Archive for the ‘அஷ்ட பிரபங்கள்’ Category

ஸ்ரீ ஆசார்ய நூற்றந்தாதி-

April 25, 2026

Click to access 2015.295141.Alarmeil-Mang-kaiyan-thaatiyum.pdf

யாதும்‌ அறியேன்‌ அதையே அறிந்தன்று
போதரா யென்றே பொருளாக்கும்‌ – நீதியான்‌
ஆசையால்‌ தாளினையே காப்பா அறிந்தின்று
பேசுகின்றேன்‌ வாஞ்சை வரப்‌ பெற்று –காப்புச் செய்யுள்

உய்வு பேற்றுக்குரிய யாதொன்றும்‌ அறியாத அறிவிலி” என்று என்னையறிந்து, அதுவே காரணமாக அடியேனைத்‌ தன்பாலழைத்து மெய்யுணர்வு இன்மையால்‌ அசித்தைப்போல (அறிவற்ற ஜடப்பொருளைப்‌ போல) கிடந்தவனை, மெய்யுணர்வை முற்றும்‌ போதித்து பொருளல்லாத . என்னைப்‌ பொருளாக்கி, சத்தை-யுண்டாம்படி செய்த ஆசாரியன்‌ செயலை இன்றாக அறிந்து மிக்க பிரேமையுற்ற அடியேன்‌, ஆசாரிய நூற்றந்தாதி என்ற வெண்பா யாப்பினால்‌ வாஞ்சையே வடிவாக ஆசாரியன்‌ திருவடிகளை முன்னிட்டுக்‌ கொண்டு இந்நூலை இயற்றுகின்றேன் –

சீரார்‌ வநசச்‌ செழுங்கடல்‌ வந்தமுதின்‌
ஏரார்‌ நிறைபொருள்மார்‌ பேய்ந்துறையும்‌ – ஆரா
வமுத்‌ யமுதமே வேறன்‌ றயிந்தை
எமையாளும்‌ பாடியன்தாள்‌ இங்கு–1-

எம்பெருமான்‌ திருக்கண்‌ வளர்தலால்‌ செழுமையுற்ற பாற்‌ கடலில்‌, (மஹாலக்ஷ்மி) தான்‌ தோன்றுவதற்கேற்ற சிறப்புற்றத்‌ தாமரை மலரில்‌ அமுதத்தோடு வந்தவதரித்து, எல்லாவற்றாலும்‌ அழகுமிக்க ஒத்தார்‌ மிக்காரையில்லாத பரம்பொருளான திருமாலின்‌ திருமார்பில்‌ இறையும்‌ அகலாது. பொருந்தியுள்ள ரூபத்தாலும்‌ குணத்தாலும்‌ பேரழகு வாய்ந்த பெரியபிராட்டியார்‌, அழுதந்தவிர்த்தப்‌ பேறு என்னலாம் படி எம்மையாளும்‌ திருவயீந்திரபுரம்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றி உய்யும்படி அடியேனுக்குப் பேர் அருள் செய்தான் –

இங்கே திரிந்தே எழு பிறப்பும்‌ தீர்ந்தொழிந்தேன்‌
சிங்கப்‌ பிரான் சீர்மை ஆய்ந்தறிந்தேன்‌ – பொங்கும்‌
கருணைக்‌ கடலமு துண்பேன்‌ அமிந்தைத்‌
திருவன்‌ திருவடி சேர்ந்‌ தின்று –2-

இருள்தரு மாஞாலமாகிய இவ்வுலகத்தில்‌ மனம்போனபடி திரிந்த அடியேன்‌ திருவயீந்திரபுரத்தில்‌ வாசஞ்செய்யும்‌ ஸ்ரீமத்‌ பகவத்‌ கைங்கர்யமாகிய செல்வம்‌ நிரம்பப்பெற்ற ஸ்ரீமத்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடிகளை, அவரருளால்‌ இன்று சேர்ந்து தேவ, மனித, விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்‌ ஆகிய ஏழுவகைத்‌ தோற்றங்களாகப்‌ பிறக்கும்‌ பிறவியொழிந்து, சிங்கப்பிரான்‌ புகழை ஆராய்ந்தறிந்து ஸ்ரீவைகுண்டமாகிய திருநாட்டிற்‌ சேர்ந்து அளவில்லாமல்‌ பொங்கி வழியக்கூடிய பநப்தநாதனின்‌ கருணையை அநுபவிப்பேன் –

இன்றுநாளை யென்றறியேன்‌ கங்குல்
பொன்றுமுட லென்றுநா னென்றறியேன்‌ – பொன்றுவிக்கும்‌
தீதறியேன்‌ யாதறியேன்‌ தேரத்‌ தெரிந்தென்னை
ஒதுவித்த தொண்பொருள்‌ ஒன்று-3-

இன்றென்றும்‌ நாளையென்றும்‌ உலகத்தவம்‌ சொல்லும்‌ கால வேறுபாட்டையும்‌ இவற்றைச்‌ சார்ந்து நிகழும்‌ நிகழ்ச்சிகளின்‌ வேறுபாட்டையும்‌ இவ்வாறே இரவு பகலின்‌ வேறுபாட்டையும்‌ அறியேன்‌. எடுக்கும்‌ பிறவிகள்‌ தோறும்‌ அழிந்து படும்‌ உடல்கள்‌ அவ்வாறு அழியாத நிலை பெற்ற உயிர்களின்‌ நிலைகளையும்‌ அறியேன்‌. அழிவுக்குக் காரணமான அடியேனை நன்கறிந்து இந் நிலை போய்‌ எல்லாவற்றையும்‌ தெளிய அறியும்படி ஒப்பற்ற பொருள்‌ ஒன்று ஒதுவித்தது –

ஒன்றுதான்‌ போதமுநி வேதமுநி நாதமுநி நன்று நலந்தீதுங்‌ காட்டுமுநி – நன்றும்‌ சிவந்த வாய் செம்பவளம் கண் கமலம் ஒன்மை உவந்துளத்துப்‌ பாடியனென்‌ றோர் -4-

ஒதுவித்த அழகிய பொருள்‌ யாதெனின்‌? மனனஞ்‌ செய்து மெய்யுணர்வை நிரம்பப்‌ பெற்றதும்‌, இதைப் பிறருக்கு அறிவிப்பதையே தொழிலாக வுடையதும்‌, நல்லொழுக்கத்தில்‌ ஏவுவதும்‌ மற்றுள்ள நல்லதும்‌ தீயதும்‌ காட்டக்கூடிய நன்கு சிவந்த தாமரைப் போன்ற வாயையும்‌ தாமரைப்‌ போன்ற இதழ்களை யுடையதும்‌ அழகிய கைகளை யுடையதும்‌ எல்லார்‌ திறத்தும்‌ நன்மையே வேண்டுவதுமான பாஷ்யமா சாரியரே யாகுமாம் –

ஓரடி முந்தமற்‌ றோரடி முந்தவதின்‌
ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்பதே? – ஈரடியக்‌
சேர்ந்திணைந்‌ தன்றன்றே சேமமாம் ஆறுபயன்‌
ஒர்ந்திணைந்‌ துள்ளதெம்‌ பால்‌–5–

அடியேனை ஏற்பதற்காக ஓரடிமுற்பட்டு வர, அதைக்காட்டிலும்‌ இன்னொரு திருவடி முற்பட, இப்படி ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்றது வியப்பன்றோ? இதன்றி இந்த இரண்டு திருவடிகளும்‌ சேர்ந்தே சாதனமும்‌ பயனுமாகும்‌ என்பதை யானறியேன் –

எம்பெரு மானார்‌ இசைத்ததாக்‌ கேட்டதுண்டு
நம்பும்‌ படி யொன்றும்‌ நானறியேன்‌ – வம்பெதற்கு?
வீடில்நாள்‌ மூன்றில்‌ முமுச்சுபடி மெய்ப்பித்த
பாடியனே பெற்றேன்‌ பயன்‌–6-

உஜ்ஜீவனத்துக்‌ கேதுவாக எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷயம்‌ அருளிச்‌ செய்துள்ளதாகக்‌ கேளவிப்படுகிறோம்‌, அதை நேர் கண்டறிந்ததில்லை. ஸ்ரீபாஷ்யத்தில்‌ சீக்கிரமாகப்‌ பல ப்ராப்தி உண்டு, இல்லை யென்‌கிற வம்பெதற்கு? நிரந்தரமாக மூன்று நாட்களில்‌ முமுக்ஷுப்படி என்கிற திருமந்திரார்த்தத்தை உள்ளவாறு கேட்பித்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளையே அடியேற்குப்‌ பயனாகப்‌ பெற்றேன்‌-

பயனுற்ற தொன்றன்றே பாவிரித்தான்‌ மாறன்‌ உயர்வசந பூடணம்‌ ஓதி – நயந்துரைத்தான்‌ தத்துவ மூன்றின்‌ தகவனைத்தும்‌ தானோக்கி வித்தகன்நீ! யென்றான்‌ வியந்து–7-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைப்‌ பயனாக மட்டுமோ பெற்றோம்‌? இவரால்‌ மாறன் கலையாகிற பகவத்‌ விஷயத்தை உரைக்கப் பெற்றேன்‌;ஸ்ரீவசன பூஷணம்‌ உரைக்கப்‌ பெற்றேன்‌; இங்ஙனே தத்வ த்ரயமும்‌ அருளப்‌ பெற்றேன்‌; இவற்றைக்‌ கேட்ட தன்மையைக்‌ கண்டு வியந்து ‘நீ வித்தகன்‌” என்று அவரால்‌ அருளப் பெற்றேன் –

வியந்தான்‌ உகந்தான்‌ விரிகமலம்‌ நோக்கி
பயந்தான்‌ பரன் தான்‌ பணியை – உயர்ந்தோர்‌
இணைந்தா மரைத்தாள்‌ இசைத்தான்தன்‌ பொன்தான்‌
பிணைத்தான்‌ பீழை தகர்த்து–8-

ஸ்ரீ பாஷ்யமாசாரியன்‌, அடியேனை வியந்தான்‌, உகந்தான்‌, தாமரைக் கண்களால்‌ விரியக்‌ கடாக்ஷித்தான்‌. அடியேன்‌ பாலுள்ள குறைகளைப் போக்கி உயர்ந்தவர்களான மெய்யடியார்‌ திருவடி யிணை யடியை வணங்கும்படி இசைவித்து, தன்‌ அழகிய திருவடிகளில்‌ இருத்திக்‌ கொண்டான்‌.

தகர்த்தேன்‌ மடமை வினைப்படலம்‌ தாக்கி
உகக்கடிந்தேன் ஊணைக் கமலம் புகுந்தேன்‌
நனியாக் கலவி இன்பம் நாளும் நுகர்வேன்
இனியனெனும் பாடியன் தாள் ஏய்ந்து –9

இனியவரான ஸ்ரீ பாஷ்யமாசரியன்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதால்‌ அறிவின்‌மையை அறத்தொலைத்து, அதன்‌ காரியமான பாப சமூகத்தையொழித்து, அதின்‌ கார்யமான உடல்‌ தொடர்பை யொழித்து, இறைவன்‌ திருவடிகளைப் பிரியா மெய்யடியார்‌ கூட்டத்து புகுந்து அளவிலா இன்பம்‌ நாளும்‌ நுகர்பவனாயினேன் —

ஏய்ந்த குருகூரன்‌ தன்தான்‌ இணையடியே வாய்ந்த சரணா வரித்தன்றே – நீந்திப்‌
பிறவிக்‌ கடல் கடந்தீர்‌ பேதை எனையும்‌ உறவைப்பீர்‌ உந்திருத்தாள்‌ உய்த்து–10–

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! திருக் குருகூரில்‌ அவதரித்து பிறந்த பொழுதே துறவியான நம்மாழ்வாரின்‌ திருவடிகளிணையே தஞ்சமாகக்‌ கொண்டு, அவரருளால்‌ பிறவிக் கடல்‌ கடந்தீர்‌. அறிவிலியான அடியேனையும்‌ தேவரீர்‌ திருவடிகளில்‌ பொருந்தச் செய்து, அவ்வாறே பிறவி தொலைத்து பேரின்பமுற்று வாழும்படி செய்வீராக –

உய்த்தும்‌ கடைக் கணித்தும்‌ ஒப்ப நினைந்திட்டும்
எய்த்த இது தன்னைப் பற்றாச-மெய்த்த வுரை
எட்டு எழுத்தும் முப்பத்திரண்டு எழுத்தும் ஐயைந்தும்
தொட்டுரைத்த ஒன்றே துணை –11-

அடியேன்‌ அறிவிலியாய்‌ உய்யும் வழி யறியாமல்‌ பிறவிக் கடலில்‌ ஆழ, அதையே காரணமாகக் கொண்டு பாஷ்யமாசாரியர்‌ என்னை நினைத்து தன் முன்‌ நிறுத்தி, கருணைப் பூத்தக்‌ கண்களால்‌ நோக்கி, மெய்யடியார்‌ திரளில்‌ சேரும்படி செய்து, மெய்ப் பொருளான எட்டெழுத்துள்ள திருமந்திரம்‌, இருபத்தைந்து எழுத்தான த்வய மந்திரம்‌, முப்பத்திரண்‌ டெழுத்தான சரம ச்லோகம்‌ இவைகளின்‌ அர்த்தங்களைச்‌ சுட்டிக் காட்டி நெஞ்சில்‌ பதிய வைத்த அவரருளே அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்குத்‌ துணை யாகும் —

துணைவனே துன்பப்‌ பிறவிக்‌ கடல்நீர்‌
புணைவனே பொய்ம்மை இருள்தீர்‌ – இணையில்‌
கதிரவனே பூரியர்‌ சுற்றங்‌ கழற்றும்‌
சதிரனே தந்தருள்வாய மறறு–12-

துணைவராயும்‌, துன்பமேயான பிறவிக் கடலைக்‌ கடத்தும்‌ நாவாய்‌ போன்றவராயும்‌, பொய்யறிவாகிய இருளை நீக்கும்‌ ஸூரியனாயும்‌, தகவு இல்லாதவர்களின்‌ உறவை நீக்கும்‌ சதுரராயும்‌ உள்ள தேவரீர்‌, உய்வு பேற்றுக்குத்‌ தக்கதை அடியேனுக்கு உகந்து அருள்‌ செய்வீராக –

மற்றோர்‌ பொருளுளதே? மாயை அறத் தொலைத்து
தெற்றத்‌ தெளிவித்துச்‌ சேம நல்கி – பிற்றைப்‌
பிறப்பொழித்துப்‌ பெம்மான்‌ கழலிணைத்து நாளும்‌
உறுமின்பம் உண்பிக்கவே–13-

ஆசாரியன்‌ அருளைக் காட்டிலும்‌ பிறிதொரு சிறந்த பொருள்‌ அடியேற்குளதோ? பிறவிக்‌ கேதுவான பிரகிருதி தொடர்பை நீக்கி,அறிவின்‌ மையாகிற மயக்கத்தைப் போக்கித் தெளிவைத்‌ தந்து,இவ்வளவிலேயே ஆனந்தமுறச்‌ செய்து முகுந்தனான இறைவன்‌ திருவடிகளில்‌ சேர்த்து மேலுள்ள காலமெல்லாம்‌ பேரின்பம்‌ நுகரும்‌ வாய்ப்பினை அடையும்படி செய்தார் –

உண்பித்தான்‌ ஒண்மை உலகார்யன்‌ ஓர்ந்தருள்செய்‌
விண்புகு விஞ்சுசுவை முத்தர்தம்‌ – பண்பிதனை
தக்கவாறுண்டு தரமுயர்ந்து நிற்கின்றேன்‌
மிக்கவா நான் எவ்வெவர்க்கும் மேல் –14-

உலகோர்க்கு உய்யும்‌ வழியைத்‌ தந்தவரான வள்ளல்‌ பிள்ளை லோகசாரியர்‌, தாம் மிக வுணர்ந்து அருளிச்‌ செய்த ஆகாசத்தைப்‌ போன்று உயர்ந்த சுவை யுடைய முத்தர்க்கு இன்பத்தை வழங்கக்‌ கூடியதான ஸ்ரீவசநபூஷணம்‌ என்ற நூலை அமுதாகக் தேர்ந்து அநுபவிக்கும்படி செய்தார்‌. பாஷியமாசாரியரும்‌ அதை அடியேனுக்கு உபகரித்தார்‌. அடியேனும்‌ அதன்‌ தரமறிந்து உள்ளத்திருத்தினேன்‌. இதனால்‌, நான்‌ உலகில்‌ எவருக்கும்‌ மேன்மையனாவேன் –

மேலா மிகு புகழ்ப் பாடியன் தன் மெய் வழி சால்
தோலா அருள்தந்த தொல்வழியில்‌ – நாலாம்‌
வழியே எளிய உரிய வழியா
அழிவிலா ஈரியல்புக்காம் –15-

மேலானார்‌ புகழும்‌ புகழ்களுக்கெல்லாம்‌ மேம்பட்ட புகழாலரான பாஷ்யமாசாரியர்‌, தம்‌ மெய்யுணர்வால்‌ ஆய்ந்து, முக்தி நெறியான நான்கில்‌ எல்லா நெறிகளைக் காட்டிலும்‌ மிக எளியதும்‌ அழிவற்ற ஆத்ம பரமாத்மாக்களுடைய உண்மை நிலைமைகளுக்குப்‌ பொருந்தியதும்‌ எவரும் மேற் கொண்டொழுகுவதற்கு உரியதாகிய மிகச்‌ சிறந்தது சரணாகதி உபாயமே யாகும்‌ என்றார் –

ஆமா றறிவுடைய ராவ தரிதன்றே
தேமா மலர்மா திருவருள்சார்‌ – நாமடந்தை
நாவன்‌ திருவயிந்தைப்‌ பாடியன்‌ நல்குதல் போல்‌
யாவனே ஆரியர்சார்‌ பின்று–16-

தன்னை யடைந்தாரை உய்விக்கத்தக்க அறிவுடையராக்குவது அரிதே யன்றோ இவ் வுலகின்‌ நிலை? இப்படி யிருக்க, தேனொழுகும்‌ தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய திருமகளின்‌ அருளைப் பெற்ற கலைமகள்‌ வாழும்‌ திருநாவை வுடையவரான திருவயீந்திரபுரம்‌ பாஷ்யமாசாரியரைப்‌ போல்‌ அடைந்தாரைக் காக்கும்‌ இயல்புடையவர்‌ எவரே உளர் –

இன்றே பிறந்தேன்‌ பழுதே யிழந்த நாள்‌
குன்றோ? மலையோ? கொழுங்கடலோ? – ஒன்றறியேன்‌
பாடியன்‌ வந்திலனேல்‌ பாழன்றே?
மேல் நாளும்‌ தேடிவந்தான்‌ ஏதிலருள்‌ செய்து–17-

மாறி மாறிப் பலப்‌ பிறவிகளை யடைந்து நின்ற கீழ்‌ நாள்களெல்லாம்‌ பல கல்பங்களாக கழிந்தது மட்டுமின்றி ஒரு குன்றினளவு, பெரியமலையளவு பெருங்கடலினளவு என்றளவிட முடியாதக்‌ காலமெல்லாம்‌ எனக்குப்‌ பழுதேயாயின. பாஷிய மாசாரியர்‌ காரணமற்ற கருணையால்‌ அடியேனைத்‌ தேடி வந்து, எனக்கருள்‌ செய்த இந்நாளே பயனுள்ள பிறவி யடைந்தேன்‌ என்றவாறு-

செய்த நலன்‌ ஈதென்று சிந்திக்க ஒல்லுமே?
மெய்யுணர்வின் மேம் பொருளைச் சேர் நெறியும் பொய்மையைப்
போக்குதலும் மெய்ம்மை மிக வுணர்த்தி பொன் கழலில்
வீக்கு மெய்ம்மைப்‌ பாடியன் மெய்‌ யின்று–18-

பாஷ்யமாசாரியர்‌ செய்த ஆனந்தத்துக்‌ கேதுவான நன்மைகளை மனத்தால்‌ நினைக்கவும்‌ முடியுமா? மெய்யுணர்வின்‌ தொடர்பால்‌ அடைதலுக்குரிய பரம் பொருளை அடையும்‌ வழியையும்‌, அதற்குத்‌ தடையானப்‌ பொய்யுணர்வைப்‌ போக்குதலும்‌, தன்னுடைய அழகிய திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொண்டு மெய்யறிவை நன்கு உணர்த்தி அருள்‌ செய்த இவை யனைத்தும்‌ மெய்யேயாகும் –

இன்றன்றே யானும்‌ இலன் போய்‌ உளனானேன்‌
என்றடி யேனை இருந்துகேள்நீ – என்றதுமே
எண்பெருக்‌ கந்நலத்‌ தொண்பொரு ளாயினன்‌
திண்கழற்‌ பாடியற்‌ சேர்ந்து–19-

அடைந்தாரைக்‌ கைவிடாது எம்பெருமானிடத்தில்‌ சேர்க்கும்‌ திருவடி களையுடைய பாஷ்யபாசாரியர்‌, அடியேனை அழைத்து ௭திரிலிருத்தி முமுஷுப்படியைப்‌ போதித்தலுமே, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அளவிடமுடியாத ஆனந்தத்தை யுடைய இறைவனோடு சம தர்மத்தை அடையத் தக்க இன்றே, அசத்தாயிருந்த அடியேன்‌ சத்தானப்‌ பொருளானேன்‌ என்றவாறு –

சேர்ந்தேதி லின்னருளே பொய்ம்மையைத்‌ தீர்த்தருள
ஆர்ந்த மதிநலம்‌ அன்றடைந்து – ஓர்ந்தீங்‌
குபய விபூதி ஒழிவி லுடையான்‌
அபயமிங்‌ குற்றே னது–20-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ வேறு காரணமற்ற இன்னருளால்‌ அடியேனைத்‌ தன் பால்‌ சேர்த்து நிறைந்த பக்தியும்‌ அறிவும்‌ உண்டாகும்படி பண்ணி, ஒரு சிறு துணுக்கும்‌ தன்னை விட்டு நீங்காது இரண்டு விதமான உலகத்திலிருக்கும்‌ அனைத்தையும்‌ தனக்குடமைப்‌ பொருளாகக்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமனால்‌ அஞ்சேல்‌ என்றருளப்‌ பெற்றேன்‌. ஈதன்றே அடியேனுடைய பாக்கியம் –

அதன்றே ஒழுக்கம் இலது உண்டறிதல்
அதன்றி மெய்ஞ்ஞானம் அறிதல் இதன்றே?
முழுமையன் பாடியன் முந்துற்ற என் போல்
விழுமயரின் மிக்கார் எவர் ? –21-

அறிவொழுக்கங்களால்‌ நிறைவுபெற்ற குருவை அடைவதே உய்வு பேற்றிற்குரியதாகும்‌. இதனை நாம்‌ அறிவது இயலாதே. இது உலகின்‌ நிலை. அப்படியிருக்க அறிவற்றவனான அடியேன்‌ இவற்றை எப்படி அறிவேன்‌? அறிவொழுக்கங்களால்‌ நிறைந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே அடியேன்‌
இருக்குமிடம்‌ தேடிவந்து இன்னருளைச்‌ செய்தார்‌. இதனால்‌ அடியேனைப்போல்‌ சிறப்புடையாரின்‌ மிக்கவர்‌ எவர்-

எவரே? விடம்போல்‌ இருந்துடன்‌ நாளும்‌ பவரேகைப்‌ பண்ணும்‌ பரிசும்‌ – அவரே கழற்றுந்‌ திறனறிவார்‌ பாடியன்‌ தானே கழற்றுங்‌ கருணை மிகக்‌ கொண்டு –22-

தீய செயலைப்புரிவதற்குக்‌ காரணமான நம்முடைய உடலானது விஷம்போல்‌ நாள்‌ தோறுமிருந்து நம்மை நலிகின்றது. இப்படிப்பட்ட உடற்பிறவியை நீக்க வேண்டுமானால்‌ விரோதி ஸ்வரூபத்தை நன்றாசு அறியவேண்டும்‌. அவ்வாறு அறிந்து, அவ்விரோதியை பொக்குவதில்‌ வல்லவரான பாஷ்யமாசாரியர்‌, தன்‌ கருணையாலே அடியேனுடைய விரோதியை போக்கி என்னை ஆட்கொண்டர்‌-

கொண்டான்‌ நிரம்புங்‌ குறைக்கொள்ளி நானாவேன்‌
மண்டிய தீவினையேன்‌ மாலுடையேன்‌ – கொண்டான்‌
உலகில்‌ நிகரில்லாப்‌ பாடியன்‌ ஒன்றோ
அலகில்‌ அருளால்‌ அணைத்து–23

இவ்வுலகில் எல்லாவாற்றாலும்‌ நீசைதை நிரம்பிய குறைக்‌ கொள்ளியானக்‌ காரணத்தினால்‌ மொய்த்த தீவினையுடைய வனானேன்‌-இத்தகு தீவினையேனையும்‌ கைக்‌ கொண்டு ஒப்பற்றக்‌ கருணை யுடையவராக ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அளவற்ற அருளால்‌ அடியேனை அணைத்துக் கொண்டார் –

அணைவான்‌ அணைத்தார்‌ பெரிய உடையார்‌
இணையில்லாச்‌ சீரார்‌ இறையை – அணைத்தான்‌
கருணைக்‌ கடல்போலுங்‌ கண்ணென்னுந்‌ தோளால்‌
பரிவுமிகும்‌ பாடியன்வந்‌ தின்று–24-

முத்தனாய்‌ வருமவனை அணைத்துக் கொள்ளும்‌ அளவற்ற கல்யாண குணங்கள்‌ நிரம்பிய ஒப்பற்றவனான சக்ரவர்த்தித்‌ திருமகனை (இராமனை) பெரியஉடையார்‌ என்ற ஜடாயு அளவற்ற ஆர்வத்தால்‌ அணைத்தார்‌. அது போல்‌, பெருங் கருணைக் கடலான பாஷ்யமாசாரியர்‌, பவித்திரத்தை உண்டாக்கும்‌ கண்ணென்னும்‌ தோளால்‌ அடியேனை அணைத்துக்‌ கொண்டார்‌.

இன்றன்‌ றிறைவன்பா லுள்ளவுற வொன்பதும்‌
ஒன்றும்‌ உணரோம்யாம்‌ தானறிவான்‌ – இன்றயிந்தை
பாடியன்பால்‌ சேர்த்தும்‌ பரிவின்‌ முழுக்களித்தான்‌
ஈடிலம்யாம்‌ என்றுலகின்‌ தேர்வு–25-

அநாதிகாலமாக எம்பெருமானுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவு ஒன்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. முற்றுணர்வினாகிய எம்பெருமான்‌ தானறிவான்‌. இத்தகு உறவின்‌ காரணமாக அடியேனை உய்வு பெற நினைத்து தகுந்தவரான பாஷ்யமாசாரியரிடம்‌ பரிவோடு சேர்த்து, மெய்யுணர்வை முழுக்க உண்டாக்கினான்‌. இதனால்‌, இன்று உலகவர்‌ இவன்‌ ஒப்பற்றவன்‌ என்று நிர்ணயிப்பதற்கு ஏதுவானேன்‌ – என்றவாறு –

தேர்வ லிதமென்னாச்‌ சிந்தியேன்‌ பாவியேன்‌
ஊரோ டுழல்வேனைப்‌ பாடியனாம்‌ – நாரணன்‌
மந்திரத்தின்‌ நுண்பொருளை மாட்டிச்‌ செவிவழியே
தந்தருள்‌ செய்தான்‌ நேர்ந்து–26-

ஆத்மாவாகிற நமக்கு நன்மையைச்‌ சிந்திக்காமல்‌ உண்டியே உடையே என்று உகந்தோடும்‌ ஊரவரோடு உழல்கின்ற பாவியான என்னை, பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அடியேனுக்கு இதம்‌ செய்வதற்காக, என்னை வளைத்துப்பிடித்து நாரணன்‌ மந்திரமாம்‌ எட்டெழுத்தின்‌ உட்பொருளை செவியின்‌ மூலம்‌ உபதேசித்தருள்‌ செய்

நேர்ந்து நினைந்தும்‌ வணங்கி வழிபட்டும்‌
கூர்ந்துமிகும்‌ அன்பின்‌ குறிக்கொண்டும்‌ – தீர்ந்துநின்பால்‌
தஞ்சம்‌ அடைந்தனன்‌ பாடிய நின்‌ தாளிணையே
எஞ்சுத லில்லா அரன்‌–27-

பெருமான்‌ அருள்தமக்கு வேண்டுமென்று ஈடுபட்டு, வணங்கி வழிபாடுகளைச்‌ செய்யும்‌ மிகமிக அன்புடையவரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! தேவரீரையே தஞ்சமென்றடைந்தேன்‌. ஆதலின்‌, தேவரீர்‌ அடியேனுடைய உய்வு பேற்றிற்குக்‌ குறைவற்றக்‌ காப்பாளாராக ஆகக் கடவீர் –

அரணென்‌ றடைந்தனன்‌ ஆரியநின்‌ தாள்கள்‌
முரணும்‌ அழுக்குடம்பும்‌ ஞானம்‌ – முரணும்‌
ஒழுக்கமும் தெற்றென அற்றன தேர்ந்தேன்
விழுப்பொருள்‌ நீயா விழைந்–28-

ஆசாரிய ஸ்வாமிகளே! தேவரீர்‌ திருவடிகளே காப்பாகுமென்று தஞ்மென்று அடைந்தேன்‌. அடைந்த இம்மாத்திரத்‌ தாலேயே, தீயவிஷயத்தில்‌ ஈடுபாட்டை விளைவிக்கும்‌ அழுக்குடம்பு, அதன்காரணமான தீயவொழுக்கம்‌, அதன்காரணமான பொய்யறிவு இவையனைத்தும்‌ பறந்தோடின. இதனால்‌, தேவரீரே விழுமிய பொருளென்று உணர்ந்தேன் –

விழைந்தேன்‌ இனியதா வேகடஞ்செய்‌ நின்னை
விழைந்திலன்முன்‌ மாயவன்சேற்‌ றள்ளல்‌ – அழுந்தி
பல் பகல் பாழ் பட்ட மீட்பதினி யுண்டாயின்
நல் வகையில் நீ இனி நல்கு –29-

முன்காலமெல்லாம்‌ வலிய சேறாகிய இந் நிலவுலகில்‌ அழுந்தி உருப்படி யில்லாமல்‌ கிடந்தமையால்‌ இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போல் இருக்கிற தேவரீருடைய ஸ்வபாவத்தை அறியாமல்‌ நீண்டகாலம்‌ பாழே போனேன்‌. இன்றாகத்‌ தேவரீரை அறிந்து அன்பு பூண்டேன்‌. ஆனால்‌, பாழே கழிந்த காலத்தை இனி மீட்பதொன்று உண்டே? தேவரீரே இதை யருளிச்‌ செய்ய வேணும்‌-

நல்கும்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ வேட்பன
அல்லனே தான் பொதுவன்‌ நீர்சிறப்பின்‌ – அல்லரே
ஏந்தூர்‌ சடகோபன்‌ வேட்பன ஈவதே
உந்தம்‌ சிறப்பினுக்‌ கொப்பு–30-

குருகூருக்குத்‌ தலைவரான நம்மாழ்வார்‌ எவ் வண்ணம்‌ எம்பெருமானை ஆசைப்படுவாரோ உபய விபூதிக்கும்‌ பொது நின்ற எம்பெருமான்‌ அவ் வண்ணமே நல்குவான்‌. எமக்கு ஆசாரியரான தேவரீரோ, உம்மைத் தஞ்சமென்று அடைந்தாரை அவர்கள்‌ விரும்பியது தரும்‌ சிறப்புடைய நியதி யுடையீர்‌. இத்தகைய நீர்‌, உம்மையே தஞ்சமாக அடைந்த ஏந்தூர்‌ சடகோபனாகிய அடியேன்‌ விரும்பியதைக்‌ கொடுப்பதே சிறப்பாகக்‌ காப்பவரான உமக்குத்‌ தகும்‌ என்று அடியேன்‌ விண்ணப்பம் –

ஒக்கும்‌ அடியேனைக்‌ கைக்கொளல்‌ உந்தமக்கே
ஒக்கும்‌ அடியேனும்‌ தாள்சாரல்‌ – தக்கதே
ஈடினை யில்லாப்‌ பெருமையீர்‌ நீரன்றே
ஈடினை யில்சின்ன வனான்‌–31-

சிறப்புடைய ஆசாரியரான உமக்கே அடியேனைக்‌ கைக்கொளல் தகும்‌. தேவரீரோ ஈடியிணையில்லாப்‌ பெருமை-யுடையவரெனத்‌ தக்கவராகையாலே, அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளைக்‌ சார்வதே ஒக்கும்‌. அடியேனோ சிறியவர்களில்‌ ஈடிணையில்லவன்‌ என்பதே உண்மையாகும்‌

நானென்‌ றெனதென்றும்‌ நான்பெரிய கோனென்றும்‌
வானொன்‌ றகங்காரத்‌ தியான்வளர்ந்தேன்‌ – தேனென்‌
றமுதென்றும்‌ மும்மநுப்பால்‌ ஆழ்ந்ததின்‌ ஆசான்‌
நமவென்‌ நலங்கொடுத்தனன்‌–3
2–

அடியேன்‌ கீழ்க்கழிந்த நாள்களிலெல்லாம்‌ நானென்றும்‌,எனதென்றும்‌, நானே பெரியவன்‌ என்றும்‌ இப்படி வானைவிட உயர்ந்தஅகங்காரத்தில்‌ முதிர்ந்தவனாய்‌ இருந்தேன்‌. இந்நிலையில்‌ ஆசார்ய சுவாமிகள்‌ அடியேனுக்கு மூன்று மந்திரங்களில்‌ முதல்‌ மந்திரமான திருமந்திரத்தில்‌ நடுவில்‌ பதமான நம: என்ற சொல்லை விவரித்து, தேனில்‌ இனியதும்‌ அமுதம்‌ போன்றதும்‌ மரண மற்றதுமான இந்த விஷேச அர்த்தங்களை உபதேசித்து அடியேனை உய்வித்தார் –

கொடுத்தான்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஈந்த
கொடுத்தான்‌ பதின்மர்‌ குறிக்கும்‌ மொழிகள்‌
கொடுத்தான்‌ கலம்பகம்‌ மற்றும்‌ அனந்தம்‌
மடுத்தேன்‌ மதுவெனப்‌ பெற்று–33-

உலகோர்‌ துன்பத்தைப்‌ போக்க திருநகரியில்‌ அவதரித்தவர்‌ நம்மாழ்வார்‌, அவர்‌ அருளிய பிரபந்தங்கள்‌, மற்றுள்ள ஆழ்வார்கள்‌ பிரபந்தங்களையும்‌ கொடுத்தார்‌. அடியேன்‌ பாஷ்யமாசாரியரை அடைந்ததே காரணமாக, அடியேனைக் கொண்டு திருவாய்மொழிக்‌ கலம்பகத்தையும்‌ இயற்றும்படி செய்து, மதுரமிக்க ஸம்பிரதாய அர்த்தங்களையும்‌ அடியேனை அநுபவிக்கச்‌ செய்தார் –

பெற்றேனின்‌ தாளிணையில்‌ பாமாலை பெய்கலையைக்‌
கற்றேன்‌ கடும்பிறவி காய்ந்தொழித்தேன்‌ – நற்றேன்‌
ஒழுகுநின்‌ கீர்த்தி நயந்துரைத்தேன்‌ ஓர்கால்‌
பழகு பரிந்துரைப்பால்‌ பட்டு–34-

ஆசாரியரே! மறு பிறப்பறுக்கும்‌ உமது தாளிணையே தஞ்சமாகப்‌ பெற்றேன்‌. நின்‌ திருவடி விஷயமான பாமாலையாகிற கலையைக்‌ கற்றேன்‌-இதனால்‌, துன்பத்துக்குக்‌ காரணமான பிறவி மீண்டும்‌ வாரா வண்ணம்‌ தேவரீர்‌ கீர்த்திகளை உலகறியச்‌ செய்தேன்‌.சில சமயம்‌ உலகோர்க்கு தேவரீர்‌ திருவடியை அடைய புருஷகாரமாகவும்‌ வாய்ப்பேன்‌ – என்றவாறு-

பட்டேன்‌ பருவரல்‌ பல்லூழிக்‌ காலமெல்லாம்‌
தொட்டேன்‌ பாடியன் தன்‌ தூமலர்த்தான்‌ – தொட்டதுமே
முன்ன வினை பின்ன வினை ஆரத்த மூன்று ஒழிந்த
என்னை நிகர் யாரே யினி –35-

கீழ்க் கழிந்த நாட்களிலெல்லாம்‌ பிறப்பிறப்புப்‌ பிணியால்‌ படாத பாடுபட்டேன்‌. காதாகித்கமாக பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடியைத்‌ தொட்டேன்‌-தொட்டதும் இப் பிறப்புக்கு முற்பட்ட பிறவிகளில்‌ செய்த வினைகள்‌, பிற்பட்ட வினைகள்‌ இவை யனைத்தும்‌ தீயினில்‌ தூசாகி கழிந்தொழிந்தன. இனி, வினை யற்றவர்களில்‌ எனக்கு நிகராக யவருமில்லை என்றவாறு–

இனியோர் குறை யுண்டோ பூதூரில் வள்ளல்
பனி மலர்த் தாளிணையே பற்றா -நனி விழையும்
சிங்களில் பாடியன் தன் செங்கமலத் தாளிணையே
துங்கமா தூய் மௌளிக் கொண்டு –36–

ஸ்ரீபெரும்புதூர்‌ யதிராசருடைய குளிர்ந்த தாமரை மலர்‌ போன்ற திருவடியினையே பற்றாக மிக விரும்பி, ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றிய பாஷ்யமாசாரியருடைய திருவடித்‌ தாமரையையே அடியேன்‌ உத்துங்கமான முடியாகக்‌ கொண்ட பிறகு, இனியும்‌ ஒரு குறையுள்ளதோ? எனக்கு –

கொண்டான்‌ வரமுநி கோயில்‌ உகந் தயிந்தை
கொண்டான் நல மந்தம் இல்லத–கொண்டோம்
உலகளந்தான்‌ பொன்னடியோம்‌ பாடியன் போல் யமும் ன்பம்‌
நிலமளந்தான்‌ சொம்மாயினோம் –37–

மணவாளமாமுநிகள்‌ திருவமீந்திர புரத்தையே தமக்குகந்த கோயிலாகக்‌ கொண்டார்‌. அதை யறிந்த பாஷ்யமாசாரியரும்‌ நலமந்தமில்லாததான அந்தக்‌ கோயிலையே தமக்கேற்ற வாச ஸ்தலமாகக்‌ கொண்டார்‌. இவர்‌ அபிமாநித்த சிஷ்யர்களாகிய யாமும்‌ உலகளந்தான்‌ பொன்னடியார்‌ ஆதலால்‌ நிலமளந்தவனுடைய சொத்தாக ஆயினோம் —

நேமிசங்கம்‌ கண்கைகால்‌ வாய்முகம்‌ நாபியணி
தாமரைகள்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டம்‌
அயிந்தையில்‌ ஈருருவும்‌ ஆறு பயன்‌ ஆவதே!
நயந்தெரிந்து நானடைந்தேன்‌ நன்கு–38-

அடைந்தாரைக்‌ காப்பாற்ற வேண்டி பஞ்ச ஸம்ஸ்காரார்த்தமாகத் தரித்த திருவாழித்‌ திருச் சங்கமும்‌, தன்னை அடைந்தாரை நோக்கும்‌ மலர்ந்த திருக் கண்களும்‌, பிறவி போக்கும்‌ திருவடிகளும்‌, அஞ்சலென்ற திருக் கைகளும்‌, உபதேசம்‌ செய்யும்‌ திரு முகமும்‌, எம்பெருமான்‌ திருமேனிக்குப்‌ போலி யுருவான திரு நாபிக்‌ கமலமும்‌ ஆகிய இவைகளைத்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டங்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீமந்‌ மணவாள மாமுனிகளும்‌ அவரின்‌ நிழல்‌ என்னலாம்படியான பாஷ்யமாசாரியரும்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஈருருவோ? என்று நினைக்கலாம் படி யிருக்கும்‌ இருப்பை நினைத்து அவர்களையே தஞ்சமடைந்தேன்‌.

நன்றென்‌ றுளதேயோ? பொய்யறியா நானறிந்த
என்றென்றும்‌ யாண்டும்‌ இலதன்றே – குன்றாக்‌
கருணைக்‌ கடலே தான்‌ பாடியன்‌ வேறன்‌
றிருனிலத்தில்‌ பேரொளியே யின்று–39-

பொய்யென்ப தறியாத அடியேன்‌ அறிந்த தொன்றைச்‌ சொல்லுகின்றேன்‌. இருள் தரு மா ஞாலத்தில்‌ பேரொளிப்‌ பிழம்பாகத்‌ திகழும்‌ திருவயீந்திர புரம்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே ஆவர்‌. கருணைக் கடலான அவரைப்‌ போல்‌ நன்றான ஒரு பொருள்‌ இன்று எவ்விடத்திலாகிலும்‌ உளதோ? இல்லை யென்றபடி –

இன்றன்றே? என்றென்றும்‌ ஈடிணை யென்பதில்லை
பொன்றாப்‌ புகழோன்‌ சடகோபன்‌ – பொன்றாத
பேரறிஞன்‌ நாதமுநி யாமுநன்‌ பேராளன்‌
நேராவ ரென்பதிலை நேர்‌–40-

இன்றும்‌ முற் காலத்திலும்‌ மேல் வரும்‌ காலத்திலும்‌ என்றும்‌ அழியாத புகழை யுடைய நம்மாழ்வாருக்கு ஒப்பானவர்‌ எவருமில்லை எனலாம்‌. அவரை அடி பணிந்த குறை வற்ற போறிஞரான ஸ்ரீமந்‌ நாத முநிகள்‌, அங்ஙனமே யாமுந முளிகள்‌, திக்கெட்டும்‌ புகழ் பரவும்‌ பேராளரான ராமாநுஜர்‌ முதலான இவர்களுக்கும்‌ ஒப்பாகக்‌ கூடியவர்‌ ஒருவரும்‌ இலர்‌ எனலாம்‌. நன்மை யொன்று மில்லாத அடியேனை அங்கீகரித்தமையால்‌ பாஷ்யமாசாரியரை வேண்டுமானால்‌ அந்த பூர்வாசாரியர்களுக்கும்‌ ஒப்புச்‌ சொல்லலாம்‌ – என்றவாறு –

நேராவார்‌ யாரே? கருணை நிரம்பியதில்‌
நேரார்‌ நிகரில்‌ புகழொன்றில்‌ – நேராவார்‌
உண்டேயோ? பாடியற்குப்‌ பெம்மானும்‌ உள்ளதேல்‌?
புண்டரீகம்‌ வான்பூத்த போல்‌–41-

கருணை நிரப்பத்திலும்‌ வாத்சல்யாதி குணங்களிலும்‌ பாஷ்யகாரருக்கு நிகர்‌ ஒருவருண்டோ? எல்லா நற் பண்புகளால்‌ நிறைந்தவனான எம்பெருமானும்‌ அவருக்கு நிகராக மாட்டான்‌. உளர்‌ என்பீரேல்‌! ஆகாயத்தில்‌ பூத்தத்‌ தாமரைப்‌ போலாகும்‌ என்பேன் –

போலா மதுரகவி மாறன் தன்‌ பொன்னருளே
ஏலாரே? சான்றோ ரெனக் கொண்டு – மேலாத்‌
தகவுடைய தாய் தந்தை என்று நின்ற அஃதே
மிக விரும்பும்‌ பாடியனே மெய்‌–42-

மதுரகவியார்‌, தன்புன்மையைக்‌ கண்டால்‌ சான்றோர்‌ தன்னை ஏற்க மாட்டார்‌ என்று கருதியே அழகிய அருளை யுடைய ஸ்வாமி நம்மாழ்வாரையே தகவுடையதாய்‌, தந்தையான எல்லா வுறவுமாய்க்‌ கொண்டு தஞ்சமடைந்தார்‌. ஆழ்வாரும்‌ அவரை ஏற்றார்‌. அதைப் போலவே புன்மை யுடைய அடியேனை பாஷ்யமா-சாரியர்‌ ஏற்றுக்‌ கடைக் கணித்ததும்‌ மெய்யே யாகும்‌-

மெய்ம்மைத் திருவயிந்தை பாடியன் மேல் நாளில்
செம்மை யுறச் செய்யா திருப்பேனேல் -அம்மே
நலன் துறந்து நாண் துறந்து பாழ் படுவன் அன்றே
இலனாகி எய்த்து இருப்பன் இன்று –43-

பொய்யில்லா மணவாள மா முநிகள்‌ திருவயீந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டதனால்‌ அத் தலம்‌ இன்று மெய்த்தல மாயிற்று. அத் தலத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியர்‌ முன் காலத்தில்‌ அடியேனை செம்மைப் படுத்தா திருப்பாரானால்‌, அம்மம்மே ! அடியேன்‌ எல்லா நலன்களையும்‌ துறந்து லஜ்ஜையும்‌ துறந்து அசத்தாகிப்‌ பாழ்பட்டிருப்பேன்‌ இன்று – என்றவாறு –

இன்றன்றே மாறன்‌ சடகோபன்‌ என்றென்று
நன்றானேன்‌ உண்ணாட்டுத்‌ தேசிதனை – நன்றா
குடிகஷணைன்‌ கோவிந்தன்‌ மாதவன்‌ அன்பர்‌
மடிவைத்து கந்தருள்வான்‌ மால்‌–44-

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளால்‌ அடியேன்‌ செம்மைப்‌ பெற்றமையால்‌, இன்று மாறன்‌ என்றும்‌, சடகோபனென்றும்‌ உலகவர்‌ இயம்புகின்றதால்‌, அடியான்‌ தொண்டன்‌ என்ற உள் நாட்டுத்‌ தேஜஸ்ஸைத்‌ தரும்‌ பேர் பெற்றவனானேன்‌; கோவிந்தன்‌ குடியடியானென்றும்‌, மாதவன்‌ தமரென்றும்‌ சொல்லத்‌ தரமுடையவனானேன் . இதனால்‌ ஸ்ரீவைகுண்டத்தில் தேவிமாரோடு எழுந்தருளி யிருக்கும்‌ பர வாசுதேவன் இவனால்‌ அலம்பி லாபம்‌ பெற்றோம்‌ என்று உச்சி முகந்தருள்‌ செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌ – என்றவாறு –

மாலே படைத்துக்‌ கடைக் கணித்தான்‌ மற்றுள்ள
ஏலா திருத்தான்‌ அன்றோ! – தோலாப்‌
புகழா இத்தைப் பாடியன் பூதூர்‌ முனிபோல்‌
மிகப் பரிந்தாட்‌ கொண்டான்‌ விழைந்து –45-

எம்பெருமான்‌ பிரளய காலத்தில்‌ இறகொடிந்த பக்ஷிகளைப்‌ போலான ஜீவாத்மாக்களைக்‌ கடைக் கணித்து, கை கால்‌ உறுப்புக்களோடுக்‌ கூடிய சரீரத்தைக்‌ கொடுத்து, அறிவைக்‌ கொடுத்து விட்டு விட்டான்‌. அயிந்தைப்‌ பாடியனோ ஸ்ரீபெரும்புதூர்‌ இராமாநுஜரைப்‌ போல்‌ ஜீவர்கள்‌ விஷயத்தில்‌ ஐயோ! ஐயோ! என்று மிகப்‌ பரிந்து அவர்களை விரும்பி அடிமை கொண்டான் –

விழையொழி யாதாயின்‌ வெந்துயரே வீவில்‌
விழைவுளதேல்‌ பாடியன் பால்‌ இன்பம்‌ – கழியும்‌?
விதிசூழ்ந்‌ திலனென்று வீறுசால்‌ தானே
பதிந்தான் தன்‌ பாலாம்பேரன்பு–46-

உலகியலில்‌ இருக்கும்‌ ஆசையை ஒருவன்‌ விடவில் யென்றால்‌, அவன்‌ பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்ந்து கிடக்க வேண்டியதே. ஆனால்‌, உத்தாரக ஆசாரியரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ திறத்து பேரன்பு உளதேல்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ நீங்குமா? நீங்காது. எம்பெருமான்‌ கருனை ஜிவர்களிடம்‌ ஏறிப்‌ பாயவில்லை என்று நினைத்து பாஷ்யமாசாரியர்‌ ஜீவர்கள்‌ தன் பால்‌ கொள்ள வேண்டிய பேரன்‌பை தாமே பதியும்படி செய்தார் –

அன்பின்‌ நிகரில்லா னாங்கே கருணையின்‌
இன்பி னிணையில்லான்‌ தோற்றத்தால்‌ – பொன் பிறங்கும்‌
மேரு மிசைப்‌ பூத்த செந்‌ தாமரையே ஒருருத்தாள்‌
கண் கை முகம் வாய்‌ மதி –47.

ஸ்ரீ பாஷ்யமாசாரியர்‌, எம்பெருமான்‌ திறத்தும்‌, தன்னை தஞ்சமென்றடைந்த சீடர்‌ திறத்தும்‌ அளவிலா அன்புடைமையின்‌ இன்புறுவதிலும்‌ இணையில்லாதவரே. இவர்‌ தோற்றத்தில்‌ பொன்னிறத்தால்‌ அழகிய திருமேனி, திருவடிகள்‌, திருக்கண்கள்‌, திருக்கைகள்‌, திருப்பவளம்‌, திருமுகம்‌ இவையனைத்தும்‌ அப்போதலர்ந்த செந்தாமரையொத்து பொன்மலையான மேருமலை௰ல்‌ பூத்தபல செந்தாமரைப் போல்‌ காட்சி யளிக்குமென்பதாம் –

மதியொன்றில்‌ மான்குறள்நேர்‌ மாயை கடிவில்‌
எதி சட கோப னிவனே – கதியில்லான்‌
என்போலும்‌ ஏழையைக்‌ கண்போலும்‌ காப்பவன்‌
விண்போகும்‌ சீர்பாடி யன்‌–48–

செயல்‌ செய்யச்‌ சிந்திப்பதில்‌ வாமந மூர்த்தி போலும்‌, மாயயைக்‌ கோபித்துப்‌ போக்குவதில்‌ முற்றுந் துறந்த சடகோபனே யாவான்‌. தன்‌ பாலீடுபாடு இல்லாத என்னைப்‌ போல்‌ அறிவிலியைக்‌ கண்‌ போலும்‌ சிறப்புறச்‌ செய்து காத்தருள்வார்‌ வானளாவிய கீர்த்தி வாய்ந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌- என்பதாம்

பாடியனோ சானகியோ போல்வீர்நன்‌ குத்தமரில்‌
வீடில்சீர்‌ ஆழ்வான்‌ தனையடைந்தார்‌ – கோடல்‌
பதி பரவும்‌ பாங்கில்‌ கலியனோ டொப்பீர்‌ மதி நலத்தால்‌ மாறனே நீர்‌–49-

தான்‌ நரகமடைந்தாலும்‌ பரவாயில்லை. ஆனால்‌, ஆசை யுடையோர்‌ இழக்கலாகாது என்று எண்ணி ஆசாரியன்‌ ஆணையை மீறி திருமந்திரத்தை ஆசையுள்ள எல்லோருக்கும்‌ தூளி தானம்‌ செய்த எம்பெருமானாரைப்‌ போலவும்‌, தேவ மாதரை மீட்கத்‌ தான்‌ சிறையிருந்த சீதாப் பிராட்டியைப்‌ போலவும்‌, தரிசனத்தைக்‌ காக்க தன்‌ கண்ணை யிழந்த கூரத்தாழ்வானைப்‌ போலவும்‌, தன்னை அடைந்தாரைக்‌ கைக் கொண்டு திவ்விய தேசங்களை வாழ்த்திய திருமங்கை யாழ்வாரைப்‌ போலவும்‌, மயர்வற மதிலம்‌ அருளப்‌ பெற்றவர்களில்‌ தலைவரான நம்மாழ்வாரைப்‌ போலத்‌ திகழும்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! இவர்களில்‌ நீவீர்‌ எவரோடு ஒப்பாவீர்‌-

நீரே சயமே யடிமைத்‌ தலை நின்றீர்‌ நீரே அடிமையில்‌ நீக்கமிலீர்‌ – நீர்தாமே கோதிலடி யாருங்‌ குணந்திகழ்‌ கொண்டலும்‌ நீதி நெறி வித்தகரும்‌ நீர்‌–50-

பாஷ்யமாசாரியரே! பயனாகிற அடிமையில்‌ தலை நின்றவர்‌ நீரே; எம்பெருமானுக்‌ காற்றும்‌ தொண்டில்‌ பிரிவதில்லாதவரும்‌ நீரே; குற்றம்‌ யாதுமில்லாது அடிமையில்‌ தலை நின்ற தோடல்லாமல்‌ அடைந்தாரைக்‌ கைக் கொண்டு குணந் திகழ்‌ மேகத்தோடு ஒத்தவரும்‌ ஆவீர்‌. ஆத்ம பரமாத்மாக்களின்‌ நீதியை முற்றும்‌ அறிந்தவரும்‌ நீரே யாவீர் –

நீரே நிகரற்ற நீசனெனை கைக்கொண்டீர்‌
பாருடன்‌ நீரும்‌ பரிவுமிகு – ஊரவரும்‌
எக்காலத்‌ தெவ்வெவரும்‌ ஏற்பதொண்‌ றுண்டேயோ?
மிக்க புகழ் தத்துவமே –51–

நிகரற்ற நீசனான என்னை நீரே உகந்துக்‌ கைக் கொண்டீர்‌. நிலத் தேவரும்‌ ஸ்வேதத்‌ தீப வாசிகளும்‌, மங்களாசாஸனமே யாத்திரை யாயுள்ள நித்திய விபூதியிலுள்ளாரும்‌ முதலாக எக்காலத்திலும்‌ எவ்வுலகிலுள்ளாரும்‌ ஏற்பது என்பது இல்லை யேயாம்‌. மேலாம்‌ புகழே வடிவான தத்துவமே இதுவாகும்‌. தேவரீருடைய வாத்சல்ய குணம் –

மேதினியில்‌ ஐம்புல வாஞ்சை மிகவுடையன்‌
காதுங்‌ கடுநெஞ்சன்‌ தீச்செயல்கள்‌ – யாதும்‌
எனையன்றே அண்டி நிலை பெறுவ யாண்டும்‌
வினையமென்ப தொன்றும்‌ மிகை–52-

பாருலகில்‌ ஐம்புலன்‌ நுகரும்‌ விஷய விருப்பம்‌ மிக உடையவன்‌; கொலை செய்ததற்குரிய கடுமை மிக்க நெஞ்சினை யுடையவன்‌; கொடிய செய்கைகளை யுடைய இப்படிப்பட்ட யாவும்‌ என்னைச்‌ சேர்ந்தே நிலை பெறுவனவாம்‌. எம்பெருமான்‌ விஷயமாக அன்பின்‌ பட்டும்‌ அடக்கமென்பதே யில்லாதவனடியேன் –

மிகையனே மெய்யடியாா கூட்டத்து யானோ
தகையிலன்‌ சாது கோட்டி தம்மில்‌ – நகையிலன்‌
நள்ளருட்கண்‌ இங்கலம்போல்‌ நானொருவன்‌ உள்ளேன்பால்‌
உள்ளதெல்லாம்‌ தீய துள–53-

மெய்யடியார்‌ கூட்டத்து அதிகப்‌ படுவேன்‌ யானொருவன்‌ என்பதாகும்‌. சாது கோட்டிக்குரிய பண்பற்றவன்‌; பகவதநுபவ மில்லாதவன்‌; குதூகலமில்லாதவன்‌; நடுநிசியில்‌ அடுப்புக்கரிபோல்‌ ஒளியற்றவன்‌; இலனென்பாரில்‌ நானொருவன்‌ உளன்‌; என்னிடம்‌ உள்ளதெல்லாம்‌ தீயதே உள்ளதாம் –

உளதேயோ? நீர்செய்‌ செயலின்‌ தரந்தான்‌
உளதேயோ? எம்பெருமான்‌ செய்த – உளதே?
இருவீரும்‌ செய்தசெயற்‌ கொப்பறிவணர்‌ உண்டோ?
பெருமைமிகு பாடியனே! பேசு–54-

தேவரீர்‌ அடியேன்‌ திறத்துச்‌ செய்த செயலின்‌ தரமறிதலுண்டோ? தேவரீரை அடியேற்குத்‌ தந்த எம்பெருமான்‌ செய்த செயலுக்கு ஈடுண்டோ? தேவரீர்களிருவரும்‌ செய்த நல்லுதவிக்‌ கொப்புண்டோ? ஒப்பறிவாரிங்குளரோ? இவற்றை பெருமை மிகு பாஷ்யமாசாரியரே! நீரே அருளிச்‌ செய்ய வேணும் –

பேசுதல்‌ வல்லீரே? நீர்செய்த பேருதவி
பேசுந்‌ தரமுடைத்‌ தல்லவே – நீசனேனைக்‌
கைக்கொண்ட காரியமே எற்கறி வித்ததால்‌
இக் குறிப்பே கொண்டுரைத்தேன்‌ இங்கு–55-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ திறத்து தேவரிர்‌ செய்த பேருதவியானது, தேவரீரே அருளிச்‌ செய்யும்‌ தரமற்றது. ஆதலினால்‌ பேசுதல்‌ வல்லீராக மாட்டீர்‌. உனக்கெப்படித்‌ தெரியும்‌ என்று கேட்பீரானால்‌, அடியேனோ நிகரற்ற நீசனானவனெனக்‌ கொண்டு செம்மை படுத்திய செயலே, அடியேற்கறிவித்தாகுமிதைக்‌ கொண்டே நிகரற்ற செயலென்கிறேனாகும் –

இங்கறிந்தேன்‌ இன்றாக எம்பெருமான்‌ செய்தநன்றி
துங்கமிகு பாடியனைத்‌ தோற்றுவித்தல்‌ – இங்கிலதேல்‌
தொல்லூழிக்‌ காலந்‌ தொலைந்தகீழ்‌ மேல்நாளும்‌
பல்லூழிக்‌ காலம்‌ பழுது –56-

எம்பெருமான்‌ அடியேனை உய்விக்க வேண்டியே பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைத்‌ தோற்றுவித்தான்‌ என்பதனை இன்றாக அறிந்தேன்‌. அப்படி அவரைத்‌ தோற்றுவிக்க வில்லையானால்‌, அடியேற்கு கீழ் கழிந்த காலமும்‌ இனி மேல்‌ வருங்காலமும்‌ பழுதாய்‌ முடிந்திருக்கு மன்றோ –

பழுதாகா வண்ணம்‌ பாடியன்தன்‌ சீலம்‌
விழுமிதென்‌ றுள்ளில்‌ விரித்தான்‌ – கழிபேர்‌
கருணையான்‌ அவ்வளவே வேறன்று கொண்டு
சரணடைந்தேன்‌ பாடியன்தா ளின்று–57-

ஆசாரிய ஸ்வாமிகள்‌, பிறர்‌ நலமே பேணும்‌ மிக்கப்‌ பெருங் கருணையால்‌ தன்னைச்‌ சார்ந்தாரை உய்வு பெறுத்தலில்‌ மிகவும்‌ ஊற்றமுடையவர்‌ ஆவார்‌ என்பதனை அடியேன்‌ உள்ளத்தில்‌ மிக விரியக்‌ காட்டி யருளினார்‌. இவ்வளவிலேயே அடியேன்‌ நிர்ணயித்து, இவர்‌ திருவடிகளில்‌ தஞ்சமென்றடைந்தேன்‌. இதனால்‌, அடியேன்‌ வாழ் நாளைப்‌ பழுதாகா வண்ணம்‌ மேற் கொண்டேன்‌ இன்றெ என்பதாம் –

இன்றயிதை மாமுநிதன்‌ தாளில்‌ இருந்து தொண்டு
நன்றியற்றும்‌ பாடியன் தன்‌ நாண்மலர்த்தாள்‌ – குன்றாத
ஆறுடன்‌ பேறாக வானில்‌ அரியயயன்‌
வீறுடன்‌ பெற்றேன்‌ விரைந்து–.58-

இன்றாக திருவயிந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டுள்ள மணவாளமாமுநிகள்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு நிலை நின்ற பேறென்றறிந்து தொண்டு செய்யும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய அன்று பூத்த தாமரை போன்ற அழகிய திருவடிகளையே அழிவற்ற ஆறுடன்‌ பேறாக வானில்‌ பெறும்‌ பயனின்‌ பெறுதற்கரிய பயனாக சிறப்புற்ற வகையில்‌ விரைந்து பெற்றேன்‌ என்பதாம் –

விரைந்து திருமலை யாழ்வார்‌ விரும்பி
வரமுநியை சீடராகக்‌ கொண்டார்‌ – வரமுநியும்‌
கோயில் அயிந்தை கொடு பாடியற் கொண்டார்
ஆய்விலடி யேற்கொண்டான்‌ ஆர்ந்து –59-

திருமலையாழ்வார்‌, தீவிரமாக மிக விரும்பி மணவாள மாமுனிகளை உபயாத்திரையும்‌ தமதாகக்‌ கொண்டு சிறப்பித்தார்‌. மணவாள மாமுனிகள்‌
திருவயிந்திபுரம்‌ விரும்பி கோயில்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உய்யும்படியே பெற்றார்‌. பாஷ்யமாசார்ய சுவாமிகளடியேனை அளவிடற்கரிய பேரன்பினில்‌ கைக் கொண்டார் —

ஆர்ந்தபுகழ்‌ அச்சுதனே வந்தான்‌ உலகார்யன்‌
தேர்ந்தறிய வல்லமே? தன்பெருமை – தேர்ந்தறிவ
தென்ப தொருபொருள்‌ நாடுறைவர்‌ யாரறிவார்‌?
பண்பனே பாடியற்குக் காப்பு –60-

நிரம்பிய புகழுடைய அடைந்தாரைக்‌ கைவிடாத எம்பெருமான்‌ பிள்ளை யுலகாசார்யராய்‌ வந்துதித் தருளுகையால்‌ இவர்‌ பெருமை நாமறியோ மென்பதொரு பொருளல்ல, உலகிலுள்ளார்‌ எவருமே அறிய முடியாத பெருமையாகக்‌ கருதக் கூடிய பண்புடையரான உலகா சாரியரே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்குக்‌ காப்பாவார் –

காப்பு வடக்குதிரு வீதிப் பிள்ளை காத்திலரேல்‌
காப்பெவர்‌ வாய் மொழி ஈட்டுரைக்கு – காப்பன்றி
நுண் பொருள்‌ முற்றவும்‌ நோக்குவித்தான்‌ பாடியற்கு
பண்பினெற்‌ கீந்தான்‌ பயன்‌–61-

வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்ளை சொன்னை திருவாய்மொழி ஈட்டின்‌ உரையைக்‌ காத்து எழுதவில்லையானால்‌, காப்பாவார்‌ யார்‌? இந்த வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை ஸ்ரீவைஷ்ணவத்தை காப்பது மட்டுமல்லாமல்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியருக்கு ஈட்டுரையை தன்னருளால்‌ இவரிடம்‌ வந்து சேரும்படி நோக்குவித்தார்‌. இந் நோக்கை பாஷியமாசாரியர்‌ தம் பரம கருணையாலே அடியேன்‌ திறத்தில்‌ பயனுறும்படி செய்தார் –

பயனாநம்‌ பிள்ளையின்றேல்‌ ஆழ்வார்கள்‌ பாக்கள்‌
பயனோயோ? உம்பர்‌ திவத்தொப்பாம்‌ – பயனுடைத்தே
ஈடின மில்லார் இறையின்பம் மில்லாதோர்
பாடியனே பெற்றான் தன்‌ சீர்‌–62-

உலகுக்குப்‌ பெரும்‌ பயனாக உயர்வற உயர்நலமுடையவனால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றவர்களாழ்வார்கள்‌ பதின்மரும்‌, இப்படி இவர்களால்‌ இறை யனுபவம்‌ கரைந்து வழிந்தவாறே அருளிச்‌ செயல்கள்‌ தொண்டர்க்கமுத மாயமைந்தன அருளிச்செயல்கள்‌. நம்பிள்ளை என்ற ஸ்வாமிகள்‌ அவதரிக்கவில்லையானால்‌ இந்த அருளிச்செயல்‌ பயனுடையதாகாது. இதன்றி தாழ்த்திக்கு முடிந்த நிலமான இருள்தருமா ஞாலம்‌ உம்பர்‌ திவத்தொப்பாம்‌ பயனுடைத்‌ தாயிற்று. இத்தகு அனுபவம்‌ நம்பிள்ளைகளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்‌ சார்ய சுவாமிகளுக்கு அருளப் பெற்ற அவ் வனுபவம்‌ தம் பரம கருணையால்‌ எமக்குக்‌ கொடுத்தார் –

தஞ்சீரை ஞானியர்கள்‌ தாம்புகழும்‌ வேதாந்தி
நஞ்சீயர்‌ தாம்பட்டர்‌ நல்லருளால்‌ – எஞ்சாத
ஆர்வமுடன்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ நூறுரு
ஆர்ந்தெற்கீந்‌ தான்பா டியன்‌–63-

தம்‌ கீர்த்தியை மெய் ஞானியர்கள்‌ கொண்டாடும்‌ தரமுடைய நஞ்சீயர்‌ என்றும்‌ வேதாந்தி என்றும்‌ பெயருடையார்‌, பட்டர்‌ திருவருளால்‌ மாறன்‌ மறையாகிய திருவாய்மொழியின்‌ நுண்‌ பொருள்கள்‌ முற்றும்‌ தம்மைச்‌ சார்ந்தார்‌ தமக்கு நூறுருவமையைக்‌ கொடுத்ததை, ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகள்‌ மேற்படியார்‌ அருள்களால்‌ தாம்‌ பெற்று தன் பேரருளால்‌ அடியார்க்கருளினார் –

அன்பின்‌ அலைகடல்‌ ஆயிரம்போக்‌ காழ்பொருள்‌
இன்பின்‌ இளங்குமரன்‌ எம்பிராற்‌ – கின்புருவன்‌
எட்டெழுத்‌ தெட்டுகாதை பண்ணின்‌ தனிச் சுவையன்‌
பட்டர்திருத்‌ தாள்பா டியன்‌–64-

எம்பெருமானார் திறத்தும்‌ மெய்யடியார் திறத்தும்‌ அலைகடலை யொத்த அன்புடையாரும்‌, இன்பம ளிக்கும்‌ இளங்குமரனும்‌, பிறவித்‌ துயரொழிய வேண்டுவார்க்கு துன்பமொழித்து எம்பிரான் பால்‌ சேர்த்து இன்பமளிக்கும்‌ எட்டெழுத்துக்கு அஷ்டச்லோகி என்ற நூலருளியவரும்‌ பண்ணின்‌ தனிக் கலைஞரும்‌ ஆயிர நாமத்துக்கு ஆழ் பொருளெல்லாம்‌ அருளிச்‌ செய்தவருமாகிய ஸ்ரீமத்‌ பட்டருடைய திருத் தாளை தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகளின்‌ திருவடிகளே அடியேற்குத்‌ தஞ்சமாகும் –

பாடியன்‌ எம்பார்‌ பதற்சேர்ந்‌ திதந் தெரிவான்‌
ஈடில்‌ சுவையன்‌ தமிழ் மறையின்‌ – நாடு புகழ்‌
நாலாயிரம் பாவில்‌ எம்பெருமானார் தாள் சேர்த்‌
தோலாத்‌ துணைச் சீட னாம்‌–65-

ஸ்ரீபாஷ்யமருளிச்‌ செய்த எம்ருமானார்‌ திருத்தாளினைச்‌ சேர்ந்து உய்யும்‌ இதந்தெரிந்தவரும்‌, தமிழ்‌ வேதமாகிய நாலாயிரம்‌ பாசுரங்களில்‌ ஈடிணை யில்லாச் சுவையுடைய பண்ணின்‌ தணிக் கலைஞருமாகியவரும்‌ உலகெல்லாம்‌ புகழும்படியான எம்பார்‌, சிஷ்யாச்சார்ய முறையில்‌ சிறிதும்‌ மாறுபடாதவராய்‌ எம்பெருமானாருக்கு துணைமிக்க சீடனுமாவார்‌. இவர்‌ திருவடிகளைப்‌ பற்றின ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ அடியேனை ஏற்ற குருவாகும் –

சீடன்‌ பெரியநம்பி சேர்ந்தசீடர்‌ ஐவர்‌
சேடனிரா மானுசனா சீர் தரும் -பாடியற்கும்
எம்பெருமான் உட்பட இந் நிலத் தேவர்க்கும்
இம்பர் நலமந்தமில் –66-

அர்ச்சாவதார மூர்த்திகளாய்‌ கோயில்‌ கொண்டுள்ள எம்பெருமான்களுட்பட ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளோடு நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி யற அனைவர்க்கும்‌ இவ் வுலகிலுள்ளவர்‌ கட்கும்‌ இங்குண்டான ஆநந்தம்‌ நிலைத்திருப்பதற்குக்‌ காரணம்‌, ஐவர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி பெரிய திருமலை நம்பி, திருமலை யாண்டான்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ இவர்களுக்கு சிஷ்யராய்‌ திருவனந்தாழ்வான்‌ அம்சமாய்‌ இராமாநுசராய்‌ வந்தவதரித் ததாலாகும் –

இலரேல்‌ இருநூ றகவைகளும்‌ ஈங்கே
நலமொன்‌ றுளதேயோ? நாட்டில்‌ – பலவென்‌?
பரமன் படைப்போடு பாடியன் எற்கோடல்‌
தரமன்று சத்திய மீது–67-

எம்பெருமானாரும்‌ அவருடைய மறு அவதாரமான மணவாள மாமுனிகளும்‌ இருநூறு ஆண்டுகள்‌ இந்த நிலத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்க வில்லையே யானால்‌ இந்த நானிலத்தில்‌ ஆனந்த மென்பதொன்றும்‌ உண்டோ? இல்லையேயாம்‌. நிற்க. பல பேசி என்‌? பரமன் படைத்த படைப்பும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனைக்‌ கைக் கோடலும்‌ முதலானவை பயனற்றுப்‌ போயிருக்கும்‌ இது சத்தியம்‌.

இதுவொப்ப தின்பமில்லை யாமுநர்த்‌ தாள்கள்‌
கதி பெற்றூர்‌ யாமுநர்த்‌ தாதை – கதி பெற்றேன்‌
இவ் விருவர்‌ தாங்களே ஆறுடன்பே றென்றபடியேன்‌
செவ்வி யுறச்‌ சேர்ந்தூய்ந்த னன்‌-68

ஸ்ரீமத்‌ ஆளவந்தார்‌ திருவடிகளையே ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளும்‌, இவர்‌ திருக் குமாரரான யாமுநாசார்ய ஸ்வாமிகளும்‌ தமக்குக்‌ கதி என்று பெற்றிருந்த இந்த இரண்டு ஸ்வாமிகளுடைய திருவடிகளையே கதி யென்றும்‌ ஆறும்‌ பேறுமா செவ்வி யுறச்‌ சேர்ந்துய்ந்தே னென்பதில்‌ இது ஓப்பதின் இல்லையாம் –

சேர்ந்தூய்ந்தோன்‌ சீராமன்‌ பங்கயக்கண்‌ ணன்தாள்கள்‌
ஆர்ந்த புகழ்ப்‌ பாடிய னம்பொனடிச்‌ – சேர்ந்துய்ந்தேன்‌
இவ்வளவே பேற்றினுக்கு ஏய்ந்த யானும் பெற்றனன்
கவ்வை யென்பால்‌ காட்டா தலை–69-

அடியேன்‌ நிரம்பிய புகழாளரான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌, மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌ இவ் விருவருடைய திருவடிகள்‌ அடைந்து உய்ந்தவர்‌. இந்த ஸ்வாமிகளின்‌ திருவடிகளே கதி யென்று சேர்ந்த இவ்வளவே பேறு பெறுதற்குரிய யாவும்‌ பொருந்தி விட்டன. ஆதலால்‌ துர் விஷயங்கள்‌ என்பால்‌ தலை காட்டாது –

தலைகாட்டாத்‌ தண்ணென்ற ஞானவவொழுக்‌ கங்கள்‌
தலைக்காட்டாத்‌ தண்ணென்ற முக்கும்‌ – நிலைநாட்டும்‌
வாள்நேர்‌ உயர்கதியும்‌ வள்ளலெனும்‌ பாடியன்தன்‌
தான்தர முந்தும்‌ தகவு–70-

மிகத்‌ தாழ்ந்தான பொய்யறியும்‌ தீயொழுக்கம்‌ அழுக்குடம்பும்‌ என்பாலும்‌ தலைக் காட்டாதவைகள்‌. ஒளி பொருந்திய நித்திய விபூதியாம்‌ உயர் கதி வள்ளலெனும்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தயையால்‌ தானே முந்தும்‌.

தகவில்‌ உலகின்‌ தகவுடையீர்‌ நீரேதகவென்னும்‌ தத்துவம்‌ வேட்கும்‌ – தகையீர்‌
தகுதியில்‌ தத்துவம்‌ நாயேனைக்‌ கொண்டு தகும் கூட்டம்‌ தந்தளித்தீர்‌ நீர்‌–71-

பெருமை யென்பதறியாத உலகில்‌ பெருமை மிக உடையீர்‌ நீர்‌. தயை யென்ற தத்துவம் தானே விரும்பும்‌ தயை யுடையீர்‌ நீர்‌. தகுதி என்பது இல்லாத அடியேனான கீழோனைக்‌ கைக் கொண்டு நிலத்தேவர்‌ கூடத்திலடியேனை இருத்தினீர்‌. இவற்றை யெல்லாம்‌ அடியேனைக்‌ கைக் கொண்டவாற்றானே அறிந்தேன் –

நீர்தந்த சேமம்‌ நிமலனாம்‌ நாதமுநி
பார் நிரம்பும்‌ பல் புகழ்ப்‌ பாவினத்தை – சீருநவே .
மீள்வித்த விஞ்சுசுவைப்‌ பண்ணமர்நா லாலிரத்தால்‌
ஆள்வித்த பாடியனன்றோ–72-

மிக்க சுவை யுடையதும்‌ பண்ணமைந்ததும்‌ உலகம்‌ நிறைந்த புகழுடையதுமான நாலாயிரத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரங்களைக்‌ ‘குற்றமன்றிக் குணம்‌ மிக்கவரான ஸ்ரீமந் நாதமுநிகள்‌, மறைந்து போனதை மீள்வித்ததைக்‌ கொண்டு அடியேனை ஆள்வித்தீர்‌. ஆதலால்‌, இத்தகைய பாஷ்யமாசார்யரான நீர்‌, அடியேற்கு எல்லாச்‌ சேமமும்‌ நீரன்றோ –

அன்றே குருகூர்ச்‌ சடகோபன்‌ தாளிணையும்‌ பொன்றாப்‌ புகழ்நிரம்பும் வாய் மொழியும்‌ –
நன்றுதவி பொந்நிலத்தில்‌ பொன்னிலத்தில்‌ மன்னு புகழ்ப் பாடியன்
என்னை நிகர்‌ யானென்றனன்‌–73-

திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வருடைய இரண்டு திருவடிகளையும்‌, அழிவற்ற இவரருளிச்‌ செயலாம்‌ திருவாய்மொழியும்‌ அடியேற்குய்யும்‌ வண்ணம்‌ உதவி, இருள்தருமாஞாலமாகிய இவ்வுலகிலும்‌ தெளிவிசும்பு திருநாடான பரமபதத்திலும்‌ நிரம்பப்‌ பொருந்தியுள்ள புகழாளரான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ ‘உனக்கு நிகர்‌ நீதா னென்றார் –

என்றறிவேன்‌ என்னாயன்‌ செய்தநன்றி முற்றவும்‌
இன்றறிந்தேன்‌ ஓரளவே சேனையர் கோன்‌ – தன் திறத்தில்‌
அன்பின்‌ அளவில்யான்‌ அங்ஙனமே என்பாலும்‌
அன்பின்‌ அளவில்லான்‌ என்று–74-

அடியேற்கு வகுத்த ஸ்வாமியான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு, அடியேன் திறத்தில்‌ செய்த நலம்‌ முற்றவும்‌ என்றும்‌ அறியப் போகாது. ஆயினும்‌ இன்றாக ஓரளவே அறிந்து கொண்டேன்‌. ஸ்ரீவைஷ்ணவ சமயாசார்யர்களில்‌ முதல்வரான ஸ்ரீமத் விஷ்வக்சேனரிடத்தில்‌ தாழுய்யும்‌ பொருட்டும்‌ பிறரை உய்வித்தல்‌ பொருட்டும்‌ அளவிறந்த அன்புடையாரானார்‌. அதே நிலையில்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு அளவு கடந்த அன்புடையரானார் –

என்றும்‌ மறவேன்‌ மறந்தேன்‌ இனியுணர்ந்தேன்‌
குன்றேய் குணக் கொண்டல்‌ பாடி – நின்ற புகழ்‌
கேள்வன் பொன்‌னாகத்து நீங்காத்தாய்‌ தாள்கட்கு
ஆளென்று புக்கான்‌ தனை–75-

குன்று போல்‌ மிக்க குணங்களால்‌ நிறைவாளனும்‌, கொண்டல் மேகம்‌ போல்வானும்‌ குறையேது மின்றி நற்குணக் கடலாக நின்ற புகழாளனான இறைவன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவான திருமகள்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உணராமையால்‌ மறந்தேன்‌; அடியேன்‌ உணர்ந்தேன்‌; இனி மறவேன் –

கேள்வனாகம்‌ நீங்காத்தாய்‌ தாள்கள்‌ சிரங்கொண்டு
கேள்வனையே தஞ்சமென்று கொள்ளும்‌ – மீள்வில்சீர்‌
பாடியன் தன் ஆர்ந்த புகழ் எக்காலும் பண் தொடுத்து
பாடுதற்‌ குற்றதொரு பற்று–76-

உலக நாயகன் தன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவின்‌ திருவடிகளைச்‌ சிரத்திற்‌ கணியாகக்‌ கொண்டு இவளைப்‌ புருஷகாரமாக, எம்பிரான்‌ தன்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமென்று கொள்ளும்‌, பழுதின்றி குணங்களால்‌ நிறைந்த புகழாளரான ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய கெளரவம்‌ மிக்க புகழை எக்காலத்தும்‌ பண்ணின்‌ இசையோட தொடுத்துப்‌ பாடுதற்குரிய தொரு உபாதானமாகும் –

பற்றோ சிறிதில்‌ பரன்சீர்க்‌ கடல்மூழ்கி
நற்றமிழ்நூல்‌ நான்களித்த இன்பமாரிப்‌- பெற்றியன்‌
வண்குருகை வந்தருளும்‌ மாறன்‌ மலரடியே
பண்புமிகும்‌ பாடியருக்‌ கின்பு –77

உலகியலில்‌ பற்று சிறிதுமின்றி பரனாம்‌ பெருமானுடைய குணக்கடலில்‌ மூழ்கி அந்த குணங்களையே உபாதாநமாகக்‌ கொண்டு, திருவாய்மொழி திருவிருத்தம்‌, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம்‌ என்கிற நான்குப்‌ பிரபந்தங்களளித்த வளமிக்க குருகூரில்‌ வந்தவதரித்த நற்குணக்கடலாகிய சடகோபருடைய திருவடிகளே ஸ்ரீமத்பாஷ்யமா சார்ய ஸ்வாமிகளுக்கு என்‌றும்‌ இன்பமேயாம் –

இன்புருவன்‌ பொய்கை எழிலியகல்‌ வார்கடல்நெய்‌
மின்சுடரா வேங்கடவற்‌ காட்டுமவன்‌ – பொன்னடிகள்‌
வன்சரணா வாழும்‌ அயிந்தைவரும்‌ பாடியன்தூள்‌
உன்சரணா நெஞ்சமே யுள்‌–78-

பகவதநுபவ இன்பமே வடிவான பொய்கையாழ்வார்‌, ஸ்ரீபூமியையே அகலாக, நிறைகடலை நெய்யாக விளக்கேற்றி இந்த ஒளிமிக்க விளக்கால்‌ திருவேங்கடத்தெம்பெருமானை உலகங்காணக்‌ காட்டும்‌ அவர்‌ திருவடிகளையே தமக்கு வாழ்வாக அவதரித்த, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ திருவடிகளையே நெஞ்சமே! உனக்குத்‌ தஞ்சமாக நினைவில்‌ கொள்ளுவாயாக –

உள்ளிருள்‌ நீக்கும்‌ ஒளிவிளக்‌ கேற்றுதற்கு
தெள்ளுதமிழ்‌ தேர்ந்து துணைக்கோடும்‌ – விள்ளரிய
கீர்த்தியார்‌ பூதத்தார்‌ தாளினையே பாடியற்கு
சீர்த்த பயன்‌ எற்கிவனே வாழ்வு–79-

உலகவருடைய அகவிருளைப்‌ போக்குதற்கு உள்ளத்திலுண்டான கோணலைப்‌ போக்கும்‌ தெளிந்த தமிழ் பாசுரமே நம்‌ செயலுக்கேற்ற துணை என்று தேர்ந்து துணையாகக்‌ கொண்ட, எவராலும்‌ புகழ்ந்து சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த பூதத்தாழ்வார்‌ திருவடிகளையே, தமக்குற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே, அடியேற்கேற்ற பேரின்ப வாழ்வாகும்‌ என்பதாம் —

வாழ்வான்‌ வலிய வழி கண்டேம்‌ நன்மைமிக்காள்‌
கேழில் திருக்‌ கண்ட பொன்‌ னாழி கண்ட – கீழ்வில்‌
தமிழ்த் தலைவன்‌ பொன்னடியே தன் சரண்‌ கொண்டான்‌
எமைக்காக்கும்‌ ஏற்ற வழி–80-

நலமந்தமில்லதொரு நாட்டில்‌ போய்‌ வாழ்ச்சி பெற, சிறப்புற்ற மார்க்கமொன்று நாம்‌ கண்டு கொண்டோம்‌. எல்லா நலன்களாலும்‌ மிக்காளரான திருக்கண்டதோடு பொன்னாழி கண்டேன்‌ என்று பாடிய எக்குறையுமற்ற பேயாழ்வாராகிய தமிழ்த்‌ தலைவன்‌ அழகிய திருவடிகளே தன்‌ சரண் என்று கொள்ளும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ எம்மைக்‌ காப்பதற்கு ஏற்ற வழியாகுமென்பதாம் –

வழியல்‌ வழி யனைத்தும்‌ வாள் கொண்டு வெட்டி
கழிய மிகு நல்வழியே காட்டும்‌ – பழுதில் புகழ்‌
பத்திசாரன்‌ தாளிணையே பாடியற்காம்‌ பரிசு
இத்தகையோன்‌ ஏற்ற பரிசு–81-

தேவதாந்தர சாதனாந்தர ப்ரயோஜநாந்தர முதலான வழியில்லா அல் வழிகள்‌ பலவும்‌, தம்‌ நாவென்னும்‌ வாளால்‌ அறத் தொலைத்து எம்பெருமான்‌ நாரணனே ஆறும்‌ பேறும்‌ என்பது முதலா மிக மிக நல்ல வழிகளனைத்தும்‌ தெளியக் காட்டி உலகவரை உய்வித்த திருமழிசைப்‌ பிரான் திருடியிணைகளே, ஏற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே எமக்குரிய எல்லாப்‌ பயனுமாவாரென்பதாம் –

பரிசறிவார்‌ பல்லோர்‌ பரிசறிவார்‌ ஈடே?
குருகை வரு வண்சட கோபன்‌ – திருவடியே
பாடியற்‌ கேற்ற நிதி பாடியன் சேர்ப்‌ பாடியனே
ஈடிணையில்‌ எந்தம்‌ நிதி–82-

உலகில்‌ உற்ற பயனறிவார்‌ தாம்‌ கண்டதுவே பயனென்பார்‌ பல்லோர்‌, ஆனால்‌ பாஷியமாசாரியர்‌ கண்ட பரிசே அனைவர்க்கும்‌ ஏற்ற பயனாகையால்‌ பயனறிவார்‌ இவர்க்கீடில்லை. திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபன்‌ திருவடிகளே நிதி போன்ற கதியாகும்‌ என்றருளியவர் ஸ்வாமி ராமாநுஜர்‌. இந்த ராமாநுஜர்‌ திருவடியைச்‌ சாரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமி ஈடும்‌ எடுப்புமில்லா நிதியாகும்‌ எம் தமக்கு –

நிதிகண்‌ டுரைசெய்தோன்‌ நீள்குன்றத்‌ தியாவும்‌
நிதியா அடியா ரடித்தூள்‌ – நிதியாக இன்பப்‌
பெருங்குழுசேர்‌ சேரலர்‌ கோனின்பம்‌
பாடியற்‌ கின்பமெற்‌ கு-83

திருவேங்கட மலையின்‌ தொடர்பே நிதி என்றும்‌, மெய்யடியார்‌ திருவடித் துகளே நிதியாகவும்‌, எம்பெருமானை நினைந் தின்‌புறும்‌ பெருங் குழுவே பேரின்பமாகச்‌ சேரும்‌ குலசேகரப்‌ பெருமானே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு இன்பம்‌. இந்த ஸ்வாமிகளே அடியேனுக்கு ஏற்ற ‘இன்பமென்பது –

எமக்குக்‌ கதியாவார்‌ பாடியரென்‌ போல்வார்‌
தமக்குங்‌ கதியாவர்‌ தாமே – குமைக்கும்‌ .
உலகென்று பல்லாண்‌டு ஓதும் விட்ணு சித்தர்‌
உலகிய லென்று பல்லாண்‌ டோதிய பட்டர் பிரான்‌– 84

இவ்வுலகின்‌ தன்மையால்‌ எம்பெருமான்‌ திருமேனிக்குக்‌ கண்ணேறு வரும்‌ என்று பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கும்‌ உற்ற காப்பாவார்‌. இத்தகு ஸ்வாமி எமக்குக்‌ கதியாவதன்றி, என் போல்வார்‌ கீழோர்‌ பலருக்குங்கதி தாமே யாவாரென்பதாம் –

உற்று நோக்கில் தேவியர் மூவர் உயர்ந்தோர் யார்
பற்றிப்‌ பரன் தாள்‌ உலகுய்ய – முற்றுணர்வை
ஒதியருள்‌ கோதை உயர் கதி கொள்‌ பாடியன் தாள்‌
மா துயர் மாய்க்கும் மருந்து–85-

எம்பெருமானுடைய தேவியார்‌ மூவராகும்‌. இவர்களில்‌ உலகவர்களுக்கு உபசரிப்பதில்‌ உயர்ந்தோர்‌ யாவரென உற்று நோக்கில்‌ உலகோர்‌ பரன் தாள்‌ பற்றி உய்வடைய இன்றியமையாச்‌ சாதனமான மெய் யுணர்வை இரண்டு ப்ரபந்தங்களில்‌ தெள்ளத்‌ தெளிய ஒதி யருளிய கோதை நாச்சியரே என்பது தேறும்‌. இத்தகு நாச்சியார்‌ திருவடிகளையே உயர்ந்த கதியாகப்‌ பற்றிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே பிறவித் துயர்‌ ஒழிக்கும்‌ மருந்தாகுமென்பதாம் –

மருந்தாய தொண்டர் தாள்‌ தொண்டர் தாள்‌ தூளே
பெருவடிவாப்‌ பேணிக் கொள்‌ பெம்மான்‌ திருவடி சேர்‌
பாடியன் தன் தாளிணையே ஒப்பில் பரகதிக்கு
ஈடில்லா நம்நல்‌ தவம்‌–86-

பிறவி நோய மாத்திரமன்று, அனைத்து நோய்க்கும்‌ மருந்தாவது தொண்டரடித் தூளே யாகும்‌. இத் தகுத்‌ தொண்டரடிப்‌ பொடியே தமக்கு மேம்பட்ட திருமேனியாக விரும்பிக்‌ கொண்டதையே நிரூபகமாக உடையவர்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வாராகும்‌. இந்தப்‌ பெருமை யுடைய இவ் வாழ்வார்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமாகச்‌ சேர்ந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய திருவடி-யிணையே ஒப்பற்ற நலமந்தமில்லதோர்‌ நாட்டிற்குப்‌ போவான்‌ ஈடிணை யில்லா நம்முடைய நல்ல தவமாகும்‌ என்பதாம் –

நற்றவம்‌ மொன்றுமிலேன்‌ நாரணன்‌ தாள் பணியேன்‌
உற்ற உறவறியேன்‌ ஊழ்வினையேன்‌ — பற்றி நின்‌
தாள்பணியேன்‌ தண் கழலே பொய்யன்‌ புறந் திரிவேன்‌
ஆள் கொண்டாய்‌ கொண்டதுவே மெய்‌–87-

நலமந்தமில்லாதோர்‌ நாடுபுகுவான்‌ பொருட்டு உலகவர்‌ செய்வதாகிய நல்ல தவங்களொன்றும்‌ செய்திலேன்‌. இதைத்‌ தருவானான நாராயணன்‌ திருவடிகளைப்‌ பணிவதும்‌ செய்திலேன்‌. இவைகளின்‌ காரணமாக ஊழ்வினை வயத்தவனாய்‌, மெய்யுணர்வு மறைக்கப்‌ பெற்றவனாய்‌ பரனுக்கும்‌ எனக்கும்‌ உள்ள உறவுகளை ஒன்றும்‌ அறியேன்‌. இந்தக்‌ குறைகளெல்லாம்‌ தீர்த்து தெளிய பரம காருணிகரான தேவரீர்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றி பணியேன்‌. இன்னும்‌ பொய்யனாய்‌ தேவரீரையும்‌, எம்பெருமானையும்‌ விட்டுப்‌ புறந் திரியுமவனான அடியேனை மேல்‌ விழுந்து அடிமை கொண்டதுமன்றி, மெய்யாம்‌ வகையில்‌ மேல்‌ செய்வனவற்றைச்‌ செய்து அருளினீர் –

மெய்யார்‌ திகிரியையும்‌ மேவார்‌ செருக்களத்தில்‌
உய்யா வகை முழங்கும்‌ ஒண்ணந்தும்‌ – மெய்யாரும்‌
எட்டெழுத்தும்‌ புண்டரமும்‌ இன்னருளே நாமமும் நின்‌
பட்டழுந்தும்‌ பங்கயமீந்‌ தாய்‌–88-

ஒளிப் பிழம்பாகத்‌ திகழும்‌ திருமேனியை யுடைய சுதரிசனாழ்வானையும்‌, விரோதிகள்‌ நிறைந்துள்ள யுத்தக் களத்தில்‌ புகுந்து, விரோதிகள்‌ குடல்‌ குழம்பும்படி முழுங்கும்‌ பாஞ்ச சந்நியாழ்வானையும்‌ முறையே வலது தோளிலும்‌ இடது தோளிலும்‌ பொறித்து உண்மை யறிவினை விளைப்பதற்கு இன்றியமையாத திருவஷ்டாக்ஷர மந்திர முதலான வற்றையும்‌ திருமண்‌ காப்பையும்‌ திருவாராதன தெய்வமான தேவரீருடைய திருவடி நிலையும்‌ ஈந்தருளினீர் –

(ஈந்த) அருளே அருள் தந்த அன்னே சுரக்கும்‌
பொருளே இணையடிகள்‌ பொன்னே – மருவார்கள்‌
அங்கம் அடரும் அயிந்தை வாழ் அண்ணலே
இங்கு இறைவர் ஆள்கவத்‌ தா–89-

இவையெல்லாம்‌ தந்த, அருளே ஒருவடி வென்னலாம்படியான ஸ்வாமிகளே! அடியேன்‌ கடைத்தேற அருளைத் தந்த இறைவன்‌ போன்றவரே! மிகவும்‌ சுரந்து மிக உண்டான செல்வமே! பொன் போலுமழகிய இணைந்த திருவடிகளை யுடையீரே! விரோதிகளைப்‌ பறிப்பது போல்‌ ஒழிக்கும்‌ திருவயிந்தையில்‌ கோயில்‌ கொண்டுள்ள உற்ற ஸ்வாமியே! மேன்மேலும்‌ இங்ஙனமே ஆள்வீராக!

நல்குங்‌ கமலநேர்‌ நாண்மலர்த்‌ தாள்தொடங்கி
பல்சுவைய மேனி பரியந்தம்‌ – பல்சுவையில்‌
பாடிப்‌ பரவிய பாணன்சேர்‌ பாடியனே
ஈடில்‌ கதியாம்‌ எமக்கு–91-

நலமனைத்தும்‌ நல்குந் திருமகள்‌ தோற்றத்துக் கேதுவாகிய அன்று பூத்த தாமரைப்‌ போன்ற திருவடி மலர்‌ தொடங்கி, மிக்க பேரழகுக்குக்‌ கொள்கலமாகிய திருமேனி பரியந்தமாக பல விதமான பாட்டுச்‌ சுவையுண்டாம்படி பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரைத்‌ தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே! நீரே எந்தமக்கு ஒப்பற்ற கதியாகுமென்பதாம் –

எமக்குங்‌ கதியுண்டே எண் பதினாறு தலம்
தமை வாழ்த்தியதே தகும்பே றமைக்கும்
பரகாலன் தாளிணையே தஞ்சம் கொள் பண்பன்
அரவிந்த மன்ன திருத்தாள் –92-

திருமங்கையாழ்வார்‌ எண்பத்தியாறு திவ்விய தேசங்களை வாழ்த்தி, அதுவே பெறும்‌ பயனான நலமந்த மில்லாதொரு நாடென்றமைக்கும்‌ இவர் திருவடிகளே தஞ்சமென்று கொள்ளும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தாமரை போன்ற திருவடிகளே ஏதிலனான அடியேற்கு கதியாகு மென்பதாம் –

தாளிணைகள்‌ தானவர்‌ தேவர்‌ தொழுதிறைஞ்ச
நாள்தொறும்‌ மாமுனி வாழ்த்துரைக்க – நாள்தொறும்‌
பாவியேனைக்‌ கைக்கொண்ட பாடியன்‌ நாவழுத்த
தேவனாதன்‌ சேரயிந்‌ தை–93-

திருவயீந்த்ர புரமானது தினந்தோறும்‌ தானவர்களும்‌ தேவர்களும்‌ வந்து வந்து தொழுதிறைஞ்சவும்‌, ஸ்ரீமன்‌ மணவாளமாமுனிகள்‌ நாள்தொறும்‌ வாழ்த்துரைக்கவும்‌, பாவியேனான அடியேனையும்‌ கைக்கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ நாவினால்‌ நாள் தொறும்‌ நவின்று வழுத்தவும்‌ தேவனாதன்‌ கோயில்‌ கொண்ட தலமாகும் –

அயிந்தையில்‌ பாடிய யாதறியா நாயேன்‌
கயவனெனைக்‌ கண்டுகந்‌ தன்பின்‌ – நயந்தழைத்த
நன்மைமுற்றும்‌ ஊட்டினையே! நாண் மூன்றில்‌ அன்றின்‌றும்‌
நன்மைமிகும்‌ பேறனைத்தும்‌ நல்கு–94-

திருவயீந்திரபுரத்தில்‌ நித்திய வாசம்‌ செய்யும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யாசார்ய ஸ்வாமிகள்‌, உண்மை உணர்வில்‌ ஒன்றும்‌ அறியாத கீழோனானக்‌ கயவனாகிற என்னைக்‌ கண்டு செளசீல்யத்தால்‌ உகந்தருகில்‌ அழைத்து நன்மை யென்பதனைத்திலும்‌ மேம்பட்ட நன்மையை முற்றூட்டாக மூன்று நாளில்‌ அக் காலத்து ஊட்டி யருளினீர்கள்‌. அது போல்‌ நன்மை மிகும்‌ பேறனைத்தும்‌ இன்று நல்குவீராக –

நல்கும்‌ நலமிக்க ஆசார்யர்க்‌ கெல்லைநீர்‌!
பல் புகழில்‌ மிக்‌க புகழ்ப் பாடியர் நீர் -அல்வழியில்‌
செல்வேன்‌ சிரத்தில்‌ அடி சூட்டிச் சீடர்களில்‌
எல்லையிவ லென்னும்‌ பேர் –95-

பல புகழில்‌ மிக்க புகழாளராம்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ நீராகும்‌. அதே நிலையில்‌ ஆசார்யரென்பவரில்‌ முடிவில்‌ உயர்ந்தவரெனத்‌ தக்கவர்‌ நீரே. அடியேனோ நன்மைக்கு மாறான அல் வழியிலேயே செல்பவன்‌. இத் தகு அடியேனுக்கு சிரோ பூஷணமாக தேவரீர்‌ திருவடித் தாமரைகளைச்‌ சூட்டி அலங்கரித்தருளி சிஷ்ய வர்க்கத்தில்‌ இவன்‌ முடிவானவனென்னும்‌ பேர்‌ நல்குவீராக –

போ் பிதற்றிப்‌ பெற்றேன்‌ பெறும் பரி சங்ஙனமே
சீர்ப் பாடிப்‌ பெற்றேன்‌ சிறப்பெல்லாம்‌ – காரேய்‌
கருணை தனைக்‌ கண்டு கலக்கங்கள்‌ தீர்ந்தேன்‌
இருணிலத்தில்‌ பாடியன்தாள்‌ ஏய்ந்து–96-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ திருநாமத்தைக்‌ கண்டவாறு பிதற்றியும்‌ மெய்யடியார்‌ கூட்டத்துப்‌ பெற வேண்டிய பகவதனுபவ பயனைப்‌ பெற்றேன்‌. அவ்வாறே அவர்‌ சீர்களைப்‌ பாடி உய்வு பேற்றுக்குரிய சிறப்பெல்லாம்‌ பெற்றேன்‌. கைம்மாறு கருதாத கொண்டல்‌ முகில்‌ போல்‌ இந்த இருள் தரு மா ஞாலத்தில்‌ அவர் தம்‌ கருணைப்‌ பெருக்கத்தைக்‌ கண்டு உய்வகையில்‌ குறை யுண்டாக்கும்‌ கலக்கங்கள்‌ தீரப் பெற்றேன்‌. இவ்வளவும்‌ இவர்‌ தம்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதலாகும் –

ஏய்ந்த கருணைவடி வானோன்‌ இவனன்றே
வாய்ந்த ஒழுக்கநிலை நின்றோனே – மாய்ந்து
அறிவின்மை முற்றறிவின்‌ பாடியன்‌ மிக்கோன்‌
பிறிது பெறுவ தெவன்‌?–97-

ஒழுக்கத்திற்‌ காணுமிடத்து மிகப் பொருந்திய கருணையே வடிவானவர்களாகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே யாவர்‌. இந்த கருணைக்கேற்ற ஒழுக்க மிக்காரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யரே தான்‌. அறிவின்மை தொலைந்து முழு மெய்யுணர்வின்‌ மிக்கவரென்பதில்‌ குறை யேதுமில்லாதவர்‌. இத்தகு பண்புகளிருக்க இதில்‌ மிக்க பிரிதொரு பண்பு பெறுவதெது –

எவன்தான்‌? அயிந்தையில்‌ ஈடிணை யில்லான்‌
எவன்தான்‌? மதுரகவி நிட்டை – எவன்தான்‌?
வரயோகித்‌ தாள்சேர்ந்த தேவநாதன்‌ சேயாம்‌
பரனாம்‌ இவனெங்‌ கதி–98-

திருவயிந்திரபுரத்தில்‌ ஈடிணையில்லா ஆசார்யர்யவரே? மதுரகவி நிட்டையை மேற்கொண்டிருந்தவர்‌ யாவரே? ஸ்ரீமன்‌ மணவாள மாமுனிகளையே கதியென்று பற்றிய தேவனாதாசார்யர்‌ திருக்குமாரரென்ற சிறப்புற்றவர் யாவரே? இத்‌ தன்மைகளால்‌ மேன்மை யுள்ளவராகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ ஆகிய நீரே எங்களுக்குக்‌ கதி யாவீர் –

கதியொன்‌ நிலதென்போல்‌ காசினியில்‌ யாது?
மதிதான்‌ இலதில்‌ உலகில்‌ – எதுவொன்‌
றிதுவேயோ? பாடியற்குப்‌ பற்றுதற்‌கேது
இதுபோல்வார்‌ யாரே? இனி–99-

யாரும்‌ பற்றத் தகாத கதியற்றவன்‌ என்போல்வாருலகில்‌ யாவர்‌? அறிவின்மையில்‌ இந்நில உலகில்‌ என் போல்வார் யாரே? இனி இத்தகு நிராதீன நிலைகளே ஸ்ரீமத்பாஷ்யமாசார்யர்‌ தனக்குத்‌ தஞ்சமெனக்‌ கருதி கைக் கொள்வதற்குங்‌ காரணமாயினவாம்‌. இதனால்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு உலகில்‌ நிகரில்லை யென்பதாம் –

இனிமறவேன்‌ செம்‌ ப்க்கொண்‌ டிசைத்து
வினவி முறுவல்‌ மிகப்பூத்து – நனிமகிழ்ந்து
செந்தா மரைக்கண்‌ கடைக்கணித்த சீர்மைதனை
அந்தோ யான்‌ உய்வழியீ தென்று–100-

அடியேனை ஒரு பொருளாக மதித்து எதிரிலமரச்‌ செய்து சிவந்த பவளம்‌ போன்ற செவ்வாய்க்‌ கொண்டு மந்திரார்த்தங்களைச்‌ சொல்லி வினாவுதல்‌ செய்து, தக்க விடையளிக்க வெண்முறுவல்‌ மலரச்‌ சிறு நகைபுரிந்து மிக்கபேருவகை கொண்டு செந்தாமரை யொத்த திருக்கண்கள்‌ கொண்டு கடைக்கணித்து உகந்த, இந்த கெளரவச்‌ செயலை அந்தோ! அந்தோ! இவைகளே அடியேற்கு உய்யும்‌ மாழ்க்கமென்று எக்காலும்‌ நினைவிற்கொண்டு இனி எக்காலும்‌ மறவேன்‌ என்பதாம் –

என்றும்நின்‌ தாளிணைக்கண்‌ சென்னி யிலக்காகும்‌
என்றும்‌ அருண்மொழியுள்‌ ளெஞ்சாது – நின்றருளும்‌
சேமத்‌ திருமேனி செவ்விக்கள்‌ ஈன்றிலகும்‌
யாமிழைத்த தென்ன தவம்‌? –101-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளே! தேவரீருடைய திருவடித்‌ தாமரைகளே அடியேன்‌ சென்னிக்கு இலக்காக அமைந்துள்ளன. தேவரீர்‌ கருணை கொண்டு அருளிச்‌ செய்த அருள் மொழிகளே உள்ளத்தில்‌ குறைவற்று என்றும்‌ நின்‌று பிரகாசிக்கும்‌. தேவரீர்‌ திவ்ய மங்கள விக்ரஹமே அழகிய கண்களில்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இத்தகு, சீரிய பயன்களைக்‌ கொண்டிருக்க யாம்‌ எத்தகைய தவமியற்றினேனோ? தெரியாது.

தவமிழைத்தோர்‌ யாரே? தமியன்போல்‌ கல்லா
தெவையெனைத்தும்‌ கேட்டுத்‌ தெளிந்தார்‌? – யவரேயோ?
பாடியன்தன்‌ னின்னருளே யிங்கன்‌ பகர்வித்த
ஈடில்லா நீசனெனை ஏற்று–102–

தனித்து கதியற்று நிற்பவன்‌ யான்‌. இத்தகையன்‌ பெருந்தவம்‌ செய்த அடியனைப்‌ போல்‌ யாரே? இனி முறையாகக்‌ கல்லாமலே சீரிய நூல்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்தோர்‌ யார்‌? ஐயந் திரிபுகளாகிற குற்றங்களைந்து தெரியக் கற்பிக்கும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளருள்‌ ஈடில்லா நீசெனனை ஏற்று இவ் வண்ணம்‌ சொல்லும்படி செய்தது –

ஏற்றேன்‌ பிராட்டி திருவருளால்‌ எம்பிரானை
ஏற்ற னிவனருளால்‌ பாடியனை – ஏற்பதும்‌
ஏலாத தென்பதிலை பாடியன்தன்‌ இன்னருளால்‌
ஏலாவை குந்தமுத லேற்பு–103-

கருணை வடிவாயமைந்த பிராட்டி கடாக்ஷத்தால்‌ எம்பிரானை கதியாக ஏற்றேன்‌. இவன்‌ தன்னின்னருளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியனை கதியாக ஏற்கப்‌ பெற்றேன்‌. இவனருளால்‌ பேறு பெருவதெவையுளதோ அவைகளில்‌ இன்னது ஏற்க முடியும்‌ இன்னது ஏலாதது என்பதில்லை. ஏற்றரும்‌ வைகுந்த முதலாக வுள்ளதனைத்தும்‌ ஏற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றோம்‌ என்பதாம்‌-

ஏற்பதே நின்‌ தாளின்றி என் சிரத்தால்‌ வேறொன்றை
ஏற்றறேல் நின்‌ சார்பன்‌ றயலொன்றை – ஏற்பதே?
தாளருமை கண்டேன்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌
ஆளுடையான்‌ கண்ட வாறு–104-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளின்‌ அருமைப் பாட்டை அறிந்தவன்‌. எவ்வாறறிந்தேனென்னில்‌? திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபனாம்‌ நம்மாழ்வாரை எம்பெருமான்‌ நோக்கி, நீர்‌ விலக்ஷணமான மோக்ஷமென்று அடிக்கடி சொல்வீரே அந்த மோக்ஷம்‌ தந்தோமென’ ‘அந்த மோக்ஷம்‌ வேண்டா, தேவரீர்‌ திருவடிகளை சிரசிலணிவித்தருள வேண்டு மென்றார்‌. அதைப் போல்‌ தேவரீர்‌ திருவடிகள்‌ சார்பன்றி வேறொள்றை ஏற்க மாட்டேன்‌ என்பதாம் –

ஆறும்பே றென்றறியார்‌ ஆசிரியா்‌ இந்நிலையில்‌
மாறில்‌ மறைமுற்றும்‌ ஐயபின்றித்‌ – தேறியநீர்‌
ஏதிலன்‌ என்னை இருயென்று முற்றுணாத்தும்‌
கோதிலருள்‌ உந்தங்‌ குணம்‌.–105-

உலகில்‌ ஆசாரியனென்று தம்மைச்‌ சொல்லிக்‌ கொள்ளுமவர்கள்‌ இன்னது சாதனம்‌, பயன்‌ இன்னது என்று வேறுபடுத்தி அறிய மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ தேவரீர்‌ வேதங்களும்‌ இவைகளின்‌ சாரமான மந்திரங்கள்‌. இவைகளில்‌ பொருள்களை ஐயந் திரிபற நன்குணர்ந்தவர்‌ நீரே. இத்‌ தகுதி யுடைய நீர்‌ அடியேனோ மூடர்களில்‌ முதல்வன்‌. இத்தகைய அடியேனை எதிரிலிரு என்று இருத்தி அனைத்தும்‌ ஐயம்‌ திரிபற உணர்த்தினீர்‌. இதனால்‌ உந்தம்‌ குணம்‌ யாதுங்‌ குறைவில்லா அருளொன்றேயாக அறிகிறேன்‌.

குணந்திகழ் சீர்க்‌ கொண்டலே பாடியனே தூயோய்‌
மணமலிந்த தாமரைத்‌ தாளோய்‌! – குணமலிந்த
சீநிவாசன்‌ தாளிணையோய்‌! தேவநாதன்‌ கதனேயோ!
கோபாலன் சொல்லமுதக் கூட்டு -105-

குணங்களால்‌ கைம்மாறு கருதாது பெய்யும்‌ கொண்டல்‌ மேகம்‌ போன்ற ஸ்வாமிகளே! ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ என்ற திருநாமமுடையவரே! மணமே உபாதாநமான தாமரையே போலுந்‌ திருவடிகளை யுடையீரே! அடைந்தாரை உய்விக்கும்‌ நற்பண்புகளே திருமேனியான ஸ்ரீநிவாச ஆசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடிகளாகவே இருப்பவரே! ஸ்ரீமத்‌ தேவநாதசார்ய ஸ்வாமிகளின்‌ திருக்குமாரரே! ஸ்ரீமத்‌ கோபாலாசார்ய ஸ்வாமிகளின்‌ சொல்லமுதமே திருமேனியாக வுடைய ஸ்வாமிகளே என்றவாறு.

கூட்டமு துள்ள தினிமையொருங்‌ கேக்கூட்டி
நாட்டும் தெளி யுணர்வை ஐயமின்றி – நாட்டிச்
சிரத்தில்‌ பரன் தாளும்‌ பாடியன் தாள்‌ சேர்க்கும்‌
வரமிக்க வைகுந்த வான்‌–107–

முன் தோன்றல்களான ஆழ்வாராசார்யர்களாகிய சான்றோர்களுடைய கூட்டமுதின்‌ இனிமையை அடியேனுள்ளத்‌ தொருங்கே கூட்டி இதன்‌ பயனான மெய்யுணர்வை ஐவந்திரிபின்றி நிலை நிறுத்தியும் இதன்‌ பயனாக திருமகள்‌ கேள்வன்‌ திருவடித் தாமரைகளையும்‌, ஸ்ரீமத் பாஷ்ய மாசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடித் தாமரைகளையும்‌ அடியேன்‌ சிரோ பூஷணமாக சேர்த்தது யாதோ எனின்‌? ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ அபிமானம்‌ பெற்ற, இவனுக்கு நாம்‌ முற்பட்டோமாக வேண்டுமென்று சிறப்புக்களனைத்தும்‌ ஒருங்கே யுடைய வைகுந்தமென்கிற பரமபதமானது, ‘சிரோபூஷணத்‌ தோடு கூடிய இவனை நம்மிடத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டு” மென்ற அவாவோடு இருத்திக்‌ கொண்டது என்பதாம் –

வானாளும்‌ சீர்சீநி வாசன்‌ மலரடியைத்‌
தான்சேர்‌ தகவுடைய பாடியன்தன்‌ – தேன்பெருகு
செந்தா மரையிணையே சிந்திப்ப தென்பேறா
அந்தோ! அவனருளும்‌ சீர்‌–108-

வைகுந்த வானாட்டில்‌ ஆட்சி செலுத்தும்‌ சிறப்புகளனைத்தும்‌ ஒருங்கே பொருந்திய ஸ்ரீமத்‌ ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமிகள்‌ தாமரை போன்ற திருவடிகளைச்‌ சேர்ந்த கருணையே வடிவான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய செந்தாமரை யொத்த திருவடி யிணையையே சிந்திப்பதையே அடியேனுடைய பரம பிரயோஜனமாக உடைய அடியேனை, ஆசார்ய ஸ்வாமிகள்‌ தம்‌ கருணையால்‌ ஐயோ!” என்றிரங்கி யருளும்‌ அருளையே அடியேன்‌ சிறப்பாக உடையவனாவேன்‌ – என்பதாம் –

இருள் தரு மா ஞாலத்து இயங்கும் உயிர்கள்
அருந்துயரில்‌ ஆழ்ந்தழுந்தல்‌ உண்மை -அருந்துயர்தீர்ந(து)
அந்தமில்பே ரின்பமுற ஆசார்ய னைத்துதி நூற்‌
றந்தாதி யன்றோ கதி.–நூற்‌ பயன்‌

இருள்தருமாஞாலமாகிய லீலா விபூதியில்‌ நிரந்தரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஆத்மாவானது, எய்தற்கரிய நிரம்பிய துன்பத்தில்‌ அழுந்துதலென்பது உண்மை விஷயமாகும்‌. இந்த துன்பத்தில்‌ மீண்டு எல்லையில்லா இன்பமேயான பேரின்பமெய்த ஆசார்யனிடத்து தான்‌ பெற்றபேற்றினைஎண்ணித்‌ துதிப்பதேயாகும்‌–அதற்கு வழி ஆசார்ய நூற்றந்தாதியை இடைவிடாமல்‌ அநுசந்திப்பதே ஏற்ற கதியாகும்

சுபமஸ்து

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி சின்ன ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ –ஸ்ரீ க.கி. யாமுநாசார்ய ஸ்வாமிகள் –

ஆத்ரேய ராமாவரஜ குரோர்‌ புத்ரம்‌ ததாஸ்ரயம்‌
வேதாந்த த்வய ஸம்பந்தம் யாமுனம் ப்ரணமாம்யகம் –

மடஞ்சால்‌ மநனே வல் வினைகள்‌ சிந்தும்‌
உடைந்தோடும்‌ ஊழ் வினைசால்‌ சென்மம்‌-தடஞ் சூழ்ந்த
பூதூர் மன்‌ தன்னருளும்‌ பொன்னருளும்‌ நின்வயமாம்‌
யாதானும்‌ யாமுநனென்‌ றேத்து

சீராரும்‌ திருவயிந்தை திகழவந்தோன்‌ வாழியே
சேயாய்பா டியர்க்கவன்தன்‌ தாளடைந்தோன்‌ வாழியே
நீராரைப்‌ பசி உத்தி ராடத்தோன்‌ வாழியே
நீள்சரணா எதிபதிதன்‌ னிணையடியோன்‌ வாழியே.
பார் புகழும்‌ பூருவர் தாள்‌ பற்றுமவன்‌ வாழியே
பதின்மர் அருள் மொழி கோதை பரவுமவன் வாழியே
ஏரார்‌ உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
எஞ்ஞான்றும்‌ யாமுனன் தாள்‌ எம் கதியா வாழியே

வாழி திருப்பாடி யன்தன்சீர்‌ மல்கிய மாதகவால்‌
வாழும்‌ சிரீயா முநனென்‌ நிறைகுரவன்‌ – வாழியவன்‌
மாறன்‌ பிறைப்‌ பொருளும் ஆகமத்தின்‌ மான்‌ பொருளும்
தேறும்‌ படி யுரைக்கும்‌ சீர் –

சேவிப்போர்‌ பிறப்பறுக்கும்‌ திருவடிகள்‌ வாழியே
செம்பொன் செய்மலை வெயிலேய் செம்பட்டும் வாழியே
பூவியலும்‌ நாபியொடு புரிநூலும்‌ வாழியே
பொருவரிய தோளிணையும்‌ புரிகண்டம்‌ வாழியே
பாவியரும்‌ உய்யப் பணிக்கும்‌ பவள வாய்‌ வாழியே
பாண் மதிஏய்‌ திரு முகமும்‌ கருணை விழி வாழியே
நீவியெனும்‌ குரவரருண்‌ மொழி உளத்தோன்‌ வாழியே
நீள் புகழ் யாமுநன் தாள்‌ நினைப்போரும்‌ வாழியே

அடியார்கள் வாழ அரங்கம் முதல் வாழ சடகோபன்‌ தண்டமிழ்நூல்‌ வாழ-படியிலிரு
மன்னும்‌ மறைப் பயிற்றும்‌ யாமுனனென்‌ தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்‌ டிரும்‌.

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி யாமுநாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம்

ஸ்ரீ கச்சிக் கிடாம்பி பெரிய ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ -ஸ்ரீ க.கி. பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகள்‌

ஆத்ரேய ஸ்ரீநிவாசார்ய பதபங்கே ரூஹாஸ்ரயம்‌
தேவநாத குரோர்‌ ஸூனும்‌ ராமாநுஜ குரும் பஜே.

ஏங்கும்‌ மடநெஞ்சே! எம்பெருமான்‌ ஈந்தநிதி ஒங்கு புகழ்‌ பாடியன்தன்‌ ஒண்மலர்த்தாள்‌-தேங்கிய நீர்க்‌
கண்டா மரையிணைகள்‌ கைத்தாமரை யிணைகள்‌ உண்டாய் காலமெல்லாம் உள் –

அநவரதம்‌ தெளி சிங்கர்‌ அடிதொழுவோன்‌ வாழியே
அருள்ஸ்ரீ னிவாசார்யன்‌ அடைந்துயந்தோன்‌ வாழியே
அநகன் தேவ நாதாரயன்‌ அருஞ்சேயோன்‌ வாழியே
ஆதிரைநாள்‌ புரட்டாசி அவதரித்தோன்‌ வாழியே
அனைத்தறிந்த கோபாலர்‌ அடைந்தறிந்தோன்‌ வாழியே
அரங்கம் முதல் உகந்தருள்‌ மாநிலத் தன்பன்‌ வாழியே.
அநர்த்தமிலா(து) உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
அமிந்தைவர முனி தாள்சேர்‌ பாடியன் தாள்‌ வாழியே-

எதிபதிதன்‌ இணையடியே கதியுடையோன்‌ வாழியே
ஈடில்லா ஈடுதனை எடுத்துரைப்போன்‌ வாழியே
பதின்மருடன்‌ கோதைமொழி பரிந்து கற்றோன்‌ வாழியே
பார்புகழும்‌ பூருவர்தாள்‌ பற்றுமவன்‌ வாழி
மதுரகவி நிட்டையையே நிட்டை கொள்வோன்‌ வாழியே
வன்முடும்மை இருகுரவர்‌ மலரடியோன்‌ வாழியே
மதிமிகுந்த வரமுனிதாள்‌ வாழ்த்துமவன்‌ வாழியே
பாடிய ராமாநு சாரியன் தாள்‌ வாழியே

வாழிசிரீ நிவாசார்யன்‌ கோபாலன்‌ மாதகவால்‌
வாழும்சீ பாடிய மாசார்யன்‌ – வாழியவன்‌.
மாறன் மறைப்பொருளும் பாடியத்தின் மான் பொருளும்
தேறும்‌ படியுரைக்கும்‌ சீர்‌.

சென்மம்‌ தவிர்த்தருளும்‌ சேஷிகள்‌ வாழியே
சேமஞ்செய்‌ பொன்னாடைத்‌ திருநாபி வாழியே
தன்மம்‌ விரிந்தணைய திருமார்பும்‌ வாழியே
தரணிதனில்‌ அஞ்சலெனும்‌ கரதலமும்‌ வாழியே
நன்மருந்து பொழிமதிபோல்‌ திருமுகமும்‌ வாழியே
நளினஞ்செய்‌ கருணை மொழி கண்ணினையும்‌ வாழியே
மென்மை குவிந்தனைய திருமேனி வாழியே
மெய்மைஇரா மாநுசன்தாள்‌ மேன்மேலும்‌ வாழியே.

ததியர்கள்‌ வாழ தலநூற்‌(று) எண்வாழ
மதிநலஞ்சால்‌ மாறன்‌ மறை வாழ – பதியார்ந்த
மண்ணுலகும்‌ வாழ சிரீ பாடியமா தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டி டிரும்

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம் –

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அலர்மேல் மங்கை யந்தாதி-

April 23, 2026

ஸ்ரீ அலர்மேல்மங்கையந்தாதி
முதல் நூலான இந்நூல் கட்டளைக் கலித்துறையிலான பாயினத்தாலாயது.இஃது, நான்கு அடிகளையுடையதாய் அடிதோறும் ஐந்து சீர்களோடு கூடி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் இறுதிச்சீர் கூவிளங்காயும் கருவிளங்காயுமாக ஏதேனும் ஒன்றைப் பெற்று ஒவ்வொரடியும் முதற்சீர் நேரசையாயிருந்தால் ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்தும், நிரையசையாயிருந்தால் பதினேழ் எழுத்துக் கணக்கோடு ஈற்றடியின் இறுதிச்சீரின் ஈற்றசை ஏகாரம் பெற்று முடிதல் வேண்டும். உதாரணம்,
அடியடி தோறும் ஐஞ்சீ ராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.”என்பது இலக்கண விதியாகும்.

இங்ஙன்‌ கட்டளைக்‌ கலித்துறை என்ற நூறு பாக்களான்‌ அமைந்த அலர்மேல்மங்கை அந்தாதியின்‌ முதற்பா காப்புச்‌ செய்யுள்‌, நூல்‌ தடையின்றி இனிது நிறைவேறும்‌ பொருட்டு சுவாமி நம்மாழ்வாராகிற ஆசாரிய வணக்கமும்‌ செயப்படுபொருளும்‌ எய்த உரைக்கும்‌ தற்சிறப்புப்‌ பாசிரமாக அமைந்துள்ளது

இழைத்தா ரிலதா மறையின்‌ பொருள் சீர்த்த இன்தமிழால்‌
இழைத்தான்‌ இவனே சராசரம் முற்றும் நினைவகத்தே
இழைத்தான்‌ சிரம் தான்‌ குலுங்க ஓர்‌ ஆயிரம்‌ பாவிழைத்தான்‌
இழைத்தான்‌ அலர் மேல் மங்கை யந்தாதி க்கருள்‌ முற்றுறவே-
காப்புச் செய்யுள்

எவராலும்‌ செய்யாமல்‌ இயல்பாக தோன்றிய வேதங்களின்‌ பொருளை இனிய தமிழில்‌ ஆயிரம்‌ பாசுரங்களாகச்‌ சொன்ன குருகூர்‌ நம்பியே, அறிவுடை பொருள்கள்‌ அறிவில்‌ பொருள்கள்‌ இவைகளை நினைவாற்றலாலேயே தோற்றுவித்த இறைவன்‌, தன்‌ சிரத்தை குலுக்கி கேட்கும்படியாகத்‌ திருவாய்மொழி என்ற ஆயிரம்‌ சொன்னவனே-இந்த அலர்மேல்மங்கை அந்தாதிக்கு இடையூறின்றி நிறைவு பெரும்படி காப்பாக இருந்து தானே அடியேனுக்கு அருள்‌ செய்தான்-

உலகொருங்‌காக வணங்குதற்‌ காக உடையவன்தான்‌
உலகொருங்‌ காக உளப்படுத்‌தாகத்‌ தகலகில்லாள்‌
உலகொருங்‌காக உடையவளாகக்‌ கலைக்கு நில்லா
உலகொருங்‌காக உதவுவாளாகத்‌ தெழில் வணங்கே.

நெஞ்சே! எல்லா உலகும்‌ தன்னை வந்து வணங்குவதற்காக அவர்களுக்கு இறைவனிடத்தில்‌ பரிந்துரை கூறுவதற்காக அனைத்து சராசரங்களையம்‌ ஊழிக்‌ காலத்தில்‌ தன்‌ வயிற்றில்‌ கொள்ளும்‌ இறைவனுடைய திருமார்பை விட்டு அகலாதவளான திருமகள்‌, இறைவனையும்‌ அவன்‌ உடைமைகள்‌ ஆன உபய விபூதிகளும்‌ ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்‌. பிராட்டியின்‌ பேர்‌ அழகு பதினாறு கலைகளில்‌ ஒரு கலைக்கும்‌ போதாத பேரழகு உடைய பிராட்டியை வணங்குவாயாக —

வணங்குக நெஞ்சே! மதிமுகம்‌ தீஞ்சொல்‌ அமுதனையவ்‌ i
வணங்குக ளுத்தமை பங்கயத் தாள் தாள் பராபரர் நீர்
வணங்குக சென்னி மகரம்‌ அகரம்‌ சுதந்திரத்தை
வணங்குக நுஞ்சீர்ப்‌ பெறஇரு வீர்க்கொரு வாய்ப்பெனுமே–2-

நெஞ்சே! முழு மதி போன்ற முகமும்‌, இனிய சொற்களும்‌, அமுதம்‌ ஒத்த இனிமையும்‌ உடைய தெய்வ பெண்களுள்‌ மிக மேம்பட்ட பிராட்டியின்‌ திருவடி தாமரைகளை வணங்குக! பிராட்டியின்‌ தொடர்பால்‌ அகாரத்தை பேராக உடைய மேலார்க்கும்‌ மேலாலனாகிய எம்பெருமான்‌ தன்‌ சுதந்திரத்தை தளர்த்தி கொடுப்பானாக- மகாரத்தை பேராக உடைய ஆன்மாக்கள்‌ தங்கள்‌ சென்னிகளை வணங்குவாராக.- இவ்வாறு பிராட்டியின்‌ இருப்பு பெருமானுக்கும்‌, ஆன்மாக்களுக்கும்‌ சிறப்புப்‌ பெற உதவுவதாகும்-

வாய்த்தவத்‌ தாயவள்‌ சேர்த்தியின்‌றேல் வேத வேத்தியன் தான்‌
வாய்த்தவத்‌ தாவனே? காட்டியும்‌ ஊட்டி மறைத்திடுமவ்‌
வாய்த்தவத்‌ தாயவக்‌ காரியம்‌ சீரிய வாமதுவே
வாய்த்தவத்‌ தாயவச்‌ சேதநன்‌ சேர்ந்து நல்‌ வாழ்வுறுமே–3–

உலகங்களுக்குத்‌ தாயாக வாய்ந்த பிராட்டியின்‌ சேர்த்தி இல்லை யென்றால்‌, வேதங்களால்‌ பரம்‌ பொருளென்று போற்றப்‌ பெறும்‌ திருமாலும்‌, மெய்ப் பொருள்‌ ஆக முடியுமா? அவனால்‌ செய்யப்படும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற செயல்களும்‌ சிறப்புற நிகழுமா? அநாதியான சீவான்‌ மாக்கள்‌ எம்பெருமானைச்‌ சேர்ந்து உய்வு பெறுமா-

வாழ்வது மாகம னுந்திரி யம்பகனும்‌ ககரன்‌
வாழ்வது மாகலை யாதிய மோன முனிக் கணமும்‌
வாழ்வது மாகமும்‌ தாரணி பூவிவ ரத்துயிர்கள்‌
வாழ்வது மாக முதல்தனி வாய்த்த கருணையினே–4-

எல்லா பொருள்களுக்கும்‌, தாயாய்‌ கருணையே வடிவெடுத்த பிராட்டி எம்பெருமான்‌ திருமார்பில்‌ வீற்றிருப்பதினாலேயே வானவர்‌ மன்னனாகிய இந்திரனும்‌, ககாரம்‌ என்ற பெயருடைய பிரமனும்‌, முக்கண்ணனாகிய உருத்திரனும்‌, மேம்பட்ட கலைகள்‌ முதலியனவும்‌ இடையறாத தவத்திலேயே ஈடுபட்டு இருக்கும்‌ முனிவர்‌ குழுவும்‌, பூமியும்‌, வானுலகும்‌, அவ்வுலகுகளில்‌ உள்ள ஜீவன்மாக்களும்‌ நல் வாழ்வு வாழ்கின்றன-

கருணைத்‌ திருவுரு காரணத்‌ தோருரு காவலன்தன்‌
கருணைத்‌ திருவுரு உள்ளங்‌ கசிவரக்‌ காகமொடு
கருணைத்‌ திருவுரு தானே யரக்கியீர்‌ காப்பெனென்ற
கருணைத்‌ திருவுரு உள்ளமன்‌றோ நமைக்‌ காப்பதுவே–5–

கருணையே வடிவு எடுத்தவனும்‌, உலக காரணனும்‌ பேரழகிய உருவினனும்‌, உலகைக்‌ காப்பவனும்‌ அழகிய பெருமானுடைய திருவுள்ளம்‌ பெருந் தவறு செய்த காக்கையின்‌ திறத்துக்‌ கருணையால்‌ உருகி அதனை கொல்லாது விடுத்தற்கும்‌, கருணையே வடிவெடுத்தவளாய்‌, தன்னை ஓயாது நலிவுறுத்திய அரக்கியரையும்‌, அனுமனால்‌ ஏதம்‌ வராது காப்பேன்‌’ என்ற பிராட்டியின்‌ கருணை வடிவான உள்ளம்‌ அன்றோ? காரணமாகும்‌. அந்தத்‌ திருவுள்ளமே வாழ்க்கையில்‌ பல தவறுகளையும்‌ செய்யும்‌ நம்மையும்‌ பாதுகாப்பதாகும் –

காப்பது நாம்தாங்‌ கருமமே முன்னா எவருமென்னின்‌
காப்பது நாம்தாமென் காப்பதா வைதிகச் சொல்வ தெவன்
காப்பது நாந்தாங்‌ கருமமே முன்னா அடைந்திவரை
காப்பதுங்‌ காசில்‌ குணத்தா லருள் வடைந்தவர்க்கே–6-

அவரவர்‌ செய்த நல் வினை தீ வினைகளுக்கு எற்‌ப நாம்‌ அவர்களைக்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று எம்பெருமான் திருவுள்ளம்‌ பற்றினால்‌ நீர்‌ பெருமானை நோக்கி உலகை காப்பதாக வேதம்‌ வல்லார்‌ கூறுவது பொருந்துமா? உங்களைச்‌ சரணாக அடையாதாரை அவர்கள்‌ வினைகளுக்கு ஏற்ப பயனளிப்பீர்‌; தன்னைச்‌ சாணாக அடைந்தவர்‌ திறத்து உம்முடைய வாத்சல்யாதி குணங்களால்‌ அவர்களை வினைகளை நோக்காது அருள் செய்யக்‌ கடவீர்‌”‘ என்பாள் –

அடைந்திடும்‌ ஏதெதோ நுந்தான்‌ அடையாத கல்வதுவே
அடைந்தில தாகா தெவரெவை தீவினை மாய்வதுவே
அடைந்தவை எவ்வெப்‌ பயனும்‌ அடையா திழக்குமதோ?
அடைந்திடு வாரும்‌ அடைகிலா தாரும்‌ உமது சேயே–7–

பிராட்டியே! உன் திருவடிகளை சரணாகப்‌ பற்றுபவரும்‌ பற்றாதவரும்‌ உன்‌ மக்களே. உன்‌ திருவடிகளைச்‌ சரணாகப்‌ பற்றாததனால்‌ பலவகை துன்பங்களும்‌ வந்து சேரும்‌; திருவடிகளைச்‌ சரணாக பற்றாமையால்‌ எந்த தீவினையும்‌ அழிய மாட்டா; திருவடிகளைப்‌ பற்றினவர்கள்‌ தாம்‌ கருதிய எவ்வெப்‌ பயன்களையும்‌ அடையாமல்‌ இழப்பதில்லை. இவ்வாறாக தாயாகிய உன்னைச்‌ சரணடையாமல்‌ பலர்‌ துன்பப்படுகிறார்கள்‌ என்பது குறிப்பாகும் –

உமது சேயாவா ரலாதார்‌ உளரே? கணிப்பதற்கும்‌
உமது சேயாவ சராசரம்‌ உள்ள அனைத்துமன்றோ!
உமது சேயாவ னலாதவன்‌ ஓர் பொருள்‌ நாரணனே
உமது சேய்க்கூட்டத்து அடியவன் ஓர் பொருள் கைவிடவே –8–

உம் மக்களல்லாதார்‌ என்று குறித்தறிவதற்கும்‌ சிலர்‌ உளரோ?-எல்லா இங்கியற்‌ பொருள்களும்‌ உமது குழந்தைகளே- உனக்கு வசப்படாத ஸ்வதந்திரப்‌ பொருள்‌ எம்பெருமான்‌ ஒருவனே- உம்முடைய மக்கள்‌ குழாத்தில்‌ அடியேனும்‌ ஒருவன்‌ ஆகலில்‌ அடியேனைக்‌ கைவிட்டு விடாதீர் –

கைவிடாக்‌ காப்ப தவனெனச்‌ சான்றோர்‌ பறையறைவர்‌
கைவிடாக்‌ காப்பவர்‌ நீரா அவனா எவரறிவார்‌?
கைவிடாக்‌ கொள்கை யனுமனைக்‌ கை விடச்‌ செய்தவர் யார்‌?
கைவிடாக்‌ காவல்‌ எழுநூ றரக்கியர்‌ கண்டதன்றே?–9-

எல்லா உயிர்களையும்‌ கைவிடாமல்‌ காப்பவன்‌ என்று சான்றோர்‌ பரக்கக்‌ கூறுவர்‌. அப்படிக்‌ கைவிடாமல்‌ காப்பவர்‌ நீரா? நும்‌ கணவராகிய எம்பெருமானா? என்பதனை உண்மையாகவா அறிகிறார்கள்‌? அரக்கியரை அழிக்க வேண்டும்‌ என்ற உறுதியான எண்ணத்தோடு வந்த அனுமனை, உம்மை விடாமல்‌ துன்புறுத்தி வந்த அரக்கியர்‌ எழுநூற்றுவரைப்‌ பாதுகாத்து, அனுமன்‌ எண்ணத்தைக்‌ கை விடச்‌ செய்த நும்‌ செயலை நோக்க, எல்லா உயிர்களையும்‌, கை விடாது காக்கும்‌ செயல்‌ உம்முடையதே என்று புலப்படுகின்றதன்றோ-

கண்ட அமுதம்‌ திசை திருப்பும் செயல் காப்பதற்கோ
கண்ட அமுதம் உமைக் குறிக்‌ கொண்டே கடல் கடைந்தான்‌
கண்ட அமுதச்‌ செயலில்‌ களவிதைக்‌ கண்டறிந்தீர்‌
கண்ட அமுதென வையகம்‌ காப்பதார் ? எய்துவதே–10-

தேவர்கள்‌ உள்ளத்தைத்‌ திசை திருப்பி அவர்கள்‌ நலன்‌ பெறுவதற்காகப்‌ பாற் கடல்‌ கடைந்து அமுதினைக்‌ கொண்ட எம்பெருமானுடைய செயல்‌ அவர்களை அமுதத்தால்‌ காப்பதற்காகவோ நிகழ்ந்தது? ஆய்ந்து கண்டால்‌ உண்மையான அமுதமாகிய உம்மைப்‌ பெற்ற பின்னரே எம்பெருமானுடைய உலகங்காத்தல்‌ தொழில்‌ சிறப்புற நிகழ்ந்து வருகிறது எனலாம்‌. ஆதலின்‌ உலகினை உண்மையாகக்‌ காப்பவர்‌ நீரே என்பது தேற்றம்‌–

எய்துவ துண்டே? அருளின்றி எம்மோய்‌ எனைத்தையுமே
எய்துவ துண்டே? சிவனயன்‌ இந்திரன்‌ தம் பதங்கள்‌
எய்துவ துண்டே?
அடியவன்‌ என்றென்‌ றிறைவனுமே
எய்துவ துண்டே? நுமநோக்‌ கிலதெனின்‌ முத்தியுமே–11-

அலர்மேல்‌ மங்கையீரே! தேவரீர்‌ அருளின்றி எந்தப்‌ பயன்களையும்‌ உலகவர்‌ எய்த இயலுமா? எம்பெருமானும்‌ தனக்கு அடியவன்‌ என்று எவனையும்‌ எய்துதல்‌ இயலுமா? பிரம்மன்‌, சிவன்‌, இந்திரன்‌ முதலியோரும்‌ தத்தம்‌ பதவிகளை அடைதல்‌ இயலுமோ? நும்‌ அருள்‌ நோக்கிலதெனின்‌ வீடு பேற்றினையும்‌ எய்த இயலுமா? என்றவாறு –

முத்தி யுளதென்‌ றளிப்பான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவைக்‌ கீடில்லை என்பதே முற்றுமுண்மை
முத்தி யுளசுவைக்‌ குற்றான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவை நீரின்றேல்‌ முற்றும்‌ பயனிலதே–12-

முத்தியை ஆன்மாக்களுக்கு வழங்குபவன்‌ முகுந்தனாகிய திருமாலே.-முத்திப் பேரின்பத்துக்கு இணையான இன்பம்‌ இல்லை என்பதே முழுமையான உண்மையாகும்‌. அம் முத்திச்சுவையை ஆன்மா பெறத்‌ திருமாலே காரணம்‌ ஆவான்‌ என்பதும்‌, அம் முத்திப்‌ பேரின்பம்‌ நல்கும்‌ என்பதும்‌, தாயாகிய நீர்‌ இல்லை யென்றால்‌ பயனிலவாகும் –

பயனற்‌ றிருப்பன உபய வி பூதிமான் பண்ணவனேல்‌
பயனற்‌ றிருப்பன்‌ நிகரில்‌ புகழ்சால்‌ பரமனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ தனிமாப்‌ புகழின்‌ படைப்பனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ அலர் மேல மங்கை தன்‌ பாலிலதே–13–

அலர்மேல்‌ மங்கை தன் பக்கம்‌ இல்லையாயின்‌, மண்‌ விண்‌ என்ற ஈருலகங்களுக்கும்‌ தலைவனாகத்‌ தான்‌ இருந்தாலும்‌, ஒப்பற்ற புகழை யுடைய பரம் பொருள்‌ என்ற நிலை இருந்தாலும்‌, ஒப்பற்ற மேம்பட்ட புகழுக்குரிய படைப்புச்‌ செயல்களைச்‌ செய்தாலும்‌ எம்பெருமான்‌ அவற்றால்‌ பயனற்றவனாகவே இருப்பான் –

பால தடைந்தனன்‌ பாதகத்‌ தாபமாழ்‌ தூறதனின்‌
பால தடைந்தனன்‌ பொய்ம் மதிப்‌ பற்றும்‌ ஒழுக்கமதின்
பால தடைந்தனன்‌ தீவினைப்‌ பாவிய காடதனின்‌
பால தடைதல்‌ கழிய நின்‌ பங்கயத்‌ தாளருளே–14-

அடியேன்‌ தீவினையாகிய வெப்பம்‌ சூழ்ந்துள்ள புதர்களில்‌ அகப்பட்டு அடைந்துள்ளேன்‌. அதனால்‌ பொய்யான அறிவைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ ஒழுக்கத்தை மேற் கொண்டேன்‌. இதனால்‌ தீவினை பரவிய காடாகிய உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்டேன்‌. அவ் வாழ்க்கையில்‌ ஈடுபடும்‌ அடியேனை மீட்டு பிறவித்‌ துயர்‌ சேர்வதில்‌ நின்றும்‌ நீங்குமாறு உன்‌ தாமரைப்‌ போன்ற திருவடிகளைச்‌ சேர்ப்பாயாக –

அருளால்‌ நிறைந்தொளிர்‌ கண்ணுடை அன்னைநீ, ஆதுவர்பால்‌
அருளால்‌ நிறைந்த அழகின்‌ இனியைநீ எம்பிரான்பால்‌
அருளால்‌ நிறைந்த அளியை நீ தேவர் தம்‌ மாததம்பால்‌
அருளால்‌ நிறைந்த அலர்மேல் மங்கை நீ ஆளெமையே–1
5-

அருளால்‌ நிறைந்த அலர்மேல்‌ மங்கையீர்‌ ! நீர்‌ பிறவிப்‌ பிணியால்‌ வருந்துவோர்பிணி தீர்க்க அருளால்‌ நிறைந்து விளங்கும்‌ அன்னையாய்‌ உள்ளீர்‌; அருளால்‌ நிறைந்த நீர்‌ எம்பெருமான்பால்‌ இனிய அழகிய உருவெடுத்து அமைந்துள்ளீர்‌, தேவ மாதர்‌ திறத்தில்‌ அருளால்‌ நிறைந்த இரக்கமே வடிவாக உள்ளீர்‌; அத்தகைய அருள்‌ வடிவாகிய நீர்‌ அடியேனையும்‌ ஆட்கொண்டு அருள்வீராக –

எமையாள வந்தே புணரி எழுந்தீர்‌ அமுதுடனே
எமையாள வந்தே துழாய் கமழ்‌ மார்பத்‌ ‘ தினிதிருப்பீர்‌
எமையாள வந்தநீர்‌ மங்கா புரத்தில்‌ இருந்தருள்வீர்‌
எமையாள வந்தெம்‌ மனத்தில்‌ இருப்பதும்‌ மாலுடனே–16–

எம்மை ஆட்கொள்வதற்காகவே திருமகளாகிய நீர்‌ அமுதத்தோடு அவதரித்தீர்‌; திருத்துழாய்‌ மணம்‌ கமழும்‌ திருமாலின்‌ திருமார்பில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறீர்‌; அலர்மேல்‌ மங்கா புரத்தை உகந்து அருளி வீற்றிருக்கின்றீர்‌; எம்மை ஆட்கொள்வதற்காக எம்பெருமானுடன்‌ சேர்ந்து எங்கள்‌ உள்ளத்தில்‌ அமர்ந்துள்ளீர் –

மாலுநும்‌ கூட்டும்‌ மலமற்‌(று) அமானவன்‌ பால்தருமே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபத்துட் புகுந்திடவே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபமேவி கேள்விகொள
மாலுநும்‌ கூட்டும்‌ மகிழ்ந்‌து அணைந்து உச்சி முகப்பதுவே ! –17–

எம்பெருமானுடன்‌ கூடிய தாங்கள்‌ சேர்ந்திருப்பது உலகம்‌ மாசற்று வீட்டுலகிற்கு அழைத்துச்‌ செல்லும்‌ அமானவன்‌ தொடர்பை உண்டாக்கும்‌; வைகுந்‌தத்திலிருக்கும்‌ திருமாமணி மண்டபத்தில்‌ புகும்‌ வாய்ப்பினை ஆன்மாக்களுக்கு நல்கும்‌; எம்பெருமான்‌ ‘நீ யார்‌ என்ன? நான்‌ ப்ரஹ்மம் ஆகிறேன்‌’ என்‌று ஜீவான்மா விடை கூறவும்‌, அவ்வான்மாவை மகிழ்வோடு தழுவி தாயன்பால்‌ உச்சி மோக்கும்‌ உயர்நிலையும் தரும் –

முகந்தருள்‌ நுந்தம்‌ கருணையின்‌ முன்னர்‌ இணையெதுவே?
முகந்தருள்‌ அண்ணல்‌ கருணை பிறிதின்‌ முனைந்ததுவே?
முகந்தருள்‌ மாறன்‌ அருள்நு மதருளின்‌ முன்வருமே?
முகந்தருள்‌ பூதார்‌ முனைவன்‌ அருளும்‌ இணையிலதே–18-

ஆன்மாக்களை விரும்பித் தழுவும்‌ எம்பெருமானுடைய கருணை இணையற்றதே? அத் தகைய செயலைச்‌ செய்யும்‌ மாறனுடைய கருணையும்‌ இணை யற்றதே? அதனை ஒத்த இராமாநுசர்‌ கருணையும்‌ ஈடு அற்றதே? என்பர்‌. இவற்றுக்கு எல்லாம்‌ காரணமாக அமையும்‌ தாயாராக அன்பு காட்டும்‌ உம்‌ அருளுக்கு முன்னர்‌ ஒப்பாகாது இவைகள்‌ குறைவடையும் –

இணையிலை என்பது நித்ய விபூதியி லெய்துமின்பம்‌
இணையிலை என்ப பிறவிக் கண்‌ ஆழ்வதில்‌ எய்துதுன்பம்‌
இணையிலை யென்ப திறைவன்‌ உயிர்கள்பால்‌ செய்யுமருள்‌
இணையிலை நும்மருட்‌(கு) இத்தனை சேரிலும்‌ ஒன்றினக்கே?-19-

நித்திய விபூதி என்னும்‌ பரமபதத்தில்‌ எய்தும்‌ இன்பம்‌ இணையற்றது; பிறவித் துயரில்‌ ஆழும்‌ துன்பமும்‌ இணையற்றது; இறைவன்‌ ஆன்மாக்கள்‌ பக்கம்‌ செலுத்தும்‌ அன்பும்‌ இணையற்றது; இவ்வளவும்‌ ஒன்று சேரினும்‌ தாயாராகிய நுமது அருளுக்கு நிகராக மட்டா –

ஒன்றினும்‌ ஒன்றா உலகியல்‌ பற்றைக்‌ களைவதற்கே
ஒன்றினும்‌ ஒன்றா உயர்பரன்‌ பால் நின்‌றகலகிலீர்‌
ஒன்றிலும்‌ ஒன்றாக்‌ கயவன்‌ சிறைநின்‌று பகரித்தீர்‌!
ஒன்றினும்‌ ஒன்றா உலைப்பும்‌ அரக்கியர்‌ நற்றமிதே–20-

தாழ்வில்லாத தனக்கு பிரிதொன்று இணையாகாத இவ் வுலக பற்றினை எம்மிடத்தில்‌ இருந்து போக்குவதற்காகவே, தன்னை ஓக்கும்‌ பொருள்‌ பிரிதொன்று இல்லாத மேம்பட்ட எம்பெருமான்‌ மார்பினில்‌ அகலாது தங்கி இருக்கின்றீர்‌. இழிவில்‌ தனக்கு ஒப்பவர்‌ இல்லாத இராவணனுடைய சிறையில்‌ இருந்து, அவனுக்கு உபதேசித்த நிலையிலும்‌ அரக்கியர்‌ ஈடு இணையில்லா தாழ்ந்த மொழிகளால்‌ அலைத்த நிலையிலும்‌ உம்‌ ஈடில்லா உபதேசத்தால்‌ அவர்களுக்கு நன்மையே புரிந்தீர் –

நற்றமாம்‌ நுந்தாள்‌ சரணா நணுகுவ தோர் செயலே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகி இறை தாள்‌ நணுகுவதே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகப்‌ பிறர் தாள்‌ நணுகுவதோ?
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகா திறைதாள்‌ நணுகுவதோ?–21-

நன்மையே தரும்‌ நும்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றுவதே மேம்பட்ட செயலாகும்‌. உம்‌ திருவடிகளை முதற்கண்‌ பற்றிட்ட பின்‌ எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவதற்குப்‌ பிறருடைய பரிந்துரைக்கு முயல்வது தேவையற்ற செயலாகும்‌. உம்‌ திருவடிகளைப்‌ பற்றாது எடுத்த எடுப்பிலேயே எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவது முறையல்லவே –

நணுகுவ துண்டே? அகப்புறப்‌ பற்றுசால்‌ நாகரீகம்‌
நணுகுவ துண்டே? பிறவித்‌ தொழுவினில்‌ நாலுசெயல்‌
நணுகுவ துண்டே? நமன்தமர்‌ சித்திர குத்தனாதி
நணுகுவ துண்டே? பரத்துவம்‌ நக்கனைப்‌ போல்பவர்க்கே–22-

உம்மைச்‌ சரணமடைந்தவர்களை யான்‌ எனது என்ற அகப்புறப்‌ பற்றுக்கள்‌ கொண்ட பண்பாடு அடையுமோ? பிறவியாகிய தொழுக்கட்டையில்‌ இயங்கும்‌ செயல்‌ அடையுமோ? இயமனுடைய ஏவலன்‌ சித்திரகுப்தனும்‌ நமனும்‌ நலிவதற்கு அணுகுவார்களா? உம்மைச்‌ சரணமடைவோருக்குச்‌ சிவன்‌ முதலான தேவர்களைப்‌ பரம்‌ பொருளாம் தன்மை உண்டென்ற நினைவு ஏற்படுமா-

கேதங்கள்‌ வாரா நமன்தமர்‌ கேள்விகொள்‌ தீயசொற்கள்‌
கேதங்கள்‌ வாரா பராசத்தி போல்பவர் கீழ் படிதல்‌
கேதங்கள்‌ வாரா புறசமயத்துறு கேடுசெயல்‌
கேதங்கள்‌ வாரா நும திருதாள் மலர் கிட்டுவார்க்கே –23-

உம்முடைய திருவடிகளிரண்டினையும்‌ சரணாகப்‌ பற்றுபவர்களுக்கு, யமனுடைய ஏவலர்‌ பழித்துக்‌ கூறும்‌ தீயசெயல்களைக்‌ கேட்கும்‌ தீவினையாகிய துயரங்கள்‌ வாரா. உமாதேவி முதலிய சிறுதெய்வங்களை வழிபாடு நிகழ்த்தும்‌ குறைபாடுவாரா. வேற்றுச்‌ சமயங்களைப்‌ பின்பற்றுவதாகிய தீயசெயல்களும்‌ ஏற்பட மாட்டாதென்பதாம் –

கிட்டுவ துண்டே? நுமதடி யாரெனும்‌ கேழில்பதம்‌
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கீழிருந்‌ தாற்றுதொண்டு
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கேழில புன்முறுவல்‌
கிட்டுவ துண்டே? மிதுநறும்‌ தாண்மலர்க்‌ கீழிருப்பே–24-

நும்முடைய அடியவரெனும்‌ ஒப்பிலாப்‌ பதவி எல்லோருக்கும்‌ கிட்டுமோ? பெருமானும்‌ நீருமாக இருக்கும்‌ இருவர்‌ திருவடிகளின்‌ கீழிருந்தாற்றும்‌ தொண்டு எல்லோருக்கும்‌ கிட்டுமோ? நும்மிருவருடைய ஒப்பற்ற புன்முறுவலைக்‌ காணும்‌ வாய்ப்புகள்‌ எல்லோருக்கும்‌ கிட்டுமோ? இருவருடைய திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ என்றும்‌ இருக்கும்‌ இருப்பு எல்லோருக்கும்‌ கிட்டுமோ-

தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பா தரணி புரப்பவரும்‌
தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பார்‌ தமதியல்‌ பெய்துவாரும்‌
தாள்மலாக்‌ கீழ்நின்‌ றெனைவரும்‌ தாங்குவார்‌ மெய்யுணர்வே
தாள்மலாக்‌ கீழ்த் தொண்‌ டலர் மேல் மங்கை! தனமெமதே–25-

அலர்மேல்‌ மங்கையாகிய அன்னையே! இவ் வுலகைக்‌ காக்கும்‌ அரசர்களும்‌ உன்‌ திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ நின்று வேண்டிய செல்வத்தை இரப்பர்‌. கைவல்ய இன்பம்‌ வேண்டுவாரும்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ வேண்டுவாரும்‌ இவற்றின்‌ காரணமாகிய மெய் யுணர்வு பெற விரும்புவாரும்‌ உன்‌ திருவடித் தாமரைகளைப்‌ பற்றியே இருப்பர்‌. உம்‌ திருவடிக் கீழ்‌ தொண்டே அடியேன்‌ வேண்டும்‌ செல்வமாகும்-

தனத்தவர்‌ தாய் நின கோட்டி தனி முதல் கோட்டியையும்
தனத்தவர்‌ நேர்மைத்‌ தனிமனந்‌ தன்னில்‌ நிறுத்தெடுத்து
தனத்தவர்‌ கெளரவத்‌ தாய்நின கோட்டி லகுமிகுத்த
தனத்தவர்‌ சாமிதன்‌ கோட்டி எனுநிலை தந்தனரே–26-

தாயே! ஸ்ரீயபதி. திருவடிகளில்‌ தொண்டு செய்தலையே தமக்குச்‌ செல்வம்‌ என்று கருதும்‌ அடியவர்‌, உமது குழாத்தின்‌ பெருமையையும்‌, ஒப்பற்ற முதற் பொருளாகிய எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமையையும்‌, தங்கள்‌ மனமாகிய தராசின்‌ இரு தட்டுகளிலும்‌ நிறுத்துப் பார்த்து தாயாகிய உங்கள்‌ குழாத்தின்‌ பெருமையே மதிப்புடையது எனவும்‌, எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமை சற்று மதிப்பு குறைந்ததுவே எனவும்‌ நிலைநாட்டி யுள்ளனர் –

தந்த மலைக்கும்‌ வினையர்‌ தகவிலர்‌ என்னநிரை
தந்த மலைக்குடை யான்தள்ளு மென்றும்‌ தருக்கியிகல்‌
தந்த மலைக்குமைத்‌ தான்திருத்‌ தாளிணைத்‌ தஞ்சமென்று
தந்த மலையவர்‌ மேல்மங்கை சற்றே தரிப்பதுண்டே–27-

பசுக்களையும்‌ ஆயர்களையும்‌ காப்பதற்காக கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனும்‌, தன் மேல்‌ செருக்குற்று போர்‌ செய்யவந்த சாணுரன்‌, முஷ்டிகன்‌ என்ற மல்லர்களை அழித்தவனான எம்பெருமான்‌, வினைகளால்‌ துன்பத்தை யடைந்த அடியார்க்‌ தன்னை நேராக தஞ்சமடைந்தால்‌, இவர்கள்‌ நெடுநாள்‌ செய்த அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சீறுவான்‌ என்று நினைத்து, தேவரீர்‌ புருஷகாரமாகிய சிபாரிசு பண்ணி அடியார்களை எம்பெருமான்‌ திருவடிகளை அடையத்‌ தந்து, பெருமான்‌ அவர்களை ஏற்கும் வரையில்‌ ஆறியிராமல்‌ அடியார்களுக்காகப்‌ பதறுபவள்‌ அன்றோ நீர்‌-

உண்டே? திரிபோ டுனர்வின்மை ஐயம்‌ முதலதீர்தல்‌
உண்டே? இவற்றின்‌ ஒழிந்துப் பெறப்பெறு மெய்யுணர்வும்
உண்டே? பரனெனுந்‌ தாரக மாதியாம்‌ உச்சநிலை
உண்டே? உடையான்‌ குறைதீர்‌ வதின்றேல்‌ உமது நோக்கே.
–28-

அன்னையீர்‌! நுமது கடைக்கண்பார்வை எங்கள்‌ மேல்‌ பொருந்தாவிடில்‌ அறிவின்மை திரிபுணர்ச்சி, ஐயம்‌ என்ற குறைபாடுகள்‌ ஆன்மாக்களை விட்டு நீங்குமா? இவற்றின்‌ நீங்கிப்‌ பெறக்கூடிய மெய்யுணர்வு ஏற்படுமா? எம்பெருமானே தாரகம்‌, போஷகம்‌, போக்கியம்‌ என்ற மனநிலை ஏற்படுமா? ஆன்மாக்கள்‌ தன்னை கிட்டவில்லையே என்ற எம்பெருமானுடைய குறையும்‌ தீருமா?

உமதுநோக்‌ கன்றே? பலபல அண்டங்கள்‌ உள்ளவாதல்‌
உமதுநோக்‌ கிவ்வெலாம்‌ பாலநம்‌ செய்பொருள்‌ உள்ளதுவும்‌
உமதுநோக்‌ கின்றே? இவை தாம்‌ நிரல்பட ஊர்வதுவே?
உமது நோக்‌கா மாதின் ஒப்பின்ற அருளும் இவ்வின்பமிதே -29-

அம்மையீர்‌! உம்‌ கடைக்கண்‌ பார்வை செலுத்தப்படாவிடின்‌ எம்பெருமான்‌ பல அண்டங்களைப்‌ படைப்பதுவும்‌, அவனால்‌ காக்கப்பட்ட இவ் வண்டங்கள்‌ உளவாதலும்‌, இவற்றின்‌ செயல்கள்‌ நிரல்பட நிகழ்வதுவும்‌ ஒப்பற்ற வீட்டின்பத்தை இவ்வான்மாக்கள்‌ எய்தி வாழ்வதுவும்‌ நிகழற்பாலதா–

இன்பம்‌ உளதா எவரும்‌ மயங்கி விடமரத்தில்‌
இன்பம்‌ உளதா எவரும்‌ பறிப்பர்‌ விடக்கனிகள்‌
இன்பக்‌ கனிதான்‌ மிதுநநும்‌ பாலன்‌ பியைவதின்றி
இன்பக்‌ கனியாம்‌ நுமதடி யாரோ டிணங்குமிதே–30-

இன்பம்‌ உளதாகக்‌ கருதி மன மயக்கங்கொண்டு சிலர்‌, உலகியலாகிய விஷமேறிய மரத்தில்‌ தோன்றும்‌ விஷக் கனிகளைப்‌ பறிப்பர்‌. பிராட்டியும்‌ பெருமானும்‌ ஆகிய நும்‌ இருவரிடம்‌ அன்பு செய்வதன்றி இன்பமாகிய கனிதான்‌ வேறுளதோ? உங்கள்‌ அடியவரோடு இணங்கி வாழும்‌ வாழ்வே உண்மையான இன்பச்சுவை தரும்‌ பழமாகும் –

இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்‌ திருந்திட லென்பதென்ன
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்து இரானொரு தொண்டனாமே?
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டமே வானுலக இன்பமாமே
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத் திருந்திடச் செய்‌கெனையே — 31-

நும்மடியார்தம்‌ கூட்டத்தோடும்‌ கலந்து வாழ்தலென்பது ஒரு சாதாரணச்‌ செயலாகுமா? உங்கள்‌ அடியார்‌ கூட்டத்தின்‌ இணக்கம்‌ இல்லாதவனும்‌ தொண்டருள்‌ ஒருவனாவானா? நும்‌ தொண்டரோடு இயைந்து வாழும்‌ வாழ்வே வானுல கின்பமாகும்‌. ஆதலின்‌ அடியேனை நும்‌ அடியார்‌ நடுவின்‌ இருந்திடச்‌ செய்யும்‌ அருளினைச்‌ செய்வீராக –

எனைப்போல்‌ பிழைசெய்வார்‌ யாரே? உலகினில்‌ இல்லையென்றும்‌
எனைப்போல்‌ பிழை செய்யார்‌ யாரே? உலகினில்‌ இல்லையின்றும்‌ ்‌
எனைப்போல்‌ பிழையாமை செய்தொறும்‌ யானென தின்மையுண்டேல்‌
எனைப்போல்‌ பிழையாமை உம்மரு ளாலல்ல தில்லையன்றே–32-

என்னைப்போல்‌ தவறான செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ உலகில்‌ என்றுமில்லை, என்னைப்போல்‌ மனமொத்து பிழை செய்யாதவர்‌ உலகில்‌ யாருமில்லை. யானென்று அகப்பற்றும்‌ புறப்பற்றும்‌ கழிந்ததென்றால்‌ செயலில்‌ பிழையில்லையாம்‌. அத்தகைய அகப்புறப்‌ பற்றும்‌ நீக்கிச்‌ செயல்களைப்‌ பிழையறச்‌ செய்தல்‌ உம்மருளாலல்லது ஏற்படாது –

அன்றே மகரமும்‌ ஆமையுங்‌ கேழலுந்‌ சிங்கமாவான்‌
அன்றே சறையினான்‌ ஆன்மேய்க்‌ கரைசால்‌ துவருடையான்‌
அன்றே இரணியன்‌ ஊனுண்‌ டவனென அறிந்திலிரே?
அன்றே வனசத்‌ தமுதின்‌ அமுதுடன்‌ தோன்றினீரே–33-

ஒவ்வொரு காலத்தில்‌ மீனாகவும்‌, ஆமையாகவும்‌, பன்றியாகவும்‌, நரசிங்கமாகவும்‌ அவதரித்த எம்பெருமானே மாட்டாரங்கழியில்‌ தோல்பை தொங்க அழுக்குப்படிந்த செந்நிற ஆடையை அணிந்த ஆயனாகிய கண்ணனாவான்‌. அடியவனுக்கு தீங்கு செய்த இரணியனுடைய மார்பைப்‌ பிளந்த அவன்‌ உடலை உண்டவனும்‌ அப்பெருமானே யன்றோ? அன்று பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றியபொழுது தாமரை மலரில்‌ தோன்றிய தாங்கள்‌ அவன்‌ மார்பில்‌ இணைந்திருக்கின்றீர்‌. அவனைத்‌ தாங்கள்‌ அறியவில்லையா

மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? உலகினில்‌ மானிடர்க்கும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ வாச வனாதியா தேவர்களும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? மலரயன்‌ சூலியொடும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ மங்கைநும்‌ ஆட்சிக்‌ கிலைகறங்கே–34-

அலர்மேல்‌ மங்கையீர்‌! உம்முடைய ஆளுகை நன்றன்றே! மறைதலும்‌ தோன்றலுமாகிய சுழற்சி இல்லை. ஆனால்‌ உலகில்‌ உள்ளமானிடர்‌ முதலியோருக்கும்‌ இந்திரன்‌ முதலிய தேவர்களுக்கும்‌ தாமரை மலரில்‌ தோன்றிய பிரமனுக்கும்‌ அவன்‌ தனயனாகிய சிவனுக்கும்‌ பிறப்பிறப்பாகிய தோன்றலும்‌ மறைதலும்‌ உண்டன்றோ-

கறங்குபு சக்கர கையன லதிலேன்‌ காசினியில்‌
கறங்குபு செல்வக்‌ றந்திலேன்‌ கல்விதனில்‌
கறங்குபு நெஞ்சின்‌ இளந்துணுக்‌ குற்றனென்‌ காத்திலையே
கறங்குங்‌ கரிசறத்‌ தேற்றந்‌ தருவித்தை நீயலையே? –35-

சுழலும்‌ சக்கரத்தை என்றும்‌ கையிலேந்திய திருமாலைப்‌ பற்றிய அடியேன்‌ வேறு தெய்வங்களை அறியேன்‌. மாறி, மாறி வரும்‌ செல்வமாகிய மாசு என்பக்கல்‌ வராதபடியானேன்‌. கல்வியைப்‌ பெற அற்பத்துணிவுடையேனாய்‌ முற்றப்பெறாத வனானேன்‌. நின்றவாநில்லா நெஞ்சின்‌ கரிசைப்‌ போக்கித்தெளிவைத்தரு வித்தை நீயாயிருந்தும்‌ கல்வியை முற்றநீர்‌ தந்திடவில்லையே –

நீயலை யேயணு வாயே விபுவின்‌ நிமிர்ந்துறைவாய்‌
நீயலை யேநிதி யாளி பெறுவதும்‌ நின்னிடமே
நீயலை யேயவன்‌ பாலநம்‌ நேருறச்‌ செய்வதுவே?

நீயலை யேழுத்தி இன்பம்‌ இணைந்திருந்‌ தாக்குவிப்பே–36-

அணுவளவாக இருந்தும்‌ நீர்‌, எங்கும்‌ வியாபித்துள்ள விபுவான பெருமானைப் போல்‌ சக்தி விசேஷத்தாலே கரந்தெங்கும்‌ பரந்தெங்கும்‌ உள்ளாய்‌ நீரன்றோ? செல்வத்துக்கு உரிய தெய்வம்‌ நீரல்லையோ? அனைவரும்‌ எல்லாச்‌ செல்வமும்‌ பெறுதல்‌ உமமிட மிருந்தன்றோ? எம்பெருமானுடைய காத்தல்‌ தொழிலை முறையாகச்‌ செய்பவரும்‌ நீயல்லையே? எம்பெருமானோட கூடியிருந்து புருஷகாரம்‌ செய்து அடியார்கள்‌ வீடு பேற்றின்பம்‌ அடைவதற்காக முயற்சி செய்பவள்‌ நீரன்றோ –

ஆக்கலுங்‌ காத்தல்‌ உமதுளத்து கப்பினுக்‌ கெம்பெருமான்‌
ஆக்கலுங்‌ காத்தலும்‌ ஆவவே? உந்தங்கண்‌ ணோக்கிலதேன்‌
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழிப்பதொன்‌ றன்றி நுமக்காக
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழித்தல்‌ ஆம்பயன்‌ சேதநனே–37-

எம்பெருமான்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌ தொழில்களைச்‌ செய்வது உமக்கு இன்பத்தை அளிப்பதற்கே. உம்‌ பார்வையின்றேல்‌ பெருமானுடைய ஆக்கலுங்காத்தலு முறையாக நிகழா. எம்பெருமான்‌ முத்தொழிலும் செய்வது உமக்காக. இம் முத்‌ தொழில்களால்‌ ஆகும்‌ பயன்‌ சேதனனைத் தம்போடிணைத்துக்‌ கொள்வதற்காகவே-

உடனிருந்‌ தன்பர்போல்‌ ஊறுபல்‌ லாற்றற்‌ களவுமுண்டே?
உடனிருந்‌ தாக்கம் அறிவொடு வீக்கும் உணக்குவமே
உடனிருந்‌ தைம்பொறி ஊட்டும்‌ புலநலத்‌ தொன்றுவமே
உடனிருந்‌ துந்தம்‌ கடைக்கணின்‌ நோக்குவீர்‌ தீர்ந்திடவே–38-

ஐம்பொறிகள்‌ இவ்வுடம்பில்‌ ஆன்மாக்களோடு கூடியிருந்து ஆற்றும்‌ பலவகை இடையூறுகளுக்கு எல்லை யுண்டோ? அவை ஆன்மாவோடு தொடர்ந்திருந்தே பக்தி செல்வத்தையும்‌ ஞானத்தையும்‌ கெடுக்கிறது, அவை: போக்கும்‌ திறத்தை நாங்கள்‌ அறிவோமா? அவ்வாறு அறியாமல்‌ ஐம்பொறிகள்‌ உண்பிக்கும்‌ புலனின்பத்தில்‌ ஈடுபட்டுக்‌ காலங்கழிக்கின்றோம்‌. இத்தகைய அறியாமை எம்மை விட்டு நீங்குமாறு தாயாகிய நீர்‌ எம்‌ பக்கம்‌ இருந்து உமது கடைக் கண்ணால்‌ நோக்கி எமக்கு அருள்‌ செய்வீராக –

தீர்ந்திடச்‌ செய்தீர்‌ துருவனைச்‌ சிற்றனைச்‌ செய்கொடுமை
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ இரணியற்‌ கொன்றவன்‌ சேய்‌ கொலையைத்
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ சிறைப்படு மாதர்‌ பிறர்துயரும்‌
தீர்ந்திடச்‌ செய்வீர்‌ அடியேன்‌ படுங்கடுந்‌ தீமைகளே–39-

துருவன்‌ என்ற அரசிளங்குமரனுக்கு அவன்‌ சிற்றன்னையால்‌ ஏற்பட்ட துயரங்கள்‌ எம்பெருமானைக்‌ கொண்டு நீங்குமாறு செய்தீர்‌. இரணியனைக்‌ கொன்று அவன்‌ மகன்‌ பிரகலாதன்‌ கொலை செய்யப் படுதலை நீங்குமாறு செய்தீர்‌, இத்தகைய தாங்கள்‌ அடியவனாகிற நான்‌ படும்‌ கடுந்தீவினைகளும்‌ நீங்குமாறு செய்வீராக –

தீமைகள்‌ செய்வன ஐம்பொறி சேர்க்கும்‌ புலனலங்கள்‌
தீமைகள்‌ செய்வன பெண்ணெனும்‌ ஆணெனும்‌ ஈருடல்கள்‌
தீமைகள்‌ செய்வன ஒன்றினோடு ஓன்றுடன் சேர் பிணக்காம்
தீமைகள்‌ செய்வனடொன்‌ மேல்நலம்‌ சேரத்‌ தடைமிழைத்தே–40-

ஐம்பொறிகளால்‌ நுகரப்பெறும்‌ புலனின்பங்கள்‌ சேதநன்‌ எம்பெருமானை அடையாதபடி தீமைகள்‌ செய்கின்றன. பெண்ணுடல்‌ எனவும்‌, ஆணுடல்‌ எனவும்‌ பருத்து உலாவப்படும்‌ இருவகை உடல்களும்‌ தீமைகள்‌ தருவனவேயாம்‌. மேம்பட்ட வீட்டின்பம்‌ அடைய முடியாதபடி தீமை செய்யும்‌ இவற்றை அகற்றுவீராக –

இழைப்ப துலகென காப்ப தழிப்ப திவைசெயல்கள்‌
இழைப்பதற்‌ கோர்துணை இன்றித்‌ தனதிடத்‌ தாக்குமவன்‌
இழைப்பவன்‌ மார்வத்‌ திருந்துநீ ரீதின்‌ இகந்தெவையும்‌
இழைப் பவற் கொண்டே இணை இல் பேரின்பத்‌ திருத்துவீரே–41-

உலகங்களைப்‌ படைத்தலும்‌, காத்தலும்‌, அழித்தலும்‌ என்ற முத்தொழில்களையும்‌ பிறருதவியின்றி எம்பெருமான்‌ தானே தனதிடத்தே நிகழ்த்தும்‌ போது, தேவரீர்‌ திருமார்பில்‌ பிரியாமல்‌ உறைந்து கொண்டு முத்தொழில்களிலும்‌ தொடர்பின்றி, எல்லா உயிர்களும்‌ எம்பெருமானைக்‌ கொண்டே, இணையில்லாப்‌ பேரின்ப உலகமாகிய பரம பதத்தில்‌ சேர்வதற்கு ஆவன செய்கின்றீர் –

இருத்துவீர்‌ நான்முக னாதி எவரையும்‌ தம்பதத்தே
இருத்துவீர்‌; தாளடையாரை அவர்தம்‌ இருவினையில்‌
இருத்துவீர்‌; தத்தம்‌ வரம்புடை யார்தம்‌ இயல்பறிந்து
இருத்துவீர்‌; தஞ்சமா ஈரிணைத்‌ தாள்களில்‌ தொண்டுடனே–42-

நான்முகன்‌ முதலிய தேவர்களை அவரவர்‌ பதவிகளில்‌ நிலையாகப்‌ பலகாலம்‌ வரை இருக்கச்‌ செய்கின்றீர்‌. உம்மை வணங்காதவர்களை அவரவர்‌ நல்வினை தீவினைகளுக்கேற்பப்‌ பயன்‌ தந்து நுகரும்‌ வண்ணம்‌ வாழ்க்கையிலிருக்கும்படி காலம்‌ கழிக்க வைக்கின்றீர்‌. ஆன்மாநந்தமே போதும்‌ என்ற வரம்புடையவர்களை கைவல்யத்திருக்கச்‌ செய்கின்‌றீர்‌. உம்மையே தஞ்சமாக துடைந்த அடியார்களை நும்மிருவருடைய இணைந்துள்ள திருவடிகளில்‌ செய்யும்‌ திருத்தொண்டை நிலையாக ஈடுபடுத்துகின்றீர் –

தொண்டினை யன்றிச்‌ சுகமே? உலகொரு நாயகமே
தொண்டினை யன்றிச்‌ சுவர்க மெனுமோர்‌ தனிச்சுகமே?
தொண்டினை யன்றி உயிர்சுகத்‌ தாழ்தல்‌ ஒருசுகமே?
தொண்டினை யன்றிக்‌ குழாத்தொடும்‌ உந்தம்‌ தொண்டுமொன்நே? –43-

உமது திருவடிகளில்‌ தொண்டு செய்வதால்‌ ஏற்படும்‌ இன்பம்‌ உலகொரு நாயகமாக ஆளும்‌ தலைமையாலும்‌ கிட்டாது. இதனை ஒத்த இன்பம்‌ சுவர்கம்‌ முதலான எவ்வுலகத்திலும்‌ இல்லை. இதனை ஒத்த இன்பம்‌ ஆன்மா தன்னைத்‌ தானே அநுபவிக்கிற கைவல்யீத்திலும்‌ இல்லை. தங்கள்‌ திருவடிகளில்‌ அடியார்‌ குழாத்தொடும்‌ ஒன்றிச்‌ செய்யும்‌ தொண்டே பேரின்பம்‌ பயப்பது. தனித்துச்‌ செய்யும்‌ தொண்டு பேரின்பம்‌ பயவாது –

ஒன்றும்‌ அறிந்திலன்‌ ஒள்ளிய உம் தம் அருள் பெருக்கை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ எம்மான்‌ பரத்துவத்‌ துண்மைதனை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ அணுவில் விபூவினை உட்படுத்தல்
ஒன்றும றிந்திலன்யான்‌ எங்கும்‌ அணுநீர்‌ எனவொத்தே–44

மேம்பட்ட தாயாகிய உம்முடைய அருள் வெள்ளம்‌ பற்றி ஒன்றும்‌ அறியேன்‌ அடியேன்‌. அது போலவே எம்பெருமானுடைய மேலார்க்கும்‌ மேலானாகிய, உண்மையும்‌ அறியேன்‌. எங்கும்‌ பரந்திருக்கும்‌ தனித் தன்மையை உடைய எம்பெருமான்‌ அணுவளவினதாகிய ஆன்மாவுக்குள்‌ மறைந்திருப்பதையும்‌ அணு அளவு நுண்ணிய தாங்கள்‌ எங்கும்‌ பரவியிருக்கும்‌ விபுவாகிய எம்பெருமான்‌ அளவினை ஒத்திருப்பதனையும்‌ அறியேன்-

ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபேய நிலைதனக்கு எவ்வுயிர்க்கும்‌
ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபாய நிலையில்‌ புருடகாரம்‌
ஒத்திருந்‌ தேயுநீர்‌ காக்கும்‌ நிலையில்‌ உடனருள்வீர்‌
ஓந்திருந்‌து அண்மையில் நீக்கும்‌ தொழிலில்‌ உடன் இருப்பே-45-

எம்பெருமான்‌ எல்லா உயிர்களுக்கும்‌ சென்று சேரத்தக்க பயனாகிய நிலையில்‌ இருக்கும்போது உயிர்களுக்கு இன்பம்‌ அருளும்‌ நிலையில்‌ தாயாகிய நீங்கள்‌ எம்பெருமானை ஒத்திருப்பீர்‌. உயிர்‌ எம்பெருமானை அடையும்‌ உபாய நிலையில்‌ பரிந்துரைக்‌ கூறி, உயிர்களைப்‌ பாதுகாக்கும்‌ தொழிலில்‌ எம்பெருமானோடு உடனிருந்து செயல்படுகின்றீர்‌. அவன்‌ பக்கலில்‌ உடனிருந்தும்‌ அவன்‌ செய்யும்‌ அழித்தல்‌ தொழிலையும்‌ ஆமோதிக்கிறீர்-

ஒட்டிலிர்‌ எம்பிராற்‌ சேடம்‌ உளதன்றிப்‌ புன்னிமயொன்றும்‌
ஒட்டிலீர்‌ ஒன்றும்‌ சுதந்திரம்‌ இன்றன்றிப்‌ பண்பிலதில்‌
ஒட்டிலீர்‌ இவ்விரு தன்மையும்‌ இன்றி ஒருகுறையும்‌
ஒட்டிலீர்‌ உம்பர்கோன்‌ சேதநர்‌ பற்றருள்‌ மற்றவையே –46-

தாயாராகிய தாங்கள்‌ எம்பெருமானுக்கே யடிமையாயுள்ளீர்‌. மற்றவர்‌ திறத்து அடிமையாம்‌ கீழ்மை யன்றித்‌ தலைவியாக உள்ளீர்‌. தங்களுக்கு எம்பெருமானை விடுத்துச்‌ சுதந்திரம்‌ இல்லை.-எம்பெருமானுக்கு அடிமை-மற்றவருக்குத்‌ தலைமை. ஏனைய உயிர்‌ பண்புகள்‌ யாவுக்‌கும் நிபந்தனம்‌ என்ற இரு தன்மை அன்றி நுமக்கு குறை தரும்‌ பண்புகள்‌ எதன்‌ கண்ணும்‌ தொடர்பில்லை. எம்பெருமான்‌ திறத்துப்‌ பற்றும்‌ உயிரினங்கள்‌ திறத்தருளுவதன்‌றி மற்றைய கீழான பண்புகளோடு தொடர்புடையீ ரல்லீர் –

மற்றவை தாம்சுவை, யற்றவை மாயையை யாரறிவார்‌?
மற்றவை தாம்சுவை யுற்றவை யாமென மாலுமிதே
மற்றவை தாமற்ப சாரம்‌ உயிர்ச்சுவை மாரணமே
மற்றவை தீர்ந்தும்‌ தொண்டர்‌ குழுவுடன்‌ வாழ்சுவையே –47-

உம்‌ திருத்தொண்டு தவிர ஏனையவை சுவையற்றவையாகவும்‌,சேதனன்‌ அவற்றை சுவையுடையனவாகக்‌ கருதச்‌ செய்யும்‌ உமது மாயையின்‌ ஆற்றலை அறியவல்லவர்‌ யார்‌? மற்ற பொருள்கள்‌ சுவையுள்ளன என்று சேதனன்‌ கருதுதல்‌ மாயையின்‌ மயக்கமே. ஏனைய புலனின்பங்கள்‌ மிகக் குறைவான சுவை புடையனவே. மரணமாகிய கைவல்யம் முதலான இவற்றை விடுத்து நும்‌ தொண்டர்‌ குழாத்தொடும்‌ வாழும்‌ சுவையே மேம்பட்ட சுவையாகும் –

வாழ்சுவை மிக்கசீர்த்‌ தொண்டர்க்‌ கமுதெனும்‌ வாய்மொழியும்‌
வாழ்சுவைப்‌ பேருரை ஐவர்‌ வழங்கிய கோலமுடன்‌
வாழ்சுவை மிக்க கலியன் சொல்‌ மாலையா றங்கமுடன்‌
வாழ்சுவை வேரிமா மாறாத பூமேல்‌ இருப்பருளே–48-

மேம்பட்ட நறுமணம்‌ மாறாத தாமரை மேல்‌ இருக்கும்‌ பெருமாட்டியே! நல் வாழ்வுக்கு உரிய சுவை மிக்க சிறப்பினையுடைய தொண்டருக்கு அமுதம்‌ எனப்படும்‌ திருவாய்மொழியும்‌, இந்நூலுக்குத்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌, நஞ்சீயர்‌, வாதிகேசரி, பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை சொன்னதை ஏடுபடுத்திய வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை இவர்கள்‌ வழங்கிய ஐந்து உரைகளும்‌ ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்‌ னீராயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று போற்றப்படும்‌ அழகிய ஐந்து உரைகளும்‌, மேம்பட்ட திருமங்கை மன்னன்‌ அருளிய பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌, சிறிய திருமடல்‌, பெரிய திருமடல்‌, திவெழுகூற்றிருக்கை என்ற பெயர்களையுடையதாய்‌ அருளிய சொல்‌ மாலைகளும்‌ உன்‌ அருளால்‌ ஏற்பட்டனவாகும் –

இருப்பதும்‌ வந்தும்‌ உறைவதும்‌ ஏற்றசீர்த்‌ தாமரையே
இருப்பதும்‌ நாச்சியார்‌ கோயிலும்‌ வெள்ளறை ஏருறையூர்‌
இருப்பதும்‌ எல்லா இதய கமலத்‌(து) இறைவனுடன்‌
இருப்பதும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்த இறையுடனே–49-

உனக்குப்‌ பொருத்தமான சிறப்பை யுடைய தாமரையே நீ காட்சி வழங்குமிடமும்‌ தோன்றுமிடமும்‌, நிலையாத்‌ தங்கி இருக்குமிடமும்‌, நீ கோயில்‌ கொண்டிருக்கும்‌ திருப்பதிகள்‌ திருநறையூர்‌, திருவெள்ளறை, திருஉறையூர்‌, முதலியனவும்‌. ஆன்மாக்களின்‌ இதய தாமரைகளும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்தும்படி இறைவனுடன்‌ வீற்றிருக்கும்‌ பரமபதமும்‌ உனக்கு நிலையான இருப்பிடங்களாகும் –

இறையுடன்‌ எவ்வெப்‌ பிறப்பினும்‌ தோன்றல்‌ இணக்கமுடன்‌
இறையுடன்‌ சேர்ந்திருந்‌ தெவ்வெவ்‌ வளத்தினு முந்துகிறீர்‌
இறையுடன்‌ சேர்ந்தே பரனெனும்‌ ஏற்றம்‌ விளைப்பதுவே
இறையுடன்‌ சேர்க்கவும்‌ இன்பநீர்‌ சேதனர்‌ ஏற்பதுவே –50-

எம்பெருமான்‌ எடுக்கும்‌ எவ்வெவ்வதாரத்திலும்‌ அவன்‌ திருவுள்ளத்துக்கு ஏற்பவே தோன்றுதலும்‌, எம்பெருமானுடன்‌ சேர்ந்திருந்தே எல்லா அறங்களிலும்‌ முற்பட்டு செயற்படுதலும்‌, எம்பெருமானை நீர்‌ சேர்ந்திருந்திருப்பதாலேயே அவனுக்கு எல்லாரிலும்‌ மேம்பட்டவன்‌’ என்று ஏற்றம்‌ விளைவிப்பதும்‌, எம்பெருமானுடன்‌ ஆன்மாக்களைச்‌ சேர்ப்பதும்‌, அவற்றை அவன்‌ ஏற்றுக்‌ கோடலும்‌ ஆகியவை அனைத்தும்‌ தாயாராகிய உங்களுக்கு மதிப்புடைய செயல்களாகும் –

ஏற்பதும்‌ எல்லா உலகும்‌ இணையில்‌ தனம்விரும்பி
ஏற்பதும்‌ ஞாநிகள்‌ எல்லாம்‌ பரனிடம்‌ சேர்ந்திடவே
ஏற்பதும்‌ நித்தரும்‌ முத்தரும்‌ தந்தொண்‌ டெழிலுறவே
ஏற்பதும்‌ எம்மான்‌ அகத்தெழில்‌ நீர்தாம்‌ முகத்தெளிவே–51-

எல்லா உலகத்திலுள்ளவர்களும்‌, ஒப்பற்ற செல்வத்தை விடும்‌ ஞாநிகள்‌ எல்லோரும்‌ தம்மை எம்பெருமானிடம்‌ சேர்ப்பிப்பதை விரும்பியும்‌, நித்தியசூரிகளும்‌, முத்தி பெற்றுப்‌ பரமபதத்திலுள்ளவர்களும்‌, தங்கள்‌ தொண்டுசிறக்க அவர்களால்‌ வழிபடப்படுகின்ற தாங்கள்‌ எம்பெருமான்‌ உள்ளத்தெய்தும்‌ உகப்பைக்‌ சுண்டு, அதனால்‌ ஏற்படும்‌ மகிழ்வால்‌ முகத்தின்‌ தெளிவான அழகைப்‌ பெற்றுள்ளீர்கள் –

முகத்தெளி வுள்ள தறிவிலார்க்‌ குத்தனம்‌ முந்துதலால்‌
முகத்தெளி வுள்ளதாம்‌ மூதறி ஞர்தமது மெய்யுணர்வால்‌
முகத்தெளி யுண்டாம்‌ பரனுக்குத்‌ தம்மை முகந்தளிப்பால்‌
முகத்தெளி வுண்டாம்‌ முகம்பரன்‌ சீர்தனைக்‌ கண்டுமக்கே–52-

அறிவில்லாதார்க்கு செல்வம்‌ மிகுதலினாலே முகத்தெளி வேற்படுகிறது. உண்மை யறிவுடையவர்களுக்குத்‌ தத்துவ ஞானத்தால்‌ முகத்தெளிவுண்டாகிறது. மெய்யடியார்கள்‌ தம்மை முற்றவும்‌ வழங்குதலால்‌ அப்பரனுக்கு உள்ளத்துகப்பால்‌ முகத்‌ தெளிவுண்டாகிறது. எம்பெருமான்‌ உகப்பைக்‌ கண்டு உகத்தலால்‌ தாயாராகிய உமக்கு முகத்தெளிவும்‌ மகிழ்ச்சியுமேற்படுகிறது –

உமக்கொரு பாதப்‌ பயனாம்‌ உலகோர்‌ செழிப்புறவே
உமக்கொரு பாதிப்‌ பயனாம்‌ சுவர்க துற்றிடுதல்‌
உமக்கொரு முக்கால்‌ பயனாம் தமதியல்பு ஊர் புகுதல்‌
உமக்கொரு முற்றாம் அடியார் குழுவில்‌ உடனிருப்‌பே –53-

உலகவர்‌ செழிப்புறும்‌ செயல்‌ எம்பெருமானுக்கும்‌, தாயாராகிய உமக்கும்‌ காற்பங்கு மகிழ்ச்சியாகிய பயனைத்‌ தருகிறது; ஆன்மாக்கள்‌ சுவர்க்க இன்பம்‌ அடைதலால்‌ உமக்கு அரைப்பங்கு மகிழ்ச்சியாகிய பயன்‌ கிட்டுகிறது; ஆன்மாக்கள்‌ வீட்டுலகம்‌ அடைந்து கைவல்லிய இன்பம்‌ நுகர்தலைக்‌ கண்டு உங்களுக்கு முக்காற்‌ பங்கு மகிழ்ச்சிப்‌ பயன்‌ ஏற்படுகிறது; அடியார்‌ குழாத்தில்‌ நடுவில்‌ நீவிர்‌ இருவரும்‌ இருப்பது உமக்கு நிறை மகிழ்ச்சியாகிய பயனை உண்டாக்குகிறது –

அடியார்‌ குழாங்களைக் காணுதல் வாய்ப்பென்‌ றறிவளித்திர்‌
அடியார்‌ குழாங்களைக் காணும்‌ பெரும்பயன்‌ ஆய்ந்தளித்தீர்
அடியார்‌ குழாத்தின்‌ அகத்துறை பேரின்பம்‌ ஈந்தநீரே
அடியார்‌ அடிசூடும்‌ பேரரசாள நினைப்பிரன்றே–54-

அடியார்‌ குழாங்களைக்‌ காணுதலே உண்மையான செயல்‌ என்ற அறிவைத்‌ தந்துள்ளீர்‌. அதனால்‌ ஏற்படும்‌ பெரும்‌ பயனை அடியேன்‌ பெறுமாறு என்‌ நிலையை ஆராய்ந்தருள்‌ செய்தீர்‌. அடியார்‌ குழாத்துள்‌ அடியேனும்‌ ஒருவனாக அவருடனே இணைந்து தங்கும்‌ வாய்ப்பினை நல்கிய தாங்களே, அடியேன்‌ அடியார்களுடைய திருவடிகளைத்‌ தலையில்‌ சூடி மகிழ்தலாகிய பெரிய அரசாட்சியை அருளுமாறு திருவுள்ளம்‌ பற்ற வேண்டும்‌-

நினைப்பதும்‌ எல்லா உயிர்களும்‌ உய்யுமா நீக்கமின்றி
நினைப்பதும்‌ எம்பிரான்‌ காப்பும்‌ நிகில செயல்நலங்கள்‌
நினைப்பதும்‌ தேவிகள்‌ மற்றவர்‌ நும்போல்‌ நினைவுகொள்ள
நினைப்பதும்‌ செவ்விதான்‌ நீள உபய விபூதியுமே –55-

எல்லா உயிர்களும்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமாகிய நும்மை நீங்காமல்‌ பற்றிப்‌ பிறவித்‌ துயரிலிருந்து பிழைத்து வீடு பேறுஅடையுமாறும்‌, எம்பெருமானுடைய காத்தல்‌ செயலோடு ஏனைய செயல்களும்‌ முறையாக நிசுழுமாறும்‌, எம்பெருமானுடைய தேவியருள்‌ ஏனையராகிய மண்மகளும்‌, ஆயர்‌ மடமகளும்‌, நும்மைப்‌ போன்ற நினைவினையே கொள்ளுமாறும்‌, லீலா விபூதியும்‌ நித்திய விபூதியையும்‌ தொடர்ந்து எல்லா நலன்களும்‌ பெறுமாறும்‌ தாயாகிய நீங்களே திருவுள்ளம்‌ பற்றியுள்ளீர்கள் –

விபூதி விபூதிமான்‌ நும்நோக்கில்‌ உள்ளதும்‌ ஓர்பொருளே!
விபூதி விபூதிமான்‌ உந்தம்சீர்‌ சார்பன்றி உள்ளதாமே?
விபூதி விபூதிமான்‌ சீரலர்‌ மேல்மங்கை உம்மதாட்சி
விபூதி விபூதிமான்‌ உந்தம தேர்கடைக்‌ கண்ணதன்றே–56-

அலர்மேல்‌ மங்கையீரே! ஈருலகமும்‌ அவற்றையுடையானும்‌ நும்பார்வை தம்மேல்‌ பதிவதாலேயே ஒப்பற்ற பொருள்களாகின்றன. உம்‌ தொடர்பின்றேல்‌ உலகுகளுக்கும்‌ அவற்றை உடையானுக்கும்‌ நிறை நலம்‌ ஏற்படுமா? உலகுகளும்‌ உம்‌ அன்பிற்கு வசப்பட்ட உடையானும்‌ உம்‌ செல்வங்களாம்‌. எல்லா உலகுகளும்‌ உம்‌ கடைக்கண்‌ நோக்கினை எதிர்நோக்கி உள்ள பொருள்களே –

உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றயி ராணிதன்கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே மலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே கலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றதே தாமரையே –57-

உம்‌ கடைக்கண்ணின்‌ அருள்‌ நோக்கத்தின்‌ பல கூறுகளில்‌ ஒரு கூறு தம்மீது பொருந்தியதனால்‌ இந்திராணியும்‌, பார்வதியும்‌, நாமகளும்‌ சிறப்புறுகின்றனர்‌. அங்ஙனமே பெருமானுடைய தாமரைக்‌ கண்களும்‌ வீறுபெற்று விளங்குகின்றன-

தாமரைக்‌ கண்ணன்‌ தகவிலை அன்றே கதிர் முழக்கே
தாமரைக்‌ கையய யம்மேலும்‌ வீடணர்த்‌ தாழ்ததியதே
தாமரைத்‌ தாள்பிறப்‌ பீர்பதாச்‌ சொல்லுதல்‌ சொல்லளவே
தாமரைத்‌ தந்தநும்‌ மொக்கும்‌ உபய விபூதிவேந்தே–58-

எம்பெருமான்‌ தாமரைக்‌ கண்ணனாய்‌ இருக்கும்‌ செயல்‌ உன்னீடில்லாக்‌ கதிர்‌ முழக்குப்‌ போன்ற வெளி அழகு மாத்திரமே. எம்பெருமானுடைய தாமரைக்கை அபய முத்திரை உடையதேனும்‌ அவனைத்‌ தஞ்சமென்றடைந்த விபீஷணாழ்வானை ஐயுறச்‌ செய்தது. எம்பெருமானுடைய தாமரைத்‌ திருவடிகள்‌ அடியாருடைய பிறவிப் பிணியைப்‌ போக்குவன என்ற செய்தி அடியேங்கள்‌ பக்கல்‌ செயற்படுவதாகத்‌ தெரியவில்லை. தாமரையில்‌ தோன்றிய தாயாராகிய தங்களை ஈருலக வேந்தனாகிய எம்பெருமானும்‌ ஒப்பானோ-

வேந்தர்‌ தலைவன்‌ தயரதன்‌ மேலாம்‌ மருகிமானீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ சனகன்‌ விரும்பும்‌ திருமகள் நீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ இராமன்‌ வியத்தகு தேவியானீர்‌
வேந்தர்‌ தலைக்கடை வேசரி நாசமாக்‌ கண்டீர்‌ நீரே–59-

அரசர்‌ தலைவர்களாகிய தயரதற்கும்‌ சனகர்க்கும்‌, இராமபிரானுக்கும்‌ முறையே மருமகளும்‌, விரும்பி வளர்த்த செல்வமகளும்‌, வியத்தகு தேவியுமாகிய தாங்கள்‌, அரசருள்‌ கடைப்பட்ட கோவேறு கழுதை போன்ற இராவணனைப்‌ பூண்டோடு அழியுமாறு செய்தீர் –

நீரே பரம புருடன்‌ புருடனா நிரணமிப்பீர்‌
நீரே உயிர்கள்‌ உடையான்‌ அணையுமா நேர்ந்திடுவீர்‌
நீரே அடியான்‌ பணியவன்‌ உள்ளம்‌ நிலைக்கவைப்பீர்‌
நீரே இவன் செயும்‌ தொண்டை நினைத்து மகிழவைப்பீர்‌–60-

நீரே எம்பெருமானைக்‌ கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தீர்‌. நீரே ஆன்மாக்களை எம்பெருமான்‌ தன்னோடு பொருந்துமாறு ஏற்றுக்‌ கொள்ளுதற்குரிய பரிவுரை கூறிச்‌ சேர்த்து வைப்பீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ திருத்‌ தொண்டினை எம்பெருமான்‌ உகந்தருளுமாறு அவன்‌ உள்ளத்தில்‌ நிலைபெறச்‌ செய்வீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ தொண்டுகளை நினைத்து எம்பெருமான்‌ மகிழுமாறு செய்வீர் –

மகிழ்வீர்‌ மணாளன்‌ படைத்ததைக்‌ காத்திவை யீர்ப்பிதனை
மகிழ்வீர்‌ மணாளன்‌ சராசரம்‌ பந்தென ஆடுசெயல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ உலகம்‌ முறையுடன்‌ பாலடைதல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ வனமாலை சேர்திரு மார்பினையே–61-

நீரே உங்கள்‌ மணாளனாகிய எம்பெருமான்‌ உலகைப்‌ படைத்துக்‌ காத்து ஊழிக் காலத்தில்‌ அவற்றை வயிற்றினிட்டு மறைப்பதனையும்‌, இவ்வுலகத்து உயிர்களை அவன்‌ பந்து போல ஆட்டுவித்தலையும்‌, உலகத்துயிர்கள்‌ தத்தம்‌ பக்குவத்திற்கு ஏற்ப முன்னோ பின்னோ அவன்பால்‌ அடைதலையும்‌ கண்டு, மகிழ்தலோடு எம்பெருமானுடைய வனமாலை அணிந்துள்ள மார்பினை உங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு மகிழ்வீர் —

மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய வெண்மை முதலுகத்தும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ நீர்கொளும்‌ செம்மை மறுயுகத்தும்
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய சாமளம்‌ மூன்றினிலும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ கொள்‌ளுவான்‌ மாநிறம்‌ நான்கினி்‌லே -62-

அலர்மேல்‌ மங்கையீர்‌! நீர்‌ எம்பெருமான்‌ திருமார்பினை விடுத்துத்‌ தனியே ஊஞ்சலில்‌ ஆடும்‌ போது கொள்ளும்‌ வெண்ணிறத்தைக்‌ கிருத யுகத்தும்‌, பின்‌ ஒருகால்‌ செம்மை நிறத்தைத்‌ திரேதா யுகத்தும்‌, மீண்டும்‌ ஒருகால்‌ கொள்ளும்‌ நீல நிறத்தைத்‌ துவாபர யுகத்தும்‌, மறுபடியும்‌ ஊழியாகிய கலியுகத்தும்‌ எம்பெருமான்‌ கரு நிறமும் முறையே தனக்குரிய நிறங்களாக்‌ கொண்டுள்ளான்-

நான்கெனும்‌ வேதம்‌ நவில்வநுங்‌ கீர்த்தியே நானிலத்தே
நான்கெனுந்‌ தோளால்‌ நலனுற சார்வதே நாரணனாம்‌
நான்கெனுந்‌ தாளால்‌ நடையறம்‌ பெற்ற நுமதுநோக்கின்‌
நான்கெனும்‌ மார்க்கம் நலமிகு மார்க்கம் செலுத்துவீரே –63-

தாயீர்‌! நான்கு வேதங்களும்‌ கூறுவன இறைவன்‌ புகழே-நாரணனாகிய எம்பெருமான்‌ தன்‌ நான்கு தோள்களாலும்‌ மகிழ்வுறத்‌ தழுவவது உம்மையே- உம் பார்வையாலேயே அறம்‌ என்னும்‌ பசு நான்கு கால்களால்‌ நடக்கிறது-கர்ப்பம்‌, யாம்யம்‌, தூமம்‌, அர்ச்சிராதிகதி என்ற நான்கு கதிகளுள்‌ நன்மை மிக்க அர்ச்சிராதிகதி மார்க்கத்தில்‌ உம்‌ அடியார்களை எம்பெருமானைக் கொண்டு செலுத்துவீராக —

செலுத்தும்‌ வினைகளைத்‌ தீய்ந்திடச்‌ செய்யும்‌ உமதருளை
செலுத்தும்‌ படைப்புப்‌ பதம்பெறு வானுறும்‌ சீரருளே
செலுத்தும்‌ சதமகன்‌ மூவுல காட்சி நும்சீரருளே
செலுத்துநும்‌ நேர்மைசால்‌ சீர்மை உபய விபூதிமனே –64-

துயரத்தில்‌ செலுத்தும்‌ கரும பயன்களை உமது அருள்‌ அழித்து ஒழிக்கும்‌. பிரமன்‌ படைப்புத் தொழில்‌ செய்வதும்‌, இந்திரன்‌ மூவுலகம்‌ ஆளுவதும்‌, எம்பெருமான்‌ தன்‌ இரு செல்வங்களாகிய உலகங்களை ஆட்சி செய்வதும்‌ நும்‌ இச்சையின்‌ பொருட்டே –

விபூதி பெறுமே விலகி நும்‌ பார்வை தனதனேலும்
விபூதி நும் கூட்டின்றி வில்வமே யாயின்‌ விளைவதுண்டே?
விபூதிசால்‌ இந்திர போகம்‌ விளையுமே? வாசவற்கும்‌
விபூதி விளைக்கும்‌ அருளன்றி உண்டே? எவர் தமக்கே–65-

நும்‌ அருட்பார்வை விலகின்‌ செல்வத்துக்கு உரிய குபேரனும்‌ செல்வத்தைப்பெறுதல்‌ இயலுமா? வில்வத்தினால்‌ கூட உம்‌ தொடர்பில்லையேல்‌ செல்வம்‌ விளைத்தல்‌ இயலுமா? உம்‌ அருளினாலேயே இந்திரனுக்கும்‌ செல்வம்‌ மிக்க தேவ இன்பம்‌ விளைகிறது. செல்வத்தை நல்கும்‌ உம்‌ அருளன்றி ஒருவருக்கும்‌ எவ்வகைச்‌ செல்வமும்‌ கிட்டாது —

தன்னலம்‌ நீத்துப்‌ பிறர் நலம்‌ பேணுமித்‌ தாயினம்யார் ?
தன்னலத்‌ தாழ்வில்‌ தரிக்கிலர்‌ மூவராந்‌ தேவதேவர்‌
தன்னலத்‌ தாழ்விலர்‌ முப்பத்து முக்கோடி தேவர்தாமும்‌
தன்னலம்‌ நீத்தல்‌ உபய விபூதிக்கும்‌ தாயதாலே–66-

மூம் மூர்த்திகளும்‌ தன்னலம்‌ குறைந்தால்‌ அமைதி யுற மாட்டார்கள்‌-முப்பத்து மூவருடைய வரிசையில்‌ சேர்ந்த தேவர்களும்‌, தன்னலம்‌ தாழ்வதைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. தன்னலத்தை விடுத்துப் பிறர்‌ நலத்துக்காகவே வாழும்‌ தாய்க் குலம்‌ உம்‌ அம்சமே. நீர்‌ ஈருலகங்களுக்கும்‌ தாயராக இருப்பதால்‌ தன்னலம்‌ நீத்துச்‌ செயல்‌ புரிகிறீர் —

தாயெனக்‌ கோடல்‌ சசியும்‌ உமையும்‌ கலைமகளும்‌
தாயெனச்‌ சித்திதே வானை பிடாரி குறமகளும்‌
தாயெனப்‌ பத்தினித்‌ தெய்வ மாச்சாற்றும்‌ மகளிரெல்லாம்‌
தாயெனும்‌ நீயெனும்‌ பொருளன்றி மற்றைத்‌ தகவுளதே–67-

உலகவர்‌ தாய்மார்‌ என்று போற்றும்‌ இந்திராணியும்‌, உமா தேவியும்‌, கலை மகளும்‌, சித்தி தேவியும்‌, தெய்வானை அம்மையாரும்‌. பிடாரியும்‌, வள்ளியும்‌, தாயார் என்று போற்றப்படும்‌ பத்தினிப்‌ பெண்டிரும்‌ உம்மைப்‌ போன்ற தாயாவார்களா? ஈருலகிற்கும்‌ தாயெனப்படும்‌ உன்னுடைய அம்சமே என்று கூறுவதைத்‌ தவிர வேறு பொருளுடைய சொற்றொடர்‌ உள்ளதோ?-

உளதே? கருணை சால்‌ சீலம்‌ உமதிரு பாலதன்றி
உளதே? உலகவர்‌ தாய்தந்தை மற்றுள உற்ற சுற்றம்‌
உளதே? அணுவும்‌ விபுவுமாய ஒன்றிலும்‌ நீக்கமின்மை
உளதே? உபாயமும்‌ பேறாம்‌ உயர்வுறு மிக்க பண்பே –68-

பெருமானும்‌ நீருமாகிய இருவர்‌ பக்கத்தலன்‌றி வேற்றுத்‌ தெய்வங்கள்‌ பால்‌ கருணையும்‌ அதற்கேற்ற செயலும்‌ உளவோ? மற்ற தெய்வங்கள்‌ உங்கள்‌ இருவரைப்‌ போல்‌ உலக மக்களுக்குப்‌ பெற்றோரும்‌ சுற்றமும்‌ ஆவாரோ? நீரும்‌ எம்பெருமானும்‌ அணுவும்‌ விபவுமாய்‌ இருந்து உடல் மிசை உயிர்‌ எனக் கலந்து பரந்திருக்கும்‌ செயல்‌, மற்ற தெய்வங்கள்‌ பால்‌ உண்டோ? வீட்டிற்கு நிமித்தப்‌ பொருளான உபாயமும்‌ உபயே யமுமாக இருக்கும்‌ உயர் தன்மை உங்கள்‌ இருவர் பால்‌ அன்றி மற்ற தெய்வங்கள்‌ பக்கம்‌ உள்ளதோ?

பண்பிவை நுந்தம்‌ பரனுக்‌ கடிமை பிறிதிலின்மை
பண்பிவை நுந்தம்‌ பரனருட்‌ சார்பன்றி சார்பிலதாம்‌
பண்பிவை நுந்தம்‌ பரனுகப்‌ பின்முகம்‌ பூப்பதுவே
பண்பிவை நீழல்‌ பரன்சார்‌ புளதில தோர் வழக்கே–69-

எம்பெருமானுக்கே அடிமையா யிருத்தலன்‌றிப் பிற தெய்வங்களுக்கு அடிமையா யிருக்கும்‌ பண்பு நும்மிடம்‌ இல்லை. எம்பெருமான்‌ அருளைச்‌ சார்தலன்றிப்‌ பிற சாதனங்களைப்‌ பின்பற்றாமை நும்‌ பண்பாகும்‌. எம்பெருமான்‌ உகப்பிணைக்கண்டு உகத்தலே நும்‌ பண்பு-எம்பெருமானுடைய நிழலாக அவனைப்‌ பிரியாது இருப்பதும்‌ நும்‌ பண்பு. இப் பண்புகள்‌ எம்பெருமான்‌ சார்பு உளதேல்‌ நும் பால்‌ உண்டு. இலதேல்‌ நம்பால்‌ இல்லை- எனவே, நீர்‌ என்றும்‌ எம்பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் –

வழக்கோ நன்‌ மக்கள் பால்‌ தீர்ந்து புன்‌ மக்கள்பால்‌ சார்வதுவே
வழக்கோ? சிறைக்கண்யம் தேவ மகளிர் சிறை கழிப்பீர்
வழக்கோ? மண் மாதர்‌ சிறை எமைத் தீர்ப்பதை பார்த்திருப்பீர்‌
வழக்கோ? படு துயர் யாம் கண்டு கத்தல் மணாளனோடே –70-

தாயாராகிய தாங்கள்‌ நன் மக்கள்‌ பக்கலினின்று நீங்கிப்‌ புன் மக்கள் பக்கல்‌ சேர்வது முறையோ? அடியவராகிய நாங்கள்‌ பிறவிச்‌ சிறையில்‌ கிடக்கவும் சிறைப்பட்டுத் தேவ மகளிரைத் தாங்கள் சிறைவீடு செய்தமை முறையோ – பூ மடந்தை கோதை நாச்சியராக அவதரித்து எமக்கு மெய்யுணர்வு அளித்து எம்மைப்‌ பிறவிச் சிறையிலிருந்து விடு விப்பதனை நீங்கள்‌ பார்த்துள்ளீர்கள்‌. நாங்கள்‌ படுந்துயரைக் கண்டும்‌ அதனைப்‌ போக்க முயலாது தங்கள்‌ மணாளனாகிய எம்பெருமானுடன்‌ தாங்கள்‌ உகந்திருப்பது முறையோ

ஓடுங்‌ கறங்கன்ன ஊழ்வினைச்‌ சூழலில்‌ ஒத்திருப்போம்‌
ஓடுங்‌ கறங்கின்‌ உலகியல்‌ ஒன்றின்பின்‌ ஒன்றுறுவ
ஒடுங்‌ கறங்கின்‌ இறை நெறி ஆம்பரிசு ஊர்ந்தலைப்ப
ஓடுங்‌ கறங்கிவை வீடுசெய்‌ யுந்தங்கண்‌ நோக்கிலதே–71-

உம்முடைய கடைக்கண்‌ நோக்கம்‌ எம்மேல்‌ பதியாததால்‌ முன்செய்த வினைகளால்‌ காற்றாடிபோலச்‌ சுழற்றப்படுகிறோம்‌. உலகியல்‌ வாழ்வும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக எங்களைச்‌ சுழலச்‌ செய்கின்றன, பல தெய்வங்களையும்‌ வழிபடும்‌ ஆராதனைகள்‌, நெறிமுறைகள்‌ போல்வன எம்மை அணுகி சுழல்விக்கின்றன. இச் சுழற்சி களிலிருந்து எங்களை விடுவிக்கத்‌ தங்களாலேயே இயலும் –

நோக்கில தாயிடின்‌ உள்ளதோர்‌ நுண்ணறிவு யார்க்குளதாம்‌?
நோக்கில தாயின்‌ நுவலுமி யாவும்‌ நிலை பெறுமே?
நோக்கில தாயின்‌ நுவல்படைப்‌ பீர்ப்பதும்‌ ஆமதுவே?
நோக்கில தாயின்‌ உகந்தருள்‌ நோன்தலம்‌ புல்லெழுமே–72-

உங்களுடைய அருள் நோக்கு இல்லையேல்‌ ஒருவருக்கும்‌ மெய் உணர்வு ஏற்படாது. எம்பெருமானுடைய உடைமைகளாகிய இயங்கியற் பொருள்ளும்‌ நிலையியற்‌ பொருளும்‌ நிலையாக இருக்கமாட்டா. எம்பெருமானுடைய படைத்தல்‌, காத்தல்‌, முதலிய செயல்களும்‌ முறையாக நிகழா? எம்பெருமாள்‌ உகந்தருகின்ற திருப்பதிகள்‌ யாவும்‌ தரிசிப்பார் இன்மையால்‌ புல்‌ தோன்றி வளரும்‌ பாழிடங்கள்‌ ஆகும் –

புல்லெழும்‌ நும்சார்‌ பிலதென்ன புண்ணிய நோன்பிடங்கள்‌
புல்லெழும்‌ புண்ணிய கேத்திரம்‌ புண்ணிய தீர்த்தங்களும்‌
புல்லெழும்‌ முத்தி தருமென போற்று நும்‌ ஏழ்தலமும்‌
புல்லெழும்‌ வேங்கடம்‌ சோலை நல்‌ வான மலையதுவே–73–

நும்‌ தொடர்பு இல்லை யெனின்‌ அறச் செயல்கள்‌ செய்வதற்கு ஏற்றன என்று போற்றப்படும்‌ புண்ணிய பூமிகளும்‌, புண்ணிய திருத் தலங்களும்‌,புண்ணிய தீர்த்தங்களும்‌, முத்தி தரும்‌ திருப்பதிகளாகிய அவந்தி அத்தினாபுரி, துவாரகை முதலியனவும்‌, எம்பெருமான்‌ உகந்தருளி யிருக்கும் வேங்கடமலை, வானமாமலை முதலியனவும்‌, பயன்‌ கொள்ளும்‌ அடியவருடைய வருகை இன்மையால்‌ பாழ் பட்டுவிடும்

மலையுமால்‌ நெஞ்சும்‌ பொறியும்‌ புலனொடு மாறி மாறி
மலையுமால்‌ முன்முன்‌ வினையும்‌ சுவையொடு வாசனையும்‌
மலையுமால்‌ தாபக்‌ கனலும்‌ மறித்து வரு பிறப்பும்‌
மலையுமால்‌ ஈங்கிதின்‌ வைத்திருப்‌ பான்றனைக்‌ கேட்கிலீரே–74–

இவ் வுலக வாழ்க்கையில்‌, நும்‌ அடியார்களை நெஞ்சமும்‌ அறிவும்‌ பொறியும்‌ புலன்‌ நுகர்ச்சியும்‌ செயற்‌ பொறிகளும்‌ தனித்தும்‌ கிளர்ந்தும்‌ நலியும்‌. பண்டைய வினைகளும்‌ அவற்றின்‌ வழிவரும்‌ சுவைகளும்‌ அவற்றின்‌ சுவடுகளும்‌ நலிகின்றன. ஆதியாத்மிகம்‌, ஆதிதைவிகம்‌, ஆதிபெளதிகம்‌ என்று கூறப்படும்‌ இடுக்கண் தரும்‌ மூவகைத்‌ தீக்களும்‌, மாறிமாறித்‌ தோன்றும்‌ பிறவிப்‌ பிணியும்‌ நலிவுறுத்துகின்றன. அடியார்கள்‌ படும்‌ இத் துயர்களை இம் மண்ணுலகில்‌ அவர்களை வைத்து வருந்தச்‌ செய்யும்‌ செயல்‌ பற்றித்‌ தாங்கள்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ வினவ மாட்டீர்களா –

கேட்கிலீர்‌ ஆய்பாடி வெண்ணை கவர்ந்துண்ணும்‌ கேவலத்தை
கேட்கிலிர்‌ முன்பகை வாய் வந்த கேட்டவன்‌ மேனிகொண்டான்‌
கேட்கிலீர்‌ பாஞ்சாலி மூர்க்கர்‌ கிளரவைக்‌ கூக்குரலைக்‌
கேட்கிலீர்‌ நீருமே பல்லூழி யான்படுங்‌ கேடிதையே–75-

எம்பெருமான்‌ ஆயர்பாடியில்‌ வெண்ணையைக்‌ களவினால்‌ உண்ணலாகிய இழி செயல்‌ செய்தான்‌. தன்‌ கண் முன்‌ பகைவனாய்‌ வந்து தன்னோடு பொருது உயிர் நீத்த சிசுபாலனுக்குத்‌ தன்‌ திருவடிமில்‌ இடம்‌ அளித்தான்‌. அரசவையில்‌ பாஞ்சாலியைக்‌ கெளரவரும்‌ அவரைச்‌ சேர்ந்தவர்களும்‌ பழித்துப்‌ பேசினர்‌. இவற்றைக்‌ குறித்து எந்த வினாவும்‌ எழுப்பாத தாங்கள்‌, பல ஊழிக் காலமாக அடியேன்‌ அனுபவிக்கும்‌ கேடுகளையும்‌ பற்றி வினவாதிருப்பதில்‌ வியப்பு ஒன்றும் இல்லை –

கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ பிணைதலும்‌ கேழிலதே
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உளத்துக்‌ கிளருமருள்‌
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ வடமறை நேருமொழி
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உபதேசக்‌ கேள்வியதே–76-

எம்பெருமானும்‌ நீங்களும்‌ சேர்ந்திருக்கும்‌ சேர்த்தியும்‌ உங்கள்‌ உள்ளத்தில்‌ மேன்‌ மேலும்‌ பெருகும்‌ அருளும்‌, வேதத்தை ஒத்து இனிய நும்‌ மொழிகளும்‌, இரக்கத்தால்‌ நீங்கள்‌ பிறருக்கு வழங்கும்‌ நல்லுரைகளும்‌ என்றும்‌ அழிவில்லாத பெரும்‌ புகழுக்கு உரியனவாம் –

கேள்விகொள்‌ வீர்நும கேள்வி யவன்கொள வையமுய்யும்‌
கேள்விகொண்‌ டானலன்‌ கேடுவுந்‌ துற்றதால்‌ கெட்டொழிந்தான்‌
கேள்விகொள்‌ வீரே சிறைப்பட்ட ரக்கியர்கே ழில்நிந்தை
கேள்விகொள்‌ வீர்பிற மாதர்தம்‌ கேடு தவிர்ப்பதற்கே–77-

அடியார்களுடைய குறைகளைச்‌ செவி மடுக்கும்‌ தாங்கள்‌ எம்பெருமானுக்கு அவற்றைத்‌ தெரிவிப்பதனால்‌ உலகவராம்‌ அவர்கள்‌ ‘நன்மை அடைகிறார்கள்‌. தங்கள்‌ சொற்களைக்‌ கேளாததனால்‌ கேடுகளை அடைந்து இராவணன்‌ அடியோடு அழிந்தான்‌. சிறையிலிருந்து அரக்கியர்‌ கூறிய கடஞ்சொற்களைத்‌ தாங்கள்‌ செவி மடுத்தீர்கள்‌. ஏனைய தேவ மாதர் தம்‌ சிறையைத்‌ தவிர்ப்பதற்கே தாங்கள்‌ அவ் வரக்கியர்‌ கூற்றைப்‌ பொறுமையோடு செவி மடுத்தீர் —

தவிர்ப்பதும்‌ எம்பிரான்‌ சேதநர்த்‌ தள்ளும்‌ சுதந்திரத்தைத்‌
தவிர்ப்பதும்‌ சேதனர்‌ தம்பிழைக்‌ கண்டு நடுங்குமதைத்‌
தவிர்ப்பதும்‌ தம்ம தியல்பின்‌ முரண்பிறர்‌ சொல்லுமதைத்‌
தவிர்ப்பதும்‌ சார்வார்‌ மிதுநத்‌ திருப்பின்‌ தமபிறப்பே–78

பிராட்டியாரே! ஆன்மாக்களைப்‌ புறக்கணிக்கும்‌ எம்பெருமானுடைய சுதந்திரத்தைத்‌ தாங்களே பரிந்துரை கூறி நீக்குகிறீர்‌. ஆன்மாக்கள்‌ தம்‌ பிழைகளை நினைத்து நடுங்குவதைத்‌ தாங்கள்‌ கருணையால்‌ போக்குகிறீர்‌. ஆன்மாவின்‌ இயல்புக்கு மாறாகப்‌ பிறர்‌ பேசுவதைப்‌ போக்குவீரும்‌ நீர்‌. எம்பெருமானும்‌ நீரும்‌ இருக்கும்‌ இருப்பினைச்‌ சரணாகச்‌ சார்பவர்‌ தம்‌ பிறவியைப்‌ போக்குபவரும்‌ நீரே-

பிறப்பதற்‌ கோர்வினைக்‌ கட்டில்லை என்றும்‌ பிறந்தருள்வீர்‌
பிறப்பதற்‌ கும்மொரு தாய்தந்தை யில்லை பிறந்தருள்வீர்‌
பிறப்பது தாமரையாம்‌ பெற்றிக்கோ ருறுப்புமில்லை
பிறப்புத்‌ தவிரா(து) அவன்பிறப்‌ பொக்கப்‌ பிறக்குமதே–79-

உலகில்‌ பிறப்பதற்குரியதொரு வினையின்‌ தொடர்பு இல்லாமலேயே நீங்கள்‌ உலகில்‌ பிறப்பெடுக்கிறீர்கள்‌. தாய்‌ தந்தையர்‌ இல்லாமலே இயல்பாலேயே நீங்கள்‌ பிறவி எடுக்கிறீர்‌. தாங்கள்‌ பிறப்பிடமாகிய தாமரைக்குத்‌ தங்களைப்‌ பிறக்கச்‌ செய்யும்‌ உறுப்பு எதுவும்‌ இல்லை.
எம்பெருமான்‌ உலகில்‌ பிறவி எடுக்குந்‌ தோறும்‌ அவனுக்கு ஏற்க நீங்களும்‌ பிறவி எடுக்கின்றீர்‌-

பிறப்பதோ பெம்மான்‌ சுரர்குலம்‌ தாமும்‌ சுரர்குலமே
பிறப்பதோ பெம்மான்‌ மனிதனே தாழும்‌ மனிதகுலம்‌
பிறப்பதோ பெம்மான்‌ விலங்கது தாமும்‌ விலங்கினமே
பிறப்பதோ பெம்மான் தான்‌ தாவரம்‌ தாமுமோர்‌ தாவரமே ! –80–

பெருமான்‌ தேவனாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ தேவியாகவும்‌,மனிதனாகப்‌ பிறப்பின்‌ பெண்மகளாகவும்‌, விலங்காகப்‌ பிறப்பின்‌ மறைந்து நின்‌று பெண்‌ விலங்காகவும்‌, தாவரமாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ மறைந்து நின்று தாவரமாகவும்‌ பிறப்பெடுக்கின்றீர்‌. நும்‌ இணை பிரியாமை இருக்குமாறு என்னே? என்பது குறிப்பெச்சம் –

தாவி லருங்கலை நும்மருள்‌ கூட்டின்‌ தகவுடைத்தாம்‌
தாவி லருங்கலைக்‌ கற்றோன்‌ கதிரோன்முன்‌ சாயிழந்தான்‌
தாவி லருங்கலைக்‌ சாற்றற்‌(கு) அரியவன்‌ நும் வயமே
தாவி லருங்கலைக்‌ முற்றும்‌ இயல்பி னறி வரிதே? –81-

வருத்தமில்லாத அரிய கலைகள்‌ நும்‌ அருளொடு கூடியே பெருமை பெறுகின்றன. நீங்குதலில்லாத அரிய கலைகளைச்‌ ஸூரியனை அடுத்துச்‌ கற்ற அனுமனும்‌ நும்‌ சொற்களால்‌ தன்‌ எண்ணத்தைக்‌ கை விட்டு நும்மைச்‌ சூழ்ந்த அரக்கியரை நலியாது விடுத்தான்‌. நீங்குதலில்லாத பல கலைகளாலும்‌ உள்ளவாறு அறிய முடியாத எம்பெருமானும்‌ நுமக்கு வசப்பட்டவனே. நீங்குதலில்லாத அரிய கலைகளும்‌ உம்மை உள்ளவாறு அறிதல்‌ இயலாது–

அறிவி தேயலர்‌ மேல்மங்கை நுந்தரத்‌ தாயிரத்தொன்‌(று)
அறிவரி தேயயன்‌ நெற்றியில்‌ அங்கணன்‌ இந்திரனும்‌
அறிவரி தேஅயன்‌ தேவி அயிராணி பார்வதியும்‌
அரிவரி தேயுடன்‌ தேவியர்‌ நீரும்‌ அமலனுமே–82-

அன்னையார்‌! நும்‌ தகுதியின்‌ ஆயிரத்திலொரு கூறு கூட மற்றவர்‌ அறிதல்‌ இயலாது. பிரமன்‌, சிவன்‌, இந்திரன்‌ என்ற பெருந்தேவரும்‌ அவர் தேவியராகிய நா மகள்‌, பார்வதி, இந்திராணி என்பவரும்‌ கூட நும்‌ தகுதியை உள்ளவாறு அறிதல்‌ இயலாது. மற்றவரைக்‌ கூறுதல்‌ ஏன்‌? உம்முடன்‌ இருக்கும்‌ நில மடந்தையும்‌, ஆயர் குல மடந்தையும்‌ நீரும்‌ எம்பெருமானும் கூட நும்‌ பெருமையை அறிதல்‌ அருமையாகும் –

அமலன்‌ அமுதங்‌ கடைந்தான்‌ பிறர்க்கென்‌ றுமை யடைந்தான்‌
அமலன்‌ அனைத்தும்‌ இயக்கற்‌ குரியன்‌ நினைவினாலே
அமலன்‌ அனைத்தும்‌ தனதா உடையான்‌ இயல்புறவே
அமலன்‌ உடையன்‌ செயலன்‌ உமதவன்‌ மார்பி௫ப்பே –83-

களங்கமற்ற எம்பெருமான்‌ பிறருக்கு அமுதம்‌ கடைந்து கொடுப்பதான பொய்க் காரணம்‌ காட்டிக் கடல்‌ கடைந்த செய்கை உலகத்துக்‌ தாயாராகிய உம்மைப்‌ பெறவே, எல்லா உலகப்‌ பொருள்களையும்‌ ஆட்டுவிக்கும்‌ செயலையும்‌ யாவற்றையும்‌ தன்னை உடைமையாகப்‌ பெற்றிருக்கும்‌ சிறப்பினையும்‌ உடையவனாய்‌, அனனத்தையும்‌ உடையவனாகவும்‌ ஆள்பவனாகவும்‌ சிறந்து விளங்குகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌, நீர்‌ அவன்‌ மார்பிலிருந்து உற்சாகப் படுத்து வதலாலேயே –

இருப்ப திறையும்‌ பிரிவிலை மேன்மை பிரிவிலையே
இருப்பதும்‌ வில்வத்‌ திரிணியக்‌ கூட்டினும்‌ சேமமுற
இருப்பதும்‌ ஐயந்‌ திரிபறத்‌ தேர்ந்த தெளிவுணர்வின்‌
இருப்பதும்‌ மெய்யடி யார் தம்‌ குழுவில்‌ இறையுடனே–84-

ஒரு கண நேரமும்‌ பிரிவினை மேற் கொள்ளாது எம்பெருமான்‌ திரு மார்பில்‌ இருக்கும்‌ மேம்பட்ட நிலையை உடைய நீர்‌ பொற் குவியலிலும்‌ வில்வத்திலும்‌, ஐய உணர்வும்‌ திரிபுணர்வும்‌ நீங்குதலால்‌ தெளிவுடைய அடியாருடைய மெய்யுணர்வில்‌ வீற்றிருப்பதும்‌, மெய்யடியார்‌ குழுவில்‌ எம்பெருமானோடு தங்கியிருப்பதும்‌ ஆகிய உயரிய செயல்களைச்‌ செய்கின்றீர் —

உடனுறை யானென தென்பதின்‌ உற்ற கொடியதெது?
உடனுறை ஐம்பொறி கோட்புலன்‌ சார்தலின்‌ ஊனமுன்டே?
உடனுறை ஊழ்வினைக்‌ கட்டில்‌ வலிய பிரிப்புமுண்டே?
உடனுறைந்‌ தெம்மான்‌ உறுவன தீர்ப்புறும்‌ வேண்டுகோளே –85-

ஆன்மாக்கள்‌. உடலில்‌ தங்கியிருந்து ‘யான்‌’ என்று அகங்கரிக்கும் அகங்காரத்தை விடக்‌ கொடியது யாது உள்ளது? ஐம்பொறி புலன்களைச்‌ சார்ந்த சிற்றின்ப நுகர்ச்சியின்‌ குறைபாடுகளுடன்‌ கூடியது வேறு உண்டே? முன்‌ செய்த வினைகள்‌ இப் பிறப்பில்‌ நம்மைப்‌ பிணித்து இன்ப துன்பங்களை நுகர்விக்கும்‌ பிணைப்பை விட வலிய பிணைப்பு உளதோ? பெருமானுடன்‌ இருந்து ஆன்மாக்களின்‌ இத் தீமைகளைத்‌ தீர்க்குமாறு வேண்டுவதனையே நும்‌ பண்பாகக்‌ கொண்டுள்ளீர்‌–

வேண்டியார்‌ பாலும்‌ அரக்கியர்‌ தீமையை விள்ளகிலீர்‌
வேண்டிப்‌ பிறந்தகம்‌ புக்ககம்‌ விட்டோர்‌ கணம் விரும்பீர்
வேண்டி முயலீர்‌ சிறையிருள்‌ தீயின்‌ விடுதலையை
வேண்டிடில் எம்மான் அடைந்தவர் ஏற்குமா வேட்கையிதே –86-

அசோக வனத்தில்‌ அரக்கியர்‌ நுமக்கு இழைத்த கொடுமைகளை நும்‌ நெருங்கிய உறவினரிடத்தும்‌ நீர்‌ தெரிவிக்க வில்லை. புக்ககத்தை விடுத்துப்‌ பிறந்தகம்‌ சென்று வர ஒரு கணமும்‌ நீர்‌ விரும்பினீர்‌ அல்லீர்‌. தீயினும்‌ கொடிய சிறையினின்றும்‌ நும்‌ முயற்சியால்‌ விடுதலை பெற நீர்‌ முயன்றீர்‌ அல்லீர்‌. எம்பெருமானைச்‌ சரணம்‌ அடைந்த அடியவர்களை ஏற்குமாறு கொள்ளும்‌ விருப்பத்தையே நீர்‌ வேண்டி நிற்கிறீர் —

வேட்கை பரன்பால்‌ அடியான்‌ விரும்பி அடைந்திடவே
வேட்கை பிரியில்‌ அடியார்க்‌(கு) அனர்த்தம்‌ விளையுமென்றே
வேட்கை யிருளுமிஞ்‌ ஞாலம்‌ தெருளும்‌ விசும்புறவே
வேட்கை திரு மா மணி மண்டபம் என்னும் வேங்கடமே –87–

அடியவன்‌ எம்பெருமானை விரும்பிச்‌ சரண்புகும்‌ செயலொன்றே நும்‌ வேட்கையாகும்‌. அத்தகைய வேட்கையை நீர்‌ நீத்துவிட்டால்‌ அடியவருக்குத்‌ தீங்கே விளையும்‌. இவ்விருள்‌ தருமாஞாலமாகிய நிலவுலகைப்‌ பரமபதமொத்த துன்பக்‌ கலப்பில்லா இன்ப மயமாக்குவதே உம்முடைய ஆசை. நீர்‌ உகந்தருளி யிருக்க விரும்புமிடம்‌ நில வுலக வைகுந்தத்‌ திரு மா மணி மண்டபமாகிய திருவேங்கட மலையே —

வேங்கடம்‌ வேங்கட மேவாய்‌ வெருவி இருந்திடுவீர்‌
வேங்கடம்‌ கீழிருந்‌ தன்புப தேசம்‌ விரித்துரைப்பீர்‌
வேங்கட மார்பகம்‌ நீங்கா விழைந்தே அபயமீவீர்‌
வேங்கடற்‌ குற்றதோர்‌ தொண்டொன்று பத்தா விரிப்பது–88-

நீர்‌ பரகால நாயகியை ஆவேசித்து! வேங்கடமே! வேங்கடமே! என்று விருப்பத்தோடு பல நாளும்‌ தன்னை மறந்து கூப்பிடச்‌ செய்தீர்‌. வேங்கட மலையின்‌ கீழிருந்தவாறே எம்பெருமானுக்குச்‌ சேதனர்‌ பக்கல்‌ அன்பு காட்டுமாறு உபதேசிக்கின்றீர்‌. வேங்கடத்தான்‌ மார்பினைப்‌ பிரியாமலிருந்தே அடியார்க்கு அஞ்சற்க! என்ற அருளுரை வழங்குகின்றீர்‌. குறை காணாது அடியாரை ஏற்றுக்‌ கொள்ளுமாறு எம்பெருமானிடம்‌ பரிந்துரை கூறும்‌ திருப் பணியை அடியவர்‌ உய்வதற்கே விரிவாகச்‌ செய்கின்றீர் –

விரியத்‌ தமர்செய்‌ வினைதான்‌ கழிவ தவனருளால்‌
விரியு மியல்பாழ்‌ வினைநீங்க ஒங்க நிகரில்சீர்‌
விரியத்‌ தமா்பால்‌ குறைகாணான்‌ மேன்மேல்‌ அருளுமவன்‌
விரியுஞ்‌ செயலுகப்‌ பீரலர்‌ மேல்மங்கை உம் மியல்பே–89-

அலர்மேல்‌ மங்கையீர்‌! அடியார்கள்‌ மிகுதியாகச்‌ செய்யும்‌ வினைகள்‌ யாவும்‌ எம்பெருமான்‌ அருளால்‌ நீங்கற்பாலன. அப் பெருமானிடத்தில்‌ தவறு கண்டு புறக் கணிக்கும்‌ சுதந்திர உணர்வு நீங்கவும்‌, தவறுகளையும்‌ உகக்கும்‌ ஒப்பற்ற புகழுடைய தூயன்பு அவன் பால்‌ தழைக்கவும்‌, அவன்‌ அடியார்களிடத்துக்‌ குறை காணாது அவர்களுக்கு விரிவாக அருள் புரியும்‌ மேம்பட்ட செயலுக்காக அடியவர்‌ திறத்தப்‌ பரிந்துரை கூறுவது உம்‌ பணபாகும் –

இயல்பீ திருவரைக்‌ காணும்‌ மறைப்பது மெய்யுணர்வை
இயல்பிது முக் குணத் தேய்ந்து மயக்கம் விளைக்குமதாம்‌
இயல்பீ திருவினை பாசப்‌ பிணக்கின்‌ இயக்குமிதே
இயல்பீ திறையுடன்‌ சார்ந்திவை முற்று மகற்றுவீரே–90-

எம்பெருமானும்‌ நீருமாகிய இருவரையும்‌ மனத்தால்‌ காணும்‌ உண்மை யறிவை மறைப்பது இவ் வுடம்பின்‌ இயல்பாகும்‌. காமம்‌, வெகுளி, மயக்கம்‌ என்ற முப் பண்புகளுடன்‌ பொருந்தி மெய்ப் பொருளை உள்ளவாறு அறிய முடியாதபடி மறைத்து மயங்கச்‌ செய்வதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. நல் வினை தீ வினைகளாகிய பற்றுக்களால்‌ ஆன்மாவை ஆட்டுவிப்பதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. எம்பெருமானைச்‌ சார்ந்து நீங்கள்‌ உடல்‌ குற்றங்கள்‌ அனைத்தையும்‌ நீக்குகின்‌றீர்‌. இது உமக்கு இயல்பாக அமைந்த பண்பாகும்‌-

வீராங்‌ கனைநீர்‌ விமலன்‌ திறத்தாறு பண்புடையீர்‌
வீராங்‌ கனைகள்‌ உமைப்போல்‌ விரதியர்‌ யாவரேனும்‌
வீராங்‌ கனைகள்‌ விழுமத்‌ தொழுதெழு மூவியலார்‌
வீராங்‌ கனைகளை நீர்‌ தத்த மியலால்‌ விளைப்பீரே-91-

வீரம்‌ சான்ற பெண்மகளாராகிய தாங்கள்‌ எம்பெருமான்‌ ஞானம்‌, சக்தி பலம்‌, ஐஸ்வரியம்‌, வீரியம்‌, தேஜஸ் என்ற ஆறு பண்புடையனாதல்‌ போல அவன்‌ திறத்தில்‌ உசுப்பில்‌ உகத்தல்‌, நோவின்‌ நோதல்‌, ஒண்பொருள்‌ கொடுத்தல்‌, நன்கு இனிது மொழிதல்‌, புணர்வு நனிவேட்டல்‌, பிரிவு நனி இரங்கல்‌ என்ற ஆறு பண்புகளை உடையீர்‌. உம்மைப்போல்‌ விரதமுடையார்‌ யாவரும்‌ வீரப் பெண்களே. எம்பெருமானைத்‌ தொழுது எழும்‌ வீரப் பெண்கள்‌ எம்பெருமானே ஆண்டான்‌, அவனே ஆறு, அவனே பேறு என்ற மூன்று இயல்பு உடையவர்கள்‌ தம்‌ பண்புகளில்‌ நெகிழ்வில்லாதபடி வீராங்கனைகளைத்‌ தயாரிப்பவரும்‌ தாங்களே —

விப்பிர நாரா யணனொடும்‌ விஞ்சு சீர்‌ மாறனொடும்‌
விப்பிரத்‌ தோன்றலாம்‌ விட்டுசித்‌ தன்னொடு வீசு புகழ்‌
விப்பிர ஊர்தி வியன் தமிழ்ப்‌ பாணன்‌ பிறவி வெரு
விப்பிர புத்தி செய்‌ வேந்தன்‌ குலசே கரனொடுமே–92-

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ ஆகிய விப்பிரநாராயணர்‌, மேம்பட்ட சிறப்பினை உடைய சடகோபர்‌, அந்தணருள்‌ மேம்பட்ட விட்டு சித்தர்‌, யோக சாரங்க முனிவர்‌ தோளில்‌ சுமக்கப்பட்டு எம்பெருமானைத்‌ தரிசிக்க வந்த திருப்பாணாழ்வார்‌, பிறவிப்‌ பிணிக்கு அஞ்சி விற்றுவக்‌ கோட்டம்மானைச்‌ சரண்‌ புகுந்த குலசேகரப்‌ பெருமான்‌ ஆகியவரும் –

ஒடுங்கலில்‌ சீரார்‌ முதல்வர்கள்‌ மூவராம்‌ ஒன்தமிழர்‌
ஒடுங்கலில்‌ ஞானமும்‌ பத்தி விரத்தியும்‌ ஒங்கு கோதை
ஒடுங்கலில்‌ யோகி மழிசை மன்‌ உற்ற மதுரகவி
ஓடுங்குலில்‌ வாழ்த்துக்‌ கலியன்‌ உதிப்பித்‌தும் மருளே –93-

மற்றும்‌ குறைவற்ற சிறப்புடைய முதலாழ்வார்கள்‌, மூவர்‌ ஞான பக்தி வைராக்கியத்தால்‌ மேம்பட்ட கோதையராகிய ஸ்ரீஆண்டாள்‌, யோகியாய்‌ வாழ்ந்த திருமழிசைப்‌ பிரான்‌ மதுரகவியார்‌, 86 திவ்விய தேசங்களைப்‌ ்‌ பாடியருளிய திருமங்கையாழ்வார்‌ முதலானாருடைய திருஅவதாரங்கள்‌ தாயாராகிய உமது முனைப்பினாலும்‌ எம்பெருமான்‌ அருளாலும்‌ இந்த பூலோகத்தில்‌ உண்டாயின–

உமதரு ளொன்றே உதவு மெய்‌ ஞானநீர்‌ வித்தையதால்‌
உமதருள்‌ சேதனர்‌ பாலதாம்‌ உற்ற நல்‌ தாயதனால்‌
உமதருள்‌ ஏற்பன் உலகுண் பரனின் இனியையதால்
உமதருள்‌ முற்றவும்‌ உற்றதே யாக்கும்‌ நெகிழ்தலிலே–94-

அன்னையாராகிய நீர்‌, வித்தையே வடிவினராய்‌ இருப்பதால்‌ உம்‌ அருளே மெய்யுணாவை உண்டாக்குவதாகும்‌. தாங்கள்‌ உலகின்‌ தாயாக இருப்பதனால்‌ தங்கள்‌ அருள்‌ இவ்வுலகினுள்ள உயிர்களின்‌ பக்கல்‌ பரவியுள்ளது. எம்பெருமான்‌ உகப்பிற்குரிய தேவியராக நீர்‌ இருப்பதால்‌ ஊழியில்‌ உலகை வயிற்றில்‌ வைத்துப்‌ பாதுகாக்கும்‌ எம்பெருமான்‌ உம்‌ அருள்செயல்களைத்‌ தானும்‌ இசைகிறான்‌. உம்‌ அருள்‌ செயல்களைக் குறைவுறாமல்‌ உயிர்களுக்கு ஏற்புடைய நன்மைகளையே உண்டாக்கும் —

நெகிழ்வதே உந்தம்‌ அருளிலர்‌ நேர்வது முற்றவுமே
நெகிழ்வதே இந்திரன்‌ நீடு சிவனயன்‌ நேர் பதங்கள்‌
நெகிழ்வதே ஓரிரு கோள்கதி யைம்பூத நேர்மையதும்‌
நெகிழ்வதில்‌ நித்த விபூதி நும்‌ சார்பில்‌ நிலைத்திடுமே-95-

உம்‌ அருள்‌ பெறாதார்‌ செய்யும்‌ செயல்கள்‌ முழுமையாக நிறைவேறாமல்‌ இடையிலேயே தடைபட்டு அழியும்‌. உம்‌ அருளின்‌றேல்‌ இந்திரன்‌, சிவன்‌, அயன்‌ என்பார்‌ பதவிகள்‌ நிலை பேறு அடைய மாட்டா, மேலும்‌, ஞாயிறு, திங்கள்‌ இயக்கமும்‌ ஐம் பூதப்‌ பண்புகளும்‌ நெகிழ்ந்து விடும்‌. அழிவில்லாத பரம பதமும்‌ உம்‌ தொடர்பினாலேயே நிலை பெற்றிருக்கும் —

நிலை நிற்கு மன்றோ கயவன்‌ சிறைவைத்த பாதகத்தை
நிலை நிற்கு மன்றோ நெருப்பிடை மூழ்க நீர்‌ நேர்ந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிமலன் தன்‌ பள்ளி இருந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிலத்தின்‌ புகு செயல்‌ மாதருக்கே–96-

இராவணன்‌ உங்களைச்‌ சிறை வைத்த நீசச்‌ செயல்‌ உலக மக்கள்‌ உள்ளத்தில்‌ துன்பத்தை உண்டு பண்ணும்‌. தாங்கள்‌ நெருப்பில்‌ மூழ்குவதற்கு ஈடுபட்ட செயலும்‌, வான்மீகியின்‌ ஆசிரமத்தில்‌ நீங்கள்‌ பல காலம்‌ இருந்த செய்தியும்‌, இறுதியில்‌ பூமிக்குள்‌ புகுந்து மறைந்த செயலும்‌ உலகவர்‌ உள்ளத்தில்‌ என்றும்‌ நிலை நிற்பனவாம் —

மாதா நுமதே அழகின்‌ சிகரமே மற்றுமுண்டே
மாதா நுமதே அருளின்‌ வடிவம்‌ பிறிதிலதே
மாதா நுமதே பிறர் நலம்‌ பேணும்‌ சிறப்புடைமை
மாதா நுமதே நிலை பிரி தொண்டர்‌ அடிப்படுத்தே–97-

அன்னையீர்‌! அழகின்‌ உயர்ந்த நிலையும்‌ அருளின்‌ வடிவமும்‌, பிறர்‌ நன்மையே வேண்டிச்‌ செயற்படும்‌ மாட்சிமையும்‌ உடைய நீங்கள்‌ அடியார்‌ தொண்டினை மிகைப்படுத்தி எம்பெருமானுக்குப்‌ பரிந்துரை கூறி, அவர்களை ஆட்கொள்வதற்காகப்‌ பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் —

அடியனைக்‌ கொண்டதே யாவும்‌ அடைந்தது போலுமானீர்‌
அடியனில்‌ கீழ்மையோன்‌ முன்பின்‌ படைப்பிலும் யாருமுண்டே
அடியர்பால்‌ காணீர்‌ குறையடி யேன்கேட்‌ டறிந்ததுண்டு
அடியனின் தாழ்வையும் கொண்ட நீர் ஆய்ந்திடின் உண்மை யன்றே –98-

மிகக் கீழனோகிய அடியேனை ஆட் கொண்ட திறத்தால்‌ தங்கள்‌ விருப்பமெல்லாம்‌ நிறைவேறியது போன்ற நிறை மகிழ்வைப்‌ பெற்றுள்ளீர்‌. முன்‌ ஊழிகளிலும்‌ இனி வரும்‌ ஊழிகளிலும்‌ நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற படைப்புகளில்‌ அடியேனிலும்‌ கீழானோர்‌ இருக்க மாட்டார்கள்‌. தாங்கள்‌ அடியார்களுடைய குறைகளைப்‌ பொருட்படுத்த மாட்டீர்‌ என்று கேட்டறிந்ததுண்டு. தங்கள்‌ உயர்வையும்‌ அடியேன்‌ தாழ்வையும்‌ ஆராய்ந்தால்‌ தாங்கள்‌ அடியேனை ஆட் கொண்டது மெய்யான செயலேயாகும் –

உண்மைப் பொருள் அலர்மேல் மங்கை சேர்ந்து இங்கு உளன் ஒருவன்
உண்மைப் பொருள் பொறைத் தாயினை ஒக்கலை யேந்து கேழல்
உண்மைப்‌ பொருள்ளேழ்‌ விடை செற்று வந்து கொள்‌ பின்னை கேள்வர்
உண்மைப் பொருள் மூன்றே ஓர்த்துப் பொதுவுறக் காண்ப தென்றே –99-

மெய்ப்பொருளாம்‌ பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுடன்‌ சேர்ந்து வேங்கட மலையில்‌ உள்ளான்‌. பொறுமைக்கு இருப்பிடமாகிய பூமித் தாயை தன்‌ இடையில்‌ வைத்துக்‌ கொணர்ந்த மகா வராக மூர்த்தியும்‌, அசுரா உட்புகுந்த ஏழு காளைகளை அழித்துப்‌ பின்னையை மணந்த கண்ணனும்‌, வேங்கடவனும்‌ ஒரே உண்மைப்‌ பொருளின்‌ அவதாரங்களே என்பதனைக்‌ காணலாம்‌

என்றலர்‌ மேல்மங்கை நின் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை மன் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை தொண்டர் சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்யங்கை போற்றும்‌ அருளென்கண்‌ பார்த்துலகே –100-

அலர்மேல்‌ மங்கைத்தாயே! என்னிடம்‌ உன்திருவுளச்‌ சார்பினை அருளுவது என்றோ? நீர்‌ எம்பெருமான்‌ திருவடிகளை அடியேன்‌ சாரும்‌ வாய்ப்பினை அருளுவது என்றோ? பிராட்டி பெருமாள்‌ என்ற இருவரையும்‌ சரணாகப்‌ பற்றிய தொண்டர்கள்‌ சார்பினை அடியேனுக்கு அருளுவது என்றோ? அடியேன்‌ மாட்டு அலர்மேல்‌ மங்கை பாலிக்கும்‌ அருளும்‌ எம்பெருமாள்‌ அடியேன் திறத்தில்‌ செய்யும்‌ அருளையும்‌ உலகவர் போற்று நாள்‌ என்று வருமோ?

அலர்மேல மங்கை நல்‌ தாய்திருத்‌ தாளன்ப ரும்பயனை
அலர் மேல மங்கையந்‌ தாதி தனையோதி ஆர்வமும
அலர்மேல மங்கை இணையடித்‌ தாமரை தம்மினெஞ்சம்‌
அலர்மே லமர்ந்துறை யன்னமாய்‌ நின்றன்பு பெற்றிடுமே –நூற்பயன்

நற்றாயாகிய அலர்மேல்‌ மங்கை திருவடிகளில்‌ அன்பு பெருகுதலாகிய அரிய பயனாய்‌, இந்த அலர்மேல்‌ மங்கையந்தாதியை ஆர்வத்தோடு ஒதுவதால்‌ நம்‌ நெஞ்சமானது, அப்பெருமாட்டியின்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ அன்னம்போல்‌ நீங்காதிருந்து தூய அன்பினைப்‌ பெற்றுச்‌ சிறந்து விளங்கும்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வட வேவேங்கட நாராயாண சதகம்‌ -மூலமும்‌ உரையும்‌-ஸ்ரீ நாராயண தாசர்–

December 3, 2025

நஞ்சு வினைக்கா மமுத நமதுயிர்க்காம்‌
செஞ்சொல்லினேர் சதகஞ்‌ செப்பியது–விஞ்சபுகழ்‌
நாராயண தாசர்‌ நன்றாக நானிலத்தே
பாராயணம் செய்பவர்க்கு.

இந்தப்‌ பூமியினிடத்து நன்றாகப்‌ பாராயணஞ்‌ செய்பவர்க்கு உபயோகமாகும் பொருட்டு மிகுந்த புகழை யுடைய நாராயண தாசர் என்பவர் செஞ்சொற்களினாலே திருவாய் மலர்ந்தருளியதாகிய ஓப்பற்ற நாராயண சதக மென்னும்‌ பாமாலையானது நம்‌முடைய ஊழ் வினையை யழிக்கத் தக்க நஞ்சாகும்‌; நமது உர்க்கோ காக்‌கத்தக்க அமுதமாகும்‌ என்றவாறு

நல்ல வட வேங்கடத்து நாராயண சதகம்‌
சொல்ல எனக்குத் துணையாமே -மல்லற்
பணையான திண் புயத்‌துப்‌ பாண்டவர்க்கு முன்னம்
துணையான பாதம் துணை-
-காப்பு
.
அழகிய வடக்கின் கணுள்ள திருவேங்கடத்தி லெழழுந்தருளிய ஸ்ரீமந் நாராயணன்‌ விஷயமாக ஓர்‌ சதகமென்னும்‌ பாமாலை பாடுதற்கு மாலையின்‌ வளம் பொருந்திய பருமையான வலியுள்ள புயங்களைப் படைத்த பாண்டவர்க்கு முற் காலத்தில்‌ துணையாயிருந்த அவருடைய பாதங்கள்‌ துணையா யிருப்பது மன்றி என்னுயிர்க்‌கும்‌ ௮வைகளே துணையாகும்‌ என்றவாறு.

நீர் கொண்டு தண்‌ மலர் கொண்டு நன்‌னெறி கொண்டு நின்‌ குறி கொண்டு வண்‌,
சீர் கொண்டு வந்‌தனை செய்துனைச்‌ செறிவார்களென்‌ பெருவார்களோ,
பேர் கொண்டிலன்‌ பொறி கொண்டிலன்‌ பெரியோர்களா லருள் கொண்டிலன்‌,
நார் கொண்டு கண்‌டருள் சோதியே நாராயணா நாராயணா–

பரிசுத்தமான தீர்த்தங்களையும்‌ குளிர்ச்சி பொருந்திய புஷ்பங்களையும்‌ கொண்டு நன் மார்க்கத்தை யறிந்து தேவரீருடைய சொருபத்தைத்‌ தெறிந்து அழகிய “ஞானத்தைப்‌ பொருந்தித் தண்டஞ்‌ சமர்ப்பித்து உம்மை ஆராதனை செய்து அடைத்த பேர்களெல்லாம்‌
என்ன பலனைப்‌ பெறுவார்களோ அறிய கில்லேன்‌; நாயினேன்‌ தாஸ்ய நாம முதலிய பஞ்ச சம்ஸ்காரத்தையும்‌ பாகவதாராலே கிருபையையும்‌ கொண்டவணே அல்லன்‌; ஆதலால்‌ ௮ன்பு சுரந்து சந்தோஷித்து இரஷித்தருள வேண்டும்‌; சோதி மயமாகிய ஸ்ரீமந் நாராயணனே-

பர காரியம்‌ பல செய்துனைப்‌ பணியாமலே பிணிபான பின்‌
விரகாயிருந் தழு தாவதென்‌ வெறியார் குணங் குறியார்களோ
உரகாரிமே லுபகாரியா யொரு சாரியா வுலவாரியா
நரகாரியே முர காரியே நாராயணா நாராயணா–

கொலை, களவு , காமம்‌, பொய்‌, வஞ்சனை இவை முதலாகிய அநேக துஷ்ட க்ருத்யங்களைச் செய்து தேவரீரைப்‌ பணியாமல்‌ பிணியானது சம்பவித்த பிற்பாடுங்‌ கபடமாயிருக்து அழுததினாலே உண்டாகிய காரியம்‌ ஒன்றுமில்லை; ஆதலால்‌, பயித்தியக்காரர்
குணங்களை நல்லோர்களே யறிந்து இரஷிப்பது கடன்‌; ௮த் தன்மை போல அடியேனை இரஷிப்பது உமக்கே கடன் -சர்ப்பங்களுக்குப்‌ பகையாகிய கருடவாகன மீதிலெழுந்தருளி அடியார்களுக் குபகாரமாக ஓப்பில்லாச் சேவையாய்‌ உலாவி வந்தாருளா நின்ற ஐயனே ! நரகாசுரனுக்கும்‌ வைரியாகிய ஸ்ரீமந் நாராயணனே-

சிவனீ தலம்‌ புயனீதலிந் திரனீ தல்‌சந் திரனீ தலா
தவனீ தல் விண்‌ ணவரீதன் மா தவரீதலோ டெவரீ தலும்‌
அவநீ தலந் தனிலெண்ணினுன்‌ னடியாரடிப்‌ பொடி யாகுமோ
நவநீத முண்‌ கரு மேகமே நாராயணா நாராயணா-

சிவனும்‌ பிரமாவும்‌ இந்திரனும் சந்திரனு ஸூரியனும்‌ தேவர்களும்‌ ரிஷிகளும்‌ ஆகிய இவர்களுடனே பின்னும்‌ யாவர்களுங்‌ கொடுக்கா நின்ற பலன்களை யெல்லாம்‌ பூதலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ அவை தேவரீருடைய அடியார்கள்‌ திருவடித்‌ துகளுக்கும்‌
ஓப்பாக மாட்டா; ஆதலால்‌ அவர்களை நினைப்பதே யில்லை; கோபாலர்‌
கிரஹத்திலே வெண்ணெயை யுண்டருளும்‌ நீல மேக வண்ணனாகிய
ஸ்ரீமந் நாராயாணனே,

அலசத்தகும் பிணிவந்து நா னலையாமலே யமரர்க்கிடுங்,
கலசத்திலோர் துளி நல்கியென் கவி யைக்கொளாய் கருணாகரா,
குலசக்கரன் சலசேக ரன் குலசேகரன் புகழ்சாகரா, நலசக்கரா
சலசக் கரா நாராயணா நாராயணா.       4

தேகமானது வருத்தத்தை யடையும்படியான நோய்வந்து அடியேன் அலையாம லிருக்கத் தேவர்களுக்குக் கொடுத்தருளா நின்ற கலசத் தமிர்தத்திலே ஒரு துளி கடாட்சித்தருளி அடியேனுடைய கவிதையைக் கைக்கொள்ளவேணும். கருணைத் திருமேனியனே! வச்சிரபாணியும் கங்காதரனுங் குலசேகரராகிய ஆழ்வாரும் தோத்திரம் பண்ணா நின்ற கீர்த்தியாகிய சமுத்திரத்தையும் நல்ல சக்கரத்தையும் தாமரைமலர் போன்ற திருக்கரங்களையும் உடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா

எதிரும்பெரும் பிணியும்பரந் திரையுஞ்செறிந் தெழிலும்பறந்,
துதிரந்திரிந் துடலங்கொளுந் துயரந்தெளிந் துனை நம்பவா,
மதியங்கிடந் தொ ளிருஞ்சடா மகுடந்தொறுந் தொனியும்பவா,
னதிவந்தெழும் பதபங்கயா நாராயணா நாராயணா.       5

[இ-ள்.] தேகத்திலே எதிர்த்து வராநின்ற பெரிதாகிய நோய் மிகுந்து இரைப்பு நெருங்கி
அழகு குலைந்து உதிரமுறிந்து கொள்ளா நின்ற துக்கமானது தெளிந்து போய்த் தேவரீரை அடியேன் நம்பும்படியாகப் பிரசன்னமாக வேண்டும். சந்திரன் வாசமாய்ப் பிரகாசியா நின்ற சிவனுடைய சடாமகுடந்தோறும் முழக்கம் நிறைந்திட ஆகாய கங்கையானது வந்தருளா நின்ற திருவடித் தாமரைகளை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

எல்லாருமுன் னுதரத்துளே யென்னோடுமங் குறைகின்றபேர்,
அல்லாதுவே றில்லாமையா லனைவர்க்குமோ ரருளல்லவோ,
வல்லாருளார் மாட்டாருளார் வறியாருளார்வாழ்வாருளார்,
நல் லாருளார் பொல்லாருளார் நாராயணா நாராயணா.       6

[இ-ள்.] அடியேனுடனே ஆத்மகோடிகளெல்லாந் தேவரீருடைய குட்சிக்குள்ளே வாசம் பண்ணுகிறதேயல்லாமல் வேறேயிடமில்லை யாதலால் யாவருக்குஞ் சமானமான கிருபையே யன்றிப் பேதமில்லையே; அத்தன்மையாயிருக்க, இதிலே வலியரென்றும் மெலியரென்றும் தாழ்வினரென் றும் வாழ்வினரென்றும் நல்லவரென்றும் பொல்லாதவரென்றும் உண்டாகிய தென்ன மாயமோ ஸ்ரீமந் நாராயணா எ-று.
——-

நீகாசுதா நீதூசுதா நீயாடுதா நீமாடுதா,
போகாதபேர்க் கிடுசோறெனப் புலையர்க்குநெஞ் சுருகச் சொனேன்,
ஆகாதகாரியமென்னிடத் தள வற்ற துண் டவையாய்வையோ,
நாகாசலா நாகா லயா நாராயணா நாராயணா.       7

[இ-ள்.] பணம் வஸ்திரம் ஆடு மாடுஞ் சாதமும் இவைகளை நீங்கள் கொடுங்களென்று சொல்லுவதற்கு யோக்கியமில்லாத பேர்களாகிய மிலேச்சருடையநெஞ்சானது உருகும்படியாய்க் கவிதை பாடித் தேடிக்கொண்ட பொல்லாத காரியங்கள் கணக்கில்லாமல் அடியேனிடத்தி லிருக்கின்றன. அவைகளை யாராய்ந்து பாராமல் இரட்சிக்க வேண்டும், சேஷமலையையும் சேஷனாகிய கோவிலையும் பெற்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

அயனாரெழுத் தளவன்றியே யதிகங்கணப் பொழுதாயினும்,
பயனாயிருப் பவரில்லையிப் படி மீதிலப் படியன்றியே,
வியனாயுனைத் தொழுவார் களவ் விதிவெல்வராய் மறை சொல்லுமே,
நயனா ரதன் புகழ்சோதியே நாராயணா நாராயணா.       8

[இ-ள்.] பிரமதேவனானவன் எழுதின பிரகார மேயல்லாமல் அதிகமாக க்ஷணப்-போதாகிலும் இந்தப் பூமியிலே பிரயோசனப்பட்டிருப்பவர் இல்லை யென்றாலும், அப்படி அல்லவென்று சந்தோஷமாகத் தேவரீரைத் தொழுதபேர்களெல்லாம் அந்த விதிவசத்தைக் கடந்திருப்பர்களென்று வேதங்கள் முறையிடுகின்றதே; நயத்தோடுங்-கூடிய நாரத மகாமுனிவர் தோத்திரம் பண்ணா நின்ற சோதிமயமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 8
————

ஓமங்களால் விரதங்களா லுயர் தீர்க்தயாத் திரை கோடியால்,
ஏமங்கள் கன்னியரீதலா லெழு பாரையுஞ் சுழல்கின்றதால்,
ஆமைம்புலன் கடி கின்றதா லடை புண்ணியங் கணமேனு நின்,
நாமமபுகன் றதுபோலுமே நாராயணா நாராயணா.       9

[இ-ள்.] ஓமங்களாலேயும் விரதங்களாலேயும் உயர்ச்சிபெற்ற கோடி தீர்த்த யாத்திரைகளாலேயும் சுவர்ணங்களுடனே கன்னிகா தானங்களாலேயும் ஏழுபூமியையும் பிரதட்சணம் வந்ததினாலேயும் உண்டாகிய பஞ்சவிந்திரியங்களை நீக்கினதினாலேயும் வரா நின்ற புண்ணியங்களெல்லாம் தேவரீருடைய திருநாமத்தை க்ஷணப்போதாகிலுஞ் சொல்லிய புண்ணியத்திற்கு ஒப்பாக மாட்டாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
———

பாடேனலோ கவிசிந்தனைப் பணியேனலோ பலகாலெழுந்,
தாடேனலோ பலிபீடமுன் னணு கேனலோசடகோபமே,
சூடேனலோவலமாகவே சுழலேனலோ கதியென் றுனை,
நாடேனலோ கொடியேனலோ நாராயணா நாராயணா.       10

[இ-ள்.] தேவரீரைக் கவிதைகளாலே பாடினதுமில்லை, தண்டஞ் சமர்ப்பித்ததுமில்லை, பல காலமுமெழுந்து ஆடினதுமில்லை, பலிபீடத்தின் முன்னே வந்ததுமிலலை, சடகோபத்தை முடியிலே சூடினதுமில்லை, வலமாகச் சூழ்ந்ததுமில்லை, கதியென்று உன்னை நினைத்ததுமில்லை, இத்தன்மையான பாவியானவன் கடைத்தேறும் மார்க்கமுளதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 10
————

அறவைக்கெலா மடிமூல நா னருளுக்கெலா மடிமூல நீ,
பிறருக்கெலாம் பெறுவித்ததும் பெறு விப்பதும்பிணை தட்டிலே,
உறவைக்கிலென்னுயிர் காவலுக் கொவ்வா வா துரை செய்வனோ,
நற வத் துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       11

[இ-ள்.] லோகங்களுக்கெல்லாம் அடிவேராகியிருப்பது யானேயன்றி வேறில்லை; கிருபைகளுக் கெல்லாம் மூலகாரணமா யிருப்பது தேவரீரே யன்றி வேறில்லை; அயலார்களுக்கு நீர்செய்த பலனையும் இனிச் செய்கின்ற பலனையுந் தராசினுடைய தட்டுகளிலே பொருந்தவைத்தால் என் னுடைய உயிரை இரட்சிக்கிற பலனுக்கு அவை சரியாகமாட்டாது. ஆதலால் வாது பேசுவதில்லை, தேன் பொருந்துத் திருத்துள வந்தரித்த திருமார்பை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 11
————

பசியா தமந் திரமேவரும் பழியாதமந் திர மந்தகன்,
விசியாதமந் திரநோயிலே விழியாத மந திரநெஞ்சிலே,
முசியாதமந் திரமோதுவார் முதலானமந் திரமொன்றிலே,
நசியாதமந் திர மோ நமோ நாராயணா நாராயணா.       12

[இ-ள்.] பசியை எழுப்பாதது, எவர்களாலேயும் பழிப்பில்லாதது, எமன் பாசத்திற் கட்டுப் படாதது, நோயைப் பார்க்காதது, நெஞ்சிலே கெடுதலில்லாதது, ஓதுவார்க்கெல்லாம் முதன்மையானது, ஒன்றினாலேயும் நாசமில்லாதது. அது யாதெனில், ஓம் நமோ நாராயணா வென்னுந் திருமந்திரமே யல்லது வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 12
———-

அபராதமா கியபல்சரக் கடலாகவோ டம தேற்றியே,
விபரீதநோ யலையிற்குளே விட நின்ற தூழ் வினையென்செய்வேன்,
இபராசனைக் கரை யேற்று நீ யெனையேற்றலிங் கரிதல்லவே,
நபரா சனே சுபராசனே நாராயணா நாராயணா.       13

[இ-ள்.] அபராதங்களாகிய பல சரக்குகளை நெருக்கமாகத் தேகமென்னும் ஓடத்திலே ஏற்றி விபரீத நோயாகிய கடலுக்குள்ளே ஊழ்வினையானது தள்ளி நின்றது. என்செய்வேன்; கஜேந்திரனைக் கரையேற்றின தேவரீர் அடியேனைக் கரையேற்றுதற்கு இவ்விடத்தில் அரிதல்லவே; தேவர்களுக்குஞ் சுபங்களுக்குங் கர்த்தாவாகிய ஸ்ரீமந்
நாராயணா எ-று. 13
————-

வான் சொல்லுமே புவிசொல்லுமே மறை சொல்லுமே நிறைசேடன்வாய்,
தான் சொல்லு மே முனிவோர்பெருஞ் சபை சொல்லுமே சசி சொல்லுமே,
தேன் சொல்லிபங்கிறை சொல்லுமே திசைசொல்லுமே திகையாமலே,
நான் சொல் லவே அவுமாவெனோ நாராயணா நாராயணா.       14

[இ-ள்.] தேவர்களுடைய நாவும், உலகத்தோருடைய நாவும், வேதங்களுடைய நாவும், கல்வி நிறைந்த ஆதிசேடனுடைய இரண்டாயிரம் நாவும், பெரிதாகிய சபையோடுங்-கூடிய முனிவருடைய நாவும், சந்திரன் முதலாகிய நவக்கிரகங்களுடைய நாவும், தேன்போலுஞ் சொல்லினை யுடைய பார்வதி பாகத்திலிருக்கும் ருத்திரனுடைய நாவும், திக்குப்பாலகருடைய நாவும் தோத்தரிக்கும்படியான தேவரீருடைய கீர்த்தியை மாறு படாமல் அடியேனுடைய நாவினாலே சொல்லுவதற்குக் காரணமாவேனோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 14
———–

சுருக்காமருந் துடற்கூறியே சுழற்றாமருந் தழற்றீயிலே,
உருக்காமருந் துலர்த் துண்டையா வுருட்டாமருந் துழக்கெண்ணெயில்,
கருக்கா மருந் திகற்கையிலே கசக்காமருந் திருகல்லிலே,
நருக்காமருந்திருக்கின்றதே நாராயணா நாராயணா.       15

[இ-ள்.] வெயிலிலே சுருங்காதது, உடலிலே யூறினாற் சுழற்றாதது, அக்கினியிலே யுருகாதது, உண்டையாக வுருட்டி உலர்த்தாதது, உழக்கெண்ணெயிலே கருக்காதது, வலிய கைகளிலே கசக்காதது, இரண்டு கல்லிலே நெருக்காதது, இத்தன்மையைக் கொண்ட மருந்தானது இருக்கின்றது. அது யாதெனில் அஷ்டாட்சரமே யன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று: 15
————-

தகவாயுனைப் புகழாமலே சலமே தொடுத் திகல் பேசுவார்,
முகவாயிலே புழுவீழுமே முனை யந்தகன் கிளைமோதுமே,
ககவாகனா மிகுமோகனா கனகன்களே பரமார்பெலாம்,
நகவாளினா லரிசீய மே நாராயணா நாராயணா.       16

[இ-ள்.] மேன்மையாகத் தேவரீரைத் தோத்திரஞ்செய்யாமல் கோபமே பொருந்திப் பகையாக இழிவுபேசுவாருடைய முகத்தோடுங்கூடிய வாய்களிலே புழுக்கள் சொரிவதுமல்லாமல் எதிர்க்கா நின்றயமதூதர் மோதுவார்கள். கருடவாகனனே! போகசொரூபனே! இரணியனுடைய மார்பையும் திவனது சேனைகளையும் நகமென்னும் ஆயுத நனாலே சங்கரியா நின்ற நரசிங்கரூபமாகிய ஸ்ரீமந் தாராயணா எ-று. 16
————-

தலமேழையும்படமோதினுஞ் சலமோ விடா தகிலாண்ட நற்,
பலம்யாவுமென் மனை சேரினும் பசைபோதிடா திசைமாதரார்,
குலம்யாவுமின் பமதீயினுங் குறுகாதுமால் பெறுகாயமே,
நலமே வுமோ பொலமேவுமோ நாராயணா நாராயணா.       17

[இ-ள்.] ஏழுலோகத்தையும் அழியும்படியாய்ப் போர் பண்ணினாலும் கோபங்கள-டங்குவதில்லை, அகிலாண்டங்களிலே யிராநின்ற நன்மையான பாக்கியங்களெல்லாம் என் வீட்டிலே நிறைந்தாலும் ஆசைக ளொழிவதில்லை, பெண்களென் றிசைந்த சாதிகளெல்லாம் இன்பத்தைக் கொடுத்தாலும் காமங்கள் நீங்குவதில்லை. இத்தன்மையைக் கொண்ட என்னுடைய தேகமானது எந்தத் தன்மையைப்பெறுமோ அறியகில்லேன் பிரகாசியா நின்ற மேகவண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 17
————-

பண்டிட்டதா மரையுந்தியிற் படி வார் நினக் கடியாரெனத்,
தொண்டிட்டு நின் றொழில்கொள் வதோ துயரத்திலே யடைவிப்பதோ,
கொண்டிட் டநின் புகழ் நிற்கவே குறையாளரைப் புகழ்கின்ற வாய்,
நண்டிட்டபாழ் வளையொக்குமே நாராயணா நாராயணா.       18

[இ-ள்.] பழமையா யிரா நின்ற தேவரீருடைய நாபிக்கமலத்திலே பொருந்தின உயிர்களை யெல்லாம் அன்பராகும்படி அடிமை கொண்டு கைங்கரியத்தைக் கொள்ள வேண்டுமேயல்லாமல் துக்கங்களடையச் செய்யலாமோ, வேதங்கள் கொண்டிரா நின்ற உம்முடைய கீர்த்தியைவிட்டுக் குறைச்சலான தெய்வங்களைப் புகழா நின்ற வாய்களெல்லாம் நண்டிட்டுத் தோண்டி விட்ட பாழ்வளைக்கு ஒப்பாவதே யன்றிப் பிரயோசனமில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 18
————–

பகையானவன் பிணிசெய்ததோர் பதினாயி ரம்பிழையுண்டு நான்,
வகையா நினக் குரைசெய்கி லேன் வருநோயுநின் னருளாதலால்,
மிகையான பின் முறையிட்டனன் விடுவித்திடாய் விளையாடி னால்,
நகையார்களோ குறையார்களோ நாராயணா நாராயணா.       19

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே பகையாகிய பொல்லாத பிணியானது செய்யா நின்ற உபத்திரவங்கள் பதினாயிரமுண்டு. அதனை இன்ன விதங்களென்று தேவரீருக்கு விண்ணப்பஞ் செய்கிலேன். வரா நின்ற இந்த நோயானது உமது கிருபையேயல்லாமல் வேறில்லை. ஆதலால் துன்பம் மிகுந்த பிற்பாடு முறையமிட்டேன். இதை நீக்கிவிடாமல் விளையாடினால் உலகத்தார் நகைப் பதுமல்லாமல் இகழ்ச்சியும் பண்ணுவார்கள்
ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

குப்புற்ற கன் றுடனாகெலாங் குழுவாகவோர் குழலூதவே,
மப்புக்கொளுந் தொனிகா திலவ் வழியேகுபுட் களுமுண்ணவே,
துப்புக்குமோர் தயிர்வெண்ணெய்பால் சொரிகைக்குமவ் விடை நங்கைமார்,
நட்புக்குமா டியகண்ணனே நாரா யணா நாராயணா.       20

[இ-ள்.] துள்ளின கன்றுகளுடனே பசுக்களெல்லாங் குவிந்திருக்கவும், ஆகாயவழியிலே செல்லா நின்ற பட்சிகளுடைய காதுகளிலே கேட்கவும், ஒப்பில்லாத வேணுகுழலூதித் தொனியாக மப்புக்கொட்டின துமல்லாமல் அங்கிருக்கும் இடைப்பெண்கள் பொழியா நின்ற நெய்க்கும் மோருக்கும் தயிருக்கும் வெண்ணெய்க்கும் பாலுக்கும் அவர்களுடைய நட்பினுக்கும் நடனஞ் செய்த கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 20
——–

தாயற்றபேர் தாயாகுவாய் தமரற்றபேர் தம ராகுவாய்,
சேயற்றபேர் சேயாகுவாய் செயலற்ற பேர் செயலாகுவாய்,
வாயற்றபேர் வாயாகுவாய் மலைபோலுநோய்க் குனை நம்பினால்,
நாயிற்று முன் பனி நிற்குமோ நாராயணா நாராயணா.       21

[இ-ள்.] தாயில்லாத பேர்களுக்குத் தாயாகவும், சுற்றமில்லாத பேர்களுக்குச் சுற்றமாகவும், பிள்ளையில்லாத பேர்களுக்குப் பிள்ளையாகவும், உதவியில் லாத பேர்களுக்கு உதவியாகவும், வாக்கில்லாத பேர்களுக்கு வாக்காகவும், அருளா நின்ற தேவரீரை அடியேன் மலைபோலுங் கொண்ட நோய் தீருதற்கு நம்பினால் சூரியன் முன்னே பனி நீங்கு மாப்போலே நீங்குமேயன்றி நிற்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
——-

மந்தன் புதன் குருவெள்ளிசேய் மதிராகுகே தரி நாடொறுந்,
தந்தம்பொலா விட மேவினுஞ் சகலேச நின சரணண்டினால்,
எந்தம்பிரா னிவ னென்று கொண் டேகாதசப்பலனீவரே,
நந்தன் சுதா நம்புபதா நாராயணா நாராயணா.       22

[இ-ள்.] சனி புதன் குரு சுக்கிரன் செவ்வாய் சந்திரன் ராகு கேது சூரியன் இவர்கள் நாடோறும் தங்கள் தங்கள் பொல்லாத இராசிகளிலே யிருந்தாலும், சகலத்துக்கும் ஈசனே! தேவரீருடைய திருவடியை யடைந்தால் எங்களுடைய தம்பிரான் இவனேயென்று அன்பு கொண்டு பதினோராமிடத்துப் பலனைக் கொடுப்பார்கள். நந்த கோபனுடைய திருக்குமாரா! நாயினேன் நம்பா நின்ற பரமபதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———

ஆற்றாமையொன் றமையாமையொன் றறி யாமையொன் றருளாமை யொன,
றேற்றாமை யொன் றிசையாமையொன் றின்னாமை யொன் றிருதாளையும்,
போற்றாமையொன் றடியாருடன் பொலியாமையொன் றொருமெய்யிலே,
நாற்றாய் விளைந் திடலாகுமோ நாராயணா நாராயணா.       23

[இ-ள்.] அயலார் வாழ்வைக்கண்டு அவதிப் படுதல், பொறுமை நீங்குதல், பேதைமை வளர்த்தல், ஈதன்மறுத்தல், முயற்சியடைதல், இங்கிதம் ஒழித்தல், பொறாமை மிகுதல், திருவடிப் புகழ் விடுதல், அடியாருடன் கூடாதிருத்தல் இவைக ளெல்லாம் நாயினேனுடைய ஒரு தேகத்துக்குள்ளே நாற்றுக்கள் போல வளரலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

தன்மைக்கு நீ யடியேனுடைச் சலிகைக்கு நீ பொலிகைக்கு நீ,
மேன்மைக்கு நீ வன்மைக்கு நீ மிகுதிக்கு நீ தகுதிக்கு நீ,
புன்மைக்கு நீ புலமைக் கு நீ பொறுமைக்கு நீமறுமைக்கு நீ,
நன்மைக்கு நீ தின்மைக்கு நீ நாராயணா நாராயணா.       24

[இ-ள்.] அடியேனுடைய ஒழுக்கத்துக்கும் சலிகைக்கும் பிரகாசத்துக்கும் மெலிமைக்கும் வலிமைக்கும் குற்றத்திற்கும் முயற்சிக்கும் பொல்லாங்குக்கும் அறிவுக்கும் பொறுமைக்கும் மோட்சத்துக்கும் நன்மைக்கும் தின்மைக்குஞ் சகலத்துக்குந் தேவரீரேயல்லாமல் வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

வேட்பித்ததுன் பெருநெஞ்சமே வியப்பித்த துன் விளையாடலே,
கேட்பித்ததுன் பல நூல் களே கிளர்ப்பித்ததுன் பதிவாசமே,
பேட்பித்த துன் கனசத்தியே பிழைப்பித்தவெம் பிணிப்பித்த வாழ்,
நாட்பிச்சையுந் தரவேண்டுமே நாராயணா நாராயணா.       25

[இ-ள்.] உமது திருவுள்ளமே எனக்கு இன்பம் தந்தது, உமது திருவிளையாடலே எனக்குச் சந்தோஷஞ் செய்வித்தது, உமது திவ்வியப் பிரபந்தமுதலாகிய புராணங்களே எனக்குக் கேட்கப் பண்ணியது, உமது திருப்பதிகளே எனக்கு வாசத்தை யுண்டாக்கியது, உமது கனம் பொருந்திய வலிமையே எனக்கு ஆதரவுபுரிந்தது. ஆதலால் அடியேனுடைய குற்றத்தையும் வெவ்விதாகிய நோயையும் நீக்கிவிட்டு இனி வாழ் நாளாகிய பிச்சையுந் தரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 25
———

பூரிக்கு நின் கொடியென்னவே புளகிக்குநின் சனமென்னவே,
ஈரிக்கு நின் சபையென்னவே யிரதிக்கு நின் புகழென்னவே,
ஆரிக்குணம் பெறு கேவர்தா மடியாருளந் தானந்தமே,
நாரிக்குவில் லொடியச் செய்தாய் நாராயணா நாராயணா.       26

[இ-ள்.] உமது கருடக் கொடியே யென்றால் எனது தேகப் பூரிக்கும், உமது அடியார்களே யென்றால் எனது மயிர் புளகிக்கும், உமது சபையேயென்றால் எனது கண்களிலே ஆனந்த பாஷ்பம் பெருகும், உமது புகழேயென்றால் என்மனது ரம்மிக்கும். ஆகலால் இத்தன்மையான குணத்தைத் தேவர்களிலே எவர்கள் தான் பெற்றார்கள். பாகவதருடைய இருதயத்தில் ஆனந்தமானவனே! ஜானகிக்காக உருத்திரன் வில்லை ஒடியச் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று. 26
————-

தேன் பாடிதா வனமாலையுந் திருவாழிசங் கமுமேந்தியே,
தான்பாடி நாரதனாடுமுன் சபை மானிடர்க் கதிதூரமே,
வான்பாடியுட் புயலென் று தான் வருமென்று வா டுவதென்னவே,
நான் பாடினால் வரவேண்டுமே நாராயணா நாராயணா.       27

[இ-ள்.] நாரதமுனியானவர் பாடியாடா நின்ற தேவரீருடைய சபையானது மானிடர்களுக்கு அதிக தூரமாக விருக்கும். ஆதலாலவாக்கூடாது. வானம்பாடியென்னும் பட்சியானது நீருண்ட மேகங்கள் என்றைக்கு வருமோவென்று மனது வாட்டங்கொள்வது போல அடியேன் வருந்தப் பாடினால் அத்தன்மை போல வந்து இரட்சித் தருளவேண்டும் வண்டு பாடித்து ராவா நின்ற துளபமாலையும் திருச்சக்கரமும் சங்கமும் ஏந்திய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

மானோயு நின னருளுற்ற நாள் வாய் நீர்மருந் தாயங்ஙனே,
தானோடு நின் னருளற்ற நாள் சஞ் சீவியைத் தளியேறுமே,
தானோரையண் டின பேர் கடா ரடியாருளத தானந்தமே,
நானோதவா ஞானோதயா நாராயணா நாராயணா.       28

[இ-ள்.] மகத்தாகிய நோய்களெல்லாந் தேவரீருடைய கிருபையைப் பெற்ற நாளையிலே உமிழ் நீரே மருந்நாகி அங்ஙனே ஓடிப்போகும். உமது கருணை யில்லாத காலத்திலே சஞ்சீவியைக் கொடுத்தாலுந் தள்ளிவிட்டு அதிகமாகுமாதலால் இதை யறிந்தபேர்கள் சுகத்தைப் பெறுவார்கள். அடியார்கள் இருதயத்தில் ஆனந்தமானவனே! நாயினேன் ‘தோத்திரம்’ பண்ணினால் ஞான உதயஞ் செய்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

ஈசன்பரன் பிரமன் பிதா விறைவிண்டுவண் இறைதண்டுழாய்,
வாசன சரா சரனென்று நின் வழியன்பர்வாழ் பதிதன்னிலே,
தீசங்கடம் பிணி தாழுமே சிறைசண்டைவஞ்சனை வீழுமே,
நாசங் கடந் துயிர்வாழுமே நாராயணா நாராயணா.       29

[இ-ள்.] ருத்திரனுக்குப் பரமனே யென்றும், பிரமனுக்குத் தந்தையேயென்றும், கர்த்தனே யென்றும், விஷ்ணுவே யென்றும், வண்டுகளுடனே குளிர்ச்சி பொருந்தா நின்ற திருத்துழாயினிடத்தில் வாசனேயென்றும், சராசரங்களான வனேயென்றும், தேவரீரைத் தோத்திரம் பண்ணி வழிபடா நின்ற அடியவர்கள் வாழ்ந்தருளும் தலங்களிலே பொல்லாத சங்கடங்களும் நோய்களும் சிறைகளும் போர்களும் வஞ்சனைகளும் இவை முதல் குற்றங்கள் யாவும் நீங்கி மற்றவுயிராக ளெல்லாட வாழ்ந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

ஆபாதவா யுனைவையுமே யடியாருடன் படைபண்ணுமே,
மாபாவ நூல் பலகற்குமே மறைபன னுவாதியர்தம்மினும்,
ஓபாவியேனிவை நின்முனேயுரை செய்தனன் விரைசெய்தபூ,
நாபா பரா பரனேயரீ நாராயணா நாராயணா.       30

[இ-ள்.] அபத்தம் நிறைந்த என்னுடைய வாயானது தேவரீரை வைதுகொண்டேயிருக்கும். அடியார்களுடன் போர் பண்ணிக்கொண்டே யிருக்கும். மகத்தாகிய பாப சாஸ்திரங்களையே கற்கும். ஆதலால் வேதத்திலே சொல்லா நின்ற விரோதிகளைப் பார்க்கிலும் அதிகரித்திரா நின்ற விரோதி யாகிய நாயினேன் தேவரீர் சந்நிதானத்திலே விண்ணப்பஞ் செய்துவிட்டேன். உமது சித்தம் எனது பாக்கியம். வாசனை சேர்ந்த நாபிக்கமலம் பொருந்தா நின்ற பராபரனென்னும் அரியாகிய ஸ்ரீமந நாராயணா எ-று.
————

காற்பாலினிற் கடவாதவன் கலிகாலமே திரை யாடிடுந்,
தோற்பாவை நா னதுமெச்சவே தொடு சூத்திரத துறைகாரணீ,
மேற்பாவபுண் ணிய மான நல் வினை தீவினைக் கெவராகுவார் ,
நாற்பாலி னுக் கொருமூலமே நாராயணா நாராயணா.       31

[இ-ள்.] கடலிலே உதித்துவரா நின்ற சூரியனாலே அறியும்படியான காலப் பிரமாணத்தோடுங் கூடிய கலிகாலமே திரையாகவும், ஆடா நின்ற தோற்பதுமை யானாகவும், மனது மெச்சும்படி யாகத் தொடுக்கா நின்ற சூஷ்திரத்துறைக்காரர் தேவரீரானால் மேலே வாரா நின்ற பாப புண்ணியங்களுக்கு அதிகாரிகள் எவராகுவார்கள்? இந்த நியாயத்தைத் தெரியப்படுத்தவேண்டும். பறப்பன ஊர்வன நடப்பன இருப்பனவாகிய நான்குவித சாதிகளுக்கெல்லாஞ் சமானமான ஆதரவு தேவரீரேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 31
————-

இரைபாலெழுஞ் சுவரான நா லிருசாணுடம் பிடியாமலே,
கரையாமலே தகராமலே கழலாமலே யழலாமலே,
திரையாமலே வினைமூடி கண் டிறவா மலே வகையென்னைதா,
னரையாதசோ றிடுமை யனே நாராயணா நாராயணா.       32

[இ-ள்.] ஆகாரத்திலே வளராநின்ற எண்சா ணுடம்பாகிய சுவரானது கரைந்து போகாமலும் இடிந்து போகாமலும், அதிர்ந்து போகாமலும், உதிர்ந்து போகாமலும், வெந்து போகாமலும், திரைந்து போகாமலும், வினையினாலே இறந்து போய் மறுபடியும் பிறந்து விழிதிறவாமலும் இருக்கும் வகையாதெனில், நரை திரை மூப்பில்லாத அமுதத்தைக் கொடுத்தருள வேண்டும் என் ஐயனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

புற்கொண்டுவாழ் பசுவாரெடார் புலியாழ் கிணற்றிடைவீழினுங்,
கற்கொண்டுவா தடி கொண்டுவா கடி தென்பரப் படுபாவி நான்,
ஏற்கொண்ட நோய்க் கெவராகுவா ரினி நீயலா திலை யெட்டியும்,
நற்கொண்டலால் வளர்கின்றதே நாராயணா நாராயணா.       33

[இ-ள்.] புல்லையுண்டுவாழா நின்ற பசுவானது கிணற்றிலே விழுந்தால் கண்டவர்கள் யாரேனும் எடுத்து விடுவார்கள். புலியானது விழுந்ததானால் சீக்கிரமாய் கற்களுந் தடிகளுங்கொண்டு கொல்லுவார்கள். அத்தன்மைபோலப் படுபாவியான என்னுடைய தேகத்திலே கொண்ட நோயைத் தீர்க்க எவரிருக்கிறார்கள்? இனி தேவரீரையன்றி வேறு இல்லை. மழையினாலே எட்டிச்செடியும் வளர்வது போல உம்முடைய கிருபையினாலே அடியேனும் வளரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 33
————-

அரசன் கையா லபயம்பெறா ரயலாளுமன் னரையண்டினால்,
விரசென்றுவந் திடமீவர் நீ வினவாதசீ விகளண்டினால்,
வரசங்கரா தியாஞ்சு வார் வருகென்னமேல் வகையென்ன தான்,
நர சிங்கனே முரபங்கனே நாராயணா நாராயணா.       34

[இ-ள்.] தாங்கள் நம்பியிருக்கும் அரசனாலே பிரயோசன மில்லையென்று மறு மன்னவரிடத்திலே சேர்ந்தால் சந்தோஷித்து எதிரே வந்து இடங்கொடுத்து இரட்சிப்பார்கள். அத்தன்மையாகத் தேவரீரை நம்பினபேர்கள் யாவரேனும் உம்மை வினவாமல் வெறுத்துப் பக்கத்திலே சென்றால், முக்கியமான சங்கரன் முதலாகிய தேவதைகளானாலும் இரட்சிக்கப் பயப்படுவார்கள். ஆதலால் கதிவேறில்லை. அடியேனை வாவென்றழைக்க வகையென்ன வெண்ணி யிருக்கிறீரோ தெரியாது. நரசிங்கரூபனே! முரகாசுரனைக் கொன்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

கோட்சொல்லுவேன் வசைசொல்லுவேன் குறை சொல்லுவேன் முறை சொல்லுவேன்,
கீட் சொல்லுவேன மிகைசொல்லுவேன் கிலிசொல் லுவேன் வலி சொல்லுவேன்,
சூட்சொல்லுவே னயனூழி நாள் சொலவேண்டினுஞ் சிறிதுன்னை யோர்,
நாட்சொல்லலென் நறிகின்றிலேன் நாரா யணா நாராயணா.       35

[இ-ள்.] பிரமகற்பபரியந்தம் அடியேனுடைய நாவானது கோள்களும் வசைகளும் குறைகளும் முறைகளும் கீழ்மைகளும் குற்றங்களும் பயங்களும் வலிமைகளும் வஞ்சனைகளும் இவைகளைச சொல்லுமேயன்றிக் கொஞ்சமாகிலும் தேவரீர் நாமத்தை ஒரு நாளையிலேனுஞ் சொல்லும்படியா யறிந்ததேயில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 35
———

ஆளாகி நின் னிரு நாலெழுத் தறியாத நா ளறிவார்களைக்,
கேளாத நாள் செவியூறவே கடை யாத நா ளதிலாசையே,
மூளாத நா ணிலமீது தான் முதனாள்லங் கெழுதாத நாள்,
நாளாகுமோ வாளாயுதா நாராயணா நாராயணா.       36

[இ-ள்.] ஆசாரியனுடைய திருவடிகளுக்கு ஆளாகத் தேவரீருடைய திருமந்திரத்தை அறியாத நாளும், தெரிந்த பாகவதரைக் கேளாத நாளும், செவிகளிலே யூறும்படியாய்க் கிடையாத நாளும், அதிலே ஆசையானது பெருகாத நாளும், அஞ்சாவது வயதில் முதல் நாளையிலே பள்ளிக்கூடத்தில் அரியென்று நிலவெழுத்தாகிலும் எழுதிவையாத நாளும் பல நல்ல நாளாகுமோ? வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 36
————

வீட்டுக்குளே துணையாவதும் வெளியிற் குளே துணையாவதும்,
கூட்டுக்குளே துணையாவ துங் குன்றுக்குளே துணையாவதும்,
காட்டுக் குளே துணையாவதும் கடலுக்குளே துணையாவதும்,
நாட்டுக்குளே துணையாவதும் நாராயணா நாராயணா.       37

[இ-ள்.] வீட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும், வெளியினுக்குள்ளே துணையா யிருப்பவனும், சந்திரனுக்குள்ளே துணையாயிருப்பவனும், மலையினுக்குள்ளே துணையா யிருப்பவனும், காட்டினுக்குள்ளே துணையாயிருப்பவனும், கடலினுக் குள்ளே துணையா யிருப்பவனும், நாட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

வாய்க்கின்றதேன் பகையுண்ணலா மணக் கின் றசாந் தரையுண்ணலாங்,
காய்க்கின்றமா வெறியுண்ணலாங் கறக்கின்றவர்க் கட்டுண்ணலாப் ,
தோய்க்கின்றபால் குடையுண்ணலாஞ் சுவை கெட்டமா னிடவாலிலா,
நாய்க்கிந்தவா தனையேனையா நாராயணா நாராயணா.       38

[இ-ள்.] தேன்கூண்டினுக்குப் பகைத்தலும், சந்தனக்கட்டையினுக்குத் தேய்த்தலும், பழுத்த மரத்தினுக்குக் கல்லெறிதலும், கறக்கும் பசுவினுக்குக் கயிறணைத்தலும், தோய்த்த தயிரினுக்கு மத்தால் குடைத்தலும், இவைகளுக்கு இந்த உபத்திரவமுண்டாகல் பிறருக்குபகாரமாகும். உருசியும் வாலுமில்லாத மானிட மென்னும் நாயினுக்கு இந்த வாதனையைக் கொடுத்தீரே இதனாலே உமக்கென்ன பிரயோசனமுண்டு. தெரியச் சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

தும்பிக்கையா னையுமைவர்முன் றுகிலோடி வாடிய நங்கையும்,
தம்பிக்கையா மகயோகருந் தா நிற்கவே சதுர்வேதியன்,
கம்பிக்கையா லரனுக் கு நீ கனியையிட் டினியையமேன்,
நம்பிக்கையா கிய தெய்வமே நாராயணா நாராயணா.       39

[இ-ள்.] கஜேந்திரனையும் பாண்டவரையும் வஸ்திரம் நீங்குதென்று வாடின துரோபதையும் ஸ்தம்பிதமாயிருந்து தவம்பண்ணா நின்ற மகத்தாகிய யோகிகளையும் இரட்சித்திருக்கட்டும். நான்கு வேகத்தையு முடைத்தாகிய பிரமனுடைய சிரத்தைக் கிள்ளின சிவனுக்கும் பிச்சையிட்டுச் சாபத்தைத் தீர்த்தபிற்பாடும் இனி பரத்துவம் வேறே யென்று ஐயப்படலாமோ? நம்பிக்கையான தெய்வம் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா. எ-று.
————-

பாலாவதோ, தேனாவதோ பழமாவதோ பாகா வதோ,
மேலானசர்க் கரையாவதோ விரையாரு நல் லமுதாவதோ,
கோலாகலப் பிணிதீரவே குளி யங்களோ வனமூலியோ,
நாலாவதோ நின்பேர் சொலாய் நாராயணா நாராயணா.       40

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே காலா கலஞ் செய்யா நின்ற நோயைத் தீர்க்கும்படியான தேவரீருடைய திருநாமமானது பாலாகியதோ? தேனாகியதோ? பழமாகியதோ? பாகாகியதோ? மேலாகிய சருக்கரையாகியதோ? வாசனை சேர்ந்த நல்லமிர்தமாகியதோ? வன மூலிகை யாகியதோ? இவையல்லாமல் மணிமாதிரம் ஒளடதம் இவை மூன்றுக்கு மேலாகியதோ? என்னென்று சொல்லுவோம் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

பூவுக்கு நல லது சொல்லவோ பொலிசீதளப் புதுவாசமே,
தேவுக்கு நல லது சொல்லவோ செவியார்முனே யெதிர் நிற்பதே,
ஆவுக்கு நல் லது சொல்லவோ வதுசாதுவா யமுதீவதே,
நாவுக்கு நல்லது சொல்லவோ நாராயணா நாரா யணா.       41

[இ-ள்.] புட்பங்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் காந்தியும் குளிர்ச்சியும் புதிய வாசனையும் உண்டாகிய புட்பமேயன்றி வேறில்லை. தெய்வங்களுக்குள்ளே நல்லது சொல்லவேணடு மானால் முறையத்தைக் காதிலே கேட்குமுன்னமே அடியார்களுக்குப் பிரசன்னமாகிய தெய்வ மேயன்றி வேறில்லை. பசுக்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் அது வெகு சாதுவா யமுதத்தைக் கொடுக்கும் பசுவேயன்றி வேறில்லை. நாவுகளுக்குள்ளே நல்லது சொல்லவேண்டு மானால் தேவரீருடைய திருநாமக்தைச் சொல்லிய நாவேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 41
—————

ஆனந்தமா யழுவார்முனே மலர்சூடியே தொழுவார்முனே,
மோனந்தனிற் கரைவார் முனே முகிலென்னவே புகழ்வார்முனே,
தானந் தவம் புரிவார் முனே சரணென றுனை யடைவார் முனே,
நானென் செய்கே னிவையொன்றிலே நாராயணா நாராயணா.       42

[இ-ள்.] தேவரீருடைய திருவடியை நினைத்து ஆனந்த பாஷ்பங்களைக் கண்களிலே பெருக்குவார்களுக்குமுன்னே, புட்பங்களை யலங்காரஞ்செய்து தண்டஞ் சமர்ப்பிப்பார்களுக்கு முன்னே, மௌனத் தியானத்தினாலே உள்ளங் கரைந்திடுவார்களுக்கு முன்னே, பசுங்கொண்டலே யென்று புகழ்ந்திடுவார்களுக்கு முன்னே, தானங்களுந் தவங்களுஞ் செய்திடுவார்களுக்கு முன்னே, சரணாகதி செய்திடுவார்களுக்கு முன்னே , அடியேன் இவைகளிலே ஒன்றாகிலும் செய்யமாட்டு வேனோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 42
————

செரிக்கின்றவூணுகர்வேனலேன் சிரிக்கின்ற காரியமே செய்வேன்,
கரிக்கின்றகண் படையேன் வெறுங் கழப்பன் கொடுங்கடுவஞ்சகன்,
பரிக்கின்ற நின் னடியாரொடும் பழகேனலேன் படர்வந்த பின்,
நரிக்கின்றனே னினியென் செய்வே நாரா யணா நாராயணா.      43

[இ-ள்.] ஜீரணமாகும்படியான ஆகாரத்தைக் கொள்ளாமல் நகைக்கும்படியான காரியமே செய்து தெரிசன அபேட்சையான கண்ணையும் படையாமல் அன்பைப் பரிக்கா நின்ற அடியாருடனேயுங் கூடாமல் விருதாவாகிய கழப்பனாகவும் பொல்லாத விஷம்போலும் வஞ்சகனாகவு மவதரித்துத் துன்பம் வந்த பிற்பாடு, அவதியைக் கொள்ளா நின்ற நாயினேன் இனி என் செய்வேன்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 43
———-

ஆதாரதே வதையென்பனோ வடியேனையா ளரசெனபனோ,
ஓதா துணர்ந திடலன்புகூ ருப தேசதே சிகனென்பனோ,
மாதாபிதா வுடலாவி நீ மனைகாணிபொன் வலிசெய்வ நீ,
நாதாவு நீ தாதாவு நீ நாராயணா நாராயணா.       44

[இ-ள்.] ஆதாரமாகிய தேவதையே யென்பனோ? அடியேனையாளுங் கர்த்தனே யென்பனோ? பல நூல்களை யோதாமல் தன்னிலே யறிந்திட நட்பு செய்யா நின்ற, உபதேசகுருவே யென்பனோ? என்னென்று சொல்வேன்? தாயும் தந்தையும் தேகமும், உயிரும், பெண்சாதியும், காணியும், திரவியமும், வலிமையும், செல்வமும், நாதனும், பிரபுவும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 44
———

வடு நிந்தையே னிடுவந்தியேன் மருள் விஞ் சினே னருளஞ்சினேன்,
அடுசிந்தையே னெடு விந்தையே னலைபண்பினே னுனை நம்பினேன்,
விடு துன்பினேன் முடுகன்பிலேன் வினைமண் டினே னுனையண்டினேன்,
தடுவொன்றிலே மிடைகுன்றுமோ நாராயணா நாராயணா.      45

[இ-ள்.] குற்றம் பொருந்திய நிந்தையையும், இடுவந்தியையும், மிகுந்த மயக்கத்தையும், அருளில்லாத பொல்லாத இருதயத்தையும், பலவித துர் நடத்தையையும், காரியமென்கிற அலைச்சலையும் , தீவினையையும் இவைகளைக் கொண்டிரா நின்ற நாயினேன் இரக்கத்திலே பயந்தவனாக, அன்பிலே துரிதமில்லாதவனாகி, துன்பம் ஒழிவில்லாமல் தேவரீரை யடைந்தேன். மத்தியிலே இன்னமொரு விதத்தினாலே எனது வருத்தம் நீங்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 45
————

குடி நீர் கொடீர் முகவேதிடீர் குடவெண்ணெ யை வடியீர்பிரம்,
படியீர்வெணீ றெறியீர்விழிக் கதிகோரவஞ் சனமேயிடீர்,
கடியீர்வயித் தியரால் வரா கமதாடுகுக் குடமிட்டுளே,
நடியீரெனிற் பிணியஞ்சுமோ நாராயணா நாராயணா.       46

[இ-ள்.] குடிக்கும்படியாய் கிஷாயங்கள் நீர் கொடுங்களென்றும், முகத்துக்கு வேதுபிடியுங்க ளென்றும், குடத்திலே எண்ணெயை காய்ச்சிக் கொடுங்க ளென்றும், பிரம்பு கொண்டு அடித்து வெளுத்த விபூதியை எறியுங்களென்றும், கண்களுக்கு அதிகோரமாகிய கலிக்கம் போடுங்களென் றும், வயித்தியருக்குக் காட்டித் தீருங்களென்றும், பன்றியும் ஆடும் கோழியும் பலி கொடுத்துச் சன்னகமாட்டிப் பாருங்களென்றுஞ் சொல்லினால் இவைகளாலே நோய் தீர்வதுண்டோ ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 46
———-

பிரம்புக்கு முள் ளிடுமா தரைம் பிணிகட்கு நீள் பிணியுற்றவென்,
உரம்புக்குளே யறியா ததெ னுலகத்தெலாமுறைசோதிதோல்,
வரம்புக்குளே யெலும்புக்குளே வழும்புக்குளே தழும்புக்குளே,
நரம்புக்குளே யுகவெட்கியோ நாராயணா நாரா யணா.       47

[இ-ள்.] முள்ளுகளோடுங் கூடிய பிரப்பம்புதரு களுக்குந் தாமரைப் பிணையல்களுக்கும் மிகுந்த நோய்கொண்டிரா நின்ற என்னுடைய நெஞ்சுக்குள்ளே நீ நுழைந்தறியாம லிருப்பதென்னே? உலகத்திலிருக்கும் எல்லா வுயிர்கள் தோறும் வாசம் பண்ணாநின்ற சோதி நீயன்றி வேறில்லை. ஆதலால் இது தோலுடம்பும் எலும்பும் வழும்பும் தழும்பும் நரம்பும்கூடி நாற்றமானபடியினாலே புகுந்தறிதலுக்கு வெட்கமாகியதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 47
————-

மன்றாடிய வதிசோபன மழைவண்ணனே விசயங்கரா,
வென்றாய்சயஞ் செயுமச்சுதா மிக வாழிகே சவனேசுபங்,
கன்றால்விள வெறிந்தாய் பெருங் கலியாணமங் கலமாதவா,
நன்றாகவேங் கடநாயகர் நாராயணா நாராயணா.       48

[இ-ள்.] கோபிகா ஷ்திரீகளுடைய சபையிலே நடனம் பண்ண நின்றவனே! உனக்கு அதிக சோபனம், மேகவண்ணனே! உனக்கு விசயம். முதலையை வென்றவனே! உனக்கு செயம். அச்சுதனே! உனக்கு மிதந்த வாழி கேசவனே! உனக்குச் சுபம். கன்றால் விளாங்கனி யெறிந்தவனே! எனக்குப் பெரிதாகிய கலியாண மாதவனே! உனக்கு மங்களம். வேங்கட நாயகா! நீ இத்தன்மையாக நன்றாயிருக்கவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 48
———–

இந்தாவெனாவென திச்சை நீ யெளி நீவையே லிழிவாகுமோ,
சந்கானமா மலராலருச் சனை செய்தவார் தவிர்வார்களோ,
வந்தானபேர் துதி யார்களோ வசுதேவர்சீர்குறையாகுமோ,
நந்தாத பெண் ணகை செய்வளோ நாராயணா நாராயணா.       49

[இ-ள்.] அடியேனுடைய இச்சையானபடியே இங்கே வாவென்று தேவரீர் எளிதாகப் பலனைக் கொடுத்தருளினால் உமக்கு இகழச்சியாகுமோ? கற்பக மலரினாலே அருச்சனை செய்யா நின்ற தேவர்கள் விட்டுவிடுவார்களோ? சந்நிதானத்தில் வந்தபேர்கள் துதியார்களோ? வசுதேவருடைய உடைமையிலேகுறைந்து போகுமோ? அழிவில்லாத ஸ்ரீமகா லட்சுமி நகைப்பாளோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

சிற்றப்பனோ துருவற்கு நீ தெதிபாண்டனார் பெரியப்பனோ,
கற்றத்தைதேவகி தங்கையோ கண் டாகனன் மிதிலேசனோ,
சுற்றத்தரோ பெறுவோ ரெலாந் தொடுவேன்வழக் கிடுவேன் விடேன்,
நற்றப்படும் பொருடந்துபோ நாராயணா நாரா யணா.       50

[இ-ள்.] தேவரீர் முன்னாளையிலே இரட்சித்த பேர்களுக்குள்ளே துருவ மகாராஜனுக்கு நீ சிற்றப்பனே? தெதிபாண்டனென்னும் குயவன் உமக்குப் பெரியப்பனோ? கல்லுருவம் போக்கிக் கிளி போலப் பேசப்பண்ணாநின்ற அகலிகையானவள் தேவகிக்குத் தங்கையாகிய உமது சிறிய தாயாரோ? கண்டாகன னென்னும் விரோதியானவன் உமக்குப் பெண் கொடுத்த மிதிலைச் சனக மகாராசனாகிய அம்மானோ? இன்னம் பேறு பெற்ற பேர்களும் பெறும் பேறுகளும் உமக்கு உறவின் முறையார்களோ? ஆதலால் சம்பந்தமில்லாத பேரையெல்லாம் இரட்சித்தபடியினாலே தேவரீருக்கும் அடியேனுக்கும் வழக்கு விடுவதில்லை. ஆசைப்பட்ட பலனைக்கொடுத்து அப்புறம் போகவேண்டுமே யன்றிப் போகக்கூடாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
——–

தன்னெட்டெழுத் தயன் மத்தகந் தனிலே பொறித் தடி நாவிலே,
உன்னெட்டெழுத் தெழுதாமையா லுலகத்துளோ ரவனைத்தொழார்,
கன் னெட்டிடத் தருநெட்டிடக் கனனெட்டிடக் கன காலிபின்,
நன்னெட்டெலாந் தொடர்பாதனே நாராயணா நாராயணா.       51

[இ-ள்.] பிரமதேவனானவன் உலகத்திலேயுள்ள மானிடர்களுடைய தலைகளிலே தனது நெட்டெழுத்தை மாத்திரம் எழுதி அடி நாவுகளிலே தேவரீருடைய அஷ்டாட்சரத்தை எழுதாமற் போன படியினாலே அவனை ஒருவருந் தேடுகிறதே யில்லை. முல்லை நிலத்திலே கல்லுகள் நெட்டிடவும், விருட்சங்கள் நெட்டிடவும், அக்கினிகள் நெட்டிடவும், விஸ்தாரமாகிய பசுக்கள் பின்னாலே நன்மைபெற நெடிதான தூரமெல்லாம் நடந்தருளா நின்ற திருவடியை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 51
————

உரலுக்குமோ ருறுபஞ்சமோ வுனை நச்சினே னெனையச்சமன்,
விரலிட்டுதேர் வினைவல்லனோ விதிகைக்குளவ் விரலோசையால்,
பொரலுற்ற நோய் கழலப்பணாய்ப் புதிதாமருந் தொரு தூத னால்,
நரலைக்குளாய் வரவேண்டுபோ நாராயணா நாராயணா.       52

[இ-ள்.] குத்தா நின்ற உரலினுக்கு ஒருகாலத்திலேயும் தரித்திரம் வருவதில்லை. அத்தன்மை போலத் தேவரீரிடத்திலே நிரம்பிய ஐசுவரியமே யன்றி இல்லாததில்லையே. ஆதலால் உம்மிடத்திலே இச்சை கொண்டேன். இனி என்னை அந்த யமனானவன் விரல் விட்டுக்காட்டி யறிந்து வினை செய்யமாட்டுவனோ? பிரமாவினுடைய கைகளிலே யிரா நின்ற விரலும் என் றலையிலே எழுத அசைய மாட்டாது. வருத்தத்தைச் செய்யா நின்ற என் நோய் தீரும்படியாய்ச் செய்வதற்கும் புதிதாய் ஒப்பில்லாத சஞ்சீவியானது ஸ்ரீ அனுமாராலே வரவேண்டுமோ? ப்ராப்தி வாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 52
————

சமையாதிதே வதையென்பதுஞ் சமையாதி நின் பெயரென்பதும்,
உமையாளுடன் பரமன் பரிந் துனைமாமறைப் பொருளென்பதும்,
தமை யாள்வதென் றிமையோர் திலோத் தமையாதிபன் புகழ்கின்றதும்,
நமையாமலே யெனையாளுவாய் நாராயணா நாராயணா.       53

[இ-ள்.] சம்பங்களுக்கெல்லாம் அதிதேவதை நீயேயென்றும், எச்சமயத்துக்கும் உரியது உம்முடைய பெயரேயென்றும், மகத்தாகிய வேதப் பொருள் நீயேயென்று உமையவளுக்குச் சிவன் பரிந்து நிச்சயம்பண்ணினதும், தேவதைகளுக்கும் திலோர்த்தமைக்கும் அதிபனாகிய தேவேந்திரன் தங்களை இரட்சிக்குங் கர்ததனே யென்று புகழ்கின்றதுங் கெடாமற்படி என்னை இரட்சித் தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 53
———–

நீயண்டரா லடிபட்ட நா ணினைவில்லை நின் னுதரத்துளே,
போயண்டகோ டியிலெந்தவூர் புரையிற்குளே விளையாடினேன்,
மாயங்கடந் தறி வேனெனில் வரதன் கெடீர் வானோர்க்கெலாம்,
நாயன் கெடீர் விடுமென்பனே நாராயணா நாராயணா.       54

[இ-ள்.] தேவரீர் அசோதை முதலாகிய இடையராலே அடிபட்ட நாளையிலே அடியேனுக்கு நினைவில்லாமற் போயது. அது எதனாலேயென்றால், உமது குட்சிக்குள்ளே இரா நின்ற அண்ட கோடிகளிலே எந்த சந்துகளுக்குள்ளேயோ விளையாடினேன். நீர் செய்யும் மாயம் நீங்கி யறிந்தே னேயானால் தேவதைகளுக் கெல்லாம் உம்மை வரதனென்றும், நாயகனென்றும். அந்த இடையர்களுக்குத் தெரியப்படச் சொல்லிக் கெடுவீர்கள். விட்டுவிடுங்கோளென்று நீக்கிவிடுவேன். திருமேனி என்னவிதமாக நொந்ததோ? இப்போது பெரியோர்களாலே யறிந்தேன் – அறிந்துஞ் சமயத்திலே உதவாதே போனேன். இனி வருந்தி என்ன பிரயோசனம்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 54
————-

காசிக்குளுங் கயையிற்குளுங் கழியாதபா தக னாகையால்,
கூசிக்குலைந் துனைவந்தியேன் குறை யாகுமோ வினையென்பதோர்,
வாசிக்குவந் தருள் செய்குவாய்வயிரத்திராவணன்றங்கைதன்,
நாசிக் குவா ளெறியையனே நாராயணா நாராயணா.       55

[இ-ள்.] காசியினிடத்திலேயும் கயாவினிடத்திலேயும் வாசமபண்ணினாலும் நீங்காத பாவியான படியினாலே மனது கூசக் கலைந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணாமல் விட்டுவிட்டேன். அதினாலே உமக்குக் குறைவாகுமோ? அடியேனுடைய வினையென்னும் வாசி தீரும்படியாய்வந்து கிருபை செய்தருள வேண்டும். முன்னாளிலே வயிபத்தோடுங் கூடிய இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகையினது மூக்கறும்படியாய்ச் செய்த வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 55
———-

தாளுக்கவா விய நாவினுஞ் சலியாதுவா சனி யானநோய்,
ஆளைக் கெடா தின்றைக்குவா வசை யாமலே யன்றைக்குவா,
தோளுக்குவா ளியை யெய்தவன் துயர்கண்டிரா வணனின்று போய்,
நாளைக்குவா .வெனுமையனே நாராயணா நாரா யணா.       56

[இ-ள்.] தேவரீருடைய திருவடிகளுக்கு ஆசை கொள்ளா நின்ற எனது நெஞ்சிலேயும் நாவிலேயும் வருத்தமில்லாமல் வரவேண்டும். சனியான நோயானது அடிமையைக் கெடுத்துவிடாமல் இன்றைக்கே வரவேண்டும். சரமதிசையிலே யமனைக்கண்டு சஞ்சலிக்கு முன்னமே அன்றைக்கு வரவேண்டும். முன்னாளையில் பாணங்களைத் தோள்களிலே யழுந்தும்படியாய் எய்து அவனது துயரத்தைக்கண்டு, வயிரத்தையுடைய இராவணா! நீ இன்றைக்குச் சென்று நாளைக்கு வாவென்று கிருபை பண்ணாநின்ற என்னையனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

விக்கற்கிடம் பொருமற்கிடம் விடுமூச்சுமே லெழுதற்கிடம்,
கக்கற்கிட மிருமற்கிடங் கருதற் கிடந்திருகற்கிடம்,
சொக்கற்கிடங்குளிர் தற்கிடஞ் சுடுதற்கிடம் வெருவற்கிடம்,
நக்கற்கிடந் தரு மெய்யருள் நாராயணா நாராயணா.       57

[இ-ள்.] விக்கலென்றும், பொருமலென்றும், மேல்மூச்சென்றும், கக்கலென்றும், இருமலென்றும், கருகலென்றும், திருகலென்றும், சொக்குத லென்றும், குளிர்தலென்றும், சுடுதலென்றும், பயப்படுதலென்றும், நக்கலென்றும் சொல்லா நின்ற அந்தப் பீடைகளுக்கெல்லாம் இடங் கொடுத்திரா நின்ற தேகத்தையுடைத்தாகிய அடியேனை இரட்சித்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 57
————-

துளசீதளத் துளசீதளத் தூய் நீரதே குடி நீ ரதாம்,
உளதாயிரம் பெயரெண்ணு நூற் றொரு கோடிமந் திரமேலதாம்,
வளமார்பின்மா மணி யென்னவே மணியாமெனைப் பிணியென் செயும்,
நளகூபரன்பகைவென்றவா நாராயணா நாராயணா.       58

[இ-ள்.] திருத்துழாயினது தளங்களிலே பொருந்துங் குளிர்ந்த நீரே குடிக்குங் கஷாயங்களுக் கெல்லாம் மேலாகிய கிஷாய நீராகவும், நிலை பெற்றிரா நின்ற ஆயிரந் திருநாமங்களும் நூற்றொருகோடி மந்திரங்களுக்கு மேலாகிய மந்திரமாகவும், வளம் பொருந்தா நின்ற திருமார்பிலே யிருக்கும் கவுஸ்துவமணியே மணிகளுக் கெல்லாம் மேலாகிய மணியாகவும் இருக்கின்றன. ஆராயுமிடத்தில் இதுவே மணிமந்திர அவுஷதமாக விருக்கப் பிணியானது அடியேனை என்ன செய்யும்? நளகூபரனுடைய சாபத்தைத் தீர்த் தருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 58
———–

சுவையோசையூ றொளிமாமணந் தொடரா மனஞ் சுழல் கெண்டையும்,
கவைமானுமானையும் விட்டிலுங் களிவண்டுமே விளிகின்றபோல்,
இவை தூயவென் றிவை தீயவென் றினியுண் டிலே னினியென் செய்வேன்,
நவைதீரவேயருள் செய்குவாய் நாராயணா நாராயணா.       59

[இ- ள்.] ஆகார வுருசையினாலே கெண்டையும், மணியோசையினாலே கிளைமானும், தேகப் பரிசத்தினால் யானையும், தீபப் பிரகாசத்தினாலே விட்டிற்பூச்சியும், வாசனையினாலே மதர்த்த வண்டும், இவை ஐந்தும் மனந் தொடர்ந்து சுழன்று விழுந்து இறந்து போவது போலே எனது பஞ்ச இந்திரியமும் இது நன்மையென்றும், இது தீமை யென்றும் தெரிந்து புசிப்பதில்லை. இனி யென் செய்வேன்? இந்தக் குற்றந் தீரும்படியாய்க் கிருபைசெய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று
———–

நெட்டேணியின் படியெட்டுமோ நின்னெட் டெழுத் தெழிலண்டமேல்,
எட்டாமெனும் பத மெட்டவே யிரதித்தசர்க் கரையேயதின்,
வட்டே பசும் பழமேசதா மதுரித்தவா ரமுதேயெனும்,
நட்டேயருட் புனல்கட்டுவாய் நாராயணா நாரா யணா.       60

[இ-ள்.] மூங்கில்களாலே நெடியகாயமைத் திரா நின்ற ஏணியினது படிகளிலே ஏறினால் பரம பதம் எட்டமாட்டாது. ஆதலால் ஏழு அண்டத்துக்குமேல் எட்டாவதாகிய அந்தப் பரமபதத்துக்கு ஏறிவர உபாயமுண்டு. அது யாதெனில், நினது திருமந்திரமாகிய எட்டெழுத்தையும் எனது நெஞ்சிலே நட்டு, இரம்மியமான சருக்கரையுங் கற்கண்டும் கனிந்த முப்பழமும் நித்திய மதுரமாகிய ஆராவமிர்தமும் இவைகளுடைய சுவைபோலே பரவும்படியாகக் கிருபைப்புனல் கட்டினால் ஏறிவருவேன் ஸ்ரீமந் நாராயணா எ-று.
————-

காணுங்கணே குவியுங்கையே கருதுள்ளமே கனலாஞ்சனம்,
பூணும்புயம் புளகாங்கமே புகழ் நாவதே திகழ்கேள்வியே,
ஆணும் பெணுஞ் சரணென்பதே யவையல்லனா ளபராதிகாண்,
நாணும் பெயர்க் காதாரமே நாராயணா நாராயணா.       61

[இ-ள்.] தேவரீர் திருவடியைக் காணா நின்ற கண்களும், குவியா நின்ற கைகளும், நினையா நின்ற உள்ளங்களும், மந்திராக்கினிபொருந்திய சங்கு சக்ர வாஞ்சனம் பூணாநின்ற புஜங்களும், புளகங்கொள்ளா நின்ற தேகங்களும், புகழா நின்ற நாவுகளும், கேட்கா நின்ற செவிகளும் இவைகள் பொருந்திக் குடும்பத்துடனே சரணாகதி பண்ணா நின்ற அடியார்களைப்போலப் பொருந்தினவன் நானல்லன்; மிகுந்த அபராதத்தை யுடையவன். ஆதலால் தரிசனம்பண்ண வெட்கத்தை யடைந்தேன். இத்தன்மையான வெட்கத்தை யடைந்த பேர்களுக்கெல்லாம் ஆதாரமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

கவி நல்லதோ கவிதீயதோ கனமூடனான் விதைவித்திடும்,
புவி நல்லதேல் விளைவெய்துமே புகழ் நல்லதேல் புகர்கேட்கவென்,
செவி நல்லதே லருணல்லதே செயனல்லதே லியனல்லதே,
நவி நல்லதே வரினாவிலே நாராயணா நாராயணா.       62

[இ-ள்.] மிகுந்த மூடனானவன் பாடா நின்ற கவிதையானது நன்மையாயதோ? தீமையாயதோ? தெரியவராது. விதைக்கா நின்ற விதையானது பூமி நல்லதாயிருப்பின் விளையுமேயன்றி விளையாமற் போவதில்லை. ஆதலால் உமது புகழும் கிருபையுஞ் செயலும் இயலும் நல்லதானபடியினாலே அதை என் காதிலே கேட்டு நாவினாலே தோத்திரம் பண்ணினால் நன்மை வருமேயன்றித் துன்பம் வருவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 62
————-

பசைகொண்டபா கவதாகமம் பருகா துகா துருகாது நெஞ்,
சசை கொண்டபா தக நீரிலே யமிழ்வேனையா ணவமாதியாம்,
கசைகொண்ட மோ துகைதாக்குமோ களவுள்ள தா னுன தன்பி லேன்,
நசைகொண்டகா ரியமாகுமோ நாராயணா நாராயணா.       63

[இ-ள்.] தேவரீரிடத்திலே அன்பு பொருந்தா நின்ற பாகவதாள் சொல்லிய ஆகம சாஸ்திரங்களை எனது காதானது கேட்பதுமில்லை. நெஞ்சானது உருகுவதுமில்லை. அலையா நின்ற பாதகக் கடலிலே விழுந்த என்னைக் காமம் வெகுளி மயக்க மென்சிற பிரமை எடுத்துக்கொண்டு வினையானது மோதி யடிக்கும். திருட்டு மனத்தை யுடைத்தான வனாய் உம்மிடத்திலே பத்தியில்லாமல் பரமபதத்துக்குக் காதல் கொண்டதால் அந்தக் காரிய மாகுமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 63
———–

பலகூறுபட் டொருநெஞ்சினன் பரிசென்ன வெங் கணுமானவா,
விலகூறு கொண் டெனை விண்டதென் விரனீக்கிமோர் நுகர்வார்களோ,
மலகூறலாய் நீதானு மென் மதிதன்னைவிட் டெனையொத்தனை,
நலகூறுவார் சுரதேனுவே நாராயணா நாராயணா.       64

[இ-ள்.] அடியேன் பலவிதமான இடையூறு பட்ட ஒரு நெஞ்சை யுடையவனானேன். தேவரீர் வாய்வு பரிசம்போலே எங்கும். நிறைந்தவ ரானீர். ஆதலால் என்னை மாத்திரம் நீங்குப்படி யான குற்றத்தைத் தேடிவிட்டதென்னோ ? விரல் நீக்கி மோரைக் குடிக்கிற பேர்களுமுளரோ? கிருபையுற்றுப் பெருகிய உண்மையான இருதயத்திலே என்னை மறந்துவிட்ட படியினாலே தேவரீரும் அடியேனுஞ் சமானமேயன்றி அதிசயம் இல்லை. நன்மையாகத் தோத்திரம் பண்ணாநின்ற தேவர்களுக்குக் காமதேனுவாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 64
—————–

வாஞ்சித்ததே வதையாகுநீ வடவேங்கடந் தனினிற்கவும்,
நீஞ்சித்திரிந் தனன் வீணிலே நிழல்கண்டபின் வெயினிற்பரோ,
காஞ்சித்தலத் தருளாளனே கனகோபுரக் கொடியாடுமொண்,
நாஞ்சிற்றிருப் பதிவள்ளலே நாராயணா நாரா யணா.       65

[இ-ள்.] அடியேனுடைய நெஞ்சிலே ஆசை கொள்ளா நின்ற தெய்வமாகிய தேவரீர் இந்தத் திருவேங்கடத்தில் தானே எழுந்தருளி யிருப்பது தெரியாமல் வீணிலே உலகமெல்லாந் திரிந்து அலைந்தேன். இனி நிழல்கண்டபேர்கள் வெயிலிலே நிற்பதுண்டோ ? கனம் பொருந்திய கோபுரங்களிலே கொடிகளாடா நின்ற அழகிய மதில்களோடுங் கூடிய காஞ்சித்தலமுதலாகிய நூற்றெட்டுத் திருப்பதிகளிலேயும் அருளாள ரென்றும் வள்ளலென்றும் விளங்கிய ஸ்ரீமந் நாராயணா. எ-று.
—————–

மை நாகமா ழியையண்டிவரழ் வகையென்ன நின் னருள்வெள்ளலாஞ்,
சையினாலிருந்ததிலூ றவே சமைவேனுறத் தருமாறெவன்,
கையினா லறிந் திடரண்ணிய கலி தீர நீ யருள் செய்திடும்,
நைனாரினிற் சரியாவனோ நாராயணா நாராயணா.       66

[இ-ள்.] மை நாகமலையானது சமுத்திரத்திலே முழுகி வாழுந் தன்மைபோலே தேவரீருடைய கிருபாசமுத்திரத்திலே ஆசையாயிருந்து ஊறும் படியாய்ப் பொருந்தின எனக்கு வரத்தைக்கொடுக்கும்படியான மார்க்கம் எவ்விடத்திலேயோ தெரிய வராது. நான் பிரமாவினுடைய சிரத்தைக் கிள்ளிப் பொருந்தா நின்ற தரித்திரம் தீரும்படியாய்த் தேவரீர் கிருபை பண்ணா நின்ற ருத்திரனுக்குச் சமானமாக மாட்டுவேனோ? ஸ்ரீமந் நாராயணா. எ-று.
————-

எமக்கென்று வாழ் குடுப்பத்திலே யிழுப்புண் ணுவாரெமதாதையர்,
தமக்கொன்றைவைத் தில ரென்பரே சழக்குள்ளபேர் வழக்குள்ள பேர்,
சுமக் கின்றவச் சுமையாளனச் சுதன்மற்றையச் சுமை கட்கெலாம்,
நமக்கென்னகா ரியமென்பரே நாரா யணா நாராயணா.       67

[இ-ள்.] எமக்கென்று வாழா நின்ற குடும்பத்திலே அவதிப்படும் பேர்களாகிய பாவிகள் நம்முடைய அவதி தீரும்படியாய் நம்முடைய பிதாக்கள் நமக்கு ஒன்றையும் வையாமற் போனார்களே யென்று அழுவார்கள். இந்தச் சம்சாரமாகிய சுமையைச் சுமக்கா நின்ற புருஷன் அச்சுதனாகையாலே அந்தச் சுமைகளைத் தாங்க நமக்கென்ன காரியமென்று அறிவுடையோர் சந்தோஷிப்பார் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

பசுக்கட்குமா யினைபாடியிற் பலபாடியா டியு மாயர் தம்,
சிசுக்கட்குமாயினைமைந்தனாய்த் திருட் டுக்குமா யினையன்று தான்,
முசுக்கட்குமா யினை நாயினேன் முசிப்புக்குமா யருள்பூவையே,
நசுக் கிப்பின்வா சனைகொள்வரோ நாராயணா நாரா யணா.       68

[இ-ள்.] ஆயர்பாடியிலே யிரா நின்ற பசுக்கூட்டங்களுக்கு இரட்சக கர்த்தாவாகியும், இடைப் பிள்ளைகளுக்குப் பாடலுடனே ஆடல்காட்டியும், சிறுபிள்ளைகளாகி வெண்ணெய் திருடுந் தொழிலுக்கு இசைந்ததுமல்லாமல் முன்னாளையிலே குரங்குகளுக்கு நேசமாகி இரட்சித்த தேவரீர் நாயினேனுடைய தளர்ச்சிக்குக் கிருபை பண்ணாமல் புட்பத்தை நசுக்கி முகர்வாரைப்போல உபேக்ஷை பண்ணலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 68
———–

குலங்காணவே குடிகாணவே குணங்காணவே பழுதாயினும்,
பலங்காணுநின னடியாரெனிற் பவசாகரப் பரப்பென்னுளங்,
கலங்காமலே கலங் காணுமே கழலாமலே கழல்காணுமே,
நலங்கா மலே நலங்காணுமே நாராயணா நாராயணா.       69

[இ-ள்.] குலவண்மையும் குலத்தின் நிலைமையும் குணப்பெருமையும் இவைகளைக் காணுமிடத்தில் பழுதாயிருந்தாலும் தேவரீருக்கு அடிமைப் பட்டார்களேயானால் மேன்மை பெறுவார்கள். ஆதலால் பாவ சமுத்திரப் பரப்புக்குள்ளே என்னுடைய நெஞ்சானது கட்டுவிட்டுக் கலங்கி ஒதுங்கி நலங்காமல் நலங்காணும் கப்பலைப் போன்ற திருவடியைக்காணும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 69
—————–

ஈன்றோனு நீ யலனானுமவ் வியலுந்தியண் டினனல்லனிற்,
போன்றோனெவன் பெறுபிள்ளை யைப் போபோபிதா வினவா திரான்,
சான்றோர் முனே யினிநோயை நீ தவிராயெனிற் சபதங் கெடும்,
நான்றோரைவீ சியவாளனே நாராயணா நாராயணா.       70

[இ-ள்.] என்னைப் பெற்றவனும் நீயல்லவோ? நானும் அருமையான இயல் பொருந்திய உமது உந்தியிலே யிருந்தவனுமல்லவோ? உம்மைப் போலே இரக்கமில்லார் எவரிருக்கிறார்கள்? போ போ! பிதாவானவன் பெற்ற பிள்ளையை வினவா திருப்பானோ? பெரியோர்கள் முன்பாக என்னுடைய நோயை இனி தீராமற் போனீரானால் உமது சரணாகதி சம்ரட்சணை என்கிறநெறி கெட்டுப்போகும். பகைஞரை வீசிய வாளாயுதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 70
————-

கஞ்சப்பதந் தனையங்ஙனே கட்டிக்கரைந் தவசத்தராய்,
நெஞ்சத்து நா ரணவென்று தா னியமித்து நித்திரைகொள்ளுவார்,
கொஞ்சத்தை நின் றளவாக்குவாய் குணபத்தைவாழ் குடியாக்கு வாய்,
நஞ்சத்தையா ரமுதாக்குவாய் நாராயணா நாராயணா.       71

[இ-ள்.] தேவரீருடைய தாமரைபோலும் திருவடியை உள்ளத்திலே நினைந்து ஞானக் கயிற்றினாலே அங்ஙனே கட்டிக் கரைந்துருகிப் பரவசத்தையடைந்து ஸ்ரீமந் நாராயணனே யென்று நிச்சயம்பண்ணி ஆனந்த நித்திரை கொள்ளுவார்கள். துரும்புபோலே யிருநதாலும் அவர்களை மகாமேருவாகச் செய்தருளுவாய். இதுவுமல்லாமல் புழுக்களை ஐஷ்வரியத்தை யுடைத்தாகிய குடும்பங்களாகவும், விஷத்தை அமிர்தமாகவும் செய்தருளா நின்ற மகிமையை யுடைய ஸ்ரீமந் நாராயணா எ -று. 71
———-

எழுநெட்டிருப் பருமேனிவந் தென்கைக் ககப்படுமென்று நான்,
தழுவிக்கொளத் திரிகின்ற னன் சகலச்சரா சரமாகு நீ,
வழுவிக்கொடங் கிங் கோடியே வர நல்கமுன் வரவஞ்சியே,
நழுவிக் கொடே திரிகின்றதென் நாராயணா நாராயணா.       72

[இ-ள்.] நெடியதாய் வளர்ந்திரா நின்ற உமது பருத்த திருமேனியானது எனது கைக்குள்ளே வந்து அகப்படுமென்று நான் தழுவிக்கொள்ளத் திரிகின்றேன். சகல சராசரங்களாகிய தேவரீர் என் முன்னேவந்து வரத்தைக் கொடுக்கப்பயந்து
அங்கு மிங்கும் ஓடி வழுவிக்கொண்டும் நழுவிக் கொண்டும் திரிகின்றது என் சொல்லும்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 72
—————

எனைக்காக்க நீ வரன் மேன்மையென் றிருப் பாய்பராக் கதுவுண்டு நின்,
றனைக்காத்தவா கன மில்லையோ தகுசேனைகா வலனில்லையோ,
நினைக் காத்தசே டனுமில்லையோ நினைவில்லையோ விமையோர்பிரா,
ணனைக்காத்தமாருதியில்லையோ நாராயணா நாராயணா.       73

[இ-ள்.] அடியேனை இரட்சிக்கவருதல் மேன்மையென் றெண்ணியிருப்பீர்; அவ்வாறு இருக்கு மெண்ணத்தில் பராக்கு வந்ததோ? அல்லது தேவரீருக்கு வாகனமாகவும் துணையாகவும் காத்துக்கொண்டிரா நின்ற கருடனும் சேனைக்காவலனும் ஆதிசேஷனும் தேவர்களாகிய வானவர்களுயிரை இரட்சிக்கச் சஞ்சீவி கொண்டுவந்த அனுமானும் இவர்களில்லாமற் போனார்களோ? அல்லது திருவுள்ளத்தில் ஞாபக மில்லையோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

கண்பொன்று கோ மகன்மாற்றவன் கடுகொத்த பொய்க் கிருள் பார்த்ததோர்,
பண்பொன்ற நூலுரைசெய்ய நான் பலபொய்ச்சொலால் விளை யாடினேன்,
மண்பொன்றி நீரனல்பொன்றிவிண் வளிபொன்றவே வருமன்று நின்,
நண்பொன்று நீ தரல்வேண்டுமே நாராயணா நாராயணா.       74

[இ-ள்.] கண்பார்வைபோன திருதராஷ்டிரன் குமாரனாகிய துரியோதனனுக்குப் பகைவனான தர்மராசன் கடுகளவு பொய் சொன்னதினாலே இருள் சூழ்ந்த நரகத்தைப் பார்த்தானென்று ஒப்பில்லாத பண்பு போன்ற சாஸ்திரஞ் சொல்லும் போதும் நான் அநேகமான பொய்களை விளையாட்டாகச் சொல்லினேன். ஆதலால் எனக்கு என்ன கதியோ தெரியவராது. பிரிதிவு, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் தேவரீர் குட்சியில் அடங்குங்காலத்திலே அடியேனும் வந்து சேருவேன். அப்போதாகிலும் உமது நண்பொன்று மாத்திரம் வைத்து இரட்சித்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 74
————

போகேந்திரன் சிரமேந்து நின் பூதேவி புல் லரையேந்தவே,
ஆகேனெனா வுரைசெய்வனே லடியேனையேந் துகைவேண்டுவாய்,
மாகேந்திரன் றன தம்பியே வடவேங்கடா சலவள்ளலே,
நாகேந்தியே நகமேந்தியே நாராயணா நாராயணா.       75

[இ-ள்]. சர்ப்பங்களுக்கு இராசனாகிய ஆதிசேஷன் முடிகளிலே ஏந்தா நின்ற உமது தேவியாகிய பூமிதேவியானவள், பாபிகளைத் தாங்குதற்கு வருத்தமாயிருக்கிறதென்று தேவரீருடைய திருக்செவியிலே விண்ணப்பஞ் செய்தருள்வாளாகில், அடியேனை-மாத்திரம் தாங்கிக் கொள்ளும் படியாய் வேண்டிக்கொள்ளவேண்டும். தேவேந்திரனுக்குத் தம்பியாகவும், திருவேங்கடமலைக்கு நாயகனாகவும் பொருந்திய வள்ளலே! பாஞ்ச சன்னியத்தையும் கோவர்த்தனகிரியையும் ஏந்தி யருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

ஊழிற்பிறந் திடுபாவநோ யுடலைத்தொடா வகைதந்திடாய்,
வாழிக்கு நா யகனிந்திரன் மனு வின்பதம் பெறவிச்சியேன்,
ஆழிக்கையுன் கொடைமிக்கதென் றடியேன்மிகப்பெறலாகுமோ,
நாழிக்குடங் கலங்கொள்ளுமோ நாராயணா நாரா யணா.       76

[இ-ள்.] இகத்திலே மனுச்சக்கரவர்த்தியினுடைய பதமும், பரத்திலே வாழ்வுக்கு நாயகனாகிய இந்திரனுடையபதமும் இச்சையாக வேண்டுவதில்லை. ஆதலால் ஊழ்வினையினாலே பிறந்திடா நின்ற பாவநோயானது அடியேனுடைய தேகத்திலே சேராவகை செய்தருளிய பரமபதத்தைத் தேவரீர் கடாட்சித்தருளவேண்டும். திருவாழி தரித்த திருக்கரத்தை யுடையவனே! உம்மிடத்திலே மிகுந்த தியாகம் உண்டென்று நானிச்சை கொண்டதினாலே மிகுந்து வருமோ? என்பிராப்தி எவ்வளவோ அவ்வளவே முடியும். அது எத்தன்மையென்றால், நாழிக்குடத்தைக் கொண்டுபோய்ச் சமுத்திரத்திலே யமிழ்த்தினால் நாழிகொள்ளுமேயன்றி கலங் கொள்ளுவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 76
———

தனுவுக்குளே யுளராறுபேர் சலிகைக்கு நா யகருன்னை நான்,
பனுவற்சொலா வகைதட்டுவார் பழகிச்சதா நெறிகட்டுவார்,
அணுவற்றசோ ரரையெற்றியேயடியேனையாளர சென்னவே,
நணு கிக்கொடே திரிகின்றனன் நாராயணா நாராயணா.       77

[இ-ள்.] என்னுடைய தேகத்துக்குள்ளே இரா நின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று சொல்லா நின்ற இந்த ஆர்பேர்களுண்டு. அவர் சலிகைக்கு நாயகராகிய தேவரீருக்குக் கவிதைகள் பாடாதவகை தட்டுவார். நித்தியமும் பழகின மார்க்கத்தையுங் கெடுப்பார். ஆதலால் கிரமம் நீங்கிய அத்திருடர்களைக் கொன்று அடியேனை ரட்சித்தருளும் கர்த்தனே யென்று அடுத்துக்கொண்டு திரிகின்றனன் ஸ்ரீமந் நாராயணா எ-று. 77
————–

உடைச்சேலைதா குழைக்கோலைதா யுணச் சோறு தா பணப்பேறுதா,
கடைப்பூவடா வடைக் காயடா கறிக்காசடா கடைக்கோளனே,
கிடைக் கோடிவா முடிச்சேதடா கிறுப்பாவையார் வெறுப் பார்பொலா,
நடைக்காசையா யிறுத்தேன லோ நாராயணா நாராயணா.       78

[இ-ள்.] உடுக்கிறதற்குச் சேரலை தாடாவென் றும், காதுக்குப் பொன்னோலை தாடா வென் றும், உண்கிறதற்குச் சோறு தாடாவென்றும், மிகுந்த பணங்களைத் தாடா-வென்றும், கடைப் புஷ்பங்களை வாங்கித்தாடா வென்றும், பாக்கு வெற்றிலை தாடா வென்றும், கறிக்குக் காசுதாடா வென்றும், கடைப்பட்ட கோளனே யென்றும், படுக்கைக்கு ஓடிவடாவென்றும், அடிச்சோம னிலே முடிச்சேதடாவென்றும், கிறுதாகப் பேசி வெறுத்துக் கொள்ளா நின்ற வேசியருடைய பொல்லாத நடத்தைகளிலே ஆசையாய்த் திரவியத்தையெல்லாம் இழந்துவிட்டு விழலனானேன் ஸ்ரீமந் நாராயணா எ.று. 78
————

கன்னிப்பெருங் கடலோடுவான் கம்பத்திலே விளையாடுவான்,
உன்னிக்கொளும் பயமென் னநோ யொருபட்டுநெஞ் சொருமிக்கிலேன்,
என் னிற்பயந தெளிவித்திடா யல்லோர்க்குமீந் தென் மட்டிலே,
நன்னிக்குணம் பிடிபட்டதே நாரா யணா நாராயணா.       79

[இ-ள்.] பெரிதாகிய கடலிலே நீந்தவும், கம்பத்திலேறி விளையாடவும், பொருந்திய இளம் புத்தியையுடையவன் சென்ற பிற்பாடு நினைத்துக் கொள்ளா நின்ற பயங்களைப்போலே நோயானது வருத்தியும் எனது நெஞ்சு ஒருமித்ததில்லை. ஆகையால், என்னிடத்திலே உண்டாகிய பயத்தைத் தெளிவித்தருள வேண்டும்; யாவருக்குங் கிருபை செய்கிற நீ என் மட்டுஞ் செய்தருள உமக்கு லோபகுணம் பிடிபட்டதோ? ஸ்ரீமந் நாரா யணா எ-று.
————–

புட்புள்ளவன் கொடியென்னவே பொற் பொன்னவன் கலையென்னவே,
கட்புண்டரீ கம லத்தினேர் கண்ணென்னவே கரைகின்றிலேன்,
சட்புள்ளவுன் சமயத்திலே சலமண்டினேன் சர ணண்டினேன்,
நட்புள்ளதோ பகையுள்ளதோ நாராயணா நாராயணா.       80

[இ-ள்.] பட்சிரூபமாகிய கருடக்கொடியனே யென்றும், வன்மைபெற்ற சுவர்ணவஷ்திரனே யென்றும், தேனோடுகூடிய சிவந்த தாமரைக்கண்ணனே யென்றும், கரைந்துருகாத பாவியான வன் உமது சமயத்தில் வயிராக்கியம் பொருந்தித திருவடி யடைந்தேன். அடியேனிடத்திலே நேச மிருக்குமோ? பகையிருக்குமோ? தெரியவராது ஸ்ரீமந் நாராயணா எ-று. 80
—————-

கச்சுப்பிதிர்ந் தெழுகொங்கையார் கடைவாள் விழிப் படைகோடிகள்,
தச்சுக்கிடந் திடுநெஞ் சிலே தனியம்புதைத் தவருய்வரோ,
பிச்சுத்தயா பரனான நீ பெருமந்திரந் தனிலாற்றுவாய்,
நச் சுப்பெருஞ் சுதைவேலையாய் நாராயணா நாரா யணா.       81

[இ-ள்.] கச்சடங்காமழெழுந்த கொங்கைகளை யுடைய கன்னியர் கடைக்கண் பார்வையாகிய ஆயுதகோடிகள் எனது நெஞ்சிலே தைத்துருகிப் புண்ணாகியது. அந்த நோயை என் சொல்வேன்? ஒருபாணம் பட்டவர்கள் பிழைப்பதில்லையே? ஆதலால் நித்தியபரனாகையினாலேயே இந்தப் பாணங்களைப் பிடுங்கிப் புண்களை உமது பெரிதாகிய திருமந்திரத்தினாலே ஆறும்படி செய்தருளவேண்டும் ஆசையுடனே உயர்ந்த அமிர்தக்கடலிலே மேவும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 81
————

எய்தாரிருந் திடவம்பைநோ மிழிவாளர் போற் பழிபாதகம்,
செய்தாரிறுத் திடலன்றியே தெய்வந்தனைச சிதைவாகவே,
வைதாவதென் விதனத்திலே வழிதப்புமே வாய்பாறுமே,
நைதா துவின் பரகாரனே நாராயணா நாராயணா.       82

[இ-ள்.] பாணத்தை யெய்தவனிருக்க, அம்பை நோகா நின்ற இழிவாளர்போல பழிபாதகஞ் செய்த நானல்லவோ அனுபவிக்கவேண்டும். அதுவன்றித் தேவரீரை விதனத்தினாலே கெடுதலாக வைதென்ன பிரயோசனம்? இதனால் நன்மார்க்கமுஞ் சத்தியமுங் கெட்டுப்போகுமேயன்றி வெறில்லை. சரமதிசையிலே நைந்துபோகா நின்ற தாதுவுக்கு வயித்தியனாகிய ஸ்ரீமந்நாராயணா எ-று.
—————–

முகிலுக்குளே யடிபட்டவோர் முதுமக்கள் போற்றுணிவிக்குநோய்,
மிகவற்பமோ விடுவித் திடாய் விமலத்த நீர் மடுவுக்குளே,
துகிலைக் கொடாய் துகில்விட்டிடாய் தொழவெட்கமே விய மைக்கணார்,
நகிலுக்குள் வீழ் நகையச்சுதா நாரா யணா நாராயணா.       83

[இ-ள்.] மேகவருஷத்திலடிபட்ட கிழவர்கள் வருத்தத்தை யடைந்து, இறக்குமாப்போலே அடியேனிறக்கும்படியாய்த் துணிந்து செய்யா நின்ற நோயானது பெருகுதல் சொற்பமல்லவே. ஆதலாலது நீங்கும்படிக்குக் கடாட்சித்தருள வேண்டும். முன்னாளையிலே, பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய யமுனா நதியிலே ஸ்நானம் பண்ணா நின்ற கோபிகா ஸ்திரீகளுடைய வஸ்திரங்களை அபகரித்துக் கொண்டுபோய்க் கொடாமலும், விட்டுவிடாமலும், நின்றகாலத்திலே அவர்களும் மைத்தொழுது கேட்க வெட்கத்தை யுடையவர்களாய் மை தீட்டிய கண்பார்வையானது, தங்கள் கொங்கையிலே படியத் தக்கதாய்த் தலையைக் கவிழ்த்துக்கொள்ள நகைத்தருளா நின்ற ஸ்ரீமத் நாராயணா எ-று. 83
—————–

கமலத்தைவந் தயல்வண்டுணுங் கருதாத தேரைக ளொக்கவே,
அமலத்தை நீரிடைவாழினு மதுபோலவே, யயலாரெலாம் ,
நிமலப்பதந் தொழுமூரிலே நிலைபெற்றிருந் துனைவந்தியேன்,
ஞமலிக்குமோ றருள் செய்திடு நாராயணா நாராயணா.       84

[இ-ள்.] பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய தடாகத்திலே யிரா நின்ற தாமரையினுடைய பெருமையை அத்துடனே பிறந்த தவளை யறிய மாட்டாது; பக்கங்களிலேயிருந்து வண்டுகளதின் தேனை சாப்பிட்டுச் சந்தோஷத்தையடையும்.அது போல தேவரீர் நிலைபெற்றிரா நின்ற ஊரிலே, அடியேனிருந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணிக் கனடத்தேற வறியேன். அயலிலே இராநின்ற பிரம்மாமுதலாகிய பேர்களெல்லாந் தேவரீருடைய பரிசுத்தமான திருவடியைத் தொழுது கடைத்தேறுகிறார்கள், கடை கெட்ட சுவானத்துக்கும், கிருயை செய்தருளின ஸ்ரீமந் நாராயணா எ-று. 84
—————-

என் மாடுவீ டென்பிள்ளை பெண் டென் காணி மண் ணென் சொம்மெனும்,
தன்மாலிலே யறியாத பேர் தமதாகுமோ தானாவதார்,
வன்மாயமென் றதுகண்டு நின் வடவேங்கட பதிவைகியே,
நன் வானுயர் நிலை நிற்பரோ நாராயணா நாராயணா.       85

[இ-ள்.] என்மாடென்றும். என்வீடென்றும், என் பிள்ளையென்றும், என் பெண்சாதியென்றும், என்காணி மண்ணென்றும், என்னுடைமையென்றும், தங்கள் மயக்கத்தினால், மூடரான பேர் சொந்தமென் றிருப்பார்கள், அவைகள் தங்கள தாகுமோ? அவைகளுக்கும், இவர்களுக்கும், சம்பந்தமென்ன? இவையெல்லாம் வலிய மாய்கை யென்று தெளிந்து நன்மை பெற்ற மானிடரெல்லாந் தேவரீருடைய திருமலையை நித்தியபதார்த்த மென்று நினைத்துத் தங்கி உயர்ந்த நிலைபெறு வார்கள் ஸ்ரீமந் நாராயணா எ-று. 85
————-

பரலோகமும் பரரூபமும் பரபோகமும் பர மாயுவும்,
சுரலோகமுஞ் சுரரூபமுஞ் சுரபோக முஞ் சுரராயுவும்,
திரலோகமென் றிவையாவை யுந் திருவேங்கடந் தனிலுள்ள தால்,
நரலோகமே மிக நன்று கா நாராயணா நாராயணா.       86

[இ-ள்.] பரமபதமும், திவ்விய திருமேனியும், நித்தியானந்தமும், நித்திய தத்துவமும், மற்ற இமையவர் நாடும், இமையவர் மேனியும், இமையவர் ஆயுளும் இமையவர் போகமும், இமை யவர்களுக்கு நாயகனாகிய இந்திரனுடைய பதவியும் இவைகள் முதலாகிய ஜசுவரியங்களெல்லாந் தமது திருவேங்கடத்தை யடைந்த பேர்களுக் கெல்லாமுண்டாகிய தன்மையினாலே இந்த நர லோகமே மிகுந்த நன்மையானது. ஸ்ரீமந் நாரா யணா எ-று.
———-

அசவா தவன் பறிவேடரா ரடியேனுடம் பிணி நோயெலாம்,
கசவாது தின்பவர்போலவே கவ ராமலிங் கருள் கூறு வாய்,
குசவாயுதா சிறு கோவலா குறுவேதியா குலமன்னவா,
னசவா வியிற் பயிலன்னமே நாராயணா நாராயணா.       87

[இ-ள்.] அசைவில்லாமல் வலியபழியைச் செய்யா நின்ற வேடரானவர்கள், தயவில்லாமல் மிருகங்களைக்கொன்று தின்னுமாப்போலே அடியேனுடைய தேகத்தைப் பிணியானது பிடுங்கித் தின்னாமல் இவ்விடத்திற் கிருபை செய்தருள வேண்டும். கலப்பையாயுதத்தை யுடையவனே! இளமையாகிய கோபாலனே! குட்டனாகிய வாமனே! சூரியகுல மன்னவனே! மானச மடுவிலே விளையாடா நின்ற அன்னரூபமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 87
————-

மீன்கூருமங் கிடிபாதியாண் மிருகங்குறள் பரசாளிகோ,
மான் கூறலா யுதனாயன் மேல் வரு வாகியும் பெருவாசியோ,
தேன் குருமா கமசார முஞ் சிறுபோகமோ கமசாரமும்,
நான்கூருரை குருபத்தனே நாராயணா நாராயணா.       88

[இ-ள்.] மச்சமென்றும், கூர்மமென்றும், வராகமென்றும், நரசிங்கமென்றும், வாமனமென்றும், பரசுராமனென்றும், ஸ்ரீராமனென்றும், பலராமனென்றும், ஸ்ரீகிருஷ்ணனென்றும், வந்ததல்லாமல் மேலும் கற்கியாய் வருவதினாலே உமக்குப் பெரிதாகிய பலனுண்டோ? மதுரம் பொருந்திய ஆகம சாஸ்திரமுஞ் சிற்றின்பமாகிய காம சாரமும் நான்குசாரமும் ஓதுவித்த குருவாகிய சாந்திபருக்குப் பக்தனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

மிறுக்கத்தகா தெனதாவியின் விளக்கிற்கு நின் னருணெய்யிடாய்,
பொறுக்கத்தகா ததுமெய் யுடல் புழுக்கத்தகா தொருபோரிலே,
குறுக்கிட்ட பேர் நடுக்கிட்டிடக் குலைவாணனார் திரடோ ளெலாம்,
நறுக்கிக்கையோர் துணைவிட்டவா நாராயணா நாராயணா.       89

[இ-ள்.] அவமாகிய எனதுதேகமானது புழுக்கங்கொண்டு பொறுக்கத் தகாமல் இறத்து போகிறது தகுதியான காரியமல்லவே. ஆதலால் உயிராகிய விளக்கானது அவிந்து போகாமல், தேவரீர் கிருபையாகிய நெய்யமுது பெய்தருளவேண்டும். ஒப்பில்லாத யுத்தமுகத்தில் குறுக்கிட்ட சிவன் முதலாகியபேர் நடுக்கங்கொள்ளப் பொல்லாத வாணாசுர்னுடைய விஸ்தாரமான தோள்களை யெல்லாஞ் சக்கரத்தினாலே நறுக்கி இரண்டு கையை மாத்திரம் விட்டருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 89
—————

புன்சொல்லிலே யகப்பட்டதும் போதாமலே யவமேற்றெனர்,
கென்சொல்லுவோ மென வெண் ணியோ யாதோவெ னக்கீயாது நீ,
தென் சொல் லிலே வடசொல்லிலே திருவாய்மொழிச் சதுர் வேதமா,
நன்சொல்லிலே விளையாடுவாய் நாரா யணா நாராயணா.       90

[இ-ள்.] அடியேனுடைய மூடபுத்தியினாலே பாடா நின்ற புல்லி தாகிய கவிதைச் சொல்லிலே அகப்பட்டதும் போதாமல், எனது அக்கியா னத்தையெல்லாம் ஏற்றபடியினாலே இவனுக்கு என்ன சொல்லுவோ மென்று திருவுள்ளத்தி லெண்ணியதோ என்னமோ கிருபை செய்தரு ளாமலிருப்பதை அறிகலேன். தமிழாகிய தென் சொல்லிலேயுங் கிரந்தமாகிய வடசொல்லிலேயுந் திருவாய்மொழி யென்னும் நான் குவேதத்தி னுடைய நன்மைபெற்ற சொல்லிலேயுந்திருவிளை யாடல் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

மெலியாமையுந் திருஞானமு மிகுபோகமுந் திடதேகமும்,
சலியாமையும் பகை நாசமுந் தன ராசியுந் தகுசீலமும்,
கலியாணமும் பெற நீதரக் கடனாளியாற் பினுமுன்னை நான்,
நலியாமலே யருள் கூறுவாய் நாராயணா நாராயணா.       91

[இ-ள்.] மெலிதலில்லாமையும், அழகிய ஞானமும், மிகுந்த போகமும், வலிய தேகமும், சலியாமையும், பகை நாசமும், திரவியராசியும், யோக்கியமான ஆசாரமும், கலியாணமும், இவையெல்லாந் தேவரீரிடத்தில் பெறும்படியான கடனாளி யானதால், இனி உம்மை நான் வருத்தாமல் பூரணமான கிருபை செய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

சமர்த்தேது நல் லறமேதருந் தயையே தருந் தவமேதுமிக்,
கமைத்தே துமே லடைவேதுகா ரணமேதுபூ ரணமேதுசங்,
கமத்தே துரா கத மேது சொல் கமையேது சொல் கதியாவு நீ,
நமத் தேதுவாரகைவாசனே நாராயணா நாராயணா.       92

[இ-ள்.] சாமர்த்தியங்கள் தானேது? நல்ல தருமங்கள் தானேது. அருமையான தயவுகள் தானேது? அரிய தவங்கள் தானேது? மிகுந்த அமைப்புகள் தானேது? மேலாகிய அடைவுகள் தானேது? காரணங்கள் தானேது? பூரணங்கள் தானேது? கூட்டங்கள் தானேது? ஆணவங்கள் தானேது? சொல்லிய பொறுமைகள் தானேது? சொல்லா நின்ற மோட்சங்கள் தானேது? இவைகள் யாவும் தேவரீருடைய கிருபையே யன்றிரையும்
வேறில்லை. ஆதலால் உமது திருவடிகளுக்கே நமஸ்காரஞ்செய்து நின்றேன் துவாரகாவாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 92
———–

பித்தங்கயஞ் சொறிதே மல்கம் பிதமீளைகா மாலைபாண்டுவுன்,
மத்தஞ்சுரஞ் சளிசன்னிகால் வலிசூலைவிக் குதல்கக்குவா,
யுத்தம்பனந் தலை நோவுமற் றுளநோயெலாந் தொடராமலாள்,
நத்தன் முதற் கொருகாலனே நாராயணா நாராயணா.       93

[இ-ள்.] பித்தம் – க்ஷயம் – சொறி – வெள்ளைப் பாண்டு – நரை – ஈளை -காமாலை-பாண்டு உன்மத்தம். சுரம் – சளி – சன்னி – கால்வலி – சூலை-விக்கல்-கக்கு வாய்- தம்பனம் தலைநோய் மற்றுஞ் சொல்லா நின்ற நோய்களெல்லாம் அடியேனைத் தொட ராமல் இரட்சித்தருள வேண்டும். நத்தன் முதனுக்கு ஒரு இயமனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.(93)
———–

துறையூருமா முதலைக்குலச் சுனையொத்த மன்னவர் வாசலில்,
குறையூர்வதுங் கசைசாடவே குலைக்கின்றதுந் தலைசோரியாய்,
முறையூர்வதும் பிறகுன்னையே முனிபாவமுந் தெரியேனலன்,
நறையூரனே கருடாசலா நாராயணா நாராயணா.       94

[இ-ள்.] முதலைக் குலஞ் சஞ்சரியா நின்ற துறையையுடைய சுனைபோலேயிரா நின்ற துஷ்ட மன்னர் வாசலிலே குறைவுகளைச் சொல்லுமிடத்தில், அவர்கள் தருமம் விசாரியாமல் நேர்ந்த படிக்குப் பிரம்புகளாலே அடித்திடத் தேகம் நொந்து தலைகளிலே உதிரம் பெருகும் போது முறையமிட்டுக் கேள்வியில்லாமல் பிற்பாடு தேவரீரைத் தெய்வமேயென்று வெறுத்துக் கொள்பவருடைய பாவந் தீர்வதேயில்லை. ஆதலால் தேவரீர் சந்நிதானத்திலே முன்னம் முறையமிட் டேன்; திருநறையூரிலேயுந் திருவேங்கடமாகிய கருடாசலத்திலேயும் நிலைபெற்ற ஸ்ரீமந் நாரா யணா எ-று. 94
———–

பிணிவிட்டதே விதியாவையும் பிழைவிட்டதே சுகசீவியாய்,
பணிவிட்டதே தமனாரெனும் பகை விட்டதே பலபூசலும்,
தணிவிட்டதே யதி ஞானமே தகவிட்டதே யுனையோதவாய்,
நணி விட்டதே யென்மட்டிலே நாராயணா நாராயணா.       95

[இ-ள்.] அடியேனுடைய சனனங்கள் தோறுந் தொடரா நின்ற பிணிகளையும், விதிகளையும், எமன் பகைகளையும், மன்மதன் சண்டைகளையும், இவை முதலாகிய யாவையும் நீக்கிச் சுகசீலியாகவும், அதிக ஞானியாகவும், வாக்கினாலே உம்மைஓதும படியாகவும், என்மட்டிலே பொருந்துதலாகத் தேவரீருடைய கடாக்ஷ வீட்சணியஞ் செய்தருளியது ஸ்ரீமந் நாராயணா எ-று. 95
———

வாய்செய்தபுண் ணியங்கோடியென், வழி செய்த புண்ணியங்கோடியென் ,
தாய் செய்த புண் ணியங்கோடி தந்தையர் செய்த புண்ணியங்கோடி யென்,
பாசெய்த புண்ணியங்கோடியென் பதி செய்த புண்ணியங்கோடியென்,
நான் செய்த புண் ணியங்கோடிகாண் நாராயணா நாராயணா.       96

[இ-ள்.] எனது வாக்கும், எனது மரபும், எனது மாதாவும், எனது பிதாவும், எனது பாடலும், எனது ஊரும், எனது நாவும், இவைக ளெல்லாஞ் செய்த புண்ணியம் அநேகங்கோடி யானபடியினாலே தேவரீரைப் பிரசன்னமாகக் காணக்கிடைத்தது ஸ்ரீமந் நாராயணா எ-று. 96
———–

உன் கோயிலென் கால் சூழவு முன்பாதமென் கண்காணவும்,
நின்பாடலென் வாய்பாடவு நின் காரியங் கை செய்யவும்,
என்காது நின் புகழ் கேட்கவு மென்நெஞ்ச நின் னினைவுன்னவும்,
நன காக நல் லரமேயருள் நாராயணா நாராயணா.       97

[இ-ள்.] உமது திருக்கோயிலை என் கால் சூழவும், உமது திருவடியை என் கண் காணவும், உமது சரித்திரத்தை என் வாய் பாடவும், உமது கைங்கரியத்தை என்கை செய்யவும், உமது புகழை எனது காது கேட்கவும், உமது தியானத்தை என்னெஞ்சு செய்யவும், இத்தன்மையாகிய நல்ல வரத்தைக் கொடுத்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 97
————
இற்கண்ணெலா நாராயணா வெங்கெங்கணு நாராயணா,
சொற்கண்ணெலா நாராயணா தொழி லெங்கணு நாராயணா,
முற்கண்ணெலா நாரா யணா முகமெங்கணு நாராயணா,
நற்கண்ணெலா நாராயணா நாராயணா நாராயணா.       98

[இ-ள்.] வீடுகள் யாவையினும் வெளிகள் யாவை யினும், சொல்லுகள் யாவையினும், தொழில்கள் யாவையினும், முன்னிடங்கள் யாவையினும், முகங்கள் யாவையினும், நல்லிடங்களெல்லாவற்றிலும், பரிபூரணமா யிருப்பது தேவரீர் சொரூபமேயன்றி வேறொருவருண்டோ ஸ்ரீமந் நாராயணா எ-று. 98
————

தேறுந்திருப் பதிவேங்கடா தெரிசித்து நாரணவென்று தான்,
நூறும்படிப் பவர்பன்னுவார் நூறும்மிருந் துலகாண்டபின்,
பேறும் பெறும் பிள்ளைப்பெறும் பெருமைப்பெறும் பெறுவிப் பையே
நாறுந்துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       99

[இ-ள்.] வேதமுடிவிலே தேறா நின்ற திரு வேங்கடமென்னுந் திருப்பதியைத் தரிசித்து ஸ்ரீமந் நாராயண சதகம் நூறுபாடலையும், படிப்பவர்களும், அர்த்தங்களா-ராய்பவர்களும் நூறு வருஷமிருந்து பிள்ளைகள் முதலாகிய உலகாட்சி யினது பலனை அனுபவித்த பிற்பாடு அவர்களுக்குப் பெருமையைப் பெற்ற பரமபதத்தைக் கடாட்சித் தருள்வாய், பரிமளிக்குத் திருத்துழாயணிந்த திருமார்பையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 99
———–

நனிவாழி நின் பல்கோயிலு நனிவாழி நின் பலதேவிமார்,
நனிவாழி நின் னடியாரெலா நனி வாழி நின் பல்லைபவம்,
நனிவாழி நின் வட வேங்கட நவிவாழி நின் களிகற்றபோ,
நனிவாழி நின் கவிகேட்டபேர் நாராயணா நாராயணா.       100

[இ-ள்.] சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும், மலை நாட்டிலும், நடு நாட்டிலும், தொண்டை நாட்டிலும், வட நாட்டிலும், தேவரீர் நித்திய வைபவமாய் விளங்கா நின்ற திருவரங்கம் பெரிய கோயில் முதல் பரமபதம் அந்தியமாகவிரா நின்ற நூற்றெட்டுத் திருப்பதியிலும், பாகவதர்கள் உச்சீவிக்கத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிரா நின்ற தேவரீருடைய திருக்கோயில்களெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது; தேவரீருடைய வக்ஷஸ்தலத்தி லின்பமுற்று வீற்றிரா நின்ற மகாலட்சுமியும், பூமிபிராட்டியும், நீளாதேவியும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலங்களிலும், இடை விடாமல் தமது திருவுள்ளமே ஆலயமாகச் செய்து கொண்டு தேவரீரைத் தியானஞ்செய்யும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தின்-கண்ணுள்ள பரம பாகவதர்கள் யாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. தேவரீருடைய மகிமை யுற்று விளங்கும் வைபவங்கள் பல்லாண்டு வாழவும், சமஸ்கிருத பாஷைக்கும், திராவிட பாஷைக்கும், எல்லையாகியும், சதுர்வேதங்களும், மற்ற சாஸ்திரங்களும் சொல்லப்பட்ட பொருள்களுக் கெல்லாம் முடிவாகியும், தர்மமே சொரூபமாகியும், பூமிதேவிக்கு மணிமுடியாகியும், தனக்கொப் பில்லாமல் பெருமை பொருந்திய சொர்ணமயமாகியும், ஓங்கிய தேவரீர் எழுந்தருளியிரா நின்ற வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலக்கியானிகளாகிய வசிஷ்ட வாமதேவ விஸ்வாமிதர வியாச பராச சவுனகாதி ரிஷிகளும், மகாத்துமாக்களாகிய நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும், பதோத்தாரகராகிய இராமாநுஜாசாரியரும், வரகவிகளான தண்டிபவுபதி காளிதாசன் கம்பர் முதலாகிய கவிசக்ரவர்த்திகளும், பரம பாகவதோத்தமர்களாகிய அழகிய மணவாள பிள்ளைப் பெருமாளையங்கார் முதலாகிய பரமபாகவதர்களாற் செய்தருளிய வேதங்களும், வைணவாகமங்களாகிய ஸ்ரீபாஞ்சராத்ர வைகாசனங்களும் இதிகாச ராமாயண பாரதங்களும், வாமம்வராகம் முதலிய புராணங்களும், மற்றுமுள்ள நூல்களாசிய இவைகளில் சொல்லப்பட்டிருக்கிற தேவரீருடைய நித்யகல்யாண குணங்களை அத்தியயனஞ் செய்த பாகவதர்கள் யாவரும் மிகுதியாக வாழக் கடவது. இவ்வாறு மகிமையுற்ற தேவரீர் விஷயமாக செய்தருளிய கவிகளை சிரவணாந்தத்துடன் கேள்வியுற்ற பாகவதர்களியாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது ஸ்ரீமந் நாராயணா எ-று. 100

வடவேங்கட நாராயணசதகம் மூலமும் உரையும் முற்றிற்று.

————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ அரங்க நகர் அன்னை அடைக்கல மாலை-

November 9, 2025

சீரரங்க நகரன்னை சேவடி சேர்த்தும் வணம்
நாராரடைக்கல நன்மாலை ஓன்று நவில் வதற்க்கிப்
பாரோர் புகழ் எம் பராங்குச மா முனி பாதமலர்
ஏரார் நின் பாங்கு அருந்திப் பரவுதி என்னுளமே
–காப்பு

திருக்கச்சி வெக்காப்பதி வந்த பொய்கைத் திரு முனிவன்
உருக்கலை என்னுளத்து ஒளிர்ந்து வோங்க வுவத்தி என்றுன்
கருக்கச் சளந்தீர் கழற் சரண் புக்கனன் காமர் வளப்
பெருக்கத்து ஒளிரும் அரங்க நகரன்னைப் பெண் மணியே
–பொய்கையாழ்வார்

பூத்திகழ் காக்கடன் மல்லை வரு முனி புங்கவன் வெண்பாத்
திகழ் நூல் என்னுள்ளத்தில் படியப் பணித்தி என்றுன்
மாத்திகழ் வாரீச மாணடி மன்னி மறை புகுந்தேன்
ஒத்தகழார் சேர் அரங்க நகர் அன்னை உத்தமியே
–பூதத்தாழ்வார்

மயிலைப்பதி வந்த மா முனிவன் கலை மன் பொருளாம்
வெயிலைப் பொழிந்தென்றும் வீடா வவித்தை வினையிருள் செய்
துயிலைத் துடைத்தி என்று உன் துணைத்தாள் சரண் டுன்னினனால்
அயிலைப் பொரும் கண்ணர் அரங்க நகரன்னை யாரணியே
–பேயாழ்வார்

ஆழி தரும் கலையாகு மழிசை யடிகள் நன்னூல்
பாழி பெரும் பொருள் என்னுளத்து என்றும் படர்ந்து நிற்க
வாழி யருள் செய்தி என்றுன் மலரடி வந்தடைந்தேன்
வீழி யிதழ் கொள் அரங்க நகரன்னை வித்தகியே –
-திருமழிசை யாழ்வார்

கோளூர் முனிவன் குருகூர் முனி மேல் குறித்த கலை
வாளூர் பொருள் என் மனம் மன்னி நிற்க மகிழ்தி என்றுன்
தாளூர் சலசச் சரண் அடைந்தேன் உயிர் தாங்கு மொன்பான்
கேளூர் ரரங்க நகரன்னையாம் கிருபாகரையே
–மதுரகவியாழ்வார்

உண்மை உலகினர் ஒர நம் மாறன் உகந்துரைத்த
திண்மை நன்னூல்கள் என் சிந்தையில் தேங்கிடச் செய்தி என்றுன்
ஒண்மை யடியை வுவந்து அடைந்தேன் உலகோர்ப் புரக்கும்
வண்மை யரங்க நகரன்னை யாகும் வராநநையே
–நம்மாழ்வார்

கொல்லி நகர் வந்த கோ முனிவன் கலை கொண்ட பொருள்
புல்லி என்நெஞ்சில் பொலியக் கருணை புரிதி என்றுன்
அல்லி மலரடி யண்டை கொண்டேன் மறையந்த முறை
வல்லி யரங்க நகரன்னையாம் பத்த வத்ஸலையே
–குலசேகராழ்வார்

பரத்துவம் செய்து நற் பஞ்சவன் பொற் கிழி பார்ப்படுத்த
உரத்துவ வில்லி புத்தூர்க்கோன் கலை என்னுளத்து நிற்கத்
திரத்துவம் செய்தி என நின் சரண் சரண் சேர்ந்தனாற்
றரத்துவர் முத்தவரங்க நகரன்னைத் தற் பரையே
–பெரியாழ்வார்

திருக்கோதை நாயகி செய்ந் நூல் என் சிந்தையில் தேக்குவித்து என்
கருக் கோதை நீக்கக் கருணை செய்வாய் என்றுன் கான் மலரின்
மருக்கோதை சூடி மறை புகுந்தேன் மறையோர் பயிலும்
இருக்கோதைத்தாய வரங்க நகரன்னை இந்திரையே
-கோதை நாயகித் தாயார்

விற்கலை வந்த பரகால மா முனி வேந்தனருள்
நற் கலை என்னுள நாடொறு நண்ண நயத்தி என்றுன்
அற்கலைத் தோட்டு மடிச் சரண் புக்கனனாரணமா
நற்கலை யோங்கு மரங்க நகரன்னை நாயகியே –
திருமங்கையாழ்வார்

விப்பிர நாராயண முனி யேந்தல் வின்கலைகள்
பப்பிரதப் பொருணாளும் என்நெஞ்சில் பதித்தி என்றுன்
துப்பிரசன்னத் துணையடியில் சரண் டுன்னினால்
அப்ரமேய வநக வரங்க நகரன்னையே –
-தொண்டரடிப்பொடியாழ்வார்

முனி யூர்தி யூர்ந்து என் முகுந்தன் முன் வந்த முனித்தலைவன்
கனியூர் சுவைக்கலை என்னுள நிற்கக் கணித்து என்றுன்
பனியூர் திருமலர்ப் பாதத் தடைந்தனன் பக்தி யிறைத்
தனியூர்தி யூரும் அரங்க நகரன்னை தாக்கணங்கே
— திருப்பாணாழ்வார்

நாதமுனிகள் எனும் எம்மடிகள் இன மலர்ப்
பாதம் உவந்து பணிந்து உய்யும் வண்ணம் பணித்தி என்றுன்
சீத முளரித் திருவடியில் சரண் சேர்ந்தனனால்
வேத முழக்கத் தரங்க நகரன்னை வித்தகியே
-நாதமுனிகள்

புலம் செயிர்த்து ஓங்கிய உய்யக் கொண்டார் புகழ் பூத்து ஒளிர்ந்து
புலம் செய் அடிகள் என் புந்தி வைத்து ஏத்தப் புரிதி என்றுன்
நலம் செய் திருவடி நண்ணின னல்லவர் நாளு நண்ணி
வலம் செய் யரங்க நகரன்னை யாகும் வரோ தயையே
–உய்யக் கொண்டார்

கூறு புகழ்க் குருகை காவலப்பன் குறிக் கொணிட்டை
தேறும் எனக்கும் சிறந்து ஒங்க நீ யருள் செய்தி என்றுன்
நாறு மலரடி நண்ணினன் சீர்த்தி யிஞ்ஞாலம் எலாம்
வீறும் அரங்க நகரன்னை வேத விளக்கே
–குருகைக் காவல் அப்பன்

நம்பி கருணாகர தாசர் வள்ளல் நல்லொழுக்கங்
கும்பி யுழைக்கும் எனக்கும் வர நின் குரை கழலை
நம்பி யடைந்தனன் நாளும் பிற விரலை யுற்றோர்க்
கம்பி யனைய வரங்க நகரன்னை யம்புயையே —
நம்பி கருணாகர தாசர்

ஏறு திருவுடையார் என்றுரை எம்மிரு நிதிக்குப்
பேறு தருமவன் பால் வரு நேயப் பெருக்கின் வளம்
தேறும் எனக்கும் அளித்து என்றுன் பதம் தேர்ந்து அடைந்தேன்
நாறு மலர்ப் பொழில் நண்ணும் அரங்க நகரன்னையே
–ஏறு திருவுடையார்

தூய திருக்கண்ண மங்கை யாண்டான் என்னெஞ்சுரநதிதன்
நேய் வடிகளடியி னுறுமன்பி னீத்த மிந்தத்
தீயனுற்றுய்ய நின் சேவடி சேர்ந்தனன் றெய்வ மயில்
சாயல் யரங்க நகரன்னை யாகும் தயா பரையே
–திருக் கண்ண மங்கை யாண்டான்

மறையோர் புகழ் வான மா மலை யாண்டான் மகிழ் தரு தன்
இறையோனுழிக் கொண்ட வீர மடியற்குமீதி என்றுன்
பொறை யோங்கு தாளிற் புகல் புகுந்தேன் ஐம் புலனை வென்ற
நிறையோர் நிலவும் அரங்க நகரன்னை நின்மலையே
–வானமாமலை யாண்டான்

பேணும் உருப்பட்டூராச்சான் பிள்ளைப் பேர் பெருந்தகை தன்
மாணுரு மாரி யன்பால் கொண்ட நிட்டை மரபு எனக்கும்
பூணுறும் வண்ணம் புரிது என்று உன் தாள் புகல் புகுந்தேன்
சேணுறு சோலை யரங்க நகரன்னைச் செந்திருவே
–உருப்பட்டூராச்சான் பிள்ளை

சோகத்தூராழ்வான் சுக நிலை நிட்டை துடி இடையார்
மோகத்தூ ரெற்கு முரண் அற்று உண்டாக நின் முண்டகத் தாள்
ஆகத்தூடு உய்த்து இன்று அடைக்கலம் புக்கனனைய வென்னை
நாகத்தூர்த்தித் தலைவன் போற்ற அரங்க நகரன்னையே
– சோகத்தூராழ்வான்-

கீழ் வானெழு பகல்போலொளிர் வண் புகழ் கீழையகத்‌
தாழ்வானெனத் தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
தாழ்வாரெனக்குந் தயை செய நின்னைச் சரணடைந்தேன்‌
வாழ்வாரரங்க நகரன்னையாகும் வதானியையே
–கீழையகத்‌தாழ்வான்

மேலையகத்துறை யாழ்வானென யான் வியந்து திரு
மாலையகத்த மறைத் தமிழ் பாடி மகிழும் வளத்‌
தாலை யளித்தி யென நின் சலசச் சரணடைந்தேன்‌
சோலையகத்த வரங்க நகரன்னைச் சுந்தரியே
–மேலையகத்தாழ்வான்‌

திருமணக்கானம்பி சேவடி சிந்தையிற் சேரச்‌ செய்து என்‌
கருமணக் காகரமாங் காம நோயைக் களைதி யென்றுன்‌
மருமணத் தாளின் மறை புகுந்தேன் மணிவண்ணனெம்மான்‌
திரு மணக் காந்தை யரங்க நகரன்னைச் செய்யவளே
.–மணக்கால் நம்பி

பெருக்கத் திருக் கைரவக் கேணிப் பாண் பெருமாளரையர்‌
தருக்கத் தவாளந் தணந்த நடை யெற்குஞ்சார்க வென்றுன்‌
திருக் கத்திகைக் கழலிற் சரண்‌ சேர்ந்தனன் றேர்வரிய
இருக்கக்தையான வரங்க நகரன்னை யின்ப வைப்பே
–திருவல்லிக் கேணிப் பாண் பெருமாளரையர்‌

சொட்டைப் பூசிச் செண்டலங்கார ராரியன் திருவடியில்‌
நெட்டைப் பேரன்புற்ற நிட்டை யெனக்கு நிகழ்க வென்‌தன்‌
மட்டைச் செய் தாமரை மாணடி புக்கனன் மன்னனந்த
முட்டைப் பெற்றாளு மரங்க நகரன்னை முன்னவளே
-சொட்டைப் பூசிச் செண்டவலங்கார தாசர்‌ –

குரு விண்ணகர் தருவானெனுங் கொள்கை கொள் கோமடத்‌துத்‌
திரு விண்ணகரப்பன் சேவடி யேத்துந் திறம் பெற நின்‌
மருவிண்ணளவுமரையடி மேவினன் வையகத்துப்‌
பெரு விண்ணரங்க நகரன்னை யாஞ்சுப் பிரசன்னையே–
கோ மடத்துத் திருவண்ணகரப்பன்‌

நல்லொழுக்கத் துலகப் பெருமாணங்கை நண்ணு நிட்டை
புல்லொழுக்கேற்கும் புகுமா கருணை புரிதி யென்றுன்‌
எல்லொழுக்கிண்டை யிணை தாளடைந்தன னென்‌றும் பொன்னி
நல்லொழுக்காரு மரங்க நகரன்னை நப்பின்னையே
–உலகப் பெருமாணங்கை

சீரார்ந்த நற் புண்டரீகாக்கதா சந்தத் தேசிகன் பால்‌
நாரார்ந் தொழுகு நடை யெற்கு நண்ண நயத்தி யென்றுன்‌
ஏரார்ந்த விண்டை யிணைத்‌ தாளிலில்லடை யெய்‌தினனாற்‌
பாரார்ந்த கீர்த்தி யரங்க நகரன்னைப் பார்க்கவியே,
-ஸ்ரீபுண்டரீகாக்ஷ தாசர்‌ –

ஆளவந்தா ரெம்மடிகளடியா மருத்த வைப்பென்‌
நாளவந்தீர மன மஞ்சிசம் வைத்து நன்றுற நின்‌
நாள வந்தாமரை நல் தாள் அணுகின னண்பர் பவ ்‌
மாள வந்தாளு மரங்க நகரன்னை மாநிதியே, –
-ஸ்ரீஆளவந்தார்‌

திருமான் முனஞ் செந்தமிழ் மறை பாடும் திருவரங்கப்‌
பெருமாளரையர் எனப் பாடியாடு நற்பேறு எனக்கு
வருமாறுன் றாளின் மறை புகுந்தேன் வழுவாத முத்தி
தருமா வரங்க நகரன்னையாகும் தயாம்புதியே
–திருவரங்கப் பெருமாள் அரையர்

கை யொழியா நன்னடைச் சொட்டை நம்பி தன் கான்மலரைப்‌
பொய் யொழியாத வென்‌ புந்தி வைத்தேத்தப்‌ புரிதி யென்று
மெய் யொழியா வன்பர் மேவு நின்றாட்‌ சரம் மேவினனான்‌
மையொழியாக் கண்ணரங்க நகரன்னை மைதிலியே
–சொட்டை நம்பி

அகந்தூயனாமெம் மரசு நம்பிப் பெரியோனடியை
உகந்தூதியமென வுன்னிட வுள்ளமுவத்தி யென்றுன்‌
சுகந் தூங்கு தாளிற்றுனைந் தடைந்தே னற்றோறுப் புரப்‌பால்
நகந்தூக்கு நாரணனண்ணு மரங்க நகரன்னையே
–௮ரசு நம்பி

அவா நிலை நீத்த வடிகள் தெய்வத்துக்கரசு நம்பி
சுவா நிலை யேற்குந் துணை நிற்க வன்பு சுரத்தி யென்று
தவாநிலைத் தாபதர் தாழு நின்றாளிற் சரணடைந்தேன்‌
உவா நிலைச்‌ துண்டத் தரங்க நகரன்னை யொள்ளொளியே,
–தெய்வத்‌ துக்கரசு நம்பி

பிள்ளை யரசு நம்பிப் பெரியோன் கழல் பேணி நின்‌றிவ்‌
வெள்ளை யறிவனும் வீடு பெற்றுய்ய நின் வீங்கு மொளிக்‌
கொள்ளை யடிச்‌ சரண் கூடினன் பேரண்ட கோடிக் கெல்லாந்‌
தன்ளை யரங்க நகரன்னையாஞ்‌ சத்ய சங்கற்பையே,
– பிள்ளைக்கரசு நம்பி

செருக்காற்றிற் செல்லாச் சிறு புள்ளுடையார்‌ திருவடியிற்‌
பெருக் காற்றிற் பீடுறும் பேரன்பு நாளும் பிறங்க வென்றுன்‌
இருக்காற்றின ரெண்ணிணை யடிக்கில்லடை யெய்தினனால்‌
அருக்காற்றுப் பொன்னே யரங்க நகரன்னை யக்கரையே
–சிறு புள்ளுடையார்‌ –

சீரார் திருமாலிருஞ்சோலை தாசர் தஞ்‌ சிர்த்திகளை
நாராரென்னா வின விற்றி யுய்வானருணல் குதியென்‌ உகள்
றேரார் நின்றாள் களிலில்லடை யெய்‌தினனீர்ம்பொழிற் கட்
காராரங்க நகரன்னையாங் கருணாலயையே,
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

தெருள் சேர்ந்த வங்கி புரத்தாய்ச்சி நிட்‌டையைச் சேர்ந் தொழுகி
மருள் சேரென்றோற்றத்தை மாற்றிட வுள்‌ள மகழ்‌தி யென்‌றுன்‌
பொருள் சேர் கழலிற் புகல் புகுந்தேன் பொழில் பூத்தளிக்கும்‌
அருள் சேரரங்க நகரன்னையாகு மகளங்கையே–
வங்கி புரத்தாய்ச்சி –

அருங்கலைக் கேள்விப் பெரிய நம்பிக்குத் தன்னாரியன் பால்‌
ஒருங்கலில் பேரன்புதித்தாங்கெனக்கு முதிக்க வென்றுன்‌
பிருங்க மிமிரம் புயத் தாளடைந்தனன் பெட்குமின்னின்‌
மருங்கு லரங்க நகரன்னையா மங்களாகரையே
-பெரிய நம்பிகள்

திருக் கோட்டியூர் நம்பிச் செம்மற்குத் தன்‌றிருத் தேசிகன் பாற்
றிருக்கோட்டு மன்பு செழித்‌தாங்கெனக்குஞ் செழிக்க வென்றுன்‌
தருக்கோட்டுந் தாளிற் சரண் புகுந்தேன் மெய்ச் சது மறையோர்‌
திருக்கோட்டி யோங்கு மரங்க நகரன்னைச் செஞ்சுடரே-
திருக்கோட்டியூர் நம்பி

பெரிய திருமலை நம்பி யெனு மெம் பெருந்தகை தன்‌
அரிய திருவருட்காளாகும் வண்ணமருடி யென்றுன்‌
ரிய சரணடைந்தே னுனையோரா வுளத்தினர் கட்‌
கரிய வரங்க நகரன்னையா மம்புயா தனையே
–பெரிய திருமலை நம்பி –

குற்றமிலா மாறனேர் நம்பி தன் குரவன் கழலில்‌
அற்றமிலா வன் படைந்தாங்கி யானுமடைக வென்றுன்‌
சுற்றமிலார்‌ துணையா மடியிற்‌ சரண்டுன்னினனாற்
செற்றமிலார் சேரரங்க நகரன்னைச் சிற்பரையே
-மாறனேர் நம்பி

திருக்கச்சி நம்பி யடிகட்குத் தந்திருத் தேசிகன் பால்
அருக்கச்சுதவன் பமைத் தாங்கெனக்கு மமைத்தி யென்றுன்‌
கருக்கச்‌ சளங் கழற்றுங் கழற்கை யடை கண்டனன்‌ சீர்ப்‌
பெருக்கத் தரங்க நகரன்னையாகும் பிராப்பியையே
–திருக்கச்சி நம்பி

திருமாலை யாண்டா னெனுஞ் செம்மலுக்குத் தன் றேசிகன் பால்
பெருமாலை யாக்கிய பெற்றியினெற்கும் பிறப்பி யென்றுன்‌
மருமாலைத் தாளின் மறை புகுந்தேன் மன மாசறுத்தோர்‌
கருமாலை நீக்கு மரங்க நகரன்னைக் காரணியே
-திருமாலை யாண்டான் –

ஆழ்வானறிவின்றலை நின்றொழுகு மெம்மாள வந்தார்‌
ஆழ்வானுக் காரியன் பாலானவன் பெற்குமாக வென்றே
ஏழ்வான் பிறப்பு மிரிக்கு நின்றாட் சரணெய்‌தினனிற்‌
றாழ்வார்க் கருளு மரங்க நகரன்னைச் சற் குணியே,
–ஆளவந்தாராழ்வான்

திரு வான மா மலை யாண்டான் றெருணடைச் செல்வமெற்கும்‌
வருவான குடி யென்றுன் மரைத் தாளின் மறை புகுந்தேன்‌
பெரு வானவர் பெறும் பேற்றை யடியவர் பெற்றுவக்கத்
தருவான ரங்க நகரன்னையாகுஞ்ச நாதனையே
–வான மா மலை யாண்டான்‌

அமலனெனுந் தெய்வ வாரி யாண்டான் றன்னடி யிணையாங்‌
கமல மென்னுள்ளக் கமலம் வைத்தேத்‌தக் கணித்தி யென்‌றுன்‌
நிமல வடிகளினீழலடைந்தன னித்தியர் சேர்‌
விமல வரங்க நகரன்னை யாரண வேத்தியையே-
தெய்வவாரி யாண்டான் –

இலங்கெழின் மேதை கொளெம்மீச னாண்டாற் கிறைவனுழித்‌
துலங்‌ கெழிலன்பு சுரந்தாங்கெனக் குஞ்சுரக்க வென்றுன்
கலங்கெழு தாள்களிற் கையடை புக்கனன் காயம் வையத்‌
தலங்கெழு சீர்த்தி யரங்க நகரன்னைத் தற் பரையே,
–ஈசனாண்டான்‌

சிதஞ்செய் பஞ்சேச்தியச்‌ சீயராண்டாற்குத் தன்‌றீர்த்‌ தனுழி
இதஞ் செயயும் பக்‌திமை யேய்‌ந்தாங்கெனக்கு மியைக வென்றுன்‌
பதஞ் செய் பதங்களைப் பற்றினன் பத்தர்கள் பாவமெலாம்‌
அகஞ்செய் யரங்க நகரன்னையா மருளார் கலியே
–ஜீயராண்டான்‌

தன்னாரியன் பாற் திருக் குருகூரப்பன் றானடைந்த
இன்னா வறுமன்பெனக்கு முண்டாக விழைக்தி யென்றுன்‌
பொன்னாரத்தவம் போருகத் தாளிற் புகல் புகுந்தேன்‌
கொன்னா ரரங்க நகரன்னையாகுங்கு சேசயையே,
-திருக்குருகூர் அப்பன்

தேசிகன் பானந் திருமோகூரப்பன் சிறந்து கொண்ட
ஆசில தாமன் பெனக்கு முண்டாக வருடி யென்றுன்‌
ஏசிகறாள்களி லேன்றடைந்தே னெண்ணி ருக்கெகர் நற்‌
கோசிகமேத்து மரங்க நகரன்னைக் கோமளையே
–திரு மோகூர் அப்பன்

நீடுறு சீர்த் திருமோகூர் நின்றானெனு நின்மலன்றன்‌
பீடுறு நன்னடையின் பெருக்கெற்கும் பெருக வென்றுன்‌
தோடுறு தோடகத்தாட் சரண்டுன்னினன்றும் பியிசை
பாடுறு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே
-திருமோகூர் நின்றான்

தெருதித் தெய்வப் பெருமாட் பெருந்தகை சீரடியைப்‌
பொருணிதி யென்ன வென் புந்தி வைத்தென்றும் புகழு மன்பு
மருணிதியா மெற்கும் வாய்க்க வென்றுன்னை மறை புகுந்தேன்‌
அருணிதியான வரங்க நகரன்னை யற்புதையே,-
தெய்வப்பெருமாள்-

மதியார்‌ வகுளா வணிச் சோமயாஜி தன் மாண்டியே
நிதியா யென்னுள்ள நிறுவி யுய்வானின்னிறை தவர்ககுக்‌
கதியாங் கழல்களிற் கையடை புக்கனன் கற்றவர்கள்‌
துதியா ரரங்க நகரன்னையாகுஞ் சுடர்க் கொடியே.
–வகுளாபரணசோமயாஜியார்‌

சீரார்த் திருக்குருகூர் தாசரென்னு மெந் தெய்வ மணிக்‌
கேரார் தன்னாரியன் பாலேய்ந்த நிட்‌டை யெனக்குமுற
வாராரருள் செய்தி யென்றுன் கழலின் மறை புகுந்தேன்‌
தேரார் தெருவார ரங்க நகரன்னைச் சின்மயையே
–திருக் குருகூர் தாசர்‌

திருமாலிருஞ் சோலை தாசரெனுந் தெய்வத் தேனு தன்‌ சீர்க்‌
குரு மா மணி யுழிப் பெய்யன்புப் பால் வெள்ளக்‌ கோலமெற்கும்‌
வருமாறுன் வாரிச மா மலர்த்தாளின் மறை புகுந்தேன்‌
திரு மா மணிப் பூணரங்க நகரன்னைச்‌ சேம வைப்பே-
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

வட மதுரைப் பிறந்தானென்னும் வண்மை மணி மலைக்குத்‌
திடமதுரைத் தவன்றே மன்‌புவதை செழித்தலென
மடமலியெற்கு மளித்தி யென்றுன் றாண் மறை புகுந்தேன்‌
நட மலிந்தோங்கு மரங்கார ரங்க நகரன்னையே
–வட மதுரைப் பிறந்தான்‌

ஆட் கொண்டி யென்னு மடிகளடி களகத்தில்‌ வைத்தேன்‌
சேட் கொண்ட தீ வினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
தாட்‌ கொண்ட தாமரைத் தாளடைந்தே னம்பிச் சார்ந்வரை
ஆட் கொண்டருலளு மரங்க நகரன்னை யம்புயையே-
-ஆட்கொண்டி.

மறை கொண்ட மாண் பொருண் மன்னுளத் தம்மங்கி வள்ளலினெந்
சிறை கொண்ட தீ வினை தீர்வானடியர் செயுஞ் செயிர்கள்‌
பொறை கொண்ட நின் புண்டரீகப் பொற் பாதம் புகல் புகுந்தேன்‌
நறை கொண்ட பூம் பொழினண்ணு மரங்க நகரன்‌னையே
–அம்மங்கி –

பொன்னித் துறைவன் புரோகிதன் பொங்கெழிற் பொன்னடி யென்‌
சென்னிக் கணி யெனச் சேர்ந்துய்யுமாறருள் செய்தி யென்றுன்‌
உன்னித்‌ துறவோர் தொழுந் தாளடைக்கல முற்றனன் மால்‌
பன்னிப் பிரியை யரங்க நகரன்னைப் பார்க்கவியே
–இராஜ புரோகிதர் நாதமுனிகள்

ஆத்தி யந்தாரனற்றார மரங்கத்ம் மன்னொழுக்கஞ்‌
சாத்தியமாக வெற்கென்றுன் சலசச் சரணடைந்தேன்‌
ஏத்திய மா மறைக் கெட்டாப் பரம் பொருளே யினிதாம்‌
வாத்திய வோதை யரங்க நகரன்னை மா மருந்தே
–இராஜ மகிஷி திருவரங்கத்தம்மன்‌

எம்பெருமாற் கென்றுமின் பணி செய்தி தயத்துகக்கும்‌
எம்பெருமானா ரிணையடியே யெனக்கென்றும் பொன்றாச்‌
சொம் பெரும் பேறென்று துன்னக் கருணை சுரந்தருள்வாய்‌
நம்பெருமாண மணவாட்டி யரங்க நகரன்னையே,
–எம்பெருமானார்‌ –

இனிய கருத்துடனின் சொலெவர்க்கு மிசைக்கு மலை
குனிய நின்றார்‌ தங்குரை கழல் கூடி யென் கோதறுப்பான்‌
நனி யருள் செய்தி யென்றுன் கழனண்ணின னாரணற்குக்‌
கனியனையா யெம் மரங்க நகரன்னைக் கண்மணியே-
-மலை குனிய நின்‌றார்‌

தன்மவுரு வாரியச் சீ சடகோப தாசரெனும்‌
நின்மல பாநுவி னெஞ்‌சிருணீங்கியிந் நீடு கன்மச்‌
சன்ம மொழிக்க நின்றாட்‌ சரண் புக்கனன் சார்ந்தவர்க்குப்‌
பொன் மலை போலு மரங்க நகரன்னைப் புண்ணியையே,-
-ஆரிய ஸ்ரீ சடகோப தாசர்‌

அணி யரங்கத் தமுதப் பேரடிகளடிகள் பவப்‌
பிணி யரங்கப் பிடித்துய்வான ருளென்றுன் பெட்கு மொன்பான்‌
மணி யரங்கத் தண்டை மாணடி புக்கனன் மாதவிகள்‌
நணி யரங்கக்‌து நடஞ்செய் யரங்க நகரன்னையே
–அணி யரங்கத் தமுதனார்‌

திருவாய்த் தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்‌
கருவாய்த் தல மரனீங்க வருள் செய்து காத்தி யென்றுன்‌
மருவாய்த் திலங்கு மரையடி புக்கனன் மாணுருவாய்‌
அருவாய்‌த் திகழு மரங்க நகரன்னை யம்புயையே-
-திருவாய்த் தலமுடையார்‌

இசை யோங்கு கூரத்திறை யெம்மடிக ளிணை யடியில்‌
நசை யோங்‌கி யுய்ய நயந்திருக்காதிய நான்மறையின்‌
மிசை யோங்கு நின்னடி மேவினனல்குதி மெய்ப்புகழெண்‌
டிசை யோங்கரங்க நகரன்னையாகுஞ் சிந்தாமணியே-
-கூரத்தாழ்வான்‌ –

ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறை முதலி
யாண்டானெனை யென்று மாள்வானருடி யென்‌றஞ்சிறைத்தேன்‌
பாண்டான் முரல் பதுமப் பதம் பற்றினன் பாரளப்பான்‌
நீண்டான் மகிழு மரங்க நகரன்னை நீரசையே-
-முதலியாண்டான்‌

அம்புவி போற்ற ருளாளப் பெருமாளெனு மடை கொள்‌
எம்பெருமானா ரிணை யடி யென்பவ கீர்க்கு மென்று
நம்புறு நன்மன நண்ண நின்றாளை நயந்தடைந்தேன்‌
வம்பவிழ் சோலை யரங்க நகரன்னை மா மணியே.-
-அருளாளப் பெருமாளெம்பெருமானார் ஜீயர்‌

மைந்தாரைந்தா நெறி மாண்பினனா மெம் வடுக நம்பி
கந்தார் நடை யெற்குக் கை கூட நின்றன் கருணை கொள்வான்‌
பைந்தார்‌ புனை நின்பதஞ் சரண் புக்கனன் பாயும் பொன்னிச்‌
சிந்தார ரங்க நகரன்னை வேதச் சிரப் பொருளே
–வடுக நம்பி

சீரார் திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திருவடியில்‌
நாரார் மன நல நண்ணிட நீ யருணல்கி டென்றுன்‌
தாரார் சலசச் சரணத் துணையிற் சரணடைந்தேன்‌
ஏராரரங்க நகரன்னை யாமெம் மிறையவளே-
-திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌

கனந் தாழ் பொழிற் திருவேங்கட மாமலைக் கண்ணனுக்குத்‌
தினந் தாழ்ந்து தே மலர்க் கண்ணித் திருப் பணி செய்துவந்த
அநந்தாழ்வானிட்டை யளித்தி யென்றுன் றாளடைந்தனனற்‌
சனந்தாழரங்க நகரன்னையாகுஞ் சரணியையே
— –அநந்தாழ்வான்‌

சீரிய ஞான வெழுபத்து நான்கு சிங்கா தனராம்‌
ஆரியர் தங்களருட் கிலக்காக வருடி யென்றுன்‌
வேரி மரை புரை மென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்‌
நாரியரதனமே நல்லரங்க நகரன்னையே–
எழுபத்து நான்கு சிங்காதனாதிபதிகள்‌ –

சத்தமனெங்க ளெதிராசமாமுனி தாளடைக்த
உத்தமமா மாச்சரமிகளோ ரெழு நூற்றுவர்கள்‌
தத்தம நிட்டை தமியேற்குற நின் சரணடைந்தேன்‌
புத்தமு தொத்த வரங்க நகரன்னைப் புங்கவியே
-எழுநூறு உத்தம ஆச்சிரமிகள்

கதியார் பன்னீராயிரவரே காந்திகள் காற்‌றுணை யென்‌
விதியாறொழு கெம்மி ராமானுச முனி வேந்தனருட்‌
மதியார நின்னை மறை புகுந்தேன்‌ வையமையலற்றோர்‌
நிதியாமரங்க நகரன்னையாகு நியாமகையே
-பன்னீ ராயிராவர் ஏகாந்திகள்

எம்மையுமாட்கொளு மெம்பெருமானா ரிணையடி சேர்‌
அம்மையரோ ரெழு நூற்றுவர் நிட்டை யடியனுக்கும்‌
இம்மை வர நின்னிணை யடிக்‌கில்லடை யெய்தினனாற்‌
செம்மை யரங்க நகரன்னையாகிய தேசிகையே-
-எழு நூற்றுவர் அம்மையர்கள்

திருவரங்கத் தமுதாந் தெள்ளியன் செய்த செந் தமிழ்‌ நூல்‌
கருவரங்கத்தினங் கற்றுய்யுமாறெனைக் காத்தி யென்று
மருவரங்கத்த நின் மாணடியிற் சரண் வந்தடைந்தேன்‌
தெருவரங்கத்த வரங்க நகரன்னைச் செந்திருவே
–திருவரங்கத்தமுதனார்

கம்பார் களத்தியர் காதலிக்கும் தீக் கரும மொழிந்
தெம்பாரடிகளை யெண்ணி யுய்வானெற் கருடி யென்றுன்‌
வம்பார் வனச மலர்த் தாட் சரண வசணமுற்றேன்‌
அம்பாரரிக் கண்ண ரங்க நகரன்னை யற்புதையே-
-எம்பார்

தேக்கும் புகழெம் பராசர பட்டர் திருவடி யென்‌
வாக்கு மனமும் வழுத்தி நினைக்கும் வரம் பெற நின்‌
சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச் செக மனைத்துங்‌
காக்கு மரங்க நகரன்னையாங் கமலாலயையே-
-பராசர பட்டர்

வெண் மணிப் பிள்ளைப் பெருமாளை யங்கர்நின்‌ வேந்தன்‌ தன் பேர்‌
நண் மணித் தாசரை நண்ணி யுய்வானுள நள்ளிருடீர்‌
விண் மணியே நின் விரையார் மலர்க்கழல் வேட்டடைந்தேன்‌
ஓண் மணி மாலை யரங்க நகரன்னை யுத்தமியே
-அழகிய மணவாள தாசர்

ஆராமப் போதால லங்கலணிந் தென்னகத் திருத்திச்‌
சீ ராமப் பிள்ளையைச்‌ சிந்திக்கச் செவ்வருள்‌ செய்தி யென்றன்‌
மாராமத்தாளின் மறை புகுந்தே னன்மரபடியர்‌
நாராமப் பூவை நயக்கு மரங்க நகரன்னையே–
சீராமப் பிள்ளை

வெஞ்‌சீய மெண்ணிடு வேழத்தின் வேண்டார் வெருவ வந்த
நஞ்சீயர் நற் கழனாடொறு நாடி நயக்க வெற்கு
நெஞ்சீதி யென்று நின்னீரசத் தாட் சரணேர்ந் தடைந்தேன்‌
மஞ்சீயன் முத்‌த வரங்க நகரன்னை மாணிக்கமே-
-நஞ்சீயர்

நலந் திகழ் நாராயணச்‌ சீயர் நற் கழனண்ணி யுய்வான்‌
பொலந் திகழ் நின்னடிப் புண்டரிகத்திற் புகல் புகுந்தேன்‌
வலந் திகழ் வன்னி வளர்ப்போர் வழுத்‌து மலர் மகளே
நிலந் திகழ்ந்தோங்கு மரங்க நகரன்னை நிச்சலையே-
-நலம் திகழ் நாராயணச் சீயர்

சொல்ல வரிய சொல்லார்ந்த நம்பிள்ளை துணை யடியாற்‌
கல்ல வரிய பிறவியைக் கல்லக் கருதி வந்துன்‌
வல்ல நற்றாளின் மறை புகுந்தேன் மறை வாணர்‌ தொழும்‌
நல்ல வரங்க நகரன்னையா நளினாம்பகியே
–நம்பிள்ளை

சேணோங்கு நல்லுரச் சேனாபதி யெனுஞ் சீயரடி
கோணோங்கு மென்னுளங் கொண்டுய்ய நீ யருள் கூர்தி யென்றுன்‌
பூணோங்கு தாளிற் புகல் புகுந்தேன்‌ சிறைப் புட் கணத்தின்‌
பாணோங்கு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே-
-ஸ்ரீ சேனாபதி ஜீயர்

மாண்ட குணத்தெம் பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
பூண்ட வரன்பு புனைந்துய்ய நின் கழல் புக்கடைந்தேன்‌
தூண்டலிலாத சுடர் விளக்கேது கடீர் வளங்கள்‌
நீண்ட வரங்க நகரன்னையாகு நிரஞ்சனையே–
பெரியவாச்சான்பிள்ளை

எந்தை நம்பிள்ளை சுதனாம் ராமானுசாரியன் தாள்
சிந்தையில் வைத்து எளியேனுய்ய நீ யருள் செய்தி என்றுன்
முந்தை மறை முடித்தாளில் அடைக்கல முந்தினன் ஓர்
நிந்தையுமில்லா வரங்க நகரன்னை நித்தியையே
–இராமானுசாசாரியார்

நீடு மெய்ஞ்ஞான நெறி நின்றொழுகு நன்னிட்டைகள் கை
கூடும் வடக்குக் திருவீதிப் பிள்ளே குரை கழலே
நாடு நலம் பெற நின்னடி நண்ணினன் நான் மறையும்‌
நேடுமரங்க நகரன்னையாகு நிராமயையே-
-வடக்குத் திருவீதிப் பிள்ளை

மாவள மோங்குஞ் சிவிக்கரைப் பிள்ளை மலரடிச்‌ சீர்‌
நாவள மோங்க நவிற்றி யென் சன்மத்தின் ஞாட்பறுப்பான்‌
பூவள மோங்கிப் பொலியு நின்றாளிற் புகல் புகுந்தேன்‌
காவள மோங்கு மரங்க நகரன்னைக் கற்பகமே-
-சிவிக்கரைப்பிள்ளை

மால் வெட்டி யென்றன் மனத்தை யெப்போதும் வளர் கருணை
வேல் வெட்டிப் பிள்ளை விழுத்தாணிறுத்‌தும் விரகு பெற
நூல் வெட்டியோர் தொழு நின்றாளடைந்தன னோற்பவர்க்கு
மேல் வெட்டிக் காட்டு மரங்க நகரன்னை விண்ணவியே
–வேல் வெட்டிப் பிள்ளை

எங்கு நிறைபுகழ் ஈ புண்ணி மாதவனின்னருளாற்
றங்கு மென் சன்மந் தவிர்ப்பானினது தயை பெற நின்‌
கொங்குண் மலரடி கூடினனன்பர்கள் கூட்டுணுஞ் சீர்‌
பொங்கு மரங்க நகரன்னையாங் கடற் புத்‌திரியே
–ஈ யுண்ணி மாதவப் பெருமாள்-இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப் பிள்ளை யென்றும் திரு நாமம்‌

சுரக்குமளிப் பத்ம நாபப் பெருமாடுணை யடி யென்‌
பரக்கு மனத்திற் பதித்‌துய்ய நின்னைப் பணிந்தனன் யான்‌
கரக்குஞ் சராசரம் யாவையு மீளவுங் கண்டவற்றைப்‌
புரக்கு மரங்க நகரன்னையா மணிப் பூடணையே–
ஈ யுண்ணி பத்ம நாதப் பெருமாள் பிள்ளை

சீரார் நாலூர்ப் பிள்ளை சேவடி யேத்தி யென்‌ தீவினையின்‌
வேரார் வம் வெட்டி விரத்தி வழி நின்று வீடடைவான்‌
எரார் நின்னிண்டை யிணை யடியிற் சரணெய்‌தினனாற்‌
காரார் பொழில் சூழரங்க நகரன்னைக் கண்மணியே
–நாலூர்ப்பிள்ளை –இவருக்குக் கோலேஸர் – கோல வராகப் பெருமாள்‌,இராமானுஜ தாசர்‌ என்றும் திரு நாமம்‌

நாலூராச்சான் பிள்ளை நற் பத நண்ணி நளிர்ந்த தென்றத்‌
காலூர்தியைப் புறங் கண்டண்டர் யாவருங் காண்பரிய
மேலூர் புக நின் விழுத் தாளடைக்கல மேவினனற்‌
சேலூர்‌ திருக் கண்ண ரங்க நகரன்னைச் செந்திருவே
–நாலூராச்சான் பிள்ளை–இவர்க்கு நாலூர் தேவப் பெருமாள் பிள்ளை யென்‌றும் திரு நாமம்‌

கடுவிற் கொடி தாக்க வற்று மிரு வினைக் கட்டறுத்த
நடுவில் திருவீதிப் பிள்ளை நல் தாள் நண்ணி நான் பிறவி
வடுவிற்றொழிய நின் வண் மலர்த் தாளின் மறை புகுந்தேன்‌
அடுவிற் புருவ வரங்க நகரன்னை யம்புயையே-
-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்

பின்பழகார்ந்த பெருமாளென்‌ சீயர் பெருமை புகழ்ந்
தென் பழங்கண்ணிரித் தீறினல் விட்டின்ப மெய்த வெண்ணி
இன் பழ நேர் நின்னிணைத் தாளிலில்லடை யெய்‌தினனாற்
றென் பழனஞ் சூழரங்க நகரன்னைச் சின்மயையே
–பின்பழகிய பெருமாள் சீயர்

ஏறு திரு வுடையார் தாசர் சீர்த்தி யிசைத்திதயத்‌
தேறு திருக்கை யிரிப்பான் ௧ருணை யிழைத்தி யென்‌றுன்‌
வீறு திருப்புகழ் வேய்ந்த நின்றாண் மறை மேவினனால்‌
நாறு திருமலர்ச் சேக்கை யரங்க நகரன்னையே
–ஏறு திருவுடைய தாசர்

தாரணியோர் புகழும் வான மா மலை தாசர் பதம்‌
ஏரணி நெஞ்சத் திருத்தி யுய்வான் அருளீதீ யென்‌றுன்‌
தாரணி தாளிற் சரணடைந்தே னுயிர்‌ தங்குலக
காரணியாகு மரங்க நகரன்னைக் கற்பகமே
–வான மா மலை தாசர் –

வானேய் புகழ்க் குருகூர் தாசர் நோக்கின் வளனெனக்கு
மீனேய் நோக்கென்றெண்ணி யுய்வானருள் செயல் வேண்டு மென்‌றுன்‌
தேனேய் செழுங்கமலத் தாளடைந்தனன் சேர்ந்தவரை
ஊனேய் தனீத் தாளரங்க நகரன்னை யுத்‌துங்கையே
–திருக்குருகூர் தாசர்

ஞான வொழுக்க நயினாராச்சான் பிள்ளை நல்லடி யென்‌
ஈன வொழுக்க மற்றெண்ணி யுய நீ யிரங்கி டென்றுன்‌
மோன வொழுக்கர் தொழுந் தாளடைந்தனன் முத்தி நெறிக்‌
கான வொழுக்கர்க் கருளு மரங்க நகரன்னையே
-நயினார் ஆச்சான் பிள்ளை –

தேவாதி கேசரி நீன் கொழுநன் பெயர்ச் சீயர் புகழ்‌
ஓவாதிசைத்துய்ய நீ திருவுள்ள முவத்தி யென்றுன்‌
தேவாதியர் தொழுஞ் சேவடியிற் சரண் சேர்ந்தனன் யான்‌
ஓவாதிருக்கோகரங்க நகரன்னை யொண்மணியே
-வாதி கேசரி அழகிய மணவாள சீயர்

பக்குவ நெஞ்சப் பரகால தாசர் பதத்‌ துணை யென்‌
சக்குவக்கக் கண்டு தாவங்க ணீங்கத் தயை புரியென்‌
றிக்கு வட்டிண்டை யடியினிலில்லடை யெய்‌தினனெண்‌
டிக்குவக்குஞ்‌சீ ரரங்க நகரன்னைச் செல்வ வைப்பே
–பரகால தாசர்

தெருளார் செழு நடைச்‌ சீ ரெங்காசாரியர் சேவடி யென்‌
இருளாரிதயத் திருத்தி யுய்வானீ யிழைத்தி யென்றுன்‌
பொருளார் பூம் புண்டரிகப் பொற் பதத்திற் புகல் புகுந்தேன்‌
அருளாரரங்க நகரன்னையா மநந் தாக்‌கியையே-
-சீ ரெங்காச்சார்யார்

நல்லவரேத்து நின்னா தன்‌ றிருப் பெயர் நண்ணயினார்‌
பல்லவ பாதம் பணிந்துய்யவன் புபணித்தி யெற்கென்‌
றெல்லவர் போலொளி ரிண்டை யடிச் சரணெய்‌தினலூல்‌
வல்லவர் வாழ்‌த்து மரங்க நகரன்னை மா மணியே–
அழகிய மணவாள நயினார்

அண்ணன் முடும்பைல காரியன் கலையார் பொருளென்‌
திண்ணன்னுளத்திற் றிகழ்ததுவிப்பா யென்றுன் சேவடி யாங்
கண்ணன் மலர்களிற் கையடை புக்கனன் காந்து மணி
வண்ணன் மகிழு மரங்க நகரன்னை வானவியே-
-பிள்ளை லோகாச்சார்யார்

சாந்த குண னங்கள் கூர குலோத்தம தாதர் பத
காந்த மென்னெஞ்சக் கரும் பொற் கவரக் கணித்தி யென்றுன்‌
சேந்த கமலத் திருவடியிற் சரண் சேர்ந்தனன் செங்‌
காந்தளங்கையாய ரங்க நகரன்னைக் காஞ்சனமே-
-கூர குலோத்தம தாச நாயன்

விஞ்சிய யோகி விளாஞ்சோலைப் பிள்ளை விரை யடி யென்‌
நெஞ்சினில் வைத்‌துதித்‌ துய்யும் வண்ண நினைத்தி யென்றுன்‌
கஞ்சவடிகளிற் கையடை புக்கனன் காதரரை
அஞ்சலென்றாளு மரங்க நகரன்னையாந் திருவே-
-விளாஞ்சோலைப்பிள்ளை -இவருக்கு நலம் திகழ் நாரணன் என்னும் திருநாமமும் உண்டு –

ஊக்கத்துடன் றன் குரவனை யுன்னு முளத்து மணப்‌
பாக்கத்‌து நம்பி பதந் தொழுதுய்யப் பணித்தி யென்றுன்‌
ஆக்கக் கழலிலடைக்கலம் புக்கன னன்பர் மனத்‌
தேக்கத்தை நீக்கு மரங்க நகரன்னை யின்ப வைப்பே
–மணப்பாக்கத்து நம்பி

ஆவலறுத்தோர்க் கருளுங் குண நிதியான கொல்லி
காவல தாசர் கழறொழுதுய்யக் கணித்தி யென்றுன்‌
பூவலர் பாதம் புகல் புகுந்தேன் புன்மை போக்கு மறை
நாவலரேத்‌து நலத்தா யரங்க நகரன்னையே–
கொல்லி காவல தாசர் –

வண்மைக் கோட்டூரண்ணர் வாரிசத் தாளை வழுத்தி யென்றன்‌
தண்மைச் சனனந் தவிர்ப்பானுளத் தெண்ணித்‌ தாழ் வொன்றில்லா
உண்‌மைச் சுருதித் தலை வாழ் நின்றாளிலு வந்தடைந்தேன்‌
ஒண்மைக் கருணை யரங்க நகரன்னை யுத்தமியே–
கோட்டூர் அண்ணர்

கண்ணங்குடிப்பிள்ளை கண்ணருளாலென் கடு வினையைத்‌
திண்ணங்குடி யெவனெனும் புகுவிக்குஞ்‌ சிந்தையனாய்‌
வண்ணங்குடி கொணின் வண் பத மெய்‌தினன் மாசறுத்தோர்
எண்ணங்குடி கொளரங்க நகரன்னை யிந்திரையே
–திருக் கண்ணங்குடிப் பிள்ளை

திருப்புட் குழி யமர்‌ சீயர்‌ திருவடி சேர்ந்து பெரு
நெருப்புட்டணந்தரு நீள் பவ நீக்க நினைத்‌து நின்றன்‌
திருப் புட்கரச்‌ சேவடிச் சரண் சேர்ந்தனன்‌ சீத மதித்‌
திருப்புட்கரிணி யரங்க நகரன்னைச் செய்யவளே-
-திருப்புட் குழிச் சீயர்

திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சேவடி யென்‌
கருமலை நன் மருந்தா வெண்ணி வாழக் கணித்தி யென்றுன்‌
மருமலி தாளின் மறை புகுந்தேன் றொண்டர் மா மனத்தின்‌
பொரு மலை நீத்தாள ரங்க நகரான்னைப் பொன்‌ மகளே
–திருவாய் மொழிப் பிள்ளை

மாட்சிக் குணத்தெம் மணவாள மா முனி மணடியைப்‌
பூட்சிக்குரிய வென் புந்தியில் வைத்துப் புனிதமுறக்‌
காட்சிக்குரிய நின்காற்‌ சரண் புக்கனன் காழ்த்தவண்ட
ஆட்சிக்குரியா யரங்க நகரன்னை யச்சுதையே-
-மணவாள மா முனிகள்


உண்டிக்‌ குடைக்குழல்வேன் றொழுதுய்ய வுவக்தி யென்றுன்‌
எண்டிக்கி பங்களெனு மெண்மராரிய ரிண்‌டை யடி
தொண்டக் குலந் தொழுந் தூவடியிற் சரண்டுன்னினனால்‌
அண்டக் குலத்தாயரங்க நகரன்னை யற்புதையே
–அஷ்ட திக் கஜங்கள்

நானெறிப் பட்ட குரவர் பலரவர் நாமம் வண்‌ சீர்‌
நூ நெறி கண்டு னுவன்று நிற் சார்ந்திடு நோன்மையிலேன்‌
ஏனெறி காறுமியம்பி நினைச் சரணெய்‌து மெனை
மேனெறி யுய்த்தாளரங்க நகரன்னை மெய்ப் பொருளே
நானெறி-1-ஆஸ்ரயண குரு பரம்பரையும் -2-ரஹஸ்ய த்ரய குரு பரம்பரையும் -3-அருளிச் செயல் வியாக்யான குரு பரம்பரையும் -4-ஸ்ரீ பாஷ்ய ஸ்ருத பிரகாசிகா குரு பரம்பரையும் –

சிருட்டி முதலிது காறுமெடுத்த செனனந் தொறும்‌
மருட்டி வருமன மாதியிற் செய்தவழு வறுத்தெற்‌
நெருட்டிப் பணி கொளெளப் புகல் புக்கனன் செய்யவருட்‌
டிருட்டி வைத்தாடி யரங்க நகரன்னைச் செய்யவளே

தெருட் கடல் செய் மதித்‌ திண்மையைத் தேய்த்‌துத் தெறும வித்தை
இருட் கடல் வற்ற விழைத்தி யென்றுன்னை யிரந்தடைந்தேன்‌
அருட் கடலே யெனை யாளுதி யாரணத் தந்தமுரை
பொருட்கடலே நல்லரங்க நகரன்னைப் பூமகளே.

ஒரு காலெனப் பல காலுளத்தார்த்தி யுவட்டலினின்‌
இருகாற் கமலத்திடைச் சரண் புக்கனனேன்றெனை நின்‌
பெரு காரருட் கிலக்காக்கனினக்குப் பெருமை யதாம்‌
முருகார் குழலா யரங்க நகரன்னை முன்னவளே

ஊக்கக்தொடு நின்னுபய வடிகளினுற்றவன் பின்‌
ஓக்கக்தொடு சரண்புக்க வென்மீ துன்னுள மிரங்கிக்‌
காக்கக் கருதிடினின் பேர் கருணைக் கடலெனலாம்‌
ஆக்கத்‌ துணைவி யரங்க நகரன்னை யம்புயையே

குற்றமென நூல் குறிக்கின்ற யாவைக்குங் கொள் கலனா
யுற்ற வெளியனை யோம்புமவ ரிவ் வுலகுதனில்‌
அற்றவனாய் நின்னடி யிணை யம்புயப மண்டை கொண்டேன்‌
நற்றவர் போற்று மரங்க நகரன்னை நாயகியே-

புறவொன்று தன்பாற் புகு வேடன் றன்னைப் புரந்து துண்டவ்‌
வுற வொன்று கொண்டு நின்னொண் கழலிற் சரணுற்றடைந்தேன்‌
துறவொன்று தூயவர் நெஞ்சத் தொளிருஞ் சுடரொளியே
நறவொன்று கூந்தலரங்க நகரன்னை நாயகியே-

கண்டு முனிவரன் கட்டுரையின் படிக்கை யடை நிற்‌
கண்டு புகுந்தோனெ வனாயினு மவற் காத்தனன் றாம்‌
விண்டு கை சோர விட றீது மெய்யின்ப வீடளிக்கும்‌
விண்டுவின் பன்னி யரங்க நகரன்னை வித்தகியே-

அறத்‌திற் கடைப்பட்ட வாதனின் பாத வரணடைந்தேன்‌
அறத்திற் குறவிலனாயினு நீ யெனை யாதரித்தல்‌
அறத்தி சிறந்த வறமென நூல்களறைந்து நிற்கும்‌
அறத்திற் கருத்துணையாகு மரங்க நகரன்னையே-

பல்வழி யானும் படர் படச் சன்மப் பரவைக்கும்‌
அல்வழிகாட்‌டி யடியனைக் கூத்துகளாட்டி நிற்கும்‌
வல்வழி மாயையை மாய்ப்பானினைச் சரண்‌ வந்தடைந்தேன்‌
நல்வழி சேர்த்தி யரங்க நகரன்னை நாயகியே-

பிறவிப் பிணிக்குப் பெரும் பீரடைந் ததைப் பேர்த்திடு நின்‌
அறவிப் பிரர் தொழு மம்புயத் தாளிணை யண்டை கொண்டேன்‌
மறவிப் பிரமமொழித்‌ துனை யேத்தும் வரமருள்வாய்‌
துறவிப் பிரிய வரங்க நகரன்னைசத் தூயவளே

பிறப்பினை யெண்ண வென்னெஞ்சந் திடுக்‌கிட்‌டுப் பீரடையும்‌
இறப்பினை யெண்ண விதயம் விதிர்விதிர்த்தேங்கி நனி
விறப்பினை நண்ணு மதனானினைச் சரண் வேட்டடைந்தேன்‌
சிறப்பினை நல்கு மரங்க நகரன்னைச் செய்யவளே

பத்தி யிலாதவன் பாமரன் பாதகன் பற்று மனச்‌
சுத்தி யிலாதவன் சொல் கவிச் சொற் பொருட்டோம் பொறுத்து
முத்திவைத்தாள நின் முண்டகத்தாளின் முயன்‌றடைந்தேன்‌
நத்தி யெற்காத்தனலமா மரங்க நகரன்னையே-

போற்றி திருமுகம் போற்றி கருணை பொழி திருக்கண்‌
போற்றி புன் மூரல தரங்களங்குழை பூண்ட கன்னம்‌
போற்றி வரதாபயகர முந்தி பொலி யுரம்‌
போற்றி யரங்க நகரன்னை பொங்கொளிப் பொன்னடியே-

வாழி யரங்க மத வள மன்னதில் வாழ் முகுந்தன்‌
வாழி யரங்க நகரன்னை நாளும் வளர் கருணை
வாழி யிரு மறை யாழ்வார் களாரிய வர்க்க மென்றும்‌
வாழி யெதிபதி திப்பிய வாணை யிவ் வையகத்தே-

வைப்பா மரங்க நகரன்னை தாளில் வயங்கு சத
முப்பான் ௧வியாலடைக்கல மாலை மொழிந் தனனால்‌
ஓப்பாரிலா வைணவர் பதமுள் வைத்துவப்பவர் பாற்
பப்பார் பரிவினன் பள்ளி கொண்டா னெனும் பாவலனே-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் ஸ்வாமிகள்-

April 27, 2025

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் (அன்னமய்யா) (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) தென்னிந்திய இசையில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற வடிவத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். திருமலை திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றன.

தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் (1408-1503) ஆந்திராவில் உள்ள தாள்ளபாக்கம் கிராமத்தில் பிறந்த தெலுங்கு வைணவ ஆச்சாரியர் ஆவார். இவர் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தெலுங்கு இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். 95 ஆண்டுகள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் துவாதசி (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார். 

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாளபாக்கம் கிராமத்தில் ருக்வேத பாரத்வாஜ கோத்திரத்தில் நாராயணசூரிக்கும், லக்கமாம்பாவிற்கும் மே 9, 1408- அன்று அன்னமாசாரியர் மகனாகப் பிறந்தார். நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். இவர் தந்தை உழவுத்தொழில் செய்து வந்ததால் அன்னமையாவும் இளமையில் உழவுத்தொழில் செய்துவந்தார். “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான “திம்மக்கா” அன்னமாச்சாரியாரின் மனைவி. மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

தாளப்பாக்கம் அன்னமாசாரியரின் தந்தை இவரை அடுத்த ஊருக்குச் சென்று அங்கிருந்து வைக்கோல் கட்டைத் தூக்கிவரும்படி ஏவினார். வைக்கோல் கட்டைத் தூக்க இயலாது இவர் திருமலை திருப்பதிக்கு ஓடிவிட்டார். அங்கு பசி மேலிட்டுத் துன்புற்றபோது, திருமாலின் சதியான அலர்மேல் மங்கைத்தாயார் இவருக்குப் பசி நீங்க அன்னமளித்து ஆட்கொண்டார். அன்னையின் அருளால் கவிஞரானார். அன்னை மீது ஒரு சதகம் பாடினார். பெற்றோர்கள் இவரைத் தேடி வந்து தம் கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். வீரசைவமரபில் பிறந்த இவர் திருப்பதிக்கு ஓடியது முதல் திருமாலடியவரானார். தினமொரு பாடலாக திருமால் மீது பாடினார். இவர் பாடல்களின் அருமையைக் கேள்வியுற்று, அப்பகுதியில் ஆட்சிபுரிந்த சாளுவ நரசிம்மராயர் இவரைப் பாடுமாறு வேண்டினார். மனிதரைப் பாட மறுத்தவரை சாளுவ மன்னர் விலங்கிட்டுச் சிறையிலிட்டார். விலங்குகள் தாமே தெறித்து விழுவதைக் கண்ட மன்னர் இவரது பெருமையை உணர்ந்து பணிந்ததாக நம்பப்படுகிறது.

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் சிருங்கார சங்கீர்த்தனம், அத்யாத்மிக சங்கீர்த்தனம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இசைநூல்களை எழுதினார். சதக நூல்கள், சிருங்கார மஞ்சரி, இரண்டடி இராமாயணம், வேங்கடாசல மாகாத்மியம் போன்ற பிற தெலுங்கு நூல்களையும் இயற்றினார். அன்னமாசாரியர் பாடிய இசைப்பாடல்கள் கீர்த்தனங்களல்ல, பல்லவி அனுபல்லவி சரணம் கொண்டவையல்ல. இவை திருவேங்கடநாதன் புகழையும், நாம சங்கீர்த்தனங்களையும் பாடியவை. அன்னமாசாரியரின் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டில் சங்கீத வடிவம் பெற்றன. அவர் பாடிய இசை தமிழிசை; மொழி தெலுங்கு மொழி. இவருடைய புதல்வரும் பின்வந்தோரும் இவருடைய பாடற்பரம்பரையை வளர்த்தனர்.

இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சார யாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, ”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர்.

அன்னமாச்சாரியார் 32,000-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றினார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலிலுள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறையில் வைக்கப்பட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் 1922-ல் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. கீர்த்தனைகள் சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என வகைப்படுத்தப்பட்டன. வைணவ ஆச்சாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தைத் தழுவிய இவரின் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல்களைப் போன்ற கருத்துடையவை. ராமானுஜர் மீதும், ஆழ்வார்கள் மீதும் சில பாடல்களைப் பாடினார்.

அன்னமய மார்க்கம் : அன்னமாச்சாரியா தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப்படுகிறது. அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, “மோக்காலு_மிட்டா” என்னும் இடம் இருக்கிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு “முழங்கால் முறிச்சான்” என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை “மோகாலு மிட்டா” என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்த போது அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் ராமானுஜர் மீதும் (கதுலன்னி கிலமைனா, உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (வாடே வேங்கடேசுனனே வாடே வீரு…) சில பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதியக் கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் “ப்ரஹ்மம் ஒக்கடே” என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளைக் கண்டித்தார். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளைத் தொடர்ந்து கேட்பதினாலேயே பொருள் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டும் கீர்த்தனைகளை இயற்றினார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு. வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் எழுதினார். இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் எழுதிய திவிபர்த ராமாயணா(இரண்டடி ராமாயணம்), சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டு நூல்களும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.

அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரைவரிசை செய்தார்.

அக்காலத்தில் தெலுங்கு கன்னடப் பிரதேசங்களில் முகம்மதியப் படைகள் கொலை கொள்ளை மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தன. இவற்றால் கோயில்களுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தது. அன்னமாச்சாரியரின் பாடல்களினால் ஆந்திரநாட்டில் பக்தியுணர்வு கிளர்ந்தெழுந்தது. ஆழ்வார், நாயன்மார் பாசுரங்களினால் உந்தப்பட்டு அன்னமாச்சாரியர் பக்திப்பாடல்கள் பாடினார்.

அன்னமையா பாடியவை கர்நாடக சங்கீதத்தின் ஆதிக் கீர்த்தனங்கள் என்று பெயர் சூட்டுவது பிழை என்பது அறிஞர்கள் கருத்து. அவை கீர்த்தனங்கள் அல்ல என்று அறிந்தோர் எழுதினர்.

ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் “தலப்பாகமரா” எனப்படும் “சங்கீர்த்தன பண்டார” என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். “தலப்பாக” கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு “சங்கீர்த்தன பாதுகாப்பு அறை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. “ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை” பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார். 1922ம் ஆண்டில்தான் இவரது கவிதை மீண்டும் வெளிகொணரப்பட்டது. “சங்கீர்த்தன பண்டார” அறையில் இருந்த இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’அன்னமய்யா’ என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். இவரது பாடல்கள் பல தெலுங்கு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொண்ணூற்றி ஐந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா பிப்ரவரி 23, 1503-ல் காலமானார்.2019-ல் ஆந்திர மாநிலம், துவாரகையில் அன்னமாச்சாரியாருக்காக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு, தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும் அன்னமாச்சாரி பட்டி – தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர் – சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் ப்ரஹ்மம் ஒக்கடே என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்தவர் இவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையில், மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. திவிபர்த ராமாயணா’ ‘சிருங்கார மஞ்சரி’ ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம்வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உடையதாக இருந்தது. சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

இசைநூல்கள்

சங்கீர்த்தன லட்சணம்

தெலுங்கு நூல்கள்

வேங்கடாசல மாகாத்மியம்

12 சதக நூல்கள்

சிருங்கார மஞ்சரி

இரண்டடி இராமாயணம்

சிருங்கார சங்கீர்த்தனம்

அத்யாத்மிக சங்கீர்த்தனம்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ திவ்யார்த்த தீபிகையில் இருந்து சிறப்பு குறிப்புக்கள்-

April 27, 2025

அத்யாத்ம க்ரந்த நிர்மாணம், அந்யேஷாம் ச அவ போதநம் அர்ச்சாவதார – ஸேவாச…”என்ற ஸ்லோகத்தின் படி வாழ்ந்தவர்

நூலுக்கு வயது நூறு! காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது-அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர் எழுதிய முதல் நூல்.அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் – 1200!-எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!ஒரு மொழியில் எழுதிய புத்தகத்தை மற்றொரு மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்யவில்லை.

குவலயங் கண்ணி கொல்லி யம் பாவை‘ (பெரி.திரு.2.7:1) என்ற திருவிட எந்தை பற்றிய திருமொழிப் பாசுர அடியிலுள்ள ‘கொல்லியம் பாவை- என்பதற்குத் தீபிகையிலுள்ள குறிப்பு வருமாறு: ‘வல்வில் ஓரி’ என்றசிற்றரசனுக்கு உரியதாய்க் ‘கொல்லி’ என்னும் பெயர் கொண்டான். மலையின் கண்ணுள்ள(இது சேலம் மாவட்டம் – திருச்சி மாவட்டங்களில் (சேந்த மங்கலம் துறையூர்) அருகில் பரவி யுள்ள ‘கொல்லிமலை’ என்று கருத இடம்
தருகின்றது.) ஒரு பெண்பாற் பிரதிமையே கொல்லியம் பாவை யாகும். இது தேவ சிற்பி போல் அமைக்கப் பெற்ற அழகிற் சிறந்த பதுமை யாகும்.அம்மலை யிலுள்ள தேவரையும் மனிதரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும் போது அவர்களது வாடை பட்டவுடனே அது தானே நகை புரியுமாறு பொறி வைக்கப் பெற்ற தென்பர் இப் பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம்(சித்திர மடல்). . இப் பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவரப்படுவதாய் பெருங் காம வேட்கை
உறுவித்து இறுதியில் கொல்லும் என்று கூறுவது. இது தெய்வ நிர்மாணம் என்பர். ஒரு காலத்தில் திருமகள் தம் முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இக் கொல்லியம் பாவை உருக் கொண்டு ஆடினள் என்பதை,செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று சிலப்பதிகாரம் செப்பும். இக் கொல்லிப் பாவை கொல்லி மலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெல்லா வகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணையில் காணத் தகும்.இப் பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவக சிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப் பாவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.ஆகவே தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப் படும்.இப் பாசுரத்தில் ‘கொல்லியம்பாவை போன்றவள்’ என்று கூறாமல் ‘கொல்லியம் பாவை’ என்றே சொல்லி வைத்தது முற்றுவமை(உருவகம்). ‘தாவி வையங் கொண்ட தடந் தாமரைக்கே’ என்றது போல-

‘துளையார் மென்குழல் ஆய்ச்சியர்‘ (பெரி.திரு. 3.8:8)என்ற தொடருக்கு எவ்வாறு பொருள் எழுதுவது?குழலாகிய கூந்தலுக்குத் துளை உண்டோ? துளை பொருந்துவது புல்லாங் குழலுக்கே யாகும். ‘துளை’ என்ற அடைமொழி கூந்தலுக்கு ஏற்காது. எனவே, “துளைகள் நிரம்பிய புல்லாங் குழலைச் சொல்லக் கடவதான ‘குழல்’என்ற சொல்லால் கூறப்படுகின்ற கூந்தலை யுடையவர்களான ஆய்ச்சிகள்” என்று பொழிப்புரை வரைய வேண்டும்.இங்கே ஆழ்வார் சங்கப் பாடல்களில் வரும் அரியதோர் தமிழ் மரியாதையைப் பின்பற்றி யுள்ளார். சங்க நூல்களிலிருந்து நம் சுவாமி எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்.
(i) புல்லிலை வஞ்சிப் புரமதிலலைக்கும் பொருநை |(புறம்-387)
(ii) “நெட்டிலை வஞ்சிக்கோ” (பரிபா, 102 பரிமேலழகர் உரை மேற்கோள்)
இவ் விரண்டிகளிலும் வஞ்சி மா நகர் விவட்சிதமே யல்லாது வஞ்சி மரம் விவட்சிதம் அன்று. ஆயினும் விருட்ச விசேடப் பொருட்கு உரிய புல்லிலை, நெட்டிலை என்னும் அடைமொழிகளை அம் மரப் பெயர் அடைமொழிகளை அம்மரப் பெயர் கொண்ட வஞ்சி மா நகர்க்கு ஏற்றியுள்ளார்கள்.
( iii) ‘ஒளி திகழ் உத்தி உருக் கெழு நாகம்” (பரிபா.12)’நாகம்’ என்னும் சொல் புன்னை மரத்துக்கும் பாம்புக்கும் பெயர். பரி பாடலில் ‘நாகம்’ என்ற சொல்லை யிட்டுப் புன்னை மரத்தைப் பேசுங்கால் பாம்புக்குரிய அடைமொழியைப் புன்னைக்கு இட்டனர். இவ்வாறு தமிழில் ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழியை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு. ‘இங்ஙனே தமிழ் நூல்களிலுள்ள சம்பிரதாயம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஏறி யுள்ளதை உணர வேண்டும்’ என்பர் நம்சுவாமி.

நாச்சியார் திருமொழியில் (3:9) ‘கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து’ என்ற இடத்தில் எல்லில் இரவில் என்று சுவாமி பொருள் கூறியதை தமிழ்ப் புலவர் ஒருவர் மறுத்து எல்லி என்பது பகலையே குறிக்குமாதலால்,’அல்லில் பிழைத்து’ என்று பாடத்தையே திருத்த வேண்டும் என்றும் எழுதினார். ‘அல்லும் பகலும்’ என்ற உலக வழக்கை அவர் தம் கருத்துக்கு அரணாகக் காட்டினார். ஆனால் நம் சுவாமியோ ‘எல்லூர்ச் சேர் தரும் ஏறுடை யினத்து’ (குறுந்.275) என்ற குறுந்தொகைப் பாடலின் அடியையும் மலை படு கடாத்தில் (அடி 416)வரும் ‘எல்லினிப் புதினே’ என்ற தொடரையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய ‘இராக் காலத்தை யுடைய யாயிராய்’என்ற பொருளையும் காட்டி நாச்சியார் திரு வாக்கின் தூய்மையை நிலை நாட்டினார்.

பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றி நன் னீர்தூய் –
புரிவது வும் புகை பூவே
(திருவாய் 1.6:1)
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘பரிவதில் ஈசன்’என்பதற்கு ‘ஹேய ப்ரத்ய நீகனான ஈஸ்வரனை’ என்று பிள்ளானும் பெரிய வாச்சான் பிள்ளையும் உரைப்பர். இதனை நம்பிள்ளை விவரித்து, கல்யாண குண யோகத்தையும் சேர்த்து உரைப்பர். எம்பெருமான் எப்படிப் பட்டவன் எனில்: ‘பரிவதில் ஈசன்’ என்கிறார். அதாவது துக்கம் இல்லாதவன்;எம்பெருமானுக்குத் துக்கம் இல்லை என்று சொல்லி விட முடியாது. பிராட்டியைப் பிரிந்து பட்ட துக்கம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பிறர் படும் துன்பத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை என்ற தயை குணம் எம்பெருமான் ஒருவனுக்கே உள்ள தென்றாகையால் இந்தத் துக்கம் குற்றமன்று என்று கூறுவர் நம் சுவாமிகள். இதனால் எம்பெருமானின் தயை என்னும் கல்யாண குணம் சொல்லப்பட்டது.-திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது கண்ண பிரானின் திருநாமமே யாயினும் தான் நேரில் சென்று உதவாத துக்கத்தைக் காட்ட,கண்ணன் திருவுள்ளம் புண்பட்டுக் கதறினது அனைவரும் அறிந்ததே. மேலும் எம்பெருமான் ஆனையின் துயரம் தீர அரை குலைய தலை குலைய மடுக் கரைக்கு ஓடி வந்து உதவினான். இது பிறர்க்காகப் படும் துக்கம் என்பதும் வெள்ளிடை மலை.

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லிய செவ் விதழே (திருவாய் 8.9:6)’எம்பெருமான் திருவருளால் இத் திருப்பதியில் வளர்ந்த கமுகு ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை யொத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்’ என்கின்றாள். ‘திருவருள் கமுகு’என்பதற்கு நம் சுவாமி இன்சுவைமிக்க ஈட்டின் ஸ்ரீ சூக்தியை எடுத்துக் காட்டுவார். அச் சூக்தி : “திருவருள் கமுகு என்று சில உண்டு; அதாவது நீரால் வளருகை யன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன’ சில”. இதனை எண்ணி எண்ணி மகிழ வேண்டும். இப் பாசுரத்தால் “இந்த ஆன்மா பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டது மன்று; தனக்குத் தானே உரியதுமன்று; பகவான் ஒருவனுக்கே உரியது” என்ற கருத்தாகிய ‘அநந்யார்ஹ சேக்ஷத்துவம்‘ தெளிவாக விளங்குகின்றது.

சேதந லாபம் தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே சித்தாந்தம். எம்பெருமான் சிருஷ்டி அவதாராதி முகத்தாலே கிருஷி பண்ணுவ தெல்லாம் ‘ஒரு சேதநன் நமக்குக் கிடைப்பனா’ என்கின்ற நப்பாசை யினாலன்றோ?கீதையிலே ‘ஸ மஹாத்மா துர்லப:‘ என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகின்ற வார்த்தை யன்றோ? ‘வாஸு தேவஸ் ஸர்வம்’ என்றிருக்கின்ற மகாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே! என்றன்றோ சொல்லுகின்றான்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகின்ற தன்றோ?எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் – ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவில் –ஜநாநிநம் லப்தவா” என்கின்ற அற்புதமான ஸ்ரீஸுக்தியில் இப் பரமார்த்தம் தன்னை ஆழ்வார் சுவாநுபவ முகத்தாலே இப்பாசுரத்தில் வைத்தருள்கின்றார்-என்னில் முன்னம் பாரித்துத்தானென்னை முற்றப் பருகினான்” என்றது சத் சம்பிரதாய சுவைஞர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. ‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன்’ என்று தாம் ஆசைப் பட்டிருந்ததாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மநோரதமே வலிதென்றும் அதுதான் முற்பட்டதாயிருந்து கார்ய கரமாகின்ற தென்றும் சொல்லிற்றாயிற்று.
என் உயிருண்ட மாயன்’ (7)என்றும் ‘என்னுயிர் தானுண்டான்’ (8) என்றும் எம்பெருமான் உண்ட படியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேட்சிதமா யிருக்குமே; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப் பாசுரத்தில் “தான் என்னை முற்றப் பருகினான்” என்று. இவருடைய ‘உண்ணுஞ்சோறு பருகுநீர்’ அவன்; அவனுடைய ‘உண்ணுஞ் சோறு பருகு நீர்’இவர். இங்கு தம்மை மறந்து இப் பாசுரத்தை நம் சுவாமிகள் அநுபவித்ததைக் காண முடிகிறது.

‘என் ஆனாய்'(பெரி.திரு. 1.9:2) என்பதற்கு ‘ஆனை’ விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே என்றபடி.”தென்னானாய், வடவானாய், குட பாலானாய், குண பால மதயானாய்” என்று திருநெடுந் தாண்டகத்திலும் (10)அருளிச் செய்வர். “என்னானை, என்னப்பன், எம்பெருமான்”என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

‘என் தந்தை’ என்பது (பெரி.திரு. 1.1:6)’எந்தை’ என மருவிற்று. ‘வாழ்நாள்’ என்பது ‘வாணாள்’ என மருவிற்று. ‘கொள்ள’ என்பது ‘கொள’ எனத் தொக்கி நிற்கின்றது; வெருக்கொள – அச்சங் கொள்ள என்றாயிற்று.பாடா வருவேன் (பெரி.திரு. 4.7:5) உன்னுடன் பாடிக் கொண்டு வருகின்ற என்கை. ‘பாடா’ ‘செய்யா’ என்னும் வாய்பாட்டுடன் இறந்த கால வினையெச்சம்,

தொழுதாடித் தூ மணி, வண்ணனுக்கு ஆட் செய்த‘ (திருவாய். 4.6:11) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் அடியில் ‘ஆட் செய்த நோய் தீர்ந்து‘ என்று தொடர் அமைந்திருப்பினும் ‘உருபு பிரித்துக் கூட்டுதல்’என்ற முறைமையின் கீழ் நோய் தீர்ந்து ஆட் செய்த’ என்று பொருள் கொள்ளத் தகும். ‘ஆட் செய்த’ என்று உருபு பிரித்துக் கூட்டியதால் ‘சொல் திரிந்து பொருள் திரியா வினைக் குறை’ (நன்னூல்- 346) என்ற நன்னூல் நூற் பாவிற்கு ஏற்ப ‘செய்து’ என்பதை எச்சத் திரிபாகக் கொண்டு ‘செய்ய’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறுவர். இவ்விடத்தில் சிறந்து விளங்கும் பொருளையும் வழங்குகிறார் சுவாமிகள். அஃதாவது, ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று. ஆன்மா உள்ள வரையில் தொடருமது.ஆகையால் ‘நோய் தீர்ந்த’ என்றது மோகம் தெளிந்து சற்று உணர்த்தி உண்டானமை பற்றியதாகும். இவ்வாறு இலக்கண வழி மூலமும் பொருட் சுவையை உணர்த்துகிறது என்று சுவாமிகள் தெளிவிப்பதால் சுவாமியின் தமிழ்ப் புலமை தெற்றென விளங்கும்.

திருவாய் மொழி (6.8)தலைமகள் பறவைகளைத் தூது விடும் பதிகமாகும். இதில் 8-ஆம் பாசுரத்தில் ‘அருள் செய்து ஒரு நாள்’ (2-ஆம்அடி) என்ற பாடமே நம்பிள்ளை முதலாக ஆசாரியர்களின் காலத்தில் வழங்கி வந்தது. இப்பாடத்தில் வினை முற்று(கிரியா பதம்) இல்லை யாகிறது. குருகிடம் ‘நீ போய்ச் சொல்ல வேணும்’ என்கின்ற வேண்டுகோள் இருக்க
வேணுமே; அ ஃது இங்கு இல்லை; ஆனாலும் வருவித்துக் கொள்ளலாம் என்பது நம்பிள்ளையின் திரு வுள்ளம்.பன்னீராயிரப்படி ஆசிரியர் வாதி கேசரி ஜீயர் ‘அருள் செய் ஒரு நாள்’ என்று பாடம் காட்டுகின்றார்;” ‘அருள் செய்து’என்று பாடமான போது ‘என்று சொல்’ என்று வாக்கிய சேஷமாகக் கூடாது” என்று எழுதி யுள்ளார். ‘அருள் செய்து‘என்று வினை எச்சமான பாடமே பிரசித்தம் என்று நம் சுவாமிகள் அதனையே கொள்வார். தொடர்ந்து ஈற்றடியின் முதலிலுள்ள ‘ஏசறு’ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டி யருள்கின்றார் என்பதையும் சுட்டி யுரைத்து தம் கருத்துக்கு அரணாக்கிக் கொள்வர். ஏசறு துக்கப்படு. ‘நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு’ என்பது தாற்பரியம். இவ்வாறு விளக்குவர் நம் சுவாமிகள்..

வியாக்கியானத்தில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’என்று வருகிறது. அது பிழை என்று காட்டி விளக்கமும் தருவார் நம் சுவாமி. “சக்கர வர்த்தி என்பது தசரதனைக் குறிக்கும். அவனுடைய மகன் என்ற பொருளில் ‘சக்ரவர்த்தி திருமகன்’ என்று ஒற்று மிகாது வர வேண்டும். வேற்றுமைத் தொகை யன்றோ?” என்பர். இங்ஙனமே “பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று ஒற்று மிகாது எழுத வேண்டும்” என்பர்.

‘ப்ரஹ்ம்’ என்று எழுதுவதே நேர்மை யானது;’ப்ரம்ஹ’ என்று எழுதுவோரைக் கண்டித்தார்- ஸ்ரீ’ என்ற சொல்லும் தமிழில் பயிலாது என்றும், அதனைத்’திரு’ என்று பெயர்த்தோ அல்லது ‘சீர்’ என்று திரித்துத் தற்பவமாகவோ தான் வழங்க வேண்டும் என்பது அவர் தம் கொள்கை. ‘சீர் வசன பூடணம்’ என்ற உபதேச ரத்னமாலைப் பிரயோகத்தைக் காட்டி ‘ஸ்ரீபாஷ்யம்’ என்பதுபோன்று செய்யுளில் வழங்குவதைக் கண்டித்துள்ளார்.

கற்றறிந்த பெரியார் ஒருவர் தம் கட்டுரை யொன்றில் “முயற்சிக்கத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது”என்று எழுதி யிருந்தார். அதனைக் கண்ணுற்ற நம் சுவாமி”முயற்சி என்கின்ற சொல் உண்டே யல்லது அதன் மேல் ஒரு ப்ரத்யய மேற்றி ‘முயற்சிக்க’ என்பது பரிஹாஸ்யங்களிலும் கடையானது” என்று கண்டித்தார். மற்றொருவர்”முயற்சிக்கிறேன்” என்று எழுதிய போது ‘முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கன்பையே‘ (கண்ணி நுண்.10) என்ற மதுர கவிகளின் திரு வாக்கினை நினைவுப் படுத்தித் திருத்தினார்-சொற்றொடர்களை மிகவும் பிரித்தெழுவது தமிழின் நரம்பறியாத செயல் என்பர் நம் சுவாமி. சொற்கள் புணர்ந்து தொடருவதில் ஓசை யின்பம் சிறக்கும் என்பது ஸ்வாமியின் கருத்து. இவ் வாய்வு வுரை, வீற்று இருக்கும்,நூற்று அந்தாதி, நூற்று எட்டுத் திருப்பதிகள் போன்ற தொடர்ப் பிரிவுகளைக் கண்டு ஸ்வாமியின் திரு வுள்ளம் புண்பட்டதுண்டு.

லட்சித லட்சணை’ என்பது ஒரு மரியாதையாகத் தமிழ் நூல்களில் வரும் மரபாகும். பரிபாடலில் (3-30)கேசியை வதம் செய்த கண்ண பிரானைக் குறிப்பாக ‘கூந்தல் எரி சினம் கொன்றோய்’ என்று வருகிறது. இங்குப் பரிமேலழகர் “கேசி – குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன். இப் பெயர் கேசம் என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றிக் கூந்தல் என்றார்” என்று விளக்குகின்றார்.-முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும் ‘கூந்தல் வாய் கீண்டானை‘(இரண். திருவந். 93) என்று பிரயோகித்துள்ளார். தீபிகை யுரையில் ஸ்வாமியின் குறிப்பு : “தலை மயிர்க்கு வாசகமான கூந்தல் என்னும் சொல்லாட்சி லட்சணை என்னும் வழியில் கேசி என்பவனைக் குறிக்கும். எங்ஙனமே என்னில்; கூந்தல் என்பதற்கு வடமொழிப் பெயர் ‘கேசம்’ என்பதாகும்.அச் சொல் கேசியை நினைப்பூட்டும்” என்பதாகும்.
திருமங்கை மன்னனும், தம் திருமொழியில்,-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள (10.9:1) என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருட் கண் வந்த பூதனை புள்ளுருவாகி வர வில்லை. அவள் பேய்ச்சியாக வந்தாள்-இங்கு ஸ்வாமி தம் தீபிகை உரையில் “மேலே சஞ்சரித்துக் குழந்தைகளை அனுங்கப் பண்ணும் சில பறவைகள் உண்டு; அப்படிப் பட்டவளாய் வந்தாள் என்று இவளது கொடுமையைக் குறிப்பிட்டவாறு” என்று வரைந்த உரை குறிப்பதாகும். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்வாறே உரைப்பார்.

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை‘ என்ற தொடருக்கு லட்சித லட்சணை வழியில் அரிய விளக்கம் அளித்தார். ‘புள்’ என்பது அலகை (=கேடு)உடையது அன்றோ! ஆதலால் அலகை ( பேய் மகள் நள்ளிருள் வந்த பூதனை என்று தேறுகின்றது. வடமொழி தமிழ்மொழி இலக்கண மரியாதைகள் எல்லாம் ஸ்வாமிக்கு நன்கு வசப்பட்டிருந்தது

தமிழ் நெறியை அறியாதார் சிலர் “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்’ (பெரியாழ். திரு . 4.9:3) என்ற விஷ்ணு சித்தன் திரு வாக்கில் உள்ள ‘போலும்’ என்பதை ஐயப் பொருளாக்கி அவப் பொருள் கண்டனர். ‘ஆங்கவுரையசை’ ‘ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்’ (தொல்.சொல். 277, 278) என்ற நூற் பாக்களைக் கொண்டு’போலும்’ என்பதை அசை நிலையாகக் கொள்வதே தமிழ் மரியாதைக்குச் சேரும் என்பது ஸ்வாமியின் முடிபாகும்.

இருந் தமிழ் நூற் புலவன்‘(பெரி.திரு.1.8:10) என்று சிங்கவேள் குன்றத் திருமொழியில் குறிப்பிடுவர். இவர் தம் ஆறு பிரபந்தங்களும் மாறன் அருளிய மா மறைக்கு ஆறு அங்கங்கள் என்று வகுத்துக் கூறுங்கால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ‘இருந்தமிழ் நூற் புலவர் பனுவல் ஆறும்‘ என்று குறிப்பிடுவர். அதனால் ‘இருந் தமிழ்’ என்று கலியனால் கருதப் பெற்றது நம்மாழ்வாருடைய நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகும் என்பது தெளிவு.

பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ் வாயன் என்கோ?
அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங் கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்வன் எங்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே!(
திருவாய். 3.3:3)
ஆழ்வார் பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக் கருதுபவர்கள்’அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை எடுப்போமா?”என்று அலமந்து கிடப்பது போல், அத்தைச் சொல்லுவேனா?இத்தைச் சொல்லுவேனா? என்று அலமந்து, எங்கும் எல்லா வகைப் பொருள்களுமாயும் தோன்றுகின்ற அப் பெருமானுக்கு வாசிகமாகக் கைங்கரியம் செய்ய நினைத்து ‘சகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம் பெருமானுடைய தன்மையை யான் என்ன வென்று சொல்லுவேன்?’ என்று நிர்வேதத்துடனே அவனது சர்வாத்மத்தைப் பேசுகின்றார் இத் திருவாய் மொழியில். அதில் மூன்றாவது பாசுரம் இது : இதற்குச் சுவாமியின் அநுபவ உரை இது :“ஆழ்வார் தம்மைக் கடாட்சித்து தம்மோடு முதலுறவு)பண்ணின திருக் கண்களின் அழகில் ஈடுபட்டு முதலில்’பங்கயக் கண்ணன்’ என்றார். அந்தக் கண்ணோக்குக்குத் தப்பினாலும் தப்ப வொண்ணாத புன் முறுவலை யுடைய வாயழகில் ஈடுபட்டுப் ‘பவளச் செவ் வாயன்’ என்றார். அந்த நோக்கத்திலும் புன் சிரிப்பிலும் ஈடுபட்டுத் தோற்று விழும் நிலமாகிய திருவடிகளில் ஈடுபட்டு ‘அங் கதிர் அடியன்’என்றார். அத் திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகில் ஈடுபட்டு ‘அஞ்சன வண்ணன்’ என்றார்.அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகை யுடையவன் ஈடும் எடுப்பும் இல்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியழகில் ஈடுபட்டுச் “செங்கதிர் முடியன்” என்றார்.திருமுடியினால் விளங்குகின்ற ஸ்வாமித்துவத்தைக் கண்டு’இப் பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது!’ என்று கருதி பின் வாங்காதபடி எப்போதும் அப் பெருமானின் திரு மார்பில் ‘அகலகில்லேன் இறையும்’ என்று இருந்து புருஷகாரம் செய்யும் தாயான பிராட்டியின் சம்பந்தத்தைக் கருதித் ‘திரு மறு மார்பன்’ என்றார் பெருமாளும் பிராட்டியுமான இச் சேர்த்திக்கு என்ன தீங்கு வருகின்றதோ என்று பொங்கும் பரிவினால் பாப சங்கை கொள்ளுகின்ற அடியார்களுடைய அச்சத்தைத் தவிர்ப்பனவான திவ்வியாயுதங்களைக் கருதி ‘சங்கு சக்கரன்’ என்றார்.” சாதி மாணிக்கத்தை) போலி யன்றிக்கே ஆதரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே நிர்த் தோஷமாய்(குற்றமில்லாததாய்) ஸ்வத சித்தமான வடிவழகுடையவனை”என்பது ஈடு முப்பத்தாறாயிரம். மறு – ஸ்ரீவத்ஸம் என்கின்ற மயிர்ச் சுழி.-உரையை ஊன்றிப் படிக்குங்கால் ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நம் ஸ்வாமி அநுபவித்ததை அறிகின்றோம்.உரை நம்மையும் மறந்து இறையபவத்தில் ஆழ்ந்து விடச் செய்கின்றது.

1- யானையை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப் பார்ப்பது போல் பரமானந்தத்தைத் தரும்; எம் பெருமானும் “அப் பொழுதைக் கப்பொழுது என் ஆரா அமுதமே” (திருவாய்2.5:4) என்று இனிப்பான்.
2-யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3-யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனும் கயிற்றினால்”(திருச்சந்த. 83) என்ற படி எம்பெருமானைக் கட்டுப் படுத்தும் பக்தி யாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள்வான். “மதி நலம் அருளினவன்” (திருவாய். 1.1:1)
4-யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமான் சுத்த பவித்திரனாய் சுத்த சத்துவ மயனாய் இருக்கச் செய்தேயும்”பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்”(திருவிருத்.1) உடைய நம் போலியருடன் சேரத் திருவுள்ளமா யிருப்பன், வாத்சல்யத்தாலே.
5-யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டு பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.
6-யானை பாகனுடைய அநுமதி யின்றித் தன் பக்கம் வருகின்றவர்களைத் தள்ளி விடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” (திருவாய். 4.6 8) என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீ கரித்தருளான்.
7-யானையின் மொழியைப் பாகனே அறிவான்;எம்பெருமானின் மொழி திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்?
8-யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல்,திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு;எம்பெருமானும், “கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா நீ கிடக்க வேண்டா…! உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த. 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லா வகையிலும் அடியன்.
9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்.எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோ மன்றோ?
10-யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்”அலம் புரி நெடுந் நடக்கை ஆயன்” (பெரி. திரு. 1.6:2)அன்றோ? “நீண்டவத்தைக் கரு முகிலை” (பெரி.திரு. 2.5:2)
11-யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?
12-யானைக்கு ஒரு கையே உள்ளது; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கை யொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ண முடையவன்” (அர்த்தி தார்த்த பரிதாந தீட்சிதம்)
13-பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான்.

1-நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமானும் சாதி முதலிய வற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்க்காகத் தூது எழுந்தருளும் போது ‘ஞானத்தால் சிறந்தோம்’என்றிருக்கும் வீடுமரையும் துரோணரையும், ‘செல்வத்தால்’சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொருளாக மதியாமல் இவை யெல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதி யிருந்த விதுரருடைய திருமாளிகையிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான். ஆகவே பள்ளத்தை யோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.
2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பியதை வோறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ்வேறு விருப்பத்தை யுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அது போலவே எம்பெருமானையும்..
3-நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம்பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறி யாயிருக்கும் “நீரிலே நெருப்புக் கிளறு மாப் போலே குளிர்ந்த திரு வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்” என்ற முமுட்சுப்படி திவ்விய ஸூக்தி காண்க.
4-நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். “தரு துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை” என்றார் குலசேகரப் பெருமாள்.
5-நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தா யிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே;ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்தாலே ஓலை கட்டித் தூது நடந்தான்.
6-நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயு மிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம்,உபேயத்துவம் என்ற இரு தன்மைகள் உண்டல்லவா?எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக் கொள்வாரும் உள்ளமை காண்க.
7-அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய் கனி கிழங்கு வேர் பலா முதலியவற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதி யொன்றையும் சகிக்க மாட்டாது நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாநுசந்தத்தாலும் போது போக்குதல் அரிது.”ஒருநாள் காண வாராயே” “அடியேன் தொழ வந்தருளே”என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்.
8-சோறு உண்ணும் போது நீர் இல்லாமல் முடியாது;அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே; உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்;எம்பெருமான் இவற்றை விரும்பாதவன், “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்.”
9-கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பி யிருக்கும் எம்பெருமானும் “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் வள்ளல்” கொள்வார் குறையே யத்தனை ஐஸ்வரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதும் என்பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமே யாகும்.
10- நீர் ஐவகைப் பட்டிருப்பது போல எம் பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன். எங்ஙனே என்னில் (i) பூமிக்குள்ளே பொதிந்து கிடக்கும் நீர்; (ii) ஆவரண நீர்; (iii) பாற்கடல் நீர்;(iv) பெருக் காற்று நீர்; (v) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி,அர்ச்சை என எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பான்.
11-நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும்.இடத்துக்குத் தக்கதாய்க் கொள்ளத் தக்கதாயும் விடத் தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்மியான எம்பெருமான் விடத் தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் விடத்தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.
12-நீர் தோண்டத் தோண்டச் சுரக்கும்;’கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில் தந்திடும்”
13-நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தனவாயும் அவனை அடைத்தவர்க்காகவே இருக்கும்.
14-நீர் தானாகப் பெய்ய வேண்டுமே யன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாது; எம்பெருமான் இயல்பும் அப்படியே.
15-நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன் படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத் தக்கவனாகின்றான்.
16- வசிட்ட சண்டாள வேறு பாடின்றியே அனைவரும் ஒரு துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம்பெருமானும் ‘நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத் தானே” என்றும், “கானமும் வானரமும் வேடும் உண்ட வேங்கடம்” என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்னும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன்.
17- நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள் புகுந்து விடும்; எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும்.’திருமாலிருஞ்சோலை மலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
18- தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்.
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது,படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமந் தன்னால்,மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதூர வாங்கி”விழுங்குவார்கள் எம்பெருமானையும்.
20-நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணா நின்றோம். “நேரே, கடிக் கமலத்துள்ளிருந்தும் காணகிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அவன்” “மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாயிடை முத்தும் தருதலும், உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ளம் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ் வுரையும்,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்பன அடைவே பிரமாணம்.பகவத் குணங்களில் சிறு மா மனிசர் அமிழ்தலும், “ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கமையில் நிற்றலும் கொள்க.
21-நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத்தல் போதும் என்பன்; “கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால், வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே”

1-பெய்ய வேண்டும் இடமளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் “வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து என்று ஆங்காங்குச் சென்று அநுக்கிரகிப்பன்.
2-மின்னலுள்ள காலம் நீர் நிரம்பி யிருக்கும் மேகம்;எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடி யிருக்கும் காலத்தில்
கிருபா ரசம் மிஞ்சி யிருக்கும். “இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது; அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்” என்ற முமுட்சுப்படியின் திவ்விய ஸூக்தியும் காண்க.
(3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்; தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான்.வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தரும ஸூஷ்மங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.
(4) பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும் மேகம்;நெஞ்சுலர்ந்து பேசினான்றோ எம்பெருமானும், திரௌபதிக்கு ஆபத்திலே அருகே யிருந்து உதவப் பெறாத குறைக்காக-
5- இன்ன காலத்திலே மேகம் பெய்யு மென்று அறுதி யிட வல்லார் எவரும் இலர். பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யா தொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே; “வந்தாய் போல வாராதாய்! வாராதாய் போல் வருவானே”திரௌபதிக்கு ஆபத்திலே வந்து முகங் காட்டா தொழிந்தான்;விரும்புதலை எதிர்பாராமல் “தாவி யன்றுலகமெல்லாம் தலை விளாக் கொண்டான்”
6-‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்” என்று வளைப்பிட வொண்ணாதது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே””பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழித் தவஞ் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருள வந்தவனிறே”
7- ஜல ஸ்தல விபாக மின்றியே பெய்யும் மேகம்.வேடன், வேடுவச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி,இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிண விருந்து வேண்டடிசிலிட்டவர், அவர் மகன், அவன் தம்பி ஆனை அரவம், மறையாளன் பெற்ற மைந்தன்” ல் என்னும் படியிறே பகவத விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.
வேடன் -குகன்;வேடுவிச்சி – சபரி; பட்சி சடாயு; குரங்கு – சுக்கிரீவன், சராசரம் அயோத்தியில் வாழும் சராசரம்; இடைச்சி சித்தயந்தி; இடையர் -ததிபாண்டன்; தயிர்த் தாழி – ததி பாண்டனுடைய தாழி; கூனி -கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்-கண்ணன் காலத்து, பக்தர்; பிணவிருந்து இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர் பக்த விலோசன ரிஷிபத்தினிகள்; அவன் மகன் – பிரகலாதன்; அவன் தம்பி -வீடணன்;ஆனை கஜேந்திராழ்வான்; அரவம் -சுமுகன்; மறையாளன்-
கோவிந்த சாமி; பெற்ற மைந்தன் -மார்க்கண்டேயன் ஆகிய பதினெண்மர்.
8-மேகம் சரத் காலத்தில் பெரு முழக்க மிட்டுப்போய் விடும், மழை பெய்யாது; பெய்யுங் காலத்தில்ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனேயிறே.
9-விராட பர்வ காலஷேபத்துக்கு வரும் மேகம்;பகவத் விஷய காலஷேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான். ஸ்ரீ சைலேஸ தயா பாத்ர (தனியன்) என்று வந்தானிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே.
10-சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்;அடியார்க்கு இன்ப மாரியாகிய (திருவாய் 4.5:10) கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே.
(11) “விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்கள்”’+ இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்;எம்பெருமான் றானும் “இன்னார் தூதன் என நின்றான்”(பெரி.திரு. 2.2:3); கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான். தூதனாய் மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 11.5:7)
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்;எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. “கஞ்சன் நாள் கவர் கருமுகில்; எந்தாய்”
“தாயர் மகிழ ஒன்னார் தளர”# இத்யாதி.
13-“எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று அநந்ய கதிகளால் எதிர்ப்பார்க்கப் படுகை ஒக்குமிறே.
(14) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கும் துப்பாய தூஉம் மழை’ (குறள். 12) என்கின்றபடியேஅன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயுமிருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப் படுபவனாயுமிறே எம்பெருமான் இருப்பது.
15-எத்தனை கண்ண நீர் விழ விட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளா கிடக்கும் மேகம்; பரதாழ்வான் பலருடனே சித்திர கூடத்தருகே போந்து கண்ண நீரை விழ விட்டு வேண்டின விடத்தும் தம் மனோ ரதம் பெறாமலே மீண்டானிறே’

1-இரத்தினத்தைச் சொந்தமாகவும் அனுபவிக்கலாம்;விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம்.அப்படியே எம்பெருமானைப் புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்;அவனை உபாயமாக்கி ஐஸ்வர்ய கைவல்யாதிகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்.
2-இரத்தினத்தின் மதிப்பை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன்; மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன்; உத்தம அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலணிந்து அநுபவித்து மகிழ்வான். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐஸ்வரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோஷ உபாயமாகக் கொண்டு மோஷ புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை’எனக்குத் தேனே, பாலே, கன்னலே அமுதே’ என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.
3-இரத்தினத்தை இழந்தவன் கதறி யழுவான்.எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. இராம ரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறி யழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்”: ‘இன்பத்தை இழந்தபாவியேன் என தாவி நில்லாதே” “உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன் தொழுவன் ‘ என்றிப்படி யெல்லாமாக கதறி யழுவார்கள்.
4-இரத்தின முடையவன் மார்பு நெறிப்பன்.எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே” “மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே””எனக் கென்னினி வேண்டுவதே “இல்லை யெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்கள்.
5-இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே.
6-இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து. “
7-இரத்தினத்திற்குச் சிலசில ஆதாரங்களில்(ஆஸ்ரயங்களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே. ஆழ்வார்கள் திரு வாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்.
8-இரத்தினம் ஒளியை விட்டு இராது; எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்.
9-இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை; எம்பெருமானுக்கும் பிராட்டியால் ஏற்றம்.
10-இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும்,இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.
11-இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.
12-இரத்தினம் எவ்வளவு உயர்ந்த தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும். எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து (அர்ச்சையில் சௌலப்பியத்தைக் காட்டுகின்றவனன்றோ?
13-இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார்; எந்த
வேளையில் யார் கொள்ளை கொள்வாரோ என்று துஞ்சாதிருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை;கண்ட பின்பும் இல்லை.

நிதியையும் வைத்த மாநிதியையும் ஒப்பு நோக்கி நம் ஸ்வாமிகள் அநுபவித்தவை: ஸ்வாமிகளின் சிந்தனை யோட்டம்.
1-புதைத்து வைக்கப் பெறும் பொருள் ‘நிதி’எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப் பெறுபவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;எம்பெருமானாகிய நிதி வைத்த மா நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.
(2) நிதியானது தன்னை யடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வாரோ என்ற அச்சத்தால் துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” . காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை;கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை.நிதியானது ‘சித்தாஞ்சனம்’ அணிந்த சில பாக்கியவான்களுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே கிடைப்பன்-
3-நிதி யுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் ‘எனக்கு ஆரும் நிகரில்லையே ‘மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே” ‘இல்லை யெனக்கெதிரில்லை யெனக், கெதிரில்லை யெனக் கெதிரே என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்துள்ளவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர்.
4-நிதியை இழந்தவன் கதறி யழுவன். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. ஸ்ரீ ராமனாகிய வைத்தமா நிதியைஇழந்த பரதாழ்வான் சபையில் கதறி யழுதானன்றோ?“பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” “இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே “எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே” * “உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்”” “என சொல்லிப் புலம்புவனே”” என்று இப்படி யெல்லாம் கதறி யழுவார்கள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லா சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறி யழக் கூடுமோ அப்படிக் கதறி யழ வேண்டும் என்பர்.

ஐதிகங்கள்
அம்மங்கி அம்மாள் என்ற ஓர் ஆசிரியர் நோயால் வருந்தி யிருக்க, நஞ்சீயரும்?நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப் படுவதைக் கண்டு நஞ்சியர் ‘ஸ்வாமின்! தேவரீர் சாமானிய மனிதரன்றே;எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கின்றீர்; குணாநுபவத் தாலல்லது போது போக்கி அறியீர்; இப்படி யிருக்க உம்மை மற்றவர்களைப் போல இப்படிக் கஷ்டப்படுத்துகிறானே (இறைவன்) என்றாராம்.அதற்கு அவர் “நீயாள, வளையாள மாட்டோமே” என்றானன்றறோ கலியன் பாசுரம். எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால்)கிலேசப்பட்டு தானே ஆக வேண்டும்” என்றாராம். பிறகு வெளியே எழுந்தருளிய பின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி ‘பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பெரி. திரு. 3.6:9 உரை -புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ் வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்)

2- ‘குடதிசை முடியை வைத்து’ (திருமாலை19) என்ற பாசுர உரையில் காணப் பெறுவது. “மேலைத் திக்கு உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிடேகத்தை யுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத் திக்கு – சகல லோகமும்,உய்விக்கும்படி சரணமடையக் கூடிய தன் திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு – முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத் திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகை யெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத் திக்கு – தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது இரு கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற் கொள்கை.

3- ‘அமலனாதி பிரான்’ (1) – இதன் உரையில் : பிள்ளை திருநறையூர் அரையரைச் சிலர்”பெரிய பெருமாளை அநுபவிக்க இருந்த இந்த ஆழ்வார்(திருப்பாணாழ்வார்) திருவேங்கடமுடையான் பக்கம் போவானேன்?” என்று கேட்க, “ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையில் ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப் போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையில் கால் தாழ்ந்தார்” என்றாராம். “ஒருவனைக் கவி பாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்;பரம பதத்தில் நின்றும், வட மதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப் போலே வைகுண்டத்தில் நின்றும் திருமலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது;அவ் வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்.

4-‘கொண்டல் வண்ணனை‘ (அமலனாதி10) என்பதன் உரையில் வருவது. கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹு ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற் போல,இவரும் (திருப்பாணாழ்வார்) பண்டு வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் திருப் பவளத்திலே கமழா நிற்பதாகக் கருதி அநுபவிக்கிறார் ‘வெண்ணெய் உண்ட வாயன்’ என்று தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐஸ்வர்யத்தைப் புசிக்கைக்கு ‘எனக்கு ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெருமாளைப் (இராமனைப்) பெற்றதைப் போல நந்தகோபரும் “கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்” என்றபடியே திருவாய்ப்பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு அடங்கலும் (கவ்ய ஸம்ருத்தி அடங்கலும்) பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம்.

5- ‘அருள் கொண்டாடும்‘ (கண்ணி நுண்-8) என்பதன் உரையில் வருவது. திருவாய் மொழியில்“எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி” (10.7:3) என்றவிடத்து அருள் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அநுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர்களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம்.எண்ணாத வற்றை எண்ணுகையாவது என்? எனில்:திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு பல பெரியோர் அவை கூடி “எம்பெருமானுடைய ஸ்வரூப குண விக்கிரக விபூதிகளை யெலாம் முற்றும் நிறைவாகப் பேச வல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம்ஒன்று அவதரிக்க வேணுமென்று நாம் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்” என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி ‘எம் பெருமானுக்கு இன்னமும் குண விக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்’என்றார்களாம். உள்ள குண விக்கிரக விபூதிகளை யெல்லாம் திருவாய்மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார் என்பது இதன் கருத்து.

5- ‘முற்ற முத்துக் கோல் துணையா’ (பெரி.திரு. 1.3:1) என்ற தொடரில் ‘கோல் துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் இரு ஐதிகங்கள்-
நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற் கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது ‘ஓ திரி தண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற பொருளை யுடைய மந்திரத்தை (ஸகர மா கோபாய ) உச்சரிக்க வேண்டும்என்று கேட்டு “எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலை யுடையவரையும் உள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டி யிருக்க, அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ஙனம் சொல்லும்படியாக நேர்ந்ததே” என்று சாதித்தாராம். சாத்திர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு; கிழத் தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்றலற்றமையினாலேஇங்கு.
இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கிற நாளிலே ஒரு கைசிக துவாதசி யன்று பட்டர் பிரம்ம ரதத்தில் எழுந்தருளித் திருவீதி அலங்கரிக்கப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, ‘உத்தமாஸ்ரமியாய் திரி தண்ட தாரியான உமக்கு இக் காரியம் தகாது’ என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர் “எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்” என்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்டஇந்த முக் கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகின்றதோ?இக் கோல் எனக்குத் துணை யல்லவோ? ஸ்வரூப ரட்சணத்துக்கு இக் கோல் இடையூராயின் இஃது எனக்கு வேண்டா” என்று சொல்லித் திரி தண்டத்தை விட்டெறியப் போனாராம்.அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம்.

6- ‘ஓதலும் உன் பேரன்றி மற்றோ தாள்'(பெரி.திரு. 2.7:5) இந்தப் பாசுரத்தின் (இது தாய்ப் பாசுரம்)இக் காட்டிய அடிக்கு ஓர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஓர் ஆய மங்கை இடைவிடாது கண்ண பிரானையே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந்திருந்தாள்; அது கண்ட அவன் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றி விடக் கருதி, தயிர் பால் நெய் முதலியவற்றை அவளிடம் கொடுத்து ‘இவற்றை விற்று வா’ என்று சொல்லி யனுப்பினான். அம் மங்கை கண்ண பிரானை யன்றி வேறொன்றையும் அறியாதவளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு, தெரு வழியே நடந்து செல்லும்போது, ‘தயிர்! பால்! நெய்!’ என்று விற்பது தவிர்த்து “கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று இங்ஙனே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அது போலவே இப் பரகால நாயகியும் ‘ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள்.

7-‘வாத மா மகன் ‘ (பெரி.திரு. 5.8:2) என்ற திருமொழிப் பாசுரத்தின் ‘கோதில் வாய்மையி னாயொடும்உடனே உண்பன் நான்’ என்ற அடிக்கு ஓர் ஐதிகம்.முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையில் உள்ளது போலவே இடை நரம்பு இல்லாமல் இருந்ததென்றும், இப்பொழுது இராமன் அநுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன்உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினானாக, அது முதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர்.இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாஸிஷ்ட இராமாயணத்தில்உள்ளது என்பர்.

8- ‘பண்டை நாளாலே‘ (திருவாய். 9.2:1) என்ற திருவாய்மொழியின் உரையில் இரண்டு ஐதிகங்கள் -கோயில் சீய்த்து (இரண்டாம் அடியில் உள்ளஇதற்கு) ஐதிகம். திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. “கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினைக் களையலாமே‘ (திருவாய்10.2:7) என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல்,,மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே’கோயில் சீய்க்கை’ என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக் கண்ணமங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்றுஉள்ளது. அஃது இது : திருங்கண்ணமங்கை யாண்டான் திருக்கண்ணமங்கை என்னும் திவ்விய தேசத்திலே ஒருமகில மரத்தடியிலிருந்து சருகைத் திரு அலகிடா நிற்க, கூட வாசித்து நாத்திகராயிருப்பான் ஒருவன் ‘பகவான் உபாயம்,நாம் வேறு பயன் கருதாதவர்கள், இப்போது செய்யும் பணிக்குப் பயன் என்ன?’ என்றானாம். அப்போது திருக்கண்ண மங்கையாண்டான் திருஅலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத்தையும் காட்டி,’இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே;இங்கொரு பலம் இல்லை என்று தோற்றி யிருந்ததோ? என்று பணித்தாராம். இங்கு அறியவேண்டுவதாவது; நேரில் காணும் பயன் என்றும் நேரில் காணாப் பயன் என்றும் இருவகைப்படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு பயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை. இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவலகிடாத இடம் கண் கொண்டு காண வொண்ணாததாயும், திருவலகிட்ட இடம் கண்ணால் காண இனிதாயிருப்பதுவும் பயன் காட்டப் பெறுகின்றன.

9-மேற்கட்ட பாசுரத்தின் மூன்றாவதுஅடியில் ‘தாமரைக் கண்களால் நோக்காய்‘ என்ற அடியின் பகுதியின் உரையில் கண்ட ஐதிகம் வார்த்தையிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத்தில்) பிள்ளை தேவ பெருமாள் அரையர் இப் பாசுரத்தைச் சேவிக்கையில் ‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் ‘நோக்காய்,நோக்காய், நோக்காய்….’ என்று பலகாலும் சொல்லிக் கொண்டிருந்து மேலடியிலே போக மாட்டாதே நின்றாராம்.அப்போது கோஷ்டியிலே வீற்றிருந்த அவரது
திருத் தந்தையாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து “பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ஙனம் பலகாலும் சொல்லி
நிர்ப்பந்திக்கலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும், செல்வத்தையும் தந்தருளி யிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைந்து இன்னமும், ‘நோக்காய் நோக்காய் … என்றால் ‘இஃது என்னே!மேலே பாடு’ என்றாராம்.

10- ‘கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன’ (திருவாய் 10.12:1) என்ற பாசுரத்தின் ‘கொடு வினை செய்யும் கூற்றின்’ என்ற அடியின் பொருளுரைக்கும் போது வருவது:யமனுடைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டா என்னுமதற்கு ஐதிகம் காட்டுகிறார் ஈட்டாசிரியர். ஒரு திரு வேட்டையிலே பட்டர் திரு வூற்றங்கரையிலே பேரோலக்கமாக இருக்க, ‘மாலைப் பொழுது ஆயிற்று’ என்று சிலர் விண்ணப்பம் செய்ய, “நாம் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒரு நாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழ்கின்றோம் என்றால் இது குற்றமாக எமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கொடு வரா நின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான்.ஒருவன் பெயரை வாசித்தால் ‘ஓம் காண்! அது கிடக்க;மேலே செல்’ என்றால், பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண்; இந்த விஷயத்திலே’உனக்காகிக் தொண்டு பட்ட, நல்லேனை வினைகள் நலியாமை நம்பு தம்பி” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்குக்காகத் தொண்டுபட்டுப் போது போக்குபவர்களை வினைகள் நலியுமோ?’ என்று அருளிச் செய்தாராம்.

11-‘புண்ணியம் செய்து நல்ல‘ (திருவாய்10.2:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘எந்தை நாமம்‘என்பதிலுள்ள ஐதிகம். இடறினவன் ‘அம்மே’ என்னுமாறு போல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. நஞ்சீயர், “திருநாமம் சொல்லும் போது பக்தி யுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?”என்று பட்டரைக் கேட்க, ‘கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறு ஓர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தர மாட்டாதோ?’ என்று அருளிச் செய்தாராம். திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.

12- ‘கடு வினை களையலாகும்‘ (திருவாய்.10.2:8). என்ற பாசுரத்தில் ‘படமுடை அரவில்… சொன்னோம்’(3-4 அடிகள்) என்ற அடிகளில் அநுசந்திக்கும் ஐதிகம்.ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி ‘யோக ரகஸ்யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!’ என்று சாதித்திருந்த படியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று ‘அடியேனுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போக விட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.அரையர் கோட்டியிலே சேர்ந்த அவர் சேவிக்கும் திருப்பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அரையர்’கடுவினை களையலாகும்’ என்கின்ற இந்தப் பாசுர
அளவிலே வரும் போது, எழிலணி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக் கறியச் சொன்னோம் என்ற அடிகளைச் சேவிக்கும் போது, ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க,,ஆளவந்தாரும் இதைக் கேட்டு ‘ஆழ்வாருடைய தமர்களிலே தாம் சேர வேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப்தம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போதே ஸ்ரீபாதத்தை உடையாரைக் கொண்டு நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார்.° இந்த நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித்தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்த அந்நாளே அவர்குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலைந்து ‘ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்க விமானம் பெற்றிலோமே’ என்று சோகித்து எழுந்தருளி யிருந்தார்.

இங்கே ஈட்டு ஸ்ரீசூக்தி : “திருவத்யயனம் பாடா நிற்க இதைக் கேட்டருளி ஆளவந்தார் ‘நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தம் உண்டாக வேணும்’ என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு (அனந்தபுரத்துக்கு) எழுந்தருளினார்”

13- “வானேற வழி தந்த வாட்டற்றான் பணி வகையே” (திருவாய். 10.6:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் ‘நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே (இறுதி அடி) என்பதற்கு ஐதிகம். பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால் வாங்கிப் போகப் பாராதே காண்! பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளி வரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தைப்) புரிந்து புரிந்து பார்த்துச் சிரி; ‘உன்னை அடி யறுத்தோமே'(உன்னை வென்றோமோ) என்று பார்த்துச் சிரி” என்கின்றார்.பின்பழகிய மணவாளப் பெருமாள் அரையர் ஒரு நோயால் வருந்தா நிற்க திருவரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளைக் கைவிட்டருளின அளவிலே,’நானேறப் பெறுகின்றேன். நரகத்தை நகு நெஞ்சே’ என்று இப்பாசுரத்தைச் சொல்லிக் கிரந்தியை (கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம்.‘நரகத்தை நகு’ என்ற இவ்விடத்திற்கு’நரக லோகத்தைப் பார்த்துச் சிரி’ என்று சிலர் பொருள் கூறுவர். அது வேண்டா; சம்சாரத்திற்கு ‘நரகம்’ என்ற பெயராதலால் ‘சம்சார பூமி’ என்ற பொருளே ஈண்டுக் கொள்ளத் தகும்.

இதிகாசங்கள்
‘தேனுகன் ஆவி போயுக
(பெரி.திரு. 9.8:7) என்ற திருமொழியில் உள்ளது. கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக்குள்ளே கண்ண பிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாகப் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப் பழங்களை விரும்பி உதிர்த்துக் கொண்டு வருகையில் அவ் வனத்துக்குத் தலைவனும்.கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினம் கொண்டு ஓடி வந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதி லாவகமாக அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பற்றி அவ் வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனை மரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. இத்தகைய பல இதிகாசங்கள் தீபிகையை அழகு செய்கின்றன.

இதிகாசமும் ஐதிகமும் – ஓர் அற்புதக் கலப்பு : இந்த இரண்டும் கலந்த நிலையை ஸ்வாமியின் உரையில் கண்ணுறும் போது அது நமக்குத் ‘தேனும் பாலும் கன்னலும் அமுதும்’ கலந்து அநுபவிப்பது போன்ற நிலையைத் தருகின்றது.
“வேங்கடங்கள் மெய்ம்மேல்” (திருவாய் 3.3:6)என்ற அடிகட்கு ஸ்வாமி அருளும் உரை:
கடன்கள் சிலர்’கடன்கள் மேல் வினை முற்றவும் வேம் (இது)’ என்று அந்வயித்துப் பொருளுரைக்க. கடங்கள்-எம்பெருமான் நாம் செய்த பாவங்களை மன்னித் தருள்வது மாத்திரம் அன்றிக்கே பகைவர்கள் மேலும் போக்குவான்,,எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் பழ வினைகள் மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய சிறிய முயற்சியால் தொலைந்திடுமோ என்று ஐயுற்றார்களாம்; அவர்கட்குப் பட்டர் ரசோகதிகளுடன் ஓர் இதிகாசம் எடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலரசனை நோக்கி மூன்று நாள் தரை கிடந்து தவம் செய்தார்;அவ்வளவில் கடலரசன் முகம் காட்டாதொழியவே சீறிச் சினந்து அக் கடல் மீது அம்பு தொடுத்து நின்றார். அது கண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து, அவன் நாலடி வர நின்ற போது ‘உனக்காக அம்பு தொடுத்தேன்’என்றுரைக்க நாணப்பட்டு “உன் விரோதிகளைச் சொல்லுக,அவர்கள் மீது இவ் வம்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல, அப்படியே அவன் தன் விரோதிகள் இருக்குமிடம் குறிப்பிட அங்கே அம்பைச் செலுத்தி உபகாரம் செய்தாரென்து வான்மீகி இராமாயணத்தால் அறிகின்றோம். வணங்கிய மாத்திரத்தில் சேதநன் பண்ணின பாவங்களை யெல்லாம் மறப்பான் இறைவன் என்பதற்குஇந்த இதிகாசம் சான்று.
இவ் விடத்தில் இன்னுமோர் ஐதிகத்தையும் அருளிச் செய்வர் பட்டர். “பண்டு தலை மயிர் இல்லாத ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்று மில்லை கண்டுபோக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்து விட, அதனை அவன் கொடு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து,’இது பெற்றது எங்கே!’ என்ன, ‘உன்தனை மொட்டைத்தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கே யுள்ள அவனைக் கண்டு ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே!’என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து ‘ஏன் தான் குழல்கள் அலைய அலைய, ஓடி வாரா நின்றாய்!’ என்ன,,’ஒன்று மின்று; இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்’ என்றானாம்; அப்படியே கடலை முகங்காட்டுவித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது,கோலைக் கோலைத் தொடுப்பதாக நிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே ‘உமக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’என்றார் அன்றோ?

சம்வாதம் என்பது சம்பாஷணை; உரையாடல். எ.டு.’வீவின்றி நின்றவர்’ (திருவாய் 7.5:11) என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடைபெற்றதைப் போன்றது.அதாவது, “அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க அதற்கு அவர் அளித்த மறுமொழி: “அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்?எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமே யொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்த்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே” என்று அருளிச் செய்தாராம்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்று மேய்த்துவிளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே
-2-5-3-
வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை‘ என்பதற்கு நஞ்சீயர் பொருள் சொல்லும் போது வேறு விதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளை யழகிய மணவாளப் பெருமாளரையர் “இவ் விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் பொருள் இப்படி யன்றே” என்று சொல்லி பட்டர் அருளிச் செய்த விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்;மலை மேல் காட்டில் உள்ள தடாகங்கங்களில் தண்ணீர் குடிக்கப் புகுங்கால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னே யிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்; அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீர்முது செய்து காட்டுவன்;அதைச் சொல்லுகிறது ‘வரை மீ கானில் தடம் பருகு‘என்று,

திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியனவாக அமைந்துள்ளன. பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள்23; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்;மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள். இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர்.
சம்பந்த உபாய பயன்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஞா வஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்” (138)(பிரஜ்ஞாவஸ்தை – மூன்று காலங்களையும் அறியும்
அறிவின் நிலை)-என்று ஆசாரிய ஹிருதயம் கூறும்.

ஞானாவஸ்தைகள்‘ என்னாமல் ‘பிரஜ்ஞாவஸ்தைகள்’என்பதற்குக் காரணம் என்ன? இந் நிலைகள் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக. திருவெட்டெழுத்தின் முப்பதப் பொருள்களைப் பற்றிய ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது?’ஓம் நமோ நாராயணாய’என்பது திருமந்திரம். இதிலுள்ள மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் சொல்லுகின்றன. °அவை சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் என்பன-அதாவது ‘பிரணவம்’ சேஷத்துவத்தையும் (பிறருக்கு அடிமையாய் இருத்தலையும்), ‘நமஸ்ஸு’ பாரதந்திரியத்தையும் (பரன் அல்லது பகவானுக்கு வசப்பட்டு இருத்தலையும்), ‘நாராயனாய’ சேதநன் ஈஸ்வரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்’ தெரிவிக்கின்றன-அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்)நான்காம் வேற்றுமை சேஷத்துவத்தையும் (அடிமைத் தன்மையையும்), உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யர்ஹ சேஷத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈஸ்வரன் ஒருவனுக்கே உரித்தாய் இருத்தலையும்)மகாரம் ஞானவானான ஜீவான்மாவையும் தெரிவிக்கின்றன.திருவெட்டெழுத்தின் மூன்று பதங்களாலும் குறிப்பிடப் பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே தோழி தாய் மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெறுகின்றன.இதனை ஆசாரிய ஹிருதயம் அவஸ்தா திரயம் (திரயம் மூன்று; அவஸ்தை – நிலை) என்று பேசும்.

ஸ்ரீ வைணவத் திருத் தலங்களில் திருவரங்கம் ‘கோயில்‘ என்றும்,திருவேங்கடம் ‘திருமலை’ என்றும், சம்பிரதாயமாக வழங்கப் பெற்று வருகின்றன. நம்மாழ்வாரின் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் திருவரங்கம், திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் (28, 26,31) வருவதால் இச் சிறப்புப் பெயர்கள் பெற்றனவாகப் பெரியோர் பணிப்பர். திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடி ‘திருப் பொலிந்த சேவடி’ (பெரியாழ். திரு. 5.4:7)என்றும் கச்சி நகரிலுள்ள தேவப் பெருமாளுடைய திருவடி’துயரறு சுடரடி’ (திருவாய் 1.1:1) என்றும், திருவேங்கடமுடையான் திருவடி ‘பூவார் கழல்கள்‘ (திருவாய் 6.10:4)என்றும் சம்பிரதாயத் திருநாமங்களாகப் பெரியோர் பணிப்பர்.

திருவரங்க விமானம் ஏழு சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது. பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பர வாசுதேவன் இதிலிருந்து சேவை சாதிக்கின்றான். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் ‘நமோ நாராயணாய’ என்பதிலுள் ஏழு எழுத்துக்கள் ஏழு திரு மதில்களாகவும் அமைந்துள்ளன.எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திரு அரங்கத்திற்குச் செல்பவர்கட்கும் இறைவன் நேரே புலனாவான் என்பது கருத்து.
விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம்; விஷ்ணு காயத்திரியின் அறிகுறியாக தூண்களால் அமைக்கப் பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்)

காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி’ அருளாளனைச்)சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள் : அதாவது தந் மாத்திரைகள் 5;ஞானேந்திரியங்கள் 5 ; கருமேந்திரங்கள் 5; பூதங்கள் 5;ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1,அகங்காரம் 1. மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (ஆன்மா),மகா புருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம்’அட்டாங்க விமானம்’ என்பது; 90 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. தஞ்சைக் கோபுரத்தின் நிழல் போல ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை யுடையது. மேல் தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும் விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஓம் நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ+ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்

நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவர்களுள் சடகோபர் ‘நம்மவர்’ என்று போற்றத் தக்கபெருமை வாய்ந்து ‘நம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயவமாகவும் நம்மாழ்வாரை அவயவி யாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்மாழ்வார். பூதத்தாழ்வாரைத் தலையாகவும் பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும்,
குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக் கைகளாகவும், தொண்டைரடிப்பொடியாழ்வாரைத் திரு மார்பாகவும்,திருமங்கையாழ்வாரைத் திரு நாபியாகவும் மதுரகவிகளையும்எம்பெருமானாரையும் (இராமாநுசர்) திருவடிகளாகவும்
பெரியோர் அருளிச் செய்வர்.

இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமாகவும்,உய்யக்கொண்டாரை (புண்டரீகாட்சரைக்) கண் ஆகவும் மணக்கால் நம்பியை (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும்,ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாகவும், திருக்கச்சி நம்பிகையைத் திருக்கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தனமாயும்,திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலை யாண்டானை முதுகாகவும், கிடாம்பி யாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாகவும்; பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாகவும், வடக்குத் திருவீதிப் பிள்ளையைத் முழங்கால்களாகவும், பிள்ளைலோகாகாரியரைத் திருவடியாகவும், திருவாய்மொழிப் பிள்ளையை பாதரேகை யாகவும், மணவாள மாமுனிகளைத் பாதுகையாகவும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்ட்ரமாகவும்,(திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும்,முதலியாண்டனைத் திரிதண்டமாகவும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும்,திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் தோமாலை யாகவும்,பிள்ளை யுறங்காவில்லி தாசரை நிழலாகவும் இங்ஙனம் இராமநுசரைச் சர்வாசார்ய ஸ்வரூபராகக் கொள்வது மரபு.

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப நாடார் அருளிச் செய்த ஸ்ரீ ஏர் எழுபது –

April 1, 2025

பாயிரமும், வாழ்த்தும் நீங்கலாக -70 பாடல்கள் இந்த நூலில் உள்ளன.-இதனை இயற்றிய ஆசிரியர் கம்ப நாடர்-கம்பராமாயணம் இயற்றிய கம்பர் தம் இளமைக்காலத்தில் இதனைப் பாடியிருக்கலாம்.-அல்லது இந்தக் கம்ப நாடர் பிற்காலத்தவராக இருக்கலாம்-கம்பராமாயணம் போன்ற செறிவோ, திண்மொழியோ, குழப்பமான சொற்றொடர் அடுக்குப் பெருக்கமோ இதில் இல்லை-உழவுத் தொழிலின் மேன்மையை இந்த நூல் போற்றுகிறது 

பாயிரம்

கங்கை பெறுங் காராளர் கருவிஎழு பதும்உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பும் முலைத் தழும்பும் அணிய, மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமை, வலஞ்செய்
கங்கை பெறும் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

கார் மேகத்தால் வாழ்பவர் காராளர் -உழவர் -அவர்களைப் போற்றும் கருவியாக இந்த 70 பாடல்களும் பாடப்படுகின்றன. 
இதனை உரைக்க ஆனைமுகன் தாள்களைப் பணிவோம் -உமை தழுவும்போது அவளது வளையல் தழும்பும், முலைத் தழும்பும் பெற்றவன் சிவன். 
அவன் மங்கை மங்கை உருவமும் சேர்ந்து அமையும் அம்மையப்பராக இருக்கிறார். 
அவரை வலம் செய்தவன் இந்த ஆனைமுகன் -அவர் நீர்த் துறையில் அமர்ந்திருக்கிறார் -அகன்ற உருவில் இருக்கிறார் -விகடம் – நல்ல மதம் -அறிவு நீர் தந்து கொண்டிருக்கிறார்

நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ, மநுவிளங்க,
தறைக்குரிய காராளர் தமதுவரம்பு இனிதோங்க,
மறைக்குரிய பூமனையும், வண்டுளபத் தாமனையும்,
பிறைக்குரிய நெடுஞ்சடிலப் பெம்மானை யும், பணிவாம். 2

அந்தணர் நெறியைப் போற்றவும் மனுநெறி விளங்கவும் வாழ்பவர் காராளர்
இவர்களின் எல்லை இனிதே ஓங்க, மறை ஓதும் பூமன் -பிரமன்-துளசி மாலையன் – திருமால் -தலையில் பிறை சூடியவன் -சிவன் மூவரையும் பணிவாம்

திங்களின்மும் மாரிபெய்யஞ், செகத்திலுயிர் செழித்தோங்கக்,
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத், தொழுகுலத்தோர்
துங்கமக, மநுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்றன் நாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்.-3-

மாதந்தோறும் 3 மழை பெய்ய,
உயிரினங்கள் செழித்து ஓங்க
காராளர் கரு வீறு பெற
அவரைத் தொழும் குலத்தோர் மனுநெறி துலங்க
வையம் படைத்த பிரமன் நாவில் உறையும் நாமடந்தையைத் தொழுவாம்

ஈழமண்டல முதலென, உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்தாழு மண்டலக்கும், செம்பியன் மரபினோர் தாமெலாம் பிறந் தினியபல் வளத்தின்வாழு மண்டலங், கனகமு மமணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்சோழ மண்டலம், இதற்கிணை யாம்எனச் சொல்லு மண்டலஞ் சொல்வதற் கிலையே-4- 

ஈழ மண்டலம் முதல் எண்ணப்படும் எல்லா வேந்தரும்  தாழும் மண்டலம்  செம்பியன் மரபினோர் காக்கும் காவிரி வளம் கொழிக்கும் சோழ மண்டலம்  இதற்கு இணையாகச் சொல்ல எந்த மண்டலமும் இல்லை –

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத் துடையகொடி யுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயரு டையான்,இடியுடைய வொலிகெழு நீர் எழுபத் தொன் பதுநாட்டுக்குடியுடையான், சென்னி பிறர் என்னு டையார் கூறீரே? -5-

மூவுலகிலும் உள்ள முடி மன்னர்  கொடிமன்னர்  அனைவரும் குலவும் முதன்மையான பேர் உடையவன்  79 நாட்டுக் குடிகளை உடையவன் சென்னி  பிறர் என்ன உடையார்?

மந்திரம் அனைய திண்டோள் மணிமுடி வளவன், சேரன்,சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட,அந்தணர் குலமும் எல்லா அறங்களும் விளங்க, வந்தஇந்திரன் ஓலக் கம்போல் இருந்தது, பெரிய நாடே. -6-

மலை போன்ற தோள் கொண்ட மணிமுடி அரசர்களான வளவன், சேரன், பாண்டியன் ஆகியோர் முடி சூட,  அந்தணர் அறம் விளங்க,  இந்திர ஓலக்கம் போல இருந்தது, பொன்னிநாடு என்னும் பெரிய நாடு.

ஆழித் தேவர் கடலானார், அல்லாத் தேவர் அம்பலத்தார்ஊழித் தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ?வாழித் தேவர் திருமக்கள், வையம் புரக்கும் பெருக்காளர்மேழித் தேவர் பெருமைக்கு வேறு தேவர் கூறேனே! -7-

கையில் சக்கரத்தை உடைய தேவர் கடலில் உறங்குகிறார்.  அவர் அல்லாத தேவர்கள் அம்பலக் கோயிலில் கிடக்கின்றனர்  இவர்களா ஒன்று கூடி உலகத்தைக் காக்க வல்லவர்?  காப்பவர் மேழித் தேவர் அன்றோ!  இவர் பெருமைக்கு வேறு தேவரைக் கூறமாட்டேன். 

தொழுங் குலத்திற் பிறந்தாலென், சுடர்முடிமன் னவராகிஎழுங்குலத்திற் பிறந்தாலென், இவர்க்குப்பின் வசியரெனுஞ்செழுங் குலத்திற் பிறந்தாராய்ச் சிறப்புடையா ராய் வாய்மைஉழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே !  -8

தொழும் தேவர் குலத்தில் பிறந்தால் என்ன  முடி சூடும் மன்னர் குலத்தில் பிறந்தால் என்ன  இவர்களுக்குப் பின் வைசியர் குலத்தில் பிறந்தால் என்ன  உங்கு உய்யப் பிறந்தவர் உழுங்குலத்தில் பிறந்தவரே ஆவர். 

எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனால் என்அழுங்குழவிக் கன்புடைய தாயேபோல் அனைத்துயிர்க்கும்எழுங்கருணைப் பெருக்காளர், எளியரோ யாம்பகழ!உழுங்கொழுவிற் கருவீறி உலகமுதற் கருவாகச்செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்!-8

அழும் குழந்தையிடம் அன்பு காட்டும் தாய் போல்  அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டி எழும் கருணைப் பெருக்காளர்  யாம் புகழும் அளவுக்கு எளியரோ  உழும் கொழுக்கருவே உலக முதலாகிய கரு. 

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும், நீதிவளம் படைத்துடைய நிதிவளத்துத் திருக்குலமும், சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலம் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே.  -9-

வேதியர் குலம்  வேந்தர் குலம்  நிதியர் குலம் – ஆகியவை  காராளர் குலத்துக்கு நிகர் இல்லை 

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,நீதிவளந் தருமுறையான் நிலநிறையு நிதிவளனும்சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்கோ தில்குலந் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே  -9-வேறு பாடம்

(பாயிரம் முடிந்தது)

1 உழவு நாட்கோடல்

சீர் மங்க லம் பொழியும், தெண்டிரைநீர்க் கடல்சூழ்ந்தபார்மங்க லம்பொழியும், பல்லுயிருஞ் செழித்தோங்கும்,கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்ஏர்மங்க லம்பொழிய இனிதுழநாட் கொண்டிடினே.-1-

கார்மேகம் சிறந்து மழை பொழிந்த பருவத்தில்  உழவர் ஏர் பூட்டும் நன்னாள் கொள்வர்.  கொண்டதும்  உலகே சீர் பெற்றுச் சிறக்கும் பல உயிர்களும் செழித்து ஓங்கும் 

2 உழவுச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந், தம்முடையசீர்விழாக் கொளவிளங்கும் திருவிழாப் பெருக்காளர்,ஏர்விழாக் கொளினன்றி, எறுழ்க்கரிதேர் மாப்படையாற்போர்விழாக் கொளமாட்டார், போர்வேந்த ரானோரே. -2-

நிலம் நீர் ஊறி விழாக் கொள்ளும் காலத்தில் திருவிழா பெருக்குபவர் உலகம் சிறக்கும் சீர்விழாக் கொள்வர்  இவர்கள் இப்படி ஏர் விழாக் கொள்ளாவிட்டால்  வேந்தர் கரி, பரி, மா படைகளைக் கொண்டு போர்விழா கொள்ள முடியாது

3 அலப்படையின் சிறப்பு

குடையாளும் முடிவேந்தர் கொலையானை தேர்புரவிபடையாளும் இவைநான்கும் படைத்துடைய ரானாலென்,மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே -3-

அலம் என்னும் கலப்பைப் படை கொண்டு உழுது பயிரிட்டு,  பொன்னி நாட்டு உழவர் போரடிக்காவிட்டால்,  வேந்தர் நாற்படை கொண்டிருப்பதால் என்ன பயன்?

4 மேழிச் சிறப்பு  

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்,ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்,ஊழிபே ரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. -4-

நானமறையாளர் வளர்க்கும் வேள்வி வாழி ஆணைச்சக்கரத்தால் உலகளிக்கும் வேந்தர் செல்வம் வாழி இவை உலகுக்கு உணவளிக்கும் உழவரின் மேழியால் விளைவது அல்லாமல்  வேறொன்றால் விளையாது 

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்றதோற்றாளர் இவராலே தொல்லுலகம் நிலைபெறுமோ?மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைஊற்றாணி உளதாயின் உலகுநிலை குலையாதே! -5-

சிவன், பிரமன், மால் – இவர்கள் தோற்றத்தால் உலகம் நிலைபெறுமா  காவிரி நாட்டு உழவர் ஊற்றாணியால் அன்றோ  உலகை நிலைகுலையாமல் இருக்கச் செய்கிறது  ஊற்றாணி என்பது கலப்பைக் கொழு  “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” – திருக்குறள் 

ஆற்றாணி வேணியர்பால் அம்மையிருந்து அனைத்துலகும்போற்றாணி யாம் கச்சிப் புறமெல்லாம் அறம்வளர்க்கச்சேற்றாணிக் கரமொதுக்கும் செல்வரணி ஏர்க்காலின்ஊற்றாணி உறுதியினால் உலகுறுதி யானதுவே.-6-

காஞ்சிபுர ஆற்றுமணலில் கரையாத ஆணியாக இருப்பவர் ஏகாம்பரர் -அவர்பால் இருப்பவர் அம்மை காமாட்சி -இவள் அறம் வளர்க்கிறாள் -வளர்க்க உதவுபவர் சேற்றில் நடவு நடும் உழவர் -இதுதான் ஏர்க்கால் ஊற்று 

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவதுவிரையேற்ற இருநிலத்தோர் வறுமையொடு வீழாமேகரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே! -6-வேறு பதிப்பு

கதிரோன் தேரை இழுக்கும் 7 குதிரைகளுக்குப் பூட்டிய நுகம்  உலகின் இருளைப் போக்குகிறது  காராளர் ஏரில் பூட்டிய நுகம்  உலகின் வறுமையைப் போக்குகிறது 

வளைத்த திரைக் கடல் சூழ்ந்த வையகத்தோர் எல்லோர்க்கும் தொளைத்த தொளை பசும் பொன்னின் அணி கிடக்கும் துணைத்தல்லால் திளைத்து வருஞ் செழும் பொன்னித் திருநாடர் உழுநுகத்தில் தொளைத்த தொளை போலுதவும் தொளை யுளதோ சொல்லீரே! -7-

காதி போட்ட துளையில் அணிகலன் கிடக்கிறது  இது அவருக்கு அழகு தருகிறது  உழவர் நுகத்தில் போட்ட துளைகளில் எருதுகள் பூட்டப்பட்டுள்ளது  இது நிலத்தை உழுது உலகைக் காக்கிறது 

ஓராணித் தேரினுக்கும், உலகங்கள் அனைத்தினுக்கும் பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ! காராணிக் காவேரி வள நாடர் உழுநுகத்தின் சீராணிக்கு ஒப்பதொரு சிறந்தாணி செப்பீரே! -8-

சூரியன் தேர் அச்சில் இருக்கும் கடையாணி  அந்தத் தேரைக் கழலாமல் ஓடச் செய்கிறது  உழவர் நுகத்தில் பூட்டிய கடைமுளை எருதுகளை நேர் வழியில் நடத்தி உழச்செய்து உலகைக் காக்கிறது 

நாட்டுகின்ற சோதிடத்தின் நாண்பொருத்தம் நாட்பொருத்தம்காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல; கடைப்புவியில்தீட்டுப்புகழ்ப் பெருக்காளர் செழுநுகத்தோடு உழும்பகடுபூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகள்மங் கலக்கயிறே! 

மங்கல நாண் பூட்டும் நாளை தாலி கட்டும் நாளை சோதிடத்தால் நாண் அணிவிக்கும் ஆண் பெண் பொருத்தம் நாள் பொருத்தம் ஆகியவற்றைப் பார்க்கும் சோதிடக் கயிறு கயிறு அல்ல உழவர் நுகத்தடியில் எருதினைப் பூட்டும் கயிறே உலகினைக் கட்டிக் காக்கும் கயிறு.

தடுத்த நெடு வரையாலும் தடவரைகள் எட்டாலும் உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?எடுத்த புகழ்ப் பெருக்காளர் எழு நுகத்தோடு இணைப்பகடு தொடுத்த தொடை நெகிழாதேல் உலகு தொடை நெகிழாதோ! -10-

8 மலையரணாலும்  கடல் அரணாலும்  உலகினைக் காப்பாற்ற முடியாது  உழவர் எருதினை நுகத்தில் பூட்டும் தொடை அவிழாமல் இருந்தால் மட்டுமே  உலகினைக் காப்பாற்ற முடியும். 

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலை யனைத்தும் ஓதுவார் எல்லாரும் உழுவார் தம் தலைக் கடைக்கே!கோதைவேன் மன்னவர் தம் குடை வளமும் கொழு வளமே ஆதலால் அவர் பெருமை யாருரைக்க வல்லாரே! -11-

வேதநூல் முதலானவை கலைகள் -அத்தகைய கலைகள் பலவற்றையும் ஓதுவார் எல்லாரும்  உழுவார் தலைக் கடை வாயிலுக்கு வந்தாக வேண்டும் -மன்னர் வெண்ணஃகொற்றக் குடைக் கீழ் இருக்ககும் வளமும் கொழு நிலத்தை உழுவதால் பெற்றிருக்கும் வளமே -அதனால் உழவர் பெருமையை எடுத்துரைக்க யாரால் முடியும்

செழுவான மழை வாரித் திங்கடொறும் பொழிந்தாலும்,கெழுவார நில மடந்தை கீழ் நீர் கொண் டெழுந்தாலும்,வழுவாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைக் கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாவே. -12-

திங்கள் மும்மாரி பொழிந்தாலும் நிலத்தில் ஊற்று சுரந்தாலும் காவிரி நாட்டார் கலப்பைக் கொழுவாகிய ஆணி கொண்டு உழவுத் தொழில் செய்யா விட்டால் உலகம் சிறப்புப் பெறாது

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும், பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே
–13-

பஞ்சம் போக்குபவர் வேளாளர் -அவர் வயலில் நாற்று முடி நட்டுத் திருந்தினால்
வேந்தர் முடி திருந்தும் -வேந்தரின் செங்கோலை நடத்தும் கோல் -ஏர் மண்ணைத் தள்ளும் தாற்றுக்கோலே

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே? ஞான மறையவர் வேள்வி நலம் பெறுவ தெவராலே? சேனை கொடு பொரு மன்னர் செருக் களத்தில், செருக்குமத யானை வலி எவராலே? இவர் எருதின் வலியாலே!-14-

வானம் பொழிந்தாலும் வளம் பெருகுவது எதனால் மறையவர் வேள்வி எதனால்
மன்னர் போர்க் களத்தில் போர் யானையின் வலிமை எதனால் உழவு செய்யும் எருதுகளின் வலிமையால்

கண்ணுதலோன் தனது திருக் கண்டத்திற் படிந்த கறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறை யென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ் சீர்ப் பெருக்காளர் எருது சுவல் இடு கறையே
!-15-

சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர்
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது மாட்டின் கழுத்தில் ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை.

ஊட்டுவார் பிறருளரோ? உலகு தனில் உழு பகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர் புகழும் புகழாமோ?
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்கு நிகர்
காட்டுவார் யார் கொல்? இந்தக் கடல் சூழ்ந்த வையகத்தே!
-16-

உணவு ஊட்டுவார் உழவரைத் தவிர வேறு யார் உண்டு ஏரில் பகடு பூட்டுவார் புகழ் அல்லாமல் வேறு எந்தப் புகழால் பிறருக்குப் பயன் வெற்றியில் மேம்பட்டவராக இவரை அல்லாமல் வேறு யாரைக் காட்டுவது

பார் பூட்டும் திசை யனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர் பூட்டும் காமனுந்தன் பொரு சிலை மேற் சரம் பூட்டான்
கார் பூட்டும் கொடைத் தடக் கைக் காவேரி வள நாடர்
ஏர் பூட்டின் அல்லது மற்(று) இரவியும் தேர் பூட்டானே! –
-17-

பகடு ஏர் பாரம் இழுத்தால் அல்லாமல் விளைச்சல் இல்லை -விளைச்சல் உண்ணும் மக்கள் உடலில் தெம்பு இல்லை எனவே பகடு பூட்டாவிட்டால் -காமன் அம்பு பூட்டான் ஏர் பூட்டா விட்டால் சூரியன் தேர் வருவதால் என்ன பயன்

கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனிற் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறன் நடக்கும் திரு வறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே! -18-

கார்மேகம் நடக்கும் காராளர் ஏர் நடக்கும் எனில், இயல் இசை நாடகம் நடக்கும்
சீர், திறன், அறத்தின் செயல், உலகியல் – நடக்கும் பசி மட்டும் நடக்காது

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின் செல்வர் என்றே யித் தொல்லுலகில்
எழுதுண்ட மறை சொன்னால் இவர் ஏவன் மள்ளர்க்கும்
பழுதுண்டோ? பார் வேந்தர் படை மன்னர் ஒப்பாரோ?
-19-

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாரும் தொழுதுண்டு பின் செல்வர்
என்று திருவள்ளுவர் மறை எழுதிச் சொல்கிறது -இந்த மள்ளருக்குப் பழுது உண்டோ வேந்தர் இவருக்கு ஒப்பு ஆவாரோ

அலகிலா மறை விளங்கும், அந்தணர் ஆகுதி விளங்கும்
பல கலையாம் தொகை விளங்கும், பாவலர் தம் பா விளங்கும்,
மலர் குலாந் திரு விளங்கும், மழை விளங்கும், மனு விளங்கும்,
உலகெலாம் ஒளி விளங்கும், உழவர் உழும் உழவாலே!
-20-

உழவர் உழும் உழவால் வேதம் விளங்கும் வேள்வி விளங்கும் கலைகள் விளங்கும்
பாவலர் பாடல் விளங்கும் திரு விளங்கும் மழை விளங்கும் மனுநெறி விளங்கும்
உலகின் புகழ் விளங்கும்

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே! – 21

பழமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட உழும் கலப்பை உயர்வானது -உழவர் பெருஞ் சிறப்புக்கு உரியவர் இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில் உலகம் செல்லும். -படைச்சாலில் விதை இடுவர் அது விளையும் விளைவைப் பெற வழிச் செல்வர்

மட்டிருக்கும் திரு மாதும், மகிழ்ந்திருக்கும் புவி மாதும்,
முட்டிருக்கும் சய மாதும், முன்னிருப்பார் முது நிலத்து
விட்டிருக்கும் கலி தொலைத்த விறல் தடக் கை வேளாளர்,
கொட்டிருக்க ஒரு நாளும் குறை யிருக்க மாட்டாதே!
– 22

திருமகள் புவிமகள் வெற்றிச் செல்வி உழவர்க்குத் துணையாக முன் வந்து நிற்பர் பஞ்சம் போக்கும் வேளாளர் முன் வந்து நிற்பர் -அவர்கள் கையில் தொத்தும் மண் வெட்டி இருக்கும் போது அவர்களுக்கு ஒரு குறையும் இருக்க முடியாது-

மேடு வெட்டி வளப் படுத்தி மெய் வரம்பு நிலை நிறுத்திக்
கோடு வெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்,
பாடு வெட்டிக் குறும்படக்கப் படை வேந்தர் அவர் விளைத்த
காடு வெட்டிப் பகை யறுத்துக் கலி களைய மாட்டாரே
.–23

மேட்டை வெட்டிச் சமநிலமாக வளப்படுத்தி வரப்பு கட்டி, கங்கு வெட்டி, பயிரிட்டு,
வேளாளர் உலகைக் காப்பாற்றா விட்டால் வேந்தர் பகைவரைச் சாய்த்து பஞ்சம் போக்குவது எப்படி?

எழுதொணா மறை விளங்கும், இயல் இசை நாடகம் விளங்கும்,
பழுதிலா அறம்விளங்கும், பார் வேந்தர் முடி விளங்கும்,
உழுதுசால் பல போக்கி உழவருழக் கிய வெங்கால்
புழுதியால் விளையாத பொருள் உளவோ புகலீரே!
–24-

மறை விளங்கும் இயல் இசை நாடகம் விளங்கும் அறம் விளங்கும் வேந்தர் சூடும் முடி விளங்கும் உழவர் உழுது உழக்கிய புழுதியால் விளையாத பொருள் என்ன இருக்கிறது?

மெய் வரம்பா நிற்கின்ற வேத நூல் நெறி வரம்பாம்,
இவ் வரம்பும் அவ் வரம்பும் இப் புவிக்கு வரம்பாமோ?
பொய் வரம்பு தவிர்த்தருளும் புவி மடந்தை திருமைந்தர்
செய் வரம்பு திருத்தாரேல் திசை வரம்பு திருந்தாதே!
–25-

வேத நூல் நெறி மக்கள் வாழ்க்கைக்கு வரம்பு என்பர் மற்றும் அந்த வரம்பு, இந்த வரம்பு என்று கூறுவர் இவையெல்லாம் பொய்யான வரம்புகள் உழவர் வயலில் நிறுத்தக் கட்டும் வரம்பே (வரப்பே) உதவும் வரம்பு.

அடுத்திரக்காக் கொடை சீர்த்தித் தாளாளர் அணி வயலில்
எடுத்து எருக் கொண்(டு) எழில்வளர இசையாரேல், இவ் வுலகில்
தொடுத்திருக்கும் அறத் துறையும், தொழுமிருக்குமகத் துறையும்,
படுத்திருக்கும் அவை யல்லால் பரிந்திருக்க மாட்டாவே!
-26-

தாளாளர் வயலில் எரு போடா விட்டால் இந்த உலகில் அறத் துறை எங்கே
அகத் துறை எங்கே இவை படுத்திருக்கும் அல்லவா பரிவுடன் இருக்க மாட்டா

அடுத்திறக்கிப் பெருங் கூடை அளவு படவே எருவை
எடுத்திறக்கித் தலை மேலே கொண்டவர் தாம் இடை யிடையே
கொடுத்திறக்கி நில மகளைக் கும்பிட்டு வணங்காரேல்
படுத்திறக்கித் திரிவார் தம் பழி மறுக்க மாட்டாரே!
– 27

எருவைப் பெரிய கூடையில் தூக்கி வருவர் -தலையிலுள்ள கூடையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு எரு அளவாகப் பரந்து நிலத்தில் இறங்கும்படி உடலை விரைவாக எவ்விச் சுழற்றுவர் கொஞ்சமாக இருக்கும் போது இறக்கிக் குனிந்து கையால் விசிறுவர் -எரு விழுந்த நிலத்தைத் தொழுவர். – பிறர் பழித்தால் ஏற்றுக் கொள்வர்.

வெறுப்ப தெல்லாம் பொய்யினையே, வேளாளர் மெய்யாக
ஒறுப்ப தெல்லாம் கலியினையே, உள்ளத்தால் வெள்ளத்தால்
செறுப்பதெல்லாம் புல்லினையே, செய்யின் வளம் அறிந்தறிந்து
மறிப்ப தெல்லாம் சேற்றினையே, வளம் படுத்தற் பொருட்டாலே
! 27 (வேறு)

வேளாளர் வெறுப்பது பொய் -தண்டிப்பது பஞ்சம் -அழிப்பது பயிரிடையில் முளைக்கும் புல் -புறட்டிப் போடுவது சேறு -இவை வயலையும், மக்களையும் வளப் படுத்துவதற்காக.

வரம்படிக்க மலர் பரப்பி வயலடிக்க வரம்பு தொறுங்
குரம்படிக்க மணி கொழிக்கும் குலப் பொன்னித் திரு நாடர்,
பரம்படிக்க உடைந்தளைந்த பழனச் சேற்(று) உரமன்றி
உரம்படிக்க பிறிதுண்டோ உண்டாயின் உரையீரே!
– 28

வரம்பு அடிக்க வயலை அடிப்பர் -குரம்பு அடிக்க நென் மணி கொழிக்கும் -பரம்பு அடிக்க சேறு சமமாகும்-எரு உரம்பு அடிக்க எல்லா நலமும் உண்டாகும்

பத்தி விளைத்து இருந்தெய்வம் பணிவார்க்கும், தற் பரமாம்
முத்தி விளைத்திடும் ஞான முதல்வருக்கும், இன்னமுதம்
வைத்து விளைத்திடுவார்க்கும், வல்லவர்க்கும், பெருக்காளர்
வித்து விளைத்திடிலன்றி வேண்டுவன விளையாவே
. -29-

பத்தி விளைய உரையாற்றுவோர்-தெய்வம் பணிவார் -முத்தி விளையத் தவம் செய்வோர் -ஞான முதல்வர் -உணவு தருவோர் வல்லவர் ஆகியோர் தரும் விளைச்சல்கள் எல்லாமே உழவர் விளைச்சல் இல்லாவிட்டால் விளையாது

மறை மயங்காது, அருள் விளங்கும் மதி மயங்காது, திறல் வேந்தர்
இறை மயங்கா, மனு நெறியும் இன மயங்கா, யாவர்க்கும்
நிறை மயங்காது, ஒரு நாளும் நிலை மயங்காது, உலகமெல்லாம்
முறை மயங்கா, அவர் வயலின் முளை மயங்காத் திறத்தாலே
.-30-

உழவர் விதைத்த பயிர் முளைகள் நெருக்கமாக மயங்காமல் வளர்ந்தால்
மறைகள், அருள் தரும் எண்ணம், இறை வழங்கும் நிலை, மனுநெறி, மக்களின் நிறையுடைமை, உலக முறைமை எதுவும் மயக்கம் இல்லாமல் இருக்கும்

ஏறு வளர்த்திடும் முகிலும் இசை வளர்க்கும் எனுரைப்பின்
ஆறு வளர்த்திடுவது சென்(று) அலை கடலைத் தானன்றோ!
வேறு வளர்பபன கிடப்ப வேளாளர் விளை வயலின்
நாறு வளர்த்திடிலன்றி ஞாலமுயிர் வளராதே!
-31-

முகில் இடியை வளர்க்கும் -ஆறு கடலை வளர்க்கும் -வயலில் நாற்று வளர்ந்தால் அன்றி ஞாலம் வளராது

வெறுத்த மீன் சனி புகிலென், வெள்ளி தெற்கே யாயிடிலென்,
குறித்த நாள் வரம்பழியாக் குலப் பொன்னித் திரு நாடர்,
மறித்து நாட்டிட நின்ற வள வயலினிடை நாற்றைப்
பறித்து நாட் கொண்டதற்பின் பார் பசிக்க மாட்டாதே!
–32-

எந்த மீன் -நட்சத்திரம் சனிக்குள் புகுந்தால் என்ன -வெள்ளி தெற்கே போனால் என்ன
வயலில் நாற்றைப் பறித்து நடவு செய்யா விட்டால் மக்கள் பசி தீராது

மாணிக்கம் முதலாய மணி யழுத்தித் தொழில் சமைத்த
ஆணிப் பொன் முடி வேந்தர் அணி முடியும் முடியாமோ?
பேணிப் பைங் கோல முடிப் பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்கும் திசைப் புறத்தும் செங்கோன்மை செல்லாதே! –
-33-

வேந்தர் அணியும் மாணிக்கம் பதித்த முடி முடி ஆகுமா உழவர் சுமக்கும் பயிர் முடி இல்லா விட்டால் அரசர் செங்கோல் செல்லாது

தென்னன் முடி சேரன் முடி தேங்கு பொன்னி நாடன் முடி
கன்னன் முடி கடல் சூழ்ந்த காசினியோர் தங்கள் முடி
இன்ன முடி அன்றியும் மற்று எடுத்துரைத்த முடிகள் எல்லாம்
மன்னு முடி வேளாளர் வயலின் முடி கொண்டன்றோ
–34-

தென்னன் சேரன் சோழன் கன்னன் மற்றும் உலகிலுள்ளோர் சூடும் முடிகள் எல்லாமே வேளாளர் வயலில் பயிர் முடி நட்டால் தான் சிறக்கும்

வெய்ய கலி வலி தொலைக்கும் வேளாளர் விளை வயலில்
செய்யின் முடி விளம்பாரேல் விளம்புவன சில உளவோ?
மையறு மந்தணர் விளம்பார் மறை மனு மன்னவர் விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந் தமிழ் நூல் விளம்பாரே.
-35-

பஞ்சம் போக்குபவர் வேளாளர் அவர் நாற்று முடி தடவு செய்யா விட்டால் அந்தணர் மறை சொல்லார் மன்னவர் மனு நெறி இல்லை புலவர் தமிழ் பாட மாட்டார்

மெய்ப் பாங்கு படக் கிடந்த வேத நூல் கற்றாலென்?
பொய்ப் பாங்கு படப் பிறரைப் புகழு நூல் கற்றாலென்?
செய்ப் பாங்கு படக் கிடந்த செழுஞ் சாலி நன்னாற்றைக்
கைப் பாங்கு பகுத்து நடக் கற்றாரே கற்றாரே! –
36-

வேத நுல் கற்றால் என்ன பயன் -பிறரைப் புகழ்ந்து பாடும் தமிழ்நூல் கற்றால் என்ன பயன் -நெல் நாற்று நடக் கற்கா விட்டால் பயனில்லை

உலகத்தில் பகடுழக்கும் ஓங்கு முடித் திறல் வேந்தர்
அலறத்தின் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்தில் பகடுழக்கும் உயர் முடி கொள் வேளாளர்
சிலவருழச் சிலவர் நடும் அவை யன்றோ திரு முனையே
! -37

வேந்தர் யானை நடக்கும் போர் முனை ஒரு முனை ஆகுமா -வேளாளர் சிலர் உழ, சிலர் நடவு செய்யும் வயல் முனைவு அன்றோ முனை

ஏராலே சேறாக்கி எருவாலே கருவாக்கி
நீராலே பைங் கூழை நிலைப்பிப்பார் தமை யன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசி தீர்வார் அகலிடத்தில் பிறந்தோரே?
-38-

ஏர் உழுது சேறாக்கி எரு இட்டுப் பயிர் விளைவிப்பார் இல்லாமல் மழையாலோ, காவிரி ஆற்றாலோ பசியைப் போக்க முடியுமா

அந்தணர்க்கு வேத முதல். அரசர்க்கு வெற்றி முதல்,
முந்திய சீர் வசியருக்கு முதலுழவாம், மூதுலகில்
வந்த வுயிர் தமக்கெல்லாம் மருந்தாக வைத்த முதல்
செந் தமிழ்க்கு முதலாம் அத் திருவாளர் செய் முதலே!
-39-

அந்தணர்க்கு வேதம் முதல் -அரசர்க்கு வெற்றி முதல் -வணிகர்க்கு உழவு முதல்
உலகுக்கு நெல் மருந்து முதல் -செந்தமிழ் வளர்க்கும் முதலும் வேளாளர் நடும் நெல் முதலே

சீர் வளரும், மறை வளரும், திறல் வேந்தர் முடி வளரும்,
பேர் வளரும் வாணி பத்தும் பெரு நிதியம் மிக வளரும்,
ஏர் வளரும், திரு வளரும், இசை வளரும், கடல் சூழ்ந்த
பார் வளரும், காராளர் பயிர் வளரும் திறத்தாலே!
–40-

பயிர் வளரும் திறத்தால் -சீர் வளரும் மறை வளரும் -வேந்தர் முடி வளரும்
வணிகம் வளரும் திரு வளரும் இசை வளரும்

காற்று மேல் வருகின்ற கார் விடினும், கடல் சுவறி,
யாற்று நீர் அற வெள்ளி அரசனும் தெற்காயிடினும்,
ஏற்றமே கொடு நாளும் இறைத் துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர் வளர்த்தல் காராளர் தங்கடனே-
41-

காற்று வந்து கார் மேகம் பெய்யாமல் போனாலும் ஆற்று நீர் வறண்டு போனாலும் ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் காராளர் கடமை

கலை யிட்ட மறை வேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலை யிட்ட புயத் தரசர் மணி மகுடம் சூட்டுவதும்,
தலை யிட்ட பொருள் நான்கும் தலை நீட்டப் படுவதுவும்,
நிலை யிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே
-42-.

மறையோர் வேள்வி செய்வதும் அரசர் முடி சூடுவதும் அறம், பொருள், இன்பம், வீடு – நான்கும் தலை காட்டுவதும் ஏற்றத் துலையில் இறைக்கும் நீரால் தான்

கெட்டாரைத் தாங்குதலால், கேடு படாத் தொழிற் குலத்தோர்
ஒட்டாரென்(று) ஒருவரையும் வரையாத உயர் நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோங்கும் பசிய கலப் பைங்கூழை
நட்டாரே வையமெல்லாம் நலந் திகழ நட்டாரே!
-43-

கெட்டாரைத் தாங்குவர் யாருக்கும் கெடுதி செய்யாத தொழில் புரிபவர் தன்னோடு ஒட்டாதவர் என்று யாரையும் கொள்ளாத உயர் நலம் கொண்டவர் உலகியல் பசியைப் போக்குவதே இதற்காகவே பயிர் நடுவார் இதனால் உலக மக்களை நட்டவர் உழவர்களே

கார் தாங்கும் காவேரி நதி தாங்கும் காராளர்
ஏர் தாங்கு வாரன்றி யாவரே தாங்க வல்லார்?
பார் தாங்கு மன்னுயிரின் பசி தாங்கும் பைங்கூழின்
நீர் தாங்கு வாரலரோ நிலந் தாங்கு கின்றாரே!
–44-

காவேரியைத் தாங்குவது கார் பொழியும் மழை காவேரி தாங்குவது காராளரை. -இவர் ஏர் தாங்குவார் இவரன்றி உலகைத் தாங்க வல்லலார் யார் உயிரின் பசியைப் தாங்குவது பயிர் பயிரின் பசிக்கு நீர் தருபவர் காராளர்

வளைகளையும், மணிகளையும், மலர்களையும், வரும் பலவின்
சுளைகளையும் கொடு கரைக்கே சொரி பொன்னித் திரு நாடர்,
விளை களையுள் செஞ்சாலி வேரூன்றிக் கோடு கொள்ளக்
களை களையா விடில் வேந்தர் கலி களைய மாட்டாரே.
–45-

வளை, மணி, மலர், பலவின் சுளை முதலானவற்றைக் கரையில் சேர்க்கும் ஆறு பொன்னி -பொன்னி நாட்டில் களை களைந்து நெல்லம் பயிர் வேரூன்றாவிட்டால் வேந்தர் பஞ்சம் போக்க முடியாது

திருவடையும், திறலடையும், சீரடையும், செறிவடையும்,
உருவடையும், உயர்வடையும், உலகெலாம் உயர்ந்தோங்கும்,
தருவடையும் கொடையாளர் தண் வயலில் செஞ்சாலி
கருவடையில் பூதலத்தில் கலி யடைய மாட்டாதே!
-46-

திரு, திறல், சீர், செறிவு, உரு, உயர்வு அடைய வயலில் நெல் கருப் பிடிக்கா விட்டால் பஞ்சம் போக்க முடியாது

ஏற்றேறும் அரன் சிறப்புக்(கு) எழிலேறும் மகத்து அழல்கள்
மாற்றேறும் அரசர் முடி வளர்ந்தேறும் வளமை மிகும்
ஊற்றேறும் குலப் பொன்னி உறைநாடர் இடும் சாலி
ஈற்றேறும் போது கலி ஈடேற மாட்டாதே
.-47

பொன்னி நாட்டு உழவர் வயலில் விதைத்த நெல் ஈடேறும் -அதனால் பஞ்சம் நீங்கும் அரசன் முடி வளம் பெறும் சிவனுக்கு வேள்வி சிறக்கும்

முதிராத பருவத்தும், முற்றிய நல் பருவத்தும்,
கதிராகி உயிர் வளர்ப்ப(து) இவர் வளர்க்கும் கதிரன்றோ!
எதிராக வருகின்ற எரி கதிரும், குளிர் கதிரும்
கதிராகி உயிர் வளர்ப்ப(து) உண்டாயிற் காட்டீரே! –
48-

நாம் முதிராத பருவத்திலும் முதிர்ந்த பருவத்திலும் நெல் கதிராக மாறி நம் உயிரை வளர்க்கும்-எரி கதிரோ குளிர் கதிரோ உணவாகி நம் உயிரை வளர்க்க முடியுமா

அலை வளையும், புவி வேந்தர் அங்கையில் தங்கிய வீரச்
சிலை வளையும், மதன் கருப்புச் சிலை வளையும், கொடுங் கலியின்
தலை வளையும், காராளர் தண் வயலில் செஞ்சாலிக்
குலை வளையும் பொழுதினிற் செங் கோல் வளைய மாட்டாதே!
–49-

வேந்தர் வில் வளையும் -மன்மதன் கரும்பு வில் வளையும் -கலி என்னும் பஞ்சத்தின் தலை வளையும் எதனால் வேளாளர் வயலில் நெல்லங்குலை வளையவதால்-இதனால் செங்கோல் மட்டும் வளையாது

அறங் காணும், புகழ் காணும், அருமறையின் ஆகமத்தின்
திறங் காணும், செயங் காணும், திரு வளர்க்கும் நிதி காணும்,
மறங் காணும், கருங் கலியின் வலி தொலைத்த காராளர்
புறங் காணுஞ் சோறிட்டுப் புறங் காணப் புகுந்திடினே-
-50-

நெல் விளைந்து சோறிடக் கண்டால் மேலே சொன்ன அனைத்தும் காணலாம்

மாயனார் வடிவாளும், மகபதிவச் சிரவாளும்,
தாயனார் அரிவாளின் தகைமை பெறுந் தன்மையவேல்,
தூயனார் அவர் வழியோர் சுடரரிவாட் கிணையென்ன
வாயினாற் புகலுதும் யாம் மன்னரொரு வாளினையே.
–51-

வடிவாள் கூர்மையா ஒளி -இதனால் மாயவனுக்குச் சிறப்பு -சிரவாள் தலை ஒளி
சிவன் தலையில் கங்கை, நிலவு சூடிச் சிறப்பினைப் பெற்றார் -அரிவாள்-அரியப்பட்ட ஒளி பிரமன் தலை ஒன்று அரியப்பட்டுச் சிறப்பினைப் பெற்றார் -மன்னன் கையில் போர் வாள் ஏந்திச் சிறப்பினைப் பெற்றான் -இவை யெல்லாம் தூயனார் உழவர் கையில் இருக்கும் நெல் அறுக்கும் அரிவாளுக்கு இணை ஆமோ வாயைத் திறந்து சொல்லுங்கள்

தோட்டியல் பூங் குழற் பெரிய பிராட்டிக்கு ஈராழிச் சொல்
பாட்டியல் சீர் பெற வளித்த பரமருவப் புற முன்னோர்
காட்டிய நென் முளை யறுத்தார் கிளை யறுத்தார்
ஊட்டியறுத் தார் மரபோர் ஊட்டவறுத் தாருலகே. –
-52-

உழத்தி பெரிய பிராட்டி ஈர நெல் அறுக்கிறாள் -திருமகள் பெரிய பிராட்டி பாற்கடலில் இருக்கிறாள் -பாட்டியல் சீர் பெறும் உழத்தி நெல் அறுக்கிறாள் -பாட்டியல் சீர் பெறும் உமை பரமன் பக்கம் இருக்கிறாள் -முளை நெல்லை அறுத்தவர் தம் கிளைஞரை அறுப்பர் -ஊட்டி அறுக்கும் மரபு அரச மரபு அரசர்க்கு ஊட்ட உழத்தியர் நெல் அறுத்தனர்

அருவுண்ட பொற் கதிரை நெற் கதிர் நேர் ஆதுலர்க்குப்
பரிவுண்ட பெரு வார்த்தை புதிதன்று பழமைத்தே!
விரிவுண்ட கடற் படியும் மேகங்கள் மறுத்தாலும்,
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே!
–53-

அறுத்த நெல்லை உழவர் ஆதுலர்க்கு (கேட்போர்க்கு) வழங்குவர் கடல் படியும் மேகம் பெய்ய மறுத்தாலும் உழவர் வழங்க மறுப்பதில்லை

கோடு வரம் பிடை யுலவும் குலப் பொன்னித் திரு நாடர்
நீடு பெரும் புகழ் வளரும் நில மடந்தைத் திரு மக்கள்
பீடு வரம் பிடை வயலில் பிறை வாளில் கடிகின்ற
சூடு வரம் பெறாதேல் சுருதி வரம் பேறாதே!-
54-

பொன்னி நீர் வரப்புள்ள வயலில் பாயும் உழவர் நிலமடந்தையின் திருமக்கள் அவர் வயலில் நெற்கட்டுகள் (சூடு) இல்லை என்றால் அந்தணர் சுருதி ஓதுதல் நடைபெறாது

சீரான விறல் வேந்தர் செரு விளைத்துச் செல்வதுவும்,
பேரான மநு நீதி பிறழாது விளங்குவதும்,
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறி நடத்தும்
காராளர் விளை வயலிற் வளம் பண்ணும் பொருட்டாலே
. –55-

வேந்தர் போரிடுவதும் மனுநீதி பிறழாமல் ஆள்வதும் உழவர் நீர் பாய்ச்சி, நெல் விளைவித்து, வயல்வளம் பெருக்குவதற்காகவே

கடி சூட்டு மலர் வாளிக் காமனடல் சூடுவதும்,
கொடி சூட்டு மணி மாடக் கோபுரம் பொன் சூடுவதும்,
முடி சூட்டி வய வேந்தர் மூவுலகும் இறைஞ்சு புகழ்
படி சூட்டி யிருப்பதெல்லாம் படு சூட்டின் வலியாலே,
–56-

காமன் மலர் அம்பு எய்வது கோயில் கோபுர மணிமாடம் பொன்னால் வேயப்படுவது வேந்தர் முடி சூட்டிக் கொள்வது இவை யெல்லாம் உணவுக்குப் படி யளக்கும் நெல் கட்டுச் சூடு வயலில் பெருகுவதனாலேயே

முருட்டின் மிகு வெம் பகைவர் முரண் கெடுத்திவ் வுலக மெல்லாம்
தெருட்டி நெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்,
வெருட்டின் மிகுங் கருங் கலியை வேரோடும் அகற்றுங் கோல்,
சுருட்டி மிகத் தடிந்து செந்நெற் சூடுமி தித் திடுங்கோலே
. –57

முரண் பகை கெடுத்து செங்கோல் செலுத்தும் கோல் எது -கலி என்னும் வறுமையைப் போக்கும் கோல் எது -நெல்லைச் சுருட்டிப் பிடித்து அறுத்து அதன் சூட்டை அடித்து உதறி மாடு விட்டு மிதிக்கும் கோல்

காராளும் கரி யினமும் பரி யினமும் கை வகுத்துப்
போராளும் முடி வேந்தர் போர்க் கோலம் எந் நாளும்
சீராளும் செழும் பொன்னித் திரு நாடர் புகழ் விளக்கும்
ஏராளும் காராளர் இவர் செய்யும் போராலே ! –
-58-

வேந்தர் யானை, குதிரை நடத்தி, போர் புரிவது எதனால் ஏர் நடத்தி, காராளர் நெல் அடிக்கும் போரால்

பார் வேந்தர் பெருஞ் செல்வம் பழுது படாது ஒரு நாளும்
ஏர் வேந்தர் பெருஞ் செல்வம் அழிவு படா திருத்தலினால்
தேர் வேந்தர் போர் களத்துச் சிலர் வெல்வர் சிலர் தோற்பர்
ஏர் வேந்தர் போர்க் களத்துள் இரப்பவரும் தோலாரே
–59-

பார் வேந்தர் செல்வம் பழுது படாமல் இருப்பது ஏர் வேந்தர் செல்வம் அழியாமல் இருப்பதால் தான் தேர் வேந்தர் போர் களத்தில் சிலர் வெல்வர். சிலர் தோற்பர் ஏர் வேந்தர் போர்க் களத்தில் இரந்து கேட்போரும் தோற்பதில்லை

வளம் பாடும் குடை மன்னர் மத யானை படப் பொருத
களம் பாடும் பெருஞ் செல்வங் காசினியிற் சிறந்தன்று!
தளம் பாடும் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம் பாடும் பெருஞ் செல்வங் காசினியிற் சிறப்புடைத்தே! —
60-

யானைப் போர்க்களத்தைப் பாடுவதை விட காராளர் போர்களத்தைப் பாடுவது சிறப்புடையது

நாவலோ நாவலென நாடறிய முறை யிட்ட
ஏவலோர் போர்க் களத்தில் எதிர் நிற்பர் முத் தமிழ் தேர்
பாவலோர் இசை வல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோர் எல்லோரும் கை யேற்கும் பொருட்டாலே! –6
1-

“நாவலோ நாவல்” நெல் அடிக்கத் தொடங்கும் போது உழவர் இவ்வாறு குரவை ஒலி எழுப்புவர் -அதனைக் கேட்டதும் போர் மறவர் முத்தமிழ்ப் பாவலர் இசை வல்லோர் 18 கணத்தவர் அனைவரும் கை யேந்தி நிற்பர் உழவர் நெல் வழங்குவர்

எடுத்த போர்க் களத்தரசர் இனைப் பகடு சில நடத்திப்
படுத்த போர் பயந்ததனால் பார் தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்த போர் உழவளரும் இனைப் பகடு சில நடத்திப்
படுத்த போர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே!
–62-

உழவர் பகடு (எருது) பிணையல் நடத்தி நெல் அடிப்பர் -அதன் வளத்தால் மன்னரின் பகடு (யானை) போர்க்களத்தில் நடக்கும்

விற் பொலியும் பெருங் கீர்த்தி வேளாளர் விளை வயலில்
நெற் பொலி யுண்டாமாகின் நில மகளும் பொலிவுண்டாம்
பொற் பொலி வுண் டாமுலகம் புகழ்ப் பொலி வுண் டாம் புலவோர்
சொற் பொலி வுண் டாங் கலியின் துயர் பொலிய மாட்டாதே.-
-63-

ஒளி பொலியும் பெருஞ்சிறப்பபு கொண்டவர் வேளாளர் -அவர் வயலில் நெல் பொலியுமாயின் நிலமகள் பொலிவாள் உலகில் பொன் பொலியும் புலவர் சொல் பொலியும் கலி என்னும் வறுமை பொலியாது

தன்னிகரொன் றொவ்வாத தலம் வளர்க்கும் பெருக்காளர்
மன்னு பெருங் களத்தினிடை மாருதத்தில் தூற்றி விடும்
செந் நெல்லைப் பொலிவாலே செம் பொன் மலை எனக்குவித்தே
அந் நெல்லின் பொலிவாலே அவனியுயிர் வளர்ப்பாரே! –
64-

உழவர் நிகரில்லாத் தலம் வளர்ப்பவர் அவர் களத்தில் காற்றில் நெல் தூற்றுவர் தூற்றிய நெல்மலை குவியும் அந்தக் குவியல் நெல்லால் உலகின் உயிரினங்களை வளர்ப்பர்

ஆடையா பரணங்கள் அணிந்து முடி சுமந்திடலும்
ஓடையா னை யினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டன நீங்காப் பெருங் கழனிப் பெருக்காளர்
கூடையா னது கையிற் கொண்டு களம் புகுந்திடினே. —
65-

அன்னம் நீங்காக் கழனி -கழனி உழவர் உழவர் களத்தில் ஏற்போர் கூடை கூடை கொண்டு களத்தில் புகுந்து உலகோர் நெல்லைப் பெற்றுக்கொள்வதால் அரசன் ஆடை அணி பொலிய முடி சூடிக்கொள்வான் அவன் யானைக்கு ஓடை பொலியும்

வலி யாற்று மன்னவர்க்கும், மறையவர்க்கும், தேவருக்கும்,
ஒலி யாற்றும் பேருலகில் உய்ய வமு திடுங் கூடை,
கலி மாற்றி நயந்த புகழ்க் காராளர் தம்முடைய
பொலி தூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே!
–66-

மன்னவர் மறையவர் தேவர் பொலிவு பெற உழவர் அமுது தருவர் இவர் நெற்பொலி தூற்றும் கூடைக்கு நிகர் உண்டா

சீற்றங் கொள் கருங் கலியைச் செறுக்குங் கோல், செக தலத்துக்
கூற்றங் கொள் மனு நெறியை உண்டாக்கி வளர்க்குங் கோல்
ஏற்றங் கொள் வய வேந்தர்க்கு எப் பொருளும் கொடுத்துலகம்
போற்றுஞ் சொற் பெருக்காளர் பூங் கையினிற் பொலி கோலே.
–67-

உழவர் கைகள் நெல்பொலி தூற்றும் கோலே கலியின் செறுக்கை அறுக்கும் கோல் மனு நெறி உண்டாக்கி வளர்க்கும் கோல் வேந்தர்க்கு எல்லாம் கொடுத்துப் போற்றும் கோல்

திருத் தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத் தோட்டுப் புகழுக்கும் உரிமை முறை வளர்க்கின்ற
வரைக் கோட்டுத் திணி புயத்து வளர் பொன்னித் திரு நாடர்
விரைக் கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே!
–68-

உழவரின் நெல்விதைக் கோட்டையால் வேந்தர் கோட்டை இருக்கிறது பிரமன் உண்டாக்கும் உயிர்கள் வாழ்கின்றன

தளர்ந்துயிர் அத்தனைக்கும், தாளாளர், எண்டிசையும்,
வளர்ந்த புகழ் பெருக்காளர், வலிமையார் உரைப்பாரே?
அளந்துலகம் அனைத்தாளும் அரசர் வேதியர் புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைகள் உண்பாரேல்.
–69-

உழவர் உயிர்களுக்குத் தாளாளர் எங்கும் புகழை வளர்ப்பவர் இவர் வலிமையைச் சொல்ல வல்லார் ஆர் அரசர் அந்தணர் புலவர் எல்லாரும் சேரும் கல்லறை உழவர் களமே

அரியாதனத்தின் மேலிருந்தே அம் பொற் குடைக் கீழ் அரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும் பேறும் பேறே யல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் அளந்து தூற்றா நிற்பச் சிலர் அளந்து
புரியா நிற்பப் பெறும் பேற்றுக்(கு) அது நேரொக்கப் போதாதே! —
70-

அரசர் பக்கத்தில் இருந்து கொண்டு ஆணை செலுத்தும் பேறு பேறு அன்று -உழவர் களத்தில் நெல் தூற்றவும் நெல் அளக்கவும் பெறும் பேறே பெரும் பேறு

பார் வாழி! நான்மறை நூற் பருணிதராகுதி வாழி!
கார் வாழி! வளவர் பிரான் காவேரி நதி வாழி!
பேர் வாழி! பெருக்காளர் பெருஞ் செல்வக் கிளை வாழி!
ஏர் வாழி! இசை வாழி! எழுபத் தொன் பது நாடே!
–வாழ்த்து

பார் நான்மறை ஆகுதி கார் மழை வளவர் பிரான் காவேரி யாறு உழவர் கிளைஞர் உழவரின் ஏர் உழவரின் இசை 79 நாடுகள் -எல்லாம் வாழ்க

ஏர் எழுபது முற்றும்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


பலபட்டடைச்‌ சொக்கநாத பிள்ளை இயற்றிய ஸ்ரீ திருமாலிருஞ்‌ சோலை மலை ஸ்ரீ அழகர்‌ கிள்ளை விடு தூது–ஸ்ரீ உ. வே. சாமிநாதையர் (தொகுப்பு, குறிப்புரையுடன்)

June 25, 2024

உலா, கோவை, பிள்ளைத்தமிழ் போன்ற நூலமைப்புக்கள் தமிழுக்கே சிறப்பாக உரியன. தூதோ இந்திய மொழிகள் பலவற்றிலும் சில சில வேறுபாடான அமைப்புக்களுடன் காணப்படும். இங்ஙனம் பல மொழிப்புலவர்களும் விரும்பி நூல் செய்வதற்குரிய அமைப்பு முறை சிறந்ததாகவே இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.

வடமொழியில் தூது நூல்களை ஸந்தேசங்களென்றும் தூத காவ்யங்களென்றும் கூறுவர். அவை காப்பிய வரிசையிலே சேர்த்து எண்ணப்படுவன. காளிதாஸ் மகாகவியால் இயற்றப் பெற்ற மேக ஸந்தேசம் புலவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இனிய காப்பியமாக விளங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றிப் பல தூத காவியங்கள் வடமொழியில் எழுந் துள்ளன.

பிரபந்தத்திரட்டென்னும் இலக்கண நூல்,

“எகினமயில் கிள்ளை யெழிலியொடு பூவை
சகிகுயினெஞ் சந்தென்றல் வண்டு-தொகைபத்தை
வேறுவே றாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்
பூறிவா வென்றறூ து”-என்று தூதின் இலக்கணத்தை அமைக்கின்றது.
இதன்கண் தூது விடுவதற்குரிய பொருள்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்பத்தையும் இரத்தினச் சுருக்கம் என்னும் நூலொன்று,

” இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே
தூ துரைத்து வாங்குந் தொடை”-எனக் கூறுகின்றது.

அழகர்‌ கிள்ளைவிடு தூதென்பது .ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை
யில்‌ திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீ செளந்தர
ராஜப்‌ பெருமாளைக்‌ காமுற்ற தலைவி ஒருத்தி அவர் பால்‌ ஒரு
கிளியைத்‌ தூது விடுத்ததாகப்‌ பலபட்டடைச்‌ சொக்கநாத
பிள்ளை யென்னும்‌ புலவர்‌ இயற்றியது. இது காப்பு வெண்பா
ஒன்றையும்‌, 239 கண்ணிகளையும்‌ உடையது.

3.2 திருமாலிருஞ்சோலைமலை

திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத் திருமால் திருப்பதிகள் பதினெட்டனுள் ஒன்று. சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில் இதன் பெருமை சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. அந்நூலில் இளம்பெருவழுதியாரென்னும் புலவராற் பாடப்பெற்று, மருத்துவன் நல்லச்சுதனாரால் இசையமைக்கப்பெற்ற நோதிறப் பண்ணிலமைந்த பதினைந்தாம் பாடல் இத்தலப் பெருமையை விரிவாகக் கூறும் ; அப்பாடலின் பொருட் சுருக்கம் வருமாறு :

3.3 பரிபாடலிற் கண்ட செய்தி

‘அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்கரவாளம் முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்துரைத்த குன்றங்களைப் பொதுவகையால் சொல்லப் புகுந்தாற் பலவாம் ; அப்பலவற்றுள்ளும் நிலத்தில் உள்ளோரது பசித் துன்பத்தை நீக்கி, நிறைபயன்களெல்லா வற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள் சில ; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய தடாகங்களும் மேகம் படியும் சிகரங்களும் உள்ள குலவரைகள் சில சிறந்தன ; அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனும் பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது. துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளிதாகுமோ? அரிதிற் பெறும் துறக்கத்தை எளிதிற் பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலைமலையை ஏத்தக் கடவோம்.

‘பலதேவரது திருமார்பிலுள்ள வெண்கடப்ப மாலையைப் போல அருவியாக வீழ்வதனால் சிலம்பாறு அழகு பெறும். திருமாலிருஞ்சோலை யென்னும் பெயர் உலகமெல்லாம் பரவ, மகளிரும் மைந்தரும் காமத்தை விதைத்து விளைக்கும் யாமத் தியல்பையுடைய இருங்குன்றத்தில் இளவெயில் சூழ இருள் வளர்தலை யொத்துப் பீதாம்பரத்தையுடைய திருமால் பல தேவரோடு அமர்ந்து நிற்கும் நிலைமையை, மாந்தர்களே! தியானம் செய்ம்மின்; அம் மலையின் சிறப்பைக் கேண்மின் :

‘சுனைகளிலெல்லாம் நீலமலர் மலர அச்சுனையைச் சூழப் பொன்னிறமுள்ள அசோக மலர்கள் மலர்தலாலும் வேங்கை மலர்கள் மலர்தலாலும் பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஒத்த நிலையினதாயிற்று அம்மலை. இருங்குன்றென்னும் பெயர் பரவி உலகத்தில் பழையதாகிய புகழையுடைய அது தன்னைக் கண்டாரது மயக்கத்தை அறுக்கும் தெய்வம் ; அதனால் சென்று திருமாலைத் தொழும் ஆற்றலை இல்லாதீர்! அம்மலையைக் கண்டேனும் பணிமின்.

‘குட்டியால் தழுவப்பட்ட மந்தி பாயவும், முல்லை மலர் கற்பு நிகழ்ச்சியைக் காட்டவும், மயில்கள் அகவவும், குருக்கத்தியின் இலை உதிரவும், அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் அவ் விருங்குன்றத்தில் குகைக்குள் முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.

‘நும் மனைவியரோடும் தாய் தந்தையரோடும் குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி அக்குன்றத்தைத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.

‘தன் திருவுந்தியில் முன்பு உண்டாகிய கமலத்தை யொக்கும் கண்ணை உடையவனும், மேகம் இருள் மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க் கூட்டங்களின் பிறவித் துன் பத்தைக் களைவோனுமாகிய திருமால் அன்பு கொண்டு அக்குன் றத்தின்கண் எழுந்தருளி யிருக்கின்றான்.

‘திருமாலே! நீ பசுந் துழாய் மாலையையுடையை ; நீல மலையைப் போன்றாய்; மிக்க ஒளியினையுடையை ; ஒற்றைக் குழையையுடையை ; கருடக்கொடியை உடையை ; வளைந்த கலப்பையை உடையை ; தண்டு, சங்கு, சக்கரம், வில், அம்பு, பாராவளை, வாள் என்பவற்றை ஏந்தினை.

‘இங்ஙனம், வேதம் அவன் பெருமை ஈதென்று உரைத்தலால் யாமும் அவற்றுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத் திருமால் பலதேவரென்னும் இருவரையும் தொழுது அவ்விருங் குன்றத்தின் அடியில் வாழ்தல் எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக!’

இப்பரிபாடலால், முற்காலத்தில் இத்தலத்தே திருமாலோடு நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும் கோயில் கொண்டு எழுந்தருளி யிருந்தனரென்று தெரிகின்றது. அன்றியும், இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பாடப் பெற்ற இப்பரிபாடலில் உள்ள,

“இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது “-என்னும் பகுதி அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப் பாராட்டுதல் அறிதற்குரியது.

சிலப்பதிகாரச் செய்தி

சிலப்பதிகாரத்தில், மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு ஒரந்தணன் வழியிலே காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில் இம்மலையைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன :

“திருமால் குன்றத்துச் செல்வீராயின், அங்கே மிக்க மயக்கத்தைக் கொடுக்கும் பிலத்துவார வழி ஒன்று உண்டு. அங்கே புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் பெயரையுடைய மூன்று பொய்கைகள் உள. புண்ணிய சரவணத்தில் நீராடினால் இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமென்னும் இலக்கணத்தை உணரலாகும். பவகாரணி யென்னும் தீர்த்தத்தில் ஆடுவார் பழம்பிறப்பை உணர்வர். இட்ட சித்தியில் நீராடி நினைத்தவற்றை யெல்லாம் அடைதல் கூடும். அங்கே சிலம்பாற்றின் கரையின்கண் உள்ள கோங்க மரத்தின் நிழலிலே ஒரு தெய்வப்பெண் தோன்றி, ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும் இவை இரண்டும் ஒழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க் கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை உரைமின்; யான் இம் மலையடிவாரத்திலே வாழ்வேன் ; வரோத்தமை யென்னும் பெயருடையேன். யான் வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார் கூறுகின்றனரோ அவருக்கு யான் ஏவல் புரிவேன். நீவிர் உரைத்தீ ராயின் உமக்கு இப்பொழுது இப்பிலவாயிற் கதவைத் திறந்து தருவேன்’ என்று சொல்வாள். அவள் வினாவியவற்றிற்கு விடை கூறின் அவள் பிலம் திறந்துவிடுவாள். மேலே செல்லின் ஆங்கொரு பெண் தெய்வம் முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும் காட்டுவாள். அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் மனத்தால் நினைத்து ஜபித்து நீராடின் நற்பயனை அடைவீர்கள். அப்பொய்கையினால் உண்டாகும் பயனை விரும்பீராயின், அவற்றை நினையாது, அம்மலைமீது நின்றோனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தியானம் செய்யுங்கள். அங்கே துவஜஸ்தம்பத்தைக் காண்பீர்கள். அப்பெருமானுடைய திருவடி தரிசனம் பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்” (சிலப். 11 : 87-138, சுருக்கம்.)

இப்பகுதியால் இந்தத் தலத்தில் மூன்று பொய்கைகளும், சிறப்புடைய கோங்கமரம் ஒன்றும், பிலத்துவாரம் ஒன்றும் இருந்து வந்தனவென்று தெரியவரும். அன்றியும் சிலப்பதிகார காலத்தில் இத்தலத்தின் கண்ணே தெய்வப் பெண்கள் வாழ்ந்து வந்ததாக மக்கள் எண்ணி யிருந்தனரென்பதும் பெறப்படும்.

பிற நூல்கள்

பத்துப்பாட்டுள் முதலாவதாகும் திருமுருகாற்றுப்படையிலே முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளிய படைவீடு ஆறு கூறப்பட்டுள்ளன ; அவற்றுள் ஒன்றாகிய பழமுதிர்சோலை யென்பது இத்தலமே யென்று தெரிகின்றது. பழங்காலத்தில் இத்தலத்தே முருகக்கடவுள் திருக்கோயிலும் இருந்ததென்பதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதும் இருக்கின்றனவென்பர். சங்க காலத்துக்குப் பின் எழுந்த நூல்களிலும், திருப்புகழிலும் இதனை முருகக்கடவுளுக்குரிய தலமாகக் கொண்டு புலவரும் அன்பரும் பாடியுள்ளனர்.

பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்பவர்களுடைய மங்களா சாஸனம் இத்தலத்திற்கு உண்டு. பிள்ளைப்பெருமாளையங்கார் இயற்றிய அழகர் அந்தாதியும், வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால் இயற்றப்பெற்ற கலம்பகம் ஒன்றும், சாமி கவிகாளருத்திரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் ஒன்றும், பெருங்கரைக் கவிகுஞ்சர பாரதியால் இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும் இத்தல ஸம்பந்த மாக உள்ளன.

கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் கூற்றாக வுள்ள பகுதியில்,

” முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் ” (12)

என்று இத்தலம் சிலேடைவகையாற் குறிப்பிக்கப் பெறுதல் காண்க.

வடமொழியில் கூரத்தாழ்வார் அருளிய ஸ்ரீ சுந்தரபாஹு ஸ்தவமென்னும் நூலும், ஒரு புராணமும் இருக்கின்றன. வட மொழிப் புராணம் தமிழ்வசன நடையில் ‘அழகர்கோயில் மான்மியம்’ என்னும் பெயரோடு பல வருஷங்களுக்குமுன் மதுரை வி. என். இராகவக்கோன் என்பவரால் அச்சிடப்பெற்று வழங்குகின்றது. இப்பொழுது இத்தல விசாரணைக் கர்த்தராக இருந்து வரும் ஸ்ரீமான் கே. என். இராதாகிருஷ்ணையர் அவர்கள் மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னரவர்களுக்கு 23-10-1935-இல் அனுப்பிய ஆங்கில விண்ணப்பமொன்று புத்தக ரூபத்தில் இருக்கின்றது. தல சம்பந்தமாகப் பல செய்திகளைத் தொகுத்து அதில் அவர் எழுதியிருக்கின்றனர். மேலே கண்ட நூல்களாலும் அழகர் கிள்ளி விடுதூதாகிய இந்நூலாலும் கேள்வியாலும் அறிந்த செய்திகள் பல ; அவற்றிற் சில பின்னே தெரிவிக்கப் படுகின்றன.

தலத்தின் திருநாமங்கள்
அலங்காரன்மலை, அழகர் கோயில், அழகர்மலை, ஆராம் சைலம், இருங்குன்றம், குலபூதரம், குலமலை, குளிர்மாமலை, குன்றம், கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம், சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம், திருமலை, திரு மால்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, தென் திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை, பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம், மண்டூகபர்வதம், மாலிருங் குன்றம், வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.

பெருமாள் திருநாமங்கள்

அலங்காரர், அழகர், கள்ளழகர், சங்கத்தழகர், சுந்தரத் தோளர், சுந்தரபாஹு, சுந்தரராஜப் பெருமாள், சோலைமலைக் கரசு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர், மாலலங் காரர், விருஷபாத்திரி நாதர்.

நாச்சியார் திருநாமம்
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும் வழங் கும். ஸ்ரீ ஆண்டாளும் இங்கே திருக்கோயில் கொண்டெழுந் தருளியுள்ளாள்.

தீர்த்தங்கள்
சிலம்பாறு என்பது இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்தம். அது தேனாறு, நூபுர கங்கை , பகவத்பாத தீர்த்தம், மஞ்சீரந்தி, விஷ்ணு கங்கை யென்றும் வழங்கப்பெறும். அது திருக்கோயிலுக்கு வடக்கே 23 மைல் தூரத்தில் இருக்கிறது. மற்றத் தீர்த்தங்கள் வருமாறு :- அக்கினிவாபி, அனுமதீர்த்தம், இஷ்ட சித்தி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக் கவி, கருட தீர்த்தம், கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம், புண்ணிய சரவணம், பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும் மூங்கிற்கவி.

விருக்ஷங்கள்
இங்கே முதல் யுகத்தில் ஆலாகவும் இரண்டாவது யுகத்தில் அரசாகவும் மூன்றாவதில் வில்வமாகவும் இக்கலியுகத்தில் புத்திர தீபமென்னும் பெயரினதாகவும் ஒரு ஸ்தல விருக்ஷம் உண்டென்று இந்த நூல் கூறும். மூன்றாம் யுகத்தில் பலாவாகவும் இக்கலி யுகத்தில் புத்திர ஜீவியென்னும் விருக்ஷமாகவும் இருப்பதாக இத்தல மான்மியம் தெரிவிக்கும். நூபுரகங்கையின் ஆரம்பத்தில் ஒரு மகா வடவிருக்ஷம் இருந்ததென்பர். சந்தன மரத்தைத் தலவிருக்ஷமென்பாரும் உளர். சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும், இந்நூலில் கூறப்படும் உறங்காப்புளியும் இத்தலத்தோடு சார்த்திச் சொல்லப்பெறும் விருக்ஷங்களாம். இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும் கூறுவர்.

விமானம்
சோமச்சந்திர விமானமென்றும், சோமச்சந்தவிமான மென்றும் வழங்கும். இது பிரணவாகாரமானதென்று தலமான் மியம் கூறும்.

மண்டபங்கள்
(1) மாத்வி மண்டபம் : இது சிலம்பாற்றங்கரையில் இருப்பது ; இந்தத் தலமான்மியத்திலும் இது கூறப்படுகின்றது. (2) சோலைமலை மண்டபம் : இது சாம்பல் போடும் மண்டபமென்றும் வழங்கும் ; பதினாறு கால்களை உடையது. (3) கனு மண்டபம்: கல்யாண சுந்தரவல்லித் தாயார் கனுத் திருவிழா நடைபெறும் மண்டபம். (4) வண்டியூர் மண்டபம் : அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று. (5) தேனூர் மண்டபம் : வையையாற்றின் இடையிலே உள்ளது ; அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று; இது தேனூரிலுள்ள அன்பர்களாற் கட்டப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது.

பூசித்துப் பேறுபெற்றோர்
அம்பரீஷன், அருச்சுனன், அனுமன், இந்திரத்தியும் நான், இந்திரன், கந்தருவன் ஒருவன், கருடன், குப்ஜபாண்டியன், கெளதம முனிவர், சதிரிளமடவார், சந்திரகேது, சுதபஸ் என்னும் முனிவர், செளனக முனிவர், தருமதேவர், தாலப்பியர், பச்சை வாரணதாசர், பராசரர், பாண்டவர், பிரகலாதன், பிரம் தேவர், புண்ணியம், புரூரவசு, புலத்தியர், மரீசி, மலயத்துவசன், மார்க்கண்டேயர், மாவலி, மைத்திரேயர், யானையொன்று, ருக்மாங் கதர், வசிஷ்டர், விபீஷணன்.

பிற கோயில்கள்
(1) ஸ்ரீ நாகநாதர் கோயில் : பல நாகர்கள் உள்ள கோயில். (2) இராக்காயி அம்மன் கோயில் : (3) அனுமன் கோயில் : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ள து. (4) கருடன் கோயில் : கருட தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (5) பாண்டவர் கோயில் : பாண்டவர் தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (6) சதிரிளமடவார் கோயில் : இம்மலையின் தென் பகுதியில் உள்ளது. (7) சக்கரத்தாழ்வார் கோயில் : இதற் குச் சில நிவந்தங்கள் அமைந்ததாகக் கூறும் சிலாசாஸனம் உண்டு. (8), தண்டலைக் கோயில். (9) வெள்ளிமலை : இது மலையின் தென் பகுதிக்குப் பெயரென்றும் இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும் கடவுள் உறைவதாகவும் கூறுவர். (10) க்ஷேத்திரபாலகர் கோயில் : க்ஷேத்திரபாலகர் கல்லென வும் வழங்கும் ; இக்கல்லில் வைரவர் எழுந்தருளி-யிருக்கின்றன ரென்பது ஐதிஹ்யம்.

விழாக்கள்
(1) கோடை உத்ஸவம் : இஃது இந்நூலிற் சிறப்பிக்கப் பெறுவது ; சித்திரா பௌர்ணமியில் நிகழ்வது. இவ்விழாவில் பெருமாள், ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்.
(2) வசந்த உத்ஸவம் : வைகாசி மாதம் பத்து நாள் நடை பெறும்.
(3) முப்பழ உத்ஸவம் : ஆனிப் பெளர்ணமியன்று முக் கனிகள் நிவேதனம் செய்யப்படும்.
(4) பிரும்மோத்ஸவம் : பத்து நாள் திருவிழா. மலயத்து வசபாண்டியன் முதலில் தொடங்கியதாகத் தலமான்மியம் கூறும். தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுவர். ஆஷாட பௌர்ணமியன்று திருத்தேர் .
(5) கருட ஸேவை : ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம் : 5 நாள் நடைபெறும். ஆவணி மாதம் பெளர்ணமியோடு நிறைவுறும்.
(7) நவராத்திரி : புரட்டாசி மாதம் நடைபெறுவது.
(8) எண்ணெய்க் காப்பு உத்ஸவம் : ஐப்பசி மாதம் நடை பெறுவது. சுக்கிலபக்ஷத் துவாதசியன்று பெருமாள் தீர்த்தத் தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம் ; இதனால் இது தொட்டி யுத்ஸவமென்றும் வழங்கும்.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு .
(10) அத்யயன உத்ஸவம் : மார்கழி மாதம் நடைபெறும் பகற் பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர் உத்ஸவம் : தைமாதம் நடைபெறுவது.
(12) திருக்கல்யாண உத்ஸவம் : பங்குனி உத்தரத்தன்று நிகழும். மறுநாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இவற்றையன்றி வேறு சில உத்ஸவங்களும் நடைபெறுவ துண்டு .

வாமன புராணம், வராக புராணம், பிரம்மாண்ட புராண மென்னும் மூன்று புராணங்களில் இத்திருப்பதியின் மான்மியம் கூறப்பட்டிருப்பதாகத் தலபுராணம் தெரிவிக்கின்றது.

திவ்யப் பிரபந்தத்திற் கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள் சிலம்பாற்றை,

“சிலம்பாறு பாயுந்தென் றிருமாலிருஞ் சோலையே”
“ஓட்டருந் தண்சிலம் பாறுடை மாலிருஞ் சோலையதே”-
என்று பெரியாழ்வாரும்,

சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது
வந்திழி யுஞ்சிலம் பாறுடை மாலிருஞ் சோலை
“-என்று ஆண்டாளும்,

சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை”-என்று திருமங்கைமன்னனும் பணித்தனர்.

இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பெருமாளை,

சுந்தரத் தோளுடையான் “
“திருமாலிருஞ் சோலைநம்பி”
“மாலிருஞ் சோலை நம்பி “
” சுந்தரன் “-
என்று ஆண்டாளும்,

தேவர்கள் நாயகன் “
“கேசவ நம்பி “
-என்று திருமங்கைமன்னனும்,

“அழகர்”-என்று நம்மாழ்வாரும் போற்றுகின்றனர்.

நெடுமாறன் தென்கூடற்கோன்”
“தென்னன் கொண்டாடும் தென்றிருமாலிருஞ் சோலை”
“அளித்தெங்கு நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையே”
“சென்றுலகங் குடைந்தாடுஞ் சுனைத்திரு மாலிருஞ்சோலை ” (பெரியாழ்வார்)
“தேசமெல்லாம் வணங்குந் திருமாலிருஞ்சோலை ” (திருமங்கையாழ்வார்) “தென்சொல் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ் சோலை” (நம்மாழ்வார்)-என இத்தலம் பாராட்டப்படுகின்றது.

3.3. நூலின் பொருள் அமைப்பு

இந்நூலில் தூதுவிடப் பெறும் கிளியின் பெருமையும், பாட்டுடைத் தலைவராகிய அழகர் சிறப்பும், தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும் முறையே கூறப்படுகின்றன. இதன் பொருளமைப்பு வருமாறு :

கிளியின் பெருமை

திருமாலின் திருநாமமாகிய அரியென்னும் பெயரையும், அவர் திருக்கண்வளரும் பாயலாகிய ஆலிலையின் நிறத்தையும் கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும் கிளியரசே, நான் சொல்வதைக் கேட்பாயாக : உன்னுடைய பெருமை பலபடியாகப் பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன் சொல்லைக் கேளாதவர் ஆர்? மன்மதனது ஒற்றைச் சக்கரங்கூட இல்லாமற் செலுத்துகின்ற காற்றாகிய தேரைப் பலங்கொண்டு இழுத்துத் திரிகின்ற பச்சைக் குதிரையே, ஒற்றைச் சக்கரத்தோடு கூடிய சூரியன் தேர் ஒன்றை யிழுக்கும் பச்சைக் குதிரைகள் ஏழும் உனக்கு ஒப்பாகுமோ? ‘அந்தக் குதிரைகள் சுற்றிவரும் உலகமும் நீயே ; ஞான விளக்கும் நீயே” என்று சொல்வதிற் பிழையென்ன? உன் உருவம் கொண்ட சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருந்தார். எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும் உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள் ஒன்றில் அடங்குமன்றோ?

உன் மேனி முழுவதும் பச்சை நிறமா யிருந்தால் உன்னைக் கண்டோர் பார்வதி தேவியாரென்று எண்ணி விடுவார்களென்று கரு தியோ நீ மூக்கு மாத்திரம் சிவந்திருக்கின்றாய்? நாக்குத் தடுமாறிப் பேசுபவர்களை உலகத்தார் சேர்த்துக் கொள்ளாமல் விடுவர்; உன்னை அப்படி விடுபவர் ஒருவரும் இல்லை. முன்பு சீவகனுடைய மனைவியருள் ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக் காரணம், அவள் உன் பெயருள் ஒன்றாகிய தத்தை யென்பதைக் கொண்டமையே. பிற பறவைகளினிடத்தில் திருமால் திருநாமத்தையும், சிவபெருமான் நாமத்தையும் சொல்வதனால் பயனில்லை. உன்னிடம் சொன்னால் நீ அவற்றைப் பயின்று கூறுவாய். கூடுவிட்டுக் கூடுபாயும் யோகி உனக்கு ஒப்பாவானோ? பாலின் பெயராகிய கீரம் என்பது உனக்கும் பெயர். அதனால் உனக்கும் ஆடை (பாலாடை, உடை) உண்டு. பாடகம், காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய். [#]கற்புடையாய்; சோலையாகிய மனையிலே சேர்வாய். இவற்றால் உன்னையும் ஒரு பெண்ணென்றே சொல்லலாம்.

சாயுச்சியமென்னும் பதவியைச் சுகரூபமென்பர். உன் பெயர் சுகமாதலின் அது நின் சொரூப மென்றே சொல்லவேண்டும்.[§] ‘வன்னி பரிசித்த வெல்லாம் பரிசுத்தம்’ என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும் உண்கின்றனர். யாருடைய சொல்லையும் நீ கற்றுக்கொள்வாய். யோகங்கள் சாதித்துப் [¢] பச்சைப்பிள்ளையாக வாழும் பெரியோர் பலர் உண்டு. ஆயினும் அந்த யோகங்கள் சாதியாமலே பச்சைப் பிள்ளையாய் நீ வாழ்கின்றாய். நீ” பாலனத்தாலே பசி தீர்க் கின்றாய். திருமாலும் தம்முடைய [£] பாலனத்தாலே உலகத்தோர் பசியைத் தீர்க்கின்றார். ஆதலின் நீ அவருக்கு ஒப்பாகின்றாய். மிக்க நண்பினரானாலும் [@] பூசையை விட்டார் முதலியோரை நீ விரும்பாய். உனக்குப் பச்சை சிவப்பு என்னும் [##] இரண்டு நிறம் இருப்பதனால் இரண்டு வடிவமுடைய கருடாழ்வானுக்கு இணையாவாய்.

[#] கல் புடையாய், கற்புடையாய். [§] வன்னி – நெருப்பு, கிளி.
[¢] பச்சைப்பிள்ளை – இளங்குழந்தை. [||] பாலனம் – பாலோடு கூடிய சோறு.
[£] இரட்சித்தல். [@] பூசையை விட்டார் – பூனையை விட்டவர், தெய்வ வழிபாட்டை நீத்தவர். [##] இரண்டு வடிவம் – பறவை வடிவமும் புருஷ வடிவமும்.

ஜபம் செய்வோர்களுக்கெல்லாம் திருவரங்கர் திருநாமத்தை நீ உபதேசம் செய்வாய். பெண்களுக்கு ஆடவரைப் போல முத்தம் கொடுப்பாய். அங்ஙனம் முத்தங் கொடுப்பதனால் அவருக்கு இதழிலே செந்நிறம் உண்டாயிற்றோ? அன்றி அவர் இதழ்ச் சிவப்பு உன் அலகிற்கு ஏறியதோ? யாருக்கும் தோற்றாதவனாகிய மன்மதனை நீ தேர்க்குதிரையாகி இழுத்து வருவாயாயின், அவனுக்குக் குறை ஏது? யோகிகளெல்லாம் அடக்கிக் கஷ்டப்படுகின்ற வாயுவை உன் பின்னாலே (தேராக) வரச் செய்வாய். திருமகளும் மலைமகளும் தம்முடைய திருக் கரங்களிலே உன்னைப் பிடித்திருக்கும்படி நீ நட்புப் பூண்டாய். திருமாலுக்கும், பார்வதிக்கும், உனக்கும் பச்சை நிறம் வந்த விதம் எங்ஙனம்?

யாவரும் மெச்சும் பறவையே, உன்னுடைய நாக்குக் கூழை நாக்கானது, அரிகீர்த்தனத்தை இடைவிடாமற் செய்ததனாலோ? [§] …….. குயில், வண்டு, புறா, மயில், நாகணவாய்ப்புள் என்னும் பறவைகளுக்கு உன் சிறப்பு வருமோ ?

வேதமாகிய சிவபிரான் குதிரைகளுக்குப் பிரமதேவர் சாரதி ; மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச் சாரதி யார்? சிவபெரு மான் திருநுதற் கண்ணால் மன்மதனும், அவன் நானாகிய வண்டும், சின்னமாகிய குயிலும் சுடப்பட்டுக் கருகிய காலத்தி லும் நீ கருகாமலே வந்தாய். உனக்குக் கனியினிடத்தில் அதிக விருப்பம். நீ [#]அரிதாளை விட்டு அகலாய். எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக் கில்லை. எனக்கும் உனக்கும் பேதம் இதுதான்.

[§] இங்கே உள்ளே சிலேடைப் பொருள்கள் வசனத்திலே எழுதற்கரியவை.
[#] அரிதாள் – அரிந்த தினைத்தாள், திருமாலின் திருவடி.

நீ வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களுடன் இதமாகப் பழகு வாய். அன்பினால் அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப் பாய். வண்டு மதுவை உண்டு குழறும். குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக் கத்தும். கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும், என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்.

நீ அன்னமில்லாமற் பால் மாத்திரம் குடிக்கும் பச்சைச் குழந்தையானாலும், உன் காலைப் பிடிப்பார் பலராவர். மன்மதனால் வருந்துவோருடைய நோயைத் தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப் படைத்தாய் ? மகளிருடைய மயக்கமாகிய காட்டைச் சுடுவதற்-காகவோ நீ [@] வன்னியென்னும் பெயரைத் தாங்கினாய்? அவர்களுடைய துன்பமாகிய வேழத்தைக் கொல்லவோ நீ [§] அரி வடிவம் பூண்டாய்? அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ [$] கிள்ளை வடிவத்தை எடுத்தாய்? மாதர்களுடைய விசனம் கெடுவதற்காகவோ நீ [¢] சுகவடிவத்தைக் கொண்டாய்? …………………….. ரதிக்கும் கலைமகளுக்கும் உன்னை உவமானமாக்கி உரைப்பர். உவமையாகக் கூறும் பொருளே உயர்ந்ததாதலின் அவ்விருவரிலும் நீயே உயர்ந்தாயன்றோ ?…………….. உன்னுடைய வடிவமும் வளைந்த மூக்கும் திருமாலினுடைய துவசத்தில் இருக்கும் கருட தேவனது அம்சமோ? உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில் கண்ணபிரான் வேய்ங்குழல் வாசித்தபோது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ? அல்லது, இராமபிரான் இராவணனைச் சங்கரித்த பிறகு விபீடணன் இலங்கையிலே புக்குக் கட்டிய புதுத்தோரணமோ? உன்னுடைய இனிய மொழி கண்ணபிரானது வேய்ங் குழலோசையோ?

[@] வன்னி – நெருப்பு, கிளி. [§] அரி – சிங்கம், கிளி.
[$] கிள்ளை – குதிரை, கிளி. [¢] சுகம் – இன்பம், கிளி.

கிளிப்பிள்ளையே, தெள்ளமுதக் கிள்ளையே, இன்பரசக் குஞ்சே, தென்றற் குழவியைத் தாய்போல எடுத்துச் சஞ்சரிக்கும் செல்வமே, திருமகள் திருக்கரத்திலே யுள்ளாய், முத்தி நகரேழில் ஒன்றாகிய அவந்தியென்பதன் பெயரையும், தமிழில் வல்லினம் ஆறனுள் ஒன்றாகிய தகர வரியிலமைந்த தத்தை யென்னும் பெயரையும், ஐந்து பூதத்தில் ஒன்றாகிய நெருப்பின் பெயராம் வன்னியென்பதையும், சதுரங்க சேனைகளுள் குதிரையின் பெயராகிய கிள்ளையென்பதையும், மும்மூர்த்திகளில் ஒருவராகிய அரியின் திருநாமத்தையும், இரு பயனாகிய சுக துக்கங்களில் சுகமென்னும் பெயரையும் தாங்கிய என் கண்ணே , கண்ணுண் மணியே, நான் திருமாலைத் தரிசனம் செய்யப்போய் ஊராரெல்லாம் அவர் கூறும் நிலையை அடைந்ததைச் சொல்கின்றேன் ; கேட்பாயாக :

அழகர் பெருமை

அவன், நரசிங்கம் போன்ற திருவுருவத்தை எடுத்து இரணியசங்காரம் செய்தவன். கிருஷ்ணாவதாரத்தில் பூதனையின் பாலையுண்டவன். பிள்ளைத் தன்மை நீங்காதவன். கல்லைப் பெண்ணாக்கும் திருவடியையுடையவன். ஒரு கவிஞன் பொருட்டுத் தன் படுக்கையைத் தூக்கிச் சென்றவன். தேவர்களுக்காக அமுது கடைந்தவன். சீதாபிராட்டியுடன் கானங் கடந்தவன். ஒரு வேடனுக்கு மெல்லிய கால் நகங்களைத் தந்தவன். என் காதல் வெள்ளத்திலே அமிழ்ந்தினவன் ; பிரளயகால வெள்ளத்திலே மிதந்தவன் என் உள்ளத்தே உள்ளவன் ; ஆயினும், உலகத்துக்கு அப்பாலான். வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன் ; அருகிலே இருந்தும் அணுகுதற்கரியான். மாயன் என்னும் பெயருக்கேற்ப என் மனத்துள் இருந்தாலும் மாயம் செய்து ஒளிப்பவன். எல்லாவற்றையும் காட்டியருளிக் கண்ணனென்னும் பெயரை அடைபவன். எங்கும் இல்லா திருந்தும் எங்கும் நிறைந்திருப்பவன் ; எங்கும் நிறைந்திருந்தும் எங்கும் இல்லாதவனாக இருப்பவன். என்னை எனக்கு ஒளித்துத் தன்னை எனக்கருளும் தம்பிரான். என்னுடைய பழைய வினைகளையும் பல மாயைக் கூட்டத்தையும் கலைத்து என்னைத் தனியே இருத்துவோன். ‘நானே பிரமன் ; நானே எல்லா வுயிரும் ; இவ்விருவரையும் ஏவுபவனும் நான்’ என்று உணர்த்தும் பொருட்டுக் கோவலரிடத்தே பசுவும் பசுவின் கன்றும் அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி. தன்னுடைய சங்கத்தொனியைக் கேட்டாரை நரகினின்றும் மீட்பவன். வேய்ங் குழலின் தொனியால் பட்ட மரங்களைத் தவிர்க்கச் செய்தவன். ‘ஆதிமூலம் இவன்’ என்பதை உணர்த்தும் யானை யொன்றை உடையவன். பிரமாவைத் திருவுந்தியால் வெளிப்படுத்திச் சிருஷ்டிக்கு மூலகாரணன் தானென்பதைப் புலப்படுத்துவோன் ; அப்படியே பிரளயகாலத்தில் உலகங்களை விழுங்கித் துடைப்போனும் தானே யென்பதை உணர்த்துவோன். தமிழினாலே வேதக் கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள் பதினொருவருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன். தன் பாதமாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும் தேனைப் போலக் கங்கை உண்டாகும் பெருமையுடையவன். துயிலாத் துயில் கொள்பவன். தன் தாயாகிய யசோதைப் பிராட்டிக்கு, தன்னுள்ளும் புறம்பும் உலகம் இருப்பதை வாய் திறந்து காட்டி உணர்த்தியவன். பிறப்பாகிய கடலில் கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில் போல விளங்குபவன். பரசமயவாதங்களாகிய நதிகள் யாவும் தன்பாலே அடங்கக் கடல் போல இருப்பவன். ஒரு கிரணம் போன்ற என்னைத் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம் பூண்டவன். உலகமாகிய ஊசலில் எழுந்தருளியிருப்பவனும் அதனை இயக்குபவனும் தானே யாகின்ற அண்ணல். வேடர்கள் ஒரு பார்வை மிருகத்தைக் கொண்டு நூறுமான்களைப் பிடிப்பதைப் போலத் தன் அவதாரமாகிய பத்தினால் தான் படைத்த எண்பத்து நான்கு லக்ஷம் யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்.

தசாங்கம்

கேசவாத்திரி, சிங்கத்திரி, இடபகிரி என்னும் திருநாமங் களையுடைய சோலைமலைக்கு அவன் தலைவன். அந்த இடபாசலம் இந்திரன் போலவும் அதில் உள்ள சுனைகள் அவன் கண்களைப் போலவும் இருப்பது, தோளில் புரளும் முத்தாரத்தைப் போல விளங்கும் நூபுரநதியை உடையவன். பூமிதேவிக்குப் பன்னிரு செந்தமிழ் நாடுகளும் கை இரண்டு, காது இரண்டு, நகில் இரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகப் பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும், அவற்றுள் சோழ நாடும் பாண்டி நாடும் கண்களாக விளங்க, அவற்றுள்ளும் வலக் கண்ணாக விளங்கும் பாண்டி நாட்டை-யுடையவன். சோமச் சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும், துவசஸ்தம் பத்தைக் கற்பகவிருட்ச மென்றும், தன்னை உபேந்திரனென்றும், திருமாலையாண்டானென்றும், ஆசிரியரைப் பிருகஸ்பதி யென் றும், மற்ற யாவரையும் இந்திரன் முதலாகிய தேவர்களென்றும் யாரும் எண்ணுதலால் தேவர் வாழும் அமராபதி போலத் தோன்றுகின்ற சீபதியென்னும் திருப்பதியையுடையவன். தன் திருமார்பில் உள்ள பல ஆபரணங்களின் நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப் போலத் தோற்றும் பசுந்துளப மாலையை அணிந்தவன். வைணவமாகிய [#]மதம் பொங்கவும் வைகானசம் பாஞ் சராத்திரமென்னும் ஆகமங்களாகிய மணிகள் ஒலிப்பவும், வடகலையும் தென்கலையும் புரசைக்கயிறாக விளங்கும் அத்துவி தானந்தமென்னும் யானையை உடையவன். வேதமாகிய குதிரையையும் கருடனாகிய கொடியையும் மும்முரசையும் உடையான். தவநிலை ஆணை தரித்தவன்.

[#]மதம் – யானையின் மதம், சமயம்.

பிற சிறப்புக்கள்

கண்ணபிரானாக வந்த காலத்துத் தன் திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப் பிதிர்கள் நட்சத்திரங்களைப் போலவும் கையில் ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம் போலவும் விளங்க அதனை உண்டவன். சூரிய சந்திரர்களாகிய திருவிழிகளையும், அவற்றைப் போன்ற சங்கு சக்கரங்களையும் தாங்கினவன். உலகத்தை உண்ட திருவாயையும், அடக்கிய திருவயிற்றையும், ஈன்ற திருவுந்தித் தாமரையையும், அளந்த திருத்தாளையும், அதனை மாவலிபால் ஏற்ற திருக்கரத்தையும், அதன்கண் வளைந்த பயிர்களின் நிறத்தைக் காட்டும் திரு மேனியையும், அதனை வராகாவதாரத்தில் பெயர்த்த மருப்பையும், ஆமையாகி ஏந்திய முதுகையும், அதனைத் தன் படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும் உடையவன். தன் திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களை ஈபவன். பிரமன் எழுதும் எழுத்தைத் தன் அஷ்டா ஷரத்தால், இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன். சங்கரன் முதலியோர் தங்கள் தங்கள் மலைகள் எங்கே இருப் பினும் இது நம் குன்று என எண்ணிவரும் நண்புடையவன். பச்சைவாரண தாசரென்பவருக்கு இரண்டு கண்களையும் மாற்றினவன் ; ஒரு யானைக் கன்றுக்குக் கண் கொடுத்தவன். திருக்கையில் உத்தியோகச் சக்கரத்தை யுடையவன். இலங்கையை முன்பு வென்று கொண்டாலும் நிலத்தை (மாவலியினிடம்) தானமாக வாங்கினவன்……. திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும், மதுரையிலுள்ள சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்தமையினாலும் சங்கத்தழகனென்று சொல்லும் திரு நாமமுடைய தம்பிரான். தன்னுடைய பாதுகை அரசு புரியவும் கருடாழ்வான் பறவைகளுக்கரசாக இருப்பவும் அருள் புரிந்தவன். செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத் தோற்றினவன். சுந்தரத்தோளன், மலையலங்காரன் என்னும் திருநாமங்களை யுடையவன்.

வேறு வேறு தெய்வங்களை மக்கள் பூசித்தமையால் உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப் பெற்றவன். மலயத்துவச பாண்டியனால் வழிபடப் பெற்றவன். அம்பரீஷனுக்கு அருள் செய்தவன்.

திருவிழா

அத்தகைய திருமால், தென்றல் வீசுங்காலத்திலே கோடைத் திருவிழாக் கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான். தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிப் பொற்குடையும் வெள்ளிக் குடையும் கொடிகளும் இலங்கவும், முரசம் முழங்கவும், மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வரவும், நீர்வீசு கருவிகள் பனிநீரைத் தூவவும், காணிக்கைக் கொப்பரை முன்னே செல்லவும் வையைநதியில் அங்கங்கே செய்யப்படும் உபசாரங்களை ஏற்றருளி வண்டியூர் மண்டபத்தில் வீற்றிருந்தருளினான்.

அப்பொழுது சூரியன் அத்தமித்தான். தீவட்டிகள் பிரகாசித் தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள் அனந்தாழ் வான் மீது பவனிவந்தான். அப்பவனியிலே அவனைத் தரிசித்துக் காமமயக்கத்தை யான் அடைந்தேன். அவன் மற்ற இடங் களுக்கு எழுந்தருளலானான்.
தலைவியின் நிலை

நான் அவனுடைய திருமுகமண்டலம் முதலியவற்றைக் கண்டு மால்கொண்டு என் உடன் வந்த மாதர்களுக்கு அவனைப் பற்றிக் கூறினேன். பின் அவனைப் பார்த்து, “அன்று நீர் திருடிய வெண்ணெயைப்போலத் தோற்றும் சங்கு இருப்பவும் என் கையிலுள்ள [§] சங்கைக் கவர்ந்து கொண்டீர். என்னுடைய கண்ணீர் உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ? உமக்குரிய பீதாம்பரம் போதாதோ? இராமாவதாரத்திலே உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ? திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரே. பழையபடி கோவியர் ஆடை கவர்ந்ததைப் போலத் திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ? இந்த நூலாடை உமக்குப் [$] பாலாடை-யாயிற்றோ? உம்மேல் விருப்பங்கொண்டு முழங்குகின்ற எம்முடைய வார்த்தையை நீர் கேட்டிலீர். பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும் தூக்கம் உண்டோ ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம் பரந்ததோ? அன்றிப் பாற்கடல் தான் உம்முடைய பிரிவாற்றாமல் உம்மைப் பின் தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ? இரவாகிய யானை கசேந் திரன் போல இருக்கிறது; அதன்மேல் வரும் முதலையைப் போன்ற சந்திரனை நீர் சும்மா விட்டு விடலாமா? சதிரிள மடவாருக்கு இரங்கிய நீர் நெஞ்சம் தவிக்கும் இளமாதருக்கு இரங்கு தல் கூடாதோ? கோவியர்களிடத்தில் காம விளையாடல் புரிந்த செய்திகளெல்லாம் இப்பொழுது மறந்து போனீரோ?” என்று யான் கூறி முறையிட்டேன்.

[#]சங்கு – வளை. [$] காய்ச்சிய பாலில் மேலேயுள்ள ஏடு.

பிறகு பெருமான் தேனூர் மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச் சார்ந்தான். யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம் போலானேன். இந்தத் துன்பத்தைத் தந்த அவன் சிறிதேனும் திருவுள்ளங் கனியானாயினன். சந்திரனும், கடலும், அயல் மகளிர் மொழியும், மன்மதன் செயலும், காளைகளின் மணியும், வேய்ங்குழலும் என்னைப் பலவாறாகத் துன்புறுத்துகின்றன.

கிளியை வேண்டுதல்

கிளியரசே, என்னுடைய உடம்பும் உன் கூடும் பலவகையில் ஒப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான் உண்பிப்பேன் ; நலங்குக் குளிப்பாட்டுவேன் ; பட்டாடையால் துடைப்பேன் ; கூட்டில் இருத்தி ஆலத்தி எடுப்பேன் ; வாசனைத் தூபம் காட்டுவேன் ; இள வெயிலிலே குளிர்காயச் செய்து எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல் வைத்துப் பெருமாள் திருநாமமெல்லாம் உனக்குப் பழக்கி வைப்பேன்.

உன்னையன்றிப் பிறபொருள்களைத் தூதுவிடல் கூடுமோ? அன்னம், குயில், வண்டு, தென்றல், மேகம், காக்கை என்பன தகுதியற்றவை. நீயோ, அங்கே போனால் அடியார்கள் இருப்பின் நீயும் அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம் செய்வாய். நாச்சியார் அருகில் இருந்தால் அவர் கையிற் பறந்து சென்றிருப்பாய். “எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டால், ” சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன்” என்று சொல்வாய். சௌந்தர-வல்லிக்கும், சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும் தெரியாமல் என்னுடைய காதலைத் தெலுங்கிலே தந்திரமாகச் சொல்வாய். என்னுடைய துன்பத்தை நீக்குவாய். சச்சிதானந்தனாகிய பெருமாள் அணிந்துள்ள மாலையைக் கொண்டு வருவாய்.

அங்கே யுகந்தோறும் வேறு வேறாகிக் கலியுகத்தில் புத்திர தீபமாகும் தரு ஒன்று உண்டு. தேவர்களுக்குரிய ஐந்து கற்பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும். ஒரு கோடி சோலைகளும், ஒரு கோடி ஆறுகளும், ஒரு கோடி பூஞ்சுனையும் இருக்கின்றன. அன்றியும், யோகிகளைப்போல அல்லும் பகலும் துயிலாத உறங்காப் புளி ஒன்று இருக்கின்றது.

கோயிற் பணியாளர்

அத்தலத்தில் பிரமதேவனும் இந்திரனும் வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள். சீரங்கராச பட்டரென்னும் அர்ச்சகரும், திரு மாலிருஞ்சோலைச் சீயரென்னும் மாதவரும், திருமாலை யாண்டா னென்னும் ஆசிரியரும், தோழப்பையங்காரும், வேத பாரகரும், அமுதாரும், திருமலை நம்பியும், சோலைமலை நம்பியும், சடகோப நம்பியும், திருமாலிருஞ் சோலைப் பிரியரென்னும் சீகருணீகரும், சீகாரியஞ் செய்யும் நாயகர்களும் தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான் திருவோலக்கத்தில் எழுந்தருளி யிருப்பான்.

தூதுரைக்கும் முறை

அப்பொழுது நீ தூதுரைக்கத் தொடங்கினால் உன் வார்த்தை அவன் திருச்செவியில் ஏறாது. ஆதலின் அவன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை பார்த்து வேறொருவர் ஒன்றை விண்ணப்பித் தற்கு முன், என்னை மன்மதன் துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர் அலர் தூற்றுவதற்கு முன்னே , கடலின் ஒலியும் தாயின் உரையும் என்னைத் துன்புறுத்தாமல் அடங்கும்படியாகத் தத்தையே, நீ என் தூதுச்செய்தியை உரைப்பாயாக.

உன்பேர் சுவாகத மாகையால் உனக்கும் [#] சுவாகதம் உண்டாகும். முன்பு ஒரு நாள் ஸ்ரீராமபிரானே உன்னைப் புகழ்ந்து பேசினானென்றால் உன்னைப் புகழ்ந்து பேசாதவர் யார்? நீ என் தூதுச் செய்தியைச் சொல்லிப் பெருமாளிடம் அவன் திருப் புயத்திலணிந்த மாலையைக் கேள். ‘உம்முடைய மாலையை அளியாவிடின் கோதையார் சூடிக்கொடுத்து-விட்ட மாலையை யேனும் தந்தருள்க” என்று கேள். தன்னை அடுப்பவர் யாவருக்கும் ஆடி மாதத்தில் தியாகம் கொடுக்கும் எம்பிரான் இல்லையென்று சொல்லான். ஆதலின் அவ்வழகன் புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.

[#] சுவாகதம் – நல்வரவு.

3.4. நூற்பொருள் ஆராய்ச்சி

அணிகள் இந்நூலின்கண் அங்கங்கே பலவகையான சொல்லணி பொரு ளணிகளைக் காணலாம்.

“வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளாதவரார்காண் கிள்ளையே ” (3)
“மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்” (19)

என்பன போன்ற இடங்களில் சிலேடையணி அமைந்திருக்கின் றது. தூத்துக்குரிய பொருள்களுட் கிளியல்லாத பிறபொருள்கள் தகுதியுடையனவல்லவென்று கூறும் பகுதியில் சிலேடையமை தியை மிகுதியாகக் காணலாம்.

“செலுத்திய காற் றேரைமுழுத் தேராய்” (4)
….. ….. ….. ….. – என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் ” (74-5)

என்பன போன்ற இடங்களில் விரோத அணியும்,

“மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதுஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய்” (28)

“…… …. ….. …..– கும்ப முனி
வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயி னுரையடங்கத் தத்தையே” (232-3)

என்பன முதலியவற்றிற் பின்வரு நிலையணியும் அமைந்துள்ளன.

“தேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும் வீறு பெறுமே” (33)
“அரசா யிருத்தியாலத்தி யெடுத்து ” (196)

என்பவற்றிற் பிற பொருட் பெயர்கள் தொனிக்கின்றன.

“தத்தை யடைந்தவரே தத்தையடையார்” (54)
“கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்” (146)
… ….. ….. …. – அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தர் (208-9)

என்பன போன்ற மடக்குகளும்,

“திருப்பா துகைக்குஞ் செழுங்கருடனுக்கும்
திருப்பா துகைக்குமர சீந்தோன்” (137)
“பாத கமலம் பரவுமல பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன் (141)

என்பவற்றில் யமகமும், 72-4, 142, 147, 222 – ஆம் கண்ணிகளில் திரிபும் அமைந்துள்ளன. சில இடங்களில் வகையுளி அமைந்திருக்கின்ற து (108,215).

தொகை முதலியன

ஏழு முதல் இரண்டு வரையில் உள்ள சில தொகைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் கிளியின் பெயரை அமைத்துக் காட்டிய பகுதி (63-5) இன்பந் தருவதாகும். பூமிக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில் தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளது (126-8)

‘கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்’ (46-7), ‘அவனசையாமல் அணுவசையாது’ (123), யானையுண்ட விளாம்பழம் (187-8) என்னும் பழமொழிகள் இதில் வந்துள்ளன.

சமற்காரம்

கிளியின் பெருமையைப் பல திறத்திற் பாராட்டிக் கூறவந்த இந்நூலாசிரியர் அதன் பெயரையும், இயல்பையும், புராண வரலாறுகளையும் வைத்துக்கொண்டு சமற்காரமாகப் பல பொருளமையும்படி அமைத்துக் காட்டுகின்றார். அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம், சுகம், சுவாகதம், தத்தை, வன்னி என்னும் கிளியின் பெயர்களைச் சிலேடை வகையிலும் பிறவாறும் இவர் எடுத்தாளுவர்.

பிற பொருள்களைத் தூதுவிடுவதனாற் பயனில்லை என்று மறுக்கும் வாயிலாகச் சில தூதுப் பொருள்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவை வருமாறு : அன்னம் (33,199), காக்கை (204), குயில் (34,46,200), ‘தென்றல் (202), நாகண வாய்ப்புள் (38), புறா (36), மயில் (37), மேகம் (203), வண்டு (35, 46, 201)

புராண முதலிய நூற் செய்திகள்

திருமாலின் பெருமைகளைச் சொல்லுமிடங்களில் இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசச் செய்திகளும், பாகவதம் முதலிய மாபுராண வரலாறுகளும், இத்தலத்திற்குரிய புராணத்திற் கண்ட சிறப்புக்களும் எடுத்தாளப்படுகின்றன. ஓரிடத்தில் சீவக சிந்தாமணிச் செய்தியைக் காணலாம்.

வைணவ மரபு

நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல் வைணவ மரபு ; கருடனைப் பெரிய திருவடிகள் என்றும் (22), திருமால் வாகனமாகிய குதிரையைக் குதிரை நம்பிரானென்றும் (152), ஆதிசேடனை அனந்தாழ்வான் என்றும் (166), பள்ளியறையைச் சேர்த்தி யென் றும் (230) வழங்குதல் அம்மரபைச் சார்ந்ததே.

பாண்டி நாட்டு வழக்கம்

‘உன்னுடைய சிறகுகள், இராமாவதாரத்தில், விபீடணன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டபோது, அங்கே கட்டிய புது மாவிலைத் தோரணமோ’ (59) என்பது ஒரு கண்ணியிற் கண்ட பொருள். ஒரு நிலத்தை மற்றொருவன் தனக்குரிய தாக்கும்போது அங்கே தோரணங்கட்டுதலும், அதனால் அச் செயலைத் தோரணம் வைத்தலென்று வழங்குதலும் பாண்டி நாட் டினர் வழக்கம். அவ்வழக்கத்தைப் பின்பற்றியே அவ்வாசிரியர் இங்கே இங்ஙனம் அமைத்தார்.

செய்யுள் நடை

இத்தூதின் செய்யுள் நடை பலவிதமாக அமைந்துள்ளது. மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக் கடினமாக இருப்பினும் மற்ற இடங்களில் தெளிவாகச் செல்வது. திருமாலினுடைய இயல்பைச் சொல்லும் இடங்கள், முக்கியமாக 75-ஆம் கண்ணி முதலிய சில கண்ணிகள் இந் நூலாசிரியர் உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும். உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும், தெளிவாகவும் விளக்கும் அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின் சிறந்த அமைப்பைக் காணலாம். கிளியினைத் தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம் அதைப் பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப் பாராட்டி யிருக்கின்றார். கல்வி, கேள்வி, அனுபவங்களிலே கிளியைப் பற்றி அறிந்தவற்றை யெல்லாம் எப்படியோ தொடுத்துக் கோத்திருக்கின்றார். கிளியைப் போலத் தூது செல்லுவதற்குரிய பொருள் வேறில்லை யென்று சொல்லுவதற்காக நிகண்டிலே கிளியின் பெயர்களாக உள்ள பதங்களும், புராண இதிகாசங்களும், சிலேடையணி முதலிய கருவிகளும், இவருக்குத் துணையாக நிற்கின்றன. கிளிதான் சகலமுமென்றவரைக்குங் கூட இவர் பாராட்டிப் பேசி விடுகிறாரெனின் வேறு என் செய்வது !

“…. ….. ….. …… – கண்ட
செகமுழுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ”

என்று இவர் வினாவும் பொழுது ‘ஆம்” என்று விடையளிப் பதையன்றி வேறு வழியேது ; யுக்தியினால் சமற்காரமாகக் கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப் பாராட்டும் இடங்கள் இதிலே பல இருக்கின்றன. கிளியைப் பலர் தம் கையிலே பிடிப்பர்; இதே விஷயத்தைக் கிளிக்குப் பெருமை விளைவிக்கும் உருவத்திலே மாற்றி,

“பால் குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே”

என்று அமைக்கும் இக்கவிஞருடைய சாமர்த்தியத்தை நாம் வியவாமல் இருப்பது எங்ஙனம்?

திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார். தலப் பெருமையையும், தசாங்கங்களையும், திருவிழா நடைபெறும் முறையையும் ஒழுங்காக உணர்த்துகின்றார். இந்தத் தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின் பெயர்களை வரிசையாகத் தெரிவிக் கின்றார். அந்தப் பகுதியினால் கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும் பயன் ஒன்றும் இல்லையென்றாலும் ஆசிரியர் தம் காலத்தில் இருந்த அவர்களைக் கிளியோடும் அழகரோடும் சேர்த்து அவர்கள் புகழையும் கல்லிற் பொறித்தது போல் தம் சொல்லிற் பொறித்திருக்கின்றார். இது புலவருடைய நன்றியறி வென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற் பிழை யாதும் இல்லை.

கணபதி துணை
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது

காப்பு
(வெண்பா )
தெள்ளு தமிழழகர் சீபதிவாழ் வார்மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே – பிள்ளைக்
குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்.

நூல்
கிளியின் பெருமை

கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர் கொண்டு 1
நீர்கொண்ட பாய னிறங்கொண்டு- சீர்கொண்ட
வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே செப்பக்கேள் – வையமெலாம்
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளா தவரார்காண் கிள்ளையே- நாளும்
மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில் லாமற்
செலுத்திய காற் றேரை முழுத் தேராய்ப் – பெலத்திழுத்துக்
கொண்டுதிரி பச்சைக் குதிரா யுனக்கெதிரோ 5
பண்டுதிரி வெய்யோன் பரியேழும் – கண்ட


குறிப்புரை

காப்பு
அழகர் : திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருநாமம் ; இதன் வடமொழிப்பெயர் அலங்காரரென்பது. சீபதி – ஸ்ரீபதி ; அழகர்மலையின் திரு நாமங்களுள் ஒன்று. பிள்ளைக் குருகு – நாரைக்குஞ்சு. ஊர – தன்பின்னே ஊர்ந்து வருதலால். தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் : ஊர்கமுகு – மேற்பாகம் பரவியுள்ள கமுகு ; ஊர்தல் – பரத்தல். சங்கு ஏறுதற்கு இடமான. குருகூர் அத்தான் – ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியுள்ள தலைவனே; அத்தான் – அத்தனே : விளி ; “நம்பான்” (தே.) என்பது போல. நேசம்கூர் – திருவருள் புரிவாயாக. கிளத்த நேசம் கூர் என இயைக்க.

நூல்

  1. கடவுள் – திருமால். பெயர் – அவருடைய திரு நாமமான அரி யென்பதை ; அரியென்பது கிளிக்கும் உரிய பெயர். பாயல் – அவருடைய படுக்கையான ஆலிலையின் நிறம் – பச்சை நிறம். (பி – ம்.) கடவுளினற் பேர்கொண்டு.
  2. வை அம்பு அடைக்கும் மதனையும் : மதனையும் – மன்மதனை யும். கிளி – மன்மதனுக்கு வாகனமாதலால், ‘மதனையுமேற் கொண்டு’ என்றார். வையம் படைக்கும் அதனையும் – புவியைப் படைக்கும் அத் தொழிலையுமென்று வேறொரு பொருளும் தோற்றுகின்றது. (பி- ம்.) செய்யும் பசுங்கிளியே.
  3. வேளாண்மை – மன்மதனுடைய ஆட்சி ; பயிர்களை விளைத்தல்; சிலேடை. வேளாண்மைத் தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள். (பி – ம்.) என்றும் விளைவுக்கு முன்.
  4. மலைத்திடும் – போர் செய்யும். மாரன் – மன்மதன். ஒற்றை வண்டில் – ஒரு சக்கரம் ; சக்கரம் வண்டிலெனவும் வழங்கும் (தேவை யுலா, 2006). கால்தேர் – தென்றற்காற்றாகிய தேர் ; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள். மாரன் செலுத்திய என இயைக்க. பெலத்து – பலம் கொண்டு.
  5. பச்சைக்குதிராய் – பச்சைக்குதிரையே ; என்றது சூரியன் தேரிலுள்ள ஏழு பச்சைக்குதிரைகளை நினைந்து. (பி – ம்.) பரியெல்லாம்.

4-5. ஒற்றைச் சக்கரத்தையுடைய சூரியன் தேரை இழுத்துச் செல் லும் ஏழு பச்சைக் குதிரைகளும் ஒரு சக்கரமும் இல்லாத தேரை இழுத் துச் செல்லும் பச்சைக் குதிரையாகிய உனக்கு ஒப்பாகமாட்டா.

செகமுழுது நீஞான தீபமுநீ யென்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய்-வகைவகையாய்
எவ்வண்ண மாய்ப்பறக்கு மெப்பறவை யாயினுமுன்
ஐவண்ணத் துள்ளே யடங்குமே – மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் – நாக்குத்
தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாய் – அடுபோர்
மறந்தரு சீவகனார் மங்கையரிற் றத்தை 10
சிறந்தது நின் பேர்படைத்த சீரே-பிறந்தவர்


  1. சுகமுனி – சுகமுனிவர் ; கிளிவடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும் தெய்வமகளிடம் வியாசருடைய கருணையால் அவதரித்தமை யின் இவர் இப்பெயர் பெற்றார். செக……… முனியே : சுகமுனிவர் பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில் நடந்து சென்றார். அவர் தந்தையான வியாசர், ‘குழந்தாய்’ என்று அவரை அழைப்ப எல்லாப் பொருளும் ஏனென்று கேட்டனவென்பர்;
    “பிறந்தபொழு தேதுறந்து பிறைக் குழவி போனடப்பப் பின் போய்த் தொன்னூல்,
    அறைந்தபுகழ் வியாத முனி யாதரத்தான் மதலாயென் றழைப்பச் செவ்வாய்,
    திறந்து நறை பொழியு மலர்ச் செழுந்தருவு மேனென்ன வுயிர்கள் யாவும்,
    நிறைந் துறையுஞ் சுகமுனிவ னிரையிதழ்த் தா மரைமலர்த்தா ணினை தல் செய்வாம்”
    (பாகவதம், காப்பு 3) என்பதனாலும் இவர் எங்கும் வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும். சுகமுனிவர் உன் வயிற்றிற் பிறந்தவர் ராதலால் புகழ்பெற்றார்.
  2. ஐவண்ணம் – ஐந்து நிறம் ; பஞ்சவர்ணக்கிளியென்று கிளியில் ஒரு சாதியுண்டு.
  3. பார்வதியென்று யாரும் உன்னை நினையாதபடி முற்றும் பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும் சிவந்தாயென்றபடி ; இதனால் உன்னுடைய அடக்கம் வெளிப்படுகின்றது. பார்வதிதேவியார் பச்சை நிறமுடையவர். (பி – ம்.) பொழுதிற் பசுங்கிளி.
  4. உன்னை – குழறிப்பேசுகின்ற உன்னை விடுவார் – தள்ளுபவர்.
  5. சீவகனார் – சிந்தாமணி யென்னும் காப்பியத்தலைவன். ததீதை – காந்தருவதத்தை; சீவகனுடைய பட்டத்தேவியருள் முதல்வி ; இவள் பெயர் தத்தை யென்றும் வழங்கும்.

(பி – ம்.) பிறந்தவருள், பறந்து வரும்.

ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ருஞ்சிவன்றன்
பேரும் பகர்ந்தார் பிழையன்றோ – நேர்பெறுவி
வேகி யொருகூடு விட்டு மறு கூடடையும்
யோகி யுனக்குவமை யுண்டோகாண் – நீகிரம்
ஆகையாலாடை யுனக்குண்டே பாடகமும்
நீ கொள்வாய் காலாழி நீங்காயே- ஏகாத
கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே
அற்புடைய பெண்கொடிநீ யாகாயோ- பொற்புடையோர்
துன்னியசா யுச்யஞ் சுகரூப மாகையால் 15
அன்னது நின்சொருப் மல்லவோ-வன்னி
பரிசித்த வெல்லாம் பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்- துரிசற்றோர்


  1. அச்சுதன்பேர் அரங்கனென்பது. சிவன் தன்பேர் சொக்க னென்பது. கிளி ரங்கரங்கா வென்று கூறுதல் வெளிப்படை. சொக்கர் பெயரைக் கூறுதல்,
    “புழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரச் சொக்கர்,
    அழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்,
    தழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்தத நீ,
    பழகிய சொற்குப் பயன் றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே” (மதுரைக். 54)
    என்பதனால் விளங்கும். பகர்ந்தால் – கற்பித்தால். பிழை – தகுதியில்லார்க்குக் கற் பித்தல். அச்சுதன்பேரையும் சிவன்பேரையும் நீ பிழையில்லாமற் கூறுகின்றாய். மற்றப் பறவைகளுக்குக் கற்பித்தால் அவை பிழைபடக் கூறும் ; அங்ஙனம் கற்பித்தல் பிழை. நேர் – நேர்மை . (பி – ம்.) பேரும் படைத்தாற் பிழையாரோ .
  2. கூடு – உடம்பு, பறவைக் கூடு. ஒருகூடு விட்டு மறுகூட்டை அடையும் யோகி உனக்கு உவமை ஆகான்; அவன் தான் இருக்கும் உடம்பை விட்டு அரூபியாகி வேறோர் உடம்பிற் புகுவான் ; நீ உடம் போடு வேறு கூட்டை அடைவாய் ;
    “கிட்டுநெறி யோகியருங் கிள்ளை களுந் தங்கூடு,
    விட்டுமறு கூடடையும் வேங்கடமே” (திருவேங்கட மாலை, 73).
    கீரம் – கிளி, பால் ; சிலேடை.
    11-2. விவேகி – விவேகியாகிய ஒருவன்.
  3. ஆடை-பாலின் ஆடை ; இங்கே சட்டை. பாடகம்- ஓராபரணம். காலாழி – ஒருவகை அணி ; இது பீலியென்னும் ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும். கிளிக்குச் சட்டை போடுதலும், கால்விரல்களில் மோதி ரம் போடுதலும் உண்டு. ஏகாத – நீங்காத.
  4. கற்புடையாய் – கல்லின் பக்கத்தே யுள்ளாய், கற்பை யுடையாய்; சிலேடை. நீ கற்புடையா யென்றால். காமனை – மன்மதனை, காவாகிய மனையை; கா – சோலை ; சிலேடை.
    13-4. கிளியையும் பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள் சிலேடை வகையாற் கூறப்பட்டன.
    15-6. சுகரூபம் – இன்பரூபம். வன்னி – கிளி , நெருப்பு. உன் எச்சில் – உன்னுடைய உச்சிட்டத்தை. கிளி கடித்த பழம் சிறந்தது ;
    “சுழித்து நல்ல தொழுகியஞ் சுகமுகஞ் சேர்ந்து,
    தழைத்த நான் மறைத் தடஞ்சினைக் கற்பகத் தருவிற்,
    பழுத்து திர்ந்தது பரமபாகவத மென் றிசைக்கும்,
    விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார் மேலோர் ” (பாகவதம், காப்பு. 4).
    வன்னியென்னும் பெயர், “அச்ச, மனப் பேதையார் மால் வனஞ்சுடவோ வன்னி, எனப்பேர் படைத்தா யியம்பாய்” (49 – 50) என்று பின்னும் சிலேடையில் அமைக்கப்பட் டுள்ளது.

(பி – ம்.) பரிசுத்த மெல்லாம், அரிசித்த ருன்னெச்சி லார்வார் ; உரிசித்து நின்னெச்சில்.

இன்சொல்லைக் கற்பா ரெவர் சொல்லு நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்- நின்போலத்
தள்ளரிய யோகங்கள் சாதியா தேபச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்-மேலினத்தோர்
நட்டா ரெனினு நடந்துவரும் பூசைதனை 20
விட்டார் முகத்தில் விழித்திடாய் – வெட்டுமிரு

வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனை நீ கண்டா லகன்றிடுவாய்-கேளாய்
இருவடிவு கொண்டமையா லெங்கள் பெரிய
திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாய் – குருவாய்ச்
செபதே சிகர்க்கெல்லாந் தென்னரங்கர் நாமம்
உபதேச மாக வுரைப்பாய் – இபமுலையார்
சித்தங் களிகூரச் செவ்விதழி லாடவர்போல்
முத்தங் கொடுக்க முகங்கோணாய் – நித்தமவர்
செவ்விதழுன் மூக்காற் சிவந்ததோ வுன் மூக்கில் 25
அவ்விதழின் சிவப்புண் டானதோ – செவ்வியிழந்


  1. உண்டோ : இல்லையென்றபடி . (பி – ம்.) உன் சொற்கற் பாரொருவ ருண்டோகாண்.
  2. யோகங்கள் – மருந்துகள், யோகாப்பியாசங்கள். பச்சைப் பிள்ளையாய் – இளம்பிள்ளையாகி. இளம்பிள்ளையைப் பச்சைப் பிள்ளை யென்பது வழக்கு. எப்போதும் இளம்பிள்ளையாயிருத்தற்கு யோகம் இன்றியமையாதது. உள் உணர்ந்த – அறிஞர்கள் உள்ளத்தால் உண ரப்பட்ட. (பி – ம்.) உள்ளுணர்ந்து .
  3. பாலனம் : திருமாலுக்குப் பரிபாலனத்தொழிலென்றும் கிளிக்குப் பாற்சோறென்றும் கொள்க. (பி – ம்.) மேலினத்து.
  4. நட்டார் – நண்பர். பூசைதனை விட்டார் – பூனையை உன்மேல் விட்டவர், பூஜையைச் செய்யாது விட்டவர்.
  5. உறவில்லாளனை – மிக வில்லையாள்கின்ற வேடனை, உறவு இல்லாதவனை ; சிலேடை.
  6. இருவடிவு : கருடனுக்குப் புருஷ வடிவமும் பறவை வடிவ மும்; கிளிக்குப் பச்சை வடிவமும் சிவப்பு வடிவமும். பெரிய திருவடி கள்-கருடன்; “வயங்கு மீருரு வண்ண க் கலுழன்” (தக்க. 286.) வீறு – வேறொன்றற்கில்லாத பெருமை. “மெய்யின், வடிவம் வளைந்த மணி மூக்கு மாயன், கொடியிலிருப்பவர் தங் கூறோ ” என்பர் பின் ; 56-7.
  7. செபதேசிகர் – ஜபஞ்செய்தலையுடைய குருமார். உரைப்பது : ரங்க ரங்காவென்பது. இபம் – யானை ; இங்கே அதன் கொம்பு அல்லது மத்தகம்.
  8. இதழ் – கீழுதடு. ஆடவர்போல் – கணவரைப்போல. முத்தங் கொடுத்தல் ஆடவர் தொழில். அவர் – அம்மகளிருடைய. (பி-ம்.) செவ்வி தழ் நின்; செவ்வியழியாதவர் போல்.

25. (பி – ம்.) அவ்வித ழிற்சிவப்புண் டானதோ – செவ்வியாம்.

தண்டருக்குந் தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங் குறையுண்டோ – உண்டடக்கி
ஆயுவை நீட்ட வருந்தவத்தோர் பூரகஞ்செய்
வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்- தேயசொளிர்
மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மா துஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம் பிடித்தாய் – மெய்ப்பிடிக்கும்
பச்சைநிற மச்சுதற்கும் பார்ப்பதிக்கு முன்றனக்கும்
இச்சை பெற வந்தவித மெந்தவிதம் – மெச்சும்
குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக் கான 30
தரிகீர்த் தனத்தினா லன்றோ – தெரிவையர்கள்

ஆர்த்தவிர லுன்முகமொப் பாகையா லேகையைப்
பார்த்து முகமதனைப் பாரென்பார் – சீர்த்திக்
கிரியையிலே காணுங்காற் கிள்ளை யடையாத
பெரியதனம் வீணன்றோ பேசாய் தெரியுங்காற்


  1. தோற்றான் – தோல்வியுற்றவன், கண்ணுக்குப் புலப்படாத வன். அடல் வேள் ஆனானை – தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை. தோல்வியுற்றவனை நீ இழுத்தும் குறையில்லாயென்றபடி. (பி – ம்.) ஆர்க்குங் குறை.
  2. ஆயுவை – ஆயுளை. பூரகம் – காற்றை உள்ளே நிரப்புதல். தென்றலென்னும் தேரை இழுக்கும் குதிரையாய் முன்னே செல்லுதல் பற்றி, ‘வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்’ என்றார் ; வாயு – தென்ற லாகிய தேர். தேயசு – ஒளி. (பி – ம்.) தேயு வொளிர்.
  3. மலர் மாது – திருமகள். திருமகள் கையில் கிளியுண்மை , “பின்னைத்தாய் கையிலுறை பெண்டத்தாய்”, “நாச்சியார், பங்கிருந் தாற் கையிற் பறந்திருப்பாய்” (65, 205) என்பவற்றாலும், உமாதேவியாரின் கையிலுண்மை, “களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங் கறைக் கண்டனே” (காசிக். 61) என்பதனாலும் விளங்கும். வங்கணம் – நட்பு ; “நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை 17 (தனிப்.)
  4. கீர்த்தனம் – இறைவன் பெயரை இசையோடு சார்த்திச் சொல்லுதல் (204 – 5).
    (பி – ம்.) குருவி நின்னாக்கு.
  5. தூங்கியெழுந்தவுடன் மகளிர் தம் கைவிரலைப் பார்த்துப் பின்பு கண்ணாடியில் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பது பண்டை மரபு ; இங்ஙனம் கூறுதற்குக் காரணம் அவர்களுடைய கைவிரலின் நகம் உன் மூக்கை ஒத்திருத்தலே.
    (பி – ம்.) பார்த்து முகத்தைப்பாரென் பார் பெரியோர்.

32. கிள்ளை – கிள்ளுதலை, கிளியை. பெரிய தனம் – பெருத்த நகில், பெருஞ்செல்வம்.

றேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும்
வீறுபெறு மே நீ விரும்பினாற்-கூறிலனம்
உன்னுடைய வூணன்றோ வூதப் பறந்து போம்
சின்னவடி வன்றோ செழுங்குயிலும் – என்னே
முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் 35
மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ -எதிரும்
கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும் புறா வுக்கு மொரு வாயோ- விரும்புமயில்
உற்ற பிணிமுகமே யுன்போற் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ – கற்றறியும்
கல்வியுங் கேள்வியுநீ கைக்கொண்டாய் சாரிகைக்குன்
செல்வமதி லள்ளித் தெளித்தாயோ- சொல்வேத
மென்பரிநா லுக்கும் விதிசாரதிவில் வேள் –
தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன்போரில்
மேவுஞ் சிவன்விழியால் வேள் கருகி நாண்கருகிக் 40
கூவும் பெரிய குயில்கருகிப் -பாவம்போல்


  1. தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச் சிந்துகின்ற சக்கையாகக் கெடும் ; நீ விரும்பினால் அக்கனிகள் வீறுபெறும் ; வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும் விரும்பி யுண்ணப்படுதல் : 16, பார்க்க. அனம் – சோறு, அன்னப்பறவை.
    இக்கண்ணியில் கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும் நதிப் பெயர்கள் தோற்றுகின்றன. கனி – தொகுத்தல்.
  2. ஊதுதற்குப் பறந்து செல்லும் சின்னமாகிய வாத்திய வடிவு; ஊதியவளவிற் பறந்துபோம் சிறிய வடிவு. குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும் வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.
  3. முடிச்சவிழ்த்தல் – பேரரும்பின் இதழ்க்கட்டை அவிழ்த்தல், இரகசியத்தை விரித்துச் சொல்லுதல். வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45 – 6).
    (பி – ம்.) முடிசேவியாமுன், முடி சேவித்தாலும்.
  4. கரும்புறா- கரும்பின் சுவையுறாத, கரிய புறாவென்னும் பறவை. புறா தூது விடுவனவற்றுள் ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும் நூலால் அறியப்படுகின்றது (கபோதம் – புறா ; சந்தேசம் – தூது);
    “நன்புறவைத் தூண்டினது நாளுந்தூ துண்டொ ழிக்கும்,
    என்புறத்துத் தூதாக வெண்ணுமே” (கச்சியானந்த. வண்டு. 337)
  5. பிணிமுகமென்பது மயிலின் பெயர் ; நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்.
  6. சாரிகை – நாகணவாய்ப்புள். செல்வமதில் அள்ளி – உன்னு டைய செல்வத்திற் சிறிய பாகத்தை அள்ளி. நாகணவாய்ப்புள் பேசும் வன்மை சிறிதே பெற்றதென்னும் கருத்தை உட்கொண்டு இங்ஙனம் கூறினார். (பி – ம்.) தெறித்தாயோ.
    38 – 9. வேத மென் பரி – வேதமாகிய மெல்லிய குதிரை ; வேதமென் னும் பரியுமாம்.
    விதி – பிரமன். (பி – ம்.) பரியா முனக்குச் சாரதியார்.

40. வேள் கருகி – நெற்றிக் கண்ணின் தீயால் மன்மதன் சாம்ப ராகி ; கருநிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள். மன்மதன் கரிய நிற முடையவன்; “ஆழி யுடையான் மகன் மாயன் ” (தண்டி. 48, மேற் ). நாண் – வண்டு. கூவும் – சின்னமாக இருந்து கூவுகின்ற. இயற்கைகள் செயற்கையாகக் கூறப்பட்டன.

நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற் 41
சென்று மறுப்படா தேவந்தாய் – என்றுமாக்
காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் றானாக்கு
மூக்கு மறுப்பாய் முகம்பாராய்-ஆக்கம்
வரையாம னன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீவிட் டகலாய் – இருகை
உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை
எனக்குமுனக் கும் பேத மீதே-மனைக்குள்
இதமாய் மனிதருட னே பழகு வாயன் 45
பதனான் முறையிட் டழைப்பாய் – மதுவுண்
டளிப்பிள்ளை வாய் குழறு மாம்பரத்தி லேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் – கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின்னத்தைப் போலுமொரு பேறுண்டோ – அன்னமின்றிப்
பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால்பிடிப்பார் கோடி பேர் கண்டாயே-மால்பிடித்தோர் 49
கைச்சிலைவே ளால் வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ


  1. மறுப்படு நாள் – தோல்வியுற்ற காலத்தில், சாம்பராகி மறுப் பட்ட காலத்தில் மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி ருத்தலை நினைந்து.
    41-2. நாக்கு மூக்கு மறுப்பாய் – நாக்கையும் மூக்கையும் கொண்டு முறையே சுவைத்தலையும் மோத்தலையும் செய்ய மறுப்பாய் ; அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும் மூக்கையும் அறுப்பா யென்று வேறொரு பொருள் கொள்க. ஆக்கம் – செல்வம்.
    43-4. நன்மை வரத்தினை நல்கும் – நல்ல கரிய மேன்மையான தினையைக் கொடுக்கும், நல்ல வரத்தைக் கொடுக்கும் ; கருந்தினை யென்று ஒரு சாதியுண்டு. அரிதாளை – தினையின் அரிந்த தாளை , திரு மாலின் பாதங்களை ; “அரிதாள் , மறவாத பாக வதனே” (மான்விடு தூது, 45) என்று பிறரும் இதனைச் சிலேடையில் அமைத்துள்ளனர்.
  2. முறையிட்டு – முறைப்பெயரிட்டு ; அப்பா, அம்மா, அக்கா என்பன முதலியன.
  3. அளிப்பிள்ளை – இளைய வண்டு. ஆம்பரம் – மாமரம். பிள்ளைப் பூங்குயிலும் – பிள்ளையாகிய குயிலும் ; குயிலுக்கு மாமரம் உரியது. (பி – ம்.) களிப்புள்ள பூங்குயிலும்.
  4. சொன்னத்தை – சொல்லியதை, தங்கத்தை. அத்தைப் போலும் – அதனைப்போலும். அன்னம் இன்றி – அன்னம் இல்லாமல்.
    (பி – ம்.) சொன்னதை, அன்னதை ; அன்னமன்றிப். 48. பச்சைக் குழந்தை – இளங்குழந்தை. கால்பிடித்தல் – கிளியின் . கால் தம் கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்.
  5. நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்துகளுள் பச்சிலை ஒன்று.

(பி – ம்.) தீர்ப்பதற்கோர், தீர்ப்பதற்குப் .

பச்சிலை ரூபம் படைத்திருந்தாய் – அச்ச 50
மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர் படைத்தா யியம்பாய்- அனத்தை
நிலவோவென் பார்க ணெடுந்துயர்வே முத்தைக்
கொலவோ வரிவடிவங் கொண்டாய் – சிலைநுதலார்
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய் நீ-உள்ளம்
மிகவுடை மாதர் விதனங் கெடவோ
சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் – தகவுடைய
தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்
வித்தையடைந் தாயுனையார் மெச்சவல்லார் – முத்தமிழோர்
மாரதி பாரதியார்க் குன்னையுவ மானிப்பார் 55
ஆரதிக மார் தாழ் வறைந்திடாய்-ஊரறிய


  1. மால்வனம் – காம மயக்கமாகிய காட்டை. வன்னி – கிளி, நெருப்பு. அனத்தை – அன்னப்பறவையை, சோற்றை.
    50-51. அன்னப்பறவையையும் மயக்கத்தால் நிலவென்று அஞ்சும் மகளிர். “தலைவரைப் பிரிந்த மகளிர் நிலவைக் கண்டு வருந்துவராதலின் வெண்மையான பிற பொருள்களையும் கண்டு அஞ்சுவாராயினர்.
  2. கிள்ளை – குதிரை, கிளி. கிற்பாய் – வன்மையுடையாய். (பி – ம்.) கிர்ச்சிப்பாய், கிற்கிற்பாய்.
  3. உடைமாதர் – உடைந்த மகளிர். சுகவடிவு – கிளியாகிய வடிவு, இன்பவடிவு.
  4. தத்தை – கிளியை, ஆபத்தை. (பி-ம்.) தத்தையடையென்று.

55. மா ரதி – திருமகளுக்கும் ரதிதேவிக்கும். பாரதியார்க்கு – கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து ; ” உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை ” (தொல். உவம். 3)

நெய்யிற்கை யிட்டாலு நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீ கரிக்கலாம்-மெய்யின்
வடிவும் வளைந்த மணிமூக்கு மாயன்
கொடியி லிருப்பவர்தங் கூறோ-நெடியமால்
விண்டுதறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ- கொண்ட சிற
கல்லிலங்கு மெய்யானை யன்றழித்து வீடணன் போய்த்
தொல்லிலங்கை கட்டுபுதுத் தோரணமோ நல்வாய்
மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக் 60
குழலி னிசைதானோ கூறாய்- அழகுக்
கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளா யின்பரசக் குஞ்சே – வளிப்பிள்ளை
தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையிலுறை பெண்டத் தாய்-பொன்னொத்தாய்
முத்தி நக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய்
ஒத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே –சுத்தமுறும்


  1. பசுமையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்தினத்தை நினைந்து. கையிட்டு – கையைச் செலுத்தி, கையறைந்து.
  2. கொடியிலிருப்பவர் – கருடாழ்வார்.
  3. விண்டு – மூங்கிலை. தறித்து – வெட்டி. வேணு – புல்லாங்குழல். சிறகு, தழைத்த பசுந்தழையோ. சிறகு : இடைநிலைத் தீவகம். (பி – ம்.) தனித் தூதும்.
  4. மெய்யான் – இராவணன். கிளி தோரணத்திற்கு உவமை ; “மாடத்துப் பறக்குமொண் கிளியொ ழுங்கின், இலைசெரு கியப சும்பூந் தோரண மிசைய வார்த்தார் ” (பிரபு. சூனிய. இருந்த. 9) (பி – ம்.) 58-9, கொண்டனிருத்தல் விலங்கு.
  5. மணிவண்ணன் – நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ண பிரான்.
  6. நலங்கு குளிப்பிள்ளாய் – நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்; “நலங் காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன்” என்பர் பின் ; 195. வளிப்பிள்ளை – தென்றற்காற்று.
    (பி – ம்.) கிள்ளாய் நலுங்கு ; குளிப்புள்ளாய்.
  7. தாய்போலெடுத்துச் சஞ்சரிக்குமென்றது குதிரையாக இருந்து வளிப்பிள்ளையைத் தாங்கிச் செல்லுதலை நினைந்து. பின்னைத்தாய் – திரு மகள் ; நப்பின்னையுமாம். பொன் – கிளிச்சிறையென்னும் பொன். (பி – ம்.) பேதைத்தாய்.

63. முத்தி நகர் ஏழில் ஒன்று அவந்தி. வல்லாறில் – வல்லெழுத்து ஆறில் ; தவ்வரிப்பேர் உற்றது ஒன்று : தத்தை. அவந்தி யென்பதும் தத்தை யென்பதும் கிளியின் பெயர்கள்.

ஐந்து பூதத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே
முந்து முத லானபொருள் மூன்றிலொன்றே- வந்த
இருபயனி லொன்றே யிமையே விழியே 65
பருவ விழியிலுறை பாவாய் – ஒருநாரில்
ஏற்றுந் திருமாலை யெய்தப்போ யூரெல்லாம்
தூற்றுமலர் கொண்ட கதை சொல்லக்கேள் – தோற்றி

அழகர் சிறப்பு
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்
பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய
வரைத்தடந் தோளவுணன் வன்காயங் கூட்டி
அரைத்திடுஞ் சேனை யருந்தி – உருத்திரனாய்ப்
பண்ணுந் தொழிலைப் பகைத்து நிலக் காப்புமணிந்
துண்ணும் படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்
பூதனை தந்த பால் போதாம் லேபசித்து 70
வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத்


  1. ஐந்து பூதத்தில் ஒன்று : வன்னி (நெருப்பு). படை நான்கிலொன்று : குதிரை. குதிரைக்குக் கிள்ளையென்று ஒரு பெயர் உண்டு. முதலான பொருள் மூன்றில் – திரிமூர்த்திகளில் ஒன்று என்றது அரி யென்னும் பெயரை. வன்னி, கிள்ளை, அரியென்பன கிளியின் பெயர்கள்.
  2. இருபயன் – சுகம், துக்கம் ; ஒன்று : சுகம் ; அது கிளிக்கும் பெயர். நார் – அன்பு, பூத்தொடுக்கும் நார். (பி – ம்.) இமையாவிழியே.
  3. திருமாலை- அழகரை, அழகிய மாலையை. அலர் – பூ. பழிமொழி.
    65-6. ஒரு நாளில் தொடுத்த பூமாலையை அடையப்போய் மலரை மாத்திரம் கொண்டேனென்பது வேறு பொருள்.
  4. அரி – சிங்கம். அரன் – சிவன். நரன்வடிவுமாகியெனப் பிரித்து, நரனென்னும் அவதாரம் செய்தென்று கொள்ளுதலுமாம். இக்கண்ணி நரசிங்காவதாரத்தைச் சுட்டியது.
  5. அவுணன் – இரணியன். காயம் – உடம்பு, உணவுப் பொரு ளோடு சேர்க்கும் பலவகைப் பொடி ; இது மசாலையென வழங்கும் ; “உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் ” (நாலடி. 116). சேனைசைனியத்தை, சேனைக்கிழங்கை. உருத்திரனாய் – நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும் கடவுளாகி.
    (பி – ம்.) சேநெயருந்தி.
  6. பண்ணும் தொழில் – காத்தற்றொழில். நிலக்காப்பு – மண்ணைக் குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக் காத்தல். குழந்தைகளுக்கு மண் பொட்டிடுதல் மரபு ; “மண்பொட் டணிந்து நீறிட்டு ” (பிரபு. மாயை யுற்பத்தி. 46). உண்ணும் உலகங்களை யெல்லாம் உண்டு; படி – உலகம், படியால் அளக்கப்படும் அரிசியால் ஆகிய பிரசாதம் ; “குளப்படி நெய் யடிசிற் கொத்ததோ” (திருவரங்கத். 89)

70. வேதனை – துன்பத்தை, பிரமதேவனை. பாதவத்தை மரங்களை.

தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும் 71
பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஒள்ளிழையார்
கொல்லைப்பெண் ணைக்குதிரை யாக்குந் திருப்புயத்தான்
கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப்
பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர முதுகடைந்த வங்கையான்- நாரியுடன்
வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான் – என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன் 75
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் – தெள்ளிதின்
வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான்
கிட்ட விருந்துங் கிடையாதான்- தட்டாதென்
எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்
கண்ண னெனும் பெயராற் காண்பிப்போன்- எண்ணுங்கால்


  1. ஒள்ளிழையார் – ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர் .
  2. கொல்லையிலுள்ள பனைமரத்தாலாகிய குதிரையாக்குதற்குக் காரணமான ; மகளிர் மடலேறுதல், திவ்யப்பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல் முதலியவற்றால் அறியப்படும். புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவாரென்பது கருத்து. பெண் -‘அகலிகை. கவிக்கு – திருமழிசை யாழ்வார் மாணாக்கரான கணிகண்ணர் பொருட்டு.
  3. முதுகு அடைந்த பாயலான் : அரவப், பாயலைத் தோளில் எடுத்துத் தூக்கிக் கணிகண்ணர்க்குப் பின்னே சென்றாரென்னும் பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது ; ‘பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத்தோ ளெருத்தலைப்பப், பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே ” (மீனாட்சி. பிள்ளைத். காப்பு. 1). ஆர் அமுதுகடைந்த – அரிய அமுதத் தைக் கடைந்த; “கடல் கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை” (திருவாய். 3. 4: 9). நாரியுடன் – சீதாபிராட்டியோடு.
  4. வன் கானகம் கடந்த – வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற. வேட்டுவற்கு – சரனென்னும் வேடனுக்கு. மென் கால் நகங்கள் தந்த – மெல்லிய கால் நகங்களைத் தந்த. கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின் கண்ணபிரானது பாதமென்று அறிந்து வருந்திய அவனுக்கு வீட்டையும் அளித்தனரென்பதை வீட்டினா னென்பதனால் உடம்படு புணர்த்தினார் ; இந்த வரலாறு பாகவதம், 11-ஆம் கந்தம் தன்னுடைச் சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம், 28-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.
  5. முதலடியில் முரண் அமைந்துள்ளது.

77. மாயன் – கரிய நிறமுடையவன், மாயையை யுடையவன். கண்ணன் – எல்லார் கண்ணிலும் உள்ளவன்; ” வீதிவாய்ச் செல்கின்றான்போல் விழித்திமை யாது நின்ற, மாதரார் கண்க ளூடே வாவுமான் றேரிற் செல்வான், யாதினு முயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ண னென்றே, ஒதிய பெயர்க்குத் தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான்” (கம்ப. உலாவியற். 6) என்பதிலும் இச்சொல் இப்பொருளில் அமைக்கப் பட்டுள்ளது. (பி – ம்.) நண்ணுங்கால்.

எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான் – அங்கறியும்
என்னை யெனக்கொளத்தி யானென்றுங் காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை
கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை 80
என்றுந் தனியே யிருத்துவோன்- துன்றுபிர
மாவுநான் மன்னுயிரு நானவ் விருவரையும்
ஏவுவான் றானு நா னென்றுணர்த்தக்-கோவலர்பால்
ஆனுமா யான்கன்று மாகி யவற்றை மேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி-மா நரகப்
பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாவுடலில்
ஆருயிர் கூட்ட வயன் வேண்டா – பாருமெனச்
சங்கத் தொனியுந் தடங்குழ லோசையெனும்
துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்- பொங்குமலை
மோதும் பரனாதி மூல மிவனென்றே 85
ஓதுங் கரியொன் றுடையமால் – மூதுலகைத்
தந்திடுவோ னுந்துடைப்போன் றானு நா னென்று திரு
உந்தியால் வாயா லுரைத்திடுவோன்- பைந்தமிழால்


  1. கோவலர்பால் – இடையரிடத்தில். 80-81. பிரமாவும் நான்.
  2. பிரமன் ஆன்கன்றுகளையும் சிறார்களையும் கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான் அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம், மலரவன் சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால் அறியப்படும்.
    83-4. துரியோதனனைச் சேர்ந்தவர்கள் தீ து செய்தவராயினும், கண்ணபிரானது சங்கத்தொனியைக் கேட்டமையின் நரகம் புகாராயி னார் ; ஆதலின் நரகப்பேரிருள் நீக்கச் சங்கத்தொனி தொனிப்பிப்போன் என்றார். வேய்ங்குழலோசையால் பட்டுப்போன மரங்கள் தளிர்த்தன வாதலின், ‘ உடலில் ஆருயிர் கூட்ட வயன்வேண்டா ‘ என்றும், ‘குழ லோசை………….. தொனிப்பிப்போன்’ என்றும் கூறினார். அலை – திருப் பாற்கடல்.
    (பி – ம்.) தொனியாய்த் தொனிப்பிப்போன்.
  3. கரி – கசேந்திரனென்னும் யானை, சாட்சி.

86. உந்தி – நாபி; இது தன்பால் பிரமனைத் தோற்றி உலகைச் சிருட்டிப்பது. பிரளயகாலத்தில் உலகத்தை உண்டமையால் வாய் அழித்தற்கு உரியது ; ” உலக முண்ட பெருவாயா” (திருவாய். 6:10:1)

ஆதிமறை நான்கையுநா லாயிரத்து நற்கவியா
ஓதும் பதினொருவ ருள்ளத்தான்-பாதமெனும்
செந்தா மரைமலரிற் சிந்திய தேன்போல
மந்தா கினிவழியும் வண்மையான்-சந்ததமும்
ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத்
தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம் புறமும் 90
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைக்
கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த
அவிச்சையுவர் வாங்கமுகி லானோன் – நிவப்பா
மடங்கும் பரசமய வாத நதிவந்
தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற்
புணர்க்க வொருகிரணம் போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன் – பணைக்கும்
விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும்
அசைப்போனுந் தானாகு மண்ணல்-இசைத்திசைத்
மீன்பிடிக்கும் வேட ரொருபார்வை யானூறு 95
மான்பிடிக் கின்ற வகையென்னத்-தான்படைத்த


  1. பதினொருவர் – ஆழ்வார்கள் பன்னிருவருள் மதுரகவி யொழிந்த மற்றையோர்.
  2. திரிவிக்கிரமாவதாரகாலத்தில் வலக்காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர். மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன் அவயவப் பொருள்.
  3. துயிலாத் துயில் – அறிதுயில். ஈன்றவளை – யசோதையை.
  4. கொள்ளை – மிகுதி. (பி – ம்.) இருப்ப வுணர்வித்தோன்.
    89-90. ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.
  5. அவிச்சையுவர் – அஞ்ஞானமாகிய உப்பை. உவரை நீக்கி நீரைக் கொள்வது முகிலின் இயல்பு; முகில் – மேகம். நிவப்பா – உயர் வாக.
  6. கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு. 91-2. (பி – ம்.) நிவப்பா மடங்காப்.
  7. நீலமணி ஏனை நிறங்களைத் தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும் இயல்புடையது.

95. பார்வை – பார்வைமிருகம் ; மிருகங்களைப் பிடிப்பதற்காக வேடர்கள் வளர்க்கும் மிருகங்கள் அல்லது அவற்றைப் போல மண்ணாற் செய்த வடிவங்கள் ; இவை தீபகமென்றும் சொல்லப்படும்.

என் பிறவி யெண்பத்து நான்குநூ றாயிரமும் 96
தன்பிறவி பத்தாற் றணித்திடுவோன் – முன்பு புகழ்ந்

தசாங்கங்கள்
(மலை)
தேத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம்
வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாம்
சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி – எங்கோமான்
மேய்த்த நிரைபோல வெற்புகளெல் லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால் விடையாய்ப் பார்த்திடலால்
இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர் 100
மன்னிய சோலை மலையினான்-எந்நாளும்

(நதி)
பொற்சிலம்பி லோடுஞ்சாம் பூந்தபோன் மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்-கற்சிலம்பில்


  1. பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்து நான்கு லட்சம் பிறப்பின் பேதங்களை. பிறவி பத்து – தசாவதாரம் ; தாம் அவதாரம் எடுத்தமையால் அவற்றைத் தியானிக்க என் பிறவி தீர்ந்த தென்பது கருத்து.
  2. இருவர் – பிரமதேவரும் உருத்திரரும். கேசவாத்திரி – அழகர் மலையின் திருநாமங்களுள் ஒன்று.
  3. காத்திரம் சேர் விலங்குகளை – உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை, முன்காலைச் சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை ; சிலேடை. காத்திரம் – யானையின் முன்கால். சிங்காத்திரி : இம்மலையின் திரு நாமம். எம்கோமான் – கண்ணபிரான்.
  4. கீழேயிருக்கும் சிறு குன்றுகளுக்குப் பசு நிரையும், அழகர் மலைக்கு இடபமும் உவமை. தருமதேவதை இடபவடிவங்கொண்டு இங்கே தவஞ் செய்து வழிபட்டுப் பேறுபெற்றமையின் இடபகிரி யென்ற பெயர் உண்டாயிற்றென்பர்.
  5. இனிமை இயம் – இனிய வாத்தியங்கள் ;
    “முன்றி லதிர்மும் முரசினான்’ என்பர் பின் ; 122.
    97-100. இக்கண்ணிகளால் அழகர் மலையின் திருநாமங்களாகிய கேசவாத்திரி, சிம்மாத்திரி, இடபமலை, சோலைமலை என்னும் திருநாமங் கள் பாராட்டப் பெற்றுள்ளன. (பி – ம்.) கிரியெனும்பேர்.

101. பொற்சிலம்பில் – மேருமலையில். சாம்பூந்தம்-மேருவின் தென் பால் ஓடும் ஓராறு ; நாவற்பழத்தின் சாறே ஆறாக ஓடுதலால் இந்நதம் சாம்பூ நதமெனப் பெயர் பெற்றது; நதம் – மேற்கு நோக்கி ஓடும் ஆறு. மாணிக்க நற்சிலம்பு – திருவடியில் அணியப் பெற்றுள்ள மாணிக்கப் பரலையுடைய சிலம்பென்னும் ஆபரணம். கற்சிலம்பில் – பலவகையான கல்மலைகளுக்கு இடையே .

இந்திரன் போலு மிடபா சலமவன்மேல் 102
வந்தவிழி போலும் வளச்சுனைகள் – முந்து திரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வருநூ புரநதியான் – சீலமுறு

(நாடு)
பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால் – பின்னகங்கண்
காட்டு மவற்றுட் கனகவரை மீது புகழ் 105
தீட்டும் புன்னாடுந் தென்னாடும்- நாட்டமாம்
அந்நா டிரண்டி லருள்சேர் வலக்கணெனும்
நன்னாடாந் தென்பாண்டி நாட்டினான் – பொன்னுருவச்

(ஊர்)
சந்த்ரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும் – மந்த்ர விரு
துக்கொடி யேறு துசத்தம்பம் வல்லிசா 108
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும் – மிக்கோர்க்


  1. சுனைகளுக்கு இந்திரன் விழிகள் உவமை.
  2. முத்தாரம் தோளிலும் மார்பிலும் உள்ளன; நதிக்கு முத்தாரம் உவமை ; “மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி” (தொல். செய். 35, பேர். மேற் ); “நதிக்குப் போத வொழுகு முத்தாரமும்” (தக்க. 280). நூபுரநதி – சிலம்பாறு ; “நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை” (சிலப். 11 : 108); “சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ் சோலை” (பெரியதிரு. 9. 9 : 9)
  3. பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகள் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள் ; “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவாவதன் வடக்கு-நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிரு நாட் டெண்” (நன். 272, மயிலை. மேற்.). பின்னகம் – பின்னல். கண் – கண்கள். கையிரண்டு, காதிரண்டு, நகிலிரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும் பன்னிரு நாடுகளுக்கு உவமை.
    (பி – ம்.) செந்தமிழ் நாடுகளும் ; வின்னகங்கண்.
  4. கனகவரை – மேருமலை. புனல் நாடு – சோழ நாடு. தென்னாடுபாண்டி நாடு. நாட்டம் ஆம் – கண்கள் ஆகும். (பி-ம்.) காட்டு மவற்றுக் கனக.
  5. சோமச்சந்திர விமானம் : இஃது அழகருடைய விமானத்தின் திருநாமம். தருமதேவதையின் கட்டளைப்படி விசுவகருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால் இப்பெயர் பெற்றது ; இது சோமச்சந்த விமானமென்றும் வழங்கும் ; ” வந்த விமானத்தமரர் மலர் தூவிப் பணிசோமச், சந்தவிமா னத்தமருஞ் செளந்தரிய பரஞ்சோதி 1) (அழகர் கலம். 1)

107-8. விருதுக்கொடி – வெற்றிக்கொடி. துசத்தம்பம் – துவசத்தம் பம். வல்லிசாதக்கொடி – கற்பகமரத்திற் படரும் காமவல்லி.

கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்
திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும்
நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை 110
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும் – எண்ணுதலால்
ஆர்பதி யான வமரா பதிபோலும்
சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில்

(மாலை)
எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த
வண்ணந் தருந்துளப மாலையான் –உண்ணின்

(யானை)
துருக்கும் வயிணவமா மோங்குமதம் பொங்கத்
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர – நெருக்கிய


  1. ஒரு வாழ்வானோனென்றது அழகரை. திருமாலையாண்டான் – உடையவருடைய குரு ; இவருடைய விக்கிரகம் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியின் பக்கத்தே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸுப்ர பாதபடனம், புஷ்பாஞ்சலி முதலியன இவர் சொல்லா நிற்ப அர்ச்சகர் செய்யவேண்டும். திவ்யப்ரபந்த சேவையும் உண்டு. இவருடைய சந்ததியார் பெருமாள் எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில் வருவார்கள். திரியெடுத்தாடுதல் முதலியவற்றில் இவர்களுக்குக் காணிக்கை யுண்டு. இவர்களைச் சேவித்தபின் அடியார்கள் பெருமாளைச் சேவிப் பார்கள்.
    (பி – ம்.) ஒருவாழ்வானோனே.
  2. நம்பி – திருமலை நம்பி; இவர் கைங்கரிய பரர் ; பட்டைக் கைங் கரியமென்று பெயர்; இக்கைங்கரியம் தர்ப்பம், கூர்ச்சம், பவித்ரம் முதலியன கொடுத்துப் புண்யாஹவா-சனாதிகள் செய்து வைக்கும் பௌரோகித சம்பந்தமானது. இவர் பரம்பரையார் இன்றும் இங்கேயே இருந்து கைங்கரியஞ் செய்து வருகிறார்கள். விபுதர் – தேவர்.
    (பி – ம்.) நம்பி முதலோர்கள்.
  3. ஆர் பதி – நிறைந்த ஊர். சீர்பதி-ஸ்ரீபதி ; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்.
  4. கலன் – ஆபரணங்கள். மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில் உவமை.
    (பி – ம்.) கலனிறத்தால், கலைநிறம்போ லிந்திரவிற்.

113. மதம் – சமயம், யானையின் மதம். திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு. துதிக்கை – துதித்தல், யானை யின் துதிக்கை .

பாகமொத்த வைகான் தம் பாஞ்ச ராத்திரமாம் 114
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு
மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக- விட்டுவிடா
வானந்த மான மலர்த்தாள்கண் டத்துவி
தானந்த மென்றகளி யானையான் – தானந்த

(குதிரை)
வர்க்கத் துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங் காண்பித்துச் சொர்க்கத்தில்
ஏறுங் கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும் பலகலையும் வென்றோடி – ஆறங்கம்
சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டு தாரணியிற்
போற்றிய வேதப் புரவியான் – பாற்கடலிற்

(கொடி)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் 120
சக்கரமும் போலத் தலைசுழன்று – தொக்கவிசை


  1. வைகானதம், பாஞ்சராத்திரம் : வைஷ்ணவ ஆகமங்களின் பெயர்கள். (பி – ம்.) மோகமுறும்.
  2. வடகலை, தென்கலை – வைணவ மதத்தின் உட்பிரிவுகள். புரசைக் கயிறு – யானையின் கழுத்திற் கட்டும் கயிறு. (பி – ம்.) விட்டுவட.
  3. வான் அந்தம் ஆன.
    (பி – ம்.) மானம் வரத்தாள் கண்டு ; தாள்கணடத்து செவிக், கானந்தம்.
    117-9. வேதத்துக்கும் குதிரைக்கும் சிலேடை.
  4. வர்க்கம் – எழுத்தின் வர்க்கம், சேணம். வாயின் உரைகடந்துமனிதர் வாயின் உரையைக் கடந்து, வாயில் நுரைகள் தந்தென்பது மற் றொரு பொருள். கற்கிவடிவு – கோயிலின் வடிவு. குதிரையின் வடிவு; கற்கி – கோயில் ; “கற்கிளர் கற்கி செய்தோன்” (சேது. இராமநாத. 43)
  5. அணு – துளி, உயிர் தோற்றி – வெளிப்படச் செய்து. கலை – நூல்கள், மான்கள். ஆறு அங்கம் – வேதாங்கம் ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்.
  6. மந்திரத்திற்குப் பம்பரமும், பூமிக்குச் சக்கரமும் உவமைகள். விசை – வேகம்.

(பி – ம்.) பூமியு மம்பரமும்.

வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப் 121
பற்றுங் கருடப் பதாகையான் – சுற்றியதன்

(முரசு )
குன்றிலரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும் முரசினான் – என்றும்

(ஆணை )
அவனசை யாம லஹிவசையாதென்னும்
தவநிலை யாணை தரித்தோன் – நவநீதம்
மேனியிற் சிந்தியது மென்கையி லேந்தியதும்
வானி லுடுவு மதியுமெனத் – தானுண்டோன்
செங்கதிரும் வெண்கதிரு மென்னத் திருவிழியும் 125
சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன் – அங்கணுல
குண்டகனி வாயா னுறையுந் திருவயிற்றான்
கொண்ட படியீன்ற கொப்பூழான் – மண்டி
அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்
விளைந்த பொருள் காட்டு மெய்யான்-உளங்கொண்


  1. கருடப்பதாகை – கருடக்கொடி : பதாகை – பெருங்கொடி. (பி-ம்.) பொழுதுவிடா, வாசுகியுஞ் சேடனையும்.
  2. அரி – சிங்கம். கரி – யானை. கொண்மூ – மேகம். மும்முரசு – நியாய முரசு, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 : 12, உரை)
  3. “அவனன்றி யோரணுவு மசையாது” (தாயுமான. எங்கு நிறைகின்ற. 1). நவநீதம் – வெண்ணெய்.
  4. உடு – நட்சத்திரம். மதி – சந்திரன்.
  5. மேனியிற் சிந்திய வெண்ணெயின் சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும், கையில் எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும் உவமைகள்.
  6. திங்கள் இடக்கண்ணும் சங்கும், சூரியன் வலக்கண்ணும் சக்கரமும் ஆகும்.
    (பி – ம்.) செங்கதிர் வெண்கதிர் நா லென்னத். வெண்கதிர் நாளென்னத்.
    125-6. உலகு உறையும் என இயைக்க. கொண்டபடி – உட் கொண்டபடி. கொப்பூழ் – திருவுந்தி. (பி – ம்.) ஈன்ற கொப்புளான்.

127. பூமியை அளந்ததும் அதனை ஏற்றதும் வாமனாவதாரத்தில். விளைந்த பொருள் – பச்சைப்பயிர்.

டிடந்த மருப்பினா னேந்து முதுகான் 128
படந்தனில் வைத்தமணிப் பாயான் – தொடர்ந்த வினை
முட்டறுக்குந் தன்னாம முன்னித் திருநாமம்
இட்டவருக் கீவோ னிகபரங்கள் – எட்டெழுத்தாற்
பிஞ்செழுத்தாய் நையும் பிரம் லிபியெனும்பேர் 130
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன் – வஞ்சமறத்
தங்கள் குன் றெங்கிருந்துஞ் சங்கர னாதியோர்
நங்கள் குன்றி தென்னவரு நண்புடையோன் – அங்கோர்
வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண் கொடுத்த கண்ணன் – நயமுரைக்கின்


  1. இடந்த – பெயர்த்த; இது வராகாவதாரத்தில். முதுகிலேந்தி யது கூர்மாவதாரத்தில் பாய் – ஆதிசேடன்.
    126-8. ” கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக், கிடந் திடுந் தன்னுட் கரக்கு முமிழும், தடம் பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும், மடந்தையை மால் செய்கின்ற மாலார் காண்பாரே”, ” உண்டு முமிழ்ந்துங் கடந்து மிடந்துங் கிடந்து நின்றும், கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும், கண்டவாற்றாற் றனதே யுலகென நின்றான்” (திருவாய். 2, 8:7, 4.5: 10)
  2. முட்டு – தடை. தன் நாமம் முன்னி – தன் திருநாமங்களைத் தியானித்து. திருநாமம் இட்டவருக்கு – திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு ;
    “மணிவாசற் றூங்க வொரு குடைக் கீழ்வையங் காத்துச் சிந்தா,
    மணிவா சவனென வாழ்ந்திருப் போர்பின்னை மாதிருக்கும்,
    மணி வாச மார்பரங் காகேச வாவென்று வாழ்த்தித்திரு,
    மணிவாசகங்கொண் பணிவா ரடியை வணங்கினரே” (திருவரங்கத். 72);
    “ஈராறு நாம் முரை செய்து மண் கொண் டிடுவார்கள் காணு மிமையோர் (வி. பா. 9-ஆம் போர்ச். 1). எட்டெழுத்து – அஷ்டாக்ஷரம்.
  3. பிஞ்சு எழுத்தாய் – சிறிய எழுத்தாய் : பிஞ்சு எழுத்து எனப் பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம். பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகி யது ; அஞ்சு எழுத்து – யாவரும் அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம். மூன்று எழுத்தது – மூன்று எழுத்தையுடைய இல்லையென்னுஞ் சொல் ; “போதனார் நெட்டெழுத்து நமனா ரிட்ட குற்றெழுத்தும் புனலெழுத் தாய்ப்போக” (சீரங்க. ஊசல். 16)
    (பி- ம்.) எழுத்தா னையும் ; அஞ்செழுத்து ; அஞ்சலியாத்.
  4. (பி-ம்.) தங்கள் குன் றத்திருந்தும்; நங்கள் குன்றென்றுவரு.

132. வயமுனி – பச்சைவாரண தாசர்; இவர் திருக்கச்சி நம்பி முன் னோர்களுள் ஒருவர்; பச்சைவாரணப் பெருமாள் கோயிலில் வழிபட்டவர். இவருக்கு ஹஸ்திகிரியில் கண்ணைப் போக்கினதாகவும், அழகர் மலையில் கண்ணைக் கொடுத்ததாகவும் வரதராஜ ஸ்தவத்தில் கூரத்தாழ்வார் கூறி யிருப்பதாகப் பெரியோர் கூறுவர். கயமுனி – யானைக் கன்று; இதற்குக் ‘கண் கொடுத்தது, “வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில் வண்டோ டிரண்டு பாடும் மழைபாய் கடாக்கரிக் கண் கொடுத்தும் 11 (அழகர் பிள்ளைத். அம்புலிப். 4) என்பதிலும் கூறப்பட்டுள்ளது.

அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம் லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான் – எஞ்சாது
விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன் – பண்ணிலங்கும்
ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போலெவர்க்கும் 135
தாரணி நல்காத தம்பிரான் – காரணியும்
செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும்
சங்கத் தழகனெனுந் தம்பிரான் – எங்கும்
திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன் – விருப்பமுகம்
சந்திர னான சவுந்தர வல்லியுடன்
சுந்தர ராசனெனத் தோன்றினோன் – அந்தம்
சொல நலங்கொ டோளழகாற் சுந்தரத் தோளன்
மலையலங் காரனென வந்தோன் – பலவிதமாய்


  1. அஞ்சுபடை – பஞ்சாயுதம், அஞ்சுகின்ற படை. உத்தியோகச் சக்கரம் : உத்தியோகச் சக்கரம், பிரயோகச் சக்கரமெனச் சக்கராயுதம் இருவகைப்படும்; அவற்றுள் இயல்பாக உள்ளது உத்தியோகச் சக்கரம்.
  2. பொன் இலங்கை – பொன்மயமான இலங்கை நகரத்தை. மண் நிலத்தை. கைத்தானமாய் வாங்குவோன் – மகாபலியினிடத்தே தானமாய்க் கையில் வாங்குவோன்.
  3. அரங்கத் தெம்பிரான் – ஸ்ரீரங்க நாதர். ஸ்ரீரங்கநாதர் நாச்சி யார் பலருக்கு மாலையை அளிப்பவர் ; அழகர் ஆண்டாளுக்கு மட்டும் மாலை அளிப்பவராதலின் இங்ஙனம் கூறினார். தாரணி – மாலையாகிய ஆபரணத்தை. கார் அணியும் – கொடையால் மேகத்தை ஒத்த. (பி- ம்.) நல்காத தண்மையான் ; சீரணியும்.
  4. இடச்செங்கையில் சங்கமென்னும் ஆயுதத்தையுடைய அழகர் ; தென்மதுரையூரிடத்தில் தமிழ்ச்சங்கத்திலுள்ள அழகர் ; “சுத்தத் தமிழ்ப் புலவர், சங்கத் திருப்பிரியான் சார்பு ” (அழகர் கலம். 68)
  5. திருப்பாது உகைக்கும் – பின்வாங்காமல் செலுத்துகின்ற. கருடன் – கருடாழ்வான் ; கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது. திருப்பாதுகை – திருவடி நிலை ; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில். (பி – ம்.) அரசீய்ந்தோன்.
  6. சவுந்தரவல்லி – இத்தலத்து நாச்சியார் திருநாமம். அந்தம் – அழகு.
  7. தோள் அழகால் – தோளாலும் அழகாலும். தோளால் சுந்தரத் தோளனென்றும், அழகால் மலையலங்காரனென்றும் திருநாமங்கள் உண்டாயின.

(பி – ம்.) சொல நலங்கொளழகாற் ; தோளழகர்.

வழிபட்டோர்
நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த 140
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன் – கண்ணனைய
பாத கமலம் பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்-கோதில்
அரணாம் புயங்களுறு மம்பரீ டற்குச்
சரணாம் புயங்க டருவோன் – திருநாளில்

கோடைத் திருவிழா
சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால்
மந்தக்கா லாக மருவுங்காற் – சிந்திக்கும்
வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டருளி- நீடுவிடைக்
குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற் 145
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரா னெழுந்தருளி – ஆடலுடன்


  1. புண்ணியம் – தருமதேவதை ; தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம் கண்ணியின் குறிப்புரையால் அறியலாம். கள் நனைய – தேனை யுடைய அரும்புகளையுடையன-வாகிய ; அரும்புகள், அன்பர்கள் இட்டவை.
  2. பாத கமலம் பரவு – திருவடித்தாமரைகளை வணங்கிய . மலயத் துவசன் – மலயத்துவச பாண்டியன் ; இவன் இத்தலத்தில் கோயிற்றிருப் பணி முதலிய திருப்பணிகளையும் நித்தவிழா முதலியவற்றையும் செய் வித்துப் பேறுபெற்றவன்; இவ்வரலாறு இத்தலபுராணத்திலும் உள்ளது; “பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே” (அழகர் கலம். 1). பாதகமாகிய மலத்தை . (பி – ம்.) மலையத்துவசன்.
  3. அரணாம் புயங்கள் – தம்முடைய குடிகளுக்கு அரணாகிய தோள்கள் ; “அரண்டரு திரடோள் ” (கம்ப. சடாயுவுயிர். 63). அம்பரீடன் : இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற ஓரரசன். சரண அம்புயங்கள் – திருவடித்தாமரைகளை.
  4. சந்தக்காவூடு – சந்தனச் சோலையினுள்ளே ; என்றது பொதி யின் மலையிலுள்ள சந்தனச் சோலையை. மந்தக்கால் ஆக – மந்தமாருத மாக ; தென்றலின் மூவகை நடையுள் மந்தம் ஒன்று.
    144-5. விடைக் குன்று ; அழகர்மலை ; 99, பார்க்க. சீபதியோர் – அழகர் மலையிலுள்ளோர். (பி – ம்.) சென்றெதிர்த்துக்.

145-6. சீபதியோர் கூடுதலால் கூடலென்னும் பெயர் பெற்ற மது ரையில் ; இது பிரிநிலை நவிற்சியணி. தரரான் – அழகர்.

கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன் 147
தல்லாகுளம்வந்து சார்ந்தருளி – மெல்ல

வையைக்கு எழுந்தருளுதல்
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்- சுரலோகத்
திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்
சந்த்ர விமானமே தானென்றும் – முந்தியவட்
டாங்க விமான மவையிரண்டு மென்னவே 150
தாங்கு விமானந் தனிற்புகுமுன் – தீங்கிலார்
உன்னி விமான முரத்தெடுக்கும் போதனந்தன் –
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி- அம்பரத்திற்


  1. கல் ஆகு உளங்கள் – கல்லைப் போன்ற மனங்கள். தல்லா குளம் – மண்டபப்படியுள்ள ஓர் ஊரின் பெயர் ; இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.
  2. நரலோகமீது – பூமியின்மேல். சுரலோகத்து – தேவருலகத் தில் உள்ள.
  3. சோமச்சந்திர விமானம் : இத்தலத்துள்ள கோயிலின் விமா னம் ; 107-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.
    149-50. அட்டாங்க விமானம் : எட்டு அங்கங்களையுடையது : அழ கருடைய சோமச்சந்திர விமானமும், கூடலழகருடைய விமானமும் இவ்வாறு கூறப்படுதலால், ” அட்டாங்க விமான மவையிரண்டும் 11 என்றார். இதன் இலக்கணத்தை , அழகர் பிள்ளைத் தமிழ், முத்தப் பருவம், “மட்பாவை தோயும் ” (7) என்னும் முதற் குறிப்புடைய செய் யுளால் அறிந்து கொள்ளலாம். தீங்கிலார் – விமானந் தாங்குவோர்.
    (பி – ம்.) அவையிரண்டென்னவே.
  4. உரத்து – வன்மைகொண்டு. அனந்தன் – ஆதிசேடனு டைய. சென்னிமணி – தலையிலுள்ள மணிகளுள்.
  5. குதிரை நம்பிரான் – பெருமாளுடைய வாகனமான குதிரை ; உத்தம் இலக்கணம் அமைந்த குதிரையைக் குதிரை நம்பிரானென்றல் மரபு (சீவக. 2157, ந.)

151-2. சூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.

கோடி கதிரோனுங் கோடி பனிமதியும்
ஓடி நிரையா வுதித்தவென- நீடிய
பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் பெயர் துடைப்பச் சொற்கத்
தியலுங் கரியுமதி பெற்று முரசும் 155
புயலு முருமேறும் போலக்-கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்து நர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலானீர் தூம்
துருத்தி மழைபோற் சொரியக் – கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்
கேட்டவர மூறுங் கிணறுபோல் நாட்டமுடன்
காணிக்கை வாங்கியன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா 160
யிரந்திருக்கண் வையைந்தி யெய்தி-உரந்தரித்த

வண்டியூர் மண்டபத்தில் எழுந்தருளுதல்
வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி
யூர் மண்டபத்தி னுவந்திருந்து – சீர்மண்டு


  1. கதிரோன் – சூரியன். மதி – சந்திரன். நிரையா – வரிசையாக,
    153 – 4. பொற்குடைக்குச் சூரியனும், வெள்ளிக்குடைக்குச் சந்திர னும் உவமைகள். விற்கொடிகள் – ஒளியையுடைய கொடிகள்.
  2. எற்றும் – அடிக்கப்படும்.
  3. (பி – ம்.) யாறு பரந்துநிறை.
  4. நீர்தூம் துருத்தி – நீர் தூவும் ஒருவகைக் கருவி.
  5. காணிக்கை – கையுறைகளை.
  6. திருக்கண் – வையை நதியினிடையே அழகர் திருக்கண் சாத்தியருளுதற்காக வைக்கப்படும் பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள். ஆயிரம், பலவென்னும் பொருளை யுடையது. ஆயிரங் கண்களை யுடைமையால் வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர். உரம் – மார்பு. (பி – ம்.) நதியேற.

161. வார்மண்டு கொங்கை – திருமகள். வண்டியூர் மண்டபம் – வையைக்கு வடகிழக்கு உள்ள ஓரூர். இவ்வூரில் சிவகங்கையரசரால் மண்டபப்படி நடத்தப்பெற்று வருகின்ற-தென்பர்.

மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான் 162
போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன்
மருளப் பகலை மறைத்தவனிப்போ
திருளைப் பகல் செய்தா னென்னத் – தெருளவே
அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற்
றிங்கட் கடவுள் சேவிப்பதுபோற் – கங்குற்
கர தீப மும்வாணக் காட்சியுங் காண 165
வரதீப ரூபமாய் வந்த- திருமால்

தலைவி அழகரைத் தரிசித்து மயல் கொள்ளல்
அவனி பரிக்கு மனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன் – அவனழகிற்
பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன் – பின்னழகு
தானே கண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
றேனோரை நோக்கி யெழுந்தருள – ஆனோன்
விமலத் திருமுகமு மென் மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன் – அமலன்
அரவணையா னென்பதுமுண் டண்ணலரன் போல 170
இரவணையா னென்பதுமுண் டேனும் – பரவைத்


  1. சூரியன் அத்தமிக்க. தற்குறிப்பேற்றவணி.
  2. பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில் ; பகல் – சூரியன்.
  3. கர தீபம் – தீவட்டி. காண – காண்பதற்கு. தீபரூபமாய் வந்தது திருத்தண்காலில் ; இவருடைய திருநாமம் விளக்கொளிப் பெருமாளென்பது. (பி – ம்.) தீபரூபமாய் வந்தான்.
  4. அனந்தாழ்வான்மீது – ஆதிசேடவாகனத்தின்மீது. பவனி – உலா.
  5. பெருமானுடைய முன்னழகைப் போல்வதாகிய பின்னழ கைக் காணுமுன்னே . முன்னிலும் பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம் உண்டு ; ” முன்பிலும்பின் பழகிய நம் பெருமாள் ” (சீரங்க . ஊசல், 8). (பி – ம்.) தன்னழகைத்.
  6. (பி – ம்.) எழுந்தருளி – வானோன்.
  7. கமலத்திரு – தாமரைப் பூவிலுள்ள திருமகளது.

170. அரவணையான் – ஆதிசேடனை அணையாக உடையவன். இரவு அணையான் – யாசித்தலைப் பொருந்தான், இரவில் தழுவான்.

திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென் 171
துருவணையு மாதர்க் குரைத்தேன் – மருவணையும்

தலைவி அழகரை நோக்கிக் கூறுதல்
செங்கரத்தி லன்று திருடியவெண் ணெய்போலச்
சங்கிருக்க வென்சங்கு தான் கொண்டீர்-கொங்கை
மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத்
தலையருவி நீர்தானோ சாற்றீர்-விலையிலாப்
பொற்கலை யொன்றிருந்தாற் போதாதோ வன்று புனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ – நற்கலைதான்
ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ 175
சோரந் திரும்பத் தொடுத்தீரோ – ஈரஞ்சேர்
நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்
பாலாடை யாமோ பகருவீர்- மாலாகி
மொய்த்திரையு மெங்கண் மொழிகேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ – இத்தரையிற்
பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடறான்
அங்குநிலா தும்மோ டணைந்ததோ – கங்குலெனும்


170-71. பரவைத் திருவணையான் – கடலிற் கட்டிய திருவணையை யுடையவன் , பாற்கடலிற்றோன்றிய திருமகளை அணையாதவன் ; பரவை – கடல் , பாற்கடல் .
மரு – வாசனை.

  1. (பி – ம்.) செப்புவதைப்பொய் ; முருகனையுஞ்.
  2. என் சங்கு – என்னுடைய வளையலை.
    172-3. கொங்கையாகிய மலையில் விழுகின்ற அருவி போன்ற கண்ணீ ர்.
  3. அன்று – இராமாவதாரத்தில். வற்கலை – மரவுரி . நற்கலை – நல்ல ஆடைகளை .
  4. ஆரம் – முத்துமாலைகள். கொங்கைக்கு – திரெளபதிக்கு. சோரம் – திருட்டுத் தொழில் ; என்றது கிருஷ்ணாவதாரத்தில் கோவியர் துகில் கவர்ந்ததை நினைந்து.
  5. பாலாடை – பால்போன்ற ஆடை, காய்ச்சிய பாலிலுள்ள ஏடு ; “ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரும் ” (அழகர் கலம். 87)
  6. மொய்த்து – நெருங்கி. இரையும் – முழங்கும். வேகவதி -வையை நதி. (பி – ம்.) வேகவதி நீருண்டோ .

178. நிலாவிற்குப் பாற்கடல் உவமை.

ஆனை கெசேந்திர னாகிலதன் மேல்வருவன்
மீனையும் விட்டு விடலாமோ -கானச்
சதிரிள மாதர் தமக்கிரங்கு வீர்நெஞ் 180
சதிரிளமா தர்க்கிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்
கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய்
மென்பா றெறித்த வியன்முலையைப் பாற்குடமென்
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்
செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை
குன்றன் றெடுத்தீர் குளிருமமு தங்கடைந்தீர்
சென்றன்று பாம்பினடஞ் செய்தீரே-என்றென்று

அழகர் சோலைமலைக்கு மீளுதல்
கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத்தேனூர் 185
மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு- பண்டை
விரசையுடன் வைகுந்த வீடுமிது வென்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான்- வரிசை


  1. கெசேந்திரன் – கசேந்திராழ்வான். வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும் மீனென்றல் மரபு ; “‘மைம்மீன் புகையினும் ” (புறநா. 117 : 1); முதலையென்பது மற்றொரு பொருள். கானம் – பாட்டு.
  2. சதிரிள மாதர் – இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள் ; இப் பெயர், ” சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது” (திருவாய்மொழி, 2. 10:2) என்பதிலும் காணப்படும். நெஞ்சு அதிர் இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.
  3. கொட்டத்து – பால்கறக்கும் பாத்திரத்தில்.
    180-181. கன்றை விட்டுக் கறப்பதையென இயைக்க.
  4. எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். (பி – ம்.) எடுப்பதறியீரோ.
  5. செவ்வி தழை – அழகு தழைத்த . (பி – ம்.) யுண்பார்போல்.
  6. குன்று – கோவர்த்தன மலையை. அமுதங்கடைந்தீர் : ” ஆர முதுகடைந்த வங்கையான் ” என்றார் முன்னும் ; 73. பாம்பில் – காளியன் தலையில்.
  7. தேனூர் – மிகப் பழையதோர் ஊர் ; ஐங்குறுநூற்றிலும் இப் பெயர் வந்துள்ளது ; ” தேனூர் வெற்றிலையும் மானூர்ச் சுண்ணாம்பும் ” என்பது ஒரு பழமொழி.

186. விரசை – விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர் ஆறு. வைகுந்தவீடு – வைகுந்தமாகிய முத்தியுலகு. புரசைமலை – கசேந்திரனாகிய யானையை.

உபசாரங் கொண்டருளி யோர்சிவிகை மீது 187
தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட

தலைவியின் நிலை
வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான்
உள்ளிற் கனியானே யூர்ந்துவரும்-பிள்ளைமதி
செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும்
காற்றேரி னானுமொரு காலனன் றோவுருக்கி 190
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ – வேற்றுக்
கிளையோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத்
துளையாக் குழலுமுண்டோ சொல்லாய்-கிளியரசே
என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்
உன்கூடு மென்கூடு மொன்றுகாண் – என்கூட்டில்
மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத்
தீங்கனி யுண்டாசினியுண்டு-பாங்கிற்


  1. தபசு ஆர் அம் சீபதி – தவம் பொருந்திய அழகிய சோலை மலையை. இபம் – இங்கே யானை யென்னும் நோய் ; “தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோல் ” (சீவக. 232) என்பதன் உரையையும் ஒப்புமைப் பகுதியையும் பார்க்க.
  2. வெள்ளிங்கனி – விளாம்பழம். வேதனை யீன்றவன் – பிரமனைப் பெற்றவன், துன்பத்தைக் கொடுத்தவன் ; ” வேதனையும் பெற்று வெளி நின்று ” என்றார் முன்னும் ; 70. உள்ளில் கனியான் – மனத்தில் இரங் கான். பிள்ளைமதி – பிறை.
  3. செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து. மொழி – பழிமொழி. கூற்று – யமன், சொல். எவ்வம்-துன்பம்.
  4. காற்றேரினான் – தென்றற்காற்றாகிய தேரையுடையவன். ஒரு காலன் – ஒற்றைத் தேர்ச்சக்கரத்தையுடையவன், ஓர் யமன். உருக்கி ஊற்றாத – வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத, தன் ஓசையைக் கேட்டாரை உருக்கி ஊற்றாத. சேமணி – இடபத்தின் கழுத்திற் கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ : ” மெழுகான், ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 11 (குறுந். 155 : 3-4)
    190-191. வேற்றுக் கிளையோடு – வேறு மூங்கில்களோடு. சுட்டுத் துளையாக் குழல் – சுட்டுத் துளை செய்யப்படாத வேய்ங்குழல், தன் இசையைக் கேட்பவரைச் சுட்டுத் துளையாத குழல்.

192. என் கூடு – என்னுடம்பு. பொன் – பசலை. 193. கொவ்வைத் தீங்கனியென்றது உதட்டை. ஆசினி – பலா ; இங்கு அதன் பழத்திற்கு ஆயிற்று ; கொங்கைக்கு உவமை : “கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்” (திருவா. நீத்தல்.) (பி- ம்.) செழுங்கோவைத்.

குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்
டுழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்
தூட்டுவே னுன்னை யுருப்பசியா யென்னநலம் 195
காட்டுவேன் பட்டாடையாற்றுடைப்பேன்- கூட்டில்
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன்- அருகே
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் துளபமணி
ஈசன் றிருநாம மெல்லாமென் போலுனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே

பிற பொருள் தூதிற் சிறவா வென்றல்
ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத் தூதுவிட்டாற்
சூடுபட் டார் துணிந்து சொல்வாரோ-கூடுகட்டி
அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாக் கோகிலந்தான் 200
என்பா லருள்வைத் தியம்புமோ-தன்பேர்
அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ- விரகஞ்செய்


  1. குழையும் மனம், குழையும் அனம். பால் – பகுதி, உண்ணும் பால், உழை – பக்கம்.
  2. உருப்பசியே தாயே என்றுகூற, உருவம் பசுத்திருப்பா யென்று யாவரும் சொல்ல. நலங்கு ஆட்டுவேன் : 61.
  3. ஆலத்தி – ஹாரத்தி ; அரசு, ஆல், அத்தி யென்னும் மரப் பெயர்கள் தோற்றுதல் ஒரு நயம். நறை – நறும்புகை.
  4. முத்தி – முத்தங்கொண்டு ; “புதல்வர் பூங்கண் முத்தி 1 (புறநா. 41:14)
  5. பேசென்று பயிற்றுவேனென இயைக்க.
  6. ஈடுபட்ட – எளிவரவுபட்ட (தக்க. 61, உரை). எகினத்தை – அன்னப்பறவையை. சூடு – உச்சிக் கொண்டை : இஃது அன்னத்தின் தலையிலுள்ள து. சூடுபட்டார் – சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்.
  7. வளர்த்த தாயார் – காக்கை. கோகிலம் – குயில். காக்கைக் கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்தபின் பறந்துபோய் விடுதல் குயிலின் இயல்பு ; ” வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற் கேட்டில் கடிந்தாள்” (சீவக. 1661); “உயிர்த்த பொழுதே நின் குரல்கே ளாமுன் ஓடிற் றீன்றதாய், நயத்தின் வளர்த்த தாய்குரல் கேட்டலுமே நடுங்கத் துரந்ததால் ” (பிரபு. பிரபுதேவர் வந்த. 63)

201. அரியென்று……. சொல்லும் : என்றது வண்டு குழறு மென்ற படி ; ” முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ “, ” அளிப்பிள்ளை வாய்குழறும் ” என்றார் முன் னும் ; 35, 46. அரி, அளியென்னும் இரண்டும் வண்டின் பெயர்கள். அரியென்பது திருமால் பெயர் ; அதைக் கூடச் சொல்லத் தெரியா தென் பதும், அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும் வேறு பொருள்; “அரியென்றெங்கள், தாலத்தின் மீதெழுதச் சமர்த்தி லாரோ” (அழகர்கலம். 6) விரகம் – பிரிவால் உண்டாகும் துன்பம்.

வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற 202
தென்காலு மென்காதல் செப்புமோ – பொன்காதல்
வண்டலையுந் தாரான்முன் மாதரையெல்லாந்தூற்றும்
கொண்டலையுந் தூதுவிடக் கூடுமோ -உண்ட
படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன்
கொடியோரும் போவாரோ கூறாய் – அடியார்கள்

கிளியின் தகுதி
அங்கிருந்தார் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார் 205
பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய் எங்கிருந்து
வந்தாயென் றான்மாலிருஞ்சோலையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய் – அந்தச்
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூடிக்கொடுத்தா ளுக்கும் – சிவந்த
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வருகிலே சொல்வாய் வகையாய் – அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தரணி
கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய் – அங்கடுக்கின்


  1. காலதிக்கு – தெற்கு ; காலன் – யமன். துன்பத்தைச் செய்வாரோடு தொடர்புடைய-தென்பதைக் காட்டத் தெற்கென்னாது காலதிக் கென்றாள். மலைவாய் – பொதியின் மலையின்கண், மலைப்புடன். தென் கால் – தென்றல் காற்று. பொன் – திருமகள்.
  2. தாரான் – திருமால். மாதரை எல்லாம் தூற்றும் – பெண்களை யெல்லாம் பழி கூறுகின்ற பெரிய பூமி முழுதும் துளியைத் தூற்றுகின்ற. கொண்டலை – மேகத்தை.
  3. படி – உலகம். கொடியோர் – காக்கைகள், கொடுமையை யுடையவர் ; காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும் நூலால் விளங்கும்.
  4. கீர்த்தனம் ; “குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக்கான, தரி கீர்த்தனத்தி-னாலன்றோ ” என்றார் முன்னும் ; 30. நாச்சியார் – ஆண் டாள் ; இவர் கையிற் கிளியிருக்கும்.
  5. சவுந்தரவல்லி : இத்தலத்துள்ள நாச்சியார் திருநாமம். தற் சொரூபி – அதே வடிவாயிருப்பவள். சூடிக்கொடுத்தாள் – ஆண்டாள்.
  6. கடுகு இலேசம் – கடுகளவாகிய சிறுமைகூட. மால் – மயல். வடுகு – தெலுங்கு.

208-9. அடு கிலேசம் கெடுப்பாய் – வருத்துகின்ற துன்பத்தைப் போக்குவாய். சச்சிதானந்தர் – அழகர். கொங்கு – தேன் ; பூந்தாதுமாம்.

அடையாளம்
ஒருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய் 210
ஒருகத்தி லேவில் லுவமாகி- ஓருகத்திற்
புத்திர தீபமுமாய்ப் புங்கவர்க்கா றாந்தருவாய்ச்
சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த
ஒரு கோடி காவுண் டொருகோடி யாறுண்
டொருகோடி பூஞ்சுனையு முண்டு – திருமால்
அறங்காக்கும் யோகிகள் போலல்லும் பகலும்
உறங்காப் புளிதானு முண்டு – திறஞ்சேர்
பிதாமக னோடுறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் – சதாகால
முந்திரமாய் வாழு முபேந்திரனங் கில்லையென 215
இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப் – பிந்திய
தம்பியர் மூவருக்குந் தானே யாசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் – வெம்பிறவித்


  1. கிருதயுகத்தில் ஆலமரமாகவும், திரேதாயுகத்தில் அரச மரமாகவும், துவாபரயுகத்தில் பலாமரமாகவும், கலியுகத்தில் புத்திரஜீவி மரமாகவும் தருமம் விளங்கும் என்று இத்தலபுராணம் கூறும். இவர் மூன்றாம் யுகத்தில் வில்வமரத்தைக் கூறுகின்றார்.
  2. புத்திர தீபம் – ஒரு மரம். புங்கவர்க்கு – தேவர்க்கு . கற்பகங் கள் ஐந்தாதலின், ‘ஆறாந் தருவாய்?’ என்றார் ; “மூவரி னால்வரா முனி ” (கம்ப. மந்திரப். 5). என்பது போல.
  3. கா – சோலை.
  4. உறங்காப்புளி : இராஜகோபுரத்திற்கு வடக்கே பதினெட்டாம் படிக்கெதிரில் இது முன்னிருந்த தென்றும், சில நாளைக்கு முன் கீழே விழுந்துவிட்டதென்றும் அந்த இடத்தில் இப்பொழுது பூஜை நிவே தனம் நடந்து வருகின்றனவென்றும் கூறுவர். குமுதவல்லி-யோடு திருமங்கை மன்னன் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தபோது வைக்கப்பட்ட தென்பது கர்ண பரம்பரைச் செய்தி.
    யோகிகள் இரவும் பகலும் தூங்காதிருப்பர். அவர் போல் இலைகளை மூடாமல் எப்பொழுதும் விரித்தே இருக்கும் புளியை உறங்காப்புளி யென்பர்.
    212-3. திருமால் அறம் – ஸ்ரீவைஷ்ண வ தர்மம்.
  5. மகனோடு பிதா உறையும் பெற்றி. பிதாமகன் – பிரமன்.
    214-5. சதாகாலமும் – எப்பொழுதும் . திரம் -ஸ்திரம். உபேந்திரன் – அசுரரால் தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால் உபேந்திரராக எழுந்தருளி யிருக்கிறாரென்பது மகாபுராண வரலாறு. “இருகூல மும்பொரு மா நீ ரரங்கத்தி லெந்தை ……… புருகூத னுக்குத் திருத்தம்பி யாகிப் புரக்கும் ” (திருவரங்கத்து மாலை, 16). முதலிலுள்ள அங்கென்றது தேவலோகத்தைக் குறித்தது.

216. மூவர் – பரதன், சுக்கிரீவன், விபீடணன் ஆகிய மூவர்.

ஸ்தலாசாரிய புருஷர்களும் பிறரும்
தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர் 217
ஆகும் ப்ரசித்தரா மர்ச்சகரும்-மோகமுறும்
கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற்
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச்
செய்யுந் திருமாலிருஞ்சோலைச் சீயரென
வையம் விளங்கவரு மாதவரும் – பொய்யில்லா
ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொரு 220
மானதீ பங்காட்டி வந்து நின்று – மேனாளில்
முத்தமிழ்க்குப் பின்போவார் முன் போகப் பின்போன
அத்தன் றிருமாலை யாண்டானும்-பத்தியினால்
வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்
பையங்கா ரென்னுமா சாரியரும் – மெய்யன்பாம்
சிட்டர்க டேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்க ளாம்வேத பாரகரும் – விட்டு வெனும்
சோதிகரு ணைக்கடற் றோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த வமுதாரும்-மூதுலகிற்


  1. பவித்திரம் – சுத்தம். சீரங்கராச பட்டர் : இவர் ஸ்தானிகராக முதலில் வந்தவர் ; அர்ச்சக ஸ்தானிகத்தில் குரு பரம்பரையார்.
  2. கங்குல் – இருளைப்போன்ற. மலமும், மாயையும், கன்மமும் அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம். திரிதண்டம் ஸ்ரீவைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது. சங்கை – சந்தேகம்.
  3. திருமாலிருஞ்சோலைச் சீயர் : ஸ்ரீ மணவாள மாமுனிகள் காலத்தில் இந்த ஜீய ஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு உரிய ஆசாரியர்கள் இப்போது கூடலழகர் சந்நிதியிலுள்ளனரென்பர்.
  4. முத்தமிழ்க்குப் பின்போவாரென்றது திருமழிசையாழ்வா ருடைய மாணாக்கருள் ஒருவராகிய கணிகண்ணர் செல்ல அவர் பின்னே திருமால் சென்றதை ; ” சொல்கவிக்குப், பார முதுகடைந்த பாயலான்” (72-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. திருமாலையாண்டான் – இவர் உடையவருடைய ஆசிரியர்களுள் ஒருவர் ; இவர் பரம்பரையினர் தல்லாகுளத்திற்கு வந்து விட்டனரென்பர்.
  5. வையம் கார்வண்ணனையே வாழ்த்த; வையம் – உலகத்தார். தோழப்பையங்கார் : திருமாலையாண்டான் பரம்பரையிலிருந்து பிரிந் தவர்களுள் மூத்தவர் ; ” தோழப்பர் நற்றமிழ்ச் சீர்பதிப்போன், நலமருவு மழகன் புரோகிதன் புனிதபத நாண்மலர் வழுத்துவேனே !! (அழகர் பிள்ளைத். பழிச்சினர்ப்பரவல், 14)
  6. சிட்டர்கள் – ஒழுக்கமுடையோர். வேதபாரகர் – வேதத்தைக் கரை கண்டவர். விட்டு – விஷ்ணு (227)

224. கரசரணாதியுடன் – கைகால்களுடன். அமுதார் – இவருடைய திருவுருவம் நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்; இவர்பரிசாரக ஸ்தானிகர்.

றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல் 225
நண்ணுந் திருமலை நம்பிகளும் – உண்ணின்ற
மாமலை சோலை மலையையே நம்புதலாற்
சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தருஞ்சட கோபநம்பி தாமும் – பெருஞ்சீர்
வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப்
பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும் – கிரியிலிருந்
தாளுங் கடவு ளருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க

தூதுரைக்க வேண்டுதல்
ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொழுதுன் 230
வார்த்தை திருச்செவியில் வாயாது- சேர்த்தியிலே
மெல்ல வெழுந்தருளும் வேளை பார்த் தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர் சொல்லாமுன்-வெல்லுமதன்
அம்பலர் தூற்ற வடர்த்து வருமுன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி


  1. திருமலை – திருவேங்கடம். திருமலை நம்பிகள் : மடைப் பள் ளிப் பரிசாரக ஸ்தானிகர்.
  2. மாலை மலை – மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத் தரித்த எனினுமாம். சோலைமலை நம்பி – சோலைமலையை நம்பியவரென்பது பொருள் ; இவர் சந்நிதி பரிசாரக கூடஸ்தர்.
  3. விரிஞ்சன் – பிரமன். சடகோப நம்பி – பரிசாரக ஸ்தானிக ருள் ஒருவர். இதன்பின்
    “‘ மருவு திருமாலிருஞ்சோலை நம்பி உருவின் மதனனையொப் போனும் ” என ஒரு கண்ணி மிகையாகக் காணப்படுகின்றது.
  4. வரி – எழுத்து. திருமாலிருஞ்சோலைப் பிரியர் : இவர் கரு ணீகர்களுள் ஒருவர். சீர்கருணப்பேர் – கணக்கர். .
  5. கடவுள் – அழகர். சீகாரியஞ்செய் நாயகர் – கோயிற் பணி விடை செய்பவர் ; இவர்களைக் கோயிற்கொத்தென்பர்.
  6. திருவோலக்கம் – சூழ இருப்பாரோடு ஆதனத்தில் எழுந் தருளியிருத்தல். வாயாது – பொருந்தாது. சேர்த்தி – பள்ளியறை.
  7. மதன் – மன்மதன்.

232. அம்பு அலர் தூற்ற – பாணமாகிய பூவைத் தூவ. வம்பலர் – அயலார். தூற்ற – பழிமொழிகூற. கும்பமுனி – அகத்திய முனிவருடைய.

வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயினுடையடங்கத் தத்தையே – நீயுரையாய்
உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும்
அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண் – முன்பொருநாள்
கோசலை கையிற் குருசி லுனைப்புகழ்ந்து 235
பேசி னுனைப் புகழ்ந்து பேசாரார்- நேசமுடன்
எம்முடைய மாலை யிருபுயத்து மாலை கேள்
உம்முடைய மாலை யுதவீரேல் – அம்மைதிருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மினென்பாய் – நீதி
அடுப்பவர் யாவர்க்கு மாடித் தியாகம்
கொடுப்பவனில்லையென்று கூறான் – தடுக்கும்
அருமாலை நீக்கு மழகன் புயத்து 239
மருமாலை நீ வாங்கி வா.


  1. நுரை அடங்க – நுரைகள் ஒன்றுபட. வாயில் வந்தவென இயைக்க. அகத்திய முனிவர் கடலை ஆசமனம் செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது. தாயின் உரை – செவிலித்தாயின் அதிகாரச் சொற்கள்; “” அனை வேங்கையினதட்ட 11 (அழகர் கலம். 42). தத்தையே – கிளியே.
  2. சுவாகதம் – கிளியின் பெயர்களுள் ஒன்று. அன்பு ஏர் சுவா கதம் ; சுவாகதம் – நல்வரவு.
  3. குருசில் – இராமன். அவர் கிளியைப் புகழ்ந்து பேசியதென் றது, சீதை தன் கிளிக்கு யார் பெயர் வைப்பதென்று கேட்க, கைகேயி யின் பெயரை வைக்கும்படி இராமன் கூறியதை நினைந்து ; ” என்னொ ரின்னுயிர் மென்கிளிக் கியார் பெய ரீகேன், மன்ன வென்றலு மாசறு கைகயன் மாதென், அன்னை தன்பெய ராகென வன்பினொ டந்நாட், சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்” (கம்ப.
    சூடாமணிப். 83)
  4. மாலை – திருமாலை ; நோக்கியென ஒரு சொல் வருவிக்க. மாலை கேள் – பூமாலையைக் கேட்பாயாக.
  5. கோதையார் – சூடிக்கொடுத்த நாச்சியார். தாதைஆர் – பூந் தாதுகள் நிரம்பிய. திருவிழாக்காலத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம். தம் மின் – தருவீர்.
  6. ஆடித் தியாகம் : அழகருக்கு ஆடி மாதத்தில் முன்பு பிர மோத்ஸவம் நடைபெற்று வந்ததென்பர்.
  7. அருமாலை – போக்குதற்கு அரிய மயக்கத்தை. மருமாலை – நறுமணமுள்ள பூமாலையை. புயத்து மரும் மாலையென்று கொண்டு திருத்தோளில் மருவிய மாலையெனலும் ஆம்.

ஸ்ரீ அழகர் கிள்ளைவிடு தூது முற்றிற்று.

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரசுவதி அந்தாதி

May 30, 2024

இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சரசுவதி அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.

கடவுள் வாழ்த்து
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

நூல்

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1

வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2

உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3

இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4

அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7

இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9

புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11

தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12

புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13

வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14

நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15

சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16

கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17

தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18

கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19

காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20

அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21

வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22

சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23

அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24

தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. 25

வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. 26

பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. 27

இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. 28

கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. 29

பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. 30-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மகர நெடுங் குழைக்காதர்‌ பிள்ளைத் தமிழ்‌ பாமாலை–ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ –முத்தப்பருவம்‌–வாரானைப்‌ பருவம்‌ –அம்புலிப்‌ பருவம்‌ –சிற்றில்‌ பருவம்‌ –சிறுபறைப்‌ பருவம்‌ -சிறுதேர்ப்‌ பருவம்‌ —

November 29, 2023

சொற்றநான்‌ மறைபுக்‌ கிருக்குமிட மாதலாற்‌
சுரிசங்‌ கிடம்புரிவதால்‌
துய்யமலர்‌ மாளிகைச்‌ செல்விபே ரமுதந்‌
துளிக்குமென்‌ நின்புறுதலான்‌
மற்றுலகின்‌ வாழ்பல்‌ லுயிர்க்கிரங்‌ குஞ்சத்திய
வாய்மைகுடி கொண்டுறைதலான்‌
மங்கலப்‌ புனிதமாஞ்‌ சகலமுந்‌ திருவுள
மகிழ்த்திரங்‌ கிச்சிறிதுநீ
முற்றுமதி யோடர வறுகெருக்‌ கம்பூவும்‌
மொய்க்குஞ்‌ செழுங்கொன்றையும்‌
மூரித்‌ திரைப்பாய்‌ சுருட்டித்‌ தருங்கங்கை
முதுநீரும்‌ விரவுசோதிக்‌
கற்றைவார்‌ சடைமுடிச்‌ சிவனுமய ஸனுந்தொழக்‌
கனிவாயின்‌ முத்தமருளே
காவுரூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.–45-

சொற்ற நான் மறை புக்கு இருக்கும்‌ இடம்‌ ஆதலால்‌ .-சிறப்பித்துப் பேசப்படுகின்ற நான்குவேதங்களும்‌ தங்கியிருக்கும்‌ இடம்‌ நுமது கனிவாய்‌ ஆதலாலும்‌,
சுரி சங்கு இடம்‌ ‘ புரிவதால்‌ – சுழிந்த பாஞ்சன்னியம்‌ என்னும்‌ வலம்புரிச்சங்கு (நுமதுவாயிடத்து) விரும்பி இடங்கொண்டு சுவைத்தலாலும்‌,
துய்ய மலர்‌ மாளிகைச்‌ செல்வி – பரிசுத்தமான செந்தாமரை வீட்டில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இலக்குமிதேவி,
பேரமுதம்‌ துளிக்கும்‌ என்று இன்‌ புறுதலால்‌ – (நுமது வாயினிடத்து) மிக்க அதரவமுதம்‌ ஊற்றெடுக்கும்‌ என்று மகிழ்வதனாலும்‌,
மற்று – மேலும்‌,
உலகின்‌ வாழ்‌ பல்‌ உயிர்க்கு – நிலவுலகத்தில்‌ வாழ்கின்ற பல ஜீவராசிகளுக்கும்‌,
இரங்கும்‌ – கருணை கொண்டு இரக்‌கப் படும்‌,
சத்திய வாய்மை குடி கொண்டு உறைதலால்‌ – உண்மையான சத்தியம்‌ (நுமது வாயினிடத்து) நிலைபெறப்‌ பயிலுவதாலும்‌,
சகலமும்‌ மங்கலப்‌ புனிதமாம்‌ – அனைத்தும்‌ மங்களகரமான பவித்திர முடையனவாகும்‌
(அத்தகைய சிறப்புக்களையுடைய) நீ– , திருவுளம்‌ மகிழ்ந்து – மனமகிழ்ச்சியோடு,
சிறிது இரங்கி – கொஞ்சம்‌(இந்த எளியனுக்கு) இரக்கமுற்று, (கனி வாயின்‌ முத்தம்‌ அருள்‌ எனமேலியையும்‌) .

(இளி), முற்று மதியோடு – வளர்ந்துவரும்‌ பிறைச்‌ சந்திரறோடு,
அரவு அறுகு எருக்கம்பூவும்‌ – பாம்பும்‌ அறுகம்புல்லும்‌ எருக்கம்பூவும்‌,
மொய்க்கும்‌ செழுங்கொன்றையும்‌ – அடர்ந்து வளவிய கொன்றைப்பூவும்‌,
மூரி – வலிமையையுடைய,
திரைப்பாய்‌ -அலைகளாகிய பாயினை,
சுருட்டித்தரும்‌ – சுருட்டி வழங்கும்‌ (அலைகளாவீசும்‌ என்றபடி),
கங்கை முது நீரும்‌ .- கங்கையினுடையதொன்றுதொட்டுப்‌ பெருகும்‌ நீரும்‌,
விரவு – சேர்ந்து (அளிக்கின்ற)
சோதி . பேரொளியினையுடைய,
கற்றை வார்‌ சடை முடி – தொகுதிப்‌பட்ட நீண்டசுடைமுடியையுடைய,
சிவனும்‌ – சிவபெருமானும்‌,
அயனும்‌ – பிரமதேவனும்‌,
தொழ – வணங்கி வழிபட,
காவு சூழ்‌ -சோலைகள்‌ சூழ்ந்த,
தென்திருப்பேரை – தென்திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியுள்ள,
ஆழிநீர்‌ வண்ண !- கடல்நீர்போல்‌ நீலநிற வண்ணனே
கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ – கொவ்வை கனிபோற்‌ சிவந்த வாயிடத்து முத்தம்‌ கொடுப்பாயாக ;
நின்‌ – உன்னுடைய, கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌-

தழைமடற்‌ பச்சைப்‌ பசும்பூக மணிமிடறு
த௲ளையவிழ்க்‌ கும்பாளைவாய்‌
குருமுத்த மும்பச்‌ செனக்கிரண மடகுமுது
தாற்றிளங்‌ கதலிவாழை
உழைமுத்து முடலிழுக்‌ குண்டுரியு மென்கரும்‌ :
பொளிர்முத்து மாலைவாயிட்‌
‘டஇடனெருக்‌ கும்பொழுது கணுவினில்‌ வெடித்துதிரும்‌
மூத்தும்வான்‌ முகடுதூங்கும்‌
மழைமுத்த முந்துளி படும்போது செவ்வுக்கு
வாராத வடிவுதரும்‌
வளர்புண்ட ரீகப்‌ பொகுட்டுமுத்‌ துஞ்சிறைய
வண்டுகால்‌ கொடுதுவைக்குங்‌
கழைமுத்த முங்கதிர்‌ வெதுப்புண்டு வீனுமொரு
கதிர்முத்து நிகரல்லவே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.’–46

தழைமடல்‌ பச்சைப்‌ பசும்‌ பூகம்‌ – தழைந்த மடலைக்‌
கொண்ட பசுநிறம்‌ மிக்குப்‌ பொருந்திய கமுகின்‌,
மணி மிடறு – அழ கிய கழுத்து,
தளை அவிழ்க்கும்‌ – குலையின்கட்டு விரிக்கும்‌,
பாளை வாய்‌ தரு முத்தமும்‌ -பாளையிடத்து உண்டாகும்‌ முத்தும்‌,
பச்செனக்‌கிரணம்‌ அட .- பளிச்செனச்‌ சந்திரகிரணங்கள்‌ பட,
குமுது (உழைமுத்தும்‌) – ஆம்பலிடத்துண்டாகும்‌ முத்தும்‌,
இளங்கதலஸி வாழைதாற்று உழை முத்தும்‌ . இளைய வாழைக்குலையினிடத்து உண்‌டாகும்‌ முத்தும்‌,
உடல்‌ இழுக்குண்டு உரியும்‌ மென்கரும்பு ஒளிர்‌ முத்தும்‌ – (தன்‌) தண்டுப்பகுதிகள்‌ தளர்வுற்று உரிந்து “போகும்‌ மெல்லியகரும்பு வெளிவிடும்‌ ஒளிவிளங்கும்‌ முத்தும்‌,
ஆலைவாய்‌ இட்டு உடல்‌ நெருக்கும்‌ பொழுது –ஆலையிலிட்டுத்தண்டுகளை“நெருக்கிப்பிழியும்போது,
கணுவினில்‌ வெடித்து உதிரும்‌ முத்தும்‌ -(அதன்‌) கணுக்களினின்று வெடித்துப்புறமேயுதிரும்‌ முத்தும்‌,
வான்‌ முகடு தூங்கும்‌ மழை முத்தமும்‌ – ஆகாயத்தின்‌ உச்சியில்‌ தவழும்‌ மேகத்தினின்று உண்டாகும்‌ முத்தும்‌,
துளி படும்போது .. மழைத்‌ துளி நேரே விழும்போது,
செவ்வுக்கு வாராத வடிவு தரும்‌ – அளவுக்குட்படாத வடிவத்தைக்கொடுக்கும்படி,
வளர்‌ – வளர்கின்ற,
புண்டரீகப்‌ பொகுட்டு முத்தும்‌ – தாமரையின்‌ கொட்டையில்‌ தோன்றுகின்ற முத்தும்‌,
சிறைய வண்டு – சிறகுகளைக்கொண்ட வண்டுகள்‌,
கால்கொடு துவைக்கும்‌ – தமது ஆறுகால்களைக்‌கொண்டு மிதிக்கின்ற
கழை முத்தமும்‌ – மூங்கிலில்‌ உண்டாகும்‌ முத்தும்‌,
கதிர்‌ வெதுப்புண்டு ஈனும்‌ ஒரு கதிர்‌ முத்தும்‌ – சூரிய னால்‌ வெம்மையாகி அதணொளியுண்டாக்கும்‌ பிரகாசம்பொருந்தியதோர்‌ முத்தும்‌,
நிகரல்ல – உன்வாய்முத்துக்கு ஒப்பாகாது
(ஆகவே) காவு சூழ்‌ தென்பேரை ஆழிநீர்‌ வண்ண –, நின்‌ கனி வாயின்‌ முத்தம்‌ அருள்‌

கமுகு, சந்திரன்‌, வாழை, கரும்பு, மேகம்‌, தாமரை, மூங்கில்‌, சூரியன்‌ என்னும்‌ எட்டு இடங்களிற்பிறக்கின்ற முத்துக்களும்‌ உன்‌
கனிவாயினின்று வழங்கும்‌ முத்துக்கு (முத்தத்துக்கு) நிகரில்லை யென்றார்‌.

முத்துப்‌ பிறக்கும்‌ இடங்கள்‌: இருபது என்பர்‌. இதனை **தந்தி வராகமருப்பிப்பி பூகந்தனிக்கதலி, நந்து சலஞ்சலமீன்றலைகொக்கு
ஒளினன்மின்னார்‌, கந்தரஞ்சாலி கழைக்கன்னலாவின்பல்‌ கட்செவி கார்‌, இந்துவுடும்புகரா முத்தமினும்‌ இருபதுமே’” என்றதனாலறிக.

ஆம்பல்‌ சந்திரனைக்‌ கண்டால்‌ மலரும்பூவா தலின்‌ அதன்மூலம்‌ முத்தீனும்‌ எனக்‌ கொள்க.

முனியுமிள வலுமுடன்‌ வரத்தன்‌ நிருத்தாளின்‌
மூளரித்‌ துகட்கருங்கல்‌
முனியிட்ட சாபந்‌ தவிர்த்துமூன்‌ ஸனுூருவெய்த
முதுகருணை யோடனலஸித்துச்‌
சனகன்மிதி லாபுரிச்‌ சிலைவளைத்‌ துச்சீதை
தனைமணம்‌ புணர்தண்டுழாய்ச்‌
சக்கரா யுதக்கடவுள்‌ ! குலநந்தீன முத்தொடலை
தத்துந்‌ தடம்பொருநையான்‌ !
இனியசதுர்‌ மாமறைக்‌ கொருமுதல்வன்‌ !
வருணன்வநீ
தெக்கால மும்பரவுவோன்‌ !
இலகுகொடி மணிமாட வழுதிவள pre ! spr
றெண்மரொடும்‌ விளையாடுமால்‌ !
கனியுமமு தும்பாகு மூறிக்‌ கலந்தசொற்‌
-கனிவாயின்‌ முத்தமருளே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண ! நின்‌
கனிவாயிண்‌ முத்தமருளே.--47-

முனியும்‌-விசுவாமித்திரமுனிவனும்‌,
இளவலும்‌ – தம்பியாகிய இலக்குமணனும்‌,
உடன்‌ வர – கூட வர,
தன்‌ முளரித்திருத்‌தாளின்‌ துகள்‌ – தனது தாமரைமலர்போன்ற அழகிய பாதங்களினின்று எழுந்த புழுதிப்பொடி,
கருங்கல்‌-கரியகல்லுருவாய்‌ இருந்த அகலிகைக்கு,
முனியிட்ட சாபம்‌ தவிர்த்து – (அவள்‌ கணவனாகிய) கெளதமமுனிவரிட்ட சாபத்தை நீக்கி,
முன்‌ உரு எய்த – முன்னாலே யிருந்த பெண்‌ வடிவத்தையே அடையும்படி,
முதுகருணையோடு அளித்து – மிக்க அருளோடு வழங்கி,
(பின்னர்‌) சனகன்‌ மிதிலாபுரிச்‌ சிலை வளைத்து –ஜனகமகாராஜனின்‌ [தலைநகராகிய] மிதிலை
நகரில்‌ [கந்யா சுல்கமாக வைத்த[ வில்லை வளைத்து,
சீதைதனை மணம்‌ புணர்‌ – சீதாதேவியைத்‌ திருமணஞ்செய்து கொண்ட,
தண்‌ துழாய்‌ சக்கராயுதக்கடவுள்‌ ! – குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையைத்‌ தரித்த சக்கரப்படையையுடைய கடவுளாகிய [திருமாலின்‌ அவதார மான ] இராமபிரானே !
குல நந்து ஈன .- சிறந்த சங்குப்பூச்சிகள்‌ பெற்ற,
முத்தொடு – முத்துக்களோடு,
அலைதத்தும்‌ – அலைகள்‌ தத்திப்பாய்கின்ற
தடம்‌ பொருநையான்‌ – அகலமான தாமிரபரணி நதியையுடையவனே |
இனிய சதுர்மா மறைக்கு ஒரு முதல்வன்‌ -(காதுக்கு) இனிமையான நான்கு சிறந்த வேதங்களுக்கு ஏற்ற ஒப்‌பற்ற முதற்கடவுளே
வருணன்‌ வந்து எக்காலமும்‌ பரவுவோன்‌ -வருணபகவான்‌ வந்து எப்போதும்‌ போற்றித்துதிக்கும்படியுள்ளவனே !
இலகு கொடி மணி மாடம்‌ – விளங்குகின்ற கொடிகள்‌ -நாட்‌டிய அழகிய மாடங்களைாக்கொண்ட,
வழுதி வள நாடன்‌ | -பாண்டிய வள நாட்டுக்குத்தலைவனே |
நூற்றெண்மரொடும்‌ விளையாடும்‌ மால்‌ ! – நூற்றெட்டுப்‌ பக்தர்களோடும்‌ திருவிளையாடல்புரியும்‌ திருமாலே /
கனியும்‌ அமுதும்‌ பாகும்‌ ஊறி கலந்த சொல்‌ – பழமும்‌ பாலும்‌ வெல்லப்பாகும்‌ சேர்ந்து ஊறித்தம்முள்‌ கலப்புற்றுச்சுவைக்கும்‌ சொற்களைப்பேசும்‌,
கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ — ; காவு சூழ்தென்‌பேரை ஆழிநீர்‌ வண்ண –, நின்‌ கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ –

*குலநந்து” என்றதால்‌ அவனது பாஞ்சசன்னியம்‌ போன்ற சங்கு என்னவுமாம்‌. -இனி, குலம்‌ – கூட்டம்‌ எனினுமாம்‌.

——

பொருதிரை சுரூட்டுமணி மகரசல ராசிதரு
புதுமுத்த முங்கைதொடேம்‌
புலவுநா றிச்சுற வெறிந்துடல முவரிப்‌
புனற்பங்க மூடெழுதலாற்‌
பருகமது ரித்தபா கூற்றிருந்‌ தொழுகும்‌
பசுங்கரும்‌ பீன்றமுத்தும்‌
பலமொழிக்‌ கவடுபடு மாதலா லதனையும்‌
படுபழி யறிந்துவேண் டேம்‌
இருநிலத்‌ துச்சிவத்துக்‌ கண்டமுங்‌ கறுப்‌
பென்றுவேய்‌ முத்தந்தொடேம்‌
இனிமேலு நினதுகனி வாய்முத்தி னுக்குவமை
ஏதெடுத்‌ துக்கூறுவேன்‌
கருதுமுது நான்மறைக்‌ கொருமுதல்வ னே !.செழுங்‌
கனிவாயின்‌ முத்தமருளே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண ! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.–48-

புலவு நாறி- புலால்‌ நாற்றம்‌ வீசி,
சுறவு எறிந்து -சுருமீனினால்‌. ஒதுக்கப்பட்டு,
உடலம்‌ – அதன்‌ உடம்பு,
உவரிப்‌புனல்‌ பங்கம்‌ ஊடு எழுதலால்‌ – கடல்நீரின்‌ சேற்றினின்று தோன்றி யெழுதலால்‌,
பொரு திரை சுருட்டும்‌ அணி மகர சலராசி – மோதுகின்ற அலைகளைச்‌ சுருளவரச்செய்யும்‌ அழகியமீன்களையுடைய கடலானது,
தரு – கொடுக்கின்ற,
புது முத்தமும்‌ …. புதிய முத்துக்களையும்‌,
கை தொடேம்‌ – கையால்‌ தொடமாட்டோம்‌ :
பருக . உண்பதற்கு,
மதுரித்த – ருசியாகச்‌ செய்த,
பாகு – வெல்லப்பாகு,
ஊற்றிருந்து ஒழுகும்‌ – உள்ளே ஊறியிருந்து பெருகும்‌,
பசும்‌ கரும்பு ஈன்ற முத்தும்‌ – வளமுள்ள கரும்பு பெற்ற முத்தும்‌,
பல மொழி – பல கணுக்‌களிலிருந்து,
கவடுபடும்‌ ஆதலால்‌ .பிரிவுபட்டுச்‌ சிதறுகின்றனவாதலால்‌,
அதனையும்‌ – அந்தக்‌ கரும்புஎன்ற முத்தினையும்‌,
படுபழிஅறிந்து – அது உண்டாகும்‌ பிறப்பிடத்தின்‌ இழிவு தெரிந்து,
வேண்‌டேம்‌ – விரும்பமாட்டோம்‌ :
(இனி) இரு நிலத்து – தாங்கள்‌ இருக்‌கும்‌ தரையில்‌,
சிவத்து . (அடிப்பக்கம்‌) சிவந்து,
கண்டமும்‌ கறுப்புஎன்று – கழுத்தும்‌ (மேல்பாகமும்‌) கறுப்பு நிறம்‌ பொருந்தியதென்‌ று,
வேய்‌ முத்தம்‌ – மூங்கிலீன்ற முத்துக்களை,
தொடேம்‌ – (கையினாலும்‌)தொடமாட்டோம்‌ ;
இனி மேலும்‌ – இவைகளுக்கு மேலே,
நினது கனிவாய்‌ முத்தினுக்கு . உன்னுடைய கோவைக்கனிபோற்‌ சிவந்த வாயினாற்‌ கொடுக்கும்‌ முத்தத்திற்கு,
உவமை ஏது எடுத்துக்‌ கூறுவேன்‌ – ஒப்பாகசொல்லுதற்கு எதனைச் சிறப்புறவெடுத்துக்‌ கூறமாட்‌டுவேன்‌ ; (எதுவும்‌ இல்லையே) :
(ஆகவே) கருதும்‌ முது நான்‌மறைக்கு ஒரு முதல்வனே -[யாவராலும்‌] சிறப்பாக நினைக்கப்‌படுகின்ற பழைய நான்குவேதங்களுக்கு ஏற்ற ஒப்பற்ற முதற்‌கடவுளே !
செழும்‌ கனிவாயின்‌ . பழுத்துச்‌ சுவைமுதிர்ந்தபழம்‌ போன்றவாயினால்‌,
முத்தம்‌ அருள்‌ –; காவு சூழ்‌ தென்பேரை ஆழி நீர்‌ வண்ண –, நின்‌ கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌

—-

உலைவளைக்‌ குங்கொழுங்‌ கனல்வாய்‌ துருத்திவைத்‌
தூதவெம்‌ பொறிசிந்தவெந்‌
துருகுங்‌ கருங்கல்‌ லுருக்கொ டிரும்புவைத்‌
தொன்றா யடித்துநீட்டித்‌
தலைமடுத்‌ ததைமுனைப்‌ படுத்திக்‌ குணக்கறத்‌
தட்டியர மிட்டராவிச்‌
சமைந்தொப்ப மிட்டுக்‌ கடைந்தவடி வேல்டொரு
தடங்கட்‌ செழுங்குமுதவாய்‌
மலைவளைக்‌ குஞ்செழுங்‌ களபகுங்‌ குமமுலை
மடந்தைதெய்‌ வீகமோக
மடமயிற்‌ சீதைப்‌ பிராட்டியை மணம்புணர
வளமருவு மிதிலாபுரிச்‌
சிலைவளைக்‌ கும்பசுந்‌ தண்டுமாய்‌ மேகமே !
திருவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–49-

உலை வளைக்கும்‌ கொழுங்கனல்‌ வாய்‌ – கொல்லனது உலை சூழஎரியும்‌ பெருத்த நெருப்பினிடத்து,
துருத்திவைத்து – உலைத்துருத்திப்பையை வைத்து,
ஊத – (அதன்‌ வாயினால்‌) ஊது,

வெம்‌ பொறி சிந்த – வெப்பமான நெருப்புப்பொறி சிதற,
வெந்து உருகும்‌ கருங்கல்‌ உருக்கொடு – கொதிப்படைந்து உருகுகின்ற கருங்கல்லில்‌ [உளியாற்‌ செய்த] சித்திரவேலையோடு,
இரும்பு வைத்து ஒன்றாய்‌ அடித்து – எஃகிரும்பினை வைத்து [இணையும்‌ படி] ஒரு சேர ஒன்ற (சம்மட்டியால்‌) அடித்து,
நீட்டி – நீளச்‌ செய்து,
தலை மடுத்து – தலைசேர்த்து,
அதை முனைப்‌ படுத்தி- அதனைக்‌ கூராக முனையுண்டாக்கி,
குணக்கு அற. கோணல்‌ நீங்க,
தட்டி – சுத்தியால்‌ தட்டி,
அரமிட்டு அராவி – அரத்தினாலே உரசி,
சமைந்து – பொருத்தமுறச்செய்து,
ஒப்பம்‌ இட்டு – துலங்கவைத்து,
கடைந்த – நன்குமுடிவுறச்செய்த,
வடிவேல்‌ – கூரிய வேலாயுதத்தை,
பொரு – ஒத்திருக்கின்ற,
தட கண்‌ – விசாலமான பெரிய கண்களையும்‌,
செழுங்‌ குமுத வாய்‌ – வளமுள்ள ஆம்பல்‌ மலர்‌ போன்ற வாயினையும்‌,
மலைவளைக்கும்‌ – மலையைப்‌ போல்‌ கனத்துப்பருத்த,
செழும்‌ களபம்‌ குங்குமம்‌ முலை – இனிமையான சந்தனக் கலவையும்‌ குங்குமக்‌ குழம்பும்‌ பூசிய முலையினையும்‌உடைய,
மடந்தை . பெண்ணாகிய,
தெய்வீக மோக மடமயில்‌ சீதை பிராட்‌டியை – தெய்வத் தன்மை பொருந்திய (கண்டார்க்கு ஆசையை விளைவிக்கின்ற மடப்பம் பொருந்திய மயில் போன்ற சாயலினை யுடைய சீதாப் பிராட்டியை,
மணம்‌ புணர – திருமணஞ்செய்து கொள்வதற்காக,
வளம்‌ மருவு மிதிலாபுரி – வளப்பம்‌ பொருந்திய மிதிலை மாநகரில்‌,
சிலை வளைக்கும்‌ – (கந்யாசுல்கமாகவைத்த) வில்லை வளைத்த,
பசும்‌ தண்‌ துழாய்‌ மேகமே ! – பச்சையாயுள்ள குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையையணிந்த மேகம்‌ போன்றவனே /(இராமாவதாரம்‌ செய்த திருமாலே!)
திருவாயின்‌ – (உனது) அழகிய வாயினது,
முத்தம்‌ அருள்‌–;
தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்‌காத ! . தென்திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியிருக்கின்ற– நமது மகரகுழைக்காதராம்‌ இறைவனே |!
நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌–;

——–

பம்புதிரை வாரிதி வடிம்பலம்‌ பத்துளி
பறுங்கன முகடுகோத்துப்‌
பரக்கும்‌ படிக்குமுன்‌ பெய்தகன மாரியிற்‌
பதறியா னிரைகெடாமல்‌
தம்பமற்‌ றிடையர்மடி யாதேழு நாளுமுது
தடவரை யெடுத்தேந்துமென்‌
தாமரைச்‌ செங்கைத்‌ தடங்குரிசி லே / சங்கு
சக்கரா யுதக்கடவுளே !
கம்பமத மால்யானை மூலமென்‌ றோதவொரு
கருடன்‌ பிடர்த்தலைவருங்‌
காராழி மணிவண்ண ! பேராயி ரம்பெற்ற
கர௫ணாக ரக்குரிசிலே !
செம்பவள முங்குமுத முங்கவிரு மொத்தநின்‌
திரூுவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–50-

பம்பு திரை வாரிதி வடிம்பு அலம்ப -தத்திப்‌ பாய்‌கின்ற அலைகளையுடைய கடல்‌ தன்‌ திருவடிகளைவிளக்கும்படி இராமபிரானாய்‌ நின்று, (
பின்‌) துளிபடும்‌ கனம்‌ – மழையையுண்டாக்கும்‌ மேகம்‌,
முகடு கோத்து பரக்கும்‌ படிக்கு – ஆகாச வுச்சியிற்‌ பின்னிப்‌
பரவிநிற்கும்படிக்கு,
முன்‌ பெய்த கன்‌ மாரியில்‌ – முற்பட்டுப்‌ பெய்த சோனைமழையில்‌,
ஆனிரை பதறி கெடாமல்‌ – பசுக்கூட்டங்கள்‌ நடுக்கமடைந்து அழிந்து போகாமல்‌,
தம்பம்‌ அற்று – பற்றுக்கோடு இன்றி,
இடையர்‌ – [கோகுலத்து ஆய்ப்பாடி] ஆயர்‌,
மடியாது -இறந்து போகாமல்‌,
ஏழு நாளும்‌-(இந்திரன்‌ மழையைப்‌ பெய்வித்த) ஏழுநாட்களிலும்‌,
முது தட வரை எடுத்து ஏந்தும்‌ . பழைய பெரிய கோவர்த்தன கிரியைக்‌ குடையாகத்தூக்கியெடுத்து விரலில்‌ ஏந்தி நின்ற,
மெல்‌ தாமரை செங்கைத்தடம்‌ குரிசிலே ! – மென்மையான செந்தாமரை போற்‌ சிவந்த கைத்தலங்களையுடைய சிறந்த கிருஷ்ணை பகவானே !
சங்கு சக்கராயுதக்கடவுளே ! – சங்கு சக்கரங்களை ஆயுதமாக ஏந்தியுள்ள இறைவனாகிய திருமாலே !
கம்ப மத மால்‌ யானை – கட்டுத்தறியிற்‌ கட்டப்படுகின்ற மதம்‌ பிடித்த பெரிய கஜேந்திரனென்னும்‌ யானை [முதலைவாயினிலகப்‌பட்டு]
மூலம்‌! என்று ஓத . ஆதிமூலமே ! என்று அலறிக்‌ கூப்பிட,
ஒரு கருடன்‌ பிடர்த்தலை வரும்‌ – ஒப்பற்ற கருடனின்‌ கழுத்தின்‌ மேலமர்ந்து விரைந்து வந்த,
கார்‌ ஆழி மணிவண்ண ! — மேகத்‌ தையும்‌ கடலினீரையும்‌ கருமணியையும்‌ ஒத்த சியாமளரூபனே !
பேர்‌ ஆயிரம்‌ பெற்ற கருணாகரக்‌ குரிசிலே ! –சகஸ்ரநாமங்களையும்‌ கொண்ட தயைக்கிருப்பிடமாகிச்‌ சிறந்தோனே
செம்‌ பவளமும்‌ குமுதமும்‌ கவிரும்‌ ஒத்த – சிவந்த பவளத்‌
தையும்‌ செவ்வல்லி மலரையும்‌ முண்முறுக்கம்‌ பூவையும்‌ஒத்திருக்‌கின்ற,
நின்திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌ — ; தென்திருப்பேரை வருநம்‌ குழைக்காத!–, நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌

இந்திரனுக்கென்று ஆயர்கள்‌ எடுத்த எழில்விழவில்‌ பழநடைசெய்‌, மந்திரவிதியில்‌ பூசனை பெறாது மழைபொழிந்திடத்‌ தளர்ந்து ஆயர்‌, எந்தம்மோடு இனவாநிரை தளராமல்‌ எம்பெருமான்‌ ! அருளென்ன, அந்தமில்‌ வரையால்‌ மழைதடுத்தானைத்‌ திருவல்லிக்கேணிக்‌ கண்டேனே”

——-

பொங்குவெண்‌ டிங்களங்‌ கவிகைவரு மிரணியன்‌
புகலவன்‌ மதலைபெயர்‌
புகலாம லெந்தைநா ராயண -ஸனெனப்பெயர்‌
புகன்‌ றதி லெழுந்துகோபித்‌
தங்கைமலர்‌ மீதுசங்‌ காழியேந்‌ தியுமயன்‌
அவிர்சடைப்‌ பெருமானும்‌
அஞ்சிப்‌ பதுங்கித்‌ திரிந்தனர்‌ மறந்தனைகொல்‌
அரியெங்‌ கெனப்புடைப்பப்‌
பங்கமுறு மக்கனகன்‌ மார்பம்‌ பிளந்திழி
பசுங்குடர்‌ பிடுங்கிரத்த
பானம்‌ பணித்தடந்‌ தோள்மாலை சூடவே
பண்டுகளி கொண்டொர்தூணிற்‌
சிங்கவடி வாய்வந்த வெங்கள்குல நாத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–51-

பொங்கு வெண்‌ திங்கள்‌ அம்‌ கவிகை வரும்‌ இரணியன்‌ – ஒளிமிகுகின்ற வெள்ளிய சந்திரனை அழகிய குடையாகப்‌ பிடித்து வருகின்ற இரணியாசுரன்‌,
புகல. கட்டளையிட்டுச்‌ சொல்லவும்‌,
அவன்‌ மதலை – அவனது மகனாகிய பிரகலாதாழ்வான்‌,
பெயர்‌ புகலாமல்‌ – (ஹிரண்யாய நம: என்று) அவன்‌ பெயரைச்‌ சொல்லாமல்‌,
“எந்தை நாராயணன்‌” என பெயர்‌ புகன்றதில்‌ – என்தந்தை
நாராயணன்‌ [அவனுக்கு நம : ] என்று அவன்‌ திருநாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தில்‌,
[அதாவது, நாராயணாய நம: என்று சொல்லவே],
கோபித்து எழுந்து . மிக்கசினங்கொண்டு இருக்கை விட்டெழுந்து,
“அங்கை மலர்‌ மீது சங்கு ஆழி ஏந்தியும்‌ – அழகிய
தாமரை மலர்‌ போன்ற கைகளில்‌ சங்கு சக்கரங்களை யேந்தியுள்ள அந்த நாராயணனும்‌,
அயன்‌ – பிரமனும்‌,
அவிர்‌ சடைப்‌ பெருமானும்‌ – விளங்குகின்ற ஜடாபாரத்தினையுடைய சிவபெருமானும்‌ ,
(எனக்கு) அஞ்சிப்‌ பதுங்கித்‌ திரிந்தனர்‌ – பயந்து நடுங்கி
யொளித்து(என்கண்ணில்படாது) திரியலாயினரென்பதை,
மறந்தனைகொல்‌ – நீமறந்துவிட்டாயா?
“அரி எங்கு ? – அந்த நாராயணனுகிய பகைவன்‌ எங்கேயுளான்‌ ? (சொல்லு),
என – என்று
அதட்டி,புடைப்ப- (அப்‌ பிரகலாதன்‌ காட்டிய தூணைக்‌ கையால்‌ அறைந்து தட்ட,
(அப்போதே) அத்‌ தூணினின்று வெளிப்பட்டு
பங்கம்‌ உறு – (தான்‌ பொய்த்ததையெண்ணி) நாணமுற்ற, ௮ கனகன்‌ – அந்த இரணியனுடைய,-கனகன்‌ – இரணியன்‌ என்பதன்‌ பரி
யாயப்‌ பெயர்‌:–மார்பம் பிளந்து – உரத்தைக்கீறிப்‌பிளவுபடச்‌ செய்து,:
இழி பசுங்‌ குடர்‌ பிடுங்கி – கீழ்த்தொங்கிய பச்சைக்குடலைக்‌ கைகளால்‌ அளைந்து பிடுங்கியெடுத்து,
ரத்தபானம்‌ ப(ண்)ணி – [அங்கு இழிந்த] இரத்தத்தையும்‌ குடித்து
(அக்குடலை) தட.ந்‌ தோள்‌ மாலை சூடவே- விசாலமான திருத்‌தோள்களில்‌ மாலையாகச்‌ சூழவரும்படி சூடுதற்காக,
பண்டு -அக்காலத்து,
களிகொண்டு- வெறிகொண்டு,
ஒர்‌ தூணில்‌ சிங்கவடிவாய்‌ வந்த – ஒரு கம்பத்தில்‌ சிங்கத்தின்‌ வடிவெடுத்து [ நரசிங்கமாய்‌] வந்த,
எங்கள்‌ குல நாத | – எங்களுடையகுல நாதனே !
நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌– : தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்காத :; நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌ –

புடைப்பத்‌ தூணில்‌ வந்த” என்றதால்‌ எங்கும்‌ உளன்‌ நாராயணன்‌ என்று காட்டியபடி :*: அந்தர்‌ பஹிஸ்ச தத்சர்வம்‌ வியாப்ய நாராயணஸ்தித :?:” என்றது சுருதியும்‌.

———

மூவா மூதலா யுலகமொரு
மூன்றும்‌ பரவ வங்கூரித்து
முத்திக்‌ கொருவித்‌ தாகவந்த
முதுநான்‌ மறையின்‌ குலக்கொழுந்தே |!
“கோவா வொளிரு மரகதமே!
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூற்றே |
கோவேத்‌ தியர ரளக்கமலங்‌
குடி.புக்‌ கிருக்கும்‌ பெருமாளே /
தாவா வளமைக்‌ கோசலைக்கோர்‌
தவமே ! தவத்தின்‌ பயனே ! யச்‌
சனகன்‌ றருசா னகிவேட்ட
தடங்கைக்‌ களிறே 1! போரேறே !
தேவா ! வமிர்தங்‌ கனிபவளத்‌
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா ! முத்தந்‌ தருகவே.–52-

மூவா முதலா உலகம்‌ ஒரு மூன்றும்‌ – அந்தமும்‌ஆதியுமில்லாத [ஆன்மாக்கள்‌ பயிலும்‌ ] சுவர்க்கம்‌, மத்திமம்‌, பாதலம்‌ என்று மூன்று லோகங்களூம்‌,
பரவ – போற்றும்படி,
அங்குரித்து-முளையாகத்‌ தோன்றி
[மூலமாகி], முத்திக்கு ஒரு வித்தாக வந்தமுக்திக்கு விதையாக [முதற்காரணமாக ] வந்த,
முது நான்மறையின்‌ குலக்கொழுந்தே – பழைதாக வருகின்ற நான்கு வேதங்களிற்‌ பயிலும்‌ சிறந்தகொழுந்து போன்றவனே
கோவா ஒளிரும்‌ மரகதமே ! – கோக்கப்படாது விளங்குகின்றபச்சை மரகதரத்தினமே /!
கொடும்‌ போர்‌ அரக்கர்‌ – கொடியயுத்தத்‌தைச்செய்கின்ற அரக்கர்களின்‌,
குலக்கூற்றே ! – குலங்கட்கு யமன்‌ போண்றவனே !
கோ – இந்திரன்‌,
வேத்தி [வேதி] – பிரமன்‌,
அரர்‌ – சிவபெருமான்‌ (இவர்களது),
உளக்கமலம்‌ – மனத்தாமரையில்‌,
குடிபுக்கிருக்‌கும்‌ பெருமாளே – தங்கிவசிக்கும்‌ இறைவனே !
தாவா – கெடாத,
வளமை . ஐசுவரியங்களையுடைய,
கோசலைக்கு – கெளசல்யாதேவிக்கு,
ஓர்‌ தவமே? – ஒப்பற்ற தவமே !
தவத்தின்‌ பயனே ! – அந்தத்தவத்தின்‌ பயனானவனே /
௮ சனகன்‌ தரு சானகி – அந்தப் பிரசித்த பெற்ற ஜனக மகாராஜன்‌ வளர்த்துத்‌ தந்த சீதாபிராட்டி,
வேட்ட – திருமணஞ்செய்து கொண்ட,
தடகை களிறே ! .. பெரிய கைகளையுடைய ஆண்யானை போன்றவனே:
போர்‌ ஏறே ! – போரில்‌ சிங்கம்போன்றவனே !
தேவா ! – தேவனே!
அமிர்தம்‌ கனி – தேவாமிர்தம்‌ போல்‌ சுவைபழுத்த,
பவளத்‌ திருவாய்‌ – சிவந்த திருவாயினால்‌,
முத்தம்‌ தருக – ;
தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ பேரைச்‌ செல்வா! ‘* தெளிந்து வழங்குகின்ற தமிழ்மொழி யினையுடைய திருப்பேரைநகரின்‌ செல்வனே ! முத்தம்‌ தருக- ;

——

துளிக்குந்‌ திரைப்பாற்‌ கடன்முகட்டுத்‌
தூய தரங்கத்‌ தனந்தபுரத்‌
தொருவா விருகண்‌ டுயில்கூருஞ்‌
சோதிச்‌ சுடரே ! பேரின்பம்‌
அளிக்குங்‌ கருணைக்‌ கருங்கடலே !
அழியா வீட்டுக்‌ கொருவிளக்கே !
அமுதங்‌ கடைந்து திரட்டியெடுத்‌
தமரர்க்‌ குதவும்‌ பெருமானே !
களிக்குஞ்‌ சுரும்பர்‌ துதைந்துழத்தேன்‌
கக்குங்‌ கமல முறுக்குடையுங்‌
கன்னித்‌ தடஞ்சூழ்‌ திருநாடா !
கண்ணா !வரி!கே சவ! முகுந்தா !
தெளிக்கும்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா ! முத்தந்‌ தருகவே.–53-

துளிக்கும்‌-திவலைகளைத்‌ தெளிக்கும்‌,
திரை பாற்கடல்‌ -அலைவீசும்‌ திருப்பாற்கடலின்‌,
முகட்டு – மேற்‌ பகுதியிலும்‌,
தூயதரங்கத்து – பரிசுத்தமான கடலிலும்‌,
அனந்தபுரத்து – திருவனந்தபுரத்திலும்‌,
ஒருவா – நீங்காதபடி (என்றைக்கும்‌),
இரு கண்‌ துயில்‌கூரும்‌ சோதிச்‌ ௬டரே !-இரண்டுகண்களையம்‌ மூடி யோகநித்திரை செய்யும்‌ பரஞ்சோதியே
பேரின்பம்‌ அளிக்கும்‌ கருணைக்‌ கருங்‌ கடலே ! – பேரானந்த
மாகிய முத்தியைக்‌ கொடுக்கும்‌ தயாசமுத்திரமே !
அழியா வீட்டுக்குஒரு விளக்கே :! – அழிவில்லாத்‌ மோட்சலோகத்திற்கு ஒப்பற்ற விளக்‌குப்போன்று சுயம்பிரகாசனே !
அமுதம்‌ கடைந்து திரட்டி எடுத்து-தேவாமிருதத்தை (த்திருப்பாற்கடலிலிருந்து) கடைந்தெடுத்துத்‌திரளவைத்து,
அமரர்க்கு – தேவர்களுக்கு (மட்டும்‌)
உதவும்‌ – வழங்‌கிய, பெருமானே !-
களிக்கும்‌ சுரும்பர்‌ – (தேனுண்டு) வெறி கொள்ளும்‌ வண்டுகள்‌,
துதைந்து உழ – (தம்‌ கால்களால்‌) மிதித்துத்துகைத்தலால்‌,
தேன்‌ கக்கும்‌ கமலம்‌ .. (தம்மிடத்திள்ள) தேனை வெளியே சொரியும்‌ தாமரை மலர்‌,
முறுக்கு உடையும்‌ – தமதுகட்டு நெகிழ்ந்து பிரியும்‌,
தடம்‌ சூழ்‌- தடாகங்கள்‌ சூழ்ந்த,
கன்னித்‌ திருநாடா ! – பாண்டியநாட்டுக்குரியவனே :!
கண்ணா !- கண்ணனே !
அரி – விஷ்ணுவே |, கேசவ முகுந்தா -,
தெளிக்கும்‌ பொருநைத்‌ தடம்‌ துறைவா . நீர்த்துளிகளை [க்காற்றில்‌] வீசும்‌ தாமிரபர்ணியின்‌ நீர் துறைகளை யுடையவனே?
திரு வாய்‌ முத்தம்‌ தருக -; தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ பேரைச்செல்வா -; முத்தம்‌ தருக –

* பாலாழி நீ கிடக்கும்‌ பண்பு ?* (பெரிய திருவந்தாதி, 34)
* கண்ணன்‌ நின்பால்‌ திருநெடுங்கண்‌ வளர்தற்கு, அருமாதவம்‌ என்ன செய்தாய்‌ பணியெனக்கு அம்புதியே “(திருவேங்கடத்தந்‌தாதி, 10)
, “எழிலணி அனந்தபுரம்‌, படமுடையரவில்‌ பள்ளி பயின்ற வன்‌ ”” (திருவாய்மொழி – 10 – 2 – 8) முதலியன ஈண்டு முதலடியில்‌ அநுசந்திக்கவும்‌.
பாண்டி நாட்டுக்குக்‌ **கன்னிநாடு ‘” என்றும்‌ பெயருண்டு : தடாதகைப் பிராட்டியாண்டமையால்‌ என்பர்‌, இனி,கன்னி – அழியாத என்றுமாம்‌.

——

சந்தா டவியும்‌ பாதிரியுந்‌
தடந்தா மரையும்‌ விளைவயலுஞ்‌
சதுரா மறையும்‌ விழாவொலியுந்‌
தழைக்கும்‌ பிள்‌௯க்‌ குழாவொலியும்‌
நற்தா வளமைத்‌ திருவழுதி
நாடா ! பரம பதவீடா !
நறுந்தா தளையும்‌ பசுந்துளவ
நாரா யண !சீ தர! முகுந்தா !
கொந்தார்‌ மலர்ப்பூங்‌ கரியகுழற்‌
கொவ்வைக்‌ கனிவாய்‌ மணிமுறுவற்‌
கொடிபோ ஸுடங்குந்‌ துடியிடைக்கோ
மளக்கோ குலக்கோ சலையளித்த
சிந்தா மணியே மரகதமே /
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா / முத்தந்‌ தருகவே.–54-

சந்து அடவியும்‌ – சந்தனமரக்காடுகளும்‌,
பரதிரியும்‌ -பாதிரிமரங்களும்‌,
தடம்‌ தாமரையும்‌ – தடாகங்களில்‌ தாமரைக்‌ கொடிகளும்‌, விளை வயலும்‌ – (நெல்‌) விளைகின்ற கழனிகளும்‌
(இவைகளோடு) சதுராம்‌ மறையும்‌ – நான்கு வேத கோஷங்களும்‌,
விழா ஒலியும்‌ – திருவிழாக்களில் எழும் ஒலிகளும்‌,
பிள்ளைக்குழாம்‌ ஒலியும்‌ – சிறுவர்களின்‌ கூட்டொலியும்‌,
தழைக்கும்‌ – மிகுதியாகச்‌ செழித்துக் காணப்படுகின்ற,
நந்தா வளமை-(என்றும்‌) குறைவுபடாத வளப்பத்தையுடைய,
திருவழுதி நாடா – பாண்டியநாட்டுக்கு உரியவனே
பரமபத வீடா – வைகுந்த வாசனே ! ,
நறும்‌ தாது அளையும்‌ பசும்‌ துளவ நாராயண –வாசனையுடைய மகரந்தங்கள்‌ செறியும்‌ பச்சைத் திருத்துழாய்‌ மாலையை யணிந்த நாராயணா,
சீதர – இலக்குமியை (மார்பில்‌) தாங்குபவனே ! –
முகுந்தா !.,
கொந்து ஆர்‌ மலர்‌ – கொத்துக்களாகவுள்ளபூக்களைச்சூடிய,
பூங்‌ கரிய குழல்‌ – (அழகிய) மென்மையான கரிய கூந்தலினையும்‌,
கொவ்வைக்‌ கனிவாய்‌ – கோவைக்கனி போற்‌ சிவந்த வாயினையும்‌,
மணி முறுவல்‌ – முத்துப்போன்ற பற்களையும்‌,
கொடி போல்‌ நுடங்கும்‌ துடி இடை. – வல்லிக்‌ கொடிபோல்‌ அசைகின்ற உடுக்கையை’ யொத்த நுண்ணிய இடுப்பினையும்‌ உடைய,
கோமளம்‌ – இளமைஅழகு படைத்த,
கோகுலக்‌ கோசலை – ஆயர்பாடியிலுள்ள யசோதை,
அளித்த – வளர்த்துக்‌ கொடுத்த,
சிந்தாமணியே – ! மரகதமே ! –, திருவாய்‌ முத்தம்‌ தருக –; தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ திருபேரைச்‌ செல்வா ! –, முத்தம்‌ தருக-

————–

வாரானைப்‌ பருவம்‌

விதுரன்‌ மனையி லடிசில்‌ நுகரும்‌ விரதன்‌ வருக
வருகவே
விதர ணிகமு மறிவு மூடைய விமலன்‌ வருக
வருகவே
அதிரு மணியு மரையின்‌ வடமு மசைய வருக
வருகவே
அழகு கரிய குழல்கள்‌ சரிய வபிமன்‌ வருக
வருகவே
புதிய மதியின்‌ வதன வெயர்வு பொலிய வருக
வருகவே
பொழியு நறவு விரவு துளவு புனையூ மனகன்‌
வருகவே
மதுர முறுசெவ்‌ வதர வமுத மூதரம்‌ வழிய வருகவே
வருணன்‌ வருடு முபய சரண: வரதன்‌ வருக
வருகவே.--55-

விதுரன்‌ மனையில்‌ அடிசில்‌ நுகரும்‌ – விதுரனது வீட்டில்‌ உணவு விரும்பிப்‌ புசித்த,
விரதன்‌ – சங்கற்பங்கொண்டோனே ! வருக வருக – :
விதரணிகமும்‌ – சாமர்த்தியமும்‌,
அறிவும்‌ உடைய – ஞானமும்‌ உடைய,
விமலன்‌ . புனிதனே ! வருக வருக -;
அதிரும்‌ மணியும்‌ – ஒலிக்கின்ற [அரைஞாணில்‌ கட்டிய] சிறுமணியும்‌,
அரையின்‌ வடமும்‌ – அரைஞாண்கயிறும்‌,
அசைய – மெலிய அசை யும்படி, வருக வருக – :
கரிய அழகு குழல்கள்‌ சரிய – கருநிறம்‌ பொருத்தி அழகாயுள்ள தலைமயிர்‌ தாழ்ந்துவிழும்படி ,
அபி மன்‌ – அன்புமிக்கோனே –வருக வருக – :
புதிய மதியின்‌ வதனம்‌ வெயர்வு – புதிய சந்திரன்போன்ற நெற்றியில்‌ [ துளிக்கும்‌]வெயர்வை,
பொலிய_ _ விளங்கும்படி, வருக வருக – :
பொழி:பும்‌ நறவு விரவு துளவு – செரரிகின்ற தேன்‌ பொருந்தியுள்ள திருத்துழாய்‌ மாலையை,
புனையும்‌ -சூட்டிக்கொண்ட,
அனகன்‌ – அழகுள்ளவனே ! வருக வருக – ;
மதுரம்‌ உறு செவ்‌ அதர அமுதம்‌ – சுவை மிக்க சிவந்த உதடுகளில்‌
ஊறும்‌ தேறல்நீர்‌, உதரம்‌ வழிய வருக – வயிற்றில்‌ ஒழுகும்படி வருக;
வருணன்‌ வருடும்‌ உபய சரண வரதன்‌ – வருணபகவான்‌ [தனது]கைகளால்‌ பிடிக்கும்‌ இரு திருவடிகளையுடைய வரதனே ! வருக வருக .

இச்செய்யுளுக்குச்‌ சந்தக்குழிப்பு தனன தனன தனன தனன தனன தனன தனனன என்பது.

———–

எரியூமனல்‌ கதுவும்விழி நிருதரடு சமர்புரியும்‌
. இகல்‌ தொலைய விடுகணையினான்‌
இருவினையு மொருசிறிது தொடரவரி தெனவருடும்‌
எவர்தமையு மடிமைகொளுமால்‌
முரிபுருவ நுதல்வனிதை சனகிமுலை மூகடுழுத
முகலளித விரணமுமூளோன்‌
முருகுவிரி தருதுளவு மணமலிய நெடியமணி
முடியினணி பெறவனைகுவோன்‌
உரியசது மறையுமுனி வரருமய னொடுபரவும்‌
உபயபரி புரசரண! நீ
டுலகமுழு வதுமுதர மமையவொரு தனிநுகரும்‌
ஒளிரும்ரவி குலமரபினோன்‌ !
நெரியமரு தமுமுதிய சகடுமுதை விதரணிகன்‌ !
நிமலனர வணைதுயிலுமால்‌!
நெறியுமகி மையுமளவில்‌ குணனும்வடி வழகு
முடை
நிகரில்‌ முகில்‌ வணன்‌ வருகவே.--56-

எரியும்‌ அனல்‌ கதுவும்‌ விழி நிருதர்‌ – சுவலிக்கின்ற நெருப்புப்‌ பற்றியதுபோற்‌ (சினத்தால்‌) சிவந்தகண்களையுடைய, அரக்கர்கள்‌,
அடு சமர்புரியும்‌ இகல்‌ தொலைய – கொல்லும்‌ போரைச்‌
செய்கின்ற பகைமை யொழியும்படி, (அவர்களையழிக்க)
விடு கணையினான்‌ – தொடுக்கின்ற அம்புகளை யுடையவனும்‌,
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய இரண்டும்‌,
ஒரு சிறிது தொடர அரிது, என – சிறிதேனும்‌ விடாது பின்வருவது இனிமுடியாது என்னும்‌ துணிபோடு,
வருடும்‌ எவர்தமையும்‌ – (திருப்பாதங்களைத்‌) தடவும்‌ அனைவரையும்‌,-தெண்ணீர்‌ பொன்னி திரைக்கையால்‌ அடிவருடப்‌ பள்ளி
கொள்ளும்‌: என்றது போல,
அடிமை கொளும்‌ மால்‌ – ஆட்கொண்டு கைங்‌கரியபரர்களாக ஆக்கிக்‌ கொள்ளும்‌ திருமாலும்‌,
முரிபுருவம்‌ -வளைந்த புருவத்தையுடைய,
நுதல்‌ – நெற்றியைக்‌ கொண்ட
வனிதை சனகி – பெண்ணாகிய சீதையின்‌,
முலை முகடு உழுதமுகம்‌ – கொங்கைகளின்‌ காம்பு அழுந்தப்பட்ட மார்பிடத்து,
லளிதவிரணமும்‌ உளோன்‌ – லாவண்யமான காயம்‌ வடு உள்ளவனும்‌
முருகு விரிதரு துளவு – அழகு விரிகின்ற திருத்துழாயை,
மணம்‌ மலிய – வாசனை மிகும்படி,
நெடிய மணி முடியில்‌ – நீண்ட அழகிய துலைமயிரில்‌,
அணி பெற வனைகுவோன்‌ – ஆபரணமாம்படி அழகுறச்‌ சூடுபவனும்‌, (ஆகிய உபயபரிபுரசண ! எனமேலியையும்‌) :
உரிய சதுமறையும்‌ – ஓதுதற்கு உரிய நான்கு வேதங்களும்‌,
முனிவரரும்‌ – இருடிச்சிரேட்டர்களும்‌,
அயணொடு பரவும்‌ – பிரமதேவனோடு துதிக்கின்ற,
உபய பரிபுர சரண ! . இரண்டு நூபுரங்களையுடைய பாதங்களை யுடையவனே !
நீடு உலகம்‌ முழுவதும்‌ –
பெரிய உலகத்திலுள்ள அனைத்துப்பொருள்களும்‌,
உதரம்‌ அமையஉமது வயிற்றினுள்‌ அடங்கும்படி,
ஒரு தனி நுகரும்‌ – (மகாபிரளய காலத்தில்‌) ஒப்பற்றவனாய்‌ உண்ட,
ஒளிரும்‌ ரவிகுல மரபினோன்‌ – விளக்கமுற்ற சூரியகுலத்திலுதித்தவனே !
மருதமும்‌ – இரண்டு மருதமரங்களும்‌,
முதிய சகடும்‌.- பழைய வண்டியின்‌ சக்கரமும்‌,
நெரிய – முறிந்து விழும்படி,
உதை-(கால்களால்‌) உதைத்த,
விதரணிகன்‌ – சாமர்த்திய முடையவனே?
நிமலன்‌ 1- தோஷமற்றவனே !
அரவணை துயிலும்‌ மால்‌ | – பாம்‌ பணைமேல்‌ யோகநித்திரை பயிலும்‌ திருமாலே |!
நெறியும்‌ – ஒழுக்கமும்‌,
மகிமையும்‌ – மேன்மையும்‌,
அளவு இல்‌ குணனும்‌ – எண்ணற்ற நற்குணங்களும்‌,
வடிவழகும்‌ – நல்ல உருவழகும்‌,
உடை. – உடைய,
நிகரில்‌ . ஒப்பற்ற முகில்‌ வணன்‌ – முகில்வண்ணன்‌ என்னும்‌ திருநாமம்‌ உடையவனே ! வருக–

————

புலருஞ்சது மறையருந்தவர்‌ புலவர்பண்டிதர்‌ மலர்‌
கொடே
புதியபங்கய சரண்வணங்கிய புனித!வெண்டிரை
யுததிசூழ்‌
செகமடங்கலு நொடியினுண்‌ டுபிழ்‌ திருமண ந்
தொளிர்‌ மரும! வோர்‌
-திரிபுரந்தழல்‌ படமுனிந்தருள்‌ சிவனயன்‌ தொழ
வருகவே
தகரமுங்கிய பரிமளங்கமழ்‌ தருதடம்புய சயதர !
சமர்முகந்தனி னிருதர்வெம்படை சரியடுஞ்சிலை
யபிம !னீள்‌
மகரகுண்டல மசையவிங்கெதிர்‌ மகரவண்குழை !
வருகவே
வருணன்வந்திரு சரண்வணங்கிட மனமகிழ்ந்‌
இதெதிர்‌ வருகவே.–57-

புகல்‌ அரும்‌ சதுமறை . பேசுதற்கரிய (புகழையுடைய) தான்கு வேதங்களிலும்‌ வல்ல,
அருந்தவர்‌ – சிறந்த தபசியரும்‌,
புலவர்‌ – கவிபாடுபவரும்‌,
பண்டிதர்‌ . அறிவாளிகளும்‌,
மலர்‌ கொடு .(தத்தம்‌) கையிலே பூக்களைக் கொண்டு (அர்ச்சித்து),
புதிய பங்கய சரண்‌ வணங்கிய – புதிதாக (அப்போது) மலர்ந்த தாமரை பூப்‌போன்ற திருவடிகளைப் பணியும் படியுள்ள,
புனித-பவித்திரனே!
வெண்திரை உததி சூழ்‌ – வெண்மையான அலைகளை யுடைய கடல்‌ சூழ்ந்த,
செகம்‌ அடங்கலும்‌ -,நிலவுலகம்‌ முழுவதும்‌,
தொடியின்‌ உண்டு – ஒருகணத்தில்‌ புசித்து,
உமிழ்‌ -(மறு கணத்தில்‌) வெளியுமிழ்‌கின்ற, –
திரு மணந்து ஒளிர்‌ மரும ! . இலக்குமிதேவி பொருந்தி விளங்குகின்ற மார்பனே 7
ஓர்‌ திரிபுரம்‌ தழல்‌ பட முனிந்தருள்‌ சிவன்‌ – முப்புரங்களும்‌ நெருப்புப்‌ பற்றி யெரியும்படி கோபித்த சிவபெருமானும்‌,
அயன்‌ – பிரமனும்‌,
தொழ – கை கூப்பித்‌ தொழும்படி,–வருக –
தகரம்‌ – மயிர்ச்சாந்து,
முங்கிய – நிறையப்‌ பூசியதால்‌,
பரிமளம்‌ கமழ் தரு – வாசனை வீசுகின்ற,
தடம்‌ புயம்‌ – பரந்த தோள்‌களையுடைய,
சயதர – வெற்றி வீரனே !
சமர்‌ முகம்‌ தனில்‌ – போரினிடத்து,
நிருதர்‌ வெம்படை சரிய. அரக்கர்களுடைய: கொடிய சேனைகள்‌ அழிந்து போகும்படி,
அடும்‌ – கொல்லுகின்ற,
சிலை – வில்‌லினையுடைய,
அபிமன்‌ ! – பயமில்லாதவனே :
நீள்‌ மகர குண்டலம்‌ அசைய – நீண்ட மகரகுண்டலங்கள்‌ (இரு காதுகளிலும்‌) [மெல்ல] அசையும்படி,
இங்கு எதிர்‌ வருக – ; மகரவண்குழை ! – மகரநெடுங்‌
குழைக்காதரே !
வருணன்‌ வந்து இரு சரண்‌ வணங்கிட – வருணபகவான்‌ வந்து [உம்முடைய] இரண்டு திருப்பாதங்களையும்‌வணங்க:
(அதனால்‌), மனம்‌ மகிழ்ந்து . உள்ளக்களிப்போடு, எதிர்‌ வருக-

———

கலைமண ந்தொளிர்‌ தவளவெண்பிறை கதுவிடுஞ்சிலை
நுதலிஷள்‌
கவினலந்தரு சனகிசம்பிரம கனதனம்பொரு
துழுதமால்‌
உலைமகந்தனி லடிபடும்பொழு தொளிருமொண்‌ சுடர்‌
வயிரவா
ளொடுமுனிந்தட ரவுணர்பொன் றிட உயிரடுஞ்‌
சமன்‌ ! வருகவே
திலகமஞ்சரி துளவசைந்தொளி திகழவண்டின
முூரலவே
செழுநறுந்துகள்‌ முகைவிரிந்தலர்‌ சிறிய பங்கய
மெனு
மலர்மடந்தையு நிலமடந்தையு மருவுதிண்டிறல்‌
வரத ! நீள்‌
மகரகுண்டல மசையவிங்கெதிர்‌ மகரவண்குழை !
வருகவே,–58–

கலை மணந்து ஒளிர்‌ – கலைகள்‌ பொருந்தி விளங்குகின்ற,
தவள வெண்பிறை – மிக்க வெண்மையையுடைய பிறைச்‌ சந்திரனை
கதுவிடும்‌ – பற்றியிருக்கின்‌ற,
சிலை _-வில்போன்று வளைந்த,
நுதலினாள்‌ -புருவங்களைக்‌ கொண்டவளாகிய,
கவின்‌ நலம்‌ தருசனகி – அழகினினிமை வழங்கும்‌ சீதையின்‌,
சம்பிரமம்‌ கன தனம்‌ -களிப்புமிகுந்த பருத்த கொங்கைகளோடு,
பொருது உழுத மால்‌ – போரிட்டு (மார்பினால்‌) கிண்டிய இராமபிரானாகிய திருமாலே !
உலைமுகம்‌ தனில்‌ அடிபடும்‌ பொழுது – கொல்லனது உலைக்‌ கூடத்தில்‌ [சம்மட்டியினால்‌] ஓங்கி அடிக்கும்‌ பொழுது,
ஒளிரும்‌ – பிரகாசிக்கின்ற,
ஒண்சுடர்‌ – ஒளிக்கதிர்ப்‌ பொறிகளை யுடைய,
வயிர வாளொடு – உறுதியான [வலிய] வாளைக்‌ கையிலே கொண்டு,
முனிந்து – சினந்து,
அடர்‌ அவுணர்‌ – தாக்குகின்ற அசுரர்கள்‌,
பொன்றிட -இறந்தொழியும்படி,
உயிர்‌ அடும்‌ சமன்‌ -உயிரைக் கொண்டு செல்லும்‌ யமன்‌ போன்றவனே ! வருக-
வண்டினம்‌ முரல . வண்டுக்‌ கூட்டங்கள்‌ ஒலித்துத்‌ துகைத்தலால்‌,
செழு நறும்‌ துகள்‌ முகை – செழித்த பரிமளமுள்ள மகரந்தப்‌ பொடிகளைக்‌ கொண்ட மொட்டு,
விரிந்து அலர்‌ – அகன்று மலர்ந்த,
சிறிய பங்கயம்‌ எனும்‌ நரு மலர்‌ – சிறிய (செந்‌) தாமரை யென்கின்ற தேன்‌ சொரியும்‌ மலரில்‌,
மடந்தையும்‌ – எழுந்தருளியிருக்கின்ற இலக்குமி தேவியையும்‌,
நில மடந்தையும்‌ – பூமிதேவியையும்‌,
திலகம்‌ – சிறந்த,
மஞ்சரி – கொத்துக்களைக்‌ கொண்ட, துளவு
அசைந்து ஒளி திகழ – துளவ மாலையசைந்து பிரகாசிக்க,
மருவு திண்‌ திறல்‌ வரத- தழுவுகின்ற மிக்க வலிமையை யுடைய வரதனே !
நீள்‌ மகர குண்டலம்‌ அசைய – நீண்ட மகரகுண்டலங்‌கள்‌ (இரு காதுகளிலும்‌ மெல்ல) அசையும்படி,
மகரவண்குழை !.-மகரநெடுங்குழைக்காதரே ! இங்கு எதிர்‌ வருக–

——–

உளநெ கிழ்ந்திரு பொழுதும்‌ வந்தனை யொடுமுவநீ
தெதிர்‌ பரவவே
உபயசெஞ்சரண்‌ முடிபு னைந்தொளி ரூயர்ப
தந்தரு கருணையால்‌
அளைக வர்ந்திடை மகளிர்‌ தங்குடி லணை தருங்கயி
றதுகொடே
அடிபடும்பொழு துடல்குழைந்தழு தழுதுநின்ற
வன்‌ 1 வரூகவே
கு ஈநி ரம்பிய புனலினுங்கரை யருகுவண்டலு மதகு
நீள்‌
குவளையம்படு கருநெருங்கிய குளிர்‌ நறும்பொழி
விடையும்‌ வால்‌
வளமுழங்கிய குருகையம்பதி மருவுநங்கைகண்‌
மணி நன்னா
வலவனிங்கித கவிதை கொண்டருள்‌ மகரவண்‌
சூழை ! வருகவே.--59-

உளம்‌ நெகிழ்ந்து – மனமுருகி,
இரு பொழுதும்‌ -காலைமாலையென்ற இரண்டுபொழுதும்‌,
வந்தனையொடு உவந்து -வழிபாட்டோடு மனமகிழ்ந்து,
எதிர்‌ பரவ – எதிர்‌ நின்று துதிக்க,
உபய செஞ்‌ சரண்‌ . இரண்டுசெவ்வியபா தங்களையும்‌,
முடிபுனை ந்து – (பரவுவோரின்‌) சிரசிலே சூட்டி,
ஒளிர்‌ உயர்பதம்‌ தரு கருணையால்‌ -(எப்போதும்‌) பிரகாசிக்கின்ற மேலான பரமபதத்தைக்‌ கொடுக்கின்ற தயையினால்‌,
அளை கவர்ந்து – வெண்ணெயைக்களவுகண்டு,
இடைமகளிர்தம்‌ குடில்‌ – இடைச்சியரது குடிசையில்‌,
அணை தரும்‌ – பிணித்‌திருக்கின்ற,
கயிறது கொடு – கடைகயிற்றினால்‌,
அடிபடும்‌ பொழுது -அடிவாங்கும்போது,
உடல்‌ குழைந்து – உடல்‌ நெளிந்து,
அழுதுஅழுது நின்றவன்‌ – விம்மி அழுகை ஓயாது நின்ற கண்ணனே !
குளம்‌ நிரம்பிய புனலினும்‌ .. நிரம்பியுள்ள குளத்தின்‌ நீரிலும்‌,
கரை அருகு வண்டலும்‌ – (அதன்‌) கரையில்‌ தெருங்கியுள்ள வண்‌டல் நீரிலும்‌,
மதகு – மதகில்தங்கியுள்ள நீரிலும்‌,
நீள்‌ ரூவகா அம்‌படுகரும்‌ – நீண்ட குவளைப்பூக்கள்‌ மலர்ந்துள்ள அழகிய நீர்நிலைகளிலும்‌,
நெருங்கிய குளிர்‌ நறும்‌ பொழிலிடையும்‌ – செறிந்த குளிர்ச்சி பொருந்தி வாசனையோடு கூடிய சோலைகளினிடத்திலும்‌,
வால்‌ வளை முழங்கிய – வெள்ளிய சங்குப்பூச்சிகள்‌ ஒலிக்கின்ற
[வளம்மிக்க].குருகை அம்பதி மருவும்‌ – திருக்குருகடர்‌ என்னும்‌ – ஆழ்வார்‌ திரு நகரியில்‌ வசிக்கும்‌,
நங்கை -உடையநங்கையாரின்‌,
கண்மணி.கண்‌ணின்‌ மணியபோன்றவனும்‌,
நல்‌ நாவலவன்‌ – நல்ல நாவீறுடைய பிரானும்‌ ஆகிய நம்மாழ்வாரின்‌,
இங்கித கவிதை கொண்டருள்‌ -(தத்துவக்‌) கருத்துக்களைக்‌ கொண்ட பாசுரங்களைக்கேட்டருள்‌ கின்ற,
’ மகரவண்‌ குழை ! – மகரநெடுங்குழைக்கா தரே. வருக –

ஒரு நாள்‌ பிரமன்‌ “எங்குத்‌ தவஞ்செய்வது ? என்று சிந்தை கொண்டிருக்கையில்‌ “*கர -பிரமனே ! குரு – (இங்குத்‌ தவஞ்‌) செய்‌ ?” என்று இத்தலத்தைச்‌
சுட்டி ஆகாயவாணி மொழிந்ததனால்‌, இதற்குக்‌ *குருகாபுரி’” என்று பெயர்வந்த தென்பர்‌.

நங்கை-உடைய நங்கையார்‌. இவர்‌ நம்மாழ்வாரின்‌ தாய்‌, இவர்‌ மலையாள நாட்டில்‌, திருவண்பரிசாரம்‌ என்னும்‌ திருப்பதியிலுள்ள திருவாழ்‌மார்பர்‌ என்னும்‌ பகவத் பக்தரது தனயையாவர்‌. இவர்‌ குருகூரில்‌ பொற்காரியார்‌ என்பவர்க்குப்‌ புதல்வராய்த்‌ தோன்றிய காரி யாரை மணந்தார்‌. (இவர்களுக்குப்‌ பிறந்த மாறன்‌ என்னும்‌ நாமம்‌ பெற்ற தம்மாழ்வாரைத்‌ திருக்குறுங்குடி எம்பெருமானே அவதரித்துள்ளார்‌ என்பது துணிபு)

நன்னாவலவன்‌ – **நன்‌ மதுரகவி வணங்கும்‌ நாவீறன்‌ வாழியே” என்றது இவரது வாழிதிருநாமப்‌ பாட்டு.

“*பெருமாள்‌ மகுடம்‌ சாய்க்கும்படி கவிபாடிய ஞானத்‌ தமிழ்க்கடலே””

———

முடிமீ தொளிர்சூ ழியத்தொகையின்‌
முழுவெண்‌ டிங்கட்‌ கற்றைநிலா
மூரிக்‌ கடல்ளூழ்‌ தருபுவனம்‌
முற்றுந்‌ தழைய வடர்ந்தவள்ளைக்‌
கொடிபோ லொசியுங்‌ குழையுமணிக்‌
குழையுங்‌ குழைய வுடல்குழையக்‌ |
குழைத்து நுதலி ஸிடுந்திலகக்‌
குறுவேர்‌ வழிய விடைகழியின்‌
அடிமே லடிவைத்‌ திருகைசுவர்‌
அதனைப்‌ பிடித்து வருதலிற்றள்‌
ளாடி விழதத்‌ தளிப்பின் மலர்‌
அங்கை பதித்துத்‌ தவழ்ந்தெனது மடிமீ திருந்து களபமுலை
வள்ளத்‌ தமுதுண்‌ டிடவருக
மகரக்‌ குழையே ! யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே,--60-

முடிமீது – தலையின்மேல்‌,
ஒளிர்‌ சூழியம்‌ தொகையின்‌ .விளங்குகின்ற உச்சிக்கொண்டையின்‌ கூட்டினால்‌,
முழு வெண்‌திங்கள்‌ கற்றை நிலா . பூர்ணசந்திரனது தொகுதிப்பட்ட நிலவொளி போன்ற ஒளியானது,
மூரிக்கடல்‌ சூழ்தரு புவனம்‌ முற்றும்‌ தழைய வலிமைபொருந்திய சமுத்திரம்‌ சூழ்ந்த உலகம்‌ முழுவதும்‌ பரவித்தங்கும்படியும்‌,
அடர்ந்த வள்ளைக்‌ கொடிபோல்‌ .- செறிந்துள்ள வள்ளைக்கொடி போல,
ஒசியும்‌ குழையும்‌ – (மெல்ல) அசைந்து துவளும்‌,
மணிக்‌குழையும்‌ – மகரகுண்டலங்களும்‌,
குழைய – தளர்ந்து தாழ்ந்து அசையும்படியும்‌,
உடல்‌ குழைய – திருமேனி துவளும்படியும்‌,
குழைத்து – கத்தாரியில்‌ கலந்துகுழையச்செய்து,
நுதலில்‌ இடும்‌திலகம்‌ – நெற்றியில்‌ இட்ட திலகமானது,
குறுவேர்வு அழிய -துளிக்கும்‌ வேர்வையினால்‌ (தெளிவுறத்‌ தெரியாது) அழியும்படியும்‌.
இடைகழியில்‌ – (மனையின்‌) இடைக்கட்டில்‌ (ரேழியில்‌) ,
அடிமேல்‌ அடிவைத்து – மெதுவாகக்குறுநடையிட்டு,
இருகை – இரண்டு கைகளாலும்‌,
சுவர்‌ அதனைப்பிடித்து – சுற்றுச்சுவரைப்‌ பிடித்துக்‌ கொண்டு,
வருதலின்‌ – வரும்போது,
தள்ளாடி விழ தத்தளிப்பின்‌ -தடுமாறித்‌ தரையில்விழும்படி திகைக்கும்போது,
மலர்‌ அங்கைபதித்து – பூப்போல்‌ மெல்லிய அழகிய உள்ளங்கைகளைத் தரையில்‌ பதிய வைத்து,
தவழ்ந்து – தவழ்ந்து வந்து,
எனது மடி மீது இருந்து – எனது மடியின்மேலே உட்கார்ந்து,
களப முலைவள்ளத்து- சந்தனம்‌ பூசப்படும்‌ கிண்ணம்போலுள்ள கொங்கைகளில்‌ (சுரக்கும்‌),
அமுது உண்டிட – பாலை (ச்சுவைத்து) உண்ண, வருக – மகரக்‌ குழையே ! – மகரநெடுங்‌ குழைக்காதரே |
என்‌ இரு கண்மணியே 7- எனது இரண்டு கண்மணிகளைப்போல்‌ பாதுகாக்கத்தக்கவனே l,
வருக வருக–;

———-

பண்டா லிலையி னரங்கத்தும்‌
பாலா ழமியிற்கண்‌ டுயில்கூரும்‌
பச்சைப்‌ புயலே ! பணாமகுடப்‌
படப்பாந்‌ தளின்கண்‌ பிதுங்கநறுந்‌
தண்டா மரைச்செஞ்‌ சரண்பெயர்த்துத்‌
தள்ளிக்‌ கடைவால்‌ பிடிக்கநெறி
தழைக்கும்‌ படிக்கு நடம்புரிந்த
தலைவா ! கடல்சூ முலகமுழு
துண்டா தரவோ டமிழ்ந்தளந்த
ஒளியே 1! யொளிரு மரகதமே !
ஒருவா ணுதல்பண்‌ டுளங்களிப்ப
உயர்வான்‌ முகடு கிழித்தெழுந்து
வண்டார்‌ தருவின்‌ மலார்கொணர்ந்த
மாலே ! வருக வருகவே
மகரக்‌ குழையே / யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே.–61-

பண்டு. மஹாபிரளயகாலத்து,
ஆலிலையின்‌ -(பச்சை) ஆலிலையிலும்‌,
அரங்கத்தும்‌ . திருவரங்கத்திலும்‌,
பாலாழியில்‌ – திருப்பாற்கடலிலும்‌,
கண்‌ துயில்‌ கூரும்‌ – கண்ணைமூடி யோகநித்திரை செய்யும்‌,
பச்சைப்புயலே | – கருநிறமேகமே !
பணாமகுடம்‌ படம்‌ பாந்தளின்‌ – தலையில்‌ பல படங்களைக்‌ கொண்ட காளியனென்னும்‌ விஷநாகத்தின்‌,
கண்‌ பிதுங்க – கண்கள்‌ வெளி வரும்படி,
நறும்‌ தண்‌ தாமரை செஞ்சரண்‌ பெயர்த்து – பரிமள முள்ள குளிர்ந்த தாமரை மலர்போன்ற செவ்விய திருவடிகளைத்‌ தூக்கித்‌ தூக்கிமாறவைத்து,
தள்ளி- அந்‌ நாகத்தைச்‌ சற்றுக்‌ கையினால்‌ தள்ளி,
கடை வால்‌ பிடிக்க – அதனது வாலின்‌ நுனியைக்‌ கையினால்‌ பிடித்துக்‌ கொள்ள, (பின்னர்‌)
நெறி தழைக்‌கும்படிக்கு – தருமதெறி ஓங்கும்பொருட்டு,
நடம்‌ புரிந்த -(அதனைக்கொல்லாமல்‌) அதன்‌ தலைகளில்‌ நடனம்செய்த, தலைவா .
எம்பெருமானே !
கடல்‌ சூழ்‌ உலகம்‌ முழுது உண்டு – கடலாலே சூழப்பட்ட நில
வுலகம்‌ முழுவதையும்‌ புசித்து,
ஆதரவோடு – அன்போடு,
உமிழ்ந்து- மீண்டும்‌ வெளிப்படுத்தி,
அளந்த ஒளியே – அதனைச் சிறு காலால்‌ அளந்திட்ட பிராசமானவனே
ஒளிரும்‌ மரகதமே – விளங்குகின்ற பச்சைரத்தினமே !பண்டு – நரகாசுரனையழித்தபின்பு,
ஒரு வாள்‌நுதல்‌ – ஒளிபொருந்திய நெற்றியையுடைய சத்தியபாமையானவள்‌,
உளம்‌ களிப்ப – மனம்‌ மகிழும்படி,
உயர்‌ வான்‌ முகடு கிழித்து, எழுந்து – ஒங்கியவானத்தின்‌ உச்சியினைக்கீண்டி , மேலும்‌ எழுந்து (தேவலோகத்துக்குச்‌ சென்று ஆங்கிருந்த)
வண்டு ஆர்‌ தரவின்‌ மலர்‌ – வண்டுகள்‌ ஆரவாரிக்கின்ற பரரிஜாதமரத்தில்‌ பூத்த மலரை,
கொணர்ந்த – துவாரகைக்குக்‌ கொண்டுவந்த,
மாலே -கண்ணபிரானாகிய திருமாலே ! வருக வருக .. ; மகரக்குழையே ! -என்‌ இரு கண்மணியே 1 -, வருக வருக .

——–

சிந்தா மணியே ! மரகதமே !
தேவே ! தேவர்‌ பெருமானே /
தேடும்‌ பொருளே ! நாடோறுஞ்‌
செய்யுந்‌ தவமே ! தவப்பயனே !
எந்தாய்‌ 1! நந்தா விளக்கொளியே /
எங்கட்‌ குயிரே 1! பரகதியே !
எழுதா மறையின்‌ வடிவே / சொல்‌
எழுத்தெட்‌ டினுக்கு மொருமயமே !
கொந்தார்‌ துளவப்‌ பசுந்தாமக்‌
கோவே 7 நிருதர்‌ குலக்கூற்றே !
கூடும்‌ புனனி ராடிவலங்‌
கொண்டு திருமஞ்‌ சனக்கொலுவில்‌
வந்தா தரித்து வருணனடி
வணங்கும்‌ புயலே ! வருகவே
மகரக்‌ குழையே /? யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே,–62-

சிந்தாமணியே – (தேவலோகத்துள்ள) சிறந்தமணிபோன்றரத்தினமே ! மரகதமே -,
தேவே – தேவனே |,
தேவர்‌பெருமானே !-தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனே
தேடும்‌ பொருளே?-(அனைவராலும்‌) தேடப்படுகின்ற செல்வமே
நாள்தோறும்‌ செய்‌யும்‌ தவமே ? -, தவப்பயனே ! – அத்‌ தவத்தின்‌ பயனாய்‌ விளங்குபவனே !
எந்தாய்‌ – எனக்குத்‌ தந்தையே
நந்தா விளக்கொளியே !தூண்டப்படாத தீபப்பிரகாசமே !(சுயம்பிரகாசமானவனே )-விளக்கொளியை, மரதகத்தை ?: என்றார்‌ கலியனும்‌.
எங்‌கட்கு உயிரே | – அடியராகிய எங்களுக்குப்‌ பிராணனாயிருப்பவனே 7
பரகதியே : – (நாங்கள்‌ அடையவேண்டிய) மேலான கதியாயிருப்‌பவனே ! [உபேயமானவனே :]
எழுதா மறையின்‌ வடிவே !-அபெளருஷேயமான வேதத்தின்‌ சொரூபமானவனே |“வேதத்தை வேதத்தின்‌ சுவைப்பயனை” என்ற திருமங்கை
மன்னன்‌ வாக்கு நினைக, 

சொல்‌ எட்‌டெழுத்தினுக்கும்‌ ஒரு மயமே . -அஷ்டாக்ஷரத்தினுலாகும்‌ மந்திரச்‌ சொல்லினுக்கு ஒப்பற்றமையமாயிருப்பவனே !
கொந்து ஆர்‌ துளவப்‌பசுந்தாமம்‌ கோவே ! – கொத்துக்கள்‌ நிறைந்த துளசியினாலாகிய பச்சைமாலையைத்‌ தரிக்கும்‌ தலைவா !
நிருதர்குலக்‌ கூற்றே – அரக்கர்‌ குலத்திற்கு யமனாகுபவனே !
வருணன்‌ – வருண பகவான்‌,
கூடும்‌ -(அருகிலோடும்‌) தாமிரபரணியின்‌ நீர்த்துறையில்‌ “சேர்ந்திருக்கும்‌,
புனல்‌ நீர்‌ ஆடி – புனிதமான தண்ணீரில்‌ ஸ்நானஞ்‌ செய்து,
வலங்‌கொண்டு-கோயிலைப்‌ பிரதட்சிணஞ்செய்து,(பின்னர்‌ உட்புகுந்து)
திருமஞ்சனக்‌ கொலுவில்‌ வந்து ஆதரித்து அபிஷேகமண்டபத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ கொலுவினில்‌ வந்து பக்தியோடு விரும்பி,
அடிவணங்கும்‌- திருவடிகளில்‌ தலைவைத்து வணங்குகின்ற,
புயலே -மேகமே .(நிகரில்முகில்வண்ணனே ), வருக .; மகரக்குழையே ! -, என்‌ இரு கண்மணியே 1! -, வருக வருக –

——–

ஆரா வமுதொத்‌ திலவிதழின்‌
அமுதத்‌ திவலை மார்பொழுக
அரை நாண்‌ வடமு மணியுமருங்
கசையக்‌ குழையுங்‌ குண்டலமுஞ்‌
சீரார்‌ திருவிற்‌ பொலியுநுதல்‌
தீட்டுங்‌ குறுவேர்‌ வரும்பவருள்‌
செய்யுங்‌ கமல முகமிலங்கத்‌
திருந்தாட்‌ டுணைப்பொற்‌ றண்டையொலி
பார்மீ தெங்கள்‌ செவிகுளிரப்‌
பழகு நெறிநா டொறும்வளர்க
பசுந்தார்த்‌ துளவு மணங்கமழும்‌
படிநீ நடந்துன்‌ னடிபெயர்த்தெண்
வாரார்‌ களபக்‌ குரும்பைமுலை
வள்ளத்‌ தமுதுண்‌ டிடவருக
மகரக்‌ குழையே ! யென்னிருகண்‌
மணியே வருக / வருகவே. –63-.

ஆரா அமுது ஒத்து – (எவ்வளவு பருகினாலும்‌) திருப்திபிறவாத தேவாமிரு தத்தையொத்து,
இலவு இதழின்‌ அமுதத்திவலை – இலவம்பூப்போற்சிவந்தஉதடுகளிலூறும்‌ தேறல்நீரின்‌ துளிகள்‌,
மார்பு ஒழுக – மார்பிடத்திலே பெருகிவர,
அரை நாண்‌ வடமும்‌ மணியும்‌ மருங்கு அசைய – அரை நாண்கயிறும்‌ சிறுமணியும்‌ இடுப்‌பின்‌ பக்கத்தில்‌ அசைந்து (மெல்லென) ஒலிக்க,
குழையும்‌ குண்டலமும்‌- காதுகளில்‌ அணிந்துள்ள காதணியும்‌ (தொங்குகின்ற) குண்டலங்களும்‌, [
அசைய – அசைந்தாட,
சீர்‌ ஆர்‌ சிறப்புப்‌ பொருந்திய,
திருவில்‌ பொலியும்‌ நுதல்‌ – அழகிய வில்போல்‌ வளைத்த புருவங்களை யுடைய நெற்றியில்‌,
தீட்டும்‌ – எழுதியதுபோல,
குறுவேர்வு அரும்பசிறுவேர்வைத்துளிகள்‌ (இலேசாகத்‌) தோன்ற,
அருள்‌ செய்யும்‌ கமலமுகம்‌ இலங்க – கருணை பொழிந்து நன்மை செய்யும்‌ தாமரைமலர்‌ போல்‌ அழகிய திருமுகம்‌ ஒளிவிட,
திரு தாள்‌ துணை – அழகிய உனது இரண்டு பாதங்களிலும்‌, (அணிந்துள்ள),
பொன்‌ தண்டை ஒலி – பொன்னாலாகிய தண்டையின்‌ சப்தமானது,
எங்கள்‌ செவி குளிர – எங்களுடைய இருகாதுகளும்கேட்டு ரசிக்கும்படி,
பார்மீது – தரையின்‌ மேல்‌,
பழகும்‌ நெறி- நடைபழகுகின்‌ ற முறைமையின்‌ அழகு,
நாடோறும்‌ வளர்க – தினந்தோறும்‌ ஓங்கட்டும்‌ : (ஆகவே)
பசும்‌ தார்‌ துளவு மணம்‌ கமமும்படி ..பச்சைத்துளசிமாலைவாசனைவீசும்‌படி,
நீ நடந்து _ நீ தளர்நடையிட்டு,
உன்‌ அடி பெயர்த்து உனதுபாதங்களை மாறி மாறித் தூக்கி வைத்து,
என்‌ – என்னுடைய,
வார்‌ஆர்‌ -கச்சுப்பொருந்திய,
களபம்‌ குரும்பை முலைவள்ளத்து -சுந்துனம்‌ பூசப்படும்‌ தென்னங்குரும்பை போன்ற கொங்கைகளாகிய கிண்ணத்‌ தில்‌ [வட்டிலில்‌] (கரக்கும்‌)
அமுது உண்டிட – பாலைச்சுவைத்து உண்ண, வருக -; மகரக்குழையே! -, என்‌ இரு கண்மணியே – !, வருக வருக – ;

அருமைப்‌ பெருமான்‌ பிறவியொழித்‌
தருளும்‌ பெருமான்‌ கரதலஞ்சங்‌
காழிப்‌ பெருமான்‌ வானவர்க்கும்‌
அருநான்‌ மறைக்கு மெட்டாத
தரமப்‌ பெருமான்‌ பசுந்துளவத்‌
காமப்‌ பெருமா னேழுலகுநீ
தழைக்கும்‌ படிக்கன்‌ றளந்தநெடுஞ்‌
சரணப்‌ பெருமான்‌ மன்னுயிர்க்குங்‌
கருமப்‌ பெருமான்‌ முத்திவழி
காட்டும்‌ பெருமான்‌ பூம்பொகுட்டுக்‌
கமலா சனத்து வீற்றிருக்குங்‌
கன்னிப்‌ பெருமான்‌ றமிழ்க்குருகும்‌
பெருமைப்‌ பெருமா னென்னருமைப்‌
பிள்‌ப்‌ பெருமான்‌ வருகவே
பேரா யிரம்பெற்‌ றுயர்ந்ததிருப்‌
பேரைப்‌ பெருமான்‌ வருகவே.–64-

அருமைப்‌ பெருமான்‌ – கிடைத்தற்கரிய பெருமானும்‌, பிறவி ஒழித்து அருளும்‌ பெருமான்‌ – பிறவிப்பிணியை அகற்றிக்‌கருணைபுரியும்‌ பெருமானும்‌,
கரதலம்‌ – கைகளிடத்து,
சங்கு ஆழிபெருமான்‌ – சங்கினையும்‌ சக்கரப்படையினையும்‌ ஏந்திய பெருமானும்‌,
வானவர்க்கும்‌ – தேவர்களுக்கும்‌,
அருநான்மறைக்கும்‌ – பயிலுதற்கரிய நான்கு வேதங்களுக்கும்‌,
எட்டாத தருமப்‌ பெருமான்‌ – காண முடியாத அப்பாற்பட்ட (சாக்ஷத்‌) தருமமாகிய பெருமானும்‌,
பசும்‌ துளவத்‌ தாமம்‌ பெருமான்‌ – பச்சைத்‌திருத்துழாய்மாலையைத்‌தரித்த பெருமானும்‌,
ஏழ்‌ உலகும்‌ தழைக்கும்படிக்கு – மேலேழுலகங்களும்‌ நல்வாழ்வு வாழும்படிக்கு,
அன்று – திரிவிக்ரமனாய்‌ வளர்ந்தகாலத்து,
அளந்த – [தனது பெருங்‌ காலால்‌] அளந்து கொண்ட,
நெடும்‌ சரணப்‌ பெருமான்‌ – நீண்ட திருப்பாதங்களை யுடைய பெருமானும்‌,
மன்னுயிர்க்கும்‌ கருமப்‌ பெருமான்‌ -நிலை பெற்ற ஜீவன்களுக்கும்‌ [ அவையவையநுபவிக்கவேண்டிய]
கருமபலன்‌களை விதிக்கின்ற பெருமானும்‌,(கருமபலன்களையநுபவித்தபின்பு அவைகளுக்கு) முத்தி வழி காட்டும்‌ பெருமான்‌ – மோட்ச நெறியை யடைவதற்கான உபாயங்களைக்‌ காட்டித் தருகின்ற பெருமானும்‌,
பூம்‌ பொகுட்டுக்‌ கமலாசனத்து – கொட்டையினை உள்ளிட்ட.
தாமரைப்பூவினைத்‌ தவிசாகக்‌ கொண்டு அதனிடத்து,
வீற்றிருக்கும்‌ -தனிச்சிறப்போடு எழுந்தருளியிருக்கும்‌,
கன்னிப்‌ பெருமான்‌ -இலக்குமி தேவிக்குக்கணவனாகிய பெருமானும்‌,-கன்னி – என்றும்‌ அழியாதவன்
தமிழ்க்கு உருகும்‌பெருமைப்‌ பெருமான்‌ – ஆழ்வார்களின்‌ செஞ்சொல்லாகிய திவ்வியதமிழ்ப்‌ பாசுரங்ககாக்கேட்டு உள்ளம்‌ உருகியநுபவிக்கும்‌ பெருமையினையுடைய பெருமானும்‌,
என்‌ அருமை பிள்ளைப்‌ பெருமான்‌ -என்னுடையஅருமந்தன்ன குழந்தையாகிய பெருமானும்‌ (ஆகிய நீ) வருக .
பேர்‌ ஆயிரம்‌ பெற்று உயர்ந்த – சகஸ்ரநாமங்களைப்‌ பெற்று மேலோங்கிய, திருப்பேரை பெருமான்‌ –
தென்திரப்பேரையிலெழுந்தருளியிருக்கும்‌ மகரநெடுங்குழைக்காதரே | வருக

‘தருமப்‌ பெருமான்‌” என்றவிடத்து – கிருஷ்ணன்‌ தர்மம்‌ ஸநாதநம்‌, “சாக்ஷாத்‌ புண்ணியத்துக்குப்‌ பாலும்‌ சோறும்‌ இட்டன்றோ வளர்க்கிறோம்‌ ‘*(ஆருயிரப்படி – திருப்‌ பாவை” செ: 28) என்ற வாக்கியங்களை நோக்குக.

*கருமப்‌ பெருமான்‌” என்றது .. ‘*கர்மண்யேவ அதிகாரஸ்தே மாபலேஷு காதாசந”” என்றபடி (கீதை : சாங்கிய யோகம்‌ 47) :

முத்திவழிகாட்டும்‌ பெருமான்‌ என்றது “ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச: என்றபடி

————-

அம்புலிப்‌ பருவம்‌–(சாம தான பேத தண்ட உபாயங்களால் சந்திரனை விளையாட அழைக்கின்றார் )

மதியுடைத்‌ தாயமண்‌ டலம்பெற்று வானமுழு
மதிக்கடவு ளெனவருதலால்‌
வடியிட்ட தெள்ளமுத மயமாகி யானந்த
மகரால யத்தெழுதலால்‌
, நதியோடர வறுகெருக்‌ கணியுஞ்‌ சடைக்காட்டு
நம்பனுக்‌ கொருகண்ண தாய்‌
நாடொறுமுயிர்ப்பயிர்‌ தழைப்பவருள்பொழிவதால்‌
நற்றுணை யுனக்கிவன்்‌ காண்‌
முதிரவிளை யுங்கொழும்‌ பவளக்‌ குலைசாலி
மூடுதொறும்‌ வாய்மடைதொறும்‌
மூரிப்‌ பகட்டுவரி வாளைவெடி தரவியலை
மோதும்‌ புனற்கேணியும்‌
அதிருமணி மதகும்வளை யுகள்வழுதி நாடனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–65-(சிலேடையணி )

மதியுடைத்தாய மண்டலம்‌ பெற்று – சந்திர மண்டலம்‌ என்னும்‌ பெயர்‌ வழங்கப்‌ பெற்று,
வானம்‌ முழுவதும்‌ – ஆகாச முற்றிலும்‌.
மதிக்கடவுள்‌ என வருதலால்‌ – சந்திரனாகியகடவுள்‌என்று சொல்லும்படி நீ வருதலால்‌, ்‌

[இக்‌ குழைக்காதன்‌ ] மதியுடைத்தாய மண்டலம்‌பெற்று – ஞானம்‌ முதிர்ந்த நித்யஸூரிகள்‌ உடைத்தாய வைகுண்டலோகத்தைப்‌பெற்று,
வானம்‌ – தேவர்‌ அனைவரும்‌,
முழுமதிக்கடவுள்‌  என வருதலால்‌ – பூர்ண ஞான முடைய தெய்வமென்று சொல்லும்படிவருதலால்‌,

வடியிட்ட தெள்ளமுத மயமாகி – வடிக்கட்டித்‌ தெளிந்த அமிருத மயமாகி,
ஆனந்த மகராலயத்து எழுதலால்‌ .-மகிழ்ச்சியாகிய கடலில்‌ தோய்ந்து தோன்றுவதால்‌,

[ இக்‌ குழையன்‌ ] வடியிட்ட தெள்ளமுத மயமாகி – சாரமாக வெடுத்த தெள்ளிய அமிருதமயமாகி,
ஆனந்த மகராலயத்து எழுதலால்‌ -பேரானந்தக் கடலாகிய வைகுண்டத்தில்‌ [நித்யவாசஞ்செய்யத்‌] தோன்றுவதால்‌,

நதியோடு – கங்கையோடு,
அரவு அறுகு எருக்குஅணியும்‌ – பாம்பு அறுகம்புல்‌ வெள்ளெருக்கம்பூ இவற்றைஅணியாகச்‌ சூடும்‌,
சடைக்காட்டு நம்பனுக்கு – சடாபாரத்‌தொகுதியையுடைய சிவபிரானுக்கு,
ஒரு கண்ணதாய்‌ – (மூன்றுகண்களில்‌) ஒரு கண்ணாய்‌(இடக்கண்ணாய்‌) இருத்தலால்‌,

[இக்‌குழையன்‌ ] நதியோடு……… நம்பனுக்கு — , ஒரு கண்ணதாய்‌ – ஒப்‌பற்ற கண்போன்றவனாய்‌ இருத்தலால்‌,

நாள்தோறும்‌ உயிர்ப்பயிர்‌ தழைப்ப அருள்‌ பொழிவதால்‌ -தினந்தோறும்‌ உயிருடைய பயிர்கள்‌ செழிக்கும்படி
(நிலவாகிய)கருணையை (நீ) சொரிதலால்‌,

[இக்குழையன்‌ ] நாள்தோறும்‌………பொழிவதால்‌ –தினந்தோறும ஆன்மாக்களாகிய பயிர்கள்‌ ஈடேறுதற்குக்‌ கருணையாகிய மழையைச்‌ சொரிதலால்‌,

உனக்கு -[ மேற்‌ கூறிய பண்புகளையுடைய] உனக்கு,
இவன்‌ — (உன்னிடமுள்ள அதே பண்புகளையுடைய) இந்த மகர குழைக்காதன்‌,
நல்‌துணை . உற்ற சினேகிதனாவன்‌ :;
(ஆதலால்‌, அவனோடு அம்புலீ விளையாடவா என மேல்‌ இயைத்துப் பொருள் கொள்ள வேணும்‌) ,
முதிர விளையும்‌ – நன்கு முதிர்ந்து விளைந்திருக்கின்ற,
கொழும்‌ – செழித்த,
பவளக்குலை சாலி .. செந்நிறக்‌ கதிர்களைக்‌ கொண்ட நெற் பயிர்களின்‌,
மூடுதொறும்‌ . வேரினிடத்திலும்‌ (அடிப்பாகத்‌திலும்‌),
வாய்‌ – கால்வாய்களின்‌,
மடைதொறும்‌ – நீரணையினிடத்‌திலும்‌,
மூரி பகடு வரி வாளை – வலிமை பொருந்திய பருத்த உடற்‌கோடுகளை யுடைய வாளைமீன்‌,
வெடிதர – தாவிப் பாய, (அதனால்‌அஞ்சி)
வளை – சங்குப் பூச்சிகள்‌,
வியலை மோதும்‌ – அகன்ற இடத்தைத் தாக்குகின்ற,
புனல்‌ . சிற்றலைகளைக்‌ கொண்ட நீர்‌ நிரம்பிய,
கேணியும்‌ – கிணறுகளிலும்‌,
அதிரும்‌ அணி மதகும்‌ – ஒலிக்கின்ற அழகிய மதகினிடங்களிலும்‌,
உகள்‌ – நழுவி விழுகின்ற,
வழுதி நாடனுடன்‌ – பாண்டிய நாட்டுத்தலைவனாகிய மகரக்குழைக்‌ காதனுடன்‌,
அம்புலீ – சந்திரனே !
ஆட வா – விளையாட வருவாய்‌ :
ஆழிநீர்வண்ணன்‌ எனும்‌ .. கடலினீர்‌ வண்ணன்‌ என்னும்படியுள்ள,
மாதவனுடன்‌ . இலக்குமிகணவனாகிய மகரநெடுங்குழைக்காதனுடன்‌,
அம்புலீ . சந்திரனே
ஆடவா – விளையாட வருவாய்‌ ; வாழி – முன்னிலை யசை

மாதவனுடன்‌” என்று பாடபிருப்பின்‌, “சக்கரப்படையை யுடைய மாதவன்‌” எனப்‌ பொருள்‌ பட்டுச்‌ சிறக்கும்‌.
அம்புலி . அழகு புல்லப்‌ பெற்றிருப்பது என்ற காரணம்‌ பற்றிச்‌ சந்திரனுக்கு வந்த பெயர்‌,

———-

இருவினைச்‌ செனனவலைக்‌ கட்டறுத்‌ தழியாத
இன்பவீ டெய்தும்‌ பொருட்‌
டிணைமலர்ச்‌ சேவடி யடைந்தவர்க்‌ குதவிடுவன்‌
இவன்‌ வருணஞாதரிக்குந்‌
திருசந்திச்‌ சமுகதீர்த்‌ தத்துறைத்‌ தீம்புனல்‌
திவலையொரு சிறிதுபடிலோ
செகமண்ட லத்துன்‌ முகமண்டல முயற்கறை
சிதைத்துவண்‌ டடைகிடப்ப
முருகுவிரி தருநறுங்‌ குமுதவாய்‌ மடமங்கை
முகிண்முலை மணம்புணர்ந்து
மூன்னுங்‌ களங்கமற்‌ றப்பாலும்‌ வைகுண்ட
முத்திமண்‌ டபமெய்தலாம்‌
அருமறைக்‌ குரியவொரு பொருளா யிருப்பனவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--66-

இருவினை செனனவலை கட்டறுத்து – நல்வினை தீவி னையாகிய பிறப்புவலையிலகப்பட்டு உழலுதலைப்போக்கி,
அழியாத இன்பவீடு எய்தும்‌ பொருட்டு – (என்றைக்கும்‌) சிதையாத மோட்‌ சத்தை அடையும்பொருட்டு,
இணைமலர்ச்சேவடி – இரண்டு திருப்‌ பாதகமலங்களை,
அடைந்தவர்க்கு – (நம்பி) சரண்புகுந்தவர்க்கு,
உதவிடுவன்‌-(அவர்விரும்பியபடி ) மோட்சத்தைக்‌ கொடுத்திடுவான்‌:
வருணன்‌ ஆதரிக்கும்‌ . வருணபகவான்‌ விரும்பி நீராடும்‌,
திரு சந்திச்‌சமுகதீர்த்தத்துறை .[சகலதீர்த்தங்களும்‌ கூடும்‌ புனற்றுறையாகிய முச்சந்திச்‌ சமூகதீர்த்தம்‌ என்னும்‌துறையிலுள்ள,
தீம்புனல்‌ – தெளிவான நீரின்‌,
திவலை ஒருசிறிது படில்‌ – துளி சிறிதுமேனிமேல்பட்டாலும்‌,
(நீ) செகமண்டலத்து – இந்தநிலவுலகத்தில்‌ தெரியும்படியுள்ள
உன்‌ முகமண்டல முயற்கறை . உனது முகப்பரப்பிலுள்ள முயல்‌ போன்ற களங்கம்‌,
சிதைத்து – இல்லாது ஒழியச்செய்து, (மேலும்‌)
வண்டு அடை கிடப்ப .. வண்டுகள்‌ நெருங்கித் தங்கி யிருக்கும்படி,
முருகு விரிதரு . தேன்பெருகுகின்ற,
நறும்‌ குமுதவாய்‌ மடமங்கை – வாசனையுள்ள வாயையுடைய ஆம்பலாகிய மடப்பம்‌ பொருந்திய பெண்ணின்‌,
முகிழ்‌ முலைமணம்‌ புணர்ந்து – அரும்புகின்ற (பொகுட்டாகிய) கொங்கையினைச்சேர்ந்து திருமணம்‌ புரிந்து,
(அதனால்‌) முன்னும்‌ களங்கம்‌ அற்று – முன்னினும்‌ களங்கம்‌அற நீங்கப்பெற்று,
அப்பாலும்‌ . அதற்குமேலும்‌,
வைகுண்ட முத்திமண்டபம்‌ எய்தலாம்‌ – பரமபதத்திலுள்ள திருமாமணி மண்டபத்தையடையலாம்‌ :
அருமறைக்கு உரிய – ஓதுதற்கு அரிய வேதங்களுக்குப்‌ பொருந்திய,
ஒருபொருளாய்‌ – ஒப்பற்ற செல்வமாய்‌, அவன்‌ இருப்பன்‌ .. அந்தக்குழைக்காதன்‌ இருப்பான்‌
[அப்படிப்பட்டவணோடு ] அம்புலீ -, ஆட வா – விளையாட வருவாய்‌ :
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ -, ஆட வா –
விளையாட வருவாய்‌ ; வாழி – அசை,

————-

வெவ்வரா விடமொழுகு கறையனற்‌ பகுவாய்‌
விழுங்கிமீ ளவுமுமிழ்தரும்‌
மிச்சிலென்‌ றுலகிலுரை செய்வரத னாலுனுடல்‌
வெளுத்தற மெலித்துகுப்புற்‌
றெவ்வுலக முந்திரிந்‌ தாவதென்‌ பெரியோரை
எளியோர்‌ துணைக்கோடனன்‌
றிருகனற்‌ கட்செவி பகையுடித்‌ தற்குவணன்‌
; இவனிட்ட வேவல்கடவான்‌
செவ்வுபட வெட்டிரட்‌ டித்தகலை யுடையனீ
சிந்திப்ப தற்கரியவாந்‌
திகழருங்‌ கலைகளறு பத்துநா லுடையவொரு
செம்மலிவன்‌ வைகுண்டமாம்‌
அவ்வுலக முந்தாகத்‌ தருவ னஃதறிந்‌
கும்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புல்‌ீ யாடவாவே.–67-

வெவ்‌ அரா – கொடிய இராகுகேதுக்கள்‌ என்ற பாம்புகளின்‌,
விடம்‌ ஒழுகு கறை அனல்‌ – விஷம்பெருகிக்கறையாகி வெதுப்‌புகின்ற,
பகுவாய்‌ – பிளவுண்ட வாயினால்‌,
விழுங்கி – [கிரகணகாலங்‌களில்‌] விழுங்கி,
மீளவும்‌ உமிழ்தரும்‌ மிச்சில்‌ – மறுபடியும்‌ வெளி கக்‌குகின்ற எச்சில்‌,என்று -,
உலகில்‌ உரை செய்வர்‌ – உலக மக்கள்‌ பழிச்சொல்‌ கூறுவர்‌ ;
அதனால்‌ – அதனால்‌ நாணி,
உன்‌ உடல்‌ வெளுத்து – உன்னுடைய மேனி வெளிறி,
அற மெலிந்து – மிகவும்‌ மெலிவுற்று,
குப்புற்று . தலைகவிழ்ந்து,
எ உலகமும்‌ – எல்லாவுலகங்‌களிலும்‌,
திரிந்து – சஞ்சரித்து,
ஆவது – ஆகும் பயன்‌,
என்‌ – என்ன(எதுவும்‌ இல்லை): [ஆகவே நான்‌ சொல்வதைக் கேட்பாயாக]
பெரியோரை – தம்மினும்‌ மிக்க சான்றோரை,
எளியோர்‌ – அவரினும்‌ தாழ்ந்தோர்‌,
துணைக்கோடல்‌ நன்று – தமக்குச் சகாயமாகக்‌ கொள்ளுதல்‌ நல்லது :
கனல்‌ இரு கட்செவி – விஷத்தினால்‌ வெதுப்புகின்ற இரண்டு பாம்புகளின்‌ (இராகு கேதுக்களின்‌),
பகை முடி.த்தற்கு -விரோதத்தை நீக்குவதற்கு,
உவணன்‌ -கருடன்‌ (இருக்கிறான்‌) :
இவனிட்ட ஏவல்‌ கடவான்‌ – அவனுக்குத்தலைவனாகிய இவன்‌ சொன்ன கட்டளையை அவன்‌ மீறமாட்டான்‌ :
நீ – நீயோ,
செவ்வு பட – தேர்‌மையுண்டாக,
எட்டு இரட்டித்த கலை உடையன்‌ -பதினாறு கலைகளை யுடையவன்‌ :
இவன்‌-இவனோ (இக்குழைக்காதனோ),
சிந்திப்பதற்குஅரியவாம்‌ – நினைத்தற்கும்‌ அரியவாகிய,
திகழ்‌ அருங்‌ கலைகள்‌ – விளங்குகின்ற அரிய கலைகள்‌,
அறுபத்துநாலுடைய – அறுபத்து நான்கினையுடைய,
ஒரு செம்மல்‌ – ஒரு பெருமையன்‌ ;
வைகுண்டமாம்‌ ௮ உலகம்‌ . வைகுந்தமாகிய பரமபத லோகத்தையும்‌,
முந்தாகதருவன்‌ – (தான்‌) முற்பட்டுக்கொடுப்பன்‌ :
அஃது அறிந்து – அந்தப்‌ பண்பினையறிந்து,
அம்புலீ -, ஆட வா – ;
ஆழிநீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ ,, ஆட வா .. ,- வாழி – அசை.

சந்திரன்‌ பதினாறு கலைகளையுடையவன்‌, அந்தப்‌ பதினாறு கலைகளில்‌ கிருஷ்ணபட்சத்தில்‌ முதற்கலையை அக்கினியும்‌,
இரண்டாங்கலையைச்‌ சூரியனும்‌, மூன்றாங்கலையை விச்வேதேவரும்‌, நான்காங்கலையை வருணபகவானும்‌, ஐந்தாங்கலையை வஷட்காரக்‌
கடவுளும்‌, ஆறாங்கலையை இந்திரனும்‌, ஏழாங்கலையைத்‌ தேவரிஷி களும்‌, எட்டாங்கலையை ஒற்றைத்தாளனான அஜனென்‌ பவனும்‌,
ஒன்‌ பதாங்கலையை எமனும்‌, பத்தாங்கலையை வாயுவும்‌, பதினோராங்‌ கலையை உமையும்‌, பன்னிரண்டாங்கலையைப்‌ பித்ருதேதேவதைகளும்‌,
பதின்மூன்றாங்கலையைக்‌ குபேரனும்‌, பதினான்‌ காங்கலையைப்‌ பசுபதி யும்‌, பதினைந்தாம்கலையைப்‌ பிரஜாபதியும்‌ உண்ண

ஒற்றைக்‌ கலையஞன சந்திரன்‌ அமாவாசையினன்‌று சூரியன்‌ ஜலம்‌ ஓஷதிகள்‌ பசுக்கள்‌ என்ற இவற்றில்‌ வசித்து, ஓஷதியில்வசிக்கும்‌ தன்னை
உண்ட பசுக்களின்‌ பாலிலிருந்து தோன்றிய நெய்யினால்‌ யஜ்ஞங்‌ களில்‌ அக்கினியில்‌ ஓமஞ்செய்யப்படுவதனால்‌ ஆப்யாயனமடைந்து,
(திருப்தியுற்று) புதிது புதிதாகக்கலைவளர்ந்துவரச்‌ சுக்கில பட்சத்‌ தில்‌ வளர்ந்து வருகின்றனன்‌ என்பதறியவேண்டுவது.

——–

பைத்தலை நெடுஞ்சுடிகை விடமொழுகு கட்செவிப்‌
படவரவு தொடரினு நீ
படரொளி மழுங்கிவான்‌ முகடொளிக்‌ குவைபெரும்‌
பாம்புதீண்‌ டிக்கிடந்த
நித்திரை மயக்கத்து மொளிமழுங்‌ கானிவன்‌
நெடியவா னிடைநுழைந்து
நிலையிலா தோடித்‌ திரிந்துழல்வை நீயிவன்‌
நீடுழி யடிபெயர்ந்து
மூத்தவா ணகைவிமலை யடிவருட வானவர்கள்‌
முனிவரஞ்‌ சலிசெய்யநீள்‌
முத்திதரும்‌ வைகுந்தம்‌ வீற்றிருப்ப வனந்த
முறைமுறை தெதரிந்துபார்க்கில்‌
அத்தகைமை தோறுமுன்‌ ஸிலுமுயர்ந்‌ தவனிவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–68-

பைத்தலை . படமுடைய தலையையும்‌,
நெடும்‌ சுடிகை -பெரிய உச்சியையும்‌,
விடம்‌ ஒழுகும்‌ – விஷத்தைக்‌ கக்கும்‌,
கட்‌செவிப்‌ பட அரவு – (தமது) கண்ணையே காதாகக்‌ கொண்ட பெரிய (இராகுகேது என்னும்‌) பாம்புகள்‌,
தொடரினும்‌ – உன்னைப்‌ பீடிக்‌கத்தொடர்ந்து வந்தாலே,
நீ- , (அஞ்சி) படரொளி மழுங்கி _மிக்க வொளி மங்கிப்போய்‌,
வான்‌ முகடு ஒளிக்குவை – ஆகாயவுச்சியிலே (மறைந்து) ஒளிந்து கொள்வாய்‌ ;
இவன்‌ – இந்தக்‌குழைக்காதனோ,
பெரும்‌ பாம்பு தீண்டி – ஆதிசேடனாகிய பெரிய பாம்பு பற்றி,
கிடந்த நித்திரைமயக்கத்தும்‌ – படுத்துக்கிடந்த மயக்‌கத்தூக்கத்திலும்‌,
ஒளி மழுங்கான்‌ – (தனது) பொலிவாகிய ஒளி மங்கிப்போகமாட்டான்‌ :
[மேலும்‌] நீ–, நெடிய வானிடை நுழைந்து – பெரிய ஆகாயத்திடத்து புகுந்து,
நிலையிலாது ஓடித்‌ திரிந்து – ஒரிடத்திலும்‌ நிலைத்து நிற்காமல்‌ ஓடிக்‌ கொண்டே
(எங்கும்‌) அலைந்து, உழல்வை – வருந்துவாய்‌ :
இவன்‌ – இக்‌ குழைக்காதன்‌,
நீடுழி – நீண்ட விண்ணில்‌,
அடி பெயர்ந்து – (தன்‌) திருவடியால்‌ (அளக்க) அதனைத்தூக்கிவைத்து,
(அதனாலேற்பட்ட தோவுதீர) முத்தம்‌ வாள்‌ நகை விமலை . முத்துப்போல்‌ ஒளி விடு கின்ற பற்களையுடைய இலக்குமிதேவி,
அடி வருட – (திருப்பாதங்‌களைத்‌) தடவிக்‌ [கைகளால்‌] பிடித்துவிட,
வானவர்கள்‌ முனிவர்‌ அஞ்சலி செய்ய – தேவர்களும்‌ இருடிகளும்‌ கைகூப்பி வணங்க,
முத்திதரும்‌ நீள்‌ வைகுந்தம்‌ வீற்றிருப்பவன்‌ – மோட்சத்தைக்‌ கொடுக்கும்‌ சாசுவதமான வைகுண்ட லோகத்தில்‌ தனிச்சிறப்‌ போடு எழுந்தருளியிருப்பவன்‌ :
அந்த முறை – அந்த ரீதியை (வகையை),
முறை தெரிந்து பார்க்கில்‌ – முறைமைப்படி ஆராய்ந்து பார்த்த்தால்‌,
அ தகைமை தோறும்‌ – அந்தப்‌ பண்புகளிலெல்லாம்‌, உன்னிலும்‌ உயர்ந்தவன்‌ இவன்‌ .. உன்னைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ இந்தக்‌ குழைக்காதன்‌ :
(ஆகவே) அம்புலீ !-, ஆட வா -(இப்படிப்பட்ட மேலானவணனோடு) விளையாட வருவாயாக :
ஆழி நீர்‌வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ1-, ஆட வா-,-வாழி. அசை,

““பள்ளிகொள்ளுமிடத்தடி கொட்டிட”” என்றாள்‌ ஆண்டாள்‌ ; *வடிவிணையில்லா மலர்‌ மகள் மற்றை நிலமகள்‌ பிடிக்கும்‌ மெல்லடியைக்‌ கெரடுவினையேனும்‌
பிடிக்க”? என்றார்‌ நம்மாழ்வார்‌ (திருவாய்‌ 9-2 -10)

——–

செங்குருதி யலைமண்டி யாறெடுத்‌ தோடச்‌
சிஸலக்கால்‌ வளைத்துவிசயன்‌
தேற்றரச னைக்கொன்று கூற்றருந்‌ தும்படி
சினத்திடும்‌ போர்முகத்துப்‌
பொங்குகதி ராயிரந்‌ தங்குசெஞ்‌ சுடரவன்‌
பொழுதுகா ணாமலொளிர்செம்‌
பொன்னிறத்‌ திகிரியா லிவன்மறைத்‌ தனனன்று
போதாக்‌ குறைக்கொளிரும்வெண்
சங்குகொண் டுன்னயு மறைத்திடா மற்கலை
தளர்ந்துமெலி வெய்துறாமல்‌
தாதள வெருப்பொடித்‌ தெறியாமல்‌ முன்னில்‌
தவழ்ந்துவிகா யர்டவாவென்
றங்கைமலர்‌ விரல்குனித்‌ துனையழைத்‌ தனனிவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--69-

செங்குருதி – சிவந்தஇரத்தமானது,
அலைமண்டி -அலைகளாக நெருங்கி,
ஆறு எடுத்து ஓட – ஆறாகப்பெருகியோடும்படி,
விசயன்‌ – அருச்சுனன்‌,
சிலை கால்‌ வளைத்து – தன்‌ வில்‌லின்‌ தண்டினை நன்றாக வளைத்து,
தேற்று அரசனைக்‌ கொன்று -உடலை நன்குதேற்றி வளர்த்த சகஸ்ரபாஹு என்ற அரசனைக் கொன்று,
(மேலும்‌) கூற்று அருந்தும்படி சினந்திடும்‌ -யமனுண்ணும்படி (பகைவரைக்‌) கோபிக்கும்‌,
போர்‌ முகத்து -போர்க்களத்தில்‌,
பொங்கு கதிர்‌ஆயிரம்‌ தங்கு செஞ்‌ சுடரவன்‌-சொலிக்கின்ற ஆயிரம்‌ கிரணங்களைத்‌ தன்னிடத்துக்‌ கொண்ட செவ்விய சூரியனுடைய,
பொழுது காணாமல்‌ – பகற்பொழுது காண முடியாதபடி,(எங்கும்‌ இருள்‌ பரவும்படி)
ஒளிர்‌ செம்பொன்‌ நிறத்திகிரியால்‌ – (தன்‌ கையில்‌)பொலிகின்ற சிவந்த பொன்னின்‌ நிறத்தைக்‌ கொண்ட திருவாழியினால்‌,
இவன்‌ -இந்த எம்பெருமான்‌ (கண்ணன்‌),
அன்று – அந்தப்‌ பாரதயுத்தத்‌தில்‌ [பதினான்காம்‌ நாள்போரில்‌],
மறைத்தனன்‌ – (அந்தச்சூரியனை )மறைத்து விட்டான்‌ :
போதாக்குறைக்கு-(தனக்கு இன்னும்‌) திருப்தி பிறவாத குறைதீர, ஒளிரும்‌ வெண்சங்குகொண்டு – விளங்குகின்ற வெள்ளிய பாஞ்சசன்னியத்தைக்‌ கொண்டு,
(இப்போது) உன்னையும்‌ -, மறைத்திடாமல்‌ – மறையச்‌ செய்து விடாமல்‌,
கலை தளர்ந்து மெலிவு எய்துறாமல்‌ – உன்னுடைய ஒளிக்கலைகள்‌ மழுங்கி மெலிந்து போகாமல்‌,
தாது அளவு எரு- புழுதிகலந்த எருவை, பொடித்து – மேலும்‌ துகளாக்கி,
எறியாமல்‌ – உன்மீது வீசியெறியாமல்‌,
முன்‌னில்‌ – (எனக்கு) முன்பாக,
தவழ்ந்து – மெதுவாக நகர்ந்து,
விளை யாட வா என்று – (என்னோடு) விளையாடுதற்கு வருவாயாக என்று,
இவன்‌ -, அம்‌ கை மலர்‌ விரல்‌ குனித்து – அழகியகையில்‌ உள்ள பூப்‌போல்மெல்லிய விரலைவளைத்து,
உனை அழைத்தனன்‌ – உன்னை அழைக்கின்றுன்‌ :
(ஆகவே) அம்புலீ /-, ஆட வா- ; ஆழி நீர்‌ வண்ணனேனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ-, ஆடவா -;வாழி – அசை.

———

கூறருந்‌ துதியைநீ யுடையவ னிவனமரர்‌
கூறருந்‌ துதியையுடையான்‌
குறைபடு தடங்கலை களுடையனீ யிவனுமோ
குறையா த கலைகஞுடையான்‌
வீறுதரு முருவிஸி மதிக்குடைய னீயிவன்‌
விதரண மதிக்குடையவன்‌
விண்ணிடை கரந்தொளி யொளித்திடுவை
நீயிவன்‌
வேதநுட்‌ பொருளினொளியான்‌
ஊறுபட வோடித்‌ திரிந்திகாத்‌ திடுவைநீ
ஒருநாளு மிளையானிவன்‌
உவரிப்‌ புனற்பங்க மூடுதிப்‌ பாயிவனும்‌
உம்பரா மியினுதிப்போன்‌
ஆறலைபுரட்டு பொருனா நெடுந்துறைவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–70-

நீ–, கூறு அரும்‌ துதியை- சொல்லுதற்கரிய (இல்லாத) துதிகளை, உடையவன்‌ .- :
இவன்‌ – இக்குழைக்காதன்‌,
அமரர்‌ – தேவர்களும்‌,
கூறு அரும்‌. சொல்லுதற்கு அருமையான (மேன்மையான),
துதியை .- துதிகளை,
உடையான்‌ -,கொண்டவனா யிருக்கிறான்‌ :
நீ -, குறைபடு தட கலைகள்‌ உடையன்‌ – குறைந்து கொண்டே வருகின்ற நல்ல கலையொளிகளை யுடையவன்‌ :
இவனு மோ – இவனோ, குறையாத கலைகளுடையான்‌ _பரிபூரணமான கலைகளனைத்தையும்‌ உடையவனுரயிருக்கிறான்‌ :
நீ-, வீறு தரும்‌ – பெருமையையுடைய,
உருவிவி – மன்மதனுடைய,
மதி குடையன்‌ _ ( சந்திர] வட்டக்குடையரயிருக்கிறாய்‌ :
இவன்‌ – இவனோ,
விதரண மதிக்கு – சாமர்த்தியமுள்ள அறிவினுக்கு,
உடையவன்‌ – உரியவன்‌
நீ, விண்ணிடை கரந்து – ஆகாயத்திலே மறைந்து,
ஓளி ஓளித்‌ திடுவை – பிரகாசத்தை வெளிவிடாது செய்கின்றாய்‌ :
இவன்‌ – இவனோ,
வேத நுண்‌ பொருளின்‌ ஒளியான்‌ – வேதங்களின்‌ நுட்பமா கிய விடயங்களில்‌ பிரகாசிப்பவன்‌ : [ அவைகளுக்குப்‌ பிரகாசம்‌ அளிப்பவன்‌ ] :
நீ -, ஊறுபட – காயமுண்டாகும்படி,
ஓடித்திரிந்து – ஆகாயவிடமெங்கும்‌ ஓடிச்சஞ்சரித்து,
இளைத்திடுவை – (உடல்‌) தேய்ந்து மெலிந்து போகிறாய்‌ :
இவன்‌ – இக்குழையணோ,
ஒருநாளும்‌ இளையான்‌ – என்றைக்கும்‌ மெலிவடையான்‌
(நீ) உவரிப்புனல்‌பங்கம்‌ ஊடு – கடல்நீரின்‌ சேற்றிலிருந்து,
உதிப்பாய்‌ – தோன்றுகின்‌றாய் :
இவனும்‌ -, உம்பர்‌ ஆழியின்‌ – மேலிடத்திலுள்ள திருப்பாற்‌ கடலில்‌,
உதிப்போன்‌ – தோன்றுவான்‌ :
(மேலும்‌ இவன்‌) ஆறு அலை புரட்டும்‌ பொருனாநதி தெடும்‌ துறைவன்‌ . (பாயும்‌) வழியிலே அலை களைப்‌ புரட்டிக்கொண்டு வருகின்ற தாமிரபரணியாற்றின்‌ [கரையி லுள்ள ]பெரியநீர்த்துறைகளுக்குத்‌ தலைவன்‌ :
(எனவே) அம்புலீ /-, ஆட வா .) ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ அம்புலீ ! _ ஆட வா? — வாழி – அசை,

——–

சந்தப்‌ படாமுலைத்‌ தார்குழற்‌ கோமளத்‌
தையல்சா னகிபொருட்டுத்‌
தடமதி லிலங்கா புரம்பொடி படுத்தித்‌
தகர்த்துமுடி பத்துமண் மேற்‌
சிந்தச்‌ சரந்தொட்டச்‌ சிலைவீர ராகவன்‌
சிறுகுழந்‌ தைப்பிள்‌காயாத்‌
திருவிரற்‌ றலைசுட்டி யுனையழைத்‌ தால்வரச்‌
செய்யா திருக்கமுறையோ
முந்தப்‌ பெருந்தக்கன்‌ வேள்வியிற்‌ றேவர்கள்‌
முறிந்துதிசை கெட்டோடுநாள்‌
முழுமதிக்‌ கடவுணீ பரிபவப்‌ பட்டகதை
மொழியக்‌ கணக்குமுண்டோ
அந்தக்‌ கணக்கின்று வந்திருக்‌ கின்றதினி
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--71-

சந்தம்‌ – அழகு பொருந்திய,
படாம்‌ – சீலைபோர்த்த,முலை – கொங்கைகளையும்‌,
தார்‌ . பூமாலையையணிந்த,
சுழல்‌ – கூந்‌தலையுமுடைய,
கோமளம்‌ தையல்‌ – இளமையழகு பொருந்திய பெண்‌ணாகிய,
சானகி பொருட்டு-சீதாபிராட்டியின்‌ நிமித்தமாக, (அவளைச்‌சிறைமீட்டற்பொருட்டு),
தட மதில்‌ இலங்காபுரம்‌ பொடிபடுத்தி .-பெரியமதில்களைக் கொண்ட இலங்கைமாநகரைத்‌ துகளாக்கி யழித்து,
(அதன்‌ அரசனாகிய இராவணனது) முடிபத்தும்‌ தகர்த்து – பத்துத்‌ தலைகளையும்‌ சிதறவடித்து,
மண்‌ மேல்‌ சிந்த – தரையின்‌ மேல்‌ (புழுதிபட) விழும்படி,
சரம்‌ தொட்ட – அம்பு தொடுத்த,
௮ சிலை வீரராகவன்‌ – வில்லையேந்திய அந்தஇராமபிரான்‌,
(இப்போது மகரநெடுங்‌குழைக்காதனாய்‌) சிறு குழந்தைப்பிள்ளையா – சிறிய ஆண்குழந்தையாகி,
திரு விரல்தலை சுட்டி – அழகிய விரலின்‌ நுனியினால்‌ சுட்‌டிக்காட்டி,
உனை அழைத்தால்‌ – உன்னை (விளயாட)க்‌ கூப்பிட்‌டால்‌,
வரச்செய்யாதிருக்க முறையோ – (நீ) வாராதிருத்தல்‌ தகுதியாகுமா (ஆகாது);
முந்த – முன்னொரு சமயம்‌,
பெருந்‌ தக்கன்‌ வேள்‌வியில்‌ – பெரிய தக்ஷப்பிரஜாபதியின்‌ யாகத்தில்‌,
தேவர்கள்‌ முறிந்து திசைகெட்டு ஓடும்‌ நாள்‌ – தேவர்கள்‌ முறியடிக்கப்பட்டுத்‌ திசை தெரியாமல்‌ சிதறியோடிய காலத்து,
முழுமதிக்கடவுள்‌ நீ – பூர்ணசந்‌திரனாயிருந்த நீ,
பரிபவப்பட்ட கதை – அவமானமடைந்த நிகழ்ச்‌ சியை, (தேய்ந்து போனதை),
மொழிய . (நான்‌) சொல்லவேண்டிய,கணக்கும்‌ உண்டோ ? –
நியாயமும்‌ உளதோ? (அனைவர்க்கும்‌ தெரியுமே) :
அந்தக்‌ கணக்கு – அந்தநாள்‌ நியாயம்‌ [நீ பட்டபாடு],
இன்று வந்திருக்கின்றது – இந்த நாளிலும்‌ [உனக்கு] ஏற்படவிருக்‌ கின்றது :
[ஆகவே] இனி – இனிமேல்‌ தாமதிக்காமல்‌, அம்புலீ -,ஆட வா -: ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ –, அம்புலி !ஆடவா–வாழி -அசை

——

தவநெறிக்‌ கவுதமன்‌ பன்னியக லிகைபுரந்‌
தரனொடு மணந்தவதனால்‌
தவமூனி யறைந்தசா பத்திலவள்‌ கல்லுருத்‌
தாங்கிய தொழித்ததெங்கோன்‌
புவனமொரு மூன்றுமீ ரடியா லளக்கின்ற
பொற்கழற்‌ றுகளுனக்கும்‌
புனிதபூ ரணசெவ்வி முகமண்ட லக்கறைப்‌
புரைதீர வரமளிக்குஞ்‌
சிவனுமய னும்வெள்களா யயிரா பதத்தனுஞ்‌
செஞ்சுடர்க்‌ கடவுளோனுந்
தேவர்முப்‌ பத்துமுக்‌ கோடியு மறுமுகச்‌
செம்மலுங்‌ கைம்மலைக்கோட்‌
டவனுமூறை முறைபரவு நிகரில்முகில்‌
வண்ணனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.,--72-

தவ நெறி கவுதமன்‌ -தவவொழுக்கத்தை மேற்‌ கொண்டிருந்த கெளதம முனிவனின்‌,
பன்னி அகலிகை – பத்தினி யாகிய அகலிகை,
புரந்தரணொடு – தேவேந்திரனோடு,
மணந்த அதனால்‌ – புணர்ந்த காரணத்தினால்‌,
தவமுனி – அந்தக்கெள தமன்‌,
அறைந்த – சொன்ன.
சாபத்தில்‌ – சாபத்தினால்‌,
அவள்‌ – அந்தஅகலிகை,
கல்லுரு தாங்கியது ஒழித்தது – கல்லாய்‌ உருவந்தாங்கிக்‌ கிடந்ததை நீக்கியது,
எம்கோன்‌ … எமது தலைவனாகிய இவ்வெம்‌பெருமான்‌ [இராமபிரான்‌ :]
[அதுபோல] புவனம்‌ ஒரு மூன்றும்‌ – -மூவுலகங்களையும்‌.
ஈரடியால்‌ அளக்கின்ற பொன்கழல்‌ துகள்‌ – இரண்டடிகளைக்‌ கொண்டு அளந்த திவ்யபாதங்களின்‌ புழுதி,
உனக்கும்‌ – (மாசுடைய) உனக்கும்‌,
புனித பூரண செவ்வி முக மண்டலம்‌ கறை – தூய முழுமையான அழகுடைய முகவட்டத்தி லுள்ள கறையின்‌,
புரை தீர – களங்கம்‌ நன்கு நீங்கும்படி,
வரம்‌ அளிக்கும்‌ – வரங்கொடுக்கும்‌ :
[ஆகவே ] சிவனும்‌ – சிவபெருமானும்‌,
அயனும்‌ – பிரமதேவனும்‌,
வெள்ளை அயிராபதத்தனும்‌ – வெள்ளை யானையாகிய ஐராவதத்தையேறிச்‌ செலுத்துபவனாய இந்திரனும்‌,
செஞ்சுடர்க்‌ கடவுளோனும்‌ – சூரியனும்‌, -முப்பத்துமுக்கோடி தேவரும்‌–,
அறுமுகச்‌ செம்மலும்‌ – முருகக்கடவுளும்‌,
கைம்மலைக்‌ கோட்டவனும்‌ – (முகத்தில்‌, யானைக்கொம்பினையுடைய விநாயகனும்‌,
முறைமுறை பரவும்‌ – தங்கள்‌ முறைதவராதபடி துதிக்கும்‌,
நிகரில்‌ (முகில்வண்ணனுடன்‌ – மகரக்குழைக்கா தனுடன்‌, அம்புலீ -ஆட வா . ; ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ -,ஆடவா -; வாழி – அசை.

:மூவுலகும்‌ ஈரடியால்‌ முறைநிரம்பாவகை முடிய, தாவிய சேவடி” என்றார்‌ இளங்கோவடிகளும்‌,

———-

விண்டட.வி முகமா யிரங்களு மொளித்துநெடு
வெளியின்வந்‌ தொருமுகமதாய்‌
வெண்டிரைக்‌ கங்கைப்‌ பெரும்புனல்‌ பரந்தென
விரிந்தவவ்‌ வெள்ளத்தின்‌ மேல்‌
தண்டரள மணியுமிழ்ந்‌ தாகாய நள்ளிடை
தயங்கிய சலஞ்சலமென த்‌
தாரகைக்‌ குலமொடு தவழ்ந்து மேன்மேல்நீ
தலைப்பட்ட வாரறானும்‌
புண்டரிக மலா்முகை முறுக்குடைந்‌ தலருமொரு
பூவெனப்‌ பொலிவுபெற்றாய்‌
புகலரிய மதிவள முரைக்கில்முழு மதியெனப்‌
புகல்கின்ற துண்மைகண்டாய்‌
அண்டபகி ரண்டமு நிரம்பிய விவனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–73-

விண்‌ தடவி- ஆகாயத்தை முற்றும்‌ அளாவி,

ஆயிரம்‌ முகங்களும்‌ ஒளித்து – (இழியும்‌) பல வாயில்களையும்‌ மறையச்செய்து,
நெடு வெளியில்‌ வந்து . பெரிய வெட்டவெளி யிடத்துவந்து,
ஒருமுகமதாய்‌ – ஏகமுகமாய்‌ (ஒருவாயிலைக்‌ கொண்டு)
வெண்திரைக்கங்கை பெரும்‌ புனல்‌ – வெள்ளிய அலை களைக்கொண்ட ஆகாச கங்கையாகிய பேராறு,
பரந்தென விரிந்தபரந்து பாய்வதென்னும்படி பரவிய,
வெள்ளத்தின்‌ மேல்‌ – நீர்ப்‌பெருக்கில்‌,
தண்‌ தரளமணி உமிழ்ந்து – குளிர்ந்த முத்துக்களை யீன்று,
ஆகாய நள்‌ இடை தயங்கிய – ஆகாசமாகிய நடுவிடத்தே விளங்கிய,
சலஞ்சலம்‌ என – வலம்புரிச்‌ சங்கினைப்‌ போல, .
தாரகைக்‌ குலமோடு தவழ்ந்து – நட்சத்திரக்‌ கூட்டங்‌ களோடு மெல்ல நகர்ந்து,
நீ. மேன்மேல்‌ தலைப்பட்டவாறானும்‌ – மிக்க(மேலிடத்துத்தலைதூக்கிச்‌ சிறப்புற்ற வகையாலும்‌,
புண்டரிக மலர்‌ முகை – வெண்டாமரையாகிய மலரின்மொட்டு, முறுக்கு
உடைந்து அலரும்‌ – கட்டவிழ்ந்து நன்கு மலர்கின்ற,
ஒரு பூஎன – ஒப்பற்றதோர்‌ பூ என்று சொல்லும்படி,
பொலிவு பெற்றாய்‌- விளக்கம்‌ பெற்றுள்ளாய்‌ ;(அவ்வகையாலும்‌).
புகல்‌ அரிய மதிவளம்‌ உரைக்கில்‌ – பேசுதற்கரிய அறிவுவளத்‌ தைப்பற்றிச்‌ சொல்லப்போனால்‌,
(உன்னை) முழுமதி எனப்புகல்‌கின்றது உண்மை .-பூர்ணஅறிவுடையவன்‌ என்று சொல்லுவது மெய்ம்மையாகும்‌ :
(அவ்வகையாலும்‌) [நீ எங்கும்‌ எல்லாம்‌ நிரம்‌ பியவனாக இருக்கின்றாய்‌ :
ஆகையால்‌ உன்னைப்போலே] அண்ட பகிர்‌ அண்டமும்‌ நிரம்பிய இவனுடன்‌ . இந்தப்பூவுலல உருண்‌ டையிலும்‌ பிற வெளிவுருண்டைகளிலும்‌ (பரிபூரணமாக) நிரம்பி யுள்ள
இந்த மகரநெடுங்‌ குழைக்காதனுடன்‌, அம்புலீ /- ஆட
வா ? ஆழி நீர்‌ வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ – , அம்புலீ-,.ஆடவா – வாழி – அசை,

மூழுமதி -பூர்ணசந்திரன்‌, பூர்ணஅறிவு : இந்த இருபொருளையும்‌ காட்டுவதாக அமைந்துள்ள நயம்‌ காண்க,-இச்செய்யுள்‌ சாமம்‌ என்ற உபாயத்தால்‌ வந்தது.

——-

என்னென்று நிகராவை யிருளன்றி நீயன்பர்‌
இதயவிரு ணீக்கவறியாய்‌
இருவிசம்‌ பிற்பொலிகு வாயிவன்‌ புவனங்கள்‌
எங்கணும்‌ பொலிவதோராய்‌
பொன்னந்‌ தகட்டிதழ்க்‌ குமுதமல்‌ லாலுளப்‌
புதுமலர்‌ திறக்கவறியாய்‌
போலியல்‌ லாவுனைப்‌ போலியென்‌ (move BSI
புதுநிலா மணிமுன்‌ நில்வாய்‌
மன்னுஞ்‌ சரோருகப்‌ படுகரும்‌ புளினவெண்
மண ற்குன்ற முஞ்சோலையும்‌
மடவனப்‌ பேடையொடு கூடிப்‌ புணர்ந்தகம்‌
மகிழ்ந்துபிரி யாதுசெஞ்சூட்‌
டன்னங்கள்‌ விகாயாடு தென்பேரை மாயனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாடவ,--74-(இச்‌ செய்யுள்‌ பேதோபாயத்தினால்‌ வந்தது, )

என்‌ – இது என்ன ?
என்று – என்றைக்கு,
நிகராவை -(இம்மாயனுக்கு) ஒப்பாவது (நீ) :
நீ – , இருளன்றி – (இந்தப்‌) புறவிருட்டையல்லது,
அன்பர்‌ இதய இருள்‌ – பக்தர்கசூுடைய [அஞ்‌ஞான ] மனவிருளை,
நீக்க அறியாய்‌ .. போக்குதற்குத்‌ தெரியாதவனா யிருக்கிறாய்‌
இரு விசும்பில்‌ – பெரிய ஆகாயத்தில்‌, (மட்டும்‌),
பொலிகுவாய்‌ – விளங்கிடுவாய்‌ ;
இவன்‌ – இம்‌ மாயன்‌,
புவனங்கள்‌ எங்கணும்‌ – எல்லாவுலகங்களிலும்‌,
பொலிவது – விளங்குவது,
ஓராய்‌ – அறியமாட்டாய்‌ :
பொன்‌ ௮ம்‌ தகடு இதழ்‌ குமுதம்‌ அல்‌லால்‌ – பொன்போல்‌ அழகிய புறவிதழ்ககாக்‌ கொண்ட ஆம்பல்‌ மலரன்றி,
உளம்‌ புதுமலர்‌ – மனமாகிய புதியமலரை,
திறக்க அறியாய்‌ -விகசிக்கச்‌ செய்யத்‌ தெரியா தவனாயிருக்கிறாய்‌ :
(இப்படி)போலி அல்லா உனை .. (ஒருபடியும்‌) நிகரல்லாத உன்னை,
போலி என்றால்‌ – நிகராவாய்‌ என்று (நாங்கள்‌ உன்னைத்‌ தூக்கிவைத்துச்‌) சொல்வோமானால்‌,
(அதுகேட்டு உகந்து) புது நிலா மணிமுன்றில்‌ வாய்‌ வந்து –புதிய அழகிய நிலாமுற்றத்தினிடத்து வந்து (இவனுடன்விளாயாட வரவேண்டாவோ ?)
மன்னும்‌ – நிலைபெற்ற,
சரோருகப்‌ படுகரும்‌ – தாமரைபூத்த நீர்‌ நிலைகளிலும்‌,
புளினம்‌ வெண்மணல்‌ குன்றமும்‌ – திட்டுக்களாக வுள்ள வெள்ளிய மணற்‌ குன்றுகளிலும்‌,
சோலையும்‌ – பொழில்களிலும்‌,
செஞ்சூட்டு அன்னங்கள்‌ – சிவந்த உச்சிக்கொண்டையை யுடைய ஆணன்னங்கள்‌,
மட அனப்பேடையொடு கூடி புணர்ந்து -மென்மையான பெட்டையன்னங்களோடு கலந்து சேர்ந்து,
அகம்‌மகிழ்ந்து பிரியாது .. மனங்களிப்புற்றுப்‌ பிரியாதபடி, விளையாடும்‌ – ,“மென்‌னடையன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர்‌” என்றதும்‌ நினைக,
தென்பேரை மாயனுடன்‌ – தென்பேரையில்‌ [நித்தியவாசஞ்‌ செய்யும்‌ ]மகரநெடுங்குழைக்கா தனாகிய மாயனோடு, அம்புலீ ;-, ஆடவா –
ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ – !, ஆட வா – வாழி. அசை,

————-

சிற்றில்‌ பருவம்‌

களிக்குஞ்‌ சுரும்பர்‌ துதைந்துழுது
கணைக்கா லசைத்துச்‌ சில்லோசை
கனிந்தூற்‌ றிருப்ப மிழற்றுதொறுங்‌
கக்குங்‌ கலுழி நறவுபரி |
மளிக்கும்‌ பசுந்தார்ச்‌ செழுந்துளவு
மணக்குங்‌ குழகா 1! கார்மேக
வண்ணா 1? கருணை மடைதிறந்து
வழியும்‌ புயலே 1! பேரின்பம்‌
அளிக்கும்‌ பெரிய திருவீதி
அணுகை வழிக்கும்‌ புறம்பாக
அறியாப்‌ பருவப்‌ பெண்களெடுத்‌
“தமைக்கும்‌ வண்ட லிதுகண்டாய்‌
தெளிக்கும்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைச்‌
செல்வா 7 சிற்றில்‌ சிதையேலே .
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே,–75-

களிக்கும்‌ சுரும்பர்‌ – தேனுண்டு செருக்கும்‌ வண்டுகள்‌,
துதைந்து – நெருங்கி,
கணைக்கால்‌ அசைத்து – , உழுது -கிண்டுதலால்‌,
கனிந்து – இளகி,
ஊற்றிருப்ப – துளித்திருப்ப, (அப்‌போது)
சில்லோசை மிழற்றுதொறும்‌ – மிக மெல்லென ஒலியை எழுப்‌புந்தோறும்‌,
கக்கும்‌ கலுழி நறவு – வெளியுமிழும்‌ கலங்கிய தேன்‌,
பரிமளிக்கும்‌ – கமழும்‌,
பசுந்தார்‌ செழும்‌ துளவு – அழகிய பச்சைத்‌ திருத்துழாய்‌ மாலை, மணக்கும்‌-(மார்பில்‌) பொருந்தியுள்ள,
குழகா ! -அழகனே /!
கார்மேக வண்ணா – மேகநிறத்தவனே !
கருணை மடைதிறந்து வழியும்‌ புயலே – தயை பெருகி வழியும்‌ மேகமே ,
பேரின்‌பம்‌ அளிக்கும்‌ பெரிய திருவீதி – மிக்க ஆனந்தம்‌ கொடுக்கும்‌ பெரிய திருவீதியை,
அணுகு – நெறுங்குகின்ற,
வழிக்கும்‌ – மார்க்கத்திற்கும்‌,
புறம்பாக – வெளிப்புறமாக இருக்கும்படி,
அறியாப்பருவப்பெண்கள்‌ -ஒன்றும்‌ தெரியாத சிறு பெண்களாகிய நாங்கள்‌,
எடுத்து அமைக்கும்‌ மண்ணெடுத்து (விளையாட்டில்‌) இழைத்துள்ள, வண்டல்‌ இது – சிற்‌றில்‌ இதுவாகும்‌ :
(ஆகவே) தெளிக்கும்‌ தமிழ்த்‌ தென்திருப்பேரை செல்வா -சாரமான தமிழ் வழங்கும்‌ தென்திருப்பேரை நகரிலுள்ள செல்வனே
சிற்றில்‌ சிதையேல்‌ – (எங்களுடைய) சிற்றிலைச்‌ சிதைக்‌ காதே ;
திரை ஆர்‌ பொருநை – அலைகளை வீசுகின்ற தாமிரபரணி நதியின்‌,
தடம்‌ துறைவா – பெரிய நீர்த்துறைகளையுடையவனே
சிறியேம்‌ – சிறுவராகிய எங்களுடைய,
சிற்றில்‌ சிதையேல்‌ – சிற்றிலைச்‌ சிதைக்காதே ;

———–

வேண்டக்‌ கிடையா வாரமுதம்‌
விரைதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
வெற்பைப்‌ பிடுங்கி மத்தாக
விடவா எளரவுக்‌ கயிறுசுற்றிப்‌
பூண்டக்‌ கணமே சுவைமதுரம்‌
பொங்கிப்‌ பெருகக்‌ கடைந்தெடுத்துப்‌
புலவர்க்‌ களிக்கும்‌ பெருமானே !
பொருந்தா நிருதர்‌ போரேறே!
காண்டற்‌ கரிய கொழுங்கிரணங்
கக்கும்‌ பசிய மரகதமே!
கதிரா மியிற்செங்‌ கதிர்மறைத்த
கருணைப்‌ புயலே ! பூமகள்கை
கீண்டச்‌ சிவக்கும்‌ புலனருளாற்
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலேதிரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே, -76-

வெற்பைப்‌ பிடுங்கி- மந்தரைமலையையெடுத்து,
மத்தாக – கடையும்‌ மத்தாக நாட்டி,
விடம்‌ வாள்‌ அரவு கயிறுசுற்றி – விஷத்தையுடைய கொடிய வாசுகியாகியபாம்பைக்‌ கடை கயிறாகச்‌ சுற்றி,
பூண்ட ௮ கணமே – (கடையுந்‌ தொழிலை) மேற்‌கொண்ட அந்த க்ஷ்ணீத்திலேயே (உடனே),
விரை தெண்‌ திரை நீர்‌ கடல்‌ முகட்டில்‌ – (கரையை நோக்கி) விரைகின்ற தெளிந்த அலைகளையுடைய நீரைக்‌ கொண்ட,கடலின்‌ மேற்பகுதியில்‌,
வேண்‌டக்கிடையா ஆரமுதம்‌ – விரும்பினாலும்‌ கிடைத்தற்கரிய தேவாமிருதம்‌,
சுவைமதுரம்‌ பொங்கி பெருக – இனிமையான சுவையோடு கிளர்ந்தெழுந்து பெருக,
கடைந்து எடுத்து, புலவர்க்கு – தேவர்‌ களுக்கு, அளிக்கும்‌ – வழங்கிய பெருமானே -,
பொருந்தா – மனம்‌ பொருந்தாத (பகைவராகிய)
நிருதர்‌ போர்‌ ஏறே !/ – அரக்கரோடு போரிடுஞ்சிங்கமே /;
காண்டற்கு அரிய – பார்த்தற்கு முடியாத,
கொழும்‌ கிரணம்‌ – (ஒளிமிக்குச்‌) செழித்த கதிர்க்கிரணங்களை,
கக்கும்‌ – வெளியுமிழும்‌,
பசிய மரகதமே ! – பச்சை மரகதரத்தினமே
கதிர்‌ ஆழியின்‌ – ஜவலிக்கின்ற சக்கரப்‌ படையினால்‌,
செங்கதிர்‌ மறைத்த – சிவந்த கிரணங்களைக்‌ கொண்ட சூரியனை மறைத்த,
கருணைப்‌ புயலே ! – தயைபொழியும்‌ மேகமே !
புலன்‌ – உன்திருவடி,
பூமகள்‌ கைதீண்ட சிவக்கும்‌ – இலக்குமி (தன்‌ மென்மையான) கையால்‌ பிடிக்கச்‌ சிவந்து காட்டும்‌ :(அவ்வளவு மிருதுவானது : அதனால்‌)
அருளால்‌ – (எங்கள்‌ மேல்‌) கிருபைவைத்து,
சிறியேம்‌ – சிறுமியராகிய எங்களுடைய,
சிற்றில்‌ சிதையேல்‌ .: திரை ஆர்‌ பொருநை தடம்‌ துறைவா ! -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ – ;

*விஞ்சை வானவர்‌ சாரணர்‌ சித்தர்‌ வியந்துதி செய்யப்‌ பெண்ணுருவாகி, அஞ்சுவையமுதம்‌ அன்று அளித்தான்‌”? என்றார்‌ திருமங்கைமன்னனும்‌.

*வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்‌ கடல்‌ வண்ணன்‌ ! பண்டொருநாள்‌ கடல்‌ வயிறு கலக்கினையே”” என்றார்‌ இளங்கோவடிகளும்‌

*நாச்சிமாரும்‌ கூசிப்‌ பிடிக்கும்‌ திருவடிகள்‌?” என்பது சம்‌ பிரதாயம்‌, பஞ்செனச்‌ சிவக்கும்‌ மென்கால்‌ தேவியாகிய? பூமகளின்‌ கைதீண்டச்சிவக்கும்‌ என்றது நயம்‌,

———–

வள்்‌சளாக்‌ குழைவே ஸனெடுங்கருங்கண்‌
மதிவா ணுதற்கோ மளப்புளக
வனமா முலைக்குங்‌ குமச்சுவடு
மடவா ரொடும்போய்‌ விளையாட
அள்ளிக்‌ குடிக்குந்‌ தடம்பொருநை
ஆற்றிற்‌ கூடு புனற்றுறையின்‌
அருகிற்‌ சிறுபே தையர்களெடுத்‌
தடங்கா விருப்ப மீதூர்ந்து
குள்ளிப்‌ பால்மாற்‌ றரும்பசும்பொன்‌
தகட்டின்‌ வயீடூ ரியங்குயிற்றிச்‌
சமைக்குந்‌ “திருமா மணிமுறத்துத்‌
தருதா மரைக்கை சேப்பமணல்‌
தெள்ளிக்‌ கொணர்ந்து தரவிகளைத்த
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–77-

வள்ளைக்குழை – வள்‌ளைக்கொடிபோன்ற காதும்‌,
வேல்‌ நெடும்‌ கருங்‌ கண்‌ – வேலாயுதம்‌ போல்‌ கூரிய நீண்ட கரிய கண்‌களும்‌,
மதிவாள்‌ நுதல்‌ – சந்திரன்‌ போல்‌ ஒளிபொருந்திய நெற்றியும்‌,
கோமளம்‌ புளகம்‌ வனம்‌ மா முலை. இளமையோடு மயிர்க்‌
கூச்செறியும்‌ அழகிய பருத்தமுலைகளும்‌,
குங்குமச்சுவடு-(அவற்றின்‌மேல்‌) பூசியகுங்குமக்குழம்பின்‌ அடையாளங்களும்‌ கொண்ட,
மடவாரொடுபோய்‌ – பெண்டிரோடும்‌ சென்று,
சிறுபேதையர்கள்‌ -சிறுமியர்கள்‌,
விளையாட – விளையாடுதற்கு (முன்னதாக),
அள்ளிக்‌ குடிக்கும்‌ – கைகளால்‌ முகந்து குடிக்கின்ற
தடம்‌ பொருநையாற்‌நின்‌ கூடு புனல்துறையின்‌ அருகில்‌ – விசாலமான தாமிரபரணிநதியின்‌ கூடுபுனற்றுறையின்‌ (சமூகதீர்த்தம்‌ என்னும்‌ திருமஞ்சனத்துறை, )பலர்கூடும்‌ நீர்த்துறையின்‌ ]சமீபத்தில்‌,
அடங்கா விருப்பம்‌ மீதூர்ந்து – மிக்க ஆதரத்தோடு, எடுத்து –
(மணலை) வாரியெடுத்து,
தள்ளி – (அதிகமாக அள்ளவே) மிகுதியைத்தரையில்‌ தள்ளி,
பால்மாற்று அரும்‌ – பின்வாங்காமல்‌,
பசும்‌பொன்தகட்டில்‌ – பசியபொன்னாலாகிய தட்டில்‌, வயிடூரியம்‌ குயிற்‌றிச்‌ சமைக்கும்‌ – (மஞ்சள்நிறவொளி வீசும்‌) வயடூரிய மணிகளைப்‌ பதியவைத்துப்‌ பண்ணிய,
திருமாமணி முறத்து . சிறந்த பிற மணிகளுமழுத்திய முறத்தினால்‌,
தரு தாமரைக்கை சேப்ப – வழங்குகின்றதாமரைப்பூப்‌ போன்‌ றகைகள்‌ சிவக்கும்படி,
மணல்‌ தெள்ளி- (வாரியஅந்த) மணலைக்கொழித்தெடுத்து,
கொணர்ந்து தர – பிரியமோடுகொண்டுவந்து கொடுப்ப,
(அதனைக்கொண்டு) சிறியேம்‌ – சிறுமியராகிய நாங்கள்‌,
விளைத்த – உண்டாக்கிய (கட்டிய),
சிற்றில்‌ – சிற்‌நிலை,
சிதையேல்‌ – சிதைக்காதே:
திரை ஆர்‌ பொருநை தடம்‌துறைவா – ! சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌

——-

தருக்கா மலர்ப்பூம்‌ பொழிலும்‌ வயல்‌
தடமுந்‌ தருதென்‌ நிருப்பேரை
தழைக்கும்‌ படிநூற்‌ றெண்மர்தொழுந்
தாமோ தர!சீ தர [முகுந்தா !
ஒருக்கா லெணுமவ்‌ விருக்காலும்‌
உணராப்‌ பொருளே ! பரஞ்சுடரே !
ஒருவா ணுதல்பண்‌ டுளங்களிப்ப
உயர்வான்‌. முகடு கிழித்தெழுந்து
மருக்கால்‌ நறுமென்‌ மலர்கொணர்ந்த
மதமோ பதினா யிரங்கோப
மங்கை யர்கள்‌ புளகமுலை
மணந்து கனிவா யமுதுண்ட
செருக்கோ வுனக்கீ தியல்பன்று
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா 
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–78-

தரு கா (வும்‌) – மரங்களையுடைய சோலைகளையும்‌,
மலர்‌ பூம்பொழிலும்‌ – பூக்களையுடைய அழகிய சோலைகளையும்‌,
வயல்‌ தடமும்‌ – கழனியிடங்களையும்‌,
தரு – கொண்டுள்ள,
தென்‌ திருப்பேரை – தென்திருப்பேரைநகர்‌, தழைக்கும்படி .- செழித்துச்‌ சிறக்கும்படி,
நூற்று எண்மர்‌ .- நூற்றெட்டு ஜைமிநீயதலவகார,ஸாமவேதிகள்‌,
தொழும்‌ – வழிபடுகின்ற,
தாமோதர ! ..- முகுந்தா – ,
ஒருக்கால்‌ – ஒருசமயம்‌,
எணும்‌ – உன்னையறிய வேண்டும்‌ ‘ என்று எண்ணிய, ௮
இருக்காலும்‌ – அந்த வேதத்‌ தாலும்‌,
உணரா – அறியமுடியாத,
பொருளே – பரம்பொருளே !
பரஞ்சுடரே ! – மேலான சோதியே,
பண்டு – முன்‌ துவாபரயுகத்தில்‌ (கிருஷ்ணாவதாரத்தில்‌)
ஒரு வாணுதல்‌-ஒரு பெண்‌ [ஒப்பற்ற சத்திய பாமை]
உளம்‌ களிப்ப – மனம்‌ மகிழும்படி,
உயர்‌ வான்‌ முகடு கிழித்து எழுந்து – ஓங்கிய ஆகாய வுச்சியினை வபூடுருவிச்சென்று,
மரு கால்‌ – வாசனையை வெளியிடுகின்ற,
நறு மென்மலர்‌ – நல்லமெல்லிய பாரிஜாத மலர்பூக்கும்‌ தருவை,
கொணர்ந்த – (இந்திரலோகத்திலிருந்து கருடன்மேலேற்றிக்‌) கொண்டு வந்த,
மதமோ – செருக்கோ ?:
பதினாயிரம்‌ கோப மங்கையர்கள்‌ – பதினாயிரம்‌ கோப ஸ்திரீகளின்‌,
புளகம்‌ முலை மணந்து – மயிர்க்கூச்செறிந்த கொங்கைகளைத்‌ தழுவியிருந்து,
(மேலும்‌ அவர்களது) கனிவாய்‌ அமுதுஉண்ட – கொவ்வைக்கனிபோற்‌ சிவந்தவாயினிடத்து அமுதநீரைப்‌ பருகியதனாலான,
செருக்கோ – அகந்தையோ ?:
உனக்கு – , ஈது – இச்‌ செயல்‌ செய்தல்‌, இயல்பு அன்று -தகாதது :
சிறியேம்‌ சிற்‌நில்‌ சிதையேல்‌ -; திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ —

மதமோ, செருக்கோ”” எ்ன்று வினவுவதிலே சிறுமியர்‌ செருக்குத்‌ தொனித்தல்‌ சுவைக்க,

*பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பார்த்‌திருப்ப”? என்றாள்‌ ஆண்டாள்‌ (நாச்‌ : திரு : 7-9)

அவர்‌ தந்‌தையார்‌ :“பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணிசெய்ய”? என்றார்‌. (4-9-4),

——–

கோவே ! கோவா மரகதமே !
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூ ற்றே !
குளிர்பூந்‌ துளவத்‌ திருத்தொங்கல்‌
குவவுத்‌ தடந்தோட்‌ காயாவாம்‌
பூவே ! பூவின்‌ பொலன்பொகுட்டுப்‌
புதுமென்‌ மணமே ! யருள்சுரந்து
பொங்கிப்‌ பெருகி யுவட்டெறிந்து
பொழியும்‌ புயலே ! கற்பகப்பூங்‌
காவே ! முதுகோ சலைதவமே !
கண்ணே ! கண்ணி னுண்மணியே !
கதிர்நித்‌ திலவெண்‌ மணல்நினது
காலி னுறுத்தல்‌ கடனன்றே
தேவே ! தேவப்‌ பெருமானே !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா 7
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–79-

கோவே – ! மன்னனே
கோவா மரகதமே | . கோக்கப்‌படாத பச்சைரத்தினமே |
கொடும்‌ போர்‌ அரக்கர்‌ குலக்‌கூற்றே !–கொடிய யுத்தத்தைச் செய்கின்ற ராட்சசர்களின்‌ குல காலனே !
குளிர்பூழ்‌ துளவம்‌ திரு தொங்கல்‌ – குளிர்ந்த அழகிய துளசி மாலையைத் தரித்த,
குவவு தட தோள்‌ – திரண்ட பெரிய தோள்‌களை யுடைய,
காயாவாம்‌ பூவே!-காயாம்‌ பூப்போல்‌ கருநிறம்‌ படைத்தவனே?
பூவின்‌ – தாமரைப்பூவின்‌,
பொலன்‌ பொகுட்டு – அழகிய கொட்டையினின்று எழும்‌,
புது மென்‌ மணமே!.புதியமென்மையான பரிமளமே !
அருள்‌ சுரந்து – கருணையூறி,
பொங்கி – மேல்வந்து,
பெருகி – ஒழுகி,
உவட்டு எறிந்து – வெள்ளமிட்டு,
பொழியும்‌ – சொரியும்‌,
புயலே . மேகமே !
கற்பகப்பூங்‌ காவே?! – கற்பகச்‌சோலையே !
முது கோசலை தவமே – (தசரதரின்‌) மூத்தமனைவியாகிய கெளசல்யா தேவியின்‌ தவப் புதல்வனே !
கண்ணே . (எங்கள்‌) கண்‌போன்றவனே !
கண்ணின்‌ நுண்‌ மணியே ! – கண்ணுக்குள்ளிருக்‌கும்‌ நுண்ணிய மணிபோன்றவனே !
கதிர்‌ நித்திலம்‌ வெண்‌மணல்‌ – ஒளிருகின்ற முத்துக்களாக் கொண்ட வெள்ளிய மணல்‌,
நினது காலின்‌ உறுத்தல்‌ – உன்னுடைய (மென்மையான) அடிகளில்‌ குத்துதல்‌,
கடன்‌ அன்று – முறையன்று :
தேவே – இறைவனே
தேவப்‌ பெருமானே ! – தேவர்களுக்குத்‌ தலைவனே !
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌-; திரை ஆர்‌ பொருநைத்தடம்‌
துறைவா -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ -;

காயா வண்ணன்‌”*’ (நாச்‌: திரு. 1-6), “காயா மலர்காள்‌ ! திருமால்‌ உருவொளி காட்டுகின்றீர்‌?? (9-3)

—————–

வன்னக்‌ களபப்‌ புளகமுலை
மடவா ரெனுங்கோ வியர்கள்‌ திரு
வாய்ப்பா டியிற் புக்கு அளை கவர்ந்த
மணிவாய்க்‌ கள்வ னென்றுகட்டி
உன்னிப்‌ பொருமி யழவடித்த
துண்டே லவர்கள்‌ விளையாடும்‌
ஒளிர்நித்‌ திலவெண்‌ மணற்சிற்றில்‌
உனக்கின்‌ றழிக்க முறைகண்டாய்‌
கன்னிக்‌ கமுக மிடறொடியக்‌
காய்க்கும்‌ பசுங்காய்க்‌ குலைசிதறக்‌
கதலிக்‌ குலங்க ளடிசாயக்‌
கயல்பாய்ந்‌ துளைந்து வாலறையுஞ்‌
செந்நெற்‌ பழனத்‌ திருப்பேரைச்‌
செல்வா ! சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே,–80-

வன்னம்‌ களபம்‌ புளகம்‌ முலை . அழகிய சந்தனம்‌ பூசப்பட்டு மயிர்கூச்செறியும்‌ கொங்கைகளைக்‌ கொண்ட,
மடவார்‌ எனும்‌ கோவியர்கள்‌ – பெண்கள்‌ என்று பேசப்படும்‌ கோபியர்களின்‌,
திருவாய்ப்பாடியில்‌ புக்கு . கோகுலத்திற்புகுந்து,
அளை கவர்ந்த -வெண்ணெயைத்‌ திருடிய,
மணிவாய்‌ – அழகிய வாயினையுடைய,
கள்வன்‌ என்று கட்டி – திருட்டுப்‌ பையன்‌ என்று தாம்பினால்‌ பிணித்து;
உன்னி – உற்று (உன்னை) உருத்துப்பார்க்க, (நீ)
பொருமி அழ – விம்மி யழும்படி,
அடித்தது உண்டேல்‌ – (மத்தினால்‌) அடித்தது உண்மையானால்‌,
அவர்கள்‌ விளையாடும்‌ – அவர்கள்‌ [வண்டலிழைத்து] விளையாடுகின்ற [இடத்திலுள்ள],
ஒளிர்‌ நித்திலம்‌ வெண்மணல்‌ சிற்றில்‌ – பிரகாசிக்கின்ற முத்துக்களைக்‌ கொண்ட வெள்ளிய மணலாலாகிய சிறு வீடுகளை,
இன்று.இப்போது,
அழிக்க – சிதைக்க,
உனக்கு முறை – உனக்குத்‌ தகுதியாகும்‌ :
கன்னிக்‌ கமுகு மிடறு ஓடிய – இளைய கமுகமரத்தின்‌ கழுத்து தாழும்படி,
காய்க்கும்‌ பசுங்காய்‌ குலை – காய்த்திருக்கின்ற பச்சைப்‌ பாக்கின்‌ குலைகள்‌,
சிதற – சிதறிவிழும்படியும்‌,
கதலிக்குலங்கள்‌ -வாழைமரங்கள்‌,
அடி சாய – கீழ்ப்பகுதி சாயும்படியும்‌,
கயல்‌ பாய்ந்து உளைந்து – கயல்‌ மீன்கள்‌ தாவியொலித்து,
வால்‌ அறையும்‌ -(தங்களது) வாலை அக்‌ குலைகளின்‌ மீதும்‌ அடிப்பகுதிமீதும்‌ [ விசையோடு] அடிக்கும்‌,
செந்நெல்‌ பழனம்‌ திருப்பேரை – செந்நெற்பயிர்‌கள்‌ விளையும்‌ வயல்களைக்‌ கொண்ட திருப்பேரைநகரின்‌,
செல்வா -,சிற்றில்‌ சிதையேல்‌ – : திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா-,சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ –;

தீராத வெகுளியளாய்ச்‌ சிக்கென ஆர்த்தடிப்ப‘? என்றவிடத்து (சிறிய திரூமடல்‌, கண்ணி – 86),
“இது அபிநயமாத்திரம்‌’” என்று வியாக்யாதமிட்டார்‌ பெரிய வாச்சாச்சான்பிள்ளே  அதுபோலே ஈண்டும்‌ “அடி அடித்ததுண்டேல்‌‘* என்கிறார்கள்‌ எனக்கொள்க:

“கள்வன்‌ என்றுகட்டி”” என்ற விடத்து அறியவேண்டுவதொன்றுண்டு : அஃதாவது –
வெண்ணெய்‌ கொள்ளுதல்‌ முதலிய தொழில்களைச்‌ செய்தலால்‌ இந்தப்‌ பட்டப்‌ பெயர்‌ பெற்றானா பினும்‌, அவனைக்‌ கள்வன்‌” என்றால்‌
தகாது என்றார்‌ திவ்யகவி தமது நூற்றெட்டுத்திரப்பதியந்தாதி’?யில்‌ (85) அஃது வருமாறு ::
பண்டேயுன்‌ பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக்‌ கள்வனென்று கூறாதே — மண்டலத்தோர்‌, புள்வாய்‌ பிளந்த புயலே யுனைக்கச்சிக்‌
கள்வாவென்‌ றோதுவதென்‌ கண்டு” என்பது.

———–

பண்ணே நியமென்‌ சூதலைமொழிப்‌
பவளக்‌ கனிவாய்க்‌ குறுநகையும்‌
பாரித்‌ தோங்கிப்‌ பூரித்த
பைம்பொற்்‌ புயமுங்‌ கண்டழகு
கண்ணே றெளியேம்‌ பட்டனமென்‌
றெண்ணிக்‌ கருத்து வேறுபடக்‌
கணக்கன்‌ றுலகில்‌ மன்னுயிர்க்குக்‌
காவற்‌ கடவுள்‌ நீயன்றோ
மண்ணே மழையுமுண்‌ இமிழ்ந்தளந்த
மாலே ! வேலைப்‌ புனல்‌ சுவறி
மறுகக்‌ கணதொட்‌ டிடுமுகுந்தா !
வருணன்‌ நினமா ராதனைசெய்‌
தெண்ணீர்ப்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே தெளிக்குத்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைச்‌
செல்வா [! சிற்றில்‌ சிதையேலே.--81-

பண்‌ ஏறிய மென்‌ குதலை மொழி – இராகம்‌ போல்‌ சுவையுள்ள மெல்லிய இனிய பேச்சினையும்‌,
பவளக்‌ கனிவாய்‌ – பவளம்‌ போற்சிவந்த இனிய வாயினையும்‌,
குறு நகையும்‌ – புன்சிரப்பினையும்‌,
பாரித்து ஓங்கிப்‌ பூரித்த பைம்பொன்‌ புயமும்‌ தோன்றி உயர்ந்து பருத்த அழகிய தோள்களினையும்‌,
கண்டு – (நீ) பார்த்து, (அதனால்‌)
எளியேம்‌ – சிறுமியராகிய நாங்கள்‌,
அழகு – எங்களது அழகினால்‌,
கண்ணேறு பட்டனம்‌ என்று- (உன்னுடைய)திருஷ்டிதோஷம்‌ அடைந்து விட்டோம்‌ என்று,
எண்ணி – நினைத்து,
கருத்து – (உன்மேல்‌ வைத்துள்ள) மனம்‌,
வேறுபடக்‌ கணக்கன்று – மாறுபட நியாயமில்லை :
(ஏனெனில்‌) உலகில்‌ – இந்திலவுலகத்தி லுள்ள,
மன்னுயிர்க்கு – நிலைபெற்ற ஜீவன்களுக்கு,
காவற்‌ கடவுள்‌ நீ அன்றோ ! – பாதுகாப்பளிக்குந்‌ தெய்வம்‌ நீயல்லவா? (நீயேதான்‌) : [
ஆகவே]. மண்‌ ஏழையும்‌ உண்டு உமிழ்ந்து அளந்த மாலே _ஏழு தீவுகளையும்‌ புசித்துப்‌ பின்னர்‌ வெளியே உமிழ்ந்து அவற்றை அளவிட்ட திருமாலே!
வேலை – கடல்‌,
புனல்‌ சுவறி- நீர்‌ வற்றி,
மறுக .- வருந்தும்படி,
கணை தொட்டிடு – ஆக்னேயாஸ்திரத்தைத்‌ தொடுத்த,
முகுந்தா – முகுந்தனே !
வருணன்‌ தினம்‌ ஆராதனை செய்‌ – வருணபகவான்‌ நாடோறும்‌ பூஜை செய்கின்ற,
தெள்‌ நீர்‌ பொருநை தடம்‌ துறைவா! _ தெளிந்த நீரையுடைய தாமிரபரணி யின்‌ விசாலமான துறைகளுக்குத்‌ தலைவனே
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ – :
தெளிக்கும்‌ தமிழ்த்‌ தென்திருப்பேரை ~ ஆராய்ந்‌ தெடுத்த சாரமான தமிழ்பயிலும்‌ தென்திருப்பேரை நகரின்‌, செல்வா! , சிற்றில்‌ சிதையேல்‌ –

——-

தடிக்குஞ்‌ சிகரப்‌ படாம்பொதிந்த
தடமா முலைக்குங்‌ குமச்சுவட்டுத்‌
தழைக்குங்‌ குறுங்கண்‌ சாந்தொழுகித்‌
்‌ தருபா லசோதை மகிழ்ந்தூட்டக்‌
குடிக்கும்‌ புயலே ! யிலங்கையில்வெங்‌
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூற்றே /
குனிக்குஞ்‌ சிலைக்கைத்‌ தடக்களிறே !
கோவே ! பசுந்தண்‌ டுழாய்மாலை
முடிக்கும்‌ பொருளே ! முத்தொழிற்கும்‌
மூவா முதலே 1! யழியாத
முத்திக்‌ கொருவித்‌ தாகவந்து
முளைக்கும்‌ பொருளே ! பாகுபெற
வடிக்குந்‌ தமிழ்த்தென்‌ றிருப்பேரை
மாலே ! சிற்றில்‌ சிதையேலே
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! சிற்றில்‌ சிதையேலே.–82-

தடிக்கும்‌ சிகரம்‌ – திரண்ட உச்சிமேல்‌,
படாம்‌ பொதிந்த – சீலையையிட்டு மூடிய,
தட மா முலை-பருத்த பெரிய முலையில்‌,
குங்குமச்சுவடு தழைக்கும்‌ – பூசிய குங்குமச்‌ சாந்தின்‌ அடை யாளம்‌ நன்கு தெரிகின்ற,
குறுங்கண்‌ – சிறிய முலைக்காம்பினிடத்து,
சாந்து ஒழுகி – சந்தனம்‌ [கலைந்து] இலேசாக ஒழுக,
தரு-கொடுத்த,
பால்‌ – முலைப்பாலை,
அசோதை – யசோதை,
மகிழ்ந்து ஊட்ட – சந்தோஷமாக ஊட்ட,
குடிக்கும்‌ . (அதனை) உறிஞ்சிப்‌ பருகும்‌,
புயலே – மேகமே!
இலங்கையில்‌ – இலங்கை மாநகரில்‌,
வெம்‌ கொடும்‌ போர்‌ அரக்கர்‌ குலம்‌ கூற்றே! – கடிய கொடிய போரைச்‌ செய்த அரக்கர்களின்‌ குலத்திற்கு யமன்‌ போன்றவனே!
சிலை குனிக்கும்‌ கை – வில்லை (நன்கு) வளைத்துத்‌ (துட்டர்களை)(யொழிக்கும்‌) கையையுடைய,
தடக்‌ களிநே! – பெரிய யானை போன்றவனே!
கோவே. . தலைவனே!
பசும்‌ தண்‌ துழாய்‌ மாலை முடிக்கும்‌ பொருளே! – பச்சை நிறமுள்ள குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையைச்‌ சூடும்‌ பரம்பொருளே!
முத்தொழிற்கும்‌ . படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற மூன்று தொழில்களைச்‌ செய்து வரும்‌,
மூவா – (என்றைக்கும்‌) கெடாத.
முதலே! -முதற்கடவுளே!
அழியாத முத்திக்கு – (என்றைக்கும்‌) அழிவில்லாத முக்திக்கு,
ஒரு வித்தாக வந்து – ஒப்பற்ற முதற்காரணமாக வந்து,
முளைக்கும்‌ – அவதரிக்‌கின்ற,
பொருளே! . மூலப்பொருளே!
பாகு பெற வடிக்கும்‌ தமிழ்‌ – வெல்லப்பாகு போல இனிமை பெறச்‌ சாரமாகப்பிழியும்‌ தமிழ்‌
பயிலும்‌, – தென்திருப்பேரை மாலே-?, சிற்றில்‌ – சிதையேல்‌ -:
மகரக்‌குழையே! – மகரநெடுங்குழைக்காதரே!,
நூற்றெண்மர்‌ வாழ்வே! – ஜைமீ நீயதலவகார சாமவேதிகள்‌ நூற்றெட்டுப்பேருக்கும்‌ நல்‌ வாழ்வளிப்பவனே?
சிற்றில்‌ சிதையேல்‌–

——-

கொத்தோ டசையப்‌ பசுந்துளவங்‌
குடக்கூ டரும்பி முகரத்தெழுந்து
கொழிக்குந்‌ தவளப்‌ பிறைநுதலிற்‌
குறுவேர்‌ வொழுக வணிந்தசுட்டி
முத்தா னதுவெண்‌ ணிலவெறிப்ப
முகத்தா மரையி னகையிலங்க
முதுகுண்‌ டலமும்‌ வார்காது
முழுமா மணிப்பொற்‌ சோ திவிட
அத்தா 1 வருணன்‌ நினம்பரவும்‌
அரி!கேசவ! நாரண ! முகுந்தா !
அடல்வா எரவிற்‌ கண்டுயிலும்‌
ஆழிப்‌ புயலே ! யாய்ச்சியர்கை
மத்தா லடிப்ப வெண்ணெயுண்ட
வாயா ! சிற்றில்‌ சிதையேலே
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! சிற்றில்‌ சிதையேலே.–83-

பசும்‌ துவளம்‌ கொத்தோடு அசைய – கொத்தாக இடப்பட்ட பச்சைத்துளவமாலை மார்பில்‌ அசைந்தாடவும்‌,
குடக்கு ஊடு அரும்பி – மேற்குத்திசையில்‌ கீற்றாக அரும்பி,
முளைத்து எழுந்து – சற்று நன்கு தெரியும்படி மேலெழுந்து,
கொழிக்‌கும்‌ – நிலவை உமிழும்‌,
தவளம்‌ பிறை – வெள்ளிய பிறைச்‌சந்திரன்போல்‌
(வளைந்த), நுதலில்‌ – நெற்றியில்‌,
குறு வேர்வுஒழுக – சிறுதுளியாக வேர்வையொழுக,
அணிந்த: சுட்டிமுத்தானது – சூட்டியசுட்டியிலுள்ள முத்தானது,
வெள்‌ நிலவு எறிப்ப -வெண்மையான ஒளியை வீசவும்‌;
முகத்தாமரையில்‌ .- தாமரை மலர்போன்ற முகத்தில்‌,
நகை இலங்க – பற்கள்‌ (அழகாக) விளங்‌கவும்‌ ;
முது குண்டலமும்‌ – பெரிய குண்டலமும்‌, .
வார்‌ காது -நீண்ட காதினில்‌ (அணிந்துள்ள),
முழு மாமணி – முற்றும்சிறந்தமணிகளால்‌
அமைந்து-குழையும்‌,
பொன்‌ சோதி விட .. பொன்‌ போல்‌ ஒளிவிடவும்‌ ; (நீ வந்து) சிற்றில்சிதையேல்‌ எனமேல்‌ இயையும்‌,
(இனி) அத்தா ! மேலோனாகிய விட்டுணுவே !
வருணன்‌ தினம்‌ பரவும்‌ அரி – வருணபகவான்‌ தினந்தோறும்‌ துதிக்‌கின்ற ஹரியே !
கேசவ !-, நாரண !-, முகுந்தா ! -,
அடல்‌ வாள்‌ அரவில்‌ – வலிய ஒளியுள்ள ஆதிசேடன்மேல்‌,
கண்துயிலும்‌ -யோகநித்திரை கொள்ளும்‌,
ஆழிப்‌ புயலே ! .. பாற்கடல்‌ மேகமே !
ஆய்ச்சியர்‌ – (கோகுலத்து) இடைச்சியர்‌,
கைமத்தால்‌ அடிப்ப -கையிற்கொண்ட மத்தினால்‌ அடிக்கும்படி,
வெண்ணெய்‌ உண்ட வாயா – (அவர்கள்‌ மனையிலுள்ள) வெண்ணெயைக்‌ களவாடித்‌ தின்ற வாயையுடையவனே
சிற்றில்‌ சிதையேல்‌-: மகரக்‌குழையே. – நூற்றெண்மர்‌ வாழ்வே ! -, சிற்றில்‌ சிதையேல்‌-;

———

அன்போ டணைத்து முலைகொடுத்தின்‌
னமுதூற்றிருக்கும்‌ புனலாட்டி
அருங்கட்‌ கடைக்கஞ்‌ சனமெழுதி
ஆரந்‌ திருத்திப்‌ பட்டுடுத்தி
உன்பே ரிடுவே னென்குழவிக்‌
குள்ள தயவாற்‌ றனிசமைத்த
உயர்மா ளிகையு மாடரங்கும்‌
ஒளிர்‌ வே திகையு நீயழிக்க
வன்பா லோடி வரவுனக்கு
வழக்கன்‌ றுலகிற்‌ சிறுபேதை
மகளி ரிருந்து விளையாடும்‌
வண்டற்‌ றுகள்சே வடிபடுமே
தென்பே ரையினங்‌ குலநாத !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா /
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.--84-

அன்போடு அணைத்து – ஆசையோடு கட்டித்‌ தழுவி யணைத்து,
இன்‌ அமுது ஊற்றிருக்கும்‌ முலை கொடுத்து – இனிய பால்‌ சுரந்து நிறைந்திருக்கும்‌ முலை யூட்டி,
(பின்னர்‌) புனல்‌ ஆட்டி -[கடாரத்தில்‌ பூரித்து வைத்த] நீரில்‌ குளிப்பாட்டி,
அரும்‌ கண்‌கடைக்கு – அழகிய கடைக்கண்ணுக்கு,
அஞ்சனம்‌ எழுதி -மையிட்டு-
ஆரம்‌ திருத்தி – முத்து மாலையைச்‌ சரிசெய்து,
பட்டு உடுத்தி(அரையில்‌) வெண்பட்டினையடுத்தி,
என்‌ குழவிக்கு- என்‌குழந்தைக்கு (என்வண்டற்‌ பாவைக்கு),
உன்‌ பேர்‌ இடுவேன்‌ – உன்‌னுடைய (நல்ல) பேரை வைப்பேன்‌ :
(எனவே) உள்ளம்‌ தயவால்‌ -மனத்துக்‌ கருணையினால்‌,
தனி சமைத்த – தனியாக நான்‌ (வண்டலிழைத்துக்‌) கட்டியுள்ள,
உயர்‌ மாளிகையும்‌ – உயர்ந்த மாளிகையையும்‌,
ஆடு அரங்கும்‌ – நடன சாலையையும்‌,
ஒளிர்‌ வேதிகையும்‌ -விளங்குகின்ற திண்ணையையும்‌,
நீ அழிக்க – நீ சிதைக்க,
வன்பால்‌ -பலாத்காரத்தோடு,
ஓடி வர- வேகமாக ஓடிவருதல்‌,
உனக்கு உலகில்‌ வழக்கன்று – உனக்கு இவ்வுலகில்‌ நியாயமாகாது: (உலகு பழிக்கும்‌):
(இதுகிடப்ப)சிறு பேதை மகளிர்‌-மடச்சிறுமியராகிய நாங்கள்‌,
இருந்து(முதுகு நோவ) இருந்து,
விளையாடும்‌ – இழைத்து விளையாடுகின்ற:
வண்டல்‌ துகள்‌ – வண்டல்‌ புழுதி,
சேவடி படுமே- உன்‌ சிவந்த பாதங்களில்‌ பட்டு மாசு படுத்துமே :
(ஆகையால்‌) தென்பேரையில்‌ நம்‌ குலநாத -தென்திருப்பேரையிலுள்ள எங்கள்‌ குலத்துக்கு முதல்‌வனே?
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ -, திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா–, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌-;

—————-

சிறுபறைப்‌ பருவம்‌

வானாடர்‌ முப்பத்து முக்கோடி யுஞ்சது
மறைக்கடவு ணனை்முகவனும்‌
மழுவலா ளனுமறு முகச்செம்ம லுங்கைம்‌
மலைக்கோட்டு வேழமுகனும்‌
ஏனோரும்‌ வச்சிரக்‌ குலிசபதி யுமகிழ்நீ
தெண்டிசா முகப்பாலரும்‌
இருவிழியு மிருசெவியு மிதயதா மரைமலர்நீ
தெக்கால முந்தழையவே
கானூறு பச்சைப்‌ பசும்பூக மடல்விண்டு
கக்குங்‌ கொழும்பிரசமுங்‌
கதலிக்‌ கொழுங்கனி யுடைந்துவழி . மதுவுங்‌
கலந்தோடி யலைமண்டியத்‌
தேனாறு பாயும்வயல்‌ சூழ்வழுதி நாடனொரு
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ 1!
சிறுபறை முழக்கியருளே.–85-

முப்பத்துமுக்கோடி வானாடரும்‌ -முப்பத்துமூன்று கோடிதேவர்களும்‌,
சதுமறைக்கடவுள்‌ நான்முகவனும்‌ . நான்கு வேதங்களையோதும்‌ இறைவனாகிய பிரமனும்‌,
மழுவலாளனும்‌ – மழுப்படையையேந்திய சிவபெருமானும்‌,
அறுமுகச்‌ செம்மலும்‌ -ஆறுமுகக்கடவுளாகிய முருகனும்‌,
கைம்மலைக்கோட்டு வேழமுகனும்‌ – யானைத்தந்தத்தோடு யானை முகத்தையுடைய விநாயகனும்‌,
வச்சிரக்குலிசபதியும்‌ . உறுதியான வச்சிராயுதத்தையுடைய இந்திரனும்‌,
மகிழ்ந்து எண்திசாமுகப்பாலரும்‌ – களிப்புற்று எட்டுத்‌ திக்குப்பாலகர்களும்‌,
ஏனோரும்‌ – மற்றைத்‌ தேவதைகளும்‌,
இருவிழியும்‌ இருசெவியும்‌ இதயதாமரை (யும்‌) மலர்ந்து – (தங்களது)இரண்டுகண்களும்‌ இரண்டு காதுகளும்‌ மனத்தாமரையும்‌ விகசித்து,
எக்காலமும்‌ தழைய – எப்போதும்‌ (அவர்களுக்கு) நல்‌ வாழ்வுசெழிக்கும்படி,
(சிறுபறைமுழக்கியருளன்‌ என மேலவியையும்‌),
கான்‌ ஊறும்‌ – வாசனைபூறிவீசுகின்ற,
பச்சைப்‌ பசும்‌ பூகம்‌ -மிகப்பசுமையாயுள்ள கழுகங்குலை,
மடல்‌ விண்டு – (தனது) மடல்‌கள்‌ விரிந்து,
கக்கும்‌ கொழும்‌ பிரசமும்‌ – வெளியேசொரியும்‌செழித்த தேனும்‌,
கதலிக்‌ கொழும்‌ கனி உடைந்து – வாழையினது கொழுத்துப்பருத்த பழங்கள்‌ சிதைந்து,
வழி மதுவும்‌ – வழிகின்ற தேனும்‌,
கலந்து ஓடி – ஒன்றாகச்‌ சேர்ந்து (ஆறாக) ஓடி,
அலைமண்டி – அலைகளை நெருங்கவெறிந்து,
தேனாறு பாயும்‌ -(பெரிய) தேனாறாகப்‌ பாய்கின்ற,
வயல்‌ சூழ்‌ வழுதிநரடன்‌ ! -கழனிகள்‌ சூழ்ந்த பாண்டிநாட்டுக்குரியவனே /
ஒரு சிறுபறை முழக்கியருள்‌ – ஒப்பற்ற சிறிய பறையை(க்கொட்டி) முழக்குவாயாக:
தென்‌ திருப்பேரை வரு – தென்திருப்பேரைநகரில்‌ வந்து கோயில்கொண்டுள்ள,
நம்‌ குழைக்காத முகில்‌ . நம்‌ மகர நெடுங்குழைக்காதராகிய (நிகரில்‌) முகில்வண்ணனே : சிறுபறைமுழக்கியருள்‌–;

அஷ்டதிக்குப்பாலகர்‌, அவராவார்‌– இந்திரன்‌, அக்கினி,யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌ என்பவர்‌.

————-

பூவாருங்‌ கொன்றைச்‌ செழுஞ்சடா டவிமுமப்
புனிதபூ ரணனிரட்டும்‌
பொற்றுடி யெனச்சொற்‌ நிறம்பாத கனகவிப்‌.
புலவர்‌ திண்‌ டி மமென்னவும்‌
மேவுகதிர்‌ மணிமகுட  கோடி நிபுடஞ்செயும்‌’
விருதரசர்‌ மணிவாசலின்‌
‘விதரணக்‌ கொடைவெற்றி மணவொலி கறங்கு
தெரு
வீதிழமம்‌ முரசமெனவுந்‌
தாவுசீ ரிட்டுடன்‌ விசித்திறுக்‌ கித்தொனி
தமைத்ததொண்‌ டகமென்னவுநீ
தவறாது சதிமுறையி னண்டகோ ளகைமுகடு
தடவியது செவிடுபடவோர்‌
தேவதுந்‌ துபியெனத்‌ திருவழுதி வளநாட !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–86-

ஆரும்‌ கொன்றை – பூக்கள்‌ நிறைந்த கொன்றை மாலையை,
செழும்‌ சடா அடவி முடி – தொகுதிப்பட்ட சடைக்‌காட்டிலே சூடியுள்ள,
புனித பூரணன்‌ – தூய நிறைவுடையனாகியசிவபிரான்‌,
இரட்டும்‌ – மாறி, மாறி அடித்து ஒலிக்கச்‌ செய்கின்ற,
பொன்‌ துடி என – அழகிய உடுக்கையென்று சொல்லும்படியும்‌ ;
சொல்‌ திறம்பாத- சொன்ன சொல்‌ மாறாத,
கன கவிப்‌புலவர்‌ – மாண்பு மிக்க வாதஞ்‌ செய்யும்‌ புலவர்கள்‌, (முழக்கும்‌)
திண்டிமம்‌ என்னவும்‌ திண்டிமப்பறையென்று சொல்லும்படியும்‌ ;
மேவு கதிர்‌ மணி மகுடம்‌ கோடி – பொருந்திய ஒளி விடு கின்ற மணிகள்‌ பதித்த கிரீடங்கள்‌ ,
பல, நிபுடம்‌ செய்யும்‌ -நெருக்கத்தையுண்டாக்குகின்ற,
விருது அரசர்‌ மணிவாசலில்‌ -சிறப்புடைய மன்னரின்‌ அழகிய அரண்மனை வாசலில்‌,
விதரணம்‌“கொடை – தயாள குணத்தோடு கொடுக்கும்‌ தானம்‌,
வெற்றி -பெற்றுள்ள வெற்றிகள்‌,
மணம்‌ – நிகழும்‌ திருமணம்‌ போன்ற மங்கலநிகழ்ச்சிகள்‌இவற்றைப்‌ பற்றிய,
ஒலி- முழக்கமானது,
தெரு -குறுந்தெருக்களிலும்‌,
வீதி – பெருந்‌ தெருக்களிலும்‌,
கறங்கு . ஒலிக்கச்‌செய்கின்ற,
மும்முரசம்‌ எனவும்‌ – மூன்று முரசங்கள்‌ என்று சொல்லும்படியும்‌ ;
தாவு – பாய்ந்து குதித்தல்‌ போன்ற துரிதத்தில்‌,
சீர்‌ இட்டு -தாளத்தையமைத்து,
உடல்‌ விசித்து – பறையின்‌ (ஓரம்‌ தவிர்த்தமுக்கிய) நடுப்பகுதியைத்‌ தோல்‌ வாரினால்‌ இறுகக்கட்டி,
இறுக்கி -மேலும்‌ அழுத்தமாக இறுக்கி,
தொனி தழைத்த . முழக்கவொலி(மேன்மேலும்‌) விருத்தியாகும்‌,
தொண்டகம்‌ என்னவும்‌-தொண்டகப்‌ பறை என்று சொல்லும்படியும்‌ ;
சதி முறை தவருது – தாளவொத்து பிழையுறாமல்‌,
அண்டகோளகை முகடு – உலகவுருண்டையின்‌ மேலுச்சியை, தடவியது –
எட்டிய ஒலி முழக்கமானது, செவிடுபட – (கேட்காதபடி)கீழாகுமாறு, [பேரொலி செய்த]
ஓர்‌ தேவந்துபி என..ஒப்பற்ற தேவதுந்துபி என்று சொல்லும்படியும்‌,
திருவழுதிவள நாட! — பாண்டிய நாட்டுக்குத்தலைவனே !
சிறுபறை முழக்கியருள்‌ – உன்னுடைய சிறுபறையைக்‌ கொட்டுவாயாக :
தென்திருப்பேரை வரு தம்‌ குழைக்காத முகில்‌–, சிறுபறை முழக்கியருள்‌ –

——–

கறைகொளுஞ்‌ சமரில்வடி வாளொடு இராவணன்‌
கைகளிரு பதும்விழுதுபோ றீ
காறுடர்மண்‌ ஸணில்விள்ளிக்‌ குப்புற்று நிற்குநிலை
கண்டுதிரு வுளமிரங்கி
உறுதிபட வின்றுபோய்‌ நாகக்கு வாவென்‌
றுரைத்தரா கவ ! வெருவியன்‌
றோராண மூலமென்‌ றோதாமுன்‌ ணோடிவந்‌
துதவுமா தவ ! சீதரா !
நறையொழுக மடன்முகை முறுக்கவிழ்ந்‌ தலரு
மொரு
தளினப்‌ பொகுட்டாசன
நள்ளிடை. பதிந்துபைந்‌ தாதளைந்‌ திசைபாடி,
நாகிளம்‌ பேடையோடுஞ்‌
சிறைவண்டு கண்படுக்‌ கும்வழுதி நன்டை !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.--87-

கறைகொளும்‌ சமரில்‌ – இரத்தக்கறை படியும்‌ போரில்‌,
வடிவாளொடு – கூரியவாளோரடு,
இராவணன்‌–, கைகள்‌ இரு பதும்‌ – இருபதுகைகளும்‌,
விழுதுபோல்‌ – ஆலம்விழுதுபோல,
கால்‌ துடர்‌ . காலைத்தொடர்ந்து தொங்கி,
மண்ணில்‌ விள்ளி – தரையில்‌ பரவலாகவிழுந்துதழுவி,
குப்புற்று – தலைகவிழ்ந்து, நிற்கும்‌ நிலை கண்டு – (நாணி)
நிராயுதபாணியாய்‌ நிற்கின்ற பரிதாபமான நிலை யைப்பார்த்து,
திருவுளம்‌ இரங்கி – மனவிரக்கமுற்று,
உறுதிபட( அவ்விராவணனுக்குத்‌) துணிவு ஏற்பட,
“இன்று போய்‌ தாளைக்குவா” என்று உரைத்த – “இன்று மனைபோய்‌ போர்க்கு தாளைவா” என்று கருணையோடு கூறி விடுத்த,
இராகவா – ரகுகுல உத்தமனே ? (இராமனே ),
அன்று – (முதலைவாயிலகப்‌ பட்ட) அன்று,
ஓர்‌ ஆனை . கஜேந்திரனென்ற ஒரு யானை,
வெருவி – பயந்து,
மூலமென்று ஓதாமுன்‌ – ஆதிமூலமே என்று கூப்பிடுவதற்குமுன்னே (கூப்பிட்டவுடனே),
ஓடி வந்து உதவும்‌ . புள்ளேறி மடுக்கரைக்கு) விரைந்துவந்து உதவிபுரிந்து அதனுயி ரைக்‌ காப்பாற்றிய, மாதவ ! -, சீதரா ! -,
நறை ஒழுக – தேன் ஓழுகும்படி,
மடல்முகை முறுக்கு அவிழ்ந்து – இதழோடுகூடிய மொக்கு கட்டுவிட்டுதெகிழ்ந்து,
அலரும்‌ – மலருகின்ற,
ஒரு நளினம்‌பொகுட்டு ஆசனம்‌ – ஒருதாமரையின்‌ கொட்டையாகிய பிடத்தின்‌,
நள்ளிடை பதிந்து – நடுவிடத்தில்‌ தங்கி,
பைந்தாது அளைந்து – பசிய மகரந்தங்களையுண்டு,
இசை பாடி – பண்ணிசைத்து,
நாகுஇளம்‌ பேடையோடும்‌ – மிக்கஇளமையினையுடைய (தனது) பெண்‌வண்டோடும்‌,
சிறைவண்டு கண்படுக்கும்‌ – சிறகுகளையுடைய ஆண்‌வண்டு (கவலையின்றி யின்பமாகத்‌) துயிலும்‌,
வழுதி நன்நாட -நல்ல பாண்டியநாட்டவனே !
சிறுபறை முழக்கியருள்‌ – : தென்‌ திருப்பேரை வரு நம்‌ குழைக்காதமுகில்‌ -, சிறுபறை முழக்கியருள்‌–;:

கம்பரும்‌*-இன்றுபோய்‌ போர்க்கு நாளைவா*’ என்றார்‌. (போரிடுவதாயின்‌ நாளைக்குவா ; சரணம்புகுவதாயின்‌ இக்கணமே சாலும்‌ *:என்பது
. சாரமானகருத்து.

———-

அண்டபகி ரண்டமு மதிர்ந்துகுல வரையெட்டும்‌
அசையாம லெண்டிசைதொறும்‌
அளிகவுள கம்பக்‌ கடாக்களிறு நிலைபெயர்த்‌
தடிச்சுவ டெடுத்திடாமற்‌
கொண்டவட வைக்கனற்‌ கண்பிதுங்‌ கக்கொடுங்‌
கோளரா முடியிற்படங்‌
குலுங்காம லாமைநெடு முதுகுகுளுக்‌ காவண்ட
கோளகையின்‌ முகடுவெடியா
விண்டட வு தாரகைக்‌ குலமடங்‌ கலுமண்ணில்‌
வீழாம லுயாசெழும்‌ பொன்‌
மேருகிரி சாயாம லோடியிரு கரைதோறும்‌
வெண்ணிலா வுமிழுமுத்தந்‌
தெண்‌ டிரை சுருட்டுபொரு னாநதி நெடுந்துறைவ !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–88-

அண்ட பகிரண்டமும்‌ அதிர்ந்து . இந்த உலகமும்‌ புறவுலகங்களும்‌ அதிர்ச்சி யடைந்து நடுங்கி,
குலவரை எட்டும்‌ அசையாமல்‌ அஷ்டகுலபர்வதங்களும்‌ நடுக்கமுறாமல்‌,
எண் திசை தொறும்‌ . எட்டுத்திக்குக்களிலுமுள்ள,
அளிகவுள – வண்டுகள்‌ மொய்க்கின்ற கன்னத்தையுடைய,
கம்பம்‌ கடாம்‌ களிறு – கட்டுத்தறிகளில்‌ கட்டப்படுகின்ற மதஜலம்‌ பெருக்குகின்ற ஆண்‌ யானைகள்‌ (அட்டதிக்குக்கஜங்கள்‌),
நிலை பெயர்ந்து – தாங்கள்‌ நிலை பெற்றுத்தங்கியுள்ள திக்கினிடங்களிலிருந்து மாறி,
அடிச்சுவடு எடுத்திடாமல்‌ – (தங்கள்‌) கால்களைப்‌ பெயர்த்து வைக்காமல்‌ ;
கொடும்‌ கோள்‌ அரா – கொடிய பற்றுந்‌தன்மையுள்ள பாம்பாகிய ஆதிசேடன்‌,
கொண்ட – கொண்டுள்ள,
வடவைக்கனல்‌ கண்‌ பிதுங்க – வடவாமுகாக்னிபோன்று சொலிக்‌ கின்ற கண்கள்‌ வெளிவரும்படி,
முடியில்‌ படம்‌ குலுங்காமல்‌ -தலையிலுள்ள படங்கள்‌ நடுங்காமல்‌,
ஆமை நெடு முதுகு குலுக்‌கா(மல்‌) – மகாகூர்மத்தின்‌ பெரிய முதுகு அசைந்து குலுங்காமல்‌,
அண்டகோளகையின்‌ முகடு வெடியா(மல்‌) உலகவுருண்டையின்‌ மேலுச்சி பிளவுபடாமல்‌,
விண்தடவு தாரகைக்குலம்‌ அடங்கலும்‌ மண்ணில்‌ வீழாமல்‌ – ஆகாயத்திலுள்ள நட்சத்திரக்‌ கூட்டமனைத்‌ தும்‌ (உதிர்ந்து) பூவுலகில்‌ தரையின்மேல்‌ விழாமல்‌,
உயர்‌ செழும்‌ பொன்‌ மேருகிரி சாயாமல்‌ .- ஓங்கியுள்ள சிறந்த பொன்மலையாகிய மேரு சாய்ந்து போகாமல்‌,(இருக்கும்படி சிறு பறைமுழக்கியருள்‌ எனப்பொருள்‌ முடிக்கவும்‌).
இரு கரைதோறும்‌ வெண்‌ நிலா உமிழும்‌ முத்தம்‌ – இரண்டுகரைகளிலும்‌ வெள்ளிய சந்திரன்‌ வெளியிட்ட முத்துக்களை,
தெண்திரை ஓடி சுருட்டும்‌-தெள்ளிய அலைகள்‌ (கரையின்‌ மேல்‌) பாய்ந்து ஓடிச் சுருளப் புரட்டி வரும்‌,
பொருனா நதி – தாமிரபரணி நதியின்‌,
நெடும்‌ துறைவ |! – பெரிய நீர்த் துறைகளுக்குத்‌ தலைவனே !
சிறுபறை முழக்கியருள்‌–: தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌ –, சிறுபறை முழக்கியருள்‌ –

அஷ்டகுல பர்வதம்‌– இமயம்‌, மந்தரம்‌, கைலாசம்‌, விந்தியம்‌, நிடதம்‌, ஏம கூடம்‌, நீலம்‌, கந்தமாதனம்‌ என்பன.

ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும்‌ பூங்கார்‌ அரவு” என்றார்‌ திருமழிசைப்பிரானும்‌. (நான்முகன்‌ : திரு : 19).

————-

கங்கா நதிச்செழும்‌ புனல்யமுனை சரசோதி
கற்புரச்‌ சுவைமணக்குங்‌
காவிரி யென த்தேவர்‌ வடியிட்ட வமுதேகக்‌
கமழுந்‌ திரைப்பொருநையும்‌
மங்காத சதுமறைக்‌ குரியவேள்‌ வியும்விழா :
வணியுமக வொலியுநாளும்‌
வளமைபெறு குலநாத! பரமபத வீடாள!
வயல்கடொறும்‌ வாய்மடைதொறுஞ்‌
சங்கார வாரஞ்செய்‌ தகடுளைந்‌ தலறித்‌
தவழ்ந்தேறி முத்துயிர்க்குந்‌
தண்ணந்‌ தடந்தா மரைப்பொகுட்‌ டாசனத்‌
தமனியப்‌ பொற்கோவிலிற்‌
செங்கா லனந்துயிலும்‌ வழுதிவள நன்ளுட!
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமூகில்‌!
சிறுபறை முழக்கிடருளே. –89-

தேவர்‌ வடியிட்ட அமுது – தேவர்கள்‌ வடித்தெடுத்த அமிருதம்‌.
கங்காநதி (என) – கங்காநதியாகவும்‌,
செழும்புனல்‌ யமுனை (என) செழித்த நீரையுடைய யமுனை நதியாகவும்‌,
சரசோதி(என) – சரசுவதி நதியாகவும்‌,
கற்பூரச்‌ சுவை மணக்கும்‌ காவிரி என . கற்பூரவாசனை வீசும்‌ காவீரி நதியாகவும்‌,
ஏக – பெருக்கெடுத்‌ துப்போக, (அவ்வமுதின்‌ மணம்‌)
கமழும்‌ – பரிமளிக்கும்‌,
திரைப்‌ பொருநையும்‌- அலை வீசும்‌ தாமிரபரணியாறும்‌,
மங்காத சதுமறைக்‌ குரிய வேள்வியும்‌ – பெருமை குறையாத நான்கு வேதங்கட்கும்‌ உரித்தாய யஜ்ஞங்களும்‌,
விழா அணியும்‌ – விழாக்கோலங்களும்‌,
மக ஒலியும்‌ – குழந்தைகளின்‌ விளையாட்டொலியும்‌,
நாளும்‌ வளமை பெறு குலநாத! .. தினந்தோறும்‌ மாட்சிமை மிகும்படி செய்யும்‌ கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனே !
பரமபத வீடாள | _ பரமபதமாகிய மோட்சவீட்டிற்குரியவனே (சிறுபறை முழக்கியருள்‌ என மேல்‌ இயையும்‌),
வயல்கள்‌ தொறும்‌ – கழனிகளிலெல்லாம்‌,
மடைவாய்‌ தொறும்‌ – மடைத்தலைகளிலெல்லாம்‌,
சங்கு . [கருக்கொண்ட ] சங்குப்‌ பூச்சிகள்‌,
ஆரவாரம்‌ செய்து-பேரொலியெழுப்பி,
அகடு உளைந்து அலறி-வயிற்று வேதனையோடு கதறி,
தவழ்ந்து ஏறி-வரப்புகளில்‌ மெல்லநகர்ந்தேறி,
முத்து உயிர்க்கும்‌ – முத்துக்களை யீனும்‌ ;
(மற்றும்‌) தண்‌ அம்‌ தடம்‌ தாமரை பொகுட்டு ஆசனம்‌ .குளிர்ந்த அழகிய விசாலமான தாமரை மலரின்‌கொட்டையாகிய (நடுப்பகுதியாகிய) தவிசினை யுடைய,
பொன்‌ – இலஷ்மியின்‌,
தமனியம்‌ கோவிலில்‌ . பொன்‌போலிலங்கும்‌ உறையுளில்‌,
செங்கால்‌ அன்னம்‌ துயிலும்‌ – சிவந்த கால்களையுடைய அன்னப்‌ பறவைகள்‌,
துயிலும்‌ – (சுகமாகத்‌) தூங்‌கும்‌ ;
(அப்படிப்பட்ட) வழுதி வள நன்னாட! – வளப்பமுடைய பாண்டிய தாட்டுக்குத்‌ தலைவனே ! சிறுபறை முழக்கியருள்‌–:
தென்‌திருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌! –, சிறு பறை முழக்கி யருள்‌ –

கோவில்‌ என்றதாலே பொன்‌” இலக்குமியைக்காட்டும்‌ : அவள்‌ உறையுள்‌ பொற்றாமரையாகும்‌.–தமனியம்‌ – பொன்‌,

வேத வொலியும்‌ விழவொலியும்‌ பிள்ளைக்குழா விளையாட்‌ டொலியும்‌ அறாத்‌ திருப்பேரை”? என்றார்‌ நம்மாழ்வார்‌, (திருவாய்‌-7-3-1)

எங்கும்‌ எழுந்த நல்வேதத்‌ தொலி நின்றோங்கும்‌ தென்திருப்பேரை”? (7-8-4)

———–

நீறுபடு தவளவெண் பொடியாட வார்சடை
நெடுந்திரைக்‌ கங்கையாட
நிலவாட முகைமூறுக்‌ கவிழ்ந்தும்பை யாடவரன்‌
நின்றாட வமரராடப்‌
பாறுபடு நெட்டிலைச்‌ சுடர்வேல்‌ விடுங்கொடும்‌
படையிரா வணன்‌ மகுடமோர்‌
பத்துந்‌ தகர்ந்தாட வெம்பேய்‌ குறும்பேய்‌
பறந்தலை கவந்தமாடத்‌
தாறுபடு கதலிக்‌ கொழுங்கனி யுடைந்துவழி
சாறுமாங்‌ கனியினறவுந்
தருமுடப்‌ பலவீனற்‌ கனியுடைத்‌ துப்பெருகு
தண்ணறவு மாலைமண் டியே
சேறுபடு பள்ளவயல்‌ சூழ்வழுதி நாடனொரு
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ கா தமூகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–90-

நீறுபடு தவளம்‌ வெண்பொடி ஆட – திருநீறாகிய மிக வெண்மையான துகள்‌ மேலெழ,
வார்‌ சடை – நீண்ட சடை மேலுள்ள,
நெடும்‌ திரை கங்கை ஆட – பெரிய அலைகளை வீசும்‌ கங்கையாறு பெருக,
நிலவு ஆட – பிறைச்சந்திரன்‌ அசைய,
முறுக்கு அவிழ்ந்து தும்பை ஆட – கட்டவிழ்ந்து தும்பை மாலை அசைய, (இப்படியாக)
அரன்‌ நின்றாட – சிவபிரான்‌ அம்பலத்தில்‌ நின்று ஆடவும்‌,(நர்த்தனம்‌ புரியவும்‌),
அமரர்‌ ஆட – தேவர்கள்‌ ஆடவும்‌ (நடனமிடவும்‌),
பாறு படு – பருந்துகள்‌ (ஒட்டியுள்ளதசைகளையுண்ணத் )தொடர்கின்ற,
நெடு இலை சுடர்‌ வேல்‌ .. பெரிய இலை வடிவாயமைந்துள்ள ஒளிரும்‌ வேலாயுதத்தை
விடும்‌ – எறியும்‌,
கொடும்படை இராவணன்‌ – கொடிய சேனைகளையுடைய இராவணனது,
மகுடம்‌ ஓர்‌ பத்தும்‌ தகர்ந்து ஆட – கிரீடங்கள்‌ பத்தும்‌ உடைந்து கிதறி (த்தலைகள்‌) ஆடவும்‌ (தடுங்கவும்‌)
பறந்தலை -போர்க்களத்து,
வெம்பேய்‌ குறும்பேய்‌- கொடிய பெரிய பேயும்‌ சிறிய பேயும்‌,
கவந்தம்‌ ஆட – உடற்குறையோடு ஒருசேரக்‌ கூத்தாடவும்‌; (சிறுபறை முழக்கியருள்‌ என இயையும்‌),
படு தாறு – குலையாகவிருந்த,
கதலிக்கொழுங்கனி உடைந்து-வாழையின்‌ செழித்த பழங்கள்‌ விண்டு,
வழி சாறும்‌ – வழிகின்ற ரசமும்‌,
மாங்கனியின்‌ நறவும்‌-மாம்பழத்திலிருந்து வருகின்ற தேனும்‌,
குரு முடப்‌ பலவின்‌ – வளைத்து பலா மரத்திலுள்ள,
நல்‌ கனிஉடைத்து – நன்கு பழுத்த பழம்‌ பிளந்து,
பெருகு தண்நறவும்‌ -ஒழுகுகின்ற இனியதேனும்‌, (சேர்ந்து)
அலை மண்டி – அலையாகச்‌ செறிந்து,
சேறுபடு பன்ளம்‌ வயல்‌ – சேடையாகிற தாழ்நிலங்கள்‌,
சூழ்‌ – சுற்றியுள்ள –
வழுதி நாடன்‌! – பாண்டியநாட்டவனே ! ஓரு சிறுபறை முழக்கி யருள்‌ –:
தென்றிருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌ ! — சிறுபறை முழக்கி யருள்‌-

————

பொருதிரை யெறிசல ராசி யுடுக்கும்‌
புவனத்‌ திருமாதும்‌
பொங்கு சினந்தலை மண்ட வடுஞ்சமர்‌
புக்கெதிர்‌ வருவோர்செங்‌
குருதி படும்படி பொருது மணம்புணர்‌
கொற்றக்‌ குூலமாதுங்‌
கோதறு வண்புகழ்‌ சேரனுகூலக்‌
கோமள மாமாதும்‌
மருமலி சததள மண்டபமீது
மகிழ்ந்துறை பூமாதும்‌
வடகலை தென்கலை முழுதுமு ணர்ந்தசொன்்‌
மங்கையு நாடோறுந்
திருவுள மகிழ்தர வழுதிநன்‌ னாடா 1
சிறுபறை கொட்டுகவே
தென்பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.--91-

பொரு திரைஎறி சலராசி.மோதுகின்ற அலைகளை வீசுகின்ற கடலை,
உடுக்கும்‌ – ஆடையாகக்‌ சுற்றியிருக்கும்‌, புவனம்‌
திருமாதும்‌ பூதேவியும்‌;
பொங்கு சினம்‌ தலை மண்ட – கிளர்ந்தெழுகின்ற கோபம்‌ தலைக்கேற (மிகச்சினந்து)
அடும்‌ சமர்புக்கு – கொல்லுகின்ற போரிற்புகுந்து,
எதிர்வருவோர்‌ செங்குருதி படும்படி பொருது – எதிர்த்து வரும்‌ பகைவர்களின்‌ சிவந்த இரத்தம்‌ தரையில்‌ தோயும்‌படி போரிட்டுக்‌ கொன்று,
மணம்‌ புணர்‌ – வெற்றியைத்‌ தழுவுகின்ற,
கொற்றக்‌ குலமாதும்‌ . கொற்றவையும்‌ (துர்க்காதேவியும்‌);
கோது அறு வண்‌ புகழ்‌ சேர்‌ குற்றமற்ற வளமைபொருந்திய புகழைக்‌ கொடுத்து,
அனுகூலக் கோமள மாமாதும்‌ – நன்மை செய்யும்‌ அழகிய கீர்த்தி லக்ஷ்மியும்‌;
மரு மலி சத தளம்‌ மண்டபம்‌ மீது . வாசனை செறிந்த நூற்றிதழ் தாமரையாகிய அலங்காரப்‌ பந்தலில்‌,
மகிழ்ந்துறை பூமாதும்‌ – களிப்புற்று வாழும்‌ இலக்குமி தேவியும்‌;
வடகலை தென்கலை முழுதும்‌ உணர்ந்த சொல்மங்கையும்‌ –
வடமொழி தமிழ்மொழியிரண்டிலும்‌ உள்ள கலைகள்‌ முற்றும்‌ அறிந்த (கலைமகளாகிய) சரசுவதி தேவியும்‌,
நாள் தோறும்‌ – தினந்தோறும்‌,
திருவுளம்‌ மகிழ்தர – மனமகிழும்படி,
வழுதி நல்‌ நாடா? – பாண்‌டிய நாட்டுக்குத்‌ தலைவனே ! சிறுபறை கொட்டுக – சிறிய பறையை முழக்குவாயாக :
தென்பேரையில்வரு–, நம்‌ குலநாதா!– நம்கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனே !
சிறுபறை கொட்டுக -சிறிய பறையை முழக்குவாயாக;

*போர் மகளைக்‌ கலை மகளைப்‌ புகழ் மகளைத்‌ தழுவியகை பொறாமை கூரச்‌, சீர்மகளைத்‌ திரு மகளைத்‌
தழுவுவான்‌ உயிர் கொடுத்துப்‌ பழி கொண்ட பித்தா 7 “பின்னைப்‌ பார் மகளைத்‌ தழுவினையோ?”” என்ற விபீடணனின்‌ புலம்பலில்‌ இந்த : வழக்கினைக்‌ கம்பர்பெருமான்‌ அழகுறக்‌ காட்டியுள்ளார்‌,

———-

உழுதுழு திசைபயி லளியொரு கோடி
உதைந்து துதைந்தாட
ஒளிர்மடன்‌ முகையவிழ்‌ துளவணி மால்குரு
கூர னுவந்தோதும்‌
பழுதறு முதுதிரு வாய்மொழி நூல்செவி
பற்பல புகுநேயன்‌
பண்டுல கங்களை பயுண்டுபி னளவு
படுத்துந்‌ திருமாமால்‌
முழுமறை முறையிடு மிருசர ணாலயன்‌
மூரிக்‌ கவடூடு
முதுபுன லோடையு மகழியும்‌ வால்வளை
மொய்க்குங்‌ கழனியிலுஞ்‌
செழுமலர்‌ மணமலி வழுதிநன்‌ னாடா /
சிறுபறை கொட்டுகவே
அதன்‌ பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.–92-

உழுது உழுது-
(கால்களால்‌) கிண்டி கிண்டி,
இசை பயில்‌ – ரீங்காரஞ்‌ செய்கின்ற,
ஒரு கோடி அளி — மிகப்பலவாகிய வண்டுகள்‌.
துதைந்து – நெருங்கி,
உதைந்து – (கால்களால்‌) மிதித்து,
ஆட – அசைய, (அதனால்‌)
ஒளிர்‌ மடல்‌ முகை அவிழ்‌ துளவு – விளங்குகின்ற இதழோடு மொட்டுக்கள்‌ மலர்கின்ற திருத்துழாயை,
அணி . (மாலையாகத்‌) தரித்துள்ள,
மால்‌ -திருமாலும்‌ ;
குருகூரன்‌ – நம்மாழ்வார்‌,
உவந்து ஒதும்‌ – மகிழ்ந்து திருவாய்‌ மலர்ந்தருளிய,
பழுது அறு – குற்றமற்ற,
முது – பழமையான,
திருவாய்மொழிநூல்‌ . திருவாய்மொழிப்பாடல்கள்‌,
பற்பல செவி -பலருடைய காதுகளில்‌,
புகு – புகுதற்குக்‌ காரணமாகிய,
நேயன்‌ -நண்பனாகுபவனும்‌ ;
பண்டு . மகாபிரளய காலத்தில்‌,
உலகங்களை உண்டு – எல்லா வுலகங்களையும்‌ புசித்து,
பின்‌ – பிரளயம்‌ நீங்கிய பின்‌,
அளவு படுத்தும்‌ – (உமிழ்ந்து) சீர்‌ செய்து அமைக்கும்‌,
திருமாலால்‌ .. லக்ஷ்மீ நாராயணனணும்‌ ;
முழுமறை முறையிடும்‌ – பூர்ணமாயுள்ள வேதங்கள்‌ (கண்‌ டறிய முடியாது) ஓலமிடும்‌,
இரு சரணாலயன்‌ . உபய பாதங்களை யுடையவனும்‌ ;(ஆகிய **வழுதி நன்னாடா”” என மேலியையும்‌).
இனி)
மூரிக்‌ கவடு ஊடும்‌ – வலிய மரக்கிகாகளின்‌ நடுவிலும்‌,
முது புனல்‌ ஓடையும்‌ – பழைய நீரோடைகளிலும்‌,
அகழியும்‌ – அகழிகளிலும்‌,
வால்‌ வளை மொய்க்கும்‌ கழனியிலும்‌ – வெள்ளிய சங்குப்‌ பூச்சிகள்‌ நெருங்கியிருக்கும்‌ வயல்களிலும்‌,
செழு மலர்‌ மணம்‌ மலி – செழித்து [ ப்பூத்துள்ள ] மலர்கள்‌ வாசனையை மிகுதியாக வீசுகின்ற,
வழுதி நல்‌ நாடா . பாண்டிய தாட்டுக்குத்‌ தலைவனே !சிறு பறை கொட்டுக–;
தென்பேரையில்‌ வரு நம்‌ குல நாதா–,சிறுபறை கொட்டுக–;

நேயன்‌ .. ஸுஹ்ருத்‌ என்றது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமமும்‌, “சுருதி நான்கும்‌ தேடுகின்ற பதம்‌‘” என்றார்‌ வில்லியும்‌.

———

புவனமு மண்ட கடாகமும்‌ வேலைப்‌
புணரித்‌ திசையெட்டும்‌
பொங்கழல்‌ கதுவிய கண்களி யானைப்‌
புகர்முக மலையெட்டுங்‌
குவடு படும்பொலன்‌ வடவரை முதலாங்‌
குலகிரி யோரெட்டுங்‌
கொடுவிட முடவுப்‌ பஃறலை மகுடக்‌
கோளர வோரெட்டுந்‌
தவமுனி வர்சுரர்‌ மகபதி முக்கட்‌
சடைமுடி யுடையோனுஞ்்‌
சதுமுக னறுமுக னொருகொம்‌ பேந்திய
தந்திமு கத்தோனுஞ்‌
செவிகுளி ரத்திரு வழுதிநன்‌ னாடா !
சிறுபறை கொட்டுகவே
தென்பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.–93-

புவனமும்‌ – நிலவுலகமும்‌,
அண்ட கடாகமும்‌ – அண்டகோளகையும்‌,
வேலைப்‌ புணரி திசையெட்டும்‌ . கரையையுடைய கடலொடு பட்ட எட்டுத்திக்குக்களும்‌,
குவடுபடும்‌ – சிகரங்களைக்‌ கொண்ட,
பொலன்‌ வடவரை முதலாம்‌ குலகிரி ஓர்‌ எட்டும்‌ -வடக்கிலுள்ள பொன்மலையாகிய மேருமலை முதலாகிய சிறந்த எட்டு மலைகளும்‌,
பொங்கு அழல்‌ கதுவிய கண்கள்‌ – கிளர்ந்‌தெழும்‌ நெருப்புப்‌ பற்றியது போலச்‌ (சினத்தினால்‌) சிவந்த கண்‌களையுடைய,
புகர்‌ முக மலை – புள்ளிகளோடு கூடிய நெற்றியைக்‌ கொண்ட மலை போன்றுள்ள.
யானை எட்டும்‌ – அட்டதிக்குக்கஜங்‌களும்‌,
கொடு விடம்‌ – கொடிய விஷத்தையும்‌,
முடவு – வளைந்த,
பல்‌ தலை மகுடம்‌ – பல தலைகளையுடைய உச்சியையும்‌ கொண்ட,
கோள்‌ அரா ஓர்‌ எட்டும்‌ – பற்றுந்தன்மையுள்ள அட்டமாநாகங்‌ களும்‌, (மற்றும்‌)
தவமுனிவர்‌ – தவவிருடிகளும்‌,
சுரர்‌ – தேவர்‌களும்‌,
மகபதி – இந்திரனும்‌,
முக்கண்‌ சடைமுடி உடையோனும்‌ – மூன்றுகண்களையும்‌ சடைமுடியையும்‌ கொண்ட சிவபெருமானும்‌ ,
சதுமுகன்‌ – நான்கு முகங்ககாக்‌ கொண்ட பிரமனும்‌,
அறுமுகன்‌ -ஆறு முகங்களைக்‌ கொண்ட முருகனும்‌,
ஒரு கொம்பு ஏந்திய தறந்திமுகத்தோணும்‌ . ஒற்றைக்‌ கொம்பினடைய யானைமுகளனாகிய விநாயகனும்‌,
செவி குளிர – காதுகள்‌ (கேட்டு) இன்புறும்படி,
திருவழுதி நல்‌ நாடா — சிறு பறை கொட்டுக — :
தென்பேரை யில்‌ வரு நம்‌ குலநாதா –, சிறு பறை கொட்டுக–

அட்டதிக்கும்‌ கஜங்களும்‌ – கிழக்கில்‌ ஐராவதம்‌, தென்கிழக்கில்‌ புண்டரீகம்‌, தெற்கில்‌ வாமனம்‌,
தென்‌ மேற்கில்‌ குமுதம்‌, மேற்கில்‌ அஞ்சனம்‌, வடமேற்கில்‌ புட்பதந்தம்‌, வடக்கில்‌ சார்வபெளமம்‌ , வடகிழக்கில்‌ சுப்பிரதீகம்‌ என்பன.

அவற்றின்‌ பிடிகள்‌ — இந்த அட்டதிக்கஜங்‌களின்‌ துணைவியான பிடிகள்‌ முறையே அப்பிரமை, கபிலை, பிங்களை,
அனுபமை, தாமிரபருணி; சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி என்பன.

அட்டதிக்குப்பாலகர்‌ – முறையே இந்திரன்‌, அக்கினி, யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌ என்பவர்‌.
குலகிரிஎட்டு :- இம௰ம்‌, மந்தரம்‌, கைலாசம்‌, விந்தியம்‌, நிடதம்‌, ஏமகூடம்‌, நீலம்‌, கந்தமாதனம்‌ என்பன,

அட்டமா நாகங்கள்‌ – வாசுகி, அனந்தன்‌, தக்கன்‌, சங்கபாலன்‌, குளிகன்‌, பதுமன்‌, மகாபதுமன்‌, கார்க்கோடகன்‌ என்பன.

———

அளிசகற்‌ றியதண்‌ டலப்பொதியத்‌
தஞ்சா ரவிற்பைங்‌ கிழங்கெடுக்கும்‌
அம்பொற்‌ குழியில்‌ சுடர்விரிக்கு
மங்கால்‌ வயிரங்‌ கிடந்திமைப்பத்‌
துளிபட்‌ டொழுகும்‌ வரையருவி
சுழிக்குற்‌ தொறும்பொன்‌ னொழுக்கெறியச்‌
சுவையூற்‌ நிருக்கும்‌ புனுற்பொருதை
சுருட்டுந்‌ திரைசெம்‌ மணிகொழிப்பத்‌
தளைவிட்‌ டலரும்‌ பசும்பாளைத்‌
தலைப்பூங்‌ கமுக மணிமிடற்றுத்‌
தாங்கும்‌ பவளக்‌ குலைகவிப்பத்‌
தடஞ்சால்‌ வழியூர்ந்‌ தகடுகந்து
வளைமுத்‌ துதிர்க்கும்‌ வயற்பேரை
மாலே ! சிறுபறை கொட்டுகவே
வருணன்‌ பரவு மிருசரண
மாலே ! சிறுபறை கொட்டுகவே.--94-

அளி சுற்றிய தண்‌ தலம்‌ பொதியத்து ௮ம்‌ சாரலில்‌-வண்டுகள்‌ சுழலும்‌ : குளிர்ந்த சோலையிடங்களைக்‌ கொண்ட பொதியமலையின்‌ அழகிய பக்கங்களில்‌,
பைங்‌ கிழங்கு எடுக்கும்‌ அம்‌ பொன்‌ குழியில்‌ . பசிய [வள்ளிபோன்ற] கிழங்குகளைக்‌ கல்லி யெடுக்கின்ற அழகிய குழிகளில்‌,
௬டர்‌ விரிக்கும்‌ அம்‌ கால்‌ வயிரம்‌ கிடந்து இமைப்ப – ஒளியைப்‌ பரப்பும்‌ அழகிய கிரணங்களை யுடைய வயிரக்கற்கள்‌ கிடந்து பிராகாசிக்க,
துளிபட்டு ஒழுகும்‌ வரை அருவி – பாழை பெய்தலால்‌ பெருகும்‌ மலையருவி,
சுழிக்கும்‌ தொறும்‌ -சுழலிடும்போதெல்லாம்‌,
பொன்‌ ஒழுக்கு எறிய.–பொன்னை ஒழுகவிட்டாற்போல்‌ வீச;
சுவை ஊற்றிருக்கும்‌ புனல்‌ பொருநை – இனிய -: நீரூற்றுக்களைக்கொண்ட தாமிரபர்ணிததி
சுருட்டும்‌ திரை – மடித்துவீசும்‌ அலைகள்‌,
செம்மணி கொழிப்ப -சிவந்தரத்தினங்களைத்‌ தெள்ளியொதுக்க;
தளைவிட்டு அலரும்‌ பசும்‌பாளை . கட்டு நெகிழ்ந்து மலர்கின்ற பசிய பாளைகளை,
தலைபூங்‌கமூகம்‌ – உச்சியிற்கொண்டுள்ள இளைய கமுகமரங்கள்‌,
மணி மிடற்றுத்‌ தாங்கும்‌ பவளக்குலை – (தமது) அழகிய கழுத்திடத்துத்‌ தாங்கியுள்‌ள பவளம்போன்ற செவ்விய பாக்குக் குலைகளை,
கவிப்ப – வளையத்தொங்கவிட்டு மூட, (இங்ஙனம்‌ சிறப்புப்பெற்று மேலும்‌)
தடம்‌ சால்‌ வழி ஊர்ந்து – பெரிய கலப்பை சென்ற வழி
யிலேயே நகர்ந்து சென்று, (அதனால்‌)
அகடு உளைந்து – (கரக்‌கொண்டிருக்கும்‌) வயிறு நொந்து,
வளை . சங்குப்பூச்சிகள்‌,
முத்து உதிர்க்கும்‌ . (வெண்‌) முத்துக்களை ஈனும்‌,
வயல்‌ பேரை மாலே ! -கழனிகளைக் கொண்ட தென்திருப்பேரையில்‌ கோயில்கொண்டுள்ள
திருமாலே சிறுபறை கொட்டுக– ;:
வருணன்‌ பரவும்‌ இருசரணமாலே!– வருணபகவான்‌ தோத்தரிக்கின்ற உபய பாதங்களையுடைய
திருமாலே சிறுபறை கொட்டுக.

இச்செய்யுளில்‌, வயிரம்‌, பொன்‌, செம்மணி, பவளம்‌ முதலிய வந்துள்ள நயம்‌ காண்க,

——————-

சிறுதேர்ப்பருவம்‌

உரைக்குஞ்‌ சதுமா மறைதனக்கும்‌ ©
– உயர்வா னவர்க்கு மெட்டாத
உண்மைப்‌ பொருளே ! கன்றொடுகுன்‌
_ றுருகும்‌ படிவேய்ங்‌ குழலூதி
நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌
நீலப்‌ புயலே 1! போரேறே
நிலமா சமரா டிடுங்கொடிய
நிருதர்‌ குலத்துக்‌ கொருகூற்றே !
வரைச்சந்‌ தகிலுஞ்‌ செம்மணியும்‌
மதவா ரணக்கிம்‌ புரிமருப்பும்‌
மயிற்பீ லியும்வெண்‌ ணித்திலமும்‌
வாரிச்‌ சுருட்டிக்‌ கரைபொருது
திரைக்குந்‌ திரைத்தண்‌ பொருநைநதிச்‌
| செல்வா ! தடந்தே ர௬ுருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ நடந்தே ருருட்டுகவே.–95-

உரைக்கும்‌ சதுமாமறைதனக்கும்‌ – ஓதுகின்ற நால்‌ வேதங்களுக்கும்‌,
உயர்‌ வானவர்க்கும்‌ . மேலான தேவர்களுக்கும்‌,
எட்டாத – காணமுடியாது
அப்பாற்பட்ட, உண்மைப்‌பொருளே ! – சத்தியமான பரம்பொருளே !
கன்றொடு – (தான்‌ மேய்க்கும்‌) பசுங்கன்றுகளோடு,
குன்று உருகும்படி-கற்களும்‌( இசைகேட்டு) மனமுருகி நெகிழும்படி,
வேய்ங்குழல்‌ ஊதி – புல்லாங்‌குழலை யிசைத்து,:
நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌ – பசுக்கூட்டங்‌களுக்குப்‌ பின்னே (அவற்றின்‌ வாலுருவி) நடந்துசெல்லும்‌,
நீலப்‌ புயலே – நீலமேகம்‌ போன்றவனே ,
போர்‌ ஏறே! போர்க்‌களத்துச்‌ சிங்கம்போன்றவனே !
நிமலா ! – தோஷமற்றவனே
சமர்‌ ஆடிடும்‌ – போரிடுகின்ற
கொடிய நிருதர்‌ குலத்துக்கு -கொடிய அரக்கரின த்திற்கு,
ஒரு கூற்றே | – ஓப்பற்ற காலனே |
வரை சுந்து அகிலும்‌ – மலையிடத்துள்ள சந்தனக்‌கட்டையினையும்‌ அகிற்கட்டையினையும்‌,
செம்‌ மணியும்‌ . சிவந்த இரத்தினங்‌களையும்‌,
மத வாரணம்‌ கிம்புரி மருப்பும்‌ – மதயானை களின்‌ பூணிட்ட தந்தங்களையும்‌,
மயில்‌ பீலியும்‌ – மயிற்றோகையின்‌ இறகு களையும்‌,
வெள்‌ நித்திலமும்‌ – வெண்மையான முத்துக்களையும்‌,
வாரிச்சுருட்டி – (பாயும்‌ வழியில்‌) வாரிக்கொண்டு சுருட்டிவந்து,
கரை பொருது . கரைகளில்‌ மோதி,
திரைக்கும்‌ – நுரைத்திடும்‌,
திரை தண்‌ பொருநை நதி .. அலைகளையுடைய குளிர்ந்த தாமிர பர்ணியாற்றின்‌,
செல்வா !–, தடம்‌ தேர்‌ . அகலமான தேரை,உருட்டுக -உருட்டுவாயாக ;
தென்பேரையின்‌ நம்‌ குல நாதா -தென்‌பேரையிலெழுந்தருளியுள்ள எங்கள்‌ குலத்தலைவனே !
செம்‌ பொன்‌ தடம்‌ தேர்‌ – சிவந்த பொன்னினாலாகிய அகலமான தேரை,
உருட்டுக – உருட்டுவாயாக ;

*நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌? என்றவிடத்து, “காலடி தோவக் கன்றின் பின்‌, கொடியேன்‌ என் பிள்ளையைப்‌ போக்கினேன்‌”? என்ற பெரியாழ்வார்‌ வாக்கு நினைக, (:3-2-9),

——–

உருவா யுயிரா யுணர்வாகி
உள்ளும்‌ புறனு முளனாகி
உரைக்குஞ்‌ சமய மாநினுக்கும்‌
ஒன்று பலவு மாயடங்கி
அருவாய்‌ நிறையு நின்‌ பெருமை
யார்க்குந்‌ தெரிய வசமன்றே
ஆழிப்‌ புயலே ! யருட்கடலே !
அரி ! கே சவ! சீ தர ! முகுந்தா !
மருவார்‌ பொழிலிற்‌ கேணியில்வாய்‌
மடையிற்‌ சுழியிற்‌ படுவரம்பில்‌
வளைமுத்‌ துயிர்க்குந்‌ திருவழுதி
வள நாட்‌ டுறையெம்‌ பெருமாளே 7/7
தெருவீ தியினூற்‌ றெண்மர்தொழச்‌
செம்பொற்‌ நடந்தே ர௬ுருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே.--96-

உருவாய்‌ உயிராய்‌ உணர்வாகி – உடம்புடையனவாய்‌ உயிருடையனவாய்‌ உணர்வுடையனவாய்‌ இருக்கும்‌ பொருள்களனைத்துமாகி,
(அவற்றுள்‌ ) உள்ளும்‌ புறனும்‌ உளனாகி-
உள்ளுக்குள்ளும்‌ வெளியிலும்‌ இருப்பவனாகி, (மேலும்‌)
உரைக்கும்‌ சமயம்‌ ஆறினுக்கும்‌ – (சிறப்பித்துப்‌) பேசப்படும்‌ ஆறு மதங்களுக்‌கும்‌,
ஒன்றும்‌ பலவும்‌ ஆய்‌ அடங்கி – (பொதுப்பட்ட) ஓரே தெய்வமாய்‌ ஏகனாகியும்‌ (அதற்கு ஏற்ற வடிவினனாய்ப்‌)பல தெய்வமாகியும்‌ அனைத்திலும்‌ தங்கி,
(மற்றும்‌) அருவாய்‌ . கண்ணுக்குப்‌ புலப்படாத உருக்கரந்த அந்தர்யாமியாய்‌,
நிறையும்‌ – (யாண்டும்‌நீக்கமற) நிறைந்திருக்கும்‌,
நின்‌ பெருமை – உன்னுடைய மேன்மை,
யார்க்கும்‌ தெரிய வசமன்று .. எவர்க்கும்‌ (அளவிட்டு) அறியும்‌ தரத்ததன்று :
ஆழிப்புயலே ! – (பாற்‌) கடலிலுள்ள மேகமே !
அருள்‌ கடலே – கருணா சமுத்திரமே
அரி! ஹரியே,
கேசவ- கேசவனே ,
சீதர – சீதரனே |,
முகுந்தா | – முகுந்தனே
மரு ஆர்‌ பொழிலில்‌ – வாசனை நிறைந்த சோலைகளிலும்‌,
கேணியில்‌ – கிணறுகளிலும்‌,
வாய்மடையில்‌ – மடைத்தலைகளிலும்‌,
சுழியில்‌ – நீர்ச்சுழியிடங்களிலும்‌,
படுவரம்பில்‌ – இருக்கின்ற வரப்புக்‌களிலும்‌,
வளை – சங்குப்பூச்சிகள்‌,
முத்து உயிர்க்கும்‌ – முத்துக்களை யீனுகின்ற,
திருவழுதிவள நாட்டு – பாண்டியநாட்டில்‌, உறை நித்யவாசஞ்செய்கின்ற,
எம்‌ பெருமாளே .- எங்கள்‌ இறையவனே !
தெருவீதியில்‌ – பெரியதெருவழியே,
நூற்றெண்மர்‌ தொழ -ஜைமீநீயதலவகாரசாம வேதிகள்‌ நூற்றெட்டுப்பேரும்‌ (கண்டு)தொழும்படி,
செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–: தென்பேரை யில்‌ நம்‌ குலநாதா –, செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக-

“உருவாய்‌ உயிராய்‌ உணர்வாகி உள்ளும்‌ புறனும்‌ உளனுகி‘” என்னுமிடத்து
திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப்‌,படர்‌ பொருண்முழுவதுமாய்‌ அவையவைதொறும்‌, உடன்மிசையுயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்‌ துளன்‌?”’ என்னும்‌ பாசுரத்தின்‌ விசேஷார்த்தங்கள்‌

உள்ளேயிருப்பதற்கு உடலுக்குள்‌ உயிரிருப்பதும்‌, வெளிப்பட்டும்‌ இருப்பதற்கு உயிரில்‌ உணர்வு இருப்பதும்‌ எடுத்‌துக்காட்டுகளாகும்‌.

கம்பர் பெருமானும்‌ :*ஊனுமுயிரும்‌ உணர்வும்‌ போலுள்ளும்‌ புறனுமுளனென்ப”? என்றார்‌.

*ஓன்‌றெனப்‌ பலவென வறிவரும்‌ வடிவினுள்நின்ற நன்றெழில்‌ நாரணன்‌”? எனறு நம்மாழ்வார்‌

கம்பர்பெருமானும்‌ :“’ஒன்றேயென்னின்‌ ஒன்றேயாம்‌ பலவென்்‌ றுரைக்கிற்‌பலவேயாம்‌”” என்றார்‌.

அருவாய்‌ நிறையும்‌”* என்றவிடத்து உளனலனெனில்‌ அவனருவம்‌ இவ்வருவுகள்‌’*? எண்ற நம்மாழ்வார்‌பாசுரம்‌

கேசவன்‌ – பிரமனையும்‌ உருத்திரனையும்‌ தன்‌ அங்கத்திற்கொண்டவனென்று பொருள்படும்‌ : க- பிரமன்‌, ஈச – சிவன்‌ : ““பிறைதங்கு சடையானை வலத்தேவைத்துப்‌ பிரம னைத்தன்னுந்தியிலே தோற்றுவித்து”’என்ரார்‌ திருமங்கையாழ்வாரும்‌.
இனி இதற்கு- அழகிய மயிர்முடியையுடையவனென்றும்‌, கேசியென்‌ னும்‌ அசுரனைக்கொன்றவனென்றும்‌ பொருள்கள்‌ உண்டு,

———–

மேல்பால்‌ முளைக்கும்‌ பிறையெயிற்று
வெங்கட்‌ கொடிய நிருதர்குழாம்‌
வெல்லுந்‌ தடக்கைச்‌ சிலையிராமன்‌ 1
விரிதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
பாலா டரவிற்‌ கண்டுயிலும்‌
பசுந்தார்க்‌ குழகன்‌ 1! கஞ்சன்விடு
பாரச்‌ சகடு மருதுமொடி
படத்தா னெரிக்கு மொருமுகுந்தண்‌ !
கால்வாய்ப்‌ புனலிற்‌ கேணியினிற்‌
கழுநீர்க்‌ குழியில்‌ வாய்மடையிற்‌
கருஞ்சேற்‌ றினினல்‌ லருங்கயத்திற்‌
கழம்பூந்‌ துறையில்‌ வெகுண்டெழுந்து
சேல்பாய்‌ வழுதித்‌ திருநாடா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே.–97-

மேல்பால்‌ முளைக்கும்‌ -மேற்குத்திக்கில்‌ தோன்றுகின்ற,
பிறை எயிறு – பிறைச்சந்திரன்போல்‌ வளைந்த கூரிய பற்‌களையும்‌,
வெங்கண்‌ – (கோபத்தினால்‌) சிவந்த கண்களையும்‌உடைய,
கொடிய நிருதர்குழாம்‌ – கொடிய அரக்கர்கூட்டத்தை,
வெல்லும்‌ தட கை சிலை இராமன்‌ ! – செயித்த பெரிய கைகளில்‌ வில்லைப்பிடித்த இராமபிரானே ,
விரி தெள்‌ திரைநீர்‌ கடல்‌ முகட்‌டின்பால்‌ – பரந்த தெளிந்த அலைகள் வீசும்‌ திருப்பாற்கடலின்‌ மேலிடத்து,
ஆடு அரவில்‌ கண்‌ துயிலும்‌ . படமெடுத்தாடுகின்ற ஆதிசேடனாகிய பாம்பின்மேல்‌ பள்ளிகொண்டு யோகநித்திரை செய்யும்‌,
பசும்‌ தார்‌ குழகன்‌ ! .. பச்சைத்திருத்துழாய்‌ மாலையைத்‌ தரித்த அழகனே;
கஞ்சன்‌ விடு பாரம்‌ சகடும்‌ – கம்சனாகிய மாமன்‌ (தன்னைக்‌ கொல்லுமாறு) நிறுவிய பெருத்த வலிய வண்‌டியையும்‌,
மருதும்‌ . [நாரத முனிவன்‌ சாபத்தால்‌ குபேரபுத்திரர்‌ இருவர்‌ மாறிய] இரட்டை மருத மரங்களையும்‌,
ஓடிபட – முறிந்து விழும்படி,
எரிக்கும்‌ – [அடியோடு] அழித்த,
ஒரு முகுந்தன்‌ -ஒப்பற்ற முகுந்தனே !
கால்வாய்‌ புனலில்‌ – வாய்க்கால்‌ நீரிலும்‌,
கேணியினில்‌ – கிணறுகளிலும்‌,
கழுநீர்க்குழியில்‌ – செங்கழுநீர்பூத்த பள்ளங்களிலும்‌,
வாய்மடையில்‌ – மடைவாயிடங்களிலும்‌,
கரும்‌ சேற்றினில்‌ – கரிய சேற்றிடங்களிலும்‌,
நல்‌ அரும்‌ கயத்தில்‌ – நல்ல சிறந்த குளங்‌களிலும்‌,
கமழ்‌ பூந்துறையில்‌ – பரிமளிக்கின்ற பூக்கள்‌ நிறைந்த நீர்த்துறைகளிலும்‌,
சேல்‌ – சேல்மீன்கள்‌,
வெகுண்டு எழுந்து பாய்‌.சினந்து மேலெழுந்து தாவிப் பாய்கின்ற
வழுதித் திருநாடா -பாண்டியநாட்டிற்குரியவனே , செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–
தென்பேரையில்‌ நம்‌ குலநாதா –!, செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்‌.டுக–;

——————-

தந்தா னெனக்கு வரமிரண்டு
தலைநா ளுரைத்த சொற்படிக்குன்‌
தகப்பன்‌ புரந்த முறைதருமத்‌
தழைப்ப வொருகோ லோச்சியெங்கும்‌
நந்தா வளமைப்‌ பரதனிந்த
நாடா Ghost காடாள
நடவென்‌ றுரைத்த சிற்றவைசொல்‌
நலமேற்‌ றலைக்கொண் டொருப்பட்டு
கொந்தார்‌ குழலி சனகியொடுங்‌
கூடப்‌ பிறந்த விளவலொடுங்்‌
கொதிக்கும்‌ பரல்வெங்‌ கொடுங்கானங்்‌
குறுகும்‌ பொழுதுங்‌ குளிர்ந்தலர்ந்த
செந்தா மரைப்பொற்‌ நிருமுகத்துச்‌
செல்வா 1! தடந்தே ருருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ௬ுருட்டுகவே.--98-

“தலைநாள்‌ உரைத்த சொற்படிக்கு – முன்‌ னொருதாள்‌ சொன்ன சொல்தவருதபடியிருக்க,
உன்‌ தகப்பன்‌ – உனது தந்‌தை யாகிய தசரதன்‌,
எனக்கு இரண்டு வரம்‌ தந்தான்‌ – (கைகேயியாகிய) எனக்கு இருவரங்கள்‌ இப்போது தந்துள்ளான்‌ :
புரந்த-பாதுகாக்கப்‌பட வேண்டிய,
முறை – முறைமைப்படி,
தருமம்‌ தழைப்ப – அறம்‌ செழிக்கும்படி,
ஒரு கோல்‌ ஓச்சி . ஒப்பற்ற செங்கோலினைச்‌ செலுத்தி, எங்கும்‌ நந்தா வளமை இந்த நாடு – எவ்விடத்திலும்‌ ‘குறையாத வளப்பதை(ப்பெறும்படி)இந்தக்‌ கோசலதேசத்தை,
பரதன்‌ ஆளுவன்‌ – (என்மகன்‌) பரதன்‌ ஆட்சி புரிவான்‌.
நீ–, காடாள நட-காட்டிற்குச்‌ செல்வாய்‌””என்று உரைத்த
சிற்றவை சொல்‌-என்றுகூறிய சிறிய தாயாகிய கைகேயின்‌ கட்டளை வார்த்தைகளை,
நலம்‌-நன்மையுடையனவே, (என)
ஒருப்பட்டு – உடன்பட்டு,
தலை மேல்‌ கொண்டு – சிரசாவகித்து,
கொந்து ஆர்‌ குழலி சனகியொடும்‌ – பூங்கொத்துக்கள்‌ நிறைந்த கூந்தலையுடைய சீதாபிராட்டியோடும்‌,
கூடப்‌ பிறந்த இளவலொடும்‌ – தன்னுடன்‌ பிறந்த தம்பியாகிய இலக்குமணணோடும்‌,
பரல்‌ கொதிக்கும்‌ – பருக்கைக்கற்கள்‌ (வெப்‌பத்தால்‌) கொதிப்படைந்திருக்கும்‌,
வெம்‌ கொடும்‌ கானம்‌ -மிகக்‌கொடுமையான ஆரணியம்‌,
குறுகும்‌ பொழுதும்‌ – செல்லும்‌ போதும்‌
(கவலையின்றி), குளிர்ந்து அலர்ந்த செந்தாமரை பொன்‌ திருமுகத்‌துச்‌ செல்வா |– குளிர்ச்சியாயிருக்கும்படி மலர்ந்த செந்தாமரைப்‌ பூப்‌ போன்ற அழகிய திருமுக மண்டலத்தையுடைய செல்வனே?
தடம்‌ தேர்‌ உருட்டுக . அகன்ற தேரை உருட்டுவாயாக :
தென்‌பேரையில்‌ நம்‌ குலநாத! செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–

பொருந்தார்கை வேல்நுதிபோல்‌ பால்பாய மெல்லடிக்கள்‌ குருதி சோர, விரும்பாத கான்‌?” என்ற குலசேகரர்‌ கூற்றும்‌ நினைக,

அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா”?

——–

தருநீழ லிடையினிது வீற்றிருக்‌ கும்புரந்‌
தரனுமுனி வரருமுளரிச்‌
சதுமுகக்‌ கடவுளு முக்கட்‌ கொழுங்கனிச்‌
சடைமுடிச்‌ சிவனும்வெஞ்சூர்ப்‌ ‘
பொருகிரண வேலுடைய பரமன்மூுரு கேசனும்‌
புகர்முகத்‌ தவனுமதியும்‌
பொங்குளைப்‌ பச்சைப்‌ பசும்புரவி யேழ்கட்டு
பொற்றடந்‌ தேரிரவியும்‌
பெருவா சலிற்புக நெருக்குண்டு சந்நிதிப்‌
பேறுண்டு கிட்டுமென்றே
பிறங்குபொற்‌ கருடக்‌ கொடிக்கம்பம்‌ வலம்வந்து
பெருகவஞ்‌ சலிசெய்திடத்‌
திருமேனி மண்டபத்‌ தரசிருக்‌ குங்கடவுள்‌ !
சிறுதே ருருட்டியருளே
தென்‌ றிருப்‌ பேரைவரு நங்குவழக்‌ காதமுகில்‌ /
-சிறுதே ருருட்டியருளே.–99-

தரு நீழலிடை இனிது வீற்றிருக்கும்‌ புரந்தரனும்‌ –கற்பக விருட்சத்தின்‌ நிழலில்‌ இணனிமையாகத்‌ தங்கியிருக்கும்‌ தேவேந்திரனும்‌,
முனிவரரும்‌ – இருடிச்சிரேட்டர்களும்‌,
முளரிச்‌ சதுமுகக்‌ கடவுளும்‌ – (திருமாலின்‌ உந்தியாகிய) தாமரை மலரில்‌ எழுந்தருளியிருக்கின்ற நான்முகனும்‌,
முக்கண்‌ கொழும்கனி சடைமுடி சிவனும்‌ – மூன்று கண்களையும்‌ பழுத்தகனி போற்‌ சிவந்த சடைத்‌ தொகுதியையும்‌ உடைய சிவபெருமானும்‌,
வெஞ்‌ சூர்‌பொரு – கொடிய சூரபதுமனோடு போரிட்ட,
கிரண வேலுடைய-ஒளிவிடும்‌ சக்தி வேலையேந்திய,
பரமன்‌ முருகேசனும்‌ – மேலானவனாகிய கந்தனும்‌,
புகர்முகத்தவனும்‌ – யானை முகத்தவனாகிய விநாயகனும்‌,
மதியும்‌ – சந்திரனும்‌,
பொங்கு உளை பச்சைப்பசும்‌ புரவி – கிளர்ந்‌தெழுகின்ற பிடரிமயிரினையுடைய மிகுந்த பச்சை நிறமுடைய குதிரைகள்‌,
ஏழ்கட்டு-ஏழு கட்டப்பட்ட,
பொன்‌ தட தேர்‌ – அழகிய விசாலமான பெரியதேரினையுடைய,
இரவியும்‌ – சூரியனும்‌,
பெரு வாசலில்‌ புக – பெரிய கோபுரவாசல்‌ மூலம்‌ புகும்போது,
நெருக்‌குண்டு – நெருக்கப்பட்டு, (உட்புகுந்தபின்‌ )
*சந்நிதிப்‌ பேறு உண்டுகிட்டும்‌, – எம்பெருமான்‌ திருவோலக்கசேவை நிச்சயம்‌ கிடைக்கும்‌; என்று – என்று குதூகலித்து,
பிறங்கு பொன்‌ கருடக்கொடிக்‌ கம்பம்‌ வலம்‌ வந்து -விளங்குகின்ற பொன்னாலாகிய அழகிய கருடத்‌துவசம்‌ கொண்ட தம்பத்தைப்‌ பிரதட்சிணஞ்‌ செய்து,
பெருக அஞ்சலி செய்திட – பெருத்தகும்பீடு போடும்படி,
திருமேனி மண்டபத்து–திருமேனிமண்டபத்திலே,
அரசிருக்கும்‌ – வீறுடன்‌ கொலுவிலெழுந்தருளியிருக்கும்‌,
கடவுள்‌ – இறையவனே ;
சிறுதேர்‌ உருட்டியருள்‌ தென்திருப்பேரை வரு-: தென்திருப்பேரை நகரில்‌ வந்து கோயில்‌ கொண்டுள்ள,
நம்‌ குழைக்காத முகில்‌ – நம்‌ மகர நெடுங்குழைக்காதராகிய [நிகரில்‌] முகில்‌ வண்ணனே ! சிறுதேர்‌ உருட்டியருள்‌ ;

*நெருக்குண்டு’ என்ற விடத்து *உன்கோயிலின்‌ வாசல்‌ சுந்தரர்நெருக்க விச்சாதரர்‌ நூக்கஇயக்கரும்‌ மயங்கினர்‌” என்ற திருப்பள்ளியெழுச்சி ஒப்புக்‌ காண்க.
** நின்‌ கோயிலின்‌ வாசல்‌, அடியாரும்‌ வானவரும்‌ அரம்பையரும்‌ கிடந்தியங்கும்‌” என்றார்‌ குலசேகரரும்‌,

முருகேசன்‌ புககுமரதண்டம்புகுந்து” என்றார்‌ தொண்டரடிப்பொடியும்‌.

———-

அன்பாய்ப்‌ பணிந்து தினம்வருணன்‌
ஆரா தனைகொண்்‌ டருள்முகுந்தா !
அடியா ராசைப்‌ புரிமுறுக்கி.
அம்பொற்‌ கயிற்று வடம்பூட்டி
வன்பால்‌ விடுத்து நெகிழ்ந்தநெஞ்சம்‌
மணிவீ தீயினள்‌ ளிடை நினைந்து
வந்துத்‌ தியரா யிருமருங்கு
மகிழ்ந்து முறையே பிடித்திழுப்பப்‌
பொன்பாற்‌ பொருந்துஞ்‌ செழுந்திலதம்‌
புவனத்‌ திருவா ணுதற்றிலதம்‌
பொங்கிப்‌ பரந்த சலராசி
புடைசுற்‌ றியபூ லோகத்துத்‌
தென்பாற்‌ நிலத மெனும்‌ பேரைச்‌
செல்வா! தடந்தே ருருட்டுகவே
செழுந்தார்த்‌ துளவு மணங்கமழுந்‌்
தேவே/ தடந்தே ருருட்டுகவே.–100-

பொங்கி – கொந்தளித்து,
பரந்த . பரவிய,
சலராசி -சமுத்திரமானது,
புடைசுற்றிய – பக்கங்களில்‌ சூழ்ந்துள்ள,
பூலோகத்து – நிலவுலகத்து, !
பொன்பால்‌ – இலக்குமியிடத்து,
பொருந்தும்‌ – நெற்றியில்‌ இடப்‌பட்டிருக்கும்‌,
செழும்‌ திலதம்‌ – செவ்வியதிலகம்‌ (என்றும்‌))
புவனதிரு – பூதேவியின்‌,
வாள்‌ நுதல்‌ திலதம்‌ – ஒளியுள்ள நெற்றியில்‌ இடப்பட்டிருக்கும்‌ திலகம்‌ (என்றும்‌),
தென்பால்‌ – தெற்குத்திக்குக்கு,
திலகம்‌ எனும்‌”- திலகம்‌ என்றும்‌ சிறப்பிக்கப்படுகின்ற
பேரை -திருப்பேரை நகரின்‌, செல்வா–!,
வருணன்‌ – வருணபகவான்‌,
தினம்‌ – நாடோறும்‌,
அன்பாய்‌ பணிந்து-பக்தியோடு வணங்கி, (செய்யும்‌)
ஆராதனை-வழிபாட்டினை
கொண்டு அருள்‌ – ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்புரிகின்ற,
முகுந்தா–!
அடியார்‌ . (உன்‌) அடியவர்களாகிய நாங்கள்‌,
ஆசை புரி முறுக்கி – (எங்கள்‌) ஆர்வத்தைச்‌ சுருளாக முறுக்கி,
அம்‌ பொன்‌ கயிறு வடம்‌ பூட்டி – ( அதனை) அழகிய பொன்னாலாகிய கயிற்று வடமாகப் பூட்டி,
வன்பால்‌ விடுத்து . கடினமான முரட்டுத்‌ தனத்தைவிட்டு,
நெகிழ்ந்த நெஞ்சம்‌ – உருகிய மனத்தினால்‌,
மணிவீதியின்‌ நள்‌ இடை நினைந்துவந்து -அழகியதெருவின்‌ நடு விடத்தில்‌ (நீ தடந்தேதேரோடு வருதலை) எண்ணி வந்து,
உத்தியராய்‌ – இருதரப்பிலும்‌ நின்று உனக்குத்துணைவராய்‌,
இருமருங்கு –வலம்‌ இடமாகிய இருபக்கங்களிலும்‌ நின்று,
மகிழ்ந்து – சந்தோஷத்தோடு,
முறையே பிடித்து :
இழுப்ப – நேரேவரும்படி கயிற்றினைப்பிடித்து வலிக்குமாறு, தடம்‌ தேர்‌ உருட்டுக-:
செழும்‌ துளவுத்‌ தார்‌ மணம்‌ கமழும்‌ தேவே
தழைத்த திருத்துழாய்மாலை நறுமணம்‌ வீசும்‌ இறைவா!, தடம்‌ தேர்‌ உருட்டுக–;

திருமகள்‌ திலகம்‌, நிலமகள்‌ திலகம்‌, தென்திசைத்‌ திலகம்‌ என மூன்றும்‌ திருப்பேரைக்குச்சேர்ந்து அதன்பெருமையைச்‌ சிறப்பித்‌தது
இனி, திருமகள்‌ திலகம்‌, நிலமகள்‌ திலகம்‌ என்ற இரண்டும்‌ பொங்கி (பெருகி) ப்பூலோகத்துத்‌ தென்பால்‌ திருப்பேரைத்திலகமாய்‌ இலங்கிற்று என்னவுமாம்‌.

———

மத்தா லடிப்ப வுரல்மிதித்து
மலர்த்தாள்‌ குந்திட்‌ டுறியில்‌ வெண்ணெய்‌
வாரிக்‌ களவி னுண்டமணி |
வாயா ! பரம பதந்தனக்கோர்‌
வித்தா கவும்வந்‌ தங்குரிக்கும்‌
வேதப்‌ பொருளே ! யருட்கடலே |
விரை நா றியபூம்‌ பசுந்துளவ
மெய்யா ! பொருவெங்‌ கரிமருப்பு
முத்தோ டகிலுஞ்‌ :செம்மணியும்‌
மூரித்‌ திரைப்பாய்‌ சுருட்டிமிக
முழங்கூ டும்பு னற்றுறைவா !
முதுவா ளரக்கன்‌ றலைகள்பத்துங்‌
கொத்தோ டடிவந்‌ துறவாளி
தொடுத்தோய்‌ ! தடந்தே ௬ருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே ! தடந்தே ருருட்டுகவே.--101-

மத்தால்‌ அடிப்ப – (கோபியர்‌ கடையும்‌) மத்தினாலே யடி.ப்பவும்‌, (பொருட்படுத்தாது)
உரல்‌ மிதித்து – உரலின்‌மேலேறி,
மலர்த்தாள்‌. குந்திட்டு . காலைமடக்கிக்குந்தியுட்கார்ந்து கொண்டு,
உறியில்‌ வெண்ணெய்‌ – உறியில்‌ வைத்‌திருந்த வெண்ணெயை .
களவின்‌ வாரி உண்ட – திருடியளைந்து தின்ற,
மணி வாயா – அழகிய வாயையுடையவனே !
பரமபதம்‌ தனக்கு ஓர்‌ வித்தாகவும்‌ – மேலான வைகுந்தம்‌ தமக்கு ஒரு உற்‌பத்தி ஸ்தானமாகவும்‌, வந்து -(அவ்விடத்தினின்று) பாற்கடலுக்கு
எழுந்தருளி வந்து, அங்குரிக்கும்‌ – அவதரிக்கின்ற,
வேதப்‌பொருளே !–,
அருட்கடலே / – கருணாசமுத்திரமே !
பூம்‌ பசும்‌துளவ விரை நாறிய மெய்யா . பூத்த பச்சைத்‌துழாய்‌ வாசனை மணக்கும்‌ திருமேனியையுடையவனே !
பொரு . (ஒன்றோடொன்று)சண்டையிடுகின்ற,
வெம்‌ கரி மருப்பு முத்தோடு – கொடிய யானை களின்‌ தந்தங்களீன்ற முத்துக்களோடு,
அகிலும்‌ – அகிற்கட்டைகளையும்‌,
செம்‌ மணியும்‌ சிவந்த இரத்தினங்களையும்‌,
மூரித்‌ திரை-வலிய அலைகள்‌,
பாய்சுருட்டி – வீசிப்பாய்போலச்சுருட்டி,
மிகமுழங்கு – மிகவும்‌ சப்திக்கின்ற,
கூடும்புனல்துறைவா ! – “கூடுபுனற்‌றுறை’ என்ற திருமஞ்சனத் துறையையுடையவனே !
முது வாள்‌அரக்கன்‌ தலைகள்‌ பத்தும்‌ – பழையகொடிய இராவணனாுகிய இராட்சசனின்‌ பத்துத்தலைகளையும்‌, கொத்தோடு
அடி வந்து உற – ஒருசேரத்தொகுதியாக (க்குலைபோல்‌) தன்‌ அடியில் வந்து விழும்‌படி,
வாளி தொடுத்தோய்‌ ! – பிரமாத்திரத்தை விடுத்தவனே !
தடம்‌ தேர்‌ உருட்டுக– :
கொழிக்கும்‌ தமிழ்‌ – தெளிந்தெடுத்த தமிழ்‌ மொழி பயிலுகின்ற,
தென்திருப்பேரை – தென்‌ திருப்பேரையில்‌ கோயில்கொண்டுள்ள,
கோவே – மன்னனே ! தடம்‌ தேர்‌ உருட்‌ டுக–;

₹கூடுபுனல்‌ திருப்பேரையிற்கே என்‌னைக் காட்டுமின்கள்‌?” என்றார்‌ நம்மாழ்வாரும்‌ (7-3-6).

வாளரக்கன்‌ நீள்முடியைப்‌, பாதமத்தால்‌ எண்ணினான்‌ பண்பு” (முதல்‌ திருவந்‌ :45);

வாளரக்கன்‌ ஏய்ந்த முடிப்போது மூன்றேழென்‌ றெண்ணினான்‌, ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண்‌ “(மூன்றாந்‌ ;திரு : 77);

தண்டவரக்கன்‌ தலைதாளால்‌ — பண்டெண்ணிப்‌, போம்‌குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலை”? (நான்முகன்‌ : திருவந்‌ீ 44)

———–

புழைத்திண்‌ டிறற்கை மதசலதி
பொழியும்‌ பிறைக்கிம்‌ புரிக்கோட்டுப்‌
புகர்மா விடங்கர்க்‌ குடைந்துவெரீ இப்‌
புதுப்பூங்‌ கேணித்‌ தடம்புனனின்‌
ற்ழைக்கும்‌ புயலே ! நெட்டரவி
னாடுங்‌ குழகா ! வொருநாளும்‌
அறியாப்‌ பரம பதந்ததியர்க்‌
கருள்சீ தர1!மா தவ ! முகுந்தா !
மழைக்கொந்‌ தளகக்‌ குரும்பைமுலை
மதிவா ணுதற்சா னகிபொருட்டு
மதில்சூ ழிலங்கை யரக்கன்‌ மணி
மகுடஞ்‌ சிதறக்‌ கோதண்டங்்‌
குழைக்குந்‌ தடக்கை ரெகுராமா !
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே 1! தடந்தே ருருட்டுகவே.–102-

புழை திண்‌ திறல்‌ கை. துவாரமுள்ள திண்ணிய வலியதும்பிக்கையினையும்‌,
மத சலதி .. மதநீர்ப்பெருக்கை,
பொழியும்‌.மிகுதியாகச்‌ சொரியும்‌,
பிறை கிம்புரி கோடு – பிறைபோல்வளைந்து பூணிடப்பட்ட தந்தத்தினையும்‌ உடைய,
புகர்மா – யானையாகிய கஜேந்திரன்‌,
இடங்கர்க்கு உடைந்து – முதலைக்குத்தளர்ந்து,
வெரீஇ – அஞ்சி,
புது பூம்‌ கேணித்தடம்‌ புனல்‌ நின்று – புதிய
அழகிய உட்கிணற்றினைக்கொண்ட தடாகத்தின்‌ நீரில்‌நின்று
கொண்டு, அழைக்கும்‌ – ஆதிமூலமே என்று ஓலமிட்டு அழைத்த:
புயலே! – மேக வண்ணனே
நெடு அரவின்‌ ஆடும்‌ – பெரிய (காளியனென்னும்‌) பரம்பின்‌மேல்‌ நடித்த,
குழகா | – அழகனே ?
ஒரு நாளும்‌ அறியா பரமபதம்‌ – என்றைக்கும்‌ (இப்படித்தென்று) அறிய முடியாத மேலான வைகுந்தத்தை
ததியர்க்கு – அடியார்க்கு,
அருள்‌ – கொடுக்கின்ற,
சீதர – ஸ்ரீதரனே , மாதவ | -மாதவனே
முகுந்தா ! – முகுந்தனே !,
மழை கொந்து அளகம்‌ . மேகம்போற்‌கறுத்துத்‌ தொகுதியாகத் தழைத்த கூந்தலிளையும்‌,
குரும்பை முலை -தென்னங்குரும்பைபோற்‌ கொங்கைகளையும்‌,
மதிவாள்‌ நுதல்‌ -சந்திரனைப்போல்‌ ஒளிரும்‌ நெற்றியினையும்‌ உடைய,
சானகிபொருட்டு – சீதாபிராட்டியின்பொருட்டு,
மதில்‌ சூழ்‌ இலங்கை அரக்கன்‌ – மதில்களால்‌ சூழப்பட்ட இலங்கைத் தீவின்‌ அரசனாகியஅரக்கன்‌ இராவணனது,
மணி மகுடம்‌ சிதற- மணிகள்‌ பதித்த கிரீடங்கள்‌ சிதைவுற்றழிய,
கோதண்டம்‌ குழைக்கும்‌ – கோதண்ட மென்னும்‌ தமது வில்லை வளைக்கும்‌,
தட கை-பெரிய நீண்ட கைகளையுடைய,
ரெகுராமா – ரகுகுலதிலகனுகிய ராமா
கொடிஞ்சி தடம்‌ தேர்‌ – தேர்மொட்டினையுடைய அகலமான தேரை, உருட்‌டு௧ –
கொழிக்கும்‌ தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே ! –, தடம்‌ தேர்‌ உருட்டுக–;

*தமிழ்வேதம்‌ ததியர்பாட”” (அஷ்‌டப்ர : ஸ்ரீரங்கநாயகர்‌ ; ஊசல்‌ 6)

“சரணமாகுந்‌ தனதாளடைநீதார்க்கெல்லாம்‌, மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌”?என்றார்‌ நம்மாழ்வாரும்‌. (திருவாய்‌ : 9-10-5),

—-

வாலப்‌ பிறைவா ணுதன்‌ மடவார்‌
மலர்க்கை வளைாகை விழத்தொழுவோர்‌
மாறாப்‌ பிறவி வேரொடற
வானத்‌ தமரர்‌ களிகூரச்‌
சாலப்‌ பொரும்வா ளசுரர்படத்‌
தருமா கதர்கள்‌ கொண்டாடத்‌
தருமந்‌ தழையக்‌ கனகவிதைத்‌
தமிழ்நா வலவ ரீடேற
ஏலக்‌ குழல்சா னகிகழுத்தின்‌
இடுமங்‌ கலநாண்‌ வாழ்வேற
எக்கா லமுநூற்‌ றெண்மர்குழாம்‌
இதயத்‌ திருந்து மகிழ்கூர்ந்து
கோலத்‌ தெருவில்‌ விளையாடிக்‌ —
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே / தடந்தே ருருட்டுகவே.–103-

வாலம்‌ பிறை வாள்‌ நுதல்‌ மடவார்‌ . வெண்மையான பிறைச் சந்திரன் போல்‌ ஒளிருகின்ற நெற்றியினை யுடைய பெண்டிர்‌,
மலர்க்கை . தாமரைமலர்போன்ற கையிலணிந்துள்ள,
வளை கை விழ தொழுவோ – வளைகள்‌ முன்கையினின்று நழுவிவிழும்படி அஞ்சலிசெய்வோரது,
மாறா பிறவி வேரொடு அற. நீங்காது,–தொடரவருகின்ற பிறப்பும்‌ அடியோடு அறும்படியும்‌ ;
வானத்து அமரர்‌ களிகூர – தேவலோகத்துத்‌ தேவர்கள்‌ மகிழ்ச்சி மிகுதியாகக்‌ கொள்ளும்படியும்‌ ;
சால பொரும்‌ . மிகுதியாகப்போரைச்‌ செய்‌கின்ற,
வாள்‌ அசுரர்‌ பட… கொடிய அரக்கர்கள்‌ அழியும்படியும்‌ ;
தரு மாகதர்கள்‌ -தரு என்ற இசைப்பாட்டை
இருந்துபாடும்‌ துதி பாடகர்கள்‌, கொண்டாட – பாராட்டும்படியும்‌ ;
தருமம்‌ தழைய -அறம்‌ செழித்தோங்கும்படியும்‌ ;
கன கவிதை தமிழ்நாவலர்‌ -மேன்மைமிக்க கவிகளைப்பாடும்‌ தமிழ்ப்புலவர்கள்‌,
ஈடேற – பெருமைபெறும்படியும்‌ ;
ஏலம்‌ குழல்‌ சானகி – வாசனைச்சாந்து பூசப்பட்ட கூந்தலினையுடைய சீதாபிராட்டியின்‌,
கழுத்தின்‌ இடு மங்கல நாண்‌ – கழுத்தில்‌ தரித்த திருமாங்கல்யம்‌,
வாழ்வு ஏற – (என்றும்‌) மங்கள வாழ்ச்சி பெற்று யரும்படியும்‌ ;
(நீ) எக்காலமும்‌ – என்றென்‌றைக்கும்‌,
நூற்றெண்மர்‌ குழாம்‌ இதயத்து இருந்து – ஜைமிநீய தலவகாரசாமவேதிகள்‌ நூற்றெட்டுப்பேர்‌ உள்ளத்திலும்‌ (நீங்காது)கோயில்கொண்டிருந்து,
மகிழ்‌ கூர்ந்து – மகிழ்ச்சிமிக்கு,
கோலத்‌தெருவில்‌ விளையாடி – அழகிய நேர்த்தியான வீதியில்‌ விளையாடி,
கொடிஞ்சித்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–; கொழிக்கும்‌ தமிழ்‌ தென்‌திருப்பேரைக்கோவே !–, தடம்‌ தேர்‌ உருட்டுக -;

———-

மருவார்‌ நறுமென்‌ மலர்கொணர்ந்து
வழிபட்‌ டிருசே வடிசொரிந்து
மயங்கும்‌ புலன்க சேந்துமொன்றாய்‌
வருணன்‌ செயும்பூ சனையுவந்த
திருமா முகிலே ! தமிழ்க்குருகுஞ்‌
செல்வக்‌ குழகா ! பாட்டயர்ந்து
சிறைவண்‌ டலம்பிக்‌ கண்படுக்குஞ்‌
செழுந்தார்த்‌ துளவப்‌ புயமுகுந்தா !
அருநான்‌ மாறைநாற்‌ றெண்மரும்வநீ
தங்கீ கரித்து வடம்பிடிப்ப
அம்போ ருகப்பூந்‌ திருவுமு (ந்‌) நீர்‌
அவனித்‌ திருவு மருங்கிருப்பக்‌
குருமா மணிப்பொன்‌ மறுகினெடுங்‌
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே ! தடந்தே ர௬ுருட்டுகவே.--104-

மரு ஆர்‌ நறுமபென்‌ மலர்‌ கொணர்ந்து – வாசனை பொருந்திய மெல்லியபூக்களைக்‌ கொண்டுவந்து,
வழிபட்டு – பூசனைபுரிந்து,
சேவடி சொரிந்து – திருவடிகளில்‌ சமர்ப்பித்து,
மயங்கும்‌புலன்கள்‌ ஐந்தும்‌ ஒன்றாய்‌ … மருளச்செய்யும்‌ பஞ்சேந்திரியங்களும்‌ ஒருமுகமாக்கி (ஏகாக்கிரசித்தத்தோடு),
வருணன்‌ செயும்‌ பூசனை -வருணபகவான்‌ செய்கின்ற அர்ச்சனையை
உவந்த – மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும்‌,
திருமா முகிலே – இலக்குமியோடு கூடிய மேக வண்ணனே !
தமிழ்க்கு உருகும்‌ – (திருவாய்மொழி போன்ற) தமிழ்‌ வேதத்திற்கும்‌ ஏனைய திவ்ய பிரபந்தங்களுக்கும்‌ மனம் நெகிழும்‌,
செல்வக்‌ குழகா ! – சகல ஐசுவரியங்களையும்‌ கொண்ட அழகனே !
சிறை வண்டு – சிறகுகளையுடைய வண்டு,
அலம்பி – ஓலித்து,
பாட்டு அயர்ந்து – இசைப்பாட்டுக்களைப்பாடி,
கண்படுக்கும்‌ – (இனிது)உறங்கும்‌,
செழும்‌ துவளத்‌ தார்‌ புயம்‌ முகுந்தா – செழித்த திருத்‌ துழாய்மாலையைத்‌ தோளில்தரித்த முகுந்தனே
அரு நான்மறை நூற்றெண்மரும்‌ வந்து – (அறிதற்கரிய) நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணராகிய நூற்றெட்டுச்‌ சாமவேதிகளும்‌ ஒருசேரவந்து,
அங்கீகரித்து – மனமொருப்பட்டு,
வடம்‌ பிடிப்ப – தேர்வடத்தைப்பிடித்து இழுக்க,
அம்போருகம்‌ பூ திருவும்‌ – தாமரைமலரில்‌ எழுந்தருளியிருக்கின்ற இலக்குமியும்‌ (ஸ்ரீதேவியும்‌),
மூ (தீ) நீர்‌ அவனித்திருவும்‌ – கடலாற்சூழப்பட்ட பூமியின்‌ தேவி யும்‌ (பூதேவியும்‌),
மருங்கிருப்ப – இருபக்கத்திலும்‌ தங்கியிருப்ப,
குரு மா மணி பொன்‌ மறுகில்‌ – நிறனுடையசிறந்த மணிகளும்‌ பொன்னும்‌ கிடக்கும்‌ தெருவில்‌,
நெடும்‌ கொடிஞ்சி – பெரிய மொட்டினையுடைய ,
தடம்‌ தேர்‌ உருட்டுக – அகலமான தேரை உருட்டுவாயாக:
கொழிக்கும்‌ தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே — தடம்‌ தேர்‌ உருட்டுக –

அக்ஷய வருஷம் பங்குனி மாதம் 22 தேதி மக நஷத்திரமும்‌ புந்தி வாரமுங்கூடின சுபதினத்தில்‌ பிள்ளைத்தமிழ்‌ எழுதி முடிந்தது,

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –