Archive for September, 2024

ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்தர ஶத நாமாவளி-ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்-ஶ்ரீ ஹனுமத³ஷ்டகம்–ஸ்ரீ ஆஞ்ஜனேய த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்-ஸ்ரீ பஞ்சமுக² ஹனுமத் கவசம்-ஸ்ரீ ஏகாத³ஶ முகி² ஹனுமத் கவசம்-

September 28, 2024

ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்தர ஶத நாமாவளி

ஓம் ஶ்ரீ ஆஞ்ஜனேயாய நம: ।
ஓம் மஹாவீராய நம: ।
ஓம் ஹனுமதே நம: ।
ஓம் மாருதாத்மஜாய நம: ।
ஓம் தத்த்வஜ்ஞானப்ரதா³ய நம: ।
ஓம் ஸீதாதே³வீமுத்³ராப்ரதா³யகாய நம: ।
ஓம் அஶோகவனிகாச்சே²த்ரே நம: ।
ஓம் ஸர்வமாயாவிப⁴ஞ்ஜனாய நம: ।
ஓம் ஸர்வப³ன்த⁴விமோக்த்ரே நம: ।
ஓம் ரக்ஷோவித்⁴வம்ஸகாரகாய நம: । 1௦ ।

ஓம் பரவித்³யாபரீஹாராய நம: ।
ஓம் பரஶௌர்யவினாஶனாய நம: ।
ஓம் பரமன்த்ரனிராகர்த்ரே நம: ।
ஓம் பரயன்த்ரப்ரபே⁴த³காய நம: ।
ஓம் ஸர்வக்³ரஹவினாஶினே நம: ।
ஓம் பீ⁴மஸேனஸஹாயக்ருதே நம: ।
ஓம் ஸர்வது³:க²ஹராய நம: ।
ஓம் ஸர்வலோகசாரிணே நம: ।
ஓம் மனோஜவாய நம: ।
ஓம் பாரிஜாதத்³ருமூலஸ்தா²ய நம: । 2௦ ।

ஓம் ஸர்வமன்த்ரஸ்வரூபவதே நம: ।
ஓம் ஸர்வதன்த்ரஸ்வரூபிணே நம: ।
ஓம் ஸர்வயன்த்ராத்மகாய நம: ।
ஓம் கபீஶ்வராய நம: ।
ஓம் மஹாகாயாய நம: ।
ஓம் ஸர்வரோக³ஹராய நம: ।
ஓம் ப்ரப⁴வே நம: ।
ஓம் ப³லஸித்³தி⁴கராய நம: ।
ஓம் ஸர்வவித்³யாஸம்பத்ப்ரதா³யகாய நம: ।
ஓம் கபிஸேனானாயகாய நம: । 3௦ ।

ஓம் ப⁴விஷ்யச்சதுரானநாய நம: ।
ஓம் குமாரப்³ரஹ்மசாரிணே நம: ।
ஓம் ரத்னகுண்ட³லதீ³ப்திமதே நம: ।
ஓம் ஸஞ்சலத்³வாலஸன்னத்³த⁴லம்ப³மானஶிகோ²ஜ்ஜ்வலாய நம: ।
ஓம் க³ன்த⁴ர்வவித்³யாதத்த்வஜ்ஞாய நம: ।
ஓம் மஹாப³லபராக்ரமாய நம: ।
ஓம் காராக்³ருஹவிமோக்த்ரே நம: ।
ஓம் ஶ்ருங்க³லாப³ன்த⁴மோசகாய நம: ।
ஓம் ஸாக³ரோத்தாரகாய நம: ।
ஓம் ப்ராஜ்ஞாய நம: । 4௦ ।

ஓம் ராமதூ³தாய நம: ।
ஓம் ப்ரதாபவதே நம: ।
ஓம் வானராய நம: ।
ஓம் கேஸரீஸுதாய நம: ।
ஓம் ஸீதாஶோகனிவாரகாய நம: ।
ஓம் அஞ்ஜனாக³ர்ப⁴ஸம்பூ⁴தாய நம: ।
ஓம் பா³லார்கஸத்³ருஶானநாய நம: ।
ஓம் விபீ⁴ஷணப்ரியகராய நம: ।
ஓம் த³ஶக்³ரீவகுலான்தகாய நம: ।
ஓம் லக்ஷ்மணப்ராணதா³த்ரே நம: । 5௦ ।

ஓம் வஜ்ரகாயாய நம: ।
ஓம் மஹாத்³யுதயே நம: ।
ஓம் சிரஞ்ஜீவினே நம: ।
ஓம் ராமப⁴க்தாய நம: ।
ஓம் தை³த்யகார்யவிகா⁴தகாய நம: ।
ஓம் அக்ஷஹன்த்ரே நம: ।
ஓம் காஞ்சனாபா⁴ய நம: ।
ஓம் பஞ்சவக்த்ராய நம: ।
ஓம் மஹாதபஸே நம: ।
ஓம் லங்கிணீப⁴ஞ்ஜனாய நம: । 6௦ ।

ஓம் ஶ்ரீமதே நம: ।
ஓம் ஸிம்ஹிகாப்ராணப⁴ஞ்ஜனாய நம: ।
ஓம் க³ன்த⁴மாத³னஶைலஸ்தா²ய நம: ।
ஓம் லங்காபுரவிதா³ஹகாய நம: ।
ஓம் ஸுக்³ரீவஸசிவாய நம: ।
ஓம் தீ⁴ராய நம: ।
ஓம் ஶூராய நம: ।
ஓம் தை³த்யகுலான்தகாய நம: ।
ஓம் ஸுரார்சிதாய நம: ।
ஓம் மஹாதேஜஸே நம: । 7௦ ।

ஓம் ராமசூடா³மணிப்ரதா³ய நம: ।
ஓம் காமரூபிணே நம: ।
ஓம் பிங்கள³ாக்ஷாய நம: ।
ஓம் வார்தி⁴மைனாகபூஜிதாய நம: ।
ஓம் கபள³ீக்ருதமார்தாண்ட³மண்ட³லாய நம: ।
ஓம் விஜிதேன்த்³ரியாய நம: ।
ஓம் ராமஸுக்³ரீவஸன்தா⁴த்ரே நம: ।
ஓம் மஹிராவணமர்த³னாய நம: ।
ஓம் ஸ்ப²டிகாபா⁴ய நம: ।
ஓம் வாக³தீ⁴ஶாய நம: । 8௦ ।

ஓம் நவவ்யாக்ருதிபண்டி³தாய நம: ।
ஓம் சதுர்பா³ஹவே நம: ।
ஓம் தீ³னப³ன்த⁴வே நம: ।
ஓம் மஹாத்மனே நம: ।
ஓம் ப⁴க்தவத்ஸலாய நம: ।
ஓம் ஸஞ்ஜீவனநகா³ஹர்த்ரே நம: ।
ஓம் ஶுசயே நம: ।
ஓம் வாக்³மினே நம: ।
ஓம் த்³ருட⁴வ்ரதாய நம: ।
ஓம் காலனேமிப்ரமத²னாய நம: । 9௦ ।

ஓம் ஹரிமர்கடமர்கடாய நம: ।
ஓம் தா³ன்தாய நம: ।
ஓம் ஶான்தாய நம: ।
ஓம் ப்ரஸன்னாத்மனே நம: ।
ஓம் ஶதகண்ட²மதா³பஹ்ருதே நம: ।
ஓம் யோகி³னே நம: ।
ஓம் ராமகதா²லோலாய நம: ।
ஓம் ஸீதான்வேஷணபண்டி³தாய நம: ।
ஓம் வஜ்ரத³ம்ஷ்ட்ராய நம: ।
ஓம் வஜ்ரனகா²ய நம: । 1௦௦ ।

ஓம் ருத்³ரவீர்யஸமுத்³ப⁴வாய நம: ।
ஓம் இன்த்³ரஜித்ப்ரஹிதாமோக⁴ப்³ரஹ்மாஸ்த்ரவினிவாரகாய நம: ।
ஓம் பார்த²த்⁴வஜாக்³ரஸம்வாஸினே நம: ।
ஓம் ஶரபஞ்ஜரபே⁴த³காய நம: ।
ஓம் த³ஶபா³ஹவே நம: ।
ஓம் லோகபூஜ்யாய நம: ।
ஓம் ஜாம்ப³வத்ப்ரீதிவர்த⁴னாய நம: ।
ஓம் ஸீதாஸமேதஶ்ரீராமபாத³ஸேவாது⁴ரன்த⁴ராய நம: । 1௦8 ।

இதி ஶ்ரீமதா³ஞ்ஜனேயாஷ்டோத்தரஶதனாமாவளி: ।

————

ஸ்ரீ ஹனுமத்-பஞ்சரத்னம்

வீதாகி²லவிஷயேச்ச²ம் ஜாதானந்தா³ஶ்ருபுலகமத்யச்ச²ம்
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருத்³யம் ॥ 1 ॥

தருணாருணமுக²கமலம் கருணாரஸபூரபூரிதாபாங்க³ம்
ஸஞ்ஜீவனமாஶாஸே மஞ்ஜுலமஹிமானமஞ்ஜனாபா⁴க்³யம் ॥ 2 ॥

ஶம்ப³ரவைரிஶராதிக³மம்பு³ஜத³ல விபுலலோசனோதா³ரம்
கம்பு³க³லமனிலதி³ஷ்டம் பி³ம்பஜ³்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3 ॥

தூ³ரீக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருதராமவைப⁴வஸ்பூ²ர்தி:
தா³ரிதத³ஶமுக²கீர்தி: புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்தி: ॥ 4 ॥

வானரனிகராத்⁴யக்ஷம் தா³னவகுலகுமுத³ரவிகரஸத்³ருஶம்
தீ³னஜனாவனதீ³க்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5 ॥

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்னாக்²யம்
சிரமிஹ நிகி²லான்போ⁴கா³ன்பு⁴ங்க்த்வா ஶ்ரீராமப⁴க்திபா⁴க்³ப⁴வதி ॥ 6 ॥

ஶ்ரீரகு⁴ராஜபதா³ப்³ஜனிகேதன பங்கஜலோசன மங்கள³ராஶே
சண்ட³மஹாபு⁴ஜத³ண்ட³ ஸுராரிவிக²ண்ட³னபண்டி³த பாஹி த³யாளோ ।
பாதகினம் ச ஸமுத்³த⁴ர மாம் மஹதாம் ஹி ஸதாமபி மானமுதா³ரம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 1 ॥

ஸம்ஸ்ருதிதாபமஹானலத³க்³த⁴தனூருஹமர்மதனோரதிவேலம்
புத்ரத⁴னஸ்வஜனாத்மக்³ருஹாதி³ஷு ஸக்தமதேரதிகில்பி³ஷமூர்தே: ।
கேனசித³ப்யமலேன புராக்ருதபுண்யஸுபுஞ்ஜலவேன விபோ⁴ வை
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 2 ॥

ஸம்ஸ்ருதிகூபமனல்பமகோ⁴ரனிதா³க⁴னிதா³னமஜஸ்ரமஶேஷம்
ப்ராப்ய ஸுது³:க²ஸஹஸ்ரபு⁴ஜங்க³விஷைகஸமாகுலஸர்வதனோர்மே ।
கோ⁴ரமஹாக்ருபணாபத³மேவ க³தஸ்ய ஹரே பதிதஸ்ய ப⁴வாப்³தௌ⁴
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 3 ॥

ஸம்ஸ்ருதிஸின்து⁴விஶாலகராலமஹாப³லகாலஜ²ஷக்³ரஸனார்தம்
வ்யக்³ரஸமக்³ரதி⁴யம் க்ருபணம் ச மஹாமத³னக்ரஸுசக்ரஹ்ருதாஸும் ।
காலமஹாரஸனோர்மினிபீடி³தமுத்³த⁴ர தீ³னமனந்யக³திம் மாம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 4 ॥

ஸம்ஸ்ருதிகோ⁴ரமஹாக³ஹனே சரதோ மணிரஞ்ஜிதபுண்யஸுமூர்தே:
மன்மத²பீ⁴கரகோ⁴ரமஹோக்³ரம்ருக³ப்ரவரார்தி³தகா³த்ரஸுஸன்தே⁴: ।
மத்ஸரதாபவிஶேஷனிபீடி³தபா³ஹ்யமதேஶ்ச கத²ம் சித³மேயம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 5 ॥

ஸம்ஸ்ருதிவ்ருக்ஷமனேகஶதாக⁴னிதா³னமனந்தவிகர்மஸுஶாக²ம்
து³:க²ப²லம் கரணாதி³பலாஶமனங்க³ஸுபுஷ்பமசின்த்யஸுமூலம் ।
தம் ஹ்யதி⁴ருஹ்ய ஹரே பதிதம் ஶரணாக³தமேவ விமோசய மூட⁴ம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 6 ॥

ஸம்ஸ்ருதிபன்னக³வக்த்ரப⁴யங்கரத³ம்ஷ்ட்ரமஹாவிஷத³க்³த⁴ஶரீரம்
ப்ராணவினிர்க³மபீ⁴திஸமாகுலமன்த³மனாத²மதீவ விஷண்ணம் ।
மோஹமஹாகுஹரே பதிதம் த³யயோத்³த⁴ர மாமஜிதேன்த்³ரியகாமம்
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 7 ॥

இன்த்³ரியனாமகசோரக³ணைர்ஹ்ருததத்த்வவிவேகமஹாத⁴னராஶிம்
ஸம்ஸ்ருதிஜாலனிபாதிதமேவ மஹாப³லிபி⁴ஶ்ச விக²ண்டி³தகாயம் ।
த்வத்பத³பத்³மமனுத்தமமாஶ்ரிதமாஶு கபீஶ்வர பாஹி க்ருபாளோ
த்வாம் பஜ⁴தோ மம தே³ஹி த³யாக⁴ன ஹே ஹனுமன் ஸ்வபதா³ம்பு³ஜதா³ஸ்யம் ॥ 8 ॥

ப்³ரஹ்மமருத்³க³ணருத்³ரமஹேன்த்³ரகிரீடஸுகோடிலஸத்பத³பீட²ம்
தா³ஶரதி²ம் ஜபதி க்ஷிதிமண்ட³ல ஏஷ நிதா⁴ய ஸதை³வ ஹ்ருத³ப்³ஜே ।
தஸ்ய ஹனூமத ஏவ ஶிவங்கரமஷ்டகமேதத³னிஷ்டஹரம் வை
ய: ஸததம் ஹி படே²த்ஸ நரோ லப⁴தேச்யுதராமபதா³ப்³ஜனிவாஸம் ॥ 9 ॥

இதி ஶ்ரீ மது⁴ஸூத³னாஶ்ரம ஶிஷ்யாச்யுதவிரசிதம் ஶ்ரீமத்³த³னுமத³ஷ்டகம் ।

———-

ஸ்ரீ ஆஞ்ஜனேய த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

ஹனுமானஞ்ஜனாஸூனு: வாயுபுத்ரோ மஹாப³ல: ।
ராமேஷ்ட: ப²ல்கு³ணஸக:² பிங்கா³க்ஷோமிதவிக்ரம: ॥ 1 ॥

உத³தி⁴க்ரமணஶ்சைவ ஸீதாஶோகவினாஶக: ।
லக்ஷ்மண ப்ராணதா³தாச த³ஶக்³ரீவஸ்ய த³ர்பஹா ॥ 2 ॥

த்³வாத³ஶைதானி நாமானி கபீன்த்³ரஸ்ய மஹாத்மன: ।
ஸ்வாபகாலே படே²ன்னித்யம் யாத்ராகாலே விஶேஷத: ।
தஸ்யம்ருத்யு ப⁴யம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ ப⁴வேத் ॥ 3 ॥

————–

ஸ்ரீ பஞ்சமுக² ஹனுமத்கவசம்

॥ பஞ்சமுக² ஹனுமத்கவசம் ॥

அஸ்ய ஶ்ரீ பஞ்சமுக²ஹனுமன்மன்த்ரஸ்ய ப்³ரஹ்மா ருஷி: கா³யத்ரீச²ன்த:³ பஞ்சமுக²விராட் ஹனுமான் தே³வதா ஹ்ரீம் பீ³ஜம் ஶ்ரீம் ஶக்தி: க்ரௌம் கீலகம் க்ரூம் கவசம் க்ரைம் அஸ்த்ராய ப²ட் இதி தி³க்³ப³ன்த:⁴ ।

ஶ்ரீ க³ருட³ உவாச ।
அத² த்⁴யானம் ப்ரவக்ஷ்யாமி ஶ்ருணு ஸர்வாங்க³ஸுன்த³ரி ।
யத்க்ருதம் தே³வதே³வேன த்⁴யானம் ஹனுமத: ப்ரியம் ॥ 1 ॥

பஞ்சவக்த்ரம் மஹாபீ⁴மம் த்ரிபஞ்சனயனைர்யுதம் ।
பா³ஹுபி⁴ர்த³ஶபி⁴ர்யுக்தம் ஸர்வகாமார்த²ஸித்³தி⁴த³ம் ॥ 2 ॥

பூர்வம் து வானரம் வக்த்ரம் கோடிஸூர்யஸமப்ரப⁴ம் ।
த³ம்ஷ்ட்ராகராளவத³னம் ப்⁴ருகுடீகுடிலேக்ஷணம் ॥ 3 ॥

அஸ்யைவ த³க்ஷிணம் வக்த்ரம் நாரஸிம்ஹம் மஹாத்³பு⁴தம் ।
அத்யுக்³ரதேஜோவபுஷம் பீ⁴ஷணம் ப⁴யனாஶனம் ॥ 4 ॥

பஶ்சிமம் கா³ருட³ம் வக்த்ரம் வக்ரதுண்ட³ம் மஹாப³லம் ।
ஸர்வனாக³ப்ரஶமனம் விஷபூ⁴தாதி³க்ருன்தனம் ॥ 5 ॥

உத்தரம் ஸௌகரம் வக்த்ரம் க்ருஷ்ணம் தீ³ப்தம் நபோ⁴பமம் ।
பாதாளஸிம்ஹவேதாலஜ்வரரோகா³தி³க்ருன்தனம் ॥ 6 ॥

ஊர்த்⁴வம் ஹயானநம் கோ⁴ரம் தா³னவான்தகரம் பரம் ।
யேன வக்த்ரேண விப்ரேன்த்³ர தாரகாக்²யம் மஹாஸுரம் ॥ 7 ॥

ஜகா⁴ன ஶரணம் தத்ஸ்யாத்ஸர்வஶத்ருஹரம் பரம் ।
த்⁴யாத்வா பஞ்சமுக²ம் ருத்³ரம் ஹனூமன்தம் த³யானிதி⁴ம் ॥ 8 ॥

க²ட்³க³ம் த்ரிஶூலம் க²ட்வாங்க³ம் பாஶமங்குஶபர்வதம் ।
முஷ்டிம் கௌமோத³கீம் வ்ருக்ஷம் தா⁴ரயன்தம் கமண்ட³லும் ॥ 9 ॥

பி⁴ன்தி³பாலம் ஜ்ஞானமுத்³ராம் த³ஶபி⁴ர்முனிபுங்க³வம் ।
ஏதான்யாயுதஜ⁴ாலானி தா⁴ரயன்தம் பஜ⁴ாம்யஹம் ॥ 1௦ ॥

ப்ரேதாஸனோபவிஷ்டம் தம் ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதம் ।
தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ன்தா⁴னுலேபனம் ।
ஸர்வாஶ்சர்யமயம் தே³வம் ஹனுமத்³விஶ்வதோமுக²ம் ॥ 11 ॥

பஞ்சாஸ்யமச்யுதமனேகவிசித்ரவர்ண-
-வக்த்ரம் ஶஶாங்கஶிக²ரம் கபிராஜவர்யம் ।
பீதாம்ப³ராதி³முகுடைருபஶோபி⁴தாங்க³ம்
பிங்கா³க்ஷமாத்³யமனிஶம் மனஸா ஸ்மராமி ॥ 12 ॥

மர்கடேஶம் மஹோத்ஸாஹம் ஸர்வஶத்ருஹரம் பரம் ।
ஶத்ரும் ஸம்ஹர மாம் ரக்ஷ ஶ்ரீமன்னாபத³முத்³த⁴ர ॥ 13 ॥

ஹரிமர்கட மர்கட மன்த்ரமித³ம்
பரிலிக்²யதி லிக்²யதி வாமதலே ।
யதி³ நஶ்யதி நஶ்யதி ஶத்ருகுலம்
யதி³ முஞ்சதி முஞ்சதி வாமலதா ॥ 14 ॥

ஓம் ஹரிமர்கடாய ஸ்வாஹா ।

ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய பூர்வகபிமுகா²ய ஸகலஶத்ருஸம்ஹாரகாய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய த³க்ஷிணமுகா²ய கராளவத³னாய நரஸிம்ஹாய ஸகலபூ⁴தப்ரமத²னாய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய பஶ்சிமமுகா²ய க³ருடா³னநாய ஸகலவிஷஹராய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய உத்தரமுகா²ய ஆதி³வராஹாய ஸகலஸம்பத்கராய ஸ்வாஹா ।
ஓம் நமோ ப⁴க³வதே பஞ்சவத³னாய ஊர்த்⁴வமுகா²ய ஹயக்³ரீவாய ஸகலஜனவஶங்கராய ஸ்வாஹா ।

ஓம் அஸ்ய ஶ்ரீ பஞ்சமுக²ஹனுமன்மன்த்ரஸ்ய ஶ்ரீராமசன்த்³ர ருஷி: அனுஷ்டுப்ச²ன்த:³ பஞ்சமுக²வீரஹனுமான் தே³வதா ஹனுமான் இதி பீ³ஜம் வாயுபுத்ர இதி ஶக்தி: அஞ்ஜனீஸுத இதி கீலகம் ஶ்ரீராமதூ³தஹனுமத்ப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக:³ ।
இதி ருஷ்யாதி³கம் வின்யஸேத் ।

அத² கரன்யாஸ: ।
ஓம் அஞ்ஜனீஸுதாய அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம: ।
ஓம் ருத்³ரமூர்தயே தர்ஜனீப்⁴யாம் நம: ।
ஓம் வாயுபுத்ராய மத்⁴யமாப்⁴யாம் நம: ।
ஓம் அக்³னிக³ர்பா⁴ய அனாமிகாப்⁴யாம் நம: ।
ஓம் ராமதூ³தாய கனிஷ்டி²காப்⁴யாம் நம: ।
ஓம் பஞ்சமுக²ஹனுமதே கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம: ।

அத² அங்க³ன்யாஸ: ।
ஓம் அஞ்ஜனீஸுதாய ஹ்ருத³யாய நம: ।
ஓம் ருத்³ரமூர்தயே ஶிரஸே ஸ்வாஹா ।
ஓம் வாயுபுத்ராய ஶிகா²யை வஷட் ।
ஓம் அக்³னிக³ர்பா⁴ய கவசாய ஹும் ।
ஓம் ராமதூ³தாய நேத்ரத்ரயாய வௌஷட் ।
ஓம் பஞ்சமுக²ஹனுமதே அஸ்த்ராய ப²ட் ।
பஞ்சமுக²ஹனுமதே ஸ்வாஹா இதி தி³க்³ப³ன்த:⁴ ।

அத² த்⁴யானம் ।
வன்தே³ வானரனாரஸிம்ஹக²க³ராட்க்ரோடா³ஶ்வவக்த்ரான்விதம்
தி³வ்யாலங்கரணம் த்ரிபஞ்சனயனம் தே³தீ³ப்யமானம் ருசா ।
ஹஸ்தாப்³ஜைரஸிகே²டபுஸ்தகஸுதா⁴கும்பா⁴ங்குஶாத்³ரிம் ஹலம்
க²ட்வாங்க³ம் ப²ணிபூ⁴ருஹம் த³ஶபு⁴ஜம் ஸர்வாரிவீராபஹம் ।

அத² மன்த்ர: ।
ஓம் ஶ்ரீராமதூ³தாய ஆஞ்ஜனேயாய வாயுபுத்ராய மஹாப³லபராக்ரமாய ஸீதாது³:க²னிவாரணாய லங்காத³ஹனகாரணாய மஹாப³லப்ரசண்டா³ய பா²ல்கு³னஸகா²ய கோலாஹலஸகலப்³ரஹ்மாண்ட³விஶ்வரூபாய
ஸப்தஸமுத்³ரனிர்லங்க⁴னாய பிங்கள³னயனாய அமிதவிக்ரமாய ஸூர்யபி³ம்ப³ப²லஸேவனாய து³ஷ்டனிவாரணாய த்³ருஷ்டினிராலங்க்ருதாய ஸஞ்ஜீவினீஸஞ்ஜீவிதாங்க³த-³லக்ஷ்மணமஹாகபிஸைன்யப்ராணதா³ய
த³ஶகண்ட²வித்⁴வம்ஸனாய ராமேஷ்டாய மஹாபா²ல்கு³னஸகா²ய ஸீதாஸஹிதராமவரப்ரதா³ய ஷட்ப்ரயோகா³க³மபஞ்சமுக²வீரஹனுமன்மன்த்ரஜபே வினியோக:³ ।

ஓம் ஹரிமர்கடமர்கடாய ப³ம்ப³ம்ப³ம்ப³ம்ப³ம் வௌஷட் ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய ப²ம்ப²ம்ப²ம்ப²ம்ப²ம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய கே²ங்கே³ங்கே³ங்கே³ங்கே³ம் மாரணாய ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய லும்லும்லும்லும்லும் ஆகர்ஷிதஸகலஸம்பத்கராய ஸ்வாஹா ।
ஓம் ஹரிமர்கடமர்கடாய த⁴ன்த⁴ன்த⁴ன்த⁴ன்த⁴ம் ஶத்ருஸ்தம்ப⁴னாய ஸ்வாஹா ।

ஓம் டண்டண்டண்டண்டம் கூர்மமூர்தயே பஞ்சமுக²வீரஹனுமதே பரயன்த்ர பரதன்த்ரோச்சாடனாய ஸ்வாஹா ।
ஓம் கங்க³ங்க³ங்க⁴ம்ஙம் சஞ்ச²ஞ்ஜஞ்ஜ²ம்ஞம் டண்ட²ண்ட³ண்ட⁴ம்ணம் தன்த²ன்த³ன்த⁴ம்னம் பம்ப²ம்ப³ம்ப⁴ம்மம் யம்ரம்லம்வம் ஶம்ஷம்ஸம்ஹம் ளங்க்ஷம் ஸ்வாஹா ।
இதி தி³க்³ப³ன்த:⁴ ।

ஓம் பூர்வகபிமுகா²ய பஞ்சமுக²ஹனுமதே டண்டண்டண்டண்டம் ஸகலஶத்ருஸம்ஹரணாய ஸ்வாஹா ।
ஓம் த³க்ஷிணமுகா²ய பஞ்சமுக²ஹனுமதே கராளவத³னாய நரஸிம்ஹாய ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஸகலபூ⁴தப்ரேதத³மனாய ஸ்வாஹா ।
ஓம் பஶ்சிமமுகா²ய க³ருடா³னநாய பஞ்சமுக²ஹனுமதே மம்மம்மம்மம்மம் ஸகலவிஷஹராய ஸ்வாஹா ।
ஓம் உத்தரமுகா²ய ஆதி³வராஹாய லம்லம்லம்லம்லம் ந்ருஸிம்ஹாய நீலகண்ட²மூர்தயே பஞ்சமுக²ஹனுமதே ஸ்வாஹா ।
ஓம் ஊர்த்⁴வமுகா²ய ஹயக்³ரீவாய ரும்ரும்ரும்ரும்ரும் ருத்³ரமூர்தயே ஸகலப்ரயோஜனநிர்வாஹகாய ஸ்வாஹா ।

ஓம் அஞ்ஜனீஸுதாய வாயுபுத்ராய மஹாப³லாய ஸீதாஶோகனிவாரணாய ஶ்ரீராமசன்த்³ரக்ருபாபாது³காய மஹாவீர்யப்ரமத²னாய ப்³ரஹ்மாண்ட³னாதா²ய காமதா³ய பஞ்சமுக²வீரஹனுமதே ஸ்வாஹா ।

பூ⁴தப்ரேதபிஶாசப்³ரஹ்மராக்ஷஸ ஶாகினீடா³கின்யன்தரிக்ஷக்³ரஹ பரயன்த்ர பரதன்த்ரோச்சடனாய ஸ்வாஹா ।
ஸகலப்ரயோஜனநிர்வாஹகாய பஞ்சமுக²வீரஹனுமதே ஶ்ரீராமசன்த்³ரவரப்ரஸாதா³ய ஜஞ்ஜஞ்ஜஞ்ஜஞ்ஜம் ஸ்வாஹா ।

இத³ம் கவசம் படி²த்வா து மஹாகவசம் படே²ன்னர: ।
ஏகவாரம் ஜபேத் ஸ்தோத்ரம் ஸர்வஶத்ருனிவாரணம் ॥ 15 ॥

த்³விவாரம் து படே²ன்னித்யம் புத்ரபௌத்ரப்ரவர்த⁴னம் ।
த்ரிவாரம் ச படே²ன்னித்யம் ஸர்வஸம்பத்கரம் ஶுப⁴ம் ॥ 16 ॥

சதுர்வாரம் படே²ன்னித்யம் ஸர்வரோக³னிவாரணம் ।
பஞ்சவாரம் படே²ன்னித்யம் ஸர்வலோகவஶங்கரம் ॥ 17 ॥

ஷட்³வாரம் ச படே²ன்னித்யம் ஸர்வதே³வவஶங்கரம் ।
ஸப்தவாரம் படே²ன்னித்யம் ஸர்வஸௌபா⁴க்³யதா³யகம் ॥ 18 ॥

அஷ்டவாரம் படே²ன்னித்யமிஷ்டகாமார்த²ஸித்³தி⁴த³ம் ।
நவவாரம் படே²ன்னித்யம் ராஜபோ⁴க³மவாப்னுயாத் ॥ 19 ॥

த³ஶவாரம் படே²ன்னித்யம் த்ரைலோக்யஜ்ஞானத³ர்ஶனம் ।
ருத்³ராவ்ருத்திம் படே²ன்னித்யம் ஸர்வஸித்³தி⁴ர்ப⁴வேத்³த்⁴ருவம் ॥ 2௦ ॥

நிர்ப³லோ ரோக³யுக்தஶ்ச மஹாவ்யாத்⁴யாதி³பீடி³த: ।
கவசஸ்மரணேனைவ மஹாப³லமவாப்னுயாத் ॥ 21 ॥

இதி ஸுத³ர்ஶனஸம்ஹிதாயாம் ஶ்ரீராமசன்த்³ரஸீதாப்ரோக்தம் ஶ்ரீ பஞ்சமுக²ஹனுமத்கவசம் ।

————-

ஸ்ரீ ஏகாத³ஶமுகி² ஹனுமத்கவசம்

(ருத்³ரயாமலத:)

ஶ்ரீதே³வ்யுவாச
ஶைவானி கா³ணபத்யானி ஶாக்தானி வைஷ்ணவானி ச ।
கவசானி ச ஸௌராணி யானி சான்யானி தானி ச ॥ 1॥
ஶ்ருதானி தே³வதே³வேஶ த்வத்³வக்த்ரான்னி:ஸ்ருதானி ச ।
கிஞ்சித³ன்யத்து தே³வானாம் கவசம் யதி³ கத்²யதே ॥ 2॥

ஈஶ்வர உவாச
ஶ‍ருணு தே³வி ப்ரவக்ஷ்யாமி ஸாவதா⁴னாவதா⁴ரய ।
ஹனுமத்கவசம் புண்யம் மஹாபாதகனாஶனம் ॥ 3॥
ஏதத்³கு³ஹ்யதமம் லோகே ஶீக்⁴ரம் ஸித்³தி⁴கரம் பரம் ।
ஜயோ யஸ்ய ப்ரகா³னேன லோகத்ரயஜிதோ ப⁴வேத் ॥ 4॥

ஓம் அஸ்ய ஶ்ரீஏகாத³ஶவக்த்ரஹனுமத்கவசமாலாமன்த்ரஸ்ய
வீரராமசன்த்³ர ருஷி: । அனுஷ்டுப்ச²ன்த:³ । ஶ்ரீமஹாவீரஹனுமான் ருத்³ரோ தே³வதா ।
ஹ்ரீம் பீ³ஜம் । ஹ்ரௌம் ஶக்தி: । ஸ்பே²ம் கீலகம் ।
ஸர்வதூ³தஸ்தம்ப⁴னார்த²ம் ஜிஹ்வாகீலனார்த²ம்,
மோஹனார்த²ம் ராஜமுகீ²தே³வதாவஶ்யார்த²ம்
ப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீபூ⁴தப்ரேதாதி³பா³தா⁴பரிஹாரார்த²ம்
ஶ்ரீஹனுமத்³தி³வ்யகவசாக்²யமாலாமன்த்ரஜபே வினியோக:³ ।

அத² கரன்யாஸ: ।
ஓம் ஹ்ரௌம் ஆஞ்ஜனேயாய அங்கு³ஷ்ட²ப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் ருத்³ரமூர்தயே தர்ஜனீப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் வாயுபுத்ராய மத்⁴யமாப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் அஞ்ஜனீக³ர்பா⁴ய அனாமிகாப்⁴யாம் நம: ।
ஓம் ஸ்பே²ம் ராமதூ³தாய கனிஷ்டி²காப்⁴யாம் நம: ।
ஓம் ஹ்ரௌம் ப்³ரஹ்மாஸ்த்ராதி³னிவாரணாய கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம: ।

அத² அங்க³ன்யாஸ: ।
ஓம் ஹ்ரௌம் ஆஞ்ஜனேயாய ஹ்ருத³யாய நம: ।
ஓம் ஸ்பே²ம் ருத்³ரமூர்தயே ஶிரஸே ஸ்வாஹா ।
ஓம் ஸ்பே²ம் வாயுபுத்ராய ஶிகா²யை வஷட் ।
ஓம் ஹ்ரௌம் அஞ்ஜனீக³ர்பா⁴ய கவசாய ஹும் ।
ஓம் ஸ்பே²ம் ராமதூ³தாய நேத்ரத்ரயாய வௌஷட் ।
ஓம் ஹ்ரௌம் ப்³ரஹ்மாஸ்த்ராதி³னிவாரணாய அஸ்த்ராய ப²ட் ।
இதி ந்யாஸ: ।

அத² த்⁴யானம் ।
ஓம் த்⁴யாயேத்³ரணே ஹனுமன்தமேகாத³ஶமுகா²ம்பு³ஜம் ।
த்⁴யாயேத்தம் ராவணோபேதம் த³ஶபா³ஹும் த்ரிலோசனம்
ஹாஹாகாரை: ஸத³ர்பைஶ்ச கம்பயன்தம் ஜக³த்த்ரயம் ।
ப்³ரஹ்மாதி³வன்தி³தம் தே³வம் கபிகோடிஸமன்விதம்
ஏவம் த்⁴யாத்வா ஜபேத்³தே³வி கவசம் பரமாத்³பு⁴தம் ॥

தி³க்³ப³ன்தா⁴:
ஓம் இன்த்³ரதி³க்³பா⁴கே³ கஜ³ாரூட⁴ஹனுமதே ப்³ரஹ்மாஸ்த்ரஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ரபிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் அக்³னிதி³க்³பா⁴கே³ மேஷாருட⁴ஹனுமதே அஸ்த்ரஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் யமதி³க்³பா⁴கே³ மஹிஷாரூட⁴ஹனுமதே க²ட்³க³ஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் நிருர்திதி³க்³பா⁴கே³ நராரூட⁴ஹனுமதே க²ட்³க³ஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் வருணதி³க்³பா⁴கே³ மகராரூட⁴ஹனுமதே ப்ராணஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் வாயுதி³க்³பா⁴கே³ ம்ருகா³ரூட⁴ஹனுமதே அங்குஶஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ரபிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் குபே³ரதி³க்³பா⁴கே³ அஶ்வாரூட⁴ஹனுமதே க³தா³ஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் ஈஶானதி³க்³பா⁴கே³ ராக்ஷஸாரூட⁴ஹனுமதே பர்வதஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் அன்தரிக்ஷதி³க்³பா⁴கே³ வர்துலஹனுமதே முத்³க³ரஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் பூ⁴மிதி³க்³பா⁴கே³ வ்ருஶ்சிகாரூட⁴ஹனுமதே வஜ்ரஶக்திஸஹிதாய
சௌரவ்யாக்⁴ர பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

ஓம் வஜ்ரமண்ட³லே ஹம்ஸாரூட⁴ஹனுமதே வஜ்ரஶக்திஸஹிதாய சௌரவ்யாக்⁴ர-
பிஶாசப்³ரஹ்மராக்ஷஸஶாகினீடா³கினீவேதாலஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ।

மாலாமன்த்ர: ।
ஓம் ஹ்ரீம் யீம் யம் ப்ரசண்ட³பராக்ரமாய ஏகாத³ஶமுக²ஹனுமதே
ஹம்ஸயதிப³ன்த-⁴மதிப³ன்த-⁴வாக்³ப³ன்த-⁴பை⁴ருண்ட³ப³ன்த-⁴பூ⁴தப³ன்த-⁴
ப்ரேதப³ன்த-⁴பிஶாசப³ன்த-⁴ஜ்வரப³ன்த-⁴ஶூலப³ன்த-⁴
ஸர்வதே³வதாப³ன்த-⁴ராக³ப³ன்த-⁴முக²ப³ன்த-⁴ராஜஸபா⁴ப³ன்த-⁴
கோ⁴ரவீரப்ரதாபரௌத்³ரபீ⁴ஷணஹனுமத்³வஜ்ரத³ம்ஷ்ட்ரானநாய
வஜ்ரகுண்ட³லகௌபீனதுலஸீவனமாலாத⁴ராய ஸர்வக்³ரஹோச்சாடனோச்சாடனாய
ப்³ரஹ்மராக்ஷஸஸமூஹோச்சாடானாய ஜ்வரஸமூஹோச்சாடனாய ராஜஸமூஹோச்சாடனாய
சௌரஸமூஹோச்சாடனாய ஶத்ருஸமூஹோச்சாடனாய து³ஷ்டஸமூஹோச்சாடனாய
மாம் ரக்ஷ ரக்ஷ ஸ்வாஹா ॥ 1 ॥

ஓம் வீரஹனுமதே நம: ।
ஓம் நமோ ப⁴க³வதே வீரஹனுமதே பீதாம்ப³ரத⁴ராய கர்ணகுண்ட³லாத்³யா-
ப⁴ரணாலங்க்ருதபூ⁴ஷணாய கிரீடபி³ல்வவனமாலாவிபூ⁴ஷிதாய
கனகயஜ்ஞோபவீதினே கௌபீனகடிஸூத்ரவிராஜிதாய
ஶ்ரீவீரராமசன்த்³ரமனோபி⁴லஷிதாய லங்காதி³த³ஹனகாரணாய
க⁴னகுலகி³ரிவஜ்ரத³ண்டா³ய அக்ஷகுமாரஸம்ஹாரகாரணாய
ஓம் யம் ஓம் நமோ ப⁴க³வதே ராமதூ³தாய ப²ட் ஸ்வாஹா ॥

ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஹனுமதே ஸீதாராமதூ³தாய ஸஹஸ்ரமுக²ராஜவித்⁴வம்ஸகாய
அஞ்ஜனீக³ர்ப⁴ஸம்பூ⁴தாய ஶாகினீடா³கினீவித்⁴வம்ஸனாய கிலிகிலிசுசு காரேண
விபீ⁴ஷணாய வீரஹனுமத்³தே³வாய ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஹ்ரௌ ஹ்ராம் ப²ட் ஸ்வாஹா ॥

ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஹௌம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஸ்ப்²ரூம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஹ்ரௌம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஸ்ப்²ரூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஹ்ராம் ஶ்ரீவீரஹனுமதே ஹ்ரௌம் ஹூம் ப²ட் ஸ்வாஹா ।
ஓம் ஶ்ரீவீரஹனுமதே ஹ்ரைம் ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஹ்ராம் பூர்வமுகே² வானரமுக²ஹனுமதே
லம் ஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஆக்³னேயமுகே² மத்ஸ்யமுக²ஹனுமதே
ரம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் த³க்ஷிணமுகே² கூர்மமுக²ஹனுமதே
மம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் நைருர்திமுகே² வராஹமுக²ஹனுமதே
க்ஷம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் பஶ்சிமமுகே² நாரஸிம்ஹமுக²ஹனுமதே
வம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் வாயவ்யமுகே² க³ருட³முக²ஹனுமதே
யம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் உத்தரமுகே² ஶரப⁴முக²ஹனுமதே
ஸம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஈஶானமுகே² வ்ருஷப⁴முக²ஹனுமதே ஹூம்
ஆம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஊர்த்⁴வமுகே² ஜ்வாலாமுக²ஹனுமதே
ஆம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் அதோ⁴முகே² மார்ஜாரமுக²ஹனுமதே
ஹ்ரீம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஸர்வத்ர ஜக³ன்முகே² ஹனுமதே
ஸ்ப்²ரூம் ஸகலஶத்ருஸகலஶத்ருஸம்ஹாரகாய ஹும் ப²ட் ஸ்வாஹா ।

ஓம் ஶ்ரீஸீதாராமபாது³காத⁴ராய மஹாவீராய வாயுபுத்ராய கனிஷ்டா²ய
ப்³ரஹ்மனிஷ்டா²ய ஏகாத³ஶருத்³ரமூர்தயே மஹாப³லபராக்ரமாய
பா⁴னுமண்ட³லக்³ரஸனக்³ரஹாய சதுர்முக²வரப்ரஸாதா³ய
மஹாப⁴யரக்ஷகாய யம் ஹௌம் ।

ஓம் ஹஸ்பே²ம் ஹஸ்பே²ம் ஹஸ்பே²ம் ஶ்ரீவீரஹனுமதே நம: ஏகாத³ஶவீரஹனுமன்
மாம் ரக்ஷ ரக்ஷ ஶான்திம் குரு குரு துஷ்டிம் குரு கரு புஷ்டிம் குரு குரு
மஹாரோக்³யம் குரு குரு அப⁴யம் குரு குரு அவிக்⁴னம் குரு குரு
மஹாவிஜயம் குரு குரு ஸௌபா⁴க்³யம் குரு குரு ஸர்வத்ர விஜயம் குரு குரு
மஹாலக்ஷ்மீம் தே³ஹி ஹும் ப²ட் ஸ்வாஹா ॥

ப²லஶ்ருதி:
இத்யேதத்கவசம் தி³வ்யம் ஶிவேன பரிகீர்திதம் ।
ய: படே²த்ப்ரயதோ பூ⁴த்வா ஸர்வான்காமானவாப்னுயாத் ॥

த்³விகாலமேககாலம் வா த்ரிவாரம் ய: படே²ன்னர: ।
ரோகா³ன் புன: க்ஷணாத் ஜித்வா ஸ புமான் லப⁴தே ஶ்ரியம் ॥

மத்⁴யாஹ்னே ச ஜலே ஸ்தி²த்வா சதுர்வாரம் படே²த்³யதி³ ।
க்ஷயாபஸ்மாரகுஷ்டா²தி³தாபத்ரயனிவாரணம் ॥

ய: படே²த்கவசம் தி³வ்யம் ஹனுமத்³த்⁴யானதத்பர: ।
த்ரி:ஸக்ருத்³வா யதா²ஜ்ஞானம் ஸோபி புண்யவதாம் வர: ॥

தே³வமப்⁴யர்ச்ய விதி⁴வத்புரஶ்சர்யாம் ஸமாரபே⁴த் ।
ஏகாத³ஶஶதம் ஜாப்யம் த³ஶாம்ஶஹவனாதி³கம் ॥

ய: கரோதி நரோ ப⁴க்த்யா கவசஸ்ய ஸமாத³ரம் ।
தத: ஸித்³தி⁴ர்ப⁴வேத்தஸ்ய பரிசர்யாவிதா⁴னத: ॥

க³த்³யபத்³யமயா வாணீ தஸ்ய வக்த்ரே ப்ரஜாயதே ।
ப்³ரஹ்மஹத்யாதி³பாபேப்⁴யோ முச்யதே நாத்ர ஸம்ஶய: ॥

ஏகாத³ஶமுகி²ஹனுமத்கவசம் ஸமாப்த ॥

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-


ஸ்ரீ (ப்ரதம -த்விதீய-த்ருதீய-சதுர்த்த-பஞ்சம-ஷஷ்டம) ஜிதந்தே ஸ்தோத்ரம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 25, 2024

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !-1-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13-

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14-

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ || 15-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி || 17–

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18–

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19-

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.-

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1-

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2-

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3-

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5-

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6-

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9-

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11-

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12-

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13-

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15-

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16-

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18-

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19-

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20-

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21-

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22-

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23-

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24-

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28-

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29-

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33-

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35-

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36-

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

————-

த்ருதீய ஜிதந்தே ஸ்தோத்ரம்-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !-1-

விஞ்ஞாபநம் இதம் தேவ ஸ்ருணு த்வம் புருஷோத்தம
நர நாராயணாப்யாம் ஸ ஸ்வத த்வீபந வாஸிபி –2-

நாரதாத்யைர் முநி கணைர் ஸநகாத்யைஸ் ச யோகிபி
ப்ரஹ்மே ஸாத்யைஸ் ஸூர கணைர் பஞ்ச கால பராயணை –3-

பூஜ்யஸே புண்டரீகாக்ஷ திவ்ய மந்த்ரைர் மஹர்ஷிபிர்
பாக்ஷண்ட தர்ம ஸங்கீர்ணே பகவத் பக்தி வர்ஜிதே -4-

கலவ் ஜாதோஸ்மி தேவேஸ ஸர்வ தர்ம பஹிஷ் க்ருதே
கதம் த்வாமஸமாசார பாபப்ரஸவ பூரஹம் –5-

அர்சயாமி தயா ஸிந்தோ பாஹி மாம் சரணா கதம்
தாபத்ரய தவாக்நவ் மாம் தஹ்ய மாநம் ஸதா விபோ –6-

த்ராஹிமாம் புண்டரீகாக்ஷ கேவலம் க்ருபயா தவ** .**
ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி து**:க ஸந்தப்த தேஹிநாம் .**

பாலயாசு த்ருசாதேவ தவ காருண்ய கர்ப்பயா** .**
இந்த்ரியாணி மயா ஜேதுமசக்யம் புருஷோத்தம** .**

சரீரம் மமதேவேச வ்யாதிபி**: பரிபீடிதம் .**
மநோமே புண்டரீகாக்ஷ விஷயாநேவ தாவதி** .**

வாணீ மம ஹ்ருஷீகேச மித்யா பாருஷ்ய தூஷிதா** .**
ஏவம் ஸாதந ஹீநோஹம் கிம் கரிஷ்யாமி கேசவ** (?) .**

ரக்ஷமாம் க்ருபயா க்ருஷ்ண பவாப்த பதிதம் ஸதா** .**
அபராத சதம்சைவ ஸஹஸ்ரமயுதம் ததா** .**

அர்புதம்சாப்யஸங்க்யேயம் கருணாப்தே க்ஷமஸ்வமே** .**
யச்சாபராதம் க்ருதவாநஜ்ஞாநாத் புருஷோத்தம** .**

மத்பக்த இதி தேவேச தத்ஸர்வம் க்ஷந்துமர்ஹஸி** .**
அஜ்ஞாத்வாதப்யசக்தத்வாதாலஸ்யாத்துஷ்ட பாவநாத்** .**

க்ருதாபராதம் க்ருபணம் க்ஷந்துமர்ஹஸி மாம் விபோ** .**
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தேஹர்நிசம் மயா** .**

தாநி ஸர்வாணி மேதேவ க்ஷமஸ்வ மதஸூதந** .**
யஜ்ஜந்மந**: ப்ரப்ருதிமோஹவசம்கதேந-**

நாநாபராதசதமாசரிதம் மயாதே
அந்தர்பஹிஸ்ச ஸகலம் தவ பஸ்யதோமே**-**

க்ஷந்தும் த்வமர்ஹஸி ஹரே கருணா வசேந
கர்மணாமநஸா வாசா யாசேஷ்டா மம நித்யச**: .**

கேசவாராதநே ஸாஸ்யாத் ஜந்ம ஜந்மாந்தரேஷ்வபி** .**

இதி த்ருதீயஜிதந்தா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

——

சதுர்த்த** (நான்காவது ) ஜிதந்தா ஸ்தோத்ரம்


ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந
 .**
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ** .**

நமஸ்தே வாஸுதேவாய சாந்தாநந்த சிதாத்மநே** .**
அத்யக்ஷாய ஸ்வதந்த்ராய நிரபேக்ஷாய சாஸ்வதே** .**

அச்யுதாய விகாராய தேஜஸாம் நிதயே நம**: .**
ப்ரதாநபுருஷேசாய நமஸ்தே புருஷோத்தம** .**

க்லேசகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட பூர்ண ஷாட்குண்ய மூர்த்தயே*.**
த்ரிபிர்ஜ்ஞாந பலைஸ்வர்ய வீர்ய சக்த்யாந்தராத்மநே** .**


த்ரியுகாய நமஸ்தேஸ்து நமஸ்தே சதுராத்மநே** .**
சது**: பஞ்ச நவவ்யூஹ தச த்வாதச மூர்த்தயே .**


அநேக மூர்த்தயேதுப்யமமூர்த்தாயைக மூர்த்தயே** .**
நாராயண நமஸ்தேஸ்து புண்டரீகாயதேக்ஷண** .**


ஸுப்ரூலலாட ஸுநஸ ஸுஸ்மிதாதர பல்லவ** .**
பீநவ்ருத்தாயத புஜ ஸ்ரீவத்ஸக்ருதலக்ஷண** .**


தநுமத்ய விசாலாக்ஷ பத்மநாபநமோஸ்துதே** .**
விலாஸ விக்ரமாக்ராந்த த்ரைலோக்ய சரணாம்புஜ** .**


நமஸ்தே பீதவஸந ஸ்பரந்மகர குண்டல** .**
ஸ்பரத்கிரீடகேயூர ஹாரகஸ்துப பூஷண** .**


பஞ்சாயுத நமஸ்தேஸ்து நமஸ்தே பஞ்ச காலிக** .**
பஞ்சகால பரைகாந்தி யோகக்ஷேம வஹப்ரபோ** .**


நித்யஜ்ஞாந பலைஸ்வர்ய போகோபகரணாச்யுத** .**
நமஸ்தேப்ரஹ்ம ருத்ராதி லோகயாத்ராபரிச்சத** .**


ஜந்மப்ரப்ருதி தாஸோஸ்மி சிஷ்யோஸ்மி தநயோஸ்மிதே** .**
த்வம்ச ஸ்வமி குருர்மாதா பிதாச மம மாதவ** .**

அபித்வாம் பகவன் ப்ரஹ்மந் ஸர்வ சக்ரோமஹர்ஷய**: .**
த்ரஷ்டும் யஷ்டுமபிஸ்தோதும் நஹிஸ்மர்துமநீஷதே** .**

தாபத்ரய மஹாக்ராஹ பீஷணே பவஸாகரே** .**
மஜ்ஜதாம் நாதநரேஷ ப்ரணதஸ்த்வத்பதார்பிதா** .**

அநாதாய ஜகந்நாத சரண்ய சரணார்த்திநே** .**
ப்ரஸீத ஸீததே மஹ்யம் நமஸ்தே பக்த வத்ஸல** .**

மந்த்ர ஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் யதர்ச்சநம்** .**
தத்க்ஷந்தவ்யம் ப்ரபந்நாநாமபராத ஸஹோஹ்யஸி** .**

அஜ்ஞாநாத்யதி வா ஜ்ஞாநாதசுபம் யந்மயாக்ருதம்** .**
க்ஷந்தவ்யம் ததஷேஷேண தாஸ்யேந ச க்ருஹாணமாம ்**.**

ஸர்வேஷு தேச காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத** .**
கிம்கரோஸ்மி ஹ்ருஷீகேச பூயோ பூயோஸ்மி கிங்கர** .**

இதி சதுர்த்த ஜிதந்தா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

பஞ்சம** (ஐந்தாவதுஜிதந்தா ஸ்தோத்ரம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந .**
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ** .**

நமஸ்தே வாஸுதேவாய சாந்தாநந்த சிதாத்மநே** .**
அஜிதாய நமஸ்துப்யம் ஷாட்குண்ய நிதயே நம**: .**

மஹாவிபூதி ஸம்ஸ்தாய நமஸ்தே புருஷோத்தம** .**
ஸஹஸ்ர சிரஸேதுப்யம் ஸஹஸ்ர சரணாயதே** .**

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ர நயநாயதே** .**
அச்யுதாய நமஸ்துப்யம் ஏகமூர்த்தாயதே நம**: .**

அநேகமூர்த்தயே துப்யமக்ஷராயசதே நம**: .**
வ்யாபிநே வேதவேத்யாய நமஸ்தே பரமாத்மநே** .**

சிந்மாத்ர ரூபிணே துப்யம் நமஸ்த்ரையந்த மூர்த்தயே** .**
அணிஷ்டாய ஸ்தவிஷ்டாய மஹிஷ்டாயச தே நம**: .**

நேதிஷ்டாய யவிஷ்டாய கநிஷ்டாய ச தே நம**: .**
பஞ்சாத்மநே நமஸ்துப்யம் ஸர்வாந்தர்யாமிநே நம**: .**

கல்பநா க்ரோடரூபாய ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த ஹேதவே** .**
நமஸ்தே குணரூபாய குணரூபாதி வர்த்திநே** .**

வ்யஸ்தாயச ஸமஸ்தாய ஸமஸ்த வ்யஸ்த ரூபிணே** .**
ஆதிமத்யாந்த சூந்யாய தத்வஸ்தாய நமோ நம**: .**

ப்ரணவ ப்ரதிபாத்யாய நம**: ப்ரணவரூபிணே .**
லோக யாத்ராப்ரஸித்த்யர்த்தம் ஸ்ருஷ்டி ப்ரஹ்மாதிரூபிணே*
.**

நமஸ்துப்யம் ந்ருஸிம்ஹாதி மூர்த்தி பேதாய விஷ்ணவே** .**
விபாகை**:கர்மபி:க்லேசைரஸ்ப்ருஷ்ட வபுஷே நம: .**

நமோப்ரஹ்மண்ய தேவாய தேஜஸாம் நிதயே நம**: .**
நித்யஸாதாரணாநேக லோகரக்ஷா பரிச்சத** .**

ஸச்சிதாந்ந்த ரூபாய வரேண்யாய நமோ நம**: .**
யஜமாநாய யஜ்ஞாய யஷ்டவ்யாய நமோநம**: .**

இஜ்யாபலாத்மநே துப்யம் நம இஜ்யாதி சீலிநே** .**
நம**:பரம ஹம்ஸாய நமஸ்ஸத்வ குணாய ச .**

ஸ்திதாய பரமவ்யோம்நி பூயோ பூயோ நமோ நம**: .**
ஸம்ஸார விஷயாவர்த்த ஸங்குலே ச மஹாபயே** .**

அபாரேத்துஸ்தரேகாதே பதிதம் கர்மபி**: ஸ்வகை: .**
அநாதமகதிம் பீரும் தயயா பரயா ஹரே** .**

மாமுத்தர தயாஸிந்தோ ஸிந்தோரஸ்மாத்ஸுதஸ்தராத்** .**
மந்த்ரஹாநிம் க்ரியாஹாநிம் ஹாநிம்வாந்யாம் த்வதர்ச்சநே** .**

க்ஷமஸ்வ மம தேவத்வம் அபராத ஸஹோஹ்யஸி** .**
அபராத ஸஹஸ்ரபாஜநம் பதிதம் பீம பவார்ணவோதரே** .**

அகதிம்சரணாகதிம் ஹரே**! க்ருபயாகேவலமாத்மஸாத்குரு .**
ஜந்ம ப்ரப்ருதி தாஸோஸ்மி சிஷ்யோஸ்மி தநயோஸ்மிதே** .**

த்வம்ச ஸ்வாமி குருர்மாதா பிதாச மம மாதவ** .**
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்தி ஹீநம் யதர்ச்சிதம்** .**

தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ தீநமாமாத்மஸாத்குரு** .**
நாஹம்ஹிதம் விஜாநாமி த்வாம்வ்ரஜாம்யேவ கேவலம்** .**

புத்த்யைவம் நய கோவிந்த முக்த்யுபாயேந வர்த்மநா** .**
த்வமேவ வேத்ஸி ச்ரேயோமே நேதமேததிதீதிச** .**
புத்தியோகம்ச மேதேஹி யேநத்வாமுபயாம்யஹம்** .**

இதி பஞ்சம ஜிதந்தாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-
ஷஷ்டம** (ஆறாவதுஜிதந்தா ஸ்தோத்ரம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந .**
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ** .**

ஸ்ரீமத்வாரவதீநாம வர்ததாம் விஜயீ பவான்** .**
திவ்யம் த்வதீயமைஸ்வர்யம் நிர்மர்யாதம் விஜ்ரும்பிதம்

தேவீபூஷாயுதைர்நித்யைர்முக்தைர்மோக்ஷைகலக்ஷணை**: .**
ஸத்வோத்தரைஸ்த்வதீயைஸ்ச ஸங்கஸ்தாபிரஸஸ்தவ** .**

ப்ராக்த்வார கோபுரவர ப்ராஸாத மணிமண்டபா**: .**
சாலிமுத்க திலாதீநாம் சாலாசைல குலோஜ்வலா**: .**

ரத்நகாஞ்சந கசேய க்ஷமக்ரமுக சாலிக**: .**
சய்யாக்ருஹாணி பர்யங்கவர்யோ**:ஸ்தூலாஸநாநிச .**

கநத்கங்கண ப்ருங்கார பதத்க்ரஹ களாசிகா**: .**
சத்ரசாமர முக்யாங்க ஸந்து நித்யாபரிச்சத** .**

அஸ்துநிஸ்துலமவ்யக்ரம் நித்யமப்யர்ச்சநம் தவ** .**
பக்ஷேபக்ஷே விஜ்ரும்பந்தாம் மாஸி மாஸி மஹோத்ஸவா**: .**

மணிகாஞ்சந சித்ராணி பூஷணாத்யம்பராணிச** .**
காஷ்மீர ஸாரகஸ்தூரி கர்பூராத்யநுலேபநம்** .**

கோமளாநிச தாமாநி கஸுமைஸ்ஸரபோத்கமை**: .**
தூபா**:கர்ப்பூர தீபாஸ்ச ஸந்துநித்யா பரிச்சதா: .**

ந்ருத்த கீதயுதம் வாத்யம் நித்யமத்ர விவர்ததாம்** .**
ச்ரோத்ரேஷுநஸ்ஸுதாதாரா**: கல்பதாம் காஹளஸ்வநை: .**

கந்தமூல பலாத்ரவ்ய காலேகாலே விவர்ததாம்** .**
ஸூபாபூப க்ருத க்ஷீர சர்க்கரா ஸஹிதம் ஹவி**: .**

கநஸார சிரோதக்ரம் க்ரமுகாஷ்டதளாந்விதம்** .**
விமலாநிச தாம்பூல தளாநி ஸ்வீகுரு ப்ரபோ** .**

ப்ரீதி பீதியுதோபூயாந்நித்யம் பரிஜநஸ்தவ** .**
பக்திமந்திப புஞ்ஜந்து பரஜாந பதைஸ்ஸஹ** .**

தரணீதந ரத்நாநி விதரந்து சிரம்தவ** .**
கைங்கர்யமகிலம் ஸர்வே குர்வந்து க்ஷோணிபாலகா**: .**

ப்ரேமதிக்த த்ருசம் ஸ்மேரம் ப்ரேக்ஷமாணஸ்த்வதாநநம்** .**
மஹாந்தஸ்ஸந்ததஸ் ஸந்தோ மங்களாநி ப்ரயுஞ்ஜதாம்** .**
பாபமேவ பவந் நித்யம பாலயன் குசலீ பவான்** .**

இதி ஷஷ்டம ஜிதந்தா ஸ்தோத்ரம்

———-

(த்வயா விநா நமேகிஞ்சித் மாம்விநா தவகஸ்ததா.**
தஸ்மான்மாமாத்மஸாத்கர்த்தும் ப்ரஸீத பரமேஸ்வர**.**

பூம ஸ்கலித பாதாநாம் பூமிரேவாவலம்பநம்**.**
த்வயி விப்ரதிபந்நாநாம் த்வமேவ சரணம் விபோ**.**

ஜ்ஞாநதோஜ்ஞாநதோவாபி யதோக்த மக்ருதம் மயா**.**
தத் ஸர்வம் பூர்ணமேவாஸ்து ஸுத்ருப்தோபவ ஸர்வதா**.**

ஓமச்யுத ஜகந்நாத மந்த்ரமூர்த்தே ஸநாதந**.**
ரக்ஷமாம் புண்டரீகாக்ஷ க்ஷமஸ்வாஜ ப்ரஸீத ஓம்**.)—

இதி ஜிதந்தா ஸ்தோத்ராணி ஸம்பூர்ணம்

————

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –

ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே
-என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம்
-என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது –
என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது –
என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம்
-திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் –தான் ஒட்டி வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகாணீந்த்ரியாண் யாஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ
-என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் –பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்திநோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப் பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆஸ்ரயண வேளையில் –யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்
-என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது

விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய
-என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத
—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக
-சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ச ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

———–

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

—————-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
நவ வ்யூஹங்களென்ன ,
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

——————-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
த்வமேவ = தேவரீரே ,
அவ்ய்ய: = நிரபாயமான ,
கதி: = உபாயமாக வாகிறீர்

—————-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
பரம் = ஸர்வாதிகனாய் ,
ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
த்வாம் = தேவரீரை ,
அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

————

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
த்வாம் = உன்னை ,
சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

————-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
கதாசந = ஒரு காலும் ,
ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
தவ = தேவரீருடைய ,
ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
இச்சாமி = விரும்புகின்றேன்
ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

————–

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

—————

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
தேவ = ஸர்வாதிகனே ,
தீநம் மாம் = ஏழையான என்னை ,
ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

—————-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
ஸ்வாத்மாநம் = தன்னை ,
நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

———-

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதைகள்-

September 25, 2024

வேதத்தின் சாரம் எனப்படுகிறது பகவத் கீதை.-பதினெட்டு அத்தியாயங்கள்; எழுநூற்றி ஒன்று ஸ்லோகங்கள்;  6446 பதங்கள் 8990 பதச் சேதங்கள் (சப்தங்கள்) உள்ள பகவத் கீதை உலகில் கோடானுகோடி பேருக்கு காலம் காலமாக வழி காட்டி வருகிறது.

மஹாபாரத கீதைகள்

மஹாபாரதத்தில் மட்டும் பகவத் கீதை, பராசர கீதா, ஹம்ஸ கீதா, அனு கீதா, உத்தர கீதா, ஷட்ஜ கீதா, ப்ராம்மண கீதா, வ்யாத் கீதா, பக கீதா, நகுஷ கீதா, சௌன்க கீதா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

ஒவ்வொன்றும் அபூர்வமான தத்துவங்களை விளக்குகின்றது.

உத்தர கீதை ; பிரமாண்ட புராணத்தில் இடம் பெறும் கீதை இது. ப்கவத் கீதைக்கு இது ஒரு அநுபந்தம் போன்றது. உண்மையை இடையறாது தியானி என்ற சுலபமான வழியை இது கூறுகிறது. இதற்கு ஆதி சங்கரரின் குருவான கௌடபாதர் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார்.

வேணு கீதை: பாகவதத்தில் பத்தாவது ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கோபிகள் கிருஷணர் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மிகவும் பக்தி மேலிட அவரது புகழைப் பாடத் தொடங்குகின்றனர். கிருஷ்ணரின் குழலோசை அவர்களை புளகாங்கிதம் அடைய வைத்து இறை உணர்வை ஊட்டுகிறது.

சுருதி கீதை: பாகவதம் பத்தாம் ஸ்காந்தத்தில் இடம் பெறும் இக்கீதை சுருதிகள் நாராயணனைப் பிரார்த்திப்பதை விளக்குகிறது.

கபில கீதை: பாகவதம் மூன்றாம் ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கபிலர் தன் தாயாரான தேவஹூதிக்கு செய்த பிரமாதமான போதனை இதில் உள்ளது

யுதிஷ்டிர கீதை. மஹாபாரத்த்தில் வரும் பிரசித்தமான சம்பவம் ய்ட்சனும் யுதிஷ்டிரரும் செய்த சம்வாதம். யட்சனின் கேள்விகளுக்கு அனாயாசமாக பதில் கூறி அவனிடம் வரம் பெற்று இறந்த தன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறார் தர்மர்.  யட்ச ப்ரஸ்னம்  என்று புகழ் பெற்றுள்ளது இதுவே.

அஷ்டாவக்ர கீதை; மாமன்னன் ஜனகன் ஒரு கனவு காண்கிறான். அதில் அவன் பசியால் வாடி பிச்சை எடுப்பது போலவும் இறுதியில் சிறிது கஞ்சி கிடைக்க, அதை வாயருகில் கொண்டு போகும் போது இரு எருதுகள் சண்டையிட்டுக் கொண்டு அவன் மீது மோத கைக்குக் கிடைத்த கஞ்சி வாய்க்குக் கிடைக்காமல் கஞ்சி சட்டி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைவது போலவும் காண்கிறான்.. அப்போது கனவிலிருந்து விழித்த ஜனகன், “இதுவா, அதுவா , எது உண்மை?” (மன்னனாக இருப்பதா, பிச்சை எடுப்பதா?) என்ற கேள்விக்கு ஆளாகிறான். அவனை சந்திக்கும் அஷ்டாவக்ரர், “இதுவும் உண்மையல்ல; அதுவும் உண்மையல்ல” என்று கூற அவன் தன் குழப்பம் நீங்குகிறான். ‘அப்போது எது உண்மை?’ என்று ஜனகன் கேட்க உண்மைப் பொருளை அஷ்டாவக்ரர் விளக்குகிறார். அதுவே இந்த அஷ்டாவக்ர கீதையாக மலர்கிறது.

சௌனக கீதை ; மஹாபாரதத்தில் சௌனக முனிவர் தர்மபுத்திரருக்கு உரைக்கும் உபதேச மொழிகளே சௌனக கீதையாக அமைகிறது. பிரபஞ்ச வாழ்வு பற்றி இதில் எடுத்துரைக்கப்படுகிறது

பக கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது.

பக முனிவர் பல கற்பங்கள் வாழ்ந்தவர். அவருக்கும் இந்திரனுக்கும் நடக்கும் இந்த சம்பாஷணையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மிக மிக நீண்ட காலம் வாழ்ந்த முனிவர் தன் அனுபவங்களை எடுத்துக் கூறுகிறார்.

நஹுஷ கீதை: மஹாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஒட்டி எழும் கீதை இது. நஹுஷன் என்ற பாம்பிடம் பீமன் பிடிபடுகிறான். அவனை விடுவிக்க விரைகிறார் தர்மபுத்திரர். தர்மரிடம் நஹுஷன் கேள்விகள் கேட்க அதற்குத் தக்க விடை அளிக்கிறார் தர்மர். அதனால் மனம் மகிழ்ந்த நஹுஷ பாம்பு பீமனை விடுவிக்கிறது. நஹுஷனின் கேள்விகளும் தர்மரின் பதில்களும் மிக்க சுவையானவை.

அவதூத கீதை; உயர்ந்த அத்வைத ஞானம் பற்றி அறிய விரும்புவோருக்கான  கீதை இது. பரமாத்மா சிவம். சிவம் என்றால் மங்கலமானவர். அவரைப் பற்றிய உண்மையில் ஆரம்பித்து அத்வைத சித்தாந்தத்தைக் கூறுகிறது இது.

தத்தாத்ரேய முனிவருக்கும் ஸகந்தனுக்கும் நடந்த இந்த சம்பாஷணை உயர் நிலையில் உள்ள சாதகர்களுக்காக அமையும் ஒரு கீதை.

அனு கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. மஹாபாரதப் போர் முடிந்த பின்னர் கிருஷ்ணரை மீண்டும் பகவத் கீதையை உரைக்குமாறு அர்ஜுனன் வேண்ட அவனை கிருஷ்ணர் கடிந்து கொள்கிறார். நினைத்த நேரம் எல்லாம் சொல்லக் கூடிய ஒன்று அல்ல கீதை. இருந்தாலும் அருள் மீதூற சுருக்கமாக கீதை தத்துவத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளி உரைப்பது இது.

தேவி கீதா ; தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 32ஆம் அத்தியாயமாக மிளிர்கிறது தேவி கீதா. இதே நூலில் பகவதி கீதாவும் இடம் பெறுகிறது.

ஹம்ஸ கீதை ; அன்னப் பறவை வடிவில் இருந்த விஷ்ணுவிற்கும் பிரம்மாவின் புத்திரரகளுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையே ஹம்ஸ கீதை.

வராஹ புராணத்தில் ருத்ர கீதா மற்றும் அகஸ்திய கீதா இடம் பெறுகின்றன.

கூர்ம புரணமோ ஈஸ்வர கீதா மற்றும் வியாச கீதாவை எடுத்துரைக்கிறது.

ரிபு கீதா:  விஷ்ணு புராணத்தில் இடம் பெறும் இதில் ரிபு முனிவர் தனது சீடரான நிதகருக்கு வேதாந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

சிவ பார்வதி சம்வாதமான குரு கீதா குருவின் பெருமையை எடுத்துரைக்கிறது.

ஹனுமானுக்கும் ராமருக்கும் இடையில் நடந்த சுவையான உரையாடல் ராம கீதையாக அத்யாத்ம ராமாயணத்தில் அமைகிறது.

வசிஷ்ட கீதையில் வசிஷ்ட முனிவர் ராமருக்குப் பல பேருண்மைகளைக் கூறுகிறார்.

நாரத கீதை கிருஷ்ணருக்கும் நாரத முனிவருக்கும் நடந்த சம்பாஷணையைக் கூறுகிறது.

இன்னும் சூர்ய கீதா, பஞ்ச தச கீதா, சக்தி கீதா, பிங்கல கீதா, சம்பு கீதா, சப்த ஸதி கீதா, ப்ரமர கீதா, ராஸ கீதா, விஷ்ணு கீதா, பித்ரு கீதா, பிருத்வி கீதா, சாந்தி கீதா, போத்ய கீதா, துளஸி கீதா, வைஷ்ணவ கீதா, ஹரித கீதா, பீஷ்ம கீதா, ஞான கீதா, ஜன்ம கீதா, ம்ருத்யுஞ்சய கீதா,ப்ரணவ கீதா என்று இப்படி பெரிய கீதை பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டமான பேருண்மையை உபதேசிக்கிறது.

———-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கொங்கில் பிராட்டி மற்றும் ஸ்ரீ கொங்கில் ஆச்சான் வைபவம்-

September 25, 2024

கொங்குப் பிராட்டியார் ஆண்டாளைப் போலே அவதரித்தவள் ஆகையால் எம்பெருமானார் இப் பிராட்டியாருக்கும் சகோதரர் ஆகிறார்
ஆகையால் ஆச்சான் எம்பெருமானாருக்கு மாப்பிள்ளை ஆகிறார்
அவதார ஸ்தலம் -லத்துவாடி கிராமம் -சேலம் மாவட்டம்
இயல் திரு நாமம் -ஸூந்தர ராஜன்
தாஸ்ய திரு நாமம் -கொங்கில் ஆச்சான் -கொங்கில் அண்ணன்
திருத் தகப்பனார் -விஷ்ணு தாஸன் என்று அழைக்கப்படும் ஆதி சேஷ ஐயங்கார்
திருத் தாயார் -அலர்மேல் மங்கையார்
கோத்திரம் -காஸ்யப கோத்திரம்-

கிபி –1053–கலி -4150-ஸர்வாரி வருஷம் -ஆவணி கேட்டை

யாரங்க ஸ்தல வாஸினம் யதிபதிம் மாது கரார்த்த தங்கதம் தத் ரத்தியை
அவி வந்திதம் ஸ விநயம் த்ருஷ்ட்வா பிரணம் மூர்த்தி தாம்
ஸ்ரீ ராமானுஜ பாதுக அர்ச்சிதம் பதம் பஸ்ஸாத் நரஸிம்ஹ அர்ச்சிதாம்
தாம் தேவிம் பஜதாம் அபீஷ்ட பலதாம் ஸ்ரீ கொங்கில் பிராட்டிம் பஜே –ஸ்ரீ கொங்கில் பிராட்டியாரின் தனியன்

ஸ்ரீ கொங்கில் பிராட்டியாரின் திரு அவதார ஸ்தலம் -கோயம்புத்தூரில் அருகில் உள்ள -கட்டளை வாரி எனப்படும்-கொள்ளை காலம் கிராமம்
இயல் திரு நாமம் -லஷ்மி -ஸூமதி -சோலாஞ்சலை -சோலாஞ்ச லாம்பா -சேல அஞ்சல -முந்தானை -தெலுங்கில் கொங்கு
திருத் தகப்பனார் -நாராயணன்
திருத்தாயார் -பத்மாக்ஷி

காவேரி வடபகுதி -சேலம் வட கொங்கு –
தென் பாகம் கோவை –பெரியார் மாவட்டங்கள் -தென் கொங்கு
மேல் பகுதி -கொள்ளை காலம் மலைப்பகுதி-மேல் கொங்கு எனப்படும்

நம்மையாளுடையவர்-கொங்கர் கோன் குலசேகரன்–3-9- -சம்பந்தம் பெற்றதால் கொங்குப் பிராட்டி திரு நாமம் எம்பெருமானாரே ஸாத்தி அருளினார்
எம்பெருமானார் திருவடி நிலைகளைப் பெற்று அவரது வடிவு அழகை மனம் என்னும் உள் கண்ணால் த்யானித்துக் கொண்டு -பெரிய திருவந்தாதி -28-கொங்கு நாட்டில் நித்ய வாஸம் செய்து வந்தாள்

வெள்ளை வஸ்திரம் சாத்திக்கொண்டு காவேரி ஆற்றங்கரை வழியாக மேற்கு நோக்கிச் சென்று
கணக்கம் பாளையம் அருகில் உள்ள அந்தியூர் ஸத்ய மங்கலம் மலைத்தொடர் வழியாக அன்றைய மைசூர் ராஜ்யத்தில் இருந்த கொள்ளே காலம் -இது அன்று தமிழ் நாட்டில் இருந்தது -வழியாகச் சென்றார் என்று தெரிகிறது-அப்பொழுது ராமானுஜர் திரு நக்ஷத்ரம் 53 இருக்கலாம் என்பர்-
கணக்கம் பாளையம் அருகில் உள்ள எக்கரம் மலை உச்சியில் இருந்து காட்டுப் பாதையாகச் சென்றால் 25-30 கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளே காலம் உள்ளது
சத்ய மங்கலம் -பழைய கொங்கு நாடு -ஈரோடு மாவட்டத்தில் உள்ளது -எக்கரை மலையில் பழைய பெருமாள் கோயிலில் ராமானுஜர் திவ்ய மங்கள விக்ரஹம் 2000 ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது

எம்பெருமானாரைத் துரத்திக் கொண்டு சோழ தேச அரசரின் வேலையாட்கள் வர
எம்பெருமானார் முதலிகளிடம்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா -தடவரைத் தோள் சக்ரபாணீ சார்ங்க வில் சேவகனே -பெரியாழ்வார் -5-4-4-என்று சொல்லி
அவர்கள் வரும் பாதையில் மணலைத் தூவி வரச்சொல்ல-அத்தை மிதித்து மேலே செல்ல முடியாமல்
போகும் பார்ப்பர் மந்த்ர வாதம் செய்து போனார்கள் என்று சொல்லி மீண்டு போனார்கள்-

அங்கு பரிவர்களான பாகவத வேட முதலிகளைக் கண்ட எம்பெருமானார் -ஸ்ரீ நல்லான் இதி மேகோ அயம் வந மத்யே பர்வர்ஷதி -நல்லானாகிற மழை மேகம் நடுக் காட்டிலும் மழை பொழிகிறதே -என்று அருளிச் செய்தார்

இங்கே பழைய சம்பந்தமும் நேர் பட்டு இருக்கிறதே -என்று கொங்கில் பிராட்டியாரைக் கண்டதும் மகிழ்ந்தார்

எம்பெருமானார் க்ருபா கடாக்ஷத்தால் அவர்களுக்கு 7 புத்ரிகளும் 2 புதரர்களும் பிறந்தனர்

கொங்கில் ஆச்சான் வம்சத்தில் ஆறு கோத்திரங்கள்
காஸ்யப –
பாரத்வாஜ
மௌத்கல்ய
கௌண்டின்ய
ஆயஸ்கல்ய
பால கல்லியர் –ஆகிய ஆறு கோத்ரங்கள்

இவர்கள் வசித்து வரும் ஸமுத்ரங்கள்
1-ரெங்க சமுத்திரம் -லத்துவாடி செருக்கலை சேலம் வேல கவுண்டம் பட்டி
2- லக்க ஸமுத்ரம் -லக்காபுரம்
3-கர்ப்பா ஸமுத்ரம் –பருத்திப்பள்ளி
4-அநந்த க்ருஷ்ணராய ஸமுத்ரம் -மூணு சாவடி -பாச்சல்
5-தேவ ராய ஸமுத்ரம் -திருமலை நாம ஸமுத்ரம் -புதுப் பாளையம் இடையாறு
6-காங்கேய ஸமுத்ரம் -படியூர்
7-ஆருத்ர கபால புரி -பஸ்ஸிம த்வாரகா புரி –ஈரோடு கருங்கல் பாளையம் -புதுப்பாளையம் -பரமத்தி

வர்த்தமான ஸ்ரீ ரெங்கம் நாராயண ஜீயர் -50 பட்டம் -பூர்வாஸ்ரமத்தில் கொங்கில் ஆச்சான் வம்சத்தவரே

இப்பரம்பரை வம்சத்தவர் ஸ்ரீ தர நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள்-55- மங்கம்பா நகர் ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய கைங்கர்யம் செய்து வருகிறார்

சிவனே பரம் பிறிதில்லையை னாநாற் சிரம் துணிக்க
உவந்தனன் சோழன் என மாரு வேடமா வோடி வந்து
கவன்றிடு ராமானுஜன் தனைத் தேற்றியும் காத்தளித்த
மவனகைக் பிராட்டியரும் கொங்கு மண்டலமே –கொங்கு மண்டல ஸதகப் பாடல்–68

சிவபெருமானே பரம் (துரியமூர்த்தி) வேறு இல்லை?
எனக்கையெழுத்துப் போடாவிடின் சோழன் கழுத்தை வெட்விடுவானென்று,
பயந்து வெளியேறி வந்த ராமாநுஜரது பயத்தை நீக்கி, ஊண் உடை முதலிய
ஆதரவு செய்த கொங்குப் பிராட்டியாருங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : திரிபுவன சக்கரவர்த்திகள் என்றும், சுங்கந் தவிர்த்த
சோழன் என்றும், பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்றும் கூறப்படும்
குலோத்துங்க சோழன் (1) என்பான் மிகுந்த பராக்கிரமசாலியும், கல்விமானுஞ்
சிறந்த தெய்வபக்தியுமுள்ளவன். இவன் வேண்டிக் கொள்ளவே சேக்கிழார்
பெரியபுராணம் பாடினார். கி.பி. 1070 – ல் பட்டந்தரித்து 1119 வரை அரசு
புரிந்தான். இராமாநுஜர் காலமும் இதுதான். இச்சோழவேந்தன் முன்னிலையில்
சைவ வைஷ்ணவ சமயவாத சபை ஒன்று வித்வான்கள் ஏற்படுத்தினார்கள்.
அதில் வைஷ்ணவர்கள் தோல்வியடைந்ததால் “சிவாத்பரேதரம் நாஸ்தி”
என்றெழுதிக் கையெழுத்திட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். இந்தச்
சபைக்கு இராமாநுஜரும் வரவேண்டு மென்று முடித்திருக்கிறார்கள்.
இதனையறிந்த நடாதூராழ்வார், உடையவர் பாலணுகி விவரமறிவிக்கும்
பொருட்டு, நடாதூராழ்வாரிடம் சொன்னார். கூரத்தாழ்வார் உடையவரிடம்
அரசன் வஞ்சகனாக இருக்கிறான், தேவரீர் சபைக்கு எழுந்தருளுவது
யுக்தமன்று நான் போய் வருகிறேனென்று, உடையவருடைய திரிதண்ட
காஷாயாதிகளைத் தரித்துக்கொண்டு ராஜ சபைக்குப் பெரிய நம்பி முதலானவர்களுடன் சென்றார். முதலியாண்டான்
முதலியவர்களுடன் வெள்ளை சாத்திக் கொண்டு மாறுவேடமாக உடையவர்
மேல் நாட்டுக்குப் புறப்பட்டனர். வழி நடந்து கொல்லிமலைத் தொடர்
நீங்கி லத்திவாடி (செருக்கலைக்) கிராமத்தில் சில வேட்டுவர்களால்
உபசரிக்கப் பெற்று, பழவகை முதலியன உதவக் களை நீங்கிச் சமீபத்தில்
அக்கிராமமிருக்கிறது, அங்கு உங்களுக்கு ஆகாரத்துக்கு இடம்
செய்கிறோமென்று அழைத்து வந்து ஒரு வீட்டில் இருத்தினார்கள்.
அவ்வீட்டு அம்மையார் இவ்வைணவர்களைக் கண்டு உவந்து முறைப்படி
வணங்கி, உடையவரிடத்து அடியாள் சமஸ்காரம் பெற்றுளேன் தளிகை
செய்கிறேன் அமுது செய்தருளள் வேண்டுமென்று கனிவாக வேண்டினள்
அம்ம! எவ்விடத்து உடையவரைச் சேவித்துக் கொண்டனை என ஒரு
வைணவர் கேட்டனர்.

     பனிரண்டு வருஷம் மழை பெய்த லொழிந்து கொங்கு நாடு கடும்
பஞ்சமுற்றது. ஸ்ரீரங்கத்தில் சதிபதிகளிருவரும் வாழ்ந்தோம். அந்நாள்
எம்பெருமானார் மாதுகர பிக்ஷைக்கு வருவதை மேல் மாடியிலிருந்து
கண்டேன். மன நெகிழ்ச்சி கொண்டு உடனே கீழே வந்து பிக்ஷையிட்டுச்
சேவித்தேன். உபதேசித்தனர். அது முதலாக அம்மந்திரத்தை ஜபித்துக்
கொண்டிருந்தேன். சில பகல் கழியவே, கொங்கு நாடு செழிப்புற்று எனக்
கேட்டு, எம்பெருமானார் சந்நிதியை அடைந்து அநுக்கிரகித்த மந்திரத்தை
மறந்தவளானேன். உபதேசித்தருளல் வேண்டுமென விண்ணப்பித்தேன்.
முறைப்படிக்குச் சமாசிரணம் அருளினர், நித்யப்படி பூசித்தற்குச் சுவாமிகள்
பாதுகை வேண்டுமென்றேன். உவந்து தமது திருவடி நிலையைப்
பிரசாதித்தனர். அதைப்பெற்ற நாள் முதல் பூசித்து வருகிறேன் என்றனள்.
ஆனால் அவர் உபதேசித்த மந்திரத்தை என்னிடத்து சொல் என்று
இராமாநுஜர் கேட்டனர். சொல்லாவிடில் வைணவ ப்ராமணர்கள்
புசிக்கமாட்டார்களே எனப்பயந்து அவர் காதில் மெதுவாகக் கூறினள்.
அப்படியானால் இங்கு உள்ளவர்களுள் உமக்கு உபதேசித்தவர்
இருக்கிறாரா? என்று வைணவர் வினவினர். எல்லாரையும் நன்றாகப் பல
முறை கவனமாகப் பார்த்து, உடையவரைக் குறித்து, சுவாமிகள் தான் என
நினைக்கிறேன்; ஆனால் அவர்கள் காஷாயம் திரிதண்ட தாரியாக இருக்கக்
கண்டேன் என்றனள். பாதுகையை எடுத்துவர அருளிய உடனே
இருகரத்தாலுந் தாங்கி வந்தனள். சரியாகவே இருக்கக் கண்டார்கள்.
திருவமுது செய்யுமாறு நியமனம் புரிந்தனர்.

     அமுது கொள்ளுமாறு பிராட்டியார் அழைத்தனள். எனது பாதுகைக்கு
நிவேதனமான பதார்த்தத்தை நான் உட்கொள்ளுதல் சரியன்று என்று மற்றைவைஷ்ணவர்களை உண்ணும்படிசெய்து, உடையவர்
பாலுண்டு சயனித்தனர். மற்றை வைஷணவர்கள் அன்னமருந்து உறங்கினர்.

     இந்த அம்மையார் பின்பு ஆகவேண்டிய காரியங்களைச் செய்து
முடித்துத் தரையில் தனியே படுத்தனள், இதுவரை துயின்ற கணவனார்
விழித்து நீ கீழே படுக்கக் காரணமென்ன வென்று மனையாளைக் கேட்டனர்.
உடையவர் முதலிய பெரியோர்கள் எழுந்தருளி உள்ளார்கள். உடையவர்
மாத்திரம் அமுது அருந்தவில்லை என்று வருந்தினள். ஆனால் அதற்கு
என்னாலாக வேண்டியதிருந்தால் செய்கிறேன் என்றனர் சமஸ்காரஞ் செய்து
கொண்டால் நாளை மத்தியானம் அருந்துவ ரென்றனள். அப்படியே செய்து
கொள்கிறேனென்றனர். காலையில் மனமுவந்த உடையவர்,
சதிபதிகளிருவருக்கும் முறைபடிக்குப் பஞ்ச சமஸ்காரம் செய்தனர். பின்பு
அன்னமருந்தினார்கள். வழி நடைக்களைப்பு முதலின நீங்கி நன்றாக
நித்திரை புரிந்தார்கள். சிலநாள் அன்புடன் அம்மனையிலேயே வசித்துப்
பின்பு வஸ்திரம் காஷாயம் திரிதண்டம் மற்றையனவும் பெற்றுக்கொண்டு
மேற்றிசைப் பிரயாணமாயினர்.

                       தனியன்கள்

     ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற
இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில்
இருந்து தான் பிறந்த (கொங்கு) தேசத்துச் செல்ல இச்சித்து அவருடைய
பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத்
துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.

     உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும்,
அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின்
தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று
அடைகிறேன்.

     உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள்
கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின்
திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள
கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.

கிரிமி கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு,
மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர்,
வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால்
ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை
அடைந்தனர்.

     உடையவர் கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன்
சேவை பெறாத துக்கமுமகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள்
அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதிகொங்கிலண்ணன் –
கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)

—————

ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தினால் தம்முடைய திரிதண்டம் காஷாயங்களை ஆழ்வானுக்கு கொடுத்துத் தாம் வெள்ளை சாற்றிக்கொண்டு திருநாராயணத்துக்கு போகும் வழியில்

கூரத்தாழ்வான், பெரிய நம்பிக்கு என்ன ஆனதோ என்று மனம் கலங்கிய ராமானுஜர், அரங்கனே துணையாக நீலகிரித் தொடரை சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். அன்று ஏழாம் நாள் உபவாசம், மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு. தூரத்தே கொஞ்சம் வெளிச்சம் தெரிய சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க சென்றார்கள்.

விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் “வழி எங்கே?” என்றார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்க

“கோயிலிலிருந்து(ஸ்ரீரங்கத்திலிருந்து) வருகிறோம்” என்று பதில் சொல்ல “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?”

அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள் எங்களுக்கு நல்லான் உபதேசிக்கும் போது த்வயத்தை உபதேசித்துவிட்டு ஸ்ரீமானுஜரின் பிரபாவத்தைச் சொல்லிவிட்டு ‘நமக்கு எல்லோருக்கும் பரமாசார்யர் எம்பெருமானார் நீங்கள் அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கள்” என்று உபதேசம் செய்தார் என்று பதிலை கேட்ட உடையவர்

“நல்லான் என்கிற காளமேகம் நடுக்காட்டிலும் மழை நீரைப் பொழிய செய்துள்ளதே!” என்று வியப்புற்றுச் சொல்ல அங்கிருந்த ஒரு சீடர்

“இவர் தான் எம்பெருமானார்” என்று உடையவர் திருவடிகளை காட்ட அவர்கள் விழுந்து எம்பெருமானாரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார்கள். ( நல்லான் பற்றி பிறகு ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன்)

அன்று இரவு அவர்களுக்குத் தேனும் தினைமாவும் அமுது செய்ய கொடுத்து இரவு கண்வளர்ந்தருளினார்கள் ( உறங்கினார்கள் ).

மறுநாள் வேடர்கள் ஸ்ரீராமானுஜரையும் அவருடைய சீடர்களையும் அழைத்துச் சென்று மலை மேலே இருக்கும் ஒரு வேடுவர் தலைவனிடம் விட “பிராமணர்கள் பட்டினியிருக்க நாம் எப்படி உண்ணலாம் ?” என்று நினைத்து அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் “கட்டளை வாரி” என்ற பிராமணன் இல்லத்துக்கு அனுப்பி “சீக்கிரம் இவர்களுக்கு அமுது செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்று ததியாராதனைக்கு வேண்டிய பொருள்களையும் கொடுத்தனுப்பினான்.

அப்போது அந்த இல்லத்தில் பிராமணன் இல்லை. அவன் மனைவி மட்டுமே இருந்தாள். அவள் அந்தச் சீடர்களை வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் “வேண்டாம்” என்றார்கள்.

அந்தப் பெண் “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் ? இங்கே அமுது செய்வதில் சந்தேகம் ஏதும் வேண்டாம். அடியாளும் எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவளே!” என்று அதிர்வைக் கொடுத்தாள்.

”எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தது எப்படி ?” எப்படி என்று சீடர்கள் முழிக்க அந்த அந்தணப் பெண் பழைய கதையை இவ்வாறு சொன்னாள்.

”ஒரு சமயம் இங்கே மழை இல்லாமல் பஞ்சம் வந்தது. நானும் என் கணவரும் ஸ்ரீரங்கம் சென்று சில காலம் வசித்தோம். அங்கு எம்பெருமானார் தினம் மாதுகரம் செய்ய வருவார். அவரைப் பிரபுக்களும், செல்வந்தர்களும் விழுந்து வணங்குவார்கள். ஒருநாள் மாதுகரம் செய்ய வரும் போது அவரைத் தடுத்தேன்
“இப்படிச் செய்யலாமா ? ஏன்” என்று கேட்டார் உடையவர் அதற்கு நான்

“மகாராஜாக்களும், பிரபுக்களும் உமது திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்கள் ஆனால் நீரோ மாதுகரம் செய்கிறீர் எதனால் ?” என்று கேட்டேன் அதற்கு அவர் புன்முறுவல் கொண்டு “நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்லவார்த்தைகள் சொல்லுகையாலே” என்றார்

“அந்த நல்ல வார்த்தைகளை அடியவளுக்கும் அருளக்கூடாதா ?” என்று கேட்டேன்

அவரும் மனமுவந்து என் காதில் அந்த மகா மந்திரத்தை ஓதினார்.

எங்கள் ஊரில் மீண்டும் மழை பொழிந்து பஞ்சம் போனது. ஊருக்குப் புறப்படும் போது அவர் எனக்குக் காதில் சொன்ன வார்த்தையை மறந்துபோனேன். மீண்டும் அவரைச் சேவிக்க சென்றேன். அப்போது

“தேவரீர் முன்பு அருளிச் செய்த நல்வார்த்தையை மறந்துபோனேன் அதை என் நெஞ்சிலே நிலைக்கும்படி மறுபடி அருளிச்செய்ய வேணும்” என்றேன். மீண்டும் ஒரு முறை த்வயத்தை நெஞ்சிலே நிலைக்கும்படி உபதேசித்தார்.

புறப்படும் முன் “தேவரீர் ஆத்ம ரக்ஷயாக ஏதேனும் ஒன்றை தந்தருள வேண்டும்” என்று கேட்டேன் … எம்பெருமானாரின் கருணையை என்ன என்று சொல்வேன். தாம் தரித்திருந்த திருவடி ஜோடியைக் கழற்றி பிரசாதித்து அருளினார். அவர் உபதேசங்களுடன், ஸ்ரீபாதுகைகளுடன் இங்கு வந்து சேர்ந்தோம். பிறகு மழைக்குக் குறைவில்லை. வாழ்வு வளம் பெற்றது. அதனால் பயப்படாமல் இங்கேயே நீங்கள் அமுது செய்யலாம்” என்றாள்.

சீடர்களுடன் உடையவர் வெள்ளை சாத்திக்கொண்டு இருந்தால் அவளுக்கு ராமானுசர் இருக்கிறார் என்று தெரியவில்லை. உடையவர் அவள் கூறியவற்றை தம் திருவுள்ளத்தில் நன்கு ஆராய்ந்து அமுது உண்ணச் சம்மதித்தார். தம் சீடர் ஒருவரை அவள் செய்யும் காரியங்களைக் கண்காணிக்கும்படி நியமித்தார். பிறகு என்ன நடந்தது என்று விசாரித்தார். அந்தச் சீடர் மேற்கொண்ட விஷயத்தைச் சொன்னார்.

”அந்தப் பெண் சுத்தமான புடவை தரித்துக்கொண்டு, சமையலறை சென்று “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று கூறி தளிகை செய்துமுடித்து, கதவைச் சாத்திக்கொண்டு எம்பெருமானார் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து, அதற்கு அமுது கண்டருளப் பண்ணி பிறகு வெளியே வந்து “அமுது செய்யலாம்” என்றாள்.
உடையவர் அந்தப் பெண்ணை பார்த்து “உள்ளே கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள்

“எம்பெருமானார் ஸ்ரீபாதுகைளைச் சோதித்து அவற்றுக்கு அமுது கண்டருளப் பண்ணினேன்” என்றாள்.

“அவற்றைக் காட்டு” என்றார் உடையவர்

அவளும் அதைக் கொண்டு வந்து காட்ட தமது பாதுகைகள் என்று கண்டுகொண்ட ராமானுசர் “ராமானுசரிடம் நீ உபதேசம் பெற்றது உணமையாகில் எங்களில் யாராவது இராமானுசர் போலிருக்கிறாரா ?” என்று கேட்டார்

அப்போது பொழுது சாய்ந்துவிட்டபடியால் விளக்கு ஒன்றை ஏற்றிவந்து அந்தப் பெண் ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டு வந்து ஸ்ரீராமானுசர் முன்பு வந்ததும் நின்று ஊன்றிக் கவனித்து அவர் திருவடிகளை கண்டதும் திகைத்து “திரிதண்டமும், காஷாயமும் இல்லாததால் தெரியவில்லை என்று அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றிய உடையவர் அங்கே சில நாள்கள் தங்கி திரிதண்ட காஷாயாதிகளை தயாரிக்கச் சொல்லி அவற்றை தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாள் முன்பு சமர்ப்பித்து அடிபணிந்து பழைய எம்பெருமானாராக தன் பயணத்தை தொடர்ந்தார்.

கொங்கில் ஆச்சான் கதை

’கொங்கில் பிராட்டி கதை’ என்று போன பகுதியில் கொங்கில் பிராட்டியின் கணவரான ’கொங்கில் ஆச்சான்’ பற்றி எதுவுமே கூறவில்லை. அவருடைய வைபவத்தை இந்தப் பகுதியில் பார்ப்பதற்கு முன், ‘முன் கதை’ சுருக்கமாக என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

கிருமிகண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து ஸ்ரீராமானுஜர் மற்றும் அவருடைய சீடர்கள் மேல் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். வழியில் நல்லானின் வேடுவ சீடர்கள் அவர்களுக்கு உதவி செய்து, தேனும் திணை மாவும் அமுது செய்யக் கொடுத்து வழி அனுப்பினார்கள்.
பிறகு அவர்கள் கொங்கில் பிராட்டி இல்லத்தை அடைந்தார்கள். அங்கே கொங்கில் பிராட்டி ஸ்ரீராமானுஜரையும் சீடர்களையும் வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் உணவு அருந்த தயக்கம் காட்டுகிறார்கள்.

கொங்கில் பிராட்டி ‘எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவள்’ என்று தன் கதையைக் கூறி, தான் சமைத்த உணவை ராமானுஜர் பாதங்களுக்குச் சமர்ப்பித்துக் கொடுக்க, ’விதுரர் ஆசையுடன் கொடுத்த உணவைக் கண்ணன் உண்டது போல, இந்த அம்மையார் ஆசையுடன் கொடுக்கும் ஆசாரிய பிரசாதத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ராமானுஜர் கூற சீடர்கள் உணவை எடுத்துக்கொண்டார்கள். தன் பாதுகைக்கு வைத்த உணவைத் தானே எடுத்துக்கொள்ள முடியாது, மேலும் ஒரு பெண் சமைத்த உணவை யதிகள் உட்கொள்ளக் கூடாது என்பது மரபு என்று ராமானுஜர் கூற கொங்கில் பிராட்டி பாலும், பழமும், சர்க்கரையும் கொண்டு வந்து கொடுத்தாள். ராமானுஜர் தான் ஆராதிக்கும் பெருமாளுக்குக் கண்டருளச் செய்து உட்கொண்டார்.

சீடர்கள் உட்கொண்ட மிச்ச பிரசாதங்களையும், ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாத தீர்த்தத்தையும் தூங்கிக்கொண்டு இருந்த தன் கணவரை எழுப்பி அவருக்குக் கொடுத்துவிட்டு, தான் ஒன்றும் உண்ணாமல், தரையில் படுத்துக்கொண்டாள். ஆனால் தூக்கம் வராமல் தவித்தாள். இதைக் கண்ட அவளுடைய கணவர் “ஏன்?” என்று கேட்க, ”திருவரங்கத்திலிருந்து வந்த எம்பெருமானாரும் அவருடைய சீடர்களும் நம் அகத்தில் உணவு உட்கொள்ளத் தயங்கி உறங்கச் சென்றார்கள்” என்றாள். அதற்கு அவர் “நான் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்க, “நீர் எம்பெருமானாரை ஆச்ரயிக்க வேண்டும். நீங்கள் ஆச்ரயித்தால் நம் அகத்தில் அவர்கள் பிரசாதிப்பார்கள்(உணவு உட்கொள்வார்கள்)” என்று கூறினாள். அவளுடைய கணவரும் இதற்கு இசைந்து “அப்படியே செய்கிறேன்” என்றார். இதைக் கேட்ட கொங்கில் பிராட்டி மகிழ்ச்சியுடன் நிம்மதியாக உறங்கினாள்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் யார் கையால், என்ன உணவை, எங்கே உட்கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்திருக்கிறார்கள். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்

கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று திருவரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து உணவு அருந்தலாம் என்று தேடும் போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்படச் சரி அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாதக் கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.
ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது. உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ? அவர் பகவன் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு
“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.

இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

ஒருமுறை கொங்கு நாட்டுக்குப் பிள்ளான் சென்றிருந்தார். அங்கே ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இல்லத்தில் தங்கினார். அங்கே தாமே தளிகை(சமையல்) செய்து உண்ண நினைத்தபோது அவருக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெருமாள் திருநாமங்களைப் பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளான் இவர்கள் இல்லத்தில் உணவு அருந்துவது தகாத விஷயம் என்று புறப்பட்டார்.
பிள்ளான் ஏன் இப்படிச் செய்தார் ? என்று நமக்குத் தோன்றும். காரணம் இருக்கிறது. அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியர்களுடைய திருநாமங்களைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களை மட்டுமே கூறியதால் ஆசாரிய அபிமானம் இல்லாதவர்கள் இல்லத்தில் அமுது செய்வது தகாது என்று அங்கிருந்து புறப்பட்டார்.

இப்போது மீண்டும் கொங்கில் பிராட்டியின் அகத்துக்குச் செல்லலாம்.
மறுநாள், பொழுதுவிடிந்தவுடன் உடையவர் திருவடியில் தண்டம் சமர்ப்பித்து,
“இவர் திருரங்கத்தில் பஞ்சசமஸ்காரம், மந்திர உபதேசம் பெற்றுக்கொள்ளவில்லை, நேற்று ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தையும், உங்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தையும் உட்கொண்டதால் இவர் மனம் உங்களை ஆச்ரடிக்க இசைந்துள்ளது” என்றாள்.
உடையவரும் மனம் உகந்து “பஞ்சசமஸ்காரம் செய்வித்து, உபதேசம் செய்தருளி அவருக்கு ‘கொங்கில் ஆச்சான்’ என்று தாஸ திருநாமம் சூட்டி, அவர் கையால் செய்த பிரசாதத்தை எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து, கண்டருளச் செய்து அவ்வமுதை உட்கொண்டு எல்லோருக்கும் சாதிக்கப்பட்டது. அங்கேயே நாலைந்து நாட்கள் அவர்கள் இல்லத்தில் எழுந்தருளி பிறகு அங்கிருந்து திருநாராயணபுரம் நோக்கிப் புறப்பட்டார். புறப்படும் முன் அவர்களுக்குத் திருவாராதனப் பெட்டியில் உள்ளச் சாளக்கிராமம், லஷ்மி நரசிம்ம பெருமாளையும் கொடுத்தார்.

ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டை வந்த பிறகு அங்கே ஓர் ஏரி அமைக்க விரும்பினார். இன்று ’தொண்டனூர் ஏறி’ என்று புகழ்பெற்ற அந்த ஏரியை நிர்மாணிக்கப் பொருள் உதவி தேவைப்பட்டது. அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர் கொங்கில் ஆச்சான். அவருக்கு ஒரு கடிதம் எழுத, அனுப்ப வேண்டிய பொற்காசுகளை உடனே தன் ஆசாரியனின் கைங்கரியத்துக்கு அனுப்பி வைத்தார்.

ஸ்ரீராமானுஜருடைய கடைசிக் காலத்தில், ஆசாரியரைப் பிரியப் போகிறோம் என்று அவருடைய சீடர்கள் மனக்கலக்கம் அடைந்தார்கள். அப்போது உடையவர் சிஷ்யர்களை கொங்கு பிராட்டி இல்லத்துக்குச் செல்லும்படி கூறினார்.

சீடர்களும் அம்மையார் இல்லத்துக்குச் சென்றார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து வந்த காரணத்தைக் கேட்டாள். அவர்களும் உடையவர் அனுப்பினார் என்று கூற, ராமானுஜர் ஏன் அனுப்பினார் என்ற காரணத்தைத் தன் நுண்ணறிவால் அறிந்துகொண்டு ஓர் அறைக்குச் சென்று சிவந்த பட்டு கயிற்றையும், ஒரு வெள்ளைப் பட்டு கயிற்றையும் எடுத்து வந்தாள். அவர்கள் முன் அமர்ந்துகொண்டு அலைந்து இருந்த கூந்தலை எண்ணெய் தடவி, சிக்கலை எடுத்து, சிகப்புப் பட்டு கயிற்றால் முடிச்சு போட்டாள். பிறகு வெள்ளைப் பட்டு கயிற்றால் முடிச்சு போட்டாள். வந்திருப்பவர்களை வணங்கி அனுப்பி வைத்தாள்.

சீடர்கள் ஒன்றும் புரியாமல் திரும்பினார்கள். நடந்தவற்றை உடையவரிடம் கூறினார்கள். ராமானுஜர் “கொங்கு பிராட்டி ஒரு சாதாரணப் பெண் அல்ல” என்று அம்மையார் கூறிய குறிப்பால் உணர்த்திய விஷயத்தை உடையவர் விளக்கினார்.

வேத தேவதை பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். கொங்கில் பிராட்டியே வேத அவதாரம். அவளுடைய கூந்தல் வேத சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துகள். மற்ற மதத்தினரின் அபத்தமான பொருள்களால் அலைந்து கலைந்து சீர்குலைந்தது. எண்ணைத் தடவி அதைச் சரி செய்தது, வேதத்தின் பொருளைச் சீர் செய்து அதை மக்களுக்குப் புரியும்படி விளக்கியதைக் காட்டுகிறது. பின் சிகப்பு கயிற்றால் கட்டியது, காஷாயம் தரித்த சந்நியாசியாகிய அடியேன் பல நூல்களை அருளிப் பாதுகாத்ததைக் குறிக்கிறது. மறுபடி வெள்ளை கயிற்றினால் கட்டியது, பல ஆண்டுகள் கிரஹஸ்தராக தேசிகராக அவதாரம் செய்து மீண்டும் வேதத்தை நிலை நிறுத்தப் போகிறோம் கலக்கம் வேண்டாம் என்று கூறினாள் என்று விளக்கம் அளித்தார்.

ஸ்வாமி தேசிகன் ‘யதிராஜ சப்ததி’யில் ஒரு ஸ்லோகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். அரண்மனையில் பட்டத்து ராணிக்குப் பணி புரியும் பணிப் பெண்கள் அரசியின் கலைந்த கூந்தல் முடிகளை, சரி செய்து, ஒன்று கூட்டி வாரி முடிந்து அழகு செய்வார்கள். இங்கே வேதத்தை வேத மாதாவாக உருவகம் செய்கிறார் தேசிகன். வேதம் திருமாலுடைய பட்டத்து ராணி. மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அதை அலங்கோலப் படுத்த, ராமானுஜர் என்ற பணிப்பெண் அந்தக் கூந்தலை ஒன்று சேர்த்து சீராக்கித் தான் அருளிய நூல்கள் மூலம் அழகு படுத்தினார் என்கிறார்.

——–

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ கொங்கில் ஆச்சான் ஆசிரமத்தில் 800 ஆண்டுகளாக வழிபடப்பட்டு வரும் ஜகதாஆச்சாரியார் சுவாமி ராமானுஜரின் மூல பாதுகைகள்.

இன்றும் எண் 55, மங்கம்மா நகர், ஸ்ரீரங்கம் எனும் முகவரியில் கொங்கில் ஆச்சான் மாளிகை உள்ளது. அங்கு இவர்களின் வம்சத்தார் இராமானுசரின் பாதுகையைப் பாதுகாத்து வருகின்றனர்.

இராமானுசரின் பாதுகை (அடி) பெற்று வழிபட்ட கொங்கில் பிராட்டியைப் போல, நான் சிறப்புறவில்லையே என வருத்தமடைகிறாள். நம் திருக்கோளூர் பெண்பிள்ளை.-அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே

————

இராமானுஜரை உபசரித்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டது கொங்கு மண்டலமே எனப் பெருமையுடன் கூறுகிறது 68ஆம் பாடலில் கொங்கு  மண்டல சதகம்.

பாடல் இதோ:

“சிவனே பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க

உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து

கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த

மவனகைக் கொங்கு பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் :-

‘சிவபெருமான பரம் (துரிய மூர்த்தி), வேறு இல்லை’ எனக் கையெழுத்துப் போடாவிடில் சோழன் கழுத்தை வெட்டி விடுவான் என்று மாறுவேடம் அணிந்து வெளியேறி வந்த இராமானுஜரது பயத்தைப் போக்கி ஊண், உடை முதலிய அனைத்தும் கொடுத்து ஆதரவு தந்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டதும் கொங்கு மண்டலமே.

இந்த வரலாறைக் குறிக்கும் வகையில் ஐந்து தனியன்கள் உள்ளன. அவற்றின் பொருள் மட்டும் இங்கு தரப்படுகிறது. (மூல ஸ்லோகங்கள் தரப்படவில்லை- க்ரந்த எழுத்துக்களில் இருப்பதால்.)

ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற
இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில்
இருந்து, தான் பிறந்த (கொங்கு) தேசத்துக்குச் செல்ல இச்சித்து அவருடைய
பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத்
துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.

     உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும்,
அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின்
தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று
அடைகிறேன்.

     உடையவருடைய திருவடிக்குறியான பாதுகைகளைப் பூஜிப்பவரும், அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின் தத்துவ ஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று அடைகிறேன்.

 உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள்
கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின்
திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள
கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.

பிரபந்நாம்ருதம்

கிரிமி கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு,
மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர்,
வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால்
ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை
அடைந்தனர்.

     உடையவர் கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன்
சேவை பெறாத துக்கமும் அகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள்
அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதி கொங்கிலண்ணன் -
கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)

—————

ஆவணியில் கேட்டை தனில் அவதரித்தான் வாழியே
அழகாரும் கொங்கு தமிழ் அமர்ந்த செல்வன் வாழியே
தேவி எனும் மற்றறியேன் என்று உரைத்தான் வாழியே
தேவி எனும் மனையாளால் தெளிவுற்றான் வாழியே
பாவணிந்த மாறனுரை பரிந்துகந்தான் வாழியே
பாகவத ஆராதனத்தால் பருகினான் வாழியே
கோயில் நம் எம்பெருமானாருக்கு மருகனார் வாழியே
கொங்கில் அண்ணன் தம்முடைய குரை கழல்கள் வாழியே l

————-

ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள் !!

1. சொட்டை நம்பி/ஆளவந்தாரின் வம்சத்தவர்.

2. புண்டரீகர்/பெரிய நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.

3. தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி வம்சத்தவர்.

4. சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான் வம்சத்தவர்.

5. ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி வம்சத்தவர்.

6. கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை

7. முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்

8. நடுவில் ஆழ்வான்

9. கோமாடத்து ஆழ்வான்

10. திருக்கோவலூர் ஆழ்வான்

11. திருமோகூர் ஆழ்வான்

12. பிள்ளைபிள்ளை ஆழ்வான்

13. நடாதூர் ஆழ்வான்

14. எங்களாழ்வான்

15. அனந்தாழ்வான்

16. மிளகாழ்வான்

17. நெய்யுந்தாழ்வான்

18. ஸேத்தலூர் சிறியாழ்வான்

19. வேதாந்தியாழ்வான்

20. கோயில் ஆழ்வான்

21. உக்கள் ஆழ்வான்

22. அரண புரத்து ஆழ்வான்

23. எம்பார்

24. கிடாம்பி ஆச்சான்

25. கனியனூர் சிறியாச்சான்

26. ஈச்சம்பாடி ஆச்சான்

27. கொங்கில் ஆச்சான்

28. ஈச்சம்பாடி ஜீயர்

29. திருமலை நல்லாண்

30. சட்டாம்பள்ளி ஜீயர்

31. திருவெள்ளறை ஜீயர்

32. ஆட்கொண்டவில்லி ஜீயர்

33. திருநகரி பிள்ளான்

34. காரான்சி சோமாஜியார்

35. அலங்கார வேங்கடவர்

36. நம்பி கருந்தேவர்

37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்

38. பிள்ளி உறந்தை உடையார்

39. திருக்குறுக்கைபிரான் பிள்ளான்

40. பெரிய கோவில் வள்ளலார்

41. திருக்கண்ணபுரத்து அரையர்

42. ஆசூரிப் பெருமாள்

43. முனிப் பெருமாள்

44. அம்மாங்கிப் பெருமாள்

45. மாருதிப் பெரியாண்டான்

46. மற்றொன்றில்லா மாருதி சிறியாண்டான்

47. சோமாசியாண்டான்

48. ஜீயர் ஆண்டான்

49. ஈஸ்வர் ஆண்டான்

50. ஈயுண்ணி பிள்ளை ஆண்டான்

51. பெரியாண்டான்

52. சிறியாண்டான்

53. குறிஞ்சியூர் சிறியாண்டான்

54. அம்மாங்கியாண்டான்

55. ஆளவந்தார் ஆண்டான்

56. அருளாளப்பெருமாள் எம்பெருமானார்

57. தொண்டனூர் நம்பி

58. மருதூர் நம்பி

59. மழுவூர் நம்பி

60. திருக்குறுங்குடி நம்பி

61. குரவை நம்பி

62. முடும்பை நம்பி

63. வடுக நம்பி

64. வாங்கீப்புரத்து நம்பி

65. ஸ்ரீ பராங்குச நம்பி

66. அம்மாங்கி அம்மாள்

67. பருத்தி கொள்ளை அம்மாள்

68. உக்காலம் அம்மாள்

69. சொட்டை அம்மாள்

70. முடும்பை அம்மாள்

71. கொமாண்டூர்ப்பிள்ளை

72. கொமாண்டூர் இளையவில்லி

73. கிடாம்பி பெருமாள்

74. காட்டுப்பிள்ளான்ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள் !!

1. சொட்டை நம்பி/ஆளவந்தாரின் வம்சத்தவர்.

2. புண்டரீகர்/பெரிய நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.

3. தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி வம்சத்தவர்.

4. சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான் வம்சத்தவர்.

5. ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி வம்சத்தவர்.

6. கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை

7. முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்

8. நடுவில் ஆழ்வான்

9. கோமாடத்து ஆழ்வான்

10. திருக்கோவலூர் ஆழ்வான்

11. திருமோகூர் ஆழ்வான்

12. பிள்ளைபிள்ளை ஆழ்வான்

13. நடாதூர் ஆழ்வான்

14. எங்களாழ்வான்

15. அனந்தாழ்வான்

16. மிளகாழ்வான்

17. நெய்யுந்தாழ்வான்

18. ஸேத்தலூர் சிறியாழ்வான்

19. வேதாந்தியாழ்வான்

20. கோயில் ஆழ்வான்

21. உக்கள் ஆழ்வான்

22. அரண புரத்து ஆழ்வான்

23. எம்பார்

24. கிடாம்பி ஆச்சான்

25. கனியனூர் சிறியாச்சான்

26. ஈச்சம்பாடி ஆச்சான்

27. கொங்கில் ஆச்சான்

28. ஈச்சம்பாடி ஜீயர்

29. திருமலை நல்லாண்

30. சட்டாம்பள்ளி ஜீயர்

31. திருவெள்ளறை ஜீயர்

32. ஆட்கொண்டவில்லி ஜீயர்

33. திருநகரி பிள்ளான்

34. காரான்சி சோமாஜியார்

35. அலங்கார வேங்கடவர்

36. நம்பி கருந்தேவர்

37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்

38. பிள்ளி உறந்தை உடையார்

39. திருக்குறுக்கைபிரான் பிள்ளான்

40. பெரிய கோவில் வள்ளலார்

41. திருக்கண்ணபுரத்து அரையர்

42. ஆசூரிப் பெருமாள்

43. முனிப் பெருமாள்

44. அம்மாங்கிப் பெருமாள்

45. மாருதிப் பெரியாண்டான்

46. மற்றொன்றில்லா மாருதி சிறியாண்டான்

47. சோமாசியாண்டான்

48. ஜீயர் ஆண்டான்

49. ஈஸ்வர் ஆண்டான்

50. ஈயுண்ணி பிள்ளை ஆண்டான்

51. பெரியாண்டான்

52. சிறியாண்டான்

53. குறிஞ்சியூர் சிறியாண்டான்

54. அம்மாங்கியாண்டான்

55. ஆளவந்தார் ஆண்டான்

56. அருளாளப்பெருமாள் எம்பெருமானார்

57. தொண்டனூர் நம்பி

58. மருதூர் நம்பி

59. மழுவூர் நம்பி

60. திருக்குறுங்குடி நம்பி

61. குரவை நம்பி

62. முடும்பை நம்பி

63. வடுக நம்பி

64. வாங்கீப்புரத்து நம்பி

65. ஸ்ரீ பராங்குச நம்பி

66. அம்மாங்கி அம்மாள்

67. பருத்தி கொள்ளை அம்மாள்

68. உக்காலம் அம்மாள்

69. சொட்டை அம்மாள்

70. முடும்பை அம்மாள்

71. கொமாண்டூர்ப்பிள்ளை

72. கொமாண்டூர் இளையவில்லி

73. கிடாம்பி பெருமாள்

74. காட்டுப்பிள்ளான்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கொங்கில் பிராட்டி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கொங்கில் ஆச்சான் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி-ஸ்ரீ ஆழ்வார் திருவடி தொழுதல் -ஸ்ரீ நம்மாழ்வார் மோட்ச வைபவம்-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ கலியன் அருள் பாடு-

September 21, 2024

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

(கலி தொடங்கி இப்பொழுது 5111-
4600 வருஷங்களாக திருவாய் மொழி-இராப்பத்து உத்சவம் திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைத்தது-
நாதமுனிகள் ஏற்பாட்டால் பகல் பத்தும் இராப் பத்தும் இயற் பாவும்-ஆக 21 நாள்கள்
திருவேங்கடத்தில் மேலும் 2 நாள்கள் -இராமானுஜ நூற்றந்தாதி தனியாக ஒரு நாள் -அனந்தாழ்வான் ஏற்பாடு
தண்ணீர் உத்சவம் -திருமலை நம்பி வம்சத்தாருக்காக)

(தர்ம வர்மா திருச்சுற்று
ராஜ மகேந்திரன் திருச்சுற்று
குலசேகரன் திருச்சுற்று
ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதி
திருவிக்ரமன் திருச்சுற்று
உத்தர வீதி -உள் துறையார்கள் -அந்தரங்க கைங்கர்ய பரர்கள் -ஆயிரம்கால் மண்டபம் மேல் நம்பெருமாள் இருக்க தாளம் இசைத்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்வானாம்
சித்ர வீதி –ஆக ஏழு பிரகாரங்கள் -மாட மாளிகைகள் சூழ் திருவீதி இதுவே -முன்பு இதற்கு வெளியில் தான் குடியிருப்பாம்)

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல ஆத்மாக்களோடு தனக்கு யுண்டான சம்பந்தம் ஒத்து இருக்க –
சிலர் தன்னை அனுபவித்து வாழ்ந்தும் –
சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு -திரு உள்ளம் கலங்கி –
இவர்கள் நம்மைக் கிட்டி அனுபவிக்கும் விரகு ஏதோ -என்று பார்த்து –

சம காலீநர்க்கு ஆஸ்ரயண உபயோகியான விபவங்கள் போல் அன்றிக்கே –
பின்னானார் வணங்கும் சோதி (திரு மூழிக் களத்தானே) -என்கிறபடியே -எல்லாக் காலத்திலும் -எல்லா தேசங்களிலும் -எல்லார்க்கும்
ஆஸ்ரயணம் ஸூலபமாம்படி பண்ணி –
அர்ச்சாவதாரமாய் ஸ்ரீ கோயில் முதலான  திருப்பதிகள்  தோறும் -க்ருஹங்கள் தோறும் நித்ய சந்நிதி பண்ணி –
ஆஸ்ரித பராதீனனாயும் -ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பட்ட நாதாதி பக்த  முக்தராலும்
அநேக ஆத்மாக்கள்  உஜ்ஜீவிக்கும் படி ரஷித்து அருளா நிற்கிற காலத்திலே-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற் கணார் கல்வியே கருதி -என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன்  விபூதி அடைய இவர் தொடைக் கீழே கிடக்கிறதோ -என்று சங்கிக்க வேண்டும்படி –
அதிசய அஹங்கார உக்தராய் – அதுக்கடியான தேஹாத்ம அபிமாநத்தை யுடையராய் –
ஆத்ம விஷய மாதல் -ஈஸ்வர விஷயமாதல் -ஒரு ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத படி
விஷய ப்ரவணராய் இருக்க –

இவரை இது நின்றும் எடுக்க விரகு பார்த்து -இவருக்கு விஷயங்களில் யுண்டான ரசிகத்வமே பற்றாசாக
தன் அழகையும்

(ஸூஸேக்ஷண –அவனது அழகே நம்மைத் திருத்த வைக்கும் உபகரணம்
ஐயப்பாடு அறுக்கும் அழகன்
ஆதரம் பெறுக வைத்த அழகன்
ஒருநாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு படுத்தும் பாடு)
சர்வார்த்த ப்ரகாசகமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும் –
ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்ட இவரும் ஹ்ருஷ்டராய் -இவர் –

(முன்பு ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தைப் பேணி வந்தவர் இப்பொழுது தான் ஆழ்வார் ஆகிறார்-காரார் திருமேனி காலம் அளவும் போய் சீரார் திருவேங்கடமே)

(அரச மரத்தின் அடியில்
ஆலி நாட்டுக்கு அரசனான கலியனுக்கு
தெய்வங்களுக்கு அரசனான வயலாலி மணவாளன்
மந்த்ர அரசான திரு மந்திரம் அருளிச் செய்த பின்பே
ஆழ்வார் ஆனார்-வேடுபரி உத்ஸவம் இன்றும் ஸேவிக்கிறோம்)

வாடினேன் வாடி -என்று தொடங்கி-உகந்து அருளிய நிலங்கள் தானே ஆஸ்ரயணீயம்-என்று நினைத்து –
ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே –
ஸ்ரீ பகவத் அர்ச்சாவதார ஸ்தலங்களுக்கு எல்லாம் பிரதானமாய் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -என்று சொல்லுகிறபடியே
ஸ்ரீ பாகவத கோஷ்டிக்கு எல்லாம்  விரும்பி வர்த்திக்கும் ஸ்தலமான ஸ்ரீ திரு வரங்கத் திருப்பதியிலே
நித்ய வாசம் செய்து அருளக் கண்டு –

நாள் தோறும் -கோல  மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ
நிறை கொண்டது என் நெஞ்சினையே-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திரு உள்ளம் குடி புகுந்து அத் தலைக்கு மங்களா சாசன பரராய் –
திருக் கோபுரம் -திரு மதிள்-திரு மண்டபங்கள் -திரு மடைப் பள்ளி -முதலான கைங்கர்யங்களும்  நடப்பித்துக் கொண்டு

இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் -என்கிறபடியே –
ஒருவராலும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற த்ரமிட சாஸ்திரத்தைக் கரை கண்ட ஜ்ஞானாதிக்யத்தை யுடையராய் –
தமிழ்க் கவிகளுக்கு எல்லாம் தலைவராய் -நாலு கவிப் பெருமாள் -என்று திரு நாமம் பெற்று –

ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளான-
ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திருவாய் மொழி -என்கிற நாலு பிரபந்தங்களிலும்
சப்த ரசம் -அர்த்த ரசம் -பாவ ரசம் -என்கிற ரச விசேஷங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு –

விசேஷமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே –
அந்தமில் பேரின்பம் -பெற்றவர் ஆகையாலே -அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக
அனுசந்தித்துக் கொண்டு போரா நிற்க -நல்லடிக் காலத்திலே –

திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமார்களும் திரு மஞ்சனம் கொண்டு அருளி –
செங்கமலக் கழலில்  -ஸ்ரீ பெரியாழ்வார் -1-5-10-படியே நன்றாக ஒப்பித்து நிற்க –

(செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-)

அப்போது ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற பிரபந்தத்தை இட்டருளி –
ப்ரதமம் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செவி சாற்றி அருளும்படி தேவ கானத்தில் ஏறிட்டு அனுசந்தித்து –
திரு உள்ளம் உகக்கும் படி நன்றாக  ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலும் ஏத்தி நிற்க –

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ஆழ்வார் திறத்திலே திரு உள்ளம் குடி புகுந்து –
ஸ்ரீ ஆழ்வீர்-இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே இரா நின்றீர் -நாம் உமக்குக் செய்ய
வேண்டுவது உண்டாகில் சொல்லும் -என்ன

ஸ்ரீ ஆழ்வாரும் நித்ய சம்சாரியாய்ப் போந்த அடியேனை தேவரீர் இப்படி விஷயீ கரித்த பின்பு ஒரு குறை யுண்டோ –
ஆகிலும் ஒரு விண்ணப்பம் யுண்டு -என்ன –
ஸ்ரீ பெருமாளும் -அத்தைச் சொல்லும் -என்ன –

ஸ்ரீ ஆழ்வாரும் -நாயன்தே நாயன்தே -தேவரீர் லோக அநுக்ரஹர்த்தமாகச் செய்து அருளின அர்ச்சாவதார ஸ்தலங்களில்
பிரதானமான இந்த ஸ்தலத்திலே
மார்கழி மாசம் சுக்ல பஷத்தில் ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)அன்று அத்யயன உத்சவம் கொண்டு அருளும் போது-(முன்பே வேதங்களை மட்டும் ஓதும் அத்யயன உத்சவம் நடந்து வந்துள்ளது)
ஸ்ரீ சடகோபன் சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியையும் வேத பாராயணத்தோடு கேட்டருளி
இதுக்கு வேத சாம்யமும் அநுக்ரஹித்து அருள வேணும் -என்ன –

(இதே போல் பின்பும் பாடிய வாளன் படித்துறை –வாளை வீசி கேட்டுப் பெற்ற வ்ருத்தாந்தம்)

ஸ்ரீ பெரிய பெருமாளும் திரு உள்ளம் உகந்து -அப்படியே வேத சாம்யம் அநுக்ரஹித்தோம்-
அத்யயன உத்சவத்தில் வேத பாராயணத்தோடு ஸ்ரீ திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்-என்று
அருளப்பாடு பிரசாதித்து அருளி

ஸ்ரீ கலியன் நம்மை தேவ கானத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது -ஆன பின்பு நாம் இன்று தரித்த
சிஷ்டமான எண்ணெய் காப்பை அவர் திரு மிடற்றிலே தடவுங்கோள் -என்று அருளப்பாடு பிரசாதிக்க
பின்பு ஸ்ரீ பெருமாள் பரிகரமும் அவர் திரு மிடற்றிலே எண்ணெய் காப்பைச் சாத்த –அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்து அருளின பின்பு –

ஸ்ரீ திரு நகரியிலும் ஸ்ரீ ஆழ்வார் அத்யயன உத்சவத்துக்கு
ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கு –
ஸ்ரீ பெரிய பெருமாள்  திரு முகப் பட்டயம் எழுதி சந்நிதிப் பேரர்களையும் ஸ்ரீ திரு நகரிக்கு அனுப்பி வைக்க –

(இப்பொழுதும் திருக் கார்த்திகை உத்சவத்தில் கைத்தலை சேவையால் ஆஸ்தானம் வரை நம்பெருமாள் எழுந்து அருளுகிறார்)

ஸ்ரீ ஆழ்வாரும் திரு முகப் பட்டயத்தை சிரசா வகித்து அத்யயன உத்சவத்துக்கு உதவும்படி ஸ்ரீ கோயில்  ஏற எழுந்து அருளின பின்பு
ஸ்ரீ திரு மங்கை மன்னனும் ஸ்ரீ ஆழ்வாரை எதிர் கொண்டு -திருவடி தொழுது -சந்நிதியிலே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக

ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வாரைக் குளிரக் கடாஷித்து அருளி -தம் திரு உள்ளத்தில் உகப்பாலே – ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று திரு நாமம் சாற்றி –
திருமாலை -ஸ்ரீ சடகோபன் திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை பிரசாதிக்க –

(ஸ்ரீ சடகோபனுக்கே ஸ்ரீ சடகோபன் சாத்தி அருளுகிறார் நம்மாழ்வார்)

ஸ்ரீ திரு மங்கை மன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக -ப்ராத காலத்திலே வேத பாராயணமும் –
ராத்திரி காலத்திலே ஸ்ரீ திருவாய் மொழியும் அநு சந்தானமாக கால விபாகம் பண்ணி
வேதங்களை அநு சந்தித்துச் சாற்றி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தித்துச் சாற்றும் போது
ஸ்ரீ ஆழ்வார் முன்பு ஸ்ரீ திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்த படியை அநு கரித்து
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து

ஸ்ரீ ஆழ்வார் பிரதி சம்வத்சரம் அத்யயன உத்சவத்துக்கு எழுந்து அருளி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தானம் நடக்கும்படி பண்ணுவித்து
திருமாலை  ஸ்ரீ சடகோபன் முதலான வரிசைகள் எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பிரசாதித்து அருளப்பாடும் பிரசாதித்து
அருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க

பின்பு ஸ்ரீ ஆழ்வாரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ திரு நகரி ஏற எழுந்து அருளி -பிரதி சம்வத்சரம் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி –
அத்யயன உத்சவத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு வர 

(அத்யயன உத்சவம் மாசி மாதம் இப்பொழுதும் திருத்தொலைவில்லி மங்கலத்தில் -நம்மாழ்வார் திரும்பிப் போகும் பொழுது நடந்தது)

(கலியுகம் தொடங்கி 398-வருஷம் திரு அவதாரம்-503 வருஷம் தன்னுடைச் சோதி -திருக் குறுங்குக்குடியில்)

(86-திவ்ய தேச மங்களா சாசனம்-47 -இவர் மட்டுமே மங்களா சாசனம்-திருவரசு உள்ளது)

(அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,-ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,-பரந்த விழியும், படிந்த நெற்றியும்,-நெரித்த புருவமும், சுருண்ட குழலும்,-வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,-தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,-

அகன்ற மார்பும், திரண்ட தோளும்,-நெளித்த முதுகும், குவிந்த இடையும்,-அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,-தூக்கிய கருங்கோவையும்,தொங்கலும் தனி மாலையும்,-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்,-சாத்திய திருதண்டையும்,

சதிரான வீரக்கழலும்,-தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,-குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,-வாடினேன் வாடி வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி, மருவளர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே!!!-(மன்னு முடி தொப்பாரம் -திருமங்கை மன்னனுக்கு அசாதாரண திரு அபிஷேகம்)

உரை களித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல், உருக வைத்த மனம் ஒழித்து உலகளந்த நம்பி மேல், குறையை வைத்து, மடல் எடுத்த குறையலாலி திருமணங்கொல்லை தன்னில்,வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,

மறை உரைத்த மந்திரத்தை, மால் உரைக்க அவன் முனே, மதி ஒடுக்கி, மணம் அடக்கி,வாய் புதைத்து ஒன்றலார்,கரை குளித்த வேல் அணைத்து நின்ற இந்த நிலைமை,என் கண்ணை விட்டு அகன்றிடாது

கலியன் ஆன ஆனையே!!! காதும் சொரிமுத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை தாளினையும், தனிற்றிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப்போல, என் ஆணை ஒப்பார் இல்லையே!!!!

வேல் அணைத்த மார்பும், விலங்கு திருவெட்டெழுத்தை மால் உரைக்க, தாழ்த்த வளர்செவியும் தாளினை தண்டையும் வீரக் கழலும், தார்க் கலியன் நன்முகமும் கண்டு களிக்கும் என் கண்.)

(இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.)

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]

ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான் வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின் எட்டெழுத்தும் பெற்ற இடம்.

(ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.)

இப்படி சில காலம் சென்ற பின்பு –
கலி தோஷத்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான திவ்ய பிரபந்தங்கள் லுப்தமாய் –
பஹூ காலம்  அத்யயந அத்யாபநங்கள் இன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வாரும் அத்யயன உத்சவத்துக்கு கோயில் ஏற எழுந்து அருளாமல் இருக்க –

இப்படி சில காலம் சென்றவாறே -ஸ்ரீ மன் நாதமுனிகள்( ஸ்ரீ மன் நாதமுனிகள் திருவவதாரம் 823-ஆனி அனுஷம்) -ஸ்ரீ வேத வியாச பகவான் லோகத்திலே திரோஹிதங்களான
வேதங்களை உத்தரித்தால் போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை உத்தரிப்பதாக திரு உள்ளமாய்
ஸ்ரீ திரு நகரி எழுந்து அருள –

ஸ்ரீ மதுரகவி சம்ப்ரதாயஸ்தரான ஸ்ரீ பராங்குச நம்பி சந்நிதியிலே –
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்கிற ஸ்ரீ ஆழ்வார் விஷயமான திவ்ய பிரபந்தத்தை லபித்து-
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திரு வாய் மொழிக்குப் பண்ணின அநுக்ரஹ அதிசயத்தை கேட்டருளி
மிகவும் திரு உள்ளம் உகந்து -யோக தசையிலே ஸ்ரீ ஆழ்வாரை சாஷாத்கரித்து –

தந் முகமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும் -ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த (23)திவ்ய பிரபந்தங்களையும் லபித்து(பவிஷ்யத் ஆச்சயர்யரான எம்பெருமானார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் கொடுத்து அருளி) -க்ருதார்த்தராய் –
ஸ்வ சிஷ்ய ப்ர சிஷ்ய  முகத்தாலே அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அத்யயந அத்யாபனங்களைப் பண்ணுவித்து –
முன்பு போலே அத்யயன உத்சவத்தில் ஸ்ரீ ஆழ்வார் கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கும்
வேத பாராயணத்தோடு  ஸ்ரீ திருவாய் மொழி  அநு சந்தானம் நடக்கும் படி பண்ணி –

ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திருவாய் மொழிக்கு வேத சாம்யத்தை அநு க்ரஹிக்கையாலே –
வேதங்களுக்கு உபக்ரம உத்சர்ஜந கால நியமம் உண்டானாப் போலே –

த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் – என்று ஓதப்பட்ட திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழிக்கும்
திருக் கார்த்திகை திவ்ய மஹோத் சவத்திலே  உத்சர்ஜன   காலம் என்றும்
மார்கழி மாதத்திலே அத்யயன உத்சவத்திலே உபக்ரம காலம் என்றும்
திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியை திருக் கார்த்திகை உத்சர்ஜனம் பண்ணி –
உபக்ரம காலமான அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் கேட்டருளும்  அளவும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சினால் நினைந்து வாயினால்   மொழியாமல் இருக்கும் படிக்கும்
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிரதி வருஷம் திரு முகப் பட்டயம் பிரசாதிக்கும் படியும்

அன்று திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் தாம் சாத்திக் கொண்ட எண்ணெய் காப்பு
சேஷத்தை ஸ்ரீ திரு மங்கை மன்னன் திரு மிடற்றிலே சாத்துவித்து அவர் தம்மைப் பாடின இளைப்பு  எல்லாம்
தீரும்படிப் பண்ணின கட்டளையை பிரதி சம்வத்சரம் திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே
ஸ்ரீ பெரிய பெருமாள் சாத்திக் களைந்த எண்ணெய்  சேஷத்தை ஸ்ரீ ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான
ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மிடற்றிலே சாத்தி
அந்த சேஷத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்கள் தங்கள் திரு மிடற்றிலே சாத்தும் படிக்கும் –

ருக்காதி பேதேன சதுர் விதமான வேதங்களுக்கு சீஷாதிகளும் இதிஹாச புராணங்களும் அங்க உப அங்கங்களாக இருக்குமா போலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நாலு பிரபந்தங்களும் -நாலு வேத ஸ்தாநே  யாகவும்
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் மற்றை ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த
பிரபந்தங்களும் அங்க உப அங்கங்கள் ஆகவும் –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)-சூரணை-43-)

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது )

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது .)

ஸ்ரீ திருவாய் மொழி தானும் த்வ்யார்த்த விவரணம் என்றும்

ஸ்ரீ திருப் பல்லாண்டு  முதல் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -ஸ்ரீ பெருமாள் திருமொழி –
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் -ஸ்ரீ திருமாலை -ஸ்ரீ திருப் பள்ளி எழிச்சி -ஸ்ரீ அமலனாதி பிரான்
ஆக இப் பிரபந்தங்கள் (ஒன்பதும்)ப்ராயேண பிரணாவர்த்த பிரகாசகம் ஆகையாலே முதல் ஆயிரம் -என்றும் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் சப்தார்த்த விவரணம் -என்றும்

ஸ்ரீ திருமொழி -ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அருளிச் செய்த ஸ்ரீ திருவந்தாதி மூன்றும் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை -ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பெரிய திருமடல் (ஆகிய பதின்மூன்றும்)-ஸ்ரீ மந்திர சேஷ விவரணம்  என்றும்

இதில் இதில் ஸ்ரீ திருவந்தாதி மூன்று முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக சப்த ரச பிரதானமாய் இருக்கையாலே -ஸ்ரீ இயற்பா -என்றும்

இப்படி இருபத்து மூன்று பிரபந்தங்களும் திருமந்த்ரார்த்த விவரணம் என்றும்

இப் பிரபந்தங்களிலே ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவத்துக்கு விஷயமாய்-  ஸ்ரீ எம்பெருமான்
விரும்பி வர்த்திக்கிற ஸ்தலங்கள்- ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருப் பாற் கடல் தொடக்கமான நூற்று எட்டு -என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி ஒழிந்த பிரபந்தங்கள்- ஸ்ரீ திருப் பல்லாண்டு முதலாக ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் அளவாக
அத்யயன உத்சவத்துக்கு முன்பு பத்து நாளாக பெரிய பெருமாள் கேட்டு அருளும்படிக்கும்

ஸ்ரீ திருவந்தாதி முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக அத்யயன உத்சவ அனந்தரம் மற்றை நாள் கேட்டு அருளும் படிக்கும் –

ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் -ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ மத் மதுர கவிகள் ஆகப் பன்னிரண்டு திரு நாமங்களும்
அருளிச் செய்த இருபத்து மூன்று பிரபந்தங்களில் பாட்டு நாலாயிரம் -என்றும் –

பிராமணனுக்கு வேத வேதாந்தங்கள் -இதிஹாச புராணங்கள் அதிகரிக்க வேண்டுமா போலே
பிரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ திவ்ய பிரபந்தங்கள் அதிகரிக்க வேணும் என்றும் –

இதில் ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சி எம்பெருமானை திருப் பள்ளி யுணர்த்து வதாகையாலே –
ப்ராத காலத்தில் நித்யம் அனுசந்தேயம் என்றும்

எப்போதும் பிரபந்த அனுசந்தானத்துக்கு முன்பு மங்களா சாசன பரமான ஸ்ரீ திருப் பல்லாண்டு அனுசந்தேயம் என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தானத்துக்கு பூர்வ  உத்தரங்களிலே ஸ்ரீ ஆழ்வார் விஷயமான
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் என்றும்

இப்படி ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திலே அநேக ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை நியமித்த நியமனம் –

(திருநெடும் தாண்டகம் முதலில்
முதல் நாள் திருப் பல்லாண்டு தொடங்கி 2-9-வரை முதல் நாள்
அடுத்த நாள் 2-10/3-1/அபிநயம் பிடித்து -5-3 வரை
மூன்றாம் நாள் -5-4 சென்னியோங்கு பதிகம் -7 பாசுரம் வியாக்யானம் -பின்பு ஸ்ரீ சடகோபன் அரையர் ஸ்வாமி ஸாதிப்பார் –
திருப்பாவை -நாச்சியார் திருமொழி பாசுரங்கள்
நான்காம் திருநாள் -இரண்டு அரையர் சேவை -நாச்சியார் திருமொழி -பெருமாள் திருமொழி -திருச்சந்த வருத்தம் -கம்ச வதம்
ஐந்தாம் நாள் திருமாலை -6 வரை -ஆராதனம் முடிந்து மீதம் பாசுரங்கள்
ஆறாம் நாள் கண்ணி நுண் சிறுத்தாம்பு-பின்பு திருமொழித் திருநாள் –முதல் 220 பாசுரங்கள்
ஏழாம் திருநாள் -மீண்டும் இரண்டு அரையர் சேவை – திருமொழி சேவை -அம்ருத மதனம் -பண்டை நாள் -திருவரங்கம் பாசுரம் -தெள்ளியீர் -8-2- அபிநயம்
முத்துக்குறி அபிநயம்
தசமி நாச்சியார் திருக்கோலம் -இரண்டு அரையர் சேவை -ராவண வதம் அபிநயம்
11 நாள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் -திருவாய் மொழி திருநாள்
விராஜா நதி மூன்றாம் திருச்சுற்று
ஒவ்வொரு நாளும் 100-பாசுரங்கள் அபிநயமும் உண்டு -ஒவ்வொரு நாளும்
ஏழாம் நாள் கங்குலும் பகலும் -அபிநயம் -பராங்குச நாயகி திருக்கோலம்
திருகைத்தல சேவை நடக்கும் -ஹிரண்யவதம்
எட்டாம் நாள் வேடுபரி -நெடுமாற்க்கு அடிமை அபிநயம்
ஒன்பதாம் நாள் -காலை மாலை கமல மலரிட்டு அபிநயம்
பத்தாம் நாள் -தாள தாமரை அபிநயம் -திருவடி தொழுதல் இறுதி 20 பாசுரம் -நம்மாழ்வாரைத் திரும்பிப் பெறுதல்
அடுத்த நாள் காலையில் தான் தீர்த்தம் ப்ரஸாதம் ஆகும்
பின்பு இயற்பா 21- நாள்)

—————

வைகுண்ட ஏகாதசி
ஆழ்வார் திருவடி தொழுதல்
நம்மாழ்வார் மோட்ச வைபவம்

   பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

     மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

     ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

   அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

அரங்கனின் திருவோலை

     திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

    நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

   நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி
ஆழ்வார் திருவடி தொழுதல்
நம்மாழ்வார் மோட்ச வைபவம்

   பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.

     மோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.

     ராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

   அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்! இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

அரங்கனின் திருவோலை

     திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

    நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

ஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.

   நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

திருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான்! இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.

     11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங் களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக் கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திரு முகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, ‘ முனியே..! நான்முகனே..’ என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.

     நம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்!

   அரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப் பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்!

      இராப்பத்தின் நிறை நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு  வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

அரங்கன் ஆழ்வாரைத் திருப்பித் தரும் வைபவம்

      இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.

       இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

       அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே

 என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே

        என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

    நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.
நனி சிறந்த அறிவு பெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகை புகுந்தனரென்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

        இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

       என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது.

     பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.

நம்மாழ்வார் மோட்சம் (திருத்துழாயால் ஆழ்வார் மூடப்படல்)

 சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதீயோ!
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

      என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

நம்மாழ்வாரின் பிறபெயர்கள்

  1. சடகோபன்
  2. மாறன்
  3. காரிமாறன்
  4. பராங்குசன்
  5. வகுளாபரணன்
  6. குருகைப்பிரான்
  7. குருகூர் நம்பி
  8. திருவாய்மொழி பெருமாள்
  9. பெருநல்துறைவன்
  10. குமரி துறைவன்
  11. பவரோக பண்டிதன்
  12. முனி வேந்து
  13. பரப்ரம்ம யோகி
  14. நாவலன் பெருமாள்
  15. ஞான தேசிகன்
  16. ஞான பிரான்
  17. தொண்டர் பிரான்
  18. நாவீரர்
  19. திருநாவீறு உடையபிரான்
  20. உதய பாஸ்கரர்
  21. வகுள பூஷண பாஸ்கரர்
  22. ஞானத் தமிழுக்கு அரசு
  23. ஞானத் தமிழ் கடல்
  24. மெய் ஞானக் கவி
  25. தெய்வ ஞானக் கவி
  26. தெய்வ ஞான செம்மல்
  27. நாவலர் பெருமாள்
  28. பாவலர் தம்பிரான்
  29. வினவாது உணர்ந்த விரகர்
  30. குழந்தை முனி
  31. ஸ்ரீவைணவக் குலபதி
  32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
  33. மணிவல்லி
  34. பெரியன்

16.11.நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்

1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்

ஆழ்வார்களுள் அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.

மற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால்

மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.

இதில்,

பூதத்தாழ்வாரை தலையாகவும்,

பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,

பெரியாழ்வாரை முகமாகவும்,

திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,

குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,

தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும்,

திருமங்கையாழ்வாரை வயிறாகவும்,

மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு இருக்கிறார்.

இதிஹாச புராணங்களில் நம்மாழ்வார் அவதாரம் பற்றிய சிறு குறிப்புகள் :

ப்ரம்மாண்ட புராணம் :  ஸ்ரீமந்நாராயணன் ப்ரம்மாவிடம், இருபத்தெட்டாவது கலியுகத்தில் “சடகோபர்” என்று திருநாமம் கொண்டு, நானே அவதரிக்கப் போகிறேன்; அப்போது, வடமொழி மறைகளைப் (வேதங்கள்) போல, தமிழ் மறைகளை (திவ்யப்ரபந்தங்கள்) வெளியிடுவேன். அத்தமிழ் மறைகளாலே கலியுகத்தில் மக்கள் பெருவாழ்வு வாழ்ந்து முக்தி அடைவார்கள் என்று தெரிவித்தான்.  

இதைப்போல, விஷ்ணு-ரிஷி ஸம்வாதம் (பேசிக்கொள்வது), நாராயண-அகஸ்த்ய ஸம்வாதம் ஆகியவைகளிலும் பெருமான் தான் “சடகோபராக” அவதரிக்கப் போவதை அறிவித்தான்.  மேலும், இதிஹாசத்தில் மேன்மையானதான ஸ்ரீராமாயணம் “தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா” – தெற்கு, திக்கு யாவர்க்கும் புகலிடம், வேதம் தமிழ் செய்யவிருக்கும் முனியாலே என்றும் குறிப்பு உரைத்தது.  

ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தத்தில், கலியுகத்தில் நாராயணனே பரம்பொருள் என்ற உறுதியான பொருளை வெளியிட, தமிழகத்தில் தாம்ரபரணி நதிக்கரையில், நம்மாழ்வாராக அவதரிக்கப் போகிறார் என்று குறிப்பு உரைத்தது.  

விருத்தபாத்ம புராணம், கலியுக ஆரம்பத்தில், வைகாசி விசாக நக்ஷரத்தில் விஷ்ணு பக்தியை நிலைநிறுத்தும் வகையில், சேனை முதலியாருடைய (விஸ்வக்சேனர்) அம்சமான ஒருவர் அவதரிக்கப் போகிறார் என்று உரைத்தது.  

மார்க்கண்டேய புராணம் நான்கு வேதங்களின் அம்சமாக (சாரமாக) நான்கு திவ்யப்ரபந்தங்களை  அருள சடகோப முனிவர் தோன்றப் போகிறார் என்றும், ஸாம வேதத்தின் ஆயிரம்  சாகைகளைத் தமிழ்ப்பாசுரம் வடிவமாக (திருவாய்மொழி) அருளிச்செய்யப் போகிறார் என்றும் உரைத்தது.  

யஜுர் வேதம் : யஜுர் வேதம் ப்ராஹ்மணத்தில, காடகமென்ற பகுதியில், “பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்பிர் ப்ரஹமசர்யமுவாஸ” என்ற ஒரு உபாக்யானம் உள்ளது.  அதில், பரத்வாஜ மஹரிஷி அனைத்து வேதங்களையும் குறைவின்றிக் கற்க விரும்பி, அதற்குத் தேவையான ஆயுளைப் பெற இந்திரனிடம் யாசித்துப் பெற்றார்.  இந்திரன், முன்னூறு ஆண்டு கழிந்து தளர்ந்த சரீரத்தை உடைய முனிவரை மறுபடியும் கண்டு,  ஒரு நூறு ஆண்டு வாழும் ஆயுளைத் தந்தால் என்ன செய்வீர்? என்றான்.  முனிவர் அதற்கு, மற்ற வேதங்களை அறிந்துகொள்ள முயல்வேன் என்றார்.  உடனே இந்திரன், வேதங்களுக்கு அளவே இல்லை. .அவை அனைத்தையும் ஒருவன் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள முடியாது என்றான்.  இதனால் மிகவும் வருத்தம் கொண்டார் பரத்வாஜர்.  இந்திரன் அவரைத் தேற்றி, “முனிவரே! கவலை வேண்டாம்; திருவாய்மொழியாகிய ஸாவித்ர வித்யையை உபதேசிக்கிறேன் என்று சொல்லி, அதன்படி உபதேசித்து, வேதங்கள் அனைத்திலும் உள்ளதை இதன்மூலமாக அறியலாம் என்றான்.  

ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்தார் என்பதனை, “அருளினான் அவ்வருமறையின் பொருள்” (அருமறை : நான்கு வேதங்களின் அர்த்தங்களை, தனது திருவாய்மொழி என்னும் திவ்யப் பிரபந்தத்தின் மூலம் பாடியவர்) என்று நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக் கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரும், “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று ஸ்ரீமந் நாதமுனிகளும், நம்முடைய “முதல் குலபதி” என்று ஸ்ரீ ஆளவந்தாரும், “சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன்” என்று மணவாள மாமுனிகளும், “வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே” என்று அப்பிள்ளையும் கொண்டாடியுள்ளனர்.  “எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வந்த சடகோபர்” (இராமாநுச நூற்றந்தாதி, 18)  என்று திருவரங்கத்தமுதனார் என்னும் வைணவ ஆசார்யர் பாடியுள்ளார்.  அதாவது, “அணுகுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் கடினமான வடமொழி வேதங்களை, இனிய தமிழ்மொழிகொண்டு திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களால் அறிவிக்க வந்தவர் என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார்.  

மாறன் பணித்த தமிழ் மறை” என்று மணவாள மாமுனிகள் என்னும் வைணவ ஆசார்யர், “நம்மாழ்வார்” அருளிய திவ்யப் பிரபந்தங்களைப்  போற்றுகிறார்.  “மாறன்” என்பது நம்மாழ்வாரின் இன்னொரு திருநாமம் (பெயர்). “வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே” என்பது இவ்வாழ்வாருக்கு அமைந்துள்ள பல்லாண்டு  (புகழ் பாடும் துதி) ஆகும்

திருவிருத்தம்” (100 பாசுரங்கள்) – “ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே” …”ருக் வேத சாரம்”.

திருவாசிரியம்” (ஏழு பாசுரங்கள்) – “ஆசிரியம் ஏழு பாட்டு அளித்த பிரான் வாழியே” ….”யஜுர்வேத சாரம்”.

ஆசிரியப் பாக்களால் அமைந்ததால், யாப்பின் அடிப்படையில் “திருவாசிரியம்” என்று பெயர் பெற்றது.  பக்தி இலக்கியங்களில் ஆசிரிய யாப்பினால் பாடப்பெற்று, பாடப்பெற்ற யாப்பினாலேயே பெயர் பெற்ற முதல் நூல் “திருவாசிரியம்” ஆகும்.   இது ஒன்பது முதல் பதினாறு அடி வரையுள்ள ஆசிரியப்பாக்களால் ஆனது.  அந்தாதி அமைப்புடையது.   வடமொழி மறைகளில் (வேதங்கள்) யஜுர் வேதம் மிகப்பெரியது ஆகும்.  இது ஏழு காண்டங்களைக் கொண்டது.  அவற்றின் சாரத்தை இவ்வாழ்வார் ஏழு ஆசிரியப் பாக்களில் அருளிச்செய்துள்ளார்.  பிரபந்தம் சிறிய அளவில் இருந்தாலும், பொருளில் (அர்த்த விஷயங்கள்) மிகப்பெரியது.  சொற் சுவையும், பொருட் சுவையும், பக்திச் சுவையும் நிறைந்த சிறந்த பிரபந்தமாகும் இது.  யஜுர் வேத மந்திரங்கள் வசன (உரை) நடையில் அமைந்தவை.  அதை ஒட்டி, இப்பிரபந்தமும் அப்படியே அமைந்துள்ளது.  யாகத்தின் நடைமுறையை விவரிப்பது யஜுர் வேதம்; யாகத்தினால் ஆராதிக்கப்படும் எம்பெருமானை அனுபவிப்பது திருவாசிரியம்.  

பெரிய திருவந்தாதி” – “ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே” 

 இப்பிரபந்தத்தின் பொருள் (அர்த்த விஷயங்கள்) சிறப்பினைக் கருதி இது பெரிய திருவந்தாதி என்று பெயர் பெற்றது.  பெருமை பொருந்திய அந்தாதி என்பதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது.  மேலும், இதில் ஆழ்வார் பெருமானை நோக்கி, “யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?” –  அதாவது பெருமானே! நீ பெரியவன்; உன்னைப் பாடுவதால் நானும் பெரியவன் என்பதனை யார் அறிவார்   என்று அருளிச் செய்துள்ளதால் இது பெரிய திருவந்தாதி என்று போற்றப்படுகிறது.  மேலும் ஆழ்வார்களில் தலைவராக இருப்பவர் நம்மாழ்வார்; ஆக அவரைப் பெரியவர் என்று கொண்டு, அவர் பாடிய இந்த அந்தாதிப் பிரபந்தத்தை பெரிய திருவந்தாதி என்று அழைத்தனர் என்றும் கூறுவர்.

இலகுதிருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே”

 மற்ற ஆழ்வார்கள் அனைவராலும் பாடப்பெற்ற திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவ்வாழ்வாரே அருளிச்செய்த முதல் மூன்று திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவரால் பாடப்பெற்ற “திருவாய்மொழி”  என்னும் பிரபந்தம்தான் மிகவும் முக்கியமானது.  கண்ணபிரான் கீதையில் “ச்ருதிஸ்ம்ருதிர்  மமைவாஞ்ஞா” என்கிறார் – அதனால் வேதம் ஆணை (ஸத்யம்) என்பதும் மாறுபாடு இல்லாதது என்றும் பெருமைபெறுகிறது.  அதைப்போலவே, 1102 பாடல்களைக் கொண்ட திருவாய்மொழியும் “ஆணை ஆயிரம், ஏதமில் ஆயிரம், பொய்யில் பாடல், முந்தை ஆயிரம், அழிவில்லா ஆயிரம்” என்றபடி மேம்பாடு உடையது.  அநாதியான (மிகவும் பழமையான) வேதங்களை நாராயணன் நான்முகனுக்கு ஓதி வெளியிட்டான்  அதுபோலவே, நித்தியமான தமிழ் வேதமான திருவாய்மொழியை பகவான் ஆழ்வாருக்கு ஓதினான்.  ஆதலால் இதனை ஆழ்வார் அருளினார் என்கிறோம்.  ருக்வேதம் ஸ்வர விவரணமாய் கானரூபமான ஸாமவேதமாயிற்று.  அது போலவே ரிக்வேத சாரமான திருவிருத்தம் இசையோடு கூடிப்பரவி, திருவாய்மொழி (சாமவேத சாரம்) ஆயிற்று.  திருவாய்மொழியின் ஒவ்வொரு பதங்களும் திருமால் பெருமையையே பேசுகிறது.  

 ஆழ்வார் எம்பெருமானை ஞானக்கண்ணால் கண்டுகளித்தார்.  அக்களிப்பினால் சொல்மாலைகள் பாடினார்.  ஒவ்வொரு பாசுரமும் இறைவனுக்கு அணிவித்த மாலை என்று கொள்ளுதலே பொருத்தமாகும்.  “அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்” என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார் மதுரகவிகள்.  அதாவது, உலகோர் அனைவரும் எம்பெருமானையே உபாயமாகப் பற்றி உய்யவேண்டும் என்று பேராவல் கொண்டு 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியை அருளிச்செய்தார் நம்மாழ்வார் என்று பொருள்.  

“என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கிருந்து தமிழ்நூல் இவை மொழிந்து” என்றும், “பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி”  என்றும் பாடி, பகவானே தம் உள்ளத்திலிருந்து பாடல்களைப் பாடுகிறான் என்பது ஆழ்வாரது கூற்று (கருத்து).  

 பகவானது திருவருளால் ஆழ்வார் தாம் பெற்ற நலத்தை ஒவ்வொரு பதிகத்திலும் விளக்குகிறார்.  “பதிகம்” என்றால், பத்து பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.  இதைப்போல ஒரு நூறு (100) பதிகங்களைக் கொண்டது “திருவாய்மொழி”ப் பிரபந்தம்.  ஒவ்வொரு பதிகமும் பகவானின் விசேஷ குணங்களை அனுபவிப்பதாக இருக்கும்.  முதலில் இவர் மதிநலம் (தெளிந்த ஞானம்) பெற்றார்.  பகவானது அருளால் தாம் கண்ட தத்வத்தை (உண்மையை) மறவாமை நேர்ந்தது; இந்த ஞானத்தின் விளைவாக இவர் தேறியது; தாம் பெரும் மோக்ஷம் பெருமானது அருளாலேயே – அவனது கருணையாலேயே என்பதை உறுதிசெய்து பாடியுள்ளார் ஆழ்வார்.  பகவானுக்கு எல்லா காலத்திலும் எல்லா நிலைகளிலும், எவ்வகைகளிலும் அடிமை செய்வது தமது பேறென்று விரும்பினார்.   தாம் கோரும் (விண்ணப்பிக்கும்) அடிமைக்கு விரோதமான பிறவியை இவர் கடிந்தார் (வெறுத்தார்).  பின்பு பகவானை அனுபவிப்பதற்குப் பெரியதோர் காதல் கொண்டார்  இவனது திருவடிகளில் பணிந்து இவனே உபாயம் (வழி) என்று துணிந்திருந்தார்.  

 நம்மாழ்வார் “வேதம் தமிழ்செய்த மாறன்” என்று மணவாள மாமுனிகளால் போற்றப்படுகிறார்.  அவர் அருளிச்செய்துள்ள திருவாய்மொழியானது “தமிழ்வேதம்” என்றும் போற்றப்படுகிறது.  இந்த வேதஸமான (வேதத்திற்கு சமமான) திருவாய்மொழி அவ்வேதத்தை வெளியிட்டது எவ்வாறு என்றால், 

 “ஸத்யம் ஞானம் அநந்தம் பிரம்ம” என்கிற வாக்கியத்தை “உணர்முழுநலம்” என்றும், “பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் சாச்வதம் சிவமச்சுதம் நாராயணம்” என்கிற வாக்கியத்தை “நாரணன் முழு ஏழுலகுக்கும் நாதன்” என்றும், “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன்” என்றும், “சக்ஷூர் தேவநாம் உதமர்த்யாதாம்” என்கிற வாக்கியத்தை “கண்ணானாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” என்றும், “ஹ்ரீச்சதே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ” என்கிற வாக்கியத்தை “தேவிமாராவார் திருமகள் பூமி” என்றும் தம்முடைய செஞ்சொற்களாலே வேதத்தை தமிழ்படுத்தி அருளினார் நம்மாழ்வார்.  

 திருவாய்மொழியின் பயன்:   எம்பெருமானார் (இராமாநுசர்) இவ்வுலகோருக்கு உபதேசம் செய்தவைகளுள் “மிகச்சிறந்த செல்வமும், தந்தையும், தாயும் குருவும் தெய்வமும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியே ஆகும்” என்பதே சிறப்புடையதாய் இருக்கிறது.  மாறனின் செந்தமிழ் ஆரணம் பெருமையுடையது.  பரபக்தி, பரஞ்ஞானம், பரமபக்தி முதலான நல்லியல்புகள் உடையது திருவாய்மொழி.  மோக்ஷத்தை அடையும் வழியைக் காட்டுவது இது.  திருவாய்மொழியை ஒதுபவரை தவறாது காக்கும் தன்மையுடையது திருவாய்மொழி.  இதனை நன்கு உணர்ந்து கற்பவர் வைணவர் ஆவார். 

மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

மாறன் சடகோபனின் தந்தை காரி மாறன். இவர் பாண்டியர் ஆட்சியில் சிற்றரசராக திருக்குருகூர் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்தவர். அதனால் பாண்டியர்களின்
“மாறன்” எனும் அடைமொழியோடு வாழ்ந்தார். ஆழ்வாரும் தம் தமிழருவிப் பாசுரங்களில் சில பாசுரங்களில் தன்னை  சடகோபன் மாறன் என்றே கூறிக்கொள்கிறார்.
(திருவாய்மொழி2-6-11, 4-5-10, 4-7-11, 4-10-10, 5-2-11,)

————

வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப் புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே”–என்றார் கம்பர்.

———–

”சேமம் குருகையோ? செய்ய திருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம் துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ? உளவோ பெருமான் உனக்கு“.

———-

பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்

தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்

காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்

பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”–நம்மாழ்வாரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி

ஸ்ரீ மணவாளமாமுனிகளும், நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து, “உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள், உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? உண்டோ,திருவாய்மொழிக்கொப்பு ? தென்குருகைக்குண்டோ ஒருபார் தனிலொக்குமூர்?” என்று நம்மாழ்வார் பிறந்த நட்சத்திர தினமான வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும், அவர் கொடுத்த திருவாய்மொழியையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார்.

-------------------------------

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​-(ஶ்ரீ பெரியாழ்வார் திருவம்சத்தவரான ஶ்ரீ வேதப்பிரான் பட்டர் கேசவாச்சாரியார் அருளியது ~

September 20, 2024

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே |
|” [“கோதாஸ்துதி” _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.]

(ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத்தருவினைச் சுற்றிப்
படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய
பூமிப் பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல்,
மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)

———–

ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​

(ஶ்ரீபெரீயாழ்வார் திருவம்சத்தவரான வேதப்பிரான் பட்டர் கேசவாச்சாரியார் அருளியது ~ கோதா பரிணய சம்பு இயற்றியவர்)

ஓம் ஸ்ரீ கோதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நாயக்யை நம:
ஓம் விஷ்ணு சித்தாத்மஜாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் கோபீ வேஷ தராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பூஸுதாயை நம:
ஓம் போகதாயிஞ்யை நம:
ஓம் துளஸீ வந ஸஞ்ஜாதாயை நம:
ஓம் ஸ்ரீ தந்வி புர வாஸின்யை நம:

ஓம் பட்டநாத ப்ரியகர்யை நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம:
ஓம் ஆமுக்த மால்யதாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ரங்கநாத ப்ரியாயை நம:
ஓம் வராயை நம:
ஓம் விஶ்வம் பராயை நம:
ஓம் கலாலாபாயை நம:
ஓம் யதிராஜ ஸஹோதர்யை நம:
ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம:

ஓம் ஸுபகாயை நம:
ஓம் துர்லப ஸ்ரீ ஸுலக்ஷணாயை நம:
ஓம் லக்ஷ்மீ ப்ரிய ஸக்யை நம:
ஓம் ஶ்யாமாயை நம:
ஓம் தயாஞ்சித த்ருகஞ்சலாய நம:
ஓம் பல்குண்யாவிர்பவாயை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் தநுர்மாஸ க்ருத வ்ருதாயை நம:
ஓம் ஸம்பகாசோக புன்னாகமாலதி விலஸத்கசாயை நம:
ஓம் ஆகார த்ரய ஸம்பந்நாயை நம:

ஓம் நாராயண பதாஶ்ரிதாயை நம:
ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீ மந்தர ராஜஸ்தித மநோ ரதாயை நம:
ஓம் மோக்ஷ ப்ரதான நிபுணாயை நம:
ஓம் மனுரத்னாதி தேவதாயை நம:
ஓம் ப்ராம்ஹண்யை நம:
ஓம் லோக ஜனன்யை நம:
ஓம் லீலா மாநுஷ ரூபிண்யை நம:
ஓம் ப்ரும்மஞ்ஞான ப்ரதாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம:

ஓம் மஹாபதி வ்ருதாயை நம:
ஓம் விஷ்ணு குண கீர்த்தன லோலுபாயை நம:
ஓம் ப்ரபந்நார்த்திஹாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் வேதஸென த விஹாரிண்யை நம:
ஓம் ஸ்ரீ ரங்கநாத மாணிக்ய மஞ்சர்யை நம:
ஓம் மஞ்சு பாஷிண்யை நம:
ஓம் பத்ம ப்ரியாயை நம:
ஓம் பத்ம ஹஸ்தாயை நம:
ஓம் வேதாந்த த்வய போதின்யை நம:

ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் ஸ்ரீ ஜனார்தந தீபிகாயை நம:
ஓம் ஸுகந்தாவயவாயை நம:
ஓம் சாருரங்க மங்கள தீபிகாயை நம:
ஓம் த்வஜவஜராங்குசாப்ஜாங்க ம்ருது பாதக லாஞ்சிதாயை நம:
ஓம் தராகாகார நகராயை நம:
ஓம் ப்ரவாள ம்ருதுளாங்குள்யை நம:
ஓம் கூர்மோபமேய பாதோர்த்வ பாகாயை நம:

ஓம் ஶோபந பார்ஷ்ணிகாயை நம:
ஓம் வேதார்த்த பாவ தத்வக்ஞாயை நம:
ஓம் லோகா ராத்யாங்கரி பங்கஜாயை நம:
ஓம் ஆநந்த புத்புதாகார ஸுகுல்பாயை நம:
ஓம் பரமாம்ஸகாயை நம:
ஓம் அதுலப்ரதிபா பாஸ்வதங்குளீ யக பூஷிதாயை நம:
ஓம் மீந கேதந தூணீரசாருஜங்கா விராஜிதாயை நம:
ஓம் குப்ஜ ஜாநுத்வயாட்யாயை நம:
ஓம் விஶால ஜகநாயை நம:
ஓம் மணி மேகலாயை நம:

ஓம் ஆநந்த ஸாகரா வர்த கம்பீராம் போஜநாபிகாயை நம:
ஓம் பாஸ்வத வளித்ரகாயை நம:
ஓம் சாரு பூர்ண லாவண்ய ஸம்யுதாயை நம:
ஓம் நவவல்லீரோம ராஜ்யை நம:
ஓம் ஸுதா கும்பாயித ஸ்தன்யை நம:
ஓம் கல்பஶாகாநிப புஜாயை நம:
ஓம் கர்ண குண்டல காஞ்சிதாயை நம:
ஓம் ப்ரவாளாங்குளி விந்யஸத மஹாரத்னாங்குளீயகாயை நம:
ஓம் நவாருண ப்ரவாளாய பாணிதேச சமஞ்சிதாயை நம:
ஓம் கம்பு கண்ட்யை நம:
ஓம் ஸுஸுபுகாயை நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் குந்ததந்த யுஜே நம:
ஓம் காருண்ய ரஸ நிஷ்யந்த லோசந த்வய ஶாலிந்யை நம:
ஓம் கமநீய ப்ரபா பாஸ்வத் சாம்பேய நிபநாஸிகாயை நம:
ஓம் தர்ப்பணாகார விபுல கபோல த்வித யாஞ்சிதாயை நம:
ஓம் அநந்தார்க்க ப்ரகா ஶோத்யத் மணிதாடங்க ஶோபிதாயை நம:
ஓம் கோடி ஸூர்யாக் நிஸங்காஶ நாநா பூஷண பூஷிதாயை நம:
ஓம் ஸுகந்த வதநாயை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் அர்த்த சந்த்ர லலாடகாயை நம:

ஓம் பூர்ணசந்த்ராநநாயை நம:
ஓம் நீலகுடிலாளக ஶோபிதாயை நம:
ஓம் ஸெளந்தர்ய ஸீமா விலஸத் கஸ்தூரீ திலகோஜ்வலாயை நம:
ஓம் தகத் தகாய மாநோத்யத் மணி பூஷண ராஜிதாயை நம:
ஓம் ஜாஜ்வல்யமான ஸத்ரத்ந திவ்ய சூடாவதம்ஸகாயை நம:
ஓம் ஸூர்யசந்த்ராதி கல்யாண பூஷாணாஞ்சித வேணிகாயை நம:
ஓம் அத்யர்க்காநலதேதஸ்விமணி கஞ்சுக தாரிண்யை நம:
ஓம் ஸத்ரத்ந ஜால வித்யோதி வித்யுத் புஞ்ஜாபஸாடிகாயை நம:
ஓம் பரிபாஸ்வத் ரத்ந புஞ்ஜஸ்யூத ஸ்வர்ணநிசோளிகாயை நம:
ஓம் நாநாமணி கணா கீர்ண காஞ்ச நாங்கத பூஷிதாயை நம:

ஓம் குங்குமா கரு கஸ்தூரீ திவ்ய சந்தன சர்ச்சிதாயை நம:
ஓம் ஸ்வோசிதோஜ்வல வித்யோத விசித்ர சுப ஹாரிண்யை நம:
ஓம் அஸங்க்யேய ஸுக ஸ்பர்ச ஸர்வாவயவ பூஷணாயை நம:
ஓம் மல்லிகாபாரிஜாதாதி திவ்ய புஷ்ப ஸ்ருகஞ்சிதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நிலயாயை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் திவ்ய தேவி ஸுஸேவிதாயை நம:
ஓம் ஸ்ரீ மத்யை கோதாயை நம:

ஶ்ரீகோதா அஷ்டோத்ர சதநாமாவளி ஸம்பூர்ணம்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ முக்திநாத் (ஸ்ரீ சாளக்கிராமம்)-நேபாளம்

September 20, 2024

ஸ்ரீ முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

           ஸ்ரீ வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

         கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மற்றும் சிறிது துரம் நடந்து முக்திநாதரை தரிசிக்கலாம்

ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.–பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.–திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)

சாளக்கிராமம்-ஆழ்வார்கள்-மங்களாசாசனம்(12-பாசுரங்கள்)

முக்திநாத் பூமி நுழைவு வாசல்

60.1(a) முக்திநாத் பூமி நுழைவு வாசல்
  • ஜொம்ஸம்–கண்டகி நதியோரம் வேனில் பயணம்–பினனர் குதிரை சவாரி–சிறிது தூரம் நடை பயணம்முக்திநாத் தலம்.60.1(b) மலையடிவாரம்
  • முக்திநாத் கோவிலின் பாதை நுழைவு வாசல்- மூன்று கலசங்களோடு ஒரு அமைப்பு.60.1(c)
  • மூலஸ்தான விக்ரகங்கள்-பஞ்சலோகம்
  • எதிரே ஒருபுரம் ஹோமம்-மறுபுரம் விளக்குகள்60.1(d)
  • மூலவர் : ஸ்ரீமூர்த்தி ; தாயார்  : ஸ்ரீதேவி நாச்சியார்
    தீர்த்தம்  : சக்ர தீர்த்தம், கண்டகி நதி
    விமானம்  : ககன விமானம்.
  • கருவறைக்குள், ஸ்ரீசாளக்ராம நாராயணன், முக்தி நாராயணன்  ஸ்ரீதேவி, பூதேவியர்.
  • பெருமாளின் இடது பக்கம் ராமானுஜர், பிள்ளையார். பெருமாளின்  பக்கம் புத்தர் சிலை தாய்லாந்து பாணியில் கிரீடம்.
  • பெருமாளுக்கு வலது பக்கம் புத்தர் அமர்ந்த நிலையில்.  அவருக்கு முன்னால் இரண்டு உருவங்கள். நரநாராயணர்கள்.  இரண்டு சாளக்ராமங்கள்.60.1(e)
  • காலை இந்து முறை பூஜை, மாலை புத்த முறை பூஜை
  • ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது. பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா என்று அங்குள்ள பூசாரி கூறுகிறார். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது.
  • கோவில் உச்சியில் கலசம்!   வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். இரண்டு பக்கமும் செவ்வக  தீர்த்தக்குளங்கள். ஒன்று பாவங்கள் களைய, இன்னொன்று புண்ணியம் சேர்க்க! சரஸ்வதி குண்டம், லக்ஷ்மி குண்டம்  என்ற பெயரில் இருக்கும்.
60.1(f)

           கோயிலுக்கு வெளியே,கோவிலின் பின்புரம், சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம்.

60.1(g)

         மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந்தாலே இதில் நீராடலாம்.வெளியே அதிக சந்நிதிகள் இல்லை. இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன. சிறிய யாக சாலை உள்ளது.

60.1(h)

                கோயிலில் கூட்டமே இல்லை. இருநதாலும் அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் மொழியில் கூறிக்கொண்டே இருக்கிறார் , அர்த்த மண்டபம் போன்ற கட்டுமானங்கள் இல்லை.

தலபுராணம்

       முன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள்.

    ஜலந்திரன் சாகா  வரம் வேண்ட பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே! உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது! எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்” என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான்.

      ஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப் படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான்

       அவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை. நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரத தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார்.

        இதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது.

        அதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதா தன்மை மாசடைந்து விடுகிறது.

     உடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார்.

       பிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதா தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்” என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.

      அதைக்கேட்ட திருமால், பிருந்தை உன்னுடைய விருப்பத்தை அப்படியே ஏற்கிறேன். நேபாளம் முக்திநாத்) கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்.

சாளக்கிராமம்

      முக்திநாத்தில் பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று.

         ஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி!

      உன்னை, எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.

      அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள். உன் பதிவிரதா தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்!” என்று அருள்பாலித்தார்.

       அது முதற்கொண்டு துளசிச் செடியும் சாளக்கிராமமும் விஷ்ணு பூஜைக்கு உகந்ததாக ஆயிற்று.

இராமாநுஜ கூடம்-ராணிபௌவா-ஆஸ்ரமம்

      இவ்விடத்தில், முக்திநாத் பக்தர்கள், முன்கூட்டியே அறிவித்தால், தேவையான தங்கும் வசதி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

60.1(i)

       இங்கு மலைப்பகுதிகளில் சாளக்கிரமங்கள் என்று கூறப்படும் கற்கள் கிடைக்கின்றன.

       நைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும்புஷ்கரத்தில் நீராகவும்பத்ரிநாத்தில் மலையாகவும்ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரகமாகவும்முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம்.

      இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது  நல்லது.

       ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள்   நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்  என்பார்கள்.

60.2:கண்டகி ஆறு (நாராயணீ ஆறு)-கங்கா நதியின் துணை ஆறு: 

     காளி–கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறு, நாராயணீ ஆறு  நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாறை காளி-கண்டகி என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

     நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.
        இமயமலையின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் நுபின் இமயமலையின் உறைபனி ஆற்றிலிருந்து காளி-கண்டகி ஆறு உற்பத்தியாகி, பின் தென்மேற்காக முக்திநாத் வழியாக பாய்கிறது.

      பின் காளி-கண்டகி ஆறு கிழக்கே திரும்பி, மகாபாரத மலைத்தொடர்கள் வழியாக செல்லும் போது, கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

        காளி-கண்டகி ஆறு தெற்கில் திரும்புகையில், திரிசூலி எனும் துணை ஆறு, தேவிகாட் எனுமிடத்தில், காளி-கண்டகி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் சித்வான் சமவெளியில் பாய்ந்து, தென்மேற்கே கோவிந்தகாட் நகரத்தை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் போது காளி-கண்டகி, கண்டகி ஆறு எனப் பெயர்க் கொள்கிறது.

      இந்தியாவில் நுழைவதற்கு முன் நேபாளத்தின் காக்பெனி நகரத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு, இந்திய-நேபாள எல்லையில் பாய்கையில் பட்ச்னாடு மற்றும் சோன்கா ஆகிய துணை ஆறுகளுடன் சேர்ந்து சோன்பூரில் கூடுமிடத்தை, திரிவேணி சங்கமம் என்பர்.

    சோன்பூர்–பீகார்  கண்டகி ஆறு, கங்கா நதியில் சங்கமம்- “கங்கா-கண்டகி-கார்கா” நதிகள் சங்கமம்”-கஜேந்திர மோட்சம் 

     கண்டகி நதியில் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது. இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது. நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.

       ஐப்பசி-பௌர்ணமி தினம் மகிமை வாய்ந்தது. இந்தத் திருநாளையட்டி ராஜஸ்தானில் பிரம்மனை போற்றி கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவும் பீகார்- சோன்பூரில் நடைபெறும் சோன்பூர் மேளாவும் பிரசித்திப் பெற்ற விழாக்கள் ஆகும்.

       கங்கை, கண்டகி, கார்கா ஆகிய நதிகள் சூழ அமைந்திருக்கும் சோன்பூர் குறித்து பாகவத புராணம் விவரிக்கிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட இந்த தலம், தொன்மை வாய்ந்த விசால திரிகூட பர்வத சேத்திரத்தைச் சார்ந்த பகுதியாக திகழ்ந்ததாம்!

         இத்தகு பெருமைகள் மிக்க சோன்பூர், நதிக் கரையில் அழகுற அமைந்துள்ளது ஹரிஹரநாத் ஆலயம். கூம்பு வடிவ கோபுரத்துடன் மிக எளிமையாகத் திகழும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கென்று தனியே கருவறையும் கிடையாது. விசாலமான- வட்ட வடிவ முற்றம் போன்ற ஓர் இடத்தில், உயரமான பீடத்தில்… சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து ஹரிஹரனாகக் காட்சி தருகிறார்கள். சிலையின் வலப் பாகம்- ஹரியின் தோற்றம்; இடப் பாகம்- ஹரனின் தோற்றம். இந்த ஹரிஹர மூர்த்தத்துக்கு வில்வம் மற்றும் துளசி மாலைகள் சாத்தப்படுகின்றன.
      முற்காலத்தில் இந்தப் பகுதியில் அடிக்கடி எழும் சைவ-வைணவ தர்க்கங்கள் மற்றும் பிரச்னைகளைப் புறந்தள்ளி, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத் துவதற்காக இந்த ஆலயம் எழுப்பப் பட்டதாகக் கூறுவர். விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்ற ஸ்ரீராம-லட்சுமணர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் கூறுவர்.

      கோயிலுக்கு அருகில் உள்ளது ‘கோன்ஹரா’ படித்துறை (கோன்ஹரா என்றால் ‘தோல்வி யுற்றது யார்?’ என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்)! சண்டையில் தோற்றது யானையா, முதலையா? வாதத்தில் தோல்வி யுற்றது சைவமா, வைணவமா என்ற கேள்வி எழுந்த இடத்துக்கு கோன்ஹரா என்ற பெயர் பொருத்தம்.

      ஐப்பசி-பௌர்ணமி அன்று, இங்குள்ள கங்கையில் நீராடி, ஹரிஹரனை கங்கா தீர்த்தத்தால் அபிஷேகித்த பின்னரே சந்தை கூடுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிய யானைகள், வரிசையாக கோயிலை வலம் வந்து இறைவனை தரிசிக்கும் அழகே அழகு! இந்தத் திருநாளன்று துவங்கும் சோன்பூர் சந்தை, சுமார் 21 அல்லது 25 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில், சகலமும் கிடைக்குமாம்!

கந்தர்வன்-ஹூஹூ:முதலையாக

     திரிகூட பர்வதத்தின் நடுவே இருந்த நீர் நிலையில், தனது ஆசை நாயகிகளுடன் ஜலக்கிரீடையில் இருந்தான் கந்தர்வத் தலைவன் ஹூஹூ.

    அப்போது, ஒரு முனிவரும் அங்கு நீராடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹுஹு, நீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரது கால்களை வாரி விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர், ‘ஹுஹு’வை முதலையாகும்படி சபித்தார். தன் தவறு உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, ‘பரந்தாமனின் அருளால் விமோசனம் பெறுவாய்’ என்று கூறிச் சென்றார் முனிவர்.

இந்திரயுத்யும்னன்:யானையாக

     அதே வேளையில், விஷ்ணு பக்தனான இந்திரயுத்யும்னன், ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அப்போது, அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் வரவேற்கத் தவறினான். இதனால் கோபமுற்ற அகத்தியர், யானையாக மாறும்படி  அந்த மன்னனை சபித்தார். அவன் சாப விமோசனம் வேண்டவே, ‘பரந்தாமன் அருளால் விமோசனம் கிடைக்கும்!’ என்று அருளிச் சென்றார் அகத்தியர்.

     இதன்பின்னரே, படித்துறையில் யானை- முதலை சண்டையும் கஜேந்திர மோட்சமும் நிகழ்ந்ததாக இங்கே சொல்கிறார்கள்.

     ஸ்ரீசக்கரத்தால் அறுபட்ட முதலை, கந்தர்வனாக உருப்பெற்று சொர்க்கம் சென்றது. கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பரந்தாமன், மன்னனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

    இதையட்டியே ஹரிஹர்நாத் ஆலயமும், அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் தோன்றியதாகச் சொல்வர். கஜேந்திர மோட்சத்தை பறைசாற்றும் சிலை ஒன்றை, படித் துறைக்குச் செல்லும் வழியில் காணலாம்.

         ஐப்பசி பௌர்ணமியன்று, ‘கோன்ஹரா’ தீர்த்தக்கட்டம் அருகில் நடைபெறும் கஜேந்திர வழிபாடு, ஹரிஹர்நாத் திருவிழா மற்றும் சோன்பூர் மேளா ஆகிய விழாக்களைக் காணக் கண் கோடி வேண்டும்!

வரலாற்றில் கண்டகி ஆறு

      மகாபாரதத்தில் இதிகாசத்தில் கண்டகி ஆறு குறித்த செய்திகள் உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் சங்கச்சூடனை வதம் புரியும் படலத்தில் கண்டகி ஆறு குறித்த செய்தி உள்ளது.

     நேபாளத்தின் கண்டகி சமவெளியில், காளி-கண்டகி ஆறு பாயுமிடத்தில் சித்வான் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நேபாள நாட்டின் பெரிய தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும்.

      இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.

சித்வான் தேசியப் பூங்காவின் தெற்கு பக்கத்தில் வால்மீகி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

சாளக்கிராமங்கள்

      முக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

  • முற்றிலும் சிவப்பு நிற சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்-இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
  • சக்கர வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.
  • முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்’ என்பர்.
  • இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.
  • வட்ட வடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.
  • குடை வடிவ கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.
  • சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
  • சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.
  • நீல நிறம்—செல்வம், சுகம் (ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம்)
  • பச்சை—பலம் , தைரியம் (ஸ்ரீ நாரயண ஷேத்திரம்)
  • .வெண்மை—ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்)
  • கருப்பு—புகழ் , பெருமை (விஷ்ணு ஷேத்திரம்)
  • மஞ்சள் நிறம்— வாமன ஷேத்திரம்
  • பசும்பொன் (அ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்—ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்
  • சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .
  •       சாளக்கிராமத்தை பால் (அ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் ,அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும்-துண்டிக்கப்பட்டிருந்தாலும் (அ) விரிந்து போனதாய் இருந்தாலும்-சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை.

பொக்காரா-ஜொம்சொம் செல்லும் விமானங்கள் லகு-ரக விமானங்கள். .அளவில் சிறியவை. 1+1 இருக்கை அமைப்பு. இதில் விமானி, துணை விமானி, பணிப்பெண் ஆகிய மூன்று பேர், இருப்பார்கள் .16 பயணிகள் அமரக்கூடியது.வாநிலை காலை 8 மணிக்கு மேல் தான் தெளிவாகும். சிலநாட்களில் நாள் முழுதும் சீராகாமல் போக்குவரத்து இல்லாமலே போய்விடுமாம்.

        பொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15 நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடுகளைத் தொட்டுவிடுவது போல் தாவிச் சென்றது

ஜீப் சுமார் இரண்டு மணி நேரம் சென்றது. வழி நெடுகிலும் பெரிய ஆறு கண்டகி, ஓடிக்கொண்டே இருக்கிறது. மிக உயரத்தில் இருந்து பார்க்கிற போதும் ஆறு ஓடுவது அச்சத்தைத் தருகிறது. எங்காவது  நீண்ட தூரத்திற்குப் பிறகு மிகச்சிறிய கிராமங்கள் உள்ளன. சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன ஸ்ரீ கண்ணதாசன்-

September 19, 2024

முதல் அதிகாரம் -ஸ்ரவண அதிகாரத்வம்
இரண்டாம் அதிகாரம் -தன் மோஹ நிவ்ருத்தி
மூன்றாம் அதிகாரம்-கர்மயோக கர்த்ருத்வம்-அவனது கருவியாக இருக்க வேண்டும் கர்வியாக இருக்கக் கூடாதே
நான்காம் அத்யாயம் -கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான யோகமே ஸ்ரேஷ்டம்
ஐந்தாம் அத்யாயம் கர்ம யோக அந்தர் கத ஞான விபாகம்
ஆறாம் அத்யாயம் யோக அப்யாஸ விதிகள்
இதுவரை ஞானத்துடன் கூர்ம கர்மா யோகம் -ஆத்மா சாஷாத்காரம் பலன்
மேல் பக்தனின் ஏற்றமும் பக்தி யோகமும்

ஏழாம் அத்யாயம் பிரபுத்த்ய ப்ரதானம் -ஞாநியின் ஏற்றம் -சதுர்வித அதிகாரிகளில் அநந்யார்ஹ பக்தன் ஞானி -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருக்குமவர்கள்
எட்டாம் அதிகாரம்–உடல் விட்டு த்ரிவித அதிகாரிகள் செல்லும் இடங்கள்-தூமாதி மார்க்கம் -கைவல்யம் அர்ச்சிராதி மார்க்கம் –
ஒன்பதாம் -தத் ப்ரகார பக்தி யோகம் –இடைவிடாமல் தைலதாரா -மன் மநா பாவ மத் பக்தன் மத் யாஜி மாம் நமஸ்குரு மாம் பாராயணம் -மாம் ஏவ வைஷ்யஸி -இத்யாதி
பத்தாம் அத்யாயம் -பூமா விபூதி ஆதிக்யம் -பக்தி செய்ய -வளர -மாதங்களில் நானே மார்கழி போல் –
பதினொன்றாம் அத்யாயம் -வைஸ்வா ரூப தர்சன உபாயம் -திவ்ய சஷுஸ் -அளித்து -காட்டவே கண்டான் –
பன்னிரண்டாம் அத்யாயம் -பக்தி வளர அப்யாஸம் -கைங்கர்யங்கள் -ஸர்வ கர்ம பல தியாகம் செய்து செய்யவே தூய்மையான மனஸ் பெற்று -மேல் மேல்
இத்துடன் கீதை முடிவு

சேஷமானவை மேல் ஆறு அத்தியாயங்கள்
பதிமூன்றாம் அத்யாயம் -தொடங்கி -க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் விபாகம் அறிய விளக்கம்
14- முக் குண தன்மை –
15-புருஷோத்தம வை லக்ஷண்யம்
16-ஸாஸ்த்ர வஸ்யத்வம் -தேவ அஸூர விபாகம்
17-ஸாஸ்த்ர வஸ்யத்வத்திலும் முக் குண சேர்க்கையின் விபாகம்
18-சார அத்யாயம்

———

கவியரசின் முழுப்பாடல் உங்களுக்காக……… 


மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா…
மரணத்தின் தன்மை சொல்வேன்…!


மானிடர் ஆன்மா மரணமெய்தாது…
மறுபடி பிறந்திருக்கும். 

மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்… 

ஆ… ஆ…


என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!


கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்!

மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!


சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்…

துணிந்து நில் தர்மம் வாழ… 

…


புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!


கண்ணனே காட்டினான்! கண்ணனே தாக்கினான்!
கண்ணனே கொலை செய்கின்றான்!

காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!


இக்களமெலாம் சிவக்க வாழ்க…


ஆ… ஆ… ஆ…

பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்


தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே

இந்தப் பாடல் அதிஅற்புதமானது. உண்மையிலேயே பதினெட்டு அத்தியாயங்கள் 700 ஸ்லோகங்கள் உள்ள கீதையை, பாமரனுக்கும் புரியக் கூடிய எளிய வார்த்தைகளிலே இதைவிடச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? கவியரசு கண்ணதாசன் பகவத்கீதையின்  சாரத்தை 9 பிரிவுகளாகப்  பிரித்துக் கொண்டிருக்கிறார்.

மரணத்தை நினைத்து கலங்குகின்றான் விஜயன். அதுதான் முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம். 

அப்பொழுது மரணத்தைப்பற்றி ஒரு தெளிவு அவருக்கு ஏற்படுத்த வேண்டும். இது இரண்டாவது பகுதி. 

உடம்பு என்றால் என்ன ஆன்மா என்றால் என்ன என்கின்ற தத்துவ விளக்கத்தைச் சொல்ல வேண்டும். இது மூன்றாவது பகுதி. 

பகவான் தன்னைப் பற்றியும் சொல்ல வேண்டும். இறைத் தன்மை. இது நான்காவது பகுதி. 

பகவானின் இரக்க குணம் இந்தப் போர்க்களத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதைச் சொல்ல வேண்டும். இது ஐந்தாவது பகுதி.

தான் பகவான் என்பதை அவன் உணர்ந்து கொள்ள தன்னுடைய விஸ்வரூபத்தைப் பற்றி சொல்ல வேண்டும் அது ஆறாவது பகுதி. (விபூதி யோகம்) 

கடமையிலே வீறு கொண்டு அவனை எழ வைக்க வேண்டும். அது எட்டாவது பகுதி. 

புண்ணியம் பாவம் இது இரண்டும் என்ன? எப்படி செய்தால் அவை இரண்டும் அதாவது புண்ணிய பாவ விளைவுகள் ஒருவருக்கு ஒட்டாமல் இருக்கும், என்கிற தத்துவத்தைச் சொல்ல வேண்டும். அதோடு ஒரு அருமையான கீதை ஸ்லோகத்தையும் இணைக்க வேண்டும். இத்தனையும் 18 வரிகளில் சொல்லியிருப்பார் கண்ணதாசன்.

நான் இந்தப் பாடலை, வரி வரியாக கீதையின் ஸ்லோகங்களோடு இணைத்துப்  பார்க்கும் பொழுதுதான், எத்தனை ஆழமாக கீதையின் சாராம்சம் அவருடைய உள்ளத்தில் இறங்கி இருக்க வேண்டும். கீதை ஸ்லோகங்களுடைய சாரமான விஷயங்களை எடுத்து அதை தமிழிலே அத்தனை அழுத்தமாக கவிஞர் கொடுத்து இருக்கிறார் என்பதெல்லாம் புரியும்.

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா…

என்ன சுவையாக கண்ணதாசன் ஆரம்பிக்கிறார் பாருங்கள். மரணத்தை எண்ணி விஜயன் கலங்குகின்றான். விஜயன் என்றால் வெற்றியைத் தவிர வேறு அறியாதவன். எது அவனுக்கு வெற்றியைத்  தருகிறதோ, அந்த காண்டீபம் கையில் இருக்கும்போது அவன் மரணத்தை எண்ணிக் கலங்குகிறான் என்றால், தன் மரணத்தை எண்ணிக் கலங்கவில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். மரணத்தை எண்ணி கலங்க அவசியமில்லை. காரணம் நீ இருக்கும் வரை மரணம் வரப் போவது இல்லை. அது வந்து விட்ட பிறகு நீ இருக்கப் போவதில்லை. அதனால் எந்த விதத்திலும் நீ கவலைப்படும் படியாக மரணம் இருப்பதில்லை. ஆனால், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தைக் குறித்துத் தான் நாம் கவலைப்படுகிறோம்.

அர்ஜுனன் அதைத் தான் முதலிலே சொல்லுகின்றான். குரு, தாத்தா, அண்ணன், தம்பி, உறவுகள், நண்பர்கள் இவர்களையெல்லாம் கொன்றுவிட்டு நான் எப்படி வாழ்வேன்? இவர்கள் மரணத்தை நான் எப்படி கண்ணால் பார்க்க முடியும்? என கவலைப்படுகிறான். முதல் அத்தியாயமே அர்ஜுனன் கவலையைப் பற்றித்  தெரிவிப்பது. அர்ஜுன விஷாதயோகம் என்று பெயர்.

ஸோக ஸம் விக்ந மானஸ :  

சோகத்துடனும் கலங்கிய மனத்துடனும் அர்ஜுனன் இருக்கின்றான். மரணத்தை எண்ணிக் கலங்கினான் என்கின்ற அந்த கிட்டத்தட்ட நாற்பத்தி ஏழு ஸ்லோகத்தின் உடைய விஷயத்தை ஒரே வரியில் சொல்லுகின்றார். மரணத்தை எண்ணிக் கலங்குகிறான்.

2. மரணத்தின் தன்மை சொல்வேன்…! மானிடர் ஆன்மா மரணமெய்தாது…

இரண்டாவது அத்தியாயத்திலேயே பகவான் அர்ஜுனன் சோகத்தை தீர்க்கக்கூடிய முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றான். ஒன்றை புரிந்து கொள்ளாதவரை அதைப்பற்றி அச்சம் இருக்கும். 

மரணத்தைப்பற்றிய பயம் என்று சொன்னால் மரணத்தினுடைய தன்மை என்ன என்பது அவனுக்குப் புரியவில்லை. அதனால் இரண்டாவது அத்தியாயத்தில் அத்தனை சாரத்தையும் எடுத்து ஒருசில வரிகளிலேயே கவிஞர் மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.

மரணத்தின் தன்மை சொல்வேன்…!
மானிடர் ஆன்மா மரணமெய்தாது…

மரணம் உடலுக்கு உயிர் இருக்க. உயிர் பிரிந்து விட்டது என்று சொன்னால், அங்கே உடல் வேறு, உயிர் வேறு ஆகிவிட்டது. உடம்பு இங்கே இருக்கிறது. உயிர் போய் விட்டது என்று சொன்னால், அது இங்கே இல்லை, போய் விட்டது என்று தான் பொருளே தவிர, அழிந்துவிட வில்லை.

இதை திருவள்ளுவரும் அழகான உவமையோடு சொல்லுகின்றார்.

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந் தற்றே 

உடம்பொடு உயிரிடை நட்பு 

தன்னுடைய கூட்டை தனித்து விட்டுவிட்டு ஒரு பறவை பறந்தது போல இந்த உயிர் பறந்து விட்டது. இரண்டும் சேர்ந்து இருந்தது. ஒன்று அழிந்தது இன்னொன்று அழிய வில்லை. அழிந்தது உடல். அழியாதது ஆன்மா. ஒருவரை வெட்டினால் அவருடைய உயிர் போய்விடுகிறது. அந்த உயிர் வெட்டுப் படுவதில்லை. ஆனால் அந்த உயிர் இருந்த  உடம்பு அந்த உயிரைத்  தாங்க முடியாத ஒரு நிலையை அடைந்துவிடுகிறது என்பது தான் மரணத்தின் தன்மை.

3. மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும்

அயம் ந ஹந்தி – ஆத்மாவானது கொல்வதில்லை
ந ஹந்யதே – கொல்லப்படுவதில்லை
ந ஜாயதே – பிறப்பதில்லை (புதிதாக)
ந ம்ரியதே – இறப்பதில்லை.

ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே – உடல் வெட்டப்படும் பொழுதும் கொல்லப்படும் போதும் ஆன்மா கொல்லப்படுவதில்லை
ஸஸ்த்ராணி ந சிந்தந்தி – ஆயுதத்தால் வெட்ட முடியாது
பாவக: ந தஹதி – நெருப்பால் எரிக்க முடியாது அப்படியானால் இந்த தேகம் எப்படி கிடைக்கிறது.

ஜீவாத்மா(தேஹி) ஜீர்ணானி (பழைய, நைந்து போன) ஸரீராணி – உடல்களை, விஹாய – விட்டுவிட்டு அந்யாநி  – வேறு  நவாநி – புதிய உடல்களை, ஸம்யாதி – அடைகிறான் பிறவி என்ற நம்முடையது அல்லாத பிற வேறு ஒரு தேகத்தை எடுத்துக் கொள்ளுதல். அதனால் பிறவி எடுக்கிறோம்.

4. நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்து தான் தீரும்

காரணம் மரணம் என்பது நிச்சயமானது. ஜாதஸ்ய ம்ருத்யு த்ருவ: – பிறந்தால் இறப்பு நிச்சயம். தவிர்க்க முடியாதது.
மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்…
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? பகவானைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தான் அடுத்து சொல்லுகின்றார்.

மா ந அபிஜாநந்தி – என்னை அறிய வேண்டும். அதை செய்வதில்லை.

அநன்யாஸ் சிந்த யந்தோமாம் யே ஜநாபர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்  

இதை தெரிந்து கொள்ள வேண்டும்
என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்!

பகவானை அருகில் இருந்தும் தெரிந்து கொள்ளாததால் தான் அவன் காண்டீபத்தை நழுவவிட்டான்.
அந்த வார்த்தை கீதையில் இருக்கிறது.

காண்டீபம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத் – கையிலிருந்து காண்டீபம் நழுவியது

மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்…
துணிந்து நில் தர்மம் வாழ… ஆ…

இப்போது தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டுகின்றார். தான் யார் என்பதை காட்டுகின்றார். அந்த விபூதி யோகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களையும், பத்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளையும் இணைத்து, நான்கு வரிகளில் கொடுத்துவிடுகின்றார்.


அஹம் க்ரது. அஹம் யக்ஞ: ஸ்வதா அஹம் அஹம் ஷதம்  
மந்த்ரோ அஹம் அஹம் அக்னி
அஹம் அஸ்வத்த சர்வ விருட்ஷானாம் – எல்லா மரங்களும் நானே

மன்னனும் நானே – நராணாம் நராதிபம்
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!
கண்ணனே காட்டினான்! கண்ணனே சாட்டினான்!

கண்ணனே கொலை செய்கின்றான்!
நீ ஏன் கவலைப்படுகிறாய்? பலத் தியாகம் செய்து விடு. அப்படிச் செய்தால், அந்த செயலால் உன்னுடைய கர்மாவினை ஒட்டுவதில்லை.

ஸர்வாணி கர்மானிட மயி ஸந்ந் யஸ்ய பலம்  கொடுத்துவிடு
நான் இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறாய்?

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!

அவன் தெளிவுபெறவேண்டும். தெளிவு பெறுவது தான் காட்சி. அதை ஒரு ஆணையாக பகவான் சொல்லுகிறார்.

நஷ்டோ மோஹ: ஸ்மிருதிர் லப்தா த்வத் ப்ரஸாதந் மயாச்சுதா

ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ  கரிஷ்யே வசநம் தவ:

இதை என்னுடைய முடிவு பெறும் பொழுது இப்படித்தான் முடிவு பெறுகிறது. அச்சுதன் என்றால் நழுவவிடாதவன். நழுவாதவன் என்று பொருள்.

அந்த ஒரு திருநாமத்தைத் தான் அந்த இடத்திலே பகவத் கீதையில் போடுகின்றார். நான் உறுதி பெற்றேன். நான் லாபம் அடைந்தேன். எனக்கு சந்தேகம் இல்லை. நான் உன்னுடைய ஆணையை ஏற்றுக் கொள்ளுகின்றேன். இதைவிட பகவத் கீதையை யார் சொல்லமுடியும்? கண்ணன் சொன்னதை கண்ணனுக்கு தாசன் தானே சொல்ல முடியும்.

———-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வாசுதேவன் நிகழ்த்திய வேதாந்த லீலைகள் – ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்–

September 19, 2024

1. பூதனா மோட்சம்

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேரநஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனை

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாள் –மண் சேர்ந்தாள்

அவள் பால் உயிர் செகவுண்ட திருவாய் மொழி

விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -நம்மாழ்வார்

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்” என்று நம்மாழ்வார் பாடியபடி

விஷப் பாலைக் கொடுத்துக் கண்ணனை அழிக்க வந்த பூதனையின் விஷப் பாலோடு சேர்த்து அவளது உயிரையும் உண்டு பூதனையை வதைத்தான் கண்ணன். இந்த லீலை நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன?

பூதனை என்பவள் தான் அவித்யை எனப்படும் அறியாமை. நம் கர்ம வினைகளின் விளைவாக வந்த அந்த அறியாமை நம் ஞானத்தை மழுங்கச் செய்து பிறவிப் பிணியில் நம்மை அழுத்துகிறது. அவளது இரண்டு மார்பகங்கள் தான் நான் என்னும் அஹங்காரமும் (I), எனது என்னும் மமகாரமும் (2)ஆகும். அறியாமையிலிருந்து தோன்றும் அஹங்காரமும் மமகாரமும் விஷம் போன்றவையாகும். இதிலிருந்து வெளிவர என்ன வழி என்றால், கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தோமாகில், அவன் பூதனையின் இரண்டு மார்பகங்களையும் உறிஞ்சியது போல், நம்முடைய அஹங்கார மமகாரங்களை முழுமையாக உறிஞ்சி எடுத்து, அந்தப் பூதனையை அழித்தது போல் நமது அறியாமையையும் அழித்து நமக்குப் பேரின்ப வாழ்வாகிய முக்தியை அருளுவான்.

2. சகடாசுர வதம் 

கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்னும் அசுரன், மாட்டு வண்டிச் சக்கர வடிவில் வந்து தொட்டிலில் கிடக்கும் கண்ணன் மேல் பாய்ந்து கண்ணனை அழிக்கத் திட்டமிட்டான். ஆனால், “பொன்றச் சகடம் உதைத்தாய்” என்று ஆண்டாள் பாடியபடி, தன் திருவடிகளால் உதைத்து அந்தச் சகடாசுரனைச் சம்ஹாரம் செய்தான் கண்ணன். இது உணர்த்தும் தத்துவம் என்ன?

சகடாசுரனின் வடிவமான மாட்டு வண்டிச் சக்கரம் என்பது நமது பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தைக் குறிக்கிறது. சக்கரம் சுழல்வது போல், “புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியில் நாம் உழல்கிறோம். கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தால், அந்தச் சக்கரத்தை உடைத்து நொறுக்கியது போல், நம் பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தையும் உடைத்து நமக்குப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவான்.

3. திருணாவர்த்தாசுர சம்ஹாரம்

யசோதை கண்ணனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்த போது, திடீரென்று வந்த புயல்காற்று கண்ணனைத் தூக்கிச் சென்றது. அந்தப் புயல் தான் கம்சனால் ஏவப்பட்ட திருணாவர்த்தாசுரன் என்னும் அசுரன். ஆனால் கண்ணனோ, தனது எடையை அதிகரித்துக் கொண்டே போகவே, பாரம் தாங்க முடியாமல், விழி பிதுங்கி, ரத்தம் கக்கிப் பூமியில் விழுந்துமாண்டான் அந்த அசுரன். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ரஜோ குணம் தான் இந்த திருணாவர்த்தாசுரன். அதிகமான கோபம், காமம் கொண்டு செயல்படுவதை ரஜோகுணம் என்று குறிப்பிடுவார்கள். திருணாவர்த்தாசுரன் கண்ணனையே தூக்கிச் சென்றது போல், ரஜோ குணத்தால் ஏற்படும் காமமும், கோபமும் நம் பக்தியையும் நற்குணங்களையும் நம்மிடமிருந்து ஒரு நொடியில் அபகரித்துச் சென்று விடும். கண்ணனின் திருவடிகளை நாம் பற்றினால், திருணாவர்த்தாசுரனை அழித்தாப்போலே, ரஜோ குணத்தை அழித்து, நம் மனதில் தூய பக்தி வளரும்படி அருள்புரிவான்.

4. வெண்ணெய் திருடிய லீலை 

வெண்ணெய் என்பது நம் உள்ளத்தைக் குறிக்கிறது. பானை அந்த நம் உடலைக் குறிக்கிறது. நம் உடலாகிய பானையிலிருந்து உள்ளமாகிய வெண்ணெயைக் கண்ணன் திருடும் அழகைத் திருப்பாணாழ்வார் வெகு அழகாக,

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”

என்று பாடினார். “அன்று ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடியவன் இன்று அரங்கனாகத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே ஆயர்பாடியில் பானை இருந்தது, வெண்ணெயைக் காணவில்லை. இங்கே அரங்கத்தில் என் உடல் இருக்கிறது, உள்ளத்தைக் காணவில்லை. ஏனெனில் பானையிலிருந்து வெண்ணெயைத் திருடினாற்போல், என் உடலிலிருந்து உள்ளத்தை இந்த அரங்கன் கொள்ளை கொண்டு விட்டான்!” என்று இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.

வெண்ணெயைப் போல் வெண்மையான, தூய மனத்துடன் வாழும் அன்பர்களின் மனங்களைக் கவர்ந்து செல்லும் உள்ளம் கவர் கள்வனாகக் கண்ணன் விளங்குவதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆனால், வெண்ணெயோ, நம் உடலோ, மனமோ, உயிரோ இவை அனைத்துமே அவனது சொத்து தானே? அவன் சொத்தை அவன் எடுத்துக் கொள்வதை ஏன் திருட்டு என்று சொல்ல வேண்டும்? வெண்ணையைத் திருடியதாலோ, மோர், பாலைத் திருடியதாலோ, நம் மனங்களையும் ஆத்மாக்களையும் திருடியதாலோ, அவனைத் திருடன் என்று குறிப்பிடுவதில்லை. வேறு எதைத் திருடினான் அந்தக் கண்ணன்? வாதிராஜர் விடைகூறுகிறார்:

“ஸ்வபக்த புஞ்ஜார்ஜிதம் பாப வ்ருந்தம் திவானிசம் சோஹரதி ஸ்ம பால:”

“கண்ணன் வெண்ணெய் திருடிய கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களின் பாபங்களைக் கண்ணன் திருடிச் சென்று விடுகிறான். நாம் செய்த பாபங்கள் அனைத்துமே நம் சொத்து தானே? நம் சொத்தாகிய பாபங்களை அவன் திருடிச் செல்வதால் தான் அவனைத் திருடன் என்று குறிப்பிடுகிறோம்!” என்று இந்த ஸ்லோகத்தில் வாதிராஜர் தெரிவிக்கிறார்.

5. ருக்மிணி திருக் கல்யாணம்

பீஷ்மக ராஜாவின் மகளான ருக்மிணி கண்ணனையே மணந்து கொள்ள விரும்பினாள். ஆனால் அவளது ஐந்து உடன்பிறந்த சகோதரர்களான ருக்மி, ருக்மரதன், ருக்மகேசன், ருக்மபாகு, ருக்மமாலி ஆகியோர் அவளை சிசுபாலனுக்கு மணம் முடிக்கத் திட்டமிட்டார்கள். அப்போது ருக்மிணி ஓர் அந்தணரிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்து, அதைத் துவாரகையில் இருக்கும் கண்ணனிடம் சென்று கொடுக்கும்படிச் சொன்னாள். அவரும் கடிதத்தைக் கண்ணனிடம் சேர்த்தவாறே, கண்ணன் வந்து அவளது சகோதரர்களை வீழ்த்தி ருக்மிணியை மணந்து கொண்டான். இதில் ருக்மிணி தான் ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா, சிசுபாலன் உலகியல் வாழ்வு. ஜீவாத்மாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஐவர் உள்ளார்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். ருக்மிணியாகிய ஜீவாத்மா பரமாத்மாவை அடைய விரும்பினாலும், உடன்பிறந்த ஐம்புலன்களும் சிசுபாலனாகிய உலகியல் வாழ்வில் ஜீவாத்மாவைத் தள்ளுகிறார்கள். 

அப்போது ருக்மிணிக்காக ஓர் அந்தணர் கண்ணனிடம் தூது சென்றது போல், ஜீவாத்மாவின் குரு ஜீவாத்மாவுக்காக இறைவனிடம் தூது பேசி இறையருளைப் பெற்றுத் தருகிறார். ருக்மிணியின் உடன்பிந்தவர்களை வென்று அவளை மணந்து கொண்டது போல், இந்தப் புலன்களை வீழ்த்தி ஜீவாத்மாவை இறைவன் மீட்டுச் செல்கிறார். இதுபோல் தான் செய்த ஒவ்வொரு லீலையிலும் எத்தனையோ வேதாந்தக் கருத்துகளை நமக்கு விளக்கினான் கண்ணன். அந்தக் கண்ணன் அவதரித்த நாளான ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நம் அனைவரின் இல்லங்களிலும் கண்ணனின் திருவருளும் சாந்நித்தியமும் நிறையட்டும்.

6. அனைவருக்கும் விழுந்த அடி 

ஆயர்பாடியில் ஒரு வீட்டில் ஏலக்காய் பால் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மாட்டுக்குப் புண்ணாக்கோடு சேர்த்து ஏலக்காயையும் அதிக அளவில் அவர்கள் கொடுப்பதால், பால் கறக்கும் போதே ஏலக்காய் மணம் கமழுமாம். அந்த ஏலக்காய்ப் பாலைத் திருடுவதற்காக அவ்வீட்டுக்குள் கண்ணன் நுழைந்தான். பாலை எடுத்து அருந்தப் போனான். அதைக் கண்ட அவ்வீட்டு கோபிகை, ஒரு பிரம்பால் கண்ணனை அடித்தாள். அடித்ததும் என்ன ஆனது பிள்ளைப் பெருமாள் சுவாமி கூறுகிறார்:

“கடிக்கும் பிறை வெவ்வாள் எயிற்றுக் காளியன்மேல்

நடிக்கும் பெரிய பெருமாள் திருவரங்கர் நறைகமழ்பால்

குடிக்கும் களவுக்கு மாறுகொண்டு ஓர் கோபிகை பற்றி

அடிக்கும் போது பதினால் உலகும் அடிப்பட்டனவே!”

அந்தப் பெண் கண்ணனின் முதுகில் பிரம்பால் அடித்தவாறே, கண்ணனுக்கு வலிக்கவில்லை. ஆனால் பாதாள லோகம் தொடங்கி, சத்திய லோகம் வரை, ஈ எறும்பு தொடங்கி பிரம்மதேவர் வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்த அடி விழுந்ததாம். அடிகொடுத்த அந்தப் பெண்ணுக்கும் அடி விழுந்தது. அனைவருக்கும் வலித்தது. இதன்மூலம் அனைத்து உலகங்களும் உயிர்களும் இறைவனுக்கு சரீரம், இறைவன் அனைத்துக்கும் ஆத்மா என்னும் வேதாந்த தத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. “யஸ்ய ப்ருதிவீ சரீரம், யஸ்ய ஆப சரீரம், யஸ்ய தேஜ சரீரம், யஸ்ய ஆத்மா சரீரம்” என்று சேதன – அசேதனங்கள் அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்பதை பிருகதாரண்யக உபநிஷத் கூறுகிறது. “ஜகத் ஸர்வம் சரீரம் தே” என்ற ராமாயண சுலோகமும், “தானி ஸர்வாணி தத்வபு:” என்ற விஷ்ணு புராண ஸ்லோகமும், “ஸோபித்யாய சரீராத் ஸ்வாத்” என்ற மனுஸ்மிருதி சுலோகமும், “உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதே கருத்தைக் கூறுகின்றன. இந்த உடல் – உயிர் உறவு என்னும் வேதாந்தத் தத்துவத்தை இந்த லீலையின் மூலமாக வெகு எளிதில் நாம் புரிந்து கொள்ளும்படிக் கண்ணன் காட்டிவிட்டான்.

7. உரலுடன் கட்டுண்ட லீலை

கண்ணனை யசோதை உரலோடு கட்டிய போது, அவளது கட்டுக்குக் கட்டுப்பட்டுக் கட்டுண்டு நின்றான் கண்ணன். துரியோதனாதியர் கண்ணனைக் கட்ட எண்ணிய போது, விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் வென்ற கண்ணன் ஒரு ஆய்ச்சியின் கயிற்றுக்குக் கட்டுப்பட என்ன காரணம்? அன்பு தான். ஆணவத்துக்கு இறைவன் கட்டுப்பட மாட்டான், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படுவான் என்பதையே இது காட்டுகிறது.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய

வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்

மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

என்று இதை நம்மாழ்வார் பாடுகிறார்.

8. மருத மரங்களைச் சாய்த்த லீலை

உரலுடன் கட்டுண்டிருந்த கண்ணன், உரலையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து செல்லத் தொடங்கினான். அப்போது வழியிலிருந்த இரட்டை மருத மரங்களுக்கு நடுவே கண்ணன் சென்றான். அவனுடன் கட்டப்பட்டிருந்த உரல் அந்த மரங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது. கண்ணன் வேகமாக இழுத்த போது, இரண்டு மரங்களும் முறிந்து கீழே விழுந்தன. அம்மரங்களின் வடிவில் இருந்த குபேரனின் மகன்களான நளகூபரன், மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றுக் கண்ணனைத் துதித்து விட்டு தேவலோகம் சென்றார்கள். இந்த இரட்டை மருத மரங்கள் நம் மனத்திலுள்ள காமம், கோபம் என்னும் இரட்டைத் தீய குணங்களைக் குறிக்கின்றன. நாம் எவ்வளவு முயன்றாலும், காமத்தையும் கோபத்தையும் நம் மனங்களிலிருந்து அகற்றுவது கடினம். ஆனால் கண்ணனை நம் மனத்தின் நடுவே கொண்டு வந்து வைத்து விட்டால், அதாவது இந்த இரட்டை மரங்களான காம கோபங்களுக்கு நடுவில் கண்ணன் வந்து விட்டால் இரண்டும் தானே முறிந்து விழுந்து விடும் என்பதில் ஐயமில்லை.

9. ஏழு காளைகளை அடக்கிய வரலாறு

கண்ணனின் தாய்மாமனான கும்பனுக்கு நப்பின்னை என்றொரு மகள் இருந்தாள். தன்னிடம் உள்ள ஏழு காளைகளை யார் அடக்குகிறார்களோ, அவர்களுக்கே தன் மகளை மணம்முடித்துத் தரப்போவதாகக் கும்பன் அறிவித்தான்.

“விடையேழ் வென்று மென்தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்

நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்

பெடையோடு அன்னம் பெய்வளையார் தம் பின்சென்று

நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே!”

என்று திருமங்கையாழ்வார் பாடியபடி, கண்ணன் ஒருவனே அந்த ஏழு காளைகளையும் அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டான். இங்கே நப்பின்னை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா. ஜீவாத்மாவின் ஐம்புலன்கள், மனம், உடல் ஆகிய ஏழும் ஏழு காளைகள். இந்த ஏழு காளைகளும் ஜீவாத்மா பரமாத்மாவை அடைய ஒட்டாமல் தடுக்கின்றன. பரமாத்மாவான கண்ணன், ஐம்புலன்கள், மனம், உடல் ஆகிய ஏழு காளைகளையும் அடக்கி, ஜீவாத்மா தன்னை அடையும்படி அருள்புரிகிறார் என்னும் தத்துவத்தை இந்தச் சரித்திரம் உணர்த்துகிறது.

10. காளிய நர்த்தனம்

காளிய நாகம் என்பது நமது மனத்தைக் குறிக்கிறது. ஏனெனில் பாம்பு போல் நெளிந்து வளைந்து அலைபாய்ந்து கொண்டே இருக்கும் இயல்பு நம் மனத்துக்கு உண்டு. நாம் எவ்வளவு முயன்றாலும் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மேலும், காளியன் விஷத்தைக் கக்கி யமுனை நதியை அசுத்தமாக்கியது போல், மனமானது தீய எண்ணங்களைக் கக்கிப் பிறரையும் அசுத்தமாக்கி விடும். இந்த மனத்தை வசப்படுத்த என்ன வழி? கண்ணனை நாம் நம் மனத்தில் கொண்டு வந்து நிறுத்தினோமாகில், காளியன் தலையில் கால் வைத்து நாட்டியமாடி அதை எப்படி அடக்கினானோ, அதே போல் நம் மனமாகிய காளியனையும் அவனே அடக்கி அதை வசப்படுத்தி விடுவான்.

11. கோவர்த்தன கிரிதாரி

ஆயர்கள் இந்திரனுக்காகச் செய்யும் விழாவைத் தடுத்த கண்ணன், இந்திரனுக்குப் பதிலாகக் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யும்படி அறிவுறுத்தினான். அதை ஏற்று ஆயர்களும் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய, அதனால் கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கனமழையைப் பொழிந்தான். அப்போது கண்ணன் கோவர்த்தன மலையையே குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் அம்மழையிலிருந்து காத்தருளினான். இதன் தத்துவம் என்னவென்றால், இவ்வுலக வாழ்க்கையில், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று விதமான தாபங்கள் கல்மழை போல் நம்மை வந்து தாக்குகின்றன. நம் உடல் ரீதியாக நமக்கு வரும் உபாதைகளுக்கு ஆத்யாத்மிகம் என்று பெயர். இயற்கைச் சீற்றங்களால் வரும் இடையூறுகளுக்கு ஆதிதைவிகம் என்று பெயர். பிற உயிரினங்களால் நமக்கு உண்டாகும் தீங்குகளுக்கு ஆதிபௌதிகம் என்று பெயர். இவற்றிலிருந்து மீள என்ன வழி?

அன்று ஆயர்கள் கண்ணனைச் சரணடைந்தது போல், நாமும் கண்ணனைச் சரணடைந்தோமானால், குன்றைப் போல் உயர்ந்த தனது கல்யாண குணங்களையே குடையாகப் பிடித்து ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் எனப்படும் தாபத்ரய மழையிலிருந்து அவன் நம்மைக் காத்தருள்வான்.

12. ராச லீலை

சரத் காலத்தில், மாலை வேளையில், சந்திரோதயத்துக்குப் பின், ஒரு செண்பக மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்தபடி கண்ணன் குழலூதத் தொடங்கினான். அதைக் கேட்டு அவனிடம் ஓடி வந்த கோபிகைகளோடு சேர்ந்து இரவு முழுவதும் பிருந்தாவனத்தில் குரவைக்கூத்து என்று சொல்லப்படும் ராசலீலையைச் செய்தருளினான் கண்ணன். கோபிகைகளும் மெய்ம்மறந்து கண்ணனோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். இதன் மூலமாக ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள முக்கியமான உறவான மனைவி – கணவன் உறவைக் கண்ணன் உணர்த்தினான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே சொல்லப்பட்ட ஒன்பது உறவுகளுள் இதுவும் ஒன்றாகும்.

1. மகன் – தந்தை

2. காப்பாற்றப்படுபவர் – காப்பவர்

3. தொண்டு செய்பவர் – தொண்டுகளைப் பெறுபவர்

4. மனைவி – கணவர்

5. அறிபவர் – அறியப் படுபவர்

6. தொண்டன் – எஜமானன்

7. தாங்கப்படுபவர் – தாங்குபவர்

8. உடல் – உயிர்

9. மகிழ்விப்பவர் – மகிழ்பவர்

இந்த ஒன்பது உறவுகளுள் ஒன்றான மனைவி – கணவன் என்னும் உறவை ராசலீலையால் உணர்த்தினான் கண்ணன்.

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஒப்பிலியப்பனுக்கு பங்குனி பிரம்மோற்சவம் – ஸ்ரீ திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்–

September 19, 2024

“தபஸ்யே பால்குனே மாஸே ஏகாதச்யாம் திதௌ முனே

புண்யே ஸ்ரவண நக்ஷத்ரே முஹூர்த்தே அபிஜித் ஆஹ்வயே

ஆஜகாம வஹாயோகீ ஸாக்ஷாத் நாராயணோ ஹரி:

ஸ தேவ: ஸ்ரீநிவாஸாக்யோ பூமி தேவ்யா: பதி: விபு:

வஸுந்தரா விவாஹார்த்தம் லோகாநுக்ரஹ காம்யயா”— என்கிறது ஸ்ரீ ஒப்பிலியப்பனின் தல புராணம். 

இதன் பொருள்: “பங்குனி மாதம் ஏகாதசி திதியில், திருவோண  நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில், திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலத்தில், பூமி தேவியை மணந்து கொள்வதற்காகவும், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அனைத்து வரங்களும் அருட்வதற்காகவும் ஶ்ரீநிவாசன் என்ற பெயரோடு திருமால் அவதாரம் செய்தார்!”

எனவே வருடந்தோறும் பங்குனி மாதத் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, கும்பகோணத்துக்கு 5 கி.மீ. கிழக்கில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவோணத்துக்கு ஒன்பது நாள் முன் தொடங்கும் இந்த உற்சவம், பங்குனி திருவோணத்தன்று நிறைவடையும். 

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஒப்பிலியப்பனுக்கும் பூமிதேவித் தாயாருக்கும் புறப்பாடு நடைபெறும். அந்தப் புறப்பாடுகளுக்கான பின்னணிகளை ஆசுகவி வில்லூர் ஶ்ரீநிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்னும் காவியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை  அவரது ஸ்லோகங்களோடு இணைத்து இக்கட்டுரையில் காண்போம்:

1. முதல் நாள் – இந்திர விமானம்:

“ஐந்த்ரம் விமானம் அதிருஹ்ய ஸமுஜ்ஜ்வலந்தீம்

இந்த்ரேண ஸர்வ ஜகதாம் தயிதேன ஸாகம்

இந்த்ராதி தேவ வினுதாம் அவலோக்ய மாத:

இந்த்ர ப்ரியா இதி பவதீம் நிஜகாத வேத:”

பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் ஒப்பிலியப்பனோடு இந்திர விமானத்தில் பூமி தேவி காட்சி தருகிறாள். இதற்கான காரணம் என்ன? அனைத்துலகுக்கும் இந்திரனாகத் (தலைவனாக) திகழும் திருமாலுக்கு மனைவியாக பூமி தேவி இருக்கிறாள். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளையும் பூமிதேவியையும் வந்து பணிகிறார்கள். வேதமும் பூமிதேவியை ‘இந்திரப் பிரியா’ என்று அழைக்கிறது. இந்தக் கருத்துகளை நமக்கு உணர்த்தவே பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் இந்திர விமான வாகனத்தில் தன் கணவனோடு பூமிதேவி வலம் வருகிறாள்.

2. இரண்டாம் நாள் – சந்திரப் பிரபை வாகனம்:

“ஓஷதீச ப்ரபா வாஹ மத்யக: ஸூன பூஷித:

நிஷ்கலங்கம் யசோ தத்தே ஸுவம்ச கர பங்கஜ:”

இரண்டாம் நாள் மாலை பெருமாளும் தாயாரும் சந்திரப் பிரபை வாகனத்தில் வலம் வருவார்கள். சந்திரனில் சில களங்கங்கள் தெரிகின்றன அல்லவா? ஆங்கிலத்தில் அவற்றை ‘craters’ என்று சொல்வார்கள். வெண்ணிலவைக் களங்கமற்றதாக ஆக்க நினைத்த ஒப்பிலியப்பன், அதையே தனக்கு வாகனமாக்கி அதன் நடுவே பூமி தேவியோடு எழுந்தருளினார். அதனால் சந்திரன் களங்கமில்லாததாக ஆனது! தூய்மை பெற்றது!

3. மூன்றாம் நாள் – சேஷ வாகனம்:

“த்வாம் யோ வஹேத பஹவ: கில தம் வஹந்தி

தத்ர ப்ரமாணம் இஹ மே புஜகாதிபோஸௌ

யஸ்த்வாம் நிஜேன சிரஸா வினதோ ததான:

ஸர்வை: அமீபி: அதுனா த்ரியதே மஹே தே”

யார் ஒருவர் பூமி தேவியைத் தலையால் தாங்குகிறாரோ, அவரை மக்கள் அனைவரும் தலையால் தூக்கிக் கொண்டாடுவார்களாம். அதற்குச் சான்றாகத் தான், உலகத்தைப் (பூமி தேவியை) பாதாளத்தில் இருந்தபடி தலையாலே தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை உற்சவத்தின் மூன்றாம் திருநாளன்று பலர் தூக்கிக் கொண்டாடுகிறார்களாம். அந்த ஆதிசேஷன் மேல் மூன்றாம் நாள் மாலையில் பூமிதேவியும் ஒப்பிலியப்பனும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

4. நான்காம் நாள் – கருட, ஹம்ச வாகனங்கள்:

“த்விஜேஷு ஹம்ஸோ பவதீம் ததாதி

த்விஜேஷு ய: குண்டலினாம் நிஹந்தா

நாதம் த்வதீயம் யுவயோ: ப்ரதீதம்

ஸ்புடம் ஹி லோகே ப்ருது தாரதம்யம்”

நான்காம் திருநாளன்று மாலையில் பெருமாள் கருட வாகனத்திலும் பூமி தேவி அன்ன வாகனத்திலும் (ஹம்ச வாகனத்திலும்) புறப்பாடு கண்டருளுவார்கள். பரம ஹம்சர்கள் என்று போற்றப்படும் ஞானியர்கள் பூமி தேவியை எப்போதும் தம் உள்ளத்தில் தாங்குகிறார்கள் என்பதை உணர்த்தவே, அந்தப் பரம ஹம்சர்களுக்குப் பிரதிநிதியான ஹம்சத்தின் மேல் பூமி தேவி புறப்பாடு கண்டருளுகிறாள். அடியார்களின் துன்பத்தை அழிப்பவராகத் திருமால் திகழ்வதால், பாம்புகளை அழிக்கும் கருடனின் மேல் அவர் புறப்பாடு கண்டருளுகிறார். இப்படித் தாயார் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டருளுவதில் இருந்து இருவரின் தன்மைகளையும் நாம் அறிய முடிகிறது.

5. ஐந்தாம் நாள் – ஹநுமந்த, கமல வாகனங்கள்:

“லங்கா புர்யாம் கில ஆஸீத் அதிகமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீனாம்

தஸ்யா மாதா ஹி ஸேயம் ஸ்வயம் இதி ஹநுமான் தர்சயதி ஆதரேண”

ஐந்தாம் திருநாளன்று பெருமாள் ஹநுமந்த வாகனத்திலும், பூமி தேவி கமல (தாமரை) வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். இலங்கையில் பூமி தேவியின் மகளான சீதையை ஆஞ்ஜநேயர் முதன் முதலில் கண்ட போது, கலைந்த கூந்தலோடும், கிழிந்த ஆடையோடும், மெலிந்த மேனியோடும், வாடிய முகத்தோடும், கண்ணீரில் தோய்ந்த கண்களோடும் அவள் இருப்பதைக் கண்டு அவர் மிகவும் வருந்தினாராம். 

அந்தக் குறை தீரும் படியாக, பட்டாபிஷேகக் கோலத்தில் ஆஞ்ஜநேயருக்குக் காட்சி தர விழைந்தாளாம் பூமிதேவி. அதனால் தான் ஐந்தாம் திருநாளன்று பெருமாள் அனுமனின் மேல் (ஹநுமந்த வாகனத்தில்) உலா வருகையில், பூமிதேவி தாமரையின் மேல் (கமல வாகனத்தில்) பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் காட்சி தந்து அனுமனை மகிழ்விக்கிறாளாம்.

6. ஆறாம் நாள் – யானை வாகனம்:

“ராஜதே கஜவரே விராஜதே

ராஜ ராஜ நத பாத பங்கஜே

நாயகோ கஜ கதி: ஸுஹம்ஸகா:

த்வம் து ஹம்ஸ கமனேதி ஸாம்ப்ரதம்”

ஆறாம் திருநாள் மாலையில் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். யானையைப் போன்ற நடையை உடைய திருமால் யானை வாகனத்தில் வருவதில் வியப்பில்லை. ஆனால் அன்னம் போல் நடக்கும் அன்னை பூமி தேவியும் ஏன் யானை வாகனத்தில் உலா வருகிறாள்? வில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்த பூமிதேவி, திருமால் வந்து தன்னை மணந்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதில்,“அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!”என்று, யானையில் திருமாலோடு சேர்ந்து எழுந்தருள விழைந்தாள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே பூமி தேவி பெருமாளோடு சேர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிப் புறப்பாடு கண்டருளுகிறாள்.

7. ஏழாம் நாள் – சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனம், தோளுக்கு இனியான்:

“ஆந்தோலிகாந்த: அவனீ ரமணம் யுவானம்

ஆஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ச ஸாயம்

த்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌதுகேயம்

தத்ர க்ஷமேதி பவதீம் அவலோக்ய த்ருத்யா”

ஏழாம் திருநாள் பொன் மாலைப் பொழுதில், பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் சூர்ணாபிஷேகம் நடைபெறும். வடநாட்டில் நடைபெறும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர் மேல் ஒருவர் தூவிக் கொள்வதைக் காண்கிறோம். அதற்கெல்லாம் வித்திட்டது வண்ணப் பொடியால் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம். அந்த சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே, பூமிதேவியோடு இளங்குமரனாய்த் தோளுக்கு இனியானில் பெருமாள் புறப்பாடு கண்டருளும் அழகைக் காண்கையில், அடியார்களின் மனம் ஒரு பெண்ணின் நிலைக்கு மாறி இறைவன் மேல் காதல் கொள்கிறது.

“புந்நாகம் அம்ப புருஷே புரத: அதிரூடே

ஸந்நாகம் அம்ஸ மதுரே பவதீ ததாதி

கிந்நாம தேன ஸஹ வாஹனதா கதா ஸ்யாத்

யந்நாம கோப வனிதாஸு ததா க்ஷமாவான்”

அதன் பின் ஏழாம் திருநாள் இரவில் பெருமாள் புன்னை மர வாகனத்திலும், தாயார் தோளுக்கு இனியானிலும் புறப்பாடு கண்டருள்வார்கள். கோபிகைகளின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு புன்னை மரத்தின் மீதேறிக் கண்ணன் அமர்ந்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா? அதை நினைவூட்டவே புன்னை மர வாகனத்தில் பெருமாள் வருகிறார். 

புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கண்ணன், சாஸ்திர விதிகளை மீறி ஆடையின்றி நீராடிய கோபிகைகளைத் தண்டிக்காமல் அவர்களிடம் பொறுமையையும் கருணையையும் காட்டினான் அல்லவா? அதை உணர்த்தவே புன்னை மரத்தில் செல்லும் பெருமாளைப் பின் தொடர்ந்து, பொறுமை, கருணை இவற்றின் வடிவாய்  இருக்கும் பூமிதேவி தோளுக்கு இனியானில் செல்கிறாள்.

8. எட்டாம் நாள் – குதிரை வாகனம், தோளுக்கு இனியான்:

“ஸுபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்வதீயே

த்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ஸ ரம்யே நிவிஷ்டா

துரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ

துரக வதன பேத்து: ச இதி மந்த ஸ்மிதாஸ்யா”

எட்டாம் நாள் மாலையில் பெருமாள் குதிரை வாகனத்திலும் பூமிதேவி தோளுக்கு இனியானிலும் காட்சி தருவது வழக்கம். “குதிரை முகத்தோடு ஹயக்ரீவராக அவதரித்த நீங்கள் குதிரை வாகனத்தில் வருவது பொருத்தமாகவே உள்ளது!” என்று பெருமாளைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருளுகிறாள் பூமிதேவி.

9. ஒன்பதாம் நாள் – திருத் தேரோட்டம்:

“ரதஸ்யாந்த: ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பதேயயௌ தஸ்யாம் வீத்யாம் ரத இதி லஸன் வர்தத இதி”

நிறைவு நாளான பங்குனி திருவோணத்தன்று காலை திருத் தேரில் பெருமாளும் பூமி தேவியும் எழுந்தருளும் போது, “இறைவன் நம்மைத் தேடி நம் வீதிக்கு வந்துள்ளாரே!” எனப் பரவசப்பட்டு பக்த கோடிகள் பேசும் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமாளும் பூமிதேவியும் ஆனந்தம் கொள்கிறார்கள்.

10. காலை பல்லக்குப் புறப்பாடு:

“ஆந்தோலிகாஸு பவதீம் ஜனதா வஹந்தீ

சாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ

ஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஜந்தீ

சாரோஹயந்தீ அத ச பாதி அவரோஹயந்தீ”

உற்சவத்தின் இரண்டாம் திருநாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளுவார்கள். மண் மடந்தையான பூமிதேவி, விண்ணகரம் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கோவில் கொண்டிருக்கிறாள் அல்லவா? இது (அதாவது விண்ணகரத்தில் மண் மடந்தை குடியிருப்பது) விண்ணிலே மண் குடி இருப்பது போல் உள்ளதாம்! விண்ணிலே மண் குடியிருப்பதைக் காட்ட, மண் மடந்தையான பூமி தேவியைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து விண்ணை நோக்கி உயர்த்திப் பிடிக்கிறார்களாம். பெருமாளோடு பூமிதேவி பல்லக்கில் வலம் வந்தபின், மண்மடந்தை மண்ணில் இருப்பதே பொருத்தம் என்று கருதி பல்லக்கைக் கீழே இறக்கி வைக்கிறார்களாம்.

“டோலாயமானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மதுஸூதனம்

ரதஸ்தம் கேசவம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம ந வித்யதே”

– என்ற ஸ்லோகம் பிரம்மோற்சவக் காலத்தில் திருமகளையும் திருமாலையும் தரிசிப்போர் மறுபிறவி இல்லாத பேரானந்தமாகிய முக்தியை அடைவார்கள் என்று சொல்கிறது.

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.