காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||
பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)
ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார். இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று. * மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது. அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள். இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர். கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர். (1) கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று, இங்கு கோதாவது (கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை. இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி. அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை). இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி * (8-2-11) என்றார் ஆழ்வாரும். (2) இனி * கோதிலவாம்* என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி.
நம்மாழ்வார் வைபவம்
இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.
* தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகார்கள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.
ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள். * இப்படி யிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக் கடவார் ஒருவருமில்லை. இவற்றை யுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ் வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான். * ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது! பகவான் இவ்வாழ்வாரை விசேஷ கடாக்ஷம் பண்ணி யருளியதால் தத்வங்களை விசதமாக அறிந்தார் நம்மாழ்வார். இனி மற்றைய ஆழ்வார்களும் இதே போன்றுதான் அருளப்பட்டார்கள் என்பதனால், அவர்களிடம் இருந்து வ்யாவ்ருத்தி தோற்ற இவரது சீர்மையை அருளிச் செய்கிறார் அடுத்த வரியினால். அப்படிப்பட்ட ஆழ்வார்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்றபடி! * பூதம் ஸரஸ்ச்ச * என்கிற தனியனாது அருளிச்செயல் ஸேவிக்கும் காலங்களில் முன்னே ஓதப்பட்டு வரப்படுகிறது. இதன் ஸாராம்ஸமாவது => ஏனைய ஆழ்வார்களும் எம்பெருமானாரும் நம்மாழ்வாருக்கு அவயவ பூதர்கள் என்பதாகும். தம்படி தாமுமறியார் => ஏதேனும் ஒரு ஸாதனைத்தை அனுஷ்டித்து வைத்து அதனால் பலிக்கப் பெற்றது இல்லாமையினாலே தம்முடைய பெருமையினைத் தாமும் அறியார் ! எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் ஆயிற்று இவ்வாழ்வார்க்கு வந்த நன்மைகள் யாவும். ஸம்ஸாரிகளுமறியார்கள் => இவரைப் போன்று ஒரு வ்யக்தி ஸம்ஸாரத்தில் காணமாட்டாமையினாலே ஸம்ஸாரிகளும் இவரது ப்ரபாவத்தினை அறியார்கள். ஸர்வேஶ்வரனும் அறியான் => தன்னுடைய க்ருஷிபலங்களும் திருக்குணங்களும் இவரிடத்தில் பலித்தது போல் வேறொருவரிடம் பலிக்காமையினாலே எம்பெருமானும் அறியான்.
ஸம்ஸாரிகளைக் காட்டில் ஆழ்வார் பெருமை படைத்தவர் என்று ஒப்புக் கொண்டாலும், நித்ய ஸூரிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தர் என்று சொல்லலாமோ என்னில் – * விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் வ்யாவ்ருத்தரே ! யாவர்நிகர் அகல்வானத்தே (4-5-8) => எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் , என்று ஆழ்வாரும் தம்மைப் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவரது புகழ்.
வேதம் தமிழ் செய்த மாறன்
ஸ்ரீ நம்மாழ்வாருக்கு * வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமம். அவரது வாழித் திருநாமத்தில் * வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே * என்றே ஓதிவரப் படுகின்றது. ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய உபதேசரத்தின மாலையினில் ஆழ்வாரை * வேதம் தமிழ் செய்த மாறன் * என்று கொண்டாடுகிறார். அதாவது தன்னை அதிகரிக்கைக்கு (கற்கைக்கு) அநேகமான அதிகாரங்களை உடைத்தாய் இருத்தல், த்ரைகுண்ய விஷயமாயிருத்தல் (முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்காயிருத்தல்) அன்றிக்கே, ஸர்வரும் அதிகரிக்கும்படியாகவும், உத்தரபாகத்தின் அர்த்தத்தை மாத்திரம் ப்ரதிபாதிக்கும்படியாய் இருப்பது ஆயிற்று இவ்வாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி. இப்படி அருளிச் செய்யுமிடத்து இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள். ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम् * – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு அது தன்னையே பிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !
இதனை அமுதனாரும் * எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * என்றருளினார். எய்தற்கு அரிய மறைகள் – அடைவதற்கு அரிதாய் உள்ள மறைகள். தன்னுள்ளே கொண்டுள்ள அர்த்தங்களை மறைப்பதினால் மறை ஆயிற்று. இதன் அர்த்தங்களை அறிவதற்கு ந்யாய ஸஞ்சாரம் பண்ணும் மஹரிஷிகளே அர்ஹர்கள். மற்றையோர்களுக்கு அது கைகூடாது என்றபடி. இதனை அதிகரிக்கவும் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம், மீமாம்ஸா இவற்றின் உதவி வேண்டும். * வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே * (2) என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரமும் அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இதனை விவரிக்கின்றன. மேலும் * அநந்தா வை வேதா: * என்று வேதங்களை முழுவதுமாக அதிகரிப்பதும் இயலாத காரியம். ஆயிரம் இன்தமிழால் – இனி ஸ்ரீசடகோப வாங்மயமான திருவாய்மொழி எய்தற்கரியதாய் இல்லாதல் சொல்லப்பட்டது. ஆயிரம் – என்பதினால் திருவாய்மொழியின் அளவுபட்டமையும், இன்தமிழால் – என்பதினால் அனைவரும் அதிகரிக்கலாம்படியும், அதுவும் இன்தமிழாகையினாலே எய்தற்கு எளியதாய் இருக்கிறது.
* யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா * [ யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.
அருளிச் செயல் வைலக்ஷண்யம்
இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள். அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது. இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய், போக்யமுமாய், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய், ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய், ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.
பகவதேகபரமாய் – எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே, * மாற்றங்களாய்ந்து கொண்டு * (6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.
போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் * என்கிறார். அதாவது திருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும். பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம். * தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள் *. இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது. திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம். முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.” இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும். இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே * என்றவிடத்தில் அருளினார். இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்ய ஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.
ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. * அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்
என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும், வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் * தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே * என்றருளினார்.
ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் * என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.* (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி.
பகவத் விஷயம்
இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம். உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது. இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் *….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் * அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா * என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.
இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே
வடதல தேவகீ ஜடர வேதஶிர: கமலாஸ்தந ஶடகோப வாக் வபுஷி ரங்க க்ருஹே சயிதம்
வரதமுதார தீர்க்க புஜலோசந ஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்தி ஹரம் || ( பூர்வ சதகம் – 78)
என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச் செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப் பெற்ற அர்த்தமாகும்.!
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்
வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ் வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்
- நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
- ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
- கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
- நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கணவளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)
அர்ச்சாவதாரம்
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவனான பேயாழ்வார், அர்ச்சாவதாரத்தைப் பற்றுகையே சுலபமானதும், நாம் உய்வதற்கும் வழியாகும் என்பதனை,
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
என்கிற பாசுரத்தினால் நமக்கு உணர்த்தினார். அதாவது மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், பஞ்சாக்நி நடுவில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட உடலை வருத்தித் தவம்புரிவது பாவங்கள் தொலைந்து நற்கதி அடையவேண்டும் என்பதனாலே. அவ்வாறு வருந்தவேண்டா! திருவெஃகாவில் உள்ள ஸ்வாமியின் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராய்ப் புஷ்பங்களைப் ஸமர்ப்பித்து ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.
வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||
இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம். வேதத்தினால் அறியப்படுபவன் எம்பெருமான். *சுடர் மிகு சுருதியுள் உளன்* என்று இதனை அருளினார் நம்மாழ்வார். * ஶ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே * என்றார் எம்பெருமானார். அப்படி வேதத்தினால் அறியப்படுபவனான எம்பெருமான் தசரதனுக்குக் குமாரனாக திருவவதரித்த போது, வேதமும் வால்மீகி முனிவரிடம் இருந்து ஸ்ரீராமாயணமாகத் தோன்றிற்று. இதனை * வேத வேத்ய ந்யாயம் * என்று உரைப்பர்கள் பூர்வர்கள். இந்த ந்யாயத்தாலே நோக்கினால், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கு நோக்கு அர்ச்சாவதாரம் என்னலாம்படியிருக்கும். நித்ய முக்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலை பரமபதம். க்ஷீராப்தியில் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அபயம் கொடுத்துக் கொண்டு இருப்பவன் எம்பெருமான். ராமக்ருஷ்ணாதி அவதாரங்களோ குறிப்பிட்ட தேசகாலத்தவர்களுக்காய் இருக்கும். * தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே * என்று ஆச்ரிதர்கள் விரும்பிய திருமேனியையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஸர்வஸுலபனாய் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமானை ப்ரதிபாதிப்பது, ஸுலபமான ஆழ்வாருடைய திருவாய்மொழியே. இதனுடைய ஸுலபத்வமும் கீழேயே சொல்லப்பட்டது.
ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது *செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்
செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)
என்று ஸங்க்ரஹித்தார். இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் * என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி. இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். * ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளோபாதி கூறு கொள்ளலாம்படி நின்ற நிலையிறே * …. * இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *
ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்
“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”
वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥
வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள். அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும். அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார். பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை *ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார். ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.
இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வ பரமாயும், உபாஸந பரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம் தான் இருப்பது; அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸந பரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது.
வ்யாக்யானங்கள்
ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அவதரித்த வ்யாக்யானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். ஸ்ரீ அபயப்ரதராஜர் எனப்படும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையே அனைத்து திவ்யப்ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். * மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில * என்று மாமுனிகள் குறிப்பிடும்படி ஸ்வாமி பிள்ளை லோகாசார்யருக்குத் திருத்தம்பியாரான ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் சில அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். இவ்வ்யாக்யானங்கள் திவ்ய ப்ரபந்தங்களின் ஆழ்ந்த பொருள்களையும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் திருவுள்ளத்தை ப்ரதிபாதிப்பதாயும் இருக்கும். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய உபதேச இரத்தினமாலையிலே * பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை மணவாளயோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளரென்று நெஞ்சே கூறு * என்ற பாசுரத்திலே அருளிச்செய்தார். * திருவாய்மொழியைக் காத்த * என்றருளினார். இத்தால் ப்ரமாண ஶ்ரேஷ்டமான திருவாய்மொழிக்கு அபார்த்தங்கள் வாராமல் காத்தருளிய குணவாளர்கள் இவர்கள் என்று திருவுள்ளம் பற்றியருளினாராயிற்று. இத்திருவாய்மொழிக்கு மட்டும் 5 வ்யாக்யானங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் ஏற்றம் விளங்கும்.
* இன்பமிகும் ஆறாயிரம் * என்று முதல் வ்யாக்யானம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸங்கையையிலே (எண்ணிக்கையிலே) * தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளானாலே * அருளிச் செய்யப்பட்டது.
* ஏர் ஒன்பதினாயிரம் * என்று * வேதாந்தி நஞ்சீயரால் * திருவாய்மொழிக்கு அதன் அர்த்த கௌரவம் தோற்ற அருளிச்செய்யப்பட்டது. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்யையிலே இருக்கும் இதன் எண்ணிக்கை. * மாய வாதியர் தான் அஞ்சப் பிறந்தவன் சீ மாதவனான * வேதாந்தியன்றோ இவர்!
* இன்பா வரு பத்தி மாறன் * – இன்பமாக வருகிற கடாக்ஷத்தாலே வந்த பக்தியை யுடைய மாறனின் மறைப்பொருளச் * இருபத்திநாலாயிரமாகச் * சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் தாமும் ஸ்ரீராமாயணத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது ஸுப்ரஸித்தம். அதனாலேயே * ராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் * என்ற சாயையிலே பாசுரம் அமைத்தார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.
ஶ்ருத ப்ரகாஶிகா ஸங்க்யையிலே * வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை * யினாலே ஏடுபடுத்தப்பட்டது * ஈடு முப்பதாறாயிரம் *. இதுவும் கேட்ட அர்த்தத்தை ப்ரகாஶப்படுத்தப்பட்டது தான்! இது தானும் * இந்த நாடறிய * என்று ஸர்வரும் கொண்டாடும்படி * தெள்ளியதா நம்பிள்ளை * யினால் அருளிச்செய்யப்பட்டது.
அடுத்தது * பன்னீராயிரமாக * அழகிய மணவாளச் சீயரால் அருளிச் செய்யப்பட்டது. * இத்தை யொழிய நாலு வ்யாக்யாநம் உண்டானாலும் ஶப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தை கொண்டே ஸாதிக்கவேண்டுமிறே * என்று இதன் ஏற்றம் ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயரால் அருளப்பட்டது. * த்ரமிடோபநிஷத் ஸங்கதியும் * இவராலேயே அருளிச்செய்ய்யப்பட்டது.
எப்படி வேதஶிரோபாகமான உபநிஷத்துக்களுக்கு வ்யாஸ பகவானால் ஸூத்ரங்களாக அர்த்தம் நிர்ணயிக்கப் பட்டதோ அதே போன்று ஸ்வாமி அழகிய மணவாள்ப் பெருமாள் நாயனாரால் * ஆசார்ய ஹ்ருதயத்தில் * திருவாய்மொழியின் அர்த்தங்கள் ஸூத்ர ரூபங்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளன.
ஸ்வாமி வேதாந்தாசார்யரால் * த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும் த்ரமிடோபநிஷத் ஸாரமும் * ஶ்லோக ரூபங்களாக திருவாய்மொழியின் அர்த்தங்களைப் ப்ரதிபாதிப்பதாக அனுக்ரஹிக்கப்பட்டன.
ஸ்ரீமத் வரவரமுனிகளால் * திருவாய்மொழி நூற்றந்தாதி * ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஸாரமாக இன்பம் பயக்கும்படி * சொல்லும் பொருளுமாகத் * தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தனை வ்யாக்யானங்கள் மற்றும் பூர்வர்கள் க்ருதியினாலேயே இத்திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.
பெண் பேச்சு
திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய பேச்சாக மட்டும் இன்றி * பெண் பேச்சு * ஆகக் கூறியுள்ளதும் பாசுரங்கள் உள. வடமொழி மறையான வேதத்தின் ப்ரதம ப்ரவர்த்தகனான ப்ரஹ்மாவிற்கு நான்குமுகங்கள். * யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் .. * என்று ஸ்ருஷ்டியில் எம்பெருமான் முதலில் பிரமனுக்கே வேதத்தை ஓதிவைத்தருளினான். கல்பந்தோறும் மாறாமல் வரும் திருவாய்மொழியினை நம்மாழ்வாரைக் கொண்டு ப்ரவர்ப்பித்து அருளினான். இவருக்கும் நான்கு முகங்கள் என்னலாம்படி இருக்கும்!
- தாமான தன்மையில் பாடியருள்வது.
- தலைவிப் பேச்சாகப் பாடியருள்வது.
- தோழி முகத்தினால் பாடியருள்வது.
- அன்னை முகத்தினால் பாடியருள்வது
இப்படி பெண் பேச்சு ப்ரேம தஶையிலே என்பதை * ஜ்ஞானத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண் பேச்சு * (118) என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் காட்டப்பட்டுள்ளது. இவர் இப்படிப் பெண்கள் நிலைமை அடைவதன் காரணமானது எம்பெருமானின் * அப்ராக்ருத விக்ரஹமே * ஆகும். அதுவே இவருடைய ஆண் தன்மையை அழித்து பெண்கள் பாவனையினை ஏறிட்டுக் கொள்ளும்படி செய்யும். பெருமாளைக் குறித்து * ஆடவரும் பெண்மையினை அவாவுறும் தோளினாய் * என்றார் கம்பநாட்டாழ்வார். பெருமாளை ஸேவித்த மாத்ரத்தில் ஆடவர்களும் கூட ஸ்த்ரீத்வத்தை ஆசைப்பட்டார்களாம்! அதே போன்று இவ் வாழ்வார் ஈடுபட்ட திருமேனியானது * குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு * (5-5-10) என்றன்றோ இருப்பது. திரள் திரளாக நித்தியசூரிகள் கைகோத்துக்கொண்டு இழியும்படி – சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-* தேஜஸாம் ராஶிம் ஊர்ஜிதம் * (ஸ்ரீ விஷ்ணு புராணம்) [ பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது, அந்த ப்ரஹ்மாதி தேவர்கள், திருச்சங்கு திருவாழி கதை முதலான திவ்யாயுதங்களை தரித்திருப்பவனும், இதுவரை காணப்படாத ரூபஸந்நிவேஶத்துடனும் தேஜஸ்ஸுக்களுடைய (ஒளிக்கற்றைகளின்) ஸமூஹமாயிருக்கிற அந்த விஷ்ணுவைக் கண்டார்கள் ]என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது.
இந்த ஸ்த்ரீத்வமும் வந்தேறியா? (இயல்பாக இல்லாததா?) என்னில், அது வந்தேறியன்று. எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள் தான்! இதனை விஶதமாக * வித்யை தாயாகப் பெற்று * (121) என்கிற ஆசார்ய ஹ்ருத்ய சூர்ணிகையினாலே. தாய்ப் பேச்சாக, தோழிப் பேச்சாகப் பேசுவது எதனால் எனில்,
தோழி – நாயகன் மற்றும் நாயகிகளை சேர்ப்பவள் – ஆழ்வாருக்கு ஸம்பந்த ஜ்ஞானம் தலையெடுக்கும் அவஸ்தையிலே தோழிப் பாசுரம்.
தாய் – நாயகி படிகடந்து செல்லக் கூடாது என்று உரைப்பள் ஆகையினால் – ஆழ்வாருக்கு உபாய அத்யவஸாயம் (எம்பெருமான் தன்னை வந்து ரக்ஷிப்பன்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தாய்ப் பாசுரம்.
நாயகி – நாயகனோடு கூடி இருக்க ஆசைப்படுபவள் ஆதலின் – ஆழ்வாருக்கு எம்பெருமானை கிட்டி அனுபவித்தல்லது தரியாமை (இதனை ப்ராப்ய த்வரை என்பர் ஆசார்யர்கள்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தலைவி பாசுரம்
இம்மூன்று அவஸ்தைகளும் முறையே திருமந்த்ரத்தில் உள்ள பதத்ரயங்களின் ப்ரதிபாத்ய விஷயம் – ஆசார்யமுகேந அதிகரிக்க வேண்டுவது. இவை அனைத்தும் * ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி * (133) * ஸகி வெறிவிலக்கி * (134) என்கிற இரண்டு ஆசார்ய ஹ்ருத்ய ஸூர்ணிகைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
உபதேசப் பத்து
திருவாய்மொழி ஒவ்வொரு 100 பாசுரங்களிலும் 10 பாசுரங்கள் பிறர்க்கு உபதேசம் பண்ணும் திருவாய்மொழிகளாக ஆயிற்று. அதாவது ஒவ்வொரு பத்திலும் ஒரு திருவாய்மொழி முழுமையும் உபதேச பரமாக ஆயிற்று. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் * பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து * (216) என்ற ஸுர்ணிகையில் அருளினார். அவையாவன
- முதல் பத்தில் * வீடுமுன் முற்றவும் * (1-2) [பகவத் பக்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோள் என்று உபதேசம்]
- இரண்டாம் பத்தில் * கிளர் ஒளி இளமை * (2-10) [எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தத்தைப் பெறும் பொருட்டுத் திருமாலிருஞ்சோலையை ஆச்ரயிக்கும்படி பிறர்க்கு உபதேசித்தல் ]
- மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதம் * (3-8) [மன்னா மனிசரைப் பாடாமல் பரமனைப் பாடித் துதிக்கும்படி புலவர்க்கு உபதேசித்தல் ]
- நான்காம் பத்தில் * ஒன்றும் தேவும் * (4-10) [ ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகையால் மற்ற தெய்வங்களை விட்டு அவனையே பற்றுங்கள் என்று உபதேசித்தல் ]
- ஐந்தாம் பத்தில் * பொலிக பொலிக * (5-2) [ஸ்ரீவைஷண்வர்கள் திரளைக்கண்டு வாழ்த்தி, அல்லாதாரை உபதேசித்துத் திருத்துதல்]
- ஆறாம் பத்தில் *நல்குரவும் செல்வமும் * (6-3) [ ப்ரணய கலஹத்தில் முரண்பட்ட தம்மை வசீகரித்தவன் விருத்த விபூதி ஐச்வர்யம் , அதாவது முரண்பட்டது அனைத்தையும் செல்வமாகக் கொண்டு திருவிண்ணகரில் உறைபவன் – அவனது * கழல்களன்றி மற்றோர் களை கணிலம் * * வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே ]
- ஏழாம் பத்தில் * இன்பம் பயக்க * (7-10) [ இன்பக்கவி பாடுவித்த ஸ்ரீமந்நாராயணனை – உள்ளித் தொழுமின் தொண்டீர் – தீவினை உள்ளத்தின் சார்வல்லவே என்று உபதேசம் ]
- எட்டாம் பத்தில் * எல்லியும் காலையும் * (8-6) [ ஆழ்வாரது பெருவிடாய் தீரக் கலக்கக் கருதி திருக்கடித்தானத்தில் இருக்கும் எம்பெருமானை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடரே என உபதேசம்.]
- ஒன்பதாம் பத்தில் * மாலை நண்ணி * (9-10) [ நீர் விரும்பியவை யாவும் உமது இவ்வுடம்பு முடியும் பொழுது தருவேன் என்று ஆழ்வார்க்கு எம்பெருமான் அருள, அவர் உவந்து, திருக்கண்ணபுரத்திலே சென்று அவனைச் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் ]
- பத்தாம் பத்தில் * கண்ணன் கழலிணை * (10-5) [ ஆழ்வார் எம்பெருமானிடத்து பக்தியுடையார் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் சுருங்கச்சொல்லி, பரோபதேசத்தை நிறைவுபடுத்தல் ]
இந்த உபதேசப் பத்தும் அந்த நூறு பாசுரங்களுக்கு, பாட்டுக்கு க்ரியா பதம் போல ப்ரதானம் என்று. இந்த உபதேசமும் அந்த நூறு பாசுரங்களின் தாத்பர்யத்தை ஒட்டியும் இருக்கும்.
தூது
இத்திருவாய்மொழியில் எம்பெருமானைக் குறித்துத் தூது விடும் பதிகங்கள் 4. அவற்றில் தூது விடுவதற்குப் பக்ஷிகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஸ்வாபதேஶத்தால் அவை ஆசார்யர்களையே குறிக்கும். இவ்விஷயம் ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த தூது பதிகங்களின் தாத்பர்யத்தினையும் * தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வத்வ்ய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் * (156) என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி தூது விடப்படும் பதிகங்கள் அஞ்சிறைய மடநாராய் (1-4), வைகல் பூங்கழிவாய் (6-1), பொன்னுலகாளீரோ (6-8) எங்கானலகங்கழிவாய் (9- ) ஆகும். இவற்றுள்
- அஞ்சிறைய மட நாராய் – *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் * என்று வ்யூஹ நிலையில், *என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு * என்று அபராதங்களைப் பொறுக்கும் தன்மை பற்றாசாகத் தூது;
- வைகல் பூங்கழிவாய் – *மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த * என்று விபவத்தில், *புணர்த்த பூந்தண்துழாய் முடி * என்று ஆர்த்தர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று தீக்ஷை யுடைமையைப் பற்றாசாகக் கொண்டு தூது;
- பொன்னுலகு ஆளீரோ – * வானவர் கோனைக் கண்டு * என்று பரத்வத்திலும், * எங்குச் சென்றாகிலும் கண்டு * என்று அந்தர்யாமித்வத்திலும் தூது;
- எங்கானலகங்கழிவாய் – * திருமூழிக்களத்தார்க்கு * என்று அர்ச்சாவதாரத்திலே தூது
ஒவ்வொரு பத்திலும் வெளியிடப்படும் திருக்குணங்கள்
எம்பெருமானது திருக்குணங்களை விசதமாகக் காண்பிப்பது திருவாய்மொழியிறே! அமுதனார் முதல் பாசுரந்தன்னிலேயே * புகழ் மலிந்த பா மன்னு மாறன் * என்றாரிறே! * உயர்நலமுடையவன் * (1-1-1), * ஈறிலவண்புகழ் * (1-2-10) என்று உபக்ரமித்து (ஆரம்பித்து), * உலப்பில் கீர்த்தி * (6-101) என்று மத்யத்திலும் (நடுவிலும்) *சுடர்ஞான இன்பம் * (10-10-10) என்று முடிவிலும் திருக்குணங்களே அருளிச் செய்யப்பட்டிருக்கை காணத்தக்கது. * சீர்த்தொடை ஆயிரமிறே * திருவாய்மொழி
எம்பெருமானுடைய தசாவதாரம் போன்று 10 பத்துக்கள் கொண்டதான திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்திலும் ஒரு திருக் குணம் ப்ராதான்யேன இருக்கும். அவையாவன
- முதல் பத்தில் – பரத்வம்
- இரண்டாம் பத்தில் – காரணத்வம்
- மூன்றாம் பத்தில் – வ்யாபகத்வம்
- நான்காம் பத்தில் – நியந்த்ருத்வம்
- ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம்
- ஆறாம் பத்தில் – சரண்யத்வம்
- ஏழாம் பத்தில் – சக்தத்வம்
- எட்டாம் பத்தில் – ஸத்யகாமத்வம்
- ஒன்பதாம் பத்தில் – ஆபத்ஸகத்வம்
- பத்தாம் பத்தில் – ஆர்த்திஹரத்வம்
திருமந்த்ர ப்ரதிபாதனம் திருவாய்மொழி
திருமந்த்ரமாவது மந்த்ர ராஜன் என்று அழைக்கப்படுவதாகும். முமுக்ஷுக்களுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்களிலே வைத்து முதலாவதாக இருப்பதாகும். இதில் உள்ள * பதத்ரயமும் – ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும், தத் ஸம்பந்த விரோதியான ஸ்வ ஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாபல்ய ஹேது பூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது. *, என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரால் பரந்தபடியில் அருளிச் செய்யப்பட்டது. ஆதலால் திருமந்த்ரத்தால் அறியப்படுவது அர்த்த பஞ்சகம் ஆகும். திருவாய்மொழியினால் அறியப்படுவதும் அர்த்தபஞ்சகமாகும். இப்படி ப்ரதிபாத்ய விஷயங்கள் இரண்டினுக்கும் ஒன்றாய் இருக்கும்.
இன்னமும் * கண்கள் சிவந்து * (8-8) பதிகத்தில் முதலிரண்டு திருவாய்மொழிகள் வழியாக எம்பெருமானின் ப்ரஸ்தாவமாக அகாரார்த்தமும், பின்பு ஜீவ ஸ்வரூபம் சொல்லும் முகத்தாலே மகாரார்த்தமும், * கருமாணிக்க மலைமேல் * (8-9) பதிகந்தன்னில் * அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் * இத்யாதிப் பாசுரங்களால் உகாரார்த்தமும், * நெடுமாற்கடிமை செய்வேன்போல் * (8-10) பதிகத்தால் பாகவத சேஷத்வம் அறிவிக்கும் ப்ரகாரமாக நமப் பதார்த்தமும், * கொண்ட பெண்டிர் * (9-1) பதிகத்தால் எம்பெருமானை ஒழிந்தவர்கள் ஆபாஸ பந்துக்கள் என்று நாராயணார்த்தமும், * பண்டை நாளாலே * (9-2) பதிகத்தால் கைங்கர்ய ப்ரார்த்தனையான வ்ய்க்த சதுர்த்தியுமாக திருமந்த்ரம் ப்ரதிபாதிக்கப்பட்டது என்னவுமாம்.
த்வயார்த்த ப்ரதிபாதனம் திருவாய்மொழி
திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் விஷயம் த்வயம் என்னலாம்படியும் இருக்கும். இதனை ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் – * த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸார ஸங்க்ரஹத்திலே * என்று அருளிச் செய்தார். பகவானாகிய ஸர்வேஶ்வரன் தன்னுடைய கருணையினாலே சேதனர்க்கு ரஹஸ்ய த்ரயங்களையும் ப்ரகாஶிப்பித்து அருளினான். அதன் அர்த்தங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு 18 ரஹஸ்யங்களாக அருளிச் செய்தார் ஸ்ரீ லோகதேஶிகன். அவற்றில் * ஸார ஸங்க்ரஹம் * என்பது ஒரு ரஹஸ்யம். அதனில் திருவாய்மொழியில் த்வயார்த்தம் சொல்லப்படுகிறது என அழகாகக் காட்டியருளியுள்ளார்.
- ஶ்ரிய:பதித்வம்
- நாராயணத்வம்
- ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான அவனுடைய சரணாரவிந்தயுகளத்வம்
- அதினுடைய ப்ராபகத்வம்
- சேதனனுடைய பற்றுதல்
- லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம்
- ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம்
- ஸர்வஸ்வாமித்வம்
- நித்ய கைங்கர்யத்வம்
- கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதலும்
ஆகிய இப்பத்து விஷயங்களே திருவாய்மொழிக்கும் த்வயத்திற்க்கும் நோக்கு!
ஶ்ரிய:பதித்வம் தெரிவிக்கப்பட்டது, * மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் * (1-3-1) – தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிமடாக உடைய பிராட்டி அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்; * மலராள் மைந்தன் *(1-5-9) திருமகள் கொழுநன்; * திருமகனார் தனிகேள்வன் * (1-6-9) தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக் கேள்வன் ; * திருவின்மணாளன் * (1-9-1) பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்; * பூமகளார் தனி கேள்வன் * (1-9-4) பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்; * மலராள் மணவாளனை * (1-10-4) திருமகள் நாதனுமான எம்பெருமானை
ஆகிய பாசுரங்களால்.நாராயணத்வம் தெரிவிக்கப்பட்டது * எம்பெருமான்நாரணற்கு * (2-1-7) எனக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு; * எம்பிரானெம்மான்நாராயணனாலே * (2-7-1) வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே ; * நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன் * (2-7-2) எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் ஆகிய பாசுரங்களால்
எம்பெருமானுடைய ஸர்வலோக ஶரண்யமான திருவடித் தாமரைகள் சொல்லப்பட்டது * நாண்மலராமடித்தாமரை * (3-3-9); * அங்கதிர் அடியன் * (3-4-3) அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளையுடையவன்; * அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் * (3-6-9) அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய பெருமானாயுமிருக்கின்ற க்ருஷ்ணனுடைய திருவடிகளை; * சீர் அடியானே * (3-8-1) சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே ஆகிய பாசுரங்களால்
அதினுடைய ப்ராபகத்வம் சொல்லப்பட்டது * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் * (4-2-8) இலங்காபுரியில் அம்புகளில் இருந்து கிளம்பும் அக்னியை செலுத்தின இராமபிரானுடைய; * வல் வினை தீர்க்கும் கண்ணனை * (4-4-11) ஸகல பாபங்களையும் போக்குமியல்வினனான க்ருஷ்ணனை ; * வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே. * (4-5-2) கொடிய க்லேசங்கள் அனைத்தும் நசிக்கும்படியாக; * மேவி நின்று தொழுவார் வினை போக * (4-5-4) நெஞ்சு பொருந்தியிருந்து அனுபவிப்பாருடைய பாபங்கள் யாவும் நசிக்கும்படி; * வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் * (4-9-9) விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து ஆகிய பாசுரங்களால்
சேதனனுடைய பற்றுதல் சொல்லப்பட்டது * தமியேனுனக்கு அருளாய் * (5-7-2) இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருள் புரிய வேணும்; * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * (5-7-10); * உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் * (5-8-3) “என்னான் செய்கேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி ; * கழல்கள் அவையே சரணாக் கொண்ட * (5-8-11) திருவடிகளையே சரணமாகப் பற்றின; * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் * (5-9-11) சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று ஆகிய பாசுரங்களால்
லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம் சொல்லப்பட்டது * திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து * (6-5-8) * அடிமை செய்வார் திருமாலுக்கே * (6-5-11) * ஒசிந்த வொண் மலராள் கொழுநன் * (6-7-8) * என் திருமார்வற்கு * (6-8-10); * கோலத் திருமாமகளோடு * (6-9-3) ஆகிய பாசுரங்களால்
ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம் சொல்லப்பட்டது * கன்னலே அமுதே * (7-1-2) பரமபோக்யனே!; * கொடியேன் பருகின்னமுதே * (7-1-7) பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!; * அலைகடல் கடைந்தவாரமுதே * (7-2-5) அலையெறிகின்றகடலைக் கடைந்த ஆராவமுதமே!; * திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ * (7-9-9) பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு அநுபவித்தாலும் ஆரமாட்டேன் ஆகிய பாசுரங்களால்
ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது – * அடியனேன் பெரியவம்மான் * (8-1-3) * விண்ணவர்கோன் நங்கள்கோன் * (8-2-2) * அமர்ந்த நாதனை * (8-4-10) * மூவுலகாளி * (8-9-5) ஆகிய பாசுரங்களால்
நித்யகைங்கர்யத்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது * பண்டைநாளாலே நின் திருவருளும் * (9-2-1) * குற்றேவல் செய்து * (9-2-2) * கொடுவினையேனும் பிடிக்க * (9-2-3) * ஆட்கொள்வானொத்து * ( 9-6-7) * அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் * (9-8-4) ஆகிய பாசுரங்களால்
கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதல் ப்ரதிபாதிக்கப்பட்டது * துயர் கெடுங்கடிது * (10-1-7) * எழுமையும் ஏதஞ்சாரா * (10-2-2) * அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் * (10-8-7) ஆகிய பாசுரங்களால்
ப்ரபந்தைகார்த்யம்
திருவாய்மொழி ஆயிரத்திற்கும் ப்ரமேயமாக * அவித்யா நிவர்த்தக * (234) என்கிற சூர்ணிகையில் ஆசார்ய ஹ்ருதய கர்த்தாவான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸங்க்ரஹிக்கும் அர்த்தமாவது – ஸம்ஸாரத்திற்குக் காரணமான அஜ்ஞானத்தைப் போக்குவிப்பதான ஜ்ஞானத்தை (* மயர்வற மதிநலம் அருளினன் * ) அருளிய பகவானது நிர்ஹேதுகமான அநுக்ரஹத்தாலே (*அவாவற்று வீடு பெற்ற * ) ஸம்ஸாரம் அகல எம்பெருமானின் கைங்கர்ய ரூபமான மோக்ஷம் லாபம் என்பதாகும். எந்த எம்பெருமானுடைய ப்ரஸாதத்தினால் ஜ்ஞானம் கிடைக்கிறதோ, அதே ப்ரஸாதமே மோக்ஷம் தனையும் அருளவல்லது – அது நிர்ஹேதுகம் என்றபடி
————-
திருவாய்மொழி என்றால் மேன்மையுடைய வாயினால் சொல்லும் சொற்களாலாகிய நூல் என்பது பொருள். இது ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்ரங்களுள் நான்காவதான சரமப்ரபந்தம். இது ஸாமவேத ஸாரமாகும்.
ஆழ்வார் இப்ரபந்தத்திலே நமக்காக, நாம் உஜ்ஜீவிப்பதற்காக பல பல அத்யத்புதமான விஷயங்களை ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்களில் கூறியிருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு அனுபவம் ஏற்படும் போதும் அதை பாசுரமாக வெளியிட்டுள்ளார்.
ஆழ்வார் சொல்வதாவது,
மக்களில் பெரும்பாலோர் நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவார்களேயொழிய தமக்கு ஆன்மீக ஞானம் இல்லையே என்று குறைபடுவதில்லை.
அதனாலேயே கண்ணபிரான் உலகமெல்லாம் அறியும்படி அர்ச்சுனனை வ்யாஜமாக்க்கொண்டு पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् என்று பார்த்தனுக்கு மட்டுமல்லாமல், அறிவினால் தமக்கு குறைவு இருக்கிறது என்ற ஞானமும் இல்லாத உலக மக்களுக்கு நெறியெல்லாம் சொல்லி பகவத் கீதையை அவர்கள் உஜ்ஜீவிக்க உபதேசித்தான். –
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-
——–
பெருமானிடம் நமக்குள்ள பக்தி பரிணமிப்பதற்கு நமக்கு ஸம்ப்ரதாய ஞானம் ஏற்படவேண்டியது மிகவும் அவச்யம். நாம் ஸம்ப்ரதாய ஞானம் பெற நாம் முதலில் அர்த்த பஞ்சகத்தை அறிய வேண்டும். இந்த அர்த்த பஞ்சகம் ஐந்து விஷயங்களை நமக்கு போதிக்கிறது. அவையாவன
1. எம்பெருமானின் ஸ்வரூபம்
2. நம் ஸ்வரூபம்
3. நம் லக்ஷ்யம் என்ன
4. நம் லக்ஷ்யத்தை அடையும் வழி என்ன
5. நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை
மேற்சொன்னவைகளுக்கு விடைகளாவது,
1. ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள், வேறு தெய்வமில்லை என அறிய வேணும்
2. எம்பெருமானுக்கும் அவன் மெய்யடியார்க்கும் நாம் அடிமை என உணர வேணும்
3. பெருமானின் திருவடிகளில் அடிமை செய்கையே நம் லக்ஷ்யம் என அறிய வேணும்
4. எம்பெருமானை அடைய அவன் திருவடிகளே நமக்கு உபாயம் என உணர வேணும்
5. அவனை அடைய நம்முன் இருக்கும் தடைகளை அறுக்க வேண்டும் என உணர வேணும்
ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை உணர்ந்து தெளிவு பெற்று பேதமை தீர்ந்தாலேயே நாம் நம் பக்தியை சரிவர செய்யமுடியும். –
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-
இதை கருத்தில் கொண்டு, இத் திருவாய்மொழி ஸாரம் என்னும் தொகுப்பை கீழ்க்கண்ட தலைப்பகளில் நாம் அணுகுவோம்.
1.1. எம்பெருமானின் ஸ்வரூபம் – அத்யாயம் 1
1.2. பெருமானை அடைய ஆழ்வாரின் ப்ரார்த்தனைகள்-அத்யாயம் 2
1.3. பெருமானை அடைய ஆழ்வாரின் துடிப்பு – அத்யாயம் 3
2. நம் ஸ்வருபம் – அத்யாயம் 4
3. நம் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்யம் என்ன – அத்யாயம் 5
4. நமது லக்ஷ்யத்தை அடையும் வழி – அத்யாயம் 6
5. நமது லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை – அத்யாயம் 7
1. எம்பெருமானின் ஸ்வரூபம்
1.1 எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம்
1. முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்தவன்
2. அப்போதலர்ந்த செங்கமலங்கள் போன்ற திருக்கண்களை உடையவன்
3. சிவந்து கனிந்த அதரங்களை உடையவன்
4. செம்பவளப்பெட்டியிலே முத்துக்கள் வைத்தாற்போல பற்களை உடையவன்
5. திவ்யமான ஒளியுடைய செம்பொன் திருமேனி கொண்டவன்
6. திவ்ய பீதாம்பரத்தை தரித்தவன்
7. பொன் நிறமுடைய மலர்மகளை திரு மார்பில் உடையவன்
8. தன் நாபி கமலத்தில் பிரமனை அமர்த்தியுள்ள பத்மநாபன்
9. நீங்கிய இடத்தை ருத்ராதி தேவர்களுக்குக் கொடுத்தவன்
10. நான்கு திருக் கைகளில் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்கள் தரித்தவன்
11. பஞ்சாயுதங்களையே ஆபரணமாகக் கொண்டவன்
12. யக்ஞோபவீதம், திருவாபரணங்கள், அழகிய ஹாரங்கள் அணிந்தவன்
13. திருத்துழாய் மாலையை விரும்பி அணிந்தவன்
14. செந்தாமரையை தோற்கடிக்கும் கழல்களுடைய பத்மபாதன்
15. நம் துயர் தீர்க்கும் ஜோதிமயமான திருவடிகளை உடையவன்
16. தேவிமார்கள் பாத ஸேவை செய்ய சயனித்து இருப்பவன்
17. சுடர் மிகு மரகத மலை போன்ற அழகுத் தோற்றம் உடையவன்
18. சூர்யனும் மங்கும்படியான தேஜோமயமான தேவதேவன்
19. வேதாத்மாவான கருடனை தன் வாகனமாகக் கொண்டவன்
அவன் மார்வம் திரு இருக்கும் இடம். தாமரை பூவில் பிறந்த பிராட்டி அதைவிட்டு இவன் திருமார்பை பற்றிக்கொண்டு ‘அகலகில்லேன்’ என்று கிடக்கின்றாள்; அவன் கொப்பூழ் பிரமன் இருக்கும் இடம்;. நீங்கினவிடமோ ருத்ரனுடையதாயிருக்கின்றது.
திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-
பிராட்டி பிரமன் சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகல லோகங்களும் ஸகல சேதநாசேதநங்களும் அவனைப் பற்றியே நிலைநிற்கின்றன. அவனுள் கலவாதது எப்பொருளுமில்லை.
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-
அமரர்களென்ன, ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லா நாரங்களையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவனானான்
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
இப்படி தான் ஒரு மரகத மலையோ என்னலாம்படி யிருக்கிறான்.
இப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் ஸர்வகாலமும் அபூர்வ வஸ்துபோலே பரம போக்யனாய் புதியனாயிருந்து தெவிட்டுகின்றானில்லை;
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
வானோர்க்கும் மண்ணோர்க்கும் கொள்ளக் கொள்ளக்குறையாத மஹாநிதிபோல * கொள்ளமாளாவின்ப வெள்ளமாய் எப்போதும் அநுபவிக்க உரியனாயிருக்கும் எம்பெருமானை எத்தனைகாலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாது.
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-
பரமபத்த்திலிருக்கும் பரம் பொருளான இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு பலபல விலக்ஷணமான நாமங்களும் ரூபங்களும் உண்டு; .
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-
அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபல. அவன் ஞானமும் பலபலவே.
கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் பொன்மணியும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே அவன் திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.
இவனுடைய கண்டுகளிக்கப் பெறுவதான திருவடிவுகளும் பல பல.
நாம் அவனை அனுபவிக்குங் காலத்தில் நம் பஞ்சேந்திரியங்களும் திருப்தி பெரும் விதமும்
கண்டு இன்பம், கேட்டு இன்பம் என்று பலவகைப்பட்டது.
இப்படி எம்பெருமான் நித்ய ஆநந்த த்ருப்தனாய் “தாம் தம் பெருமையறியார்” என்றும் “தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்னும் சொல்லுகிறபடி எழுந்தருளியிருக்கிறான். 2.5.6
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-
இப்படி வெள்ளை வெள்ளத்தின் மேலே ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்றது எங்கள் பெருமானே.
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—
ஆக அத்வைதிகள் சொல்வதுபோல் நம் பெருமான் நிராகார ப்ரம்மம் இல்லை. அவன் திவ்யமங்கள் விக்ரஹத்தை உடையவன்.
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-
1.2. எம்பெருமானின் பரத்வம்
எம்பெருமான் நித்யஸூரிகளுக்கு நியாமகன்.
எதிர் நிகழ் கழிவு என்னும் முக்காலங்களிலும் ஒப்புயர்வற்றவன்
ஆனால் கண்களால் காணப்பட முடியாதவன்.
அதே போல். காதுகளால் கேட்கப்பட முடியாதவன்.
நம் இந்திரியங்களுக்கும் விஷயமாகாதவன்.
மற்ற ஜீவாத்மாக்கள் நம்மால் க்ரஹிக்கப்படுவதுபோல் பரமாத்மா க்ரஹிக்கப்பட முடியாதவன்.
நேராக அவனை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானந்தாலேயே அறியப்படுபவன். அவனுக்கு ஸமானமானவர்களோ, மேற்பட்டாரோ யாருமில்லை.
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–
இவனிடம் இது இல்லை என்று சொல்ல முடியாதபடி, எல்லாம் தன்னகத்தே கொண்டவன். ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீநம்.
இவற்றின் ஸ்வரூபம் அவனதீதமாயிருக்கையாவது ஸ்ருஷ்டி காலத்திலே எம்பெருமான்தானே இவற்றை யுண்டாக்கியவன்.
எம்பெருமான் எல்லா உலகங்களுக்கும் ஸர்வ ஸ்வாமி.
1.3. எம்பெருமானே ஸர்வ ச்ருஷ்டி கர்த்தா
ஸ்ருஷ்டியையும் ஸம்ஹாரத்தையும் பிரமனும் சிவனும் செய்வதாக சிலர் நினைப்பது தவறு.
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-
எதுவுமே இல்லாமலிருந்த காலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப்படைத்து,
நீ வானோர் பலரும் முனிவருமான யோனிகளைப் படை யென்றான்- அதாவது, ஸப்த ரிஷிகள் தச ப்ரஜாபதிகள் ஏகாதச ருத்ரர்கள் த்வாதசாதித்யர்கள் அஷ்டவஸுக்கள் என்றிப்படிச் சொல்லப்பட்டுள்ளவர்களும் விலக்ஷண ஜன்மங்களை யுடையவர்களும் தத்தமது அதிகாரங்கட்கு ஏற்ற ஸ்ருஷ்டி முதலியவற்றை நன்கு அறிந்திருப்பவர்களுமான சிறந்த வ்யக்திகளை நீ படையென்றான். 1.5.3
மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-
எல்லாம் ஸ்ருஷ்டித்து பிரமன் ருத்ரன் தேவஜாதிகள் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் மூவுலகங்களையும், சேதநவர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தது இவனே.
பஞ்சபூதங்களாகிய ஆகாசம் அக்நி வாயு ஜலம் பூமி என்கிற ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானே.
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
மூவகைக் காரணமுமாயிருந்து ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியை பண்ணினது அவனே
தனிமுதலாகிய மூலப்ரக்ருதியும் அவனே
முக்கட்பிரான் அவனே, திசைமுகன் அவனே,
அமரரும் அவனே, அமரர்கோனும் அவனே.
ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலிய ஸகல புருஸார்த்தங்களுக்கும், நரகம் முதலிய அபுருஷார்த்தங்களுக்கும், தேவாதி ஸகல ஆத்மவர்க்கத்துக்கும், தாரகனாய்க் காரண பூதனாய், நியாமகனாய், ஸஹகாரி காரணம் நிமித்த காரணம் உபாதாந காரணம் என்கிற மூவகைக் காரணங்களும் தானேயாய் நிற்பவன்.
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
1.4. எம்பெருமானின் வ்யாபகத்வம்
ஒருவனைப் பிடிக்க வேண்டி ஊரை வளைவாரைப்போல தம்மை விஷயீகரிப்பதற்காக எங்கும் வியாபித்து ஸர்வாந்தர்யாமியாயிருப்பவன் ஸ்ரீமந்நாராயணன்.
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-
எங்கும் பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த் திவலைகள் தோறும் வியாபித்திருப்பவன். பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே. எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான்.
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-
ஸர்வலோகங்களிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமான் அதீநம். புலப்படும் ஒரு வஸ்துவு மொழியாமல் ஸகல வஸ்துக்களிலும் வியாபித்து அந்தர்யாமியா யிருப்பவன்.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
ஆனால் ஸகல பதார்த்தங்களோடும் அந்தராத்மாவாயக் கலந்து நின்றானேயாகிலும் அவைகளின் தோஷங்கள், ஸுகதுக்கங்கள் தன்மேல் தட்டப்படாமல் இருப்பவன்.
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-
எங்கும் பரந்துள்ள ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருக்கிறான் எம்பெருமான்.
வஸ்துக்களின் உட்புகுந்து அவைகளை ஒரு வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவும் ஆக்கினவன் இவனே.
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-
அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய தெய்வங்களெல்லாவற்றிற்கும் அந்தர்யாமி இவனே.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
இவர்கள் எல்லோரையும் நிர்வஹிப்பவனும் அவனே
பிரமன் முதலானார்க்கு இட்ட காரியங்களை அவர்கள் வழியாலே தானே நடத்தியும், தன் தலையில் வைத்துக் கொண்ட காரியங்களையும் தானே நடத்தியும் போகையாலே அவனுடைய தொழில்கள் எங்கும் காணலாயிருக்கும்.
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-
ப்ரம்ம ருத்ராதி கடவுளர்களென்ன, ஸகல சேதன ஆசேதனப்பொருள்களென்ன, ஆகிய எல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி செய்து அதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவன்.
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
இங்கு ஒரு ரஸமான விஷயம் தெறிந்து கொள்ளத் தக்கது.
எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான் என்று ப்ரஹ்லாதாழ்வான் சொன்னதை இரணியன் நம்பவில்லை. அதை சோதிக்கப்போய் அவன் மாண்டான் என்பது ஜகத் ப்ரஸித்தம்
வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி, அந்த இரணியன் தானே நாட்டிய தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,
வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,
அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,
அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை நிலையை மறுக்கக் கூடுமாகையாலே, அதற்கு இடம் அறும்படி கர்ப்பம், கரு முதிர்தல், ப்ரஸவித்தல் குழந்தாயாய் ஜனித்தல், பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல், இரணியனைவிட பருத்து வளர்ந்த வடிவையுடையவனாய், அப்பொழுதே தோன்றினனென்பதும்
அங்ஙனம் தோன்றியவிடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால், ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும், பரத்வம் ஸித்தியாமற் போய்விடுமாதலால், அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தனனென்பதும்,
இவைபோன்ற பல விசேஷங்கள் நரஸிம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.
ஆகவே எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே ஸந்தேகம் உடையோர் இரணியன் கதையிலிருந்து பெருமான் எங்கும் வ்யாபித்துள்ளான் என்பதில் தெளிவு பெறவேண்டும் என்கிறார் ஆழ்வார். எம்பெருமானுடைய வ்யாபகத்வத்தை நம்பாதவர்கள் இரணியன் அடைந்த கதியையே அடைவார்கள் என்றும் ஆழ்வார் சொல்கிறார்.
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-
1.5. எம்பெருமானே ஸர்வ ரக்ஷகன்
ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ரக்ஷணமும் அவன் அதீநம்.
பிரளய காலத்திலே இவற்றையெல்லாம் தன் வயிற்றிலே வைத்து காத்தவன் இவனே.
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-
இவ்வுலகில் ரக்ஷகர்களென்று பேர் சுமப்பவர்கள் பலவகைப்பட்டு இருப்பர்.
ஒருவன் ஒரு வீட்டுக்கு ரக்ஷகனென்றிருப்பன்;
ஒருவன் ஒரு க்ராமத்துக்கு ரக்ஷகனென்றிருப்பன்;
ஒருவன் ஒரு நாட்டுக்கு ரக்ஷக்னென்றிருப்பன்;
ஒருவன் மூவுலகுக்கு ரக்ஷகனென்றிருப்பன்
ஒருவன் பதினாலுலகுக்கும் ரக்ஷ்கனாயிருப்பன்,
இந்த வ்யக்திகளில் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலேயே இந்த ரக்ஷணங்கள் நடக்கின்றன. இவனுடைய அநுப்ரவேசமின்றி ஒருவராலும் ஒரு ரக்ஷணமும் பண்ண முடியாது. ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை.
சேதநர்களினால் ஆச்ரயிக்கப்படும் மற்ற தெய்வங்கள் எம்பெருமான் தங்களிடத்தில் உள்புகுந்த்தனால்தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்கள்.
ஆக உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே.
அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து வழிபாடுகள் செய்து அவரவர்கள் தாம் தாம் கோரிய பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் தானே அத்தெய்வங்களுக்கு உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமே. அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
மகாப்ரளய காலத்திலே மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் விழுங்கி வயிற்றில் வைத்து ரக்ஷித்த்தும் இவனே.
ஸம்ரக்ஷணம் ஸம்ஹாரம் முதலான எல்லாவற்றிற்கும், அத்விதீய காரணபூதன். ஸகல வஸ்துக்களுக்கும் தனி முதல்வன். மூவுலகுங் காவலோன் இவனே.
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் எம்பெருமான் அதீநம். அதாவது, ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் காரியங்களெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்துக்கு அதீனம்.
கருமங்கள் யாவும் அவனிட்ட வழக்கு.
செய்கையும், பயனும் அவனிட்ட வழக்கு.
அந்தந்த க்ரியைகளை அனுட்டிக்கின்ற கர்த்தாக்களைப் படைப்பவனும் அவனே
சுவர்க்கமும் நரகமும் அவனிட்ட வழக்கு.
அதாவது, ஸகல சேதநாசேதநங்களுள்ளும் எம்பெருமான் அந்தர்யாமியாய் நிற்றலால் சரீர-சரீரி भाव ஸம்பந்தம் என்கிற விசிஷ்டாத்வைதக் கோட்பாடு. இங்கு புரிந்து கொள்ளத் தக்கது. 1.1.6
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
எம்பெருமானது அற்புதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காண முடியாதவை அவன் தானே காட்ட காண்பார்க்குக் காணலாமே யல்லது, ஸ்வ ப்ரயத்நத்தாலே காணப் புகுவார்க்கு ஒரு நாளும் காணமுடியாது.
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-
1.6. அழிப்பவனும் அவனே
நல்லோர்களைக் காப்பவனான அவன் தீயோர்களை அழிக்கவும் செய்கிறான். அவன் செய்த ஸம்ஹாரங்கள் ஜகத் ப்ரஸித்தம். மற்ற தேவனான பிரமன் வரம் கொதுத்து செருக்கெடுத்துத் திரிந்த இரணியனையும் ராவணனையும் அழித்தவன் நாராயணனே. யார் கொடுத்த எந்த வரமும் இவன் முன் பலிக்காது.
தேவர், மனிதர், விலங்குகள், தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்கிளிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் சாகாதபடியும் அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற் பெற்ற வரம் பழுதுபடாமைக்காக, நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல், தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றினனென்பதும்
அஸ்த்ரஸஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும், ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும், பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும்,
பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி, அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,
பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம் மெய்யாகும்படி, தன் மடிமீது வைத்துக் கொன்றனென்றதும்,
வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி, வாசற்படி மீது வைத்துக் கொன்றானென்பதும்,
இவைபோன்ற பல விசேஷங்கள் நாதாயணனின் நரஸம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.
மற்றொரு தேவனான ருத்ரன் கொடுத்த வரத்தைக்கொண்டு ருத்ரனையே தாக்கிய பஸ்மாஸுரனை அழித்தவனும் நாராயணனே. எம்பெருமான் புத்தாவதாரம் எடுத்ததும் ருத்ரன் கொடுத்த வரத்தினால் நாசம் விளைவித்த அசுரர்களை அழிக்கவே.
1.7. எம்பெருமானின் எளிமை
மேற்சொன்ன ஒப்புயர்வற்ற மேன்மை இருக்கச்செய்தேயும் அதனை யெல்லாம் மறைத்துக்கொண்டு கோபால க்ருஷ்ணனாய்த் திருவவதரித்தவன்
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-
தான் இப்படி ஸர்வேச்வரனாக இருப்பினும் தன் மேன்மை பாராதே நீசர் திறத்திலும் வந்து தன்னைத் தாழவிட்டுக் கொடுக்கும் சீலம் எம்பெருமானுக்கு உண்டெண்பது குஹப்பெருமாள். ஸுக்ரீவன், சபரீ, குசேலர், கூனி, இடைச்சிகள், மாலாகாரர் என்று இப்படிப்பட்டவர்களின் சரிதங்களில் காணலாம். நீரின் ஸ்வபாவம்போன்ற ஸ்வபாவத்தையுடைய எம்பெருமான். நீரை நாம் எப்படியிழுத்தாலும் அப்படியெல்லாம் அது ஓடிவரும்; அதுபோலே எம்பெருமான் யார்க்கும் உடன்பட்டு வருபவன்.
நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-
மேலும் எம்பெருமானே, எனக்கு மகனாய் நீ வரவேண்டும் என்று கேட்காதவர்களுக்கும் மகனாக பிறந்தான். அவன் திருவடி ஸம்பந்தம் கேட்காதவர்க்கும் த்ரிவிக்ரமனாக உலகளக்கும்போது, அவர்கள் சிரஸின்மீது திருவடி வைத்து அருளினான்.
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-
இன்ன யோநியில் தான் பிறப்பதென்று ஒரு ஸ்யவஸ்தை கொள்ளாமலே இன்ன சேஷ்டி தந்தான் செய்வது என்று ஒரு வ்யவஸ்தை கொள்ளாமையாலே பலவகைப்பட்ட அவதாரங்களைச்செய்து எளியனாய் நின்றான்.
இருந்தும் நாம் அவனைக் கண்டு கொள்ள வேண்டி, அவ்வப்போது தன் பரத்வத்தையும் காட்டி நின்றான். அர்ஜுனனுக்குச் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் விச்வரூபத்தைக் காட்டினான். ஏழு பிராயத்திலே கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தான்.
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களில். அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லை க்ருஷ்ணாவதாரத்திலே. வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தி ஏங்கி நின்ற நிலையிலே அகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோ. ‘உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவு எத்திறம்?’ என்று சொல்லிக் கொண்டே ஆழ்வார் ஆறுமாஸம் மோஹித்துக் கிடந்தாராம்.
அவன் அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவன் ஆனாலும் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனா யிருப்பவன்
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-
நல்ல எண்ணமில்லாதார்க்கு எட்டாதவன்.
பக்தியையுடையார்க்கு எளியன், பக்த பராதீனன். ஆனால், எளியவனாயிருக்குந்தன்மை எல்லாரிடத்துங் காட்டப்பட்டால் அனர்த்தமாகுமே. ஆகவே உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், உகவாதார்க்கு அருமைப்பட்டவனாக இருந்தால்தானே அன்பர் தேறியிருக்க முடியும்; ஆகவே, பிறர்களுக்கு அரிய வித்தகன்.
களவு வழியிலே வெண்ணெயை அள்ளி அமுது செய்து, பிடியுண்டு உரலோடே கட்டப்பட்டு, அழுது ஏங்கி நின்றதுபோலே தன் ஆப்தர்களான யசோதைப்பிராட்டி முதலானார்க்கு விதேயனாயிருந்து உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், பூதனை, சகடம், மருதம் முதலிய உகவாதார்க்கு அணுகவுமொண்ணாது இருப்பவன்.
பாண்டவர் போல்வார்க்குக் கையாளாயிருந்தாலும் துரியோதனாதியர்க்கு அரியவன் .
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
இப்படிப்பட்ட எம்பெருமானுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியப் போகாது.
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
ஆனால், அதிசயிக்கத்தக்க ஞானத்தையுடையவர்களாலும் அறியவொண்ணாத இந்த எம்பெருமான் தன் க்ருபைக்கு பாத்திரர்களாகில் அவர்களாலே பல பல திருநாமங்களாலும் பலபல திருவுருவங்களாலும் எளிதிலறியக்கூடியவன்.
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-
1.8.எம்பெருமானின் திருக் கல்யாண குணங்கள்
எம்பெருமான் உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றைக்காட்டிலும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படி உயர்ந்த கல்யாணகுணங்களை யுடையவன். ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்தவன்.
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-
எம்பெருமானது குணங்களிலே புகுந்து விட்டால் ஒவ்வொரு குணத்தினுடைய அதிசயமும் எல்லை காண வொண்ணாததாயிருக்கும்;
பரத்வத்திற்கு ஈடான குணங்களும், ஸௌலப்யத்திற்கு ஈடான குணங்களுமாக வகுக்கப்பட்டுள்ள குணங்களிலே ஒருவர் ஒரு குணத்தை அநுபவித்து அதன் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டாட, மற்றொருவர் மற்றுமொரு குணத்தை யனுபவித்து அதன் அருமை பெருமைகளை யெடுத்துரைத்துக் கொண்டாடலாம்படி இருப்பவன் அவன்.
அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-
எம்பெருமானைப் பற்றி சொல்லுகின்ற சாஸ்த்ரங்கள் அவனை ‘அகில ஹேய ப்ரத்யநீகன்’ என்கின்றன; தீய குணங்கள் எல்லாவற்றிற்கும் அவன் எதிர்த் தட்டானவன் என்றபடி. அவனிடத்திலுள்ளவை யெல்லாம் கல்யாண குணங்களே யன்றி ஒரு வகையான தீய குணமும் இல்லாமையால் அங்ஙனஞ் சொல்லுகிறது.
வேறொரு பலனையும் விரும்பாமல் எம்பெருமானையே பரம ப்ரயோஜனமாக விரும்ப வேண்டுவது ஸ்ரீவைஷ்ணவர்களின் கடமை.
அங்ஙனம் தன்னை விரும்பாமல் வேறொரு அற்ப பலனை விரும்பி அது பெறுவதற்காகத் தன்னைவந்து பணிவாருண்டாகில், இவர்கள் பெருமாளையே பரம உத்தேச்யமாக்க் கொள்ளும் உத்தமாதிகாரிகளாக இல்லா விட்டாலும், அப் பலனைப் பெறுவதற்கு வேறொரு க்ஷுத்ர தேவதையைத் தேடி ஓடாமல் நம்மிடம் வந்தார்களே; நம்மை உபேயமாகக் கொள்ளாவிடினும் உபாயமாகவாவது கொண்டார்களே’ என்று திருவுள்ளமுவந்து அருமையான காரியங்களைச் செய்து அவர்களது மனோரதத்தை நிறைவேற்றுபவன் எம்பெருமான்.
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வறுமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே –3-7-5-
எம்பெருமான் நரஸிம்ஹாவதாரம் செய்தருளினதைப்பற்றி ஒரு விசேஷார்த்த்த்தை ஆழ்வார் சொல்கிறார்.
அதாவது, ஒருவன் எம்பெருமானைத் துதி செய்கிறான், ஒருவன் நிந்தனை செய்கிறான், என்று வைத்துக் கொள்வோம்
துதி செய்பவன் நாபியிலிருந்தெழுந்த அன்போடே துதி செய்கிறானா அல்லது கபடமாக மேலெழத் துதி செய்கிறானா, என்று ஆராய்ந்து பார்ப்பதில் எம்பெருமான் ப்ரவர்த்திப்பதில்லை;
பக்தனென்று கைக்கொள்வதற்கு, ஸஹ்ருதயமாகவோ அஹ்ரூதயமாகவோ துதிசெய்தாலும், ‘இவன் துதிசெய்பவன்’ என்று துணிகிறான். பக்தன் என்று கணக்கிட சிறிது வியாஜம் கிடைத்தாலும் போதும் பெருமானுக்கு.
.
நிந்தனை செய்பவனிடத்திலோ வென்னில், இவனுக்குப் பகை உள்ளுற இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்து, அப்படி யிருப்பதாகத் தெரிந்தாலொழியத் தண்டிப்பதில்லை.
ஆகவேதான், இரணியனை நெஞ்சு தொட்டுப் பிளந்து உள்ளிலும் ஆராய்ந்து பார்த்தானாம். பகவத் விஷயத்தில் அவன் பகை மேலெழ இல்லாமல் உள்ளுறவே யிருந்ததாம். அது தெரிந்த பின்பே அவனைத் தண்டிக்கலானான்.
இதன் மூலம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்வதாவது, எம்பெருமானுக்கு அநுக்ரஹத்திலேயே அதிக நோக்கு என்கிறார்.
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-
எம்பெருமான் அடியார்கள் துயர்தீர, தான் துயர் தீர்ந்து இருப்பவன். அதாவது ஆச்ரிதருடைய துக்க நிவர்த்தியை தன்னுடைய துக்க நிவ்ருத்தியாக் கொள்ளுமியல்வினன்.
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-
“பிறர் படும் துக்கத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை” அவன் ஸ்வபாவம். ஸ்ரீராமாயண, அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமபிரானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டு வரும் பிரகரணத்தில் “பிரஜைகள் துக்கப்படுங் காலங்களில் ஸ்ரீராமன் மிகவும் துக்கப் படுகிறான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மடுவின்கரையிலே முதலை வாய்ப்பட்ட ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடரை பிற்பாடு எம்பெருமான் தீர்த்தருளினானேலும் அவன் பட்ட பரிதாபம் அறிந்து கெட்டேன், கெட்டேன் என்று நொந்துகொண்டே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்தானென்றால் பாருங்களேன்!
பிறர் படுந்துயரத்தைக் கண்டு தான் துயரப்படுவது என்று நிற்காமல் அத்துயரை நீக்கவல்ல சக்தியுடைமையும் அவனிடம் உண்டு. துச்சாஸனன் கையிலே த்ரௌபதி பரிபவப்பட்டுக் கூவினபோது கண்ணபிரான் ஒருவாறு அவளது துயரைத் தீர்த்திருக்கச் செய்தேயும் ‘ஐயோ! அவள் கூவின போது நான் நேரில் சென்றிருந்து உதவாதொழிந்தேனே!, ஐயோ! அவளுக்குப் பரிபவம் நேர்ந்து அவள் கதறினபின்பு நான் அதைப் போக்கினேனேயன்றி, முதல் தன்னிலே பரிபவமே உண்டாகாதபடி ஜாகரூகனாயிருக்கை தவிர்ந்தேனே! அவளுக்கு நான் பெரிய கடனாளியாய்விட்டேனே! என்று மிகவும் வருத்தப்பட்டானாம்.
ஸஹஸ்ரநாமத்திலே விகர்த்தா என்னும் திருநாமத்தின் தாத்பர்யமாவது, தமக்காக இன்பதுன்பங்கள் இல்லாமலிருந்தும் பிறர் இன்பதுன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களையடைந்து விகாரப்படுகிறவர் என்று பொருள்.
அதற்கேற்ப, குறையாத செல்வங்களையுடையவனும் நித்யஸித்தங்களான திருக்குணங்களையுடையவனான எம்பெருமான் பரமபதத்தில் ஸம்ஸாரிகளகிற நாம் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து திருவள்ளத்தில் க்லேசத்தோடே இருக்கிறான். – 4.10.2
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-
1.9. எம்பெருமான் உபகாரகன்
எம்பெருமான் அவனையே பரம ப்ரயோஜனமாகப் பற்றி நிற்கும் அடியார் விஷயத்திலே மஹோபகாரம் செய்தருள்பவன்;
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-
அவனை அநுபவித்துக்கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்துபோவர்கள்.
தேவர்களுண்ணும் அமுதமானது இறப்பை மட்டுமே நீக்கும். ஆனால் இவனைப் பற்றிய அமுதத்தை பருகினால் மறு பிறவி நீங்கும்.
ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-
எம்பெருமான் எவ்விதத்திலாவது நம்மைத் தன் வலையில் அகப்படுத்திக் கொள்ளும் வழியையே பார்ப்பன்; நாம் அவன்பால் நாலடி கிட்டச் சென்றால் நம்முடைய அபிநிவேசத்துக்கும் மேலாகவே அபிநிவேசங்கொண்டு அவன் நம்மைச் சூழ்ந்து கொள்வான்.
பக்தர்களைப் பொருத்த மட்டில் இப்படி எளியனாக இருப்பவன், யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே பக்கர்களின் இடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப் பேறு என நினைத்து அவர்களின் இடுப்பிலே வந்தும் அமருவான். கண்ணன் என் ஒக்கலையானே-1.9.4
அங்கிருந்து அவர்கள் நெஞ்சிலே வந்து புகுவான். என் நெஞ்சின் உளானே-1.9.5
அநுகூலர்க்கு எளியனான எம்பெருமான் அவர்கள் நெஞ்சிலிருந்து தோளின் மீதேறி –என்னுடைத் தோளிணை யானே-1.9.6
அவர்கள் நாவிலே கலப்பான். நாவில் உளானே-1.9.7
நாவிலே கலந்த பிறகு, புஷ்பஹாஸ ஸுகுமாரனாய், சதுர்ப்புஜனாய், சங்க சக்ரகதாகரனாய், இந்தீவரதளச்யாமனாய்ப் புண்டரீகாக்ஷனாய் தன் வடிவை அவர்கள் கண்களுக்கு இலக்காக்குவான். கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே-1.9.8
இதுவரையில் அவனைக் காண முடியாதபடி நிரம்பிக்கிடந்த தோஷங்கள் அவனது கடாக்ஷ வீக்ஷணத்தாலே மாய்ந்தனவாதலால் அவனடியார்களும் அவனை கண்ணாரக் காணப்பெருவர். இப்படியே மற்றுமுள்ள செவி முதலிய காரணங்களாலும் அவனை அநுபவிக்கப் பெறுவார்கள். என் நெற்றி உளானே -1.9.9
அவனும் தன்னுடைய குளிர்ந்தழகிய திருக் கண்களாலே அவர்களுடைய ஸகல தாபங்களும் தீரும்படி அவர்களை குளிர நோக்கி யருள்வான்.
இப்படிப்பட்ட அடியார்களின் நெற்றியிலே திருமண் ரூபமாக இருந்து கொண்டு அவர்களை ஸ்ரீவைஷ்ணவதிலகமாக ஆக்கி பிரமன், சிவன், இந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய் இருக்கிறவன் தான் அந்த அடியார்களைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்துவந்து அவர்கள் தலைமீது தன் திருவடி வைத்து அனுக்ரஹிப்பான். என் உச்சி உளானே-1.9.10
ஆனால் அவனுடைய உபாயங்களையெல்லாம் பழுதாக்கி நாம் அவனது வலைக்கு அகப்படாமல் அகன்று போவதையே விரதமாகக் கொண்டிருப்போமாகில், ஐயோ! நம் முயற்சி பலிக்கவில்லையே! என்று கண்ணீர்விட்டழுதுகொண்டே விலகி நிற்பவன்
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-
துன்பம் சிறிதுமில்லாத எம்பெருமான் பரமபதத்திலே நித்யஸூரிகளோடே ஒரு நீராகக்கலந்து பரிமாறுகிறான் ஸேவை ஸாதிக்கிறான் என்றால் இதற்கு ஒரு பொருளில்லையே; ஸம்ஸாரிகளான நமக்கன்றோ துன்பம் உள்ளது. இங்கு வந்து நம்மோடு பரிமாறுகிறானென்றால் அல்லவோ பொருந்தும்;
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-
அதற்காகவே இந்நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் கண்ணனாக வந்து பரிமாறினான் அன்றோ. இப்படி க்ருஷ்ணாவதாரஞ்செய்தருளினது மாத்திரமன்றியே இன்னமும் எத்தனையோ அவதாரங்களை செய்து தனது ருஜுத்வத்தை வெளியிட்டுக் கொண்டானென்பது ப்ரஸித்தம்.
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-
இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தைகட்கும் முலை கொடுக்கப்பாங்காக நடுவே கிடக்குமாபோலே நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒருசேர முகந்தருவதற்காகவே திருவேங்கடமலையிலே நின்றருள்கிறான்.
மேலுள்ளவர்கள் சிறிதுதூரம் பயணமெடுத்துவந்து சேரும்படியாய் கீழுள்ளவர்களும் சிறிதுதூரம் சென்று சேரும்படியாய் வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு என்கிறபடியே இருவர்க்கும் நிதியாகவுள்ள திருவேங்கட மலையில் ஸந்நிதிபண்ணியிருக்கிறான் எம்பெருமான்.
திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாயிருப்பதாலேயே இது ‘விண்ணோர்வெற்பு’ என்றது ஏனென்னில்; ஸம்ஸாரிகளைக் காட்டிலும் நித்யஸூரிகளே பெரும்பான்மையாக இங்கு வந்து அநுபவிப்பவர்களாதல் “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்யநின்றான்” என்பர் திருப்பாணாழ்வாரும்.
திருமலையிலுள்ள பசு பக்ஷி திர்யக் ஸ்தாவரங்களையுமெல்லாம் நித்யஸூரிகளே என்று கருதுவர் பெரியோர்.
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-
இந்திரன் மேகங்களை ஏவி மழைபெய்வித்துத் திருவாய்பாபடியிலுள்ள சராசரங்கள் அனைத்துக்கும் பெருத்த தீங்கை விளைவித்தபோது கண்ணபிரான் சீற்றமுற்று அவ்விந்திரன் தலையை அறுத்தெறிய வல்லமை பெற்றிருந்த போதிலும், அப்பிரான் அவனிடம் சீற்றங் கொள்ளாமல் பெரும்பசியாற் பிறந்த கோபத்தினால் இப்போது இவன் தீங்கிழைக்கிறான், சிறிதுபோது கழிந்தவாறே தானே ஒய்வன். இவனது உணவைக் கொள்ளைகொண்ட நாம் அவன் உயிரையுங் கொள்ளைகொள்ளக் கூடாது எனப் பேரருள் பாராட்டி தன் அடியாரை மலை எடுத்துக்காத்து நம்போன்றவர்களுடன் நீர் போல் கலந்த ருஜுத்வகுணம் அறியத்தக்கது.
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-
திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருந்த்தோ அவ்வளவு போக்யாமயிருந்தது பக்தர்களின் சரீரம் அவனுக்கு. ஆதலாலேயே ஆயர்களை மலை தூக்கிக்காத்தான்.
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-
மஹாபலியைத் தன் வசப்படுத்தி, அவன் தன்னதாக அபிமானித்திருந்த பொருள்களைத் தன்னதாக்கிக் கொண்டதுபோலவே நம்மோடே ஒரு நீராகக் கலந்து நம் ஆத்மாவைக் கொண்டு நாம் நமக்காக வாழ்கிறோம் என்கிற விருப்பைத் தவிர்ப்பான்.
கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-
நப்பின்னைப் பிராட்டியோடு சேர, அதற்கு இடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே நம்மோடு கலவிசெய்ய விரும்பி நம்முடைய பாபம் முதலிய பிரதிபந்தகங்களைப் போக்கியருளுவான்.
பிரளயங்கொள்ளப்புகுந்த பூமண்டலத்தைத் தனது திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்த்துபோல் நம்மைத் தன்னுள்ளே வைத்துக்காப்பான்.
பரமபதத்திற்குச் செல்லவேணும்’ விரஜையாற்றிலே முழுகவேணும் அங்கே ஸாமகானம்பண்ணி அவனை யநுபவிக்கவேணும், என்றிப்படியெல்லாம் நாம் பாரித்துக்கொண்டிருக்க, நம்மை ஆட்கொள்ளவேணும் என்று அவன், தான் பாரித்துக்கொண்டு நம்மிடம் ஓடிவருவான்.
கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-
நம்மை அகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை.
தன்னுடைய திவ்யாவதாரங்களுமெல்லாம் நாம் அனுபவிப்பதற்காக செய்தருளினான்
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே 1.8.8
இப்படி நமக்காக மீன், பன்றி என்று ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவன். சிலரை வசப்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள் கையிலே மருந்தை வைத்துக்கொண்டு திரியுமாபோலே அவதாரங்கள் தோறும் திவ்யாயுதங்களோடே வந்து அவதரிப்பவன் அவன்.
மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருகோலங்கொண்டு எழுந்தருளப்போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே சென்று நின்றாப்போலே (திருவீதி புரப்பாடு கண்டருளி நம் தெருவில் நம் வீடுமுன்) தானே வந்து தன் வடிவழகை திவ்யாயுதங்களை ஏந்தின அவ்வழகையும் தன் திருவடியையும் அனைவருங்கண்டு தொழும்படியாக நம் கண்ணுக்கு இலக்காக்கும் நிர்ஹேதுக க்ருபை செய்பவன்.
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-
பிரிவில் தரிக்கமாட்டாத பக்தியோடு தொழுதால் அவர்களது கண்வட்டத்துக்கு அப்பால் போகமாட்டாதேயிருப்பான். ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் “இருபத்தாறு” என்னுமளவில் (இருபத்தினான்கு தத்துவங்களுக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, இருபத்தாறாவது தத்துவம் பரமாத்மா என்பது சாஸ்திரஸித்தாந்தமாதலால்), தன்னைக்குறித்ததாகக் கொண்டுவந்து நிற்பன்; இப்படி ஏதேனுமொரு காரணம் காட்டி எம்பெருமான் நம்மைக் கைக்கொள்வதில் மிக்க வூற்றமுடையவன். ஸர்வேச்வரனுடைய இயல்பு இதுவானபின்பு இனி நமக்கொரு குறையிருக்க வாய்ப்புண்டோ?
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-
எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டோவென்னில்; எங்குமுண்டு; உகவாதார் கண்ணுக்கு தோற்றாது, உகந்தார் கண்ணுக்குத் தோற்றும்.
ராஜாக்கள் நகரசோதனைக்காக மாறுவேஷத்தில் புறப்பட்டால் அந்தரங்கர்களும் வேண்டிய நேரத்திலே முகங்காட்டுகைக்காகப் பின்னாடியே இருளோடேயிருளாகத் திரிவர்கள்; ஆனால் அவர்கள் கூடவே இருக்கமாட்டார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று வந்து அணுகி நிற்கும்படியாக எங்கேனும் மறைந்து திரிவர்கள்; அதுபோலே திருவாழி திருச்சங்கு முதலான அந்தரர்களும் எம்பெருமானுடைய எந்த அவதாரத்திலும் மறைந்து கூடனிருப்பர்கள்.
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-
திருத்துழாய் மாலையை திருமுடியிலணிந்துள்ள ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய திருவடிகளை நோக்கி மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே பக்தர்களை துன்புறுத்தும் எந்த நோய்க்கும் அருமையான மருந்தாகும்.
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-
இலேசான ப்ரபத்தி அனுஷ்டானத்துக்கு கனமான பேறாகிய பரமபதத்தை நமக்கு தருகிறார்ப்போலே, எம்பெருமானுக்கு நாம் नमः என்று சொன்னாலே “भूयिष्टांते नम उक्तिं विधेम” என்கிறபடி தனக்கு இயல்பான வாத்ஸல்யத்துடன் அவன் அதைச்சுமையாக ஏற்று “போயிற்று வல்லுயிர்ச் சாபம்” என்னும்படி நம் அனைத்து பூர்வக்ருத பாபங்களும் வெந்து போகும்படி செய்கிறான். எதிர்கால பாபங்களும் ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறான்.
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-
தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணின மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரத்திலே அவன் செய்த உபகாரம் யாதெனில், அவனையநுபவிப்பதற்கு வழிவராத தன் நெஞ்கை மாற்றிப் பதஞ்செய்வித்ததுவே மஹோபகார மென்கிறார்
முன்பெல்லாம் பெருமான் திருநாமஞ் சொல்லுவதென்றால் வேப்பங்கஷாயம் குடிப்பது போல் வெறுத்துக்கிடந்த நான், இப்போது ஒரு நொடிப்பொழுதும் இடை வீடின்றி, வாமனனே! என் மரதகவண்ணனே! புண்டாரிகாக்ஷனே! என்று பலபல திருநாமங்களையே சொல்லி உன் திருவடிகளைப்பாடியே பணிந்து, ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாத சுத்தமான ஹ்ருதயத்தையுடையேனாய், இனியொருநாளும் ஸம்ஸாரபந்தம் நேராதபடியாகப் பழைய தீயமனம் கெட்டுப்போம்படி பண்ணினாயே!. இங்ஙனே பண்ணின உபகாரத்தின் கனத்தைப் பார்த்தாலோ ஏதேனுமொரு கைம்மாறு செய்யாமல் தரிக்க மாட்டேன்; என்ன கைம்மாறு செய்வதென்று அறிகிலேன்; திருமகள் கொழுநனாய் அவாப்த ஸம்ஸ்தகாமனாயிருக்கின்ற உனக்கு, நான் செய்யத்தக்க தொன்றுமில்லையே! என்கிறார்.
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
வேட்டையின் போது காட்டிலே தொலைந்துபோன ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர் புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமாப் போலே, நானும் ஸம்ஸாரத்தில் அகப்பட்டு “திருமாலே நான் உன் புத்திரன்” என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனென்கிறார்.
பெருமானே, தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு வருந்துகிறார். என்னாலே நான் கெட்டேன் என்கிறார்,
நான் ஒரு சூழலிலே அகப்பட்டுக்கிடக்க எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழலிலே புகுந்து வந்தான் என்கிறார். 2.9.9
சேதநாசேதந வர்க்கங்களையெல்லாம் ஸ்ருஷ்டி ஸமயத்திலே உண்டாக்கியும், ஸ்ருஷ்டிக்கப்பட்டவற்றுக்கு நேரும் ஆபத்துக்களைப் போக்கியும் வேண்டியதைக் கொடுத்து ரக்ஷித்தும் அவற்றினுள்ளே அந்தராத்மாவாயும் ஸ்வாமியுமாய், ஸம்ஹார ஸமயத்திலே தன்னுள்ளேயாம்படியாயும் வைத்து கண்ணபிரானான எளிமையைக்காட்டி நமக்குப் பரம போக்யனாய் ரஸிகனான எம்பெருமான் பிராட்டியோடுகூட நம்முடைய சூழலிலேயே இருக்கின்றான்.
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
இப்படி சூழ்த்துக்கொண்ட காரியம் ஸம்ஸாரிகளான நம்மை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்தது. நாம் பல பிறவிகள் எடுக்கும்போது எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்து என்று பல பல திருவவதாரங்கள் செய்து பலபலமுறை நம்மை சூழ்ந்து நம்மை அகப்படுத்திக் கொள்வதற்காக முயல்கிறான். நாமும் பல பிறவிகள் பிறக்கிறோமானாலும் கருமங்காரணமாகப் பிறக்கின்றோம்; எம்பெருமான் பிறப்பது தன் கருணை காரணமாகப் பிறக்கின்றான்.
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-
அவன் பரமபதமாகிய தன் நித்யவிபூதியை இங்கேயிருந்து கொண்டே நிர்வஹிக்கிறான் போலும் என்னும்படி நம்மை ஒரு நொடிப்பொழுதும் விடுகிறானில்லை.
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
குற்றமே வடிவான நம்மீது எம்பெருமான் இவ்வளவு விஷே கடாக்ஷஞ் செலுத்தக் காரணமில்லையே! என்ன காரணமென்று ஆராய்ந்து பார்த்தால் எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று உணர்வீர். அவன் வெறும் மால் அல்லவே, அவன். அவன் திருமால் அன்றோ.
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-
உலகுக்கெல்லாம் நிர்வாஹகன். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவன். , எண்ணிறந்த திருக்குணங்களையுடையவன். அக்குணங்களைக்காட்டி நம்மை ஈடுபடுத்திக் கொள்பவன். ஒருநாளுமழியாத பரமபதம் முதலிய ஸகல லோகங்களையும் தன் விபூதியாகவுடையவன். அந்த கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன்.
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-
இங்ஙனே தாழவிட்டுப் பிறக்கிறது நமக்கு மோக்ஷமளிப்பதற்காக. ‘ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், அஃது எங்களால் கடக்கப்போகாது; வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’ என்று வேண்டுவார்க்குக் காரியம் செய்பவன்.
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
பக்தர்களனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலை யிட்டுக்கொண்டு அத்விதீய நாயகனாக விளங்குபவனுமான எம்பெருமானோடுண்டான ஸம்பந்தம் போதும் துயரங்களை விளைப்பதான பிறவி முதலாக மற்றும் அபாரமான ஜராமரணாதிகளான எவ்வகைப்பட்ட துக்கமும் ஸ்பர்சியாத மோக்ஷமளிப்பதற்கு. .
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –-2-8-2-
எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு நான்செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; “ஊன்வாட வுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொத்து, தான் வாடவாடத் தவஞ்செய்யவேண்டா”என்று திருமங்கையாழ்வார் சேதநர்கட்கு உபதேசிப்பதுபோலே, எம்பெருமான் ஆழ்வார்க்கு உபதேசிப்பன்போலும்.
“உன்னை யாதொரு தபஸ்ஸிலும் கொண்டு க்லேசப்படவில்லை. மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டான். எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருந்தாலும், பிராட்டி ஸம்பந்தத்தை முன்னிட்டிருக்கின்ற திருநாமத்தில் அவனுக்கும் ஒரு ப்ரிதியுண்டு ஆக மாதவன் என்பதன் பொருளாவது, மா-பிராட்டிக்கு, தவன்- நாயகன் என்றபடி. பெருமானின் பல பெயர்களையும் வாயாற் சொல்லிவருமடைவிலே மாதவனென்கிற ஒரு உக்தியும் என் வாக்கில் வந்துவிட்டது; இதையே அவன் பெரிய ஸாதநமாகக் கொண்டான்போலும்.
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-
என்னை மாத்திமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமர்த்தியம் என்னே! இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே என்னை நித்யஸூரியென்னலாம்படி திருத்தித் தன்னுடையவனாகக் கைக்கொண்டு, தன்னுடைய அங்கீகாரத்திற்கு விரோதியாயிருந்த என்னுடைய பாபங்களையும் ஓடிப்போம் படி துரத்தி, என்னோடு ஸம்பந்தமுள்ளவர்கள் ஏழேழு ஜன்மமும் தன்னை அண்டும் தன்மையையுடையோமாம்படி செய்யுவிட்டானே! இப்படியும் ஒரு வல்லமை யுண்டோ. !
இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நம் நெஞ்சுக்கு உரைக்கிறார்.
நெஞ்சமே, பலபடியாலும் நமக்கு எம்பெருமான் செய்தருளிய உபகாரங்களை அநுஸந்தானஞ் செய்து கொண்டே, அவனை வணங்கு.
1.10 அவன் லக்ஷ்யம் – நம்மை அடைவதே
நமக்காக க்லேசப்படுகின்ற எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்திலோ அல்லது திருப்பாற்கடலிலோ எழுந்தருளியிருக்குமிருப்பு நமக்கு இவ்வுலகத்தில் உபயோகப்படுவதன்று;
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாம் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்;
அப்படியாக, அவன் நமக்காக எங்கோ இருந்துகொண்டு க்லேசப்படுவதனால் நமக்கு என்ன ப்ரயோஜனம்?’
இந்த கேள்விக்கு விடையாக ஆழ்வார் சொல்வதாவது,
ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப் போலே நம்மை பிடிப்பதற்காக நம்மைச்சுற்றி எங்கும் வ்யாப்தனாகி நின்கிறான்.
என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-
மேலும் நம்மை அடைவதற்காக அவன் அர்ச்சாரூபியாகி நம்மிடையே திருமலை பெருமாள் கோயில் முதலான கோயில்களில் காத்துக்கிடக்கிறான்.
பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், திருமலை பெருமாள் கோயில் முதலான கோயில்களிலும் எம்பெருமான் இருப்பதன் நோக்கமே ஸமயம்பார்த்து பக்தர்களின் நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே. எம்பெருமானுக்கு, பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாயும் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே அவன் லக்ஷ்யமாயும் உள்ளது.
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–பெரிய திருவந்தாதி 68-
மேலும் நாம் யாதொன்றை அவனுக்கு ரூபமாக நினைக்கிறோமோ அதையே தன் திவ்யரூபமாகக் கொண்டருளி நம் க்ருஹங்களிலே சித்திரமோ, விக்ரஹமோ, ஸாளக்ராமமோ, நாமுகந்ததொரு த்ரவ்யத்தில் எழுந்தருளப்பண்ணி ஆச்ரயித்தால் அதையே தன் திருமேனியாகக்கொண்டு உகந்து எழுந்தருளி நம்மை அனுக்ரஹிக்கிறான். 3.6.9
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-
தன்னைப்பொருத்தவரையில் ஆழ்வார் சொல்வதாவது, இதுவரையில் தான் பல யோனிகளிற் பிறந்தும் அப்பெருமானுக்கு தன்னை வசீகாரிக்கைக்கு உறுப்பான சிறு வ்யாஜமுங் கிடைக்கவில்லையாம். இந்தப் பிறவியில்தான் இவரைக் கைக்கொள்வதற்கு ஒரு சிறு வ்யாஜம் அவனுக்கு கிடைத்ததாம். இப்படி ஜீவாத்மாக்களை அனுக்ரஹிக்காமல் விஷயீகாரிகாமல் இருப்பது அவனால் முடியாது என்கிறார் ஆழ்வார். 2.7.6
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-
அநாதிகாலந் தொடங்கி இன்றளவும்வரை எம்பெருமான் எடுத்த அவதாரங்களெல்லாம் அவன் பக்கலிலே நாம் ஊன்றுகைக்காக. அதற்காக அவனைத் தவிர வேறு எந்த உபேயமும் உபாயமும் நாம் வேண்டாதபடி அவனையே துதித்துப்பாடி ஆடும்படியாக நம்மை திருத்திப் பணிகொள்ளும் பொருட்டு, நாம் பிறந்த பிறவிகள் தோறும் தானும் எதிரே வந்து நம்மை வசீகாரிக்கைக்கீடான வடிவுகளைக் கொண்டு பிறந்தருளி நமக்கு வலை போடுகிறான். இதற்கு காரணம் அவன் பரம க்ருபையே.
ஒரு சேதநனை எம்பெருமான் வசப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அதற்காக அவன் பல திருவவதாரங்கள் செயயவேணுமோ? அவன்தானே வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ளுமளவில் தடுப்பாரில்லையே. அப்படியிருக்க, இவரை வசீகாரிக்க அவன் பல பிறப்புகளை பிறந்தருளினதாகச் சொல்லுகிற இது எப்படி? என்று சிலர் சங்கிப்பதுண்டு.
இதற்குப் பெரியோர் பணிப்பதாவது-எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்திரம் உள்ளவனேயாகிலும் ஒரு வ்யாஜ மாத்திரமாவது ஒரு காரணமாவது வேண்டும் என்று ஒரு வரம்பு இட்டுக் கொண்டிருக்கிறான்; 2.7.5
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-
இவ்வித்தில் மற்றொரு கேள்வி. பக்தர்களை ரக்ஷிக்க எம்பெருமான் அவதாரம் செய்ய வேணுமோ?
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையெல்லாம் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹித்துப் போகின்ற பரம சக்தியுக்தனான எம்பெருமான் அந்த ஸங்கல்பத்தைக் கொண்டே ஸாது பரித்ராணமும் செய்தருளக் கூடாதோ;
“மஹர்ஷிகள் வாழ்க; ராவணாதிகள் மாள்க.” என்று பரமபதத்தில் வீற்றுருந்தபடியே ஸங்கல்பிக்குமளவால் தலைக்கட்டமாட்டாத காரியமில்லையே.
அப்படியிருக்க, ஏதுக்கு நாட்டில் பிறந்து படாதன படவேணும்?
அதற்கு ஆழ்வார் சொல்வதாவது,
ஸாதுக்களை ரக்ஷிப்பதாவது என்ன? அவர்களது அநிஷ்டங்களைத் தவிர்த்து இஷ்டங்களைக் குறையறக் கொடுத்தருள்வதுதானே அவர்களை ரக்ஷிப்பது.
எம்பெருமானை நேரில் ஸேவிக்கப் பெறவேணும் என்பதுதானே அவர்களின் ப்ரார்த்தனை. இதை எங்ஙனே ஸங்கல்பத்தினால் தலைக்கட்ட முடியும்? நேரில் எழுந்தருளி ஸேவை ஸாதித்தேயாக வேண்டுமன்றோ.
ஸ்ரீகஜேந்திராழ்வான் முதலையின் வாயிலகப்பட்டுத் துடித்து ‘ஆதிமூலமே’ என்று கதற அக்கூக்குரல் கேட்டு அரை குலையத் தலைகுலைய மடுவின் கரையிலே வந்துநின்ற எம்பெருமானை நோக்கி என்றேனுமொருநாள் அழிந்தே போகக்கூடியதான இந்த வுடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நான் கரைந்தேனில்லை; எம்பெருமானே உன்னை நேரில் ஸேவித்து உன்றன் பொன்னடிகளில் இத்தாமரை மலர்களைப் பணிமாறுவதற்காகவே கரைந்தேன் என்றான்.
இப்படிப்பட்ட பக்தசிரோன்மணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்டுதல் எங்ஙனே ஸாத்யமாகும்? இருந்தவிடத்தேயிருந்து ஸங்கல்பத்தைக்கொண்டே ரக்ஷித்தால் அடியார்க்காக ஓடிவந்து உதவுமவன்’ என்கிற ப்ரஸித்தியாலுண்டாகும் தேசு மறைந்தொழியுமன்றோ 3.1.9
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
2. எம்பெருமானை அடைய ஆழ்வாரின் ப்ரார்த்தனைகள்
2.1 நான் கெட்டுத்திரிகின்றேனே. என்னைக்காப்பாத்து
1. பரமனே, இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.
என்னை இந்த விஷயாந்தர வேட்கைகளில்லாதபடி செய்து என்னை உன் திருவடிகளிலேயே கைங்கர்யம் செய்யும்படி செய்துகொள்ள வேணும்.
2. எம்பெருமானே நீ கொடுத்தருளின சரீரத்தினுடைய வழியிலேயே நடந்து கெட்டுத் திரிகின்றேன். என் மன வ்யாதிகள் தீரும்படி கரும பந்தங்களை வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று அடியேன் மஹோபகாரனான) உன்னை அடையப் பெறுவது இனி என்றைக்கோ. 3.2.1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
3. என்னுடைய புலன்கள் பெரும் குழிகள். எத்தனை விஷயபோகம் அனுபவித்தாலும் இவை நிறம்பா. மேலும் மேலும் ஆசை பெருகியே நிற்கும். பெருமானே நீர் ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான என் தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்வழி தந்தருள வேணும் பிரானே! 3.2.4, 5.8.4, 5.8.6
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-
4. உன் அவதாரங்களுக்கும் நான் தப்பினபடியால் உன் திருவடிகளொழியப் புறம்புண்டான விஷயங்களில் என் நசையெல்லாம் அற்று உன்றன் பொன்னடிகளில் பரம போக்யமான கைங்கரியத்தை நான்பெறும்படி இன்னுமோர் திருவவதாரம் பண்ணியாகிலும் செய்தருளவேணும்.
5. எம்பெருமானே!, பிரளயத்துக்குள்ளிருந்து பூமியை उदधृतासि वराहेण कृष्णेन शतबाहुना என்று நிர்ஹேதுகமாக வராஹவுருக்கொண்டு எடுத்தாப்போலே, என்னிடம் ஒரு காரணம், உபாயம், ஸாதனம் என்று நோக்காமல் ஸம்ஸார வெள்ளத்துக்குள்ளே அலைந்துழல்கின்ற என்னையும் எடுத்தருளி நானும் உன் அடிமை செய்யும்படியாக செய்யவேண்டும். 5.7.6
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-
6. தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே. யானே என்னாலே நான் கெட்டேன்.
எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழலில் வந்து புக்குத் திரிய, நானே விநாசத்தைச் தேடிக்கொன்டேனே.
ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர் புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமா போலே, நானும் ஸம்ஸார சூழலில் சிக்கி நாண் திருமாலுக்கு அடியேன்” என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனே.
ஆனால் நான் என்னதான் திருந்திவிட்டாலும், நான் இரக்குமிடம் இந்த ஸம்ஸாரமேயாகையால் இப்போதிருக்கும் என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? இப்போது நான் “யானே நீ யென்னுடைமையும் நீயே” என்றிருப்பதுபோலவே முற்றிலும் இருப்பேனென்று நம்பமுடியாதே.
இப்போது திருந்தியிருக்கின்ற நான், அநாதி காலமாக அஹங்காரமமகாரங்களினால் மாய்ந்து போனேனே. என்னைத் உன் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’. 2.9.9
யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-
7. என்னிடத்துள்ள நீசத்தன்மையைநோக்கி அகன்றுபோக என் பல்வினையை ஸௌசீல்யகுணத்தாலே போக்கி என்னை அபிமுகனாக்கிக் கொண்டவனே! நித்யாநுபவம் பண்ணிக்கொண்டிருக்கிற நிதய் முக்தாகளின் திரளிலிருந்து, என்னை சீலகுணத்தாலே அகப்படுத்திக்கொள்ள இங்கு வந்தவனே! என்னை இன்னமும் சிக்ஷியாதே உடனே உன் தேனேமலரருந்திருப்பாதம் சேருமாறு அருளாய். 1.5.6
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-
2.2 என்னிடம் அனுஷ்டானம் ஒன்றில்லையே. என்னைக்காப்பாற்று
1. உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களானவற்றை எப்படியாவது நினைக்கவே நான் பார்க்கின்றேன்;
இவை ஒவ்வொன்றும் சிந்திக்கும் போதெல்லாம் என் மனம் நெருப்பிலேயிட்ட மெழுகுபோலே நின்று நெஞ்சை உருக்குகின்றனவே. நெஞ்சு சிதிலமாகாதலிருந்தாலன்றோ நினைக்க முடியும். இப்படிப்பட்ட விலக்ஷணகுண சேஷ்டிதங்களைக் கேட்குந்தோறும் என்னெஞ்சம் நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவிபோலே சொரிகின்றதே; இதனால் ஒன்றும் ஒழுங்குபட நினைக்க முடியவில்லையே!
உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ?
பிரானே! உருகாதே கரையாதே தரித்துநின்று உன்னைப் பேசி உன்னையநுபவிக்க வல்லேனாம்படி பண்ணி உன்னை மகிழும்வகைக்கு நீயே உபாயம் சொல்லியருளவேணும். 5.10
பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணா! உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு–59-
2. ஒரு ஸதானுஷ்டானம் பண்ணி உன்னை அடைய முடியாதபடி உன் ஸௌந்தர்ய குணங்களில் ஈடுபட்டு சிதிலனாகிவிட்டேன். ஆகவே பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்களது வகுப்பிலே சேர்ந்து உன்னை அநுபவிக்க முடியாதவனாகிவிட்டேன் ஆதலால் அங்குற்றேனல்லேன்.
உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்;
உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடந்து, எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேனாகையினாலே உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன்
ஆகவே இங்குற்றேனும் அல்லேன்.
ஆக, பரமபத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவன் அல்லேன்.
உன்னையே உபாயமாக நம்பியிருந்த சீதா பிராட்டியை தடையெல்லாம் நீக்கி காத்தருளினபடியே என்னையும் நீ காத்தருளவேணும்.5.7.2
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-
3. சரண்யனே, பலன் பெரும் வகையில் எனக்கு யோக்யதை என்று ஒன்றுமில்லை. என் கையிலே கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் இல்லை.
கர்மாநுஷ்டானத்தின் மூலமேயே ஸ்வஸ்வரூபஞானம் ஏற்படும். ஆகவே ஸ்வஸ்வரூபஞானம் இல்லை. ஸ்வஸ்வரூபஞானம் இல்லாத்தால் பரஸ்வரூபஞானம் இல்லை. ஆனாலும் உன்னை மறந்து பிழைக்கமாட்டிற்றிலேன். உன்னையும் அறியாதே
என்னையும் அறியாதே இருந்த அன்று உன்னை இழந்தேன். உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்று உன்னை இழக்கமாட்டேன்.
2.3 எனக்கு நீயே சரண். என்னை ஏற்றுக்கொள்
1. நான் இறக்கும் தருவாயிலும், நான் உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணியருள வேணும். கையும் திருவாழியுமாயிருக்கிற இருப்பைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமானே! நான் உம்மிடத்து துக்க நிவ்ருத்தியை விரும்புகின்றேனல்லேன்; நெஞ்சிலே கோழைகட்டிப் போய்த் தடுமாறும்படியான நிலைமை நேர்ந்தாலும் நேருக; அப்போதும் உன் திருவடிகளில் பக்தி குலையாமே துதிக்கும்படி செய்தருளினாற்போதும். எம்பெருமானே! எனக்கு எப்படிப்பட்ட துர்க்கதி நேர்ந்தகாலத்தும், சிந்தனைமாத்திரம் உன்னைவிட்டு அகலாதிருக்குமாயின், அவ்வளவே நான் உய்யப் போதுமானது 2.9.3
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-
2. என்னை நியமித்துக் கொண்டு, நீ என்னெஞ்சினுள்ளேயே வந்து கிடக்கவேணும் நிலாத்தென்றல் சந்தனம் தண்ணீர்முதலிய பொருள்கள் போல, தனககேயாக என்னைக் கொள்ளவேணும் இவ்வளவே நான் விரும்பும் புருஷார்த்தம். 2.9.4
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
3. ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; தேவரீர் கர்மம் காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்தும் ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிற்றே, அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாக நிலை நிறுத்த வேணும். 2.9.5
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-
4. என்னை உன்னை அநுபவிப்பது நியதஸ்வபாவமாகும்படி பண்ணியருள வேணும். விசித்ர ஸ்ருஷ்டிகளைப் பண்ணவல்ல நீ, என்னுடைய ஹ்ருதயம் உன்னையநுபவித்து மகிழ்ச்சியையுடையதாம்படி பண்ணவேணும். என்னுடைய வாக்கும் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ணவேணும். என்னுடைய வியாபாரமும் உகப்போடு செய்யும் கைங்காரியமாகவேணும். நானுன்னையநுபவிக்குமாறு வந்தருளவேணும். 2.9.6
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-
எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன்’ 2.9.8
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-
5. கஜேந்திராழ்வானுக்கு உதவ ஆகாசத்தில் நின்றும் வந்து தோன்றினாப்போலே எனக்காகவும் வந்து தோன்றுகிறாயோவென்று அகாசத்தை நோக்குகிறேன்காண். நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவதும் தொழுவதும் செய்து நிற்கிறேன். சிறுவர்களைப்போலே அழுவது, பெரியார்களைப்போலே தொழுவது எல்லாம் செய்கிறேன்.
குடந்தைகிடந்த மாமாயா திருக்குடந்தையிலேவந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண்வளர்ந்தருளுகிறது எதற்காக? நான் உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணியருளவேணும். என் உடலும் கட்டுக்கலைந்து தளர்ந்துகொண்டே போகிறது. என் ப்ராணனும் விரைவில் நீங்கும், ஆனால் உன் சக்திக்கு குறையொன்றுமில்லையே. நீ உன் சரமச்லோக ப்ரதிக்ஞா வார்த்தையை காப்பாற்றமாட்டாயோ. 5.8.8
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-
6. பெருமானே! என்னையும் எல்லோரையும் அடிமை கொள்வதற்காக எவ்விடத்தும் வியாபித்து விருக்கிறவனே! உன் இந்த அருளும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே காட்டியருள வேணும்.
7. உன் திருவடியே சுமந்துழல பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்தாபோல எனக்கும் அருளவேணும். 4.9.9
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
8. சேதநர்கட்குப் புருஷகாரஞ் செய்வதையே தொழிலாகவுடைய பெரிய பிராட்டியாரை திருமார்பிலே கொண்டு அதனால் மாதவனென்னுந் திருநாமமுடையோனே! கூனியின் கூன் நிமிர்ந்தவனே!, மதுசூதனே!, உன்னுடைய பரம போக்யமான திருவடிகளை நான் பெறும்படி அருள்புரியவேணும். பிராட்டி திருமார்பிலே நித்ய ஸந்நிதாநம் பண்ணியிருக்கும்போது அருளாமைக்குக் காரணமில்லையே ! 1.5.5
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-
9. பிரானே! உன் திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; நின் திருவடியை என் தலைமேல் சேர்த்தால், ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்யம், ஸாயுஜ்ய மென்கிற நான்கு மோக்ஷ ஸாம்ராஜ்யங்களும் இதிலேயே அடங்கிவிட்டனவாகும். வேறு எதுவும் நான் எஞ்ஞான்றும் வேண்டமாட்டேன். 2.9.1
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
10. தம்முயற்சியால் ஒருவர்க்கும் அணுக வொண்ணாத உம் திருவடிகளை, நான், அணுகும்படி பண்ணவேணும்.2.9.2
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-
11. உன் திருவடிகளின் நிழல்போலவும் ரேகை போலவும் என்னை ஆக்கி வைக்க வேணும். 2.9.10
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-
2.4 எம்பெருமானே, செவி சாய்க்க மாட்டாயா?
1. பெருமானே, இவ்வளவு கூவியும் நீ செவிசாய்க்கவில்லை என்றால் என் பாபம் தானே காரணமாக இருக்கவேண்டும். நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லிப்போனாலாகாதோ.4.7.3
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-
2. அநுக்ரஹம் செய்யத் திருவுள்ளமில்லையாகிலும் ‘நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று நிக்ரஹித்து விட்டேனென்றாவது கண்முன்னே வந்து நின்று சொல்லிப்போனாலாகாதோ? சொல்லுகிற இந்த வார்த்தையாவது என் முகத்தை நோக்கி நீ சொல்லுவாயாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே.
எம்பெருமானே, எனக்கு மகனாய் நீவரவேண்டும் என்று கேட்காதவர்களுக்கும் மகனாக பிறந்தாய். உன் திருவடி ஸம்வந்தம் கேட்காதவர்க்கும் த்ரிவிக்ரமனாக உலகளக்கும்போது, அவர்கள் சிரஸின்மீது திருவடி வைத்து அருளினாய். உலகம் முழுமைக்கும் க்ருபை செய்த நீ என்மீது க்ருபை செய்யலாகாதோ. கண்ணெதிரே வந்து ஸேவைத்தந்தருளலாகாதோ?
என்னை நீ பாவியென்றாலும் அதில் எனக்கொரு ஆக்ஷேபமில்லை; உன் திரு மிடற்றோசை கேட்கவேண்டுவதே எனக்கு அபேக்ஷிதம்; ஆகவே நீ என் கண்ணுக்கு இலக்காகி வந்து சொல்லவேணும்.உன்னைக்காணாதவளவில் என் உயிர் பிரிய வேண்டுமோ.
எம்பெருமானே, நீ எனக்கு ஞானம் கொடுத்தருளினாய். ஆனால் அதைக்கெண்டு உன்னை அடையவிடாமல், என் ஆத்மாவை ஓர் அழுக்குடம்பில் வைத்து புண்யபாபரூபங்களான பலவகைப் பாசங்களால் கட்டி மாம்ஸம், மேதஸ், இவைகளால் நாற்புறமும் சுவர் எழுப்பி நான் உன்னை அநுபவிக்க விரோதியாய் நிற்கச்செய்து உன்னை அடைய ஸாத்யமாகாதபடி ஸீதையை அசோக வனத்தில் வைத்தாற்போல் புறமே போர வைத்திருக்கின்றாயே, இது ந்யாயமா !.5.1.5
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-
3. எம்பெருமானை அடைய ஆழ்வாரின் துடிப்பு
இப்போது ஆழ்வார் தாமான தன்மையில் இல்லை; எம்பெருமானின் நாயகியாக, பராங்குசநாயகியாகி பெருமான் மீது காதல் கொண்டுள்ளார்.
எம்பெருமானும் பராங்குசநாயகியின் காதலுக்குத் தான் இலக்காகப் பெற்று அதையே தனக்குப் ஸூவர்ணமயமான ஒளிமிக்க கிரிடம் முதலாகிய திருவாபரணங்களாகவும். பீதாம்பரமாகவும் அபிமானித்திருந்தான்.
எம்பெருமான் தன் பூமாலைகளாக ஆழ்வாரின் சொல்மாலைகளை ஏற்றுக் கொண்டான். ஆழ்வாரின் அஞ்ஜலியால் தன்னை ஸர்வாபரண பூஷிதனாகக் கருதினான்,
அது கண்டு ஆழ்வார், பெருமானைப்பார்த்து, என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய் ஏழுலகமும் முற்றுமாகி நின்றவனே,
ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப்போலே என்னைப்பிடிக்கைக்காகவே வ்யாப்தனானவனே,
என்னை பெற்ற ப்ரீதியாலே அந்தவ்யாப்தி ஸபலமானதாக நினைத்து மிகுந்த ஆனந்தம் அடைந்தவனே!
என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு உன் ஸவ்ரூபம் நானிட்ட வழக்கு என்கு களித்துக் கூத்தாடினார்.
ஆனால் இவை எல்லாம் வெறும் பாவனையாகவே இருக்க, ஆழ்வார் எம்பெருமானோடு உண்மையாகவே சேர ஆவலாக உள்ளார்.
3.1 பராங்குச நாயகியின் பரவை விடு தூது- 1
3.1.1. ஆண்டாளைப் போலே .பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குச நாயகி தன் ஸமீபத்திலிருப்பதொரு நாரையைப் பார்த்து, ‘நாராய்! நீ என் நிலைமையை எம்பெருமானுக்கு அறிவித்து என்னையும் அவனையுஞ் சேர்க்க வேணும்’ உன் நீ அழகிய சிறகுகள் படைத்திருப்பது எனக்காக விரைந்து தூது செல்லுவதற்கன்றோ. அவன் என்னை புறக்கணித்து விட்டுப் போயிருக்கும் ஸமயத்திலே என் வருத்தங்களை முறையிட்டுக் கொள்ளலாம்படி வந்து முகங்காட்டின உன் கருணையே கருணை. அவனோடே கலந்து பிரிந்து அவனை மீண்டுங் கண்ணாலே காண்பதெப்போதொவென்று விடாய்த்துக் கிடக்கிற என் விஷயத்தில் கருணைகூர்ந்து, விரஹம் தின்ற என் வடிவைக் கண்டு இரங்கி நீயும் நின் சேவலுமாய் பெண்ணும் ஆணும் விட்டுப்பிரியாமல் தூதுபோகவேணும். அடியார்களை நோக்குவதற்கென்றே அவர் கொடிகட்டிக் கொண்டு இருக்கின்றாராதலால் நீங்கள் சென்று சிறிது ஞாபகப் படுத்தினாலேயே, யானைக்கு ஓடி வந்ததுபோல் அரை குலையத் தலைகுலைய ஓடிவருவார். இராமபிரான் மாருதியை இலங்கைக்குத் தூதுவிட்டான்; ஆதலால் என்விடு தூதாய்ச் சொல்வது உங்களுடைய பாக்கியமேயாகும்.
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
3.1.2 இனககுயில்காள்! = என்னைப்போலே நீங்களும் தனியாயிருக்கவில்லையே; கூடிக்களித்திருக்கின்ற நீங்கள் ஸந்தோஷமாக இது செய்யலாமே. அவனோடு கலந்து பிரிந்து வெறுந்தரையாயன்றோ நானிருக்கிறேன்; இப்படிப்பட்ட தாமரைககண் பெருமானாரிடம் எனக்குத் தூதாய்ச் செல்லுகை தருமமன்றோ. எனக்காக அவன் பக்கலிற்சென்று என் நிலைமையை அறிவித்தால் போதும்; அநாதிகாலமாகத் ஸதநாநுஷ்டானம் பண்ணாத நான் திரட்டின பாபத்தாலே அவன் திருவடிவாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுதற்கு ஏற்கவே பாக்யம் பெறவில்லை. இப்போது திருவடியைவிட்டு விலகியே போய்விட்டேனே. என் கையிலே ஒன்று மின்றியே அவன் கையையே எதிர்பார்த்திருக்குமிந்த நிலைமையிலும் அவனை இழப்பதுண்டோ? என்று கேளுங்கோள்.
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-
3.1.3 மென்னடைய அன்னங்காள் உங்களுடைய பாக்கியமே பாக்கியம்! நீங்கள் சாஸ்திரப்படியே மணந்து கொண்டதனாலன்றோ பிரிவுத்துயரம் விளையப்பெறாமலிருக்கின்றீர்கள்; நான் அப்படியன்றியே காந்தர்வ விவாஹம்போல் மனப்பாங்கினால் கூடினபடியாலன்றோ இப்போது இங்ஙனம் பிரிவாற்றாமையெய்திப் பரிதபிக்கின்றேன். தலைவன் பிரிந்துபோம்போது அங்ஙனம் போகவொண்ணாதபடி வளைத்துத் தடுத்து நிறுத்திக்கொள்ளாமற்போனேனே! மதிகேடியானேனே! தன் புத்தி சாதுர்யத்தினால் வாமன்னாய் சென்று, உலகை மீட்ட கள்வனிடம் தூது செல்லவேண்டும். ஒருத்தி அறிவழிந்து வருந்திக் கிடக்கின்றாளென்று சொல்லுங்கோள். அளவில்லாத பாபங்களை அநுவரதமும் செய்கின்ற ஜனங்கள் நிறைந்த இவ்வுலகின்கண் தானொருத்தி செய்த பாவந்தானா அனுபவித்தும் மாளாதது? என்று கேளுங்கோள். அரைகுலையத் தலைகுலைய ஆனைக்கு உதவ ஓடிவந்தாப்போலே கடுக ஓடி வரும்படி சொல்லுங்கோள்.
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-
3.1.4 பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறிது அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? பிரிவில் தரிக்கமாட்டாத என்னுடைய ஸ்வபாவத்தை நன்றாகக் கண்டு வைத்தும் ‘ஐயோ? இப்படிப்பட்டவளையோ விட்டுப் பிரிவது!, ஒருகாலும் பிரியத்தகாது’ என்றிராத என் நீலமுகில்வண்ணர்க்கு என்ன ஸமாசாரம் சொல்லுவேன். நான் இங்கே நிறம் இழந்து பசலையால் பீடிக்கப்பட்டு தவிக்கிறேன். என்னோடு முன்பு கலந்ததனாலே நீலமுகில் வண்ண மேனி நிறம் பெற்றவர் ‘என்னைவிட்டுப் பிரிந்தபின்பும் நிறம் அழியாமல் நீலமுகில் வண்ணராமேயிருக்கின்றாரே. என் நிறம் மட்டும் போய் அவர்க்குப் பிரிவாற்றாமையுமில்லையே, பசலை நிறம் வந்து அவர் வெளுத்துப்போகவில்லையே. அவருக்கு என் சொல்லி யான் சொல்லுகேன். நான் சொல்லியனுப்பவேண்டம்படியாக இருக்கிறவர் உங்கள் வார்த்தைகேட்டா வரப்போகிறார்? இன்றளவும் ஒருவாறு தங்கியிருந்தாலும் இனி ஒரு நொடிப்பொழுதும் தங்காதென்று சொல்லுங்கோள்.
என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4
3.1.5 நீர் நிறைந்திருக்கும் படியான கொடித்தோட்டங்களிலே இரைதேடுகின்ற குருகே! எப்போதும் நீர் வெள்ளமிட்டுக்கொண்டேயிருக்கின்ற கண்களையுடைவளான என்னைப் பாருங்கள். கூடியிருக்குங்காலத்திலோ ஆனந்தக்கண்ணநீர்; பிரிந்திருக்குங்காலத்திலோ சோகக்கண்ணீர். யாரும் கேட்காமலேயே உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்கு உதவலாகாதோ. ஸர்வ ஜந ரக்ஷணம் பண்ணுகிறவர் ஸ்வ ஜந ரக்ஷணம் பண்ணலாகாதோ? நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்த:புரத்துக்கு அரிதாகவேணுமோ? ’
நாராயணன் என்ற சொல் ஸகல சேதநங்களுக்கும் தான் இருப்பிடமாய் அவற்றையும் தான் இருப்பிடாகவுடையனாயிருக்கும் பெருமானையன்றோ குறிக்கிறது. நார-பதத்தின் அர்த்தத்தினாலே நான் அவரைச் சேர்ந்தவளல்லேனோ? என்னைவிட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்?. நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல்லோக ஸம்ரக்ஷகனென்றும் விருதுசுமக்கின்ற அவர்க்கு என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் பெற்ற பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக்கொள்ளும்படி சொல்லவேணும்.
கள்ளிச்செடிக்கு மஹாவ்ருக்ஷமென்று பேர் இருப்பதுபோலே அவர்க்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டதோ? அவர் திருநாமத்திற்கு அர்த்தபுஷ்டி இல்லையோ என்று கேளுங்கோள்.
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-
3.1.6 கம்பீரத்தன்மையும் அழகும் பொருந்திய வண்டே! எம்பெருமான் இப்படி உபேக்ஷிக்கும்படி என்ன பாவம் பண்ணினோம்!; எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து கெட்டபெயர் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே சரி என ஒருகால் திருவுள்ளம் பற்றி இருக்கக்கூடும். அப்படியானால், அவருக்கும் அவத்யம்வராமல் எனக்கும் அவர் ஸம்பந்தம் கிடைக்க ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு பராங்குசநாயகி இருக்கிற வீதிவழியாகக் கருடனை ஒருநாள் செலுத்தவேணுமென்று சொல்லவேணும். எங்கள் தெருவே போனால் அவருக்கும் அவத்யம் வாராது. ஜன்னல் வழியே அவரை நோக்கி நானும் என் ஆசை தணிந்து ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய்.
அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-
3.1.7 நான் வளர்த்த இளங்கிளியே! வடிவில் பசுமையாலும் வாயில் பழுப்பாலும் மழலைச் சொற்களாலும் எம்பெருமானை அநவரதம் நினைப்பூட்டிக்கொண்டு என்னை வருத்துகின்ற கிளியே! என்னால் வளர்க்கப்படுகிறவர்கள் எல்லாரும் எனக்குத் தீங்கிழைப்பதென்றே வழக்கமாய்விட்டது; எம்பெருமான் இப்போது எனக்குத் தீங்கிழைப்பதும் என்னுடைய ஸம்பந்தமே காரணமாகவன்றோ; அதுபோலே என்னுடைய ஸம்பந்தமே காரணமாக நீயும் எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருப்பது வியப்பன்று; என்னால் வளர்க்கப்பட்டவனன்றோ நீ.
அபராத ஸஹத்வமென்று, குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர்தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்கவேண்டவோ. எனது பிழைகளை மாத்திரம் நினைந்தாரேயல்லது, பிழை பொறுக்கவல்ல தமது க்ஷமாகுணத்தை நினைத்தாரில்லையே. அதனை மறந்தாப்போலே எனது பிழைகளையும் மறந்தாலாகாதோ?
பிழையுடையார் பக்கலிலே அருள் செய்யாவிடின் இவர் எங்ஙனம் திருமாலாக இருக்கமுடியும்? அநுக்ரஹமே வடிவெடுத்தவளென்றும் நிக்ரஹமென்பதைக் கனவிலுங் கண்டறியாதவளென்றும் புகழ் பெற்றவளான பிராட்டிக்கு இவர் மணவாளராகில் அவளது உபதேசத்தின்படி நடக்கவேண்டியவரன்றோ இவர். பிழைசெய்யாதவனே உலகில் இல்லை என்று சொன்ன ஸீதா பிராட்டியோடே இவர் ஸம்பந்தம் பெற்றுவைத்து இங்ஙனே பிழைகண்டு உபேக்ஷித்தல் தகுதியோ இப்படி அவர் பிழைகண்டு ஒதுங்குகின்றாரென்பதைப் பிராட்டியறிந்தால் அவள் தானும் பிறகு இவர் முகத்திலே விழிப்பளோ?
இளங்கிளியே! ‘இப்படி அருளாதிருக்கலாமா?’ என்று அவரிடத்துச் சென்று கேள்;
அதற்கு அவர், “குற்றங்களை அளவில்லாதபடி செய்து வைத்திருந்தால் நாம் எப்படி அருள் செய்யக்கூடும். அங்ஙனஞ் சொன்னால் தேவரீருடைய கருணைக்கு இடையூறாக என்ன பிழை செய்தாள்? “தேவரீருடைய கருணை தாராளமாகப் பெருகலாம்படி அவள் இருக்கிறாளேயொழிய அக்கருணை தடைபடும்படி ஒரு அதிப்ரவ்ருத்தியுஞ் செய்த்தில்லையே. ’தேவரீருடைய கருணைக்கும் அப்பால் அவள் என்ன பிழை செய்தாள் என்று கேள்.
இந்த வொரு வார்த்தையை மாத்திரம் நீ அங்குச்சென்று சொல்லவேணும். நீ என்னால் வளர்க்கப்பட்டவனாயிருந்து இவ்வளவு உபகாரமுஞ் செய்யலாகாதோ?
என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-
3.1.8 நான் வளர்க்கும் பூவை பக்ஷியே. என் தலைவரோ பக்தர்கள் பக்கலில் பைத்தியம் பிடித்தவர். நானும் தூதுவிட வேண்டுமளவான பைத்தியம் பிடித்தவள்; ஆகவிப்படி இருவரும் அன்பார்ந்திருக்கும்போது இடையிலே சேரவிடுவார் வேண்டுமத்தனையே. அது உன்னாலாகக் கூடியதாதலால் ‘என் நோயை அங்குச்சென்று தெரிவிப்பாய்’ என்று உன்னைப் பல்காலும் வேண்டினேன். இருந்தும் என்னை நீ உபதேக்ஷித்திருந்துவிட்டாய்.
நான் எதுசொன்னாலும் விரைந்து செய்து முடிப்பதே இயல்பாக, ‘எப்போதும் உத்ஸாஹமாகவேயிருக்கு மியல்வுடைய நீ இப்போது என் நிலைமையைக் கண்டு வருந்தாமல் ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்ட பிறகும் எனக்காகத் தூது செல்லாமல் இருக்கிறாயே. நீ இதுவரையில் இருந்த மாதிரியில்லையே. நானோ இப்போது என் நிறம் நீங்கி, பசலை நோயால் பீடிக்கப்பட்டு மிக மெலிந்து முடியும் நிலையில் இருக்கிறேன். இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய்.
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
3.1.9 ஓ வாடைக்காற்றே! அங்குமிங்கும் திரிகின்ற குளிர்ந்தகாற்றே! என்றபடி அங்கே அந்தரங்கமாய்த் திரியவல்ல காற்றே. இப்போது எனது சரீரம் எலும்பும் நரம்புமேயாம்படி மிகவும் மெலிந்து போயிற்று. எலும்பிலே துளைத்து நூலைக் கோத்தால் எவ்வளவு ஹிம்ஸையாயிருக்குமோ, அவ்வளவு ஹிம்ஸையைச் செய்கின்றையே.
பகவானை ஆராதிப்பதற்கென்றே நமது கரணகளேபரங்கள் ஏற்பட்டுள்ளன. மலர்போலே எம்பெருமானுக்குப் பரமபோக்யமான ஆத்மபுஷ்பத்தை ஸமர்ப்பித்து எம் பெருமானின் இணையடிக்கீழ்“ அடிமை செய்வதற்காகவே நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட நான் இங்ஙனே எம்பெருமானைவிட்டுப் பிரிந்து துரத்ருஷ்டத்தில் இருப்பது ஏனோ! “நித்யகைங்கர்யத்துக்கு இட்டுப்பிறந்தவஸ்து இப்படியிருக்கக்கடவதோ”. ஏதுக்காக இவ்வாத்மா இப்படி அநர்த்தப்பட்டு கிடக்கவேணும்? என்கிற இவ்விஷயத்தை எம் பெருமானிடத்து விண்ணப்பஞ் செய்து, அதற்குப் பிறகும் அவன் காது கொடாது, என்னிடம்ருந்து வரும் கைங்கரியம் நமக்குவேண்டா’ என்றிருந்தானாகில் நீ அவனோட்டைப் பிரிவுக்குச் சிளையாத என்னுடலை நீ அவச்யம் வந்து முடித்துவிட வேணுமென்று காலைப்பிடித்து வேண்டிக்கொள்கிறேன்.
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-
3.1.10 என் நெஞ்சே! நம் காரியம் ஒருவிதமாக முடியும்வரை நீ அவனை விடாதே யிருக்கவேணும். ஆச்ரித விரோதிகளைத் தொலைப்பதற்காகத் திருவாழியுங் கையுமாகவே கண்வளர்ந்தருளுகிறான் பெருமான். . அப்படிப்பட்ட எம்பெருமானைக் காண்பது அரிது; பாக்யவசத்தாலே அவனை காணப்பெற்றால் இவ்வாத்மா ஸம்ஸாரத்திலிருந்து விட்டு நீங்கி மோக்ஷம் அடைவதற்கன்றோ தேவரீரும் முயற்சி செய்கின்றது என்பதாகச் சொல்லவேண்டும்.
சுழன்று வருகிற பேதை நெஞ்சே! நாம் பிறந்ததற்குப் பயன் அவரைக்கிட்டி அடிமை செய்கையாயிருக்க. அது செய்யாதே இங்ஙனம் பிரிந்து பரிதபிக்கும்படியான பாபத்தைப் பண்ணிக்கிடக்கிற நாம் அவரோடே சேருகிறவரையில் அவரை நீ விடாதே அநுவர்த்தித்து என்னைச் சேர்க்கப்பாராய்.
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-
3.2. தன் விரஹத்தை எங்கும் காணுதல்
3.2.1 கடற்கரைச் சோலையில் உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, பராங்குச நாயகி அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் வெளுத்துவிட்டதாகக்கொண்டு
என்தாய் உறங்கினாலும் நான் உறங்குவதில்லை. என் உறக்கமின்மை கண்டு வருந்தி என் தாயும் உறங்காள். என்னைப்பெற்ற தாயும், உறங்காதிருக்கும் தேவலோகமும் உறங்கினாலும் நீ உறங்குவதில்லையே! இதற்குக் காரணம் என்ன;
உள்ளம் உருகி நைந்து அதனாலே பயலை நிறம் விஷமேறினாற்போலே உடம்பிலே வியாபித்து, நான் நோவுபடுவது பகவத் விஷயத்திலீடுபட்டதனாலே;
என்னைப்போல் நாயும் வெளுத்திருக்கிறாயே. என்னைப்போலவே நீயும் திருமாலால் நெஞ்சு கொள்ளை கொள்ளப் பெற்றாயோ. நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ.
வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-
3.2.2 அன்றில் பறவை ஆணும் பெண்ணும் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாய் அலகைக் கோத்துக்கொண்டு உறங்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் கூவும். அப்படி அவை கத்துகிற குரல் பராங்குச நாயகியின் திருச்செவியிலே விழுந்தது.
தழதழத்த குரலையுடைத்தான அன்றிற்பறவையே! நெஞ்சு பறியுண்டு நெடும் போதாக வருந்திக்கிடக்கின்றாயே! அடிமைப்பட்ட என்னைப்போலே பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற நீயும் அரவணைமேல் பள்ளிகொண்ட முகில் வண்ணணுடைய துழாய் மாலையை ஆசைப்பட்டு இப்பாடுபடுகிறாயோ?
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-
3.2.3 கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவதும் வடிவதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லயிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வந்து கரையேறமாட்டாதே கத்துகின்றதாகக்கொண்டு,
உறங்குவதற்கென்று ஏற்பட்டது இரவு; விழித்துக் கொண்டிருபப்பதற்கென்று ஏற்பட்டது பகல் கடலே! இந்த வித்யாஸத்தை உன்னிடத்து கண்டிலோம். நீ எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாயே. எம்பெருமானின் விரஹத்தாலே என் நெஞ்சைப்போலே உன் நெஞ்சும் உருகிப்போய் நீ எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாயோ. நான் அந்த இராமபிரானிடத்து ஈடுபட்டிருக்குமாபோலே நீயும் ஈடுபட்டு வருந்துகிறாயோ?
ஸீதை யென்பவளும் நம்மைப்போலே ஒரு பெண் பிள்ளையாயிருக்க அவளுக்காக மாத்திரம் உண்ணாது உறங்காது படாதபாடுகளும்பட்டவர் நம்மைப் பற்றி ஒரு சிந்தனையுஞ் சிந்திக்கின்றிலரே !
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-
3.2.4 காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும். உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனையும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜன்னி ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு
வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயோ. என்போல் கடலும் மலையும் ஆகாயமும் துழாவி அப்பெருமானைக் காணவேண்டி நின்றவாறு நில்லாதே, எங்குப்போய்த் தேடினால் எம்பெருமான் கிடைப்பனென்று, திருப்பாற்கடலில் சென்று தேடலாமா? திருமலையிற் சென்று நாடலாமா? பரமபதத்திற்கே போய்ப் பார்க்கலாமா என்று இங்ஙனே பலவிடமும் துழாவி அலைகிறாயோ.
இங்ஙனே கடலும் மலையும் விசும்பும் அவனை துழாவித் திரிகின்றவர்கள் நாங்கள் சிலரே என்றிருந்தேன்; காற்றே! நீயும் எங்களைப்போலவே எங்குத் திரிகின்றாய்; இரவு பகல் கண்ணுறங்காதே அலைகிறாயே. கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரனை நீயும் காண ஆசைப்பட்டு அதனால் இப்பாடு படுகிறாயோ.
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-
3.2.5 மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர்விட்டு அழுகிறபடியாக எண்ணி,
நீயும் நீயும் மதுசூதன் பாழிமையிற்பட்டு அவன்கண் பாசத்தால் என்னைப்போலே அவனுடை. குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு உலகம் வெள்ளங் கோக்கும்படியாகக் கண்ணீர்விட்டு அழுகிறாயோ.
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-
3.2.6 கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு
அந்தோ! முன்பு பூர்ணணாயிருந்த சந்திரனே!’ நேற்றுவரையில் நீ உதித்தவுடனே இருள் சிதறி ஓடுதலைக் கண்டிருந்தோம் இன்று அங்ஙணம் காண்கின்றிலோம் நீ ஒளி மழுங்கிக் குறையுடன் இருக்கிறையே. இப்படி நீயும் எம்மைப்போலே மேனிமெலிந்தமைக்கு என்ன காரணம்? உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே!
அவர் வசனங்களை நம்பி நான் கெட்டதுபோலே நீயுங் கெட்டாயோ? அவர் இயற்கையாக ஸத்யமே சொல்லுகிறவராயினும் இரட்டை நாக்கு படைத்த பாம்பரசனோடே ஸஹவாஸம் உள்ளவர் அன்றோ.
நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-
3.2.7 ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து
இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிக்கிறாயே.
நாரையென்ன, அன்றிற் பறவையென்ன, கடலென்ன, வாடைக்காற்றென்ன, மேகமென்ன, இளம்பிறைச் சந்திரனென்ன இங்ஙணம் சேதன அசேதனமாகிய நாங்களெல்லோரும் பகவத் விஷயத்திலீடுபட்டு நெஞ்சிழந்து எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கதறியழுதுகொண்டிருக்க,
இருளே ! நீயும் எங்களைப்போலே எங்கள் திரளிலே சேர்ந்து கதறியழவேண்டியிருக்க. அது செய்யாதது மட்டுமல்லாமல் கொடிதாக நின்று எங்களை நீ ஹிம்ஸிக்கின்றாயே! இப்படியும் ஒரு கொடுமையுண்டோ?
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-
3.2.8 ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி ஜ்வரம் பற்றியிருக்கிறது கண்டு
நொந்தாராக்காதல்நோய் தமக்கு இருப்பது போலவே விளக்குக்கு இருப்பதாக்க்கொண்டு,
நந்தாவிளக்கமே! நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ. நாட்டுக்குக் கண்காட்டியான உனக்குப் உடம்பிலே இப்படி நோவு வருவதே!
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-
3.3 பராங்குச நாயகியின் தாயின் வருத்தம்
3.3.1 ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பராங்குச நாயகி ஆற்றாமையாலே துடித்து நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகி கண்ணீராய் வழிந்தோடி அசோகவனத்தில் சிம்சுபா வ்ருக்ஷத்தின் கீழே பிராட்டி வருந்தினார்ப்போல் வருந்தி திக்குக்கள்தோறும் கண்களைச் சுழலவிட்டு எம்பெருமான் ஆபத்திலே வந்து உதவத் தவறமாட்டான், திடீரென்று ஓடிவந்தே தீருவன் என்று நிச்சயித்துச் சுற்றிலும் பார்த்தபடியே ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்குத்தான் உதவவேணும், மற்றையோர்க்கு உதவலாகாது என்று ஏதேனம் ஸங்கல்பமுண்டோ வென்று சொல்லிவாடுகின்றாள்.
வந்து உதவவேணுமென்று திருவுள்ளங்கொண்டால் ஒரு தூணிலோ துரும்பிலோ தோன்றியும் உதவலாமே; அவனுக்கு அசக்யமான தொன்றில்லையே! என்று சொல்லியும் உயிரை ஒருவாறு தரித்துவைத்துக் கொண்டு வாடுகின்றாள் என்று அவள் திருத்தாய் சொல்லுகிறாள்.
ஆடி யாடி யகம் கரைந்து இசை
பாடிப் பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடி வாடும் இவ்வாணுதலே –2-4-1-
3.3.2 பாணாசுரனின் ஆயிரந்தோள்களையுந் துணித்து உஷைக்கும் அநிருத்தாழ்வானுக்கும் மணம் செய்தருளின நீர் இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது ஏனோ.
இவளுடைய நெற்றியழகைக் கண்டால் ஒரு நொடிப்பொழுதாகிலும் இவளைவிட்டுப் பிரிந்திருக்கமுடியாதே. பெற்ற தாயான எனக்கே ஆகர்ஷகமாயிருக்கின்ற இவள் அழகு உமக்கு அநாதர விஷயமானது எங்ஙனனேயோ.
இவளை நீர்மறந்தாலும் உம்மை நீர்மறக்கலாமோ? உம்முடைய குணம் உமக்குத் தெரியாதோ? நம்மைப் பிரிந்தவர்கள் பிழையார்கள் என்று நீர் அறியமாட்ரோ? உம்மைக்காணும் ஆசையுடன் நைகின்றாள். நீர் இவளைக்காண ஆசைப்படவேண்டியது ப்ராப்தமர்யிருக்க விபாரீதமாக நீர் இருப்பது என்னே!
உடைமையக்காண உடையவனன்றோ ஆசைப்படவேண்டும் உடையவனைக் காண உடைமை ஆசைப்படும்படியாயிற்றே!
ஆசை யென்பது ஒரு கடலாகச் சொல்லத்தக்கதாதலால், இவள் கடலிலே வீழ்ந்து துடிக்கிறாளே. தடைகள் கனத்திருக்கின்றனவோ. தடைகளை தொலைப்பது உமக்கு ஒரு பெரிய காரியமோ என்கிறாள்.
வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-
3.3.3. பிரானே! நீர்ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகிபோல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்த்தினாலன்றோ இப்பெண்பிள்ளை துடித்து நிற்கிறாள்;
ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்கவிட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறுகிறாள்.
இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு.
இரக்கமே வடிவெடுத்தாற்போலிருக்கின்ற நெஞ்சையுடைய இவள் நெருப்போடே சேர்ந்த அரக்கும் மெழுகும்போலே உருகுகின்றாள். இவளுடைய நிலையோ இது; நீரோ இரக்கமென்பது சிறிதுமில்லாம லிருக்கிறீர். உம்மைப்போலே இவளும் இரக்க மற்றவளாக இருக்கும்படி செய்துவிட்டால் இடையில் நான் துடிக்க வேண்டியதில்லை; இவளோ இரக்கமனத்தினள்; நீரோ இரக்கமில்லாதவர். இதற்கு என்ன செய்வேன்?
உம்முடைய இரக்கந்தவிர வேறொன்றால் போக்கக்கூடியதாக இல்லையே இவளுடைய வருத்தம். வேறு எதைச்செய்வேன் நான்? ‘நாம் யாருக்கும் யாதொரு காரியமும் செய்வதில்லை; என்று நீர்சொல்வதற்கும் இடமில்லாதபடி ஒரு பிராட்டிக்காக எவ்வளவு செய்தீர். பக்ஷபாதச் செயல் செய்யாதே இவளைக் கொள்ளும்.
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–
3.3.4 மகளே! பதாறாதே எம்பெருமான் தன்பால் மோகித்திருக்குமவர்களுக்கு காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ?
அவளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது. அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை வென்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு
-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக்கொண்டு ஒருவாறு தாரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளே.
நீ நினைத்தபோதே அடியாரிருக்குமிடத்தே கொண்டுவந்து சோக்கவல்ல பெரிய திருவடியை ஊர்தியாகவுடைய வனல்லையோ அப்படியிருக்கச் செய்தேயும் வரக்காணாமையாலே நெஞ்சு கலங்கி நெடுமூச்செறிந்து நிற்கிறாள்; கண்ணீரைத் தாரைதாரையாகப பெருகவிட்டு நிற்கிறாள். கலங்கினவளாய் உன்னைத்தொழுவதும் செய்யா நிற்கிறாள். இவளையோ உபேக்ஷை செய்வது. என்செய்வேன்.
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-
3.3.5 இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? இரவும் பகலும் இவள் விஷயமாக நீர் வாய் வெருவவேண்டியது போய் உம் விஷயமாக இவள் வாய் வெருவ வேண்டும்படியாயிற்றே!
அவ்வளவேயோ! ஆனந்தக் கண்ணீர்; பெருக வேண்டிய கண்கள் சோகக் கண்ணீர் பெருகிநின்றனவே! இவள் ஏதேனும் அதிகமாக ஆசைப்பட்டதுண்டோ? விரஹஜ்வரத்தாலே வாடின இவள் மார்விலுள்ள மாலையை வாங்கி, உம்முடைய மார்விலுள்ள மாலையைக் கொடுத்தால் போதுமே; வண்டு பண்ணின தவமும் இவள் பண்ணவில்லை போலும் ஒரு வண்டாகப் பிறக்கப் பெற்றிலேனே யென்று துவண்டு நிற்கின்றாள் காணும்.
இவள் அலமாபபுத்தீர இத்தனை திருத்துழாய் ப்ரஸாதமும் கொடுக்கின்றீர் இல்லையே. உம்முடைய ஸ்வபாவம் நிஷ்கல்மஷமன்றோ; இப்படி இரக்கமற்றவராக நீர் இருக்கிற வழக்கமில்லையே; உம்முடைய இரக்கம் எங்கே போயிற்று?
இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-
3.3.6 எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் கேட்கப்பொறாமல்
‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? பெருமாளுக்கு ஒருநாளும் தயவு இல்லாமற் போகாது; என்னுடைய தெளர்ப்பாக்யத்தினால் இங்ஙனம் ஸந்தேஹிக்க வேண்டியதாகிறதவ்வளவே. என்று சொன்னாள்.
நீ தயாளுதான் என்று அறுதியிட்டுவிட்டால் விருப்பம் வளரச் சொல்லவேண்டாவோ. பிரான் என்னும் நீ அடியார்க்கு உபகாரஞ்செய்வதையே தொழிலாகவுடையவனல்லனோ.
தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-
3.3.7 தன்னுடைய நெஞ்சிலுள்ளது பிறரறியாதபடி மறைத்துக்கொண்டிருக்கு மியல்வுடைய இவள் இப்போது படும்பாடு என்னே வஞ்சனை !
பிராட்டி திருவடியிடத்தில் “ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்று சொல்லியனுப்பினாள்’ அதைக் கேட்ட நீர் பிராட்டியைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் தாரித்திருக்க என்னால் முடியவில்லையே என்றாயே. இப்படி நீர் அவளிடம் தோற்க வேண்டியது ப்ராப்தமர்யிருக்க இப்போது இவள் தோற்றிருப்பது ஏதோ வஞ்சனையாக நடந்த காரியமே யன்றி ருஜூவாக நடந்தபடியன்று.
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-
உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கும் இவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ?
மிடுக்கையுடைய கம்ஸன் நினைத்த நினைவு அவனோடே போம்படிபண்ணி அவனை முடித்தீர்; உம்மைத் தோற்பிக்க நினைத்தவர்களை நீர்தோற்பிக்கின்றவராயிருந்தீர்; பிரதிகூலர்களிடத்திலே வெற்றிபெறுவதும் அநுகூலர்களிடத்திலே தோல்விபெறுவதும் உமக்கு ப்ராப்தமர்யிருக்க இரண்டிடத்திலும் வெற்றி உம்முடையதாகவே யிருக்கத்தகுமோ?
உம்மையே தஞ்சமாகப் பற்றினவிவள் இப்பாடுபடலாமோ? இவள் படும்பாடுகளைச் சொல்லப்புகுந்தால் ஒரு மஹாபாரதத்திற்காகுமே.
ஸம்ஸாரிகளைப்போலே உண்டியே உடையே உகந்தோடித்திரியும்படியாக வைத்தீரல்லீர்; நித்யமுக்தர்களைப்போலே நித்யாநுபவம்பண்ண வைத்தீருமல்லீர்;
கம்ஸனைப்போலே முடியச் செய்தீருமல்லீர்;
உம்மையே தஞ்சமாகப்பற்றின விவளை எத்தனை பாடு படுத்த வேணுமோ!.
வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-
3.3.9 உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர்செய்ய நினைத்திருப்பது என்ன?.
ஸூர்யன் அஸ்தமிப்பது உதிப்பது யாதொன்றுமறியாள். ஸம்ஸாரிகள் உதயமானவாறே யதேஷ்டமாகத் திரிந்து வேண்டிய பொருள்களை ஆர்ஜிக்கலாமென்று களிக்கிறார்கள்; அஸ்தமித்தவாறே ஆர்ஜித்த பொருள்களைக்கொண்டு யதேஷ்டமாக விஷயபோகங்கள்; செய்யலாமென்று களிக்கிறார்கள்;
இப்பெண்பிள்ளையோவென்னில் உதயாஸ்தமயங்களில் வித்யாஸமில்லாதவளா யிருக்கின்றாள். சைதந்யமற்றவளோவென்னில், அல்லள்; பாரிமளமும் தேனும் நிறைந்த திருத்துழாய் விஷயமான வார்த்தையாகவே யிருக்கின்றாள்.
கூர்மையையுமுடைய திருவாழியை நீர் ஏந்தியிருப்பது எதற்காக? அத்திருவாயுதத்தைக்கொண்டு அநுகூலரை வாழ்விக்கவும் வல்லீர், பிரதி கூலரை அழியச்செய்யவும் வல்லீர்; இவள் திறத்து நீர்செய்யநினைத் திருப்பது எதுவோ. இவள் பேற்றில் நீர்நினைத்திருக்கிறதென் ?”
பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-
3.3.10 இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் மீந்துக்கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர்நோக்கிக்கொள்ளவேணும்.
இது நமக்கு துர்லபம்’ என்றறிந்தாலும் ஆசையை விடமாட்டாத இளம்பருவமுடையவள். ஆக இப்படிப்பட்ட இவள் இரவும் பகலும் கண்ணுங் கண்ணீருமுர்க இருக்கின்றாள். தாமைரையிலே முத்துப்பட்டாற்போலே இக்கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற இருப்பபைக் காட்டிலெறித்த நிலாவாக்காமல் நீர்ஒடிவந்து காணவேண்டாவோ?
அவளிடம் நாம் வந்து கலப்பதற்கு தடைகள் கனக்கவுண்டே என்கிறீரேல், இராவணனிலும் வலிதோ இவளுடைய விரோதி வாக்கம்? அவனுடைய ஐச்வர்யமெல்லாம் நீறாகும்படி இலங்கையைப் பாழாக்கினீர்; ஒன்றை அழிக்க நினைத்தால் கிழங்குகூட மிகுந்திராதபடி அழிக்குமாவராயிருக்கின்றீர்; அப்படியே இவளையும் அழிக்க நினைக்து விட்டீரோ? எவ்வளவு அழித்தாலும் இவளுடைய கண்ணழகை மாத்திரமாவது குலையாமே நோக்கி யருளவேணும். உயிர்போகாதபடி நோக்கிக் கொள்ளவேணும்.
ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10-
3.4 பராங்குச நாயகி தன்னையே பெருமானாக பாவித்துக் கொள்ளல்
நாயகி நாயகனைப் பிரிந்து வருந்தும் காலத்திலே அனுகரித்து தரித்தல் என்றொரு முறையுண்டு. அதாவது, ராஸக்ரீடை செய்த காலத்திலே கண்ணன் தன்னை மறைத்திட, கோபியர்கள் தங்களையே கண்ணனாக பாவித்து நான் குழலூதுகிறேன், நான் காளிங்க நர்த்தனம் ஆடுகிறேன், நான் கோவர்ர்ரன மலை தூக்குகிறேன் என்று தரித்து இருந்தாற்போலே, நாயகனாக தன்னையே நினைத்து நாயகி போதுபோக்குவது உண்டு.
ஆண்டாள் திருப்பாவை பாடியது, கோபியராக தன்னை அனுகரித்து தானே.
இப்போது, விரஹதாபத்திலிருக்கும் பராங்குச நாயகி, தன்னையே எம்பெருமானாக பாவித்துக்கொண்டு அவனை அனுகரிக்கிறாள். 5.6
கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்–46-
1. ஜகத் ச்ருஷ்டி, ஸம்ஹாரம்
கடல் சூழ்ந்த ஞாலம் முழுவதையும் படைத்தவன் நானே
பஞ்ச பூதங்களும் நானே
ப்ரபஞ்சஸ்ருஷ்டியை பண்ணினது நானே
நிகழ் எதிர் இறந்தகாலங்கள் நானே.
முக்கட்பிரான் யானே,
திசைமுகன் யானே,
அமரரும் யானே, அமரர்கோன் யானே,
இவர்கள் எல்லோரையும் நிர்வஹிப்பவனும் நானே
பிரளய காலத்திலே எல்லாரையும் வயிற்றிலே வைத்து ரக்ஷித்ததும் நானே
2. விபவாதாரம்
மந்தரம் நாட்டி அமிர்தம் கடைந்தெடுத்தது நானே
மஹாவராஹமாகி பூமியை காத்தது நானே.
ஞாலம் அளந்தவன் யானே
ராவண ஸம்ஹாரம் செய்ததும் நானே
கன்று மேய்த்தேனும் யானே
ஆநிரை காத்தேனும் யானே
ஆயர் தலைவனும் யானே
கோவர்த்தனமலையைக் தூக்கி நின்றவன் நானே
ஏழு எருதுகளையும் வலியடக்கி நப்பின்னை பிராட்டியை மணஞ்செய்து கொண்டவன் நானே
பஞ்சபாண்டவர்களை ரக்ஷித்தருளினவன் நானே
இப்படி பராங்குசநாயகியின் பெருமான் பால் வ்யாமோஹம் அதிகமாகி பித்தை அடைந்துவிட்டாள்.
3.5 தாய்மார்களின் சீற்றம்
பராங்குசநாயகியின் பெருமான் பால் வ்யாமோஹம் கண்டு உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார்கள் சீரினார்கள். தாய்மார் நாயகியின் காதலை புரிந்துகொள்ளாமல் வையவும், பழிதூற்றவும் தொடங்கினார்கள்;. நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் பெருமானை ஸேவிக்கவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்றும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
அவள் முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்த்தை கண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று மேலும் கைசுடுக்கி வையத் தொடங்கினாள் தாய்.
பராங்குச நாயகியின் பதில்
தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் அந்த பெருமானின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று அவனைச் சீறில் சரியேயொழிய என்னைச் சீறுவது முறைமையன்று.
நான் ஏதேனும் ஒரு சாதாரண புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறேனோ?
குறைவற்ற கீர்த்தியையுடைய பெருமானின் பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது.
நீங்கள் என்னெஞ்சைக்கொண்டு அவனை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே வையமாட்டீர்கள். இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்?
என்னை அப்பெருமானைக் காணவொண்ணாதபடி செய்து விடுவது என்கிற உங்கள் எண்ணம் அந்தோ! தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்குமாபோலேயிருக்கிறது.
இது நான் அவனை காணப்பெறுவதற்கு முன்னமே சேய்திருக்கவேணும்;
அது செய்யாதே இன்று மறுக்கப் பார்ப்பது பயன் தராது.
அம்மா, அவன் என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ. விலக்ஷணமான திருமேனியழகும், அவன் திருவாழியேந்திய அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென்? பாவமென்றாலென்? நானோ சிளைப்பது என்றாள்.
3.6. தாய் மனம் கலங்குகிறாள்
எம்பெருமான்பால் பராங்குச நாயகியின் வ்யாமோஹம் மேலும் அதிகரித்தது.
சந்திரனைச் காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கலானாள்.
மலையைப்பார்த்து, உலகங்களை அளக்க நிற்கிற ஸர்வேச்வரன் என்கிறாள்
தெருவில் திரியும் கன்றைப்பிடித்து கண்ணபிரான் மேய்த்த கன்று இது என்கின்றாள். ஸர்ப்பத்தைக்காட்டி ‘எம்பெருமானுடைய திருப்பள்ளி மெத்தை இது’ என்கின்றாள்.
இப்படி எம்பெருமானையே கண்டு, அவன் நினைவாகவே இருந்து வாய் வெருவிக்கொண்டேயிருக்கும் மகளைப்பார்த்து மனம் கலங்குகிறாள் தாய்.
அநுபவித்து முடிக்க அரிய பாபத்தை யுடையேன்
நான்பெற்ற இவளை எம்பெருமான் மயக்கி பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு எவ்வளவில் ஆகும் என்று ஒன்றும் அறிகிலேன் என்கிறாள்
இப்படி வ்யாகுலப்பட்டு, பராங்குசநாயகியின் தாய், குறத்தியை அழைத்து குறி விசாரிக்க, அவள் தேவதாந்தர பூஜை செய்ய ஆயத்தமானாள்.
அது கண்டு, உண்மை அறிந்த பராங்குச நாயகியின் தோழி,
தாய்மார்களே! நீங்கள் இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு ஸ்வரூப விருத்தமானதைச் செய்து மதுவையும் மாம்சஸத்தையும் ஆராதனையாக வைக்கவேண்டா.
இப்பெண்பிள்ளை ஒரு காலத்திலும் தேவதாந்தர பஜனம் பண்ணியறியாள்.
ஆகவே நீங்கள் திருத்துழாய் மாலையை அணிந்துள்ள ப்ரபுவினுடைய திருவடிகளை நோக்கி மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே இப்பெண்பிள்ளையடைந்திருக்கிற நோய்க்கு அருமையான மருந்தாகும்
அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை துதியுங்கோள்:
துதித்தவுடனே இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத் தொழுது கூத்தாடுவாள் நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமானே என்ற்றிந்தவர்கள் வேதம் வல்லார்கள். அப்படிப்பட்ட வேதவித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளாமல் அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மையென்கிறாள்.
3.7 ஆழ்வாரின் கோபம்
விச்லேஷத்தின் எல்லையில் நின்ற பராங்குச நாயகி, நான் இவ்வளவு ப்ரார்த்தித்தும் கெஞ்சியும் அவன் வரவில்லை
ஆய்ச்சியரோடு ராஸக்ரீடை செய்த அன்று மறைந்து நின்று அவர்களுக்கு மிகவும் அலமாப்பை விளைத்து, பின்னை புன்முறுவல் காட்டிவந்து புகுந்துநின்றாற்போலே நமக்கும் வந்து முகங்காட்டுவன் என்றிருந்தால் அப்போதும் அவன் வந்து தோன்றவில்லையே யென்று கதறினாள்.
நிரந்தரம் துக்கத்தையேஅனுபவித்தாலும் முடியாதே நிற்கின்ற இந்த ஆத்மாவை இந்நிலையில் ரக்ஷிப்பார் யார் என்று விசனப்பட்டாள்.
எம்பெருமான் என்பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளைகொண்டு எட்டா நிலத்திலிருக்கிறான். அவன் எங்குச் சென்றால்தானென்ன? சபதஞ் செய்துகிடக்கிற எனக்குத் தப்பிப் பிழைக்கவொண்ணுமோ அவனால்?
தோழி, கேள். ! நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
மடலூரப்போகிறேன் நான்; என்னை ஊரார் பழி சொல்லும்படி பண்ணின அவனை லோகமே பழி சொல்லும்படி நான் பண்ணக்கடவேன் என்று தன் கோபத்தை வெளியிடுகிறாள்.
4-நம் ஸ்வரூபம்
4.1 நாம் பல வகைப்பட்டவர்கள்
மக்களில் பலவகை உண்டு. நம்மில் நல்லோர்களும் உண்டு, தீயோர்களும் உண்டு.
ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே’ என்று அனைவரும் கூடி கலங்கவேண்டியிருக்க, உகந்து சிரிக்கும்படியும் சிலர் உண்டு.
பிறரைக் கெடுக்கவேணுமென்று கோலி தாங்களே கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
ஒரு பிறர்மனையிலே புகுந்து திருடுவதற்காகச் சென்று, மற்றெருவன் இவன்தன் வீட்டிலே புகுந்து இவன் பலகாலமாகக் களவுகண்டு திரட்டிவைத்திருந்த பொருள்களைலெல்லாம் கவர்ந்து சென்ற கதைகளும் உண்டு.
செல்வம் இல்லாவிடில் உறவினனாக இவனை சொல்லிக்கொள்வது நமக்கு நிறக்கேடு என்று அவனை விட்டு ஒதுங்குபவர்கள் உண்டு.
அப்படி விடப்பட்டவன் சிறிது செல்வம் பெற்றவாறே உறவினர்கள் அல்லாதாரும் கூட
இவனுடைய ஞாதிகளாக நம்மைச் சொல்லிக்கொள்ளுதல் நமக்கு மேன்மை என்று நினைத்து ‘இவரும் நாங்களும் ஒரே குடும்பம்’ என்று சொல்லி அணுகுபவர்களும் உண்டு.
4.2 செல்வத்தின் பின்னே
நெருப்பு தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது போலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் கண்டும் “பகல்கண்ட குழியிலே இரவில் விழுவாரைப் போலே” அச்செல்வத்தை மேலும் மேலும் சேர்த்து அச்செல்வத்தினாலேயே மன அமைதி இழந்தவர்கள் உண்டு.
கையிலே நாலுகாசு உள்ளவர்களைக் கண்டால் அதைப் பறிக்கவெண்ணிச் சில உபாயங்கள் செய்து வயிறு வளர்ப்பர்கள் உண்டு.
பணத்தின் பின் அலையும் தன்மை நம் எல்லோரிடமும் இருக்கிறது. பணம் ஸம்பாதிப்பதே நம் லக்ஷ்யமாக இருப்பதால், நமக்கு பகவானை சிந்திக்க நேரமோ மனமோ இருப்பதில்லை. பணம் ஸம்பாதிப்பதே நம் லக்ஷ்யமாக இருப்பதால் நாம் குறுக்கு வழிகளில் சென்று தவறுகள் செய்து பாபத்தையும் ஸம்பாதிக்கிறோம். இந்த தாழ்ந்தும், கெட்டும் பணம் ஸம்பாதித்தவர் க்எத்தனை பேர்?
ஒன்று, அந்த பணம் தீர்ந்த பின்னும் நாம் இருப்போம். அல்லது நாம் இறந்த பின்னும் அந்த பணம் இருந்து அந்த பணத்திற்காக நம் குழந்தைகளே பரஸ்பர விரோதிகளாகி நம்மையே தூஷிப்பார்கள். இப்படி இரண்டு விதத்திலும் அந்த பணம் நமக்கு உபயோகமில்லை என்று ஆகிறது. இப்படி நமக்கு உபயோகமில்லாத பணம் நமக்கு தேவைதானா?
4.3. பதவியின் பின்னே
அடுத்தது, பதவி ஆசை. பெரிய பெரிய பதவிகள் பெற ஆசை கொண்டு நம் நிம்மதி இழந்து, அவை பின் ஓடி ஓடி, தாழ்ந்தும், கெட்டும் ஸம்பாதிக்கும் பதவிகள் பின் ஓடியவர்
பெரும் செல்வத்தில் திளைத்த பெரிய பெரிய அரசர்கள் இன்று எங்கே? ஓர் படை எடுப்பில் தோற்று தன் தேசத்தை விட்டு, தன் மனைவி மக்களை எதிரிகளின் பிடியில் விட்டு ஓடி காட்டில் மறைந்து வாழ்ந்து ஒரு வேளை சோற்றுக்கு அலைந்தவர்களின் சரித்திரங்கள் நமக்கு போதிப்பது என்ன?
இன்றும் கூட, ஒரு காலத்தில். பெரிய பெரிய பதவிகளில் இருந்தவர்கள் இன்று எந்த மூலையில் கிடக்கிறார்கள்?
4.4. சிற்றின்பங்களின் பின்னே
அடுத்தபடியாக சிற்றின்பங்கள். சிற்றின்பங்களே வாழ்க்கை என்று இந்த சிற்றின்பங்களில் சிக்கி தன் வாழ்வையே பாழாக்கிக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
உண்மை இப்படி இருக்க, நித்யமான பகவானை விட்டு அந்த அநித்யமான பணம், பதவிகள், சிற்றின்பங்கள் பின் சென்று நாம் நம் அரிய மனித வாழ்வை வீண் அடித்தவர் எத்தனைபேர்?
ஒவ்வொரு சேதனருடைய ருசி, ஞானம் ஒவ்வொரு விதமாகையினாலே ஒருவன் போகத்திலே, ஒருவன் உழைப்பதிலே, இன்னொருவன் மற்றொன்றிலே ஈடுபய்யிருப்பான்.
இப்படி உலகத்திலுள்ள சேதநர்கள் ஸாத்விகராகவும் ராஜஸராகவும் தாமஸராகவும் இருப்பார்கள்.
4.5 அஹங்கார மமகாரங்களுடன்
1. உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்கள்
2. எம்பெருமானாகவே தம்மைப் பாவித்திருந்த அரசர்கள்
3. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் நம்பக்கலில் கப்பஞ் செலுத்தி வாழ்ந்துபோங்கள்’ என்று ஒரு கட்டளை தெரிவித்தமாத்திரத்திலேயே பகைவர்கள் பணிந்து நின்று வணங்கப்பட்டவர்கள்
4. ஒலிக்கின்ற பேரிகைகள் தமது மாளிகை முற்றத்திலே சப்திக்க, பெரு மிடுக்காக உலகத்தை ஆண்ட ஸார்வபௌமர்கள்
5. சிற்றரசர்கள் கொண்டுவரும் உபஹாரங்களைத் தங்கள் கையாலே நேராக வாங்காமல் ஆளிட்டவர்கள்
6. மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே ஆடல் பாடல் கண்டு போதுபோக்கி வாழ்ந்தவர்கள்
7. நெடுநாள் மதிப்போடே ஜீவித்துக்கிடந்தவர்கள்
8. தம் காலிலே குனிந்தவர்களை லக்ஷியம் பண்ணாதிருந்தவர்கள்
9. உலகமெல்லாம் கொண்டாடும்படியான புகழையுடையனராயும், பரம்பரையாகவே ப்ரபுக்களாக வாழ்வர்கள்
இப்படி எத்தனைபேர்கள் இருந்திருப்பார்களென்று நினைக்கத் தொடங்கினால், கடல் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை எண்ணி முடித்தாலும் முடிக்கலாம்; இவர்களை எண்ணி முடிக்கப்போகாது. நாளடைவிலே இவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்த்தால்………………..
1. இப்படிப்பட்டவர்களில் பலர் தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கண்கூடாகக் காணப்பெற்றது உண்டு.
2. பட்டினி கிடக்கமுடியாமல் பலருங்காண வெளியில் புறப்படமாட்டாமல் இருட்டு வேளைகளிலே புறப்பட்டு பிச்சைக்கு இருளிலே செல்ல வழியிலே கருநாய் கிடப்பதறியாதே அதன் மேலே காலை வைத்திட அவை கடித்திட, அந்த உபாதை பொறுக்கமாட்டாமல், கையிலிருந்த பிச்சைப் பானையைக் கீழே நெகிழ விட பிச்சைப்பானை கீழே விழுந்து உடைந்த வோசை கேட்டும் நாய் கத்தின வொலி கேட்டும் ஓடிவந்து காணத்திரள் திரண்டு “முன்பு கொற்றக்குடையின் நிழலிலே வாழ்ந்தவனுக்கா இக்கதி வந்திட்டது!” என்று சொல்லும் நிலைமை நேர்ந்த்தும் உண்டு.
3. வெண்கொற்றக்குடை நிழிலிலே இனிதாக வாழ்ந்தவர்கள் அந்த நிலைமையை யிழந்து காடுகளுக்கு ஓட, அங்குந் தொடர்ந்து பகைவருடைய ஆட்கள் வர என்று ஆனதும் உண்டு
4. ஏழைமைக் கொடுமையும் உடன்சேர்ந்து அரையில் எட்டம் போராதே முன்பக்கத்திலே மாத்திரம் குஹ்யத்திற்கு ஆவரணமாகச் சிறிது துணி தொங்க, தேஹயாத்திரைக்காக யாசிக்கப் புக, ஏளனம் செய்யப்பட்டவர்கள் உண்டு.
வாழ்ந்தவர்களாக உங்களால் நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்திருந்தாலும் மழைப்பெருக்கிலுண்டாகும் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்து, அதோகதியிலே விழுந்து ஒழிந்துபோனவர்களே தவிற ப்ரஹ்மஸ்ருஷ்டி ஏற்பட்ட காலம்முதல் இன்றளவும் வாழ்ந்தவர்கள் ஒருபடியாக வாழ்ந்தே போந்தார்கள் என்பது கிடையாது. 4.9
நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று–39-
4.6 ஆஸ்திகமும் நாஸ்திகமும்
ஆத்திகத்தைப்பொருத்த அளவிலே, சிலர் ஆஸ்திகர்களாயும், சிலர் நாஸ்திகர்களாயும் இருப்பார்கள். மற்றும் பலர் ஆஸ்திகமும் இல்லாமல் நாஸ்திகமும் இல்லாமல் நடுவே இருப்பார்கள்.
சுத்த ஸாத்வீகர்களாக இருப்பவர்கள் எம்பெருமானையன்றி மற்றொரு தெய்வத்தையும் தொழாதவர்களாயும் வேறொரு பிரயோஜனத்தையும் விரும்பாதவர்களாய் இருப்பார்கள்;
ஆனால் மற்ற குணங்கட்கு வசப்பட்டவர்கள் ஐச்வர்யம், ஆரோக்யம், ஸந்தானம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்புபவர்களாய், அப்படிப்பட்ட பலன்களையும் நேரே எம்பெருமானிடத்துச் சென்று கேட்டாமல், தாம் தாம் அபிமானித்திருக்கிற மற்ற தெய்வங்கள் பக்கலிலே சென்று விரும்புபவர்களாயிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ருசிபேதங்களினால் அவர்கள் கோலின பலன்களுக்காக அனுஷ்டிக்கும் ஸாதனங்களும் பலவகைப்பட்டிருக்கும். சிலர் த்யானத்தினாலும், சிலர் யஜ்ஞங்களினாலும், சிலர் அர்ச்சனையினாலும், சிலர் திருநாமஸங்கீர்த்தநங்களினாலும், சிலர் அபிஷேகத்தினாலும் ஆகவிப்படி வெவ்வேறுபட்ட வகைகளாலே தெய்வங்களை வழிபடுவார்கள். . 1.1.5
இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே அஸாதாரணமாயினும், சேதநர்களின் அபிமானத்தயடியொற்றி இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் இப்படி ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வாமியாகக் கொள்வர். 1.1.5
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
ஆக, நாம் ஒவ்வொருவரும் நம் குணம் என்ன, ருசி என்ன, ஸ்வரூபம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஸ்வஸ்வரூபஞானம் எற்பட்டு, ஆத்திகத்தில் ருசி எற்பட்டாலேயே பரஸ்வரூபஞானம் ஏற்படும். 5.7.1
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-
—————
5–நம் லக்ஷ்யம்
நம் லக்ஷ்யம் – எம்பெருமானை அடைவதே
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொன்னது போல் நாம் எல்லோரும் அடைய வேண்டிய இலக்கு ஸ்ரீவைகுண்டமே. ஸ்ரீ வைகுண்டம் சென்றடைந்து, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம் பெற்று, எம்பெருமானுடன் கலந்து, அவன் திருவடிவாரத்திலே வழுவிலா அடிமையாகிய கைங்கர்யம் செய்வதே நம் லக்ஷ்யம்.
நாம் அடையவேண்டிய லக்ஷ்யமாகிய எம்பெருமானைப்பற்றி முதல் அத்யாயத்தில் நாம் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். ஆனாலும் எம்பெருமானைப்பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் குறைவேயாதலால், நம் லக்ஷ்யமாகிய எம்பெருமானைப்பற்றி மேலும் சில வார்த்தைகள்:
1. ஸ்ரீமன் நாராயணனனே பரத்வம்
1. மோக்ஷத்தின் ஸ்வாமியான பரமபதநாதன் ஸ்ரீமன் நாராயணனே
2. அவன் எல்லாம் அறிந்த மேம்பட்ட தேவர்களான நித்ய சூரிகளின் தலைவன்
3. தானே மூன்று மூர்த்தியான ஆதி முதல்வன்
4. படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் தானே செய்பவன்
5. எல்லா தேவதைகளிலும் மேம்பட்டவன்
6. வேதத்தால் பரம புருஷன் என்று அழைக்கப்படுபவன்
7. ஸகல தேவதைகளாலும் ஆராதிக்கப்படுபவன்
8. நித்யவிபூதியையும் லீலா விபூதியையும் தனதாகக் கொண்டவன்
9. ஆதி மூலமே என்ற கூட்ட குரலுக்கு ஓடி வந்தவன்
10. ஆதியும் அந்தமும் இல்லாதவன்
11. முக்காலமும் தானே ஆகி காலத்தினால் யௌவனம் மாறாதவன்
12. நம் புலன்களால் அறியமுடியாதவன்
13. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் வ்யாபித்த விராட் புருஷன்.
14. எல்லா ஞானங்களும் அவனே
15. அவன்தான் பர ப்ரம்மம்
2. அவன் வ்யூஹ புருஷன்
16. நம் குறை கேட்பதற்காகவே திருப்பாற்கடலில் இருப்பவன்
17. திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது நமக்காக சிந்தித்துக் கிடப்பவன்
18. பாற்கடலின் அலைகள் ஆதிசேஷனை ஊஞ்சல் போல் ஆட்ட பள்ளியிருப்பவன்
19. ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாகமணிகளில்
தன் திருமேனி ப்ரதிபலிக்கும் கண்ணாடியறையில் துயில் கொள்பவன்
20. சயனிக்கும்போது ஆதிசேஷனை துயிலணையாகக் கொண்டிருப்பவன்
21. ஆமர்ந்திருக்கும்போது ஆதிசேஷனை சிம்மாசனமாகக்கொண்டிருப்பவன்
22. செல்லும்போது ஆதிசேஷனை குடையாகக்கொண்டிருப்பவன்
3. அவனே ஸ்ருஷ்டி கர்த்தா
1. திருப்பாற்கடலிலிருந்து ச்ருஷ்டி முதலிய கார்யங்களை செய்பவன்
2. தான முக்காரணமுமாகி தன்னிடமிருந்தே உலகை ச்ருஷ்டிப்பவன்
3. மூலப்ரக்ருதி முதலாக ஸகல வஸ்துக்களுக்கும் காரணபூதன்
4. ப்ரபஞ்சத்துக்கு தானே தனி வித்தானவன்
5. வானம், ஒளி, காற்று, நீர், நிலம் எல்லாம் தானே ஆனவன்
6. சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தமாகிய தன்மாத்ரைகளாகியும் நின்றவன்
7. சூர்யனாகவும் சந்திரனாகவும் இருந்து நமக்கு ஒளி தருபவன்
8. பிரமனுக்கு நாபியியில் இடம் கொடுத்து பத்மநாபன் ஆனவன்
9. ருத்ரனுக்கும் தன் திருமேனியில் இடம் கொடுத்தவன்
10. தான் சரீரியாகி உலகத்தை தன் சரீரமாகக்கொண்டவன்
11. தேவன், மனிதன், திர்யக், தாவரம் ஆகிய நால்வகை படைப்பு செய்பவன்
12. காய் கனிகளுடைய ப்ரம்மாண்டமான மரத்தை ஒரு வித்தில் வைத்திருப்பவன்
13. பெரிய சரீரத்தை ஸூக்ஷ்மமாகவும், ஸூக்ஷ்மத்தை பெரிதாகவும் ஆக்குபவன்
14. ஸமஸ்த வஸ்து ஸ்வரூபத்தையும் தன் அதீனமாகக்கொண்டவன்
15. அகர முதல எழுத்தெல்லாம் தானே ஆனவன்
16. ஓங்கார ஸ்வரூபியானவன்
17. சொற்களாகி, வாக்கியங்களாகி, வேதமாக நிற்பவனும் அவனே
18. வேதமாகவும் வேதங்களின் பொருளாகவும் இருப்பவன்
19. வேதாந்தங்களை தன்னுடைய அங்கங்களாகக்கொண்டவன்
4. அவனே காப்பவன்
20. நாராயணனான தானே விஷ்ணுவாக அவதரித்து காக்கும் கடவுளானவன்
21. நாராயணன் என்ற பெயராலேயே தன்னை நமக்கு புகலாக காட்டியவன்
22. தான் படைத்த உலகைக் குத்தி எடுத்து அளந்து, உண்டு, காத்தவன்
23. நிலம், நீர், ஒளி, காற்று, ஆகாயங்களுக்கு நியாமகன்
24. ஆச்ரிதர்களை மலையையும் தூக்கி ரக்ஷித்தவன்
25. ஏழுலகும் காப்பதையே சிந்தையில் வைத்திருப்பவன்
26. ஜகத் ரக்ஷணார்த்தமாகவே அவதாரங்கள் செய்பவன்
27. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்றபடி எங்கும் வியாபித்து இருப்பவன்
28. நான் எங்கும் இருக்கிறேன் என்று ப்ரஹ்லாதன் மூலம் காண்பித்தவன்
29. உலகங்களுக்கெல்லாம் ஆதாரமாய் நிற்பவன்
5. அவனே அழிப்பவனும்
30. அவன் அழித்தலும் காத்தலே
31. ப்ரளய காலத்தில் ஸமஸ்த சேதன அசேதனங்களை தன் வயிற்றில் வைப்பவன்
32. இப்படி ஏழு உலகங்களையும் விழுங்கி தன்னுள் இருத்துபவன்
33. ஏழுலகும் உண்டு தனக்கு ஓர் ஆலிலை மட்டும் வைத்துக்கொண்டவன்
34. பின் பாலகனாகி அந்த ஆலிலையில் துயின்ற ஆதிதேவன்
35. கடலில் தோன்றி கடலிலேயே மறையும் அலைகளை போலே தன்னுள் தோன்றி தன்னுள் மறையும் ஸ்ருஷ்டியும் அப்படியே என காட்டியவன்
36. மார்க்கண்டேயனுக்கு தன் வயிற்றினுள் ஏழுலகும் காட்டியவன்
37. ஏழு உலகங்களையும் யசோதைக்கு தன்னுள் காண்பித்தவன்
38. ப்ரளயம் முடிந்த பின் அவைகளை வெளிக்கொணர்ந்து மறுபடி ஸ்ருஷ்டிப்பவன்
39. இப்படி உலகங்களைப் படைத்து, காத்து, அளந்து, உண்டு உமிழ்பவன்
40. ப்ரம்ம ருத்ராதி தேவர்களின் காலத்தை நிர்ணயிப்பவன்
41. கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தும் தீயோரை அழிப்பவன்
6. அவன் விபவ அவதாரங்கள்
42. இவ்வுலகைப்படைத்து அதனுள்ளே தானும் உதிப்பவன்
43. இஷ்டமான திரு உருவங்களை தரிப்பவன்
44. ஆமை, பன்றி, சிங்கம், ஆயன், அரசன் என்று பல பிறப்பெடுப்பவன்
45. ஒவ்வொரு பிறப்பிலும் நமக்கு உயர்ந்த குணங்களை கற்பிப்பவன்
46. ஆச்சர்யமான நம்பமுடியாத கார்யங்களையும் செய்பவன்
47. சூரியனையே மறைத்து வானிலும் பெரிய மாயைகள் செய்பவன்
மீனாய்
48. மீனாய் அவதரித்து ப்ரளய ஜலத்தில்ருந்து வேதத்தை மீட்டவன்
கூர்மனாய்
49. அமரர்கள் வேண்டுதலுக்கு இணங்கி அலைகடல் கடைந்தவன்
50. ஆமையாய் அவதரித்து மந்தர மலையை தன்மீது தாங்கி நின்றவன்
51. கடலில் அமுதம் பிறக்க, அவ்வமுதுடன் பிறந்த பெண்ணமுதை மணந்தவன்
வராஹனாய்
52. வராஹனாய் அவதரித்து நம் பூமியை வெளிக்கொணர்ந்தவன்
53. ஞானப்பிரானாய் நாமஸங்கீர்த்தனத்தின் பெருமை உணர்த்தியவன்
54. நான் என் பக்தனை நினைவில் வைத்திருப்பேன் என்றவன்
நரசிங்கனாய்
55. ஒரு பக்தன் சொல்லுக்காகவே அவதாரம் எடுத்தவன்
56. தன் பக்தனுக்காக சிங்கமாயும் மனிதனாயும் இணைந்து அவதரித்தவன்
57. ராமனைப்போல் தேடி, அணைகட்டி என்று தாமதியாமல் உடனே வந்தவன்
வாமன, த்ரிவிக்ரமனாய்
58. மகாபலி கொள்ளைகொண்ட உலகங்களை மீட்பதற்கு வாமனனாவன்
59. வாமனனாய் வந்து தான் படைத்த நிலத்தை தானே தானம் கேட்டவன்
60. சிறு குரளாய் இருந்து நெடிது வளர்ந்து பெரு நிலம் கடந்து அளந்தவன்
61. த்ரிவிக்ரமனாய் நம் எல்லோர் சிரஸிலும் தன் திருவடி வைத்தவன்
62. அவனை நாம் தொடமுடியாததால் அவனே வந்து நம்மை தொட்டவன்
63. கங்கையை உண்டாக்கி நமக்கு தன் ஸ்ரீபாத தீர்த்தத்தை அருளினவன்
64. தம் திருவடி ஸம்பந்த்தால் கங்கைக்கு நம் பாபம் தீர்க்கும் திறன் கொடுத்தவன்
65. ருத்ரன் தலை மீது கங்கை நீர் சேர்த்து அவனை சிவன் ஆக்கியவன்
வீர ராமனாய்
66. கடலைப் படைத்து, படுத்து, கடைந்து, அணை கட்டி, தாண்டியவன்
67. இராட்சசனுக்கும் அபயம் கொடுத்து அவனை சிறந்த பக்தனாக்கியவன்
68. இன்று போய் நாளை வா என்று சொல்லி திருந்த வாய்ப்பு கொடுத்தவன்
69. முன்னவனை முடித்து சரணடைந்த பின்னவனை அரசனாக்கியவன்
70. வானரப்படை கொண்டு அசுரப்படை வென்றவன்
71. யாராலும் எதிர்க்க முடியாதவன்
தர்ம ராமனாய்
72. மனிதனாக வாழ்ந்து நல்வழி சென்று தர்ம நெறி புகட்டியவன்
73. தந்தையின் வாய்ச்சொல் காக்க முடி துரந்து கானகம் சென்றவன்
74. பட்சிக்கு ஈமக்ரியை செய்தவன்
75. குரங்குகளுக்கு நண்பனாவன்
76. அணிலிடம் அன்பு காட்டியவன்
மாயக்கண்ணனாய்
77. இரு தாய் பெற வேண்டி இரு குலத்தில் வந்துதித்த மாயன்
78. வசுதேவனுக்கு தன்னையும் நந்தகோபனுக்கு தன் அனுபவத்தையும் கொடுத்தவன்
79. பேய்ச்சி பாலை உண்டு, வெண்ணை உண்டு, மண்ணை உண்டவன்
80. பேய்ச்சி பாலை குடித்து அவள் உயிரையும் குடித்தவன்
81. விஷப்பாம்பின்மேல் நடனமாடியவன்
82. ஆச்ரித விரோதிகளை தன் விரோதியாக பாவித்து பாரதப்போரை வென்ற மாயன்
83. மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பல கொண்டவன்
எளியனாய்
84. வெண்ணை உண்டு, பாண்டம் உடைத்து, ஓசை கேட்டு களித்தவன்
85. வெண்ணை களவாடி, அகப்பட்டு, கட்டுண்டு, அழுது நின்ற எளியவன்
86. இடையனாக கன்றுகளை மேய்த்தவன்
87. அஞ்ஞானிகளான இடையர்களிடையே தோன்றி கலந்து பழகியவன்
88. ஆய்ச்சிகளால் அனுபவிக்கப்பட்ட ஆயர் கொழுந்தாய் நின்றவன்
89. குசேலருக்கு பாத பூஜை செய்த எளியவன்
90. பார்த்தனுக்கு தேர் செலுத்தி பக்தர்களுக்கு தாழ்ந்து செல்பவன்
ஆசார்யனாய்
91. கீதோபதேசம் செய்து தன் தெய்வத்தன்மையை காட்டியவன்
92. கீதை உபதேசித்து தர்மத்தின் விளக்கம் தந்தவன்
93. உன் கடமையை செய். பலனை நான் கொடுக்கிறேன் என்றவன்
94. நம் அறியாமை போக்கி பக்தி கலந்த ஞானத்தை கொடுப்பவன்
95. நம் துயக்கு, மயக்கு, மயர்வை போக்குபவன்
96. நல்லோர்களின் எண்ணமே தன் எண்ணம் என்று சொன்னவன்
97. நல்லோர் பயிலும் நூலாக இருப்பவன்
பல அவதாரங்கள்எடுத்து…
98. விஷ்ணுவாய் அவதாரம் எடுத்து காக்கும் கடவுளானவன்
99. ஹயக்ரீவனாய் அவதரித்து ஞானம் புகட்டியவன்
100. தன்வந்த்ரியாய் அவதரித்து ஆரோக்யத்துக்கு வழி காட்டியவன்
101. ஹம்ஸமாய் அவதரித்து வேதம் ஓதியவன்
102. வ்யாஸர் போன்ற மகர்ஷிகளாகவும் அவதரித்தவன்
103. அவன் பேரும், ஊரும் ஆதியும் யாரும் நினைக்க முடியாதவன்
7. அர்ச்சா மூர்த்தியாய்
104. பரமபதத்தில் குறாயுள்ளோர் இல்லையாகையாலே நம்மில் கலக்க வந்தவன்
105. எல்லா ஊர்களிலும் தனக்கு இடம் பிடித்து ஸன்னிதி கொண்டிருப்பவன்
106. எண்ணற்ற அவதாரங்களாக, திவ்ய மங்கள விக்ரஹங்களை உடையவன்
107. அர்ச்சையில் நம் கோயில்களில் இருந்து நம்ம மனதுள் புக வந்திருப்பவன்
108. ஒவ்வொரு ஊரிலும் இருந்து நம்மை நல்வழிப்படுத்த மறியல் செய்பவன்
109. கருணை, பொறுமை, அன்பு என்னும் ஸ்ரீ, பூ, நீளா தேவிகளுடன் இருப்பவன்
110. பக்த பராதீனனாக பக்தர் சொல் கேட்டு எழுந்தருளியிருப்பவன்
111. ஆழ்வார் சொன்னவண்ணம் செய்த பெருமான் அவன்
112. நாம் செய்யும் பல்வகை ஆராதனத்தையும் ஏற்பவன்
113. ஆயிரம் நாமங்களால் அறியப்பட்டு வணங்கப்படும் ஸஹஸ்ர நாமன்
8. அவன் பன்னிரு நாமங்கள்
114. அயனுக்கும் அரனுக்கும் ஸ்வாமியானதால் கேசவன் ஆனவன்
115. சேதன அசேதனங்களுக்கு புகலிடமானதால் நாராயணன் ஆனவன்
116. திருமகளை மார்பில் கொண்டதால் மாதவன் ஆனவன்
117. பசுக்களையும் பூமியையும் ரக்ஷிப்பதால் கோவிந்தன் ஆனவன்
118. எங்கும் வியாபித்து இருப்பதால் விஷ்ணு ஆனவன்
119. அரக்கர்களை வென்றதால் மதுசூதனன் ஆனவன்
120. மூவுலகையும் அளந்திடும் திருமேனி எடுத்ததால் த்ரிவிக்ரமன் ஆனவன்
121. குரளாய் வந்து யாசித்து நின்றதால் வாமனன் ஆனவன்
122. நமக்காக பரிந்துபேசும் ஸ்ரீயை தரித்து இருப்பதால் ஸ்ரீதரன் ஆனவன்
123. நம் மனதை தன்பால் ஈர்ப்பதனால் ஹ்ருஷீகேசன் ஆனவன்
124. பத்மத்தை நாபியில் கொண்டதால் பத்மநாபன் ஆனவன்
125. யசோதையிடம் கயிற்றினால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனவன்
9. அவன் நீர் போன்ற நற்குணமுடையவன்
நீர் கீழ் நோக்கி பாயும்.
அவன் தாழ்ந்தோரிடத்தில் எளிதாகச்செல்வான்
நீர் மேல் நோக்கி பாயாது.
நான் உயர்ந்தவன் என இறுமாப்பு கொண்டால் அவன் நம்மிடம் வரமாட்டான்.
எந்த காரியத்துக்கும் நீர் வேண்டும்.
எந்த காரியத்துக்கும் அவன் அனுக்ரஹம் வேண்டும்.
நீர் வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.
அவனை வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.
நீரின் தன்மை குளிர்ச்சி.
அவனும் குளிர்ந்த தன்மை உடையவன்
நீர் கொதித்தால் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும்.
அவன் கோபம் கொண்டாலும் அவனையே பற்ற வேண்டும்.
நீரை நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
அவனையும் நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
நீரை எப்பாத்திரத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
அவனையும் எந்த ரூபத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
நீரைக்கொண்டு மற்ற பண்டங்களை சமைக்கலாம்.
பெருமானைக் கொண்டு மற்ற பலன்களைப்பெறலாம்.
நீரை நீருக்காகவே பருகலாம்.
எம்பெருமானையே புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்.
நீரில் ஐந்து வகை. மேகம், கடல், மழை, கிணறு, நிலத்தடி நீர்.
பெருமானும் ஐந்து வகை. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி.
நீர் ஆகாயம், பூமி, பூமிக்கு கீழே என்று எங்கும் வ்யாபித்திருக்கும்
பெருமானும் அப்படியே எங்கும் வ்யாபித்திருப்பவன்
நீரைக்கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.
பகவன் நாமம் கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.
தோண்டத் தோண்ட சுரக்கும் நீர்.
கொள்ளக் கொள்ள இன்பம் தருவன் பகவன்
நீர் நமக்காக இருக்கிறது.
பகவான் நமக்காக இருக்கிறான்.
நீர் தடாகங்களை எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.
பகவானையும் எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.
நீரில் இறங்கி. படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கலாம்
அவனும் படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கக்கூடியவன்
குழாமாகச்சென்று நீரை அனுபவிப்பது மிகவும் இன்பம் தரும்.
குழாமாகச்சென்று அவனை அனுபவிப்பதும் மிகவும் இன்பம் தரும்.
படகில் சிறிது த்வாரம் இருந்தாலும் நீர் உள்ளே புகுந்துவிடும்.
சிறிது இடம் கொடுத்தாலும் பகவான் நம்முள்ளே புகுந்து விடுவான்.
எல்லா நீரும் நீரே. ஆனால் நதிகளின் நீர் விசேஷம். எல்லார் மனதிலும் பகவான் உள்ளான். ஆனால் கோயில்களில் உள்ளவன் விசேஷம்.
கோயில்களில் உள்ளவன் விசேஷம். ஆனால் திவ்ய தேசங்களில் உள்ளவன் மிகவும் விசேஷம்.
தாகம் உள்ளவர் நீர் பருகுவர்.
தாபம் ( மன வருத்தம் ) உள்ளவர் பகவானைப் பருகுவர்.
இப்படிப்பட்ட மேம்பட்டவனை அடைவதே நம் லக்ஷ்யம்.
இப்பேற்பட்டவனை அடைய நாம் நித்யம் ஆராதிப்போமாக.
அடையவேண்டியவனும் அவனே
அவனை அடையும் வழியும் அவனே
6–நாம் நம் லக்ஷ்யம் அடையும் வழி என்ன?–
விஷயபோகங்களுக்கு ஆயதனமாகப் பற்றியிருக்கிற சரீரங்களானவை மின்னல் போலவுங்கூட நிலைத்திராதவை. ஆகவே விடவேண்டியதையும் செய்யவேண்டியதையும் உடனே செய்யுங்கள்.
6.1 விடவேண்டியவை
1. எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விடுங்கள்
2. அஹங்கார மமகாரங்களையும் விட்டொழியுங்கள் 1.2.3.
3. இந்த்ரியங்களை அடக்கி வாஸநைகளின்மேலுள்ள பற்றுக்களை விடுங்கள் 1.2.4.
4. விஷயங்களிலே நீ வைத்திருக்கிற பற்றை விட்டு அவனுள் முற்றிலடங்குங்கள் 1.2.6
5. உண்டியே உடையே என்று அவைகளிலேயே மூழ்கியிருக்காதீர்.
6. ஸ்ரீவைஷ்ணவ ஸ்வரூபத்திற்கு சேராத விஷயங்களையும் விடுங்கள் 1.2.3
7. நான் ஸ்வதந்த்ரன், எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினையாதீர்கள் 1.2.9
8. ஐச்வர்யம் ஸந்தானம் முதலான அற்பபலன்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அவனைவிட்டுப் பிரிந்து போய்விடாதீர்கள் 1.6.1
தொண்டு செய்து அமுதமுண்ண விரும்பியிருப்பீர்களாகில் புறம்பான பற்றுக்களில் நசையைத் தவிருங்கோள்; அங்ஙனம் தவிர்த்து அப்பெருமானைத் தொழுங்கோள். அங்ஙனம் தொழுதால் இவ்வாத்மாவோடே பொருந்திருக்கின்ற கருமங்களை வாஸநையோடே போக்கி மீட்சியற்ற செல்வமாகிய மோக்ஷ புருஷார்த்தத்தை அவன் தானே கொடுத்தருள்வான். 1.6.8
6.2 செய்யவேண்டியவை
1. அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுங்கள்
2. எல்லையில்லாத ஆநந்தமயமாயிருக்கும் பரம் பொருளை பற்றுங்கள்
3. அவனையே என் மாதா பிதாவும் ஸகலவித பந்துவாகவும் பற்றுங்கள் 1.2.6
4. அவனுக்கு ஸகலவித கைங்கரியங்களிலும் செய்வதில் ஊக்கமுற்று இருங்கள்.1.2.6
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-
5. எம்பெருமானின் குணானுபவம் செய்யுங்கள்
6. அவனுடைய வீர சரிதங்களைக் கேட்டு போதுபோக்குங்கள்
7. நான் பெருமானுக்கு அடிமை என நினையுங்கள்
8. அஞ்சலியுடன் மனம் செலுத்தி ஸ்தோத்திரம் சொல்லுங்கள் 4.3.2
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடையவாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-
9. கரணங்களுக்கு பகவதநுபவமே யாத்ரையாகும்படி செய்யுங்கள்
10. திருவாராதனம் செய்யுங்கள்
11. அர்ச்சா முர்த்திக்கு மனத்தாலும் வாயாலும் சரீரத்தாலும் பணிவிடை செய்யுங்கள்
12. எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோள். 1.2.1. 1.2.2
வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-
13. ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கும்படி
இருங்கோள்.
[1] எம்பெருமானே சரண் என்பதைத்தவிர மற்ற உபாயங்கள் சிறிதும் அற்றிருக்கை ஆகிஞ்சந்ய மெனப்படும்.
[2] எம்பெருமானின் அனுக்ரஹம் உடனே கிடைக்காவிடினும் பிறர்மனைதேடி ஓடப்பாராதே. இவ்விடமொழிய வேறுயபுகலில்லை” என்கிற திண்ணிய அத்யவஸாயத்து டனிருக்கை அநந்யகதித்வமெனப்படும்.
உன்காரியத்தில் நீ எவ்வளவு தாமதித்தாலும் என் காரியத்தில் நான் நிஷ்டை குலையமாட்டேன். என்னைப்பற்றியவரையில் நீதான் எனக்கு உபாயம். எனக்கு உன்னுடைய அனுபவம் கிடையாமற்போனாலும் உன் திருவடியே தஞ்சம். எனக்கு வேறு களைகண் இல்லை என்னும் விச்வாஸமே ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்பவை.
ராமபிரான் வருவதற்கு தாமதமானாலும் சீதாப்பிராட்டி அவன் நிச்சயம் வருவான் என்று காத்திருந்தாள் அல்லவா?. சீதா பிராட்டியை தன் முதுகிலே ஏற்றிச்செல்லுகிறேன் என்றதை நிராகரித்தாளல்லவா? –
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–திருவாய்மொழி –5-8-8-
தாளும் தடக்கையும் கூப்பி என்று, கால் கூப்புகை, கை கூப்புகை. இவையிரண்டாலும் ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் தெரிவிக்கப்பட்டவாறாம்:
கால்களை ஒன்று சேர்த்து நின்றால், கூப்பிவிட்டால், வேறெங்கும் எனக்குப் போக்கிடமில்லையென்று ஸூசனையாதலால் அதனால் அநந்யகதித்வம் தெரியும்;
கைகூப்பிவிட்டால் என்கையில் ஒன்றுமில்லை என்கிற ஸுசனையாதாலால் அதனால் ஆகிஞ்சந்யம் தெரியும்.
அவன் தான் ஸர்வேச்வரனாயிற்றே, நமக்கு அவன் முகந்தருவானோவென்று யோசிக்க வேண்டாம்
1. அவன் ஸௌசீல்யமே வடிவாயிருப்பவன். .
2. அவன் ஸர்வேச்வரனேயாகிலும் ஆச்ரிதர் பக்கல் ஸ்நேஹ ஸ்வபாவனாயிருப்பவன்
3. ஆச்ரிதர்களுடன் புரையறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவன்
4. மேன்மையடன் நீர்மையும் உள்ளவன்.
5. ஸகலவித பந்துவுமாகவும் இருப்பவன்.
6. அடியார்களிலே , அறிவு ஒழுக்கம் ஜாதி முதலிய ஏற்றத்தாழ்வு பாராதவன். எவ்வகுப்பினர்க்கும் ஆச்ரயணீயன்.
6.3. எம்பெருமானின் திருவாராதனம் செய்வது எப்படி ?
உலகத்தில் ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும்போது இதை இவன் ஸ்வீகரித்து என்ன குறை சொல்லப் போகிறானோ என்று நெஞ்சு தளும்பியிருக்க வேண்டிவரும்.
ஆனால் புத்திரன் பிதாவுக்கு விருந்திட்டால் ஏதேனுங் குறையிருந்தாலும் அது கண்டு தகப்பன் வெதும்பமாட்டான். அவனுக்கு வேண்டுவதெல்லாம் மகனின் அன்பே.
அதுபோன்ற ஸம்பந்தம் எம்பெருமானுக்கும் நமக்குமுண்டு. ஆக, பெருமான் ஆராதிக்க ஸுலபன்
1. தன்னை ஆராதிக்க மனம் கண் உடல் மொழி போதுமானவன்
2. தம் பெருமைக்கு குறைவாக செய்யும் ஆராதனத்தையும் உகப்பவன்
3. நம் அபசாரங்களைப் பொறுத்து நாம் செய்யும் ஆராதனத்தை ஏற்பவன்
4. எவராலும் தொழக்கூடியவன்
5. யாரும் எளிதில் ஆச்ரயிக்கக்கூடியவன்
6. செவ்வைக்கேடான மக்களுக்கும் திவ்ய தரிசனம் தருபவன்
7. நாம் அவனைப் பல்லாண்டு பாடுவதை மிகவும் விரும்பவன்
8. ஒரு வேளை தொழுதாலும் அந்தமில்லா பேரின்பம் தருபவன்
9. காசு செலவில்லாமல் சுலப வஸ்துக்களாலே ஆராதிக்கக்கூடியவன்
10. பூக்களை கோராமல் இலையை (துளசியை) விரும்புபவன்
11. நாம் இட்டது கொண்டு திருப்தி அடைபவன்
12. நாம் உகந்து உண்ணும் வெண்ணையை தானும் திருடி உண்டவன்
13. அங்க ப்ரதக்ஷிணம் போன்று உடல் வருத்தி உபாஸிக்க வேண்டாதவன்
14. நாம் அஞ்சலி செலுத்தினாலேயே மிகவும் ஸந்தோஷப்டுபவன்
நாம் கண்களினின்று நீர் வெள்ளமிட நெஞ்சு குழைய ஓர் அஞ்ஜலி பண்ணினால் எம் பெருமான் தன்னை ஸர்வாபரண பூஷிதனாகக் கருதுகிறான் அதுவே ஹ்ருதயபூர்வமாக இருந்தால் அதை சந்தனமாகவும் உகக்கிறான். நாம் வாயால் சொல்லும் ஸ்தோத்திரங்களாகிற சொல் மாலைகளை எம்பெருமான் பூமாலைகளாக ஏற்கிறான். அதுவும், ஆழ்வார் அருளிச்செயல்களை சொன்னோமானால் அவைகளை தான் பீதாம்பரமாக அணிகிறான்.
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-
ஆக எம்பெருமானின் பூஜையிலே சுத்தமான தீர்த்தத்தை அர்க்ய, பாத்ய, ஆசமனீய, ஸ்நாநீயமாக ஸமர்ப்பித்து ஏதேனுமொரு சுத்தமான பூவையிட்டு ஏதூப தீபங்களை காட்டினாலும் போதும். ஆராதனை எளிமையாக இருந்தாலும் போதும்.
1. ஏற்கனவே அமைந்துள்ள மனம், மொழி, மெய்கள் மூன்றும் அவன் விஷயத்தில் உபயோகப் படுத்துவதற்காகவே தந்தருளப்பட்டவை. இந்த உறுப்புகளை, அவன் விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கள். இத்தனையே வேண்டுவது
உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-
2. தன்னைவந்துபணிகின்றவர்களைத் தான் பரீக்ஷித்துப்பார்ப்பன், இவரகள் ஏதேனும் க்ஷுத்ரபலன்களைப்பெற்றுக்கொண்டு போய்விடுவார்களா? அல்லது அவற்றில் நசையற்று நம்மையே பரமப்ரயோஜநமாகப் பற்றுகிறவர்காள? என்று பார்ப்பன், எம்பெருமான் பார்ப்பது இவ்வளவே.
அகன்று போகிறவர்களாயிருந்தால், க்ஷுத்ரபலன்களைத்தந்து அவர்களை அகற்றிவிடுவன்,
அங்ஙனல்லாதவர்களுக்கு தானே முற்றுமாக இருப்பான். அப்படிப்பட்டவர்களுக்கு அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே என்னும்படியாயிருப்பன்.
கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-
3. அடுத்தது, எம்பெருமானை ஆச்ரயித்து எம்பெருமானே என் மாதா பிதாவும் ஸகலவித பந்துவும் என்றும் கொள்ள வேண்டும். எம்பெருமானே என் மாதா பிதாவும் என்று ஆனபிறகு, இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை என்றவொரு அத்யவஸாயமும் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்; சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள். ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ?
பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும் தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–பெரிய திருவந்தாதி 70
4. பாவங்கள் நம்மை நரகம் அனுப்பும். நரகத்தில் தண்டனை அனுபவித்தபிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறப்பைக் கொடுக்கும்,
புண்ணியங்கள் நம்மை ஸ்வர்கம் அனுப்பும். ஸ்வர்கத்தில் சுகம் அனுபவித்தபிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறப்பைக் கொடுக்கும்,
பரம புருஷார்த்தமாள மோக்ஷம் விரும்பி நிற்பார்க்கு ஸ்வர்க்க நரகங்களிரண்டும் தடையே. ஆதலால் நாம் மோக்ஷம் அடைய புண்ய பாபங்களிரண்டும் தொலைய வேணும்.
தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-
நம் லக்ஷ்யமாவது புண்யத்தினால் கிடைக்கும் ஸுகங்களையும் வெறுத்து பாப கார்யங்களையும் செய்யாமல் எம்பெருமானை அடைந்து அவனுக்கு தொண்டு செய்வதே.
ஆகவே ஈடிலா திருக்கல்யாண குணங்களையுடைய நாராயணனுடைய அடியவர்களை ஒரு நாளுங் கைவிட மாட்டாத திருவடிகளைச் சேருங்கள்.
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
நீங்கள் இப்படி எம்பெருமானை ஆச்ரயிப்பதாக முயன்றவளவிலே விரோதி கருமங்கள் அனைத்தும் தொலைந்து போம்; அவற்றைத் தொலைக்கப் பிராட்டி இருக்கிறாளல்லவா. பிராட்டியை புருஷகாரமாகப் பற்றினாருடைய குற்றங்களைக் கணிசியாதே கைக் கொள்ள வல்ல திருவடிகள் அல்லவோ எம்பெருமானின் திருவடிகள்.
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-
6.4. பாகவதர்களைப் புருஷகாரமாகக்கொன்டு எம்பெருமானைப் பற்றுங்கள்
பகவானை ஸேவிப்பதைவிட பாகவதர்களை ஸேவிப்பது மிகவும் உயர்ந்த்து. பகவத் சேஷத்வத்தின் எல்லை பாகவத சேஷத்வம் எனப்படுகிறது. இந்த பெரும் ஸ்ரீவைஷ்ணவ தத்வத்தை விளக்கி ஆழ்வார் கூறுவதாவது: திருவாய்மொழி 3.7
பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா–27-
1. பாகவத சேஷத்வம் பரம விசேஷம்.
A. ஏனெனில், பகவானே பாகவத சேஷத்வத்தை தானே அனுஷ்டித்துக்காட்டினானல்லவோ. பாகவதர்களில் தலைவனான ஆதிசேஷனுக்குப்பின் பலராமனுக்குப்பின் பிறந்து “பாகவதற்கோர் கீழ்க்கன்றாய்” என்னும் அவனளவிலே தன் பாரதந்திரியத்தைக் காட்டினான்.
B. பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரித பக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினான்.
C. ஆச்திதர்களுக்கு தன்னையே கொடுக்க அவன். கண்ணனாய்த் திருவவதரித்து ஒவ்வொருவர்க்கும் தன்னை முற்றுமாகக் கொடுத்தான்.
D. அடியார்க்கு தன்னையே கொடுப்பதுபோலத் தனது திவ்யாயுதத்தையும் அவர்களுக்கே தந்தவனாயிற்றே அவன். அம்பரீஷ சக்வர்த்திக்கும் தொண்டமான் சக்வர்த்திக்கும் தன் சக்ராயுதத்தையே தந்து உபகரித்தது இதிஹாஸ புராணப்ரஸித்தமன்றோ.
2. ஆகவே நாங்கள் பாகவதர்கேட்கே ஆட்பட்டவர்கள்.
A. எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள்
B. எம்பெருமானைத் தாளும் தடக்கையுங்கூப்பிப் பணியுமவர்கள்
C. எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.
D. எப்பொழும் எம்பெருமானின் பரத்வத்திலே யீடுபட்டு பேசுமவர்கள்
E. அவன் திருப்பாற்கடலில் சாய்ந்தருளும்படியை வாயாரப்பேசி அந்தக் கிடையழகிலே யீடுபட்டிருக்குமவர்கள்.
F. அற்ப பலன்களுக்காக எம்பெருமானை அணுகி அப்பலன் கைபுகுந்தவாறே விலக நினைக்காமல் எம்பெருமானோடு இடைவிடாது பழகுவதையே பெருஞ் செல்வமாக வுடையவர்கள்
இவர்கள் எனக்கு எக்காலத்தும் பிறவி தோறும் ஸ்வாமிகளென்கிறார். இவர்களே பிறவி தோறும் எம்மை ஆட்கொள்ளவல்ல நாதர்கள் என்கிறார்.
மேலும்
3. நாங்கள் எம்பெருமானின் அடியார்க்கு அடியாருக்கும் அடியார்களே
A. எம்பெருமானுடைய அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள்
B. எம்பெருமானுக்கு தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள்
இவர்களும் எனக்கு எக்காலத்தும் பிறவிவேதாறும் ஸ்வாமிகளென்கிறார்.
இப்படியாக தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்று தாம் சேஷத்வத்தின் எல்லையிலே நிற்க விரும்புகிறார் ஆழ்வார்.
त्वद् भृत्य भृत्य परिचारक भृत्य भृत्य भृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ என்ற முகுந்தமாலையும் காண்க.
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே –3-7-1-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
தோளுமோர் நான்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை யாளுடை நாதரே –3-7-2-
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்போதனை
பொன்னெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறும் என்னை யாளுடையார்களே –3-7-3-
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்
புடையார் பொன்னூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையாவுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே –3-7-4-
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வறுமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே –3-7-5-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
துளிக்கும் நறும் கணனித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே –3-7-6-
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடியார்ந்த வாயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே –3-7-11-
4. ஆழ்வார் மேலும் சொல்வதாவது
A. எம்பெருமானை ஏத்துமவர்கள் நரகத்திற்குச் செல்லுதற்குரிய பாவங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் அவர்கள் எமது தொழுகைக்கு உரிய சிறந்த குலத்திற் பிறந்தவர்களாகக் கொள்ளப்படுபவர்கள்.
B. ப்ராஹ்மண க்ஷத்ரிய ஆதி நான்கு ஜாதிகளைத்தாண்டி (திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், நம்பாடுவான் போல்) மிக நீச ஜாதியராக இருந்தாலும் அவர்கள் பரமனைப் பயிலுந் திருவுடையவர்கள் ஆகில் அவர்கள் பிறந்த வருணம் தொழில் எதுவானாலும், அவற்றைக் கணிசிக்கத் தேவையில்லை; அவர்களிடத்துப் பரமனைப் பயிலுந் திரு உள்ளதா என்பதொன்றே பார்க்கத்தக்கது.
C. மேன்மேலும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பது எமக்கு வேண்டாததாயினும் பாகதவதர்கட்கு ஆட்பட்டிருத்தலாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெறுவதாகில் எத்தனை பிறப்புகள் நேர்ந்தாலும் உத்தேச்யமே என்கிறார்
ஆக நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமானே என்றறிந்தவர்கள் பெருமானின் அடியார்களை புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிய வேண்டும்.
ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் ஸ்ரீராம ஸந்நிதானத்திலே புகும்போது வானர முதலிகளைப் பணிந்து அவர்கள் மூலமேயே எம்பெருமானை பற்றினாரன்றோ.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மூலம் பகவதாச்ரயணம் பண்ணுவானேன் என்னில்,
இங்கு ஸ்ரீ நம்பிள்ளை சொல்வதாவது,
மதுரகவிகள், சத்ருக்னன் அனுஷ்டித்த்துபோலே ஸ்ரீவைஷ்ணவர்களே ஆச்ரயணீயர்; அவர்களுக்கு மேற்பட்டு எம்பெருமானளவிலே சென்றுகூட ஆச்ரயிக்கவேண்டியதில்லை.
ஆனாலும் ஸஜாதீயர்களிடத்திலே ருசி விச்வாஸங்கள் உண்டாவது அரிதாகையாலே, யானையின் மீது ஏறவிரும்புமவர்கள் யானைப் பாகனுடைய அநுமதி கொண்டு புக வேண்டுமாபோலே, அவர்களைப் புருஷகாரமாக வாகிலும் கொள்ளப் பாருங்கோளென்று அருளிச்செய்கிறார்-
தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-
————–
6.5. யார் எம்பெருமானைத் தொழ அதிகாரிகள்
அவன் நாம் கேட்காமலேயே எல்லோர்க்கும் அருளும் பகவனாகையினாலே நாம் எவரும் எவ்வளவு நீசர்களாக இருப்பினும் அவனை அணுகத் தடையில்லை. தம் தம் க்ருஹங்களிலே அவனுக்கு யாரும் ஆராதனம் செய்யலாம்.
மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-
ஆழ்வார் மேலும் சொல்வதாவது எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்க தகுதியானவர்களே. ஜாதியைவிட பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம். –
உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –பெரிய திருவந்தாதி 79 .-
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
மிகவும் நிஹீன்னர்களின் மேல் பாசம் வைத்துள்ளான் எம்பெருமான். ஆனால் மேலும் நீசனான ஒரு வ்யக்தியைத் தேடிப் பார்த்து, அப்படிப்பட்ட வ்யக்தி உலகத்தில் கிடைக்காமையாலே என்றைக்காவது அப்படிப்பட்டவொரு வ்யக்தி கிடைக்காமற் போக மாட்டானா என்கிற நசையினால் திருமலையில் வீற்றிருத்தலும் சயனித்தலும் இல்லாமல் நின்று கொண்டே தேடுகிறான் அவன்.
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
மேடும் பள்ளமுமான நிலத்திலே பெரு வெள்ளம் பெருகினால் மேடு பள்ளங்கள் நீங்கி ஸம நிலைமாக ஆகும் படியைக் காண்கிறோம். அவ் வண்ணமாகவே அருள் வெள்ளத்தால் எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடு பள்ளமும் நிரவப்படக் கூடியதே.
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-
இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாமலிருக்கப் பெற்றிருப்பதுபோலே, மோக்ஷம் இன்பங்களுக்கு அந்தமில்லாதிருக்கப் பெற்றது. பக்தி யற்றவர்களால் பெறலாகாத இம் மோக்ஷத்தை யளிப்பபவன், மோக்ஷ தானத்திற்கு நிர்வாஹகன் அவனே.
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-
‘உங்களுடைய விரோதிகளை அவன் நிச்சேஷமாகப் போக்கவல்லவன்’ ‘அஸூர வர்க்கங்கள் தடுமாறி முடியும்படி அவற்றைத் தொலைத்தாப்போலே, உங்கள் விரோதிவர்க்கங்களை முடிப்பவனான அப்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலே ஈடுபடுங்கோள்’
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று என்கிறபடியே அர்ச்சாவதார ஸ்தலத்திலே கிடந்தும் மிருந்தும் நின்றும்” நிலையையும் அநுஸநிதியுங்கோள்.
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-
தன்னிடம் ஆசையுடையாரெல்லாரையும் அடிமைப் படுத்திக்கொள்ளு மியல்வினன் அவன். இங்ஙனம் பரம போக்யனான மனத்துக்கினிய எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது அதாவது, அனுமானைப் போலே அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு போது போக்கி ஸம்ஸார நிலத்திலிருக்கும் வரையில் கடல் போலே பெருகிச் செல்லுகின்ற நாள்களைத் தொலையுங்கோள் –
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7
இன்ப மயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புற இடைவிடாது எம்பெருமானுடைய திருக் குணங்களிலே அவகாஹியுங்கள்.-
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-
தேவர்களுண்ணும் அமுதமானது இறப்பை நீக்கும். ஆனால் பகவத் விஷயமாகிற அமுதம் பிறப்பை நீக்கும். இதனை ஆரப்பருகி என் மாயப் பிறவி அறுங்கள்.
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–
அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும். யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யனாயிருக்கும் ஆரா அமுதன் அவன். ஸர்வகாலமும் அபூர்வ வஸ்துபோலே புதியனாயிருந்து தெவிட்டாதிருப்பான்–
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
6.6. எம்பெருமானிடம் நம் ப்ரார்த்தனை என்னவாக இருக்கவேணும்?
நாம் எம்பெருமானை ப்ரார்த்திக்க வேண்டியது “தனக்கேயாக வென்னைக் கொள்ளுமீதே” என்பதே. அதாவது,
1. பெருமானே,தேவரீர் என்னுள் சாச்வதமாக எழுந்தருளியிருக்கவேணும்,
2. ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’
3. நீர் அடியேனை தம் குற்றேவல்களை நிறைவேற்ற நியமித்துக் கொள்ள வேணும்,
4. நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் முதலிய பொருள்கள் போலத் தனக்கேயாக என்னைக் கொள்ள வேணும்.
5. இது தவிற அடியேன் ப்ரார்த்திப்பது ஒன்றுமில்லை.
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
———————-
7-நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை?
முன் அத்யாயத்தில் நாம் நம் லக்ஷ்யம் அடைய வழி என்ன என்று விவரிக்கப்பட்டது. அங்கே நாம் செய்யவேண்டியவை யாவை, செய்யக்கூடாதவை யாவை என்றும் சொல்லப்பட்டன. இவைகளை நன்கு அறிந்து அவைகளை நன்கு அனுஷ்டித்து வாழ்பவர்கள் காலக்ரமத்தில் இகலோக வாழ்க்கை முடிந்து எம்பெருமானை நிச்சயம் அடைவர்.
ஆனால் ஸம்ஸாரிகளில் பெரும்பாலோர் பரமபதத்தில் வாத்ஸல்யம் ஸௌசீல்யம் முதலிய எண்ணில் பல்குணங்கள் உபயோகப்படாமே கிடந்ததனால் இந்நிலத்தில் வந்து தன்னுடைய ஒப்பற்ற வடிவழகைக் காட்டி அர்ச்சாவதாரத்திலே நமக்கு அருகிலேயே மேன்மையுடனும் தேஜஸ்ஸுடனும் நமக்கு உபகாரம் செய்வதற்காக அமையக்கிடக்கின்ற அவனை மறந்து உண்டியே உடையே என்று அவைகளிலேயே மூழ்கி, செய்யவேண்டியவைகளை செய்யாமலும், செய்யக் கூடாதவை களைச் செய்தும் வாழ்க்கை நடத்தும் மக்களே. இப்படிப்பட்ட கேடான வாழ்க்கையே அவர்கள் எம்பெருமானை அடைய தடை என்று சொல்லவும் வேண்டுமோ.
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
முன் அத்யாயங்களில் செய்யக் கூடாதவை என்று சொல்லப்பட்டவைகளுக்கும் மேலே, தேவதாந்தரங்களைத் தொழுதல் நாம் நம் லக்ஷ்யம் அடைய பெரும் தடையாகும். ஏனெனில்
7.1 ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தெய்வம். இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே ஒக்கும். மற்றெல்லோரும் தேவதைகளே.
7.2 மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனனுக்குப் பாசுபதாஸ்த்ரம் வேண்டியிருந்தது; சிவபிரானை ஆராதித்து அதனைப் பெறவேணுமென்று அவன் முயற்சி செய்யப் போகையில், கண்ணபிரான், அவ்வாஜூனனை நோக்கி, ‘ருத்ரனிடத்தில் நீ செய்ய நினைத்திருக்கிற ஆராதனையை என் காலிலே செய்து வேண்டுவதை பெறுவாயாக’ என்று கட்டளையிட்டுத் தனது முழந்தாளைக் காட்ட, அங்கே அவன் சில புஷ்பங்களையிட்டு அர்ச்சிக்க, அன்று இரவு கனவிலே ருத்திரன் அந்த புஷ்பங்களைத் தனது தலையிலே அணிந்து கொண்டு வந்து காட்சி தந்து, அஸ்த்ர ப்ரதானம் பண்ணினதாகச் சொல்லப்படுகிற கதை இங்கு உணரத்தக்கது.
இப்படியாக தேவாதி தேவன் நம்பெருமானே என்பது மகாபாரதத்திலே முன்பே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயம்.
7.3 த்ரிவிக்ரமாவதாரத்தின் போது, பெருமானின் திருவடி ப்ரம்மலோகம் புக, பிரமன் பெருமானின் திருவடிக்கு பாதபூஜை செய்ய, ருத்ரன் எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை முடிமேல் தரித்து சிவனாயினான் என்பதும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-
7.4 ருத்ரன் எம்பெருமானுடைய வலப்பக்கத்தை ஆச்ரயித்திருப்பவன். நான்முகக் கடவுளும் பெருமானின் திருநாபிக்கமலத்திலே பொருந்தியிருப்பவன். இதனால் இவர்களே பற்றியிருக்கும் பெருமான் பரதத்துவமான ஸ்ரீமந் நாராயணனே. 1.3.9
7.5 உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே. அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து அவரவர்கள் வழிபாடுகள் செய்து தாம் தாம் வேண்டிய பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலேதான். அவை, தானே அத்தெய்வங்களுக்கு ஆத்மாவாக / உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமேயன்றி அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று. ஆக அந்தத் தேவதைகளுக்கு ஸ்வதந்திரமாக ஒரு சக்தியுண்டென்று நினையாதீர்கள்.
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-
7.6 ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
7.7 நாராயணனென்றும் நான்முகமெனன்றும் ருத்ரனென்று முள்ள மூன்று தேவர்களில் நாராயணனே படைப்பவன். மற்ற இருவரும் படைக்கப்படுமவர்கள்.
7.8 நாராயணனே ஸாத்விகன். மற்றோர் ராஜஸ தாமஸர்கள்.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
7.9 நம் பாபங்களை க்ஷமித்து நம்மை உய்விக்கக்கூடியவன் நாராயணனே. மற்ற தேவதைகளினால் அது நடவாது. உலகங்களின் பாவங்களை அழியச்செய்வது கிடக்கட்டும் உலகுக்குத் தலைவனாக அபிமானிக்கப்படுகிற சிவபிரானுடைய பாவத்தையும் தொலைத்தவன் நாராயணனே.
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-
சிவபிரானுடைய பல நாமங்களிலே, கபாலி என்பதும் ஒன்று. ஒரு காலத்திலே பரமசிவன் பிரமனுடைய சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொண்டு, அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ப்ரார்த்திக்க, அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கபாலம் கையைவிட்டு அகன்றது என்பது வரலாறு.
கொலையுண்டவன் பிரமன். கொலை செய்தவன் ருத்திரன். கொலையுண்டவனும் கொலை செய்தவனும் பரதெய்வமாக எப்படி இருக்கமுடியும். ப்ராயச்சித்தமாக பிச்சை எடுத்தவன் பரதெய்வமாக எப்படி இருக்கமுடியும்.
7.10 மார்கண்டேயன் நெடுநாள் வாழ்ந்துவருகையில், மஹா ப்ரளயத்தைத் தான் காண வேணும் என்று ஆசைகொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும்போது, மஹாப்ரளயத்தில் திருமாலொருவனை யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைதத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங்கண்டஆன் என்பதும் புராணம்.
7.11 ஆக, எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே.
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-
கேள்வி 1
ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்து வைத்தது ஏன்?
ஆழ்வார் சொல்லும் பதிலாவது, அவரவர்கள் பண்ணின புண்யபாபரூப கருமங்களுக்குத் தக்கபடியு பலன் கொடுப்பதென்ற ஒரு சாஸ்த்மரியாதை ஏற்பட்டிருக்கின்றது; முற் பிறவிகளில் புண்யம் செய்தோரை ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணம் செய்யும்படி பண்ணுகிறான். அஃதே போல் முற் பிறவிகளில் பாபம் செய்திருந்தவர்களுக்கு அவற்றின் பலனாக இப் பிறவியில் அவர்களை க்ஷுத்ர தேவதா பஜனம் பண்ணும்படி செய்கிறான் எம்பெருமான். 4.10.6
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
உலகில் பாபம் செய்பவர்களே அதிகமாகையினால், பாஹ்யமதங்களும் குத்ருஷ்டிமதங்களும் மலிந்து கிடக்கின்றன. உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதிபோல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி ஸ்ரீவைஷ்ணவமதம் மிக விரளமாயிருக்கிறது.
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-
கேள்வி 2
ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களும் தேவதாந்தரங்களின் பெயரில் ஹோமங்கள் செய்கிறார்களே. ஏன்.
எப்படி என்றால், சக்கரவர்த்திக்கு ( இப்போது அரசாங்கத்துக்கு ) செலுத்தவேண்டிய கப்பம் / வரிகளை நாம் நேராகவே சக்ரவர்த்திக்குச் செலுத்துகிறோமோ? இல்லையே. ஆங்காங்குப் பல அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்களாதலால் அவர்களிடம் நாம் செலுத்துகிறோம்; ஆனாலும் அவை அவர்களுக்குச் சேருவனவல்ல.
இவ்வண்ணமாகவே ஸகலதேவதாநாயகனான எம்பெருமாள் தானும், நாம் செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்துவதற்காக இதர தேவதைகளை லோகமடங்கலும் பரப்பிவைத்துள்ளான். 5.2.8
அவர்கள் எம்பெருமானுக்கு சேரவேண்டியவைகளை நம்மிடமிருந்து வாஙகி, அவனிடத்தில் சேர்க்கின்றன. இக்காரணத்தாலேயே,
आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् सर्व देव नमस्कारः केशवं प्रतिगच्छति என்று சொல்கிறோம்.
ஆனால் எம்பெருமானை ஆராதனை செய்யும் விஷயத்தில் ஸாக்ஷாத்தாகவே அவனை ஆச்ரயித்தல் உசிதமாதலால் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜநராய் ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள். 5.2.8
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-
7.12 ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாகவுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்தும். தனது ஸங்கல்பத்தினாலே தேவஜாதி முதலான ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கின ஆச்சர்ய பூதனான ஸர்வேச்வரனையன்றி மூன்று லோகங்களையும் நிலைபெறுமாறு திருத்தித் தன் ஸங்கல்பத்திலே வைத்துக்கொண்டு காக்கும் ஸ்வபாவமுடையவர் வேறு யாரேனுமுளரோ?
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-
7.13 ஆக, இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் அலையாது, ஸ்ரீமன் நாராயணனையே வழிபடுங்கள்.
7.14 சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திருவயிற்றிலே வைத்து ரக்ஷக்கையாலே, வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான இவனே ஈச்வரன்.
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-
7.15 உங்களுக்கு இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறவி வேண்டாமல் மோக்ஷம் தான் லக்ஷ்யம் என்றால் मोक्षमिच्छेत् जनार्दऩात् என்ற படி மோக்ஷம் தர வல்லவன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே.
7.16 ஆக தேவதாந்தர பஜனம் பண்ணுவது மோக்ஷம் போகாமல் இவ்வுதகத்திலேயே மறுபடியும் மறுபடியும் ஜன்மம் எடுத்து ‘பிள்ளைவேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி இவை கொடுப்பார் யாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிந்து நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு முயல்வதேயன்றி வேறில்லை
ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.–திரு ஆசிரியம் 6-
7.17 ஆக, மற்ற இரு மூர்த்திகளிலே யுள்ள பசையை யறுத்து ஸ்ரீமன் நாராயணனையே ஆச்ரயித்தல் நலம்.
ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-
———-
8-முடிவுரை
எம்பெருமானருளாலே அர்த்த பஞ்சகத்தை தாம் அறிந்ததாகவும் அதில் ஒவ்வொன்றிலும் நல்தெளிவு பெற்றதையும் இத்திருவாய்மொழியிலே கூறுகிறார் ஆழ்வார். ஆகவேதான் இத்திருவாய்மொழி ஸாரமும் அர்த்த பஞ்சகத்தை ஒட்டியே தொகுக்கப்பட்டது.
வ்யாக்யாதாக்கள் சொல்வதாவது,
அர்த்த பஞ்சகம் அறிதல், முதல் நிலை.
தெளிதல், கடை நிலை.
அதாவது,
1. பர ஸ்வரூபஜ்ஞானம் என்பது
எம்பெருமானின் பரத்வம் அறிதல்,
அவன் ஆச்ரித பாரதந்த்ரியம் கண்டு தெளிதல்
2. ஸ்வ ஸ்வரூபஜ்ஞானம் என்பது,
நாம் எம்பெருமானுக்கு அடிமை என அறிதல்
பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என தெளிதல்
3. உபாய ஸ்வரூபஜ்ஞானம் என்பது
எம்பெருமான் திருவடிகளே உபாயம் என அறிதல்
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகமென்று தெளிதல்
4. புருஷார்த்த ஸ்வரூப ஜஞானம் என்பது
வழுவிலாவடிமை செய்கை புருஷார்த்தம் என அறிதல்
கைங்கர்யம் அவன் ஆநந்தத்துக்காக என தெளிதல்
5. விரோதி ஸ்வரூப ஜ்ஞானம் என்பது
அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் என அறிதல்
கைங்காரியம் என்னை அவன் செய்விக்கிறான் என தெளிதல்
ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை ஸாமாந்யரூபேணவும் விசேஷ ரூபேணவும் உணர்ந்து தெளிவு பெற்றபடியை அறிந்தறிந்து தேறித்தேறி என்றதனால் தான் பேதமை தீர்ந்தொழிந்ததாக அருளிச்செய்கிறார் ஆழ்வார்.
ஆழ்வார் உலகத்தோர் படும் துன்பங்களைப்பார்த்து மிகவும் மனம் நொந்தார்.
ஆராய்ந்து பார்க்கையில், மக்கள் துன்பப்படுவதற்குக் காரணம் தேவதாந்திர பஜனமே என்று கண்டறிந்தார். 5.2.1
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-
எம்பெருமான் கீதையிலே मामेव ये प्रपद्यंते मायां एतां तरंति ते என்று சொன்னபடி, மக்கள் எம்பெருமானின் பரத்வம் அறிந்து, தேவதாந்திர பஜனம் தவிர்த்து, ஸ்ரீமந்நாராயணனையே தொழுதார்களானால் அவர்கள் துன்பம் நீங்குமே என்று நினைத்து எம்பெருமான் பரத்வம் பற்றி இத்திருவாய்மொழியிலேபரக்கப்பேசசுகிறார் ஆழ்வார்.
திருவாய்மொழியானது தொண்டர்கட்கு ஆனந்தத்தைப் பொழியும் இன்பமாரி.
திருவாய்மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகம் ஸ்வாமி நமமாழ்வார்.
ஏடு பார்த்துக் கற்கையன்றிக்கே ஆசார்யனிடத்தில் நன்கு அத்யயநத்தைப் பண்ணி, அர்த்த ஜ்ஞானமும் பிறந்து அதற்கேற்றவாறு அனுஷ்டிப்பவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவத்வ ஸித்தி யுண்டாகுமென்கிறார் ஆழ்வார்.
அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-
இத்திருவாய்மொழியை மக்தள் அனுஸந்தித்தார்களேயானால் தான் பரக்கப்பேசிய எம்பெருமானின் பரத்வம் புரிந்து மக்கள் எல்லோரும் திருந்துவர், அதனாலே ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தி ஏற்பட்டு எங்கும் பகவதனுபவம் ஏற்படும். பாபங்கள் தொலையும். நரகம் புல்லெழுந்தொழியும் என்று நமக்கு சொல்லியருளினார் ஆழ்வார்.
இப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேணும் என்று விரும்பிய ஆழ்வார் நமக்காக ஒரு ப்ரார்த்தனையும் செய்கிறார். அப்ரார்த்தனையாவது,
இமையோர்தலைவா தேவாதிராஜனே!, அடியேன் வணக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் வார்த்தையை மெய் நின்று அங்குமிங்கும் போய்விடப் பாராமல் நிலைத்து நின்று என் விண்ணப்பத்தை முடிய திருச்செவி சார்த்தியருள வேணும்.
விண்ணப்பம் செய்பவன் அடியேன் ஒருவனே யாகிலும், இவ்விருள் தருமா ஞாலத்தில் துவள்கின்ற மற்றும் பல ஸம்ஸாரிகளின் அநர்த்தமும் நீங்கவேணுமென்று அனைவர்க்கும் பிரதிநிதியாய் அடியேன் விண்ணப்பஞ்செய்கிறேன்.
சேஷபூதர்களான எங்களை உத்தரிக்கச் செய்வதற்காகவே,
எந்நின்ற யோனியு மாய் நாங்கள் கேட்காமலேயே இவ்வுலகில் அவ்வப்போது அவதரிக்கும் எங்கள் சேஷியான நீ,
இந்த ஸம்ஸாரநிலத்தில் பொய்யான விபரீத ஞானம் கொண்டு அஹங்கார மமகாராதிகள்கூடே, விபரீதானுஷ்டானமாகிற பொல்லாவொழுக்கம் செய்து கொண்டு திரியும் எங்களுக்கு
இவ்வழுக்கடம்புடனே திரியும் அடியோங்களுடைய ஸம்ஸாரபந்தம் தொடர்ந்து வராமல் இவ்வளவோடு அற்றுப் போகுமாறு பிறப்பு நீக்கி, ‘மோக்ஷம் தந்து
அன்ய சேஷபூதர்களான நித்யமுக்தர்களை அடிமைகொண்டு எழுந்தருளியிருக்குமாப்போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும்.
———–
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!
ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –