Archive for the ‘அஷ்ட பிரபங்கள்’ Category

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-2-

June 2, 2026

திருப் புளிப்‌ படலம்‌

பருமா னிலத்தி லடர்நீச முற்ற பரவாதி யர்க்கியமனாய்க்‌
திருமாதிருக்கு மணிமார்பருக்க திக நேசருக்கினியவாங்‌
குருவாயுதித்த வெிராசன்‌ மெச்சு குண சீல னித்தனடியா
மிரு தாமரைச் செம்‌ மலரே மனத்து ளெளியே மிருத்தி நினைவாம்–1-

மதியோடருக்க ரிருபாடு முற்று மருமாமரைச்‌ செம்மலரே
பொதிநீல்வரைக்கு நிகராகி நின்ற பொருவான தற்ற பெருமா
னெதிரே திருக்கு முதவாய் முகிழ்த்த வெழில் கால்‌ கிடத்தி யிறையும்‌
நிதியாலிழைத்த கடமாமுலைப்‌ பெணிதியோடு மெச்சு பொழுதில்–2-

இமையோர் வணங்க முனிவோரிறைஞ்ச விறையோரிதென்கொல் விபரீ
தமதாயதென்று வகையோடிரங்க வடியார்கள்‌ சங்க மறை சொல்‌
விமலாதிமன்‌ற னருளானதின்‌று வெளியானதென்று மகிழக்‌
கமமாய துன்ப நிறை வாரி நின்று கரை காண வன்பர் கணமே–3-

மிடியே மிகுப்ப வதினோ மவர்க்கு மிளிர்மா னிதிக்‌ குவையுமே
னெடுநாடிருக்‌ லெயர்‌ வோடிருக்கு நிலமானிடர்க்‌ கிருகணு
மிடைசேர்‌ தரக்கொ ளவரோகை தற்கு மினிதே யிரட்டி யயில்வே
லுடையானொடுற்ற விள வாணகைக்கு மொழியா மகிழ்ச்சி எழவே–4-

தரைமீது சற்று மசையாது வைத்த தலமே கிடக்கு முளைதான்‌
புரை தரு மத்த வளையாதி மைத்த புகழ் சாயல்‌ கண்டு மகிழ்வான்‌
மரைநே ரரிக்க ணுறவே விழித்து மணி வாய்‌ திறந்து பொதுவர்‌
நிரையே களிக்க வவர்பாலுதித்து நெடு நா டவழ்ந்த தெனவே–5-

இருதோள்‌ குலுங்க விருகா தணிந்த வெழிலே மிகுந்த மணி சேர்‌
தருநீடு குண்டலமராக வொண்வி றரலோடிலங்க வவிருந்‌
திருமார்‌ பணிந்த வணியே சரிந்து செகமீ திழிந்து புரளச்‌
சுருணாறு குஞ்சி மிசையார் கலன்‌கடொடை யோடசைந் தொளிரவே–6-

பிறையோ டிகற்றரு மனோகரத்தின்‌ பிழை தீர்‌ நுதற்க ணணியு
நிறைவா லொளித்‌ தரளமே யிழைத்த நெடிதாய சுட்டி யலைய
விறையா மடிச்செ நறையோடு புத்து றிரு தாமரைச்செ மலர்மே
லுறை யோதி மத்தண்‌ சிறை யோதி மப்புள்‌ ளொலீயே தரக்க லெனவே–7-

எணிலாத தன்மை யுறுபார வண்ட மிசையா வடங்கு மிடமா
மணிமேவு பண்டி யரைசேர்‌ சதங்கை யொடு கீழ்‌ சரிந்து புரளப்‌
புணராய செந்துவரை நேரிலங்கு புகழ் தாளி னங்குலிகளொ
ணிணர்கோடை யங்கையுடன்‌ மாமுழந்து மிடவே சிவந்த நிறமே–8-

திருமாமடந்தை புவிமாது செவ்வி திகணீளை தங்களுடனே
யொருநீல விண்டு நிகராக நின்ற வொளிராதி தன்னை வலமா
யருகே தவழ்ந்து வரு போதிலய் யனனையோடு தந்த மரெலாம்‌
பெரு கோகை மண்டி யெழ நீடு கண்டு பினிலே தொடர்ந்‌து வரவே–9-

எழிலே மிகுந்த மதவேளு மண்டி. யெதிர்காணுறிற்றன்‌ வடிவவ்
வுழியார வெள்ளி யணை வானோர்‌ பெண்மை யுறவே விருப்புளடையக்‌
கழிதே லங்க வருளாதி நின்று களி நீடிடத்தின்‌ வடபால்‌
வழியாகி நின்ற மதி மேவு திந்திரிணி நீழலுற்‌ றனனரோ–10-

மாக னகக் கலை சூழரையிற்புனை மாறனணைத் தலமா
நாக மதைக்கலி யேகுது முற்பட ஞாலமடுத்‌ தெகின
மாகி யுதித்திடு போதி யெனச்சொல வார வழுத்‌தி விரைந்
தேகி யுரைப்படி. யாய திருப்புளி யேர்தகை சிற்பகர்வாம்‌.–11-

கஞ்ச மலர்த்தவி சந்தர முற்றெழு கண்ணோரு வெட்டனொடு
மஞ்சி னிறத்தடை கண்டர்‌ தமக்கு மகிழ்ந்தினி தெட்டரிதா
யெஞ்சலினித்திய வும்பரிலுற்றிட மெங்கும்‌ விரிந்‌ திடலா
லஞ்சயினற்படை யங்கை தரிக்கு மரிந்தம னொக்குமரோ–12-

வானக மண்டல மோர்கையின்‌ மன்னிய வாணி தனத்‌ திசையா
மேனனிகொண்டிடு மோதி மனண்ணிய வேலை யுயிர்ப் படையா
நானன்‌ முகங்களு நாடி யிரும்மரி தாமரை பெற்றிடலாற்‌
றானவருங்‌ கமலாலய மன்னு பிதாமக னொக்குமரோ.–13-

வானதி தன்னுடன்‌ மீத விரும்பிறை வான்முக மஞ்சுறலா
லூனமிலங்கமலாதன மன்னய னோர் தலை தங்குறலாற்‌
றூனகு கொன்றையு மாடரவுந் தலை சூடியை யொன்றுமதே
ஞானமிகுந்தந மாறனுகந்தன னாடிய திந்த்ரிணியே.–14-

வென்றிமிகுத்திடு மங்கதமுற்று விளங்கு பதிக்குமடி
நின்றெவருக்கு மகிழ்ந்தினி தெட்டி னிமிர்ந்து சலிப்படையா
வன்றிறலிற்படுமண்ட முகட்டிடை மன்னி யுணிற்குமதை
யென்ற முறச்சரிவின்றி நிறுத்தெழு வென்னு முரைக்குறழா–15–

கொண்டபசுஞ்சுடர்‌ விண்டுவையுஞ்‌ சிறுகுன்‌று கடம்மையுமே
கண்டதை யொன்று மணங்கையினன்‌ கவிகை யெனும்‌ வண்ணமுற
வண்ட மடங்க லு மண்டி விரிந்தெழு மந்தர மாந்தனையும்‌
வண்டலையும்‌ பல தண்டலைதம்மையு மன்னவே கண்டிடிலே.–16-

காயொடடை திரள்‌ சேர்தரு நற்கனி காண மிகுக்குமலர்‌
தூயமிகக்கெழு காலடி பட்டுயர் சோர்வி றிசைத்‌ திசைப்போ
யோயடை யுற்றிடு மோவல துக்கு விணோடுநதிக்குள்‌ விழா
மேயலை கிட்டுமோ வோர்கில மித்தரை வீழ்தரலற்றனவே–17-

ஆருமலர்க்கணணாலு மளப்பரி தாய் முடிவற்றி மிருஞ்‌
சாருமெணற்றப லாயிர மற்படு சாகை தழைத்திடலா
லாரணமொக்கு மலாமலு மற்று வலாரி நிகர்க்குமதே
சேருமை யுற்றொளி சேர்சசி தொட்டுயர்‌ சேணகருற்றிடலால்‌–18-

வாரிகலிங்க மெனா வரை கொண்டிடு மானில மண்டிமிரு
மாரிருள்‌ வெம்பகை போழ்தர வெங்கதி ராமசி கொண்‌ டெழுகுஞ்‌
சூரிய னொன்றினராவித னுண்ணுழை தோறு மெஞ்ஞான ரவி
சாரொளியா லொரு தீபமெனும்படி. தானொளி தந்திடுமால்‌–19-

பாயுமிதிற்‌ சிறிதேனு முரைத்திடில்‌ பாருள மட்டுமிழி
வாயுவுடற்படு நோய்களனைத்தும்‌ வராமலடர்த்திடமாற்‌
றீயகனற்‌ கணுவேனுமிதிற்‌ படில்சேகுரு கப்‌ புனல்க
ளேயது வெத்தல மோவவ்விடத்தினி லேற விடுத்திடுமால்‌–20-

யோகவருங்‌ கொடி தாய தொழில் புரிவோர்களு மிவ்வழியா
யேக வரும் பொழு தீதவர்கண்படி லேய பவந் தொலையும்‌
ஆகவ நன்னகர்‌ மேவி விளங்குவராகில்‌ விளம்புவர்‌ யார்‌
தாகமொடும்‌ வழிபாடு செயும்‌ மவர் தாமடையும்‌ திறனே-21-

தாறுபடுங்கமுகேர்பெறு தெங்கொடு சாமரையிற்‌ பொலியச்‌
சீறி மலர்ந்தகல்‌ வானுயருங் கவிர்தேரின்‌ விளக்கொளிரச்‌
சூறடி விண்டவழ்‌ சோலையெறுழ்‌ மனர்தாழ்ம்‌ தயனிற்பவன
மாறனெனும்படி பூவரசுற்றிடும்‌ வாளர வப்புளியே–22-

அத்தனறா மாவலி பான்‌ மூவடி. மண்‌ வாங்ய நாள னைத்துந் தள்னுள்‌
வைத்தடக்கு மலரடியே மானவிரு வானமெலா மலர்ந்து நீண்ட
இத்தகைய புளிநீழற்ற வழ்ந்‌ தோடிச் சென்‌ றணைந்‌ தவிள வலாய
முத்தி நிலமடி தொழுவோர் தமக்கருளும் பரன தன்‌ றன் மூலம் சேர்ந்தான்–23-

பாரடையிற்‌ பரகதியிற்‌ சேர்த்தருள்வாம்‌ வடபாற்கட்‌ பரிந்துமுன்‌ போய்‌ ஓரடியிட்டினிவரவின் றொழுதிரெனத் தென் புறத்துற்‌றுறையும்‌ தீய
காரடமற்படு முடலத்தே மனருங்‌ கொடுந்‌ தமரைக்‌ காய்வான்‌ போலச்‌
சீடரப்புளி வேரிற் சென்ற பரன்‌ றெக்கண மாந் திசையை நோக்கா–24-

ஐம்புலமாயந்தனை நிராகரிக்கும்‌ யோகியர்கட்‌ ௧ றிவிப்பான்‌ போற்‌
செம்பது மாதனந்தரித்‌துட் கரிகாப் புடையகலாச் செழித்து நீண்டு
வம்புறுமற்கமல நறும் போதெனவே யிடையிடைசெவ்வரிகளோடிப்‌
பம்பருட்‌ கணிணைபிறழா தெழிலாரு நாசி நுனி பார்த்துமாதோ–25-

வடமேருப்‌ பொன்கிரி நின்றிழிதரு பல்லருவியென வயங்குமார்பி
னிடமே வொண்ணிலவு மிழும்‌ வெண்டரள மணியார மிலங்கவே நேர்
படமேலி நிமிர்ந்த மிருமரகத நல்வரைய தனுட்‌. படிர்த சோதித்‌
தடமேய செங்க தரிற்‌ றிருமேனி யொளி செய்யச்‌ சலியானாகி–26-

பல்லாயிரங்கோடி யண்டமு மவ் வண்டத்துட்‌ பரந்து வாழு
மெல்லாமுந் தானாகி நின்றருளு முதலாய வெழில் கொள்‌ சோதி
வில்லாரைம்படையாதி நிர்மலனே பரமாயவிமல னென்ன
மல்லாரும்‌ வலது கரத்தில்‌ குசின்முத்திரை தரித்து வயங்கிமாதோ–27-

மற்றோர்‌ செங்கர கமல முன்னொரு நாட்‌ டோன்றிய வம் மலரே யன்னப்‌
பொற்றோ யுமப் போதிற்‌ புடை பரந்த வுந்தியின் மேற்‌ பொருந்தச்‌ சேர்த்தி யுற்றோடும் பேருயிர்ப் புள்ளு ற வடக்கி யாம்பலம்போ துறழ்வாய்மூடி
முற்றோகை யொளி பரந்‌து வாண் முக நின்றொளி செய்ய மோனமாகி.–28-

அகலுகில்லேனிறையு மெனத்‌ திருமாதுள்ளுற மகிழ்வுற்ற மருமார்‌ சகமுழுதுந் தன்னுளுறக்‌ தானடக்குந் தாட் கமலத் தார்வம்‌ வைத்துப்‌ பன்
பகர்தரக்‌ கண்ணகத்‌ துழலு மிரு வினையாம்‌ பவந் தொடைத்துப்‌ பாநாடீயும்‌
நிகரிலருர்‌ தகைய வட்டாக்‌ கரப்பொருளே தாரகமாய்‌ நெஞ்சுட்‌ கொண்டு–29-

உருகிய பேரன்பினொடும் வந்தணைந்தா ரிருவினை யீர்த்‌து யர்வானீயத்‌
தருமுதலே மெல்லணையா யந்நிழலே மேனிழற்றுஞ்‌ சத்திரமாகப்‌
பெருகிய மெய்ஞ்ஞானச் செங்கோலோச்சி வீற்றிருந்து பிறங்னானா
லிரு நிலங்கொள்‌ மருளகலச்‌ செங்கதர் போற்‌ றென்பாலி லெழுந்தானம்மா–30-

இவ்வணம்‌ வீற்றிருந்‌ தருளுமேந் தறனைக் கண்‌ டெளிதி னெடுப்பா னெண்ணிப்‌
பவ்வங்கொளலை வாரி தன்னிலும்‌ பேருவகை வெள்ளம் பம்பி யோங்‌கச்
செவ் வண்ணந் திகழ் சுடரோன்றனை மின்சேருந்‌ தகையிற்‌ றழுவினாளான்‌
மைவ்‌ வண்ணந் திகழோதிப்‌ பொன்னுடைய நங்கை யெனு மடந்தை தானே—31-

கையாரத்‌ தழுவியணைத்‌ தெடுத்தளவிற்‌ பேர்வரைபோற்‌ கனப்ப நோக்கி
யையோ வீதென்கொலெனப்‌ பதைபதைப்புற்‌ றசைத்‌ தெடுத்து மசையா னாகி
மெய் சோரக் கை சோர மாழாந்து வாய் குழறி மிகவே விம்மி
மையோதி யெழுதியவோர்‌ சித்திரம் போலத்‌ தனையு மறந்தான் மன்னோ–32-

மருவிரியுங் குழலுடைய நங்கை யெனும் மட மாதோர் வண்ணந்தேறிப்‌
பொருமலொடு விம்மலு மென்மே லெழவுள்ளுற வடக்கிப்‌ பொரு வேற்‌ கண்ணின்‌
றருவியெனப்‌ புனல்சோர வாம்பலென வாயங்‌ காந்தறைந் தாண்‌
விரு நிலனும்‌ பெரு வானுங்‌ கருதுறவே யிசை வாய்ந்த விறையோற்‌ கன்றே–33-

போதகமோடிகல்‌ வேடற்‌ இருவானமீந்து முகிற் பொலிந்‌து நின்ற நாதனருட்‌ பல்காற்‌ சிந்தித்‌ தோகை மீக்கிளர்‌ நனியுந்தேசார்‌காதலனின்‌ றிங்கோடி த்‌ தவழ்ந்ததுவே பெறும் பேறாய்க் கருதி நின்ற சீத நறுங்‌ களி வண்டு பாண் முரலுந்‌ தொடை யகலத் திறல் வேற்‌ கோமான்‌–34-

பருந்தாரயில் வாட்‌ படை விழியாள்‌ பரிவிற்‌ சோர்வுற்‌ றுரைத்த
திருந்தாரங்கை வேனுதி போற்‌ செவியினாடே நுழைதரலும்‌
வருந்தா நின்றுள்ளினி திரங்கி மாழாந் தீ தென்‌னதிசயமென்‌
றருந்தாட்‌ கமலத்‌ தவிர் கழல்‌ களதிரக் கடிதிற்‌ குறுகினனால்‌–35-

மழஞ்சே றொளிவிட் டெழுங் கதிரை வளையுமூர்‌ கோள்‌ சூழ்ந்ததெனக்‌ குழைஞ்சேயுள்ளந் திருந்தலர்க்குக்‌ கொடுமை கூருங் கொலைவேலான்
பழஞ்சேயாம்பற்‌ றுவர்‌ வாய பாலனாமப்‌ பரனைத் தன்‌
முழைஞ்சேயேம வரை யன்ன மொய்ம்பாற்‌ றழுவி யெடுத்தனனால்–36-

தண்ணென்‌ நதி சூடிறையன்னான்‌ றாதையாய தாட்கமலத்‌
தண்ண றன்னோடும்ப ரெல்லாமறியச்‌ சுடரை யெடுத்தளவிற்‌
றிண்ணஞ்‌ சிகரம் போற்‌ கனப்பச்‌ செழியர்‌ கோமான் றிறலழிந்து
கண்ணிலாதான்‌ பெற்றிழந்த காட்சி யண்ணலா யினனால்‌–37-

மன்னர்கோமா னெடுத்ததற்‌ பின்‌ மாழாந்துருகிக்‌ தமர்குழுவுந்‌
துன்னுங்‌ கதிர் வேன ராதிபருந்‌ துணைமென்கொங்கை நுண்மருங்கு
லின்னல்கூரப்‌ பணைத் தண்ணாந் திறுமாந்திருக்குங்‌ குவடிணையா
மன்னம் போலு நடையாரு மசைத்‌ தசைத்துப்‌ பார்த்தனரால்‌,–38-

தம்மாலாகுந் திறத்தினொடுந்‌ தழுவி யசைத்‌ துப்‌ பார்த்தளவிற்‌
செம்மா மேனித்‌ தனி முதல்வன்‌ சிறிதுஞ்‌ சலியாலகை நோக்கா
நம்மாலாகா வகையன்றி தாறுங்கதிர்காலிப்‌ புதல்வன்‌
செம்மாந்‌ திருக்கும்‌ களியானைத்‌ திரட்குமசையா னென்றனரே–39-

சனித்தநாட்‌ டொட்டின்‌ றளவுஞ்‌ சலியாத ணுவுமதி விரைவி
லினித்த செவ்வாய்‌ கண்டிறந்‌ தின்றெளி திற்றவழ்ந்திங்‌ கோடியதால்‌
பனித்த நெஞ்சில்லாதார்‌ தம்‌ பார்வை யெச்சிலெய்தியதோ
தனிச் செஞ்சுடரே யெனவொளிரித்தனைய ற் கென்பார் சிலரன்றே–40-

மருந்தனின்சொற்‌ நிருமாது வளரு மணிமார்பன்‌ கொல்லோ
திருந்து, தனிச்‌ செங்கோ னடத்துஞ்‌ சேனை முதல்வன்‌ தான்‌ கொல்‌லோ
கருந்தண்ணீர்‌ மண்ணிடத்தேதோ காரண த்தின்‌ பொருட்டாக
அருந்தவத்‌ திம்மன்னவன்‌ பா லடைந்தார்‌ கொல்லோ வென்பாரால்‌–41-

தேனார்கமலத்‌ திருமகட்குந் திரைப்பார்‌ மகட்குந் தனிச்‌ செல்வக்‌
கோனாதனுக்குக்‌ குடிகுடியாட்‌ சேய்யுஞ்‌ செழியர்தங்‌ கோமான்‌
மேனாளிழைத்த மெய்த்‌ தவங்கள்‌ விளங்க முற்று முடித்திலனோ
ஏனாமிவ்வாறிப்‌ புதல்வற்‌ இருக்கும்‌ திறனென்பார்‌ சிலரே—42-

வாளை கமுகு மடல்‌ கீறு வயல்சூழ்‌ குருகாபுரி யளிக்குங்‌
காளையன்னா னிம்மை தனிற்‌ கணமும்‌ தீமை நினையானாய்‌
வேளை மூன்று மெய்யறமே விளங்கச்‌ செய்தான்‌ யாம றநிவோங்‌
கோளை யெய்திக்‌ கொடுமை யன்னன்‌ கொண்டதிறனெ னென்பார்‌ சிலரே–43-

வியனார்ப தம மென்போதே மிளிருங்‌ கண்கால்‌ கரமாயு
முயர்வா னிலவினேர்‌ மதியே யொளிமா முகமாயும்‌ படைத்தே
யியலாரிப்‌ பாலகன்‌ றனக்கங்‌ கிவ்வாற ளித்தவீர்ங்கமலத்‌
தயனே கொடிய பாவியென வறைவா ருள்ளங் கரைவால்-44-

என்று கூறுமொழிகளைக்‌ கேட்டி றுமாந்‌ திணைந்த வன்னமுலை
துன்றுங்குழ னங்கை மாதுர்‌ தோன்ற றானு முள்ளுடைந்து
கன்றிமாழாற்‌ தனராடிக்‌ கண்ணீர்‌ தமை மஞ்சன மாட்டக்‌
குன்றுபோலப்‌ பொலிந்து நின்ற கோமான்‌ முன்னரிவை சொல்‌வார்–45-

கொண்டலிற்‌ பொலிந்து நின்ற கொழுஞ்சுடர்ப்‌ பரிதி வேந்தே
வண்டர்தந்‌ துயரந்திர வகலிடத்து தித்த கோவே
பண்டொரு விலங்கிற்கோடிப்‌ பாலனம்‌ புரிந்த வுன்றன்‌
மண்டரு ளினையின்‌ றெங்கண்‌ மறைத்தனை யெம்பான்‌ மன்னோ–46-

வழிவழி நினக்காட்‌. செய்து வர்த வல்வினையே மின்று
கழிபெருங்‌ கொடிய துன்பக்‌ கடலிடையாழ்த னன்றே
பழிவழி யொழுகா வன்பர்‌ படுந்‌.துயர்‌ காப்பா யென்று
மொழிவது பொய்யதாமோ முதற்பரம்‌ பொருளிரங்காய்‌–47-

அறிவிலாச்‌ சிறியரே போலெதுவு நின்னடியலாது
பிறி துயர்‌ நினைந்ததுண்டோ பெருந்துய ருழன்று வாடுங்‌
குறியினைப்‌ புரிவதென்னோ குணப்பெருங்‌ கடலேநாவி
செறிகுழற்‌ றிருமணாளா செழிக்க வின்னருள்‌ செய்வாயே–48-

அருளிழிந் தொழுகு தாதை யன்னை மெய்ஞ்ஞான மோதுங்‌
குருமுத னைத்து நீயாய்க் கொண் டினிதிருக்கு மெம்பாற்‌
பெருகிய வருள்‌ செய்யாதே பிறங்கு மெய்ப்பொருளே மேன்மேல்‌
வருதுய ரதனின்‌ மூழ்க வைக்தனை யென்கொலின்றே–49-

வன்புறு மனத்தேன்‌ நின்பான்‌ மனிமக வருள்வா யென்ன
வன்புடன்‌ வேண்டுங்காலை யளித்திடா தொழியின்‌ மேவுந்
துன்பமொன்‌ றதுவே யாகுந் தூய்மறைப் பொருளே யன்றி
யின்ப மதருள்வான்‌ போல விடர்‌ பல விளைத்ததென்னோ–50-

மூல மென்றொருகாற்‌ கூவு முன்னரே யடைந்தோர் மாவி
னேலஞரொழிந்தா யின்றிவ்விளி வரலிடரின்‌ மூழ்கச்‌
சாலவு முழன்‌ற நேகந் தர முனை யழைத்து மென்னோ
வாலடை துயின்ற கோவே யருள் செயா திருந்தவாறே–51-

உள்ள நெக்குருகி யிவ்வாறொலி திரைப்‌ பரவை ஞாலத்‌
தெள்ளருஞ்‌ சிறப்பு வாய்ந்த வெரி மணிப்‌ பூணாரேத்தப்‌
புள்ளுயர்‌ கொடியனாங்குப்‌ பொலிந்தருள்‌ புரியானாகத்‌
தள்ளருந்துயரவாரி தன்னுளாழ்ந்‌ திருந்தாரன்றே–52-

வரிசிலைச்சுவடு தோய்ந்த வரை பொருவயிர த்திண்டோட்‌
குரிசிலாண்‌ டகைமையாலுட்‌ கொள்ளஞ ரடக்கா நின்றான்‌
பெரிய வாட்டடங்கணல்லாள்‌ பேதைமைக்‌ குணத்தாலன்ன
துரியனைக்‌ கண்டி கண்டு துயருளாழ்ந்தினைய சொல்வாள்‌-53-

நஞ்சிற்‌ பொலிகண்‌ ணங்கையர்‌ நகை கண்டயல்‌ சூழ்ந்தே
கொஞ்சத்தனி மஞ்சத்திடை குலவித்துயில்‌ வளர்ந்தென்‌
நெஞ்சத்‌ துயரகலக்‌ களிநிலைபெற்றிட வருளா
விஞ்சுற்றுயர்தருமித்தரு வேருற்ற தென் மதலாய்‌–54-

தளிர்மெல்லடி தனவைப்‌ பழி நுதலாய்‌ குல மதலாய்‌
மிளிரொண்மணி மனைவாய்ப்‌ பவ வினையாள்‌ செயவிழைவா
லொளிமேனி சற்றசையா விடு முழையே கிடந்தனையே
யெளிதாயிவனுறவே யெழுமிகல்‌ வந்த தெனிறையோய்‌–55-

இருகட்புல னில்லாதவர்க்‌ கிடையே யளித்‌ தன்றே
பருகுற்றிடு வகைபோ லொளிர்‌ பனிமாமதி நுதலாய்‌
மருவுற்றெழு களியுட்கொளும்‌ வகையே தவழ்‌ நடைசெய்‌
துருகித்‌ துயருற வென்னதை யுடனே கரந்தனையே–56-

பழுமாமர விலைமேலோரு பகலோர்‌ சிறுமகவாய்த்‌
தழுவாவிழி துயில்வோனருட்‌ டகையால் வரு மகனே
யெழுநீள்பசியதனான்மல ரெழில் வாய் திறந்‌ தினிதா
யழு மோசையை யெளியேன் செவி யடையுந் திற னென்றே–57-

துனியே மிகு மா பாதகத்‌ தொழிலே யரு வினையே
னினிதாய்‌ மடிமிசை வைத்‌ தம மிழிபானிறை வூட்டக்‌
கனிவாய் திறந்‌ துண வென்றுகொல்‌ களியோடது காண்பேன்‌
பனிமாமதி மரபூடெழு பகல்‌ போலொளிர்‌ மகனே–58-

இங்குன்றன தணியும்‌ பெருவெழிலார்மதி முகமும்‌
பொங்குஞ்செழு வகுளப்புயம்‌ பொருவு நயநயுக
முங்கண்டவர்‌ கண்ணெச்‌ சிலதுடையப்பல காப்புத்‌
தங்கும்படி செயவென்றெழு தருவா யொளி யுருவே–59-

கோடுஞ்சிலை நுதலாயணி குழையார்கன மரும்பப்‌
பாடுள்ள விர்‌ பனி தூங்கவே செங்கீரைய தொன்றி
யாடும் பருவ மிதாகலினரிதாய தொல் வினை யேன்‌
நீடுந்துயரது தீர்தர நீ யென்று புரிவாய்‌.–60-

துன்றுங் குழன் மட மங்கையர்‌ சூழ்வுற்றனர்‌ தாலோ
வென்றுன்றனை யாட்டச்சுட ரெறிமா மணியதனா
லொன்றும்படியிழை தொட்டிலிலோடித்‌ தவழ்ந்தேறி
மின்‌ றுன்றிய கழலாய் மலர்‌ விழி யென்று கொ றுயில்வாய்‌–61-

என்றென்‌ வயிறிடை நின்று நீ யிவண் வந்‌ துதித்தனையோ
வன்றொன்றியே யிது நாள் வரை யஞரிற்பட மூழ்கு
முன்றன்றவ முது தந்தையு முறவோர்களு மியானுங்‌
குன்றில்‌ களி கொள வென்று கொல்‌ சப்பாணி கொட்டுவையே—62-

சித்தந் தனிலுறு வெந்துயர்‌ தீரக்களிசேரக்‌
கத்துந் திறலதுகண்டு நீயினியாகிலுங் கனிவாய்‌
முத்தந் தர வெழுவாய் தரு மூலத் துறைவோ யென்‌
புத்தென்‌றுரை நரகப்பிணி போகப்பணி மகனே–63-

விட்டுக்கதிர்‌ பொலியுஞ்சுடர்‌ மிளிரும்‌ பசுமுகிலு
மெட்டிக்கு மகிழ வந்தென விவரிம்மர முறை வோய்‌
வட்டச்‌ சிறு பறை கைக்கொடு வரு சிற்ற வருடனே
கொட்டித்‌ திரிதரலென்‌று கொல்‌ கொடியே னிடர் கெடவே–64-

தாராகண நடு நின்றோளிர்‌ தருமாமதி யெனவே
வேரார்‌ தருசிறு பாலகரிடை மன்னுற வெய்தி
வாரார் முலை மடவார் மலி மறு கூடொளிர்‌ சிறிய
தேரார விடுத்‌ தென்று கொறிரிவா யொளியுருவே–65-

வரமாமலரிணை நேரடி மணி நூபுரமொலியே
தரநாடொறும்‌ விரைவோடியே தள வெண்ணகை யிளையார்‌
பரவாவகன் மறு கூடிழை பயில்‌ சிற்றில் கண்‌ முழுதுந்
திரமாக வெனொரு பாலக சிதைத் தென்று கொல்‌ வருவாய்‌.–66-

அணிமாநகருறைவோர்‌ பல ரடையா வெனதிடையே
மணிவார்‌ குழையுடையாயுனன்‌ மகனா டொறுமளவில்‌
திணியோடின றருவம்புகள்‌ செய்கின்றன னெனவே
பணியாவெழ விறை யென்ற.கொல்‌ பயில்வாய்‌ மறுகிடையே–67-

பெருநீருலகிடை மாமகள்‌ பெருமானுயர்‌ மதமே
மருவாமலி, தரவே செயுமனர்‌ கோனளி மகனே
திருமாதுறுமணி மாளிகைத்‌ திருவே முதன் மருவா
திருமாமரநிழல்‌ வைகுறுமிதுவோவுன விதியே–68-

கடல்வேலை கடந்தாலென விழிநீரிருபுடையும்‌
விடவே யெரிதரு வெங்கனலிடைமென்றளி ரெனவே
யுடல்சோர்‌ தரமாழாந்தினி துருகுஞ்‌ செயல் கண்டு
மிடரேனென வுரையாடலை யிதுவோ வுன தறமே–69-

மிகவே நறை யுகு மாலுகவிரி மாலையினிறையோய்‌
மகனே யருமகனேயென மதசோர்தரல்‌ கண்டே
யுகவாவெனதனைநீ யினி யுருகே லென வுரையா
வகமேவிய துயர் தீர் தர வருளாதது தகவோ–70-

நகுமின் சுதரிசனன் பத நளினங்களை மறவேந்
தகவெந் துயர் கொள மன்னுயிர் தமை யெங்‌ கணு நலியே
மிகு நல்லற வினை யன்‌றியே புரியோ மொரு வினையுஞ்‌
செகுவெந் துயரிடை மூழ்குறு செயலென்ன கொல் விதியே–71-

கொலை பழுத்தொழு கூன்‌ வைவேற் கொற்றவர்‌ குழுமி நந்தந்‌
தலைமகனிவனே யென்று தாங்கருந் திறைகள்‌ கொண்டு
சிலை நுதற்றிருவே யுன்றன்‌ நிருவடி போற்றா நின்றார்‌
உலைவு றென்‌றுயரந் தீர வுகந்ததைக் கண்ணாற் பாராய்‌-72-

சிற்றிடைக் கன்னிமாருன்‌ சீரடிச்சுவடு காண்பான்‌
முற்றிலந் தூதை கொண்டிம்‌ மூதெகினத்தி னீழற்‌
சுற்றிலுஞ் சிற்றில் செய்து துன்னி நின்றார்‌ நீயத்தைப்‌
பற்றுமென்‌றுயரந்‌ தீரப்‌ பணி மலர்க் கண்ணாற்‌ பாராய்‌-73-

செவ்விய வொளி கொள் மேனிச் செல்வனோர்‌ வளர் வெண்டிங்கட்‌
கொவ்வ நாடொரும்‌ பூரித்து முடல்‌ சிறி தசையானாக
வவ்வணமிருப்பக் கண்டே யறற் குழஞரிலாழ்ந்தாங்
கிவ்வணம் பருவந்தோறு மிரங்கி யுள்ளுருகா நின்றார்‌—74-

எல்லியும் பகலு நீங்கா தியாவருமிருப்பச்‌ செம்பொற்‌
சில்லியங் குழலாணங்கை செவ்வி யிற்றினங்கடோறு
மில்லகந்தனிலே முன்னரியற்றிய வாறு போல
வல்லியல் கமலக் கண்ணாற்‌ கவ்விடத்தி யற்றா நின்றாள்–75-

வண்டலைந்திழி தேனுண்டு மருவுதாரிமிரு மார்பக்‌
கொண்டலைப் பொருவும்‌ வண்கைக் கோமகன்‌ குழவி தன்னைக்‌
கண்டு கண்டுருகித்‌ துன்பக் கடற்கரை காணானாகிப்‌
பண்டருங் குறுங்கை வாழும்‌ பரமனதுரை மறந்தே-76-

நச்சினர் வினையை நீக்கும்‌ ஞான தேசிகனெடுப்பான்‌
வைச்ச பண்டிதர்களாலு மந்திரத் தலைவராலும்‌
வெச்சுறு முத்தீ யோம்பும்‌ வேத வந்தணர்களாலும்‌
பச்சிலை வகை யினாலும்‌ பார்‌த்தனனிருந்தா னன்றே-77-

நீருலாம்பொருனை நாடனெஞ்சிடர்‌ நிறைய நாளு
மேருலாங்குழவி தன்னை யெடுத் தினி தளிப் போர்க்கென்றன்‌
சீருலாந் தரணியாவுஞ்‌ சிறப்புடன ளிப்பேனென்ன
வோருரைவழங்கி யன்னோரு றும்‌ வழி பாரா நின்றான்‌-78-

ஞானவாரமுத முண்டு நாடொறு மவயவாதி
வானவாந் தருக்களே போல்‌ வளர்தரத் தருவின் மூலத்
தேனலம் பொருந்த யோகி யென வினி தமர்ந்‌து வாமு
மூனமிலாத வெந்தை யொளித்திர மேனி தன்னில்‌-79-

விரைக்கருங்குழலாணங்கை வேந்தர் கோன்‌ முதலயாரு
நிரைக்குலந் தமது கன்றை நீங்கிலா வகை போற் சூழ்ந்தே
யுரைக்கரும் பதினாருண்டீ யுடனெறும்‌ பணுகா வண்ண
மரைக் கணப் பொழுது நீங்கா தன்னவ ரிருந்தா ராங்கே–80-

திருப் புளிப் படல முற்றும்‌-

திரு மதுரகவிப்‌ படலம்‌-

பைத்தலை யாவந்‌ தாங்கும்‌ பாரிடத்‌ துயிர்கட்‌ கெல்லா
மெய்த்தகு முகலேய்‌ மேனி மாயனெம்‌ பெருமான்‌ றன்னைக்‌
கைத்தலத்‌ தமர்ந்த நெல்லிக்‌ கனி யெனக்‌ காட்டித்‌ தந்த
மெய்த்தவ னெதிராசன்‌ றன்‌ விரை மலரடி யுட்‌ கொள்வாம்–1-

கர கமலங்கள்‌ கூப்பிக்‌ கை தொழு மவர் தம்‌ தீய
நரகவித்‌ தருள்வான்‌ ஞான நாதனிவ்‌ வாறிருக்க
குரகத முகத்தாற்‌ கன்பாங்‌ குமுத கணாம்சராம் ம
துரகவிப்‌ பெருமாள்‌ வந்து தோன்றிய விபரஞ் சொல்வாம்‌–2-

உலகெனு மடந்தைக்‌ கோங்கு முருவமை யவயவாதி
யலகிலா வளஞ் சேர்‌ தேய மவற்றுளிப்‌ பாண்டி நந்நா
டிலகொளி வதன மந்த வெழின் முகங்‌ கவினத்‌ தீட்டும்‌
திலகம தென்னகத் தோன்றித்‌ திகழ்தருந் திருக்கோளூரே-3-

அத்தமா னிறத்து வேதத்‌ தந்‌தணன்‌ முதலாந்‌ தேவர்‌
தத்தமானியை யெடுத்துச்‌ சாற்றிடக்‌ கமல மென்போ
துய்த்தமா னிலமான்‌ செய்ய வொளியடி வருடப்‌ பாம்பில்‌
வைத்தமா னிதி மலர்க்கண்‌ வளர்தருந் திருக்கோளூரே–4-

மாகய மருப்புமாய்த் தான்‌ மலரடி. வணங்குந் தூயோ
ரேகய வேள்வி யாற்ற வெழுந் தடர்‌ கரிய தூமம்‌
ஆகயம்‌ படரக்‌ கண்டே யணி முகிற்‌ குலங்களென்னாக்‌
கேகயம்‌ பல நின்‌ றாடிக்‌ கிளர்தருந் திருக்கோளூரே –5-

அமலமுற்‌ நிடலான்‌ மீதி லணிமை தங்குறலான்‌ மீவான்‌
கமலக ணுறலா னற்பொற்‌ கலை தரித்‌ திடலான் மண்ணின்‌
குமரர் கண்‌ணிணைக்கு மெட்டாக்‌ கொள்கையா லொளிரு மாடம்‌
விமல விண்டு வினை யொப்பாய்‌ விளங்ககுறுந் திருக்கோளூரே –6–

எங்கண்மா னகர் போந்‌ தெந்த மிறையடி வண்டி யேகுஞ்‌
சங்கரன்‌ றனைநீ தாகத்‌ தருக்குட னெம் போனிற்குந்‌
துங்க நன்‌ றெனவான்‌ கைலைத்‌ தொல் கிரி யினை நக்கென்னாத்‌
திங்களஞ்‌ சவீசேர்‌ மாடம்‌ திகழ் தரும்‌ திருக்கோளூரோ–7-

இத்திரு நகரில்‌ வேத வெழிற்‌ பெருங் குலத்துட்டு வாப
ரத்தின தந்த மாகு மணிய விக்கிரம வாண்டிற்‌
சித்திரை மாதத்‌ தோடு சேர்ந்த சுக்கில பக்கச்‌ச
துர்த்த சித்‌ திதியுஞ்‌ சுக்ர வாரமுங்‌ கலந்ததாகும்‌–8-

சித்திரை நாளி லாசான்‌ சிச்சரி னியல்பு மன்னோர்‌
பத்தியும்‌ விசுவாசத்தின்‌ பான்மையு நிலத்‌ து வாமும்‌
புத்தியி லுயிர்கட்‌ கன்பாய்ப்‌ புகழ் பெறக்‌ காட்டித்‌ தூய
முத்தியின்‌ விளைவை நல்க முதற் பரம்‌ பொருளா லன்றே–9-

இருணலி தரக்கால்‌ சோதி யிளங்கதி ருதையமுன்ன
ரருணனா ருதிந்குந் தன்மை யாமெனப்‌ பரவை ஞால
மருணசிப்‌ படைய ஞான வாரமு தருளுஞ் செம்பொன்‌
வருணநங்‌ காரிமாறன்‌ வருமுன்‌ மெழுந்த வள்ளல்‌.–10-

முடிவிலின்னவனால்‌ வேத முற்றணர் திறத்தைக்‌ கூறிற்‌
கடிமலர்‌ கமலச் சேக்கைக்‌ கண்ணவற் கிழுக்குண்டாமா
லொடி திரைப்‌ பரவை ஞாலத்‌ துயிர் கண் மேல்‌ வைக்கு மன்பாற்‌
படி முழு தளந்து கொண்ட பரமனே யனை யனாவான்‌–11-

பண்டரும்‌ பரம வேதவிதிப்படி பரித்த முந் நூல்‌
விண்டலத்‌ தெழுந்துலாவு மின்னெனப்‌ பிறழு மார்பன்‌
வெண்டிக ழூர்த்த புண்ட்ர மேவிய னுதலான்‌ சேந்த
மண்டு பொற்‌ சடிலத்‌ தாலே வயங்கு சேகரத்தினானே–12–

பரந்த வணையான்‌ செய்ய பத கமலங்க ளல்லாற்‌
புரந்தர னீறாய்‌ வேதப் புனிதனே முதலாந் தேவர்‌
வரந்தர வல்லே மென்ன வந்து முன்‌ னிற்பாரேனுங்‌
கரந்தலை குவித்துச்‌ சற்றுங்‌ கணித்திடாக்‌ கருத்தனம்மா–13-

கொல்லு நஞ்‌ சடக்கு கண்டக்‌ குழகனு மறை வலானும்‌
வெல்லுதற்‌ கரிய காம வெகுளிக ளவிக்கு நீரான்‌
புல்லிய நெறியி னாளும்‌ பொறி புலன்‌ றமைப் போக்‌காது
சொல்லிய வறத்தினிற்குந்‌தூய நன்மனத்‌ தனம்மா.–14-

சென்னிகழ்‌ வடைத லாகச்‌ செப்பிய கால மூன்று
முன்னி யுள்‌ ளறியும்‌ ஞானத்‌ துறுதி கொண்‌ டுயர்வு பெற்றோன்‌
பன்னுதற்‌ கரியவாய பதும வாதனத்‌ தட்டாங்க
மன்னிய யோகத்‌ தின்‌ கண்‌ வரம்பினான்‌ மகிழ்வு கொண்டோன்‌–15–

இன்ன தன்மைய மதுரகவிப் பெருமா னெண்ணுதற்கரிய வேதாந்தத்‌
தன்னியல் புணரு நிபுணனாய்ச் சத்வந் தலை யெடுத் தெவருமோர் தரமு
ளுன்னிய வளவிற்‌ பரகதி யுதவயோத்தியே முதற் றிரு மடந்தை
மன்னியோ ரிறையு மகல்கிலா மருமன் வளர்தரும்‌ பத தொறுஞ்‌ சென்றே–16-

விழுத்தகு மூவகை யுள்ள நெக்‌ குருகி விரைமல ரருச்சனைபுரியா
வழுத்தியாங்‌ குளவாம்‌ புனித நற்‌ றிவலை வானக முகடு தைவரவே
கொழுத்தலை யெறியுங் கங்கையை முதலாக்‌ கொண்ட பற்பல நதிபடிந்து
பழுத்த மெய்ஞ்ஞான நிலை யுணர்ந்‌ தநேகம் பகல் வட புலத்திருந்தனனால்‌.–17-

அங்கரு முனிவ னிவ்வண மிருப்ப வணிய வைகுந்த நன்னாட்டிற்‌
பொங்கருட்‌ பரம வுருவினித்தியர்கள்‌ புடை பரந்‌ திறைஞ்சினர்‌ பொலிய
சங்குடன்‌ றிகரி வாள் கதை வரிவிற்‌ றாங்கி வீற்றிருந்தரு ணிமலன்‌
செங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி நன்களிக்குஞ்‌ சேனையர்‌ தலைவனைக் கூவி–18-

இன்றெழும்‌ துலூற்‌ றீ யிருட்‌ பிழம்பை யிகலறத்‌ துடைத்தருள்‌ புரிவான்‌
சென்றுந மமிசைபூதரா யுதித்துத்‌ திருப்புளியடியில் யோகியரா
யொன்றிய பதமாசனந்தரித்‌ திருக்கு மொப்பிலா மாறனுக்கின்றே
பொன்மக ளிடமுன்னீர்ப் பெரும்‌ தகையைப் போற்றிரு விலச்சினை முதலா–19-

மந்திர வுபதேசமும்புரிந் திவணீர்‌ வருதிரென்‌ றுரைத்திட விரைவிற் சிந்தையுள்‌ ளுவகை கொண்டன னிவணந் திந்த்ருணி யடியில்‌ வீற்‌றிருக்கும்‌ நந்த மதிறையாங் கொந்தவிழ்‌ குழலி னங்கை தன்‌ திரு வயிறுதித்த சுந்தர வதநற்‌ கவ்வணம்‌ புரிந்து தொன்னக ரடைந்தனன்‌ றூயோன்-20-

சங்கொடும்‌ புனிதத்‌ திகிரியும்‌ தாங்கித்‌ தயங்குறு மூர்த்த புண்டரனாய்‌
மங்கலி லதிதேயோ மயனாய்‌ நின்மலனுமாய் வீற்றிருந்தனனால்‌
பொங்கலைப்‌ புணரி நிலந்தனி புரக்கும்‌ புரவல னியற்றருந் தவத்தில்‌
வெங்கலி கரப்ப வந்தெழுந்தருளும்‌ விமல மெய்ஞ்‌ ஞான நாயகனே–21-

இருந்தரு டரவிங்கணை யிலான்‌ முன்ன ரெழுந்தன னுத்தரதிசை யிற்‌ றதா
பொருந்திய மதுர கவியெனும்‌ பெயர் கொள்‌ புனித மெய் யற நிலை பிறழா
வருந்தவ முனிவ னொருபக லிரவி லனை பிரிந்த லமருகன்‌ றின்‌
வருந்தியுள ளுருகி யணி திருக்கோளூர் வணங்கினன்‌ தென்றிசை நோக்கா–22-

நோக்கலு மிவணந் திருப்புளி யடியி னுவலருந் தகையின்‌ வீற்றி ருக்கு
மாக்கவி னிமல மாறனன்னவன்றன்‌ மணி விழி யிணையினுக்‌ கல்‌லாற்
றாக்குற வெவர்க்குந் தோற்றில னாகித்‌ தள தளப்‌ புடனெழுமுதைய
நீக்கருஞ்‌ சவி கொள்‌ கதிரெனப்‌ பொலிந்து நின்றிடக்‌ கண்டனன வனும்‌–23-

காண்டவச்‌ செழுமி னொளியிடுஞ்‌ சுடரைக்‌ கடிய வெங்கானக மதனிற்
றாண்டி நின்‌ றெரியு மங்கி கொ லலது தட நகர்‌ வேவுறக்‌ கனன்று
நீண்டு பற்றிடு செங்‌ கனல்‌ கொலோ வென்ன நெஞ்சயிர்ப்‌ புடனி ருந்தனனால்‌
மாண்டகு மினிய தமிழ் மறை யுரைத்த வன்றன தடி பணிந் துய்ந் தோன்‌–24-

இவ்வண மிரண்டு மூன்று நா ளளவா யெண்ணியு மவ்வொளி மழுங்கா
தவ்வண மிருப்ப வென் விழிப்‌ புலனுக்‌ கன்றிமற்‌ றியாவர்‌ கண்ணிணைக்கு
மொவ்வுத லின்றி யொளி யுட னிலங்க லென்னகொ லிதுவெனக்‌ கலங்கிச்‌
செவ்விய நெறிகொண்‌ முனிவரன்‌ பின்னுர்‌ திரு வினாயகன்‌ செய லென்னா.–25-

நன்றுகொ லிதனைக்‌ கண்ணுறி லழியா நவையிலா வொளியதா யிலங்கு
கின்றது கணமுந் தங்குறா விரைவிற்‌ கிளம்பியான்‌ சோதனை
சென்‌றிவ ணடைவ னெனத்திரங்‌ கொடுதொ றென்முக நோக்‌கின னெழுந்தான்‌
மன்றலந்‌ துளவத்‌ தாரினா னடியர்‌ மலரடி யன்‌றி மற்றுன்னான்‌–26-

உதைய வெங்கதிரி னொளி விடுஞ்‌ சுடரை யொன்றுற நோக்கியச்‌ சுடரே
சிதைவினன்‌ னெறியாக்‌ கொண்டிரா முழுதுஞ்‌ சென்று சென்றரும்பக றொருங்கண்‌
டதைமலர்‌ வளரச்‌ செயதிடை யுறு நற்‌ றலந் தொறுஞ்‌ சோதனை புரிந்து
புதை யிருட்‌ பிழம்பு சீத்தொளிர்‌ மாடம்‌ பொலி திரு வரங்கம் வந்தடைந்தான்–27-

அத் திரு நகரி லரங்கனை வணங்கி யற்றைய பகலினைக்‌ கழித்து
நத்தம் வந்தடைய வாய்ந்தன னவணந்‌ நகை விடுஞ்‌ சோதியே பின்னு
மத்திசை யொளிர வெழுந்தனன்‌ விரை விலடவி வெற்பகன்‌ றிருங் கரையைக் குத்திரு்‌ந் திரை கொள்‌ பொருனை சூழ்‌ தருமிக்‌ குருகை மானகரம்‌ வந்தடைந்தான்‌-28-

எழுந்தரு டரவு மவ்வொளி மறைய விரும்பல தருவினான்‌ மறைந்து
மழுங்கியது கொலோ வெனும்பினுந்‌ தென்பால்‌ வந்தனன்‌ வட புலத்‌ தொளிரத்‌
தொழுந்தகை யுடையவ்‌ வருந்தவ முனியித்‌ தொன்னக ரிடத்ததீ தென்ன
வழுந்தினன்‌ களியி லடைந்தன னிவணே யடைதலு மறைந்த தவ்‌ வொளியே–29-

வந்த வருந்தவ மாமுனி வோனு
மிந்த நகர்க்கு ளேதேனும்‌ விசேடம்‌
விந்தையி னுண்டுகொ லென்ன வினாவச்‌
சிந்தை யுவந்தனர்‌ செப்புவர்‌ மன்னோ,–30-

எந்தம்‌ விளங்கயி லேந்திறை வோனே சந்தத முஞ்செய்‌ தவத்தினின்‌ மாயோ னந்தமிலண்ணறன்‌ னின்னரு ளாலே மைந்தனும்‌ வந்து பிறந்தன னன்றே.–31-

தோன்றிய வன்று தொடங்கியி தீறா யான்ற வரும் பதி னாறெனு மாண்டாய்‌
வான்றழை வெஞ்சுடர்‌ வானவ னே போற்‌ கான்ற கவின்றிகழ்‌ காண்டகு மேனி,–32-

சற்றுமசைத்திலன்‌ றாமரை யங்க ணுற்று விழித்தில னொள்ளிய செம்மை
முற்றியவாயது மூடுத லின்றிப்‌ பற்றிழையான்‌ முலைப் பாலு மருந்தான்‌–33-

தீண்டரு மெய்த்தவ செப்பிய தன்றி யாண்டு தோறுங்கவி னங்கம்‌ வளர்ந்தே
நீண்டிட வோர்தரு நீழ லிடத்தே மாண்டக வைகினன்‌ மைந்தனு மன்றே.–34-

அன்றுமுதற்கொ டருந்திறல்‌ வேலோ னின்றள வாக வெழுந்தரு ளூன்போற்‌
சென்றவ ராய செழுந்தவர்‌ தம்மாற்‌ குன்றி னிதிக்குவை கொள்ள வளிப்பேன்‌.–35-

என்னவுரைத்தன னிந்நெடு நாளாய்த்‌ துன்ன வருட் கொடு பார்த்தனன்‌ றுய்ய
வன்னவ ராலு மசைந்தில னாக மன்னிய வின்னலின்‌ மாழ்கின னன்னோன்‌–36-

என்றுரை செய்தன ரின்றத னைப் போய்‌ நன்றறி வேனென நாறிய மாடங்
குன்றென நின்றொளிர்‌ கோமறு கின்கண்‌ சென்று நடந்தனன்‌ றீதில் குணத்தோன்‌–37-

வருந் தவனைச் செழு மாமறு கிற்கண்‌ டரந்தை யழுங்கினனன் னவர்காணா
இருந்தவெழிற் புயவேந்தலிடம் போய்‌ விரைந்தனர் சென்‌ற விளம்பினரன்றே.–38-

கேட்டள விற்பொன்‌ கிரிப்பெரு மொய்ம்பின்‌ வாட்டகை மன்னன்‌ மதிக்கடலாய
கூட்டவமைச்சர்கள்‌ கூட்டி வரத் தீ வீட்டிய லற்கெதிர்‌ மேவின னன்றே–39–

இந் நக ருக்குணி யெய்துற வென்றன்‌ முன்னரிழைத்த முதற்றவ மேயென்‌
றன்ன முனிப்பர னாய்மல ரன்ன மன்னுமடித்‌ துணையார வழுத்தி–40-

ஆக்கமு றும் முடை யார வொடுக்கி நீக்கரும்‌ வெந்துயர்‌ நீடின னிற்கும்‌
வீக்கவடற்புய வேந்தனை யன்னோ னோக்கின னின்று நுவன்றிட லுற்றான்–41–

நெய்கதழ்‌ வேலநின்‌ னெஞ்சிடர்‌ கொள்ளுஞ்‌ செய்கை யதென்ன கொல்‌ செப்பு தி யென்னப்‌
பொய்கை தனிற்பல புட் செறி பாண்டி மொய் கவினுற்று முதிர்ந்திடு நாடன்‌.–42-

மைந்த னிலாது வருந்திய தாதி யந்த மராத்தி லடைந்ததை யீறாய்‌
விந்தை யினங்கிடை மேவிய வெல்லாஞ்‌ சிந்தை மயக்கொடு செப்பினனன்றே.–43-

இந்த வாறிரு நிலந்தனி புரந்தரு ளிறையோன்‌ சந்த மாமுடி மன்னவன்‌ சாற்றின னிற்ப
வந்த மாமுனி யருண்முக நோக்கினராகி அந்த மாமதி யமைச்சர் நின்‌ றறைகுவர்‌ மாதோ,–44-

அரிய மாமறைப்‌ பொருளெலா மினிதுணர்ந்‌ தரியாந்‌ துரிய மால்பத மன்றி மற்‌ றுணர் தராத்‌ தூயோய்‌
விரிய காதமென்‌ மேலெழுந் துயரெனு மிகுந்த கரிய வார் கலிக்‌ கரை பெறாதுழன்றுயர்‌ கடையோம்‌–45-

களிப்பெனும்பெரு மதுக் கட லாழ் தரக்‌ கமலத்‌ தளிர்க்கு மெல்லடிக்‌ குமரனத் தருநிழல்‌ விட்டெங்‌
களிக்குலம்படு மாம்பலம்‌ போதினுக்‌ கரிய நளிக் கனிக்கிணை வாய்‌ திறந்‌ தொரு மொழி நவில–46-

விருப்புளிப்புரிரந் தருளுவ தன்‌ றிமேல்‌ வேங்கைப்‌
பொருப்பு விட்ட பைங்‌ரியெனத் தனியிடை பொலியுந்
திருப்புளித் தலத்‌ திருந்தெடுத்‌ தன்னை தன்‌ செமுலை
யருப்புளிற்பெரு கமுதுண வருள்‌ செய வேண்டும்‌–47-

இவ் வணம்புரி்‌ந் திடிலொரு சூச்சியு மேறாச்‌
செவ் வணந்திகழ்‌ சடிலசேகர வருந் திறலோய்‌
பவ்வ வெண்டி ரைப்‌ பரவை மா னிலந்தனி புரக்குங்‌
கவ்வை யின்னக ரன்புட னளித்தகங்‌ களிப்ப–48-

மண்டலேசுர ரனை வரு நின்னடி வணங்கப்‌
பண்டை யாய்வழி வருமுடி சூட்டினர்‌ பரவுக்‌
கொண்ட தோரரி யணைமிசை யிருத்தினங்‌ கொடியேந்
தொண்டு செய்தனம்‌ வருகுவ மென்றுபு சொற்றார்–49-

சொற்ற வம்மொழி யிரு செவி வெதுப்புறத்‌ தூய்மை
யுற்ற மாமுனி வரனவ னுறைவிட மதனை
யிற்றை நீரது காட்டுமி னிவ்வண மியற்றிப்‌
பிற்றை யானது கொள்ளுவ னென்மொழி பெய்தான்‌–50-

என்ற மாமுனி வரன்றனை மிறையவர்க்‌ இறையோன்‌
துன்று பற்பல மங்கல முரசினந் தொனிப்ப
நன்று கொண்டினி தேகியத்‌ தருநிழ னவையின்‌
றொன்றி வைகிய வொளியினைக்‌ காட்டின னுகந்தே,–51-

முன்னம்‌ தாயினை நீங்கிய முலை விடாக்‌ கன்று
பின்னம்‌ காண்குறு வகை யெனப்‌ பெய்யொளி பிறங்க
மன்லுர்‌ தாரு நன்‌ னிழலிடைக்‌ கதிரென வைகும்‌
பொன்னந் தேசினம்‌ மாறனைக்‌ கண்டனன்‌ புனிதன்‌-52-

வண்டு சூழ் மகிழ்‌ மாறனைக்‌ காண்டலும்‌ வதநம்‌
விண்டலர்ந்திட லாலவன்‌ முகமது விளங்கும்‌
புண்டரீகமென்‌ பத ற்குமம்‌ மாறனைப்‌ பொருவி
லண்ட யோனி யென்‌பதற்கு மிங்கைய மில்லம்மா–53-

மோன மாகியோகத்தினி திருந்தருண்‌ முதல்வ
னான நாதனைக்‌ காண்டலு மன்னவ னருளால்‌
ஞான முன்னைய துதயமா குற முனி நளினத்‌
தேனவாமலர்த்‌ தாட்டுணைச்‌ சடை முடி தீண்டி –54-

இப்பெருந்தனிச்‌ சோதியோ வென்றன திதயற்‌
துப்பனன்‌ மெழு கெனவுருக்‌ கியதெனுந் தூய
முப்பரஞ்சுடர்‌ தம்மிலு முதற் சுட ரிதுவென்‌
றப் பராங்குசன்‌ குணனெலா மெடுத்தெடுத்‌ தறையும்‌.–55-

கண்ணுகர்ந்தவர்‌ தம்மிலுங்‌ களி நறா வருந்தி
யுண்ணெகிழ்ந் து நின்‌றாடுறும்‌ பாடுறு முயர் யாழ்ப்‌
பண்னுலாமொழி நங்கை கொண் மகிமை யிப்‌ பரவை
நண்ணு மானிலத்‌ துற்றவர்‌ யாரென நவிலும்‌.–56-

அங்கு மிங்குமா யெழுந்தெழுர்‌ தேமுறு மமல
னிங்கு தோன்றுதற்‌ கெத்தவ மிழைத்த திவ்‌ வெறிநீர்‌
தங்கு மானில மென்னுமியான்‌ பெற்றிடுந்‌ தகையிற்‌
பொங்கு பேறியார்‌ பெற்றவ ரெனத்தனைப்‌ புகழும்‌.–57-

மருப்படுங்கம லாநந மலருமாநதந்தப்‌
பெருக்கி னீடுகட்‌ புனலிடை மூழ்குறும்‌ பிதிருந்
திருத்தகும்புய வரைகள்‌ பூரிப்புடன்‌ றிகழ
விருப்பினாற் புள காங்‌கித மடைதர வியக்கும்‌–58-

இத்தரைக்குள் யா னியற்றிய தவப் பல னின்றே
முத்தி யின்விளை யதனை யீந்தது வென மொழியும்‌
பித்தடைந்தவ ரென்ன மெய்‌ மறந்தளி பிதிருங்‌
கொத்து நன்மலர்‌ கொய்து கொய்‌தெறி தரு மன்றே.–59-

இவ்வணம்பர மானந்தக்‌ கடலத னிடையே
யவ்வரந்தரு முனிவரன்‌ மெய் மறந்‌ தாழ்ந்து
செவ்வை யின்னகந் தெளிந்து பின்‌ றோத்திரஞ்‌ செய்வான்‌
கொவ்வை வாயுடை நங்கை தன்‌ குலக்கொழுந் தனையே,–60-

செஞ்சுடர்‌ போலொளி செய்‌தே சுறு மெய்ப் பொருளே
மஞ்செனவே யணி சேர்‌ மானிற மெங்குரையாய்‌
விஞ்சகல் மார்பிடையே மேவி விளங்குறு பொற்
கஞ்சமலர்த் தவிசார் காரிகை மெய்த்‌ தவனே-61-

பொங்கட லாரவுணர்‌ பொயொழியப்‌ புவியில்‌
வெங்கதழ்‌ வாளமரில்‌ வீசு செழுந்திகிரி
சங்குட னொண் கதை வாள்‌ சார்ங்க மெனுந்தவர் மற்‌
றெங்கிவை வைத்தனையோ வென்றனை யாளொளியே–62-

மந்தர மாமலையின்‌ வாகொரு நான்கிலுனுங்‌
சுந்தர மோடடல்சேர்‌ தோளிணை பெங்கு கொலோ
இந்தள ராகமிசைத்‌ தின்னளி பல்லடருங்‌
கந்தமுறுந் துளவக்‌ கண்ணிகளெங்கு கொலோ–63-

பாதக வெவ்வீனைகள்‌ பாரிடம்‌ விட்டகலத்‌
தீதறு மெய்யறிவார்‌ தேசிடு மாதவனே
மாதக வாயுறுசீவத்ச மெனும் மருவும்‌
பீதக மெய்யொளி சேர்‌ பீடுடை யெங்கு கொலோ—64-

செஞ்சரண்‌ வீழ்சுரர் நோய்‌ தீர் தர மண் கொளு நாள்‌
விஞ்சகல்‌ வான்முகடுமே வர நின்றது தான்
எஞ்சலி னன் மணியா லிழை பல பூண்டிகழிக்‌
குஞ்சி கொலோ வழுதிக்‌ கோமகனே யுரையாய்‌—65-

நாடிய வாசமுறு நான நறுந் திலகம்‌
பீடிய லாவணியப்‌ பெய்யொளி செய்வது தான்‌
நீடிய வெண்ணிலவி னேரவிர்‌ புண்டரமரர்‌
கோடிய செம்பிறை நேர்‌ கொண்டொளிரிந் நுதலே—66-

அண்டர்‌ தொழக்குளிர வன்றருள்‌ செய்தது தான்‌
வண்டலர்‌ செங்கமல மான மிளிர்ந்தரிகள்‌
கொண்டு பரந்தணிசேர்‌ குழைகளி னோடி சலிக்‌
கண்டவர்‌ கண் கவரிக்‌ கண்ணிணையே கொலரோ–67-

கோவியர்‌ மத்தளைபால்‌ கொண்டினி துண்டது தான்‌
காவிய நீள் விழி நங்கைக்குயர்‌ மாமதலாய
தூவிய னற்பவளத்‌ துண்ட மிரண்டதனைச்‌
சீவியிணை த்ததெனத்‌ திகழுமிவ்‌ வாய் கொலரோ–68-

முன்னொரு வாரணமே முலமெனுஞ் சொலையே
மன்னுற வேற்றத தான்‌ மா மறை யாலுணராய்‌
நன்னய நான் மகர குண்டல நின்றினிதூ
சன்னளி யாடுறமிக்‌ காது கொல்‌ சற்றுரையாய்‌–69-

விழுத்தகு வால் வளையை வென்‌று பசுங்கமுகிற்‌
பழுத்தணி கொண்டு பள பளப் புட னோங்குறுமிக்‌
கழுத்து கொ லண்டமெலா முண்டு களித்ததுவே
கொழுத்தலை மண்டு புனற்‌ கூர் பொருனைத் துறையாய்‌–70-

விண்ணவருக்கனிய வெண் சுதை யீந்தருள்வான்‌
தண்ணலையைக் கடையுஞ்‌ சார் தகை யுற்றது தான்‌
வண்ணமுறுங் கிரிபோன்‌ மல்லோடு பேரணியு
தண்ணிய விப்புயமோ நங்கை கண்‌. மா மணியே,–71-

சந்தமுறும்பசிய தாமரை யோடிகல
விந்தை சின்‌ முத்திரையை மேவிய விக்கரமோ
நொந்தக நைந்தரனார்‌ நுன் சரணே சரணாய்‌
வந்தடி வீழ்தருமுன்‌ மாபலி யிட்டதுவே,–72-

துண்ட நறுந்துவரோ தூய்மை யருங் கமலம்‌
விண்டிதழோ வெனவே விளங்கணி யிவ் விரறான்
மண்டு நிரைக்குலம் விண்‌ மாரி நெருங்குதலைக்‌
கண்டழு கால் வரையைத்‌ தாங்கி யளித்ததுவோ–73-

நிம்பவலங்கலொடு நீண் மணி யார முநி
ரம்பி நிதிக் கிரிபோ லகன்றொளி ரிம் மருமப்‌
பம்பிடமேகொலரும்‌ பைங் கமலத்திடை வாழ்‌
வம்பு மலர்க் குழலாள்‌ வாழ்வினுகக்குமிடம்‌–74-

குயிற்றிட மேதினியிற்‌ கோதறு மெய் யறிவைப்‌
பயிற்றிட வேவிய வெம்‌ பரம்பொருண்‌ முத்திரையைக்‌
கயிற்றிட மேகொளிறை கவின்மிக வார்ந்தொளிரிவ்‌
வயிற்றிட மேகொலுயிர்‌ வைத்து வளர்த்ததுவே–75-

அங்கம லாதனனை யன்றருள்‌ செய்தது தான்‌
துங்கம லாதவனார்‌ தோன்றின ரென்ன வொளி
பொங் கமலாதடையிற்‌ பூம் புனலிற் சுழிபோற்‌
பங்கம லாதளிசேர்‌ பாவுமிவ்‌ வுந்தி கொலோ–76-

பார்த்தனணிந்த செழும்‌ பைந் தொடை யுங்கனத
தீர்த்தமு மன்றரனார்‌ செஞ்சடை மீதுறவே
சேர்த்தது தானெழிலச்‌ செய்ய மலர்க் கழலோ
நீர்த்தல மேழிலுமே நின்ற புகழ்ச்சுடரே.–77-

ஏறுட னம்பதும விரேகை பரந்த மலர்‌
வீறுகெடுத்து மணி மேவி யடைந்தவர் நோய்‌
மாறுபடுத்தி யருண்‌ மா மலரிவ்வடியோ
வீறிலிரும் புவி மண்‌ டாவி யளர்ந்த துவே,–78–

சேய மணிச் சடிலச்‌ சேகர னிவ்வனமா யேயரியன்‌றி விழி யேனெனு மக்குறியே மேயவனாகிய நா வீறனை யுன்றனரு மாயமதைத் தெரியும்‌ வல்லவர்‌ யார் கொலெனா-79-

பற்பல தோத்திரமுஞ்‌ செய்து பரன் செயலைக்‌
கற்புடை நங்கை முதல்‌ கண்டு மகிழ்ந்திடுவான்‌
சிற்பரனுக்கணிசேர்‌ செவிப்புல னுண்டுகொலென்‌
றற்பக நின்றெழவே யம்முனி வோரிறையே–80-

அடுத்த திரைக்கடன் மண்‌ ணதிர்ச்சி மிகுந்திடவே
யெடுத்தோரிருங்கலை முன்‌ னே யெறியக்‌ குணமே
கொடுத்தருள்‌ செய்தெளியேங்‌ கோது தொலைப்பவனுந்‌
திடுக்கென வேவிழிக டிறந்தன னோக்கினனால்‌–81-

நீக்கமருங்களியி னாழ்ந்தன னின்றெ வரு
நோக்கினர்‌ மன்னுறவே நோன்மையி னேழுலகு
மாக்கிய நல்லிசைகொ ளவ்வரு மா முனிவன்‌
வாக்கிவ னுக்குள கொலென்‌று மகிழ்ந்தனனாய்‌-82-

சித்தின் வயிற்றிடையே சிறிய துதித்திடிலே
யெத்தை யருந்தியது வெங்கு கிடக்குமென
வத்தை யருந்தியது வங்கு கிடக்குமென
வித்தக னன் பொடுவாய்‌ விண்டுரை செய்‌ தனனால்‌ -83-

அதுல னுரைத்திடு மம்மொழி தன்செவி யடையா முன்‌
மதுர கவித்தவ னெந்தை யடித் துணை மலர் வாழ்த்திச்‌
சதுமறை யுட்பொருண்‌ முற்றுமோ ரிம்மொழி தனிலொன்றி
யது வென வுட்கொடு கந்தன னங்ங னிருக்குங்கால்‌–84-

வந்தடி சென்னி புனைந்தவர்‌ வெவ் வினை மருவாதே
விந்தையி னின்ப முகந் தரு ணன் மகிழ்‌ விரை மார்பன்‌
இந்தை யுவந்து விளம்பிய வம்மொழி செவியோரா
வந்தர நின்று பொழிந்தனர்‌ விண்ணவ ரலர்மாரி-85-

மல்லட ரும்புய நின்மல னன்று மகழ்ந்தீயு
நல்லமு அண்டு வியந்தவி ணும்பரி னனியேயு
மல்லலெனுங்கட றன்னி லழுங்கிய வனைவோருஞ்‌
சொல்லமு தஞ்செவி யுண்டு களித்தனர்‌ துணிவுற்றார்‌–86-

எத்திசை யுந்தனி நின்று புரந்தரு ளிறையோனோ
டுத்தி யுறும் பணி நுண்ணிடை நங்கையு முடனாகப்‌
பித்தரெனும்படி தம்மை மறந்தனர்‌ பேரோகை
யத்தி யழுங்‌கி மயங்கி யுணர்ந்தனராய் நின்றே-87-

அங்கை யெனும் மலர்‌ சென்னி புனைந்தன ராயம் பொன்‌
றங்கிய செஞ்சடை கொண்டெழுமம்முனி தனையார
வெங்கடம்‌ வெந்துயர்‌ மங்க வெழுந்தரு ளிறைபோற்றி
யங்கச னுந்திய வெஞ்சரம்‌ வெனறவ வருள் போற்றி–88-

வய்யக மெங்கு மலிந்து பிறங்கிசை வளர்ந்தோங்கப்‌
பொய்யிலருந்தவ மெண்ணில்‌ புரிந்த புனித போற்றி
வெய்ய கொடும் பவ மெவ்வுயிரும் விட மேவாவந்
தய்யமறும்படி மெய்யறி வின்‌றருளடி போற்றி-89-

என்று வணங்கெ ருள்ள நிரம்பி யெழுந்தோகை
யொன்றுற நின்றிட மன்ற லுறுங்குழன்‌ மட மாதர்‌
வன்றிறலின் மணி மண்டபமெங்கு மலிந்தோங்கிக்‌
குன்றின் மிகுந்தெரு வெங்கு முளங்களி கொண்டாராய்‌–81-

விந்தையலங்கிர்த நன்கு புரிந்தனர்‌ மென்மேலுஞ்‌
சந்தன நன்புனு கின்பணி நீர் மலர்‌ தயிர் நெய் பால்‌
புந்தியிலன்பு மிகுந்து பொழிந்தனர்‌ பொருவில்லா
மைந்தனுதத்தரு ளன்றினு மினறெண்‌ மடங்காக,–82-

இவ்வண மெண்ணி லருந்தகை யந்நக ரெல்லோரு
மெவ்வமி லுள்ள மகிழ்ந்தனர்‌ வைகுற விகல் சேருந்‌
தெவ்வர் கடம்முயிர்‌ தனஜொளி மண்டிய திறல்வேலான்‌
முவ்வுல கும்புகழம் முனி தன்னடி. முடி தாழ்ந்தே–83-

மின்னவிருஞ்சடை மன்னு மருந்தவ வினையேன் முன்‌
சொன்ன வணந்திரை மண்டி யெழுங்கடல்‌ சூழும் பரர்‌
நின்னததன் கண்‌ மலிந்து பிறங்கிய நிதி யெல்லா
முன்னது வின்று நீ கொள்ளுதி யென்றவனுரை செய்தான்‌–84-

அவ்வுரை தன்னை யுணர்ந்து மறிந்தில னெனவே யவ்‌
வெவ்வமி னன்னெறி கொண்ட வருந்தவ னிடை வைகப்‌
பவ்வவருங்கடன்‌ மண்டனி நின்றளி பகல் வேலான்‌
செவ்விய வன்னவன்‌ முன்பினு மின்னுரை செய்வானால்‌–85-

இன்று கொடும்பவ வல் வனை யேன் சொலை யேறாதே
யொன்றிய தென்னென வன்பு மிகுந்தன னுரைசெய்யத்‌
துன்றிய மின்னவி ருஞ்சடை கொண்டு துறந்தெல்லாம்‌
பின்றவ நல்விர தங்கொ டெழுந்தவர்‌ பிழை யில்லோய்‌–86-

மன்னவர்‌ தம் வினை கொண்டு மகிழ்ந்திட வகை நன்றோ
வின்னமு துண்டவர்‌ வெங்கடு வுண்பர் கொலெனவே முன்‌
றென்ன முகந் தனில்‌ வெங்கதர்‌ கண்டெழு சீராளன்‌
சொன்ன துணர்ந் தெழின்‌ மன்னவர்‌ மன்னவன சொல் வானால் –87-

சங்கென வெண்ணில வுந்தி யிலங்கு பறவ யோகி
ருங்குல தன்மமி தென்னிலெ மைந்தனை யுற நன்றாய்ச்‌
செங்கனி மென்றுவ ரென்ன விளங்குறு செவ்வாயை
யிங்கு திறந்து சொ னன்கு மொழிந்திட விறை செய்யா–88-

அப்புமலர்க்சண்‌ விழித்திட வின்னுமதருள் செய்தே
யொப்பிலிவன்‌ றனை யன்னை முலைப்பய முண வோங்கு
மிப்புளி நின்று மெடுத்தெமிடந் தனி லினி தீந்து
செப்பரு வாழ்வை யளித்தரு ளென்றுரை செய்தானால்‌-89-

திரு மதுரகவிப்‌ படலம்‌ முற்றும்‌.

பதின்மர்‌ திரு வரன் முறைப்‌ படலம்‌

ஆடரவத்‌ தமளி துயி லரங்கன் செய்ய வடி பரவக்‌ கூரேச னடைய மேலை
வீடுமக்கின்‌ றளித்தனமென்‌ றரங்கன் சொல்ல விபுதனென்‌ சம்பந்தா சம்பந்திகட்குன்‌
நாடிடந் தந்தருடி யென வுரைத்‌துக்‌ கைக் கொ ணன்மையிற்‌ காடாயமுயர்‌ நனிவீ செந்தை
சேடமுனி கழல் பணிந்து பதின்மர் தங்க டிரு வரன்முறைப்‌ படலஞ்‌ செப்புவாமால்‌–1-

இன்னணங்‌ குரிசி லுரை செவி யுணர்ந்தாங்‌ கேதிலாத்‌ தவமுனி யுகந்து
தென்னனின்‌ மகவென்‌ றுள்ளினை யதுவோர்‌ தேவரா சியமெனத்‌ திரண்ட
கன்னவிறிறற்‌ றோட்‌ காளைமன்‌ மதுர கவி யடி பணிந்ததை யருடி
யென்னலு முன்னாண்‌ டறிந்தவை முழுது மியம்பின னெவர்களு மறிய–2-

தாதளைந்தின வண்‌ டூது பைந் துளபத்‌ தாரினன்‌ கரைக்கள னூர்திப்‌
போதவற்‌ கரு நான்‌ மறையன வடிவிற்‌ போதமுற்‌ றிடவருள்‌ புனிதன்‌
ஆதவனெளி கெட்‌ டிர வுறப்‌ பகலி லாழி கொண்‌ டெறி தருக படன்
வாத முண்‌ ணரவப்‌ பணாடவி நடித்த மாயவன்‌ பர வாசு தேவன்–3-

செங்கதிர்‌ மதிமின்‌ மினியென வொளி கொள் சேணுறு நித்தியரான்றிப்‌
பங்கய னரனிந்‌ திரன் முத லறியாப்‌ பதத்தவ னுள்மகிழ்ந்‌ து லகோர்‌
நங்கழ னிலைபெற்‌ றின்புற வவர்த நவை கொள்வெவ்‌ வினைத் தொட ரகலச்‌
சங்கையி லவதாரங்கள்‌ செய்துரைத்த சது மறை விதி வழி யனைத்தும்‌-4-

கற்றிடற்‌ குரிய ரெவர்க்கு முட்‌ பொருள்கள்‌ கசடற வெளிப்பட லரிதாய்‌
மற்றுளோ ருள்ளற்‌ கறமில தாகி வழங்கலி லவரெவாறுய்வார்‌
இற்றை நாடொடங்கி யாவரு மஃதை யெளிதினி லறிவதற்‌ கினிய
சொற்றருந் தமிழி லருமறைப்‌ பொருளைச்‌ சொற்றிடி லுய்வரென்‌ றெண்ணி-5–

பைத்தலை யரவுக்‌ கரசனோ டினிய பரிகர மனைத்தையும்‌ விளித்தங்
கத்திசூழுலகின்‌ முன்பினு மமிச மவதரித்‌ திடப்புரிந் தறநூன்‌
முத்தமிழதனிற்‌ றெளிதரப்‌ பொருளை மொழிந்து வெம்‌ பிறமத நெறிகொள்‌
சித்தர்களெளிதிற்‌ பரமிதென்‌ றறியச்‌ செய்திடச்‌ செவ்லியிற்‌ செய்மின்‌–6-

என்றவர்க்‌ குரைத்திவ்‌ வுலகுயக்‌ கருது மெம்பிரான்‌ சரபசங்கார
வென்றி கொளுகிரி னரகரி யெனுமம்‌ மேதகு விமலனுள்‌ ளுகந்தே
இன்று நீ செய்த தவத்தினு முன்னா ளெய்து மாதவத்தினு முனக்கு
மன்றலங்‌ குழவி யெனப் புகழுடைபோய்‌ மலடற வுதித்தன னென்‌றான்‌–7-

மாமுனி யுரைத்த வுரை செவி யுணரா வாம்பரி மன்னர் கோனயந்து
தேமலர்த்துள வினானருட்‌ பெறுமச்‌ சேடன் மற்‌ றுள பரிகரங்க
டாமினி துதித்த தெவ்விட மவர்கள்‌ சாற்றிய நூல்கள் யா வெனவும்‌
நாமவேன்‌ மன்னா நினக்கறி வுறயா னவில் குவ னென நவில்குவனால்‌-8–

முதலாழ்வார்கள்‌

தண்டுழாய்‌ மார்பன்‌ பாஞ்ச சன்னி யாழ்‌ வானு மிந்தத்‌
தொண்டை மானிலப்‌ பெண்‌ கண்டந் துலங்கு மங்கலமே யென்ன
வண்ட மொடிலகு மிஞ்சி யத்திமா நாகந் தன்னுட்‌
கொண்டலார் கலியென்‌றுள்ளிக் குளிர் புனற் பருகும் பொய்கை–9-

தோடலவிழ்ந் தொழுகு செந்தேன்‌ றும்பிதங்ளேயோ டுண்டு
பாடொலி கறங்குஞ்‌ செய்ய பங்கய மலரினுள்ளே
கேடி றுவா பராந்தங்‌ கெழு முசித்தார்த்தி தன்னி
னாடுமைப் பசியிற் சுக்ல பக்கமு நயந்த காலை–10-

ஓணமோ டார னன்ன ளொன்றிய தினத்தி லாங்கு
மாணமர்‌ குழவி யாயவ்‌ வளநகர்‌ வதிந்து நாம
நீணிலத்தவர்கள்‌ பொய்கை யாரென நிகழ்த்த மேலோர்‌
பேணிய புவிகள்‌ முற்றும்‌ வலஞ் செய்வான்‌ பெயர்ந்தான ன்றே–11-

திண்டிறற்‌ கதையு முன்னஞ்‌ செப்பிய திருநா டுள்ளே
வெண்டிரைக்‌ கரங்கண்‌ முத்தம்‌ வீசுமம்‌ புதிக்கங்‌ குற்ற
துண்ட வெண்‌ பிறை யோனென்னச்‌ சுதையவிர்‌ மாட மல்லை
வண்டிமிர்ந்‌ தடருத்யான வனத்துறு குருக்‌கத்திக் கண்‌–12-

வாய்ந்த பொன்‌ மலரிலக்த யுகமொடு வருட மாதத்‌
தேந்திடு புதன விட்டத்‌ திளமக வுருவாய்‌ நாம
மாய்ந்த பேருலகர்‌ பூதத்‌ தய்யனென்‌ றழைக்க முன்னீர்‌
தோய்ந்த மாநில மன்னோனும்‌ வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–13-

நாந்தக மதுமுன்‌ சொன்ன நாட்டெறி கடற்‌ கரைக்கண்‌
மாந்தளி ரனைய மேனி மாதரார்‌ மயிலை தன்னிற்‌
பாந்தளிற்‌ பயிலு மாதி கேசவப்‌ பெருமாள்‌ கோயி
லேய்ந்த நீள்‌ புனல் கொள்‌ கூபத்‌ திருந்த செவ்‌ வல்லிப் போதில்‌–14–

முன்னிருவருக்கு மாங்கு மொழி யுக வருட மாதம்‌
தன்னிலந்‌ தசமி பொன்னாட்‌ சதையம்‌ வந்‌ துதித்த நாம
மின்னிலத்‌ தவர்கள்‌ பேயரென்றிட முதிர்ந்த ஞான
மன்னியவாறு பூமி வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–15-

முனம் புவி வலஞ் செயச் சென்‌ மூவரிற்‌ பெரியோன்‌ செய்யி
லனம்பயில்‌ கோவ லற்றோ ரம்மையார்‌ மனைக் கண்‌ சென்றித்‌
தினந்துயில்‌ வுறவெற்‌ கும்மி லிடமருள்‌ செய்வீ ரென்ன
மனமகிழ்ந் தவளத் தொண்டன்‌ மலரடி பரவிச்‌ சொல்வாள்‌–16-

அய்யவிக்‌ குடிற்கு டிண்ணை யொருவருக்‌ கணையா மற்று
மெய்யவரிருவராகில்‌ வீற்றிருந்‌ திடலா மூன்று
துய்யவராகின்‌ மாயன்‌ றொடர நிற்றிடலா மென்னப்‌
பொய்யிலாள்‌ மனைக்கு ளன்பிற்‌ புகுந்து கண்டுயிலுங்‌ காலை–17-

பூதமா முனிவ னின்னோன்‌ போலவே வினவி வந்தம்‌
மேதகு விமலனோடு வீற்றிருந் தருள மற்றும்‌
கோதிலா னொருவ னன்னோன்‌ போல மேய்‌ வினவிக்‌ கூட
வேதிலார்‌ மூவராகி யிசைந்து நின்‌றிடு மவ்வேலை–18-

நள்ளிருட்‌ பிழம்பி னாங்கு நனிபடர்‌ தர வவ்வேலை
கள்ளிருந் தொழுக வண்டர்‌ காமரு பெடையோ டுண்டு
கொள்ளரும்‌ பார்ப்பு முண்ணக்‌ கொடுத்‌து வாழ் துளவக்‌ தெந்தை
ஜெள்ள லாரிடைக்க ணின்று நெருக்கிட வவருஞ்‌ சொல்வார்‌-19-

அய்ய மூவரின்‌ முன்னோனங்‌ கடை தரு மிருட்குலங்க
ணைய வென்‌ றாழி யான்ற னளீரடிக்‌ கமலப்‌ போதில்‌
வையமோர்‌ தகழி யாக வாரிதி நறு நெய்‌யாக
வெய்யவன்‌ விளக்கதாக விருப்புட னேற்றினானால்‌–20-

பின்பிரு வருக்குண்‌ முன்னோன்‌ பேரிருட்‌ பிழம்பு துஞ்ச
வன்பொரு தகழி யாக வார்வமே நறு நெய்‌யாக
வின்புறு சித்தை யந்நெய்‌ யிடுதிரி யாகப்‌ போத
நன் மணி விளக்கதாக நாரணன்‌ கழலிற்‌ சூட்ட–21-

துன்னிய விருள் கணீங்கித்‌ துளவினான்‌ கலுழன்‌ மீதங்‌
கன்னவர்க்கெதிரில்‌ காட்சி யளித்திட வவருட்‌ பின்னோன்‌
மன்னிய திருவைக்‌ கண்டேன்‌ மாசில் பொன்‌ மேனி கண்டேன்‌
பின்னுமைம்‌ படை கைக்‌ கண்டேன்‌ பேரருட்‌ கடலென்றோதி –22-

மூவரொன்‌ றாகி யார்க்கு முதல்வனை வித யீசற்குந்
தேவனைக்‌ கமலவீட்டுச்‌ செல்வி நாயகனை வாழ்த்தி
மேவுபு வணங்க யன்னோன்‌ விரிபுகழ தனினெஞ்ச
வாவுற வேதாந்தார்த்தம்‌ வண்டமிழ்த்‌ தொடை செய்தாரால்‌–23–

அத்திரு நாட்டில்‌ மாயன்‌ நிருவாழி யாழ்வான்‌ மெய்யர்‌
நித்தமைந்‌ தழலை யோம்பு நீணகர்‌ மழிசை தன்பாற்‌
பத்துடை யடியர்‌ மேலாம்‌ பார்க்கவ ரிடி தன்றேவி
மைத்தகோ திசுக வின்சொற்‌ கனகாங்கி மணி வயிற்றில்‌–24-

செப்புறு விபவாப்தத்துட்‌ செயிரறு மகர சுக்லத்‌
தொப்பறு தசமி பொன்னா ளுற்றிடு மக நாளெங்கு
மற்புத மெனவோர்‌ பிண்ட மாய வதரிக்க நொந்தம்‌
மைப்படி குழலியோடவ்‌ வரமுனி யதை யெடுத்தே–25-

வனத்துறு யிரப்புத்‌ தூற்றில்‌ வைத்தவ ரேகப்‌ பின்பு
வனத்துளோர்‌ தமைப்புமக்கு மலரவ ளருளினாலே
வனத்துறு புணரி சூழ் குவலயமா ததனைக்‌ காக்க
வனப்புறு குழவி போல வடிவமைந்‌ தழுமவ்‌ வேல்வை -26-

அந் நக ருறையு நெய்யா ராழியா னறிந்து சென்று
தன்னிரு கண்களாரத்‌ தழிஇய ருளமுத மூட்டி
மன்னு தன்‌ வடிவு காட்டி மாயனுண்‌ மகிழ்ந்து போய
பின்னரம்‌ மகவு தாயைப்‌ பிரிந்த கன்‌றனைய வேங்க -27-

அற்றைநா ளரிதா சென்னு மருட்டிரு வாள னென்னும்‌
வெற்றி வேந் தொருவ னன்பின்‌ மேவவவ்‌ வனத்து முன்செய்‌
நற்றவ மதனாற்‌ கண்ட நாகிளங்‌ குழவி செங்கை
பற்றி யுண்‌ மகிழ்தன்‌ றாரப்‌ பங்கயச்‌ செல்விக்‌ கீந்தான்‌ -28-

கொந்தவி சளக பாரக்‌ குவிமுலை மடமா னோக்கி
வந்தியா கையிலன்‌ போடு வாங்கி யுள்‌ளு வகை பொங்கக்‌
கந்துக நகிலங்‌ கொண்டு கான்முளை மலர்‌ வாய்‌ வைக்கச்‌
செந்தளிர்‌ மேனி கொள்ளச்‌ செல்வனும்‌ பருகா துற்றான்‌ –29–

என்ன காரணமோ வென்றங்‌ கிருவரும்‌ வருந்தா நிற்க
மன்னுமவ்‌ வூரினான்காந் வருணத்தோர்‌ திருமா னேய
னுன்னி யிப்‌ புதுமை கேளா வுளங்கனிந் தினிய தீம்பால்‌
கன்னியங்‌ குழவிக்‌ கென்று காய்ச்சிவந் துதவ வுண்டான்‌–30-

நாடொறு மன்பி னன்னோ னல்க வுண்‌ டிடுமோர்‌ நாளிற்‌
கோடிலா னுளமீ தென்றுட்‌ குறித்ததி லிறையுட்‌ கொண்டிச்‌
சேடமுண்‌ டிடினிற்‌ கொன் போற்‌ சிறுவனுண்‌ டாகு மென்ன
நீடிய களி கூர்ந்‌ துண்டந் நேயனுங்‌ குழவி யீன்றான்‌ –31–

மண்ணுளோர்‌ புகழப்‌ பன்னீ ராண்டவண்‌ வதிந்து வெவ்வே
றெண்ணமுற்‌ றிதர மாய சமயம தியல்பு கோக்க
நண்ணியங்‌ குளதே வெல்லா நலிதர வறிதல்‌ காணப்‌
பண்ணவ னாழி யானே பரமென வுறுதி கொண்டே –32–

மருமலர்‌ நறவ மாந்தி வண்டிமிர்ந்‌ தடருஞ்‌ சோலைத்‌
திருவலிக்‌ கேணி தன்னிற்‌ சென்ற மெய்ப்‌ பொறி யடக்கிக்‌
குருமணி வண்ண னுன்னிக் கொடுந்தவ முஞற்று நாளி
லெருது வெந் கொடு முக்‌ கண்ணா னெய்தின னுமை யோடன்றே–33-

வெறுமையா லறுவை கீறி வேளை போக்கிடப்‌ பொருத்து
மறிஞரை யுமைகாண்‌ குற்றிவ்‌ வறியனுக்‌ கருள்வா யின்று
தறுகண்வெங்‌ கயத்தோ லன்பா சார்ந்தென மறுக்கத்‌ தாழ
மறுவிலான்‌ முனவன்‌ நண்ண மதித்திடா திருந்துந் தேறான்‌ –34-

மாசிலாய்‌ நினது ளென்சொல்‌ வழங்குவ னெனவீ டென்ன
வாசிலா ததற்கு நாமோ ரதிகாரி யில்லை யென்னத்‌
தேசிக னகைத்தாங்‌ கேநின்‌ சீர்மை யிக்கலை பொருத்து
மூசிபோம்வழி நூலேனு முடன்‌ செலற்‌ குதவா யென்ன –35-

முக்கணான்‌ பரிகசித்தா னிவனென முனிந்து வெய்ய
வக்கனிக்‌ கணை விழிப்ப வவன்றவத்‌ தழலை யேவ
விக்கி நொந்‌ துயரேழ்‌ மால் பெய்‌ வித்‌ தும தவியா தெண்ணி
நக்கனும்‌ பக்தி சார நாமமிட்‌ டேகினானால்‌–36-

இத்தகை மழிசை வேந்த னிணைமரு திறுத்த வேந்தே
மத்தளை தயிர் பாலுண்ட மாயனே பரனென்றோ துந்
தத்துவப்‌ பொருளு மாறு சாத்திரப்‌ பொருளு மோர்ந்து
முத்தமிழதனில்‌ யாரு மொழி தரப்‌ புகன்றான்‌ மாதோ –37–

காரமர்‌ மேனி நங்கள்‌ கண்ணனின்‌ கவுத்துவாம்சத்‌
தார் கலி பரசு ராம னாணையி லொதுக்கித்‌ தந்த
கேரள நாட்டு மாதர்‌ கிளரொளி வதன நோக்கி
மாரவேண்‌ மயல் கொள்‌ வஞ்சிக்‌ களநக ரரசுகந்து–38-

அகனில முழுதுமோச்சு மரசனாங்‌ கொருவன் பால
வுகமுறு பராபவத்து ளோங்கிய மாசிச் சுக்லத்‌
திகல் கெடு தசமி பொன்னா ளெய்திய புனர் பூசத்திற்‌
பகலவ னொளியே யன்ன பைங் கதிர்க்‌ குழவியானான்‌–39-

சேரனுக்‌ கிள வலாகச்‌ செனித்‌ துவெண்‌ டிருமண் காப்பு
நேர்கொள் வைணவர்க ளோடு நித்தலும்‌ ராம காதை
யோரு நாட்‌ கரனோடெந்தை யொருவனாய்ப்‌ பொருதுங்‌ காதை
போரவு மொழியக்‌ கேட்டுப்‌ பொருதுவன்‌ கரனோடென்‌றே –40-

வழிகொடு கடந்த போத மைச்சரான்‌ மறை வலார்கள்‌
பழிபடு கரன் மற்‌ றுள்ள பரிகர மழிந்தாரென்று
மொழி தரு காதை சொல்ல முழக்கு பேரிகையை யென்‌ று
கழுகுலா மயிற்கை வேந்தன்‌ களிப்புடனிருந்தானம்மா–41-

இன்னவா றியைந்த வாய்மை யேதிலா வுழைய ரோர்ந்து
மன்னனுக்‌ கிவ்வா றோதும்‌ வைணவர்‌ நீக்க வென்று
ளுள்ளியவ்‌ வினன் செய்‌ பூசைக்‌ குரிய தென்‌ னரங்கன் சாத்தும்‌
பொன்னணி யாரந் தாமே கவர்ந்து பின்‌ புகலலுற்றார்‌–42–

கடகரி மருப்பொசித்த கண்ணன்‌ முத்தாரந்‌ தன்னை
மட மிலா விபுதராநின்‌ வைணவர்‌ கவர்ந்தா ரென்ன
வடலரசவர்கள்‌ செய்யா ரென்றுரை யாடிப் பாந்தட்‌
குடமதுட்‌ கையிட்‌ டன்னோர்க்‌ குறுதியே கூறினால்‌–43-

இனையன விழைத்த பேர்க ளுழையரென்‌ நினனுளெண்ணி
வனமணி மார்ப னெந்தை மாமதி லரங்க மேவித்‌
தனைக் குல சேகராழ்வா ரென்று பேர்‌ சாற்றப்‌ பெற்று
முனமுள ராம காதை மொழிந்தனன்‌ றமிழி லன்றே–44-

கள்ளவி ழளகபாரக்‌ கடைசியர்‌ களை கொய்‌ வேலை
பள்ளநீர்ப்‌ பழன முற்றும்‌ பங்கயல்‌ குமுத நீலத்‌
தொள்ளிய வுருவிற்‌ காட்ட வோதையிட்‌ டலமார்ந் தெங்குங்‌
கொள்ளை வண்‌ டுள மயங்குங்‌ கோமகன்‌ வழுதி நாட்டில்‌–45–

அல்லியங்‌ கோதை மாதரகனிலா மணி மாடஞ் சேர்‌
வில்லிபுத்தூரின்‌ மெய்ய விப்பிரர்‌ குலத்து முன்னஞ்‌
சொல்லு நற்‌ குரோதனத்திற்‌ றோன்‌றிய மிதுன சுக்லச்‌
செல்வ நற் பலகோளேகாதெசிகொள்‌ ஞாயிறு நன்னாளில்‌–46-

சோதிநாட்‌ கருடன்‌ சேயாய்ச்‌ தோன்றியப்‌ பருவஞ்‌ சென்று
நீதி நூ லனைத்தும் மோர்ந்து நிலமலர நந்தனான
வாதிமா லடியர்‌ தம்பா லன்பு பூண்‌ டவன் பதத்திற்‌
போது நந்தவனம்‌ வைத்துப பூந் தொடை யளித்து வந்தான்‌–47-

ஆவலிற்‌ றுளபமற்று மமுதுகு மலர்கள்‌ கொய்து
மாவல மார்பன்‌ செய்ய மலரடி சூட்டு நாளிற்‌
சீவல தேவனென்னுந் தென்னர்கோன்‌ பரமதாய
தேவினைத்‌ தெரிவா லுள்ளந்‌ திகைத்திருங்‌ கவலை பூண்டே–48-

ல்வியின்‌ முதிர்ந்து ஞானக்‌ கடலெனக்‌ கருணை பூத்த
செல்வ நம்‌ பியினைக் கூவித்‌ தேவினுட் பரமீதென்று
சொல்வதற்‌ குலகுளோரிற்‌ றுளக்கறு மறை மற்‌றுள்ள
பல்வகை நூல்களாய்ந்த பாவலர்த்‌ தேர்மினென்றான்‌–49-

இன்னிலத்‌ தியாவரேனு மிணையிலாப்‌ பரமீதென்று
நன்னெறி மநு நூன்‌ மற்று நான் மறை யெவையாலேனு
மன்னிடப்‌ பிரதிபாதிக்க வல்லரே லளவிலிந்தப்‌
பொன்னுறு கிழி யறுத்துப்‌ போவரென்‌ றறிவித்தானால்‌–50-

கற்றறிவாளர்‌ பல்லோர்‌ கசடற வறிந்தீ தென்று
சொற்றிடற்‌ கரியதாகச்‌ சோர்வுறப்‌ புதுவை வாழு
மற்றுறந்‌ திடவென்‌ றோட்டும்‌ வடபெருங்‌ கோயிலுள்ளா
னற்றை நா டொடையல்‌ சூட்டவ்‌ வன்பனின்‌ கனவிற்‌ சொல்வான்‌–51-

வார்ந்த வேல்‌ வழுதி கூடன்‌ மன்னர் கோன்‌ பரமீதென்‌ று
தேர்ந்திட வறிவிப்‌ போரிக்‌ கிழியறச்‌ செய்வாரென்‌ று
நேர்ந்தவ னாற்றி னான்‌ நிருபன தவைக்க ணீயுஞ்‌
சார்ந்திதென்‌ றறிவித்துப் பொன்‌ றனை யறுத்‌ திவணேகென்றான்‌–52-

கொழுஞ்சுட ரனைய நேமிக்‌ கோவல னுரைப்பவன்னோன்‌
அழுங்கி யு னடியிலன்பி னாய் மலர்‌ த்‌ தொடையல்‌ சூட்டுந்
தொழும்பல தறியா யான் மெய்ச்‌ சொரூபமீ தென்பான்‌ கொட்டுத்‌
தழும்பினைக்‌ காட்டி வீட்டத்‌ தக்கதோ கிழியை யென்றான்‌–53–

மெய்ய நின்‌ கவலை மாற்றி வேந்தன தவைக்கண் வாதஞ்‌
செய்யு நா ளெழுந்து யானுன்‌ சிந்தை வந் திருப்ப னஞ்ச
லய்யவென்‌ றிட வவ்‌ வன்ப னரசர் கோணவைக் கண் சென்று
பையராத்‌ துயிலு மாலே பரமென வறிவித்தானால்‌–54–

கொய்யுளைப்‌ பரிவேந் தன்னோன்‌ கூறிய தோர்ந்து பின்னுங்‌
கையிலங்‌ காழி மாலே பரமெனக்‌ கழறும்‌ வாய்மை
மெய்யெனில்‌ கிழி யறுந்து விழுமெனச்‌ சமையமெல்லா
நைய வீழ்ந்தது வெல்லோர்க்கு நாரணன்‌ பரமனென்ன–55-

மீனகேதனனுகந்தவ்‌ விபுதனைக்‌ களிற்றி லேற்றித்‌
தானைபின்‌ றொடர வீதி தனை வலம்‌ வருங் காலத்தில்‌
வானினான்‌ முகன் வேய்‌ முத்தன்‌ வார் தொழக்‌ கலுழன்மீது
தேனிறை துளவத்‌ தெந்தை சேவை தந் தருளக் கண்டே–56–

கூடினான்‌ களிதுலங்கக்‌ குணமிகு பரமன்‌ தாளைச்‌
சூடினான்‌ றுதி பல்காலுஞ்‌ சொல்லினான்‌ றுளங்‌கி நெஞ்சம்‌
வாடினா னிவர்கண்‌ ணீறு வருமெனத்‌ திருப்பல்லாண்டு
பாடினா னெவர்க்கு நீயே பரமெனத்‌ தொழுதான் மாதோ–57-

பொன்னவள்‌ கொழுநன்‌ வாழ்த்திப்‌ போனபின்‌ புனிதனாகும்‌
பின்னமி லிவர்க்குப்‌ பட்டர்‌ பிரானென நாமஞ்‌ சாத்திக்‌
கன்னவி றிரடோட்‌ காளை கனிந் திவர்க்‌ கடிமையாக
மன்னுமிவ்‌ வுலகிற்‌ பாக வத மியற்‌ றமிழ்செய்தானால்‌-58-

இளையவன்‌ புதுவை சென்றாங்‌ கெந்தைபான்‌ முன்னினந்தா
வனமதுபுரந்து செய்ய மலரளித்‌ திடுமோர் நாளிற்‌
கனவண னருளா னீளை கடிவனத்‌ துளவத் தூற்றிற்‌
சினமக ளுருவதாகத்‌ திருவின் வந்‌ தவதரித்தாள்‌–59-

மண்டமர்‌ கடந்த வாழி வடபெருங்‌ கோவிலார்க்குத்‌
தண்டுள வெடுக்குங்‌ காலத்‌ தளிர் நிறக்‌ குழவி தன்னைக்‌
கண்டுட னெடுத்து வந்து கனிவுடன்‌ வளர்க்க வன்னாள்‌
கொண்டலிற்‌ சுருளுங்‌ குஞ்சிக்‌ குழவி போய்ப்‌ பருவமுற்றான்‌–60-

ஒடரித்‌ தடங்கணாளவ்‌ வொளிமணி வண்ணற்‌ கன்னோன்‌
ஜோடவிம்‌ மலர்கள்‌ கொய்து தொடுத்து வைத்‌ தயல்‌ போங்‌ காலை
நாடியுள்‌ ளுகந்து நீண்ட நள்ளிரு ளளகந் தன்னிற்‌
சூடிநீர்க்‌ கிணற்றிற்‌ பார்த்துச்‌ சுற்றி வைத்‌ திடுமோர் நாளில்‌–61-

தார்வட பத்திரற்குச்‌ சாத்தவன்‌ னோனெடுக்க
வார்குழலிருப்ப நோக்‌கி மதி மலைந்‌ துழன்‌ று கெட்டுச்‌
சீர்கெழிம்‌ மடமான்‌ செய்த செய்கை யென்‌ றறிந்து மற்று
மேர் கொடே மலர் கொய்‌ தெந்தை யிணை யடி புனைந்தான்‌ மன்னே–62-

அம்மல ரணிந்த மாலவ்‌ வடியனின்‌ கனவிற்‌ சென்றப்‌
பொம்மல் வெம்‌ முலையாள்‌ சூடும்‌ போதுகந்‌ தளித்திடாதிச்‌
செம்மல ரளித்த தெற்குத்‌ திருவுள மிலையென்றேக
விம்மறை யோனு மன்னா ளிந்திரை யாமென் றெண்ணி–63-

படத்தர வணையானுள்ளப்‌ படிமல ரளித்துச்‌ சூடிக்‌
கொடுத்தவ ளென்று காமங்‌ கொழுங்கயற்‌ கண்ணிக் கீந்தான்‌
மடக்கொடி யுகந்‌து பொன்னி யரங்கனை மணந்து முன்னீ
ரிடத்‌ துப நிடதார்த்தத்தை யிசைத்தன டமிழிலன்றே–64-

கடி கொள் சந்தகிலுருட்டுங்‌ காவிரி நதிநீர்‌ சூழத்‌
தொடுநிரை விளைவாஞ்‌ சாலிச்‌ சோழநாடதனுள்‌ மண்டங்
குடிநக ருறையும்‌ விப்ர குலத்திலோர்‌ வனமாலாஞ்சத்‌
தடியர்பாற்‌ கலியுகத்தி லழகிய தனுமாதத்தில்–65-

கேட்டை நாளவதரித்‌துக்‌ கிளரொளி மகவாய்‌ ஞான
நாட்டமார்‌ விப்ர நாரா யணனென நாமம் பெற்று
வாட்டமின்‌ மறை கண்‌ மற்றை மனு முத னூல்க ளோர்ந்து
கோட்டமின்‌ மனத்தா னென்று கூறிட வதியுமெல்லை–66-

மஞ்சுயர்‌ மாட நீண்ட மாமதி லரங்கஞ்‌ சென்றோ
ரஞ்சன வண்ணன்‌ செம்பொ னடி யிணை வணங்க மாயோன்‌
கஞ்ச நீண்‌ மலரரிக்கட்‌ கடையரு ளளித்தன்‌ னோன்ற
னெஞ்சினைக்‌ கவர்ந்து தன்பா னே யவா னாக்கினானால்‌–67–

அற்றைநாண்‌ முதலன்னோ னெம்‌ மரங்கனே யரணென்‌
றுள்ளிற்‌ பற்றிமா மலர் கொணந்தா வனமது பரிவாய்‌ வைத்து
நற்றொடை யளித்துச்‌ செல்லு நாளொரு தினத்திலந் நா
டுற்றிடு திருக் கரம்ப னூரில் வாழ்‌ கணிகைமானாள்‌–68-

காவிவென்‌ றகன்று நீண்ட கயற்கணர்‌ துவர் வாய்த் தேவ
தேவகி யெனும் பேர்‌ கொள்ளுந்‌ தெரிவையு மிகுளை மாரு
மாவலி னிசளை யென்றோ ரணி நகர்க்‌ கரசன் பாற் சென்‌
றேவல்கள்‌ புரிந்து தன் பொ னெழினகர்க்‌ கெய்துமாறில்‌–69-

இவ்வெழில்‌ வனங்கண்‌ டுட்சென்‌ றெய்திரு வளநோக்‌ குங்கா
னவ்விகொணயரநி விப்ர காரணன்‌ றன்னைக்‌ காணச்‌
செவ்வியோ னிவளை யோர் கண்‌ டிரும்பியும்‌ பாரா நிற்க
வவ்வணி மாதுக்‌ குற்ற பின்னவ ளறை கின்றாளால்‌–70-

மைப்படு குழலி யிந்த வையகத்‌ தெவரையும் யான்‌
கைப்படுத்‌ துவனென்‌ நென்பாற்‌ கழறினை யலவோ விந்தத்‌
துப்பனை வசஞ்செயின்னீ தொழில் வல வேசி யென்ன
வெப்படி யேனு நங்கா யிவனை யென்‌ வசப்படுப்பேன்‌–71-

சூளென வுரைக்க மற்றோர்‌ தொன்னக ரடைய வீண்டு
வாளரி மதர்க்கட்‌ டேவ தேவகி வஞ்சமுற்று
நீளலர்‌ வனத்‌துக்‌ சுன்னோன்‌ பரிவுட னீரிறைக்கும்‌
வேளை பார்த்‌ திவளங்‌ குற்றம்‌ மடையினை விலக்கி வந்தாள்‌ –72-

இன்னணஞ்‌ சிலநாட்‌ சென்றவ்‌ வேதிலா னீயாரென்ன
நன்னய நிதி வெறுத்து நாயினேன்‌ பரனைக்‌ காண்பா
னுன்னடி பணிந்து சந்ம முய்ந்திட வந்தேனென்ன
வன்னவ னிசமென்‌ அள்ளி யவ்வனம்‌ பயிலுங் காலை–73-

வருடமோ ரிரவிற்‌ பெய்ய மறைவலான்‌ சிறுகுடிற்கு
ளிருடிபோல்‌ வேடங்கொண்ட விவளையான்‌ அழைக்க வந்தெ
னருடருக்‌ தவனே நின்றன டியினை வருடல்‌ செய்வேன்‌
முருடனே னென நயந்து முனிவனை வசஞ் செய்தாளால்‌–74-

அன்றுதொட்‌ டவளை யின்னே னிறையள வகலானாகிப்‌
பின்றொடர்ந்‌ தேக வன்னாள்‌ பின்னவள்‌ வியந்த பின்னர்ப்‌
பொன்தரத்‌ தரமிலாய்நீ போவெனப்‌ புகல மின்னாண்‌
முன்‌ றில்வற்‌ தணுகி யென்னோ முடங்கி நெஞ்‌ சுருகுங் காலை–75–

வாவிசூழரங்கன்‌ றன் பொன்‌ வட்டிலை யெடுத்தன்னோனா
லேலிய தூதன்‌ போல வெய்திய வேசி தன் முன்‌
மேவி வட்‌ டிலை யுன்‌ விப்ர நாரணன்‌ கொடுத்து விட்டா
னாவியி னவனைக் கூவி யணை கெனக்‌ கொடுத்த கன்றான்‌–76–

அன்னவன்‌ கொடுத்தகன்ற வனந்தர மவனைக்‌ கூவிப்‌
பின்னமி லணைந்து மற்றும்‌ பிற்றை நாள்‌ வெறுக்க வாங்கு
பொன்னரங் கேசன்‌ கோயிற்‌ பொலன் கொள்‌ வட்டிலைக்‌ காணாதீ
தென்ன காரண மென்றேங்கி யிறைவனுக்‌ கறிவித்‌ தாரால்‌–77-

செம்பியன்‌ சினத்தக்‌ கோயிற்‌ சேவக ரனைவோர்க் கூவி
யெம்பிரான்‌ வட்டி றன்னைக்‌ கவர்ந்த தாரியம்பீ ரென்று
வெம்பிட வருத்துங்காலவ்‌ வேசையின்‌ றூதி சென்றெம்‌
வம்பவிழளகத் தேவதேவகி மடமான்‌ கண்ணே—78-

அடுத்தவ னொருவன்‌ விப்ர நாரண னவன் றன்‌ றூதாய்‌
விடுத்தவ னொருவ னோர் பொன்‌ மேய வட்டிலைக் கைக்‌ கொண்டு
கொடுத்தன னதுவோ வென்று கூறு முன்‌ படை திரண்டவ்‌
வடுக்கணி மனைசோதித் தவ்‌ வட்டிலை யெடுத்தாங் கெய்தும்‌–79-

துப்பனை யழைத்து நின்றன்‌ றாதனார்‌ கவர்ந்த தென்னீ
செப்புவா யெனவுமன்னோன்‌ செப்பலென்‌ றூதுமில்லை
யிப் பொன்‌ வட்டிலையும்‌ யானிங்‌ கெடுத்ததி லென வேந் துள்ளம்‌
வெப்பியன்‌ னோனைக்‌ காவற்‌ படுத்திட விளம்பிச்‌ சென்றான்‌–80-

பொன்னிசூழரங்கனிந்தப்‌ புனிதனொன்‌ றறியான்‌ யானே
யன்னவ ளிடத்திற்‌ சென்றிவ்‌ வட்டிலை யளித் தன்னோன்ற
னன்னயத்‌ தூதனென்று நவின்றன னென்று வைவேன்‌
மன்னவ னருகிற்‌ சென்று கனவுரை வழங்கனானால்–81-

கேட்டமன்‌ னவனாமென்ன கேடிழைத்‌ தனமென்‌ றுள்ளம்‌
வாட்டழுற்‌ றவணெழுந்தம்‌ மறை வலான்‌ சிறையை நீக்‌கிக்‌
கோட்டமின்‌ மனத்தனோ யென்‌ கொடும்பிழை பொறுத்தி யென்று
தாட்டுணை தழுவ வன்னோன்‌ றன்பிழை குறித் தயர்ந்தே–82-

முன்னினந் தவனம் வைத்தம்‌ முகிழ் மலர்த்‌ தொடையல்‌ சூட்டித்‌
தென்னரங்‌ சேசன்‌ மெய்ய திருவடித்‌ தொழும்பனாகி
யன்னவ னடியவர்க்கு மடியர்காற்‌ றுகணாமங்கொண்
டின்னியல்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–83-

ஒதமா னீர்கொள்‌ பொன்னி யுலவு தண்‌ சோழ நாட்டின்‌
மாதவர்‌ வேள்வி நாளும்‌ வளர்த்திடு முறந்தை தன்னிற்‌
சீதவா ரங்கொழிக்குஞ்‌ செய்யுறு கதிரினுளளே
கோதறு கலி யுகத்திற்‌ கூறு துன்‌ மதியப்தத்தில்‌–84–

விருச்சிக மதியிற்‌ புந்தி விமாநநாள்‌ ஸ்ரீவத்ஸாஞ்சத்‌
துருக்கிளர்‌ மதலை யாயங்குதித்தழ வுழவன்‌ காணாத்‌
தருக்குடனெடுத்தச் சேயைத்‌ தன் மனை வளர்க்கச் சேயுந்‌
தெருட்சியின் முதிர்ந்த ஞானச்‌ சிந்தையாய் வளர்ந்து பின்னர்‌–85-

நித்தனு மரங்கத் துற்றுத்‌ திரு முகத்‌ துறைக்கு நேர் நின்‌
றத்தனை மனத்துட்‌ கொண்டம்‌ கவன் குணம்‌ பலவும்‌ சொல்லிப்‌
பித்தரிற்‌ கடையனேனென்‌ பிறப்பறுத்‌ தருள்வா யென்று
புத்தல ரடிவணங்கிப்‌ போரு நாளொரு நாளாங்கே–86–

போதுலாம்‌ பொதும்பர்‌ சூழும்‌ பொன்னரங் கேசனாரக்
கோதிலாற்‌ கருள்வானெண்ணிக்‌ குண மிகு முனிவனாகும்‌
வேத சாரங்கன்‌ றன்பான்‌ மேவு புகன வினீநஞ்‌
சீதவார்‌ புனலலைக்குந் திரு முகத்‌ துறைக் கண்‌ சென்று –87–

அங்கிருந் தொரு வனம்பா லன்பினின்‌ றகலா னாடகிச்‌
செங்கர முடி மேல்‌ வைத்தித்‌ திசை தொழு திறைஞ்டு நிற்கும்‌
புங்கவன்‌ றனை நின்றோளிற்‌ பொலிய வைக்‌ திவண் வாவென்‌று
வங்கமா கடல் கடைந்த மாயவனருளிச்‌ சென்றான்‌–88-

அவ்வுரை முனிவன்‌ கேளா வன்புடனெழுந் தாங்குற்ற
செவ்வியோன்‌ றனை யழைப்பச்‌ சிறியனான்‌ புலை யனையா
எவ்வண மெழுவேனென்ன விசைத்தனன்‌ றிருத் தோளேற்றிப்‌
பவ்வநீ ரணை படுத்த பாழியான்‌ றிருமுன்‌ புய்த்தான்‌–89-

வண்டின முரலுந்தாம வனமணி மார்பன்‌ றன்னைக்‌
கண்டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
வண்டர் நாயகனை வாழ்த்தி யவனருளமுத மாந்திப்‌
பண்டு போம்‌ பொருள் கிடைத்த படி யுள மகிழ்ந்தா னன்றே–90-

மாட மாளிகை யரங்க மறைவலா ரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப் பரனுக்குற்ற குணங்களி லீடுபட்டுப்‌
பாடலி லுனக்கு நாமம்‌ பாண் பெரு மாளென்‌றோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–91–

கொல்லுலைப்‌ படுவே லங்கைக்‌ கோமகன்‌ வதி சோணாட்டுட்‌
சில்லரிச்‌ சிலம்பு மாதர்‌ செறி தரு குறையலூரி
லல்லி நற்‌ கமலக் கண்ண னழகிய தனு வஞ்சத்தின்‌
மல்லலங்‌ கலி யுகத்தில்‌ வரு நள வருடமன்னோ–92-

பொங்கு கார்த்திகை யுவாவிற்‌ பொன்னெரி நாளினல்ல
மங்கல யோக நான்காம்‌ வருணம துதித்து நாமம்‌
நங்குல நீல னென்று நவின்றிட வளவன்‌ றன்னாற்‌
சங்கையி னிதிபடைத்தோர்‌ தரணியும்‌ புரந்து வந்தான்‌–93–

ஆவியி லுலக மோம்பு மவன் றிரு நகரி லுள்ளோர்‌
வாவியி லரம்பை மாதர்‌ வைகலு மாட வோர்நாட்‌
கூவிளங்‌ கனி மென்‌ கொங்கைக்‌ கொடி யிடைக்‌ கமல மாது
மேவியிப்‌ புவிமானென்ன வியந்து நீராடி னாளால்‌–94–

அன்னவ ளடைதலோடு மரம்பைய ரகலக்‌ கண்டார்‌
பொன்னவ டனிக்க வாங்கோர்‌ புனிதன் வந் திவளை நோக்கா
நின்னிட மெவணின்‌ பேரென்‌ னிற்றலென்‌ றனித்திங்‌ கென்னக்‌
கன்னலிற்‌ கனிந்த தீஞ்சொற்‌ கன்னியும்‌ கழறு வாளால்‌-95-

நாக மங்கையரோ டிங்கு நணுகின னெனை யன்னோர் விட்‌
டேகின ரினியுன்‌ பண்டி யெய்திய மகள் யா னென்னக்‌
கேகையச்‌ சாயன்‌ மாதைக்‌ கிழத்தி பா லளித்து நாளும்‌
பாகமா ரமுத மூட்டிப்‌ பரிவுடன்‌ வளர்க்குங்‌ காலை–96-

நீலனவ்‌ வநகன்பாலோர்‌ நேரிழை யியைந்‌து வாழுஞ்‌
சீலம தறிந்தனாளைத்‌ திருமணஞ்‌ செய்ய வென்று
கோலியாங்‌ கணுகிச்‌ செம் பொன்‌ குறை வறக்‌ கொடுக்க வன்னோன்‌
னேலவார்‌ குழலி யுள்ள மென்றவ னியம்பப் பின்னர்–97-

குருகுலாமயிற்கை வேந்தன்‌ கோகில மொழியைக் கேட்கத்‌
திரு விலச்சனை யுண்டாகிற்‌ செய்வனென்றுரைப்பச் சென்று
மருமலர்ப் பொதும்பர் சூழு மாமதி னறையூர் நம்பி
யருளினன்‌ றிருமுன் பெற்றீண்ட டைதலு மவள் பின்‌ சொல்வாள்‌–98-

வான்றொடை புனை நாட்‌ டொட்டோர்‌ வருடமதளவுமெற்கோர்‌
நோன்பது வைணவர்க்கு ணூறு பேரழைத்து நித்தம்‌
பான்மிசை கருனை மற்றும்‌ பல மளித்‌ தவருண்பிக்கி
னானுனை மணப்பே னென்ன நன்றென மணஞ் செய்தானால்‌–99-

மன்றலா னது தொட்‌ டன்னோன்‌ வைணவர்க் களித்துக் காணாக்‌
குன்றிய நிதியோ னாயுட்‌ குழைவது வளவன்‌ கேட்டு
யின்‌று நந் நிலுவை வாங்க யேகு மென்‌ றுரைக்கத் தூதர்‌
சென்றிட முனிந்தி லென்னச்‌ செம்பியன்‌ சிறையிலிட்டான்‌—100-

வெம்பிய சிறையி லன்னோன்‌ வெதும்ப நும்‌ வேக்கிறைக்கும்‌
வம்பவிழ்‌ கமலத் தொங்கல்‌ வைணவர்‌ வேழ்விக்கும் யான்‌
அம் பொன தளிப்பே னென்றங்‌ கத்தி மா நகரத்‌ தெம்மா
னெம்பதிக்‌ கேகென்‌ றன்னோற்‌ கியம்பினன்‌ கனவிலன்றே–101-

அக்கன வறியா நீல னத்திமா நரகம்‌ வந்து
மிக்க நும்‌ பகுதி கோடி வேந்தென விசைந்தவ்‌ வூருட்‌
புக்க நன்‌ னிதி காணாது புலர்ந்திடக்‌ கனவில்‌ வந்து
சக்கரத்‌ தெந்தை காட்டுந் தனத்தவர்க்‌ குளதளித்தான்‌–102-

மற்ற நன்னிதியு முன் போல்‌ வைணவர்க் களிக்கக் காணா
துற்றிட வழிப் பறி செய்‌து,தவவவ்‌ வேள்விக்கோர் நாள்‌
சொற்றெரி வீழி துயின்ற மாயவன்‌ றிருவினோடு
விற்றிரட்‌ பணி பூண்‌ டாற்றின்‌ மேவினன்‌ கிழவோரன்ன–103-

அன்னவ ரடைய நீல னகமகிழ்ந் தணுகி வல்லை
பொன்னணி பறித்தன்‌ னோர்தம்‌ பொற் கலை விரித்து வைத்து
பன்னக நடித்த பொற்றாட்‌ பவள மெல்‌ விரலின்‌ மிஞ்சி
தன்னை வெள்‌ ளெயிற்றால்‌ வாங்கித்‌ தானைவைத்‌ தெடுக்குங் காலை–104-

அந்தர மசைபட்டாலு மசை படா விதனை யோர்ந்து
கந்துகக்‌ களினு போல்வான்‌ காய்சினத்‌ தவனை நோக்கி
மந்திர முணர்ந்தாய்‌ கொல்லோ மறை வலா வதையான்‌ றேறத்
தந்திடில்‌ விவெனென்னச்‌ சக்கரத்‌ தெந்தை சொல்லும்–105-

வழிப்பறிக்‌ கபடர்‌ மேலாம்‌ வள்ளலிம்‌ மந்திரந் தான்‌
விழுமிய ததினாலிந்த மென் மலர்‌ வாவி யுண்ணீ
முழுகி நாமமு மணிந்‌துண்‌ மொய்த்தவன்‌ பகலத்‌ தென்னை
தொழுது பின்‌ வினவிற்‌ சொல்வன்‌ றூய வென்னலு மிசைந்தான்‌–106-

மாதவ னடியை வாழ்த்தி வலச் செவி கொடுக்க வன்னோன்‌
கோத றட்டாக் கரத்தைக்‌ கூறவு மிருளகன்று
போதமுற்‌ றெனை யிவ்‌ வாறிற்‌ போந்துனதடிக் காட் செய்த
நாதனே கண்டு கொண்டே னாரண னாமமென்றே–107–

சூடினான்‌ மடி மாங்காயிட்‌ டடியனை வழித் தொண்‌ டாக்குங்‌
கோடுளாய்‌ மாதரார்தங்‌ கூர் விழி வலையிற்‌ பட்டு
வாடினேன்‌ வாடி யென்றும்‌ வருந்தினே னெனப்‌ பாமாலை
பாடினான்‌ பரமீதென்று பாருளோர்‌ தெளிய மாதோ–108-

பொன்வரைக்‌ குடுமி மீதூர்‌ புயலெனக்‌ கலுழன்மீது
கன்னியர்‌ அளவினானுங்‌ காட்சி தந்தருளிப்‌ பின்னர்‌
மன்னு நங்‌ கலிய னென்று நாமமும் வழங்கிச்‌ செல்ல
வின்னவ னுகந்தம்‌ மாயன்‌ பதிதொறு மிறைஞ்ச வென்றே–109-

நாடிப்பல்‌ பதிகஞ்‌ சொல்லி நாற் கவிப்‌ புலவனென்று
நீடிய விருது பெற்று நிகழுறும் பொழுது கொன்றை
சூடியின்‌ கழல் சம்பந்த தூதனாங் கொருவன்‌ செல்லா
ஏட வெம்‌ மிறை போலிந்த விருதுனக்‌ கிசையாதென்ன–110-

கலியனீ தறிந்திவ்‌ வண்ணம்‌ விருது கொள்‌ கவியின்‌ மிக்க
வலியன தவைக்கண்‌ சென்றியாம்‌ வாதமே புரிவ மென்று
சொலிவரு மிவனை யன்னோன்‌ றூயனென்‌ றறியானாி
வெலுவமென்‌ றெண்ணி நீயோர்‌ குறளினை விளம்பென்றானால்‌–111–

இந்தவா றுரைப்ப நெஞ்சத்‌ தேதிலாக்‌ கலியனோர்ந்தே
யந்தமா நகர்க்குள்‌ வைகும்‌ வைணவத்‌ தம்மை யாரை
யெந்தமக்‌ குமது பூசை யெம்பிரான்‌ றனை நீர் சற்றே
தந்திடு மெனக்கைக்‌ கொண்டச்‌ சார்ங்கனை யெதிரில்‌ வைத்தே–112-

ஒருகுற ளென்றெடுத்துப்‌ பதிகமொன்‌ றுரைத்துத்‌ தான்கொள்‌
விருதுகள் அனைத்தையும் கூறி வென்ற பின் இவனை யன்னோன்
திருவடி வணங்கி நாயேன்‌ செய் பிழை பொறுத்தி யென்று
பருதி முன்‌ சசியினின்று பரகால னென்று போனான்–113-

நாரணன்‌ பதிகடோறு நாடியன்‌ னவனும்‌ வாழ்த்தி
யாரணப்‌ பொருளீ தென்றுள்‌ ளறிந்து பற்‌ பதிகமாக
பாரணு முயிர்கள்‌ செய்ய பழ வினை யறுத்துய்தற்‌குக்‌
காரணமாகச் செய்தான் கலியனும்‌ தமிழின் மன்னோ–114-

திருப் புளி யாழ்வார்‌

நன்னய துவாபர சயத்தினலி வில்லா மன்னு மிதுநத்தில்வரு மாசிறிரு மூலம்‌
பன்னக வரோதய னுகந்து பனி மாலூ ரின்னறு மலர்ப் புளி யுருக் கொடி வனுற்றான்‌-115-

இங்கன முரைத்தடு ப்ர பந்நர்களிவர்க்கே
யங்கமென வுற்றிடுவ ரண்ணலினி நீ யிப்‌
புங்கவனை நம் புதல்வ னென்று புகலாது
வங்கமவி பவ்வமதி மாயனென வெண்ணீ -116-

கற்றின மறித்ததோர்‌ கழைத்தலை யிடத்தும்‌
புற்றரவ மீதும் விழி போதவள ரெந்தை
சிற்‌றுருவினேரிலிவன்‌ சென்‌று தனடிக்காட்‌
பற்றிய நின்‌ பேரினுயர்‌ பாரிலெவருள்ளார்‌–117-

வாரிச நிகேதனன்‌ மலைத் தெரிவை பாகன்‌ ஈரிமு மறைக்குவடு மின்னு மறியாத
சூரிகள்‌ பராவுமிவன்‌ றொண்டு புரிகின்ற வாரிய நினாது புக ழாருரை செய்கிற்பாற்‌,–118-

வெஞ்சமர்‌ கடந்தவிறல்‌ வேக்தென விளம்ப
நெஞ்சிரு ளகன்‌ றுவகை நீள்கடலழுந்தா
வெஞ்சலிலிவன்பர னெனும்வகை தெரிந்தே
வஞ்சலி புரிந்திறைவ னம்முனி பணிந்தான்‌-119-

இத்தகைமை யுற்றபுக ழெய்து முதிர்‌ ஞானத்‌
தத்துவ முனிப்பர னடித்துணை யிறைஞ்சா
நத்தியுல காய சட நாசனென நாமம்‌
முத்தி தருகானரு முதற்கினி தளித்தே–120-

எம்பிறவி வெவ்வலை யிறக்கருணை கூரும்‌
நம்பி யருள் செய்த மொழி நாயினன்‌ மறந்தே
வம்புலவு பைந் துளவ மாலை யணி மார்பா
கொம்புலவு திந்தரிணி கொண்ட சடகோபா–121-

கண்ண நினை யிவ்வுலகர்‌ காள்‌ முளையினெஞ்சத்‌
தெண்ணி யடியன் பிழை யிழைத்தது பொறுத்தி
விண்ணவிர்‌ திருப்புளி வியந்த பெருமானே
தண்ணளி யெனுங்கட றதும்பு சடகோபா–122-

என்‌றுபல வாறுள மியைந்து பணி மாறி நன்‌று புரி யாத பவ நாடி நனி செய்யுந்
தன்றனைய னாயவன்‌ சனித்த வரு ளோரா நின்று பு திகைத்து பு நினைந்து பு மகிழ்ந்தே–123-

என்னை யுல கோர்பொரு ளெனத் திரு வுளத்தி
துன்னி யருள்‌ வான் வயி றுதித்த பெருமானா
நின்னை மக வென்ற பிழை நீ பொறு வெனத்தார்‌
மன்னவ னிரந்‌து பு மலர்க்கழல்‌ பணிந்தான்‌–124-

அன்னவ னிறைஞ்சலு மருட்கொடளி சூழாத்‌
தென்னவெனு மாலையன்முன்‌ செய்யு மவதாரந்‌
தன்னை முழு தும் மவன்‌ றனா துளம்‌ வியப்பப்‌
பின்னமி லளித்தனன்‌ பிறப்பினை யறுப்பான்‌–125–

தாறுகொள்‌ மதக்கரி தடிந்த விறை தந்த
வீறிலவ தாரமதி லின்புற வுளங்கண்‌
மாறில் வகை பற்றவுடன்‌ வாய் புகழ வென்போற்
பேறுறுவ ரார் கொலெனவே பெரிதுவந்தான்‌.–126-

இன்னண நவின்‌ றுவல மெய்தியிம மால்கொண்
மின்னெனு நுடங்கடை விழிக்கரு விளைப்பூ
கன்னியுட னப் பரன்‌ கழற்றுணைபணிந்தே
நன்னக ரடைந்து நித நாடுவர் தொழற்கே–127–

பதின்மர்‌ திரு வரன்முறைப்‌ படலம் முற்ரம்

நூற்றெட்டுத்‌ திருப் பதிப்‌ படலம்‌

திரு மகழ்‌ மார்பரங்கன்‌ நிருவடித்‌ துணையதாகு
மருமகிழ்‌ மாலை மாறன்‌ மலர்ப் பதத்‌ தினிதுவாழு
மிருமகி தலத்துளோங்கு மெதிபதி சரணம் போற்றி
யருமகிமைய நூற்றெட்டா மரும்பதிப்‌ படலஞ்‌ சொல்வாம்‌–1-

குருதிகொப்பளிக்கும்‌ வைவேற்‌ கொற்றவன்‌ றேவிசேரப்‌
பருதியிற்‌ றிகழு மேனிப்‌ பரமனை யிவ் வாறாகக்‌
கருதிநித்தமும்‌ போந்தன்னான்‌ கழறொழு தினிய செய்யுட்‌
டருதவத்‌ திறையை நீ கொள்‌ தகையார் பெற்றாரென் றேத்தி–2-

அண்டமு மண்டத்துற்ற சராசர மனைத்து மாகும்‌
புண்டரீகக்கண்‌ ணாழிப்‌ புங்கவன்‌ போந்து போந்திவ்‌
வெண்டிசை போற்றச்‌ செய்த வெழில் விபவாவதாரந்
தண்டரை யின்றர்ச்சாவதாரமாய் விளங்கலாலே–3–

அன்னது நிகர்ப்ப நம்பா லடைந்தவதாரஞ்‌ செய்த
பன்னருஞ்‌ சிறப்புற் றோங்கிப்‌ பரமனு மிவ்வாறாவா
னென்ன மண்ட லங்கள்‌ காக்கு மெழின் முடி மன்னர் போந்தே
சென்னி தாழ்ந்‌ திறைஞ்சும்‌ வேந்தன்‌ றிருவுளத்‌ தெண்ணா நின்றே–4-

பொனனக ரிமையோர்‌ போற்றப்‌ பொலிந்து நின்‌ றருளுமாதி
சினகரத்தினுக்குத்‌ தெற்கிற்‌ றிகழ் திருப்‌ புளியின்‌ கீழ் பா
லன காற்‌ புளத்து வாழு மனைய மாறனுக்குக்‌ கோயில்‌
கனக ரத்தினத்தினாலே கவின் பெற வமைத்துப்‌ பின்னர்‌–5–

சங்கராசனுக்கு முத்தித்‌ தலமுகந் தளித்த வாதிப்‌
புங்கவன்‌ மிக்க வாதிப்‌ புனிதன்‌ றன்பாற்‌ றனாது
தங்கு நீர்‌ வளங் கொண்டோங்குந் தரை யெழி னகராங்குள்ள
மங்கல நிதிபூண்‌ மற்றும்‌ வளமெலா முகந்து நல்கி–6–

பாட்டளி துதைந்து பாடும்‌ பனிவளர்‌ வகுளத்‌ தெம்மான்‌
றாட்டுணை கருதியன்னோன்‌ றழை விழிக்‌ கருணையாலே
வாட்டடங்‌ கண்ணாணங்கை மாதொடுஞ்‌ சின்னாளீங்கு
வேட்டனன்‌ வைகி வேந்தன்‌ விளம்பரும்‌ பதியிற் சேர்ந்தான்‌–7-

அனையவ ரிவ்வாருக வணி பெருஞ்‌ சுடர் கொள்‌ மேனி
புனை தரும்‌ வகுளத்‌ தெம்மான்‌ பொற்றிரு வடித் துணைக்கே
தனை நிகர்‌ மதுரச்‌ செய்யுட்‌ டவப்பிரான்‌ பலவாறாய
நினைவரு மடிமை செய்யா நின்‌று முன்‌ னினைய சொல்வான்‌–8-

எளியனா மடியேற்‌ ஒன்று ஹித புரு டார்த்த தத்வங்‌
களை விளக்‌ குறு விசேடார்த்‌ தங்களை யெல்லாங்‌ கைசே
ருள மயக்‌ கறவே யுள்ள முகந்துரைத்‌ தருடி. யென்றே
வள மலர்க்‌ கரங்கள்‌ கூப்பி வணங்‌கினன்‌ வழங்கினானால்‌–9–

இன்னணம்‌ பரமன்‌ முன்ன ரிசைத்தன னிற்குங்காலை
அன்னு மெய்ஞ்ஞான நித்ய சூரி கடமக்கிலாது
பின்னெவர்களுக்கு மெட்டாப்‌ பேறுரித்‌ தாகி யோங்கும்‌
தன்னிக ரில்லா வைகுந் தத்தினிற்‌ பொலிந்து வாழும்‌–10-

திரு வினாயக னொண்போதின்‌ செல்வனன்‌ றிட்ட சாப
மிருவிநாயகன்‌ றாதைக்கன்‌ றீர்த்தவன்‌ கமல பாத
மருவினாய கருவோட்டி வானுகந் தளிக்கு மெம்மான்‌
பொரு வினாயக மாறற்குப்‌ புகழ்ந் தெதிர்‌ விழி கொடுப்பான்‌–11–

கருத்தினிற்‌ கருதா முன்னர்க்‌ கலுழனு முன்னர்‌த் தோன்ற
வெருத்தமீ தலரின்‌ மேன்மா திரு நில மாது நீளை
யருத்தி யி னுடன் வந்தேற வவிர் பொலன்‌ கிரியின் மீது
கருத்ததோர் வெற்‌ புவந்து கலந்தெனத்‌ திகழத் தோன்றி–12–

இருமருங் கினிது வாழு மிந்திரை முதலா மூவர்‌
கரு விழி யெனுங்கார்‌ வண்டின்‌ கண் முக மலரின் வீழப்‌
பொருதயிற்‌ றிகிரி யாதி பூங்கரத்‌ தடக்குந்துய்ய
செருவிகற்‌ படை களைந்து முறை முறை திகழ்மின் காட்ட–13–

அங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி யண்டாண்ட முழுதுங்‌ காக்கும்‌
பொங்கருட்‌ சேனை நாதன்‌ புகழ்ந்தனன்‌ முன்னரேகத்‌
துங்கலில்‌ வினை தீர்‌ நித்ய சூரிகள்‌ நெருக்கிப் பக்க
மெங்கிலுஞ்‌ சூழ்ந்து சென்னி யெழிற்கா முகிழ்த்தாராகி –14–

பாயிர மறைகணான்கும்‌ பாடுறப்‌ பலர்கள்‌ சில்லோ
ராயிர ஈாமங்‌ கூறி யடியினை பணிந்தாரேத்த
தூயவர்‌ சிலர் ப்ர தாபஞ்‌ சொல்லியங் கர முகிழ்த்தா
ராயவண்‌ வெகுபராக்கென்‌ றன்னவ ரெழுச்சி கூர–15–

தாணுவயனே முதலர்‌ காணரிய மாயன்‌ றனக்கு விழி யிற்றுறு மெனத்தமதுளத்தே |
பூணரிய சங்கைகொடு மாணுறு மநேகர்‌ பொங்கு பல வாழியொடு மங்கள முரைப்பச்‌
சேணிமிரு வெண்மதியின்‌ வாணில வெறிக்குஞ்‌ சித்திர மிழைத்தபல சத்திர மெடுத்தே
யேணுடைய இற்சிலர்க ணீணசையி னொடு மெழிற்றிரு வொண்‌ மேனி யினிழற்றினர்கள்‌ செல்ல–16-

ஆமவர்க ளிற்சிலர் க டேமருவுமென்பூ வாசறுமி னாசை யுறு தூசி னொடு சுண்ணம்‌
பூமருவு மங்கை கொட மா மணமும்‌ வீசப்‌ போதமிக வுற்ற சிலர்‌ போதவு மிரட்டும்‌
காமரொணி லாவுலவு சாமரைக ளன்னான்‌ காயமெனு மார்கலியின்‌ மேயகவினங்கத்‌
தாமரையை நாடி வரு கோமள மிகும்புட்‌ சாதியி னுயர்ந்த பல வோதிமநிகர்ப்ப–17-

மந்தவிள மாருத மிகுந்தடைய வால வட்டமல ரங்கைகொடு சிட்டர் பலர் வீச
விந்தை யுறு பற்பலர்கள்‌ சிந்தை மகிழ்‌வோடும்‌ விசித்திர விநோத வொண்‌ விசுத்த விருதுக்க
ளந்தமற வங்கை கொடு முந்தினர்‌ நடப்ப வற்புத மிகுந்தணிய பொற் புலவு மின்னா
ரெந்தையி னருங்குண முகந்‌ தினி துரைத்தே யின்னிசை யிசைத்‌தனர் கண்‌ முன்னுற நடப்ப–18-

௮ண்ட பகிரண்டமுமு துண்ட விறை வந்தா னக்கனய னுக்கரிய விக்கிரமன்‌ வந்தான்‌
முண்ட கமின்‌ மார்பினிடை கொண்டபரன்‌ வந்தான்‌ முற்றுமுயிர்‌ தானாக வுற்றவ னடைந்‌தான்‌
பண்டைமறை நாலினிலுங்‌ கண்டறிய கில்லாப்‌ பராதீன மற்றிலகு புராதன னெழுந்த
னெண்டிசையு மண்டிசைகொள்‌ கொண்டல் வணன்‌ வந்தா னென்று பல நற்கின ஈயின்‌ றன கறங்க–19-

ஆடக மணிக் குழைகள்‌ பாடலை தரப்பொன்‌ னரத்தவொ ணரிப்பரி புரத்தொலி கறங்க
பாடக வடித்துணையி டக ஈடித்தே பான்மொழியர்‌ சிற் சிலர் கண்‌ மேன்மையி னடப்ப
மாடக முடுத்ததிரை நாடிய முழக்கோ மாறரிய கோடையிடி யேறது கொலென்ற
நீடக மயிர்ப்புறவே கோடணிய காள நிகழ்த்தரிய பல்லிய மிகுத்தன கறங்க-20-

இன்னன வளங்களய முன்னின நடப்ப வெங்கிலு நிறைந்‌ துறையு மங்கள முகுந்தன்‌
பன்னக முடித்தலய னின்னலொழி யெம்மான்‌ பங்கய வரும் பனைய கொங்கை யயிராணி
மன்னவன்‌ முதற்சுரர்க டன்னடி வணங்க வந்தருள்‌ புரிக சவ னெழுந்தனன்‌ விரைந்தே)
தன்னை நிகராய சுட ரென்னவொளி பொங்கிச்‌ சந்தமுறு மாறனெதி ரந்தர நிறைந்தான்‌–21-

வாரண மளித்தருளு நாரணனிவ்‌ வாறு வானக மிசைப் பொலிய வானகு மகழ்ப்பூந்
தாரணியு மார்பனிசை தாரணி யுயர்ந்தோன்‌ றன்னடி வணங்குமவர்‌ துன்னு வினை தீர்ப்பான்‌
சீரணிய பொற் கமல வேரணிப கண்கடிறந்து வகை நீர் மடை திறந் தொழுக நீல்வா
ணேரணவு குஞ்சி மிசை யாரமலரங்கை நிகழ்த்தரிய வன்பொடு முகிழ்த்தன னுவந்தே –22-

செங்கவி னுறு பைங்‌ கமலம் வீற்‌றிருக்குந் திருமக ணாயக னெம்மான்‌
சங்குடன்‌ பதும விரேகைகள்‌ பரந்து தாமரை மலரொடு மிகலிப்‌
பொங்குமெய்‌ யுளவன்‌ பொடு தொழு மவர்கள்‌ பொருந்‌த வெம்‌ பவப் பிணி மருந்தா
யங்கண் மா ஞால மகலிரு விசும்பு மளந்த பொற்‌ றிருவடித்‌ துணையும்‌ –23-

வானகத்‌ தவிருஞ்‌ செக்களை யனைய வயங்குமாற்‌ றுயர்ந் தொளிர்‌ பசும்பொன்‌
னான நற்‌ கலையை நன்மருங்‌ கலைப்ப வணிந்தெழிலுறுதிரு வரையு
மூனமி லொருநான்‌ முகத்தனை யளிக்கு மொளி கொள் பைங் கமல முன்‌ னளித்த
கானகு மலரிற்‌ புடைபரந்‌தகன்று கவினுறு நாபிநற்‌ றலமும்‌ –24-

அழிவுறு முடிவி லெண்ணிலண்‌ டாண்ட மதனுள சராசரத்‌ தொகை கண்‌
முழுமையு நெருங்கி யடங்குறு மிடமா மொய்யொளி யுதர பந்தனமும்
வழுவறுஞ்‌ சரச வீட்ட ர சுகந்த மாணிழை மடந்தையுள்‌ ளூகந்தெப்‌
பொழுது முள்‌ வதியு மஞ்சன வரையிற்‌ பொற்புறு மார்பின திடமும்‌ –25-

அத்திரு மருமத்‌ துற்றினி திவகு மணியபொன்‌ முப்புரி யிழையும்‌
நத்திவண்‌ மனக்க ளிணைந்திசை முரன்று நறைத் துளி யுண்டடை கிடக்கப்‌
பத்தெனும்‌ இசையு மணம் புகுந் தொளிரப்‌ பரவு வண்‌ டிருத் துழாயணியு
மத்தியி னிலகுங்‌ கெளத்துவ மணியும்‌ வற்சமென்‌ றுரை திரு மருவும்‌ –26-

ஒன்னல ருதிர மலகையுண்‌ டுவப்ப வுதவிய திதிரியை முதலா
மன்னுமைம்‌ படைக டாங்கி நன்‌ கமல மலரெனச்‌ சிவந்தொளிர்‌ கரமு
மின்னொளி கதுவு மங்கத மணிந்து வெற்பிரு நான்கொடு மிகலிப்‌
பொன்னக ருவப்பப்‌ புணரி முன்‌ கடைந்து பொற்புறு மீரிரு புயமும்‌ –27-

அண்டமுண்‌ டுகந்த கண்டமுங்‌ கரந்தன்‌ றாய்ச்சியர்‌ மத்தளை தயிர்‌ பா
லுண்டு விண்‌ டிலகு முண்டக மலரி னொளிர்ந்தனி யரக்கெனச்‌ சிவப்புட்‌
கொண்டு கண்‌ டவர் கண்‌ கவர்ந்திடு வாயுங்‌ கோமள மிகுந்தகன்‌ றருளுண்‌
மண்டு செங்‌ கமல மலரினுக்‌ கிணை செவ்‌வரி பரந்‌ துயர்ந்த கணினையும்‌–28-

வாமவிற்‌ புருவத்‌ துணையும் வெண்‌ பிறையின்‌ மலிந்த நன்‌ நுதற்றிகழ் நான
நாமமுங் கமல மலரெனப்‌ பொலிந்து நவை யிலா வட்ட வொண் மதியிற்
றூமலி கவினுற்‌ றிலகு மாநநமுந் துன்றிய கதிர் மணி முடியு
நீமநற்‌ பசிய மரகத மலையை நிகர்த்தில கருந் திரு வுருவும்‌ –29-

இரு மருங்கிலு மஞ்‌சலி புரிந்தனர் வீற்‌ றிருந்தரு ளினியசொற்‌ கனி வாய்த்‌
திருமகண்‌ முதலா மூவர் தங்‌ கனகந்‌ திகழு சுந்தரமு மன்னவர் தம்‌
பெருகிய வணியின்‌ விநோதமு நிமலன்‌ பிழை யறு குணத்தினி தியல்பும்‌
பொருவரும்‌ வகுள பூடண னுகந்து புகழ்ந்தனன்‌ கண்டு கண்டுருகா–30-

இவ்வண மாநந்‌ தத்துட னிமல னெண்ணிறிவ்‌ யாத்தும ஸ்வரூப மம்மா
திவ்ய மங்‌கள விக்கிரக திவ்ய தேவி பூடணா யுத திவ்ய
வெவ்வமில்‌ குண சேட்‌டி தங்களை யுமுளஞ்‌ சிறந்தநு பவித்துந
னவ்வநு பவத்தை வெளியிடுஞ்‌ சர்வ வாரணத்‌ தந்த சாரமதாம்‌–31–

அருந்தகைய திருமந்திரார்த்‌ தத்தை யடக்கி நால்‌ வேதசாரமதாந்
துரிதமி லீரிரண்டு ப்ரபந்தத் தொடர்பினால்‌ விளக்கிட மனத்துட்‌
கருதுமு னனைய மாறனுக்குகந்து கருணையிற்‌ சேவை சாதிப்பான்‌
றிருவளர்‌ நித்ய சூரிகளெ வருஞ்‌ சென்றனர்‌ திருப்புளி மருங்கே–32-

இருவி னைத் தொடரின் செய லற்றுயர்‌
திருவுறக் கடை சென்றவ ருமிவ்வூர்‌
வருத லுற்றன ராயினம்‌ மன்னகர்‌
பெருகு சீரெவர்‌ பேசுக்‌ தகையரே-33–

அந்த நித்திய சூரிக ளன்னவே
மிந்த மானிலத்‌ தேய்பதி தோறும் வாழ்‌
கந்த மார்வனக்‌ கண்ணி கொள்‌ யாவரும்‌ ்‌
வந்து சேவை வழங்கிட லாயினார்‌–34-

பெருவரங்கள்‌ கருது மன்பர்‌ பெற வழங்கு வகுளநங்‌
குருவரங்கொள்‌ கவியிலன்பு கொடுவ வண்‌ முனரனய
னிருவரங்க ளமுதமண்டி யெழுகு பொன்னி வலம்‌ வருந்‌
திஸருவரங்க ந௧ருறங்கு திருவரங்க னெய்தினான்‌ –35–

மருவரு நூறிதட் கமல மன்னி கர்மா றன்‌றருவின்‌
மருவரு நூலினிதுணர்வான்‌ வந்தனனன்‌ னானெதிரே
திருவுறையூ ரியறுளவந்‌ திகழ்ந்தலையு மணி மார்பத்‌
திருவுறையூ ரெனும் பதியிற்‌ சிறந்துறையு மிறையோனும்‌–36-

கருத்தஞ்ச வானோ ருருக்கும் பொ னாமன்‌ கணத்தின் மு னேதுஞ்சவே
வருத்தஞ்செய்‌ மாய னருக்கன் குலாவு மணிப் பொன்னின்‌ மாடங்கள்‌ சேர்
திருத் தஞ்சை யாய நகர்க் கண்ண மாலுஞ்‌ சிறைப் புள்ளின்‌ மேனாடின
னிருத்தஞ்செ யாகன்‌ றமிழ்ச் செஞ்சொன்‌ மாறன்‌ றமர்க்கன்பர்‌ நேயன் முனே–37-

அருவன்‌ பிலியா மரவின்‌ றலை மேற்‌ பெருவன்‌ பினினா டிய நம்‌ பெருமான்‌
திரு வன்‌பிலில் வாழ்‌ தேவு முவண வொருவன்‌ பிடர்மே லுற்றானிவணே—38-

கருக்க ரும்படர்‌ கண்ட னாதிதே வருக்க ரம்பட வாண னாயிரங்‌
குருக்க ரம்பக லாழி கொண்டரி திருக் கரம்பனூர்த்‌ தேவு மெய்தினான்‌.–39-

புள்ளறை யும் பொழில்‌ பொன் மதில்‌ வானை நள்ளறை கூவவி ணாமய வெனவாம்
வெள்ளறை மாயனு மேவின னம்பொற் கள்ளறை வந்த கருங்குழலோடு–40-

பொருப்புள்ளம்‌ பூதப்‌ படையாற்கெட்‌ டாதென்றும்‌ போற்றடியார்‌
விருப்புள்ளம்‌ பூதல மாதின்‌ விளங்கவினார் முகமாந்‌
திருப்புள்ளம்‌ பூதங்‌ குடிவிற்‌ றிகழ் ராமனும் பொழிலிற்
கருப்புள்ளம்‌ தங் குரு கைம் மாறற்‌ கீந்தனன்‌ காட்சியதே–41-

திருப்பே ரொருக்கா னினைப்போர்‌ திருக்கே திரித்தாண்மகிழ்‌
மருப்பே ரளித்தா ருடைக்கோ னெதிர்க்கே வரத் தேறினான்‌
திருப்பேர்‌ நகர்க்கோ ரிறைச்சேர்‌ தடத்தே திகைத்தே யழை
மருப்பேர்‌ கரித்தோ மொழித்தா னிருக்கே வழுத்தாதியே–42-

மருவாத வல்வினை மாறருளாத்‌ திருவாத வனேரணி கொண்டவன் முன்‌
திருவாதனூர்‌ மேவிய சீதரனும்‌ பெருவா தமோடு பிறங்கனனால்‌–43–

செருவழுந் திறலுடைய ராகிடுந் தீய பிணி மருவழுந்‌ திட வவுணர்‌ வளை திரிக்‌ தெறியு மணி
திருவழுந்‌ தூரிறையு மேயினன்‌ செய்ய மகிழ்‌ மருவழுந்‌ திய வணி கொண்‌ மார்பினன்‌ முனரரோ–44-

தருச்சினை மலராற்‌ செய்ய தாட்டுணை மலரின்‌ மீதே
யருச்சனை புரிந்து வானோ ரக மகிழ்ந் திறைஞ்சி யேகத்‌
திருச் சிறு புலியூர்‌ வாழும்‌ தேவனெம்‌ பெருமான்‌ றானு
முருச்சிறைப்‌ புட்பான்‌ மாறற்‌ குதவினன்‌ சேவை மன்னோ –44-

சூறை யாகத்‌ துதைந்தெழு தீயவர்க்‌ கிறை யாக்கி யிருந்தவனாந் திருச்‌ சேறை
யாயனுஞ்‌ சென்‌றன னந்தமிழ்‌ வீறை யாரும்‌ விமலன்‌ றிருமுனம்‌–45–

உருத்தலைச் சங்‌கம் புதிய வொன்றால் எரித்தரக்கர்
கருத்தலைச் சங்கவர் திறளைக் கண்டனஞ் செய்‌ தினிதுகந்த
திருத்த லைச் சங்‌ க நாண்மதியத்‌ தேவர் பிரா னும் மடைந்தான்‌
குருத்த லைச் சங்கப்புலவோர்‌ கொண்ட செருக்‌ கடர்ப்பான் முன்‌-46-

சீர்‌ திருக்‌ குடந்தை மானகர்க்‌ கமர்ந்த தேவனற்‌ புளென்ற வாகன
வூர் திருக்‌ குடந்தை யோர் கணத்‌தின் முன ரோகை யுற்றெழுந்து நாடினான்‌
பார் திருக்‌ குடந்தை யானவர்‌ கருதும் பராங்குசற்‌ குறுண்‌ மைசேரிடை
வார் திருக்குடந்தை மாதனத்து நங்‌கை வாழ்வினுக்‌ குகந்து முன்‌னரோ–47-

தருக்கண்டி யானை யிடர்‌ தந்துகன்‌ மடந்தை யுருக்கண்டி யாரதிவ ளோதுமுனி யென்ற
திருக்கண்டி யூரிலுறை தேவனு முகந்தெங்‌ கருக்கண்டி மாறனுயர்‌ கண் முன மடைந்தான்‌–48-

மண்ணக முறும் வினை வரைந்தருளு மாறன்‌ கண்ணக முன்‌ னண்ணினன கங்களி சிறப்ப
விண்ணகர மெண்ணறிரு விண்ணகர நண்ணுந் தண்ணகமலம் புரை தடங்கணிறை யோனும்‌ –49-

கருதிருக்‌ கண்ணறனை நில வுயிர்க்‌ கங்கை யுறு கனி யெனத் தந்த மகிழ்தேன்‌
றரு திருக்‌ கண்ணி புனை யளி புயத்‌ தெந்தை யெழு தளவிரைச்‌ செங்‌ கமல நே
ரிரு திருக்‌ கண்ணவுயர்‌ கருடனற்‌ கந்தர முளிசை கரப்‌ பொன்னி னோடு சென்‌
றொரு திருக் கண்ணபுர வள நகர்க்‌ கண்ணவனு முயர்புளிக்‌ கண்‌ மருவினான்‌.–50-

அருவாலில்‌ வளர்ந் தொ ணடி.ப்பொடியா லுருவா லிகைதற்‌ குதவுற்‌ றெணிலாக்‌
குருவா லிபர்‌ தங்கள்‌ குழா மலியுந்‌ திருவாலி வாழ் தேவனுஞ்‌ சென்றனனால்‌.–51-

பாகை யினிப்படு பான்மொழி மின்னா ரோகை யின் மாளிகை யும் பரு லாவ
வாகையின்‌ மின்னென லாகும்‌ வளங் கொள்‌ நாகையி னாதனு நாடின னம்மா–52-

மறையூ டு வதிந்‌ தருளெம்‌ பெருமானறையூ ருறை நம்‌பியுமெய்தினனாற்‌
நிறையூ கமனேரலருக்‌ கயிலிற்‌ கறை யூறிய காரிகுலச்‌ சுதன்முன்‌–53-

வெந்திற லுறுந் திதிரி நந்துவி லருங்கதை விளங்கு வடிவாள்‌
சந்தம லரங்கைக டயங்கமரு வண்டுமுர றண்டுளவமுஞ்‌
செந்திரு மடந்தையு முரந்தனில்‌ வயங்க நொடி சென்‌ றனனரோ
நந்திபுர விண்ணகர வெந்தையு மினங்கையரு நந்தனெதிரே–54-

அருவிந்தள மளிபாடுசெ யடருங்களை கடியு மிருவிந்தள முலையார்மரை யெழில் செந் துவர்‌ குவளை
வருவிந்தன முகம் வாய்விழி யென வேகரை மருவுந்‌ திருவிந்தளூருறை மாயனுஞ்‌ சென்றானவன் முனமே–55-

குருச்சித்‌ தரமா ளிகை மிசையே கொண்டல்‌ வந்து கண் படுக்குந்‌
திருச்சித் திர கூடத்தமர்ந்த சீமானும் போந்தான் மலரா
லருச்சித்‌ திரவெ ணீங்காத வன்பர்‌ கொண்ட வெவ்வினையை
வருச்சித்‌ திரங்கு நங்கோனாம்‌ வகுளாபரணன்‌ றிரு முன்னர்‌-56–

காரா மணிச்சுனை கலக்க முகை விண்டே வாரா மதுத்தளி மலர்த்தவி சுகந்த
தாரா மடுத்தன தழைத்திடு வளஞ்சேர்‌ சீராம விண்ணகரச்‌ சீதரனுமுற்றான்‌–57-

ஏடலார் குழ னங்கை தன் சுத னெந்தை யஞ் சட கோபனின்‌
பாட லார் தமி ழாசை யான் மிகு பரிவதோடு முன்‌ மருவினா
னாட லாருர காசனன்பிட ராரவேறியே நேரிலாக்‌
கூட லூரெனு மாவளப்பதி கொண்டவன்‌ றுயர் விண்டவன்‌–58-

வண்ணங்‌ குலையா தமடந் தையர்மா றிண்ணங்‌ குலை யன்‌பர் செருக்‌ கருவா
னெண்ணங்‌ குடியா னுமுனெய்‌ தினனாற்‌ கண்ணங்‌ குடி நின்று ககப்‌ பிடர்மேல்–59-

வண்ண மங்கல மாமலர்‌ மேவிய வெள்ளை யன்ன விராசிக ளாதவ
மன்னை வெஞ்சமர்‌ வேளையி லே மறை மாயோனின்‌
றண்ண மங்கையி னாமயவால்வளை யென்ன நன்கணி யோடு முலாவிடு தங்கு பல்வள நீள் பணை சூழ் தரு தாரார்‌ சீர்க்‌
கண்ண மங்கையி னோகையினோடுறை யன்பர்‌ தங்களி னாவியுமேவன கன்கணண்ணபி டேகமனாளொடு கானாரும்‌
விண்ண மங்கைகு லாவிய காவின மன்னுமங் குரு காபுரி மாறனின்‌ மென் கண் முன்னணி சேவை தரா புளின்‌ மேலானான்‌–60-

உருக்கவித்‌ தலத்‌ துளோடு மும்பரு நடுங்கவே
செருக்கவித்‌ தலங்கைமன்‌ செருக்கழித்த வாதியாந்‌
திருக்கவித்‌ தலத்‌ துகந்த தேவுமெய்தி னம
தருக்கவித்‌ தலங்கெடுத்த தன்னிகர்க்கு மாறன் முன்‌–61-

வள்ளி யங்குழை யின்சொன்‌ மடந்தையர்‌ கள்ளி யங்குங்‌ கவின் குரு காரின்முன்‌ பள்ள யங்குடி கொண்ட பரவைசெய்‌ வெள்ளி யங்குடி மாயனு மேவினான்‌–62-

அணிமாடத்‌ திடை யிருந்த லைம்பால் கொண்‌ மாதர் செயுந்‌
திணி மாட கத்தியாழ்ப் பண்‌ செவியின் மடுத்‌ தகணமெலா
நணி மாட கத்துலவு நாரியர் கண்‌ டினிதுவக்கு
மணி மாடக்‌ கோயிலுறை மாமகணாதனு மடைந்தான்‌–63-

நந்தமர்‌ முன்கை மின்னிடை மாதர்‌ நடை கண்டே
வந்‌துறை யும்ப லஞ்சம னத்தே வட்கிப்போம்‌
விந்தை வைகுந்த விண்ணகரத்தே விளைவோடா
ரந்தமி லானு மிந்திரை யோடடைந்தானால்‌–64-

வரிமேய விளமுசுவு முழவோர்‌ கண்டார்‌ வளைகொடெறி தரவது தென்‌ மரமேறாவெண்‌)
கரிமேய விண்ணகர மிசையிற்‌ றாவிக்‌ கற்பகக்கா வூடொளியுங்‌
லரிமேய விண்ணகரத்‌ திறையும்‌ போந்தா னன்பர் குழா மிடுபதக மாகும் பாரப்‌ பரிமேய விறை யளவுஞ்‌ சகியா நம் பராங்குசன் நன்‌ குரைசெய்தமிழ்‌ பரிந்துளோர்வான்‌–65-

ஆவனார்தொக லார்மன வன்பர் தங்‌ காவ னார் தொடு கண்ணி மகிழன் முன்‌
மாவ னார் தொகை யுற்று மகிழ்ந்து வாழ்‌ தேவனார் தொகைச்‌ செல்வனு மெய்தினான்‌–66-

வருடோத்தவ மாதோத்தவ மகிழ்வோடு செ யது விண்‌
வருடோத்தரம்‌ புரியப் பசு மலை யிற்றி கழுறு வண்‌
புருடோத்தம மெனவே யுரை பொரு வின்னக ரிடை வாழ்‌
புருடோத்தம னுஞ்சென்றனன்‌ பொலிவா ருவணத்தே–67-

பம்பு செங் கதிரோன்‌ றன்னைப்‌ பாயிரு ளனைத்து மொன்றி
வம்பற வுறவு செய்வான்‌ வருந்தகை யனைய மாற
னம்பொன்செ யுருவந் தாங்கு மமலனின்‌ றிரு முன்‌ பாகச்‌
செம்பொன்செய்‌ கோயில்‌ வாழும்‌ திரு வினாயகனும்‌ போந்தான்‌–68-

வெற்றி யம்பலத்‌ தாடும்‌ விளங்கனல்‌ நெற்றி யம்பலர்‌ நேர் சடை யாற் கருள்‌
பெற்றி யம்பலரும் பரன்‌ பேரருட்‌ டெற்றி யம்பலத்‌ தேவனு மெய்தினான்‌-69-

அருமணிக்‌ கூட லுற்ற விர்தரத்‌ துடைய நங்கைக்‌ கொரு மணிக்‌ கூடற்‌ சங்க மொழிப்பவ னுரை நூலோர்வான்‌
பெருமணிக்‌ கூடத்‌ தோடும்‌ பிறங்கு மாடங்களோங்குந்‌ திருமணிக்‌ கூடத்‌ தானுஞ்‌ சென்றனன்‌ கடிதினம்மா–70-

நெருக்கா வளவில்‌ நிரை மேய்த்து நேர்ந்தங்‌ கிகலுந்‌ தீ யோரைக்‌
கருக்கா வளவிற்‌ சென்றாயர்‌ கன்னி மாரோ டினிதாடும்‌
திருக்கா வளம் பாடிக் குறையுஞ்‌ செங்கட்‌ டிருமாலும் போந்தான்‌
பெருக்கா வளமார்‌ தென் குருகைப்‌ பெருமான்‌ வகுளப்‌ பரன்‌ முன்னே –71-

எள்ளக்‌ குளத்தினை யினித்த சொலரும்பிக்‌
குள்ளக்‌ குளத்தியர்‌ குருடேந் திட வரால்கள்‌
பள்ளக்‌ குளத்திடை பரந் துயர்‌ குதிக்கும்‌
வெள்ளக்‌ குளத்திலுரை மெய்யனு மடைந்தான்‌.-72-

சுருப்பார்த்‌ தலம்பு பொழில்‌ சூழ் குருகை மாறன் பால்‌
விருப்பார்த்‌ தநெஞ்சடியார்‌ வெவ் வினை தீர்ப்‌ பான் முன்னர்‌
மருப்பார்த்‌ ததண்டுளவ மாலையணி மார்பிலங்கத்‌
திருப் பார்த்தன்‌ பள்ளி யுறை தேவ பிரானும் மடைந்தான்‌–73-

இருமா னிலம்பரவு மகிழ் மார்ப னின் வாயி லினிதாயெழு
மொருமா வளங் கொள் கவி பெற வேணு மென்றேகி யுயர் மேவு தண்‌
முருகா ரரும்பு விரி புளி மேவி னன் கரிய முகின் மேருவின்‌
வருமாறு புண் மீது திருமா லிருஞ்சோலை வளர் மாயனே–74-

சினத் திருக் கோட்‌ டிபமலற மருப் பொசித்த திருக்கரன்ற னடிபரவு்‌ந் திறத்தினோருண்‌ மனத் திருக்கோட்‌ டிடுங் கருணை வரதன் செய்ய மரைத் திருமா மகளுகந்த வரை நேர் மார்பன்‌
முனத் திருக்கோட்‌ டினை யுறுவெற்‌ பெடுத்தானுய்ய முகிறடுத்தோன்‌ பழமறை தேர்‌ முதுவோர் வாழுந்‌
தனத் திருக்கோட்‌ டி யெனு மணி நகர் வாழெந்தை செளமிய நாராயணனுஞ்‌ சார்ந்தான்‌ மன்னோ–75–

வையமுறு மாருயிர்கள்‌ செய்யும் வினை யோடி யுயர்‌ வானி லடையா
வுய்யும் வகை யாக வரு மய்யனருண்‌ மாறனுரை யொன்று பெறவே
பையரவ மீது துயின்‌ மைய வரி மூசி யடர்‌ பாசொளி துழாய்‌
மெய்ய மலை யாளனிவண்‌ செய்ய மலர்‌ மாதினொடு மேவினனரோ–76-

செல்லாரு மாறுறுவ ரெல்லாரு மேபரவு தீந்தாமமார்‌
சல்லாப மாறனுரை யில்லார்வ மொடுகட றான்றீய வெய்‌
வில்லாளி யேழிடப மல்லோடு காயும் வலி வேந்தாகு மெம்‌
புல்லாணி மாயவனும்‌ மல்லாரு மோதியொடு போந்தனரோ–77-

எருத்தண லமரர்‌ யாரு மியாங்களுச்‌ சீவித்தற் கெங்‌
கருத்தண்கா வென நின்‌ றேத்தக்‌ கருணை கூர்ந் தருளினானை
மருத்தண்கா வுகு செந் தேனால்‌ வானுற வளருஞ்‌ செந்நெற்‌
றிருத்தண்கா லுறையு மம்பொற் றிருமகட்‌ கிறை வந்தானால்‌–78-

குன்றுறழ்‌ மாடம்‌ பம்பிய வீதிக்‌ குருகூரில்‌ வென்றி கொண்‌ மாறன்‌ செந்தமிழ்‌ தானும்‌ வியந்தே விண்‌
பொன்றல மேவர்‌ தண் புளி நீழற்‌ பொலிவானான்‌ றென்றிரு மோகூ ரம்பதி வாழும்‌ திருமாலே–79-

தோடவிழும்‌ நிம்பத்‌ தொடைசூழ்‌ வழுதியர் முன்‌ டிப்‌ பரம்பொருணந் நாரணனா மென்றுரை த்தோன்‌
பாட லுகந்தருளும்‌ பானீய மாலுருவோன்‌ கூடலழகன்‌ கருடன்‌ கூடி யிவண்‌ சென்றனனால்‌–80-

சழக்கறு நீருலவு பெரு வராற்க டுள்ளிச்‌ சாடிடத்தீம்‌ பல வுதிர்க்‌கத்‌ தகர்ந்து வீழும்‌ பழப்பொறைகங்‌ குறுவேழ நுதியிற்‌ றூங்கும்‌ பைந்தேனி ரூலு டையப்‌ படியமேதி
வழுக்குற வண்‌ டர் மிகு பூங்‌ கழனி சூழ்ந்த வண் புதுவா புரி வளரு மலர் வாவிக் கண்‌ புழைக்கை யிடர்‌ கெட வஞ்ச லென்று வந்த பொன்னவள் சேர்‌ வடபத்ர சயநன்‌ போந்தான்‌–81-

சிலைவில்லி மங்கலமை நுதலோதி நங்கை யருள்‌ சிறுவோனருள்‌
கலைவில்லி மங்கல நகரில் வந்தனன் கரிய களனென்‌ ற பொன்‌
மலைவில்லி மங்கலம ழிய வென்ற செம்பதும மகள் மொய்ம்பனார்‌
தொலைவில்லி மங்கலம தனிலொன்று தும்பியிசை துளவத்தனே–82-

௮ரமங்கை நிகர் கொங்குண்‌ குழனங்கை சுதனன்பு ளடியர்க்குவிண்‌
சரமங்கை தருமின்ப னொரு செஞ்சொல்‌ பெறவென்று தனிவந்தனன்‌
வரமங்கை நகரொன்று திரு நண்ப னென தென்‌ று வரு பொன்னவன்‌
னுரமங்கை கொடு விண்ட நரசிங்கன்‌ வலி கொண்ட வுவணத்தனே–83-

தென்றிருப்பே றையில்வளர்‌ சீதான்‌ றன்றிரப்பே ருரைப்பவர்‌ தங்களுக்‌
கொன்றிருப்பே யுதவுவன்‌ மாறன் வாய்‌ துன்றிரும்பே ருரை பெறத்‌ தோன்றினன்‌.–84-

மருவை குந்தளம னுடைய நங்கைவயின்‌ வந்தவன்‌ னினிய சந்தமா
குருவை குந்தமிளிர்‌ நறுமை கண்டகுதை யுள்ளியே மிகவு நள்ளிடார்ப்‌
பொருவை குந்தனருள்‌ சிவனிரந்த பலி பொன்றிடக்‌ குருதி தந்தவன்‌
றிருவை குந்தநக ருறைவை குந்தனிவன்‌ சென்றனன்‌ கருட னொன்றியே-85-

மருப்புளிக்கண்‌ வளர்பவன்‌ பாவினில்‌ விருப்புளித்தன்‌ விறற்புய மால் வரை
யுருப்புளின்‌ மிசை யொன்றி மிக் கொல்லையிற்‌ றிருப் புளிங்குடிச்‌ சீதரன்‌ சென்றனன்‌–86-

மருமலர்‌ நிம்பத்‌ தொடையணி தென்ன வரேரதயனாங்‌ குருகுல வங்கைப்‌ படையுறு காரி குமாரனரு
ளருமறை யின்சொற்‌ றமிழ் பெற வுன்னி யடைந்தனனாற்‌ றிருமக ளன்பன்‌ வர குண மங்கைத்‌ திருமாலே–87-

மருக்கு லாமகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டிருக்கு ளுமெந்தை யின்புறுந் தொண்டதாய்க்‌
கருக்குளன்றிக்‌ கடத்துங்‌ கருணையோன்‌ றிருக் குளந்தைப்‌ பதியவன்‌ சென்றனன்‌–88-

மன்றன்‌ மா மகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டொன்றி னன் புளி யொள்ளயில்‌ வேற்கலி
கன்றி விண்ணகர்‌ கண்ட குறுங்குடி நின்ற நம்பியு கந்து நிகழ்ந்தரோ-89-

மஞ்ச னந்தவழ்‌ தண்டலை வாவி சூழ்‌ மாட மார் திருக்‌ கோளூ ரகந்தனி
னஞ்ச னந்தன்‌ றுயிறரு மாமுகி னாயகன் வைத்த மாநிதி நாதன்‌ வெங்‌
கஞ்ச னந்த வுதைத்தவன்‌ பிங்கலற்‌ கான செம்பொ னளித்தினுங்‌ காணுவா
னஞ்ச னந்தங்‌ கரங்கொடு நோக்குவா னவலோடிங் கடைந்த னன்‌ மாதரோ –90-

திருவ னந்த புரமுகந்த செமலருந்தி யிறைவனா மருவ னந்த ழுவுமலங்க லணி முகுந்த னணுகினான்‌
கருவ னந்த வெமையுகந்த கருணை நங்கை யென வுரை யொருவ ளந்த னருமை நந்த னெளி சுதந்த்ர னெதிரரோ–91-

திண்பரி சாரங்‌ கங்கர மேவுந் திறலோனேர்‌
வண்பரி சார மன்னிறை யோனெம்‌ மன மேவு
நண்பரி சாரங்‌ கொண்டுயர்‌ பாவி னசைவைய்யா
வெண் பரி சாரர்‌ தந் திகழ்‌ மாற னெதிரானான்‌–92-

பனித் திருக் கார்த்‌ தொலி கெழு தண்‌ பரவை யூடே யினிது வளர்‌
தனித் திருக்காட்‌ கரையோனுந்‌ தந்தான் சேவை யுகந்தடியார்‌
துனித் திருக்கா றலைத்தரிய துணைத்தா ளருளு மணித்தான் வாய்க்‌
கனித் திருக்காரக மேவிக்‌ கவினார் குருகாபுரிச்‌ சுடர்க்கே–93-

காழிக்‌ கடாபணை சூழத்‌ திகழ் குருகாபுரிவாய்‌
வாழிக்‌ கலியடன்‌ மாறற்‌ கருள்புரி வானுகவா
முழிக்‌ கள நக ராழிக்‌ கரனளி மூசழகார்‌
சூழிக்‌ கமலவ ளோடுற்‌ றனனுயர்‌ தூய்ப்புளியே–94-

குருப்புலி யோநி வழிப்பிறவாது குலைத்தெமை யாளு மகிழ்‌
மருப்புலி யூறு மதுத் தொடைமார்பன்‌ வழுத்திடு பாவுணர்வா
னிருப்புலி யானை யுரித்தணி யாடை யிடைக்கணி வோனயர்‌ தீர்‌
திருப்புலி யூரனிவற்கு முனேர்பு திருப்புளி நாடினனால்‌-95-

இங்குன்‌ ரூளே சரணமென்று ளெண்ணா வந்திங்‌ கடிதொழுவோர்‌
வெங்குன்‌ றாத வினை தீர்ப்பான்‌ விரையார்‌ வகுளத்‌ தார்க்கோ முன்‌
செங்குன்‌ றூரென்‌ றுரை சேருந் திருவாழ்‌ நகரு ளினிதுறையு
மங்குன்‌ றூராற்‌ கரியானும்‌ மடைந்தான்‌ பாக்க ணசை கொண்டே-96-

காவாயென வணிவானவர்‌ கண மோடினி தடையா
பூவாயடி தொழவே யவர்‌ புரை தீர் வருட்‌ டருபுள்‌
நாவாயிடை யமர் மாயனு நலமார் தமிழ்‌ நசையாற்‌
றேவாயந மகிழ் மாலை சொல்‌ செவியோன் முன நணினன்‌–97-

குருவல்ல வாவு முலை யுடை நங்கை பாலனுயர்‌ குணமொன்று பாவி னசையாய்ப்‌
பொருவல்ல வால் வகுள வணிகொண்ட, மாறனெதிர்‌ பொதி யன்பி னாடினனரோ
வொருவல்ல வாவெமைமு னருள்செய்த வாவெனவிண்‌ ணுளர்வந்‌து தாழ நிதமுந்‌ திருவல்ல வாழுறையு முகிலெள்ளு மேனியிறை திரை பொக்கு வாரி யணையான்‌–98-

தண்டா தரிக்கமல வண்டான முற்றதிரு தன்மார்‌ பிருக்கு மிறை யோன்‌
மண்டா தரிக்கமுகில்‌ விண்டாற டுத்தவன்வண்‌ வண்டூரி னித்த மிமையோர்‌
விண்டா தரிக்கவருள்‌ கொண்டா தரித்தவன்வி ரைந்தேக மைப்பு னலிதா னண்டா தரிக்கமல ரொண்டாள ளிக்கு மகிழந் தாரன்‌ முற்கணினனால்‌.–99-

சூட்டோதி மந்தமது போட்டோடிணைந்‌ அலவு தோட்டோ டவிழ்ந்த மலர்நீர்‌ மாட்டோதி மங்கையர்கள்‌ வேட்டாடு கின்ற திரு வாட்டாற தென்‌றுரை செயுந்‌
கோட்டோதி மந்நிலவு நாட்டானு மம்மமவிர்‌ கோட்டானை நங்கை புதல்வன்‌
பாட்டோது வன்னமது பாட்டே யுகந்தெனவுப்‌ பாட்டோ னடைந்தனனரோ.–100-

பெருவித்து வக்கோட்டி பெருகித் தமிழ்ச் சூட்டு குருகைப்ப ரற்கேத்து மடியர்க்கு நோய்க்‌
கருவித்து வக்கோட்டி யழிவிற்‌ கதிக்காட்டு கருணைக்கடற்கேற்ப வெதிருற்றனன்‌
றிருவித் து வக்கோட்டிலிறை யுட் கருக்கோட்டன்‌ செருவிற்‌ றலைக்‌ கோட்டு மதவெற்பினை
மருவித்து வக்கோட்டி கலி முற்ப றித்தாட்ட மதுமுற்றளிப்பாட்ட துளவத்தனே–101-

துருக்கடித்‌ தானத்த வரைக்கு முற்‌ காலத்தி றொனித்தழைக்‌ காமுற்று யரையட்டவன்‌
திருக்கடித்தானத்தன்‌ வனத் தனித்‌ தாமத்தன்‌ சிறைக்ககத் தேறித்த ணெகினத்துவேர்‌
நெருக்கடித்‌ தானத்த மருக்கனைப்‌ போலுற்ற நிதிக்கருத்‌ தேவைக்கு மடி யர்க்குறுந்‌
தருக்கடித்‌ தானத்தன்‌ மகிழ்ப்பனித்‌ தாமத்தன்‌ சடத்தினைக்‌ காய்நித்த னெதிருற்றனன்‌–102-

மாறன் விளை யாடி மலர்‌ மாதுவள சேர் குருகை மான கருணா
வீறன்விளை சாரமுறு பாவினசை யோடவன்முன்‌ மேவினனிலா
நீறன்விளை யாநநச ரோருக நிகேதனனு நேடரியனா
மாறன்விளை யாகுநகர்‌ நாடிநிதம்‌ வாழுமுத லாயபரனே–103-

இருவிசும்பிடை யமரரும்பர வெம துநம்பிமெய்‌ வாதனால்‌
பொருவிலின்கவீ பெற வெழுந்‌துயர்‌ புளியிலொன்‌ றின னளிகுலா
மருவிரிந்து நறவுகும் புது மலரடர்ந்திவர்‌ சோலை சூழ்‌
திருவயிந்திர புரமெனும் பதி திகழுமம்புய லொருவனே–104-

மாவ டம்பமொளி ரோவி யத்‌ துலவு:மங்கை யாருடைய நங்கை சேய்‌
பாவ லம்பெறவு ளாவ லின் வினதை பால னேறிமிக வோலமாய்‌
நாவ லம்புவியுண்‌ மேவு முவர் முன நண்ணியே கிருபை பண்ணினேன்‌
கோவ லம்பதியின்‌ மாவலன்‌ கருணை கூடினோன்‌ புளியி னாடினான்‌—105-

மச்ச விழி நங்கையருள் எச்சமொரு செந்தமிழ் வழ ங்குமெனவே
யிச்சையொடு கந்துமதிர்‌ கச்சணி குறுங்கணுறு மிந்திரையொடு
கச்சி நகர் நின்று அருளும் அச்சுதன் அன்று துயர்‌ கடிந்த வலியோ
னச்சரவ மீது துயில்‌ பச்சை முகிலும் புளியி னண்ணினனரோ–106-

பெருவட்ட புயகரனங்‌ கமல னாதிப்‌ பெரும் தேவ ராசுரர் தமைப் பிலத்தில்‌ வீழ்த்தப் பொருவட்ட புயகரம்ய வணையா யென்றே போந்தனர்க ளனுதினமும்‌ போற்றி யேகத்‌
திருவட்ட புயகரமென்‌ றுரை சேர் திவ்ய தேசமகிழ்ந் தினிதுறையுந் திருமால்‌ வந்தான்‌
கருவட்ட புயகரலா வன்பர்‌ தம்பாற்‌ கண்ணருள் செய்‌ தருண் மாறன்‌ கண் முனம்மா–107-

பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌ தொளிர் மாடப்‌ பருப்பதஞ்சூழ்‌
பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌
தண்காவி னின்றருளெம்‌ பெருமா னொல்லைச்‌ சழக்கறு புட்‌ பிடரேறிச்‌ சார்ந்தான்‌ மிக்கு
வண்காரி மாறனுரை யாரணத்தின்‌ வண்டமிழ் கேட்‌டுகந்திடமின் மருவி மாதோ–108-

மஞ்சினம் தெண்‌ முதிர்ந்துளையா வுயிர்க்கு முத்த மல்கு மணி மாட மிசை மடவார்‌ நின்று
நஞ்சினுங்கா ரளகமுண வூட்டுந் தூம நனி கெழுமி யாசை யெலா நறைய தாக்கும்‌
வெஞ்சினமற்‌ றற நெறிக்கண்‌ ணகலார்‌ வாழும்‌ வேளூரை யாளரியு மேவினானால்‌ செஞ்சிலம்பா ருடைய நங்கை வயிறு வாய்த்தோன்‌ செந்தமிழ் கேட்‌டுகந்திடப் புட்‌ செலுத்தி மாதோ–109-

உருப்பாட கத்தடிய நங்கைக்‌ குயர்மகவாய்‌
விருப்பாடகத்தடியார்‌ வெவ் வினை தீர்‌ மாறனெ திர்‌
பொருப்பாடகத்தனுவான்‌ சிலை யிறுத்த புங்கவனாந்‌
திருப்பாடகத் துறையுஞ்‌ ஸ்ரீதரனுஞ் சென்றனனால்‌–110-

சூர கந்தடிந்‌ தோனுயிர்த்‌ தோன்றனைச்‌
சேர கந்தணித்‌ தோன்செழுஞ்‌ சோலை சூழ்
நீர கந்தனி நின்றருள மால் குரு
கூர கந்தனிற்‌ கூடினன்‌ மாதரோ–111-

முத்தனைய வெண்ணகை செம்‌ பவளவாய் கொண்‌ முகிழ்‌ மலர்க்‌ கைக்‌ கடைகியர்தமுகமாய்‌ நின்று
மத்தமுடன்‌ களைகடிய வவர் முகந் தா மரை யெனவோ திம மயங்கு வளைமென்‌ சாலி
நித்கிலமார்ந் திலகு பழ னங்களார்ந்த நிலாத்திங்கட்‌ டுண்டத்து நெடுமால் முன்ன
மத்திவிளித்‌ திடுமுனஞ் சென்‌ றருள்வோன் மாற னாரணச் செந் தமிழ் தருமென்‌ றடைச்தான்‌ மாதோ–112–

வம்பு லாவு மகிழ் மலர்த்‌ தாரினான்‌ பம்பு மாமறைப்‌ பாவில வாவியே
உம்பர்‌ போற்று நம்‌ மூரக மால்‌ முனம்‌ தும்பி காத்தவன்‌ றோன்றினன்‌ மாதரோ —113-

வண்ணமுறு மாதவர்செய்‌ வேள்வி தோறும்‌ வழங்குறுமா குதிய வியை வாங்க நாளும்‌
விண்ணவர்தங்‌ குழூஉக்கணிரைந் தணி கொண்‌ மாட வெஃகாவிற் துயிலமரும்‌ வேந்தன்‌ வாசச்‌
சுண்ணமனைர்‌ தளி பெடையோ டமுதமுண்ணுந்‌ துளவலங்க லாடுதிருத்‌ துலங்கு மார்ப
னண்ணலரு ளிலகு மயிற்‌ காரி சூனு நாவீறற்‌ கருள்புரிவா னண்ணி னால்‌,–114-

இருக்கார கங்கனியாப்‌ புல்லரிடந் தன்னடியே யிறைஞ்சு மெய்யன்‌
பருக்கார கங்கடிவார்‌ தானெனதென்‌ றிடுங்கனகன்‌ பருமார்‌ பத்துட்‌
பெருக்கார கங்கலுழக்‌ ண்டவன் சேயினை மருவும்‌ பெற்றி யோர்‌ தென்‌
றிருக்கார கங் கருதும்‌ பொன்னவள் காந்தரு முகந்து சேர்ந்தாரன்றே–115-

உருக்கார்வா னந் தணிவார்‌ தன்னடியார்‌ செய்த பிழை யுகந்தன்‌ னோரைத்‌
கருக்கார் வானந் தருவார்‌ மறந்தொரு காற்‌ றமை யெணினுங்‌ கருணை செய்வார்‌
மருக்கார்வா னந் தவழுந்‌ தண்டலைசூழ்‌ மணிமாட மல்க யோங்குந்‌
திருக்கார்வா னந் தனில் வாழும் பரந்தா மரும் புளிக் கண்‌ சேர்ந்தார்‌ மாதோ–116-

அண்டர்‌ நாய கன் கபாலி யம்புயத்தி னன்றொழும்‌
புண்ட ரிக மந்திரங்கொள்‌ பூவை வாழு மார்பினான்‌
கண்டல்‌ வேலி நின்றிலங்கு கள்‌ வனூரு மாயவன்‌
வண்டு லாவ லங்கலாட வந்தனன் புள்‌ ளொன்றியே–117-

குருப்பவள வண்ணவத ரத்துடைய ஈங்கையருள்‌ குமரன்‌ செஞ்‌ சொல்‌
விருப்பவள வண்ண றனை முப்போதும்‌ வந்தனை செய்‌ விபுதர்‌ தாயர்‌
கருப்பவள வண்ணவிடா தருள்புரிவோன்‌ கனக மதிற்‌ ககனமோங்‌குந்
திருப்பவள வண்ண நக ருறை கருமா முகலுருவன்‌ சேர்ந்தானன்றே–118-

வண்டொடுதே னினமுல்கே சர நறுந்தா ரிலகு புய மாறன்‌ செஞ்‌சொற்‌
ணுற்றான்‌ தண்டமிழ்கேட்‌டுகந்திடப் புட்‌ பிடரேறி யரவெகினைத்‌ தருக்க
புண்டரிகத்‌ தாளிறை மெய்‌ யடியர் பணிக்‌ குடனுருகப்‌ புரக்கும்‌ போதத்‌
திண்டிறலார்‌ பயில் பரமேச்‌ சுரவிண்ண நகரில் வரு திருமான்‌ மன்னோ-119-

உட்புல னெனுமோர்‌ பாகனூ ணுதிர வுடலெனு நாப்பணி லுறச்‌ சேர்
கட்செவி நாசி வாயெனு நான்கு கற்கி வாய்‌ மதிக்கருள்‌ பூட்டி
நுட்ப நூலுரைக்கு மறநெறி செலுத்து நுவலரு மறையவர்‌ வளர்‌ சீர்ப்‌
புட்குழி நெடுமால்‌ சடகரிக்‌ கருள்வான்‌ போந்தனன்‌ போரகெஞ்‌சுகந்தே–120-

நன்றி யோர் தொழு நாயகன்‌ வெஞ்சட வென்றி மாறன்‌ விழுத்தமிழ்‌ வேட்டி வண்‌
சென்ற னன்னறை சேர் மலர்க்‌ காவொளிர்‌ நின்ற வூருறை நின்மல மாயனே–121-

பருமணி யிமைக்குஞ்‌ செஞ்சூட்‌ டராவணைப்‌ பரம னீலக்‌
குருமணி வண்ண னெவ்வுட்‌ கோவல’ னடைந்தா னொன்னார்‌
மருமமுண்‌ டொளிரும்‌ வைவேற்‌ காரி சேய்‌ மாறனாவா
லொருகவி பெற வென்‌ றுன்னா வுவணன்‌ மொய்ம்‌ புந்தி மாதோ–122-

கார்மலை மேனி வேங்கட்‌ கடகரி மருப்பொசித்துப்‌
போர்மலை முனிந்த சீற்றப்‌ புயவலிக்‌ குரிசில்‌ வண்மை
நீர்மலை யாதி செல்வி நீளையுற்‌ றெழுந்தான்‌ முத்து
வார்மலை யுடைய நங்கை மகவினுக்‌ கருள வென்றே-123-

கொந்து லாநெடுங்‌ குந்தள நங்கை சேய்‌ செந்த மிழ்த் தொடை சிந்தை யுள்‌ ளுன்னியே
யந்த ணாளரமருந் திருவிட வெந்தை வாழ் தரு விண்டுவு மெய்தினான்‌–124-

இருக்கடன்‌ மல்லைந் திலக கணந் திகழ் மா றன் கவிவேட்‌ டிசைக்கு மென்றுட் டருக்கடன்‌ மல்லைப்‌ பொருவா குவலியுளோ யனநடைப் பொன் றரப்‌ பெண்ணாள் பா
கருக்கடன்‌ மல்லைத்‌ தொலைத்தா யருளெமக்கென்‌ றும்பர்தொழுங்‌கடிகொள்‌ செம்பொன்‌
றிருக்கடன்‌ மல்லைப்‌ பதி வாழெம்‌ பெருமா னெகின நிழற்‌ சென்றான்‌ மாதோ–125–

மருவல்லிக்‌ கேணிளநீ ரளக மொழி முலை நங்கை மடமா னென்னு
மொருவல்லிக்‌ கேசுதன் மா றன் கவி வேட்‌ டளைசுவைப்பா லுடனே வெண்ட
யிருவல்லிக்‌ கேகி யுறிக்‌ கண்கவர்வோன்‌ மணிமாட மிலங்கும்‌ வண்‌மைத்
திருவல்லிக்‌ கேணி வள ரெம் பெருமான்‌ புட்கடவிச்‌ சென்றான் மாதோ-126-

முடிகை கூப்பு முள்கனிந்த மொய்த்த வன்பி னோர்கள் பால்‌
மடிகை யோடு யிர்ப்பறுக்கு மாறனின்‌ சொல் வாவியே
சுடிகை யோதி மத்தனன்ன வேதியர்கள்‌ சூழ்‌ திருக்‌
கடிகை மாநகர்க்குள்‌ வாமுங்‌ கண்ணனெய்தினனரோ-127–

சஞ்ச ரீகவிழி நங்கை பாலிலவ தரித்தவன்‌ சடமரித்தவன்‌
செஞ்சொ லாயதமி ழொன்ற வாவியுயர்‌ சிற்றி லைப்புளியு ளுற்றனன்‌
வஞ்ச மாயை யொரு கஞ்ச னே வுமத மத்த கக்கரியு தைத்தவன்‌
கஞ்ச மாதுவளர்‌ நெஞ்சி னானடியர்‌ கற்பகன்‌ னரவ வெற்பனே-128-

நங்கையார்‌ குழவி யின் சொ னாடி வந் தடைந்தா னும்ப
ரெங்கணா யகவென்‌ றேத்து மிகன்மதக்‌ கரியி னீட்டம்‌
தங்க நாயகி களோடு தனித்தனி வதுவை யாற்றும்‌
சிங்க வேழ்‌ குன்றில்‌ வாழுந் தெய்வ நாயகனு மாதோ–129-

மற்புனை யிலங்கை மூதூர்‌ வள்ளல்கம்‌ பத்துவீழ
விற்புனைந் தெழில் கொள்‌ தோளான்‌ மிளிர் நிலா மணி மாடத்தி
னற்புத மிகுமயோத்தி யாண்டகை யடைந்தா னின்பா
கற்பழ மொழிச்சி நங்கை கண்மணி கவி வேட்‌ டன்றே–130-

பொருந்தலரூ ணுண்டொளிரு மயில் வேற்காரி பு.தல்வனடி.யார்க்கு வினை பொருந்தா தேக
மருந்தனைய திருவடியோ னெகினத்‌ தங்கா வணனிறைக் கீழ்ச் சடவைரி மலர்வாய்ச்‌ செஞ்சா
லருந்தமிழ் வேட்‌டிந்திரையோ டெழுந்தா னக்கன்‌ ௮டற்பதுமா சுரற்குழலா வலைய வாங்கோர்‌
திருந்கணிமா தாகியனோன்‌ முனிந்த சோலை சேர் நைமி சாரணியத் திருமால்‌ மன்னோ–131-

நள்ளிரு ளளகபார நங்கையார்‌ மகவின்‌ சொற் கொண்
டுள்ளுகர்‌ தருள்வான்‌ புள்ளி னொல்லையி னெழுந்தான்‌ றொல்லை
பொள்ளனால்‌ கரவெற்‌ பாண்ட புங்கவன்‌ பவளத்‌ துண்டக்‌
கிள்ளை சேர்‌ பொழில் கொள்‌ சாளக்‌ கிராம நின்‌றருள் வோனன்றே–132-

மதரிரு விழிக்க ணங்கை மதலை வாய்ப்‌ பனுவல்‌ வேட்டுச்‌
சிதறியாச்‌ சியத்தை யுண்ட சீதரன்‌ பெரு மழைக்குப்‌
பதறியாச்‌ சிரமத்‌ தெய்தப்‌ பருமலை யெடுத்துக்‌ காத்த
வதரியாச்‌ சிரமத்‌ துற்ற மாயவ னெழுந்தான்‌ மன்னோ–133-

கொண்டலைந்‌ தரு நே ராங்கைக்‌ குரிசினன்‌ னெறிவாய்‌ நின்று
விண்டிலான்‌ காரி சூனு விளம்புறு பனுவல்‌ வேட்டீண்‌
டண்டின திரைக டோறும்‌ ஆரமீன்‌ றிடு கங்‌கைக் கண்‌
கண்டமா நகரின்‌ வாழுங்‌ கண்ணனு மெழுந்தான்‌ மன்னோ–134-

குருதிதோ யயில்வே றாங்குங் கொற்றவன்‌ காரி சூது
சுருதிதோய்‌ தமிழ் வேட்‌ டைவர்‌ தூதனாம்‌ விசையன்‌ போரில்‌
பரிதோ யிரத மூரும்‌ பாகனா மறையோர்‌ வாழும்‌
பிரிதிதோ யிலங்கை செற்ற பீடுளோ னெழுந்தா னம்மா–135-

விடமெனக்‌ கருத்து நீண்ட வேல் விழி யுடைய நங்கை
யிடமவ தரித்த செல்வ னின்னுரை கழறு மென்றே
குடவர்தம்‌ மனையில்‌ ரெய்பால்‌ கொள்ளை கொண்‌ டறியே னென்னும்‌
வடமது ரையினில்‌ வாழும்‌ மாயவ னெழுந்தான்‌ மாதோ –136-

கண்டு வரார்தமை யண்டகிலார் வினை கண்டிந மாறனெரி
பண்டு வராடை மண்‌ மண்டிசை யானுரை பண்டறு பாவினசை
கொண்டு வராலினம்‌ விண்டல மூடு செல்‌ கண்டுறு நீர் புடை சூழ்
வண்டு வராபதி விண்டுவும்‌ மேவினன்‌ மண்டல மேழ்புகழ–137-

ஆடி நேர்‌ கொடி றிரண்டு மணி செய்யு முடைய நங்கை
தோடவள்‌ கமலப் பண்டி தோன்றிய சிறுவன்‌ செஞ்சொல்
நாடி நன்‌னெறி வாய்‌ நின்‌ற நந்தர் கோன்‌ மதலை யாயர்‌
பாடி வந்‌ தருள்வோன்‌ யார்க்கும்‌ பரமனு மடைந்தான்‌ மன்னோ -138-

சேற்கடல்‌ விளக்கு முண் கட்‌ சேயிழை யுடைய நங்கை
சூற் கடங்‌ குறவெ ழுந்த தோன்றனல்‌ லுரைவேட்‌ டங்கை
வேற்கட மதமா வாணன்‌ விறற் புயந்‌ துணித்தம்‌ பைவாய்ப்‌
பாற்கடல்‌ துயிலு மாதிப்‌ பரமனு மெழுந்தான்‌ மாதோ–

நூற் றெட்டுத்‌ திருப்பதிப்‌ படலம்‌ முற்றும்‌-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-1-

May 28, 2026

உலக மீரேழினுள்ளவும்‌ பரூர்வன வேயாதி
யலகிலா வுயிர்கட்கெல்லா மக மொடு புறமாய்‌ நின்றங்‌
கிலனுளனெனு முரைக்கு மிசைந்து சாத்விகர்கள்‌ போற்றும்‌
வலமுறு திரு வைகுந்த மாயவனுகந்து முன்னாள்–1-

அரவரசழைத்து நீ யிவ்வவனி போயிரு நூறாண்டு
பரமதங்களைக் கடிந்து பாடிய முரைத்‌து வாவென்‌
றுரை செயப்‌ பெரும்பூதூர்‌ வந்துதித்து நூற்றிருபதேழிற்‌
பரன்‌ றணவாற்ற கல்லாப்‌ பரமனோடெழுந்த வேலை -2-

குரகதக்‌ கயவாய்‌ விண்ட கோவலனெதியை நோக்கித்‌
திரை கடலுலகில்‌ முன்போற்‌ சென்‌றவதரித்து நும்மை
மருவிய நிலுவை நீக்கி வாருமென்‌ றுரைப்ப நாமம்‌
வரா வர முனியென்றோத வைணவர்‌ குலத்து மன்னோ-3-

தாதுரு நறை வண்டுண்டு ததை மலர்ப்‌ பழனஞ்‌ சூழுங்‌
கோதிலா மறையோர்‌ வாழ்‌ தென் குருகை வந்தவதரித்து
மாதுலர்‌ க்ரகம்‌ போய்‌ வாழ்ந்து மற்ற மீண்டணுகிமாற
னோது செந்தமிழ்‌ வேதார்த்த முரைத்தரும்‌ பொருட்டே னுண்ணும்‌-4-

காலையோர்‌ புனிதன்‌ ஞாதில்‌ காரனாண்டிறந்த வாய்மை
சீலே மாதவனுக்‌ கோதத்‌ தீம்‌ பயனுகருங்‌ கன்றைக்‌
கோல வானினத்தினின்‌று கூட்டறப்‌ பிரித்ததே போற்‌
சால நொந்திறந்தோர்க்‌ காகுஞ்‌ சடங்கினைக்‌ கழித்த பின்னர் -5-

இல்லறத்‌ தியலிலின்ன மியைந்திடிற்‌ பரநாடேகத்‌
தொல்லை மிக்குறு மென்றெண்ணித்‌ துரியமா மனுநூலாதி
வல்ல மெய்ப்‌ புனிதனாயெண்‌ வாரணமெனவும்‌ போதத்‌
தெல்லையில்‌ குணத்தின் மிக்க வெண்மரோ டியையுங் காலை -6-

கனிந்தள முருக யட்டக சங்களம்‌ முனிதாள்‌ சென்னி
புனைந்து நாவீறன்‌ மற்றும்‌ புனிதர்‌ வைபவங்கள்‌ கேட்க
நினைந்தன முரைத்தியென்ன நிமலனவ்‌ வடியர்‌ தங்கள்‌
மனங்களி துளங்கச்‌ சொன்னான்‌ மணிப்‌ பிரவாளம்‌ தன்னில்–7-

என்ன மாதவத்து வைகும்‌ மணவாள வெதியும ப
னன்னிலை யுணருமட்ட கசங்களு நனியுகப்பச்‌
சொன்ன செஞ்சொற்களாய குரு பரம்பரையைக்‌ கேட்டல்‌
கன்னவ ராகந்தானந்த வார்கலி படிந்தாரன்றே –8-

கோதி லந் நூற்கு நாமங்‌ குருபரம்‌பரை யென்‌ றோதி
மாதவ னுரைத்த வாய்மை மறையொடுந் தமிழுஞ்‌ சேர்ர்த
தாதலி னுணரவல்ல வதிகாரிக்கன்‌ றி மற்றோ
ரோத வொண்‌ ணாததாலு முகமற்‌றி ருத்தலானும்–9-

உயக்கருத்‌ துடையரா ய்வறந் துளங்களிந் துணர்வோர்க்‌ கெல்லா
மயக்கறவ குளமாலை வரதனா வீறன்‌ மற்றுந்‌
துயக்கறு பதின்மர்தங்‌ கடூய நற்‌ காதை முற்று
மியற்றமிழ்‌ தன்னிற் பேர்த்திங் கின்புற விசைப்பீ ரென்ன–10-

பத்துநூற்‌ றொருநாற்பத்‌ தேழாண்‌ டிடபமதாந்‌ திங்க
ளூத்திரட்டாதி நன்னாளந் நகருறு தேவேச
வித்தகன்‌ சடகோபன்‌ றிவ்விய சரித்திர மென்றோதி
அத்தனங் கூரத்தாழ்வான்‌ றளியாங் கேற்றினானே–11-

மேதகு சடகோபன்‌ திவ்விய சரித்திரத்‌தைக் கேட்போர்‌
மாதகவுடை யோராக மாநிலமிருந் திகத்தி
லேதமில்குண ராய்மக்க ளிரு நிதிபெற்‌று மாற
னோதிய தமிழ்‌ வேதத்தாற்‌ பரத்தினில் உய்குவாரே-12-

கேட்டவர்‌ படித்தோர்‌ முற்றுங் கிளத்‌தினர்‌ வரைந்தோ ருள்ளங்‌
கோட்டமில்‌ குணராய்ச்‌ செல்வங்‌ கொடுத்ததைப்‌ படிப்பித்தோரிவ்‌
வேட்டினைப்‌ பரிபாலித்‌ தோரேனு நான்முகன்‌ போற்றெந்தை
தாட்டுணை பரவிச்‌ செய்யாடன்னொடும வாழ்வர் அன்றே–13-

நீர்மைகொண்‌ மெய்யடியர்‌ பரவடியுஞ்‌ செய்ய நிறங்கொடு பொற்றிருவரை யினிலவுந் தூசும்‌,
மார்பிலகு மணிவடமும்‌ திகழ்மு நூலும்‌ மரை மலர்ச்‌ செங்கரத்தனிடை வளர் முக்கோலுஞ்‌
சீர்கெழு பாடிய முரைத்த பவளவாயுஞ்‌ சேதனர்‌ பாலருளொழுகு திருக் கணோக்கும்‌,
ஏர்கொடிரு முகத்தொளியு மிலங்கநின்ற வெதிராசன்‌ விரை மலர்த் தாளிறைஞ்சி வுய்வாம்–1-

மதுரவின்‌ கதையின்‌ மேலாய்‌ மறைத்தமிழுரைத்த ஞான,
அதுலன்றன்‌ சரிதை கூற அருந் துணையாகும்‌ வாசப்‌,
பதுமமேலயற்கு மேனாட்‌ பாலனத்‌ துருவமகிச்‌,
சதுமறை நவின்ற மாயோன் றாட்டுணைக்‌ கமலப் போதே–2-

மணிகொள் நெடும் திரையாழிப்‌ புடவிமாது மதிமுகவொண்டிலத மென வயங்கு மாடத்‌,
தணிதிகழ்‌ தென் குருகை யினாவீற மாற னருண் மாரி வைபவமெம் மறிவாற்‌ சொல்லத்‌;
துணிகுவ மின்னமுதி லெழு திருவே பிம்பத்‌து வரிதட் செந் தாமரை மேற்‌ றுலங்குமானே
பணிமொழி மென்குமிழ்‌ மறிந்து குழைபாய்வை வேற்‌படை மதர்க்கட் கடையருணீ பாலிப்பாயே–3-

தேனுகும்‌ பொழிற்‌ றென்‌ குருகாபுரி,
ஞான தேசிகனன்‌ புகழோத மீ
வான நாடுறை மாமகிழ்‌ காற்றுணைச்‌
சேனை நாதன்‌ றிருவடி யுன்னுவாம்–4-

அற்றவ னுருவமாகி யனேக நூலுலகுக்‌ கீந்து,
மற்றடந் திரடோள்‌ வேந்தாய்‌ வனம்‌ புகுந்தரக்க ரீட்டஞ்‌
செற்ற பினைவர்‌ கட்காய்ச்‌ சிறிய தூதெழுக்து பின்னர்ச்‌
சிற்றிலைப்‌ புளிக்குள்‌ வந்த செல்வனை மனத்துட்‌ கொள்வாம்–5-

சீராரும்‌ பொய்கையர்‌ பூதத்தார்‌ மபயார்‌ திருமழிசைப் பரன்‌ வகுளச்‌ செல்வன்‌ கோளூர்‌
ஏராரும்‌ மதுரகவி முனிவன்‌ சேரர்க்‌ கிறைவனருட்‌ பாகவத ரிரு தாட்டூளி,
பாராரும்‌ வழுதியர்‌ முன்‌ கிழி யறுத்த பட்டர்‌ பிரான்‌ கோதை யருட்‌ பாணன்‌ கையிற்‌, கூராரும்‌ வேற்‌ கலியனின்னோர்‌ செய்ய குரைகழலெம்‌ முடிக்‌ கணியாய்ச்‌ கூட்டுவாமால் -6-

கண்ணினுண்‌ சிறுத்தாம்போதிக்‌ காரி சேயருள்‌ பெற்றுய்ந்த
அண்ணன்‌ மெய்ப்‌ போத நாதமுனி திருவடியுஞ் ஞானம்‌,
நண்ணிய வுய்யக் கொண்டார்‌ நலந்திகழ்‌ மணக்கால் நம்பி,
தண்ணிய வாள வந்தார்‌ தாளிணை மலருங்‌ கொள்வாம்–7-

நறைத்துள வலங்கன்‌ மார்பன்‌ நாண்மல ரடியினான்கு
மறைத்தமி ழுதவு ஞான வகுளபூ டணனை வாழ்த்தக்‌
கறைத் தலைப்‌ பணிமன்னேயிக்‌ காசினியதனின்‌ முக்கோல்‌
இறைத்தவ னாகி வந்த வெதிபதி கழலுட்‌ கொள்வாம்–8-

எண்டிசையோரும்‌ புகழப் பணிமன்னே யிங்‌ கெதிபதியாய்ப்‌ பர சமயத்‌ திருளை வென்று
புண்டரத்தை நிலை நிறுத்தச்‌ கிரிமி கண்ட பூபதியும்‌ சிவமலதோர்‌ பொருளிலென்‌ று மண்டலத்துள்‌ ளோர்களிடத் தொப்பம்‌ வாங்கி மாமுனிவன்‌ பாலனுப்ப மகிழ்ந்து நோக்கிக்‌
கொண்டல்‌ வண்ணனே பரமாய்க்‌ குறித்தனுப்புங்‌ கூரத்தாழ்‌ வானடியே கூடுவாமே–9-

வாரிதிகலையிற்‌ சூழிம்மானில மாந்தருள்ளக்‌
காரிருட்‌ பிழம்பு தஞ்‌ சக்கதிர்‌ பதினெட்டு நேரச்‌
சிர்கொளட்‌ டா தசத்துள்‌ சிறப்புறு ரகசிய மோதெம்‌
மாரியன்‌ பிள்ளைலோகா சாரிய னருட்பெற்‌ றுய்வோம்–10-

வண்டின முரன்‌ றிந்தள விசை பயிலு மருமலர்த்துள வினான்‌ மதக் கூழ்த்‌
தெண்டிரை கொ ழிக்குங்‌ கருங்கடற்‌ புவியாஞ்‌ செறு விடைப்‌ பரமதக்‌ களையைக்‌
கண்டறக்களைந்‌ தின்னருட் புனல்‌ விடுத்துக்‌ கணந் தளர்வடை வுறா வளர்ப்பான்‌,
தண்டலை யுடுக்குற்‌ தூப்பில்‌ வந்துதி வேதாந்த தேசிகனடி தாழ்வாம்–11-

தேனினமுரன்றுபாடும்‌ மடிழ் மலர்த் தெரியல் வேய்ந்த,
ஞானதேசிகனுரைத்த நான்மறைத்‌ தமிழ்ச் சுடர்க்கு,
மேனியைத் தகழியாக்கி மெய்யறி விடு நெய்யாக்கி,
மானிலம் விளங்கச் செய்த வரவர முனி தாட்கொள்வாம்–12

நந்தணிமகர யாழ்க்கை நங்கையார்‌ குழவீ சீர்த்தி,
செந்தமிழதனினாயேன்‌ செட்‌ புவானெடுத்துக் கொண்ட
தந்தகன்‌ ககனமீனை யய்ய மற்றெணுவே னென்ன,
வந்த வாறமையுமுன்னீர்‌ வையக மதினின்மாதோ–1-

நூற்றிதழ்க்‌ கமலத்தோனு னுவலுதற்‌ கரியதான,
மாற்றருந் தகை கொண்டோங்கு மாறன் றன்‌ சரிதை தன்னைத்‌,
தேற்றமின்‌ மனத்து நாயேன்‌ செப்புவான்‌ றொடங்கலீங்கோர்‌
ஆற்தினுண்‌ மணலையோர்‌ சேயளப்பதற்க்‌ கெழு தலேய்க்கும்–2-

விண்ணவர்க்‌ கரிய மாறன்‌ மேம்படு புகழைப்‌ பாரில்‌,
னுண்ணியல்‌ புடைய நாயேனு வலுவானெடுத்துக்‌ கொண்ட
தெண்ணியார்‌ கலி நீர்‌ முற்று மேந்திளங்‌ குழவி யொன்று
அண்ணி நுண்‌ மூழை தனைனா லளப்பதை நிகர்க்கு மாதோ–3-

கரும்பினுரு வங்கோணி லதினுள்‌ ளாருங்‌ கனிந்த சுவையினை யறிந்தோர்‌ களைவார்‌ கொல்லோ ,
விரும்பிய கண்டுருக்‌ கரடு முரடதென்று, விலக்குவரோ வறிவுடையோ ரவைகள்‌ போல,
விரும்புவி யிற்றமியே னாலுரைக்கும்‌ பாக்களிழி வெனினு மகிலுறைந்த வேதிலாவண்‌
பெரும்‌ புகழ்‌ நஞ்‌ சடகோபன்‌ காதை கண்டு பேணுவரே புலமை கொணற்‌ பெருமை யோரே–4

பாண்டி நாட்டு திருப்பதிப்‌ படலம்‌
சீர்வள ரெதிராசன்‌ பொற் றிருவடிக் கமலம்‌ போற்றிக்‌
கார்வளர் மேனியெம்மான்‌ கண்ணை யுற்றுயிர்களுய்ய
ஏர் வளர் மாறனாக வெழுந் தவதாரஞ்‌ செய்யும்‌
பார் வளரிசை கொள்‌ செல்வப் பாண்டி நாட்டணி விரிப்பாம் -1-

உலகெலாந்‌ தனிபுரக்குமுயர்‌ மழை முகிற்‌ குழாங்கள்‌
அலைவிலாதரியதீம்‌ பயோததி யென வானார்ந்து
பலவளம்பெருகு தெண்ணீர்ப் பரவை நீர்பருகிச்‌ சூலாய்‌
நிலவிய தரள மீனுநீனிறக்‌ கடல்போன் மீண்ட-2-

திரு மகிழலங்கன் மார்பன்‌ றிருவடித் துணைக் காட் செய்வான்‌
கருமிடற்றரனார்‌ வாழ் வெண் கையிலை யென்‌ கிரி யெழுந்து
வருவபோன் முகிற்‌ குழாங்கள்‌ வானிடை. யடர்ந்து வாரிப்‌
பொரு திரை யருந்தி நீலப் பொருப்பென மீண்டவம்மா–3-

அலம்பு வண்டிருந்த தார்‌ நம்மரிந்த மனலரே யங்கைத்
தலமமர்‌ திகிரி மானத்‌ தடித்தியங்‌க வன்றனாம
வலம்புரித் தொனியே யென்ன வாணிடை யதிர்ந் திளங்காற்‌
சிலம்பிடை யவன்றன்‌ சாபமுமிழ்‌ கணைத் திரள் போற் பெய்த–4–

மந்தர கிரியை வென்று மல்லடர்த்‌ துயர்ந்து நீண்ட,
சுந்தரத்‌ திருத்தோளண்ணல்‌ சுடு சரந் துரந்து மேனாட்‌,
கந்தர வடி.வரக்கர்‌ களைகளைக்‌ களையக்‌ கண்டே,
யந்தரத்‌ திமையோர்‌ தூற்று மலர்‌ மழை யென வான்‌ பெய்த–5-

விரிதரு முகட்டின்‌ மீது விடாதுறப்‌ பொழியும்‌ தாரை
அரிய விண்ணுலகத்தான வமரரிவ்‌ விளங்‌ கானச்சி
யுரிய தன்னகர்க்குச்‌ சேர வுயரு மிம்‌ மலையைக்‌ கொள்வான்‌
சொரிதரு வடங்கள்‌ போலத்‌ துலங்கின துதைந்து மாதோ–6–

துவளிலாடக முகட்டிற்‌ றோன்று பல்லருவி யீட்டங்‌
கவளமும்‌ மதப்புழைக்கைக்‌ கரிகட மருப்பு குக்குறந்
தவள வொண்டராள மீர்த்துச்‌ சங்கையி றருக்கள்‌ சாடிக்‌
குவலயத்‌ திளஞரோகை கொள்ள வந்திழித்த வம்மா–7-

மண்ணிடை யிழிந்த தோயம்‌ வாரணத்தினமு மானு
மெண்ணிடற்‌ கரியதாய விடபத்தின்‌ குழுவு மீர்த்துப்‌
புண்ணியம்‌ புரிவார்‌ நெஞ்சம்‌ போலெங்கு நிரவி வந்து
தண்ணிய திரைகண்‌ மோதுந் தாம்பர வன்னி சேர்ந்த–8-

தடந்திரைக்‌ கரத்தின்‌ வாரித்‌ தரளமா மணிகள்‌ வீசி
யடர்ந்த வன்னீத்தத்‌ தூடே யமிழ்ந் தெழு மரத்தின்‌ றோற்றம்‌
மிடைந்த வைம்‌ படைகளேந்தும்‌ விமலன்‌ பாற்‌ கடலை வேண்டிக்‌
கடைந்திடுங்‌ காலத்துற்ற கற்பகத்‌ தருவைப்‌ போன்ற–9-

கோடி னோடந் திகிரியுங்‌ கொண்டுமால்‌
ஈடி றாமரைக்‌ கண்ணிடை யிற்பசு
மாடு மேவி மறிகடற்‌ சேர்தலால்‌
ஓடுமப்‌ புனல்‌ நாரண னொக்கு மால்–10-

மலை களைந்திடை மாதரைச்‌ சேர்ந்து மீ
துலை குருந்த மொசித்து மருதிற்‌ போய்‌
விலை யுயர்ந்திடு மான்பின மேவலால்‌
அலை கொளப் புனல்‌ கண்ணனை யன்னதே–11-

ஆன வெள்ள மரி புலி வேங்கை மான்‌
றான வாரணஞ்‌ சம்பு எண்‌ கேனமே
ஏனல்‌ சந்தக லின்வகுளஞ்‌ செருக்‌
கூனமில்‌ பல வோங்கும்‌ வளை புனை–12-

குங்குமம்‌ சண்பகம்‌ பனை கோங்கில
வங்க மேலம்‌ வசம்‌ பொடு சாதி மா
பங்கம மற்றிடு பற்பல பாதவ
முங்கணிப்பில்‌ விலங்குகளுங் கொடு–13-

ஏக்க மொடு மெயின ரெயிற்றியர்‌
தாக்கருந் துயர்‌ தன்னிலழுங்கிட
வாக்கு செந்தினை யாரிடி தன்னெடுந்
தேக்கிலைக்‌ குடில்‌ சேரவரன்றியே–14-

செறிந்து பற்பல நல்வளஞ்‌ சேர்‌ தரும்‌
குறிஞ்சி விட்டுக்‌ கொடுங்க ணரவமும்‌
நெறிந்திரிந்திட நின்றெரி வீசியுள்‌
வறண்ட பாலையில்‌ வந்து கலந்ததே–15-

அன்னிலத்தைக்‌ குறிஞ்சிய தாக்கியே
மன்னு மாங்குள யாவும்‌ வரன்றியே
துன்னு முல்லை நிலத்திடைச்‌ சூழ்ந்ததாற்‌
தன்னிகர்த்திடும்‌ தாம்பிர வன்னியே–16-

அண்டர்வெள்ள மலமர வன்னவர்‌
மண்டுபாடி வயின்புகுந்‌ தாங்குள
தண்டுளித் தயிர்த்தாழி யளை நெய் பால்‌
கொண்டு வெண்ண திக் கோலந் திகழ்ந்ததே –17-

மல்லலான்‌ விடை மற்றிளங் கன்றுடன்‌
முல்லையங் குழலாயர்‌ முகிழ் முலை
வல்லிமார்கள்‌ வனையும்‌ பணி துகில்‌
மெல்ல மெல்ல வுண் மேவி வரன்‌றியே–18-

மற்றுமுள்ள வளங்களை வாரியே
கொற்ற வெண் குடைக்‌ கோமகன்‌ காரிதன்‌
நற்றவத்துதி நந்தன்‌ புகழென
வெற்றுநீர்‌ மருதத்திடை யேய்ந்ததே–19-

மருப்பொடிக்‌ கமழுஞ் சோலை வான்றருக்‌ குலங்கள்‌ சாடிச்‌
சுருப்பொடு மயில்களாங்குச்‌ சூழ் தரும்‌ பறவை பாய
விருப்பொடு காக்கு மள்ளர்‌ வெள்ளங்கள்‌ வெருக்‌ கொண் டோடக்‌
கருப்பொடித்‌ தயல் சூழ் வாளை கம்புளாரங் களீர்த்து–20-

மள்ளர்‌ தம்‌ சேரி யன்னோர்‌ வளர்த்திடு மெகினங்‌ கோழி
புள்ளின மிடப மேடம்‌ பூங்கிடிக்‌ குருளையோடு
விள்ளு முக்கனிகளீர்த்து வேரி முண்டகக்‌ காடூடுற்‌
அள்ளிதழ்த்‌ தேனினோடு மொன்றிச்‌ செந்நிறத்ததாகி–21-

கொங்க விழி ரதத்தேனைக்‌ கொள்ளை கொண்டளிகள்‌ பாடும்‌
பங்கய வாவி தோறும்‌ பரந்து நித்திலங்க ளீனுஞ்‌
சங்குலாம்‌ பணை கடோறுந் தடையறப்‌ படிந்து நீலத்‌
துங்க வெண்டிரை கண்‌ மோதுந்‌ தூய நீர்க்‌ கடலுட்‌ சேர்ந்த–22-

தேர்ந்‌ துணர்ந்தோர்த நெஞ்சிற்‌ றெளிவுறக்‌ நீத்த நீடு
வார்ந்தலை யகடு கீண்டு வகிர் தர வொதுக்கல்‌, வெம் போர்‌
ஆர்ந்த தோள வுணன்றன்னை யரி யுருவாகி யெம்மான்‌
ஈர்ந்தணி பூண்ட மாலை யெழிலினைப்‌ பொருவு மாதோ–23-

நாடுகடோறம்‌ பாய்ந்த நறம் புன றடையாயுள்ள
கோடுக ளனைத்துஞ்‌ சாடிக்‌ குமுறிடு மொலியுஞ்‌ செந்தேன்‌
ஓடு தண்டலைகள்‌ யாவு மொண் சிறை யறு காற்‌ றும்பி
பாடு மத்தொனியு மாங்குப்‌ பரந்தன வெங்கு மாதோ–24-

கட்கடை குழையைத்‌ தாவுங்‌ கடைசியர்‌ குழுவினோடும்‌
உட்களி தூங்க மள்ள ருண்ணுதற்‌ கமைத்த வூனை
மட்கலத்‌ தெடுத்து மீது வைத்தல ரணையின்‌ மேய
புட்குல மிரிய வந்து புகுந்தன ரனந்தர்‌ மாதோ,–25-

வெட்டுவர்‌ சுமப்பர்‌ வாரி வீசுவர்‌ வரம்பை நேராய்க்‌
கட்டுவர்‌ மிதிப்‌ர்‌ கோட்டுக்‌ கரு நிறப்‌ பகட்டினத்தை
மட்டறப்‌ பூட்டிச்‌ சாறு வார்கரும பொடித்‌ தனேகர்‌
எட்டு மாதீரமுமஞ்ச வேரடித்‌ துழுவர்‌ மாதோ–26–

முருகவிழ்‌ கமலப்போதின்‌ முத்தனம்‌ வளைகளீனக்‌
குருகு தன்‌ கருவாமென்றே குறித்து வெண்‌ சிறகான்‌ மூடி
அருகிருந் தடை கிடக்கு மகன பணைத்‌ தலத்து வானெற்‌
பெருக வென்‌ றகத்திலுள்ளிப்‌ பெய்குவ ரெங்கும் வித்தே–27-

பருமருங்‌ குடை நற்‌ பாகற்‌ பழங்‌ கனிந்திழிந்த தேனும்‌
மரு,மலர்‌ விரியுஞ்‌ சூத வார் கனித்‌ தேனு மீத
விரு மரம்பையின்‌ பலங்கள்‌ வீழ்ந்திழி தேனும்‌ பாயத்‌
திரு மகிழலங்கன்‌ மார்பன்‌ கீர்த்தி போல்‌ வளருஞ் செந்நெல்–28-

இற்றொடி னுழை நுசுப்பு மிரணியத் துகளை நேர்தே
மற்றொடு தனப்‌ பொருப்பும்‌ வாள்‌ பொரு விழியும்‌ பெற்ற
பொற்றொடிக்‌ கடைசி மார்கள்‌ பூந் துகிற்‌ கொடிமென்‌ பூவி
வற்றொடு களைகள்‌ யாவும்‌ வரைந்து பின்‌ குரவை செய்வார்–29-

வரி வளை யலறி யீன்ற மணிதிகழ் கழனி தோறும்‌
விரிகளை கடியு மாதர்‌ விளங்கு நன்‌ முகத்தை நோக்கி
உரிய மா மதியமென்ன வுண்ணெகிழ்ந் தலரு மாம்ப
றரியல னெழுந் தானென்னத்‌ தாமரை மலர்‌ வாய்‌ மூடும்–30-

அந்தரத்‌ தடர்ந்த வாச வைந்தரு நீழல்‌ வைகுஞ்‌
சந்த வானினங்‌ கறிக்கச்‌ சலிப்புறு தோங்கித்‌ திண்டோள்‌
மைந்தரைக்‌ கண்ட கற்பு மகளிர் தங்‌ குழுக் கணாணிக்‌
கந்தரஞ்‌ சாய்ப்பதே போற்‌ கவிழ்ந்தன சாலி யெங்கும்–31-

அகட்டிரசித மீன்றாவ வரிந்தரி யனைத்தும்‌ வாரிச்‌
சகட்டினு மெருத்தின் மீதுந் தலையினுக்‌ கொடு போ யண்ட
முகட்டினிற்‌ படியப்‌ பல் போர்‌ மூட்டியே பிணை யனீலப்‌
பகட்டின மனந்தம்‌ பூட்டிப்‌ பற் பலர்‌ தெழிப்பர்‌ மாதோ–32-

உளங்களி தூங்கவாரு மொண்டொடித்‌ திரளினோடுரந்
தளந்தளமாக வெங்குஞ்‌ சார்ந்த நெற் பொலியை வாரிக்‌
களங்களைப்‌ புதுக்கித்‌ தூய காற்றினிற்‌ றூற்றிப்‌ பின்ன
ரளந் தளந்‌ தவர் கடங்க ளகத்தினிற்‌ கொணர்வர்‌ தாமே–33-

காவியும்‌ கடையு நேமிக்‌ ககமுமென்‌ கமலப் போதுந்
தா விடுஞ்‌ சினை வராலுஞ்‌ சைவலத்‌ துணரு ஞண்டு்‌ந்
தூவியவனமு மீனுந் தூய தெண்‌ டிரையுங்‌ காட்டி
வாவிக ளனைத்து மாதர்‌ வடிவெனப்‌ பொலியு மாதோ–34-

தாதினி னிறையு மம்பொற்‌ றடத்தினிற்‌ றிகழ் வெண்கஞ்சப்‌
போதினி லினிதமர்ந்து பொலிவுறு மனத்தின்‌ றோற்ற
நீதி நின்‌ றுயர்ந்த மாற னிகழ்த்து மத்‌ தமிழை யோர்வான்‌
மேதினி தன்னில் வாணி மெய்த்தவம்‌ புரித லொக்கும்–35-

வெடித்திடுஞ்‌ சினைவரால்‌ போய்‌ வெண் மதிச்‌ சசத்தைக்‌ கீறி
வடித்திடு மமுதத்தோடும்‌ வாரணிந்‌ தடர்ந்த கொங்கைத்‌
தொடிக்கைய ரிருண்ட கூந்தற்‌ சொரிந்தடு நறவு மொன்றி
மடித்தலை யெறிந்தனேக மாநதிக் கிணையா யோடும்–36-

கயமெலாம்‌ பறவை கூடும்‌ காவெலா மயில்களாடும்‌
வயலெலாங் கரும்பு நீடும்‌ வரம்பெலாந்‌ தேன்களோடும்‌
வியன்றருக்‌ குலங்களெல்லாம்‌ விளரி வண்டினங்கள்‌ பாடும்‌
அயலறப் பெருகி நாடு மரும்புனல்‌ குவடு சாடும்–37-

கணையினுங்‌ கொடியதாகுங்‌ காவியம்‌ கருங்கட்‌ செவ்வாய்த்‌
துணையிள முலைக்கரும்பொற்‌ றொடி யுழத்‌ தியரின்‌ வெள்ளம்‌
பணையிடத்‌ தடர்ந்து செய்யும்‌ பணை யிகழ்‌ குரவையோடு
இணை தட வொலிகளெங்கும்‌ கெழுமியார்‌ கலி போலார்க்கும்–38-

வாளை விண்‌ முகடு தாவு மாமரங்கனிக டூவும்‌
வேளை மாங்குயில்கள்‌ கூவும்‌ வெள்ளனம்‌ வயல் கடாவு
நீளரி மலர்த்‌ தேனுண்ணு நீர்முகில்‌ பொழின்‌ மேனண்ணும்‌
பாளைகள்‌ மிகவுமொன்றும்‌ பனி வளர்‌ கமுகின்‌ கண்ணும்–30-

தாமரைத்‌ தடங்கடோறும்‌ தடமுலை மடவாரீட்டம்‌
பூமலர்க்‌ கழனி தோறும்‌ பூங்கரு வண்டுப்‌ பாட்டம்‌
தேமரு பொழில் கடோறும் செழிப்புறு மயில்களாட்டம்‌
தோமறநோக்கும்‌ பக்கந் தோறும் பன்‌ மலர் சேர்‌ தோட்டம்–31-

குடங்கையினகன்று கொலைத்‌ தொழில்‌ புரியுங்‌ கூற்றினைப்‌ பழித்த வெவ்‌ விழிகொண்
மடந்தையரிருண்ட குழற்றிரட்‌ கருத்து மணந் திகழகிற் புகை ககனத்‌
தடர்ந்தன விமையா தவர்கள்‌ கண்‌ ணெச்சின்னாட்டணி யழித்திடா நீலப்‌
படந்தனை விரித்து மறைத்தன கடுப்பப்‌ படர்ந்தன விண்ணிட மெல்லாம்–32-

வண்டலம்பிடு பூந்தண்டலை யுகுதேன்‌ வழிந்து பாய்வுற வளர் கன்னல்‌
அண்டர்‌ தம்பதியிலடைய வாங்குலவு மானினங் கறித்திடச் சிதறி
எண்டிசை யிடங்கண்‌ முழுவது மறைய வெழின் மணி யினங்கள் வீழ்‌ தோற்றம்‌
விண்டலத்‌ திரவி தனக்‌ குடைந் துடுக்கள்‌ வெடித்து வீழ்ந்திடுதலைப்‌ பொருவும்–33-

போதலர்ந்திரத நறவிழிந்தொழுகு புனிதமா முல்லைய நிலத்தில்‌
யாதவரியற்றுல்‌ குழலிசை யினைக்கேட்‌டைம் பொறி வழி யுளஞ்‌ செலுத்தா
மேதகு தவரு மெய்யறி விழந்து மேலை நாளி ருந்தமை கருதி
மாதவ னெழுந்தா னெனவவன்‌ றனையே மருவியின்‌ புறுவமென்‌ றெழுவார்–34-

எழலிகண் படுக்குந் தண்டலை யரங்கி லிவர் முருக்‌ கலரொளி விளக்கவ்‌ வுழிவிளங்‌ கிட வொண்‌ சிறை யறு பதங்களுறு அமளிக்‌ குலங்கள்‌ பண்‌ணியற்ற
பழியிலன்‌ புறு மேன்மையரென விருந்தொண்‌ பறவை கண்‌ மகிழ்வுற விமையா
விழி கொளுஞ் சிகிகள்‌ பயிலின மடவார்‌ விழைவொடு நடிப்பன நடிக்கும்–35–

அஞ்சனமணிந்து விடத்தினிற்‌ கருத்தை யரி பரந்‌ தகன்ற கண்‌ மடவார்‌
மஞ்சனம்‌ புரிநீ ரருவி பாய்ந்திட நெல்‌ வளர்வன வகன் பணை முழுதும்‌
பைஞ்சிறைக்‌ கிளியும்‌ பூவையுமிருந்து பாடுவ சோலை கடோறும்‌
கஞ்ச நன்‌ மலருங்‌ காவியுந் திகழ்வ கயந் தொறும்‌ வழுதி நாட்‌டகத்தே–36–

காவினிற்‌ றிகழும்‌ பலவினற்‌ கனியைக்‌ கறித்தொரு
பாகமாய்க்‌ குரங்கொன்‌ றாவலிற்‌ புசித்து விட்டிட வதனை யருகெழுந்‌ தொருகரு முசுவும்
வாவிமுன்கறித்த விடத்தினைப்‌ பிடித்து வாயை வைத்‌ தருந்துதல்‌ கதிர்கா
றேவிருட்‌ பகையைக்‌ கரும்பை யிராகு சினங் கொடு தீண்டுதல்‌ கடுக்கும்–37-

அற்புத மிகுந்த விரு நிதி யுறலா லம்புயத்‌ திருமகிழ்‌ வுறலால்‌
பற்பல வண்ட ருகப்புடன்‌ மிடைந்து பரிந்துரை பான்மையான்‌ மின்னார்‌
கற்பக மருவுந் தன்மையா லெவருங்‌ கணிப்பரு முயர்ச்சி யினாலும்‌ பொற்பினின்‌ மிகுந்த பொன்னகர்க்‌ கிணையாய்ப்‌ பொலி தரும்‌ பாண்டி நன்னாடு–38-

உந்திமே லொருநான்‌ முகனை முன்‌ படைத்தன்‌ னோன் றனைக் கொண்டு வெண்ணீற்றா
னிந்திரன்‌ முதலாந்‌ தேவரை யுலகத்‌ செண்ணருஞ்‌ சராசரத்‌ தொகையைத்‌
தந்திடப்‌ புரிந் தங்கவை தொறு நிறைந்‌து சாக்ஷியா யிருந்தருள்‌ பெருமான்‌
வந்து தித்தருளும்‌ பாண்டி நாடதனுள்‌ வளத்தினை யுரைத்திடற்‌ பாற்றே–39-

பாண்டிய நாட்டுத்‌ திருப்பதிப்‌ படலம் முற்றும்

திருநகரப்‌ படலம்‌

தண்டலை சூழ்ந்தில குறு சாளக்கிராமஞ்‌ சார்ந்துழியோர்‌ பதினூறு சயினர்‌ வந்தாங்
கண்டியெம்மோ டடல்வாதம்‌ புரிவீ ரென்ன வன்னவர்க்கா யிரம் பணங்கொளரவாய் நின்று
புண்டரிகத்தாளவனைப்‌ பரமதாக்கி போதவலர்‌ தன்னடிக்கட்‌ பொருத்து ஞானத்‌ திண்டிறல்‌ கொளெ திராஜன்‌ கழலை வாழ்த்தித்‌ திருநகரப்படல மதைத்‌ தெரிவிப்பாமால் –1-

சங்கமீனுந்தரள நிலவுல
கெங்கு மாரகழின்புடை யேய் பொலன்‌
றுங்க நீளெயில் சூழ்‌ குருகாபுரி
பொங்கு வாசவன்‌ பொன்னக ரொக்குமால்–2-

வச்சிரத்தி னிடைக்கிடை மாடுபெய்‌
மச்சிவர்ந் தொழிர்‌ மாளிகையும்‌ பளிக்‌
குச்சிமேய வுயர்‌ மணி மேடையும்‌
பச்சையாமறையும்‌ மடைப்பள்ளியும்–3-

பம்பரத்தை நிகர்த்த பயோதரக்‌
கொம்பனார்கந்து கம்பயில்‌ கூடமும்‌
வம்புலாந்‌ அணர்‌ மஞ்சமு மாமணித்‌
தம்பநாட்டுஞ்‌ சயனத்‌ தலங்களும்–4-

பீதகத்திற்‌ சமைத்தொளிர்‌ பித்தியுங்‌ கோதறும்‌ வயிடூரீய கும்பமுற்‌
றாதவன்‌ றொட்டவிர்ந்த சிகரியும்‌ மேதகத்தின்‌ விமானமுங்‌ கோயிலும்–5-

கள்ளலம்பு,கருங்குழல்‌ வாணுதல்‌
அள்ள யிற்க ணடர்க்தெழு மா முலை
கிள்ளையின்‌ சொற்கிளவிநன்மாதர்க
டுள்ளீயாடிடு தோரண வாயிலும்–6-

வானிறாவு கயற் கொடி வைகிய பானிலாமணி மேடையின்‌ பந்தியுந்
தூனிறத் தண் மதி முகத் தோகைமார்‌ கானிசைக்குங்‌ கருமணிச்‌ சாலையும்–7-

பன்னிறக்‌ கதிர்வீசும்‌ பரப்பினாற்‌ றுன்னிராவும்‌ பகலும்‌ துலங்கிடா
நன்னகர்த்‌ தெருவீதி நலத்தையா மின்னதென்றிங்‌ கெடுத்‌ துரைப்பாமரோ–8-

விந்தையிற்‌ சிறவோர்‌ விளையாடிடத்‌ தந்தவாழி சமைத்து று தேரினிற்‌
பந்தனஞ்செய்‌ பரியின்‌ விலாழிநீர்‌ சிந்தவீதியிற்‌ சேறுறு மாதரோ–9-

சீதவாரம்‌ திமிர்ந்த சிமிழ்முலை மாதர் வீணை மலர்க்‌ கைபிடித்து நற்‌
கீதமோ தொலியுங் ளர்‌ மாதவர்‌ வேத கோடமு மேய தவ்‌ வீதியே–10-

தூலை யுற்று நுடங்கிடை மாதரை வேலை யுற்று மிளிர்க்தகை வீரர் கண்‌
மாலையிட்டு மணம்புரி பல்லிய மோலை யுற்ற கடலொலி யொக்குமே–11-

கெண்டையொண்‌ கட்கிளி மொழிமா தரின்‌ கொண்டை கொண்டவிர்‌ கோதை நறவுக வண்டலிட்டு மறுகு வழுக்கமே வொண்டொடித்‌ திரள்யாஞ்‌ சொல வொண்ணுமோ-12-

நீனிறக்கற்‌ சகர நிறைத்தெழு மேனிலைக் கண்‌ மிளிர் கயற் கேதனர்‌
தேனினின்‌ சொற்றெரிவையர்‌ கட்கிணை தானிருக்கத்‌ தவஞ்செயன்‌ மானுமே–13-

ஒள்ளிருஞ்சுதை மாட த்தினுற்றவிழ்‌ நள்ளிருட்‌ குழனங்கை முகத்தொளி
வெள்ளி வெற்புயர்‌ வெண்மதி மாமுகிற்‌ குள்ளிருந்து வெளிப்பட லொக்குமோ–14-

பூவணத்தரளத்திற்‌ பொலிந்தடர்‌ காவணத்தின்‌ கவின்றிகழ்‌ பற்பல
வாவணத்துளமைந்த சிறப்பையிப்‌ பாவணத்திற்‌ பகர்ந்திடற்‌ பாலதோ–15-

ஆரநானமலர்ந்த நறைகொள்கர்ப்‌ பூரநீள்விலைப்‌ பொற்றுகி றாவுழைக்‌
கோரமா னிடபங்‌ கலை கோரதம்‌ வாரணங்கண்‌ மலிந்தது கூலமே–15-

சிந்தியாது பொய்‌ செப்பு தலில்லரிச்‌ சந்திரன்‌ றனிற்றாழ்‌ குனரின்‌ மதி
மந்தராய்த்‌ திரிவாரிற்சுரகுரு வந்தணன்‌ றனிற்றாழ்‌ குனரற்றதே–16-

இன்னலுற்‌ நிரப்‌ போர்க்கிறை யீ விலாப்‌ பொன்னை வைத்துப்‌ புகல்‌ சொல்லும்‌ புல்லரி
லன்ன முற்றுறங்கும்‌ பணை யங்கர் கோன்‌ கன்னனுக்குக்‌ கடையின ரில்லையால்–17-

விட்பரந்த புகழ்ப்பெரு மேன்மையர்‌ திட்புயச்‌ சிறுவோர்‌ சிலர்‌ சேவறாள்‌
முட்பொரும்‌ படைகட்டி முயலொலி மட்கலைக்‌ கெதிர்‌ மாறுகொ ளோலமே–18-

மின்னி னுண்ணிடை மெல்லியலார்கடம்‌ மன்னனோடு மகிழ்ந்து புணர்ந்திட
வன்னை யில்விட்‌ டவரவ ரிற்‌ புகல்‌ பொன்னினாள் வந்து புக்கது போன்றதே–19-

காதலன்‌ பொற்கலையை நெகழ்த்தமெல்‌ லோதிநாணி விளக்கை யொளிக்கவம்‌
மாது பூணு மணியொளி வீசிடப்‌ போத வெட்கிக்‌ கரங்கண்‌ புதைக்குமால்–20-

மானறுங்குழல்‌ மங்கைய ரன்பரோ டானவின்ப மனைத்து மிகுளையர்‌
பானவில்கப்பசியுறு மிற்புலி மோனமோடுண்‌ முழுமையும்‌ நோக்குமே–21-

காவி நோக்கியர்‌ காதல ரூடலின்‌ மேவுமாமணி மேடை யொளித்திட
வாவலோடெழுந்தாட வரன்னரென்‌ றோவியந்தொழ வுன்னி நகைப்பரால்–22-

வற்றனத்‌து மடந்தையர்‌ மாடமூ டுற்றுநாளு முடுபதி தான்செலப்‌
பெற்றதாலவட்‌ பெய்விளக்‌ காவியாற்‌ கற்று மெய்யைக்‌ களங்க மென்பார்களே–23-

கோலமாடக்‌ குழுக்குண்‌ மடந்தையர்‌ சாலவாயற்‌ றிறந்து தனித்தனி
வேலினேர்‌ விழிநோக்கொளி வீதிவாய்‌ நீல மா மலர்த்‌ தோரண நேர்ந்தவால்–24-

அஞ்சினாறும்‌ புனுகு மணிந்து வா சஞ் சிறந்த குழலியர்தத்தை பாற்‌
செஞ்சொனாமம்‌ பயிற்றச்‌ செலற்கது பஞ்சரத்துட்‌ பதுங்கு மணத்தினால்–25-

தென்‌ றமிழ்‌ வட நூறெரி வோர்கடம்‌ முன்றிறன்னிற்‌ புராண முதுப்பொருள்‌
பொன்றிலாது புகன்றிட மாந்தர்கள்‌ சென்று கேட்டுத்‌ தினமு மகிழ்வரால்–26-

மானநீர்ப்‌ பொருணா நதியின்‌ வடக்‌ கானினேறரன்‌ கோயிலமைந்ததான்‌
மேனிலைத்‌ தென் விரசைக்‌ கவாசியா ஞான நாடெனலா மிந் நகரையே–27-

ஏறுமிவ்‌ வளங்கொள்குரு காபுரியி னூடே யீறிலொளி வீசு பொனியற்றெழு நிரைத்த
வீறணியு மண்டபமுண்‌ மேவி யருள் காரி மாறனரி யாதன மகழ்ந்தினி திருந்தான்–28-

வாமரைநிகர்‌ த்தவீழி மங்கைய ரனேகர்‌ சாமரையிரட்ட வெகுதாதியர்கணின்‌று தாமரையலர்க்கு நிகர் தாளிணை பெயர்ப்பத்‌ தூமறை நல்‌ வேதயாக டோததிர மியம்ப–29-

வைரமுடி சூடுதிணி மன்னவர்‌ கடங்கள்‌ செயிரினை யெடுத்தினிது செப்பிட மருங்கே
யுயிரனைய மந்திரிக ஞற்றவை யுரைப்ப மயினிகர்‌ கருங்குழல் கொண்‌ மங்கையர்கள் பாட–30-

வலங்கொள்‌ தட மார்பினிடை வண்டிமிரு நிம்ப வலங்கலொடு வெண்டரள வாரமு மிலங்க
விலங்கரிக ளொண்புய மிடைந்த வலயங்கள்‌ இலங்குற வெண்‌ மண்ணுத லிருந்தொளி தயங்க–31

அளக்கரு மளக்கரி னதிர்முரசொலிப்ப விளக்கொளி யயிற்படை விரற்பதுமமின்ன தளத்துள வலங்கலணி தாயமுகிலே வந்‌ துளத்தினிதுறக்‌ குழைகளொண்‌ சுடரெறிப்ப–33-

கொந்தலரு மோதியர்கள்‌ கும்பமொடு தீபம்‌ வந்தினிதெடுப்ப மதி வாணில வெறிக்கும்‌
சுந்தர மணிக் கவிகை சூழவதனீழல்‌ இந்திரனெனப்‌ பெரிதிருந்தனன்‌ மகிழ்ந்தே–34-

வாசமலர்‌ கொண்டடரு மங்குலினிருண்ட கேச மட மங்கையர்‌ கிளர்ந்தொளிருமம்பொற்‌
றூசுடனெய்‌ வாசமணி சுண்ணமு மெடுத்தே வீசவடன்‌ மைந்தர் பலர்‌ மெல்லடியில்‌ வீழ–35-

பட்டமறு வற்றருள்‌ பரந்தெழு நிலாவின்‌ வட்டமதி யொத்தொளி செய்‌ வத்திர மிலங்க
மட்டுறுமலர்க்கமல மானவிரு கண்ணின்‌ றெட்டிசை தழைத்திட வருட்டிரை யெறிப்ப–36-

இவ்வண மகிழ்ந்தினி இருந்தருள்‌ சுரந்து நவ்விநயநத்‌துடைய நங்கை யொடு நீலப்‌
பவ்வவலை சூழ்புவி பரித்து முறை செங்கோற்‌ செவ்விதினி யற்று பொழு துற்ற துரை செய்வாம்–37-

திருநகரப்படல முற்றும்‌

திருக்குறுங்குடிப்‌ படலம்‌

வெண்டி ரை கறங்குங்‌ கடனிலவரைப்பின்‌ மிடைந் துயிர்ப்பயிர்‌ கொடுங்க கலியாம்‌
அண்டு வெம்‌ கதிரான்‌ மிக்குடல் வெ தும்பி யழிதரா தல் கலின்ஞான
மண்டு விண்‌ மாரி பெய்தருளியரா மானுசன்‌ றாட்டுணை வணங்கி கொண்டல் கண் படுக்கும்‌ தண்டலை யுடுத்த குறுங்குடிப்‌ படலமின்‌ றுரைப்பாம்–1–

பொங்கு நீ டிரைகொ ளு வரியந்தானைப்‌ பூவை மெய்‌ வழியிலோர்‌ குடைக்கீழ்த்‌
தங்க வைத்‌ தனேக நாளர சியற்றித்‌ தனையனில்லாமையின்‌ மெலிந்து
கங்குலிற்‌ கரிய கூந்தலந் துவர் வாய்க்‌ கயற் கணங்‌ கற்பு று நங்கை
பங்கய மலரின்‌ முகமதி நோக்கிப்‌ பார்த்திபன்‌ மொழி சில பகர்வான்‌–2-

இழையிடை புகுதற்கிட மிலா தடர்ந்த . விளமுலை துடி யினே ரிடைநால்‌
புழை நெடுங் கரமென்‌ பிடிநடைத்‌ திருவே பொற் கலத்‌ தடிசிலிற்‌ சிறுகை
தழைவுற வளைந்தங்‌ கிளநகை புரிந்து தவழ்நடை பயிற்றிடு மழகார்‌
மழவிளஞ்‌ சேய்க டமைப் பெ றாதுற்ற வாழ் விருந்‌ தென் பய னென்றான்–3-

சிற்றெரும்‌ பணியி னடப்பன கடுப்பச்‌ சிறுமயி ரொழுங்குமே கலைசூழ்‌ புற்றரவல் குற்‌ றமனியக்‌ கொடியே பொன்னக ரமிழ்தினு மினிமை-யுற்றமென்‌ குதலைச்‌ சிறுவர் கண்‌ மிழற்று மொருசொலிச்‌ செவிப் புலத்‌ தேர்க்கப்‌ பெற்றில ரன்றோ மகர யாழ்‌ முழலைப் பேசு வரினிதெனப்‌ பிறர்க்கே–4-

துப்பித டளவின்‌ முகை யணி முறுவற்‌ றோகை நன்‌ னெறியிலோர்‌ மகவைக்‌
கைப்பெறினேழு பிறப்பினு , மியற்றுங்‌ கடும் பவந்‌ தொலைத்து மா விரசைக்‌
கப்புற மிருத்து மெனிற்புவி துறந்தா ரணிய முற்‌ றைம்பொறி யடக்கித்‌
தப்பில துடலங்‌ கருக வைம்‌ தழலுட்‌ டவஞ் செய றரும் பய னெவனோ.–5-

ஐங்கணைக்‌ குறிசில்‌ வசந்த மண்டபமுற் றணிசெயு மரம்பையங்‌ குறங்கும்‌
பங்கய மலரின்‌ மிதிக்குமுன்‌ சிவக்கும்‌ பதமுநின்‌ றொளிகொள்‌ பெண்‌ மயிலே
செங்கர மதனா லபனருள்‌ கொடு நஞ்‌ சென்னியிற்‌ பொறித்தடும்‌ பொழுது
சங்க நன்‌னிதியுந் தரணியும்‌ பெறுவீர்‌ தனைய ரில் லென வெமுதினனோ–6-

இந்திர தனுவை நிம்பபத்‌ திரத்தை யிகல் செயும்‌ புருவ நற்‌ கமுகின்‌
கந்தரம்‌ வருக்கைக்‌ கனி மொழித்‌ திருவிக்‌ காசினி யதனுணம்‌ மரபில்‌
வந்த திண்‌ டிரடோள்‌ மன்னரி லெவரு மகவின் நல்‌ வாழ்வுற நமக்குச்‌
சந்ததி யிது நாள்‌ வரையிலா ததற்கென்‌ றாழ் வினைப்‌ புரிக்தன மென்றான்–7-

வண்டினம்‌ பெடைக ளுடனிரும்‌ தமுதுண்‌ மருமலர்த்‌ தொடை யணி குழலாய்‌
கண்டினு மினிய மழலை மென்‌ மொழி கொள்‌ கான்முளைப்‌ பொருளிது நாளுங்
கொண்டிலா துணவு முறக்கமும்‌ பெரிதாய்க்‌ குவிமுலைப்‌ போகமே நுகர்ந்து
தெண்டிரைக்‌ கடல் சூழ்‌ புவியு நன்‌ னிதியுசந் திறமென வாழ்ந்தன மென்றான்–8-

இவ்வின மெலிந்து பகையின ருதிர அம் மிருஞ் சிறைப்‌ புள்ளினுக்‌ கிரையாய்‌
வவ்வு மொள் ளயில் வேற்‌ படை யுறு மங்கை மன்னவனுரைத்த சொல்‌ வினவி
நவ்வியை னச் சுணங்கணிர்‌ தடர்பொன்‌ னக கெனத்‌ திமிர் முலை வனசச்‌
செவ்வி கொள்‌ வதன வனநடைத் தெரிவை செப்புவள் சில மொழி யன்றே -9-

இன்னல ரெனுமும்‌ மதமுகும்‌ புழைக்கை யிபமெனுங்‌ குழுவினுக்கரியாம்‌
மன்ன வெவ்‌ வுலகு மகவிலார்‌ தமக்கு வலி கொள் புத்‌ தெனு நர கென்று
நன்னெறி யுணரு மறிஞர்‌ நின்னவை யினவில் வதைக்‌ கேட்டு நாமிதுநா
ளுன்னின மிலையப்‌ பொருளிலா தெவ்வாழ்‌ வொன்றினும்‌ பயனிலை யென்றாள்–10-

என்று மன்னவனு மங்கையுள்‌ சிலநா ளிரங்‌யிந்நாள்‌ வரை யினுநாஞ்‌
சென்றமுப்‌ பொழுது மிடைவிடா திழைஞ்சுஞ்‌ செழுங்கரு முகிலெனப்‌ பொலிந்து
நின்ற நம்‌ பெருமான்‌ றனதடிபரவி நிகழ்த்‌ துவ மின்றவ னமக்கு
மன்றலங்குழலா யஞ்சலென்றருளி மகவர மளித்தருள்‌ குவனேல்–11

வந்தரசியற்றி வாழ்குவ மாங்கம்‌ மகவர மளித்திடா னெனினாஞ்‌
சுந்தரவதனத் தெரிவை யந்கெறியே சூழிருஞ்‌ சடைமுடி. தாங்கிச்
செந்த ழலிடை நின்றருந்தவம்‌ புரிவோர்‌ செறியுமக்‌ கான மேகுவமென்‌
றந்‌ தமன்‌ னவர்கோன்‌ மங்கை பாலுறுதி யறைந்தவ ளுடன்‌ றளிக்‌ கெழுந்தான்–12–

கஞ்ச நன் மலரை யனைய வானனத்துக்‌ கன்னிய ரிருவர் முன்‌ னெதிர
மஞ்சினு மிரட்டி யதிர் குரன்‌ முரசும்‌ வலம் புரிச்‌ சங்கமு மொலிப்ப
வெஞ்சலி னிறை நீர்த்‌ தசம்புடன் மலரு மினிய நற்‌ கனிகளும்‌ வரமுன்‌
அஞ்சுக மொழிமின்‌ னணங்குமன்‌ னவனு மறிந்தறிந்‌ தக மதிழ்ந்தனரால்–13-

பன்னகமிசை நின்றெழுந்து மேனிவந்த பருமணிப்‌ புரிசையும்‌ பரந்த
மின்னொளி விரிக்கு மாட மண்டபங்கண்‌ மிடைந்த பன்‌ மறுகையுங்‌ கடந்து
கன்னலி னமிழ்திற்‌ கனிந்த மென்‌ றீஞ்சொற் கரும்புய னிகருமொண்‌ கூந்த
லன்ன மென்‌ னடையி னணங்கு மன்னவனு மன்பினத்‌ தளிவலம்‌ வந்தார்–14-

செய்ய வொண்‌ கமல மலர்த்தவி சுகந்த திசைமுகத்‌ தயனுறு மிடர்தீர்ந்
துய்ய விண்‌ ணமரர்‌ மஞ்சன முதலா வுள்ளன வெடுத்தினி தளிப்ப
மெய்யவன்‌ பொடுமா ராதன மியற்ற விண்டொட ராசையங்‌ கிரியோர்‌
துய்ய வண்‌ டினங்க ளிசை செய் பைந்‌ துளவத்‌ தொடையல் கொண்‌ டடியிணை பணிய–15-

ஒன்னல ரெனும்வெற்‌ திரைக்கட லினை யுண்‌ டொளிருமொண்‌ டிகிரி முன்‌னடையின்‌
இன்னொளி மழுங்கிப்‌ பரிபவ முறுவ மென்றுரு மாறி வந் தருக்கர்
பன்னிரு வருமுள்‌ ளுவந்திறைஞ்சி யடர்‌ பவரையோ லக்கமா யிருமின்‌
என்னவொ ரிருகை குவித்து வேகு பராக்‌ கென்றவர்‌ கட்டியம்‌ மியம்ப–16-

புகரில்‌ யாழெடுத்து மாடக முருக்கிப்‌ புரிரரம பிசைத்திசை நிறுவப்‌
பகரெழு வகையி னிசைகளை முறையிற்‌ பாணியிற்‌ சுதையினு மினிதாய்‌
அகமகிழ்‌ வொடுமக்‌ கின்னா ரியற்ற வவிர்ந்த செஞ்‌ சடை முடி தரிக்கு
நிகரிலாப்‌ ப்ருகு மார்க்கண்டரு மருங்கி னெடிய மா மறையினிற்‌ புகழ-17-

முருகு கொப்பளிக்க நறவுகுந் துளவ முடியினிற்‌ புடைபரந்‌ தளிக
டுருவிமுன்‌ னடிக்கு மரமபையர்‌ தமக்குச்‌ சுருதியி னின்னிசை பயில
விருவிசும்‌ பகட்டூ ரிருளினிற்‌ கிளர்வுற்‌ றெழுந்த வெண்‌ பிறை திகழ்‌ மறுவின்‌
றிரு நுதற்‌ றலத்துட்‌ செழு மணங்‌ கமழுந்‌ தென் கலைப்‌ புண்டரா மொளிர–18-

செவ்வரியோடிப்‌ புடை பரந் தெழுந்து செவி யொடும்‌ பொருதிக்‌ காண்பவர்‌ கண்‌
வவ்வுறு நீரதாகி நீண்டகன்று மானிலத்‌ துறு முயிர்ப்‌ பயிர்கள்‌
வெவ் வினை யொழியத்‌ தண்ணளி கொழித்து வீளங்கிருங்‌ கண்ணிணை விமலன்‌
பவ்வவார்‌ கலியுட்‌ கிளர்ந் தெழுந் தகையோ பங்கயமோ வெனத்திகழ.–19-

வாட்டடம்‌ பொருந்து மதிமுக மதனுண்‌ மலர்ந்த செலங் கமலமோ வதனுட்‌
காட்டிடும்‌ பவளக் கடிகையோ வெனக் கண்‌ கவர்ந்திடு வாயித ழிலங்க
கோட்டிரு மலையிற்‌ சினந்தெதிர்‌ பொருதக்‌ கொழுஞ் சுட ரருக்கரோ ரிருவர்‌
ஈட்டு வெவ்வினையி னெழுந்தனர்‌ கடுப்ப விலங்கிட மகர குண்டலமே–20-

பொங்கலைப்‌ புணரி நிலந்தனைக்‌ கவர்வான்‌ பொதிந்தெழுங்காலையிற்‌ கிளரும்‌
வெங்கனல்‌ கடுப்பத்‌ திகிரியு மொளிர் வெண்‌ விதுவெனச்‌ சங்கமும்‌ விளங்கக்‌
கங்குலிற் கரிய மலை யெனப்‌ பரந்து கவினுறு மார்பிடைச்‌ செழுநீன்‌
மங்குலிற்றிகமு மின்னெனத்‌ துவளும்‌ வயங்கு முப்புரி யிழை யிலங்க -21-

துங்க முற்றமர்ந்த குடக்கெனும்‌ திசையிற்‌ றோன்றி யம்‌ புயலின்‌கீ ழுதிக்குஞ்‌ செங்கணிற்றுலங்குஞ்‌ செக்‌ கரினரை யிற்‌ செழும் பொற்‌ பீதாம்பர மிலங்க
விங் கருமுகிலினிவ்வணம்‌ பொலிந்த நின்ற மெய்ப்‌ பரன்றிரு முன்னர்‌
௮ங்கடற்‌ றழைத்த வருள்‌ கொண்‌ மன்னவனு மரிவையோ டினிது வந்தடைந்தான்–22-

அண்ட மா யண்டத்துட்‌ பொருளாகி யரிய நான்‌ மறைக்கு மெட்டாத
புண்டரீ கங்கொ ணயன வெம்‌ பெருமான்‌ பொலிந்து நின்‌ றருள் பிரான்‌ றிருத்தாள்‌
கண்டவர்‌ தாளுந்‌ தடக்யைக்‌ கூப்பிக்‌ கவினொளி விரித்திடும்‌ பல்பூண்‌
மண்டல மாது புனை தர வீழ்ந்து வணங்குபு நின்றன ரன்றே–23-

கருந்தட மலையிற்‌ பொலிந்து நின்றருளுங்‌ கருணை யங்‌ கடலினை நோக்கிப்‌
பொருந்தல ருரத்தி னுதிரமுண்‌ டொளிரும்‌ பொரு வயிற்‌ படை கொண்‌ மன்னவனு
மருந்தினு மினிய மொழி நெடுங் கருங்கண்‌ மங்கையு மிருகணீர்‌ பொழிய
வருந்தி நின்‌ றிரங்கி யிரு கை மேற்‌ குவித்து வழுத்துவர்‌ விழுத்தகு மொழியே–24-

அண்டமு மீரேழுலகும்‌ படைத்த னாளி லதிர் சனா யிப்பதியு ளமர்ந்தாய்‌ பின்பு
முண்டகத்தி னான்‌முகனைப்‌ படைத்தன்னோனை முன் படைத்த வுலகளிக்க முதல்வனாக்கத்‌
திண்டிறமில்‌ லாதவனுன்‌ னடியை யுள்ளித் திருவட்டாக்‌ கரப் பொருளை சிந்தை செய்ய
வண்டிமிருந்‌ துளவலங்கன்‌ மார்பிலங்க மா மகள்‌ பூ நீளையுடன்‌ வந்த கோவே–25-

வெந்தறுக ணால் வாய்மும்‌ மதப் புழைக்கை வேழத்தை விற் படைக்கை வேடன்‌ சீறி
வந்தடரக்‌ கடமகன்று நெடுந் தூரங் கொள் வழி துரத்தி யிப்பதிக்கண் வர வன்னோனைத்‌
தந்த மதனாலுறுத்த வவனுங் குத்தத்‌ தந்தியுமக்‌ குறவனு மித்‌ தலத்தின்‌ மாள
விந்திர னந்தகன்‌ றூதர்க் கலை யென்றுந்‌ தனிணை யடிக் காட்‌ செய்‌து கந்த வெழிலிண்ணா–26-

வேதங்க ளீரிரண்டுஞ்‌ சிச்சர்கட்கோர்‌ விப்பிரர் பன்‌ னாள் வரையும்‌ விளம்பிப்‌ பின்னும்‌
போதமிலா னதிலொருவ னிருக்கை நோக்கிப்‌ புங்கவனும்‌ புன் பிறப்பிற்‌ போவாய்‌ நீ யென்‌
றோதவவ னூரினம் விட்‌ டயலூர்க்கேதி யுன்றளி சூழ் புறம்‌ பிடுங்கி யுடலம் பேணப்‌
பேதமிலா தென தடிய னவனென றுன்னிப்‌ பின் பிறப்பில்‌ வீடளித்த பெருமையோனே–27-

வானவரும் தவளமத வாரணங்கொள்‌ வாசவனும்‌ புயவலி போய்‌ வதியுநாட்டைத்‌ தானவர் முன்‌ பறி கொடுத்தங்‌ கமல யோனி தனைத் தொழ வங்‌ கவனவர் கடம்மை சோக்கி
மானிலத் திற்றிரை கொள்‌ பொருனைக் கவாசி வனமதில்‌ நம்மா லுகந்‌ து வளர்கின்றானீர்‌
தேனின் மலர்‌ கொடுதொழுமென்‌ றுரைக்க வந்து தேவர் தொழ வவர்க்கருளுஞ்‌ செவ்வியோனே–28-

சங்கனெனு மறையோன்றே விருவரோடுன்‌ றனைச் சரியென்‌ றெணியாசை தன்னைக் காக்கப்‌
பொங்கு தவஞ்‌ செய்திட நாரதனுழன்று போந்தவனை வாரணமாய்ப்‌ போவாயென்ன
வங்கவனம்‌ முனிவனை யேத்திட மெஞ்ஞான வறிவுணர்வாய்‌ நீ யென்ன வவனும்‌ பின் போய்‌
வங்கமலி யார் கலியுட்‌ சங்கமாயுன்‌ மலரடி வந்தேத்த வருண்‌ மனத்தினானே–29-

அண்டமு மவ்வண்டத்து ளுலவுந் தீயு மலைகடலு மனிலமுமோ ரணுவின்மான
வுண்டு வந்தோ ராலடையிற்‌ பாலனாகி யோகந பநந் துயில வுந்தி தோன்று
முண்டக மென்மலரதி னான்முகத்தோன்‌ றன்னை முன் படைத்தாங் கவற்குனையே மூல மென்னும்‌
பண்டை யிருக்காதிய நான்மறை யனைத்தும்‌ பானிறங்‌ கொளோதிமமாய்ப்‌ பகர்ந்த கோவே–30-

பன்றி யுருக் கொண்டு திரைக்கடல்‌ சேர்‌ மண்ணோர்‌ பருமருப்பிற்றுகளினைப்போற்‌ பரித்து வந்தாய்‌
வென்றி கொளும்‌ வழுதி வள நாடன்றுய்ய மெய்மை யறற்தாங்‌கி சக்ர பாணியாருள்‌
துன்றொளிர் வேலச்சுதர்‌ தாமரைக் கண்ணர்‌ பொற்‌ செங்கணர் பொற்‌ காரிகையா ரெந்தை முன்னோர்‌
குன்றலிலா வழி வழி சந்ததிகளன்பிற்‌ கொடுத் தடிமை கொண்ட பெருங்குணக்‌ குன்றோயே–31-

பொங்கலை நீராழியினைப்‌ புடையுடுக்கும்‌ புவி மகளைக்‌ குடை நிழலிற்‌ புரக்குங்‌ கோவும்‌,
புங்கவிழித்‌ தெரிவையு மித்துதி மொழிந்து புத்தெனு மக்கொடு நரகப்‌ புவியிலெம்மைத்
தங்கவிடா தீடேற்றிக்‌ கதி யளிக்குந் தனையரெமக்‌ கருளென வஞ்சன வெற்பூடே
செங்கமலக்‌ காடுடனோர்‌ மதியுங்கூடிச்‌ செறிந்ததென நின்றவன் முன்‌ செப்பினாரே–32-

தன்னெறிவா யுலகமெலா மோச்சுஞ்‌ செங்கோல்‌ நலமுறு வேந் தினைய மொழி நவிலப் போதின்‌
மின்னுறையு மார்பனணி யாழி சங்கு வில் கதை நாந்ககப்‌ படை கொள்‌ விமலன்‌ கொண்மூ
வன்ன வருள்‌ சுரந்து பொலிந்தோங்கி நின்ற வாதிமா லதரிச வாக்காகச்‌ செம்பொன்‌
மன்னு மணி மாடத் தென்‌ குறுங்கை செல்வீர்‌ மகவளிப்போமென வொருசொல்‌ வழங்கினானே–33-

என்னவெழு மம்மொழி கேட்டிரு புயமு மிருவரையை
மன்ன நெடி தோங்கி யிவண்‌ மனமகிழ்வுற்‌ றிறைஞ்சினனாய்‌
கொன்னவிலு மயிற்படையைக்‌ கொடு மடையா ரிகலடக்கம்‌
மின்ன விரு மணிமுடியான்‌ மின்னினை நேரிடையினொடு–34-

அருமறையு மளவிடுதற்‌ கரிய வொரு தனிப்பொருளாய்க்‌
கரு முகிற்போற்‌ பொலிந்து நின்ற கருணை யமுதினை வலமாய்‌
மருமலரு நிம்பமணி மதர் நெடுந்தோண்‌ மன்னன் மனத்
தெருமர லற்றெழில்‌ விரச சினகர முன்‌றிலி லணைந்தான்–35-

உலகமெலாம்‌ பொது நீக்கி யொரு தனி நாயகம்‌ புரக்கு
மிலகுமணிப்‌ பூண்டிகழு மெழில் கனகத்‌ தடவுரக்கா
வலன முறை யிற் கடிது வருதிரெனச்‌ சாற்றிடலு
மலகிலற நெறி யமைச்ச ரனைவரும்‌ வந்தடைந்தனரால்–36-

வந்தடைந்த வமைச்சரனை வருமரசர்‌ கோனொலிக்குஞ்‌
சந்தமுறு மொண் கழல்க டயங்குமலர்த்‌ தாடொழுது
சிந்தையுவந்‌ துடை யொடுக்கித்‌ திகழ் கரத்தின்‌ வாய் புதைத்து
முந்து நிற்ப மன்னனவர்‌ முக நோக்கி விளம்ப லுற்றான் -37-

வண்டினங்க ளிசைபாட மஞ்ஞையெலாம்‌ கண்ணுளர் போற்‌
றண்டலைவாய்‌ நடனமிடுந்‌ தண் குறுங்கை மா நகரு
ளெண்டிசையும்‌ போற்றி செயு மெம்பெரு மானெந்தமை யாட்‌
கொண்டு வழி வழி யருளுங்‌ கோதிலாச்‌ சுடர் மூர்த்தி–38-

அண்ட மெலா மளித் தருளின்‌ னருளாழி யண்ணறனைக்‌
கண்டுதெரி சித்திருகண்‌ களிப்புறயாஞ்‌ செல்வதினான்‌
மண்டு திரைக்‌ கடலனைய வரும்‌ படைகளைக்‌ கடிது
கொண்டூ வருகுதிரென்னக்‌ கோமானு முரைத்தனனால்–39-

ஒன்னலர் தம்‌ மணி முடிக ளூரஞ்சுதா ளரசர்பிரான்‌
சொன்ன வுரை கேட்டிருதாட்‌ டுணையுமுடியிற்‌ புனைந்து
நன்னெறியிற்‌ றிகழமைச்சர்‌ நவையிலா விரைவினொடு
மின்னவிரச்‌ சினகரத்தை விட்‌ டினிது சென்றனரால் -40-

கூம்போடி வான்முகடு கூடு நெடுந் தேர்முதலா
யாம் பேர்‌ படைக்கலங் கொண்‌ டரசர் பிரான்‌ திரு முன்னர்த்‌
தாம் போய்‌ வணங்கி நன்கு சாற்ற வவர்முக நோக்கித்‌
தேம்பாடு வண்டிணை தார்த் திருமார்பன்‌ செப்பலுற்றான்–41-

இப்பெருநம்‌ படையொடு முன்‌ னேகுதிரென்‌ றவர்க்கருளி
ஒப்பில்லாப்‌ பரிபூட்டி யுயர் மணித் தேர்‌ கொணர்தி யெனச்‌
செப்பிடச்‌ சாரதி நொடியிற்‌ சென்‌ றிறைவர்‌ கோனுரைத்த
வப்படியம்‌ பொற்றேர் கொண்‌ டரசர் பிரானடி தொழுதான்–42-

மஞ்செனவள்‌ வார்முரசும்‌ வால்வளையு நின்றதிரத்‌
தஞ்சமென வந்தடைந்தார்‌ தமக்கருளுங்‌ கருணை வள்ளல்‌
பஞ்சினை நேரடித் துவர் வாய்ப்‌ பணி மொழி யன்னாளினொடு
விஞ்சொளிருந்‌ தேரேறி விரைந்து பெரும்படை கலந்தான்–43-

மின்னொளி ததும்பியணி கொண்டவிர தந்தனை விரைந்து கொடுபோய்‌
மன்னவ னரும்படையி றன்ன விரு பங்கிலும்‌ வளைந்து வருமால்‌
சொன்ன பணி செய்யுமதி மந்திரி யருந்திய துரங்க கணமு
முன்னத மிகுந்த புய மைந்தர் நடவும்‌ திகிரியும்‌ பலவரோ–44-

சுந்தர ரதந்தனை விரைந்தரசியங்க வயறுன்னி மயில்போற்‌
கந்தர நறுங்குழல்‌ மடந்தைய ரடர்ந்தரிய கவரிவிசிற
வந்தவ னுகந்த பணி தந்‌தடி பணிந்து வரு மைந்தர் பலர் சூழ்ந்‌
தந்தர மெழுந்தணி புரந்தரன்‌ வருங்கவி னடைந்தனனரோ–45-

முத்தின நிறைத்தொளிர்‌ மணிக்குவை யழுத்தி வெளி முற்று மொளிரும்
சத்திர மெடுப்பவர்கள்‌ சுற்றிலு நிழற்றவய றத்ததிமென
மத்தள மடிக்கவின்‌ மொழிச்சியர் நடிக்க விதழ்வைத்து வெகு பேர்‌
நத்தின முழக்க வமுதத்தினி தொலிக்குமுயர்‌ நாகாசுரமே–46-

வெண்டரள மண்டியணி கொண்டொளிரு தண்டிகையுண்‌ மென்‌ சிறைகொளும்
வண்டர் நற வுண்டுகுதி கொண்டுலவு தண்டெரியல்‌ மந்திரிகள்‌ சூழ்ந்
தண்டை தனின்‌ மிண்ட வுயர்‌ புண்டர மணிந்திலகு மந்தணர் குழாங்
கொண்டனிற வெந்தறுகண்‌ தந்திமிசை யுந்தி வரல்‌ கோடி யுளவே–47-

குந்தமொடு சூலமயி றண்டு சிலை வாளி கதை கொண்டெ றிதிரைச்‌
சிந்து வென லாகவெழு கம்பலை கொள்‌ சேனை பல சென்றடருமா
லிந்து முறி வாணுதன்‌ மடந்தையர்‌ விலோசன மிருந்தொளிசெய
வந்‌ துலவு மீனென விருங்கயல்கொள்‌ கேதன மலிந்தனவரோ–48-

சித்திர மிழைத்த கனகப்படமுகக்‌ கரி கதித்த திரளி
றத்தி வருமொப்பில வெணற்ற தவளத் துரகதத்‌ தொகுதிகள்‌
அத்திரவிழிப்புவி மகட்குடை யெனப் பொலியு மற்புதமிகு
நத்தின மிகச்செ றியு மத்தியிடை. யெற்றலை யினைப்‌ பொருவுமால் -49-

சந்திர விருங்கவிகை யின்னிழலிறங்குறு மதன்‌ றனணியார்‌
தந்தமடமங்கையருடன்‌ கரியினந்தர மிசைந்து வருவோர்‌
சுந்தர மிகுஞ்‌ சசி மடந்தையருடன்‌ கரிய துன்னி யெழு சூழ்‌
கந்தர மமர்ந்து வரு மிந்திர ரனந்தரி னிகர்ந்திடுவரால்–50-

முத்தின மிகுத்தடு கடற் புவியினைப் பொதுவின்‌ முற்‌ றுமளிகோன்‌
சுத்தமரையைப்‌ பொருமடித்‌ துணையினைத் தொழுது சுற்றி வருமின்‌
பத்தியினயிற் படையினைக் கரமதிற் கொணிரு பத்திறலினோ
ரத்தமு ளிரத்தின மிழைத்த சிவிகைக்குழு வெணற்றவையரோ–51-

சுத்தவமுதத்தினு மினித்தமொழி வைத்த பல சொற் கவிகளால்‌
வித்தகமிகுத்திடு குணத்தரசனைத்‌ துதி செய்‌ விற்பனர்களைக்‌
கைத்துணை குவித்தவனெழுச்சியை யுரைத்து வரு கட்டியர்களை
யித்தனை யெனத் தெரித லுற்றினி துரைக்கும்‌ தெமக்கரிதரோ–52-

எண்டிசையு மண்டி வருகின்ற விவரும் படை யெழுந்து களெலாம்‌
விண்டல மடர்ந்திட மிகுங்கதிர்‌ மறைந்திட விரிந்தொளிசெயும்‌
வெண்டரள மென்னகை மடந்தையர்‌ கலன்களு மிடைந் திருமணி
கொண்ட விரதங்களு மனந்தமரி யின்னொளி மிகுந்‌ திடுமரோ–63-

பங்கய வரும்பினொ டெதிர்ந்தடி பரந்தணி செய்‌ பம்பரநிகர்‌
கொங்கையர்‌ கமுங்குழலிழிந்த மகரந்த மிரு கும்ப மிசையார்‌
துங்கமுறு தந்திகள்‌ பொழிந்திடு மதங்களொடு துன்றிவிரவி
யெங்கு மிகு பங்கமிடு மென்னிலவை யின்‌ கண மியம்ப வெளிதோ–64-

தண்டிரை கொ ளங்கடலை யன்ன விரு பங்கில்‌ வரு தண்டுகளு நீர்க்‌
கொண்டலி னிருண்டுவரு தந்தமுறு தந்தியின் மிகுந்த குழுவும்‌
விண்டொடர்‌ பொலன் குவடை யன்ன விரதங்களு மிசைந் து வரவி
வண்டமுழு துந்துதி குறுங்கை நகரந் தனை யடைந்தனனரோ–65-

நனை விண்ட நறுங் கமலப்‌ பிரசஞ்‌ சினை கொண்ட செழுங் கய லுண்டுகளுங்‌
கனை கொண்ட கருங்கடனேரகழைப்‌ புனைகின்ற பொலன் மதில்‌ வானுறுமே-66-

புயலுற்ற பொலன்மணி மாளிகைகள்‌
கயலுற்ற கருங்கணுடங்‌ கிடையார்‌
மயலுற்ற மதன் சமர்‌ வென்றும௰ழ்‌
செயிரற்றொளிர்‌ மேனிலை சேணுறுமே–67-

பண்ணுற்ற மொழிச்சியர்‌ பற்பலர்க
ணண்ணித்தின நற்கழல்‌ பந்துபயில்‌
விண்ணுற்று மிளிர்ந்தடர்‌ கூடமிகுந்
தெண்ணற்ற திருந்தணி செய்‌ திடுமால்–68-

வாரூடு கிழிக்கு மதர் முலைமின்‌
னாராடிடு நாடக சாலைகளுங்‌
காரான கருங்குழலார்களிசை
யாராயு மரண்மனையும்‌ பலவே–59-

அமிழ்தத்‌துமினித்த வருஞ்சுவை முத்‌
தமிழ் கற்றிடு சாலையுமால்புகழோ
து மறத்தினுருக்கிளர்‌ தூய் மறை நான்‌
குமுணர்த்திடு கூடமுமாயிரமே–60-

மணிவார்‌ கொடிறுக்கிய மாமுரசைக்‌
குணிலாலே துவைத்திடு கோடணையு
மணியாழிசை யார்வமு மார்ந்திலகுந்
துணி வீசிய தோரண வாயிலெலாம்–61-

கஞ்சப்‌ பெணுளங்‌ களிசெய்‌ கணவன்‌
விஞ்சக்‌ கதிர் வீசுபொ னிஞ்சயும் வெம்‌
நஞ்சத்தனரன்‌ முடிகாணரிதாய்‌
விஞ்சித் திகழ்‌ கோபுர மேலுறுமே–62-

மீனந்தவழ்‌ மாடமிசைத் திமிர்பாற்‌
றூ நன்கொடியாடுத றொன்னகர் வாழ்‌
மானின் மகவாமென வெண்கையினால்‌
வானொன்றுவர்‌ கூவுதல் மானுமரோ–63-

முருகூரு நிம்பமல ரணியா னெழுந்தருளன்‌ முனமே யறிந்திநகர்வாழ்‌
இருநாக மன்ன விரு தனபார மங்கை யரு மிகலாரு மைந்தர் குழுவுந்
திருமா துறுந்தவள மணிமாட மண்டியணி செயும்‌ வீதியெங்கு நடுவார்‌
மருவேரி யம் மடல்‌களொடு பூக முங்கழையு மதியேற ரம்பைகளுமே–64-

கருமா முகிற் படியு மிருவான கட்டுற மகர தோரணங்க ளிடுவார்‌
பருவா னிறத்தரள மணிவா யமைத் தொளிகள்‌ பரிகா வணங்க ளிடுவார்‌
அருமா டகத் தகழி யிடையா நெயிட்டு வெயிலளி தீப மெங்கு மிடுவார்‌
விரிவா னகர்க்குமிடர்‌ தருவீதி முற்றவுமி விதமா யியற்று பொழுதில்–65-

உலகேழுமுற்ற முடிவுறு நாளினிற்‌ கிளரு முவராழி கட்‌ கிணை யெனப்‌
பலமாரு மப்படைக ளிருநா றிசைக் கண் வரை பரவா வரச் சுடர்‌ கொளுஞ்‌
சலமா றையிற் படை கொள்‌ வயவார் முதற்‌ றலைவர்‌ தமை யிடழித்திடு புர
வலனீ டிரத்னமணி யதனா லிழைத்த நகர்‌ மதில்‌ வாயினிற்‌ குறுகினான்–66-

இனனீதி யுற்ற வறு தொழிலோ ரிருக்கொலியொ டெதிர் காண்‌ வரக்கரிய சூற்‌
கனமீதினிற்‌ படியு மணிமாட மட்டில் பல கவின்வீதி பிற்பட வொளிர்‌
முனமே யுரைத்த நெடுமதி லாலையத்தினகன்‌ முது வாயிலிற்‌ சிகர வொண்‌
டன மேருவைப்‌ பழி செயணி தேர்‌ நடத்தி யடறளமோடு முற்றனனரோ–67-

அடலாழி யுற்ற கர னடியா ரடிக்கமல மகலா மனத்தி னிறையோன்‌
கடனீ டிரட்டியக லிகறானை கட்கவணி கவின் வாயி னிற்பவருளி
விட தேர் நிறுத்தி நிலவுமிழ்‌ மாமதிக்கு நிகர்‌ விரியான னத்தினணியார்‌
மடமாது பிற் செலமி னொளி வீசுமத்தளியை வலமாக வுற்றனனரோ–68-

மரையா தனத்திலுறை யொருநான்‌ முகத்தவனு மறையோதி நிற்பவடல்கொ
ளுரையோதி மத்தனைவிலெனவே பரித்தவர னுறுகாதன்‌ மக்களுடனே
விரையாரலர்த்துளவ முடியாயெமக்கருடி வினையே மடைக்கலமெனத்‌
தரைமீதினிற்‌ றொழுது பலவாய நற்றுதிக கடகையோடி யற்றி மகிழ–69-

அகல்வா னகத்‌ துறையு மிமையோர் கணத்தி னெடு மயிராவதத்தின்‌ மிசையூர்‌
இகன்மா மலைச்சிறைகடுணி தூ றையிற் குவிச மெழிலார்‌ கரத்திற் திகழ
மகவானடுத்தினிய நறையோடு கற்பகமென்‌ மலரா லருச்சுனை செயத்‌
தகவாத ரத்தினொடு விரிசாம நற் சுருதி தனை யோதிடத்தவர்களே–70-

மருவார்‌ கமலங்கள்‌ மலர்ந்த நெடுங்‌ கருமாமுகின்மீது கவின்றிகழ
வொருகோடி யருக்க ருதி த்தனெரென்‌ திருமா முடியொன்‌று திகழ்ந்திடவே–71-

வருசூரிய மண்டல மத்தியனென்‌ றருமாமறையான தறைந்தவெனப்‌
பெரியோர்க ளுரைத்திடு பெற்றியையா முருவாக முனந்தெரி வுற்றன மால்-72-

செடியாதுமிலாது செழித்த நுதற்‌ கடி நான முறுந்தில கத்‌ தினொடும்‌
வீடுதண்சுடர்‌ வெண்பிறை யொன்றுளதேல்‌ வடிவேறெனை மானுமென திகழ–73-

மாசற்றமுண்‌ மேவி மலர்ந்த விருந் தே சுற்றணி கொண்ட செழும்‌ முகமெம்‌
மீசற்கிணை யுண்டெனி லென்றனை நேர்‌ பேசத்‌ தகுமென்று பிறங்டவே–74-

மரைமா மலரென்ன மலர்ந்தவிர்செவ்‌ வரிமீது பரந்த வருட்கணிணை
தரைவாழு முயிர்ப்‌யிர்‌ தான் வளரப்‌ புரைதீ ரருண் மாரி பொழிந்திடவே–75-

நகுவொண்கதிரம்‌ பொனின்மாமணியால்‌ வகுவங்கத மிட்டுயர்‌ மாநகருட்‌ டகுவைந்தருவின்‌ றிகழ்சாகை நிரை நிகரென்னவே நாற்புய நின்றொளிர–76-

வாடாதமரைத்திரு மாமலரை சாடா விலகங்கை கடம்மிலக
லாடாழியொ டொண்‌ கதை யந்தனுவா ணீடாய வலம்புரி நின்றொளிர–77-

சிறையோதிமமேல்‌ வருசேவனொடுங் கறையாய களத்தரனே முதலோர்‌
அறியாது விளங்கு மடித்துணையா நெறியாக நிகழ்த்‌துவ தெவ்வினையே–78-

அந்தப் படிகத்‌ தமையத் தளியுள்‌ ளிந்தப்படி யேய்ந்திடு நம்‌பிமுனஞ்‌
சிந்தப்படி கண்ணொடு தெவ்வரெலா மந்தப்படி யாளிறை வந்தனனால்–79-

காசத்த மனத்தரி காணமுன மாசத்த மனத்தி சூழ்‌ மானிலமு
ணேசத்த மனத்திறை நேரவுமெற்‌ றேசத்த மனத்தி றிகழ்ந்ததுவே.–80-

ஓலைப்புனல்‌ சூழ்‌ புவியோம்பிடு செங்‌ கோலைத்‌ தரிகோன்‌ பவனிக்‌ கெழுமக்‌
காலைக்குமுனே குறு கட்டியரின்‌ மாலைப் பொழு தெற்கு முன்‌ வந்ததுவே–81-

கூவற்ற குயின்னட மற்ற மயில்‌ வாவற்றிர ளூண்ணிரை வைகுமிட
மேவச் செல்லுற்றன மென்‌ கவிக டாவற்ற தடம்பொழி றன்னிலரோ–82-

வீசக்கரவாக விரும்பியணை நேசப்பெடை நீங்க மென்குமுத
மாசைத்‌ தனி யன்பர்வரக்‌ களிகொள்‌ வாசக்‌ குழலாரின்‌ மலர்ந்தனவே–83-

பரிவிற்‌ புணர்பான்மைய வன்பர் தமைப்‌ பிரிவுற்றவர்‌ பேது ற வெங்குள ரென்‌
றரிபற்று மலர்க்கணை யைந்துகொடு திரிவுற்றனன்‌ சித்தச னெங்குமரோ–84-

இவ்வாறு தூலங்குறு மெல்லிலடற் றெவ்வானவர்‌ சிந்தை கலங்க வொளிர்‌
வெவ்வாழி விளங்குகை நம்பியம ரவ்வாயி னிகழ்ந்த தறைந்‌திடுவாம்‌.–85-

திருக்‌ குறுங்குடிப்‌ படலம்‌ முற்றும்‌,

வரம்‌ வேண்டுகோட்‌ படலம்‌

தேனுகு பூம்பொழி லிடைமாடக்‌ களாருத்‌ திருநாராயணபுரத்திற்‌ சிச்சர்கூடி
ஞானமுனி நின்னுருப்‌ போலர்ச்சை யொன்று நாங்களியற்றியதினடி நாளுந் தாழ்ந்தெம்‌
மூனமற வேண்டுமெனப்‌ பணியச்‌ செய்வித்‌ துடையவரோ வென்றதை மாற்‌ றுரைக்கச்‌ செய்ரா
மானுசன்றாளிணை மலர்நஞ்செ ன்னி சூடி வரம்வேண்டுகோட்‌ படலம்‌ வருவிப்பாமால்–1-

கொந்துற்ற குழற்கொடி நேரிடையு வந்துற்‌ றமரு மரைமாமலரின்‌
பந்திச்‌ செழு மாமுகில்‌ பார்த்தனரால்‌ வந்திக்கு மறைப் பொரு டன்னைமுனே–2-

வெண்ணித்தில வொண்வட பேழுதலா மண்ணிற்பட வீழ்ந்து வணங்கி யிரு
கண்ணிற்‌ புனலோடு கனிந்‌ துருகி நண்ணிப்‌ பறுதிப்பை நவின்‌ றிடுவார்‌-3-

அற்புக்கொரு வாழியினான வளாய்ப்‌ பற்பத்‌ தளிமேவிய பாலின்மொழி
கற்புத்‌ திருமங்கை கவின்றிகழ விற்பத்தொடு மெய்மணிமார்‌ புடையாய்–4-

மஞ்சிற்‌ கரிவாவென வந்தருள்வான்‌, கஞ்சத்‌ தடமேவிய வெங்கரவைத்‌
துஞ்சக்கனனின்‌ றெரி தூய்மை யுறும்‌அஞ்சக் கரம்‌ வீசி யறுத்தவனே–5-

அரிதாய பலாயிர வண்டமெலாம்‌ விரிவாக வீடுத்தி டுனக்‌ கடியேந்‌
தரிகான்முளை தன்னை யெமக்கருளல்‌ பெரிதோ விது வென்று பிறழ்ந்தனனே–6-

இன்னவாறுள மின்புற்‌ நிறையுமா றன்னை வாழ்த்திக்‌ தளிவலமாய் முகின்‌
மின்னையே மிடை மெல்லியலோடுதான்‌ மன்னி கேதனம்‌ வந்தணைந்‌ தானரோ–7-

மாலதிக்கிணை யாதிய வாலனம்‌ பால சர்க்கரை நெய்யொடு பாகமாய்‌
வேலை மாய னமுது செய்‌ மிச்சிலை கோலமோடுண்‌ டருந் துயில்‌ கொண்டனன்–8-

அனனடைப்‌ பொன்னணங்குறு நம்பியவ்‌ வினனிடங்‌ கனவிலுனக்‌ கஞ்சவா
கனனரும்‌ பொருடந்தவன்‌ காதலார்‌ தனைய னற் பொருடந்தில னென்றனன்–9-

சொன்ன வாய்மை துளைச் செவி யேறுமுன்‌ மன்ன னுள்ள மலங்கி
பொன்னினோடு புலரி நீராடிமால்‌ சந்ததிக்குட்‌ புகுந்தினல்‌ சாற்றுமால்‌–10-

மெச்சயன்‌ மதமேவ மறையை நின்‌ னிச்சையா லசைரர்‌ சென்‌ றெடுத்‌ தெழற்‌
கச்சமுற்ற வவன்‌ றுயராற்றுவான்‌ மச்ச ரூப மெடுத்தருள்‌ மாயனே–11-

இமையவர்‌ திரண்டின்புற வின்சுவை யமுதமீயெமக்‌ கண்ணலெனச்‌ சொலச்‌
சிமையம்வெந்‌நறச்‌ சேர்த்திட வாரியுட்‌ கமடமாதிய கார் முகில்‌ வண்ணனே–12-

இரணியாக்க னுயிர்க்கிடர்‌ செய்குவான்‌ தரணியைக்‌ கொடு பாதலந்தான்‌ செல
வரணியாவெனு மன்பர்க்கருள்‌ செய முரணியங்டியாய்‌ வரு முர்த்தியே–13-

பாரினுட்‌ பரநா மலதில்லை யென்‌றாருயிர்‌ முன்னறைந் துரையீரெனுங்‌
கூரயிற்‌ கனகன்‌ னுயிர் கோறவே நாரசிங்கம தாய் வரு நம்பியே–14-

திறமிலா மையிற்றேவ ருலகையும்‌ மறமுறும்‌ புயமாவலிகைக்‌ கொளத்‌
தறையும் வானு நின்றாளிணையே தொழக்‌ குறளுருக்‌ கொண்டருளிய கொண்டலே–15-

அத்தி சூழு மிலங்கை யரசனான்‌ மெத்தவாற்றன்‌ மெலிந்துள சந்துமா
கத்துளோருன்‌ கழறொழவன்‌ றுகா குத்தனாய்‌ வந்தருளிய கொண்டலே–16-

மண்ணகப்பெண்‌ வருந்த நினைத்தொழு தண்ணலென்‌ பொறை யாற்றுவை யென்‌ றலும்‌
மூண்ணெகிழ்ந்தம்‌ குகந்தெழிலான்‌ மிகும்‌ கண்ணனாகி யருளிய கர்த்தனே–17-

பாருளோர்‌ வெம்பவத்தளை பூண்டுனைச்‌ செர்கிலாது புன்றீய மதாந்தராய்‌
நீர்மை குன்றிட நீயவர்க்‌ கின்னருள்‌ கூரவே கற்கியாய் வரு கொண்டலே–18-

பழுதி லெண்டிசையோர்‌ புகழ்‌ பண்பறா வழுதி மன்னர்‌ மரபிலுதித்த யான்‌
எழுதலை முறையா யுனையே தொழ மழலை நன்மக வில்லெனன்‌ மாட்சியோ–19-

ஊழ்வினைப்‌ பயனோ வலதும்பர்‌ பாற்‌ றாழ்வு செய்தனனோ பற்றளிகளாம்‌
வாழ்வகற்றி வதிந்தனனோவல தேழை மாந்தர்க்கிட ரிழைத்தேனரோ–20-

பொம்மலுண்ணக்‌ கலத்துறு பூசுரர்‌ தம்மையேகக்‌ கடிந்தனனோ தமிழ்ச்‌
செம்மலார்ந்த கொழுநனைச்‌ சேர் தருமைம்‌ முகிற் குழல்‌ வாழ்வறித்தேனரோ–21-

மண்டலத்‌ துண்மகவுறு மாந்தரைக்‌ கண்டு நெட்டுயிர்ப்‌ புற்றனனோகரங்‌
கொண்டு பாலிறையேனுங்‌ குழவி கட்‌ குண்டுகக்க வுதவின னில்லையோ–22-

வேதியர்‌ பெரியோர்கள்‌ வியந்ததங்‌ காதலாரைக்‌ கருதினனோ வயல்‌
மாதரோடு மருவிக்‌ கருவையுந் தீதெணாது செகுத்தனனோ கொலோ–23-

ஊதியத்திலவாவி யுலகமொவ்‌வாத பொய்மை வழங்னெனோபலி
யாதுலர்‌ முன்னளிக்குவ னென்றலைத்‌ தேதுமில்‌லு மக்கேகுமினென்‌றெனோ–24-

கொஞ்சமேனு மிரக்கங்‌ கொளாதுயி ரஞ்ச வீண் கொலை யாற்றினனோ வெனைத்‌
தஞ்சமாகுற்‌ தமர்க்கருள்‌ செய்வபோல்‌ வஞ்சமே செய் மனத்தினனே கொலோ–25-

பெற்ற வின்பயம்‌ பேரிளங்‌ கன்றுணச்‌ சற்று மின்றித்‌ தகைந்து கறந்துவாக்
குற்றசங்க மொழித்து மதுவினைக்‌ கற்றிலாரிற்‌ கருதி யுண்டேன்‌ கொலோ–26-

மெய்வருந்த விழைத்திடு வேலையர்க்‌ கெய்து கூலி கொடுத்தன வில்லையோ
செய்யெனாமுனஞ்‌ செய்தவர்‌ நன்றி யுண்‌மையிதாக மறந்தனனே கொலோ–27-

ஆறிலொன்‌ று கொளா துறுத்‌ தாசையால்‌ ஊறு செய்துல கோம்பினனோதவத்‌
தேறுபோல்வர்க ளெய்திடில்‌ யான் கொடுஞ்‌ சேறு சேர வெழாதிருந்தேன் கொலோ–28-

முன்னியற்றுக்‌ தவமுடி வில்லையோ பின்னிழைத்திடும்‌ பேறுங்‌ குறைந்ததோ
வின்னிலத்திலி யாங்கள்‌ மலடராய்‌ மன்னவென்று வரங்கொணர்ந்‌ தேமரோ–29-

அன்று வேழ மழைக்கு முனாவலாய்ச்‌ சென்று றூஉகண்‌ செகுத்துத்‌ துரோபதைச்‌
கொன்றவாடை வுதவிய நின்னருளின்‌ றெமக்கிலதாயதெ னேந்தலே–30-

இப்படிக்‌ குரிசி லுள்ள த்திருந்த வெந் துயரமெல்லாம்‌
மைப்புயலுரு வோனக்கன்‌ மலமறக்‌ குருதி யீந்த
நப்பின யணங்கு கேள்வ னம்பி காற்றுணையில்‌ வீழ்ந்து
செப்பினனழுங்கிப் பல்காற்றிருக்கு நீர் கலுழமாதோ–31-

மண்ணினன்‌ களைகணீ யென்‌ றலமரு மாண்பு நோக்கிப்‌
புண்ணியவெதவேந் தன்பிற்‌ பொறிக்கும்‌ புண்டரமிலங்கத்‌
தண்ணளிக் கடலா னம்பிதனாதுள மகிழ்ந்‌திவ்‌ வேந்தின்‌
கண்ணினுக்‌ கணியனாய் நின்‌ றீனிய சொற்‌ கழறுவானால்–32-

மானிலத் துறவிலார் தம்‌ மண்டமர்கடந்த வொள்வேல்‌
மீனவன்‌ மரபுட்டோன் றும்‌ வேந் துனக்குரிய சேயாய்‌
நானடைகுவனின்‌ சோக நவையற மகிழ்ந்தெல்லீருந்
தேனின முரலுஞ்‌ சோலைக் குருகை சென்றிடுமின் என்றே–33-

மாயவனுரைத்த மாற்றம்‌ வள்ள றன்‌ செவியுறாமுன்‌
வேயுறழ்‌ புயமிரண்டு மேருவினிமிரச் செய்யாள்‌
நேயனேவன்மீ னட்ட நேமியா யுலகமுண்ட
தூய கந்தரத்தா யென்றே துதிபல வியம்பி நின்‌றான்–34-

பாடினா னாடினான்‌ செம்பதமலரணி முடிக்கட்‌
சூடினா னாழியானின்‌ சுதனெனுங்‌ கருணையே கொண்‌
டாடினானணியனா மவ்வாண்டகை வடிவு நோக்கங்
கூடினான்‌ றொழதா னின்பக்‌ குளிர் கடல்‌ முழுகி நின்றான்–35-

விஞ்சை யரியக்கர்‌ விண்ணோர்‌ விரை கொளைந் தருவின்‌ பூவான்‌
மஞ்சன மாரி பெய்ய மண்ணுளோரிறைஞ்சி யேத்த
கஞ்ச மின்னிலகும்‌ திண்டோட்‌ காரியார்க்‌ கருளீந் தன்று
குஞ்சரத்து றுகணீத்த கோவலன்‌ கோயில் புக்கான்–36-

மாமனங்‌ கதர்சனாக மறைந்த பின்‌ குருதி தோய்ந்த
நாம வேலிறையுங் காதனங்கையு மிக மகிழ்ந்து
தேமலர்த்‌ துளவினான்‌ றன்‌ சினகரம்‌ வலமதாய்த்தன்‌
றாமமுற்றடிசி லுற்றுத்‌ தளத்துடனிருந்த பின்னர்–37-

பிழையறப்‌ புவிபுரக்கும்‌ பேரருட்‌ ஞரிசினீதி
யுழையரை விளித்து யூகமொலி கடற்றிரளே யின்பந்
தழை வுறச் செய்து பிற்றைப்‌ புலரியிற்றருதிர்‌ நீவிர்‌
குழை பொரு கயற் கணார்‌ வாழ் குருகையா மடைதற் கென்றான்–38-

ஆங்கரசியம்பா முன்னரறிவின்மிக்‌ கமைச்சரெல்லாம்‌
பாங்குறு மிரதமியானை பாய் பரி படைக் குழாங்க
ளீங்கு வந்தடைந்த தெந்தாயினி யருளென்னே யென்று
வீங்கிய குவவுத் திண்டோள்‌ வேந்தனுக்‌ கறிக்கை செய்தார்–39-

மந்திர மறையோர்‌ வாழ்த்த மங்கள வியங்களார்ப்ப
பந்தையொத்‌ தெழுந்த கொங்கைப்‌ பரத்தையர்‌ நடிப்ப மன்னன்‌
பைநதுள வலங்க னம்பி பங்கயப்‌ பதமுட்கொண்டு
வந்தனை புரிந்து பொற்றேர்‌ மங்கையோ டேறினானால்–40-

வாளரி மதர்க்க ணல்லார்‌ வயங்கு சாமரமிரட்ட
காளமும்‌ முரசு சங்குங்‌ கறங்க வானிலவு காலுங்
கோளகை கவிகை யேந்‌திப்‌ படைகளின்‌ குழு முன் செல்ல
வாளி மொய்ம்பினனும்‌ பொற்றே ரணி கொள்‌ வாம் பரி நடாத்தி–41-

குதி தோய்ந்தொளிரும்‌ வெற்றிக் கொற்ற வேற்‌ கலியனன்பர்க்‌
கருணிதியமரு மவ்வூர்க்‌ கண் மறுகதனைத் தாண்டி
இரு விசும்பணவு செம்பொனெயில கழியையு நீங்கித்‌
திரு மகிழ்ந்‌ துறையு மார்பன்‌ செழும் பணைத் தலமடைந்தான்–42-

தூய தாமரைத்‌ தடத்தையு மத்தடந் தோயு
மாயந் தன்னையு மணிமலர்க்‌ காவையு மயலி
னேய தண்பணை களையு மற்‌றுள வள மெல்லாம்‌
ஏயவோகையி னணங்கிலுக் கிறையவன்‌ காட்டும்‌–43-

அங்கயத்‌ தடைந் தரிவையர்‌ தேர் நிமிர்ந் தாடச்‌
செங்கயத்தடி முகத்தொரு தனமு மேற்றெரிதல்‌
வெங்கயத்தடர்‌ முலையினா யாங்கதில்‌ விளங்கும்‌
பங்கயத் தட மலர்‌ முகை போன்றன பாராய்–44-

வடு வகிர்க் கிணையாய கண்‌ ணணங்குசின்‌ மடவார்‌
இடுபுனற்‌ குடைந்தேந்து பின் குழலில்‌ வைத்திடு தேன்‌
விடு வெண்‌ டாமரைப்‌ போது சூற் கொண் முகின் மீதில்‌
படுமுடுக்கணம்‌ போன்‌ றினி திலங்குவ பாராய்–45-

மாங்குயிற்‌ சொலி னன்னவர்‌ குடைந்தெழ மறைக்குந்
தேங்குழற்றிர ளொதுக்கிடத்‌ தெரியும்‌ வத்‌ திரந்தான்‌
ஈங்கெழிற்‌ கொடியிடையினாய்‌ மேற்பட ரெழிலி
நீங்க வுட்‌ டெரி வெண்மதி நிகர்த்தன பாராய்‌–46-

அனிச்சப்போது மெனஞ்சத்தின்‌ றூவியுமழுத்தி
நனிச் சிவப்புறும்‌ மடியினாய்‌ நாரந் தோய்வான்‌ செல்‌
கனிச் செவ்வாயினர்‌ சிலம்பொலி கேட்டனக்‌ கணங்கள்‌
பனிச்சையோடு தம்‌ மினமெனத்‌ தொடர்வன பாராய்–47-

கருமுகிற்குழலா யொரு கன்னி செங்கமல
மருவை யோருவானாசி வைத்திட முக மதி யென்‌
றருகு கூம்புமம்‌ மலரினைக்‌ காணி லதன்னார்‌
திருமுகத்தினுக்‌ கடையு நாணென்னலாந் தெரிவாய்–48-

கோங்கு கொங்கைகள்‌ காட்ட நன்முருக்‌ இதழ் காட்ட
மாங்குயின்‌ மொழி காட்ட மாவடு விழி காட்டத்‌
தேங்குழைத் தளிர்‌ திருவுருக்‌ காட்டிடச்‌ சிறந்து
பாங்கரும்‌ பொழின்‌ மடந்தையர்‌ போன்றன பாராய்–49-

விரியறத்தின ரரும்பொருள டையுமவ்வேலை
யரியதாயதம்‌ முறவினை த்‌ தழுவுத லனையக்‌
கரியவாயசந் தானுணும்‌ மிரையினைக் கண்டே
யுரியதன் கிளைகூவுவ காண்டி யொண்டொடியே–50-

தேகி யென்றவர்க்‌ கிம்மியு மளித்திடாச்‌ சிறிய
ராகி நின்‌றவ ரரும் பொருளாக்கிக்‌ காப்பது போல்‌
கோகிலத்தினன்‌ மொழி மினாய் தேன் கணங்‌ கொழுந்தே
னேகி யெங்கனு மீட்டி வைத்‌ திருப்பன பாராய்‌–51-

வயற்றலந்‌ தொறு மடர்ந்த பைங் களைகளை மாய்க்கும்‌
புயற்றருங்குழலுழத்தியர்‌ கண்ணெழிற்‌ பொலிய
வயிற்றிரிந் திடும் புட்‌ குலமவாவொடு மடைந்து
கயற்றிரள்களென்‌ றேங்கி யங் கிருப்பன காண்டி–52-

இன்ன தன்மைய வளனெலா மெடுத்தெடுத்‌ தொளிரும்‌
பொன்னின் மா மெளலி மன்னவன்‌ புயற் கருங் குழற்பைங்‌
கன்னனன் மொழிக்‌ கனி யிதழ்க்‌ குரைத் துரைத் துகந்து
செந்நென்‌ மன்னிய பணை பொழிற் பின்னிடச் சென்றான்–53-

பெருகு மார்கலிக் கணை யெனப்‌ பெருந் தவப்‌ படைகள்‌
வருக நாற்றிசைப்‌ புறத்தினு நண்ணி வெண் மருப்பார்‌
பொருகை மாமதக் குஞ்சரம்‌ புரை பவனுயர்ந்து
குருகை மா நகரர் தனைக்‌ குறுகினனன்றே–54-

ஆதி நான்மறை யந்தண ரோதிட மடவார்‌
வீதி யெங்கணு மயினிநீர்‌ சுழற்றிட வினிதன்‌
மாதினோடு பன்மாமணி மறுகெலாங்‌ கடந்து
கோதிலாத தன் கோயிலைக்‌ குறுகினன்‌ கோமான்–55-

இருந்ததானைகட்‌ கொருவிடை கொடுத்தினி திறையோன்‌
பொருந்து நீண் முகிற்‌ பொலிந்து நின்‌றருளிய பெருமான்‌
றிருந்து சேவடி யனு தினந் தொழுது மண்‌ சிறிதும்‌
வருந்து றாதுள மகிழ்ந்‌ தரசி யற்றியே வந்தான்–56-

கந்‌தமாலுகக்‌ கண்ணி கொள்‌ காவலனினிதின்‌
இந்தவா றரசியற்றி நுண்ணிடையிற விணைந்த
சந்தவார் முலைத்‌ தையலோடினிது வாழ்வுறு நாள்‌
வந்தவாறெடுத்‌ தியம்பிட லுற்றனன் மன்னோ

வரம்‌ வேண்டு கோட்‌ படலம்‌ முற்றிற்று

திரு வவதாரப் படலம்‌

வாதினான்‌ மிகு வாதியர்‌ தங்களை
நீதி நூல்‌ கொடுவென்று நினைப்பருஞ்‌
சேதி நீளெர்திரத்தினி லிட்ட நங்‌
கோதில்‌ ராமானுசன்‌ பதங் கொள்ளுவாம்–1-

ஆரஞ்‌ செய்ய வலரனமோடுச
கோரஞ்‌ செய்மன்‌ குருகையுண்‌ மாறனாய்‌
நீரஞ்‌ சேயவ ணேய னடைந்தவ
தாரஞ் செய்படலந்தனைச்‌ சாற்றுவாம்–2-

வையமோர்குடை நீழலிற்‌ வைத்தெழிற்‌
றையலோடு தருக்குற வாழுநாட்‌
பொய்யிலா தவப்‌ பூவை வயிற்றிடை
துய்ய சூற்குறி தோன்‌ றிய தற்பமே–3-

மங்கலஞ்செய மாமல ரன்னவே ,
பொங்கருட்‌ பொலிவுற்ற பொலன்முக
மெங்கும் வெள்‌ ளியவாகி யிலங்கு மொண்‌
திங்களென்னத் திகழ்ந்தது மாதரே–4-

மட்டுவாரு மரையின்‌ முகையெனப்‌
பட்ட வார் கொ டணிந்த பயோதரங்‌
கட்டலிழ்ந்த வக்‌ கானின்‌ மலரென
வட்டமிட்டு மணிக்கண்‌ கறுத்ததே–5-

துங்க வேலைச்‌ சுடுசரந் தன்னை யொண்‌
கொங்கவிழ்ந்த குவளை யம்‌ போதை வெல்‌
லுங் கருங்கண்‌ குழைந்து டல் ரோமமெய்‌
௮ங்கமெங்கு மழகிற் பொடித்ததே–6-

ஒது மோகை யடக்க வடங்ககில்‌
லாது மேற்க சிவார்ந்தது போலவே
கோதினீலக் குழற்‌ கொடி நேரிடை
மாதின் மேனி வெளிர்ப்பு மலிந்ததே–7-

தொன் மரத்தி னிலையிற் றுலங்குறு நன்மைப்‌ பண்டி நலத்திற்‌ கனத்ததவ்‌
வின் மலிந்த நுதற்‌ கொடி மின்‌னெனுந் தன்மையான விடையுந் தடித்ததே–8-

தண்ணிலாவின்‌ தரள மணி யென வண்ணி யெங்கும்‌ சுவேத மரும்பிய
துண்ணி வந்த நரம்புடம் பெங்கிலும்‌ மண்ணுவப்ப மலிந்து பசுத்தவே–9-

நலந்தருங்கொடி நைந்த விடைச்சிதன்‌
புலங்கொண் மேனியிற்‌ போர்த்த பசுநரம்‌
பிலங்கு பொற்றிருப்‌ பாவை யிடையிடை
துலங்கிழைத்த மரகதந் தோன்றுமால்–10-

செயிரறும்‌ பலதேசிக நற்கலன்‌
பயில் வுறுந்தன பார வரைமிசை
யயர்விலேற வமைத்த படியெனும்‌
வயிறணிந்த மடிப்பு மறைந்தவே–11-

அண்டமு மதனுட்‌ பொருளி யாவையும்‌
உண்டகட்டிலடக்கு மொருவனே
கொண்டன்‌ மைக்குழற்‌ கோற்றொடி மாது தன்‌
பண்டி வந்‌து படிந்தன னென்பரால்–12-

தேங்கொள்‌ செங்கம லாதனன்‌ றேடரும்‌
பூங்கழற்றனிப்‌ போற்றிருந்தான்‌ றனை
பாங்கு பெற்ற பசுங்கொடி. மாது தான்‌
றாங்கி நிற்கத்‌ தவமென் செய்தாளரோ–13–

கன்னி பண்டியைக்‌ கான வடமாகவே
முன்னரே யுவமிப்பர்‌ முறைமையால்‌
பொன்னுடைப் பரன்‌ போந்தனன்‌ வைகலா
லன்னதேதிரமாக வமைந்ததே–14-

வேதமோதிய வேதி யருந் தவப்‌
போத ஞானப்‌ புனிதரும்‌ போந்து போற்‌
தோது மன்னவர்க்குற்ற சடங்கெல
மாதந்தோறு மடவரற்‌ காற்றினார்–15-

குமுதவாய்க்‌ கொடிக்‌ குற்றிடைப்‌ பாங்கிமா
ரமுதினுமினிதாக வமை பல்வி
தமுதிருண்டிதர வெறுத்தும் முணா
துமுதகங்‌ கணந்தோறு மருந்தியே–16-

மாத மைந்தினோ டைந்து மலிந்த பின்‌
றீதமைந்‌தித்‌ திரை நெடு மண்ணெலாம்‌
பேதமைய்யிற்‌ பிழைப்பரிதாமெனப்‌
போதமைந்த னுருக்கொடு போந்தரோ–17-

பேதியாது பிறங்குமெய்ஞ்‌ ஞானத்தைப்‌
போதியா நற்பதந் தனிற்‌ போக்குவா
னோதிருக்கு மறத்தெரிந்தோர்கிலா
வாதியான பரஞ்சுடரண்ணலே–18-

சந்த நீண்முடி மன்னன்‌ றவத்தனால்‌
இந்தமாதி னெழில்மிகு பண்டியில்‌
வந்தடங்கி யிருக்கு மகிமையாம்‌
விந்தை தன்னை வியப்பொடு நோக்குவான்–19-

கந்தரத்திற்‌ றுலங்கு களத்தனொ
டுந்திமா மலரோனை முதலவா
னந்தரத்திறை யோனொ டமரரும்‌
வந்துநாளும்‌ வணங்கித்‌ துதிப்பரால்–29-

வானக முகட்டின் மீது வயங்கு பொன்‌ முடிகளோங்கத்‌
தேனக மலர்த்தாட் சேடன்‌ செகத்துறப்‌ பொலிந்து நின்ற
நீனக முலையிம்‌ மாதின்‌ நெருங்குறு வயிற்றிற் போந்த
தீனரைக்‌ கலவாச்சோதி யெவ்வண முரைத்தி யென்பார்–21–

அண்டமு மதனுள்ளான வலை புனற் ககனநேமி
மண்டெரி யனிலமற்று மனிதர் புள்‌ விலங்கி யாவும்‌
உண்ட கட்டிடையே வைத்த வொருவனே மடமினாடன்‌
பண்டியுளடங்கி நிற்கும்‌ பரிசெவன்‌ பகரா யென்பார்–22–

தொலைவறு நிலையதாகத்‌ துலங்குறு பூதமைந்‌து
நிலை திரிந் திருக்கு மூழி நெருங்கிய வேலை தன்னில்‌
உலை வுருவனைத்தும்‌ பண்டி யுள்ளுற வடக்கியாலி
னிலையதன்மீ வளர்ந்தார்க்‌ கீதென வரிதோ வென்பார்–23–

திங்களின்‌ மரபிற்‌ றோன்றித்‌ திரை நெடு நேமி யாண்ட
பொங்கு வேல்‌ வழுதி மன்னர்‌ புரிந்த மெய்த்தவமோ வென்பார்‌
இங்கணீவ் விறையோன்‌ செய்த வெழிற்றவப்பேரே யென்பார்‌
மங்குனேர் குழலாள்‌ பெற்ற மகிமையே மகிமை யென்பார்–24–

எம்மை யாளுடைய வீசனிங்கு வந்‌ துதித்தலாலே
விம்மூநீர்ப்பொருனை யேயவ்‌ விரசையா மென்பாரீங்கே
இம்மியுமகலா வாழ்வுற்றிருந்திடு மவரே நித்யர்‌
பொம்மலி நகரே யந்தப்‌ புனித வைகுந்த மென்பார்–25–

கோதகமுடையராகிக்‌ கொடுந் தொழில்‌ கொலைகளாதி
பாதகம்‌ புரி்ந்து நாளும்‌ பழிப்புறு நிலையரேனுந்‌
தீதகற்றிடு மித்தூய திருநகரடையி லன்னோர்‌
மாதக வுடையராகி வாழ்வர்‌ விண்ணாட்டி லென்பார்–26–

மண்ணிழை தவமோ மற்ற மானிடர்‌ தவமோ மீதின்‌
விண்ணவர்‌ தவமோ வேள்வி வேதியர்‌ தவமோ தென்பால்‌
நண்ணினர்‌ தவமோ விந்த நகரிழை தவமோ யாரும்‌
எண்ணரிதாய சோதி யிங்கு வந்‌ துதிப்ப வென்பார்–27–

இவ்வணமடைந்து நாளுமிமையவர்‌ வணங்கி யேகப்‌
பவ்வமைக்கடனே ரங்கட் பனிமொழிக்‌ கரியகூந்தற்‌
கொவ்வை வாய்த்‌ தெரிவை யாகங் குழையெனக்‌ குழைந்‌ துவாடி
வவ்வி நேர்விழி கொள்‌ பாங்கிமா ரிருபுறமும் தாங்க–28-

மெலமெல நடப்பாளொல்கி மீளவுமடைந்து சோர்வாள்‌
அலணை யொண்‌ கூந்தல் சோர வலமரலடைவாள்‌ யாருஞ்‌
சலம் வர முனிவா ளன்னாள்‌ சார்துய ருரைக்கலாமோ
தலமிசை யிருந்திவ்வாறு தளர்வொடு வருந்து மெல்லை–29–

விண்டல வெளியி னின்று விளம்பிய வமர ரெல்லாம்‌
கண்டரு மறைக ணின்றுங்‌ கருது தற்‌ கரியசோதி
மண்டலத்‌ துதிக்கும்‌ வேலை வந்ததின்‌ றெனவுள்‌ ளோகை
கொண்டு நம்‌ வினைக ளெல்லாம் குடியொடுந்‌ தொலைந்தது என்னா–30-

அடக்கருமுவகை வெள்ளத்‌ தாழ்ந்தன ராகப்‌ பாவத்‌
தொடக்கறுத்‌ துய்ந்தோமென்னத்‌ துணைக் கர முடியிற்கூப்பி
யிடக்கறத்‌ தொழுவ ரோரா யிரமறை நவிலு நாமம்‌
விடக்கருத்‌ திலர்களாகி விளம்புவர்‌ குணங்களெல்லாம்–31–

ஆடுவர்‌ கள்ளுண்டாரின்‌ மெய் மறந்‌ தறிவுசோர்ந்து
பாடுவர்‌ மறைகணான்கும்‌ பற்பல தரமானந்தத்‌
தோடுகட்புனலில்‌ மூழ்கி யுருகுவ ரினிதி னுள்ளம்‌
பீடுற விமையா நாட்டம்‌ பெற்றமை பலித்த வென்பார்–32–

இருவிசும்‌ பகட்டுள்‌ வானோ ரிவ்வண்ண மாடிப்‌ பாடி
மருவிரி தருமந்தார மலர் கொடு சொரியச் சோதித்‌
திருமுகத் தரம்பை மாதர் செருக்குடனடிப் பயாரு
முருகயா ழெடுத்தியக்க ருகந்தன ரிசைகள் பாட–33–

அடல்கெழு வாணனாரோ ராயிரங்‌ கரங்களாலுந்
திடமுட னடிப்ப வார்க்கு மொலியெனத்‌ தெருவிலூடே
குடமுழாத்‌ தொனி முழங்கக்‌ கொடும் பவத்‌ தொடரறுத்துக்‌
கடம்படு முனிவோ ருள்ளக்‌ கவலை யற்‌று வந்து வாழ்த்த–34–

நவமணிக்‌ காளஞ்‌ சின்ன நவையிலா முரசத்தோடும்‌
தவள வொணிலவு காலுஞ்‌ சங்கமு முகிலினார்ப்பப்‌
பவள வாய்க்‌ கரிய கூந்தற்‌ பைந்தொடி சுதையி னின்சொற்‌
குவளை யொண் கண்ணா ருள்ளங்‌ குளிர்ந்து மங்கலங்கள் பாட–35-

வழக்கிடப்‌ பலநூ லாய்ந்தும்‌ வாய்மை கொ ணிலையைத்‌ தேறாச்‌
சழக்குறு புலவோ ருள்ளந் தன்னின்‌ மெய் யறிவு தோன்ற
இழக்க வெவ்‌ வினைகளெல்லா மெத்திற முடையாரேனுந்
தொழக் கருத்‌ துடையராகுந் துணிவரு டேவேயாகி–36–

நண்ணிய கலியி னாற்பத்து மூன்றா நாளென நவில்பிர மாதிப்‌
புண்ணிய வாண்டிற்‌ புனித வைகாசிப்‌ பூரணை வெள்ளியுங் கலந்த
வெண்ணிய திருவிசாக நன்னாளி லெறி திரை யறி துயின்‌ மாலே
விண்ணெழுமுதைய விரவி போன்‌ றுலதில்‌ விளங்கிழை வயிற்றினின்‌ றுதித்தான்–37–

பொங்கு வெண்‌ டிரை கொ ளிருநில வரைப்பிற்‌ போற்றுறு மடியவர் முகமாம்‌
பங்கயமலர்கள்‌ விகசித மடையப்‌ பரமத விருளின மிரிய
விங்குழலுயிர்கள்‌ பவப் புனல்‌ சுவற வெண்ணரு மளிமுரன்‌ றிருந்தேன்‌
சங்குறும்‌ வகுள பூடண பாஸ்கரோதய மாயது பாரீர்‌–38-

கணிப்பெரு நிலைய வாரண நான்குங்‌ கருதி நின்‌ றளவிடற்கரிய
திணிப் பெருந் திரடோடிரு முத றலைவன்‌ செழியனன்னுதற்‌ சிறு மகவாய்ப்‌
பணிப்பெருஞ்‌ சுடிகை மிசையுறக்‌ கிடந்த பாரிடத்‌ துதித்தன னென்றான்‌
மணிப் பெரு முடிய மன்னர் கோ னிழைத்த மாதவ மியம்பிட லெளிதோ–39-

மதித்திட வெவரு முதித்தவக்‌ கணமே வருசட வாயுவைத்‌ தடுத்துக்‌
கதித்த மெய்ஞ்‌ ஞானக்‌ கடலிடை முழ்கிக்‌ கண்ணிணை யுற விழி யாதுஞ்‌
சதிர்த்திருப்‌ பவளவாய்‌ திறவாதுந் தரையிடை யசை வறக்‌ கிடந்த
வெதிர்த்த செஞ்‌ சுடரின்‌ றேசுறுங்‌ குழவிக்‌ கிகுளைய ரினை யன புரிவார்–40–

இள நிலவெறிக்கும்‌ பிறையினைப்‌ பழித்தங்‌ கிலங்குறு நுதற்றலந் திருத்தித்‌
தளதளப்‌ புடனுட்‌ டிரண்டழ கொழுகித்‌ தயங்கிடு நாசியை யுறுவி
வளமை நற்‌ கரமு மணி முழந் தாளும்‌ வகை யுறக்‌ கை கொடு முறுக்கிக்
கிளர்தரு மம்பொற்‌ கோடிகத்‌ தேந்திக்கெழீ இயபொற் சுண்ண நீராடி–41–

நறிய பொற்‌ கலையின்‌ மெய்யது துடைத்து நாபிநற்‌ றலமுற நோக்கிச்‌
செறி மயிர்‌ மணி யுச்சியினெயும்‌ பொத்தித்‌ திகைத்தயர்‌ வதிகரித்திருந்த
மறிமரு ணோக்கின்‌ மடவர றன்பால்‌ மைந்தனை மலர்க்கரத்‌ தேந்தி
வெறி மலர்க்‌ கூந்தற்‌ குவளை யொண்‌ கண்ணார்‌ விழைவொடு மளித்தனரன்றோ–42-

வாங்கிய வளவிற்‌ படுதுய ரனைத்து மாள மென்‌ மேலறப்‌ பெருகித்‌
தேங்கிய வுவகைக் கடலிடை யாழ்ந்து செழிய தன்‌ மடித்தலத் திருத்திப்‌
பூங்கரும்‌ பனுக்கு மொழிச் சிறு விடைவிற்‌ புருவமெல்‌ லியலுறுமணங்கு
கோங்கரும்‌ பனைய விள முலை பிடித்தக்‌ குழவி தன்‌ வாயிடை வைத்தாள்–43–

வைத்தவார்‌ தனத்துக்‌ கலசம தருந்தா வரவாப்‌ பருமிதமடைய
வித்தகைக்‌ குழவி யிருநிலவரைப்பி லிருப்பது முளது கொல்‌ லென்னப்‌
புத்தகமனைய புறவடித் துவர் வாய்ப்‌ பூவை யுண்‌ மழுங்கி யிங்‌ கிருப்ப
மத்தகக்‌ களிற்ற மன்னர் கோ னுணர்ந்த வண்ணமு மிழைத்தது முரைப்பாம்–44-

அடன்மிகுந்திகலு மவுணரை யடர்த்த வைம்படை தாங்கிய பெம்மான்‌
மடலுறுங்‌ கமல மலரடியகலா மனத்திறை யவனிடம்‌ பகர்வான்‌
றடமுலை வரையின்‌ வடமணிந்திலகு தையலாளி குளையர்‌ விரைந்தே
திடமிகுந்தொளிரும்‌ புயவலி யரசர்‌ திரண்டு சூழவை யிடை யடைந்தார்–45–

கொண்டலும்‌ தருவு நாணநன்‌ னிதி கைக்‌ கொண்டுகந் திரவலர்க்‌ களிக்கும்‌
வண்டின நெருங்கி யின்னிசை முரல மதுவிழி நிம்ப நற்‌ றாரான்‌
புண்ட ரீகங் கொள்‌ ளடியினை போற்றிப் பொற் புறும் சுணங்கவிர்‌ நகில
மிண்டை கொண் டிலகுங்‌ கருங்குழல் மடவா ரெதிர்வியந் தினிது நின்றனரால்–46–

வந்து தன்‌ கமலமலரடி வணங்‌கி வணக்கமோ டெதிருறு மடவார்‌
இந்து நன் முகங்கண்‌ டிங்கெழுந் தடைந்த தென்ன கொல் விளம்பு திரென்ன
விந்தையி னிலகு மணிமுடி வழுதி வேந்தர் கோன்‌ வினவு தன் முன்னர்‌
அந்த மன்னனுக்‌ கவ்விடைக்‌ கருங் கூந்த லணங்கினர்‌ விளம்பலுற்றனரால்‌–47-

வெஞ்சமத்‌ திகலு மடையல ராவி வேலினிற்‌ பறித்திடு மிறையோய்‌
மஞ்செனக்கரிய மலர்க்குழன்‌ மடந்தை மணிவயிற்றிடையி னின்றின்றே
செஞ்சுடர்‌ விரித்து வான்முகட்டொளிருந் தினகரர் கோடி யென்‌ றுரைப்ப
அஞ்சுடர்விரிக்கு மாண் மகவாகி யகலிடத்‌ தினி துதித்த தம்மா–48-

கண்ணிணை சிறிதும்‌ விழித்திலை வாயங் காந்தினி தரற்றவுமில்லை
யண்ண லஞ்சுடரி னணிதிருமேனி யசைத்திலை யஞ்சனின்‌ மகவு
முண்ணிகழ்ந் தொளிரு மாவியினோடு முற்றுறைகின்றது வென்னா
வெண்ணிகர்‌ குமிழ்மூக்‌ கன்னிய ருரைத்தாங்‌ கேகினை ரிறைவனைத்‌ தொழுதே–49-

கொடியென நுடங்கு மிடைக்கனித்‌ துவர்வாய்ச்‌ கோதைய ராண்மகவெனுமுன்‌
படியொடு கனகமணியிழை வலையம் பரித்தெழு வெனத்‌ திரள் புயங்கள்‌
வடிவு மிக்குயர்ந்த மேரு வென்‌றுரை செய்வரையென மிக்கினிதுயரக்‌
கடியயிற்‌ படைகொ ளிறையவ னோகைக்‌ கடலிடையாழ்ந் தனனாகி–50-

காதல னில்லாத்‌ தன்மையிற்‌ றுயரகே கடலிடை யாழ்ந்துளம்‌ வருந்தி
யீதள வாகக்‌ காலம தகற்றி யிருந்துமிக்‌ குழலுறு மெம்பாற்‌
போதவு மொளிரு மாண்மக வீந்த புனிதமைம்‌ முகனிறத்‌ தாதி
நாதனிங்‌ கதற்குண்டாய செய்கைகளு நல்கிலா திருப்பவ னல்லன்–51-

அன்றிநந் தமக்கோரருங்‌ கொடுந் துயர்க ளடைந்திடி லன்னவ னல்லால்‌
சென்றினி தொழுக்குந் தன்மைய ருளரோ செறி திரைப்‌ பரவை சூழுலகில்‌ என்றொளி விரிக்கு மயிற்படை தரித்த வெழின் முடி மன்னவர்‌ வணங்கக்‌
குன்றெனப்‌ பணைத்த புய வலி படைத்த கோமகன்‌ நிருவுளத்‌ தெண்ணா–52-

அருமறைக்குரிய வேள்‌வி யந்தணர்களாசிகள்‌ பற் பல நவிலத்‌
திருமுடி தரிக்கு மன்னவர்‌ தாழ்ந்து திரண்டு நான்மருங்கினு மேக
மருமலர்க்‌ கூந்தற்குவளை யொண் கண்ணார்‌ வானிறக்‌ கவரிகா லசைப்ப
வுருமெனத்தவள வலம்புரிக்குலமு முயர்‌ முரசினங்களுங்‌ கறங்க–53-

மிடைந்தொளிர்‌ தரளமணி யெடுத்தெறியும்‌ வெண்டிரைக்‌ தாம்பரவன்னி
யடைந்தரும்‌ புனலி லாடியுள்‌ ளுகந்து தென்கலைப்‌ புண்டரமணிந்து
குடைந்து வண்டிமிரு மருமலர்த்‌ தொடையல்‌ கொண்டகன்‌ றொளிருமார்‌ பிறையோ
னடைந்தனன்‌ விரைவில்‌ லுதையனைப்‌ பொருந்த னையனற்றிருமுகங்‌ காண்பான்–54-

செப்பெனப்‌ பரந்து மார்பிடம்‌ கவர்ந்து திரண்முலை மடமினா ருகந்தங்‌
கொப்பருங்‌ குழவிதனை யெடுத்‌ தளிக்க வொன்னல ருடறடி யிறையோ
னப்பரன்‌ றனது திருவுருவனைத்து மன்பொடு கண்டு கண்டுருகித்‌
துப்புறுஞ்‌ சுடர்கொளுதையனைக்‌ கண்ட தூய செங்கமல மொத்தனனால்–55-

உருமினு மிரட்டி மும்முரசினமு முயரிய சங்கமும்‌ பிளிற
௮ருமறைக்கிழவர வாவின தளவா யகத்திடைப்‌ பெருங்களிதுளும்பப்‌
பொருவிலுன்‌ சனகப்‌ பொருப்பெனக்‌ குவித்து வித்தினற்றானமும்‌ மிமிரு
மிரு நிதிக் குவையு மெண்ணிலா நிரையுமிசை பெறப்‌ புனலொடு மளித்து–56-

மெய்வகையுணரு முழையரைக்‌ கூவி விளங்கு நம்மரபினுக்குரிய
தெய்வமா மாதி நாயகனமருந் திருத்தளியே முதலாய
பொய்‌ வகையொழி நன்னாட்டினிற்‌ சிறந்து பொலியுமால்‌ சன்னதி தோறும்‌
மெய்வகை இருத்தி யாடை பூணிதிய மிகுநில முதற் சிறப்‌ பளிமின்‌–57-

ஆனினமுதல பற்பல வுயிர்க ளருந்திமெய்‌ விடாயது தணிப்பா
னீனிறக்‌ கடலினிரட்டிய தடமும்‌ நிகமநற்‌ சாலையுஞ்‌ சிகரம்‌
போனிகழ்‌ தருமாலயங்களு மெவரும்‌ புகழ்தரு மன்ன சத்திரமும்‌
மானயிவ வகையி னாயபோ லினும்ப லாயிர வறத்துறை யிழைமின்‌–58-

சிறையது விடுமின்‌ சிறைக்கள மெடுமின்‌ றிகழ் முடி மன்னவரளக்கும்‌
இறை விடு மீரேழாண்டயனிதிய மீட்டு மாயத் துறை விடுமின்‌
குறைவிலா நிதியவரையது திறந்து கோதறப்‌ பலவரு மெழுநா
ணிறை தருமளவும்‌ வெறுத்திட வகத்துணோ்ந்தவை யெடுத் யெடுத்‌ தளிமின்–59-

நண்ணிய தடந்தோட்‌ கொற்றவ ரிழைத்த நவையெலாம்‌ பொறுத்துறப்‌ பிணித்த
திண்ணிய கழல்யாப்‌ பற விடுத்‌ தவர் தந்‌ திரு நக ரடை தரச்‌ செலுத்திப்‌
பண்ணியற்றமிழின்‌ வகை நல முணரும்‌ பான்மை நம்‌ பேரவைப்‌ புலவோர்‌
உண்ணனி மகிழத்‌ துன்னெனக்‌ கலையு முரையுடன்‌ பணிகளு மளிமின்‌–60-

வெண்டிரை கொழிக்கும்‌ கருங்கட லுடுத்த மேதினியதனிடைச்‌ சிறந்த
திண்டிறற் புயத்த மன்னவ ருணர்வான்‌ றிருமுகங்‌ கடிதினி லனுப்பிக்‌
கொண்டல் கண்‌ படுக்கு மாட மா நகரங்‌ கோதற வலங்கரித்திடுவான்‌
அண்டுறுமாந்த ரறிதரமுரச மறைதரச்‌ செய்மினென்‌ றரைத்தான்–61-

இடியெனக்‌ கறங்கு மணிமுரசோதை யெழினகர்‌ மாந்தர்தஞ்‌ செவியிற்‌
கடிதினிற்‌ படுமு னளவிலா வோகைக்‌ கடலிடை யாழ்ந்தன ராகி
வடிவுறு மயில் வேலனைய கண்‌ மடவார்‌ மைந்தரோ டிணைந்திர வகற்றும்‌
படிமருத்‌ தொடையும்‌ யாயொளி விரிக்கும்‌ பற்பல வணிகளுமகற்றி–62-

மங்கையர்‌ நகிலப்‌ பொருப்பினுக் கணிந்‌த வாச நற்‌ கலவையின்‌ றுகளும்‌
கங்குலிற்‌ கரிய கூந்தனின்‌ நிழிந்த கான் மகரந்தமு மடங்க
வங்கமுன்றி றொறுங் குங்குமச்‌ செழுஞ் சேறது கொடு வழுக்குறத்‌ தெளிப்பார்‌ பொங்கிய சுடர்வே லிறை மகன்றன்பாற்‌ புதல்வன் வந் துதித்திடு மதிழ்வால்–63-

பத்தி யினிவந்து விசும்பக டுரஞ்சும்பரூ௨ மணிமாட பந்தியினற்‌
பித்தியின்‌ புறத்து மகத்திலும்‌ புதுவெண்‌ மெய்யொளிச்‌ சுதைகள்‌ தீற்றிடுவார்‌
நித்தில முறுவற்‌ கமலைவா ழகல நிருமலன்‌ றிரு வவதாரச்‌
சித்‌திர வகையே முற்றிலு முவந்து தீட்டுவர்‌ கவின் பெறமாதோ–64-

வெண்ணில வெறிக்குங் கையிலையின்‌ கிரியின்‌ மிசைப்பலகதிரெழுவனபோல்‌
திண்ணிய மாடமுகட்டிடையனந்தஞ்‌ செறி சுடர்த்‌ தூபிக ணிரைப்பார்‌
நண்ணிய குலிசத்‌ துவசமு முழுவை நாடிய கொடிகளு நடுவார்‌
தண்ணியவிதை வித்தரிய பாலிகைகள்‌ சதிருற வயின்வயி னிறைப்பார்–65-

மங்கல மகலாமறுகிட மெங்கு மணிநடைக்‌ காவண மிடுவார்‌
துங்கமென்பாளைக்‌ கமுகொடு சுவை கொள்‌ கன்னலுமினிமையிற்‌ கனிந்த
செங்கனித்தாறு படு விரிதலையுஞ்‌ சேட்பட வெழுத்‌ தொறு மமைப்பார்‌
சங்கையின்‌ மகர தோரண நிரைப்பார்‌ தமனியப்‌ பாவைகள்‌ தொடுப்பார்–66-

தேனினமுரன்றிந்தள விசை பயில செழு மணித்‌ தாம நாற்றிடுவார்‌
வானில வெறிக் குமார வாரமுமொண்‌ மரகதக்‌ கோவையும்‌ தொடுப்பார்‌
ஆனிழு துறப்பெய்‌ தருஞ்‌ சுடர் தருமொ ணஞ்சர விளக்கினமிடுவார்‌
கானிடு மலருந் தண் பனி நீருங்‌ கலவையுங்‌ குழம்பொடு மிறைப்பார்–67-

கரிய சூன்முகி லனையமும்‌ மதம் பொழி கரிகட்‌ குரிய வோடையு மேற்றவிசையு முறவமைப்பார்‌
விரியும்‌ வான் முக டிடிதரத்‌ தாவியு மீளும்‌ பரிகள்‌ பல்லணங்‌ கால் கழுத்தணிகளும்‌ படுப்பார்–68-

திவிய மாமணி யணிபெறக்‌ குயிற்றிய திகழும்‌
சவி கொண்‌ மாவிரதங்க ளெண்ணில நிரை தயங்க
விவுளி சேர்த்திரு மறுகிடை நிரைப்பரா லிரும்பொன்‌
அவிரு மேருபல்‌ லொரு வழிச்‌ சேர்ந்தன வனைய–69-

தவள வானில வுமிழ்‌ மணிமாட மேற்றாவத்‌
துவளிலாநறு மதிற்புகை வயின்வயின்‌ றொகுப்பார்‌
பவள வாய்க்கொடி நுண்ணிடைப்‌ பனிமொழிக்‌ கரிய
குவளை யொண் கணார்‌ குரவையாட்‌ டயருவர் கூடி–70-

முருகு சேரு மாலதிக்கலிகைக்‌ கிணை மூரல்‌
குருகு சேருமால்‌ வரையெனப்‌ பொலி தரக்‌ குவிப்பார்‌
கருணையோடு மற்‌ றரிய நற்‌ கனிவருக்க முநேர்‌
௮ருகுதோறஞ்‌ சிற்குன்றென வமைப்பர்க ளன்றே–71-

இனியவாய முக்கனிகளு மிடையிடை நிறைப்பார்‌
புனிதவாதர நிறைந்த வுள்ளத்தினர்‌ பொருந்தி
தனிவிருந்தினர்க்‌ கெதிர்கொடு சென்று நற்றகையாய்‌
மனி யுமக்கெமக்‌ கென்றுத மகங்கொடு வருவார்–72-

சேயதேறலி னறுகெய்பால்‌ தயிருடன்‌ சேர்ந்து
தூயமாமறுகெங்கணுந்‌ தொனியுறத்‌ துதைந்து
பாயவென்ன று மாகனகக்‌ கலம் பரப்பி
யேய நாரண னடி யருக்‌ கின்னமு திடுவார்–73-

தழனிறத்த நற்‌ நிகிரியு மிவுளியுந்தான
மழவிருங்கரிகளு முலைத்‌ தவரவர்‌ வருவார்‌
பழமை யாய பொற்‌ கலன்களை வெறுத்தலைம்‌ பாலார்‌
௮ழகினீடிய கலன்களைப்‌ புனைகுவரன்றே–74-

ஊறு தேன் பொழி மாலிருஞ்‌ சோலை வெற்‌ புயிர்த்த
நாறு சந்தன வரியமென்‌ றேய்வையின்‌ றீய
சேறு நூலிடை தேம்புறப்‌ பணைத்தருஞ்‌ சிகர
வீறு வாய்ந்தணைக்‌ தடர் தரு முலை முகட்‌ டணிவார்–75-

ஓங்குமாமதி வடந்தனைப்‌ புனை குவ ரொழுகுந்
தேங்கொள்‌ வண்டின மலை தர வோச்சி நீர் செழுஞ்சூ
றாங்குமால் குழல்‌ திருத்தியத்‌ தலைப்பணி சாத்தி
பூங்கொண்‌ மாலதி செவந்திநற்‌ பிச்சியும்‌ பொறுப்பர்–76-

ஏர வாணுதற்‌ சுந்தரத்‌ திலகம்‌ திடுவார்‌
போர வானில வெறியுநித்‌ திலச் சுட்டி புனைவார்‌
சூரவேளி கரம்பகத் தஞ்சனந் தோய்ப்பார்
ஆரவாரவம்‌ புதிக்கிரு வரம்பிட லனைய–77-

பொய்யமைந்க நுண்ணிடைக்‌ கணிமேகலை புனைவார்‌
துய்ய நற்பசுங்‌ கழையெனத்‌ திரளுறுந் தோளிற்‌
செய்யமாமணி குயிற்றிய வொண்கலன்‌ றிருத்திப்‌
பெய்யுமம்பொனிற்‌ றொடிபல முன் கையிற்‌ பெய்வார்–78-

கடி தினிற்றழ னிறத்த நற்‌ றளிர்நிறங்‌ கவற்று
மடிமிசைச்‌ செழுஞ்செய்ய பஞ்சின்‌ குழம் பணிவார்‌
வெடி கொளம்புய மிசையனஞ் சிலம்புவ வனைய
படிவுறுஞ்‌ சிலம்பொலி தரப்‌ பதமிசை யணிவார்–79-

மாடகத்த நன்மகரயா ழெடுத்திசை வகுப்பார்‌
பாடகத்தொடும்‌ பரிபுரத்‌ தொலியெழப்‌ பதம்பேர்த்‌
தாடகக்குழை யலைதரத்‌ தனித்தனி யரிய
நாடகத்தொழில்‌ நலந்தெரி மடந்தையர்‌ நடிப்பார்–80-

அந்த மாடவின்‌ னெழினகர்‌ மாந்தறா மடர்ந்த
சந்த வார்முலை மாதரு மகங்களி ததும்ப
இந்த வாறியற்றிய பின்ன ரக்கொடி யிடையார்‌
விந்தையோடு பொற் சுண்ண நீராடுற விழைவார்–81-

சாடிகொப்பரி சாருங்‌ குழிசியிப்‌
பீடியற்கலம்‌ பெய்திடி லற்பமே
நாடுமென்ன நளியும்‌ பொழிபுனல்‌
ஓடிடாம லொருங்குறத்‌ தேங்கவே–82-

பண்ணுலாவிய பாவினு மின்‌மொழி
விண்ணுலாவிய மின்னிடை மாதரார்‌
எண்ணிலாதவரேர்‌ மறுகெங்கணும்‌
வண்ண நீடு வரம்புகள்‌ கட்டினார்–83-

தமனியத்திற்‌ சமைத்த தளங்களாற்‌ கமவசந்தக்‌ கலவைக்‌ குழம்பினோ
டிம நறும்புன னெய்நல்லெண்ணை சுணம்‌ அமரு மத்தர்‌ புனுகு மென்னானமே–84-

வண்ணமுற்ற பொற்சுண்ண வனநறுந் தண்ண நீரிற்‌ றகையன மட்டிலா விண்ணின் மா நகரெங்கும்‌ விடுத்தனர்‌ பண்ணினின்‌ சொற் பனிக்‌ குழன் மாதரே–85-

சத்தவார்கட றானொருங்‌ குற்றபோற்
சுத்த வீதிகடோறு நன் மஞ்சனம்‌
பத்தியோடு பொழிந்த பின்‌ பான் மொழிக்‌
கொத்தலர்க்‌ குழற்கோதையர்‌ கூடியே–86-

இழையினுண்ணிடை நீவியிறுக்கி மென்‌
றழைசுணங்கின்‌ றனங்கள்‌ குலுங்குறாப்‌
பிழையில்‌ வம்பு பிணித்து மழைக்கரும்‌
குழறிருத்திற் கொண்டை யணிந்தரோ–87-

தந்ததாரைக்‌ குழலுச்‌ தமனிய
விந்தை தேர்கட்‌ சிவிறியு மின்ன்போ
லந்தமில்‌ புனலாடுங்‌ கருவியோ
டிந்து வின்னுத லேழையர்‌ தோன்றினார்–88-

இடக்கை பேரிகை யேய்ந்திடு திண்டிம
முடுக்கை பம்பை யுறுமி முரசொடுந்
தடக்கு தோறவில்‌ தமரவலம்புரி
திடத் திருச்சினந்‌ தேதிகக் காளாமே–89-

கூறிவாச்சியங் கொண்டு குணில்களா
லேறு சூன்‌ முகிறன்னி லிரட்டியே
நாறிசைக் கணு நண்ணி முழக்கிடச்‌
சாறினோதியர் தாம்‌ புனலாடுவார்–90-

கள்ளலம்புங் கருங்குழன்‌ மாதரார்‌
உள்ளலம்பிய வோகை கிளர்ந்தெழ
வெள்ளிடற்கிடனின்‌ நி மறுகடர்ந்
தள்ளி யள்ளியவர்‌ புனலாடுவார்–91-

கூந்தல் சோரக்‌ கொடியிடை சோர்தர்க்‌
காந்தளென்னக்‌ கரஞ்சிவப்‌ பேறவே
சாந்தணிந்த தனங்கள்‌ குலுங்குற
வாந்துருத்தி கொண்டாடுவர்‌ நீரரோ–92-

கலை நெகிழ்ந்தது காண்கிலர் கச்சுமென் முலை நெகிழ்ந்தது மோர்கிலர்‌ மொய்யொளி
யலையு மார மகன்ற துணர் கிலார் தலைமை சேர் புன் லாடுந் தருக்கினால்–93-

அத்தர்‌ பன்னீர்‌ புனுனோ டாரரெய்‌
யொத்து வாரி யொருவ ரொருவர்மேல்‌
லத்த நற்குழ லாலினி தாடுவார்‌
புத்தகத்தின்‌ புறவடி மாதரே–94-

அருத்தி யோடொ ரரிவைநன்‌ னெய்யைமா றொருத்தி வாயி லொழுக்க வுமிழ்ந்திட
றிருத்தன்‌ வாயெனுஞ்‌ செவ்வித ழாம்பல் பெய்‌ மருத் தண்‌டேற றனை நிகர்‌ மானுமால்–95-

கூந்தன்மீதிற்‌ குழல்கொடு பிச்சுநீ
ரேந்தி ளந்தனற்‌ தன்னி லிழிதரல்‌
சேந்த மேருத்‌ திரியின்‌ மீமிசை
போந்து மேகம்‌ பொழிதலை மானுமால்–96-

மாதர்பல்லோர்‌ மடந்தையின்‌ வான்முக மீதருங்குழல்‌ கொண்டு வீடும் புன
லோது வானெழு மொண்மதி வீசிய சீத வெண் கதி ரென்னத்‌ திகழுமால்–97-

விடவெண்‌ பால் கொடோர்‌ மின்னிடை மாதின் மேல்‌ லுடல் வெழுப்பினை யுற்றுடன்‌ றீர்தலாற்‌ புடவி யிற்பசும்‌ பொன்னினற்‌ பாவையைப்‌ படம் படுத்து பறிப்பதை யொக்குமால்–98-

நெஞ்சினிற்‌ பொழி நீரிரு கொங்கைமே லெஞ்சலான தற்‌ றேயிழிந்‌ தோடுறல்‌ விஞ்சடர்ந்தெழு விண்டுவின்‌ மேல் வழி யுஞ்சிறுதண்‌ ணருவியை யொக்குமால்–99-

படைக்கண்மங்கை பனிமுகம்‌ வீசுநீர்‌ தடுப்பவங்கைத்‌ தலம்பொதி தன்மரை
யிடக்குள்வீழு வெமைவருகத் தேன்மதி யடைக்கலம்மென்‌ றடைதலை மானுமால்–100-

சோதிமாமணி மாடங்க டுன்றிய
வீதி தோறும்‌ விழைவி னடர்ந்து முப்‌
போதுமீரறு வைகல்‌ புனலிடை
மாதராடி. மனக்களி யுற்றபின்‌–101-

வண்ணமாமறு கெங்கும்‌ வதிந்தபொற்
சுண்ணநீர்‌ தலைப்பெய்து துவன்‌றியே
தண்ணரும்‌ பொருனாநதி சார்ந்திரும்‌
பண்ணைவாயிட மெங்கும்‌ பரந்து போய்–102-

நலிகொள்‌ வெண்டிரை நண்ணி யதினுள
புலவு நீக்கிப்‌ புதுமண மீந்தவன்‌
சுலவு மிப்பி சரிமுக முண்ணச் செய்‌
உலவுமார முயிர்த்திடச்‌ செய்யுமால்‌ –103-

திரு வவதாரப் படலம் முற்றும்

‌-

நாம தேயப்‌ படலம்‌

கற்றவ னீராடவெழ முதலியாண்டான்‌ கையும் பின்‌ வடுகநம்பி கரமென்போதும்‌
பற்றியெழற்‌ காண்டானுள்‌ வெதும்ப வத்தைப்‌ பரிகரிக்க வவர்க்‌கிருதாம்‌ பரச்செம்‌ பீந்தாங்‌
கற்றநதிப்புனல்‌ கொணர்வித்‌ தஃதா னம்பி யாந்தரிகப்‌ பத்தி வெளி யறியச்‌ செய்த
நற்றவனெம்‌ மெதிராச னடியை வாழ்த்தி நாமதேயப் படல நல்குவாமால்–1-

மீனவன்குல வேந்தன்‌ வியந்துபஃ றான மந்தணர்‌ தாமுகக்கக்கொடுத்‌
தானபின்‌ பேரவை யெழுந்தாக்கொளிர்‌ வானரியணை மன்னினன்‌ மாதரோ–2-

ஆரியர்க ளறிஞர்‌ கணிதநூ
லோருவோர்‌ மெய்யுறுதிகொ ளாரணஞ்‌
சோர்விலா துணர்‌ தூய்மறை யாளர்‌ மற்‌
றே ரறா தொளி ரேந்தலுழையரே–3-

மற்ற நுட்ப மதியின ரானிறை
வுற்ற சங்கத்‌ துறவிலர்‌ மெளலிதோய்‌
பொற்றிருக்கழற்‌ பூப னுவகையாற்‌
சொற்றிடுஞ்சில தூய்மொழி யன்றரோ-4-

மன்‌ றுளோரெம்‌ மனமரை யின்முகை
யின்றலர்ந்‌ தொளி யெய்திட வெல்லிளங்‌
கன்றை நேர் வருகான்‌ முளைக்கியாது நா
மின்று நாம மிடுத லியம்புவீர்‌–5-

கொக்குமீதுறு கோகிலவின்‌ சொலார்‌
செக்கர்மாடத்‌ திருக்குருகாபுரி
புக்க நும்மைப்‌ புரக்கும்‌ புயலுக்கு
மிக்க வாதிப்பிரான்‌ றளிமேவியே–6-

பரவை சூழுல கோரடி பற்றிடக்‌
கரவினாலளந் தின்பருள்‌ கான்மலர்‌
சிரமணிந்தவன்‌ சீரருட்‌ பெற்றுடன்‌
மரபினாமம்‌ வழங்குதன்‌ மாண்பரோ–7–

பாதுகாத்துயிர்ப்‌ பாலருள்‌ கூர்ந்து நன்‌ னீதியாலுலகோச்சு நிருப நின்‌
றீதிலாத திருவுரை யுட்கொடீ தோதனோ மற்றுளப்படி செய்குதி–8-

இவ்வண மன்றுளார்சொல்‌ லியல்பினை யிறைவ னுள்ளிற்‌
செவ்வியி னமைத்து நந்தஞ் செய்தவத்‌ துதித்த சேய்க்குக்‌
கொவ்வையின்‌ கனிவா யின் சொற் கோங்கரும்‌ பனைய கொங்கை
நவ்விநேர்‌ விழியாய்‌ யாது சாற்றலா நாமமென்றான்–9-

நம்மகவெனவுமன்ன னவின்றிடப்‌ பெற்றோமென்று
செம்மலங்‌ கடலுளாழ்ந்து திரு முக மலர்ந்து நீருண்‌
மைம் முகிற்‌ குழலி வேந்தன்‌ மலரடி பரவி யின்பம்‌
விம்மியாழ்‌ குழலே யின்சொல்‌ விளம்புவள்‌ சிலது மன்னோ–10-

புத்தெனுங்‌ கொடிய சேறிற்‌ புகுந்துழன்‌ றழலுகின்ற
தத்தினை யறுத்து நம்பாற்‌ றனய சம்பத்‌தை யிந்த
வித்தகன்‌ பொலிந்து நின்ற மெய்ப்பர னமரரஞ்ச
நத்தினை முழக்கு மாதி நாதர்‌ சன்னதி முன்‌ சென்றே–11-

வஞ்ச மற்றுள த்தை யைவர்‌ வழி செலுத்தாது வாழ்த்து
நெஞ்சினர்‌ நாற்பொருட்‌ குணினைத்த தங்குவந் தளிக்கும்‌
கஞ்சனன்‌ மலர்த்‌ தாட்‌கீழிக்‌ கான்முளை வணங்கச்‌ செய்து
விஞ்சுநம்‌ மரபினாமம்‌ விளம்பலே விதி யென்றாளே–12-

கொங்கலர்க்‌ கருத்து மைம்பாற்‌ குவளை வாண்‌ மதரரிக்கண்‌
நங்கையா ருரைத்த வாய்மை நங்கருத்தியைந்த தென்றப்‌
புங்கவ னமைச்சர்க்‌ கூவிப்‌ பொரு கடற்‌ றானை சூழ
விங்கடைந்‌ திடுவீர்‌ பூமா திறைவனைத்‌ தொழச்‌ செலற்கே–13-

ஆண்டகை யியம்பாமுன்ன மரும்பொருண்‌ முகத்தி னோக்காற்‌
காண்டக விரைவிற்‌ செய்யுங்‌ கருணை கூருழையர்‌ சேனை
யீண்டவந்‌ தறிக்கை செய்தவ்‌ வின்னடி பரவ வண்டு
பாண்டருற்‌ துளவினானைப்‌ பணிந்திடற்‌ கெழுச்சி யானான்–14–

தண்ணுமை படகம்‌ பிலி தக்கை திண்டிமறந் தடாரி
மண்ணமை முழவு கேட்போர்‌ வள்ளின முவந்து கீதக்‌
கண்ணுகர்ந்‌ திடுபன்‌ னாகசுரமோ டெக்காளஞ்‌ சின்ன
மெண்ணில்‌ பல்லி யங்களெங்கு மெறி திரைக்‌ கடலினார்ப்ப–15-

கருவிளை குமிழி னொண்பூக்‌ கயிரவ மலர்களுட்‌ கொண்‌
மருமலர்க்‌ கமலமோர்‌ பொன்‌ கொடி மிசை மலர்ந்த தன்ன
திருமுகத்‌ தரிவை மார்வெண்‌ கவரியின்‌ சிறு கால்‌ வீசக்‌
குருமணி நிலவு காலும்‌ குழுஉக்‌ கொள்‌ வெண்குடை நிழற்ற–16-

மட்டவிழ்‌ குமுத வேந்துள்‌ வதியிரு முயனீத்‌ தூர்வான்‌
விட்டதி வெளிவந்தாக மீ திரு கயல்‌ கடாங்கி
யிட்டமோடுல வலன்ன வெழின்முக மடவாரால
வட்டமீயோட்டிகொண் டுண் மகிழ்ந்தரு கசைப்பர் மன்னோ–17-

மாசுறுங்‌ கலியின்‌ றீயவலிகெடு மெனவே வெள்ளை
வீசு தலனைய வான்‌மீ வெண்டுகிற்‌ கொடிகளாட
வேசி விண்ண ரம்பை மாதர்க்கின்புறு பரதங்காட்டுந்
தாசியரிசையினேர்ப்‌ பச்சதியிடை யடிகள்‌ பேர்ப்ப–18-

தேங்கமழ்‌ கமலப்‌ புத்தேள்‌ சேணிறை கலச யோனி
யாங்கவிர்‌ வேத நாவரரசர்‌ முத்தமிழ்‌ தேர்‌ வாணர்‌
பாங்குட னருகிலாரப்‌ பரவு பொற்‌ சிவிகை பம்ப்
வீங்குதிண்‌ குவவுத்‌ தோளார்‌ கட்டிய மியம்ப மன்னோ–19-

கங்குல வயிற்கை யொன்னார்‌ கணங்களின்‌ வலி மலைக்குத்‌
தங்கிய குலிகத்திண்டோட்‌ டானை முன்‌ மிடைந்து செல்லப்‌
பொங்கு செந்துக ளிவர்ந்து புயலெனப்‌ படரத்‌ தீய்க்கும்‌
வெங்கதிரவிந்து வானஞ்‌ செக்கரில்‌ விளங்கித்‌ தோன்ற–20-

தூயதீப்‌ புடத்திற்‌ பல்காற்‌ சுட்டசெம்‌ பொன்னிலும்பர்‌
மேயயாணரினாற்‌.செய்ய வில்லுமிழ்‌ மணியிடைக்‌ கண்‌
ணேயவிட்‌ டடைத்த தொட்டி லேற்றி யக்குழவி சூழ்ந்தாங்‌
காய மிண்டேகலென்மு னம்புலிக்‌ கண நேராமல்–21–

கோதில்பூற்‌ தொட்டி லூடு குயிற்று செம்‌ மணிவிற்‌ றோற்றம்‌
மாதவ னரசன்‌ சேயா வந்தவா றறிந்து போற்றப்‌
பாதலத்‌ தனந்தன்‌ றன்மெய்ப்படிவத்தை மறைத்தீண்‌ டேகச்‌
சோதி கொள்‌ சுடிகைநாறு மாமணிச்‌ சுடரி னேர்த்த–22-

இன்னணங்‌ குழவி தன்னோ டிறைவனு மெழுந்து செங்காற்‌
பொன்னனந்‌ துயிலுஞ்‌ சேக்கைப்‌ பூம்பணைக்‌ குருகை மேவிக்‌
கொன்னவில்‌ படைக்கணார்தங்‌ குழற்கிடு புகையின்‌ வாச
மன்னிய மறுகி லூடுண்‌ மதிழ்த. வலம்‌ வந்தானால்–23–

கூன்சுரி முகங்க ளீனுங்‌ கோதினித்திலங்க ணாற்றித்‌
தேன்பயி லலரி னாற்றுஞ்‌ செழிய காவண முகப்பில்‌
வான்றட வரம்பை நாட்டும்‌ வாயினின்‌ றயினிநீரைக்‌
கான்படு மழலைத்‌ தீஞ்சொற்‌ கன்னியர்‌ சுழற்றினாரால்–24–

கருமணி குயிற்று செம்பொற்‌ றகட்டுறம்‌ கடிகொண்‌ மாத
ரிருவரோ ரிருவராய்த்‌ தம்மின்‌ முனந்திக்‌ காப்பிட்டுப்‌
பருகவின்‌ னமுதிற்‌ சேயின்‌ படிவத்தி னெழினோக்‌ காற்பின்‌
றிருமினார்‌ சிலர்‌ கர்ப்பூர வாரத்தி தெரியச்‌ செய்தார்–25-

ஆரண மொருநான்‌ கோது மயனன வ றிஞரெல்லாம்‌
நாரணனாம. நாவின வின்றிறா கரத்திற்‌ செம்பொற்‌
பூரண கும்பங்‌ கொண்டிப்‌ பூதலத்‌ துயிருயச்செய்‌
காரணன்‌ மகவிற்‌ றோன்றப்‌ பெற்ற காவலனைக்‌ கண்டார்–26–

மட்டலிழ்‌ நறவமாந்தி வண்டிமிர்ந்‌ தடரு மைம்பாற்‌
கட்டழ கரம்பை மாதர்‌ கடுப்பவரடிகள்‌ பேர்ப்பக்‌
கொட்ட மிட்டமர ரீட்டங்‌ குல்யவென றமுதைத்‌ தால
வட்டம்‌ வைத்திடு புட்டோன்றல்‌ வாகனன்றளிக்குட்‌ சென்‌றான்–27-

அத்தினா புரத்து வாழருச்சுனற்‌ கறத்தினூல்‌
தத்துவத்‌ தரும்பொருள்‌ ரதத்தினிற்‌ றெரித்தவன்‌
மெத்தவுட்‌ புறத்துறிக் கிடைச்‌சி வைத்த வெண்ணை பா
னத்தி யுண்ட பூரணத்தி தேச லோக நாதனே–28-

எருதோ ரேழடர்த்து மாதொருத்தி பாலிணங்கினாய்‌
மருதினூடு போயிறுத்து மாயமாய்‌ வருந்தினாய்
குருதி தோயிபப்‌ பதிக்கிழிந்த தூது கூறினாய்‌
கருதி நின்‌ குணத்தை யார்‌ கணிக்க வல்ல வல்லரே–29-

தாலமீது நாத கேதனன்‌ முனந்தளர்ந்த பாஞ்‌
சாலி நாணழிந்திடாது தானை முன்‌ னளித்தனை
சில வேத வாணனெஞ்சு தேற வாக மோடவன்‌
பாலனீ நினாது தன்மை பார்‌ மதிக்க வல்லதோ–30-

இச்சையா லுளங்கனிச்‌ தெழுந்த வன்பினோடு நீ
மெச்சவே சுவைத்தடுங்‌ கனிக்குளின்பு விஞ்சினா
லச்சுதற்‌ கெனப்புறத்‌ தமைத்த செளரி யங்களை
யெச்சிலுண்டு வானளித்‌ தெழுந்த புண்டரீனே–31-

இன்னணம்‌ பொலிந்து நின்ற வெம்பிரா னிணைப்பதஞ்‌
சென்னியிற்‌ புனைந்து பின்‌ றுதித்துளஞ்‌ சிறப்புறத்‌
தன்னருங்‌ குலப்பெருஞ்‌ சுடர்ச்சுதன்‌ றனைப்புவி
மன்னனுண்‌ மழ்ந்தவன பொலன் கழல்‌ வணக்‌கியே–32-

புத்தெனுந் நராலையைப்‌ புடைத்தெமைப்‌ புறந்த வேய்‌
முத்தனோ டயன்‌ பராவு மூர்த்தி யாதி மூலமென்‌
றத்தனைப்‌ பழிச்சி மன்னவன்‌ றிருவருட்‌ கொடுண்‌
ணத்தியே மகற்‌ குகந்து நாம மோத லாயினான்–33-

தங்குலப்‌ புரோகிதன்‌ றனைக்‌ கோடேத மின்றியா
றங்கமைந்து வேள்வி நான்‌ மறைக்குடே ரகங்கொணற்
புங்க வேத வாணர் கூய்ப்‌ பொலிந்த பின் விதிப்படி
மங்களத்தி யங்கறங்க மாதவர்க் களிப்பனால்–34–

செம்பொனே ரிலங்கு பூணிவர்ந்து விண்‌ செறிந்தவிற்‌
பம்பு மாட கூட மாளிகைச்‌ செடெற்‌ பணைத்தல்
மம்பரஞ்‌ சுவைப்பயஞ்‌ செழித்தவா னிதிக்‌ குவை
இம்பரைந் தருக்கு நேர பீட்ட தான மீந்தனன்–35-

பொங்குவெண்‌ முனூலிலங்கு பூ சுரர்க்களித்த போழ்‌
தங்கை விட்ட நீருகுந் துலாயியாறு பாய்ந்தவண்‌
எங்கணும்‌ பரந்து தாம்ப்ரவன்னி யாயிழிந்ததே
லங்கவன்‌ செய்தான நேரிதாகு மென்ன லாகுமே–36-

எண்ணிறான மாதவர்க்‌ களித்து லோப மொன்றிலா
துண்ணெகிழ்ந்து நீதி நாலிலோது நேம கப்படி
நண்ணியே சடங்கினை நடத்தியன்பின்‌ வந்தெழுந்‌
தண்ணளிக்‌ கடற்கு வள்ளல்‌ சாத கர்ம மாற்றியே–37-

எறெறெருத்த மீதுறீச னுக்கய னிழைத்ததத்‌
தூறரித்த மால்‌ பதத்தி லொண்டமிழ்ப்‌ புனைந்து நா
வீறனாகு மெய்ப் பரன்‌ றனக்கவன்‌ குலப்பெயர்‌
மாறனென்று நாமமன்‌ வரோ தயன்‌ வழங்கனான்–38-

அந்தரத்தி னன்பனா யம்புயத்‌ தவன்‌ மறை
யெந்தை தாளுறற்‌ கொணாம லின்னு மேத்த நின்றவன்‌
றந்தையாகி மன்னவன்‌ றனக்கு நாம்‌ முந்தரில்‌
விந்தை சேரவன்‌ புகழ்‌ விளம்ப யாவர்‌ வல்லரே–39-

இன்னண நராதிபன்‌ பொலிந்து நின்ற வெம்பிரான்‌
றன்னருட்‌ கொடேதமார்‌ சடத்தினைச்‌ சினந்த தீங்
கன்னலின்‌ சொனங்கை கான்முளைக்‌ க நாம மோது நாள்‌
பொன்னகர்க்கு ளோருகந்து பூவின்‌ மாரி பெய்தனர்–40-

மண்ட லேசுரன்‌ கனிந்து மாறனைத் த ழீ இயெணி
லண்ட முண்டு மிழ்ந்த மாயனம்‌ புயப்‌ பதம்பராய்‌
விண்டடைந்த மாடமார்த மாளிகைக்குண்‌ மேவியே
கெண்டை யொண்‌ கண்‌ மாதினோடு கேண்மை யுற்‌ றுறைந்தனன்–41-

நாமதேயப்‌ படல முற்றும்‌,

ஆதிமால்‌ தரிசனப்‌ படலம்‌

பொன்பதி யெனவாம்‌ கோட்டிப்‌ புங்கவ நம்பி பாலீ
ரொன்பது தடவைக்‌ கப்பா லோதியந்‌ நூலையார்க்கு
மின்புற வளித்து நாம மெம்பெருமானா ரானோன்‌
றன்பத மலரைச்‌ சூடித்‌ தரிசனப்‌ படலஞ்‌ சொல்வாம்–1-

இன்னண முவகை மீதூ ரேந்தறம்‌ சேமக்‌ கோயின்‌
மன்னியந்‌ தமரினோடு மறுவிலா தறு சுவைக்க
ணன்னய மூரலுண்‌ டனந்தர முடைய நங்கை
தன்னருஞ்‌ சுதனைத்‌ தொட்டி லிடுதரத்‌ தலைமை சான்றாள்–2-

கொண்டலிற்‌ சுருளும்‌ குஞ்சி நித்திலக்‌ கொண்டை சேர்த்துத்‌
துண்டவெண்‌ பிறைநுதன்மீத்‌ துராயொளி துலங்கச்‌ சாத்திப்‌
பண்டமார்‌ சுடிகை யோடைப்‌ பற்பல மணி யிழைத்த
குண்டலம்‌ பிடிகஞ்‌ சாத்திக்‌ குலவு கண்டிகையும்‌ பூட்டி–3-

அம்புயத்‌ தொளிரும்‌ வைரத்‌ தழுத்து மங்கதமுஞ்‌ சாத்தி
வம்புறு நிம்ப மாலை மார்பிடை மதாணி சாத்தி
பம்பு மொண்‌ கதிருலாய காஞ்சியும்‌ பரிவிற்‌ பூட்டிச்‌
சம்பய னறியாத்தாளிற்‌ பரிபுரச்‌ சதங்கை சாத்தி–4-

பாடகங்‌ கொலுசு பாதப்‌ பவளமென்‌ விரலின்‌ மிஞ்சி
யாடகத்‌ தமைத்துப்‌ பூட்டி யங்குலிக்‌ காழி சேர்த்துக்‌
கோடு புன்னகமுஞ்‌ சாத்திக்‌ குதலைக்‌ ண்ணிக்‌ காயொடு
நீடர வடமும்‌ பூட்டி நிலவ மண்‌ டிலத மிட்டு–5-

அஞ்சன மகன்‌று நீண்ட வையரி விழிமேற்‌ றீட்டிக்‌
கஞ்ச மெல்லடியிற்‌ செய்ய மஞ்சொளி கதுவக்‌ கோட்டி.
வஞ்சர்‌ கண்ணீறு தையா வகை வலக்கதுப்‌ பினீல
நஞ்சிலுங்‌ கரிய மையா னலம் பெறக்‌ குறி யொன்றிட்டு–6–

காசறொண்‌ பிரவாளத்தாற்‌ கவின்‌ பெறக்‌ கடைந்த காலுட்‌
டேசிகத் திடைசலாகை சேந்த மாமணி குயிற்றிப்‌
பாசொளி பரந்த சட்டம்‌ பணித்துமா மரகதத்தில்‌
வீசுவிற்‌ றொடரு நாற்றி வீசித்த பொற்றொட் டிலேற்றி–7–

பற்பல நிலவு காலுஞ்‌ சூரிய படத்திற்‌ செய்ய
விற்புனை யேழடுக்கு மெத்தை மேல்‌ விரித்‌து வெண்பட்‌
டற்புத மலர்களாற்செய்‌ தணிகொண்மே லாப் பமைத்துய்‌
பொற்புறு தொட்டி லேற்றிப்‌ பூவை தாலாட்டு வாளால்–8-

பண்ணைவாய்‌ வளையு குத்த பன்மணி நிலவு காலுங்‌
கண்ணகன்‌ றொளிரு கூடற்‌ கா வலன்‌ மரபுளோரை
நண்ணுதற்‌ கரிய வைதரணிக்‌ கரை கடத்த வென்றிம்‌
மண்ணிடை யுதித்த வென்கண்‌ மணியே தாலோ தாலேலோ–9-

உலைபடா தொளிருஞ்‌ செம்பொ னுதயனாற்‌ கருகாமாலை
யலைபடா வமுத மாலை யடைதரா வினிய கன்னல்‌
கலைபடா மதியம்‌ வண்டர்‌ கவர்ந்கடா திஸ்னிய செந்தேன்‌
விலைபடா மணியேர்‌ நந்தா விளக்கே தாலோ தாலேலோ–10-

கோடரங்‌ குழையிற்‌ பாயக்‌ கூனிருலுடையத் தேனூர்‌
மாடவிர்‌ முகடார்‌ மந்த மாருத வரையாள்‌ கோவே
நீடிய திரைவாய்‌ முத்தை நேமியம்‌ பறவை காக்குந்‌
தோடவிழ்‌ கமல வைகைத்‌ துறைவ தாலோ தாலேலோ–11–

அள்ளலங்‌ கருஞ்சே றுற்ற வகன்பணை யுழவின்‌ மள்ளர்‌
உள்ளடி யுறுத்த நீல முகுமதுக்‌ குருகூர்‌ நம்பி
வெள்ள நீர்க்‌ கயல்க ணாக மேய வைந்தருவைச்‌ சாடித்‌
துள்ளூநீர்ப்‌ பொருனற்‌ சங்கத்‌ துறைவ தாலோ தாலேலோ–12-

இருநிலத்தறு விசிட்டாத்‌ துவைத முற்றிட வுயர்ந்த
திருமிகு மகர கேதுச்‌ செல்வனே வாசு தேவ
தருநிழ லண்ட முற்றுந் தங்கிய தன்ன முன்னீர்‌
வருபுவி யோர் குடைக்கீழ்‌ வளர்க்க வந்தவ தாலேலோ–13-

வாட்டடமங் கண்ணி யிவ்வாறுல கெலாம்‌ வயிற்றடக்கி
மீட்டுமிழ்ற்‌ தளித்தழிக்கும்‌ விருப்பு மாத்திரத்தி லோரும்‌
பாட்டுடைப்‌ பரனை முன்னாட்‌ பயிற்றிடு தவத்தி னாற்றா
லாட்டியுள்‌ ளுவகை பொங்க வங்கையி லெடுத்துப்‌ பின்னர்–14-

முன்னுளபடி மலர்க்கண்‌ முகிழ்த்தி யாம்‌ வீட்ட வாறே
நன்னய வணைகிடந்து நகிலமு முண்ணா தங்கந்
தன்னிலே யசைவு மெய்யிற்‌ றளர்ச்சியோ டழுகையின்‌றி
மன்னுநம்‌ மதலை போலே வையகத்துளதோ வென்றே–15-

அம்மமுண்‌ ணெனவே யங்கை யனகனை கிடத்தி வார்கொள்‌
கொம்மை வெம்முலை பிடித்துக்‌ குமுத வாய்‌ பொருத்த வப்பால்‌
செம்மையங்‌ கடைவாய்‌ முன்போ லோடுறத்‌ திகைப்புற்‌ றந்தோ
மைம்முகி லளகத்‌திரீ தென்னென வருந்தா நின்றாள்–16-

சுவர்க்க பூதலத்திற்‌ றோன்றி தூம்பயல்‌ வளைந்த தன்ன
விவர்தரு திருத்தோணல்லீ ரென்ன காரண முனான் செய்‌
பவமதின்‌ குறையோ வன்றிப்‌ பயிற்றிய தவத்துட்‌ கோதோ
வவனிமீ திவ்வாறெச்ச மாரேனும்‌ பெற்ற துண்டோ -17-

சசியலை தரவே செய்வ தனமுறு மடவீர்‌ சற்றும்‌
பதியினா லழவு மின்றிச்‌ சேனையும்‌ பருகாதாகி
அசதியு மில்லா தங்க மதிவளம்‌ பெருக முன்னீர்‌
வசுந்தரை பிறந்த மாதர்‌ மக்களைப்‌ பெறலு முண்டோ–18-

மைப்படு குழலீ ராயு மலரணை மீதியானங்‌
கெப்படிக்‌ கிடத்தினேனோ விசைந்து நாளெட்டானாலும்‌
அப்படி யிருக்க லல்லா லங்கமொன்‌ றசைவ மில்லா
திப்படி மீது மாத ரிளமக வுயிர்த்த லுண்டோ–19-

இண்டை கொண்டிலகு மைம்பா லிழைநுசுப்‌ பரிவையீர்‌ பொற்‌
றண்டை கிண்கிணி கறங்கத்‌ தவழ்ந்தடு சிறுசே யென்னைக்‌
கண்டு முன்‌வர வன்போடு கைகொடுதழா௮ தழுக்கா
றுண்‌ டெரிசின முள்ளோங்க வுற்றெடா திஸ்ருந்திட்டேனோ–20-

பல்லமம்‌ பகமொண்‌ மெளவ்வற்‌ பசிய கோரக வெயிற்றீர்‌
தொல்லை நாளளவுஞ்‌ சேயாற்‌ றுன்புறப்‌ பின்‌ றவத்தான்‌
மல்லலங்‌ குழவி தந்த மாமகணேய னிவ்வா
றல்லலுற்‌ றழுங்கச்‌ செய்ய வடிமையிற்‌ பிழையென்‌ னோவால்–21-

ஒரு குறங்கணை வாய்‌ வைத்தாங்‌ கொரு குறுங்கணை நெரூ உடித்‌
திருமுக மலர நோக்கிச்‌ சிறு நகை புரியாச்‌ சேயைக்‌
குருமணி கொழிக்கு முன்னீர்‌ குலவு மானிலத்‌ துளோர்கண்‌
மருமல ரளகபார வனிதையீ ரறிந்த துண்டோ-22–

வண்டு நாணுடைய வீரன்‌ வாளிபாய்‌ செம்புணாரச்‌
செண்டு மாமுலை கொண்டொத்திச்‌ செழிக்க வன்பரைச்சேர்‌ நல்லீர்‌
யெண்டிசை யிடத்திலுள்ளே குழவிகட்‌ கென்சேய்‌ நோய்‌ போ
லுண்டு கொல்‌ யான்‌ செய்‌ பாவத்துறுதி கொலறைதி ரென்றாள்–23-

பொற்றொடி கறங்கு முன்கைப்‌ பூவை யீரரியின்றாளுட்‌
பற்று மிவ்வுலகர்‌ செய்ய பாலனில்லா தழுங்கிப்‌
பெற்ற பினுவகை கொள்வர்‌ பேதையே னளவுமச்சே
யுற்று நீயழுங்‌ கென்றெம்மா னுந்தி யோன்‌ வகுத்திட்டானோ–24–

தையலார்‌ முழுகு சீறு தைத்ததோ வன்றி வேலன்‌
வெய்ய கண்ணோக்கோ வத்தி மேய புட்‌ சீரோ வென்று
வையுற விதற்குமுன்‌ னிவ்வன்கறுப்‌ பாடினானோ
தொயயில்‌ வெம்முலையீ ருற்ற சூழ்ச்சியை யறிந்திலோமால்–25–

கொங்கையின்‌ பொறை கண்டேங்கு கொடியிடை மடவீர்‌ சற்றுஞ்‌
சங்கை வேறுளவென்‌ றெண்ணிற்‌ றனுவிடை வாட்ட மில்லை
யங்கை யுள்ளங்கால்‌ வெப்ப மாறிலைச்‌ சரந்தாழ்வில்லை
விங்குள முச்சி தாழ்வு மெய்தில தென்னோ வென்றாள்–26-

மெதகு முனிவன்‌ பின்பேர்ய்‌ விறல்‌ கொடா டகையும்‌ அம்மம்‌
போத வந்துதவு சீற்றப்‌ பூதனை யாளையும்‌ பார்த்‌
தேதிவர்‌ பெண்பா லென்றங்‌ கெண்ணிடா தவர்‌ கடுஞ்ச
மோதுகன்‌ மனனோ நங்கை மொழியினுக்‌ கிரங்குவானே–27-

இன்னண முடைய நங்கை யுண விலாதிளைப்‌ புற்றோர்க
ணன்னய மூர றீம்பா னண்ணியு முணற்‌ கில்லாயி
னன்னவ ருறுக ணெவ்வா றடைவரோ வஃதினொந்து
மன்னனுக்‌ குரைப்ப வன்னோன்‌ வருந்தி யீ துரை செய்வானால்–28-

கொந்தார்‌ குழலெழி றோடணி குழையாய்‌ கலை குறையா
விந்தார்‌ முக மகவார்கலி மிரு மானிலர்‌ முளை போற்‌
செந்தாமரை விழிவா யவிழ்‌ செயுமென றெணி யிதுநாள்‌
வந்தோமினி முனமீ பெருமானே சரணெனவே–29-

என்போடுள முலைவாய்‌ மெழுகெனவே கரை தரவுள்‌
ளன்போடவ னிணைமாமல ரடி மீதினி லமரப்‌
பொன்‌ போலொளி ரிளமாறனைப்‌ புகவித்தடி பரவி
மின்போதரு முரனே யெனவினை செய்தன முனமே–30-

அடியோ மிது தரமோ நினையருளார்‌ கலியெனவிப்‌
படியோ டமரரு மாமறை பகரும்‌ முரை கெடுமே
அடிவார்‌ மரையுறைவோன்கடுக்‌ களனோடடி யறியா
வடிவாகிய முதலேயறு மனமேவிய துயரே–31-

என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்‌
அன்றே யருள்‌ புரிவா னிதிலயமே தவனடி வாய்‌
சென்றே அயர்‌ களைவோ மெழு தெரிவாயென விறைவன்‌
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–32-

என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்‌
அன்றே யருள்‌ புரிவா னிதிலயமே தவனடி வாய்‌
சென்றே அயர்‌ களைவோ மெழு தெரிவாயென விறைவன்‌
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–33-

மெய்‌ யொன்றிய மதயோருளை வீறன்‌ மாவணி திகழும்‌
வையந்தனை மறி தெண்டிரை மடைநின்றெழு புனனேர்‌
மொய்யன்‌ புறுபடை பல்லிய முழவார்ப்‌ பெழவுதவ
வய்யன்மன மகிழாவவ ணடைவான் மிசை யேறி–34-

தனையன்‌ றனையி பவென்‌ கொடுதளிர்‌ மெல்லடி மடமான்‌
மனனம்‌ தணிகர நங்கையு மதமந்திரி யுடனே
கனமொன்‌ றயரணி மேடைகள்‌ கவினா ரெயில்‌ சிகரி
யினமொன்‌ நியமற: கோடிறை யெய்தாச்‌ சினகரமே–35-

திதி மைந்தரின்‌ வலியால்வரர்‌ சேணாடரசிழவா
விதியே வலினிவண்‌ வந்தடி மேவும்பொழு துருவா
யெதிர்‌ வந்தவர்‌ வலியொன்‌றிட வினல்‌ வென்றிட வருளும்‌
புதுமென்‌ மரை மலராளிறை முன் போய்த்‌ துதி புரிவான்‌–36-

கண்ணனின்‌ னருளா லென்றுய ரறமுன்‌ கான்முளை யளித்தனை யதுவிம்‌
மண்ணக மடவார்‌ சிறுவரிற்‌ கருணை வார்விழி யவிழ்‌ தரா தம்ம
முண்ணிலா தவயவங்களு மசையா தொளி கொள்‌ செம்‌ பவள வாய்‌ திறவா
தண்ணலிப்‌ புதுமை யெற்கென நினைந்தோ வருளினை கருணை வாருதியே–37-

பாட்டளிமுரலின்‌ றளவணி முறுவற்பாசிழைக்‌ கமலவீட்‌ டரசி
மோட்டிள நூலமுழுந்திரு வரைகொள்‌ மொய்ம்பநன்‌ மசுவருளென்‌று
வேட்டிடக்‌ களப குங்குமஞ்‌ சுமந்த வேசரி யாக்கனிற்‌ கறமோ
வோட்டரும்‌ பிரசத்‌ துளவணி புயவீண்‌ டுனையலாற்‌ களை க ண்வேறி லையே.–38-

செப்புறழ்‌ நகில முருந்திள முறுவற்‌ சேலிணைக் கண்டுடி யிடைகொ
ணப்பினை பொருட்டேழ்‌ விடையட ராதி நாதனே யருள்‌ மழை முகிலே
மைப்படு வரை செங்கதிர் மத யிருபால்‌ வயங்க நின்றது வனவுருவத்‌
தப்பனே களைக ணீயலா தெற்‌கீங் காருளார்‌ கருணை வாரிதியே–39-

கோதறு மறைகணான்கின மறியாக்‌ குணமிகும்‌ பரமதாய்‌ விழியின்‌
சோதியா லெவரு மறிவதற்‌ கரிதாய்த்‌ துளக்கறு மன த்தினுக்‌ கெளி தாய்‌
நீதிகொ ளதமா யவைசெயும்‌ பொருளாய்‌ நிறைதரும்‌ குணமழை முகிலே
ஆதியே களைக ணீயலா தெற்கிங் காருளார்‌ கருணை வாரிதியே–40-

அண்டமாயண்டத்‌ தயனரன்‌ குலிசத்‌ தரசனா யவனவனுலகாய்ப்‌
பிண்டமாய்‌ விரிவாய்ப்‌ புலனொடு நிலனாய்ப்‌ பிறங்கன லொலியொடு விசும்பாய்ப்‌
பண்டமா யணுவுக்‌ கணுவதா யிவரும்பருப்பத மதற்கத னுருவாய்‌
மண்டல முழுதும்‌ நிறை தரும் பொருளே மாயனே கருணை வாரிதியே–41-

கண்ணிலா னொருவன்‌ நின்னடி. நிழற் கீழ்க்‌ கடுந்தவமுஞ்ற்றியெற்‌ இருகண்‌
நண்ணிட வருளென்‌ நிறைஞ்சிட வுருக்க ணல்கிய தொளிகொடா தனைய
வண்ணனின்‌ னருள்கொ டுதவுநம்‌ மகவீண்‌ டனை யதாயு றிலெவ ணருள்வாய்‌
வண்ணமால்‌ வரைசெங்‌ கரநுதி பரித்த மாயனே கருணே வாரிதியே–42-

கண்ணகன்‌ ஞாலத்தொரு பொறியிலிமால் கருணையாற்‌ பசுங்கனி
டுண்ணு நாட்‌ சுவையில்‌ லாகிலாங்‌ கஅவுற்‌ றுளபயனெவணது சிவண கைக்கொண்
வெண்ணுதற்கரிய மாமையங்‌ குழவி யீண்டெனக்‌ களித்தையதினைய
வண்ணமுற்றிடி லென்‌ பயனதற்‌ கருள்வாய்‌ மாயனே கருணை வாரிதயே–43-

வட்டவா ௬லகத்‌ தொருபசுங்‌ கொடிபன்‌ மகவுயிர்த்தட வதிலொரு வன்
துட்டனாயிடினு மாங்கவற்‌ குறுகண்‌ டோன்றிமிக்‌ குழல்பொழு தனை நெஞ்
சொட்டுமோ கடிய வதுவியல்‌ பன்றியோதநீர்‌ வண்ண நின்‌ னடியை
யெட்டுணைப்பொழுது நயந்துள முன்னா திருந்தெனோ கருணை வாரிதியே–44-

புத்தமு தூறுங்‌ கூபமு மடவார்‌ புனிதமாங்‌ கற்பினின்‌ றகலாச்‌
சித்தமு மாலே பரமெனக்‌ கருதிச்‌ செபதப கோம கேமனமு
மத்தமும்‌ படையு மடல்கெழு புயமிக்‌ காண்மையும்‌ படைத்து நின்‌ னடி சேர்‌
பத்தர்கணிடை யூறளித்திடுங்‌ கொடிய பாகுபா டொன்று றுமதனால்–45-

இஞ்சிசூழவரை வெல்வதற்‌ கெணிநா மெதிருநில்‌ வல்லைநங்‌ கழல்‌ வாய்த்‌
தஞ்சமென்‌ றடைவ ரருள்செய வேண்டுஞ்‌ சரியல வாங்கவர்‌ செயலை
வஞ்சமா யழிவுசெய்ய வென்றுன்னி மாவுரு வெடுத்தமு தனைத்துந்‌
துஞ்சிடப்‌ பருக யாசதாய்‌ மடவார்‌ தூய கற்‌ பதனையு மழித்தே–46-

போதவோர்‌ புத்தனாயவர்‌ பக்தி போக்கி யிவ்‌ வுலகிரதமதாய்‌
ஆதவன்‌ மதியந்‌ திகிரியா யொருநான்‌ காரணம்‌ பரியதாய்ச்‌ சூதன்‌
வேதனா யரனு மெதிரியாய்‌ மேரு வில்லதாய்‌ நாணும்‌ வாசுகியாய்‌
தீதறுவாளி நீயதாய்‌ வென்ற தேவவென்‌ பிழையதிற்‌ கொடிதோ–

தனியாழி சூழ வனியாளு மெந்தை சர ராம னான பொழுதோர்‌
முனிவாலிலக்கு வனை நீ முகத்து முனிலேன்‌ முனங்குருகைபோ
யினிதாயடர்ந்த புளியாவை நின்க ணெழுவாம்பி னென்ற வுரையே
யுனிமாயனம்பொன்‌ னடிவாய்‌ கிடத்து மொளி சேய்‌ செய் வாய்மை யறைவாம்

ஆதிமால்‌ தரிசனப் படலம்‌ முற்றும்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ பார்த்தசாரதிப் பரஞ்சுடர்‌ மாலை—

May 24, 2026

ஸ்ரீ பார்த்தசாரதிப் பரஞ்சுடர்‌ மாலை

மாமாலைநீக்கியருள்‌ வண்பார்தக்தசாரஇமேற்‌
பாமாலையொன்னு பகரகெஞ்சே.-நீமாக்‌
குணவாளமாமுனிவர்‌ கொண்டாகெங்கண்‌
மணவாளமாமுனிகாள்‌ வாழ்ச்‌.2,
மாமணிமாலையுச மன்பார்த்தசாரதிமேற்‌
பாமணிமாலை பகசகெஞ்சே—கோமணிபோல்‌
வாதரர்‌ குதிட்டிமத வல்லிருடீசெல்லின்வக்௪
பூதூர்முனிவசன்முள்‌ போற்று,
புவிமாலைகத்தோர்‌ புகழ்கண்ணன்றுளிற்‌
கவிமாலைகெஞ்சேகழறச்‌–செவியாச
மாறன்புசழமுதே மாக்இவளர்மெய்ஞ்ஞான
மாறன்மலரடியே வாழ்த்து.-காப்பு,

அகரப்பொருளாயமைக்தோயனைத்தும்மர்பவனே 
உகரப்பொருளொமெல்லியங்கேணியுறைபவனே
மகசப்பொருளென்மனத்தென்றும்வாழமகழ்‌ திசல்லோர்‌
பகரப்பொருள்பெ.றம்பா ர்த்தன்றன்பாகப.ரஞ்சுடமே, (௧)
உயிர்க்குயிராயதனூனரினுதென்னுணர்பவனே
மயிர்க்குமிதோறுமருவும்பல்லண்டவகுப்பினனே
செயிர்க்குழிச்சிக்தையைச்செவ்வேதிருத்திச்சிறந்தபத்‌இப்‌
பயிர்க்குழியாப்பணிப்பாய்பார்த்தன்பாகபரஞ்சுடமே,(௨)
கித்தெவச்‌.துகிகாயகிகலமுகேர்ச்‌ அகிக்குஞ்‌
சத்தியசத்தப்பொருளேசதாகக்தத்தன்மையதாம்‌
மூத்யெதரின்முயன்முன்னமீதிமுதிர்க்கபெரும்‌
பத்தியகத்‌ அப்பயில்பார்த்தன்பாகபரஞ்சுடசே, (௩)
மறைகேட்டுவக்கின்றமாப்பாற்கடற்கண்ம௰மடந்தை
குறைகேட்டுவக்ககுணககடலேகொதயேன்குதையும்‌
இறைகேட்டருடியியற்குடக்கூத்தினெடுத்தபெரும்‌
பறைகேட்கவெற்றியபார்த்சன்றன்பாகபசஞ்சுடசே. (அ
கீரக்கடல்வக்துதேவர்கள்வாழ்த்தக்களொக்‌ வரைப்‌.
போரக்கருணைபுரிந்தேயது குலம்போக்துஇமின்‌
காரச்கருளவரு துமென்றோயென்னலிவகற்றும்‌
பாரச்சகடனினகேபார்த்தன்பாகபரஞ்சுடசே, (௫)
கழ்குணப்பூணணிதேவடகுக்கியினன்சமைக்த
சற்குணப்பிளையுசோகணிதன்வயிற்சேர்த்தவனே
முற்குணப்பாவனமூடன்மும்மோகத்தைமோ சனித்தாள்‌
பற்குனப்பேர்கொண்டபார்‌ச்சன்றன்பாகபரஞ்சடசே, 0
புண்ணியமோருருக்கொண்டன்னதேவ௫பொன்னகட்டில்‌
நண்ணியவி ரது திங்களிருக்கவகாளூகல்லோர்‌
எண்ணிபகின்னடி யேச்தித்தொழவெற்கருளிருக்கன்‌
பண்ணியலல்லிச்குளப்பார்‌ சதன்பாகபசஞ்சுடசே. (ஏ)
ஆவணிமாதமபசபக்கத்தட்டமிகிஇயிம்‌ ர
பூவணிசோகணிப்பொன்னாளிலிப்புவிபோக்துஇத்தாய்‌
தாவணியென்மனச்சஞ்‌ சலந்தீர்த்திதகைப்புலவோர்‌
பாவணிதிண்புயப்பார்த்தன்றன்பாகபசஞ்சுடசே, (௮)
ஆழிசங்கந்கமைக்கண்டஞ்சியன்னையவையொளித்தி
ஊநிமுதல்வவெனவொளிக்தாயடியேனுளமோர்‌
காழிகையேனுகின்னற்ருடொழுதுய்‌ கலமளித்தாள்‌
பாழியந்தோஞுடைப்பாரத்தன்றன்பாகபரஞ்சுடசே, (௯)
பெற்றார்தளைவிடத்தந்தைகைமீதடிப்பிச்சமன்ன
வற்றாஈதியும்வழிவிடகக்தன்மனைபு தந்தோய்‌
செற்றாகிற்செல்லல்செயுக்‌ இவினை தனைச் தீர்‌ த்தருள்வாய்‌
பற்ரார்பயங்கரபார்த்தன்றன்பாகபசஞசுடசே, (௧0)
கஞ்சகிற்கொல்பவன்வேதுளனெற்றுமியா இக்கத்‌இ
வஞசவெனவான்கரக்தபெண்மாயைவசவிடுத்தோய்‌ கெஞ்சகெடழ்க்குகெடுக்‌ துயர்நீக்ககினைத்தருள்வாய்‌
பஞ்சச.ாரனன்னபார்த்தன்றன்பாகபரஞ்சுடசே, (௧௧)
பூகனைமாய்த்தவசன்்‌்டமுடுபாலரைப்போக்தொளித்த
போதனைமுன்னம்புசக்தவபுக்இபுமுக்க9ற்கும்‌
வேதனைவியவிழைந்கருள்வேட்டவர்வேட்டனதப்‌
பாதனைபோலருள்பார்‌த்கன்றன்பாசுபசஞ்சுடசே, (௧௨)
பகாசுரன்கேசியரீட்டன்பிரலம்பன்பண்டிகின்றோன்‌
அகரசுசனாகியர்ச்செற்றோயடியனகத்‌ துறையும்‌
அகாசுரனலலலசுரனிவர்சசெற்றுள்புரிவசய்‌
பகாசகுரவைரிபின்பார்த்தன்றன்பாகபரஞ சுடரே, டு இணைமருகாசவெனவிட்டசாவமியககரற
அணையுசலோடுமணைக்கம்புயவடி யாலனித்தாய்‌ கணை யெனககாய்ச்‌ துகவற்றுஙகையாற்றைக்கடிக்சருள்வாய்‌
பணைவளவல்லிக்குளப்பார்க்கன்பாகபசஞ்சுடமே, (௧௪)
முஞ்சாரணியமுதிர்‌ தீத்திளுண்டுமுன்னிறைாயோ
டஞ்சாயரையுமஞஷசேன்மினென்மேம்பியவையபொறிப்‌
பஞ்சாகுலங்களும்பாறப்பணித்தருள்பற்தலர்ககுப்‌
பஞ்சானனமன்னபார்தசன்றன்பாகபரஞ்சுடசே, (௧௫)
மடப்பிடியாயர்மடச்தையர்வத்திரம்வவ்வீமுன்னர்க்‌
கடப்பினிலேறிய துகற்கதிபெறக்கண்டவனே
கடப்பரிதாமென்சருக்கட ல்வற்றக்கடைக்கணித்கான்‌
படப்பையசாவணையாய்பாரத்தன்பாகபரஞ்சுடமே, (௧௬)
கரட்டுவன்மியைக்கணத்தினுண்டாயரைக்காத்தவனே
சூட்டுவன்னாகத்‌ இின்மீது டித்த துணையடியாய்‌'
வாட்டுமென்‌ சன்மவருக்கமொழித்தருள்‌மாமலைகற்‌
பாட்டுமன்னல்லிக குளப்பார்த்தன்பாகபசஞ்சுடசே, (௧௪)
ரீண்வெளர்க்கவரையேழ்‌னமானிரைபுசப்பான்‌
பூண்டுகின்முயைமபொடலிவெல்லுமாற்றைப்புரிக்‌ சருள்வாய
மாண்டுறுமைக்தனைத்தக்கணையாய்மறையோத்களித்தாய்‌
பாண்டுபயக்தருளபார்த்தன்தன்பாகபசஞ்சுட.சே, (௧௮)
ஈந்தனைக்கொண்டோரசுரன்புனற்றெகாட்டினுய்க்க
மூக்கனையோனைக்கொணர்க்தோயிம்மூடனுமுத்தபெறச்‌
சிக்கனைசெய்இதிருவல்லிககேணியசேர்க்‌தவன்பர்‌
பக்தனைதர்ப்பவபா ஈத்‌ சன்றன்பாகபரஞ்சுடசே, (௧௯)
கோவமொடாயரைவவ்வியவிஞ்சையக்கோளசவின்‌
சாவமொருவிட த்தைவக்கதாட்‌டாமரைத்தலைவ
சாவமொழியிம்சவட்டுக்துபரை த்‌. நணத்‌்இயன்பர்‌
பாவமொழிப்பவபார்த்தன்றன்பாகபர ஞ்சுடசே, (௨௦)
வர்கனஞ்செய்யாதிகழ்காழியனைவதைகத்துமணச்‌
சர்கனக்கக்தவக்கூனிசகுச்சக்கத்தனுவளித்தோய்‌
உக்தனலேழுமு௮வலொரீஇயென்னுளத்தைகின்பாற்‌
பந்தனஞ்செய்தருள்பார்‌த்தன்றன்பாகபரஞ்சுடசே, (௨௧)
கஞ்சனும்விட்டகளினுங்களிற்றைக்கடவிவக்த
வஞ்சனுமல்லருமவானுறச்செய்தவவல்வினையேன்‌
கெஞ்சகெ கிழ்வுற்றுகினனைகினைக்ககினைத்தருள்வாய்‌
பஞ்சவர்‌ தூதுவபார்ததன்றன்பாகபரஞ்சுடசே, (௨௨)
சச.தர்சேர்செருள்சேசக்குரூரனச்‌இல்‌.து விலுக்‌ கே ரகன்‌ மீஜுந்தெரியகின்றோயென்திருககதுத்தாள்‌
கீரகமூருமபொழிலல்லிக்கேணிகிகழமலா
பாசகபண்டனப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே,
மாத்துப்பிசழியாமத்திமமத்திமமன்னியங்கை
கோக்துப்பரகக்குரவைசெய்தோ யென்குறைமுடித்தாள்‌
ஒக்துப்பயிலல்லிக்கேணியுறைபவவுத்றவர்க்குப்‌
பாத்துப்பருகிடும்பார்ததன்றன்பாகபரஞ்சுடசே,
சேணியன்றக்தபொற்சேலையடுத்துகற்செல்வகல்ல
வாணியவறத்குவழங்குங்கருணைமகோததியான்‌
பூணியறுன்பமபொ ருக்கெனப்போகப்புரிஇவல்விற்‌
பாணியனாகியபார்த்தன்றன்பாகபசஞ்சுடசே, (௨௫)
மணவா சிகைஈல்குமா ச்சுசன்மாமீமலர்க்க ணிதிஇக்‌ குணவாளகின்குலம்வாழ்சவென்றுசகொ?த்தவனே தணவாதவென்சன்மசாகசம்வற்றக்தயைபுரிவாய்‌
, பணவாளரசாப்பகைப்பார்த்தன்றன்பாகபசஞ்சுடசே, ()
அருத்தியொடுக்கரசேகற்கணிமகுடங்கவிப்பான்‌
மருத்இனைக்கொண்டுசுகன்மையைமண்மிசைலைத்தவனே
விருத்தியடையென்வினைதக்துயர்வீயவிழைக்தருள்வாய்‌
பருத்திவர் கோளுைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடசே. ()
காலயவனற்கடிவான்முசுகுக்தற்கண்ட வற்குக்‌
காலவினையொன்றுமில்லாக்கதிதக்தகற்பகமே
தலமி?மென்னுறுவலொழித்தியுயர்மகவான்‌
பாலனெனப்படும்பார்த்தன்றன்பாகபசஞ்சுடபே, (௨௮) குண்டினமாபுரகங்கையுருப்பிணியைக்கொணர்க்து
வண்டினமார்காத்துவரைப்பதியில்வ துவைசெய்தோய்‌
தொண்டினனெஞ்சத்துயர்துடைச்காள்்‌சுடசாழிசொட்டுப்‌
பண்டனனைப்புதைத்தாய்பார்ச்தன்பாகபசஞ்சுடசே. ()
அம்பசமீதிலசெனெனக்கொண்டமுக்தியவச்‌
சம்பசனைப்பிசத்யும்கனைக்கொண்டுச இத்தவனே
அம்பரமென்னவகை ஐயர்‌ ஈர்த்கியடற்சிலைசேர்‌
பம்பரமொய்ம்புடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடசே, ()
சாம்பவனோடமர்செய்சவன்வாழ்த்‌ து ககைமணியஞ்‌
சாம்பவதியுமவன்றசக்கொண்டசகார்த்தனனே
இம்பரினென்னைக்கெறுக்‌வினையைச்செகுத்தருள்வாய
பாம்பரிவைப்பதியாம்பார்‌த்தன்பாகபசஞ்சுடசே, (௯௧)
கத்தியமாமணிசத்சா௫ித்‌ துக்கன்பினல்‌இயவன்‌
சத்தியபாமாமணி கரக்கைப்பற்றுக்கக்துவவென்‌ கத்‌ தியலையுமனகிலைகிற்கத்தயைபுரிவாய்‌
பத்தியமைந்தோர்க்கருள்பார்தகன்பாகபரஞ்சுடசே. 0
ச.சநினைப்பெறவெண்ணியமுனை த்தடங்கரைக்கண்‌
விரதமியற்தியகாளிக்திதேவியைவேட்டவனே
வசதஙகினைமனம்வைத்துவழுத்தியுய்வண்ணஞ்செய்வாய்‌
பசதகுலோக்துக்கப்பராத்தன்றன்பாகபசஞ்சுடசே. சத்திரமாருமவக்இிக்றையவன்செல்வியெனும்‌
மிச்சாவிரசையைதக்கேரிற்கொணாொதக்‌ தவேட்டவனே
குத்திரமாரென்கொடுவினை சக்கு நித்தருள்வாய்‌
பத்திரவில்வண்மைப்பார்‌த்தன்றன்பாகபரஞ்சுடமே.(௩௪)
குண்டைகளோரேம்‌. கழமுவியயோத்தியர்கோன்மகளாங்‌
கெண்டைவிழிச்சத்தியைமணஞ்செய்தருள்கேசவனே
தண்டையணியுகின்றுடொழுதுய்யத்சயைபுரிவாய்‌
பண்டைமறைபுகழ்பார்க்சன்றன்பாகபரஞ்சுடசே, (உட)
சர்ச்தபெறுகேசுயர்கோன்பயந்தளிமொழிர்ப்‌
பூர்த்திபெறும்பத்திரைமா தைமன்றல்புரிக்கவனே
ஆர்த்தியடியனையார்த்தவசக்இனடியறுத்தாள்‌
பார்த்திவர்போற்றிரம்பார்த்தன்றன்பாகபசஞ்சுடசே, ()
நீர்கெழுமாவளமக்‌்இசதேயகிருபனருள்‌
வார்கெழுகொங்கையிலக்குமணைேயைமணக்தவகின்‌
சர்கெழுசேவடிசிக்தைவைத்தேத்துந்திறனளித்தாள்‌
'பார்கெழுூர்த்தியபார்த்தன்றன்பாகபரஞ்சுடசே, (௩௭)
அரணாறழித்தடலாரீஈரகன்பதியண்மிவிட்ட முரணான தண்டைமுதித்துமுசனைமுனிக்சவனே
சரணாககனென்ற௪சன்மவிடாயைத்கணித கருணற்‌
டணாயதவுசப்பார்‌.த்தன்றன்பாகபரஞ்சுடசே, (௩௮)
மத்தத துயர்கரசுற்செற்றவன்றன்மதலைபக
தத்தற்குச்தாமமுடிதரித்தாய்சரண்சார்தமியன்‌
சித்தக்திருக்துஇனக்‌இனகின்திருச்சேவைகக்தாள்‌
பத்தர்க்கெளியவபார்த்தன்‌்றன்பாகபச்ஞ்சுடசே, (௨௯)
மணப்பாரிசாதங்கொணர்க்துமகிகட்டுமாவருணன்‌
வணப்பாற்குடையுமஇதி.தழையும்வழங்கியவா
கணப்பாதகத்மைக்கழித்தாளனின்‌௧டன்காளியன்றன்‌
பணப்பானடித்தவபார்க்தன்றன்‌ பாசபரஞ்சுடசே. (௪௦)
சொன்னயமார்பதினாருயிரக்தொகைத்தோகையரை
அன்னவெண்பெற்றவுருக்கொடுவேட்டருளச்சு தனேஇன்னலிரிச்தென்மனநினையெண்ணவிசைத்தருள்வாய்‌
பன்ன மக்கொடிப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடசே, (௪௧)
மருமணிக்கூக்தலம்மாணிமையார் தம்மனைதொறும்புக்‌
கருமணிக்கண்கண்டோஓருமுனிசாரதனேன்௮ுகொழும்‌
கருமணிவண்ணகடையனைக்காத்திகவுத்‌துவப்பேர்ப்‌
பருமணிமார்பத்தபார்த்தன்றன்பாகபசஞ்சுடசே. (௪௨)
வயங்செழுவாகுவுவாணனைவென்றவன்மாமகளை
ழூயங்கவகிருத்‌ தூர்‌ தீ இக்கருளியமுன்னவனே
மயங்கமதிதருமாயையைமாற்றுதிமாற்றலர்க்குப்‌
பயங்கரனாஇயெபார்த்தன்றன்பாகபசஞ்சுடசே. (௪௯) ஈதிபதிகாகனரலைக்கண்வவ்வியகல்லிடத்தை
விஇபதிவிண்ணோர்வியன்புனைவற்கொண்டுவேய்சிக.7
மதிபதிமாடச்‌.அுவரைப்பதிசெய்அுமன்னியதிற்‌
பதிபதியேயெனையாள்பா ர்ச்தன்பாகபரஞ்சுடசே. (௪௪)
இயெசராசந்தனைச்செகுவித்தவன்‌ சேட்சிறையின்‌
மேயசசாசன வேக்தர்களேகவிடைகொடுத்தோய்‌
ஆயசராமரணா தஇிகணீச்கியடயனையாள்‌பாயச.சாசரரத்தாய்பார்‌ தசன்பாகபரஞ்சுடசே, (௪௫)
வைவளர்வேலைவர்செய்சாயசூபமகமுகத்துக்‌
கைவளரசக்கிரபூசனைகொண்ட ருள்சா ர்வணனே
மைவளாரொன்மனமாயையைமாய்‌த்தருள்வாரிதியித்‌
பைவளர்பாம்பணையாய்பார்த்தன்பாகபரஞ்சுடசே, (௪௬) மாசுபசசொலுவனைவிமானத்தைமா௮ரத்தைத்‌
தேசுபதிதிண்ணசரைச்‌ செயிர்ச்துச்சிசைத்தவனே
ஆசுபதியென்னகவககீக்‌ இயருளசன்பாற்‌
பாசுபதம்பெற்றபார்‌த்தன்றன்பாகபசஞ்சுடமே. (௪௪)
அண்டர்களேத்‌தகின்னம்புயத்தாள்களிலன்புடனின்‌
ஜரொண்ட ர்க டொண்டனள்சொலுமுறைகேட்டென்‌ அயர்‌ துடைத்தான்‌
சண்டகரக்தக்கவக்சணுக்தமபியுஞ்சாய்க்தொ ழியப்‌
பண்டமர்செய்தவபார்த்தன்றன்பாகபசஞ்சுடசே. (௪௮) இச்சைச்சுடுகஞ்சிலஞ்சியினைவர்க௫ ற தியின்றி
மிச்சைசசுயோ கனன்‌ விட்டவெச௱கூவியைவெல்வி, கொச்சைசசிகியற்குவிககொண்டுகாம்‌இகுலவடியர்‌
பச்சைசசுரகருவேபார்த்‌ ச்ன்பசகபசஞ்சுடசே, ௪)
பரித்‌.சாமன்விட்டபகழியினுத்‌. ரை பண்டிகன்‌ ஆட்‌
கரித்தா மமானகருவுககுயிர தக்ககாற்கமலா
எரித்தாமமென்னவெரிம்‌ துமென்னின்னலிரித்தருள்வாய்‌ பரித்தாமக்குக்கெபார்த்தன்றன்பாசபசஞ்சுடரே, (௬௫)
கொண்டு செயாவகைதொல்லை வினைப்பயன்‌ தூண்டவக்து
மண்டுமனத்துபம்மாற்றிடுவாயமறைவே கியறகு
விண்டுமுன்மீளாப்பதம்புககமைக்‌கசைமீட்டுவக் து
பண்டுகொடுத்‌ அவபார்த்கன்றன்பாசபரஞசுடசே. (௪௬)
அச்‌.௮க9 டுக்கவ்வறிஞர்குசேலரவலமன்று
சிக்தமூழ்க்‌ த ருவெட்டுகலடய ்பாளே
கித்தகினைகினைவித்துன்மலர்ப்பதரீழலவைப்பாய்‌
பக்தகவெனப்படும்பசாத்தன்றன்பாகபரஞ்சுடசே, (௬௪)
பார்ப்பார்கஞ்சாவத்‌இற்பச்சோஃ தி பா௫ியோர்பாழ்வ்ணெ ந்தின்‌
நீர்ப்பானில வுகிரு குகாருள்செய்கரினமலனே
போர்ப்பாலதுன்‌ பினைப்போக்இியரு பார்ப்பாற்படைத்தவனாம்பார்த்த ளு திபொற்புகழைப்‌
ன்பாகபசஞ்சுட செ. ()
வராதீனமென்னடியா ர்ககென்ற வகிக்கர்வாழ்வைகுக்க
புரா. னர்ச்காககும்பு ௧0 *ட்டருவேமணப்பூங்கமலக்‌
கசாதீனனெண்ணங்கைகூட்டுஇயுள்ள வ்கசயும்பத்த
ப.ரா.தீனனானவபா ர்த்தன்றன்பாசுபரஞ்சு டசே,
விதிகிலைபெற்றகின்‌வே சகெறியைவிழைக்கொழுகா
மதிகிலை பெற்றவிம்ம ண்ணைபடியனின்‌, மா மலர்தசான்‌
கஇிகிலையென்றடைக்தேன கா ப.இகிலையான வபர ர்‌ தன்றன்‌ கநனெககட வளர்க்கும்‌.
பாகபரஞ்சுடசே, (௪?)
உன்னியுமேத்இயுமுன்றாள்‌ வணங்‌ கயுமோவவின்றித்‌
அன்னியதுக்கமு க்தேச லாததுணுக்குக்தெொ டர்ந்தெனுழி மன்னியகாசணமாக்‌ைசொன்மலர்வாய்திறக்து
பன்னியருளுஇபா ர்‌்த்கன்றன்பாகபரஞ்சுடரே, (௪௮)
ஒருகானின்னாமமுரைக்கற்பவங்களொழியுமென
அருகாமறை-ஃளனந்தீமுங்கூறுமல்லுமபகலும்‌
உருகாகின்னாமமுரைத்துமவையொழியாவிதமென்‌
பருகாரறு தனையாய்பார்த்தன்பாகயரஞ்சுடசே, (௪௨)
எண்ணேயுகெய்யெனவெப்பொருட்சண்ணுமிருப்பவனே
கண்ணேகருணைச்கடலேகீயென்னுளக்கண்‌ணிலையோ
உண்ணோர்‌ ந்தொறுக்கு வத்‌ குழா ந தனையோர்டு இலையோ
பண்ணேபண்ணின்சுவையயேபார்த்தன்பாகபரஞ்சுடசே,.(0
ஆற்றுந்துபரளித்தாணிற்கறமா மடைமழையோல்‌
ஊற்றுக்‌ துயரமொனுக்கின்றதென்னை யுறமெலிக்சேன்‌
போற்னுச்‌ சமியனைபபோர்‌.மியர௬டி.பொருக்தலரைப்‌
பரத்றுந்திறழலுடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடமே. (௪௪)
எற்௮ுக்துயர்செய்தொறுத்தலெவர்க்கு மினிமையசே
மற்ற௮ுக்தவறன்றவரவர்க்கேற்பன வாய்க்‌ துசெயல்‌
மூற்றுக்ககுவ_துமூவாமுகல்வமுத்று ந்‌ துறந்தோர்‌
பற்றும்பதயுகபார்‌ த்கன்றன்பாகபரஞ்சுடசே. (௭௫)-
எல்லசமூணர்பவயாவுமுறைபவயசவுஞ்‌ செய்ய
வல்லாய்கினக்கென்வருத்தம்வரைக்திடல்வண்‌ மையன்ோ
அல்லாவிடினின்கிருவருட்கஃ்திலக்கான தன்றோ
பல்லாசமார்பொளிர்பார்க்தன்றன்பாகபரஞ்சுடசே. (௪௬)
பிரமமெனப்படும்பேரின்பச ரகரப்பேசகல்ல
௪சரமகெதறிசார்பவர்க்கருளும்பரக்‌தா மவென்றன்‌
சரமமதறும்பசல்சே ய்த்தண்மைத்தென்றுதெரியகலேன்‌
ப. சமதயா நிதியேபார்த்தன்பாகபசஞ்சுடசே, (௪௪)
வெய்யஇன்வெய்கென்வினையத,தன்னால்‌ விளைபயனை
கொய்யரிஜெய்யவனோத்ககிலேனின்‌தனோன்சழல்சேர்‌
செய்யவடயடைக்தேன்திருவுளளச்செயலெனையேோ பையசபைபன்வியசய்பா சத்தன்பசகபரஞ்சுடசே, (௪௮)
ஏ.கனெளவுமகேகனெனவுமிலங்சமலா
மூகனெனத்துயர்மூழ்குமென்னெண்ணமுடித்தருள்வாய்‌
ஊகனெனவாகினாமீட்டற்கூக்கெயவுத்தச ன்றேர்ப்‌
பாகனெனவந்தபார்த்தன்றன்‌பாகபரஞ்சுடசே, (௪௯)
எத்கனைகாலுமிடைவீடிலாமலிடரொனும்பேர்க்‌
கொத்கனைத்துங்குடிகொண்டுக மைக்சக்குழைக்துகிற்குஞ்‌
சித்தனைவேறோர்களைகணிலாத9றுவனையிப்‌
பததனையாளுஇபார்த்தன்றன்பாகபரஞ்சுடசே, (௮0)
இக்கியலா இயதேவாதிதேவவென்தநீயமனப்‌
பொக்கியல்போக்ஒப்பு கல்புகுவித்‌ துப்புலைப்பிறவி
சிக்கியவென்னைச்திதிச்தருள்வேதத்திருவுருவப்‌
பக்ஒயம்பாக கற்பார்க்தன்றன்பாகபரஞ்சுடசே, (௮௧)
முழுவக்களாத்‌்துணைபம்.நியகுூட ரின்மூடனென்மிஒ,
புழுவக்இிற்புல்லியன்பொல்ல. வொழுகசன்டொக்கவொணா
வழுவர்‌,சமில்லவனேனும்பொறுத்தென்றன்வல்வினையாம்‌
பழுவக்கனைப்பறிக்காள்பார்த்தன்பா கபரஞ்சுடசே. (௮௨)
இயல்கு தணையியங்காத்தணையென்னுமிருவகையா
யுயங்குமுமிர்களினாயேனொருவனுணர்வவிக்து
மயங்கு புசெய்‌சமறடிக்கியென்றுமலிபிறவிப்‌
பயங்குடிபோகப்பணிபார்த்தன்பாகபரஞ்சுடசே,
கடைப்படுமிவ்விளையாட்‌ டவிபூ௫ெடிப்பவருட்‌
கடைப்படுவேனிழ்கடைப்பிடித்‌ தய்ய்க்க டைக்கணித்தாள்‌
துடைப்பவகொன்றுதொடர்ந்தவினை யின்றொடர்புகொண்டு
படைப்பவகரப்பவபார்த்தன்‌உன்பாகபரஞ்சுடரே. (௮௪)
உடை யவனீயிவ்விபூதிமிரண்டையுமோர்க்து கிளை
அடைய யேற்கு நினக்குமுறவினமைதியுண்டு
கடையறத்தாங்குக்கட னினதாகுக்தயம்‌இடுமைம்‌ படையமர்காற்புயபா ச்த்தன்றன்பாகபரஞ்சுடசே. (௮௫) விரிபவகோய்க்குமருக்கேயக்கோயைவிளு விதையை
அரிபவனேயம்புயாகனவக்கணனாயிரங்கண்‌
அரிபவ னதியர்க்கும்மரியாயென்னகத்‌ அயரும்‌
பரிபவமுக்துடைத்தாள்பார்‌க்தன்பாகபரஞ்சுடசே.(௮௯)
அரிகேர்மறையுமறியவென்ருய்க்தோரறையமலா
அரிதேர்மலர்ப்பொழிலல்லிக்குளத்‌ தவராக்கவர்க்‌
கெரிதேரைதன்னிலைகேர்க்தேனைக்காத்‌இகெருப்பிறைபாழ்‌
பரிதேர்முதற்பெற்றபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே, (௮௪)
ஈண்டியவெவ்வினையால்வக்இகல்செயிடரிரிப்பான்‌
வேண்டியகல்குகின்ருளடைக்தேனிடர்வேலைகனைச்‌
காண்டியடியனந்தாமமடையத்தயைபுரிவாய்‌
பாண்டியன்பெண்கொண்டபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே.
வட்டப்பசவையின்வற்றா துகாளும்வளருமென்றன்‌
துட்டப்பவப்பிணிதொட்டுக்கவற்றமொலைக்கருள்வாய்‌
சட்டப்படித்துட்டரைச்செற்றுமும்மைச்சகக்‌ அம்வெற்றிப்‌
பட்டப்பெயர்கொண்டபார்திதன்றன்பாகபசஞ்சுடரோ, ()
சத்தியஞ்சத்தியஞ்சத்தியநின்றாட்சசணடைந்தேன்‌
அத்தியலையிற்றடிமாறுளத்தைகின்றாண்மலரின்‌
மெத்தியவன்புடன்மேவவருள்‌ செய்வியன்மனையின்‌
பத்தியவல்லிக்குளப்பார்‌ ச்கன்பாகப.ரஞ்சுடரசே. (௯0)
வெம்பிவெருட்டும்பவவீஸா,காண்டிடவேண்டிகின்றாள்‌
அம்பியையன்னையுருப்பிணிகங்சைமுன்னாய்ர்‌ துபற்றி
கம்பியுளவென்னடலையைநீக்குதிகாண்மலர்க்காப்‌
பம்பியவல்லிக்குளப்பார்த்தன்பாகபரஞ்சுடரே, (௯௧)
கருப்பதநீக்கிக்கனிவோரைக்காக்தருள்கண்ணகரி
மருப்பகஞ்செய்‌தவவென்முயுருப்பிணிமங்கைமான்னின்‌
இருப்பசஞ்சேர்கஅபுகல்புகுக்கேனென்கிருக்கறுத்தாள்‌
பருப்பதகற்குடையாய்பார்த்சன்பாகபாஞ்சுடசே. (௯௨)
ச.ரணாகதியின்றருமமறிக்‌ ததலைவரின்றுள்‌
அ.ரணாககம்பியுறுப்பிணிகங்கையென்னன்னைஞுன்முக்‌
கரணாகவமற்றடைச்சேனருள்செய்கவுத்‌துவவா
ப.சணாகதாத பார்‌ த்தன்றன்பாகபரஞ்சுடரே, (௯௩)
உவசோகஞாலத்தொருஅணையில்லாவுனதடியேன்‌
இவசோதிமகடையன்னையுருப்பிணியிர்‌ கிரைமுன்‌
சவசோகைகொண்டுதொழுக்காண்டைக்சேன்றயைபுரிதி
பவசோகபண்டிதபார்க்தன்றன்பாகபாஞ்சுடரோ, (௯௪) முன்னவ$£முன்னின்ழுழ்ருவினையில்லைமொய்த்துவனா
மன்னவகின்றாளூருப்பிணித்தாய்முன்மறைபுகுக்தேன்‌
என்னவமானமுமேக்கமுகீக்கயென்னெண்ணமொன்றும்‌
பன்னவமாகாகருள்பார்த்தன்பாகபரஞ்சுடரே, (௯௫)
கசாமுகஞ்செற்றுக்களிரொன்றுகாத்தருள்கண்ணநின்றுள்‌
குசாமுகப்பூங்குழலென்றாயுருப்பிணிக்கோதைமுன்னிச்‌
சீ சாமுகத்தேசரண்சார்ந்கேனெனதுசனிமனுவைப்‌
பராமுகஞ்செய்யாதருள்பார்த்தன்பாகபரஞ்சுடசே, ()
செங்கயல்வாவியல்லிக்கு எச்செல்வநின்‌சேவடியிற்‌
திங்கள்வதனவுருப்பிணித்தாய்முன்னர்ச்டிக்தையன்பு
பொங்கவடைக்கலம்புக்கனனென்னைப்புரக்தருள்வாய்‌
பங்கயனேத்தும்பகபார்‌.த்தன்பாகபரஞ்சு டே.
நீசாவல்லிக்குளகாதாநின்றாவினிலை சகம்‌
மாதாவுருப்பிணிஈங்கைககியாமறைபுகுக்தேன்‌
தாகாவென்சன்மந்த விர்த் தருள்வாய்‌ சண்ணக்தாமரைப்பூப்‌
பாதாபஞ்சாயுதபார்ச்சன்றன்பாகபரஞ்சுடரே, (௯௮)
கலதேவூகயந்தனதாயுருப்பிணிகங்கைமுன்னர்ப்‌
பலசேவர்போற்றுன்பதஞ்சரண்புக்கனன்பத்தர்தங்கள்‌
குலதேவவென்னைகினதடியார்குழுக்கூட்டுவிப்பாய்‌
பலசேவன்பின்னவபார்‌ச்சன்றன்பாகபசஞ்சடசோ, (௯௯)
தேவவிபூ டணதேவகிதேவிசிறுவபவகத்‌
காவவிபாவரிச்சார்பைத்தணக்கச்சமைக்ககதர்த்‌
இவவிபாகரநின்னடி யார்பணிச்செல்வந்தக்தாள்‌
பாவவிமோசனபார்ச்தன்றன்பாகபரஞ்சுடரே. (௧0௦)
வாழியல்லிக்குளம்வாழியருச்சுனன்‌மாவலவன்‌
வாழியனக்சவலாயுதன்வாழியருப்பிணித்தாய்‌
வாழிகஈஞ்சாத்தகியாம்வான்பிரக்யும்சவண்பெயசோன்‌
வாழியநிருத்தவள்ளலெஞ்ஞான்று மிவ்வையகதக்தே, கயற்பெயர்செய்புடைசூழல்லிக்கேணிக்கடிஈகர்வாழ்‌
மயற்பெயர்சகையுரைகத்தாற்கு சூறுசொன்மாலையென்றும்‌
அயற்பெயர்ச்தேவறியாப்பள்ளிகொண்டா னெ
இயற்பெயரானம்மெதிசாசதாசனியற்தினனே,

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வீரகேரளம்புதூர்-ஸ்ரீ நவநீதகிருட்டிணன் கலம்பகம்–ஸ்ரீ புலவர் கோமான் தண்டபாணி ஸ்வாமிகள்–

May 24, 2026

தண்ணார் தமிழ் வளர்க்கும் தனிப் புகழாளர் பலர் தோன்றிய திருநெல்வேலிச் சீமையில், தென்காசிக் கருகில் அமைத்த வீர கேரளம் புதூரில் குடிக் கொண்ட நவநீத கிருட்டிணப் பெருமாளைக் கலம்பக
இலக்கியத்தாற் புலவர் கோமான் தண்டபாணி சுவாமிகள் வனப்புறப் பாடி மகிழ்கிறார்-ுமார்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற இம் மூலநூல் இப்பொழுதுதான் உரையுடன் வெளிவருகின்றது.

ஸ்ரீ திருவரங்க திருவாயிரம் -ஸ்ரீ திருமால் ஆயிரம் -போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்-இவர் திருமால் மீது ஈடுபாடு கொண்டு பாடிய பாடல்கள் பலவாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது திருஎழுகூற்றிருக்கை, திருவரங்கன் பேரில் திருவரங்கத் திருவாயிரம், திருவயிந்திரபுரம் பெருமாள் பதிகம் திருவனந்தபுரம் யமக அந்தாதி, திருக்கண்ணபுரம் பெருமாள் பதிகம். விஷ்ணுபுரம் ஒருபது கூற்றிருக்கை, அரி ஏகபாதத்தந் தாதி, திருமாலந்தாதி, திருமகளந்தாதி எனப் பல அரிய இலக்கியங்களை இவர் படைத்தளித்துள்ளார். இவையேயன்றி திருமால் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்கு எழுந் தருளியுள்ள பெருமாள், இலக்குமி, அனுமார் ஆகியோர் பெயரில் பதிகம், திருப்புகழ், வெண்பா, அந்தாதி, வகுப்பு போன்றவற்றையும் பாடியுள்ளார்.

மண்ணினிற் பிறந்த பயன் மிகப் பெற்றே மதி யுடன் வாழ்ந்திடற் காக
வண்ண நற் றமிழில் எண்ணரு பனுவல் வழங்கிய தண்டணி சாமி
கண்ணனைப் போற்றிக் கழறிய வீரைக் கலம்பக நூற்குரை வகுத்து,
கண்ணினைக் கருத்தைக் கவர்ந்திடு மாறு கவின் மிகு புத்தகம் பதித்தான்
–எழுசீர் ஆசிரிய விருத்தம்-சிறப்புப் பாயிரம் –

அன்னவன் யாரோ என்றிடிற் புகழ்வேன். அறிவுசால் கலைபல வல்லோன்;
என்னவன் என்றே நல்லவர் நாடும் இனியநற் பண்புள சீலன்;
முன்னமும் பலவா முத்தமிழ் நூல்கள் முறையுடன் பதித்தவன்; நாளும்
பொன்னவிர் வேலூர் மாதவன் என்னப் புகழ்நிலை பெற்றவன் தானே.

கலம்பகப் பாக்கள் கருதிய பொருளைக் கற்பவர் எளிதினில் உணர்ந்தே
நலம்பெற, சீர்த்த உரையினைத் தருங்கால் நயமொடு தக்கமேற் கோள்கள்
நிலம்புகழ் நாலா யிரத்தினிற் காட்டி நெஞ்சினில் நிலைக்கவைத் திட்டான்-
வலம்படை ஐந்து வயங்கெழிற் பாணி- மாலருள் பெற்றுவா ழியவே!

திவ்வியப் பிரபந்தத்தின் திருப்பள்ளியெழுச்சியில் ‘கலம்பகம் புனைந்த விலங்கலத்தொடையல்’ எனும் தொடர் இச் சொல்லின் முதல் ஆட்சியைத் தருகின்றது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இவ்வாட்சி, பல்வகை மலரும் கலந்து தொடுக்கப்பட்ட மலர்மாலையைச் குறித்தலால், கலவை எனும் அடிப்படைப் பொருண்மையின் சார்புடன் கலம்பகம் அமைந்தமை விளங்கும்.-தமிழில் முதன்முதலாக வைணவக் கடவுள்மீது எழுந்த முதற்கலம்பகம் திருவரங்கக் கலம்பகமே.-ி.பி.17ஆம் நூற்றாண்டில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய இலக்கலம்பகத்தின் தொடர்ச்சியாகத் தமிழில் பல கவம்பசு நூல்கள்
எழுந்துள்ளன.

சமய நூல்களைக் கற்குமிடத்து நம்மாழ் வாரின் திருவாய்மொழியின் சிறப்பைப் படித்தறிந்த பின்பே வைணவ சமயத்தின் பெருமையை உணர்ந்தார் எனக் கூறுவர் .
இவருடைய குருபர தத்துவம் என்னும் நூலில் இருபத்து நான்காம் சருக்கமாகிய விட்டுணு தரிசனச் சருக்கத்தில் இதை இவரே கூறக் காணலாம்.
விண்டு தூடணைக் கொடியரில் ஒருவனா விளங்கிய எனை அன்னோன்
பண்டு செய்தவப் பயனகொடோ அல்லது பழுதில்தன் ணருளாலோ
தொண்டு செய்பவர் அடியவர்க் காளெனும் துணிவுடைக் குருகூரான்
கண்டு கூறிய தமிழ்மறைப் பொருள்கொடு களிப்புறப் புரிந்தானே.
(1)எனத் திருவாய்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறித் திருமால் வடிவமே செப்பும் எத் தெய்வமும் எனத்தாம் தெளிவுற்றதையும் பின் வருமாறு கூறுகின்றார்-
சேய வார்சடைச் சிவனென, அயனெத் தேவர்கோன் எனமற்றும்
ஆய பல்பொரு ளெனத்திரு மால்உறும் அதிரக சியந்தன்னைத்
தூய சீர்ச்சடகோபன் முன் வெளிப்படச் சொல்லியும்.துயரெய்தித்
தீயர் பால்இது பரம்அது பரம்எனச் செயும் சமர்க் கிசையேனே. (
3) என்னும் பாடலால் தம்முடைய மனத் தெளிவைப் புலப்படுத்துகிறார். காக்கும் கடவுளாகிய திருமாலே வாழ்நாளில் பரம் என்பதைத் தாம் உணர்ந்தவாறு தெளிவு படுத்துகின்றார்.

வியாச மா முனி சங்கர மா முனி ஆகிய மேலோரும்
தயா நிதித் திரு மால்பதம் போற்றிய சாத்தியம் தெரிந்து அப்பாற்
கயானனற் தொழும் ஒளவை சொல்லிய விதி கண்டு, நாரணற்கன்பு
செயார்கள் வீடு பெற்றுய்ந்திடா ரென மிகச் செப்பிடத் துணிந்தேனே. (8)

நவநீதகிருட்டிணன் கலம்பகம் காப்புச் செய்யுள் இரண்டு,-அவையடக்கம் ஒன்று, நூல் 100 பாடல்கள், நூற்பயன் ஒரு பாடல் ஆக மொத்தம் 104 செய்யுட்களானியன்றது. நூல், ‘திருமகள் பூமகளொடு’ எனத்தொடங்கி அந்தாதித் தொடை பெற்று நடந்து இறுதிப்பாடல் ‘திருமாலே’ என மண்டலித்து
முற்றுப்பெறுகிறது. இது பொருள்தொடர் நிலைச் செய்யுள், சொல்தொடர் நிலைச் செய்யுள் என்னும் இரு வகைகளில் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
-இந்நூலில், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களும் பாவினங்களுமாக முப்பத்தைந்திற்கும் மேற் பட்ட தமிழ் யாப்பு வகைகள் இடம்பெற்றுள்ளன.

நந்தமிழ் நாட்டின் ஒண்முகமே போன்று ஒருக்கால் உற்றார்க்கும் தீவினை தீர்த்து ஒழுகு புனற் பெயருக்கு ஓவாச் சிற்றாற்றின் வட பாலில் திகழ் வீரை நகர் என முதற்பாடலிலேயே இத்தலத்தின் இருப்பிடத்தை விவரிக்கும் ஆசிரியர், இத்தலத்தின் இயற்கை எழிற்சிறப்பைப் பலபடப் பாராட்டுவர்.

இத்தலத் திறைவனாம் கண்ணபிரானின் திருப் பெயர்களை ஆசிரியர் பலவாறு எடுத்துரைக்கின்றார். எடுத்துக் காட்டாக, அஞ்சனன்-26.
அச்சுதநாதன்- 100,
அட்டாக்கரன்- 5, 63,
அண்டர் நண்பன்- 26,
அப்பன் – 50,
அம்மான்-94.
ஆதிமால்- 26.
எம்பெருமான்கா. 3, 20.
ஐயன்- 50.
ஒய்யாரன்-39,
கண்ண பிரான்-75,82,
கண்ணன்- கா. 1,18, 28, 30, 33. 54, 55,56,
67, 69, 84,
கரியவன்- 53.
கள்ளன்-29,
காகுத்தன்-55,
கிட்டிணன்-63,
கிரி-69.
குழகன்- 88,
கொண்டல்-23,

கோபாலன்-6,
சீதரன்- 12,
சீலன் 69,
சூதன்-19,25,
ஞானகுருபரன்- 16,
திருமால்-24, 45, 100,
தீரன்-69,
தொல்லோன்- 21,
நவநீதகிட்டிணன்-16,16,100,
நாரணன் -14, 16, 32, 38, 43, 49.
நெடுமால் -22, 27,
நெடியோன் 7,3, 89,
நேமியான்-95.
பவபயங்கரன்- 26
பிரான்-96,
புண்ணியன்- 36,81,
புருடோத்தமன்- 10, 66,
புனிதன்-23,
பெருமாள்- 19, 84.
மணிவண்ணன் -69,
மறைமூலன் -69,
மாதவன் – 25, 70,
மாயன்- 57,
முகுந்தன்-44,
முதல்வன்-17,
முதற்தேவு- 97.
வரதன்-97,
வள்ளல்-29,
விகிர்தன்-41 எனத் திருமாலின் திருப் பெயர்கள் பலவும் கூறக் காணலாம்.

கண்ணபிரானின் திருவுருவச் சிறப்பு, குணநலன்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுமிடங்கள் பலவாகும்.
காசைமென்பூந்துணர் வண்ணன்- 55, காயாமலர்த் துணர் போல் நின்றெறிக்கும் கண்ணபிரான் -75, பொன்னிகர் பூவான்-85. மணிக்குன்ற வண்ணன்-28, கொண்டல் மேனியன்-49, கருமுகில்-16. புயல் புரையும் நெடுமேனிப் புனிதன்-67.
புயல்நேரு மேனிப் புருடோத்தமன்-11,வானேய்த்த மேனி
முகுந்தன்-76, மைக்கனமே நிகர் கிட்டிணன்-33, நீலமால்
வரை-7, பச்சை நெடுமேனி அம்மான் -94. காரமர் நெடியமேனிக் கருணை மால்வரை -40, தளஞ்செறிபூங் கண்ணன் 2,
செங்கண்நெடுமால் – 30. மலர்ச்செங் கண்ணன்-94,மலர்க்கண்
அமுது- 41. பூ அனைய திருத்தாளன்-59, நான்முகனைப் பயந்த வுந்தி நளினத்தான்- 43, அந்தணன் குடிகொள் உந்தி கொண்ட
முகில்- 26, ஆரணஞ் செப்புநர் பலர்வரலான நாபியன் – 58.
செந்திருவை மார்பினிடத் தமைத்தோன்-93, ஐம்பெரும் படை கொள் ஆதிமால்- 26, சங்காழிப் படைக்கை மால்- 43.
சுகம் ஒன்று ஊர்ந்து விண்வழி வரும் நாரணன்- 32.

என இவ்வாறு சுண்ணபிரானின் திருவுருவைப் பலவாறு விளக்கும் ஆசிரியர் அக் கண்ணபிரானின் குணநலன்களைச் சுட்டியும் அவரை விளிக்கின்றார்.

திருமறு மார்பன் திகழ்சரிதந் தன்னைத் தெளிந்தாய்ந்த
மருளறு ஆழ்வார் மொழிதமிழா மென்றே மதித்தந்நாள்
குருவருள் பெற்றுயர் தண்டபாணிப் பாவலன் கூறுஞ்சீர்
அருள்நவ நீதன் கலம்பகத் திற்குரை யான்தரலே.–
1-கட்டளைக் கலித்துறை

பொய்கை பூதம் பேய்உரைத்த பொருளில் தமிழும், புத்தூரில்
ஐயன் விஷ்ணு சித்தன்முனம் அறைந்த தமிழும், கலிகன்றி
செய்ததமிழும், மழிசைக்கோன் செப்பும் தமிழும், ஒப்பிலா
மெய்யன்தொண்ட ரடிப்பொடிமுன் விரித்த தமிழும்,
கொல்லிக் கோன் செப்பும் தமிழும், திருப்பாணன் செய்ததமிழும், புதுவைநகர்
ஒப்பில் கோதை அன்புரையால் ஓதும் தமிழும்,அவரவரைத்
தப்பொன் றின்றிப் பதிகத்துச் சாற்றும் பெயரும் தாமோதித்
தெப்பம் பிறவிக் கடற்கென்னத் தாம் செய்தசெழுந்தமிழ்கள் (ஸ்ரீராமானுஜ வைபவம் 1:57,58-வடிவழகிய நம்பிதாச
ர்)

பொய்யில் பரம கவிகளால் புகலப்பட்ட தமிழிவைகள்
ஐய தெய்வ நன்மாலை அதனால் இதனை நாமெல்லாம்
தெய்வ கானத் தியலிசையில் சேர்த்துக் கலியால் தீதுற்று
நையும் உலகில் பரத்தியிட வேண்டும் என்றான் நாதமுனி. (ஸ்ரீ ராமானுஜ வைபவம் 1-67)

கழறிடு மன்பர்க் கருளுங் கருணைமால் காப்பதுவாய்க்
குழறிடு மென்னுரைப் புன்மையுங் காக்கும் குறையிலவே:
பழமறை யாதியாம் மாதவன் சேய்மகிழ்ப் பாமகளே!
தொழவருள் வாணியே! சொற்பொருள் வாக்கருள் சொல்மகளே! 2
மாதவன் சேய்-என்றது திருமாலின் குழந்தை யான பிரமனைக் குறித்தது. மாதவன் என்றது உரையாசிரியர் பெயரையும் குறித்தது.

சீரைத் திருவைச் செழிப்பைப் பொழிற்பெருக்கைக்
காரைப் பொருந்திக் களிகாட்டும்- வீரைக்
கலம்பகம்பு கன்றுகண்ணன் கான்மலரிற் சூட்ட
அலம்பகம்பு கானைதுணை யாம்.–1
-காப்பு-நேரிசை வெண்பா

சீரை திருவை செழிப்பைப் பொழிற்பெருக்கை- பேரழகும்.தெய்வீகமும்,செல்வச் செழிப்பும், மிகுதியான பொழில்களும் நிறைந்து
காரைப் பொருந்தி களி காட்டும்- எப்பொழுதும் நீர் கொண்டமேகங்கள் சூழ்ந்து மகிழ்ச்சியைத் தருகின்ற
வீரைக் கலம்பகம் புகன்று – வீரை என்னும் வீரகேரளம்புதூரில் கோவில் கொண்டெழுந்தருளியுள்ள நவநீத கிருட்டிணன் மீது இக்கலம்பக நூலை மொழிந்து
கண்ணன் கால்மலரில் சூட்ட- கண்ண பெருமானின் திருவடித் தாமரையில் சேர்ப்பிக்க
அலம்பு அகம் புகு ஆனை துணை ஆம் – -அலம்பு அகம்- (அன்பால்) கழுவப்பட்ட உள்ளம்; தூய
உள்ளம்.-தூய உள்ளங்களில் குடி யிருக்கும் விநாயகர் துணையாவார்.

நிலம்பகச் சம்மதி யாதார் நெருங்கும் நெடுங்களத்தில்
இலம்பகம் ஈரொன்ப தால்தன்னில் வேறில்லை என்றுணர்த்தி
வலம்பகப் பார்த்தனை யாண்டானை வீரையில் வாழ்த்துதமிழ்க்
கலம்பக நூற்குநம் மாழ்வார்முன் னாம்பலர்காவலுண்டே.
2-கட்டளைக் கலித்துறை

நிலம்பகச் சம்மதியாதார்-பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைப் பகிர்ந்தளிக்க மறுத்த துரியோதனாதிகள்
நெருங்கும் நெடுங்களத்தில்- நெருங்கியிருக்கும் பெரிய போர்க் களத்தில்
இலம்பகம் ஈரொன்பதால்- பதினெட்டு அத்தியாயங்களை யுடைய கீதையை உபதேசித்து
தன்னில் வேறு இல்லை என்று உணர்த்தி- உலகத்தில் இறைவனாகிய தன்னைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பதை எடுத்துக்காட்டி
வல் அம்பு அக பார்த்தனை ஆண்டானை – வெற்றிச் சிறப்பும் வலிமையுமிக்க அம்பு எய்வதில் பெருமிதம் கொண்ட அருச்சுனனைக் காத்தருளிய கண்ணபெருமானை
வீரையில் வாழ்த்து தமிழ்க் கலம்பக நூற்கு- வீரகேரளம்புதூரில் வாழ்த்தி வணங்கும் இத் தீந்தமிழ்க் கலம்பகமாகிய இலக்கி யத்திற்கு
நம்மாழ்வார்முன்னாம்பலர் காவல் உண்டே- சடகோபராகிய நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் ஆசாரியர் அனைவரும் காவலாக இருப்பார்கள் என்பது உறுதி. ஏகாரம்-தேற்றம்.

நம்மாழ்வாரை முதலிற் கூறியது, திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்தோடு தோற்றுதல் போல ஞானமாகிய பரிமளத்தோடு திருவவதரித்து மற்றை ஆழ்வார்களினும் மேம்படுதலாலென்க. பலர் என்றது ஆழ்வார்களைத் தொடர்ந்து வந்த வைணவ ஆசாரியர் பலரும் என்னும் பொருளிலாகும்.
ஆழ்வார்-பகவானுடைய மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவர்.

எம்பெருமான் அருளாலோ, திருவுந்தித் தாமரைமீ திருப்பான் சேர்வென்
கொம்பெழிற்கட் கடையாலோ, எனதுமனக்களிப்பாலோ, கொடியார் கூட்டத்து
அம்பெயுங்கைச் சிலைஇருத யாலயப்பேர்மகிபாலன் அதிட்டத் தாலோ
கம்பெகினத் தொடுமயங்கும் வயல்வீரைக் கலம்பகநூல் கலிக்கு மாறே. 3
–(அவையடக்கம்) அறுசீர் ஆசிரிய விருத்தம்-
எம்பெருமான் அருளாலோ -திருமாலின் திருவருள் காரண மாகவோ
திரு உந்தித் தாமரை மீதிருப்பான்சேர்வெண்கொம்பு எழில்கண் கடையாலோ-திருமாலின் திருவுந்தித் தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனின் தேவியாகிய கலைமகளின் அழகிய கடைக்கண்பார்வையின் காரணமாகவோ.
எனது மனக் களிப்பாலோ-(கண்ணன் திருஅவதாரச் சிறப்பையும் பேரருளையும் நினைந்து நினைந்து அகம்மிக மகிழ்ந்த) அடியேனுடைய உள்ள மகிழ்ச்சியின் காரண மாகவோ
கொடியார் கூட்டத்து அம்பு எய்யும் கைச்சிலை இருதயலாயப் பேர் மகிபாலன் – (நீதியும் நேர்மையும் தவறிய) தீயோர் கூட்டத்தின்மீது அம்புகளைப் பொழியும் வில்லினைக் கையிலேந்திய இருதயாலய மகிபாலன் என்னும் மன்னனின்

அதிட்டத்தாலோ- நல்வினையின் காரணமாகவோ.
கம்புஎகினத்தொடு மயங்கும் வயல் வீரை- சங்கும் அன்னமும் அருகருகே பொருந்தி வாழும் வயல்கள் நிறைந்த
வீரகேரளம்புதூர் (மாநகரில் கோவில் கொண்டுள்கண்ணபெருமானுக்குரிய)
கலம்பக நூல்-இக் கலம்பக இலக்கியம்
கலிக்குமாறே- ஒலிக்கத் தொடங்குகிறது

விண்டுதூடனைக் கொடியரின் ஒருவனா விளங்கியஎனை, அன்னோன்
பண்டு செய்தவப் பயன்கொடோ அல்லது பழுதில் தண் அருளாலோ,
தொண்டு செய்பவர் அடியவர்க் காளெனும் துணிவுடைக் குருகூரான்
கண்டு கூறிய தமிழ்மறைப் பொருள்கொடு களிப்புறப் புரிந்தானே.

திருமகள்பூ மகளொடுதன் சேவடிப்பூக் களைத் தமது
மருமலர்க் கையால் வருட மாசுணப்பாயலின் மீது
பாற்கடலிற் பொய்த் துயில் கூர் பான்மையைப் பல் வானவரும் தோற்க அடர் வார்க்கறுவும் தொழில்நிமித்தம் விடுத்தெழுந்து
தேவகி தன் மகவாகித் தீதில் அருட் தாதை கையால் பாவமும் கண்டு ஒல்க மிகப் பழுத்த இருட் பா நாளில்
ஆயர் தம் ஊ ரிடை எய்தி. யசோதை யென்னும் அருந்தவத்து ஓர் தாயகமிக் குவப்பெய்தத் தவழ்ந்தினீதுஆடிய பருவத்து
இருமருதுஅட்ட டமைகருதி எண்ணின்மருது ஏற்று அவற்றின் திரு நிழல் வேட் டுற்றஅரன் சிந்தைநைதல் தீர்க்கினன்றி
முன்னாள் பிச் சொழித்தாண்ட முதுக்குறைக்கோர் குறையென்ன
உன்னாநந் தமிழ்நாட்டின் ஓண் முகமே போன்று ஒருக்கால்
உற்றார்க்கும் தீவினை தீர்த்து ஒழுகுபுனற் பெருக்கு ஓவாச்
சிற்றாற்றின் வடபாலில் திகழ்விரை நகர்நாப்பண்
அருள்மலி கண் ஆதியவாம் அவயவம் தோய் தருமருதின்
பெருநிழற்பால் நின்றருள் எம் பெருமானே பேசக்கேள்!
–மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

திருமகள் பூமகளொடு – பெரிய பிராட்டியாகிய இலக்குமி மற்றும் பூமிப்பிராட்டியாரோடு
தன் சேவடிப் பூக்களை-செந்தா மரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை
தமது மருமலர்க் கையால் வருட தமது மணம் மிக்க மலர் போன்ற திருக்கைகளால் தடவும்படி
மாசுணப்பாயலின் மீது – ஆதிசேடனாகிய படுக்கையின் மேலே
பாற்கடலில் பொய்த்துயில் கூர் பான்மையை – திருப்பாற்கடலின் நடுவிலே அறிதுயிலாகிய யோசு நித்திரை கொள்ளும் தன்மையை
பல்வானவரும் தோற்க அடர்வார் -தேவர்கள் பலரும் தோற்கும்படியாக நெருங்கும் அசுரர்களை
கறுவும் தொழில் நிமித்தம் – அழியச் செய்வதற்காக விடுத்தெழுந்து விட்டு எழுந்து
தேவகி தன் மகவாகி- தேவகியின் பிள்ளையாகத் தோன்றி
தீதில் அருட் தாதை கையால்-குற்றமற்ற மெய்ஞ்ஞான முடையவராகிய வசுதேவர் கையால் ஏந்த
பாவமும் கண்டு ஒல்க மிகப்பழுத்த இருட்பா நாளில்- மகா பாவங்களும் சுண்டு நாணமுறும்படி மிகக் கருமையான இருள்சூழ்ந்த இரவில்
ஆயர்தம் ஊரிடை எய்தி- இடையர்கள் வாழும் ஆயர்பாடி யாகிய கோகுலத்தை அடைந்து
யசோதை யென்னும் அருந்தவத்து ஓர் தாய் அகம் மிக்குவப் பெய்த- (இடையர் தலைவனாகிய நந்தகோபனுடைய மனைவியாகிய) யசோதை என்னும் அருமைத்தாயின் உள்ளம் மகிழும்படியாக
தவழ்ந்தினிது ஆடிய பருவத்து – அவளிடையே தவழ்ந்து விளையாடிய காலத்தில் (உரலில் கட்டியபொழுது )
இருமருது அட்டமை கருதி-இரண்டு மருத மரங்களை ஒடித்து வீழ்த்தியதைக் கருத்தில்கொண்டு
எண்ணின் மந்து ஏற்று பல தலங்களில் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு
அவற்றின் திருநிழல் வேட்டுற்ற அரன்- அவற்றின் நிழலில் விரும்பித் தங்குகின்ற சிவ பெருமான்
சிந்தை நைதல் தீர்க்கினன்றி- தன் மனவருத்தத்தைத் தீர்க்காவிடில்
முன்னாள் பிச்சொழித்தாண்டமுதுக்குறைக்கோர் குறை என்ன உன்னா- முற்காலத்தில் இரந்துண்ட இழிநிலையை நீக்கிய பேரறிவின் அருளிற்குக் குறைவு உண்டாகும் என நினைத்து
நம் தமிழ்நாட்டின் ஒண்முகமே போன்று- நம்முடைய தமிழ கத்தின் ஒளிமிக்க முகமே போல
ஒருக்கால் உற்றார்க்கும் தீவினை தீர்த்து- ஒருமுறை வந்து அடைந்தவர்க்கும் பாவங்களை ஒழித்து
ஒழுகுபுனல் பெருக்கு ஓவாச் சிற்றாற்றின்-வற்றாத நீர்ப் பெருக்கினை எப்பொழுதுமுடைய சிற்றாற்றுக்கு (சித்ராநதிக்கு)
வடபாலில் திகழ் வீரை நகர் நாப்பண்-வடக்கே திகழும் வீரைஎன்னும் நகரத்தின் நடுவே
அருள்மலி கண் ஆதியவாம் அவயவம் தோய்தரு மருதின் பெரு நிழற்பால் நின்றருள் -அருள் நிறைந்தும், கணு முதலிய உறுப்புக்கள் பெற்றும் விளங்கும் மருத மரத்தின் பெரிய நிழலிலே எழுந்தருளியுள்ள
எம்பெருமானே- எங்கள் இறைவரே!
பேசக்கேள்- அடியேன் விண்ணப்பிப்பதைக் கேட்டருள்வீராக

அருமறை முதலிய பலகலை நுவலென அயனைமுன் அலர்மகள் அயர்வுற அருளினை,
தெருள்மலி தருசிவன் முதலிய கடவுளர் செயசெய எனவழி படமிக நிலவினை,
ஒருபொருள் இருபொருள் பலபொருள் எனஇக லுறுபல சமயமும் அருள்பொது நிலையினை,
கருமுகில் மிசைவரு மகபதி முதலினர் கடலமு துணமகள் உருவமும் மருவினை
–இவை நான்கும் ஈரடி அராகங்கள்-

அருமறை முதலிய பலகலை நுவலென-கற்பதற்கு அரிய வேதம் முதலான பல கலைகளையும் சொல் என்று
அயனை முன் அலர்மகள் அயர்வுற அருளினை – முற்காலத்தில் திருமகள் தன் வழியாகப் பிள்ளைப்பேறு வாய்க்க வில்லையே என வருத்தமுறும்படி பிரமனைப் பெற்
றெடுத்தீர்
தெருள்மாலிதரு சிவன் முதலிய கடவுளர்- தெளிவு மிக்க சிவபெருமான் முதலான கடவுளர் யாவரும்
செயசெய என வழிபட மிக நிலவினை- வெற்றி வெற்றி என (உம்மைத் துதித்து) வழிபடும்படியாகப் புகழ் பெற்று விளங்குகின்றீர்
ஒருபொருள் இருபொருள் பலபொருள் என இகலுறு பல சமயமும்- உள்பொருள் ஒன்று. இரண்டு,பல எனத் தமக்குள்ளே வாக்குவாதம் செய்யும் பல சமயங்களையும்
அருள்பொது நிலையினை-அடியவர்களின் பக்குவநிலைக் கேற்ப வழங்குகின்ற பொது நிலையை உடையவராக விளங்குகின்றீர்
கருமுகில் மிசைவரு மகபதி முதலினர் – மேகத்தை வாகனமாக உடைய இந்திரன் முதலான தேவர்கள்
கடல் அமுது உண – திருப்பாற்கடலிலே கடைந்த அமுதத்தை அடையும்படியாக
மகள் உருவமும் மருவினை-மோகினி என்னும் பெண்ணுருவமும் கொண்டருளினீர்.

ஆனையொன்று மூலமென அந்நாள் அழைத்திடப்போய்
ஏனை விண்ணோர் நாண இடங்கர்நெடு நாவறுத்தாய்!
தந்தைசெய்யுந் தீமையிடைத் தட்டழிந்த தானவச்சேய்
சிந்தைகளி கூரவொரு சீயமாச்சென் றளித்தாய்!
பொல்லார்தம் புன்சபையிற் புண்படும்ஓர் பூவைஉய்ய
எல்லாரும் கண்டுமெச்சும் எண்ணில்கலைப் பேறீந்தாய்!
கார்கடல்நீர் முற்றும்அறக் கைச்சிலைஒன் றாற்கணக்கில்
வார்கணைமா மாரிபெய்தும் வல்லரக்கர் வாழ்வழித்தாய்!
ஆன்அனந்தம் இன்பமுற அந்தரத்து ஆர்த் துப்பொழிந்த
வானமுற்றும் நாணமெய்த மாமலையொன் றேந்திநின்றாய்!
மீனாமை ஏனமுதல் வெவ்வே றுருச்சமைந்துற்று
ஆனாத கீர்த்தி அளவிறந்த கோடிகொண்டாய்!

ஆனை யொன்று மூலமென அந்நாள் அழைத்திடப் போய்-கஜேந்திரனாகிய ஒப்பற்ற யானை ‘ஆதி மூலமே’ என ழிஅழைக்க அன்று உடனே சென்று
ஏனை விண்ணோர் நாண- மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் நாணமுறும்படியாக
இடங்கர் நெடுநாவறுத்தாய் முதலையினுடைய நீண்ட வாயை அறுத்தெறித்தீர்
தந்தை செய்யுந் தீமையிடை -இரணியகசிபன் என்னும் தகப்பன் செய்யும் கொடுமைகளால்
தட்டழிந்த நிலை குலைந்த
தானவச் சேய்-அசுரர்குலக் கொழுந்தான பிரகலாதன்-
சிந்தைகளிகூர -மனம் மகிழும்படியாக
ஒரு சீயமாச் சென்று அளித்தாய்- நரசிங்கத் திரு வுருவாய்ச் சென்று ஆட் கொண்டருளினீர்
பொல்லார் தம் புன் சபையிற்-துரியோதனன் முதலிய பொல்லாதவர்கள் நிறைந்த குற்றம் நிறைந்த சபையில்
புண்படும் ஓர் பூவை உய்ய – ஆடை குலைந்து அவமானத்நால் நெஞ்சம் புண்பட்ட திரெளபதி என்னும் ஒருபெண் தப்பும் படியாக
எல்லாரும் கண்டு மெச்சும்- அங்கிருந்த சபையோரே அன்றி விண்ணொரும் மற்ற எல்லாரும் கண்டு போற்றும்படியாக
எண்ணில் கலைப்பேறு ஈந்தாய்-கணக்கற்ற ஆடைகளை யளித்து அருளுனீர்
கார்கடல்நீர் முற்றும் அற – கரிய கடல் நீர் அனைத்தும் வற்றும் படியாக
கைச்சிலை ஒன்றால்- கையிலேந்திய ஒற்றை வில்லால்
கணக்கில் வார் கணைமா மாரி பெய்தும் கணக்கற்ற அம்புகளைப் பெருமழை போல் பொழிந்தும்
வல்லரக்கர் வாழ்வழித்தாய் – இராவணன் முதலான வலிய அரக்கர்களின் உயிரினைப் போக்கினாய்
ஆன் அனந்தம் இன்பமுற பசுக்களின் கூட்டம் எல்லாம் மகிழ்ச்சி கொள்ளும் படியாகவும்
அந்தரத்து ஆர்த்துப் பொழிந்த -ஆகாயத்தில் பேரொலியுடன் பொழிந்த
வாணம் முற்றும் நானமெய்து- -மேகக் கூட்டங்கள் முழுவதும் தோற்று நாணும்படி
மாமலை பொன்றேந்தி நின்றாய் கோவர்ந்தன கிரி என்னும் பெரு மலையை ஒரு விரலால் ஏந்தி நின்றீர்
மீன் ஆமை ஏனம் முதல் வெவ்வேறு உருவச் சமைந்து உற்று- மச்சாவதாரம் கூர்மாவதாரம் வராக அவநாரம் என வேறு வேறு உருவங்களைக் கொண்டு
ஆனாத கீர்த்தி அளவிறந்த கோடி கொண்டாய்- குறையாத பெரும் புகழை அளவில்லாது பெற்றீர்.

இராகவன் என்னும் உழவன் கடலாகிய வனத்தைப் பாணமாகிய அழலினாலே திருத்தி, வயல் உண்டாக-அதனிடத்துச் சேதுவாகிய வரம்யையும் கூட்டி, இராக்கதர் இரத்தமாகிய ஏரிநீரை நிறைவித்து, இலங்கையாகிய பெரிய வயலைச் செறிந்து, இராவணனுடைய பல முடிகளாகிய
களைகளைப் பறித்து விபீடணன் என்றும் பயிரையுண்டாக்கி அப்பபிருக்கு நல்லருள் ஆகிய நீரைவிட்டு, சூரியன் முதலான பல கதிர்கள் முற்றும்படி விளைவித்தான்

பொதுவமி னார்தரு போகம் ஆர்ந்தனை!
கதுமென மாதொடுகாடு சேர்ந்தனை!
அதுஇதுஎ னாதவர் ஆவி ஆர்ந்தனை!
மதுமுத லோர்நெடு மார்பு வார்ந்தனை!
–நாற்சீர் அம்போதரங்கம்

பொதுவமினார் தரு போகம் ஆர்த்தனை- -பொதுவ மினார் – பொதுவர் மின்னார்-ஆயர்பாடியிலுள்ள கோபியர்கள் கொடுத்த இன்பத்தைத் துய்த்தீர்
கதும் என மாதொடு காடு சேர்ந்தனை-கைகேயி கேட்ட வரத்திற்கு வாக்களித்த தந்தையின் சொல்லைக் காப்பதற்காக- சீதையுடன் விரைந்து காட்டைச் சென்று அடைந்தீர்
அது இது எனா தவர் ஆவி ஆர்த்தனை-(இறைவன்மீது பக்தி இல்லாமல்) பரம் பொருள் அத்தகையது, இத்தகையது என்று வீணே அரற்றித் திரியாமல் உண்மையாகத் தவத்தில் ஈடுபடும் அடியார்களுடைய உயிரையே தமக்கு இடமாகப் பொருந்தி இருக்கிறீர்கள்
மது முதலோர் நெடு மார்பு வார்ந்தனை- மது, கைடபன் போன்ற பல அசுரர்களின் வலிமை பொருந்திய பெரிய மார்புகளைக் கிழித்தீர்

ஆர ணத்தொகை நாட்டினை;
கார ணத்தனி வீட்டினை;
அன்பர் தம்புடை மேயினை;
இன்ப துன்பமும் ஆயினை;
–முச்சீர் அம்போதரங்கம்

ஆரணத் தொகை நாட்டினை-பற்பல வேதங்களை உலகில் நிலை நிறுத்தினீர்
காரணத் தனி வீட்டினை- மூலமாகிய பரமபதமென்னும் தனியான இன்பப்பெரு வீட்டினைக் கொண்டீர்
அன்பர் தம் புடை மேயினை – பரம பாகவதர்களாகிய அடியவர் பக்கமாகவே சேர்ந்தீர்
இன்ப துன்பமும் ஆயினை – உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளீர்

உளவ றிந்தனை;
துளவ ணிந்தனை;
உண்மை உற்றனை;
திண்மை பெற்றனை.-
-இருசீர் அம்போதரங்கம்

உளவறிந்தனை-மாற்றாரின் உட் கருத்தை அறிந்தீர்
துளவு அணிந்தனை-பரிசுத்தமான துளசி மாலையை எப்பொழுதும் சூடியுள்ளீர்
உண்மை உற்றனை- எப்பொழுதும் சத்தியத்தின் பக்கமே சார்ந்திருப்பீர்
திண்மை பெற்றனை-(இத்தனைக் காரணங்களால் எப்பொழுதும்) மெய்ம்மையாகிய வண்மையை யுடையீர்.

எனலால்–தனிச்சொல்

(“அருமறை முதலிய’ என்பது தொடங்கி திண்மை பெற்றனை என்பது முடிய) இதுகாறும் பலவாறாகக் கூறப் பட்டவாறு.)

நின்மாட் டொன்று நெடிதுஇரக் கின்றேன்
என்மாட் டுன்னருள் இன்றுகொல்? உண்டுகொல்?
உன்னுருக் கொண்டென் உள்ளகத்து ஒருபொருள்
பன்னும் மாற்றம் பல உள ஆயினும்
ஒன்றும்இவ் வுலகத்து ஒளிரக் காண்கிலன்;
என்றும்அன் னவைபொய்த்து ஏகினும் ஏகுக!
மாதவப் பயிர்பொதி வன்களை யென்ன
ஏதமிக்காற்றும் இருங்கலிக் கஞ்சிப்
பரந்தநீர்ப் புணரிப்பார்மிசை பலவாறு
இரந்தலைந் தேங்கி இடையா வண்ணம்
பன்முனை வயிரப் படையான் பயந்த-
வின்மகன் ஆளென வெள்காது ஓதி
நின்ற ஊரில் நீயும் நானும்
நன்றறிந் துய்ந்த நடுவர்பற் பலரும்
அறிதர நிகழ்ந்தபோராடல்
நெறிவழி பிழையா நிசப்பட விளக்கே.-
-ஆசிரியச் சுரிதகம்

நின்மாட்டு ஒன்று நெடிது இரக்கின்றேன் – உம்மிடத்தில்(அடியேன்) ஒரு வரத்தைப் பெரிதும் வேண்டுகிறேன்
என் மாட்டு உன்னருள் இன்று கொல்? உண்டு கொல்?- அடியேனிடத்தில் உம்முடைய அருள் உண்டா? இல்லையா?
உன் உருக்கொண்டு என் உள்ளகத்து ஒரு பொருள் பன்னும் மாற்றம் பல உள- உம்முடைய திருவுருவத்தை ஏற்று
அடியேனுடைய தியானத்தில் பரம் பொருள் கூறி யருளிய சொற்கள் பலவாகும்.
ஆயினும் -இருப்பினும்
ஒன்றும் இவ்வுலகத்து ஒளிரக் காண்கிலன்-இந்த உலகத்தில் அவ் வுரைகள் எதுவும் பலிக்கக் காணவில்லை.
என்றும் அன்னவை பொய்த்து ஏகினும் ஏகுக-ஒருநாளும் நிறைவேறாமல் அவை பொய்யாகிப் போனாலும் போகட்டும்
மாதவப் பயிர் பொதி வன்களை என்ன- பெருந்தவமாகியபயிரிடையே மறைந்திருக்கும் கொடிய களை போன்று
ஏதம் மிக்கு ஆற்றும் இருங்கலிக்கு அஞ்சி- கொடுமை மிகப்புரியும் வறுமைக்கு அஞ்சி
பரந்த நீர்ப் புணரிப் பார்மிசை-பரந்து பட்ட அலை கடலால் சூழப்பட்ட இப் பூமியில்
பலவாறு இரந்து அலைந்து ஏங்கி இடையா வண்ணம்-பலவிதமாகக் கையேந்தி அலைந்து அடியேன் வசங்கெடாதவாறு
பன்முனை வயிரப்படையான் பயந்த- பல முனைகளைக் கொண்ட வச்சிராயுதப் படையுடைய இந்திரனின் மகனாகிய
வில் மகன் ஆள்என வில்லுக்குரிய அருச்சுனனின் அம்சமாகிய அருணகிரி நாதரின் அடியான் இவன் என்று
வெள்காது ஓதி நின்ற ஊரில்- சற்றும் வெட்கப்படாமல்(அடியேன்) சொல்லி நின்ற நகரில் நீயும் நானும் நன்று அறிந்து உய்ந்த நடுவர் பலரும் -தேவரீரும் அடியேனும் ஐயந் திரிபற நன்கு கற்றறிந்த நடு நிலையாளர்கள் பலரும்
அறிதர நிகழ்ந்த பேராடல்- நேரில் அறியும்படியாக நடை பெற்ற திருவிளையாடலை
நெறிவழி பிழையா நிசப்பட விளக்கே- உண்மைக்குப் புறம் பாகாதவாறு உடன் (அனைவருக்கும்) தெரிவிப்பீராக!

இவர் முற்பிறப்பில் அருணகிரியாக யிருந்ததை வேறு பல நூல்களிலும் குறிப்பர். இப்பிறப்பில் சைவக்கோலம் பூண்டவராயினும் திருமால் பக்தி மிக்கவர் என்பதால் இவர் திருவரங்கத்
திருவாயிரம் போன்ற நூல்களை அக்கோயிலிலேயே பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தபொழுது, திருமாலே நேரில் வந்து திருவிளையாடல் புரிந்ததை இவர்தம் வரலாற்றில் காணலாம்.

விளங்கனிமேற் கன்றெறிந்தாய்! விண்ணுமண்ணும் தாளால்
அளந்தறிந்தாய்! யாவையுந்தா னானாய்!- தளஞ்செறிபூங்
கண்ணா! தென் வீரைநகர்க் காவலா! கத்தும் என் சொல்
நண்ணாதென் கொல்லோ நவில்–2-நேரிசை வெண்பா-
2-இது, மலர்என்னும் வாய்பாட்டால் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

விளங்கனிமேற் கன்றெறிந்தாய்- உம்மைக் கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங் கொண்டு வந்து வத்சாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்சுழற்றி, விளாமரத்தின் மேல் எறிந்து, அம் மரவடிவாய் வந்த கபித்தாசுரனையும் கொன்றீர்
விண்ணும் மண்ணும் தாளால் அளந்தறிந்தாய்-திருவிக்கிரமாவதாரமாய்த் தோன்றிய போது நின் திருவடி கொண்டு விண்ணையும் மண்ணையும் அளந்தறிந்தீர்
யாவையும் தான் ஆனாய்-எல்லாம் நீரே ஆனீர்
தளஞ்செறிபூங்கண்ணா – அழகிய இதழ்கள் செறிந்து தாமரையை யொத்த கண்களை உடையவரே
தென் வீரை நகர்க் காவலா -அழகிய தெற்கே யுள்ள வீரைநகரின் தலைவரே!
கத்தும் என் சொல் நண்ணாது என் கொல்லோ நவில்- ஓயாமல் பாடிக் கதறும் அடியேன் சொற்கள் நின் செவிகளை வந்து அடைய வில்லையா? சொல்வீராக.

நவில்பூம் புளிநிழல் ஆழ்வானை நாடிமுன் நான்பகர்ந்த
கவிவாஞ்சை யாலவன் சொன்னசொற் போற்பயன் காண்பதென்றோ
செவிதூங்கும் வேழம் பலஆர்க்கும் வீரைத் திருநகரில்
புவிமான் களிப்பும் மலர்மான் சிறப்பும் பொலிதெய்வமே.
–3-கட்டளை கலித்துறை

செவி தூங்கும் வேழம் பல ஆர்க்கும்-தொங்குகின்ற செவிகளையுடைய பல யானைகள் பேரொலி செய்கின்ற
வீரைத் திரு நகரில்-(வளமை மிக்க) வீர கேரளம்புநூரில்
புவிமான் களிப்பும் மலர்மான் சிறப்பும் பொலி தெய்வமே -பூதேவியின் உவகையும் திருமகளின் அன்பும் பெற்று விளங்கும் பெருமாளே-புவிமான்- பூதேவி. மலர்மான்- திருமகள்-
நவில் பூம் புளிநிழல் ஆழ்வானை நாடி -திருப்புளியமர நிழலில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாரைப் போற்றி
முன் நான் பகர்ந்த கவி வாஞ்சையால் அவன் சொன்ன சொல் போல் பயன் காண்பது என்றோ – முன்னர் அடியேன் ஆசையுடன் பாடிய பாடல்கள் எல்லாம், அவ்வாழ்வார் பாசுரங்களை நீவிர் சூடியது போன்று சூடும் பெருமையை அடியேன் எப்பொழுது அடைவேனோ அறியேன்.

தெய்யஎன்னும் இடைச்சொல்லின் திருட்டறியாப் புலவோரும்
வையஎன்னைத் துயர்செய்தாய் மனமிரங்கும் கணம்யாதோ?
பையரவின் மிசையாடிப் பசியமயில் இறகணிந்து
செய்யநிறத் தமிழ்வீரைத் திருக்கோயி லமர்வானே.
–4-கொச்சகக் கலிப்பா-

பையரவின் மிசை ஆடி–காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் மீது நடனம் ஆடியும்
பசிய மயில் இறகு அணிந்து -பச்சைநிற மயிலின் இறகினைச்சூடியும்
செய்யநிறத் தமிழ்வீரைத் திருக்கோயில் அமர்வானே-செந்தமிழ் வளங்கொழிக்கும் வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்போரே!
தெய்ய என்னும் இடைச்சொல்லின் திருட்டறியாப் புல வோரும்- தெய்ய என்னும் இடைச்சொல்லின் திருட்டு அறியாது இளம்புலவர்களும்
வைய என்னைத் துயர் செய்தாய்-அடியேனை ஏசும்படியாகத் துன்புறுத்துகின்றாய்
மனம் இரங்கும் கணம் யாதோ(அடியேனின் துயர் தீரும்படி )உள்ளம் இரங்கும் காலம் எப்பொழுது வருமோ? (கூறுவீராக)

அமர ருந்தெரி யாதவ ரோதையா ஆன்பு ரக்கும்மெ யாதவ ரோதை பா
சமர சத்தர் மதிக்குமட் டாக்கரா சலதி தன்னைம திக்குமட் டாக்கரா
விமல ஞானக் குருகைய னையனே வெள்ளை மாதுக் குருகை யனையனே
கமல வாவிகொள் வீரையின் மாயனே காத்தி யேல்மயல் வீரையின் மாயனே.–
5-கட்டளைக் கலிப்பா-மடக்கு-

அமரரும் தெரியாத வரோதயர்-தேவர்களாலும் அறிய முடியாதபடி மிகச் சிறந்த அவதாரங்களை எடுத்தவரே!-வர + உதயா = வரோதயா வடமொழி குணசந்தி
ஆன் புரக்கும் மெய் யாதவர் ஓது ஐயா- பசுக் குலங்களைப் பாதுகாக்கின்றவர்களும் பொய்மை யற்றவர்களுமாகிய முல்லைநில மக்களால் புகழப் படுகின்ற தலைவரே!
சமரசத்தர் மதிக்கும் அட்டாக்கரா -சமய பேதமற்ற ஞானி களால் போற்றப்படுகின்ற திருவெட்டெழுத்தின் மெய்ப் பொருளாக விளங்குபவரே!
சலதி தன்னை மதிக்கும் மட்டாக்கரா –திருப்பாற்கடலைக் கடைகின்ற (வலிமையில்) குறையாத திருக்கரங்களை உடையவரே!-பாற்கடலைக் கடைந்த தேவர், அசுரர் ஆகிய ஒவ்வொருவருள்ளும் அந்தர்யாமியாக நின்று அச்செயல் புரிந்ததும் திருமாலே ஆதலின் “மட்டாக்கரா’ என்பதற்கு அளவற்ற கைகளை உடையவரே’-

விமல ஞான குருகையன் ஐயனே- குற்றமற்ற மெய் ஞானியாகியவரும் திருக்குருகூரருமாகிய நம்மாழ்வாரால் வணங்கப் பெறும் தெய்வமே!
வெள்ளை மாதுக்கு உருகு ஐயன் ஐயனே- வெண்மை நிறத்தினளாகிய கலைமகளின் மேல் அன்பு கொண்டுள்ள பிரம தேவனின் தந்தையே!
கமல வாவிகொள் வீரையின் மாயனே- தாமரைத் தடாகங்கள் நிறைந்த வீரகேரளம்புதூரில் எழுந்தருளியுள்ள திருமாலே!
காத்தியேல் மயல் வீரையில் மாயனே- (தேவரீர் அருள் கூர்ந்து அடியேனை) பாதுகாத்தருளுவீராகில் நான் மாயையாகிய கடலில் வீழ்ந்து வீணே இறக்க மாட்டேன். உமது ஒப்பற்ற திருவடிகளை அடைந்து உய்வேன் என்றபடி.

மாயவுல கிடைநிகழும் மனிதர்விலங்கு ஆதியபல் வகைக்கும் வேண்டும்
நேயவழி உணவூட்டும் நீயெனைஏன் அதிற்பெரிதும் நிர்ப்பந் தித்தாய்?
தீயவரைச் செகுக்கமுயன் றுள்ளேன்மீது உன்றன்உளத் திருத்தி யின்றோ?
வேயணிகைக் கோபாலா! வியன்வீரைப் பதிபுரக்கும் விகிர்த மாலே
.–6-அறுசீர் ஆசிரிய விருத்தம்

வேய் அணி கைக்கோபாலா -குழலினைக் கையிலேந்திய இடையர் குலத்தரசே!
வியன் வீரைப்பதி புரக்கும் விகிர்த மாலே-பெருமை மிக்க வீர கேரளம்புதூரைக் காக்கும் நட்புடைய திருமாலே!
மாய உலகிடை நிகழும் மனிதர் விலங்கு ஆதிய பல்வகைக்கும்-தேவரீரின் மாயத்தின் விளைவாகிய இப் பூமியில் தோன்றும் மக்கள், விலங்குகள் முதலான பற்பல உயிரினங்களுக்கும்
நேய வழி வேண்டும் உணவு ஊட்டும் நீ அன்பு வழியிலே அவற்றிற்கு இன்றியமையாததாகிய போகப் பொருள்களை வழங்கிக் காப்பாற்றுகின்ற தாங்கள்
எனை ஏன் அதில் பெரிதும் நிர்ப்பந்தித்தாய்- அடியேனை ஏனோ அப் போகப் பொருள்கள் பெறுவதற்காகவே அலையுமாறு விட்டீர்
தீயவரைச் செகுக்க முயன்றுள்ளேன் மீது உன்றன் உளத்திருத்தி இன்றோ (உயிர்க் கொலை போன்ற பாவங்களைச் செய்யும்) கொடியவரை அழித்து ஓடுக்க முயன்றுவரும் அடியேன் செயல் கண்டும் இன்னும் உம் உள்ளம் நிறைவு அடைய வில்லையா? கூறியருளுவீராக.

மால லாற்பிறிது ஒருபரம் இன்றெனும் வயிணவ நெறிசார்ந்த
சீலர் தங்களிற் பிரிந்திகல் கொடிதறத் தீர்ப்பதே விழைகின்றேன்;
கால வாதனைக் கடற்சுழி கடந்துயக் கடைக்கணித் தருளாயோ?
நீல மால்வரை யெனத்தமிழ் வீரையில் நிலவிய நெடியோனே.–7
-எழுசீர் ஆசிரிய விருத்தம்

நீல மால்வரை எனத் தமிழ் வீரையில் நிலவிய நெடியோனே–நீல நிறமுடைய பெரிய மலை போன்று, தமிழ்ச் சான்றோர் நிரம்பிய வீர கேரளம்புதூரில் கீர்த்தி பெற நிற்கும் திரிவிக்கிரமனானவரே!
மால் அல்லால் பிறிது ஒருபரம் இன்று எனும் வயிணவ நெறி சார்ந்த சீலர் – திருமால் ஒருவரைத் தவிர வேறொரு பரம் பொருள் இல்லை என்னும் நெறியைக் கொண்ட நற்குணச் சான்றோர்களாகிய வைணவப் பெருமக்கள்
தங்களில் பிரிந்து இகல் கொடிது அறத் தீர்ப்பதே விழை கின்றேன்-தங்களுக்குள்ளேயே (வடகலை, தென்கலை)இரு பிரிவினராகப் பிரிந்து நின்று வாதஞ் செய்யும் கொடுமையை முற்றிலும் தேவரீர் நீக்கி யருள வேண்டுமென அடியேன் விரும்புகின்றேன்
கால வாதனைக் கடற்சுழி கடந்து உய்யக் கடைக் கணித்து அருளாயோ-கலி காலமாகிய துன்பந் தருகின்ற கடற் சுழற்சியிலிருந்து விடுபட்டு உலகம் ஈடேறும்படியாக நீவீர் கிருபை செய்து அருள்புரிய மாட்டீரோ? அருள்வீராக.

நெடியவனைச் செஞ்சிறைப்புட் பரிமேற் செம்பொன் நேரிழையோடு உன்னியுன்னி நிகம கோடி)
முடிவில்நுவல் எட்டெழுத்தும் மொழிந்தெட் டான முறையுணர்ந்து மெய்ஞானம் முழுகும் மேலோர்
அடியவர்தம் வேடமொரு சிறிதும் இல்லாரானாலும் அவர்பதத்தூள் அணிவேன் கண்டீர்!
கடிமதிற் தென் வீரைநகர்ப் புலவீர்! உள்ளக் கருத்தறிவான் வள்ளல்என்சொல் கடைப்பாற் றன்றே.
–8-எண்சீர் ஆசிரிய விருத்தம்

கடிமதில் தென்வீரைநகர்ப் புலவீர்- காவற் சிறப்புள்ள மதில்களையுடைய தென் வீரை நகரத்து அறிஞர்களே!
நெடியவனைச் செஞ்சிறைப் புட்பரிமேல் செம்பொன் நேரிழையோடு உன்னி உன்னி-சிவந்த இறகுகளையுடைய கருட வாகனத்தின் மேலே திருமகளுடன் வீற்றிருக்கும் நெடுமாலின் திருக் கோலத்தை இடைவிடாது தியானித்தும்
நிகம் கோடி முடிவில் நுவல் எட்டெழுத்தும் மொழிந்து -பல வேதங்களும் தமது முடிந்த முடிபாகச் சொல்லுகின்ற அட்டாட்சரமாகிய விஷ்ணு மந்திரத்தையே ஜபித்தும்
எட்டான முறை உணர்ந்து- அட்டமா சித்திகள் கை வரப்பெற்று
மெஞ்ஞானம் முழுகும் மேலோர் – உண்மையான ஆன்ம ஞானம் அடையப் பெற்ற பெரியோர்கள்
அடியவர் தம் வேடம் ஒரு சிறிதும் இல்லார் ஆனாலும் – (வெளித் தோற்றத்தில்) திருமாலடியார்கள் போன்று கோலங்கள் கொண்டிருக்காவிடினும்
அவர் பதத்தூள் அணிவேன் கண்டீர்- அவர்களுடைய திருவடி பட்ட மண்ணையும் திருமண் ஆக அடியேன் அணிவேன்; இது உறுதி!
உள்ளக் கருத்தறிவான் வள்ளல்- அடியேன் உள்ளத்தே உறைந்திருக்கும் இவ் வுண்மையை அந்தக் கண்ணனும் அறிவார்
என் சொல் கடைப்பாற் றன்றே- அடியேன் மொழிகள் வீணானவை யல்ல என்பதை அறிவீராக.

(இக் கலம்பக நூலில் ஆறு, ஏழு. எட்டு ஆகிய செய்யுட் களை முறையே ஆறுசீர், ஏழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்க ளாலேயே அமைத்திருப்பதும் ஒரு சிறப்பாகும்.)

அன்று வந்தென்மன மாம்வெளி யிடைநீ அஞ்சல் அஞ்சலென ஓதிய அருள்நீர்
இன்று குன்றியது போல்வதென்? அடியேன் இந்த வெந்துயரில் மூழ்குதல் முறையோ?
மன்றுள் ஒன்றுபல காவலர் எதிரே வம்பு விண்டவனும் வாழ்வுறல் படிறோ!
கன்று டன்பசுவெ லாமகிழ் வுறுசீர் கண்ட பைம்பொழில்கொள் வீரையின் அரசே.-
-9—தந்த தந்ததன தானன தனனா’ என்னும் சந்தஸ்ஸித்தில் அமைந்த எண்சீர் வண்ண விருத்தம்.

கன்றுடன் பசுவெலாம் மகிழ்வுறு சீர்கண்ட பொழில்கொள் வீரையின் அரசே – (அன்று) ஆயர்பாடியில் கன்றுடன் பசுக் கூட்டமெல்லாம் மகிழும்படியாகக் காத்தருளி இன்று இந்தச் சோலைகள் நிறைந்த வீரை நகருக்குத் தலைவராக வீற்றிருப்பவரே!
அன்று வந்த என் மனமாம் வெளியிடை- முன்பொரு நாள் வந்து என் மனக் காட்சியில் தோன்றி
நீ அஞ்சல் அஞ்சல் என ஓதிய அருள்நீர் – நீ அச்சமடையாதே அச்சமடையாதே என்று கூறிக் கிருபை செய்த நீவிர்
இன்று குன்றியது போல்வது என்- இப்பொழுது பாராதிருப்பது ஏனோ?
அடியேன் இந்த வெந்துயரில் மூழ்குதல் முறையோ? – அடியவனாகிய நான் இவ்வாறு துன்பத்தில் அழுந்தியிருப்பது முறைமை தானா?
மன்றுள்ஒன்று பல காவலர் எதிரே வம்பு விண்டவனும் வாழ்வுறல் படிறோ? -சபையில் பல காவலர் முன்பு தீச் சொல் சொல்லியவனும் பிழைத்திருப்பது வஞ்சகம் தானோ? கூறுவீராக.(நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொல்பவரும் இக் காலத்தே நன்றாக வாழ்கின்றனரே, இது உம் ஆட்சியின் குறையோ எனினுமாம்.)

அரசாளு மிக்கதிரு வுடையாரில் நற்குணர்தம் அரணாமெ னப்பெரிது சுற்றிப் புரந்தவே;
அரவேறு கத்திகையன் நிகர்பாத கத்தர்குடை அழிவாகி டத்தகும்வி தத்தைச் செய்கின்றவே;
அனல்போல்வி ழித்துநெடு மலைபோலு றுக்கிவரும் அடல்வேழம் ஒற்றையின்ம ருப்பைக் கவர்ந்தவே;
அனையோடு தித்தகொடி யவன்ஏவ லிற்தொடரும் அசுராதி யர்க்கொலைசெய் மற்பெற் றெழுந்தவே;

இரவேயெ னக்ககன நிறைவாய்அ றற்பொழியும் எழுமேகம் வெட்குறஓர் வெற்பைச்சு மந்தவே;
இடிநேர்தொ னிந்தவள வளையோடு சக்கரமும் இசைவாய்என் உட்கனவில் உறறுக் கவீன்றவே
எமகால னைச்சடையின் மிசைமோ தருச்சுனன்இரதமாவி னைக்கடவும் நட்பிற் பொலிந்தவே;
இடைநோவு றப்பலபல் கிரிபோல் எழுச்சியுறும் எழில்மாமு லைத்தொகுதி முட்டக் கிடந்தவே;

பரலோக நட்பர் உணர் புகழ்மாறன் முற்பதின்மர் பகர்பாடல் கட்டுளவம் ஓக்கப் புனைந்தவே;
பனிநீர்ம கட்கினிய மகன்ஆர்வ மிக்குறஓர் படையேவு தற்பொருதி ருட்டைப் புரிந்தவே;
பலவாம்உ றித்தயிர்கொள் விளையாட லைச்சொல்பவர் பகைபாவ முற்றறஓ ழிக்கத் துணிந்தவே;
பணிவான்உ யிர்க்கிறுதி மருவாது அருக்கன்உறு பகலூடி ருட்டைவரு விக்கத் தெரிந்தவே;

நரகாதி பத்தியம்எய்து ஒருபாவி முத்திபெற நகுபாசி லைச்சிறிய தட்டிட் டெறிந்தவே;
நலமேமி குத்தபசு வினம்வாழ் வுறத்திகிரி நடுவேது ளைத்தகுழல் வைத்துப் பயின்றவே;
நகர்மாசு ணத்திறைவர் பலர்வாய் உரைத்திடினும் நசையார்பு கழ்க்குமுடி வற்றுப் படர்ந்தவே;
நளிர்வீரை யிற்குலவும் இதயா லயற்கினிய நவநீத கிட்டிணர்தம் வெற்றிப் புயங்களே.(பதினாறு கலைகளைக் கொண்ட புய வகுப்புப் பாடல்–தனதான தத்ததன தனதான தத்ததன தனதான தத்ததன தத்தத் தனந்தனா)

இப்பாடலுள், பதினாறாங்கலையில் உள்ள வெற்றிப் புயங்கள்’ என்னும் எழுவாய் முதற்கலையில் உள்ள புரந்தவே முதல் பதினைந்தாங் கலையிலுள்ள படர்ந்தவே’ முடிய உள்ள பதினைந்து பயனிலைகளைத் தனித்தனியே பெற்று முடிந்தது. இதனை இறுதிநிலைத் தீபக அணி என்பர்

நளிர் விரையில் குலவும் இதயாலயற்கு இனிய- பெருமை மிக்க வீரை நகரில் மகிழ்வுடன் வீற்றிருக்கும் இருதயாலய மருதப்ப தேவர் என்றும் இன்பமுடன் போற்றி வணங்குகின்ற,
நவநீத கிட்டிணர் தம் வெற்றிப் புயங்கள்- நவநீத கிருட்டிணனுடைய வெற்றி மிகுந்த திருத் தோள்கள்.
அரசாளும் மிக்க திருவுடையாரில்-அரசாட்சி செய்யும் மேன்மை மிக்கோருள்,
நற்குணர் தம் அரண் ஆம் என-(பாண்டவர்கள் போன்ற நல்ல குணங்களை உடையவர்களுக்குக் காவலாகும் என்னும் படியாக
பெரிது சுற்றிப் புரந்தவே – அவர்களைச் சுற்றியிருந்து காப்பாற்றுவன;
அரவு ஏறு கத்திகையன் நிகர் பாதகத்தர் -பாம்புக் கொடியை யுடைய துரியோதனன் போன்ற தீயவர்கள்,
குடை அழிவாகிடத்தகும் விதத்தைச் செய்கின்றவே – குடை(ஆட்சி) ஒழியும் படியான செயல்களைப் புரிந்தன;
அனல்போல் விழித்து நெடுமலைபோல் உறுக்கிவரும்-நெருப்பைப் போன்ற கண்களுடன் பெரிய மலை போன்று குதித்துக்கொண்டு மிக்க கோபத்துடன் வருகின்ற,
அடல்வேழம் ஒற்றையின் மருப்பைக் கவர்ந்தவே- வலிமை பொருந்திய குவலயாபீடமென்னும் மதயானையின் தந்தங்களைப் பறித்து எறிந்தன;
அனையோடு உதித்த கொடியவன் ஏவலில் தொடரும் – தன் தாயொடு பிறந்த மிகக் கொடியவனான கம்சன் தூண்டி அனுப்பியதால் தொடர்ந்து வருகின்ற,
அசுராதியர்க் கொலைசெய்மற்பெற்று எழுந்தவே-(சாணூரன்,முஷ்டிகன் ஆகிய) அசுரர்கள் பெரு மல்லர்களாக வந்து பெரும் போர் செய்த போது அவர்களை அப்பொழுதே கொன்று வெற்றி பெற்றன ;
இரவே எனக் ககனம் நிறைவாய் அறற் பொழியும் – சூரிய ஒளியே தெரியாதவாறும் இரவு என்று சொல்லும்படியாகவும் இருள் சூழ்ந்து, ஆகாயம் முழுவதும் நீர் நிறைந்து, கல் மழையாகப் பொழிகின்ற,
எழுமேகம் வெட்குற ஓர் வெற்பைச் சுமந்தவே- புஷ்கலா வர்த்தகம் முதலிய ஏழு மேகங்களும் வெட்கப்படும்படியாகக்
கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாகப் பிடித்து ஏழுநாள் சுமந்தன
இடிநேர் தொனித்த வள வளையோடு சக்கரமும் – இடியோசை போன்று ஒலிக்கும் மாட்சிமை கொண்ட சங்கும் சக்கரமும்
இசைவாய் என் உட்கனவில் உற்றுக் கவின்றவே – திருக்கரங்களில் பொருந்தி அடியேனுடைய உள்மனத்துள் அழகுற நிறைந்தன;
எமகாலனைச் சடையின் மிசைமோதும் அருச்சுனன்-கால காலனாகிய சிவபெருமானை வெல்லும் அருச்சுனனுடைய
இரத மாவினைக் கடவும் நட்பிற் பொலிந்தவே -தேரின் குதிரைகளைச் செலுத்தும் செயலினைக் கொண்டு பொலிவடைந்தன;
இடைநோவுறப் பலபல் கிரிபோல் எழுச்சியுறும்- (ஆயர் குலப்பெண்களின்) மெல்லிய இடுப்பு வருந்தும்படியாக உயர்ந்த மலைகளைப் போலப் பூரித்துக் கிடக்கும்.
எழில்மா முலைத்தொகுதி முட்டக் கிடந்தவே- இளமையும் அழகும் மிக்க மார்பகங்கள் யாவும் நெருங்கி அணையுமாறு விளங்கின,
பரலோக நட்பர் உணர் புகழ்மாறன் முற்பதின்மர்- வைகுந்தத்தை விரும்புபவர்களாலேயே உணரத் தகும் பெரும் புகழ் படைத்த சடகோபாழ்வார் முதலான பத்து ஆழ்வார்கள்,
பகர் பாடல்கள் துளவம் ஒக்கப் புனைந்தவே-சொல்லுகின்ற திவ்வியப் பாசுரங்களையெல்லாம் துளசி மாலையை மகிழ்ந்து அணிவது போன்று அணிந்தன;
பனிநீர் மகட்கு இனிய மகன் ஆர்வம் மிக்குற – கங்கையின் மைந்தனாகிய பீமர் மனம் மகிழ்ச்சியடையும்படி,
ஓர் படை ஏவுதற் பொருதிட்டைப் புரிந்தவே- ஒப்பற்ற சக்ராயு தத்தை ஏவுவதைப் போலப் பாசாங்கு செய்தன;
பலவாம் உறித்தயிர்கொள் விளையாடலைச் சொல்பவர்–(ஆயர்பாடியில்) பல இல்லங்களிலும் மகளிர் உறிகளில் வைத்திருந்த தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்டதைப் புகழ்ந்து துதிப்போரின் (கண்ணனின் பால லீலைகளைக் கூறுவோருக்கு)
பகை பாவம் முற்றற ஒழிக்கத் துணிந்தவே – இன்னல்களை யெல்லாம் அழிக்க முற்பட்டன;
பணிவான் உயிர்க்கு இறுதி மருவாது-தன்னை எப்போதும் வணங்குபவனாகிய அருச்சுனன் உயிர்க்குத் தீங்கு ஏற் படாதவாறு.
அருக்கன்உறு பகலூடு இருட்டை வருவிக்கத் தெரிந்தவே- சூரியன் பிரகாசிக்கின்ற பகற்பொழுதிலேயே (தன் சக்கரப் படை கொண்டு மறைத்து)போர்க்களத்தில் இருளை வரவழைத்துக் காட்டின
நரகாதிபத்தியம் எய்து ஒருபாவி முத்திபெற -நரர்களுக்குத் தலைமை ஏற்றுத் துன்புறுத்தி வந்த தீயோன் ஒருவன் முத்தி அடையும்படி
நகு பாசிலைச் சிறிய தட்டிட்டு எறிந்தவே – பச் சிலையைச் சிறிய தட்டிலிட்டு வீசின;
நலமே மிகுந்த பசுவினம் வாழ்வுற – மன்னுயிர்கட்கெல்லாம் பயன் மிக அளிக்கும் பசுக்கூட்டங்கள் மகிழும்படியாக ;
திகிரி நடுவே துளைத்த குழல் வைத்துப் பயின்றவே – மேலே துளை செய்யப்பட்டுள்ள இசையெழும் மூங்கிற் குழலைத் தாங்கின;
நகர் மாசுணத் திறைவர் பலர் வாய் உரைத்திடினும் ஊர்ந்து செல்கின்ற பாம்புகளின் தலைவனாகிய ஆதிசேடன் போல ஆயிரம் வாய் படைத்தவர்கள் பலர் கூடிப் போற்றிப் புகழ்ந்திடினும்;
நசை ஆர் புகழ்க்கு முடிவற்றுப் படர்ந்தவே – விருப்பம் மிக்க கீர்த்திக்கு எல்லையே இல்லாமல் நிறைந்தன.

புயல்நேரு மேனிப் புருடோத் தமனைக்
கயல்நீர்க் கழனிவளங் காணும் -வியனார்ந்த
வீரைப் பதியில் விரும்புநலம் பெற்றபின்மற்
றாரைப் பொருட்படுத்தலாம்?–11-நேரிசை வெண்பா

புயல் நேரும் மேனிப் புருடோத்தமனை–நீல மேகம் போன்ற நிறத்துடன் கூடிய மேனி கொண்ட திருமாலை,
கயல் நீர்க் கழனி வளம் காணும் கயல் மீன்கள் நிறைந்து காணும் நீர்வளம் மிக்க வயல்களை யுடைய,
வியனார்ந்த வீரைப்பதியில்- பெருமை மிக்க வீரகேரளம் புதூரில் (கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ளவாறு),
விரும்பு நலம் பெற்றபின் – யான் விரும்பிய வண்ணம் கண்டு களித்ததன் பின்பு,
மற்று ஆரைப் பொருட் படுத்தலாம்- அடியேன் இனி யாரை ஒரு பொருட்டாகக் கருதுவேன்? (கருத மாட்டேன் என்பதாம்)

ஆம்பலன் றோலிடச் சென்றளித் தாய்என் றறைதலினால்
நோம்பல வாதனை யுந்தவிர்ப்பாய்என்ன நோக்குகின்றேன்|
வேம்பல என்சொல் அறிந்தே மிகவும் விரும்புகின்றாய்
தேம்பலம் தீர்த்தருள் வாய்வீரை மேவிய சீதரனே-
-12-கட்டளைக் கலித்துறை

வீரை மேவிய சீதரனே-வீர கேரளம் புதூரினை வந்தமர்ந்திருக்கும் திருமகள் மகிழ் மார்பா,
விரும்பி ஆம்பல் அன்று ஒலிடச் சென்று அளித்தாய்என்று அறைதலினால்- கசேந்திராழ்வான் அன்று முதலை வாயினில் அகப்பட்ட பொழுது ஆதிமூலமே என்று கூவி அபயமிட்டு அழைத்தவுடன் சென்று காத்தீர் எனப் பலரும் கூறுவதால்,
நோம்பல வாதனையும் தவிர்ப்பாய் என்ன நோக்குகின்றேன்- அடியேனுக்குற்ற பல பெருந் துன்பங்களை யெல்லாம் தீர்த்தருள்வீர் என்றே உம்மை நோக்கி யுள்ளேன்.
வேம்பல என்சொல் அறிந்தே மிகவும் விரும்புகின்றாய்- என்னுடைய பாடல்கள் அனைத்தும் இனியவை என்பதையும் மிகுதியாகவே தெரிந்து வைத்துள்ளீர்!
தேம்பு அலம் தீர்த்து அருள்வாய்-மெலிதலைத் தருகின்ற சஞ்சல மெல்லாம் ஒழித்துக் காப்பீராக!

சீதளநீர்ப் பதத்தானே சீதளநீர்ப் பதத்தானே
நாதருக்கார் தம்மானே நாதருக்கார் தம்மானே
காதலறத் தடுப்பானே காதலறத் தடுப்பானே
வீதனையூர் வீரையனே வீதனையூர் வீரையனே.–13-கொச்சகக் கலிப்பா-அடிமடக்கு
-இப்பாடலில் பாடகமடக்கு என்னுஞ் சொல்லணி பயின்றது.

சீதள நீர் பதத்தானே – தாமரையின் தன்மையைப் பெற்ற திருவடிகளை உடையவரே!
சீதள நீர் பதத்தானே-குளிர்ச்சி மிக்க பாற்கடலாகிய இடத்தை உடையவரே!
நாத ருக்கார் தம்மானே-ஒலிச்சிறப்பு மிக்க வேதங்களை ஓதும் அந்தணர்களின் தலைவரே!
நாதருக்கு ஆர்த்து அம்மானே-ஞானிகளுக்குத் தம்மையே அநுபவிக்கும்படி அருளும் தலைவரே!
காது அல் அற தடுப்பானே -கொல்வதைப்போல் துன்புறுத்துகின்ற அறியாமையாகிய இருட்டு நெருங்காதபடித் தூரத்தே விலகச் செய்பவரே!
காதல் அறத்து அடுப்பானே- விரும்பத்தக்க தரும நெறியில் ஒழுகுபவர் மாட்டுத் தாமே வந்து பொருந்துபவரே!
வீதனை ஊர் வீர ஐயனே – கருடனாகிய பறவையைச் செலுத்துகின்ற வீரமிக்க தலைவரே!
வீதல் நை ஊர் வீரையனே – வறுமையை வருத்துகின்ற ஊராகிய வீரகேரளம்புதூரின் இறைவனே!

ஐயமுற்றுத் தவமெதுவோ என்றேங்கித் தடுமாறும் அறிவி வீர்காள்
செய்யநிறப் புட்பரிமேல் திருவொடுநாரணனிருந்த தீர்க்கம் நாடிக்
கையறவில் லார்வளர்சீர் வீரைமுதல் ஊர்தோறும்போய்க் கவிகள் பாடித்
துய்யருக்குஆ ருயிராகித் துட்டருக்கோர் எமனாகித் துணிதல் தானே.–14-அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஐயமுற்றுத் தவம் எதுவோ என்று ஏங்கி- இறைவனைச் சென்றடைய முடியுமோ முடியாதோ என உள்ளத்தில் மிக்க சந்தேகத்துடன், உலக பந்தங்களை யெல்லாம் நீக்கியும் அவை நீங்காது தவம் என்பது எதுவாக யிருக்கும் என்று பலவாறு ஏக்கமுற்று,
தடுமாறும் அறிவிலீர்காள் – மனங்கலங்கும் அறிவற்ற மூடர்களே!
செய்ய நிறப் புட்பரிமேல் திருவொடு நாரணன் இருந்த தீர்க்கம் நாடி-சிவந்த வண்ண இறகுகளுடன் கூடிய கருட வாகனத்தின் மேலே இலக்குமி தேவியுடன் நாராயணன் வீற்றிருக்கும் பரிபூரண கோலத்தை மனத்தில் விரும்பி யிருந்து,
கையறவு இல்லார் வளர் சீர்வீரைமுதல் -ஒழுக்கமின்மை என்பதே இல்லாத செயலோங்கு தன்மை மிக்க பல பெரியோர்கள் வாழ்கின்ற பெருமையுடன் கூடிய வீரகேரளம்புதூர் முதலான, ஊர்தோறும் போய்க் கவிகள் பாடி- திருமால் உறையும் திவ்வியத் தலங்களுக்கெல்லாம் சென்று பாசுரங்களை இசைத்து மகிழ்ந்து,
துய்யருக்கு ஆருபிர் ஆகி – மனம் மொழி மெய்யினில் மிகவும் பரிசுத்தமான வர்கட்கெல்லாம் பெருந்துணையாக இருந்து,
துட்டருக்கோர் எமன் ஆகித் துணிதல் தானே – தீயவர்கட்கெல்லாம் ஒரு காலனைப் போல அழிக்கும் துணிச்சலுடன் செயல்படுவதே பெருந் தவமாம்

துணிவொரு கோடி பொருந்தினும், முதுநூல் சொல்லற முழுதியற் றிடினும்
அணி நகைத் துவர்வாய் அரம்பையர் வலிதுற்று அணைதலா தியநலம் பெறினும்
பணியணைத் திருப்பாற் கடல்விடுத் தெழுந்து பார்புகழ் வீரையம் பதியில்
மணிமுகில் எனநின் றருள்செய்வான் மலர்த்தாள் மறந்தவர் பிறந்துழல் வாரே
.–15-எழுசீர் ஆசிரிய விருத்தம்

துணிவு ஒருகோடி பொருந்தினும்-இவ் வுலகச் செயல்களில் முழுவதுமாக ஈடுபட்டுப் பொருந்தினாலும்
முது நூல் சொல்லற முழுது இயற்றிடினும்-பழமையான நன் மொழிகள் நிறைந்த நூல் பல எழுதினாலும்
அணி நகைத் துவர்வாய் அரம்பையர் வலிது உற்று அணைதல் ஆதிய நலம் பெறினும் – அழகு மிக்கதும் செம் பவள நிறத்துடனும் விளங்கும் புன்னகை யிதழ்களை யுடைய தேவலோகக் கன்னியர் வலிய வந்து அணைக்கும் சுகமே அடைந்தாலும்
பணி அணைத் திருப்பாற்கடல் விடுத்து எழுந்து – திருப்பாற் கடலில் ஆதிசேடன் மீது அறி துயில் கொண்டிருப்பதை விட்டு எழுந்து
பார்புகழ் வீரையம் பதியில்- இப்பூவுலகே போற்றி செய்யும் வீரகேரளம்புதூர் என்னும் திருத்தலத்தில்
மணிமுகில் என நின்று அருள் செய்வான் – அழகுமிக்க கருமேகம் போன்று கோலங்கொண்டு காத்தருள்கின்ற கண்ண பெருமானின்
மலர்த் தாள் மறந்தவர் பிறந்து உழல்வாரே-தாமரையை யொத்த திருவடிகளைத் தொழுது போற்றி செய்யாதவர் இவ் வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துன்பமே பெறுவர்.

வாரணமும் இரணியன்தன் மதலையும்பாண் டவரோர் மனைவியும்போற் தாம்வாழ்வான் வருத்திடினும் அருள்நீ
ஆரணத்தேர டாகமங்கட்கு உயிராய பசுமுற்று அலமராவா றயர்வேற்கு அருள்புரியா தேனோ?
பாரணங்கும் சீரணங்கும் பரிசுகுன்றி லாரோ? பரிதிமதி ஒளியுமட்கப் பாவமிகல் படிறோ?
நாரணப்பேர்க் கருமுகிலே! வீரைநகர்க் கோயில் நவநீத கிருட்டிணனாம் ஞானகுரு பரனே.–16-எண்சீர் ஆசிரிய விருத்தம்

நாரணப்பேர்க் கருமுகிலே-எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாகிய நீரையே இடமாகக் கொண்டு நாராயணன் என்ற திருநாமத்துடன் விளங்கும் நீலமேக வண்ண முடையோரே!
வீரைநகர்க் கோயில் நவநீதகிருட்டிணன்ஆம் ஞான குரு பரனே – வீரகேரளம்புதூரிலே கோயில் கொண்டெழுந் தருளியுள்ள நவநீத கிருட்டிணன் கோலத்துப் பரமகுருவே
வாரணமும் இரணியன் தன் மதலையும் பாண்டவர் ஓர் மனைவி யும் போல்- கசேந்திரனும் பிரகலாதனும் திரௌபதையும் போன்று
தாம் வாழ்வான் வருத்திடினும் அருள்நீ- உள்ளத்தால் நினைத்து வருந்தி யழைத்தவுடனே சென்றருளும் நீவீர்
ஆரணத்தோடு ஆகமங்கட்கு உயிர்ஆய பசு முற்று அலமராவாறு அயர்வேற்கு- வேதாகம சாத்திரங்களுக்கெல்லாம் ஆதார நிலை போல்வதான பசுக்கள் கொலை யுண்டு துன்பப் படாதவாறு தடுக்க முயன்று வாடி வருந்தும் அடியேனுக்கு
அருள் புரியாதது ஏனோ?- (உலகில் பசுக் கொலைகளைத்nதடுத்து) இன்னும் கிருபை செய்யாதிருப்பது ஏன் என்று கூறுவீராக!
பார் அணங்கும் சீர் அணங்கும் பரிசு குன்றிலாரோ – பூமி தேவியும் சீதேவியும் நீவீர் அருளுவதைத் தடுக்கின்றார்களோ?
பரிதி மதி ஒளியும் மட்கப் பாவம் மிகல் படிறோ- சூரியனும் சந்திரனும் மறைய ஒளி மழுங்கி இருளே பரவும் என்பது பொய்யோ? கூறுவீராக.

ஞான குருவென நிற்கும்நின் நிலைதேர் வீரகேரளம்புதூர் ஞாய மருவியும் இப்படி யடியேன்
மான மறதியு றத்தகு சிறியோர் வாயும் நகமெலி வுற்றிடல் முறையோ?
கான மலிகுழல் வைத்தகை அமுதே! காம னுடன்அய னைத்தரு முதல்வா!
மீன உருவொட ளக்கரும் அளைவாய் வீரை நகர்மரு தற்கினி யவனே.–17-(தான் தனதன தத்தன தன்னா)எண்சீர் வண்ண விருத்தம்

கானம் மலி குழல் வைத்த கை அமுதே – இனிய இசையைப் பொழியும் குழலினைக் கையில் ஏந்தியிருக்கும் அமுத மயமானவரே!
காமனுடன் அயனைத் தரும் முதல்வா-எல்லா வுயிர்களுக்கும் பொதுவான மன்மதனையும் எல்லாவுயிர்களையும் படைத் தருளும் பிரமனையும் படைத்தளித்த முழுமுதற் கடவுளே!
மீன உருவொடு அளக்கரும் அளைவாய்- மச்சாவதாரத்தில் கடலைக் கலக்கியவரே, அளவிடவியலாத வெண்ணெய் உண்ட வாயனாய் விளங்கும் நவநீதகிருட்டிணரே!
வீரைநகர் மருதற்கு இனியவனே – வீரகேரளம்புதூரினை விளங்க வைக்கும் மருதப்பனாகிய இருதயலாயருக்கு இன்பம் அளிப்பவரே!
ஞான குரு என நிற்கும் நின் நிலை தேர் ஞாயம் மருவியும்- அன்று அருச்சுனனுக்காகப் போரில் பகவத்கீதையை அருளி அனைவருக்கும் ஞான குருவாய் நின்ற உம்முடைய பேரருளை நன்குணர்ந்து தெளிந்த பின்பும்,
இப்படி அடியேன் மானம் மறதி உறத்தகு சிறியோர் வாயும் நக மெலிவுற்றிடல் முறையோ- எளியேனாகிய நான், அவமானத்திற்கெல்லாம் அஞ்சாத கீழ்மக்களின் ஏளனத்திற்கு ஆளாகித் தவிப்பது நியாயந்தானோ? கூறுவீராக.

இனியுனக் கொருகுறையும் இல்லைமுக் காலும்நிம் என்றுநம் புன்றன் ஆணை
இப்பொழுது தான்மலைவி டுத்துவந் தோம்முன்னம் எண்ணில்கல கத்தி ருந்தோம்
பனிமலர்க் கொம்பைக்கொ ணர்ந்துன துகையிற் பளிச்செனத் தரவும் வல்லோம்
பன்னீரண் டாயசம யத்தும்க லந்துரிமை பலபேசி உறவு செய்வோம்
நனிவருந் தாதுவகை ஐந்துமறி வோம்பெருக நல்லரச மும்கு டிப்போம்
நாகங்க ளைந்தரித் தகமொடு புறத்துமிக நடமாடு வோம்ந மக்குக்
கனிகிழங் கன்றிஉண வெய்தவிலை, இன்றுநாம் கழறுணவு முழுதும் அருள்வாய் |
கண்ணனைத் தென்அளகை நிகர்வீரை நகரூடு கருதும்ஒரு சித்தர் யாமே-
-18–இரட்டையாசிரிய விருத்தம்-

இனி உனக்கு ஒரு குறையும் இல்லை–இதன் பிறகு உங்களுக்கு எவ்விதமான குறையும் இருக்காது
முக்காலும் நிசம் என்று நம்பு- இறப்பு எதிர் நிகழ்வு ஆகிய மூன்று காலங்களிலும் உண்மை என்றே நம்புவீராக!
உன்றன் ஆணை- உம்மீதே இது சத்தியம்!
இப்பொழுதுதான் மலை விடுத்து வந்தோம்-சிறிது முன்புதான் நாங்கள் எங்கள் இருப்பிடமாகிய மலையை விட்டுக் கீழே வந்தோம்
முன்னம் எண்ணில் கல் அகத்து இருந்தோம்-இதற்கு முன்பு பல்வேறு மலையிடங்களிலும் குகைகளிலும் வாழ்ந்திருந் தோம்
பனிமலர்க் கொம்பைக்கொணர்ந்து உனது கையில் பளிச்செனத் தரவும் வல்லோம்- பனிப்பூக் கொம்பைக் (பார்வதியைக்) கொண்டு வந்து உம் கைபிசில் விரைவில் தருவதில் யாம் வல்லமை யுடையோம்
பன்னிரண்டு ஆய சமயத்தும் கலந்து உரிமை பல பேசி உறவு செய்வோம் -சொல்லப் பெறும் பன்னிரு சமயங்களிடத்தும் கலந்து அவற்றின் பொதுவானவற்றைக் கூறி அவற்றிடையே இணக்கம் ஏற்படுத்துவோம்
நனி வருந்தாது வகை ஐந்தும் அறிவோம் – பொன் முதலான ஐந்து வகைத் தாதுக்களையும் மாற்ற வல்லோம்
பெருக நல்ல ரசமும் குடிப்போம்-அத்தகைய உயரிய இரசவாதங்களையும் செய்வோம்
நாகங்களைத் தரித்து அகமொடு புறத்தும் மிக நடமாடுவோம்-உடலெங்கும் நாகங்களை ஆபரணமாகப் பூண்டு உள்ளும் வெளியேயும் உலா வருவோம்
நமக்குக் கனி கிழங்கு அன்றி உணவு எய்தவில்லை–எங்களுக்குப் பழங்கள் கிழங்குகள் தவிர வேறு உணவு கிடைக்கப் பெறவில்லை
இன்று நாம் கழறு உணவு முழுதும் அருள்வாய் – இன்று நாங்கள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் கொடுத்து மகிழ்விப்பீராக!
கண்ணனைத் தென் அளகை நிகர் வீரைநகர் ஊடு கருதும் ஒரு சித்தர் யாமே-தெற்குப் பகுதியில், குபேரனுடைய ஊர் போல விளங்கும் வீரகேரளம்புதூரில் வீற்றிருக்கும் கண்ண பிரானையே அநு தினமும் போற்றி வாழும் சித்தர் நாங்களே!

சித்தம் அறிய விளையாடல் செயும்நீ உலகத் தினர் காணச் சிறியேன் நிமித்தம் செயில் அமரர் சிரிப்பார் என நா ணுதியோ முன்
பத்தர் விடும் ஓர் தூதாகிப் பரிதூண்டிடும்சூ தனும்ஆன பழைய மொழிஈ ரேழுலகும் பரந்து முழங்கல் படிறாமோ?
சுத்த வெளிற்றுக் கவியொன்று சொன்னா னுடன்போய் மீண்டுவரும் தொன்மைக் குணம்இன் றிலைகொல்லோ, துயர்மிக் குழன்றேன் அருள்சுரந்துஆள்
சத்த மறைஓ லிடும்வீரைத் தலத்தில் அடியார் பலர்போற்றத் தமிழும் தனமும் கனமுமலர்ச் சரணுந்தரும்ஓர் பெருமாளே–19-தாழிசை-

சத்த மறை ஒலிடும் வீரைத்தலத்தில்-வேத ஒலிகள் எப்பொழுதும் முழங்கிக் கொண்டிருக்கும் வீரகேரளம்பு தூர் என்னும் திருநகரில்
அடியார் பலர் போற்றத் தமிழும் தனமும் கனமும் மலர்ச் சரணும் தரும் ஓர் பெருமாளே -தொண்டர்களெல்லாம் போற்றும்படியாக நல்ல தமிழ்ப் புலமையையும், செல்வத்தையும், பெருமையையும் நாடினோருக்கெல்லாம் அடைக்கலமாகத் திருமலரடிகளையும் அளித்துதவுகின்ற ஒப்பற்ற பரம்பொருளே!
சித்தம் அறிய விளையாடல் செய்யும் நீ – அடியேன் உள்ளம் உணரும்படியாகத் திருவிளையாடல்களைப் புரியும் நீவிர் உலகத்தினர் காணச் சிறியேன் நிமித்தம் செய்யில் அமரர் சிரிப்பார் என நாணுதியோ?-இவ்வுலக மக்களெல்லாம் பார்க்கும்படியாக, எளியவனான அடியேன் பொருட்டு நேரில் வந்து ஆடல் புரிந்தால் தேவர்கள் ஏளனம் செய்வார்கள் என்று வெட்கப்படுகிறீரோ?
முன் பத்தர் விடும் ஓர் தூதாகி-முன்பு தொண்டர் அனுப்பும் ஒரு தூதனுமாகி
பரி தூண்டிடும் சூதனும் ஆன – (அருச்சுனனின்) தேர்க் குதிரைகளைச் செலுத்தும் பார்த்தசாரதியும் ஆனீர்
என்னும் பழையமொழி ஈரேழு உலகும் பரந்து முழங்கல் படிறாமோ- தொன்மை வரலாறுகள் பதினான்கு உலகெங்கும் பேசப் பெறுதல் பொய்யாகுமோ?
சுத்த வெளிற்றுக் கவி ஒன்று சொன்னான் உடன்போய் மீண்டுவரும் தொன்மைக் குணம் இன்று இல்லை கொல்லோ-ஒரே ஒரு வெண்பாப் பாடல் புகன்ற திருமழிசையாழ்வார்பின் போய் வந்த அந்தப்பழைய இயல்புகூட இப்பொழுது தேவரீரிடம் இல்லை போலும்!
துயர் மிக்கு உழன்றேன், அருள் சுரந்து ஆள்-துன்பமே மிகுந்து மனம் கலங்கி வாடுகின்றேன், காத்தருள்வீராக.

பெருமலர்ப் பொகுட்டுப் பீடம் நீத்துக் கருமணி வரையெனக் காண்குநர் கருத
வீரை நகரில் மிளிரும்எம் பெருமான் மாரை நீங்கா வாழ்வுறு மங்காய்!
நின்னருட் துளியால் நிலவணி சடையான் அன்ன வாகனன் அம்பொனூர்க் கிழவன்
ஆதிய கடவுளர் அகமிக மகிழ்ந்தனர் மாதிரம் புகழ்வாள் மருதன் ஆதிய
காவலர் தாமும் களிமிகப் பெருகினர் நாவலந் தீவின் நரர்சிலர் செருக்கினர் அன்னர்வாழ்வு அடியேற்கு அருளினும் அணியேன் இன்னல் கூர்ந்து இராவது ஏற்பவர்வேட்கை அருள்நலம் பொருத்தின் அதுமதி; அருளாது இருள்கலிப் பேயால் இடர்படக் கண்டாய் கொண்கன்ஆங் கியற்றக் கூறிய பின்அவ்
வண்கவின் தரச்செயல் மாண்பன்று, அவன்நின் தகையறிபொருட்டே சாற்றிலன் போலும்
மிகைபடும் உரித்தென் மீதுஅவன் கொளல்சான்று அன்றிசை முனிமுதல் அரனார் அறியத்
தன்திருக் கரத்தாற் தமனியச் சிமிழுள் காட்டிய பொருளைக் கடைய னேன்தலை| சூட்டிய வாறாம் சுடரறிந் துளதே.–20-நிலைமண்டில ஆசிரியப்பா

பெருமலர்ப் பொகுட்டுப் பீடம் நீத்து- சிறப்பு மிக்க தாமரை மலர் இருக்கையை விட்டு எழுந்து
கருமணி வரை எனக் காண்குநர் கருத -நீல மணிக்குன்றோ எனப் பார்ப்பவர்களெல்லாம் வியக்கும்படியாக
வீரைநகரில் மிளிரும் எம்பெருமான் மாரை நீங்கா வாழ்வுறு மங்காய்- வீரகேரளம்புதூரில் ஒளிவீசி நிற்கும் எங்கள் தலைவராகிய திருமாலின் மார்பகத்தை அடைந்து. எப்பொழுதும் நீங்காது இருக்கும் இலக்குமியே!
நின்னருட் துளியால்- உம்முடைய கிருபையின் காரணமாக
நிலவு அணி சடையான் அன்ன வாகனன் அம்பொனூர்க்கிழவன் ஆதிய கடவுளர் அகம்மிக மகிழ்ந்தனர் – பிறைச் சந்திரனைத் தலையிலே சூடிய சிவபெருமானும், அன்னப் பறவையை வாகனமாகக் கொண்ட பிரமனும், தேவ லோகத்திற்குத் தலைவனான இந்திரனும், மற்றுமுள்ள கடவுளர் அனைவரும் உள்ளம் நிறைய இன்புற்றனர்
மாதிரம் புகழ் வாள் மருதன் ஆதிய காவலர் தாமும் களி மிகப் பெருகினர்- வெற்றிச் சிறப்பும் வீரமும் பொருந்திய மருதப்பன் முதலான மன்னர் பலரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
நாவலந் தீவின் நரர் சிலர் செருக்கினர்- நாவலந்தீவிலுள்ள சில மக்களும் களிப்புற்றனர்
அன்னர் வாழ்வு அடியேற்கு அருளினும் அணியேன் – அவர்களுடைய இன்ப வாழ்க்கையெல்லாம் எனக்கு அளித்தாலும் நான் ஏற்பதாகயில்லை
இன்னல் கூர்ந்து இரவாது-துன்பப்பட்டு யாசிக்காமல்
ஏற்பவர் வேட்கை அருள்நலம் பொருத்தின்- பெறுவோரின் தேவை யறிந்து கொடுக்கும் நன்மையை அடியேனுக்குக் கூட்டினால்
அது மதி -அதுவே போதுமானது
அருளாது – இந்த வரத்தை வழங்காமல்
இருள்கலிப் பேயால் இடர் படக் கண்டாய்-கொடிய வறுமை யென்னும் பேயால் அடியேன் துன்பமடைய விட்டீர்
கொண்கன் ஆங்கு இயற்றக் கூறிய பின்-உம்முடைய கணவ ராகிய திருமால் அவ்விடத்து நின்னருளைக் காட்டுமாறு சொல்லிய பிறகு
அவ்வண் கவின் தரச்செயல் மாண்பு அன்று- அவ்வாறு நல்குவது ஒன்றும் பெருமையல்ல
அவன் நின் தகை அறிபொருட்டே சாற்றிலன் போலும்- அவரும் உம்முடைய ஈகைத் தன்மையை நன்கு அறிந்ததனாலேயே இன்னும் அவ்வாறு கூறியருளவில்லை என எண்ணுகிறேன்
மிகைப்படும் உரித்து என் மீது கொளல் சான்று- அடியேன் மேல் அவர் கொண்டுள்ள பேரன்பிற்குச் சாட்சியமும் உள்ளது
அன்று இசைமுனி முதல் அரனார் அறிய- அன்றொருநாள் இசைமுனி முதலாக சிவபெருமானும் அறியும்படியாக
தன் திருக்கரத்தால் தமனியச் சிமிழுள் காட்டிய பொருளை- தம்முடைய திருக்கைகளால் பொற்சிமிழுள் காட்டிய பொருளை
கடையனேன் தலை சூட்டிய வாறாம் – எளியேனாகிய அடியேன் தலையில் அணிவித்தபடியாம்
சுடர் அறிந்துளதே விளக்கம்-பெற்றதென்பதை அறிவீராக.

சுடர்போமுன் வீரைநகர்த் தொல்லோன்முன் போயென்
இடர்யாவும் நன்றா யியம்பிப் படர்மார்பிற்
பூண்டதுழாய் வாங்கிவரப் போதாய்; புதுப்பூந்தேன்
வேண்டளியே நொந்தேன் மிக.–21-வண்டுவிடுதூது–நேரிசை வெண்பா-

புதுப்பூந்தேன் வேண்டு அளியே – புத்தம் புதிதாக மலர்ந்திருக்கும் மலரையே நாடித் திரிந்து மயக்கந்தரும் மதுவை அருந்தும் வண்டே!
நொந்தேன் மிக – நான் என் தலைவனைப் பிரிந்த வேதனையால்மிக வாடுகிறேன்
சுடர் போம்முன் வீரைநகர்த்தொல்லோன் முன்போய்- சூரியன் மறைவதற்கு முன்பாக வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபிரான் முன்னே சென்று
என் இடர் யாவும் நன்றாய் இயம்பி-நான் அவரைப் பிரிந்து வாடும் துன்பங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லி
படர்மார்பில் பூண்ட துழாய் வாங்கி வரப்போதாய் -பரந்து விரிந்த அவர்தம் மார்பகத்தே அணிந்திருக்கும் துளப மாலை வாங்கி வரச் செல்வாயாக!

மிகநொந்த மங்கையர் சொற்றூது போதற்கு மேகமும்சில்
ககமும் கழிவென்னத் தேர்ந்து அனை யாரையும்கைத்துஎனதுள்
அகமென்ற பாவியை விட்டேன் அதுவும் அருட்புலவோர்
புகழும்தென் வீரை நெடுமால்முன் போயது போயதுவே.–22-இதுவுந்தூது–கட்டளைக்கலித்துறை,-

மிக நொந்த மங்கையர் சொல் தூது போதற்கு-கண்ணபிரானுடைய பிரிவுத் துயரத்தால் மிக வாடும் அடியேனுடைய துன்பத்தை எடுத்துக் கூறுமாறு தூது அனுப்புவதற்கு
மேகமும் சில் ககமும் கழிவு என்னத் தேர்ந்து -முகிலும் வண்டும் பறவையும் பொருத்தமற்றவை என்பதை அறிந்துணர்ந்து
எனது உள் அகம் என்ற பாவியை விட்டேன்- எப்பொழுதும் வாராத தலைவனுக்காக வருந்தித் தவிக்கும் அடியேனுடைய உள்ளமாகிய நெஞ்சத்தை அவர்பால் தூதாக விடுத்தேன்-
அதுவும் அருட்புலவோர் புகழும் வீரை நெடுமால் மூன்போயது போயதுவே- (அடியேன் முன்பு அவர் பாலனுப்பிய மேகமும் வண்டும் பறவையும் போலவே) அந்நெஞ்சமும் பாகவதர் போற்றும் வீரைநகர் நெடியோனாகிய கண்ண பிரானிடம் போய்ச் சேர்ந்தது சேர்ந்தது தான்! இன்னும் திரும்பவே
யில்லை.

அதுலன்பன் மறையுஞ்சொல் புனிதன்தண் அருள்விஞ்சும் அகநீர்மையோன்
மதுரங்கு லவுசெஞ்சொல் வனைதொண்டரொடு சென்று வரநாணிடான் |
விதுரன்தன் மனையுண்டி யினிதென்று நுகர்கொண்டல் மிகவாழும்ஊர்
எதுஎன்கில் மருதன்தன் மரபென்றும் வளர்துங்கம் இசைவீரையே.–23-கலிநிலை வண்ணத்துறை-( தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனதானனா)

அதுலன்- ஒப்பில்லாதவர்
பன்மறையும் சொல் புனிதன் – வேதங்கள் பலவற்றையும் அருளும் பரிசுத்த மானவர்,-பல வேதங்களாலும் புகழப்படும் தூயவர் எனினுமாம்
தண்அருள் விஞ்சும் அக நீர்மையோன்-எப்பொழுதும் உள்ளங்குளிர்ந்த அருளையே மிகுதியாகக் கொண்டிருக்கும் குணம் பொருந்தியவர்
மதுரம் குலவு செஞ்சொல் வனை தொண்டரொடு சென்று வர நாணிடான்- இனிமை நலம் பொருந்திய மதுர கானம் தரும் திருமழிசையாழ்வார் பின் சென்று வரவும் தயங்காதவர்
விதுரன் தன் மனை உண்டி இனிது என்று நுகர் கொண்டல்-பாண்டவருக்குத் துணையான விதுரன் இல்லத்துச் சென்று அவனளித்த உணவை இனிதென உண்டு களிப்புற்ற மேக வண்ணர்
மிக வாழும் ஊர் எது என்கில்- உளம் மகிழ்ந்து விருப்பமுடன் வாசம் செய்கின்ற தலம் எங்குள்ளது என்று கேட்பீராயின்
மருதன்தன் மரபு என்றும் வளர் துங்கம் இசை வீரையே -மருதப்பனுடைய குலத்தினர் எபபொழுதும் சிறப்புடன் வாழ்ந்து பெருமை மிகக் கூடி நிற்கும் வீரகேரளம்புதூரே ஆம் –

இசைப்பார் இசைக்கும் நலமு ழுதும் இயங்கும் வீரைப் பதித்திருமால்
நசைப்பால் அரங்கம் திருவயிந்தை நாகை வடவேங் கடம்குடந்தை
கசைப்பாங் கவிரூர் கண்ணபுரம் காஞ்சி அனந்தை முதற்பலவூர்
திசைப்பா லனரும் தொழவுளவாம் சேட னாலும் செப்பரிதே.–24-இதுவுமது-அறுசீர் ஆசிரிய விருத்தம்

இசைப்பார் இசைக்கும் நலம் முழுதும் இயங்கும்- எம்பெருமானுடைய திவ்ய நாமங்களையே பாடும் பரம பாகவதர்கள் விரும்பிக் கேட்கும் நன்மைகளை யெல்லாம் கொடுத்தருளுகின்ற
வீரைப்பதித் திருமால் நசைப்பால்- வீரகேரளம்புதூரில் உறைகின்ற எம்பெருமான் விரும்பும் திருப்பதிகள்
அரங்கம் திருவயிந்தை நாகை வடவேங்கடம் – திருவரங்கம், திருவகிந்திரபுரம், நாகப்பட்டினம், வேங்கடமாமலை
குடந்தை கசைப்பு ஆங்கு அவிர் ஊர்-கும்பகோணம்,திருவல்லிக்கேணி|கண்ணபுரம், காஞ்சி, அனந்தை முதற் பல ஊர்- திருக்கண்ணபுரம், காஞ்சிபுரம்,திருவனந்தபுரம் முதலான பல தலங்கள்
திசைப்பாலனரும் தொழ உளவாம் – ஆட்டதிக்குப் பாலகர்களும் வணங்கும் படியாகச் சிறப்புற்றுள்ளன
சேடனாலும் செப்ப அரிதே- (அத்திருத்தலங்களின் பெருமைகளை யெல்லாம்) ஆதிசேடனாலும் விளக்குவது அருமையாம்.-

செப்ப மார்புகழ் மிக்குளான் நலம்
செப்ப மார்பிடை சிந்தியான்
தீய தானவர் வேர்கெல்வான் மதி
தீய தாம்நவை தீர்க்கிலான்
கைப்ப ருங்கதை ஒன்றினான் அனம்
கைப்ப ருங்களி செய்கிலான்
காம ராயனை நல்கினான் என்மெய்க்
காம ராய விழைந்திலான்
துப்ப லங்கிதழ் தந்திலான் பலர்
துப்ப லங்கமென் றேவினான்
சூத னாப்பரி தூண்டினான் கொடுஞ்
சூத னாஎனை மால்செய்தான்
மைப்ப கட்டைவ தைத்துளான் விழி
மைப்ப கட்டைம திக்கிலான்
மாத வன்தமிழ் வீரைமா நகர்
மாத வன்தனி வஞ்சனே .–25-மடக்கு–இரங்கல் தாழிசை

செப்பம் ஆர் புகழ் மிக்குளான் -சிறப்புப் பொருந்திய கீர்த்தி மிக்கவர் (ஆனால்)
நலம் செப்ப மார்பிடைச் சிந்தியான்- (அவர் பிரிவால் வருந்தும் எனக்கு) இன்சொல்சொல்லி, ஆட்கொள்ள நெஞ்சாலும் நினைக்காதவராக இருக்கிறார்
தீய தானவர் வேர் கெல்வான்—கொடிய அரக்கரை அடியோடு இல்லாமல் ஒழித்தருளுவார் (ஆனால்)
தீ அது ஆம் நவை தீர்க்கிலான்-(துன்புறுத்துவதில்)நெருப்பைப் போன்று விளங்கும் (பிரிவுத் துயராகிய) குற்றத்தைப் போக்கியருள மறுக்கிறார்
கை பரும் கதை ஒன்றினான்- தன் திருக்கரத்தில் பெரிய கதாயுதம் ஒன்றைத் தாங்கியுள்ளவர் (ஆனால்)
அனக் கைப்பு அறும் களி செய்கிலான்- உணவை வெறுக்கச் செய்யும் பிரிவுத்துயரை இல்லாமற் செய்யும் மகிழ்ச்சியை அளிக்காமலிருக்கிறார்
காம ராயனை நல்கினான்- மன்மதனைப் பெற்றேடுத்தார் (ஆனால்)
என் மெய் காமர் ஆய விழைந்திலான்-என்னுடைய உடலின் அழகை ஆராய்ந்து துய்க்க விருப்பமில்லாதவராக இருக்கிறார்
துப்பு அலங்கு இதழ் தந்திலான்- பவளத்தைப் போல ஒளிரும் இதழ்களை முத்தமிடத் தந்தருள மாட்டார் (ஆனால்)
பலர் துப்பு அலம் கம் என்று ஏவினான்-பலராலும் இகழப்படுகின்ற துன்பத்தை மேகத்தைப் போன்று (என்மாட்டு உண்டாக்கினார்
சூதனா பரி தூண்டினான்-அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாகக் குதிரைகளைச் செலுத்தினார்.(ஆனால்)
கொடும் சூதனா எனை மால் செய்தான்- தீமை மிக்க வஞ்சகராகி என்னை மயங்க வைத்தார் ( ஆனால். என்மீது அன்பு காட்டவில்லை)
மை பகட்டை வதைத்துளான் கரிய குவலயாபீடமாகிய-யானையைக் கொன்றிருக்கிறார் (ஆனால்)
விழிமை பகட்டை மதிக்கிலான் – (என்) கண்களின் அஞ்சனப் பூச்சின் கவர்ச்சிக்கு ஆளாகமலிருக்கிறார்

ஓதருஞ்சீர் வீரைநகர் உற்றநெடு மால்ஒருவன்
வேதனரன் இந்திரற்கும் மேலானான் அம்மானை
வேதனரன் இந்திரற்கு மேலானான் ஆமாகில்
பூதலத்துஏ னத்திற் புகுவானேன் அம்மானை
போதகனா வைத்துப் புரந்தான்காண் அம்மானை.–27-(கலித்தாழிசை)

ஓத அருஞ்சீர் வீரை நகர் உற்ற நெடுமால் ஒருவன்- சொற்களால் சொல்லுதற்கு அரிதான சிறப்புடைய வீரகேரளம்பு தூரினை அலங்கரிக்கின்ற விட்டுணு ஒருவரே
வேதன் அரன் இந்திரற்கும் மேல் ஆனான்- பிரமன், சிவபெருமான், இந்திரன்ஆகியோர்களுக்கெல்லாம் மேலான கடவுள் ஆவார் (இது. முதற்பெண் கூற்று)
வேதன் அரன் இந்தி அரற்கும் -கடவுள், எப்பொருட்கு மிறைவன், இலக்குமி. அநந்தன் போன்றவர் ஏவல் ஆனான் ஆமாகில்- பணிவிடை செய்ய ஏற்பவர் என்றால்
பூ தலத்து ஏனத்தில் புகுவான் ஏன்- நிலவுலகில் பன்றியின் உருவம் பெற்றது எதற்காக? (இது. இரண்டாவது பெண்ணின் வினா)
போதகனா வைத்துப் புரத்தான் காண்-குழந்தையை எடுத்துக் காப்பது போன்று காப்பாற்றினார் என்பதை அறிவாயாக (இது மூன்றாம் பெண் இருவர் கொண்ட பொருளுக்கும் பொருந்துமாறு விடை கூறுவது- இறுதிப் பகுதி)

அம்மானை யைப்பொற் கழங்கைத்தொடாள்முச்சி லதைநாடிடாள்
அவிர்தூசு குருகாழி அமையப்பெறாள்பாலொடு அமுதுண்டிடாள்
மெய்ம்மானு டைத்திங்கள் வருமென்றுயிர்ப்பாள்மை விழிமூடிடாள்
வீரைப்பி ரான்என் றிரங்குங்கொலோ என்றும் விள்வாள்ஐயோ!
இம்மாதி னைப்பெற்றே டுக்கச்செய்தவமுற்றும் அறியாய்கொலோ
இன்னம்து ழாய்நல்கி டாதுற்றி|டேல்கொச்சை இடைமாதர்தம்
கைம்மாமு லைப்போர்வி ழைந்தெண்ணில்வடிவிற்க ணந்தோறும்வாழ்
கண்ணா! மணிக்குன்ற வண்ணா!பழுத்துள்ள கள்ளத்தனே!
–28-(நற்றாயிரங்கல்)தாழிசை

அம்மானையைப் பொன் கழங்கைத் தொடாள்- (என் மகள் தான் காதலிக்கும் உம்மையே நினைந்து நினைந்து) அம்மானை, பொன்னாலான கழங்கு ஆகியவற்றைக் கையில் எடுப்பதுமில்லை
முச்சிலதை நாடிடாள் அவிர்தூசு குருகு ஆழி அமையப் பெறாள்- அவிழ்ந்த கூந்தலையும் முடிவதில்லை, ஒளிவீசும் ஆடை,கைவளை, மோதிரம் ஆகிய அணிகலன்களையும் அவள் அணிவதில்லை
பாலொடு அமுது உண்டிடாள் -பாலும் சோறும் அவள் உண்பதேயில்லை
மெய்ம் மானுடைத் திங்கள் வரும் என்று உயிர்ப்பாள்-தலைவன் வரும் காலம் வருமென்றே நம்பிஉயிர் வாழ்ந்திருக்கின்றாள்
மை விழி மூடிடாள் – கண் உறங்குவதுமில்லை
வீரைப் பிரான் என்று இரங்கும் கொலோ என்றும் விள்வாள்- வீரகேரளம்புதூர்த் தலைவராகிய நீவிர் எப்பொழுது மனமிரங்குவீரோ என அடிக்கடிப் பெருமூச்சுவிடுவாள்
ஐயோ, இம் மாதினைப் பெற்றெடுக்கச் செய்த தவம் முற்றும் அறியாய் கொலோ -இப்படிப்பட்ட பெண்ணை நான் ஈன்றெடுக்க என்ன தவம் செய்தேனோ தெரியவில்லையே!
இன்னும் துழாய் நல்கிடாது உற்றிடேல் – (என் மகளைப் பற்றி இவ்வளவு கூறியும்) இப்பொழுதும் கூட உம் திருமாலையை அளித்தருளாமல் இருக்காதீர்
கொச்சை இடை மாதர்தம் கைம்மா முலைப்போர் விழைந்து -ஆயர்குலப் பெண்களை மருவி அவர்களுடைய மார்பில் அணைய விரும்பி
எண்ணில் வடிவில் கணந்தோறும் வாழ்கண்ணா -(கோபியர் இல்லந்தோறும்) கணக்கற்ற உருவங்களை (அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம்) எல்லாக் காலங்களிலும் பெற்று வாழும் கண்ணனே!
மணிக்குன்றவண்ணா! பழுத்துள்ள கள்ளத்தனே!- நீலமலை போன்ற நிறத்தவரே! தீர்ந்த திருட்டுத்தன முடையவரே! (என் மகளின் பிரிவுத் துயரைத் தீர்த்தருள்வீராக)

கள்ளன்என ஏசினர்க்கும் காதலறத்தீர்த்தருளும் வள்ளல் ஒருவன்றி மற்றில்லை-அள்ளற்
கடல்வளை துவரைக் காவல் நீத்து மிடலினர் பலர்புகழ் வீரைத் தடமதிற்கோயிற் தங்கினன் அவனே.-
-29-மருட்பா

கள்ளன் என ஏசினர்க்கும் (ஆயர்பாடியில்) பல இல்லங்களில் திருடியவன் என்று பழிபடத் தூற்றினவர்க்கும்
காதலறத் தீர்த்து அருளும் வள்ளல் ஒருவன் அன்றி மற்று இல்லை-ஆசை தீர அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் கொடையாளி அக் கண்ணன் அல்லது வேறு யாருமில்லை
அள்ளல் கடல் வளை துவரைக் காவல் நீத்து- நெருங்கிய அலைகளோடு கூடிய திருப்பாற் கடலிடத்தையும், துவாரகாபுரி அரண்மனையையும் விட்டுவிட்டு,
மிடலினர் பலர்புகழ் வீரைத் தடமதில் கோயில் தங்கினன் அவனே- வலிமை மிக்கோர் பலருடைய போற்றுதலுக்குக் காரணமான மலை போன்ற அரண்களையுடைய வீரகேரளம்புதூர்க் கோயிலில் வந்து தங்கியுள்ள எம்பெருமான் அவரே.

தங்கம்வெள்ளி யாதியவே தஞ்சமென்பார் போற்தமியேன்
பங்கமுற இன்னம் படுத்தா தருள்புரிவாய்;
செங்கணெடு மாலே! திருவீரைக் கோயிலிடத்
தெங்கள்குரு வானகண்ண னே!
–30-இன்னிசை வெண்பா-

செங்கண் நெடு மாலே-சிவந்த தாமரை மலர் போன்ற கண்களையுடைய நெடியோனாகிய திருமாலே!
திருவீரைக் கோயிலிடத்து எங்கள் குரு ஆன கண்ணனே-செல்வமகள் குடி கொண்டிருக்கும் வீரகேரளம்புதூர்க் கோயிலில் எங்களுக்கெல்லாம் ஞானாசிரியனாக அருளுகின்ற கண்ண பெருமானே!
தங்கம் வெள்ளி ஆதியவே தஞ்சம் என்பார் போல்- பொன்னாபரணங்கள், வெள்ளியாலான பொருள்கள் போன்ற வற்றையே செல்வமெனத் விழைவார்கள் போல.துணையாகக் கொள்ள
தமியேன் பங்கம் உற இன்னம் படுத்தாது அருள்புரிவாய்- வறியவனாகிய அடியேன் ஈனமடையும்படித் துன்புறாமல் கிருபை செய்வீராக.-

கண்ணும்கருத் தும்கொடுத் துன்உருக் காணுமாறே
எண்ணும்துணி வும்கொடுத் தாய்பிறி தென்செய் வேன்யான்?
விண்ணும்புவி யும்துணைத் தாள்கவர் வென்றி யோர்ந்தே
நண்ணும்பெரி யோர்மலி வீரை நகர்ப்பி ரானே.–31-கலிநிலைத்துறை-

விண்ணும் புவியும் துணைத்தாள் கவர் வென்றி ஓர்ந்தே-தேவ லோகமும் பூலோகமும் எம்பெருமானாகிய உம் மலரடிகளால் அ ள ந்து திரிவிக்கிரமனாய் நின்ற காரணத்தை நன்கு ஆராய்ந்தே!
நண்ணும் பெரியோர் மலி வீரைநகர்ப் பிரானே – (உம்மிடம் விரும்பி வந்து) சேரும் ஆன்றோர்கள் நிறைந்த வீரகேரளம்புதூர் வாழ் இறைவரே!
கண்ணும் கருத்தும் கொடுத்து உன் உருக்காணுமாறே-காணும் விழியிரண்டும் ஆழ்ந்துணரும் உள்ளமும் அளித்து உம்முடைய பேரெழிலைக் காணும் வண்ணம்!
எண்ணும் துணிவும் கொடுத்தாய்-நினைக்கும் தெளிவினையும் அளித்துள்ளீர்!
பிறிது என்செய்வேன் யான்- (இப்படி உம்மையே எண்ணிப் பாடாமல்) நான் வேறு என்ன செய்வேன் கூறுவீராக.-அவனருளால் அவன்தாள் வணங்கும் பேறும் பெற்றபின் அவனையே பாடிப் பரவுவதே அடியார் தொழிலாம். அதையே அடியேனும் செய்கின்றேன். பிறிதென் செய்வோன் யான் என்கிறார்

நகமன் றேந்தியும் ஆனனம் புரந்தநீ நல்லோர்
இகழ்பொல் லார்அவற் றினைக்கொலப் பார்ப்பதென் றிழப்பாய்?
ககம் ஒன் றூர்ந்துவிண் வழிவரும் நாரணா! கமல
மகள்கொண்கா ! வள வீரையில் மருவுவா னவனே.
-32-கலித்துறை-

ககம் ஒன்று ஊர்ந்து விண்வழிவரும் நாரணா -கருடப் பறவை மீதேறி ஆகாய மார்க்கமாக வந்தருளும் நாராயணரே!
கமலமகள் கொண்கா-தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் கணவரே!
வள வீரையில் மருவு வானவனே- எல்லாச் செல்வங்களும் பொருந்திய வீரகேரளம்பு தூரில் வாழ்கின்ற தேவபிரானே!
நகம் அன்று ஏந்தியே ஆன்இனம் புரந்தநீ -(கோவர்த்தன) மலையை அன்றொருநாள் ஒரு விரலால் தூக்கிப் பிடித்துப் பசுக் கூட்டங்களை யெல்லாம் காத்த நீவிர்.
நல்லோர் இதழ் பொல்லார் அவற்றினைக் கொல்லப் பார்ப்பது என்று இழப்பாய்- உயிர்களிடத்து அன்பு கொண்ட நல்லவர்கள் தூற்றும் படியாக உயிர்க்கொலை புரிவோர் அப் பசுக்களைக் கொல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்று நிறுத்துவீரோ? (தெரிய வில்லையே) விரைந்து வந்து காப்பீராக.

வான கத்துமென் தேவ ரல்லர்யாம் மலையில் உற்றவன் மறவர் காண்மகத்து
ஊன ருந்தியும் பெண்கள் நல்கிடேம் உயிரின் மானமிக்கு உயர வைத்துளேம்
ஆன தன்மைநின் அரச றித்திடா ததும ணஞ்செயற்கு ஆதல் நிம்பமே
கான வேயிசைக் கண்ணன் வீரையூர் கருதும் வீரவேல் மருதன் ஆணையே.–33
-எண்சீர்த் தாழிசை-

வானகத்து மென் தேவர் அல்லர் யாம் (தூதனே!) விண்ணுல கிலிருக்கும் வலிமை யில்லாத தேவர்கள் அல்ல நாங்கள்
மலையில் உற்ற வன்மறவர் காண்- குன்றுகளையே இருப்பிடமாகக் கொண்ட வலிமை மிக்க வேடர்கள் என்பதை அறிவாயாக
மகத்து ஊன் அருந்தியும் பெண்கள் நல்கிடேம் -பெரிய இறைச்சி உணவினை உண்போமானாலும் மகளிரை (உன் மன்னனுக்கு) அளிக்க மாட்டோம்
உயிரின் மானம் மிக்கு உயர வைத்துளேம்- உயிரை விட மானத்தையே பெரிதாகக் கருதுபவர்கள் நாங்கள் ஆன தன்மை நின் அரசு அறிந்திடாதது-(என்னும்) இக்குலப் பெருமையை உன் மன்னன் அறிய மாட்டான்
மணம் செயற்கு ஆதல் நிம்பமே- அரசு (மரம்) மணக்க வேண்டியது வேம்பையே
கானவேய் இசைக் கண்ணன் வீரையூர் கருதும் வீரவேல் மருதன் ஆணையே -குழலூதும் புகழ் மிக்க நெடுமால் வாழும் வீர கேளம்புதூரில் வெற்றிச் சிறப்புடன் விளங்கும் மருதப்பன் ஆணை இது என்பதை நீயும் அறிவாயாக.

ஆண்மகனே! உனைத்தூதிங் கனுப்பு மன்ன னானால்வந்து அமர்புரிந்துஎம் அயிலால் மாய்ந்து சேண் மடவார் முலைபுணர்வான்; எங்கள் பெண்கள் சிவனிடத்தும் குகன்வலத்துந் திகழ்கின் றார்பார்! மாண்மலிகங் கையும்மகவான் மகளும் அஞ்சி வாழ்க்கைகுன்றிப் படும்பாடு மதித்தோர் முன்னைக் கோண்மறைத்தான் தனைவீரை நகரிற் பல்கால் கும்பிட்டெம் குலராயே கொண்டார் அன்றே.–34-எண்சீர் ஆசிரிய விருத்தம்-

உன்னைத் தூது இங்கு அனுப்பும் மன்னன் ஆண்பிள்ளை யானால்- உன்னை இவ் விடத்தில் (பெண் கேட்டுத்)தூதாக அனுப்பி யிருக்கும் அரசனானவன் உண்மையிலேயே வலியவனானால்
வந்து அமர் புரிந்து எம் அயிலால் மாய்ந்து- வேண்டுமானால் இங்கு வந்து எம்முடன் போரிட்டு, எம்முடைய வேலால் உயிர் துறந்து
சேண் மடவார் முலை புணர்வான்- வீர சுவர்க்கம் புகுந்து தேவ லோகப் பெண்களை அடைவானாக
எங்கள் பெண்கள் சிவன் இடத்தும் குகன் வலத்தும் திகழ்கின்றார் பார்- எங்கள் வேடர் குலப் பெண்கள் சிவ பெருமானின் இடப் பக்கத்திலும் அறுமுகப் பெருமானின் வலப் பக்கத்திலும் சிறப்புற்று விளங்குவதைக் காண்பாயாக
மாண்மலி கங்கையும் மகவான் மகளும் அஞ்சி- மாட்சிமை நிறைந்த கங்கா தேவியும் இந்திரன் மகளும் பயந்து
வாழ்க்கை குன்றிப் படும்பாடு மதித்தோர்- தம் வாழ்வு குலைந்து படுகின்ற நிலையை யுணர்ந்தவர்கள் (அவர்கள் படும் பாட்டினை ஆராய்வாயாக)
முன்னைக் கோள் மறைத்தான் தன்னை-முன்பு சூரியனைச் சக்கரத்தால் மறைத்தவரை
வீரை நகரில் பலகால் கும்பிட்டு எம் குலராயே கொண்டார் அன்றே- வீர கேரளம்புதூரில் பல காலங்களிலும் வணங்கி எங்களுடைய குடும்ப விளக்கே எனக் கொண்டாடினர் காண்.-

கொண்டல் வண்ண மேனியும் குவிந்த பொற்கி ரீடமும் கோவை வாயும் முண்டகம் குலாவு கண்க ளும்திருத்
துண்ட மும்செவிக் கணிந்த குண்ட லங்க ளும்கையிற் சோதி ஆழி சங்கமுற் சொலும்பல் சீரும் என்னுளே
அண்ட ரும்பொ றாமைஎய்த வந்த துண்டு பொய்சொனால் ஆயி ரம்பி றப்பில்நீசம் ஆவ துண்டு அவர்வரக்
கண்ட தில்லை எத்தவத்தில் என்ன பாவ முற்றதோ? காமர் வீரை யூரிலென் கவிக்க வாவும் நேயரே!–
35-பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்-

கொண்டல் வண்ண மேனியும் குவிந்த பொற்கிரீடமும்-கார்மேகம் போன்ற உடலும் அழகு மிக்க பொன்னாலான திருமுடியும்
கோவை வாயும் முண்டகம் குலாவு கண்களும் -கோவைப் பழம் போன்று சிவந்த வாயும், தாமரை மலரை யொத்த விழிகளும்
திருத் துண்டமும் செவிக்கு அணிந்த குண்டலங்களும்-(ஒளி வீசுகின்ற) திருமுகமும், காதில் பூண்ட குண்டலங்களும்
கையில் சோதி ஆழி சங்கம் முதற் சொல்லும் பல்சீரும்- திருக்கரங்களில் ஒளி பரப்பும் சக்கரமும் சங்கும் எனச் சொல்லப்பட்ட சிறப்பியல்புகளை
என்னுளே அண்டரும் பொறாமை எய்த வந்தது உண்டு-(ஒருங்கே காட்டி யருளும் திருக் கோலமுடன்) தேவர்கள் எல்லாம் பொறாமையால் எரிச்சலடையும்படியாக
அடியேன் அகத்தில் (கண்ணன் அன்றொருநாள்) வருகை புரிந்தது உண்மை பொய் சொன்னால் ஆயிரம் பிறப்பில் நீசம் ஆவது உண்டு-(அவ்வாறு அவர் வந்தாரில்லை எனப்) பொய் பேசினால் ஆயிரம் பிறவிகளிலும் ஈனமே உண்டாகும்
அவர் வரக்கண்டது இல்லை- (அன்று வந்தவர்) இன்னும் அத்தகையவர் அடியேன் முன் பலரறியத் தோன்ற வில்லை
எத்தவத்தில் என்ன பாவம் உற்றதோ – அடியேன் முற்பிறப்பில் செய்த தவத்தில் எப்படிப்பட்ட குறை சேர்ந்ததோ?(தெரியவில்லை)
காமர் வீரை ஊரில் என் கவிக்கு அவாவும் நேயரே- அலங்கார அழகு மிக்க வீரகேரளம்புதூரில் என்னுடைய பாடலை விரும்பும் அன்பரே! ( அவர் நேரில் வந்து காட்சியளித் தருளுவாரென்றே காத்திருக்கிறேன் என்பதாம்)-

நேயமோர் சிறிதும் நெஞ்சிற் குறியார்
வாயல் கண்டு மறுகுறப் படுத்தும்
பாழ்த்ததீவினைப் படுதுயர் களைந்திட்டு
ஆழ்த்தமெய் உணர்வார் அடியரிற் கூட்டிப்
பார்த்தன் தன்பாற் படிநலங் குறிக்கும்
நீர்த்தவர் பெருமை நிகழ்த்திய மாற்றம்
மெய்ப்படக் காட்டி விடாய்அற மாற்றிப்
பொய்ப்படா நினது பூம்பதம் புகுத்தாய்!
நின்னிறை வுணரார் நெறியிடைப் பழகி
அன்னியம் வகுத்திட்டு அகமிகச் செருக்கி
அந்த வண்ணம் அயர்தரும் என்னை
இந்த வண்ணம் இயக்கிய கருணை
உலகமுற் றுணராது ஒழிதல்நன் றல்ல
திலக வாணுதற் சேயிழை மடவார்
ஆதி யேடணைக்காட்டு அலையினும் அருட்பெரு
நீதிவேட் டுளஎன் நெஞ்சமுற் றறிவாய்!
எவ்வகைப் பொருளும் இயலும்எட் டெழுத்தில்
தவ்வரு முதலைத் தணவுந ரேனும்
ஆருயிர்க் கோறல் அழிதசை யருந்தல்
தீருமாண் பினரேல் சிதடர்அன் றென்னக்
கோடல்மட் டாண்டும் கொழிதமிழ்ப் பனுவல்
பாடல்மிக் கேற்றும் பரிசுநல் கிலையே!
விண்மரு புளிக்கீழ் வீற்றிருந் தானும்
மண்மகள் தன்னை வளர்த்தளித் தானும்
வருதமிழ்ப் பாண்டி வதனம் போலும்
திருமலி வீரையில் தேவரும் பிறரும்
வழிபடக் கருமுகில் மானப்
பொழியருள் விளக்கிப் பொலிந்தபுண் ணியனே.–36-நேரிசை ஆசிரியப்பா-

விண்மரு புளிக்கீழ் வீற்றிருந்தானும்-விண்ணோர் புகழும் புளிய மரத்தடியில் அமர்ந்திருந்த சடகோபாழ்வாரும்
மண்மகள் தன்னை வளர்த்து அளித்தானும்-(இப்பூவுலகில் தோன்றி யருளிய ) பூமாதேவியாகிய ஆண்டாளைக் கண்டெடுத்து வளர்த்து ஆளாக்கி (கண்ணபிரானுக்கு)அர்ப்பணம் செய்த பெரியாழ்வாரும்
வருதமிழ்ப் பாண்டி வதனம் போலும் திருமலி வீரையில்–வாழ்ந்து புகழ் பெற்றுவரும் செந்தமிழ் நாடாகிய தென் பாண்டியின் முகமே போன்று செல்வங் கொழிக்கும் வீரகேரளம்பு தூரில்
தேவரும் பிறரும் வழிபடக் விண்ணுலகத்தவர்களும் மண்ணுல கத்தவரும் போற்றிசைக்கும்படியாக
கருமுகில் மானப்பொழியருள் விளக்கிப் பொலிந்த புண்ணியனே–நீர்கொண்ட மேகம் போன்று கருணையைப் பொழிவித் தருளும் பரிசுத்தமானவரே!
நேயம் ஓர் சிறிதும் நெஞ்சில் குறியார் வாயல் கண்டு-1 (அடியேன் உள்ளத்தே யிருக்கும்) அன்பினைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்கத் தெரியாதவர்கள் மூலமாக
மறுக்குறப்படுத்தும் பாழ்த்த தீவினைப் படும்துயர் களைந்திட்டு- மனங்குழம்பச் செய்யும் கொடுமைகளை யெல்லாம் விலக்கி விட்டு
ஆழ்த்த மெய் உணர்வார் அடியரில் கூட்டி- ஆழமான உண்மைகளை அறிந்தவர்களாசிய பாகவதர்களுடன் சேர்த்து
பார்த்தன் தன்பால் படிநலம் குறிக்கும் – (பாரதப் போரில்) அருச்சுனன் பக்கம் அறவழி நிற்சின்ற
நீர்த்தவர் பெருமை நிகழ்த்திய மாற்றம் -குற்றமற்ற குணங்களையுடைய பெரியோர்களின் சிறப்புகளை (எடுத்துக்காட்டிச்) செய்த மாறுபாடுகளை
மெய்ப்படக் காட்டி விடாய்அற மாற்றி- உண்மை விளங்கும்படி (இப்போது) செய்தளித்து, ஆசை அற்றுப் போகும்படி மாறுதல் செய்து
பொய்ப்படா நினது பூம்பதம் புகுத்தாய்- (எக்காலத்தும்) பூரண நிலை பெற்று விளங்கும் உமது திருமலரடிகளை அடையச் செய்வீராக!
நின் நிறை உணரார் நெறியிடை பழகி- உம்முடைய பூரண நிலையை அறியாதவர்களாகிய பிறசமயத்து வழிகளிலேயே சென்று பழக்கப்பட்டு
அன்னியம் வகுத்திட்டு அகம் மிகச் செருக்கி-வேற்றுமை பாராட்டி, உள்ளத்தில் அகங்காரம் கொண்டு
அந்த வண்ணம் அயர்தரும் என்னை- அவ்வாறே வருத்தம் கொள்ளும் அடியேனை
இந்த வண்ணம் இயக்கிய கருணை உலகம் முற்றும் உணராது ஒழிதல் நன்று அல்ல- இப்படி ஆட்கொண்ட விதத்தை உலகமக்கள் எல்லோரும் அறியும்படியாகச் செய்யாது(அவர் முன்தோன்றாது) இருப்பது நல்லதல்ல
திலக வாள்நுதல் சேயிழை மடவார் ஆதி ஏடணைக் காட்டும் அலையினும் – திலகமுடன் ஒளிவீசும் நெற்றியினையுடைய பெண்கள் முதலான ஆசைகளையே (திரும்பத் திரும்ப) காண்பிக்கும் (இவ்வுலக வாழ்க்கையாகிய துன்பக் கடல்) அலைகளைக் காட்டிலும்
அருட்பெரு நீதி வேட்டுள என் நெஞ்சம் முற்றும் அறிவாய்— (உம்முடை திவ்விய அவதார) அருளிச் செயலென்னும் உண்மை நிலையையே வேட்கை கொண்டுள்ள அடியேனுடைய உள்ளத்தை முழுவதுமாக உணர்வீராக!
எவ்வகைப் பொருளும் இயலும் எட்டெழுத்தில்- (வேதத்தி|னுடைய) எல்லாப் பொருள்களும் கூடியதான விட்டுணு மந்திரத்தில்
தவ்வரு முதலைத் தணவுநரேனும் -தோன்றும் முதல்நிலையை நீங்கியவராலும்
ஆருயிர்க் கோறல் அழிதசை அருந்தல் தீரும் மாண்பினரேல்- பசுக்கொலை ஊண் உண்ணல் இவற்றைத் தீர்க்கும் மாட்சிமை யுடையவரானால்
சிதடர் அன்று என்னக் கோடல் மட்டு ஆண்டும் -அறிவில்லாத வர்கள் அல்லர் என உணரும் அளவில் ஆட்கொண்டும் –கொழிதமிழ்ப் பனுவல் பாடல் மிக்கு ஏற்றும் பரிசு நல்கிலையே-(சொற்பொருள்வளம்) கொழிக்கும் பாசுரங்களை அளவில்லாது யான் பாடி நீவிர் ஏற்று அருள்புரியவில்வையே (ஏனென்று கூறி யருள்வீராக)-

புண்ணருந்தச் சம்மதியோம் போதப் புதுமலர்த்தீம்
கண்ணசையுள் ளோம்பொய் கழிறிடோம்- விண்ணவரில்
சூரனிடம் வீரையில் மால் தொட்டவளை விட்டதன்றோ
பாரதம்நன் றாயுணர்ந்து பார்.–37-நேரிசை வெண்பா-

புண்அருந்தச் சம்மதியோம் – பிற உடல்களின் புண் ஆகிய புலாலை உண்ண ஒருப்பட மாட்டோம்
புதுமலர் தீம் கள் நசை போது உள்ளோம் – அன்றலர்ந்த பூக்களில் உள்ள இனிய தேனின் மேல் நிரம்பிய விருப்பம் உடையேம்
பொய் கழறிடோம் – நாங்கள் இல்லாத ஒன்றைக் கூற மாட்டோம்
விண்ணவரில் சூரனிடம்-தேவர்களுக்குள்ளே ஒருவனாகிய சூரியனின் பால்
வீரையில் மால் தொட்ட வளை -வீரையில் எழுந்தருளியுள்ள நவநீத கிருட்டிணப்பெருமாள் தான் ஏந்தியுள்ள சக்ராயுதத்தை
விட்டதன்றோ பாரதம்- (சயத்திரதனை விசயன் கொல்ல வாய்ப்பாகச் சூரியனை மறைக்குமாறு) செலுத்திய வரலாறு பாரதம் அல்லவா?
நன்றாய் உணர்ந்து பார் – சொல்லையும் பொருளையும் நன்கு சிந்தித்துப் பார்ப்பாயாக.

பாரணைந் தான்திங்கள் என்றூழ்பைங் கிள்ளைப் பறவைநட்டான்
காரமுற்றாள்கம லத்திரு மாதெண்கரப்பிரமன்
ஊரன்னத் தாசைவைத் தான்மதன் கால்வையம் ஒன்றச்சென்றான்
நாரணன் வீரைப் புலவீர்பொய் யன்று மெய் நம்மொழியே.
–38-

திங்கள் பார் அணைந்தான்- சந்திரன் உரோகிணியை (மிக விரும்பிப்) புல்லினான்
என்றூழ் பைங்கிள்ளைப் பறவை நட்டான்- சூரியன் பசிய குதிரைகள் (கட்டிய தேரில்) பறப்பதை மிக விரும்பினான்;
கமலத் திருமாது காரம் உற்றாள்-தாமரையில் உள்ள இலக்குமி பொன் எனப் பெற்றாள்
எண்கரப் பிரமன் ஊர் அன்னத்து ஆசை வைத்தான்- எட்டுக் கைகளை உடைய பிரமதேவன் தான் இவர்ந்து செல்லும் அன்னப் புள்ளை மிக நேசித்தான்
மதன் கால் வையம் ஒன்றச் சென்றான்- மன்மதன் (தென்றல்) காற்றாகிய தேரில் மனமொத்து உலாவினான்
நாரணன் வீரைப் புலவீர்-திருமால் எழுந்தருளியுள்ள வீர கேரளம்பு தூரில் வாழும் அறிஞர்களே!
நம்மொழி பொய்யன்று, மெய்யே.-

மொழியொ ணாத முதற்பதம் நல்கும்நீ
பழியில் ஆண்மைப் பயன்தரல் பாவமோ?
பொழில்வ ளம்பொலி புண்ணிய வீரையூர்
உழியொர் புள்ளில் உலாவும் ஓய் யாரனே!–39-கலிவிருத்தம்-

பொழில் வளம் பொலி புண்ணிய வீரையூர்உழி – சோலைகள் நிறைந்து அழகு மிக்கு விளங்கும் மங்களகரமான வீர கேரளம்புதூரில்-
புள்ளில் உலாவும் ஓய்யாரனே- கருடப் பறவையின் மேலேறிப் பொழுதினைக் கழிக்கும் அலங்கார மோகம் கொண்டவரே!
மொழி ஒணாத முதல் பதம் நல்கும் நீ-(உம்மை அடைந்தவர்க்கு) சொல்லுவதற்கு அரிதான வீடு பேற்றினை அளிக்கும் நீவிர்
பழிஇல் ஆண்மைப் பயன் தரல் பாவமோ- (இம்மையில்)குற்றமற்ற மெய்ம்மைப் பயன் அளித்தால் குறை யுண்டாகுமோ? கூறுவீராக.

ஆரணம் பயந்த துண்டேல் அவன்விதி பழுதா னாலும்
தீரம்நன் றருள வல்லாய் என்னவே சிந்திக் கின்றேன்
காரமர் நெடிய மேனிக் கருணைமால் வரையே காமர்
மாரனைப் பழியார் வீரை வளநகர் வாழ்வன் னானே.–
40-அறுசீர் அசிரிய விருத்தம்-

காரமர் நெடிய மேனிக் கருணை மால் வரையே -நீர் மேகம் போன்ற உடல் வண்ணமும் நெடுங்குன்றம் போன்ற உருவமும் கருணையுள்ளமும் கொண்ட திருமாலே!
காமர் மாரனைப் பழியார் வீரை வளநகர் வாழ்வு அன்னானே-பேரழகு மிக்க மன்மதனைப் போன்ற அழகு மிக்கோர் வாழ்கின்ற வீரகேரளம்புதூரில் இருப்பவரே!
ஆரணர் பயந்தது உண்டேல் -(தாமோதரனாகிய உமது கொப்பூழ்க் கொடியில்) பிரமனைப் பெற்றது என்பது உண்மையானால்
அவன் விதி பழுது ஆனாலும் – அப் பிரமனுடைய எழுத்தில் (அடியேன் தலையெழுத்தில்) குற்றம் ஏற்பட்டாலும் –தீரம் நன்று அருள வல்லாய் எனவே சிந்திக்கிறேன்- மனத்திடமும் அறிவும் வலிமையும் (அடியேனுக்கு) அருளுவீர் என்றே எண்ணியிருக்கின்றேன் காத்தருள்வீராக.

நானென் றெழுந்த இருளைத் தடிந்துன்| நளினப் பதங்கள் கருதித்
தேனென் றினித்த அருளின் பம்உண்டு திகழ்கின்ற நாளும் வருமோ?
மீனென் றளக்கரிடை சென்றும் அன்று வேதம் புரந்த விகிர்தா!
ஆனென் றும்இன்பம் உறும்வீரை யாளும் அரசே! மலர்க்கண் அமுதே!
–41-எழுசீர் ஆசிரிய விருத்தம்

மீன் என்று அளக்கர் இடை சென்றும் அன்று வேதம் புரிந்த விகிர்தா (அசுரன் வேதங்களை ஒளித்த பொழுது) மீன் உருவம் எடுத்துக் கடலிடத்தே போய் வேதங்களை மீட்டுmவந்த தலைவரே!
ஆன்என்றும் இன்பம் உறும் வீரை ஆளும் அரசே- பசுக்கூட்டங்கள் எப்பொழுதும் (உம் கிருபையால்) மகிழ்ச்சியுடன் உலாவும் வீரகேரளம்புதூரினை ஆட்சி புரிகின்ற மன்னவரே!
மலர்க்கண் அமுதே – தாமரை மலர் போன்ற அழகிய விழிகளை யுடைய அமுத மயமானவரே!
நான் என்று எழுந்த இருளைத் தடிந்து-யான், எனது என்னும் அஹங்கார மமகாரமாகிய மயக்கத்தை (அடியேனிடமிருந்து) அறுத்து
உன் நளினப் பதங்கள் கருதி உமது தாமரைத் திருவடிகளையே நினைந்திருந்து
தேன் என்று இனித்த அருள் இன்பம் உண்டு- தித்திக்கும் தெவிட்டாத அமுதம் என்னும்படியான உமது கிருபையைப் பெற்று விளங்கும்
திகழ்கின்ற நாளும் வருமோ -ஒளி பொருந்திய காலமும் (அடியேனுக்கு) வரக் கூடுமோ? கூறுவீராக.

அமுதமுன் அமரர்க் களித்த வானவனே அளவறக் களித்த வானவனே
அம்புயப் பொகுட்டா தனத்திரு வினனே ஆன்செய் வந்தனத் திருவினனே
குமுதம்நேர் வாயாற் சங்கம் ஆர்த்தவனே கோபியர் சங்கம் ஆர்த்தவனே
குஞ்சரம் புரப்பவி ரைந்தமா திரனே கோவென விரைந்த மாதிரனே
சமுசயம் அறுக்கு மந்திரத் தவனே தாழ்வில்எண் மந்திரத் தவனே
தானவர்க் கஞ்சா தரித்தவம் மானே சட்டுவந்தரித்தவம் மானே
திமுதநீர்க் கரந்து மீண்டுவந் தானே சீரற மீண்டுவந் தானே
திரைமலி தவளவீ ரைநா ரணனே செழும்பொழில் வீரைநா ரணனே.–42-பதினான்கு சீர்த் தாழிசை-மடக்கு-
இது, ஒவ்வோர் அரையடியிலும் வந்த சொற்களே மீண்டும் வந்து இருபொருள் தரும் மடக்கணியின்பாற்படும்.

அமுதம் முன் அமரர்க்கு அளித்த வானவனே- (பாற்கடலில் தோன்றிய) அமுதத்தை முற் காலத்தில் தேவர்கட்கு (மட்டும்) பங்கிட்டுக் கொடுத்த பெருமையை உடையவரே!
அளவு அற களித்த வானவனே-கணக்கற்ற (பகைவர்களாகிய அசுரர்களை ஒழித்ததால்) பெருமிதங்கொண்ட தேவரே!
அம்புயப் பொகுட்டு ஆதனத் திருவினனே-செந்தாமரை மலரின் நடுப்பாகமாகிய இருக்கையை உடைய இலக்குமியைத் தேவியாகப் பெற்றவரே!
ஆன் செய் வந்தனத் திருவினனே -பசுக் கூட்டங்களால் (கோவர்த்தன கிரி கொண்டு காத்ததால்) செய்யப்படுகின்ற வணக்கங்களாகிய மேன்மையை உடையவரே!
குமுதம் நேர் வாயால் சங்கம் ஆர்த்தவனே-அல்லி மலரைப் போன்ற வாயில் பாஞ்சசன்னியமாகிய சங்கை வைத்து முழங்கியவரே!
கோபியர் சங்கம் ஆர்த்தவனே-ஆயர் மகளிர் கூட்டத்தால் நன்கு அனுபவிக்கப் பெற்றவரே! (கோபியர் ஆடைகளை ஒளித்து வைத்தவரே! எனினும் ஆம்)
குஞ்சரம் புரப்ப விரைந்த மா திரனே – (ஆதி மூலமே எனக் கூவியழைத்த) கசேந்திரனைக் காக்க வேகமாகச் சென்ற வலிமையை உடையவரே!
கோ என இரைந்த மாது இரனே -கோவிந்தா! கோபாலா! என்று ( துரியோதனன் சபையில்) அரற்றி ஒலித்து அழைத்த திரௌபதியின் வேண்டுகோளை ஏற்றவரே!(ஏற்று அவளுக்கு ஆடை நல்கி மானங்காத்தவரே!)
சமுசயம் அறுக்கும் அம் திரத்தவனே- (ஆன்மாக்களுக்கு உய்யும் நெறியில் ஏற்படும்) ஐயங்களைப் போக்கியருளும் அழகையும் நிலை பேற்றையும் உடைய பரம் பொருளே!
தாழ்வு இல் எண் மந்திரத்தவனே- குறைவற்ற திருவெட்டெழுத்தாகிய அருமறையின் பொருளாயிருப்பவரே!
தானவர்க்கு அஞ்சாது அரித்த அம்மானே- அசுரர்களுக்குப் பயப்படாமல் அவர்களை ஒழித்தருளிய தலைவரே!
சட்டுவம் தரித்த அம் மானே(திருப்பாற் கடலில் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்க) அகப்பையை ஏந்திய அழகிய (மான் போன்றவளாகிய) மோகினி யானவரே!
திமுதநீர்க் கரந்து மீண்டு வந்தானே- (சோமுகனென்னும்அசுரன் வேதங்களைந் திருடிக் கடலில் ஒளித்துப் போக, தேவலோகத்தளவுஞ் சென்று கடல் வெள்ளம் பரந்த காலத்தில்) கடல் வெள்ளம் முழுவதையும் தமது உடலின் ஒருபுறத்திலே அடக்கவல்ல மிடுக்கையுடைய மீன் வடிவம் எடுத்து அசுரனைத் தேடிக் கொண்டு வேதங்களை மீட்டுக் கொணர்ந்தவரே!
சீர் அறம்ஈண்டு உவந்தானே சிறப்புப் பொருந்திய தருமத்தை இவ் வுலகில் நிலைநிறுத்த விரும்புபவரே!
திரைமலி தவள வீரை நார் அண் அனே-அலைகள் நிறைந்ததும் வெண்மை நிறமுடையதுமாகிய (திருப்பாற்) கடலினிடத்து விருப்பம் பொருந்திய தாயனையவரே!
செழும் பொழில் வீரை நாரணனே- வளமை மிக்க சோலைகளால் சூழப்பட்டுள்ள வீர கேரளம்புதூரில் திருக்கோயில் கொண்டுள்ள திருமாலே!

நாரணனே! சங்காழிப் படைக்கை மாலே!
நான்முகனைப் பயந்தவுந்தி நளினத் தானே!
வாரணமுன் சென்றாங்குஎன் முன்னும் இன்னே
வருகவெனச் செந்தமிழால் வாழ்த்து வார்க்குச்
சீரணம் தவிர்நலம் திகழ்ந்த வீரையிற்
பூரணத் திருவருட் பொலிவுண் டாகுமே.–43-வேற்றொலி வெண்டுறை

நாரணனே சங்கு ஆழிப் படைக்கைமாலே- நாராயணா!-சங்கமும் சக்கரமும் (தீமையை யழிக்கக்) கையில் ஏந்தியிருக்கும் திருமாலே! (சங்கு சக்கர தாரியே!)
நான்முகனைப் பயந்த உந்தி நளினத்தானே – பிரமனைப் பெற்றெடுத்த தாமோதரனே!
வாரணம் முன் சென்றாங்கு என் முன்னும் இன்னே வருக எனச் செந்தமிழால் வாழ்த்துவார்க்கு- (ஆதிமூலமே என அழைத்த) கசேந்திரன் முன்பு சென்று காத்தது போல,(எமது துன்பங்களைப் போக்க) எங்கள் முன்னாலும் இப்பொழுதே வந்துகாத்தருள்வீராக என்று சிறப்பு மிக்க பாசுரங்களால் போற்றுபவர்கட்கு
சீரணம் தவிர் நலம் திகழ்ந்த வீரையில்-பழ வினைகளை யெல்லாம் போக்கும் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில் பூரணத் திருவருள் பொலிவு உண்டாகுமே (கோயில் கொண்டு விளங்கும் கண்ணபிரானின், முழுமையான கருணை யழகு தோற்றமாகும்.

உண்டுண் டுறங்கி உறங்கி ஒளிவளையார்
தொண்டுண்ட ணைந்தணைந்து சோர்ந்தாலும் வண்டுண்ட
செங்கமலத் தாள் முகுந்ததற் தென்வீரை யூரினீற்கண்டு
அங்கமலத் தாழ்வொழிக்கலாம்–44-நேரிசை வெண்பா-

உண்டு உண்டு உறங்கி உறங்கி – இவ் வுடலைப் பாதுகாப்பதற்காக இதுவரையில் தினமும்) திரும்பத் திரும்ப உணவு அருந்தியும், பெரும்பாலும் தூக்கத்திலேயே காலம் கழித்தும்
ஒளிவளையார் தொண்டு உண்டு அணைந்து அணைந்து சோர்ந்தாலும் – மின்னுகின்ற வளையல்களை அணிந்த பெண்களின் பணிவிடைகளை ஏற்று அவர்களை அடிக்கடி மருவிப் புணர்ந்தும் (இவ்வுடலும் வாழ்க்கையும் கசந்து) சாலிப்படைந்து மெலிந்தாலும் (பரவாயில்லை. இனி)
வண்டு உண்ட செங்கமலத்தாள் முகுந்தரைத் தென் வீரை ஊரினில் கண்டு-(எப்பொழுதும் அடியார் கூட்டம் போன்று) வண்டுகள் மொய்த்திருக்கும் சிவந்த தாமரை மலரைப் போன்ற திருவடிகளை யுடைய திருமாலைத் தென் தமிழகத்திலுள்ள வீரகேரளம்புதூரில் வந்து தரிசித்தால்
அங்கம் மலத் தாழ்வு ஒழிக்கலாம் –இவ் வுடலால் ஏற்படுகின்ற குற்றங்களையும் கீழ்மையான இழிவுத் தன்மைகளையும் அறவே தீர்க்கலாம்.

ஒழிக்கரும் ஆணவப் பேய்தலைக் கேறலின் ஓகைமிஞ்சிக்
கழிக்கரு வாதனைக் காளா யுளீர்சகம் காக்குமலர்
விழிக்கரு ணைத்திரு மாலென்னும் வாழ்வெற்றி வீரைநகர்
உழிக்கரு டப்பரிச் சேவைகண் டேத்தி உருகுமினே.–45-கட்டளைக் கலித்துறை

ஒழிக்க அரும் ஆணவப்பேய் தலைக்கு ஏறலின்- (எத்தனை முறை யுணர்ந்து தவிர்த்தும்) அழிப்பதற்கு அரிதான (நான் பெரியன் என்கிற) அஹங்கார குணம் உச்சிவரை நிறைந்திருப்பதால்
ஓகை மிஞ்சி- நெஞ்சம் முழுவதும்) உவகை மிகுதியாகி
கழிக்க அரும் வாதனைக்கு ஆளாய் உள்ளீர்-போக்கு தற்கரிய துன்பத்திற்கு ஆட்பட்டு இருக்கின்றீர்கள் (மீண்டும் மீண்டும் கருவில் பிறந்திறக்கும் துன்பத்திற்கு ஆளாக இருக்கின்றீர்கள்)
சகம் காக்கும் மலர்விழிக் கருணைத் திருமால் என்றும் வாழ் வெற்றி வீரை நகர் உழி – உலகத்தையே (தம் அருட் பார்வையால் காத்தருளும் தாமரைக் கண்ணனாகிய எம்பெருமான் அனு தினமும் கோலங் கொண்டிருக்கின்ற வீரச் சிறப்பு மிக்க வீரகேரளம்பு தூரினிடத்தே
கருடப் பரிச்சேவை கண்டு ஏத்தி உருகுமினே- திருமால் கருடன் மீது உலா வரும் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் போற்றி அகம் மகிழ்வீராக.-

உருவென் றருவென்று உழல்புன் சமயத்து
இருள்துன் றியிடைந்து அழும்ஏழ் மையீர்!
விருதொன் றுதென்வீ ரையின்மால் ஒருதூண்
வருபண் பைமதிக் கின்மயக் கறுமே.–46-கலிவிருத்தம்-

உரு என்றும் அரு என்றும் உழல் புன் சமயத்து இருள் துன்றிஇடைந்து அழும் ஏழ்மையீர் – இறைவனுக்கு உருவம் உண்டு என்றும் (அரு சமயம் என்றும்), இறைவன் உருவம் இல்லாதவன் என்றும் (சமணம் போன்றதென்றும் ) உலைந்து திரிந்து, அற்பமான கொள்கைகளை யுடைய சமயங்களின் மயக்கங்கள் நெருங்கித் தம் வசங்கெட்டுப் புலம்பும் பேதைமை யுடையோரே!
விருது ஒன்று தென் வீரையின்மால் ஒருதூண் வரும் பண்பை மதிக்கின் மயக்கு அறுமே -வெற்றிச் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டிருக்கும் திருமால்
(அன்றொருநாள் பிரகலாதனுக்காக) ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டு (நரசிங்கமாய்) காட்சியளித்தருளிய இறை குணத்தை உணர்வீராயின் (சமயங்கள் என்று வேறுபாடு காட்டும்) மயக்கநிலை ஒழியுமே (காண்பீராக)

மயன் வியக்கும் மணிமாட மறுநார்தண் டமிழ்வீரைப்
புயல்புரையும் நெடுமேனி ப் புனிதா நீ புளி நிழல்
இயல் முநிவன் ஒரு பதிகம் இசைத்தானும் கினிதருளும்
பயனெனக்கேன் அருள்கில்லாய் பல பாடல் நேர்ந்தேநே .–47-கொச்சகல் கலிப்பா-

மயன் வியக்கும் மணிமாட மறுநார்தண் டமிழ்வீரை–(சிற்பக்கலையில் வல்லவனான) மயன் என்னும் தேவ லோகச் சிற்பி வியக்கும்படியான (உயர்ந்த சிறந்த) மணிமாடங்களும் தெருக்களும் நிறைந்து, தமிழ்ச்சிறப்பு மிக்க வீர கேரளம்புதூரில்

வலியம் யாம் எனச் செருக்குபுன் குணத்தோர் வான நாட்டிடை வாழ்துந ரேனும்
புலிமுற் போய மான் கன்றெனத் தகாரப் புரிந்துன் மெய்யருட் புகழ் சொலல் விழைந்தேன்
கலியிற் புண்படக் காண்பது முறையோ?கருத்துள் வந்து அந்நாள் கழறல் பொய் மொழியோ-
குலிசன் ஊரிளை நகத்தகும் வீரைக் கொற்ற வாசினைக் கொண்டல் மேனியனே–
49-எண் சீர் ஆசிரிய விருத்தம்-

குலிசன் ஊரிளை நகத்தகும் வீரைக் கொற்ற வாசினைக் கொண்டல் மேனியனே–இந்திரனுடைய தேவ லோகத்தை விஞ்சப்படியான அழகும் வளமும் மிக்க வீரகேரளம்புதூரின் வீரத் தலைவரெ! இத் திருத்தலத்தில் வாசஞ் செய்யும் கார்மேக வண்ணா!
வலியம் யாம் எனச் செருக்குபுன் குணத்தோர் வான நாட்டிடை வாழ்துந ரேனும்-எல்லோரையும் காட்டிலும் வல்லமை மிக்கவன் என்று இறுமாப்புடைய இழி யுள்ளம் கொண்டவர்கள் தேவ லோகத்தில் வசிப்பவர்களே யாயினும் -அவர்கள் –
புலிமுற் போய மான் கன்றெனத் தகாரப் புரிந்துன் மெய்யருட் புகழ் சொலல் விழைந்தேன்– புலியின் எதிரே சென்ற மான் கன்று போல நடுக்கமுறுமாறு செய்து உம்முடைய உண்மையான அருளிச் செயல்களைப் பாட ஆவல் கொண்டேன்.
கலியிற் புண்படக் காண்பது முறையோ?- (அடியேன்) வறுமையிலும் சிறுமையிலும் உழன்று வேதனைப்படுதல் முறையாகுமோ?
கருத்துள் வந்து அந்நாள் கழறல் பொய் மொழியோ- அடியேன் மனக்காட்சியில் அன்றொரு நாள் தோன்றி யுரைத்த மொழிகளெல்லாம் உண்மையில்லையோ ? (எல்லாம் பொய் தானோ? மொழிந்தருள்வீராக)

மேனி முற்றும் நீற ணிந்து உருத்தி ரக்கணங் கள்போல் |
மின்னு மென்னை நின்ன ருட்கண் வேட்கை யெய்த விட்ட
நானி லத்தோர் எட்பொ ரப்பு னைந்து லாவுவார் கள்தம்
நாறல் வாயும் ஏசல் காணல் ஞாய மென்க லாகுமோ?
வேனில் வேள்வி ழாவ றாத வீரை யூரில் நாரணா!
வேலை சுற்று பார ளந்து விண்ண ளந்துமா வலிக்கு
ஆனி யற்ற மெய்ப்ப தம்கொடுத்த ளித்த ஐயனே!
அஞ்சல் அஞ்சல் என்ற நாள்ர் ஆனை முன்செல் அப்பனே!–50-பதினான்குசீர்த் தாழிசை-

மேனி முற்றும் நீறு அணிந்து – உடல் முழுவதும் திருநீறு பூசி உருத்திரக் கணங்கள் போல் மின்னும் என்னை-சிவகணங்களைப் போல ஒளி வீசும் அடியேனை
நின் அருட்கண் வேட்கை எய்த விட்ட நீ – உம்முடைய திருவருள் பார்வையைப் பெற வேண்டுமென்ற தீராத விருப்பத்தை(அடியேனுள்ளே ) ஏற்படுத்தி யிருக்கும் நீவீர்
நால் நிலத்தோர் எட்பொரப் புனைந்து உலாவுவார்கள்தம்-இவ் வுலகத்தவர்கள் அனைவரும் இகழும்படியாகக் கற்பனை செய்துரைத்துத் திரிவார்களுடைய
நாறல் வாயும் ஏசல்காணல் ஞாயம் என்கல் ஆகுமோ -(கூடுசொற்களே பேசும்) தீ மணம் வீசும் வாய்கள் பழிப்பதைப் பார்த்து வாளாயிருப்பது முறையாகுமோ?
வேனில் வேள் ‘விழா அறாத வீரையூரில் நாரணா-வேனில்விழா, வேள் விழா போன்று பல விழாக்கள் மலிந்த வீர கேரளம்புதூரில் கோலஞ் செய்யும் நாராயணரே!
வேலை சுற்று பார் அளந்து விண் அளந்து மாவலிக்கு ஆனி அற்ற மெய்ப்பதம் கொடுத்து அளித்த ஐயனே!- (வாமன அவதாரமெடுத்து)உம் திருவடியால் இக்கடல்சூழ் மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்து எல்லையில்லாத இன்பம் நல்கும் (உம் திருவடிகளை யுடையும்)
வீடு பேற்றினை மாபலிச் சக்கரவர்த்திக்கு அருளிய இறைவரே!
அஞ்சல் அஞ்சல் என்று அந்நாள் ஓர் ஆனைமுன் செல் அப்பனே-(ஆதி மூலமே என ஓலமிட்டழைத்த போது) பயங்கொள்ளாதே என (இதோ வந்தேன் என) அன்றொரு நாள் கசேந்திராழ்வார் முன்னே சென்ற எந்தையே! (அடியேனுக்கும் காட்சி தந்து அவ் வண்ணம் மொழிந்தருள்வீராக.)

அப்பணி சென்னியன்அனையார் பத்தி ஓர்கால் அம்புயப்பூ வினன்போல்வார் கருமம் ஓர்கால்
முப்பழச் சாறுஒல்குதமிழ்ச் சடகோ பாழ்வான் முதலினர்மெய் ஞானம்விட்டம் மொழியா மோன
மெய்ப்பல கைஎட்டெழுத்தும் உடங்க ளாக வீரைநகர் வாழ்பெருமாள் ஆடீர் ஊசல்
செப்பரும் சீர்த்திருவும் நிலமகளும் சேரத் தேவகியார் செல்வர்இருந்து ஆடீர் ஊசல்–51-எண்சீர் ஆசிரிய விருத்தம்-

அப்பு அணி சென்னியன் அனையார் பத்தி ஓர்கால்–கங்கையாதிய நீரினைத் தலையிலே சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமான் போன்ற தேவர்களின் அன்பு வழிபாடு ஒரு காலாகவும்
அம்புயப் பூவினன் போல்வார் கருமடம் ஓர்கால்- (உம்முடைய உந்திக் கமலத்தில் வீற்றிருக்கும் பிரமம் போன்றவர்களின்ஆக்கல் போனற தொழில்கள் ) ஒரு காலாகவும்
முப்பழச் சாறு ஒல்கு தமிழ்ச் சடகோபாழ்வான் முதலினர் மெய்ஞானம் விட்டம் – மா.பலா,வாழை என்னும் பழங்களைக் குழைத்துச் செய்யப் பெற்ற மதுரம் போன்ற பாசுரங்களை இசைக்கும் சடகோபாழ்வார் ஆகிய பெரியோரின் மெய்ஞானமே உத்திரமாக
மொழியா மோனம் மெய்ப்பலகை சொல்லு தற்கரிய மௌனமே மெய்ப் பலகையாக
எட்டெழுத்தும் வடங்கள் ஆக- நாராயணாய என்னும் விட்டுணு மந்திரமே கயிறு ஆக (அமைத்து ஊஞ்சலாக்கி அதில்)
வீரை நகர் வாழ் பெருமாள் ஆடீர் ஊசல் – வீரகேரளம்புதூரில் வாசஞ்செய்கின்ற கண்ண பெருமானே! ஊசலாடுவீராக
செப்ப அரும் சீர்த் திருவும் நிலமகளும் சேரத் தேவகியார் செல்வர் இருந்து ஆடீர் ஊசல்-தேவகி மைந்தரே!-சொல்லுதற்கு அரிதான சிறப்புகளுடன் கூடிய பெரிய பிராட்டியாரோடும் பூமிப் பிராட்டியாரோடும் சேர்ந்திருந்து ஊசல் ஆடுவீராக!

ஊசலென வேதிரியும் உள்ளத்தேன் ஓர்மையின்றிப்
பேசலும் கேட் டின்பம் பெருக்குமோ-வாசத்
துளவனணி வீரையர்கோன் தொல்லாயர் பாடிக்
களவனணி தண்டைக் கழல்.–54-நேரிசை வெண்பா

ஊசல் எனவே திரியும் உள்ளத்தேன்-(அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டு) ஊஞ்சலைப் போலவே அலைந்து திரியும் நெஞ்சத்தை யுடையேன் (அடியேன்)
ஓர்மை இன்றிப் பேசலும் கேட்டு இன்பம் பெருக்குமோ-துணிவில்லாமல் பிதற்றுவதைச் செவியுற்ற பின்பு (உம் உள்ளத்தில்) மகிழ்ச்சி மேலிடுமோ?
வாசத் துளவன் அணி வீரையர்கோன் தொல்லாயர் பாடிக் களவன் அணி தண்டைக் கழல்- நறமணம் பொருந்திய திருத்துழாய் மாலையை அணிந்தவரே! பெருமை மிக்க வீரையூரின் தலைவரே! தொன்மைச் சிறப்பு மிக்க ஆயர் பாடியிலுள்ள கோபியர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரே! (வெண்ணெய் திருடியவரே) அழகு பொருந்திய தண்டையைத் திருவடிகளிலே அணிந்தவரே!
(என அனைவரும் புகழத் தக்கவரே அடியேன் மீது இரக்கம் கொள்ளலாகாதோ? அருள்வீராக-

கழல்வேட்டுன் மெய்ப்புக ழேபகராதருங் கானகத்தில்
விழல்வாய்ப்ப நீ இறைப் பாரென்னவேபைம்பொன் வெஃகி நொந்தேன்
அழல்வாட்டு மென்மெழு காகாமுன்ஆண்டருள் அங்கையில்வேய்ங்
குழல்கேட்கும் மால்மிக்கு ளாய்வீரை மேவும் குணக்கொண்டலே.–53-கட்டளைக் கலித்துறை

அங்கையில் வேய் குழல் கேட்கும் மால் மிக்குளாய் வீரை மேவும் குணக் கொண்டலே – அழகிய கையில் புல்லாங்குழலை மிக்க விருப்பமுடன் இசைப்பவரே! வீரகேரளம்புதூரில் விரும்பி வாழும் பெருங்குணமுடைய மேகம் வண்ணமுடையவரே!
கழல் வேட்டு உன் மெய்ப்புகழே பகராது -(அழியாப் பேரின்ப வீட்டை நல்கும் உம்முடைய) திருவடிகளை வேண்டி உம்முடைய திருப்புகழை ஓதாமல்
அருங் கானத்தில் விழல் வாய்ப்ப நீர் இறைப்பர் என்னவே பைம்பொன்வெஃகி நொந்தேன்–அருமையான குறிஞ்சி நிலத்தில் புன்மையான புற்கள் வளரும்படியாகத் தண்ணீரை இறைத்துக் கொட்டுபவர்களைப் போலவே (அடியேனும்) பசும் பொன் போன்ற செல்வத்தையே விரும்பியிருந்து (இதுகாறும்) துன்பப்பட்டேன்
அழல் வாட்டும் மென் மெழுகு ஆகா முன் ஆண்டு அருள்– (அடியேன்) தீயினால் உருகும் மெழுகாய்க் கரைந்து அழியும் முன்பாக வந்து ஆட்கொள்வீராக!

குணங்கும் மாதர்தம் குயத்துமால்கொளும்
சுணங்கல் போலுமென் தொழும்பும் கொள்வையோ?
அணங்கு மாய்அமு தளித்து வானவர்
கணங்கொள் வாய்திரு வீரையிற் கண்ணனே.–54-கலி விருத்தம்

அணங்குமாய் அமுது அளித்து வானவர் கணம்கொள் வாய் திருவீரையில் கண்ணனே-மோகினியாக வந்து தேவர்களுக்கு அமுது அளித்து. செல்வச் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில்வாழும் கண்ணபிரானே!
குணங்கும் மாதர் தம் குயத்து மால் கொளும் (வயது செல்லச்செல்ல இயற்கையில்) வளைந்து மெலிந்து வற்றிப் போகும் பெண்களுடைய நகில்கள் மீது விருப்பம் கொள்கின்ற
சுணங்கல் போலும் என் தொழும்பும் கொள்வையோ-மெலிந்தவனாகிய அடியேனுடைய அடிமைப் பணியையும் (உம் திருவுள்ளத்தில்) ஏற்று அருள்வீர்களோ? கூறுவீராக.

கண்ண னைக்கரு ணைக்கட லேநிகர் காகுத்தன்தனைக் காசைமென் பூந்துண
வெண்ண னைத்தனீ வீரையில் மேவிய மாய னைத்தினம் வாழ்த்தெடுக் கின்றவர்
எண்ண முற்றுப் பெறாதெனச் சொல்லன் ஏழை மானீடர் காள்ஒரு பாடலால்
அண்ண லம்திருக் கச்சியிற் செய்தபேராடல் பாரில் அனேகர் சொல் வார்களே.–55-கட்டளைக் கலிப்பா

ஏழை மானிடர்காள்- அறியாமையை உடைய மாந்தர்களே!
கண்ணனை, கருணை கடலே நிகர் காகுத்தன் தன்னை-கண்ணபெருமானை, கருணைக் கடல் போன்ற இராமனை
காசை மென் பூந்துணர் வண்ணனை, தனி வீரையில் மேவிய மாயனை – காயா மலர்ப்பூங்கொத்து போன்ற நீல வண்ணரை, சிறப்பு மிக்க வீரையூரினில் விரும்பி வாழும் மாயோனை
தினம் வாழ்த்தெடுக்கின்றவர் எண்ணம் முற்றுப் பெற தென சொல்லன்மின் -நாள் தோறும் ஸ்திதித்துப் போற்றி செய்பவர் விண்ணப்பங்கள் நிறைவேறாது எனக்கூறாதீர்
ஒரு பாடலால் அண்ணலம் திருக்சச்சியில் செய்து பேராடல் பாரில் அனேகர் சொல்வார்களே – திருமழிசையாழ்வார் மணி கண்ணன் போகின்றான் ‘ என்னும் ஒரு வெண்பாவால் காஞ்சி வரதர் சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக திருவிளையாடலைப் பலரும் கூறுவார்களே. (அவற்றையெல்லாம் கேட்டறிந்தாலும் உம்முடைய இழி குணத்தை விட்டொழிப்பீராக.)

களங்கமற்ற மெய்ஞ்ஞானக் கண்ஈந் தாளும் கண்ணனைத்தென் வீரைநகர்க் கண்ணே கண்டு
விளங்கனியிற் கன்றெறிந்த தாதி யான விளையாடல் களைத்தமிழால் விளம்பப் பெற்றேன்
அளங்கருதிப் பானையினை வியந்து பேசா தனவாய பொருளைவிளித்து அகம்ஓல் காமல்
இளங்கவிஞர் மதிப்பதெண்ணிப் புலம்ப மாட்டேன் யானடைந்தஅநுபூதிக்கு எண் இன்றாமே.–56-எண்சீர் ஆசிரிய விருத்தம்

களங்கம் அற்ற மெய் ஞானக்கண் ஈந்து ஆளும் கண்ணனை-குற்றமில்லாத மெய்ஞானவுணர்வு நல்கி (அடியேனை )ஆட்டுவிக்கின்ற கண்ணபெருமானை
தென்வீரை நகர்க் கண்ணே கண்டு-தென்திருப்பதியாம் வீரகேரளம்புதூரிலே தரிசித்து
விளங்கனியில் கன்று எறிந்தது ஆதியான விளையாடல்களைத் தமிழால் விளம்பப் பெற்றேன் – கண்ணன் விளவெறிந்தது முதலான பேராடல்களை (திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களாகிய ஆழ்வார்களின்) தமிழ்ப் பாடல்களால் சொல்லக் கேட்டு அடியேனும் பாடினேன்-
அளம் கருதி பானையினை வியந்து பேசாது-(கண்ணனின் பேராடல்களின் பெருக்கம் காரணமாக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என) முழுவதையும் விளக்கிச் சொல்லாது
அனவாய பொருளை விளித்து அகம் ஒல்காமல் -அத்தகைய உட்பொருள்களை மட்டுமே கூறி, மனம் தளராமல்
இளம் கவிஞர் மதிப்பது எண்ணிப் புலம்பமாட்டேன் – சிறு புலவர்கள் (அடியேனை)பாராட்ட வேண்டுமென்பதற்காக வீணாகப் பாடமாட்டேன்
யான் அடைந்த அநுபூதிக்கு எண் இன்று ஆமே-(கண்ணால் ஆட்கொள்ளப் பெற்று)அடியேன் பெற்ற பேரின்பத்திற்கு (தானே கண்டறிந்ததும் பிறர்க்குச் சொல்ல இயலாததுமான பேரின்பத்திற்கு) அளவே கிடையாது.

இன்றுடன் போன நாள்களும் வந்திடுந்தேதி யோடுசொல்1 என்றும்நின் பாரம் நானென நாடும்நீர்
ஒன்றுதந் தாய்பொ லார்உதி ரந்திரண் டாழிதோயஓருங்கடுந் தீரா! வீரமும் ஈவதேன்?
நன்றுபண்பி யாவும் நீதரல் என்கைவம் போதென்வீரையில்நந்துதண் டாழி வாள்சிலை யோடுளாய்!
மன்றுள்நின் றாடி னான்அயன் இந்திரன் தேவர் மானிடர்மண்கலுழ்ந்தான்எ னாநிகழ் மாயனே!–57-பதின்சீர் வண்ண விருத்தம்
–( தந்தனந் தான தானன தந்தனந் தான தானன
தந்தனந்தான தான்ன தானனா)

இன்றுடன் போன நாள்களும் வந்திடும் தேதி யோடுசொல்-(அடியேன் பலவாறு போற்றிப் பாடியும் ) இந்நாள் வரையும் இனி வரப் போகும் நாள்களையும் கூட்டியுரைப்பீராக
என்றும் நின் பாரம் நான் என நாடும் நீர் ஒன்று தந்தாய்-எக் காலத்தும் உன்னுடைய துன்பச் சுமைகளை யெல்லாம் நானே சுமப்பேன் என்று அடியேனை நாடி வந்த நீவீர் எல்லாம் ஒன்று என அருளினீர்கள்
பொலார் உதிரம் திரண்டு ஆழி தோய ஒருங்கு அடும் தீரா-தீக்குணமுடைய அசுராதிகள் ( முற்றிலும் அழிந்ததால் அவர்களுடைய ) இரத்த ஆறு பெருகி கடலைச் சென்றடையுமாறு போரிட்டழிக்கும் வெற்றிச் செல்வரே!
வீரமும் ஈவது ஏன்- (அடியேனுக்கு) வலிமையை அளிப்பது எதற்காகவோ?
நன்று பண்பு யாவும் நீ தரல் என்கை வம்போ-நல்லவை எல்லா வற்றையும் நீரே அருளுகிறீர் எனக் கூறுதல் பொய்யோ
தென் வீரையில் தந்து துண்டு ஆழி வாள் சிலையோடு உள்ளாய் வீரகேரளம்புதூரில் சங்கு, தண்டம், சக்கரம், வாள். வில் என்னும் பஞ்சாயுதபாணியாய் விளங்குகின்றவரே!.
மன்றுள் நினறு ஆடினான் அயன் இந்திரன் தேவர் மானிடர் மண்கலுழ்ந்தால்ஏனை நிதழ் மாயனே- சபைகள் தோறும் காலைத் தூக்கி நின்று ஆடும் சிவபெருமான், பிரமன்,தேவேந்திரன், தேவலோகத்தவர் மற்றும் மண்ணுலக மக்கள் எல்லாம் (நீவீர்) மண்ணுலகில் வந்து கலங்கி அழுதீர் என்று சொல்லும்படியாகக் கண்ணன் அவதாரமாய் நின்ற மாயக் கண்ணபிரானே! (திருவாய் மலர்ந்தருளுவீராக.)

மாயன் ஆரணஞ் செப்புநர் பலர்வரலான நாபியந் தக்கரி யவன் அடல்
வாணன் ஆணமைகுன் றப்பொரு சிலைவலி யுற்றோன் ஓர்
பாய வானவெங் கட்கடு அரவணைஓவி வீரையின் கட்குடி கொளும்அரி
பாலெ னாதுநெஞ் சத்துயர் முழுதும்உரைப்பாரார்?
கார னானமுன் ஒஞ் சத்தகு தகையதுநாரை மீன்அருந் தித்திரி பிழையது
காமர் ஓதிமம் தத்தைஅ னவன்மகன் நட்டூர்ஆன்ஈர மீறிஅங் குற்றுள மகிழ்வன
தோழி மார்மயங் கிப்புணர் பவர்அனை ஏகி டாள்சினர் தெட்டுணை யுரிமையும் விட்டாளே
.–58-பதின்மூன்றுசீர் வண்ண விருத்தம்)-(தான தந்தனந் தத்தன தனதன தான தானனந் தத்தன தனதன
தான தானனந் தத்தன தனதன தத்தானா)

மாயன் ஆரணம் செப்புநர் பலர் வரல் ஆன நாபி- மாயவன்,வேதத்தைச் சொல்பவர்கள் பல பேர் தோன்றுவதற்குக் காரணமான (பிரமனை உந்திக் கமலத்திலே தோற்றுவித்த )பத்மநாபன்
அந்தக் கரியவன் அடல் வாணன் ஆண்மை குன்றப் பொருசிலை வலி உற்றோன்- நீலமேக வண்ணன், போரிட வந்த வாணாசுரனின் ஆண்மை கெடும்படியாகச் சண்டையிட்ட வில் வலிமை யுடையோன்
ஓர் பாயல் ஆன வெம்கண் கடு அரவணை ஓவி- வெம்மையான நஞ்சினையுடைய (ஆதிசேடன் என்னும்) பாம்பாகிய படுக்கையை விட்டு (எழுந்து வந்து)
வீரையின் கண் குடி கொள்ளும் அரி பால்-வீரகேளம்புதூர் கோயிலிலே வாசங்கொண்டிலங்கும் (என் தலைவனாகிய) திருமாலினிடத்தே எனது நெஞ்சத்துயர் முழுதும் உரைப்பார் யார்-(தலைவனை
விட்டுப் பிரிந்துழலும்) என்னுடைய உள்ளத்துத் துன்பத்தை யெல்லாம் சென்று சொல்லி வருவார் யார் இருக்கிறார்கள்? (யாரும் இல்லையே)
கார் அனான் முன் ஒஞ்சத் தகு தகையது- மேகமானது (என் தலைவனாகிய நீலமேக வண்ணனின் மேனி நிறத்தைக் கண்டு) அன்னவர் முன்னே செல்லவும் வெட்கப்படும் தன்மை யுடையது
நாரைமீன் அருந்தித் திரி பிழையது-நாரையானது மீன்களை நீரில் பிடித்துத் தின்னும் குற்றமுடையது (என் தலைவன் மீன் அவதாரம் செய்தவன், நாரைக்கு அவனுருவம் மீன் போன்றே தோன்றும் ஆகையால் அதுவும் பொருந்தாது)
காமர் ஓதிமம் தத்தை அனவன் மகன் நட்டு ஊர் ஆன் உற்று உளம் மகிழ்வன – அழகிய அன்னமும் கிளியும் அத்தகையவரின் (என் தலைவனின்) மக்களாகிய பிரமனும் ஏறச் செலுத்தும் ஊர்திகள்; மேலும், வீர கேரளம்புதூரின் சோலையின் வனப்பைக் கண்டு அங்கேயே தங்கி நெஞ்சம்
நிறைவன (ஆகையால் அவையும் பொருத்தமில்லை)
தோழிமார் மயங்கிப் புணர்பவர்- (என்னைச் சுற்றி யிருக்கும் என்னுடைய)தோழிப் பெண்களோ (என் தலைவனைப் போன்ற ஆண்மை மிக்கவர்களைக் கண்டாலே) மயக்கம் கொண்டு அணையும் இயல்பினர் (எனவே அவர்களும் தூதாகச் செல்லத் தகுதியற்றவர்)
அனை ஏகிடாள் சினந்து எத்துணை உரிமையும் விட்டாளே- அன்னையோ (நான் சொன்னாலும் ) போக மாட்டாள்.-என் மீதும் கோபங்கொண்டு எள்ளளவு கூட அன்பில்லாதவளாக மாறிவிட்டாள்!
இது, தலைவனிடம் தூது அனுப்பத்தக்க தூதுப் பொருள் அமையாது வருந்தும் தலைவி இரங்கிக் கூறியதாகும்.

ஆளாவார் சென்னி அணிபூ வனையதிருத்
தாளா! நம் வீரைநகர்த் தாடாளா!
தேளாம் மிடியொழித்துச் சித்தியெட்டும் நல்கியென்றும்
மீளாக்கதியில் விடு.–59-சவலை வெண்பா-

ஆளாவார் சென்னி அணி பூ அனைய திருத்தாளா -தேவரீருக்கு அடியாரான பாகவதர்கள் தலையில் சூடும் தாமரை போன்ற திருவடிகளை உடையவரே!
நம் வீரை நகர்த் தாடாளா -எங்கள் வீரகேரளம்புதூரில் வாழுபவரே!
தேள்ஆம் மிடி ஒழித்து சித்தி எட்டும் நல்கி என்றும் மீளாக் கதியில் விடு-தேன் போன்று துன்பத்தைத் தரும் என் வறுமையை நீக்கி அட்டமாசித்தி என்பன வற்றை யெல்லாம் தந்து, எப்பொழுதும் நீங்காத பேரின்ப வீட்டை அருளுவீராக!

விடுக்கும் தழையன்றி மாலையொன் றீயும்பொய் வேட்கையன்அன்று
எடுக்கும்குன் றாற்பசுக் காத்தான்தென் வீரை யிடத்தினிது
கொடுக்கும் துழாயலங் கற்சீர் இரண்டும் குலாவுவதால்
‘படுக்கும் கொடுமை யலார்க்கரு ளோகைபப் பாதியன்றே
.–60-கட்டளைக் கலித்துறை-

விடுக்கும் தழை அன்றி மாலை ஒன்றுஈயும் பொய் வேட்கையன் அன்று- (உம்முடைய தலைவர்) கையுறையாகத் தந்தனுப்பியுள்ள இத் தழை மட்டுமல்லாமல் மாலை ஒன்றையும் அளித்துள்ளார் என்பதால் அவர் விருப்பத்தில் ஐயங்கொள்ளாதே. அவர் பொய் வேடதாரி அல்லர்
அன்று எடுக்கும் குன்றால் பசுக்காத்தான்- கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்பாடியிலுள்ள பசுக் கூட்டங்களை யெல்லாம் காப்பாற்றியவர் அவர்
தென் வீரை இடத்து இனிது கொடுக்கும் துழாய் அலங்கல் சீர் இரண்டும் குலாவுவதால் படுக்கும் கொடுமை – வீரைநகரில் மகிழ்ந்து கொடுத்த இத் திருத்துழாய் மாலையில் தளிராகிய தழை என்பதும் உண்டு, அதுவே பூமாலையாக ஆவதும் உண்டு. இவ்விரண்டு சிறப்புகளை உடையதாகையால் இதைப் பெற்றவர் துன்பங்கள் எல்லாம் தீரும்
அயலார்க்கு அருள் ஓகை பப்பாதி அன்றே-(தீமை புரியும் கொடுஞ்செயல் புரிபவர் அல்லாத) நல்லோருக்கெல்லாம் அவர் அருளும் உவகை பாதிபாதி என்று தவறாக எண்ணாதே. (அவர் அருள் முழுமையானதே) இதை ஏற்றுக் கொள்வாயாக.-

பாதிக் கலைவாண் மதிநுதற்பொற் பாவை யனையீர் எனதுமகள்
பலவா மகளிர் விளையாட்டிற் பழகும் வீரைப் பதிமாலை
வீதிக் கருடன் மிசைகண்டே மெலிந்து பலகோ ரணிசெய்து
வீழ்ந்தே கிடந்தாள் அன்றொருநல் விறலி கொணர்ந்த விரைத்துளவால்
சோதிக்கமல முகமலர்ந்து சொற்சோர் வின்றி ஆன்பாலும்
சோறும் அருந்தி வளைகலன்பொற் சுண்ணம் களபம் தொடுத்தணிந்து
மாதிக்கறிய இன்றென்பால் வருவான் கலக்கஎ னச்செருக்கி
மலரால் அரங்கும் அலங்கரித்து வளஞ்சேர் துதிசொற்றிருந்தாளே
.–61-பன்னிருசீர்த்தாழிசை-இதுவுமது-

பாதிக் கலை வாள் மதி நுதல் பொற்பாவை அனையீர்-பிறைச் சந்திரனைப் போலவும் ஒளி வீசுவதுமான நெற்றியையுடைய தங்கப் பதுமையைப் போன்ற பெண்களே!
எனது மகள் பல ஆம் மகளிர் விளையாட்டில் பழகும் வீரைப்பதி மாலை-என்னுடைய பெண்ணானவள் (அன்று ஆயர்பாடியில்) எண்ணற்ற கோபியர்கள் இடையே பற்பல ஆடல்களில் மூழ்கித் திளைத்த வீரகேரளம்புதூர்த் தலைவரான திருமாலானவர்
வீதிக் கருடன் மிசை கண்டேமெலிந்து பல கோரணி செய்து வீழ்ந்தே கிடந்தாள்-தெருவில் கருடப்பறவை மீது அமர்ந்து வந்ததைப் (கருட சேவையினை) பார்த்து (அவர் மீது காதல் கொண்டு) உடல் மெலிவுற்று, சொல்லு தற்கரிய பலவித நோய்கள் பெற்று (பேச்சு மூச்சின்றி) தரையில் படுத்திருந்தாள்-
அன்று ஒரு நல் விறலி கொணர்ந்த விரைத் துளவால் சோதிக் கமல முகம் மலர்ந்து- அத்தகைய ஒருநாளில் இளம் பருவத் தோழி ஒருத்தி (தலைவரிடத்திருந்து) கொண்டு வந்த
நறுமணம் கமழும் திருத்துழாயால் (அவள் மயக்கம் தீரும்படியாக) அவள் நிலையை ஆராய்ந்த பொழுது (அது வரையில் சோர்ந்து காணப்பட்ட அவள்) அத் துழாயால் ஒளி வீசும் தாமரை மலர் போன்று முகமலர்ச்சி யுண்டாகி
சொல் சோர்வு இன்றி ஆன் பாலும் சோறும் அருந்தி-(ஆனந்த மேலீட்டினால், வாயில் படபடவென சொற்கள் தடுமாற்றமின்றி வெளி வரவும், பசுவின் பாலும் சோறும் உண்டு
வளை கலன் பொற்சுண்ணம் களபம் தொடுத்து அணிந்து- கையில் வளையல்களையும் உடல் முழுவதும் ஆடை அணி கலன்களையும் பொற் கண்ணமும் நறுமண மிக்க சாந்தினையும் மிகப் பலவாக அணிந்து கொண்டு
மா திக்கு அறிய இன்று என்பால் வருவான் கலக்க எனச் செருக்கி- ( அழகும் சிறப்பும் பொருந்திய) தாயே! எல்லாத் திசை யிலுள்ளவர்களும் அறியும்படியாக (என் இறைவர்) இன்றைய தினம் என்னிடம் வருவார், வந்து என்னை அணைப்பார் என்று மிக்க களிப்புடன்
மலரால் அரங்கும் அலங்கரித்து வளம்சேர் துதி சொற்றிருந் தாளே- பூக்களால் சபையைச் சிங்காரித்த வண்ணம்,
(நலம் தருகின்ற நாராயணா என்னும் படியான) பல போற்றிப் பாசுரங்களை அவள் வாயில் சொல்லிக் கொண்டே யிருந்தாள் (என்னே அவள் மகிழ்ச்சி!)-

இருந்தமிழ்ச்சொல் மழைபொழியும் புலவீர்! செஞ்சொல் ஏற்றமெல்லாம் மருதனைப்போல் இனிது தேறும்
அருந்தகைய மன்னர்களே! வயிரம் குன்றா அன்பர்காள்! வீரையின்மால் அடியார்பாதம்
தருந்தரும வடிவான துகளைச் சென்னி தாங்கியபின் என்மனத்திற் தானாத் தோன்றும்
பெருந்தனத்துப் பனுவல்கள் எத்தனையோ சற்றே பேசுகின்றேன் இதுபகர்தல் பெருமைக் கன்றே.
–62-எண்சீர் ஆசிரிய விருத்தம்-

இருந்தமிழ்ச் சொல் மழை பொழியும் புலவீர்-(பல்லாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் இளமையோடு இருக்கும்)சிறந்த தமிழ் மொழியால் எண்ணற்ற பாசுரங்களைப் பாடும் புலமையுடையோரே!
செஞ்சொல் ஏற்றம் எல்லாம் மருதனைப் போல் இனிது தேறும்- (நீவிர் சொல்லும்) செம்மை மொழியின் பெருமை யனைத்தும் மருதப்பனைப் போன்றே ஏற்றம் பல பெறும்
அருந்தகைய மன்னர்களே வயிரம் குன்றா அன்பர்காள்-நற்குணமும் பெருமையும் மேன்மையும் மிக்க அரசர் பெரு மக்களே! வலிமை மிகப் பெற்ற அன்புடையவர்களே!
வீரையின் மால் அடியார் பாதம் தரும் தரும வடிவான துகளைச் சென்னி தாங்கிய பின்- வீர கேரளம்புதூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபெருமானின் தொண்டர்தம் காலடிகள் அளிக்கும் அறத்தின் சின்னமான துகங்களை(அடியேனுடைய) தலையில் அணிந்த பின்பு என் மனத்தில் தானாத் தோன்றும் பெருந்தனத்துப் பனுவல்கள் எத்தனையோ – அடியேனுடைய உள்ளத்தில் இயல்பாக உண்டாகும் சிறப்புடைய பாடல்கள் கணக்கற்றன-
சற்றே பேசுகின்றேன் இது பகர்தல் பெருமைக்கு அன்றே(அப் பனுவல்களில்) சிலவற்றை மட்டுமே இப்பொழுது பாடுகின்றேன். இவ்வாறு பாடுவது அடியேன் புலமைச் சிறப்பைக் காட்டுவதற்காக அல்ல என்பதை அறிவீராக.(எம்பெருமானின் திருப் புகழைப் பரப்பவே அடியேன் பாடுகிறேன்.)

மைக்கன மேநிகர் கிட்டிணன் வானவர் மட்குமுன் வாழ்வருள் பெட்பினான்
அக்கர மாவன எட்டுடை யான்அரு மைத்திரு வாய்மொழி கற்றுளார்
பக்கம்வி டாதவி ருப்பினன் வீரையர் பற்பல நாளும்வ ழுத்துகோ
செக்கரை நேர்சிவன் முற்சில ரேயுணர் சித்துடை யானெனல் மெய்ச்சொலே.–63
-எழுசீர் வண்ண விருத்தம்-( தத்தன தானன தத்தன தானனதத்தன தானன தத்தனா )

மைக்கனமே நிகர் கிட்டிணன் வானவர் மட்கும் முன் வாழ்வு அருள் பெட்பினான்- (அடர்ந்த மை போன்ற கருமேகமே போன்ற கண்ண பெருமானானவர் தேவர்கள் அழியும் முன்பாக அவர்களுக்கு அபயம் அருளிய பெருமைக்குரியவர்
அக்கரம் ஆவன எட்டு உடையான்- (ஓம் நாராயணாய நம என்னும்) திருமந்திரவெழுத்து எட்டின் வடிவாக இருப்பவர்
அருமைத் திருவாய்மொழி கற்று உளார் பக்கம் விடாத விருப்பினன்- (ஆழ்வார்களிற் சிறந்தோராகிய) நம்மாழ்வார் இயற்றியருளிய திருவாய்மொழியைப் படித்துணர்ந்தோர் அருகேயே தங்கியிருக்கும் ஆவலுடையவர்
வீரையர் பற்பல நாளும் வழுத்தும் கோ- வீரைநகர அன்பர்கள்-அனு தினமும் போற்றிப் பரவும் தலைவர்!
செக்கரை நேர் சிவன் முதல் சிலரே உணர் சித்து உடையான் எனல் மெய்ச் சொல்லே-செவ்வானம் போன்று செம்மை நிறமான சிவபெருமானை யொத்த ஒரு சிலர் மட்டுமே அறியக் கூடிய மாயவித்தைகளை யெல்லாம் (சித்து விளையாடல்களை யெல்லாம்) செய்ய வல்லவர் என்று பலரும்
கூறுவது உண்மையே யாகும் (அடியேனும் கண்டு கொண்டேன்).

சொலபமல ஓர்பெரிய தவமுளது லோகரெதிர் சொலினுமதி யார்களிது சரதமெழில் வீரையூர்
நலமருவ ஓர்கையிடை புனையும்வ நீதமிக நகநிலைகொள் வானை அவன் அடியவர்கள் பாடலால்
மலநிகள மானதடை முறியநனி பேசிஇகல் வலியதகு வேசர்முடி இடறலும்அ வாவியே
தலமகள்அ கோவெனம னியகொடிதெ லாமும்அழிதலின்முயல் ஓர்பாகவ தனதுபிறகு போதலே.-
-64-எண்சீர் வண்ண விருத்தம்-(தனனதன தான தன் தனன தன தானதன தனனதன் தானதன் தனனதன தானனா)

லோகர் எதிர் சொல்லினும் மதியார்கள் -மெய்யறிவு இல்லாத உலக மக்கள் எம்பெருமானே நேரில் வந்து வாக்கருளினாலும் உணர மாட்டார்கள் (அத்தகைய அஞ்ஞானம் மிக்கவர்கள் அவர்கள்)
இது சரதம்- இதுவே உண்மை நிலையாகும்
எழில் வீரையூர் நலம் மருவ ஓர் கையிடை புனையும் நவநீதம் மிக நகம் நிலைகொள்வானை-அழகுமிக்க வீரகேரளம்புதூர் என்னும் நகர் சிறக்கும்படியாக, தம்முடைய ஒரு கரத்திலே வெண்ணெயை ஏந்தி இப்பூமியில் வந்து தங்கிய எம்பெருமானாகிய கண்ணபிரானை
அவன் அடியவர்கள் பாடலால் மலம் நிகளமான தடை முறிய நனிபேசி- அவருடைய திருவருள் பெற்ற அடியவர்களாகிய ஆழ்வார்கள் போன்றோரின் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களால். அறியாமை,வினைகள் ஆகிய விலங்குகள் அகலும்படியாகப் போற்றியும்-
இகல் வலிய தகுவேசர் முடி இடறலும் அவாவியே -பகை யுணர்ச்சி மிக்க கொடிய அரக்கர்களின் தலைகள் கவிழும் படியாக விரும்பியும்
தலமகள் அகோ என மன்னிய கொடிது எல்லாமும் அழிதலில் முயல்- பூமாதேவி வருந்தும்படியாக நிலைபெற்ற கொடுமைகள் அனைத்தும் ஒழியும் படியாகவும் அரும் பணியாற்றுகின்ற
ஓர் பாகவதனது பிறகு போதலே – ஒப்பற்றதொரு அடியாரது நெறியைப் பின்பற்றுகின்ற ஓர் பெரிய தவம் உளது -ஓர் உன்னதமான தவம் இருக்கின்றது(இதை உணர்வீர்களாக)
சொல்அபம் அல- (அடியேனுடைய மொழியில் வேறுபாடு எதுவுமில்லை (அறவீர்களாக.)

போதனைப் பலகோடி புவனமொடு தரவுந்தி பூத்தநெடு மால்புரக்கும்
புனிதவீ ரைப்பதிப் புலவீர்என் மொழிகளிற் பொய்யின்று, சிறிதுகேண்மோ
ஆதவர்க ளொடுகூடி விளையாடினேன் செறுவில் அண்டாரைவேர்கெல்லினேன்
அம்புயம் தடமலை யசைத்திடக் கண்டேன் அரக்கர் உருளச்சிரித்தேன்
காதகத்தொழிலோரை மிகமதித்தேன் சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன்
கன்னியரை அன்னைய ரென த்தக்கபே ரொடும் கலகங்கள் பெரிதுசெய்தேன்
பூதம்ஒன் றைப்பதத்தால் மிதித்தேன்; பெரும் புற்றினைக் கொண்டுவந்தேன்.
புண்ணியம் பேசினேன் அகளங் கரச புஞ்சபூர ணத்துற வெய்தியே.–65-
இரட்டையாசிரிய விருத்தம் )சம்பிர தம்-இது இருபொருள் பயப்பதாக அமையும்.

போதனைப் பல கோடி புவனமொடு தர உந்தி பூத்த நெடுமால் புரக்கும் புனித வீரைப்பதிப் புலவீர் -எண்ணற்ற அண்டங்களைப் படைப்பதற்காகத் தம்முடைய உந்திக் கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்த திருமால் ஆகிய கண்ணபிரான் காத்தருளும் புண்ணிய நகராகிய வீரகேரளம்புதூரில் விளங்கும் சான்றோர்களே!
என்மொழிகளில் பொய் இன்று சிறிது கேண்மோ- அடியேனுடைய கூற்றுகளில் பொய் ஒன்றுமில்லை (எல்லாம் மெய்யே) சற்றுச் செவி மடுத்துக் கேட்பீராக!
சம்பிரதப் பொருள்-
ஆதவர்களோடு கூடி விளையாடினேன் – பல ஸூரியங்களுடன் சேர்ந்து ஆடல் புரிந்தேன்
செருவில் அண்டாரை வேர் கெல்லினேன்- போரிட வந்த பகைவர்களை வேரோடு கிள்ளி (தோண்டி) எறிந்தேன்
அம்புயம் தடமலை அசைத்திடக் கண்டேன்-வலிமை மிக்க தோள்கள் பெருங் குன்றுகளை அசைப்பதைப்பார்த்தேன்
அரக்கர் உருளச் சிரித்தேன்- அசுரர்கள் தோல்வி யுற்று மடிந்து உருண்டு விழுமாறு அவர்களைப் பார்த்து நகைத்தேன்
காதகத் தொழிலோரை மிக மதித்தேன்-கொலைகள் செய்வோரை நன்கு போற்றினேன்
சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன் -சிறிதளவு கடல் நீரைக் கடைந்தும் சாப்பிட்டேன்.
கன்னியரை அன்னையர் எனத் தக்க பேரோடும் கலகங்கள் பெரிது செய்தேன் – மணமாகாத பெண்களைத் தாயானார்கள் எனச் சொல்லுமாறு குழப்பம் பல புரிந்தேன்
பூதம் ஒன்றைப் பதத்தால் மிதித்தேன்- கொல்ல வந்த பூகம் ஒன்றைக் காலால் நசுக்கிக் கொன்றேன்
பெரும் புற்றினைக் கொண்டு வந்தேன் – பெரிய பாம்பினைக் கொணர்ந்தேன்
புண்ணியம் பேசினேன்- வேதங்களிலும் மேலான ஞானத்தைப் பற்றியே எடுத்துரைத்தேன்
அகளங்க ரச புஞ்ச பூரணத் துறவு எய்தியே- அகளங்க அரச புஞ்ச பூரணத் துறவு எய்தியே (இவற்றை யெல்லாம் செய்தேன்)
இயற்கைப்பொருள்
ஆதவர்களோடு கூடி விளையாடினேன் – இடையர்களாகிய யாதவர்களுடன் சேர்ந்து ஆடல் புரிந்தேன்
செருவில் அண்டு ஆரை வேர் கெல்லினேன்- வயலில் முளைத்த ஆரைச் செடியின் வேர் எடுத்தேன்.-
அம்புயம் தடமலை அசைத்திடக் கண்டேன்- தாமரையைத் தண்ணீர் அலைகள் அசைத்திடக் கண்டேன்
அரக்கர் உருளச் சிரித்தேன்- சாராயம் குடித்தவர்கள் புரண்ட போது நகைத்தேன்
காதகத் தொழிலோரை மிக மதித்தேன்- காத்தல் தொழில் புரியும் (அதகரை) மருத்துவரை மிகவும் மதித்தேன்
சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன்- கொஞ்சம் கடலைப்பருப்பைக் கீரையோடு சேர்த்துக் கடைந்தும் சாப்பிட்டேன்.
கன்னியரை அன்னையர் எனத்தக்க பேரொடும் கலகங்கள் பெரிது செயதேன்- இளம்பெண்கள், ஆயர்குலத் தாய்மார்கள் ஆகியோருடன் கூடி விளையாடி பேரொலி எழுப்பினேன்
பூதம் ஒன்றைப் பதத்தால் மிதித்தேன்-பூமியைக் காலால் மிதித்துக் கொண்டே இருக்கிறேன்
பெரும் புற்றினைக் கொண்டு வந்தேன்- பெரிய புல்லை உடைய தினையை எடுத்து வந்தேன்
புண்ணியம் பேசினேன்- தூய்மையே பேசினேன்
அகளங்க ரச புஞ்ச பூரணத்து உறவு எய்தியே – குற்ற மற்றதும் இனிமையின் திரட்சியினதுமாகிய முழு முதற் பொருளான இறைவனின் துணை கொண்டே-

துறவாது வேடமிட்டுத் தொண்டரொடு கூடி
அறமலிதற் காவனசெய் யாமல் பிறவிப்
பிணிமலிதற் கான பிழையனந்தம் செய்தேன்
அணிதமிழ்க்கும் வேட்கையுற்றா யன்றோ!-பணிலமொடு
சக்கரமும் ஏந்தித் தமியேன் மனவெளியூடு
அக்கனவில் வந்ததுபொய் யாகாமே- திக்கறியப்
பட்டப் பகலிற் பறவையர சேறிவந்தென்|
இட்டப் படியருட்பே றீந்தருள்வாய்-துட்டர்களைக்
கொல்வதஞ்சிப் பேடிக் குணங்காட்டி னற்றிருத்தி
வில்வலிமைக் கீர்த்தி மிகக்கொடுத்தாய்-கல்வரை ஒன்று
ஏந்திப் பசுக்காத்திட்டு இந்திரனும் வானவரும்
காந்தியநெஞ் சேங்கி ஒல்கக் கண்டுவந்தாய்-நீந்திக்
கரையேற வல்லார் கருத்துங் கலங்கத்
திரைவீசும் வாவியிலோர் தீக்கண்- வரைபோலும்
பாம்பிற்கும் அம்பொற் பதஞ்சூட்டி னாய்எனையோர்
வேம்பிற் கசந்து வெறுத்துவிடேல்-கோம்பிக்கு
உருகும யில்போற்பொன் உள்ளவரை நாடி
அருகுமிழி வாற்தளர்ந்தேன் அந்தோ ஒருகுறையும்
இல்லாத ருள்வதனுக் கேதேனும் ஓர்தடைநின்
கூத்துள் அடக்கமெனக் கோடாநு கோடிமறை
ஏத்தும் உலவா இசைபொய்யோ- ஆத்துமப்பேர்
ஆனந்தத் தாசை அணுவுமரு வாக்கவிஞர்
போனதற் கஞ்சிப் புழுங்குகின்றேன்- தானம்
தராவிடினும் என்சொற்தமிழ்விலைப் பொன்தந்தால்
கராசலம்போன் றுய்ந்துகொள்வேன் கண்டாய்- குராவினையும்
கையாற் தழுவக் கருத்தொவ்வாக் கற்பினர்தம்
ஓய்யாரத் துப்பால் உயர்வீரை- எய்யாப்
புகழ்பொருந்தக் காக்கும் புருடோத் தமனே
இகழ்சிலர்க்கும் பேறளித்தோனே.–66
-நேரிசைப் பஃறொடை வெண்பா-

குராவினையும் கையால் தழுவக் கருத்து ஒவ்வாக் கற்பினர் தம் ஓய்யாரத் துப்பால் உயர் வீரை எய்யாப் புகழ் பொருந்தக் காக்கும் புருடோத்தமனே-குரா மரத்தினையும் தம் கரங்களால் தொட விரும்பாத கற்பு நலம் மிக்கவர்கள்
வாழும் அழகும் மேன்மையும் மிக்க வீரை நகரை(இதுகாறும் எந்த நகரும் அடையாத )பெருஞ்சிறப்புடன் வாழ்வித்தருளும் ஆண்மையில் சிறந்த அரசரே!
இகழ் சிலருக்கும் பேறு அளித்தோனே- (உம்மை) வெறுத்துப் பேசியவர்களுக்கும் வீடுபேறு நல்கியவரே!
துறவாது வேடம் இட்டுத் தொண்டரோடு கூடி – மண், பெண்.பொன் என இவ்வுலக ஆசைகள் ) எதையும் துறக்காமல், வெறும் வேடதாரியாகி, அடியார் கூட்டத்தில் சேர்ந்து
அறம் மலிதற்கு ஆவன செய்யாமல் பிறவிப்பிணி மலிதற்கான பிழை அனந்தம் செய்தேன்-தருமம் தழைப்பதற்கு வேண்டியதைச் செய்யாது, (மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழலும்) பிறவி நோய் உண்டாவதற்கான குற்றங்களை யெல்லாம் அளவில்லாமல் புரிந்தேன்
அணி தமிழ்க்கும் வேட்கை உற்றாய் அன்றோ-(ஆழ்வார்களின்) பெருமை மிக்க திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களுக்கு ஆசை கொண்டீர் அல்லவா?
பணிலமொடு சக்கரமும் ஏந்தி தமியேன் மனவெளி ஊடு அக்கனவில் வந்தது பொய் ஆகாமே – சங்குடன் சக்கரமும் கையில் ஏந்திக் கொண்டு வறியவனாகிய அடியேனுடைய உள்ளத்தின் கண்ணே அன்றொரு நாள் கனவில் (நீவிர்) வந்து காட்சியருளியது பொய்யாகி விடாமல்
திக்கு அறியப் பட்டப் பகலில் பறவை அரசு ஏறி வந்து என் இட்டப்படி அருள் பேறு ஈந்து அருள்வாய்-எல்லாத் திசைகளும் பார்க்கும்படியாக, ஸூரியன் ஒளி வீசும் பகற் பொழுதில் கருடன் மீதமர்ந்து எழுந்தருளி அடியேனுடைய விருப்பத்திற்கேற்பப் பெறுதற்கரிய பேரின்ப வீட்டினை அளிப்பீராக!
துட்டர்களைக் கொல்வது-அஞ்சிபேடிக்குணம் காட்டிநர் திருத்தி வில் வலிமைக் கீர்த்தி மிகக் கொடுத்தாய்-கொடியவர்களைக் கொல்லப் பயந்து ஆண்மையின்மையைக் காட்டியவனைத் (அருச்சுனனைத்) திருத்தி அவனுடைய கை வில்லின் பேராற்றலைக் காட்டினீர்)
கல் வரை ஒன்று ஏந்திப் பசு காத்திட்டு இந்திரனும் வானவரும் காந்திய நெஞ்சு ஏங்கி ஒல்கக் கண்டு உவந்தாய் (கோவர்த்தன கிரி என்னும்) பெருங்கல் மலையை ஒரு விரலால் தாங்கி நின்று பசுக் கூட்டங்களைக் காப்பாற்றி,) இந்திரனும் தேவர்களும் பொறாமையால் மனம் வெதும்பி ஏக்கமுற்று மெலிவதைப் பார்த்து மகிழ்ந்தீர்-
நீந்திக் கரை ஏற வல்லார் கருத்தும் கலங்கத் திரை வீசும் வாவியில் ஓர் தீக்கண் வரை போலும் பாம்பிற்கும்
அம்பொற் பதம் சூட்டினாய்- (பாவங்களே நிறைந்த பிறவியாகிய துன்பக் கடலை) நீந்திக் கடக்க வல்லவர்களின் (ஞானிகளின்) நெஞ்சமும் நடுக்கும்படியாக (தீமையே நிறைந்த) அலைகள் வீசும் நீர்ப் பரப்பில் தோன்றிய பெருந்தீப்பிழம்பைக் கண்களால் பொழிந்து கொண்டுடிருக்கும் மலை போன்ற (காளிங்கன் என்னும்) பாம்புக்கும் (அதன் தலை மீது ஏறி நடனம் செய்து) உம்முடைய திருவடிகளை அளித்தீர்கள்!என்னை ஓர் வேம்பில் கசந்து வெறுத்து விடேல்-அடியேனை வெறுக்கத் தக்க ஒருவனாக எண்ணத் தள்ளிவிட வேண்டாம்
கோம்பிக்கு உருகும் மயில் போல் பொன் உள்ளவரை நாடி அருளும் இழிவால் தளர்ந்தேன் அந்தோ- பச்சோந்திக்காக மயக்கம் கொள்ளும் மயிலைப் போன்று, செல்வம் உடையவர்களைத் தேடிச் சேர்ந்து இரந்து இழிந்து மெலிந்தேன், என்னே என் நிலை!
ஒரு குறையும் இல்லாது அருள்வதனுக்கு ஏதேனும் ஓர் தடை நின் வல்லாண்மையில் பெரிதாய் வந்து உள்ளதோ-(துன்பப்பட்டு வருந்திச் சரணடைவோருக்கு உடன்அருளாமல்) உம்முடைய குறைவில்லாத கிருபையை நல்கும் வல்லாண்மையில் என்ன தடை ஏற்பட்டதோ அறியேன்! (ஏதாகிலும் தடை உள்ளதா எனத் தெரிவிப்பீராக) எல்லாம் நின் கூத்துள் அடக்கம் எனக் கோடாநு கோடி மறை ஏத்தும் உலவா இசை பொய்யோ -அண்ட சராசரங்கள் அனைத்தும் இயங்கும் இயக்கம் எல்லாம் உம்முடைய பேராடலில் அடங்கும் என்று வேதங்களெல்லாம் புகழ்ந்து ஏத்துவது பொய்யாகுமோ?
ஆத்துமப் பேரானந்தத்து ஆசை அணுவும் மருவாக் கவிஞர்|-போனதற்கு அஞ்சிப் புழுங்குகின்றேன்- இவ்வுலகில் புழங்கும் சீவாத்துமாக்கள் பரமாத்மாவாகிய உம்மைச் சரணடைதல் வேண்டும் என்னும் பேரவாவை ஒரு சிறிதும் கருதிக் கைவரப் பெறாத போலிப் புலவர்களின் இழி தன்மைக்கு அஞ்சி மனம் வெதும்புகின்றேன்–தானம் தரா விடினும் என் சொல் தமிழ் விலைப் பொன் தந்தால் கராசலம் போன்று உய்ந்து கொள்வேன் கண்டாய்-(நீவீர்) தருமமாக எதையும் அடியேனுக்கு அளிக்க வேண்டாம்.(உம்மைப் புகழ்ந்து பாடும் பாடலுக்கேற்ப) அடியேனுடைய மொழிக்குத் தக்க மதிப்பாகப் (பேரின்பத்தினை)பொன்னை அளித்தால் போதும்.யானையைப் (கசேந்திரனைப்) போன்று அடியேனும் பேறு பெற்றவனாவேன்.காண்பீராக.

அளிக்கொந் தளகமின் னார்தம்மை நாடி அகம்பெரிது
களிக்குங் தமியனை ஆண்டால்நின் மெய்ப்புகழ்க் காமர்குன்றாது
ஒளிக்கும்ப மென்முலைக் கோபியர் கூட்டம் ஒருங்கணைந்தாய்
துளிக்குஞ்செர் தேன்பொழில் சூழ்வீரை காக்கும் தொழிற்கண்ணனே
.–67-கட்டளைக் கலித்துறை-

ஒளிக்கும்ப மென்முலைக் கோபியர் கூட்டம் ஒருங்கு அணைந்தாய்- அழகிய கச்சினகத்தே யானையின் மத்தகம் போன்று குவிந்ததும் மென்மை யானதுமான நகில்களையுடைய ஆயர்குலப் பெண்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் கூடியின்புற்று இருந்தவரே!
துளிக்கும் செந்தேன் பொழில் சூழ் வீரை காக்கும் தொழில் கண்ணனே – இனிக்கும் தேனைத் தம்மகத்தே கொண்ட பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற வீரைநகரை காப்பதே தொழிலாகக் கொண்ட கண்ண பெருமானே!
அளிக்கொந்தளகம் மின்னார் தம்மை நாடி அகம் பெரிது களிக்கும் தமியனை ஆண்டால் நின் மெய்ப்புகழ்க்காமர் குன்றாது – வண்டுகள் மொய்க்கும் மணம் மிக்க அழகிய கூந்தலை யுடைய மகளிரை விரும்பிச் சேர்ந்து களித்திருக்கும் அடியேனை ஆட்கொள்வதால் உம்முடைய
பெரும் புகழுக்கு இழுக்கு ஒன்றும் ஏற்படாது (அதனால் விரைந்து வந்து அருள் புரிவீராக )

தொழிலற் றொருதுன் பமும்இன்ப மும்அற்று
அழிவற் றபதத்து உறுமா றருள்வான்
விழியிற் றமிழ்நா டுணர்வீ ரையின்மேய
வழிபட் டனர்வாழ் வுறழ்மா யவனே.–68-
கலிவிருத்தம்-

தொழில் அற்று ஒரு துன்பமும் இன்பமும் அற்று அழிவு அற்ற பதத்து உறுமாறு அருள்வான்- (இவ்வுலகப் பற்றுக்களினாலுண்டாகும்) செயல்களெல்லாம் ஒழித்து எவ்வகைத் துயரமோ மகிழ்ச்சியோ நம்மை அண்டாமல், என்றும் அழிவில்லாத திருவடிப் பேற்றினை அடையுமாறு அருள்பவர்(யார் என வினவு வீராயின்)
வழியில் தமிழ்நாடு உணர் வீரையின் மேய வழிபட்டவர் வாழ்வு உறழ் மாயனே-(ஞான நூலோர்களில்) குறைவற்ற தமிழ் நாட்டினர் நன்குணர்ந்த வீரைநகரின் கண் கோயில் கொண்டுள்ள இறைவரைப் போற்றிச் செய்தவர்களைக் காத்தருளும் மாயோனாகிய திருமாலே ஆவார்!

அவமேயுழல் பவவேர்கெலும் அட்டாக்க ரம்நட்டாய்
அவனானபின் அவளானதென் றரியாரு ணர்கிரியே
கவலைக்கடல் சுவறப்பொரு கண்ணாமணி வண்ணா
கவளங்கொள்ஓர் குவடன்றடர் கையா அருள்மெய்யா
சிவனா தியர்தவ நாடியசீலா மலைமூலா
திவவூடிருள் நவலீலைசெய் தீரா முதல்வீரா
உவரிப்பொருள் கவர்வீரையில் உற்றாய் பலநற்றாய்
உவலைப்பழி நுவலாதெனை ஒருவேளை யில்மருவே.–69-
எண்சீர்க்கட்டுத் தாழிசை-

அவமே உழல் பவ வேர் கெல்லும் அட்டாக்கரம் நட்டாய்-இவ் வுலகத்தில் வீண் செயல்களிலேயே சிக்கித் தவிப்பவர்களின் பாவங்களை அடியோடு போக்குவிக்கும் விட்டுணு மந்திரமாகிய என் எழுத்துக்களின் விளக்கமானவரே!
அவன் ஆன பின் அவள் ஆனது என்று அறியார் உணர் கிரியே -ஆண் பெண் ஆனது (தேவகி மைந்தனாகப் பிறந்து யசோதையின் பெண் குழந்தை யிடத்தில் மாறிச் சென்று வளர்ந்தது) என்பதைத் தெளிந்து அறியாதவரும் உணருமாறு (கம்சன் உணருமாறு)செய்த மலையோனே!
கவலைக் கடல் சுவறப்பொரு கண்ணா! மணிவண்ணா!- பிறவித்துன்பமாகிய கடலை வற்றச் செய்யும்படிப் போரிடும் கண்ண பெருமானே! நீல நிறத்தவரே!
கவளம் கொள் ஓர் குவடு அன்று அடர் கையா! அருள்மெய்யா! குவலயாபீடமாகிய யானையைக் கொன்ற கரத்தரே!-மெய்யருளை நல்கும் இறைவரே!
சிவன் ஆதியர் தவம் நாடிய சீலா! மறை மூலா- (முப்புரங்களை வென்ற) சிவபெருமான் முதலானவர்கள் தவம் இருந்து அருள் பெற விழையும்படியான பெருமை பெற்ற நற்குண நலம் மிக்கவரே! வேதங்களுக்கெல்லாம் மூலகாரண மானவரே!
திவம் ஊடு இருள் நவ லீலை செய்தீரா! முதல் வீரா!-(பாரதப் போரில் அருச்சுனனைக் காப்பாற்ற) பகலிலேயே இரவை உண்டாக்கி (சக்கராயுதத்தால் ஸூரியனை மறைத்து)புதியதோர் பேராடலைப் புரிந்த வலியவரே! தலை சிறந்த வெற்றி யுடையவரே!
உவரிப் பொருள் கவர் வீரையில் உற்றாய்-பல கடல் பொருள்கள் பல விளங்கும் வீரகேரளம்புதூரில் பல விளையாடல்கள் புரிந்து விளங்குபவரே!
நற்றாய் உவலைப் பழி நுவலாது என்னை ஒருவேளையில் மருவே-(என்னைக் காக்கும்) நற்றாய் முதலானவர்கள் அலர் கூறாதவாறு ஒரு பொழுதாகிலும் வந்து என்னை அணைப்பீராக!

மருமலிபூங் குழல்மதங்கி ஒருத்தி வீரை மாதவன்சீர் வீணைதொட்டு வாசித் திட்டாள்
அருகிலுற்றார் அனைவரும்ஓ வியமே போன்றார் அணிநார தாதியர்மிக் கழுக்கா றுற்றார்
பொருவில்கலை மகள்உவகைப் பொலிவு கொண்டாள் பூதரம்புள் விலங்குமுதற் புகல்வ எல்லாம்
உருகினதோற் பறையறைந்திட்டு அசுணம் கொல்வார் உலோபிகள்போற் துயர்மிகப் பெற்றொடுங்கினாரே.–70-
எண்சீர் ஆசிரிய விருத்தம்-இக் கலம்பக உறுப்பு மதங்கு என்றும்,
மதங்க மென்றும், மதங்கியா ரென்றும் வழங்கப்பெறும்.

மரு மலி பூங்குழல் மதங்கி ஒருத்தி வீரை மாதவன் சீர் வீணை தொட்டு வாசித்திட்டாள்- நறுமணம் மிக்க பல மலர்களைத் தன் கூந்தலிலே சூடிய மதங்கி என்னும் இளம் பெண்,வீரகேரளம்புதூரில் வாசம் செய்யும் கண்ணன் திருப் புகழைச் சொல்லி வீணையையும் சேர்த்து இசைத்தாள்
அருகில் உற்றார் அனைவரும் ஓவியமே போன்றார்- (அவளுடைய இசையைக் கேட்ட) அருகிலிருந்தோர் எல்லாம் தம்மை மறந்து (ஆடாமல் அசையாமல்) சித்திரத்தை யொத்துக் காணப்பட்டனர்
அணி நாரத ஆதியர் மிக்க அழுக்காறு உற்றார் – (இசைக்கலையில் வல்லவரான) சிறப்புடைய நாரதர் முதலானவர்களும்(அம்மதங்கி மீது) பொறாமை அடைந்தனர்
பொருவு இல் கலைமகள் உவகைப் பொலிவு கொண்டாள்-(இசைக் கலைக்குத்தெய்வமான ) ஒப்பற்ற சரசுவதி தேவி மகிழ்ச்சியால் பூரிப்படைந்தாள்
பூதரம் புள் விலங்கு முதல் புகல்வன எல்லாம் உருகினமண்ணுலகிலுள்ள மலைகள், பறவைகள், மிருகங்கள் ஆகிய சொல்லப்பெறுவன அனைத்தும் (அவள் இசைத்த இசையினைக் கேட்டு) மயக்கம் கொண்டன
தோல் பறை அறைந்திட்டு அசுணம் கொல்வார் உலோபிகள் போலத் துயர் மிகப் பெற்று ஒடுங்கினாரே-(பசு போன்றவிலங்குகளின்) தோலால் செய்யப்பட்ட பறைகளை ஒலித்து அசுணம் முதலானவற்றைக் கொலை செய்கின்றவர் அவை கிடைக்காது வருந்தி, பொய் வேடதாரிகளைப் போன்று துன்பமுற்றுச் செயலற்றுப் போனார்கள்.-

நாரியர்க்கெ லாமும்வெட்கம் நல்குபொற்பொ டுற்றஇந் நன்மதங்கி வீரை மேவும் நாரணற்பு கழ்ந்துளாள்|
ஆரியன் தன் நாவிலுற்ற மங்கையோ! அவன்கையால் அன்றுதான வர்ச்செகுத்தி டப்படைத்த பெண்கொலோ!
காரினங்கள் சென்றுகண்டு ணப்படாத பாற்கடற் கண்பிறந்த நங்கைமார்க ளிற்சிறந்த யாவளோ?
பாரினிற்சொல் ஓசைபாவ ராகதாளம் ஓர்கிலார் பஞ்சமத்தி என்னவும் பழிக்க அஞ்சி லார்களே!
–71–எண்சீர்த் தாழிசை-இதுவுமது-

நாரியர்களுக்கு எல்லாமும் வெட்கம் நல்கு பொற்போடு உற்ற இந்த நல்ல மதங்கி வீரை மேவும் நாரணரைப் புகழ்ந்து உள்ளாள்- (தேவலோகப்) பெண்கள் அனைவரும் வெட்கித் தலை குனியும் படியான அழகோடு விளங்கும் இச்சிறப்பு மிக்க மதங்கியானவள் வீரைநகரை விரும்பி வாழும் கண்ண பெருமானைப் போற்றி யிசைத்து இருக்கின்றாள்
ஆரியன் தன் நாவில் உற்ற மங்கையோ -(அம் மதங்கி) நான்முகன் நாக்கில் வாழும் கலைமகளோ!
அவன் கையால் அன்று தானவர் செகுத் திடப் படைத்த பெண் கொல்லோ- சந்தோப சந்தவர்களை அழிப்பதற்காகப் பிரமனால் உண்டாக்கப்பட்டதிலோத்தமையோ!
கார் இனங்கள் சென்று கண்டு உண்ணப்படாத பாற்கடல் கண்ணே பிறந்த நங்கைமார்களில் சிறந்த யாவளோ-
கருமேகங்கள் அலைந்து திரிந்தும் வற்றாத திருப்பாற் கடலிலே தோன்றிய அரம்பையர்களுள் ஒருத்தி ஆவாளோ இவள்!
பாரினில்சொல் ஓசை பாவம் ராகம் தாளம் ஓர்கிலார் பஞ்சமத்தி எனவும் பழிக்க அஞ்சி இலார்களே-இவ்வுலகில், பாடலாகிய (அவளுடைய) மொழியையும் அதன் ஒசையையும், பாவத்தையும், அதற்குரிய ராகம், தாளம் ஆகிய ஐந்தினையும் ஆராயாதவர்கள் கூட (அவளை) பஞ்சமத்தி வல்லபம் மிக்கவள் எனத் துதிக்க அஞ்ச மாட்டார்கள்-

அஞ்சி லம்பணி வார்தரு மாலினான் அஞ்சி லம்பணி வார்தரு மாலினான்
நஞ்சி றைக்கும் பலவாய வார்வனே நஞ்சி றைக்கும் பலவாய வார்வனே
கஞ்சி யாதிய கோவில னேகத்தே கஞ்சி யாதிய கோவில னேகத்தே
வஞ்சி யொல்குதென் வீரையின் மன்னனே வஞ்சி யொல்குதென் வீரையின் மன்னனே
.–72-கட்டளைக் கலிப்பா–அடிமடக்கு-

அம் சிலம்பு அணிவார் தரும் மாலினான்- அழகிய சிலம்பு புனைகின்ற கோபியர் அளிக்கும் மயக்கத்தை யுடையவர்
அஞ்சி அலம் பணிவார் தரும் மாலினான்- தீமையைக் கண்டு அஞ்சி, சஞ்சலத்தோடு தஞ்சமடையும் அடியவர்களுக்குத் தம்முடைய இன்னருளைத் தந்தருளும் பெருமையை உடையவர்
நம் சிறைக்கும் பலவாய வார்வனே- நமக்குண்டாகும் காமம் போன்ற தடைகளை முறியடிக்கத் தக்க வலிமையைத் தரும் அன்புடையவர்
நஞ்சு இறைக்கும் பலவாய வார்வனே- விடத்தைப் பொழியும் பல வாயையுடைய ஆதிசேடனுக்கும் நாயகர்
கஞ்சி ஆதிய கோவில் அனேகத்தே-காஞ்சிபுரம் முதலான திருத்தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளியிருப்பவர்
கம்சி யாதிய கோவிலான் ஏகத்தே- கம்சன் போன்ற கொடியவர்களைத் தனியொருவராயிருந்து வென்ற இடையனானவர் (ஆகிய இவர் யாரெனின்)
வஞ்சி ஒல்கு தென் வீரையின் மன்னனே-வஞ்சிக் கொடி போன்ற மெல்லியலார் நிறைந்த வீரகேரளம்பு தூரின் தலைவரே
வஞ்சி ஒல்கு தென் வீரையின் மன்னனே- தரும தேவதையானவள் அகங்குழைந்து வீற்றிருக்கும் வீரகேரளம்புதூரின் தலைவரே ஆவார் (அவரைப் பணிவீராக.)-

மன்னர் மன்னவர் போற்றுசீர் மருதன் வீரையின் மாயவன்
பன்னகப் பகையேறியேறியே பவனி வந்ததைப் பார்த்ததால்
இன்ன மையல்இத் தையல்கொண் டேங்கு கின்றனள் பாங்குளீர்
அன்ன வன்துளவ னுப்புவான் அப்போதென் குறி அவிருமே.–73
-அறுசீர்த் தாழிசை-

பாங்கு உள்ளீர் – அழகு பொருந்திய தாயே (குறி கூறக் கேட்பீராக)
மன்னர் போற்று சீர் மருதன் வீரையில்- அரசர் களுக்கெல்லாம் அரசராக விளங்குபவர் பாராட்டும் மேன்மையைப் பெற்ற மருதப்பன் அரசாட்சி செய்யும் வீரகேரளம்புதூரில்
மாயவன் பன்னகப்பகை ஏறி ஏறியே பவனி வந்ததைப் பார்த்ததால் இன்ன மையல் இத்தையல் கொண்டு ஏங்குகின்றனள்-கண்ணபிரானானவர் பாம்புக்குப் பகையாகிய கருட வாகனத்தில் ஆடம்பரமாக உலா வந்ததை இப் பெண்ணானவள் நேரில் கண்டதாலேயே இத்தகைய மயக்கத்தை அடைந்து ஏக்கமிட்டுள்ளாள்
அன்னவன் துளவம் அனுப்புவான் அப்போது என் குறி அவிருமே – (அவ்வாறு உலா வந்து தலைவியின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட அத்தலைவன்) அத்தகைய கண்ணபிரானே விரைவில் தம் திருத்துழாய் மாலையைக் கையுறையாக அனுப்பி வைப்பார். அவ்வேளையில் நான் சொன்ன குறி எத்தகையது என்பதை நீங்களே நன்கு புரிந்து கொள்வீர்கள்-

என்குறியை ஈனமென்று தள்ளிடாதே கையில் எழுநெற்கை ஒன்றியதில் ஏது சூதே
நின்குணத்தை நானறிவேன் என்னையறிவாய் வீரை நீலவண்ணன் ஆள்வானென்று நெஞ்சிற் குறியாய்
புன்குலத்தர் நிந்தைநாளைத் தீரும்பாரம்மே வேண்டும் பொன்னும் நெல்லும் தந்துகஞ்சி போத வாரம்மே
வன்குறப்பெண் ஆனநான் பொய்விண்டிடேனே எங்கள் வள்ளிகண்முன் வந்துசெவ்வேள் கொண்டு ளானே.–74-
எண்சீர்க் கட்டுத்தாழிசை-இதுவுமது-

என் குறியை ஈனம் என்று தள்ளிடாதே- குறத்தியாகிய நான் சொல்லும் குறிச் சொல்லை இழிவு என எண்ணி விலக்கா திருப்பாயாக (தாயே!)
கையில் ஏழு நெல்கை ஒன்றியதில் ஏது சூதே – என்னுடைய கையில் ஏழு நெல் இருந்தது. அதில் கை பொருந்தி யிருந்ததில் சூழ்ச்சி எதுவும் இல்லை-
நின் குணத்தை நான் அறிவேன். என்னை அறிவாய்- உம்முடைய (தலைவிக்காக ஏங்கும்) நல்ல உள்ளத்தை நான் நன்கு உணர்ந்தவள். அவ்வாறே (நானும் உண்மையானவள் என்பதை) நீங்களும் என்னை நன்கு உணர்வீர்கள்
வீரை நீலவண்ணன் ஆள்வான் என்று நெஞ்சில் கு றியாய்- வீர கேரளம்புதூரில் விரும்பி வாழ்கின்ற மணி நிறத்து மாயவனாகிய கண்ணன் வந்து (உம் மகளை மணம் புரிவார்) ஆட் கொள்வார் என்பதை உள்ளங்கொள்வீராக
புன்குலத்தர் நிந்தை நாளை தீரும் பார் அம்மே தாயே!-(அலர் பரப்பு) இழிகுணத்தோரின் இகழ்ச்சியான பேச்சுக்களெல்லாம் நாளையே ஒழியும் காண்பீராக
வேண்டும் பொன்னும் நெல்லும் தந்து கஞ்சி போத வார் அம்மோ -தாயே! எனக்கு நிறையத் தங்கமும், சோறாக்கத் தானியங்களும், இப்பொழுது குடிப்பதற்குக் கஞ்சியும் கொடுத்து உதவுவீராக
வன் குறப்பெண் ஆன நான் பொய் விண்டிடேனே – வலிமை பொருந்திய குறவர் மரபில் வந்தவளான நான் ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டேன்
எங்கள் வள்ளி கண்முன் வந்து செவ்வேள் கொண்டு உள்ளானே -எங்களுடைய குறக்குலப் பெண்ணான வள்ளி என்பவளுக்கும் (என்னைப் போன்ற குறப்பெண் தான் குறி கூறினாள்) குறத்தி குறி சொன்னவாறே அவள் காதலித்த முருகப்பெருமான் அவள் எதிரில் தோன்றி அவளை மணந்துகொண்டு இப்பொழுதும் கொலு வீற்றிருக்கிறான் என்பதை அறிவீராக. (எனவே. உங்கள் மகளையும் விரைவில் கண்ணன் மணம் முடிப்பான் என மகிழ்வீராக.)

உளங்கலந்த காட்சிதந்தாய் ஊரறிய ஓர்சீர்
களங்கமற நல்கக் கருதாய்விளங்கனியிற்
கன்றெறிந்த வீரையினிற் காயா மலர்த் துணர்போல்
நின்றெறிக்கும் கண்ணபிரானே.–75-
நேரிசை வெண்பா-

விளங்கனியில் கன்றெறிந்த வீரையினில் காயாமலர்த்துணர்போல் நின்று எறிக்கும் கண்ணபிரானே – (கம்சனால் ஏவப்பட்ட கபித்தாசுரன் மற்றும் வத்சாசுரன் ஆகிய இருவரையும் கொல்ல அவர்கள் கொண்ட உருவமாகிய) விளா மரத்தினையும் கன்று வடிவத்தினையும் ஒருசேரஅடித்து எறிந்து கொன்றவரும் வீரகேரளம்புதூரில் காயா பூங்கொத்தினைப் போன்ற நீல நிறத்துடன் காட்சி நல்கிடும் தீமையெல்லாம் அறுத்தெறிகின்ற கண்ண பெருமானே!
உளம் கலந்த காட்சி தந்தாய்- (அன்று அடியேன் மனம் மகிழும்படியாக சங்கு சக்கரதாரியாய்) கனவில் வந்து காட்சி யருளினீர்!
ஊர் அறிய ஓர் சீர் களங்கம் அற நல்கக் கருதாய்- (அவ்வாறு நீர் காட்சி தந்தது பொய் என்று பிறர் நகைக்காமல் )அத்தகைய பெருமைக்குப் பங்கம் ஏற்படாதவாறு ஊரார் அறியும்படி இப்பொழுது நேரில் பலர் அறிய வந்து அருள்வீராக.-

ஆனேங் குறுங்கொடுங் காலத்தில் முற்றும் அதைமறந்து
தானேற்றம் எய்த முயலாமல் ஆண்டமின் தண்ணருளுக்கு
ஏனேனித் தாமதம் ஈதுநின் பாரமன் றென்குதியோ
வானேய்த்த மேனி முகுந்தாதென் வீரையில் வாழண்ணலே,
–76-கட்டளைக் கலித்துறை-

வான் ஏய்த்த மேனி முகுந்தா! தென் வீரையில் வாழ் அண்ணலே- நீலமேக வானம் போன்ற நிறங்கொண்ட முகுந்தா ! வீரைநகரில் கோயில் கொண்டுள்ள அன்பிற் சிறந்தவரே!
ஆன் ஏங்குறும் கொடுங் காலத்தில் முற்றும் அதை மறந்து தான் ஏற்றம் எய்த முயலாமல்-(ஆயர்பாடியில் இந்திரன் கோபத்தினால் கல் மழை மொழிந்த போது) பசுக்கூட்டங்கள் உம்மை நாடிக் காப்பாற்ற அழைத்த பொழுது, அவற்றை அசட்டை செய்யாமல் (நாம் எல்லாவற்றினும் மேலானவர் எனக் கருதி வாளா இருக்காமல்) நம்முடைய நலமே பெரிதென எண்ணாது
ஆண்ட நின் தண் அருளுக்கு ஏன் இனி இத்தாமதம் -(உடனே கோவர்த்தனகிரியைக் கையால் குடையெனத் தாங்கிப்பிடித்து) அப் பசுக் கூட்டங்களைக் காத்த உம்முடைய அகங்குளிர்ந்த அன்பு (இப்பொழுது அடியேன் அழைக்கவும் வாராதிருக்க) ஏனோ இன்னும் அடியேனுக்குக் கிட்ட விடாமல் தாமதம் செய்கின்றீர்?ஈது நின்பாரம் அன்று என்குதியோ – (அடியேனுக்கு அருளுவது) இது உம்முடைய கடமையல்ல என்று சொல்லுகின்றீரோ! (அதையும் நேரில் வந்துரைப்பீராக!)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்ய நூற்றந்தாதி-

April 25, 2026

Click to access 2015.295141.Alarmeil-Mang-kaiyan-thaatiyum.pdf

யாதும்‌ அறியேன்‌ அதையே அறிந்தன்று
போதரா யென்றே பொருளாக்கும்‌ – நீதியான்‌
ஆசையால்‌ தாளினையே காப்பா அறிந்தின்று
பேசுகின்றேன்‌ வாஞ்சை வரப்‌ பெற்று –காப்புச் செய்யுள்

உய்வு பேற்றுக்குரிய யாதொன்றும்‌ அறியாத அறிவிலி” என்று என்னையறிந்து, அதுவே காரணமாக அடியேனைத்‌ தன்பாலழைத்து மெய்யுணர்வு இன்மையால்‌ அசித்தைப்போல (அறிவற்ற ஜடப்பொருளைப்‌ போல) கிடந்தவனை, மெய்யுணர்வை முற்றும்‌ போதித்து பொருளல்லாத . என்னைப்‌ பொருளாக்கி, சத்தை-யுண்டாம்படி செய்த ஆசாரியன்‌ செயலை இன்றாக அறிந்து மிக்க பிரேமையுற்ற அடியேன்‌, ஆசாரிய நூற்றந்தாதி என்ற வெண்பா யாப்பினால்‌ வாஞ்சையே வடிவாக ஆசாரியன்‌ திருவடிகளை முன்னிட்டுக்‌ கொண்டு இந்நூலை இயற்றுகின்றேன் –

சீரார்‌ வநசச்‌ செழுங்கடல்‌ வந்தமுதின்‌
ஏரார்‌ நிறைபொருள்மார்‌ பேய்ந்துறையும்‌ – ஆரா
வமுத்‌ யமுதமே வேறன்‌ றயிந்தை
எமையாளும்‌ பாடியன்தாள்‌ இங்கு–1-

எம்பெருமான்‌ திருக்கண்‌ வளர்தலால்‌ செழுமையுற்ற பாற்‌ கடலில்‌, (மஹாலக்ஷ்மி) தான்‌ தோன்றுவதற்கேற்ற சிறப்புற்றத்‌ தாமரை மலரில்‌ அமுதத்தோடு வந்தவதரித்து, எல்லாவற்றாலும்‌ அழகுமிக்க ஒத்தார்‌ மிக்காரையில்லாத பரம்பொருளான திருமாலின்‌ திருமார்பில்‌ இறையும்‌ அகலாது. பொருந்தியுள்ள ரூபத்தாலும்‌ குணத்தாலும்‌ பேரழகு வாய்ந்த பெரியபிராட்டியார்‌, அழுதந்தவிர்த்தப்‌ பேறு என்னலாம் படி எம்மையாளும்‌ திருவயீந்திரபுரம்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றி உய்யும்படி அடியேனுக்குப் பேர் அருள் செய்தான் –

இங்கே திரிந்தே எழு பிறப்பும்‌ தீர்ந்தொழிந்தேன்‌
சிங்கப்‌ பிரான் சீர்மை ஆய்ந்தறிந்தேன்‌ – பொங்கும்‌
கருணைக்‌ கடலமு துண்பேன்‌ அமிந்தைத்‌
திருவன்‌ திருவடி சேர்ந்‌ தின்று –2-

இருள்தரு மாஞாலமாகிய இவ்வுலகத்தில்‌ மனம்போனபடி திரிந்த அடியேன்‌ திருவயீந்திரபுரத்தில்‌ வாசஞ்செய்யும்‌ ஸ்ரீமத்‌ பகவத்‌ கைங்கர்யமாகிய செல்வம்‌ நிரம்பப்பெற்ற ஸ்ரீமத்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடிகளை, அவரருளால்‌ இன்று சேர்ந்து தேவ, மனித, விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்‌ ஆகிய ஏழுவகைத்‌ தோற்றங்களாகப்‌ பிறக்கும்‌ பிறவியொழிந்து, சிங்கப்பிரான்‌ புகழை ஆராய்ந்தறிந்து ஸ்ரீவைகுண்டமாகிய திருநாட்டிற்‌ சேர்ந்து அளவில்லாமல்‌ பொங்கி வழியக்கூடிய பநப்தநாதனின்‌ கருணையை அநுபவிப்பேன் –

இன்றுநாளை யென்றறியேன்‌ கங்குல்
பொன்றுமுட லென்றுநா னென்றறியேன்‌ – பொன்றுவிக்கும்‌
தீதறியேன்‌ யாதறியேன்‌ தேரத்‌ தெரிந்தென்னை
ஒதுவித்த தொண்பொருள்‌ ஒன்று-3-

இன்றென்றும்‌ நாளையென்றும்‌ உலகத்தவம்‌ சொல்லும்‌ கால வேறுபாட்டையும்‌ இவற்றைச்‌ சார்ந்து நிகழும்‌ நிகழ்ச்சிகளின்‌ வேறுபாட்டையும்‌ இவ்வாறே இரவு பகலின்‌ வேறுபாட்டையும்‌ அறியேன்‌. எடுக்கும்‌ பிறவிகள்‌ தோறும்‌ அழிந்து படும்‌ உடல்கள்‌ அவ்வாறு அழியாத நிலை பெற்ற உயிர்களின்‌ நிலைகளையும்‌ அறியேன்‌. அழிவுக்குக் காரணமான அடியேனை நன்கறிந்து இந் நிலை போய்‌ எல்லாவற்றையும்‌ தெளிய அறியும்படி ஒப்பற்ற பொருள்‌ ஒன்று ஒதுவித்தது –

ஒன்றுதான்‌ போதமுநி வேதமுநி நாதமுநி நன்று நலந்தீதுங்‌ காட்டுமுநி – நன்றும்‌ சிவந்த வாய் செம்பவளம் கண் கமலம் ஒன்மை உவந்துளத்துப்‌ பாடியனென்‌ றோர் -4-

ஒதுவித்த அழகிய பொருள்‌ யாதெனின்‌? மனனஞ்‌ செய்து மெய்யுணர்வை நிரம்பப்‌ பெற்றதும்‌, இதைப் பிறருக்கு அறிவிப்பதையே தொழிலாக வுடையதும்‌, நல்லொழுக்கத்தில்‌ ஏவுவதும்‌ மற்றுள்ள நல்லதும்‌ தீயதும்‌ காட்டக்கூடிய நன்கு சிவந்த தாமரைப் போன்ற வாயையும்‌ தாமரைப்‌ போன்ற இதழ்களை யுடையதும்‌ அழகிய கைகளை யுடையதும்‌ எல்லார்‌ திறத்தும்‌ நன்மையே வேண்டுவதுமான பாஷ்யமா சாரியரே யாகுமாம் –

ஓரடி முந்தமற்‌ றோரடி முந்தவதின்‌
ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்பதே? – ஈரடியக்‌
சேர்ந்திணைந்‌ தன்றன்றே சேமமாம் ஆறுபயன்‌
ஒர்ந்திணைந்‌ துள்ளதெம்‌ பால்‌–5–

அடியேனை ஏற்பதற்காக ஓரடிமுற்பட்டு வர, அதைக்காட்டிலும்‌ இன்னொரு திருவடி முற்பட, இப்படி ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்றது வியப்பன்றோ? இதன்றி இந்த இரண்டு திருவடிகளும்‌ சேர்ந்தே சாதனமும்‌ பயனுமாகும்‌ என்பதை யானறியேன் –

எம்பெரு மானார்‌ இசைத்ததாக்‌ கேட்டதுண்டு
நம்பும்‌ படி யொன்றும்‌ நானறியேன்‌ – வம்பெதற்கு?
வீடில்நாள்‌ மூன்றில்‌ முமுச்சுபடி மெய்ப்பித்த
பாடியனே பெற்றேன்‌ பயன்‌–6-

உஜ்ஜீவனத்துக்‌ கேதுவாக எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷயம்‌ அருளிச்‌ செய்துள்ளதாகக்‌ கேளவிப்படுகிறோம்‌, அதை நேர் கண்டறிந்ததில்லை. ஸ்ரீபாஷ்யத்தில்‌ சீக்கிரமாகப்‌ பல ப்ராப்தி உண்டு, இல்லை யென்‌கிற வம்பெதற்கு? நிரந்தரமாக மூன்று நாட்களில்‌ முமுக்ஷுப்படி என்கிற திருமந்திரார்த்தத்தை உள்ளவாறு கேட்பித்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளையே அடியேற்குப்‌ பயனாகப்‌ பெற்றேன்‌-

பயனுற்ற தொன்றன்றே பாவிரித்தான்‌ மாறன்‌ உயர்வசந பூடணம்‌ ஓதி – நயந்துரைத்தான்‌ தத்துவ மூன்றின்‌ தகவனைத்தும்‌ தானோக்கி வித்தகன்நீ! யென்றான்‌ வியந்து–7-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைப்‌ பயனாக மட்டுமோ பெற்றோம்‌? இவரால்‌ மாறன் கலையாகிற பகவத்‌ விஷயத்தை உரைக்கப் பெற்றேன்‌;ஸ்ரீவசன பூஷணம்‌ உரைக்கப்‌ பெற்றேன்‌; இங்ஙனே தத்வ த்ரயமும்‌ அருளப்‌ பெற்றேன்‌; இவற்றைக்‌ கேட்ட தன்மையைக்‌ கண்டு வியந்து ‘நீ வித்தகன்‌” என்று அவரால்‌ அருளப் பெற்றேன் –

வியந்தான்‌ உகந்தான்‌ விரிகமலம்‌ நோக்கி
பயந்தான்‌ பரன் தான்‌ பணியை – உயர்ந்தோர்‌
இணைந்தா மரைத்தாள்‌ இசைத்தான்தன்‌ பொன்தான்‌
பிணைத்தான்‌ பீழை தகர்த்து–8-

ஸ்ரீ பாஷ்யமாசாரியன்‌, அடியேனை வியந்தான்‌, உகந்தான்‌, தாமரைக் கண்களால்‌ விரியக்‌ கடாக்ஷித்தான்‌. அடியேன்‌ பாலுள்ள குறைகளைப் போக்கி உயர்ந்தவர்களான மெய்யடியார்‌ திருவடி யிணை யடியை வணங்கும்படி இசைவித்து, தன்‌ அழகிய திருவடிகளில்‌ இருத்திக்‌ கொண்டான்‌.

தகர்த்தேன்‌ மடமை வினைப்படலம்‌ தாக்கி
உகக்கடிந்தேன் ஊணைக் கமலம் புகுந்தேன்‌
நனியாக் கலவி இன்பம் நாளும் நுகர்வேன்
இனியனெனும் பாடியன் தாள் ஏய்ந்து –9

இனியவரான ஸ்ரீ பாஷ்யமாசரியன்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதால்‌ அறிவின்‌மையை அறத்தொலைத்து, அதன்‌ காரியமான பாப சமூகத்தையொழித்து, அதின்‌ கார்யமான உடல்‌ தொடர்பை யொழித்து, இறைவன்‌ திருவடிகளைப் பிரியா மெய்யடியார்‌ கூட்டத்து புகுந்து அளவிலா இன்பம்‌ நாளும்‌ நுகர்பவனாயினேன் —

ஏய்ந்த குருகூரன்‌ தன்தான்‌ இணையடியே வாய்ந்த சரணா வரித்தன்றே – நீந்திப்‌
பிறவிக்‌ கடல் கடந்தீர்‌ பேதை எனையும்‌ உறவைப்பீர்‌ உந்திருத்தாள்‌ உய்த்து–10–

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! திருக் குருகூரில்‌ அவதரித்து பிறந்த பொழுதே துறவியான நம்மாழ்வாரின்‌ திருவடிகளிணையே தஞ்சமாகக்‌ கொண்டு, அவரருளால்‌ பிறவிக் கடல்‌ கடந்தீர்‌. அறிவிலியான அடியேனையும்‌ தேவரீர்‌ திருவடிகளில்‌ பொருந்தச் செய்து, அவ்வாறே பிறவி தொலைத்து பேரின்பமுற்று வாழும்படி செய்வீராக –

உய்த்தும்‌ கடைக் கணித்தும்‌ ஒப்ப நினைந்திட்டும்
எய்த்த இது தன்னைப் பற்றாச-மெய்த்த வுரை
எட்டு எழுத்தும் முப்பத்திரண்டு எழுத்தும் ஐயைந்தும்
தொட்டுரைத்த ஒன்றே துணை –11-

அடியேன்‌ அறிவிலியாய்‌ உய்யும் வழி யறியாமல்‌ பிறவிக் கடலில்‌ ஆழ, அதையே காரணமாகக் கொண்டு பாஷ்யமாசாரியர்‌ என்னை நினைத்து தன் முன்‌ நிறுத்தி, கருணைப் பூத்தக்‌ கண்களால்‌ நோக்கி, மெய்யடியார்‌ திரளில்‌ சேரும்படி செய்து, மெய்ப் பொருளான எட்டெழுத்துள்ள திருமந்திரம்‌, இருபத்தைந்து எழுத்தான த்வய மந்திரம்‌, முப்பத்திரண்‌ டெழுத்தான சரம ச்லோகம்‌ இவைகளின்‌ அர்த்தங்களைச்‌ சுட்டிக் காட்டி நெஞ்சில்‌ பதிய வைத்த அவரருளே அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்குத்‌ துணை யாகும் —

துணைவனே துன்பப்‌ பிறவிக்‌ கடல்நீர்‌
புணைவனே பொய்ம்மை இருள்தீர்‌ – இணையில்‌
கதிரவனே பூரியர்‌ சுற்றங்‌ கழற்றும்‌
சதிரனே தந்தருள்வாய மறறு–12-

துணைவராயும்‌, துன்பமேயான பிறவிக் கடலைக்‌ கடத்தும்‌ நாவாய்‌ போன்றவராயும்‌, பொய்யறிவாகிய இருளை நீக்கும்‌ ஸூரியனாயும்‌, தகவு இல்லாதவர்களின்‌ உறவை நீக்கும்‌ சதுரராயும்‌ உள்ள தேவரீர்‌, உய்வு பேற்றுக்குத்‌ தக்கதை அடியேனுக்கு உகந்து அருள்‌ செய்வீராக –

மற்றோர்‌ பொருளுளதே? மாயை அறத் தொலைத்து
தெற்றத்‌ தெளிவித்துச்‌ சேம நல்கி – பிற்றைப்‌
பிறப்பொழித்துப்‌ பெம்மான்‌ கழலிணைத்து நாளும்‌
உறுமின்பம் உண்பிக்கவே–13-

ஆசாரியன்‌ அருளைக் காட்டிலும்‌ பிறிதொரு சிறந்த பொருள்‌ அடியேற்குளதோ? பிறவிக்‌ கேதுவான பிரகிருதி தொடர்பை நீக்கி,அறிவின்‌ மையாகிற மயக்கத்தைப் போக்கித் தெளிவைத்‌ தந்து,இவ்வளவிலேயே ஆனந்தமுறச்‌ செய்து முகுந்தனான இறைவன்‌ திருவடிகளில்‌ சேர்த்து மேலுள்ள காலமெல்லாம்‌ பேரின்பம்‌ நுகரும்‌ வாய்ப்பினை அடையும்படி செய்தார் –

உண்பித்தான்‌ ஒண்மை உலகார்யன்‌ ஓர்ந்தருள்செய்‌
விண்புகு விஞ்சுசுவை முத்தர்தம்‌ – பண்பிதனை
தக்கவாறுண்டு தரமுயர்ந்து நிற்கின்றேன்‌
மிக்கவா நான் எவ்வெவர்க்கும் மேல் –14-

உலகோர்க்கு உய்யும்‌ வழியைத்‌ தந்தவரான வள்ளல்‌ பிள்ளை லோகசாரியர்‌, தாம் மிக வுணர்ந்து அருளிச்‌ செய்த ஆகாசத்தைப்‌ போன்று உயர்ந்த சுவை யுடைய முத்தர்க்கு இன்பத்தை வழங்கக்‌ கூடியதான ஸ்ரீவசநபூஷணம்‌ என்ற நூலை அமுதாகக் தேர்ந்து அநுபவிக்கும்படி செய்தார்‌. பாஷியமாசாரியரும்‌ அதை அடியேனுக்கு உபகரித்தார்‌. அடியேனும்‌ அதன்‌ தரமறிந்து உள்ளத்திருத்தினேன்‌. இதனால்‌, நான்‌ உலகில்‌ எவருக்கும்‌ மேன்மையனாவேன் –

மேலா மிகு புகழ்ப் பாடியன் தன் மெய் வழி சால்
தோலா அருள்தந்த தொல்வழியில்‌ – நாலாம்‌
வழியே எளிய உரிய வழியா
அழிவிலா ஈரியல்புக்காம் –15-

மேலானார்‌ புகழும்‌ புகழ்களுக்கெல்லாம்‌ மேம்பட்ட புகழாலரான பாஷ்யமாசாரியர்‌, தம்‌ மெய்யுணர்வால்‌ ஆய்ந்து, முக்தி நெறியான நான்கில்‌ எல்லா நெறிகளைக் காட்டிலும்‌ மிக எளியதும்‌ அழிவற்ற ஆத்ம பரமாத்மாக்களுடைய உண்மை நிலைமைகளுக்குப்‌ பொருந்தியதும்‌ எவரும் மேற் கொண்டொழுகுவதற்கு உரியதாகிய மிகச்‌ சிறந்தது சரணாகதி உபாயமே யாகும்‌ என்றார் –

ஆமா றறிவுடைய ராவ தரிதன்றே
தேமா மலர்மா திருவருள்சார்‌ – நாமடந்தை
நாவன்‌ திருவயிந்தைப்‌ பாடியன்‌ நல்குதல் போல்‌
யாவனே ஆரியர்சார்‌ பின்று–16-

தன்னை யடைந்தாரை உய்விக்கத்தக்க அறிவுடையராக்குவது அரிதே யன்றோ இவ் வுலகின்‌ நிலை? இப்படி யிருக்க, தேனொழுகும்‌ தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய திருமகளின்‌ அருளைப் பெற்ற கலைமகள்‌ வாழும்‌ திருநாவை வுடையவரான திருவயீந்திரபுரம்‌ பாஷ்யமாசாரியரைப்‌ போல்‌ அடைந்தாரைக் காக்கும்‌ இயல்புடையவர்‌ எவரே உளர் –

இன்றே பிறந்தேன்‌ பழுதே யிழந்த நாள்‌
குன்றோ? மலையோ? கொழுங்கடலோ? – ஒன்றறியேன்‌
பாடியன்‌ வந்திலனேல்‌ பாழன்றே?
மேல் நாளும்‌ தேடிவந்தான்‌ ஏதிலருள்‌ செய்து–17-

மாறி மாறிப் பலப்‌ பிறவிகளை யடைந்து நின்ற கீழ்‌ நாள்களெல்லாம்‌ பல கல்பங்களாக கழிந்தது மட்டுமின்றி ஒரு குன்றினளவு, பெரியமலையளவு பெருங்கடலினளவு என்றளவிட முடியாதக்‌ காலமெல்லாம்‌ எனக்குப்‌ பழுதேயாயின. பாஷிய மாசாரியர்‌ காரணமற்ற கருணையால்‌ அடியேனைத்‌ தேடி வந்து, எனக்கருள்‌ செய்த இந்நாளே பயனுள்ள பிறவி யடைந்தேன்‌ என்றவாறு-

செய்த நலன்‌ ஈதென்று சிந்திக்க ஒல்லுமே?
மெய்யுணர்வின் மேம் பொருளைச் சேர் நெறியும் பொய்மையைப்
போக்குதலும் மெய்ம்மை மிக வுணர்த்தி பொன் கழலில்
வீக்கு மெய்ம்மைப்‌ பாடியன் மெய்‌ யின்று–18-

பாஷ்யமாசாரியர்‌ செய்த ஆனந்தத்துக்‌ கேதுவான நன்மைகளை மனத்தால்‌ நினைக்கவும்‌ முடியுமா? மெய்யுணர்வின்‌ தொடர்பால்‌ அடைதலுக்குரிய பரம் பொருளை அடையும்‌ வழியையும்‌, அதற்குத்‌ தடையானப்‌ பொய்யுணர்வைப்‌ போக்குதலும்‌, தன்னுடைய அழகிய திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொண்டு மெய்யறிவை நன்கு உணர்த்தி அருள்‌ செய்த இவை யனைத்தும்‌ மெய்யேயாகும் –

இன்றன்றே யானும்‌ இலன் போய்‌ உளனானேன்‌
என்றடி யேனை இருந்துகேள்நீ – என்றதுமே
எண்பெருக்‌ கந்நலத்‌ தொண்பொரு ளாயினன்‌
திண்கழற்‌ பாடியற்‌ சேர்ந்து–19-

அடைந்தாரைக்‌ கைவிடாது எம்பெருமானிடத்தில்‌ சேர்க்கும்‌ திருவடி களையுடைய பாஷ்யபாசாரியர்‌, அடியேனை அழைத்து ௭திரிலிருத்தி முமுஷுப்படியைப்‌ போதித்தலுமே, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அளவிடமுடியாத ஆனந்தத்தை யுடைய இறைவனோடு சம தர்மத்தை அடையத் தக்க இன்றே, அசத்தாயிருந்த அடியேன்‌ சத்தானப்‌ பொருளானேன்‌ என்றவாறு –

சேர்ந்தேதி லின்னருளே பொய்ம்மையைத்‌ தீர்த்தருள
ஆர்ந்த மதிநலம்‌ அன்றடைந்து – ஓர்ந்தீங்‌
குபய விபூதி ஒழிவி லுடையான்‌
அபயமிங்‌ குற்றே னது–20-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ வேறு காரணமற்ற இன்னருளால்‌ அடியேனைத்‌ தன் பால்‌ சேர்த்து நிறைந்த பக்தியும்‌ அறிவும்‌ உண்டாகும்படி பண்ணி, ஒரு சிறு துணுக்கும்‌ தன்னை விட்டு நீங்காது இரண்டு விதமான உலகத்திலிருக்கும்‌ அனைத்தையும்‌ தனக்குடமைப்‌ பொருளாகக்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமனால்‌ அஞ்சேல்‌ என்றருளப்‌ பெற்றேன்‌. ஈதன்றே அடியேனுடைய பாக்கியம் –

அதன்றே ஒழுக்கம் இலது உண்டறிதல்
அதன்றி மெய்ஞ்ஞானம் அறிதல் இதன்றே?
முழுமையன் பாடியன் முந்துற்ற என் போல்
விழுமயரின் மிக்கார் எவர் ? –21-

அறிவொழுக்கங்களால்‌ நிறைவுபெற்ற குருவை அடைவதே உய்வு பேற்றிற்குரியதாகும்‌. இதனை நாம்‌ அறிவது இயலாதே. இது உலகின்‌ நிலை. அப்படியிருக்க அறிவற்றவனான அடியேன்‌ இவற்றை எப்படி அறிவேன்‌? அறிவொழுக்கங்களால்‌ நிறைந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே அடியேன்‌
இருக்குமிடம்‌ தேடிவந்து இன்னருளைச்‌ செய்தார்‌. இதனால்‌ அடியேனைப்போல்‌ சிறப்புடையாரின்‌ மிக்கவர்‌ எவர்-

எவரே? விடம்போல்‌ இருந்துடன்‌ நாளும்‌ பவரேகைப்‌ பண்ணும்‌ பரிசும்‌ – அவரே கழற்றுந்‌ திறனறிவார்‌ பாடியன்‌ தானே கழற்றுங்‌ கருணை மிகக்‌ கொண்டு –22-

தீய செயலைப்புரிவதற்குக்‌ காரணமான நம்முடைய உடலானது விஷம்போல்‌ நாள்‌ தோறுமிருந்து நம்மை நலிகின்றது. இப்படிப்பட்ட உடற்பிறவியை நீக்க வேண்டுமானால்‌ விரோதி ஸ்வரூபத்தை நன்றாசு அறியவேண்டும்‌. அவ்வாறு அறிந்து, அவ்விரோதியை பொக்குவதில்‌ வல்லவரான பாஷ்யமாசாரியர்‌, தன்‌ கருணையாலே அடியேனுடைய விரோதியை போக்கி என்னை ஆட்கொண்டர்‌-

கொண்டான்‌ நிரம்புங்‌ குறைக்கொள்ளி நானாவேன்‌
மண்டிய தீவினையேன்‌ மாலுடையேன்‌ – கொண்டான்‌
உலகில்‌ நிகரில்லாப்‌ பாடியன்‌ ஒன்றோ
அலகில்‌ அருளால்‌ அணைத்து–23

இவ்வுலகில் எல்லாவாற்றாலும்‌ நீசைதை நிரம்பிய குறைக்‌ கொள்ளியானக்‌ காரணத்தினால்‌ மொய்த்த தீவினையுடைய வனானேன்‌-இத்தகு தீவினையேனையும்‌ கைக்‌ கொண்டு ஒப்பற்றக்‌ கருணை யுடையவராக ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அளவற்ற அருளால்‌ அடியேனை அணைத்துக் கொண்டார் –

அணைவான்‌ அணைத்தார்‌ பெரிய உடையார்‌
இணையில்லாச்‌ சீரார்‌ இறையை – அணைத்தான்‌
கருணைக்‌ கடல்போலுங்‌ கண்ணென்னுந்‌ தோளால்‌
பரிவுமிகும்‌ பாடியன்வந்‌ தின்று–24-

முத்தனாய்‌ வருமவனை அணைத்துக் கொள்ளும்‌ அளவற்ற கல்யாண குணங்கள்‌ நிரம்பிய ஒப்பற்றவனான சக்ரவர்த்தித்‌ திருமகனை (இராமனை) பெரியஉடையார்‌ என்ற ஜடாயு அளவற்ற ஆர்வத்தால்‌ அணைத்தார்‌. அது போல்‌, பெருங் கருணைக் கடலான பாஷ்யமாசாரியர்‌, பவித்திரத்தை உண்டாக்கும்‌ கண்ணென்னும்‌ தோளால்‌ அடியேனை அணைத்துக்‌ கொண்டார்‌.

இன்றன்‌ றிறைவன்பா லுள்ளவுற வொன்பதும்‌
ஒன்றும்‌ உணரோம்யாம்‌ தானறிவான்‌ – இன்றயிந்தை
பாடியன்பால்‌ சேர்த்தும்‌ பரிவின்‌ முழுக்களித்தான்‌
ஈடிலம்யாம்‌ என்றுலகின்‌ தேர்வு–25-

அநாதிகாலமாக எம்பெருமானுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவு ஒன்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. முற்றுணர்வினாகிய எம்பெருமான்‌ தானறிவான்‌. இத்தகு உறவின்‌ காரணமாக அடியேனை உய்வு பெற நினைத்து தகுந்தவரான பாஷ்யமாசாரியரிடம்‌ பரிவோடு சேர்த்து, மெய்யுணர்வை முழுக்க உண்டாக்கினான்‌. இதனால்‌, இன்று உலகவர்‌ இவன்‌ ஒப்பற்றவன்‌ என்று நிர்ணயிப்பதற்கு ஏதுவானேன்‌ – என்றவாறு –

தேர்வ லிதமென்னாச்‌ சிந்தியேன்‌ பாவியேன்‌
ஊரோ டுழல்வேனைப்‌ பாடியனாம்‌ – நாரணன்‌
மந்திரத்தின்‌ நுண்பொருளை மாட்டிச்‌ செவிவழியே
தந்தருள்‌ செய்தான்‌ நேர்ந்து–26-

ஆத்மாவாகிற நமக்கு நன்மையைச்‌ சிந்திக்காமல்‌ உண்டியே உடையே என்று உகந்தோடும்‌ ஊரவரோடு உழல்கின்ற பாவியான என்னை, பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அடியேனுக்கு இதம்‌ செய்வதற்காக, என்னை வளைத்துப்பிடித்து நாரணன்‌ மந்திரமாம்‌ எட்டெழுத்தின்‌ உட்பொருளை செவியின்‌ மூலம்‌ உபதேசித்தருள்‌ செய்

நேர்ந்து நினைந்தும்‌ வணங்கி வழிபட்டும்‌
கூர்ந்துமிகும்‌ அன்பின்‌ குறிக்கொண்டும்‌ – தீர்ந்துநின்பால்‌
தஞ்சம்‌ அடைந்தனன்‌ பாடிய நின்‌ தாளிணையே
எஞ்சுத லில்லா அரன்‌–27-

பெருமான்‌ அருள்தமக்கு வேண்டுமென்று ஈடுபட்டு, வணங்கி வழிபாடுகளைச்‌ செய்யும்‌ மிகமிக அன்புடையவரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! தேவரீரையே தஞ்சமென்றடைந்தேன்‌. ஆதலின்‌, தேவரீர்‌ அடியேனுடைய உய்வு பேற்றிற்குக்‌ குறைவற்றக்‌ காப்பாளாராக ஆகக் கடவீர் –

அரணென்‌ றடைந்தனன்‌ ஆரியநின்‌ தாள்கள்‌
முரணும்‌ அழுக்குடம்பும்‌ ஞானம்‌ – முரணும்‌
ஒழுக்கமும் தெற்றென அற்றன தேர்ந்தேன்
விழுப்பொருள்‌ நீயா விழைந்–28-

ஆசாரிய ஸ்வாமிகளே! தேவரீர்‌ திருவடிகளே காப்பாகுமென்று தஞ்மென்று அடைந்தேன்‌. அடைந்த இம்மாத்திரத்‌ தாலேயே, தீயவிஷயத்தில்‌ ஈடுபாட்டை விளைவிக்கும்‌ அழுக்குடம்பு, அதன்காரணமான தீயவொழுக்கம்‌, அதன்காரணமான பொய்யறிவு இவையனைத்தும்‌ பறந்தோடின. இதனால்‌, தேவரீரே விழுமிய பொருளென்று உணர்ந்தேன் –

விழைந்தேன்‌ இனியதா வேகடஞ்செய்‌ நின்னை
விழைந்திலன்முன்‌ மாயவன்சேற்‌ றள்ளல்‌ – அழுந்தி
பல் பகல் பாழ் பட்ட மீட்பதினி யுண்டாயின்
நல் வகையில் நீ இனி நல்கு –29-

முன்காலமெல்லாம்‌ வலிய சேறாகிய இந் நிலவுலகில்‌ அழுந்தி உருப்படி யில்லாமல்‌ கிடந்தமையால்‌ இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போல் இருக்கிற தேவரீருடைய ஸ்வபாவத்தை அறியாமல்‌ நீண்டகாலம்‌ பாழே போனேன்‌. இன்றாகத்‌ தேவரீரை அறிந்து அன்பு பூண்டேன்‌. ஆனால்‌, பாழே கழிந்த காலத்தை இனி மீட்பதொன்று உண்டே? தேவரீரே இதை யருளிச்‌ செய்ய வேணும்‌-

நல்கும்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ வேட்பன
அல்லனே தான் பொதுவன்‌ நீர்சிறப்பின்‌ – அல்லரே
ஏந்தூர்‌ சடகோபன்‌ வேட்பன ஈவதே
உந்தம்‌ சிறப்பினுக்‌ கொப்பு–30-

குருகூருக்குத்‌ தலைவரான நம்மாழ்வார்‌ எவ் வண்ணம்‌ எம்பெருமானை ஆசைப்படுவாரோ உபய விபூதிக்கும்‌ பொது நின்ற எம்பெருமான்‌ அவ் வண்ணமே நல்குவான்‌. எமக்கு ஆசாரியரான தேவரீரோ, உம்மைத் தஞ்சமென்று அடைந்தாரை அவர்கள்‌ விரும்பியது தரும்‌ சிறப்புடைய நியதி யுடையீர்‌. இத்தகைய நீர்‌, உம்மையே தஞ்சமாக அடைந்த ஏந்தூர்‌ சடகோபனாகிய அடியேன்‌ விரும்பியதைக்‌ கொடுப்பதே சிறப்பாகக்‌ காப்பவரான உமக்குத்‌ தகும்‌ என்று அடியேன்‌ விண்ணப்பம் –

ஒக்கும்‌ அடியேனைக்‌ கைக்கொளல்‌ உந்தமக்கே
ஒக்கும்‌ அடியேனும்‌ தாள்சாரல்‌ – தக்கதே
ஈடினை யில்லாப்‌ பெருமையீர்‌ நீரன்றே
ஈடினை யில்சின்ன வனான்‌–31-

சிறப்புடைய ஆசாரியரான உமக்கே அடியேனைக்‌ கைக்கொளல் தகும்‌. தேவரீரோ ஈடியிணையில்லாப்‌ பெருமை-யுடையவரெனத்‌ தக்கவராகையாலே, அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளைக்‌ சார்வதே ஒக்கும்‌. அடியேனோ சிறியவர்களில்‌ ஈடிணையில்லவன்‌ என்பதே உண்மையாகும்‌

நானென்‌ றெனதென்றும்‌ நான்பெரிய கோனென்றும்‌
வானொன்‌ றகங்காரத்‌ தியான்வளர்ந்தேன்‌ – தேனென்‌
றமுதென்றும்‌ மும்மநுப்பால்‌ ஆழ்ந்ததின்‌ ஆசான்‌
நமவென்‌ நலங்கொடுத்தனன்‌–3
2–

அடியேன்‌ கீழ்க்கழிந்த நாள்களிலெல்லாம்‌ நானென்றும்‌,எனதென்றும்‌, நானே பெரியவன்‌ என்றும்‌ இப்படி வானைவிட உயர்ந்தஅகங்காரத்தில்‌ முதிர்ந்தவனாய்‌ இருந்தேன்‌. இந்நிலையில்‌ ஆசார்ய சுவாமிகள்‌ அடியேனுக்கு மூன்று மந்திரங்களில்‌ முதல்‌ மந்திரமான திருமந்திரத்தில்‌ நடுவில்‌ பதமான நம: என்ற சொல்லை விவரித்து, தேனில்‌ இனியதும்‌ அமுதம்‌ போன்றதும்‌ மரண மற்றதுமான இந்த விஷேச அர்த்தங்களை உபதேசித்து அடியேனை உய்வித்தார் –

கொடுத்தான்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஈந்த
கொடுத்தான்‌ பதின்மர்‌ குறிக்கும்‌ மொழிகள்‌
கொடுத்தான்‌ கலம்பகம்‌ மற்றும்‌ அனந்தம்‌
மடுத்தேன்‌ மதுவெனப்‌ பெற்று–33-

உலகோர்‌ துன்பத்தைப்‌ போக்க திருநகரியில்‌ அவதரித்தவர்‌ நம்மாழ்வார்‌, அவர்‌ அருளிய பிரபந்தங்கள்‌, மற்றுள்ள ஆழ்வார்கள்‌ பிரபந்தங்களையும்‌ கொடுத்தார்‌. அடியேன்‌ பாஷ்யமாசாரியரை அடைந்ததே காரணமாக, அடியேனைக் கொண்டு திருவாய்மொழிக்‌ கலம்பகத்தையும்‌ இயற்றும்படி செய்து, மதுரமிக்க ஸம்பிரதாய அர்த்தங்களையும்‌ அடியேனை அநுபவிக்கச்‌ செய்தார் –

பெற்றேனின்‌ தாளிணையில்‌ பாமாலை பெய்கலையைக்‌
கற்றேன்‌ கடும்பிறவி காய்ந்தொழித்தேன்‌ – நற்றேன்‌
ஒழுகுநின்‌ கீர்த்தி நயந்துரைத்தேன்‌ ஓர்கால்‌
பழகு பரிந்துரைப்பால்‌ பட்டு–34-

ஆசாரியரே! மறு பிறப்பறுக்கும்‌ உமது தாளிணையே தஞ்சமாகப்‌ பெற்றேன்‌. நின்‌ திருவடி விஷயமான பாமாலையாகிற கலையைக்‌ கற்றேன்‌-இதனால்‌, துன்பத்துக்குக்‌ காரணமான பிறவி மீண்டும்‌ வாரா வண்ணம்‌ தேவரீர்‌ கீர்த்திகளை உலகறியச்‌ செய்தேன்‌.சில சமயம்‌ உலகோர்க்கு தேவரீர்‌ திருவடியை அடைய புருஷகாரமாகவும்‌ வாய்ப்பேன்‌ – என்றவாறு-

பட்டேன்‌ பருவரல்‌ பல்லூழிக்‌ காலமெல்லாம்‌
தொட்டேன்‌ பாடியன் தன்‌ தூமலர்த்தான்‌ – தொட்டதுமே
முன்ன வினை பின்ன வினை ஆரத்த மூன்று ஒழிந்த
என்னை நிகர் யாரே யினி –35-

கீழ்க் கழிந்த நாட்களிலெல்லாம்‌ பிறப்பிறப்புப்‌ பிணியால்‌ படாத பாடுபட்டேன்‌. காதாகித்கமாக பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடியைத்‌ தொட்டேன்‌-தொட்டதும் இப் பிறப்புக்கு முற்பட்ட பிறவிகளில்‌ செய்த வினைகள்‌, பிற்பட்ட வினைகள்‌ இவை யனைத்தும்‌ தீயினில்‌ தூசாகி கழிந்தொழிந்தன. இனி, வினை யற்றவர்களில்‌ எனக்கு நிகராக யவருமில்லை என்றவாறு–

இனியோர் குறை யுண்டோ பூதூரில் வள்ளல்
பனி மலர்த் தாளிணையே பற்றா -நனி விழையும்
சிங்களில் பாடியன் தன் செங்கமலத் தாளிணையே
துங்கமா தூய் மௌளிக் கொண்டு –36–

ஸ்ரீபெரும்புதூர்‌ யதிராசருடைய குளிர்ந்த தாமரை மலர்‌ போன்ற திருவடியினையே பற்றாக மிக விரும்பி, ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றிய பாஷ்யமாசாரியருடைய திருவடித்‌ தாமரையையே அடியேன்‌ உத்துங்கமான முடியாகக்‌ கொண்ட பிறகு, இனியும்‌ ஒரு குறையுள்ளதோ? எனக்கு –

கொண்டான்‌ வரமுநி கோயில்‌ உகந் தயிந்தை
கொண்டான் நல மந்தம் இல்லத–கொண்டோம்
உலகளந்தான்‌ பொன்னடியோம்‌ பாடியன் போல் யமும் ன்பம்‌
நிலமளந்தான்‌ சொம்மாயினோம் –37–

மணவாளமாமுநிகள்‌ திருவமீந்திர புரத்தையே தமக்குகந்த கோயிலாகக்‌ கொண்டார்‌. அதை யறிந்த பாஷ்யமாசாரியரும்‌ நலமந்தமில்லாததான அந்தக்‌ கோயிலையே தமக்கேற்ற வாச ஸ்தலமாகக்‌ கொண்டார்‌. இவர்‌ அபிமாநித்த சிஷ்யர்களாகிய யாமும்‌ உலகளந்தான்‌ பொன்னடியார்‌ ஆதலால்‌ நிலமளந்தவனுடைய சொத்தாக ஆயினோம் —

நேமிசங்கம்‌ கண்கைகால்‌ வாய்முகம்‌ நாபியணி
தாமரைகள்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டம்‌
அயிந்தையில்‌ ஈருருவும்‌ ஆறு பயன்‌ ஆவதே!
நயந்தெரிந்து நானடைந்தேன்‌ நன்கு–38-

அடைந்தாரைக்‌ காப்பாற்ற வேண்டி பஞ்ச ஸம்ஸ்காரார்த்தமாகத் தரித்த திருவாழித்‌ திருச் சங்கமும்‌, தன்னை அடைந்தாரை நோக்கும்‌ மலர்ந்த திருக் கண்களும்‌, பிறவி போக்கும்‌ திருவடிகளும்‌, அஞ்சலென்ற திருக் கைகளும்‌, உபதேசம்‌ செய்யும்‌ திரு முகமும்‌, எம்பெருமான்‌ திருமேனிக்குப்‌ போலி யுருவான திரு நாபிக்‌ கமலமும்‌ ஆகிய இவைகளைத்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டங்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீமந்‌ மணவாள மாமுனிகளும்‌ அவரின்‌ நிழல்‌ என்னலாம்படியான பாஷ்யமாசாரியரும்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஈருருவோ? என்று நினைக்கலாம் படி யிருக்கும்‌ இருப்பை நினைத்து அவர்களையே தஞ்சமடைந்தேன்‌.

நன்றென்‌ றுளதேயோ? பொய்யறியா நானறிந்த
என்றென்றும்‌ யாண்டும்‌ இலதன்றே – குன்றாக்‌
கருணைக்‌ கடலே தான்‌ பாடியன்‌ வேறன்‌
றிருனிலத்தில்‌ பேரொளியே யின்று–39-

பொய்யென்ப தறியாத அடியேன்‌ அறிந்த தொன்றைச்‌ சொல்லுகின்றேன்‌. இருள் தரு மா ஞாலத்தில்‌ பேரொளிப்‌ பிழம்பாகத்‌ திகழும்‌ திருவயீந்திர புரம்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே ஆவர்‌. கருணைக் கடலான அவரைப்‌ போல்‌ நன்றான ஒரு பொருள்‌ இன்று எவ்விடத்திலாகிலும்‌ உளதோ? இல்லை யென்றபடி –

இன்றன்றே? என்றென்றும்‌ ஈடிணை யென்பதில்லை
பொன்றாப்‌ புகழோன்‌ சடகோபன்‌ – பொன்றாத
பேரறிஞன்‌ நாதமுநி யாமுநன்‌ பேராளன்‌
நேராவ ரென்பதிலை நேர்‌–40-

இன்றும்‌ முற் காலத்திலும்‌ மேல் வரும்‌ காலத்திலும்‌ என்றும்‌ அழியாத புகழை யுடைய நம்மாழ்வாருக்கு ஒப்பானவர்‌ எவருமில்லை எனலாம்‌. அவரை அடி பணிந்த குறை வற்ற போறிஞரான ஸ்ரீமந்‌ நாத முநிகள்‌, அங்ஙனமே யாமுந முளிகள்‌, திக்கெட்டும்‌ புகழ் பரவும்‌ பேராளரான ராமாநுஜர்‌ முதலான இவர்களுக்கும்‌ ஒப்பாகக்‌ கூடியவர்‌ ஒருவரும்‌ இலர்‌ எனலாம்‌. நன்மை யொன்று மில்லாத அடியேனை அங்கீகரித்தமையால்‌ பாஷ்யமாசாரியரை வேண்டுமானால்‌ அந்த பூர்வாசாரியர்களுக்கும்‌ ஒப்புச்‌ சொல்லலாம்‌ – என்றவாறு –

நேராவார்‌ யாரே? கருணை நிரம்பியதில்‌
நேரார்‌ நிகரில்‌ புகழொன்றில்‌ – நேராவார்‌
உண்டேயோ? பாடியற்குப்‌ பெம்மானும்‌ உள்ளதேல்‌?
புண்டரீகம்‌ வான்பூத்த போல்‌–41-

கருணை நிரப்பத்திலும்‌ வாத்சல்யாதி குணங்களிலும்‌ பாஷ்யகாரருக்கு நிகர்‌ ஒருவருண்டோ? எல்லா நற் பண்புகளால்‌ நிறைந்தவனான எம்பெருமானும்‌ அவருக்கு நிகராக மாட்டான்‌. உளர்‌ என்பீரேல்‌! ஆகாயத்தில்‌ பூத்தத்‌ தாமரைப்‌ போலாகும்‌ என்பேன் –

போலா மதுரகவி மாறன் தன்‌ பொன்னருளே
ஏலாரே? சான்றோ ரெனக் கொண்டு – மேலாத்‌
தகவுடைய தாய் தந்தை என்று நின்ற அஃதே
மிக விரும்பும்‌ பாடியனே மெய்‌–42-

மதுரகவியார்‌, தன்புன்மையைக்‌ கண்டால்‌ சான்றோர்‌ தன்னை ஏற்க மாட்டார்‌ என்று கருதியே அழகிய அருளை யுடைய ஸ்வாமி நம்மாழ்வாரையே தகவுடையதாய்‌, தந்தையான எல்லா வுறவுமாய்க்‌ கொண்டு தஞ்சமடைந்தார்‌. ஆழ்வாரும்‌ அவரை ஏற்றார்‌. அதைப் போலவே புன்மை யுடைய அடியேனை பாஷ்யமா-சாரியர்‌ ஏற்றுக்‌ கடைக் கணித்ததும்‌ மெய்யே யாகும்‌-

மெய்ம்மைத் திருவயிந்தை பாடியன் மேல் நாளில்
செம்மை யுறச் செய்யா திருப்பேனேல் -அம்மே
நலன் துறந்து நாண் துறந்து பாழ் படுவன் அன்றே
இலனாகி எய்த்து இருப்பன் இன்று –43-

பொய்யில்லா மணவாள மா முநிகள்‌ திருவயீந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டதனால்‌ அத் தலம்‌ இன்று மெய்த்தல மாயிற்று. அத் தலத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியர்‌ முன் காலத்தில்‌ அடியேனை செம்மைப் படுத்தா திருப்பாரானால்‌, அம்மம்மே ! அடியேன்‌ எல்லா நலன்களையும்‌ துறந்து லஜ்ஜையும்‌ துறந்து அசத்தாகிப்‌ பாழ்பட்டிருப்பேன்‌ இன்று – என்றவாறு –

இன்றன்றே மாறன்‌ சடகோபன்‌ என்றென்று
நன்றானேன்‌ உண்ணாட்டுத்‌ தேசிதனை – நன்றா
குடிகஷணைன்‌ கோவிந்தன்‌ மாதவன்‌ அன்பர்‌
மடிவைத்து கந்தருள்வான்‌ மால்‌–44-

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளால்‌ அடியேன்‌ செம்மைப்‌ பெற்றமையால்‌, இன்று மாறன்‌ என்றும்‌, சடகோபனென்றும்‌ உலகவர்‌ இயம்புகின்றதால்‌, அடியான்‌ தொண்டன்‌ என்ற உள் நாட்டுத்‌ தேஜஸ்ஸைத்‌ தரும்‌ பேர் பெற்றவனானேன்‌; கோவிந்தன்‌ குடியடியானென்றும்‌, மாதவன்‌ தமரென்றும்‌ சொல்லத்‌ தரமுடையவனானேன் . இதனால்‌ ஸ்ரீவைகுண்டத்தில் தேவிமாரோடு எழுந்தருளி யிருக்கும்‌ பர வாசுதேவன் இவனால்‌ அலம்பி லாபம்‌ பெற்றோம்‌ என்று உச்சி முகந்தருள்‌ செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌ – என்றவாறு –

மாலே படைத்துக்‌ கடைக் கணித்தான்‌ மற்றுள்ள
ஏலா திருத்தான்‌ அன்றோ! – தோலாப்‌
புகழா இத்தைப் பாடியன் பூதூர்‌ முனிபோல்‌
மிகப் பரிந்தாட்‌ கொண்டான்‌ விழைந்து –45-

எம்பெருமான்‌ பிரளய காலத்தில்‌ இறகொடிந்த பக்ஷிகளைப்‌ போலான ஜீவாத்மாக்களைக்‌ கடைக் கணித்து, கை கால்‌ உறுப்புக்களோடுக்‌ கூடிய சரீரத்தைக்‌ கொடுத்து, அறிவைக்‌ கொடுத்து விட்டு விட்டான்‌. அயிந்தைப்‌ பாடியனோ ஸ்ரீபெரும்புதூர்‌ இராமாநுஜரைப்‌ போல்‌ ஜீவர்கள்‌ விஷயத்தில்‌ ஐயோ! ஐயோ! என்று மிகப்‌ பரிந்து அவர்களை விரும்பி அடிமை கொண்டான் –

விழையொழி யாதாயின்‌ வெந்துயரே வீவில்‌
விழைவுளதேல்‌ பாடியன் பால்‌ இன்பம்‌ – கழியும்‌?
விதிசூழ்ந்‌ திலனென்று வீறுசால்‌ தானே
பதிந்தான் தன்‌ பாலாம்பேரன்பு–46-

உலகியலில்‌ இருக்கும்‌ ஆசையை ஒருவன்‌ விடவில் யென்றால்‌, அவன்‌ பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்ந்து கிடக்க வேண்டியதே. ஆனால்‌, உத்தாரக ஆசாரியரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ திறத்து பேரன்பு உளதேல்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ நீங்குமா? நீங்காது. எம்பெருமான்‌ கருனை ஜிவர்களிடம்‌ ஏறிப்‌ பாயவில்லை என்று நினைத்து பாஷ்யமாசாரியர்‌ ஜீவர்கள்‌ தன் பால்‌ கொள்ள வேண்டிய பேரன்‌பை தாமே பதியும்படி செய்தார் –

அன்பின்‌ நிகரில்லா னாங்கே கருணையின்‌
இன்பி னிணையில்லான்‌ தோற்றத்தால்‌ – பொன் பிறங்கும்‌
மேரு மிசைப்‌ பூத்த செந்‌ தாமரையே ஒருருத்தாள்‌
கண் கை முகம் வாய்‌ மதி –47.

ஸ்ரீ பாஷ்யமாசாரியர்‌, எம்பெருமான்‌ திறத்தும்‌, தன்னை தஞ்சமென்றடைந்த சீடர்‌ திறத்தும்‌ அளவிலா அன்புடைமையின்‌ இன்புறுவதிலும்‌ இணையில்லாதவரே. இவர்‌ தோற்றத்தில்‌ பொன்னிறத்தால்‌ அழகிய திருமேனி, திருவடிகள்‌, திருக்கண்கள்‌, திருக்கைகள்‌, திருப்பவளம்‌, திருமுகம்‌ இவையனைத்தும்‌ அப்போதலர்ந்த செந்தாமரையொத்து பொன்மலையான மேருமலை௰ல்‌ பூத்தபல செந்தாமரைப் போல்‌ காட்சி யளிக்குமென்பதாம் –

மதியொன்றில்‌ மான்குறள்நேர்‌ மாயை கடிவில்‌
எதி சட கோப னிவனே – கதியில்லான்‌
என்போலும்‌ ஏழையைக்‌ கண்போலும்‌ காப்பவன்‌
விண்போகும்‌ சீர்பாடி யன்‌–48–

செயல்‌ செய்யச்‌ சிந்திப்பதில்‌ வாமந மூர்த்தி போலும்‌, மாயயைக்‌ கோபித்துப்‌ போக்குவதில்‌ முற்றுந் துறந்த சடகோபனே யாவான்‌. தன்‌ பாலீடுபாடு இல்லாத என்னைப்‌ போல்‌ அறிவிலியைக்‌ கண்‌ போலும்‌ சிறப்புறச்‌ செய்து காத்தருள்வார்‌ வானளாவிய கீர்த்தி வாய்ந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌- என்பதாம்

பாடியனோ சானகியோ போல்வீர்நன்‌ குத்தமரில்‌
வீடில்சீர்‌ ஆழ்வான்‌ தனையடைந்தார்‌ – கோடல்‌
பதி பரவும்‌ பாங்கில்‌ கலியனோ டொப்பீர்‌ மதி நலத்தால்‌ மாறனே நீர்‌–49-

தான்‌ நரகமடைந்தாலும்‌ பரவாயில்லை. ஆனால்‌, ஆசை யுடையோர்‌ இழக்கலாகாது என்று எண்ணி ஆசாரியன்‌ ஆணையை மீறி திருமந்திரத்தை ஆசையுள்ள எல்லோருக்கும்‌ தூளி தானம்‌ செய்த எம்பெருமானாரைப்‌ போலவும்‌, தேவ மாதரை மீட்கத்‌ தான்‌ சிறையிருந்த சீதாப் பிராட்டியைப்‌ போலவும்‌, தரிசனத்தைக்‌ காக்க தன்‌ கண்ணை யிழந்த கூரத்தாழ்வானைப்‌ போலவும்‌, தன்னை அடைந்தாரைக்‌ கைக் கொண்டு திவ்விய தேசங்களை வாழ்த்திய திருமங்கை யாழ்வாரைப்‌ போலவும்‌, மயர்வற மதிலம்‌ அருளப்‌ பெற்றவர்களில்‌ தலைவரான நம்மாழ்வாரைப்‌ போலத்‌ திகழும்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! இவர்களில்‌ நீவீர்‌ எவரோடு ஒப்பாவீர்‌-

நீரே சயமே யடிமைத்‌ தலை நின்றீர்‌ நீரே அடிமையில்‌ நீக்கமிலீர்‌ – நீர்தாமே கோதிலடி யாருங்‌ குணந்திகழ்‌ கொண்டலும்‌ நீதி நெறி வித்தகரும்‌ நீர்‌–50-

பாஷ்யமாசாரியரே! பயனாகிற அடிமையில்‌ தலை நின்றவர்‌ நீரே; எம்பெருமானுக்‌ காற்றும்‌ தொண்டில்‌ பிரிவதில்லாதவரும்‌ நீரே; குற்றம்‌ யாதுமில்லாது அடிமையில்‌ தலை நின்ற தோடல்லாமல்‌ அடைந்தாரைக்‌ கைக் கொண்டு குணந் திகழ்‌ மேகத்தோடு ஒத்தவரும்‌ ஆவீர்‌. ஆத்ம பரமாத்மாக்களின்‌ நீதியை முற்றும்‌ அறிந்தவரும்‌ நீரே யாவீர் –

நீரே நிகரற்ற நீசனெனை கைக்கொண்டீர்‌
பாருடன்‌ நீரும்‌ பரிவுமிகு – ஊரவரும்‌
எக்காலத்‌ தெவ்வெவரும்‌ ஏற்பதொண்‌ றுண்டேயோ?
மிக்க புகழ் தத்துவமே –51–

நிகரற்ற நீசனான என்னை நீரே உகந்துக்‌ கைக் கொண்டீர்‌. நிலத் தேவரும்‌ ஸ்வேதத்‌ தீப வாசிகளும்‌, மங்களாசாஸனமே யாத்திரை யாயுள்ள நித்திய விபூதியிலுள்ளாரும்‌ முதலாக எக்காலத்திலும்‌ எவ்வுலகிலுள்ளாரும்‌ ஏற்பது என்பது இல்லை யேயாம்‌. மேலாம்‌ புகழே வடிவான தத்துவமே இதுவாகும்‌. தேவரீருடைய வாத்சல்ய குணம் –

மேதினியில்‌ ஐம்புல வாஞ்சை மிகவுடையன்‌
காதுங்‌ கடுநெஞ்சன்‌ தீச்செயல்கள்‌ – யாதும்‌
எனையன்றே அண்டி நிலை பெறுவ யாண்டும்‌
வினையமென்ப தொன்றும்‌ மிகை–52-

பாருலகில்‌ ஐம்புலன்‌ நுகரும்‌ விஷய விருப்பம்‌ மிக உடையவன்‌; கொலை செய்ததற்குரிய கடுமை மிக்க நெஞ்சினை யுடையவன்‌; கொடிய செய்கைகளை யுடைய இப்படிப்பட்ட யாவும்‌ என்னைச்‌ சேர்ந்தே நிலை பெறுவனவாம்‌. எம்பெருமான்‌ விஷயமாக அன்பின்‌ பட்டும்‌ அடக்கமென்பதே யில்லாதவனடியேன் –

மிகையனே மெய்யடியாா கூட்டத்து யானோ
தகையிலன்‌ சாது கோட்டி தம்மில்‌ – நகையிலன்‌
நள்ளருட்கண்‌ இங்கலம்போல்‌ நானொருவன்‌ உள்ளேன்பால்‌
உள்ளதெல்லாம்‌ தீய துள–53-

மெய்யடியார்‌ கூட்டத்து அதிகப்‌ படுவேன்‌ யானொருவன்‌ என்பதாகும்‌. சாது கோட்டிக்குரிய பண்பற்றவன்‌; பகவதநுபவ மில்லாதவன்‌; குதூகலமில்லாதவன்‌; நடுநிசியில்‌ அடுப்புக்கரிபோல்‌ ஒளியற்றவன்‌; இலனென்பாரில்‌ நானொருவன்‌ உளன்‌; என்னிடம்‌ உள்ளதெல்லாம்‌ தீயதே உள்ளதாம் –

உளதேயோ? நீர்செய்‌ செயலின்‌ தரந்தான்‌
உளதேயோ? எம்பெருமான்‌ செய்த – உளதே?
இருவீரும்‌ செய்தசெயற்‌ கொப்பறிவணர்‌ உண்டோ?
பெருமைமிகு பாடியனே! பேசு–54-

தேவரீர்‌ அடியேன்‌ திறத்துச்‌ செய்த செயலின்‌ தரமறிதலுண்டோ? தேவரீரை அடியேற்குத்‌ தந்த எம்பெருமான்‌ செய்த செயலுக்கு ஈடுண்டோ? தேவரீர்களிருவரும்‌ செய்த நல்லுதவிக்‌ கொப்புண்டோ? ஒப்பறிவாரிங்குளரோ? இவற்றை பெருமை மிகு பாஷ்யமாசாரியரே! நீரே அருளிச்‌ செய்ய வேணும் –

பேசுதல்‌ வல்லீரே? நீர்செய்த பேருதவி
பேசுந்‌ தரமுடைத்‌ தல்லவே – நீசனேனைக்‌
கைக்கொண்ட காரியமே எற்கறி வித்ததால்‌
இக் குறிப்பே கொண்டுரைத்தேன்‌ இங்கு–55-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ திறத்து தேவரிர்‌ செய்த பேருதவியானது, தேவரீரே அருளிச்‌ செய்யும்‌ தரமற்றது. ஆதலினால்‌ பேசுதல்‌ வல்லீராக மாட்டீர்‌. உனக்கெப்படித்‌ தெரியும்‌ என்று கேட்பீரானால்‌, அடியேனோ நிகரற்ற நீசனானவனெனக்‌ கொண்டு செம்மை படுத்திய செயலே, அடியேற்கறிவித்தாகுமிதைக்‌ கொண்டே நிகரற்ற செயலென்கிறேனாகும் –

இங்கறிந்தேன்‌ இன்றாக எம்பெருமான்‌ செய்தநன்றி
துங்கமிகு பாடியனைத்‌ தோற்றுவித்தல்‌ – இங்கிலதேல்‌
தொல்லூழிக்‌ காலந்‌ தொலைந்தகீழ்‌ மேல்நாளும்‌
பல்லூழிக்‌ காலம்‌ பழுது –56-

எம்பெருமான்‌ அடியேனை உய்விக்க வேண்டியே பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைத்‌ தோற்றுவித்தான்‌ என்பதனை இன்றாக அறிந்தேன்‌. அப்படி அவரைத்‌ தோற்றுவிக்க வில்லையானால்‌, அடியேற்கு கீழ் கழிந்த காலமும்‌ இனி மேல்‌ வருங்காலமும்‌ பழுதாய்‌ முடிந்திருக்கு மன்றோ –

பழுதாகா வண்ணம்‌ பாடியன்தன்‌ சீலம்‌
விழுமிதென்‌ றுள்ளில்‌ விரித்தான்‌ – கழிபேர்‌
கருணையான்‌ அவ்வளவே வேறன்று கொண்டு
சரணடைந்தேன்‌ பாடியன்தா ளின்று–57-

ஆசாரிய ஸ்வாமிகள்‌, பிறர்‌ நலமே பேணும்‌ மிக்கப்‌ பெருங் கருணையால்‌ தன்னைச்‌ சார்ந்தாரை உய்வு பெறுத்தலில்‌ மிகவும்‌ ஊற்றமுடையவர்‌ ஆவார்‌ என்பதனை அடியேன்‌ உள்ளத்தில்‌ மிக விரியக்‌ காட்டி யருளினார்‌. இவ்வளவிலேயே அடியேன்‌ நிர்ணயித்து, இவர்‌ திருவடிகளில்‌ தஞ்சமென்றடைந்தேன்‌. இதனால்‌, அடியேன்‌ வாழ் நாளைப்‌ பழுதாகா வண்ணம்‌ மேற் கொண்டேன்‌ இன்றெ என்பதாம் –

இன்றயிதை மாமுநிதன்‌ தாளில்‌ இருந்து தொண்டு
நன்றியற்றும்‌ பாடியன் தன்‌ நாண்மலர்த்தாள்‌ – குன்றாத
ஆறுடன்‌ பேறாக வானில்‌ அரியயயன்‌
வீறுடன்‌ பெற்றேன்‌ விரைந்து–.58-

இன்றாக திருவயிந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டுள்ள மணவாளமாமுநிகள்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு நிலை நின்ற பேறென்றறிந்து தொண்டு செய்யும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய அன்று பூத்த தாமரை போன்ற அழகிய திருவடிகளையே அழிவற்ற ஆறுடன்‌ பேறாக வானில்‌ பெறும்‌ பயனின்‌ பெறுதற்கரிய பயனாக சிறப்புற்ற வகையில்‌ விரைந்து பெற்றேன்‌ என்பதாம் –

விரைந்து திருமலை யாழ்வார்‌ விரும்பி
வரமுநியை சீடராகக்‌ கொண்டார்‌ – வரமுநியும்‌
கோயில் அயிந்தை கொடு பாடியற் கொண்டார்
ஆய்விலடி யேற்கொண்டான்‌ ஆர்ந்து –59-

திருமலையாழ்வார்‌, தீவிரமாக மிக விரும்பி மணவாள மாமுனிகளை உபயாத்திரையும்‌ தமதாகக்‌ கொண்டு சிறப்பித்தார்‌. மணவாள மாமுனிகள்‌
திருவயிந்திபுரம்‌ விரும்பி கோயில்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உய்யும்படியே பெற்றார்‌. பாஷ்யமாசார்ய சுவாமிகளடியேனை அளவிடற்கரிய பேரன்பினில்‌ கைக் கொண்டார் —

ஆர்ந்தபுகழ்‌ அச்சுதனே வந்தான்‌ உலகார்யன்‌
தேர்ந்தறிய வல்லமே? தன்பெருமை – தேர்ந்தறிவ
தென்ப தொருபொருள்‌ நாடுறைவர்‌ யாரறிவார்‌?
பண்பனே பாடியற்குக் காப்பு –60-

நிரம்பிய புகழுடைய அடைந்தாரைக்‌ கைவிடாத எம்பெருமான்‌ பிள்ளை யுலகாசார்யராய்‌ வந்துதித் தருளுகையால்‌ இவர்‌ பெருமை நாமறியோ மென்பதொரு பொருளல்ல, உலகிலுள்ளார்‌ எவருமே அறிய முடியாத பெருமையாகக்‌ கருதக் கூடிய பண்புடையரான உலகா சாரியரே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்குக்‌ காப்பாவார் –

காப்பு வடக்குதிரு வீதிப் பிள்ளை காத்திலரேல்‌
காப்பெவர்‌ வாய் மொழி ஈட்டுரைக்கு – காப்பன்றி
நுண் பொருள்‌ முற்றவும்‌ நோக்குவித்தான்‌ பாடியற்கு
பண்பினெற்‌ கீந்தான்‌ பயன்‌–61-

வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்ளை சொன்னை திருவாய்மொழி ஈட்டின்‌ உரையைக்‌ காத்து எழுதவில்லையானால்‌, காப்பாவார்‌ யார்‌? இந்த வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை ஸ்ரீவைஷ்ணவத்தை காப்பது மட்டுமல்லாமல்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியருக்கு ஈட்டுரையை தன்னருளால்‌ இவரிடம்‌ வந்து சேரும்படி நோக்குவித்தார்‌. இந் நோக்கை பாஷியமாசாரியர்‌ தம் பரம கருணையாலே அடியேன்‌ திறத்தில்‌ பயனுறும்படி செய்தார் –

பயனாநம்‌ பிள்ளையின்றேல்‌ ஆழ்வார்கள்‌ பாக்கள்‌
பயனோயோ? உம்பர்‌ திவத்தொப்பாம்‌ – பயனுடைத்தே
ஈடின மில்லார் இறையின்பம் மில்லாதோர்
பாடியனே பெற்றான் தன்‌ சீர்‌–62-

உலகுக்குப்‌ பெரும்‌ பயனாக உயர்வற உயர்நலமுடையவனால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றவர்களாழ்வார்கள்‌ பதின்மரும்‌, இப்படி இவர்களால்‌ இறை யனுபவம்‌ கரைந்து வழிந்தவாறே அருளிச்‌ செயல்கள்‌ தொண்டர்க்கமுத மாயமைந்தன அருளிச்செயல்கள்‌. நம்பிள்ளை என்ற ஸ்வாமிகள்‌ அவதரிக்கவில்லையானால்‌ இந்த அருளிச்செயல்‌ பயனுடையதாகாது. இதன்றி தாழ்த்திக்கு முடிந்த நிலமான இருள்தருமா ஞாலம்‌ உம்பர்‌ திவத்தொப்பாம்‌ பயனுடைத்‌ தாயிற்று. இத்தகு அனுபவம்‌ நம்பிள்ளைகளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்‌ சார்ய சுவாமிகளுக்கு அருளப் பெற்ற அவ் வனுபவம்‌ தம் பரம கருணையால்‌ எமக்குக்‌ கொடுத்தார் –

தஞ்சீரை ஞானியர்கள்‌ தாம்புகழும்‌ வேதாந்தி
நஞ்சீயர்‌ தாம்பட்டர்‌ நல்லருளால்‌ – எஞ்சாத
ஆர்வமுடன்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ நூறுரு
ஆர்ந்தெற்கீந்‌ தான்பா டியன்‌–63-

தம்‌ கீர்த்தியை மெய் ஞானியர்கள்‌ கொண்டாடும்‌ தரமுடைய நஞ்சீயர்‌ என்றும்‌ வேதாந்தி என்றும்‌ பெயருடையார்‌, பட்டர்‌ திருவருளால்‌ மாறன்‌ மறையாகிய திருவாய்மொழியின்‌ நுண்‌ பொருள்கள்‌ முற்றும்‌ தம்மைச்‌ சார்ந்தார்‌ தமக்கு நூறுருவமையைக்‌ கொடுத்ததை, ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகள்‌ மேற்படியார்‌ அருள்களால்‌ தாம்‌ பெற்று தன் பேரருளால்‌ அடியார்க்கருளினார் –

அன்பின்‌ அலைகடல்‌ ஆயிரம்போக்‌ காழ்பொருள்‌
இன்பின்‌ இளங்குமரன்‌ எம்பிராற்‌ – கின்புருவன்‌
எட்டெழுத்‌ தெட்டுகாதை பண்ணின்‌ தனிச் சுவையன்‌
பட்டர்திருத்‌ தாள்பா டியன்‌–64-

எம்பெருமானார் திறத்தும்‌ மெய்யடியார் திறத்தும்‌ அலைகடலை யொத்த அன்புடையாரும்‌, இன்பம ளிக்கும்‌ இளங்குமரனும்‌, பிறவித்‌ துயரொழிய வேண்டுவார்க்கு துன்பமொழித்து எம்பிரான் பால்‌ சேர்த்து இன்பமளிக்கும்‌ எட்டெழுத்துக்கு அஷ்டச்லோகி என்ற நூலருளியவரும்‌ பண்ணின்‌ தனிக் கலைஞரும்‌ ஆயிர நாமத்துக்கு ஆழ் பொருளெல்லாம்‌ அருளிச்‌ செய்தவருமாகிய ஸ்ரீமத்‌ பட்டருடைய திருத் தாளை தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகளின்‌ திருவடிகளே அடியேற்குத்‌ தஞ்சமாகும் –

பாடியன்‌ எம்பார்‌ பதற்சேர்ந்‌ திதந் தெரிவான்‌
ஈடில்‌ சுவையன்‌ தமிழ் மறையின்‌ – நாடு புகழ்‌
நாலாயிரம் பாவில்‌ எம்பெருமானார் தாள் சேர்த்‌
தோலாத்‌ துணைச் சீட னாம்‌–65-

ஸ்ரீபாஷ்யமருளிச்‌ செய்த எம்ருமானார்‌ திருத்தாளினைச்‌ சேர்ந்து உய்யும்‌ இதந்தெரிந்தவரும்‌, தமிழ்‌ வேதமாகிய நாலாயிரம்‌ பாசுரங்களில்‌ ஈடிணை யில்லாச் சுவையுடைய பண்ணின்‌ தணிக் கலைஞருமாகியவரும்‌ உலகெல்லாம்‌ புகழும்படியான எம்பார்‌, சிஷ்யாச்சார்ய முறையில்‌ சிறிதும்‌ மாறுபடாதவராய்‌ எம்பெருமானாருக்கு துணைமிக்க சீடனுமாவார்‌. இவர்‌ திருவடிகளைப்‌ பற்றின ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ அடியேனை ஏற்ற குருவாகும் –

சீடன்‌ பெரியநம்பி சேர்ந்தசீடர்‌ ஐவர்‌
சேடனிரா மானுசனா சீர் தரும் -பாடியற்கும்
எம்பெருமான் உட்பட இந் நிலத் தேவர்க்கும்
இம்பர் நலமந்தமில் –66-

அர்ச்சாவதார மூர்த்திகளாய்‌ கோயில்‌ கொண்டுள்ள எம்பெருமான்களுட்பட ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளோடு நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி யற அனைவர்க்கும்‌ இவ் வுலகிலுள்ளவர்‌ கட்கும்‌ இங்குண்டான ஆநந்தம்‌ நிலைத்திருப்பதற்குக்‌ காரணம்‌, ஐவர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி பெரிய திருமலை நம்பி, திருமலை யாண்டான்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ இவர்களுக்கு சிஷ்யராய்‌ திருவனந்தாழ்வான்‌ அம்சமாய்‌ இராமாநுசராய்‌ வந்தவதரித் ததாலாகும் –

இலரேல்‌ இருநூ றகவைகளும்‌ ஈங்கே
நலமொன்‌ றுளதேயோ? நாட்டில்‌ – பலவென்‌?
பரமன் படைப்போடு பாடியன் எற்கோடல்‌
தரமன்று சத்திய மீது–67-

எம்பெருமானாரும்‌ அவருடைய மறு அவதாரமான மணவாள மாமுனிகளும்‌ இருநூறு ஆண்டுகள்‌ இந்த நிலத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்க வில்லையே யானால்‌ இந்த நானிலத்தில்‌ ஆனந்த மென்பதொன்றும்‌ உண்டோ? இல்லையேயாம்‌. நிற்க. பல பேசி என்‌? பரமன் படைத்த படைப்பும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனைக்‌ கைக் கோடலும்‌ முதலானவை பயனற்றுப்‌ போயிருக்கும்‌ இது சத்தியம்‌.

இதுவொப்ப தின்பமில்லை யாமுநர்த்‌ தாள்கள்‌
கதி பெற்றூர்‌ யாமுநர்த்‌ தாதை – கதி பெற்றேன்‌
இவ் விருவர்‌ தாங்களே ஆறுடன்பே றென்றபடியேன்‌
செவ்வி யுறச்‌ சேர்ந்தூய்ந்த னன்‌-68

ஸ்ரீமத்‌ ஆளவந்தார்‌ திருவடிகளையே ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளும்‌, இவர்‌ திருக் குமாரரான யாமுநாசார்ய ஸ்வாமிகளும்‌ தமக்குக்‌ கதி என்று பெற்றிருந்த இந்த இரண்டு ஸ்வாமிகளுடைய திருவடிகளையே கதி யென்றும்‌ ஆறும்‌ பேறுமா செவ்வி யுறச்‌ சேர்ந்துய்ந்தே னென்பதில்‌ இது ஓப்பதின் இல்லையாம் –

சேர்ந்தூய்ந்தோன்‌ சீராமன்‌ பங்கயக்கண்‌ ணன்தாள்கள்‌
ஆர்ந்த புகழ்ப்‌ பாடிய னம்பொனடிச்‌ – சேர்ந்துய்ந்தேன்‌
இவ்வளவே பேற்றினுக்கு ஏய்ந்த யானும் பெற்றனன்
கவ்வை யென்பால்‌ காட்டா தலை–69-

அடியேன்‌ நிரம்பிய புகழாளரான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌, மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌ இவ் விருவருடைய திருவடிகள்‌ அடைந்து உய்ந்தவர்‌. இந்த ஸ்வாமிகளின்‌ திருவடிகளே கதி யென்று சேர்ந்த இவ்வளவே பேறு பெறுதற்குரிய யாவும்‌ பொருந்தி விட்டன. ஆதலால்‌ துர் விஷயங்கள்‌ என்பால்‌ தலை காட்டாது –

தலைகாட்டாத்‌ தண்ணென்ற ஞானவவொழுக்‌ கங்கள்‌
தலைக்காட்டாத்‌ தண்ணென்ற முக்கும்‌ – நிலைநாட்டும்‌
வாள்நேர்‌ உயர்கதியும்‌ வள்ளலெனும்‌ பாடியன்தன்‌
தான்தர முந்தும்‌ தகவு–70-

மிகத்‌ தாழ்ந்தான பொய்யறியும்‌ தீயொழுக்கம்‌ அழுக்குடம்பும்‌ என்பாலும்‌ தலைக் காட்டாதவைகள்‌. ஒளி பொருந்திய நித்திய விபூதியாம்‌ உயர் கதி வள்ளலெனும்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தயையால்‌ தானே முந்தும்‌.

தகவில்‌ உலகின்‌ தகவுடையீர்‌ நீரேதகவென்னும்‌ தத்துவம்‌ வேட்கும்‌ – தகையீர்‌
தகுதியில்‌ தத்துவம்‌ நாயேனைக்‌ கொண்டு தகும் கூட்டம்‌ தந்தளித்தீர்‌ நீர்‌–71-

பெருமை யென்பதறியாத உலகில்‌ பெருமை மிக உடையீர்‌ நீர்‌. தயை யென்ற தத்துவம் தானே விரும்பும்‌ தயை யுடையீர்‌ நீர்‌. தகுதி என்பது இல்லாத அடியேனான கீழோனைக்‌ கைக் கொண்டு நிலத்தேவர்‌ கூடத்திலடியேனை இருத்தினீர்‌. இவற்றை யெல்லாம்‌ அடியேனைக்‌ கைக் கொண்டவாற்றானே அறிந்தேன் –

நீர்தந்த சேமம்‌ நிமலனாம்‌ நாதமுநி
பார் நிரம்பும்‌ பல் புகழ்ப்‌ பாவினத்தை – சீருநவே .
மீள்வித்த விஞ்சுசுவைப்‌ பண்ணமர்நா லாலிரத்தால்‌
ஆள்வித்த பாடியனன்றோ–72-

மிக்க சுவை யுடையதும்‌ பண்ணமைந்ததும்‌ உலகம்‌ நிறைந்த புகழுடையதுமான நாலாயிரத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரங்களைக்‌ ‘குற்றமன்றிக் குணம்‌ மிக்கவரான ஸ்ரீமந் நாதமுநிகள்‌, மறைந்து போனதை மீள்வித்ததைக்‌ கொண்டு அடியேனை ஆள்வித்தீர்‌. ஆதலால்‌, இத்தகைய பாஷ்யமாசார்யரான நீர்‌, அடியேற்கு எல்லாச்‌ சேமமும்‌ நீரன்றோ –

அன்றே குருகூர்ச்‌ சடகோபன்‌ தாளிணையும்‌ பொன்றாப்‌ புகழ்நிரம்பும் வாய் மொழியும்‌ –
நன்றுதவி பொந்நிலத்தில்‌ பொன்னிலத்தில்‌ மன்னு புகழ்ப் பாடியன்
என்னை நிகர்‌ யானென்றனன்‌–73-

திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வருடைய இரண்டு திருவடிகளையும்‌, அழிவற்ற இவரருளிச்‌ செயலாம்‌ திருவாய்மொழியும்‌ அடியேற்குய்யும்‌ வண்ணம்‌ உதவி, இருள்தருமாஞாலமாகிய இவ்வுலகிலும்‌ தெளிவிசும்பு திருநாடான பரமபதத்திலும்‌ நிரம்பப்‌ பொருந்தியுள்ள புகழாளரான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ ‘உனக்கு நிகர்‌ நீதா னென்றார் –

என்றறிவேன்‌ என்னாயன்‌ செய்தநன்றி முற்றவும்‌
இன்றறிந்தேன்‌ ஓரளவே சேனையர் கோன்‌ – தன் திறத்தில்‌
அன்பின்‌ அளவில்யான்‌ அங்ஙனமே என்பாலும்‌
அன்பின்‌ அளவில்லான்‌ என்று–74-

அடியேற்கு வகுத்த ஸ்வாமியான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு, அடியேன் திறத்தில்‌ செய்த நலம்‌ முற்றவும்‌ என்றும்‌ அறியப் போகாது. ஆயினும்‌ இன்றாக ஓரளவே அறிந்து கொண்டேன்‌. ஸ்ரீவைஷ்ணவ சமயாசார்யர்களில்‌ முதல்வரான ஸ்ரீமத் விஷ்வக்சேனரிடத்தில்‌ தாழுய்யும்‌ பொருட்டும்‌ பிறரை உய்வித்தல்‌ பொருட்டும்‌ அளவிறந்த அன்புடையாரானார்‌. அதே நிலையில்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு அளவு கடந்த அன்புடையரானார் –

என்றும்‌ மறவேன்‌ மறந்தேன்‌ இனியுணர்ந்தேன்‌
குன்றேய் குணக் கொண்டல்‌ பாடி – நின்ற புகழ்‌
கேள்வன் பொன்‌னாகத்து நீங்காத்தாய்‌ தாள்கட்கு
ஆளென்று புக்கான்‌ தனை–75-

குன்று போல்‌ மிக்க குணங்களால்‌ நிறைவாளனும்‌, கொண்டல் மேகம்‌ போல்வானும்‌ குறையேது மின்றி நற்குணக் கடலாக நின்ற புகழாளனான இறைவன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவான திருமகள்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உணராமையால்‌ மறந்தேன்‌; அடியேன்‌ உணர்ந்தேன்‌; இனி மறவேன் –

கேள்வனாகம்‌ நீங்காத்தாய்‌ தாள்கள்‌ சிரங்கொண்டு
கேள்வனையே தஞ்சமென்று கொள்ளும்‌ – மீள்வில்சீர்‌
பாடியன் தன் ஆர்ந்த புகழ் எக்காலும் பண் தொடுத்து
பாடுதற்‌ குற்றதொரு பற்று–76-

உலக நாயகன் தன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவின்‌ திருவடிகளைச்‌ சிரத்திற்‌ கணியாகக்‌ கொண்டு இவளைப்‌ புருஷகாரமாக, எம்பிரான்‌ தன்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமென்று கொள்ளும்‌, பழுதின்றி குணங்களால்‌ நிறைந்த புகழாளரான ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய கெளரவம்‌ மிக்க புகழை எக்காலத்தும்‌ பண்ணின்‌ இசையோட தொடுத்துப்‌ பாடுதற்குரிய தொரு உபாதானமாகும் –

பற்றோ சிறிதில்‌ பரன்சீர்க்‌ கடல்மூழ்கி
நற்றமிழ்நூல்‌ நான்களித்த இன்பமாரிப்‌- பெற்றியன்‌
வண்குருகை வந்தருளும்‌ மாறன்‌ மலரடியே
பண்புமிகும்‌ பாடியருக்‌ கின்பு –77

உலகியலில்‌ பற்று சிறிதுமின்றி பரனாம்‌ பெருமானுடைய குணக்கடலில்‌ மூழ்கி அந்த குணங்களையே உபாதாநமாகக்‌ கொண்டு, திருவாய்மொழி திருவிருத்தம்‌, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம்‌ என்கிற நான்குப்‌ பிரபந்தங்களளித்த வளமிக்க குருகூரில்‌ வந்தவதரித்த நற்குணக்கடலாகிய சடகோபருடைய திருவடிகளே ஸ்ரீமத்பாஷ்யமா சார்ய ஸ்வாமிகளுக்கு என்‌றும்‌ இன்பமேயாம் –

இன்புருவன்‌ பொய்கை எழிலியகல்‌ வார்கடல்நெய்‌
மின்சுடரா வேங்கடவற்‌ காட்டுமவன்‌ – பொன்னடிகள்‌
வன்சரணா வாழும்‌ அயிந்தைவரும்‌ பாடியன்தூள்‌
உன்சரணா நெஞ்சமே யுள்‌–78-

பகவதநுபவ இன்பமே வடிவான பொய்கையாழ்வார்‌, ஸ்ரீபூமியையே அகலாக, நிறைகடலை நெய்யாக விளக்கேற்றி இந்த ஒளிமிக்க விளக்கால்‌ திருவேங்கடத்தெம்பெருமானை உலகங்காணக்‌ காட்டும்‌ அவர்‌ திருவடிகளையே தமக்கு வாழ்வாக அவதரித்த, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ திருவடிகளையே நெஞ்சமே! உனக்குத்‌ தஞ்சமாக நினைவில்‌ கொள்ளுவாயாக –

உள்ளிருள்‌ நீக்கும்‌ ஒளிவிளக்‌ கேற்றுதற்கு
தெள்ளுதமிழ்‌ தேர்ந்து துணைக்கோடும்‌ – விள்ளரிய
கீர்த்தியார்‌ பூதத்தார்‌ தாளினையே பாடியற்கு
சீர்த்த பயன்‌ எற்கிவனே வாழ்வு–79-

உலகவருடைய அகவிருளைப்‌ போக்குதற்கு உள்ளத்திலுண்டான கோணலைப்‌ போக்கும்‌ தெளிந்த தமிழ் பாசுரமே நம்‌ செயலுக்கேற்ற துணை என்று தேர்ந்து துணையாகக்‌ கொண்ட, எவராலும்‌ புகழ்ந்து சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த பூதத்தாழ்வார்‌ திருவடிகளையே, தமக்குற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே, அடியேற்கேற்ற பேரின்ப வாழ்வாகும்‌ என்பதாம் —

வாழ்வான்‌ வலிய வழி கண்டேம்‌ நன்மைமிக்காள்‌
கேழில் திருக்‌ கண்ட பொன்‌ னாழி கண்ட – கீழ்வில்‌
தமிழ்த் தலைவன்‌ பொன்னடியே தன் சரண்‌ கொண்டான்‌
எமைக்காக்கும்‌ ஏற்ற வழி–80-

நலமந்தமில்லதொரு நாட்டில்‌ போய்‌ வாழ்ச்சி பெற, சிறப்புற்ற மார்க்கமொன்று நாம்‌ கண்டு கொண்டோம்‌. எல்லா நலன்களாலும்‌ மிக்காளரான திருக்கண்டதோடு பொன்னாழி கண்டேன்‌ என்று பாடிய எக்குறையுமற்ற பேயாழ்வாராகிய தமிழ்த்‌ தலைவன்‌ அழகிய திருவடிகளே தன்‌ சரண் என்று கொள்ளும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ எம்மைக்‌ காப்பதற்கு ஏற்ற வழியாகுமென்பதாம் –

வழியல்‌ வழி யனைத்தும்‌ வாள் கொண்டு வெட்டி
கழிய மிகு நல்வழியே காட்டும்‌ – பழுதில் புகழ்‌
பத்திசாரன்‌ தாளிணையே பாடியற்காம்‌ பரிசு
இத்தகையோன்‌ ஏற்ற பரிசு–81-

தேவதாந்தர சாதனாந்தர ப்ரயோஜநாந்தர முதலான வழியில்லா அல் வழிகள்‌ பலவும்‌, தம்‌ நாவென்னும்‌ வாளால்‌ அறத் தொலைத்து எம்பெருமான்‌ நாரணனே ஆறும்‌ பேறும்‌ என்பது முதலா மிக மிக நல்ல வழிகளனைத்தும்‌ தெளியக் காட்டி உலகவரை உய்வித்த திருமழிசைப்‌ பிரான் திருடியிணைகளே, ஏற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே எமக்குரிய எல்லாப்‌ பயனுமாவாரென்பதாம் –

பரிசறிவார்‌ பல்லோர்‌ பரிசறிவார்‌ ஈடே?
குருகை வரு வண்சட கோபன்‌ – திருவடியே
பாடியற்‌ கேற்ற நிதி பாடியன் சேர்ப்‌ பாடியனே
ஈடிணையில்‌ எந்தம்‌ நிதி–82-

உலகில்‌ உற்ற பயனறிவார்‌ தாம்‌ கண்டதுவே பயனென்பார்‌ பல்லோர்‌, ஆனால்‌ பாஷியமாசாரியர்‌ கண்ட பரிசே அனைவர்க்கும்‌ ஏற்ற பயனாகையால்‌ பயனறிவார்‌ இவர்க்கீடில்லை. திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபன்‌ திருவடிகளே நிதி போன்ற கதியாகும்‌ என்றருளியவர் ஸ்வாமி ராமாநுஜர்‌. இந்த ராமாநுஜர்‌ திருவடியைச்‌ சாரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமி ஈடும்‌ எடுப்புமில்லா நிதியாகும்‌ எம் தமக்கு –

நிதிகண்‌ டுரைசெய்தோன்‌ நீள்குன்றத்‌ தியாவும்‌
நிதியா அடியா ரடித்தூள்‌ – நிதியாக இன்பப்‌
பெருங்குழுசேர்‌ சேரலர்‌ கோனின்பம்‌
பாடியற்‌ கின்பமெற்‌ கு-83

திருவேங்கட மலையின்‌ தொடர்பே நிதி என்றும்‌, மெய்யடியார்‌ திருவடித் துகளே நிதியாகவும்‌, எம்பெருமானை நினைந் தின்‌புறும்‌ பெருங் குழுவே பேரின்பமாகச்‌ சேரும்‌ குலசேகரப்‌ பெருமானே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு இன்பம்‌. இந்த ஸ்வாமிகளே அடியேனுக்கு ஏற்ற ‘இன்பமென்பது –

எமக்குக்‌ கதியாவார்‌ பாடியரென்‌ போல்வார்‌
தமக்குங்‌ கதியாவர்‌ தாமே – குமைக்கும்‌ .
உலகென்று பல்லாண்‌டு ஓதும் விட்ணு சித்தர்‌
உலகிய லென்று பல்லாண்‌ டோதிய பட்டர் பிரான்‌– 84

இவ்வுலகின்‌ தன்மையால்‌ எம்பெருமான்‌ திருமேனிக்குக்‌ கண்ணேறு வரும்‌ என்று பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கும்‌ உற்ற காப்பாவார்‌. இத்தகு ஸ்வாமி எமக்குக்‌ கதியாவதன்றி, என் போல்வார்‌ கீழோர்‌ பலருக்குங்கதி தாமே யாவாரென்பதாம் –

உற்று நோக்கில் தேவியர் மூவர் உயர்ந்தோர் யார்
பற்றிப்‌ பரன் தாள்‌ உலகுய்ய – முற்றுணர்வை
ஒதியருள்‌ கோதை உயர் கதி கொள்‌ பாடியன் தாள்‌
மா துயர் மாய்க்கும் மருந்து–85-

எம்பெருமானுடைய தேவியார்‌ மூவராகும்‌. இவர்களில்‌ உலகவர்களுக்கு உபசரிப்பதில்‌ உயர்ந்தோர்‌ யாவரென உற்று நோக்கில்‌ உலகோர்‌ பரன் தாள்‌ பற்றி உய்வடைய இன்றியமையாச்‌ சாதனமான மெய் யுணர்வை இரண்டு ப்ரபந்தங்களில்‌ தெள்ளத்‌ தெளிய ஒதி யருளிய கோதை நாச்சியரே என்பது தேறும்‌. இத்தகு நாச்சியார்‌ திருவடிகளையே உயர்ந்த கதியாகப்‌ பற்றிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே பிறவித் துயர்‌ ஒழிக்கும்‌ மருந்தாகுமென்பதாம் –

மருந்தாய தொண்டர் தாள்‌ தொண்டர் தாள்‌ தூளே
பெருவடிவாப்‌ பேணிக் கொள்‌ பெம்மான்‌ திருவடி சேர்‌
பாடியன் தன் தாளிணையே ஒப்பில் பரகதிக்கு
ஈடில்லா நம்நல்‌ தவம்‌–86-

பிறவி நோய மாத்திரமன்று, அனைத்து நோய்க்கும்‌ மருந்தாவது தொண்டரடித் தூளே யாகும்‌. இத் தகுத்‌ தொண்டரடிப்‌ பொடியே தமக்கு மேம்பட்ட திருமேனியாக விரும்பிக்‌ கொண்டதையே நிரூபகமாக உடையவர்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வாராகும்‌. இந்தப்‌ பெருமை யுடைய இவ் வாழ்வார்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமாகச்‌ சேர்ந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய திருவடி-யிணையே ஒப்பற்ற நலமந்தமில்லதோர்‌ நாட்டிற்குப்‌ போவான்‌ ஈடிணை யில்லா நம்முடைய நல்ல தவமாகும்‌ என்பதாம் –

நற்றவம்‌ மொன்றுமிலேன்‌ நாரணன்‌ தாள் பணியேன்‌
உற்ற உறவறியேன்‌ ஊழ்வினையேன்‌ — பற்றி நின்‌
தாள்பணியேன்‌ தண் கழலே பொய்யன்‌ புறந் திரிவேன்‌
ஆள் கொண்டாய்‌ கொண்டதுவே மெய்‌–87-

நலமந்தமில்லாதோர்‌ நாடுபுகுவான்‌ பொருட்டு உலகவர்‌ செய்வதாகிய நல்ல தவங்களொன்றும்‌ செய்திலேன்‌. இதைத்‌ தருவானான நாராயணன்‌ திருவடிகளைப்‌ பணிவதும்‌ செய்திலேன்‌. இவைகளின்‌ காரணமாக ஊழ்வினை வயத்தவனாய்‌, மெய்யுணர்வு மறைக்கப்‌ பெற்றவனாய்‌ பரனுக்கும்‌ எனக்கும்‌ உள்ள உறவுகளை ஒன்றும்‌ அறியேன்‌. இந்தக்‌ குறைகளெல்லாம்‌ தீர்த்து தெளிய பரம காருணிகரான தேவரீர்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றி பணியேன்‌. இன்னும்‌ பொய்யனாய்‌ தேவரீரையும்‌, எம்பெருமானையும்‌ விட்டுப்‌ புறந் திரியுமவனான அடியேனை மேல்‌ விழுந்து அடிமை கொண்டதுமன்றி, மெய்யாம்‌ வகையில்‌ மேல்‌ செய்வனவற்றைச்‌ செய்து அருளினீர் –

மெய்யார்‌ திகிரியையும்‌ மேவார்‌ செருக்களத்தில்‌
உய்யா வகை முழங்கும்‌ ஒண்ணந்தும்‌ – மெய்யாரும்‌
எட்டெழுத்தும்‌ புண்டரமும்‌ இன்னருளே நாமமும் நின்‌
பட்டழுந்தும்‌ பங்கயமீந்‌ தாய்‌–88-

ஒளிப் பிழம்பாகத்‌ திகழும்‌ திருமேனியை யுடைய சுதரிசனாழ்வானையும்‌, விரோதிகள்‌ நிறைந்துள்ள யுத்தக் களத்தில்‌ புகுந்து, விரோதிகள்‌ குடல்‌ குழம்பும்படி முழுங்கும்‌ பாஞ்ச சந்நியாழ்வானையும்‌ முறையே வலது தோளிலும்‌ இடது தோளிலும்‌ பொறித்து உண்மை யறிவினை விளைப்பதற்கு இன்றியமையாத திருவஷ்டாக்ஷர மந்திர முதலான வற்றையும்‌ திருமண்‌ காப்பையும்‌ திருவாராதன தெய்வமான தேவரீருடைய திருவடி நிலையும்‌ ஈந்தருளினீர் –

(ஈந்த) அருளே அருள் தந்த அன்னே சுரக்கும்‌
பொருளே இணையடிகள்‌ பொன்னே – மருவார்கள்‌
அங்கம் அடரும் அயிந்தை வாழ் அண்ணலே
இங்கு இறைவர் ஆள்கவத்‌ தா–89-

இவையெல்லாம்‌ தந்த, அருளே ஒருவடி வென்னலாம்படியான ஸ்வாமிகளே! அடியேன்‌ கடைத்தேற அருளைத் தந்த இறைவன்‌ போன்றவரே! மிகவும்‌ சுரந்து மிக உண்டான செல்வமே! பொன் போலுமழகிய இணைந்த திருவடிகளை யுடையீரே! விரோதிகளைப்‌ பறிப்பது போல்‌ ஒழிக்கும்‌ திருவயிந்தையில்‌ கோயில்‌ கொண்டுள்ள உற்ற ஸ்வாமியே! மேன்மேலும்‌ இங்ஙனமே ஆள்வீராக!

நல்குங்‌ கமலநேர்‌ நாண்மலர்த்‌ தாள்தொடங்கி
பல்சுவைய மேனி பரியந்தம்‌ – பல்சுவையில்‌
பாடிப்‌ பரவிய பாணன்சேர்‌ பாடியனே
ஈடில்‌ கதியாம்‌ எமக்கு–91-

நலமனைத்தும்‌ நல்குந் திருமகள்‌ தோற்றத்துக் கேதுவாகிய அன்று பூத்த தாமரைப்‌ போன்ற திருவடி மலர்‌ தொடங்கி, மிக்க பேரழகுக்குக்‌ கொள்கலமாகிய திருமேனி பரியந்தமாக பல விதமான பாட்டுச்‌ சுவையுண்டாம்படி பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரைத்‌ தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே! நீரே எந்தமக்கு ஒப்பற்ற கதியாகுமென்பதாம் –

எமக்குங்‌ கதியுண்டே எண் பதினாறு தலம்
தமை வாழ்த்தியதே தகும்பே றமைக்கும்
பரகாலன் தாளிணையே தஞ்சம் கொள் பண்பன்
அரவிந்த மன்ன திருத்தாள் –92-

திருமங்கையாழ்வார்‌ எண்பத்தியாறு திவ்விய தேசங்களை வாழ்த்தி, அதுவே பெறும்‌ பயனான நலமந்த மில்லாதொரு நாடென்றமைக்கும்‌ இவர் திருவடிகளே தஞ்சமென்று கொள்ளும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தாமரை போன்ற திருவடிகளே ஏதிலனான அடியேற்கு கதியாகு மென்பதாம் –

தாளிணைகள்‌ தானவர்‌ தேவர்‌ தொழுதிறைஞ்ச
நாள்தொறும்‌ மாமுனி வாழ்த்துரைக்க – நாள்தொறும்‌
பாவியேனைக்‌ கைக்கொண்ட பாடியன்‌ நாவழுத்த
தேவனாதன்‌ சேரயிந்‌ தை–93-

திருவயீந்த்ர புரமானது தினந்தோறும்‌ தானவர்களும்‌ தேவர்களும்‌ வந்து வந்து தொழுதிறைஞ்சவும்‌, ஸ்ரீமன்‌ மணவாளமாமுனிகள்‌ நாள்தொறும்‌ வாழ்த்துரைக்கவும்‌, பாவியேனான அடியேனையும்‌ கைக்கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ நாவினால்‌ நாள் தொறும்‌ நவின்று வழுத்தவும்‌ தேவனாதன்‌ கோயில்‌ கொண்ட தலமாகும் –

அயிந்தையில்‌ பாடிய யாதறியா நாயேன்‌
கயவனெனைக்‌ கண்டுகந்‌ தன்பின்‌ – நயந்தழைத்த
நன்மைமுற்றும்‌ ஊட்டினையே! நாண் மூன்றில்‌ அன்றின்‌றும்‌
நன்மைமிகும்‌ பேறனைத்தும்‌ நல்கு–94-

திருவயீந்திரபுரத்தில்‌ நித்திய வாசம்‌ செய்யும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யாசார்ய ஸ்வாமிகள்‌, உண்மை உணர்வில்‌ ஒன்றும்‌ அறியாத கீழோனானக்‌ கயவனாகிற என்னைக்‌ கண்டு செளசீல்யத்தால்‌ உகந்தருகில்‌ அழைத்து நன்மை யென்பதனைத்திலும்‌ மேம்பட்ட நன்மையை முற்றூட்டாக மூன்று நாளில்‌ அக் காலத்து ஊட்டி யருளினீர்கள்‌. அது போல்‌ நன்மை மிகும்‌ பேறனைத்தும்‌ இன்று நல்குவீராக –

நல்கும்‌ நலமிக்க ஆசார்யர்க்‌ கெல்லைநீர்‌!
பல் புகழில்‌ மிக்‌க புகழ்ப் பாடியர் நீர் -அல்வழியில்‌
செல்வேன்‌ சிரத்தில்‌ அடி சூட்டிச் சீடர்களில்‌
எல்லையிவ லென்னும்‌ பேர் –95-

பல புகழில்‌ மிக்க புகழாளராம்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ நீராகும்‌. அதே நிலையில்‌ ஆசார்யரென்பவரில்‌ முடிவில்‌ உயர்ந்தவரெனத்‌ தக்கவர்‌ நீரே. அடியேனோ நன்மைக்கு மாறான அல் வழியிலேயே செல்பவன்‌. இத் தகு அடியேனுக்கு சிரோ பூஷணமாக தேவரீர்‌ திருவடித் தாமரைகளைச்‌ சூட்டி அலங்கரித்தருளி சிஷ்ய வர்க்கத்தில்‌ இவன்‌ முடிவானவனென்னும்‌ பேர்‌ நல்குவீராக –

போ் பிதற்றிப்‌ பெற்றேன்‌ பெறும் பரி சங்ஙனமே
சீர்ப் பாடிப்‌ பெற்றேன்‌ சிறப்பெல்லாம்‌ – காரேய்‌
கருணை தனைக்‌ கண்டு கலக்கங்கள்‌ தீர்ந்தேன்‌
இருணிலத்தில்‌ பாடியன்தாள்‌ ஏய்ந்து–96-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ திருநாமத்தைக்‌ கண்டவாறு பிதற்றியும்‌ மெய்யடியார்‌ கூட்டத்துப்‌ பெற வேண்டிய பகவதனுபவ பயனைப்‌ பெற்றேன்‌. அவ்வாறே அவர்‌ சீர்களைப்‌ பாடி உய்வு பேற்றுக்குரிய சிறப்பெல்லாம்‌ பெற்றேன்‌. கைம்மாறு கருதாத கொண்டல்‌ முகில்‌ போல்‌ இந்த இருள் தரு மா ஞாலத்தில்‌ அவர் தம்‌ கருணைப்‌ பெருக்கத்தைக்‌ கண்டு உய்வகையில்‌ குறை யுண்டாக்கும்‌ கலக்கங்கள்‌ தீரப் பெற்றேன்‌. இவ்வளவும்‌ இவர்‌ தம்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதலாகும் –

ஏய்ந்த கருணைவடி வானோன்‌ இவனன்றே
வாய்ந்த ஒழுக்கநிலை நின்றோனே – மாய்ந்து
அறிவின்மை முற்றறிவின்‌ பாடியன்‌ மிக்கோன்‌
பிறிது பெறுவ தெவன்‌?–97-

ஒழுக்கத்திற்‌ காணுமிடத்து மிகப் பொருந்திய கருணையே வடிவானவர்களாகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே யாவர்‌. இந்த கருணைக்கேற்ற ஒழுக்க மிக்காரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யரே தான்‌. அறிவின்மை தொலைந்து முழு மெய்யுணர்வின்‌ மிக்கவரென்பதில்‌ குறை யேதுமில்லாதவர்‌. இத்தகு பண்புகளிருக்க இதில்‌ மிக்க பிரிதொரு பண்பு பெறுவதெது –

எவன்தான்‌? அயிந்தையில்‌ ஈடிணை யில்லான்‌
எவன்தான்‌? மதுரகவி நிட்டை – எவன்தான்‌?
வரயோகித்‌ தாள்சேர்ந்த தேவநாதன்‌ சேயாம்‌
பரனாம்‌ இவனெங்‌ கதி–98-

திருவயிந்திரபுரத்தில்‌ ஈடிணையில்லா ஆசார்யர்யவரே? மதுரகவி நிட்டையை மேற்கொண்டிருந்தவர்‌ யாவரே? ஸ்ரீமன்‌ மணவாள மாமுனிகளையே கதியென்று பற்றிய தேவனாதாசார்யர்‌ திருக்குமாரரென்ற சிறப்புற்றவர் யாவரே? இத்‌ தன்மைகளால்‌ மேன்மை யுள்ளவராகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ ஆகிய நீரே எங்களுக்குக்‌ கதி யாவீர் –

கதியொன்‌ நிலதென்போல்‌ காசினியில்‌ யாது?
மதிதான்‌ இலதில்‌ உலகில்‌ – எதுவொன்‌
றிதுவேயோ? பாடியற்குப்‌ பற்றுதற்‌கேது
இதுபோல்வார்‌ யாரே? இனி–99-

யாரும்‌ பற்றத் தகாத கதியற்றவன்‌ என்போல்வாருலகில்‌ யாவர்‌? அறிவின்மையில்‌ இந்நில உலகில்‌ என் போல்வார் யாரே? இனி இத்தகு நிராதீன நிலைகளே ஸ்ரீமத்பாஷ்யமாசார்யர்‌ தனக்குத்‌ தஞ்சமெனக்‌ கருதி கைக் கொள்வதற்குங்‌ காரணமாயினவாம்‌. இதனால்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு உலகில்‌ நிகரில்லை யென்பதாம் –

இனிமறவேன்‌ செம்‌ ப்க்கொண்‌ டிசைத்து
வினவி முறுவல்‌ மிகப்பூத்து – நனிமகிழ்ந்து
செந்தா மரைக்கண்‌ கடைக்கணித்த சீர்மைதனை
அந்தோ யான்‌ உய்வழியீ தென்று–100-

அடியேனை ஒரு பொருளாக மதித்து எதிரிலமரச்‌ செய்து சிவந்த பவளம்‌ போன்ற செவ்வாய்க்‌ கொண்டு மந்திரார்த்தங்களைச்‌ சொல்லி வினாவுதல்‌ செய்து, தக்க விடையளிக்க வெண்முறுவல்‌ மலரச்‌ சிறு நகைபுரிந்து மிக்கபேருவகை கொண்டு செந்தாமரை யொத்த திருக்கண்கள்‌ கொண்டு கடைக்கணித்து உகந்த, இந்த கெளரவச்‌ செயலை அந்தோ! அந்தோ! இவைகளே அடியேற்கு உய்யும்‌ மாழ்க்கமென்று எக்காலும்‌ நினைவிற்கொண்டு இனி எக்காலும்‌ மறவேன்‌ என்பதாம் –

என்றும்நின்‌ தாளிணைக்கண்‌ சென்னி யிலக்காகும்‌
என்றும்‌ அருண்மொழியுள்‌ ளெஞ்சாது – நின்றருளும்‌
சேமத்‌ திருமேனி செவ்விக்கள்‌ ஈன்றிலகும்‌
யாமிழைத்த தென்ன தவம்‌? –101-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளே! தேவரீருடைய திருவடித்‌ தாமரைகளே அடியேன்‌ சென்னிக்கு இலக்காக அமைந்துள்ளன. தேவரீர்‌ கருணை கொண்டு அருளிச்‌ செய்த அருள் மொழிகளே உள்ளத்தில்‌ குறைவற்று என்றும்‌ நின்‌று பிரகாசிக்கும்‌. தேவரீர்‌ திவ்ய மங்கள விக்ரஹமே அழகிய கண்களில்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இத்தகு, சீரிய பயன்களைக்‌ கொண்டிருக்க யாம்‌ எத்தகைய தவமியற்றினேனோ? தெரியாது.

தவமிழைத்தோர்‌ யாரே? தமியன்போல்‌ கல்லா
தெவையெனைத்தும்‌ கேட்டுத்‌ தெளிந்தார்‌? – யவரேயோ?
பாடியன்தன்‌ னின்னருளே யிங்கன்‌ பகர்வித்த
ஈடில்லா நீசனெனை ஏற்று–102–

தனித்து கதியற்று நிற்பவன்‌ யான்‌. இத்தகையன்‌ பெருந்தவம்‌ செய்த அடியனைப்‌ போல்‌ யாரே? இனி முறையாகக்‌ கல்லாமலே சீரிய நூல்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்தோர்‌ யார்‌? ஐயந் திரிபுகளாகிற குற்றங்களைந்து தெரியக் கற்பிக்கும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளருள்‌ ஈடில்லா நீசெனனை ஏற்று இவ் வண்ணம்‌ சொல்லும்படி செய்தது –

ஏற்றேன்‌ பிராட்டி திருவருளால்‌ எம்பிரானை
ஏற்ற னிவனருளால்‌ பாடியனை – ஏற்பதும்‌
ஏலாத தென்பதிலை பாடியன்தன்‌ இன்னருளால்‌
ஏலாவை குந்தமுத லேற்பு–103-

கருணை வடிவாயமைந்த பிராட்டி கடாக்ஷத்தால்‌ எம்பிரானை கதியாக ஏற்றேன்‌. இவன்‌ தன்னின்னருளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியனை கதியாக ஏற்கப்‌ பெற்றேன்‌. இவனருளால்‌ பேறு பெருவதெவையுளதோ அவைகளில்‌ இன்னது ஏற்க முடியும்‌ இன்னது ஏலாதது என்பதில்லை. ஏற்றரும்‌ வைகுந்த முதலாக வுள்ளதனைத்தும்‌ ஏற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றோம்‌ என்பதாம்‌-

ஏற்பதே நின்‌ தாளின்றி என் சிரத்தால்‌ வேறொன்றை
ஏற்றறேல் நின்‌ சார்பன்‌ றயலொன்றை – ஏற்பதே?
தாளருமை கண்டேன்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌
ஆளுடையான்‌ கண்ட வாறு–104-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளின்‌ அருமைப் பாட்டை அறிந்தவன்‌. எவ்வாறறிந்தேனென்னில்‌? திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபனாம்‌ நம்மாழ்வாரை எம்பெருமான்‌ நோக்கி, நீர்‌ விலக்ஷணமான மோக்ஷமென்று அடிக்கடி சொல்வீரே அந்த மோக்ஷம்‌ தந்தோமென’ ‘அந்த மோக்ஷம்‌ வேண்டா, தேவரீர்‌ திருவடிகளை சிரசிலணிவித்தருள வேண்டு மென்றார்‌. அதைப் போல்‌ தேவரீர்‌ திருவடிகள்‌ சார்பன்றி வேறொள்றை ஏற்க மாட்டேன்‌ என்பதாம் –

ஆறும்பே றென்றறியார்‌ ஆசிரியா்‌ இந்நிலையில்‌
மாறில்‌ மறைமுற்றும்‌ ஐயபின்றித்‌ – தேறியநீர்‌
ஏதிலன்‌ என்னை இருயென்று முற்றுணாத்தும்‌
கோதிலருள்‌ உந்தங்‌ குணம்‌.–105-

உலகில்‌ ஆசாரியனென்று தம்மைச்‌ சொல்லிக்‌ கொள்ளுமவர்கள்‌ இன்னது சாதனம்‌, பயன்‌ இன்னது என்று வேறுபடுத்தி அறிய மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ தேவரீர்‌ வேதங்களும்‌ இவைகளின்‌ சாரமான மந்திரங்கள்‌. இவைகளில்‌ பொருள்களை ஐயந் திரிபற நன்குணர்ந்தவர்‌ நீரே. இத்‌ தகுதி யுடைய நீர்‌ அடியேனோ மூடர்களில்‌ முதல்வன்‌. இத்தகைய அடியேனை எதிரிலிரு என்று இருத்தி அனைத்தும்‌ ஐயம்‌ திரிபற உணர்த்தினீர்‌. இதனால்‌ உந்தம்‌ குணம்‌ யாதுங்‌ குறைவில்லா அருளொன்றேயாக அறிகிறேன்‌.

குணந்திகழ் சீர்க்‌ கொண்டலே பாடியனே தூயோய்‌
மணமலிந்த தாமரைத்‌ தாளோய்‌! – குணமலிந்த
சீநிவாசன்‌ தாளிணையோய்‌! தேவநாதன்‌ கதனேயோ!
கோபாலன் சொல்லமுதக் கூட்டு -105-

குணங்களால்‌ கைம்மாறு கருதாது பெய்யும்‌ கொண்டல்‌ மேகம்‌ போன்ற ஸ்வாமிகளே! ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ என்ற திருநாமமுடையவரே! மணமே உபாதாநமான தாமரையே போலுந்‌ திருவடிகளை யுடையீரே! அடைந்தாரை உய்விக்கும்‌ நற்பண்புகளே திருமேனியான ஸ்ரீநிவாச ஆசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடிகளாகவே இருப்பவரே! ஸ்ரீமத்‌ தேவநாதசார்ய ஸ்வாமிகளின்‌ திருக்குமாரரே! ஸ்ரீமத்‌ கோபாலாசார்ய ஸ்வாமிகளின்‌ சொல்லமுதமே திருமேனியாக வுடைய ஸ்வாமிகளே என்றவாறு.

கூட்டமு துள்ள தினிமையொருங்‌ கேக்கூட்டி
நாட்டும் தெளி யுணர்வை ஐயமின்றி – நாட்டிச்
சிரத்தில்‌ பரன் தாளும்‌ பாடியன் தாள்‌ சேர்க்கும்‌
வரமிக்க வைகுந்த வான்‌–107–

முன் தோன்றல்களான ஆழ்வாராசார்யர்களாகிய சான்றோர்களுடைய கூட்டமுதின்‌ இனிமையை அடியேனுள்ளத்‌ தொருங்கே கூட்டி இதன்‌ பயனான மெய்யுணர்வை ஐவந்திரிபின்றி நிலை நிறுத்தியும் இதன்‌ பயனாக திருமகள்‌ கேள்வன்‌ திருவடித் தாமரைகளையும்‌, ஸ்ரீமத் பாஷ்ய மாசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடித் தாமரைகளையும்‌ அடியேன்‌ சிரோ பூஷணமாக சேர்த்தது யாதோ எனின்‌? ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ அபிமானம்‌ பெற்ற, இவனுக்கு நாம்‌ முற்பட்டோமாக வேண்டுமென்று சிறப்புக்களனைத்தும்‌ ஒருங்கே யுடைய வைகுந்தமென்கிற பரமபதமானது, ‘சிரோபூஷணத்‌ தோடு கூடிய இவனை நம்மிடத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டு” மென்ற அவாவோடு இருத்திக்‌ கொண்டது என்பதாம் –

வானாளும்‌ சீர்சீநி வாசன்‌ மலரடியைத்‌
தான்சேர்‌ தகவுடைய பாடியன்தன்‌ – தேன்பெருகு
செந்தா மரையிணையே சிந்திப்ப தென்பேறா
அந்தோ! அவனருளும்‌ சீர்‌–108-

வைகுந்த வானாட்டில்‌ ஆட்சி செலுத்தும்‌ சிறப்புகளனைத்தும்‌ ஒருங்கே பொருந்திய ஸ்ரீமத்‌ ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமிகள்‌ தாமரை போன்ற திருவடிகளைச்‌ சேர்ந்த கருணையே வடிவான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய செந்தாமரை யொத்த திருவடி யிணையையே சிந்திப்பதையே அடியேனுடைய பரம பிரயோஜனமாக உடைய அடியேனை, ஆசார்ய ஸ்வாமிகள்‌ தம்‌ கருணையால்‌ ஐயோ!” என்றிரங்கி யருளும்‌ அருளையே அடியேன்‌ சிறப்பாக உடையவனாவேன்‌ – என்பதாம் –

இருள் தரு மா ஞாலத்து இயங்கும் உயிர்கள்
அருந்துயரில்‌ ஆழ்ந்தழுந்தல்‌ உண்மை -அருந்துயர்தீர்ந(து)
அந்தமில்பே ரின்பமுற ஆசார்ய னைத்துதி நூற்‌
றந்தாதி யன்றோ கதி.–நூற்‌ பயன்‌

இருள்தருமாஞாலமாகிய லீலா விபூதியில்‌ நிரந்தரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஆத்மாவானது, எய்தற்கரிய நிரம்பிய துன்பத்தில்‌ அழுந்துதலென்பது உண்மை விஷயமாகும்‌. இந்த துன்பத்தில்‌ மீண்டு எல்லையில்லா இன்பமேயான பேரின்பமெய்த ஆசார்யனிடத்து தான்‌ பெற்றபேற்றினைஎண்ணித்‌ துதிப்பதேயாகும்‌–அதற்கு வழி ஆசார்ய நூற்றந்தாதியை இடைவிடாமல்‌ அநுசந்திப்பதே ஏற்ற கதியாகும்

சுபமஸ்து

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி சின்ன ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ –ஸ்ரீ க.கி. யாமுநாசார்ய ஸ்வாமிகள் –

ஆத்ரேய ராமாவரஜ குரோர்‌ புத்ரம்‌ ததாஸ்ரயம்‌
வேதாந்த த்வய ஸம்பந்தம் யாமுனம் ப்ரணமாம்யகம் –

மடஞ்சால்‌ மநனே வல் வினைகள்‌ சிந்தும்‌
உடைந்தோடும்‌ ஊழ் வினைசால்‌ சென்மம்‌-தடஞ் சூழ்ந்த
பூதூர் மன்‌ தன்னருளும்‌ பொன்னருளும்‌ நின்வயமாம்‌
யாதானும்‌ யாமுநனென்‌ றேத்து

சீராரும்‌ திருவயிந்தை திகழவந்தோன்‌ வாழியே
சேயாய்பா டியர்க்கவன்தன்‌ தாளடைந்தோன்‌ வாழியே
நீராரைப்‌ பசி உத்தி ராடத்தோன்‌ வாழியே
நீள்சரணா எதிபதிதன்‌ னிணையடியோன்‌ வாழியே.
பார் புகழும்‌ பூருவர் தாள்‌ பற்றுமவன்‌ வாழியே
பதின்மர் அருள் மொழி கோதை பரவுமவன் வாழியே
ஏரார்‌ உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
எஞ்ஞான்றும்‌ யாமுனன் தாள்‌ எம் கதியா வாழியே

வாழி திருப்பாடி யன்தன்சீர்‌ மல்கிய மாதகவால்‌
வாழும்‌ சிரீயா முநனென்‌ நிறைகுரவன்‌ – வாழியவன்‌
மாறன்‌ பிறைப்‌ பொருளும் ஆகமத்தின்‌ மான்‌ பொருளும்
தேறும்‌ படி யுரைக்கும்‌ சீர் –

சேவிப்போர்‌ பிறப்பறுக்கும்‌ திருவடிகள்‌ வாழியே
செம்பொன் செய்மலை வெயிலேய் செம்பட்டும் வாழியே
பூவியலும்‌ நாபியொடு புரிநூலும்‌ வாழியே
பொருவரிய தோளிணையும்‌ புரிகண்டம்‌ வாழியே
பாவியரும்‌ உய்யப் பணிக்கும்‌ பவள வாய்‌ வாழியே
பாண் மதிஏய்‌ திரு முகமும்‌ கருணை விழி வாழியே
நீவியெனும்‌ குரவரருண்‌ மொழி உளத்தோன்‌ வாழியே
நீள் புகழ் யாமுநன் தாள்‌ நினைப்போரும்‌ வாழியே

அடியார்கள் வாழ அரங்கம் முதல் வாழ சடகோபன்‌ தண்டமிழ்நூல்‌ வாழ-படியிலிரு
மன்னும்‌ மறைப் பயிற்றும்‌ யாமுனனென்‌ தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்‌ டிரும்‌.

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி யாமுநாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம்

ஸ்ரீ கச்சிக் கிடாம்பி பெரிய ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ -ஸ்ரீ க.கி. பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகள்‌

ஆத்ரேய ஸ்ரீநிவாசார்ய பதபங்கே ரூஹாஸ்ரயம்‌
தேவநாத குரோர்‌ ஸூனும்‌ ராமாநுஜ குரும் பஜே.

ஏங்கும்‌ மடநெஞ்சே! எம்பெருமான்‌ ஈந்தநிதி ஒங்கு புகழ்‌ பாடியன்தன்‌ ஒண்மலர்த்தாள்‌-தேங்கிய நீர்க்‌
கண்டா மரையிணைகள்‌ கைத்தாமரை யிணைகள்‌ உண்டாய் காலமெல்லாம் உள் –

அநவரதம்‌ தெளி சிங்கர்‌ அடிதொழுவோன்‌ வாழியே
அருள்ஸ்ரீ னிவாசார்யன்‌ அடைந்துயந்தோன்‌ வாழியே
அநகன் தேவ நாதாரயன்‌ அருஞ்சேயோன்‌ வாழியே
ஆதிரைநாள்‌ புரட்டாசி அவதரித்தோன்‌ வாழியே
அனைத்தறிந்த கோபாலர்‌ அடைந்தறிந்தோன்‌ வாழியே
அரங்கம் முதல் உகந்தருள்‌ மாநிலத் தன்பன்‌ வாழியே.
அநர்த்தமிலா(து) உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
அமிந்தைவர முனி தாள்சேர்‌ பாடியன் தாள்‌ வாழியே-

எதிபதிதன்‌ இணையடியே கதியுடையோன்‌ வாழியே
ஈடில்லா ஈடுதனை எடுத்துரைப்போன்‌ வாழியே
பதின்மருடன்‌ கோதைமொழி பரிந்து கற்றோன்‌ வாழியே
பார்புகழும்‌ பூருவர்தாள்‌ பற்றுமவன்‌ வாழி
மதுரகவி நிட்டையையே நிட்டை கொள்வோன்‌ வாழியே
வன்முடும்மை இருகுரவர்‌ மலரடியோன்‌ வாழியே
மதிமிகுந்த வரமுனிதாள்‌ வாழ்த்துமவன்‌ வாழியே
பாடிய ராமாநு சாரியன் தாள்‌ வாழியே

வாழிசிரீ நிவாசார்யன்‌ கோபாலன்‌ மாதகவால்‌
வாழும்சீ பாடிய மாசார்யன்‌ – வாழியவன்‌.
மாறன் மறைப்பொருளும் பாடியத்தின் மான் பொருளும்
தேறும்‌ படியுரைக்கும்‌ சீர்‌.

சென்மம்‌ தவிர்த்தருளும்‌ சேஷிகள்‌ வாழியே
சேமஞ்செய்‌ பொன்னாடைத்‌ திருநாபி வாழியே
தன்மம்‌ விரிந்தணைய திருமார்பும்‌ வாழியே
தரணிதனில்‌ அஞ்சலெனும்‌ கரதலமும்‌ வாழியே
நன்மருந்து பொழிமதிபோல்‌ திருமுகமும்‌ வாழியே
நளினஞ்செய்‌ கருணை மொழி கண்ணினையும்‌ வாழியே
மென்மை குவிந்தனைய திருமேனி வாழியே
மெய்மைஇரா மாநுசன்தாள்‌ மேன்மேலும்‌ வாழியே.

ததியர்கள்‌ வாழ தலநூற்‌(று) எண்வாழ
மதிநலஞ்சால்‌ மாறன்‌ மறை வாழ – பதியார்ந்த
மண்ணுலகும்‌ வாழ சிரீ பாடியமா தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டி டிரும்

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம் –

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அலர்மேல் மங்கை யந்தாதி-

April 23, 2026

ஸ்ரீ அலர்மேல்மங்கையந்தாதி
முதல் நூலான இந்நூல் கட்டளைக் கலித்துறையிலான பாயினத்தாலாயது.இஃது, நான்கு அடிகளையுடையதாய் அடிதோறும் ஐந்து சீர்களோடு கூடி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் இறுதிச்சீர் கூவிளங்காயும் கருவிளங்காயுமாக ஏதேனும் ஒன்றைப் பெற்று ஒவ்வொரடியும் முதற்சீர் நேரசையாயிருந்தால் ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்தும், நிரையசையாயிருந்தால் பதினேழ் எழுத்துக் கணக்கோடு ஈற்றடியின் இறுதிச்சீரின் ஈற்றசை ஏகாரம் பெற்று முடிதல் வேண்டும். உதாரணம்,
அடியடி தோறும் ஐஞ்சீ ராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.”என்பது இலக்கண விதியாகும்.

இங்ஙன்‌ கட்டளைக்‌ கலித்துறை என்ற நூறு பாக்களான்‌ அமைந்த அலர்மேல்மங்கை அந்தாதியின்‌ முதற்பா காப்புச்‌ செய்யுள்‌, நூல்‌ தடையின்றி இனிது நிறைவேறும்‌ பொருட்டு சுவாமி நம்மாழ்வாராகிற ஆசாரிய வணக்கமும்‌ செயப்படுபொருளும்‌ எய்த உரைக்கும்‌ தற்சிறப்புப்‌ பாசிரமாக அமைந்துள்ளது

இழைத்தா ரிலதா மறையின்‌ பொருள் சீர்த்த இன்தமிழால்‌
இழைத்தான்‌ இவனே சராசரம் முற்றும் நினைவகத்தே
இழைத்தான்‌ சிரம் தான்‌ குலுங்க ஓர்‌ ஆயிரம்‌ பாவிழைத்தான்‌
இழைத்தான்‌ அலர் மேல் மங்கை யந்தாதி க்கருள்‌ முற்றுறவே-
காப்புச் செய்யுள்

எவராலும்‌ செய்யாமல்‌ இயல்பாக தோன்றிய வேதங்களின்‌ பொருளை இனிய தமிழில்‌ ஆயிரம்‌ பாசுரங்களாகச்‌ சொன்ன குருகூர்‌ நம்பியே, அறிவுடை பொருள்கள்‌ அறிவில்‌ பொருள்கள்‌ இவைகளை நினைவாற்றலாலேயே தோற்றுவித்த இறைவன்‌, தன்‌ சிரத்தை குலுக்கி கேட்கும்படியாகத்‌ திருவாய்மொழி என்ற ஆயிரம்‌ சொன்னவனே-இந்த அலர்மேல்மங்கை அந்தாதிக்கு இடையூறின்றி நிறைவு பெரும்படி காப்பாக இருந்து தானே அடியேனுக்கு அருள்‌ செய்தான்-

உலகொருங்‌காக வணங்குதற்‌ காக உடையவன்தான்‌
உலகொருங்‌ காக உளப்படுத்‌தாகத்‌ தகலகில்லாள்‌
உலகொருங்‌காக உடையவளாகக்‌ கலைக்கு நில்லா
உலகொருங்‌காக உதவுவாளாகத்‌ தெழில் வணங்கே.

நெஞ்சே! எல்லா உலகும்‌ தன்னை வந்து வணங்குவதற்காக அவர்களுக்கு இறைவனிடத்தில்‌ பரிந்துரை கூறுவதற்காக அனைத்து சராசரங்களையம்‌ ஊழிக்‌ காலத்தில்‌ தன்‌ வயிற்றில்‌ கொள்ளும்‌ இறைவனுடைய திருமார்பை விட்டு அகலாதவளான திருமகள்‌, இறைவனையும்‌ அவன்‌ உடைமைகள்‌ ஆன உபய விபூதிகளும்‌ ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்‌. பிராட்டியின்‌ பேர்‌ அழகு பதினாறு கலைகளில்‌ ஒரு கலைக்கும்‌ போதாத பேரழகு உடைய பிராட்டியை வணங்குவாயாக —

வணங்குக நெஞ்சே! மதிமுகம்‌ தீஞ்சொல்‌ அமுதனையவ்‌ i
வணங்குக ளுத்தமை பங்கயத் தாள் தாள் பராபரர் நீர்
வணங்குக சென்னி மகரம்‌ அகரம்‌ சுதந்திரத்தை
வணங்குக நுஞ்சீர்ப்‌ பெறஇரு வீர்க்கொரு வாய்ப்பெனுமே–2-

நெஞ்சே! முழு மதி போன்ற முகமும்‌, இனிய சொற்களும்‌, அமுதம்‌ ஒத்த இனிமையும்‌ உடைய தெய்வ பெண்களுள்‌ மிக மேம்பட்ட பிராட்டியின்‌ திருவடி தாமரைகளை வணங்குக! பிராட்டியின்‌ தொடர்பால்‌ அகாரத்தை பேராக உடைய மேலார்க்கும்‌ மேலாலனாகிய எம்பெருமான்‌ தன்‌ சுதந்திரத்தை தளர்த்தி கொடுப்பானாக- மகாரத்தை பேராக உடைய ஆன்மாக்கள்‌ தங்கள்‌ சென்னிகளை வணங்குவாராக.- இவ்வாறு பிராட்டியின்‌ இருப்பு பெருமானுக்கும்‌, ஆன்மாக்களுக்கும்‌ சிறப்புப்‌ பெற உதவுவதாகும்-

வாய்த்தவத்‌ தாயவள்‌ சேர்த்தியின்‌றேல் வேத வேத்தியன் தான்‌
வாய்த்தவத்‌ தாவனே? காட்டியும்‌ ஊட்டி மறைத்திடுமவ்‌
வாய்த்தவத்‌ தாயவக்‌ காரியம்‌ சீரிய வாமதுவே
வாய்த்தவத்‌ தாயவச்‌ சேதநன்‌ சேர்ந்து நல்‌ வாழ்வுறுமே–3–

உலகங்களுக்குத்‌ தாயாக வாய்ந்த பிராட்டியின்‌ சேர்த்தி இல்லை யென்றால்‌, வேதங்களால்‌ பரம்‌ பொருளென்று போற்றப்‌ பெறும்‌ திருமாலும்‌, மெய்ப் பொருள்‌ ஆக முடியுமா? அவனால்‌ செய்யப்படும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற செயல்களும்‌ சிறப்புற நிகழுமா? அநாதியான சீவான்‌ மாக்கள்‌ எம்பெருமானைச்‌ சேர்ந்து உய்வு பெறுமா-

வாழ்வது மாகம னுந்திரி யம்பகனும்‌ ககரன்‌
வாழ்வது மாகலை யாதிய மோன முனிக் கணமும்‌
வாழ்வது மாகமும்‌ தாரணி பூவிவ ரத்துயிர்கள்‌
வாழ்வது மாக முதல்தனி வாய்த்த கருணையினே–4-

எல்லா பொருள்களுக்கும்‌, தாயாய்‌ கருணையே வடிவெடுத்த பிராட்டி எம்பெருமான்‌ திருமார்பில்‌ வீற்றிருப்பதினாலேயே வானவர்‌ மன்னனாகிய இந்திரனும்‌, ககாரம்‌ என்ற பெயருடைய பிரமனும்‌, முக்கண்ணனாகிய உருத்திரனும்‌, மேம்பட்ட கலைகள்‌ முதலியனவும்‌ இடையறாத தவத்திலேயே ஈடுபட்டு இருக்கும்‌ முனிவர்‌ குழுவும்‌, பூமியும்‌, வானுலகும்‌, அவ்வுலகுகளில்‌ உள்ள ஜீவன்மாக்களும்‌ நல் வாழ்வு வாழ்கின்றன-

கருணைத்‌ திருவுரு காரணத்‌ தோருரு காவலன்தன்‌
கருணைத்‌ திருவுரு உள்ளங்‌ கசிவரக்‌ காகமொடு
கருணைத்‌ திருவுரு தானே யரக்கியீர்‌ காப்பெனென்ற
கருணைத்‌ திருவுரு உள்ளமன்‌றோ நமைக்‌ காப்பதுவே–5–

கருணையே வடிவு எடுத்தவனும்‌, உலக காரணனும்‌ பேரழகிய உருவினனும்‌, உலகைக்‌ காப்பவனும்‌ அழகிய பெருமானுடைய திருவுள்ளம்‌ பெருந் தவறு செய்த காக்கையின்‌ திறத்துக்‌ கருணையால்‌ உருகி அதனை கொல்லாது விடுத்தற்கும்‌, கருணையே வடிவெடுத்தவளாய்‌, தன்னை ஓயாது நலிவுறுத்திய அரக்கியரையும்‌, அனுமனால்‌ ஏதம்‌ வராது காப்பேன்‌’ என்ற பிராட்டியின்‌ கருணை வடிவான உள்ளம்‌ அன்றோ? காரணமாகும்‌. அந்தத்‌ திருவுள்ளமே வாழ்க்கையில்‌ பல தவறுகளையும்‌ செய்யும்‌ நம்மையும்‌ பாதுகாப்பதாகும் –

காப்பது நாம்தாங்‌ கருமமே முன்னா எவருமென்னின்‌
காப்பது நாம்தாமென் காப்பதா வைதிகச் சொல்வ தெவன்
காப்பது நாந்தாங்‌ கருமமே முன்னா அடைந்திவரை
காப்பதுங்‌ காசில்‌ குணத்தா லருள் வடைந்தவர்க்கே–6-

அவரவர்‌ செய்த நல் வினை தீ வினைகளுக்கு எற்‌ப நாம்‌ அவர்களைக்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று எம்பெருமான் திருவுள்ளம்‌ பற்றினால்‌ நீர்‌ பெருமானை நோக்கி உலகை காப்பதாக வேதம்‌ வல்லார்‌ கூறுவது பொருந்துமா? உங்களைச்‌ சரணாக அடையாதாரை அவர்கள்‌ வினைகளுக்கு ஏற்ப பயனளிப்பீர்‌; தன்னைச்‌ சாணாக அடைந்தவர்‌ திறத்து உம்முடைய வாத்சல்யாதி குணங்களால்‌ அவர்களை வினைகளை நோக்காது அருள் செய்யக்‌ கடவீர்‌”‘ என்பாள் –

அடைந்திடும்‌ ஏதெதோ நுந்தான்‌ அடையாத கல்வதுவே
அடைந்தில தாகா தெவரெவை தீவினை மாய்வதுவே
அடைந்தவை எவ்வெப்‌ பயனும்‌ அடையா திழக்குமதோ?
அடைந்திடு வாரும்‌ அடைகிலா தாரும்‌ உமது சேயே–7–

பிராட்டியே! உன் திருவடிகளை சரணாகப்‌ பற்றுபவரும்‌ பற்றாதவரும்‌ உன்‌ மக்களே. உன்‌ திருவடிகளைச்‌ சரணாகப்‌ பற்றாததனால்‌ பலவகை துன்பங்களும்‌ வந்து சேரும்‌; திருவடிகளைச்‌ சரணாக பற்றாமையால்‌ எந்த தீவினையும்‌ அழிய மாட்டா; திருவடிகளைப்‌ பற்றினவர்கள்‌ தாம்‌ கருதிய எவ்வெப்‌ பயன்களையும்‌ அடையாமல்‌ இழப்பதில்லை. இவ்வாறாக தாயாகிய உன்னைச்‌ சரணடையாமல்‌ பலர்‌ துன்பப்படுகிறார்கள்‌ என்பது குறிப்பாகும் –

உமது சேயாவா ரலாதார்‌ உளரே? கணிப்பதற்கும்‌
உமது சேயாவ சராசரம்‌ உள்ள அனைத்துமன்றோ!
உமது சேயாவ னலாதவன்‌ ஓர் பொருள்‌ நாரணனே
உமது சேய்க்கூட்டத்து அடியவன் ஓர் பொருள் கைவிடவே –8–

உம் மக்களல்லாதார்‌ என்று குறித்தறிவதற்கும்‌ சிலர்‌ உளரோ?-எல்லா இங்கியற்‌ பொருள்களும்‌ உமது குழந்தைகளே- உனக்கு வசப்படாத ஸ்வதந்திரப்‌ பொருள்‌ எம்பெருமான்‌ ஒருவனே- உம்முடைய மக்கள்‌ குழாத்தில்‌ அடியேனும்‌ ஒருவன்‌ ஆகலில்‌ அடியேனைக்‌ கைவிட்டு விடாதீர் –

கைவிடாக்‌ காப்ப தவனெனச்‌ சான்றோர்‌ பறையறைவர்‌
கைவிடாக்‌ காப்பவர்‌ நீரா அவனா எவரறிவார்‌?
கைவிடாக்‌ கொள்கை யனுமனைக்‌ கை விடச்‌ செய்தவர் யார்‌?
கைவிடாக்‌ காவல்‌ எழுநூ றரக்கியர்‌ கண்டதன்றே?–9-

எல்லா உயிர்களையும்‌ கைவிடாமல்‌ காப்பவன்‌ என்று சான்றோர்‌ பரக்கக்‌ கூறுவர்‌. அப்படிக்‌ கைவிடாமல்‌ காப்பவர்‌ நீரா? நும்‌ கணவராகிய எம்பெருமானா? என்பதனை உண்மையாகவா அறிகிறார்கள்‌? அரக்கியரை அழிக்க வேண்டும்‌ என்ற உறுதியான எண்ணத்தோடு வந்த அனுமனை, உம்மை விடாமல்‌ துன்புறுத்தி வந்த அரக்கியர்‌ எழுநூற்றுவரைப்‌ பாதுகாத்து, அனுமன்‌ எண்ணத்தைக்‌ கை விடச்‌ செய்த நும்‌ செயலை நோக்க, எல்லா உயிர்களையும்‌, கை விடாது காக்கும்‌ செயல்‌ உம்முடையதே என்று புலப்படுகின்றதன்றோ-

கண்ட அமுதம்‌ திசை திருப்பும் செயல் காப்பதற்கோ
கண்ட அமுதம் உமைக் குறிக்‌ கொண்டே கடல் கடைந்தான்‌
கண்ட அமுதச்‌ செயலில்‌ களவிதைக்‌ கண்டறிந்தீர்‌
கண்ட அமுதென வையகம்‌ காப்பதார் ? எய்துவதே–10-

தேவர்கள்‌ உள்ளத்தைத்‌ திசை திருப்பி அவர்கள்‌ நலன்‌ பெறுவதற்காகப்‌ பாற் கடல்‌ கடைந்து அமுதினைக்‌ கொண்ட எம்பெருமானுடைய செயல்‌ அவர்களை அமுதத்தால்‌ காப்பதற்காகவோ நிகழ்ந்தது? ஆய்ந்து கண்டால்‌ உண்மையான அமுதமாகிய உம்மைப்‌ பெற்ற பின்னரே எம்பெருமானுடைய உலகங்காத்தல்‌ தொழில்‌ சிறப்புற நிகழ்ந்து வருகிறது எனலாம்‌. ஆதலின்‌ உலகினை உண்மையாகக்‌ காப்பவர்‌ நீரே என்பது தேற்றம்‌–

எய்துவ துண்டே? அருளின்றி எம்மோய்‌ எனைத்தையுமே
எய்துவ துண்டே? சிவனயன்‌ இந்திரன்‌ தம் பதங்கள்‌
எய்துவ துண்டே?
அடியவன்‌ என்றென்‌ றிறைவனுமே
எய்துவ துண்டே? நுமநோக்‌ கிலதெனின்‌ முத்தியுமே–11-

அலர்மேல்‌ மங்கையீரே! தேவரீர்‌ அருளின்றி எந்தப்‌ பயன்களையும்‌ உலகவர்‌ எய்த இயலுமா? எம்பெருமானும்‌ தனக்கு அடியவன்‌ என்று எவனையும்‌ எய்துதல்‌ இயலுமா? பிரம்மன்‌, சிவன்‌, இந்திரன்‌ முதலியோரும்‌ தத்தம்‌ பதவிகளை அடைதல்‌ இயலுமோ? நும்‌ அருள்‌ நோக்கிலதெனின்‌ வீடு பேற்றினையும்‌ எய்த இயலுமா? என்றவாறு –

முத்தி யுளதென்‌ றளிப்பான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவைக்‌ கீடில்லை என்பதே முற்றுமுண்மை
முத்தி யுளசுவைக்‌ குற்றான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவை நீரின்றேல்‌ முற்றும்‌ பயனிலதே–12-

முத்தியை ஆன்மாக்களுக்கு வழங்குபவன்‌ முகுந்தனாகிய திருமாலே.-முத்திப் பேரின்பத்துக்கு இணையான இன்பம்‌ இல்லை என்பதே முழுமையான உண்மையாகும்‌. அம் முத்திச்சுவையை ஆன்மா பெறத்‌ திருமாலே காரணம்‌ ஆவான்‌ என்பதும்‌, அம் முத்திப்‌ பேரின்பம்‌ நல்கும்‌ என்பதும்‌, தாயாகிய நீர்‌ இல்லை யென்றால்‌ பயனிலவாகும் –

பயனற்‌ றிருப்பன உபய வி பூதிமான் பண்ணவனேல்‌
பயனற்‌ றிருப்பன்‌ நிகரில்‌ புகழ்சால்‌ பரமனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ தனிமாப்‌ புகழின்‌ படைப்பனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ அலர் மேல மங்கை தன்‌ பாலிலதே–13–

அலர்மேல்‌ மங்கை தன் பக்கம்‌ இல்லையாயின்‌, மண்‌ விண்‌ என்ற ஈருலகங்களுக்கும்‌ தலைவனாகத்‌ தான்‌ இருந்தாலும்‌, ஒப்பற்ற புகழை யுடைய பரம் பொருள்‌ என்ற நிலை இருந்தாலும்‌, ஒப்பற்ற மேம்பட்ட புகழுக்குரிய படைப்புச்‌ செயல்களைச்‌ செய்தாலும்‌ எம்பெருமான்‌ அவற்றால்‌ பயனற்றவனாகவே இருப்பான் –

பால தடைந்தனன்‌ பாதகத்‌ தாபமாழ்‌ தூறதனின்‌
பால தடைந்தனன்‌ பொய்ம் மதிப்‌ பற்றும்‌ ஒழுக்கமதின்
பால தடைந்தனன்‌ தீவினைப்‌ பாவிய காடதனின்‌
பால தடைதல்‌ கழிய நின்‌ பங்கயத்‌ தாளருளே–14-

அடியேன்‌ தீவினையாகிய வெப்பம்‌ சூழ்ந்துள்ள புதர்களில்‌ அகப்பட்டு அடைந்துள்ளேன்‌. அதனால்‌ பொய்யான அறிவைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ ஒழுக்கத்தை மேற் கொண்டேன்‌. இதனால்‌ தீவினை பரவிய காடாகிய உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்டேன்‌. அவ் வாழ்க்கையில்‌ ஈடுபடும்‌ அடியேனை மீட்டு பிறவித்‌ துயர்‌ சேர்வதில்‌ நின்றும்‌ நீங்குமாறு உன்‌ தாமரைப்‌ போன்ற திருவடிகளைச்‌ சேர்ப்பாயாக –

அருளால்‌ நிறைந்தொளிர்‌ கண்ணுடை அன்னைநீ, ஆதுவர்பால்‌
அருளால்‌ நிறைந்த அழகின்‌ இனியைநீ எம்பிரான்பால்‌
அருளால்‌ நிறைந்த அளியை நீ தேவர் தம்‌ மாததம்பால்‌
அருளால்‌ நிறைந்த அலர்மேல் மங்கை நீ ஆளெமையே–1
5-

அருளால்‌ நிறைந்த அலர்மேல்‌ மங்கையீர்‌ ! நீர்‌ பிறவிப்‌ பிணியால்‌ வருந்துவோர்பிணி தீர்க்க அருளால்‌ நிறைந்து விளங்கும்‌ அன்னையாய்‌ உள்ளீர்‌; அருளால்‌ நிறைந்த நீர்‌ எம்பெருமான்பால்‌ இனிய அழகிய உருவெடுத்து அமைந்துள்ளீர்‌, தேவ மாதர்‌ திறத்தில்‌ அருளால்‌ நிறைந்த இரக்கமே வடிவாக உள்ளீர்‌; அத்தகைய அருள்‌ வடிவாகிய நீர்‌ அடியேனையும்‌ ஆட்கொண்டு அருள்வீராக –

எமையாள வந்தே புணரி எழுந்தீர்‌ அமுதுடனே
எமையாள வந்தே துழாய் கமழ்‌ மார்பத்‌ ‘ தினிதிருப்பீர்‌
எமையாள வந்தநீர்‌ மங்கா புரத்தில்‌ இருந்தருள்வீர்‌
எமையாள வந்தெம்‌ மனத்தில்‌ இருப்பதும்‌ மாலுடனே–16–

எம்மை ஆட்கொள்வதற்காகவே திருமகளாகிய நீர்‌ அமுதத்தோடு அவதரித்தீர்‌; திருத்துழாய்‌ மணம்‌ கமழும்‌ திருமாலின்‌ திருமார்பில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறீர்‌; அலர்மேல்‌ மங்கா புரத்தை உகந்து அருளி வீற்றிருக்கின்றீர்‌; எம்மை ஆட்கொள்வதற்காக எம்பெருமானுடன்‌ சேர்ந்து எங்கள்‌ உள்ளத்தில்‌ அமர்ந்துள்ளீர் –

மாலுநும்‌ கூட்டும்‌ மலமற்‌(று) அமானவன்‌ பால்தருமே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபத்துட் புகுந்திடவே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபமேவி கேள்விகொள
மாலுநும்‌ கூட்டும்‌ மகிழ்ந்‌து அணைந்து உச்சி முகப்பதுவே ! –17–

எம்பெருமானுடன்‌ கூடிய தாங்கள்‌ சேர்ந்திருப்பது உலகம்‌ மாசற்று வீட்டுலகிற்கு அழைத்துச்‌ செல்லும்‌ அமானவன்‌ தொடர்பை உண்டாக்கும்‌; வைகுந்‌தத்திலிருக்கும்‌ திருமாமணி மண்டபத்தில்‌ புகும்‌ வாய்ப்பினை ஆன்மாக்களுக்கு நல்கும்‌; எம்பெருமான்‌ ‘நீ யார்‌ என்ன? நான்‌ ப்ரஹ்மம் ஆகிறேன்‌’ என்‌று ஜீவான்மா விடை கூறவும்‌, அவ்வான்மாவை மகிழ்வோடு தழுவி தாயன்பால்‌ உச்சி மோக்கும்‌ உயர்நிலையும் தரும் –

முகந்தருள்‌ நுந்தம்‌ கருணையின்‌ முன்னர்‌ இணையெதுவே?
முகந்தருள்‌ அண்ணல்‌ கருணை பிறிதின்‌ முனைந்ததுவே?
முகந்தருள்‌ மாறன்‌ அருள்நு மதருளின்‌ முன்வருமே?
முகந்தருள்‌ பூதார்‌ முனைவன்‌ அருளும்‌ இணையிலதே–18-

ஆன்மாக்களை விரும்பித் தழுவும்‌ எம்பெருமானுடைய கருணை இணையற்றதே? அத் தகைய செயலைச்‌ செய்யும்‌ மாறனுடைய கருணையும்‌ இணை யற்றதே? அதனை ஒத்த இராமாநுசர்‌ கருணையும்‌ ஈடு அற்றதே? என்பர்‌. இவற்றுக்கு எல்லாம்‌ காரணமாக அமையும்‌ தாயாராக அன்பு காட்டும்‌ உம்‌ அருளுக்கு முன்னர்‌ ஒப்பாகாது இவைகள்‌ குறைவடையும் –

இணையிலை என்பது நித்ய விபூதியி லெய்துமின்பம்‌
இணையிலை என்ப பிறவிக் கண்‌ ஆழ்வதில்‌ எய்துதுன்பம்‌
இணையிலை யென்ப திறைவன்‌ உயிர்கள்பால்‌ செய்யுமருள்‌
இணையிலை நும்மருட்‌(கு) இத்தனை சேரிலும்‌ ஒன்றினக்கே?-19-

நித்திய விபூதி என்னும்‌ பரமபதத்தில்‌ எய்தும்‌ இன்பம்‌ இணையற்றது; பிறவித் துயரில்‌ ஆழும்‌ துன்பமும்‌ இணையற்றது; இறைவன்‌ ஆன்மாக்கள்‌ பக்கம்‌ செலுத்தும்‌ அன்பும்‌ இணையற்றது; இவ்வளவும்‌ ஒன்று சேரினும்‌ தாயாராகிய நுமது அருளுக்கு நிகராக மட்டா –

ஒன்றினும்‌ ஒன்றா உலகியல்‌ பற்றைக்‌ களைவதற்கே
ஒன்றினும்‌ ஒன்றா உயர்பரன்‌ பால் நின்‌றகலகிலீர்‌
ஒன்றிலும்‌ ஒன்றாக்‌ கயவன்‌ சிறைநின்‌று பகரித்தீர்‌!
ஒன்றினும்‌ ஒன்றா உலைப்பும்‌ அரக்கியர்‌ நற்றமிதே–20-

தாழ்வில்லாத தனக்கு பிரிதொன்று இணையாகாத இவ் வுலக பற்றினை எம்மிடத்தில்‌ இருந்து போக்குவதற்காகவே, தன்னை ஓக்கும்‌ பொருள்‌ பிரிதொன்று இல்லாத மேம்பட்ட எம்பெருமான்‌ மார்பினில்‌ அகலாது தங்கி இருக்கின்றீர்‌. இழிவில்‌ தனக்கு ஒப்பவர்‌ இல்லாத இராவணனுடைய சிறையில்‌ இருந்து, அவனுக்கு உபதேசித்த நிலையிலும்‌ அரக்கியர்‌ ஈடு இணையில்லா தாழ்ந்த மொழிகளால்‌ அலைத்த நிலையிலும்‌ உம்‌ ஈடில்லா உபதேசத்தால்‌ அவர்களுக்கு நன்மையே புரிந்தீர் –

நற்றமாம்‌ நுந்தாள்‌ சரணா நணுகுவ தோர் செயலே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகி இறை தாள்‌ நணுகுவதே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகப்‌ பிறர் தாள்‌ நணுகுவதோ?
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகா திறைதாள்‌ நணுகுவதோ?–21-

நன்மையே தரும்‌ நும்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றுவதே மேம்பட்ட செயலாகும்‌. உம்‌ திருவடிகளை முதற்கண்‌ பற்றிட்ட பின்‌ எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவதற்குப்‌ பிறருடைய பரிந்துரைக்கு முயல்வது தேவையற்ற செயலாகும்‌. உம்‌ திருவடிகளைப்‌ பற்றாது எடுத்த எடுப்பிலேயே எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவது முறையல்லவே –

நணுகுவ துண்டே? அகப்புறப்‌ பற்றுசால்‌ நாகரீகம்‌
நணுகுவ துண்டே? பிறவித்‌ தொழுவினில்‌ நாலுசெயல்‌
நணுகுவ துண்டே? நமன்தமர்‌ சித்திர குத்தனாதி
நணுகுவ துண்டே? பரத்துவம்‌ நக்கனைப்‌ போல்பவர்க்கே–22-

உம்மைச்‌ சரணமடைந்தவர்களை யான்‌ எனது என்ற அகப்புறப்‌ பற்றுக்கள்‌ கொண்ட பண்பாடு அடையுமோ? பிறவியாகிய தொழுக்கட்டையில்‌ இயங்கும்‌ செயல்‌ அடையுமோ? இயமனுடைய ஏவலன்‌ சித்திரகுப்தனும்‌ நமனும்‌ நலிவதற்கு அணுகுவார்களா? உம்மைச்‌ சரணமடைவோருக்குச்‌ சிவன்‌ முதலான தேவர்களைப்‌ பரம்‌ பொருளாம் தன்மை உண்டென்ற நினைவு ஏற்படுமா-

கேதங்கள்‌ வாரா நமன்தமர்‌ கேள்விகொள்‌ தீயசொற்கள்‌
கேதங்கள்‌ வாரா பராசத்தி போல்பவர் கீழ் படிதல்‌
கேதங்கள்‌ வாரா புறசமயத்துறு கேடுசெயல்‌
கேதங்கள்‌ வாரா நும திருதாள் மலர் கிட்டுவார்க்கே –23-

உம்முடைய திருவடிகளிரண்டினையும்‌ சரணாகப்‌ பற்றுபவர்களுக்கு, யமனுடைய ஏவலர்‌ பழித்துக்‌ கூறும்‌ தீயசெயல்களைக்‌ கேட்கும்‌ தீவினையாகிய துயரங்கள்‌ வாரா. உமாதேவி முதலிய சிறுதெய்வங்களை வழிபாடு நிகழ்த்தும்‌ குறைபாடுவாரா. வேற்றுச்‌ சமயங்களைப்‌ பின்பற்றுவதாகிய தீயசெயல்களும்‌ ஏற்பட மாட்டாதென்பதாம் –

கிட்டுவ துண்டே? நுமதடி யாரெனும்‌ கேழில்பதம்‌
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கீழிருந்‌ தாற்றுதொண்டு
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கேழில புன்முறுவல்‌
கிட்டுவ துண்டே? மிதுநறும்‌ தாண்மலர்க்‌ கீழிருப்பே–24-

நும்முடைய அடியவரெனும்‌ ஒப்பிலாப்‌ பதவி எல்லோருக்கும்‌ கிட்டுமோ? பெருமானும்‌ நீருமாக இருக்கும்‌ இருவர்‌ திருவடிகளின்‌ கீழிருந்தாற்றும்‌ தொண்டு எல்லோருக்கும்‌ கிட்டுமோ? நும்மிருவருடைய ஒப்பற்ற புன்முறுவலைக்‌ காணும்‌ வாய்ப்புகள்‌ எல்லோருக்கும்‌ கிட்டுமோ? இருவருடைய திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ என்றும்‌ இருக்கும்‌ இருப்பு எல்லோருக்கும்‌ கிட்டுமோ-

தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பா தரணி புரப்பவரும்‌
தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பார்‌ தமதியல்‌ பெய்துவாரும்‌
தாள்மலாக்‌ கீழ்நின்‌ றெனைவரும்‌ தாங்குவார்‌ மெய்யுணர்வே
தாள்மலாக்‌ கீழ்த் தொண்‌ டலர் மேல் மங்கை! தனமெமதே–25-

அலர்மேல்‌ மங்கையாகிய அன்னையே! இவ் வுலகைக்‌ காக்கும்‌ அரசர்களும்‌ உன்‌ திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ நின்று வேண்டிய செல்வத்தை இரப்பர்‌. கைவல்ய இன்பம்‌ வேண்டுவாரும்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ வேண்டுவாரும்‌ இவற்றின்‌ காரணமாகிய மெய் யுணர்வு பெற விரும்புவாரும்‌ உன்‌ திருவடித் தாமரைகளைப்‌ பற்றியே இருப்பர்‌. உம்‌ திருவடிக் கீழ்‌ தொண்டே அடியேன்‌ வேண்டும்‌ செல்வமாகும்-

தனத்தவர்‌ தாய் நின கோட்டி தனி முதல் கோட்டியையும்
தனத்தவர்‌ நேர்மைத்‌ தனிமனந்‌ தன்னில்‌ நிறுத்தெடுத்து
தனத்தவர்‌ கெளரவத்‌ தாய்நின கோட்டி லகுமிகுத்த
தனத்தவர்‌ சாமிதன்‌ கோட்டி எனுநிலை தந்தனரே–26-

தாயே! ஸ்ரீயபதி. திருவடிகளில்‌ தொண்டு செய்தலையே தமக்குச்‌ செல்வம்‌ என்று கருதும்‌ அடியவர்‌, உமது குழாத்தின்‌ பெருமையையும்‌, ஒப்பற்ற முதற் பொருளாகிய எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமையையும்‌, தங்கள்‌ மனமாகிய தராசின்‌ இரு தட்டுகளிலும்‌ நிறுத்துப் பார்த்து தாயாகிய உங்கள்‌ குழாத்தின்‌ பெருமையே மதிப்புடையது எனவும்‌, எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமை சற்று மதிப்பு குறைந்ததுவே எனவும்‌ நிலைநாட்டி யுள்ளனர் –

தந்த மலைக்கும்‌ வினையர்‌ தகவிலர்‌ என்னநிரை
தந்த மலைக்குடை யான்தள்ளு மென்றும்‌ தருக்கியிகல்‌
தந்த மலைக்குமைத்‌ தான்திருத்‌ தாளிணைத்‌ தஞ்சமென்று
தந்த மலையவர்‌ மேல்மங்கை சற்றே தரிப்பதுண்டே–27-

பசுக்களையும்‌ ஆயர்களையும்‌ காப்பதற்காக கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனும்‌, தன் மேல்‌ செருக்குற்று போர்‌ செய்யவந்த சாணுரன்‌, முஷ்டிகன்‌ என்ற மல்லர்களை அழித்தவனான எம்பெருமான்‌, வினைகளால்‌ துன்பத்தை யடைந்த அடியார்க்‌ தன்னை நேராக தஞ்சமடைந்தால்‌, இவர்கள்‌ நெடுநாள்‌ செய்த அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சீறுவான்‌ என்று நினைத்து, தேவரீர்‌ புருஷகாரமாகிய சிபாரிசு பண்ணி அடியார்களை எம்பெருமான்‌ திருவடிகளை அடையத்‌ தந்து, பெருமான்‌ அவர்களை ஏற்கும் வரையில்‌ ஆறியிராமல்‌ அடியார்களுக்காகப்‌ பதறுபவள்‌ அன்றோ நீர்‌-

உண்டே? திரிபோ டுனர்வின்மை ஐயம்‌ முதலதீர்தல்‌
உண்டே? இவற்றின்‌ ஒழிந்துப் பெறப்பெறு மெய்யுணர்வும்
உண்டே? பரனெனுந்‌ தாரக மாதியாம்‌ உச்சநிலை
உண்டே? உடையான்‌ குறைதீர்‌ வதின்றேல்‌ உமது நோக்கே.
–28-

அன்னையீர்‌! நுமது கடைக்கண்பார்வை எங்கள்‌ மேல்‌ பொருந்தாவிடில்‌ அறிவின்மை திரிபுணர்ச்சி, ஐயம்‌ என்ற குறைபாடுகள்‌ ஆன்மாக்களை விட்டு நீங்குமா? இவற்றின்‌ நீங்கிப்‌ பெறக்கூடிய மெய்யுணர்வு ஏற்படுமா? எம்பெருமானே தாரகம்‌, போஷகம்‌, போக்கியம்‌ என்ற மனநிலை ஏற்படுமா? ஆன்மாக்கள்‌ தன்னை கிட்டவில்லையே என்ற எம்பெருமானுடைய குறையும்‌ தீருமா?

உமதுநோக்‌ கன்றே? பலபல அண்டங்கள்‌ உள்ளவாதல்‌
உமதுநோக்‌ கிவ்வெலாம்‌ பாலநம்‌ செய்பொருள்‌ உள்ளதுவும்‌
உமதுநோக்‌ கின்றே? இவை தாம்‌ நிரல்பட ஊர்வதுவே?
உமது நோக்‌கா மாதின் ஒப்பின்ற அருளும் இவ்வின்பமிதே -29-

அம்மையீர்‌! உம்‌ கடைக்கண்‌ பார்வை செலுத்தப்படாவிடின்‌ எம்பெருமான்‌ பல அண்டங்களைப்‌ படைப்பதுவும்‌, அவனால்‌ காக்கப்பட்ட இவ் வண்டங்கள்‌ உளவாதலும்‌, இவற்றின்‌ செயல்கள்‌ நிரல்பட நிகழ்வதுவும்‌ ஒப்பற்ற வீட்டின்பத்தை இவ்வான்மாக்கள்‌ எய்தி வாழ்வதுவும்‌ நிகழற்பாலதா–

இன்பம்‌ உளதா எவரும்‌ மயங்கி விடமரத்தில்‌
இன்பம்‌ உளதா எவரும்‌ பறிப்பர்‌ விடக்கனிகள்‌
இன்பக்‌ கனிதான்‌ மிதுநநும்‌ பாலன்‌ பியைவதின்றி
இன்பக்‌ கனியாம்‌ நுமதடி யாரோ டிணங்குமிதே–30-

இன்பம்‌ உளதாகக்‌ கருதி மன மயக்கங்கொண்டு சிலர்‌, உலகியலாகிய விஷமேறிய மரத்தில்‌ தோன்றும்‌ விஷக் கனிகளைப்‌ பறிப்பர்‌. பிராட்டியும்‌ பெருமானும்‌ ஆகிய நும்‌ இருவரிடம்‌ அன்பு செய்வதன்றி இன்பமாகிய கனிதான்‌ வேறுளதோ? உங்கள்‌ அடியவரோடு இணங்கி வாழும்‌ வாழ்வே உண்மையான இன்பச்சுவை தரும்‌ பழமாகும் –

இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்‌ திருந்திட லென்பதென்ன
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்து இரானொரு தொண்டனாமே?
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டமே வானுலக இன்பமாமே
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத் திருந்திடச் செய்‌கெனையே — 31-

நும்மடியார்தம்‌ கூட்டத்தோடும்‌ கலந்து வாழ்தலென்பது ஒரு சாதாரணச்‌ செயலாகுமா? உங்கள்‌ அடியார்‌ கூட்டத்தின்‌ இணக்கம்‌ இல்லாதவனும்‌ தொண்டருள்‌ ஒருவனாவானா? நும்‌ தொண்டரோடு இயைந்து வாழும்‌ வாழ்வே வானுல கின்பமாகும்‌. ஆதலின்‌ அடியேனை நும்‌ அடியார்‌ நடுவின்‌ இருந்திடச்‌ செய்யும்‌ அருளினைச்‌ செய்வீராக –

எனைப்போல்‌ பிழைசெய்வார்‌ யாரே? உலகினில்‌ இல்லையென்றும்‌
எனைப்போல்‌ பிழை செய்யார்‌ யாரே? உலகினில்‌ இல்லையின்றும்‌ ்‌
எனைப்போல்‌ பிழையாமை செய்தொறும்‌ யானென தின்மையுண்டேல்‌
எனைப்போல்‌ பிழையாமை உம்மரு ளாலல்ல தில்லையன்றே–32-

என்னைப்போல்‌ தவறான செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ உலகில்‌ என்றுமில்லை, என்னைப்போல்‌ மனமொத்து பிழை செய்யாதவர்‌ உலகில்‌ யாருமில்லை. யானென்று அகப்பற்றும்‌ புறப்பற்றும்‌ கழிந்ததென்றால்‌ செயலில்‌ பிழையில்லையாம்‌. அத்தகைய அகப்புறப்‌ பற்றும்‌ நீக்கிச்‌ செயல்களைப்‌ பிழையறச்‌ செய்தல்‌ உம்மருளாலல்லது ஏற்படாது –

அன்றே மகரமும்‌ ஆமையுங்‌ கேழலுந்‌ சிங்கமாவான்‌
அன்றே சறையினான்‌ ஆன்மேய்க்‌ கரைசால்‌ துவருடையான்‌
அன்றே இரணியன்‌ ஊனுண்‌ டவனென அறிந்திலிரே?
அன்றே வனசத்‌ தமுதின்‌ அமுதுடன்‌ தோன்றினீரே–33-

ஒவ்வொரு காலத்தில்‌ மீனாகவும்‌, ஆமையாகவும்‌, பன்றியாகவும்‌, நரசிங்கமாகவும்‌ அவதரித்த எம்பெருமானே மாட்டாரங்கழியில்‌ தோல்பை தொங்க அழுக்குப்படிந்த செந்நிற ஆடையை அணிந்த ஆயனாகிய கண்ணனாவான்‌. அடியவனுக்கு தீங்கு செய்த இரணியனுடைய மார்பைப்‌ பிளந்த அவன்‌ உடலை உண்டவனும்‌ அப்பெருமானே யன்றோ? அன்று பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றியபொழுது தாமரை மலரில்‌ தோன்றிய தாங்கள்‌ அவன்‌ மார்பில்‌ இணைந்திருக்கின்றீர்‌. அவனைத்‌ தாங்கள்‌ அறியவில்லையா

மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? உலகினில்‌ மானிடர்க்கும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ வாச வனாதியா தேவர்களும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? மலரயன்‌ சூலியொடும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ மங்கைநும்‌ ஆட்சிக்‌ கிலைகறங்கே–34-

அலர்மேல்‌ மங்கையீர்‌! உம்முடைய ஆளுகை நன்றன்றே! மறைதலும்‌ தோன்றலுமாகிய சுழற்சி இல்லை. ஆனால்‌ உலகில்‌ உள்ளமானிடர்‌ முதலியோருக்கும்‌ இந்திரன்‌ முதலிய தேவர்களுக்கும்‌ தாமரை மலரில்‌ தோன்றிய பிரமனுக்கும்‌ அவன்‌ தனயனாகிய சிவனுக்கும்‌ பிறப்பிறப்பாகிய தோன்றலும்‌ மறைதலும்‌ உண்டன்றோ-

கறங்குபு சக்கர கையன லதிலேன்‌ காசினியில்‌
கறங்குபு செல்வக்‌ றந்திலேன்‌ கல்விதனில்‌
கறங்குபு நெஞ்சின்‌ இளந்துணுக்‌ குற்றனென்‌ காத்திலையே
கறங்குங்‌ கரிசறத்‌ தேற்றந்‌ தருவித்தை நீயலையே? –35-

சுழலும்‌ சக்கரத்தை என்றும்‌ கையிலேந்திய திருமாலைப்‌ பற்றிய அடியேன்‌ வேறு தெய்வங்களை அறியேன்‌. மாறி, மாறி வரும்‌ செல்வமாகிய மாசு என்பக்கல்‌ வராதபடியானேன்‌. கல்வியைப்‌ பெற அற்பத்துணிவுடையேனாய்‌ முற்றப்பெறாத வனானேன்‌. நின்றவாநில்லா நெஞ்சின்‌ கரிசைப்‌ போக்கித்தெளிவைத்தரு வித்தை நீயாயிருந்தும்‌ கல்வியை முற்றநீர்‌ தந்திடவில்லையே –

நீயலை யேயணு வாயே விபுவின்‌ நிமிர்ந்துறைவாய்‌
நீயலை யேநிதி யாளி பெறுவதும்‌ நின்னிடமே
நீயலை யேயவன்‌ பாலநம்‌ நேருறச்‌ செய்வதுவே?

நீயலை யேழுத்தி இன்பம்‌ இணைந்திருந்‌ தாக்குவிப்பே–36-

அணுவளவாக இருந்தும்‌ நீர்‌, எங்கும்‌ வியாபித்துள்ள விபுவான பெருமானைப் போல்‌ சக்தி விசேஷத்தாலே கரந்தெங்கும்‌ பரந்தெங்கும்‌ உள்ளாய்‌ நீரன்றோ? செல்வத்துக்கு உரிய தெய்வம்‌ நீரல்லையோ? அனைவரும்‌ எல்லாச்‌ செல்வமும்‌ பெறுதல்‌ உமமிட மிருந்தன்றோ? எம்பெருமானுடைய காத்தல்‌ தொழிலை முறையாகச்‌ செய்பவரும்‌ நீயல்லையே? எம்பெருமானோட கூடியிருந்து புருஷகாரம்‌ செய்து அடியார்கள்‌ வீடு பேற்றின்பம்‌ அடைவதற்காக முயற்சி செய்பவள்‌ நீரன்றோ –

ஆக்கலுங்‌ காத்தல்‌ உமதுளத்து கப்பினுக்‌ கெம்பெருமான்‌
ஆக்கலுங்‌ காத்தலும்‌ ஆவவே? உந்தங்கண்‌ ணோக்கிலதேன்‌
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழிப்பதொன்‌ றன்றி நுமக்காக
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழித்தல்‌ ஆம்பயன்‌ சேதநனே–37-

எம்பெருமான்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌ தொழில்களைச்‌ செய்வது உமக்கு இன்பத்தை அளிப்பதற்கே. உம்‌ பார்வையின்றேல்‌ பெருமானுடைய ஆக்கலுங்காத்தலு முறையாக நிகழா. எம்பெருமான்‌ முத்தொழிலும் செய்வது உமக்காக. இம் முத்‌ தொழில்களால்‌ ஆகும்‌ பயன்‌ சேதனனைத் தம்போடிணைத்துக்‌ கொள்வதற்காகவே-

உடனிருந்‌ தன்பர்போல்‌ ஊறுபல்‌ லாற்றற்‌ களவுமுண்டே?
உடனிருந்‌ தாக்கம் அறிவொடு வீக்கும் உணக்குவமே
உடனிருந்‌ தைம்பொறி ஊட்டும்‌ புலநலத்‌ தொன்றுவமே
உடனிருந்‌ துந்தம்‌ கடைக்கணின்‌ நோக்குவீர்‌ தீர்ந்திடவே–38-

ஐம்பொறிகள்‌ இவ்வுடம்பில்‌ ஆன்மாக்களோடு கூடியிருந்து ஆற்றும்‌ பலவகை இடையூறுகளுக்கு எல்லை யுண்டோ? அவை ஆன்மாவோடு தொடர்ந்திருந்தே பக்தி செல்வத்தையும்‌ ஞானத்தையும்‌ கெடுக்கிறது, அவை: போக்கும்‌ திறத்தை நாங்கள்‌ அறிவோமா? அவ்வாறு அறியாமல்‌ ஐம்பொறிகள்‌ உண்பிக்கும்‌ புலனின்பத்தில்‌ ஈடுபட்டுக்‌ காலங்கழிக்கின்றோம்‌. இத்தகைய அறியாமை எம்மை விட்டு நீங்குமாறு தாயாகிய நீர்‌ எம்‌ பக்கம்‌ இருந்து உமது கடைக் கண்ணால்‌ நோக்கி எமக்கு அருள்‌ செய்வீராக –

தீர்ந்திடச்‌ செய்தீர்‌ துருவனைச்‌ சிற்றனைச்‌ செய்கொடுமை
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ இரணியற்‌ கொன்றவன்‌ சேய்‌ கொலையைத்
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ சிறைப்படு மாதர்‌ பிறர்துயரும்‌
தீர்ந்திடச்‌ செய்வீர்‌ அடியேன்‌ படுங்கடுந்‌ தீமைகளே–39-

துருவன்‌ என்ற அரசிளங்குமரனுக்கு அவன்‌ சிற்றன்னையால்‌ ஏற்பட்ட துயரங்கள்‌ எம்பெருமானைக்‌ கொண்டு நீங்குமாறு செய்தீர்‌. இரணியனைக்‌ கொன்று அவன்‌ மகன்‌ பிரகலாதன்‌ கொலை செய்யப் படுதலை நீங்குமாறு செய்தீர்‌, இத்தகைய தாங்கள்‌ அடியவனாகிற நான்‌ படும்‌ கடுந்தீவினைகளும்‌ நீங்குமாறு செய்வீராக –

தீமைகள்‌ செய்வன ஐம்பொறி சேர்க்கும்‌ புலனலங்கள்‌
தீமைகள்‌ செய்வன பெண்ணெனும்‌ ஆணெனும்‌ ஈருடல்கள்‌
தீமைகள்‌ செய்வன ஒன்றினோடு ஓன்றுடன் சேர் பிணக்காம்
தீமைகள்‌ செய்வனடொன்‌ மேல்நலம்‌ சேரத்‌ தடைமிழைத்தே–40-

ஐம்பொறிகளால்‌ நுகரப்பெறும்‌ புலனின்பங்கள்‌ சேதநன்‌ எம்பெருமானை அடையாதபடி தீமைகள்‌ செய்கின்றன. பெண்ணுடல்‌ எனவும்‌, ஆணுடல்‌ எனவும்‌ பருத்து உலாவப்படும்‌ இருவகை உடல்களும்‌ தீமைகள்‌ தருவனவேயாம்‌. மேம்பட்ட வீட்டின்பம்‌ அடைய முடியாதபடி தீமை செய்யும்‌ இவற்றை அகற்றுவீராக –

இழைப்ப துலகென காப்ப தழிப்ப திவைசெயல்கள்‌
இழைப்பதற்‌ கோர்துணை இன்றித்‌ தனதிடத்‌ தாக்குமவன்‌
இழைப்பவன்‌ மார்வத்‌ திருந்துநீ ரீதின்‌ இகந்தெவையும்‌
இழைப் பவற் கொண்டே இணை இல் பேரின்பத்‌ திருத்துவீரே–41-

உலகங்களைப்‌ படைத்தலும்‌, காத்தலும்‌, அழித்தலும்‌ என்ற முத்தொழில்களையும்‌ பிறருதவியின்றி எம்பெருமான்‌ தானே தனதிடத்தே நிகழ்த்தும்‌ போது, தேவரீர்‌ திருமார்பில்‌ பிரியாமல்‌ உறைந்து கொண்டு முத்தொழில்களிலும்‌ தொடர்பின்றி, எல்லா உயிர்களும்‌ எம்பெருமானைக்‌ கொண்டே, இணையில்லாப்‌ பேரின்ப உலகமாகிய பரம பதத்தில்‌ சேர்வதற்கு ஆவன செய்கின்றீர் –

இருத்துவீர்‌ நான்முக னாதி எவரையும்‌ தம்பதத்தே
இருத்துவீர்‌; தாளடையாரை அவர்தம்‌ இருவினையில்‌
இருத்துவீர்‌; தத்தம்‌ வரம்புடை யார்தம்‌ இயல்பறிந்து
இருத்துவீர்‌; தஞ்சமா ஈரிணைத்‌ தாள்களில்‌ தொண்டுடனே–42-

நான்முகன்‌ முதலிய தேவர்களை அவரவர்‌ பதவிகளில்‌ நிலையாகப்‌ பலகாலம்‌ வரை இருக்கச்‌ செய்கின்றீர்‌. உம்மை வணங்காதவர்களை அவரவர்‌ நல்வினை தீவினைகளுக்கேற்பப்‌ பயன்‌ தந்து நுகரும்‌ வண்ணம்‌ வாழ்க்கையிலிருக்கும்படி காலம்‌ கழிக்க வைக்கின்றீர்‌. ஆன்மாநந்தமே போதும்‌ என்ற வரம்புடையவர்களை கைவல்யத்திருக்கச்‌ செய்கின்‌றீர்‌. உம்மையே தஞ்சமாக துடைந்த அடியார்களை நும்மிருவருடைய இணைந்துள்ள திருவடிகளில்‌ செய்யும்‌ திருத்தொண்டை நிலையாக ஈடுபடுத்துகின்றீர் –

தொண்டினை யன்றிச்‌ சுகமே? உலகொரு நாயகமே
தொண்டினை யன்றிச்‌ சுவர்க மெனுமோர்‌ தனிச்சுகமே?
தொண்டினை யன்றி உயிர்சுகத்‌ தாழ்தல்‌ ஒருசுகமே?
தொண்டினை யன்றிக்‌ குழாத்தொடும்‌ உந்தம்‌ தொண்டுமொன்நே? –43-

உமது திருவடிகளில்‌ தொண்டு செய்வதால்‌ ஏற்படும்‌ இன்பம்‌ உலகொரு நாயகமாக ஆளும்‌ தலைமையாலும்‌ கிட்டாது. இதனை ஒத்த இன்பம்‌ சுவர்கம்‌ முதலான எவ்வுலகத்திலும்‌ இல்லை. இதனை ஒத்த இன்பம்‌ ஆன்மா தன்னைத்‌ தானே அநுபவிக்கிற கைவல்யீத்திலும்‌ இல்லை. தங்கள்‌ திருவடிகளில்‌ அடியார்‌ குழாத்தொடும்‌ ஒன்றிச்‌ செய்யும்‌ தொண்டே பேரின்பம்‌ பயப்பது. தனித்துச்‌ செய்யும்‌ தொண்டு பேரின்பம்‌ பயவாது –

ஒன்றும்‌ அறிந்திலன்‌ ஒள்ளிய உம் தம் அருள் பெருக்கை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ எம்மான்‌ பரத்துவத்‌ துண்மைதனை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ அணுவில் விபூவினை உட்படுத்தல்
ஒன்றும றிந்திலன்யான்‌ எங்கும்‌ அணுநீர்‌ எனவொத்தே–44

மேம்பட்ட தாயாகிய உம்முடைய அருள் வெள்ளம்‌ பற்றி ஒன்றும்‌ அறியேன்‌ அடியேன்‌. அது போலவே எம்பெருமானுடைய மேலார்க்கும்‌ மேலானாகிய, உண்மையும்‌ அறியேன்‌. எங்கும்‌ பரந்திருக்கும்‌ தனித் தன்மையை உடைய எம்பெருமான்‌ அணுவளவினதாகிய ஆன்மாவுக்குள்‌ மறைந்திருப்பதையும்‌ அணு அளவு நுண்ணிய தாங்கள்‌ எங்கும்‌ பரவியிருக்கும்‌ விபுவாகிய எம்பெருமான்‌ அளவினை ஒத்திருப்பதனையும்‌ அறியேன்-

ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபேய நிலைதனக்கு எவ்வுயிர்க்கும்‌
ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபாய நிலையில்‌ புருடகாரம்‌
ஒத்திருந்‌ தேயுநீர்‌ காக்கும்‌ நிலையில்‌ உடனருள்வீர்‌
ஓந்திருந்‌து அண்மையில் நீக்கும்‌ தொழிலில்‌ உடன் இருப்பே-45-

எம்பெருமான்‌ எல்லா உயிர்களுக்கும்‌ சென்று சேரத்தக்க பயனாகிய நிலையில்‌ இருக்கும்போது உயிர்களுக்கு இன்பம்‌ அருளும்‌ நிலையில்‌ தாயாகிய நீங்கள்‌ எம்பெருமானை ஒத்திருப்பீர்‌. உயிர்‌ எம்பெருமானை அடையும்‌ உபாய நிலையில்‌ பரிந்துரைக்‌ கூறி, உயிர்களைப்‌ பாதுகாக்கும்‌ தொழிலில்‌ எம்பெருமானோடு உடனிருந்து செயல்படுகின்றீர்‌. அவன்‌ பக்கலில்‌ உடனிருந்தும்‌ அவன்‌ செய்யும்‌ அழித்தல்‌ தொழிலையும்‌ ஆமோதிக்கிறீர்-

ஒட்டிலிர்‌ எம்பிராற்‌ சேடம்‌ உளதன்றிப்‌ புன்னிமயொன்றும்‌
ஒட்டிலீர்‌ ஒன்றும்‌ சுதந்திரம்‌ இன்றன்றிப்‌ பண்பிலதில்‌
ஒட்டிலீர்‌ இவ்விரு தன்மையும்‌ இன்றி ஒருகுறையும்‌
ஒட்டிலீர்‌ உம்பர்கோன்‌ சேதநர்‌ பற்றருள்‌ மற்றவையே –46-

தாயாராகிய தாங்கள்‌ எம்பெருமானுக்கே யடிமையாயுள்ளீர்‌. மற்றவர்‌ திறத்து அடிமையாம்‌ கீழ்மை யன்றித்‌ தலைவியாக உள்ளீர்‌. தங்களுக்கு எம்பெருமானை விடுத்துச்‌ சுதந்திரம்‌ இல்லை.-எம்பெருமானுக்கு அடிமை-மற்றவருக்குத்‌ தலைமை. ஏனைய உயிர்‌ பண்புகள்‌ யாவுக்‌கும் நிபந்தனம்‌ என்ற இரு தன்மை அன்றி நுமக்கு குறை தரும்‌ பண்புகள்‌ எதன்‌ கண்ணும்‌ தொடர்பில்லை. எம்பெருமான்‌ திறத்துப்‌ பற்றும்‌ உயிரினங்கள்‌ திறத்தருளுவதன்‌றி மற்றைய கீழான பண்புகளோடு தொடர்புடையீ ரல்லீர் –

மற்றவை தாம்சுவை, யற்றவை மாயையை யாரறிவார்‌?
மற்றவை தாம்சுவை யுற்றவை யாமென மாலுமிதே
மற்றவை தாமற்ப சாரம்‌ உயிர்ச்சுவை மாரணமே
மற்றவை தீர்ந்தும்‌ தொண்டர்‌ குழுவுடன்‌ வாழ்சுவையே –47-

உம்‌ திருத்தொண்டு தவிர ஏனையவை சுவையற்றவையாகவும்‌,சேதனன்‌ அவற்றை சுவையுடையனவாகக்‌ கருதச்‌ செய்யும்‌ உமது மாயையின்‌ ஆற்றலை அறியவல்லவர்‌ யார்‌? மற்ற பொருள்கள்‌ சுவையுள்ளன என்று சேதனன்‌ கருதுதல்‌ மாயையின்‌ மயக்கமே. ஏனைய புலனின்பங்கள்‌ மிகக் குறைவான சுவை புடையனவே. மரணமாகிய கைவல்யம் முதலான இவற்றை விடுத்து நும்‌ தொண்டர்‌ குழாத்தொடும்‌ வாழும்‌ சுவையே மேம்பட்ட சுவையாகும் –

வாழ்சுவை மிக்கசீர்த்‌ தொண்டர்க்‌ கமுதெனும்‌ வாய்மொழியும்‌
வாழ்சுவைப்‌ பேருரை ஐவர்‌ வழங்கிய கோலமுடன்‌
வாழ்சுவை மிக்க கலியன் சொல்‌ மாலையா றங்கமுடன்‌
வாழ்சுவை வேரிமா மாறாத பூமேல்‌ இருப்பருளே–48-

மேம்பட்ட நறுமணம்‌ மாறாத தாமரை மேல்‌ இருக்கும்‌ பெருமாட்டியே! நல் வாழ்வுக்கு உரிய சுவை மிக்க சிறப்பினையுடைய தொண்டருக்கு அமுதம்‌ எனப்படும்‌ திருவாய்மொழியும்‌, இந்நூலுக்குத்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌, நஞ்சீயர்‌, வாதிகேசரி, பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை சொன்னதை ஏடுபடுத்திய வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை இவர்கள்‌ வழங்கிய ஐந்து உரைகளும்‌ ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்‌ னீராயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று போற்றப்படும்‌ அழகிய ஐந்து உரைகளும்‌, மேம்பட்ட திருமங்கை மன்னன்‌ அருளிய பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌, சிறிய திருமடல்‌, பெரிய திருமடல்‌, திவெழுகூற்றிருக்கை என்ற பெயர்களையுடையதாய்‌ அருளிய சொல்‌ மாலைகளும்‌ உன்‌ அருளால்‌ ஏற்பட்டனவாகும் –

இருப்பதும்‌ வந்தும்‌ உறைவதும்‌ ஏற்றசீர்த்‌ தாமரையே
இருப்பதும்‌ நாச்சியார்‌ கோயிலும்‌ வெள்ளறை ஏருறையூர்‌
இருப்பதும்‌ எல்லா இதய கமலத்‌(து) இறைவனுடன்‌
இருப்பதும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்த இறையுடனே–49-

உனக்குப்‌ பொருத்தமான சிறப்பை யுடைய தாமரையே நீ காட்சி வழங்குமிடமும்‌ தோன்றுமிடமும்‌, நிலையாத்‌ தங்கி இருக்குமிடமும்‌, நீ கோயில்‌ கொண்டிருக்கும்‌ திருப்பதிகள்‌ திருநறையூர்‌, திருவெள்ளறை, திருஉறையூர்‌, முதலியனவும்‌. ஆன்மாக்களின்‌ இதய தாமரைகளும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்தும்படி இறைவனுடன்‌ வீற்றிருக்கும்‌ பரமபதமும்‌ உனக்கு நிலையான இருப்பிடங்களாகும் –

இறையுடன்‌ எவ்வெப்‌ பிறப்பினும்‌ தோன்றல்‌ இணக்கமுடன்‌
இறையுடன்‌ சேர்ந்திருந்‌ தெவ்வெவ்‌ வளத்தினு முந்துகிறீர்‌
இறையுடன்‌ சேர்ந்தே பரனெனும்‌ ஏற்றம்‌ விளைப்பதுவே
இறையுடன்‌ சேர்க்கவும்‌ இன்பநீர்‌ சேதனர்‌ ஏற்பதுவே –50-

எம்பெருமான்‌ எடுக்கும்‌ எவ்வெவ்வதாரத்திலும்‌ அவன்‌ திருவுள்ளத்துக்கு ஏற்பவே தோன்றுதலும்‌, எம்பெருமானுடன்‌ சேர்ந்திருந்தே எல்லா அறங்களிலும்‌ முற்பட்டு செயற்படுதலும்‌, எம்பெருமானை நீர்‌ சேர்ந்திருந்திருப்பதாலேயே அவனுக்கு எல்லாரிலும்‌ மேம்பட்டவன்‌’ என்று ஏற்றம்‌ விளைவிப்பதும்‌, எம்பெருமானுடன்‌ ஆன்மாக்களைச்‌ சேர்ப்பதும்‌, அவற்றை அவன்‌ ஏற்றுக்‌ கோடலும்‌ ஆகியவை அனைத்தும்‌ தாயாராகிய உங்களுக்கு மதிப்புடைய செயல்களாகும் –

ஏற்பதும்‌ எல்லா உலகும்‌ இணையில்‌ தனம்விரும்பி
ஏற்பதும்‌ ஞாநிகள்‌ எல்லாம்‌ பரனிடம்‌ சேர்ந்திடவே
ஏற்பதும்‌ நித்தரும்‌ முத்தரும்‌ தந்தொண்‌ டெழிலுறவே
ஏற்பதும்‌ எம்மான்‌ அகத்தெழில்‌ நீர்தாம்‌ முகத்தெளிவே–51-

எல்லா உலகத்திலுள்ளவர்களும்‌, ஒப்பற்ற செல்வத்தை விடும்‌ ஞாநிகள்‌ எல்லோரும்‌ தம்மை எம்பெருமானிடம்‌ சேர்ப்பிப்பதை விரும்பியும்‌, நித்தியசூரிகளும்‌, முத்தி பெற்றுப்‌ பரமபதத்திலுள்ளவர்களும்‌, தங்கள்‌ தொண்டுசிறக்க அவர்களால்‌ வழிபடப்படுகின்ற தாங்கள்‌ எம்பெருமான்‌ உள்ளத்தெய்தும்‌ உகப்பைக்‌ சுண்டு, அதனால்‌ ஏற்படும்‌ மகிழ்வால்‌ முகத்தின்‌ தெளிவான அழகைப்‌ பெற்றுள்ளீர்கள் –

முகத்தெளி வுள்ள தறிவிலார்க்‌ குத்தனம்‌ முந்துதலால்‌
முகத்தெளி வுள்ளதாம்‌ மூதறி ஞர்தமது மெய்யுணர்வால்‌
முகத்தெளி யுண்டாம்‌ பரனுக்குத்‌ தம்மை முகந்தளிப்பால்‌
முகத்தெளி வுண்டாம்‌ முகம்பரன்‌ சீர்தனைக்‌ கண்டுமக்கே–52-

அறிவில்லாதார்க்கு செல்வம்‌ மிகுதலினாலே முகத்தெளி வேற்படுகிறது. உண்மை யறிவுடையவர்களுக்குத்‌ தத்துவ ஞானத்தால்‌ முகத்தெளிவுண்டாகிறது. மெய்யடியார்கள்‌ தம்மை முற்றவும்‌ வழங்குதலால்‌ அப்பரனுக்கு உள்ளத்துகப்பால்‌ முகத்‌ தெளிவுண்டாகிறது. எம்பெருமான்‌ உகப்பைக்‌ கண்டு உகத்தலால்‌ தாயாராகிய உமக்கு முகத்தெளிவும்‌ மகிழ்ச்சியுமேற்படுகிறது –

உமக்கொரு பாதப்‌ பயனாம்‌ உலகோர்‌ செழிப்புறவே
உமக்கொரு பாதிப்‌ பயனாம்‌ சுவர்க துற்றிடுதல்‌
உமக்கொரு முக்கால்‌ பயனாம் தமதியல்பு ஊர் புகுதல்‌
உமக்கொரு முற்றாம் அடியார் குழுவில்‌ உடனிருப்‌பே –53-

உலகவர்‌ செழிப்புறும்‌ செயல்‌ எம்பெருமானுக்கும்‌, தாயாராகிய உமக்கும்‌ காற்பங்கு மகிழ்ச்சியாகிய பயனைத்‌ தருகிறது; ஆன்மாக்கள்‌ சுவர்க்க இன்பம்‌ அடைதலால்‌ உமக்கு அரைப்பங்கு மகிழ்ச்சியாகிய பயன்‌ கிட்டுகிறது; ஆன்மாக்கள்‌ வீட்டுலகம்‌ அடைந்து கைவல்லிய இன்பம்‌ நுகர்தலைக்‌ கண்டு உங்களுக்கு முக்காற்‌ பங்கு மகிழ்ச்சிப்‌ பயன்‌ ஏற்படுகிறது; அடியார்‌ குழாத்தில்‌ நடுவில்‌ நீவிர்‌ இருவரும்‌ இருப்பது உமக்கு நிறை மகிழ்ச்சியாகிய பயனை உண்டாக்குகிறது –

அடியார்‌ குழாங்களைக் காணுதல் வாய்ப்பென்‌ றறிவளித்திர்‌
அடியார்‌ குழாங்களைக் காணும்‌ பெரும்பயன்‌ ஆய்ந்தளித்தீர்
அடியார்‌ குழாத்தின்‌ அகத்துறை பேரின்பம்‌ ஈந்தநீரே
அடியார்‌ அடிசூடும்‌ பேரரசாள நினைப்பிரன்றே–54-

அடியார்‌ குழாங்களைக்‌ காணுதலே உண்மையான செயல்‌ என்ற அறிவைத்‌ தந்துள்ளீர்‌. அதனால்‌ ஏற்படும்‌ பெரும்‌ பயனை அடியேன்‌ பெறுமாறு என்‌ நிலையை ஆராய்ந்தருள்‌ செய்தீர்‌. அடியார்‌ குழாத்துள்‌ அடியேனும்‌ ஒருவனாக அவருடனே இணைந்து தங்கும்‌ வாய்ப்பினை நல்கிய தாங்களே, அடியேன்‌ அடியார்களுடைய திருவடிகளைத்‌ தலையில்‌ சூடி மகிழ்தலாகிய பெரிய அரசாட்சியை அருளுமாறு திருவுள்ளம்‌ பற்ற வேண்டும்‌-

நினைப்பதும்‌ எல்லா உயிர்களும்‌ உய்யுமா நீக்கமின்றி
நினைப்பதும்‌ எம்பிரான்‌ காப்பும்‌ நிகில செயல்நலங்கள்‌
நினைப்பதும்‌ தேவிகள்‌ மற்றவர்‌ நும்போல்‌ நினைவுகொள்ள
நினைப்பதும்‌ செவ்விதான்‌ நீள உபய விபூதியுமே –55-

எல்லா உயிர்களும்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமாகிய நும்மை நீங்காமல்‌ பற்றிப்‌ பிறவித்‌ துயரிலிருந்து பிழைத்து வீடு பேறுஅடையுமாறும்‌, எம்பெருமானுடைய காத்தல்‌ செயலோடு ஏனைய செயல்களும்‌ முறையாக நிசுழுமாறும்‌, எம்பெருமானுடைய தேவியருள்‌ ஏனையராகிய மண்மகளும்‌, ஆயர்‌ மடமகளும்‌, நும்மைப்‌ போன்ற நினைவினையே கொள்ளுமாறும்‌, லீலா விபூதியும்‌ நித்திய விபூதியையும்‌ தொடர்ந்து எல்லா நலன்களும்‌ பெறுமாறும்‌ தாயாகிய நீங்களே திருவுள்ளம்‌ பற்றியுள்ளீர்கள் –

விபூதி விபூதிமான்‌ நும்நோக்கில்‌ உள்ளதும்‌ ஓர்பொருளே!
விபூதி விபூதிமான்‌ உந்தம்சீர்‌ சார்பன்றி உள்ளதாமே?
விபூதி விபூதிமான்‌ சீரலர்‌ மேல்மங்கை உம்மதாட்சி
விபூதி விபூதிமான்‌ உந்தம தேர்கடைக்‌ கண்ணதன்றே–56-

அலர்மேல்‌ மங்கையீரே! ஈருலகமும்‌ அவற்றையுடையானும்‌ நும்பார்வை தம்மேல்‌ பதிவதாலேயே ஒப்பற்ற பொருள்களாகின்றன. உம்‌ தொடர்பின்றேல்‌ உலகுகளுக்கும்‌ அவற்றை உடையானுக்கும்‌ நிறை நலம்‌ ஏற்படுமா? உலகுகளும்‌ உம்‌ அன்பிற்கு வசப்பட்ட உடையானும்‌ உம்‌ செல்வங்களாம்‌. எல்லா உலகுகளும்‌ உம்‌ கடைக்கண்‌ நோக்கினை எதிர்நோக்கி உள்ள பொருள்களே –

உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றயி ராணிதன்கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே மலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே கலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றதே தாமரையே –57-

உம்‌ கடைக்கண்ணின்‌ அருள்‌ நோக்கத்தின்‌ பல கூறுகளில்‌ ஒரு கூறு தம்மீது பொருந்தியதனால்‌ இந்திராணியும்‌, பார்வதியும்‌, நாமகளும்‌ சிறப்புறுகின்றனர்‌. அங்ஙனமே பெருமானுடைய தாமரைக்‌ கண்களும்‌ வீறுபெற்று விளங்குகின்றன-

தாமரைக்‌ கண்ணன்‌ தகவிலை அன்றே கதிர் முழக்கே
தாமரைக்‌ கையய யம்மேலும்‌ வீடணர்த்‌ தாழ்ததியதே
தாமரைத்‌ தாள்பிறப்‌ பீர்பதாச்‌ சொல்லுதல்‌ சொல்லளவே
தாமரைத்‌ தந்தநும்‌ மொக்கும்‌ உபய விபூதிவேந்தே–58-

எம்பெருமான்‌ தாமரைக்‌ கண்ணனாய்‌ இருக்கும்‌ செயல்‌ உன்னீடில்லாக்‌ கதிர்‌ முழக்குப்‌ போன்ற வெளி அழகு மாத்திரமே. எம்பெருமானுடைய தாமரைக்கை அபய முத்திரை உடையதேனும்‌ அவனைத்‌ தஞ்சமென்றடைந்த விபீஷணாழ்வானை ஐயுறச்‌ செய்தது. எம்பெருமானுடைய தாமரைத்‌ திருவடிகள்‌ அடியாருடைய பிறவிப் பிணியைப்‌ போக்குவன என்ற செய்தி அடியேங்கள்‌ பக்கல்‌ செயற்படுவதாகத்‌ தெரியவில்லை. தாமரையில்‌ தோன்றிய தாயாராகிய தங்களை ஈருலக வேந்தனாகிய எம்பெருமானும்‌ ஒப்பானோ-

வேந்தர்‌ தலைவன்‌ தயரதன்‌ மேலாம்‌ மருகிமானீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ சனகன்‌ விரும்பும்‌ திருமகள் நீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ இராமன்‌ வியத்தகு தேவியானீர்‌
வேந்தர்‌ தலைக்கடை வேசரி நாசமாக்‌ கண்டீர்‌ நீரே–59-

அரசர்‌ தலைவர்களாகிய தயரதற்கும்‌ சனகர்க்கும்‌, இராமபிரானுக்கும்‌ முறையே மருமகளும்‌, விரும்பி வளர்த்த செல்வமகளும்‌, வியத்தகு தேவியுமாகிய தாங்கள்‌, அரசருள்‌ கடைப்பட்ட கோவேறு கழுதை போன்ற இராவணனைப்‌ பூண்டோடு அழியுமாறு செய்தீர் –

நீரே பரம புருடன்‌ புருடனா நிரணமிப்பீர்‌
நீரே உயிர்கள்‌ உடையான்‌ அணையுமா நேர்ந்திடுவீர்‌
நீரே அடியான்‌ பணியவன்‌ உள்ளம்‌ நிலைக்கவைப்பீர்‌
நீரே இவன் செயும்‌ தொண்டை நினைத்து மகிழவைப்பீர்‌–60-

நீரே எம்பெருமானைக்‌ கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தீர்‌. நீரே ஆன்மாக்களை எம்பெருமான்‌ தன்னோடு பொருந்துமாறு ஏற்றுக்‌ கொள்ளுதற்குரிய பரிவுரை கூறிச்‌ சேர்த்து வைப்பீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ திருத்‌ தொண்டினை எம்பெருமான்‌ உகந்தருளுமாறு அவன்‌ உள்ளத்தில்‌ நிலைபெறச்‌ செய்வீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ தொண்டுகளை நினைத்து எம்பெருமான்‌ மகிழுமாறு செய்வீர் –

மகிழ்வீர்‌ மணாளன்‌ படைத்ததைக்‌ காத்திவை யீர்ப்பிதனை
மகிழ்வீர்‌ மணாளன்‌ சராசரம்‌ பந்தென ஆடுசெயல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ உலகம்‌ முறையுடன்‌ பாலடைதல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ வனமாலை சேர்திரு மார்பினையே–61-

நீரே உங்கள்‌ மணாளனாகிய எம்பெருமான்‌ உலகைப்‌ படைத்துக்‌ காத்து ஊழிக் காலத்தில்‌ அவற்றை வயிற்றினிட்டு மறைப்பதனையும்‌, இவ்வுலகத்து உயிர்களை அவன்‌ பந்து போல ஆட்டுவித்தலையும்‌, உலகத்துயிர்கள்‌ தத்தம்‌ பக்குவத்திற்கு ஏற்ப முன்னோ பின்னோ அவன்பால்‌ அடைதலையும்‌ கண்டு, மகிழ்தலோடு எம்பெருமானுடைய வனமாலை அணிந்துள்ள மார்பினை உங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு மகிழ்வீர் —

மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய வெண்மை முதலுகத்தும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ நீர்கொளும்‌ செம்மை மறுயுகத்தும்
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய சாமளம்‌ மூன்றினிலும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ கொள்‌ளுவான்‌ மாநிறம்‌ நான்கினி்‌லே -62-

அலர்மேல்‌ மங்கையீர்‌! நீர்‌ எம்பெருமான்‌ திருமார்பினை விடுத்துத்‌ தனியே ஊஞ்சலில்‌ ஆடும்‌ போது கொள்ளும்‌ வெண்ணிறத்தைக்‌ கிருத யுகத்தும்‌, பின்‌ ஒருகால்‌ செம்மை நிறத்தைத்‌ திரேதா யுகத்தும்‌, மீண்டும்‌ ஒருகால்‌ கொள்ளும்‌ நீல நிறத்தைத்‌ துவாபர யுகத்தும்‌, மறுபடியும்‌ ஊழியாகிய கலியுகத்தும்‌ எம்பெருமான்‌ கரு நிறமும் முறையே தனக்குரிய நிறங்களாக்‌ கொண்டுள்ளான்-

நான்கெனும்‌ வேதம்‌ நவில்வநுங்‌ கீர்த்தியே நானிலத்தே
நான்கெனுந்‌ தோளால்‌ நலனுற சார்வதே நாரணனாம்‌
நான்கெனுந்‌ தாளால்‌ நடையறம்‌ பெற்ற நுமதுநோக்கின்‌
நான்கெனும்‌ மார்க்கம் நலமிகு மார்க்கம் செலுத்துவீரே –63-

தாயீர்‌! நான்கு வேதங்களும்‌ கூறுவன இறைவன்‌ புகழே-நாரணனாகிய எம்பெருமான்‌ தன்‌ நான்கு தோள்களாலும்‌ மகிழ்வுறத்‌ தழுவவது உம்மையே- உம் பார்வையாலேயே அறம்‌ என்னும்‌ பசு நான்கு கால்களால்‌ நடக்கிறது-கர்ப்பம்‌, யாம்யம்‌, தூமம்‌, அர்ச்சிராதிகதி என்ற நான்கு கதிகளுள்‌ நன்மை மிக்க அர்ச்சிராதிகதி மார்க்கத்தில்‌ உம்‌ அடியார்களை எம்பெருமானைக் கொண்டு செலுத்துவீராக —

செலுத்தும்‌ வினைகளைத்‌ தீய்ந்திடச்‌ செய்யும்‌ உமதருளை
செலுத்தும்‌ படைப்புப்‌ பதம்பெறு வானுறும்‌ சீரருளே
செலுத்தும்‌ சதமகன்‌ மூவுல காட்சி நும்சீரருளே
செலுத்துநும்‌ நேர்மைசால்‌ சீர்மை உபய விபூதிமனே –64-

துயரத்தில்‌ செலுத்தும்‌ கரும பயன்களை உமது அருள்‌ அழித்து ஒழிக்கும்‌. பிரமன்‌ படைப்புத் தொழில்‌ செய்வதும்‌, இந்திரன்‌ மூவுலகம்‌ ஆளுவதும்‌, எம்பெருமான்‌ தன்‌ இரு செல்வங்களாகிய உலகங்களை ஆட்சி செய்வதும்‌ நும்‌ இச்சையின்‌ பொருட்டே –

விபூதி பெறுமே விலகி நும்‌ பார்வை தனதனேலும்
விபூதி நும் கூட்டின்றி வில்வமே யாயின்‌ விளைவதுண்டே?
விபூதிசால்‌ இந்திர போகம்‌ விளையுமே? வாசவற்கும்‌
விபூதி விளைக்கும்‌ அருளன்றி உண்டே? எவர் தமக்கே–65-

நும்‌ அருட்பார்வை விலகின்‌ செல்வத்துக்கு உரிய குபேரனும்‌ செல்வத்தைப்பெறுதல்‌ இயலுமா? வில்வத்தினால்‌ கூட உம்‌ தொடர்பில்லையேல்‌ செல்வம்‌ விளைத்தல்‌ இயலுமா? உம்‌ அருளினாலேயே இந்திரனுக்கும்‌ செல்வம்‌ மிக்க தேவ இன்பம்‌ விளைகிறது. செல்வத்தை நல்கும்‌ உம்‌ அருளன்றி ஒருவருக்கும்‌ எவ்வகைச்‌ செல்வமும்‌ கிட்டாது —

தன்னலம்‌ நீத்துப்‌ பிறர் நலம்‌ பேணுமித்‌ தாயினம்யார் ?
தன்னலத்‌ தாழ்வில்‌ தரிக்கிலர்‌ மூவராந்‌ தேவதேவர்‌
தன்னலத்‌ தாழ்விலர்‌ முப்பத்து முக்கோடி தேவர்தாமும்‌
தன்னலம்‌ நீத்தல்‌ உபய விபூதிக்கும்‌ தாயதாலே–66-

மூம் மூர்த்திகளும்‌ தன்னலம்‌ குறைந்தால்‌ அமைதி யுற மாட்டார்கள்‌-முப்பத்து மூவருடைய வரிசையில்‌ சேர்ந்த தேவர்களும்‌, தன்னலம்‌ தாழ்வதைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. தன்னலத்தை விடுத்துப் பிறர்‌ நலத்துக்காகவே வாழும்‌ தாய்க் குலம்‌ உம்‌ அம்சமே. நீர்‌ ஈருலகங்களுக்கும்‌ தாயராக இருப்பதால்‌ தன்னலம்‌ நீத்துச்‌ செயல்‌ புரிகிறீர் —

தாயெனக்‌ கோடல்‌ சசியும்‌ உமையும்‌ கலைமகளும்‌
தாயெனச்‌ சித்திதே வானை பிடாரி குறமகளும்‌
தாயெனப்‌ பத்தினித்‌ தெய்வ மாச்சாற்றும்‌ மகளிரெல்லாம்‌
தாயெனும்‌ நீயெனும்‌ பொருளன்றி மற்றைத்‌ தகவுளதே–67-

உலகவர்‌ தாய்மார்‌ என்று போற்றும்‌ இந்திராணியும்‌, உமா தேவியும்‌, கலை மகளும்‌, சித்தி தேவியும்‌, தெய்வானை அம்மையாரும்‌. பிடாரியும்‌, வள்ளியும்‌, தாயார் என்று போற்றப்படும்‌ பத்தினிப்‌ பெண்டிரும்‌ உம்மைப்‌ போன்ற தாயாவார்களா? ஈருலகிற்கும்‌ தாயெனப்படும்‌ உன்னுடைய அம்சமே என்று கூறுவதைத்‌ தவிர வேறு பொருளுடைய சொற்றொடர்‌ உள்ளதோ?-

உளதே? கருணை சால்‌ சீலம்‌ உமதிரு பாலதன்றி
உளதே? உலகவர்‌ தாய்தந்தை மற்றுள உற்ற சுற்றம்‌
உளதே? அணுவும்‌ விபுவுமாய ஒன்றிலும்‌ நீக்கமின்மை
உளதே? உபாயமும்‌ பேறாம்‌ உயர்வுறு மிக்க பண்பே –68-

பெருமானும்‌ நீருமாகிய இருவர்‌ பக்கத்தலன்‌றி வேற்றுத்‌ தெய்வங்கள்‌ பால்‌ கருணையும்‌ அதற்கேற்ற செயலும்‌ உளவோ? மற்ற தெய்வங்கள்‌ உங்கள்‌ இருவரைப்‌ போல்‌ உலக மக்களுக்குப்‌ பெற்றோரும்‌ சுற்றமும்‌ ஆவாரோ? நீரும்‌ எம்பெருமானும்‌ அணுவும்‌ விபவுமாய்‌ இருந்து உடல் மிசை உயிர்‌ எனக் கலந்து பரந்திருக்கும்‌ செயல்‌, மற்ற தெய்வங்கள்‌ பால்‌ உண்டோ? வீட்டிற்கு நிமித்தப்‌ பொருளான உபாயமும்‌ உபயே யமுமாக இருக்கும்‌ உயர் தன்மை உங்கள்‌ இருவர் பால்‌ அன்றி மற்ற தெய்வங்கள்‌ பக்கம்‌ உள்ளதோ?

பண்பிவை நுந்தம்‌ பரனுக்‌ கடிமை பிறிதிலின்மை
பண்பிவை நுந்தம்‌ பரனருட்‌ சார்பன்றி சார்பிலதாம்‌
பண்பிவை நுந்தம்‌ பரனுகப்‌ பின்முகம்‌ பூப்பதுவே
பண்பிவை நீழல்‌ பரன்சார்‌ புளதில தோர் வழக்கே–69-

எம்பெருமானுக்கே அடிமையா யிருத்தலன்‌றிப் பிற தெய்வங்களுக்கு அடிமையா யிருக்கும்‌ பண்பு நும்மிடம்‌ இல்லை. எம்பெருமான்‌ அருளைச்‌ சார்தலன்றிப்‌ பிற சாதனங்களைப்‌ பின்பற்றாமை நும்‌ பண்பாகும்‌. எம்பெருமான்‌ உகப்பிணைக்கண்டு உகத்தலே நும்‌ பண்பு-எம்பெருமானுடைய நிழலாக அவனைப்‌ பிரியாது இருப்பதும்‌ நும்‌ பண்பு. இப் பண்புகள்‌ எம்பெருமான்‌ சார்பு உளதேல்‌ நும் பால்‌ உண்டு. இலதேல்‌ நம்பால்‌ இல்லை- எனவே, நீர்‌ என்றும்‌ எம்பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் –

வழக்கோ நன்‌ மக்கள் பால்‌ தீர்ந்து புன்‌ மக்கள்பால்‌ சார்வதுவே
வழக்கோ? சிறைக்கண்யம் தேவ மகளிர் சிறை கழிப்பீர்
வழக்கோ? மண் மாதர்‌ சிறை எமைத் தீர்ப்பதை பார்த்திருப்பீர்‌
வழக்கோ? படு துயர் யாம் கண்டு கத்தல் மணாளனோடே –70-

தாயாராகிய தாங்கள்‌ நன் மக்கள்‌ பக்கலினின்று நீங்கிப்‌ புன் மக்கள் பக்கல்‌ சேர்வது முறையோ? அடியவராகிய நாங்கள்‌ பிறவிச்‌ சிறையில்‌ கிடக்கவும் சிறைப்பட்டுத் தேவ மகளிரைத் தாங்கள் சிறைவீடு செய்தமை முறையோ – பூ மடந்தை கோதை நாச்சியராக அவதரித்து எமக்கு மெய்யுணர்வு அளித்து எம்மைப்‌ பிறவிச் சிறையிலிருந்து விடு விப்பதனை நீங்கள்‌ பார்த்துள்ளீர்கள்‌. நாங்கள்‌ படுந்துயரைக் கண்டும்‌ அதனைப்‌ போக்க முயலாது தங்கள்‌ மணாளனாகிய எம்பெருமானுடன்‌ தாங்கள்‌ உகந்திருப்பது முறையோ

ஓடுங்‌ கறங்கன்ன ஊழ்வினைச்‌ சூழலில்‌ ஒத்திருப்போம்‌
ஓடுங்‌ கறங்கின்‌ உலகியல்‌ ஒன்றின்பின்‌ ஒன்றுறுவ
ஒடுங்‌ கறங்கின்‌ இறை நெறி ஆம்பரிசு ஊர்ந்தலைப்ப
ஓடுங்‌ கறங்கிவை வீடுசெய்‌ யுந்தங்கண்‌ நோக்கிலதே–71-

உம்முடைய கடைக்கண்‌ நோக்கம்‌ எம்மேல்‌ பதியாததால்‌ முன்செய்த வினைகளால்‌ காற்றாடிபோலச்‌ சுழற்றப்படுகிறோம்‌. உலகியல்‌ வாழ்வும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக எங்களைச்‌ சுழலச்‌ செய்கின்றன, பல தெய்வங்களையும்‌ வழிபடும்‌ ஆராதனைகள்‌, நெறிமுறைகள்‌ போல்வன எம்மை அணுகி சுழல்விக்கின்றன. இச் சுழற்சி களிலிருந்து எங்களை விடுவிக்கத்‌ தங்களாலேயே இயலும் –

நோக்கில தாயிடின்‌ உள்ளதோர்‌ நுண்ணறிவு யார்க்குளதாம்‌?
நோக்கில தாயின்‌ நுவலுமி யாவும்‌ நிலை பெறுமே?
நோக்கில தாயின்‌ நுவல்படைப்‌ பீர்ப்பதும்‌ ஆமதுவே?
நோக்கில தாயின்‌ உகந்தருள்‌ நோன்தலம்‌ புல்லெழுமே–72-

உங்களுடைய அருள் நோக்கு இல்லையேல்‌ ஒருவருக்கும்‌ மெய் உணர்வு ஏற்படாது. எம்பெருமானுடைய உடைமைகளாகிய இயங்கியற் பொருள்ளும்‌ நிலையியற்‌ பொருளும்‌ நிலையாக இருக்கமாட்டா. எம்பெருமானுடைய படைத்தல்‌, காத்தல்‌, முதலிய செயல்களும்‌ முறையாக நிகழா? எம்பெருமாள்‌ உகந்தருகின்ற திருப்பதிகள்‌ யாவும்‌ தரிசிப்பார் இன்மையால்‌ புல்‌ தோன்றி வளரும்‌ பாழிடங்கள்‌ ஆகும் –

புல்லெழும்‌ நும்சார்‌ பிலதென்ன புண்ணிய நோன்பிடங்கள்‌
புல்லெழும்‌ புண்ணிய கேத்திரம்‌ புண்ணிய தீர்த்தங்களும்‌
புல்லெழும்‌ முத்தி தருமென போற்று நும்‌ ஏழ்தலமும்‌
புல்லெழும்‌ வேங்கடம்‌ சோலை நல்‌ வான மலையதுவே–73–

நும்‌ தொடர்பு இல்லை யெனின்‌ அறச் செயல்கள்‌ செய்வதற்கு ஏற்றன என்று போற்றப்படும்‌ புண்ணிய பூமிகளும்‌, புண்ணிய திருத் தலங்களும்‌,புண்ணிய தீர்த்தங்களும்‌, முத்தி தரும்‌ திருப்பதிகளாகிய அவந்தி அத்தினாபுரி, துவாரகை முதலியனவும்‌, எம்பெருமான்‌ உகந்தருளி யிருக்கும் வேங்கடமலை, வானமாமலை முதலியனவும்‌, பயன்‌ கொள்ளும்‌ அடியவருடைய வருகை இன்மையால்‌ பாழ் பட்டுவிடும்

மலையுமால்‌ நெஞ்சும்‌ பொறியும்‌ புலனொடு மாறி மாறி
மலையுமால்‌ முன்முன்‌ வினையும்‌ சுவையொடு வாசனையும்‌
மலையுமால்‌ தாபக்‌ கனலும்‌ மறித்து வரு பிறப்பும்‌
மலையுமால்‌ ஈங்கிதின்‌ வைத்திருப்‌ பான்றனைக்‌ கேட்கிலீரே–74–

இவ் வுலக வாழ்க்கையில்‌, நும்‌ அடியார்களை நெஞ்சமும்‌ அறிவும்‌ பொறியும்‌ புலன்‌ நுகர்ச்சியும்‌ செயற்‌ பொறிகளும்‌ தனித்தும்‌ கிளர்ந்தும்‌ நலியும்‌. பண்டைய வினைகளும்‌ அவற்றின்‌ வழிவரும்‌ சுவைகளும்‌ அவற்றின்‌ சுவடுகளும்‌ நலிகின்றன. ஆதியாத்மிகம்‌, ஆதிதைவிகம்‌, ஆதிபெளதிகம்‌ என்று கூறப்படும்‌ இடுக்கண் தரும்‌ மூவகைத்‌ தீக்களும்‌, மாறிமாறித்‌ தோன்றும்‌ பிறவிப்‌ பிணியும்‌ நலிவுறுத்துகின்றன. அடியார்கள்‌ படும்‌ இத் துயர்களை இம் மண்ணுலகில்‌ அவர்களை வைத்து வருந்தச்‌ செய்யும்‌ செயல்‌ பற்றித்‌ தாங்கள்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ வினவ மாட்டீர்களா –

கேட்கிலீர்‌ ஆய்பாடி வெண்ணை கவர்ந்துண்ணும்‌ கேவலத்தை
கேட்கிலிர்‌ முன்பகை வாய் வந்த கேட்டவன்‌ மேனிகொண்டான்‌
கேட்கிலீர்‌ பாஞ்சாலி மூர்க்கர்‌ கிளரவைக்‌ கூக்குரலைக்‌
கேட்கிலீர்‌ நீருமே பல்லூழி யான்படுங்‌ கேடிதையே–75-

எம்பெருமான்‌ ஆயர்பாடியில்‌ வெண்ணையைக்‌ களவினால்‌ உண்ணலாகிய இழி செயல்‌ செய்தான்‌. தன்‌ கண் முன்‌ பகைவனாய்‌ வந்து தன்னோடு பொருது உயிர் நீத்த சிசுபாலனுக்குத்‌ தன்‌ திருவடிமில்‌ இடம்‌ அளித்தான்‌. அரசவையில்‌ பாஞ்சாலியைக்‌ கெளரவரும்‌ அவரைச்‌ சேர்ந்தவர்களும்‌ பழித்துப்‌ பேசினர்‌. இவற்றைக்‌ குறித்து எந்த வினாவும்‌ எழுப்பாத தாங்கள்‌, பல ஊழிக் காலமாக அடியேன்‌ அனுபவிக்கும்‌ கேடுகளையும்‌ பற்றி வினவாதிருப்பதில்‌ வியப்பு ஒன்றும் இல்லை –

கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ பிணைதலும்‌ கேழிலதே
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உளத்துக்‌ கிளருமருள்‌
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ வடமறை நேருமொழி
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உபதேசக்‌ கேள்வியதே–76-

எம்பெருமானும்‌ நீங்களும்‌ சேர்ந்திருக்கும்‌ சேர்த்தியும்‌ உங்கள்‌ உள்ளத்தில்‌ மேன்‌ மேலும்‌ பெருகும்‌ அருளும்‌, வேதத்தை ஒத்து இனிய நும்‌ மொழிகளும்‌, இரக்கத்தால்‌ நீங்கள்‌ பிறருக்கு வழங்கும்‌ நல்லுரைகளும்‌ என்றும்‌ அழிவில்லாத பெரும்‌ புகழுக்கு உரியனவாம் –

கேள்விகொள்‌ வீர்நும கேள்வி யவன்கொள வையமுய்யும்‌
கேள்விகொண்‌ டானலன்‌ கேடுவுந்‌ துற்றதால்‌ கெட்டொழிந்தான்‌
கேள்விகொள்‌ வீரே சிறைப்பட்ட ரக்கியர்கே ழில்நிந்தை
கேள்விகொள்‌ வீர்பிற மாதர்தம்‌ கேடு தவிர்ப்பதற்கே–77-

அடியார்களுடைய குறைகளைச்‌ செவி மடுக்கும்‌ தாங்கள்‌ எம்பெருமானுக்கு அவற்றைத்‌ தெரிவிப்பதனால்‌ உலகவராம்‌ அவர்கள்‌ ‘நன்மை அடைகிறார்கள்‌. தங்கள்‌ சொற்களைக்‌ கேளாததனால்‌ கேடுகளை அடைந்து இராவணன்‌ அடியோடு அழிந்தான்‌. சிறையிலிருந்து அரக்கியர்‌ கூறிய கடஞ்சொற்களைத்‌ தாங்கள்‌ செவி மடுத்தீர்கள்‌. ஏனைய தேவ மாதர் தம்‌ சிறையைத்‌ தவிர்ப்பதற்கே தாங்கள்‌ அவ் வரக்கியர்‌ கூற்றைப்‌ பொறுமையோடு செவி மடுத்தீர் —

தவிர்ப்பதும்‌ எம்பிரான்‌ சேதநர்த்‌ தள்ளும்‌ சுதந்திரத்தைத்‌
தவிர்ப்பதும்‌ சேதனர்‌ தம்பிழைக்‌ கண்டு நடுங்குமதைத்‌
தவிர்ப்பதும்‌ தம்ம தியல்பின்‌ முரண்பிறர்‌ சொல்லுமதைத்‌
தவிர்ப்பதும்‌ சார்வார்‌ மிதுநத்‌ திருப்பின்‌ தமபிறப்பே–78

பிராட்டியாரே! ஆன்மாக்களைப்‌ புறக்கணிக்கும்‌ எம்பெருமானுடைய சுதந்திரத்தைத்‌ தாங்களே பரிந்துரை கூறி நீக்குகிறீர்‌. ஆன்மாக்கள்‌ தம்‌ பிழைகளை நினைத்து நடுங்குவதைத்‌ தாங்கள்‌ கருணையால்‌ போக்குகிறீர்‌. ஆன்மாவின்‌ இயல்புக்கு மாறாகப்‌ பிறர்‌ பேசுவதைப்‌ போக்குவீரும்‌ நீர்‌. எம்பெருமானும்‌ நீரும்‌ இருக்கும்‌ இருப்பினைச்‌ சரணாகச்‌ சார்பவர்‌ தம்‌ பிறவியைப்‌ போக்குபவரும்‌ நீரே-

பிறப்பதற்‌ கோர்வினைக்‌ கட்டில்லை என்றும்‌ பிறந்தருள்வீர்‌
பிறப்பதற்‌ கும்மொரு தாய்தந்தை யில்லை பிறந்தருள்வீர்‌
பிறப்பது தாமரையாம்‌ பெற்றிக்கோ ருறுப்புமில்லை
பிறப்புத்‌ தவிரா(து) அவன்பிறப்‌ பொக்கப்‌ பிறக்குமதே–79-

உலகில்‌ பிறப்பதற்குரியதொரு வினையின்‌ தொடர்பு இல்லாமலேயே நீங்கள்‌ உலகில்‌ பிறப்பெடுக்கிறீர்கள்‌. தாய்‌ தந்தையர்‌ இல்லாமலே இயல்பாலேயே நீங்கள்‌ பிறவி எடுக்கிறீர்‌. தாங்கள்‌ பிறப்பிடமாகிய தாமரைக்குத்‌ தங்களைப்‌ பிறக்கச்‌ செய்யும்‌ உறுப்பு எதுவும்‌ இல்லை.
எம்பெருமான்‌ உலகில்‌ பிறவி எடுக்குந்‌ தோறும்‌ அவனுக்கு ஏற்க நீங்களும்‌ பிறவி எடுக்கின்றீர்‌-

பிறப்பதோ பெம்மான்‌ சுரர்குலம்‌ தாமும்‌ சுரர்குலமே
பிறப்பதோ பெம்மான்‌ மனிதனே தாழும்‌ மனிதகுலம்‌
பிறப்பதோ பெம்மான்‌ விலங்கது தாமும்‌ விலங்கினமே
பிறப்பதோ பெம்மான் தான்‌ தாவரம்‌ தாமுமோர்‌ தாவரமே ! –80–

பெருமான்‌ தேவனாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ தேவியாகவும்‌,மனிதனாகப்‌ பிறப்பின்‌ பெண்மகளாகவும்‌, விலங்காகப்‌ பிறப்பின்‌ மறைந்து நின்‌று பெண்‌ விலங்காகவும்‌, தாவரமாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ மறைந்து நின்று தாவரமாகவும்‌ பிறப்பெடுக்கின்றீர்‌. நும்‌ இணை பிரியாமை இருக்குமாறு என்னே? என்பது குறிப்பெச்சம் –

தாவி லருங்கலை நும்மருள்‌ கூட்டின்‌ தகவுடைத்தாம்‌
தாவி லருங்கலைக்‌ கற்றோன்‌ கதிரோன்முன்‌ சாயிழந்தான்‌
தாவி லருங்கலைக்‌ சாற்றற்‌(கு) அரியவன்‌ நும் வயமே
தாவி லருங்கலைக்‌ முற்றும்‌ இயல்பி னறி வரிதே? –81-

வருத்தமில்லாத அரிய கலைகள்‌ நும்‌ அருளொடு கூடியே பெருமை பெறுகின்றன. நீங்குதலில்லாத அரிய கலைகளைச்‌ ஸூரியனை அடுத்துச்‌ கற்ற அனுமனும்‌ நும்‌ சொற்களால்‌ தன்‌ எண்ணத்தைக்‌ கை விட்டு நும்மைச்‌ சூழ்ந்த அரக்கியரை நலியாது விடுத்தான்‌. நீங்குதலில்லாத பல கலைகளாலும்‌ உள்ளவாறு அறிய முடியாத எம்பெருமானும்‌ நுமக்கு வசப்பட்டவனே. நீங்குதலில்லாத அரிய கலைகளும்‌ உம்மை உள்ளவாறு அறிதல்‌ இயலாது–

அறிவி தேயலர்‌ மேல்மங்கை நுந்தரத்‌ தாயிரத்தொன்‌(று)
அறிவரி தேயயன்‌ நெற்றியில்‌ அங்கணன்‌ இந்திரனும்‌
அறிவரி தேஅயன்‌ தேவி அயிராணி பார்வதியும்‌
அரிவரி தேயுடன்‌ தேவியர்‌ நீரும்‌ அமலனுமே–82-

அன்னையார்‌! நும்‌ தகுதியின்‌ ஆயிரத்திலொரு கூறு கூட மற்றவர்‌ அறிதல்‌ இயலாது. பிரமன்‌, சிவன்‌, இந்திரன்‌ என்ற பெருந்தேவரும்‌ அவர் தேவியராகிய நா மகள்‌, பார்வதி, இந்திராணி என்பவரும்‌ கூட நும்‌ தகுதியை உள்ளவாறு அறிதல்‌ இயலாது. மற்றவரைக்‌ கூறுதல்‌ ஏன்‌? உம்முடன்‌ இருக்கும்‌ நில மடந்தையும்‌, ஆயர் குல மடந்தையும்‌ நீரும்‌ எம்பெருமானும் கூட நும்‌ பெருமையை அறிதல்‌ அருமையாகும் –

அமலன்‌ அமுதங்‌ கடைந்தான்‌ பிறர்க்கென்‌ றுமை யடைந்தான்‌
அமலன்‌ அனைத்தும்‌ இயக்கற்‌ குரியன்‌ நினைவினாலே
அமலன்‌ அனைத்தும்‌ தனதா உடையான்‌ இயல்புறவே
அமலன்‌ உடையன்‌ செயலன்‌ உமதவன்‌ மார்பி௫ப்பே –83-

களங்கமற்ற எம்பெருமான்‌ பிறருக்கு அமுதம்‌ கடைந்து கொடுப்பதான பொய்க் காரணம்‌ காட்டிக் கடல்‌ கடைந்த செய்கை உலகத்துக்‌ தாயாராகிய உம்மைப்‌ பெறவே, எல்லா உலகப்‌ பொருள்களையும்‌ ஆட்டுவிக்கும்‌ செயலையும்‌ யாவற்றையும்‌ தன்னை உடைமையாகப்‌ பெற்றிருக்கும்‌ சிறப்பினையும்‌ உடையவனாய்‌, அனனத்தையும்‌ உடையவனாகவும்‌ ஆள்பவனாகவும்‌ சிறந்து விளங்குகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌, நீர்‌ அவன்‌ மார்பிலிருந்து உற்சாகப் படுத்து வதலாலேயே –

இருப்ப திறையும்‌ பிரிவிலை மேன்மை பிரிவிலையே
இருப்பதும்‌ வில்வத்‌ திரிணியக்‌ கூட்டினும்‌ சேமமுற
இருப்பதும்‌ ஐயந்‌ திரிபறத்‌ தேர்ந்த தெளிவுணர்வின்‌
இருப்பதும்‌ மெய்யடி யார் தம்‌ குழுவில்‌ இறையுடனே–84-

ஒரு கண நேரமும்‌ பிரிவினை மேற் கொள்ளாது எம்பெருமான்‌ திரு மார்பில்‌ இருக்கும்‌ மேம்பட்ட நிலையை உடைய நீர்‌ பொற் குவியலிலும்‌ வில்வத்திலும்‌, ஐய உணர்வும்‌ திரிபுணர்வும்‌ நீங்குதலால்‌ தெளிவுடைய அடியாருடைய மெய்யுணர்வில்‌ வீற்றிருப்பதும்‌, மெய்யடியார்‌ குழுவில்‌ எம்பெருமானோடு தங்கியிருப்பதும்‌ ஆகிய உயரிய செயல்களைச்‌ செய்கின்றீர் —

உடனுறை யானென தென்பதின்‌ உற்ற கொடியதெது?
உடனுறை ஐம்பொறி கோட்புலன்‌ சார்தலின்‌ ஊனமுன்டே?
உடனுறை ஊழ்வினைக்‌ கட்டில்‌ வலிய பிரிப்புமுண்டே?
உடனுறைந்‌ தெம்மான்‌ உறுவன தீர்ப்புறும்‌ வேண்டுகோளே –85-

ஆன்மாக்கள்‌. உடலில்‌ தங்கியிருந்து ‘யான்‌’ என்று அகங்கரிக்கும் அகங்காரத்தை விடக்‌ கொடியது யாது உள்ளது? ஐம்பொறி புலன்களைச்‌ சார்ந்த சிற்றின்ப நுகர்ச்சியின்‌ குறைபாடுகளுடன்‌ கூடியது வேறு உண்டே? முன்‌ செய்த வினைகள்‌ இப் பிறப்பில்‌ நம்மைப்‌ பிணித்து இன்ப துன்பங்களை நுகர்விக்கும்‌ பிணைப்பை விட வலிய பிணைப்பு உளதோ? பெருமானுடன்‌ இருந்து ஆன்மாக்களின்‌ இத் தீமைகளைத்‌ தீர்க்குமாறு வேண்டுவதனையே நும்‌ பண்பாகக்‌ கொண்டுள்ளீர்‌–

வேண்டியார்‌ பாலும்‌ அரக்கியர்‌ தீமையை விள்ளகிலீர்‌
வேண்டிப்‌ பிறந்தகம்‌ புக்ககம்‌ விட்டோர்‌ கணம் விரும்பீர்
வேண்டி முயலீர்‌ சிறையிருள்‌ தீயின்‌ விடுதலையை
வேண்டிடில் எம்மான் அடைந்தவர் ஏற்குமா வேட்கையிதே –86-

அசோக வனத்தில்‌ அரக்கியர்‌ நுமக்கு இழைத்த கொடுமைகளை நும்‌ நெருங்கிய உறவினரிடத்தும்‌ நீர்‌ தெரிவிக்க வில்லை. புக்ககத்தை விடுத்துப்‌ பிறந்தகம்‌ சென்று வர ஒரு கணமும்‌ நீர்‌ விரும்பினீர்‌ அல்லீர்‌. தீயினும்‌ கொடிய சிறையினின்றும்‌ நும்‌ முயற்சியால்‌ விடுதலை பெற நீர்‌ முயன்றீர்‌ அல்லீர்‌. எம்பெருமானைச்‌ சரணம்‌ அடைந்த அடியவர்களை ஏற்குமாறு கொள்ளும்‌ விருப்பத்தையே நீர்‌ வேண்டி நிற்கிறீர் —

வேட்கை பரன்பால்‌ அடியான்‌ விரும்பி அடைந்திடவே
வேட்கை பிரியில்‌ அடியார்க்‌(கு) அனர்த்தம்‌ விளையுமென்றே
வேட்கை யிருளுமிஞ்‌ ஞாலம்‌ தெருளும்‌ விசும்புறவே
வேட்கை திரு மா மணி மண்டபம் என்னும் வேங்கடமே –87–

அடியவன்‌ எம்பெருமானை விரும்பிச்‌ சரண்புகும்‌ செயலொன்றே நும்‌ வேட்கையாகும்‌. அத்தகைய வேட்கையை நீர்‌ நீத்துவிட்டால்‌ அடியவருக்குத்‌ தீங்கே விளையும்‌. இவ்விருள்‌ தருமாஞாலமாகிய நிலவுலகைப்‌ பரமபதமொத்த துன்பக்‌ கலப்பில்லா இன்ப மயமாக்குவதே உம்முடைய ஆசை. நீர்‌ உகந்தருளி யிருக்க விரும்புமிடம்‌ நில வுலக வைகுந்தத்‌ திரு மா மணி மண்டபமாகிய திருவேங்கட மலையே —

வேங்கடம்‌ வேங்கட மேவாய்‌ வெருவி இருந்திடுவீர்‌
வேங்கடம்‌ கீழிருந்‌ தன்புப தேசம்‌ விரித்துரைப்பீர்‌
வேங்கட மார்பகம்‌ நீங்கா விழைந்தே அபயமீவீர்‌
வேங்கடற்‌ குற்றதோர்‌ தொண்டொன்று பத்தா விரிப்பது–88-

நீர்‌ பரகால நாயகியை ஆவேசித்து! வேங்கடமே! வேங்கடமே! என்று விருப்பத்தோடு பல நாளும்‌ தன்னை மறந்து கூப்பிடச்‌ செய்தீர்‌. வேங்கட மலையின்‌ கீழிருந்தவாறே எம்பெருமானுக்குச்‌ சேதனர்‌ பக்கல்‌ அன்பு காட்டுமாறு உபதேசிக்கின்றீர்‌. வேங்கடத்தான்‌ மார்பினைப்‌ பிரியாமலிருந்தே அடியார்க்கு அஞ்சற்க! என்ற அருளுரை வழங்குகின்றீர்‌. குறை காணாது அடியாரை ஏற்றுக்‌ கொள்ளுமாறு எம்பெருமானிடம்‌ பரிந்துரை கூறும்‌ திருப் பணியை அடியவர்‌ உய்வதற்கே விரிவாகச்‌ செய்கின்றீர் –

விரியத்‌ தமர்செய்‌ வினைதான்‌ கழிவ தவனருளால்‌
விரியு மியல்பாழ்‌ வினைநீங்க ஒங்க நிகரில்சீர்‌
விரியத்‌ தமா்பால்‌ குறைகாணான்‌ மேன்மேல்‌ அருளுமவன்‌
விரியுஞ்‌ செயலுகப்‌ பீரலர்‌ மேல்மங்கை உம் மியல்பே–89-

அலர்மேல்‌ மங்கையீர்‌! அடியார்கள்‌ மிகுதியாகச்‌ செய்யும்‌ வினைகள்‌ யாவும்‌ எம்பெருமான்‌ அருளால்‌ நீங்கற்பாலன. அப் பெருமானிடத்தில்‌ தவறு கண்டு புறக் கணிக்கும்‌ சுதந்திர உணர்வு நீங்கவும்‌, தவறுகளையும்‌ உகக்கும்‌ ஒப்பற்ற புகழுடைய தூயன்பு அவன் பால்‌ தழைக்கவும்‌, அவன்‌ அடியார்களிடத்துக்‌ குறை காணாது அவர்களுக்கு விரிவாக அருள் புரியும்‌ மேம்பட்ட செயலுக்காக அடியவர்‌ திறத்தப்‌ பரிந்துரை கூறுவது உம்‌ பணபாகும் –

இயல்பீ திருவரைக்‌ காணும்‌ மறைப்பது மெய்யுணர்வை
இயல்பிது முக் குணத் தேய்ந்து மயக்கம் விளைக்குமதாம்‌
இயல்பீ திருவினை பாசப்‌ பிணக்கின்‌ இயக்குமிதே
இயல்பீ திறையுடன்‌ சார்ந்திவை முற்று மகற்றுவீரே–90-

எம்பெருமானும்‌ நீருமாகிய இருவரையும்‌ மனத்தால்‌ காணும்‌ உண்மை யறிவை மறைப்பது இவ் வுடம்பின்‌ இயல்பாகும்‌. காமம்‌, வெகுளி, மயக்கம்‌ என்ற முப் பண்புகளுடன்‌ பொருந்தி மெய்ப் பொருளை உள்ளவாறு அறிய முடியாதபடி மறைத்து மயங்கச்‌ செய்வதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. நல் வினை தீ வினைகளாகிய பற்றுக்களால்‌ ஆன்மாவை ஆட்டுவிப்பதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. எம்பெருமானைச்‌ சார்ந்து நீங்கள்‌ உடல்‌ குற்றங்கள்‌ அனைத்தையும்‌ நீக்குகின்‌றீர்‌. இது உமக்கு இயல்பாக அமைந்த பண்பாகும்‌-

வீராங்‌ கனைநீர்‌ விமலன்‌ திறத்தாறு பண்புடையீர்‌
வீராங்‌ கனைகள்‌ உமைப்போல்‌ விரதியர்‌ யாவரேனும்‌
வீராங்‌ கனைகள்‌ விழுமத்‌ தொழுதெழு மூவியலார்‌
வீராங்‌ கனைகளை நீர்‌ தத்த மியலால்‌ விளைப்பீரே-91-

வீரம்‌ சான்ற பெண்மகளாராகிய தாங்கள்‌ எம்பெருமான்‌ ஞானம்‌, சக்தி பலம்‌, ஐஸ்வரியம்‌, வீரியம்‌, தேஜஸ் என்ற ஆறு பண்புடையனாதல்‌ போல அவன்‌ திறத்தில்‌ உசுப்பில்‌ உகத்தல்‌, நோவின்‌ நோதல்‌, ஒண்பொருள்‌ கொடுத்தல்‌, நன்கு இனிது மொழிதல்‌, புணர்வு நனிவேட்டல்‌, பிரிவு நனி இரங்கல்‌ என்ற ஆறு பண்புகளை உடையீர்‌. உம்மைப்போல்‌ விரதமுடையார்‌ யாவரும்‌ வீரப் பெண்களே. எம்பெருமானைத்‌ தொழுது எழும்‌ வீரப் பெண்கள்‌ எம்பெருமானே ஆண்டான்‌, அவனே ஆறு, அவனே பேறு என்ற மூன்று இயல்பு உடையவர்கள்‌ தம்‌ பண்புகளில்‌ நெகிழ்வில்லாதபடி வீராங்கனைகளைத்‌ தயாரிப்பவரும்‌ தாங்களே —

விப்பிர நாரா யணனொடும்‌ விஞ்சு சீர்‌ மாறனொடும்‌
விப்பிரத்‌ தோன்றலாம்‌ விட்டுசித்‌ தன்னொடு வீசு புகழ்‌
விப்பிர ஊர்தி வியன் தமிழ்ப்‌ பாணன்‌ பிறவி வெரு
விப்பிர புத்தி செய்‌ வேந்தன்‌ குலசே கரனொடுமே–92-

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ ஆகிய விப்பிரநாராயணர்‌, மேம்பட்ட சிறப்பினை உடைய சடகோபர்‌, அந்தணருள்‌ மேம்பட்ட விட்டு சித்தர்‌, யோக சாரங்க முனிவர்‌ தோளில்‌ சுமக்கப்பட்டு எம்பெருமானைத்‌ தரிசிக்க வந்த திருப்பாணாழ்வார்‌, பிறவிப்‌ பிணிக்கு அஞ்சி விற்றுவக்‌ கோட்டம்மானைச்‌ சரண்‌ புகுந்த குலசேகரப்‌ பெருமான்‌ ஆகியவரும் –

ஒடுங்கலில்‌ சீரார்‌ முதல்வர்கள்‌ மூவராம்‌ ஒன்தமிழர்‌
ஒடுங்கலில்‌ ஞானமும்‌ பத்தி விரத்தியும்‌ ஒங்கு கோதை
ஒடுங்கலில்‌ யோகி மழிசை மன்‌ உற்ற மதுரகவி
ஓடுங்குலில்‌ வாழ்த்துக்‌ கலியன்‌ உதிப்பித்‌தும் மருளே –93-

மற்றும்‌ குறைவற்ற சிறப்புடைய முதலாழ்வார்கள்‌, மூவர்‌ ஞான பக்தி வைராக்கியத்தால்‌ மேம்பட்ட கோதையராகிய ஸ்ரீஆண்டாள்‌, யோகியாய்‌ வாழ்ந்த திருமழிசைப்‌ பிரான்‌ மதுரகவியார்‌, 86 திவ்விய தேசங்களைப்‌ ்‌ பாடியருளிய திருமங்கையாழ்வார்‌ முதலானாருடைய திருஅவதாரங்கள்‌ தாயாராகிய உமது முனைப்பினாலும்‌ எம்பெருமான்‌ அருளாலும்‌ இந்த பூலோகத்தில்‌ உண்டாயின–

உமதரு ளொன்றே உதவு மெய்‌ ஞானநீர்‌ வித்தையதால்‌
உமதருள்‌ சேதனர்‌ பாலதாம்‌ உற்ற நல்‌ தாயதனால்‌
உமதருள்‌ ஏற்பன் உலகுண் பரனின் இனியையதால்
உமதருள்‌ முற்றவும்‌ உற்றதே யாக்கும்‌ நெகிழ்தலிலே–94-

அன்னையாராகிய நீர்‌, வித்தையே வடிவினராய்‌ இருப்பதால்‌ உம்‌ அருளே மெய்யுணாவை உண்டாக்குவதாகும்‌. தாங்கள்‌ உலகின்‌ தாயாக இருப்பதனால்‌ தங்கள்‌ அருள்‌ இவ்வுலகினுள்ள உயிர்களின்‌ பக்கல்‌ பரவியுள்ளது. எம்பெருமான்‌ உகப்பிற்குரிய தேவியராக நீர்‌ இருப்பதால்‌ ஊழியில்‌ உலகை வயிற்றில்‌ வைத்துப்‌ பாதுகாக்கும்‌ எம்பெருமான்‌ உம்‌ அருள்செயல்களைத்‌ தானும்‌ இசைகிறான்‌. உம்‌ அருள்‌ செயல்களைக் குறைவுறாமல்‌ உயிர்களுக்கு ஏற்புடைய நன்மைகளையே உண்டாக்கும் —

நெகிழ்வதே உந்தம்‌ அருளிலர்‌ நேர்வது முற்றவுமே
நெகிழ்வதே இந்திரன்‌ நீடு சிவனயன்‌ நேர் பதங்கள்‌
நெகிழ்வதே ஓரிரு கோள்கதி யைம்பூத நேர்மையதும்‌
நெகிழ்வதில்‌ நித்த விபூதி நும்‌ சார்பில்‌ நிலைத்திடுமே-95-

உம்‌ அருள்‌ பெறாதார்‌ செய்யும்‌ செயல்கள்‌ முழுமையாக நிறைவேறாமல்‌ இடையிலேயே தடைபட்டு அழியும்‌. உம்‌ அருளின்‌றேல்‌ இந்திரன்‌, சிவன்‌, அயன்‌ என்பார்‌ பதவிகள்‌ நிலை பேறு அடைய மாட்டா, மேலும்‌, ஞாயிறு, திங்கள்‌ இயக்கமும்‌ ஐம் பூதப்‌ பண்புகளும்‌ நெகிழ்ந்து விடும்‌. அழிவில்லாத பரம பதமும்‌ உம்‌ தொடர்பினாலேயே நிலை பெற்றிருக்கும் —

நிலை நிற்கு மன்றோ கயவன்‌ சிறைவைத்த பாதகத்தை
நிலை நிற்கு மன்றோ நெருப்பிடை மூழ்க நீர்‌ நேர்ந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிமலன் தன்‌ பள்ளி இருந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிலத்தின்‌ புகு செயல்‌ மாதருக்கே–96-

இராவணன்‌ உங்களைச்‌ சிறை வைத்த நீசச்‌ செயல்‌ உலக மக்கள்‌ உள்ளத்தில்‌ துன்பத்தை உண்டு பண்ணும்‌. தாங்கள்‌ நெருப்பில்‌ மூழ்குவதற்கு ஈடுபட்ட செயலும்‌, வான்மீகியின்‌ ஆசிரமத்தில்‌ நீங்கள்‌ பல காலம்‌ இருந்த செய்தியும்‌, இறுதியில்‌ பூமிக்குள்‌ புகுந்து மறைந்த செயலும்‌ உலகவர்‌ உள்ளத்தில்‌ என்றும்‌ நிலை நிற்பனவாம் —

மாதா நுமதே அழகின்‌ சிகரமே மற்றுமுண்டே
மாதா நுமதே அருளின்‌ வடிவம்‌ பிறிதிலதே
மாதா நுமதே பிறர் நலம்‌ பேணும்‌ சிறப்புடைமை
மாதா நுமதே நிலை பிரி தொண்டர்‌ அடிப்படுத்தே–97-

அன்னையீர்‌! அழகின்‌ உயர்ந்த நிலையும்‌ அருளின்‌ வடிவமும்‌, பிறர்‌ நன்மையே வேண்டிச்‌ செயற்படும்‌ மாட்சிமையும்‌ உடைய நீங்கள்‌ அடியார்‌ தொண்டினை மிகைப்படுத்தி எம்பெருமானுக்குப்‌ பரிந்துரை கூறி, அவர்களை ஆட்கொள்வதற்காகப்‌ பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் —

அடியனைக்‌ கொண்டதே யாவும்‌ அடைந்தது போலுமானீர்‌
அடியனில்‌ கீழ்மையோன்‌ முன்பின்‌ படைப்பிலும் யாருமுண்டே
அடியர்பால்‌ காணீர்‌ குறையடி யேன்கேட்‌ டறிந்ததுண்டு
அடியனின் தாழ்வையும் கொண்ட நீர் ஆய்ந்திடின் உண்மை யன்றே –98-

மிகக் கீழனோகிய அடியேனை ஆட் கொண்ட திறத்தால்‌ தங்கள்‌ விருப்பமெல்லாம்‌ நிறைவேறியது போன்ற நிறை மகிழ்வைப்‌ பெற்றுள்ளீர்‌. முன்‌ ஊழிகளிலும்‌ இனி வரும்‌ ஊழிகளிலும்‌ நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற படைப்புகளில்‌ அடியேனிலும்‌ கீழானோர்‌ இருக்க மாட்டார்கள்‌. தாங்கள்‌ அடியார்களுடைய குறைகளைப்‌ பொருட்படுத்த மாட்டீர்‌ என்று கேட்டறிந்ததுண்டு. தங்கள்‌ உயர்வையும்‌ அடியேன்‌ தாழ்வையும்‌ ஆராய்ந்தால்‌ தாங்கள்‌ அடியேனை ஆட் கொண்டது மெய்யான செயலேயாகும் –

உண்மைப் பொருள் அலர்மேல் மங்கை சேர்ந்து இங்கு உளன் ஒருவன்
உண்மைப் பொருள் பொறைத் தாயினை ஒக்கலை யேந்து கேழல்
உண்மைப்‌ பொருள்ளேழ்‌ விடை செற்று வந்து கொள்‌ பின்னை கேள்வர்
உண்மைப் பொருள் மூன்றே ஓர்த்துப் பொதுவுறக் காண்ப தென்றே –99-

மெய்ப்பொருளாம்‌ பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுடன்‌ சேர்ந்து வேங்கட மலையில்‌ உள்ளான்‌. பொறுமைக்கு இருப்பிடமாகிய பூமித் தாயை தன்‌ இடையில்‌ வைத்துக்‌ கொணர்ந்த மகா வராக மூர்த்தியும்‌, அசுரா உட்புகுந்த ஏழு காளைகளை அழித்துப்‌ பின்னையை மணந்த கண்ணனும்‌, வேங்கடவனும்‌ ஒரே உண்மைப்‌ பொருளின்‌ அவதாரங்களே என்பதனைக்‌ காணலாம்‌

என்றலர்‌ மேல்மங்கை நின் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை மன் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை தொண்டர் சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்யங்கை போற்றும்‌ அருளென்கண்‌ பார்த்துலகே –100-

அலர்மேல்‌ மங்கைத்தாயே! என்னிடம்‌ உன்திருவுளச்‌ சார்பினை அருளுவது என்றோ? நீர்‌ எம்பெருமான்‌ திருவடிகளை அடியேன்‌ சாரும்‌ வாய்ப்பினை அருளுவது என்றோ? பிராட்டி பெருமாள்‌ என்ற இருவரையும்‌ சரணாகப்‌ பற்றிய தொண்டர்கள்‌ சார்பினை அடியேனுக்கு அருளுவது என்றோ? அடியேன்‌ மாட்டு அலர்மேல்‌ மங்கை பாலிக்கும்‌ அருளும்‌ எம்பெருமாள்‌ அடியேன் திறத்தில்‌ செய்யும்‌ அருளையும்‌ உலகவர் போற்று நாள்‌ என்று வருமோ?

அலர்மேல மங்கை நல்‌ தாய்திருத்‌ தாளன்ப ரும்பயனை
அலர் மேல மங்கையந்‌ தாதி தனையோதி ஆர்வமும
அலர்மேல மங்கை இணையடித்‌ தாமரை தம்மினெஞ்சம்‌
அலர்மே லமர்ந்துறை யன்னமாய்‌ நின்றன்பு பெற்றிடுமே –நூற்பயன்

நற்றாயாகிய அலர்மேல்‌ மங்கை திருவடிகளில்‌ அன்பு பெருகுதலாகிய அரிய பயனாய்‌, இந்த அலர்மேல்‌ மங்கையந்தாதியை ஆர்வத்தோடு ஒதுவதால்‌ நம்‌ நெஞ்சமானது, அப்பெருமாட்டியின்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ அன்னம்போல்‌ நீங்காதிருந்து தூய அன்பினைப்‌ பெற்றுச்‌ சிறந்து விளங்கும்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வட வேவேங்கட நாராயாண சதகம்‌ -மூலமும்‌ உரையும்‌-ஸ்ரீ நாராயண தாசர்–

December 3, 2025

நஞ்சு வினைக்கா மமுத நமதுயிர்க்காம்‌
செஞ்சொல்லினேர் சதகஞ்‌ செப்பியது–விஞ்சபுகழ்‌
நாராயண தாசர்‌ நன்றாக நானிலத்தே
பாராயணம் செய்பவர்க்கு.

இந்தப்‌ பூமியினிடத்து நன்றாகப்‌ பாராயணஞ்‌ செய்பவர்க்கு உபயோகமாகும் பொருட்டு மிகுந்த புகழை யுடைய நாராயண தாசர் என்பவர் செஞ்சொற்களினாலே திருவாய் மலர்ந்தருளியதாகிய ஓப்பற்ற நாராயண சதக மென்னும்‌ பாமாலையானது நம்‌முடைய ஊழ் வினையை யழிக்கத் தக்க நஞ்சாகும்‌; நமது உர்க்கோ காக்‌கத்தக்க அமுதமாகும்‌ என்றவாறு

நல்ல வட வேங்கடத்து நாராயண சதகம்‌
சொல்ல எனக்குத் துணையாமே -மல்லற்
பணையான திண் புயத்‌துப்‌ பாண்டவர்க்கு முன்னம்
துணையான பாதம் துணை-
-காப்பு
.
அழகிய வடக்கின் கணுள்ள திருவேங்கடத்தி லெழழுந்தருளிய ஸ்ரீமந் நாராயணன்‌ விஷயமாக ஓர்‌ சதகமென்னும்‌ பாமாலை பாடுதற்கு மாலையின்‌ வளம் பொருந்திய பருமையான வலியுள்ள புயங்களைப் படைத்த பாண்டவர்க்கு முற் காலத்தில்‌ துணையாயிருந்த அவருடைய பாதங்கள்‌ துணையா யிருப்பது மன்றி என்னுயிர்க்‌கும்‌ ௮வைகளே துணையாகும்‌ என்றவாறு.

நீர் கொண்டு தண்‌ மலர் கொண்டு நன்‌னெறி கொண்டு நின்‌ குறி கொண்டு வண்‌,
சீர் கொண்டு வந்‌தனை செய்துனைச்‌ செறிவார்களென்‌ பெருவார்களோ,
பேர் கொண்டிலன்‌ பொறி கொண்டிலன்‌ பெரியோர்களா லருள் கொண்டிலன்‌,
நார் கொண்டு கண்‌டருள் சோதியே நாராயணா நாராயணா–

பரிசுத்தமான தீர்த்தங்களையும்‌ குளிர்ச்சி பொருந்திய புஷ்பங்களையும்‌ கொண்டு நன் மார்க்கத்தை யறிந்து தேவரீருடைய சொருபத்தைத்‌ தெறிந்து அழகிய “ஞானத்தைப்‌ பொருந்தித் தண்டஞ்‌ சமர்ப்பித்து உம்மை ஆராதனை செய்து அடைத்த பேர்களெல்லாம்‌
என்ன பலனைப்‌ பெறுவார்களோ அறிய கில்லேன்‌; நாயினேன்‌ தாஸ்ய நாம முதலிய பஞ்ச சம்ஸ்காரத்தையும்‌ பாகவதாராலே கிருபையையும்‌ கொண்டவணே அல்லன்‌; ஆதலால்‌ ௮ன்பு சுரந்து சந்தோஷித்து இரஷித்தருள வேண்டும்‌; சோதி மயமாகிய ஸ்ரீமந் நாராயணனே-

பர காரியம்‌ பல செய்துனைப்‌ பணியாமலே பிணிபான பின்‌
விரகாயிருந் தழு தாவதென்‌ வெறியார் குணங் குறியார்களோ
உரகாரிமே லுபகாரியா யொரு சாரியா வுலவாரியா
நரகாரியே முர காரியே நாராயணா நாராயணா–

கொலை, களவு , காமம்‌, பொய்‌, வஞ்சனை இவை முதலாகிய அநேக துஷ்ட க்ருத்யங்களைச் செய்து தேவரீரைப்‌ பணியாமல்‌ பிணியானது சம்பவித்த பிற்பாடுங்‌ கபடமாயிருக்து அழுததினாலே உண்டாகிய காரியம்‌ ஒன்றுமில்லை; ஆதலால்‌, பயித்தியக்காரர்
குணங்களை நல்லோர்களே யறிந்து இரஷிப்பது கடன்‌; ௮த் தன்மை போல அடியேனை இரஷிப்பது உமக்கே கடன் -சர்ப்பங்களுக்குப்‌ பகையாகிய கருடவாகன மீதிலெழுந்தருளி அடியார்களுக் குபகாரமாக ஓப்பில்லாச் சேவையாய்‌ உலாவி வந்தாருளா நின்ற ஐயனே ! நரகாசுரனுக்கும்‌ வைரியாகிய ஸ்ரீமந் நாராயணனே-

சிவனீ தலம்‌ புயனீதலிந் திரனீ தல்‌சந் திரனீ தலா
தவனீ தல் விண்‌ ணவரீதன் மா தவரீதலோ டெவரீ தலும்‌
அவநீ தலந் தனிலெண்ணினுன்‌ னடியாரடிப்‌ பொடி யாகுமோ
நவநீத முண்‌ கரு மேகமே நாராயணா நாராயணா-

சிவனும்‌ பிரமாவும்‌ இந்திரனும் சந்திரனு ஸூரியனும்‌ தேவர்களும்‌ ரிஷிகளும்‌ ஆகிய இவர்களுடனே பின்னும்‌ யாவர்களுங்‌ கொடுக்கா நின்ற பலன்களை யெல்லாம்‌ பூதலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ அவை தேவரீருடைய அடியார்கள்‌ திருவடித்‌ துகளுக்கும்‌
ஓப்பாக மாட்டா; ஆதலால்‌ அவர்களை நினைப்பதே யில்லை; கோபாலர்‌
கிரஹத்திலே வெண்ணெயை யுண்டருளும்‌ நீல மேக வண்ணனாகிய
ஸ்ரீமந் நாராயாணனே,

அலசத்தகும் பிணிவந்து நா னலையாமலே யமரர்க்கிடுங்,
கலசத்திலோர் துளி நல்கியென் கவி யைக்கொளாய் கருணாகரா,
குலசக்கரன் சலசேக ரன் குலசேகரன் புகழ்சாகரா, நலசக்கரா
சலசக் கரா நாராயணா நாராயணா.       4

தேகமானது வருத்தத்தை யடையும்படியான நோய்வந்து அடியேன் அலையாம லிருக்கத் தேவர்களுக்குக் கொடுத்தருளா நின்ற கலசத் தமிர்தத்திலே ஒரு துளி கடாட்சித்தருளி அடியேனுடைய கவிதையைக் கைக்கொள்ளவேணும். கருணைத் திருமேனியனே! வச்சிரபாணியும் கங்காதரனுங் குலசேகரராகிய ஆழ்வாரும் தோத்திரம் பண்ணா நின்ற கீர்த்தியாகிய சமுத்திரத்தையும் நல்ல சக்கரத்தையும் தாமரைமலர் போன்ற திருக்கரங்களையும் உடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா

எதிரும்பெரும் பிணியும்பரந் திரையுஞ்செறிந் தெழிலும்பறந்,
துதிரந்திரிந் துடலங்கொளுந் துயரந்தெளிந் துனை நம்பவா,
மதியங்கிடந் தொ ளிருஞ்சடா மகுடந்தொறுந் தொனியும்பவா,
னதிவந்தெழும் பதபங்கயா நாராயணா நாராயணா.       5

[இ-ள்.] தேகத்திலே எதிர்த்து வராநின்ற பெரிதாகிய நோய் மிகுந்து இரைப்பு நெருங்கி
அழகு குலைந்து உதிரமுறிந்து கொள்ளா நின்ற துக்கமானது தெளிந்து போய்த் தேவரீரை அடியேன் நம்பும்படியாகப் பிரசன்னமாக வேண்டும். சந்திரன் வாசமாய்ப் பிரகாசியா நின்ற சிவனுடைய சடாமகுடந்தோறும் முழக்கம் நிறைந்திட ஆகாய கங்கையானது வந்தருளா நின்ற திருவடித் தாமரைகளை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

எல்லாருமுன் னுதரத்துளே யென்னோடுமங் குறைகின்றபேர்,
அல்லாதுவே றில்லாமையா லனைவர்க்குமோ ரருளல்லவோ,
வல்லாருளார் மாட்டாருளார் வறியாருளார்வாழ்வாருளார்,
நல் லாருளார் பொல்லாருளார் நாராயணா நாராயணா.       6

[இ-ள்.] அடியேனுடனே ஆத்மகோடிகளெல்லாந் தேவரீருடைய குட்சிக்குள்ளே வாசம் பண்ணுகிறதேயல்லாமல் வேறேயிடமில்லை யாதலால் யாவருக்குஞ் சமானமான கிருபையே யன்றிப் பேதமில்லையே; அத்தன்மையாயிருக்க, இதிலே வலியரென்றும் மெலியரென்றும் தாழ்வினரென் றும் வாழ்வினரென்றும் நல்லவரென்றும் பொல்லாதவரென்றும் உண்டாகிய தென்ன மாயமோ ஸ்ரீமந் நாராயணா எ-று.
——-

நீகாசுதா நீதூசுதா நீயாடுதா நீமாடுதா,
போகாதபேர்க் கிடுசோறெனப் புலையர்க்குநெஞ் சுருகச் சொனேன்,
ஆகாதகாரியமென்னிடத் தள வற்ற துண் டவையாய்வையோ,
நாகாசலா நாகா லயா நாராயணா நாராயணா.       7

[இ-ள்.] பணம் வஸ்திரம் ஆடு மாடுஞ் சாதமும் இவைகளை நீங்கள் கொடுங்களென்று சொல்லுவதற்கு யோக்கியமில்லாத பேர்களாகிய மிலேச்சருடையநெஞ்சானது உருகும்படியாய்க் கவிதை பாடித் தேடிக்கொண்ட பொல்லாத காரியங்கள் கணக்கில்லாமல் அடியேனிடத்தி லிருக்கின்றன. அவைகளை யாராய்ந்து பாராமல் இரட்சிக்க வேண்டும், சேஷமலையையும் சேஷனாகிய கோவிலையும் பெற்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

அயனாரெழுத் தளவன்றியே யதிகங்கணப் பொழுதாயினும்,
பயனாயிருப் பவரில்லையிப் படி மீதிலப் படியன்றியே,
வியனாயுனைத் தொழுவார் களவ் விதிவெல்வராய் மறை சொல்லுமே,
நயனா ரதன் புகழ்சோதியே நாராயணா நாராயணா.       8

[இ-ள்.] பிரமதேவனானவன் எழுதின பிரகார மேயல்லாமல் அதிகமாக க்ஷணப்-போதாகிலும் இந்தப் பூமியிலே பிரயோசனப்பட்டிருப்பவர் இல்லை யென்றாலும், அப்படி அல்லவென்று சந்தோஷமாகத் தேவரீரைத் தொழுதபேர்களெல்லாம் அந்த விதிவசத்தைக் கடந்திருப்பர்களென்று வேதங்கள் முறையிடுகின்றதே; நயத்தோடுங்-கூடிய நாரத மகாமுனிவர் தோத்திரம் பண்ணா நின்ற சோதிமயமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 8
————

ஓமங்களால் விரதங்களா லுயர் தீர்க்தயாத் திரை கோடியால்,
ஏமங்கள் கன்னியரீதலா லெழு பாரையுஞ் சுழல்கின்றதால்,
ஆமைம்புலன் கடி கின்றதா லடை புண்ணியங் கணமேனு நின்,
நாமமபுகன் றதுபோலுமே நாராயணா நாராயணா.       9

[இ-ள்.] ஓமங்களாலேயும் விரதங்களாலேயும் உயர்ச்சிபெற்ற கோடி தீர்த்த யாத்திரைகளாலேயும் சுவர்ணங்களுடனே கன்னிகா தானங்களாலேயும் ஏழுபூமியையும் பிரதட்சணம் வந்ததினாலேயும் உண்டாகிய பஞ்சவிந்திரியங்களை நீக்கினதினாலேயும் வரா நின்ற புண்ணியங்களெல்லாம் தேவரீருடைய திருநாமத்தை க்ஷணப்போதாகிலுஞ் சொல்லிய புண்ணியத்திற்கு ஒப்பாக மாட்டாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
———

பாடேனலோ கவிசிந்தனைப் பணியேனலோ பலகாலெழுந்,
தாடேனலோ பலிபீடமுன் னணு கேனலோசடகோபமே,
சூடேனலோவலமாகவே சுழலேனலோ கதியென் றுனை,
நாடேனலோ கொடியேனலோ நாராயணா நாராயணா.       10

[இ-ள்.] தேவரீரைக் கவிதைகளாலே பாடினதுமில்லை, தண்டஞ் சமர்ப்பித்ததுமில்லை, பல காலமுமெழுந்து ஆடினதுமில்லை, பலிபீடத்தின் முன்னே வந்ததுமிலலை, சடகோபத்தை முடியிலே சூடினதுமில்லை, வலமாகச் சூழ்ந்ததுமில்லை, கதியென்று உன்னை நினைத்ததுமில்லை, இத்தன்மையான பாவியானவன் கடைத்தேறும் மார்க்கமுளதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 10
————

அறவைக்கெலா மடிமூல நா னருளுக்கெலா மடிமூல நீ,
பிறருக்கெலாம் பெறுவித்ததும் பெறு விப்பதும்பிணை தட்டிலே,
உறவைக்கிலென்னுயிர் காவலுக் கொவ்வா வா துரை செய்வனோ,
நற வத் துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       11

[இ-ள்.] லோகங்களுக்கெல்லாம் அடிவேராகியிருப்பது யானேயன்றி வேறில்லை; கிருபைகளுக் கெல்லாம் மூலகாரணமா யிருப்பது தேவரீரே யன்றி வேறில்லை; அயலார்களுக்கு நீர்செய்த பலனையும் இனிச் செய்கின்ற பலனையுந் தராசினுடைய தட்டுகளிலே பொருந்தவைத்தால் என் னுடைய உயிரை இரட்சிக்கிற பலனுக்கு அவை சரியாகமாட்டாது. ஆதலால் வாது பேசுவதில்லை, தேன் பொருந்துத் திருத்துள வந்தரித்த திருமார்பை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 11
————

பசியா தமந் திரமேவரும் பழியாதமந் திர மந்தகன்,
விசியாதமந் திரநோயிலே விழியாத மந திரநெஞ்சிலே,
முசியாதமந் திரமோதுவார் முதலானமந் திரமொன்றிலே,
நசியாதமந் திர மோ நமோ நாராயணா நாராயணா.       12

[இ-ள்.] பசியை எழுப்பாதது, எவர்களாலேயும் பழிப்பில்லாதது, எமன் பாசத்திற் கட்டுப் படாதது, நோயைப் பார்க்காதது, நெஞ்சிலே கெடுதலில்லாதது, ஓதுவார்க்கெல்லாம் முதன்மையானது, ஒன்றினாலேயும் நாசமில்லாதது. அது யாதெனில், ஓம் நமோ நாராயணா வென்னுந் திருமந்திரமே யல்லது வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 12
———-

அபராதமா கியபல்சரக் கடலாகவோ டம தேற்றியே,
விபரீதநோ யலையிற்குளே விட நின்ற தூழ் வினையென்செய்வேன்,
இபராசனைக் கரை யேற்று நீ யெனையேற்றலிங் கரிதல்லவே,
நபரா சனே சுபராசனே நாராயணா நாராயணா.       13

[இ-ள்.] அபராதங்களாகிய பல சரக்குகளை நெருக்கமாகத் தேகமென்னும் ஓடத்திலே ஏற்றி விபரீத நோயாகிய கடலுக்குள்ளே ஊழ்வினையானது தள்ளி நின்றது. என்செய்வேன்; கஜேந்திரனைக் கரையேற்றின தேவரீர் அடியேனைக் கரையேற்றுதற்கு இவ்விடத்தில் அரிதல்லவே; தேவர்களுக்குஞ் சுபங்களுக்குங் கர்த்தாவாகிய ஸ்ரீமந்
நாராயணா எ-று. 13
————-

வான் சொல்லுமே புவிசொல்லுமே மறை சொல்லுமே நிறைசேடன்வாய்,
தான் சொல்லு மே முனிவோர்பெருஞ் சபை சொல்லுமே சசி சொல்லுமே,
தேன் சொல்லிபங்கிறை சொல்லுமே திசைசொல்லுமே திகையாமலே,
நான் சொல் லவே அவுமாவெனோ நாராயணா நாராயணா.       14

[இ-ள்.] தேவர்களுடைய நாவும், உலகத்தோருடைய நாவும், வேதங்களுடைய நாவும், கல்வி நிறைந்த ஆதிசேடனுடைய இரண்டாயிரம் நாவும், பெரிதாகிய சபையோடுங்-கூடிய முனிவருடைய நாவும், சந்திரன் முதலாகிய நவக்கிரகங்களுடைய நாவும், தேன்போலுஞ் சொல்லினை யுடைய பார்வதி பாகத்திலிருக்கும் ருத்திரனுடைய நாவும், திக்குப்பாலகருடைய நாவும் தோத்தரிக்கும்படியான தேவரீருடைய கீர்த்தியை மாறு படாமல் அடியேனுடைய நாவினாலே சொல்லுவதற்குக் காரணமாவேனோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 14
———–

சுருக்காமருந் துடற்கூறியே சுழற்றாமருந் தழற்றீயிலே,
உருக்காமருந் துலர்த் துண்டையா வுருட்டாமருந் துழக்கெண்ணெயில்,
கருக்கா மருந் திகற்கையிலே கசக்காமருந் திருகல்லிலே,
நருக்காமருந்திருக்கின்றதே நாராயணா நாராயணா.       15

[இ-ள்.] வெயிலிலே சுருங்காதது, உடலிலே யூறினாற் சுழற்றாதது, அக்கினியிலே யுருகாதது, உண்டையாக வுருட்டி உலர்த்தாதது, உழக்கெண்ணெயிலே கருக்காதது, வலிய கைகளிலே கசக்காதது, இரண்டு கல்லிலே நெருக்காதது, இத்தன்மையைக் கொண்ட மருந்தானது இருக்கின்றது. அது யாதெனில் அஷ்டாட்சரமே யன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று: 15
————-

தகவாயுனைப் புகழாமலே சலமே தொடுத் திகல் பேசுவார்,
முகவாயிலே புழுவீழுமே முனை யந்தகன் கிளைமோதுமே,
ககவாகனா மிகுமோகனா கனகன்களே பரமார்பெலாம்,
நகவாளினா லரிசீய மே நாராயணா நாராயணா.       16

[இ-ள்.] மேன்மையாகத் தேவரீரைத் தோத்திரஞ்செய்யாமல் கோபமே பொருந்திப் பகையாக இழிவுபேசுவாருடைய முகத்தோடுங்கூடிய வாய்களிலே புழுக்கள் சொரிவதுமல்லாமல் எதிர்க்கா நின்றயமதூதர் மோதுவார்கள். கருடவாகனனே! போகசொரூபனே! இரணியனுடைய மார்பையும் திவனது சேனைகளையும் நகமென்னும் ஆயுத நனாலே சங்கரியா நின்ற நரசிங்கரூபமாகிய ஸ்ரீமந் தாராயணா எ-று. 16
————-

தலமேழையும்படமோதினுஞ் சலமோ விடா தகிலாண்ட நற்,
பலம்யாவுமென் மனை சேரினும் பசைபோதிடா திசைமாதரார்,
குலம்யாவுமின் பமதீயினுங் குறுகாதுமால் பெறுகாயமே,
நலமே வுமோ பொலமேவுமோ நாராயணா நாராயணா.       17

[இ-ள்.] ஏழுலோகத்தையும் அழியும்படியாய்ப் போர் பண்ணினாலும் கோபங்கள-டங்குவதில்லை, அகிலாண்டங்களிலே யிராநின்ற நன்மையான பாக்கியங்களெல்லாம் என் வீட்டிலே நிறைந்தாலும் ஆசைக ளொழிவதில்லை, பெண்களென் றிசைந்த சாதிகளெல்லாம் இன்பத்தைக் கொடுத்தாலும் காமங்கள் நீங்குவதில்லை. இத்தன்மையைக் கொண்ட என்னுடைய தேகமானது எந்தத் தன்மையைப்பெறுமோ அறியகில்லேன் பிரகாசியா நின்ற மேகவண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 17
————-

பண்டிட்டதா மரையுந்தியிற் படி வார் நினக் கடியாரெனத்,
தொண்டிட்டு நின் றொழில்கொள் வதோ துயரத்திலே யடைவிப்பதோ,
கொண்டிட் டநின் புகழ் நிற்கவே குறையாளரைப் புகழ்கின்ற வாய்,
நண்டிட்டபாழ் வளையொக்குமே நாராயணா நாராயணா.       18

[இ-ள்.] பழமையா யிரா நின்ற தேவரீருடைய நாபிக்கமலத்திலே பொருந்தின உயிர்களை யெல்லாம் அன்பராகும்படி அடிமை கொண்டு கைங்கரியத்தைக் கொள்ள வேண்டுமேயல்லாமல் துக்கங்களடையச் செய்யலாமோ, வேதங்கள் கொண்டிரா நின்ற உம்முடைய கீர்த்தியைவிட்டுக் குறைச்சலான தெய்வங்களைப் புகழா நின்ற வாய்களெல்லாம் நண்டிட்டுத் தோண்டி விட்ட பாழ்வளைக்கு ஒப்பாவதே யன்றிப் பிரயோசனமில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 18
————–

பகையானவன் பிணிசெய்ததோர் பதினாயி ரம்பிழையுண்டு நான்,
வகையா நினக் குரைசெய்கி லேன் வருநோயுநின் னருளாதலால்,
மிகையான பின் முறையிட்டனன் விடுவித்திடாய் விளையாடி னால்,
நகையார்களோ குறையார்களோ நாராயணா நாராயணா.       19

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே பகையாகிய பொல்லாத பிணியானது செய்யா நின்ற உபத்திரவங்கள் பதினாயிரமுண்டு. அதனை இன்ன விதங்களென்று தேவரீருக்கு விண்ணப்பஞ் செய்கிலேன். வரா நின்ற இந்த நோயானது உமது கிருபையேயல்லாமல் வேறில்லை. ஆதலால் துன்பம் மிகுந்த பிற்பாடு முறையமிட்டேன். இதை நீக்கிவிடாமல் விளையாடினால் உலகத்தார் நகைப் பதுமல்லாமல் இகழ்ச்சியும் பண்ணுவார்கள்
ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

குப்புற்ற கன் றுடனாகெலாங் குழுவாகவோர் குழலூதவே,
மப்புக்கொளுந் தொனிகா திலவ் வழியேகுபுட் களுமுண்ணவே,
துப்புக்குமோர் தயிர்வெண்ணெய்பால் சொரிகைக்குமவ் விடை நங்கைமார்,
நட்புக்குமா டியகண்ணனே நாரா யணா நாராயணா.       20

[இ-ள்.] துள்ளின கன்றுகளுடனே பசுக்களெல்லாங் குவிந்திருக்கவும், ஆகாயவழியிலே செல்லா நின்ற பட்சிகளுடைய காதுகளிலே கேட்கவும், ஒப்பில்லாத வேணுகுழலூதித் தொனியாக மப்புக்கொட்டின துமல்லாமல் அங்கிருக்கும் இடைப்பெண்கள் பொழியா நின்ற நெய்க்கும் மோருக்கும் தயிருக்கும் வெண்ணெய்க்கும் பாலுக்கும் அவர்களுடைய நட்பினுக்கும் நடனஞ் செய்த கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 20
——–

தாயற்றபேர் தாயாகுவாய் தமரற்றபேர் தம ராகுவாய்,
சேயற்றபேர் சேயாகுவாய் செயலற்ற பேர் செயலாகுவாய்,
வாயற்றபேர் வாயாகுவாய் மலைபோலுநோய்க் குனை நம்பினால்,
நாயிற்று முன் பனி நிற்குமோ நாராயணா நாராயணா.       21

[இ-ள்.] தாயில்லாத பேர்களுக்குத் தாயாகவும், சுற்றமில்லாத பேர்களுக்குச் சுற்றமாகவும், பிள்ளையில்லாத பேர்களுக்குப் பிள்ளையாகவும், உதவியில் லாத பேர்களுக்கு உதவியாகவும், வாக்கில்லாத பேர்களுக்கு வாக்காகவும், அருளா நின்ற தேவரீரை அடியேன் மலைபோலுங் கொண்ட நோய் தீருதற்கு நம்பினால் சூரியன் முன்னே பனி நீங்கு மாப்போலே நீங்குமேயன்றி நிற்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
——-

மந்தன் புதன் குருவெள்ளிசேய் மதிராகுகே தரி நாடொறுந்,
தந்தம்பொலா விட மேவினுஞ் சகலேச நின சரணண்டினால்,
எந்தம்பிரா னிவ னென்று கொண் டேகாதசப்பலனீவரே,
நந்தன் சுதா நம்புபதா நாராயணா நாராயணா.       22

[இ-ள்.] சனி புதன் குரு சுக்கிரன் செவ்வாய் சந்திரன் ராகு கேது சூரியன் இவர்கள் நாடோறும் தங்கள் தங்கள் பொல்லாத இராசிகளிலே யிருந்தாலும், சகலத்துக்கும் ஈசனே! தேவரீருடைய திருவடியை யடைந்தால் எங்களுடைய தம்பிரான் இவனேயென்று அன்பு கொண்டு பதினோராமிடத்துப் பலனைக் கொடுப்பார்கள். நந்த கோபனுடைய திருக்குமாரா! நாயினேன் நம்பா நின்ற பரமபதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———

ஆற்றாமையொன் றமையாமையொன் றறி யாமையொன் றருளாமை யொன,
றேற்றாமை யொன் றிசையாமையொன் றின்னாமை யொன் றிருதாளையும்,
போற்றாமையொன் றடியாருடன் பொலியாமையொன் றொருமெய்யிலே,
நாற்றாய் விளைந் திடலாகுமோ நாராயணா நாராயணா.       23

[இ-ள்.] அயலார் வாழ்வைக்கண்டு அவதிப் படுதல், பொறுமை நீங்குதல், பேதைமை வளர்த்தல், ஈதன்மறுத்தல், முயற்சியடைதல், இங்கிதம் ஒழித்தல், பொறாமை மிகுதல், திருவடிப் புகழ் விடுதல், அடியாருடன் கூடாதிருத்தல் இவைக ளெல்லாம் நாயினேனுடைய ஒரு தேகத்துக்குள்ளே நாற்றுக்கள் போல வளரலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

தன்மைக்கு நீ யடியேனுடைச் சலிகைக்கு நீ பொலிகைக்கு நீ,
மேன்மைக்கு நீ வன்மைக்கு நீ மிகுதிக்கு நீ தகுதிக்கு நீ,
புன்மைக்கு நீ புலமைக் கு நீ பொறுமைக்கு நீமறுமைக்கு நீ,
நன்மைக்கு நீ தின்மைக்கு நீ நாராயணா நாராயணா.       24

[இ-ள்.] அடியேனுடைய ஒழுக்கத்துக்கும் சலிகைக்கும் பிரகாசத்துக்கும் மெலிமைக்கும் வலிமைக்கும் குற்றத்திற்கும் முயற்சிக்கும் பொல்லாங்குக்கும் அறிவுக்கும் பொறுமைக்கும் மோட்சத்துக்கும் நன்மைக்கும் தின்மைக்குஞ் சகலத்துக்குந் தேவரீரேயல்லாமல் வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

வேட்பித்ததுன் பெருநெஞ்சமே வியப்பித்த துன் விளையாடலே,
கேட்பித்ததுன் பல நூல் களே கிளர்ப்பித்ததுன் பதிவாசமே,
பேட்பித்த துன் கனசத்தியே பிழைப்பித்தவெம் பிணிப்பித்த வாழ்,
நாட்பிச்சையுந் தரவேண்டுமே நாராயணா நாராயணா.       25

[இ-ள்.] உமது திருவுள்ளமே எனக்கு இன்பம் தந்தது, உமது திருவிளையாடலே எனக்குச் சந்தோஷஞ் செய்வித்தது, உமது திவ்வியப் பிரபந்தமுதலாகிய புராணங்களே எனக்குக் கேட்கப் பண்ணியது, உமது திருப்பதிகளே எனக்கு வாசத்தை யுண்டாக்கியது, உமது கனம் பொருந்திய வலிமையே எனக்கு ஆதரவுபுரிந்தது. ஆதலால் அடியேனுடைய குற்றத்தையும் வெவ்விதாகிய நோயையும் நீக்கிவிட்டு இனி வாழ் நாளாகிய பிச்சையுந் தரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 25
———

பூரிக்கு நின் கொடியென்னவே புளகிக்குநின் சனமென்னவே,
ஈரிக்கு நின் சபையென்னவே யிரதிக்கு நின் புகழென்னவே,
ஆரிக்குணம் பெறு கேவர்தா மடியாருளந் தானந்தமே,
நாரிக்குவில் லொடியச் செய்தாய் நாராயணா நாராயணா.       26

[இ-ள்.] உமது கருடக் கொடியே யென்றால் எனது தேகப் பூரிக்கும், உமது அடியார்களே யென்றால் எனது மயிர் புளகிக்கும், உமது சபையேயென்றால் எனது கண்களிலே ஆனந்த பாஷ்பம் பெருகும், உமது புகழேயென்றால் என்மனது ரம்மிக்கும். ஆகலால் இத்தன்மையான குணத்தைத் தேவர்களிலே எவர்கள் தான் பெற்றார்கள். பாகவதருடைய இருதயத்தில் ஆனந்தமானவனே! ஜானகிக்காக உருத்திரன் வில்லை ஒடியச் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று. 26
————-

தேன் பாடிதா வனமாலையுந் திருவாழிசங் கமுமேந்தியே,
தான்பாடி நாரதனாடுமுன் சபை மானிடர்க் கதிதூரமே,
வான்பாடியுட் புயலென் று தான் வருமென்று வா டுவதென்னவே,
நான் பாடினால் வரவேண்டுமே நாராயணா நாராயணா.       27

[இ-ள்.] நாரதமுனியானவர் பாடியாடா நின்ற தேவரீருடைய சபையானது மானிடர்களுக்கு அதிக தூரமாக விருக்கும். ஆதலாலவாக்கூடாது. வானம்பாடியென்னும் பட்சியானது நீருண்ட மேகங்கள் என்றைக்கு வருமோவென்று மனது வாட்டங்கொள்வது போல அடியேன் வருந்தப் பாடினால் அத்தன்மை போல வந்து இரட்சித் தருளவேண்டும் வண்டு பாடித்து ராவா நின்ற துளபமாலையும் திருச்சக்கரமும் சங்கமும் ஏந்திய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

மானோயு நின னருளுற்ற நாள் வாய் நீர்மருந் தாயங்ஙனே,
தானோடு நின் னருளற்ற நாள் சஞ் சீவியைத் தளியேறுமே,
தானோரையண் டின பேர் கடா ரடியாருளத தானந்தமே,
நானோதவா ஞானோதயா நாராயணா நாராயணா.       28

[இ-ள்.] மகத்தாகிய நோய்களெல்லாந் தேவரீருடைய கிருபையைப் பெற்ற நாளையிலே உமிழ் நீரே மருந்நாகி அங்ஙனே ஓடிப்போகும். உமது கருணை யில்லாத காலத்திலே சஞ்சீவியைக் கொடுத்தாலுந் தள்ளிவிட்டு அதிகமாகுமாதலால் இதை யறிந்தபேர்கள் சுகத்தைப் பெறுவார்கள். அடியார்கள் இருதயத்தில் ஆனந்தமானவனே! நாயினேன் ‘தோத்திரம்’ பண்ணினால் ஞான உதயஞ் செய்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

ஈசன்பரன் பிரமன் பிதா விறைவிண்டுவண் இறைதண்டுழாய்,
வாசன சரா சரனென்று நின் வழியன்பர்வாழ் பதிதன்னிலே,
தீசங்கடம் பிணி தாழுமே சிறைசண்டைவஞ்சனை வீழுமே,
நாசங் கடந் துயிர்வாழுமே நாராயணா நாராயணா.       29

[இ-ள்.] ருத்திரனுக்குப் பரமனே யென்றும், பிரமனுக்குத் தந்தையேயென்றும், கர்த்தனே யென்றும், விஷ்ணுவே யென்றும், வண்டுகளுடனே குளிர்ச்சி பொருந்தா நின்ற திருத்துழாயினிடத்தில் வாசனேயென்றும், சராசரங்களான வனேயென்றும், தேவரீரைத் தோத்திரம் பண்ணி வழிபடா நின்ற அடியவர்கள் வாழ்ந்தருளும் தலங்களிலே பொல்லாத சங்கடங்களும் நோய்களும் சிறைகளும் போர்களும் வஞ்சனைகளும் இவை முதல் குற்றங்கள் யாவும் நீங்கி மற்றவுயிராக ளெல்லாட வாழ்ந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

ஆபாதவா யுனைவையுமே யடியாருடன் படைபண்ணுமே,
மாபாவ நூல் பலகற்குமே மறைபன னுவாதியர்தம்மினும்,
ஓபாவியேனிவை நின்முனேயுரை செய்தனன் விரைசெய்தபூ,
நாபா பரா பரனேயரீ நாராயணா நாராயணா.       30

[இ-ள்.] அபத்தம் நிறைந்த என்னுடைய வாயானது தேவரீரை வைதுகொண்டேயிருக்கும். அடியார்களுடன் போர் பண்ணிக்கொண்டே யிருக்கும். மகத்தாகிய பாப சாஸ்திரங்களையே கற்கும். ஆதலால் வேதத்திலே சொல்லா நின்ற விரோதிகளைப் பார்க்கிலும் அதிகரித்திரா நின்ற விரோதி யாகிய நாயினேன் தேவரீர் சந்நிதானத்திலே விண்ணப்பஞ் செய்துவிட்டேன். உமது சித்தம் எனது பாக்கியம். வாசனை சேர்ந்த நாபிக்கமலம் பொருந்தா நின்ற பராபரனென்னும் அரியாகிய ஸ்ரீமந நாராயணா எ-று.
————

காற்பாலினிற் கடவாதவன் கலிகாலமே திரை யாடிடுந்,
தோற்பாவை நா னதுமெச்சவே தொடு சூத்திரத துறைகாரணீ,
மேற்பாவபுண் ணிய மான நல் வினை தீவினைக் கெவராகுவார் ,
நாற்பாலி னுக் கொருமூலமே நாராயணா நாராயணா.       31

[இ-ள்.] கடலிலே உதித்துவரா நின்ற சூரியனாலே அறியும்படியான காலப் பிரமாணத்தோடுங் கூடிய கலிகாலமே திரையாகவும், ஆடா நின்ற தோற்பதுமை யானாகவும், மனது மெச்சும்படி யாகத் தொடுக்கா நின்ற சூஷ்திரத்துறைக்காரர் தேவரீரானால் மேலே வாரா நின்ற பாப புண்ணியங்களுக்கு அதிகாரிகள் எவராகுவார்கள்? இந்த நியாயத்தைத் தெரியப்படுத்தவேண்டும். பறப்பன ஊர்வன நடப்பன இருப்பனவாகிய நான்குவித சாதிகளுக்கெல்லாஞ் சமானமான ஆதரவு தேவரீரேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 31
————-

இரைபாலெழுஞ் சுவரான நா லிருசாணுடம் பிடியாமலே,
கரையாமலே தகராமலே கழலாமலே யழலாமலே,
திரையாமலே வினைமூடி கண் டிறவா மலே வகையென்னைதா,
னரையாதசோ றிடுமை யனே நாராயணா நாராயணா.       32

[இ-ள்.] ஆகாரத்திலே வளராநின்ற எண்சா ணுடம்பாகிய சுவரானது கரைந்து போகாமலும் இடிந்து போகாமலும், அதிர்ந்து போகாமலும், உதிர்ந்து போகாமலும், வெந்து போகாமலும், திரைந்து போகாமலும், வினையினாலே இறந்து போய் மறுபடியும் பிறந்து விழிதிறவாமலும் இருக்கும் வகையாதெனில், நரை திரை மூப்பில்லாத அமுதத்தைக் கொடுத்தருள வேண்டும் என் ஐயனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

புற்கொண்டுவாழ் பசுவாரெடார் புலியாழ் கிணற்றிடைவீழினுங்,
கற்கொண்டுவா தடி கொண்டுவா கடி தென்பரப் படுபாவி நான்,
ஏற்கொண்ட நோய்க் கெவராகுவா ரினி நீயலா திலை யெட்டியும்,
நற்கொண்டலால் வளர்கின்றதே நாராயணா நாராயணா.       33

[இ-ள்.] புல்லையுண்டுவாழா நின்ற பசுவானது கிணற்றிலே விழுந்தால் கண்டவர்கள் யாரேனும் எடுத்து விடுவார்கள். புலியானது விழுந்ததானால் சீக்கிரமாய் கற்களுந் தடிகளுங்கொண்டு கொல்லுவார்கள். அத்தன்மைபோலப் படுபாவியான என்னுடைய தேகத்திலே கொண்ட நோயைத் தீர்க்க எவரிருக்கிறார்கள்? இனி தேவரீரையன்றி வேறு இல்லை. மழையினாலே எட்டிச்செடியும் வளர்வது போல உம்முடைய கிருபையினாலே அடியேனும் வளரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 33
————-

அரசன் கையா லபயம்பெறா ரயலாளுமன் னரையண்டினால்,
விரசென்றுவந் திடமீவர் நீ வினவாதசீ விகளண்டினால்,
வரசங்கரா தியாஞ்சு வார் வருகென்னமேல் வகையென்ன தான்,
நர சிங்கனே முரபங்கனே நாராயணா நாராயணா.       34

[இ-ள்.] தாங்கள் நம்பியிருக்கும் அரசனாலே பிரயோசன மில்லையென்று மறு மன்னவரிடத்திலே சேர்ந்தால் சந்தோஷித்து எதிரே வந்து இடங்கொடுத்து இரட்சிப்பார்கள். அத்தன்மையாகத் தேவரீரை நம்பினபேர்கள் யாவரேனும் உம்மை வினவாமல் வெறுத்துப் பக்கத்திலே சென்றால், முக்கியமான சங்கரன் முதலாகிய தேவதைகளானாலும் இரட்சிக்கப் பயப்படுவார்கள். ஆதலால் கதிவேறில்லை. அடியேனை வாவென்றழைக்க வகையென்ன வெண்ணி யிருக்கிறீரோ தெரியாது. நரசிங்கரூபனே! முரகாசுரனைக் கொன்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

கோட்சொல்லுவேன் வசைசொல்லுவேன் குறை சொல்லுவேன் முறை சொல்லுவேன்,
கீட் சொல்லுவேன மிகைசொல்லுவேன் கிலிசொல் லுவேன் வலி சொல்லுவேன்,
சூட்சொல்லுவே னயனூழி நாள் சொலவேண்டினுஞ் சிறிதுன்னை யோர்,
நாட்சொல்லலென் நறிகின்றிலேன் நாரா யணா நாராயணா.       35

[இ-ள்.] பிரமகற்பபரியந்தம் அடியேனுடைய நாவானது கோள்களும் வசைகளும் குறைகளும் முறைகளும் கீழ்மைகளும் குற்றங்களும் பயங்களும் வலிமைகளும் வஞ்சனைகளும் இவைகளைச சொல்லுமேயன்றிக் கொஞ்சமாகிலும் தேவரீர் நாமத்தை ஒரு நாளையிலேனுஞ் சொல்லும்படியா யறிந்ததேயில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 35
———

ஆளாகி நின் னிரு நாலெழுத் தறியாத நா ளறிவார்களைக்,
கேளாத நாள் செவியூறவே கடை யாத நா ளதிலாசையே,
மூளாத நா ணிலமீது தான் முதனாள்லங் கெழுதாத நாள்,
நாளாகுமோ வாளாயுதா நாராயணா நாராயணா.       36

[இ-ள்.] ஆசாரியனுடைய திருவடிகளுக்கு ஆளாகத் தேவரீருடைய திருமந்திரத்தை அறியாத நாளும், தெரிந்த பாகவதரைக் கேளாத நாளும், செவிகளிலே யூறும்படியாய்க் கிடையாத நாளும், அதிலே ஆசையானது பெருகாத நாளும், அஞ்சாவது வயதில் முதல் நாளையிலே பள்ளிக்கூடத்தில் அரியென்று நிலவெழுத்தாகிலும் எழுதிவையாத நாளும் பல நல்ல நாளாகுமோ? வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 36
————

வீட்டுக்குளே துணையாவதும் வெளியிற் குளே துணையாவதும்,
கூட்டுக்குளே துணையாவ துங் குன்றுக்குளே துணையாவதும்,
காட்டுக் குளே துணையாவதும் கடலுக்குளே துணையாவதும்,
நாட்டுக்குளே துணையாவதும் நாராயணா நாராயணா.       37

[இ-ள்.] வீட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும், வெளியினுக்குள்ளே துணையா யிருப்பவனும், சந்திரனுக்குள்ளே துணையாயிருப்பவனும், மலையினுக்குள்ளே துணையா யிருப்பவனும், காட்டினுக்குள்ளே துணையாயிருப்பவனும், கடலினுக் குள்ளே துணையா யிருப்பவனும், நாட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

வாய்க்கின்றதேன் பகையுண்ணலா மணக் கின் றசாந் தரையுண்ணலாங்,
காய்க்கின்றமா வெறியுண்ணலாங் கறக்கின்றவர்க் கட்டுண்ணலாப் ,
தோய்க்கின்றபால் குடையுண்ணலாஞ் சுவை கெட்டமா னிடவாலிலா,
நாய்க்கிந்தவா தனையேனையா நாராயணா நாராயணா.       38

[இ-ள்.] தேன்கூண்டினுக்குப் பகைத்தலும், சந்தனக்கட்டையினுக்குத் தேய்த்தலும், பழுத்த மரத்தினுக்குக் கல்லெறிதலும், கறக்கும் பசுவினுக்குக் கயிறணைத்தலும், தோய்த்த தயிரினுக்கு மத்தால் குடைத்தலும், இவைகளுக்கு இந்த உபத்திரவமுண்டாகல் பிறருக்குபகாரமாகும். உருசியும் வாலுமில்லாத மானிட மென்னும் நாயினுக்கு இந்த வாதனையைக் கொடுத்தீரே இதனாலே உமக்கென்ன பிரயோசனமுண்டு. தெரியச் சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

தும்பிக்கையா னையுமைவர்முன் றுகிலோடி வாடிய நங்கையும்,
தம்பிக்கையா மகயோகருந் தா நிற்கவே சதுர்வேதியன்,
கம்பிக்கையா லரனுக் கு நீ கனியையிட் டினியையமேன்,
நம்பிக்கையா கிய தெய்வமே நாராயணா நாராயணா.       39

[இ-ள்.] கஜேந்திரனையும் பாண்டவரையும் வஸ்திரம் நீங்குதென்று வாடின துரோபதையும் ஸ்தம்பிதமாயிருந்து தவம்பண்ணா நின்ற மகத்தாகிய யோகிகளையும் இரட்சித்திருக்கட்டும். நான்கு வேகத்தையு முடைத்தாகிய பிரமனுடைய சிரத்தைக் கிள்ளின சிவனுக்கும் பிச்சையிட்டுச் சாபத்தைத் தீர்த்தபிற்பாடும் இனி பரத்துவம் வேறே யென்று ஐயப்படலாமோ? நம்பிக்கையான தெய்வம் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா. எ-று.
————-

பாலாவதோ, தேனாவதோ பழமாவதோ பாகா வதோ,
மேலானசர்க் கரையாவதோ விரையாரு நல் லமுதாவதோ,
கோலாகலப் பிணிதீரவே குளி யங்களோ வனமூலியோ,
நாலாவதோ நின்பேர் சொலாய் நாராயணா நாராயணா.       40

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே காலா கலஞ் செய்யா நின்ற நோயைத் தீர்க்கும்படியான தேவரீருடைய திருநாமமானது பாலாகியதோ? தேனாகியதோ? பழமாகியதோ? பாகாகியதோ? மேலாகிய சருக்கரையாகியதோ? வாசனை சேர்ந்த நல்லமிர்தமாகியதோ? வன மூலிகை யாகியதோ? இவையல்லாமல் மணிமாதிரம் ஒளடதம் இவை மூன்றுக்கு மேலாகியதோ? என்னென்று சொல்லுவோம் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

பூவுக்கு நல லது சொல்லவோ பொலிசீதளப் புதுவாசமே,
தேவுக்கு நல லது சொல்லவோ செவியார்முனே யெதிர் நிற்பதே,
ஆவுக்கு நல் லது சொல்லவோ வதுசாதுவா யமுதீவதே,
நாவுக்கு நல்லது சொல்லவோ நாராயணா நாரா யணா.       41

[இ-ள்.] புட்பங்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் காந்தியும் குளிர்ச்சியும் புதிய வாசனையும் உண்டாகிய புட்பமேயன்றி வேறில்லை. தெய்வங்களுக்குள்ளே நல்லது சொல்லவேணடு மானால் முறையத்தைக் காதிலே கேட்குமுன்னமே அடியார்களுக்குப் பிரசன்னமாகிய தெய்வ மேயன்றி வேறில்லை. பசுக்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் அது வெகு சாதுவா யமுதத்தைக் கொடுக்கும் பசுவேயன்றி வேறில்லை. நாவுகளுக்குள்ளே நல்லது சொல்லவேண்டு மானால் தேவரீருடைய திருநாமக்தைச் சொல்லிய நாவேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 41
—————

ஆனந்தமா யழுவார்முனே மலர்சூடியே தொழுவார்முனே,
மோனந்தனிற் கரைவார் முனே முகிலென்னவே புகழ்வார்முனே,
தானந் தவம் புரிவார் முனே சரணென றுனை யடைவார் முனே,
நானென் செய்கே னிவையொன்றிலே நாராயணா நாராயணா.       42

[இ-ள்.] தேவரீருடைய திருவடியை நினைத்து ஆனந்த பாஷ்பங்களைக் கண்களிலே பெருக்குவார்களுக்குமுன்னே, புட்பங்களை யலங்காரஞ்செய்து தண்டஞ் சமர்ப்பிப்பார்களுக்கு முன்னே, மௌனத் தியானத்தினாலே உள்ளங் கரைந்திடுவார்களுக்கு முன்னே, பசுங்கொண்டலே யென்று புகழ்ந்திடுவார்களுக்கு முன்னே, தானங்களுந் தவங்களுஞ் செய்திடுவார்களுக்கு முன்னே, சரணாகதி செய்திடுவார்களுக்கு முன்னே , அடியேன் இவைகளிலே ஒன்றாகிலும் செய்யமாட்டு வேனோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 42
————

செரிக்கின்றவூணுகர்வேனலேன் சிரிக்கின்ற காரியமே செய்வேன்,
கரிக்கின்றகண் படையேன் வெறுங் கழப்பன் கொடுங்கடுவஞ்சகன்,
பரிக்கின்ற நின் னடியாரொடும் பழகேனலேன் படர்வந்த பின்,
நரிக்கின்றனே னினியென் செய்வே நாரா யணா நாராயணா.      43

[இ-ள்.] ஜீரணமாகும்படியான ஆகாரத்தைக் கொள்ளாமல் நகைக்கும்படியான காரியமே செய்து தெரிசன அபேட்சையான கண்ணையும் படையாமல் அன்பைப் பரிக்கா நின்ற அடியாருடனேயுங் கூடாமல் விருதாவாகிய கழப்பனாகவும் பொல்லாத விஷம்போலும் வஞ்சகனாகவு மவதரித்துத் துன்பம் வந்த பிற்பாடு, அவதியைக் கொள்ளா நின்ற நாயினேன் இனி என் செய்வேன்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 43
———-

ஆதாரதே வதையென்பனோ வடியேனையா ளரசெனபனோ,
ஓதா துணர்ந திடலன்புகூ ருப தேசதே சிகனென்பனோ,
மாதாபிதா வுடலாவி நீ மனைகாணிபொன் வலிசெய்வ நீ,
நாதாவு நீ தாதாவு நீ நாராயணா நாராயணா.       44

[இ-ள்.] ஆதாரமாகிய தேவதையே யென்பனோ? அடியேனையாளுங் கர்த்தனே யென்பனோ? பல நூல்களை யோதாமல் தன்னிலே யறிந்திட நட்பு செய்யா நின்ற, உபதேசகுருவே யென்பனோ? என்னென்று சொல்வேன்? தாயும் தந்தையும் தேகமும், உயிரும், பெண்சாதியும், காணியும், திரவியமும், வலிமையும், செல்வமும், நாதனும், பிரபுவும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 44
———

வடு நிந்தையே னிடுவந்தியேன் மருள் விஞ் சினே னருளஞ்சினேன்,
அடுசிந்தையே னெடு விந்தையே னலைபண்பினே னுனை நம்பினேன்,
விடு துன்பினேன் முடுகன்பிலேன் வினைமண் டினே னுனையண்டினேன்,
தடுவொன்றிலே மிடைகுன்றுமோ நாராயணா நாராயணா.      45

[இ-ள்.] குற்றம் பொருந்திய நிந்தையையும், இடுவந்தியையும், மிகுந்த மயக்கத்தையும், அருளில்லாத பொல்லாத இருதயத்தையும், பலவித துர் நடத்தையையும், காரியமென்கிற அலைச்சலையும் , தீவினையையும் இவைகளைக் கொண்டிரா நின்ற நாயினேன் இரக்கத்திலே பயந்தவனாக, அன்பிலே துரிதமில்லாதவனாகி, துன்பம் ஒழிவில்லாமல் தேவரீரை யடைந்தேன். மத்தியிலே இன்னமொரு விதத்தினாலே எனது வருத்தம் நீங்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 45
————

குடி நீர் கொடீர் முகவேதிடீர் குடவெண்ணெ யை வடியீர்பிரம்,
படியீர்வெணீ றெறியீர்விழிக் கதிகோரவஞ் சனமேயிடீர்,
கடியீர்வயித் தியரால் வரா கமதாடுகுக் குடமிட்டுளே,
நடியீரெனிற் பிணியஞ்சுமோ நாராயணா நாராயணா.       46

[இ-ள்.] குடிக்கும்படியாய் கிஷாயங்கள் நீர் கொடுங்களென்றும், முகத்துக்கு வேதுபிடியுங்க ளென்றும், குடத்திலே எண்ணெயை காய்ச்சிக் கொடுங்க ளென்றும், பிரம்பு கொண்டு அடித்து வெளுத்த விபூதியை எறியுங்களென்றும், கண்களுக்கு அதிகோரமாகிய கலிக்கம் போடுங்களென் றும், வயித்தியருக்குக் காட்டித் தீருங்களென்றும், பன்றியும் ஆடும் கோழியும் பலி கொடுத்துச் சன்னகமாட்டிப் பாருங்களென்றுஞ் சொல்லினால் இவைகளாலே நோய் தீர்வதுண்டோ ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 46
———-

பிரம்புக்கு முள் ளிடுமா தரைம் பிணிகட்கு நீள் பிணியுற்றவென்,
உரம்புக்குளே யறியா ததெ னுலகத்தெலாமுறைசோதிதோல்,
வரம்புக்குளே யெலும்புக்குளே வழும்புக்குளே தழும்புக்குளே,
நரம்புக்குளே யுகவெட்கியோ நாராயணா நாரா யணா.       47

[இ-ள்.] முள்ளுகளோடுங் கூடிய பிரப்பம்புதரு களுக்குந் தாமரைப் பிணையல்களுக்கும் மிகுந்த நோய்கொண்டிரா நின்ற என்னுடைய நெஞ்சுக்குள்ளே நீ நுழைந்தறியாம லிருப்பதென்னே? உலகத்திலிருக்கும் எல்லா வுயிர்கள் தோறும் வாசம் பண்ணாநின்ற சோதி நீயன்றி வேறில்லை. ஆதலால் இது தோலுடம்பும் எலும்பும் வழும்பும் தழும்பும் நரம்பும்கூடி நாற்றமானபடியினாலே புகுந்தறிதலுக்கு வெட்கமாகியதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 47
————-

மன்றாடிய வதிசோபன மழைவண்ணனே விசயங்கரா,
வென்றாய்சயஞ் செயுமச்சுதா மிக வாழிகே சவனேசுபங்,
கன்றால்விள வெறிந்தாய் பெருங் கலியாணமங் கலமாதவா,
நன்றாகவேங் கடநாயகர் நாராயணா நாராயணா.       48

[இ-ள்.] கோபிகா ஷ்திரீகளுடைய சபையிலே நடனம் பண்ண நின்றவனே! உனக்கு அதிக சோபனம், மேகவண்ணனே! உனக்கு விசயம். முதலையை வென்றவனே! உனக்கு செயம். அச்சுதனே! உனக்கு மிதந்த வாழி கேசவனே! உனக்குச் சுபம். கன்றால் விளாங்கனி யெறிந்தவனே! எனக்குப் பெரிதாகிய கலியாண மாதவனே! உனக்கு மங்களம். வேங்கட நாயகா! நீ இத்தன்மையாக நன்றாயிருக்கவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 48
———–

இந்தாவெனாவென திச்சை நீ யெளி நீவையே லிழிவாகுமோ,
சந்கானமா மலராலருச் சனை செய்தவார் தவிர்வார்களோ,
வந்தானபேர் துதி யார்களோ வசுதேவர்சீர்குறையாகுமோ,
நந்தாத பெண் ணகை செய்வளோ நாராயணா நாராயணா.       49

[இ-ள்.] அடியேனுடைய இச்சையானபடியே இங்கே வாவென்று தேவரீர் எளிதாகப் பலனைக் கொடுத்தருளினால் உமக்கு இகழச்சியாகுமோ? கற்பக மலரினாலே அருச்சனை செய்யா நின்ற தேவர்கள் விட்டுவிடுவார்களோ? சந்நிதானத்தில் வந்தபேர்கள் துதியார்களோ? வசுதேவருடைய உடைமையிலேகுறைந்து போகுமோ? அழிவில்லாத ஸ்ரீமகா லட்சுமி நகைப்பாளோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

சிற்றப்பனோ துருவற்கு நீ தெதிபாண்டனார் பெரியப்பனோ,
கற்றத்தைதேவகி தங்கையோ கண் டாகனன் மிதிலேசனோ,
சுற்றத்தரோ பெறுவோ ரெலாந் தொடுவேன்வழக் கிடுவேன் விடேன்,
நற்றப்படும் பொருடந்துபோ நாராயணா நாரா யணா.       50

[இ-ள்.] தேவரீர் முன்னாளையிலே இரட்சித்த பேர்களுக்குள்ளே துருவ மகாராஜனுக்கு நீ சிற்றப்பனே? தெதிபாண்டனென்னும் குயவன் உமக்குப் பெரியப்பனோ? கல்லுருவம் போக்கிக் கிளி போலப் பேசப்பண்ணாநின்ற அகலிகையானவள் தேவகிக்குத் தங்கையாகிய உமது சிறிய தாயாரோ? கண்டாகன னென்னும் விரோதியானவன் உமக்குப் பெண் கொடுத்த மிதிலைச் சனக மகாராசனாகிய அம்மானோ? இன்னம் பேறு பெற்ற பேர்களும் பெறும் பேறுகளும் உமக்கு உறவின் முறையார்களோ? ஆதலால் சம்பந்தமில்லாத பேரையெல்லாம் இரட்சித்தபடியினாலே தேவரீருக்கும் அடியேனுக்கும் வழக்கு விடுவதில்லை. ஆசைப்பட்ட பலனைக்கொடுத்து அப்புறம் போகவேண்டுமே யன்றிப் போகக்கூடாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
——–

தன்னெட்டெழுத் தயன் மத்தகந் தனிலே பொறித் தடி நாவிலே,
உன்னெட்டெழுத் தெழுதாமையா லுலகத்துளோ ரவனைத்தொழார்,
கன் னெட்டிடத் தருநெட்டிடக் கனனெட்டிடக் கன காலிபின்,
நன்னெட்டெலாந் தொடர்பாதனே நாராயணா நாராயணா.       51

[இ-ள்.] பிரமதேவனானவன் உலகத்திலேயுள்ள மானிடர்களுடைய தலைகளிலே தனது நெட்டெழுத்தை மாத்திரம் எழுதி அடி நாவுகளிலே தேவரீருடைய அஷ்டாட்சரத்தை எழுதாமற் போன படியினாலே அவனை ஒருவருந் தேடுகிறதே யில்லை. முல்லை நிலத்திலே கல்லுகள் நெட்டிடவும், விருட்சங்கள் நெட்டிடவும், அக்கினிகள் நெட்டிடவும், விஸ்தாரமாகிய பசுக்கள் பின்னாலே நன்மைபெற நெடிதான தூரமெல்லாம் நடந்தருளா நின்ற திருவடியை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 51
————

உரலுக்குமோ ருறுபஞ்சமோ வுனை நச்சினே னெனையச்சமன்,
விரலிட்டுதேர் வினைவல்லனோ விதிகைக்குளவ் விரலோசையால்,
பொரலுற்ற நோய் கழலப்பணாய்ப் புதிதாமருந் தொரு தூத னால்,
நரலைக்குளாய் வரவேண்டுபோ நாராயணா நாராயணா.       52

[இ-ள்.] குத்தா நின்ற உரலினுக்கு ஒருகாலத்திலேயும் தரித்திரம் வருவதில்லை. அத்தன்மை போலத் தேவரீரிடத்திலே நிரம்பிய ஐசுவரியமே யன்றி இல்லாததில்லையே. ஆதலால் உம்மிடத்திலே இச்சை கொண்டேன். இனி என்னை அந்த யமனானவன் விரல் விட்டுக்காட்டி யறிந்து வினை செய்யமாட்டுவனோ? பிரமாவினுடைய கைகளிலே யிரா நின்ற விரலும் என் றலையிலே எழுத அசைய மாட்டாது. வருத்தத்தைச் செய்யா நின்ற என் நோய் தீரும்படியாய்ச் செய்வதற்கும் புதிதாய் ஒப்பில்லாத சஞ்சீவியானது ஸ்ரீ அனுமாராலே வரவேண்டுமோ? ப்ராப்தி வாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 52
————

சமையாதிதே வதையென்பதுஞ் சமையாதி நின் பெயரென்பதும்,
உமையாளுடன் பரமன் பரிந் துனைமாமறைப் பொருளென்பதும்,
தமை யாள்வதென் றிமையோர் திலோத் தமையாதிபன் புகழ்கின்றதும்,
நமையாமலே யெனையாளுவாய் நாராயணா நாராயணா.       53

[இ-ள்.] சம்பங்களுக்கெல்லாம் அதிதேவதை நீயேயென்றும், எச்சமயத்துக்கும் உரியது உம்முடைய பெயரேயென்றும், மகத்தாகிய வேதப் பொருள் நீயேயென்று உமையவளுக்குச் சிவன் பரிந்து நிச்சயம்பண்ணினதும், தேவதைகளுக்கும் திலோர்த்தமைக்கும் அதிபனாகிய தேவேந்திரன் தங்களை இரட்சிக்குங் கர்ததனே யென்று புகழ்கின்றதுங் கெடாமற்படி என்னை இரட்சித் தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 53
———–

நீயண்டரா லடிபட்ட நா ணினைவில்லை நின் னுதரத்துளே,
போயண்டகோ டியிலெந்தவூர் புரையிற்குளே விளையாடினேன்,
மாயங்கடந் தறி வேனெனில் வரதன் கெடீர் வானோர்க்கெலாம்,
நாயன் கெடீர் விடுமென்பனே நாராயணா நாராயணா.       54

[இ-ள்.] தேவரீர் அசோதை முதலாகிய இடையராலே அடிபட்ட நாளையிலே அடியேனுக்கு நினைவில்லாமற் போயது. அது எதனாலேயென்றால், உமது குட்சிக்குள்ளே இரா நின்ற அண்ட கோடிகளிலே எந்த சந்துகளுக்குள்ளேயோ விளையாடினேன். நீர் செய்யும் மாயம் நீங்கி யறிந்தே னேயானால் தேவதைகளுக் கெல்லாம் உம்மை வரதனென்றும், நாயகனென்றும். அந்த இடையர்களுக்குத் தெரியப்படச் சொல்லிக் கெடுவீர்கள். விட்டுவிடுங்கோளென்று நீக்கிவிடுவேன். திருமேனி என்னவிதமாக நொந்ததோ? இப்போது பெரியோர்களாலே யறிந்தேன் – அறிந்துஞ் சமயத்திலே உதவாதே போனேன். இனி வருந்தி என்ன பிரயோசனம்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 54
————-

காசிக்குளுங் கயையிற்குளுங் கழியாதபா தக னாகையால்,
கூசிக்குலைந் துனைவந்தியேன் குறை யாகுமோ வினையென்பதோர்,
வாசிக்குவந் தருள் செய்குவாய்வயிரத்திராவணன்றங்கைதன்,
நாசிக் குவா ளெறியையனே நாராயணா நாராயணா.       55

[இ-ள்.] காசியினிடத்திலேயும் கயாவினிடத்திலேயும் வாசமபண்ணினாலும் நீங்காத பாவியான படியினாலே மனது கூசக் கலைந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணாமல் விட்டுவிட்டேன். அதினாலே உமக்குக் குறைவாகுமோ? அடியேனுடைய வினையென்னும் வாசி தீரும்படியாய்வந்து கிருபை செய்தருள வேண்டும். முன்னாளிலே வயிபத்தோடுங் கூடிய இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகையினது மூக்கறும்படியாய்ச் செய்த வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 55
———-

தாளுக்கவா விய நாவினுஞ் சலியாதுவா சனி யானநோய்,
ஆளைக் கெடா தின்றைக்குவா வசை யாமலே யன்றைக்குவா,
தோளுக்குவா ளியை யெய்தவன் துயர்கண்டிரா வணனின்று போய்,
நாளைக்குவா .வெனுமையனே நாராயணா நாரா யணா.       56

[இ-ள்.] தேவரீருடைய திருவடிகளுக்கு ஆசை கொள்ளா நின்ற எனது நெஞ்சிலேயும் நாவிலேயும் வருத்தமில்லாமல் வரவேண்டும். சனியான நோயானது அடிமையைக் கெடுத்துவிடாமல் இன்றைக்கே வரவேண்டும். சரமதிசையிலே யமனைக்கண்டு சஞ்சலிக்கு முன்னமே அன்றைக்கு வரவேண்டும். முன்னாளையில் பாணங்களைத் தோள்களிலே யழுந்தும்படியாய் எய்து அவனது துயரத்தைக்கண்டு, வயிரத்தையுடைய இராவணா! நீ இன்றைக்குச் சென்று நாளைக்கு வாவென்று கிருபை பண்ணாநின்ற என்னையனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

விக்கற்கிடம் பொருமற்கிடம் விடுமூச்சுமே லெழுதற்கிடம்,
கக்கற்கிட மிருமற்கிடங் கருதற் கிடந்திருகற்கிடம்,
சொக்கற்கிடங்குளிர் தற்கிடஞ் சுடுதற்கிடம் வெருவற்கிடம்,
நக்கற்கிடந் தரு மெய்யருள் நாராயணா நாராயணா.       57

[இ-ள்.] விக்கலென்றும், பொருமலென்றும், மேல்மூச்சென்றும், கக்கலென்றும், இருமலென்றும், கருகலென்றும், திருகலென்றும், சொக்குத லென்றும், குளிர்தலென்றும், சுடுதலென்றும், பயப்படுதலென்றும், நக்கலென்றும் சொல்லா நின்ற அந்தப் பீடைகளுக்கெல்லாம் இடங் கொடுத்திரா நின்ற தேகத்தையுடைத்தாகிய அடியேனை இரட்சித்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 57
————-

துளசீதளத் துளசீதளத் தூய் நீரதே குடி நீ ரதாம்,
உளதாயிரம் பெயரெண்ணு நூற் றொரு கோடிமந் திரமேலதாம்,
வளமார்பின்மா மணி யென்னவே மணியாமெனைப் பிணியென் செயும்,
நளகூபரன்பகைவென்றவா நாராயணா நாராயணா.       58

[இ-ள்.] திருத்துழாயினது தளங்களிலே பொருந்துங் குளிர்ந்த நீரே குடிக்குங் கஷாயங்களுக் கெல்லாம் மேலாகிய கிஷாய நீராகவும், நிலை பெற்றிரா நின்ற ஆயிரந் திருநாமங்களும் நூற்றொருகோடி மந்திரங்களுக்கு மேலாகிய மந்திரமாகவும், வளம் பொருந்தா நின்ற திருமார்பிலே யிருக்கும் கவுஸ்துவமணியே மணிகளுக் கெல்லாம் மேலாகிய மணியாகவும் இருக்கின்றன. ஆராயுமிடத்தில் இதுவே மணிமந்திர அவுஷதமாக விருக்கப் பிணியானது அடியேனை என்ன செய்யும்? நளகூபரனுடைய சாபத்தைத் தீர்த் தருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 58
———–

சுவையோசையூ றொளிமாமணந் தொடரா மனஞ் சுழல் கெண்டையும்,
கவைமானுமானையும் விட்டிலுங் களிவண்டுமே விளிகின்றபோல்,
இவை தூயவென் றிவை தீயவென் றினியுண் டிலே னினியென் செய்வேன்,
நவைதீரவேயருள் செய்குவாய் நாராயணா நாராயணா.       59

[இ- ள்.] ஆகார வுருசையினாலே கெண்டையும், மணியோசையினாலே கிளைமானும், தேகப் பரிசத்தினால் யானையும், தீபப் பிரகாசத்தினாலே விட்டிற்பூச்சியும், வாசனையினாலே மதர்த்த வண்டும், இவை ஐந்தும் மனந் தொடர்ந்து சுழன்று விழுந்து இறந்து போவது போலே எனது பஞ்ச இந்திரியமும் இது நன்மையென்றும், இது தீமை யென்றும் தெரிந்து புசிப்பதில்லை. இனி யென் செய்வேன்? இந்தக் குற்றந் தீரும்படியாய்க் கிருபைசெய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று
———–

நெட்டேணியின் படியெட்டுமோ நின்னெட் டெழுத் தெழிலண்டமேல்,
எட்டாமெனும் பத மெட்டவே யிரதித்தசர்க் கரையேயதின்,
வட்டே பசும் பழமேசதா மதுரித்தவா ரமுதேயெனும்,
நட்டேயருட் புனல்கட்டுவாய் நாராயணா நாரா யணா.       60

[இ-ள்.] மூங்கில்களாலே நெடியகாயமைத் திரா நின்ற ஏணியினது படிகளிலே ஏறினால் பரம பதம் எட்டமாட்டாது. ஆதலால் ஏழு அண்டத்துக்குமேல் எட்டாவதாகிய அந்தப் பரமபதத்துக்கு ஏறிவர உபாயமுண்டு. அது யாதெனில், நினது திருமந்திரமாகிய எட்டெழுத்தையும் எனது நெஞ்சிலே நட்டு, இரம்மியமான சருக்கரையுங் கற்கண்டும் கனிந்த முப்பழமும் நித்திய மதுரமாகிய ஆராவமிர்தமும் இவைகளுடைய சுவைபோலே பரவும்படியாகக் கிருபைப்புனல் கட்டினால் ஏறிவருவேன் ஸ்ரீமந் நாராயணா எ-று.
————-

காணுங்கணே குவியுங்கையே கருதுள்ளமே கனலாஞ்சனம்,
பூணும்புயம் புளகாங்கமே புகழ் நாவதே திகழ்கேள்வியே,
ஆணும் பெணுஞ் சரணென்பதே யவையல்லனா ளபராதிகாண்,
நாணும் பெயர்க் காதாரமே நாராயணா நாராயணா.       61

[இ-ள்.] தேவரீர் திருவடியைக் காணா நின்ற கண்களும், குவியா நின்ற கைகளும், நினையா நின்ற உள்ளங்களும், மந்திராக்கினிபொருந்திய சங்கு சக்ர வாஞ்சனம் பூணாநின்ற புஜங்களும், புளகங்கொள்ளா நின்ற தேகங்களும், புகழா நின்ற நாவுகளும், கேட்கா நின்ற செவிகளும் இவைகள் பொருந்திக் குடும்பத்துடனே சரணாகதி பண்ணா நின்ற அடியார்களைப்போலப் பொருந்தினவன் நானல்லன்; மிகுந்த அபராதத்தை யுடையவன். ஆதலால் தரிசனம்பண்ண வெட்கத்தை யடைந்தேன். இத்தன்மையான வெட்கத்தை யடைந்த பேர்களுக்கெல்லாம் ஆதாரமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

கவி நல்லதோ கவிதீயதோ கனமூடனான் விதைவித்திடும்,
புவி நல்லதேல் விளைவெய்துமே புகழ் நல்லதேல் புகர்கேட்கவென்,
செவி நல்லதே லருணல்லதே செயனல்லதே லியனல்லதே,
நவி நல்லதே வரினாவிலே நாராயணா நாராயணா.       62

[இ-ள்.] மிகுந்த மூடனானவன் பாடா நின்ற கவிதையானது நன்மையாயதோ? தீமையாயதோ? தெரியவராது. விதைக்கா நின்ற விதையானது பூமி நல்லதாயிருப்பின் விளையுமேயன்றி விளையாமற் போவதில்லை. ஆதலால் உமது புகழும் கிருபையுஞ் செயலும் இயலும் நல்லதானபடியினாலே அதை என் காதிலே கேட்டு நாவினாலே தோத்திரம் பண்ணினால் நன்மை வருமேயன்றித் துன்பம் வருவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 62
————-

பசைகொண்டபா கவதாகமம் பருகா துகா துருகாது நெஞ்,
சசை கொண்டபா தக நீரிலே யமிழ்வேனையா ணவமாதியாம்,
கசைகொண்ட மோ துகைதாக்குமோ களவுள்ள தா னுன தன்பி லேன்,
நசைகொண்டகா ரியமாகுமோ நாராயணா நாராயணா.       63

[இ-ள்.] தேவரீரிடத்திலே அன்பு பொருந்தா நின்ற பாகவதாள் சொல்லிய ஆகம சாஸ்திரங்களை எனது காதானது கேட்பதுமில்லை. நெஞ்சானது உருகுவதுமில்லை. அலையா நின்ற பாதகக் கடலிலே விழுந்த என்னைக் காமம் வெகுளி மயக்க மென்சிற பிரமை எடுத்துக்கொண்டு வினையானது மோதி யடிக்கும். திருட்டு மனத்தை யுடைத்தான வனாய் உம்மிடத்திலே பத்தியில்லாமல் பரமபதத்துக்குக் காதல் கொண்டதால் அந்தக் காரிய மாகுமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 63
———–

பலகூறுபட் டொருநெஞ்சினன் பரிசென்ன வெங் கணுமானவா,
விலகூறு கொண் டெனை விண்டதென் விரனீக்கிமோர் நுகர்வார்களோ,
மலகூறலாய் நீதானு மென் மதிதன்னைவிட் டெனையொத்தனை,
நலகூறுவார் சுரதேனுவே நாராயணா நாராயணா.       64

[இ-ள்.] அடியேன் பலவிதமான இடையூறு பட்ட ஒரு நெஞ்சை யுடையவனானேன். தேவரீர் வாய்வு பரிசம்போலே எங்கும். நிறைந்தவ ரானீர். ஆதலால் என்னை மாத்திரம் நீங்குப்படி யான குற்றத்தைத் தேடிவிட்டதென்னோ ? விரல் நீக்கி மோரைக் குடிக்கிற பேர்களுமுளரோ? கிருபையுற்றுப் பெருகிய உண்மையான இருதயத்திலே என்னை மறந்துவிட்ட படியினாலே தேவரீரும் அடியேனுஞ் சமானமேயன்றி அதிசயம் இல்லை. நன்மையாகத் தோத்திரம் பண்ணாநின்ற தேவர்களுக்குக் காமதேனுவாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 64
—————–

வாஞ்சித்ததே வதையாகுநீ வடவேங்கடந் தனினிற்கவும்,
நீஞ்சித்திரிந் தனன் வீணிலே நிழல்கண்டபின் வெயினிற்பரோ,
காஞ்சித்தலத் தருளாளனே கனகோபுரக் கொடியாடுமொண்,
நாஞ்சிற்றிருப் பதிவள்ளலே நாராயணா நாரா யணா.       65

[இ-ள்.] அடியேனுடைய நெஞ்சிலே ஆசை கொள்ளா நின்ற தெய்வமாகிய தேவரீர் இந்தத் திருவேங்கடத்தில் தானே எழுந்தருளி யிருப்பது தெரியாமல் வீணிலே உலகமெல்லாந் திரிந்து அலைந்தேன். இனி நிழல்கண்டபேர்கள் வெயிலிலே நிற்பதுண்டோ ? கனம் பொருந்திய கோபுரங்களிலே கொடிகளாடா நின்ற அழகிய மதில்களோடுங் கூடிய காஞ்சித்தலமுதலாகிய நூற்றெட்டுத் திருப்பதிகளிலேயும் அருளாள ரென்றும் வள்ளலென்றும் விளங்கிய ஸ்ரீமந் நாராயணா. எ-று.
—————–

மை நாகமா ழியையண்டிவரழ் வகையென்ன நின் னருள்வெள்ளலாஞ்,
சையினாலிருந்ததிலூ றவே சமைவேனுறத் தருமாறெவன்,
கையினா லறிந் திடரண்ணிய கலி தீர நீ யருள் செய்திடும்,
நைனாரினிற் சரியாவனோ நாராயணா நாராயணா.       66

[இ-ள்.] மை நாகமலையானது சமுத்திரத்திலே முழுகி வாழுந் தன்மைபோலே தேவரீருடைய கிருபாசமுத்திரத்திலே ஆசையாயிருந்து ஊறும் படியாய்ப் பொருந்தின எனக்கு வரத்தைக்கொடுக்கும்படியான மார்க்கம் எவ்விடத்திலேயோ தெரிய வராது. நான் பிரமாவினுடைய சிரத்தைக் கிள்ளிப் பொருந்தா நின்ற தரித்திரம் தீரும்படியாய்த் தேவரீர் கிருபை பண்ணா நின்ற ருத்திரனுக்குச் சமானமாக மாட்டுவேனோ? ஸ்ரீமந் நாராயணா. எ-று.
————-

எமக்கென்று வாழ் குடுப்பத்திலே யிழுப்புண் ணுவாரெமதாதையர்,
தமக்கொன்றைவைத் தில ரென்பரே சழக்குள்ளபேர் வழக்குள்ள பேர்,
சுமக் கின்றவச் சுமையாளனச் சுதன்மற்றையச் சுமை கட்கெலாம்,
நமக்கென்னகா ரியமென்பரே நாரா யணா நாராயணா.       67

[இ-ள்.] எமக்கென்று வாழா நின்ற குடும்பத்திலே அவதிப்படும் பேர்களாகிய பாவிகள் நம்முடைய அவதி தீரும்படியாய் நம்முடைய பிதாக்கள் நமக்கு ஒன்றையும் வையாமற் போனார்களே யென்று அழுவார்கள். இந்தச் சம்சாரமாகிய சுமையைச் சுமக்கா நின்ற புருஷன் அச்சுதனாகையாலே அந்தச் சுமைகளைத் தாங்க நமக்கென்ன காரியமென்று அறிவுடையோர் சந்தோஷிப்பார் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

பசுக்கட்குமா யினைபாடியிற் பலபாடியா டியு மாயர் தம்,
சிசுக்கட்குமாயினைமைந்தனாய்த் திருட் டுக்குமா யினையன்று தான்,
முசுக்கட்குமா யினை நாயினேன் முசிப்புக்குமா யருள்பூவையே,
நசுக் கிப்பின்வா சனைகொள்வரோ நாராயணா நாரா யணா.       68

[இ-ள்.] ஆயர்பாடியிலே யிரா நின்ற பசுக்கூட்டங்களுக்கு இரட்சக கர்த்தாவாகியும், இடைப் பிள்ளைகளுக்குப் பாடலுடனே ஆடல்காட்டியும், சிறுபிள்ளைகளாகி வெண்ணெய் திருடுந் தொழிலுக்கு இசைந்ததுமல்லாமல் முன்னாளையிலே குரங்குகளுக்கு நேசமாகி இரட்சித்த தேவரீர் நாயினேனுடைய தளர்ச்சிக்குக் கிருபை பண்ணாமல் புட்பத்தை நசுக்கி முகர்வாரைப்போல உபேக்ஷை பண்ணலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 68
———–

குலங்காணவே குடிகாணவே குணங்காணவே பழுதாயினும்,
பலங்காணுநின னடியாரெனிற் பவசாகரப் பரப்பென்னுளங்,
கலங்காமலே கலங் காணுமே கழலாமலே கழல்காணுமே,
நலங்கா மலே நலங்காணுமே நாராயணா நாராயணா.       69

[இ-ள்.] குலவண்மையும் குலத்தின் நிலைமையும் குணப்பெருமையும் இவைகளைக் காணுமிடத்தில் பழுதாயிருந்தாலும் தேவரீருக்கு அடிமைப் பட்டார்களேயானால் மேன்மை பெறுவார்கள். ஆதலால் பாவ சமுத்திரப் பரப்புக்குள்ளே என்னுடைய நெஞ்சானது கட்டுவிட்டுக் கலங்கி ஒதுங்கி நலங்காமல் நலங்காணும் கப்பலைப் போன்ற திருவடியைக்காணும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 69
—————–

ஈன்றோனு நீ யலனானுமவ் வியலுந்தியண் டினனல்லனிற்,
போன்றோனெவன் பெறுபிள்ளை யைப் போபோபிதா வினவா திரான்,
சான்றோர் முனே யினிநோயை நீ தவிராயெனிற் சபதங் கெடும்,
நான்றோரைவீ சியவாளனே நாராயணா நாராயணா.       70

[இ-ள்.] என்னைப் பெற்றவனும் நீயல்லவோ? நானும் அருமையான இயல் பொருந்திய உமது உந்தியிலே யிருந்தவனுமல்லவோ? உம்மைப் போலே இரக்கமில்லார் எவரிருக்கிறார்கள்? போ போ! பிதாவானவன் பெற்ற பிள்ளையை வினவா திருப்பானோ? பெரியோர்கள் முன்பாக என்னுடைய நோயை இனி தீராமற் போனீரானால் உமது சரணாகதி சம்ரட்சணை என்கிறநெறி கெட்டுப்போகும். பகைஞரை வீசிய வாளாயுதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 70
————-

கஞ்சப்பதந் தனையங்ஙனே கட்டிக்கரைந் தவசத்தராய்,
நெஞ்சத்து நா ரணவென்று தா னியமித்து நித்திரைகொள்ளுவார்,
கொஞ்சத்தை நின் றளவாக்குவாய் குணபத்தைவாழ் குடியாக்கு வாய்,
நஞ்சத்தையா ரமுதாக்குவாய் நாராயணா நாராயணா.       71

[இ-ள்.] தேவரீருடைய தாமரைபோலும் திருவடியை உள்ளத்திலே நினைந்து ஞானக் கயிற்றினாலே அங்ஙனே கட்டிக் கரைந்துருகிப் பரவசத்தையடைந்து ஸ்ரீமந் நாராயணனே யென்று நிச்சயம்பண்ணி ஆனந்த நித்திரை கொள்ளுவார்கள். துரும்புபோலே யிருநதாலும் அவர்களை மகாமேருவாகச் செய்தருளுவாய். இதுவுமல்லாமல் புழுக்களை ஐஷ்வரியத்தை யுடைத்தாகிய குடும்பங்களாகவும், விஷத்தை அமிர்தமாகவும் செய்தருளா நின்ற மகிமையை யுடைய ஸ்ரீமந் நாராயணா எ -று. 71
———-

எழுநெட்டிருப் பருமேனிவந் தென்கைக் ககப்படுமென்று நான்,
தழுவிக்கொளத் திரிகின்ற னன் சகலச்சரா சரமாகு நீ,
வழுவிக்கொடங் கிங் கோடியே வர நல்கமுன் வரவஞ்சியே,
நழுவிக் கொடே திரிகின்றதென் நாராயணா நாராயணா.       72

[இ-ள்.] நெடியதாய் வளர்ந்திரா நின்ற உமது பருத்த திருமேனியானது எனது கைக்குள்ளே வந்து அகப்படுமென்று நான் தழுவிக்கொள்ளத் திரிகின்றேன். சகல சராசரங்களாகிய தேவரீர் என் முன்னேவந்து வரத்தைக் கொடுக்கப்பயந்து
அங்கு மிங்கும் ஓடி வழுவிக்கொண்டும் நழுவிக் கொண்டும் திரிகின்றது என் சொல்லும்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 72
—————

எனைக்காக்க நீ வரன் மேன்மையென் றிருப் பாய்பராக் கதுவுண்டு நின்,
றனைக்காத்தவா கன மில்லையோ தகுசேனைகா வலனில்லையோ,
நினைக் காத்தசே டனுமில்லையோ நினைவில்லையோ விமையோர்பிரா,
ணனைக்காத்தமாருதியில்லையோ நாராயணா நாராயணா.       73

[இ-ள்.] அடியேனை இரட்சிக்கவருதல் மேன்மையென் றெண்ணியிருப்பீர்; அவ்வாறு இருக்கு மெண்ணத்தில் பராக்கு வந்ததோ? அல்லது தேவரீருக்கு வாகனமாகவும் துணையாகவும் காத்துக்கொண்டிரா நின்ற கருடனும் சேனைக்காவலனும் ஆதிசேஷனும் தேவர்களாகிய வானவர்களுயிரை இரட்சிக்கச் சஞ்சீவி கொண்டுவந்த அனுமானும் இவர்களில்லாமற் போனார்களோ? அல்லது திருவுள்ளத்தில் ஞாபக மில்லையோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

கண்பொன்று கோ மகன்மாற்றவன் கடுகொத்த பொய்க் கிருள் பார்த்ததோர்,
பண்பொன்ற நூலுரைசெய்ய நான் பலபொய்ச்சொலால் விளை யாடினேன்,
மண்பொன்றி நீரனல்பொன்றிவிண் வளிபொன்றவே வருமன்று நின்,
நண்பொன்று நீ தரல்வேண்டுமே நாராயணா நாராயணா.       74

[இ-ள்.] கண்பார்வைபோன திருதராஷ்டிரன் குமாரனாகிய துரியோதனனுக்குப் பகைவனான தர்மராசன் கடுகளவு பொய் சொன்னதினாலே இருள் சூழ்ந்த நரகத்தைப் பார்த்தானென்று ஒப்பில்லாத பண்பு போன்ற சாஸ்திரஞ் சொல்லும் போதும் நான் அநேகமான பொய்களை விளையாட்டாகச் சொல்லினேன். ஆதலால் எனக்கு என்ன கதியோ தெரியவராது. பிரிதிவு, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் தேவரீர் குட்சியில் அடங்குங்காலத்திலே அடியேனும் வந்து சேருவேன். அப்போதாகிலும் உமது நண்பொன்று மாத்திரம் வைத்து இரட்சித்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 74
————

போகேந்திரன் சிரமேந்து நின் பூதேவி புல் லரையேந்தவே,
ஆகேனெனா வுரைசெய்வனே லடியேனையேந் துகைவேண்டுவாய்,
மாகேந்திரன் றன தம்பியே வடவேங்கடா சலவள்ளலே,
நாகேந்தியே நகமேந்தியே நாராயணா நாராயணா.       75

[இ-ள்]. சர்ப்பங்களுக்கு இராசனாகிய ஆதிசேஷன் முடிகளிலே ஏந்தா நின்ற உமது தேவியாகிய பூமிதேவியானவள், பாபிகளைத் தாங்குதற்கு வருத்தமாயிருக்கிறதென்று தேவரீருடைய திருக்செவியிலே விண்ணப்பஞ் செய்தருள்வாளாகில், அடியேனை-மாத்திரம் தாங்கிக் கொள்ளும் படியாய் வேண்டிக்கொள்ளவேண்டும். தேவேந்திரனுக்குத் தம்பியாகவும், திருவேங்கடமலைக்கு நாயகனாகவும் பொருந்திய வள்ளலே! பாஞ்ச சன்னியத்தையும் கோவர்த்தனகிரியையும் ஏந்தி யருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

ஊழிற்பிறந் திடுபாவநோ யுடலைத்தொடா வகைதந்திடாய்,
வாழிக்கு நா யகனிந்திரன் மனு வின்பதம் பெறவிச்சியேன்,
ஆழிக்கையுன் கொடைமிக்கதென் றடியேன்மிகப்பெறலாகுமோ,
நாழிக்குடங் கலங்கொள்ளுமோ நாராயணா நாரா யணா.       76

[இ-ள்.] இகத்திலே மனுச்சக்கரவர்த்தியினுடைய பதமும், பரத்திலே வாழ்வுக்கு நாயகனாகிய இந்திரனுடையபதமும் இச்சையாக வேண்டுவதில்லை. ஆதலால் ஊழ்வினையினாலே பிறந்திடா நின்ற பாவநோயானது அடியேனுடைய தேகத்திலே சேராவகை செய்தருளிய பரமபதத்தைத் தேவரீர் கடாட்சித்தருளவேண்டும். திருவாழி தரித்த திருக்கரத்தை யுடையவனே! உம்மிடத்திலே மிகுந்த தியாகம் உண்டென்று நானிச்சை கொண்டதினாலே மிகுந்து வருமோ? என்பிராப்தி எவ்வளவோ அவ்வளவே முடியும். அது எத்தன்மையென்றால், நாழிக்குடத்தைக் கொண்டுபோய்ச் சமுத்திரத்திலே யமிழ்த்தினால் நாழிகொள்ளுமேயன்றி கலங் கொள்ளுவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 76
———

தனுவுக்குளே யுளராறுபேர் சலிகைக்கு நா யகருன்னை நான்,
பனுவற்சொலா வகைதட்டுவார் பழகிச்சதா நெறிகட்டுவார்,
அணுவற்றசோ ரரையெற்றியேயடியேனையாளர சென்னவே,
நணு கிக்கொடே திரிகின்றனன் நாராயணா நாராயணா.       77

[இ-ள்.] என்னுடைய தேகத்துக்குள்ளே இரா நின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று சொல்லா நின்ற இந்த ஆர்பேர்களுண்டு. அவர் சலிகைக்கு நாயகராகிய தேவரீருக்குக் கவிதைகள் பாடாதவகை தட்டுவார். நித்தியமும் பழகின மார்க்கத்தையுங் கெடுப்பார். ஆதலால் கிரமம் நீங்கிய அத்திருடர்களைக் கொன்று அடியேனை ரட்சித்தருளும் கர்த்தனே யென்று அடுத்துக்கொண்டு திரிகின்றனன் ஸ்ரீமந் நாராயணா எ-று. 77
————–

உடைச்சேலைதா குழைக்கோலைதா யுணச் சோறு தா பணப்பேறுதா,
கடைப்பூவடா வடைக் காயடா கறிக்காசடா கடைக்கோளனே,
கிடைக் கோடிவா முடிச்சேதடா கிறுப்பாவையார் வெறுப் பார்பொலா,
நடைக்காசையா யிறுத்தேன லோ நாராயணா நாராயணா.       78

[இ-ள்.] உடுக்கிறதற்குச் சேரலை தாடாவென் றும், காதுக்குப் பொன்னோலை தாடா வென் றும், உண்கிறதற்குச் சோறு தாடாவென்றும், மிகுந்த பணங்களைத் தாடா-வென்றும், கடைப் புஷ்பங்களை வாங்கித்தாடா வென்றும், பாக்கு வெற்றிலை தாடா வென்றும், கறிக்குக் காசுதாடா வென்றும், கடைப்பட்ட கோளனே யென்றும், படுக்கைக்கு ஓடிவடாவென்றும், அடிச்சோம னிலே முடிச்சேதடாவென்றும், கிறுதாகப் பேசி வெறுத்துக் கொள்ளா நின்ற வேசியருடைய பொல்லாத நடத்தைகளிலே ஆசையாய்த் திரவியத்தையெல்லாம் இழந்துவிட்டு விழலனானேன் ஸ்ரீமந் நாராயணா எ.று. 78
————

கன்னிப்பெருங் கடலோடுவான் கம்பத்திலே விளையாடுவான்,
உன்னிக்கொளும் பயமென் னநோ யொருபட்டுநெஞ் சொருமிக்கிலேன்,
என் னிற்பயந தெளிவித்திடா யல்லோர்க்குமீந் தென் மட்டிலே,
நன்னிக்குணம் பிடிபட்டதே நாரா யணா நாராயணா.       79

[இ-ள்.] பெரிதாகிய கடலிலே நீந்தவும், கம்பத்திலேறி விளையாடவும், பொருந்திய இளம் புத்தியையுடையவன் சென்ற பிற்பாடு நினைத்துக் கொள்ளா நின்ற பயங்களைப்போலே நோயானது வருத்தியும் எனது நெஞ்சு ஒருமித்ததில்லை. ஆகையால், என்னிடத்திலே உண்டாகிய பயத்தைத் தெளிவித்தருள வேண்டும்; யாவருக்குங் கிருபை செய்கிற நீ என் மட்டுஞ் செய்தருள உமக்கு லோபகுணம் பிடிபட்டதோ? ஸ்ரீமந் நாரா யணா எ-று.
————–

புட்புள்ளவன் கொடியென்னவே பொற் பொன்னவன் கலையென்னவே,
கட்புண்டரீ கம லத்தினேர் கண்ணென்னவே கரைகின்றிலேன்,
சட்புள்ளவுன் சமயத்திலே சலமண்டினேன் சர ணண்டினேன்,
நட்புள்ளதோ பகையுள்ளதோ நாராயணா நாராயணா.       80

[இ-ள்.] பட்சிரூபமாகிய கருடக்கொடியனே யென்றும், வன்மைபெற்ற சுவர்ணவஷ்திரனே யென்றும், தேனோடுகூடிய சிவந்த தாமரைக்கண்ணனே யென்றும், கரைந்துருகாத பாவியான வன் உமது சமயத்தில் வயிராக்கியம் பொருந்தித திருவடி யடைந்தேன். அடியேனிடத்திலே நேச மிருக்குமோ? பகையிருக்குமோ? தெரியவராது ஸ்ரீமந் நாராயணா எ-று. 80
—————-

கச்சுப்பிதிர்ந் தெழுகொங்கையார் கடைவாள் விழிப் படைகோடிகள்,
தச்சுக்கிடந் திடுநெஞ் சிலே தனியம்புதைத் தவருய்வரோ,
பிச்சுத்தயா பரனான நீ பெருமந்திரந் தனிலாற்றுவாய்,
நச் சுப்பெருஞ் சுதைவேலையாய் நாராயணா நாரா யணா.       81

[இ-ள்.] கச்சடங்காமழெழுந்த கொங்கைகளை யுடைய கன்னியர் கடைக்கண் பார்வையாகிய ஆயுதகோடிகள் எனது நெஞ்சிலே தைத்துருகிப் புண்ணாகியது. அந்த நோயை என் சொல்வேன்? ஒருபாணம் பட்டவர்கள் பிழைப்பதில்லையே? ஆதலால் நித்தியபரனாகையினாலேயே இந்தப் பாணங்களைப் பிடுங்கிப் புண்களை உமது பெரிதாகிய திருமந்திரத்தினாலே ஆறும்படி செய்தருளவேண்டும் ஆசையுடனே உயர்ந்த அமிர்தக்கடலிலே மேவும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 81
————

எய்தாரிருந் திடவம்பைநோ மிழிவாளர் போற் பழிபாதகம்,
செய்தாரிறுத் திடலன்றியே தெய்வந்தனைச சிதைவாகவே,
வைதாவதென் விதனத்திலே வழிதப்புமே வாய்பாறுமே,
நைதா துவின் பரகாரனே நாராயணா நாராயணா.       82

[இ-ள்.] பாணத்தை யெய்தவனிருக்க, அம்பை நோகா நின்ற இழிவாளர்போல பழிபாதகஞ் செய்த நானல்லவோ அனுபவிக்கவேண்டும். அதுவன்றித் தேவரீரை விதனத்தினாலே கெடுதலாக வைதென்ன பிரயோசனம்? இதனால் நன்மார்க்கமுஞ் சத்தியமுங் கெட்டுப்போகுமேயன்றி வெறில்லை. சரமதிசையிலே நைந்துபோகா நின்ற தாதுவுக்கு வயித்தியனாகிய ஸ்ரீமந்நாராயணா எ-று.
—————–

முகிலுக்குளே யடிபட்டவோர் முதுமக்கள் போற்றுணிவிக்குநோய்,
மிகவற்பமோ விடுவித் திடாய் விமலத்த நீர் மடுவுக்குளே,
துகிலைக் கொடாய் துகில்விட்டிடாய் தொழவெட்கமே விய மைக்கணார்,
நகிலுக்குள் வீழ் நகையச்சுதா நாரா யணா நாராயணா.       83

[இ-ள்.] மேகவருஷத்திலடிபட்ட கிழவர்கள் வருத்தத்தை யடைந்து, இறக்குமாப்போலே அடியேனிறக்கும்படியாய்த் துணிந்து செய்யா நின்ற நோயானது பெருகுதல் சொற்பமல்லவே. ஆதலாலது நீங்கும்படிக்குக் கடாட்சித்தருள வேண்டும். முன்னாளையிலே, பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய யமுனா நதியிலே ஸ்நானம் பண்ணா நின்ற கோபிகா ஸ்திரீகளுடைய வஸ்திரங்களை அபகரித்துக் கொண்டுபோய்க் கொடாமலும், விட்டுவிடாமலும், நின்றகாலத்திலே அவர்களும் மைத்தொழுது கேட்க வெட்கத்தை யுடையவர்களாய் மை தீட்டிய கண்பார்வையானது, தங்கள் கொங்கையிலே படியத் தக்கதாய்த் தலையைக் கவிழ்த்துக்கொள்ள நகைத்தருளா நின்ற ஸ்ரீமத் நாராயணா எ-று. 83
—————–

கமலத்தைவந் தயல்வண்டுணுங் கருதாத தேரைக ளொக்கவே,
அமலத்தை நீரிடைவாழினு மதுபோலவே, யயலாரெலாம் ,
நிமலப்பதந் தொழுமூரிலே நிலைபெற்றிருந் துனைவந்தியேன்,
ஞமலிக்குமோ றருள் செய்திடு நாராயணா நாராயணா.       84

[இ-ள்.] பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய தடாகத்திலே யிரா நின்ற தாமரையினுடைய பெருமையை அத்துடனே பிறந்த தவளை யறிய மாட்டாது; பக்கங்களிலேயிருந்து வண்டுகளதின் தேனை சாப்பிட்டுச் சந்தோஷத்தையடையும்.அது போல தேவரீர் நிலைபெற்றிரா நின்ற ஊரிலே, அடியேனிருந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணிக் கனடத்தேற வறியேன். அயலிலே இராநின்ற பிரம்மாமுதலாகிய பேர்களெல்லாந் தேவரீருடைய பரிசுத்தமான திருவடியைத் தொழுது கடைத்தேறுகிறார்கள், கடை கெட்ட சுவானத்துக்கும், கிருயை செய்தருளின ஸ்ரீமந் நாராயணா எ-று. 84
—————-

என் மாடுவீ டென்பிள்ளை பெண் டென் காணி மண் ணென் சொம்மெனும்,
தன்மாலிலே யறியாத பேர் தமதாகுமோ தானாவதார்,
வன்மாயமென் றதுகண்டு நின் வடவேங்கட பதிவைகியே,
நன் வானுயர் நிலை நிற்பரோ நாராயணா நாராயணா.       85

[இ-ள்.] என்மாடென்றும். என்வீடென்றும், என் பிள்ளையென்றும், என் பெண்சாதியென்றும், என்காணி மண்ணென்றும், என்னுடைமையென்றும், தங்கள் மயக்கத்தினால், மூடரான பேர் சொந்தமென் றிருப்பார்கள், அவைகள் தங்கள தாகுமோ? அவைகளுக்கும், இவர்களுக்கும், சம்பந்தமென்ன? இவையெல்லாம் வலிய மாய்கை யென்று தெளிந்து நன்மை பெற்ற மானிடரெல்லாந் தேவரீருடைய திருமலையை நித்தியபதார்த்த மென்று நினைத்துத் தங்கி உயர்ந்த நிலைபெறு வார்கள் ஸ்ரீமந் நாராயணா எ-று. 85
————-

பரலோகமும் பரரூபமும் பரபோகமும் பர மாயுவும்,
சுரலோகமுஞ் சுரரூபமுஞ் சுரபோக முஞ் சுரராயுவும்,
திரலோகமென் றிவையாவை யுந் திருவேங்கடந் தனிலுள்ள தால்,
நரலோகமே மிக நன்று கா நாராயணா நாராயணா.       86

[இ-ள்.] பரமபதமும், திவ்விய திருமேனியும், நித்தியானந்தமும், நித்திய தத்துவமும், மற்ற இமையவர் நாடும், இமையவர் மேனியும், இமையவர் ஆயுளும் இமையவர் போகமும், இமை யவர்களுக்கு நாயகனாகிய இந்திரனுடைய பதவியும் இவைகள் முதலாகிய ஜசுவரியங்களெல்லாந் தமது திருவேங்கடத்தை யடைந்த பேர்களுக் கெல்லாமுண்டாகிய தன்மையினாலே இந்த நர லோகமே மிகுந்த நன்மையானது. ஸ்ரீமந் நாரா யணா எ-று.
———-

அசவா தவன் பறிவேடரா ரடியேனுடம் பிணி நோயெலாம்,
கசவாது தின்பவர்போலவே கவ ராமலிங் கருள் கூறு வாய்,
குசவாயுதா சிறு கோவலா குறுவேதியா குலமன்னவா,
னசவா வியிற் பயிலன்னமே நாராயணா நாராயணா.       87

[இ-ள்.] அசைவில்லாமல் வலியபழியைச் செய்யா நின்ற வேடரானவர்கள், தயவில்லாமல் மிருகங்களைக்கொன்று தின்னுமாப்போலே அடியேனுடைய தேகத்தைப் பிணியானது பிடுங்கித் தின்னாமல் இவ்விடத்திற் கிருபை செய்தருள வேண்டும். கலப்பையாயுதத்தை யுடையவனே! இளமையாகிய கோபாலனே! குட்டனாகிய வாமனே! சூரியகுல மன்னவனே! மானச மடுவிலே விளையாடா நின்ற அன்னரூபமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 87
————-

மீன்கூருமங் கிடிபாதியாண் மிருகங்குறள் பரசாளிகோ,
மான் கூறலா யுதனாயன் மேல் வரு வாகியும் பெருவாசியோ,
தேன் குருமா கமசார முஞ் சிறுபோகமோ கமசாரமும்,
நான்கூருரை குருபத்தனே நாராயணா நாராயணா.       88

[இ-ள்.] மச்சமென்றும், கூர்மமென்றும், வராகமென்றும், நரசிங்கமென்றும், வாமனமென்றும், பரசுராமனென்றும், ஸ்ரீராமனென்றும், பலராமனென்றும், ஸ்ரீகிருஷ்ணனென்றும், வந்ததல்லாமல் மேலும் கற்கியாய் வருவதினாலே உமக்குப் பெரிதாகிய பலனுண்டோ? மதுரம் பொருந்திய ஆகம சாஸ்திரமுஞ் சிற்றின்பமாகிய காம சாரமும் நான்குசாரமும் ஓதுவித்த குருவாகிய சாந்திபருக்குப் பக்தனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

மிறுக்கத்தகா தெனதாவியின் விளக்கிற்கு நின் னருணெய்யிடாய்,
பொறுக்கத்தகா ததுமெய் யுடல் புழுக்கத்தகா தொருபோரிலே,
குறுக்கிட்ட பேர் நடுக்கிட்டிடக் குலைவாணனார் திரடோ ளெலாம்,
நறுக்கிக்கையோர் துணைவிட்டவா நாராயணா நாராயணா.       89

[இ-ள்.] அவமாகிய எனதுதேகமானது புழுக்கங்கொண்டு பொறுக்கத் தகாமல் இறத்து போகிறது தகுதியான காரியமல்லவே. ஆதலால் உயிராகிய விளக்கானது அவிந்து போகாமல், தேவரீர் கிருபையாகிய நெய்யமுது பெய்தருளவேண்டும். ஒப்பில்லாத யுத்தமுகத்தில் குறுக்கிட்ட சிவன் முதலாகியபேர் நடுக்கங்கொள்ளப் பொல்லாத வாணாசுர்னுடைய விஸ்தாரமான தோள்களை யெல்லாஞ் சக்கரத்தினாலே நறுக்கி இரண்டு கையை மாத்திரம் விட்டருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 89
—————

புன்சொல்லிலே யகப்பட்டதும் போதாமலே யவமேற்றெனர்,
கென்சொல்லுவோ மென வெண் ணியோ யாதோவெ னக்கீயாது நீ,
தென் சொல் லிலே வடசொல்லிலே திருவாய்மொழிச் சதுர் வேதமா,
நன்சொல்லிலே விளையாடுவாய் நாரா யணா நாராயணா.       90

[இ-ள்.] அடியேனுடைய மூடபுத்தியினாலே பாடா நின்ற புல்லி தாகிய கவிதைச் சொல்லிலே அகப்பட்டதும் போதாமல், எனது அக்கியா னத்தையெல்லாம் ஏற்றபடியினாலே இவனுக்கு என்ன சொல்லுவோ மென்று திருவுள்ளத்தி லெண்ணியதோ என்னமோ கிருபை செய்தரு ளாமலிருப்பதை அறிகலேன். தமிழாகிய தென் சொல்லிலேயுங் கிரந்தமாகிய வடசொல்லிலேயுந் திருவாய்மொழி யென்னும் நான் குவேதத்தி னுடைய நன்மைபெற்ற சொல்லிலேயுந்திருவிளை யாடல் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

மெலியாமையுந் திருஞானமு மிகுபோகமுந் திடதேகமும்,
சலியாமையும் பகை நாசமுந் தன ராசியுந் தகுசீலமும்,
கலியாணமும் பெற நீதரக் கடனாளியாற் பினுமுன்னை நான்,
நலியாமலே யருள் கூறுவாய் நாராயணா நாராயணா.       91

[இ-ள்.] மெலிதலில்லாமையும், அழகிய ஞானமும், மிகுந்த போகமும், வலிய தேகமும், சலியாமையும், பகை நாசமும், திரவியராசியும், யோக்கியமான ஆசாரமும், கலியாணமும், இவையெல்லாந் தேவரீரிடத்தில் பெறும்படியான கடனாளி யானதால், இனி உம்மை நான் வருத்தாமல் பூரணமான கிருபை செய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

சமர்த்தேது நல் லறமேதருந் தயையே தருந் தவமேதுமிக்,
கமைத்தே துமே லடைவேதுகா ரணமேதுபூ ரணமேதுசங்,
கமத்தே துரா கத மேது சொல் கமையேது சொல் கதியாவு நீ,
நமத் தேதுவாரகைவாசனே நாராயணா நாராயணா.       92

[இ-ள்.] சாமர்த்தியங்கள் தானேது? நல்ல தருமங்கள் தானேது. அருமையான தயவுகள் தானேது? அரிய தவங்கள் தானேது? மிகுந்த அமைப்புகள் தானேது? மேலாகிய அடைவுகள் தானேது? காரணங்கள் தானேது? பூரணங்கள் தானேது? கூட்டங்கள் தானேது? ஆணவங்கள் தானேது? சொல்லிய பொறுமைகள் தானேது? சொல்லா நின்ற மோட்சங்கள் தானேது? இவைகள் யாவும் தேவரீருடைய கிருபையே யன்றிரையும்
வேறில்லை. ஆதலால் உமது திருவடிகளுக்கே நமஸ்காரஞ்செய்து நின்றேன் துவாரகாவாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 92
———–

பித்தங்கயஞ் சொறிதே மல்கம் பிதமீளைகா மாலைபாண்டுவுன்,
மத்தஞ்சுரஞ் சளிசன்னிகால் வலிசூலைவிக் குதல்கக்குவா,
யுத்தம்பனந் தலை நோவுமற் றுளநோயெலாந் தொடராமலாள்,
நத்தன் முதற் கொருகாலனே நாராயணா நாராயணா.       93

[இ-ள்.] பித்தம் – க்ஷயம் – சொறி – வெள்ளைப் பாண்டு – நரை – ஈளை -காமாலை-பாண்டு உன்மத்தம். சுரம் – சளி – சன்னி – கால்வலி – சூலை-விக்கல்-கக்கு வாய்- தம்பனம் தலைநோய் மற்றுஞ் சொல்லா நின்ற நோய்களெல்லாம் அடியேனைத் தொட ராமல் இரட்சித்தருள வேண்டும். நத்தன் முதனுக்கு ஒரு இயமனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.(93)
———–

துறையூருமா முதலைக்குலச் சுனையொத்த மன்னவர் வாசலில்,
குறையூர்வதுங் கசைசாடவே குலைக்கின்றதுந் தலைசோரியாய்,
முறையூர்வதும் பிறகுன்னையே முனிபாவமுந் தெரியேனலன்,
நறையூரனே கருடாசலா நாராயணா நாராயணா.       94

[இ-ள்.] முதலைக் குலஞ் சஞ்சரியா நின்ற துறையையுடைய சுனைபோலேயிரா நின்ற துஷ்ட மன்னர் வாசலிலே குறைவுகளைச் சொல்லுமிடத்தில், அவர்கள் தருமம் விசாரியாமல் நேர்ந்த படிக்குப் பிரம்புகளாலே அடித்திடத் தேகம் நொந்து தலைகளிலே உதிரம் பெருகும் போது முறையமிட்டுக் கேள்வியில்லாமல் பிற்பாடு தேவரீரைத் தெய்வமேயென்று வெறுத்துக் கொள்பவருடைய பாவந் தீர்வதேயில்லை. ஆதலால் தேவரீர் சந்நிதானத்திலே முன்னம் முறையமிட் டேன்; திருநறையூரிலேயுந் திருவேங்கடமாகிய கருடாசலத்திலேயும் நிலைபெற்ற ஸ்ரீமந் நாரா யணா எ-று. 94
———–

பிணிவிட்டதே விதியாவையும் பிழைவிட்டதே சுகசீவியாய்,
பணிவிட்டதே தமனாரெனும் பகை விட்டதே பலபூசலும்,
தணிவிட்டதே யதி ஞானமே தகவிட்டதே யுனையோதவாய்,
நணி விட்டதே யென்மட்டிலே நாராயணா நாராயணா.       95

[இ-ள்.] அடியேனுடைய சனனங்கள் தோறுந் தொடரா நின்ற பிணிகளையும், விதிகளையும், எமன் பகைகளையும், மன்மதன் சண்டைகளையும், இவை முதலாகிய யாவையும் நீக்கிச் சுகசீலியாகவும், அதிக ஞானியாகவும், வாக்கினாலே உம்மைஓதும படியாகவும், என்மட்டிலே பொருந்துதலாகத் தேவரீருடைய கடாக்ஷ வீட்சணியஞ் செய்தருளியது ஸ்ரீமந் நாராயணா எ-று. 95
———

வாய்செய்தபுண் ணியங்கோடியென், வழி செய்த புண்ணியங்கோடியென் ,
தாய் செய்த புண் ணியங்கோடி தந்தையர் செய்த புண்ணியங்கோடி யென்,
பாசெய்த புண்ணியங்கோடியென் பதி செய்த புண்ணியங்கோடியென்,
நான் செய்த புண் ணியங்கோடிகாண் நாராயணா நாராயணா.       96

[இ-ள்.] எனது வாக்கும், எனது மரபும், எனது மாதாவும், எனது பிதாவும், எனது பாடலும், எனது ஊரும், எனது நாவும், இவைக ளெல்லாஞ் செய்த புண்ணியம் அநேகங்கோடி யானபடியினாலே தேவரீரைப் பிரசன்னமாகக் காணக்கிடைத்தது ஸ்ரீமந் நாராயணா எ-று. 96
———–

உன் கோயிலென் கால் சூழவு முன்பாதமென் கண்காணவும்,
நின்பாடலென் வாய்பாடவு நின் காரியங் கை செய்யவும்,
என்காது நின் புகழ் கேட்கவு மென்நெஞ்ச நின் னினைவுன்னவும்,
நன காக நல் லரமேயருள் நாராயணா நாராயணா.       97

[இ-ள்.] உமது திருக்கோயிலை என் கால் சூழவும், உமது திருவடியை என் கண் காணவும், உமது சரித்திரத்தை என் வாய் பாடவும், உமது கைங்கரியத்தை என்கை செய்யவும், உமது புகழை எனது காது கேட்கவும், உமது தியானத்தை என்னெஞ்சு செய்யவும், இத்தன்மையாகிய நல்ல வரத்தைக் கொடுத்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 97
————
இற்கண்ணெலா நாராயணா வெங்கெங்கணு நாராயணா,
சொற்கண்ணெலா நாராயணா தொழி லெங்கணு நாராயணா,
முற்கண்ணெலா நாரா யணா முகமெங்கணு நாராயணா,
நற்கண்ணெலா நாராயணா நாராயணா நாராயணா.       98

[இ-ள்.] வீடுகள் யாவையினும் வெளிகள் யாவை யினும், சொல்லுகள் யாவையினும், தொழில்கள் யாவையினும், முன்னிடங்கள் யாவையினும், முகங்கள் யாவையினும், நல்லிடங்களெல்லாவற்றிலும், பரிபூரணமா யிருப்பது தேவரீர் சொரூபமேயன்றி வேறொருவருண்டோ ஸ்ரீமந் நாராயணா எ-று. 98
————

தேறுந்திருப் பதிவேங்கடா தெரிசித்து நாரணவென்று தான்,
நூறும்படிப் பவர்பன்னுவார் நூறும்மிருந் துலகாண்டபின்,
பேறும் பெறும் பிள்ளைப்பெறும் பெருமைப்பெறும் பெறுவிப் பையே
நாறுந்துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       99

[இ-ள்.] வேதமுடிவிலே தேறா நின்ற திரு வேங்கடமென்னுந் திருப்பதியைத் தரிசித்து ஸ்ரீமந் நாராயண சதகம் நூறுபாடலையும், படிப்பவர்களும், அர்த்தங்களா-ராய்பவர்களும் நூறு வருஷமிருந்து பிள்ளைகள் முதலாகிய உலகாட்சி யினது பலனை அனுபவித்த பிற்பாடு அவர்களுக்குப் பெருமையைப் பெற்ற பரமபதத்தைக் கடாட்சித் தருள்வாய், பரிமளிக்குத் திருத்துழாயணிந்த திருமார்பையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 99
———–

நனிவாழி நின் பல்கோயிலு நனிவாழி நின் பலதேவிமார்,
நனிவாழி நின் னடியாரெலா நனி வாழி நின் பல்லைபவம்,
நனிவாழி நின் வட வேங்கட நவிவாழி நின் களிகற்றபோ,
நனிவாழி நின் கவிகேட்டபேர் நாராயணா நாராயணா.       100

[இ-ள்.] சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும், மலை நாட்டிலும், நடு நாட்டிலும், தொண்டை நாட்டிலும், வட நாட்டிலும், தேவரீர் நித்திய வைபவமாய் விளங்கா நின்ற திருவரங்கம் பெரிய கோயில் முதல் பரமபதம் அந்தியமாகவிரா நின்ற நூற்றெட்டுத் திருப்பதியிலும், பாகவதர்கள் உச்சீவிக்கத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிரா நின்ற தேவரீருடைய திருக்கோயில்களெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது; தேவரீருடைய வக்ஷஸ்தலத்தி லின்பமுற்று வீற்றிரா நின்ற மகாலட்சுமியும், பூமிபிராட்டியும், நீளாதேவியும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலங்களிலும், இடை விடாமல் தமது திருவுள்ளமே ஆலயமாகச் செய்து கொண்டு தேவரீரைத் தியானஞ்செய்யும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தின்-கண்ணுள்ள பரம பாகவதர்கள் யாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. தேவரீருடைய மகிமை யுற்று விளங்கும் வைபவங்கள் பல்லாண்டு வாழவும், சமஸ்கிருத பாஷைக்கும், திராவிட பாஷைக்கும், எல்லையாகியும், சதுர்வேதங்களும், மற்ற சாஸ்திரங்களும் சொல்லப்பட்ட பொருள்களுக் கெல்லாம் முடிவாகியும், தர்மமே சொரூபமாகியும், பூமிதேவிக்கு மணிமுடியாகியும், தனக்கொப் பில்லாமல் பெருமை பொருந்திய சொர்ணமயமாகியும், ஓங்கிய தேவரீர் எழுந்தருளியிரா நின்ற வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலக்கியானிகளாகிய வசிஷ்ட வாமதேவ விஸ்வாமிதர வியாச பராச சவுனகாதி ரிஷிகளும், மகாத்துமாக்களாகிய நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும், பதோத்தாரகராகிய இராமாநுஜாசாரியரும், வரகவிகளான தண்டிபவுபதி காளிதாசன் கம்பர் முதலாகிய கவிசக்ரவர்த்திகளும், பரம பாகவதோத்தமர்களாகிய அழகிய மணவாள பிள்ளைப் பெருமாளையங்கார் முதலாகிய பரமபாகவதர்களாற் செய்தருளிய வேதங்களும், வைணவாகமங்களாகிய ஸ்ரீபாஞ்சராத்ர வைகாசனங்களும் இதிகாச ராமாயண பாரதங்களும், வாமம்வராகம் முதலிய புராணங்களும், மற்றுமுள்ள நூல்களாசிய இவைகளில் சொல்லப்பட்டிருக்கிற தேவரீருடைய நித்யகல்யாண குணங்களை அத்தியயனஞ் செய்த பாகவதர்கள் யாவரும் மிகுதியாக வாழக் கடவது. இவ்வாறு மகிமையுற்ற தேவரீர் விஷயமாக செய்தருளிய கவிகளை சிரவணாந்தத்துடன் கேள்வியுற்ற பாகவதர்களியாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது ஸ்ரீமந் நாராயணா எ-று. 100

வடவேங்கட நாராயணசதகம் மூலமும் உரையும் முற்றிற்று.

————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ அரங்க நகர் அன்னை அடைக்கல மாலை-

November 9, 2025

சீரரங்க நகரன்னை சேவடி சேர்த்தும் வணம்
நாராரடைக்கல நன்மாலை ஓன்று நவில் வதற்க்கிப்
பாரோர் புகழ் எம் பராங்குச மா முனி பாதமலர்
ஏரார் நின் பாங்கு அருந்திப் பரவுதி என்னுளமே
–காப்பு

திருக்கச்சி வெக்காப்பதி வந்த பொய்கைத் திரு முனிவன்
உருக்கலை என்னுளத்து ஒளிர்ந்து வோங்க வுவத்தி என்றுன்
கருக்கச் சளந்தீர் கழற் சரண் புக்கனன் காமர் வளப்
பெருக்கத்து ஒளிரும் அரங்க நகரன்னைப் பெண் மணியே
–பொய்கையாழ்வார்

பூத்திகழ் காக்கடன் மல்லை வரு முனி புங்கவன் வெண்பாத்
திகழ் நூல் என்னுள்ளத்தில் படியப் பணித்தி என்றுன்
மாத்திகழ் வாரீச மாணடி மன்னி மறை புகுந்தேன்
ஒத்தகழார் சேர் அரங்க நகர் அன்னை உத்தமியே
–பூதத்தாழ்வார்

மயிலைப்பதி வந்த மா முனிவன் கலை மன் பொருளாம்
வெயிலைப் பொழிந்தென்றும் வீடா வவித்தை வினையிருள் செய்
துயிலைத் துடைத்தி என்று உன் துணைத்தாள் சரண் டுன்னினனால்
அயிலைப் பொரும் கண்ணர் அரங்க நகரன்னை யாரணியே
–பேயாழ்வார்

ஆழி தரும் கலையாகு மழிசை யடிகள் நன்னூல்
பாழி பெரும் பொருள் என்னுளத்து என்றும் படர்ந்து நிற்க
வாழி யருள் செய்தி என்றுன் மலரடி வந்தடைந்தேன்
வீழி யிதழ் கொள் அரங்க நகரன்னை வித்தகியே –
-திருமழிசை யாழ்வார்

கோளூர் முனிவன் குருகூர் முனி மேல் குறித்த கலை
வாளூர் பொருள் என் மனம் மன்னி நிற்க மகிழ்தி என்றுன்
தாளூர் சலசச் சரண் அடைந்தேன் உயிர் தாங்கு மொன்பான்
கேளூர் ரரங்க நகரன்னையாம் கிருபாகரையே
–மதுரகவியாழ்வார்

உண்மை உலகினர் ஒர நம் மாறன் உகந்துரைத்த
திண்மை நன்னூல்கள் என் சிந்தையில் தேங்கிடச் செய்தி என்றுன்
ஒண்மை யடியை வுவந்து அடைந்தேன் உலகோர்ப் புரக்கும்
வண்மை யரங்க நகரன்னை யாகும் வராநநையே
–நம்மாழ்வார்

கொல்லி நகர் வந்த கோ முனிவன் கலை கொண்ட பொருள்
புல்லி என்நெஞ்சில் பொலியக் கருணை புரிதி என்றுன்
அல்லி மலரடி யண்டை கொண்டேன் மறையந்த முறை
வல்லி யரங்க நகரன்னையாம் பத்த வத்ஸலையே
–குலசேகராழ்வார்

பரத்துவம் செய்து நற் பஞ்சவன் பொற் கிழி பார்ப்படுத்த
உரத்துவ வில்லி புத்தூர்க்கோன் கலை என்னுளத்து நிற்கத்
திரத்துவம் செய்தி என நின் சரண் சரண் சேர்ந்தனாற்
றரத்துவர் முத்தவரங்க நகரன்னைத் தற் பரையே
–பெரியாழ்வார்

திருக்கோதை நாயகி செய்ந் நூல் என் சிந்தையில் தேக்குவித்து என்
கருக் கோதை நீக்கக் கருணை செய்வாய் என்றுன் கான் மலரின்
மருக்கோதை சூடி மறை புகுந்தேன் மறையோர் பயிலும்
இருக்கோதைத்தாய வரங்க நகரன்னை இந்திரையே
-கோதை நாயகித் தாயார்

விற்கலை வந்த பரகால மா முனி வேந்தனருள்
நற் கலை என்னுள நாடொறு நண்ண நயத்தி என்றுன்
அற்கலைத் தோட்டு மடிச் சரண் புக்கனனாரணமா
நற்கலை யோங்கு மரங்க நகரன்னை நாயகியே –
திருமங்கையாழ்வார்

விப்பிர நாராயண முனி யேந்தல் வின்கலைகள்
பப்பிரதப் பொருணாளும் என்நெஞ்சில் பதித்தி என்றுன்
துப்பிரசன்னத் துணையடியில் சரண் டுன்னினால்
அப்ரமேய வநக வரங்க நகரன்னையே –
-தொண்டரடிப்பொடியாழ்வார்

முனி யூர்தி யூர்ந்து என் முகுந்தன் முன் வந்த முனித்தலைவன்
கனியூர் சுவைக்கலை என்னுள நிற்கக் கணித்து என்றுன்
பனியூர் திருமலர்ப் பாதத் தடைந்தனன் பக்தி யிறைத்
தனியூர்தி யூரும் அரங்க நகரன்னை தாக்கணங்கே
— திருப்பாணாழ்வார்

நாதமுனிகள் எனும் எம்மடிகள் இன மலர்ப்
பாதம் உவந்து பணிந்து உய்யும் வண்ணம் பணித்தி என்றுன்
சீத முளரித் திருவடியில் சரண் சேர்ந்தனனால்
வேத முழக்கத் தரங்க நகரன்னை வித்தகியே
-நாதமுனிகள்

புலம் செயிர்த்து ஓங்கிய உய்யக் கொண்டார் புகழ் பூத்து ஒளிர்ந்து
புலம் செய் அடிகள் என் புந்தி வைத்து ஏத்தப் புரிதி என்றுன்
நலம் செய் திருவடி நண்ணின னல்லவர் நாளு நண்ணி
வலம் செய் யரங்க நகரன்னை யாகும் வரோ தயையே
–உய்யக் கொண்டார்

கூறு புகழ்க் குருகை காவலப்பன் குறிக் கொணிட்டை
தேறும் எனக்கும் சிறந்து ஒங்க நீ யருள் செய்தி என்றுன்
நாறு மலரடி நண்ணினன் சீர்த்தி யிஞ்ஞாலம் எலாம்
வீறும் அரங்க நகரன்னை வேத விளக்கே
–குருகைக் காவல் அப்பன்

நம்பி கருணாகர தாசர் வள்ளல் நல்லொழுக்கங்
கும்பி யுழைக்கும் எனக்கும் வர நின் குரை கழலை
நம்பி யடைந்தனன் நாளும் பிற விரலை யுற்றோர்க்
கம்பி யனைய வரங்க நகரன்னை யம்புயையே —
நம்பி கருணாகர தாசர்

ஏறு திருவுடையார் என்றுரை எம்மிரு நிதிக்குப்
பேறு தருமவன் பால் வரு நேயப் பெருக்கின் வளம்
தேறும் எனக்கும் அளித்து என்றுன் பதம் தேர்ந்து அடைந்தேன்
நாறு மலர்ப் பொழில் நண்ணும் அரங்க நகரன்னையே
–ஏறு திருவுடையார்

தூய திருக்கண்ண மங்கை யாண்டான் என்னெஞ்சுரநதிதன்
நேய் வடிகளடியி னுறுமன்பி னீத்த மிந்தத்
தீயனுற்றுய்ய நின் சேவடி சேர்ந்தனன் றெய்வ மயில்
சாயல் யரங்க நகரன்னை யாகும் தயா பரையே
–திருக் கண்ண மங்கை யாண்டான்

மறையோர் புகழ் வான மா மலை யாண்டான் மகிழ் தரு தன்
இறையோனுழிக் கொண்ட வீர மடியற்குமீதி என்றுன்
பொறை யோங்கு தாளிற் புகல் புகுந்தேன் ஐம் புலனை வென்ற
நிறையோர் நிலவும் அரங்க நகரன்னை நின்மலையே
–வானமாமலை யாண்டான்

பேணும் உருப்பட்டூராச்சான் பிள்ளைப் பேர் பெருந்தகை தன்
மாணுரு மாரி யன்பால் கொண்ட நிட்டை மரபு எனக்கும்
பூணுறும் வண்ணம் புரிது என்று உன் தாள் புகல் புகுந்தேன்
சேணுறு சோலை யரங்க நகரன்னைச் செந்திருவே
–உருப்பட்டூராச்சான் பிள்ளை

சோகத்தூராழ்வான் சுக நிலை நிட்டை துடி இடையார்
மோகத்தூ ரெற்கு முரண் அற்று உண்டாக நின் முண்டகத் தாள்
ஆகத்தூடு உய்த்து இன்று அடைக்கலம் புக்கனனைய வென்னை
நாகத்தூர்த்தித் தலைவன் போற்ற அரங்க நகரன்னையே
– சோகத்தூராழ்வான்-

கீழ் வானெழு பகல்போலொளிர் வண் புகழ் கீழையகத்‌
தாழ்வானெனத் தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
தாழ்வாரெனக்குந் தயை செய நின்னைச் சரணடைந்தேன்‌
வாழ்வாரரங்க நகரன்னையாகும் வதானியையே
–கீழையகத்‌தாழ்வான்

மேலையகத்துறை யாழ்வானென யான் வியந்து திரு
மாலையகத்த மறைத் தமிழ் பாடி மகிழும் வளத்‌
தாலை யளித்தி யென நின் சலசச் சரணடைந்தேன்‌
சோலையகத்த வரங்க நகரன்னைச் சுந்தரியே
–மேலையகத்தாழ்வான்‌

திருமணக்கானம்பி சேவடி சிந்தையிற் சேரச்‌ செய்து என்‌
கருமணக் காகரமாங் காம நோயைக் களைதி யென்றுன்‌
மருமணத் தாளின் மறை புகுந்தேன் மணிவண்ணனெம்மான்‌
திரு மணக் காந்தை யரங்க நகரன்னைச் செய்யவளே
.–மணக்கால் நம்பி

பெருக்கத் திருக் கைரவக் கேணிப் பாண் பெருமாளரையர்‌
தருக்கத் தவாளந் தணந்த நடை யெற்குஞ்சார்க வென்றுன்‌
திருக் கத்திகைக் கழலிற் சரண்‌ சேர்ந்தனன் றேர்வரிய
இருக்கக்தையான வரங்க நகரன்னை யின்ப வைப்பே
–திருவல்லிக் கேணிப் பாண் பெருமாளரையர்‌

சொட்டைப் பூசிச் செண்டலங்கார ராரியன் திருவடியில்‌
நெட்டைப் பேரன்புற்ற நிட்டை யெனக்கு நிகழ்க வென்‌தன்‌
மட்டைச் செய் தாமரை மாணடி புக்கனன் மன்னனந்த
முட்டைப் பெற்றாளு மரங்க நகரன்னை முன்னவளே
-சொட்டைப் பூசிச் செண்டவலங்கார தாசர்‌ –

குரு விண்ணகர் தருவானெனுங் கொள்கை கொள் கோமடத்‌துத்‌
திரு விண்ணகரப்பன் சேவடி யேத்துந் திறம் பெற நின்‌
மருவிண்ணளவுமரையடி மேவினன் வையகத்துப்‌
பெரு விண்ணரங்க நகரன்னை யாஞ்சுப் பிரசன்னையே–
கோ மடத்துத் திருவண்ணகரப்பன்‌

நல்லொழுக்கத் துலகப் பெருமாணங்கை நண்ணு நிட்டை
புல்லொழுக்கேற்கும் புகுமா கருணை புரிதி யென்றுன்‌
எல்லொழுக்கிண்டை யிணை தாளடைந்தன னென்‌றும் பொன்னி
நல்லொழுக்காரு மரங்க நகரன்னை நப்பின்னையே
–உலகப் பெருமாணங்கை

சீரார்ந்த நற் புண்டரீகாக்கதா சந்தத் தேசிகன் பால்‌
நாரார்ந் தொழுகு நடை யெற்கு நண்ண நயத்தி யென்றுன்‌
ஏரார்ந்த விண்டை யிணைத்‌ தாளிலில்லடை யெய்‌தினனாற்‌
பாரார்ந்த கீர்த்தி யரங்க நகரன்னைப் பார்க்கவியே,
-ஸ்ரீபுண்டரீகாக்ஷ தாசர்‌ –

ஆளவந்தா ரெம்மடிகளடியா மருத்த வைப்பென்‌
நாளவந்தீர மன மஞ்சிசம் வைத்து நன்றுற நின்‌
நாள வந்தாமரை நல் தாள் அணுகின னண்பர் பவ ்‌
மாள வந்தாளு மரங்க நகரன்னை மாநிதியே, –
-ஸ்ரீஆளவந்தார்‌

திருமான் முனஞ் செந்தமிழ் மறை பாடும் திருவரங்கப்‌
பெருமாளரையர் எனப் பாடியாடு நற்பேறு எனக்கு
வருமாறுன் றாளின் மறை புகுந்தேன் வழுவாத முத்தி
தருமா வரங்க நகரன்னையாகும் தயாம்புதியே
–திருவரங்கப் பெருமாள் அரையர்

கை யொழியா நன்னடைச் சொட்டை நம்பி தன் கான்மலரைப்‌
பொய் யொழியாத வென்‌ புந்தி வைத்தேத்தப்‌ புரிதி யென்று
மெய் யொழியா வன்பர் மேவு நின்றாட்‌ சரம் மேவினனான்‌
மையொழியாக் கண்ணரங்க நகரன்னை மைதிலியே
–சொட்டை நம்பி

அகந்தூயனாமெம் மரசு நம்பிப் பெரியோனடியை
உகந்தூதியமென வுன்னிட வுள்ளமுவத்தி யென்றுன்‌
சுகந் தூங்கு தாளிற்றுனைந் தடைந்தே னற்றோறுப் புரப்‌பால்
நகந்தூக்கு நாரணனண்ணு மரங்க நகரன்னையே
–௮ரசு நம்பி

அவா நிலை நீத்த வடிகள் தெய்வத்துக்கரசு நம்பி
சுவா நிலை யேற்குந் துணை நிற்க வன்பு சுரத்தி யென்று
தவாநிலைத் தாபதர் தாழு நின்றாளிற் சரணடைந்தேன்‌
உவா நிலைச்‌ துண்டத் தரங்க நகரன்னை யொள்ளொளியே,
–தெய்வத்‌ துக்கரசு நம்பி

பிள்ளை யரசு நம்பிப் பெரியோன் கழல் பேணி நின்‌றிவ்‌
வெள்ளை யறிவனும் வீடு பெற்றுய்ய நின் வீங்கு மொளிக்‌
கொள்ளை யடிச்‌ சரண் கூடினன் பேரண்ட கோடிக் கெல்லாந்‌
தன்ளை யரங்க நகரன்னையாஞ்‌ சத்ய சங்கற்பையே,
– பிள்ளைக்கரசு நம்பி

செருக்காற்றிற் செல்லாச் சிறு புள்ளுடையார்‌ திருவடியிற்‌
பெருக் காற்றிற் பீடுறும் பேரன்பு நாளும் பிறங்க வென்றுன்‌
இருக்காற்றின ரெண்ணிணை யடிக்கில்லடை யெய்தினனால்‌
அருக்காற்றுப் பொன்னே யரங்க நகரன்னை யக்கரையே
–சிறு புள்ளுடையார்‌ –

சீரார் திருமாலிருஞ்சோலை தாசர் தஞ்‌ சிர்த்திகளை
நாராரென்னா வின விற்றி யுய்வானருணல் குதியென்‌ உகள்
றேரார் நின்றாள் களிலில்லடை யெய்‌தினனீர்ம்பொழிற் கட்
காராரங்க நகரன்னையாங் கருணாலயையே,
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

தெருள் சேர்ந்த வங்கி புரத்தாய்ச்சி நிட்‌டையைச் சேர்ந் தொழுகி
மருள் சேரென்றோற்றத்தை மாற்றிட வுள்‌ள மகழ்‌தி யென்‌றுன்‌
பொருள் சேர் கழலிற் புகல் புகுந்தேன் பொழில் பூத்தளிக்கும்‌
அருள் சேரரங்க நகரன்னையாகு மகளங்கையே–
வங்கி புரத்தாய்ச்சி –

அருங்கலைக் கேள்விப் பெரிய நம்பிக்குத் தன்னாரியன் பால்‌
ஒருங்கலில் பேரன்புதித்தாங்கெனக்கு முதிக்க வென்றுன்‌
பிருங்க மிமிரம் புயத் தாளடைந்தனன் பெட்குமின்னின்‌
மருங்கு லரங்க நகரன்னையா மங்களாகரையே
-பெரிய நம்பிகள்

திருக் கோட்டியூர் நம்பிச் செம்மற்குத் தன்‌றிருத் தேசிகன் பாற்
றிருக்கோட்டு மன்பு செழித்‌தாங்கெனக்குஞ் செழிக்க வென்றுன்‌
தருக்கோட்டுந் தாளிற் சரண் புகுந்தேன் மெய்ச் சது மறையோர்‌
திருக்கோட்டி யோங்கு மரங்க நகரன்னைச் செஞ்சுடரே-
திருக்கோட்டியூர் நம்பி

பெரிய திருமலை நம்பி யெனு மெம் பெருந்தகை தன்‌
அரிய திருவருட்காளாகும் வண்ணமருடி யென்றுன்‌
ரிய சரணடைந்தே னுனையோரா வுளத்தினர் கட்‌
கரிய வரங்க நகரன்னையா மம்புயா தனையே
–பெரிய திருமலை நம்பி –

குற்றமிலா மாறனேர் நம்பி தன் குரவன் கழலில்‌
அற்றமிலா வன் படைந்தாங்கி யானுமடைக வென்றுன்‌
சுற்றமிலார்‌ துணையா மடியிற்‌ சரண்டுன்னினனாற்
செற்றமிலார் சேரரங்க நகரன்னைச் சிற்பரையே
-மாறனேர் நம்பி

திருக்கச்சி நம்பி யடிகட்குத் தந்திருத் தேசிகன் பால்
அருக்கச்சுதவன் பமைத் தாங்கெனக்கு மமைத்தி யென்றுன்‌
கருக்கச்‌ சளங் கழற்றுங் கழற்கை யடை கண்டனன்‌ சீர்ப்‌
பெருக்கத் தரங்க நகரன்னையாகும் பிராப்பியையே
–திருக்கச்சி நம்பி

திருமாலை யாண்டா னெனுஞ் செம்மலுக்குத் தன் றேசிகன் பால்
பெருமாலை யாக்கிய பெற்றியினெற்கும் பிறப்பி யென்றுன்‌
மருமாலைத் தாளின் மறை புகுந்தேன் மன மாசறுத்தோர்‌
கருமாலை நீக்கு மரங்க நகரன்னைக் காரணியே
-திருமாலை யாண்டான் –

ஆழ்வானறிவின்றலை நின்றொழுகு மெம்மாள வந்தார்‌
ஆழ்வானுக் காரியன் பாலானவன் பெற்குமாக வென்றே
ஏழ்வான் பிறப்பு மிரிக்கு நின்றாட் சரணெய்‌தினனிற்‌
றாழ்வார்க் கருளு மரங்க நகரன்னைச் சற் குணியே,
–ஆளவந்தாராழ்வான்

திரு வான மா மலை யாண்டான் றெருணடைச் செல்வமெற்கும்‌
வருவான குடி யென்றுன் மரைத் தாளின் மறை புகுந்தேன்‌
பெரு வானவர் பெறும் பேற்றை யடியவர் பெற்றுவக்கத்
தருவான ரங்க நகரன்னையாகுஞ்ச நாதனையே
–வான மா மலை யாண்டான்‌

அமலனெனுந் தெய்வ வாரி யாண்டான் றன்னடி யிணையாங்‌
கமல மென்னுள்ளக் கமலம் வைத்தேத்‌தக் கணித்தி யென்‌றுன்‌
நிமல வடிகளினீழலடைந்தன னித்தியர் சேர்‌
விமல வரங்க நகரன்னை யாரண வேத்தியையே-
தெய்வவாரி யாண்டான் –

இலங்கெழின் மேதை கொளெம்மீச னாண்டாற் கிறைவனுழித்‌
துலங்‌ கெழிலன்பு சுரந்தாங்கெனக் குஞ்சுரக்க வென்றுன்
கலங்கெழு தாள்களிற் கையடை புக்கனன் காயம் வையத்‌
தலங்கெழு சீர்த்தி யரங்க நகரன்னைத் தற் பரையே,
–ஈசனாண்டான்‌

சிதஞ்செய் பஞ்சேச்தியச்‌ சீயராண்டாற்குத் தன்‌றீர்த்‌ தனுழி
இதஞ் செயயும் பக்‌திமை யேய்‌ந்தாங்கெனக்கு மியைக வென்றுன்‌
பதஞ் செய் பதங்களைப் பற்றினன் பத்தர்கள் பாவமெலாம்‌
அகஞ்செய் யரங்க நகரன்னையா மருளார் கலியே
–ஜீயராண்டான்‌

தன்னாரியன் பாற் திருக் குருகூரப்பன் றானடைந்த
இன்னா வறுமன்பெனக்கு முண்டாக விழைக்தி யென்றுன்‌
பொன்னாரத்தவம் போருகத் தாளிற் புகல் புகுந்தேன்‌
கொன்னா ரரங்க நகரன்னையாகுங்கு சேசயையே,
-திருக்குருகூர் அப்பன்

தேசிகன் பானந் திருமோகூரப்பன் சிறந்து கொண்ட
ஆசில தாமன் பெனக்கு முண்டாக வருடி யென்றுன்‌
ஏசிகறாள்களி லேன்றடைந்தே னெண்ணி ருக்கெகர் நற்‌
கோசிகமேத்து மரங்க நகரன்னைக் கோமளையே
–திரு மோகூர் அப்பன்

நீடுறு சீர்த் திருமோகூர் நின்றானெனு நின்மலன்றன்‌
பீடுறு நன்னடையின் பெருக்கெற்கும் பெருக வென்றுன்‌
தோடுறு தோடகத்தாட் சரண்டுன்னினன்றும் பியிசை
பாடுறு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே
-திருமோகூர் நின்றான்

தெருதித் தெய்வப் பெருமாட் பெருந்தகை சீரடியைப்‌
பொருணிதி யென்ன வென் புந்தி வைத்தென்றும் புகழு மன்பு
மருணிதியா மெற்கும் வாய்க்க வென்றுன்னை மறை புகுந்தேன்‌
அருணிதியான வரங்க நகரன்னை யற்புதையே,-
தெய்வப்பெருமாள்-

மதியார்‌ வகுளா வணிச் சோமயாஜி தன் மாண்டியே
நிதியா யென்னுள்ள நிறுவி யுய்வானின்னிறை தவர்ககுக்‌
கதியாங் கழல்களிற் கையடை புக்கனன் கற்றவர்கள்‌
துதியா ரரங்க நகரன்னையாகுஞ் சுடர்க் கொடியே.
–வகுளாபரணசோமயாஜியார்‌

சீரார்த் திருக்குருகூர் தாசரென்னு மெந் தெய்வ மணிக்‌
கேரார் தன்னாரியன் பாலேய்ந்த நிட்‌டை யெனக்குமுற
வாராரருள் செய்தி யென்றுன் கழலின் மறை புகுந்தேன்‌
தேரார் தெருவார ரங்க நகரன்னைச் சின்மயையே
–திருக் குருகூர் தாசர்‌

திருமாலிருஞ் சோலை தாசரெனுந் தெய்வத் தேனு தன்‌ சீர்க்‌
குரு மா மணி யுழிப் பெய்யன்புப் பால் வெள்ளக்‌ கோலமெற்கும்‌
வருமாறுன் வாரிச மா மலர்த்தாளின் மறை புகுந்தேன்‌
திரு மா மணிப் பூணரங்க நகரன்னைச்‌ சேம வைப்பே-
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

வட மதுரைப் பிறந்தானென்னும் வண்மை மணி மலைக்குத்‌
திடமதுரைத் தவன்றே மன்‌புவதை செழித்தலென
மடமலியெற்கு மளித்தி யென்றுன் றாண் மறை புகுந்தேன்‌
நட மலிந்தோங்கு மரங்கார ரங்க நகரன்னையே
–வட மதுரைப் பிறந்தான்‌

ஆட் கொண்டி யென்னு மடிகளடி களகத்தில்‌ வைத்தேன்‌
சேட் கொண்ட தீ வினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
தாட்‌ கொண்ட தாமரைத் தாளடைந்தே னம்பிச் சார்ந்வரை
ஆட் கொண்டருலளு மரங்க நகரன்னை யம்புயையே-
-ஆட்கொண்டி.

மறை கொண்ட மாண் பொருண் மன்னுளத் தம்மங்கி வள்ளலினெந்
சிறை கொண்ட தீ வினை தீர்வானடியர் செயுஞ் செயிர்கள்‌
பொறை கொண்ட நின் புண்டரீகப் பொற் பாதம் புகல் புகுந்தேன்‌
நறை கொண்ட பூம் பொழினண்ணு மரங்க நகரன்‌னையே
–அம்மங்கி –

பொன்னித் துறைவன் புரோகிதன் பொங்கெழிற் பொன்னடி யென்‌
சென்னிக் கணி யெனச் சேர்ந்துய்யுமாறருள் செய்தி யென்றுன்‌
உன்னித்‌ துறவோர் தொழுந் தாளடைக்கல முற்றனன் மால்‌
பன்னிப் பிரியை யரங்க நகரன்னைப் பார்க்கவியே
–இராஜ புரோகிதர் நாதமுனிகள்

ஆத்தி யந்தாரனற்றார மரங்கத்ம் மன்னொழுக்கஞ்‌
சாத்தியமாக வெற்கென்றுன் சலசச் சரணடைந்தேன்‌
ஏத்திய மா மறைக் கெட்டாப் பரம் பொருளே யினிதாம்‌
வாத்திய வோதை யரங்க நகரன்னை மா மருந்தே
–இராஜ மகிஷி திருவரங்கத்தம்மன்‌

எம்பெருமாற் கென்றுமின் பணி செய்தி தயத்துகக்கும்‌
எம்பெருமானா ரிணையடியே யெனக்கென்றும் பொன்றாச்‌
சொம் பெரும் பேறென்று துன்னக் கருணை சுரந்தருள்வாய்‌
நம்பெருமாண மணவாட்டி யரங்க நகரன்னையே,
–எம்பெருமானார்‌ –

இனிய கருத்துடனின் சொலெவர்க்கு மிசைக்கு மலை
குனிய நின்றார்‌ தங்குரை கழல் கூடி யென் கோதறுப்பான்‌
நனி யருள் செய்தி யென்றுன் கழனண்ணின னாரணற்குக்‌
கனியனையா யெம் மரங்க நகரன்னைக் கண்மணியே-
-மலை குனிய நின்‌றார்‌

தன்மவுரு வாரியச் சீ சடகோப தாசரெனும்‌
நின்மல பாநுவி னெஞ்‌சிருணீங்கியிந் நீடு கன்மச்‌
சன்ம மொழிக்க நின்றாட்‌ சரண் புக்கனன் சார்ந்தவர்க்குப்‌
பொன் மலை போலு மரங்க நகரன்னைப் புண்ணியையே,-
-ஆரிய ஸ்ரீ சடகோப தாசர்‌

அணி யரங்கத் தமுதப் பேரடிகளடிகள் பவப்‌
பிணி யரங்கப் பிடித்துய்வான ருளென்றுன் பெட்கு மொன்பான்‌
மணி யரங்கத் தண்டை மாணடி புக்கனன் மாதவிகள்‌
நணி யரங்கக்‌து நடஞ்செய் யரங்க நகரன்னையே
–அணி யரங்கத் தமுதனார்‌

திருவாய்த் தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்‌
கருவாய்த் தல மரனீங்க வருள் செய்து காத்தி யென்றுன்‌
மருவாய்த் திலங்கு மரையடி புக்கனன் மாணுருவாய்‌
அருவாய்‌த் திகழு மரங்க நகரன்னை யம்புயையே-
-திருவாய்த் தலமுடையார்‌

இசை யோங்கு கூரத்திறை யெம்மடிக ளிணை யடியில்‌
நசை யோங்‌கி யுய்ய நயந்திருக்காதிய நான்மறையின்‌
மிசை யோங்கு நின்னடி மேவினனல்குதி மெய்ப்புகழெண்‌
டிசை யோங்கரங்க நகரன்னையாகுஞ் சிந்தாமணியே-
-கூரத்தாழ்வான்‌ –

ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறை முதலி
யாண்டானெனை யென்று மாள்வானருடி யென்‌றஞ்சிறைத்தேன்‌
பாண்டான் முரல் பதுமப் பதம் பற்றினன் பாரளப்பான்‌
நீண்டான் மகிழு மரங்க நகரன்னை நீரசையே-
-முதலியாண்டான்‌

அம்புவி போற்ற ருளாளப் பெருமாளெனு மடை கொள்‌
எம்பெருமானா ரிணை யடி யென்பவ கீர்க்கு மென்று
நம்புறு நன்மன நண்ண நின்றாளை நயந்தடைந்தேன்‌
வம்பவிழ் சோலை யரங்க நகரன்னை மா மணியே.-
-அருளாளப் பெருமாளெம்பெருமானார் ஜீயர்‌

மைந்தாரைந்தா நெறி மாண்பினனா மெம் வடுக நம்பி
கந்தார் நடை யெற்குக் கை கூட நின்றன் கருணை கொள்வான்‌
பைந்தார்‌ புனை நின்பதஞ் சரண் புக்கனன் பாயும் பொன்னிச்‌
சிந்தார ரங்க நகரன்னை வேதச் சிரப் பொருளே
–வடுக நம்பி

சீரார் திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திருவடியில்‌
நாரார் மன நல நண்ணிட நீ யருணல்கி டென்றுன்‌
தாரார் சலசச் சரணத் துணையிற் சரணடைந்தேன்‌
ஏராரரங்க நகரன்னை யாமெம் மிறையவளே-
-திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌

கனந் தாழ் பொழிற் திருவேங்கட மாமலைக் கண்ணனுக்குத்‌
தினந் தாழ்ந்து தே மலர்க் கண்ணித் திருப் பணி செய்துவந்த
அநந்தாழ்வானிட்டை யளித்தி யென்றுன் றாளடைந்தனனற்‌
சனந்தாழரங்க நகரன்னையாகுஞ் சரணியையே
— –அநந்தாழ்வான்‌

சீரிய ஞான வெழுபத்து நான்கு சிங்கா தனராம்‌
ஆரியர் தங்களருட் கிலக்காக வருடி யென்றுன்‌
வேரி மரை புரை மென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்‌
நாரியரதனமே நல்லரங்க நகரன்னையே–
எழுபத்து நான்கு சிங்காதனாதிபதிகள்‌ –

சத்தமனெங்க ளெதிராசமாமுனி தாளடைக்த
உத்தமமா மாச்சரமிகளோ ரெழு நூற்றுவர்கள்‌
தத்தம நிட்டை தமியேற்குற நின் சரணடைந்தேன்‌
புத்தமு தொத்த வரங்க நகரன்னைப் புங்கவியே
-எழுநூறு உத்தம ஆச்சிரமிகள்

கதியார் பன்னீராயிரவரே காந்திகள் காற்‌றுணை யென்‌
விதியாறொழு கெம்மி ராமானுச முனி வேந்தனருட்‌
மதியார நின்னை மறை புகுந்தேன்‌ வையமையலற்றோர்‌
நிதியாமரங்க நகரன்னையாகு நியாமகையே
-பன்னீ ராயிராவர் ஏகாந்திகள்

எம்மையுமாட்கொளு மெம்பெருமானா ரிணையடி சேர்‌
அம்மையரோ ரெழு நூற்றுவர் நிட்டை யடியனுக்கும்‌
இம்மை வர நின்னிணை யடிக்‌கில்லடை யெய்தினனாற்‌
செம்மை யரங்க நகரன்னையாகிய தேசிகையே-
-எழு நூற்றுவர் அம்மையர்கள்

திருவரங்கத் தமுதாந் தெள்ளியன் செய்த செந் தமிழ்‌ நூல்‌
கருவரங்கத்தினங் கற்றுய்யுமாறெனைக் காத்தி யென்று
மருவரங்கத்த நின் மாணடியிற் சரண் வந்தடைந்தேன்‌
தெருவரங்கத்த வரங்க நகரன்னைச் செந்திருவே
–திருவரங்கத்தமுதனார்

கம்பார் களத்தியர் காதலிக்கும் தீக் கரும மொழிந்
தெம்பாரடிகளை யெண்ணி யுய்வானெற் கருடி யென்றுன்‌
வம்பார் வனச மலர்த் தாட் சரண வசணமுற்றேன்‌
அம்பாரரிக் கண்ண ரங்க நகரன்னை யற்புதையே-
-எம்பார்

தேக்கும் புகழெம் பராசர பட்டர் திருவடி யென்‌
வாக்கு மனமும் வழுத்தி நினைக்கும் வரம் பெற நின்‌
சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச் செக மனைத்துங்‌
காக்கு மரங்க நகரன்னையாங் கமலாலயையே-
-பராசர பட்டர்

வெண் மணிப் பிள்ளைப் பெருமாளை யங்கர்நின்‌ வேந்தன்‌ தன் பேர்‌
நண் மணித் தாசரை நண்ணி யுய்வானுள நள்ளிருடீர்‌
விண் மணியே நின் விரையார் மலர்க்கழல் வேட்டடைந்தேன்‌
ஓண் மணி மாலை யரங்க நகரன்னை யுத்தமியே
-அழகிய மணவாள தாசர்

ஆராமப் போதால லங்கலணிந் தென்னகத் திருத்திச்‌
சீ ராமப் பிள்ளையைச்‌ சிந்திக்கச் செவ்வருள்‌ செய்தி யென்றன்‌
மாராமத்தாளின் மறை புகுந்தே னன்மரபடியர்‌
நாராமப் பூவை நயக்கு மரங்க நகரன்னையே–
சீராமப் பிள்ளை

வெஞ்‌சீய மெண்ணிடு வேழத்தின் வேண்டார் வெருவ வந்த
நஞ்சீயர் நற் கழனாடொறு நாடி நயக்க வெற்கு
நெஞ்சீதி யென்று நின்னீரசத் தாட் சரணேர்ந் தடைந்தேன்‌
மஞ்சீயன் முத்‌த வரங்க நகரன்னை மாணிக்கமே-
-நஞ்சீயர்

நலந் திகழ் நாராயணச்‌ சீயர் நற் கழனண்ணி யுய்வான்‌
பொலந் திகழ் நின்னடிப் புண்டரிகத்திற் புகல் புகுந்தேன்‌
வலந் திகழ் வன்னி வளர்ப்போர் வழுத்‌து மலர் மகளே
நிலந் திகழ்ந்தோங்கு மரங்க நகரன்னை நிச்சலையே-
-நலம் திகழ் நாராயணச் சீயர்

சொல்ல வரிய சொல்லார்ந்த நம்பிள்ளை துணை யடியாற்‌
கல்ல வரிய பிறவியைக் கல்லக் கருதி வந்துன்‌
வல்ல நற்றாளின் மறை புகுந்தேன் மறை வாணர்‌ தொழும்‌
நல்ல வரங்க நகரன்னையா நளினாம்பகியே
–நம்பிள்ளை

சேணோங்கு நல்லுரச் சேனாபதி யெனுஞ் சீயரடி
கோணோங்கு மென்னுளங் கொண்டுய்ய நீ யருள் கூர்தி யென்றுன்‌
பூணோங்கு தாளிற் புகல் புகுந்தேன்‌ சிறைப் புட் கணத்தின்‌
பாணோங்கு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே-
-ஸ்ரீ சேனாபதி ஜீயர்

மாண்ட குணத்தெம் பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
பூண்ட வரன்பு புனைந்துய்ய நின் கழல் புக்கடைந்தேன்‌
தூண்டலிலாத சுடர் விளக்கேது கடீர் வளங்கள்‌
நீண்ட வரங்க நகரன்னையாகு நிரஞ்சனையே–
பெரியவாச்சான்பிள்ளை

எந்தை நம்பிள்ளை சுதனாம் ராமானுசாரியன் தாள்
சிந்தையில் வைத்து எளியேனுய்ய நீ யருள் செய்தி என்றுன்
முந்தை மறை முடித்தாளில் அடைக்கல முந்தினன் ஓர்
நிந்தையுமில்லா வரங்க நகரன்னை நித்தியையே
–இராமானுசாசாரியார்

நீடு மெய்ஞ்ஞான நெறி நின்றொழுகு நன்னிட்டைகள் கை
கூடும் வடக்குக் திருவீதிப் பிள்ளே குரை கழலே
நாடு நலம் பெற நின்னடி நண்ணினன் நான் மறையும்‌
நேடுமரங்க நகரன்னையாகு நிராமயையே-
-வடக்குத் திருவீதிப் பிள்ளை

மாவள மோங்குஞ் சிவிக்கரைப் பிள்ளை மலரடிச்‌ சீர்‌
நாவள மோங்க நவிற்றி யென் சன்மத்தின் ஞாட்பறுப்பான்‌
பூவள மோங்கிப் பொலியு நின்றாளிற் புகல் புகுந்தேன்‌
காவள மோங்கு மரங்க நகரன்னைக் கற்பகமே-
-சிவிக்கரைப்பிள்ளை

மால் வெட்டி யென்றன் மனத்தை யெப்போதும் வளர் கருணை
வேல் வெட்டிப் பிள்ளை விழுத்தாணிறுத்‌தும் விரகு பெற
நூல் வெட்டியோர் தொழு நின்றாளடைந்தன னோற்பவர்க்கு
மேல் வெட்டிக் காட்டு மரங்க நகரன்னை விண்ணவியே
–வேல் வெட்டிப் பிள்ளை

எங்கு நிறைபுகழ் ஈ புண்ணி மாதவனின்னருளாற்
றங்கு மென் சன்மந் தவிர்ப்பானினது தயை பெற நின்‌
கொங்குண் மலரடி கூடினனன்பர்கள் கூட்டுணுஞ் சீர்‌
பொங்கு மரங்க நகரன்னையாங் கடற் புத்‌திரியே
–ஈ யுண்ணி மாதவப் பெருமாள்-இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப் பிள்ளை யென்றும் திரு நாமம்‌

சுரக்குமளிப் பத்ம நாபப் பெருமாடுணை யடி யென்‌
பரக்கு மனத்திற் பதித்‌துய்ய நின்னைப் பணிந்தனன் யான்‌
கரக்குஞ் சராசரம் யாவையு மீளவுங் கண்டவற்றைப்‌
புரக்கு மரங்க நகரன்னையா மணிப் பூடணையே–
ஈ யுண்ணி பத்ம நாதப் பெருமாள் பிள்ளை

சீரார் நாலூர்ப் பிள்ளை சேவடி யேத்தி யென்‌ தீவினையின்‌
வேரார் வம் வெட்டி விரத்தி வழி நின்று வீடடைவான்‌
எரார் நின்னிண்டை யிணை யடியிற் சரணெய்‌தினனாற்‌
காரார் பொழில் சூழரங்க நகரன்னைக் கண்மணியே
–நாலூர்ப்பிள்ளை –இவருக்குக் கோலேஸர் – கோல வராகப் பெருமாள்‌,இராமானுஜ தாசர்‌ என்றும் திரு நாமம்‌

நாலூராச்சான் பிள்ளை நற் பத நண்ணி நளிர்ந்த தென்றத்‌
காலூர்தியைப் புறங் கண்டண்டர் யாவருங் காண்பரிய
மேலூர் புக நின் விழுத் தாளடைக்கல மேவினனற்‌
சேலூர்‌ திருக் கண்ண ரங்க நகரன்னைச் செந்திருவே
–நாலூராச்சான் பிள்ளை–இவர்க்கு நாலூர் தேவப் பெருமாள் பிள்ளை யென்‌றும் திரு நாமம்‌

கடுவிற் கொடி தாக்க வற்று மிரு வினைக் கட்டறுத்த
நடுவில் திருவீதிப் பிள்ளை நல் தாள் நண்ணி நான் பிறவி
வடுவிற்றொழிய நின் வண் மலர்த் தாளின் மறை புகுந்தேன்‌
அடுவிற் புருவ வரங்க நகரன்னை யம்புயையே-
-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்

பின்பழகார்ந்த பெருமாளென்‌ சீயர் பெருமை புகழ்ந்
தென் பழங்கண்ணிரித் தீறினல் விட்டின்ப மெய்த வெண்ணி
இன் பழ நேர் நின்னிணைத் தாளிலில்லடை யெய்‌தினனாற்
றென் பழனஞ் சூழரங்க நகரன்னைச் சின்மயையே
–பின்பழகிய பெருமாள் சீயர்

ஏறு திரு வுடையார் தாசர் சீர்த்தி யிசைத்திதயத்‌
தேறு திருக்கை யிரிப்பான் ௧ருணை யிழைத்தி யென்‌றுன்‌
வீறு திருப்புகழ் வேய்ந்த நின்றாண் மறை மேவினனால்‌
நாறு திருமலர்ச் சேக்கை யரங்க நகரன்னையே
–ஏறு திருவுடைய தாசர்

தாரணியோர் புகழும் வான மா மலை தாசர் பதம்‌
ஏரணி நெஞ்சத் திருத்தி யுய்வான் அருளீதீ யென்‌றுன்‌
தாரணி தாளிற் சரணடைந்தே னுயிர்‌ தங்குலக
காரணியாகு மரங்க நகரன்னைக் கற்பகமே
–வான மா மலை தாசர் –

வானேய் புகழ்க் குருகூர் தாசர் நோக்கின் வளனெனக்கு
மீனேய் நோக்கென்றெண்ணி யுய்வானருள் செயல் வேண்டு மென்‌றுன்‌
தேனேய் செழுங்கமலத் தாளடைந்தனன் சேர்ந்தவரை
ஊனேய் தனீத் தாளரங்க நகரன்னை யுத்‌துங்கையே
–திருக்குருகூர் தாசர்

ஞான வொழுக்க நயினாராச்சான் பிள்ளை நல்லடி யென்‌
ஈன வொழுக்க மற்றெண்ணி யுய நீ யிரங்கி டென்றுன்‌
மோன வொழுக்கர் தொழுந் தாளடைந்தனன் முத்தி நெறிக்‌
கான வொழுக்கர்க் கருளு மரங்க நகரன்னையே
-நயினார் ஆச்சான் பிள்ளை –

தேவாதி கேசரி நீன் கொழுநன் பெயர்ச் சீயர் புகழ்‌
ஓவாதிசைத்துய்ய நீ திருவுள்ள முவத்தி யென்றுன்‌
தேவாதியர் தொழுஞ் சேவடியிற் சரண் சேர்ந்தனன் யான்‌
ஓவாதிருக்கோகரங்க நகரன்னை யொண்மணியே
-வாதி கேசரி அழகிய மணவாள சீயர்

பக்குவ நெஞ்சப் பரகால தாசர் பதத்‌ துணை யென்‌
சக்குவக்கக் கண்டு தாவங்க ணீங்கத் தயை புரியென்‌
றிக்கு வட்டிண்டை யடியினிலில்லடை யெய்‌தினனெண்‌
டிக்குவக்குஞ்‌சீ ரரங்க நகரன்னைச் செல்வ வைப்பே
–பரகால தாசர்

தெருளார் செழு நடைச்‌ சீ ரெங்காசாரியர் சேவடி யென்‌
இருளாரிதயத் திருத்தி யுய்வானீ யிழைத்தி யென்றுன்‌
பொருளார் பூம் புண்டரிகப் பொற் பதத்திற் புகல் புகுந்தேன்‌
அருளாரரங்க நகரன்னையா மநந் தாக்‌கியையே-
-சீ ரெங்காச்சார்யார்

நல்லவரேத்து நின்னா தன்‌ றிருப் பெயர் நண்ணயினார்‌
பல்லவ பாதம் பணிந்துய்யவன் புபணித்தி யெற்கென்‌
றெல்லவர் போலொளி ரிண்டை யடிச் சரணெய்‌தினலூல்‌
வல்லவர் வாழ்‌த்து மரங்க நகரன்னை மா மணியே–
அழகிய மணவாள நயினார்

அண்ணன் முடும்பைல காரியன் கலையார் பொருளென்‌
திண்ணன்னுளத்திற் றிகழ்ததுவிப்பா யென்றுன் சேவடி யாங்
கண்ணன் மலர்களிற் கையடை புக்கனன் காந்து மணி
வண்ணன் மகிழு மரங்க நகரன்னை வானவியே-
-பிள்ளை லோகாச்சார்யார்

சாந்த குண னங்கள் கூர குலோத்தம தாதர் பத
காந்த மென்னெஞ்சக் கரும் பொற் கவரக் கணித்தி யென்றுன்‌
சேந்த கமலத் திருவடியிற் சரண் சேர்ந்தனன் செங்‌
காந்தளங்கையாய ரங்க நகரன்னைக் காஞ்சனமே-
-கூர குலோத்தம தாச நாயன்

விஞ்சிய யோகி விளாஞ்சோலைப் பிள்ளை விரை யடி யென்‌
நெஞ்சினில் வைத்‌துதித்‌ துய்யும் வண்ண நினைத்தி யென்றுன்‌
கஞ்சவடிகளிற் கையடை புக்கனன் காதரரை
அஞ்சலென்றாளு மரங்க நகரன்னையாந் திருவே-
-விளாஞ்சோலைப்பிள்ளை -இவருக்கு நலம் திகழ் நாரணன் என்னும் திருநாமமும் உண்டு –

ஊக்கத்துடன் றன் குரவனை யுன்னு முளத்து மணப்‌
பாக்கத்‌து நம்பி பதந் தொழுதுய்யப் பணித்தி யென்றுன்‌
ஆக்கக் கழலிலடைக்கலம் புக்கன னன்பர் மனத்‌
தேக்கத்தை நீக்கு மரங்க நகரன்னை யின்ப வைப்பே
–மணப்பாக்கத்து நம்பி

ஆவலறுத்தோர்க் கருளுங் குண நிதியான கொல்லி
காவல தாசர் கழறொழுதுய்யக் கணித்தி யென்றுன்‌
பூவலர் பாதம் புகல் புகுந்தேன் புன்மை போக்கு மறை
நாவலரேத்‌து நலத்தா யரங்க நகரன்னையே–
கொல்லி காவல தாசர் –

வண்மைக் கோட்டூரண்ணர் வாரிசத் தாளை வழுத்தி யென்றன்‌
தண்மைச் சனனந் தவிர்ப்பானுளத் தெண்ணித்‌ தாழ் வொன்றில்லா
உண்‌மைச் சுருதித் தலை வாழ் நின்றாளிலு வந்தடைந்தேன்‌
ஒண்மைக் கருணை யரங்க நகரன்னை யுத்தமியே–
கோட்டூர் அண்ணர்

கண்ணங்குடிப்பிள்ளை கண்ணருளாலென் கடு வினையைத்‌
திண்ணங்குடி யெவனெனும் புகுவிக்குஞ்‌ சிந்தையனாய்‌
வண்ணங்குடி கொணின் வண் பத மெய்‌தினன் மாசறுத்தோர்
எண்ணங்குடி கொளரங்க நகரன்னை யிந்திரையே
–திருக் கண்ணங்குடிப் பிள்ளை

திருப்புட் குழி யமர்‌ சீயர்‌ திருவடி சேர்ந்து பெரு
நெருப்புட்டணந்தரு நீள் பவ நீக்க நினைத்‌து நின்றன்‌
திருப் புட்கரச்‌ சேவடிச் சரண் சேர்ந்தனன்‌ சீத மதித்‌
திருப்புட்கரிணி யரங்க நகரன்னைச் செய்யவளே-
-திருப்புட் குழிச் சீயர்

திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சேவடி யென்‌
கருமலை நன் மருந்தா வெண்ணி வாழக் கணித்தி யென்றுன்‌
மருமலி தாளின் மறை புகுந்தேன் றொண்டர் மா மனத்தின்‌
பொரு மலை நீத்தாள ரங்க நகரான்னைப் பொன்‌ மகளே
–திருவாய் மொழிப் பிள்ளை

மாட்சிக் குணத்தெம் மணவாள மா முனி மணடியைப்‌
பூட்சிக்குரிய வென் புந்தியில் வைத்துப் புனிதமுறக்‌
காட்சிக்குரிய நின்காற்‌ சரண் புக்கனன் காழ்த்தவண்ட
ஆட்சிக்குரியா யரங்க நகரன்னை யச்சுதையே-
-மணவாள மா முனிகள்


உண்டிக்‌ குடைக்குழல்வேன் றொழுதுய்ய வுவக்தி யென்றுன்‌
எண்டிக்கி பங்களெனு மெண்மராரிய ரிண்‌டை யடி
தொண்டக் குலந் தொழுந் தூவடியிற் சரண்டுன்னினனால்‌
அண்டக் குலத்தாயரங்க நகரன்னை யற்புதையே
–அஷ்ட திக் கஜங்கள்

நானெறிப் பட்ட குரவர் பலரவர் நாமம் வண்‌ சீர்‌
நூ நெறி கண்டு னுவன்று நிற் சார்ந்திடு நோன்மையிலேன்‌
ஏனெறி காறுமியம்பி நினைச் சரணெய்‌து மெனை
மேனெறி யுய்த்தாளரங்க நகரன்னை மெய்ப் பொருளே
நானெறி-1-ஆஸ்ரயண குரு பரம்பரையும் -2-ரஹஸ்ய த்ரய குரு பரம்பரையும் -3-அருளிச் செயல் வியாக்யான குரு பரம்பரையும் -4-ஸ்ரீ பாஷ்ய ஸ்ருத பிரகாசிகா குரு பரம்பரையும் –

சிருட்டி முதலிது காறுமெடுத்த செனனந் தொறும்‌
மருட்டி வருமன மாதியிற் செய்தவழு வறுத்தெற்‌
நெருட்டிப் பணி கொளெளப் புகல் புக்கனன் செய்யவருட்‌
டிருட்டி வைத்தாடி யரங்க நகரன்னைச் செய்யவளே

தெருட் கடல் செய் மதித்‌ திண்மையைத் தேய்த்‌துத் தெறும வித்தை
இருட் கடல் வற்ற விழைத்தி யென்றுன்னை யிரந்தடைந்தேன்‌
அருட் கடலே யெனை யாளுதி யாரணத் தந்தமுரை
பொருட்கடலே நல்லரங்க நகரன்னைப் பூமகளே.

ஒரு காலெனப் பல காலுளத்தார்த்தி யுவட்டலினின்‌
இருகாற் கமலத்திடைச் சரண் புக்கனனேன்றெனை நின்‌
பெரு காரருட் கிலக்காக்கனினக்குப் பெருமை யதாம்‌
முருகார் குழலா யரங்க நகரன்னை முன்னவளே

ஊக்கக்தொடு நின்னுபய வடிகளினுற்றவன் பின்‌
ஓக்கக்தொடு சரண்புக்க வென்மீ துன்னுள மிரங்கிக்‌
காக்கக் கருதிடினின் பேர் கருணைக் கடலெனலாம்‌
ஆக்கத்‌ துணைவி யரங்க நகரன்னை யம்புயையே

குற்றமென நூல் குறிக்கின்ற யாவைக்குங் கொள் கலனா
யுற்ற வெளியனை யோம்புமவ ரிவ் வுலகுதனில்‌
அற்றவனாய் நின்னடி யிணை யம்புயப மண்டை கொண்டேன்‌
நற்றவர் போற்று மரங்க நகரன்னை நாயகியே-

புறவொன்று தன்பாற் புகு வேடன் றன்னைப் புரந்து துண்டவ்‌
வுற வொன்று கொண்டு நின்னொண் கழலிற் சரணுற்றடைந்தேன்‌
துறவொன்று தூயவர் நெஞ்சத் தொளிருஞ் சுடரொளியே
நறவொன்று கூந்தலரங்க நகரன்னை நாயகியே-

கண்டு முனிவரன் கட்டுரையின் படிக்கை யடை நிற்‌
கண்டு புகுந்தோனெ வனாயினு மவற் காத்தனன் றாம்‌
விண்டு கை சோர விட றீது மெய்யின்ப வீடளிக்கும்‌
விண்டுவின் பன்னி யரங்க நகரன்னை வித்தகியே-

அறத்‌திற் கடைப்பட்ட வாதனின் பாத வரணடைந்தேன்‌
அறத்திற் குறவிலனாயினு நீ யெனை யாதரித்தல்‌
அறத்தி சிறந்த வறமென நூல்களறைந்து நிற்கும்‌
அறத்திற் கருத்துணையாகு மரங்க நகரன்னையே-

பல்வழி யானும் படர் படச் சன்மப் பரவைக்கும்‌
அல்வழிகாட்‌டி யடியனைக் கூத்துகளாட்டி நிற்கும்‌
வல்வழி மாயையை மாய்ப்பானினைச் சரண்‌ வந்தடைந்தேன்‌
நல்வழி சேர்த்தி யரங்க நகரன்னை நாயகியே-

பிறவிப் பிணிக்குப் பெரும் பீரடைந் ததைப் பேர்த்திடு நின்‌
அறவிப் பிரர் தொழு மம்புயத் தாளிணை யண்டை கொண்டேன்‌
மறவிப் பிரமமொழித்‌ துனை யேத்தும் வரமருள்வாய்‌
துறவிப் பிரிய வரங்க நகரன்னைசத் தூயவளே

பிறப்பினை யெண்ண வென்னெஞ்சந் திடுக்‌கிட்‌டுப் பீரடையும்‌
இறப்பினை யெண்ண விதயம் விதிர்விதிர்த்தேங்கி நனி
விறப்பினை நண்ணு மதனானினைச் சரண் வேட்டடைந்தேன்‌
சிறப்பினை நல்கு மரங்க நகரன்னைச் செய்யவளே

பத்தி யிலாதவன் பாமரன் பாதகன் பற்று மனச்‌
சுத்தி யிலாதவன் சொல் கவிச் சொற் பொருட்டோம் பொறுத்து
முத்திவைத்தாள நின் முண்டகத்தாளின் முயன்‌றடைந்தேன்‌
நத்தி யெற்காத்தனலமா மரங்க நகரன்னையே-

போற்றி திருமுகம் போற்றி கருணை பொழி திருக்கண்‌
போற்றி புன் மூரல தரங்களங்குழை பூண்ட கன்னம்‌
போற்றி வரதாபயகர முந்தி பொலி யுரம்‌
போற்றி யரங்க நகரன்னை பொங்கொளிப் பொன்னடியே-

வாழி யரங்க மத வள மன்னதில் வாழ் முகுந்தன்‌
வாழி யரங்க நகரன்னை நாளும் வளர் கருணை
வாழி யிரு மறை யாழ்வார் களாரிய வர்க்க மென்றும்‌
வாழி யெதிபதி திப்பிய வாணை யிவ் வையகத்தே-

வைப்பா மரங்க நகரன்னை தாளில் வயங்கு சத
முப்பான் ௧வியாலடைக்கல மாலை மொழிந் தனனால்‌
ஓப்பாரிலா வைணவர் பதமுள் வைத்துவப்பவர் பாற்
பப்பார் பரிவினன் பள்ளி கொண்டா னெனும் பாவலனே-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் ஸ்வாமிகள்-

April 27, 2025

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் (அன்னமய்யா) (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) தென்னிந்திய இசையில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற வடிவத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். திருமலை திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றன.

தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் (1408-1503) ஆந்திராவில் உள்ள தாள்ளபாக்கம் கிராமத்தில் பிறந்த தெலுங்கு வைணவ ஆச்சாரியர் ஆவார். இவர் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தெலுங்கு இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். 95 ஆண்டுகள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் துவாதசி (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார். 

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாளபாக்கம் கிராமத்தில் ருக்வேத பாரத்வாஜ கோத்திரத்தில் நாராயணசூரிக்கும், லக்கமாம்பாவிற்கும் மே 9, 1408- அன்று அன்னமாசாரியர் மகனாகப் பிறந்தார். நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். இவர் தந்தை உழவுத்தொழில் செய்து வந்ததால் அன்னமையாவும் இளமையில் உழவுத்தொழில் செய்துவந்தார். “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான “திம்மக்கா” அன்னமாச்சாரியாரின் மனைவி. மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

தாளப்பாக்கம் அன்னமாசாரியரின் தந்தை இவரை அடுத்த ஊருக்குச் சென்று அங்கிருந்து வைக்கோல் கட்டைத் தூக்கிவரும்படி ஏவினார். வைக்கோல் கட்டைத் தூக்க இயலாது இவர் திருமலை திருப்பதிக்கு ஓடிவிட்டார். அங்கு பசி மேலிட்டுத் துன்புற்றபோது, திருமாலின் சதியான அலர்மேல் மங்கைத்தாயார் இவருக்குப் பசி நீங்க அன்னமளித்து ஆட்கொண்டார். அன்னையின் அருளால் கவிஞரானார். அன்னை மீது ஒரு சதகம் பாடினார். பெற்றோர்கள் இவரைத் தேடி வந்து தம் கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். வீரசைவமரபில் பிறந்த இவர் திருப்பதிக்கு ஓடியது முதல் திருமாலடியவரானார். தினமொரு பாடலாக திருமால் மீது பாடினார். இவர் பாடல்களின் அருமையைக் கேள்வியுற்று, அப்பகுதியில் ஆட்சிபுரிந்த சாளுவ நரசிம்மராயர் இவரைப் பாடுமாறு வேண்டினார். மனிதரைப் பாட மறுத்தவரை சாளுவ மன்னர் விலங்கிட்டுச் சிறையிலிட்டார். விலங்குகள் தாமே தெறித்து விழுவதைக் கண்ட மன்னர் இவரது பெருமையை உணர்ந்து பணிந்ததாக நம்பப்படுகிறது.

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் சிருங்கார சங்கீர்த்தனம், அத்யாத்மிக சங்கீர்த்தனம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இசைநூல்களை எழுதினார். சதக நூல்கள், சிருங்கார மஞ்சரி, இரண்டடி இராமாயணம், வேங்கடாசல மாகாத்மியம் போன்ற பிற தெலுங்கு நூல்களையும் இயற்றினார். அன்னமாசாரியர் பாடிய இசைப்பாடல்கள் கீர்த்தனங்களல்ல, பல்லவி அனுபல்லவி சரணம் கொண்டவையல்ல. இவை திருவேங்கடநாதன் புகழையும், நாம சங்கீர்த்தனங்களையும் பாடியவை. அன்னமாசாரியரின் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டில் சங்கீத வடிவம் பெற்றன. அவர் பாடிய இசை தமிழிசை; மொழி தெலுங்கு மொழி. இவருடைய புதல்வரும் பின்வந்தோரும் இவருடைய பாடற்பரம்பரையை வளர்த்தனர்.

இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சார யாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, ”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர்.

அன்னமாச்சாரியார் 32,000-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றினார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலிலுள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறையில் வைக்கப்பட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் 1922-ல் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. கீர்த்தனைகள் சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என வகைப்படுத்தப்பட்டன. வைணவ ஆச்சாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தைத் தழுவிய இவரின் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல்களைப் போன்ற கருத்துடையவை. ராமானுஜர் மீதும், ஆழ்வார்கள் மீதும் சில பாடல்களைப் பாடினார்.

அன்னமய மார்க்கம் : அன்னமாச்சாரியா தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப்படுகிறது. அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, “மோக்காலு_மிட்டா” என்னும் இடம் இருக்கிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு “முழங்கால் முறிச்சான்” என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை “மோகாலு மிட்டா” என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்த போது அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் ராமானுஜர் மீதும் (கதுலன்னி கிலமைனா, உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (வாடே வேங்கடேசுனனே வாடே வீரு…) சில பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதியக் கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் “ப்ரஹ்மம் ஒக்கடே” என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளைக் கண்டித்தார். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளைத் தொடர்ந்து கேட்பதினாலேயே பொருள் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டும் கீர்த்தனைகளை இயற்றினார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு. வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் எழுதினார். இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் எழுதிய திவிபர்த ராமாயணா(இரண்டடி ராமாயணம்), சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டு நூல்களும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.

அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரைவரிசை செய்தார்.

அக்காலத்தில் தெலுங்கு கன்னடப் பிரதேசங்களில் முகம்மதியப் படைகள் கொலை கொள்ளை மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தன. இவற்றால் கோயில்களுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தது. அன்னமாச்சாரியரின் பாடல்களினால் ஆந்திரநாட்டில் பக்தியுணர்வு கிளர்ந்தெழுந்தது. ஆழ்வார், நாயன்மார் பாசுரங்களினால் உந்தப்பட்டு அன்னமாச்சாரியர் பக்திப்பாடல்கள் பாடினார்.

அன்னமையா பாடியவை கர்நாடக சங்கீதத்தின் ஆதிக் கீர்த்தனங்கள் என்று பெயர் சூட்டுவது பிழை என்பது அறிஞர்கள் கருத்து. அவை கீர்த்தனங்கள் அல்ல என்று அறிந்தோர் எழுதினர்.

ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் “தலப்பாகமரா” எனப்படும் “சங்கீர்த்தன பண்டார” என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். “தலப்பாக” கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு “சங்கீர்த்தன பாதுகாப்பு அறை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. “ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை” பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார். 1922ம் ஆண்டில்தான் இவரது கவிதை மீண்டும் வெளிகொணரப்பட்டது. “சங்கீர்த்தன பண்டார” அறையில் இருந்த இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’அன்னமய்யா’ என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். இவரது பாடல்கள் பல தெலுங்கு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொண்ணூற்றி ஐந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா பிப்ரவரி 23, 1503-ல் காலமானார்.2019-ல் ஆந்திர மாநிலம், துவாரகையில் அன்னமாச்சாரியாருக்காக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு, தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும் அன்னமாச்சாரி பட்டி – தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர் – சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் ப்ரஹ்மம் ஒக்கடே என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்தவர் இவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையில், மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. திவிபர்த ராமாயணா’ ‘சிருங்கார மஞ்சரி’ ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம்வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உடையதாக இருந்தது. சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

இசைநூல்கள்

சங்கீர்த்தன லட்சணம்

தெலுங்கு நூல்கள்

வேங்கடாசல மாகாத்மியம்

12 சதக நூல்கள்

சிருங்கார மஞ்சரி

இரண்டடி இராமாயணம்

சிருங்கார சங்கீர்த்தனம்

அத்யாத்மிக சங்கீர்த்தனம்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ திவ்யார்த்த தீபிகையில் இருந்து சிறப்பு குறிப்புக்கள்-

April 27, 2025

அத்யாத்ம க்ரந்த நிர்மாணம், அந்யேஷாம் ச அவ போதநம் அர்ச்சாவதார – ஸேவாச…”என்ற ஸ்லோகத்தின் படி வாழ்ந்தவர்

நூலுக்கு வயது நூறு! காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது-அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர் எழுதிய முதல் நூல்.அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் – 1200!-எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!ஒரு மொழியில் எழுதிய புத்தகத்தை மற்றொரு மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்யவில்லை.

குவலயங் கண்ணி கொல்லி யம் பாவை‘ (பெரி.திரு.2.7:1) என்ற திருவிட எந்தை பற்றிய திருமொழிப் பாசுர அடியிலுள்ள ‘கொல்லியம் பாவை- என்பதற்குத் தீபிகையிலுள்ள குறிப்பு வருமாறு: ‘வல்வில் ஓரி’ என்றசிற்றரசனுக்கு உரியதாய்க் ‘கொல்லி’ என்னும் பெயர் கொண்டான். மலையின் கண்ணுள்ள(இது சேலம் மாவட்டம் – திருச்சி மாவட்டங்களில் (சேந்த மங்கலம் துறையூர்) அருகில் பரவி யுள்ள ‘கொல்லிமலை’ என்று கருத இடம்
தருகின்றது.) ஒரு பெண்பாற் பிரதிமையே கொல்லியம் பாவை யாகும். இது தேவ சிற்பி போல் அமைக்கப் பெற்ற அழகிற் சிறந்த பதுமை யாகும்.அம்மலை யிலுள்ள தேவரையும் மனிதரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும் போது அவர்களது வாடை பட்டவுடனே அது தானே நகை புரியுமாறு பொறி வைக்கப் பெற்ற தென்பர் இப் பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம்(சித்திர மடல்). . இப் பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவரப்படுவதாய் பெருங் காம வேட்கை
உறுவித்து இறுதியில் கொல்லும் என்று கூறுவது. இது தெய்வ நிர்மாணம் என்பர். ஒரு காலத்தில் திருமகள் தம் முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இக் கொல்லியம் பாவை உருக் கொண்டு ஆடினள் என்பதை,செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று சிலப்பதிகாரம் செப்பும். இக் கொல்லிப் பாவை கொல்லி மலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெல்லா வகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணையில் காணத் தகும்.இப் பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவக சிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப் பாவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.ஆகவே தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப் படும்.இப் பாசுரத்தில் ‘கொல்லியம்பாவை போன்றவள்’ என்று கூறாமல் ‘கொல்லியம் பாவை’ என்றே சொல்லி வைத்தது முற்றுவமை(உருவகம்). ‘தாவி வையங் கொண்ட தடந் தாமரைக்கே’ என்றது போல-

‘துளையார் மென்குழல் ஆய்ச்சியர்‘ (பெரி.திரு. 3.8:8)என்ற தொடருக்கு எவ்வாறு பொருள் எழுதுவது?குழலாகிய கூந்தலுக்குத் துளை உண்டோ? துளை பொருந்துவது புல்லாங் குழலுக்கே யாகும். ‘துளை’ என்ற அடைமொழி கூந்தலுக்கு ஏற்காது. எனவே, “துளைகள் நிரம்பிய புல்லாங் குழலைச் சொல்லக் கடவதான ‘குழல்’என்ற சொல்லால் கூறப்படுகின்ற கூந்தலை யுடையவர்களான ஆய்ச்சிகள்” என்று பொழிப்புரை வரைய வேண்டும்.இங்கே ஆழ்வார் சங்கப் பாடல்களில் வரும் அரியதோர் தமிழ் மரியாதையைப் பின்பற்றி யுள்ளார். சங்க நூல்களிலிருந்து நம் சுவாமி எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்.
(i) புல்லிலை வஞ்சிப் புரமதிலலைக்கும் பொருநை |(புறம்-387)
(ii) “நெட்டிலை வஞ்சிக்கோ” (பரிபா, 102 பரிமேலழகர் உரை மேற்கோள்)
இவ் விரண்டிகளிலும் வஞ்சி மா நகர் விவட்சிதமே யல்லாது வஞ்சி மரம் விவட்சிதம் அன்று. ஆயினும் விருட்ச விசேடப் பொருட்கு உரிய புல்லிலை, நெட்டிலை என்னும் அடைமொழிகளை அம் மரப் பெயர் அடைமொழிகளை அம்மரப் பெயர் கொண்ட வஞ்சி மா நகர்க்கு ஏற்றியுள்ளார்கள்.
( iii) ‘ஒளி திகழ் உத்தி உருக் கெழு நாகம்” (பரிபா.12)’நாகம்’ என்னும் சொல் புன்னை மரத்துக்கும் பாம்புக்கும் பெயர். பரி பாடலில் ‘நாகம்’ என்ற சொல்லை யிட்டுப் புன்னை மரத்தைப் பேசுங்கால் பாம்புக்குரிய அடைமொழியைப் புன்னைக்கு இட்டனர். இவ்வாறு தமிழில் ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழியை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு. ‘இங்ஙனே தமிழ் நூல்களிலுள்ள சம்பிரதாயம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஏறி யுள்ளதை உணர வேண்டும்’ என்பர் நம்சுவாமி.

நாச்சியார் திருமொழியில் (3:9) ‘கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து’ என்ற இடத்தில் எல்லில் இரவில் என்று சுவாமி பொருள் கூறியதை தமிழ்ப் புலவர் ஒருவர் மறுத்து எல்லி என்பது பகலையே குறிக்குமாதலால்,’அல்லில் பிழைத்து’ என்று பாடத்தையே திருத்த வேண்டும் என்றும் எழுதினார். ‘அல்லும் பகலும்’ என்ற உலக வழக்கை அவர் தம் கருத்துக்கு அரணாகக் காட்டினார். ஆனால் நம் சுவாமியோ ‘எல்லூர்ச் சேர் தரும் ஏறுடை யினத்து’ (குறுந்.275) என்ற குறுந்தொகைப் பாடலின் அடியையும் மலை படு கடாத்தில் (அடி 416)வரும் ‘எல்லினிப் புதினே’ என்ற தொடரையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய ‘இராக் காலத்தை யுடைய யாயிராய்’என்ற பொருளையும் காட்டி நாச்சியார் திரு வாக்கின் தூய்மையை நிலை நாட்டினார்.

பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றி நன் னீர்தூய் –
புரிவது வும் புகை பூவே
(திருவாய் 1.6:1)
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘பரிவதில் ஈசன்’என்பதற்கு ‘ஹேய ப்ரத்ய நீகனான ஈஸ்வரனை’ என்று பிள்ளானும் பெரிய வாச்சான் பிள்ளையும் உரைப்பர். இதனை நம்பிள்ளை விவரித்து, கல்யாண குண யோகத்தையும் சேர்த்து உரைப்பர். எம்பெருமான் எப்படிப் பட்டவன் எனில்: ‘பரிவதில் ஈசன்’ என்கிறார். அதாவது துக்கம் இல்லாதவன்;எம்பெருமானுக்குத் துக்கம் இல்லை என்று சொல்லி விட முடியாது. பிராட்டியைப் பிரிந்து பட்ட துக்கம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பிறர் படும் துன்பத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை என்ற தயை குணம் எம்பெருமான் ஒருவனுக்கே உள்ள தென்றாகையால் இந்தத் துக்கம் குற்றமன்று என்று கூறுவர் நம் சுவாமிகள். இதனால் எம்பெருமானின் தயை என்னும் கல்யாண குணம் சொல்லப்பட்டது.-திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது கண்ண பிரானின் திருநாமமே யாயினும் தான் நேரில் சென்று உதவாத துக்கத்தைக் காட்ட,கண்ணன் திருவுள்ளம் புண்பட்டுக் கதறினது அனைவரும் அறிந்ததே. மேலும் எம்பெருமான் ஆனையின் துயரம் தீர அரை குலைய தலை குலைய மடுக் கரைக்கு ஓடி வந்து உதவினான். இது பிறர்க்காகப் படும் துக்கம் என்பதும் வெள்ளிடை மலை.

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லிய செவ் விதழே (திருவாய் 8.9:6)’எம்பெருமான் திருவருளால் இத் திருப்பதியில் வளர்ந்த கமுகு ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை யொத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்’ என்கின்றாள். ‘திருவருள் கமுகு’என்பதற்கு நம் சுவாமி இன்சுவைமிக்க ஈட்டின் ஸ்ரீ சூக்தியை எடுத்துக் காட்டுவார். அச் சூக்தி : “திருவருள் கமுகு என்று சில உண்டு; அதாவது நீரால் வளருகை யன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன’ சில”. இதனை எண்ணி எண்ணி மகிழ வேண்டும். இப் பாசுரத்தால் “இந்த ஆன்மா பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டது மன்று; தனக்குத் தானே உரியதுமன்று; பகவான் ஒருவனுக்கே உரியது” என்ற கருத்தாகிய ‘அநந்யார்ஹ சேக்ஷத்துவம்‘ தெளிவாக விளங்குகின்றது.

சேதந லாபம் தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே சித்தாந்தம். எம்பெருமான் சிருஷ்டி அவதாராதி முகத்தாலே கிருஷி பண்ணுவ தெல்லாம் ‘ஒரு சேதநன் நமக்குக் கிடைப்பனா’ என்கின்ற நப்பாசை யினாலன்றோ?கீதையிலே ‘ஸ மஹாத்மா துர்லப:‘ என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகின்ற வார்த்தை யன்றோ? ‘வாஸு தேவஸ் ஸர்வம்’ என்றிருக்கின்ற மகாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே! என்றன்றோ சொல்லுகின்றான்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகின்ற தன்றோ?எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் – ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவில் –ஜநாநிநம் லப்தவா” என்கின்ற அற்புதமான ஸ்ரீஸுக்தியில் இப் பரமார்த்தம் தன்னை ஆழ்வார் சுவாநுபவ முகத்தாலே இப்பாசுரத்தில் வைத்தருள்கின்றார்-என்னில் முன்னம் பாரித்துத்தானென்னை முற்றப் பருகினான்” என்றது சத் சம்பிரதாய சுவைஞர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. ‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன்’ என்று தாம் ஆசைப் பட்டிருந்ததாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மநோரதமே வலிதென்றும் அதுதான் முற்பட்டதாயிருந்து கார்ய கரமாகின்ற தென்றும் சொல்லிற்றாயிற்று.
என் உயிருண்ட மாயன்’ (7)என்றும் ‘என்னுயிர் தானுண்டான்’ (8) என்றும் எம்பெருமான் உண்ட படியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேட்சிதமா யிருக்குமே; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப் பாசுரத்தில் “தான் என்னை முற்றப் பருகினான்” என்று. இவருடைய ‘உண்ணுஞ்சோறு பருகுநீர்’ அவன்; அவனுடைய ‘உண்ணுஞ் சோறு பருகு நீர்’இவர். இங்கு தம்மை மறந்து இப் பாசுரத்தை நம் சுவாமிகள் அநுபவித்ததைக் காண முடிகிறது.

‘என் ஆனாய்'(பெரி.திரு. 1.9:2) என்பதற்கு ‘ஆனை’ விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே என்றபடி.”தென்னானாய், வடவானாய், குட பாலானாய், குண பால மதயானாய்” என்று திருநெடுந் தாண்டகத்திலும் (10)அருளிச் செய்வர். “என்னானை, என்னப்பன், எம்பெருமான்”என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

‘என் தந்தை’ என்பது (பெரி.திரு. 1.1:6)’எந்தை’ என மருவிற்று. ‘வாழ்நாள்’ என்பது ‘வாணாள்’ என மருவிற்று. ‘கொள்ள’ என்பது ‘கொள’ எனத் தொக்கி நிற்கின்றது; வெருக்கொள – அச்சங் கொள்ள என்றாயிற்று.பாடா வருவேன் (பெரி.திரு. 4.7:5) உன்னுடன் பாடிக் கொண்டு வருகின்ற என்கை. ‘பாடா’ ‘செய்யா’ என்னும் வாய்பாட்டுடன் இறந்த கால வினையெச்சம்,

தொழுதாடித் தூ மணி, வண்ணனுக்கு ஆட் செய்த‘ (திருவாய். 4.6:11) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் அடியில் ‘ஆட் செய்த நோய் தீர்ந்து‘ என்று தொடர் அமைந்திருப்பினும் ‘உருபு பிரித்துக் கூட்டுதல்’என்ற முறைமையின் கீழ் நோய் தீர்ந்து ஆட் செய்த’ என்று பொருள் கொள்ளத் தகும். ‘ஆட் செய்த’ என்று உருபு பிரித்துக் கூட்டியதால் ‘சொல் திரிந்து பொருள் திரியா வினைக் குறை’ (நன்னூல்- 346) என்ற நன்னூல் நூற் பாவிற்கு ஏற்ப ‘செய்து’ என்பதை எச்சத் திரிபாகக் கொண்டு ‘செய்ய’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறுவர். இவ்விடத்தில் சிறந்து விளங்கும் பொருளையும் வழங்குகிறார் சுவாமிகள். அஃதாவது, ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று. ஆன்மா உள்ள வரையில் தொடருமது.ஆகையால் ‘நோய் தீர்ந்த’ என்றது மோகம் தெளிந்து சற்று உணர்த்தி உண்டானமை பற்றியதாகும். இவ்வாறு இலக்கண வழி மூலமும் பொருட் சுவையை உணர்த்துகிறது என்று சுவாமிகள் தெளிவிப்பதால் சுவாமியின் தமிழ்ப் புலமை தெற்றென விளங்கும்.

திருவாய் மொழி (6.8)தலைமகள் பறவைகளைத் தூது விடும் பதிகமாகும். இதில் 8-ஆம் பாசுரத்தில் ‘அருள் செய்து ஒரு நாள்’ (2-ஆம்அடி) என்ற பாடமே நம்பிள்ளை முதலாக ஆசாரியர்களின் காலத்தில் வழங்கி வந்தது. இப்பாடத்தில் வினை முற்று(கிரியா பதம்) இல்லை யாகிறது. குருகிடம் ‘நீ போய்ச் சொல்ல வேணும்’ என்கின்ற வேண்டுகோள் இருக்க
வேணுமே; அ ஃது இங்கு இல்லை; ஆனாலும் வருவித்துக் கொள்ளலாம் என்பது நம்பிள்ளையின் திரு வுள்ளம்.பன்னீராயிரப்படி ஆசிரியர் வாதி கேசரி ஜீயர் ‘அருள் செய் ஒரு நாள்’ என்று பாடம் காட்டுகின்றார்;” ‘அருள் செய்து’என்று பாடமான போது ‘என்று சொல்’ என்று வாக்கிய சேஷமாகக் கூடாது” என்று எழுதி யுள்ளார். ‘அருள் செய்து‘என்று வினை எச்சமான பாடமே பிரசித்தம் என்று நம் சுவாமிகள் அதனையே கொள்வார். தொடர்ந்து ஈற்றடியின் முதலிலுள்ள ‘ஏசறு’ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டி யருள்கின்றார் என்பதையும் சுட்டி யுரைத்து தம் கருத்துக்கு அரணாக்கிக் கொள்வர். ஏசறு துக்கப்படு. ‘நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு’ என்பது தாற்பரியம். இவ்வாறு விளக்குவர் நம் சுவாமிகள்..

வியாக்கியானத்தில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’என்று வருகிறது. அது பிழை என்று காட்டி விளக்கமும் தருவார் நம் சுவாமி. “சக்கர வர்த்தி என்பது தசரதனைக் குறிக்கும். அவனுடைய மகன் என்ற பொருளில் ‘சக்ரவர்த்தி திருமகன்’ என்று ஒற்று மிகாது வர வேண்டும். வேற்றுமைத் தொகை யன்றோ?” என்பர். இங்ஙனமே “பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று ஒற்று மிகாது எழுத வேண்டும்” என்பர்.

‘ப்ரஹ்ம்’ என்று எழுதுவதே நேர்மை யானது;’ப்ரம்ஹ’ என்று எழுதுவோரைக் கண்டித்தார்- ஸ்ரீ’ என்ற சொல்லும் தமிழில் பயிலாது என்றும், அதனைத்’திரு’ என்று பெயர்த்தோ அல்லது ‘சீர்’ என்று திரித்துத் தற்பவமாகவோ தான் வழங்க வேண்டும் என்பது அவர் தம் கொள்கை. ‘சீர் வசன பூடணம்’ என்ற உபதேச ரத்னமாலைப் பிரயோகத்தைக் காட்டி ‘ஸ்ரீபாஷ்யம்’ என்பதுபோன்று செய்யுளில் வழங்குவதைக் கண்டித்துள்ளார்.

கற்றறிந்த பெரியார் ஒருவர் தம் கட்டுரை யொன்றில் “முயற்சிக்கத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது”என்று எழுதி யிருந்தார். அதனைக் கண்ணுற்ற நம் சுவாமி”முயற்சி என்கின்ற சொல் உண்டே யல்லது அதன் மேல் ஒரு ப்ரத்யய மேற்றி ‘முயற்சிக்க’ என்பது பரிஹாஸ்யங்களிலும் கடையானது” என்று கண்டித்தார். மற்றொருவர்”முயற்சிக்கிறேன்” என்று எழுதிய போது ‘முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கன்பையே‘ (கண்ணி நுண்.10) என்ற மதுர கவிகளின் திரு வாக்கினை நினைவுப் படுத்தித் திருத்தினார்-சொற்றொடர்களை மிகவும் பிரித்தெழுவது தமிழின் நரம்பறியாத செயல் என்பர் நம் சுவாமி. சொற்கள் புணர்ந்து தொடருவதில் ஓசை யின்பம் சிறக்கும் என்பது ஸ்வாமியின் கருத்து. இவ் வாய்வு வுரை, வீற்று இருக்கும்,நூற்று அந்தாதி, நூற்று எட்டுத் திருப்பதிகள் போன்ற தொடர்ப் பிரிவுகளைக் கண்டு ஸ்வாமியின் திரு வுள்ளம் புண்பட்டதுண்டு.

லட்சித லட்சணை’ என்பது ஒரு மரியாதையாகத் தமிழ் நூல்களில் வரும் மரபாகும். பரிபாடலில் (3-30)கேசியை வதம் செய்த கண்ண பிரானைக் குறிப்பாக ‘கூந்தல் எரி சினம் கொன்றோய்’ என்று வருகிறது. இங்குப் பரிமேலழகர் “கேசி – குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன். இப் பெயர் கேசம் என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றிக் கூந்தல் என்றார்” என்று விளக்குகின்றார்.-முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும் ‘கூந்தல் வாய் கீண்டானை‘(இரண். திருவந். 93) என்று பிரயோகித்துள்ளார். தீபிகை யுரையில் ஸ்வாமியின் குறிப்பு : “தலை மயிர்க்கு வாசகமான கூந்தல் என்னும் சொல்லாட்சி லட்சணை என்னும் வழியில் கேசி என்பவனைக் குறிக்கும். எங்ஙனமே என்னில்; கூந்தல் என்பதற்கு வடமொழிப் பெயர் ‘கேசம்’ என்பதாகும்.அச் சொல் கேசியை நினைப்பூட்டும்” என்பதாகும்.
திருமங்கை மன்னனும், தம் திருமொழியில்,-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள (10.9:1) என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருட் கண் வந்த பூதனை புள்ளுருவாகி வர வில்லை. அவள் பேய்ச்சியாக வந்தாள்-இங்கு ஸ்வாமி தம் தீபிகை உரையில் “மேலே சஞ்சரித்துக் குழந்தைகளை அனுங்கப் பண்ணும் சில பறவைகள் உண்டு; அப்படிப் பட்டவளாய் வந்தாள் என்று இவளது கொடுமையைக் குறிப்பிட்டவாறு” என்று வரைந்த உரை குறிப்பதாகும். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்வாறே உரைப்பார்.

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை‘ என்ற தொடருக்கு லட்சித லட்சணை வழியில் அரிய விளக்கம் அளித்தார். ‘புள்’ என்பது அலகை (=கேடு)உடையது அன்றோ! ஆதலால் அலகை ( பேய் மகள் நள்ளிருள் வந்த பூதனை என்று தேறுகின்றது. வடமொழி தமிழ்மொழி இலக்கண மரியாதைகள் எல்லாம் ஸ்வாமிக்கு நன்கு வசப்பட்டிருந்தது

தமிழ் நெறியை அறியாதார் சிலர் “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்’ (பெரியாழ். திரு . 4.9:3) என்ற விஷ்ணு சித்தன் திரு வாக்கில் உள்ள ‘போலும்’ என்பதை ஐயப் பொருளாக்கி அவப் பொருள் கண்டனர். ‘ஆங்கவுரையசை’ ‘ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்’ (தொல்.சொல். 277, 278) என்ற நூற் பாக்களைக் கொண்டு’போலும்’ என்பதை அசை நிலையாகக் கொள்வதே தமிழ் மரியாதைக்குச் சேரும் என்பது ஸ்வாமியின் முடிபாகும்.

இருந் தமிழ் நூற் புலவன்‘(பெரி.திரு.1.8:10) என்று சிங்கவேள் குன்றத் திருமொழியில் குறிப்பிடுவர். இவர் தம் ஆறு பிரபந்தங்களும் மாறன் அருளிய மா மறைக்கு ஆறு அங்கங்கள் என்று வகுத்துக் கூறுங்கால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ‘இருந்தமிழ் நூற் புலவர் பனுவல் ஆறும்‘ என்று குறிப்பிடுவர். அதனால் ‘இருந் தமிழ்’ என்று கலியனால் கருதப் பெற்றது நம்மாழ்வாருடைய நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகும் என்பது தெளிவு.

பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ் வாயன் என்கோ?
அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங் கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்வன் எங்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே!(
திருவாய். 3.3:3)
ஆழ்வார் பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக் கருதுபவர்கள்’அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை எடுப்போமா?”என்று அலமந்து கிடப்பது போல், அத்தைச் சொல்லுவேனா?இத்தைச் சொல்லுவேனா? என்று அலமந்து, எங்கும் எல்லா வகைப் பொருள்களுமாயும் தோன்றுகின்ற அப் பெருமானுக்கு வாசிகமாகக் கைங்கரியம் செய்ய நினைத்து ‘சகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம் பெருமானுடைய தன்மையை யான் என்ன வென்று சொல்லுவேன்?’ என்று நிர்வேதத்துடனே அவனது சர்வாத்மத்தைப் பேசுகின்றார் இத் திருவாய் மொழியில். அதில் மூன்றாவது பாசுரம் இது : இதற்குச் சுவாமியின் அநுபவ உரை இது :“ஆழ்வார் தம்மைக் கடாட்சித்து தம்மோடு முதலுறவு)பண்ணின திருக் கண்களின் அழகில் ஈடுபட்டு முதலில்’பங்கயக் கண்ணன்’ என்றார். அந்தக் கண்ணோக்குக்குத் தப்பினாலும் தப்ப வொண்ணாத புன் முறுவலை யுடைய வாயழகில் ஈடுபட்டுப் ‘பவளச் செவ் வாயன்’ என்றார். அந்த நோக்கத்திலும் புன் சிரிப்பிலும் ஈடுபட்டுத் தோற்று விழும் நிலமாகிய திருவடிகளில் ஈடுபட்டு ‘அங் கதிர் அடியன்’என்றார். அத் திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகில் ஈடுபட்டு ‘அஞ்சன வண்ணன்’ என்றார்.அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகை யுடையவன் ஈடும் எடுப்பும் இல்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியழகில் ஈடுபட்டுச் “செங்கதிர் முடியன்” என்றார்.திருமுடியினால் விளங்குகின்ற ஸ்வாமித்துவத்தைக் கண்டு’இப் பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது!’ என்று கருதி பின் வாங்காதபடி எப்போதும் அப் பெருமானின் திரு மார்பில் ‘அகலகில்லேன் இறையும்’ என்று இருந்து புருஷகாரம் செய்யும் தாயான பிராட்டியின் சம்பந்தத்தைக் கருதித் ‘திரு மறு மார்பன்’ என்றார் பெருமாளும் பிராட்டியுமான இச் சேர்த்திக்கு என்ன தீங்கு வருகின்றதோ என்று பொங்கும் பரிவினால் பாப சங்கை கொள்ளுகின்ற அடியார்களுடைய அச்சத்தைத் தவிர்ப்பனவான திவ்வியாயுதங்களைக் கருதி ‘சங்கு சக்கரன்’ என்றார்.” சாதி மாணிக்கத்தை) போலி யன்றிக்கே ஆதரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே நிர்த் தோஷமாய்(குற்றமில்லாததாய்) ஸ்வத சித்தமான வடிவழகுடையவனை”என்பது ஈடு முப்பத்தாறாயிரம். மறு – ஸ்ரீவத்ஸம் என்கின்ற மயிர்ச் சுழி.-உரையை ஊன்றிப் படிக்குங்கால் ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நம் ஸ்வாமி அநுபவித்ததை அறிகின்றோம்.உரை நம்மையும் மறந்து இறையபவத்தில் ஆழ்ந்து விடச் செய்கின்றது.

1- யானையை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப் பார்ப்பது போல் பரமானந்தத்தைத் தரும்; எம் பெருமானும் “அப் பொழுதைக் கப்பொழுது என் ஆரா அமுதமே” (திருவாய்2.5:4) என்று இனிப்பான்.
2-யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3-யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனும் கயிற்றினால்”(திருச்சந்த. 83) என்ற படி எம்பெருமானைக் கட்டுப் படுத்தும் பக்தி யாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள்வான். “மதி நலம் அருளினவன்” (திருவாய். 1.1:1)
4-யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமான் சுத்த பவித்திரனாய் சுத்த சத்துவ மயனாய் இருக்கச் செய்தேயும்”பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்”(திருவிருத்.1) உடைய நம் போலியருடன் சேரத் திருவுள்ளமா யிருப்பன், வாத்சல்யத்தாலே.
5-யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டு பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.
6-யானை பாகனுடைய அநுமதி யின்றித் தன் பக்கம் வருகின்றவர்களைத் தள்ளி விடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” (திருவாய். 4.6 8) என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீ கரித்தருளான்.
7-யானையின் மொழியைப் பாகனே அறிவான்;எம்பெருமானின் மொழி திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்?
8-யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல்,திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு;எம்பெருமானும், “கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா நீ கிடக்க வேண்டா…! உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த. 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லா வகையிலும் அடியன்.
9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்.எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோ மன்றோ?
10-யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்”அலம் புரி நெடுந் நடக்கை ஆயன்” (பெரி. திரு. 1.6:2)அன்றோ? “நீண்டவத்தைக் கரு முகிலை” (பெரி.திரு. 2.5:2)
11-யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?
12-யானைக்கு ஒரு கையே உள்ளது; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கை யொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ண முடையவன்” (அர்த்தி தார்த்த பரிதாந தீட்சிதம்)
13-பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான்.

1-நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமானும் சாதி முதலிய வற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்க்காகத் தூது எழுந்தருளும் போது ‘ஞானத்தால் சிறந்தோம்’என்றிருக்கும் வீடுமரையும் துரோணரையும், ‘செல்வத்தால்’சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொருளாக மதியாமல் இவை யெல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதி யிருந்த விதுரருடைய திருமாளிகையிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான். ஆகவே பள்ளத்தை யோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.
2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பியதை வோறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ்வேறு விருப்பத்தை யுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அது போலவே எம்பெருமானையும்..
3-நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம்பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறி யாயிருக்கும் “நீரிலே நெருப்புக் கிளறு மாப் போலே குளிர்ந்த திரு வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்” என்ற முமுட்சுப்படி திவ்விய ஸூக்தி காண்க.
4-நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். “தரு துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை” என்றார் குலசேகரப் பெருமாள்.
5-நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தா யிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே;ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்தாலே ஓலை கட்டித் தூது நடந்தான்.
6-நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயு மிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம்,உபேயத்துவம் என்ற இரு தன்மைகள் உண்டல்லவா?எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக் கொள்வாரும் உள்ளமை காண்க.
7-அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய் கனி கிழங்கு வேர் பலா முதலியவற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதி யொன்றையும் சகிக்க மாட்டாது நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாநுசந்தத்தாலும் போது போக்குதல் அரிது.”ஒருநாள் காண வாராயே” “அடியேன் தொழ வந்தருளே”என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்.
8-சோறு உண்ணும் போது நீர் இல்லாமல் முடியாது;அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே; உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்;எம்பெருமான் இவற்றை விரும்பாதவன், “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்.”
9-கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பி யிருக்கும் எம்பெருமானும் “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் வள்ளல்” கொள்வார் குறையே யத்தனை ஐஸ்வரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதும் என்பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமே யாகும்.
10- நீர் ஐவகைப் பட்டிருப்பது போல எம் பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன். எங்ஙனே என்னில் (i) பூமிக்குள்ளே பொதிந்து கிடக்கும் நீர்; (ii) ஆவரண நீர்; (iii) பாற்கடல் நீர்;(iv) பெருக் காற்று நீர்; (v) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி,அர்ச்சை என எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பான்.
11-நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும்.இடத்துக்குத் தக்கதாய்க் கொள்ளத் தக்கதாயும் விடத் தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்மியான எம்பெருமான் விடத் தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் விடத்தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.
12-நீர் தோண்டத் தோண்டச் சுரக்கும்;’கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில் தந்திடும்”
13-நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தனவாயும் அவனை அடைத்தவர்க்காகவே இருக்கும்.
14-நீர் தானாகப் பெய்ய வேண்டுமே யன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாது; எம்பெருமான் இயல்பும் அப்படியே.
15-நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன் படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத் தக்கவனாகின்றான்.
16- வசிட்ட சண்டாள வேறு பாடின்றியே அனைவரும் ஒரு துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம்பெருமானும் ‘நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத் தானே” என்றும், “கானமும் வானரமும் வேடும் உண்ட வேங்கடம்” என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்னும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன்.
17- நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள் புகுந்து விடும்; எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும்.’திருமாலிருஞ்சோலை மலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
18- தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்.
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது,படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமந் தன்னால்,மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதூர வாங்கி”விழுங்குவார்கள் எம்பெருமானையும்.
20-நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணா நின்றோம். “நேரே, கடிக் கமலத்துள்ளிருந்தும் காணகிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அவன்” “மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாயிடை முத்தும் தருதலும், உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ளம் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ் வுரையும்,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்பன அடைவே பிரமாணம்.பகவத் குணங்களில் சிறு மா மனிசர் அமிழ்தலும், “ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கமையில் நிற்றலும் கொள்க.
21-நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத்தல் போதும் என்பன்; “கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால், வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே”

1-பெய்ய வேண்டும் இடமளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் “வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து என்று ஆங்காங்குச் சென்று அநுக்கிரகிப்பன்.
2-மின்னலுள்ள காலம் நீர் நிரம்பி யிருக்கும் மேகம்;எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடி யிருக்கும் காலத்தில்
கிருபா ரசம் மிஞ்சி யிருக்கும். “இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது; அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்” என்ற முமுட்சுப்படியின் திவ்விய ஸூக்தியும் காண்க.
(3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்; தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான்.வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தரும ஸூஷ்மங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.
(4) பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும் மேகம்;நெஞ்சுலர்ந்து பேசினான்றோ எம்பெருமானும், திரௌபதிக்கு ஆபத்திலே அருகே யிருந்து உதவப் பெறாத குறைக்காக-
5- இன்ன காலத்திலே மேகம் பெய்யு மென்று அறுதி யிட வல்லார் எவரும் இலர். பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யா தொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே; “வந்தாய் போல வாராதாய்! வாராதாய் போல் வருவானே”திரௌபதிக்கு ஆபத்திலே வந்து முகங் காட்டா தொழிந்தான்;விரும்புதலை எதிர்பாராமல் “தாவி யன்றுலகமெல்லாம் தலை விளாக் கொண்டான்”
6-‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்” என்று வளைப்பிட வொண்ணாதது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே””பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழித் தவஞ் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருள வந்தவனிறே”
7- ஜல ஸ்தல விபாக மின்றியே பெய்யும் மேகம்.வேடன், வேடுவச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி,இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிண விருந்து வேண்டடிசிலிட்டவர், அவர் மகன், அவன் தம்பி ஆனை அரவம், மறையாளன் பெற்ற மைந்தன்” ல் என்னும் படியிறே பகவத விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.
வேடன் -குகன்;வேடுவிச்சி – சபரி; பட்சி சடாயு; குரங்கு – சுக்கிரீவன், சராசரம் அயோத்தியில் வாழும் சராசரம்; இடைச்சி சித்தயந்தி; இடையர் -ததிபாண்டன்; தயிர்த் தாழி – ததி பாண்டனுடைய தாழி; கூனி -கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்-கண்ணன் காலத்து, பக்தர்; பிணவிருந்து இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர் பக்த விலோசன ரிஷிபத்தினிகள்; அவன் மகன் – பிரகலாதன்; அவன் தம்பி -வீடணன்;ஆனை கஜேந்திராழ்வான்; அரவம் -சுமுகன்; மறையாளன்-
கோவிந்த சாமி; பெற்ற மைந்தன் -மார்க்கண்டேயன் ஆகிய பதினெண்மர்.
8-மேகம் சரத் காலத்தில் பெரு முழக்க மிட்டுப்போய் விடும், மழை பெய்யாது; பெய்யுங் காலத்தில்ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனேயிறே.
9-விராட பர்வ காலஷேபத்துக்கு வரும் மேகம்;பகவத் விஷய காலஷேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான். ஸ்ரீ சைலேஸ தயா பாத்ர (தனியன்) என்று வந்தானிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே.
10-சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்;அடியார்க்கு இன்ப மாரியாகிய (திருவாய் 4.5:10) கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே.
(11) “விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்கள்”’+ இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்;எம்பெருமான் றானும் “இன்னார் தூதன் என நின்றான்”(பெரி.திரு. 2.2:3); கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான். தூதனாய் மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 11.5:7)
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்;எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. “கஞ்சன் நாள் கவர் கருமுகில்; எந்தாய்”
“தாயர் மகிழ ஒன்னார் தளர”# இத்யாதி.
13-“எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று அநந்ய கதிகளால் எதிர்ப்பார்க்கப் படுகை ஒக்குமிறே.
(14) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கும் துப்பாய தூஉம் மழை’ (குறள். 12) என்கின்றபடியேஅன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயுமிருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப் படுபவனாயுமிறே எம்பெருமான் இருப்பது.
15-எத்தனை கண்ண நீர் விழ விட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளா கிடக்கும் மேகம்; பரதாழ்வான் பலருடனே சித்திர கூடத்தருகே போந்து கண்ண நீரை விழ விட்டு வேண்டின விடத்தும் தம் மனோ ரதம் பெறாமலே மீண்டானிறே’

1-இரத்தினத்தைச் சொந்தமாகவும் அனுபவிக்கலாம்;விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம்.அப்படியே எம்பெருமானைப் புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்;அவனை உபாயமாக்கி ஐஸ்வர்ய கைவல்யாதிகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்.
2-இரத்தினத்தின் மதிப்பை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன்; மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன்; உத்தம அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலணிந்து அநுபவித்து மகிழ்வான். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐஸ்வரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோஷ உபாயமாகக் கொண்டு மோஷ புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை’எனக்குத் தேனே, பாலே, கன்னலே அமுதே’ என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.
3-இரத்தினத்தை இழந்தவன் கதறி யழுவான்.எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. இராம ரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறி யழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்”: ‘இன்பத்தை இழந்தபாவியேன் என தாவி நில்லாதே” “உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன் தொழுவன் ‘ என்றிப்படி யெல்லாமாக கதறி யழுவார்கள்.
4-இரத்தின முடையவன் மார்பு நெறிப்பன்.எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே” “மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே””எனக் கென்னினி வேண்டுவதே “இல்லை யெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்கள்.
5-இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே.
6-இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து. “
7-இரத்தினத்திற்குச் சிலசில ஆதாரங்களில்(ஆஸ்ரயங்களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே. ஆழ்வார்கள் திரு வாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்.
8-இரத்தினம் ஒளியை விட்டு இராது; எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்.
9-இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை; எம்பெருமானுக்கும் பிராட்டியால் ஏற்றம்.
10-இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும்,இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.
11-இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.
12-இரத்தினம் எவ்வளவு உயர்ந்த தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும். எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து (அர்ச்சையில் சௌலப்பியத்தைக் காட்டுகின்றவனன்றோ?
13-இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார்; எந்த
வேளையில் யார் கொள்ளை கொள்வாரோ என்று துஞ்சாதிருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை;கண்ட பின்பும் இல்லை.

நிதியையும் வைத்த மாநிதியையும் ஒப்பு நோக்கி நம் ஸ்வாமிகள் அநுபவித்தவை: ஸ்வாமிகளின் சிந்தனை யோட்டம்.
1-புதைத்து வைக்கப் பெறும் பொருள் ‘நிதி’எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப் பெறுபவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;எம்பெருமானாகிய நிதி வைத்த மா நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.
(2) நிதியானது தன்னை யடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வாரோ என்ற அச்சத்தால் துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” . காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை;கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை.நிதியானது ‘சித்தாஞ்சனம்’ அணிந்த சில பாக்கியவான்களுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே கிடைப்பன்-
3-நிதி யுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் ‘எனக்கு ஆரும் நிகரில்லையே ‘மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே” ‘இல்லை யெனக்கெதிரில்லை யெனக், கெதிரில்லை யெனக் கெதிரே என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்துள்ளவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர்.
4-நிதியை இழந்தவன் கதறி யழுவன். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. ஸ்ரீ ராமனாகிய வைத்தமா நிதியைஇழந்த பரதாழ்வான் சபையில் கதறி யழுதானன்றோ?“பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” “இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே “எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே” * “உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்”” “என சொல்லிப் புலம்புவனே”” என்று இப்படி யெல்லாம் கதறி யழுவார்கள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லா சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறி யழக் கூடுமோ அப்படிக் கதறி யழ வேண்டும் என்பர்.

ஐதிகங்கள்
அம்மங்கி அம்மாள் என்ற ஓர் ஆசிரியர் நோயால் வருந்தி யிருக்க, நஞ்சீயரும்?நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப் படுவதைக் கண்டு நஞ்சியர் ‘ஸ்வாமின்! தேவரீர் சாமானிய மனிதரன்றே;எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கின்றீர்; குணாநுபவத் தாலல்லது போது போக்கி அறியீர்; இப்படி யிருக்க உம்மை மற்றவர்களைப் போல இப்படிக் கஷ்டப்படுத்துகிறானே (இறைவன்) என்றாராம்.அதற்கு அவர் “நீயாள, வளையாள மாட்டோமே” என்றானன்றறோ கலியன் பாசுரம். எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால்)கிலேசப்பட்டு தானே ஆக வேண்டும்” என்றாராம். பிறகு வெளியே எழுந்தருளிய பின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி ‘பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பெரி. திரு. 3.6:9 உரை -புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ் வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்)

2- ‘குடதிசை முடியை வைத்து’ (திருமாலை19) என்ற பாசுர உரையில் காணப் பெறுவது. “மேலைத் திக்கு உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிடேகத்தை யுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத் திக்கு – சகல லோகமும்,உய்விக்கும்படி சரணமடையக் கூடிய தன் திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு – முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத் திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகை யெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத் திக்கு – தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது இரு கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற் கொள்கை.

3- ‘அமலனாதி பிரான்’ (1) – இதன் உரையில் : பிள்ளை திருநறையூர் அரையரைச் சிலர்”பெரிய பெருமாளை அநுபவிக்க இருந்த இந்த ஆழ்வார்(திருப்பாணாழ்வார்) திருவேங்கடமுடையான் பக்கம் போவானேன்?” என்று கேட்க, “ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையில் ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப் போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையில் கால் தாழ்ந்தார்” என்றாராம். “ஒருவனைக் கவி பாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்;பரம பதத்தில் நின்றும், வட மதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப் போலே வைகுண்டத்தில் நின்றும் திருமலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது;அவ் வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்.

4-‘கொண்டல் வண்ணனை‘ (அமலனாதி10) என்பதன் உரையில் வருவது. கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹு ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற் போல,இவரும் (திருப்பாணாழ்வார்) பண்டு வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் திருப் பவளத்திலே கமழா நிற்பதாகக் கருதி அநுபவிக்கிறார் ‘வெண்ணெய் உண்ட வாயன்’ என்று தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐஸ்வர்யத்தைப் புசிக்கைக்கு ‘எனக்கு ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெருமாளைப் (இராமனைப்) பெற்றதைப் போல நந்தகோபரும் “கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்” என்றபடியே திருவாய்ப்பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு அடங்கலும் (கவ்ய ஸம்ருத்தி அடங்கலும்) பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம்.

5- ‘அருள் கொண்டாடும்‘ (கண்ணி நுண்-8) என்பதன் உரையில் வருவது. திருவாய் மொழியில்“எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி” (10.7:3) என்றவிடத்து அருள் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அநுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர்களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம்.எண்ணாத வற்றை எண்ணுகையாவது என்? எனில்:திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு பல பெரியோர் அவை கூடி “எம்பெருமானுடைய ஸ்வரூப குண விக்கிரக விபூதிகளை யெலாம் முற்றும் நிறைவாகப் பேச வல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம்ஒன்று அவதரிக்க வேணுமென்று நாம் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்” என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி ‘எம் பெருமானுக்கு இன்னமும் குண விக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்’என்றார்களாம். உள்ள குண விக்கிரக விபூதிகளை யெல்லாம் திருவாய்மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார் என்பது இதன் கருத்து.

5- ‘முற்ற முத்துக் கோல் துணையா’ (பெரி.திரு. 1.3:1) என்ற தொடரில் ‘கோல் துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் இரு ஐதிகங்கள்-
நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற் கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது ‘ஓ திரி தண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற பொருளை யுடைய மந்திரத்தை (ஸகர மா கோபாய ) உச்சரிக்க வேண்டும்என்று கேட்டு “எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலை யுடையவரையும் உள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டி யிருக்க, அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ஙனம் சொல்லும்படியாக நேர்ந்ததே” என்று சாதித்தாராம். சாத்திர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு; கிழத் தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்றலற்றமையினாலேஇங்கு.
இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கிற நாளிலே ஒரு கைசிக துவாதசி யன்று பட்டர் பிரம்ம ரதத்தில் எழுந்தருளித் திருவீதி அலங்கரிக்கப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, ‘உத்தமாஸ்ரமியாய் திரி தண்ட தாரியான உமக்கு இக் காரியம் தகாது’ என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர் “எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்” என்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்டஇந்த முக் கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகின்றதோ?இக் கோல் எனக்குத் துணை யல்லவோ? ஸ்வரூப ரட்சணத்துக்கு இக் கோல் இடையூராயின் இஃது எனக்கு வேண்டா” என்று சொல்லித் திரி தண்டத்தை விட்டெறியப் போனாராம்.அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம்.

6- ‘ஓதலும் உன் பேரன்றி மற்றோ தாள்'(பெரி.திரு. 2.7:5) இந்தப் பாசுரத்தின் (இது தாய்ப் பாசுரம்)இக் காட்டிய அடிக்கு ஓர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஓர் ஆய மங்கை இடைவிடாது கண்ண பிரானையே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந்திருந்தாள்; அது கண்ட அவன் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றி விடக் கருதி, தயிர் பால் நெய் முதலியவற்றை அவளிடம் கொடுத்து ‘இவற்றை விற்று வா’ என்று சொல்லி யனுப்பினான். அம் மங்கை கண்ண பிரானை யன்றி வேறொன்றையும் அறியாதவளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு, தெரு வழியே நடந்து செல்லும்போது, ‘தயிர்! பால்! நெய்!’ என்று விற்பது தவிர்த்து “கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று இங்ஙனே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அது போலவே இப் பரகால நாயகியும் ‘ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள்.

7-‘வாத மா மகன் ‘ (பெரி.திரு. 5.8:2) என்ற திருமொழிப் பாசுரத்தின் ‘கோதில் வாய்மையி னாயொடும்உடனே உண்பன் நான்’ என்ற அடிக்கு ஓர் ஐதிகம்.முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையில் உள்ளது போலவே இடை நரம்பு இல்லாமல் இருந்ததென்றும், இப்பொழுது இராமன் அநுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன்உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினானாக, அது முதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர்.இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாஸிஷ்ட இராமாயணத்தில்உள்ளது என்பர்.

8- ‘பண்டை நாளாலே‘ (திருவாய். 9.2:1) என்ற திருவாய்மொழியின் உரையில் இரண்டு ஐதிகங்கள் -கோயில் சீய்த்து (இரண்டாம் அடியில் உள்ளஇதற்கு) ஐதிகம். திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. “கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினைக் களையலாமே‘ (திருவாய்10.2:7) என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல்,,மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே’கோயில் சீய்க்கை’ என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக் கண்ணமங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்றுஉள்ளது. அஃது இது : திருங்கண்ணமங்கை யாண்டான் திருக்கண்ணமங்கை என்னும் திவ்விய தேசத்திலே ஒருமகில மரத்தடியிலிருந்து சருகைத் திரு அலகிடா நிற்க, கூட வாசித்து நாத்திகராயிருப்பான் ஒருவன் ‘பகவான் உபாயம்,நாம் வேறு பயன் கருதாதவர்கள், இப்போது செய்யும் பணிக்குப் பயன் என்ன?’ என்றானாம். அப்போது திருக்கண்ண மங்கையாண்டான் திருஅலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத்தையும் காட்டி,’இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே;இங்கொரு பலம் இல்லை என்று தோற்றி யிருந்ததோ? என்று பணித்தாராம். இங்கு அறியவேண்டுவதாவது; நேரில் காணும் பயன் என்றும் நேரில் காணாப் பயன் என்றும் இருவகைப்படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு பயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை. இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவலகிடாத இடம் கண் கொண்டு காண வொண்ணாததாயும், திருவலகிட்ட இடம் கண்ணால் காண இனிதாயிருப்பதுவும் பயன் காட்டப் பெறுகின்றன.

9-மேற்கட்ட பாசுரத்தின் மூன்றாவதுஅடியில் ‘தாமரைக் கண்களால் நோக்காய்‘ என்ற அடியின் பகுதியின் உரையில் கண்ட ஐதிகம் வார்த்தையிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத்தில்) பிள்ளை தேவ பெருமாள் அரையர் இப் பாசுரத்தைச் சேவிக்கையில் ‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் ‘நோக்காய்,நோக்காய், நோக்காய்….’ என்று பலகாலும் சொல்லிக் கொண்டிருந்து மேலடியிலே போக மாட்டாதே நின்றாராம்.அப்போது கோஷ்டியிலே வீற்றிருந்த அவரது
திருத் தந்தையாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து “பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ஙனம் பலகாலும் சொல்லி
நிர்ப்பந்திக்கலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும், செல்வத்தையும் தந்தருளி யிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைந்து இன்னமும், ‘நோக்காய் நோக்காய் … என்றால் ‘இஃது என்னே!மேலே பாடு’ என்றாராம்.

10- ‘கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன’ (திருவாய் 10.12:1) என்ற பாசுரத்தின் ‘கொடு வினை செய்யும் கூற்றின்’ என்ற அடியின் பொருளுரைக்கும் போது வருவது:யமனுடைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டா என்னுமதற்கு ஐதிகம் காட்டுகிறார் ஈட்டாசிரியர். ஒரு திரு வேட்டையிலே பட்டர் திரு வூற்றங்கரையிலே பேரோலக்கமாக இருக்க, ‘மாலைப் பொழுது ஆயிற்று’ என்று சிலர் விண்ணப்பம் செய்ய, “நாம் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒரு நாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழ்கின்றோம் என்றால் இது குற்றமாக எமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கொடு வரா நின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான்.ஒருவன் பெயரை வாசித்தால் ‘ஓம் காண்! அது கிடக்க;மேலே செல்’ என்றால், பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண்; இந்த விஷயத்திலே’உனக்காகிக் தொண்டு பட்ட, நல்லேனை வினைகள் நலியாமை நம்பு தம்பி” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்குக்காகத் தொண்டுபட்டுப் போது போக்குபவர்களை வினைகள் நலியுமோ?’ என்று அருளிச் செய்தாராம்.

11-‘புண்ணியம் செய்து நல்ல‘ (திருவாய்10.2:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘எந்தை நாமம்‘என்பதிலுள்ள ஐதிகம். இடறினவன் ‘அம்மே’ என்னுமாறு போல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. நஞ்சீயர், “திருநாமம் சொல்லும் போது பக்தி யுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?”என்று பட்டரைக் கேட்க, ‘கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறு ஓர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தர மாட்டாதோ?’ என்று அருளிச் செய்தாராம். திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.

12- ‘கடு வினை களையலாகும்‘ (திருவாய்.10.2:8). என்ற பாசுரத்தில் ‘படமுடை அரவில்… சொன்னோம்’(3-4 அடிகள்) என்ற அடிகளில் அநுசந்திக்கும் ஐதிகம்.ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி ‘யோக ரகஸ்யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!’ என்று சாதித்திருந்த படியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று ‘அடியேனுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போக விட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.அரையர் கோட்டியிலே சேர்ந்த அவர் சேவிக்கும் திருப்பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அரையர்’கடுவினை களையலாகும்’ என்கின்ற இந்தப் பாசுர
அளவிலே வரும் போது, எழிலணி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக் கறியச் சொன்னோம் என்ற அடிகளைச் சேவிக்கும் போது, ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க,,ஆளவந்தாரும் இதைக் கேட்டு ‘ஆழ்வாருடைய தமர்களிலே தாம் சேர வேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப்தம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போதே ஸ்ரீபாதத்தை உடையாரைக் கொண்டு நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார்.° இந்த நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித்தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்த அந்நாளே அவர்குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலைந்து ‘ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்க விமானம் பெற்றிலோமே’ என்று சோகித்து எழுந்தருளி யிருந்தார்.

இங்கே ஈட்டு ஸ்ரீசூக்தி : “திருவத்யயனம் பாடா நிற்க இதைக் கேட்டருளி ஆளவந்தார் ‘நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தம் உண்டாக வேணும்’ என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு (அனந்தபுரத்துக்கு) எழுந்தருளினார்”

13- “வானேற வழி தந்த வாட்டற்றான் பணி வகையே” (திருவாய். 10.6:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் ‘நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே (இறுதி அடி) என்பதற்கு ஐதிகம். பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால் வாங்கிப் போகப் பாராதே காண்! பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளி வரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தைப்) புரிந்து புரிந்து பார்த்துச் சிரி; ‘உன்னை அடி யறுத்தோமே'(உன்னை வென்றோமோ) என்று பார்த்துச் சிரி” என்கின்றார்.பின்பழகிய மணவாளப் பெருமாள் அரையர் ஒரு நோயால் வருந்தா நிற்க திருவரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளைக் கைவிட்டருளின அளவிலே,’நானேறப் பெறுகின்றேன். நரகத்தை நகு நெஞ்சே’ என்று இப்பாசுரத்தைச் சொல்லிக் கிரந்தியை (கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம்.‘நரகத்தை நகு’ என்ற இவ்விடத்திற்கு’நரக லோகத்தைப் பார்த்துச் சிரி’ என்று சிலர் பொருள் கூறுவர். அது வேண்டா; சம்சாரத்திற்கு ‘நரகம்’ என்ற பெயராதலால் ‘சம்சார பூமி’ என்ற பொருளே ஈண்டுக் கொள்ளத் தகும்.

இதிகாசங்கள்
‘தேனுகன் ஆவி போயுக
(பெரி.திரு. 9.8:7) என்ற திருமொழியில் உள்ளது. கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக்குள்ளே கண்ண பிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாகப் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப் பழங்களை விரும்பி உதிர்த்துக் கொண்டு வருகையில் அவ் வனத்துக்குத் தலைவனும்.கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினம் கொண்டு ஓடி வந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதி லாவகமாக அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பற்றி அவ் வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனை மரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. இத்தகைய பல இதிகாசங்கள் தீபிகையை அழகு செய்கின்றன.

இதிகாசமும் ஐதிகமும் – ஓர் அற்புதக் கலப்பு : இந்த இரண்டும் கலந்த நிலையை ஸ்வாமியின் உரையில் கண்ணுறும் போது அது நமக்குத் ‘தேனும் பாலும் கன்னலும் அமுதும்’ கலந்து அநுபவிப்பது போன்ற நிலையைத் தருகின்றது.
“வேங்கடங்கள் மெய்ம்மேல்” (திருவாய் 3.3:6)என்ற அடிகட்கு ஸ்வாமி அருளும் உரை:
கடன்கள் சிலர்’கடன்கள் மேல் வினை முற்றவும் வேம் (இது)’ என்று அந்வயித்துப் பொருளுரைக்க. கடங்கள்-எம்பெருமான் நாம் செய்த பாவங்களை மன்னித் தருள்வது மாத்திரம் அன்றிக்கே பகைவர்கள் மேலும் போக்குவான்,,எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் பழ வினைகள் மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய சிறிய முயற்சியால் தொலைந்திடுமோ என்று ஐயுற்றார்களாம்; அவர்கட்குப் பட்டர் ரசோகதிகளுடன் ஓர் இதிகாசம் எடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலரசனை நோக்கி மூன்று நாள் தரை கிடந்து தவம் செய்தார்;அவ்வளவில் கடலரசன் முகம் காட்டாதொழியவே சீறிச் சினந்து அக் கடல் மீது அம்பு தொடுத்து நின்றார். அது கண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து, அவன் நாலடி வர நின்ற போது ‘உனக்காக அம்பு தொடுத்தேன்’என்றுரைக்க நாணப்பட்டு “உன் விரோதிகளைச் சொல்லுக,அவர்கள் மீது இவ் வம்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல, அப்படியே அவன் தன் விரோதிகள் இருக்குமிடம் குறிப்பிட அங்கே அம்பைச் செலுத்தி உபகாரம் செய்தாரென்து வான்மீகி இராமாயணத்தால் அறிகின்றோம். வணங்கிய மாத்திரத்தில் சேதநன் பண்ணின பாவங்களை யெல்லாம் மறப்பான் இறைவன் என்பதற்குஇந்த இதிகாசம் சான்று.
இவ் விடத்தில் இன்னுமோர் ஐதிகத்தையும் அருளிச் செய்வர் பட்டர். “பண்டு தலை மயிர் இல்லாத ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்று மில்லை கண்டுபோக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்து விட, அதனை அவன் கொடு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து,’இது பெற்றது எங்கே!’ என்ன, ‘உன்தனை மொட்டைத்தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கே யுள்ள அவனைக் கண்டு ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே!’என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து ‘ஏன் தான் குழல்கள் அலைய அலைய, ஓடி வாரா நின்றாய்!’ என்ன,,’ஒன்று மின்று; இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்’ என்றானாம்; அப்படியே கடலை முகங்காட்டுவித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது,கோலைக் கோலைத் தொடுப்பதாக நிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே ‘உமக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’என்றார் அன்றோ?

சம்வாதம் என்பது சம்பாஷணை; உரையாடல். எ.டு.’வீவின்றி நின்றவர்’ (திருவாய் 7.5:11) என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடைபெற்றதைப் போன்றது.அதாவது, “அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க அதற்கு அவர் அளித்த மறுமொழி: “அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்?எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமே யொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்த்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே” என்று அருளிச் செய்தாராம்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்று மேய்த்துவிளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே
-2-5-3-
வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை‘ என்பதற்கு நஞ்சீயர் பொருள் சொல்லும் போது வேறு விதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளை யழகிய மணவாளப் பெருமாளரையர் “இவ் விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் பொருள் இப்படி யன்றே” என்று சொல்லி பட்டர் அருளிச் செய்த விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்;மலை மேல் காட்டில் உள்ள தடாகங்கங்களில் தண்ணீர் குடிக்கப் புகுங்கால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னே யிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்; அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீர்முது செய்து காட்டுவன்;அதைச் சொல்லுகிறது ‘வரை மீ கானில் தடம் பருகு‘என்று,

திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியனவாக அமைந்துள்ளன. பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள்23; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்;மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள். இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர்.
சம்பந்த உபாய பயன்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஞா வஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்” (138)(பிரஜ்ஞாவஸ்தை – மூன்று காலங்களையும் அறியும்
அறிவின் நிலை)-என்று ஆசாரிய ஹிருதயம் கூறும்.

ஞானாவஸ்தைகள்‘ என்னாமல் ‘பிரஜ்ஞாவஸ்தைகள்’என்பதற்குக் காரணம் என்ன? இந் நிலைகள் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக. திருவெட்டெழுத்தின் முப்பதப் பொருள்களைப் பற்றிய ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது?’ஓம் நமோ நாராயணாய’என்பது திருமந்திரம். இதிலுள்ள மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் சொல்லுகின்றன. °அவை சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் என்பன-அதாவது ‘பிரணவம்’ சேஷத்துவத்தையும் (பிறருக்கு அடிமையாய் இருத்தலையும்), ‘நமஸ்ஸு’ பாரதந்திரியத்தையும் (பரன் அல்லது பகவானுக்கு வசப்பட்டு இருத்தலையும்), ‘நாராயனாய’ சேதநன் ஈஸ்வரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்’ தெரிவிக்கின்றன-அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்)நான்காம் வேற்றுமை சேஷத்துவத்தையும் (அடிமைத் தன்மையையும்), உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யர்ஹ சேஷத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈஸ்வரன் ஒருவனுக்கே உரித்தாய் இருத்தலையும்)மகாரம் ஞானவானான ஜீவான்மாவையும் தெரிவிக்கின்றன.திருவெட்டெழுத்தின் மூன்று பதங்களாலும் குறிப்பிடப் பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே தோழி தாய் மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெறுகின்றன.இதனை ஆசாரிய ஹிருதயம் அவஸ்தா திரயம் (திரயம் மூன்று; அவஸ்தை – நிலை) என்று பேசும்.

ஸ்ரீ வைணவத் திருத் தலங்களில் திருவரங்கம் ‘கோயில்‘ என்றும்,திருவேங்கடம் ‘திருமலை’ என்றும், சம்பிரதாயமாக வழங்கப் பெற்று வருகின்றன. நம்மாழ்வாரின் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் திருவரங்கம், திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் (28, 26,31) வருவதால் இச் சிறப்புப் பெயர்கள் பெற்றனவாகப் பெரியோர் பணிப்பர். திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடி ‘திருப் பொலிந்த சேவடி’ (பெரியாழ். திரு. 5.4:7)என்றும் கச்சி நகரிலுள்ள தேவப் பெருமாளுடைய திருவடி’துயரறு சுடரடி’ (திருவாய் 1.1:1) என்றும், திருவேங்கடமுடையான் திருவடி ‘பூவார் கழல்கள்‘ (திருவாய் 6.10:4)என்றும் சம்பிரதாயத் திருநாமங்களாகப் பெரியோர் பணிப்பர்.

திருவரங்க விமானம் ஏழு சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது. பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பர வாசுதேவன் இதிலிருந்து சேவை சாதிக்கின்றான். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் ‘நமோ நாராயணாய’ என்பதிலுள் ஏழு எழுத்துக்கள் ஏழு திரு மதில்களாகவும் அமைந்துள்ளன.எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திரு அரங்கத்திற்குச் செல்பவர்கட்கும் இறைவன் நேரே புலனாவான் என்பது கருத்து.
விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம்; விஷ்ணு காயத்திரியின் அறிகுறியாக தூண்களால் அமைக்கப் பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்)

காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி’ அருளாளனைச்)சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள் : அதாவது தந் மாத்திரைகள் 5;ஞானேந்திரியங்கள் 5 ; கருமேந்திரங்கள் 5; பூதங்கள் 5;ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1,அகங்காரம் 1. மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (ஆன்மா),மகா புருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம்’அட்டாங்க விமானம்’ என்பது; 90 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. தஞ்சைக் கோபுரத்தின் நிழல் போல ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை யுடையது. மேல் தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும் விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஓம் நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ+ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்

நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவர்களுள் சடகோபர் ‘நம்மவர்’ என்று போற்றத் தக்கபெருமை வாய்ந்து ‘நம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயவமாகவும் நம்மாழ்வாரை அவயவி யாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்மாழ்வார். பூதத்தாழ்வாரைத் தலையாகவும் பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும்,
குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக் கைகளாகவும், தொண்டைரடிப்பொடியாழ்வாரைத் திரு மார்பாகவும்,திருமங்கையாழ்வாரைத் திரு நாபியாகவும் மதுரகவிகளையும்எம்பெருமானாரையும் (இராமாநுசர்) திருவடிகளாகவும்
பெரியோர் அருளிச் செய்வர்.

இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமாகவும்,உய்யக்கொண்டாரை (புண்டரீகாட்சரைக்) கண் ஆகவும் மணக்கால் நம்பியை (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும்,ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாகவும், திருக்கச்சி நம்பிகையைத் திருக்கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தனமாயும்,திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலை யாண்டானை முதுகாகவும், கிடாம்பி யாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாகவும்; பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாகவும், வடக்குத் திருவீதிப் பிள்ளையைத் முழங்கால்களாகவும், பிள்ளைலோகாகாரியரைத் திருவடியாகவும், திருவாய்மொழிப் பிள்ளையை பாதரேகை யாகவும், மணவாள மாமுனிகளைத் பாதுகையாகவும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்ட்ரமாகவும்,(திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும்,முதலியாண்டனைத் திரிதண்டமாகவும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும்,திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் தோமாலை யாகவும்,பிள்ளை யுறங்காவில்லி தாசரை நிழலாகவும் இங்ஙனம் இராமநுசரைச் சர்வாசார்ய ஸ்வரூபராகக் கொள்வது மரபு.

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-