Archive for the ‘ஆச்சார்ய ஹிருதயம்’ Category

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 27, 2025

உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது-நாடு திருந்த – நச்சுப் பொய்கை யாகாமைக்கு – பிரபந்தம் தலைக் கட்ட – வேர் சூடுவார் மண் பற்றுப் போலே – என்னும் அவற்றிலும் இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும் ஆர்த்த்யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .(ஸ்ரீ அருளிச் செயல்களிலே 142 இடங்களிலே இனி பதப் பிரயோகங்கள் உண்டு)

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய் திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-என்று திரு அடிகளைக் கிட்டி – ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் -பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம் பரிசமாப்தம் ஆகைக்காகவும் –வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே – இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி இவளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-
4-இனி அவர் கண் தாங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-
6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்துகூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்று
இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..

ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது – ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் – இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து 

—————

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–இனி – ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே-உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு-யாம் உறாமை – பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்-உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ-மன்றாடியவர் வருஷம் தோறும் சென்று திரும்புகிறார்-தந்தோம் தந்தோம் என்று தருகிறான் அவனும்-மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ராமானுஜர் -வேறு பாடு உண்டே-நாங்கள் ஸ்பர்சியாத படி –சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே –யாம் -என்கிறார்-ஆத்மனி பஹூ வசனம்வா –உறாமை-சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்- நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில் அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-இனி வளை காப்பவர் ஆர் ?
வந்து கிட்டுவது  காணும் என்று இருக்கிறாள்-ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்-கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன-ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து–1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ-2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ-3-வறுத்துகிற வாடை காக்கவோ-4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று-(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )-பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை
இனிக் கழலாமல் நோக்குபவர் யார்-
(கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் ) எனை வூழிகள் ஈர்வனவே —அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன –-ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது–விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும் அழிக்கத் தேடா நின்றது-கழல் வளை கழலும் வளையானவே-நாயகனோ வரவில்லை-எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ
வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62 –ஈங்கிவள் தன் நிறையோ -இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது -பிரபல விரோதி யுண்டாய்-ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ –தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –முறையோ-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-நன்னீர்மை-நற்சீவன் ஜீவந்தீம் மாம் யதா ராமஇனி-பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது-ஆன அளவும் கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள்.-யவர் கண் தங்காது-சேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்கும் இத்தனை-சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது, பிராட்டி, பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே-‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் பாலி பாயக் கூடியதான ஸ்நேஹத்தை -அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடை செய்து போந்தார்; அவர் இவ் வாற்றாமையாலே உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக் கொண்டு வர,
விடாயர் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை;-அவரைக் கண்ட பிற்றை நாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று,‘தலைவராகிய உம் பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி-என்று ஒரு வாய்ச் சொல்-என்று ஒரு வார்த்தை சொல்லு-ஒரு யுக்தி – சொல் சொல்ல அமையும்.-வாசா தர்மம் அவாப்னுஹி-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
அத்தலையில் வ்யாமோஹம் அது
இத்தலையில் நோவு இது-இரண்டு தர்மியையும் ஓர் உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது-அது போகிறேன் என்று உத்யோகித்தது – இனி யாரை நோக்கப் போகிறாய் என்கிறாள் சமுதாய சோபையோடு கூடின அழகிய நிறத்தை இழந்தேன்-இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.–இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண்-ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-என்னுடைய விரோதிகளை போக்கி இம் மஹா அவசானத்திலே வந்து சம்ச்லேஷித்து என்னை உண்டாக்கினவனே -இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போரும்-இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்-இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’-பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே-இனி எம்மைச் சோரேல்-கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி,-அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள்.-இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.’

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்–எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை; இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். – பூர்ணே சதுர்தசே வர்ஷே -பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதியன்று’ என்னுமா போலே , -உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்வர்.-எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்; ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச் செய்வர். ஆதலால், இப் பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-
-ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, சகல பதார்த்தங்களிலும்- ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தவனை.-எல்லாரையும் அடிமை கொண்டவனை-அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன் அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-முன்பு விஷயாந்தர பிரவணனாய்ப் போந்த என்னை உனக்கு அடிமை-அறக் கொண்டாய் அநந்யார்ஹமாக சேஷமாக்கிக் கொண்டாய்–நான் நின்ற நிலைக்குச் சேராத படியான உன் திருவடிகளில் அடிமையை ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய்-உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒன்னாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை-என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே-நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும்இனி என் – அவர்கள் ஒருபடியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள் கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’ என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’ என்னுதல்.

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2–கண்ணனும் வாரான்-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -உனக்கும் அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனா யன்றே உதவாது விட்டது,
என்னுடைய சம்பந்தமே அன்றோ. என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது,-அது உனக்கும் ஒக்குமே அன்றோ.-இனி காப்பார் யார் –கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீ தன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று -இருவர் பவ்யராக-இருப்பதால் –ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ. பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே-இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இறே ஆதித்யன் போக்குவது -விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –இன்னம் ஒரு கால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது,
அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்
அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே-இனி –என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –இனி–உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து – ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்
அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே
இனி –என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆன பின்பு ஆறி இருக்க போமோ என்கை –

இனி- உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி –என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-தரியேன் இனி
மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இறே -தறியாமை எவ்வளவு போரும் என்ன-உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.-ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –இனி தரியேன்–அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது.-தாய் தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன, கோமள வல்லித் தாயார் திருக் கோலம் -அவனுக்கும் ஆராவமுத ஆழ்வார் திருக் கோலம் அவளுக்கும் மாற்றி
குத்து விளக்கு பாசுரம் சாத்தி சேவை இன்றும் உண்டே
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். -‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-நிறம் தானே போயிற்றே -அவனை நிறம் கொள்ள வேணும் என்று கோலி இருந்த என்னுடைய நிறத்தை இ றே இழந்தது -அந்நிறத்தை மீட்டுக் கொண்டு வருகிறேன் என்று போன என் மனசாகிறதும் என்னை மறந்து அங்கே அடி யுற்றதுஅவன் இழவாளனாய் நாம் இழவு பரிஹரிக்கை யன்றிக்கே நாம் இழவாளர் ஆவதே -என்று அபிமானித்து போன நெஞ்சை வினைத் தலையிலே படை யறுத்து கொள்வாரை போலே படை யறுத்துக் கொண்டான் -லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான் -இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது –-நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-இப்போதே மீட்டுக் கொடு வருகிறேன்’ என்று விரைந்து சென்ற மனமும் அங்கே படையற்றது-(கிட்டிற்று )அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?
அவன் சொன்னதாகவும் -நெஞ்சு சொன்னதாகவும் கொள்ளலாம் -பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி -‘நெஞ்சினார்’-அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –-‘தூசித் தலையில் வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீவிபீஷணாழ்வான்?‘ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’ என்பது, ஸ்ரீராமா. யுத். 19:23.-தூசித்தலை – படையின் முன்னிடம் –இனி உழ்ந்து ஆரைக் கொண்டு என் உசாகோ –என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.போக்குவது?-உழந்து – வருந்தி. இலங்கையிலே இருந்தவளுக்கு ஒருவனாதல் ஒருவன் குடியாதல் உண்டு; அதுவும் இல்லையே எனக்கு!-ஆரைக் கொண்டு என் உசாகோ – சரீரத்தையே ஆத்துமாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ? பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்திய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத்தலையை உரிசூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?-யாரைக் கொண்டு எதனை உசாவுவது? என் உசாகோ –‘நான் அங்கே பன்னிரண்டு வருடங்கள்’ என்று சொல்லலாமன்றோ பிராட்டிக்கு? அப்படியே நமக்கும் ஏதேனும் உண்டோ?-கலவியில் நிறைவு பெறாமை இருக்கிறபடி.-ஆரைக் கொண்டு –நெஞ்சு போலே நமக்குப் பாங்காய் இருப்பார் உளரோ? 

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-மெய்யன்-அல்லன் ஒருவர்க்கும்   -பரம பிரணயி -சர்வ ரக்ஷகன் என்று இருக்கிற உங்களுக்கும் பொய்யே பலிப்பது –ராமோ த்விர் நபி பாஷதே –நத்யஜேயம்–ஏதம் விரதம் மம -என்னும் ராமாவதாரத்தை போலே இறே நீங்கள் நினைத்து இருப்பது –கபந்தனுக்கும் மெய் சொல்லி -திருவடிக்கு மெய் சொல்லுமவன் அல்லனே -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுக்கையும் பகலை இரவாக்குகையும் இ றே இவ்வாதாரத்தில் க்ருத்யம் –-இப்படிச் சொல்லவும் அவை விடாதே கூவிற்றன -முடிந்தேன் ஆகாதே -என்கிறாள் –-அத்தனை ஆம் இனி-இனி அத்தனை யாகாதே என்கிறாள் –என் உயிர்-அவன் கையதே–என்னுடைய பிராணன் அவன் கைப் பட்டது -அவன் நினைவேயாய்த் தலைக் கட்டின பின்பு என்னுடைய பிராண ரக்ஷணத்துக்கு உங்கள் கால் பிடிக்க வேண்டா வாகாதே –இராமாவதாரத்தில் மெய்யும்-கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –ஆகையாலே அவன் பொய்யன் ஆகில் என் -மெய்யன் ஆகில் என் –இருந்தபடியே உகப்போம் இத்தனை அன்றோ நாங்கள்-என்று தொடர்ந்த கார்யத்தில் முதிர நின்றன –அத்தனை ஆம் -இனி என் உயிர் அவன் கையதே – இனி அவ்வளவே அன்றோ –இவற்றின் ஒருப்பாடு இருந்தபடியால் அவன் நினைவே தலைக் கட்டி விட்டதே அன்றோ -என்கிறாள் – என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்-பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இறே -ராமாவதார வாசனையால் –வான நாடன் -நாரைக் குழாங்கள் -என்கையாலே-உபய விபூதியும் வேண்டுமோ -ஓர் அபலையை முடிக்கைக்கு-என்பது தோற்றுகிறது-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-யுத்த பூமியிலே எதிரிட்ட அஸூரர்க்கு மிருத்யு வானவன் –எதிர் அம்பு கோத்த அ ஸூ ரர்க்கு யாய்த்து மிருத்யு யாவது –சரணம் என்ற அஸூரர்க்கு ரக்ஷகனாம் அத்தனை -ப்ரஹ்லாதி விபீஷணாதி களை ரஷித்தான் இறே–ப்ரஹ்மா ஸ்வயம்பூ சதுராநோவா ருத்ர த்ரிநேத்ர த்ரி புராந்தகோவா இந்த்ரோ மகேந்திர சூரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் -சுந்தர -51-55- இராம தண்டத்துக்கு காரணமாய் இருக்கும் ஒருவனை-இந்த்ரன் சிவன் பிரமன் என்னும் இவர்களும் கூட அத் தண்டத்தின் நின்றும் காப்பதற்கு ஆற்றல் உடையார் அல்லர் -என்னக் கடவது அன்றோ –-வாரான்-என்னை நலிகிற பதார்த்தங்களை சிஷித்துக் கொண்டு வருகிறிலன்-இங்கு அம்பு ஏற்கவும் வேண்டா-பகைவர்களும் இலர்-முகம் காட்ட அமையும் –-இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்––வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ –இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ–வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ–என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ-வரையாதே- பாது காக்குகின்றவனுமாய்-ஆற்றலும் உடையவனுமாய்-சம்பந்தமும் உள்ளவனாய் இருக்கிறவன் வாராது ஒழிய அவனாலே பாது காக்கப் படுகின்ற பொருள்களில் சேர்ந்தவளாய் ஆற்றல் இல்லாதவளாய்-தகுதி இல்லாதவளாய்-இருக்கின்ற நான் என் உயிரை நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ—இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே -வரும் துணையும் ஜீவித்துக் கிடக்கும்படி இராகவன்-உணவுகளையும் உண்பது இல்லை என்று சிலர் சொல்லுதல்-அத்தலையிலே ஆற்றாமையும் –கானனானி சூரம்யாணி நதீ பிரச்ரவண நிச-சரன் நரதிம் ஆப்நோதி த்வாம் அபச்யன் நருபாத் மஜே -சுந்தர -35-47 ஜனகராஜன் புத்ரியே உன்னைக் காணாமையால் மிக்க துன்பத்தை அடைகிறார்-என்னுதல் செய்து தான் ஆறி இருக்கிறேனா–வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ -வரவுக்கு உடலாக-கரன் பட்டான்-கவந்தன் பட்டான்-வாலி பட்டான்-கடல் அடைப்பது வந்து புகுந்தார் அத்தனை -என்று சிலர் சொல்ல ஆறி இருக்கிறேனோ- இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இறே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –இப்பொழுது -இனி இருந்து -என்கையாலே
இதற்கு முன்பு எல்லாம் அவன் சரக்கு அழிய ஒண்ணாது -என்று-நோக்கிக் கிடந்தமை தோற்றுகிறது-பிறர் -சர்வேஸ்வரன் -உயிராகத் தான் நோக்கி இருக்கிறேனோ -என்பாள்-
அவன் விரும்பா விட்டால் நோக்கப் போமோ –என் உயிர் -என்கிறாள்-இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி
துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு -என்று திருவடி –

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-என் தலை மிசையாய் வந்திட்டு-என் தலையிலே  திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து -செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இறே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை –இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு –ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இறே –ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் –இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் – என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –இனி-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-நான் –வழிச் சுவடு அறிந்த நான்-போகல் ஒட்டேன்
தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14-ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்- செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ- அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-போகல் ஒட்டேன் –வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு–ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித –ஆரண்ய -10-9-நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு- மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –ஒன்றும் மாயம் செய்யேல் –உன்னை அறிவதற்கு முன்பு-விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்-உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து-
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்-ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்-அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து-நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் என்னையே –ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய் பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே விரகம் தின்று-குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் – அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு-இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே – உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தவனே –நீலக்கடல் -கடைகிறவனுடைய நிழலீட்டாலே யாதல் -சகல ஓஷிதிகளையும் பொகடுகையால் வந்த நிற வேறுபாடு என்னுதல் – நிறத்தால் நீல ரத்னத்தைச் சொல்லிற்றாய் தத் பிரசுரமான ரத்நாகாரம் என்னுதல் -எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்-அன்றிக்கே- நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்- இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம்–உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது – உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் –
உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே –
ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது –
ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது 

செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும்
படுக்கையும் –இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க- நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே--இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –
இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் – தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் –என்று அருளிச் செய்தார் –முகில் வண்ணன் -என்று-ஏக வசனமாக சொன்னால் –
நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் –என்றபடி -இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர்-–மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி-வெறுத்துப் பேசுவான் என் என்னில்-பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார்
அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு-இனி நாம்-ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்-இனி சேஷித்த காலமாகிலும்-இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் – அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்-ஆளாக-சேஷ பூதராக-ஆளாகவே -அவர்களுக்கும் ஆளாய் –நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் –ஆளாகவே — ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக-இசையும் கொல்-அவன் ஆள் பார்த்து உழி தருவான் -நான்முகன் -60-ஆகையால்
இவ்வர்த்தத்தில் இவனை இப்போதாக இசைவிக்க வேண்டா – இவர் எப்போது என்று பிரார்த்திக்கிறவர் ஆகையால் இவர்க்கு இசைவு உண்டு-இசையுங்கொல் என்பான் என் என்னில் – பாகவத சேஷத்வமாகை யாகிறது கூடுவது ஓன்று அல்லாமையாலே
கூடாத அர்த்தம் இங்கனே கூட வற்றோ -என்கிறார் –ஊழி தோறு ஊழி-இந்த பாகவத சேஷத்வம் தான் சில காலமாய்க் கழிய ஒண்ணாதே –-கல்பம் தோறுமாக வேணும் –
அது தன்னிலும்-ஓவாதே-ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் 

அவாப்த ஸமஸ்த காமனாய்- ஸ்ரீ யபதியாய் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான(திருவாய்-1-1-1 ) சர்வேஸ்வரன் சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாதே இங்கே வந்து அவதரித்த இடத்து – துஷ் ப்ரப்ருதிகளான சிசுபாலாதிகள் அது பொறுக்க மாட்டாமே முடிந்து போனால் போலே –இப்போது பாகவதர்களுடைய பெருமை அறியாதே இவர்களும் நம்மோடு ஓக்க அன்ன பானாதிகளாலே தரியா நின்றார்கள் ஆகில் நம்மில் காட்டில் வாசி என் என்று
சஜாதீய புத்தி பண்ணி சம்சாரிகள் அநர்த்தப் படுகிற படி
-அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே-இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது-இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் –எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9
நுமக்கு அடியோம்-இதுவே போரும் அவன் இரங்குகைக்கு-என்று என்று-அதுக்கும் மேலே அத்தைப் பலகால் சொல்லுகையும் திரு உள்ளத்தைப் புண் படுத்துக்கைக்கு உடல்-நொந்து உரைத்தென்-ஆர்த்தோ வா யதி வா திருப்த ஹரி பரேஷாம் சரணாகத பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதார்த்தமநா (யுத்த )-என்றதுவும் பொய் போலே-மாலார் தமக்கு பண்டு (ஸம்ஸ்லேஷித்த தசையில் )இவை எல்லாம் செய்து வர்த்தித்தவருக்கு(நம்மிடத்திலே முன்பு அடியோம் என்பது நொந்து உரைப்பது-பல் காட்டுவதாய்ச் செய்து வர்த்தித்தவர்க்கு -என்றபடி )அவர் தாம் சார்வரியரானால்
கையாளாய் வர்த்தித்தவர் கிட்ட அரியவரானால் அவர் செய்வோம் என்று நினைத்த வன்று போலே காணும் இங்குச் சொன்னவை (நுமக்கு அடியோம் போல் சொன்னவை )எல்லாம் பலிப்பது–எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்-பசித்த போது கிடையாத சோறு என் செய்ய விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –நெஞ்சே–அவர் தாம் சார்வரியரானால்-சார்வு அரியரானால்- மாலார் தமக்கு நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் எமக்கு இனி -இனி எமக்கு – யாதானும் ஆகிடு காண் அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு-என்று அந்வயம் –‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை;-அவன் நம்மை அநுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?-“எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்; அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.-நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.-அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.-நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்; அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்
-மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-ஸர்வேஸ்வரத்வத்தையும் ஸ்வா பாவிகமான விக்ரஹத்தையும் சொல்லுகிறது-ஆசா லேசமுடையார் பக்கல் வ்யாமோஹத்தையும்
த்வேஷம் பண்ணினாலும் விடப் போகாத படியையும் சொல்லுகிறது என்றுமாம்
(யதிவா ராவண ஸ்வயம் என்றவர் தானே )-ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் சொன்னதாகவும்-ஸ்வரூபம் ரூபம் இரண்டையும் சொன்னவாறு-படிச் சோதி –ஸ்வா பாவிகமான விக்ரஹம் -என்னுதல்-விக்ரஹத்தினுடைய காந்தி என்னுதல்-மாற்றேல் இனி
வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )இறையிலி ஏது என்னில்-உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் – இவ்விறையிலியை மாற்றாதே கொள்-மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு -ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை-பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது-இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்-ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்-ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால் நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-
சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார் இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்-யாதாகில் யாதேயினி-இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என்
பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-உன் ஐஸ்வர்யத்தை நான் தானே சொல்லுவது உண்டோ -என்னவுமாம்-உன்னுடைய நீர்மையை நான் சொல்லுவது உண்டோ என்னவுமாம்-கார்ய ஜாதம் எல்லாம் அழிந்து காரண அவஸ்த்தமாய் நாம ரூப விபாக அநர்ஹமாய் தான் என்ற சொல்லிலே அடங்கித் தனக்கு வேறே ஒரு அபாஸ்ரயம் இன்றிக்கே நின்றவனே-

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும் இது தன்னையே சொல்லு-நான் புக்க இடத்தே புகக் கடவ நெஞ்சே-எல்லாக் காலத்திலும் கையை விட்டு அகலாத திருவாழியை யுடையவன் நம் பக்கல் பாபத்தைப் போக்குவான்-போக்யமான திருவடிகளை ஏத்த உத்ஸாஹி-பற்றினாரை விட்டுக் கொடாத திருவடிகளை என்றுமாம் –ஈதே சொல்-கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்-அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று-விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்-இயல் வான்-வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்-இப்படி இப்படி எதிர் சூழல் புக்கு உத்ஸஹிக்குமவன் என்னுதல்-ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–-முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்-இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன் பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி-பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-சர்வ சக்தியான தான் பண்ணி வைத்த வியவஸ்தை தன்னால் தான் அழிக்கப் போமோ
சர்வ சக்தித்வத்தோ பாதி சத்யா சங்கல்பத்துவமும் வியவஸ்த்தை–சர்வ சக்தியான தான் பண்ணி வைத்த வியவஸ்தை தன்னால் தான் அழிக்கப் போமோ சர்வ சக்தித்வத்தோ பாதி சத்யா சங்கல்பத்துவமும் வியவஸ்த்தை-இனி முன்பு செய்யலாம் -இனிச் செய்யப் போகாது -எத்தாலே என்னில்இனி’ என்கிற ‘உரப்பு எதனைப் பற்ற?’ என்னில்,-பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை-நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூ ரிகள் ஓலக்கம் இருக்க -அச் சேர்த்தி அழகிலே தோற்று அடிமை புக்க என் நெஞ்சை மீட்கப் போகாது என்கை-அந்தப்புர பரிகரத்தை ராஜாவாலும் அநாதரிக்க ஒண்ணாது-ஹர்யர்ஷ கண சந்நிதவ் –என்கிறபடியே நித்ய ஸூ ரிகள் முன்பு பண்ணின ப்ரதிஜ்ஜை முடிய நடத்த வேணும் என்கை-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-உபய விபூதி உக்தனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து என் ஆத்மா ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது-இனி யகலுமோ-ப்ருதக் ஸ்திதி யுபலம்பம் இல்லாதபடி ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாக சம்ச்லேஷித்தும் அகல பிரசங்கம் உண்டோ-பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்துவ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ-ஜாதி குணங்களை பிரிக்க ஒண்ணாதாப் போலே த்ரவ்யத்துக்கும் நித்ய தாதாஸ்ரயத்வம் உண்டாகையாலே பிரிக்க ஒண்ணாதாய் இறே இருப்பது-நித்ய தத் ஆஸ்ரயத்வம்-எப்பொழுதும் ஒரு பொருளை மற்றொரு பொருள் சேர்ந்தே இருத்தல்.-ஈண்டு, விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும்,-‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-எண்ணிலும் வரும்–கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்-
பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் –
நம்முடைய உண்மையை இசைந்தான் இ றே என்று அப்போதே வந்து முகம் காட்டும்
இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-பரம பத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’
என்னினி வேண்டுவம்--சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை -இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று, இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார்.-இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,-அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.–-ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில்
கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று,சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி (‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில் ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;ஆகையாலே,சர்வாதிகாரம் இவ் வுபாயம்’என்று அருளிச் செய்தார்.

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நெஞ்சமே நல்லை நல்லை –
சொன்ன காரியத்தை உகந்து செய்த சத் புத்திரர்களை உகக்குமா போலே உகக்கிறார் -என்னைக் கொண்டாடுகிறது என் என்னில்-உன்னைப் பெற்றால்-என் செய்யோம் –
பலம் தருகைக்கு ஈஸ்வரனுண்டு-விலக்காமைக்கு நீயும் உண்டு-இனிச் செய்ய முடியாதது உண்டோ –-இனி என்ன குறைவினம்-உன்னைப் பெற்றால் என் செய்யோம் என்று சாத்திய அம்சம் உண்டாக சொன்ன இடம் தப்பச் சொன்னோம்-உன் பக்கல் விலக்காத அளவே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் இனி சாத்திய அம்சம் உண்டோ
அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்திய அம்சம் தானுண்டோ
எனக்கு க்ருத்யம்சம் யாது -என்ன-எனக்கு வள வேழ் உலகு பின்னாட்டுவது ஒரு போது உண்டு-அப்போதும் நீ விடாதே கொள்

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க —அசித் கல்பன்-என்னாலே மறக்கப் போமோ என்கிறார் –அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறப்பனோ இனி –மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்-யான் –-அநாதி காலம் –மறந்தேன் உன்னை முன்னமே -என்று விஸ்மரித்துப் போந்த நான்-என் மணியையே– பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து புகரை உடைத்தான் நீல மணி போலே இருக்கிற தன்னை-எனக்கு அனுபவ யோக்யமாம் படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பேனோ-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-எனதாவி தந்து ஒழிந்தேன்
நீ உன்னை எனக்கு ஆக்குகையாலே வெளிறு கழிந்த என் ஆத்மாவைத் தந்தேன்-நெடு நாள் இழந்தவர் ஆகையால் இவர் திரிய நிற்கும் என்று கொண்டு இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –இனி மீள்வது என்பதுண்டே-சத்யோ தசாஹமாக தந்தேன் -மீள்வு என்றோர் அர்த்தம் தானும் உண்டோ –இவரை ப்ரம்மத்தோடு விடுகிறது என் -என்று யார் பொருளை யாருக்கு கொடுத்தீர் என்ன-‘அழகிது, நீர் தாம் யாரதை யாருக்குத் தந்தீர்? ஆராய்ந்து பார்த்தீரோ!’ என்றான் ஈஸ்வரன்.-ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது.-எனதாவி யாவியும் நீ – எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறாய் நீ -இது உனக்கு அநந்யார்ஹ சேஷம் அன்றோ –(என்னாவி -என்னாதே -என்னதாவி -என்றதும் ஹார்த்த பாவம் -அநாதி காலம் இத்யாதி )ஆத்ம சமர்ப்பணம் செய்யாவிடில் சர்வமுத்தி பிரசங்கமாம்; சமர்ப்பிக்கில் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாம்; அப்படியாயின், செய்ய அடுப்பது என்?’ என்னில்,மயங்கிக் கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக் கடவன் அல்லன்-ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை யாதல் –-இவ்வாறு சாமான்ய சங்கல்பத்தையும் விசேஷ சங்கல்பத்தையும் சொன்ன படி-மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீ ஆளவந்தார் திருவாக்கு-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-இனி–உன பாதம் சேர்ந்தேனே-என்பதுடன் அந்வயம்-இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி அறிவித்த தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ -ஸப்த லோகங்களையும் விலக்ஷணமான ஸ்ரீ வராஹ நாயனாராய் கூர்மையான திரு எயிற்றிலே வைத்தாய்-இனி இப்படிச் செய்த போதே பண்டே உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’-இனி -என்றதும் மூன்று அர்த்தங்கள்-1-அறியாதன அறிவித்த பின்பு-2பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போல் சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்த பின்பு-3-இனி யாம் உறாமை -நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை யுடைய – உனது அங்கீ கார பலத்தை யுடைய நாங்கள் அணுகாத படி –வாயும் திரை யுகளில் வியசனம் தீர ஊனில் வாழ் உயிரில் ஸம்ஸ்லேஷித்த போதே உனபாதம் சேர்ந்தேன் அன்றோ )

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
–2-6-7-எனக்காக்கில் இனி முடியாதது உண்டோ –இனி அநவாப்தாமாய் இருப்பது உண்டோ -எங்கனே என்னில்
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து-அடியேனுள் புகுந்தான் –பிரளய ஆபத்தில் சகல லோகமும் நோவு படாத படி திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்–ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய செல்லாதனாய் சம்பந்தத்தைப் பார்த்து உட்ப்புகுந்தான்-ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான்-இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு -மத சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –
அகல்வானும் அல்லன் இனி-பிரளய அநந்தரம் உமிழ்ந்தான்-இங்கு அங்கனே செய்வானாய் இருக்கிறான் அல்லன்-சேதனரைப் போலே பாபத்தாலே அகன்று ஒரு ஸூ க்ருத்தாலே கிட்டுதல் இல்லையே இவனுக்கு-வேறு ஒன்றால் அன்றியே என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -எவ்வளவு என்னில் –கீழ் ஏழு படியும் மேல் ஏழு படியும் விடியா வென்னரகத்து –
ஒரு நாளிலே முடிவுண்டான தண்டல் யமனது -விடியா வென்னரகம் சம்சாரம்-வென்னரகம் -நரகம் என்று புத்தி பிறக்குமதில் தண்மை தோற்றாத நரகம் இது –என்றும் சேர்த்தல் மாறினரே –-என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள் ––எனக்கு இனி அநவாய்ப்பதமாய் -அடையப்படாதது -இருப்பது ஓன்று உண்டோ –மோஷயிஷ்யாமி -தன்னடையே ஓடிப்போமே -கிருஷ்ண சம்பந்தம-இங்கே கிருஷ்ண த்ருஷ்ண சம்பந்தம் –-குலம் –சப்த சப்தச்ச சப்த – -தச பூர்வா தச உத்தர தன்னோடு -அந்தன்-ஒருவன் அநந்தன் ஒருவன் -கூட்டிப் போவது போலே-ஆழ்வார் குருடர்களான நம்மையும் கூட்டிப் போவார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-உன்னை என்னுள்ளே குழைந்த
கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி யாயிற்று கலந்தது-வெம்-மைந்தா – என்னோடே கலக்கப் பெற்ற இத்தாலே நவீக்ருத யுவன ஸ்வ பாவன் ஆனவனே-வானேறே-அஸ் ப்ருஷ்ட சம்சார கந்தரை அனுபவிப்பித்தால் போலே யாயிற்று இவரை அனுபவிப்பித்தது-இனி எங்குப் போகின்றதே –-நித்ய ஸூ ரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது -போகிலும் கூடப் போக வேண்டும்படி யன்றோ கலந்தது –விலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-மாதவன் என்றதே கொண்டு –மாதவன் என்கிற யுக்தி மாத்ரத்தையே கொண்டு -என் பக்கல் அஹ்ருதயமான யுக்தி மாத்திரமே உள்ளது-அத்தை அந்தப்புரத்தில் உள்ளார் வார்த்தை யாகையாலே சஹ்ருதயமாகவும் -அநேக ஆயாச சாத்தியமான ஆஸ்ரயணமாகவும் கொண்டு-என்னை –
கேவல நாராயண சப்தத்துக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை-இனி-போன காலமே போரும் –இனி விடேன் என்னா நின்றான் –பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –இப்பால் பட்டது-அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இ றே போன காலம் -இனி மேல் உள்ள காலம் ஆகிலும் ஒரு பொல்லாங்கும் சேர விட்டுக் கொடேன் என்று –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு –அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, -அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.-கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ -வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’-வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறது-இவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல்-பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே
பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –-இனி என்ன குறை எழுமையுமே-
இங்கே ஸ்வரூப அனுரூபமான கிஞ்சித் காரம் பண்ணின எனக்கு பின்பு ஒரு நாளும் ஒரு குறை இல்லை-தேஹ சம்பந்தம் அற்றதில்லை -ஒரு தேச விசேஷம் சித்தித்தது இல்லை என்கிற குறைகள் ஒன்றும் இல்லை-இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘ அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?-அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’-இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன-எழுமையுமே-என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இறே-‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ-எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு
இன்று தொட்டும் இனி என்றுமே?–அடிமையை இழிந்த இன்று தொடங்கி-மேல் உள்ள காலம் எல்லாம் -அரியது இல்லை-(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அடிமைத்தனம் அநாதி –இசையாமல் இழக்கிறோம்-இசைவித்து தான் தாள் இணை அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ ) பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது உபநிடதம். –தீர்ப்பாரை யாம் இனி அடுத்து நிற்க இறே -இவர் வார்த்தை சொல்லுகிறது பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இறே-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-ஈஸ்வரன் அழைத்து -நமக்கு ஒரு கவி சொல் என்றால் அப்போதே சமைக்க வல்ல எனக்கு என்று பூர்வர்கள் நிர்வாஹம்-அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே, சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
பகவத் குணங்களில் உடைகுலைப் பட்டு இருக்கிற நெஞ்சை தரித்து நின்று கவி சொல்ல வல்லேனாம் படி அமைக்க வல்ல எனக்கு என்று பட்டர் நிர்வாஹம்-ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது-இனியாவர் நிகர் அகல் வானத்தே?–-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்கிறவர்கள் தான் எனக்கு எதிரோ-த்ரிபாத் விபூதி என்னா-இங்கே இருந்து கவி சொல்ல வல்ல எனக்கு ஒத்தார்களோ-அகல் வானம் அது -நிகர் அற்றவன் அடியேனே–தெளி விசும்பு ஆகையால் அந்நிலம் தானே சொல்லுவிக்கும்-இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இந்நிலம் அத்தை தவிர்ப்பிக்கும்-சீதனையே தொழுவார் விண்ணுளா ரிலும் சீரியர் என்ன கடவது இறே-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-ஓர் ஊர் அளவன்றியிலே ஒரு நாட்டுக்காக காட்சி கொடுத்து கொண்டு இருக்கிற படி-கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–-இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.- -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-இவர்கள் பரிஹாரம் பண்ணா நிற்கச் செய்தே-தீர்ப்பாரைத் தேடுகிறது -செய்கிறவை பரிஹாரம் அன்று என்கை தீர்ப்பாரைத் தேடுகையாலே இவள் பரிசரத்தில் பரிஹரிக்கைக்கு ஆள் இல்லை-மோஹிக்கைக்கு ஆள் உண்டு அத்தனை என்கை -இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது? ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’–‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ –யாம் –என்று தன்னையும் கூட்டிக் கொள்கிறாள் -இவர்களோபாதி தானும் நிரூபிக்கிறாளாய் தோற்றுகைக்காக- கலகத்துக்கு இவர்களோடு தன்னோடு வாசி இல்லை என்று தோற்றுகைக்காக -என்றுமாம் -தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது-தோழியானவள், ‘இனிப் பரிஹாரம் உண்டோ? எங்கே தேடக்கடவோம்?’ என்றவாறே,‘இவள் கையது நம் காரியம். இவள் அறிந்தாளாக அடுக்கும்,’ என்று உறவினர் அனைவரும் இவள்மேலே ஒருமுகம் செய்து பார்த்தனர்; ‘இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்;-நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து–ஓர்ப்பால்
‘இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள். என்றது, ‘நீங்களும் ஆராயா நின்றீர்களே அன்றோ?-உங்களைப் போன்று நானும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இங்ஙனே தோற்றிற்று,’ என்கிறாள் என்றபடி.-இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; –
போதாயன வ்ருத்தி கிரந்தம் -இழந்தோம் -துக்கம் பட -ஸ்வாமி திரு உள்ளம் ஆகில் சொல்லவா என்றாரே —தாய்மார் -ஸ்ரீ பாஷ்ய காரர் -கூரத்தாழ்வான் தோழி –
மனத்தினைப் புறத்தே செல்ல விடாது உட்பொருளை நோக்கச் செய்தால்,-மனசை பிரத்யக் ஆக்கினால் —மூவகைத் தத்துவங்களையும் அலகு அலகாகக் காண வல்லள் ஆயிற்று.,–இனி–கடல் வண்ணார் இது செய்தார் காப்பார் யார் என்று ஒளஷதமே ரோத ஹேதுவானால் பரிஹாரம் உண்டோ –-நச்சு மா மருந்தம் இறே மோஹிக்கப் பண்ணுகிறது நிர்வாணம் பேஷஜம் பிஷக் –ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–-ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான்.-ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.ஆன பின்பு-எங்ஙனம் நாடுதும் —எங்கனே தேடுவோம் –

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-ஸ்வ தந்தர்யத்தை நினைத்தோ -கிருபையை விஞ்சி கால் வாங்கி காண் -இனி என்கிறார்-ஐயோ என்றது ஹர்ஷத்தாலே -கிருபையின் கீழ் குற்றம் காண ஞானம் இல்லை -விட சக்தி இல்லை-கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.– ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி –இனிப் போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ –ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே-சத்ருசமான பரமபதத்தை விட்டு -விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று அவசர பிரதீஷனான பின்பு-நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய-பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் துராரதரைப் பற்றவோ –

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
நித்ய ஸூரிகளும் பூமியில் உண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஒரு நீறாகச் சேர்ந்து அடிமை சர்வாதிகனானவன் வந்து -காட்டில் த்ரியக்குகளோடு இளைய பெருமாளோடு வாசி அற அடிமை கொண்டால் போலே -விலக்கடி யுண்டான சம்சாரத்தில் இருக்கிறவர்களோடு நிலவரான நித்ய ஸூ ரிகளோடு வாசி அற அடிமை கொள்ளும் ஏற்றத்தை உடையவன் என்கை -இப்போது -பூர்வ க்ஷணத்தில் அறியாதே இருக்க -இங்கனே பலித்துக் கொடு நின்றேன் அடியேன் மனத்தே மன்னினார்- சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார்-விட ஒண்ணாத சம்பந்தத்தை இட்டு வந்தான். -நித்ய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலை பெற்று நின்றான்.-இனி-போக்யைகளான ஸ்த்ரீகளும்-தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும்.- -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் –இனி அவரே ஆவார்ஆவார் அவரேஇனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா –மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்

முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-இனி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -மேல் அடங்க இனி என்கிற இதன் விவரணம்-தோழீ -இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே மீட்க வேண்டாவோ –-நம்மை -நிறத்தில் வேறுபாடு அவளுக்கும் ஒத்து இருக்கும் படி –ஏஹம் துக்கம் ஸூ கஞ்ச சவ்-வாயாலே மடல் எடுக்க வேண்டா என்கிறாள் அத்தனை வைவர்ணயம் இருவருக்கும் ஒத்து இருக்கும் –
யாமுடைத் துணை என்னும் தோழி மாறும் எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ-எனக்கு அவன் வேணும் என்னும் அளவு இ றே இவளுக்கு உள்ளது –இவள் நோவு போக வேணும் -என்றும் இருவரும் சேர வேணும் என்றும் இரட்டித்து இறே அவள் நோய் இருப்பது –
ததா ஸீன் நிஷ் பிரபோத்த்யர்த்தம் ராஹு க் ரஸ்த இவாம் சுமான்-என்று பெருமாளின் காட்டில் ஒழி மழுங்கினார் இறே மஹா ராஜர்-இம் முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில்-மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன.
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று கூட்டுக.-இனி நம்மை--தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட, உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’என்கிறாள்.
தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக் கடவதன்றோ. -முன்னமே ஈடுபடுவர்களே -என்றவாறு –“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி;
இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவே யாயிற்று வாசி.
-பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும், பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-என்னைக் கடல் கொண்டது -எனக்காய் இருக்கிற உங்களுக்கும் யாகாதபடி அகப்பட்டேன் –என் கார்யம் நான் நினைத்தபடி யாகில் யன்றோ உங்கள் வார்த்தை கேட்டு மீளுவது –-என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
இனி உமக்கு ஆசை இல்லை-இவ்விஷயத்தில் மூட்டுகை அன்றிக்கே-மீட்கப் பார்க்கில் பின்பு உங்களுக்கு என் பக்கல் நசை இல்லை –முன்னை அமரர் முதல்வன் –
பெரியார் சிறியோர் என்று இன்றிக்கே ஆழப் பண்ணும் கடலிலே அகப்பட்டேன் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-என்கிற நித்ய ஸூரிகளுக்கும் சத்தா ஹேதுவாய் இருக்கிற மேன்மையை யுடையவன் –வண் துவராபதி-மன்னன்– அம்மேன்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத நீர்மையை யுடையவன்-மணி வண்ணன் -நீர்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத வடிவு அழகு -பிரணயிநி துவக்குண்பது வடிவு அழகிலே இறே-வாசு தேவன் -அதில் காட்டிலும் ஆபி ஜாதியத்திலே யாயிற்று அகப்பட்டது –ஸ்நுஷாதசரதஸ் யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபி ந-வலையுளே அகப்பட்டேன் -நோக்கிலும் முறுவலிலும் அகப்பட்டேன் -முகப்பில் அனுகூலம் போலே தோற்றி பந்துக்களோட்டை தொற்றை யறுத்து வ்யதிரேகத்தில் முடிய ஒண்ணாது இருக்கை–அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.-ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க, எம் பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,-கமலக் கண் என்னும் நெடுங்கயிறு” என்னக் கடவதன்றோ.-அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப் படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்-இனியது கொண்டு செய்வதென்?-நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வைகள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்-இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.-அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-இப்படி ஒருத்தருக்கும் நிலம் அல்லாத கிரித்ருமத்தை அபலைகளான நாங்கள் அறியவோ -பழம் கிணறு கண் வாங்குகிறது என் -அது கிடக்கிடாய் -நான் பசு மேய்க்கப் போனமை அஸத்யமோ –இனி எம் பரமே
நித்திய ஸூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்று படுத்திப் பேசுகிறார்கள்.-அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ?அவை யெல்லாவற்றையும் எங்களை ஒழியச் சொல்லாய்.-‘என் தான்’-நான் பசு மேய்த்தமை இல்லை என்கிறீர்கோளோ?
அறிந்திலோம் என்கிறீர்கோளோ?-நான் சொன்னது பொய் தான் என்கிறீர்கோளோ? என்றான்.–விகல்பம் பண்ணி கேட்கிறான் –-வார்த்தை கேட்பதில் தானே இவனுக்கு அபேஷிதம் –அவையெல்லாம் அப்படியே யானாலும் நீதான் பசுக்கள் மேய்க்கும்படி இப்படியேயோ?

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-தன் சேஷ்டிதங்களை அனுசந்தித்து நாள்தோறும் அடைவுகெட கூப்பிட்டு-அனுபவத்தோடு காலம் கழிய பெற்றேன் என்னுதல்-அனுபவிக்கலாம் படி காலம் நெடுக்கப் பெற்றேன் என்னுதல்எனக் கென்னினி நோவதுவே-ப்ரீதி பிரேரிதனாய் அனுபவிக்கிற எனக்கு இப்படி காலம் நித்தியமான பின்பு -விஸ்லேஷம் ஆகிற நோவு உண்டோ-எனக்கு என் இனி நோவதுவே –‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.-அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.-இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு – ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் – இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.
உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-அவன் சேஷ்டிதங்களை அனுபவித்து நெஞ்சு நெகிழ்ந்து இச் சேஷ்டிதங்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன் –இனி எனக்கு வேண்டுவது என்-இவ்வனுபவத்தோடே காலம் செல்லப் பெற்ற எனக்கு அவாப்தவ்யம் உண்டோ –அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன். நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-அவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களையே-இடைவிடாமல் அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன் –காரணம் பந்த மோஷாயா -என்கிற பொதுமை தவிர்ந்து அசாதாரணமான நெஞ்சை பெற்றேன் –
பஞ்சஸாத் கோடி விஸ்தீரணையான பூமியில் எனக்கு எதிர் யார்-பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ? பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-அவர்கள் தலையிலே திருவடிகளை வைத்த இது தம் பேறாக நினைத்து இருக்கிற படி -இப்படி தனித் தனியே அனுபவித்து முடிக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சை யுடையேன் –அநுஸந்திக்கும் நெஞ்சு -நெஞ்சு என்னும் உட் கண் -என்னக் கடவது இறே
அங்கனம் அன்றியே -முடியானே யில் கரணங்களை யுடையாராகையாலே மனஸ்ஸூ சஷூர் இந்திரிய விருத்தியும் லபிக்க வற்றான படி சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் –இதர தேவதைகளை ரக்ஷகர் என்கிற கலக்கமும் -ஈஸ்வரனுடைய ரக்ஷணத்தில் அதி சங்கை பண்ணும் கலக்கமும் -தனக்குத் தானே கடவன் என்கிற கலக்கமும் இல்லை –என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது காண் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இறே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை -தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று-நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்-இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு--இனி-தொழுகை தேக யாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்க வேண்டும் என்பாள்‘இனி’ என்கிறாள்.அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ-பகவத் விஷயத்தில் மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது;
பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக் கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள்

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே

கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-இவள் திரு நாமம் சொல்லும் போது த்வயத்தில் படியே ஸ்ரீ மன் நாராயணன் என்று ஆயிற்று சொல்லுவது-நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –போய் இனித்-லீலா உபகரண ரசமும் திரு நாமமே யான இருப்பை விட்டு -அங்கு என்ன ஏற்றகத்துக்குப் போனாள்-என் புத்திக்கு வசமான செயல்களை யுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப் போனாள்.-அன்றிக்கே,-நிருபாதிகமான பெண்மையை யுடையவள் என்னலுமாம். –-மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல – விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனே யாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப் போய்’ என்கிறாள்.

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்

பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-த்யாஜ்ய உபாதேய விபாகம் -பருவம் நிரம்பாத அளவிலே கிடீர் உண்டாயிற்று –பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-என்கிறபடியே பருவம் நிரம்பாது இருக்க பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கிற படி-போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்-இதில் காட்டில் அங்கு என்ன -ஏற்றகம் உண்டாய் போனாள் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று இருக்க மாட்டிற்று இலள் -தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி கண் வளர்ந்து அருளுகிற வூரிலே -பிராட்டியோபாதி தன் பக்கல் வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற வூரிலே என்றுமாம் –

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே

சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்இளமான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-இனிப்போய்த்-பெற்றோரை விடும் படி இவ்விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் –பெற்றோரை விட்டு பற்றுமது இறே ப்ராவண்யத்துக்கு எல்லைஇனிப் போய் – உறவு முறையாரில் தாய்க்கு மேற்பட்டார் இலர் அன்றே! இப்படித் தாயுங்கூடப் புறம்பாம்படி அவன் பக்கலிலே பிறந்த பாவ பந்தத்துக்கு மேலே‘அவ் வருகே ஒன்று உண்டு’ என்னப் போனாளோ?-வந்தேறியைக் கை விட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?
ஸ்வதஸ் சித்தம் பகவத் கைங்கர்யம் -தேடித் போக வேண்டாம் என்றபடி

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே

ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-அஹோராத்ரம் அவன் வ்யாமோஹம் அனுபவிக்கிற இவ்விடத்தை விட்டு என்ன ஏற்றம் பெறப் போனாள் –யயவ்ச காசித் ப்ரேமாந்தா-என்கிறபடியே இருட்சி கை கொடுக்க இறே போயிற்று-அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே தன் வியாமோகம் காட்டப் போனாளே.-அன்றிக்கே, கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே,
இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது? என்னுதல்.

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-நேருடைத்தாகவும்-மருங்குடைத்தாகவும் அடைத்து -முன்பும் பார்ஸ்வத்திலும் நிறுத்தி -நீயே ரக்ஷகன் என்கிற விச்வாஸத்தையும் நெகிழ்ப்பாரைப் போலே இருந்தாய் என்னுதல் -கை விடுமா போலே இருந்தாய் என்னுதல்-ஆர் மருந்தினி யாகுவார்! -ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் யார் மருந்தாகுவார்-நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?- -பிறர் அல்லாத அற்றைக்கு நீ துணை என்று இருக்கலாம் -நீ கை விட்டால் நோக்கக் கடவார் உண்டோ -மருந்தாவது எது என்னாதே யார் என்கிறது ஒரு பரம சேதனன் மருந்து ஆவான் என்று இருக்கிறார் –நிர்வாணம் -பேஷஜாம் பிஷக்மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந்திருவந்தாதி, 4.–அநிஷ்டம் -சம்சாரம் -தொலைக்கும் -இஷ்டமான மோக்ஷம் கொடுக்கும் பொருளும் –போக்யமான அனுபவமும் நீயே-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்!
என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9–பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை-எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்-முனிந்து இனி -அவன் அவ்வபதானம் செய்வதற்கு முன்பே மீட்கப் பார்க்க வேண்டாவோ-என்செய்தீர் அன்னைமீர்காள்!-எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர் -மீட்க்கத் தொடங்கிற்று தலைக் கட்டிற்று அன்று -பொடிகைக்கு முறை அமையுமோ -பலம் வேண்டாவோ

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங் குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-போது போக்குகைக்கு என் நெஞ்சை அழைத்து தருவாரும் இல்லை -அத்தை அழைத்து தரும் போது நெஞ்சிலும் அண்ணியராக வேணும் இ றே -இனி யாரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -நெஞ்சு மீளாதே வ்ருத்த கீர்த்தனத்துக்கும் ஆள் இன்றிக்கே ஒழிந்தது ஆகில் நீ செய்யப் பார்க்கிறது என் என்ன-என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே-என் நெஞ்சு யாது ஓர் இடத்தே போய்த் தரித்தது -நானும் அங்கே போய்ப் புகும் அத்தனை -என் நெஞ்சு மீளாத பின்பு எனக்கும் அது அல்லது புகல் உண்டோ –அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணே நகதாம் கதிம்-நான் இப்பொழுதே இலக்குமணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே,‘நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -ஆனாலும் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான லஜ்ஜையை விடாதே நோக்க வேண்டாவோ என்ன –
நன்னுதலீர் !இனி நாணித் தான் என் ?-ஜகத்து எல்லாம் அடைய பழி சுமந்த பின்பு லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -நம் அழகும் அழிவதற்கு முன்பே அன்றோ அது நோக்க வேண்டுவது –உலகத்தில் பிரசித்தமாய் விட்டதாகில் இனி நாணி என்ன பிரயோஜனம் உண்டு–நன்னுதலீர்-நுதல் –நெற்றி -உங்கள் முகத்தில் எழில் அழியாது இருக்க என் முகத்தில் எழில் குடி போன படி கண்டி கோளே -இந்த நெடுவாசியை பார்த்து அன்றோ வார்த்தை சொல்லுவது –

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது–நான் முடிந்து ஒரு தலையே யாம்படி கிட்டினேன் -என்னுதல் –நித்ய விபூதிக்கு -சாம்யாபத்தி அடைய-அன்றிக்கே
கலவியின் பொருட்டு சென்று கிட்டினேன் என்னுதல் –இனி என் கொடுக்ககேன்-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எத்தை இழப்பது –கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து – அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என்பாடு அற்று வாசனையோடு போம்படியாக இழந்து– அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்–ஆதலின் எல்லாம் என்கிறது

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்-இப்படி நோவு படுத்தினவன் தான் தன்னோடு ஸ்பர்சம் உள்ளவற்றை தந்து ஆகிலும் என்னை உஜ்ஜீவிப்பிக்கிறிலன் -அது செய்கின்றிலன் அது செய்தான் ஆகில் பூவுக்கு இட்டோம் போலும் என்று இருக்கலாமே-காமுகர் காமினிக்கு இட்டால் போலே -சங்கேத சொல் –-தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் என்றவரே -என்னுடைய ஸ்பர்சம் உள்ளதைக் கொண்டு -அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் –அபிமதம் கிட்டாது ஒழிந்தால் சத்தையை நோக்க வேண்டாவோ ––ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-நலிந்த இவனுக்கு கூப்பிடாதே யாருக்கு கூப்பிடுவோம் சொல்லி கோளே -சம்பந்தம் இல்லாதார் வாசலிலே சென்று கூப்பிடவோ-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-இந்திரன் ராஜ்யம் பெற்றான் -மஹா பலி உதார குணம் காட்டிப் போந்தான் நான் எனக்கு சர்வ ஸ்வம்மான அடக்கைத்தையும் லஜ்ஜையையும் இழந்தேன்-இனி என் கொடுக்கேன்-இனி எத்தை கொடுப்பேன்-என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–இத் துக்கம் அறியாமையால் அழகிலும் குறைவற்று பூரணைகளாய் எனக்கு ஹிதம் சொல்லலாம் இ றே உங்களுக்கு –கீழே நாலாம் பாட்டில் இனி என் கொடுக்கேன் என்று சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் -பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் கையும் திரு வாழி யுமான சேர்த்தியிலும் தோற்று நாயக் கூத்தனை யாதரித்து கலக்கச் சென்று கிட்டாமையாலே வந்த இழவு அதில் -ஸ்ரீ வாமனனுடைய அழகிலும் சேலத்திலும் தோற்று மஹா பலியைப் போலே சர்வஸ்வத்தையும் இழந்தேன் என்கிறது இதில்-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-எனக்கு உறவு முறையாரான நீங்கள் வடிவு அழகிலும் ஸ்த்ரீத்வத்திலும் குறைவற்று இருக்கையாலே நிர் துக்கைகளாய் இருந்தி கோள்-யான்-எல்லாம் இழந்து அவசன்னையாய் இருந்தேன்
இனிச் செய்வதென் -இப்படியான பின்பு எத்தைச் செய்வேன் -இவற்றை மீட்க்கவோ -அவனை நியமிக்கவோ -எல்லா அளவிலும் தரித்து இருக்க வேண்டாவோ –என்ன
அதற்கு நெஞ்சு வேண்டாவோ -என்கிறாள் –

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-
பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -/அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-
என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்-அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ–நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது-இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –-மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்
மருள் தானீதோ ––சர்வேஸ்வரன் ஒரு சம்சாரியைப் பெற்று ஹ்ருஷ்டனானான் என்கிற இது கூடுவது ஓன்று அன்று -நான் பிரமித்தேனோ –-மாய மயக்கு மயக்கே-தன் ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பித்தானோ -அநாதி காலம் பிரக்ருதியைக் காட்டி அறிவு கெடுத்தான் -இப்போது தன் வ்யாமோஹத்தை காட்டி அறிவு கெடா நின்றான் –

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-நான் முடியா நின்றேன் -இனி இப் பேறு பெற இருக்கிறார் யாரோ -நதே மனுஷ்யா -என்கிறபடியே மனுஷ்யர்க்கு கூட்டு அல்லர்
அந்தோ –உடைமையான எனக்கு உள்ளது உடையவனுக்கு இன்றிக்கே ஒழி வதே –வர்ஷே பஞ்ச தசே புன –பதினான்கு ஆண்டும் கழித்து பதினைந்தாம் ஆண்டுக்கு இருப்பாரே அன்றோ காணப் பெறுவார் காலம் முடிந்தது என்று இருக்கிறான் ஆயிற்று சக்கரவர்த்தி –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் –என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வரவுக்கு உடலாக-கரன் பட்டான்-கவந்தன் பட்டான்-வாலி பட்டான்-கடல் அடைப்பது
வந்து புகுந்தார் அத்தனை -என்று என்றால் போலே -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ – இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இறே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ- வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ- என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ-பாது காக்குகின்றவனுமாய்-ஆற்றலும் உடையவனுமாய்-சம்பந்தமும் உள்ளவனாய் இருக்கிறவன் வாராது ஒழிய அவனாலே பாது காக்கப் படுகின்ற பொருள்களில் சேர்ந்தவளாய் ஆற்றல் இல்லாதவளாய்-தகுதி இல்லாதவளாய்-இருக்கின்ற நான் என் உயிரை நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ-இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி-துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு –என்று திருவடி –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-கண்களுக்கு இலக்கான பொருள்கள்-முழுதும் துன்புறுத்த புக்கவாறே-அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-அகவாயிலே அவன் அழகு நினைவுக்கு வந்து-நலியா நின்றதுஎனக்கு தாரகமான அழகு பாதகமானால் எனக்கு பிராணனை நோக்க விரகு உண்டோ-மனத்தே நின்று ஈரும் –என்கையாலே கண்ணை மூடினாள் எனபது தானே போதரும்-செம்பளித்தல் -மூடுதல்-என்னது என்று அபிமானித்த -உடம்பு பகை ஆயிற்று –என்னது -என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று –-இனி இருந்து என்னுடைய உயிரை பாதுகாப்பாது என்ற-ஒரு பொருள் உண்டோ –

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6–பிராட்டியோடு -அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து -அச் சீலத்தை உடைய திருமேனி நித்தியமான ஆத்துமாவை-முடியா நின்றது-காபாலி கந்தர்க்கு எளிதானது கண்டீர் எனக்கு அரிதாயிற்று-ஆயின் புறம்பே சென்றாகிலும் தரிக்கல் ஆகாதோ என்ன-காபாலி கந்தர் -மூலம் -பிரமன் என்றபடி ––எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனால் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன-எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8–கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –ஆதலின் கண்ணனில் கொடிது -என்கிறாள் -என்றது இச் செயல்களைக் காட்டிலும் இன்னமும் அவன் தானே நல்லன் -என்றபடி –-இனியதனிலும்பர்-பின்னையும் அதுக்கு மேலே மது மண மல்லிகை மந்தக் கோவை-மதுவையும் மணத்தையும் யுடைத்தான மல்லிகையாலே செறியத் தொடுத்த மலை —வண் பசும் சாந்தினில்–அழகிய பசுஞ்சாந்து இவை நலியா நின்றன-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-அவன் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே அநாதி கால ஆர்ஜிதமான பூர்வாகம் நசிக்கும்-நாளும் பிணி -பூர்வாகம் -நித்யம் சேர்க்கிறோம் – –இனியத்தைச் செய்யவே விரோதியான பாபம் போம் என்கை –தம் சாரா எனக்கேல் இனி என் குறை–புகுதருவான் நின்ற வினைகளும்-உத்தராகமானது சேஷியாது –அவன் திருவடிகளிலே தலை சாய்க்க என்னுடைய சகல துரிதங்களும் போவதான பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ –

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-சகல துக்கங்களும் போம் –இனி எனக்கு என்ன குறை யுண்டு -பகவத் அனுபவ விரோதி துரிதங்கள் போன பின்பு -எனக்கு அனுபவிக்கைக்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்ததோ –என்னால் வருவது போவதான பின்பு அவனால் வருவதற்கு ஒரு குறை யுண்டோ –பக்தியில் இழிய பரிகரம் கர்ம ஞான யோகம் இல்லாமல் -பிரபத்தியில் வியவசாயம் இல்லாமல் -யுக்தி மாத்ரத்தால்
-அல்லல் -போம் -போக்கிட்டு என்ன -என்றால் -எனக்கேல் இனி என் குறை –-என்கிறார் –

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-இன்று நாம் –நன்று நணுகுதும் –அவன் சர்வ ரக்ஷகனான பின்பு -ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் -நன்றாகக் கூடுவோம் -ஸ்ரீ மதுரையை காலயவன ஜராசந்தாதிகள்-கிட்டினால் போல் அன்றியே –நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் – திரு விருத்தம் -92-என்று-ப்ரஹ்மாதிகள் ஷீராப்தியை கிட்டினால் போல் அன்றியே –அநந்ய பிரயோஜனராகக் கிட்டுவோம் –  நமது இடர் கெடவேஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக–வழித் துணை தேடி க்லேசிக்கிற நம்முடைய துக்கம் கெட —

தகவிலை தகவிலையே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்-போகில் மேன்மேல் என பிரிவுண்டாம் -பிரிவை என்று செய்யுள் பாடாய் பிரிவால் என்றபடி -உன்னைப் பிரிகை யுண்டாம் -இனி -முன்புத்தை பிரிவுகளுக்கு ஜீவித்து இருந்தேன் ஆகிலும் இனி ஜீவித்து இருக்க மாட்டேன் –பிரிவை என்பதில்-ஐகாரம் அசை நிலை -செய்யுட்பாடு- பிரிவு உண்டாம்படி வருகிற பசு நிரை மேக்கப் போக்கு வீவ–பசு வந்தன -என்னுமாறு போலே-போக்குகள் தவிரப் படுவானவாக -என்றபடி –போக்கு ஏக வசனம் என்பதற்கு நிதானம் —-இனி வீவ –-இதற்க்கு முன்புள்ள காலம் எல்லாம் பிரிந்து போந்தாயே யாகிலும் இனி மேல் உள்ள காலம் எல்லாம் தவிர வேண்டும்-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ –அன்றிக்கே–உன்னை நீ அறியாயோ -என்னுதல்-ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –-சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே –இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –-என் தனிப் பேர் உயிரைஉன்னை –என்றதின் வியாக்யானம்-வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ– -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பர லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே –-என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –

————–

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25--என்னுடைய வளை நிமித்தமாக–சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும் ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது—சம்சாரத்தின் அபலையான இவளைப் பெற்றால்-சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆஜ்ஜையை பக்னம் ஆக்கா நின்றான்-என் உடைய வளை நிமித்தமாக இவனை அழிக்க தொடங்கினால்
வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்–மிடுக்கை உடைய இந்த்ராதி தேவதைகளுக்கு நாதனான பிரம்மாவுக்கும் நாதன் ஆனவன்-மேலா தேவர்களான அயர்வறும் அமரர்கள் அதிபதி
இத்தால் உபய விபூதி நாதன் என்ற படி-உபய விபூதிக்கு நாதன் ஆனால் போல அன்று கிடீர்
எனக்கு நாதன் ஆயிற்று-(அரங்கம் ஆளி என் ஆளி-ஸ்ரீ ரெங்க நாத மம நாத-அங்கு எல்லாம் விசேஷ கடாக்ஷம் இங்கு பேர் அளவிலே நாதன் )–அவனது பிரயத்தனமும் கார்யகரமாகா இருக்க -தலைகாட்டாமல் இருக்க அவனுடைய ஆணையையும் அழித்து இவளை பாதிக்கத் தொடங்கிற்றே-இனி அசாத்தியமான வியாபாரம் இதுக்கு ஒன்றுமே இல்லையேஇனி நால் நிலத்தே-இங்ஙனமான பின்பு,-இவ்வுலகத்தில்-(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-நான்காம்‌ ப்ரகரணம்‌-

August 21, 2025

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ தீதற்ற
ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே காண்

மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

——

219-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள்‌ உம்பர்‌ வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன்‌ என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர்‌ சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய்‌ நீயும்‌ நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம்‌ ஸம்ஸாரிகளுக்கமாம்படி வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து எளிதாக ௮வதரித்துப்‌ பிழைகளை ஸஹித்துப்‌ புரையறக்‌ கலந்து அல்ப ஸந்துஷ்டனாய்‌ அம்ருதமே ஒளஷதமாக்கி நீர் புரையத்‌ தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும்‌ இனிமையுமுண்டு, தொழுதால்‌ அரும்‌ பயனாயதரும்‌, உத்‌யோகத்தே வினைகளும்‌ மாளும்‌, ௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று தாம்‌ மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார்‌ முதற்பத்தில்‌.
இதில்‌ முதல்‌ பத்தாலே ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி பத்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இன்னமும்‌ இவர்‌ நம்மை விஸ்மரிக்கக்‌ கூடுமென்று இவர் பக்கல்‌ தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே இவருடைய ஹ்ருதய கமலத்திலே ஸுப்ரதிஷ்டிதனாய்க்‌ கொண்டு நிரந்தர வாஸம்‌ பண்ண இவரும்‌ அத்தாலே ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்த்வ ஜ்ஞாநத்தை உடையராய்‌ அவருடைய குணங்களைத்‌ தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து இவ் விஷயம்‌ தனியே அநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷங்களையும்‌ அதினுடைய த்யாக ப்ரகாரத்தையும்‌ உபாதேயமான பகவத்‌ விஷயம்‌ நிரதிஸய போக்‌யமாயிருக்கும்‌ என்னுமத்தையும்‌ அவனுடைய பஐநீயத்வத்தையும்‌ பஐநத்துக்கு ஆலம்பநமான மந்த்ரத்தையும்‌ உபதேஸித்து அந்த பஜநீயனுடைய ஸெளலப்‌யம்‌ அபராத ஸஹத்வம்‌ ஸீலவத்தை ஸ்வாராததை ஆஸ்ரயண ரஸ்யதை ஆர்ஜவம்‌ ஸாத்ம்ய போக ப்ரதத்வம்‌ பரபக்திக்கும்‌ பரிகணநைக்கும்‌ ஒக்க முகம்‌ காட்டுகிற ஸாம்யம்‌ இப்படிப்பட்ட குணங்களையும்‌ பஐநத்தினுடைய ஸூகரத்வ ரஸ்யதைகளையும்‌ பஜிக்கவே ஸர்வ பலங்களும்‌ ஸித்‌திக்கும்‌ என்னுமிடத்தையும்‌ பஜநோபக்ரமத்திலே பஜந விரோதி யடைய நஸிக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அறிவித்து இப்படியான பின்பு ஸ்ரீகீதையில்‌ அவன்‌ அருளிச்‌ செய்த பக்தி மார்கத்திலே நின்று தேவதாந்தரங்கள்‌ பக்கல்‌ பரத்வ ஸங்கா நிவ்ருத்தி பூர்வகமாக அவன்‌ விஷயமான ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு அவன்‌ பக்கலிலே அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று தமக்கு ஸர்வேஸ்வரன்‌ மயர்வற மதிநலம்‌ அருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக ஞாந பக்திகளை உபதேஸித்து அவனுடைய பஜநத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார்‌. (பரபரனாய்‌ நின்ற வளவேழ்‌ வைப்பாமவையுள்‌ உம்பர் வானவரதிபதி) முழுதுண்ட பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-8) “ஆய்நின்ற பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-14 வளவேழுலகின்‌ முதலாயவா னோரிறை” (திருவாய்மொழி 1-5-1 “வைப்பாம்‌ மருந்தாம்‌ (திருவாய்மொழி 1-7-2) “நலத்தால்‌ உயர்ந்துயர்ந்து அப்பாலவன்‌” திருவாய்மொழி 1-7-2) “அவையுள்‌ தனிமுதல்‌” (திருவாய்மொழி 1-9-1 “உம்பர்‌ வானவர்‌ ஆதியஞ்சோதி” (திருவாய்மொழி 1-10-9)”அயர்வறுமமரர்களதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்று ஸகல ஜகத்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்ருத்வத்தாலும்‌ உபய விபூ,தி யோகத்தாலும்‌ உபய விபூதி நாயகத்வத்தாலும்‌ ப்ராப்ய ப்ராபகத்வத்தாலும்‌ அபரிச்சேத்‌யாநந்த, யுக்ததையாலும்‌ ஸர்வ ஸரீரித்வத்தாலும்‌ ஸர்வ ஸப்த, வாஸ்யத்வத்தாலும்‌ நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தாலும்‌ பரத்வ ப்ரதிபாதகமான “உளன்‌ சுடர்மிகு சுருதி” (திருவாய்மொழி 1-1-7) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத்தாலும்‌ ”திருவுடையடிகள்‌” (திருவாய்மொழி 6-8-11) என்று ஸ்ரீய:பதித்வத்தாலும்‌ “என்‌ செய்ய தாமரைக்கண் பெருமானார்‌‘ (திருவாய்மொழி 1-4-2 என்று புண்டரீகாக்ஷத்வத்தாலும்‌ “ஓடும் புள்ளேறி” (திருவாய்மொழி 1-8-1) என்று கருட, வாஹநத்வத்தாலும்‌ அத ஏவ ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ (மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி) “மயர்வற மதிநலம்‌ அருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “மயர்வற என்‌ மனத்தே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-7-4) என்று ஜீஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸநையோடே போக்கி நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இவர்‌ திருவுள்ளத்திலே புகுந்து “சார்ந்த இருவல் வினைகளும்‌ சரித்து மாயப் பற்றறுத்துத்‌ தீர்ந்து தன் பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி” (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே இவருடைய புண்ய பாப ரூப கர்மத்தை ஸவாஸநமாகப்‌ போக்கி “அருவினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1) என்று அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகன்ற விடத்திலும்‌ தன்‌ ஸீலவத்தையைக்‌ காட்டிச்‌ சேர்த்துக்‌ கொண்டு இவர்‌ தாமே “மாயோன்‌” (திருவாய்மொழி 1-5-8) என்று தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி தரிசு கிடந்த நிலத்தைச்‌ செய்காலாகத்‌ திருத்துவாரைப்போலே திருத்தி, (மறக்குமென்று நல்கி விடாதே மன்ன) “ மறக்குமென்று செந்தாமரைக்‌ கண்ணொடு” (திருவாய்மொழி 1-10-10) “நல்கி என்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-10-10) என்று சொல்லுகிறபடியே இவரின்னம்‌ நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று நிரதிஸய வ்யாமோஹத்தைப்‌ பண்ணி இவரை விடாதே இருட்டறையிலே புகுவார்‌ சிலர்‌ விளக்கேற்றிக் கொண்டு புகுருமா போலே அழகிய திருக் கண்களோடே இவர்‌ திருவுள்ளத்தே புக்கு நிரந்தர வாஸம்‌ பண்ண (அயர்ப்பிலன்‌ அறுத்தேன்‌ என்‌ சொல்லி மறப்பனோ என்னும்படி தத்வ ஜ்ஞரானவர்‌) “பெரு நிலங் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன்‌” (திருவாய்மொழி 1-3-10) “மாயப்பிறவி மயர்வறுத்தேன்‌” (திருவாய்மொழி 1-7-3) “எம்பிரானை என் சொல்லி மறப்பனோ” (திருவாய்மொழி 1-10-9) என்று வர்ஷுகவலாஹகம் போலே ஸ்யாமமான திருமேனியை உடையவனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளை ஒருக்காலும்‌ விஸ்மரியேன்‌, நிரதியய போக்‌யனான அவனை ஸதா, அநுபவித்து ஆஸ்சர்யமான ஜந்மமடியாக வருகிற வஜ்ஞாநத்தைப்‌ போக்கப்‌ பெற்றேன்‌; எனக்கு உபகாரகனான அவனை எத்தைச்‌ சொல்லி விஸ்மரிப்பதென்னும்படி ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதிகள்‌ இல்லாதபடி தத்வ ஜ்ஞாநத்தை யுடையரான இவர்‌ (சுடரடி எம்பிரானை விடாது கண்டாயே நீயும்‌ நானும்‌ என்கிற ஸஹ்ருதயாநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “துயரறு சுடரடி தொழுதெழு என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) “எம்பிரானைத்‌ தொழாய்‌ மட நெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3) “மலராள்‌ மணவாளனைத்‌ துஞ்சும் போதும்‌ விடாது தொடர்‌ கண்டாய்‌” (திருவாய்மொழி 1-10-4) “கண்டாயே நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று” (திருவாய்மொழி 1-10-5) “நீயும்‌ நானும்‌ இந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌” (திருவாய்மொழி 1-10-6) என்று நிரவதிக தேஜோ ரூபமான அவன்‌ திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்‌ பண்ணி உஜ்ஜீவிக்கப் பார்‌; எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனான அவனைத்‌ தொழப் பாராய்‌-ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரனை நான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகலும்போதும்‌ நீ விடாதே கிடாய்‌, அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்‌ இருந்தபடி கண்டாயே, நீயும்‌ நானும்‌ அயோக்‌யதாநுஸந்தாநம் பண்ணி அகலாதிருக்கப் பெறில்‌ அநாதி காலார்ஜிதமான கர்மம்‌ இதர விஷய ப்ராவண்யம்‌ ப்ரயோஜநாந்தர ஸ்ரத்‌தை. உபாயாந்தர ஸங்கம்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ தொடக்கமான விரோதிகள்‌ நம்மைக்‌ கிட்டாதபடி பண்ணுமென்று திருவுள்ளத்தைப்‌ பார்த்து உபதேஸித்துத்‌ தம்முடைய திருவுள்ளமும்‌ தாமும்‌ கூட அவனுடைய குணங்களை அநுபவித்து இப்படித்‌ திருவுள்ளத்தோடே கூட அநுபவித்த அநுபவம்‌ தனி யநுபவிக்க வொண்ணாமையாலும்‌ “ஏக ஸ்வாது ந புஞ்ஜீத” என்று இவர்‌ தனி யநுபவிக்க வல்லரல்லாமையாலும்‌ ஸம்பந்தம்‌ ஸர்வ ஸாதாரணமாகையாலும்‌ இவர்‌ பராநர்த்தம்‌ பொறாத படியான பரம க்ருபாவானாகையாலும்‌ இவ்வநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து (வீடுமின்‌ என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்தரமாக உபதேஸித்து) வீடுமின்‌ முற்றத்திலே “வீடுமின்‌ முற்றவும்‌” (திருவாய்மொழி 1-2-1 என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும்‌ “மின்னின்‌ நிலையில மன்னுயிராக்கைகள்‌’ (திருவாய்மொழி 1-2-2) என்று அதினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷத்தையும்‌ “நீர்‌ நுமதென்றிவை வேர் முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அவற்றினுடைய பரித்யாக க்ரமத்தையும்‌ “வீடுடையான்‌” (திருவாய்மொழி 1-2-2) என்று உபாதேயமான பகவத்‌ ஸ்வரூபத்தையும்‌ “எல்லையிலந்நலம்‌” (திருவாய்மொழி 1-2-5) என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும்‌ ‘ வீடுசெய்ம்மின்‌’ (திருவாய்மொழி 1-2-1 என்றும்‌ “இறை சேர்மின்‌” (திருவாய்மொழி 1-2-3) என்றும்‌ “ இறை பற்று” (திருவாய்மொழி 1-2-5) என்றும்‌ “திண் கழல்‌ சேரே” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ அவ் விஷயத்திலே ஆத்மாவை சமர்ப்பிக்கும் கிரமத்தையும்‌ “வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி1-1-2-10) என்று அந்த ஸமர்ப்பணத்துக்கு ஆலம்பநமான திருமந்த்ரத்தோடே உபதேசித்து – (எளிதாக வந்தவதரித்து) “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌” (திருவாய்மொழி 1-3-2) என்று அவன்‌ அதீந்த்‌ரியன்‌ என்று இறாயாதபடி ராம க்ருஷ்ணாதி ரூபேண வந்தவதரித்து ஆஸ்ரயிப்பார்க்கு ஸுலபனாய்‌ அப்படி யவதரித்து ஸூலபனானவன்‌ ஆஸ்ரிதருடைய அபராதங்களைக்‌ கண்டு கை விடுமோ என்னில்‌ அங்ஙனன்று (பிழைகளை ஸஹித்து) “என் பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று அபராத ஸஹனாயிருக்கும்‌. (புரையறக்‌ கலந்து) அவன்‌ அபராத ஸஹனானாலும்‌ “அரு வினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1 என்று இவன் தான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலிலும்‌ “திசைகளெல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ தானோர்‌ உருவனே” (திருவாய்மொழி 1-5-3) என்றும்‌ “நெய்யூண்‌ மருந்தோ மாயோனே” (திருவாய்மொழி 1-5-8) என்றும்‌ தன்‌ செல்லாமையையும்‌ இவரோடே புரையறக்‌ கலக்கிற பலத்தையும்‌ காட்டி இவரைச்‌ சேர்த்துக் கொள்ளுந்தனை ஸீலவானாய்‌ இப்படி சேர்த்துக்‌ கொண்டால்‌ ஆஸ்ரயண மரிதாயிருக்குமோ என்னில்‌ (அல்ப ஸந்துஷ்டனாய்‌) அவன்‌ இவனிட்டது கொண்டு வயிறு வளர்க்க வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய்‌ ஸ்ரீய:பதியாயிருக்கையாலே “புரிவதுவும்‌ புகை பூவே” (திருவாய்மொழி 1-6-1 என்று த்‌ரவ்ய நியதி அதிகாரி நியதி யில்லாதபடி ஆஸ்ரயணம்‌ ஸுகரமாம்படி அல்ப ஸந்துஷ்டனாய்‌ அவ்வாஸ்ரயணந் தான்‌ தேவையாயிருக்குமோ என்னில்‌ (அம்ருதமே ஒளஷத மாக்கி) “தூயவமுதைப்‌ பருகிப்‌ பருகி என்‌ மாயப் பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய்மொழி 1-7-3) என்று நிரதிஸய போக்‌யனான அவனுடைய ஆஸ்ரயணமாகையாலே ஸம்ஸார வ்யாதி பேஷஜமான அவ்வாஸ்ரயணம்‌ தானே இனிதாம்படி பண்ணி அப்படி ஆஸ்ரயிக்குமிடத்தில்‌ இவர்களைத்‌ தன்‌ நினைவுக்கீடாக நியமித்துப்‌ பரிமாறுவித்துக்‌ கொள்ளுமோ என்னில்‌ (நீர் புரையத்‌ தன்னை நியமித்து) “நீடு நின்றவை ஆடுமம்மானே” (திருவாய்மொழி 1-8-1) என்றும்‌ “அம்மானாய்ப்‌ பின்னும்‌ எம்மாண்புமானான்‌” (திருவாய்மொழி 1-8-2) என்றும்‌ “நீர் புரை வண்ணன்‌‘ (திருவாய்மொழி 1-8-11) என்றும்‌ சொல்லுகிறபடியே மேட்டிலே நீரை விரகாலே ஏத்துவாரைப்‌ போலே இவர்களுடைய செவ்வைக் கேடு செவ்வையாம்படி தன்னைச்‌ செவ்வியனாக நியமித்து இப்படிப்‌ பரிமாறுமிடத்தில்‌ குளப்படியிலே கடலை மடுத்தாப்போலே நலக்கேடு கெடும்படி பரிமாறுமோ வென்னில்‌ (போகத்தை ஸாத்மிப்பித்து) “சூழலுளானே” (திருவாய்மொழி 1-9-1) என்று தொடங்கி “உச்சியுளானே” திருவாய்மொழி 1-9-10) என்று ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னை அநுபவிப்பித்து (பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி அநுபவிக்குமிடத்தில்‌ “கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌” (திருவாய்மொழி 1-10-2) என்று பர பக்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஒக்க முகம்‌ கொடுக்கிற அவனுடைய ஆஸ்ரயணத்துக்கு (எளிமையும்‌ இனிமையுமுண்டு) “ பத்துடை எளியவன்‌” (திருவாய்மொழி 1-3-1”அமுதிலுமாற்ற இனியன்‌” (திருவாய்மொழி 1-6-6) என்று ஆஸ்ரயணந்தான்‌ எளிதுமாய்‌ இனிதுமாய்‌ இருக்கும்‌; இத்தால்‌ அபேஷித்த பலங்கள்‌ ஸித்‌திக்குமோ என்னில்‌ (தொழுதால்‌ அரும்பயனாய தரும்‌) அவனைத்‌ தொழுதால்‌ வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம்‌ தரும்‌” (திருவாய்மொழி 1-6-8) “தருமவரும்பயனாய” (திருவாய்மொழி 1-6-9) என்று அவனை பஜித்தால்‌ ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும்‌ நிஸ் ஸேஷமாகப்‌ போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும்‌ தரும்‌. பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதி, குவாலாகவுண்டே” என்னில்‌ (உத்யோகத்தே வினைகளும்‌ மாளும்‌) “நாளு நின்றடு நமபழமை அங்கொடு வினையுடனே மாளும்‌” (திருவாய்மொழி 1-3-8) என்று நாள் தோறும்‌ நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதி யான அதி க்ரூரமான கர்மங்கள்‌ பஜநோபக்ரமத்திலே நஸிக்கும்‌; ஆனால்‌ பஜநோபாயமேதென்னில்‌ (அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று) பிணக்கற வித்யாதி.. “அம்ப கவன்‌ வணக்குடைத்‌ தவநெறி வழி நின்று” (திருவாய்மொழி 1-3-5) என்று பாஹ்யமான ஷட் ஸமயங்களுக்கும்‌ வைதிக ஸமயத்துக்கும்‌ தன்னில் தானுண்டான பிணக்கறும்படி வேத மார்க்கத்தை யதா, நிரூபணம்‌ பண்ணி யருளிச்‌ செய்தவனுமாய்‌ நிரவதிக வாத்ஸல்யத்தை யுடையனாய்‌ ஜ்ஞாநாதி குண பரிபூர்ணனான க்ருஷ்ணன்‌ திருத் தேர்த் தட்டிலே அர்ஜுந வ்யாஜத்தாலே ஸ்ரீ கீதா முகத்ததாலே “பக்த்யா து அநந்யயா ஸுக்ய:” (கீதை 11-54) என்றும்‌ “ மந்மநா பவ மத்பக்தோ மத்‌யாஜீ மாம்‌ நமஸ்குரு” (கீதை 9-34) என்றும்‌ அருளிச்செய்த பக்தி மார்க்கத்திலே நின்று “நும்மிருபசை யறுத்து” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மனனக மலமறக்‌ கழுவி” (திருவாய்மொழி 1-3-8) என்றும்‌ தேவதாந்தரங்களில்‌ பண்ணுகிற பரத்வ ஸங்கை யற்று இவனோ அவர்களோ ஆஸ்ரயணீயரென்று ஸம்ஸயாக்ராந்தராகாதே வாஸநையோடே விட்டு அவனுடை உணர்வு கொண்டு தத் விஷய ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு “நன்றென நலம்‌ செய்வது” (திருவாய்மொழி 1-3-7) என்று அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோளென்று. (தாம்‌ மயர்வற மதிநலமருளி பஐநத்திலே சேர்க்கிறார்‌ முதல்பத்தில்‌) ஸர்வேஸ்வரன்‌ தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே தத்வ ஹித புருஷார்த்த, விஷயமாக அஜ்ஞாநத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளை யுபதேஸித்து பகவத்‌ பஜநத்திலே மூட்டுகிறார்‌

220-சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன்‌ அறியாதன அறிவிக்க உள்ளம்‌ தேறித்‌ தூ மனம்‌ மருளிலென்னும்‌ ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம்‌ தேடிவாட, உலராமலாவி சேர்ந்து சிக்கனப்‌ புகுந்து ஸம்பந்தி களும்‌ சேர்தல்‌ மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர்‌ ஆஸ்ரயணீயனுக்குப்‌ பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்‌யாதிகளைத்‌ திண்ணன்‌ அணைவதென்று வெளியிட்டு கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டிப்‌ புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப்‌ பெருக்கி முழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதும்‌ செய்து இளமை கெடாமல்‌ செய்யும்‌ க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத்‌ யங்க யுக்தம்‌ ஆக்குகிறார்‌ இரண்டாம்‌ பத்தில்‌.

இரண்டாம்‌ பத்தில்‌ ஸர்வ காரண பூதனான ஸர்வேஸ்வரன்‌ கீழிற் பத்திலே இவ்வாழ்வார்க்கு அஜ்ஞாத ஜ்ஞாபநம்‌ பண்ணி அவனாலே தத்த ஜ்ஞாநரான இவர்‌ அந்த ஜ்ஞாநத்துக்குப்‌ பலமான மோக்ஷத்தை அப்போதே பெற வேணுமென்று ஆசைப்பட்டுப்‌ பெறாமையாலே அவஸந்நராக இவருடைய அவஸாதமெல்லாம்‌ தீரும்படி அவன்‌ வந்து ஸம்ஸ்லேஷித்து அந்த ஸம்ஸ்லேஷத்தாலே வந்த ப்ரீதியை உடையராய்‌ அந்த ப்ரீதியை இவரொருவர்‌ அளவில்‌ பர்யவஸியாதே இவரோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரளவும்‌ வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கவன்‌ கொடுக்கத் தேட அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும்‌ தம்முடைய ஸேஷத்வத்துக்கும்‌ அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்த இவர்‌ ஆஸ்ரயணீயனான அவனுக்கு கீழ்‌ உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனவான லக்ஷணங்களையும்‌ வெளியிட்டு ஸம்ஸாரிகள்‌ துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ ஸுக ப்ராப்திக்கு ஸாதநமாக விதிக்கப்பட்ட ஸ்வரூபாந்தர்கதமான குணோபாஸநத்தை நிஷித்‌தாநுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ர வாஸாத்‌ யங்கங்களோடே கூட்டுகிறார்‌ என்கிறார்‌. (சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவன்‌” என்கிற சிதசித் த்ரய த்ரிவித காரணமானவன்‌) “சோராத எப்பொருட்கும்‌ ஆதியாஞ்சோதி” (திருவாய்மொழி 2-1-11) “மூவாத்தனிமுதலாய்‌” (திருவாய்மொழி 2-8-5) “எப்பொருட்கும்‌ வேர் முதலாய்‌ வித்தாய்‌” (திருவாய்மொழி 2-8-10) “பொருளென்றிவ்வுலகம்‌ படைத்தவன்‌” (திருவாய்மொழி 2-10-11 என்று பத்‌த முக்த நித்யாத்மகமான சித் த்ரயத்துக்கும்‌ ஸூத்‌த ஸத்வ மிஸ்ர ஸத்வ ஸத்வ ஸூந்யமென்கிற அசித் த்ரயத்துக்கும்‌ நித்ய விபூதியிலே அப்ராக்ருத த்‌ரவ்ய விஸிஷ்டனாய்க்‌ கொண்டு உபாதாநமாயும்‌ இச்சா விஸிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும்‌ விநியோக விஸிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும்‌ லீலா விபூதியில்‌ ஸுஷ்ம சிதசித் விஸிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும்‌ ஸங்கல்ப விஸிஷ்டனாய்க்‌ கொண்டு நிமித்தமாயும்‌ ஜ்ஞாந சக்த்யாதி, விஸிஷ்டனாய்க்‌ கொண்டு ஸஹ காரியாயும்‌ போருகையாலே ஸர்வத்துக்கும்‌ நிமித்தோபாதாந ஸஹகாரிகளான த்ரிவித காரணமும்‌ தானேயான ஸர்வேஸ்வரன்‌ (அறியாதன வறிவிக்க உள்ளம்‌ தேறி) “அறியாதன அறிவித்த அத்தா”(திருவாய்மொழி 2-3-2) என்று இவர்க்கஜ்ஞாதமான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக அறிவிக்க, “அடியை அடைந்துள்ளம்‌ தேறி” (திருவாய்மொழி 2-6-8)-அத்தாலே இவரும்‌ அவனைக்‌ கிட்டி நெஞ்சிலே தெளிவை உடையராய்‌ (தூமனம்‌ மருளிலென்னும்‌ ஞான பலமான) “தூ மனத்தனனாய்‌’” (திருவாய்மொழி 2-7-8)“மருளில்‌ வண் குருகூர்‌ வண் சடகோபன்‌” (திருவாய்மொழி 2-10-11) என்று

மோக்ஷ ஏக ஹேதுவாய்‌ பரி ஸூத்‌தமான அந்‌தக் கரணத்தை உடையவராய் அவனுடைய கல்யாண குண விஷயமான அஜ்ஞாந கந்த மில்லாதபடி கீழ்ப் பத்தில்‌ பிறந்த தம்முடைய ஜ்ஞானத்துக்குப்‌ பலமான (ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடி வாட) “களிப்பும்‌ கவர்வுமித்யாதி, ஒளிக் கொண்ட சோதியமாய்‌ அடியார்கள் குழாங்களை யுடன்‌ கூடுவதென்றுகொலோ” (திருவாய்மொழி 2-35-10) என்று ப்ராக்ருத பதார்த்தங்களினுடைய லாபாலாபங்களினால்‌ வருகிற க்லேஸ ஹர்ஷங்களுமற்று ஷட்‌பாவ விகார ரஹிதமாய்‌ நிரவதிக தேஜோ ரூபமாய அப்ராக்ருதமுமாயிருக்கிற விக்‌ரஹத்தை யுடையோமுமாய்‌ அவனுடைய ரஷகத்வத்திலே தோற்றிருக்கிற நித்ய ஸூரிகளுடைய திரளோடே கூடப் பெறுவதெப்போதோ என்று அந்த மோக்ஷத்தை ஆசைப்பட்டவர்க்கு அப்போதே கிடையாமையாலே “நாடி நாடி வாடும்‌” (திருவாய்மொழி 2-4-1 என்று தேடிப்‌ பெறாமையாலே ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே இவர்‌ வாட, (உலராமல்‌ ஆவி சேர்ந்து) “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (திருவாய்மொழி 2-4-7) என்கிற இவர்‌ தாபமாறும்படி “அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேரம்மான்‌” (திருவாய்மொழி 2-5-1 என்கிறபடியே பரமபதத்திலே பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி கமர்‌ பிளந்த தறையிலே நீரைப்‌ பாய்ச்சுவாரைப்‌ போலே இவருடைய தாபமாறும்படி இவரோடே நிரதிஸய ஸம்ஸ்லேஷத்தைப்‌ பண்ணி (சிக்கெனப்‌ புகுந்து) சிறிதோரிடமும்‌ புறப்படாத்‌ தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கெனப்‌ புகுந்தான்‌” (திருவாய்மொழி 2-6-2) என்கிறபடியே அத் யல்பமா யிருப்பதொரு பதார்த்தமும்‌ தன் பக்கலிலே நின்றும்‌ பிரி கதிர்ப் பட்டு நோவு படாதபடி ஸர்வ லோகங்களையும்‌ தன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேஸத்திலே வைத்து இனி ஒருக்காலும்‌ பேராதபடி புகுந்து (ஸம்பந்தி களையும்‌ சேர்தல்‌ மாற்றினரென்ன வாழ்வித்து) “எமர்‌ ஏழ்‌ மேல்‌ எழு பிறப்பும்‌ விடியா வெந் நரகத்து என்றும்‌ சேர்தல்‌ மாறினர்‌ ‘ (திருவாய்மொழி 2-7-1) என்று இவருடைய ஸம்பந்த ஸம்பந்‌திகளையும்‌ ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி “எமரேழ்‌ எழு பிறப்பும்‌ மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி 2-7-1) என்று என்னுடைய ஸம்பந்தமே ஹேதுவாக என்னோடு ஸம்பந்த ஸம்பந்‌திகளும்‌ கேசவன்‌ தமராம்படி “நாராயணனாலே” (திருவாய்மொழி 2-7-1) என்கிற மா சதிரைப்‌ பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல்‌ பெருகா நின்றது என்று இவர் தாமே ஆஸ்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து, (உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர்‌) “நீந்தும்‌ துயரில்லா வீடு” (திருவாய்மொழி 2-8-2) “கெடலில்‌ வீடு” (திருவாய்மொழி 2-9-17 “எம்மா வீடு” (திருவாய்மொழி 2-9-1 என்று துக்க கந்த ரஹிதமாய்‌ அநர்த்த கந்த மில்லாததாய்‌ எவ் வகையாலும்‌ விலஷணமான மோக்ஷத்தை இவர்க்கு உபரிக்கத்‌ தேட எனக்கென்று உபகரிக்கில்‌ மோக்ஷம்‌ அஹங்கார கர்ப்ப மாகையாலே ஐஸ்வர்ய கைவல்யங்களோபாதி ஸ்வரூப விருத்‌த மாகையாலே அது த்யாஜ்யம்‌; எனக்கு மோக்ஷம்‌ தரப் பார்த்ததாகில்‌ “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த் தொல்லை அம்மா அடியேன்‌ வேண்டுவதீதே” (திருவாய்மொழி 2-9-1 என்று அகவாய்‌ சிவந்து புறவாய்‌ கறுத்து பரம பூஜ்யமாய்‌ பரம போக்‌யமாய்‌ ஸேஷியானவனுடைய திருவடிகளை ஸேஷ பூதனானவன்‌ தலையிலே கொக்கு வாயும்‌ படு கண்ணியும் போலே சடக்கெனச்‌ சேர்க்க வேணும்‌; ஸேஷியான உன் பக்கல்‌ ஸேஷ பூதனான நான்‌ அபேக்ஷித்துப்‌ பெறுவதுமிது; “தனக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே” (திருவாய்மொழி 2-9-4 என்று உபய ஸ்வரூபத்துக் கநுகுணமாக புருஷார்த்தத்தை நிஷ் கர்ஷித்த இவர்

ஆஸ்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆஸ்ரயணீயனானவனுக்கு முதற்பத்தில்‌ சொல்லப்பட்ட ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை நிலை பெறுத்துவனவான (ஸகல பல ப்ரதத்வ காரணத்வ ஸேஷ ஸாயித்வ ஸ்ரீய:பதித்வ ஸெளலப்‌யாதிகளை திண்ணன்‌ அணைவது என்று வெளியிட்டு) ஸகல பல ப்ரதத்வம்‌ முதலான பரத்வ லக்ஷணங்களை “வீடுமுதல்‌ முழுதுமாய்‌” (2-2-1) மோக்ஷ ப்ரப்‌ருத் யஸேஷ புருஷார்த்த ப்ரதனாகையாலே ஸகல பல ப்ரதத்வம்‌ “தேவும்‌ எப்பொருளும்‌” (திருவாய்மொழி 2-2-4) “கருத்தில்‌ வருத்தித்த மாயப் பிரான்‌’‘ (திருவாய்மொழி 2-2-8) “ஆக்கினான்‌ தெய்வ உலகுகளே” (திருவாய்மொழி 2-2-9) என்று ஸர்வ காரணத்வம்‌, “ஆழியம்பள்ளியாரே” திருவாய்மொழி 2-2-6) என்று லக்ஷணையாலே அநந்த ஸாயித்வம்‌ “பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத்‌ தன்னுள்‌ வைத்து” (திருவாய்மொழி 2-2-3) என்று ஸ்ரிய:பதித்வம்‌, ‘கண்ணன் கண்‌” (திருவாய்மொழி 2-2-1) “கோபால கோளரி” (திருவாய்மொழி 2-2-2 என்கிற அவதார ஸெளலப்‌ யம்‌ இப்படி இவ்வர்த்தங்களை திண்ணன்‌ வீட்டிலும்‌, அணைவதரவணை மேல்‌” என்று ஸேஷஸாயித்வம்‌, “பூம்பாவை யாகம்‌ புணர்வது” (திருவாய்மொழி 2-8-1) என்று ஸ்ரீய:பதித்வம்‌, “இருவரவர்‌ முதலும்‌ தானே” (திருவாய்மொழி 2-8-1) என்று காரணத்வம்‌, “இணைவனாம்‌ எப்பொருட்கும்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று அவதார ப்ரயுக்தமான ஸெளலப்‌யம்‌, “வீடு முதலாம்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று ஸகல பல ப்ரதத்வம்‌ என்கிற இவற்றை அணைவதரவணையிலும்‌ வெளியிட்டு (கள்வா தீர்த்தன்‌ என்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டி) “கள்வா ‘ (திருவாய்மொழி 2-2-10) என்கிற பாட்டாலே, அவதரித்து உன்னுடைய பரத்வம்‌ தெரியாதபடி நின்றாயே யாகிலும்‌ எங்களுக்குக்‌ காரண பூதனான ஸேஷி நீயே என்று தேவதாந்தரங்களில்‌ தலைவனான ப்‌ரஹ்மாதிகளே தங்களுக்குக்‌ காக்ஷி கொடுக்கைக்கு பெரிய திருவடியை மேல் கொண்டு புறப்பட்டால்‌ அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடா நிற்பர்கள்‌ என்று இவ்வர்த்தத்துக்கு வசநத்தையும்‌ “தீர்த்தன்‌ உலகளந்த” (திருவாய்மொழி 2-8-6) என்கிறபாட்டிலே ஒரு அஸ்த்ர லாபத்துக்கு ஒரு தேவதையை உபாஸிக்க வேணுமென்று அர்ஜுநன்‌ சொல்ல அப்பூவை என்‌ காலிலே பொகடென்று க்ருஷ்ணன்‌ அருளிச் செய்ய “பார்த்தோ , விஜேதா மது ஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்‌பித சித்ர புஷ்பம்‌ ததேவ கங்கா தர மெளலி மத்‌யே ததர்ம வீர: க்ருத நிஸ்சயார்த்த :” என்கிறபடியே தீர்த்த பூதனான ஸர்வேஸ்வரனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப் பூவைப்‌ பணிமாறி அவற்றோடு ஸஜாதீய மானவை யன்றிக்கே அவை தன்னையே பாடே பக்கலிலே யன்றிக்கே ருத்‌ரன்‌ தலை மேலே ஆப்த வாக்யத்தால்‌ அன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்துப்‌ பேரளவுடையனான அர்ஜுநன்‌ நிர்ணயித்த பரத்வம்‌ மந்த மதிகளாலே இன்றாராயும்படி இருந்ததோ என்கிற ப்ரத்யக்ஷத்தையும்‌ காட்டி

புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் குணோபாஸநத்தை) “புலனைந்து மேயும்‌ பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌” (திருவாய்மொழி 2-8-4) என்று பரிச்சிந்ந வஸ்து க்‌ராஹகமான இந்த்‌ரிய வஸ்யராகை தவிர்ந்து நன்மைக்கு முடிவில்லாதே யிருக்கிற நாட்டிலே புக வேண்டியிருப்பீர்‌ “அலமந்து வீய அசுரரைச்‌ செற்றான்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌” (திருவாய்மொழி 2-8-4) என்று தடுமாறி முடியும்படி அஸுர வர்க்கத்தை அழியச் செய்தவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோளென்று ஸம்ஸார துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷாநந்த ரஸ ப்ராப்திக்கு ஸாதனமாக விதிக்கப் படுவதாயிருக்கிற “தஸ்மிந்யதந்தஸ்‌த்து, பாஸிதவ்யம்‌” (தைத்திரீய உபநிஷத்‌ என்று ப்‌ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹத பாப்மத்வாதி குண விஸிஷ்ட வஸ்து உபாஸநத்தை (மதித்துப்‌ பெருக்கி மூழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதுஞ் செய்து இளமை கெடாமல்‌) “சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதியாது” திருவாய்மொழி 2-10-2) “திறமுடை வலத்தால்‌ தீவினை பெருக்கி” (திருவாய்மொழி 210-5) “வல்வினை மூழ்கி” (திருவாய்மொழி 2-10-9) “நரகழுந்தி” (திருவாய்மொழி 2-10-7) “கீழ்மை செய்து” (திருவாய்மொழி 2-10-6) “வலங்கழித்து” (திருவாய்மொழி 2-10-8) “சூதென்று களவும்‌ சூதும்‌ செய்து” (திருவாய்மொழி 2-10-10) “இளரொளி இளமை கெடுவதன்‌ முன்னம்‌” (திருவாய்மொழி 2-10-12) என்று உபாஸந விரோதியான இதர விஷய ப்ராவண்யத்தாலே பாபங்களைக்‌ கூடு பூரித்து அவற்றிலே மறு நனைய மூழ்கி அழுந்தி தாழ்வு பட்டு பலத்தைப்‌ பாழே போக்கி பற்யதோஹரனாய்‌ க்ருத்ரிமனாய்‌ பஸ்யதோ ஹரனாய் -க்ரித்ரமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தநாதி அங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில் –பால்ய ஏவ சரேத் தர்மம் –என்றும் தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயஸே ஸதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75) என்றும் சொல்லுகிறபடியே பால்யத்திலே கர்த்தவ்யமான -சார்வது சதிரே (2-10-1)போதவிழ் மலையே புகுவது பொருளே (2-10-10)என்றும் க்ஷேத்ர வாஸம் -பதியதி ஏத்தி எழுவது (2-10-2) என்றும் ஸங்கீர்த்தனம் -தொழக் கருதுவதே (2-10-9) என்றும் அஞ்சலி -வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே (2-10-8) என்று ப்ரதக்ஷிணம் -நெறிப்பட யதுவே நினைவது நலமே (2-10-6) என்று கதி சிந்தனம் என்கிற இவை முதலான உபாசந அங்கத்தோடு சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கிறார்

221-(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..

மூன்றாம்‌ பத்தாலே “தத்‌ ஸ்ருஷ்ட்வா ததே வாநுப்ராவிஸத்‌” (தைத்திரீய உபநிஷத்‌ )என்கிறபடியே கார்யமான சேதநாசேதநங்களை யடைய வியாபித்து தத் கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய்‌ இருக்கையாலே ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்ப்‌ பத்தாலே இவர்‌ உபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான தன்னுடைய விக்‌ரஹாநுபவத்தை இவரைப்‌ பண்ணுவிப்பிக்க இவரும்‌ அநுபவித்து தரித்து அநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஸர்வ வித, கைங்கர்யங்களும்‌ செய்ய வேண்டும்படியான அபி நிவேஸத்தை யுடையராய்த்‌ தம்முடைய அபிநிவேஸ அநு குணமாக அவன்‌ காட்டிக் கொடுத்த அவனுடைய ஸர்வாத்ம பாவத்தைப்‌ பேசி அத்தாலே வந்த ப்ரீதியை யுடையராய்‌ அது அவனளவில்‌ பர்யவஸியாதே பாகவத ஸேஷத்வத்தில்‌ எல்லை யளவும்‌ சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத்‌ வைலக்ஷண்யா நுஸந்தாநத்‌ தாலே தாமும்‌ தம்முடைய கரண க்‌ராமங்களும்‌ சேதந ஸமாதியாலே அநுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்‌ இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணராய்‌ அவ்வளவே யன்றிக்கே பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணராய்‌ பகவதநுப வத்துக்குத்‌ தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிஸய ஆநந்த யுக்தரானவர்‌ புண்டரீகாக்ஷனாய்‌ ஸுரி ஸேவ்யனானவவனை நம்மாலே ஆஸ்ரயிக்கப் போமோ என்று ஸம்ஸாரிகள்‌ அஞ்சிக்‌ கை வாங்காதே மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலும்‌ உபதேஸித்த அவதார ஸெளலப்‌யம்‌ பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸெளலப்‌யத்தை யுமுபதேஸித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவிக்குமவனை யொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ விழிகை நிஷ் ப்ரயோஜநம்‌; ஆன பின்பு நீங்கள்‌ ஸகல பல ப்ரதனுமாய்‌ ஸாம்யாபத்தியைக்‌ கொடுப்பானுமா யிருக்கிற அவன்‌ விஷயத்திலே வாசிகமான வடிமை செய்யுங்கோளென்று நிஹீநதமமான இதர ஸேவையை நிவர்த்திப்பித்துத்‌ தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார் –

(முழுதுமாயெங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம்‌ ஸர்வ வ்யாபகன்‌) முழுதுமாய்‌ முழுதியன்றாய் ‘(திருவாய்மொழி 3-1-8) ‘ஏழ்ச்சிக் கேடின்றி எங்கணும்‌ நிறைந்த வெந்தாய்‌ திருவாய்மொழி 3-2-4) ” எஞ்ஞான்று மெங்கும்‌ ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச்‌ சோதி” (திருவாய்மொழி 3-2-7) “அளவுடை ஐம்புலன்களறியா வகையால்‌ அருவாள்‌ நிற்கும்‌ யாவையும்‌ யாவரும்‌ தானாய்‌ அவரவர்‌ சமயந்தோறும்‌ தோய்விலன்‌ (திருவாய்மொழி 3-10-10) என்று தேஸ கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க வொண்ணாதபடி கார்யமான ஸகல சேதநாசேதநங்களையும்‌ வ்யாபித்து “அநஸ்நந்நந்யோ அபி சாகஸீதி” (கடோபநிஷத்‌ என்கிறபடியே தத்கத தோஷைர ஸம் ஸ்ப்ருஷ்டனாய்‌ இப்படி ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன்‌ (தீர்ந்த வடியார்களைத்‌ தாளிணைக் கீழ்க்‌ கொள்ளும்‌ தன்படிக்கும்‌) “தீர்ந்த வடியவர்‌ தம்மைத்‌ திருத்திப் பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழச்சுகனை” (திருவாய்மொழி 3-5-11) என்று தன்னையே உபாயோபேயங்களென்று நிஷ்கர்ஷித்தவர்களை “சன்ம சன்மாந்தரம்‌ காத்தடியார்களைக்‌ கொண்டு போய்த்‌ தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக் கீழ்க்‌ கொள்ளுமப்பனை” (திருவாய்மொழி 3-7-7) என்று இனியொரு ஐந்ம பரம்பரைகளிலே போகாதபடி ரக்ஷித்து ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷத்திலே கொடு போய்‌ ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுத்து தனக்குப்‌ பாதோபதாநமாக விட்டுக்‌ கொள்ளும்படியான ஸேஷியான தன்னுடைய ஒளதார்யத்துக்கும்‌ (நீ தந்த மாமாயப்‌ புணர்வினைப்‌ பிறப்பழுந்தி அலமருகின்றேன்‌ வேரற வரிந்து எந்நாளெங்கு வந்து தலைப் பெய்வன்‌ என்று கழித்துப்‌ புகும்‌ தம்‌ காதலுக்கும்‌) “அந்நாள்‌ நீ தந்த ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌” (திருவாய்மொழி 3-2-1 “பன்மா மாயப்‌ பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவாய்மொழி 3-2-2) “பொல்லா ஆக்கையின்‌ புணர்வினை அறுக்கலறா” (திருவாய்மொழி 3-2-3) “வினையியல்‌ பிறப்பழுந்தி கொடுவினைத்‌ தூற்றுள்‌ நின்று பாவியேன்‌ பல காலம்‌ வழிதிகைத் தலமருகின்றேன்‌” (திருவாய்மொழி 3-2-7) என்று ஸ்ருஷ்டி காலத்திலே உன்னை வழிபடுகைக் குடலாக நீ ஸரீரத்தைக்‌ கொடுக்க நான்‌ அதின் வழியே போய்‌ அநர்த்தத்தைச்‌ சூழ்த்துக்‌ கொண்டு ப்ரக்ருதி கார்யமான தேவ மநுஷ்யாதி, ஸரீரங்களிலே அவகாஹித்து ஹேயமான ஸரீரத்துக்கடியாய்‌ ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும்‌ பாபத்திலே கொடு போய்‌ மூட்டக் கடவதான ஐந்ம பரம்பரைகளிலே யழுந்தி என்னால்‌ அடி யறுக்க வொண்ணாதே அடி காண வொண்ணாதே புகுர வழி தெரியுமத்தனை யொழிய புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற பாபமாகிற மிடைந்த தூற்றிலே கிடந்து உன்னை ப்ராபிக்கைக்கீடான வழி காணாதே கூப்பிட்டு அலமருவா நின்றேன்‌; “வினைகளை வேரறப்‌ பாய்ந்து” (திருவாய்மொழி 3-2-1) “தொன்மா வல்வினைத்‌ தொடர்களை முதலரிந்து” (திருவாய்மொழி 3-2-2) என்று அநாதியாய்‌ மஹத்தாய்‌ என்னாலே போக்கிக்‌ கொள்ள வொண்ணாதபடி வலிதாய்‌ ஸ்ருங்கலாஞ்சலமா(?) யிருக்கிற பாப ஸமூஹங்களை உச்சி வேரோடே யரிந்து பொகட்டு “எந்நாள்‌ யானுன்னை இனி வந்து கூடுவனே–திருவாய்மொழி 3-2-1 “எங்கு வந்து அணுகிற்பனே (திருவாய்மொழி 3-2-5) “ எங்கினித்‌ தலைப் பெய்வனே (திருவாய்மொழி 3-2-9) என்று நான்‌ உன்னைக்‌ கிட்டுவதொரு நாள்‌ அறுதியிட்டுத் தர வேணும்‌ நான்‌ உன்னை எங்கே வந்து கிட்டக்‌ கடவேன்‌ இட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று ஸரீர ஸம்பந்தத்துக்கு நொந்து அதிலுண்டான அருசியோடே “காயம்‌ கழித்து அவன்‌ தாளிணைக் கீழ்ப்‌ புகும்‌ காதலன்‌‘ (திருவாய்மொழி 3-9-8) என்று பகவத் குணாநுபவத்தோடே கால க்ஷேபத்தைப்‌ பண்ணி ஸுரீரத்தை விட்டு அவன்‌ திருவடிகளிலே புக வேணும்‌ என்னும்படியான ஸேஷ பூதரான தம்முடைய ஆசைக்கு (ஸத்‌ருஸமாகக்‌ கண்டு கொள்‌ என்னும்‌) உபய ஸ்வரூபத்துக்கும்‌ அநுகுணமாக “வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்‌” (திருவாய்மொழி 3-9-9) என்று ஈஸ்வரன்‌ காட்டிக்‌ கொடுக்கிற ( ஊனமில்‌ மோக்ஷ பலமான முடிச் சோதியில்‌ அநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று) “ஊனமில்‌ மோக்கமென்கா” (திருவாய்மொழி 3-4-7) என்று ப்ரகாரமான ஆத்மாநுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்ல அநுபவிக்கையாலே ஸ்வரூபாநுரூபமாகக்‌ கீழில்‌ பத்தில்‌ அறுதியிட்ட பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்குப்‌ பலமான “முடிச் சோதி’ (திருவாய்மொழி 3-1) என்கிற திருவாய்மொழியில்‌ விக்‌ரஹ வைலக்ஷண்யத்தையும்‌ ஆபரணங்களினுடைய சேர்த்தியையும்‌ அநுபவித்து அவை பரிச்சேதித் தநுபவிக்க வொண்ணா தொழிய இது கரண ஸங்கோசத்தாலேயோ என்றதிஸங்கை பண்ணின இவருடைய அதி ஸங்கையை வஸ்து வைலக்ஷண்ய நிபந்தந மென்னுமிடத்தைக்‌ காட்டி நிவ்ருத்தமாக்க அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிர்‌ (திருவாய்மொழி 3-2-10) என்கிறபடியே நித்ய வஸ்து ஸத்தை பெற்று ஸத்தா கார்யமும்‌ பலிக்க வேண்டுகையாலே அவச்சேதமற்று அடிமை செய்ய வேண்டும்படி “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய” (திருவாய்மொழி 3-3-1 என்கிற பாட்டின் படியே தேஸ காலாவஸ்த்தா, ப்ரகாரங்களை யிட்டு அவச்சேதியாதபடி ஸர்வ தேஸ ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும்‌ ஸர்வவித, கைங்கர்யங்களும்‌ செய்ய வேண்டும்படியான அபிநிவேஸத்தாலே (ஸர்வாத்ம பாவத்தைப்‌ புகழ்ந்து) புகழு நல்லொருவனிலே (திருவாய்மொழி 3-4) பூதங்கள்‌ பெளதிகங்கள்‌ உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள்‌ காநாதி ஸப்‌த ராஸிகள்‌ மோக்ஷாதி புருஷார்த்தங்கள்‌ ஜகத்துக்கு ப்ரதாநரான ப்‌ரஹ்ம ருத்‌ராதிகள்‌ இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதி புருஷார்த்தங்கள்‌ ஆக விவற்றை யடைய விபூதியாக வுடையனாய்‌ இவை தனக்குள்ளே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிற படியைப்‌ பேசி அநுபவித்து அவ்வநுபவத்தாலே ப்ரீதராய்‌ (சொல்லிப் பாடி யேத்திப்‌ பிதற்றி யெழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளிக்‌ குனித்துத்‌ தடுகுட்டக்‌ கும்பிடு நட்டமிட்டுச்‌ சிரிக்கக்‌ குழைந்து நையும்‌ ப்ரீதி யுகள) “எம்மானைச்‌ சொல்லிப் பாடி” (திருவாய்மொழி 3-5-1 “பண்கள்‌ தலைக் கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2”முனிவின்றி யேத்தி’ (திருவாய்மொழி 3-5-6 “பேர் பல சொல்லிப்‌ பிதற்றி” (திருவாய்மொழி 3-5-8) ‘ எழுந்தும் பரந்தும்‌ துள்ளாதார்‌‘திருவாய்மொழி 3-5-1) “ஏத்திக்‌ குனிப்பார்‌’ (திருவாய்மொழி 3-5-6) தடு குட்டமாய் (திருவாய்மொழி 3-5-3) “கும்பிடு நட்டமிட்டாடி” (திருவாய்மொழி-3-5-4)உலோகர்‌ சிரிக்க நின்றாடி உள்ளங் குழைந்து நைய” (திருவாய்மொழி 3-5-8) என்று வாசிக காயிக மாநஸங்களினாலே களித்து அந்த ப்ரீதி தலை மண்டை யிட்டு (தம்‌மடியாரென்று உடன் கூடும்‌ ஸாத்‌யம்‌ வளர) இப்படி யுண்டான ப்ரீதி அவ் வளவில்‌ பர்யவஸியாதே “தம்மடியாரடியார்‌ தமக்கடியார்‌ அடியார் தம்‌ அடியார்‌ அடியோங்களே (திருவாய்மொழி 3-7-10) என்று ஸேஷத்வத்தினுடைய எல்லையிலே நிற்கும்படி “அடியார் குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி 2-3-10) என்று கீழில்‌ பத்திலே ப்ரார்த்தித்த பாகவத ஸேஷத்வமாகிற புருஷார்த்தம்‌ அதினுடைய எல்லை யளவாக வளர (பைகொள்‌ பாம்பு போலே இந்த்‌ரிய விருத்தி நியமமற) “பைகொள்‌ பாம்பேறி உறை பரனே‘ (திருவாய்மொழி 3-8-4) என்று திருவனந்தாழ்வான்‌ சஷுஸ்ரவா: என்கிறபடியே ஒரு கரணத்தாலே மற்றைக்‌ கரணத்தில்‌ கார்யமும்‌ கொள்ளுமா போலே “நெடியானே என்று கிடக்கு மென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 3-8-1 “வஞ்சனே என்னு மெப்போதும்‌ என்‌ வாசகமே” (திருவாய்மொழி 3-8-2) “ஆனாயர்‌ தாயவனே என்று தடவுமென்‌ கைகளே” (திருவாய்மொழி 3-8-3) என்றித்யாதிகளாலே கரணம்‌ சேதந ஸமாதியாலே கரணாந்தர ப்ரவருத்தியையும்‌ ஆசைப் படும்படியான பெரு விடாயை உடையராய்‌ (பாடவந்த கவி யன்றிக்கே படைத்தான்‌ ஸ்லோக க்ருத்தாய்‌) “வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன்‌” (திருவாய்மொழி 3-9-9) என்று இதர ஸ்தோத்ரத்துக்கநர்ஹ கரணராய்‌ “ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு” (திருவாய்மொழி 3-9-10) என்று ஐகத் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே தம்முடைய ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணின ஸர்வேஸ்வரன்‌ விஷயத்திலே “அஹம்‌ ஸ்லோக க்ருத்‌ அஹம்‌ ஸ்லோக க்ருத்‌” (தைத்திரீய உபநிஷத்‌) என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய்‌ (குறை முட்டுப்‌ பரிவிடர்‌ துயர்‌ துன்ப மல்லல்‌ துக்கம்‌ தளர்வு கேடுகளின்றி அம்ருதாந்த மக்‌நரானவர்‌) தேஸ விஸேஷத்தில்‌ போயநுபவிக்கப்‌ பெற்றிலேனென்கிற குறைவில்லை; இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதி யில்லை, ஏகதேஸமும்‌ மநோதுக்க, மில்லை; வகுத்த ஸேஷி என்று பற்றுகையாலே எனக்கொரு துக்கமில்லை. ருசி முன்னாக தேஸ விஷேஷ ப்ராப்த பண்ணுகிற எனக்கு வைதிக புத்ரர்களைப்‌ போலே மீளில்‌ செய்வதென்‌ என்கிற துக்கமில்லை; இங்கே அவனுடைய கல்யாண கு ணங்களை நெருங்க புஜித்த எனக்கொரு தேஸ விஸேஷத்திலே போகப் பெற்றிலேன்‌ என்கிற துக்க மில்லை; இவ் விபூதி அவனுடைய லீலை என்றறிந்த வெனக்கு ஒரு தளர்த்தி யில்லை: எனக்காக ஸர்வ வ்யாபகனா யிருக்கிறவனைப் பற்றின எனக்கொரு கேடில்லை. அவனுடைய லீலா விபூத்யந்வயமாகில்‌ செய்வதென்‌ என்கிற அல்லலில்லை; ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனைப்‌ பற்றின எனக்கொரு கேடில்லை; என்றிப்படித்‌ தாமே சொல்லும்படி அம்ருதரான முக்தர்‌ பகவதநுப வத்தால்‌ ஆநந்திக்குமாபோலே அவ்வாநந்த ஸாக,ரத்திலே மக்‌நரான இவர்‌ (செய்யதாமரைக்‌ ௧ண்ணன்‌ அமரர்‌ குல முதல்‌ என்று அஞ்சாதபடி) “செய்ய தாமரைக்‌ கண்ணனாய்‌” (திருவாய்மொழி 3-6-1 “எஞ்சலிலமரர்‌ குல முதல்‌ (திருவாய்மொழி 3-6-9) “அஞ்சி நீர்‌ உலகத்துள்ளீர்கள்‌ (திருவாய்மொழி 3-6) என்று புண்டரீகாஷனான ஸர்வேஸ்வரன்‌ ஜ்ஞாந ஸங்கோசமில்லாத நித்ய ஸூரிகளுடைய திரளுக்கு நிர்வாஹகனன்றோ, ஸம்ஸாரிகளான நம்மாலே அவனை ஆஸ்ரயிக்கப்‌ போமோ என்றஞ்ச வேண்டாதபடி (எளிவரு மிணைவனாம்‌ என்றவை பரத்வமாம்படி) “எளிவரும்‌ இயல்வினன்‌’ (திருவாய்மொழி 1-3-2) “இணைவனாம்‌ எப்பொருட்கும்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று பத்துடை யடியவரிலும்‌ அணைவதரவணையிலும்‌ வெளியிட்ட அவதார ஸெளலப்‌ யம்‌ பரத்வ ஸ்த்தாநீயமாம்படி (அவனாகும்‌ ஸெளலப்‌ய காஷ்டையைக்‌ காட்டி) “நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவன்‌ அவனாகும்‌ கடல்‌ வண்ணனே (திருவாய்மொழி 3-6-9) என்று மநஸ்ஸாலே யாதொன்றைத்‌ திருமேனியாகக்‌ கோலினிகோள்‌ அபரிச்சேத்‌ய மஹிமனான ஸர்வேஸ்வரன்‌ அதைத்‌ தனக்கு அஸாதாரண விக்‌ரஹமாக விரும்பும்‌ என்று “யே யதா, மாம்‌ ப்ரபத்‌யந்தே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம்‌’ (கீதை 4-11 என்றும்‌ “அர்ச்யஸ் ஸர்வ ஸ ஹிஷ்ணு: அர்ச்சக பராதநாகிலாத்ம ஸ்த்திதி.” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ 74) என்கிற அர்ச்சாவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டி (வழியைத்‌ தருமவன்‌ நிற்க இழியக் கருதுவது என்னாவது) ‘ஓழிவொன்றில்லாத இத்யாதி, ஓர்‌ மானிடம்‌ பாடல்‌ என்னாவதே” (திருவாய்மொழி 3-9-3) என்று யாவதாத்ம பாவி பகவதநுபவத்தோடே வர்த்திக்கிற தேஸத்தையும்‌ அவ்வநுபவம்‌ தான்‌ ஒரு சிறாங்கை என்னும்படியான அர்ச்சிராதி, மார்க்கத்தையும்‌ அத்தேஸ விஸேஷத்தையும்‌ ப்ராபிக்கிற உபாயத்தையும்‌ தருகிறவன்‌ நம்மை ஒரு சொல்‌ சொல்லுவாரோ என்று அவஸர ப்ரதீக்ஷனாய்‌ நிற்க அவனை விட்டு ஒரு சொல்லுக்குப்‌ பாத்தம் போராதானாய்‌ அசித் ப்ராயனாய்‌ நீர்க் குமிழி போலே உடைந்து போகிற ஷூத்‌ர மநுஷ்யனைக்‌ கவிபாடி முன்பு நின்ற நிலையிலுங் காட்டில்‌ தாழவிழிய நினைக்கிற இத்தாலே என்ன ப்ரயோஜநமுண்டு? அத்தால்‌ ஸ்வரூபம்‌ பெற்றிலிகோள்‌, அபிமதம்‌ பெற்றிலிகோள்‌; (வேண்டிற்றெல்லாம்‌ தரும்‌) ‘ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு?” (விஷ்ணுதர்மம்‌ என்கிறபடியே ஸர்வாபேக்ஷிதங்களையும்‌ கொடுக்கும்‌ (தன்னாகவே கொள்ளும்‌) “பரமம்‌ ஸாம்யமுபைத” (முண்டகோபநிஷத் ) என்கிறபடியே தன்னோடு ஸாம்யாபத்தியைக்‌ கொடுக்கும்‌, தனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக்‌ கொள்ளும்‌ (கவி சொல்ல வம்மின்‌ என்று) இதுக்கு நீங்கள்‌ செய்ய வேண்டுவதொன்றும்‌ இல்லை. இதரரை ஸ்தோத்ரம்‌ பண்ணி உங்கள்‌ கரணங்களைப்‌ பாழே போக்காதே வாய்‌ படைத்த ப்ரயோஜநம்‌ போரும்படி இவ் விஷயத்திலே ஸ்தோத்ரம்‌ பண்ண வாருங்கோளென்று (முக்தைஸ்வர்யத்தை முன்னிட்டு) “ஹாவு ஹாவு ஹாவு அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்‌’ (தைத்திர்யோபநிஷத்‌) என்று முக்தருடைய ஐஸ்வர்யமான வாசிக கைங்கர்யத்தை முன்னிட்டு (ஸ்வவ்ருத்தியை மாற்றி ஸ்வ வ்ருத்தியிலே மூட்டுகிறார்‌) “ஸேவா ஸ்வ வருத்திராக்‌யாதா தஸ்மாத்தாம்‌ பரிவர்ஜயேத்‌’ (மநு ஸ்ம்ருதி’ என்று அப்ராப்த விஷயத்திலே ஸேவை நிஹீந தரமாகையாலே அந்த ஸ்வ வ்ருத்தியை மாற்றி சாயாவாஸத்வமநுகச்சேத்‌”(மூல ஸம்ஹிதை )என்றும்‌ “ஸா கமர்த்தம்‌ ந ஸேவ்யதே” (விஹகேஸ்வர ஸம்ஹிதை 24-14) என்றும்‌ விதிக்கப் படுகிற ப்ராப்த விஷயத்திலே புகழு நல்லொருவனில் படியே தம்முடைய வாசிக வருத்தியிலே மூட்டுகிறார்‌ முன்றாம்‌ பத்தில் -என்கிறார் –

222-(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் 

நாலாம்‌ பத்திலே கீழ்ச் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போல்‌ அன்றிக்கே-“அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா” (ஆரணம்‌ 3-20) என்றும்‌-“ஆத்மாநமந்தரோ யமயதி” (ப்‌ருஹ தாரண்யகம்‌) என்றும்‌ “ஸாஸ்தா விஷ்ணு:அஸேஷஸ்ய ஐகதோ யோஹ்ருதி.ஸ்திதி .” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-17-20 என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த வ்யாப்தி நிறம் பெறும்படி ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும்‌ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானிட்ட வழக்காம்படி நியமித்துக்‌ கொண்டு போருகையாலே ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ ஒழிவில்‌ காலத்தில்‌ கைங்கர்யாபி நிவேஸம்‌ போலே தேஸ கால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத்தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று இவர்க்குக்‌ காலோபாதியைக்‌ கழித்து ஸம காலமாக்கி யநுபவிப்பித்து இவருடைய இழவைத்‌ தீர்த்து இவருடைய கரண த்ரய வ்யாபாரத்தையும்‌ யோக்‌யமாக்கிக்‌ கொள்ள அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்‌தி பதார்த்தங்களையும்‌ அவனென்று பிச்சேறி தேஸ விஸேஷத்திலே அநுபவத்தை யாசைப்பட்டுக்‌ கூப்பிட்ட இவர்க்கு அவ் விழவும்‌ தீரும்படி “ஸ்ரியா ஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” (லைங்கம்‌) என்கிறபடியே தேஸ விஸேஷத்திலே பெரிய பிராட்டியாரும்‌ தானுமே போக்தாக்களா யிருக்கிற இருப்பை ப்ரத்யக்ஷாநுபவம் போலே அநுபவத்துக்கு விஷயமாக்க இவருமநுபவித்து மாநஸாநுபவமாகையாலே தத் பலமான பகவத்‌ வ்யதிரிக்தங்களான தேவதாந்தரம்‌ முதலானவற்றிலே வைராக்‌யத்தை உடையராயிருக்கிற இவரை ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும்‌ நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு ஷுத்‌ர தேவதா பஜனம்‌ பண்ணுகிற இதினுடைய தண்மையையும்‌ ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத் விபூதி பூதராய்‌ இருக்கச்‌ செய்தே இவனோடே விகல்பிக்கலாம்படி அவனாலே தத்தமான ஐஸ்வர்யத்தை உடையராயிருக்கிற ப்‌ரஹ்ம ருத்‌ரர்களுடைய அஜ்ஞாந அஸக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும்‌, பாஹ்ய குத்‌ருஷ்டி மதங்களினுடைய தமோ நிஷ்டதைகளையும்‌ வெளியிட்டு தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத்பலமும்‌ பெற்றுப்‌ போனிகோள்‌; ஸர்வேஸ்வரனுடைய ஜகந் நிகரணாதி ஸர்வ சேஷ்டிதங்களாலும்‌ ஸர்வேஸ்வரனே ரஷகன்‌ அல்லாதாரடைய ரக்ஷ்ய பூதரென்னும்‌ அர்த்தத்தை வ்யாஸ பராஸராதிகளுடைய வசநங்களாலே கண்டு வைத்தும்‌ தேற மாட்டுகிறிகோள்‌; இப்படி நீங்கள்‌ தேறாதிருக்கைக்கடி அவனிட்ட வழக்கா யிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்‌; தத்‌ விமோசநோபாயம்‌ அவன்‌ திருவடிகளே என்றறிந்து ஆஸ்ரயித்துத்‌ தப்பப் பாருங்கோள்‌, அவன்‌ திருவடிகளில்‌ கைங்கர்யமே உங்களுக்குச்‌ சீரிய புருஷார்த்தம்‌ என்று ப்ரயோஜநாந்தரங்களுடையவும்‌ தேவதாந்தரங்களினுடையவும்‌ விரக்தி முன்னாக பர தேவதை ஸர்வேஸ்வரனே என்றும்‌ தத்‌ விஷய கைங்கர்யமே பரம ப்ரயோஜநமென்றும்‌ உபதேஸித்து பகவத்‌ ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார்‌ என்கிறார்‌.

(ஈசனை ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும்‌ ஆயே என்கிற வ்யாப்தி நிறம் பெறத்‌ தனிக்கோல்‌ செலுத்தும்‌ ஸர்வ நியந்தா ) “மறுகலிலீசனை” (திருவாய்மொழி 4-1-10)’ ஈசன்‌ ஞாலமுண்டுமிழ்ந்த” (திருவாய்மொழி 4-3-2) “ஈசன்பாலோர்‌ அவம்‌ பறைதல்‌’ (திருவாய்மொழி 4-10-4) என்று நியந்த்ரு வாசகமான ஸப்தத்தாலே சொல்லும்படி ‘ஏர்கொளேழுலகமும்‌ துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்‌” (திருவாய்மொழி 4-3-8) “வானத்தும்‌ வானத்துள்ளும்பரும்‌ மண்ணுள்ளும்‌ மண்ணின் கீழ்த்‌ தானத்தும்‌ எண்டிசையும்‌ தவிராது நின்றான்‌” (திருவாய்மொழி 4-5-9) “ஆயே இவ்வுலகத்து நிற்பனவும்‌ திரிவனவும்‌ நீயே” (திருவாய்மொழி 4-9-7) என்று கீழ்ப்பத்தில்‌ சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போலன்றிக்கே அது நிறம் பெறும்படி “வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல” (திருவாய்மொழி 4-5-1) என்னும்படி உபய விபூதியும்‌ தன்‌ நியமனத்திலே யாம்படி தன்‌ ஆஜ்ஞையை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன்‌ (ஒழிவில் காலத்துக்குச்‌ சேர பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச்‌ சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி (திருவாய்மொழி 3-3-1) என்று ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்‌ அடிமை செய்ய வேணுமென்று கீழ்க் கழிந்த காலத்தில்‌ அடிமையையும்‌ ஆசைப்பட்டதுக்கு ஒக்க தேஸ கால விப்ரக்ருஷ்டங்களாயிருக்கிற அவனுடைய அபதானங்களை “மாதர் மா மண்‌ மடந்தை பொருட்டு இத்யாதி, ஒதும்‌ மால்‌ எய்தினள்‌” (திருவாய்மொழி 4-2-6) என்று தத் தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று பிச்சேறும்படியான இவருடைய சாபல்யத்துக்குச் சேர காலோபாதியைக்‌ கழித்து வர்த்தமாந காலம்‌ போலே ஸம காலமாக்கி அநுபவிப்பித்து (போதால்‌ வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்‌) “பூவை வீயா நீர்‌ தூவிப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்‌ பூவை வீயாம்‌ மேனிக்குப்‌ பூசும்‌ சாந்து என்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 4-5-1என்று; “பூசுஞ்சாந்தென்‌ நெஞ்சமே இத்யாதி ஏக மூர்த்திக்கே” (திருவாய்மொழி 4-3-2) என்று விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற அவதார காலங்களிலே உதவி புஷ்பாத்‌ யுபகரணங்‌களைக்‌ கொண்டு ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனே யாகிலும்‌ ஸர்வ நியந்தாவாய்‌ ப்ரளயாத்யாபத் ஸகனானவன்‌ தன்னுடைய அத்‌விதீயமான விக்‌ரஹத்துக்கு என்னுடைய கரண த்ரய வ்யாபாரத்தையும்‌ தனக்கு போக்யமாகக்‌ கொள்ளுவதே என்று இவர் தாமே ஈடுபடும்படி இவருடைய இழவு தீர்த்த அவனுடைய ப்ரணயித்வ குணத்திலே “காதல்‌ மையலேறினேன்‌” (திருவாய்மொழி 4-3-9 என்கிறபடியே அவன் பக்கல்‌ உண்டான ப்ராவண்யாதிஸயத்தாலே அறிவழிய அது வெள்ளக்‌ கேடாகாதபடி அவன்‌ அல்பம்‌ பேர நிற்க அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்தங்களையும்‌ அவனென்று ப்‌ரமித்து “என்‌ பெண்கொடி ஏறிய பித்தே’‘ (திருவாய்மொழி 4-4-6) என்று பிச்சேறி (தேஸ தூரத்துக்குக்‌ கூவியும்‌ கொள்ளாய்‌ என்றது தீரக்‌ கண்ட சதிரையும்‌ ஒரு நிலமாகக்‌ காட்ட) “கோல மேனி காண வாராய்‌ கூவியும்‌ கொள்ளாயே” (திருவாய்மொழி 4-7-1) என்று உன்னுடைய வடிவழகை வந்தநுபவிப்பித்தருளுதல்‌ அங்கே அருளப்பாடிடுதல்‌ செய்கிறிலை என்று தேஸ விஸேஷத்தில்‌ அநுபவத்தை ஆசைப்பட்டுக்‌ கூப்பிட்ட இவருக்கு “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலா நிற்பக்‌ கண்டசதிர்‌ கண்டொழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும்‌ நீயுமே போக்தாக்களாய்‌ அவ் விபூதி யிலுள்ளாரடைய போகோபகரண கோடியிலேயாம்‌ படி கண்டு வைத்த கட்டளையை நான்‌ கண்டேன்‌ என்று கீழ்‌ காலோபாதியைக்‌ கழித்து ஸம காலமாக்கினாப் போலே அவ் விபூதியிலநுபவத்தை இங்கே யிருந்தே அநுபவிக்கலாம்படி ஒரு போகியாக ப்ரகாஸிப்பிக்க (வீவிலின்பம்‌ கூட்டினை என்று முக்த போகம்‌) “வீவிலின்பம்‌ மிக எல்லை நிகழ்ந்தனன்‌ மேவியே” (திருவாய்மொழி 4-5-3) என்று அவனைக்‌ கிட்டி நிரதிஸயாநந்தியாகப்‌ பெற்றேன்‌, “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே” (திருவாய்மொழி 4-9-8) என்று ஸ்வ யத்நத்தாலே கிட்டுவார்க்குக்‌ கிட்ட வரிதாயிருக்கிற திருவடிகளை உன்னருளாலே பெற விருக்கிற நான்‌ பெற்றநுபவிக்கும்படி கூட்டினாய்‌, நானுங்கண்டநுபவிக்கப்‌ பெற்றேன்‌ என்று பேசும்படியான முக்த போகமான இவ்வநுபவம்‌ மாநஸாநுபவமாய்‌ அந்த மாநஸ ப்ராப்திக்குப்‌ பலமான (தேவதாந்தராத்மாத்மீய லோக யாத்ரைஸ்வர்ய அக்ஷரங்களில்‌ வைராக்‌யம்‌ உன்னித்துயிருடம்பினால்‌ கொடுவுலகம்‌ வேட்கை யெல்லா மொழிந்தேனென்ன உடையரானவர்‌) “உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌” (திருவாய்மொழி 4-6-10) என்று தன்னெஞ்சாலே துதித்து ஒரு தேவதைக்கு மூச்சுண்டென்று தொழுதறியாள்‌ என்று தேவதாந்தர விஷயமான வைராக்‌யத்தையும்‌ “உயிரினால்‌ குறைவிலமே” (திருவாய்மொழி 4- 8-10) “உடம்பினால்‌ குறைவிலமே’ (திருவாய்மொழி 4-8-9 என்று ஆத்மாத்மீயங்களில்‌ வைராக்‌யத்தையும்‌ “கொடு வுலகம்‌ காட்டேல்‌’ (திருவாய்மொழி 4-9-7) என்று லோக யாத்ரையில்‌ வைராக்‌யத்தையும்‌ “வேட்கை யெல்லாம்‌ விடுத்து” (திருவாய்மொழி 4-9-9) என்று ஐஸ்வர்யத்தில்‌ வைராக்‌யத்தையும்‌ “சிற்றின்பம்‌ ஒழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்று அக்ஷரமென்று சொல்லப்படுகிற ஆத்மாநுபவத்தில்‌ வைராக்‌யத்தையும்‌ உடையரான விவர்‌ (ஒருநாயகம்‌ என்று ராஜ்ய ஸ்வர்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதி கத்வாதிகளையும்‌) ஒரு நாயகத்திலே ‘ஒரு நாயகமாய்‌ ஓட உலகுடனாண்டவர்‌ பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1 )என்று “ராஜ்யம்‌ நாம மஹா வ்யாதி : அசிகத்ஸ்யோ விநாமந: ப்‌ராதரம்‌ வா ஸுதம்‌ வாபி த்யஜந்தி கலு பூமிபா:” என்கிறபடியே ராஜ்யைஸ்வர்யத்தினுடைய அல்பதையையும்‌ ‘குடிமன்னுமின்சுவர்க்கம்‌ எய்தியும்‌ மீள்வர்கள்‌” (திருவாய்மொழி 4-1-9) என்றும்‌ “ஷீணே புண்யே மர்த்யலோகம்‌ விஸந்தி” (கீதை 9-21 என்று ஸ்வர்க்காநுப வத்தினுடைய ௮ஸ்திரத்வத்தையும்‌ “இறுகலிறப்பு” (திருவாய்மொழி 4-1-10) என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும்‌ (ஆடு கள்ளிறைச்சி கருஞ் செஞ்சோறாகிற நிந்த்‌யங்களாலே இளந் தெய்வத்துக்கு இழைத்தாடும்‌ நிஹீநதையையும்‌) ‘அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்‌ கள்ளும்பராய்‌” (திருவாய்மொழி 4-6-7) “அங்கோர்கள்ளுமிறைச்சியும்‌ தூவேன்மின்‌” (திருவாய்மொழி 4-6-3) “கருஞ்சோறும்‌ மற்றைச்‌ செஞ்சோறும்‌” (திருவாய்மொழி 4-6-4) என்று “த்‌ரவ்யம்‌ நிந்த்‌ய ஸூராதி தைவத மதி ஷூத்‌ ரஞ்ச பாஹ்யாக மோ த்‌ருஷ்டிர்‌ தேவலகாஸ்ச தேஸிகஜநா திக்‌ திக்‌தி கேஷாம்‌ க்ரமம்‌ வேதா வேதநாஸ்ச தேஸிக ஜநா ஸத்வஞ்ச வேதாந்தகம்‌ ப்‌ரஹ்ம ஸ்ரீதர மத்ர வேத,விஹிதந்‌ நிஜீவஜீவாதவே” என்கிறபடியே நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு “நீரணங்காடும்‌ இளம்‌ தெய்வம்‌” (திருவாய்மொழி 4-6-2) என்று ஷூத்‌ர தேவதைகளுக்கு ‘ ‘கள்ளிழைத்தென்‌ பயன்‌” (திருவாய்மொழி 4-6-4) என்று அவ்வோ தேவதைகள்‌ ஸந்நிதி பண்ணுகிற ஸ்தலங்களிலே யிடுகிறவிது “நீரணங்காடுதல்‌ கீழ்மையே” (திருவாய்மொழி 4-6-8) என்று நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு ஷூத்ர தேவதா பஜநம்‌ பண்ணுகை நிஹீநமென்னுமத்தையும்‌, (பேச நின்ற தேவதா ஜ்ஞாநா முக்தி ஸாபேக்ஷத்வாதி களையும்‌) “பேச நின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ நாயகனவனே கபால நன் மோக்கத்துக்‌ கண்டு கொண்மின்‌’ (திருவாய்மொழி 4-10-4) என்று ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலும்‌ தாமஸ புராணங்களாலும்‌ பேசப்பட்டு அவற்றுக்கு முட்டுப் பொருத்து நின்ற ப்‌ரஹ்ம ருத்ராதிகளுடைய “வாமாங்குஷ்டநகாக்‌ரேண சிந்நம்‌ தஸ்ய ஸிரோ மயா” என்றும்‌ “யஸ்மாத ந பராதஸ்ய ஸிரஸ் சிந்நம்‌ த்வயா மம, தஸ்மாச்சாப ஸமாயுக்த: கபாலீ த்வம்‌ பவிஷ்யஸி த்த்ர நாராயணஸ் ஸ்ரீமாந்‌ மயா பி அசாம்‌ ப்ரயாசித: விஷ்ணு ப்ரஸாதாத்‌ ஸுஸ்ரோணி கபாலம்‌ தத்‌ ஸஹஸ்ரதா ” (மாத்ஸ்ய புராணம் )என்றும்‌ சொல்லுகிற படியே ப்ரஹ்மா ருத்‌ரனாலே தலை யறுப்புண்டு ஸோச்யனாகையாலும்‌ ருத்‌ரன்‌ குருவினுடை ஸிரஸ் சேதநத்தாலே பாதகியாய்‌ ஸர்வேஸ்வரன்‌ பக்கலிலே ஸாபேஷனாக, அந்த ஸர்வேஸ்வரன்‌ அந்த ப்‌ரஹ்மாவினுடைய ஸோகத்தையும்‌ போக்கி ருத்‌ரனுடைய ஸாபத்தையும்‌ போக்கினான்‌ என்கையாலே இவர்கள்‌ அந்யோந்யம்‌ தங்களுக்கு வருகிற க்லேஸ மறியாமையாலும்‌ வந்த க்லேஸம்‌ தாங்கள்‌ தாங்கள்‌ தவிர்த்துக்‌ கொள்ள மாட்டாத அஸக்தியாலும்‌ (இவை போமிடத்தில்‌ ஸர்வேஸ்வரனே போக்க வேண்டும் படியான ஸாபேக்ஷதையாலும்‌ இப்படி மஹாபாரத வசந ஸித்தமாக அஜ்ஞாநாஸக்தி ஸாபேக்ஷங்களையும்‌. ஆதி-ஸப்த த்தாலே அவர்களுடைய கர்ம வஸ்யதையையையும்‌. (இலிங்கத்து விளம்பும்‌ பாஹ்ய குத்‌ருஷ்டி தமோ நிஷ்டதையையும்‌ சொல்லி) ” இலிங்கத்திட்ட புராணத்தீரும்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌, “விளம்புமாறு சமயமும்‌” (திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ சொல்லுகிறவிவை “யந்மயஞ்ச ஐகத் ஸர்வம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-1-5) என்று ப்ரஸ்நம்‌ பண்ண” விஷ்ணோஸ் ஸகா ஸாதுத்பூதம்‌’ (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-1-41) என்று கோல் விழுக்காட்டிலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக்‌ கவிபாடவேணு மென்பாரைப்‌ போலே லிங்க மென்றொரு வ்யக்தியை நிர்தேஸித்து, இதுக்குத்கர்ஷம்‌ தேடிச்‌ சொல்ல வேணுமென்று கேட்கிறவனும்‌ தமோபிபூதனாய்க்‌ கேட்கச்‌ சொல்லுகிறவர்களும்‌ தமோபிபூதராய்ச்‌ சொல்ல லிங்க விஷயமாக உத்கர்ஷம்‌ தேடியிட்ட குத்‌ருஷ்டி ஸ்ம்ருதிகளென்ன, ப்ரமாணாநுகூலமான தர்க்க மல்லாமையாலே கேவலம்‌ உக்தி ஸாரமான பாஹ்யருடையவும்‌ மதங்களென்ன, இவை “யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய: யாச்ச காச்ச குத்‌ருஷ்டய: தாஸ் ஸர்வா நிஷ்ப்பலா: ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தா: ஸ்ம்ருதா:” (மநுஸ்ம்ருதி 12-95) என்கிறபடியே தமோ நிஷ்டங்களென்னுமிடத்தையும்‌ சொல்லி, (ஓடிக்‌ கண்டீர்‌) “ஓடியோடி வழியேறிக்‌ கண்டீர்‌;” (திருவாய்மொழி 4-10-10) “கதாகதம்‌ காமகாமா லபந்தே” (6. தை 9-21 என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது கர்ப்பத்தேற வருவதாய்க்‌ கொண்டு அநேக ஐந்மங்கள்‌ தேவதாந்தரங்களை ஸப்ரகாரமாக த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயித்து அவ்வாஸ்ரயணமும்‌ முடிய நடத்தி தத்‌ பலமும்‌ கண்டிகோள்‌; (கண்டும்‌ தெளிய கில்லீர்‌) இவனுடைய ஐகந் நிகரணாதி, திவ்ய சேஷ்டிதங்களை ஸமாஸ்த்ர த்‌வாரா ப்ரத்யக்ஷித்தும்‌ இவனே ஸர்வ ஸமாஸ்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள்‌. (அறிந்தறிந்தோடுமின்‌) உங்களை யிங்ஙனே வைத்தது ஸதஸத்கர்ம காரிகளான ஜந்துக்கள்‌ அவ்வோ கர்மங்களை அநுபவிக்கக்‌ கடவதான ஸாஸ்த்ர மர்யாதை, அழியுமென்று. “மம மாயா துரத்யயா” (கீதை 7-14) என்கிறபடியே இதுவும்‌ அவனுடைய மாயை என்றறிந்தும்‌, மாமேவ யே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-14) என்கிறபடியே மாயாதரணோபாயம்‌ அவன்‌ திருவடிகளை யாஸ்ரயிக்கையே என்றறிந்து அவனை யாஸ்ரயித்துத்‌ தப்பப்‌ பாருங்கோள்‌. (ஆட் செய்வதே உறுவதாவதென்று) “நீள்குடக் கூத்தனுக்கா ட் செய்வதே உறுவது” (திருவாய்மொழி 4-10-10)என்று ஆஸ்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனுக்கு அடிமை செய்கையே இவ் வாத்மாவுக்குச்‌ சீரியதும்‌ ஸு-ஸூமும்‌ என்று (விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார்‌ நாலாம்‌ பத்தில்‌) ப்ரயோஜநாந்தரங்கள்‌ க்ஷத்‌ர தேவதைகள்‌ பாஹ்ய குத்‌ருஷ்டிகள்‌ என்கிற இவற்றிலுண்டான விரக்தி பூர்வகமாக ஐகத் காரணத்வாதிகளான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து ஸூசிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ நாலாம் பத்தில் –

223-(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

கீழ்ச் சொன்ன பரத்வாதிகளால்‌ வந்த அவனுடைய உத்கர்ஷத்தையும்‌ தம்முடைய நிகர்ஷத்தையு மநுஸந்தித்து அகல்வாரளவிலும்‌ மேல் விழுந்து விஷயீகரிக்கும்படி பரம க்ருபாவானான ஸர்வேஸ்வரன்‌ கீழிவர்க்குப்‌ பிறப்பித்த விரக்தி பலமான ஸ்வ விஷயமான பக்தியை பரம்பரயா அபிவிருத்‌தமாக்க அந்த பக்தியையும்‌ பாகவத ஸமாகமத்தை யுமுடையரான இவர்‌ திருத்தின தம்மையும்‌ திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும்‌ காண்கைக்கு வந்த நித்ய ஸூரிகளையும்‌ ஸ்வேத த்‌வீப வாஸிகளான ஸித்‌தரையும்‌ கண்டு மங்களாஸாஸநம்‌ பண்ணி திருந்தாத ஆஸுர ப்ரக்ருதிகளையும்‌ பகவத்‌ பாகவத வைபவத்தையும்‌ உபதேஸித்துத்‌ திருத்தி பாகவத ஸமாஜம்‌ தர்ஸநீயமாம்படியான ஜ்ஞாநம்‌ பிறந்தார்க்கும்‌ ப்ராப்ய த்வரைக் கடியான பக்தியையும்‌ உபதேஸித்துத்‌ தலைக் கட்டுகிறார்‌ என்கிறார்‌-

(ஆவாவித்யாதி,)“ஆவாவென்றருள்செய்து’‘ (திருவாய்மொழி 5-1-9) என்றும்‌, “தானே இன்னருள்‌ செய்து” (திருவாய்மொழி 5-1-10) என்றும்‌ “கலியுக மொன்றுமின்றிக்கே தன்னடியார்க் கருள்‌ செய்யும்‌”(திருவாய்மொழி 5-2-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல் வினையால்‌” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ சொல்லுகையாலே “அம்மானாழிப்பிரான்‌ அவனெவ்விடத்தான்‌ யானார்‌ எம்மா பாவியற்கும்‌ விதி வாய்க்கின்று வாய்க்கும்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 5-1-7) என்று கையும்‌ திருவாழியுமான வழகை நித்ய ஸூரிகளுக்குக்‌ காட்சி கொடுத்துக்‌ கொண்டு அங்குள்ளார்‌ பரிமாற விருக்கிறவன்‌ எவ்வளவிலே, நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான நானெவ்வளவிலேன்‌; கீழ்ச் சொன்ன அவனுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளாலே வந்த உத்கர்ஷத்தையும்‌ தங்களுடைய நிகர்ஷத்தையும்‌ அநுஸந்தித்து அகலும்படியான எத்தனையேனும்‌ மஹா பாபிகளளவிலும்‌ ஐயோ ஐயோ வென்று அர்த்தித்வ நிரபேக்ஷமாக தன் பக்கலிலே ந்யஸ்த பரரானார்க்கு கால தோஷம்‌ தட்டாதபடி பண்ணும்‌ ஸ்வாபாவிக க்ருபையை உடையனாகையாலே “விதி வாய்க்கின்று வாய்க்கும்‌” (திருவாய்மொழி 5-1-7) என்கிறபடியே தன்னுடைய நிரங்குஸ ஸ்வாதந்த்ர்யமாகிற கரையையும்‌ இவனுடைய ஒளபாதிக ஸ்வாதந்த்ர்யமாகிற கரையும்‌ அழியப்‌ பெருகும்படியான க்ருபா ப்ரவாஹத்தை யுடைய ஸர்வேஸ்வரன்‌. (பொய்க் கூத்து வஞ்சக் களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி” (திருவாய்மொழி 5-1-1 என்றும்‌ “என்றென்றே சில கூத்துச்‌ சொல்ல” (திருவாய்மொழி 5-1-2) என்றும்‌ “என்றென்றே உன்னையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ள மனம்‌ தவிர்ந்தே” (திருவாய்மொழி 5-1-3) என்கிறபடியே மெய் கலவாத பெரும்‌ பொய்களைச்‌ சொல்லி ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வாந்தர்யாமியான உன்னையும்‌ பகட்டும்‌ க்ருத்ரிம யுக்தமான மநஸ்ஸைத்‌ தவிர்ந்தே என்று இவர்‌ தவிரும்படி. (முற்றவும்‌ தானாய்‌ உன்னை விட்டென்னப்‌ பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்‌) “என்னை முற்றவும்‌ தானானான்‌” (திருவாய்மொழி 5-1-10) என்று எனக்கு ஸர்வ வித போக்‌யமுமான “உன்னை விட்டென்‌ கொள்வன்‌ ” (திருவாய்மொழி 5-1-3) என்று நான்‌ விட்டவன்றும்‌ விட மாட்டாத உன்னை யொழிய துராராதமாய்‌ ஆராதித்தாலும்‌ கிடைப்ப தொன்றில்லாத விஷயத்தைப்‌ பற்றவோ என்று இவர் தாமே பேசும்படி “கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்கிறபடியே தன்னுடைய போக்‌யதையாலே ஸ்வ வ்யதிரிக்தங்களை யுபேக்ஷிக்கும்படி கீழில்‌ பத்தில்‌ பிறந்த விரக்திக்குப்‌ பலமான ‘ பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி” (பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி) என்கிறபடியே அபரமாத்ம விஷயமான விரக்திக்குப்‌ பலமான பரமாத்ம விஷய ராகம்‌. (பேரமர்‌ இத்யாதி, ஊடு புக்கு வளர) “பேரமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 5-3-4) “பின்னின்ற காதல்‌” (திருவாய்மொழி 5-4-6) என்று அபரிச்சேத்‌யமாய்ப்‌ பொருந்திப்‌ பிடரி பிடித்துக் கொண்டு நின்று நெஞ்சை முடிப்பதாய்க்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று பார்ஸ்வஸ்த்தரும்‌ பேசும்படி மிகவும்‌ கை கழிந்து, (யானே யென்ன வாய்ந்து) “கடல்‌ ஞாலம்‌ செய்தேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-1 என்றும்‌ “வாய்ந்த வழுதி வளநாடன்‌” (திருவாய்மொழி 5-6-1) என்றும்‌ “துஷ்ட காளிய” இத்யாதி. இப்படி இவனுடைய ஜகத் காரணத்வாதி, அத்‌புத கர்மங்களை நானே செய்தேன்‌ என்று அநுகார முகத்தாலே அவனை பாவித்துப்‌ பேசும்படி திட்டி (ஆற்றகில்லாது) “உன்னை விட்டொன்றும்‌ ஆற்றகிற்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்று அவனை யொழிய ஒரு ப்ரகாரத்தாலும்‌ ஆற்ற மாட்டாத படியாய்‌, (நீராய்‌) “ஆராவமுதே அடியேனுடலம்‌ நீராய்‌” (திருவாய்மொழி 5-8-1) என்று போக்‌யதாதிஸயத்தாலே வந்த ப்ராவண்யத்தாலே அநுபவோபகரணமான ஸரீரம்‌ ஸிதிலமாம்படியாய்‌, (மெலிய) “வைகலும்‌ வினையேன்‌ மெலிய-(திருவாய்மொழி 5-9-1 அது தான்‌ ஒருநாளன்றிக்கே ஸர்வ காலமும்‌ மெலியும்படியாய்‌, (ஊடு புக்கு வளர) “நிறந்தனூடுபுக்கெனதாவியை உருக்கி (திருவாய்மொழி 5-10-1) என்று மர்மத்திலே புக்கு ஆத்மாவை த்‌ரவ த்‌ரவ்யமாக்கி முடிக்கும்படி அபிவிருத்‌தமாய்‌ (விஷ வ்ருக்ஷ பலங்கள்‌ கை கூடினவர்‌) “ஸம்ஸார விஷ வ்ருக்ஸ்ய த்‌வே பலே ஹ்யம்ருதோபமே கதாசித்‌ கேஸவே பக்திஸ்‌ தத் பக்தைர்வா ஸமாகம:’ என்கிறபடியே ஸம்ஸார விஷ வ்ருக்ஷ பலம்‌ இப்படிப்பட்ட பகவத்‌ பக்தியும்‌ பாகவத ஸமாகமமான இவை இரண்டும்‌ கை புகுந்த விவர்‌. (அடிமை புக்காரையும்‌ ஆட்செய்வாரையுங்‌ காண லோக த்‌வீபாந்தரங்களில்‌ நின்றும்‌ போந்த தேவர்‌ குழாங்களைக்‌ கண்டு காப்பிட்டு) ஒன்றுந் தேவிலே ‘ பாடியாடிப்‌ பரவிச் செல்மின்கள்‌” (திருவாய்மொழி 410-9) “தெய்வம்‌ மற்றில்லை” (திருவாய்மொழி 4-10-3) “நாயகனவனே” (திருவாய்மொழி 4-10-4) “ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) ” அறிந்தோடுமினோ” (திருவாய்மொழி 4-10-6) “ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக் கடிமை புகுவதுவே” (திருவாய்மொழி 4-10-7) “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” (திருவாய்மொழி 4-10-9)”ஆட்செய்வதே உறுவதாவது” (திருவாய்மொழி 4-10-10) என்று இப்படி உபதேஸிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும்‌ “ஆட்செய்தாழிப் பிரானைச்‌ சேர்ந்தவன்‌” (திருவாய்மொழி 4-10-11 என்று இப்படித்‌ திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும்‌ காண்கைக்கு வந்த “வைகுந்தன்‌ பூதங்களேயாய்‌” (திருவாய்மொழி 5-2-5) “தடங்கடல்‌ பள்ளிப்‌ பெருமான் தன்னுடைப்‌ பூதங்களேயாய்‌” (திருவாய்மொழி 5-2-4) “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து குழுமித்‌ தேவர்‌ குழாங்கள்‌” (திருவாய்மொழி 5-2-3 என்று லோகாந்தரமான ஸ்ரீவைகுண்ட,த்திலே நின்றும்‌ போந்தவர்களுமாய்‌ த்‌வீபாந்தரமான க்ஷீராப்‌தியில்‌ நின்றும்‌ போந்தவர்களுமான நித்ய ஸூரிகளான திரள்களை “கண்டோம்‌ கண்டோம்‌ கண்டோம்‌” (திருவாய்மொழி 5-2-2) என்று கண்ணுக்கினியதா யிருக்கையாலே கண்டோம்‌ என்று பல காலும்‌ சொல்லும்படி கண்டு பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1 என்று அத் திரள்‌ அபிவிருத்‌த மாயிடுக என்று மங்களாஸாஸநம்‌ பண்ணின விவர்‌-(ப்ரஹ்லாத விபீஷணர்‌ சொல் கேளாத அரக்கரசுரர்‌ போல்வாரைத்‌ தடவிப்‌ பிடித்து) “அரக்கரசுரர்‌ பிறந்தீர்‌ உள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று “த்வய்யஸ்‌தி மய்யஸ்தி” என்று ப்ரஹ்லாதாழ்வான்‌ உபதேஸிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தாத ஆஸூர ப்ரக்ருதியான ஹிரண்யன்‌ போல்வாரையும்‌, “ப்ரதீயதாம்‌ தாஸரதாய மைதிலீ ” (ராயு. 14-34) என்று ஸ்ரீவிபீஷணப்‌ பெருமாளுடைய உபதேஸம்‌ கேட்டுத்‌ திருந்தாத ராக்ஷஸ ப்ரக்ருதியான ராவணன்‌ போல்வாரையும்‌ தேடிப் பிடித்து. (தேஸ கால தோஷம்‌ போக எங்குமிடங்‌ கொண்டவர்களை மேவித்‌ தொழுது உஜ்ஜீவியுங்கோள்‌) “கொன்றுயிருண்ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌ நின்றிவ் வுலகில்‌ கடிவான்‌ நேமிப் பிரான்‌ தமர்‌ போந்தார்‌ (திருவாய்மொழி 5-2-6) என்றும்‌ “திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” (திருவாய்மொழி 5-2-3) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான வ்யாதி பகை பசி முதலான தேஹ தோஷமும்‌ “பவிஷ்யத்யத ரோத்தரம்‌” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபட்டு வரக்‌ கடவதான கலி ப்ரயுக்தமான கால தோஷமும்‌ தங்கள்‌ ஸஞ்சாரத்தாலே போம்படி “திரியப்‌ புகுந்திசை பாடி எங்குமிடங்‌ கொண்டனவே” (திருவாய்மொழி 5-2-3) என்கிறபடியே பகவதநுபவ ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பெரிய ஆராவாரத்தை யுடைத்தாம்படி விபரீதர்க்கு இடமில்லாதபடி விஸ்ம்ருதராய்க்‌ கொண்டு “மறுத் திருமார்வனவன்தன்‌ பூதங்கள்‌ கீதங்கள்பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்‌ மேவித்‌ தொழுதுய்ம்மினீரே’ (திருவாய்மொழி 5-2-8) என்று ஸ்ரீய:பதியாய்‌ ஸ்ரீவத்ஸ வக்ஷஸ்தனான ஸர்வேஸ்வரனுடைய குணங்களைத்‌ தங்களுக்கு ஸத்தா தாரகமாக உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ இந்த விபூதி ஸ்வபாவத்தாலே வந்த வெறுப்பற்று எங்கும்‌ விஸ்த்ருதரானார்கள்‌. அவர்களை அநந்ய ப்ரயோஜநராய்க்‌ கொண்டு கட்டி நீங்கள்‌ உஜ்ஜீவியுங்கோள்‌; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத்‌ வைபவமறிகைக்‌கீடான அளவிலிகளாகில்‌ (நீங்கள்‌ நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவன்‌) “நிறுத்தி நும்முள்ளத்துக்‌ கொள்ளும்‌ தெய்வங்கள்‌” (திருவாய்மொழி 5-2-7) என்றும்‌ அஸதஸ்ய மாகையாலே பிறரறியாதபடி ராஜஸ தாமஸ யுக்தமான உங்கள்‌ நெஞ்சாலே அவற்றுக்கு ஸ்வத:உத்கர்ஷ மில்லாமையாலே நீங்கள்‌ சேமம்‌ சாத்தி நிறுத்தி த்‌யாநம்‌ பண்ணுகிற தேவதைகளை “நிறுத்தினான்‌ தெய்வங்களாக அத்‌ தெய்வ நாயகன்‌ தானே” (திருவாய்மொழி 5-2-8) என்று ராஜாவானவன்‌ ஊர் தோறும்‌ விடைச்‌ சேவகரை நிறுத்துமா போலே உங்களுக் காஸ்ரயணீயராக நிறுத்தினான்‌ அந்த ஸர்வேஸ்வரன் தானே; அவனை (மேவிப்‌ பரம்புமவரோ டொக்கத்‌ தொழில்‌ யுக தோஷமில்லையா மென்று) “நக்கபிரானோ டயனு மிந்திரனும்‌ முதலாகத்‌ தொக்க வமரர்‌ குழாங்கள்‌ கண்ணன்‌ திரு மூர்த்தியை மேவி மிக்க உலகுகள்‌ தோறும்‌ எங்கும்‌ பரந்தன ஓக்கத்‌ தொழுக ஒற்றிராகில்‌ கலியுகமொன்றுமில்லை” (திருவாய்மொழி 5-2-10) என்று ப்‌ரஹ்மேந்த்‌ர ருத்‌ராதிகளான தேவதா ஸமூஹங்கள்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனுடைய ஸூபாஸ்ரயமான விக்‌ரஹத்தை யாஸ்ரயித்துத்‌ தங்கள்‌ லோகங்களிலே விஸ்த்ருதரானார்கள்‌; அவர்களைப்‌ போலே நீங்களும்‌ அவனை யாஸ்ரயிக்கப்‌ பெறில்‌ விபரீத ப்ரவர்த்தகமான யுக தோஷம்‌ உங்களுக்குத்‌ தட்டாதென்று (விஷ்ணு பக்தி பரராக்கி) என்றிப்படி உபதேஸித்து “விஷ்ணு பத்தி பரோ தேவ: விபரீதஸ் ததா ஸர; என்று பகவத்‌ ப க்தி யுக்தராம்படி திருத்தி, (கண்ணுக்கினியன காட்டலாம்படி யானார்‌ கண்ணிலே நோக்கிக்‌ காணும்‌ பக்தி ஸித்‌தாஞ்ஜனத்தை இடுகிறார்‌ அஞ்சாம்‌ பத்தில்‌) “கண்ணுக்கினியன கண்டோம்‌ தொண்டீர்‌ எல்லீரும்‌ வாரீர்‌” (திருவாய்மொழி 5-2-2) என்று பாகவத ஸமாஜ தர்ஸனம்‌ இனிதாம்படி அவ் விஷயத்தில்‌ சாபலமுடையார்க்கு “என்‌ நெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே” (திருவாய்மொழி 5-5-2) என்று உபாய தஸையிலே நின்று ப்ராப்ய தஸையிலே நிற்கிற தம்மைப்‌ பொடியும்படியான அவர்களுடைய உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தின் மேலே “மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்தி ஸித்‌தாஞ்ஜநேந” ஸ்ரீகுண ரத்ந கோசம்‌ 12) என்கிறபடியே ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த பக்தியை உபதேஸிக்கிறார்‌ என்கிறார்‌ அஞ்சாம்‌ பத்தில்

224-(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படி யிருக்கிற ஸர்வ ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளான இவர்க்குத்‌ தன்‌ திருவடிகளே நிரபேக்ஷோ பாயமென்னுமிடத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க, அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தை யுடையராய்த்‌ தம்முடைய வ்யவஸாயத்தை ௧டகர்‌ முகத்தாலே யவனுக்கறிவித்துத்‌ தம்முடைய விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த இன்னாப்பைப்‌ பரிஹரித்தவனுடைய ஸாமர்த்‌யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப்‌ பண்ணின ப்ரபத்தியும்‌ பலித்தவாறே ப்ராப்திக்குப்‌ ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்‌தோபாய ஸ்வீகாரம்‌ இதரோபாய த்யாக பூர்வகமாக வேண்டுகையாலே பெளராணிக வசந ப்ரக்ரியாலே உபாய விரோதி களான த்யாஜ்யங்களை வாஸநையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும்‌ அஸஹ்யமாம்படி விட்டு விட்டவை யெல்லாம்‌ தமக்கு ப்ராப்த விஷயமே யாக்கி நிரதிஸயமான பர பக்தியோடே திருவுலகளந்த ஸர்வ ஸுலபமான திருவடிகளை நித்ய ஸூரிகளும்‌ வந்தனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே ஸரணம்‌ புக்கவர்‌ பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம் பத்தளவாக உபதேஸித்த பக்த் யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஸோகம்‌ ஐநிக்கும்படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்குத்‌ தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கிறார்‌ என்கிறார் –

(என்னையும்‌ இத்யாதி, சரண்யனென்கிற தளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளளென்மின்௧ளே” (திருவாய்மொழி 6-1-10) “யாவர்க்கும்‌ வன்‌ சரணே” (திருவாய்மொழி 6-3-7) ‘வன் சரண்‌ சுரர்க்காய்‌” (திருவாய்மொழி 6-3-8) என்று ஆர்த்த ரக்ஷ்ணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தி உளள்‌ என்று சொல்லுங்கோள்‌ என்றும்‌, திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும்‌ வலிய ரக்ஷை இல்லை; தேவர்களுக்கும்‌ வலிய ரக்ஷ என்று இவர் தாமே பேசும்படி “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து அடியீர்‌ வாழ்மின்‌ என்றென்றருள்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 6-10-11) என்று நமக்கு ஸேஷபூதராயுள்ளா ரெல்லாரும்‌ நம்மடியின்‌ கீழே அநந்ய ப்ரயோஜநராய்ப்‌ புகுந்து உஜ்ஜீவியுங்கோள்‌ என்று அவன் தானே அருளிச் செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வ லோக பூதேப்‌ய: என்கிறவை கடலோசையும்‌ கழுத்துக்கு மேலுமாகாமல்‌) “ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம்‌ க்ஷிப்ரம்‌ விபீஷணமுபஸ்த்திதம்‌” ரா.யு. 17-14 என்றும்‌, “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோ ததாமி ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33) என்றும்‌ சொல்லுகிற ஸரணாக தனுடையவும்‌ ஸரண்யனுடையவும்‌ உக்தி ஸமுத்‌ர கோஷம்‌ போலே நிரர்த்தகமாகாத படியாகவும்‌, கண்டாதுபரியாகாத படியாகவும்‌ “வானவர்‌ வானவர்‌ கோனொடும்‌ நமன்றெழும்‌ திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 3-3-7 என்றும்‌ “வினைச்‌ சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடம்‌” (முதல்‌ திருவந்தாதி 26) என்றும்‌ “வானரமும்‌ வேடுமுடை வேங்கடம்‌” நான்முகன்‌ திருவந்தாதி 47) என்றும்‌ “கண்டு வணங்கும்‌ களிறு” (மூன்றாம்‌ திருவந்தாதி 70) என்றும்‌ சொல்லுகிறபடியே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஸ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஸ்ரயணீயத்வம்‌ ஸிலா லிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விஸேஷ அஸேஷ லோக ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ (அஜ்ஞாந அஸக்தியித்யாதி, அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்‌யாதோ தேவே பரிப்‌ருட தயா வா விதி தயா ஸ்வ பக்தேர்‌ பூம்நா வா ஐகதி கதி மந்யா விதுஷாம்‌ கதிர்‌ கம்யஸ் சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ : ரஹஸ்யம்‌ வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந்‌ சவ்நகமுநி:” (பட்டர்‌ ஸ்ரீஸூக்தி)என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும்‌ அநுஷ்டிக்கைக்கு மீடான ஜ்ஞாந ஸக்திகளில்லாத அளவால்‌ வந்த அந்த உபாயாந்தரங்களில்‌ அந்வயமே யன்றிக்கே ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரஷ்யமாகை யொழிய வ்யதிரிக்தோபாயங்கள்‌ ஸ்வரூப விருத்‌தங்கள்‌ என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும்‌ ஒன்றும்‌ குறை வேண்டேன்‌-(திருவாய் -5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத் தளவன்றிக்கே அங்குற்றேனல்லேன்‌ இங்குற்றேன்‌ அல்லேன்‌ உன்னைக்‌ காணும்‌ அவாவில்‌ வீழ்ந்து நான எங்குற்றேனுமல்லேன்‌‘ (திருவாய்மொழி 5-7-2) “என்‌ நான்‌ செய்கேன்‌” (திருவாய்மொழி 5-8-3) “புணரா நின்ற மரமேழ்‌ அன்றெய்த ஒரு வில் வலவாவோ” திருவாய்மொழி 6-10-5) என்று நித்ய ஸூரிகள்‌ ஸம்ஸாரத்திலே உலாவினாப் போலே ஸித்‌த ஸாதநம்‌ பண்ணி வர்த்திக்கிறேனல்லேன்‌ ஸாதநாநுஷ்டாநம்‌ பண்ணுகிறவர்களிலே ஒருவனாய்‌ வர்த்திக்கிறேனல்லேன்‌, அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவனாய்‌ அங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌ உன்னை யொழிய ஸப்‌தாதி, விஷயாநுப,வம்‌ பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய்‌ இங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌. உன்னுடைய ஸெளந்தர்யாதி களிலே ஈடுபட்டு உன்னைத் தான்‌ வேணுமென்று ஆசையாலே பல ஹீநனாய்த்‌ தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம்‌ பண்ண க்ஷமனல்லேன்‌; உன்‌ திருவடிகளைக்‌ கிட்டுகைக்கு என்னால்‌ செய்யலாவதில்லை; எனக்கும்‌ செயலுக்கும்‌ என்ன சேர்த்தி யுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதி ஸங்கை பண்ணின மஹா ராஜருடைய ஸங்கா நிராகரணார்த்தமாக இலக்குக்‌ குறிக்க வொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள்‌ ஏழையும்‌ எய்த ஏக வீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய் யமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே யமர வேண்டும்படியாய்த்‌ தம்முடம்போடே அவனமர வேண்டும் படியாய்‌ ஸத்யமாய்ப்‌ பொருந்தி ஸ்வரூபாநுபந்தியாய்‌ கீழில்‌ பத்தில்‌ தமக்குப்‌ பிறந்த பக்தி பாரவஸ்யத்தினுடைய பலமாகவுமாம்‌. உபாயாந்தரத்துக் கன்றிக்கே “களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்னும்படி அநந்ய கதித்வமுடைய இவர் தமக்கு (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய்‌ ) “ஆறெனெக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்‌” (திருவாய்மொழி 5-7-10) என்று தன்‌ திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேஷமான ஸாதநமென்னுமிடத்தைக்‌ காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” (திருவாய்மொழி 5-8-11 என்றும்‌, “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌, “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கென்று நாடொறு மேக சிந்தையனாய்‌” (திருவாய்மொழி 5-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஸீலனாயிருக்கிறவன்‌ திருவடிகளே நிரபேக்ஷோபாய மென்கிற ஏக ரூபமான வ்யவஸாயத்தை யுடையராய்‌ , (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய்‌ வந்து மேயுங்‌ குருகினங்காள்‌ வினையாட்டியேன்‌ காதன்மை கைகள்‌ கூப்பிச் சொல்லீர்‌ ” (திருவாய்மொழி 6-1-1) என்றும்‌, “சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்களே’ (திருவாய்மொழி 6-1-10) என்றும்‌ பெற்றல்லது தரியாத அதி மாத்ர ப்ராவண்ய முடையரா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத அத்யந்த பாரதந்த்ர் யத்தினாலே ததேக ரக்ஷ்யமா யிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஸூத்‌த ஸ்வபா வராய்‌ ஸாகா ஸஞ்சாரிகளாய்‌ மதுகர ப்ரக்ருதிகளாய்‌ பக்ஷபாதிகளாய்‌ ஷட்பத நிஷ்டரான கடகரை யிட்டறிவித்து (விளம்ப ரோஷ முபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும்‌ அவன் தாழ்க்க அத்தால்‌ வந்த ப்ரணய ரோஷத்தாலே, அவன்‌ வந்து மேல்‌ விழுந்த வளவிலும்‌, “போகு நம்பீ ” (திருவாய்மொழி 6-2-2) “கழகமேறேல்‌ நம்பீ (திருவாய்மொழி 6-2-6) என்று அவனை உபேஷித்து அவன்‌ முகம்‌ பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும்‌ தன்னுடைய போக விரோதி யாகையாலே “அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்ய பரதைகளை தனக்கும்‌ சரமோபாயமான திருவடிகளாலே உப லக்ஷிதமான விக்‌ரஹ வைலக்ஷ்ண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து. (உருகாமல்‌ வலித்ததும்‌ நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால்‌ நெஞ்சமுள்ளுருகி உன்‌ தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌ அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றிப்படி அல்லோம்‌ என்ற நம்மைச்‌ சேர்த்துக்‌ கொண்ட தோராஸ்சர்ய மிருந்தபடி யென்‌ என்றுருக, இது தொன்று கண்டோ ஆஸ்சர்யப்படுகிறீர்‌, தன்னில் தான்‌ சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்‌ என்று தன்னுடைய விருத்‌த விபூதிகத்வத்தை நல்குரவுஞ் செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும்‌ “நல்குரவும்‌” என்று தொடங்கி “திருவிண்ணகர்க்‌ கண்டேனே” (திருவாய்மொழி 6-3-1) என்று அத்தைக்‌ கண்டு தேறின விதுவும்‌ குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி 6-4-1) என்று தொடங்கி “நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ எனக்கார்‌ பிறர்‌ நாயகரே” (திருவாய்மொழி 6-4-10) என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. ‘உருகாமல்‌ வரித்தும்‌’ என்று பாடமானபோது பிறந்தவாற்றிலே உன்னைப்‌ பிரிந்த தஸையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம்‌ பண்ணி தரிக்கலாமோ வென்று பாரா நின்றேன்‌; “ஊடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” (திருவாய்மொழி 5-10-10) என்று அவை தானே ஸிதிலமாக்கா நின்றன-தரித்து நின்று குணாநுஸந்தாநம்‌ பண்ணும்படி பண்ணி யருள வேணுமென்றும்‌ “மற்றோர்‌ களை கணிலம்‌ காண்மின்களே” (திருவாய்மொழி 6-3-10) “(நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 )என்று உபாய வரணம்‌ பண்ணி அந்த வரணமும்‌ என்ன குறை யெனக் கென்று தொடங்கி “விண் மிசைத்‌ தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்‌ நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ (திருவாய்மொழி 6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவா ராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க்‌ கொண்டு பேசப்‌ பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநமிடுவார்‌ மல்லரை யிட்டு நெருக்கத்‌ தேடுவார்‌ எதிரம்பு கோர்ப்பாராய்க்‌ கொண்டு இருக்கற இந்த விபூதியிலிராதே “கதஸ்‌ ஸ்வம் ஸ்த்தாந முத்தமம்‌” என்கிறபடியே பரிவரேயான நிர்பய ஸ்த்தா நத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப்‌ பெற்ற வெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்‌; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம்‌. (ஸப்ரகாரமாக ஸக்ருத்‌ கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ “ஸக்ருதேவ” (ராயு. 18-33 என்கிற படியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர்‌ தயாஜ்யா மஸமாக்கின சித சித்‌ ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை) புராணேதிஹாஸங்‌களும்‌ அவற்றை உள்ளபடி யறிகையாலே பெளராணிகரான உடையவரும்‌ –பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌, ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌ரஹாணிச, ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌” (சரணாகதி கத்யம்‌) “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்‌ ச ராகவம்‌ ஸரணம்‌ கத: (ரா.யு19-5) என்று த்யாஜ்யாம்ஸமாக்கினவற்றில்‌ பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம்‌ “மாத்ரு தேவோ பவ” (தைத்திர்யோபநிஷத்‌ இத்யாதி ப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும்‌ அவர்களுடைய வியோகம்‌ அஸஹ்யமாம்படி ப்ரிய விஷயமாகையாலே ப்ராப்யங்களாயு மிருக்கையாலும்‌; ரத்நாதிகள்‌ உபாயாந்தரத்துக்கு தாநாதி முகத்தாலே ஸஹகாரிகளா யிருக்கையாலே ப்ராபகங்களாயும்‌ தன்னை யழிய மாறியும்‌ இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்க ளாகையாலே ப்ராப்யங்களா யுமிருக்கிற இந்த ப்ராப்ய ப்ராபகாபா ஸங்களை; ஸாக்ஷாத்‌ ப்ராப்ய ப்ராபகங்கள்‌ அல்லாமையாலே ஆபாஸங்களென்கிறது. (கை வலிந்து கை கழலக்‌ கண்டும்‌ எல்லாம்‌ கிடக்க நினையாதகன்றும்‌) “நம்மைக்‌ கை வலிந்து” (திருவாய்மொழி 6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6-6-1) “இதெல்லாம்‌ கடக்க இனிப்‌ போய்‌ எம்மை யொன்றும்‌ நினைத்திலளே” (திருவாய்மொழி 6-7-9) “இன்றெனக்கு உதவாதகன்ற” (திருவாய்மொழி 6-7-6) என்று சிதசித்‌ வர்க்கமான இவற்றைக்‌ கை விட்டும்‌, உறங்கினவன்‌ கையிலே எலுமிச்சம்‌ பழம்‌ போலே ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன் கையில்‌ நின்றும்‌ நெகிழும்படி கண்டு “ஸர்வாந்‌ போகாந்‌ பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை மதியாமல்‌ அகன்றும்‌ (ஆளீர்‌ மேவீர்‌ ஊதீர்‌ என்று ததீய ஷோஷமாக்கியும்‌) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி 6-8-1 “நெய்யமரின்னடிசல்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி 6-8-2 )“ஓடிவந்தென்‌ குழல்மேலொளி மாமலரூதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்று கீழ்‌ தாம்‌ விட்டவிடத்திலும்‌ தம்மை விடாதபடி பற்றிக்‌ கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத்‌ விஷயத்தில்‌ உபகாரகரானவர்களுக்கு “ஸத்‌ குருப்யோ நிவேதயேத்‌” என்கிறபடியே ஸமர்ப்பித்து. (புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில்‌ முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம்‌ கெடுப்பாயோ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ” (திருவாய்மொழி 6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்‌யமான ஸப்‌தாதி, விஷயங்களினுடைய தர்ஸநத்திலே ஸத்தா ஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாயிருக்கையாலே அவற்றை விட்டு, (தந்தைதாயுண்ணுஞ்‌ சோறு மாநிதி, பூவை யாவை யுமொன்றே யாக்கி) “பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை” ரா.யு என்றும்‌, “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ் ச குரஸ்‌ த்வமேவ, த்வமேவ வித்‌யா த்‌ரவிணம்‌ த்வமேவ த்வமேவ ஸர்வம்‌ மம தேவதே வ” என்றும்‌ ‘வாஸுதேவஸ்‌ ஸர்வம்‌” (கீதை 7-) என்றும்‌ “மாதா பிதா ப்‌ராதா நிவாஸஸ் ஸரணம்‌ ஸுஹ்ருத்‌ கதிர்‌ நாராயண:” (ஸுபால உபநிஷத் )என்றும்‌ சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த‘” (திருவாய்மொழி 6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்‌ருதிகளான ஸர்வ வித பந்துவும்‌ என்றும்‌, ‘ உண்ணுஞ் சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலை யுமெல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்க ளெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான கிருஷ்ணனே என்றும்‌, “வைத்த மா நிதியாம்‌ மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி 6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச்‌ சேமித்து வைத்த அக்ஷயமான நிதியும்‌ விரோதி நிரஸந ஸீலனான அவனே யென்றும்‌, “பூவை பைங்கிளிகள்‌ பந்து தூதை பூம்புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால்‌ திரு நாமங்களே கூவியெழும்‌’ (திருவாய்மொழி 6-7-3) என்று லோபகரணங்களால்‌ பிறக்கும்‌ ரஸமெல்லாம்‌ ஸ்ரீயபதியினுடைய திருநாமங்களைச்‌ சொல்லவே யுண்டாகா நின்றதென்றும்‌, இப்படி கீழ்‌ விட்டவை யெல்லாம்‌ பகவத்‌ விஷய மொன்றிலுமே யாக்கி, (தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னு மார்த்தியோடே) “கோலத்‌ திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள்‌ அடியேனின்னம்‌ தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன்‌ சேர்‌ மெழுகா யுலகில்‌ திரிவேனோ” (திருவாய்மொழி 6-9-6) “கூவிக்கொள்ளுங்காலமின்னம்‌ குறுகாதோ” (திருவாய்மொழி 6-9-9) “புணரேய்‌ நின்ற மரமிண்டின்‌ நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி 6-10-5) என்று ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய்‌ பெரிய பிராட்டியாரோடே யிருக்கிற உன்னைக்‌ கிட்டப் பெறாதே ஸம்ஸாரத்திலே யிருந்து எத்தனை காலம்‌ இப்படியே அவஸந்நனாகக் கடவேன்‌ என்றும்‌, த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணின வுன்னைக்‌ காண வாசைப்பட்டுக்‌ கிடையாமையாலே அக்‌நி ஸகாஸத்தில்‌ மெழுகு போலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம்‌ திரியக் கடவேன்‌ என்றும்‌, ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக்யமான உன்‌ திருவடிகளிலே என்னை அருளப் பாடிடுங்காலம்‌ இன்னமணித்தாகாதோ என்றும்‌, யமளார்ஜுநங்களின்‌ நடுவே போன ஸர்வ காரண பூதனே என்றும்‌ உன்‌ திருவடிகள்‌ மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக்‌ கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே (ப்ரபத்தி முக்‌யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்‌) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந் தாமரை யென்கிற தளவாக) “லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே(அ)வ்ரஜம்‌ விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக்‌ கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக்‌ கொண்ட எந்தாய்‌” என்கிறபடியே ஒரு நீராகவும்‌ அவர்கள்‌ தாங்களே ப்ரத்யக்ஷிக்கும்படி வடிவைக்‌ காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும்‌ வைக்கையாலே ஆஸ்ரயணோபயோகியான வாத்ஸல்ய ஸெளஸீல்ய ஸெளலப்‌யங்களும்‌, “தே?” என்று தன் பேறாகச்‌ செய்கைக் குறுப்பான ஸ்வாமித்வமும்‌, “விபோ” என்று கார்யோபயோகியான ஜ்ஞாந ஸக்திகளும்‌ த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாபபிக்கையாலே “தெய்வ நாயகன்‌ நாரணன்‌ திரிவிக்கிரமன்‌” “மாண் குறள்‌ கோலப் பிரான்‌’ (திருவாய்மொழி 5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்‌” (திருவாய்மொழி 5-10-9) “மின் கொள் சேர்‌ புரி நூல்‌ குறளாய்‌ அகல் ஞாலம் கொண்ட வன்‌ கள்வன்‌” (திருவாய்மொழி 6-1-11) என்றும்‌ ஸுூரிபோக்யனாய்‌ ஸர்வ ஸ்வாமி யானவன்‌ த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணுகைக்காகப்‌ பெரு விலையனான அழகைச்‌ சிறாங்கித் தனுபவிக்கலாம்படி வாமந வேஷ பரிக்‌ரஹம்‌ பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடி யென்றிரந்து ப்‌ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹா வஞ்சகன்‌- “காண்மின்களுலகரென்று கண் முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி 6-3-1 )நோக்கு வித்‌யை காட்டுவாரைப் போலே லெளகிகர்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல் கொள்‌ திசை வையமளந்த மாயன்‌‘ (திருவாய்மொழி 6-4-6) “திசை ஞாலம் தாவி யளந்ததும்‌” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்‌” (திருவாய்மொழி 6-6-1) “மண்ணும்‌ விண்ணும்‌ கொண்ட மாய வம்மான்‌'” (திருவாய்மொழி 6-9-2) “ஓரடியால்‌ எல்லா வுலகும்‌ தட வந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவி வையம்‌ கொண்ட தடந் தாமரைகட்கே” (திருவாய்மொழி 6-9-9) என்று விஸ்த்ருதமாய்‌ திக்குகளோடே கூடின பூமியையும்‌ உபரிதந லோகங்களையும்‌ தென்றலுலாவினாப்‌ போலே ஸுக தரமாம்படி எங்குமொக்கப்‌ பரப்பி யளந்து கொண்ட நிரதிஸய போக்‌யமாய்‌ அதிஸுகுமாரமான திருவடிகள்‌. (இணைத் தாமரைகள்‌ காண இமையோரும்‌ வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம்‌ மண்ணளந்த” (திருவாய்மொழி 6-10-6) இத்யாதி, திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக் யமாய்ச்‌ சேர்த்தி யழகை யுடைத்தான திருவடிகளை நாம்‌ காண்பதெப்போதோ என்று நித்ய ஸூரிகளும்‌ வந்தநுபவிக்க ஆசைப்பட்டு வரும்படி “அன்று ஞாலம்‌ அளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை‘ (திருவாய்மொழி 3-3-8) என்று திருவுலகளந்தருளின ஸ்ரமந் தீர அச் செயலாலே ஸர்வ ஸ்மாத் பரனானவன்‌ விடாயர்‌ மடுவிலே சேருமாப் போலே உகந்து நிற்கிற ‘ உலகுக்குத்‌ திலதமாய்‌ நின்ற திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 6-10-1 என்று ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு முக்‌யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்‌) ‘ “அகலகில்லேன்‌ இறையும்‌”(திருவாய்மொழி 6-10-10) இத்யாதி புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி, குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டு தம்முடைய அநந்ய கதித்வாநுஸந்தாந பூர்வகமாக பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம்‌ பண்ணினவர்‌ (பிணக்கறத்‌ தொடங்கி வேதப் புனித விருக்கை நாவில்‌ கொண்டு) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ஞான விதி பிழையாமே அச்சுதன்‌ தன்னை மேவித்‌ தொழுதுய்ம்மினீர்கள்‌’ (திருவாய்மொழி 5-2-9) என்கிறதளவாகக்‌ கீழுபதேஸித்த ஸாத்‌ய ஸாதந பக்தி ஸ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தா நத்தாலும்‌ ஸ்வ பாரதந்த்ர்யா நுஸந்தானத்தாலும்‌ ஸோகம்‌ பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்தி நிஷ்டை துணையாம் படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்கு (தந்தனன்‌ களை கணிலம்‌ புகுந்தேனென்று ஸ்வ ஸித்‌தோபாய நிஷ்டையை உக்த் யநுஷ்டாங்களாலே காட்டுகிறார்‌ என்கிறார்‌) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே”(திருவாய்மொழி 6-3-9) “திருவிண்ணகர்‌ மன்னு பிரான்‌ கழல்களன்றி மற்றோர் களை கணிலம்‌ காண்மின்களே‘ (திருவாய்மொழி 6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும்‌ “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி 6-10-11 என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும்‌ தமக்கிந்த ஸித்‌தோபாயத் திலுண்டான நிஷ்டையை ப்ரகாஸ்ரிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ ஆறாம் பத்தில்

225-(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்ட நிவருத்தி பூர்வகமாக இஷ்ட ப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஸ்சர்யமான ஜ்ஞாந சக்த்யாதி, யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம்‌ பிறந்தவர்களுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதான பரமபதத்தைத்‌ தானே உபாயமாய்க்‌ கொண்டு கொடுக்குமிடத்தில்‌ சத்ருவுக்கும்‌ திர்யக் ஸ்த்தாவரங்களுக்கு முட்படக்‌ கொடுக்க வல்ல ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரன்‌ தன்‌ திருவடிகளிலே ஸாங்க,ப்ரபதநம்‌ பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஸிப்பிக்கக்‌ கடவதான இந்த்‌ரியங்கள்‌ நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக்‌ கண்டு விஷண்ணராய்க்‌ கூப்பிட்டு தம்‌ தமை தாம்‌ பேச மாட்டாதே அபஹ்ருத சித்தராக அவன்‌ தன்‌ விஜயத்தைக்‌ காட்டித் தரிப்பிக்க அந்த தரிப்பும்‌ ஸம்ஸாரிகளிழவை நினைத்துச்‌ சுவறிப்‌ பழைய வார்த்தியே தலை யெடுத்து அநுபாவ்ய விஷயம்‌ ஸ்ம்ருதி விஷயமாய்‌ ஒருமுகஞ்செய்து நலிய நோவு பட்டு இப்படி க்லேஸப்படுகிற இவர்‌ உபாய பூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாந சக்திகளில்‌ குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும்‌ ஆர்த்தியிலும்‌ குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக் கடியென்‌ என்று அவனைக்‌ கேட்க அவனும்‌ நமக்கும்‌ நம்மடியார்க்கும்‌ திருவாய்மொழி பாடுகைக்கு வைத்தோங்காணும்‌ என்று தான்‌ இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய முதலாழ்வார்கள்‌ வ்யாஸாதிகள்‌ கவி பாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக்‌ கொண்டு கவிபாடுவித்துக்‌ கொள்ளுவதே என்று அவன்‌ பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப்‌ ப்ரத்யுபகாரம்‌ தேடிக்‌ தாணாமையாலே திருவாறன்விளையிலே அவன்‌ பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்தருளி யிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம்‌ ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர்‌ கீழ்‌ தம்முடைய உபாயத்தில்‌ நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில்‌ நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம்‌ அத்தேஸமே ப்ராப்யமென்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத்‌ தம்முடைய திருவுள்ளத்தில்‌ உகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

(எண்ணிலாக்‌ கு,ணங்கள்‌ இத்யாதி,) ஆஸ்சர்ய யோக,த்தாலே “எண்ணிலாப்‌ பெரு மாயனே’ (திருவாய்மொழி 7-1-1 “குணங்கள்‌ கொண்ட மூர்த்தியோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌” (திருவாய்மொழி 7-1-11 “பால துன்பங்கள்‌ இன்பங்கள்‌ படைத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-7) “ஊழிதோறாழி உருவும்‌ பேரும்‌ செய்கையும்‌ வேறவன்‌ வையங்காக்கும்‌” (திருவாய்மொழி 7-3-11) “மாயா வாமனனே’ (திருவாய்மொழி 8-8-1 “உள்ளப் பல் யோகு செய்தி” (திருவாய்மொழி 7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையனாய்‌ ஸத்வாதி குண ப்ரசுரமான மூர்த்திகளைக்‌ கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணுமவனாய்‌ இடமறிந்து ஸுக,துக்கங்களை ஸங்கல்பிக்குமவனாய்‌ ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாகக்‌ கல்பந்தோறும்‌ திருமேனியும்‌ சேஷ்டிதங்களும்‌ வேறு படக்‌ கொள்ளுமவனுமாய்‌ ஆஸ்சர்ய சேஷ்டிதங்களை உடையவனுமாய்‌ ஸர்வருடையவும்‌ ரக்ஷ்ணோப சிந்தை பண்ணுமவனுமாய்‌ இப்படி உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆஸ்சர்ய சக்தி யோகத்தை உடையவனாகையாலே (தெளிவுற்றவர்க்கு ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம்‌ புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஸக்தி) “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்‌ கதிசெய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” (திருவாய்மொழி 7-5-1 “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌” (திருவாய்மொழி 7-6-10) என்று ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ தானேயென்று அத்‌யவஸித்துப்‌ பின்பு நாட்டார்‌ செயல்‌ கண்டாதல்‌ உக்த்யாபாஸங்கள்‌ கண்டாதல்‌ பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஸயாநந்தமாய்‌ ஒருவராலும்‌ ஸ்வ யத்நத்தாலே ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத்‌ தன்னருளாலே கொடுக்கைக்குத்‌ தான்‌ உபாயமாமிடத்தில்‌ “புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌ ‘ (திருவாய்மொழி 7-5-1) என்றும்‌ “நாட்டை அளித்துய்யச்‌ செய்து” (திருவாய்மொழி 7-5-2 என்றும்‌ “சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடி தாட்பாலடைந்த‘ (திருவாய்மொழி 7-5-3) என்றும்‌ முதலிலே ஜ்ஞாந லேஸமில்லாத திர்யக்‌ ஸ்தாவரங்களுக்கும்‌ ப்ராதி கூல்யத்திலே முதிர நின்ற ஸத்ருவுக்கும்‌ கொடுக்க வல்லனாம்படி ஸர்வ ஸக்தி யுக்தனான ஸர்வேஸ்வரன்‌ (பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுன பாதம்‌ அகலகில்லேனிறையும்‌” (திருவாய்மொழி 6-10-9)என்று தன் திருவடிகளை க்ஷ்ண காலம்‌ அகல ஸக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து (திருவாய்மொழி 6-10-10) என்று ஸரணம்‌ புகுந்த தம்மை (அகற்றுமவற்றின்‌ நடுவே இருத்தக்‌ கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை (திருவாய்மொழி 5-7-8) என்று பகவத்‌ விஷயத்தைக்‌ கிட்டாத படி அகற்றவற்றான இந்த்‌ரியங்களின்‌ நடுவே வைக்கக்‌ கண்டு (நலிவான்‌ சுமடு தந்தாய்‌ ஓவென்று சாதன பலமான ஆக்ரஸத்தோடே பழியிட்டு )நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -(திருவாய் -7-1-1)அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் (திருவாய் -7-1-10) விண்ணுளார் பெருமானேயோ (திருவாய் -7-1-5) முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியேயோ (திருவாய் -7-1-10) என்று வ்யவதான விளம்பம் இல்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே – பிரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலே உள்ளத்தையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே –சாகாம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முஸ் சரண்யம் சரணம் ச ராமம் -(யுத்த -59-44)என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்பும் குலைந்து வந்து விஷயீ கரிக்கும்படி பெரிய ஆக்ரோஸத்தோடே அவன் மேலே பழியாம்படி கூப்பிட்டு

(கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி)கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் (திருவாய்மொழி 7-521)இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் (திருவாய்மொழி 7-2-4)சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் (திருவாய்மொழி 7-2-5)என்று திவா ராத்ரி விபாகமற அரதியாயத் துடிக்கும்படி அடைவுக்கெட்ட ஆர்த்தியை திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே (திருவாய்மொழி 7-2-1)என் செய்திட்டாய் (திருவாய்மொழி 7-2-3) என் சிந்தித்தாயே (திருவாய்மொழி 7-2-4)என் செய்கேன் என் திருமகட்கே (திருவாய்மொழி 7-2-8)என்றும் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டுக் கூச்சு முறை தவிர்ந்து அவன் தன்னையே கேட்டுக் கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தா பேதத்தை யுடையவராய் (தேற்ற ஒண்ணாத தோற்று)அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் (திருவாய் மொழி -7-3-9)என்று பார்ஸ்வத்தாராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்தர்யத்தையும் இழந்து (ஓன்று நிற்கப் பண்ணின பலாதாநம் )இப்படி இருக்கிற இவரைத் தரிப்பிக்கைக்காக ஈஸ்வரன் தன்னுடைய விஜய பரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஓன்று நின்ற சடகோபன் (திருவாய் மொழி -7-4-11)என்று அவர் விஜய பரம்பரைகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பார் இழவிலே சுவறி )கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும்‌ கற்பரோ” (திருவாய்மொழி 7-5-1) என்று “அபவரகே ஹிரண்ய நித ம்‌ நிதா ய உபரி ஸஞ்சரந் தோ நத்‌ ரஷ்யந்தி” என்கிறபடியே அவதார ப்ரயுக்த ஸெளலப்‌யத்தை உடையனாய்‌ ப்ரிய பரனுமாய்‌ தான்‌ அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷ பர்யந்தம்‌ நடத்துமவனுமா யிருக்குமிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே -என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும்‌ சுவறி (பழைய தனிமைக்‌ கூப்பீடு தலையெடுத்து) “பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன்‌ தனியாளாவோ” (திருவாய்மொழி 7-6-1 என்று அவனுடைய ஐகத் காரணத்வாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில்‌ தனிமைக்‌ கூப்பீடே மீண்டும்‌ தலையெடுத்து (சூழவும்‌ பகை முகஞ்செய்ய) “சூழவும்‌ தாமரை நாண் மலர் போல்‌ வந்து தோன்றும்‌ கண்டீர்‌ இணைக் கூற்றங்கொலோ அறியேன்‌” (திருவாய்மொழி 7-7-1) “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே” (திருவாய்மொழி 7-7-8 என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில்‌ அவயவ ஸோபை யானது விஸத ஸ்ம்ருதி விஷயமாய்க்‌ கொண்டு பாதிக்க நலிவு பட்டு (எடுப்பும்‌ சாய்ப்புமான க்லேஸம்‌ நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும்‌ அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க்‌ கொண்டு க்லேஸமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள்‌ செய்து வைத்த வைசித்ரியைக்‌ கேட்க) உபாய பூதனாயிருக்கிற வுனக்கு அஜ்ஞாந அஸக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க ஸரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும்‌ ஆர்த்தியும்‌ உண்டாயிருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள்‌ நீக்கி இத்யாதி, மாயங்கள்‌ செய்து வைத்தி” (திருவாய்மொழி 7-7-5) என்று ஸம்ஸாரத்தில்‌ ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக்‌ கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஸ்சர்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று கேட்க (ஐச்சிகமாக இருத்தி யறக்கொண்ட ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச்‌ செய்ய) அவன்‌ நமக்கும்‌ நம்முடையார்க்கும்‌ உம்மைக்‌ கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்‌ கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம்‌ காணும்‌ என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய (என்‌ சொல்லி எந்நாள்‌ பார் விண்ணீரிறப்பெதிர்‌ எதுவும்‌ என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்‌ருதிகள்‌ முதலாழ்வார்களள வுண்டாயிருக்கத்‌ தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என்‌ சொல்லி நிற்பனோ” “எந்நாள்‌ சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “பார்‌ விண்ணீர்‌ முற்றுங்‌ கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-9) என்று எங்ஙனே நான்‌ தரையில்‌ கால்‌ பாவுவது அவவுபகாரத்தைக்‌ காலதத்வ முள்ளதனையும்‌ அநுஸந்தித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. ஸகல ஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத்‌ யுபகரணங்களை நானொருவனுமே உடையேனுமாய்‌ கால த்ரயத்திலும்‌ பேசி யநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. “உதவிக் கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்று மில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம்‌ பண்ணுமிடத்தில்‌ ஆத்மாவும்‌ ததீயமா யறிகையாலே உபய விபூதியிலும்‌ செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகார ஸ்ம்ருதியை உடையராய்‌ (தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக்‌ கேட்பிப்பதாக காந கோஷ்ட்டியையும் தேவ பிரானறிய மறந்தவர்‌) “செம்பவளத்‌ திரள்வாய்த்‌ தன் சரிதை கேட்டான் (பெருமாள்‌ திருமொழி 10-8) என்று நாச்சியாரை யொழிய பெருமாள் தாமே தனி இருந்த இடத்தே ஸ்ரீராமாயணம்‌ கேட்பித்த குஸ லவர்களைப்‌ போல் அன்றிக்கே -இன்பம் பயக்க வெழில்‌ மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ் வேழுலகை இன்பம்‌ பயக்க நிலத் தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தை மகிழ்‌ திருவாறன்விளை” (திருவாய்மொழி 7-10-1 என்று ஆநந்த மயனான அவன் தனக்குமாநந்த வர்தகையான பிராட்டியும்‌ ஸர்வேஸ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாயகத்வத்தால்‌ வந்த வேறுபாடெல்லாம்‌ தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரண த்ரயத்தாலும்‌ அநுபவிக்கிற பூ ஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திரட்சியை யுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத்‌ திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து (காந கோஷ்டியையும்‌ தேவபிரானறிய மறந்தவர்‌) “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌ திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்‌” (திருவாய்மொழி 7-10-10) என்று அந்தத்‌ திருவாறன்‌ விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்‌) என்று ஸாமகாநம்‌ பண்ணுகிற பரமபதத்தில்‌ கோஷ்டியையும்‌ அயர்வறுமமரர்கள்‌ அதிபதியாய்‌ ஸர்வருடைய ஹ்ருதயமும்‌ அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிற அவனும் கூட அறியும்படி விஸ்‌மரித்த இவர் (சரம உபாய பரரானார்க்கு )கீழ்‌ தாமருளிச்செய்யக்‌ கேட்ட (ஸித்‌த சாதனத்தாலே தத் பரரானார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார்) நீள் நகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரம் தோள் துணித்தான்‌ சரணன்றி மற்று ஒன்றிலம் உள்ளித்தொழுமின் தொண்டீர் (திருவாய் மொழி -7-10-7) என்றும் நிரதிசய போக்யமான திருவாறன்விளை யாகிற மஹா நகரே பரம ப்ராப்யம் -அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா நிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம் -இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை – ஆகையால்‌ இவ்வர்த்தத்தில்‌ ருசி யுடையராய் புத்தி பண்ணுங்கோள்‌ என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயம் என்றும் பிராபகத்தினுடைய அவதி, அர்ச்சாவதார ஸுலபனானவன்‌ திருவடிகளே என்றும்‌ இவ்வர்த்தத்தைத்‌ தம்முடைய திரு வுள்ளத்தி லுகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார் –

226-தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்‌னும் படி சக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன்‌ கொண்ட வாக்‌ வ்ருத்தியையும்‌ மறப்பிக்கும்‌ கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும் தீர, தலைச்‌ சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர்‌ தலைவன்‌ கந்யகாதநம்‌ போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப்‌ பணைத்து ஜந்ம பாஸம் விட்டு ஆத்‌வாரம்‌ ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்‌ மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அரு வினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேனென்றதின்‌ பெருமையைக்‌ காட்ட தேஹாதிகளில்‌ பரமாய்‌ கன்று நினைக்கில்‌ லக்ஷ்மீ துல்யமாய்‌ அவர்க்கே குடிகளாம்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌ ஸ்வ ஸாதந ஸாத்‌யஸ்தர்‌ இரு கரையராகாமல்‌ மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக் கொண்மின்‌ உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார்‌ எட்டாம் பத்திலே –

இப்படிப்பட்ட ஸக்தி தன்னாலே நித்யமாக கல்பிதமான போக்ய போகோபகரண போக ஸ்தாநங்களை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ தம்மைக்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரித்து பகவத லாபத்தாலே கலங்கி அவனுடைய குணங்களிலும்‌ ஸ்வரூபத்திலும்‌ அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின இவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க அத்தாலே க்ருதஜ்ஞராய்‌ அதுக்குப்‌ பலமாக அவர்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ண அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய்‌ இவர்க்குண்டான ஆத்ம குணங்களாலே ப்ரீதனாய்‌ இவர்‌ திருவுள்ளத்திலே யிருந்து நிரதிஸயமாக அநுபவிப்பித்து இவர்‌ இனி அயோக்‌யரென்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாஸிப்பிக்க அதனுடைய யாதாத்ம்யத்தை அநுஸந்தித்த இவர்‌ கீழ்‌ தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்களைக்‌ கேட்டு உகந்தவர்களுக்கு ப்ராப்ய மொன்றும்‌ ப்ராபக மொன்றுமாகாதபடி ப்ராப்ய மொன்றிலுமே தத்பரராக்குகிறார்‌.

(தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடென்னும்படி ஸக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்யகாமன்‌) “தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட்செய்வார்‌” (திருவாய்மொழி 8-1-1 “பணியாவமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌ அணியாராழியும்‌ சங்கமுமேந்துமவர்‌ (திருவாய்மொழி 8-3-6) “நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” (திருவாய்மொழி 8-9-111) “நல்லகோட்பாட்டுலகங்கள்‌ மூன்றினுள்ளும்‌ தான் நிறைந்த அல்லிக்கமலக்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று லக்ஷ்மீ ப்‌ரப்‌ருதி திவ்ய மஹிஷிகளுக்கு வல்லபனாய்‌, நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுமவனுமாய்‌, அவர்களுடைய ஸ்தோத்ராதிகளுக்கு விஷய பூ,தனுமாய்‌, போக்யாதிகளால்‌ குறைவற்றுக்‌ கட்டளைப்‌ பட்ட லோக த்ரயத்துக்கும்‌ நிர்வாஹகனுமாய்‌ இருக்குமென்கையாலே கீழ்ச் சொன்ன ஸக்தி தன்னாலே நித்யமாகக்‌ கல்பிக்கப்பட்ட பத்நீ பரிஜந ஸ்தாந போக்‌ய போகோபகரணங்களை உடைய ப்ரக்ருதியாலே தனக்கென்று தேட வேண்டாத படி நித்யமான போகத்தை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌. (கொண்ட வாக்‌ வ்ருத்தியை மறப்பிக்கும்‌) கீமும்‌ கைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தோம்‌ என்று அவன்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரிப்பிக்க வற்றான (கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும்‌ தீர) “காணுமாறருளாய்‌ என்றென்றே கலங்கி” (திருவாய்மொழி 8-1-2 “அறிவொன்றும் சங்கிப்பன்‌‘ (திருவாய்மொழி 8-1-7) நரகம் நானடைதல் அன்றும் அஞ்சுவன் (திருவாய்மொழி 8-1-9) என்று பகவதலாபத்தாலே கலங்கி பகவத் குளங்களிலும் ஸ்வரூபத்திலும்‌ அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தானத்தாலே அஞ்சின இவர்க்கு அவையும்‌ நிவ்ருத்தமாம்படி. (தலைச் சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்து (திருவாய்மொழி 5-7-10) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே” (திருவாய்மொழி 6-3-9) என்று உபாயமாக முன்னிவர்க்கு உபகரித்த தன்‌ திருவடிகளை “தாள்களை எனக்கே தலைத் தலைச்‌ சிறப்பத்‌ தந்த” (திருவாய்மொழி 8-1-10) என்று விஸத ஸ்ம்ருதி விஷயமாக்க அத்தை அநுஸந்தித்து அத்தால்‌ வந்த க்ருதஜ்ஞதைக்குப்‌ பலம்‌ ஸத்‌ருஸ ப்ரத்யுபகாரம்‌ பண்ணுகையாலே “உதவிக் கைமாறு என்னுயிர்‌ என்ன வுற்றெண்ணில்‌ அதுவுமற்றாங்கவன்றன்னது’ (திருவாய்மொழி 7-9-10) என்று கீழ்‌ ப்ரத்புபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி பகவதீயத் வாகார அநுஸந்தானத்தாலே நிவ்ருத்தரானவர்‌ இங்கு உபகார ஸ்ம்ருதியாலே வந்த கலக்கத்தாலே (வேந்தர்‌ தலைவன்‌ கந்யகா தாநம்‌ போலே ஆரத் தழுவி யறவிலை செய்த) “வேந்தர்‌ தலைவன்‌ சனகராசன் தன்‌ வேள்வியில்‌ கண்டாருளர்‌ ‘ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-1-2) என்கிறபடியே க்ஷத்ரியாக்‌ரேஸராய்‌ ஜ்ஞாநாதிகனான ஜநக சக்ரவர்த்தி மாஹேஸ்வரமான தநுர்பங்கம்‌ பண்ணின பெருமாளுடைய ஆண் பிள்ளைத் தனத்தைக்‌ கண்டு கலங்கி “விஷ்ணோஞஸ்ரீரநபாயிநீ”’ ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 1-17) “அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபா யதா,” (ரா) என்கிறபடியே ப்ருதக் ஸித்‌தி அநர்ஹையாய்‌ ததர்த்தமாக “ராக வத்வே அபவத்‌ ஸீதா” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-9-144) என்றவனுடைய அவதாராநுகூலமாக அவதரித்து நாச்சியாரை “இயம்‌ ஸீதா மம ஸுதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம்‌ பத்‌ரம்‌ தே பாணிம்‌ க்‌ரஹ்ணீஷ்வ பாணிநா” (ரா.பா. 73-26) என்று கந்யகா தாநமாக ஸமர்ப்பித்தாப் போலே ‘பேருதவிக்‌ கைம்மாறா தோள்களை ஆரத்‌ தழுவி என்னுயிரை அற விலை செய்தனன்‌” (திருவாய்மொழி 8-1-10) என்று ஸமர்ப்பணோந்முகரான வளவிலே தாளும்‌ தோளுமாகப்‌ பணைத்த வந்த ஆத்ம வஸ்துவை அவனுக்கு ப்ரத்யுபகாரமாக ஸமர்ப்பிக்க ஆ த்ம லாபத்தாலே தன்னதல்லாததொன்றை அதீவ விளங்கிப்‌ பணைத்து அவனும்‌ “அப்ரமேயம்‌ ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஐநகாத்மஜா” (ரா.ஆ. 37-18) என்று அவளைப்‌ பெற்று விளங்கினாப் போலே “சோதீ” (திருவாய்மொழி 8-1-10) என்றிவர்‌ பேசும்படி இவருடைய ஆத்ம லாபத்தாலே தன்னதல்லாத தொன்றைப்‌ பெற்றாப்‌ போலே அதீவ உஜ்ஜ்வலனாய்‌ “தோள்களாயிரத்தாய்‌ முடிகளாயிரத்தாய்‌ துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌ தாள்களாயிரத்தாய்‌ பேர்களாயிரத்தாய்‌” (திருவாய்மொழி 8-1-10) என்னும்படி அந்த ப்ரீதியாலே ஸதஸாகமாகப்‌ பணைத்து

227-எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற ஆலின்‌ மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின்‌ லயாதிகளைப்‌ போக்குமாபத்ஸகன்‌ ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக்‌ கூவுதல்‌ வருதலென்று முடுகவிட்டு ஏகமெண்ணிக்‌ காணக் கருதி எழ நண்ணி நினை தொறும்‌ உருகி யலற்றிக்‌ கவையில்‌ மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம்‌ ஒருபகல்‌ பொறுத்தவர்கள்‌ ஒரு மாஸ தின ஸந்த்‌யையில்‌ படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக்‌ கீடாக இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத்‌ தம்பிக்‌ கிட்டதாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப்‌ பெற்றவர்‌ இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக்‌ காட்டி மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌, அதில்‌ துர்பல புத்‌திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி, அதில்‌ அஸக்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி அதில்‌ அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌, ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும்‌ பாடியிடும்‌ தண்டனென்று கீதாசார்யனைப்‌ போலே அதிகாராநுகுணம்‌ நெறி யெல்‌லாம்‌ உரைக்கிறார்‌ ஒன்பதாம்‌ பத்தில்‌.

இப்படி அவாப்த ஸமஸ்த காமத்வத்தால்‌ வந்த நைரபேக்ஷ்யத்தாலே அபேக்ஷா நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத் தஸைகளிலே உதவி ரக்ஷிக்கும்‌ ஆபத் ஸகனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ ப்ரகாஸிப்பித்த ஆத்ம தர்ஸநத்துக்கு பலம்‌ ஸ்வ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யாநுபவமாய்‌ அவ்வநுபவத்திலுண்டான த்வரையாலே க்ஷண கால விளம்பம்‌ பொறுக்க மாட்டாமல்‌ ஆர்த்தரான இவர்க்கு ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே பேறாகக்‌ கடவதென்று நாளிட்டுக்‌ கொடுக்கப்‌ பெற்ற இவர்‌ கீழ்த்‌ தாமுபதேஸித்த ஹித வசநம்‌ கேட்டுத்‌ திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும்‌ விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே யதாதிகாரம்‌ ஸர்வோபாயங்களையும்‌ அருளிச் செய்கிறார்‌ என்கிறார்‌.

(எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற இத்யாதி,) “எண்டிசையும்‌ கீழும்‌ மேலும்‌ முற்றவும்‌ உண்ட பிரான்‌” (திருவாய்மொழி 9-1-1 “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ அவனே அஃதுண்டு மிழ்ந்தான்‌ அளந்தான்‌” (திருவாய் மொழி 9-3-2 “அகலிடம்‌ படைத் திடந்துண்டுமிழ்ந் தளந்து எங்கும்‌ அளிக்கின்ற ஆயன்‌” (திருவாய்மொழி 9-9-2) “ஆலின் மேலாலமர்ந்தான்‌’ (திருவாய்மொழி 9-10-1) என்று ஸகல லோகங்களையும்‌ ஸஹகாரி நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும்‌ என்கையாலே கீழ்ச் சொன்ன ஸத்ய காமத்வத்தால்‌ வந்த நைரபேக்ஷ்யத்தாலே “பாதோஸ்ய விஸ்வா பூதாநி திரிபாதஸ்யாம்ருதம்‌ திவி (புருஷ ஸூக்தம்‌) அந்த நித்யவிபூத்யேக தேஸமான லீலா விபூதிக்குண்டான ஆபத்துக்களிலே அபேக்ஷா நிரபேக்ஷமாக உதவித்‌ தன் பேறாக ரக்ஷிக்கும்‌ ஆபத் ஸகத்வனான ஸர்வேஸ்வரன்‌ (ஆருயிரென்னப்படுத்தின இத்யாதி.) “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்று என்னாத்மா பட்டது நித்ய விபூதியிலுள்ளாரா ரேனும்‌ பட்டாருண்டோ என்று இவர் தாமே பேசும்படி அவன் மேல் விழுந்து அநுபவிக்கைக்கு அடியாக கீழில்‌ பத்தில்‌ ஆத்ம ஸ்வரூபத்தை யதாவாகக்‌ கண்டவதுக்குப்‌ பலம்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யநுபவிக்கையாய்‌, அதிலே த்வரை விளைகையாலே “தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌” (திருவாய்மொழி 9-2-1 “பாத பங்கயமே தலைக்கணியாய்‌” (திருவாய்மொழி 9-2-2 “உன்‌ தாமரை மங்கையும்‌ நீயும்‌ இடங்கொள்‌ மூவுலகும்‌ தொழ இருந்தருளாய்‌” (திருவாய்மொழி 9-2-3), “கனிவாய்‌ சிவப்ப நீ காண வாராய்‌” (திருவாய்மொழி 9-2-4) “நின்‌ பன்னிலா முத்தம்‌ தவழ் கதிர்‌ முறுவல்‌ செய்து நின்‌ திருக் கண்‌ தாமரை தயங்க நின்றருளாய்‌” (திருவாய்மொழி 9-2-5) என்று என்னார்த்தி தீரத்‌ திருக் கண்களாலே குளிர நோக்கி யருள வேணும்‌, திருவடிகளை என்‌ தலையிலே வைத்தருள வேணும்‌, தேவரீரும்‌ பிராட்டிமாரும்‌ கூட எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குக்‌ காட்டி யருள வேணும்‌, என்‌ முன்னே நாலடி உலாவி யருள வேணும்‌, அநுகூல தர்ஸனத்திலே பிறக்கும்‌ ஸ்மிதம்‌ நான்‌ காண வேணும்‌, ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்‌, என்றிப்படி அநுபவ பரம்பரைகளை ஆசைப்பட்டு அது க்ரம ப்ராப்தமாகாமல்‌ கூவுதல்‌ வருதல்‌ செய்யாயே என்று நிரதிஸய போக்‌யமான உன்னுடைய திருவடிகளிலே நானும்‌ வந்தடிமை செய்யும்படி என்னை அங்கே அழைத்தல்‌ இங்கே வருதல்‌ செய்தருள வேணும்‌ என்று இப்படி முடுக விட்டு (ஏகமெண்ணி இத்யாதி) “கவையில்‌ மனமின்றி” (திருவாய்மொழி 9-8-3) “மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனம்‌ ஏகமெண்ணும்‌ இராப் பகலின்றியே” (திருவாய்மொழி 9-2-7) என்று அவன்‌ நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வ காலமும் ஏக ரூபமாக மநோ ரதித்து -காணாக் கருதும் என் கண்ணே (திருவாய்மொழி 9-4-1) என்று பெரிய பிராட்டியாரோடும்‌ திவ்யாயுதங்களோடும்‌ திவ்ய விக்‌ரஹத்தோடும்‌ கூடி யிருக்கிற அவனைக்‌ காண வேணுமென்று ஆசைப் பட்டு “எழ நண்ணி நாமும்‌ நம்‌ வானநாடனோடொன்றினோம்‌” (திருவாய்மொழி 9-5-10) என்று ஸ்மாரக பதார்த்த, தர்ஸநத்திலே நோவு படுகையாலே முடிந்து போகையிலே ஒருப்பட்டு “நினைதொறும்‌ சொல்லுந்‌ தொறும்‌ நெஞ்சிடிந்துகும்‌” (திருவாய்மொழி 9-6-9) “உருகுமால்‌ நெஞ்சம்‌ உயிரின்‌ பரமன்றி பெருகுமால்‌ வேட்கையும்‌” (திருவாய்மொழி 9-6-1) என்று, அவனுடைய அனுபவத்தை நினைக்கும் தொறும்‌ அநுபவ உபகரணமான நெஞ்சானது ஸிதிலமாய்க்‌ கரைய “தக்கிலமே கேளீர்கள்‌” (திருவாய்மொழி 9-7-2 )என்று ஆள் விட்டு “திளிமொழியாளலற்றிய சொல்‌” (திருவாய்மொழி 9-7-111) என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக்‌ கூப்பிட்டு “கவையில்‌ மனமின்றிக்‌ கண்ணீர்கள்‌ கலுழ்வன்‌’ திருவாய்மொழி 9-8-3) என்று இருதலைத்த நெஞ்சின்றிக்கே கண்ணீர்‌ காட்டாறு போலே பெருக (பதினாலாண்டு இத்யாதி, இரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப்‌ பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான்‌ அந்த அவதி கழிந்த ஒருநாள்‌ பட்ட க்லேஸமும்‌, பத்து மாஸம்‌ பிரிந்து பொறுத்திருந்த பிராட்டி “மாஸாதூரர்த்‌வம்‌ ந ஜீவிஷ்யே” (ரா.ஸு. 40-10) என்று ஒரு மாஸத்தில்‌ பட்ட க்லேஸமும்‌, க்ருஷ்ணன்‌ பசு மேய்க்கப்‌ போக ஒரு பகலெல்லாம்‌ அவனைப்‌ பிரிந்து பொறுத்திருந்த ஸ்ரீகோபிமார்‌ ஸந்த்‌யா காலத்திலே பசுக்களின்‌ முற் கொழுந்திலே காணாமல்‌ அவர்கள்‌ பட்ட க்லேஸமுமெல்லாம்‌ அவனை “விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச்‌ சடகோபன்‌” என்று ஒரு க்ஷணத்திலே யாம்படி யீடுபடுகிற தம்முடைய த்வரைக்கீடாக (இனிப்‌ பத்திலொன்று தஸம தஸையிலே பேறென்று) “நயந ப்ரீதி: ப்ரதமம்‌ சித்தா போகஸ்‌ ததோநு ஸங்கல்ப: நித்‌ராச் சேதஸ்‌ தநுதா விஷய விரக்திஸ்‌ த்ரபாநாமா: உந்மாதோ, மூர்ச்சா மரணம்‌ இத்யேதா ஸ்மரதஸா தஸைவ ஸ்யு:, ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத்‌ த்‌விதீயம்‌ சிந்தநம்‌ பவேத்‌ அநுஸ்ம்ருதிஸ்‌ த்ருதீயந்து சதுர்த்தம்‌ குண கீர்த்தநம்‌ உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாத.ஸ்‌ ஸப்தமோ ஜ்ஞோய: அஷ்டமோ வ்யாதி ருஸ்யதே நவமே ஜடதா சைவ தஸமம்‌ மரணம்‌ ததா,” என்று காமுகராயிருப்பார்க்கு தஸமமாவஸ்தையிலே மரணமாமா போலே நம் பக்கல்‌ பரபக்தி யுக்தரான உமக்கு நம்மைப்‌ பெறா விடில்‌ முடியும்படி பரம பக்தி தஸையான பத்தாம் பத்திலே பெறக் கடவதென்று

(நாட் கடலாகத்‌ தம்பிக்கிட்ட தாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர்‌) “நாட்கடலைக்‌ கழிமினே” (திருவாய்மொழி 1-6-7) என்று ஒரு நாள்‌ ஒரு கடல்‌ போலே விஸ்லேஷ வ்யஸநத்தாலே துஸ்தரமாம்படி ‘பூர்ணே சதுர்தமே வர்ஷே” (ராயு. 127-1 என்று தம்பியான ஸ்ரீ பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக்‌ கொடுத்தாப் போலே யன்றியே “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” (நாச்சியார்‌ திருமொழி 6-2) என்று இன்றென்னில்‌ வெள்ளக்கேடாம்‌ சிலநாள்‌ கழித்தென்னில்‌ வறட்கேடாமென்று “நாளை” என்று நாச்சியார்க்கு நாளிட்டாற் போலே “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவதியாக அவனாலே நாளிட்டுக்‌ கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டரான இவர்‌ (இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட இத்யாதி, ப்ரதி ஸம்பந்‌தியைக்‌ காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாக தாமருளிச் செய்த ஹித வசநம்‌ கேட்டுத்‌ திருந்தனவர்களை யொழிய அல்லாதாரையும்‌ விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம் மடவுலகர்‌’ (திருவாய்மொழி 9-2-7 என்று ஸம்ஸாரத்தில்‌ அறிவு கேடரானவர்களையும்‌ பார்த்து, “கொண்ட பெண்டிர்‌’ (திருவாய்மொழி 9-1-1 என்று தொடங்கி த்‌ரவ்யாதிகளாலே ஸம்பாதிக்கப்‌ பட்டு ஸந்நிதி யிலே ஸ்நேஹித்திருக்கு மதொழிய காணாத போது ஸ்நேஹமொன்று மின்றிக்கே மிருக்கிற புத்ரதாராதிகள்‌ பந்துக்களன்று ப்ரளயாபத் ஸகனானவனே பரமபந்து வென்று துணையும்‌ சார்வும் (திருவாய்மொழி 9-1-2) இத்யாதி “பொருள்‌ கை” (திருவாய்மொழி 9-1-3) இத்யாதி, “அரணமாவர்‌” (திருவாய்மொழி 9-1-4) இத்யாதி, அவனை யொழிந்தார்‌ தாங்கள்‌ உபகாரகரைப் போலே ப்ரயோஜநமுள்ள போது பந்துக்களாய்க்‌ கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பர்கள்‌. ஆகையாலே இவர்கள்‌ ரக்ஷகரல்லர்‌. நிர்ஹேதுகமாக ஆபத் ஸகனான க்ருஷ்ணனை யொழிய வேறு ரக்ஷகரில்லை. “சதிரம்‌’” (திருவாய்மொழி 9-1-5) இத்யாதி தங்களுக்கு போக்‌யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள்‌ ஆபத்து வந்தவாறே உபேஷிப்பர்கள்‌. ஏக ப்ரகாரமாக ஸ்நிக்‌தனா யிருப்பானவனே. ஆனபின்பவனே நிரதிஸய போக்‌யன்‌. “இல்லை கண்டீர்‌ இன்பம்‌” (திருவாய்மொழி 9-1-5) என்று துக்க மிஸ்ரமான சிலவற்றை ஸுக மென்று ப்‌ரமிக்கிற வத்தனை போக்கி அவனை யொழிய ஸுக ரூபமாயிருப்ப தொன்றில்லை. “யாதுமில்லை” (திருவாய்மொழி 9-1-9) இத்யாதி. இவனை யொழிய வேறே யொருவனை ரஷகமென்று பற்றினவர்கள்‌ பண்டை நிலையுங்‌ கெட்டு அநர்த்த ப்பட்டுப்‌ போவர்கள்‌; ஆன பின்பு அவனை யொழிய உபாயமில்லை என்று அவனை யொழிந்த வற்றினுடைய அபாந்துத்வத்தையும்‌, அரக்ஷகத்வத்தையும்‌, அபோக்யத்வத்தையும்‌, அஸுகத்வத்தையும்‌, அநுபாயத்வத்தையும்‌ அவர்களுக்கு உபதேஸித்து (மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌)”மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌”திருவாய்மொழி 9-1-7) என்று இதுக்கு மேலொன்று இன்றியிலே யிருப்பதாய்‌ ஸம் ஷேபேண வுபதேஸிக்கலாம் படியுமாய்‌ ஸர்வாதிகாரமுமாய்‌ ஸ்வரூபாநுரூபமுமாய்‌ ஸுகரமுமாய்‌ நிரதிஸய போக்‌யமுமாய்‌ “கண்ணனல்லா லில்லை கண்டீர்‌ சரண்‌” (திருவாய்மொழி 9-1-9 என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66) என்று திருத் தேர்த்தட்டிலே நின்றருளிச் செய்த க்ருஷ்ணனை யொழிய வேறு நிரபேக்ஷோபாயமில்லை. இவ்வுபாயந்தான்‌ “வைகல்‌ வாழ்தல்‌ கண்டீர்‌ குணம்‌” (திருவாய்மொழி 9-1-7) என்று யாவதாத்ம பாவி யநுபவம்‌ என்று ஸித்‌தோபாயத்தை அவர்களுக்குபதேஸித்தும்‌ (அதில் துர்பல புத்‌தி களுக்கு) “ஸக்ருதேவஹி ஸமாஸ்த்ரார்த்த,: தப்நாம்‌ பயநா முக: நராணாம்‌ புத்தி தெளர்பல்யாத்‌ உபாயாந்தர மிஷ்யதே” என்று அந்த ஸித்‌தோ பாயத்தில்‌ மஹா விஸ்வாஸம்‌ பிறக்கைக் கடியான பாக்‌யமின்றிக்கே ஸாத்‌யங்களான உபாயாந்தரங்களில்‌ ருசி குலையாமையாலே அவன்‌ பல ப்ரதனாமோ என்று புத்‌தி தெளர்ப்பல்ய முடையார்க்கு (மாலை நண்ணிக்‌ காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி) “மாலை நண்ணித்‌ தொழுதெழுமினோ காலை மாலை கமல மலரிட்டு நீர்‌” (திருவாய்மொழி 9-10-1) “விண்டு வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” (திருவாய்மொழி 9-10-3) “தேனை வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” (திருவாய்மொழி 9-10-4) “தனதன்பர்க்கு” (திருவாய்மொழி 9-10-5) என்று நிரதிஸய ப்ரீதி யுக்தராய்க்‌ கொண்டு ஸர்வ காலமும்‌ புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அவனை ஸமாராதநம் பண்ணி அவன்‌ பக்கலிலே பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று அங்க ஸஹிதையான பக்தியை உபதேஸித்தும்‌ (அதிலஸத்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி) அதில்‌ துஷ்கரத்வத்தாலே அநுஷ்டிக்க ஸக்தி இல்லாதார்க்கு “சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று ஸர்வாதிகாரமுமாய்‌ ஸரீராவஸாநத்திலே பலமுமான ப்ரபத்தியை வெளியிட்டும்‌ (அதிலஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌) உபாய பல்குத்வம்‌ பல கெளரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற ஸங்கா த்ரயத்தாலே அதில்‌ வ்யவஸாயத்துக் கடியான ஸக்தி யில்லாதார்க்கு “திருக்கண்ணபுரம்‌ சொல்ல நாளும்‌ துயர்‌ பாடு சாராவே” (திருவாய்மொழி 9-10-10) என்று உச்சாரண மாத்ரத்தை வெளியிட்டும்‌ (ஸர்வோபாயர்க்கும்‌ இப்பத்தும் பாடியிடும்‌ தண்டனென்று) கீழ்ச் சொன்ன உபாயாங்க ளெல்லாவற்றிலும்‌ அயோக்‌யராயிருப்பார்க்கு“இப்பத்தும்‌ பாடியாடிப்‌ பணிமின்‌ அவன்‌ தாள்களே” (திருவாய்மொழி 9-10-11 )என்று இத் திருவாய்மொழியை ப்ரீதி ப்ரேரிதராய்க்‌ கொண்டு பாடி அவன்‌ திருவடிகளிலே விழுங்கோளென்று கீதோபநிஷதா சார்யன்‌ தன்‌ பரம க்ருபையாலே“நெறி யெல்லாம்‌ எடுத்துரைத்த” (திருவாய்மொழி 4-8-6) என்கிறபடியே ருச்யநுகுணமான உபாயங்கள்‌ எல்லாவற்றையும்‌ வெளியிட்டாற் போலே இவர்‌ தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஸம்ஸாரிகள்‌ இழக்க வொண்ணாதென்று பார்த்து அவ்வவருடைய அதிகாராநுகு ணமாந உபாயங்கள்‌ எல்லாவற்றையும்‌ வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

228-சுரிகுழல்‌ அஞ்சனப்‌ புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக்‌ காயாவென்னும்‌ ஆபத்திற் கொள்ளும்‌ காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன்‌ அருள் பெறும்‌ போதணுக விட்டதுக்குப்‌ பலமான வானேறும்‌ ௧திக்கு அண்ட மூவுலகும்‌ முன்னோடிக்‌ கால்‌ விழுந்திடத்தே நிழல்‌ தடங்களாக்கி அமுதமளித்த தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே வேடன்‌, வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம்‌, இடைச்சி, இடையர்‌, தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர்‌, பிணவிருந்து, வேண்டடிசில்‌ இட்டவர்‌, அவன் மகன்‌, அவன் தம்பி, ஆனை, அரவம்‌, மறையாளன்‌, பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன்‌ பெருங்கூட்டம்‌ நடத்தும்‌ ஆத்தனை வழித் துணையாக்கி அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல்‌ போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்‌ ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தஸையானவாறே முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து, வலம்‌ செய்து எண்ணுமின்‌ பேசுமின்‌ கேண்மின்‌ காண்மின்‌ நடமின்‌ புகுதுமென்று கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டுப்‌ பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து எண்பெருக்கிலெண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி மாதவனென்று த்‌வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்துச்‌ செஞ்சொற் கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு மனம்‌ திருத்தி வீடு திருத்தப்‌ போய்‌ நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம்‌ தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம்‌ புறப்பட்ட வாக்கையிலே புக்குத்‌ தான நகர்களை அதிலே வகுத்துக்‌ குரவை துவரைகளில்‌ வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம்‌ அறிவித்து மாயையை மடித்து வானே தரக்‌ கருதிக்‌ கருத்தின் கண்‌ பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்‌ யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க இந்த்‌ரிய கிங்கரராய்க்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌, அவை யாவரையும்‌ அகற்ற நீ வைத்தவை யென்பர்‌; அது தேஹ யோகத்தாலே யென்னில்‌ அந் நாள்‌ நீதந்த சுமடென்பர்‌: முன் செய்த முழு வினையாலே என்னில்‌, அது துயரமே உற்ற விருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌ ; ஈவிலாத மதியிலேன்‌ என்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில்‌, ஆங்காரமாய்ப்‌ புக்குச்‌ செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌; யானே எஞ்ஞான்றும்‌ என்றத்தாலே யென்னில்‌; அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழிலென்பர்‌: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்‌; தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌; ஸெளஹார்தம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌; பிணக்கிப்‌ பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில்‌ அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள்‌ நம்மது; நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌; நெறி காட்டி அருகும்‌ சுவடும்‌ போலே இதுவும்‌ நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம்‌ போலே ஏறப்‌ பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத்‌ தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு போகாமல்‌ தடுத்துத்‌ திருவாணை யிட்டுக்‌ கூசம்‌ செய்யாத செய்திப்‌ பிழை பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; புறம் போனால்‌ வருமிழவு, உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம்‌, உயிருறவு முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல்‌ போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌.

ஆபத் ஸகனாகையாலே ப்ரபந்நரானவர்களுடைய ஆபத்துக்களிலே ஸூபாஸ்ரயமாய்‌ அஸாதாரணமான திருமேனியோடே வந்துதவி அவர்களுடைய தாபங்களைப்‌ போக்கும்‌ ஆர்த்த ஹரனானவன்‌ கீழில்‌ பத்தில்‌ இவர் த்வரைக்கீடாக அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததற்குப்‌ பலம்‌ அர்ச்சிராதி, கதியாலே துணை பெற்றுப்‌ போகை யாகையாலே அதுக்கு ஆப்தனானவன்‌ தன்னையே துணையாகப்‌ பற்றி ப்ராப்தி நிஸ்சிதமென்ற போக்கிலே ஒருப்பட்ட இவர்‌ தாம்‌ தஞ்சமாக நினைத்திருந்த வர்த்தமும்‌ பேசியிடும்படியான தஸையானவாறே முற்பட்ட உபதேஸ விஷயமான திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து-அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்வ்யாதிகளை வெளியிட்டு முதலிலே உபக்ரமித்த பக்தி ப்ரபத்திகளையும்‌ நிகமித்து ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆஸ்ரயணத்தை உபதேஸித்து அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு பல் குணமாகிற ஆழங்காலையும்‌ காட்டித்‌ தம் பக்கல்‌ வ்யாமுக்‌தனான ஈஸ்வரனுக்குத்‌ தம்முடைய திருமேனியில்‌ தமக்குண்டான உபேக்ஷையை வெளியிட்டு இப்போது தமக்குப்‌ பரதந்த்ரனாய்‌ நிற்கிறவவனை அநாதி காலம்‌ தம்மைக்‌ கைவிட்டதுக்கு ஹேதுவென் னென்று கேட்க அவனும்‌ இந்த்‌ரிய வஸ்யதை தொடக்கமான ஹேது பரம்பரைகளை யெண்ணி அதுவும்‌ ததாயத்தமென்றறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்குப்‌ போக்கிடம்‌ சொல்லுகை யரிதென்று நிருத்தரனாய்‌ அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும்‌ காட்டிக் கொடுக்க அத்தை ஸாக்ஷாத்கரித்தவிவர்‌ அதுவும்‌ மாநஸாநுபவமாய்‌ பாஹ்யகரண யோக்‌ய மல்லாமையாலே அவனுக்கு மறுக்க வொண்ணாத வாணையிட்டுத்‌ தடுத்து அது பெறாவாணை யல்லாமைக்கு ஹேதுக்களைச்‌ சொல்லும்படியான தம்முடைய பரமபக்தி யெல்லாம்‌ குளப்படியாம்படியான அபி நிவேஸத்தோடே வந்து தம்முடைய தாபத்தைப்‌ போக்கிப்‌ பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடுத்தபடியை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌ பத்தாம் பத்தில்‌.

(சுரிகுழலஞ்சனப்புனலித்யாதி, ப்ரபந்நார்த்த்ஹரனான ஸர்வேஸ்வரன்‌) “சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌” (திருவாய்மொழி 10-1-1) “அணிக்கொள்‌ நால்தடந்தோள்‌” (திருவாய்மொழி 10-1-9) “மணிமிகு மார்பு அணிமிகு தாமரைக்‌ கை” (திருவாய்மொழி 10-3-5) “கைகளும்‌ பீதகவாடையும்‌” (திருவாய்மொழி 10-3-8) “செங்கமலவண்ண மென்மலரடி” (திருவாய்மொழி 10-3-7) “மணிநின்ற சோதி” (திருவாய்மொழி 10-4-7) “அஞ்சன மேனி” (திருவாய்மொழி 10-3-3) “புனல்‌ மைநின்றவரை போலும்‌ திருவுருவம்‌” (திருவாய்மொழி 10-6-8) “பொல்லாத்‌ தாமரைக்கண்‌ கருமாணிக்கம்‌” (திருவாய்மொழி 10-10-1 “புனக்காயா நிறத்த” (திருவாய்மொழி 10-10-6) “நீரார்‌ முகில்‌ வண்ணன்‌” (திருவாய்மொழி 10-5-8) “கார்‌ மேகவண்ணன்‌” (திருவாய்மொழி 10-4-1 “மெய்ந்நின்று கமழ்‌ துளப விரையேறு திருமுடியன்‌” (திருவாய்மொழி 10-6-8) “திகழ்கின்ற திருமார்பில்‌ திருமங்கை” (திருவாய்மொழி 10-6-9) “அணிநின்ற செம்பொன்‌ அடலாழி” (திருவாய்மொழி 10-4-7) “காமனைப்‌ பயந்த காளை” (திருவாய்மொழி 10-2-8) என்று அவயவங்களோடும்‌ ஒளதார்யம்‌ முதலான குணங்களோடும்‌ ஸ்ரக்‌ வஸ்த்ர ஆபரண ஆயுதங்களோடும்‌ கூடி “காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான்‌” (திருவாய்மொழி 10-1-10) என்று ஆஸ்ரிதருடைய ஆபத்‌ ரக்ஷணத்துக்கு அநுரூபமாகக்‌ கொள்ளும்‌ விக்‌ரஹங்களுக்கெல்லாம்‌ கந்த மாய்‌ ஸூபாஸ்ரயமான அந்த விக்‌ரஹத்தை யுடையனாய்க்‌ கொண்டு தன் பக்கல்‌ ந்யஸ்த பரரானவர்களுடைய ஆர்த்தியைத்‌ தீர்க்கையாலே ப்ரபந்நார்த்த ஹரனான ஸர்வேஸ்வரன்‌ (அருள்பெறும்போதணுக விட்டதித்யாதி, தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே) “அவனுடையருள்பெறும்‌ போதரிதால்‌ அவனருள்‌ பெருமளவாவி நில்லாது” (திருவாய்மொழி 9-9-6) என்று கீழில்‌ பத்திலே க்ஷண கால விஸ்லேஷம்‌ பொறாமை ஆர்த்தரான இவ்வாழ்வார்க்கு “மரணமானால்‌’” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே உமக்கு மோக்ஷம்‌ தருகிறோம்‌ என்று அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததுக்குப்‌ பலம்‌ வானேற வழிதந்த” (திருவாய்மொழி 10-6-5) என்று அவன்‌ காட்டிக்‌ கொடுத்த அர்ச்சிராதி மார்க்கத்துக்குத்‌ துணை பெற்றுப்‌ போகையாலே இவரை இவ் வழியாலே கொடு போவதாக ராஜ குமாரன்‌ போம் போது நிலவரானார்‌ முன்னே போய்‌ நிலம்‌ சோதித்து நிழலாம்படி சோலை செய்து தடாகங்கள்‌ சமைத்து வைத்துப்‌ பின்‌ கொண்டு போவரைப்‌ போலே “அண்டமூவுலகளந்தவன்‌” (திருவாய்மொழி 10-1-5) என்று திருவுலகளக்க என்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம்‌ ஸோதித்து “அவனடி நிழல்‌ தடமன்றி யாமே” திருவாய்மொழி 10-1-2) என்று காளமேகமான தன் கால்‌ விழுந்த விடத்தே நிழலும்‌ தடாகமுமாம்படி பண்ணி அமுதமளித்த பெருமானாகையாலே “பாதேயம்‌ புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்‌” (காருடம்‌) என்றிவர்க்கு பாதேயமாகத்‌ தன்‌ திவ்ய குணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய்‌ “தயரதன்‌ பெற்ற மரதக மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்றும்‌ “கூத்தன்‌ கோவலன்‌” (திருவாய்மொழி 10-1-6 என்றும்‌ சக்ரவர்த்தி திருமகனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ வந்தவதரித்தவனாகையாலே. (வேடன்‌ வேடு வச்சி என்று தொடங்கி – ஆத்தனை வழித்துணையாக்கி) “உகந்த தோழன்‌ நீ” (பெரிய திருமொழி 5-8-1) என்று பெருமாளுடைய ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனான ஸ்ரீகுஹப்‌ பெருமாள்‌, “சஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு நந்தந” (ரா. ஆ. 74-14) என்று அவன்‌ கடாக்ஷ லஷ்ய பூதையான ஸபரீ, “யா கதிர்‌ யஜ்ஞ ஸீலாநாம்‌ ஆஹிதாக்‌ நேசயா க,தி: அபரா வர்த்திநாம்‌ யாச யாச பூமி ப்ரதாயிநாம்‌ மயா த்வம்‌ ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாதநநுத்தமாந்‌” (ரா.ஆ. 68-29, 30) என்று விஷயீ கரிக்கும்படியான ஸ்ரீஜடாயு மஹாராஜர்‌, “ராமபாணாஸந ஷிப்தமாவஹத்‌ பரமாங்கதிம்‌” (ரா. ஸு. 17-8) என்னும்படியான வாலி ஸுக்ரீவ மஹாராஜர்‌ தொடக்கமான வாநர ஸேநைகள்‌ அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌, “சிந்தயந்தீ ஜகத் ஸூதிம்‌ பரப்‌ரஹ்ம ஸ்வரூபிணம்‌ நிருச்வாஸ தயா முக்திம்‌ க.தாந்யா கோப கந்யகா” என்னும்படி இடைச்சியான சிந்தயந்தி ததி பாண்டன்‌, அவனுடைய தயிர்த்தாழி, “ஸுகந்த மேதத்‌ ராஜார்ஹம்‌ ரசம்‌ ருசிராநநே ஆவயோர்காத்ர ஸத்‌ருஸம்‌ தீ,யதா மநுலேபநம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-20-6) என்று விஷயீகரிக்கும்படியான கூனி, “தர்மே மநஸ் ச தே பத்ர ஸர்வ காலம்‌ பவிஷ்யதி யுஷ்மத்‌ ஸந்ததி ஜாதாநாம்‌ தீர்க்க மாயுர்‌ பவிஷ்யதி” ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 5-9-26) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீமாலாகாரர்‌ “நவம்‌ ஸவமிதம்‌ புண்யம்‌ வேத பாரக மச்யுத யஜ்ஞ ஸீல மஹா ப்ராஜ்ஞ ப்‌ராஹ்மணம்‌ ஸவமுத்தமம்‌” (ஹரிவம்சம்‌) என்று பிணவிருந்திட்ட கண்டாகர்ணன்‌, “வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்‌ கொள்ளும்‌” (நாச்சியார்‌ திருமொழி 12-6) பத்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகள்‌, “மீளவவன்மகனை” (பெரியாழ்வார்‌ திருமொழி 1-5-2) என்று ஹிரண்ய புத்ரனான ஸ்ரீப்ரஹ்லாதன்‌, “அவன்‌ தம்பிக்கு” (பெருமாள்‌ திருமொழி 10-7) என்று ராவணாநுஜனான ஸ்ரீவிபீஷணப் பெருமாள்‌, ஸ்ரீகஜேந்த்‌ராழ்வான்‌, “நஞ்சு சோர்வதோர்‌ வெஞ்சினவரவம்‌” (பெரிய திரு மொழி 5-8-4) எனகிற ஸுமுகன்‌, “மலரடி கண்ட மாமறையாளனான (பெரிய திருமொழி 58-5] கோவிந்த ஸ்வாமி, “மாமுனி பெற்ற மைந்தன்‌” (பெரிய திருமொழி 5-8-6) என்று ம்ருகண்டு புத்ரனான மார்க்கண்டே,யன்‌ இவர்கள்‌ தொடக்கமான பதினெட்டு நாட்டிலுள்ள அநுகூல வர்க்கமான பெருங்கூட்டத்தை அர்ச்சிராதி மார்க்கத்தாலே தானே துணையாய்க்‌ கொண்டு நடத்துகிறவனாய்‌ “திருமோகூராத்தன்‌ தாமரையடியன்றி மற்றொன்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1) என்று பரமாப்தனான காளமேகத்தை வழித் துணையாகப்‌ பெற்று (அறியச்‌ சொன்ன ஸூப்ரபாதத்தே) “நாமுமக்கறியச்‌ சொன்ன நாள்களும்‌ நணியவான” (திருவாய்மொழி 10-2-9) “மரணமானால்‌” (திருவாய்மொழி 9-10-35) என்று அவனறுதி யிட்டுத்‌ தந்தானாய்‌ நான்‌ உங்களுக்குச்‌ சொன்ன நாள்‌ கிட்டிற்றென்று பிறர்க்கும்‌ பேசும்படியாய்‌ “ஸுப்ரபாதா ச மே நிஸா ” (ஸ்ரீவிஷ்ணுபுரானம்‌ 5-17-3) “ஸுப்ரபா தாத்‌ய ரஜநீ மது,ராவாஸ யோஷிதாம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-18-24) என்று பகவத் ப்ராப்தி அணித்தான நல்விடிவான நாளிலே (துணை பிரியாமல்‌ போக்கொழிந்து மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவிவர்‌) “துணை பிரிந்தார்‌ துயரமும்‌ நினைகிலை பசுமேய்க்கப் போகேல்‌” (திருவாய்மொழி 10-3-4) “என்‌ கை கழியேல்‌” (திருவாய்மொழி 10-3-8) “பசுநிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன (திருவாய்மொழி 10-3-11) என்று தமக்குத்‌ துணையாக அவனை பசு மேய்க்கப்‌ போகையாகிற அபிமதத்தில்‌ நின்றும்‌ தவிர்த்து “மீள்கின்றதில்லை பிறவித்துயர்‌ கடிந்தோம்‌” (திருவாய்மொழி 10-4-3 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்‌’ (திருவாய்மொழி 10-4-4) என்று ஸம்ஸார துரிதம்‌ மறுவலிடா தென்று “நபி, பேதி குதஸ்சந’ (தைத்திர்யோபநிஷத்‌ என்கிறபடியே ஒன்றுக்கும்‌ அஞ்சாதபடி நிஸ்சித்திருந்த விவர்‌ (ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தமையானவாறே) மரணாவஸ்தைகளிலே ஸஞ்சிதமாய்ப்‌ புதைத்துக்‌ இடந்த நிதிகளைப்‌ புத்ராதிகளுக்குக்‌ காட்டுவாரைப்‌ போலே தமக்கு ப்ராப்தி யணித்தானவாறே ஒருவரும்‌ இழக்க வொண்ணாது இவ்வளவிலே எல்லார்க்கும்‌ ஹிதாஹிதங்களை அறிவிக்க வேணுமென்று பார்த்து, (முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணியித்யாதி க்ருத்யாக்ருத்யங்‌களை விதித்து) “தொழுதெழென்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) என்று ப்ரதமத்திலே உபதேஸிக்கும்படி பகவத்‌ விஷயத்திலே தம்மிலும்‌ முந்துற்று நிற்கிற தம்முடைய திருவுள்ளத்தைப்‌ பார்த்து, “பணிநெஞ்சே நாளும்‌ பரமபரம்பரனை (திருவாய்மொழி 10-4-7) “வாழியென்‌ நெஞ்சே மறவாது வாழ்கண்டாய்‌” (திருவாய்மொழி 10-4-8) “மருளொழி நீ மடநெஞ்சே” (திருவாய்மொழி 10-6-1 “நரகத்தை நகு நெஞ்சே” (திருவாய்மொழி 10-6-5 “வாழி மனமே கைவிடேல்‌” (திருவாய்மொழி 10-7-9 என்று நம்‌ ப்ரதிபந்தகங்களை யெல்லாம்‌ தானே போக்கி அடிமை கொள்ளும்‌ ஸர்வஸ்மாத்‌ பரனை அநுபவிக்கப்பார்‌. உனக்கிந்த ஸம்ருத்‌தி மாறாதே சென்றிடுக கைபுகுந்ததென்னா இதர விஷயங்களிலே செய்யுமத்தை இவ் விஷயத்திலும்‌ செய்யாதே கிடாய்‌. இன்பம்‌ பயக்கவிலே ‘ திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கை தொழக்கூடுங்கொலோ” (திருவாய்மொழி 7-10-9)என்று ப்ராப்ய வஸ்து கிட்டிற்றாகில்‌ இங்கே யடிமை செய்ய வமையாதோ வென்று ப்‌ரமிப்பதொன்றுண்டு; உனக்கு அத்தைத்‌ தவிரப் பார்‌. உத்தேஸ்ய வஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று அத்தையே பார்க்குமத்தனையோ, நம்மைப்‌ பார்க்க வேண்டாவோ நான்‌ பரமபதத்தேறப்‌ போகா நின்றேன்‌. நெடுநாள்‌ நம்மைக்‌ குடிமக்களாக்கி எளிவரவு படுத்தின ஸம்ஸாரத்தைப்‌ புரிந்து பார்த்து சிரித்துப்‌ போரு கிடாய்‌; நமக்கு இந்த ஸம்பத்தெல்லாம்‌ திருமலையாழ்வாராலே வந்ததாய்த்து. அத்திருமலையைக்‌ கைவிடாதேகொள்‌ என்று க்ருத்யாக்ருத்யங்களை அவஸ்ய கரணீயமாம்‌ படி விதித்து (நெஞ்சு போல்வாரைத் தொண்டீரென்றழைத்து) திருவுள்ளம்‌ போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர்‌ வம்மின்‌” (திருவாய்மொழி 10-1-4) என்று அழைத்து (வலஞ்செய்தித்யாதி நடமின்‌ புகுதுமின்‌ என்று) கொண்ட “கோயிலை வலஞ்செய்திங்காடுதும்‌ கூத்தே” (திருவாய்மொழி 101-5) “எண்ணுமின்‌ எந்தை நாமம்‌” (திருவாய்மொழி 10-2-5) “பேசுமின்‌ கூசமின்றி” (திருவாய்மொழி 10-2-4) “நமர்களோ சொல்லக் கேண்மின்‌” (திருவாய்மொழி 10-2-8)பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் (திருவாய்மொழி 10-2-1)அனந்தநகர் புகுதுமின் (திருவாய்மொழி 10-2-1) என்றும் அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணுங்கோள் -ஸ்வாமியுடைய திரு நாமங்களை அநுஸந்தியுங்கோள்‌; உங்கள்‌ அயோக்‌யதை பார்த்துக்‌ கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணி வர்த்திக்கதிறவனைப்‌ பேசுங்கோள்‌; என்னோடு ஸம்பந்த முடையரானார்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேளுங்கோள்‌: திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளைக்‌ காணப்‌ போருங்கோள்‌; இச்சை பிறந்த இன்றே அங்கே போய்ப் புகப்‌ பாருங்கோள்‌ என்று அவர்களுக்குக்‌ கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டு (பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்துக்‌ கொண்டு) உக்த நிகமநம்‌ பண்ணுகை ஸாஸ்த்ரமாகையாலே முதலிலே “பிணக்கற” என்கிற பாட்டில்‌ “வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்று உபக்ரமித்த ஸாத்‌ய ஸித்‌த ரூபமான பக்தி ப்ரபத்திகளாகிற உபாயத்தையும்‌ சார்வே தவநெறியிலே “சார்வே தவ நெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌” (திருவாய்மொழி 10-4-1 என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) “இருமை வினைகடிந்து இங்கென்னை யாள்கின்றான்‌” (திருவாய்மொழி 10-4-2) என்று நிகமித்துக்‌ கொண்டு ( எண் பெருக்கில்‌ எண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி) “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ “திண்ணம்‌ நாரணமே” (திருவாய்மொழி 10-5-1) என்றும்‌ பக்திக்காலம்பநமாக உபதேஸித்த திருமந்தரத்திலர்த்தத்தையும்‌ ஸப்‌தத்தையும்‌ பரவாதபடி சுருக்கிக்‌ கொண்டு (மாதவன்‌ என்றென்று த்‌வயமாக்கி) “ மாதவனென்றென்று ஓத வல்லீரேல்‌” (திருவாய்மொழி 10-5-7) என்று அந்தத் திருநாமத்தினுடைய விதாநுஸந்தாநமான த்‌வயத்தையும்‌ வெளியிட்டு (கரண த்ரயமித்யாதி, கையோலை செய்து கொடுத்து )ஈஸ்வரன் தம்மைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும்‌ கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்திக்கு விஷயமாம்படியாகவும் சுருங்கக் கொண்டு அநுஷ்டாநார்த்த ப்ரகாஸகமான ப்ரயோக விருத்தி போலே பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே” நெடியானே” (திருவாய்மொழி 10-5-5) “சுனைநன்‌ மலரிட்டு நினைமின்‌ (திருவாய்மொழி 10-5-10) என்று கரண த்ரயத்தாலுமுண்டான ஆஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து (செஞ்சொற்கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாள்‌ உயிர்காத்தாட்செய்மின்‌” (திருவாய்மொழி 10-7-1) என்று அவனுக்கு அடிமை செய்வார்‌ ஸீலாதிகளிலே அகப்படாதே கொள்ளுங்கோள்‌, அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு அரணழியாமல்‌ கள்ள வழி காவலிடுவாரைப்‌ போலே ஸீல குணமாகிற ஆழங்காலிலே இழியாதே கொள்ளுங்கோள்‌ என்று உபதேஸித்து (மனந்திருந்தி யென்று தொடங்கி தேஹதோஷமறிவித்து) “தன்பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி வீடு தருத்துவான்‌’ (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே பரமபதத்தைக்‌ கொடுப்பதாகப்‌ போய்‌ அலங்கரித்து அவன்‌ வரக் கொள்ள “ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்று இவருபதேஸத்தாலே லோகமாகத்‌ திருந்த இவரை வைத்த கார்யம்‌ தலைக் கட்டினவாறே “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரித்து இவருடைய ஸரீரம்‌ சரம ஸரீரமாகையாலே அதில்‌ தனக்குண்டான வ்யாமோஹத்தாலே இவரைக்‌ கொண்டு போகையையும்‌ மறந்து “கோவிந்தன்‌ குடி கொண்டான்‌’ (திருவாய்மொழி 10-6-7) என்று ஸபரிகரனாய்க்‌ கொண்டு “என்‌ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) இன்றிவர் தாம்‌ குந்தியடியிட்டு த்யாஜ்யமென்று சரக்குக்‌ கட்டிப்‌ புறப்பட்டு நிற்கிற இவருடைய தேஹத்திலே தான்‌ புகுந்து “திருமாலிருஞ்சோலை மலையே” (திருவாய்மொழி 10-7-8) என்கிற பாட்டின்படியே ஷீராப்‌தி தொடக்கமாகத்‌ தனக்கு வாஸஸ்தாந திவ்ய நகரங்களில்‌ பண்ணும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ ஒரோ அவயவங்களிலே பண்ணி “அங்க நாமங்க நாமந்தரே மாத வவோ மாதவம்‌ மாதவஞ்சாந்தரேணாங்க நா இத்தமா கல்பிதே மண்டலே ஸஞ்சரந்‌ ஸஞ்ஜகெள, வேணுநா தேவகீ நந்த ந: (கர்ணாம்ருதம்‌ என்று திருக் குரவையில்‌ பெண்களோடே அநேக விக்‌ரஹ பரிக்ரஹம்‌ பண்ணி அநுபவித்தாப்‌ போலவும்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையிலே தேவிமார்களோடே பதினாறாயிரம்‌ விக்‌ரஹம்‌ கொண்டு அநுபவித்தாப் போலவும்‌ அநேக விக்‌ரஹ பரிக்‌ரஹம்‌ பண்ணி இவருடைய அவயவங்கள் தோறும்‌ அநுபவிக்கும்படி இவருடைய விக்‌ரஹத்திலே சபலனானவனுக்கு “பொங்கைம்புலனும்‌ பொறியைந்தும்‌ கருமேந்திரியம்‌ ஐம்பூதம்‌ இங்கிவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்களே உன்‌ மாமாயை மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-8-10) என்று தம்முடைய தேஹத்தில்‌ தோஷத்தை அவனுக்கறிவித்து அத்தை விடுவிக்க வேணுமென்று (மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின் கண்‌ பெரியனானவனை) ‘”மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை” (திருவாய்மொழி 10-8-3) ஸம்ஸாரத்தில்‌ நிற்கைக்கடியான மாயை ப்ரக்ருதி அத்தைத்‌ திரிய விடுத்தேன்‌ என்று இவர் தாமே பேசும்படி அசித் ஸம்பந்தத்தை யறுத்து “வானே தருவான்‌” (திருவாய்மொழி 10-8-5) என்று பரமபதத்தை இவர்க்குக்‌ கொடுப்பதாக “கருத்தின் கண்‌ பெரியன்‌” (திருவாய்மொழி 10-8-8 என்று இவருடைய மநோரதத்தினளவல்லா படி இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிற பற்று கண்டு (அநாத்‌யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க) “இன்றென்னை’ (திருவாய்மொழி 10-8-9) இத்யாதி, இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயிகரித்த நீ அநாதி காலம்‌ உபேக்ஷித்து வைத்ததுக்கு ஹேதுவை அருளிச்‌ செய்யவேணுமென்று அவன்‌ மடியைப்‌ பிடிக்க, (இந்த்‌ரிய கிங்கரராய்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌ அவை யாவரையுமகற்ற நீ வைத்தவை என்பர்‌) “வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்‌ரிய இங்கரா:” (வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை) என்கிறபடியே அநாதி காலம்‌ இந்த்‌ரிய வஸ்யராய்‌ “தூராக்குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்‌” (திருவாய்மொழி 5-8-6) “அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்‌” (திருவாய்மொழி 3-2-6) என்று துஷ்பூரமான இந்த்‌ரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம்‌ உன்னை அகன்றிருக்கக்‌ கடவேன்‌ அற்ப சாரமானது அது நமக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழிப்‌ போந்தேன்‌ என்று நீர் தாமே பேசும்படியான ஸப்‌தாதி விஷய ப்ராவண்ய மன்றோ நீர்‌ அநாதி காலம்‌ இழக்கைக்கு ஹேது என்னில்‌, “ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த” (திருவாய்மொழி 7-1-8) என்றும்‌ “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்‌” (திருவாய்மொழி 5-7-8) என்றும்‌ நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை என்று நன்றாக அறிந்தேன்‌ என்பர்‌. (அது தேஹ யோகத்தாலே என்னில்‌ அந்நாள்‌ நீ தந்த சுமடென்பர்‌) அந்த இந்த்‌ரிய வஸ்யதைக்கடி ஸரீர ஸம்பந்த மன்றோ என்னில்‌ “அந்நாள்‌ நீ தந்த ஆக்கை” (திருவாய்மொழி 3-2-1) “அது நிற்கச்‌ சுமடு தந்தாய்‌” (திருவாய்மொழி 7-1-10) என்று அதுவும்‌ உன்னாலே உண்டான (தென்பர்‌). (முன்‌ செய்த முழு வினையாலே என்னில்‌ அது துயரமே யுற்ற இருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌) “முன்செய்த முழு வினையால்‌ திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌ முன் செய்ய முயலாதே அகல்வதுவோ (திருவாய்மொழி 1-4-2) என்று அந்த தேஹ ஸம்பந்தத்துக்கடி நீர்‌ அநாதியாகச்‌ செய்து போந்த கர்மமன்றோ என்னில்‌ “துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்‌” (திருவாய்மொழி 3-6-8) “உற்ற விரு வினையாய்‌” (திருவாய்மொழி 10-10-8) என்று புண்ய பாப ரூபமான கர்மங்களை அசேதநமுமாய்‌ நஸ்வரமுமாய்‌ இருபசை மலமுமாய்க்‌ கொண்டு உன்‌ கோபமும்‌ அருளுமென்று உன்னுடைய நிக்‌ரஹாநுக்‌ரஹ ரூபேண பலிக்குமவை யாகையாலே அந்த கர்மம்‌ நீயிட்ட வழக்கென்பர்‌. (ஈவிலாத மதியிலே னென்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்‌ என்னில்‌ ஆங்காரமாய்ப்‌ புக்கு செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கர்த்ருத்வமும்‌ தத்‌ பலமான போக்த்ருவத்வமும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌) “ஈவிலாத வினைகள்‌ எத்தனை செய்தனன்‌ கொல்‌” (திருவாய்மொழி 4-7-3) என்றும்‌ “மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌ அநுபவித்தாலும்‌ மாளாத பாபத்தை எத்தனை பண்ணினேன்‌, நான்‌ பண்ணின பாபமேயோ அநுபவித்தாலும்‌ மாளாதே யிருப்பது என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்த்ருத்வமும்‌ போக்த்ருத்வமும்‌ உம்மதன்றோ என்று நாம்‌ சொல்லில்‌ தானாங்காரமாய்ப்‌ புக்கு தானே தானே யானான்‌’ (திருவாய்மொழி 10-7-11 என்று தானபிமாநியாய்ப்‌ புக்கு ஆத்மாத்மீயங்களில்‌ எனக்குண்டான அபிமானத்தைத்‌ தவிர்த்துத்‌ தானே அபிமாநியானானென்று, அந்த கர்த்ருத்வமும்‌ “செய்கைப்‌ பயன்‌ உண்பேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-4) என்றும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய காரணன்‌ தன்னை (திருவாய்மொழி 3-5-10) என்று பல போக்தாவும்‌ நாமிட்டவழக்காகையாலே கர்த்தாவும்‌ போக்தாவும்‌ நீயே என்பர்‌. (யானே எஞ்ஞான்றுமென்றத்தாலே என்னில்‌ அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழில்‌ என்பர்‌) “யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்‌” (திருவாய்மொழி 2-9-9 “எஞ்ஞான்றும்‌ மெய்ஞ்ஞான மின்றி வினையியல்‌ பிறப்பழுந்தி’ (திருவாய்மொழி 3-2-7) என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்ம கர்த்ருத்வ பல போக்த்ருத்வங்களுக்கடி உம்முடைய அஜ்ஞானமன்றோ என்னில்‌, ‘அயர்ப்பாய்த்‌ தேற்றமுமாய்‌” (திருவாய்மொழி 7-8-6) “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்‌” (திருவாய்மொழி 3-1-4) “உள்ளம்‌ பேதம்‌ செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்‌” (திருவாய்மொழி 5-10-4) என்று ஜ்ஞாநாஜ்ஞானங்களிரண்டும்‌ நீயிட்ட வழக்காகையாலே அத்தால்‌ வந்த புத்தி பேதங்களும்‌ உனக்குக்‌ காரியமென்று சொல்லுவர்‌.

(ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது அக மேனியில்‌ அழுக்கறுக்கை அபி மாநி க்ருத்யம்‌) “மூதாவியில்‌ தடுமாறு முயிர்‌ முன்னமே யாதானும்‌ பற்றி நீங்கும்‌ வ்ரதம்‌” (திருவிருத்தம்‌ 95) என்று ஸுஷ்ம ப்ரக்ருதி விஸிஷ்டனான ஆத்மாவில்‌ இடக்கிற சைதந்யம்‌ ப்ரக்ருதி ப்ராக்ருதங்களைப்‌ பற்றி நம்மை விட்டகலுகை நங்கார்யம்‌. “அகமேனி ஒழியாமே’ (திருவாய்மொழி 9-7-10) என்று நமக்கந்தரங்க ஸரீரமான இவ் வாத்மாவைப்‌ பற்றிக்‌ கிடக்கிற ப்ரக்ருதி ரூபமான மாலிந்யத்தை அறுக்கை அவ்வாத்மாவுக்கு அபிமாநியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததீ. (தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌) “நல்கித்தான்‌ காத்தளிக்கும்‌ பொழிலேழும்‌ வினையேற்கே நல்கத் தானாகாதோ நாரணனைக்‌ கண்டக்கால்‌” (திருவாய்மொழி 1-4-5) என்று நாம்‌ ஸ்நேஹ பூர்வமாக ரக்ஷிக்கைக் கடியான நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம்‌ நிருபாதிகமாகையால்‌ (ஸெளஹார்த்த,ம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌) “தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாய்த்‌ தான்தோன்றி” (திருவாய்மொழி 8-10-7) என்று அந்த பந்த மடியாக எல்லாருடைய நன்மையை ஆஸாஸிக்கைக்கடியான ஸெளஹார்த்த குணம்‌ ஸர்வாத்மாக்கள்‌ பக்கலிலும்‌ ஸர்வ காலமும்‌ நடக்கையாலே இந்த ஸம்பந்த மடியான ஸ்நேஹமும்‌ இவனுக்குக்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யிருந்தது. (பிணக்கிப்‌ பேதியாத ஜ்ஞாந வைகல்யம்‌ இல்லை) “பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர் கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர் ஞான மூர்த்தியினாய்‌” (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்தில்‌ மண்ணும்‌ நீரும்‌ கலசுமாப் போலே நன்றாகக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவருக்குத்‌ தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கும்படியான நமக்கு ஞான சக்த்யாதிகளிலே குறை சொல்லி கண்ணழிக்க வொண்ணாதாயிருந்தது. [எகமுர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள்‌ நம்மது) “ஏகமூர்த்தி யிருமூர்த்தி’ (திருவாய்மொழி-4-3-3) என்கிற பாட்டின்படியே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற எல்லாவற்றையும் உண்டாக்கி அவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு ப்ரஸித்து ஸுஷ்மரான சேதநர்க்கு ருசி பிறந்த போது ஆஸ்ரயிக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்தருளுகிற ஸர்வ ஸரீரியான நீ உன்னுடைய திருமேனிக்கு வேண்டும்‌ போகோபகரணங்களை பூசும்‌ சாந்தில்‌ படியே என் பக்கலாக்கி நிர்துக்கனானாயே என்று இவர்‌ பேசும்படி இவரைப்‌ பெறுகைக்கு யத்நம்‌ பண்ணுகையும்‌ பெற்றால்‌ உகக்கைக்கீடாந அறிவுள்ளதொன்றாயிருந்து அத்தாலும்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யொழிந்தது. (நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே என்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌) “தனி நின்ற சார்விலா மூர்த்தி” (பெரிய திருவந்தாதி 71 என்று தான்‌ வேண்டிற்றுச்‌ செய்யும்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரனும்‌ நீயே. “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ (திருவாய்மொழி 9-3-2) இத்யாதி. “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” (திருவாய்மொழி 9-3-2) என்று ஸ்ருஷ்டி முதலான ஸகல ப்ரவ்ருத்திகளையும்‌ ஸஹஜமாகத்‌ தானே செய்ய வல்லனென்று இப்படி நம்மை உள்ளபடி அறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்கு உத்தரம்‌ சொல்லுகை யறிந்து (நெறி காட்டி அருகும்‌ சுவடும் போலே இதுவும்‌ நிருத்தரம்‌ என்ற கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6) என்கிற பாட்டிலும்‌ “அருகும்‌ சுவடும்‌ தெரிவுணரோம்‌” (பெரிய திருவந்தாதி 8) என்கிற பாட்டிலும்‌ உபாயாந்தரங்களைக்‌ காட்டி அகற்றப்‌ பார்த்தாயோ -விலக்ஷணமான திருமேனியைக்‌ காட்டி சேர்த்துக்‌ கொள்ளப்‌ பார்த்தாயோ அஜ்ஞரான எங்களை என் செய்வதாக நினைத்தாய்‌ இத்தை அருளிச்செய்ய வேணும் என்றும் கேட்ட விடங்களில்‌ ஒரு ஹேது இல்லாமையாலே இதுக்கும்‌ சொல்லலாவ தொரு ஹேது இல்லாமையாலே நிருத்தரமென்‌று தரையைக் கீறிக்கவிழ்ந்து நிற்க
(அமந்த்ரோத்ஸவ கோஷம் போலே )உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயன் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லுமா போலே இவனும் ( ஏறப்போகிற எழுச்சியை ஸூ சிப்பிக்கிற வென்று )அது கிடக்க உம்மைக் கொண்டு போகிற வழியைப் பாரீர் என்று –நான் ஏறப் பெறுகின்றேன் (திருவாய் மொழி -10-6-5)என்றும் இவர் கீழ்ச் சொன்னபடியே -பரமபதத்திற்குப் போகிற மார்க்கத்தையும் -மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க (மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே )சூழ் விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கின ஆழ்கடல்‌ அலை திரை கையெடுத்தாடின (திருவாய்மொழி 10-9-1)கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கெருடர்கள்(திருவாய்மொழி 10-9-5) “காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்கு மிசைத்தனர் வாளொண்‌ கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌” (திருவாய்மொழி 10-9-6) “தொடர்ந்தெங்கும்‌ தோத்திரம்‌ சொல்லினர்‌” (திருவாய்மொழி 10-9-7) என்று ராஜாக்கள்‌ போகிற போது தூர்யாதி, மங்கல கோஷம்‌ பண்ணுவாரைப்‌ போலே போகிறவர்களைக்‌ கண்ட ப்ரீதியாலே உண்டான மேக ஸமுத்‌ரங்களினுடைய கோஷங்களாகிற தூர்யாதி பேரிகளையும்‌ அங்குள்ளாருடைய கீத காஹள ஸங்கா ஸீஸ்துதி கோலாஹலங்களையும்‌ இவர்‌ செவிப்படுத்த அத்தைக்‌ கேட்டவாறே (ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்கு) அந்த அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ மார்க்கஸ்தரான ஆதி வாஹிக ஸத்காரத்தையும்‌ திவ்ய தேஸ ப்ராப்தியையும்‌ அங்குள்ளாருடைய பஹுமாநத்தையும்‌ பெற்று ஆநந்த மயமான ஆஸ்தாநத்தில்‌ இருப்பையும்‌ ஸாக்ஷாத்கரித்து, இப்படி ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்தி மாநஸாநுபவ மாத்ரமாய்‌ யதா, மநோரத மநுபவமல்லாமையாலே (தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு) “தலைமிசையாய்‌ வந்திட்டினி நான்‌ போகலொட்டேன்‌” (திருவாய்மொழி 10-10-1 என்றும்‌ “தலைமேல்‌ புனைந்தேன்‌” (திருவாய்மொழி 10-4-4) “தலைமேல தாளிணைகள்‌‘ (திருவாய்மொழி 10-6-6 என்றும்‌ இப்படி பூர்ணமாக வந்து தோன்றின திருவடிகளைக்‌ கட்டிக்‌ கொண்டு போகாமல்‌ தடுத்து (திருவாணையிட்டு) “திருவாணை நின்னாணை கண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று அவனுக்கு மறுக்க வொண்ணாத ஆணை யிட்டுத்‌ தடுக்க நீர்‌ ஸேஷ பூதரான பின்பு ஸேஷியான நான்‌ செய்தது கண்டிருக்குமத்தனையொழிய நீர்‌ ஆணை யிட்டுத்‌ தடுக்கை உமக்கு ஸ்வரூபமன்று; ஆன பின்பு அது பெறாவாணை காணும்‌” என்ன, (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) ‘கூசம்‌ செய்யாது கொண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று ஸர்வஜ்ஞனான நீ என்‌ பூர்வ வ்ருத்தத்தால்‌ வந்த அயோக்‌யதையைப்‌ பார்த்துக்‌ கூசி வாசி வையாதே உன்னோடு ஆத்ம பேதமில்லாதபடி என்னைப்‌ பரிக்‌ரஹித்த உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்‌. (பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு) “ஆவிக்கோர்‌ பற்றுக்‌ கொம்பு நின்னலாலறிகின்றிலேன்‌ நான்‌” (திருவாய்மொழி 10-10-3 என்று கொடி கொழு கொம்பை ஒழிய நிற்க மாட்டாதாப்‌ போலே என்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்ப தொன்று உன்னை யொழிய வேறு காண்கிறிலேன்‌ என்னும்படியான அநந்யகதித்வம்‌ என்றும்‌ (போரவிட்ட பெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப்‌ போரவிட்டிட்டாயே” (திருவாய்மொழி 10-10-4) என்று என்‌ கார்யம்‌ நீ செய்யக் கடவதாக ஏறிட்டுக்‌ கொண்டு உன் பக்கல்‌ நின்றும்‌ பிரித்து உன்‌ குணங்கள்‌ கால் நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்‌; இது உனக்கும்‌ பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோ வென்றும்‌ (புறம்போனால்‌ வருமிழவு) “போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால்‌ பின்னை யான்‌ ஆரைக்‌ கொண்டெத்தை யந்தோ எனதென்பதென்‌ யானென்பதென்‌” (திருவாய்மொழி 10-10-5)என்று உன் பக்கல்‌ நின்றும் பிரித்து அநந்ய கதியாய்‌ அஜ்ஞனாய்‌ அஸக்தனான என்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவு புகுர நிறுத்தி ஸர்வ ரக்ஷகனான நீ என்‌ கார்யம்‌ நான்‌ செய்வேனாகப்‌ பார்த்து என்னை உபேஷித்தால்‌ நான்‌ எந்த உபாயத்தைக்‌ கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? எனக்கொரு புருஷார்த்தமென்றும்‌ நானென்றும்‌ உண்டா? முடிந்தேன்‌ என்கிற இழவாலும்‌. (உண்டிட்ட முற்றீம்பு] மனக்காராமை மன்ன உண்டிட்டாய்‌ இனி உண்டொழியாய்‌” (திருவாய்மொழி 10-10-6 )என்று மநஸ்ஸூக்கு பர்யாப்தி பிறவாமல்‌ நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கின கார்யத்தை குறை கிடவாதே விஷயீகரித்து விடாய்‌- புக்த ஸேஷமாக்கின உன்னதன்றோ முதல்‌ தீம்பு என்றும்‌ (அன்பு வளர்ந்த அடியுரம்‌) கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ” (திருவாய்மொழி 10-10-7) நான்‌ அந்த:புர பரிகரமன்றோ! என்பக்கலுண்டான அன்புக்கடி மில்லையோ! அந்த புருஷகார பலத்தால்‌ வந்த அடியுரமென்றும்‌, (உயிருறவு) “பெற்றினிப் போக்குவனோ உன்னை என்‌ தனிப்பேருயிரை” (திருவாய்மொழி 10-10-8) என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்து வைத்து எனக்கு தாரகனான உன்னை விட்டுத் தரிக்கப்‌ போமோ? ப்ராணனை விட்டு ப்ரக்ருதி தரிக்கவற்றோ என்னும்படியான ஸரீர ஸரிர ஸம்பந்தம்‌ என்றிப்படி. (முதலளவு துரக் கைகளாலே) முதலிலே பிடித்து முடியுமளவாக புகலறத் துரந்து பெறாவாணை யல்லாமையை பலிப்பித்துக்‌ கொள்ளும்படியான பேரவா குளப்படியாம்படி யென்னும்படி “அதனில்‌ பெரியவென் னவா வறச்‌ சூழ்ந்தாயே” (திருவாய்மொழி 10-10-10) என்று தத்வ த்ரயங்களையும்‌ விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படியான பரம பக்தியையும்‌ குளப்படியாக்க வற்றான ஸமுத்‌ரம்‌ போன்றிருக்கிற தன்னபிநிவேஸத்தைக்‌ காட்டி வந்து ஸம்ஸ்லேஷித்து இவருடைய ஸகல தாபத்தையும்‌ வாஸநையோடே போக்கி இவருடைய கூப்பீட்டையும்‌ ஓயப்‌ பண்ணி “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” (ராயு. 134-39) என்கிறபடியே மீண்டெழுந்தருளிப்‌ பெருமாள்‌ ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்துக்‌ கொண்டாப் போலே இவர்‌ விடாய்‌ கெடும்படி கலந்து ‘அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்‌” என்று தாமே பேசும்படி இவருடைய ஸகல தாபங்களையும்‌ போக்குகையாலே நிர்துக்கராய்‌ நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய்‌ பேற்றோடே தலைக் கட்டின படியை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌

229-உறாமையோடே உற்றேன்‌ ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப்‌ பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம்‌ தலைக் கட்ட, வேர்சூடுவார்‌ மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும்‌ இனி இனியென்று இருபதின் கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்‌யம்‌.

இனிமேலிவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தராய்க்‌ கொண்டு ஸரணம்‌ புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில்‌ அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும்‌ இவர்க்குப்‌ பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான்‌ என்கிறார்‌.
(உறாமையோடே உற்றேனாக்கா தொழிந்தது) “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கும்‌ அழுக்குடம்பபும்‌ (இன்னின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌-1) என்று முதலிலே அவித்‌யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்‌களை விடுவிக்க வேணுமென்று ஆர்த்தராய்‌ ஸரணம் புக்க விவர்க்கு “உற்றேன்‌ உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம்‌ வேண்டுவதெந்தாய்‌” (திருவாய்மொழி 10-8-10)என்று திருவடிகளைக்‌ கட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப்‌ பெற்றேன்‌ என்று பேசும் படியாகத்‌ தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவவும்‌ ஈஸ்வரன்‌ வைக்கைக்கு ஹேதுவென்னென்னில்‌, (நாடு இருந்த) அவன்‌ ஸ்ருஷ்ட் யவதாரங்களாலும்‌ திருத்த வொண்ணாத ஜகத்தை ஊரும் நாடு முலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்னும்படி திருத்துகைக்காகவும்‌, (நச்சுப் பொய்கை யாகாமைக்கு) இவரபேஷித்த போதே) கார்யம்‌ செய்யில்‌ நச்சுப்‌ பொய்கை போலே பகவத்‌ விஷயத்தில்‌ இழிவாரில்லை என்றும்‌ (ப்ரபந்தம்‌ தலைக்‌ கட்ட) தன்னோடு பிறரோடு வாசியற எல்லார்க்கும்‌ போக்‌யமுமாய்‌ பாவநமுமாய்‌ இருக்கிற இப்ப்ரபந்தங்களை இவரைக்‌ கொண்டு தலைக் கட்டுவித்துக்‌ கொள்ளுகைக்கும்‌, (வேர் சூடுவார்‌ மண் பற்றுப்‌ போலே) வேர்‌ சூடுவார்‌ அதில்‌ மண்பற்றுக்‌ கழற்றதாப் போலே, சரம ஸரீரமான இவருடைய விக்‌ரஹத்திலுண்டான வ்யாமோஹத்தாலே விட மாட்டாமை யாலும்‌ வைத்தான்‌ என்கிற இந்த ஹேதுக்களெல்லாவற்றிலும்‌ (இனியினி யென்றிருபது கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி) அவித்‌யாதி துக்கம்‌ “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌ -1) என்று தொடங்கி “இனிநெஞ்சமிங்குக்‌ கவர்வது யாமிலம்‌” (திருவிருத்தம்‌ 4), “இனி வளை காப்பவரார்‌’ (திருவிருத்தம்‌ 13),“இனியுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” (திருவிருத்தம்‌ 62), “இனியவர் கண்‌தங்காது” (திருவாய்மொழி 1-4-4),“இனி யுனது வாயலகிலின்னடிசில்‌ வைப்பாரை நாடாயே” (திருவாய்மொழி 1-4-8), “இனி யெம்மைச்‌ சோரேலே” (திருவாய்மொழி-2-1-10), “எந்நாள்‌ யானுன்னை யினி வந்து கூடுவனே” (திருவாய்மொழி 3-2-1),“ஆவி காப்பாரினியார்‌” (திருவாய்மொழி 5-4-2), “நெஞ்சிடர்‌ தீர்ப்பாரினியார்‌‘(திருவாய்மொழி 5-4-9), “இனி யுன்னை விட்டொன்று மாற்ற கிற்கின்றிலேன்‌”(திருவாய்மொழி 5-7-1), “தரியேனி” (திருவாய்மொழி 5-8-7), “உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4), “அத்தனையா மினி யென்னுயிரவன்‌ கையதே” (திருவாய்மொழி 9-5-2), “நாரைக் குழாங்கள்காள்‌ பயின்றென்னினி(திருவாய்மொழி 9-5-10),“இனியிருந்தென்னுயிர்‌ காக்குமாறென்‌” (திருவாய்மொழி-9-9-2), “இனிப் பிறவி யான் வேண்டேன்‌” (திருவாய்மொழி 10-6-1) “இனி நான்‌போகலொட்டேன்‌’ (திருவாய்மொழி 10-10-1), “முடிவிலீயோ” (திருவாய்மொழி
-10-10-9), “சுடர்ஞான இன்பமேயோ” (திருவாய்மொழி 10-10-10) என்னுமளவாக
இருபதின்கால்‌ கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து இவருடைய பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை ப்ரகாஸிப்பிக்கைக்காக வைத்தான்‌ என்கிற விதுவே தாத்பர்யமென்கிறார்

230-கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.
ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச்செய்கிறார்‌ “கமலக் கண்ணன் என்று தொடங்கி பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி. “கமலக்கண்ணன்‌ என்‌ கண்ணினுள்ளான்‌ காண்பன்‌” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷ்னானவன்‌ என்‌ கண்ணுக்கு விஷயமானான்‌; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன்‌ என்று உபக்ரமித்து “கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-8) என்‌ கண் வட்டத்தை விட்டுப்‌ போகிறிலன்‌ என்றெதளவாக “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக் கண்டு கொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டு கொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே (திருவாய்மொழி 5-7-5), “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே’ (திருவாய்மொழி 5-8-1), “திருவிண்ணகர்க்‌ கண்டேனே’ (திருவாய்மொழி 6-3-1), “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப் பத்து சந்தையாலும்‌ ஸாக்ஷாத்காரமாகச்‌ சொல்லுகிறவிது “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸ ஸாக்ஷாத்காரமாய்‌ “கைய பொன்னாழி வெண்சங்கொடுங்‌ காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌ (திருவிருத்தம்‌ 84), “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ‘, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக் காணு மாசையுள்‌ நைகின்றாள்‌” (திருவாய்மொழி 2 -4-2, “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8), “மெய் கொள்ளக் காண விரும்பும்‌ என் கண்களே’ (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங்காணப்‌ பெறேன்‌ உன கோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே’ (திருவாய்மொழி 3-8-8), “கோல மேனி காண வாராய்‌” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌” (திருவாய்மொழி 5-8-4), “ஒரு நாள்‌ காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள்‌ காண வாராய்‌” (திருவாய்‌ மொழி 6-9-4), “உன்னைக் காண்பான்‌ வருந்தியெனை நாளும்‌” (திருவாய்‌ மொழி 6-9-6) “அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ’ (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய்‌ சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே’ (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக் காண வாசசைப்பட்டுக்‌ கூப்பிட்ட சந்தைகள்‌ அதிலிரட்டி யாகையாலே “கண்டு களிப்பக்‌ கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-7) என்று திருமாலிருஞ்சோலையளவும்‌ அநுபவம்‌ செல்லா நிற்கச்‌ செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தி யாயிருக்கிறது –

231-இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.
(இருந்தமையென்றது பூர்ண பரஜ்ஞானம்‌) ‘ சூழ்விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கி
” (திருவாய்மொழி 10-9-1 என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும்‌ மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஸ விஸேஷ ப்ராப்தியையும்‌ பகவதநுபவத்தையும்‌ பகவத் ஸ்வரூப ரூப குண விபூ,திகளை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்கிற நித்ய ஸூரிகளோடு ஏக ரஸராய்க்‌ கொண்டிருந்த நுபவிக்கிற ப்ரகாரத்தையும்‌ யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில்‌ பூர்ண பரஜ்ஞாநமாய்‌ இருக்கிறது –

232-முடிந்த அவாவென்றது பரமபக்தி.
(முடிந்த அவா என்றது பரமபக்தி
) இப்படி ஸாக்ஷாத்கரித்த விது மாநஸாநுபவமாகையாலே யதா மநோரதாநுபவ ஸித்‌தியாகத்‌ திருவாணை யிட்டுத்‌ தடுத்துப்‌ பெருங் கூப்பீடாகக்‌ கூப்பிட்டுப்‌ பெற்றாலல்லது தரிக்க வொண்ணாத படியாய்‌ “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்‌” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஸையாயிருக்கிறது –

233-இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.
“ஜ்ஞாதும்‌ த்‌,ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப”
(கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்தி அவஸ்தைகள்‌ என்கிறார்‌. எங்ஙனே என்னில்‌ பகவத்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுகதுக்கராம்படியான ப்ரேம பூர்வகமான பரபக்தி ஜ்ஞாந தஸையாயும்‌, பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம்‌ தர்ஸந தஸையாயும்‌ ஸாக்ஷாத்கார ஸமநந்தரம்‌ அப்போதே அநுபவியா விடில்‌ முடியும்படியான பரமபக்தி ப்ராப்தி தஸையாயுமிருக்கிற அவஸ்தா விஸேஷம்‌ என்கிறார்

234-அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.
” மயர்வற மதிநலமருளினன்‌
” திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம்‌ பரமபக்தி தஸையான பாகத்தையும்‌ விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும்‌ தரும்‌ என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத்‌ தாத்பர்யமென்கிறார்‌. (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்‌யம்‌) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-மூன்றாம்‌ ப்ரகரணம்‌-

August 15, 2025

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ தீதற்ற
ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே காண்

மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

——————-

150-சேர்ப்பாரைப்‌ பஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று குரு ஸப்‌ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும்‌.
இனிமேல்‌ இவர்‌ தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில்‌, (சேர்ப்பாரைப்‌ பக்ஷிகளாக்கி) பகவத்‌ விஷயத்தில்‌ கடகரைப்‌ பக்ஷிகளாக்கி, (ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று) “உபாப்‌ யாமேவ பக்ஷாப்‌யாமாகாமே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்‌யாம்‌ ப்ராப்யதே புருஷோத்தம:” என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகாக உடையரான குரு ஸப்‌ரஹ்மசாரி ஸிஷ்ய புத்ர ஸ்தாநீயரா யுள்ளாரைப்‌ பக்ஷி முதலானவையாகப் பேசக்கடவது –

151-விவேக முகராய்‌ நூலுரைத்து அள்ளலில்‌ ரதியின்றி அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று குடை நீழலிலே கவரி யசையச்‌ சங்கமவை முரல்‌ வரிவண்டிசை பாட மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து விதியினால்‌ இடரில்‌ அந்தரமின்றி இன்பம்‌ படக்‌ குடிச் சீர்மையிலே யாதல்‌ பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன்‌ மெய்ந்நாவன்‌ நாத யாமுநர்‌ போல்வாரை அன்னமென்னும்‌.
குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார்‌, விவேக முகராய்‌ என்று தொடங்கி. (விவேக முகராய்‌) அன்னமாவது நீர ஷீர விபாகம்‌ பண்ணுமதொன்றாகையாலே ஸாராஸார விவேகோந்முகராய்‌. (நூலுரைத்து) “அன்னமதாயன்றங்கற நூலுரைத்த” (பெரியதிருமொழி 11-4-8) என்று ஹம்ஸ ரூபியாய்க்‌ கொண்டு ஸமாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினாப் போலே இவர்களும்‌ ஸ்ரோதாக்களைக்‌ குறித்து ஸாஸ்த்ரங்களை யுபதேஸித்து. (அள்ளலில்‌ ரதியின்றி) “ராகாதி தூஷிதே சித்தே நாஸ்பத, மது ஸூதந: நபத்‌ நாதி ரதிம்‌ ஹம்ஸ: கதா சித்‌ கர்த்த மாம்பஸி’ (விஷ்ணுதர்மம்‌ 9-11) என்று அந்த அன்னமானது கர்தம ஜலத்திற்‌ பொருந்தாதாப்‌ போலே “அழுந்தார்‌ வன் சேற்றள்ளல்‌ பொய்ந் நிலத்தே” (திருவிருத்தம்‌ 100) என்று ஸம்ஸார கர்தமத்திலே பொருத்த முடையரன்றிக்கே. (அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று) “அன்னநடைய வணங்கே” (பெரிய திருமடல்‌ 7 என்றும்‌, “அன்னம்‌ பெய் வளையார் தம்‌ பின்‌ சென்று” (பெரியதிருமொழி 6-5-5) என்றும்‌ சொல்லுகையாலே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலும்‌, புருஷகார பாவத்தாலும்‌ ஹம்ஸ கதியான பெரிய பிராட்டியாரைப்‌ பின் சென்று –குடை நீழலிலே கவரி யசைய) ‘அன்னமென்‌ கமலத் தணி மலர்ப்பீடத்து அலை புனலிலைக்குடை நீழல்‌ செந்நெலொண் கவரி அசைய வீற்றிருக்கும்‌” (பெரிய திருமொழி 9-1-5) என்றும்‌, “சங்கமவை முரலச்‌ செங்கமல மலரை யேறி” (பெரிய திருமொழி 7-8-2) என்றும்‌, “வரிவண்டிசைபாட அன்னம்‌ பெடையோடுடனாடும்‌” (பெரிய திருமொழி 7-5-9) என்றும்‌ மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து அன்னமானது மேலே எழுந்த தாமரையிலை குடையாகவும்‌, பக்வ பலமான செந்நெல்லினுடைய அசைவுகள்‌ கவரியாகவும்‌ சங்குகளினுடைய த்‌வநி தூர்ய கோஷமாகவும்‌ வண்டுகளுடைய மிடற்றோசை பாட்டாகவும்‌ மாநஸ ஸரஸ்ஸில்‌ பத்‌மம்‌ ஆஸநமாகவும்‌ அன்னம்‌ இருக்குமாபோலே “அக்கமலத்திலை போலும்‌ திருமேனி’ (திருவாய்மொழி 9-7-3 என்று பத்‌ம பத்ர நிப ஸ்யாமமான திருமேனியைத் தங்களுக்கு ஒதுங்க நிழலாக உடையராய்‌ பரிபூர்ண ஜ்ஞாநர்‌ அநுகூல விருத்திகளைப்‌ பண்ண ஸூத்‌த ஸ்வபாவர்‌ ஸ்தோத்ரம்‌ பண்ண ஸாரக்‌ராஹிகள்‌ ஸாமகாநம்‌ பண்ண, “போதிற்‌ கமல வன்னெஞ்சு’ (பெரியாழ்‌-திரு- 5-2-8) என்கிறபடியே ஸிஷ்யர்களுடைய மாநஸ பத்‌மத்தை வாஸஸ்தாநமாக உடையராய்‌ (விதியினால்‌ இடரில்‌ இத்யாதி குடிச் சீர்மையிலே யாதல்‌) “விதியினால்‌ பெடை மணக்கும்‌” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌, “இடரில்‌ போகம்‌ மூழ்கி இணைந்தாடும்‌ மடவன்னங்காள்‌” (திருவாய்மொழி 6-1-4) என்றும்‌, “அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையும்‌” (திருவாய்மொழி 6-8-10) என்றும்‌ “மிகவின்பம்‌ படமேவும்‌ மென்னடைய அன்னங்காள்‌” (திருவாய்மொழி 9-7-10) என்றும்‌ சொல்லுகிறபடியே வித்‌யுக்த ப்ரகாரத்திலே ஸாம்ஸாரிக ஸகல து.:க்கங்களும்‌ தட்டாதபடியாகவும்‌ ஒரு விச்சேதமும்‌ வாராதபடியாகவும்‌ மேல்மேலென ஆநந்தமபி விருத்தமாம்படி யாகவும்‌, “குடிச்சிர்மையிலன்னங்கள்‌’ (திருவிருத்தம்‌ 29) என்கிறபடியே புத்ர தாராதிகளோடே யிருந்து பகவதநுபவம்‌ பண்ணுகிற “நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌” (பெரியாழ்‌.திரு. 4-4-8) என்று சொல்லுகிற செல்வ நம்பி, “மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌” (பெரியாழ்‌.திரு. 4-9-11) என்கிற பெரியாழ்வார்‌ போல்வாரையும்‌, (பற்றற்ற பரமஹம்ஸரான ) “பற்றற்றார்‌ பயிலரங்கம்‌” (பெருமாள்‌ திருமொழி 1-4) என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கத்தையும்‌ விட்டு உத்தமாஸ்ரமிகளாய்‌ பரம ஹம்ஸராயிருக்கிற நாதமுனிகள்‌ யாமுந முனிகள்‌ போல்வாரை அன்னம்‌ என்கிறது என்கிறார்-

152-என் பெறுதி யென்ன ப்‌ரமியாது உள்ளத்துளுறிய மது வ்ரதமாய்‌ தூமது வாய்கள்‌ கொண்டு குழல் வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்துத்‌ தேதெனவென்று ஆளம் வைத்துச்‌ சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக்‌ கொள்ளப்‌ பாடித்‌ துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புதம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்திருண்ட குழலிலே றங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமே யூதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமமுடை நாரதன்‌ முனி வாஹனர்‌ தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பியென்னும்

(என்பெறுதியென்ன ப்‌,ரமியாது) ஏரார்‌ மலரெல்லாமூதி நீ என்பெறுதி (பெரிய
திருமொழி 8-4-5) என்று நிவர்த்திப்பிக்க வேண்டாதபடி அப்ராப்த போக்யங்களிலே
ப்ரவணரன்றிக்கே, (உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்‌) “உளங்கனிந்தருக்கும்‌ பெரிய திருமொழி 4-3-9) என்று அடியவர்‌ தங்கள்‌ உள்ளத்துள்‌ ஊறிய தேனை ( பகவத்‌ விஷயத்திலே பக்வமான ஸ்நேஹத்தை உடையராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுள்ளத்திலே ஊறியிருப்பதாய்‌ “ஸாஹிஸ்ரீரம்ருதாரகிற மதுவை ஸதாம்‌” என்று நிரதிஸய போக்‌யமான பகவத்‌, குணமாகிற மதுவை “தவாம்ருதஸ்யந்திநி” என்று தொடங்கி “மதுவ்ரதோ நேஷுரகம்‌ ஹி வீக்ஷதே (ஸ்தோத்ர ரத்நம்‌ 27) என்கிறபடியே புஜிக்கையே வ்ரதமாக உடைத்தாய்‌. (தூ மது வாய்கள்‌ கொண்டு) “தண்டுளவமுண்ட தூமது வாய்கள்‌ கொண்டு” (திருவாய்மொழி 6-8-3) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்கையாலே பரி ஸூத்‌தமாய்‌ இனிதான வாயைக்‌ கொண்டு. (குழல்‌ வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்து) “ஓடிவந்தென்‌ குழல்‌ மேல்‌ ஒளிமாமலர்‌ ஊதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, “வைகுந்த மன்னாள்‌ குழல்வாய்‌ விரைபோல்‌ விண்டு கள்வாரும்‌ மலருளவோ நும்‌ வியலிடத்தே” (திருவிருத்தம்‌ 55) என்றும்‌, மணிவண்டு வகுளத்தின்‌ மலர்மேல்‌ வைகு” (பெரிய திருமொழி 6-6-1 என்றும்‌, ‘நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்பினன்‌” (திருவாய்மொழி 4-10-11) என்றும்‌ பரத்வாதி களிலே போக்‌யதையையும்‌ பரிச்சிந்ந மென்னும்படியாய்‌ பகவதநுபவ ஜநித ப்ரீதியாலே விஸ்த்ருதமாயிருக்கிற ஆழ்வாருடைய போக்‌யதையை புஜித்து. (தேதெனவென்று ஆளம்‌ வைத்து) வரி வண்டு தேதெனவென்று இசைபாடும்‌” (பெரிய திருமொழி 4-1-1) என்றும்‌, “யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌ அரங்கம்‌” (பெரியாழ்‌.திரு. 4-8-6 என்றும்‌ இப்படி பகவத்‌ பாகவத குணங்களை அனுபவித்து உண்டான செருக்குக்குப்‌ போக்குவீடாக ஆளத்தி வைத்து, (சிறுகாலெல்லியம் போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக் கொள்ளப்‌ பாடி) “அறுகால்‌ வரிவண்டுகள்‌ ஆயிரநாமஞ்சொல்லி சிறுகாலைப்‌ பாடும்‌”, (பெரியாழ்‌.திரு. 4-2-8) “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான்‌ குணம்‌ பாடும்‌” (பெரியாழ்‌- திரு- 4-8-8 “வண்டு குறிஞ்சி மருளிசைபாடும்‌” (பெரிய திருமொழி 2-1-2), “வண்டினங்கள்‌ காமரங்களிசைபாடும்‌” (பெருமாள்‌ திருமொழி 8-4), “கந்தாரமந்தேனிசைபாட” (பெரிய திருமொழி 3-8-1), “பண்கொள் தலைக்‌ கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2 என்று காலோசிதமான பண்களிலே பண்கள்‌ தலைமேற்‌ பொரும்படி பாடி, (துன்னிட்டு நெருக்கி நீக்கென்று ) “துன்னிட்டுப்‌ புகலரிய வைகுந்த நீள்வாசல்‌” (பெருமாள்‌ திருமொழி 4-3), “சுந்தரர்‌ நெருக்க விச்சாதரர்‌ நூக்க” (திருப்பள்ளியெழுச்சி 7) என்றபடி திருவாசல்களிலே “நேச நிலைக் கதவம்‌ நீக்கு” திருப்பாவை 16) என்றும் “பொன்னியலுமாடக்‌ கவாடம்‌ கடந்து புக்கு” (பெரியதிருமடல்‌ 73) என்கிறபடியே தகைவறப்‌ புக்கு (வண்டொத்திருண்ட குழலிலே மங்கையற மருவி) “நீ மருவி அஞ்சாதே நின்று” (திருநெடுந்தாண்டகம்‌ 26) என்று பாடுமவர்களாகையாலே ஸங்கையற பகவத்‌ ஸமீப வர்த்தியாய்‌ மருவி (அருளாதயாமென்று ஓடிவந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” (திருவாய் 1-4-6) என்றும்‌, யாமிதுவோ தக்கவாறு (திருவாய்மொழி 6-8-4) என்றும்‌, “ஓடிவந்தென்‌ குழல்மேல்‌’ (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில்‌” (பெரிய திருமொழி 11-1-9) என்றும்‌ இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து அவனுடைய விஷயிகாரத்தை இத்தலைக்குண்டாக்க இத்தலையில்‌ ஸெளமநஸ்யத்தைத்‌ தாங்களநுபவித்து அத்தலையில்‌ போக்‌யதையாலே இத்தலையை ஆஸ்வஸிப்பித்து (வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌) “கொங்குண் வண்டே கரியாக (பெரிய திருமொழி 9-3-4) என்று ஸாகாக்ர ஸாராஸார க்‌ராஹியாய்‌ ஷட்பத நிஷ்டராய்‌ பக்ஷத்‌ வயத்தை உடைத்தாகையாலே அப்ரதிஹதக தியான மது கரத்தை முன்னிட்டு ௮ங்‌கீ கரிப்பானுமாய்‌ ‘தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வவண்டு’ (திருவாய்மொழி 9-9-4) என்று வேதாந்தவேத்‌யனாய்‌ “தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வர: என்கிற ஸார க்‌ராஹியாயிருக்கிற ஈஸ்வரனோடே சேர்க்கிற “சேமமுடை நாரதனார்‌’ (பெரியாழ்‌.திரு. 4-9-5) என்று பகவத்‌ குணாநுபவ ஜநித ஹர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கிற ஸ்ரீநாரத ப்‌ரஹ்மருஷி, முநிவாஹநரென்கிற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி பாடுகையே தங்களுக்கு போக்‌யமாயிருக்கிற தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பி என்னும்‌ என்கிறார்‌. இவர்களை ஸ ப்‌ரஹ்மசாரிகளென்கிறது அநுபாவ்ய விஷயத்தில்‌ ஐக்யத்தினாலே

153-கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு ஒருமிடறாய்ப்‌ போற்றி ஒரு வண்ணம்‌ திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும்‌ நீயலையே நல்வளம்‌ துரப்பனென்னு மவற்றுக்கும்‌ உகந்து சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்‌ கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர்‌ தலைமீதடிப்பொடி உடையவருடையார்‌ போல்வாரைக்‌ கிளி பூவை குயில்‌ மயிலென்னும்‌.

(கண்வலைப்படாதே அகவலைப்பட்டு) “மாதரார்‌ கயற்கணென்னும்‌ வலையுள்‌ பட்டு” (திருமாலை 16 என்று இதர விஷயங்களினுடைய த்‌ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதே “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றும்‌ “யம்‌ பஸ்யேத்‌’ என்றும்‌ ப்ரேக்ஷ்யே கஞ்சித்‌ கதாசந என்றும்‌ “அமலங்களாக விழிக்கும்‌ திருவாய்மொழி 1-9-8) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல பாப க்ஷபண நிபுணங்களாய்‌ ஸம்ஸார தாபமெல்லாம்‌ ஆறும்படி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரைப்‌ பூப்போலே யிருக்கிற பகவத் கடாஷமென்கிற வலையிலே அகப்பட்டு (வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து) “வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ ‘திருநெடுந்தாண்டகம்‌ 14) என்றும்‌ ‘ எடுத்தவென்‌ கோலக்‌ கிளி” நாச்சியார்‌ தி மொழி 5-5) என்றும்‌, மங்கைமார்முன்பென்கையிருந்து” (திருவாய்மொழி 6-8-2 )என்றும் உபலாலித்து ரக்ஷிக்கிறவர்களுடைய கை வஸமாய (தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு) “தயிர்ப்பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” (திருவாய்மொழி 9-5-8) என்றும்‌ “நெய்யமரின்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடும்‌” (திருவாய்மொழி 6-8-2) என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” (நாச்சியார்‌ திருமொழி 5-5) என்றும்‌ சொல்லுகிறபடியே அவர்கள்‌ காலோசிதமாகவும்‌, பாகாநுகுணமாகவும்‌ “உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்‌” (கீதை 4-34) என்கிறபடியே பகவத்‌ குணங்களை ஆசார்யர்கள்‌ அநுபவிப்பிக்க அநுபவித்து (ஒருமிடறாய்‌) ‘ஆசார்யர்களோடு ஏக கண்டராய்‌, (போற்றி ஒருவண்ணமித்யாதி) போற்றியானிரந்தேன்‌ புன்னைமேலுறை பூங்குயில்காள்‌’ திருவாய்மொழி 6-1-6) என்றும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண்கிளியே” திருவாய்மொழி 6-1-7) என்றும்‌, “திருந்தக்‌ கண்டெனக்கொன்றுரையாய்‌ ஒண்சிறு பூவாய்‌ ்‌ (திருவாய்மொழி 6-1-8) என்றும்‌ ஆதரித்துக் கொண்டு போந்த தஸையோடு, “நோயெனது நுவல்‌ என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்‌” திருவாய்மொழி 1-4-8) என்றும்‌, என்‌ பிழைக்கும்‌ இளங்கிளியே யான்‌ வளர்த்த நீயலையே” (திருவாய்மொழி 1-4-7) என்றும்‌ இன்னாதான தஸையோடு, “சொல்‌ பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீர்‌” திருவாய்மொழி 9- -5-8) என்றும்‌, “நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குற்று நின்றும்‌ துரப்பன்‌” (நாச்சியார்‌ திருமொழி 5-10) என்றும்‌ அநாதரித்து தஸையோடு வாசியற வகுத்த விஷயத்தில்‌ நிக்‌ரஹாநுக்‌ரஹங்களிரண்டும்‌ அங்குத்தை விநியோக,ப்ரகாரமாகையாலே இவற்றுக்கும்‌ உகந்து, (சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே) “சொல்லெடுத்துத்‌ தன்‌ கிளியைச்‌ சொல்லே யென்று துணைமுலைமேல்‌ துளிசோரச்‌ சோர்கின்றாளே’ (திருநெடுந்தாண்டம்‌ 13) என்று திருநாமத்தைச்‌ சொல்ல உபதேஸித்து பல ஹாநியாலே ஒரு சொல்‌ சொல்லும் போது மலை யெடுக்குமா போலேயாய்‌ அதுவும்‌ மாட்டாதே பரவஸகாத்ரை யானவாறே (கற்பியா வைத்த மாற்றங்‌ கைகூப்பி வணங்கப்பாடி) “கன்மின்கள்‌ என்று உம்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசார்யருசி பரிக்‌ருஹீதமான திருநாமங்களை, “திருமாலைப்‌ பாடக்‌ கேட்டு வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ வருக வென்று மடக்கிளியைக்‌ கைகூப்பி வணங்கினாளே” (திருநெடுந்தாண்டகம்‌ 14 என்று அவ்வாசார்யர்‌ தாமே அநுஸந்திக்கும்படி ப்ரீதி ப்ரேரிதராய்ப்‌ பாடி. (ஆலியாவழையா) “குயில்‌ நின்றால்‌” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 10) என்றும்‌ “ஆலியாவழையாவரங்கா” (பெருமாள்‌ திருமொழி 3-2 என்றும்‌ சொல்லுகிறபடியே அவ்வநுபவத்தாலே வந்த ஹர்ஷத்தை உடையராய்‌, (பராபிமானத்திலே ஒதுங்கி) “தேவு மற்றறியேன்‌” (கண்ணிநுண்‌- 2) என்று ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கின (நம்பிக்கன்பர்‌) “தென்குருகூர்‌ நம்பிக்கன்பரான (கண்ணிநுண்‌- 11 ஸ்ரீமதுரகவிகள்‌. (தலைமீதடிப்பொடி) “நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்றமர்‌ தலைகள்‌ மீதே” (திருமாலை 1 என்று திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள்‌ தலையிலே அடியிடும்படியான செருக்கை உடையராய்‌, “அடியார்க்கென்னை ஆட்படுத்தாய்‌’” (அமலனாதிபிரான்‌ 1 என்கிற ஸ்ரீதொண்டரடிப்பொடிகள்‌. (உடையவருடையார்‌ போல்வாரை) இராமானுசனுடையார்‌ என்று சொல்லப்படுகிற ஆழ்வான்‌ ஆண்டான்‌ எம்பார்‌ அருளாளப்‌ பெருமாள் எம்பெருமானார்‌ போல்வாரான ஆச்சார்ய பரதந்த்ரராய் இருப்பாரை குயில்‌ மயில்‌ என்னும்‌)

154-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதை யற்றுத்‌ தாய் வாயிலுண்ணும்‌ பிள்ளைக்‌கிரை தேடி வைகலுடன்‌ மேய்ந்து நுங்கால்‌ பைங்கானமென்று ப்‌ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும்‌ வேண்டேனென்னும்‌ தனிப்பெரும்‌பித்தர்‌ நம்முதலிகள்‌ போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும்

(ஆசறுதூவி என்னும் பாஹ்யாப்யந்தர ஸூத்தியோடே) “ஆசறுதூவி வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசறுகை அந்த:கரண ஸூத்‌தியாய்‌, “வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று பாஹ்ய ஸூத்‌தியாய்‌, “(அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம்‌ கதோபி வா ய ஸ்மரேத்‌ புண்டரீகாக்ஷம்‌ ஸ பாஹ்யாப்‌யந்தரஸ் ஸூசி: என்கிற பாஹ்யாந்தர ஸூத்‌தியை உடையராய்‌, (திரையுகளும்‌ வ்யஸந வ்யதையற்று) வாயும்‌ திரையுகளும்‌” (திருவாய்மொழி 2-1-1 )என்று “கிரயோ வர்ஷ தாராபி,: ஹந்யமாநா ந விவ்யது: அபி பூயமாநா வ்யஸநைர்‌ யதா தோ கஜ சேதஸ:” (ஸ்ரீபாகவதம்‌ 10-2015) என்று பகவத்‌ விஷயத்திலே நெஞ்சு ஊன்றுகையாலே ஸம்ஸார துஃக்கோர்மிகளானவை அஹமஹமிகயா மேலிடா நின்றாலும்‌, சலியாதே. (தாய்‌ வாயிலுண்ணும்‌ பிள்ளைக்கிரைதேடி) “தாய்வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிறவுண்ணும்‌” (பெரியதிருமொழி 9-6-1 என்றும்‌, “புள்ளுப்பிள்ளைக்கிரை தேடும்‌” (பெரியதிருமொழி 5-1-2) என்றும்‌, கொக்கானது தன்‌ பிள்ளைக்கநுகுணமாக இரைதேடி யிடுமாபோலே முறைகெடாமல்‌ அநுபவிக்க விருக்கிற ஸிஷ்யர்களுடைய ப்ரக்ருதிக்கநுகுணமான பகவத்‌ விஷயத்தை ஸகல ஸாஸ்த்ரங்களிலும்‌ ஆராய்ந்து அருளிச்செய்து. (வைகலுடன்‌ மேய்ந்து) _வைகல்பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌’ (திருவாய்மொழி 6-1-1 என்றும்‌ காதல்‌ மென்பெடையோடு உடன்மேயும்‌ கருநாராய்‌” (திருவாய்மொழி 6-1-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வகாலமும்‌ அநுகூலரான ஸிஷ்ய புத்ர்களோடே பகவத்‌ குணங்களை அநுபவித்து (நுங்கால்கள்‌ பைங்கானம்‌ என்று ப்‌ரஹ்ம ரதம் பண்ணிக்‌ கொடுத்தவை கொண்டு) “நுங்கால்கள்‌ என்‌ தலைமேல்‌ ‘கெழுமீரோ நுமரோடே” திருவாய்மொழி 9-7-1) என்றும்‌, “பைங்கானம்‌ ஈதெல்லாம்‌ உனதே யாகப்‌ பழன மீன் கவர்ந்துண்ணத்‌ தருவன்‌ (‘திருநெடுந்தாண்டகம்‌ 27 )என்றும்‌ இவர்கள்‌ பக்கல்‌ உப ஜீவித்த ஸிஷ்யர்கள்
உபகார ஸ்ம்ருதியால் ப்ரஹ்ம ரதம் பண்ணி –ஸாரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத் (விஹகேச்வரஸம்ஹிதை) என்று ஆத்மாத்மீயங்களை முகமலர்த்தியோடே கொடுக்கக்‌ கைக்கொண்டு நல்ல பதத்தையும்‌ வேண்டேன்‌ என்னும்‌ தனிப்பெரும்‌ பித்தர்‌ (நல்ல பதத்தால் மனை வாழ்வர்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று பாகவத கைங்கர்யத்துக்‌கு உறுப்பான -கார்ஹஸ்த்யத்தையும்‌ ஸம்ஸார வெக்காயத்தாலுண்டான அச்சத்தாலே இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (பெருமாள் -4-5) என்று உபேக்ஷிக்குமவருமாய்‌, “அங்கை யாழி அரங்கன்‌ அடியிணைத்‌ தனிப் பெரும்‌ பித்தன்‌” (பெருமாள்மொழி 4-5) என்று சொல்லப்படுகிற ஸ்ரீகுலஸேகரப் பெருமாள்‌(நம்‌ முதலிகள்‌ போல்வாரை) நம்‌ முதலிகள்‌ என்கிறது பட்டர்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை, திருத்தமப்பனார்‌ பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, திருத்தமையனார் பிள்ளை இவர்கள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்‌-என்கிறார் –

155- பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌ எங்கும்‌ திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்துத்‌ தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து , பரஸம்ருத்‌தியே பேறான அன்புகூரும்‌ அடியவர்‌, உறையிலிடாதவர்‌, புயற்கை அருள்மாரி, குணந்திகழ்‌ கொண்டல்‌ போல்வாரை மேகமென்னும்‌.

(பூண்டநாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு) “மற்பொன்ற நீண்டதோள்‌ மால்‌ கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ பூண்டநாளெல்லாம்‌ புகும்‌” (முதல்‌ திருவந்தாதி 69) என்றும்‌, “சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன்‌” (பெரியதிருவந்தாதி 69) என்றும்‌ பகவத்‌ விஷயத்திலே அவகாஹித்தவன்று தொடங்கி, கல்யாண குண ஸாகரத்தைப்‌ பருகி (திருமேனி நன்னிறமொத்து) “மேகங்களோ உரையீர்திருமால்‌ திருமேனியொக்கும்‌ யோகங்கள்‌” (திருவிருத்தம்‌ 32 )என்றும்‌, “என்னுடைய கண்ணன் பால்‌ நன்னிறங்கொள்‌ கார்‌” (பெரிய திருவந்தாதி 85) என்றும்‌ சொல்லுகிற படியே ஸ்வரூப குணத்தாலும்‌ ரூப குணத்தாலும்‌ அவனோடு ஸாம்யாபத்தியை உடையராய்‌, (உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌) “உயிரளிப்பான்‌ மாகங்கள்‌ எல்லாம்‌ திரிந்து” (திருவிருத்தம்‌ 32) என்றும்‌ “தீர்த்தகரராமின்‌ திரிந்து” (இரண்டாம்‌ திருவந்தாதி 14) என்றும்‌ “தீதில்‌ நன்னெறிகாட்டி எங்கும்‌ திரிந்து” (பெருமாள்‌ திருமொழி 2-6 என்றும்‌ சொல்லுகிறபடியே லோக ரக்ஷணார்த்தமாக எங்கும்‌ ஸஞ்சரித்து, பகவத்‌ குணங்களை வர்ஷித்து, எல்லாரையும்‌ பரிஸூத்‌தராக்கி, (ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்து) “ஜ்ஞாந ஹ்ரதே, த்‌யாந ஜலே ராக த்‌வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே, ஸ யாதி பரமாம்‌ கதிம்‌” என்கிறபடியே ஜ்ஞாநமாகிற தடாகத்தை பகவத்‌ கு,ணங்களாலே பூரித்து (தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” (திருப்பாவை 3) என்றும்‌, வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” (திருப்பாவை 4) என்றும்‌, “மாமுத்த நிதி சொரியும்‌” (நாச்சியார்‌ திருமொழி 8-2) என்றும்‌ அநர்த்த கந்த மின்றியே எல்லாரும்‌ உஜ்ஜீவிக்கும்படி பகவத்‌ கு,ணங்களை வர்ஷித்து, (கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து பர ஸம்ருத்‌தியே பேறான) ஒளதார்யாதிஸயத்தாலே பிறருக்குபகரித்து அத்தை நினையாதே ‘மேலும்‌ உபகரிக்கப்‌ பெற்றிலோம்‌ என்று இழவாளராய்‌ எதிர்த்தலையில்‌ ஸம்ருத்‌தி யைக்‌ கண்டுகந்த அதுலே தங்களுக்குப்‌ பேறாக நிலைத்திருக்க (அன்புகூரும்‌ அடியவர்‌)ஆங்கரும்பிக்‌ கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்‌” (பெரிய திருமொழி 2-10-4) அடியவர்களான முதலாழ்வார்கள்‌ (உறையிலிடாதவர்‌) உருவின வாள்‌ உறையிலிடாதே ஆதி,மத்‌யாவஸாநம்‌ தேவதாந்தரங்களினுடைய அவரத்வ ப்ரதிபாதந பூர்வமாக பகவத் பரத்வத்தை உபபாதிக்கிற திருமழிசைப்பிரான்‌ (புயற்கை அருள்மாரி) “காரார்‌ புயற்கைக்‌ கலிகன்றி” (பெரிய திருமொழி 3-2-10) என்றும்‌, “அருள்மாரி” (பெரிய திருமொழி 3-4-10) என்றும்‌ ஒளதார்யத்திலே மேக ஸத்‌ருஸராய்க்‌ கொண்டு க்ருபையை வர்ஷிக்கிற திருமங்கையாழ்வார்‌ “குணந்திகழ்‌ கொண்டல்‌” (இராமானுச நூற்றந்தாதி 60 )ஆன உடையவர்‌ போல்வாரை மேகம்‌ என்னும்‌ என்கிறார்‌. (இவர்தாம்‌ தூது விடுகையாவது ப்ராப்யருசியால்‌ வந்த விளம்பாக்ஷமத்வத்தாலே ஆசார்ய த்‌வாரா உபாயோபேய ப்ரார்த்தநை பண்ணுகை. “கைகள்‌ கூப்பிச்‌ சொல்லீர்‌” (திருவாய்மொழி 6-1-1, “பாதம்‌ கைதொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-2), “இரங்கி நீர்‌ தொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-3) என்றும்‌, “திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌” (திருவாய்மொழி 1-4-2 “வாடாத மலரடிக்கீழ்‌ வைக்கவே வகுக்கின்று” (திருவாய்மொழி 1-4-9) என்றும்‌ சொல்லக் கடவது இறே –

156-தம்பிழையும்‌ சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வ த்‌வய அர்ச்சைகள்‌ தூது நாலுக்கும்‌ விஷயம்‌.

இனிமேல்‌ இவர்‌ இப்படித்‌ தூது விடும்படி முகம்‌ காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும்‌ தூது விடுகைக்குப்‌ பற்றாசையும்‌ அது தனக்கு விஷயத்தையும்‌ அருளிச்செய்கிறார்‌ தம்பிழை என்று தொடங்கி. தம்பிழை யானது மறப்பித்த க்ஷ்மையை உணர்த்தும்‌ ப்ரதம தூதுக்கு விஷயம்‌ வ்யூஹம்‌ என்கிறது ப்ரதம தூதான அஞ்சிறைய மடநாரையிலே (திருவாய்மொழி 1-4). “என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று வ்யாமோஹாதிஸயத்தாலே மேல் விழுந்து விஷயீகரித்தான்‌; ஸர்வஜ்ஞனாகையாலே தோஷ தர்ஸனம்‌ பண்ணினான்‌; பிரிந்தவாறே இதுவோ இதினளவென்று பிரிந்திருந்தானத்தனை. எங்களபராதத்தைக்‌ கண்டு கைவிடுமளவன்று. “என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு என்று ஒரு வாய்‌ சொல்‌” (திருவாய்மொழி 1-4-7) என்று அவர்க்கு அபராத, ஸஹத்வ மென்பதொரு குணமுண்டு அத்தை யறிவிக்கவே வரும்‌ என்று அபராத, ஸஹத்வம்‌ பற்றாசாக, “கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்‌ அடலாழி யம்மானைக்‌ கண்டக்கால்‌ இதுசொல்லி விடல்‌” (திருவாய்மொழி 1-4-10) என்று இல்லாத வஸ்துவை உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்தருளுகிறவனுக்கு உண்டாக்கின வஸ்துவுக்கு ஒரு குண தாநம் பண்ணலாகாதோ -என்று சொல்லென்று வ்யூஹத்திலே தூது விடுகிறார் –
சிறந்த செல்வமானது மறப்பித்த தீஷையை யுணர்த்தும் இரண்டாவது தூதுக்கு விபவம் விஷயம் விடுகிற விஷயம்‌ என்கிறது வைகல்‌ பூங்கழிவாயில்‌ (திருவாய்மொழி 6-1. “சிறந்‌த செல்வம்மல்கு திருவண்வண்டுருறையும்‌” (திருவாய்மொழி-6-1-3- என்றும் ஆர்த்த ரக்ஷணம்‌ பண்ணி வாரா நிற்கச்‌ செய்தே திருவண்வண்டூரிலே போக்‌யதையிலே கால் தாழ்ந்து நம்மை மறந்திருத்தான் இத்தனை
மாறில் போரரக்கன்‌ மதிள்நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளள்‌’ (திருவாய்மொழி 6-1-10), “ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33 என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீக்ஷித்திருப்பானாய்‌ ஆர்த்த ரஷணமொரு தரையானால்‌ அஸ்தமிதாந்யபாவம்‌ என்றிருப்பானொருவன்‌ ஆகையாலே நம்முடைய ஆர்த்தியை அறிவிக்கவே வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாக -அரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார் (திருவாய்மொழி 6-1-10) என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸ பூமியான லங்கையை பஸ்மஸாத்தாக்கின ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனுக்குச்‌ சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகிறார் –
படைத்த பரப்பானது மறப்பித்த ஸாரஸ்யத்தை உணர்த்தும்‌ மூன்றாம்‌ தூதுக்கு பரத்வ த்‌வயம்‌ விஷயம்‌ என்கிறது பொன்னுலகாளீரில்‌ (திருவாய்மொழி 6-8). “முன்னுலகங்க ளெல்லாம்‌ படைத்த முகில் வண்ணன்‌ கண்ணன்‌ என்‌ நலங் கொண்ட பிரான்‌ (திருவாய்மொழி 6-8-1 )என்று விபூதி ரக்ஷணத்திலே பராக்கை உடையவனாகையாலே நம்மை மறந்திருந்தான்‌ அத்தனை; “தன்‌ மன்னு நீள்கழல்மேல்‌ தண்டுழாய்‌ நமக்கன்றி நல்கான்‌” திருவாய்மொழி 6-8-6) என்று ஆஸ்ரிதரோடு ஏக ரஸனாயிருக்கிற ஆகாரத்தை அறிவிக்கவே வரும்‌ என்று ஐகரஸ்யம்‌ பற்றாசாக, ‘ வானவர் கோனைக்‌ கண்டு யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி 6-8-4) என்று பரத்வத்திலும்‌, “எங்குச்‌ சென்றாலும்‌ கண்டு” (திருவாய்மொழி 6-8-5) என்றும்‌ “யாவையுமாய்‌ யாவருமாய்‌ நின்ற மாயன்‌” (திருவாய்மொழி 6-8-7) என்றும் சொல்லுகிறபடியே அத்‌விதீயமுமாய்‌ நித்யமுமாயிருக்கையாலே பரத்வ ஸத்‌ ருஸமான அந்தர்யாமித்வத்திலும்‌ தூது விடுகிறார்‌. தமரோட்டை வாஸம்‌ மறப்பித்த ஸெளந்தர்யத்தையுணர்த்தும்‌ நாலாம்‌ தூதுக்கு அர்ச்சாவதாரம்‌ விஷயமென்கிறது எங்கானலில்‌ (திருவாய்மொழி 9-7). “தமரோடங்குறைவார்க்கு” (திருவாய்மொழி 9-7-2) என்று தம்மையுகந்த பாகவதரோட்டைச்‌ சேர்த்தியில்‌ இனிமையாலே நம்மை மறந்திருந்தானத்தனை. “பூந்துழாய்‌ முடியார்க்கு” என்று தொடங்கி “தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று” (திருவாய்மொழி 9-7-9) என்று தம்முடைய ஸெளந்தர்யத்தை அநுபவித்துப்‌ பிரிந்தார்‌ தரிக்க வல்லார்களோ என்று ஸெளந்தர்யத்தை உணர்த்தவே வரும்‌ என்று ஸெளந்த,ர்யம்‌ பற்றாசாக, திருமூழிக்களத்தாருக்கு என்று அர்ச்சாவதாரத்திலே தூது விடுகிறார் –

157-பகலோலக்கமிருந்து , கறுப்புடுத்துச்‌ சோதித்து, காரியம்‌ மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும்‌ ராஜநீதி ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும்‌ காணலாம்‌.

இப்படிப்‌ பரத்வாதிகளிலே தூது விட்டால்‌ இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில்‌, பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார்‌ பகலோலக்கம்‌ என்று தொடங்கி. (பகலோலக்கமிருந்து) ஒரு ராஜாவானால்‌ மந்த்ரிகள்‌ முதலான ஸர்வரும்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்து, (கருப்புடுத்துச்‌ சோதித்து) நாட்டிலுள்ள குற்றங்குறைகளாராய்கைக்குப்‌ பிறரறியாதபடி கருப்புடுத்து நகரி ஸோதநை வந்து அந்த நாட்டில்‌ ஸிஷை ரக்ஷைகளுக்காக வ்ருத்‌த, மந்த்ரிகளும்‌ தானுமாய்‌ கார்ய விசாரங்களைப்‌ பண்ணியும்‌, துஷ்ட ஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடியும்‌, அந்த ஸ்ரமம்‌ தீரப்‌ பூந் தோப்புக்களிலே விளையாடக்‌ கடவதான ராஜநீதி (ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌ அங்காதும்‌ சோராமே ஆள்கின்ற எம்பெருமான்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ (நாச்சியார்‌ திருமொழி 11-3 என்றும்‌, “இருளார்‌ வினைகெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌” (திருவிருத்தம்‌ 33) என்றும்‌ உபய விபூதியிலும்‌ ஏகதேஸமும்‌ ஸேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய்‌, “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே (திருவிருத்தம்‌ 80) என்று ஸெளலப்‌யம்‌ பரத்வம்‌ ப்ரணயித்வம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற மூன்று முடிக்குரிய வானிளவரசுக்கு (விண்மீதென்ற ஐந்திலும்‌ காணலாம்‌) “விண்‌ மீதிருப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) “பகல் கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌” (இரண்டாம்‌ திருவந்தாதி- 81 )என்றும்‌ “வைகுண்டே து பரே லோகே ஸ்ரியாஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” என்றும்‌ ஒரு பகலான பரம பதத்திலே பிராட்டிமாரும்‌ தானும்‌ நித்ய முக்தர்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்தும்‌, “இவற்றுளெங்கும்‌ மறைந்துறைவாய்‌‘ (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “யமாத்மா ந வேத என்றும்‌ சொல்லுகிறபடியே வ்யாப்ய பதார்த்தங்களுக்குத்‌ தெரியாதபடி அந்தர்யாமியாய்‌ நின்று ஆராய்ந்தும்‌, “கடல்‌ சேர்ப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌, “பாற்கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்‌” (திருவாய்மொழி 2-6-5) என்றும்‌ சேதநருடைய ரக்ஷணோபாயங்களை மந்த்ரித்தும்‌ அநந்தரம்‌ சேதந ரக்ஷணார்த்தமாக மண்மீதுழல்வாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “களிறும்‌ புள்ளும்‌ உடன் மடிய வேட்டையாடி வருவான்‌” நாச்சியார்‌ திருமொழி 14-9) என்றும்‌ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஆஸ்ரித விரோதிகளான ராவண கும்ப கர்ணாதி துஷ்ட ஸத்வ நிரஸநமாகிற வேட்டையாடியும்‌, “மலை மேல்‌ நிற்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “ஆராமம்‌ சூழ்ந்த” (சிறியதிருமடல்‌ 71 என்றும்‌ அந்த விரோதி நிரஸநத்தாலுண்டான ஸ்ரமம்‌ ஆறும்படி கோயில்‌ திருமலை முதலான தேஸங்களிலே நிற்கையாலும்‌ காணலாம்‌. ஆக இத்தால்‌ பரத்வாதிகளுக்கு ஸ்தல பேதமொழிய விஷய பேதமில்லை என்கிறார் –

158-தமருகந்த அடியோமுக்கே யென்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌.
இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ இனிமேல்‌. (தமருகந்த அடியோமுக்கே என்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌) “தமருகந்தது எவ்வுருவம்‌ அவ்வுருவம்‌ தானே தமருகந்தது எப்பேர்‌ மற்றப்பேர்‌’ (முதல்‌ திருவந்தாதி 44) என்று ஆஸ்ரிதருகந்த திரவயங்களே திருமேனியாகவும்‌ அவர்கள்‌ உகந்த திருநாமங்களைத்‌ தனக்குத்‌ திருநாமமாகவும்‌ கொண்டு, “அடியோமுக்கே எம்பெருமான்‌ அல்லீரோ நீர்‌ இந்தளூரீரே’ (பெரிய திருமொழி 4-9-5) என்றும்‌, “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி திருமூழிக்களத்தானாய்‌” (திருநெடுந்தாண்டகம்‌ 10) என்றும்‌ ஆஸ்ரிதாதீந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையனாய்‌, அவதாரங்களுக்குப்‌ பிற்பாடராகையாலே அநுபவிக்கப்‌ பெறாத வாஸ்ரிதர்‌ இழவாதபடி தன்னை அநுபவிப்பித்துக்‌ கொடு நிற்கிற அர்ச்சாவதாரத்திலே பரத்வாதிகளில்‌ அநுபாவ்யமான குணங்களெல்லாம்‌ ‘ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம்‌’ என்கையாலே பரிபூர்ணமென்கிறார் –

159-வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.
அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌
கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌ ‘வன்பெரு வானகமுதலுய்ய’ என்று தொடங்கி, “வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” (பெருமாள்‌ திருமொழி 1-10) என்று உபய விபூதியும்‌ உஜ்ஜீவிக்கும்படி “திருவாளன்‌ இனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-10) என்றும்‌ “தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ திருப்பதி” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-11) என்றும்‌ சொல்லுகிற ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌ திருவுள்ளமுகந்து கண் வளர்ந்தருகிற பெரிய திருப்பதியான கோயிலிலே, (வடிவுடைக்‌ கடலிடங்‌ கட்கிலீயென்னுமவற்றில்‌) “வடிவுடை வானோர்‌ தலைவனே” (திருவாய்மொழி 7-2-10) என்றும்‌, “கடலிடங்கொண்ட கடல் வண்ணா” (திருவாய்மொழி 7-2-7 என்றும்‌, “கட்கலி உன்னைக்‌ காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “திருவரங்கத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-4) என்றும்‌ பரத்வாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரகாஸித்ததேயாகிலும்‌ (இவள்‌ திறத்தென்‌ கொலோ என்பிக்கிற) “இவள் திறத்தென்செய்கின்றாய்‌” (திருவாய்மொழி 7-2-1 “இவள் திறத்து என்‌ சிந்தித்தாய்‌’ (திருவாய்மொழி 7-2-4) “என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி 7-2-2) என்று ‘இவள்‌ திறத்து தேவர்‌ செய்தருள நினைத்ததேது? இவள்‌ கார்யமென்னாய்‌ முடியக் கடவது என்று கேட்கையாலே “பாற் கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி 2-6-5) என்று ஸர்வருடையவும்‌ ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில்‌ ப்ரகாஸிக்கிற ஸெளஹார்த, குணம்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் –

160-மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.
(மண்ணோர்‌ விண்ணோர்‌ வைப்பில்‌) “கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌
விண்ணோர்க்கு”
(திருவாய்மொழி 1-8-3) என்றும்‌, “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” (நான்முகன்‌ திருவந்தாதி 45) என்றும்‌ உபய விபூதி யிலுள்ளார்க்கும்‌ ஆபத்‌ தநமாய்‌ நிற்கிற திருமலையில்‌ நிலையிலே (போகின்றவேழுலகுக்குயிர்‌) “போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌ தாய்தந்தை உயிராகின்றாய்‌” (திருவாய்மொழி 2-6-10 என்றும்‌, “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார் வண்ணனை‘ (பெரிய திருமொழி 1-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல காலமும்‌ ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸர்வவித பந்துவுமாய்க்‌ கொண்டு ஸர்வர்க்கும்‌ ஆத்ம பூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில்‌ ப்ரகாஸிப்பதாய்‌ (பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌) ‘ என் கண்‌ பாசம்‌ வைத்த” (திருவாய்மொழி 3-3-4) “நிகரில்‌ புகழாய்‌” (திருவாய்மொழி 6-10-10) என்று அத்யந்தம்‌ தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப்‌ பண்ணினான்‌ என்னும்‌ ஒப்பிலாத புகழை உடையவனே என்று சொல்லுகிற வாத்ஸல்யம்‌ “வேங்கடத்தெழில்‌ கொள்‌ சோதி” (திருவாய்மொழி 3-3-2 என்றும்‌ “நிலவும்‌ சுடர்‌ சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி 6-10-7) என்றும்‌ “”பரஞ்சுடர்ச்சோதி” (திருவாய்மொழி 3-3-4) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க்‌ கொண்டு பிரகாஸிக்கும் என்கிறார் –

161-உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌ எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌.
(உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌) “ப்‌ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம்‌ யுஞ்ஜீத” என்றும்‌ “ஒங்காரோ பகவாந்‌ விஷ்ணு: என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ரணவம்‌ ஜீவேஸ்வரர்களிருவர்க்கும்‌ வாசகமாய்க்‌ கொண்டு உபயருடையவும்‌ ப்ராதாநீயம்‌ தோற்ற விருக்கிறாப் போலே பொலிந்து நின்ற பிரானுடையவும்‌ ஆழ்வாருடையவும்‌ திவ்யாஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றுவதாய்‌ “அவன்‌ மேவி உறைகோயில்‌” (திருவாய்மொழி 4-10-2 என்று ஆழ்வாரை விஷயீ கரிக்கலான தேஸமாகையாலே பரமபதத்தில்‌ உள் வெதுப்புத்‌ தீர்ந்து அவன்‌ வர்த்திக்கிற திருநகரியில்‌ நிற்கிற நிலையிலே (எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌) ‘உறுவதாவதெத்தேவும்‌ எவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தயோடு (இத்தனையும்‌ நின்ற வண்ணம்‌ நிற்கவே” (திருவாய்மொழி 4-10-10) என்றும்‌, திருக் குருகூரதனுள்‌ பரன்‌” (திருவாய்மொழி 4-10-3) என்றும்‌ “திருக்குருகூரதனுள்‌ ஈசன்‌” (திருவாய்மொழி 4-10-4) என்றும்‌ “பொலிந்து நின்ற பிரான்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தமும்‌ தனக்கு ஸரீரமாமிடத்தில்‌ அப்ராக்ருத விக்‌ரஹத்தோடொக்கும்படி தான்‌ ஸரீரியா யிருக்கிற பரத்வத்தில்‌ ப்ரகாஸிக்கிற நியந்த்ருத்வ குணம்‌ அபி வ்ருத்‌தமாம் என்கிறார் –

162-வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌. (வைஷ்ணவ வாமநத்தில்‌) வைஷ்ணவ வாமனமான திருக்குறுங்குடியில்‌ நிற்கிற நிலையிலே (நிறைந்த நீலமேனியின்‌) “நீலமேனியும்‌ நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே” (திருவாய்மொழி 5-5-6) என்று, இவர்‌ திருவுள்ளத்திலே ப்ரகாஸிக்கும்படியான காளமேக நிபாஸ்யமமான விக்‌,ரஹத்தினுடைய (ருசி ஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌ ) “செல்கின்ற தென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 5-5-1 என்று ருசியைப்‌ பிறப்பிப்பதாய்‌ “பும்ஸாம் த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌‘ (ரா.௮.3-29 , “ரூபவாந்‌ ஸுபக ஸ்ரீமாந்‌ கந்தர்ப இவ மூர்த்திமாந்‌” (ரா. ஸு.34-30) “ஸாக்ஷாந்‌ மந்மத மந்மத,:” (ஸ்ரீபாகவதம்‌ 10-32-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும்‌ மடலெடுக்கும்படி பண்ண வற்றான விபவத்தில்‌ ப்ரகாஸிக்கிற “நிறைந்த சோதி வெள்ளம்‌ சூழ்ந்த நீண்ட பொன் மேனி (திருவாய்மொழி 5-5-7) என்கிற லாவண்யம்‌-நம்பி என்கையாலே பூர்ணம்‌” என்கிறார் –

163-ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.
(ருசி விவஸர்க்கு)
இப்படி லாவண்யத்தாலே பிறராலும்‌ நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஸரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌’ என்று திருவடிகளை உபாயமாகப்‌ பண்ணித் தந்த ஒளதார்யம்‌ (வானமாமலையிலே கொழுந்து விடும்‌) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலே “வானவர்‌ கொழுந்து” (திருவாய்மொழி 5-7-7) என்கிறபடியே கொழுந்து விட்டு அபிவ்ருத்‌தமாம்‌” என்கிறார்-

164-களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.
(களை கணற்றாரை) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்கிறபடியே தம்முடைய பக்கலிலும்‌ கைம்முதலற்று, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும்‌ மாதுர்யம்‌) நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி 5-8-1 என்று சிதிலராக்கும்படியான மாதுர்யம்‌. (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌) குடமூக்கில்‌ கோயிலாக்‌ கொண்டு” (இரண்டாம்‌ திருவந்தாதி 97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும்‌ என்கிறார் –

165-மெலிவிலும்‌ சேமம்‌ கொள்விக்கும்‌ க்ருபை தென்னகரிலே நித்யம்‌.
(மெலிவிலும்‌ சேமங் கொள்விக்கும்‌ க்ருபை தென்னகரிலே நித்யம்‌)
கீழ்ச் சொன்ன மாதுர்யாதிகளைக்‌ கிட்டி அநுபவிக்கப் பெறாமையாலே துக்க ஸீலராய்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய” (திருவாய்மொழி 5-9-1) என்று மெலிவாரையும்‌ “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல்வினை” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ “சேமங்கொள் தென்னகர்‌’ (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்‌யவஸிக்கலாம்படி யிருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய்‌ அத்தாலே நித்யமென்கிறார்

166-வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷண ஸ்தைர்யம்‌ பம்போத்தர தேஸஸ்த்தம்‌.
(வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷணஸ்தைர்யம்‌) “சரணே சரண்‌”
(திருவாய்மொழி 5-10-11 என்கிற அத்‌யவஸாயத்தை “ஜ்ஞாந ஸம்பந்ந:’ என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்‌’ (திருவாய்மொழி 6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில்‌ “மித்ரபாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந” (ரா.யு18-3, “ஸக்ருதேவ”(ரா.யு18-33) இத்யாதிகளிலே ப்ரகாஸிப்பதாய்‌ அநுகூலராலும்‌ குலைக்க வொண்ணாத படியான ஸ்தைர்யம்‌ (பம்போத்தர தேஸஸ்தம்‌) “தேறு நீர்ப் பம்பை வடபாலைத்‌ திருவண்வண்டுர்‌’ (திருவாய்மொழி 61-10) என்று விரஜைக் கரை யென்னுமா போலே திருப் பம்பை யாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம்‌ என்கிறார் –

167-விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.
(விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌)
இப்படி வ்யவஸிதராயிருக்கச்‌ செய்தேயும்‌ ஈஸ்வரன்‌ முகம்‌ காட்டாமல்‌ விளம்பிக்கையாலே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-1 என்றும்‌ “கழகமேறேல்‌ நம்பீ” (திருவாய்மொழி 6-2-6) என்றும்‌ இவர்களுக்கு ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தா யுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அழிக்கும் படியான ‘நல் குரவும்‌ செல்வும்‌ நரகும்‌ சுவர்க்கமுமாய்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று தொடங்கி -தன்னில் தான்‌ சேராத தாரித்‌ர்யம்‌ ஐஸ்வர்யம்‌ என்கிற விருத்‌தங்களைத்‌ தனக்கு விபூதியாமிடத்து இவற்றினுடைய விரோதங்களைத்‌ தன் பக்கலிலே சேர்த்துக்‌ கொள்ளும்படியான அ கடித க டநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரான திரு விண்ணகரிலே நிற்கிற நிலையிலே “பல்வகையும்‌ பரந்த பெருமான்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று பரக்கக்‌ காணலாம்‌ –

168-௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.
(கடிதகடநா பாந்தவம்‌) “தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு இழை கொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌’
(திருவாய்மொழி 6-5-5) என்று பகவத்‌ விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதா பிதாக்களோடும்‌ உமக்காசை யில்லை விடுமினோ” (திருவாய்மொழி 6-5-1, நம்மைக்‌ கை வலிந்து என்ன வார்த்தையும்‌ கேட்குறாள்‌” திருவாய்மொழி 6-5-7 என்று பொருந்தாமையைப்‌ பிறப்பித்த அவனுடைய பாந்தவம்‌ “தேவபிரானையே தந்தை தாய் (திருவாய்மொழி-6-5-11) என்று அவனுடைய பரம பாந்தவம்‌ (அவ்வூரிலே த்‌விகுணம்‌.) அவ்வூர் திரு நாமம் (திருவாய்-6-5-10) என்று திருவில்லித்தொலை மங்கலமான அவ்வூரிலே-தேவபிரான் அரவிந்த லோசனன் என்றும் நின்றிருந்துறையும்‌” (திருவாய்மொழி 6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதி யாகையாலே இரட்டித்திருக்‌க்கும் என்கிறார் –

169-கைம்முதலிழந்தாருண்ணும்‌ நிதியின்‌ ஆபத் ஸகத்வம்‌ புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌.

(கைம்முதலிழந்தார்‌ உண்ணும்‌ நிதியின்‌ ஆபத்ஸகத்வம்‌) ” ஏலக்குழலி இழந்தது சங்கே (திருவாய்மொழி 6-6-1 என்று இப்பாலுண்டான ப்ராப்யாபாஸ் ப்ராபகாபாஸங்களைக்‌ கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ் சோறு பருகும்‌ நீர்‌ தின்னும்‌ வெற்றிலையும்‌ எல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்கள்‌ தானேயாம்படியான “வைத்தமாநிதி” (திருவாய்மொழி 6-7-1 என்று ஒருகாலும்‌ தொலையாதபடியான நிதியாயிருக்கிறவனுடைய ஆபத் ஸகத்வம்‌ (புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌) “புகுமூர்‌ திருக்கோளூர்‌ (திருவாய்மொழி 6-7-1 என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலே “செல்வம்‌ மல்க” (திருவாய்மொழி 6-7-4, 7) என்று ஸம்ருத்‌த மாயிருக்கும்‌ என்கிறார்‌-

170-சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.
(சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌) “தென்திருப்பேரையில்‌ சேர்வன்‌ சென்றே
” (திருவாய்மொழி 7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக்‌ கைவிட்டுச்‌ சென்று ப்ரவேஸிக்குமவர்களுக்கு “என்‌ நெஞ்சினாரும்‌ அங்கே யொழிந்தார்‌ உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்றும்‌, “முழங்கு சங்கக்கையன்‌ மாயத்தாழ்ந்தேன்‌” (திருவாய்மொழி 7-3-4 என்றும்‌ உசாத் துணையான நெஞ்சையும்‌ அபஹரிக்கும்படியான “செங்கனிவாயின்‌” (திருவாய்மொழி 7-3-3) இத்யாதியில்‌ சொல்லுகிற ஸெளந்தர்யத்தை “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” (திருவாய்மொழி 7-3-9) என்று மஹாநகரமான திருப்பேரையில்‌ நிற்கிற நிலையிலே “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி 7-3-4) என்கிறபடியே அவ்வூரில்‌ ஸாமவேத, கோஷந்தானே சொல்லா நின்ற தென்கிறார் –

171-ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.
(ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆநந்த வருத்தி) “தீவினை உள்ளத்தின்‌ சார்வல்ல இத்யாதி, “என்றுமென்‌ சிந்தனை
” (திருவாய்மொழி 7-10-9) என்று அவித்‌யாதிகள்போய்‌ பரமபத ப்ராப்தியிலே ஒருப்பட்டாலும்‌ த்ரிவித கரணங்களாலும்‌ ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படியான திருவாறன்‌ விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும்‌ என்னா நின்றதென்‌ நெஞ்சானது என்று தன் பக்கல்‌ ப்ரவணமான சித்தத்தை “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” (திருவாய்மொழி 7-10-10 என்று பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும்‌ உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம்‌ பயக்க எழில்மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ்வேழுலகை இன்பம்‌ பயக்கவினிதுடன்‌ வீற்றிருந்து” (திருவாய்மொழி 7-10-1 என்கிற ஆநந்த வ்ருத்‌தி நீணகரான திருவாறன்விளையிலே காணலாமென்கிறார் –

172-ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடிவிடும்‌. (ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டிதாஸ்சர்யம்‌] “கூடச் சென்றேன்‌‘ இத்யாதி- ஆதரித்து” கூடச்சென்றேன்‌’ என்று இப்படி ஆதரமுடையாரை ‘பல்வளையார் முன்‌ பரிசழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக் கூத்தென்கிற சேஷ்டிதாஸ்சர்யம்‌ (குளத்தே கொடிவிடும்‌) தென் குளந்தையிலே “மாடக்‌ கொடி” (திருவாய்மொழி 8-2-4) என்று கொடி யெடுத்து ப்ரகாஸிக்கும்‌ என்கிறார்‌.

173-ஸ்ரமமனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌ ஆய்ச்சேரியிலே.
(ஸ்ரமமனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌) பணியாவமரர்‌ இத்யாதி. “திருநீலமணியார்‌ மேனியோடு என்‌ மனம் சூழ வருவாரே
(திருவாய்மொழி 8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஸ்ரமம்‌ இவர்‌ நெஞ்சிலே சூழ வரும்படியான ஸெளகுமார்யம்‌ “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று அப்ராக்ருத விக்‌ரஹத்தினுடைய ஸெளகுமார்ய ப்ரகாஸம்‌-

174-மஹாமதிகள்‌ அச்சம்‌ கெட்டு அமரும்‌ சவ்ர்யாதிகள்‌ சிற்றாற்றிலே கொழிக்கும்‌.
(மஹாமதிகள்‌ அச்சம்‌ கெட்டமரும்‌ சவ்ர்யாதிகள்‌ சிற்றாற்றிலே கொழிக்கும்‌) “ஸம்ஸ்ப்ருயந்நாஸநம்‌ சவ்ரே: விதுர: ஸ: மஹாமதி
:” (பார. உத்‌). இப்படி ஸர்வஸக்திக்கும்‌ பரியும்படியான மஹாமதிகள்‌ ஸெளகுமார்ய அநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர்‌ “எங்கள்‌ செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று எங்களைப்‌ போல்வார்க்கு நிர்பயஸ்த்தா மென்று அச்சம்‌ கெட்டு “நான்முகனை அமர்ந்தேனே (திருவாய்மொழி 8-4-10) என்று இவர்‌ அமர்ந்து ஸுஸ்திரராம்படியான “வார்கடாவருவி” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (சவ்ர்யாதிகள்‌) சவ்ர்யாதிகள்‌ திருச்செங்குன்றூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதி யாலே கொழிக்கும்‌-என்கிறார்‌.

175-ஸாத்‌ய ஹ்ருதிஸ்த்தனாயும்‌ ஸாதநம்‌ ஒருக்கடுக்கும்‌ க்ருதஜ்ஞதாகந்தம்‌-தாயப் பதியிலே-(ஸாத்‌ய ஹ்ருதிஸ்தனாயும்‌ ஸாதநமொருக்கடுக்கும்‌ க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே )திருக் கடித்தானமும்‌ என்னுடைச்‌ சிந்தையும்‌ ஒருக்கடுத்‌துள்ளே உறையும்‌ பிரான்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 8-6-2) என்று ஸாத்‌யமான ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச்‌ செய்தேயும்‌ இவ்வா ழ்வார்‌ திருவுள்ளத்தைப்‌ பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் -அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம்‌ தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம்‌ “தனதாயப்பதி” (திருவாய்மொழி 8-6-8) என்று அவனுக்கு தாயப்ராப்தமான திருக்கடித்தானத்திலே என்கிறார்‌. கடித்தானம்‌ வாசப் பொழில்‌ என்றும்‌ சொல்லுகையாலே கந்தமென்கிறது.

176-அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும்‌ நாயக லக்ஷணம்‌ வளம்‌ புகழுமூரிலே குட்டமிடும்‌.
(அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும்‌ நாயக லக்ஷணம்‌ வளம்புகும்‌ ஊரிலே குட்டமிடும்‌) “அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினளே”
(திருவாய்மொழி 8-9-5) என்று இப்படித்‌ தன்னுடைய க்ருபையிலே மறு நனைய மூழ்கினாரை “அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) என்றும்‌, “திருப்புலியூர்‌ புகழன்றி மற்று பரவாளிவள்‌’ (திருவாய்மொழி 8-9-9) என்றும்‌ “மாயப்பிரான்‌ திருவருளாம்‌ இவள்‌ நேர்பட்டதே” (திருவாய்மொழி 8-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும்‌ அவயவ ஸோபை, ஆபரண ஸோபை, தொடக்கமான நாயக லக்ஷணம்‌; “திருப்புலியூர்‌ வளம்‌ புகழும்‌” (திருவாய்மொழி 8-9-3) என்று இவர்‌ கொண்டாடும்படியான ஐஸ்வர்யத்தை யுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும்‌ என்கிறார் –

177-போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில்‌ மூன்றிலும்‌ ப்ரகடம்‌.
( போக்‌ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில்‌ மூன்றிலும்‌ ப்ரகடம்‌)
பசித்த புருஷன்‌ அந்நம்‌ பக்வமாமளவும்‌, நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹராகையாலே போக்‌யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம்‌ பிறக்குமளவும்‌ போக்தாவான ஸர்வவேஸ்வரனுக்குண்டான த்வரை “தெளிந்த என்‌ சந்தை” என்கிற சந்தைக்கு முன்னில்‌ “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” (திருவாய்மொழி 9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும்‌ கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த்‌ தோற்றுமென்கிறார் –

178-போகத்தில்‌ தட்டுமாறும்‌ ஸீலம்‌ காட்கரையிலே கரையழிக்கும்‌.
(போகத்தில்‌ தட்டுமாறும்‌ சீலம்‌ காட்கரையிலே கரையழிக்கும்‌)
இப்படி போக்‌யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என்‌ உயிருண்ட மாயன்‌” (திருவாய்மொழி 9-6-7) என்றும்‌, “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்றும்‌, “தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌” (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌, அத்தலை யித்தலையாய்‌ ஸேஷ ஸேஷி பாவம்‌ மாறாடும்படியான ஸீலம்‌ திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையுமழியப்‌ பெருகும்‌ என்கிறார் –

179-மஹாத்மாக்கள் விரஹம்‌ ஸஹியாத மார்தவம்‌ வளத்தின்‌ களத்தே கூடு பூரிக்கும் –
“தமரோடங்குறைவார்‌’
(திருவாய்மொழி 9-7-2) “என்றும்‌ “ஸக்ருத்வதாகாரேத்யாதி, க்ஷணேபி தே யத்‌ விரஹோ அதி துஸ்ஸஹ (ஸ்தோத்ர ரத்நம்‌ 55 -என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய விக்‌ரஹத்தை ஒருகால்‌ காண வேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும்‌ த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம்‌ தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம்‌, அதாகிறது நெஞ்சில்‌ மென்மை. மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல்‌ 129) என்கிற திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம்‌ என்கிற ஸமாதியாலே கூடு பூரிக்கும்‌ என்கிறார் –

180-பிரிந்த துன்பக்‌ கடல்‌ கடத்தும்‌ விஷ்ணுபோதாந்ருஸம்ஸ்யம்‌ நாவாயிலே நிழலெழும்‌.
(பிரிந்த துன்பவித்யாதி ) “அன்புடையாரைப்‌ பிரிவுறுநோய்‌ துன்பக்‌ கடல்‌ புக்கு”
நாச்சியார்‌ திருமொழி 5-4) என்றும்‌, ” யஸ்த்வயா ஸஹ ஸஸ்வர்க்கோ, நிரயோ யஸ்த்வயா விநா” (ரா.௮.30-18) என்கிறபடியே தன்னைப்‌ பிரிகையாகிற துக்க ஸாகரத்திலே அழுந்துமவர்களை “ஸம்ஸாரார்ணவ மக்‌நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநா நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌” (விஷ்ணு தர்மம்‌ என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணு போதத்தினுடைய, “ஆவாவடியான்‌ இவனென்றருளாய்‌” (திருவாய்மொழி 9-8-7) என்கிற ஆந்ருஸம்ஸ்யம்‌ திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும்‌, “கொந்தார்‌ மலர்ச்‌ சோலைகள்‌ சூழ்‌” (திருவாய்மொழி 9-8-10) என்று சோலையைச்‌ சொல்லுகையாலே நிழலெழும்‌ என்கிறார் –

181-ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.
“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும் பிரான்‌”
(திருவாய்மொழி 9-10-5) என்று இப்படி ஸரண்யனான அவனுடைய மோக்ஷ ப்ரதத்வம்‌ உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ சவ்ரிராஜமஹம்‌ வந்தே, ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்‌” (திருக்கண்ணபுரம்‌ ஸ்தலபுராணம்‌?) என்று திருக்கண்ணபுரத்திலே உத்பலாவதக மென்னும்‌ பேரையுடைத்தான திவ்ய விமாநத்தில்‌ நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார் –

182-மார்க்க பூந்து ஸைத்யம்‌ மோஹநத்தே மடுவிடும்‌.
இப்படி மோக்ஷ ப்ரதனாமிடத்தில்‌ முக்தி மார்க்கமான அர்ச்‌சிராதி மார்க்கத்துக்குத் துணையான “ ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) என்றும் -ஆப்த பந்துவானவனுடைய சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌ காளமேகத்தை யன்றி மற்றிலம்‌ கதியே” (திருவாய் -10-1-1-) என்றும்‌,அவனடி நிழல் தடமன்றி யாமே (திருவாய்மொழி 10-1-2) என்றும்‌ ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஸைத்யம்‌ மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே, மரகத மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்கிற ஸமாதியாலே மடுவிடும்‌ என்கிறார் –

183-ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.
(ஸஸைந்யேத்யாதி,) (ஸஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்‌ பணி செய்வர்‌ விண்ணோர்‌
” (திருவாய்மொழி 10-2-6) என்கிற ஸேநா ஸஹிதரான ஸேநை முதலியாராகிற ஸாத்‌யர்‌, (புத்ர) உலகுயிர்‌ தேவும்‌ மற்றும்‌ படைத்த” (திருவாய்மொழி 10-2-7) என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்‌ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்‌தர்‌, (ஸிஷ்யர்‌) “நடமினோ நமர்களுள்ளீர்‌ அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” (திருவாய்மொழி 10-2-8) என்று இவர்‌ உபதேஸிக்கக்‌ கேட்ட ஸிஷ்யர்களாகிற பூஸுரர்‌ என்கிற இவர்கள்‌ மூவரும்‌ அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல்‌ மூன்றாலும்‌ காட்டுகையாலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம்‌ கொடுக்கும்‌ ஸாம்யம்‌ திருவனந்தபுரத்தில்‌ கண் வளருகிற கிடை யழகிலே ஸுவ்யக்தமாகக்‌ காணலாமென்கிறார்

184-மோக்ஷதாநத்தில்‌ ப்ரணத பாரதந்த்ர்யம்‌ வளம்மிக்க நதியிலே கரைபுரளும்‌.
“அருள்தருவா னமைகின்றான்‌ அது நமது விதி வகையே’
” (திருவாய்மொழி 10-6-1 என்றும்‌, “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” திருவாய்மொழி 10-6-3) என்றும்‌, இப்படி ஸர்வ ஸமனானவன்‌ ஆஸ்ரிதர்க்கு மோக்ஷத்தைக்‌ கொடுக்குமிடத்தில்‌ அவர்கள்‌ விதித்தபடியே செய்யக் கடவோமென்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம்‌ “வளம்மிக்க வாட்டாற்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரை புரளும்‌ என்கிறார் –

185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்‌ மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌.
(த்யாஜ்யதே ஹவ்யாமோஹம்‌) ‘ மாய வாக்கை இதனுள்‌ புக்கு”
(திருவாய்மொழி 10-7-3) என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ்‌ சோலை இத்யாதிப்படியே தேஸ விஸேஷத்திலே பண்ணுமாதரத்தையும்‌ இதிலே பண்ணி இவர்‌ “மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-7-10) என்று கால் கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம்‌ (மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌) “மருள்கள்‌ கடியும்‌ மணி மலை” (திருவாய்மொழி 10-7-7) என்று ஸர்வருடையவும்‌ அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப்‌ போக்குமதாய்‌ ‘ மயல்மிகு பொழில்சூழ்‌ மாலிருஞ்சோலை” (திருவாய்மொழி 2-10-3) என்று போக்த்தாக்கள்‌ அடைவு கெடும்படி பிச்சேற்ற வற்றாயிருக்கிற தெற்குத்‌ திருமலையில்‌ நிற்கிற நிலையிலே; சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும்‌ என்கிறார்-

186-அங்கீ,கரிக்க ௮வகாஸம்‌ பார்க்கும்‌ ஸ்வாமித்வம்‌ பெருககரிலே பேர் பெற்றது, “திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத்‌ திருமால்‌ வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌” (திருவாய்மொழி 10-8-1 என்று இவரை விஷயீகரிக்க அவகாஸம்‌ பார்த்து மடிமாங்காயிட்டும்‌ விஷயீகரிக்க வேணு மென்கிற ஸ்வாமித்வம்‌ “பெருநகரரவணை மேல்‌” (பெரியதிருமொழி 5-9-3) என்கிற திருப்பேர்‌ நகரில்‌ கண் வளர்ந்தருளுகிற விடத்தே ப்ரஸித்‌தம்‌ என்கிறார் –

187-இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்‌ பரமே யென்ன வுண்டாய்‌ ஷோடஸ கலா பூர்ணமான சந்த்‌ர மண்டலம்‌ போலே பதினாறு திருநஷத்ரம்‌ நிரம்பினவாறே தேவ போக்யமானவதில்‌ அம்ருதம்‌ போலன்றிக்கே என்னாத்‌ தமிழர்‌ இசைகாரர்‌ முதற்பத்தர்‌ வானவர்‌ என்னம்மான்‌ பார்பரவென்னும்படி ஸேஸ்வர விபூ,தி போக்‌யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம்‌ செய்தது.

(இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்பரமே என்ன வுண்டாய்‌) இத் திருப்பதிகளில்‌ நிற்கிற நிலையில்‌ இவர்க்கு உண்டான ப்ராவண்யம்‌ “பெருமான்‌ மலையோ திஸ்ருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்‌ இவள்‌ பரமே” (திருவிருத்தம்‌ 60) என்று நிஷேதகரும்‌ ஆஸ்சர்யப்படும்படி உண்டாய்-பதினாறு கலையும்‌ நிறைந்தால்‌ சந்த்‌ரன்‌ பூர்ணனாமாப் போலே இவரும்‌ திருவவதரித்தவன்று தொடங்கி …… த்தோடே யிருந்து பகவதநுபவத்தைப்‌ பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க்‌ கொண்டு பதினாறு திருநக்ஷத்ரம்‌ நிரம்பினவாறே அந்த சந்த்‌ரன்‌ பக்கலுண்டான அம்ருதம்‌ தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய்‌ அந்த சந்த்‌ரனுக்கு வ்ருத்‌தி ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்திலல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய்‌ தேஹத்தைப்‌ பூண் கட்டுமதாகையாலே ஸம்ஸார வர்த்தகமாயிருக்கும்‌ அது போலன்றிக்கே -(என்னாத்‌ தமிழர்‌ இத்யாதி மென்மொழி முகம் செய்து ) என்நாவிலின் கவி (திருவாய் -3-9-1) என்னுமா போலே தமிழர் இசைகாரர்‌ பத்தர் பரவும் ஆயிரம் (திரு -1-5-11) என்றும் தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைத் சொன்ன (திருவாய் -7-9-3) என்றும் கேட்டாரார் வானவர்கள் (திரு 10-6-11) என்றும்‌-தென்னா வென்னுமென்னம்மான்‌” (திருவாய்மொழி-10-7-5) என்றும் பார்பரவின்கவி’ (திருவாய்மொழி 7-9-5) என்றும்‌ சொல்லுகிறபடியே தம்மோடு பிறரோடு ஈஸ்வரனோடு வாசியற ஸர்வஜந போக்‌யமாகையாலே ஸர்வாதிகாரமுமுமாய்‌ அந்த சந்த்‌ரனைப்‌ போலே விருத்‌தி க்ஷயங்களின்றிக்கே காதல்‌ கடல்புரைய” (திருவாய்மொழி 5-3-4) ‘ காதல்‌ (கடலின்‌) மிகப்‌ பெரிது”(திருவாய்மொழி 7-3-6) “அதனில்‌ பெரிய என்னவா” (திருவாய்மொழி 10-10-10) என்கையாலே விருத்‌தியேயாய்‌, ஸதா போக்‌யமுமாய்‌, “உயிரின்‌ மேலாக்கை
ஊனிடையொழிவிக்குமே” (
திருவாய்மொழி 3-2-11 என்று மாம்ஸாஸ்ருகாதி மயமான ஸரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸார நிவர்த்தகமாமளவே யன்றிக்கே மேலை வைகுந்தத்து இருத்தும்‌” (திருவாய்மொழி 8-6-11) என்று அப்ராக்ருத திவ்யதேஸ ப்ராப்தியையும்‌ பண்ணித் தரவற்றான “பாலோடமுதன்னவாயிரம்‌(திருவாய்மொழி 8-6-11) என்றும்‌ “அமுதமென்மொழி‘ (திருவாய்மொழி 6-5-2) என்றும்‌ சொல்லுகிற படியே அம்ருத ரூபமாய்‌ அதிலும்‌ அதிமார்த்தவத்தை யுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றின’ என்கிறார் –

188-நீர்‌ பால்‌ நெய்யமுதாய்‌ நிரம்பின வேரி நெளிக்குமா போலே பரபக்த்யாதி மய ஜ்ஞாநாம்ருதாப்‌தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழி பட்டு அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது.
இப்படி போக்‌யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு அந்த ஸப்‌த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க்‌ கொண்டு அவதரித்ததென்கிறார்‌. (நீர்பால்‌ நெய்யமுதாய்‌) நீர்‌ பாலாய்‌, பால்‌ நெய்யாய்‌, நெய்‌ அம்ருதமாய்‌, அவ் வம்ருதத்தாலே நிரம்பினதோர்‌ ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம்‌ பக்தியாய்‌, பக்தி பரபக்தியாய்‌, பரபக்தி பரஜ்ஞாநமாய்‌, பரஜ்ஞாநம்‌ பரமபக்தியாய்‌ “அச்யுத பக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்‌தி, பரிவாஹ ஸூபை ர்‌ வசோபி:,” (ஸ்தோத்ர ரத்நம்‌ 3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்‌தியானது (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேககை பிறந்து “நிமியும்‌ வாய்‌” (திருவாய்மொழி
6-5-2) என்கிற வாய்க்கரையை “மிடைந்த சொல்‌ தொடை” (திருவாய்மொழி 1-7-11)
என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்து “மொழிபட்டோடும்‌ கவியமுதம்‌”(திருவாய்மொழி 8-10-5 என்று சொற்களாய்க்‌ கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதிஎன்று பேர்‌ பெற்றது) ‘அவாவிலந்தாதிகளால்‌ இவையாயிரமும்‌” (திருவாய்மொழி-10-10-19 என்று பரபக்த்யாதிகளாலே “சொல்லப்பட்ட ஆயிரம்‌” (திருவாய்மொழி-8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்‌த மாய்த்தென்கிறார் –

189-மனம்செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரியதோ,ஷபல, மந ப்ராதா,ந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுரவிபாக, விபூதி யோக, , விஸ்வருபதர்ஸந, ஸாங்கபத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.
தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌. (மனஞ் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌) “எல்லாப்பொருள்கட்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனம்‌ செய்‌ ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி 1-5-2) என்று ஸர்வத்துக்கும்‌ காரணமாகா நிற்கச்‌ செய்தே தான்‌ நிர்விகாரமாய்‌ “எல்லையில்‌ ஞானத்தன்‌ ‘ (திருவாய்மொழி 3-10-8 என்று அபரிச்சேத்‌யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையும்‌ “சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர் ஞான வின்பமேயோ’ (திருவாய்மொழி 10-10-10) என்று ப்ரக்ருதி புருஷர்களிரண்டும்‌ தனக்குள்ளேயாம்படி வியாப்தமாய்‌, தான்‌ அபரிச்சேத்‌யமாய்‌ விஸத தமமாய்‌ அநந்த ரூப ஜ்ஞாநமாய்‌ இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும்‌ “நிறைந்த ஞானமூர்த்தியாயை நின் மலமாக வைத்து” (திருவாய்மொழி 4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூப ஸ்வபாவங்களிரண்டும்‌ ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வருபனாயிருக்கிறவனை விஸத தமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வ தர்ஸிகளா யிருக்கிற இவர்‌, (ஞானப் பிரானை ஞானத்து வைம்மின்‌ என்ற இது) “இருங் கற்பகம்‌ சேர்‌ வானத்தவர்க்கும்‌ அல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ ஞானப் பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” (திருவிருத்தம்‌ 99) என்று உபக்ரமித்து “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌ உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்‌நையான ஸ்ரீபூமிப் பிராட்டியை மஹா வராஹமாய்க்‌ கொண்டு எடுத்தவனுமாய்‌, ஸ்லோக த்‌வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனு மாயிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிற தேஸத்தை உங்கள்‌ மாநஸ ஜ்ஞாநநத்துக்கு விஷய மாக்குங்கோளென்று இப்படி உபபாதிக்கிற இப்ரபந்த,ம்‌ (தத்த்வ விவேகம்‌) திருத் தேர்த்தட்டிலே “விஸ்ருஜ்ய ஸமரஞ்சாபம்‌ ஸோகஸம்விக்‌ந மாநஸம்‌” (கீதை 1-47) என்று பந்து ஹத்யாபீதனாய்க்‌ கொண்டு ஸோகிக்கிற அர்ஜுநனைக்‌ குறித்து அவனை “ஸ்திதோஸ்மி’ (கீதை 18-73) என்னப்‌ பண்ணுகைக்காக “நத்வேவாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஐநாதி பா: ந சைவ ந ப.விஷ்யாம: ஸர்வேவயமத:பரம்‌” (கீதை 2-12) என்று நீயும்‌ நானும்‌ இந்த ராஜாக்களும்‌ முன்பாக இல்லாமலுமில்லை, மேலும்‌ இல்லாமலுமில்லை என்று ஜீவ பரபேதம்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம்‌, “தேஹிநோஸ்மிந்‌ யதா, தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா ததா, தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர ந முஹ்யதி” (கீதை 2-13) என்றித்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற தத்வ விவேகம்‌; (நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்‌யோயமதாஹ்‌ யோயம்‌ அக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகதஸ்தாணுரசலோயம்‌ ஸநாதந:” (கீதை 2-24) என்றும்‌, “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்‌ருஹ்ணாதி நரோபராணி ததா, ஸரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ’ (கீதை 2-22, “நாஸதோ வித்‌யதே பாவோ நாபாவோ வித்‌யதே ஸத:’ (கீதை 2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வா நித்யத்வம் “பூமிராபோநலோவாயு: கம்‌ மநோ புத்‌திரேவ அஹங்கார இதீயம்‌ மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா வைன்‌ வலவன்‌ ப்ரக்ருதிம்‌ வித்‌தி மே பராம்‌ தீவபூதாம்‌ மஹாபாஹோ யயேதம்‌ தார்யதே ஜெகத்‌ (கீதை7-4,5) என்று சேதநா சேதநங்களை ஸாரீரமாக வுடையனாய்க் கொண்டு, “ஸர்வஸ்யசாஹம்‌ ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ்‌ (கீ தை 15-1) என்றும்‌, “ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌தே ஸோரஜ “ந திஷ்டதி ப்‌ராமயந்‌ ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா (கீதை 18-61 )என்றும்‌ ஸ்வ ஸரீரபூதமான ஸர்வ ஜந்துக்களினுடைய ஹ்ருதய ப்ரதேஸத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்‌ தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்‌; (ஸெளலப்‌ய) “தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந:” (கீதை 8-14) என்றும்‌, “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (கீதை 19-8) என்றித்யாதியாலும்‌ பக்திமான்கள்‌ நிமித்தமாகவும்‌ அவதார ப்ரயுக்தமாகவும்‌ உண்டான அவனுடைய ஸெளலப்‌யம்‌; (ஸாம்ய) ‘ஸமோஹம்‌ ஸர்வபூதேஷ- ந மேத்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” (கீதை 9-29 என்று அவனுடைய ஸர்வபூத ஸமத்வம்‌; (அஹங்காரதோஷ) “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை: கர்மாணி ஸர்வ: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” (கீதை 3-27) என்று அஹங்கார தோஷம்‌; (இந்த்‌ரிய பல) “இந்த்‌ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம்‌ மந:” (கீதை 2-60) என்று இந்த்‌ரிய ப்ராபல்யம்‌ (மந:ப்ராதாநய) “அஸம்ஸயம்‌ மஹாபாஹோ மநோ துர் நிக்‌ரஹம்‌ சலம்‌ அப்‌யாஸேந து கெளந்தேய வைராக்‌யேண ச க்‌ ருஹ்யதே” (கீதை 6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதா நீயம்‌; (கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்‌ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச (கீதை 2-61 இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம்‌; (ஸூக்ருதி பேத) “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்த ஜ்ஞாநீ ச பரதர்ஷப,” (கீதை 7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதி பேதம்‌; (தேவாஸுரவிபா ௧) “த்‌வெள பூதஸர்கெள, லோகேஸ்மிந்‌ தைவ ஆஸ ஏவ ச தை வீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தா யாஸுரீமதா” (கீதை 16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்‌; (விபூதி யோக,) “ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை 10-10), “ஆதித்யாநாம்‌ அஹம்‌ விஷ்ணு: ஜ்யோதிஷாம்‌ ரவிரம்ஸூமாந்‌’ (கீதை 10-2) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதி யோகம்‌; (விஸ்வரூபதர்ஸந) “பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விஸேஷ ஸங்காந்‌ ப்‌ரஹ்மாண மீஸம்‌ கமலாஸநஸ்த்தம்‌ ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌ (கீதை 11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஸ்வரூப தர்ஸநம்‌; (ஸாங்க பக்தி) மந்மநாபவ மத்பக்தோ மத்‌ யாஜீ மாம்‌ நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை 18-65) என்று சொல்லப்பட்ட அங்க, ஸஹிதையான பக்தி; (ப்ரபத்தி த்‌வைவித்‌யம்‌) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவயே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-10), “தமேவ ஸரணம்‌ ௧ச்ச ஸர்வபாவேந பாரத (கீதை 18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்க ப்ரபத்தி, “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” (கீதை 18-66) இத்யாதி யாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர ப்ரபத்தியாகிற இவ்வர்த்த, விஸேஷங்களை ஸ்ரீ கீதா முகத்தாலே உபபாதித்தாப்போலே,
“அடியேனுள்ளான்‌ உடலுள்ளான்‌” (திருவாய்மொழி 8-8-2 என்று ஜீவ பர பேதமும்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும்‌, “சென்று சென்று பரம்பரமாய்‌ யாதுமின்றித்‌ தேய்ந்தற்று நன்று தீதென்றறிவரிதாய்‌ நன்றாய்‌ ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி 8-8-5) என்று தேஹத்துக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டான பேதமுமாகிற தத்த்வ விவேகத்தையும்‌, “மின்னின்‌ நிலையில மன்னுயிர்‌ ஆக்கைகள்‌” (திருவாய்மொழி 1-1-2), “உள்ளதும்‌ இல்லதும்‌”(திருவாய்மொழி 1-2-8) என்று ஆத்மாவினுடையவும்‌ அசித்தினுடையவும்‌ நித்யத்வாநித்யத்வங்களையும்‌, “உடல் மிசை உயிரெனக்‌ கரந்து எங்கும்‌ பரந்துளன்‌’ (திருவாய்மொழி 1-1-7) என்றும்‌, “கரந்தசிலிடந்தொறும்‌ இடந்திகழ்‌ பொருடொறும்‌” (திருவாய்மொழி 1-1-10) என்றும்‌ அந்த சேதநாசேதநங்கள்‌ ஸரீரமாகத்‌ தான்‌ ஸரீரியாய்க்‌ கொண்டு “நின்றனர்‌” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதி யாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்‌ ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும்‌, பத்துடை யடியவர்க்கு எளியவன்‌ (திருவாய்மொழி 1-3-1) என்றும்‌, “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌ ‘ (திருவாய்மொழி 1-3-2) என்றும்‌ ஆஸா லேஸமுடையவர்க்கு ஸுலபன்‌ என்றும்‌, அவதரித்து ஸுலபனாயென்றும்‌ சொல்லுகிற அவனுடைய ஸெளலப்‌ யத்தையும்‌, “முற்றவும்‌ நின்று” (திருவாய்மொழி 1-2-6) என்று ஆஸ்ரயணீயத்வே ஸர்வஸமனாய்‌ நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும்‌, ‘ நீர் நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும்‌, “விண்ணுளார்‌ பெருமாற்கு அடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலன்‌” (திருவாய்மொழி 7-1-6) என்று இந்த்‌ரிய பலத்தையும்‌, “என்றும்‌ ஏத்துதல்‌ மனம்‌ வைம்மினோ” (திருவாய்மொழி 3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும்‌, “உள்ள முரை செயல்‌ உள்ள விம்‌ மூன்றையும்‌ உள்ளிக் கெடுத்து” (திருவாய்மொழி 1-2-8) என்று கரண நியமநத்தையும்‌, ‘பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌, “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று தேவாஸூர விபாகத்தையும்‌, புகழு நல்லொருவனென்கோ திருவாய்மொழி 3-4-1) என்று தொடங்கி ‘நல்குரவும்‌ செல்வும்‌” (திருவாய்மொழி 6-3-1 “மாயா வாமனனே” (திருவாய்மொழி 7-8-1 என்கிற திருவாய்மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதி யோகத்தையும்‌, “நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌ சிவனாய்‌ அயனானாய்‌” (திருவாய்மொழி 6-9-1) என்று விங்வரூப தர்ஸனத்தையும்‌, ‘வணக்குடைத்‌ தவநெறி வழிநின்று புறநெறிகளைகட்டு உணக்குமின்‌ பசையற அவனுடை உணர்வுகொண்டுணர்ந்தே” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌, “நன்றெனநலம்‌ செய்வது அவனிடை” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மேவித் தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப்
புனிதவிருக்கை நாவில்‌ கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி 5-2-9) என்று அங்க ஸஹிதமான பக்தி யோகத்தையும்‌, “சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்‌ கெல்லாம்‌” (திருவாய்மொழி 8-10-5) என்றும்‌ “மற்றொன்றில்லை” (திருவாய்மொழி 9-1-7) என்கிற பாட்டிலும்‌ சொல்லப்பட்ட ப்ரபத்தி த்‌வைவித்‌யத்தையும்‌
ஆக இவ்வர்த்த விஸேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக்‌ காண்கையாலே “மாயன்‌ அன்றோதிய வாக்கை” (நான்முகன்‌ திருவந்தாதி 71) என்கிற ஸ்ரீ கீதையோடொக்கும்‌ என்கிறார்‌.

190-அது தத்த்வோபதேஸம்‌; இது தத்த்வதர்ஸி வசநம்‌.

ஆக இதுக்குக்‌ கீழ்‌ ஸ்ரீ கீதையோ டொக்கத்‌ திருவாய்மொழிக்கு ஸாம்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும்‌ ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்‌ உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும்‌, ப்ரபந்த ப்ரதிபாத்‌ய அர்த்த வைஷம்யமும்‌ சொல்லுகிறது. (அது தத்வோபதேஸம்‌) அந்த ஸ்ரீகீதை பரதத்த்வ பூதனான க்ருஷ்ணன்‌ தானே உபதேஸித்தது. இந்தப்ரபந்தம்‌ (தத்த்வதர்ஸி வசநம்‌) “தத்‌ வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா உபதேஷயந்தி தே ஜ்ஞாநம்‌ ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:” (கீதை 4-34) என்று இது அவனும்‌ ஆப்த தமனாக அருளிச் செய்த தத்வதர்ஸிகளான இவருடைய வார்த்தை. “அஹம்‌ க்ருத்ஸ்நஸ்ய ஐகத: ப்ரபவ: ப்ரலயஸ் ததா மத்த: பர தரம்‌ நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய” (கீதை 7-6 என்று ஸ்வ வைபவத்தைத்‌ தானே அருளிச்
செய்கையாலே ஸ்வப்ரமம்ஸை போலிருக்கையாலே மந்த மதிகளுக்கு விஸ்வஸநீயமல்ல. “பொலிந்து நின்ற பிரான்‌ கண்டீர்‌ ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) என்று மத்‌யஸ்த்தரான இவர்‌ அருளிச்‌ செய்த இது ஆப்த வாக்யமாகையாலே விஸ்வஸநீயம்‌. ஆகை யிறே அவன் தான்‌ தத்த்வதர்ஸிகளை ப்ரஸம்ஸித்து அவர்களுபதேஸிக்குமதுவே ஜ்ஞாநம் என்கிறது –

191-அது ஐவரை வெல்வித்துப்‌ பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத்‌ தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது.
(அது ஐவரை வெல்வித்துப்‌ பதித்தைந்திரட்டி படச்‌ சொன்னது) அந்த ஸ்ரீ கீதை “த்‌ரெளபத்யாஸ்‌ ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர்‌ ஜநார்த்த நம்‌
” (பார.ஆர. 192-56) என்று ராஜ்யகாங்க்ஷிகளாய்‌ வந்து ஸரணம்‌ புகுந்த பாண்டவர்களைவரையும்‌ “அன்றைவரை வெல்வித்த” (திருவாய்மொழி 4-6-1) என்கிறபடியே “ந காங்க்ஷே விஜயம்‌ க்ருஷ்ண” (8. தை 1-32) என்ற இவனை” ஸ்திதோஸ்மி‘ ‘ (கீதை 18-73) என்னப்‌ பண்ணி யுத்தத்திலே விஜயிகளாக்கி, “பதிற்றைந் திரட்டிப்‌ படை வேந்தர் பட (பெரியதிருமொழி 2-4-4) என்று அவர்களுக்கு விரோதிகளான துர்யோதநாதிகளை முடிக்கைக்காகச்‌ சொன்னது. (இது நாடாகத்‌ தோற்றோம்‌ என்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது) இந்த ப்ரபந்த,ம்‌ “தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ நாரணற்கு” (திருவாய்மொழி 2-1-7) என்று வகுத்த ஸேஷியானவன்‌ பக்கலிலே ஸர்வரும்‌ தோற்றோம்‌ என்று அநந்யார்ஹ ஸேஷ பூதராம்படி ஐயைந்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது. அந்த ஸேஷத்வ விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸங்கத்தையும்‌ ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ அறுத்து ஸம்ஸார பந்தத்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது ஆகையாலே அது பந்த மோக்ஷங்கள்‌ இரண்டுக்கும்‌ ஹேது. இது மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார் –

192-அங்கு நம்பி சரணென்று தொடங்கி முடிவில்‌ அப்ரிய மென்றது; இங்கு பரமே யென்றிழிந்து பொலிக வென்று உகந்தது.
(அங்கு நம்பிசரண்‌ என்று தொடங்கி முடிவில்‌ அப்ரியமென்றது) அதினுடைய உபக்ரமத்திலே “நாந்தகமேந்திய நம்பி சரண்‌ என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி’
(பெரியாழ்வார்‌ திருமொழி 1-9-4) என்று ‘ ஸிஷ்யஸ்தேஹம்‌ ஸமாதி, மாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌” (கீதை 2-7) என்று ஸிஷ்யனான அர்ஜுநனுடைய அநுவர்த்தந பூர்வகமாகையாலே ப்ரீதியோடே உபக்ரமித்து, “நூநமஸ்ரத்‌ததா நோஸி துர்மேதஸ்சாஸி பாண்டவ அபுதத்‌யா யந்ந ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம்‌” (அனுகீதை) என்று அவன்‌ பக்கலிலே அவிஸ்வாஸத்தைக்‌ காண்கையினாலே அப்ரீதியோடே தலைக் கட்டிற்று. (இங்கு பரமே என்றிழிந்து பொலிக என்றுகந்தது) இவருபதேஸிக்கிற விடத்தில்‌ தாந்தராய்‌ ஸமித் பாணிகளாய்க்‌ கொண்டு அநுவர்த்திப்பாரின்றிக்கே விமுகரா யிருக்க க்ருபையாலே உபதேஸிக்கையாலே உபதேஸோபக்ரமத்திலே “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-1) என்று அப்ரீதியோடே உபக்ரமித்து, அவ்வுபதேஸம்‌ கேட்டு ஜகத்தாகத்‌ திருந்துகையாலே அப்படித்‌ திருந்தினவர்களைக்‌ கண்டு “பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1) என்று மங்களாஸாஸநம்‌ பண்ணி உகப்போடே தலைக்‌ கட்டிற்று. ஆகையாலே உபதேஸம்‌ ஸப்ரயோஜநமாய்த்தது இதிலே என்கிறார் –

193-அதில்‌ ஸித்‌த தர்மவிதியே; இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌.

(அதில்‌ ஸித்‌த தர்ம விதியே) அந்த ஸ்ரீகீதைக்கு தாத்பர்யார்த்தம்‌ “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66 என்று ஸித்‌த தர்மவிதாந மொன்றுமே யாய்த்து; (இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌) (இந்த ப்ரபந்தத்திலே “திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1 என்று விதியும்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே (திருவாய்மொழி 6-10-10) என்று அநுஷ்டாநமும்‌ இரண்டும்‌ காணலாம்‌. இத்தாலே இப் ப்ரபந்தம்‌ விதி ப்ரகாஸகமான மாத்ரம்‌ அன்றிக்கே அநுஷ்டாந ப்ரகாஸகமும்‌ என்கிறார் –

194-பகவன்‌ ஞானவிதி பணிவகையென்று இவரங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்
அந்த கீதை தனக்கும் உத்கர்ஷம் இவருடைய பரிக்ரஹத்தாலே என்கிறார் (பகவன்‌ ஞானவிதி பணிவகையென்று) “அம் பகவன்‌ வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌ “அச்சுதன்‌ தன்னை ஞான விதி பிழையாமே (திருவாய்மொழி 5-2-9) என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) என்றும்‌ ப்ராமாணிகரான இவர்‌ இத்தை இப்படி ப்ரமாணமாக அங்கீ கரிக்கையாலே யாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கிறார் -அல்லது புத்த முநியாயும்‌ கபிலமுநியாயும்‌ சொன்ன பெளத்த ஸாஸ்த்ரமும்‌ ஸாங்க்‌ய ஸாஸ்த்ரமும்‌ அவன்‌ சொன்னது யாகிலும் அந்த ஸாஸ்த்ரங்களுக்கு ப்ராமாணிக பரிக்‌ரஹமில்லாமையாலே இறே அவை அப்ரமாணமாய்த்து-

195-வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே; அஜ்ஞர்‌ ஜ்ஞாநீகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ இவர்‌ திருத்துவர்‌. இனி மேல்‌ அவனுடைய ௨பதேஸம்‌ ஸங்குசித விஷயம்‌; இவருடைய உபதேஸம்‌ அஸங்குசித விஷயமென்கிறார்‌ வேத வேத்‌யனென்று தொடங்கி. (வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே) வேதமும்‌ வேத வேத்‌யனும்‌ வைதிகரான ருஷிகளுமுபதேஸிப்பது ‘ஆவித்‌ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” என்று அவித்‌யா ஸம்பந்திகளாய்‌ அத ஏவ தத்த்வ ஹித புருஷார்த்த, ஜ்ஞானமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளுக்கே. அவ்வளவன்றிக்கே இவர்‌ அஜ்ஞர்‌ ஜ்ஞாநிகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ திருத்துவர்‌. அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு தத்வ ஹித புருஷார்த்தங்களில்‌ விஸத ஸிக்ஷை பிறந்த முமுஷுக்களோடு பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விஸத தமமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி ஸாத்‌யதஸையிலே நிற்கிற ஜ்ஞாந விஸேஷ யுக்கரோடு “நைவ கிஞ்சித்‌ பரோக்ஷம்‌ தே” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌) என்றும்‌, யோ வேத்தி யுகபத்‌ ஸர்வம்‌ ப்ரத்யக்ஷேணே ஸதா ஸ்வத:” என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வத்தையும்‌ ஸர்வகாலமும்‌ ப்ரத்யக்ஷமாக யுகபதேவ ஸ்வத: ஸாக்ஷாத்கரிக்கும்‌ ஸர்வஜ்ஞனோடு வாசியற ஸர்வர்க்கும்‌ இவர்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லித்‌ திருத்துவர்‌ என்கிறார் –

196-அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌, இக்கரை யேறினார்க்கு இன்ப வெள்ளமும்‌, நிலை அறியாதாருக்கு ஆழங்காலும்‌ , கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌.
திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம்‌ பண்ணுகையிறே. அதில்‌ இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும்‌ அர்த்த விஸேஷங்கள்‌ எவை யென்னில்‌, (அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌) “அறியாதார்‌ என்றுமறியாதார்‌ கண்டாமே” (பெரிய திருமொழி 1-7-8) என்று முதலிலே பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்கு அஃதே வுய்யப் புகுமாறு’ (திருவாய்மொழி 4-1-11) என்று “திருநாரணன்‌ தாள்‌” (திருவாய்மொழி 4-1-1 என்கிறவிதுவே உஜ்ஜீவநோபாயம்‌ என்று ஸம்ஸாரோத்தீர்ண உபாயத்தையும்‌, (இக்கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்‌) “அக்கரை யென்னும் அனர்த்தக்கடலுளழுந்தி உன்‌ பேரருளால்‌ இக்கரை யேறி இளைத்திருந்தேன்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 5-3-7 என்று ஸம்ஸார ஸமுத்‌ரத்திலே அழுந்துகிறவர்களுக்கு பகவதேகோபாய ஜ்ஞாநம்‌ பிறக்கையாவது இங்கே யிருக்கச்‌ செய்தே அக்கரை இக்கரை என்னலாம்படி இருக்குமிறே. ஆகையாலந்த பகவதேகோபாய ஸங்கத்திலே வ்யவஸிதராகையாலே ஸ்வ ப்ரவிருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்கு “முகில்வண்ண வானத் திமையவர்‌ சூழ விருப்பர்‌ பேரின்ப வெள்ளத்தே (திருவாய்மொழி 7-2-11 என்று அவர்கள்‌ அந்த வ்யவஸாயம்‌ குலைந்து த்வரிக்கும்படியான ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும்‌, (நிலையறியாதார்க்கு ஆழங்காலும்‌) ஸீல குணத்தில்‌ இழியாமையாலே அதில்‌ நிலையறியாதவர்களுமாய்‌ ப்ராப்ய தஸையிலே நிற்கிறவர்களுக்கு “செஞ்சொற் கவிகாள்‌ உயிர்‌ காத்து ஆட் செய்ம்மின்‌” (திருவாய்மொழி 10-7-1 என்று பகவத் குணாநுபவம்‌ பண்ணுகிற நீங்கள்‌ ஸீலகுணமாகிற ஆழங்காலில்‌ இழியாதே கொள்ளுங்கோள்‌ என்கிற ஆழங்காலையும்‌, (கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌) “ஸம்ஸார ஸாகரம்‌ கோரமநந்த க்லேஸ பாஐநம்‌ த்வாமேவ ஸரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌ என்று ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அக்கரைப்‌ படுத்துமவனுக்கு “பொங்கைம்புலன்‌‘ (திருவாய்மொழி 10-7-10) இத்யாதியாலே சதுர்விம்ஸதி தத்த்வங்களையும்‌ இப்படி அறிவிக்க வேணும்‌-என்கிறார்‌-

197-அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது; தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌; காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறும்‌ இடம்‌; ராகாந்த னுக்கு மாயாதோஷம்‌ இவர்‌ காட்டுமவை.
இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள்‌ ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும்‌, இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும்‌ அவ்வர்த்த விஸேஷங்கள்‌ தன்னையும்‌ அருளிச் செய்கிறார்‌. (அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது) “ந க்ஷமாமி கதாசந” என்றும்‌ ‘க்ஷிபாம்யஜஸ்ரம ஸூபாந்‌ ஆஸுரீஷ்வேவ யோநிஷ**‘ என்று அவன்‌ நிக்ரஹத்துக்கு விஷயமாகையாலே அஜ்ஞராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு ஞானப் பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” என்றும்‌ “பெருங்கேழலார் தம்‌ பெருங்கண்‌ மலர்ப்‌ புண்டரீகம்‌ நம்மேல்‌ ஒருங்கே பிறழவைத்தார்‌‘ (திருவிருத்தம்‌ 45) என்கிற பாட்டாலே மஹா வராஹமான ஸர்வேஸ்வரன்‌ கடாக்ஷிக்கையாலே எனக்கு ஸத்‌ருஸ மில்லை; ஸம்ஸார ஸம்பந்த மும்‌ என்னுடைய ஸம்பந்திகளுக்கும்‌ கிட்டா தென்னும்படி தமக்கு பலித்தபடியாலே ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவநோபாயம்‌ அந்த ஜ்ஞாந வராஹமல்லது இல்லை; இது நானறுதியிட்ட விலக்ஷணமான அர்த்தமென்றும்‌; (தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌) “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது” (திருவாய்மொழி 5-5-1) என்று உபாய அத்யாவசாய தசையில் நின்று துறும்பு நறுக்கில் ஸ்வரூப ஹாநியாம் என்னும் செங்கிடு குட்டைகளாய் இருக்கையாலே -ப்ராப்ய வைலக்ஷண்யம் அறியாதே ப்ராப்ய விஷயத்திலே இத்தனை அதி ப்ராவண்யமாகாதென்று தம்மைப்‌ பொடியுமவர்களுக்கு “என்னெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே’ (திருவாய்மொழி 5-5-2) என்று ப்ராப்ய வைலக்ஷ்ண்யத்தை அவகாஹித்த என்‌ நெஞ்சாலே பார்க்க மாட்டிகோளோ என்று தம்முடைய உட் கண்ணான ப்ராப்ய வைலஷண்ய ஜ்ஞாநத்தையும்‌, (காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறுமிடம்‌) “ஸர்வம்‌ ஹ பஸ்ய: பஸ்யதி” என்று ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரிக்குமவர்களாகையாலே ஸீலகுணம்‌ பாதகம்‌ என்றறியாதே இதிலே இழியில்‌ செய்வதென்னென்றஞ்சி தாம்‌ அதிலே ஈடுபட்டவராகையாலே அந்த ஸீல குணத்திலே கண் வையாதே கொள்ளுங்கோள்‌ என்று கண்‌ மாறுமிடத்தையும்‌ (ராகாந்தனுக்கு மாயா தோஷம்‌) இவர் பக்கல்‌ உண்டான வ்யாமோஹத்தாலே முன்னடி தோற்றாதே இவர்க்கு த்யாஜ்யமான தேஹ தோஷத்தில்‌ கண் வைக்க அறியாதவனுக்கு “மங்கவொட்டுன்‌ மா மாயை (திருவாய்மொழி 10-7-10) என்று ப்ரக்ருதிதோஷத்தையும்‌ (இவர்‌ காட்டுமவை) இவர்களுக்கு இவர்‌ தர்ஸிப்பிக்குமவை இவ் வர்த்த விஸேஷங்கள் என்கிறார் –

198-ஸாதந ஸாத்‌யஸ்த, மத்‌யஸ்தரை விட்டு அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்க்கு வீடுமின்‌ நினைமின்‌ பிடித்தேன்‌ விடுவேனோ வைத்தெழ வூது வாடிநிற்கக்‌ கன்மமன்று ஆன்பின்‌ கைகழியேல்‌ உழிதராய்‌ என்‌ சொற்‌ கொள்‌ என்று இவர்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுவர்‌.
ஆனால்‌ அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும்‌ எப்போதுமொக்கவும்‌ உபதேஸிப்பரோ என்னில்‌, (ஸாதந ஸாத்‌ய மத்‌யஸ்த்தரைவிட்டு] ஸாதந தஸையிலும்‌ ஸாத்‌ய தஸையிலும்‌ நிற்கிறவர்களாய்‌ அஜ்ஞருக்கும்‌ ஸர்வஜ்ஞனுக்கும்‌ நடுவே சொல்லப்பட்ட முமுஷுக்களுக்கும்‌ நித்ய முக்தர்க்கும்‌ காதாசித்கமாக உபதேஸித்துவிட்டு, (அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்களுக்கு) அந்த ஸாதந ஸாத்‌யங்கள்‌ இன்னதென்று அறியாதே கலங்குகிற ஸம்ஸாரி சேதநர்க்கு (வீடுமின்‌ நினைமின்‌) “வீடுமின்‌ முற்றவும்‌“(திருவாய்மொழி 1-2-1 என்று பகவத் வ்யதிரிக்த ஸமஸ்தங்களையும்‌ விடுங்கோள்‌ என்று உபக்ரமித்து ‘சுனை நன்மலரிட்டு நினைமின்‌ நெடியானே (திருவாய்மொழி 10-5-10) என்று புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அபரிச்சேத்‌ய ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனை த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயியுங்கோள்‌ என்கிறது முடிவாகவும்‌ ஸம்ஸாரிகளுக்குப்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுவர்‌.
(பிடித்தேன்‌ விடுவேனோ இத்யாதி ) (ஈஸ்வரனுக்கும்‌) பல காலும்‌ ஹிதாஹிதங்‌களைச்‌ சொல்லுவர்‌. இவர்‌ இவ்வளவிலே அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலப்புகில்‌ செய்வதென்‌ என்று அதிஸங்கை பண்ணுகிற ஈஸ்வரனை “உன்னை நான்‌ பிடித்தேன்‌ கொள்‌ சிக்கனவே” (திருவாய்மொழி 2-6-1), “உன்னை நான்‌ அடைந்தேன்‌ விடுவேனோ” (திருவாய்மொழி 2-6-10 என்று அவனை மாஸூச:” (கீதை 18-66) என்றும்‌, ‘தோகை மா மயிலார்கள்‌ செவியோசை வைத்தெழ ஆகள்‌ போக விட்டுக்‌ குழலூது’ (திருவாய்மொழி 6-2-2) என்று ஸாதந ஸாத்‌ யங்கள்‌இன்னதென்றும்‌ “ மழறுதேன்‌ மொழியார்கள்‌ நின்னருள்‌ சூடுவார்‌ மனம்வாடி நிற்க என்‌ குழறு பூவையொடும்‌ கிளியோடும்‌ குழகேலே (திருவாய்மொழி -6-2-5) என்றும்‌ “கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” (திருவாய்மொழி 6-2-8) என்றும்‌ ஆன் பின்‌ போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ “என்‌ கை கழியேல்‌ (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ (இப்படி அக்ருத்யங்களைச்‌ செய்யாதே கொள்ளென்றும்‌, நீயுகக்கு நல்லவரொடும்‌ உழி தராயே” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ அவத்தங்கள் விளையும்‌ என்‌ சொற் கொளந்தோ” (திருவாய்மொழி 10-3-10) என்றும்‌ ஈஸ்வரனுக்குப்‌ பல காலும்‌ ஹிதா ஹிதங்களைச்‌ சொல்லுவர் –

199-கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே.
ஆனால்‌ இருவர்க்கும்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுகைக்கு ஹேது என்னென்னில்‌, இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ என்கிறார்‌. (கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே) ‘பிணக்கி யாவரும்‌ யாவையும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர்ஞான மூர்த்தியினாய்‌’ (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்திலே ஸர்வத்தையு மொக்கக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவர்க்குத்‌ தட்டாதபடி பிரித்து யுகபதேவ ஸாக்ஷாத்கார ஸமமாய்‌ விஸத தமமான ஜ்ஞானத்தை உடையவனாகையாலே ஸர்வஜ்ஞனாயிருக்கிறவனுக்கு “உனக்கொன்று உணர்த்துவன்‌” (திருவாய்மொழி 6-2-5) என்று ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுகைக்கடி அவன்‌ பக்கலிலே ப்ரேமத்தாலே. (தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே) “கொள்ளென்று தமமூடும்‌” (திருவாய்மொழி 4-9-4) என்று தமோபி பூதராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு “நின் கண்‌ வேட்கை எழுவிப்பனே ‘ (திருவிருத்தம்‌ 96) என்று பகவத் பக்தியை உபதேஸிக்கிறது பகவத் விமுகரான இவர்களும்‌ நம்மைப் போலே பகவதநுபவம்‌ பண்ண வேணுமென்கிற ஜ்ஞானத்தாலே என்கிறார் –

200-உயிர்‌ மாய்தல்‌ ஆழுமென்னாருயிர்‌ என்னும்‌ பர துக்கம்‌ ஸஹியாமை இரண்டிலுமுண்டு.
இவர்களளவில்‌ இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டாலும்‌ பர துக்கம்‌ ஸஹியார்‌ என்னுமிடம்‌ சொல்லுகிறது மேல்‌. (உயிர்மாய்தல்‌ ஆழுமென்னாருயிர்‌ என்னும்‌ பரதுக்கம்‌ ஸஹியாமை இரண்டிலுமுண்டு) உயிர்மாய்தல்‌ கண்டாற்றேன்‌” (திருவாய்மொழி 4-9-3) என்று ஸம்ஸாரிகள்‌ துக்கம்‌ ஸஹியாமையும்‌, “அசுரர்கள்‌ தலைப்பெய்யில்‌ எவன் கொலாங்கு என்றாமுமென்னாருயிர்‌’ (திருவாய்மொழி 10-3-8) என்று அசுரர்கள்‌ ஒன்றாக வந்து கிட்டினார்களாகில்‌ அங்கென்னாய்‌ விளைகிறதோ என்று என்‌ ஜீவனானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான ஈஸ்வரனுடைய துக்கம்‌ ஸஹியாமையும்‌ அந்த ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டிலுமுண்டு. ஆகையாலே இவையடியாக இருவர்க்கும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார் –

201-என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன்‌ மதம்‌ தோன்றும்‌.
இன்னும்‌ இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும்‌ பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர்‌ அவனுக்குப்‌ பரியக் கடவர்‌ என்னுமிடமும்‌ தோன்றும்‌ என்கிறார்‌ மேல்‌. (உன்னதென்னதாவியிலே (என்னதுன்னதாவியிலே?) அறிவாராத்மாவென்று அவன்‌ மதம்‌ தோன்றும்‌) “உன்னதென்னதாவி” (திருவாய்மொழி 4-3-8) என்கிற இடத்திலே “அறிவாருயிரானாய்‌” (திருவாய்மொழி 6-9-8) என்றும்‌ “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்‌” (கீதை 7-18) என்று ஜ்ஞாநியானவன்‌ தனக்கு தாரகன்‌; மே மதம்‌, இது க்ருஷ்ண ஸித்‌தாந்தம்‌ என்று அவனுடைய அபிப்ராயத்தாலே இவர் தம்மைத்‌ தனக்கு தாரகராக நினைக்கிற வாகாரம்‌ தோற்றுகையாலும்‌ அவனுக் கிவர்‌ பரியக்‌ குறையில்லை யென்கிறார் –

202-இருத்துமெண்டானாய்ப்‌ பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய்‌ ஷூத்‌த்‌ருட்‌ பீடித நிர்த்தநரைப்‌ போலே கண்டு கொண்டுண்டு பருகிப்‌ பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து என் செய்வன்‌ என்றே யிருந்து அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும்‌ போகு என்றாலும்‌ அகல்வானுமல்லனாய்‌, போகேலென்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌.
ஆனால்‌ இவர்‌ ஈஸ்வரனுக்கு உபதேஸித்தா ரென்னும்போது அவனுக்கு ஸிஷ்ய லக்ஷணம்‌ உண்டோ என்னில்‌, ஸிஷ்யனானவன்‌ ஆசார்யனை ஓரிடத்திலே வைத்துத்‌ தான்‌ அவனுடைய மநோ ரதமாய்‌ அவன் பக்கலிலே புரை யற்ற ஸ்நேஹத்தைப்‌ பண்ணி,
புறம்புண்டான ஸங்கங்களை விட்டு தரித்‌ரன்‌ நிதி கண்டாப் போலவும்‌ பசித்தவன்‌ சோறு கண்டாற் போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ ஆசார்யன்‌ பக்கலிலே அத்யபிநிவேஸத்தைப்‌ பண்ணி
ஸரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத்‌குருப்யோ நிவேதயேத்‌” (விஹகேஸ்வர ஸம்ஹிதை)
என்கிறபடியே தன்னுடைய ஆத்மாத்மீயங்களை ஆசார்ய விஷயத்திலே ஸமர்ப்பித்து, “க்ருத்ஸ்நாம்‌ வா ப்ருதிவீம்‌ தத்‌யாத்‌ ந தத் துல்யம்‌ கதஞ்சந” என்று இவன்‌ எல்லாம்‌ செய்தாலும்‌ ஆசார்யன்‌ பண்ணின உபகாரத்துக்கு ஸத்‌ருஸமில்லாமையாலே குறைவாளனாய்‌ ஆசார்யனுடைய தேஹ யாத்ரைகளெல்லாம்‌ தானே சுமந்து செய்யுமவனாய்‌ ஆசார்யன்‌ நிக்‌ரஹித்தாலும்‌ திவா ராத்ர விபாகமற அவனைப்‌ பிரியாதே அவனுக்கிஷ்டமானால்‌ தனக்குகப்பான வற்றையும்‌ விட்டு ஆசார்யன்‌ நியமித்தபடியே நடக்குமவனே ஸச்சிஷ்யனாகையாலே இந்த லக்ஷணம்‌ ஈஸ்வரன்‌ பக்கலிலே உண்டாகையாலே இவனுக்கே ஸச் சிஷ்ய லக்ஷணமுள்ளதென்கிறார்‌. (இருத்துமெண்டானாய்‌)இருத்தும்‌ வியந்தென்னைத்‌ தன்பொன்னடிக் கீழ்‌” (திருவாய்மொழி 8-7-1) என்று இவரை ஓரிடத்திலே இருத்தி “என்னெண்டானானான்‌” (திருவாய்மொழி 1-8-7) என்று இவருடைய நினைவு தானாய்‌ (பொய்கலவா தன்பு செய்து) “பொய்கலவாதென்‌ மெய்‌ கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5) என்று இவர்‌ திருமேனியில்‌ பண்ணின ஸங்கத்திலே ஒரு பொய்யின்றிக்கே “அந்தாமத் தன்பு செய்து” (திருவாய்மொழி 2-5-1) என்று பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர்‌ பக்கலிலே பண்ணி (பற்றிலனாய்‌) “‘ பற்றிலனீசனும்‌” (திருவாய்மொழி 1-2-6) என்று இவர் பக்கல்‌ ஸங்கத்தாலே பரமபதத்தில்‌ ஸங்கத்தையும்‌ விட்டு, (ஷூத்‌த்‌ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகி) “இருந்தான்‌ கண்டு கொண்டு (திருவாய்மொழி 8-7-2) என்று நிர்தநனானவன்‌ நிதி கண்டாப் போலே கண்டு கொண்டு “என்னை முற்றவும்‌ தானுண்டான்‌” (திருவாய்மொழி 9-6-8) என்றும்‌ “தானென்னை முற்றப்‌ பருகினான்‌ (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌ சொல்லுகிறபடியே பசி கனத்தவன்‌ சோறு கண்டாப்‌ போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ இவரை அபி நிவேஸத்தோடே அநுபவித்து (பரிஜநாதிகளோடே தன்னைத்‌ தந்து) ‘ பரிஜந பரிபர்ஹா பூஷணநாந்யாயுதாநி ப்ரவர குணகணாஸ்ச ஜ்ஞாந ஸக்த்யாத யஸ்‌தே பரமபத மதாண்டாந்யாத்ம தேஹஸ்‌ ததாத்மா வரத ஸகலமேதத்‌ ஸம் ஸ்ரிதார்த்த,ம்‌ சகர்த்த” (வரத ராஜஸ்தவம்‌ 63) என்றும்‌ “எனக்கே தன்னைத்‌ தந்த கற்பகம்‌” (திருவாய்மொழி 2-7-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னையும்‌ தன்‌ விபூதியையும்‌ இவர்க்குக்‌ கொடுத்து, “உன்னடியார்க்கென்‌ செய்வன்‌ என்றே இருத்தி” (பெரியதிருவந்தாதி 53) என்கிறபடியே இவர்க்கு எல்லாம்‌ செய்தாலும்‌ தான்‌ இழவாளனாய்‌ (அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து) இவராத்மாத்மீய ஸகலபரத்தையும்‌ இவன் பக்கலிலே ஸமர்ப்பிக்க “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாங்கடமை அது சுமந்தார்கட்கே” (திருவாய்மொழி 3-3-6) என்று “பூயிஷ்டாம்‌ தே நம உக்திம்‌” (யஜுர்வேதம்‌! )என்கிறபடியே இவருடைய நம: என்கிற உக்தி அவனுக்கு கனத்துத்‌ தோற்றுகையாலே இவருடைய அகில பரத்தையும்‌ சுமந்து (அல்லு நன்‌ பகலும்‌ போகு என்றாலும்‌ அகல்வானுமல்லனாய்‌) “அல்லு நன்பகலும்‌ இடைவீடின்றி நல்கி யென்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) என்று இவர் பக்கல்‌ பண்ணின ஸ்நேஹத்தாலே திவா ராத்ர விபா௧ மற இவரை விடமாட்டாதே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-2) என்று இவர் தாம்‌ உபேக்ஷித்தாலும்‌ “அகல்வானுமல்லனினி” (திருவாய்மொழி 2-6-7) என்று அகலமாட்டாதே (போகேல்‌ என்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து) “ஆன்பின்போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்று இவனுக்கு இஷ்டமானத்தையும்‌ நிவர்த்தி என்று இவர்‌ நியமித்தால்‌ “திவத்திலும்‌ பசு நிரை மேய்ப்பு உவத்தி (திருவாய்மொழி 10-3-10) என்ற அவ் வுகப்பையும்‌ தவிர்ந்து(விதி வகையே நடத்துமவனே) “அருள் தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதி வகையே ” (திருவாய்மொழி 10-6-1 என்று இவர்‌ விதித்தபடியே நடக்கையாலே ஸதாசார்ய விஷயத்திலே ஸச் சிஷ்யன்‌ வர்த்திக்கும்‌ க்ரமம்‌ இவன்‌ பக்கலிலே உண்டென்கையாலே இவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌ என்கிறார் –

203-நண்ணாதார்‌ மெய்யிலூன்‌ ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள்‌ விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள்‌ பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை வம்மின்‌ விரோதம்‌ ஈனச் சொல்‌ எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார்‌ பந்த புத்தியும்‌ அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌ மிக்க க்ருபையுமிறே .
ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய்‌ இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய்‌ ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து இவர்‌ மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள்‌ துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார்‌ (நண்ணாதார்‌ மெய்யிலூனாசை நிர்வேதத்தோடே) “நண்ணாதார்‌ முறுவலிப்ப விலும்‌ (திருவாய்மொழி 4-9) “மெய்யில்‌ வாழ்க்கை”யிலும்‌ (பெருமாள்‌ திருமொழி 5-2-5) ப்ரிய ஜநமபஸ்யந்தீம்‌ பஸ்யந்தீம்‌ ராக்ஷஸீ கணம்‌ ஸ்வ கணேந ம்ருகீம்‌ ஹீநாம்‌ ஸ்வகணேநா வ்ருதா மிவ ரா.ஸு. 15-24) என்றும்‌ “ந சவ்ரி சிந்தாவிமுக ஜந ஸம்வாத வைஸ ஸம்‌வர்‌ ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:” என்றும்‌ (சொல்லுகிறபடி யே?) சவ்ரி சிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹவாஸம்‌ ஆழ்வார் தமக்கு அஸஹ்யமானாப் போலே ஸம்ஸாரிகளோடு பொருத்த முடையார்களன்றிக்கே “ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்‌ வேண்டேன்‌” (பெருமாள்‌ திருமொழி 4-1) என்றும்‌ “ஆசைவாய்ச்‌ சென்ற சிந்தையர்‌ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-5-1) இத்யாதியாலும்‌ ஆழ்வார்களுக்கு அநேக தோஷ துஷ்டமான ஸரீரமும்‌ ஸரீர ஸம்பந்திகளும்‌ அஸஹ்மயமானாப் போலே ஸரீரத்தினுடைய அஸ்திரத்ரத்வாதி, தோஷங்களை அநுஸந்தித்து அவற்றுடன்‌ பொருந்தாமையை உடையார்களாய்‌ “பரீஷ்ய லோகாந்‌ கர்ம சிதாந்‌ ப்‌ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந” (முண்டகோபநிஷத்‌ 2-11 என்கிறபடியே கர்ம ஸாத்‌யங்களான லோகங்கள்‌ அஸ்த்திரங்களாயிருந்தது, ஸ்த்திரமான லோகங்கள்‌ கர்ம ஸாத்‌யமன்றிக்கே இருந்தது என்று இவற்றினுடைய நிரூபணத்தாலே வெறுப்பை உடையவர்களாய்‌ (ஆஸ்திக்ய அமாநித்வாதிகள்‌ விஞ்சின) “ஆஸ்திகோ தர்ம ஸ்ரீலஸ்ச ஸீலவாந்‌ வைஷ்ணவஸ் ஸூசி: கம்பீரஸ் சதுரோ தீர: ஸிஷ்ய இத்யபி தீ யதே” என்றும்‌ “அமாநித்வம தம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்‌ ஆசார்யோபாஸநம்‌ மெளசம்‌ ஸ்தைர்யமாத்ம விநிக்‌ரஹ நித்யந்து ஸமசித்தத்வம்‌ இஷ்டாநிஷ்டோபபத்திஷ மயிசாநந்யயோகே,ந பக்திரவ்யபிசாரிணீ’ (கீதை 13-7) என்றும்‌ சொல்லப்படுகிற ஸிஷ்ய லக்ஷணங்களாலே மிக்கிருப்பாராய்‌ (ப்ரணிபாதாபி வாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு) “தத் வித்‌தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா (கீதை 4-34) என்று பக்‌நாபிமாநராய்க்‌ கொண்டு அநுவர்த்தந பூர்வகமாக சிரகால ஸேவை பண்ணினவர்களுக்கு (உளங்கொள் பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை) “உளங் கொள்‌ ஞானத்து வைம்மின்‌” திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ “பேசுமளவன்றிது வம்மின்‌ நமர்‌ பிறர்‌ கேட்பதன்‌ முன்‌ (பெரிய திருமொழி 2-4-9) என்றும்‌ இப்படி அஷட் கர்ணமாக உபதேஸிக்க வேண்டும்படியான அர்த்த விஸேஷத்தை (வம்மின்‌ விரோத மீனச்சொல்‌ எவவுயிர்க்கு மறியவென்று) “வம்மின்‌ புலவீர்‌ நும்‌ மெய்வருத்திக்‌ கைசெய்தும்மினோ” (திருவாய்மொழி 3-9-6) என்றும்‌ ” சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேண்மினோ (திருவாய்மொழி 3-9-1 என்றும்‌ “ஈனச் சொல்லாயினுமாக நான்‌ கண்ட நல்லது ஞானப்பிரானை யல்லாலில்லை” (திருவிருத்தம்‌ 99) என்றும்‌ “மன்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌ (திருவாய்மொழி 9-1-7) என்றும்‌ “நாமுமக்கறியச்‌ சொன்னோம்‌” (திருவாய்மொழி 10-2-9) என்றும்‌ (அடைவு கெட அதபஸ்கர்க்கு உபேதஸிக்கிறது) முற்படச்‌ சொன்ன அடைவன்றிக்கே “இதம்‌ தே நாதபஸ்காய நாபத்தாய கதாசந ந சா ஸூஸ்ரூஷவே வாச்யம்‌ நசமாம்‌ யோப்‌ய ஸூயதி (கீதை 18-67) என்று உபதேஸத்துக்கு அதி காரமில்லாத தேஹ யாத்ராபரவஸராய்ப்‌ பிறரைக்‌ கவிபாடுவார்க்கும்‌ அதுதானுமின்றிக்கே பஸூ ஸமராய்த்‌ திரிவார்க்கும்‌ ஆசார்ய ப்ரேமமில்லதார்க்கும்‌ ஆசார்ய ஸுஸ்ரூஷை யில்லாதார்க்கும்‌ ஸ்ரோதுமிச்சை இல்லாதார்க்கும்‌ பகவத்‌. விஷயத்தில்‌ அஸூயா பரராயிருப்பார்க்கும்‌ இவர்‌ உபதேஸிப்பான்‌ என்‌ என்னில்‌, (ஞாலத்தார்‌ பந்த புத்‌தியும்‌) ‘ஞாலத்தார்‌ தமக்கும்‌ வானத்தவர்க்கும்‌ பெருமானை” (திருவாய்மொழி 4-5-8) என்று நித்யாநுபவம்‌ பண்ணுகிற நித்ய ஸூரிகளோபாதி லீலா விபூ தியில்‌ உள்ளார்க்கும்‌ அவனோடு ஸம்ப ந்த முண்டாயிருக்க இவர்கள்‌ இழக்க வொண்ணாது என்கிற ஸம்பந்த ஜ்ஞாநாநுஸந்தாநத்தாலும்‌ (அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌) “கண்டாற்றேன்‌ உலகியற்கை” (திருவாய்மொழி 4-9-3) என்று இவர்கள்‌ ஸம்ஸாரத்திலே படுகிற அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாமலும்‌ (மிக்க க்ருபையுமிறே) “அருள்‌ கண்டீர்‌ இவ்வுலகினில்‌ மிக்கதே” (கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு- 8) என்று இவருடைய மிக்க க்ருபையாலும்‌ உபதேஸித்தார்‌ –

205-க்யாதி லாப, பூஜாபேக்ஷையற மலர்‌ நாடி ஆட்செய்ய உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும் வில்லும்‌ கொண்டு என்கிற இழவுகள்‌ தீரப்பெற்றது.
ஆனால்‌ இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில்‌, இவ்வுபதேஸம்‌ பலித்தமை உண்டோ என்னில்‌, இவர்‌ க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க்‌ கொண்டு பகவத்‌ கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத்‌ திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும்‌ ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும்‌ எம்பெருமானுடைய தனிமைக்கும்‌ க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும்‌ தீரப் பெற்றதென்கிறார்‌.
(க்யாதி லாப பூஜாபேக்ஷயற மலர்நாடி ஆட் செய்ய) “நீசனேன்‌ நிறைவொன்றுமிலேன்‌’ (திருவாய்மொழி 3-3-4) என்று தம்மைத்‌ தண்மைக்கு எல்லையாக நினைத்திருக்கையாலும்‌ “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாக” (திருவாய்மொழி 4-9-4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக்‌ காண்கையாலும்‌ “தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌ (திருவாய்மொழி 8-9-1 என்று பா௧வத ஸேஷத்வத்தில்‌ எல்லையிலே நிற்கிறவர்களுக்குத்‌ தம்மை ஸேஷமாக நினைத்திருக்கையாலும்‌ “ஓதவல்ல பிராக்கள்‌ எம்மை ஆளுடையார்கள்‌ பண்டே” (திருவாய்மொழி 9-1-11) என்று இப்ரபந்தத்திலே அந்வயித்தவர்களைத்‌ தமக்கு ஸேஷிகளாக நினைத்திருக்கையாலும்‌ க்யாதி லாப, பூஜா நிரபேஷராய்க்‌ கொண்டு “நறிய நன்மலர்‌ நாடி” (திருவாய்மொழி 5-5-11 என்கிறபடியே ஸேஷத்வமாகிற பரிமளத்தை உடைத்தான ஆத்ம புஷ்பங்களைத்‌ தேடி “ஆட்செய்தாழிப்பிரானைச்‌ சேர்ந்தவன்‌ (திருவாய்மொழி 4-10-11 என்று கைங்கர்ய ரூபமாக உபதேஸிக்கையாலே ஐகத்தாகத்‌ திருந்தினபடி. (உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும்‌ வில்லும்‌ கொண்டு என்கிற இழவும்‌ தீரப்பெற்றது) “உம்மை உய்யக்‌ கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ஸம்ஸாரிகளுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாமல்‌ உபதேஸிக்க அவர்கள்‌ திருந்துகையாலே அவர்கள்‌ தனிமை என்கிற அவ்விழவு தீரப்பெற்றது. “ஆரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்று தமக்கு உசாத்துணை யில்லை என்று சொல்லப்பட்டதுவும்‌ ஸம்ஸாரிகளடையத்‌ திருந்தித்‌ தமக்கு உசாத் துணை உண்டாகையாலே அவ்விழவும் தீரப்பெற்றது. “வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’ (திருவாய்மொழி 8-3-3) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸெளகுமார்ய மறிந்து பரியக்‌ கடவார்‌ ஒருவருமில்லை என்று இழவு பட்ட விவர்க்கு பகவத்‌ விஷயத்துக்குப்‌ பரிவராய்‌ மங்களா ஸாஸநம்‌ பண்ணப்‌ பலருண்டாகையாலே அவ் விழவும்‌ தீரப்பெற்றது. ஆகையாலே இவருடைய உபதேஸம்‌ பல பர்யந்தமாய்த்து என்கிறார்‌-

206-ப்‌ரஹ்மநிஷ்டரும்‌ ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்‌ ஏ பாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது.
(ப்‌ரஹ்ம நிஷ்டரும்‌ ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்‌) இப்படி உபதேஸம்‌ பலிக்கும்போது “பரீஷ்யலோகாந்‌ கர்மசிதாந்‌ ப்‌,ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந தத்விஜ்ஞா நார்த்தம்‌ ஸகுருமேவாபி கச்சேத்‌ ஸமித்பாணி: ஸ்ரோத்ரியம்‌ ப்‌ரஹ்ம நிஷ்டம்‌ தஸ்மை ஸவித்‌வாநுபஸந்நாய ஸம்யக்‌, ப்ரஸமாந்தசித்தாய மமாந்விதாய யேநாக்ஷரம்‌ புருஷம்‌ வேத, ஸத்யம்‌ ப்ரோவாச தாம்‌ தத்வதோ ப்‌ரஹ்மவித்‌ யாம்‌” (முண்டகோபநிஷத்‌ 2-11) என்று ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷாநுஸந்தாநத்தாலும்‌ பரம ப்ராப்யமான தேஸத்தைக்‌ கிட்டப் பெறாமையால்‌ உண்டான வெறுப்போடே ஸம தமாத் யாத்‌ம குணோபேதனாய்‌ ஸோபஹார ஹஸ்தனாய்க்‌ கொண்டு ஸ்ரோத்ரியனாய்‌ ப்‌ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை பக்‌நாபிமாநனாய்‌ உபஸத்தி பண்ண அவ்வாசார்யனும்‌ “நாஸம்வத்ஸரவாஸிநே பரப்‌ரூயாத் என்று ஒரு ஸம்வத்ஸரம்‌ பரீக்ஷித்து பின்னையும்‌ உபதேஸிப்பான்‌ என்று சொல்லுகிற ஸாஸ்த்ரக்ரமத்திலே இவரும்‌ ஸம்ஸாரிகள்‌ அநுவர்த்திக்க உபதேஸித்தார் ஆனாலோ என்னில்‌, (ஏபாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது) ஸிஷ்யனுடைய அநுவர்த்தனமுண்டாகில்‌ “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-2) என்று ஓ பாபமே எனக்கிது பரமாவதே என்று உபதேஸோபக்ரமத்திலே வெறுத்துச்‌ சொல்லுகிற ஆசார்யோக்தியும்‌ சேராது. ஸிஷ்யன்‌ தன்‌ அநுவர்த்தனத்தாலே இவ்வர்த்தத்தைப்‌ பெற்றானாகில்‌ “பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணிகொள்வான்‌’ (கண்ணிநுண்‌. 10) என்கிற ஸிஷ்யோக்தியும்‌ சேராது. ஆகையாலே முன்பு சொன்ன க்ரமத்திலே ஸம்ஸாரிகளுடைய அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாதே தம்முடைய க்ருபையாலே உபதேஸித்தார்‌ என்கிறார் –

207-மெய்க்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்‌போபதேஸம்‌.
ஆனால்‌ அபரிச்சே,த்‌,யமாய்‌ நிரதிஸயபோக்யமான பகவத்‌ விஷயத்தை அநுப விக்கிற இவர்‌ பரோபதேஸம்‌ பண்ணுகிறார்‌ என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம்‌ கூடினபடி எங்கனே என்னில்‌, இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமாயிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கும்‌ என்கிறார்‌. (மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு) “மெய்ந்நின்று கேட்டருளாய்‌ அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே’ (திருவிருத்தம்‌ 1 என்று உபக்ரமித்து“மங்கவொட்டுன்‌ மாமாயை” (திருவாய்மொழி 10-7-10) என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும்‌ அநுபவம்‌ உள்ளே செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கிறது; இது தான்‌ ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய்‌ பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும்‌ இவர்க்கு அநுபவத்தில்‌ குறை யில்லை

208-இவற்றுக்கு மந்த்ரவித்‌யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.
ஆனால்‌ இந்நாலு ப்ரபந்தத்தாலும்‌ இவருபதேஸிக்கும் வர்த்தம்‌ ஏதென்னில்‌
(இவற்றுக்கு மந்த்ரவித்‌யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி) ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமாய்‌ இவ்வாத்மாவுக்கு தத்வ ஹித புருஷார்த்த ப்ரகாஸகமுமாய்‌ ஸரண்யாபிமதமுமாய்‌ ஸிஷ்ட பரிக்ருஹீதமுமாய்‌ மந்த்ர விதி அநுஸந்தாந ரூபமான ரஹஸ்ய த்ரயத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த, பஞ்சகத்தையும்‌ இவற்றிலே ப்ரதிபாதிக்கையாலே இப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ ரஹஸ்ய த்ரயத்தோடு சேர்த்தி என்கிறார் –

209-அளிப்பானடியேனடைக்கலம்‌ சூடிய பொய்‌ யாதானும்‌ அழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும்‌ தாமரை யுந்திப்‌ பெருமா மாயனாளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும்‌, நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகிலென்று உபாயத்தையும்‌ சொன்னவை மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும்‌.

அவற்றில்‌ ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம்‌ இவற்றிலே ப்ரதிபாதிதமாகிறபடி எங்ஙனே என்னில்‌ (அளிப்பான்‌ அடியேன்‌ அடைக்கலம்‌ சூடிய பொய்‌ யாதானும் அழுந்தார்‌ என்று ஸ்வரூப விரோதி, நிவ்ருத்திகளையும்‌) இதில்‌ ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்திலே உயிரளிப்பான்‌ (திருவிருத்தம்‌ -1)என்று திருமந்த்ரத்திலே ப்ரதமாக்ஷரத்தில்‌ அவ ரக்ஷணே யென்கிற தாத்வர்த்தத்தாலே சொல்லப்பட்ட ரக்ஷகத்வத்தையும்‌ “அடியேன்‌” (திருவிருத்தம்‌ 1) என்று அவ்வகாரத்தில்‌ லுப்த சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ அந்த ஸர்வ ரக்ஷகனானவனுக்கு இவ்வாத்மா அநந்யார்ஹ ஸேஷமாயிருக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அந்த ஸேஷத்வாஸ்ரயமான ஸ்வரூபம்‌ ஜ்ஞாநாநந்த மயமாயும்‌ ஜ்ஞாந குணகமாயுமிருக்கிற மகாரார்த்தத்தையும்‌, “அடியேனடியாவி அடைக்கலமே” (திருவிருத்தம்‌ 85) என்று அந்த சதுர்த்தி, ‘ஸம் ப்ரதாநே சதுர்த்தி என்னுமிடத்தில்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தையும்‌ “திருமால்‌ திருப்பேர்‌ வல்லார்‌ அடிக் கண்ணி சூடிய மாறன்‌” (திருவிருத்தம்‌ 100) என்று அந்த ப்ரணவத்தில்‌ சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வம்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமா யிருக்கும்‌ என்று நமஸ்ஸில்‌ ஆர்த்தமாகச்‌ சொல்லப்படுகிற ததீய ஸேஷத்வத்தையும்‌, ” பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “யாதானுமோராக்கையில்‌ புக்கு அங்காப்புண்டும்‌ ஆப்பவிழ்ந்தும்‌” (திருவிருத்தம்‌ 95) என்றும்‌ அந்த நமஸ்ஸில்‌ ‘ம:’ என்கிற ஷஷ்டியாலே சொல்லப்பட்ட அவித்‌யை அவித்‌யாகாரிதமான அஹங்கார மமகாரங்கள்‌ அவற்றாலே உண்டான அக்ருத்யகரணாதிகள்‌ தத் கார்யமாய்‌ தேவ மநுஷ்யாதி ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும்‌ சொல்லி “வன்சேற்றள்ளல்‌ பொய்ந்நிலத்தில்‌ அழுந்தார்‌‘ (திருவிருத்தம்‌ 100) என்று அந்த நமஸ்ஸில்‌ நிஷேத வாசியான நஞ்ஞாலே கீழ்ச் சொன்ன அவித்‌யாதிகளாய்‌ ஸம்ஸார கர்தமம்‌ எல்லையான விரோதிகளினுடைய நிவ்ருத்தியையும்‌ சொல்லி ஆக இப்படி ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ ஸேஷமாய்‌ ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமான ஸ்வரூபத்தையும்‌, தத் விரோதியான அஹங்கார மமகாரமாகிற விரோதி ஸ்வரூபத்தையும்‌ தந் நிவ்ருத்தியையும்‌ சொல்லுகையாலே திருவிருத்தம்‌ ப்ரணவ நமஸ்ஸுக்கள்‌ இரண்டினுடைய அர்த்தமாயிருக்கிறது. (தாமரை யுந்திப்‌ பெரு மா மாயன்‌ ஆளாகவே வாழிய வென்று ப்ராப்ய பலங்களையும்‌) “தெய்வக் குழாங்கள்‌ கை தொழக்‌ கிடந்த தாமரை யுந்தித்‌ தனிப் பெரு நாயக” (திருவாசிரியம்‌ 1 என்றும்‌, “ஓராலிலைச்‌ சேர்ந்த எம்பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம்‌ மற்றுடையமோ யாமே” (திருவாசிரியம்‌ 7) என்றும்‌ காரணத்வ ரக்ஷகத்வங்களைச்‌ சொல்லுகையாலே காரணமுமாய்‌ ரக்ஷகனுமாயிருக்கிறவனே பரம ப்ராப்யன்‌’ என்கிற நாராயண ஸப்தார்த்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும் “தனிமாத் தெய்வத்தடி யவர்க்கு ஆளாகவே இசையுங்கொல் (திருவாசிரியம் -3)என்றும்‌ “ஊழி தோறூழி ஓவாது வாழிய வென்று யாம தொழ இசையுங்கொல் (திருவாசிரியம்‌ 4) என்றும்‌ அந்த நாராயண பதத்தில் பிரார்த்தநா ரூபமான சதுர்த் யர்த்தமான பல ஸ்வரூபத்தையும்‌ சதுர்த் யந்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும்‌ சொல்லுகையாலே அந்தத்‌ திருவாசிரியம்‌ சதுர்த் யந்தமான நாராயண பத்தின் அர்த்தமாய் யிருக்கிறது. (நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால்‌ அடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகில்‌ என்று உபாயத்தையும்‌ சொன்னவிது) பெரிய திருவந்தாதியிலே “நெறி காட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6 )என்று உபாயாந்தரங்களைக்‌ காட்டி என்னை அகற்றப்‌ பார்த்தாயோ என்கையாலே “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ (கீதை 18-66) என்கிற உபாயாந்தரங்களினுடைய த்யாஜ்யதையையும்‌ ‘வெங்கோட்டேறுழுடனே கொன்றானையே மனத்துக்‌ கொண்டு” (பெரிய திருவந்தாதி 48) என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ (கீதை 18-66) என்கிற மாநஸாத்‌யவஸாய ரூபமான உபாய ஸ்வீகாரத்தையும்‌ “சீரார்‌ மனத்தலை வன்‌ துன்பத்தை மாற்றினேன்‌ வானோரினத் தலைவன்‌ கண்ணனால்‌ யான்‌” (பெரிய திருவந்தாதி 25) என்றும்‌ “எம்மிறையார்‌ தந்த அருளென்னும்‌ தண்டாலடித்து” (பெரிய திருவந்தாதி 26) என்றும்‌ சொல்லுகையாலே “அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌யோ மோக்ஷயிஷ்யாமி” கீதை 18-66) என்று உபாய பூதன்‌ பண்ணும்‌ ஸர்வபாப விமோசனத்தையும்‌ “வானோ மறிகடலோ இத்யாதி மருங்கு வன்துயரை கண்டிலமால்‌” (பெரிய திருவந்தாதி 54) என்று அந்த விரோதிகள்‌ போனவிடம்‌ தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போய்த்ததென்கையாலே “இஷ்யாமி’ என்கிற ணிச்சாலே சொல்லுகிற அர்த்தத்தையும்‌ “அடர்பொன்‌ முடியான்‌” இத்யாதி, யாதாகில்‌ யாதே இனி’ (பெரிய திருவந்தாதி 70) என்று “மாஸூச:” (கீதை 18-66 என்கிற பதத்தாலே பலிதமான நிர்ப ரத்வாநுஸந்தானத்தையும்‌ சொல்லுகையாலே திருவந்தாதியாலே ஸ்லோகார்த்தமான உபாய ஸ்வரூபத்தைச்‌ சொல்லிற்று. ஆகையாலே இவை மந்த்ர ஸ்லோகங்களோடு சேரும்‌. ஆகத்‌ திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தையும்‌ ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும்‌ சரம ஸ்லோகத்தினுடையவும்‌ அர்த்த மாயிருக்கிறது –

210-த்வயார்த்தம்‌ தீர்க்க ஸரணாகதி யென்றது ஸாரஸங்க்‌ரஹத்திலே. திருவாய்மொழி த்‌வயத்தில்‌ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார்‌. த்‌வயத்திலே ப்ரதிபாதி க்கப்பட்ட ஸ்ரிய:பதித்வம்‌, நாராயணத்வம்‌, விலக்ஷண விக்‌ரஹ யோக,ம்‌, அவனுடைய உபாயத்வம்‌, உபாய பரிக்‌ரஹம்‌, கைங்கர்ய ப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத் வல்லபனுடைய நித்ய ஸம்பந்த ம்‌, ஸர்வ ஸ்வாமித்வம்‌, நிரதிஸய போக்‌யத்வம்‌, கைங்கர்ய ப்ரார்த்தனை, கைங்கர்ய விரோத நிவ்ருத்தி ஆக இப்பத்து அர்த்தத்தையும்‌ திருவாய்மொழி பத்து பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கையாலே இத் திருவாய்மொழி தீர்க்க ஸரணாகதி என்று ஸார ஸங்க்‌ரஹத்திலே பிள்ளை அருளிச்‌ செய்தார்‌

211-மூன்றில்‌ சுருக்கிய ஐந்தையும்‌ உயர்‌ திண்‌ அணை ஒன்று பயில்‌ ஏறு கண்‌ ௧ரு வீடு சொன்னால்‌ ஒருக்‌ கொண்ட நோற்ற நாலும்‌ எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌ அருளினன்‌ வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌, தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்‌ டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயமென்னும்‌. இனி மேல்‌ திருமந்த்ரத்திலும்‌ சரம ஸ்லோகத்திலும்‌ ஸங்க்‌ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத்‌ திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச்‌ சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும்‌ இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அந்த அர்த்த பஞ்சகத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அவை தன்னிலும்‌ உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ சொல்லக்‌ கடவதென்கிறார்‌. (மூன்றில்‌ சுருக்கின ஐந்தையும்‌ என்று தொடங்கி) திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்தில்‌ சுருங்கச்‌ சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும்‌ திருவாய்மொழியில்‌ (உயர்‌ திண்‌ அணை ஒன்று) முதல்‌ திருவாய்மொழியான உயர்வற உயர் நலத்தில்‌ ஸ்ருதிச் சாயையாலே அந்வய ரூபேண ஸ்வாநுபவ ரூபத்தாலே பரத்வத்திலே பரத்வத்தையும்‌, திண்ணன்‌ வீட்டில்‌ (திருவாய்மொழி 2-2 இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அந்வய வ்யதிரேகங்கள்‌ இரண்டாலும்‌ பரோபதேஸ முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தையும்‌, அணைவதரவணையில்‌ (திருவாய்மொழி 2-8 மோக்ஷ ப்ரதத்வத்தாலே வந்த பரத்வத்தையும்‌, ஒன்றும்‌ தேவிலே (திருவாய்மொழி 4-10) அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக உயர்வற உயர்நலம்‌ திண்ணன் வீடு அணைவதரவணை ஒன்றுந் தேவு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பர ஸ்வரூபத்தையும்‌; (பயிலேறு கண்‌ ௧ரு ) பயிலும்‌ சுடரொளியில்‌ (திருவாய்மொழி 3-7] இவ் வாத்மாவுக்கு ஸேஷத்வமே ஸ்வரூபமாகையாலே அதினுடைய எல்லையான பாகவத ஸேஷத்வத்தையும்‌, ஏறாளுமிறையோனில்‌ (திருவாய்மொழி 4-8) அவன்‌ வேண்டாத ஆத்மாத்மீயங்களை வேண்டேன்‌ என்று இவ் வாத்மா ஸேஷமான போது உபாதேயமாய்‌ அல்லாத போது த்யாஜ்யமென்கிற வ்யதிரேகத்தாலே ஸேஷத்வமே ஸ்வரூபமென்னுமிடத்தையும்‌ கண்கள்‌ சிவந்திலே “சென்று சென்று பரம் பரமாய்‌” (திருவாய்மொழி 8-8-5) இத்யாதி யாலே ஸேஷத்வாஸ்ரயமான ஆத்ம வஸ்துவினுடைய ப்ரக்ருதே:பரத்வ ஜ்ஞாநாநந்த அமலத்வங்களையும்‌ கரு மாணிக்க மலையிலே அந்த ஸேஷத்வத்தினுடைய அநந்யார்ஹத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக பயிலுஞ்சுடரொளி ஏறாளுமிறையோன்‌ கண்கள் சிவந்து கரு மாணிக்கமலை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ ஸ்வ ஸ்ரூபத்தையும்‌, (வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில்‌ (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம்‌ என்றும்‌, சொன்னால்‌ விரோதத்தில்‌ (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம்‌ என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள்‌ தொடக்கமானவை த்யாஜ்யமென்னுமிடத்தையும்‌ சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும்‌ சொன்னால்‌ விரோதம்‌ ஒருநாயகம்‌ கொண்ட பெண்டிர்‌ என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ விரோதி ஸ்வரூபத்தையும்‌ (நோற்ற நாலும்‌) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌’ (திருவாய்மொழி 5-7-1 என்று தம்முடைய ஆகிஞ்சந்ய பூர்வகமாகவும்‌ ஆராவமுதில்‌ “களைவாய்‌ துன்பம் களையா தொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று தம்முடைய அநந்யகதித்வ பூர்வகமாகவும்‌, மானேய் நோக்கில்‌ “வைகலும்‌ வினையேன்‌ மெலிய (திருவாய்மொழி 9-9-1) என்று தம்முடைய பக்தி பாரவஸ்யதையாலும்‌ அடி மேல்‌ சேமங்கொள்ளென்று ஸரணம்‌ புகுந்து, பிறந்தவாற்றில்‌ “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு என்று நாடொறும்‌ ஏக சிந்தையனாய்‌’ (திருவாய்மொழி 5-10-11 என்று தமக்கு அவ்வுபாயத்திலுண்டான அத்‌யவஸாயத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக நோற்ற நோன்பு, ஆராவமுது, மானேய் நோக்கு, பிறந்தவாறு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ உபாய ஸ்வரூபத்தையும்‌ (எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற) எம்மா வீட்டிலே (திருவாய்மொழி 2-9) கைங்கர்யத்தினுடைய ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை ப்ரார்த்தித்து, ஒழிவில்‌ காலத்தில்‌ (திருவாய்மொழி 3-3)அந்த கைங்கர்யந் தன்னை ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாகச்‌ செய்ய வேணுமென்று ப்ரார்த்தித்து, நெடுமாற்கடிமையில்‌ (திருவாய்மொழி 8-10) அந்த கைங்கர்யம்‌ பாகவத பர்யந்தமாக வேணுமென்றும்‌, வேய்மருதோளிணையில்‌ (திருவாய்மொழி 10-3) அது தான்‌ பர ஸம்ருத்‌தயைக ப்ரயோஜநமாகவும்‌ ப்ரார்த்திக்கையாலே, ஆக எம்மா வீடு ஒழிவில் காலம்‌ நெடுமாற் கடிமை வேய்மரு தோளிணை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பல ஸ்வரூபத்தையும்‌ (இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌) ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ இவ் விருபது திருவாய்மொழியாலும்‌ விஸதமாக அருளிச் செய்து மற்ற எண்பது திருவாய்மொழியாலும்‌ விஸ்த்ருதமாக்குகையாலே இத் திருவாய்மொழிக்கு இவ்வர்த்த பஞ்சகமும்‌ ப்ரமேயமென்றும்‌ (அருளினன்‌ வீடு பெற்ற என்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌) “மயர்வறமதிநல மருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “அவாவற்று வீடு பெற்ற” (திருவாய்மொழி 10-10-11) என்று அர்த்த பஞ்சகத்துக்கும்‌ ப்ரதாநமான உபாயோபேயங்கள்‌ இரண்டையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்றும்‌ (தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணி செய்‌ என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்னும்‌) ‘தொழுதெழு” என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌, “விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே’ (திருவாய்மொழி 10-8-6)என்றும்‌, “மேலைத்‌ தொண்டுகளித்து அந்தி தொழும்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌” (திருவாய்மொழி 10-8-7) என்றும்‌ “சொல்‌ பணி செய்‌ ஆயிரம்‌” (திருவாய்மொழி 1-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே முக்தர்க்கு அஸாதாரண லக்ஷணமான வாசிக வ்ருத்தி இத் திருவாய்மொழி என்கையாலே அவ்வுபாயோபேயங்களிரண்டிலும்‌ உபேயமொன்றுமே இதுக்குத்‌ தாத்பர்யார்த்த மென்று சொல்லக் கடவதென்கிறார்‌.

212-ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கோருருவும்‌ போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்தருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும்‌ ஸங்க்‌ருஹீதம்‌
திருமந்த்ரமும்‌ த்‌வயமும்‌ முதல்‌ பதங்களிலே ஸங்க்‌ரஹமாய்‌ ஒழிந்தவிடம்‌ அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும்‌ திருவாய்மொழியும்‌ முதல்‌ பாட்டுக்களிலே ஸங்க்‌ரஹமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌. (ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கு ஒருருவும்‌ போலேயான வற்றிலே) ஒரெழுத்து ஒருருவென்னும்படி திருமந்த்ரத்துக்கு ஸங்க்‌ரஹமான அகாரத்தையும்‌ அதன்‌ விக்ருதியான ப்ரணவத்தையும்‌ போலே என்னுதல்‌-அன்றிக்கே த்‌வயத்துக்கு ஸங்க்‌ரஹமான அதில்‌ ப்ரதம பதத்தையும்‌ போலே யிருக்கிற திருவிருத்தத்தில்‌ முதல்‌ பாட்டிலும்‌ திருவாய்மொழியில்‌ முதல்‌ பாட்டிலும்‌ (இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்து அருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழு என்ற பஞ்சகத்தோடே) “இமையோர்‌ தலைவா” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “அயர்வறும்‌ அமரர்கள்‌ அதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ சொல்லுகையாலே ஸுரி ஸேவ்யமாய்‌ ஸர்வாதிகமா யிருக்குமென்று பர ஸ்வரூபத்தையும்‌ அடியேன்‌” என்றும்‌ “என்‌ மனனே” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷமாய்‌ அபரிச்சேத்‌யாந்த:கரணமா யிருக்கும்‌ என்று ஸ்வ ஸ்வரூபத்தையும்‌ “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்றும்‌ “மயர்வு” என்றும்‌ சொல்லுகையாலே அவித்‌யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்‌ “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌” என்றும்‌ “மதிநலமருளினன்‌” என்றும்‌ சொல்லுகையாலே லோக ரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப்‌ பண்ணின ஸர்வேஸ்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும்‌ “அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே” என்றும்‌ “தொழுதெழு” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷி விஷயத்தில்‌ கரண த்ரயத்தாலும்‌ உண்டான கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்று பல ஸ்வரூபத்தையும்‌ ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும்‌ அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள்‌ முதலான வர்த்த விஸேஷங்களும்‌ ஸங்க்‌ருஹீதமென்கிறார்‌ மேல்‌. (அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவ) “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவத்தையும்‌-அன்றிக்கே அவித்‌யாதி, ஸ்வரூப ஸ்வபாவமென்ற இவற்றை தத்வ த்ரய விஷயமாக்கி அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைப்‌ “பொய்ந் நின்ற ஞானம்‌” என்றும்‌ -மயர்வு” என்றும்‌ அவித்‌யையாகிற அசித் ஸ்வரூபத்தையும்‌ ஜ்ஞாநாநுதய அத்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞானங்களாகிற அவித்‌யா ஸ்வபாவத்தையும்‌ அடியேன்‌ என்று ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ “என் மனனே” என்று ஆத்மாவினுடைய ஸ்வபா வத்தையும்‌ “தலைவா” என்றும்‌ “யவன்‌” என்றும்‌ ஈஸ்வர ஸ்வரூபத்தையும்‌“நலமுடையவன்‌” என்று அவனுடைய ஸ்வபாவத்தையும்‌ சொல்லுகிறார்‌ என்றுமாம்‌. (ஆத்மேஸ்வரபந்த ) “இமையோர்‌ தலைவா” “அடியேன்‌” “அதிபதி”“தொழுதெழு” என்று ஜீவேஸ்வரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்தத்தையும்‌ ரக்ஷண க்ரமம்‌ ” உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌ என்றும்‌ “மயர்வற மதிநல மருளினன்‌’ என்றும்‌ ஈஸ்வரன்‌ அநேகா வதாரங்களைப்‌ பண்ணி ரக்ஷிக்குமென்றும்‌ அஜ்ஞானத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளைத்‌ தன்‌ க்ருபையாலே தந்தானென்றும்‌ அவனுடைய ரக்ஷண க்ரமத்தையும்‌ (குண விக்‌ரஹ விபூதி யோக,) “நலமுடையவன்‌ என்று குணத்தையும்‌, “சுடரடி” என்று விக்‌ரஹத்தையும்‌, “இமையோர்‌” என்றும்‌“அயர்வறும்‌ அமரர்கள்‌” என்றும்‌ விபூதியையும்‌ அந்த ஸுூரிகளை முன்னிடுகையாலே ததீயாபிமானத்தையும்‌ “மெய்‌ நின்று கேட்டருளாய்‌”“தொழுதெழு என்‌ மனனே” என்று நெஞ்சு போலே பவ்யமான ஈஸ்வரனும்‌ அப்படி பவ்யரானார்‌ உபதேஸத்துக்கு விஷயமென்றும்‌ (அந்யாபதேஸ ஹேது)“நலமருளினன்‌’ என்று பக்தியைத்‌ தந்தான்‌ என்கையாலே அந்யாபதேஸ த்துக்குஹேது அந்த பக்தி என்றும்‌- ஆதி ஸப்தத்தாலே வேதாந்தங்களில்‌ யாவை சில அர்த்தங்கள்‌ சொல்லப்பட்டது அவை யெல்லாம்‌ ஸங்க்‌ரஹ ரூபேண இவற்றிலே சொல்லப் பட்டதென்கிறார் –

213-அடி தொழுதெழென்ற இதிலே வஸ்து நிர்த்தேஸ நமஸ்கார ஆஸீஸுக்களும்‌ உண்டு.
ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்‌ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும்‌ சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம்‌ என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்‌,(அடிதொழுதெழு என்கிற இதிலே வஸ்து நிர்தேஸ நமஸ்கார ஆஸீஸ்ஸூக்களும்‌ உண்டு) என்கிறார்‌. “துயரறு சுடரடி” (திருவாய்மொழி 1-1-1) என்று வஸ்து நிர்தேஸத்தையும்‌ “தொழுது” என்று நமஸ்காரத்தையும்‌ “எழு” என்று ஆஸீஸ்ஸையும்‌ சொல்லிற்றென்கிறார் –

214-சாது சனம்‌ நண்ணா மயர்வற மாசறுக்கும்‌ தெருள்‌ கொள்ளப்‌ பத்தராவர்‌ அடிமையற வுரிய நோய்களறுக்கும்‌ உடைந்து ஏற்றரும்‌ வானின்‌ தாளின் கீழ்‌ அடிக்கீழின்பக்கதி பயக்கும்‌ ஊடுபுக்கு மூவுலகும்‌ உருகா நிற்பர்‌ என்னும்‌ ஸாம்யத்தாலே வாச்யம்‌ பத்தினாய தோற்றம்‌ போலே தோற்றங்கள்‌ ஆயிரத்தின்‌ பத்துப்‌ பத்தான இதினாவிர்ப்பாவம்‌.
இனி மேல்‌ “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம்‌ போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்‌ சாது சனம்‌ என்று தொடங்கி. (சாது சனம்‌) “சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஸாது, பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து மயர்வற மதிநலம்‌ அருளினன்‌ (திருவாய்மொழி 1-1-1 என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி ஜ்ஞாந பக்திகளை உண்டாக்கி (அடிமை யற) அடிமை யறக்கொண்ட (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷமாக அங்கீகரித்து (நோய்களறுக்கும்‌) “நோய்களறுக்கும்‌ மருந்தே (திருவாய்மொழி-9-3-3) என்கிறபடியே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாய்‌ (ஏற்றரும்‌) “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு” (திருவாய்மொழி 7-6-10) என்று ஸ்வ யத்நத்தானாலே பெற வரிதாயிருக்கிற பரம பதத்தைக்‌ கொடுத்து (தாளின்‌ கீழ்‌) “தன்‌ தாளின் கீழ்ச்‌ சேர்த்து” (திருவாய்மொழி 7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக் கொண்டு ( இன்பக் கதி) “இன்பக் கதி செய்யும்‌‘ (திருவாய்மொழி 7-5-11 என்று நிரதஸயாநந்தி யாக்கி (ஊடு புக்கு) “எடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற (திருவாய்மொழி 5-10-10) என்று தன்னுடைய போக்‌யதாதிஸயத்தாலே சேதநனை த்‌ரவ த்‌ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும்‌ (நண்ணா) “நண்ணா வசுரர்‌ நவி வெய்த நல்லவமரர்‌ பொலி வெய்த எண்ணாதனகள்‌ எண்ணும்‌ நன்முனிவரின்பம்‌ தலைச் சிறப்ப பண்ணார்‌ பாடல்‌” (திருவாய்மொழி 10-7-5) என்கிறபடியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து (மாசறுக்கும்‌ தெருள் கொள்ளப்‌ பத்தராவர்‌) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்‌” (திருவாய்மொழி 5-3-11 என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கி “தெருள் கொள்ளச்‌ சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்மொழி 2-10-11 என்றும்‌ ‘தூயவாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்றிமே” (திருவாய்மொழி 6-4-11) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக்‌ கொடுத்து “உரிய தொண்டராக்கும்‌” (திருவாய்மொழி 6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹ ஸேஷமாமாக்கி (உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி 1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல துரிதங்களையும்‌ ஸவாஸநமாகப்‌ போக்கி “வானின் மீதேற்றி அருள் செய்து” (திருவாய்மொழி 8-4-11 என்று தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவித்து, (அடிக்கீழ்‌) ‘அடிக்கீழிருத்தும்‌” (திருவாய்மொழி 8-8-1॥ என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி (பயக்கும்‌) “எங்ஙனே சொல்லிலும்‌ இன்பம்‌ பயக்குமே” (திருவாய்மொழி 7-9-1॥ என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி (மூவுலகும்‌ உருகா நிற்பர்‌) ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகும்‌ உருகுமே” (திருவாய்மொழி 9-5-11 என்றும்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல்‌ போல்‌ உருகா நிற்பர்‌” (திருவாய்மொழி 6-8-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரைத் த்‌ரவத்‌ரவ்யமாக்கி இப்படி ஸர்வேஸ்வரனோடு ஸாம்யத்தை உடைத்தாகையாலே (வாஸ்யன்‌ பத்தினாய தோற்றம் போலே ) தனக்கு வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய பத்தினாய தோற்றம் திருச்சந்த -79)என்கிற பத்து அவதாரமே போலே ‘தோற்றங்களாயிரம்‌ (திருவாய்மொழி 6-8-11) என்று இத்திருவாய்மொழியின்‌ பத்துப்‌ பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார் –

215-ஐந்தினாடொன்பதோட ஒருபத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிரமென்றதும்‌ ஸாபிப்ராயம்‌.
இனிமேல்‌ (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும்‌ என்னுமவை போலே) “ஐந்தினோடைந்தும்‌ வல்லார்‌ ்‌ (திருவாய்மொழி 10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம்‌ ஐந்து பாட்டுக்கொரு அபி ப்ராயமுமானாப்போலவும்‌ “ஒன்பதோடொன்றுக்கும்‌” (திருவாய்மொழி 9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும்‌ ஒருபாட்டுக்கொரு கருத்துமானாப்‌ போலவும்‌ “பாடலோராயிரத்துள்‌ இவையும்‌ ஒருபத்தும்‌ வல்லார்‌ (திருவாய்மொழி 3-4-11 என்று பத்து பாட்டுக்கு ஒரு கருத்தானாப் போலவும்‌ (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம்‌ என்றதும்‌ ஸாபிப்ராயம்‌) “நூறே சொன்ன ஆயிரம்‌” (திருவாய்மொழி 9-4-11) என்றும்‌ “பத்து நூற்றுள்‌ இப்பத்து” (திருவாய்மொழி 6-7-11 என்றும்‌ சொல்லுகையாலே பத்துக்கள்‌ தோறும்‌ வேறு வேறு கருத்தாயும்‌ “அவாவிலந்தாதிகளால்‌ இவை ஆயிரமும்‌” (திருவாய்மொழி 10-10-11) என்று ஆயிரத்துக்கும்‌ ஓரபிப்ராயமாயும்‌ இப்படித்‌ தலைக்கட்டுமென்கிறார்

216-பாட்டுக்கு க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து. (பாட்டுக்குக்‌ க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து) அதாவது ஒரு பாட்டு “தொழு தெழு” (திருவாய்மொழி 1-1-1 என்று ஒரு க்ரியையோடே தலைக் கட்டுமாப்‌ போலவும்‌ பத்து பாட்டு பரத்வம்‌, பஜநீயத்வம்‌, ஸெளலப்‌யம்‌, அபராத ஸஹத்வம்‌ என்றாப் போலே ஒரு கருத்தோடே தலைக் கட்டுமா போலவும்‌, நூறு பாட்டு பரோபதேஸமா யிருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டுமென்கிறார்

217-பகவத்‌ பத்த பரங்கள்‌ ஆஸ்ரயண விதி, ஸேஷங்கள்‌. இவற்றில்‌ பகவத் பக்த பரங்களாய்‌ வருமவற்றுக்குத்‌ தாத்பர்யம்‌ ஏதென்ன, அவற்றுக்குத்‌ தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்‌. (பகவத்‌ பக்தபரங்கள்‌ ஆஸ்ரயண விதி ஸேஷங்கள்‌) “பயிலும்‌ சுடரொளி” (திருவாய்மொழி 3-7) “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக்‌ கருத்து என்னென்னில்‌, ‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” (யஜுஸ்‌ ஸம்ஹிதை 2-5-5) என்று ஸ்வர்க்க காமனானவன்‌ ஜ்யோதிஷ்டோமத்தைப்‌ பண்ணுவான்‌ என்கிற விதிக்கு “ப்ரயாஜைர்‌ யஜேத” இத்யாதி விதிகள்‌ ஸேஷமாய்‌ அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பல பர்யந்தமாய்த்‌ தலைக் கட்டுமா போலே ‘திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 41-1) “நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌ ஓவாதே” (திருவாய்மொழி 2-8-4) என்கிற ஆஸ்ரயணம்‌ பாகவத ஸமாஸ்ரயணத்தோடொழிய தலைக் கட்டாமையாலே அவ்வாஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரங்கள்‌ என்கிற இதுக்கு பகவத்‌ பரமாயும்‌ தத் பக்த பரமாயும்‌ வருமவை என்று பொருளான போது (பாட்டு க்ரியையிலே முடியுமாபோலேயும் )பத்துப்‌ பாட்டு நிதாநம்‌ சொல்லும்‌ பாட்டிலே முடியுமா போலேயும்‌ பத்துத் தோறும்‌ உபதேஸம்‌ உண்டாகையாலே) பகவத் குணங்களையும்‌ தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும்‌ சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம்‌ பண்ணுகிற திருவாய்மொழியில்‌ என்று இதற்குத்‌ தாத்பர்யமாகக்‌ கடவதென்று ஏக வாக்யமாகச்‌ சொல்லவுமாம் –

218-பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன்‌ மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம்‌ கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக்‌ கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலாஸத்தி பல திக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத் தோறும்‌ வெளியிடுகிறார்‌.
இனி மேல்‌ திருவாய்மொழியில்‌ பத்துப்‌ பத்தாலும்‌ பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ தமக்குப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌. பரத்வ காரணத்வாதி, ஸர்வ ஸ்மாத் பரனாயிருந்த பரத்வ லக்ஷணம்‌ காரணத்வத்தாலே யாகையாலே ஸர்வ காரண பூதனாயிருந்த காரணத்வம்‌ நாட்டிலுள்ள காரண கார்யங்களைப்‌ போலே ப்ருதக் ஸித்‌தனா யிருக்கை யன்றிக்கே கார்ய வஸ்துக்களிலே வ்யாபித்திருக்கையாலே ஸர்வ வ்யாபகனாய்‌ அந்த வ்யாப்தி தான்‌ ஆகாஸ வயாப்தி போலன்றிக்கே நியந்த்ருத்வேந வாகையாலே ஸர்வ நியந்தாவாய்‌ இப்படி இருக்கிற பரத்வாதிகளைக்‌ கண்டஞ்ச வேண்டாதபடி பரம காருணிகனாய்‌ இப்படிப்‌ பரம காருணிகனாகையாலே ஸர்வ ஸரண்யனாய்‌ இப்படி ஸர்வ ஸண்யனாம் போது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்கமான இஷ்ட ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்க வேண்டுகையாலே அதுக்கு ஈடான ஸர்வ சக்தித்வத்தை யுடையனாய் அந்தப் ஸக்தி தன்னாலே கற்ப்பிக்கப்பட்ட நித்ய போகத்தை யுடையவனாகையாலே ஸத்யகாமனாய்‌ இப்படி நித்யபோகத்தை யுடையவனாய்க் கொண்டிருக்கையாலே லீலா விபூதியை நோவு பட விட்டு இருக்குமோ என்னில் அதனுடைய பிரளய ஆபத்தில் உதவி ரக்ஷிக்குமவனாகையாலே ஆபத் சகனாய் -இப்படி ஆபத் சகனாகையாலே ஸம்ஸார தாப ஆர்த்தரான ஆஸ்ரிதர்களுடைய ஆர்த்தியைப் போக்குமவனாகையாலே ஆர்த்தி ஹரனாய் -ஆர்த்திஹரனாய்‌ ஆக இப்படி பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் சஹத்வ ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன் -இப்படி பத்துப் பத்தாலும் பிரதி பாதிக்கப்பட்ட பரத்வாதிகளான பத்துக் குணங்களுடன் கூடியிருக்கிற சர்வேஸ்வரன் (மயர்வை அறுக்க தத்வ வேதந மறப்பற்று )மயர்வற மதிநலம் அருளினன் -மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4-என்றும் சொல்லுகிறபடியே அஜ்ஞாநத்தை ஸ வாஸநமாகப்‌ போக்கி ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்க “மறப்பனோ இனி யான்‌ என்‌ மணியையே” (திருவாய்மொழி 1-10-10) என்று விபூதியிலில்லாதபடியான தத்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌ (ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து) அந்த தத்வ ஜ்ஞாந பலமான மோக்ஷத்தை “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த்து”” (திருவாய்மொழி 2-9-1) என்று ஸ்வரூபாநுரூபமாக “தனக்கேயாக” (திருவாய்மொழி 2-9-4) என்று நிஷ்கர்ஷித்து (மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து) அந்த ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்துக்கு பலமான வ்ருத்தியை “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” (திருவாய்மொழி -3-3-1) என்று அர்த்தித்து (புருஷார்த்த, பலாந்ய ருசியொழிந்து) அந்த புருஷார்த்தத்துக்குப்‌ பலம்‌ தத்‌ வ்யதிரிக்தங்களில்‌ ருசியை “‘ஐங்கருவிகண்ட இன்பம்‌ சிற்றின்பமொழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 4-9-10) என்று தவிர்ந்து ( விரக்தி பல ராகம்‌ கழிய மிக்கு) அந்த விரக்தி விஷய வைராக்‌யத்துக்குப்‌ பலமான பகவத்‌ விஷயத்தில்‌ ராகம்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று அதிஸயித்து (ப்ரேம பலோபாயத்தே புகுந்து) இப்படி நிரதியய ப்ரேம பலமான விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த த்வரையாலே “அலர் மேல்‌ மங்கை உறை மார்பா அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி 6-10-10) என்று உபாய வரணம்‌ பண்ணி (ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி) இப்படி ஸித்‌த ஸாதந பரிக்ரஹம்‌ பண்ணின இவர்‌ அந்த ஸாதந பலமான க்ருதஜ்ஞதையாலே ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி “அதுவுமற்றாங்கவன்‌ தன்னது எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) என்று அவ்வாத்மா அவனுக்கு அநந்யார்ஹ ஸேஷம்‌ என்றிருக்கையாலே ப்ரத்யுபகாரம்‌ காணாதே தடுமாறி (க்ருதஜ்ஞதா பல ப்ரதி க்ருதமா னத்தை உணர்ந்து) அந்த க்ருதஜ்ஞதா பலமான ப்ரத்யுபகாரம்‌ பண்ணத்‌ தேடி ஆத்ம ஸ்வரூபத்தை “நின்றவொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்மொழி 8-8-4) என்று தேஹேந்த்‌ரியாதி களில்‌ விலக்ஷணமாய்‌ பகவத நந்யார்ஹ ஸேஷமாயிருக்கிற ஆகாரத்தை அறிந்து (ஆத்மதர்ஸந பலப்ராப்தி மரணாவதி யாகப்‌ பெற்று) அந்த ஆத்ம தர்ஸநத்துக்குப்‌ பலமான பகவத்‌ ப்ராப்தியை “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்கிறபடியே ஸரீராவஸாநத்திலே பண்ணித்‌ தருகிறோம்‌ என்று அவன்‌ நாளிட்டுத் தர பெற்றுடையராய்‌ (காலாஸத்தி பல கதிக்குத்‌ துணை கூட்டின) அணித்தாக நாளிட்டுக்‌ கொடுக்கையாலே அதுக்கு பலம்‌ அர்ச்சிராதி, மார்க்கத்தாலே போகையிறே, ஆகையாலே அவ் வர்ச்சிராதி கதிக்கு “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1 என்றும்‌ “ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” திருவாய்மொழி 10-1-6) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆபத்‌ தநமான அவன்‌ தன்னை இவருக்குத்‌ துணையாக்க அவனைத்‌ துணையாக உடையராய்‌ (தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத்தோறும்‌ வெளியிடுகிறார்‌) இப்படி ஈஸ்வரன்‌ தமக்குப்‌ பண்ணிக்‌ கொடுத்த தஸைகளைப்‌ பத்துப்‌ பத்தாலும்‌ வெளியிடுகிறார்‌.

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-த்‌விதீய ப்ரகரணம்‌-

August 11, 2025

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ தீதற்ற
ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே காண்

மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

——————-

87-அணைய ஊர புனைய அடியும்‌ பொடியும் பட பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜதநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப்‌ பெரு மக்களும்‌ பெரியோரும்‌ பரிக்‌ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்‌.
இனி மேல்‌ பகவத்‌ விநியோகார்ஹமாயும்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும்‌ மிகவும்‌ உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம்‌ மாநஸைரந்த்ய ஜாதிதாம்‌ | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம்‌ நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக்‌ கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ போலன்றிக்கே, பகவத்‌ விநியோகார்ஹமாய்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்‌ரஹிக்கவும்‌ ஆதரிக்கவும்‌ படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்‌ (அணைய இத்யாதி,).

*அணைவதரவணைமேல்‌” (திருவா.2 – 8 – 1) விடாயர்‌ மடுவிலே சேர்ந்தாப் போலே ஸ்ரம ஹரமாய்‌, அதாவது – “பூம்பாவை யாகம்‌ புணர்வது” என்று நாச்சிமாரோட்டைச்‌ சேர்த்தியோடே விகல்பிக்கலாம் படியான ஸூக ஸ்பர்ஸத்தை உடையனாகையாலே ஸர்வேஸ்வரன்‌ கண் வளர்ந்தருளுகைக்குப்‌ பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும்‌, “ஊரும்‌ புட்கொடியுமக்தே”” (திருவா. 10 – 2 – 3) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத யோதகமான கருட வாஹநன்‌ கருட த்‌வஜன்‌ என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும்‌ த்‌வஜமாயுமிருக்கும்‌ பெரிய திருவடியாயும்‌, “தாளிணை மேலும்‌ புனைந்த” (திருவா, 1 – 9 – 7), ““புனையுங் கண்ணி”” (திருவா. 4 – 3 – 2) என்கிறபடியே ஸர்வேஸ்வரத்வ ஸூூசகமான தனி மாலையாய்‌, ”மலர்த் துழாய் மாட்டே நீ மனம்‌ வைத்தாய்‌” (திருவா. 3- 1 & 4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக்‌ கொள்ளை கொள்ளவற்றான திருத் துழாயாழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப்‌ “பெரு மக்களுள்ளவர்‌’” (திருவா. 3 – 7 – 5) என்னும்படி மஹாத்மாக்களாயும்‌, ஸத்தையே பிடித்து மோஷத்வ ஜ்ஞாந திரோதாந மில்லாமையாலே “’அஸந்நேவ’”, ‘“ஸந்தமேநம்‌”’ (தை.ஆ.) என்ன வேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள்‌ பகவத்‌ விநியோகார்ஹமாக ஸ்வேச்சையாலே பரிக்‌ரஹித்தார்கள்‌.

(அடியும்‌ பொடியும் பட) ““பத்யு? ப்ரஜாநாமைஸ்வர்யம்‌ பஸூநாம்‌ வா ந காமயே அஹம்‌ கதம்போ பூயாஸம்‌ குந்தேரா வா யமுநா தடே”’ என்று ப்ரஜாபதி பஸூ பதிகளுடைய ஐஸ்வர்யத்தையும்‌ வேண்டேன்‌; ”பூத்த நீள்‌ கடம்பேறி”’ (நா. தி. 4 – 4] என்றும்‌, ‘“பூங்குருந்தேறி யிருத்தி” (நா. தி. 3 – 3) என்றும்‌ சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஸத்துக்கு விஷயமான குருந்தாதல்‌, கடம்பாதல்‌ ஆவேனாக வேணும்‌ என்றும்‌, ““ஆஸாமஹோ சரண ரேணு ஜுஷாமஹம்‌ ஸ்யாம்‌ ப்‌,ருந்ததாவநே கிமபி குல்மல தெளஷதீநாம்‌ । யா து ஸ்த்யஷம்‌ ஸ்வஜ ந மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம்‌ ஸ்ருதிபிர் விம்ருக்‌யாம்‌”‘ (பாக,.10) என்று வேதங்களாலும்‌ தேடவரிய க்ருஷ்ணன்‌ போன வழியை ஸ்வ ஜநத்தையும்‌ குலாசாரத்தையும்‌ அதிக்ரமித்து யாவர் சில பெண்கள்‌ பின் தொடர்ந்தார்கள்‌, அந்த க்ருஷ்ணனுடையவும்‌, பெண்களுடையவும்‌ பாத ரேணுவை தரித்திருக்கும்‌ ப்‌ருந்தா வநத்தில்‌ சிறு செடிகள்‌ கொடிகள்‌ ஓஷதிகள்‌ இவையாவேனாக வேணும்‌ என்றும்‌,

(பர்வத) “கோனேரி வாழும்‌ குருகாய்ப் பிறப்பேனே’‘ (பெருமா. தி. 4 – 1) என்றும்‌, “திருவேங்கடச் சுனையில்‌ மீனாய்ப் பிறக்கும்‌ விதி யுடையே னாவேனே”‘ (பெருமா.தி, 4 2) என்றும்‌ “‘தம்பகமாய்‌ நிற்கும்‌ (பெருமா. தி. 4 – 5) , “*செண்பகமாய்‌ நிற்கும்‌‘” (பெருமா. தி. 4 – ச்‌) , “கானாறாய்ப் பாயும்‌”(பெருமா. தி. 4 – 7), எம்பெருமான்‌ பொன் மலை மேல்‌ ஏதேனுமாவேனே”'(பெருமா. தி. 4 – 10) என்றும்‌ திருமலை யாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாரவரங்களில்‌ ஏதேனுமொன்றாகப்‌ பெறுவேனாக . வேணும்‌ என்றும்‌,
(ப,வநங்களில்‌]) “தவத,ஸ்ய ஸுகைக ஸங்கிநாம்‌ பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே”? (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தாஸ்ய ஸுக மொன்றிலுமே ஸங்கத்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாஸங்களிரண்டும்‌ அங்கேயாம் படியான கீட ஜத்மமே எனக்கு உண்டாக வேணும்‌ என்றும்‌; இப்படி பகவத்‌ பாாகவத ஸம்பந்தங்களை யுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை *பேராளன்‌ பேரோதும்‌ பெரியோரான ஸ்ரீஸூக ப்‌ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப் பெருமாள்‌, பெரிய முதலியார்‌ தொடக்கமான முமுஷுக்கள்‌ ப்ரார்த்தித்தார்கள்‌.
ஆக இத்தால்‌ பகவஜ் ஜ்ஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட வர்ணாதிகள்‌ ஸத்துக்களுக்கு அநாதரணீயமென்றும்‌, பகவத்‌ விநியோகார்ஹமான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ ஆதரணிய மென்னுமிடத்தையும்‌ சேர அருளிச் செய்தார் –

88-ஸேஷத்வ பஹிர்பூத ஜஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதார்‌ த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே.
இனி மேல்‌ ஸேஷேத்வத்துக்குப்‌ புறம்பான ஆத்மாவையும்‌ அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச்‌ சொல்ல வேணுமோ? என்கிறார்‌ (ஸேஷத்‌வேத்யாதி ,), “ந தேஹம்‌ ந ப்ராணாந்‌ ந ச ஸுக,மஸேஷாபி லஷிதம்‌ ந சாத்மாநம்‌ நாந்யத்‌ கிமபி தவ ஸேஷத்வ விப்வாத்‌ ! பஹிர்பூ,தம்‌ நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா விநாஸம்‌ தத்‌ ஸத்யம்‌ மது மதந விஜ்ஞாபநமித,ம்‌”” (ஸ்தோ, ர. 57) என்று – தேவரீருடைய ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான தேஹாதிகள்‌ ஒன்றையும்‌ ஸஹியேன்‌; அவ்‌வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த,மயமான ஆத்ம வஸ்துவையும்‌ ஸஹியேன்‌; அது ஸததாவாக விநாஸத்தை அடைவதாக. இது – அஹ்ருதயமன்று ஸத்யம்‌- இது அஸத்யமாகில்‌ தேவரீர் ஸந்நிதி யில்‌ அஸத்யம்‌ சொன்ன மது பட்டது படக் கடவேன்‌-என்று ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான போது ““ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா” (பாஞ்ச) என்று ஜ்ஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதவர்கள்‌, ஸேஷத்வ ஜஞாந விரோதியான அஹங்காரத்துக்கு ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய்‌, காமமடியாக வருவதொன்றாகையாலே ஓளபாதிகமான வர்ணத்தை ஆதரியார்க ளென்னுமிடம்‌ சொல்ல வேணுமோ ? என்கிறார் –

89-இதின்‌ ஓளபாதிகத்வம்‌ ஒரு ராஜா தன்னை மறை முனிவனாக்கினவன்‌ நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யதிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்‌.
இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌ (ஒரு ராஜா என்று தெடங்கி). ருஷிக வம்ஸ உத்பவனாய்‌ ராஜாவான விஸ்வாமித்ரன்‌ ப்‌ரஹ்ம ரிஷித் வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம்‌ தபஸ்ஸு பண்ணின தன்னை ‘‘மந்திரங்‌ கொள்‌ மறை முனிவன்‌” (பெருமா.தி.10 – 2) என்னும் படி ப்ரஹ்ம ரிஷியாக்கின வஸிஷ்டன்‌ தன்னுடைய வார்தாதிலங்கநம்‌ பண்ணின த்ரி ஸங்குவைத்‌ தன்‌ புத்ரர்களுடைய ஸாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந் தானே வாராம்படி சண்டாளனாக்கு விக்க, அந்த த்ரிஸங்குவையும்‌ அந்த வாரே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாம் படித்‌ தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம்‌ பண்ணுவித்த போதே வர்ணம்‌ கர்மோபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுவ்யக்த மென்கிறார்‌,-ஆக இத்தால்‌ ஒரு க்ஷத்ரியன்‌ ப்‌ரஹ்ம ரிஷியானானென்றும்‌, ஒரு க்ஷத்ரியன்‌ சண்டாளனானானென்றும்‌, அந்த சண்டாளனானவனை அந்த ப்‌ரஹ்ம ரிஷியானவன்‌ தபோ பலத்தாலே ஸ்வர்க்க மேற்றினான்‌ என்றும்‌ சொல்லுகையாலே வர்ணம்‌ ஓளபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுஸ்திரமாய்த்து –

90- மாவுருவில்‌ கள்ள வேடம்‌, திருந்து வேதமலமான மானிடம்‌ பாடல்‌, ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌, காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன்‌ வேடம்‌, தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி, ஸ்வபசரில்‌ பத்தி பாசனமும்‌ அறிவார்‌ ஆரார்‌ அமரரென்ன ஏற, அறியாதார்‌ சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌.
ஆக கீழ்‌ பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம்‌ அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ அநுபாதேயரென்றும்‌, பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம்‌ உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ உபாதேயரென்றும்‌ சொல்லா நின்றது. இனி மேல்‌ ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றிலும்‌ த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்‌ படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும்‌ ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபண ஸமம்‌ இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார்‌ (மா வுருவில்‌ கள்ள வேடம்‌ என்று தொடங்கி].
எம்மா வுருவும்‌ வேண்டு மாற்றாலாவா யெழிலேறே”’ (திருவா. 5 – 8 – 2) “எவ் வுருவும்‌ மாவுரு’ என்று அவன்‌ பரிக்‌ரஹித்த விக்‌ரஹமெல்லாம்‌ அப்ராக்ருதமா யிருக்குமென்றும்‌, “இச்சா க்‌ருஹீதாபி மதோருதேஹா “” (வி.பு. 6 – 7 – 84) என்று இச்சையாலே பரிக்‌ருஹீதமா யிருக்குமென்றும்‌ சொல்லுகிற விக்‌ரஹங்களில் வைத்துக்கொண்டு “கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும்‌”” (திருவா. 3 – 10 – 4) என்று, “யாதா ஹி சோரஸ்ஸ ததா ஹி புத்தா (ரா. ஆ. 109 – 73) என்று வேதத்துக்கு அப்ராமாண்யம்‌ சொல்லுகிற புத்‌த முனியான விக்‌ரஹமும்‌,
(திருந்து வேதம்‌) ஸகல ஸப்‌தங்களும்‌ ஸத்‌வாரகமாகவும்‌, அத்‌வாரகமாகவும்‌ ஸர்வேஸ்வரனை ப்ரதி பாதிக்கையாலே கட்டளைப் பட்ட வேதத்தில்‌ (மலமான மானிடம்‌ பாடல்‌) *’ஓர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” (திருவா. 3 – 9 – 4) என்றும்‌, “ந ஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ:? ! காவ்யாலாபோபி ஜப்யோஸெள யத்ர ஸங்கீர்த்ய தேச்யுதா ” என்றும்‌ சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை ப்ரஸம்ஸிக்கிற வாக்யங்களும்‌,
(ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌) “ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா? | ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா யே ஹ்ய பக்தா ஜநார்த்தநே” என்று பகவத்‌ பக்தனல்லாதவன்‌ எல்லா வர்ணங்களிலும்‌ ஸூத்‌ரனென்றும்‌, ப்ரமாண-ப்ரமேய -ப்ரமாதாக்கள்‌ மூவரிலும்‌ த்யாஜ்யரையும்‌ சொல்லி இனி மேல்‌ உபாதேயரையும்‌ சொல்லுகிறது-
(காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன் வேடம்‌] ““கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்‌ பெற்றான்‌ காடு வாழ்‌ சாதியுமாகப் பெற்றான்‌”” (நா.திரு. 12 – 8) என்று கோபாலனாய்க்‌ கொண்டு காட்டிலே பசுக்களின் பின்னே ”கறையினார்‌” (திருவா. ச – 8 – 4) என்னும் படி பேணாதே திரியச் செய்தேயும்‌ ‘‘கடல் வண்ணன்‌ வேடத்தை வந்து காணீர்‌”” (பெரியா… 3 – 3 – 1) என்னும்படி பிறர்க்கும்‌ அழைத்துக் காட்ட வேண்டும்படி த்ரஷ்டவ்யமான க்ருஷ்ண லிக்ரஹமும்‌, (தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி) த்‌ராவிட பாஷா பரிகல்பிதமான ப்ரபந்தங்களில்‌ வைத்துக் கொண்டு *ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத் ‘ ” (மாத்ஸ்யே) இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதக மானவையும்‌ (ஸ்வபசரில்‌) ஸ்வபரோபி மஹீபால் விஷ்ணு பக்தோ த்விஜாதி க” (பாஞ்ச. என்று ஸ்வபாகரே யாகிலும்‌, (பத்தி பாசனமுமறிவார்‌) “பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌” (திருச்ச, விரு. 100) என்று சொல்லுகிறபடியே ஸ்வ யத்நத்தாலே பெறுதற்கரிதான பகவச் சரணார விந்தங்களில்‌ பக்தியைத்‌ தங்களுக்கு தநம்‌ என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண -ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றும்‌ -உத்க்ருஷ்ட தமம்‌ என்றும்‌ சொல்லி இந்த உத்க்ருஷ்ட -தமமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள் வைபவத்தை (ஆராரமாரென்ன) “நீரார்‌ முகில் வண்ணன்‌ பேராரோதுவார்‌ ஆராரமரரே”” (திருவா. 10 – 5 – 8) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை அநுஸந்திக்க வல்லவர்கள்‌ ஏதேனுமொரு ஐந்ம வ்ருத்தங்களை உடையரே யாகிலும்‌ அவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌ என்றும்‌, (ஏற) ”இலங்குவான்‌ யாவரூமேறுவர்‌ சொன்னாலே”” (திருவா. 3 – 8 – 11) என்று பகவத விஷயத்தில்‌ அந்வயித்தவர்கள்‌ ஆரேனுமாகிலும்‌ தேஸ விஸேஷ ப்ராப்தி பண்ணுவர்கள்‌ என்றும்‌, இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச்‌ சொல்லா நிற்க (அறியதார்‌) ஜந்மாதிகளால்‌ வந்த அஹங்காரத்தாலே மந்த மதிகளாய்க் கொண்டு அவர்கள் வைபவத்தை அறியாதே ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ (சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌) ‘அமரவோரங்கமாறும்‌”’ (திருமாலை 43) என்கிற பாட்டின் படியே ““அநாசாராந்‌ துராசாராந் அஜ்ஞாத்ரூதந் ஹீந ஜந்மந? । மத்‌ பக்தாந்‌ ஸ்ரோத்ரியோ நிந்தந்‌ ஸத்‌யஸ் சண்டாளதாம்‌ வ்ரஜேத்‌”” என்றும்‌ சொல்லுகிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மத்திலே பிறந்து அங்க ஸஹிதமான நாலு வேதங்களையும்‌ அதிகரித்து பகவத்‌ பக்தரா யிருந்தார்களே யாகிலும்‌ ஜந்மாதிகளால்‌ குறைய நின்று பகவதீயரா யிருப்பாருடைய ஜந்மத்தை காதா சித்கமாக வாகிலும்‌ நிரூபித்‌தார்களாகில்‌ அந் நிலையிலே அவர்கள்‌ சண்டாளராவர்‌ என்கையாலே பின்னை ஒரு காலும்‌ உஜ்ஜிவந மில்லாதபடி அத, பதிப்பர்க ளென்கிறார்‌. “ஸூத்‌ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ நிஷாதம்‌ ஸ்வபசம்‌ ததா | ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத்‌ ஸ யாதி நரகம்‌ நர- என்றும்‌, “ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம்‌ நைஷாம்‌ சிந்த்யம்‌ குலாதிகம்‌” என்றும்‌ சொல்லா நின்றதிறே –

91-தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே க்வசித்‌ க்வசித்‌ என்று இவராவிர்பாவம்‌ கலியும்‌ கெடும் போலே ஸூசிதம்‌.
இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம்‌ வ்யாஸ ஸூகாதி களாலும்‌ ப்ரகாஸிப்பிக்கப்‌ பட்ட தென்கிறார்‌ மேல்‌. (தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே) “வண்டமிழ்‌ மாமுனி”’ (பெருமா.தி. 10 – 5) தக்ஷிணாதிக்‌ க்ருதா யேந ஸரண்யா புண்ய கர்மணா”’ (குருகா மாஹாத்ம்யம்‌) என்று த்ராவிட ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யன்‌ நின்ற திக்கு ஸர்வர்க்கும்‌ புகலிடம்‌ என்ற வ்யாஸ ஸூகாதிகளாலே (க்வசித்‌ க்வசித்‌ என்று இவர்‌ ஆவிர்பாவம்‌) *’கலெள கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் கவசிந் மஹா பாகா த்‌ராவிடேஷு ச பூயாஸ ? தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ । காவேரி ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹாநதீ, । யே பிபந்தி ஜலம்‌ தாஸாம்‌ மநுஜா மநுஜேஸ்வர ! தேஷாம்‌ நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்‌ரவா”’ (வி.பு.) என்றும்‌,
“க்ரூரே கலியுகே, ப்ராப்தே நாஸ்திகைச கலுஷீக்ருதே ॥ விஷ்ணோரம்ஸாம் ஸ ஸம்பூதோ வேத வேதார்த்த ஸாரவித்‌ | ஸ்தோத்ரம்‌ வேத மயம்‌ கர்த்தும்‌ த்‌ராவிட்‌யா ஸ ச பாஷயா ஜநிஷ்யதி ஸதாம்‌ ஸ்ரேஷ்டோ லோகாநாம்‌ ஹித காம்யயா ! கஸ்சிந் மநுஷ்ய ரூபேண க்ருபயா தத்ர வை முநி? । ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம்‌ பரமாத்மநா அத்‌ யேதவ்யம்‌ த்‌விஜஸ் ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ ! ஸ்த்ரீபிஸ் , ஸூத்‌ரா திபிஸ் சைவ தேஷாம்‌ முக்தி? கரே ஸ்திதா’” (குருகாமா.) என்றும்‌, ““கலெள புந பாபரதாபி பூதே ஸ உத்‌ பபூ வாஸ்ரித வத்ஸலத்வாத்‌ ! பக்தாத்மநா ஸர்வ ஜநாந்‌ ஸு கோப்தும்‌ விஸ்வாதி கோ விஸ்வ மயோ ஹி விஷ்ணு?” என்றும்‌ இவ் வாழ்வாருடைய ஆவிர்பாவம்‌ கர்ம மூலமன்றிக்கே பகவதவதாரம் போலே ஜகத்‌ ரக்ஷணார்த்தமாக பகவதிச்சையாலே உண்டான தாகையாலே ஆவிர்பாவம்‌ என்கிறது –அந்த ஆவிர்பாவம் ““கலியும்‌ கெடும்‌”” (திருவா. 5 – 2 – 1) என்று இவர் தாம்‌ திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ வந்துதித்து கலியுக, ஸ்வபாவம்‌ கெடும்‌ என்று அருளிச் செய்தாப் போலே அவர்களாலே ஸசிப்பிக்கப்பட்ட தென்கிறார் –

92–அத்ரி-ஜமதக்‌நி-பங்க்திரத,-வஸு-நந்த, ஸூநுவானவனுடைய யுக,-வர்ண-க்ரமாவதாரமோ? வ்யாஸாதி வத் ஆவேஸமோ? மூதுவர்‌ கரை கண்டோர்‌ சீரியரிலே ஒருவரோ? முன்னம்‌ நோற்ற அனந்தன் மேல்‌ புண்ணியங்கள்‌ ப,லித்தவரோ? என்று ஸங்கிப்பர்கள்‌,
இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில்‌ ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்‌தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்‌ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள்‌ என்கிறார்‌ (அத்ரி ஐமதக்‌நி என்று தொடங்கி ) க்ருத யுகத்திலே அத்ரி ஜமதக்‌நிகள் பக்கலிலே தத்தாத்ரேயராயும்‌, பரஸூராமனாயும்‌-த்ரேதா யுகத்திலே ஷத்ரியனான தஸரத சக்ரவர்த்தி பக்கலிலே வந்தவதரித்தும்‌-த்‌வாபர- யுகத்திலே க்ஷத்ரியரில்‌ தண்ணியராகையாலே வைஸ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும்‌, ‘“க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம்‌ வைஸ்யம்‌ கர்ம ஸ்வபாவஜம்‌” (கீ. 18 – 44) என்று கோ ரக்ஷண தர்மத்தை உடையராகையாலே வைஸ்யரான ஸ்ரீநந்தகோபர்க்குப்‌ புத்ரராயும்‌, யுக க்ரமத்திலும்‌ அடைவே வர்ண த்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஸ்வரன்‌ கலியுகத்திலே நாலாம்‌ வர்ணத்திலே ஆழ்வாராய்த்‌ திருவவதரித்தானோ என்றும்‌,
““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்தி, நாராயணம்‌ ப்ரபும்‌” (விபு. 3 – 4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதிகள் போல்‌ வந்தவதரித்தானோ ? என்றும்‌, ”கரை கண்டோர்‌”” (திருவா. 8 – 3 – 10)என்று ஸம்ஸாரத்தைக்‌ கரை கண்ட முக்தரிலே ஒருவர்‌ அப்படியே அவதரித்தாரோ? ““பாம்பணை மேல்‌ பன்ளி கொண்டருளும்‌ சீதனையே தொழுவார்‌ விண்ணுளாரிலும்‌ சீரியரே” (திருவிரு. 79) என்றும்‌, .““முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதச்ச்‌ வேத த்‌வீப நிவாஸிநாம்‌?” (பர. ரா. 337 – 40) என்றும்‌ நித்ய முக்தரோடொக்கச்‌ சொல்லலாம்படி இருக்கிற பவேதத்‌,வீபவாஸிகளான ஸித்‌தரிலே ஒருவரோ? “முன்னம்‌ நோற்ற விதி கொலோ” (திருவா. 6 – 5 – 7) என்கிற படியே ஜந்மாந்தர ஸஞ்சிதமான தம்முடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? “அனந்தன்‌ மேல்‌ கிடந்த வெம் புண்ணியா?” (திருச்ச. 45) என்று அநந்தஸாயியான ஸர்வேஸ்வரனுடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? என்று சங்கிப்பர்கள்‌ என்கிறார் –

93-இதுக்கு மூலம்‌ – யான்‌ நீ என்று மறுதலைத்து வானத்து மண் மிசை மாறும்‌ நிகருமின்றி நிலயிடம்‌ தெரியாதே தெய்வத்தினம்‌ ஒரு வகைக் கொப்பாக இனத் தலைவன்‌ அந்தாமத்தன்பு செய்ய, சேர்ந்தமைக் கடையாளம்‌ உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழித்து ஸடரை யோட்டி மதாவலிப்தர்க்கு அங்கு மிட்டு நடாவிய கூற்றமாய்‌, தீயன மருங்கு வாராமல்‌ கலி யுகம்‌ நீங்கிக்‌ கித யுகம்‌ பற்றிப்‌ பட்டெழுபோதறி யாதிருந்த ப்ரபாவம்‌.
இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில்‌, இவருடைய ப்ரபாவம்‌ கண்டு என்கிறார்‌ மேல்‌. (இதுக்கு மூலம்‌) இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது. (யான்‌ நீ என்று மறுதலைத்து) “’புவியும்‌ இரு விசும்பும்‌ நின்னகத்த, நீ என்‌ செவியின்‌ வழி புகுந்தென்னுள்ளாய்‌, அவிவின்றி யான்‌ பெரியன்‌ நீ பெரியை என்பதனை யாரறிவார்‌, ஊன் பருகு நேமியாய்‌ உள்ளு”” (பெரிய திரு. 75) என்று – உபய விபூ,தியையும்‌ உன்‌ ஸங்கல்பைக தேஸத்திலே வைத்து என்‌ ஸ்ரவண த்‌வாரா நெஞ்சிலே புகுந்து விச்சேதமின்றியிலே நித்ய வாஸம்‌ பண்ணா நின்ற பின்பு, நானோ, நீயோ பெரியாய்‌? ஆரென்று ஸர்வாதிகனான நீயே விசாரி – என்று ஸர்வேஸ்வரனோடே விகல்பிக்கலாம் படியாய்‌,(வானத்து மண்மிசை மாறும்‌ நிகருமின்றி) ““இனி யாவர்‌ நிகரகல் வானத்தே’” (திருவா. 4 5 – 8) என்றும்‌, ““மாறுளதோ இம் மண்ணின் மிசையே”’ (திருவா. 6 – 4 – 9) என்றும்‌ ‘ உபய விபூதி யிலும்‌ எனக்கு ஸத்‌ருஸருண்டோ என்னும்படி த தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையராய்‌ (நிலையிடம்‌ தெரியாதே) ““வைகுந்தமோ வையமோ நும்‌ நிலையிடம்‌”” (திருவிரு -75) என்று – இந்த விபூதிஸ்தரோ? நித்யவிபூதிஸ்தரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உபய விபூ,தியிலும்‌ வ்யாவ்ருத்தராய்‌,
(தெய்வத்தினம்‌ ஒருவகைக் கொப்டாக) “*தெய்வத்தினமோரனையீர்களாய்‌” (திருவிரு. 23) என்று நித்யஸூரிகளெல்லாரும்‌ கூடினாலும்‌ தம்முடைய ஒருவகைக் கொப்பாக உடையராய்‌, (இனத் தலைவன்‌ இத்யாதி,) ”வானோரினத் தலைவன்‌”’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரி ஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்‌, ““அந்தாமத்தன்பு செய்து”‘ (திருவா. 2 – 5 – 1) என்று விலக்ஷணமான பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண-(சேர்ந்தமைக் கடையாளமுளவாக) “திருவருள்களும்‌ சேர்ந்தமைக் கடையாளம்‌ திருந்தவுள”’ (திருவா. 8 – 9 – 6) என்று ஸர்வேஸ்வரனுடைய க்ருபையாலே விஷயீ க்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்சநமான ராகத்தை வாய்க் கரையிலே உடையராய்‌ கேவலம்‌ வாய்க் கரையில்‌ ராக மாத்ர மன்றிக்கே “‘உகந்துகந்துள் மகிழ்ந்து குழையுமே”’ (திருவா. 6 – 5 – 4) என்று பாஹ்யாப் யந்தர ஹர்ஷத்தாலே ஸிதிலராய்‌, “’திமிர கொண்டாலொத்து நிற்கும்‌ ”” (திருவா. 6 – 52) என்று அநுஸந்தா நத்தாலுண்டான ஆதராதிஸயத்தாலே ““ஸ்தப்‌தோஸ்யுத தமாதேஸம ப்ராக்ஷ்ய?”” (சா. 6 – 1 – 3) என்று ஸர்வ நியாமகமான ப்‌ரஹ்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரம்‌ பிறந்தாரைப் போலே ஸ்திமிதராய்‌,(நாட்டியல்வொழிந்து) ““நாட்டாரோடியல் வொழிந்து”‘ (திருவா. 10 – 6 – 2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்கத்தை விட்டு (ஸடரையோட்டி) ஸட கோபராகையாலே ப்ரமாணாநு குணமாக தர்க்கம்‌ சொல்லுகை யன்றிக்கே ஸ்வ மநீஷையாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு, ஷூஷ்க தர்க்கங்களாலே அர்த்த ஸ்தாபநம்‌ பண்ண விருக்கிற ஸடரைத்‌ தம்முடைய உக்தி ஸ்ரவண மாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதாநத்தில்‌ நில்லாதபடி பண்ணி,

(மதா வலிப்தர்க்கு அங்குஸ மிட்டு) பராங்குஸ ராகையாலே ‘வித்‌யா மதோ தந மத,ஸ்‌த்ருதியோபி ஜநோ மத, | ஏதே மதா வலிப்தாநாம்‌ ஏத ஏவ ஸதாம்‌ தம?”’ என்று அபிஜந வித்‌யா வ்ருத்தங்களாகிற மத,த்ரயங்களினாலே தூஷிதரா யிருக்கிறவர்களை ஸ்வோக்தி ரூபமான அங்குஸங்களாலே நிர்மதராம்படி பண்ணி, (நடாவிய கூற்றமாய்‌) “பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றங் கண்டீர்‌”” (திருவிரு. 6) என்று வேத, வேத்‌யத்வ ஸூசகமான கரூட வாஹநனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே, “நின்‌ கண்‌ வேட்கை எழுவிப்பனே”” (திருவிரு. 96) என்கிறபடியே எல்லார்க்கும்‌ பக்தியை உண்டாக்கி நடத்துமவராய்‌ கூற்றம்‌ என்கையாலே தம்முடைய தர்ஸநஸ்தருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஸகரராய்‌. (தீயன மருங்கு வாராமல்‌) **கொன்றுயிருண்‌ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌”’ (திருவா. 5 – 2 – 6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான ஆதி வ்யாதி ரூபமான தோஷங்களும்‌ “வானே மறி கடலோ”’ (பெரியதிரு. 54) இத்யாதி,ப்படி ஸாம்ஸாரிக து,:க ஹேதுவான பாபங்‌களும்‌ பார்ஸ்வத்திலும்‌ வாராதபடியாய்‌,
(கலியுகம்‌ நீங்கிக்‌ கிதயுகம்‌ பற்றி) “திரியும்‌ கலியுகம்‌ நீங்கி!” (திருவா. 5 – 2 – 9) என்று ‘“பவிஷ்யத்யத ரோத்தரம்‌”‘ (பார.சா .மோ) என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள்‌ வேறுபட்டு வருகிற கவியுக தோஷமும்‌ நீங்கி, ““பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக) (திருவா. 5 – 2 – 3) என்று ஆதி க்ருத யுகத்தை யொக்க மஹத்தான ஆநந்த ஸாகரம்‌ அபி வ்ருத்‌தமாக, “பட்ட போதெழு போதறியாள்‌ விரை மட்டலர்‌ தண்டுழா யென்னும்‌”‘ (திருவா. 2 – 4 – 9) என்று பகவத்‌ விஷயத்தில்‌ போக்‌யதாநுஸந்தாநத்தாலே “‘தந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் யஸ்தமிதே ரவெள”’ என்றும்‌, ‘ப்ராதர் மூத்ர புரீஷாப்‌,யாம்‌ மத்‌யாஹ்நே ஷூத் பிபாஸயா । ஸாயம்‌ காமேந படத்‌யந்தே ஜந்தவோ நிமி நித்‌ரயா” என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப்‌ புறம்பே கால க்ஷேப ஹேதுவான திவா ராத்ர விபாக மறியாதே அகால கால்யமான தேஸ விஸேஷத்திற்‌ போலே பகவதநுபவைக பரராய்ப்‌ போந்த இவருடைய ப்ரபாவம்‌ கீழ்‌ அப்படி சங்கிக்கைக்கு ஹேது என்கிறார்-

94-இதுக்கு ஹேது – ஊழி தோறும்‌ சோம்பாது ஒன்றிப்‌ பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன்‌ உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக்‌ கழறலர் ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங் கண்‌ எங்குமிலக்கற்று அன்பொடு தோக்கான திசையிலே ஆக்கையில்‌ புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர்‌ மேலே படப்‌ பக்க நோக்கறப் பண்ணின விஸேஷ கடாக்ஷம்‌.

இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என்‌ என்னில்‌, ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன்‌ ஸஜாதீயரைக்‌ கொண்டு இவர்களைத்‌ திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில்‌ கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்‌யஸ்தரான இவர்‌ பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார்‌ (இதுக்கு ஹேது ஊழி தோறும்‌ என்று தொடங்கி). இதுக்கு ஹேது – கீழ்‌ ப்ரஸ்துதமான ப்ரபாவத்துக்கு ஹேது.
ஊழி தோறும்‌. தன்னுள்ளே படைத்துக்‌ காத்துக்‌ கெடுத்துழலும்‌”’ (திருவா. 10 – 7-9) என்றும்‌, ”சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம்‌ படர்வித்த வித்தா”” (பெரியதிரு. 18) என்றும்‌, ”ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌”” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌, ‘“பொருளென்றிவ் வுலகம்‌ படைத்தவன்‌”’ (திருவா. 2 – 10 – 11) என்றும்‌, அளிமகிழ்ந்துலக மெல்லாம்‌ படைத்தவை” (திருவா. 3 – 4 – 8) என்றும்‌ சொல்லுகிறபடியே கர்ஷகனானவன்‌ ஒரு போகம்‌ பதறி(ரி)ற்றென்னா, கை வாங்காதே மேலே மேலே க்ருஷி பண்ணுமாப் போலே கல்பந் தோறும்‌ ஸ்ருஷ்டிக்கச் செய்தேயும்‌, அது ஸபலமாகாதிருக்‌கச் செய்தேயும்‌, பின்னையும்‌ முசியாதே ப்ரயோஜநமாம்‌, ப்ரயோஜநமாம்‌ என்று திருவுள்ளத்தில்‌ க்ருபையாலே வந்த உகப்போடே அடுத்தடுத்து ஸ்ருஷடித்து,
(முற்றுமாய் நின்று) ““தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிஸத்‌”’ (தை. 2 – 6 – 1) என்கிறபடியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே அவற்றினுடைய வஸ்துத்வ-நாம பாக்த்வங்களுக்காக அவற்றைச்‌ சொல்லுகிற ஸப்‌தங்கள்‌ தன்னளவிலே பர்யவஸிக்கும்படி வ்யாப்தனாய்க்‌ கொண்டு ப்ரகாரியாய்‌ நின்று, “‘அன்னமதா யிருந்தங்கற நூலுரைத்த ‘” (திருமொழி 11 – 4 – 8) என்கிறபடியே ஸாராஸார விவேகோந்முகமான ஹம்ஸ ரூபியாய்க் கொண்டு ஸாஸ்த்ர ப்ரதராநத்தைப் பண்ண (யோகு புணர்ந்து) ““தன் கோலச் செந்தாமரைக் கண்‌ உறைபவன்‌ போலவோர்‌ யோகுபுணர்ந்த ஓளிமணிவண்ணன்‌”’(திருவா. 3 – 10 – 2) என்று க்ஷீராப்தியில்‌ யோக நித்‌ரா வ்யாஜத்தாலே சேதநருடைய ரக்ஷண உபாயசிந்தை பண்ணி,
சிந்தா ஸமநந்தரம்‌ தோற்றின உபாயாநுகு, ணமாக (கண் காண வந்து) “துயரில்‌ மலியும்‌ மனிசர் பிறவியில்‌ தோன்றிக் கண் காண வந்து”’ (திருவா. 3 – 10 – 6) என்கிறபடியே ”ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம்‌”, “ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம்‌””, “என்றேனும்‌ கட்கண்ணால்‌ காணாத அவ்வுரு” (பெரியதிரு. 28) என்றும்‌ சொல்லுகிற தான்‌ துக்க பஹுளரான மநுஷ்யரோடே ஸஜாதீயராய்க் கொண்டு வந்து பிறந்து அவர்களுடைய மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷய பூ,தனாய்‌, “‘ஆள்பார்த்துழிதருவாய்‌”? (பெரியதிரு. 60) என்று அப்ராக்ருத விக்‌ரஹ விஸிஷ்டனாய்‌, நிரங்குசா ஸ்வதந்த்ரனாய்‌, நிரபேக்ஷனான தான்‌ உற்றாரா யிருப்பார்‌ உருமாறி நின்று ஆராயுமாப் போலே *தமருகந்த இத்யாதிப்படியே அர்ச்சகர்‌ உகந்த திரவ்யத்தைத்‌ திருமேனியாகக்‌ கொண்டு அவர்களுக்கு அத்யந்த பரதந்த்ரனாய்‌, அவர்களிடுகிற பத்ர புஷ்பாதிகளிலே ஸா பேக்ஷனாய்க் கொண்டு கோயில்‌களிலேயும்‌, க்‌ருஹங்களிலேயும்‌ நின்றருளி நம்முடைய விஷயீகாரத்துக் காளாவார்‌ ஆர்‌ என்று ஆள் பார்க்கிறவன்‌.
(உலகினதியல்வை நல்வீடுசெய்ய) “ஓ ஓ உலகினதியல்வே”’ (திருவாசிரி. 6) என்கிற படியே ஸர்வ ப்ரகார ரக்ஷகனான தன்னை விட்டு ஷூத்‌ர தே,வதைகளை பர ஹிம்ஸாதி ஸாதந முகத்தாலே வலித்து, ஷூத்‌ர ப்ரயோஜநங்களைப்‌ பெற்று அவற்றை அநுபவிக்‌கைக்காக தேவாதி சரீர ப்ரவேஸம்‌ பண்ணி, ஆஸ்சர்ய பூதையான ப்ரக்ருதி வஸ்யரான ஸம்ஸாரி சேதநர் ஸ்வபாவத்தை “யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதத்தை நல் வீடு செய்யும்‌”” (திருவிரு. 95) என்று ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்‌ ஏதேனுமொன்றைப்‌ பற்றத் தன்னை விட்டு நீங்குகையே ஸ்வபாவமான விரதத்தை ஸவாஸநமாகப்‌ போக்குகைக்காக,
(இணக்குப் பார்வை தேடி) ஸஜாதீய புத்‌தியாலே தன்னோடு இணக்க வற்றான பார்வை மானை வைத்து ம்ருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டு திருத்த வேணும்‌ என்று பார்த்து, அதுக்காளாவார்‌ ஆரோ என்று தேடி, (கழறலர்‌ ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங்கண்‌) ““கழறலம்‌” (திருவிரு. 58) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற படியே ஜகத்திலே வ்யாப்தமான ஜ்ஞாநத்தையும்‌ அதிக்ரமித்து, ”மண்முழுது மகப்படுத்து நின்ற””, ”மேலைத் தண்மதியும்‌ கதிரவனும்‌ தவிரவோடி”’ (திருநெடு. 5) என்று ஸகல லோகங்களையும்‌ ஆக்ரமிக்கும்படி வ்யாபிக்கப் பெற்ற திருவடிகளிலும்‌ முற்பட்ட ்‌அழறலர் தாமரைக் கண்ணன்‌ ” (திருவிரு. 58) என்றும்‌, ““பெருங் கேழலார்‌ தம் பெருங்‌கண் மலர்ப் புண்டரீகம்‌”” (திருவிரு. 45) என்கிற திருக் கண்களானவை, (எங்குமிலக்கற்று) விஷயீகாரத்துக்கு அநுகுணமான நன்மை சேதநர் பக்கல்‌ காணாமையாலே எங்கும்‌ இலக்கற்று,
(அன்பொடு நோக்கான திசையிலே) *’அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளி கொள்ளும்‌”’ (பெகுமா.தி. 1 – 10) என்கிறபடியே இவர்கள் பக்கல்‌ நன்மை பெறாத வளவிலும்‌ இவர்கள் பக்கல்‌ தனக்குண்டான சாபலத்தாலே ஸ ஸ்நேஹமாக கடாஷித்த திசையிலே, (ஆக்கையில்‌ புக்கு) ”யாதானு மோராக்கையில்‌ புக்கு”’ (திருவிரு. 95) என்றும்‌, ““ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌”’ (திருவா. 3 – 2 – 1) என்றும்‌, “மாறி மாறிப்‌ பல பிறப்பும்‌ பிறந்து (திருவா. 2 – 6 – 8) என்றும்‌, “’பன் மா மாயப் பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவா. 3 – 2 – 2) என்றும்‌, ““பிறவிக் கடலுள்‌ நின்று நான்‌ துளங்க”” (திருவா. 5 – 1 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவாதி சரீரங்களிலே புக்கு“தேவோஹம்‌ மநுஷ்யோஹம்‌’ என்கிறபடியே அவற்றிலே பக்‌தராய்‌, அவற்றின்‌ வழியே போய்‌ தத் பலமான ஜந்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவற்றிலே அவகாஹித்துத்‌ தரை காண ஓண்ணாத ஸம்ஸார ஸமுத்‌ர மத்‌யஸ்தராய்க் கொண்டு நடுங்குகிற இவர் மேலே படும்படி,
“எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”’ (திருவா, 2 – 6 – 2) என்கிறபடியே நாச்சிமார் வந்து திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்‌ புரிந்து பாராதே ““நாஸெள புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா | கேவலம்‌ ஸ்வேச்ச யைவாஹம்‌ ப்ரேஷே கஞ்சித்‌ கதாசந”” (பாஞ்ச.), ““நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே ! ஆசார்ய விஷயீகாராத்‌ ப்ராப்நுவந்தி பராங்கதிம்‌”” (பாஞ்ச.) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப்‌ பண்ணப்பட்ட விஸேஷ கடாஷம்‌ என்கிறார்‌
ஆக இத்தால்‌ கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம்‌ என்றதாய்த்து.

95-ஸ்ரமணீ-விது,ர-ருஷிபத்நிகளைப்‌ பூதராக்கின புண்ட,ரீகாக்ஷ்ன நெடுநோக்கு சாபமிழிந்தென்னப்பண்ணுமிறே.

நித்ய ஸம்ஸாரியாய்ப்‌ போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும்‌ போய்‌ இந்த ப்ரபாவமெல்லாம்‌ உண்டாகக் கூடுமோ என்னில்‌; ஸபரி முதலானாரை பரி ஸூத்‌,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம்‌ அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும்‌ நஸிப்பிக்குமிறே என்கிறார்‌ (ஸ்ரமணிவிது,ர என்று தொடங்கி). (ஸ்ரமணிவிது,ர) ““ஸ்ரமணிம்‌ த.ர்ம நிபுணாம்‌”’ (ரா. ஆ. 1 – 56) என்கிறபடியே வேடுவிச்சியாயிருக்கிற ஸபரியை *சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு,தந்த,ந । பாத,மூலம்‌ க,மிஷ்யாமி யாநஹம்‌ பர்யசாரிஷம்‌”‘ (ரா. ஆ. 74 – 12) என்று அவள்தானே “தேவரீருடைய அழகிய கடாக்ஷத்தினாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிப,ந்த,கங்களெல்லாம்‌ நிங்பேஷமாகப்‌ போகையாலே பரிஸுத்‌,தை,யானேன்‌’ என்று சொல்லும்படி பண்ணியும்‌,

ஸ்ரீவிது,ரரை ‘“பீ,ஷ்மத்‌,ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது,ஸூ௫த.ந । கிமர்த்த_ம்‌ புண்ட,ரீகாக்ஷ பு,க்தம்‌ வ்ருஷலபே,ஜநம்‌”” (பார. உத்‌.) என்று எதிரியானவன்‌ சீறிச்‌ சொல்லா நிற்கச் செய்தேயும்‌ ”புண்ட,ரீகாக்ஷ”” என்னும்படியான திருக்கண்களாலே அவரை பரிஸூத்‌,த, ராம்படி பண்ணியும்‌,

(ருஷி பத்நிகளை) “*வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்‌” (நா. திரு. 12 – 6) என்கிறபடியே தன்னுடைய நெடு நோக்காலே ப,க்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகளிலே ஒருத்தியை “கத்ரைகா வித்‌,ருதா ப,ர்த்ரா ப,க,வந்தம்‌ ய தாஸ்ருதம்‌ । ஹ்ருதேரபகூ,ஹ்ய விஜஹெள தேஹம்‌ கர்மநிப,ந்த,நம்‌”” (ப,ாக,. 10 – 28 – 34) என்று தன் பக்கல்‌ ப்ராவண்யத்தாலே-அப்போதே முக்தையாம்படிபண்ணியும்‌, அதிலே சிலர்‌ தன்னை அதுப,விக்கும்படியாகவும்‌ பண்ணின விஷோேஷ கடாக்ஷமானது, (சாபமிழிந்தென்னப் பண்ணுமிறே) “திங்களு மாதித்தியனுமெழுந்தாற் போல்‌ அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல்‌ நோக்குதியேல்‌ எங்கள்மேல்‌ சாபமிழிந்து ”” (திருப்பாவை 22) என்கிறபடியே ஆஹ்லாத,கரத்வத்தையும்‌, அதிப்ரகாஸகத்வத்தையும்‌ உடைத்தாகையாலே சற்த்‌.ராதி.த்யர்களிருவரும்‌ உதித்தாற்போலேஇருக்கிற அழகிய திருக்கண்களாலே எங்களைப்‌ பார்த்தருளினாயாகில்‌ ஸசாபோபஹதரைப்போலே, அநுப,வித்தல்லது நமமியாத ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும்‌ நிவ்ருத்தமாம்‌ என்று சொல்லும்படி ஸகல பாபக்ஷபணத்தில்‌ நிபுணங்களாயிறே இருப்பது என்கிறார்-

96-கோவ்ருத்‌திக்கு நெரிஞ்சியைப்‌ புல்லாக்கினவன்‌ ஐகத்‌திதார்ததமாக “எனக்கே நல்லவருள்கள்‌” என்னும்படி ஸர்வ ஸெளஹார்த்த,ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க, லோகமாகத்‌ தம்மைப் போலாக்கும்படி யானார்‌.

ஸர்வேஸ்வரன்‌ இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம்‌ என்‌ என்னில்‌, லோக ஹிதார்த்தமாக என்கிறார்‌ (கோவ்ருத்‌திக்கு நெரிஞ்சியைப்‌ புல்லாக்‌கினவன்‌ என்று தொடங்கி). “*திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி” (திருவா, 10 – 3 10) என்று ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத கோ ரக்ஷணத்திலே திருவுள்ளம்‌ உகந்திருக்கையாலே அவற்றினுடைய அபிவ்ருத்‌திக்காக “ப்‌ருந்தாவநம்‌ பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்ட கர்மணா ! றாபே,ந மநஸாத்‌,யாதம்‌ கவாம்‌ வருத்‌தி மபிப்ஸதா”’ (வி.பு. 5 – 6 – 28) என்று நெரிஞ்சிக் காட்டை பர ஸம்ருத்‌த்‌யேக ப்ரயோஜநமாகத்‌ திருவுள்ளத்தாலே **உத்பந்நநவபாஷ்பாட்‌யம்‌”’ (வி.பு. 5 – 6 – 37) என்கிறபடியே அவற்றுக்கு போக்‌யமாக ஸங்கல்பித்தவன்‌. “நமோ ப்‌ரஹ்மண்யதே வாய கேரா ப்‌ராஹ்மண ஹிதாய ச ।ஜகத்‌தி தாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம?” (பாரதம்‌) என்று பசுக்களினுடைய ரக்ஷணத்தோபாதி ஜகத்தினுடைய ரக்ஷ்ணத்துக்குக்‌ கடவன்‌ அவனாகையாலே அந்த ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக.

(எனக்கே நல்ல வருள்கள்‌ என்னும்படி) ‘எதிர்சூழல் புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – எம்மான்‌ திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது”‘ (திருவா. 2 – 7-6) என்று – அநேக ஜந்மங்கள்‌ நான்‌ பிறந்த ஐந்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து என்னை விஷயீகரிக்ரும்படி ஸர்வேஸ்வரனை க்ருபை கால் கட்டிற்று என்றும்‌, ‘நல்ல வருள்கள்‌ நமக்கே உகந்தருள் செய்வான்‌’” (திருவா. §-6- 1) என்றும்‌ தன் பேறாக க்ருபை பண்ண!], “பிராட்டி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானார்க்குக்‌ கூறுகொடாதே எனக்கும்‌ என்னோடு ஸம்பந்தமுடையார்க்கும்‌ தருகிறவன்‌” என்று இவர்‌ பெறும்படி.

(ஸர்வ ஸெளஹார்த்த, ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து) “ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ .ஸாந்திம்ருச்சதி‘” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூதங்கள்‌ பக்கலிலும்‌ நடக்கிற தன்னுடைய ஸெளஹார்த்தத் தாலுண்டான ப்ரஸாதத்தை-இவரொருவர் பக்கலிலே ஒரு மடைப் படச்‌ செய்து விஷயீகரித்து. (இவரைத் தன்னாக்க) ““என்னைத் தன்னாக்கி”” (திருவா. 7 – 9 – 1) என்கிறபடியே இவரைத்‌ தன்னோடொத்த ஜ்ஞாந பக்திகளை உடையராகவும்‌, அநந்யார்ஹ ஸேஷபூதராகவும்‌ பண்ண- அவனாலே விஷயீ க்ருதரான இவரும்‌ லோகமாகத்‌ தம்மைப் போலே ஆக்கும்படி ஆனார்‌. “ஊரும்‌ நாடுமுலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவா. 6 – 6 – 2) என்கிறபடியே தாம்‌ அவதரித்த திருநகரி, அத்தோடே சேர்ந்த திருவழுதிவளநாடு, அத்தோடே சேர்ந்த பூ, லோகம்‌, அவற்றிலுள்ளாரடையத்‌ தம்மைப் போலே பகவதநுபவைக பரராகப்‌ பண்ணும்படி ஆனார்‌ என்கிறார்‌.

97-அதாவது மயர்வற மதிநலமருளுகை.

(அதாவது மயர்வறமதிநலமருளுகை) அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான்‌ “*மயர்வறமதிநலமருளினன்‌” என்று தாமே அருளிச்‌ செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாதத்தைத்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே கொடுக்கை

98-இருள்‌ துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய-ஸம்மய-விபர்யய-விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக்‌ காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌ ஸங்க-காம-அநுராக,ஸ்நேஹாத்‌,யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தஸை யாக்குகை.

அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்கையாவது – பகவஜ்‌ ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம்‌ போய்‌ ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸு அவித்‌யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய்‌, தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்‌.

(இருள்‌ துயக்கு மயக்கு மறப்பென்கிற) ”இருளார்‌ வினை கெட”‘ (திருவிரு. 33), துயக்கின்றித் தொழுதுரைத்த’” (திருவா. 3 – 1 – 11), “மயக்குடை மாயைகள்‌” (திருவா. 1 – 3 – 10), “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌”” (திருவா. 1 – 10 – 10) என்கிற ஜ்ஞாநாநுதயமென்ன, ‘ஸ்தாணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதாவாக க்‌ரஹிக்க வொட்டாதிருக்கிற ஸம்மயமென்ன, ரஜ்ஜுவில்‌ ஸர்ப்ப புத்‌தியும்‌, ஸ்தாணுவில்‌ புருஷ புத்‌தியும் போலே வஸ்துவை விபரீதமாக க்‌ரஹிக்கை யாகிற விபர்யயமென்ன, அநுபூத விஷய ஜ்ஞாந திரோதாந ரூபமான விஸ்ம்ருதி யென்ன, இப்படிச் சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.

(மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) “’மனனகமலமற மலர்மிசை எழுதரும்‌” (திருவா, 1 1 – 2) என்று ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸைப்‌ பற்றிக்‌ கிடக்கிற “’காம ச க்ரோதஸ் ச லோப,ய்ச ஹர்ஷோ மாநோ மதோ க்‌ரூணா । விஷாதஸ்சாஷ்டம? ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா?” என்று சொல்லப்படுகிற காம க்ரோதாதி ரூபமாய்‌ அஷ்டவிதமான மல நிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌) ““நொந்தாராக் காதல்‌’” (திருவா. 2 – 1 – 9) என்றும்‌, ‘“ஆரா வன்பு”’ (திருவா. 6 – 10- 2) என்றும்‌, “பெருகு மால் வேட்கை” (திருவா. 9 – 6 – 1) என்றும்‌, “அதனில்‌ பெரிய என்னவா?” (திருவா. 10 – 10 – 10) என்றும்‌ சொல்லப்படுகிற – வஸ்து தர்ஸநத்திலே ப்ரதம பாவியாய்‌, ஸ்நேஹாங்குரரூபமான ஸங்கமென்ன, ‘“ஸங்காத் ஸஞ்ஜாயதே காம?” (கீதை 2 – 62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன; அதினுடைய அவிச்சேத,ரூபமான அநுராகமென்ன, அநந்தரம்‌ அவ் வஸ்துவை அநுபவித்தல்லது நிற்க வொண்ணாத அபி நிவேஸ ரூபமான ஸ்நேஹமென்ன, இவை தொடக்கமான இப்படி அவஸ்தராநுரூுபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு பரம பக்தி பர்யந்தமாக அபி,வ்ருத்‌தமாம்படி பண்ணுகை என்கிறார்‌. ஆக- இதுக்குக்‌ கீழ்‌, பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க்‌ கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம்‌ பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்‌தமான படி சொல்லிற்று

99-ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்‌யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌, குளித்து ஓதி உருவெண்ணும்‌ அந்தி, ஐ வேள்வி அறு தொழில்களால்‌ மிக்கு, ஊன்‌ வாடப்‌ பொருப்பிடைத்‌ தாம்‌ வருந்தி, துன்ப வினைகளை விடுத்து, விவேகமாமாதிகள்‌ வளர, எட்டு நீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப் பூவில்‌ சாந்தொடு தேவ- காரியம்‌ செய்து உள்ளம்‌ தூயராய்‌, வாரிப் புன்புலவகத்தினுள்‌ இளைப்பினை அடைவே விளக்கினைக்‌ கண்டு, யோக நீதி நண்ணி, அறந்திகழுமறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெரும்‌ சுடரை *கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம்‌ மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய்‌, கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌, ஆகத்துப் புல்கும்‌ அத்யர்த்த,ப்ரியமாய்‌, வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவல்‌ என்னாதே அநந்ய ப்ரயோஜநமாய்‌, வேதந-உபாஸந- ஸேவா-த்‌யாநாதிகள்‌ என்று சொல்லுமது ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌,த,ம்‌.

இனிமேல்‌ இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையாய்‌, உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்‌த,ஸாதந பரிக்‌ரஹம் பண்ணினவர்கள்‌ கைங்கர்‌யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்‌; உபயமுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்‌.

(ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “’ஜந்மாந்தர ஸஹஸ்‌ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி,ச | நராணாம்‌ க்ஷீண பாபாதாம்‌ க்ருஷ்ணே பக்தி? ப்ரஜாயதே“‘ (லக்‌வத்ரி ஸ்ம்ருதெள) என்றும்‌, ‘“ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தாழியூழிதோறெலாம்‌” (திருச்ச. 75) என்றும்‌, “அநேக ஜந்ம ஸம்ஸித்‌த,?”’ (கீதை 6 – 45) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே பலாபிஸந்தி ரஹிதமாய்‌, பகவத் ஸமாராதந ரூபமான ஸத் கர்மங்களாலே, (க்‌யாத குலங்களிலே பிறந்து) “*ஸூசீநாம்‌ ஸ்ரீமதாம்‌ கேஹே யோக,ப்‌ரஷ்டோ அபி,ஜாயதே” (கி,தை 6 – 41) என்றும்‌, “ஜநித்வாஹம்‌ வம்ஸே மஹதி ஜகதிக்யாத யமஸாம்‌ ஸூசீநாம்‌ யுக்தாநாம்‌ குண புருஷ தத்த்வஸ்தி,திவிதாம்‌”‘ ( ஸ்தோ, 7.61) என்றும்‌ சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய்‌, பரமயோகிகள்‌ என்றும்‌ ப்ரஸித்‌தரானவர் ஸ்தலங்களிலே வந்து பிறந்து.

(எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌) “தெரித்தெழுதி வாசித்தும்‌ கேட்டும்‌”” (நான்‌.திரு. 63) என்று ஸாஸ்த்ராப்‌யாஸத்துக்கு யோக்‌யமான அக்ஷர ஸிக்ஷையென்ன, அந்த அக்ஷர ராஸி க்‌ரஹண ரூபமான வேத அப்‌யாஸமென்ன, அந்த வேதத்தினுடைய அர்த்த,விஜ்ஞாநத்துக்குறுப்பான ஸாஸ்த்ராப்‌யாஸமென்ன, உபயத்தினுடையவும்‌ அர்த்த ஸ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌. (குளித்து) உபாஸந அங்கமான நித்யகர்மாநுஷ்டாநத்துக்கு உபயுக்தமாக காய ஸூத்‌த்‌, யர்த்த,மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்‌யாவந்தந காயத்ரீ ஜப-பஞ்ச மஹா யஜ்ஞங்களைப்பண்ணி. (அறுதொழில்களால்மிக்கு) “அறுதொழிலந்தணர்‌” (திருவெழுகூ.)என்று யஜந-யாஜத-அத்‌யயந–அத்‌யாபந-தாந-ப்ரதிக்‌ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்‌

-“ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு”” (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்யகர்மாநுஷ்ட,ாநத்தாலே தபம்சர்யைக்கு யோக்‌,யமானவாறே தத,ர்த்த, மான காயபோஷணார்த்த_மாக நிராஹாரராய்‌, அவ்வளவிலும்‌ ப்ராணத,ரணார்த்த, மாக அப்‌, க்ஷ்ணவாயுப,க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம்‌ வருந்தி) ”பொருப்பிடையே நின்றும்‌ புனல்குளித்தும்‌ ஐந்து நெருப்பிடையே நிற்க” (மூ.திருவ. 76) என்றும்‌, ‘‘வீழ்‌ கனியுமுழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம்‌ தாம்‌ வருந்தி” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே க்‌,ரீஷ்மகாலங்களில்‌ பர்வதாக்‌,ரத்திலே நின்றும்‌, பஞ்சாக,நிமத்‌,யே நின்றும்‌, பபீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே மூழுகிக்கிடந்தும்‌, ஜீர்ணபர்ணப,லாரநராயும்‌ இப்படி தபஸ்சர்யையாலே மாரீரத்தை ஸோஷிப்பித்து. (துன்ப வினைகளை விடுத்து) ““மேவுதுன்பவினைகளை விடுத்தும்‌”” (திருவா. 3 – 2 – 8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டாநத்தாலே ”திலதைலவத்‌,தாருவஹ்நிவத்‌’” (ஸர.க.த்‌,யம்‌) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற து,2க,ஹேதுவான பாபங்களை “த,ர்மேண பாபமபநுத,தி” (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.

(விவேகமாமாதிகள்‌ வளர) இப்படி பாப விமோசநம்‌ பிறந்தவாறே மநோ நைர்மல்ய ஹேதுவான விவேக-விமோகாப்‌,யாஸ க்ரியா கல்யாணாநவஸா தநுத்‌த,ர்ஷங்களும்‌, ““ஸமதம நியதாத்மா ஸர்வ பூதாநுகம்பீ விஷய ஸுக விரக்தோ ஜ்ஞாந த்‌ருஷ்டி ப்ரபந்ந ச । அநியதநியதாந்தோ நைவ ருஷ்டோ ந ஹ்ரூஷ்டச ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்தச”” என்கிற ஸமாதி,களும்‌ அபி,வ்ருத்‌தமாக.
இதில்‌ விவேகமாவது – “’ஜாத்யாஸ்ரய நிமித்தாது,ஷ்டாத,ந்நாத் காயமாத்‌திர் விவேக” (போதாயந) என்கிற காய ஸூத்‌திக்கடியான அந்ந ஸூத்‌தி,.-விமோகமாவது – காமாநபி,ஷ்வங்க,ம்‌. அப்‌,யாஸமாவது -““ஆரம்பண ஸம்ஸபீலநம்‌ புந புநரப்‌யாஸ?”’ என்று த்‌,பாநாலம்பநவஸ்துவிலே பலகாலும்‌ பரிஸீலநம்‌ பண்ணுகை. க்ரியையாவது “பஞ்சமஹாயஜ்ஞாத்‌,யநுஷ்டாநம்‌ ஸக்திதா க்ரியா?” என்று நித்ய கர்மங்களை வல்லவளவும்‌ அநுஷ்டிக்கை, கல்யாணமாவது – ““ஸத்யார்ஜவத யாதாநா ஹிம்ஸாநபி,த்‌,பா கல்யாணாநி” என்கிற ஸத்யார்ஜவத, யாத,நா ஹிம்ஸாதி,கள்‌. அநவஸாத,மாவது **ஸோக ஹேதுஷு மநஸ? கேத,ராஹித்யம்‌ அநதவஸாத,” என்கிறபடியே ஸோகஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ நெஞ்சு தளராதிருக்கை. அநுத்‌தர்ஷமாவது – ““தத்‌ விபர்யயஜா துஷ்டி: – உத்‌தர்ஷச தத்‌,விபர்யய? – அநுத்‌த.ர்ஷ?’” என்று ஹர்ஷ ஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ அதி ப்ரீதனாகாதொழிகை –

(எட்டு நீக்கி) ‘ஈனமாய எட்டு நீக்கி” (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப்‌ பொல்லாங்கைப்‌ பண்ணக் கடவதான ‘காம-க்ரோத,- லோப, -மோஹ-மத, -மாத்ஸர்ய-அஜ்ஞாத-அஸூயைகள்‌ என்கிறவற்றை விட்டு. (எட்டுமிட்டு) “கந்தமாமலரெட்டுமிட்டு” (திருமொழி 3 – 5.- 6), “இனமலரெட்டுமிட்டு’” (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே “அஹிம்ஸா ப்ரதமம்‌ புஷ்பம்‌ புஷ்பமிந்த்‌ரிய நிக்‌ரஹ?। ஸர்வபூததயா புஷ்பம்‌ க்ஷமா புஷ்பம்‌ விஸேஷத: । ஜஞாநம்‌ புஷ்பம்‌ தப? புஷ்பம்‌ தயாநம்‌ புஷ்பம்‌ ததைவ ச ! ஸத்யமஷ்டவிதம்‌ புஷ்பம்‌ விஷ்ணோ: ப்ரீதிகரம்‌ பவேத்‌” என்கிறபடியே அஹிம்ஸாதிகளான அஷ்டவித, புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதிகள்‌ திருவுள்‌ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது -(எட்டினாய பேதம்‌) ““எட்டினாய பேதமோடிறைஞ்சி’* (திருச்ச. 77) என்கையாலே “மநோ புத்தி அபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே ! கூர்மவச் சதுர ச பாதந்‌ ஸிரஸ்‌ தத்ரைவ பஞ்சமம்‌” என்றும்‌, “*உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா வசஸா மநஸா ததா ॥ பத்‌ப்‌யாம்‌ கராப்‌யாம்‌ ஜாநுப்‌யாம்‌ ப்ரணா மோஷ்டாங்க, ஈரித?‘ என்றும்‌, பக்நாபிமாநனாய்‌ விழுகையும்‌, மநோ புத்‌திகளுக்கு ஈஸ்வரனையே விஷயமாக்குகையும்‌, பாணித்‌வயமும்‌, பாத த்‌வயமும்‌, ஸிரஸ்ஸும்‌ பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி. (பூவில்‌ சாந்தொடு தேவ காரியம்‌ செய்து) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ” (திருவா. 5 – 2 – 9), “சாந்தொடு விளக்கம்‌ தூபம்‌ தாமரை மலர்கள்‌ நல்ல ஆய்ந்து தொண்டு” (திருவா. 10 – 2 – 10) என்று ஸமாராதநோபகரணங்கள்‌ மிகுத்துக் கொண்டு அநந்ய ப்ரயோஜநராய்‌, ““தேவ காரியம்‌ செய்து” (பெரியா. திரு. 4 – 4 – 1) என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைப் பண்ணி -(உள்ளம்‌ தூயராய்‌) ““ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தூழியூழி தோறெலாம்‌ நின்று நின்றவன்‌ குணங்களூள்ளி உள்ளம்‌ தூயராய்‌” (திருச்ச. 75) என்கிறபடியே நித்யகர்மாநுஷ்டாநம்‌ முதலாக பகவத் ஸமாராதந மெல்லையாக பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டாநத்தாலும்‌ பகவத்‌ குணாநுஸந்தாநத்தாலும்‌ ““கஷாயே கர்மபிர் பக்வே ததோ ஜ்ஞாநம்‌ ப்ரகாஸதே”” என்கிறபடியே கர்மாநுஷ்டாநத்தாலே ம்ருதிதகஷாயனானவாறே ஜ்ஞாந விகாஸத்துக்கடியான மநோ நைர்மல்யத்தை உடையராய்-

(வாரிப்புன்புலவகத்தினுள்‌) “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்‌ சேரி திரியாமல்‌ செந்நிரீ, ‘ (மூ.திருவ. 47) என்றும்‌, ““புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞானநற்கூடர் கொளீஇ”” (திருச்ச. 76) என்றும்‌, ”ஐம்புலனகத்தினுள்‌ செறுத்து” (திருவெழு.) என்றும்‌, ”ப்ரசீர்ணே விஷயாரண்யே ப்ரத வந்தம்‌ ப்ரமாதிநம்‌ ! ஜ்ஞாநாங்குஸேந க்ருஹ்ணியாத்‌ வஸ்யமிந்த்‌ரிய தந்திநம்‌”” என்கிறபடியே இந்த்‌ரியங்களாகிற மமூதிதமான ஆனைகளை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகீற அங்குஸத்‌தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில்‌ திரியாதபடி பகவத்‌ விஷயமாகிற யதா ஸ்தாநமாகிற தறியிலே சேர்த்தென்றும்‌, இந்த்‌ரியங்களை ஷூத்‌ர விஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்த விஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஸமான தீபத்தைக்‌ கொளுத்தி. இப்படி நிக்‌ருஹீதேந்த்‌ரிய க்‌ராமராய்‌, (இளைப்பிணை யடைவே விளக்கினைக் கண்டு) “இளைப்பினை இயக்கம்‌ நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர்‌ கண்ணே வைத்துத்‌ துளக்கமில்‌ சிந்தை செய்து தோன்றலும்‌ சுடர் விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்‌‘” (திருக்குறு. 18) . என்றும்‌ சொல்லுகிறபடியே யோகாப்‌யாஸ விரோதியாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓர் ஆஸந விஸேஷங்களிலே இருந்து நாஸாக்‌ரந்பஸ்த லோசநனாய்‌, இந்த்ரியங்களை நியமித்து த்‌யேய வஸ்துவின்‌ பக்கலிலே நிரதிஸயமான ஸ்நேஹத்தைப் பண்ணி ததநந்தரம்‌ ஸ்வயம் ப்ரகாஸமாய்க்‌ கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஸாஸ்த்ரோக்த ப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.
(யோக நீதி நண்ணி) என்று யோகம்‌ தலை நின்று. (அறந்திகமும்‌ மறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெருஞ்சுடரை) ‘*மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம்‌ துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை யில்லாத தொன்னெறிக் கண்‌ நிலை நின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம்‌ கதியை” (பெருமாள்‌ திரு. 1 – 7) என்றும்‌, “மறையோர் மனந்தன்னுள்‌” (திருமொழி 7 – 8 – 7) என்றும்‌, ““மாதவமானவர் தங்கள்‌ சிந்தை”’ (திருமொழி 2 – 1 – 1) என்றும்‌, ”ஆரமார்வனரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச்‌ சேரும்‌ நெஞ்சினராகி’” (பெருமாள்திரு. 2 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே பரமயோகி,களுடைய ஹ்ருதயங்களிலே அதி ப்ரகாபமமான விக்‌ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஸ்வரனை.
(கண்கள் சிவந்திற் படியே மனவுட் கொண்டு) ““கண்கள் சிவந்து’ (8-8 -1)-என்கிற பாட்டின் படியே அவயவ ஸோபையோடும்‌ ஆபரண ஸோபையோடும்‌ கூடி காளமேக நிபஸ்யாமமாயிருக்கிற விலக்ஷண விக்‌ரஹத்தை ““கற்றவர் தந்தம்‌ மனவுட்‌ கொண்டு” (திருமொழி 7 – 3 – 1) என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்‌யாநம் பண்ணி. (நிரந்தரம்‌ மறவாமை) “நிரந்தரம்‌ நினைப்பதாக”’ (திருச்ச. 101) என்றும்‌, “மன்னு சேவடிக்கே மறவாமை” (திருமொழி 3 – 5 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த த்‌யாநத்துக்கு விஸ்ம்ருதியும்‌ விச்சேதமுமின்றிக்கே. (துடக்கு ஸ்ம்ருதியாய்‌) “சோர்‌விலாத காதலால்‌ துடக்கறா மனத்தராய்‌”’ (திருச்ச. 78) என்கிறபடியே ஸர்வ காலமும்‌ விஷயாந்தரங்களால்‌ அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத்‌ ஸம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்கராய்‌, பகவத் ஸ்ம்ருதி ஸந்ததி ரூபேண செல்லா நின்றால்‌ விச்சேதமில்லாத த்‌ருவாநு ஸ்ம்ருதி ரூபமாய்‌, “ஸத்த்வாத்‌ தெள த்‌ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே, ஸர்வக்‌ரந்தீ நாம்‌ விப்ரமோக்ஷி’‘ (சாந் 7 – 26 – 2) என்னக் கடவதிறே. (கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌) “கனவில்‌ மிகக்கண்டேன்‌’” (இ. திருவ. 81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய்‌. (ஆகத்துப்‌ புல்கும்‌ அத்யர்த்த ப்ரியமாய்‌) ஆகத்தணைப் பாரணைவரே” (மு.திருவ. 32) என்றும்‌, “ஆர்வம்‌ புரிய பரிசினால்‌ புல்கில்‌” (மூ.திருவ. 50) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த தர்சந ஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான்‌ அந்த த்‌யேய வஸ்துவை ஹ்ருதயகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும்‌ அத்யர்த்த, ப்ரிய ரூபையாய்
(வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவ லென்னாத அநத்ய ப்ரயோஜநமாய்‌) “’நின் புகழில்‌ வைகும்‌ தம்‌ சிந்தையிலும்‌ மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும்‌ வான்‌?” (பெரியதிருவ. 53) என்றும்‌, “’உலகு படைத்துண்ட வெந்தை”” (திருவாசி.2) என்று தொடங்கி, ”அமுத வெள்ளத்தானாம்‌ சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக நல்வீடு பெறினும்‌ கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்‌ குறிப்பே” என்றும்‌, “மேலால்‌ பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க்‌ குற்றேவலன்று மறப்பின்மை யான்‌ வேண்டும்‌ மாடு’* (பெரியதிரூவ. 58) என்றும்‌ சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாந ரஸத்தாலே தேஸா விஸேஷத்திலநுபவத்தை உபேஷிக்கும்படி தானே பர மப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்ய ப்ரயோஜநமாய்‌..
(வேத,ந-௨ பாஸந-ஸேவா-த்‌யாநாதி களென்னுமவை) வேதநம்‌, உபாஸநம்‌, ஸேவை, த்யாநம்‌, த்‌ருவாநுஸ்ம்ருதி, தர்சந ஸமாநாகாரம்‌, பக்தி என்றும்‌ சொல்லப்படுகிறவை யாகையாலே இந்த ப,க்தி ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌தம்‌. ‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்‌ய”(ஆத்மஸித்‌தி,) என்று கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்தா கரணனுக்குப்‌ பிறக்கும தொன்றாகையாலே ஸாத்‌,யமாய்‌, பகவத் ப்ரஸாதநோபாயமாகையாலே ஸாதநமான பக்தி என்று ஸாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார்‌. ஆக இத்தால்‌ சேதநனாலே ஸாத்‌யமாய்‌, உபாய ரூபமான பக்தி விஸேஷம்‌ சொல்லிற்று –

100-ஸ்வீக்ருத ஸித்‌த ஸாதநர்‌ இத்தை ஸாத்‌யமாக இரக்க ப்ராப்திக்கு முன்னே ஸித்‌திக்கும்‌.
இனி உபேயமான கைங்கர்யோப கரணமாய்‌, ப்ரார்த்‌யமான பக்தி விஸேஷம்‌ சொல்லுகிறது மேல்‌ (ஸ்வீக்ருத ஸித்‌த ஸாதநர்‌ என்று தொடங்கி). (ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர்‌) *’த்வத் பாத மூலம்‌ ஸரணம்‌ ப்ரபத்‌யே”” (ஸ்தோ,ர.22) என்றும்‌, ‘“ஸ்ரீமந்‌ நாராயண சரணாரவிந்த,ம்‌ ஸரணமஹம்‌ ப்ரபத்‌யே”” (ஸ -கத்யம்‌) என்றும்‌, “லோக விக்ராந்த சரணென ஸரணம்‌ தே அவ்ரஜம் விபோ ”” (ப,வி.பு.) என்றும்‌ சொல்லுகிறபடியே இப்படி ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ பண்ணினவர்கள்‌ இத்தை ஸாத்‌யமாக இரக்க, இந்த பக்தி கைங்கர்யோபகரணமாய்க் கொண்டு ப்ராப்யாந்தர் கதமாகையாலே “‘பகவத்‌ பக்திமபி ப்ரயச்ச, மே!” (ஸ்தோ.ர.) என்றும்‌, ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ”’ (ர.கத்‌யம்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே இந்த பக்தியை ஸாத்‌யமாக அவன் பக்கலிலே அபேஷிகிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்‌, இது கைங்கர்யத்துக்கு பூர்வபாவியாகையாலே பகவத் பிராப்திக்கு முன்னே ஸித்‌திக்கும்‌ என்கிறார்‌.

101-இது உபயமுமின்றிக்கே அறியாக் காலத்துள்ளே ஓக்கப்‌ பிறந்து தழுவி நின்று கட்டமே நோயா யுலர்த்தி வீழ்ந்தலப்பாய்‌ த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி ஸத்தா போக வ்ருத்த் யுபகரணமான ஒன்று.
(இது உபயமுமின்றிக்கே
) இவருடைய பக்தி உபாஸகர்‌ கர்ம ஜ்நாநங்களாலே ஸாதித்து பகவத் ப்ரஸாதத்துக்கு ஸாதநமாகக்‌ கொள்ளுகிற பக்தியுமன்றிக்கே, ஸித்‌த ஸாதந பரிக்‌ரஹம்‌ பண்ணினவர்கள்‌ கைங்கர்யோபகரணமாக அபேஷித்துப்‌ போருகிற பக்தியுமன்றிக்கே; (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து] ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண்‌ அன்பு செய்வித்து’” (திருவா. 2 – 8 – 3) என்றும்‌, ““பால்யாத் ப்ரப்‌ரதி ஸுஸ்நிக்‌த.”” (ரா.] என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்‌யதை யில்லாத அதிபால்யத்திலே கைங்கர்யத்தைப்‌ பெற்றல்லது நிற்க வொண்ணாத அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தான்‌ என்று சொல்லும்படி ”ஸஹஜ பக்திரஸ்மாகம்‌”‘ என்று ஸஹஜையாய்‌, *‘தழுவி நின்ற காதல்‌ ”” (திருவா. 4 – 7 -11) என்று உடன் வந்தியாய்‌, கட்டமே காதல்‌” (திருவா. 7 – 2 – 4) என்றும்‌, ““வேட்கை தோய் கூர” (திருவா. 9 – 6 7) என்றும்‌ அபி, நிவேஸாநுகுணமாக அநுபவம்‌ ஸித்‌தியாமையாலே இது கஷ்டம்‌ என்று சொல்லும்படி வ்யாதி ரூபமாகையாலே பாத,கமாய்‌, ““வேவாரா வேட்கை தோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”” (திருவா. 2 – 1 – 10) என்றும்‌, “உன்னைக் காணுமவாவில்‌ வீழ்ந்து” (திருவா. 5 – 7 – 2) என்றும்‌, ““உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌”” (திருவா. 5 – 8 – 4) என்றும்‌ அஸோஷ்யமான ஆத்ம வஸ்துவை ஸோஷிப்பித்து, அபி நிவேஸத்திலே ஆழ்ந்து, காண வேணுமென்று அலமாக்கப் பண்ணி. (த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக நிஷ்டையைக் குலைத்து, ஸக்ருத்‌ ஸ்வீகாரம்‌ அமைந்திருக்க *நோற்ற தோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில்‌ நிஷ்டையைக் குலைத்து. (ஸத்தா போக வ்ருத்த் யுபகரமானதொன்று) ““நாகிஞ்சித்குர்வதஸ் ஸேஷத்வம்‌”’ (வேதாஸம்‌) என்று ஸேஷத்வைக நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாகையாலே இவருடைய ஸத்தா ஹேதுவாய்‌, “’தனக்கேயாக”’ (திருவா. 2 – 9 – 4) என்றும்‌, “உன்தன்‌ திருவுள்ள மிடர்கெடுந்தோறும்‌”” (திருவா. 10 – 3 – 9) என்றும்‌ “*கதாத்‌, ரக்ஷ்யதி மாம்‌ பதி” (ரா.ஸு.) என்றும்‌, ”கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி” (ஸ்தோ.ர. ) என்றும்‌, “உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவி யல்லல்‌ மாய்த்ததே”” (திருவா. 4 – 3 – 3) என்றும்‌ ஸர்வேஸ்வரனை பலியாகச்‌ சொல்லுகையாலே அவனுக்கு போகமாயிருக்கிற கைங்காயத்துக்கு உபகரணமாயிருப்பதொரு பக்தி என்கிறார்‌. ஆக, இதுக்குக் கீழ்‌ இவருடைய பரபக்தி ஸாதித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –

102-இடகிலேன்‌ நோன்பறிவிலேன்‌ கிற்பன்‌ கீழ் நாள்கள்‌ என்கையாலே ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல.
இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில்‌, ஜந்மாந்தரங்களில்‌ அவை தமக்கு இல்லை என்னுமிடம்‌ தாமே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌ (இடகிலேன்‌ இத்யாதி, ). ““இடகிலேன்‌ ஒன்றட்டகில்லேன்‌ ஐம்புலன்‌ வெல்லகில்லேன்‌ கடவனாகிக் காலந் தோறும்‌ பூப்பறித்‌தேத்த கில்லேன்‌’” (திருவா. 4 – 7 – 9) என்று பகவத்‌ விபூதி பூதர்‌ என்று அந்ந பாநாதிகளை பூதங்களுக்கு இட்டுக்கொடுபோரில்‌ கர்ம யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌, இந்த்‌ரிய ஜயம்‌ பண்ணினேனகில்‌ ஜ்ஞாந யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌. ஸாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு பகவத் ஸமாராதநம்‌ பண்ணினேனாகில்‌ பக்தி யோகத்திலே நிவேஸிப்பிக்‌கலாம்‌. இவை இத்தனையும்‌ செய்யப்‌ பெற்றிலேன்‌ என்றும்‌, ”நோற்ற தோன்பிலேன நுண்ணறிவிலேன்‌”’ (திருவா. 5 – 7 – 1) என்று பலத்தோடே வ்யாப்தமாய்‌ இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டிக்கப் பெற்றிலேன்‌; ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகமான பகவஜ் ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்‌- ஆக இவை இல்லாமையாலே உபய ஸாத்‌யமான பக்தியை உடையேனல்லேன்‌ என்றும்‌. (கிற்பன்‌ கீழ்நாள்கள்‌ என்கையாலே) “கிற்பன்‌ கில்லேன்‌ என்றிலன்‌ முனநானால்‌”’ (திருவா. 8 – 2 – 6] விஹிதததைச்‌ செய்து அவிஹிதத்தைத் தவிர்‌’ என்கிற விடத்தில்‌ அப்படிச்‌ செய்கிறேன்‌ என்னாதே விஹிதத்தைத் தவிரந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன் நெடுங் காலம்‌ என்றும்‌-‘”ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன்‌ வாளா விருந்தொழிந்தேன்‌ கீழ் நாள்களெல்லாம்‌’” (பெரியதிருவ. 82) என்றும்‌, ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனை மங்களாஸாஸநம்‌ பண்ணாதே விஸ்மரித்து அநாதி காலம்‌ வ்யர்த்தமே இருந்தேன்‌ என்கையாலும்‌, இப்படி ஜந்மாந்தரங்களில்‌ தமக்கு கர்ம ஜ்ஞாநாதிகளில்‌ அந்வயமில்லை என்று அருளிச் செய்கையாலே. (ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல) ஐத்மாந்தரங்களில்‌ கர்ம ஜ்ஞாந பக்த்திகளை அநுஷ்டி,த்து தத்பலமாய்‌ வந்த பக்தியன்று என்கிறார் –

103-இப் பிறப்பே சில நாளில்‌ என்ற போதே இரண்டும்‌ கழியும்‌.
ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும்‌ இந்த ஜந்மத்திலே சில தாள்‌ ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில்‌, அதுவுமல்ல என்கிறார்‌ (இப் பிறப்பே சில நாளில்‌ என்று). ““குறிக் கொள் ஞானங்களால்‌ எனை யூழி செய்தவமும்‌ கிறிக் கொண்டிப் பிறப்பே சிலநாளிலெய்தினன்‌ யான்‌” (திருவா. 2 – 8 – 8) என்று யம நியமாத்‌யவஹிதராய்க்‌ கொண்டு ஸம்பாதிக்க வேண்டும்‌ வேதந-த்‌யாந-உபாஸநாத்‌, யவஸ்தா விஸேஷங்களான ஜஞாநங்களாலே அநேக கல்பம்‌ கூடி ஸ்ரவணாமாய்‌, மநநமாய்‌-த்ருவாநுஸ்ம்ருதியாய்‌, வரக்கடவதான தப பலத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க நல் விரகனான அவனாலே இஜ் ஜந்மத்திலே, அது தன்னிலும்‌ அல்ப காலத்திலே பெற்றேனென்கைஃ யாலே ஐந்மாந்தர ஸாத்‌யமுமல்ல; இஜ் ஜந்மத்திலும்‌ ஸாதித்து வந்ததுமல்ல என்கிறார் –

104-பெரும்பாழில்‌ ஷேத்ரஜ்ஞன்‌ பெருஞ்செய்‌ கலியாரேவ ஆளும்‌ வன் குறும்பர்‌ குடியேறிப் பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கிப்‌ படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே யொறுக்கெணுப்‌ போகத்துக்குக்‌ காவல் செய்து குமைத்துத்‌ திரித்து வீழ்த்து வலித்‌தெற்றி அருவியறுத்துக்‌ கடனாயின இறுப்பிக்கப்‌ பாழ்த்த விதி யானவாறே தன்பால்‌ மனம்‌ வைப்பிப்பதாகத்‌ தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத்‌ தீக் கொளீஇக்‌ கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல்‌ வித்தி எழுநாற்றுக்களையையும்‌ வேர் முதல் மாய்த்துப்‌ பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல்‌ குறிக்கொள்வித்துக்‌ கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள்‌ கோட்குறையாக நின்றாரறியாமல்‌ குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல்‌ பற்றறுத்துத்‌ தண்டாலடித்துப்‌ பதரறுத்துப்‌ போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும்‌ நீரிலே கழுவி வேறோர்‌ கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌ குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து உழுவதோர்‌ நாஞ்சில் கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன்‌ க்ருஷி பலமிறே-

ஆனால்‌ இவர்க்கு இந்த ப,க்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில்‌ பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம்‌ என்னுமிடத்தை க்ஷேத்ரமும்‌, கர்ஷகனும்‌, க்ருஷியும்‌, தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்‌ (பெரும்பாழில்‌ க்ஷேத்ரஜ்ஞன்‌ என்று தொடங்கி]. (பெரும்பாழில்‌ க்ஷேத்ரஜ்ஞன்‌) “முடிவில்‌ பெரும்பாழேயோ”” (திருவா. 10 – 10 – 10) என்று அபரிச்சேத்‌,யமாய்‌, சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக்‌ கொள்ளுகைக்கு நிலமான மூல ப்ரக்ருதியிலே பத்‌தனான சேதநன்‌, “நெஞ்சப்‌ பெருஞ் செய்யுள்‌” (திருவா. 5 – 3 – 4) என்று பகவத்‌ பக்திக்கு விளை நிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும்‌ செய்யிலே-(கலியாரேவ) ““ஏவினார்‌ கலியார்‌ நலிக’” (திருமொழி 1 – 6 – 8) என்று கலியுகமாகிற வறியன்‌ தன்‌ படரான இந்த்‌ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும்‌ வன் குறும்பர்‌) “’மனமாளுமோரைவர்‌ வன்குறும்பர்‌”’ (பெ.திருவ.51) என்று ப்ரதாந கரணமான மநஸ்ஸையும்‌ தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுமவர்களுமாய்‌ முன்கை மிடக்கருமாய்‌ அநியாம்‌யருமான அத்‌விதீயரை வரும்‌ ““பொய்யாலைவரென்‌ மெய் குடி யேறி”” (திருமொழி 7 7 – 9) என்கிறபடியே குடியேறி
(பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கி) ““ஐம்புலன்கருதும்‌ கருத்துளே திருத்தினேன்‌ மனத்தை?” (திருமொழி 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரதாந கரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே) *’புலம்படிந்துண்ணும்‌ போகமே பெருக்கிப் போக்கினேன்‌’ (திருமொழி 1 – 6 – 2) என்று ஸப்‌தாதி விஷயங்களிலே அவகாஹித்து பஜிக்கிற போகத்தை அபி வ்ருத்‌தமாக்கி. “’தூராக்குழி”’ (திருவா. 5 – 8 – 6) என்கிறபடியே அத்தால்‌ ஒருகாலும்‌ பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணுப்‌ போகத்துக்குக்‌ காவல்‌ செய்து) ”பொறுத்துக் கொண்டிருந்தால்‌ பொறுக் கொணாப் போகமே நுகர்வான்‌ புகுந்து” (திருமொழி 7 – 7 – 7) என்று சேதநனாலே பொறுக்கப் போகாத ஸப்‌தாநுபவத்துக்கு, “கடியார்‌ காளையர்‌ ஐவர்‌ புகுந்து காவல் செய்த”” (திருமொழி 7 – 7 – 8) என்று நெஞ்சில்‌ க்ரெளர்யத்தை உடையராய்‌, பதிக்க பாதிக்க மேலே இளகிப் பதித்து வருகிற அந்த விஷயங்கள்‌ {இந்த்‌ரியங்கள்‌] கீழே சொன்ன போகத்துக்கு விருத்‌,த,மான பகவத்‌ ஸம்ரம்பமாகிற்‌ ராஜபரிகரம்‌ புகுராதபடி காவல்செய்து.

(பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌குண ரஸாந்நமாக்கி] ‘அணைவர் போயமருலகில்‌ பைந்தொடி மடந்தையர் தம்‌ வேய் மரு தோளிணை”’ (திருவா. 10 – 2 -11) என்று “ஸதம்‌ மாலா ஹஸ்தா?” (கெளஷீதகீ) இத்யாதியாலே சொல்லப்படுகிற திவ்யாப்‌ஸரஸ்ஸுக்களைக் கொண்டு பகவத்‌ போக யோக்‌யமாம்படி அலங்கரித்து, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்‌யதே”‘ என்று ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைப்‌ பெறுவிக்கையாலே ஸ்வருப கதமாயிருக்கச் செய்தே முன்பு திரோஹித மாயிருக்கிற ஜஞாந ஸக்தயாதிகளும்‌, அபஹத பாப்மத்வாதிகளும்‌ ப்ரகாஸித்து இவை ஸேஷவஸ்துகதமாகையாலே ஸேஷி விநியோகத்துக் குறுப்பாகையாலே அந்த குண விஸிஷ்டமான ஆத்ம வஸ்துவைத்‌ தனக்கு போக்‌,யமாக்கி(வானோர்க் காராவமுதான வாறே) நித்ய ஸூரிகளுக்கும்‌ போக்யமானவாறே. (முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” (திருவா, 10 – 9 -10) என்றும்‌, “என்னில்‌ முன்னம்‌ பாரித்து”’ (திருவா. 9 – 6 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும்‌ முன்னே பாரித்து(உழுவதோர்‌ நாஞ்சில்கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன் க்ருஷிபலமிறே) “உழுவதோர்‌ படையும்‌” (பெரியா. தி. 4 – 7 – 5), “ஒற்றைக் குழையும்‌ நாஞ்சிலும்‌”” (திருமொழி 8 – 8 – 9) என்று க்ருஷி ஸாதநத்தைக் கொண்டு, ‘“அரியதெளிதாகுமாற்றலால்‌ மாற்றிப்‌ பெருக முயல்வாரைப்பெற்றுல்‌” (இ.திருவ. 22) என்று அரிதான பகவத்‌ ப்ராப்தியும்‌ எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும்‌ க்ருஷி பண்ணுகிற *பத்தி யுழவன்‌”‘ (நா. திருவ. 23) என்கிற பக்திக்கு க்ருஷி பண்ணுகிற ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாய்க்‌ கொண்டு உண்டாய்த்து இவருடைய பக்தி என்கிறார்‌. ஆக இத்தால்‌ இவருடைய பக்தி போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலம்‌ என்றதாய்த்து-

105-கோஸல கேகுல சராசரம்‌ செய்யும்‌ குணமொன்றின்றியே அற்புதமென்னக்‌ கண்டோம்‌.
இப்படி இத்தலையில்‌ ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில்‌, கோஸல தேஸத்திலுண்டான ஸ்தாவர ஜங்கமங்‌களையும்‌ கோகுலத்திலுண்டான சராசரங்களையும்‌ ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக துக்கராம்படி பண்ணக் கண்டோமிறே என்கிறார்‌ (கோஸலமென்று தொடங்கி). “த்வாமாமநந்தி கவய? கருணாம்ருதாப்‌ தே, ஜ்ஞாந க்ரியா பஐந- லப்‌யமலப்‌யமந்யை
ஏதேஷு கேந வரதோரத்தர கோஸல ஸ்தா பூர்வம்‌ ஸதூர்வ- மப ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்‌’”
(வரத,.ஸ்த. 69) என்றும்‌, “அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌ – ஒன்றின்றியே நற் பாலுக்குய்த்தனன்‌” (திருவா. 7 – 5 – 1) என்றும்‌ கோஸல தே,ஸத்திலுண்டான சராசரங்களடைய “அபி வ்ருக்ஷாச பரிம்லாநாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா? உபதப்தோதகா நத்‌ய பல்வலாநி ஸராம்ஸி ச ப பரிஸூஷ்க பலாஸாநி வநாந் யுபவநாநி ச (ரா. ௮. 59 – 8), ““விஷயே தே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா?”, என்றும்‌, “அகால பலிநோ வ்ருக்ஷா ச” (ரா. யு. 127 – 18) என்றும்‌, “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்‌ கதர? ! ராமபூ,தம்‌ ஜகத பூத்‌ ராமே ராஜ்யம்‌ ப்ரஸாஸதி”? (ரா. உ.) என்றும்‌ ஒரு ஹேது வின்றியிலே ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைகஸுக துக்க ராகவும்‌.
கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்ய ப்ரஸரண மில்லாத வ்ருக்ஷங்களும்‌, “அவனொருவன்‌ குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்‌ மலர்கள்‌ வீழும்‌ வளர் கொம்புகள்‌ தாழும்‌ இரங்கும்‌ கூம்பும்‌ திருமால்‌ நின்ற நின்ற பக்கம்‌ நோக்கி அவை செய்யும்‌ குணமே” (பெரியா.தி. 3 – 6 – 10) என்றும்‌, சைதந்ய லேஸமுடைய திஸ்ர்யக்குக்களும்‌ “மருண்டு மான் கணங்கள்‌ – கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திரங்கிச்‌ செவி யாட்டகில்லாவே”” (பெரியா. தி, 3 – 6 – 6) என்று திர்யக் ஸ்தாவரங்கள்‌ அந்யோந்யம்‌ ஸ்வபாவங்கள்‌ மாறாடும்படி பண்ணி, “நங்கைமீர்களிதோரற்புதம்‌ கேளீர்‌” (பெரியா-3 – 6 – 1) என்று இதோராஸ்சர்யமென்று விஸேஷஜ்ஞர்‌ சொல்லும்படியாகக்‌ கண்டோமிறே என்கிறார்‌. ஆக இத்தால்‌, சைதந்யாசைதந்யங்களிரண்டும்‌ தன்னில்‌ பதார்த்த வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனை யொழிய பகவத்‌ விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக்‌ காணாமையாலே இவர்க்குப்‌ பிறந்த பக்தி பகவந் நிர்ஹேதுக விஷயீகாரத்‌தாலே என்றதாயிற்று.

106-பட்டத்துக்குரிய ஆனையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது.
ஆனால்‌ ”ஸமோஹம்‌ ஸர்வபூதேஷு ந மே த்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய்‌, பரதுக்கம்‌ ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன்‌ ஸர்வரோடும்‌ தனக்கு ஸம்பந்தம்‌ ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றால்‌ அவனுக்கு வைஷம்ய நைர்க்‌ருண்யங்‌கள்‌ வாராதோ என்னில்‌ நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய்‌, ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய்‌, அத ஏவ உபய விபூதியையும்‌ ஸ்வாதீநமாகவும்‌, ஸ்வார்த்தமாகவும்‌ உடைய ஸர்வேஸ்வரன்‌ ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்‌ருண்யங்களை யிட்டு நிவாரகர்‌ இல்லை என்னும்‌ அர்த்தத்தை லோக த்‌ருஷ்டாந்த த்‌வாரா அருளிச் செய்கிறார்‌.
(பட்டத்துக்குரிய ஆனையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது) தான்‌ செய்தது தான்‌ இட்ட வழக்காம்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும்‌ அந்த ராஜா பரிக்‌ரஹித்தவளே ராஜ மஹிஷியுமா மிடத்தில்‌ இப்படி ஆவானென்‌? என்று ஆராய்வாரில்லை யிறே. அப்படியே-“’ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த,ம்‌ விஸ்வம்‌ விபர்யஸிதுமந்யத ஸச்ச கர்த்தும்‌ | ஷாம்யந்‌ ஸ்வபாவ நியமம் கிமுதீ க்ஷஸே த்வம்‌ ஸ்வாதந்த்ர்ய மைஸ்வர மபர்யநு யோஜ்யமாஹு ” (வை.ஸ்த. 55), ““படுநைக வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ? காகணிகா ஸுவர்ண கோட்யோ | பவமோக்ஷ்ண்யோஸ் த்வயைவ ஐந்து கரியதே ரங்க நிதே, த்வமேவ பாஹி”’ (ர. ஸ்த. உ. 88) என்று உபயமும்‌ தானிட்ட வழக்காம்படி நிரங்குச ஸ்வதந்தரனானவன்‌ செய்யுமவை ஆராயப் படாதிறே என்கிறார் –

107-முந்நீர்‌ வாழ்ந்தார்‌ சூட்டும்‌ கோவை ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ தோன்றும்‌.
அப்படிச் சொல்லுவானென்‌? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதமன்றோ இல்லை என்றது? யாத்‌ருச்சிகாதிகளான அஜ்ஞாந ஸுக்ருதமடியாக அவன்‌ விஷயீகரித்தானாகத்தட்டென்‌ ? என்னில்‌, ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித் தருளிச் செய்தவர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வாவஸ்தையிலிறே. உத்தராவஸ்தையிலும்‌ அஜ்ஞாதமாகில்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றாரில்லையாவரிறே. (முந்நீர்‌ வாழ்ந்தார்‌ தொடங்கி) “முந்நீர் ஞாலம்‌ படைத்த எம்‌ முகில் வண்ணனே” (திருவா. 3 – 2 – 1) என்று தொடங்கி அவன்‌ சேதநருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களைப்‌ பண்ணின படியையும்‌, தாம்‌ அவன்‌ கொடுத்த தேஹத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி ஸம்ஸரித்துப் போந்த படியையும்‌, “வாழ்ந்தார்கள்‌ வாழ்ந்தது”” (திருவா. & – 1 – 6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்தவர்களாகச்‌ சொல்லுமவர்கள்‌ ஜலபுத்‌புதம் போலே நஸித்து அதே கதியிலே போனார்கள்‌ என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப்‌ போந்தார்கள்‌ என்னுமர்த்தம்‌ இல்லை என்னுமதுவும்‌, “‘சூட்டு நன் மாலைகள்‌’” (திருவிரு. 20) என்று தொடங்கி – ஒரு விபூ,தியாக ஸமாராதநோந்முகராய்‌ உப கரணங்களைக் கொண்டு நில்லா நிற்கச் செய்தே அத்தை உபேஷித்துத்‌ திருவாய்ப்பாடியில்‌ திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக புஜிக்கையிலுண்டான இச்சையாலே கருஷ்ணனாய்‌ வந்தவதரித்து நப்பின்னைப்‌ பிராட்டிக்காக ருஷபங்கள்‌ ஏழையும்‌ அடர்த்தான்‌ என்றும்‌-““கோவை வாயாள் பொருட்டு”’ (திருவா. 4 – 3 – 1) என்று தொடங்கி -ராமக்ருஷ்ணாத்‌ யவதாரங்களைப் பண்ணி விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற தஸைகளிலே உதவி ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனாகிலும்‌ என்னுடைய ஸத்தாதிகளெல்லாம்‌ தனக்கு போக உபகரணமாகக்‌ கொள்ளும்படி என் பக்கலிலே வ்யாமுக்‌தனானானென்றும்‌. ““ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாபதாநம்‌-அம்ருதமதநம்‌, பூம்யுத்‌தரணம்‌, மஹா ப்ரளயவ்ருத்தாந்தம்‌, ஹிரண்ய நிரஸநம்‌, ராவண வத,ம்‌, பாணனுடைய பாஹாுவநச்சேதந ப்ரகாரம்‌, ததநந்தரம்‌ ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகாரம்‌, கோவர்த்‌தநோத்‌தரணம்‌ இப்படிப்‌ பத்தும் பத்தான விஜய பரம்பரைகளையும்‌, இப்படி ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித்துப்‌ பேசின இவர்க்குத்‌ தம்மை விஷயீகரித்தது யாத்‌ருச்சிகாதி, ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே என்கிறார்

108-செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்ற அத்‌வேஷாபிமுக்‌,யங்களும்‌ ஸத் கர்மத்தாலல்ல.
இப்படி அங்கீ காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும்‌, அத்‌வேஷாபிமுக்‌,யங்கள்‌ ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில்‌, அந்த அத்‌வேஷாபிமுக்‌யங்களும்‌ அவனாலே உண்டாய்த்தென்று இவர் தாமே அருளிச் செய்தாரிறே. (செய்த நன்றி தேடிக் காணாதே என்று தொடங்கி) ”வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில்‌ திகழ்வதுவே” (திருவா. 10 – 8 – 8) என்று ஸர்வேஸ்வரன்‌ தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக் காணாதே. (கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்று) “என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌”” (திருவா. 2 – 7 – 8), “மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌” (திருவா. 2 – 7 – 7) என்று சொல்லுகிற அத்‌வேஷாபிமுக்‌யங் களிரண்டும்‌ அவனாலே உண்டாய்த் தென்று தாமே அருளிச் செய்கையாலே அவையும்‌ ஸத் கர்ம மடியாக வந்ததன்று என்கிறார்

109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.
ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌. (எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி ‘“ஓரெண்டானுமின்றியே”” என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

110-மதியால்‌ இசைந்தோம்‌ என்னும்‌ அநுமதி-இச்சைகள்‌ இருத்துவம்‌ என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.
ஆனால்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாக அருளிச் செய்தாரே- அவைதான்‌ ஹேதுவானாலோ என்னில்‌, அவையும்‌ அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார்‌ (மதியால்‌ இசைந்தோம்‌ என்று தொடங்கி) வைத்தேன்‌ மதியால்‌ எனதுள்ளத்‌தகத்தே”” (திருவா. 8 – 7 – 10) என்றும்‌, “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்‌ (பெ.திருவ. 26) என்றும்‌, அனுமதி மாத்ரத்தாலே அவனை என்‌ தெஞ்சுக்குள்ளே வைத்தேன்‌ என்றும்‌, விரோதியைப்‌ போக்குவானாக யானும்‌ என்‌ நெஞ்சும்‌ இசைந்‌தொழிந்தோம்‌ என்றும்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாகச்‌ சொன்னாரே என்னில்‌; அந்த அநுமதீச்சைகளும்‌ ”யானொட்டி என்னுள்‌ இருத்துவமென்றிலன்‌‘ (திருவா. 1 – 7- 7) என்று, நான்‌ அவனை என்னுள்ளே இருக்க வொட்டேன்‌ என்று ப்ரதிஜ்ஞை பண்ண, தான்‌ “அத்ய மே மரணம்‌ வாபிதரணம்‌ ஸாகரஸ்ய வா”’ (ரா. யு. 21 – 87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப் போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஸரீரத்‌தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம்‌ பண்ணி, ““இசைவித்‌சென்னை” (திருவா. 8 – 8 – 9) என்று என்னை இசையும்படி பண்ணினான்‌ என்றும்‌, இசைவித்த மாத்ரமே யன்றியிலே, ‘“என்னிசைவினை”” (திருவா. 1 – 7 – 4) என்று இசைவு தானும்‌ தானேயாய்‌ நின்றவனுடைய க்ருஷி பலம்‌ என்கிறார் –

111-மாதவன்‌ மலை நீர்‌ நிழல்‌ என்றேறிடுமது, வ்யாவ்ருத்த் யுக்தி, அந்யார்த்தம்‌, அபுத்‌தி பூர்வகம்‌, அவிஹிதம்‌, பலவிஸத்‌ருஸம்‌, பலாந்தரஹேது.
ஆனாலும்‌ இவர்‌ தம்முடைய ப்ரபந்தத்திலே ஹேது ஸூசகமாகச் சில உக்திகள்‌ உண்டாயிரா நின்றதே என்னில்‌, அவையும்‌ ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும்‌ உப பாதிக்கிறார்‌ ( மாதவன்‌ என்று தொடங்கி). “மாதவனென்றதே கொண்டு என்னை யினி இப்பாற் பட்டது’” (திருவா. 2 – 7 – 3) என்றும்‌, “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால்‌ வந்தென்‌ தெஞ்சு நிறையப் புகுந்தான்‌ (திருவா. 10- 8- 1) என்றும்‌ இப்படி அந்தப்புரத்திலுள்ளார்‌ சொல்லும்‌ பாசுரத்தை அஹ்ருதயமாகச் சொன்ன வளவிலே இத்திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமத்துக்கும்‌ வாசி யறியாத என்னை விஷயீகரித்து என்‌ விரோதிகளைப்‌ போக்கினான்‌ என்றும்‌, திருமலையின்‌ பேரைச்‌ சொன்னேனாக ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன்‌ என்னுடைய அஹ்ருதயமான உக்தியையே பற்றாசாகக்‌ கொண்டு விஷயீகரித்தான்‌ என்றும்‌.
(நீர்‌ நிழல்‌ என்று) “என்னடியார்‌ விடாயைத்‌ தீர்த்தாய்‌ அவர்களுக்கு ஒதுங்க நிழல்‌ கொடுத்தாய்‌” என்றாப் போலே இவை விஷயீகார ஹேது வானாலோ என்னில்‌; மாதவன்‌, மலை என்றது இரண்டும்‌ வ்யாவ்ருத்த் யுக்தி- அதாவது – இந்தத் திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமங்களுக்கும்‌ வாசி அறிந்து ஸ்ரீயப்பதியுடைய திருநாமம்‌ என்று சொன்னதன்று-இப் பேருககும்‌ அப்பேருக்கும்‌ வேறுபாடு சொன்ன மாத்ரம்‌. ”திருமாலிருஞ்சோலைமலை”’ என்றது – ஸர்வேஸ்வரனுக்கு இது வஸ்தவ்ய பூ,மி என்று சொன்னதன்று; ஒரோ தேஸங்களில்‌ மலைகளைச்‌ சொல்லுவார்‌, “கொல்லி மலை”, *குலை மலை’ என்று சொல்லுவாரைப் போலே இம் மலைக்கும்‌ அம் மலைக்கும்‌ வேறுபாடு தோற்றச்‌ சொன்னவித்தனை.
(நீர்‌ நிழல்‌ என்னுமவை அந்யார்த்த,ம்‌) அதாவது – தன்‌ பயிருக்காக ஏற்றமிரைத்தும்‌ சூதுச துரங்கத்துக்காக விரிவுண்டாக அகம்‌ கட்டியும்‌ செய்கிறானத்தனைபோக்கி, பாகவதர்கள்‌ விடாய்‌ தீருகைக்கும்‌, ஒதுங்குவார்‌ ஓதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன்‌ அந்நீரிலே துளி நீர்‌ அள்ளக் காணுதல்‌, அந்நிழலிலே ஒருவன்‌ ஒதுங்கக்‌ காணுதல்‌ செய்யில்‌ தடியிட்டு விலக்குவர்களிறே. இவை யெல்லாம்‌ சேர அபுத்தி பூர்வம்‌ இந்த உக்தி வ்ருத்திகளிரண்டும்‌ இவர்க்கு புத்‌தி பூர்வமல்ல. (அவிஹிதம்‌) இவை தான்‌ மோக்ஷ ஹேதுக்களென்று ஸாஸ்த்ர விதியுமில்லை. (பல விஸத்‌ருஸம்‌) பகவத்‌ விஷயீகார மஹா பலத்துக்கு இவை ஸத்‌ருஸமுமன்று. (பலாந்தரஹேது] இவை உண்டாயிற்‌றாகில்‌ இப் பாலுண்டான அல்ப ப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாபலத்துக்கு ஹேதுவாகவும்‌ மாட்டாது. ஆகையால்‌ இவை ஹேதுவாகமாட்டாது –

இவன்‌ நடுவே அடியான்‌ என்று ஓலைப்படா ப்ரமாணம்‌ பக்ஷபாதி ஸாஷி வன் களவில்‌ அநுபவமாகிற இந்திர ஞாலங்கள்‌ காட்டிக்‌ கொள்ள காப்பாரற்று விதி சூழ்ந்தது.
இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில்‌ ““மதிநல மருளினன்‌?” (திருவா. 1 – 1 – 1) என்றும்‌, “ஓஒ? எண்டானுமின்றியே வந்தியலுமாறு’” (திருவா, 1 – 10 – 5) என்றும்‌, ““எனதாவி யுள் கலந்த”” (திருவா. 2 – 3 – 4) என்றும்‌, ”நீசனேன்‌ நிறை வொன்றுமிலேன்‌ என் கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்சோதி” (திருவா. 3 – 3 – 4) என்றும்‌, ‘“அதுவுமவனதின்னருனே” (திருவா. 8 – 8 – 3) என்றும்‌, “வெறிதே அருள் செய்வர்‌”” (திருவா. 9 – 7 – 8) என்றும்‌, “ இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள்‌ வைத்தான்‌”? (திருவார்‌. 10 – 8 – 8) என்றும்‌, “‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்‌” (திருவா. 5 – 7 – 3) என்றும்‌, “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – – 3) என்றும்‌, ‘“என்னைத்‌ தீ மனங் கெடுத்தாய்‌”’ (திருவா. 2 – 7 – 8) என்றும்‌, மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌?” (திருவா. 2 – 7 – 7) என்றும்‌, ““வரவாறொன்‌றில்லையால்‌ வாழ்வினிதால்‌”” (பெ.திருவ. 56) என்றும்‌ இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றருளிச்செய்த ஸ்வ வாக்யங்கள்‌ பலவற்றோடும்‌ வ்யாஹதமாமே.-இப்படி இவரை அஹேதுகமாக விஷயிகரிக்கnவேண்டுவானென்‌ என்னில்‌ “த்வம்‌ (ம அஹம்‌ மே” என்று ஸம்பந்தத்தை ஏறிட்டு இவரை வலியப் பிடிக்க, இவர்‌ இறாய்த்த விடத்திலும்‌ வழக்குப் பேசி, அவ்வளவிலும்‌ அகப்படாதொழிய, மஹாபலிக்குத் தன்‌ வடிவழகைக் காட்டி வஸீ கரித்து லோகத்தை அதிக்ரமித்துக் கொண்டாப் போலே தன்‌ வடிவழகைக் காட்டி இவரை வாய் மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால் கட்டிற்று என்கிறார் (இவன்‌ நடுவே அடியான்‌ என்று தொடங்கி). “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – 7 – 5) என்றும்‌, ”அடியானிவனென்‌றெனக்காரருள்‌ செய்யும்‌” (திருவா. 9 – 4 – 10) என்றும்‌ நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச் செய்தே “இவன்‌ என்‌ அடியான்‌” என்று பிடிக்க, அதுக்கு, இவர்‌ இசையாதொழிய, இவர்‌ இசைகைக்காக ‘“பதிம்‌ விஸ்வஸ்ய” இத்யாதிகளைக்‌ காட்ட, அது எழுதா மறையாகையாலே அது ஓலைப் படா ப்ரமாணம்‌ என்று அத்தையும்‌ இவர்‌ அந்யதாகரிக்க, இவர்‌ அடியானானமைக்கு தத்த்வ தர்மிகளான ஜ்ஞாநிகள்‌ ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும்‌ உனக்கு பக்ஷபாதிகள்‌ என்று ப்ரதி வசநம் பண்ண, ஆனால்‌ “இவ் வஸ்து உம்மதானபடி எங்ஙனே?” என்று பகவதபிப்ராயமாக, “அநுபவவிபவாத்‌”” என்கிறபடியே “அஹம்‌ மம” என்று அநாதி, காலம்‌ அநுபவித்துப் போந்தேன்‌ என்று ப்ரபல ப்ரமாணமான அநுபவத்தைக் காட்ட, ப்ரமாண ஸாக்ஷிகளும்‌ ஆக்ரோஸ முண்டாயிருக்கச் செய்தே அநுபவித்துப் போந்த இது ““வன்கள்வனேன்‌” (திருவா. 5 – 1 – 4) என்று ஸர்வஜ்ஞனானவனையும்‌ க்ருத்ரிமித்துப்‌ போந்தேன்‌ என்று விஷயீகாராநந்தரம்‌ தாமே பேசும்படி இவர்‌ க்ருத்ரிமத்திலே அநுபவித்தாராம்படி ‘*இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகுங்கொண்ட. நந்திரு மார்வன்‌”! (திருவா. 9 – 5 – 5) என்று ஐந்த்‌ரஜாலிகம்‌ காட்டுவாரைப் போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக் காட்டி, மன்னை மனங்கொள்ள வஞ்சித்து தெஞ்‌சுருக்கி’ ” (பெ. மடல் ) என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதியான மஹாபலியை வாய் மாளப் பண்ணி ஸகல ஜகத்தையும்‌ ஆக்ரமித்துக் கொண்டாப் போலே, வடிவழகைக் காட்டி வாய்மாளப்‌ பண்ணி விஷயீகரிக்கும்படி, (காப்பாரற்று) ”விதிவாய்க்கின்று காப்பாரார்‌ – ஐயோ கண்ண பிரான்‌ அறையோ இனிப் போனாலே”’ (திருவா. 5 – 1 – 1) எனறு – கிருபை பெருகுமிடத்தில்‌ க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா ப்ரேரிகையான அவள்‌ காக்கவோ? க்ருபா விஷயமான நான்‌ காக்கவோ? இந்த கருபையைத் தப்பி நீ போனாயாகில்‌ “அறையோ அறை” என்று நிவாரகரில்லாதபடி விதி சூழ்ந்தது. ”எதிர் சூழல்‌ புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – அம்மான்‌ திருவிக்கிரமனை விதி சூழ்ந்தது”” (திருவா. 2 – 7 – 6) என்று அநேக ஜந்மங்கள்‌ இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்து கொடு வந்து இவரை விஷியீகரிக்கும்படி விரோதி நிரஸந ஸீலனான ஸர்வேஸ்‌வரனை, இவரை விஷயீகரித்தல்லது நிற்க வொண்ணாத படியான க்ருபை கால் கட்டிற்று என்கிறார்‌

113-வரவாறில்லை, வெறிதே என்று அறுதி யிட்டபின்‌ வாழ் முதல்‌ என்கிற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை.
ஆகையாலே இவர் தாமே “நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌’ என்று அர்த்தத்தை அறுதியிட்ட பின்பு விஷயீகார ஹேதுவான ப்ரதம ஸுஹருதமும்‌ அவனை யல்லதில்லை என்கிறார்‌ மேல்‌ (வரவாறில்லை என்று தொடங்கி). “வரவாறொன்றில்லையால்‌ வாழ்‌வினிதால்‌”” (பெ. திருவ. 56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச்‌ செய்தே அப்பேறு மிகவும்‌ இனிதாயிருந்ததென்றும்‌, ““வெறிதே அருள் செய்வர்‌ செய்வார்கட்குகந்து”” (திருவா. 8 – 7 – 8) என்று ”செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள் செய்வர்‌’‘ என்கையாலே தான்‌ அங்கீகரிக்க வேண்டினார்க்குத்‌ திருவுள்ளத் தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ் விஷயீகாரம்‌ திர்ஹேதுக மென்று தாமே அறுதி யிட்டபின்‌ (வாழ்முதல்‌ என்ற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை) இவ் விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூல ஸூஹ்ருதம்‌ *‘பொழிலேமழுமேனமொன்றாய்‌ நுனியார்‌ கோட்டில்‌ வைத்தாய்‌ – தனியேன்‌ வாழ் முதலே”’ (திருவா. 2 – 3 – 5) என்று ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை நீருக்கும்‌ சேற்றுக்கும்‌ இறாயாத வடிவைக் கொண்டு உத்‌தரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவ மக்‌நனாய்‌ ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம ஸுஹ்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானை யொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்‌.

ஆக, இதுக்குக்கீழ்‌ இவருடைய ப்ரபாவத்தையும்‌, ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம்‌ என்னுமிடத்தையும்‌, அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும்‌, அந்த பக்தி தான்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையுமல்ல, அதுக்கடியான யாத்‌ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும்‌ அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –

114-நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.
ஆனால்‌, உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்‌யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக்‌ கண்டோம்‌, இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில்‌ பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில்‌, அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும்‌ ஸாதநம்‌ என்கிறார்‌ மேல்‌ (நலமருளினன்‌ என்று தொடங்கி). “மயர்வற மதிநலமருளினன்‌ ”‘ (திருவா. 1 – 1 – 1), “ஆவா வென்றருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 9), “’தானே இன்னருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 10), ‘“அதுவுமவனதின்னருளே”‘ (திருவா. 0 – ப – 3), ”என்கொலம்மான் திருவருள்கள்‌”‘ (திருவா, 10 – 7 -4) என்று ஜஞாந தஸையோடு, உபாயதஸையோடு, ப்ராப்தி தஸையோடு வாசியற ஆமூலசூடம்‌ அருளால்‌ ”மன்னு குருகூர்ச் சடகோபன்‌”’ (திருவா, 1 – 5 -11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார்‌ பிடி தோறும்‌ ‘நெய்‌’ என்னுமாப் போலே அவனுடைய அருளை யொழியச்‌ செல்லாத இவர்க்கு. (அன்புக் கடியானதுவே அடி சேருகைக்கும்‌ ஸாதநம்‌) ““அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

115-புணர்தொறுமென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌, மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல் மாபோகச் சிரமமாக.
இப்படி பரம க்ருபாவானானவன்‌ இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்‌லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம்‌ என்‌ என்னில்‌, இவர்க்கு தேஸ விஸேஷத்தில்‌ அநு பவம்‌ ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம்‌ செய்வித்தபடி என்கிறார்‌ (புணர்தொறும்‌ என்று தொடங்கி), “புணர்‌ தொறும்‌” (திருவா. 10 – 3 – 2) என்கிற பாட்டில்‌ ஸம்ஸ்லேஷிக்குந் தோறும்‌ அந்த ஸ்ம்ஸ்லேஷ்த்தின்‌ அளவல்லாத ஸுக ஸாகரம்‌, அபரிச்சிந்நமான ஆகாயத்தையும்‌ கடந்து அது தானும்‌ இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜஞாநமும்‌ தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமான அந்த ஸுகம்‌, அவனுடைய விஸ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்ந ஸமமாய்ப் போய்‌ அந்த ஸுகம்‌ போனவிடமெல்லாம்‌ வ்யாப்தமாய்க் கொண்டு அணு பரிமாணமான ஆத்மாவின்‌ அளவல்லாத அபிநிவேஸம்‌ பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஸ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஸ்லேஷித்து பக்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌ மாஸோபவாஸி போஜநப் புறப் பூச்சும் போலே) கனத்த பணிகளிடுகைக்குக்‌ காது பெருக்குவாரைப்‌ போலேயும்‌, மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஸநத்தை இடில்‌ ஸாத்மியா தென்று ஸரீரத்திலே அந்நத்தை அறைத்துப்‌ பூசியும்‌ கஞ்சியைக்‌ கொடுத்தும்‌, குழம்பு கொடுத்தும்‌ ஸாத்மிப்பிப்பாரைப் போலேயும்‌-
(ஆற்றநல்ல மா போகச் சிரமமாக) “*ஆற்ற நல்ல வகை காட்டுமம்மான்‌ ” (திரு-4-5-5) என்றும்‌, அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்தம்‌ அருளிச் செய்தாப் போலே எனக்கும்‌ ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னுடைய பரத்வாதிகளை அநுபவிப்பித்தான்‌ என்று இவர்‌ அருளிச் செய்தபடியே பகவதநுபவம்‌ என்று கனாக் கண்டறியாத இவர்க்கு “எம்மா வீடு”’ (திருவா. 2 – 9 – 1) என்றும்‌, “மா போகம்‌”’ என்றும்‌ சொல்லுகிறபடியே எல்லாப்படியாலும்‌ விலக்ஷணமாய்‌, ““கொள்ள மாளா இன்ப வெள்ளம்‌”” (திருவா. 4 – 7 – 2) என்கிறபடியே அதிஸயித ஜ்ஞாந ஸக்திகரான நித்ய ஸூரிகளாலும்‌ துலைத்தநுபவிக்க வொண்ணாதபடி அபரிச்சேத்‌யமாயிருக்கிற தன்னோட்டை அநுபவத்தை முதலிலே ப்ரகாஸிப்பிக்கில்‌ இவரைக் கிடையாதென்றும்‌, அவ்வநுபவம்‌ ஸாத்மிக்கைக்காகச்‌ சிரமம்‌ செய்வித்தபடி என்கிறார்-

116-இவற்றால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாநஸாநுஸந்தாநமும்‌ திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌.
இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச்‌ சொல்லுகிறவை எவை என்னில்‌, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும்‌, அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும்‌ என்கிறார்‌ மேல்‌ (இவற்றால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன- அந்த ஜஞாந பக்திகளை வளர்த்தத்தால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறனவை எவை என்னில்‌, (எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாதஸாநுஸந்தாநமும்‌) “கருத்துக்கு நன்றுமெளியனாய்‌”‘ (திருவா. 8 – 6 – 11), “நிற்கும்‌ முன்னே வந்து”‘ (திருவா-7 – 2 – 6), “கண்கள்‌ காண்டற்கரியனாய்‌”’ (திருவா. 3 – 6 – 11), ““கைக்குமெய்தான்‌” (திருவா. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருதயத்திலே மிகவும்‌ எளியனாய்க் கொண்டு என் முன்னே நிற்கும்‌ என்றும்‌, என்‌ கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன்‌ என்றும்‌ சொல்லுகிற ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாநஸாநுஸந்தாநமும்‌, (திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌) அந்த மாநஸாநுபவ வைஸத்‌யத்தாலே “என்‌ கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள்‌ அருளாயுன்‌ திருவுருவே”’ (திருவா. 5 – 10 – 7) என்று பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ணி அது கிடையாமையாலே அம் மாநஸாநுபவத்துக்கு வரும்‌ குலைதலும்‌ ்‌ என்கிறார்‌.-

117-புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌.
அபிமத விஷயத்தில்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும்‌ நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்‌; அந்த பாபங்கள்‌ வாஸனையோடே போகப்‌ பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும்‌ என்கிறார்‌. (புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை) “புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவென்றிவையாய்‌”’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு ) சார்ந்த இரு வல்வினைகளும்‌ சரித்து மாயப்‌ பற்றறுத்து”‘ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மங்களை விரகர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமாப்‌ போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஸ்வரன்‌ போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌) ப்ரிய பரனாய்க் கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்திப்பித்தும்‌ ஹித பரனாய்க் கொண்டு பக்தியை வர்த்திப்பித்தும்‌ போருகிற ஈஸ்வரன் தானே.[சிக்கென இத்யாதி,]துளக்கற்றமுதமாய்க் கொண்டு “எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”” (திருவா, 2 – 6 – 2) என்று விபூதி வ்யாபாரத்தை ஒருங்க விட்டுக் கொண்டு வந்து என்‌னுள்ளே சிக்கெனப்‌ புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞ்யனுமாய்‌, “விஜ்வர?? (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள் நடுக்கம்‌ தீர்ந்து நிரதிஸய போக்‌யனுமாய்‌ நாச்சிமாரையும்‌ புரிந்து பராமல்‌ என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக் கண்களும்‌ செவ்வி பெற்று இப்படி என்னுள்ளே இருந்தான்‌ என்றும்‌, *‘தழை நல்ல இன்பம்‌ தலைப்பெய்தெங்கும்‌ தழைக்கவே” (திருவா. 9 – 5 – 10) என்று ‘விஸ்லேஷ வ்யஸநத்தாலே நான்‌ முடியா நின்றேன்‌, என்னுடைய க்லேஸம்‌ கண்டு ஜகத்து கலேஸிக்க வேண்டாவே” என்றும்‌, தீப்பாய்வார்‌ “நாடு வாழ, நகரி வாழ ‘ என்று வாழ்த்துமாப் போலே “ஜகத்தெங்கும்‌ ஆநந்தமானது அபிவ்ருத்‌தமாயிருக்க‘ என்று தாம்‌ முடிகையிலே வ்யவஸிதராயும்‌ இப்படித்‌ தாமே பேசும்படி நடத்திக் கொண்டு போரும்‌ என்கிறார்‌.

118-ஜ்ஞாநத்தில்‌ தம் பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு.
ஆனால்‌ இவர்க்கு இந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சேது? ப்ரேம தஸையில்‌ பேச்சேது? என்னில்‌, ஜ்ஞாநத்தில்‌ தம்‌ பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு என்கிறார் –

119-தேறும்‌ கலங்கி என்றும்‌ தேறியும்‌ தேறாதும்‌ ஸ்வரூபம்‌ குலையாது.
பேச்சில்‌ வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில்‌ மாறாட்டமில்லை என்கிறார்‌ (தேறும்‌ கலங்கி என்று). “சிந்திக்கும்‌ திசைக்கும்‌ தேறும்‌ கை கூப்பும்‌’” (திருவா. 7 – 2 – 5), “கலங்கிக்‌ கை தொழும்‌ நின்றிவள்‌” (திருவா. 2 – 4 – 4) என்றும்‌, ‘‘தேறியும்‌ தேறாது மாயோன்‌ திறத்தனளே இத் திருவே” (திருவா. 4 – 4- 7) என்றும்‌ பிண்டத்வ-கடத்வ-கபாலத்வ காபாலிகத்வாத்‌,-யவஸ்தைகளில்‌ ம்ருத்தான ஆகாரம்‌ அநுவர்த்திக்குமாப் போலே தெளிந்த (தேறின – பா. போதோடு கலங்கின போதோடு வாசியற இரண்டவஸ்தையிலும்‌ அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு “அவனை யல்லதறியாள்‌” என்கையாலே ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையோடு ப்ரேம தஸையில்‌ பிராட்டிமார் பேச்சான அவஸ்தையோடு வாசியற சேஷத்வத்தில்‌ கலக்கமற்று ஏக ரூபமாயிருக்கு மென்கிறார்

120-அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌ அடிச்சியோம்‌ அடிக் கீழ்க்‌ குற்றேவலாகை அவஸ்தாந்தரம்‌.
ஆனால்‌ பின்னை அவஸ்தாந்தரம்‌ கூடின படி என்‌ என்னில்‌ (அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌ அடிச்சியோம்‌ அடிக்கீழ்க் குற்றேவலாகை அவஸ்தாந்தரம்‌) ஸ்வரூபத்திலும்‌ ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தி ப்ரார்த்தனையிலும்‌ வாசியில்லை. தம்‌ பேச்சும்‌ பிராட்டிமார்‌ பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-

121-வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.

வியன்துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு என்று தொடங்கி) ““வியன்துழாய்க்கற்பென்று சூடும்‌” (மூ.திரூவ. 69), “’ஆராரயில் வேற்கணஞ்சனத்தின்‌ நீறணிந்து’‘ (சி.மடல்‌),, “மெய்திமிரு நானப்பொடி “” (பெரியா.தி. 1-49), ‘“பெருமானரையில்‌ பீதக வண்ணவாடை” (நா.தி. 13 – 1), “பல்கலனும்‌ யாமணிவோம்‌”’ (திருப்பாவை 27) என்றும்‌,
“தம்‌ பஞ்சஸ தாந்ய ப்ஸரஸாம்‌ ப்ரதிதா வந்தி மதம்‌ மாலா ஹஸ்தா? ஸதம்‌ சூர்ண ஹஸ்தா? தம்‌ வாஸோ ஹஸ்தா?”’ (கெளஷீ- உப.) என்று குளக்கரையிலே பர்த்தாவினுடைய பந்துக்கள்‌ வந்து அலங்கரிக்குமாப்‌ பாலே திவ்யாலங்காரோப கரணங்களை ஏந்திக்‌ கொண்டு மானேய்‌ நோக்கிகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸூக்கள்‌ எதிரே வந்து “தம்‌ ப்‌,ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” (கெளஷீ- உப.) என்கிறபடியே பர விநியோகார்ஹமாம்படி அலங்கரித்து.(பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) இவர்கள் விஷயத்தில்‌ சாபலத்தாலே மங்களாஸாஸநம்‌ பண்ணிச்‌ சாமரமிட. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள] “நிதியும்‌ நற்சுண்ணமும்‌ நிறைகுடவிளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌”‘ (திருவா. 10 – 9-10) என்று மங்களாவஹமான மங்கள தீப பூர்ண கும்பங்களையும்‌ தரித்துக் கொண்டு. “சதிரிளமங்கையர்‌ தாம்‌ வந்தெதிர் கொள்ள”” (நா.தி. 6 – 5) என்று நித்ய நவயெளவந ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்‌ எதிர் கொள்ள.
(வைகுந்தம்‌ புக்கிருந்து) ‘“மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பார்‌” (நா.தி. 3 10) என்று ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரனோடே தேஸ விஸேஷ ப்ராப்திபண்ணி. (வாய்‌ மடுத்துப் பெருங் களிச்சியாக வானவர் போகமுண்டு) பின்பு பர்த்ரு க்‌ருஹத்திலே தம்பதிகளும்‌ மற்றுமுள்ள பந்துக்களும்‌ பெருங்களிச்சி யுண்ணக் கடவரிறே; அப்படியே ““அடியேன்‌ வாய் மடுத்துப் பருகிக்‌ களித்தேன்‌” (திருவா. 2 – 3 – 9) என்றும்‌, ““கட்டெழில்‌ வானவர்‌ போகமுண்பாரே”” (திருவா, 6 – 6 – 11) என்றும்‌ நித்ய ஸூரிகளுடைய போகத்தை அவர்களோடொக்க முழு மிடறு செய்து ““ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌ ஸஹ ப்‌ரஹ்மணா விபஸ்சிதா’‘ (தை. உப.) என்கிறபடியே புஜித்து.
(கோப்புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து) பின்பு பர்த்ரு ஸம்ஸ்லேஷத்துக்குப்‌ படுக்கையிலே ஏறக் கடவதிறே; அப்படியே ““கோப்புடைய சிங்காசனம்‌” ( திருப்பாவை 23) என்றும்‌, ““குத்துவிளக்கெரியக்‌ கோட்டுக்கால்‌ – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி”” (திருப்பாவை 19) என்றும்‌ சொல்லுகிறபடியே உபய விபூ,தியும்‌ தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஸ்சர்ய மயமான சீரிய சிங்காசனத்திலே “’தமேவம் வித்‌பாதே,நாத்‌, யாரோஹதி” (கெளஷீ. 1 – 5) என்கிறபடியே பாத பீடத்திலே அடியிட்டேறி,(பரதாக்ரூரமாருதிகளைப்‌ பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே) “அங்கே பரதமாரோப்ய முதித பரிஷஸ்வஜே”’ (ரா. யு. 130 – 41) என்றும்‌, “ஸோப்யேநம்‌ த்‌வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம்‌ பரிஷஸ்வஜே”” (வி.பு. 5 – 18 – 2) என்றும்‌, ““ஏஷ ஸர்வஸ்வபூ,தஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத?”’ (ரா. யு. 1 – 13) என்றும்‌, ஸ்ரீபரதாழ்வானையும்‌, அக்ரூரனையும்‌, திருவடியையும்‌ அணைத்த மணி மிகு மார்விலே – ஸ்ரீகௌஸ்துப,மும்‌ நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே, (குருமாமணியாயணையும்‌ வஸ்துவுக்கு) ஸ்லாக்‌யமாய்‌, ஸர்வேஸ்வரத்வ சிஹ்நமான அந்த ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி அவனுக்கு போக்‌யமுமாய்‌, தேஜஸ்கரமுமாய்க்‌ கொண்டு அணைகிற ஆத்ம வஸ்துவுக்கு. (மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று) ““வண்பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்‌”’ (திருவிரு. 9) என்று உதாரமாய்‌, அழகு மிக்கதாய்‌, ஸ்லாக்‌யமான கொடி போன்றவள்‌ என்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய்‌ வருகிற பேச்சு வந்தேறி யன்று, ஸ்வாபாவிகம்‌ என்கிறார்‌.

122-இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே.
கேவலம்‌ ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்‌தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப்‌ பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம்‌ உண்டென்கிறார்‌ (இன்பும்‌ அன்பும்‌ என்று தொடங்கி). (இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது) “நமக்கும்‌ பூவின் மிசை நங்கைக்குமின்பனை”’ (திருவா. ச – 5 – 8) என்று – இன்று ஆஸ்ரயித்த நமக்கும்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ அவ்வருகாய்‌, ரூப குணத்தாலும்‌ ஆத்ம குணத்தாலும்‌ பரிபூர்ணை யாயிருக்கிற பெரிய பிராட்டி யார்க்கும்‌ இன்பனாமிடத்தில்‌ “இங்கே இன்பனாயாய்த்துப்‌ பின்னே அவளுக்கு ஸ்நேஹிப்பது’ என்று பிராட்டிக்கு முன்னே தன்பக்கல்‌ இன்பனாவது, ‘*கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ?‘” (திருவா. 10 -10 -7) என்று – நிரதிஸய போக்‌ யதைக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு அன்பனாகையாலே அவள் பரிக்‌ரஹமான என் பக்கலிலும்‌ அன்பனானவன்‌ என்று பெரிய பிராட்டியார் பக்கல்‌ அவனுக்‌குண்டான அன்பு தம்மளவாக வர்த்திப்பதாய்‌, இப்படி இன்பு முற்படுவது, அன்பு கொழுந்து விடுவதாகிறது. (கடி மா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கததாலே) “காவியங் கண்ணி யெண்ணில்‌ கடி மாமலர்ப்பாவை யொப்பாள்‌” (திருமொழி 3 – 7 – 9) என்றும்‌, “காவி?” என்று செங்கழுநீராய்‌, செவ்வரியாலும்‌, கடைக் கண்ணில்‌ சிவப்பாலும்‌ செங்கழுநீர் போன்ற கண்ணழகை உடையள்‌ என்கையாலே ராகோத்தரமான ஜ்ஞாநத்தை உடையள்‌ என்றபடி.-இத்தால்‌ மேற் சொல்லப்படுகிற அநந்யார்ஹ ஸேஷத்வ ஜ்ஞாநாதி ஷட்கத்துக்கும்‌ உப லக்ஷணம்‌. அது என்‌ என்னில்‌, ”கடிமாமலர்ப்பாவை யொப்பாள்‌”’ என்று – இவளை ஆராயில்‌ பரிமள ப்ரசுரமான தாமரையை இருப்பிடமாக உடையளாய்‌, நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையளாகையாலே ரூப குணத்தாலும்‌, ஆத்ம குணத்தாலும்‌ பூர்ணையாய்க் கொண்டு நிரதிஸய போக்‌யையாயிருக்கிற பெரியபிராட்டியாரோடொக்கச்‌ சொல்லலாம்படியான அநந்யார்ஹ
ஸேஷத்வமும்‌, அநந்ய ஸரணத்வமும்‌, அநந்ய போக்யத்வமும்‌, ஸ்ம்ஸ்லேஷத்தில்‌ தரிக்கை, விஸ்லேஷத்தில்‌ தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வம்‌
என்கிற ஆறு ப்ரகாரத்தாலே என்கிறார்‌; இனி அபிமதத்வம்‌, அநுகூலத்வம்‌, நிருபகத்வம்‌, ஸேஷத்வ ஸம்பந்த த்‌வாராபாவம்‌, புருஷகாரத்வம்‌, ப்ராப்ய பூரகத்வம்‌ என்கிற இவை முதலான ஸ்வபாவ விஸேஷங்கள்‌ பெரியபிராட்டியாருக்கே அஸாதாரணமா யிருக்குமிறே

123-உண்ணாது கிடந்தோர் மாயையினால்‌ என்னும்‌ வீறுடைய முடிக்குரியாரோடு இத்திருமண்ணேரன்ன ஒண்ணுதல்‌ பின்னை கொல்‌ என்கிற ஒப்பு தென் பால்‌ நெடு மாடம்‌ கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறைழவெரித்த பெருந்தோற்றத் தாருயிர்க் காகுத்தன்‌ ஆதியங்கால மண்புரை பொன்மாதின்‌ துகளாடி எருதேழ்தழீஇச்‌ சறையினார்‌ என்னுமவற்றிலே தோன்றும்‌.
இப்படிப்‌ பெரியபிராட்டியாரோடு ஸாம்யம்‌ சொன்னவளவன்றிக்கே நிரதிஸய போக்‌யதையை உடைய பிராட்டிமார்‌ மூவரோடும்‌ இவர்க்கு ஸாம்யம்‌ உண்டு என்னுமாகாரம்‌ இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ (உண்ணாது என்று தொடங்கி). ‘“உண்ணாதுறங்கா தொலி கடலை ஊடறுத்துப்‌ பெண்ணாக்கை ஆப்புண்டு தாமூற்ற பேது” என்றும்‌, “’ந மாம்ஸம்‌ ராகவோ பு,ங்க்தே ந சாபி மது ஸேவதே”’ (ரா. ஸு, 36 – 41), ”அநித்‌ரஸ்ஸதம்‌ ராமஸ் ஸுப்தோபி ச நரோத்தம: (ரா.ஸு. 36 – 44), “நைவ தம்ஸாந் ந மஸகாதந் ந கீடாந்த ஸரீஸ்ருபாந்‌ ! ராகவோபநயேத்‌, கத்ராத்‌ தவத்‌ கதேநாந்தராத்மநா” (ரா.ஸு., 36 -42) என்கிறபடியே தீரோதாத்த நாயகனான சக்ரவர்த்தித் திருமகனையும்‌ தன்னுடைய விஸ்லேஷத்தில்‌ ஊணுமுறக்கமுமற்று, கடித்ததும்‌, ஊர்ந்ததும்‌ அறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷ்ண்யத்தால்‌ வந்த வீறுடையளாய்‌, ஸர்வேஸ்வர ஸாம்ராஜ்யத்தில்‌ அவனோடொக்க அபிஷிக்தை யாகையாலே முடிக்குரியளா யிருக்கிற ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடும்‌, “கிடந்திருந்து நின்றளந்து ” (திருவா. 2 – 8 – 7) என்கிற பாட்டின் படியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரனையும்‌, பஹு ப்ரகாரமாகத்‌ தன்னை அநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகாதபடி பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்ப்‌ பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீபூமிப் பிராட்டியாரோடும்‌.(ஓர்‌ மாயையினால்‌ இத்யாதி,) நித்ய ஸூரிகள்‌ ஸமாராதந பரராய் நிற்க, அவர்களையும்‌ உபேக்ஷித்துத்‌ தாழ்வுக் கெல்லையான இடைக் குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து, அவள் தன்னைப்‌ பெறுகைக்கு ஸூல்கமாக இட்டு ம்ருத்யு ஸமங்களான ருஷபங்களின்‌ கொம்பிலே கருமாறிப் பாய்ந்தாப் போலே தன்னைப் பேணாமல்‌ சென்று விழும்படி அவனைப் பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்‌ அவர்களோபாதி முடிக்குரியளான நப்பின்னைப் பிராட்டியோடும்‌.
(இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல்‌ என்கிற் ஒப்பு) “’தேறியும்‌ தேறாதும்‌ மாயோன் திறத்தனளே இத்திருவே”’ (திருவா. 4 – 4 – 7), “மண்ணேரன்ன ஒண்ணுதலே ”’ (திருவிரு. 50), பின்னை கொல்‌ நில மா மகள் கொல்‌’‘ (திருவா. 6 – 5 – 10) என்று தேறின தஸையோடு தேறாத தஸையோடு வாசியற ““அநத்யா ராக, வேணாஹம்‌”” (ரா. ஸு. 21 – 16) என்கிறபடியே அவனை யல்லது அறியாள்‌ இத்திரு என்றும்‌, ஸ்ரீபூ,மிப்பிராட்டி யாரோடொத்த வைலக்ஷ்ண்யத்தை உடையாள்‌ என்றும்‌, ‘நப்பின்னைப் பிராட்டியாரோ? ஸ்ரீபூமிப்பிராட்டியாரோ? பெரிய பிராட்டியாரோ?’ என்று விகல்பிக்கலாம்படி இவர்க்குண்டான ஸாம்யம்‌-(தென்பால்‌ இத்யாதி, ) “தென்பால்‌”’ (திருவிரு. 77), “இலங்கைக்குழா நெடுமாடம்‌ இடித்தபிரானார்‌ கொடுமைகளே”‘ (திருவிரு. 36), ““காயுங்கடுஞ்சிலை என்‌ காகுத்தன்‌ வாரானால்‌”‘ (திருவா. 5 – 4- 3), “இலங்கைநகர்‌ அம்பெரி உய்த்தவர்‌” இத்யாதி, (திருவா. 4-2- 8), ‘தீழுற்றத் தென்னிலங்கை ஊட்டினான்‌ தாள்‌ நயந்த யாமுற்றதுற்றுயோ? (திருவா. 2 – 1 – 3), “மாறில்‌ போரரக்கன்‌’” இத்யாதி, (திருவா. 6 – 1 – 10) ”கினிமொழியாள் காரணமா?’ இத்யாதி, (திருவா. 4 – 8 – 5), ““என்னாருயிர்க் காகுத்தன்‌” இத்யாதி, (திருவா. 9 – 5 – 6) என்று சக்ரவர்த்தித் திருமகனான அவ் வவதாரத்தையும்‌, அவ் வவதாரத்‌திலுண்டான அபதாநங்களையும்‌ அநுபவிக்கவேணும்‌ என்று ஆசைப்பட்டுப்‌ பேசின இப்பாசுரங்களிலும்‌ -(ஆதியங்காலம்‌ இத்யாதி,) ““ஆதியங் காலத்தகவிடங் கீண்டவர்‌”” (திருவா. 4 – 2 – 6), “மண்புரை” இத்யாதி, (திருவா. 6 – 6 – 5), “மண்ணளந்த – செவ்வாய்‌ ”” இத்யாதி, (5 4 – 4), ““ஞாலப் பொன் மாதின்‌ மணாளன்‌” இத்யாதி, (திருவிரு. 50), “ஏனமொன்றாய்‌ மண்துகளாடி”’ இத்யாதி, (திருவிரு. 55) என்று ஸ்ரீவராஹ ப்ராதுர் பாவத்தையும்‌ அதில்‌ அபதாநங்களையும்‌ அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இவர் பாசுரங்களிலேயும்‌.-(எருதேழ்தழீஇச்சறையினார்‌ இத்யாதி,) ““எருதேழ்தழீஇ” (திருவா. 4 – 2 – 5) என்று தொடங்கி *‘நாளு நாள்‌ நைகின்றதால்‌”” என்றும்‌, ‘“நிறைவினால்‌ குறைவில்லா” (திருவா, 4 – 8 – 4) என்று தொடங்கி *’சறையினார்‌ கவராத தளிர் நிறத்தால்‌ குறைவிலமே”” என்று நப்பின்னைப் பிராட்டியார்‌ ஆசைப்பட்ட க்ருஷ்ணாவதாரத்தையும்‌, அதில்‌ அபதாநங்களையும்‌ அநுபவிக்க ஆசைப்பட்டுப்‌ பேசின இப் பாசுரங்களிலேயும்‌ ப்ரகாஸிக்குமென்கிறார்-

124-இவர்கள்‌ தேடி நிற்கப்‌ பொய்கை முதுமணல்‌ முற்றம்‌ முல்லைப்‌ பந்தல்‌ வாரிச் சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்து மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு கோயின்மை குறும்பு செய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரும்‌ உகக்கு நல்லவர்‌ மூழுசி ஆவரென்னும்‌ தேன்‌ மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிரந்தார் பாவம்‌ கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறற்கஞ்சனை மங்கநூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்‌நிலே தோன்றும்‌.
அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும்‌ உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவமும்‌, அவர்களையும்‌ தங்கள்‌ பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும்‌, நரகவத,அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பதினாறாயிரம்‌ தேவிமார்களுடைய பாவமும்‌ இவர்க்குண்டான ஆகாரம்‌ இவர் பேச்சிலே தோன்றும்‌ என்கிறார்‌ (இவர்கள்‌ தேடிநிற்க என்றுதொடங்கி)–“தேடித் திருமாமகள்‌ மண்மகள்‌ நிற்ப”? (திருமொழி 10 – 8 – 9) என்று இப்படி ப்ரதாந மஹிஷிகளான இவர்களும்‌ தேடி நிற்கும்படி இவர்களை உபேஷித்து வந்து, (பொய்கை முது மணல்‌ முல்லைப் பந்தல்‌ முற்றம்‌ மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு வாரிச்‌ சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்துக்‌ கோயின்மை குறும்புசெய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரூமூகக்கும்‌ நல்லவர்‌) (பொய்கை) !”இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்‌”: (நா. தி. 3 2), “மூத்தவை காண முதுமணற்குன்றேறி”” (பெரியா. தி. 1 – 10 – 8) , “முல்லையின்‌ பந்தர் நீழல்‌ மன்னி அவளைப்‌ புணரப் புக்கு”” (பெருமா.தி. 6 – 8), “முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப்‌ புன்முறுவல்‌ செய்து”? (நா. தி. 2 – 9), “மச்சொடு மாளிகையேறி’” (பெரியா. தி. 2 – 7 – 3), “அவ்வவ்விடம் புக்கவ்வாயர்‌ பெண்டிர்க் கணுக்கனாய்‌”’ (பெரியா. தி. 3 – 2 – 5) என்று அவர்கள்‌ ஜலக்ரீடை பண்ணுமிடம்‌, அவர்கள்‌ விளையாடுமிடம்‌, அவ்வோவிடங்களிலே புக்கு-“துகில் வாரியும்‌ சிற்றில்‌ சிதைத்தும்‌”” (திருமொழி 3 – 8 – 8), ““பந்து பறித்துத்‌ துகில்‌ பற்றிக்‌ கீறி” (திருமொழி 10 – 7 – 5) என்றும்‌ அவர்களுடைய துகிலை வாரியும்‌, அவர்களுடைய லீலா ஸ்தாநங்களை அழித்தும்‌, அவர்களுடைய வீலோபகரணங்களைப்‌ பற்றிக்‌ கொண்டும்‌, ‘“கோயின்மை செய்து கன்மமொன்றில்லை” (திருவா. 6 – 2 – 6), “குறும்பு செய்வானோர்‌ மகனைப்பெற்ற”? (நா. தி. 12 – 3), ‘“கொள்ளை கொள்ளிக் குறும்பனை”’ (நா. தி, 13 – 8) என்றும்‌, அராஜகமாய்‌, ஸ்வதந்த்ரமான செயலைச் செய்து, “அல்லல்‌ விளைத்த பெருமான்‌?” (தா. தி. 13 – 10) என்கிறபடியே ஆரவாரத்தை விளைத்து-“முன்கைவளை கவர்ந்தாய்‌”” (திருமொழி 10 – 9 – 2), “நீ உகக்கு நல்லவரொடுமுழிதந்து “‘ (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ அவன்‌ இப்படி மேல் விழ வேண்டும்படியான வைலக்ஷ்ண்‌யத்தை யுடைய திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவம்‌. (கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய் மரு பேய் முலை முன்னின்று) என்று – “துஷ்ட காளிய திஷ்டராத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”’ (வி. பு. 5 – 13 – 27), “க்ருஷ்ணோஹமேஷ லலிதம்‌ வ்ரஜாம்யாலோக்ய தாம்‌ கதிர” என்று அவர்கள்‌ அநுகரித்தாப் போலே ““கடல் ஞாலம்‌ செய்தேனும்‌ யானே யென்னும்‌”” (திருவா. 5 – 6 – 1) என்று இவரும்‌ அநுகரிக்கையாலும்‌, *மின்னிடை மடவாரிலே அவனோடே ஊடுகையாலும்‌, *மல்லிகை கமழ்‌ தென்றலிலே பகல் போதெல்லாம்‌ பசுமேய்க்கப் போன க்ருஷ்ணனைப்‌ பசுக்களின்‌ முற்கொருந்தில்‌ காணாதே பிற்கழையிலே வருமளவில்‌ பற்றாமல்‌ ஒரு ஸந்த்‌யையில்‌ திருவாய்ப்பாடியில்‌ பஞ்ச லக்ஷம் குடியில்‌ பெண்களுடைய ஆற்றாமையை இவரொருவரு முடையராய்க் கொண்டு பேசுகையாலும்‌, *வேய்மருதோளிணையில்‌ ராத்ரியெல்லாம்‌ க்ருஷ்ண ஸம்ஸ்லேஷம்‌ ப்ரவ்ருத்தமாய்‌ அவன்‌ பசு மேய்க்கப் போகிற ப்ராதசகாலம்‌ வந்தவாறே அவன்‌ அணைத்துக் கொண்டிருக்கச் செய்தேயும்‌, அவன்‌ விஸ்லேஷித்தானாக அதிசங்கைபண்ணி அவனுடைய முகத்தைப்‌ பார்த்துத்‌ தம்முடைய ஆற்றாமையைப்‌ பேசுகையாலும்‌, *“பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து” (திருவா. 5 – 3 – 8), “முனிந்து சகடமுதைத்து”” (திருவா. 7 – 3 – 5) என்கிற பாட்டுக்களிலே பூதநா சகட யமளார்ஜுநாதிகளை நிரஸித்த க்ருஷ்ணனை கிட்டுவதென்றோ என்றும்‌, அப்படிப்பட்ட க்ருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தைத்‌ தோற்றேன்‌ என்றும் சொல்லுகிற பேச்சுக்களிலே இவர்க்கு உண்டென்னுமாகாரம்‌ தோன்றும்‌.
(முழுசியாவரென்னும்‌ தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ என்று) க்ருஷ்ணன்‌ ஸ்ரீமாலாகார க்ருஹ்த்திலே திருமாலை சாத்தி, கூனி பக்கலிலே சாந்து சாத்தி, ராஜ மார்க்கத்தாலே எழுந்தருளி, குவலயாபீட நிரஸநம்‌ பண்ணி நின்றருளின போது, ““முழுசி வண்டாடிய தண்டுழாய்‌”’ (திருமொழி 2 – 8 – 7), ““ஆவரிவை செய்தறிவார்‌ (திருமொழி 3 – 3 – 7) என்கிற பாட்டுக்களில்‌ சொல்லுகிறபடியே “ஸக்‌ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணே க்ஷணம்‌ ! கஜயுத்‌த க்ருதாயாஸஸ் வேதாம்பு கணிகாசிதம்‌’” (வி. பு. 5 – 20 – 54) என்று ஒப்பனை யழகிலும்‌, வடிவழகிலும்‌, குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும்‌ தோற்று, “மழறு தேன் மொழியார்கள்‌’” (திருவா. 6 – 2 – 8) என்று அந்யோந்யம்‌ தங்களிலே பேசுகிற மழலைத் தேன் போலே இனிதான பேச்சுக்களினாலே ““மதுராம்‌ ப்ராப்ய கோவிந்த கதம்‌ கோகுலமேஷ்யதி ! நகர ஸ்த்ரீகலாலாபமது ஸ்ரோத்ரேண பாஸ்யதி” (வி. பு. 5 – 18 – 14) என்று கோகுலத்தில்‌ பெண்கள் தானே பேசும்படி அவனை அந்த கோகுலத்தை மறக்கும்படி பண்ணும்‌ ஸ்ரீமதுரையில்‌ பெண்களுடைய பாவம்‌.
(மற்பொரு விறல் கஞ்சனை)”மற்பொரு தோளுடை – மாயப் பிரானுக்கு” (திருவா. 6 – ப – 10) இத்யாதி – சாணூர முஷ்டிக நிரஸநம்‌ பண்ணின ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனுககு அறிவை யுடையளான என்னுடைய பெண் பிள்ளை எல்லாத்தையும்‌ இழந்தாள் என்றும்‌, ““விறற் கஞ்சனை வஞ்சனை செய்தீரும் மைத்தஞ்சமென்றிவள்‌ பட்டனவே”’ (திருவா. 2 4 – 8) என்று பெரு மிடுக்கனான கம்ஸனை நிரஸித்த உம்மைத் தஞ்சமென்று விஸ்வஸித்த இவளை நீர்‌ இப்படிப்‌ படுத்துவதே என்றும்‌, சாணூர முஷ்டிகரையும்‌ கம்ஸனையும்‌ நிரஸித்து நின்ற க்ருஷ்ணனை ஆசைப்படுகையாலே இவர்க்கு உண்டென்னுமாகாரம்‌ தோன்றும்‌.
(நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிறந்தார் பாவம்‌) ‘நரகனைத் தொலைத்த கரதலத்த மதியின்‌ கருத்தோ?” (திருமொழி 10 – 9 – 4), மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல்‌ வண்ணன்‌”? (பெரியா. தி. 4 – 3 – 4) என்றும்‌, ‘“பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணிசெய்ய” (நா. தி. 7 – 9), “பல்லாயிரம்‌ பெருந்தேவிமார்‌” (பெரியா. தி. 4- 1 – 6) என்று நரகாஸூரவத அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த பதினாறாயிரம்‌ தேவிமார் பாவமும்‌. (மங்க நூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்றிலே தோன்றும்‌) ““நூற்றுவரை அன்று மங்க நூற்ற” (திருவா. 7 – 3 – 10) இத்யாதி, – துர்யோதநாதிகள்‌ மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணன்‌ என்‌ நெஞ்சை அபஹரித்தான்‌ என்றும்‌, ‘“குரரி விலபஸி த்வம்‌ வீத நித்‌ரா ந ஸேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யா மீஸ்வரக்‌ ரஸ்த போதே, ! வயமிவ ஸகி, கச்சித்‌ காட நிர்விண்ண சேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந ” (பாக,.10) இத்யாதிகளால்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பெண்கள்‌ க்ருஷ்ண விஷயத்திலே பேசினாப் போலே *வாயுந்திரையுகளிலே நாரை அன்றில்‌ தொடக்கமானவற்றுக்கு தாவள்யாதி ஸ்வபாவங்கள்‌ நியதம்‌ என்றறியாதே அவையும்‌ தம்மைப் போல்‌ நோவு படுகிறனவாகக் கொண்டு தாம்‌ நோவு படுகையாலும்‌, *தீர்ப்பாரை யாமினியிலே ‘*தேர்ப்பாகனார்க்கிவள்‌ சிந்தை துழாய்த் திசைக்கின்றதே ” (திருவா. 4 – 6 – 1) என்று அவனுடைய ஸாரத்‌ய வேஷத்தில்‌ அகப்பட்டு இவள்‌ நெஞ்சு கலங்கினாள்‌ என்று தொடங்கி, ““’வண்டுவராபதி மன்னனை ஏத்துமின்‌” (திருவா. 4 – 6 10) என்று ஸ்ரீமத்‌ த்‌வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களா ஸாஸதம்‌ பண்ணவே இவர் வ்யாதி பரிஹ்ருதமாம்‌ என்று தலைக் கட்டுகையாலே இவர்க்கு உண்டானமை தோன்றும்‌.

125–இரானெனில்‌ ந ச வாகக் குழைத்தவன்‌ பின் தொடர விருந்த வன் சிறையிலும்‌ விதி,தன்‌ புணை என்று ஜீவிதாதிகளால்‌ குறைவின்றி மாயும் வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி வில் வலவா ஹா என்று இரக்கமெழாக் கொடுமைகள்‌ ஸங்கித்து என்னையும்‌ ஜீவந்தீம்‌ என்று ஆள் விட்டுச்‌ சுடரை யடைந்து அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.
ஆகக் கீழ்‌, ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும்‌ மற்றும்‌ பகவத் பரிக்‌ரஹ முடையாரோடும்‌ ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும்‌ இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய்‌ ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார்‌ (இரானெனில்‌ ந ச ஆக என்று தொடங்கி). ‘“மராமர மெய்த மாயவன்‌ என்னுளிரானெனில்‌ பின்னை யானொட்டுவேனோ ”‘ (திருவா. 1- 7- 6) என்றும்‌, ““ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ ! மூஹூரர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்‌ த்‌ருதெள’* (ரா. ௮.) என்று சக்ரவர்த்தித் திருமகனைப் பிரியில்‌ ஜலாதுத த்‌ருதமான மத்ஸ்யம் போலே முடியும்படியான பிராட்டியைப் போலே, இவரும்‌ அவனைப் பிரியில்‌ தாம்‌ உளராகாதபடி “*இலங்கை செற்றாய்‌ உன்னை என்னுள்ளே குழைத்த வெம் மைந்தா”” (திருவா. 2 – 6 – 9) என்று இவரோடு ஏக தத்த்வ மென்னலாம்படி ஸம்ஸ்லேஷித்த சக்ரவர்த்தித் திருமகன்‌ லங்கா த்‌வாரத்தளவும்‌ அவளைத் தேடிப் பின்‌ தொடர்ந்தாப் போலே *““எதிர் சூழல் புக்கு’ (திருவா. 2 – 7 – 6) என்று இவர் பிறந்த ஜந்மங்கள் தோறும்‌ தானும்‌ பின் தொடரும்படி அவள்‌ ராவண பவநத்திலே சிறை யிருந்‌தாப் போலே இவரும்‌ “வன்சிறையில்‌ அவன் வைக்கில்‌’” (திருவா. 1 – 4 – 1) என்று ஸம்ஸாரத்திலே சிறையிருந்த விடத்தில்‌ ப்ரதிகூலனான ராவணனுக்கு “‘விதிதஸ்ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்ஸல:। தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி”’ (ரா. ஸு. 21 – 20) என்று ஹிதம்‌ சொன்னாப் போலே இவரும்‌ ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளுக்கு புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே’‘ (திருவா. 2 – 8 – 1) என்று ஹிதமருளிச்‌ செய்கையாலும்‌.(ஜீவிதாதிகளால்‌ குறைவின்றி)“ந ஹி மே ஜீவிதே நார்த்தோ நை வார்த்தைர்‌ ந ச பூஷணை??’ (ரா. ஸு.)என்று மஹா ரதரான சக்ரவர்த்தித் திருமகனை யொழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு என்‌ ஆத்மாத்மீயங்களால்‌ என்ன ப்ரயோஜநம்‌ உண்டென்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தாப் போலே ”மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலமே”” (திருவா. 4 – 8 – 1) என்று தொடங்கி, ”உயிரினால்‌ குறைவிலமே””, (திருவா. 4 – 8- 10), “உடம்பினால்‌ குறைவிலமே”‘ (திருவா, 4 – 8 – 9 9) என்று இவரும்‌, அவனுக்குறுப்பல்லாத நானும்‌ என்னுடைமையும்‌ வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும்‌. (மாயும்‌ வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி) “மாயும்‌ வகை யறியேன்‌ வல் வினையேன்‌”? (திருவா-4 – 8 – 1) என்றும்‌, ‘“விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கஸ்சித்‌ ஈஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய ”” (ரா.ஸு.) என்று உயிர்க் கொலையாக்கி வைத்த ராவண க்‌ருஹத்திலே நற் கொலையாக்குவ தித்தனை விஷம்‌ தருவாரில்லையோ? விஷம் போலே நின்று கொல்லுகை யன்றிக்கே அப்போதே முடிப்பதொரு ஸஸ்த்ரம்‌ தருவாரில்லையோ? என்று பிராட்டி முடியும்‌ வகை தேடினாப் போலே இவரும்‌ மாயும்‌ வகை தேடுகையாலும்‌ (வில் வலவா ஹா என்று) ”புணரா நின்ற மரமேழன்றெய்த ஒரு வில் வலவாவவோ”? (திருவா. 6 – 10 – 5) என்று – “ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸுமித்ரே ஹா ராம மாதஸ் ஸஹ மே ஜநந்யா । ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க, பாஹோ ஹா பூர்ண சந்த்‌ர ப்ரதிமாந வக்தர”’ (ரா.ஸு.), “ஹா ஜிவ லோகஸ்ய ஹித ப்ரியஸ்ய வத்‌யம்‌ ந மாம்‌ வேத்ஸி ஹி ராக்ஷஸாநாம்‌”” (ரா. ஸு.) என்று பிராட்டி பெருமாளுடைய சவ்ர்யாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிட்டாப் போலே இவரும்‌ கூப்பிடுகையாலும்‌.(இரக்கமெழாக் கொடுமைகள்‌ ஸங்கித்து) ”க்‌,யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞஸ்ச ஸாநுக்ரோஸஸ் ச ராகவ? | ஸத்‌ வ்ருத்தோ நிரதுக்‌ரோ ஸஸ்ஸங்கே மத்‌ பாக்‌ய ஸங்ஷயாத்‌” (ரா.ஸு.]என்று பெருமாளை நிர்க்‌ருணாராக ஸங்கியா நின்றேன்‌, என்னுடைய பாக்‌ய ஹாநியாலே என்று பிராட்டி அப்படி ஸங்கித்தாப்போலே, இவரும்‌ ”இரக்கமெழீரிதற்கென்செய்கே ன்‌” (திருவா. 2 ௨4 – 3) என்றும்‌, ‘“இலங்கைக் குழா நெடு மாடம்‌ இடித்த பிரானார்‌ கொடுமைகளே?”? (திருவிரு. 36) என்றும்‌, ”அறிவொன்றும்‌ சங்கிப்பன் வினையேன்‌ ‘‘ (திருவா. 9 – 1 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே அவரை நிர்க்ருணராக ஸங்கிக்கையாலும்‌, (என்னையும்‌ ஜீவந்திமென்று ஆள்விட்டு) ”ஜீவந்திம்‌ மாம்‌ யதா ராமஸ் ஸம்பா வயதி கீரத்திமாந்‌ | தத்த்வயா ஹநுமந்‌ வாச்யோ வாசா தர்மமவாப்றுஹி’” (ரா.ஸு.) என்று தம்முடைய ரக்ஷ்ய வர்க்க,த்திலே நானுமொருத்தி உளேனாகப் பெருமாளுக்கு விண்ணப்பம்‌ செய்‌ என்று பிராட்டி ஆள்விட்டாப் போலே, இவரும்‌ ‘“மாறில் போரரக்கன்‌ மதிள்‌ நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்கள்‌’” (திருவா. 6 1 – 10) என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவர்க்கு ஆர்த்தரிலே நானும்‌ ஒரு ஆர்த்தை யுளேனாகச்‌ சொல்லுங்கோள்‌ என்று பிராட்டியைப் போலே சதுஷ்பாத்தா யிருப்ப தொன்றைத் தூதுவிடுகை யன்றிக்கே ஷட் பத,ங்களாய்‌, பக்ஷ பாதத்தை உடையனவாய்‌, ஸாகா ஸஞ்சாரிகளாய்‌, மதுகர வ்ருத்திகளுமாய்‌, அத ஏவ ஸாரக்‌ராஹிகளாயிருப்பார்‌ பலரையும்‌ தூது விடுகையாலும்‌. (சுடரை யடைந்து) “ அநந்யா ராகவேணாம்‌ பாஸ்கரேணே ப்ரபாயதா” (ரா.ஸ. 21 – 15) என்று பிராட்டி தன்னை அநந்யையாகப்‌ பேசினாப் போலே, இவரும்‌ “அரக்கியை மூக்கீர்ந்தாயை சுடரை – அடியே னடைந்தேன்‌ முதல் முன்னமே”’ (திருவா. 2 – 3 -6) என்று தம்மை அநந்யார்ஹமாகப்‌ பேசுகையாலும்‌.-(அகலகில்லா)’அகலகில்லலே னிறையுமென்றலர்மேல் மங்கை யுறை மார்பா”‘ (திருவா. 6 – 10 – 10) என்று பெரிய பிராட்டியார்‌ அவனுடைய திருமார்வைப் பறறி அகல ஸக்தை யல்லே னென்னுமாப் போலே, “அடியேனுனபாத மகலகில்லேன்‌” (திருவா. 6 – 10 -9) என்று இவரும்‌ அவன் திருவடிகளைப் பற்றி அகல ஸக்தனல்லேனென்கையாலும்‌ முற்றுவமை *பெரு மகள் பேதை மங்கை தன்னோடே என்கிறார்‌. அவள்‌ மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்‌; இவர்‌ தாளைப் பற்றி அகலகில்லேனென்பர்‌. இதுவே இருவர்க்கும்‌ வாசி. ஆனாலும்‌ அவளைப் பற்ற இவர்க்குக்‌ கால் கூறு ஏற்றமுண்டிறே –

126-பிரியிவிலேனுக்கு இளங்கோவும்‌ அக் குளத்தில்‌ மீனிறே.
இனிமேல்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்‌ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி-அர்ஜுநன்‌ என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்‌.-(பிரியிலிலேனுக்கு) அவனைப் பிரியுமளவில்‌ ‘‘நின்னலாலிலேன்‌ காண்‌”” (திருவா. 2 – 3 – 7) என்று இவரைப் போலே ஸத்தை அழிகைக்கு (இளங்கோவும்‌) “*நேரிழையுமிளங்கோவும்‌’‘ (பெருமா.தி. 9 – 2) என்றும்‌, “ந சாஹமபி ராகவ”’ (ரா.அ.53-31) என்று – பிராட்டியோ டொக்கத்‌ தம்மை ஏக ப்ரக்ருதியாகச்‌ சொன்ன இளைய பெருமாளும்‌. (அக் குளத்தில்‌ மீனிறே) கீழ்‌ ப்ரஸ்துதமான ஜலாந்‌ மத்ஸ்யமிறே.-இத்தால்‌ அவனைப் பிரியில்‌ தரியாமைக்குப்‌ பிராட்டியும்‌ இளைய பெருமாளும்‌ இவருமொக்குமென்றபடி. இத்தால்‌ இளைய பெருமாள் ஸாம்யம்-

127-அழுந்தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்‌களில்‌ கூவிக் கொள்ளும்‌ பிரியா வடிமைக்குச்‌ சரணே சரண்‌ என்று வாளும்‌ வில்லுங் கொண்டு பந்துவும்‌ பிதாவுமவரே என்கையும்‌, அன்னை யென் செய்யிலென்‌ ராஜ்யமும்‌ யானே என்று பெருஞ்‌ செல்வமும்‌ இச்சியாமல்‌ வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும்‌ கண்ண நீர்‌ பங்கமாக நிலந் துழாவிக்‌ குடிக் கிடந்த கையறவும்‌ கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள்‌ நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்‌ராதாக்கள்‌, அப்பொழுதைக்கப் பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌, செந்தீ தண் காற்று இள நாகம்‌ முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும்‌ பள்ளிப்‌ பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும்‌ தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம்‌ கற்பார்‌ பாவம்‌ மற்றிலேன்‌ என்னும்‌ ராம தாஸன்‌ பல்வகையும்‌ கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌ முதலானார் படிகளும்‌ காணலாம்‌.

அழுந் தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே) ”பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்‌த(ரா. பா, 18 – 27) என்றும்‌, ”பாஷ்பபர்யாகுலமுக,?”‘ (ரா. ௮. 33 – 1) என்றும்‌, ‘*ப்ரஹ்‌வாஞ்ஜலிபுடம்‌ ஸ்திதம்‌” (ரா. ௮. 16 – 26) என்றும்‌ இளைய பெருமாள்‌ பெருமாளைப்‌ பிரியில்‌ தரியாத ஸ்நேஹத்தாலே கண்ணும்‌ கண்ண நீருமாய்‌, அஞ்ஜலி ஹஸ்தராய்க்‌ கொண்டு ‘‘குருஷ்வ மாமநுசரம்‌ வைதர்ம்யம்‌ நேஹ வித்யதே’‘ (ரா. ௮. 31 – 24) என்றும்‌, ““ஸ்வயந்து ருசிரே தேஸே கரியதாமிதி மாம்‌ வத,” (ரா. ஆ, 785 – 7) என்றும்‌, “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ! அஹம்‌ ஸர்வம்‌ கரிஷ்யாமி ஜாக்‌ரதஸ் ஸ்வபதஸ்ச தே” (ரா. அ. 31 – 27) என்றும்‌ சொல்கிறபடியே என்னை அநு சரனாகப்‌ பண்ண வேணுமென்று ப்ரார்த்தித்துச் செய்கிற அடிமைக்கு உபாயமாக “’ஸ ப்‌ராதும் சரணெள காடம்‌ நிபீட்‌ய ரகுநந்தநச । ஸீதாமுவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம்‌’ ்‌ (ரா. அ. 31 – 2) என்று நாச்சியார்‌ புருஷகாரமாகத்‌ திருவடிகளைக்‌ கட்டிக் கொண்டு ”அக்‌ரத? ப்ரயயெள ராமஸ் ஸீதா மத்‌யே ஸுமத்‌யமா। ப்ருஷ்டதஸ்ச தநுஷ்பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹூ”? (ரா. ஆ. 11 – 1) என்று ஸாயுதராய்க் கொண்டு அவரைப் பின் சென்று “‘ப்‌ராதா பர்த்தா ச பந்து,ர்ீச பிதா ச மம ராகவ?”‘ (ரா.௮.58-34) என்று பெருமாளை எல்லா உறவுமாகப்‌ பற்றினாப் போலே,
இவருமப்படியே (அழுந் தொழுமித்யாதி, – பிரியா வடிமைக்கு) ”அழுந்தொழும்‌”்‌ (திருவா. 7 – 2- 8) என்று அழுவது தொழுவதாய்‌, “திருவேங்கடத்தெழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கு – ஒழிவில் காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌”’ (திருவா, 3 – 3 – 1) என்று திருமலையிலே நின்றருளின பரம ஸ்வாமிக்கு ஸர்வதேஸ ஸர்வ கால-ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வஸேஷ வ்ருத்திகளையும்‌, “முகப்பே கூவிப் பணி கொள்ளாய்‌‘” (திருவா, 8 – 8 – 7) என்கிறபடியே ஏவி அடிமை கொள்ள வேணுமென்று ப்ரார்த்தித்து, ““பிரியா வடிமை என்னைக் கொண்டாய்‌?! (திருவா. 5 – 10 – 11) என்று விச்சேதியாதபடியான கைங்கர்யத்துக்கு (சரணே சரணென்று) ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண் தமக்கு ‘” (திருவா. )என்று அவன்‌ திருவடிகளை உபாயமென்று அத்‌யவஸித்து“வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’‘ (திருவா. 8 – 3 ஃ- 3) என்று அவற்றைக் கொண்டு தாம்‌ பின்னே திரிய ஆசைப்பட்டு. (பந்துவும்‌ பிதாவும்‌ அவரே என்கையும்‌) ““சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ் செல்வமும்‌ நன் மக்களும்‌ மேலாத் தாய்‌ தந்தையுமவரே இனியாவார்‌” (திருவா. 5 – 1 – 8) என்று ஸர்வேஸ்வரனே எல்லா உறவு முறையாகப்‌ பற்றுகையாலும்‌

(அன்னை என்‌ செய்யிலென்‌ இத்யாதி.) ஸ்ரீபரதாழ்வான்‌ பெருமாளுடைய திருவபிஷேகத்தைக்‌ கைகேயி விலக்கின சீற்றத்தாலே “*ஹந்யாமஹமிமாம்‌ பாபாம்‌ கைகேயீம்‌ துஷ்டசாரிணீம்‌” (ரா. அ. 78 – 22) என்கிறபடியே கைகேயியைச் சீறி உபேக்ஷித்து “’ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய’” (ரா. அ. 82 – 12) என்று – ராஜ்யமும்‌ நானும்‌ பெருமாளுக்கு ஸேஷமென்றும்‌, “ம்ருதே து தஸ்மிந்‌ பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர்‌ த்‌விஜைச ! நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத்‌,ராஜ்யம்‌ மஹாபலா ”? (ரா. படா. 1 – 33) என்றும்‌ வஸிஷ்டாதி,புரோஹிதர்‌ ராஜாவாக வேணுமென்று அபேக்ஷிக்க, ““இக்ஷ்வாகூணாமியம்‌ பூமிஸ் ஸ ஸைல வந காநநா ।”” (ரா. கி. 18 – 6) என்கிற மஹதைஸ்வர்யத்தை இச்சியாதே, ‘அயாசத்‌,ப்‌ராதரம்‌ ராமமார்ய பாவ புரஸ்க்ருதச” (ரா. பதா, 1 – 35) என்று பெளர ஜநங்களோடே பெருமாள் திருவடிகளிலே சென்று மீண்டெழுந்தருளவேணும்‌ என்றபேக்ஷிக்க, ““பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம்‌ தத்த்வா புந புந” (ரா. பா 1 -37) என்று அவரும்‌ அப்படிச் செய்யாதே திருவடி நிலையைக்‌ கொடுத்துவிட.-““பாதுகே தே புரஸ்க்ருத்ய’‘ (ரா. யு. 124 – 4) என்று அத் திருவடி நிலையை முன்னிட்டுக்‌ கொண்டிருந்து, ““பமிரஸா யாசதோ யஸ்ய வசநம்‌ ந க்ருதம்‌ மயா”‘ (ரா. யு. 121 – 19) என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே ““ந மே ஸ்நாநம்‌ பஹுமதம்‌ வஸ்த்ராண்யாபரணாநி ச (தம்‌ விநா கைகயீ புத்ரம்‌ பரதம்‌ தர்ம சாரிணம்‌”’ (ரா. யு. 121 6) என்று – நாம்‌ பிள்ளை பரதனை யொழியக்‌ குளித்தல்‌ ஒப்பித்தல்‌ செய்யக் கடவோமல்‌லோமென்று பெருமாள்‌ த்வரையோடே மீண்டு வருமளவும்‌ ”பங்கதிக்‌தஸ்து ஜடில?”’ (ரா. யு. 124 -4 ) என்று கண்ணீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து இக்ஷ்வாகு குல மர்யாதை தப்பாமலிருந்து, “க்ருதம்‌ தஸ குணம்‌ மயா” (ரா. யு. 127 – 56) என்று பெருமாளுடைய திவ்யைஸ்வர்யத்தை ஒன்று பத்தாகப்‌ பெருக்கி, ”ஸ காம மநவாப்‌யைவ”’ (ரா.ப.. 1 – 38) என்று தாம்‌ ஆசைப்பட்ட பொருள்‌ கைப்படாத இழவோடே இருந்தாப்‌ போலே-இவரும்‌ அப்படியே “அன்னை என்‌ செய்யிலென்‌”’ (திருவா. 5 – 3 – 6) என்று – தாயார்‌ முடியிலென்‌? பிழைக்கிலென்‌? என்று உபேக்ஷித்து (ராஜ்யமும்‌ யானே என்று) யானே நீ என்னுடைமையும்‌ நீயே”” (திருவா. 2 – 9 – 9) என்று ஆத்மாத்மீயங்கள்‌ அவனுக்கு சேஷமென்று. (பெருஞ்செல்வமும்‌ இச்சியாமல்‌) ““கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பு?” (திருவா, 4 – 9 – 4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக் கண்டு, “’ஜங்கருவிகண்ட இன்பம்‌ – ஓழிந்தேன்‌ ”” (திருவா. 4- 9 – 10) என்கிறபடியே உபேஷித்து. (வேங்கடவாணனை வேண்டிச் சென்று) அவனை அநுபவிக்க வேணுமென்று வேண்டிச் சென்று இவர்‌ அபேக்ஷித்தபடி கிடையாமையாலே. (திருவடியே சுமந்து) “திருவடியே சுமந்துழலக்‌ கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை’” (திருவா. 4 – 9 – 9) என்று அவன்‌ திருவடிகளை ஸிரஸா வஹிப்பிக்க ஸிரஸா வஹித்து. (விரைந்து வருமளவும்‌) வீடு திருத்துவான்‌போய்‌ விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைந்து வருமளவும்‌. (கண்ணநீர்‌ பங்கமாக்கி) *“கண்ணநீர்‌ கைகளாலிறைக்கும்‌”’ (திருவா. 7 – 2 – 1) என்று கண்ணநீர்‌ வெள்ளமிட இருந்து. (நிலந்துழாவி) ”இருநிலம்‌ கைதுழாவிருக்கும்‌”” (திருவா. 7 – 2 – 1) என்று ஆற்றாமையாலே நிலம்‌ துழாவி (குடிக்கிடந்த) ““குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே ப்ரபந்ந குலத்தில்‌ செய்து போருகிற மர்யாதையைத்‌ தப்பாமலிருந்து. (கையறவும்‌) “காமுற்ற கையறவோடு”” (திருவா. 2 – 1 – 3) என்று ஆசைப்பட்ட பொருள்‌ கைபுகுராத இழவோடே இருக்கையாலும்‌. (கோதிலடிமை உறுமோ என்பித்த) ஸ்ரீஸத்ருக்‌நாழ்வான்‌ “கச்சதா மாதுல குலம்‌ பரதேந ததா அநக,சத்ருக்‌, நோ நித்ய சத்ருக்‌நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத”” (ரா. அ. 1 – 1) என்று – ““அநக’, “*நித்ய சத்ருக்‌ந'” என்று ஸ்ரீபரதாழ்வானுடைய பாவநத்வ போக்‌யத்வங்களிலே கால் தாழ்கையாலே “பும்ஸாம்‌ த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌”‘ (ரா. அ. 3 – 29) என்று ஸஜாதீயரையும்‌ ஈடுபடுத்தவற்றான பெருமாளுடைய விக்‌ரஹத்திலே துவக்குண்ணாதே, அந்த வடிவழகுதான்‌ பரதாநுவ்ருத்தியில்‌ போகாதபடி துவக்க வற்றாகையாலே நித்ய ஸத்ருவாக நினைக்கிறாப் போலே.
இவரும்‌ ““கோதிலடிமை”’ (திருவா. 8 – 10 – 9) என்று சொல்லப்படுகிற பாகவத ஸேஷ்த்வ ரஸம்‌ (உறுமோ என்பித்த) ““அவனடியார்‌ சிறு மா மனிசராய்‌ என்னை யாண்டார்‌ இங்கே திரிய – அதுவன்றி உலக மூன்றுமுடன்‌ நிறைய சிறுமாமேனி நிமிர்த்த என்‌ செந்தாமரைக்‌ கண்‌ திருக்குறளன்‌ – நறுமா விரை நாண் மலரடிக்கீழ்ப் புகுதல்‌ – பாவி யேனுக்குறுமோ’” (திருவா. 8 – 10 – 3) என்னும்படி பண்ண அந்த பாகவத ஸேஷத்வ ரஸத்தாலே. (புலங்‌கொள்‌ நித்ய சத்ரு விசிந்தநமும்‌) ““புலங்கொள் வடிவு’” (திருவா. 8 – 10 – 4) என்று ஸர்வேந்த்‌ரி யாபஹார க்ஷமமான வடிவழகையும்‌ உபேக்ஷிக்கையாலும்‌. (ஆன ப்‌ராதாக்கள்‌) இப்படியிருந்துள்ள இளையபெருமான்‌, ஸ்ரீபரதாழ்வான்‌, ஸ்ரீஸத்ருக்‌நாழ்‌வான்‌ என்கிற ப்‌ராதாக்கள்‌.

(அப்பொழுதைக்கப்பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌) “ந ததர்ப்ப ஸமாயாந்தம்‌”” (ரா. ௮. 3 – 30) என்று பெருமாளை ஸர்வ காலமும்‌ அநுபவியா நிற்கச்‌ செய்தேயும்‌ பர்யாப்தனாகாத சக்ரவர்த்தியைப் போலே இவரும்‌ ”அப்பொமுதைக்கப்‌பொழுதென்‌ ஆராவமுதம்‌” (திருவா. 2 – 5 – 4) என்று ஸர்வ காலமும்‌ அநுபவியா நிற்கச் செய்தேயும்‌ பர்யாப்தி பிறவாத அபிநிவேஸத்தை உடையராகையாலும்‌, “போனாய்‌ மா மருதின்‌ நடுவே”’ (திருவா. 5 – 1 – 2) என்று யமளார்ஜநங்களின்‌ நடுவே போன போது யஸோதைப் பிராட்டி வயிறெரிந்தாப் போலே இவரும்‌ அதீத காலமாயிருக்கச் செய்தேயும்‌ ஸம காலத்திற் போலே வயிறு பிடிக்கையாலும்‌.
(செந்தீ தண்காற்று இத்யாதி, ) ““நாக்‌நிர்தஹதி தைவாயம்‌ மஸ்தரைஸ்சிந்நோ மஹோரகை.। க்ஷயம்‌ நீதோ ந வாதேந ந விஷேண நக்ருதயயா”‘ (வி. பு. 1 – 19-59), “ஸத்வாஸக்தமதி: கருஷ்ணே தஸ்ய மாநோ மஹோரகை, ! ந விவேதாத்மநோ காத்ரம்‌ தத்ஸ்ம்ருத் யாஹ்லாத,ஸம்ஸ்தித?’” (வி. பு. 1 – 17 – 39) என்று அக்‌நி முதலான பாதக பதார்த்தங்களும்‌ தன்னை பாதியாதபடி **ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே, ஜகந்மயே । பரமாத்மநி கோவிந்தே, மித்ராமித்ரகதா குத?” (வி. பு. 1 – 19 – 37) என்று ஸர்வத்தினுடையவும்‌ பகவதாத்மகத்வாநு ஸந்தாநத்தாலே ஸத்ரு மித்ர விபாகமற ஸர்வமும்‌ தனக்கு அநுகூலமாக அநுஸந்தித்து, “எங்குமுளன்‌ கண்ணன்‌” (திருவா. 2 8 – 9) என்கிறபடியே ‘“உர்வ்யாமஸ்தி”” என்று தொடங்கி ““ஸர்வத்ராஸ்தி’‘ என்று பிறர்க்கு உபதேஸிக்கவும்‌ வல்லனாய்‌, “’பள்ளியிலோதி வந்ததன்‌ சிறுவன்‌”, “பிள்ளையைச் சீறி” (திருமொழி 2 – 8 -8) என்று சொல்லப்படுகிற பள்ளிப் பிள்ளையான ஸ்ரீப்ரஹ்லாத ஆழ்வானைப் போலே.
இவரும்‌ (செந்தீ தண்காற்று இத்யாதி, பகையறச்சிந்தைசெய்து) ”அறியும்‌ செந்தீயைத் தமுவி அச்சுதனென்னும்‌ மெய்வேவாள்‌ எறியும்‌ தண் காற்றைத்‌ தழுவி என்னுடைக்‌ கோவிந்தனென்னும்‌”” (திருவா. 4 – சீ – 3), ““போமிள நாகத்தின்‌ பின் போய்‌ அவன்‌ கிடக்கை ஈதென்னும்‌’” (திருவா. 4 – 4- 5) என்றும்‌ அப்படியே அக்‌நி முதலான பாதக பதார்த்தங்களும்‌ பகவதாத்மகத்வாநுஸந்தாநத்தாலே அநுகூலமானபடி, “என்‌ முன்னைக்‌ கோளரியே – உன்னைச் சிந்தை செய்துசெய்து – என்‌ முன்னைத் தீவினைகள்‌ முழுவேரரிந்தனன்‌ – முடியாததென்‌ எனக்கேலினி”’ (திருவா. 2 – 6 – 6) என்று அதுஸந்தித்து, “’கரந்தசிலிடந்தொறுமிடந்திகழ்பொருள் தொறும்‌ கரந்தெங்கும்‌ பரந்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 10) என்று அவனுடைய ஸர்வகதத்வத்தை அருளிச் செய்கையாலும்‌ (முற்றவிட்டும்‌ மற்றிலேன்‌ என்னும்‌ தூர்மாத்மா) ‘பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச | பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை”’ (ரா. யு. 19 – 5), “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ம்ச ராகவம்‌ ஸரணம்‌ ௧த ச'” (ரா. யு. 17 – 16) என்றும்‌ லங்கையோடே கூட புத்ர தாராதிகளான ஸர்வத்தையும்‌ விட்டு எல்லாம்‌ சக்ரவர்த்தித்‌ திருமகனாகப் பற்றின ‘“விபீஷணஸ்து தர்மாத்மாந து ராக்ஷஸ சேஷ்டித?’”” (ரா. ஆ. 17 24) என்ற, “ராமோ விக்‌,ரஹவாந்‌ தர்ம?” (ரா. ஆ. 37 -13) என்று தர்ம ஸ்வரூபமான சக்ரவர்த்தித் திருமகனைத்‌ தனக்கு தரரகமாக உடையனாகையாலே தர்மாத்மா என்று சொல்லப்படுகிற ஸ்ரீவிபீஷணப் பெருமாளைப் போலே இவரும்‌. (முற்றவிட்டு) “பாதமடைவதன்பாசத்தாலே மற்ற வன் பாசங்கள்‌ முற்ற விட்டு” (திருவா. 8 – 2 – 11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல ஸங்கத்தையும்‌ ஸவாஸநமாக விட்டு. (மற்றிலேன்‌ என்று) தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே”’ (திருவா. 3 – 6 – 8) என்று சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப்‌ பற்றுகையாலும்‌.

(வாளிபொழிந்த இத்யாதி, ) “நிர்குண பரமாத்மாஸெள தேஹம்‌ தே வ்யாப்ய திஷ்ட,தி”’ (பா. ஆ. 147 – 8) என்று – ஏறிட்ட நாணை இறங்கிட்ட சக்ரவர்த்தித் திருமகனைத்‌ தனக்குள்ளே உடையனாய்‌, “*ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந்‌ பரமாம்‌ விமுக்திம்‌ புத்‌த்‌யா விதூய சரிதம்‌ தவ ஸேவதேஸெள”’ (அதிமாநு. 32) என்று அந்த சக்ரவர்த்தித்‌ திருமகனுடைய வீரசரிதத்தை போக்‌யமாக உடையனாய்‌, “ஸ்நேஹோ மே பரமோ ராஜம் ஸ்த்வயி நித்யம்‌ ப்ரதிஷ்டித | பக்திஸ் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” (ரா.௨.40-16) என்று சக்ரவர்த்தித் திருமகனுடைய வீர சரிதத்தை போக்‌,யமாக உடையனான திருவடியைப் போலே.
இவரும்‌ (கற்பார் பாவம்‌ மற்றிலேன்‌) ““கற்பாரிராமபிரானையல்லால்‌ மற்றும்‌ கற்பரோ”’ (திருவா. 7 – 5 – 1) என்று ப்ரிய ஹிதங்களிலொன்றைக்‌ கற்குமவர்களைப் பற்ற உன்னைக்‌ கற்குமவர்கள்‌ சக்ரவர்த்தித் திருமகனை யொழியப்‌ பரத்வாதிகளையும்‌, அவதாராந்தரங்களையும்‌ கற்பரோ என்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யத்தாலே “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லா’” (திருவா. 7 – 11 – 10) என்று பரத்வத்தின்‌ பேருங்கூட அஸஹ்யமாம்படி “தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே”’ (திருவா.3 – 6 – 8) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப்‌ பற்றுகையாலும்‌.
(பல்வகையுங்கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌) *“பண்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிபேஷஸங்காந்‌ ! ப்‌ரஹ்மாணமீஸம்‌ கமலாஸநஸ்த ம்ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌”” (கீதை 11 – 15) என்று விஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்த அநந்தரம்‌ தன்னால்‌ அமைத்தநுபவிக்க வொண்ணாமையாலே *’க்ருதாஞ்ஜலிர்வேபமாநச கிரீடீ”” (கீதை 11 – 35) என்று பீ.தியாலே நடுங்கி அஞ்ஜலி ஹஸ்தனாய்க்கொண்டு ““கிரீடிநம்‌ கதிநம்‌ சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம்‌ த்‌ரஷ்டு மஹம்‌ ததைவ । தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வமூர்த்தே”’ (கீதை 11 – 46) என்று ஸங்க சக்ர கதா தரமாய்‌ அஸாதாரணமான உன்னுடைய விக்ரஹத்தைக்‌ காட்ட வேணுமென்று அவ்வடிவிலே தத் பரனாய்‌ அபேக்ஷித்த அர்ஜுநனைப்போலே.
இவரும்‌ “நல்குரவும்‌” (திருவா. 6 – 3 – 1) என்று தொடங்கி “’பல்வகையும்‌ பரந்த பெருமானை – திருவிண்ணகர்க் கண்டேன்‌’” என்று விருத்‌த விபூதி யுக்தானானவனைக்‌ கண்டு. (வெண் சங்கேந்தின) “நீராய்‌ நிலனாய்‌”’ (திருவா. 6 – 9 – 1) என்று தொடங்கி, *“சிவனாயயனானாய்‌” என்று கார்ய காரணங்களிரண்டையும்‌ ஸரீரமாகக் கொண்டு நீ ஜகச் சரீரனா யிருந்தாயே யாகிலும்‌, அத்தால்‌ நான்‌ பெற்றது “விபூதி என்னதுமல்ல, பிறரதுமல்ல; உன்னதே” என்கிற ப்ரதிபத்தி யொழிய எனக்கு-அநுபாவ்யமாகிறதில்லை. ஆனபின்பு எனக்கு அநுபாவ்யமாம்படி “கூராராழிவெண்சங்‌கேந்தி – வாராய்‌”’ (திருவா. ‘ 6 – 9 – 1) என்று சங்க,சக்ர கதா தரனான உன்னுடைய அஸாதரண விக்ரஹத்தோடே வரவேணுமென்று அபேக்ஷிக்கையாலும்‌,-இப்படி இளையபெருமாள்‌ முதலானவர்களெல்லாரோடும்‌ ஸாம்யம்‌ சொல்லிற்று.

128-குழவில்‌ நெஞ்சும்‌ அருகவில்‌ சுவையுமான இவர்‌ அவர்களளவல்லர்‌.
இனிமேல்‌ இவர்களெல்லார்க்கும்‌ இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில்‌ இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்‌செய்கிறார்‌ (குழலில்‌ நெஞ்சும்‌ அருகலில்‌ சுவையுமான இவர்‌ அவர்களளவல்லரேன்று ). குழற்கோவலர்‌ மடப்பாவையும்‌”’ (திருவிரு. 3) என்கிற பாட்டிற்படி மஹிஷீ த்ரயத்துக்கும்‌ வல்லபனாய்‌ பூஷணாயுத, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸர்வ ஸ்வாமியாய்‌, கருடவாஹநனான ஸர்வேஸ்வர விஷயத்தில்‌ அவகாஹித்த என்னுடைய நெஞ்சானது அவனுடைய பரத்வத்தைக் கண்டு மீளுமோ? போக்‌யதையையும்‌, ஸெளலப்‌யத்தையும்‌ கண்டு நிற்குமோ? என்னும்படியான நெஞ்சை யுடையராய்‌, அத்தால்‌ *அப்புள்‌ளின்‌ பின் போன தனிநெஞ்சமே”’ (திருவிரு. 4) என்கையாலே இவருடைய திருவுள்ளம்‌ ப்ரமாணாநுஸாரியாய்க்‌் கொண்டு ப்ரமாண ஸார ப்ரதிபாத்‌,யமான ஸ்வாராதத்வ ரக்ஷகத்வ- போக்‌யத்வங்களிலே கால் தாழ்ந்து மேன்மை முதலாக நீர்மை ஈறாக அவகாஹித்ததென்றபடி. ‘அருகவிலாய”’ (திருவா. 1 – 9- 3) என்கிற பாட்டிற்படி ஹேய ப்ரத்ய நீகனாய்‌, கல்யாண குணங்களை யுடையனாய்‌, நித்ய ஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கெல்லாம்‌ காரண பூதனாய்‌, விலக்ஷண விக்‌ரஹ யுக்தனாய்‌, புண்டரீகாக்ஷனாய்‌, கருடவாஹநனாய்‌, ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌, பிராட்டி நித்ய ஸூரிகளெல்லாரோடும்‌ ஓரோ வகைகளாலே பரிமாறும்‌ பரிமாற்றமெல்லாம்‌ என்னொருவனோடே பரிமாறி அத்தால்‌ வந்த ரஸத்தை எனக்குத்தந்து பின்னையும்‌ விட க்ஷமனாகிறிலன்‌ என்னும்படியான ரஸத்தை யுடையராய்‌, இப்படிப்பட்ட சுவையையும்‌ நெஞ்சையுமுடைய இவர்‌, பகவத்‌ விஷயத்தில்‌ ப்ராவண்யம்‌ காதசித்கமாய்‌, புறம்பே பரந்த நெஞ்சை யுடையராய்‌, விஷயாந்தரங்களிலும்‌ ரஸஜ்ஞராய்ப்‌ போருகிற இவர்களளவல்லர்‌ என்கிறார்‌. ஆக இதுக்குக் கீழ்‌ பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகளோடு இவ்வாழ்வாருக்கு ஸாதர்ம்ய வைதர்ம்யங்களிரண்டும்‌ சொல்லிற்றாய்த்து –

129-எற்றைக்கும்‌ என்றது தோன்றப்‌ பிறந்து ஒப்பித்து வீசிக்‌ காப்பிட்டுக்‌ காட்டுக்கு முற்பட்டு தூமம்‌ சொல்லிக்‌ கேட்டு ஸிஷ்யா -தாஸீ-பக்தைகளாய்ப்‌ பாடி வருடி இன்று வந்தென்பாரையும்‌ சென்றாலூரும்‌ நிவாஸ-தாஸ-பேதம்‌ கொள்வாரையும்‌ தாம்‌ அவனாக பாவிப்பர்‌.

இப்படி ஸாம்யம்‌ சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும்‌ வ்ருத்திகளாலும்‌ பிராட்டிமாரையும்‌, திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களையும்‌ தாம்‌ அவர்களாக பாவிப்பர்‌ என்கிறார்‌ (எற்றைக்கும்‌ என்று தொடங்கி). ‘“எற்றைக்குமேழேழ்‌ பிறவிக்குமுன்றன்னோடுற்றோமேயாவோம்‌”‘ (திருப்பாவை 29) என்று அபேக்ஷித்தமை தோன்ற “‘ராகவத்வேபவத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி । அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயிநீ”’ (வி.பு. 1 – 9 – 144) என்கிறபடியே அவன்‌ வந்தவதரித்த அவதாரங்கள் தோறும்‌ தாமுமவதரித்து. (ஒப்பித்தென்று) ‘திருவபிஷேக மஹோத்ஸவத்துக் கீடாம்படி பெருமாளை அலங்கரித்து. (வீசி) ‘“ஸ்திதயா பார்றவதஸ்சாபி வாலவ்யஜதஹஸ்தயா ! உபேதம்‌ ஸுதயா பூயஸ்சித்ரயா ஸஸிநம்‌ யதா” என்று திருவெண்சாமரம்‌ பரிமாறி. (காப்பிட்டு) ““பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷ்ணா । ஆத்‌வாரமநுவவ்ராஜ மங்களாந்யபிதத்‌யுஷீ”, ““பூர்வாம்‌ திஸம்‌ வஜ்ரதரோ தக்ஷிணாம்‌ பாது தே யம? । வருண? பஸ்சி மாமாஸம்‌ தநேசஸ்தூத்தராம்‌ திஸம்‌”” என்று பெருமாள் வைலக்ஷண்யத்தைக் கண்டு இவ்வழகு தமக்குத்‌ தொங்கப்‌ புகுகிறதோ என்னும்‌ வயிறுபிடியாலே மங்களாஸாஸநம்‌ பண்ணி.
(காட்டுக்கு முற்பட்டு) “அக்‌ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்‌,நந்தீ குஸ கண்டகாந்‌” என்று பெருமாள்‌ வநத்துக்கு எழுந்தருளுகிறபோது தான்‌ முற்பட்டு. (தர்மம்‌ சொல்லி) பெருமாள்‌ தண்டகாரண்யத்திலே கையும்‌ வில்லுமாய்க் கொண்டு நின்ற நிலையைக் கண்டு இவர்‌ ஸாயுத,ராய்‌ நிற்கில்‌ ஆரேனையும்‌ மேல்விழுந்து ப்ரமாத,ம்‌ விளையக்கூடுமென்று பயப்பட்டு, பெருமாளைப் பார்த்து “நாயன்தே, தர்மமூலமாயிருக்கும்‌ ஸர்வமும்‌, ஆன பின்பு தேவரீர்‌ ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை அநுஷ்டிக்க அமையும்‌” என்று தர்‌மோபதேஸ த்தையும்‌ பண்ணினாள்‌ பிராட்டி.
(தர்மம்‌ கேட்டு) ஸ்ரீபூ,மிப்பிராட்டியார்‌ ஸகலதர்மங்களையும்‌ ஸ்ரீவராஹ நாயனார்‌ பக்கவிலே கேட்டு. (ஸிஷ்யா தாஸீ பக்தைகளாய்‌) “அஹம்‌ ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவ | மத் க்ருதே ஸர்வபூதாதாம்‌ லகூபாயம்‌ வத ப்ரபோ ‘ என்று ஸிஷ்யா தாஸீ பக்தையாய் விஸேஷ தர்மத்தையும்‌ கேட்டு.
(பாடி) “பாடிப் பறைகொண்டு”’ (திருப்பாவை 27) என்கிறபடியே க்ருஷ்ணனைப் பாடுவதும்‌ செய்தாள்‌. (வருடி) இவர்களிருவரும்‌ ”ஒருமதிமுகத்து மங்கையரிருவரும்‌ மலரன அங்கையின் முப்பொழுதும்‌ வருட” (திருவெழு.), ”செங்கமலத்திருமகளும்‌ புவியும்‌ செம்பொன்திருவடியினிணை வருட ” (திருமொழி 7 – 8 – 1) என்று இருவரும்‌ திருவடியை வருடினார்கள்‌. ‘“இன்றுவந்தித்தனையும்‌ அமுதுசெய்திடப்பெறில்‌ நான்‌ ஒன்று நூறாயிரமாகக்‌ கொடுத்துப்‌ பின்னுமாளும்‌ செய்வன்‌”’ (நா. தி. 8 – 7) என்று தம்மைக்கொண்டு கைங்கர்யம்‌ கொண்டால்‌ அதுக்கு ப்ரத்யுபகாரமும்‌ பண்ணுவர்‌ என்கிறார்‌.

(சென்றால்‌ ஊரும்‌ நிவாஸ)திருவநந்தாழ்வான்‌ ‘“சென்றால்‌ குடையாம்‌’” (மூ.திருவ. 59) என்கிறபடியே ““நிவாஸ ஸய்யாஸந பாதுகாம் ஸூகோபதாந வர்ஷாத பவாரணாதி.பிர் ஸாரீரபேதை ஸ்தவ ஸேஷதாம்‌ க,தைர்ய தோசிதம்‌ ஸேஷ இதீரிதே ஜநை?”’ (ஸ்தோ. ர.40) என்று ஸர்வேஸ்வரனுடைய விநியோகத்துக்கு அநுகுணமாக ஸாரீர பேதங்களைக்‌ கொண்டு அஸேஷ ஸேஷவ்ருத்திகளையும்‌ பண்ணினார்‌. “ஊரும்‌ புட்கொடியுமக்தே” (திருவா. 10 – 2 -3) என்றும்‌, ”தாஸஸ்ஸகா வாஹநமாஸநம்‌ த்வஜோ யஸ்தே விதாநம்‌ வ்யஜநம்‌ த்ரயீமய? । உபஸ்திதம்‌ தேந புரோ கருத்மதா த்வதங்க்‌ரி ஸம்மர்த்த, கிணாங்கஸோபிநா’? (ஸ்தோ. ர.41) என்று பெரியதிருவடி நாயனார்‌ வாஹந த்‌வஜாதி முகத்தாலே ஸகலவித, கைங்கர்யங்களையும்‌ பண்ணினார்‌. அப்படியே இவரும்‌ ““பிறந்திட்டாள்‌”(திருவா. 6 – 5- 10) என்கிறபடியே பிறந்து அந்த நாச்சிமார்‌ மூவரையும்‌ திருவநந்தாழ்‌வானையும்‌, பெரியதிருவடியையும்‌ தாமவர்களாகப் பாவிப்பர்‌ என்கிறார்

130-எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப்‌ பாஞ்சாலி படுத்துமதும்‌ கெளஸல்யாதநுவ்ருத்தியும்‌ ஓப்பாக்குகை பரிசு.
இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும்‌ இந்த விருத்தி பேதத்தில்‌ அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில்‌, அப்ராக்ருதமான விக்‌ரஹம்‌ பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும்‌, அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்திலுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும்‌, ப்ராக்ருதமாய்‌ ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களிலுண்டானவற்றை த்‌ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம்‌ என்கிறார்‌ (எழுவதோருரு என்று தொடங்கி). (எழுவதோருரு அழிக்க) *’சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு (திருவா. 5 – 5 – 40) என்று தேஜஸ்தரங்கங்களுக்கு நடுவே உந்நேயமான ‘‘பும்ஸாம்‌ த்‌ருஷி சித்தாபஹாரிணம்‌”” (ரா.௮. 3 – 29) என்று ஸஜாதீயரையும்‌ விஜாதீயராக்க வற்றான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ இவருடைய பும்ஸ்த்வத்தை அழிக்க, இவர்க்குண்டான ஸ்த்ரீத்வத்‌துக்கும்‌. (வழுவிலா அடிமைக்கு) ஸ்வரூப ப்ராப்தமான அவ்விஷயத்தில்‌ இவர்க்கு உண்டான வ்ருத்தி பேதங்களுக்கும்‌ (பாஞ்சாலி படுத்துமதும்‌) ”பாஞ்சால்யா: பத்‌ம பத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம்‌ ௧நம்‌ । யா ஸ்தரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம்‌ மநஸா யயு: ” என்று ப்ராக்ருதமாய்‌, பூதிகந்தியாய்‌, மாம்ஸாஸ்ருகாதி மல மயமான த்‌ரெளபதி,யினுடைய ஸரீரம்‌ ஸஜாதீயருடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்பாவத்தை அடைவித்தத்தையும்‌. (கெளஸல்யாநுவ்ருத்தியும்‌) ““யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸ்கீவச பார்யாவத்‌ பகி நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி” (ரா.அ. 12 – 68) என்று கெளஸலையார்‌ ஓளபாதிகமான பர்த்ரு விஷயத்தில்‌ தத்ததாவஸ்த அநுகு,ணமாகப்‌ பண்ணின அநுவ்ருத்தியையும்‌ த்‌ருஷ்டாந்தமாக்குகை அதில்‌ ஸ்தூலம்‌ என்கிறார் –

131-பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை நோக்குமாப் போலே நெக்‌கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌ கடலிடங்கொண்ட கடலை பஹுமுகமாக அவகாஹிக்கும்‌.
ஆனால்‌ தாமான தன்மையும்‌ பிராட்டிமார் தஸையுமுண்டான இதில்‌ தாமான தன்மையில்‌ அபிநிவேஸம்‌ அளவு பட்டிருக்குமோ? என்னில்‌; ஆறு பெருகா நின்றால்‌ பல வாய்த்தலை களிலும்‌ போரா நிற்கச்செய்தே, தானும்‌ கடலில்‌ போரும்‌ அம்ஸம்‌ குறையாதிருக்குமாப்‌ போலே பிராட்டிமார் தஸையோடும்‌, தாமான தன்மையோடும்‌ வாசியற அபி நிவேவம்‌ கரை புரண்டு பகவத்‌ விஷயத்தை அவகாஹிக்கும்‌ என்கிறார்‌ (பெருக்காறு என்று தொடங்கி), (பெருக்காறு பல தலைத்துக்‌ கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌) ““நினைந்தென்னுள்ளே நின்று நெக்கு”! (பெரியா. தி. 5 – 4 – 8), ”நிமியும்‌ வாயொடு கண்கள்‌ நீர் மல்க நெக்கொசிந்து கரையும்‌”? (திருவா. 6 – 5- 2), ”என்‌ மனம்‌ உடைவதும்‌ அவர்க்காகவே”‘ (திருவா. 9-3 – 6) என்று அபிநிவேஸத்துக்குக்‌ கரைப் பற்றான நெஞ்சானது விட்டுச் சரிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைந்து ஸிதிலமாய்ப் போம்படி “*பெருகு காதலடியேன்‌”’ (திரு மொழி 5 – 2 – 9) என்று இவருடைய அபரிச்சேத்‌யமான பக்தியான ஆறானது. (கடலிடங்கொண்ட கடலை) க்ஷீராப்‌திஸாயியாய்‌, ஸர்வேஸ்வரனாய்‌, ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரியபெருமாளாகிற கடலைப்‌ பலமுகமாக அவகாஹிக்கும்‌ என்கிறார் –

132-அச்சேத்‌யமென்னுமது ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க கரணங்கள்‌ முடியானேயிலவையாக உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள காற்றும்‌ கழியும்‌ கட்டி யழக்‌ கொண்ட பெருங் காதலுக்குப்‌ பத்திமை நூல்‌ வரம்பில்லையே.
இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான்‌ ஸக்ரமமாயிருக்கமோ? என்னில்‌, இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில்‌ பக்தி போலே இதுவும்‌ வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார்‌ (அச்சேத்‌யமென்று தொடங்கி). **௮ச்சேத்‌யோ யமதாஹ்யோயமக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச?” (கீ,. 2 – 24) என்று சேதந-தஹந-ப்லாவந-ஸோஷணாதிகளுக்கு அயோக்‌யமா யிருக்கிற ஆத்ம வஸ்து. (ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட) “சிவனொடு பிரமன்‌ வண்திருமடந்தை சேர்‌ திருவாக மெம்மாவி ஈரும்‌” (திருவா. 9 – 9- 6), ‘‘வேம்‌ எமதுயிரழல்‌ மெழுகிலுக்கு”” (திருவா. 10 – 3 – 6) ”கண்ணனுக்கென்‌றீரியாயிருப்பாள்‌”‘ (திருவா. 6 – 3 – 6), “’வேவாரா வேட்கை நோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”‘ (திருவா. 2 -.1 – 1) என்று அவனுடைய ஸீல கு,ணம்‌ என்‌ ஆத்மாவை ஈரா நின்றது என்றும்‌, அக்‌நி ஸகாஸத்துக்குள்ளே புகுந்த மெழுகு போலே என்‌ ஆத்மாவானது தக்‌தமாகா நின்றது என்றும்‌, விலக்ஷண பதார்த்தங்களைக்‌ காணில்‌ கண்ணனுக்கு என்று த்‌ரவீ பூதையாகா நின்றாள்‌ என்றும்‌, ப்ரேம வ்யாதியானது என்‌ ஆத்மாவைக்‌ குருத்து பற்றாக உலர்த்தா நின்றது என்றும்‌, இப்படி சேதநாதிகளுக்கு யோக்‌யமாய்த் தென்று இவர் தாமே சொல்லும்படியாக ஆத்ம வஸ்து பாஹ்ய பதார்த்தங்களாலே சேதநாதிகளுக்கு அயோக்‌யமென்றது இத்தனை போக்கி, தன்னிலும்‌ அச்சமான பகவத்‌ குணங்கள்‌ புக்கழிக்க, அழியாதாகில்‌ இதுதான்‌ ஜ்ஞாந-. த்‌ரவ்யமன்றியிலே ஒழியுமிறே-
(சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க) என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” (திருவா, 8 – 2 – 10) என்று அசேதநமான சித்தமானது சேதந ஸமாதியாலே இவரை ““ஸந்ந்யஸ்தம்‌ மயா”’ என்று விட்டு நீங்க, (கரணங்கள்‌ முடியானேயிலவையாக) “முடியானேயிற்படியே சேதந ஸமாதியாலே விடாய்த்த கரணங்களை உடையராய்‌. (உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள) ‘“அடியேனுடலம்‌ நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய”’ (திருவா. 5 – 8 – 1) என்று த்‌ரவ்யமிருந்த குஹை உருகுமாப் போலே ஆத்மா பகவத் ப்ரேம வஸ்யதையாலே ஸிதிலமாகாதபடி கட்டின கரையான ஸரீரமானது அந்தராத்மாவைப் போலே பகவத் ப்ராவண்யத்தை உடைத்தாய் கொண்டு ஸிதிலமாக.
(காற்றும்‌ கழியும்‌ கட்டியழ) “கடலும்‌ மலையும்‌” இத்யாதி, (திருவா. 2-1. 4), “எம்‌ ஆற்றாமை சொல்லி அழுவோமை’: (திருவா, 2 – 1 – 7) என்று வாயுவுக்கு ஸதத கதித்வம்‌ ஸ்வாபாவிகமென்றும்‌, கழிக்கு ஏறுதல்‌ வடிதல்‌ செய்கை ஸ்வாபாவிகமென்றும்‌, மற்றும்‌ நாரை தொடக்கமானவற்றுக்கு அவ்வோ ஸ்வபாவம்‌ நியதமென்றும்‌ அறியாதே தம்மைப் போலே பகவத்‌ விஸ்லேஷத்தாலே இவையும்‌ நோவு படுகிறனவாக இவற்றோடே க்லேஸிக்கும் படியாகக்‌ கொண்ட பெருங்காதலுக்கு, ”அலர்‌ தூற்றிற்றது முதலாக்‌ கொண்ட என் காதல்‌” (திருவா. 7 – 3 – 8) என்று இப்படியிருக்கிற இவருடைய அபரிச்சேத்‌யமான பக்திக்கு.
(பத்திமை நூல் வரம்பில்லையே) ”ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:’‘ என்று தேஸ விஸேஷத்தில்‌ அநுபவோபகரணமான பக்தி போலே இவருடைய பக்திக்கு, ஸாதந பக்திபோலே வைதமாகையும்‌ க்ரமாபேஷையும்‌ இல்லையிறே.
ஆக இதுக்குக் கீழ்‌ –ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையிலே பேசுவர்‌; ப்ரேம தஸையில்‌ ஸ்த்ரீ ஸ்வபாவத்தாலே பேசுவர்‌ என்றும்‌, அந்த ஸ்த்ரீத்வம்‌ இவர்க்கு ஸ்வாபாவிகம்‌ என்றும்‌, ஸ்த்ரீத்வந்தான்‌ ஸாமான்யமன்றிக்கே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலே பிராட்டியோடொப்பர்‌ என்றும்‌, மற்றுமுண்டான பிராட்டிமார்‌ பகவத் பரிக்‌ரஹமுடை யாரெல்லாரோடும்‌ ஒப்பர்‌ என்றும்‌ ஸர்வதா ஸாம்யமுன்ளது பெரிய பிராட்டியாரோடே என்றும்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகள் படியும் இவர்க்கு உண்டென்றும்‌, அவர்களிலும்‌ வ்யாவ்ருத்தர்‌ என்றும்‌, அவர்களோடு ஸாம்யமன்றிக்கே அவர்களைத்‌ தாமாக பாவிப்பர்‌ என்றும்‌, இந்த பாவ வ்ருத்திகள்‌ இவர்க்கு உண்டாகைக்கு நிதாநம்‌ இன்னதென்னுமிடத்தையும்‌, இந்த பாவ வ்ருத்திகளுக்கு அடியான பக்தி ப்ரகாரங்களையும்‌ சொல்லி நின்றது கீழ்‌. ஆக இத்தால்‌ பக்தி தஸையில்‌ இவர்‌ பேச்சிருக்கும் படி சொல்லிற்று-

133-ஸம்பந்த உபாய பலங்களில்‌ உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா வஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று பேர்‌.
ஆனால்‌ பக்தி தஸையில்‌ பெண் பேச்சாகில்‌ பிராட்டி ஒருத்தியாகப்‌ பேசுகை ப்ராப்தம்‌, தோழி தாய்‌ மகள்‌ என்கிற த்ரைவித்‌யமான பேச்சுக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌, இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும்‌, நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்‌களில்‌ ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்‌தில்‌ த்வரை யென்ன இவற்றைத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்கிறார்‌ (ஸம்பந்தமென்று தொடங்கி). (ஸம்பந்த உபாய பலங்களில்‌ உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று பேர்‌) தோழியாவாள்‌ நாயகநாயகிகளை இணக்கிச்‌ சேர்க்குமவளாகையாலே திருமந்தரத்தில்‌ ப்ரதம பதமான ப்ரணவத்தில்‌ அகாரத்தாலே சொல்லப்பட்ட, காரணமாய்‌ ரக்ஷகமாய்‌ ஸேஷியாய்‌ ஸ்ரீய: பதியாயிருக்கிற பகவத் ஸ்வரூபத்துக்கும்‌, தத் ப்ரதி ஸம்பந்தியாய்‌, கார்யத்வ- ரஷ்யத்வ ஸேஷத்வங்களை ஸ்வரூபமாக உடைத்தாய்‌, ப்ரக்ருதே: பரமாய்‌, ஜ்ஞாநாநந்த மயமாய்‌, ஞாந குணகமாயிருக்குமென்று மகாரத்தாலே சொல்லப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கும்‌ சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ சொல்லப்பட்ட நிருபாதிக ஸேஷத்வ-அநந்யராஹ ஸேஷத்வாதி,ஸம்பந்தத்தை விஷயீகரித்த ஜ்ஞாநத்தைத்‌ தோழி என்றும்‌,
தாயாராவாள்‌ நாயகன் பக்கலிலே அதி மாத்ர ப்ராவண்யம்‌ பெண் பிள்ளைக்கு உண்டானாலும்‌ நாயகன் தானே வந்து பரிக்‌ரஹித்துக் கொண்டு போமதொழியப் படி கடந்து புறப்படுகை குல மர்யாதைக்குப்‌ போராதென்று அவளை நிஷேதித்து அவன் வரவு பார்த்திருக்குமவளாகையாலே, ஸம்பந்த ஜ்ஞாந ஸமநந்தரம்‌ ஸம்பந்தாநுரூபமான பரிமாற்றத்திலே த்வரை உண்டானாலும்‌, ஸ்வ ப்ரவ்ருத்தியில்‌ இழிகை நமஸ்ஸில்‌ சொன்ன பாரதந்த்ர்யத்துக்கு விருத்‌தமாகையாலே அத்தை நிவர்த்திக்க, அதில்‌ ஸாப்‌தமாகவும்‌, ஆர்த்தமாகவும்‌ சொல்லுகிற பகவதேகோபாயத்வத்தாலே ப்ராப்ய ஸித்‌தி, என்கிற அத்‌யவஸாய ஜ்ஞாநத்தைத்‌ தாயார்‌ என்றும்‌, தலைமகளாவாள்‌, இயற்கையிலே புணர்ந்து நாயகன் வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு, குல மர்யாதைகளையும்‌ பாராதே கிட்டியல்லது தரியேன்‌ என்னும்‌ பதற்றத்தை உடையாளொருத்தி யாகையாலே, நாராயண பதத்தாலே சொல்லப்பட்ட ஸேஷியாய்‌, ஸரண்யனானவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளால்‌ வந்த வைலக்ஷண்யத்தை அநுபவித்து அத்தால்‌ வந்த விளம்ப அக்ஷமத்வத்தாலே ததேகோபாயத்வாத்‌ யவஸாயத்தையும்‌ அதிக்ரமித்துக் கிட்டி, அநுபவித்து அநுபவ ஜநித ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தை இப்போதே பெற வேணுமென்கிற த்வராஜ்ஞாநத்தைத்‌ தலைமகள்‌ என்றும்‌ சொல்லும்‌,
““ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா ! புத்திஸ் தாத்காவிகீ ப்ரோக்தா ப்ரஜ்ஞா துரைகாலிகீ மதா” என்று அதீத-அநாகத-வர்த்தமாந-விஷய ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதிமதி-புத்‌தி, என்று சொல்லுகையாலே பூர்வமேவ உண்டாயிருக்கிற ஸம்பந்தத்தை விஷயமாக உடைத்தா யிருக்கிற ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி என்றும்‌, மேல் வரக் கடவதான கைங்கர்யத்தில்‌ த்வராஜ்ஞாநத்தை மதி என்றும்‌, ஸம்பந்த, ஜ்ஞாந ஸமநந்தரம்‌ யாவத்‌ பல ப்ராப்தி நடக்கக் கடவதான உபாயத்வாத்‌ யவஸாயத்தை புத்தி என்றும்‌ சொல்ல வேண்டி யிருக்க, ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்பானென்‌? என்னில்‌, மூன்றும்‌ ஏக காலிகமாக நடக்கையாலே ஓரொன்றினுடைய ப்ராதாந்யம்‌ தோற்றப்‌ பேசுகையாலே ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்றது.
ஆக இப்படி ஸ்வ ஸ்வரூப-பரஸ்வரூப -ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ஈஸ்வரைகோபாயத்வத்தில்‌ வ்யவஸாயம்‌, பலமான கைங்கர்யத்தில்‌ த்வரை இவையாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று சொல்லுகிறது என்கிறார்‌-

134- ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்‌ அநந்யார்ஹத்வமும்‌, வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்‌ கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில்‌ அத்‌யவஸாயமும்‌, புத்ரி பலகால்‌ ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக்‌ கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக்‌ கண் புதையப்‌ போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக்‌ கூடுதாள்தேடித்‌ தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச்‌ சூழவும்‌ பகைமுகம்‌ செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும்‌ காலையும்‌ பூசலிடுகிற பதினேழில்‌ த்வரையும்‌ தெரியும்‌.

இனிமேல்‌ மூன்று தஸையின்‌ பேச்சினுடைய ப்ரகாரங்களையும்‌ அவ்வோ தஸைகளில்‌ திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும்‌ அருளிச் செய்கிறார்‌ (ஸகி, வெறி விலக்கி என்று தொடங்கி). வெறி விலக்காவது – இயற்கையிலே புணர்ந்து பிரிந்த தலைமகள்‌ மோஹங்‌கதையாய்க்‌ கிடக்க, அவளுடைய பந்துக்கள்‌ இது க்ஷுத்‌ர தேவதைகளால் வந்ததோ என்று ஸங்கித்து இத்தை பரிஹரிப்பதாக வெறியாடலுற அவ்வளவில்‌ இவள்‌-ப்ரக்ருதியறிந்த உயிர்த்தோழியானவள்‌ “இது க்ஷுத்‌ர தேவதைகளால்‌ வந்ததன்று; இது ஒரு விஷயத்தில்‌ ஸங்கத்தாலே வந்தது” என்று அத்தை விலக்கி, அதுக்கு யோக்‌யமான பரிஹாரத்தைச்‌ சொல்லுகை,-இத்தால்‌ ஸம்ஸாரகாந்தாரத்திலே ஸப்‌தாதிகளாகிற போக்‌யோபஜீவதத்துக்காக ஸ்வர்க்க -நரக-கர்ப்பங்களாகிற போக ஸ்தலங்களிலே ஸஞ்சரிக்கிறவனுமாய்‌, பாரதந்ர்த்ர்ய- போக்யதா-அநந்யார்ஹத்வங்களாலே ஸ்த்ரீத்வத்தை உடையனான ஆத்மாவை அவ் விடத்திலே ஆத்ம ம்ருக யாத்ரா வ்யாஜத்தாலே ஸஞ்சரிக்கிற ஈஸ்வரன்‌ “ஏவம்‌ ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்‌ராம்யமாணே ஸ்வ கர்மபி,: | ஜீவே துக்கா குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே?” என்றும்‌, ““நாஸெள புருஷ காரேண”’ இத்யாதியிற்படியே கடகரும்‌, ஜ்ஞாபகருமன்றியிலே உபயருடையவும்‌ தர்ம ப்ரயுக்தமாக கடாக்ஷிக்க, அத்தாலே இத்தலைக்கு முண்டான க்ரம ப்ராப்தி பற்றாத அதி ப்ராவண்யத்‌தாலே வந்த கலக்கத்தாலே ததேகோபாயத்வாத்‌யவஸாயம்‌ குலைந்து ‘இந்த ப்ராவண்ய ஹேது எது? ப்ராவண்ய கார்யமான கலக்கத்தை பரிஹரிக்கலாவது எத்தாலே?’ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கலாபங்களாலே பரிஹரிக்கலாமோ என்று ஸங்கிக்க, ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ‘அநத்யார்ஹமான இவ்வஸ்துவிலுண்டான இந்த ப்ராவண்யம்‌ நிர்ஹேதுக க்ருபா கார்யமாகையாலே ததேகோபாயத்வத்தாலே பரிஹரிக்கலா மத்தனை யல்லது தத்‌ வ்யதிரிக்தங்கள்‌ பரிஹாரமாகாத வளவேயன்றிக்கே அநத்யார்ஹ ஸேஷத்வாதி ஸம்பந்தங்களுக்கு விருத்‌தமாகையாலே ஸ்வரூபத்துக்கு நாஸகமாகையாலே இவை நிவர்த்யங்கள்‌” என்று அந்ய ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற வெறி விலக்காகிற *தீர்ப்பாரை யாமினியிலும்‌.

(ஆசை யறுத்து)திருத் தொலை வில்லி மங்கலத்திலே அதி ப்ரவணையாயிருக்கிற இவளை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்துத்‌ தோழியானவள்‌ ‘நீங்களே யன்றோ திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு அதி ப்ராவண்யத்தை விளைத்திகோள்‌; இனி உங்களால்‌ ப்ராப்த விஷய ப்ரவணையான இவளை மீட்கப் போகாது; ஆன பின்பு இவள் பக்கல்‌ நீங்கள்‌ ஆசை யறுங்கோள்‌’ என்று ஆசை யறுக்கிறது.
இத்தால்‌ உபாயாத்‌யவஸாயமானது உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லது இராமையாலே அந்த உபேய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோ என்னும்‌ அதி ஸங்கையாலே அந்த ப்ராவண்யத்தை வ்யவஸாயம்‌ நிவர்த்திப்பிக்கத் தேட இந்த ப்ராவண்யம்‌ ஸேஷ வஸ்துகதமாகையாலே ஸேஷியினுடைய ப்ரியோபயோகியாமத்தனை யல்லது உபாயத்தில்‌ அந்வயியாதென்கிற ஸங்கையை நிவர்த்திப்பிக்கிறது-ஸம்பந்த ஜ்ஞாநம்‌.–இத்தால்‌ ப்ராப்த விஷய வைலக்ஷண்யாதீநமாக உண்டான அந்த ப்ராவண்யத்தை, “இது ஸ்வரூபாதிரேகியாய்க் கொண்டு ஸாதநத்திலே அந்வயிக்குமாகில்‌ “தத் தஸ்ய ஸத்‌ருஸம்‌ பவேத்‌”” (ரா.ஸு.. 39 -30) என்றிருக்கிற ஸ்வரூபத்துக்கு விருத்‌தமாம்‌; ஆகையாலே இது நிவர்த்யம்‌” என்று இந்த ப்ராவண்யம்‌ ஸ்வ நிவர்த்யம்‌ என்று தடுக்க, இவ்வுபாயாத்‌யவஸாயத்தில்‌ ஸ்வாதீநதாப்ரதிபத்தியை பரேச்சாநுகுண விநியோகார்‌ஹதா ரூபமான ஸேஷத்வ ஜ்ஞாந மானது, ஸேஷ வஸ்துகதமாய்‌, ஸேஷியினுடைய வைலக்ஷண்யாதீநமான இது ஸேஷிக்கு அதிஸயகரமாகையாலே ஸ்வரூபாதிரேகியன்று; தாரகமாகையாலே ஸ்வ நிவர்த்யமுமன்று. இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்திருக்கையாகிற ஸ்வாதந்த்ர்யம்‌ கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்தோடு விருத்‌தமாகையாலே த்யாஜ்யம்‌ என்று ஸ்வ ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற *துவளில்‌ மா மணியிலும்‌. (அறத்தொடு நின்ற) அறத்தொடு நிற்கையாவது – தலைமகளுடைய பருவத்தையும்‌, வடிவில்‌ வேறுபாட்டையும்‌ கண்ட பந்துக்கள்‌ ஸ்வயம்வரத்துக்கு ராஜ லோகத்தைத்‌ திரட்டுகைக்கு மணமும்‌ செறிவிக்க, இவளுடைய உயிர்த் தோழியானவள்‌ கேட்டு, “இது இவள் செவிப்படில்‌ இவளைக் கிடையாது இத்தை ஏற்கவே பரிஹரிக்க வேணும்‌” என்று இவளுடைய பந்து ஜநங்களைப் பார்த்து “இவளுக்குத்‌ திருப்புலியூர் நாயனாரோடே ஸங்கம்‌ உண்டு போலே இரா நின்றது; ஆன பின்பு நீங்கள்‌ செய்கிறது தர்மமல்ல” என்ன, “ஆனால்‌ இவளுக்குத் தக்க அவயவ ஸோபை தொடக்கமான நாயக லக்ஷணங்கள்‌ அவனுக்குண்டோ” என்ன, ‘அவை எல்லாத்தாலும்‌ ஒரு குறையில்லை. அவையொன்று மில்லையே யாகிலும்‌ இவள்‌ அவனுக்கு அநந்யார்ஹையானாள்‌ என்னுமிடத்துக்கு அடையாளம்‌ ஸுவ்யக்தமாகக்‌ காணலாம்‌. ஆன பின்பு நீங்கள்‌ செய்கிற விது அதர்மம்‌” என்று மத்‌யஸ்தையாய்க் கொண்டு தர்மம்‌ சொல்லுகிறாளாய்‌ அந்த மணத்தை விலக்குகை.
ஆக இத்தால்‌ ப்ராப்ய த்வரையினுடைய பரிபாகத்தை அநுஸந்தித்த உபாயாத்‌யவஸாயம்‌, “இந்த த்வரை அப்ராப்த விஷயாவலம்பியோ?” என்று அதி ஸங்கை பண்ண, ஸம்பந்த,ஜ்ஞாநம்‌, “இது ப்ராப்தனான ஸேஷி விஷயீகாரத்தாலே உண்டானது, இதுக்கு அப்ராப்த விஷய ஸங்கையும்‌ ஸ்வரூப நாஸகரம்‌; இனி அந்த ஸேஷியினுடைய போக்‌யதையாலும்‌, அந்த போக்‌யதை ஒழியவே நிருபாதிக ஸேஷித்வத்தாலும்‌ இவ் வஸ்து அவனுக்கு அநந்யார்ஹம்‌” என்று அந்த அதி ஸங்கையை நிவர்த்திப்பிக்கிற *கரு மாணிக்க மலையிலும்‌, ஆகத்‌ தோழிப் பேச்சான மூன்று திருவாய்மொழியிலும்‌ இவ்‌ வாத்மா தர்மி தர்ம விபாகமற அந்ய ஸேஷமுமன்று; ஸ்வஸேஷமுமன்று;பகவத் அநந்யார்ஹ ஸேஷமாயிருக்குமென்று ஸம்பந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சாயிருக்கிறது.
(வாடி மெலிந்து என்று தொடங்கி) – (எழில்‌ அத்‌யவஸாயமும்‌) *ஆடியாடியில்‌ “வாடி வாடுமிவ்வாணுதல்‌”’ (திருவா. 2 – 4 – 1) என்று ஆஸ்ரயத்தை ஓழிந்த தளிர் போலே வாடா நின்றாளென்றும்‌, *பாலனாயேழுலகில்‌ ”பொன் செய்பூண் மென்முலைக்கென்று மெலியும்‌” (திருவா. 4 – 2 – 10) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்க வேணுமென்று மெலியா நின்றாளென்றும்‌, *மண்ணை யிருந்து துழாவியில்‌ ““என் பெண்‌ கொடி யேறிய பித்தே”’ (திருவா. 4 – 3 – 7) என்று என் பெண் பிள்ளை அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்த்தங்களையும்‌ அவனாகச்‌ சொல்லும்படி பிச்சேறினாள்‌ என்றும்‌, *கடல் ஞாலத்திலே ““ஈசன் வந்தேறக்கொலோ”’ (திருவா. 5-0 1) என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறாள்‌ என்று அறிய மாட்டாதே ஸர்வேஸ்வரன்‌ இவள் பக்கலிலே ஆவேஸித்தாப் போலே பேசா நின்றாள்‌ என்றும்‌, *மாலுக்கு வையத்தில்‌ “கற்புடை யாட்டி இழந்தது கட்டே”’ (திருவா. 6 – 6 – 10) என்று அறிவுடையாளான இவள்‌ ஸர்வேஸ்வரனை ஆசைப்பட்டு ஸர்வத்தையும்‌ இழந்தாள்‌ என்றும்‌, உண்ணும் சோற்றிலே ““எனக்குதவாதகன்ற இளமான்‌” (திருவா. 6 – 7 – 6) என்று தன்னைப் பிரிந்து க்லேஸப்படுகிற இவ்வாபத்‌ தஸையில்‌ எனக்குதவாதே அகன்றாள்‌ என்றும்‌, *கங்குலும்‌ பகலில்‌ ‘“சந்தித்துன்சரணம்‌ சார்வதே வலித்த தையல்‌” (திருவா. 7 – 2 – 5) என்று உன்‌ திருவடிகளைக் கிட்டி உன் முன்னே முடிய வேணுமென்று வ்யவஸிதையானாள என்றும்‌ சொல்லுகிற இவளுடைய விரஹ கார்யத்தையும்‌, அந்த விரஹக்‌லேஸத்தாலே அடைவு கெடப் பேசுகையும்‌, பெற்றல்லது தரியாத அதிமாத்ர ப்ராவண்யமும்‌, உபாஸகனுக்கும்‌ உபாயாநுஷ்டாந துஷ்கரதையாலும்‌, பக்தி பாரவஸ்யத்தாலும்‌ ப்ராப்த வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலும்‌ அவை உண்டாகுமாகையாலே இவளுக்கும்‌ இவை ஸாதநத்திலே அந்வயிக்கில்‌ ததேகோபாயத்வத்துக்கு விருத்‌தமா மென்று மாதா அஞ்சி, “முறையோ அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்வண்ணனே”’ (திருவிரு. 60) என்று தேவர் க்ருபை யொழிய இவள்பக்கல்‌ உள்ளவை யோன்றும்‌ ஹேது வல்ல; ஆனபின்பு இவளை இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை தேவரீருடைய க்ருபைக்கும்‌, ரக்ஷகத்வத்துக்கும்‌ போருமோ என்று சொல்லிக்‌ கூப்பிடுகிற தாய்ப் பேச்சான. ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உடாயாத்‌யவஸாயமான தஸையில்‌ பேச்சுத் தோன்றும்‌.

(புத்ரி) தலைமகளானவள்‌, (பலகால்‌ ஆள்விட்டு) *அஞ்சிறைய மடநாரை (திருவா. 1 4), *வைகல் பூங் கழிவாய்‌ (திருவா. 6 – 1), *பொன்னுலகாளீரோ (திருவா. 6 – 8), *எங் கானல்‌ (திருவா. 9 – 7) என்கிற நாலு திருவாய்மொழிகளிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாமல்‌ தூது விட்டு, (ஆற்றாமை சொல்லி) *’ஆற்றாமை சொல்லி அழுவோமை”’ (திருவா. 2 – 1 7) என்று *வாயும் திரையுகளிலே ஸகல பதார்த்த,ங்களும்‌ பகவதலாபத்தாலே நோவு படுகிறனவாக க்லேஸித்து, (கவராதவை விட்டு) *ஏறாளுமிறையோனிலே “மாறாளன்‌ கவராத மணி மாமை குறைவிலமே”‘ (திருவா. 4 – 8 – 1) என்று அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள்‌ வேண்டா என்று உபேக்ஷித்து, (இரைக்க மடலெடுத்து) *மாசறு சோதியிலே ““யாமடலூர்ந்தும்‌ … நாடுமிரைக்கவே”” (திருவா, 5 – 3 – 10) என்று ஜகத் க்ஷோபம்‌ பிறக்கும்படி மடலூரக்கடவேனென்று, (கண் புதையப் போக்கற்று) *ஊரெல்லாம்‌ துஞ்சியிலே ‘“பின்னின்ற காதல் நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்‌றிராவூழி கண்புதைய மூடிற்றால்‌”” (திருவா, 5 – 4- 6) என்று ப்ரேம வ்யாதியும்‌, ராத்ரியாகிற கல்பமும்‌ க்ருத ஸங்கேதிகளாய்க்கொண்டு சூழப் பொருகையாலே போக்கடியற்று.
(உருநெஞ்சுள்ளெழ) *எங்ஙனேயோவிலே “*சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும்‌”
(திருவா. 5 – 5- 10) என்று தேஜஸ்தரங்க மத்‌யே உந்நேயமான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ நெஞ்சிலே ப்ரகாஸிக்கும்படியான உருவு வெளிப்பாட்டாலே ப்ரீத்ய ப்ரீதி ஸமமாய்‌, (கூடுநாள் தேடி) *மானேய் நோக்கியிலே ““திருவல்லவாழுறையும்‌ கோனாரை அடியேனடி கூடு வதென்று கொலோ”” (திருவா. 5 – 9 – 1) என்று அவன்‌ திருவடிகளைக் கிட்டும்‌ நாளை ப்ரார்த்தித்து (தாழ்த்ததுக்கு ஊடி) இப்படி ப்ரார்த்திக்கச்‌ செய்தேயும்‌ தாம்‌ தாழ்த்தவாறே *மின்னிடை மடவாரிலே ”போகு நம்பி’‘ (திருவா. 6 2 – 2) என்று ப்ரணய ரோஷத்தாலே ஊடி-(உசாத் துணையற்று) *வெள்ளைச் சுரி சங்கிலே ““என்னெஞ்சினாருமங்கே ஒழிந்தார்‌ ஆரைக்‌ கொண்டென் னுசாகோ”’ (திருவா. 7 – 3 – 4) என்று அபஹ்ருத சித்தையாகையாலே உசாத் துணையுமின்றிக்கே, (பகைமுகம்செய்ய) *ஏழையராவியிலே “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே’‘ (திருவா. 7 – 7 – 8) என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கங்களெல்லாம்‌ ஒருமுகமாய்‌ நலியத் தேட நில்லாதே, *நங்கள் வரிவளையிலே ”காலம் பல சென்றும்‌ காண்பதாணை உங்களோடெங்களிடையில்லை”’ (திருவா. 8 – 2 – 7) என்று அதிமாத்ர ப்ராவண்ய மாகாதென்‌று நிஷேதிக்கிற தோழிமாரையும் தாமரையும் அதிக்ரமித்து -புயக்கற்று –இன்னுயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது (திருவாய் -9-5-10) என்றும் முடிகையிலே வ்யவசிதையாய் (மாலையும் காலையும் பூசலிடுகிற ) மல்லிகை கமழ் தென்றலிலும் -வேய் மரு தோளிணையிலும் -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனைப் பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமையாலும்-அக்காலத்தில் பாதக பதார்த்தங்களாலும் பார்த்து, “நீ பசுமேய்க்கப்போனால்‌ நலியக்கடவதான டாத, க பதார்த்தங்களும்‌ நோவு பட்டுக் கூப்பிட்டும் ப்ராத காலத்திலே கிருஷ்ணன் பசு மேய்க்க்கப் போனானாக அதி சங்கை பண்ணி கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவதான பாதக பதார்த்தங்களும் நலியாநின்றது” என்று கூப்பிட்டும்‌, இப்படித் தலைமகள் பேச்சான பதினேழு திருவாய்மொழியிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாதபடியான அதிமாத்ர ப்ராவண்ய கார்யமான ப்ராப்ய த்வரை தோன்றும்

135-தோழிமார்‌ அன்னையர்‌ என்கிற பன்மை ரக்ஷகத்வாதி, பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே.
ஆனால்‌ தோழி என்றும்‌, தாய்‌ என்றும்‌ சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும்‌ உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில்‌ இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார்‌ (தோழிமார்‌ அன்னையர்‌ என்று தொடங்கி), ‘ஊரென் சொல்லிலென்‌ தோழிமீர்‌”’ (திருவா, 5 – 3 – 9), எங்னேயோ அன்னைமீர்காள்‌”’ (திருவா. 5 – 5 4 1), ”அன்னையரும்‌ தோழியரும்‌” (திருவா, 8 – 4-5), “ஏலமலர்க் குழலன்னைமீர்காள்‌”’ (திருவா. 8 – 2 – 3); ““என்னுடைத்‌ தோழியர்காள்‌”” (திருவா. 8 – 2 – 7) என்று தோழிமாரையும்‌, தாய்மாரையும்‌ பலவாகச் சொல்லுகிறது – ரக்ஷகத்வாதி,பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே; ‘ரஷக ரக்ஷ்ய ஸம்பந்தம்‌, சேஷ சேஷி ஸம்பந்த,ம்‌, பித்ரு புத்ர ஸம்பந்தம்‌, பர்த்ரு பார்யா ஸம்பந்தம்‌, ஜ்ஞாத்ரு ஜ்ஜேய ஸம்பந்தம் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்‌, ஸாரீர ஸரீரி ஸம்பந்தம்‌, ஆதார ஆதேய ஸ்ம்பந்தம்‌, நியந்த்ரு நியாம்ய ஸம்பந்தம் , போக்த்ரு போக்‌ய ஸம்பந்தம்‌’ என்று இவை முதலான ஸம்பந்தங்களை விஷயீகரித்த ஜ்ஞாநங்கள்‌ பலவாகையாலே அவற்றையும்‌, வாத்ஸல்யம்‌, ஸ்வாமித்வம்‌, ஸெளஸீல்யம்‌, ஸெளலப்யம்‌, ஜ்ஞாநம்‌, பக்தி, க்ருபை, ப்ராப்தி, பூர்த்தி என்கிற குண அநுஸந்தாநத்தாலே அந்த வ்யவஸாய புத்‌திகளும்‌ பலவாகையாலே பன்மையாகச்‌ சொல்லுகிறதென்கிறார்

136-அபிலாஷா-சிந்தந-அநு ஸ்ம்ருதி-இச்சா -ருசி-பர- பரம பக்திகளிலே பேதை முதலான பருவம்‌ கொள்ளும்‌.
தலைமகளுக்கும்‌ இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள்‌ உண்டென்கிறார்‌ (அபிலாஷை என்று தொடங்கி). அபிலாஷையாவது ப்ரதம தர்ஸநத்தில்‌ பிறக்கும்‌ ஆசை. சிந்தனையாவது – த்‌ருஷ்டமான விஷயத்தில்‌ உண்டான ஸ்மரணம்‌. அநு ஸ்ம்ருதியாவது – அந்த ஸ்மரணம்‌ இடை விடாமல்‌ நடக்கை. இச்சையாவது – அவ் விஷயத்தை அவஸ்யம்‌ அநுபவிக்க வேணுமென்கிற ஆசை. ருசியாவது – ரஸாந்தரத்தால்‌ மாற்ற வொண்ணாதபடி அந்த ஆசை முதிருகை. பரபக்தி யாவது – அந்த வஸ்துவினுடைய ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே ஸூக துக்கங்களாகை. பரமபக்தி யாவது – அவ்வஸ்துவினுடைய விஸ்லேஷத்தில்‌ ஸத்தை கிடையாதொழிகை. ஆகையாலே இந்த அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான்‌ பருவம்‌ கொள்ளக் கடவது என்கிறார்‌.

137-மயில்‌ பிறை வில்‌ அம்பு முத்து பவளம்‌ செப்பு மின்‌ தேர்‌ அன்னம்‌ தெய்வவுரு விகாஸ ஸூத்‌தி, தாந்தி ஜ்ஞாநாநந்தாநுராக,.பக்த் யணுத்வ போக்‌யதா கதிகளை யுடைய அகமேனியின்‌ வகுப்பு.
மேல்‌ அந்தத்‌ தலைமகளுக்குச்‌ சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம்‌ இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக்‌ கடவதென்கிறார்‌ (மயில்‌ பிறை என்று தொடங்கி]. ““தோகைமாமயிலார்கள்‌”்‌ (திருவா. 6 – 2 – 2) என்று ஸ்த்ரீகளை மயில்‌ என்பது – அளகடாரத்தினுடைய விஸ்த்ருதியைப் பற்றவாகையாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸத்தைச்‌ சொல்லுகிறது. ““பிறை யுடை வாணுதல்‌” (திருமோழி 2 – 9 – 9) என்று ஸ்தரீகளுடைய நெற்றியைப்‌ பிறையாகச்‌ சொல்லுகையாலே, அதினுடைய தாவள்யத்தையிட்டு அந்த ஜ்ஞாநத்தினுடைய ஸூத்‌தி யோகத்தைச்‌ சொல்லுகிறது. ““விற் புருவக் கொடி”‘ (திருவா. 6 – 6 – 6) என்று புருவத்தின்‌ வளைவாலே வில்லாகச்‌ சொல்லுகையாலே, அது கொண்டு ஜ்ஞாநத்தினுடைய தாந்தி ரூபதையைச்‌ சொல்லுகிறது. ”அம்பன்ன கண்ணாள்‌” (திருமொழி 6 – 8 – 6) என்று கண்ணை அம்பாகச்‌ சொல்லுகிறது – லக்ஷ்யபாதியாகையாலே, அத்தாலே விஷய க்‌ராஹியான ஜ்ஞாநத்தைச்‌ சொல்லுகிறது,
முத்தன்ன வெண் முறுவலை முத்தாகச்‌ சொல்லுகிறது – அதினுடைய ஒளியையும்‌, நீர்மையையும்‌ இட்டாகையாலே, ““முத்ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ
?” என்று அந்த ஜ்ஞாநத்தினுடைய ஆநந்த ரூபதையைச்‌ சொல்லுகிறது. “பவள வாயாள்‌”‘ (திருமொழி 4 – 8 – 1) என்று அதரத்தை ப்ரவாளமாகச்‌ சொல்லுகிறது – சிவப்பை யிட்டாகையாலே, பகவத்‌,விஷயத்தில்‌ அந்த ஜ்ஞாநத்தினுடைய அநுராகதையைச்‌ சொல்லுகிறது. “செப்பன்ன மென்முலை”” (திருப்பாவை 20) என்று முலைகளைச்‌ செப்பாகச்‌ சொல்லுகையாலே, ஸேஷிக்கு போக்‌யமாம்படி அந்த ஜ்ஞாநம்‌ பக்தி ரூபாபந்நமானமையைச்‌ சொல்லுகிறது. “மின்னனைய நுண் மருங்குல்‌”’ (திருமொழி 3 – 9 – 5) என்று இடையின்‌ நுண்மையையிட்டு மின்னாகச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய அணுத்வம்‌ சொல்லுகிறது. ““தேரணங்கல்குள்‌” என்று நிதம்பத்தினுடைய விஸ்த்ருதியைச்‌ சொல்லுகையாலே ஆத்மாவினுடைய போக்‌யதையைச்‌ சொல்லுகிறது. “பெடையன்ன மென நடந்து” (திருமொழி 3 – 7 – 5), “தூவிசேரன்னமன்ன நடையாள்‌”’ (திருமொழி 3 – 7 – 9) என்று நடையை யிட்டு அன்னமாகச்‌ சொல்லுகையாலே, ஆத்மாவினுடைய ஸேஷத்வாநுரூபாநுஷ்டாநத்தைச்‌ சொல்லுகிறது.
ஆக இத்தால்‌, “என்‌ தெய்வ வுருவில்‌ சிறுமான்‌”’ (திருவா. 4 – 4 – 2) என்று அப்ராக்ருத ஸ்வபாவமாய்‌, *“’அகமேனியொழியாமே” (திருவா. 9 – 7 – 10) என்று ஸர்வேஸ்வரனுக்கு அந்தரங்க, ஸரீரமான ஆத்மாவுக்கு அவயவ பூதமான ஜ்ஞாநத்தினுடைய பிதைகள்‌ என்கிறார் –

138-சூழ்ச்சி அகற்றினீர்‌ என்னும் பழி, இணக்கி எங்ஙனே என்னும்‌ மேலெழுத்து, முன்னின்றாய்‌ இவளை நீரென்னும்‌ இருபடை மெய்க்‌ காட்டு, நீரென்னேயென்னு முடன்பாடு, இடையில்லை யென்னுமுதறுதல்‌, இருந்திருந்து நடந்தாளென்னும்‌ கொண்டாட்டம்‌ அவஸ்தா த்ரய வ்ருத்தி.
இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது (சூழ்ச்சி அகற்றினீர்‌ என்று தொடங்கி). ‘“தோழிமார் பலர்‌ கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌”” (பெரியா. திரு. 3 – 7 – 4) என்று தாயார்‌ தோழிமார் மேலே பழியிட, * அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றியகற்றினீர்‌”” (திருவா. 6 – 5- 2) என்று தோழி தாய்மார் மேல்‌ பழியிட, ““இணக்கி எம்மை யெம்‌ தோழிமார்‌ விளையாடப்‌ போதுமின்‌ என்னப்போந்தோமை”‘ (திருவா. 6 – 2 – 8) என்றும்‌, ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காளென்னை மூனிவது நீர்‌?” (திருவா. 5 – 5 – 1) என்றும்‌ தலைமகள்‌, “உங்களாலே யன்றோ எனக்கு இந்த ப்ராவண்யம்‌ உண்டாய்த்து‘ என்று பழி இரண்டுக்கும்‌ மேலெழுத்திட. (முன்னின்றாய்‌ இத்யாதி, – மெய்க்காட்டு) ”முன்னின்றாயென்று தோழிமார்களும்‌ அன்னையரும்‌ முனிதிர்‌”” (திருவா. 5 – 5 – 9) என்று தோழி தாய்மாரொடே கூடி நின்று தலைமகளைப் பொடிந்தும்‌, **தொலை வில்லி மங்கலம்‌ தொழுமிவளை நீரினி அன்னைமீர்‌ உமக்காசையில்லை விடுமினோ”? (திருவா. 6 – 5 – 1) என்று தோழி, தாய்மார்க்கு கார்யோபதேஸம்‌ பண்ணுவாரைப் போலே தலைமகளுக்கும்‌ ஸஹகரித்தும்‌ இப்படி(இருபடை மெய்க்காட்டு.)
(நீரென்னேயென்னு முடன்பாடு) ““அன்னையரும்‌ தோழியரும்‌ நீரென்னே யென்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌”‘ (திருவா. 5 – 4 – 8) என்று தலைமகள்‌ தாய்மாரொடும்‌ தோழிமாரோகும்‌ உடன்பாடாக வார்த்தை சொல்ல; (இடை யில்லை யென்னு முதறுதல்‌) அவர்கள்‌, “நீ எங்கள் வார்த்தை கேட்கில்‌ மீளவமையும்‌’ என்ன, ”உங்களோடு எங்களிடையில்லையே”’ (திருவா. 8 – 2 – 7) என்று ‘நீங்கள்‌ இவ் விஷயத்தினின்றும்‌ மீட்கத் தேடில்‌ உங்களுக்கும்‌ எனக்கும்‌ ஒரு ஸம்ப,ந்தமில்லை” என்று அவர்களை அதிக்ரமிக்க, (இருந்திருந்து நடந்தாள்‌ என்னும்‌ கொண்டாட்டம்‌) ‘“இருந்திருந் தரவிந்தலோசன என்றென்றே தைந்திரங்குமே” (திருவா. 6 – 5 – 8) என்று தோழி கொண்டாட்டமும்‌, “நேரிழை நடந்தாள்‌ எம்மை ஒன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று தாயார்‌ கொண்டாட்டமுமான இவை அவஸ்தா த்ரய வ்ருத்தி.

இத்தால்‌ இந்த வ்ருத்திகளினுடைய அவஸ்தா த்ரயத்துக்கும்‌ ஸ்வாபதேஸம்‌ – “சூழ்ச்சி அகற்றினீர்‌’ என்று அந்யோந்யம்‌ பழியிடுகிற வித்தால்‌ சேஷத்வ ஜ்ஞாநம்‌ ஸேஷ வ்ருத்தி பர்பந்தமா யல்லதிராமையாலே அந்த ஸம்பந்த ஜ்ஞாநம்‌ ப்ராப்ய ருசிக்கு ஹேது என்றும்‌, உபாயாத்‌யவஸாயம்‌ உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லதிராமையாலே அந்த அத்‌யவஸாயம்‌ உபேய ருசிக்கு ஹேது வென்றும்‌, மேலெழுத்து என்று ப்ராப்ய த்வரை தன்னை நிரூபித்தாலும்‌ இது ஸம்பந்த உபாயங்களிரண்டாலும்‌ வந்ததென்று சொல்லுகிற வித்தாலும்‌, ஸம்பந்த ஜ்ஞாநமும்‌ உபாயாத்‌யவஸாயமும்‌ ப்ராப்ய த்வரைக்கு ஹேது வென்று அந்த ஸம்பந்த உபாயங்களிரண்டினுடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றி நிற்கிறது.
ப்ரதம தஸையில்‌ – வ்ருத்தி இருபடை மெய்க்காட்டென்கிற வித்தால்‌ ஸம்பந்த ஜ்ஞாநமானது ஸேஷத்வம்‌ ஸ்வரூபமான பின்பு அந்த ஸேஷி தானே வந்து விஷயிகரிக்கக்‌ கண்டிருக்கு மத்தனை யல்லது தான்‌ த்வரிக்கை ஸ்வரூப விருத்‌தம்‌ என்று உபாயாத்‌யவஸாயத்துக்கு ஸஹ்கரித்தும்‌, ஸேஷத்வம்‌ வ்ருத்தி பர்யந்தமாகையல்லது ஸித்‌தியாதென்று அந்த வ்ருத்தியில்‌ ருசியை விளைக்கையாலே ப்ராப்ய த்வரைக்கு ஸஹகரித்தும்‌, உடன்பாடென்கிற வித்தால்‌ ப்ராப்யம்‌ ஸம்பந்தாநுகுணமாகவும்‌ வேண்டுகையாலே ப்ராப்ய த்வரை இவை யிரண்டும்‌ கூடி நின்ற படி சொல்லிற்று.
ஆக இருபடை மெய்க்காட்டு உடன்பாடென்கிற இரண்டாலும்‌ ஸம்பந்த ஜ்ஞாநம்‌ உபாய வ்யவஸாயம்‌ உபேய ருசி என்கிற இவற்றில்‌ சேர்ந்து நின்றது மத்‌யம தஸையில்‌ வ்ருத்தி-உதறுதல்‌ கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ ப்ராப்ய த்வரையானது ஸம்பந்த உபாயங்களை அதிக்ரமிக்க, பலதஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ‘“எம்மை யொன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று உபாயாத்‌யவஸாய ஸத்‌பாவம்‌ இல்லை யென்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது, சரம தஸையில்‌ வ்ருத்தி; ஆக அவஸ்த_த்ரய வ்ருத்தி –

139-தாயார்‌, ஏதலர்‌ உற்றார்கள்‌ என்னும்‌ ஸாத்‌ய ஸித்‌த ஸாதந நிஷ்டரை; மகள்‌, நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌ ஸித்‌த ஸாதந ஸாத்‌ய பரரை.
(தாயார்‌ ஏதலர்‌ இத்யாதி,) தாயாரான உபாயாத்‌யவஸாய தஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ”எம்மை யொன்றும்‌ நினைத்திலளே ” (திருவா. 6-9- 7) என்று உடாயாத்‌யவஸாய ஸத்‌ பாவமில்லை என்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, ஸித்‌த ஸாதநத்துக்கு எதிர்த் தட்டான உபாயாந்தர நிஷ்டரையும்‌, அநுகூலரான ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌ சொல்லுகிறது. (மகள்‌ நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌) மகள்‌ என்று சொல்லுகிற ப்ராப்ய த்வரா தஸையில்‌ “நம்முடை ஏதலர்‌ முன்பு நாணி?” (திருவா. 8 – 2 – 1) என்று அந்த விரோதிகளாகவும்‌,யாமுடைத் துணையென்னும்‌ தோழிமாரும்‌”’ (திருவா. 9 – 9 – 5) என்று தன்னோடு ஸம ஸுக துக்கிகளான பந்துக்களாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, தன்னைப் போலே பகவத்‌ விஷயமொன்றிலும்‌ இழிந்திருக்கச் செய்தேயும்‌ அத்தை ப்ராப்யம்‌ என்று கொள்ளாதே ப்ராபகம்‌ என்று கொள்ளுகிற ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌, தன்னைப்‌ போலே ப்ராப்யமென்றிருக்கிற ஸாத்‌ய பரரையும்‌ சொல்லுகிறது –

140-நாலயலார்‌ அயற்சேரியார்‌ உபாய சதுஷ்டயாந்தர்யாமித்வ பரர்‌.
(நாலயலார்‌ இத்யாதி, அந்தர்யாமித்வபரர்‌) ”நாலயலாருமறிந்தொழிந்தார்‌] (
நா.தி.12 – 2) என்றும்‌, “*அயற்சேரியுள்ளாருமெல்லே” (திருவா. 6 – 7 – 4) என்றும்‌ நாலசலாகவும்‌, அயல் தெருவாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்தி என்கிற நான்கு உபாய நிஷ்டரையும்‌, பரத்வம்‌ முதலான மற்றை நாலிடத்திலும்‌ உறவற்று கேவலம்‌ ஸ்வரூபாந்தர்யாமியளவிலே உறைத்திருக்குமவர்களையும்‌ சொல்லுகிறது –

141-கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத்‌ தன்பற்றுள்ளசல்‌.
ஆனால்‌ ப்ரபத்தி நிஷ்டரையும்‌ அசலாகச்‌ சொல்லுமோ என்னில்‌, (கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத்‌ தன் பற்றுள்ளசல்‌) என்கிறார்‌. ““கீழையகத்துத் தயிர் கடைய”* (பெரு.தி. 6 – 2) இத்யாதி யாலே சொல்லுகிற கர்ம நிஷ்டரையும்‌, ‘“மேலையகத்து நங்காய்‌ வந்து காண்மின்கள்‌” (திருமொழி 10 – 8 – 2) என்று சொல்லுகிற ஜ்ஞாந யோக நிஷ்டரையும்‌, ““வடக்கிலகம்‌ புக்கிருந்து மின் போல்‌ நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம்‌ செய்து வைத்த அன்பா” (பெரியா. தி. 3 – 1 – 2) என்றும்‌ சொல்லுகிற பக்தி யோக நிஷ்டரர்க்கும்‌ ஸித்‌த ஸாதந நிஷ்டரர்க்குப்‌ புறவாசலாகையாலும்‌ இவ் விஷயத்திலே இழிந்திருக்கச் செய்தேயும்‌ தன் பற்றை உபாயமென்றிருக்குமவர்கள்‌ உள்ளசலாயிருக்கையாலும்‌ சொல்லுகிறது

142-ஊரார்‌ நாட்டார்‌ உலகர்‌ கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்தரர்‌.
(ஊரார்‌ நாட்டார்‌ உலகர்‌) ”ஊரும்‌ நாடுமுலகமும்‌”
‘ (திருவா, 6 – 7 – 2) என்றும்‌, “ஊரவர்‌ கவ்வை” (திருவா, 8 – 3 – 4) என்றும்‌, ”நாட்டாரோடியல் வொழிந்து ”* (திருவா, 10 – 6 2) என்றும்‌, ““எங்கள் கண் முகப்பே உலகர்கள்‌”‘ (திருவா. 9 – 2 8) என்றும்‌ சொல்லுகிற இது – ஊரார்‌ என்று கேவலரையும்‌, நாட்டார்‌ என்று புத்ர பங்வந்நாதிகளான ஐஹலெளகிக ஐஸ்வர்ய காமரையும்‌, உலகத்தவர்‌ என்று ஸ்வர்க்காதி பர லோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரையும்‌ சொல்லுகிறது.

143-இறுகலிறப்புக்கும்‌ இறந்தால்‌ தங்குமூரொக்குமே.
கேவலனையும்‌ ஓரூராகச்‌ சொல்லுவானென்‌ என்னில்‌, (இறுகலிறப்புக்கும்‌ இறந்தால்‌ தங்குமூரொக்குமே) ““எல்லாம் விட்ட இறுகலிறப்பு’” (திருவா. 4 – 1 – 10) என்று ஐஸ்வர்யத்தையும்‌ -பகவதநுபவத்தையும்‌ விட்டு ஆத்மாநுபவ மாத்ரமான ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற கேவலனுக்கு அவ் வநுபவம்‌ நித்யமாம் போது “ஜரா மரண மோக்ஷாய”‘ (கீதை) என்று அதுக்கு விரோதி யான ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்கு கர்மீ பவிக்கைக் கடியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸம்பந்தம்‌ அற வேண்டுகையாலே ““யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌”” என்கிறபடியே “இறந்தால்‌ தங்குமூரண்டமே கண்டு கொண்மின்‌”” (திருமொழி 10 – 2 – 10) என்று அவனுக்கு வஸ்தவ்யம்‌ தேஸ விஸேஷமாக வேண்டுகையாலே ஊர்‌ என்கிறார் –

144-சிறு சீரார்‌ சுளகுகள்‌ உபய விவேக பரிகரம்‌
(சிறு சீரார்‌ சுளகுகள்‌ உபய விவேகபரிகரம்‌) ”சிறு சுளகும்‌ மணலுங் கொண்டு”’
(நா.தி. 2 – 8) என்று சிறு சுளகாவது – பெரு மணலையும்‌ நுண் மணலையும்‌ பிரிப்பதொன்றாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான ப்ரமாணம்‌, ”சீரார் சுளகில்‌ சில நெல்‌ பிடித்தெறியா” (சிறியதிரு மடல்‌) என்று தொடங்கி ““பேராயிரமுடையானென்றாள்‌”’ என்று இவளுக்கு இவ் வ்யாமோஹத்தை விளைத்தான்‌ ஸர்வேஸ்வரனாகையாலே, சீரார்‌ சுளகென்பது ஆத்ம பரமாத்ம விவேகத்துக்கு பரிகரமாய்ப்‌ போருகிற ப்ரமாணம் –

145-மாலை கங்குல்‌ காலை பகல்‌ ரஜஸ்‌ தமஸ்‌ ஸத்த்வ ஸூத்‌த-ஸத்தவ ஜ்ஞாநங்கள்‌.
(மாலை கங்குல்‌ இத்யாதி, – ரஜஸ்‌ தமஸ்‌ ஸத்த்வ ஸாத்‌த ஸத்தவ ஜ்ஞாநங்கள்‌) “மாலையும்‌ வந்தது ”
(திருவா. 9 – 9 – 10) என்றும்‌, ”செங்களம்பற்றி நின்றெள்கு புன் மாலை ”? (திருவிரு. 77) என்றும்‌ சொல்லுகையாலே, மாலையாவது – ஸந்த்‌யை; அது ராகோத்தரமா யிருப்ப தொன்றாகையாலே ராஜஸ ஜ்ஞாநம்‌, “கங்குல்‌ நாழிகை ஊழியில்‌” (திருமொழி 9- 5 – 3) என்றும்‌, ”செல்கின்ற கங்குல்வாய்‌”” (திருவா. 5 – 4 – 10) என்றும்‌ கங்குல்‌ என்பது – மத்‌ய ராத்ரி; அது தமோ பூதமாயிருக்கையாலே தாமஸ ஜ்ஞாதம்‌. ““காலையெழுந்திருந்து” (நா.தி. 9 – 8) என்று காலையாவது – ப்ராத காலம்‌; அது ப்‌ராஹ்ம முஹுர்த்தமாய்‌ ஸத்த்வோத்தர காலமாகையாலே ஸாத்த்விக ஜ்ஞாநம்‌. ““பகல் கண்டேன்‌ நாரணனைக் கண்டேன்‌”‘ (இ.திரு. 71) என்று, பகலாவது – ஸகல பதாார்த்தங்களையும்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிப்பதொரு காலமாகையாலே குண விக்‌ரஹ விபூதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை யதாவாக ஸாக்ஷாத் கரிக்கிற ஸூத்‌த ஸத்த்வ ஜ்ஞாநம்‌. இத்தால்‌ அந்யதா ஜ்ஞாநம்‌, விபரீத ஜ்ஞாதம்‌, யதாஜ்ஞாதம்‌, தத் பலமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம்‌ என்கிற இவற்றைச்‌ சொல்லுகிறது –

146-நிலா முற்றம்‌ ப்ரஜ்ஞா ப்ராஸாத மென்னு மெல்லை நிலம்‌.
(நிலா முற்றமித்யாதி, – எல்லை நிலம்‌) *“நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌”
(திருமொழி 8 – 2 – 2) என்று நிலா முற்றமாகச்‌ சொல்லுகிறது – “’ப்ரஜ்ஞா ப்ராஸாத, மாருஹ்யா ஸோச்யஸ் ஸோசகாந்‌ ஜநாந்‌ ! பூமிஸ்தாநிவ ஸைலஸ்தோ ஹ்யஜ்ஞாந்‌ ப்ராஜ்ஞ ப்ரபஸ்யதி’‘ என்று சொல்லுகிறபடியே “காணுமோ கண்ண புரமென்று ‘காட்டினாள்‌”’ (திருமொழி 8 – 2 – 2) என்று சொல்லுகையாலே ததீயரை ப்ராப்யர்‌ என்கிற எல்லை நிலமான புருஷார்த்த ஜ்ஞாநத்தை என்கிறார் –

147-கலை வளை அஹம்‌ மம க்ருதிகள்‌.
(கலை வளை என்று தொடங்கி – மம க்ருதிகள்‌) ‘“கை வளையும்‌ மேகலையும்‌ காணேன்‌ கண்டேன்‌ கனமகரக் குழை யிரண்டும்‌ நான்கு தோளும்‌”’
(திருநெடு. 22) என்றும்‌, ““கலையாளாவகலல்குல்‌ கன வளையும்‌ கையாளா என்செய்கேன் நான்‌” (திருமொழி 5 – 5 – 2) என்றும்‌ கலை வளையாகச்‌ சொல்லுகிறது – பகவதநுபவ விரோதியான அஹங்கார மமகாரங்களை-

148-பட்டம்‌ சூடகமாவன பராவர குருக்கள்‌ பூட்டும்‌ ஆத்ம பூஷணங்கள்‌.
(பட்டம்‌ சூடகமாவன – பூஷணங்கள்‌) ”பட்டங்கட்டிப் பொற்றோடு பெய்திவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்து”
(பெரியா. திரு. 3- 7 – 6) என்றும்‌, “சூடகமே தோள் வளையே” (திருப்பாவை 27) என்று தொடங்கி இவற்றாலே சொல்லுகிற ஆபரணங்களாவன – ‘“க்ருஷ்ணாங்கரி துளஸீ மெளளி: பட்டம்‌ க்ருஷ்ணாபிவந்தநம்‌ ! குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம்‌ கங்கணோஞ்ஜலி:” என்கிறபடியே ப்ரதமத்திலே இவளை அங்கீகரித்த ஆசார்யன்‌ உண்டாக்குமவை. இவ் வாத்மாவுக்கு அலங்காரமா யிருக்கிற நாம ரூபங்களும்‌, பகவத்‌ வந்தநாதிகளும்‌, பின்பு அவ்வாசார்ய வைபவத்தை உணர்த்தினவன்‌ உண்டாக்கின ஸேஷத்வ ஜ்ஞாநாதிகளும்‌ என்கிற இவை –

149-பந்து கழல்‌ பாவை குழமணன்‌ யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ சிற்றில்‌ தூதை முதலாவன குண த்ரய விசித்ர கர்ம ஸுூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும்‌ சுழன்‌றுழன்றும்‌ பறிபட்டும்‌ அற்பசாரமாமவையுமாய்‌, மதீயமென்னில்‌ விட்டகலவும்‌ ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌ முனிவதும்‌ இக் காலம்‌ ஈதோ என்னப்படும்‌ பொங்கைம்புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌.
(பந்து கழல்‌ இத்யாதி, – போக்‌ யாதி, முதலானவை] போக உபகரணமாகவும்‌ சொல்லப்படுகிறவற்றுக்கு ஸ்வாபதேஸம்‌ அருளிச் செய்கிறார்‌. ”பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ”: (திருவா. 6 – 2 – 1) என்று பந்து கழல்‌ என்பது – போக ஸ்தாநமாகிற ஸ்தூல ஸூக்ஷ்ம ஸரீரங்களை- ““கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது?” (திருவா. 6 – 2- 7) என்றும்‌, ”குழகி யெங்கள்‌ குழமணன் கொண்டு”” (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ சொல்லுகையாலே பாவை குழமணன்‌ என்பது – போக்த்ரு வர்க்கமான ஸ்த்ரீ புருஷ விபாகத்தை. ““சீருற்ற அகில் புகை யாழ்‌ நரம்பு” (திருவா. 9 – 9- 7) என்றும்‌, “தைவந்த தண் தென்றல்‌’” (திருவா. 5 – 4 – 8) என்றும்‌, ‘“மேவு தண் மதியம்‌” (திருவா. 9 – 9 – 4)-என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி ”’ (நா.தி. 5 – 5) என்றும்‌, “சாந்தமும்‌” பூணும்‌ சந்தனக் குழம்பும்‌”” (திருமொழி 2 – 7 – 3) என்றும்‌ சொல்லுகிற யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ என்கிறவை ஸப்‌தாதிகளான போக்‌யங்கள்‌. சிற்றில்‌ ‘ என்பது – போக ஸ்தாநம்‌, தூதை என்பது – பதார்த்தங்களை இட்டு வைப்பதொன்‌றாகையாலே போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம்‌,
(குண த்ரய விசித்ர கர்ம ஸூத்ரத்தாலே கட்டி)
பந்தானது – வெண்ணூல்‌ செந்நூல்‌ கருநூலாலே கட்டியிருப்ப தொன்றாகையாலே, ப்ரக்ருதியும்‌, ‘‘லோஹித ஸுக்ல க்ருஷ்ணாம்‌”’ (தை.௨..) என்று ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாலே விசித்ரமாய்‌. “த்வம்‌ ந்யஞ்சத்‌ பீருதஞ்சத்‌, பிர் கர்ம ஸூத்ரோபபாதி,தைச | ஹரே விஹரஸி க்ரீடா கந்து, கைரிவ வஸ்துபி?”’ என்கிறபடியே கர்ம ஸூத்ரத்தாலே கட்டி. (வீலையாக ப்ரேரிக்க விழுந்‌தெழுந்தும்‌ சுழன்றுழன்றும்‌) ““அஜ்ஞோ ஜந்துர நீஸோய மாத்மநஸ்ஸுக துக்கயோ ச | ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத்‌ ஸ்வர்க்கம்‌ வா ஸ்வ ப்‌ரமேவ வா’” என்கிறபடியே அஜ்ஞனாய்‌ அஸக்தனா யிருக்கிற இவன்‌ கர்மாநுகுணமாக ஈஸ்வரன்‌ ப்ரேரிக்க, ்‌ யமாலய மஹாஸூலே மாதுர் ஜடர தோல்பதா ! யாதா யாத ஸஹஸ்ராணாம்‌ முநே ஜீவஸ்ய ஸாதநம்‌ 1! க்வசித் கதஈசித் ஸ்வர்க்கஸ்ய புநாபதந துர்கதோ ‘‘ என்கிறபடியே ஸ்வாக்க, -நரக-கர்ப்பங்களிலே தட்டித் திரிந்து பறிபட்டு, ““பந்து பறித்து”” என்கிறபடியே ஈஸ்வரன்‌ தன்னுடைய போக விரோதி, என்று விடுவிக்க விட்டும்‌.
(அற்ப சாரமாமவையுமாய்‌) ““அற்ப சாரங்களவை சுவைத் தகன்று ஓழிந்தேன்‌”’ (திருவா. 3 – 2- 6) என்கிறபடியே ஸப்‌தாதிகள்‌ பகவத்‌ விஷயத்தினின்றும்‌ அகற்றுமதொழியத்‌ தன் பக்கல்‌ புஜிக்கலாவ தொன்றில்லாதபடி அல்ப ஸாரங்களாய்‌. (மதீயமென்னில்‌ விட்டகலவும்‌) இவற்றை பகவதீயத்வாகார மொழிய மதீயமென்று பார்த்த போது “சிற்றில்‌ மென் பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை”” (திருமொழி 3 – 7 – 8) என்கிற படியே த்யாஜ்யங்களாய்‌. (ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌) ததீயத்வாகாரத்தாலே கண்ட போது ““இகழ்விலிவ்வனைத்துமென்கொ?” (திருவா. 3 – 4 – 1) என்கிறபடியே கட்டடங்க உபாதேயங்களாயும்‌.
(முனிவதுமிக்காலமீதோ என்னப்படும்‌) “அன்னை முனிவதும்‌ அன்றிலின்‌ குரலீர்வதும்‌ இத்யாதி, (திருமொழி 11 – 2 – 5), இக்காலமிவ்வூர்ப் பனிப்பியல்வெல்லாம்‌ தவிர்ந்தெரி வீசும்‌” (திருவிரு. 5) என்கிறபடியே அவனை யொழியக் கண்டபோது ப்ரதிகூலங்களாயும்‌, ““அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே”” (திருவிரு. 27) என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அநுகூலங்களாயுமிருக்கிற. (பொங்கைம் புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌) பொங்கைம்புலன்‌ என்கிற பாட்டிற் சொல்லுகிற போக்‌ய-போக்த்ரு வர்க்க, -போக உபகரண-போக ஸ்தாநங்களைச்‌ சொல்லுகிறதென்கிறார்‌.

| இரண்டாம்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-முதல்‌ ப்ரகரணம்‌-

August 3, 2025

எம்பெருமானின் விசேஷம் அவதாரங்களில் கர்த்தம பிரஜாபதியின் திருமடந்தையான தேவர் ஹூதிக்கு குமாரராய்‌ அவதரித்தார்‌ கபில மஹரிஷி. ஸாங்க்யம்‌ என்கிற ஞான தர்ஸனத்தை தம்‌ தாய்க்கு உபதேஸித்து, அவளுக்கு தேஹாத்ம விவேகத்தை உண்டாக்கினார்‌ இவர்‌. இவரின்‌ கர்தம ஆஸ்ரமம்‌ ஹிமய மலையின்‌ அருகிலே உள்ளது. இவர்க்குப்‌ பல ஸிஷ்யர்கள்‌ உண்டு. அவர்களுள்‌ ப்ரதான ஸிஷ்யர்‌ ஆஸூரி மஹரிஷி. ஆஸூரி மஹரிஷியின்‌ ஸிஷ்யர்‌ பஞ்சயிகாசாரியார்‌ என்று இவரின்‌ இந்த வரலாற்றை கூறுகிறது மஹாபாரதம்‌; ஆஸூரி என்று வடமொழியில்‌ கடுகுக்குப்‌ பெயராகும்‌. சாணக்யன்‌ தகப்பனார்‌ சணகர்‌ (என்றால்‌ கடலை), பூர்வ காலத்தில்‌ இப்படி மலை, கொடி, தான்யம்‌ இத்யாதிகளை பேர்‌ இடும்படி வழக்கம்‌ ஸ்ம்ருதி இதிஹாஸங்களில்‌ காணலாம்‌. ஆஸூரி முனி பாஞ்சராத்ர அநுஷ்டானம்‌ அவலம்பித்து வந்தவர்‌ என்றும்‌ காணலாம்‌. பாஞ்சராத்ரிகள்‌ ஸிகை, யக்ஞோபவீதம்‌, வைஷ்ணவாசரணம்‌ உள்ளவர்கள்‌. ஆகையால்‌ ஆஸூரி வைஷ்ணவர்‌.
ஆஸுரி வம்மாத்திற்கு கோத்ரம்‌ ஹாரீதம்‌ (ஒரு பக்ஷி) இல்லை ஹரிதம்‌ (என்றால்‌ பச்சை). இரண்டையும்‌ சேர்த்து பச்சைக் குருவி என்று சொல்லலாம்‌. ஹாரீத கோத்ரத்துக்கு ப்ரவரர்கள்‌ ஆங்கிரஸர்‌, அம்பரீ ஷர்‌, யெளவநாஸ்வர்‌. ஆஸரி ஹாரீத கோத்ரம்‌ ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌, க்ருஷ்ண யஜுர்‌ வேதம்‌. ஆங்கிரஸ்‌ என்கிற ப்ரஜாபதி சதுர்முகனின்‌ மாநஸ புத்ரர்களில்‌ ஒருவர்‌. ப்ருகு, அங்கிரஸ்‌, மரீசி, அத்ரி இவர்கள்‌ ஒரு கூட்டம்‌; சித்ரஸிகண்டி என்று பேர்‌. இவர்கள்‌ ப்ராச்யர்கள்‌.
அம்பரீஷன்‌ க்ஷத்ரியன்‌. யெளவநாஸ்வன்‌ அவரின்‌ குமாரர்‌ மாந்தாதா. இவர்‌ இக்ஷவாகு ஸூர்ய வம்மத்தில்‌ பெரிய ராஜாவாய்‌ பூமியை ஆண்டவர்‌. ஹாரீத கோத்ரம்‌ க்ஷத்ரியம்‌ கலந்த ப்ராம்ஹண வம்ஸம்‌. ஹாரீதர்‌ பூத புரியில்‌ அநந்த தீர்த்தத்தில்‌ காயத்ரீ யோகத்தால்‌ ப்ராஹ்மண்யம்‌ பெற்றார்‌. இந்த விசாரத்தை பூத புரி மாஹாத்மியத்தில்‌ காணலாம்‌. இந்த வம்மத்தில்‌ ஆஸூரி கேஸவாசாரியர்‌ இந்த பூத புரிக்கு ராஜா, யதிராஜர் என்று கொண்டாடும்படியாய்‌ ஸ்வாமி ராமாநுஜாசாரியர்‌ இந்தக்‌ குலத்தில்‌ இவரது திருக் குமாரராய்‌ அவதரித்தார்‌. கருடவாஹந பண்‌டிதரின் திவ்ய ஸுரி சரித்திரத்தில்‌ காணலாம்‌. வடுகநம்பிகள்‌ கூறியபடி எம்பெருமானாருக்கு இஷ்ட தெய்வம்‌ காஞ்சி தேவப்பெருமாள் -இவர் தான் இவரின்‌ நித்ய ஆராதனப்‌ பெருமாள்‌. எம்மான்‌ பெம்மான்‌ என்றால்‌ பெருமாள்‌ என்றும்‌ காஞ்சி தேவராஜனைக்‌ குறிக்கும்‌. எம்பெருமானாருக்கு அநுஜரின்‌ பேர்‌ ஆஸுூரிப் பெருமாள்‌ என்று ஸ்ரீராமாநுஜ திவ்ய சரிதத்தில்‌ பிள்ளைலோகம்‌ ஜீயர்‌ விளக்கியுள்ளார்‌. எம்பெருமானாருக்கு அவதரித்த யமளரின்‌ பேர்‌ எம்பெருமான்‌ மற்றும்‌ பெருமாள என்று நிஸ்சயித்தார்‌. இருவர்‌ குமாரரில்‌ ஆஸூரிப் பெருமாள்‌ என்று இரண்டாவது குமாரர்‌ பின்பு ராமாநுஜரை ஆஸ்ரயித்து மேலே எம்பெருமானாரால்‌ -74 ஸிம்ஹாஸநாதிபதிகளில்‌ ஒருவராய்‌ நியமிக்கப்பட்டு. கூரத்தாழ்வனிடம்‌ அடிபணிந்து ஸகல ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களையும்‌ கற்றார்‌ என்பது: இதே வம்ஸத்தில்‌ மேலே அவதரித்த ஆஸுூரி தேவராஜர்‌ என்கிற ஆயி ஜநந்யாசார்யரின்‌ ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

இவருக்கு ஆஸூரிப்பெருமாள்‌. ஆஸுூரிதேவர்‌, புண்டரீகாக்ஷர்‌ என்றும்‌ திருநாமம்‌ உண்டு. இவர்‌ எம்பெருமானாரிடம்‌ ஆக்ஞை பெற்று திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்‌. இவரின்‌ பெளத்ரர்‌ ஆஸூரி ஸ்ரீநிவாஸாசாரியர்‌, இவரின்‌ பெளத்ரர்‌ ஆஸூரி லக்ஷமணாசாரியர்‌. இவரின்‌ குமாரர் தான்‌ ஆஸூரி தேவராஜர்‌ என்னும்‌ மேலே திருநாரணன்‌ இவரை ஆயி ஜனனி என்று அபிமாநித்து, இவருக்கு ஆயி ஜநந்யாசாரியர்‌ என்று பேர்‌ ஆயிற்று. இவர்‌ அருளிச் செய்த பல ப்ரபந்தங்கள்‌ மற்றும்‌ வ்யாக்யானங்களில்‌ ஒன்று த்ராவிட ப்ரஹ்ம ஸூத்ரம்‌ என்கிற ஆசார்ய ஹ்ருதயத்துக்கு முதல்‌ வ்யாக்யானம்‌. மேற்கொண்டு, இவர்‌ ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ ஸகல அர்த்தத்தையும்‌ ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்கு ஸாதித்தார்‌ என்று பிள்ளைலோகம்‌ ஜீயரின்‌ யதீந்த்ரப்ரவண ப்ராபவத்தில்‌ காணலாம்‌. எம்பெருமானாரின்‌ புநராவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு ஆசார்யர்‌ என்கிற விருதை அங்கீகரிக்காமல்‌ அவரை குருவாக அடைய அவரிடம்‌ ஸந்யாஸ தீக்ஷை பெற்று அவரை ஸந்யாஸதீக்ஷா குருவாய்‌ அடைந்தார்‌.

ஐநநயாசார்யரது திருவம்மாத்தின்‌ மூலபுருஷர்‌ பகவத்‌ ராமாநுஜருடைய விடப்பட்ட பத்நியின்‌ கர்பத்தில்‌ பிறந்த எம்மான்‌, பெம்மான்‌ என்ற இரட்டைக்‌ குழந்தைகளில்‌ இரண்டாம்‌ பிள்ளையான பெம்மான்‌ ஆஸுரிப்பெருமாள்‌. ஆயிஸ்வாமிக்கு ஈடு வ்யாக்‌,யாந, ரஹஸ்யங்களுக்கு ஆசார்யர்‌ மேல் நாடாச்சான்‌ பிள்ளை என்று பெயர்‌ பெற்ற தே,வராஜ நாலூராச்சான் பிள்ளை. ஆசார்யஹ்ருத,யம்‌ என்ற திராவிட ப்‌, ரஹ்ம ஸுத்ரத்திற்கு ஆசார்யர்‌ கிடாம்பி நாயனார்‌ வரத, வேங்கட ஸூரி என்ற திருமலை அய்யங்கார்‌; இவருக்குப்‌ பெத்தார்‌ என்று திருநாமம்‌. இவர்‌ ஆசார்ய ஹ்ருத,ய பரம்பரையில்‌ இரண்டாம்‌ பெத்தார்‌. ஆயி ஸ்வாமிக்கு ஸந்யாஸ தீக்ஷா கு,ரு மணவாளமாமுனிகள்‌. இவர்‌ ‘கல்யாணி நாச்சியார்‌’ என்ற திருநாராயணபுரத்‌ தாயாரின்‌ திருத்தேரின்‌ அம்ஸம்‌, இவர்‌ மணவாள மாமுனிகளிடம்‌ ஸந்யாஸ ஆஸ்ரமத்தைப்‌ பெற்று, விராகி யாகத்‌ திருநாராயண புரத்தில்‌ கல்யாணி புஷ்கரிணிக்கு வடக்கே திருக் குலத்துச்‌ சேரியின்‌ அருகே திருநந்தவநம்‌ செய்து திருநாரணனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வந்தார்‌. இவ்வுலகில்‌ 103 வருஷம்‌ எழுந்தருளி யிருந்து திருநாராயண புரத்திலேயே திருநாடலங்கரித்தார்‌. இவருடைய திருவரசு கல்யாணி புஷ்கரிணிக்கு அருகே உள்ளது; இன்றும்‌ ஸேவிக்லாம்

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

ஸ்ரீயாதவாத்ரி, திருநாராயணபுரம்‌, அஷ்டோத்தர ஸத ஸ்தாந ஸாரம்‌, தக்ஷிண பத்ரிகாஸ்ரமம்‌, வைகுண்ட வர்த்தந ஷேத்ரம்‌, இந்திராக்ஷேத்ரம்‌, ஸம்யமி ஸார்வபெளம விஜயஸ்தாநம்‌ என்னும்‌ பலபல திருநாமங்களால்‌ விளங்குகிற (மேலக்கோட்டை) திவ்ய க்ஷேத்ரத்தில்‌, ஸேனை முதலியார்‌ அவதரித்த ஓங்கு துலாப் பூராட நன்னாவில்‌ உதித்து, எம்பெருமானார்‌ தம்‌ திருக் கைகளாலே திருவாராதநம்‌ ஸமர்ப்பித்த திரு நாராயணப்‌ பெருமாளுக்கும்‌, ராம ப்ரியனும்‌, யதிராஜ ஸம்பத்குமாரனுமான செல்வப் பிள்ளைக்கும்‌ யஸோதா தேவியைப்‌ போலப்‌ பாலமுதும்‌, ஸ்ரீமாலாகாரர்‌, ஸ்ரீவிஷ்ணு சித்தர்‌, ஆண்டாள்‌ முதலானவர்களைப்‌ போலப்‌ புஷ்பமும்‌ ஸமர்ப்பித்துக் கொண்டு புஷ்ப-க்ஷீர கைங்கர்ய நிரதராய்‌, நம்‌ தர்ஸநத்தை நிர்வஹித்துக் கொண்டு ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய்‌ விளங்கினவராய்‌, ‘திருநாராயணபுரத்து ஆய்‌”, ‘திருத்தாழ்வரை தாஸர்‌: (ஸ்ரீஸாநு தாஸர்‌), “ஐநந்யாசார்யர்‌’, ‘மாத்ரு குரு’, ஆயி”, ‘தேவ ராஜர்‌: என்று ப்ரஸித்தி பெற்றவரே இம் மஹாசார்யர்

எம்பெருமானார்‌ திருவவதரித்த வம்ஸம்‌ ஹாரீத வம்ஸம்‌. ‘ஆஸூரிப் பெருமாள்‌’, ‘ஆஸூரி தேவர்‌: என்று ப்ரஸித்தரான ஆஸூரி புண்டரீகாக்ஷர்‌ இந்த ஹாரீத வம்ஸத்தில்‌ அவதரித்து, எம்பெருமானாரை அடி பணிந்து போந்த மஹாநுபாவர்‌. இவர்‌ எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகளுள்‌ ஒருவர்‌. ”குடீங்க்ருத்வா தஸ்மிந்‌ யதுகிரி தடே நித்ய வஸதி’” என்று எம்பெருமானார்‌ பரமபதத்துக்கு எழுந்தருளுவதற்கு முன்பு நியமித்த ஆறு உபதேசங்களில்‌ நான்காவதான ஸ்ரீயாதவ கிரியில்‌ நித்ய வாஸத்தை ஆதரித்து இந்த ஆஸுூரிப் பெருமாள்‌ திருநாராயண புரத்துக்கு எழுந்தருளி எம்பெருமானார்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாக அங்கே நிலையாக நின்று பெருமாளுக்கு மங்களா ஸாஸந பரராய்‌, தர்ஸந நிர்வாஹகராய்‌ எழுந்தருளி இருந்தார்‌. இவர்‌ வம்ஸத்தில்‌ அவதரித்தவர்‌ ஐநநீயாசார்யர்‌. இவர் திருத் தகப்பனார் திருநாமம்‌ ஆஸூரி லக்ஷ்மணாசார்யர்‌. இவர்‌ திருக் குமாரர்‌ ஆயி கேஸவாசார்யர்‌. இந்த ஆயி ஸ்வாமி ஸர்வ ஸங்க பரித்யாகம்‌ பண்ணி உத்துங்கமான ஸந்யாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார்

நம்பிள்ளை ஸிஷ்யர்களில்‌ ஒருவராய்‌, அவரிடமிருந்து திருவாய்மொழி ஈட்டைப்‌ பெற்றவர்‌ ஈயுண்ணி மாதவர்‌. இவருடைய ஸிஷ்ய பரம்பரையிலே ஈடு ஓராண் வழியாய்‌ உபதேசிக்கப்‌ பெற்று வந்தது. இவருடைய குமாரரும் -சிஷ்யருமான – ஈயுண்ணி பத்மநாபர்‌. இவருடைய ஸிஷ்யர்‌ நாலூர் பிள்ளை என்னும்‌ ஸூ மந கோலேஸர்‌. இவருடைய குமாரரும் -சிஷ்யருமான தேவராஜர்‌ என்னும்‌ நாலூராச்சான் பிள்ளை. இவருடைய ஸிஷ்யர்களில்‌ முக்யமானவர் திருநாராயணபுரத்து ஆய்‌ என்னும்‌ ஐநந்யாசார்யர்

தேவராஜருக்கு ‘ஆய்‌’ என்று திருநாமம்‌ வந்த வகையாவது – இவர்‌ தினந்தோறும்‌ பரிவுடன்‌ செல்வப் பிள்ளைக்கு ரஸ விஸேஷம்‌ குறையாமல்‌ ஸுகோஷ்ணமாயும்‌, ஏலா லவங்க கந ஸார குங்கும பரிமள யுக்தமாயும்‌ பாலமுது காய்ச்சி அமுது செய்யப்‌ பண்ணி வந்தார்‌. ஒரு நாள்‌ பாலமுது கொண்டு வரச்‌ சிறிது தாழ்க்கவே செல்வப் பிள்ளை அது பொறாமல்‌ ‘நம்‌ ஆய்‌ (தாய்‌) எங்கே? இன்னம்‌ காணோமே?” என்று அர்ச்சக முகேந வினவின படியாலே இவருக்கு ‘ஆய்‌” என்றும்‌, ‘ஐநந்யாசார்யர்‌’ என்றும்‌ நிருநாமமுண்டாயிற்று என்பர்

பகவத பாகவதர்களுக்குத்‌ தாய் போலே பரிவு காட்டி வந்தமையாலே ‘ஆய்‌’ என்றும்‌, ‘ஜநநீ’ என்றும்‌ சிறப்புப்‌ பெயர்‌ பெற்றவர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌, தேவராஜர்‌ என்பது இவருடைய இயற்பெயர்‌.திருநாராயண புரத்தில்‌ அவதரித்தவராகையாலே ‘திருநாராயணபுரத்து ஆய்‌’ என்று அழைக்கப்படுவர்‌. இவர்‌ அருளிய ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநமும்‌, திருப்பாவை வ்யாக்யாநங்களான ஈராயிரப்படியும்‌, நாலாயிரப்படியும்‌ இப்போது உள்ளன. திருமாலைக்கு இவர்‌ வ்யாக்யாந மிட்டருளினதாகப்‌ பெரிய திருமுடி யடைவு கூறும்‌. அது இப்போது கிடைப்பதில்லை

ஆயி ஸிஷ்யர்‌ நல்லப்ப நாயன்‌ என்பவரை பிள்ளை லோகம்‌ ஜீயர்‌ ”சச்சம்பிரதாயம்‌” (உப.ர. 58) என்ற பாட்டு வ்யாக்யாநத்தில்‌ கூறியிருக்கிறார்‌. ஆயி பெருமைகூறும்‌ பின்வரும்‌ பாடலையும்‌ எடுத்துள்ளார்‌.
மாறில் முடும்பை உலகாரியன்‌ வசனக் கலனும்‌
மாறன்‌ கருத்தின்‌ மணவாளன்‌ வார்த்தையும்‌ வல் விருளைச்‌
சீறும்படி திருத் தாழ்வரை தாதன்‌ தெரிந்தெனக்குத்‌
தேறும்படி உரைத்தான்‌ திருத்தாள்களென்‌ சென்னியதே,

[வசனக் கலன்‌ – வசந பூஷணம்‌. மாறன் கருத்தின்‌ மணவாளன்‌ வார்த்தை – ஆசார்ய ஹ்ருதயம்‌] என்று பிள்ளை லோகம் ஜீயர்‌ எடுத்துள்ள பாடல்‌ இவரை ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ வசந பூஷண ப்ரவசநத்தில்‌ ஈடுபட்டவராகக்‌ காட்டுகிறது

மா முனிகளுக்கும்‌ இவருக்கும்‌ உள்ள ஸம்பந்தம்‌ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில்‌ பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது
(மாமுனிகள்‌) ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச் செய்யும் போது ”ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்குதயம்‌:: என்கிற வாக்யத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக ஆகாமையாலே இதற்கு அர்த்த மருளிச் செய்வார்‌ ஆர்‌? என்று விசாரமுண்டாய்‌, திருநாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணுமென்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பம்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப்‌ போவோம்‌ என்று பறப்பட்டெழுந்தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவம்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்நமாக மார்க்க மத்யே வந்து ஸங்கதராக அவரைக் கண்டு, “எண்ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே!’ என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும் தாளும்‌ தடக்கையும்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸ்நம்‌ பண்ணி நிற்க, இதைக் கண்டு ஜீயர் ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாற் போலாயிற்று’ என்று மிகவும்‌ உகந்‌தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்ற மாடத் திருக்குருகூரேற எழுந்தருளி ஆயி பக்கலிலே ”ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸரிதா? ! ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தேவராஜம்‌ தமாஸ்ரயே” என்று அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன்‌ அருளிச் செய்தருள; ஆயி தமக்கு அதில்‌ அந்வயமற்றபடி தோற்ற,

பூதாரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்‌
தாதாரு மகிழ் மார்பன்‌ தானிவனோ? – தூதார
வந்த நெடுமாலோ? மணவாளமாமுனிவன்‌ எந்தை யிவர் மூவரிலும்‌ யார்
-என்று அருளிச்செய்து, ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு ஆழ்வாரையும்‌ அநு திநம்‌ ஸேவித்துக் கொண்டு ஆங்கே சில காலம்‌ எழுந்தருளி யிருக்க; அதுவே ஹேதுவாக ‘ஆயி திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌’ என்று திருநாராயண புரத்திலுள்ள அஸூயாளுக்கள்‌ திரு மாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கிகரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்‌தில்‌ சேர்க்க, அக் காலத்திலே ஆயியும்‌ மீண்டு திருநாராயண புரத்துக்கு எழுந்தருளி இச்‌செய்தியைக்கேட்டு ஹ்ருஷ்டராய்‌, ”யஸ்யாநுக்ரஹமிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம் யஹம்‌”‘ [எவனுக்கு நான்‌ அருள் புரிய விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தை எடுத்துக் கொள்‌கிறேன்‌] என்னும்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப்பிள்ளை இத்தைக்‌ கைக் கொண்டருளின பின்பு நாம்‌ இனி இரக்கத்துக்கு விஷயம்‌ என்கிறது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே. ‘யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌: [மனைவி, புத்ரன்‌, அடிமை ஆகியவர்களுடைய செல்வம்‌ அவர்களுடைய யஜமாநனுக்கே உரியது] அன்றோ? என்று ஈடுபட்டு ஆநந்தாஸ்ருக்கள் பனிப்ப எழுந்தருளி, ஆசார்ய க்ருபால ப்தரான ஞானப் பிரானொருவரையுமே அர்த்தித்துப் பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து, யாதவ கிரி நிலயனுக்கு மால்ய ஸமர்ப்பணைக நிஷ்டராய்‌, அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளியிருந்தார்

மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்யை மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – தீதற்ற
ஆசாரிய விதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே! காண்‌-
என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத்‌ தாம்‌ (மாமுனிகள்‌) அநுஸந்தித்தருள, அப்படியே முதலிகளும்‌
மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினால்‌
ஆங்கவர் தாள்‌ சேர் பெற்றார்‌ ஆயி மணவாமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று
-என்று அநுஸந்தித்தார்கள்‌.
பூர்வாஷாட,அவதீர்ணாய துலாயாம்‌ யது. பூ,த,ரே!
ஸ்ரீஸாநு தாஸ கு,ரவே தே,வராஜாய மங்களம்‌

(திருநாராயண புரத்தில்‌ ஐப்பசிப் பூராடத்தில்‌ அவதரித்தவராய்‌,-திருத்தாழ்வரை தாஸர்‌ எனப்படும்‌ தேவராஜருக்கு மங்களம்‌

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன்‌ வாழியே
ஒண் மதியோன்‌ எதிராசன்‌ ஒண் சரணோன்‌ வாழியே
பாங்குடனே ஞானப் பிரான்‌ பணியுமவன்‌ வாழியே
பஞ்சமத்தின்‌ பொருள் தன்னைப்‌ பரிந்துரைத்தோன்‌ வாழியே
தேங்கு புகழ்‌ தேவராசர்‌ திருவருளோன்‌ வாழியே
தென்மறையின்‌ மனப் பொருளைத்‌ தெளிவித்தான்‌ வாழியே
தாங்கு திருக்கை திரிதண்டம்‌ தரித்த வள்ளல்‌ வாழியே
திருத்தாழ்வரை தாதர்‌ திருவடிகள்‌ வாழியே

பஞ்சமம்‌ -பஞ்சமோபாயமான ஆசார்யாபிமாதம்‌; தேவ ராசர்‌ – நாலுராச்சான் பிள்ளை]

————————–

ஸ்ரீஸூரி ஸூக்தி-ப்‌ரஹ்ம ஸாஸ்திரம்‌ – த,ராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஆசார்ய ஹ்ருத,யம்‌
[| திருநாராயணபுரம்‌ அரையர் ஸ்ரீஉ வே ஸ்ரீராம சர்மா ஸ்வாமிகள் ]

இந்த கரந்தம்‌
த்‌,விக த்‌,வயமாகவும்‌,
அத்‌,யா ய சதுஷ்டயமாகவும்‌,
ஷோட,ச பாத, மாகவும்‌,
ஸப்த விம்சத் யதி,கரணமாகவும்‌

பிரிவுகளை உடையது.

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌
(ஸாஸ்த்ராரப்‌, யாதி, கரணம்‌) 1 – 15 —-15

2 தாத்பர்ய மூலபாத, – த்‌,விதீய 1 – 2 —16 –1
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌- 16—1

3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம்‌ —17 – 18 —2

4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம்‌ —19 – 38 –20-

5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—-3-

6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

12 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–

16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—— 1
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—–4–
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 ———1

இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்‌ரி நிவாஸிநா
த்ராவிட ப்‌ரஹ்ம ஸூத்ராணாம்‌ விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
ஸ்வபாநுப பாத்‌ர ஸூத்‌தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
யதாத்‌ யயநமக்‌,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத்‌ ப்ரபஞ்சநம்

————-

ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ ““அசித,விஸேஷிதாந்‌ ப்ரளய ஸீமநி” (ஸ்ரீர. ஸ்தவ- 2 -41) என்று சொல்லுகிறபடியே கரண களேப ரங்களை இழந்து அசித் அவிஸேஷிதமாய்‌, அத ஏவ போக, மோக்ஷ ஸூந்யமாய்க்‌ கிடக்கிற சேதந வர்க்கத்தை, இவற்றின் பக்கல்‌ தனக்குண்டான ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக “ததைக்ஷத’” (தை. ஆ. 6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுபவத்துக்கு இட்டுப் பிறந்த இச் சேதநர்‌ இவ் வநுபவத்தை இழந்து இங்ஙனே க்லேஸிக்க வொண்ணாது” என்று ‘“கரண களேபரைர் கடயிதும்‌ தயமாந மநா: ‘ (ஸ்ரீர. ஸ்தவ- 2 – 41) என்கிறபடியே தயமாந மநவாய்க் கொண்டு கரண களேபர ப்ரதாநம்‌ பண்ணுவதாக “‘பஹு ஸ்யாம்‌”’ (தை, ஆ. 6) என்று ஸங்கல்பித்து “*தத் ஸ்ருஷ்ட்வா’” (தை. ஆ. 6) என்சிறபடியே யதா ஸங்கல்பம்‌ இவர்களுக்குக்‌ கரண களேபரங்களைக்‌ கொடுத்து, அநந்தரம்‌, “‘ததநுப்ரவிய்ய ” என்கிறபடியே அநு ப்ரவேயித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்களை உண்டாக்கி, “அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா” என்கிறபடியே ஜ்ஞாந விகாஸத்தையும்‌, ப்ரவருத்தி நிவ்ருத்தி யோக்‌,யதையையும்‌ பண்ணிக் கொடுத்து இந்த ஜ்ஞாந கார்யமான தயாஜ்யோபாதே,ய விவேகத்துக்குப்‌ பரிகரமாக ““மாநம்‌ ப்ரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீர, ஸ்தவே 2 – 1) என்கிறபடியே வேத ப்ரதாநத்தைப் பண்ணி, அநந்தரம்‌ மந்வாதிகளுக்கு அந்தர்யாமியாய்‌ தின்று சேதநருடைய விஸிஷ்ட வேஷ விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும்‌, அந்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநம்‌ சிரகால ஸாத்‌,யமுமாய்‌, அதிக்ருதாதி,காரமுமாய்‌, அநேக யோக்‌யதா ஸாபேக்ஷமுமா யிருக்கையாலே துஷ்கரமுமாயிருக்கும்‌ என்று, ஏவமாதி,தோஷ ரஹிதமுமாய்‌, நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர ப்‌,ரஹ்மவித்‌யைத் தானே உபதேஸித்த விடத்திலும்‌ இதில்‌ இழிவாரற்ற படியாலே ஓலைப் புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுச்‌ செலுத்திக் கொள்ளும்‌ ராஜாக்களைப் போலே ““அஜாயமாந:”’ (யஜு. ஆர. பீ – 17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது, பரித்ராணார்த்தமாக வந்து அவதரித்துப் போருகிற அளவிலும்‌, இவை ஒன்றிலும்‌ அர்த்த,க்ரியாகார்யமாகா திருக்கிற படியாலே, ‘விஸஜாதீயரான நம்மால்‌ ஒன்றாலும்‌ இவர்களைத்‌ திருத்த வொண்ணாது. இனிப்‌ பார்வை காட்டி ம்ரூகம்‌ பிடிப்பாரைப்‌ போலே ஸஜாதீயரைக் கொண்டே கார்யம்‌ கொள்ளக் கடவோம்‌” என்று அறுதியிட்டு ““ஸுஹ்ருத.ம்‌ ஸர்வ பூ,தாநாம்‌’” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூ,த ஸூஹ்ருத்‌தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாதத்தாலே எங்கும்‌ பார்த்து இலக்குக்‌ காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வை தானே தாஷிண்யமானவளவிலே, ““மாறி மாறிப் பல பிறப்பும்‌ பிறந்து”‘ (திருவாய்‌. 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார்‌ மேலே நிர்ஹேதுகமாகப்பட அது தானே “மா நிஷாத, ப்ரதிஷ்டாம்‌ த்வமக,மஸ்‌ ஸாஸ்வதீஸ் ஸமா : । யத் க்ரெளஞ்ச மிதுநாதே கமவதீ,! காம மோஹிதம்‌”’ (ரா. பா – 2 – 15) என்கிறபடியே ஸோகம்‌ ஸ்லோகமாய்‌ அவதரித்தாப் போலே ஸர்வ லக்ஷணோபேதமான ப்ரப,ந்த,மாய்த்‌ தலைக் கட்டிற்று

அது தானும்‌ த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய்‌, பரந்திருக்கையாலே இதில்‌ தாத்பர்யம்‌ எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில்‌ அர்த்த, விஸேஷங்களையும்‌, இவற்றில்‌ இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக்‌ கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்‌ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும்‌ தஞ்சம்‌ என்னுமிடத்தையும்‌, இவர்‌ தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி யோக்‌யமாம்படி ஸங்க்‌ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்‌கிறார்

இதில்‌ முதல்‌ சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன்‌ “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணி ஸ்ருஷ்ட்யநந்தரம்‌ அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர்‌ ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய்‌ அஜ்ஞாநம்‌ நீங்கி, வேதாந்த வேத்‌யனாய்‌, நித்யனாய்‌, ஸ்வயம் ப்ரகாஸனாய்‌ இருந்துள்ள தன்னைக்‌ கண்டு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்‌,ரஹமாய்‌, ஸகல ஸப்‌தங்களும்‌ தன்னுடைய கார்யமாகையாலே தான்‌ காரணமாய்‌, ஸகலார்த்த,ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன்‌ க்ருபையாலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்

———–

த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

——

சூர்ணிகை 1..

காருணிகனான சர்வேஸ்வரன் –அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கிமேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–

காருணிகனான சர்வேஸ்வரன் –க்ருபா விஸிஷ்ட ஸ்வதந்த்ரன்‌ என்றபடி
சர்வேஸ்வரன்–என்று ஈஸ ஈஸி தவ்ய ஸம்ப,ந்த,ம்‌ சொல்லுகிறது.
இத்தால்‌ ஸம்பந்தமே ப்ரதாநம்‌ என்றபடி. ஸம்பந்த முள்ள விஷயத்திலே கிருபையுமாகப்‌ பெற்றது என்கிறார்‌. ஸ்வாதந்தர்ய விஸிஷ்டமான கிருபை என்று கிருபைக்கு ஸ்வாதந்தர்யம்‌ உபயுக்தம்‌ என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது
அறிவிலா மனிசர் -அறிவிலா மனிசர்’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாந அந்த காரத்தாலே ஆவ்ருதரான சேதநர் –
உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி) ”உய்த்துணர் வென்னும்‌ ஒளி கொள்‌ விளக்கேற்றி”’ (மூ. திரு. 94) என்றும்‌, ““ஞானச் சுடர் விளக்கேற்றினேன்‌” (இர, திரு, 1) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜிவந கரமுமாய்‌, ஸ விபூ,திகனான ஸர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய்‌, (பரஸ்மை) ஸ்வயம் ப்ரகாஸமுமாய்‌, ஸ்கலார்த்த,ப்ரகாஸாகமுமான ஜ்ஞாந தீ,பத்தை உடையராய்
பிறங்கு இருள் நீங்கி-) ‘“பிறங்கிருள்‌ நிறங்கெட”” (திரு மொழி 5-7 – 3) என்றும்‌, ““பின்னிவ்வுலகினில்‌ பேரிருள்‌ நீங்க”” (பெரியாழ் . திரு. 1 – 9 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம்‌ போய்‌
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு) ““வேதாந்த விழுப்பொருளின்‌ மேலிருந்த விளக்கு!” (பெரியா. திரு-4-3 – 11) என்றும்‌, “நந்தா விளக்கு” (திருமொழி 3 – 8-1) ”மிக்க ஞான மூர்த்தியாய வேத வீளக்கினை” (திருவாய்‌. 4 – 7 – 10) என்றும்‌ வேதாந்தங்களியே ஸர்வ ஸ்‌மாத் பரனாக ப்ரகாஸியா நிற்பானுமாய்‌, நித்யனுமாய்‌, வேதத்தாலே ப்ரகாஸ ஸ்வரூபனாக ப்ரதிபாத்யனுமா யிருந்துள்ள தன்னை, “என் தக்க ஞானக் கண்களாலே கண்டு”” (திருவாய்‌-4 -7. 10) என்கிறபடியே ஜஞாந த்‌,வாரா ஸாக்ஷாத்கரித்து,

நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு–) ‘“இவை யன்றே நல்ல இவை யன்றே தீய இவையன்றிவை அறிவனேலும்‌”’ (பெரிய திருவ. 3) என்கிறபடியே ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு. அதாவது – ப,க,வத்‌ விஷயம்‌ நன்று, ஸம்ஸாரம்‌ தீது – என்று அறிகைக்காக; ப,க.வத்‌, விஷயத்தைக் கண்ட பின்பு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகையாவது என்‌ என்னில்‌ – ப,க,வத்‌, விஷயத்தில்‌ வைலக்ஷண்யம்‌ கண்ட பின்பிறே ஸம்ஸாரம்‌ அவிலக்ஷணம்‌ என்று அறியலாவது
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை–மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை ” (திருமொழி -8-9-4-), துளக்கமில்‌ விளக்கு (திருச்சந்த-4) என்று ஸகல வேத ஸங்க்‌ரஹ்மாய்‌, நித்யமாய்‌, ஸகலார்த்த, ப்ரகாஸ கமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான, ‘“மாநம்‌ பரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீ, ர ஸ்தவ 2 – 1) என்றும்‌, ‘“பன்னு கலை நால் வேதப் பொருளை’ (திருமொழி 7 – 8 – 2) என்றும்‌, ”கலைகளும்‌ வேதமும்‌ நீதி நூலும்‌”’ (திருமொழி 2 – 8 – 5) என்றும் சொல்லப்படுவதாய்‌, த்யாஜ்யோபாதே,யார்த்த,ப்ரகாஸகமான ஸாஸ்த்ரங்களை
நீர்மையினால் அருள் செய்தான் -ஸர்வேஸ்வரன்‌ தன்‌ க்ருபையாலே ஸாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணி யருளினான்‌ என்கிறார்

*மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கு ” என்று வேதத்தையும்‌, அகாரத்தையும்‌ ஸர்வேஸ்வரனோடே ஸமாநாதி,கரிக்கைக்கடி ““வேதைஸ் ச ஸர்வை ரஹமேவ வேத்‌ய!”’ (கீ. 15 – 15) என்றும்‌, “’ஸமஸ்த ஸப்‌த, முலத்வாத, காரஸ்ய ஸ்வ பாவத: । ஸ்மஸ்த வாச்ய முலத்வாத்‌, ப்‌,ரஹ்மணோபி ஸ்வபாவத: ॥ வாச்ய வாசக ஸம்ப,ந்தஸ் தயோரர்த்தாத்‌ ப்ரதீயதே”” (வாமந பு.) என்று ப்ரதிபாத்‌,ய ப்ரதிபாத,க பாவத்தாலும்‌, காரணத்வ வ்யாபகத்வாதி,களான அர்த்த, ஸாம்யத்தாலே தோற்றின வாச்ய வாசக ஸம்பந்தத்தாலும்‌. ““அக்ஷராணாமகாரோஸ்மி” (கீ. 4) என்றானிறே.

ஆக இத்தால்‌ “ஹர்த்தும்‌ தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம்‌ ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள்‌ அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய்‌ ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-

  1. விவேக பலம்‌ வீடு பற்று.

(விவேக பலம்‌) இப்படி இவன் கொடுத்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே ஸாராஸார விவேகம்‌ பண்ணினதுக்கு பலம்‌ என்னென்னில்‌ ;
(வீடு பேறு) விடுகையும்‌ பற்றுகையும்‌; இவை இரண்டையும்‌. “*வீடுமின்‌ முற்றவும்‌”” (திருவாய்‌. 1 – 2 – 1) என்றும்‌, “அற்றிறை பற்றே”’ (திருவாய்‌. 1 – 2-5) என்றும்‌ சொல்லக் கடவதிறே.

3-த்யாஜ்ய உபாதேயங்கள்‌ ஸுக, துக்க,ங்கள்‌.
இனி த்யாஜ்யோபாதே.யங்கள்‌ எவை என்னில்‌ ; (த்யாஜ்யோபாதே,யங்கள்‌ ஸுக, துக்க,ங்கள்‌) என்கிறார்‌. “ஸுகீ, பவேயம்‌, துக்கீ, மா பூ,வம்‌” என்று ஸர்வர்க்கும்‌ துக்கம்‌-த்யாஜ்யமாய்‌, ஸுக,ம்‌ உபாதே,யமாயிறே இருப்பது.

4-இவற்றுக்கெல்லை இன்பு துன்பளி பன் மா மாயத் தழுந்துகையும்‌, களிப்பும்‌ கவர்வு மற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையும்‌

இந்த ஸுக துக்கங்களுக்கு எல்லை எவை என்னில்‌ (இன்பு துன்பளி பன் மா மாயத்தழுந்துகையும்‌, களிப்பும்‌ கவர்வு மற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையும்‌)
(இன்பு துன்பளி)
துன்பத்தோடே கூடின இன்பத்தைத் தருமதாய்‌ இருக்கை.
இதுக்கு ப்ரமாணம்‌ “அத்யந்தஸ்திமி தாங்காநாம்‌ வ்யாயாமேந ஸுகைஷீணாம்‌ ப்‌,ராந்தி ஜ்ஞாநவதாம்‌ பும்ஸாம்‌ ப்ரஹாரோபி ஸுகாயதே’” என்று திமிர்வாதம் பற்றின ஸரீரத்தை யுடையவர்களாய்‌, வ்யாயாமத்தினாலே ஸுகத்திலே ஆசை யுடையவர்களுக்கு ஸரீரத்திலே குத்த, ப்‌ ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுகமாகிறாப் போலேயிறே.
இன்புதுன்பளி பன்மா மாயத் தமுந்துகையாவது– ‘“ஓ ஓ உலகினதியல்வே ” (திருவாசிரியம்‌ 6) என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதி, ஸாத,ந முக,த்தாலே க்ஷத்‌ர தேவதா ஸமாஸ்ரயணம்‌ பண்ணி, தத் ப,லமாய்‌ துக்க,மிஸ்ரமான க்ஷுத்‌ர ஸுகங்களை அநுபவிக்கைக் கீடான தேவாதி ஸரீரங்களிலே அஹமபி,மாநம்‌ பண்ணி ஸம்ஸரிக்கை.
களிப்பும்‌ கவர்வுமற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையாவது-– “களிப்பும்‌ கவர்வுமற்று” (திருவாய்‌. 2 – 3 – 10) என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதார்த்த,ங்களினுடைய லாபா லாபங்களாலே வருகிற ஸோக ஹர்ஷங்கள்‌ போய்‌, ஷட்‌,பாவ விகாராஸ்பதமான ஸ்தூ,ல ஸூஷ்ம ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்த முமற்று, ”பேரின்ப வெள்ளத்தே”’ (திருவாய்‌. 7 – 2- 11) என்று சொல்லுகிற நிரதிஸய ஆநந்த, மயமான தேஸ விஸேஷத்திலே போய்‌, அப்ராக்ருத விக்‌, ரஹ பரிக்‌,ரஹம் பண்ணி, தி,வ்யாஸ்தாந மண்டபத்திலே நிரதிஸய ஆநந்த., மக்‌நரான நித்ய ஸூரிகளோடே “ ௬ழி பட்டோடும்‌ சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற்று (திருவாய்‌. 8 10 – 5) என்கிறபடியே ப.கவதநுபவம் பண்ணி, ஆநந்த நிர்பரராய்‌ இருக்கையும்‌, அந்த ஸாஸ்தர ஜந்ய ஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம்‌ த்யாக, ஸ்வீகாரங்களென்றும்‌, த்யஜிக்கைக்கும்‌ ஸ்வீகரிக்கைக்கும்‌ ஹேது ஸுக துக்கங்களாகையாலே என்றும்‌, இவை இரண்டுக்கும்‌ எல்லை ஸம்ஸார ஸம்பந்தமும்‌, பரமபதத்திலே போய்‌ ஆநந்த நிர்பரரா யிருக்கையும்‌ என்றதாய்த்து

5-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –

அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது--,) ”ஸம்ஸார ஸாக,ரம்‌ கோரம்‌ அநத்த கலேஸ பாஜநம்‌” (ஜித. 1) என்கிறபடியே அநந்த துக்காவஹமான ஸம்ஸாரத்துக்கும்‌, நிரஸ்தாதிஸயாஹ்லாத, ஸூக, பாவைக லக்ஷணா பேஷஜம்‌ பகவத ப்ராப்தி ரேகோந்‌ தாத்யந்திகீ மதா” (வி.பு. 6 – 5 -59) என்கிறபடியே நிரதிஸய ஆநந்தா வஹமான மோஷத்துக்கும்‌ ஹேது என்‌ என்னில்‌ மறந்தேன் -என்று தொடங்கி ”ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந:। ப்ராப்த் யுபாயம்‌ ப,லம்‌ ப்ராப்தே! ததா ப்ராப்தி விரோதி, ச ” (வ்ருத்‌த,ஹாரீத, 8) என்று இத்யாதிகளில்‌ சொல்லுகிற அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத்‌ விஷயமான அஜ்ஞாநமும்‌ என்கிறார்‌ மேல்‌. “மறந்தேனுன்னை முன்னம்‌” (திருமொழி -6- 2 – 2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும்
அறியகிலாத — “யானே என்னை அறியகிலாதே
”’ (திருவாய்‌ 2 – 9 – 9) என்கையாலே ஆத்ம விஷயமான அஞ்ஞாநமும்
உணர்விலேன் -”ஓடியும் உழன்றும்‌ உயிர்களே கொன்றேன்‌ உணர்விலேன்‌
” (திருமொழி 1 – 6 – 6) என்கையாலே விரோதி விஷயமான அஜ்ஞாநமும்‌
ஏணிலேன் -) ”பிறவி நோயறுப்பான்‌ ஏணிலேனிருந்தேன்‌”
(திருமொழி 1 – 6- 1) என்கையாலே உபாய விஷயமான அஜ்ஞாநமும்
அயர்த்து என்றும்-”ஆழியங்கை யம்மானை ஏத்தாதயர்த்து
” (பெரியதிரு – 82) என்கையாலே புருஷார்த்த விஷயமான அஜ்ஞாநமும்‌-
ஏத்துகையிறே புருஷார்த்தம்‌. அத்தை மறக்கையாலே புருஷார்த்த, விஷயமான அஜ்ஞாநமும்‌ என்கிறார்‌. “*சூழ்ந்திருந்தேத்துவர்‌’” (திருப்பல்‌. 12) என்றும்‌, ““ஏதத் ஸாம் காயந் நாஸ்தே” (தை. ப்ருகு,.) என்றும்‌ சொல்லக் கடவதிறே-

உய்யும் வகை – “உணர்ந்தேன்‌ உண்மையாலினி யாதும்‌ மற்றோர்‌ தெய்வம்‌ பிறிதறியேன்‌”’ (திருமொழி 6 – 3 – 6) என்கையாலே பர விஷயமான்‌ ஜ்ஞாநமும்
நின்ற ஒன்றை -நின்ற வொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்‌, 8 – 8 – 5) என்கையாலே ஸ்வருப விஷயமான ஜ்ஞாநமும்
நன்கு அறிந்தனன்- ‘ அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்‌’” (திருவாய்‌. 5 – 7 – 8) என்கையாலே விரோதி, விஷயமான ஜ்ஞாநமும்
உணர்வினுள்ளே -) *’உணர்வினுள்ளே இருத்தினேன்‌ அதுவுமவனதின்னருளே”” (திருவாய்‌. 8 – 8 – 3) என்கையாலே உ.பாய விஷயமான ஜ்ஞாநமும்
ஆம் பரிசு என்றும்– ”ஆம்பரிசறிந்து கொண்டு” (திருமாலை 38) என்கையாலே புருஷார்த்த, விஷய ஜ்ஞாநமும்‌ சொல்லிற்று.
ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும்‌ மோக்ஷ ப்ராப்திக்கும்‌ ஹேது ‘ஜ்ஞாநாந்‌ மோக்ஷம்‌, அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்‌’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத் அஜ்ஞாநமும்‌ என்றதாய்த்து.

6-இவற்றுக்குக்‌ காரணம்‌ இரண்டில்‌ ஒன்றினில்‌ ஒன்றுகைகள்‌.
இந்த அர்த்த,பஞ்சக ஜ்ஞாநமும்‌, அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக்‌ காரணம்‌ – இரண்டில்‌ ஒன்றினில்‌ ஒன்றுகைகள்‌. அதாவது இரண்டில்‌ ஒன்றுகையும்‌, ஒன்றினில்‌ ஒன்றுகையும்‌.
இரண்டில்‌ ஒன்றுகையாவது – ““முத்திறத்து வாணியத் திரண்டிலொன்றும்‌ நீசர்கள்‌” (திரு. ச வி. -68) என்கிறபடியே ரஜஸ் தமஸ் : ப்ரசுரனாகை.
ஒன்றினில்‌ ஒன்றுகையாவது “முக் குணத்திரண்டவை யகற்றி ஒன்றினில்‌ ஒன்றி நின்று ” (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வ ப்ரசுரனாகை.
இத்தால்‌ அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம்‌ ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள்‌ என்றபடி,

7-ஸத்த்வாஸத்த்வ நிதாநம்‌ – இருள் தரும்‌ அமலங்களாக என்னும்‌ ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்‌.
இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும்‌ அஸத்த்வத்துக்கும்‌ நிதாநம்‌ என்‌ என்னில்‌ – (இருள்தரும்‌ அமலங்களாக என்னும்‌ ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்‌). அவையாவன – “’இருள் தரு மா ஞாலத்துள்‌ இனிப் பிறவி யான்‌ வேண்டேன்‌”’ (திருவாய்‌. 10 – 6 – 1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ““ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம்‌ பஸ்யேந்‌ மது ஸூதந: । ஸாத்த்விகஸ் ஸ து விஜ்ஜேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:”” (பாரதே சபா . ப. 348 -73) என்கிற ஜாயமாந காலத்தில்‌ “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவாய்‌. 1 – 9 – 9) என்கிற பகவத் கடாக்ஷமும் –

8-இவற்றுக்கு மூலம்‌ –இரு வல்லருள் நல் வினைகள்‌.
(இவற்றுக்கு மூலம்‌) இந்த ஜந்ம கடாக்ஷங்களாகிற இவற்றுக்குக்‌ காரணம்‌ என்‌ என்னில்‌ –
(இரு வல்லருள் நல்‌ வினைகள்‌). ““சார்ந்த இரு வல் வினை ”யும்‌, ”தொல்லருள் நல்வினை”’ யும்‌.-அவையாவன – ஆத்மாவுக்கு ஸஹஜம்‌ என்னலாம்படி பொருந்தி இருந்துள்ள புண்ய பாபங்களும்‌, ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும் –

9-கர்ம க்ருபா பீஜம்‌, பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்‌,யா ஸெளஹார்த்த.ங்கள்‌.
கர்ம க்ருபா பீஜம் ) ஏவம் விதமான கர்மத்துக்கும்‌ க்ருபைக்கும்‌ பீஜம் – (பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்‌,யா ஸெளஹார்த்த.ங்கள்‌.- அவையாவன – ‘*’பொய்ந் நின்ற ஞானம்‌”! (திருவிரு. 1) என்கிற அவித்‌யையும்‌, “அருள்புரிந்த சிந்தை” (இர. திருவ. 59) என்றும்‌, ““ஈஸ்வரஸ்ய ச ஸெளஹார்த்தம்‌”’ ( ) என்றும்‌ சொல்லுகிற ஈஸ்வரனுடைய ஸெளஹார்த்தமும்-

10-ஏதந் நிமித்தம்‌ முன்னமே முதல் முன்னமேயான அசித் , அயநா நாதி, ஸ்ம்பந்தங்கள்‌–
(ஏதந் நிமித்தம்‌)
இந்த அவித்‌,யைக்கும்‌ ஸெளஹார்த்த,த்துக்கும்‌ ஹேது ஏதென்னில்‌
[முன்னமே முதல்‌ முன்னமேயான அசித,யநாநாதி,ஸம்பந்தங்கள்‌). அவை யாவன “மூதாவியில்‌ தடுமாறும்‌ உயிர் முன்னமே”” (திரு விரு. –95) என்கிற அநாதியான அசித்‌ ஸம்பந்த,மும்‌, *’அடியேனடைந்தேன்‌ முதல் முன்னமே’ (திருவாய்‌, 2 – 3 – 6) என்கிற அநாதி யான அயந ஸம்பந்தமும்‌.

11-இவை கிட்டமும்‌ வேட்டு வேளானும் போலே ஒண் பொருள்‌ பொருளல்லாத(வை) என்னாதே நானிலாத யானுமுளனாவன்‌ என்கிற ஸாம்யம்‌ பெறத் தின்றூதி அந்தமும்‌ வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை உண்டாக்கும்‌.
உபய ஸம்பந்தததினுடையவும்‌ கார்யம் சொல்லுகிறது மேல்‌ ; (இவை கிட்டமும்‌ வேட்டு வேளானும் போலே ) என்று தொடங்கி.
அதில்‌ அசித் ஸம்பந்தம்‌ கிட்டம்‌ போலே. ”எண் பெருக்கந் நலத்தொண் பொருள்‌”’ (திருவாய்‌. 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்ம வஸ்து வென்று பாராதே ”நானிலாத முன்னெலாம்‌”’ (திரு ச வி.- 57 என்னும்படி ஸாம்யம் பெற. *அறுத்துத் தின்று”” (திருமொழி 7 – 7. 7) என்கிறபடியே தின்று. ‘அந்தமும்‌ வாழ்வும்‌” (திருமொழி 5 – 7 – 2) என்கிறதில்‌ அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும்‌. ““அஸந்நேவ ஸ பவதி”” (தை. ஆந.) என்னக் கடவதிறே. இனி அயந ஸம்பந்தம்‌ வேட்டு வேளான் போலே *“‘பொருளல்லாத என்னைப்‌ பொருளாக்கி (திருவாய்‌, 5 – 7 – 3) என்கிறபடியே அவஸ்து ஸப்‌த,வாச்யமான இத்தை வஸ்து சப்‌த வாச்யமாக்கி, “உள்ள உலகளவும்‌ யானுமுளனவனென் கொலோ ” (பெரியதிருவ. 76) என்கிறபடியே இவனும்‌ தர்ம பூத ஜ்ஞாந த்‌வாரா விபு வாகையாலே ஈஸ்வரன்‌ உள்ளவளவும்‌ இவ்வாத்மா உண்டாம்படி ““பரமம்‌ ஸாம்யமுபைதி” (மு. 3-1- 3) என்கிற ஸாம்யம்‌ பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும்‌. ““ஸந்தமேதம்‌ ததோ விது,” (தை. ஆந.) என்றும்‌, ”கீட: பேஸாக்ருதா ருத்‌த,: குட்‌,யாத்ந்ரநுசிந்தயந் । ஸம்ரம்ப பய யோகே,ந விந்ததே தத் ஸரூபதாம்‌ | ஏவம்‌ க்ருஷ்ணே பகவதி மாயாமநுஜ ஈஸ்வரே ! கோவிந்தே, மதிமாவேஸ்ய நரஸ்ஸத்‌யோ விமுச்யதே'” ( ) என்றும்‌ ‘அந்தமும்‌ வாழ்வுமாய எம்பெருமான்‌”’ (திருமொழி 5 – 7 – 2) என்றும்‌ சொல்லக்‌ கடவதிறே

12-ஒன்று கூடினதாய்ப்‌ பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன்‌ என்னுமதொன்றுமே ஒழிக்க ஓழியாதது.
இந்த உபய ஸம்பந்தமும்‌ அநாதியாய்‌ நித்யமா யிருக்குமோ வென்னில்‌ ; அசித்‌ ஸம்பந்தம்‌ வந்தேறியுமாய்‌, கர்மோபாதி கமாகையாலே அநித்யமுமா யிருக்கும்‌. அயந ஸம்பந்தம்‌ அநாதியுமாய்‌, நிருபாதிக மாகையாலே நித்யமுமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ (ஒன்று கூடினதாய்‌) என்று தொடங்கி
(ஒன்று கூடினதாய்‌) “பெருந்‌ துயரிடும்பையில்‌ பிறந்து கூடினேன்‌”” (திருமொழி 1 – 1 – 1) என்கையாலே அசித்‌ ஸம்பந்தம்‌ ஆகந்துகம்‌. ஆனால்‌ அசித் ஸம்பந்தம்‌ அநாதி, என்று சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; வந்தேறின காலம்‌ பழையதாகையாலும்‌, ப்ரமாணங்கள்‌ தான்‌ அநாதி, என்கையாலும்‌. இனி ““வினை பற்றறுக்கும்‌ விதியே” (திருமொழி 11 – 5 – 9), “அடைந்த அருவினையோ டல்லல் நோய் பாவம்‌ மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்‌”: (மூன்றாம் திரு -59) என்றும்‌ சொல்லுகிறபடியே ஒருநாள்‌ வரையிலே பகவத் ப்ரஸாதத்தாலே கழியக்‌ காண்கையாலே ஆகந்துகம்‌ என்கிறது. ஆகையாலே ”நானுமுனக்குப்‌ பழவடியேன்‌”’ (திருப்பல்‌. 11) என்கிறபடியே ஜீவ பரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்த மொன்றுமே ““உறவேல்‌ நமக்கிங்கொழிக்க ஒழியாது ” (திருப்பாவை 28) என்கிறபடியே கழியாதது

13-இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்‌.
இவ்வயந ஸம்பந்தமே கீழ்ச் சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது என்கிறார்‌ மேல்‌, (இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்‌). (இந்த உத,ரத்‌ தரிப்பு) இந்த நாராயணத்வ ப்ரயுக்தமான குடல்‌ துடக்கு, “’த்ரை குண்ய விஷயா வேத?” (கீதை 2 – 45) என்கிறபடியே த்ரிகுணவஸ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஸிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. தமஸ் ப்ரசுரராயும்‌, ரஜஸ் ப்ரசுரராயும்‌, ஸத்த்வ ப்ரசுரராயுமிறே சேதநர்‌ இருப்பது. ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம்‌ என்கிற இத்தால்‌ ருச்யநுரூப புருஷார்த்தங்களையும்‌ தத்‌ ஸாதநங்களையும்‌ விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம்‌ என்றதாய்த்து.

கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்‌”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து

14-வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல்‌ மண் தின்ன விட்டு ப்ரத்யெளஷதம்‌ இடுமாப் போலே எவ் வுயிர்க்கும்‌ தாயிருக்கும்‌ வண்ணமான இவனும்‌ ருசிக் கீடாகப்‌ பந்தமும்‌ பந்த மறுப்பதோர்‌ மருந்தும்‌ காட்டுமிறே.
இப்படி ஸாஸ்தர ப்ரதாநம்‌ பண்ணுகிறது ஸம்பந்த, மடியாக வாகில்‌ விமோசக. ஸாஸ்த்ரத்தையே வெளியிடாதே பந்தக ஸாஸ்த்ரங்களையும்‌ வெளியிடுவான்‌ என்‌ என்னில்‌; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநு குணமாக வெளியிட்டான்‌ என்கிறது மேல்‌ (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி- ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும்‌ அதுக்கடியான வாத்ஸல்யத்தைப் பற்றவும்‌ இப்போது மாதாவை த்‌ருஷ்டாந்தமாக்குகிறது. ““எல்லா வெவ்வுயிர்க்கும்‌ தாயோன்‌” (திருவாய்‌. 1 – 5 – 3) என்றும்‌, “’தாயிருக்கும்‌ வண்ணமே” (திருமொழி 11 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனும்‌ அப்படியே ஸர்வாத்மாக்கள் பக்கலிலும்‌ மாத்ருத்வ ப்ரயுக்கமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான “பந்தமும்‌” என்கிற பந்தக ஸாஸ்த்ரங்களையும்‌, ““பந்த மறுப்பதோர்‌ மருந்தும்‌” என்கிற விமோசக ஸாஸ்த்ரத்தையும்‌ விதிக்கும்‌ என்கிறார் –

15-அதுதானும்‌ ஆஸ்திக்ய விவேகம்‌ அந்ய ஸேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.
இப்படி பந்தகமாக ஸாஸ்த்ரத்தையும்‌ கலசி விதித்தால்‌ அது கொண்டு சேதநர்‌ ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில்‌ ; அது தானும்‌ விமோசக ஸாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார்‌ மேல்‌ (அதுதானும்‌ ஆஸ்திக்யம்‌) என்று தொடங்கி, அதுதானும்‌ -பந்தக ஸாஸ்த்ரத்தைக்‌ கலசி விதித்தது தானும்‌. பர ஹிம்ஸா ஸீலனாய்‌ ஸாஸ்த்ர ஸாமர்த்‌யம்‌ {ஸாஸ்த்ரத்தில்‌ ஆஸ்திக்யம்‌) முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால்‌ அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபிசார ஸாஸ்த்ரத்தை விதித்து அது அவனுக்கு பலித்தவாறே அவ் வழியாலே ஸாஸ்தரம்‌ உண்டென்கிற்‌ ஆஸ்திக்யத்தை ௨ண்டாக்கியும்‌, ஆஸ்திகனானவாறே ்‌ ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” ( ) என்று இத்யாதி,களில்‌ சொல்லுகிறபடியே ஸ்வர்க்காதி, புருஷார்த்தங்களையும்‌, தத் ஸாதநங்களையும்‌ சொல்லுகிற ஸாஸ்த்ரங்களையும்‌ விதித்து, அவ் வழியாலே ப்ரகருத் யாத்ம விவேகத்தைப்‌ பிறப்பித்தும்‌, இப்படி ப்ரக்ருத் யாத்ம விவேகம்‌ பிறந்தவாறே ஆத்ம லாப, ரூப புருஷார்தத்தைக்‌ காட்டி அந்ய ஸேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும்‌, அநந்தரம்‌ பகவத் கைங்கர்ய ருப புருஷார்த்‌தத்தைக் காட்டி ஸ்வ ஸ்வாதந்தர்யத்தை நிவர்த்திப்பித்தும்‌, ஆத்மா வினுடைய அத்யந்த பாரதந்தர்யத்தை உண்டாக்குகைக் கிட்ட வழி என்கிறார் –

16-சதுர் விதமான தே,ஹ-வர்ண- ஆஸ்ரம-அதிகார- ப,ல- மோக்ஷ -ஸாதந ,-கதி- யுக.- தர்ம-வ்யூஹ-ரூப-க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்‌டுப் பரப்புக்கு – பெரிய தீவினில்‌ ஒன்பதாம்‌ கூறும்‌, மானிடப்‌ பிறவியும்‌, ஆக்கை நிலையும்‌, ஈரிரண்டிலொன்றும்‌, இளமையும்‌, இசைவுமுண்டாய்‌, புகுவரேலும்‌ என்கிறதுக்குள்ளே விக்‌நமற, நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத ஸார-உபநிஷத் ஸார தர அநுவாக-ஸார தம காயத்ரியில்‌ முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத்‌ தெய்வ வண்டாய்‌, அன்னமாய்‌, அமுதம்‌ கொண்டவன் -ஸாகை களிலும்‌, ஓதம் போல் கிளர்‌ நால் வேதக்‌ கடலிலும்‌, தேனும்‌ பாலும்‌ அமுதுமாக எடுத்துப்‌ பெரு விசும்பருளும்‌ பேரருளாலே சிங்காமை விரித்தது –

இனி மேல்‌ ஸாஸ்த்ர ப்ரதிபாத்‌யமான அர்த்த விமேோஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்‌யாஸத்துக்கு ஐம்பூ, த்‌வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும்‌ அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய்‌, அத ஏவ ஸூகரமுமாய்‌, ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்‌ (சதுர்விதமான தே,ஹ) என்று தொடங்கி. (சதுர்விதமான தேஹம்‌) தே,வ-திர்யங்‌ மநுஷ்ய-ஸ்தாவர ரூபமான ஸரீர விஸேஷங்கள்‌. (வர்ணம்‌) ப்‌,ராஹ்மண-க்ஷத்ரிய வைஸ்ய-ஷூத்‌ர ரூபமான வர்ண சதுஷ்டயம்‌. (ஆஸ்ரமம்‌) ப்‌,ரஹ்ம சர்ய- கார்ஹஸ்த்ய -வாநப்ரஸ்த,-ஸந்த்யாஸங்களாகிறவை. (அதிகாரம்‌) “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு அர்த்தார்த்தி, ஜ்ஞாநீ” (கீதை 7 – 16) என்று சொல்லுகிறவை-

இதில்‌ ஆர்த்தனாவான்‌ – நஷ்ட ஐஸ்வர்ய காமன்‌. ஜிஜ்ஞாஸுவாவான்‌ – கேவலன்‌. அர்த்தார்த்தீ,யாவான்‌ -அபூர்வ ஐஸ்வர்ய காமன்‌. ஜ்ஞாநி என்கிறது பகவதநுபவ ஏக பரனை. ஆர்த்தனுக்கும்‌ அர்த்தார்த்திக்கும்‌ நடுவே கேவலனைச் சொல்லிற்று – அவனும்‌ ப்ரயோஜநாந்தர பரன்‌ என்னுமிடம்‌ தோற்றுகைக்காக. (பலம்‌)“‘தர்ம- அர்த்த,- காம மோக்ஷாக்‌,யா:” ( ) என்று சொல்லுகிறவை. (மோக்ஷமாவது) – ஸாலோக்ய-ஸாமீப்ய ஸாரூப்ய-ஸாயுஜ்யங்கள்‌, (ஸாதநம்‌) – கர்ம-ஜ்ஞாத-ப,க்தி-ப்ரபத்திகள்‌. (கதியாவது )த்‌,யு:பர்ஜந்ய ப்ருதிவீ புருஷ யோஷித்துக்களான பஞ்சாக்‌நி வித்‌யையில்‌ சொல்லுகிற படியே வருகிற கர்ப்ப,கதியும்‌, யாம்ய கதியும்‌, தூம்ய கதியும்‌, அர்ச்சிராதி,கதியும்‌. (யுக,மாவது) – க்ருத-த்ரேதா-த்‌,வாபர-கலியுக,ங்கள்‌. (த,ர்மமாவது) – “த்யாயத்‌ க்ருதே யஜந்‌ யஜ்ஞை: த்ரேதாயாம்‌ த்‌,வாபரேர்ச்சயத்‌ | யதாப்நோதி ததாப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம்‌”’ (வி. பு. 6 – 2 – 17) என்று சொல்லுகிற த்‌யாந -யாக,-அர்ச்சந -சங்கீர்த்தநங்கள்-வ்யூஹமாவது – வாஸு தே,வ-ஸங்கர்ஷண-ப்ரத்‌யும்ந- அநிருத்‌தர்கள்‌. ரூபமாவது “ரக்தம்‌ ஸிதே தரே பீதம்‌ சதுர்த்தா யத் க்ருதே யுகே, ! ரக்தாத்‌யம்‌ ஸித நிஷ்டஞ்ச த்ரேதோயாம்‌ ஹி மஹாமதே பீதம்‌ க்ருஷ்ணம்‌ ஸிதம்‌ ரக்தம்‌ ஸம்ப்ராப்தே த்வாபரே யுகே, ! கலெள க்ருஷ்ண ஸிதம்‌ ரக்தம்‌ பீதஞ்சாநுக்ரமேண து””( ) (யதாமதி ஸோத நீயம்‌] என்கிற படியே க்ருதாதி,களில்‌ ஸித-ரக்த- பீத-க்ருஷ்ணாதி,களான ஸங்கர்‌ஷணாதிகளுடைய வர்ண சதுஷ்டயங்கள்‌. “பாலினீர்மை”! (திரு.ச . வி. 44) இத்யாதி, க்ரிசை யாவது -ஸ்ருஷ்டி -ஸ்திதி-ஸம்ஹார-மோக்ஷ ப்ரதத்வாதி,கள்‌. ஆதி சப்‌தத்தாலே மற்றும்‌ அர்ச்சநீயரான தேவதா விஸேஷங்களைச்‌ சொல்லுகிறது

இப்படி சதுர் வித,மான தேஹாத் யர்த்த,விஸேஷங்களுக்கு ப்ரகாஸகமான பாட்டுப்‌ பரப்புக்கு “பாட்டும்‌ முறையும்‌?” (நா. திருவ. 76) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற ஸாஸ்த்ர விஸ்தரத்துக்கு. (பெரியதீவினில்‌ இத்யாதி,) ““நாவலம் பெரிய தீவு”’ (பெரியா. தி. 3 – 6: – 1) என்கிற ஜம்பூ த்‌வீபத்தில்‌ நவ கண்டையான ப்ருதிவியில்‌ பரத கண்ட,மும்‌. “துர்லபோ மாநுஷோ தேஹு:”” (ப,ாக,வ. 11 – 2 – 21) என்றும்‌, “மானிடப் பிறவி அந்தோ?” (திருக் குரும் -. 6) என்றும்‌ சொல்லுகிற மநுஷ்ய தேஹமும்‌, ‘“தே,ஹிநாம்‌ க்ஷண பங்கு, ர:”” என்றும்‌, “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌”’ (திருவாய்‌. 1 – 2. 2) என்றும்‌ சொல்லுகிற தாத்‌ருஸ தேஹங்களினுடைய ஸ்தைர்யமும்‌. ஸாஸ்த்ர ஜ்ஞாநத்துக்கு யோக்‌யமான வர்ணங்களில்‌ ப்ரதம க,ண்யமாய்‌, ““குலங்களாய ஈரிரண்‌டிலொன்றிலும்‌”’ (திருச்ச. 90) என்கிற ப்‌ராஹ்‌மண ஜந்மமும்‌, “கிளரொளி இளமை”” (திருவாய்‌. 2 – 10 – 1) என்று இதினுடைய பால்யமும்‌–தஸ்மாத் பால்யே விவேகாத்மா’ (வி.பு. 1 – 17 – 75) என்றும்‌ சொல்லக் கடவது இறே

அதிலும்‌, ““யானுமென்னெஞ்சும்‌ இசைந்தொழிந்தோம்‌”’ (பெரியதிருவ, 36) என்கிறபடியே இச்சையுமுண்டாய்‌, “*வேத நூல்‌ பிராயம்‌ நூறு மனிசர் தாம்‌ புகுவரேலும்‌”’ (திரு மாலை 3) என்றும்‌, ““ஸதாயுர்வை புருஷ:”” (யஜு. கா. 1 – 8 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மநுஷ்யர்‌ வேதோக்தமான ஆயுஸ்ஸை உடையவரே யாகிலும்‌ அவ்வாயுஸ்‌ஸுக்குள்ளே “அநந்த ஸாரம்‌ ப,ஹு வேதி தவ்யம்‌ அல்பஸ் ச காலோ பஹவமஸ்ச விக்‌,நாநி :’” ( ) என்றும்‌, ““ஸ்ரேயாம்ஸி ப,ஹுவிக்‌,நாநி ப,வந்தி மஹதாம்பி”” ( ) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸாஸ்த்ர ஜ்ஞாந விரோதி,யான ப்ரபல ப்ரதிபந்தகங்களும்‌ அற்று, “நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்‌ ” (திருமொழி 1 – 1 & 4) என்றும்‌, “சஞ்சலம்‌ ஹி மநஸ் : க்ருஷ்ண ப்ரமாதி, பலவத்‌,த்‌ரூடம்‌ ! தஸ்யாஹம்‌ நிக்‌ரஹம்‌ மந்யே வாயோரிவ ஸதுஷ்கரம்‌”’ (கீதை 6 – 34) என்றும்‌ சொல்லப்படுகிற மநஸ்ஸைக் கொண்டு ‘கலையறக் கற்றமாந்தர்‌”” (திருமாலை 7) என்கிறபடியே ஸாஸ்த்ரங்களைக்‌ கரை கண்டு ”ஆமாறறிவுடையார்‌ ஆவதரிதன்றே”’ (பெரியதிருவ. 37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே

வேதஸாரோபநிக்ஷத்‌ – (”அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம்‌ ஸாரதரம்‌ த்யஜேத்‌ | பஜேத்‌ ஸாரதமம்‌ ஸாஸ்த்ரம்‌ ரத்நாகர இவாம்ருதம்‌” ( )) அயதர்த்த,ப்ரதிபாத,கங்களான பாஹ்ய ஸாஸ்த்ரங்கள்‌ அஸாரமாய்‌, புத்ர பஸ் வந்நாத்‌,ய ஐஸ்வர்யஸாத,நத்தையும்‌, ஸ்வர்க்க,ஸாத,ந ஜ்யோதிஷ்டோமாதி, களையும்‌ விதிக்கிற முகத்தாலே ஸாஸ்தராஸ்திக்யம்‌ ப்ரக்ருத் யாத்ம விவேகம்‌ இவற்றைப்‌ பிறப்பிக்கையாலே வேதத்தில்‌ பூர்வபாகம்‌ அல்ப ஸாரமாயிருக்கும்‌. இங்ஙனன்றிக்கே அநந்த ஸ்திர பல ப்‌ரஹ்மோபபாதநமான உபதிஷத பாகம்‌ ஸாரமாயிருக்கும்‌

அந்த உபநிஷத்துக்களிலும்‌ சொல்லுகிற “பரம்‌ ப்‌,ரஹ்ம பரம்‌ ஜ்யோதி: ‘” இத்யாதி, ஸாமாந்ய வாசக ஸப்‌,த,ங்களாலும்‌, விஸேஷ வாசியான சம்பு,சிவாதி ஸப்‌,த,ங்களாலும்‌,ப்ரதிபாதி,க்கப்படுகிறன்‌ நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம்‌ ஸார தரமாய்‌, அதில்‌ வ்யாபக த்ரயத்தையும்‌ ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கிற விஷ்ணு காயத்ரியில்‌ ப்ரதமோபாத்தமான நாராயண ஸப்‌,த,ம்‌ ஸார தமமாகையாலே ““ஓத்தின்‌ பொருள்‌ முடிவுமித்தனையே – மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே ஒத்தின்‌ சுருக்கு! (இர, திருவ. 39) என்கிறபடியே வேதாந்த தாத்பர்யமாய்‌, “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநி ச ” (வரு. ஹா.) என்று இத்யாதி,களில்‌ சொல்லுகிறபடியே ஸகல வேத ஸங்க்ரஹமுமாய்‌, ஸகலார்த்த,ப்ரகாஸகமுமாய்‌ ஸர்வேஸ்வரன் தனக்குத்‌ திருநாமமான திருமந்தரத்தை ஷட்பத,மானது ஸாகா ஸஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமாப் போலே தூவியம்புள்‌ளுடைத்‌ தெய்வ வண்டானவன்‌ ஸாகைகளில்‌ ஸாரரூபமான திருமத்த்ரத்தை எடுத்தும்‌, அன்னமாய்‌ அன்றங்கருமறை பயந்தான்‌” (திருமொழி 5 – 7 – 3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப் போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்

அநந்தரம்‌, ““பேணான்‌ வாங்கி அமுதங்கொண்ட ” (திருமொழி 6 – 10 – 3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸூர பய பீதரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்‌தியை மதித்து அம்ருதத்தை எடுத்தாப் போலே ஸம்ஸார பய பீ,தரான சேதநருடைய ரக்ஷ்ணார்த்த,ம்‌ ”நால்வேதக்கடலமுது?’ (பெரியா. தி. 4 – 3 – 11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும்‌ ஸார பூ,தமான திருமந்த்ரத்தை எடுத்தும்‌.
ஆக, ஸர்வரஸமுமாய்‌ ஸர்வாதிக ஸத்யத்தையும் தருமதான “தேனும்‌ பாலும்‌
அமுதுமாய திருமால் திருநாமம்
-(திருமொழி -6-10-6) என்கிற திருமந்திரத்தை அமரர் பெரும் விசும்பருளும் பேரருளாளன்‌ ”’ திருமொழி 1 – 4.4) என்கிற பெரும் விசும்பான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுக க்ருபையாலே ““‘நரநரரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தவன்‌’‘ (திருமொழி 10 – 6 – 1) என்கிறபடியே ஸ்ரீபதரி காஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண வந்து அவதரித்து ஸ்வரூபஸாஸ்த்ரம்‌ மடங்காதபடி விஸ்தரித்தருளினது அறக்கற்கை அரிதென்றிறே – இத்தைக் கொண்டு அந்வயிப்பது-

17-முனிவரை இடுக்கியும்‌ முந்நீர் வண்ணனாயும்‌ வெளியிட்ட ஸாாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள்‌ விஷயம்‌.
ஸாஸ்த்ரத்தையும்‌ ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும்‌ வெளியிட்டருளினான்‌ என்று நின்றது கீழ்‌ ; அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென்‌ ; அவற்றுக்கு விஷயமேது” என்கிற சங்கையில்‌ சொல்லுகிறது (முனிவரை இடுக்கியும்‌) என்று தொடங்கி. ““இருள்‌கள்‌ கடியும்‌ முனிவரும்‌” (திருவாய்‌. 10 – 7 – 7) என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி,களுக்கு ““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்‌தி, நாராயணம்‌ ப்ரபு,ம்‌ | கோஹ் யந்ய: புண்ட,ரீகாஷாந் மஹா பாரத க்ருத்‌,பவேத்‌”’ (வி.பு. 3 – 4 – 5) என்கிறபடியே அந்தர்யாமியாய் நின்று தந் முகேந ப்ரவர்த்திப்பித்த ஸாஸ்த்ரங்களுக்கு விஷயம்‌ இவர்களுடைய தேஹ விஸிஷ்ட ஸ்வரூபம்‌ என்றும்‌, *“கருங்கடல்‌ முந்நீர்வண்ணன்‌”’ (திருமொழி 1 – 4 10) என்கிறபடியே ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம்‌ சேதநருடைய நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம்‌ என்றும் சொல்லப்பட்டது ; ஸாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து –

18-தோல்புரையேபோமதுக்குப்‌ பழுதிலா யோக்‌யதை வேணும்‌ ; மனமுடையீர்‌ என்கிற ஸ்ரத்‌தையே அமைந்த மர்ம ஸ்பர்ஸிக்கு நானும்‌ நமரும்‌ என்னும்படி ஸர்வரும்‌ அதிகாரிகள்‌.
ஆனால்‌ இவை யிரண்டும்‌ ஸர்வாதிகாரமா யிருக்குமோ? அதி க்ருதாதிகாரமா யிருக்குமோ? என்கிற சங்கையிலே சொல்லுகிறது (தோல் புரையே போமதுக்கு) என்று தொடங்கி, தேஹ விஸிஷ்ட ஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹாவஸாநமே தனக்கு அவஸாநமான ஸாஸ்த்ரத்துக்கு ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப் பேதிமார்‌கள்‌” ்‌ (திருமாலை 42) என்கிறபடியே அதிகாரி ஸம்பத்தி ஸாபேக்ஷமாயிருக்கும்‌. “மன முடையீர்‌” என்கையாலே * “கண்ணன்‌ கழலிணை நண்ணும்‌ மனமுடையீர்‌”” (திருவாய்‌. 10 – 8 – 1) என்றும்‌, “ந தீர்த்தம்‌ ந ச நக்ஷத்ரம்‌ ந க்‌ரஹா ந ச சந்த்‌ரமா: ஸ்ரத்‌தைவ காரணம்‌ ந்ரூணாம்‌ அஷ்டாக்ஷர பரிக்‌ரஹே”” (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரத்‌தா மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஸியான தாத்பர்யத்துக்கு “நானும்‌ சொன்னேன்‌ நமருமுரைமின்‌ நமோ நாராயணமே ‘ (திருமொழி 6 – 10 – 6) என்கையாலே அதிகாரி நியமமில்லை. இத்தால்‌ ஸாஸ்த்ரம்‌ அதி க்ருதாதிகாரமா யிருக்கும்‌ ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம்‌ ஸர்வாதிகாரமென்றதாய்த்து –

19-ஸாஸ்த்ரிகள்‌ தெப்பக் கையரைப் போலே இரண்டையு மிடுக்கிப்‌ பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர்‌ விட்டத்தி லிருப்பாரைப் போலே இருகையும்‌ விட்டுக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.
இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது (ஸாஸ்த்ரிகள்‌ தெப்பக் கையரைப் போலே) என்று தொடங்கி, ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

20-இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும்‌ உணர்வைப்‌ பெறவூர மிக உணர்வுமுண்டாம்‌.
இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது (உணர்ந் துணர்ந்துணரவும்‌ உணர்வைப் பெற வூர மிக வுணர்வுமுண்டாம்‌) என்று. (உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

21-ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்‌.
இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌ (-ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்‌.) என்று தொடங்கி. ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

22-ஜ்ஞாந சதுர்த்தி,களின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்‌.
ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

23-முளைத்தெழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம்‌ விதியில்‌ காணும்‌ . ப்ரதம மத்‌யம தஸைகளைப்‌ பகல் விளக்கும்‌ மின்மினி யுமாக்கும்‌.
இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது (முளைத்தெழுந்த) என்று தொடங்கி, “முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தார்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

24-நாலிலொன்று பரவர்த்தகம்‌ ; ஒன்று நிவர்த்தகம்‌.
இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ (நாவிலொன்று ப்ரவர்த்தகம்‌) என்று தொடங்கி. உபாஸகன்‌ தன்னை போக்தாவாக நினைத்திருக்கையாலே அந்த போக்த்ருத்வ நிபந்த,நமான கர்த்ருத்வமும்‌ அவனுக்கே ஆகையாலே அவனை உபாய ரூப ப்ரவ்ருத்தியிலே மூட்டும்‌ போக்த்ருத்வம்‌– ப்ரபந்நனுக்கு போக்யதை ஸ்வரூபமாகையாலே அத்த போக்யதை தானே தந் நிவ்ருத்தி ஹேதுவாயிருக்கும் –

25-முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை இரண்டும்‌, செயல் தீர்ந்தார்‌ வ்ருத்தியில்‌ ஸ்வ நிர்பந்த மறுக்கும்‌.
ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌ (முற்பாடர்க்கு) என்று தொடங்கி. ‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

26-கர்ம கைங்கர்யங்கள்‌ ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்‌.
இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்குமென்னில்‌ ; (கர்ம கைங்கர்யங்கள்‌ ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்‌) என்கிறார்‌. இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

27-இவற்றுக்கு விதி, ராக,ங்கள்‌ ப்ரேரகங்கள்‌.
இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ (இவற்றுக்கு விதி, ராக,ங்கள்‌ ப்ரேரகங்கள்‌]). “இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

28-மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌.
இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌, (மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

29-அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும்‌ நல்லதோரருள்‌ தன்னாலே நன்றுமெளியனாகிறதும்‌ விஷயம்‌,
இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ; ”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌.

30-இவற்றாலே ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌.
ஆக (இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

31-ஜாத் யாஸ்ரம தீஷைகளில்‌ பேதிக்கும்‌ த,ர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில்‌ பொதுவானது நழுவும்‌.
ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌ – அது தானே நழுவும்‌ என்கிறார்‌–எங்ஙனே என்னில்‌ ; ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே

32-ஸாதந ஸாத்‌யங்களில்‌ முதலும்‌ முடிவும்‌ வர்ண தர்மிகள்‌ தாஸ வ்ருத்திகள்‌ என்று துறை வேறிடுவித்தது.
இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது (ஸாதந ஸாத்‌யங்களில்‌) என்று தொடங்கி, ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌. பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

33- வேத வித்துக்களும்‌ மிக்க வேதியரும்‌ சந்தஸாம்‌ மாதாவாலும்‌, அதுக்கும்‌ தாயாய்த்‌ தாயினுமாயின செய்யுமத்தாலும்‌ பிறப்பிக்குமது இருவர்க்கும்‌ ஸ்ரேஷ்ட ஜந்மம்‌.
இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌ (வேதவித்துக்களும்‌) என்று தொடங்கி. ‘ யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

34-அந்தணர்‌ மறையோர்‌ என்றும்‌, அடியார்‌ தொண்டர் என்றும் இவர்களுக்கு நிரூபகம்‌
இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌ (அந்தணர்‌ இத்யாதி, ). “’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

    35-ஒரு தலையில்‌ க்‌ராம குலாதி வ்யபதேஸம்‌ குலந்தரும்‌ மாசில்‌ குடிப்பழி என்று பதியாகக கோயிவில்‌ வாழுமென்பர்கள்‌.
    கர்மகைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ (ஒரு தலையில்‌ க்ராம குலாதி வ்யபதேஸம்‌ என்று தொடங்கி). கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

    36-விப்ரர்க்கு கேரத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்‌ பராஸர பாராஸர்ய போதாயநாதி,கள்‌; ப்ரபந்ந ஜந கூடஸ்தர்‌ பராங்குசா பரகால யதிவராதிகள்‌.
    இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது (விப்ரர்க்கு என்று தொடங்கி). முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

    37-அத்‌யயந ஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே ப்‌ராஹ்மண்யமாகிறாப்‌ போலே சந்தங்களாயிரமும்‌ அறியக் கற்று வல்லரானால்‌ வைஷ்ணவத்வ ஸித்‌தி,.
    இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ (அத்‌யயந ஜ்ஞாதாநுஷ்டாநங்களாலே என்று தொடங்கி). அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

    38–இந்த உட்பொருள்‌ கற்றுணர்ந்து மேலைத் தலைமறையோ ராகாதாரை அயல் சதுப்பேதிமார்‌ என்று உத்பத்தி நிரூபிக்கும்‌.
    அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌ (இந்த உட்பொருள்‌ கறறுணர்ந்து என்று தொடங்கி). ““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

    39-“எவ்வுலகத் தெவ்வெவையும்‌’” என்கையாலே வேதம்‌ பஹு வித ம்‌. வேத அத்‌,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்‌,யயநமும்‌ விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில்‌ உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச்‌ சொல்லா நின்றீர்‌. இதுவும்‌ பிற்றை வேதமோ என்னில்‌ ; இதுவும் வேதம்‌; இது என்ன வேதம்‌ என்ன; “‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும்‌, ‘“ஓதுவாரோத்தெல்லாம்‌ எவ்வுலகத் தெவ்வெவையும்‌”* (திருவா. 3 – 1- 6) என்றும்‌ சொல்லுகிறபடியே அத்‌யேதாக்களுடைய பேதத்தாலும்‌, லோக பேதத்‌தாலும்‌ வேதம்‌ ப,ஹு வித,ம்‌ என்கிறார் –

    40-இதில்‌ ஸம்ஸ்க்ருதம்‌, த்‌ராவிடம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம்‌ போலே.
    ஆனால்‌ அது ஸம்ஸ்க்ருதமாய்‌, இது த்‌ராவிடமாய்ப்‌ பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்‌. (இதில்‌) இந்த வேதத்தில்‌. (ஸம்ஸ்க்ருதம்‌ த்‌ராவிட,ம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான்‌ ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான்‌ ரூக்‌,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப்‌ பிரிந்தாப் போலே வேதந்தான்‌ ஸம்ஸ்க்ருத ரூபமாயும்‌, த்‌ராவிட ரூபமாயும்‌ பிரிந்ததென்கிறார் –

    41-செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும்‌ அநாதி..

    ஆனாலும்‌ அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான்‌ அநாதியாயிரா நின்றதே என்ன ; (செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும்‌ அநாதி,) ““செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில்‌ ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப்‌ பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும்‌ அநாதி யிறே-

    42-வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.
    ஆனால்‌ அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வமுண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்‌; (வடமொழிமறை என்றது – தென்மொழி மறையை நினைத்திறே) வேதம்‌ என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம்‌ என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-

    43-வேத,சதுஷ்டய-அங்கோபாங்க,ங்கள்‌ பதினாலும்போலே, இந்‌ நூலுக்கும்‌ இருந் தமிழ் நூற் புலவர் பனுவலாறும்‌, மற்றை எண்மர்‌ நன் மாலைகளும்‌.
    அங்கோபாங்க ஸஹிதத்வம்‌ இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார்‌ மேல்‌ (வேத,சதுஷ்டயாங்கோபாங்க,ங்கள்‌ என்று தொடங்கி), ““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

    44-ஸகல வித்‌யாதிக வேதம் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்த, ப்ரதாநம்‌.
    ஸகல வித்‌யைகளிலும்‌ வைத்துக் கொண்டு அங்கியான வேதம்‌ அதிகமாயன்றோ இருப்பது என்னில்‌, (ஸகல வித்‌யாதிக வேதம் போலே) அந்த ஸகல வித்‌யைகளிலும்‌ அதிகமான வேதம்‌ ப்ரதாநமானாப் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்தங்களில்‌ ப்ரதாநமாயிருக்கும்‌.

    45-வேத நூல்‌, இருந் தமிழ் நூல்‌, ஆஜ்ஞை, ஆணை, வசையில்‌, ஏதமில்‌, ௬ருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில் பாடல்‌, பண்டை, நிற்கும்‌, முந்தை, அழிவில்லா என்னும்‌ லக்ஷணங்கள் ஓக்கும்‌.
    ஆனால்‌ வேதத்துக்குச்‌ சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம்‌ நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும்‌, ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும்‌, ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும்‌, பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம்‌, நித்யத்வம்‌, ஸத்யத்வம்‌ தொடக்கமான லக்ஷணங்கள்‌ இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில்‌, உண்டென்கிறார்‌ (வேதநூல்‌ என்று ்‌ தொடங்கி). வேதநூல்‌?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல்‌ ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும்‌, ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய்‌, “வசையில்‌ வேதம்‌”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்‌” (திருவா. 1 – 0 – 11) என்று ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய்‌, “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, *’செவிக்கினிய செஞ்சொல்‌?” (திருவா. 10 – 6 – 11) என்றும்‌ ஸ்ராவ்யமாய்‌, ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்‌”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில்‌ சொல்லுகிற அர்த்தங்களில்‌ ஒரு பொய்‌ இன்றியிலே இருப்பதாய்‌, ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும்‌ நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்‌’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும்‌, “அழிவில்லா ஆயிரம்‌”’ (திருவா. 9 – 7 – 11) என்றும்‌ ஆத்‌யந்த ரஹிதமாய்‌, அதிற் சொல்‌லுகிற லக்ஷணங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார் –

    46-‘“சொல்லப்பட்ட”” என்றதில்‌ கர்த்ருத்வம்‌ “ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்‌’ என்றது போலே
    ஆனால்‌ “சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில்‌ கர்த்ருத்வத்தால்‌ நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில்‌, வாராதென்கிறார்‌. அது என் போல வென்னில்‌, “முன்னம்‌ திசை முகனைத் தான்‌ படைக்க, மற்றவனும்‌ முன்னம்‌ படைத்தனன்‌ நான்மறைகள்‌”! (பெ.திருமடல்‌) என்றும்‌, ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப்‌ படைத்தான்‌ ‘ என்ற இடத்தில்‌, அந்த ப்‌,ரஹ்மாவால்‌ வந்த கர்த்ருத்வத்தால்‌ அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும்‌ நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –

    47-நால் வேதங்கண்ட புராண ருஷி-மந்த்ர தர்மிகளைப்‌ போலே இவரையும்‌ ருஷி, முனி, கவி என்னும்‌.
    (நால் வேதங் கண்ட இத்யாதி, ) ”நால் வேதங் கண்டானே”’
    (திருமொழி 9 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக்‌ கரை கண்ட வர்களையும்‌ அஷ்டாதஸ புராண கர்த்தாக்‌களையும்‌ “*சதுர் வேத தர்ஸநாத்‌ ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும்‌, ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும்‌, இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும்‌ சொல்லுமாப் போலே இவரையும்‌ ““ருஷிம்‌ ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம்‌ | ஸஹஸ்ர ஸாகாம்‌ யோ த்‌ராஷீத்‌, த்‌ராவிடீம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஹிதாம்‌” (பரா.௮.) என்றும்‌, ““ஸட,கோபமுநிம்‌ வந்தே, ஸடாநாம்‌ புத்‌தி தூஷகம்‌ | அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜநகம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌””’ (பரா. அ) என்றும்‌, “உலகம்‌ படைத்தான்‌ கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌ சொல்லுகையாலே இவரையும்‌ ருஷி முனி கவி என்னும்‌ என்கிறார் –

    48-“படைத்தான்‌ கவி” என்ற போதே இதுவும்‌ யதா பூர்வ கல்பதமாமே.
    ‘ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு’”
    (திருவா. 4 – 10 – 10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணினவனுக்குக்‌ கவி யானேன்‌ என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்‌?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும்‌ ஸூர்யா சந்த்‌ரமாக்கள்‌ உண்டானாப் போலே ஸ்ருஷ்டி தோறும்‌ இந்த ப்ரபந்தமும்‌ உண்டென்னுமிடம்‌ தோற்றுகிறது. இத்தாலும்‌ இதினுடைய அநாதித்வம்‌ சொல்லுகிறது.

    49-உறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே ஓதின சந்தச் சதுமுகன்‌ சலங்கலந்த வெண் புரி நூல்‌ மானுரி திரிதந்துண்ணும்‌ காமனுடல்‌ இருக் கிலங்கு ஜயேஷ்ட புத்ராதிகளுக்‌கு மறை பயந்தாப் போலே ஆதுமில்‌ காலத் தெந்தையான வாய்‌ முதலப்பன்‌ பிரம குருவாய்‌ இராப் பகல்‌ முன் சொல்லக் கற்றனமே என்ற இவரும்‌ நாவினால்‌ நன்மையால்‌ என்று ஓத வல்ல பிராக்களை **கண்மின்கள்‌’” என்று சொல் பயிற்ற, வேதம்‌ ஓதுவாரோத்தாகையாலே அதர்வணாதிகள் போலே இதுவும்‌ பேர் பெற்றது.
    ஆனால்‌ அதிகாரிகள்‌ ஸம்ஹ்ருதராக வேதம்‌ நித்யமானபடி என்‌ என்னில்‌, ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன்‌ நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்‌த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம்‌ “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம்‌ அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின அந்த ப்‌ரஹ்மாவானவன்‌ ஜ்யேஷ்ட புத்ரனான ருத்‌ரன்‌ தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன்‌ இந்த த்‌ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும்‌ தம் பக்கலில்‌ க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்‌யயநம்‌ பண்ணுவிக்க, இதுவும்‌ இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்‌ (உறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை என்று தொடங்கி). “உன்னிய யோகத் துறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்‌) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்‌யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்‌) என்றும்‌, ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம்‌ தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌” (ம.உ.) என்றும்‌, ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும்‌ மற்றும்‌ யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும்‌ அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்‌”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய்‌ அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய்‌ மேல்‌ ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத்‌ திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.

    பின்னை ஸம்ஹாராநந்தரம்‌ யோக, நித்‌ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில்‌ ““உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும்‌ ஸ்மரித்த “திசை முகனார்‌ தங்களப்பன்‌” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப்‌ பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்‌யயநம்‌ பண்ணலாவதும்‌-ஸ்மரிக்கலாவதும்‌- ”சந்தச் சதுமுகன்‌” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவானவன்‌ ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்‌”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‌‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்‌”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்‌”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய்‌ எண்டோளீசர்‌”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும்‌, நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும்‌, பிக்ஷாசரணமும்‌, ஜிதேந்த்‌ரியத்வமும்‌, ஸதா அத்‌யயந பரத்வமுமாகிற ப்‌ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய்‌, “ப்‌ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு சரணா மறை பயந்த தாமரையான்‌’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே ““ஆதுமில்‌ காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும்‌ வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில்‌ இவற்றைத்‌ தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “என்கை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன்‌. “என்‌ வாய் முதலப்பன்‌’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன்‌ என்கிற. ““பீதகவாடைப் பிரானார்‌ பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில்‌ “என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன்‌ முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல்‌ கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம்‌ பண்ணினேன்‌ என்று அவனோடே ஓதின இவரும்‌.‘நாவினால்‌ நவிற்றின்பமெய்‌தினேன்‌”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்‌”” என்றும்‌, “நன்மையால்‌ மிக்க நான்மறையாளர்கள்‌ புன்மையாகக்‌ கருதுவரா” ம்படியான “என்னை ஆண்டிடும்‌ தன்மையான்‌ சடகோபன்‌’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்‌யஸியுங்கோள்‌ என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்‌”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச்‌ சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம்‌ ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்‌யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும்‌, தைத்திரீயம்‌ என்றும்‌ பேர் பெற்றாப் போலே இதுவும்‌ “சட கோபன் சொல்‌”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது

    50-இயற்பா மூன்றும்‌ வேத த்ரயம் போலே; பண்ணார் பாடல்‌ பண்புரை இசை கொள்‌ வேதம் போலே. :
    கீழே இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ வேத சதுஷ்டயம் போலே என்றது, எந்த ப்ரபந்தம்‌ எந்த வேத ஸ்தாநத்திலே என்னில்‌, (இயற்பா மூன்றும்‌ என்று தொடங்கி). இயற்பாவா யிருக்கிற திருவிருத்தம்‌, திருவாசிரியம்‌, திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள்‌ மூன்றும்‌ ருக்‌, யஜூர் அதர்வணம்‌ என்கிற மூன்று வேத ஸ்தாநத்திலே; ”பண்ணார் பாடல்‌”’ (திருவா, 10 – 7 – 5) என்கிற திருவாய்மொழி “பண்புடை வேதம்‌”, (திருவா. 6 – 6 – 5) ‘இசை கொள் வேதநூல்‌ (திருமொழி 5 – 3 – 2) என்றும்‌ சொல்லுகிற காந ப்ரதாநமான ஸாம வேதம் போலே என்கிறார் –

    51-ருக்கு ஸாமத்தாலே ஸ ரஸமாய்‌, ஸ்தோப,த்தாலே பரம்புமாப்‌ போலே சொல்லார்‌ தொடையல்‌ இசை கூட்ட அமர் சுவை ஆயிரமாயிற்று.
    இதில்‌ ருக்கு ஸாமமாகப்‌ பாடப்படுகிறாப் போலே ருக்‌ வேத ஸ்தாநே யாயிருக்கிற திருவிருத்தம்‌ திருவாய்மொழியாகப்‌ பாடப்படும்‌ என்கிறார்‌ (ருக்கு ஸாமத்தாலே என்று தொடங்கி). ஸாம ஸங்க்‌,ரஹம்‌ ருக்கு; ருக்‌ விவரணம்‌ ஸாமம்‌. அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும்‌. (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்‌) ருக்கு ஸாமத்தோடேகூடி ரஸ ஸஹிதமாய்‌. (ஸ்தோப,த்தாலே பரம்புமாப்போலே) ஸ்தோப,ம்‌ என்கிறது ருக்‌ வேதங்களை யொழிந்த “*ஹாவு ஹாவு ஹாவு”” இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப் போலே *சொல்லார் தொடையலான இந் நூறு பாட்டும்‌ ““இசை கூட்டி வண் சடகோபன்‌”‘ (திருவா. 2 – 4 – 11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே “அமர்‌ சுவையாயிரம்‌”’ (திருவா. 1 – பி – 11)என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று-

    52-சந்தோகனென்று ஸாமாத்யமாகாமல்‌ முதலிலே பிரித்து யாழ்‌ பயில்‌ காந ஸ்வரூபியை *பாலையாகி”” என்று விஸேஷிக்கையாலே வேத கீதச்சாமி நானென்ன ஸாமந் தோன்ற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரத மத்திலே மாறாடி சரமகதி முடிவாகத்‌ தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹா கோஷ நல் வேத வொலி போலே மஹாத்‌,யயந மென்னப்‌ பாடுகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌. ஸாமந்தான்‌ ஆயிரமாய்‌ அநேக விதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஓப்பாகிறது என்னில்‌, சாந்தோக்‌ய ஸமமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ (சந்தோகன்‌) என்று தொடங்கி. ““சந்தோகன்‌ பெளழியன்‌ ஐந்தழலோம்பு தைத்திரியன்‌ சாமவேதி”” (திருமொழி 5 – 5 9) என்கிற விடத்தில்‌ ““’ஸாமவேதி” என்று ஸாம ஸாமாந்யமாகாமல்‌ ““சந்தோகன்‌”” என்று முதலிலே பிரித்து “’முன்னல் யாழ் பயில்‌ நூல் நரம்பின்‌ முதிர்சுவை”’ (திருவா 2-5 – 7) என்கிற காந ரூபியை காந ரஸமானவனை; ““யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி”’ (திருமொழி 7 – 3 – 7) என்று கொண்டு காந ஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல்‌, “பாலை?””, “யாழ்‌” என்கிற பண்ணை யிட்டு விஸேஷிக்கையாலே “சாம வேத கீதனாய”” (திருச்ச. 14) என்றும்‌, “’வேதா நாம்‌ ஸாமவேதோஸ்மி?” (கீதை 10 – 22) என்றும்‌ அவன் தன்னோடொக்க ஸமாநாதி, கரிக்கும் படியான சந்தோக ஸாமம்‌ இத்திருவாய்‌ மொழி என்னுமிடம்‌ தோற்ற ‘“உத்‌ கீத மேதத் பரமநுப்‌ரஹ்ம””, ““ஓங்காரோத்‌ கீத மேவ”, “ஓமித் யேததக்ஷர முத்‌ கீத முபாஸீத”‘(சா. 1 – 1 – 1) என்று சொல்லுகிற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்‌கீதம்‌ என்கிற இது ப்ரதாநம்‌ என்னுமாகாரம்‌ தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்த ஆதியிலே “உயர்வற-மயர்வற, அயர்வறும்‌”” என்று மாறாடி “உயர்ந்தே” என்று சரம கதி முடிவாக அகார மகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம்‌ அத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி {அகார-உகாரங்களின்‌ சரமமான தகாரத்தைத்‌ திருவாய்மொழிக்கு முடிவாக்கி!.

    அன்றிக்கே அர்ச்சிராதி,யை முடிவாக்கி என்னவுமாம்‌. அதுக்கடி – முடிவிலே சூழ்‌ விசும்பணிமுகிலாகையாலே. “’தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன் மாலைகள்‌ சொன்னேன்‌”’ (திருவா. 9 – 4 – 9) என்று இப் ப்ரப,ந்த,த்தை ““ஹாவு ஹாவு ஹாவு” என்று தொடங்கி, “அஹமந்நாதோரஹமந்நாதோரஹமந்நாத,?‘” என்று தேவ போக்‌யமானாப் போலே,
    ப,க,வத்‌,விஷயத்தில்‌ சபலரானார்க்கு போக்‌யமாக்கி.““ஸர்வேப்‌யோபி ஹி வேதேப்‌ய: ஸாம கோஷோ மஹாநபூத்‌ | அந்வ கோஷய தத்யர்த்த,ம்‌ தேந ப்ரஹ்மாண்ட,மண்டபா ” என்று (மஹாகோஷம்‌) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாம கோஷமிறே. “எழுந்த நல்வேதத்தொலி”* என்றும்‌, *“ஸாமத்‌வநி” என்றும்‌ சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும்‌ மஹாத்‌யயநமென்னப்‌ பாடுகையாலே பெரிய திருவத்யயந மென்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌ என்கிறார்

    53-புரவியேழொரு காலுடைய தேரிலே திருச் சக்கர மொத்து கால சக்கரச் செங்கோல்‌ நடாவி ஜ்யோதிஸ் சக்ரவொளி சுருக்கி அக்‌நீஷோமீய தோஜோம்ருதத்துக் கூற்றும்‌- மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌, முக்தி மார்க்கத் தலை வாசலும்‌, கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண்மணியும்‌, த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்க தோள்‌ வளையும்‌ குழையும்‌, திருச் செய்ய முடியும்‌ ஆரமும்‌ படையும்‌, திகழும்‌ பொன் மேனியும்‌, செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய்‌, அணி நிற மூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும்‌ தன்னிறமாக்குகிற செய்யாளான வித்‌யையோடே அருக்கன்‌ மேவின ஸதாத்‌யேய தேஜஸ்ஸின்‌ ஸாம ரஸோத்‌ காந நாமமுள்ளுறையான ஆத்‌யந்தங்‌களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினா லருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத குரூபதேஸம்‌

    அதிலே சொல்லுகிற அந்தராதித்யவித்‌யை தொடக்கமான வற்றையும்‌ இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார்‌ மேல்‌ (புரவி ஏழொரு காலுடைய தேரிலே என்று தொடங்கி]. “காரார்‌ புரவியேழ்‌”’ (சி. திருமடல்‌) என்றும்‌, ““ஓருகாலுடைய தேரொருவன்‌”” (திருமொழி 5 – 7 – 8) என்றும்‌, “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்‌”” (அருணம்‌ 3) என்றும்‌, “ஏகோ அஸ்வோ வஹதி ஸப்தநாமா‘ (அருணம்‌ 3) என்று ஸப்தநாமா வாயிருப்பதொரு அஸ்வத்தாலே வஹிக்கப்படுவதாய்‌, ஏக சக்ரியுமாயிருக்கிற தேரிலே-திருமால்‌ திருக்கைத்‌ திருச் சக்கரமொக்கும்‌”’ (திருவிரு. 86) என்கிறபடியே திருவாழி யாழ்வானோடே ஒப்புச் சொல்லலாய்‌, (கால சக்கரச் செங்கோல்‌ நடாவி) ““கால சக்கரத்தாய்‌” (திருவா. 7 – 2 – 7), ‘தனி வளர்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌’” (திருவிரு, 13) என்கிறபடியே கால சக்ர நிர்வாஹகமுமாய்‌, (ஜயோதிஸ் சக்ரவொளி சுருக்கி) “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ர தேஷஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப் பண்ணுமதாய்‌.

    (அக்‌நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும்‌) அக்‌நியினுடைய தேஜஸ்ஸூக்கும் சந்தரனுடைய அம்ருத கலைக்கும்‌ உத்பத்தி ஸ்தலமுமாய்‌. பூர்வாபரங்களாகிற பக்ஷ த்வயத்திலும்‌ சந்த்ர கலையானது போவது வருவதாவது ஆதித்யன் பக்கல் நின்றுமிறே.
    (மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌)மந்தேஹரென்று – ஆதித்யனோடே உத,யாஸ்தமய ஸமயங்களிலே யுத்தம்‌ பண்ணுவார்‌ சில அசுரர்கள்‌. அவர்களை ‘“எரிகொள்‌ செந்தீ வீழ்‌” (திருவிரூ. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்‌நி ஜ்வாலையுமாய்‌,
    (முக்தி மார்க்கத் தலை வாசலும்‌)“’நக்ஷத்ராதாதித்யம்‌” என்று முக்தி மார்க்க த்‌வாரமுமாய்‌,-“ஸம்வத்ஸராதாதித்யம்‌‘”’ என்று ஆதித்யனைக் கூட்டி “’தத்‌ பித்வா ஸூர்ய மண்ட,லம்‌”” என்றும்‌, “தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு” (சி.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய மண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப்‌ போக வேண்‌டுகையாலும்‌, மற்றவை யெல்லாம்‌ கிட்டுமளவேயாய்‌ ௮ண்ட பேதம்‌ பின்பே (அண்ட பேதத்துக்கு முன்‌பே )யாகையாலே முக்தி மார்க்கத் தலை வாசலும்‌ என்கிறார்‌.
    (கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண் மணியும்‌) *“’கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு’‘ (திருவாய்‌. 1.- 8 – 3) என்றும்‌, ““சஷுர் தேவாநாமூத மர்த்யாநாம்‌” (யஜு. ஸம்‌. ச்‌ – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ர பூதனான ஸர்வேஸ்வரனுடைய “’சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத’” (பு.ஸூ .) என்கிறபடியே திவ்ய சக்ஷுஸ்ஸைப்‌ பிறப்பகமாக உடைத்தாய்‌-
    ”ஜக தேக சக்ஷுஷே”’ என்கிறபடியே ஜகத்துக்கு த்‌ருஷ்டி பூதமாய்‌, (த்ரயீ
    மயமுமான மண்டலத்திலே) ““தரயீ மயாய”
    என்கிறபடியே வேத மயமுமான ஆதித்ய மண்டலத்‌திலே (தண்டாமரை சுமக்க) ”தண்டாமரை சுமக்கும்‌ பாதப் பெருமான்‌”” (திருவாய்‌. 4 5 – 8) என்றும்‌, “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்‌ய வர்த்தீ நாரயாணஸ்‌ ஸரஸி ஜாஸந ஸந்நிவிஷ்டா கேயூரவாந்‌ மகர குண்டலவாந்‌ கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுஸ் த்‌ருத சங்க சக்ர” என்றும்‌, ““மங்கல வைம்படையும்‌ தோள் வளையும்‌ குழையும்‌ மகரமும்‌” (பெரியா.திரு, 1 – 8 -9) என்றும்‌, ”திருச் செய்ய முடியுமாரமும்‌ படையுந் திகழ” (திருவாய்‌. 8 – 4 – 7) என்றும்‌, ‘‘நீண்ட பொன் மேனியோடும்‌’” (திருவாய்‌. 5- 5- 7), *“செஞ்சுடர்த் தாமரைக் கண்‌ செல்வனும்‌”’ (திருவாய்‌. 5 – 4 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பாஹு-வலய-மகர குண்டல-அபிஷேக-ஹார-கேயூர- சங்க, -சக்ராதி, திவ்ய பூூஷணங்களாலும்‌ விளங்கா நிற்பதுமாய்‌, ““ருக்மாபம்‌ ஸ்வப்ந தீ கம்யம்‌ வித்‌யாத்து புருஷம்‌ பரம்‌” (மநு. 12 – 122) என்றும்‌, “’ஆப்ரணகாத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண?”‘ (சா. 1 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்‌ரஹத்தையும்‌, “யதா கப்யாஸம்‌ புண்டரீக மேவ மக்ஷிணீ”” (ச,ா.) என்கிறபடியேஆதித்ய கிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸை யுடைய திருக் கண் மலரையுமுடைத்தாய்‌,

    ““அருக்கனணிநிறமும்‌ கண்டேன்‌” (மூ.திரு. 1) என்றும்‌, ““செய்யதோர்‌ நாயிற்றைக்‌ காட்டிச் சிரீதரன்மூர்த்தி”” (திருவாய்‌. 4 – சீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய தேஜஸ்ஸு போலே யிருக்கிற பகவத்‌ விக்‌ரஹத்தையும்‌, ப்ரபா -ப்ரபாவான்‌௧ளுடைய சேர்த்தியாலே ஸ்ரியப் பதித்வத்துக்கு ஸ்மாரகமு மாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும்‌,இவை யிரண்டையும்‌ தன்னிறமாக்கும்படியான ““கமலமலர் மேல்‌ செய்யாள்‌” (திருவாய்‌. 9 – 3 – 1) என்கிறபடியே ஹிரண்ய வர்ணையாய்‌, *“வித்‌யா ஸஹாயம்‌”ஆதித்ய ஸம்ஸ்தம்‌ வித்‌யாப்ரபாவகம்‌ (ப்ரஸாதகம்‌)’” என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.-“வானிடை அருக்கன்‌ மேவி நிற்பார்க்கு’” (பெ.திருமொழி 2 – 1 – 7) என்கிறபடியே ஆதி,த்யாந்தர் வர்த்தியாய்‌, ஸதாத்‌, த்யேய தேஜோ ருபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி,க்கிற . “ஸாம்ந உத்‌கீதோரஸ?” (சாந்) என்று ஸாமத்துக்கு ரஸமாய்‌, ““தஸ்யோதிதி நாம”‘ (சாந்த ] என்கிறபடியே அவர்க்குக்‌ திருநாமமாயிருக்கிற உத்‌காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே * ‘உத்‌’” என்கிற விதில்‌ உகார தகாரங்களை ஆதி யந்தங்களில்‌ உடைத்தாயிருக்கிற இப் பரபந்தத்தை.
    ஓராயிரமா யுலகேழளிக்கும்‌ பேராயிரம்‌”” (திருவாய்‌;9 – 3 – 1) என்கிறபடியே ஒரோ திருநாமமே அநேக பிரகாரமாக ரக்ஷிக்கும் படியான திருநாமங்களில்‌ வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனான வனுக்குத்‌ திருநாமமான ”உத்‌” என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயண ஸப்‌தத்தை “’ஆயிர முகத்தினாலருளி மந்தரத் திழிந்த கங்கை” (பெரிய. திரு. 1 – 4 – 7) என்கிறபடியே கங்கை லோக பாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே “’தீர்த்தங்களாயிரத்து”’ (திருவாய்‌. 7 – 10 – 11) என்கிறபடியே லோக பாவநார்த்தமாக ஆயிரம்‌ பாட்டாக விஸ்தரிக்கிறார்‌ என்று வேதாசார்ய ப,ட்டர்‌ அருளிச் செய்யும்படி

    ஆக, ‘“வ்வுலகத்தெவ்வெவையும்‌”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார்‌ அருளிச் செய்த ப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ வேத ரூபத்வமும்‌, அங்கோபாங்க ஸஹிதத்வமும்‌, ஸாஸ்த்ரதவம்‌ முதலான வேத லக்ஷணங்களும்‌ இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும்‌, இந்நாலு ப்ரபந்தங்களுக்கும்‌ நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும்‌, அதில்‌ திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌, அதில்‌ விசேஷ லக்ஷணங்களையும்‌ சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்‌துக்கு வேத,ஸாம்யம்‌ சொல்லா நின்றது –

    54-அன்றிக்கே, ஸ்வரூப கு,ண விபூ,தி சேஷ்டிதங்களை விஸமமாக்‌குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள்‌ போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருூம்ஹணமென்பர்கள்‌.
    இனி மேல்‌ ஸ்வரூபாதிகளை விஸத, மாகச்‌ சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்‌ரஹத்தை விஸதமாகச்‌ சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம்‌ விவரண ரூபமாயிருக்கும்‌ என்பாரு முண்டென்கிறார்‌ (அதவா வேத ஸாம்ய முண்டான மாத்ரமே யன்றிக்கே ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்கள்‌ என்று தொடங்கி) ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்களித்தனையும்‌ வேதத்திலே சொல்லும்‌-ஸ்வருபத்தையும்‌, குணத்தையும்‌ விஸதமாகச்‌ சொல்லும்‌ ஸ்ரீபாஞ்சராத்ரம்‌-விபூதியை விஸதமாகச்‌ சொல்லும்‌ புராணங்கள்‌-அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு பிரகாஸகமாயிருக்கும்‌ இதிஹாஸங்கள்‌, அவை போலே “’நீல தோயத மத்‌யஸ்த வித்யுல்‌லேகேவ பாஸ்வரா”‘ (தை.நா.) என்றும்‌, பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப ” (முண்டக 2- 27) என்றும்‌ விக்‌ரஹ பரமான வே வாக்யங்களை “*“தெரியச் சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்‌. 6 – 9 -11)என்கிறபடியே விஸதமாக்குகிற வேத உப ப்‌ரும்ஹணம்‌ என்பாருமுண்டென்கிறார்‌.

    55-கல்பாதி,யில்‌ தோற்றிற்று வர்ணிக்கும்‌ சதுர்முகன்‌ சந்தஸ்ஸும்‌ மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌ பிணச்சுடலை வெந்தார்‌ அக்கும்‌ ஆறும்‌ அணிந்து ஏறேறிச் சுழன்றாடும்‌ ஆலமமர்‌ பிச்சுத் தெளிந்து தான்‌ வணங்குமாறுரைக்கக் கேட்ட ஸஜாதீயர் ப்ரஸாதமும்‌ ஆர்ஷ மூலம்‌.
    கீழ்ச் சொன்ன புராணேதிஹாஸ கர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்‌ரிக்த குணாநுகுணமாகச்‌ சொல்லும்‌ ப்‌ரஹ்மாவின்‌ ப்ரஸாதமும்‌, ரஜஸ் தமஸ் ப்ரசுரனான ருத்ரன்‌, அவை தலை சாய்ந்து ஸத்த்வம்‌ தலை யெடுத்த போது அத்‌யாத்மம்‌ சொல்லக் கேட்ட ஸப்‌ரஹ்மசாரிகளான ப்‌ரூகு-புலஸ்த்ய-மார்க்கண்டேய வாமதேவாதி,கள்‌ என்று சொல்லப்படுகிறவர்கள்‌ ப்ரஸாதமும்‌ ஆர்ஷத்துக்கு மூலம்‌-ப்‌,ரஹ்ம ருத்‌ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம்‌ பண்ணினவன் தானே ஸ்ரீ யப்பதியாய்‌, பரம ஸத்த்வ ஸமாஸ்ரயமான திவ்ய விக்‌ரஹ யுக்தனுமாய்‌ நின்று செய்த ப்ரஸாதம்‌ இவர்க்கு மூலம்‌ என்கிறார்‌ (கல்பாதியில்‌ தோற்றிற்று வர்ணிக்கும்‌ என்று தொடங்கி) (கல்பாதி,யில்‌) ‘“யஸ்மிந்‌ கல்பே து யத் ப்ரோக்தம்‌ புராணம்‌ ப்‌ரஹ்மணா புரா ! தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம்‌ தத் ஸ்வரூபேண வர்ண்யதே ॥ அக்‌நேஸ் ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷு ப்ரகீர்த்யதே । ரஜஸேஷு ச மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ப்‌ரஹ்மணோ விது | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ஹரே -தேஷ்வேவ யோக ஸம் ஸித்‌தாக,மிஷ்யந்தி பராம்‌ க,திம்‌”” (மாத்ஸ்யே) என்று குண த்ரய வஸ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத்‌ தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்த போது ருத்‌ராக்‌நி மாஹாத்ம்யமும்‌, ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வ வர்ணநமும்‌, ஸத்த்வம்‌ தலையெடுத்த போது பகவத்‌,வர்ணநமும்‌ சொல்லக் கடவனான ப்‌,ரஹ்மாவினுடைய ““மச்சந்தா தேவ தே ப்‌ரஹ்மந்‌ ப்ரவ்ருத்தேயம்‌ ஸரஸ்வதீ?” (ரா. பா. 2 – 31) என்கிற நினைவும்‌. ““சந்தஸ்ஸு” என்றது நினைவென்றபடி-

    (மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌”) “தவம்‌ ஹி ருத்‌ர மஹா பாஹோ மோஹ ஸாஸ்த்ராணி காரய ! மாஞ்ச கோபய யேந ஸ்யாத்‌ ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்ய வாதஸ்சித்த விபே,த,த₹ ॥ கிம்புநர் லோக மோஹார்த்த,ம்‌ ப்ரவ்ரூத்தம்‌ ருத்‌ர ஸாஸநம்‌ | மயாநுமிஷ்டோ ருத்‌ரஸ்து மோஹ ஸாஸ்த்ரம்‌ வ்யதாத்‌ ஸ்வயம்‌”’-என்கிறபடியே பகவந் நியோகத்தாலே மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்‌ரன்‌- (பிணச்சுடலை இத்யாதி, ) ”பிணங்களிடுகாடதனுள்‌”’ (திருமொழி 2 – 6 – 9) என்றும்‌, “சுடலையில்‌ சுடு நீறன்‌’” (திருமொழி 10 – 1 – 5) என்றும்‌, ““வெந்தாரென்பும்‌ சுடு நீறும்‌” (திருமொழி 1 – 5 – 8) என்றும்‌, ““அக்கும்‌ புவியினதளுமுடையர்‌” (திருமொழி 9 – 6 – 1) என்றும்‌, “ஆறும்‌ பிறையுமரவமும்‌ அடம்பும்‌ சடைமேலணிந்து”” (திருமொழி 6 – 7 – 9) என்றும்‌, “வேறேறிப்‌ பட்டவிடுசாபம்‌”” (இர.திருவ. 63) என்றும்‌, “’தன்னினுடனே சுழலச்‌ சுழன்றாடும்‌”’ (பெ.திருமடல்‌) என்றும்‌, “’ஆலமமர்‌ கண்டத்தரன்‌”’ (மு.திருவ. 4] என்றும்‌, ““ஆல் மேல்‌ வளர்ந்தானைத் தான்‌ வணங்குமாறு – மேலை யுகத்துரைத்தான்‌’” (நா. திருவ, 17) என்றும்‌ சொல்லுகிற இவற்றாலே ருத்‌ரன்‌ தமஸ்ஸு தலை மண்டை யிட்டு பகவத்‌ விமுகனய்‌ ப்‌ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும்‌ ஸஞ்சரியாநின்றுகொண்டு, “தீ பாக்‌நிம்‌ தீ பதைலஞ்ச பஸ்ம சாஸ்திம்‌ ரஜஸ் வலாம்‌ ॥ ப்ரமாதாத்‌ ஸ்பர்ஸநாத்‌, விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஸேத்‌’” என்று தர்ஸந-ஸ்பர்ஸந-அநர்ஹங்களான பஸ்மாஸ்திகளைத் தரித்து வ்யாக்‌ர சர்மவஸநனாய்‌, நதீ சந்த்‌ரர்களை ஜடையிலே தரித்து, ஸாபோபஹதனாய்‌, க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்‌ விஷத்தை தரித்து, சக்ர ப்‌ரமம்‌ போலே ப்‌ரமிக்கிறவன்‌,
    அதுக்கு மேலே ஸத்த்வம்‌ தலை யெடுத்து, ஸத்த்வம்‌ விஷ்ணு ப்ரகாஸகமாகையாலே, அகடிதகடநா ஸாமர்த்‌யத்தை யுடைய ஸர்வேஸ்வரனே உபாஸ்யனென்று தான்‌ அவனை உபாஸிக்கும்‌ ப்ரகாரத்தை உபதேஸிக்கக் கேட்டு ஸத்த்வஸ்தராய்‌, ருஷித்வத்தால்‌ ஸாஜாத்யத்தை யுடையரான புஸஸ்த்ய ப்‌ருகு. மார்க்கண்டேய-வாம தேவாதிகளுடைய ப்ரஸாத,ம்‌ ஆர்ஷங்களான புராணேதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஸரனோடே ருஷி ஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர்‌ என்றது.

    56-பரம ஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும்‌ நிறை ஞானத்தயனாம்‌ சிவனாம்‌ திருமாலருள் கொண்டு இவர்‌ பாடினார்‌.
    இனி (பரம ஸத்த்வம்‌) என்று தொடங்கி – “பரம ஸத்த்வஸமாஸ்ரய: கஸ் (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ் தமஸ்ஸூக்கு ஆஸ்ரயமன்றிக்கே பரம ஸத்வ ஸ்மாஸ்ரயனாய்‌, அவர்களைப் போலே தோற்றிற்றுச்‌ சொல்லுகை யன்றிக்கே “நெறி யுள்ளி யுரைத்த ” (திருவா. 1 – 3 – 8) என்கிறபடியே இவன்‌ சொல்லிற்றொன்று வேதர்த்தமாயிருக்கச்‌ செய்தேயும்‌, இச் சேதநர் பக்கல்‌ க்ருபாதிஸயத்தாலே விசாரித்துச்‌ சொல்லலாம்படி ஆப்தனுமாய்‌, ““நிறை ஞானத்தொரு மூர்த்தி”” (திருவா. 4 – 9 – 6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தை யுமுடையனாய்‌, *’அயனாய்‌ சிவனானாய்‌ திருமாலாலருளப்பட்ட சடகோபன்‌”’ (திருவா. 8 – 8- 11) என்கிறபடியே ப்‌ரஹ்ம ருத்‌ராதி களுக்கும்‌ அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப் போலே ஸ்ரீயப் பதியாய்‌ அஸாதாரண விக்‌ரஹ யுக்தனான ஈஸ்வரனுடைய க்ருபை இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார் –

    57–கருவுள்‌ வேறலாமை அரன்‌ அயன்‌ எனச் செய்யுமவை போலே மூவுருவாம்‌ முதல்வன்‌ துப்பரவாலே பரம கவிகளால்‌ பாடுவியாது நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத் தன்னாக்கி என்‌ நா முதல்‌ வந்து புகுந்து தப்புதலறத்‌ தன்னை வைகுந்தனாகத்‌ தன்‌ சொல்லால்‌ தானே துதித்து மலக்கு நாவியல்‌ மொய்ய சொல்லால்‌ சொல்ல வல்லேனென்று நானும்‌ சொல்லி நாடும்‌ கையெடுக்கும்படி என்‌ சொல்லால்‌ யான் சொன்ன இன் கவி யென்பித்தா னென்றாரிறே.
    அவர்களுடைய ப்ரஸாதம்‌ ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம்‌ பரமாண ப்ரஸித்‌தமா யிருந்தது. இவருடைய பரபந்தத்துக்கு பகவத் ப்ரஸாதம்‌ மூலமென்னுமிடம்‌ அறிந்தபடி என்‌ என்னில்‌, அவர் தம்முடைய வசநங்கள்‌ ப்ரமாணமென்கிறார்‌ (கருவுள்‌ வேறலாமை என்றுதொடங்கி).“ஸ்ருஷ்டி ஸ்தித் யந்தகரணீம்‌ ப்‌ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்‌ | ஸ ஸம்ஜ்ஞாம்‌ யாதி பகவாந்‌ ஏக ஏவ ஜநார்த்தநா ”” (வி.பு.1 – 2) என்றும்‌, “ஸ்ருஷ்டிம்‌ தத? கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே”’, “கல்பாந்தே ருத்‌ரரூபீ யோ க்ரஸதே ஸகலம்‌ ஜகத்‌ ! தமாத்‌யம்‌ புருஷம்‌ விஷ்ணும்‌ ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்‌”’, “’விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ । தஸ்மாத்‌ தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்‌ ஸவிஷேஹோ மஹேஸ்வர?” (பார. கர்ண. 29) என்றும்‌, ”திசைமுகன்‌ கருவுள்‌ வீற்றிருந்து படைத்திட்ட கருமங்‌களும்‌’” (திருவா. 5 – 10 – 8) என்றும்‌, ‘“வெள்ள நீர்ச் சடையானும்‌ நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்‌”” (திருவா. 5 – 10 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்‌ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாமியாய்‌ ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணா நிற்கச் செய்தேயும்‌ ‘அரனயனென உலகழித்தமைத்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 8) என்கிறபடியே ப்‌ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்‌; வேதங்களை உபதேஸித்தான்‌; ருத்ரன்‌ ஜகத்தை ஸம்ஹரித்தான்‌; த்ரிபுரங்களை தஹித்தான்‌” என்று லோகத்தார்‌ சொல்லும்படி செய்தாப் போலே ““மூவுருவாம்‌ மூதல்வன்‌” (திருவா. 7 – 9- 2) என்கிறபடியே ப்‌ரஹ்மாதிகளுக்குத்‌ தானே காரணமானாப் போலே தனக்குத் தானே அடியாயிருக்கிறவன்‌,-*திறத்துக்கே துப்பரவாம்‌”‘ (திருவா. 7 – 9 – 9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொரு கார்யம்‌ கொள்ள நினைத்தான்‌, அத்தைக் கொண்டே அக் கார்யம்‌ கொள்ள வல்ல ஸாமர்த்‌யத்தை உடையனாகையாலே, தன்னைக் கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால்‌ ‘“இன் கவிபாடும்‌ பரம கவிகளால்‌ தன் கவி தான்‌ தன்னைப்‌ பாடுவியாது” ‘ (திருவா. 7 – 9 – 6) என்கிறபடியே வ்யாஸ-பராஸர-வால்மீகிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌, முதலாழ்வார்களைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌ செய்யாதே. (நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத்‌ தன்னாக்கி) “நேர் பட யான் சொல்லும்‌ நீர்மையிலாமையில்‌”” (திருவா. 7 – 9 – 5) என்கிறபடியே தன்னைக் கவி பாடுகைக்குத்‌ தகுதியான ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே இருக்க, “என்னைத்‌ தன்னாக்கி”” (திருவா, 7 – 9 – 1) என்கிறபடியே என்னைத்‌ தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்‌; என்னைத்‌ தன்னோடொத்த ஜஞாந சக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, “என்‌ நா முதல்‌ வந்து புகுத்து’” (திருவா. 7 – 9 – 3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித்‌ தான்‌ தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்‌ரத்திலே வந்து புகுந்திருந்து–தப்புதலின்றித் தனைக் கவி தான்‌ சொல்லி?” (திருவா. 7 – 9 – 4) என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்ஸத்தால்‌ வந்த தோஷம்‌ தட்டாத படி பண்ணி, *’தன்னை வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி’‘ (திருவா, 7 – 9- 7) என்கிறபடியே நான்‌ கவி பாடின பின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும்‌ அவ்‌ விபூதியில்‌ ஐஸ்வர்யம்‌ தான்‌ பெற்றானாகவும்‌ நினைத்து, *‘தன் சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த மாயன்‌” (திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே சொல்லும்‌ தன்னதாய்‌, சொன்னானும்‌ தானாய்‌, சொல்லிற்றும்‌ தன்னையாய்‌, தன்னைத் தானே துதித்து” (திருவா. 10 – 7- 2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய்‌ நின்று தன்னைத் தானே ஸ்துதியா நிற்கச்‌ செய்தேயும்‌–‘மலக்கு நா வுடையேற்கு”’ (திருவா. 6 – 4- 9) என்றும்‌,“நாவியலாலிசை மாலைகளேத்தி”’ (திருவா. 4 – 5 – 4) என்றும்‌, ‘மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி”” (திருவா. 4 – 5 2) எனறும்‌, ‘‘வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு”” (திருவா. 4 – 5 – 9) என்றும்‌ இப்படி நானும்‌ சொல்லி, *’சடகோபன் சொல்‌”” என்றவாறே நாடும்‌ அஞ்ஜலி பண்ணும்‌ படி பண்ணி, *“என்சொல்லால்‌ யான்‌ சொன்ன இன் கவி என்பித்து”’ (திருவா. 7- 9- 2) என்று – சொல்‌ என்னதாகவும்‌, சொன்னேன்‌ நானாகவும்‌, அது தான்‌ எனக்கு இனிதாகவும்‌ சொல்லுவித்தான்‌ என்கிறாரிறே. ஆகையால்‌ இவருடைய உக்திகளால்‌ ஸர்வேஸ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார்‌ என்னுமிடம்‌ ஸித்‌தம்

    58-தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய்‌ மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே உள் கலங்கிச்‌ சோகித்து, மூவாறு மாஸம்‌ மோஹித்து, வருந்தி, ஏங்கித்‌ தாழ்ந்த சொற்களாலே நூற்கிற விவர்‌.
    இதுக்குக் கீழ்‌ ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ வக்த்ரு வைலக்ஷண்‌யம்‌ சொல்லுகிறது (தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி). “ஹஸிதம்‌ பாஷிதஞ்‌சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம்‌ | தத் ஸர்வம்‌ தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி?” (ரா. பாடி – 4) என்கிறபடியே தந்தாமுடைய தபோ பலத்தாலே லப்‌தமான ஜ்ஞாநத்தாலே “கண்டும்‌ தெளிந்தும்‌’” (திருவா. 7- 5- 7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்டராய்‌, மேலே மேலே ஸப்‌தங்களைத்‌ தொடுக்கும்‌ ருஷிகளைப் போலன்றே அருளின ப,க்தி ரூபமான ஜ்ஞாநமெல்லாம்‌ அடி மண்டியோடே கலங்கி யதா மநோரதம்‌ பகவதநுபவம்‌ பண்ணப் பெறாமையாலே ஸோகித்து, “’தாம்நா சைவோதரே பத்‌த்‌வா ப்ரத்யபத்‌ நாதுலூகலே யதி ஸக்நோஷி கச்ச த்வம்‌ அதி சஞ்சல சேஷ்டித” என்றும்‌, “‘உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்‌’” (திருவா, 1 – 3 1) என்றும்‌, “போனாய்‌ மா மருதின்‌ நடுவே ” (திருவா. 5 – 1 – 2) என்றும்‌, ““பிறந்தவாறும்‌ வளர்ந்தவாறும்‌”’ (திருவா. 8 – 10 – 1) என்றும்‌, “ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வ ஸக்தியா யிருக்கச்‌ செய்தே இப்படி ஓரபலை கையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஸ்ரித வ்யாமோஹந்‌தான்‌!’ என்கிற ஆஸ்ரித வ்யாமோஹாநுஸந்தாநமும்‌,
    இவர்‌ பக்தி பாரவஸ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம்‌ பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும்‌ நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, உலகங்கட்கெல்லாம்‌ ஒருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில்‌ செய்வதென்‌?” என்கிற ப்ரேமாதிஸயமும்‌, ‘ஜநந ஹேதுவான கர்ம ஸ்பர்ஸ மில்லாத வஸ்து “’ததஸ் ச த்‌வாதஸே மாஸே”? (ரா.படா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டு மாஸம்‌ கர்ப்பவாஸம் பண்ணி ஸத்ரு க்‌ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!” என்றும்‌, ஓரொன்றில்‌ மூவாறு மாஸம்‌ மோஹித்து, ““வருந்தி நன்‌ வாசக மாலை கொண்டு” (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல்‌ எடுக்கும் போது ஒரு மலை எடுத்தாப் போலே வருந்தி, (ஏங்கி) “என்றென்றேங்கி அழுதக்கால்‌”” (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன் திருநாமங்‌களைச்‌ சொல்லப் புக்கு பல ஹாநியாலே நடுவு நடுவே ஏங்குவது இளைப்பதாய்‌. (தாழ்ந்த) “அங்கே தாழ்ந்த சொற்களால்‌”” (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப் புக்குச்‌ சொல்ல மாட்டாதே தரைப்பட்டு கத்‌கத ஸ்வரத்தோடே ““வண்டமிழ் நோற்க நோற்றேன்‌”” (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிற விவர்‌ என்கிறார் –

    59-ஸ்வாத்‌,யாய யோக,ங்களைக்‌ கற்றும்‌ தெளிந்தும்‌ கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்‌ இன்றும்‌ ஆஸா பாஸ பத்‌தர்‌.
    இனி மேல்‌ இந்த ருஷிகளிற் காட்டில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது (ஸ்வாத்‌யாய யோகங்களைக்‌ கற்றும்‌ தெளிந்தும்‌ என்று தொடங்கி). வேதங்களைக்‌ கற்றும்‌ அதில்‌ அர்த்தத்தைத்‌ தெளிந்தும்‌ யம நியமாத்‌,யஷ்‌டாங்க, யோகத்தாலேயும்‌ அவனைக் கண்ட மைமைப்பாலே – ஸ்வ ப,ஹு பலாரா்ஜிதமான ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே தாங்கள்‌ காண்கிறதாகையாலே மெய்ம்மை யற்றிருக்கும்‌; அவிஸத மாயுமிருக்கும்‌. அத்தாலே ““ஓதி யுணர்ந்தவர்‌ முன்னா” (திருவா. 3 – 5- 5) என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்யோபாதேயங்களை உணரந்திருக்கிற ருஷிகள்‌ இன்றும்‌ “ஆஸா பாஸ ஸதைர் பத்‌தா காம க்ரோத,பராயணா ”” என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸங்க பாஸ பத்‌தர்‌. இவர்க்கோ வென்னில்‌ 2- (அவன்‌ வழங்கும்‌ திவ்ய சக்ஷுஸ்ஸாலே) “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவா. 1 – 9 – 9) என்றும்‌, ““திவ்யம்‌ ததாமி தே சஷு பஸ்ய மே யோக,மைஸ்வரம்‌”‘ (கீதை 11 – 8) என்றும்‌ சொல்லுகிற படியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே தத்தமான திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும்‌ காண்கிலான்‌ கண்ணனடிக்‌ கமலந் தன்னை அயன்‌”” (மூ.திருவ. 56) என்றும்‌, ““கார் செறிந்த கண்டத்தான்‌ எண் கண்ணான்‌ காணான்‌’” (தா.திருவ. 73) என்றும்‌, “*நீறாடி தான்‌ காண மாட்டாத-தாரகல சேவடி ” (நா. திருவ. 27) என்றும்‌, *“கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென் றிவர்க்கும்‌ கட்கரிய கண்ணன்‌’‘ (திருவா. 7 – 7 – 11) என்றும்‌, ”விதி ஸிவ ஸநகாத்‌, யைர்த்‌ யாதுமத்யந்த தூ,ரம்‌”’ (ஸ்தோ.ர. 47) என்றும்‌ சொல்லுகிறபடியே தங்களைப் போரப் பொலிய நினைத்திருக்கும்‌ ப்‌ரஹ்ம ருத்‌ராதிகளுக்கும்‌ காண வரிதாயிருக்கிற ““அரும் பொருளாய்‌ நின்ற அரங்கனே?” (நா. திருவ. 60) என்கிற படியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய்‌ பரத்வ- ஸெளலப்‌ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை “கண்டேன்‌ கமல மலர்ப் பாதம்‌” (திருவா. 10 – 4- 9) என்கிறபடியே கண்ட போதே ““பொய்ந் நின்ற ஞானமும்‌ ” (திருவிரு. 1) என்று தொடங்கி, “’இனி யாமுறாமை”” (திருவிரு. 1) என்று – ‘அவித்‌யாதிகளை விடுவித்தருளவேணும்‌” என்று இவர் தாமே அவனைக் கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால்‌ விடுவிக்க அரிதான ‘“மற்ற வன் பாசங்கள்‌”’ (திருவா. 6 – 2 11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகல பாபயங்களும்‌ “பாசங்கள்‌ நீக்கி” (திருவா. 7 – 8 5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார்-

    60-அவர்களுக்குக்‌ காயோடென்னுமவையே தாரகாதிகள்‌; இவர்க்கு எல்லாம்‌ கண்ணனிறே.
    இனி மேல்‌ அவர்களுக்கும்‌ இவர்க்கும்‌ தாரகாதிகளும்‌ வேறுபட்டபடி சொல்லுகிறது. “காயோடு நீடு கனியுண்டு”” (திருமொழி 3 – 2 – 2) என்றும்‌, ““வீழ் கனியுமூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து ”” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே பல-மூலபத்ர-வாயு- தோயங்களே அவர்களுக்கு தாரக போஷக போக்‌யங்கள்‌. இவரையும்‌ “ருஷி” என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும்‌ ஒவ்வாதோ என்னில்‌, ஒவ்வாது. “உண்ணும்‌ சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையு மெல்லாம்‌ கண்ணன்‌” (திருவா. 6 – 7 – 1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனிறே இவர்க்கு.

    61-அழுநீர் துளும்பக்‌ கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌ திருமால்‌ என்று “எங்கே காண்கேன்‌!* என்னுமிவரலமாப்பு அவர்களுக்கு புத்ர வியோகத்திலே.
    ஆகில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசையற்ற தென்றும்‌, அவர்களுக்கு நசையற்ற தில்லை என்றும்‌ சொல்லிற்றே, அதறிந்தபடி என்‌ என்னில்‌, அத்தைச் சொல்லுகிறது,-“அழுநீர் துளும்ப அலமருகின்றன (திருவிரு. 2) என்றும்‌, ‘‘கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌” ்‌ (திருவா. 2 -1- 4) என்றுதொடங்கி, * ‘சிந்தை கலங்கித் திருமால்‌ என்றழைப்பன்‌ (திருவா. 9 – 8 – 10) என்றும்‌, ”எங்கே காண்கேன்‌ ஈன் துழாயம்மான்‌ தனனை ” (திருவா, 8-5-11) என்றும்‌, “‘உன்னைக் காண்பான்‌ நானலைப்பாய்‌”” (திருவா, 5 – 8 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் விஸ்லேஷ வ்யஸநத்தாலே கண்ணும்‌ கண்ணீருமாய்‌ அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஸத்தோடு வாசியற, எங்கும்‌ தேடி ‘ஸ்ரீயப் பதியே!’ என்று கூப்பிட்டுப் படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ர வியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஸக்தி ஸூகாதிகளாகிற புத்ர வியோகத்திலே காணலாம் –

    62-பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்‌.
    பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்களிருவர்க்கும்‌ நினைவு ஒக்குமோ என்னில்‌, அவற்றிலுண்டான வாசி பேச்சிலே தெரியுமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ““பேஷஜம்‌ பகவத் ப்ராப்தி?”‘(வி. பு. 6 – 5 – 59) என்று பகவத் ப்ராப்தி பலமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ கர்ம ஜ்ஞாந பத்திகள்‌ என்றும்‌, இந்த்‌ராதி, தேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ஈஸ்வரன்‌ உபாஸ்யனா யிருக்கு மென்றுமிறே அவர்கள்‌ சொல்லுவது. இவரோ வென்றால்‌ ““தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே”’ (திருவா. 2- 9-4) என்றும்‌, *“வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம்‌”’ (திருவா. 3 – 3- 1) என்கிற கைங்கர்யம்‌ புருஷார்த்தமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு”’ (திருவா. 5 – 19 – 11) என்றும்‌, *’அடிக் கீழமர்ந்து புகுந்தேன்‌” (திரூவா. 6 – 10 – 10) என்றும்‌ சொல்லுகிற ப்ரபத்தி என்றும்‌, தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ (திருவா. 4 – 6 – 10) என்றுமிறே இவரருளிச் செய்வது –

    63-ராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி கங்கா காங்கேய ஸம்பவாத்‌ய ஸத் கீர்த்தநம்‌ பண்ணின எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ணாமல்‌ ““திருமாலவன் கவி’” என்ற வாயோலைப் படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரிய சொல்‌ வாய்த்தவிது – வேதாதிகளில்‌ பெளருஷ-மாநவ-கீ,தா- வைஷ்ணவங்கள்-போலே அருளிச் செயலில்‌ ஸாரம்‌.
    ஆக, இதுக்கு கீழ்‌ வக்த்ரு வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று – இனி மேல்‌ ப்ரபந்த,வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்றுகொண்டு இதினுடைய ஸார தமத்வம்‌ சொல்லுகிறார்‌ (ராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி). “காவ்யம்‌ ராமாயணம்‌ கருத்ஸ்நமீத்‌ருஸை கரவாண்யஹம்‌”‘ (ராபா. 2 – 42), “நமோ பகவதேதஸ்மை வயாஸாயாமித தேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்‌,வஹ்யாமி நாராயண கத மிமாம்‌” (ப.ர.ஆதி;) என்றும்‌ சொல்லுகிறபடியே இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும்‌, ஸுப்‌ரஹ்மண்ய கதையும்‌, புஷ்பக வர்ணநமூமாய்‌, ஸ்ரீமஹாபாரதத்தில்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடையவும்‌ ஸ்ரீபீஷ்மருடையவும்‌ உத்பத்தி முதலான பூசல் பட்டோலையாய்‌, *அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம்‌” (ஹரிவம்பே) என்கிறபடியே அஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாயானது “வாசம்‌ சவ்ரிகதா லாபகங்கயைவ புநீமஹே”’ என்று ஸூத்‌,தி, பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. “ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி”’ (வி.த,ர்மே 1) என்றும்‌, “வாயவனை யல்லது வாழ்த்தாது”” (மு.திரு11) என்றும்‌ சொல்லுகிற இவர் நாக்குக்கு பகவத்‌ வ்யதிரிக்தமான வர்ணநம்‌ உச்சிஷ்டமிறே.
    இவருடைய ப்ரபந்தத்தில்‌ அப்படி எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ண வேண்டாதே திருமாலவன் கவி யாது கற்றேன்‌’‘( திருவிரு. 48) என்று வாயோலை யிட்டாப் போலே மாற்றங்களாய்ந்து கொண்டு”’ (திருவா. 6 – 8- 11) என்கிறபடியே எல்லாச்‌ சொற்களும்‌ புறம்பு அந்ய பரங்களாயிராதே ஸர்வமும்‌ *“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி’* (திருவா. 4 – 5 – 6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய்‌ “*வாய்த்த வாயிரத்துள்‌”’ (திருவா. 2 – 2 – 11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்‌; (வேதாதிகளில்‌) வேத ஸாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு “வேதேஷு பெளருஷம்‌ ஸூக்தம்‌ தர்மமமாஸ்த்ரேஷு மாநவம்‌ ! பாரதே பகவத்‌ கீதா புராணேஷு ச வைஷ்ணவம்‌”’ என்கிறபடியே வேதத்தில்‌ ஸாரமான ஸ்ரீபுருஷ ஸூக்தம் போலேயும்‌, தர்ம ஸாஸ்த்ரத்தில்‌ மநு ப்ரணீதமானது ஸாரமானாப் போலேயும்‌, ஸ்ரீமஹா பாரதத்தில்‌ கீதை ஸாரமானாப் போலவும்‌, புராணங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ ஸாரமானாப் போலவும்‌, அருளிச்செயலில் வைத்துக் கொண்டு இத் திருவாய்மொழி ப்ரபந்தத்தினுடைய ஸார தமத்வம்‌ சொல்லிற்று –

    64-குரு சிஷ்ய க்‌ரந்த,விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல்‌ செஞ் சொல்‌, செந்தமிழ்‌, இன் கவி, பரவி, அழைக்கும்‌ என்று அந்யோத்யம்‌ கொண்டாடிப் பேசிற்றே பேசும்‌ ஏக கண்டரில்‌ “என்னில்‌ மிகு” என்னுமிவருரை கொளின்மொழி கொண்டு ஸாஸ்த்ரார்த்தங்கள்‌ நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங் கொண்ட இதுக்குச்‌ சேராதவை மநு விபரீதங்கள் போலே.
    ஆனால்‌ இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ பரஸ்பர விருத்‌தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும்‌ ஏக கண்டராகையாலே எல்லாம்‌ ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய்‌, எல்லா ப்ரபந்தங்களும்‌ இவருடைய ப்ரபந்தத்தைப்‌ பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய்‌, இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம்‌ த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம்‌ சொல்லுகிறது ( குரு சிஷ்ய க்‌ரந்த விரோதம்‌ எனறு தொடங்கி). ருஷிகளில்‌ குரு ஸிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில்‌ குருவான வியாஸனுடைய க்ரந்தமான ப்‌ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஸிஷ்பனான ஜைமிநி க்‌ரந்தமான கர்ம ஸூத்ரத்தில்‌ நிரீஸ்வர வாதத்தால்‌ வந்த விரோத,த்தை வ்யாஸன் தானே “’ஜைமீிநி ராசார்யோ மந்யதே”’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும்‌ ஏக கண்டர்‌; இனி நிரீஸ்வர வாதம்‌ சொன்னது – வைதிக க்ரியைகளை நாஸ்திவாதம்‌ பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பர மதத்தை அதிஷ்டித்துச் சொன்னானென்று பரிஹரிக்க வேண்டிற்று அங்கு. இதுக்கு அப்படிப்‌ பரிஹரிக்க வேண்டாதபடி ”சென்சொற் கவிகாள்‌’” (திருவா. 10 – 7 – 1) என்றும்‌, ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்‌”” (திருமொழி 2 – 8 – 2) என்றும்‌, “இன்கவி பாடும்‌ பரம கவிகள்‌” (திருவா. 7 – 9 – 6] என்றும்‌, “பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌”’ (திருவா. 1 – 5- 11) என்றும்‌, ““பரவித்தொழும்‌ தொண்டர் தமக்குக்கதி?’ [திருமொழி 7 – 1 – 7) என்றும்‌, *’அழைப்பன்‌ திருமாலை ஆங்கவர்கள்‌ சொன்ன பிழைப்பில்‌ பெரும் பெயரே பேசி” (இ. திருவ. 50) என்றும்‌, * அரங்கவோ என்றழைக்‌கும்‌?” (பெரு. தி, 2 – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்யோந்யம்‌ கொண்டாடி “பேசிற்றே பேசலல்லால்‌“‘ (திருமாலை 22) என்று ஏக கண்டராகையாலே ஏகார்த்த ப்ரதிபாதகரான இவர்களில் வைத்துக் கொண்டு, ‘ “என்னில்‌ மிகு புகழார்‌ யாவரே?” (பெ. திருவ. 4) என்கிறபடியே தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய “உரை கொளின்மொழி’” (திருவா. 6 – 5 – 9) என்கிறபடியே “அது அது’ என்று வாய்‌ புலற்றும் படியாகப்‌ பேச்சுக்கு அவிஷயமாய்‌-மாற்று முறையு மற்றிருப்பதாய்‌, ஸ்ரீராமாயணத்திலுங் காட்டில்‌ இனிமையை உடைத்தாயிருக்கிற இவருடைய உக்திகளைக் கொணடு தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதி,க்கிற வேதாந்த ஸாஸ்தரங்களில்‌ ஸம்ஸயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே “சொல்‌ வலங்கொண்ட” (திருவா. 53. 9. 11) என்கிறபடியே அர்த்த ப்ரதிபாதந ஸாமர்த்‌யத்தை உடைத்தான இப்‌ ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஸமாஸ்த்ரங்கள்‌, அவை, **மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஸஸ்யதே” என்று மநு விபரீதமான ஸ்ம்ருதிகளைப் போலே கழிக்கப்படுகிறது-

    65- பாஷ்யகாரர்‌ இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌.-ஆகையாலே பாஷ்யகாரர்‌ இப் ப்ரபந்தங் கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌” என்கிறார்

    66-அதுக்கு மூலம்‌ ““விதயஸ்ச’” என்கிற பரமாசார்ய வசநம்‌.
    வேதாந்த ஸூத்ரங்களைக் கொண்டு இதிலர்த்தங்களைக் கடிப்பியாதே இப் ப்ரபந்தத்தைக்‌ கொண்டு வேதாந்த ஸூத்ரங்களை கடிப்பிப்பானென்‌ என்னில்‌, அதுக்கடி “விதயஸ்ச?” (ஸ்தோ. ர. 20) என்கிற பரமாசார்ய வசநமென்கிறார்‌. *“வைதிகா: வித யஸ்ச த்வதீய கம்பீர மநோநு ஸாரிண?”” என்று கொண்டு ‘இத,ம்‌ குர்யாத்‌ இதம்‌ ந குர்யாத்‌”, “விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத”” (ப்‌,ரூ. 6 – 4 – 21), “த்‌யாயத,”‘ (மூ. 2- 2- 6), “‘உபாஸீத” (கா. 1 – 1 – 1) என்கிற வைதிக ஸாஸ்த்ரங்களானவை ஐஸ்வர்ய கைவல்யங்களால்‌ கடக்க ஓண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மஸ்ஸைப் பின் செல்லுமென்று கொண்டு பரமாசார்யரான ஆளவந்தார்‌ அருளிச் செய்கையாலே –

    67-ஆப்திக்கு இவர்‌ “சுருதி, மார்க்கண்டேயன்‌, பார்த்தன்‌” என்கிற இவை வ்யாஸ மநு ப்‌,ரஹ்மவாதிகளை வேதம்‌ சொல்லுமாப் போலே.
    ஆனால்‌ பாஷ்யகாரருட்பட ப்‌ரஹ்ம ஸூத்ரங்களில்‌ ஸந்தேஹார்த்தங்களையும்‌ இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியை யுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர்‌ வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென்‌ என்னில்‌; வேதந் தான்‌ ஆப்ததமமா யிருக்கச்‌ செய்தேயும்‌ ஆப்திக்கு ”ஸஹோவாச வ்யாஸ? பாராமர்ய?” (யஜு. அரு.), ‘“யத்‌ வை கிஞ்ச மநுரவதத்‌ தத்‌ பேஷஜம்‌”” (யஜு. 2 – 2 – 10) என்றும்‌, ““ப்‌ரஹ்மவாதி நோ வதந்தி!” (யஜு. 1 – 7 – 1) என்றுமெடுத்தாப் போலே இவரும்‌, “உளன்‌ சுடர் மிகு சுருதியுள்‌’* (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, ““மார்க்கண்டேயனும்‌ கரியே”’ (திருவா. 5 – 2 7) என்றும்‌, ““பார்த்தன்‌ தெளிந்தொழிந்த”’ (திருவா. 2 – 8 – 6) என்றும்‌ ஆப்த யதிஸயத்‌துக்காக எடுத்தார்‌ என்கிறார்-

    68-பாரத கீதைகளின்‌ வேதோபநிஷத்த்வம் போலே இதுவும்‌ வ்யாக்‌யை யானாலும்‌ வேத ரஹஸ்யமாம்‌.
    கீழே இதுக்கு வேத ரஹஸ்யத்வம்‌ சொல்லிற்று; இப்படி யிருக்க இத்தை கரந்தஸ்தமாக்கி வ்யாக்‌யாநம்‌ பண்ணப்படா நின்றது (இது உப ப்ரும்ஹண ஸமமானால்‌ வேத வ்யாக்‌யாநமாம்‌ – பா] அப்போது வேதத்வத்துக்கும்‌ ரஹஸ்யத்வத்துக்கும்‌ கொத்தை வாராதோ என்னில்‌, ப்ரஸித்‌த,-லிகித-படித- பாடங்களான மஹா பாரதத்துக்கும்‌ ஸ்ரீகீதைக்கும்‌ ‘“வேதாநத்‌யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்‌”’ (வி.பு) என்றும்‌, “பகவத்‌ கீதாஸு உபநிஷத்ஸு’”'(கீ. 1) என்றும்‌ சொல்லுகிறபடியே இவை யிரண்‌டுக்கும்‌ வேதத்வ-உபநிஷத்த்வங்கள்‌ உண்டானாப் போலே இதுவும்‌ விகித-படிதங்‌களாய்ப்‌ போந்ததே யாகிலும்‌ வேத,த்வமும்‌ ரஹஸ்யத்வமும்‌ உண்டாம் -என்கிறார் –

    69-உதாத்தாதி -பத-க்ரம-ஜடா-வாக்ய-பஞ்சாதி-பாத-வ்ருத்த ப்ரஸ்ந -காண்ட,-அஷ்டக-அத்‌யாய- அம்ஸ -பர்வாத்‌ யலங்காரங்கள்‌ போலே, எழுத்து, அசை, சீர்‌, பந்தம்‌, அடி, தொடை, நிரைநிரை, ஒசை, தளை, இனம்‌, யாப்பு, பா, துறை, பண்‌, இசை, தாளம்‌, பத்து, நூறு, ஆயிரம்‌ முதலான செய் கோலம்‌ இதுக்குமுண்டு.
    ஆக, இப்ப்ரபந்த,ம்‌ வேதத்தோடும்‌, உப ப்‌ரும்ஹணத்தோடும்‌ துல்யமென்றீர்‌, அவை யிரண்டுக்குமுன்ள உதாத்தாதிகளான வேத லக்ஷணங்களும்‌, அத்யாய அம்ச பர்வாதிகளான உப ப்‌ரும்ஹண லக்ஷணங்களும்‌ இதுக்குமுண்டோ என்னில்‌, த்‌ரமிடோபநிஷத்‌ விஹிதங்களாய்‌, “’செய்கோலத் தாயிரம்‌” (திருவா. 4 – 1 – 11) என்கிறபடியே ‘எழுத்து, அசை, சீர்‌’ என்று இத்யாதிகளான அலங்காரங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார்‌ (உதாத்தாதி, என்று தொடங்கி] பாஷாநுகுணமாயும்‌, வேதா அநு குணமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லஷணங்களை அருளிச் செய்தது.

    70-அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம்‌ வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில்‌ ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய்‌ ஆக மூர்த்தியில்‌ பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்‌ராவிடமாகச்‌ செய்தாரென்னும்‌.
    ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்‌ (அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே என்று தொடங்கி). (அதவா) என்றது – கீழ்ச் சொன்ன யோஜனை யொழிய யோஜநாந்தர மென்கை. “வேத வேத்‌யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே ! வேதா ப்ராசேத ஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா”” (ரா. பா.) என்கிறபடியே வேத வேத்‌யனான பரம புருஷன்‌ தஸரத புத்ரனாய்‌ வந்தவதரித்த விடத்தில்‌ அபெள்ருஷேயமான வேதமும்‌ ஸ்ரீவால்மீகி பகவான் பக்கலிலே ஸ்ரீராமாயணமாய்‌ வந்தவதரித்த தென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்‌) “’முதுவேத முதல்வனுக்கு?” (திருவா. 1 – 6 – 2) என்கிற ப்ரத்வ ப்ரதிபாதகமான பழைய வேதம்‌. இத்தால்‌ நித்ய நிர்தோஷமாய்‌, அபெளருஷேயமாய்‌ ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமான வேதம்‌ என்றபடி.

    அந்த பரத்வம் தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில்‌ அந்த வேதந்தானே “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்‌”” (பர. மோ.) என்றும்‌, ““ஓதினாய்‌ நீதி”‘ (இ, திருவ.48) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனருளிச் செய்த ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமாய்‌ வந்தவதரித்தும்‌,
    அந்தர்யாமியான அவஸ்தையில்‌ “கேட்ட மனுவும்‌” (நா.திருவ. 76) என்கிறபடியே ஆசார வ்யவஹார ப்ராயஸ் சித்தங்களுக்கு ப்ரகாஸ கமான மந்வாதி ஸ்ம்ருதிகளாயும்‌,
    ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களில்‌ வந்தவாறே ”பாட்டும்‌ முறையும்‌ படு கதையும்‌‘” (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள் தான்‌ இதிஹாஸாதிகளானாப்‌ போலேயும்‌,
    ”ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌ என்னவுமாம்‌ என்கிறார்‌. அந்த வேதம்‌ முதலானவை எல்லாத்திலும்‌ எல்லாம்‌ சொல்லிற்றே யாகிலும்‌ ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –

    71-மண்ணாடின ஸஹ்ய ஜலம்‌ தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்‌ அந்தஸ்தத்தைக் காட்டுமாப் போலே அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.

    ஆனால்‌ இப்படி பரத்வ ப்ரதிபாதகமான வேதம்‌ அவஸ்தாந்தர பாக்காயுள்ள வளவில்‌ ப்ரமேய ப்ரகாஸகமாக வற்றோ என்ன, இவ் வவஸ்தையிலே யதாவாக ப்ரகஸிக்கும்‌ என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார்‌ (மண்ணாடின ஸஹ்ய ஜலம்‌ என்று தொடங்கி), மண்ணாடின ஸஹ்ய ஜலமாவது – ‘*தோதவத்தித் தூய் மறையோர்‌ துறை படிய”’ (பெரியா. 4 – 8 – 1) என்றும்‌, “பொருநல்‌ சங்கணி துறை ”” (திருவா. 10 – 3 – 11) என்றும்‌ சொல்லுகிற துறைகளிலே ‘ ‘துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்‌’‘ (திருவா. 7 – 211) என்றும்‌, “தெண்ணீர்ப் பொன்னி” (பெருமா. தி. 1 – 1 ) என்றும்‌ சொல்லுகிறபடியே தெளிந்த நீராய்த்‌ தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஸிப்பிக்குமாப்‌ போலே, அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி – ”இதிஹாஸ புராணாப்‌யாம்‌ வேதம்‌ ஸமுபப்‌ரும்ஹயேத்‌ பிபேத் யல்ப ஸ்ருதாத்‌ வேத-மாமயம்‌ ப்ரதரிஷ்யதி” (பர. ஆதி.) என்கிறபடியே அல்ப ஸ்ருதராயிருக்கு மவர்கள்‌ ஒரு ஸ்ருதி வாக்யத்தைப் பிடித்து இதுக்குப் பொருள்‌ த்வைதமென்றும்‌, அத்‌வைதமென்றும்‌, த்‌வைதாத்‌வைதமென்றும்‌ இப்படி பஹு ப்ரகாரமாகக் கலக்க, கலங்கின ஸ்ருதியானது – (நன் ஞானத்துறை சேர்ந்து) ‘“ரமணீயம்‌ ப்ரஸந் நாம்பு, ஸந் மநுஷ்யமதோ யத (ரா. பரா. 2 – 5) என்றும்‌, ““காலை நன்‌ ஞானத்‌துறை”: (திருவிரு. 93) என்றும்‌ சொல்லுகிறபடியே ஞானத் துறையான இவ்வாழ்வார்‌ பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது) *’தெளிவுற்ற வரயிரம்‌ ” (திருவா, 7 – 5 – 11) என்கிறபடியே ப்ரஸந்ந கம்பீரமான ஆயிரம் பாட்டாய்‌, ““அறிவித்தேன் ஆழ்பொருளை ” (நா. திருவ. 1) என்கிறபடியே அகதமாய்‌ பரம ரஹஸ்யமான அர்த்த விஸேஷங்களை யெல்லாம்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிக்கும் என்கிறார் –

    72-மேகம்‌ பருகின ஸமுத்‌ராம்பு போலே நூற் கடல் சொல்‌ இவர்‌ வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.
    இனிமேல்‌ அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும்‌ இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம்‌ சொல்லுகிறது (மேகம்‌ பருகின என்று தொடங்கி) ஸமுத்‌ர ஜலம்‌ விரஸதையை யுடைத்தாய்‌ ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய்‌, புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யமன்றியிலே இருப்பதாய்‌, அபர்வணி ஸ்பர்ஸிக்கைக்குக்‌ கால நியதியையு முடைத்தாயிருக்கும்‌. அந்த ஸமுத்‌ர ஜலத்தை மேகமானது பாநம்‌ பண்ணி ஐகத்திலே வர்ஷிக்க அந்த மேக, ஸ்பர்ஸத்‌தாலே அதினுடைய விரஸ்தையும்‌, ஸ்பர்ஸ கால நியதமும்‌ போய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாமாப் போலே, பகவத் ஸ்வரூபாநுரூப குண விபூ,திகளை ப்ரதிபாதிக்கிற வேதம்‌ பகவத்‌ விபூதி பூ.தரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கை யாகிற விரஸதையை உடைத்தாய்‌, வேதாதிகாரிகளான த்ரை வர்ணிகர்க்கே அத்‌யேதவ்யமாகையாலே அதி க்ருதாதி காரமுமாய்‌ அத்‌யயந-அநத்‌யயந-கால நியதியையு முடைத்தா யிருக்கும்‌. ‘“நூற் கடல்‌’” (மூ. திருவ, 92) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஸாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஸேஷங்கள்‌ ‘‘இவள் வாயனகள்‌ திருந்தவே” (திருவா. 6 – 5- 7) என்கிறபடியே இவருடைய வாக் கதமாய்க் கொண்டு கட்டளைப் பட்டவாறே பகவத்‌ வ்யதிரிக்த ப்ரஸம்ஸா பரதையாகிற விரஸதையும் போய்‌ “அத்‌யேதவ்யம்‌ த்‌விஜ ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ । ஸ்த்ரீபிஸ் ஸூத்‌ராதி பிஸ்சைவ தேஷாம்‌ முக்தி: கரே ஸ்திதா” (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி காரமுமாய்‌ ஸர்வ காலாத்‌ யேதவ்யமுமா யிருக்கும்‌-

    73-ம்ருத்‌ கடம்‌ போலன்றே பொற்குடம்‌.
    ஸமுத்‌ர ஜலத்தையும் தத்கார்யமான மேகம்‌ பருகின ஜலத்தையும்‌ அதி க்ருதாதிகாரமான வேதத்துக்கும்‌ தத் கார்யமான திருவாய்மொழிக்கும்‌ த்‌ருஷ்டாத்தமாக்கினால்‌ காரணம்‌ போலே கார்யமும்‌ அதிக்ருதாதிகாரமா யிருக்குமோ என்னில்‌, அப்படியிராது–ஸர்வாதிகாரமாய்‌, ஸ்லாக்‌யமாய்‌,ஸ்ப்ருஹணீயமா யிருக்குமென்கிறார்‌ (ம்ருத்‌ கடம்‌ போலன்றே பொற்குடம்‌ என்று). ம்ருத்‌ கடமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும்‌ தொட வொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற் குடம்‌ பார்த்திவமா யிருக்கச் செய்தேயும்‌ எல்லார்க்கும்‌ ஸ்பர்ஸிக்கவுமாய, ஸ்லாக்‌யமுமாய்‌, ஸ்ப்ருஹணீய முமாயிருக்கும்‌. ஆகையாலே அதி க்ருதாதிகாரமான வேதந் தான்‌ திருவாய்மொழியான அவஸ்தையை பஜித்தாலும்‌ ஸர்வாதிகாரமுமாய்‌, ஸ்ப்ருஹணீயமுமா யிருக்குமென்கிறார்‌-

    74-பெரும் புறக் கடலும்‌, ஸ்ருதி ஸாக,ரமும்‌ அலைத்தாழ்ந்து ஓடுமிடங்களில்‌ அயோக்‌யர்க்குச்‌ சமைத்த மடுவும்‌, சாய் கரகமும்‌ மாந மேய சரமம்‌.
    ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும்‌ திருவாய் மொழியையும்‌ கீழ்‌ ‘“பரத்வபரமுது வேதம்‌” என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை “‘பெரும்புறக்‌ கடலும்‌” ““ஸ்ருதி ஸாகரமும்‌ என்று பராமர்ஸித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியும்‌ கீழ்ச் சொன்ன பரத்வாதிகளுக்கும்‌ வேதம்‌ முதலான ஸாஸ்த்ரங்களுக்கும்‌ அயோக்‌யரானார்க்கும்‌ அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும்‌ என்கிறார்‌.
    ( பெரும் புறக்கடலும்‌ ஸ்ருதி ஸாகரமும்‌) அபரிச்சேத்‌யமான ப்ரமாண ப்ரமேயங்கள்‌; அவை யாவன – பரத்வமும்‌ பரத்வ ப்ரதி பாதகமான வேதமும்‌-அவற்றுக்குடலானால்‌ அலையக் கடவதிறே -அலைகையாவது – பர வாஸுதேவர் பக்கல் நின்றும்‌ பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான வ்யூஹமூம்‌ தத் ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும்‌-(ஆழ்ந்து) “யமாத்மா ந வேத,” (ப்‌,௬. 5 – 7 – 22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும்‌, தத் பரமான மந்வாதி ஸ்ம்ருதிகளும்‌. (ஓடுமிடம்‌) ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களும்‌ தத் ப்ரகாஸகங்களான இதிஹாஸங்களும்‌;-இவை தேஸ -கால -இந்திரிய -விப்ரக்ருஷ்டங்களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்‌யரல்லாதவர்களுக்கு அப்படி தேஸ கால விப்ரகர்ஷமு மின்றிக்கே பெருகின ஆற்றில்‌ மடுப் போலே ஸர்வ ஸுலப,முமாய்‌, ருசி ஜநகமூமாய்‌, ஸ்ரமஹரமுமாய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாய்‌, ஸர்வாபாஸ்ரயமுமான அர்ச்சாவதாரமும்‌, வேதாதி களுக்கு யோக்‌யரா யிருக்கிறவர்களுக்கு சாய் கரகம் போலே ஸுகரமுமாய்‌, ஸர்வாதிகாரமுமான திருவாய் மொழியும்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரம மென்கிறார்‌. ஆக, இத்தால்‌ **பரத்வபரமுதுவேதம்‌’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –

    75-வீட்டின்ப-இன்பப் பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூுபண ஸமம்‌ இன்பமாரி யிலாராய்ச்சி,
    ஆக, ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்‌ (வீட்டின்பமென்று தொடங்கி). மேலெல்லாம்‌ இதில்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்‌தவத் கரித்து இவற்றோடொக்கும்‌ ப்ரமாதாக்களின்‌ ஜந்ம நிரூபணம்‌ என்கிறார்‌ (வீட்டின்பமித்யாதி,). ““கனிவார்‌ வீட்டின்பமே”’ (திருவா. 2 – 3 – 5) என்கிறபடியே அவன்‌ என்றால்‌ உள் கனிந்திருக்கிற வர்களுடைய க்‌ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும்‌ அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, ““அந்தமிழினின்பப் பாவினை”” (பெருமா.திரு, 1 – 4) என்றும்‌ சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய நிருபணத்தோடும்‌ பாஷா நிரூபணத்தோடும்‌ ஓக்கும்‌ என்றும்‌, ““அடியார்க்கின்பமாரி?? (திருவா. 4 – 5 – 10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத்‌ திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தாவஹமான பகவத்‌ குணங்களை வர்ஷிக்கும்‌ மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில்‌ ஆராய்ச்சியு மென்கிறார்‌. அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதம்‌ பஹு ப்ரமாண ஸித்‌தம்‌. அத்தோடே சேர்த்துச் சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷா நிரூபணம்‌ பண்ணலாகாதென்னுமிடம்‌ ஸித்‌தமாய்த்து. ““ஹரிகீர்த்திம்‌ விநைவாந் யத்‌ ப்‌ராஹ்மணேந நரோத்தம । பாஷா காநம்‌ ந காதவ்யம்‌ தஸ்மாத்‌ பாபம்‌ த்வயா க்ருதம்‌” (லைங்கே, ௨, 3 – 44) என்றிறே மநுவும்‌ சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென்‌ என்னில்‌; ““அர்ச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவே ஜாதி சிந்ததம்‌ | மாத்ரு யோநி பரீக்ஷா யாஸ் துல்ய மாஹுர் மநீஷிண?” (பாஞ்ச.) என்றும்‌, “யோ விஷ்ணோ? ப்ரதிமாகாரே லோஹ பாவம்‌ கரோதி வை । யோ குரெள மாநுஷம்‌ பாவம்‌ உபவ் நரக பாதிநெள”” (பகவச் சாஸ்த்ரே) என்றும்‌ சொல்லக் கடவதிறே–

    76-பேச்சுப் பார்க்கில்‌ கள்ளப் பொய்ந் தூல்களும்‌ க்‌ராஹ்யங்கள்‌; பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌.
    ஆகிலும்‌ திராவிட பாஷையாயிரா றின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்‌; (பேச்சுப் பார்க்கில்‌) பாஷா மாத்ரமே அங்கீகார-அநங்கீகார ஹேதுவாகில்‌, (கள்ளப்‌ பொய்ந் நூல்களும்‌ க்ராஹ்யங்கள்‌) ‘*வெள்ளியார் பிண்டியார்‌ போதியாரென்றிவர்‌ ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும்‌’” (திருமொழி 9 – 7- 9) என்றும்‌, “’பொய்ந்‌நூலை மெய்ந் நூல்‌’ (திருமொழி 3 – 5 – 2) என்றும்‌ சொல்லுகிற பாஹ்ய ஸாஸ்த்ரங்களும்‌ குத்‌ருஷ்டி ஸாஸ்த்ரங்களும்‌ அங்கீ கரிக்கப்படும்‌. அவற்றுக்கு அப்படி ஸிஷ்டாசார மில்லாமையாலும்‌, இத்தை ஸிஷ்டரானவர்கள்‌ பரிக்‌ரஹிக்கையாலும்‌ பாஷாவதி மாத்ரமே பரிக்‌,ராஹ்ய-அபரிக்‌ராஹ் யதா ஹேதுவாக ஒண்ணாது –
    ஆனாலும்‌ ப்ரபந்த கர்த்தா சதுர்த்த வர்ணாதிகாரி யாயிரா நின்றாரே? ப்ரபந்தமும்‌ ப்ரதிபாத்‌ய வஸ்துவும்‌ விலஷணமே யாகிலும்‌ கர்த்ரு மாந்த்‌யத்தாலே ப்ரபந்த மாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌) என்கிறார்‌. (பிறவி பார்க்கில்‌) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தை யிட்டுக்‌ கழிக்கப் பார்க்கில்‌, வலைச்சி வயிற்றிலே பிறந்த வ்யாஸன்‌ சொன்ன பஞ்சம வேதமான மஹா பாரதமும்‌, இடைச்சேரியிலே பிறந்த கருஷ்ணனருளிச் செய்த ஷ்ட்க த்ரயாத்மகமான ஸ்ரீகீதையும்‌ கழியுண்ணும் –

    77–கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வ ஜந்மம்‌.
    ஆக, இதுக்குக்‌ கீழ்‌ கருஷ்ண த்‌வைபாயநனான வ்யாஸனோடும்‌, க்ருஷ்ணனேடும்‌ உண்டான ஜந்ம ஸாதர்ம்யம்‌ சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்‌வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே’‘ என்று – இனி மேல்‌ வைதர்ம்யம்‌ சொல்லுகிறது, எங்ஙனே என்னில்‌; இடைச்சி வயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும்‌ வலைச்சி வயிற்றில்‌ பிறந்த கருஷ்ணாத்‌வைபாயநனுடையவும்‌ (உத்பத்தி போலன்றே, இவர்‌ திருவவதாரம்‌ இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும்‌ அவர்களுடைய ஜந்மத்தையும்‌ நிருபித்தால்‌ இத்தோடு அவை நேர் நில்லாது. ஆகையால்‌ இவர்க்கு அவர்கள்‌ ஸத்‌ருஸரல்லர்‌-

    78-பெற்றும்‌ பேறிழந்தும்‌ கன்னிகை யானவளும்‌ எல்லாம்‌ பெற்றாளாயும்‌, தத்துக் கொண்டாள்‌ என்பர் நின்றார்‌ என்னுமளவும்‌ நெடுங்‌ காலமும்‌ நங்கைமீர்‌ என்னுமிவர்க்கு நேரன்றே.
    இவர்களுடைய உத்பத்தி ப்ரகாரங்களையும்‌ ஸ்தலங்களையும்‌ விசாரித்தால்‌ அவையும்‌ வாசா மகோசரம்‌ என்கிறார்‌ மேல்‌ (பெற்றும்‌ பேறிழந்தும்‌ என்று தொடங்கி), “தேவகி பெற்ற” (பெரியா. 1 – 8 – 17) என்கிறபடியே ஸ்ரீதேவகிப் பிராட்டி க்ருஷ்ணனைப்‌ பெற்று வைத்து, ”திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌”’ (பெருமா.தி.7 – 5) என்கிறபடியே அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலளிறே. வ்யாஸனைப் பெற்ற அநந்தரம்‌ “புந கந்யா பவிஷ்யதி?” (பார ) என்று ஸ்ரீபராஸர பகவான்‌ சொல்ல மீண்டும்‌ கந்யகையான மத்ஸ்யகந்தியும்‌ அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலள்‌. (எல்லாம்‌ பெற்றாளாயும்‌) “எல்லாம்‌ தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’‘ (பெருமா.தி. 7 – 5) என்கிற யசோதையும்‌ க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம்‌ அநுபவிக்கப்‌ பெற்றாளே யாகிலும்‌, “’தத்துக் கொண்டாள் கொலோ”’ (பெரியா.2 – 1 7) என்றும்‌, “உன்னை என் மகனே என்பர்‌ நின்றார்‌” (பெரியா. 3 – 1 – 3) என்றும்‌ – தானும்‌ பிறரும்‌ ஸங்கிக்கும் படியாயிருக்கும்‌. இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே “நெடுங் காலம்‌ கண்ணன்‌ நீண் மலர்ப் பாதம்‌ பரவிப் பெற்ற”’ (திருவிரு. 37) என்றும்‌, “நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண் பெற்று நல்கினீர்‌” (திருவா. 4 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும்‌ சில பெண்களைப் பெற்று வளர்த்தி கோளல்லிகோளோ, பகவல் லாஞ்சநாதிகளை திவா ராத்ர விபாகமற வாய் புலற்றும்படியான என்‌ பெண் பிள்ளைக்கு ஸத்‌ருஸமுண்டோ என்கையாலே இவர்க்கும்‌ அவர்களுக்கும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லிற்று –

    79-மீந நவநீதங்கள்‌ கந்திக்குமிடமும்‌ வெறி கொள் துழாய்‌ கமழுமிடமூம்‌ தன்னிலொக்குமோ. *
    மத்ஸ்ய கந்தத்தையுடைய வ்யாஸன்‌ பிறந்த விடமும்‌ நவநீத கந்தியான க்ருஷ்ணன்‌ பிறந்தவிடமும்‌ – ‘“வெறி கொள் துழாய்‌ மலர் நாறும்‌ வினையுடை யாட்டியேன்‌ பெற்ற”’ (திருவா. 4 – 4 – 9) என்கிற பகவத் ஸம்பந்த கந்தியான் ஆழ்வார்‌ திருவவதரித்த இடத்துக்கு ஸத்‌ஸருமன்றே-

    80-ஆற்றில்‌ துறையில்‌ ஊரிலுள்ள வைஷம்யம்‌ வாசா மகேசரம்‌.
    வ்யாஸனுக்கு உத்பத்தி ஸ்தலமான அஸிஷ்ட பரிக்‌ரஹமுடைய கங்கா நதிக்கும்‌, அதில்‌ ஓடத் துறைக்கும்‌, அவ் விடத்தில்‌ வலைச் சேரிக்கும்‌, க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ண ஜல ப்ரவாஹமான யமுநா நதிக்கும்‌, காளிய விஷ தூஷிதமான அதில்‌ துறைக்கும்‌, “கறவைகள்‌ பின் சென்று ” என்கிறபடியே ‘பசுக்கள் தான்‌ ஸர்வஜ்ஞம்‌’ என்னும்படி அறிவு கேடரான இடையர்‌ வர்த்திக்கிற இடைச் சேரிக்கும்‌ ஆகிய இவற்றுக்கும்‌, முக்தா பல ப்ரஸவோந்முக ஸங்க ஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும்‌ ஸூத்‌த ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஸங்கங்கள் சேருகிற திருச் சங்கணித்‌ துறைக்கும்‌, “நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” (திருவிரு, 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்‌ படுமதாய்‌ ““சயப் புகழார்‌ பலர்‌ வாழும்‌ தடங் குருகூர்‌” (திருவா, 3 – 1 11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய்‌, பகவதநுப,வம்‌ பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர்‌ பலரும்‌ வர்த்திக்கிற திருக்குருகூர்க்கு முண்டான வைஷம்யம்‌ பேச்சுக்கு அவிஷயமா யிருக்கும்‌. ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்‌வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக் குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்ய, தர்ம்யங்கள்‌ சொல்லிற்று

    81-தேவத்வமும்‌ நிந்தை யானவனுக்கு ஒளி வரும்‌ ஜநிகள் போலே ப்‌ரஹ்ம ஜந்மமும்‌ இழுக்கென்பார்க்குப்‌ பண்டை நாளில்‌ பிறவி உண்ணாட்டுத் தேசிறே.
    இனி மேல்‌, இப்படி ஆழ்வார்‌ தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரே யாகிலும்‌, மிகவும்‌ தேஜஸ்ஸு உண்டாமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ஸர்வேஸ்வரன்‌ லோக ஸம்ரஷணார்த்தமாக அவதரித்த விடத்தில்‌ பரத்வ ஸங்கையும்‌ அஸஹ்யமாம்படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஸயித் திருக்குமாப் போலே பாகவதத்வ ரஹிதமான உத் க்ருஷ்ட ஜந்மமும்‌ அவத்‌யம்‌ என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால்‌ வருகிற அஹங்கார மின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில்‌ ஜந்மம்‌ நித்ய விபூதியிலும்‌ தேஜஸ் கரம்‌ என்கிறார்‌ (தேவத்வம்‌ என்று தொடங்கி).-(தே,வத்வமும்‌ நிந்தை யானவனுக்கு) ராவண வதாநந்தரம்‌ ப்‌ரஹ்மாதிகள்‌ “பவாந் நாராயணோ தேவ?” (ரா.யு. 120 – 13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய்‌, “ ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதராத்மஜம்‌”’ (ரா. யு. 120 – 11) என்றும்‌, கோவர்த்ந தோத்தரணாநந்தரம்‌. அந்த அதிமாதுஷ சேஷ்டிதங் கண்டு ஆச்சா்யப்பட்ட இடையர்‌ *““பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச ஐந்ம சாஸ்மாஸ்வ ஸோபநம் ॥ தேவோ வா தாநவோ வா த்வம்‌ யக்ஷோ கந்தர்வ ஏவ வா! (வி. பு. 5 – 13 – 7) என்று ஸங்கிக்க, “ஷணம்‌ பூத்வா த்வஸெள தூஷ்ணீம்‌ கிஞ்சித் ப்ரணய ரோஷவாத்‌” என்று அது அஸஹ்யமாய்‌, ”நாஹம்‌ தேவோ ந கந்தர் வோ ந யஷோ ந ச தாநவ ! அஹம்‌ வோ பாந், வோ ஜாத? நைதச்சிந்த்ய மதோந் யதா ‘” (வி. பு. 5 – 13 – 12) என்று இப்படி பரத்வ ஸங்கையும்‌, அஸஹ்யமாம்படி ஸீலாதிகனா யிருக்கிறவனுக்கு.
    (ஒளிவரும்‌ ஜநிகள்‌் போலே) ““ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந” என்றும்‌, “பல் பிறப்பாய்‌ ஒளி வரு முழு நலம்‌”’ (திருவா. 1 – பீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாண குணங்கள்‌ ஒனி பெற்று வரும்‌ அவதாரங்கள்‌ போலே.-(ப்‌ரஹ்ம ஜத்மமும்‌ இழுக்கென்பார்க்கு) ‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’” (ஸ்தோ. ர. 55) என்கிறபடியே அபாாகவத க்‌ருஹ்ங்களில்‌ ப்‌ரஹ்மாவாய்ப்‌ பிறக்கையும்‌ அவத்‌யமாம்படி பகவத்‌ தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு (பண்டை நாளில்‌ பிறவி) “பண்டை நாள்‌” (திருவா. 9 – 2 – 1) என்கிற பாட்டின் படியே லக்ஷ்மீ-தத்‌ வல்லபருடைய கடாக்ஷமடியாகக்‌ கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய்‌, தாஸ்ய விரோதி ஜந்மாதிகளால்‌ வரும்‌ அஹங்கார ரஹிதமான குலங்களில்‌ ஜந்மமும்‌.(உண்ணாட்டுத் தேசிறே) புற நாடான வீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகராலே நெருங்கி பகவானுக்கு போக விபூ,தியாகையாலே அந்தரங்கமா யிருக்கிற பரமபதத்தில்‌ தேஜஸ்ஸன்றோ என்கிறார்

    82-ஜநக-தஸரத,-வஸுதேவ-குலங்களுக்கு மூத்த பெண்ணும்‌, நடுவில்‌ பிள்ளையும்‌, கடைக் குட்டியும்‌ போலே இவரும்‌ பிறந்து புகழும்‌ ஆக்கமும்‌ ஆக்கி அஞ்சிறை யுமறுத்தார்
    இப்படிப்பட்ட இவருடைய அவதாரம்‌ ஜநக குல ஸுந்தரியான நாச்சிமார்‌ முதலானாரூடைய அவதாரம் போலே ஸர்வோபகாரகம்‌ என்கிறார்‌ (ஜநகேத்யாதி,) ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான நாச்சியார்‌ திருவவதரித்து. “ “ஸீதா பர்த்தாரமாஸாத்‌ய. ராமம்‌ தஸரதாத்மஜம்‌ | ஜநகாநாம்‌ குலே கீர்த்திம்‌ ஆஹரிஷ்யதி மே ஸுதா”'(ரா. பரா. 67 – 21) என்று தான்‌ பிறந்து ஜநக குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்‌,
    தஸரத குலத்துக்கு நடுவில்‌ பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான்‌ பிறந்து ‘விலலாப ஸப மத்‌யே ஜகர்ஹே ச புரோஹிதம்‌ ! ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார்ஹஸி”’ (ரா. ௮. 82 – 10) என்றும்‌, “‘ஜடிலம்‌ சீர வஸநம்‌ ப்ராஞ்ஜலிம்‌ பதிதம்‌ புவி?” (ரா. ஆ. 102 – 1) என்றும்‌, ““குடிக் கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மூத்தாரிருக்க இளையார்‌ முடிசூடக் கடவதன்று என்கிற குல மர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, ஜயேஷ்டரான பெருமாளுடைய விஸ்லேஷத்தில்‌ ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்‌,
    வஸாுதேவ குலத்துக்கு “‘மக்களறுவரைக்‌ கல்லிடை மோத இழந்தவள் தன்‌ வயிற்றில்‌ சிக்கென வந்து பிறந்து நின்றாய்‌” (பெரியா. தி. 5 – 3 – 1) என்று சொல்லுகிறபடியே கடைக் குட்டியான க்ருஷ்ணன்‌ பிறந்து ““தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ”‘ (திருமொழி 7 – 5 – 1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதா பிதாக்களுடைய கட்டை அறுத்தாப் போலேயும்‌,
    இவரும்‌ திருவவதரித்து ““மலி புகழ் வண் குருகூர்‌’‘ (திருவா. 4 – 2 – 11) என்றும்‌, “ஏற்கும்‌ பெரும்புகழ்‌ வண் குருகூர்‌‘” (திருவா. 3 – 9 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே தாம்‌ திருவவதரித்து அந்நகரிக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கி, “*குடிக்கிடந் தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாந வர்த்தகரான மாத்ரமே யன்றியிலே ப்ரேம வர்த்தகராயும்‌, ”அறுவர் தம்‌ பிறவி அஞ்சிறையே”’ (திருவா. 1 – 311) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்‌யாஸ முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச் சிறையையு மறுத்தார் –

    83–ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பாநுக்களுக்குப்‌ போகாத உள்‌ளிருள்‌ நீங்கி, சோஷியாத பிறவிக் கடல்‌ வற்றி, விகஸியாத போதில்‌ கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே.
    அவ்வளவே யன்றிக்கே அஜ்ஞாந அந்தகார நிரஸநாதிகளாலே ஆதித்ய ராம க்ருஷ்ணர்‌ களில்‌ வ்யாவ்ருத்தர்‌ என்கிறார்‌ (ஆதித்யேத்யாதி,). பாஹ்யமான அந்த காரத்தைப்‌ போக்கிக்‌ கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாந அந்தகாரமும்‌,
    தமோ பாஹ்யம்‌ விநஸ்யேத்து பாவக ஆதித்ய ஸந்நிதெள ந பாஹ்யாப்‌, யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க ஸந்நிதெள”’ என்கிறபடியே நீங்கி, ‘ஸரஜாலாம் ஸூமாந்‌ ஸூர கபே ராம திவாகர:। ஸத்ருரஷோமயம்‌ தோயம்‌ உபஸோஷம்‌ நயிஷ்யதி”‘ (ரா.ஸு. 37 – 16) என்று ஸரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க் கொண்டு ஸத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணுகிற ராம திவாகரர்க்கு வற்றாத ஸம்ஸாரஸமுத்‌ரம்‌ “பிறவி என்னும்‌ கடலும்‌ வற்றி” (பெரியா, தி, 5 – 4 – 2) என்கிறபடியே வற்றி,
    *“ததோகில ஜகத் பத்‌மபோதாய அச்யுத பாநுநா ! தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம்‌ ஆவிர்பூதம்‌ மஹாத்மநா”’” (வி.பு. 5- 3 – 2) என்று ஜகத் பத்‌மம்‌ விகஸிதமாம்படி தேவகி யாகிற பூர்வ ஸந்த்‌யையிலே ஆவிர்பூதனான அச்யுத பாநுவான் க்ருஷ்ணனுக்கு விகஸியாத ”போதில்‌ கமல வன்னெஞ்சம்‌”‘ (பெரியா. தி. 5 – 2- 8) என்கிற ஹ்ருத் பத்‌மம் விகஸிதமாயிற்று,
    “யத்‌, கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்‌ நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க, சக்ரா | யந் மண்டலம்‌ ஸ்ருதிகதம்‌ ப்ரணமந்தி விப்ரா? தஸ்மை நமோ வகுள பூ,ஷண பாஸ்கராய”” (பரா. ௮.) என்றும்‌ திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய்‌, மஹிஷீ பூக்ஷணாயுத விஸிஷ்டனான நாராயணனை *கண்கள்‌ சிவந்திற்படியே உள்ளே உடையராய்‌, வேத வித்துக்களான ஸர்வ ஸிஷ்டர்களும்‌ ப்ரணாமம்‌ பண்ணும்படியான வைபவத்தை உடையராய்‌, வகுள பூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார்‌. கீழ்ச் சொன்ன ஆதித்ய திவாகர பாநு சப்‌தம்‌ போலன்றிக்கே இவர் பக்கவிலே பாஸ்கர சப்‌த ப்ரயோகம்‌ பண்ணுகையாலே **ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌ (திருவா. 6 – 7- 2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்த, முடையா ரெல்லார்க்கும்‌ தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர்‌ என்னுமிடமும்‌ தோற்றுகிறது –

    84-வம்ஸ பூ,மிகளை உத்‌தரிக்கக்‌ கீழ்க் குலம்‌ புக்க வராஹ கோபாலரைப்‌ போலே இவரும்‌ நிமக்‌நரை உயர்த்தத் தாழ இழிந்தார்‌.
    இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர்‌ அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென்‌ என்னில்‌, க்ஷத்ரியரில்‌ வைத்துக் கொண்டு ஹீநமான யது குலத்தை உத்‌தரிக்கைக்‌காக ”அங்கோராய்க் குலம்‌ புக்கு?” (திருவா. 6 – 4 – 5) என்றும்‌, அயம்‌ ஸ கத்‌யதே ப்ராஜ்ஞை? புராணார்த்த,விஸாரதை, ! கோபாலோ யாதவம்‌ வம்ஸம்‌ மக்‌ந மப்‌யுத்‌தரிஷ்யதி’‘ (வி. பு. 5 – 20 – 49) என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு கேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க் கொண்டு கோபாலனானாப் போலவும்‌, ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுக்கைக்காக ““உத்‌த்‌ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஸத பாஹுநா”’ (தை. உ.) என்றும்‌, “‘நமஸ் தஸ்மை வராஹாய லீலயோத்‌தரதே மஹீம்‌ | குரமத்‌யக,தோ யஸ்ய மேரு கணகணாயதே”’ (வராஹபு.) என்கிறபடியே வராஹ ஸஜாதீயனாய்க் கொண்டு ““கேழலாய்க்‌ கீழ்ப் புக்கு (திருவா. 2 8 – 7) என்கிறபடியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலவும்‌, ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகல ஜந்துக்களையும்‌ அதில் நின்றும்‌ எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார்‌ என்கிறார்‌.-அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீ, கரித்தாராகில்‌ வேதமும்‌ ததுப ப்‌ரும்ஹணங்களும் போலே அதி க்ருதாதி காரமாமிறே,
    ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும்‌ வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌ திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும்‌ ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்‌’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால்‌ வரும்‌ ப்ரத்யவாயத்தையும்‌, வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்‌யத்தையும்‌, அவதாரம்‌ பரார்த்த,ம்‌ என்னுமிடத்தையும்‌, இப்படி மஹா ப்ரபாவரான இவர்‌ தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும்‌ அருளிச்செய்தார்

    85–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.

    இனிமேல்‌ ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப்‌ பல உதாஹரணங்களாலும்‌ அருளிச் செய்கிறார்‌. அதில்‌, அவர்கள்‌ ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களே யாகிலும்‌ பகவத்‌ பக்தரானார்களாகில்‌ அவர்கள்‌ ஸர்வ உத்க்ருஷடரென்றும்‌, அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும்‌, அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும்‌, அவர்கள் விஷயத்தில்‌ பகவானுடையவும்‌, பகவதீயருடையவும்‌ ஆதர ப்ரகாரத்தையும்‌, அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்‌,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம்‌ என்னுமிடத்தையும்‌, ப்ரமேய பூதனுடையவும்‌, ப்ரமாதாக்களினுடையவும்‌, உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்‌.

    (ம்லேச்சனும்‌ பக்தனானால்‌) “மத்‌ பக்த ஜந வாத்ஸல்யம்‌ பூஜாயாஞ்ச அநுமோதநம்‌ ! ஸ்வயமப்‌யர்ச்சதஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்‌ |) மத் கதா ஸ்ரவணே ப்ரீதி ஸ்வர நேத்ராங்க விக்ரியா । மமாநுஸ்மரணம்‌ நித்யம்‌ யச்ச மாம்‌ நோபஜீவதி । பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சேபி வர்த்ததே’* (பகவச் ஸாஸ்த்ரே) என்று பாகவத விஷயத்தில்‌ வாத்ஸல்யம்‌ முதலான அஷ்டவிதையான பக்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும்‌. (சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக்‌ குல தைவத்‌தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்‌) ““ஸ விப்ரேந்தரோ முநிஸ் ஸ்ரீமாறந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌ராஹ்யம்‌-ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ । தத் பாதாம் ப்வதுலம்‌ தீர்த்தம்‌ ததுச்சிஷ்டம்‌ ஸுஃபாவநம்‌ | ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்‌ர்யம்‌ தத் ஸ்ப்ருஷ்ட மகிலம்‌ ஸூசி?” (பகவஸ் ஸாஸ்த்ரே) என்று – அவர்கள்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ உத்க்ருஷ்டர்‌. அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்‌களாலே அநுவர்த்தநீயர்‌. அவர்கள்‌ வித்‌யோபஜீவநத்துக்கு விஷய பூதர்‌. அவர்கள்‌ என்னைப் போலே யாகிலும்‌ பூஜ்யர்‌, அவர்கள்‌ தீர்த்த ப்ரஸாதாதிகள்‌ பரம பாவநம்‌” என்கிற திருமுகமான பகவதுக்தியும்‌, ”பழுதிலா ஒழுகலாற்று”” (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்‌.

    (விஸ்வாமித்ர-விஷ்ணுசித்த-துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து) ““கெளஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்‌,யா ப்ரவர்த்ததே । உத்திஷ்ட, நரஸார்தூ,ல கர்த்தவ்யம்‌ தைவமாஹ்நிகம்‌”” (ரா. படா, 23 – 2) என்று பெரிய பெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின விஸ்வாமித்ரனோடும்‌, “ அரவணையாய்‌ ஆயரேறே அம்மமுண்ணத் துபிலெழாயே”” (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத்‌ திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும்‌, ”அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும்‌ ஸகேத்ரிகளாய்க்‌ கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, **வலந்தாங்கு சக்கரத் தண்ணல்‌ மணி வண்ணர்க்‌காளென்று உள் கலந்தாரடியார்‌’‘ (திருவா. 3 – 7 – 9) என்கிறபடியே வலவருகே தரிக்கப்‌ பட்ட திருவாழியையும்‌ அதுக்குப் பரபாகமான நீலமணி போலே இருக்கிற திருமேனியை யுமுடைய ஸர்வ ஸ்வாமிக்கு அநந்யார்ஹ ஸேஷ பூதரென்று கொண்டு ஸேஷத்வ ஜ்ஞாந பூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, “எம்‌ தொழு குலம்‌ தாங்களே” (திருவா. 3- 7 – 8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்த நீயருமாய்‌, ஸேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்‌-

    (நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌) சரக வம்ஸத்திலே பிறந்த ஸோம ஸர்மாவான ப்‌ராஹ்மணன்‌ வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில்‌ மந்த்ர-க்ரியா-த்‌ரவ்ய-தஷிணா-லோபத்தாலே யாக மத்‌யே ம்ருதனாய்‌ ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை அடைந்து வந்தவன்‌, கைஸிக வ்ருத்தாந்தத்தில்‌ வந்த ஸ்ரீ வைஷ்ணவரைக் கண்டு -த்வம்‌ வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி ஏவமுக்த்வாத, சண்டாளம்‌ ராக்ஷஸ ஸ்ரவணம்‌ ௧,த2 | ப்‌ரஹ்ம ரக்ஷோ வசஸ் ஸ்ருத்வா ஸ்வபாகஸ் ஸம்ஸிதவ்ரத ! பாட, மித்யேவ தத்‌ வாக்யம்‌ ப்‌ரஹ்ம ராக்ஷஸ சோதிதம்‌ । யந் மயா பஸ்சிமம்‌ கீதம்‌ ஸ்வரம்‌ கைஸிக முத்தமம்‌ । ப,லேந தஸ்ய பத்‌ரம்‌ தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்‌ । ஏவம்‌ தத்ர வரம்‌ க்ருஹ்ய ராக்ஷஸோ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஞீத: | யஜ்ஞ ஸாபாத்‌, விநிர்முக்தஸ் ஸோமஸர்மா மஹா யஸா” (கை. பு.) என்று அவன்‌ ஸரணம்‌ புக, (நிலையார்‌ பாடலாலே) கைஸிகம்‌ என்கிற பண்ணில்‌ தாம்‌ பண்ணின கீத ப்ரபாவத்தாலே அவனுடைய ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக் குறையும்‌ தலைக் கட்‌டினாரானமையும்‌.

    (கீழ்மகன்‌) “ஏழை ஏதலன்‌ கீழ்மகன்‌” (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்ற ஸ்ரீகுஹப் பெருமாள்‌ ”வானோர் தலைமகன்‌”” (திரு விருத்த-53 )என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தித் திருமகனோடே “உகந்து தோழன்‌ நீ?” (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸஹாவாய்‌, (தம்பிக்கு முன் பிறந்து) “என் தம்பி உன் தம்பி‘ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைய பெருமாளுக்கும்‌ முற்பாடராய்‌, (வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) இளையபெருமாள்‌ பெருமாள் பக்கல்‌ ஸெளகுமார்யா நுஸந்தாநத்தா லுண்டான பரிவாலே அநிமிஷ த்‌ருஷ்டியாய்க்‌ கொண்டு இவரையும்‌ அதி ஸங்கை பண்ணி ஸாயுதராய்க் கொண்டு நோக்கும்படி பெருமாள் பக்கல்‌ பரிவை யுடையராய்‌

    (தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌) ‘*ஆசசக்ஷேத ஸத்‌ பாவம்‌ லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: | பரதாயா ப்ரமேயாய குஹோ கஹந கோசர?” (ரா. ஆ. 86 – 1) என்று அளவிறந்த வைபவத்தை உடையரா யிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளைய பெருமாள்‌ கைங்கர்ய ஸ்ரீயாலே உளராயிருக்கிற படியை இவர்‌ உபதேஸிக்கும்படி இஷ்வாகு வம்ஸ்யரோடு ஏக குலமானமையும்‌.

    (தூதுமொழிந்து) ““முன்னோர்‌ தூது வானரத்தின்‌ வாயில்‌ மொழிந்து” ‘ (திருமொழி 2 – 2 3) என்று பிராட்டி பக்கல்‌ திருவடியோடே தூத வாக்யத்தை அருளிச் செய்துவிட்ட பெருமாள்‌ “ ஸ பர்யா பூஜிதஸ் ஸம்யக்‌, ராமோ தஸரதாத்மஜ?’‘ (ரா. பா. 1 – 58) என்று ஸபரி கையாலே ஸம்யக்காக பூஜிதரான பின்பு அழகு நிலைபெற்ற படியையும்‌, (நடந்து) குடைமன்னரிடை நடந்த தூதா’” (திருமொழி 6 – 2 – 9) என்று பாண்டவ தூதனான க்ருஷ்ணனுடைய ““புக்தவத்ஸு த்‌விஜாக்‌ர்யேஷு நிஷண்ண? பரமாஸநே ! விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ” (படர. உத்‌,.) என்று பாவநத்வ போக்‌யத்வங்களை உடைத்தா யிருக்கிற விதுராந்த போஜநத்தையும்‌, (வந்த) ”தூது வந்த குரங்கு?” (திருமொழி 10 – 2 – 6) என்கிறபடியே ”த்‌ருஷ்டா ஸீதா” (ரா.பா. 1 – 78) என்ற திருவடியோடே ““உபகாராய ஸுக்‌ ரீவோ ராஜ்யகாங்க்ஷி விபிஷண? ! நிஷ் காரணாய ஹநுமாந்‌ தத் துல்யம்‌ ஸஹ போஜநம்‌” (பாத்‌மோத்தரே) என்றும்‌; “உடனே உண்பன்‌ நானென்ற ஒண் பொருள்‌?” (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள்‌ ஸஹ போஜநம்‌ பண்ணின படியும்‌.

    (ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு] யது குலத்திலே பிறந்து கோப குலத்திலே வளர்ந்த கிருஷ்ணனுக்கும்‌, ருஷி கர்ப்பமாய்க் கொண்டு போந்த விடத்திலே வளர்ந்த திருமழிசைப் பிரானுக்கும்‌, (தர்ம ஸுநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்- தர்ம புத்ரரும்‌, பெரும்புலியூரடிகளும்‌ தங்கள்‌ யாகங்களிலே அக்ர பூஜை கொடுத்தமையும்‌.
    (ஐவரில்‌ இத்யாதி,) ஐவரில்‌ முற்பட்ட தர்ம புத்ரர்‌ ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக் யத்தையும்‌ அசரீரி வாக்யத்தையம்‌ கொண்டு ஸந்தேஹியாமல்‌ புத்ர க்ருத்யம்‌ பண்ணினமையும்‌, நால்வரில்‌ முற்பட்ட சக்ரவர்த்தித் திருமகன்‌ ஸஹஜரான இளைய பெருமாளோடே கூட “ததஸ்தேநைவ ஸோகேந க்ருத்‌ரம்‌ தக்‌த்‌வா ஜடாயுஷம்‌”’ (ரா.பா.1 – 54) என்கிற படியே பெரிய உடையார்க்குப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்‌, மூவரில்‌ முற்பட்ட . பெரிய நம்பி மாறனேரி நம்பிக்குப்‌ புரோடாஸமமாகப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்

    (புஷ்ப த்யாகேத்யாதி,) “சிந்து பூ மகிமும்‌ திருவேங்கடத்து”” (திருவா. 3 – 3 – 2) என்கிற படியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப் பூவுங் கையுமாய்த்‌ திருவுள்ள மறியப்‌ பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ““துளங்கு நீண் முடி அரசர் தம்‌ குரிசில்‌ தொண்டை மன்னவன்‌”’ (திருமொழி 5 – 8 – 9) என்கிற அபிஷிக்த க்ஷத்ரிய புத்ரரான தொண்டை மான்‌ சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம்‌ ஹ்ரிஸ் ஸ்வயம்‌ । வரதஸ் ஸர்வ பூதாநாம் அத்‌யாபி பரித்‌ரு்ஸ்யதே”” (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே த்யாக மண்டபமான பெருமாள் கோயிவிலே திருவாலவட்டமும்‌ கையுமாய்ப்‌ பெருமாளுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““தெண்ணீப்பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்‌”’ (பெருமாள் தி, 1 1) என்கிறபடியே போக மண்டபமான கோயிலில்‌ வீணையுங் கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோக ஸாரங்க மஹாமுனிகள்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌.
    (யாகா நுயாகேத்யாதி,) யாகம் என்று – திருவாராதநமாய்‌, அதுக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் ஸ்பர்ஸத்தாலே காய ஸூத்‌தி, பண்ணின உடையவருடையவும்‌, அநு யாகம்‌ என்று – பகவத் ஸமாராதநாநந்தரம்‌ பண்ணப் படுகிற ப்ரஸாத ஸ்விகாரம்‌. அதுக்குப்‌ பிள்ளை ஏறு திருவுடையார்‌ தாஸருடைய கர ஸ்பர்ஸத்தாலே அந்ந ஸூத்‌தி, பண்ணின நம்பிள்ளை யுடையவும்‌, உத்தர வீதி குடி புகுருகைக்கு “ஆலோக்ய ராஜநகரீ மதி, ராஜஸூநு ராஜாநமேவ பிதரம்‌ பரிசிந்த்ய பூ,ப ! ஸூக்‌ரீவ மாருதி விபீஷண புண்ய பாத ஸஞ்சார பூத பவநம்‌ ப்ரவிவேஸ ராம?” என்று பெருமாள்‌ ஸ்தல ஸூத்‌தி பண்ணினாப் போலே, உத்தர வீதி குடி புகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்தல ஸூத்‌தி பண்ணின நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டருடையவும்‌ அநுஷ்டாந ப்ரகாரங்களையும்‌ அறிவார்க்கிறே ஐந்மத்தினுடைய உத்க்ருஷ்ட அபக்ருஷ்டத்வம்‌ தெரிவது-

    ஆக கீழ்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களேயாகிலும்‌ பகவதீ யரானார்‌களாகில்‌ அவர்கள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச்‌ சொல்லிற்று

    86-அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்‌யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம்‌, ஸ்வபசாதமம்‌, ஸில்பநைபுணம்‌, பஸ்மாஹுதி, ஸவவிதவா லங்காரமென்று கழிப்பர்கள்‌.

    இனிமேல்‌ பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற கேவல வர்ணாதிகள்‌ வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார்‌ (அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற என்று தொடங்கி), அஜ்ஞர்‌ – பகவச் சேஷத்வ ஜ்ஞாதமில்லாதவர்கள்‌, உத்தம வர்ணமென்றும்‌, உத்தமாஸ்ரமமென்றும்‌, ஸத்‌வித்‌யை என்றும்‌,ஸத்‌ வ்ருத்தமென்றும்‌ கேவலம்‌ உத்க்ருஷ்டமாக ப்‌ரமிக்கிற இவற்றை.
    (கர்த்தப ஜந்ம மித்யாதி,) ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸு தேவம்‌ ந விந்த,தி । வேத பாரபராக்ராந்தஸ்ஸ வை ப்‌ராஹ்மண கர்த்தப”” என்கிறபடியே ஸகல வேதத்‌தையும்‌ அதிகரித்து வைத்து ““வேதைஸ் ச ஸர்வைரஹமேவ வேத்‌ய” (கீதை 15 – 15) என்கிறபடியே ஸகல வேத,ப்ரதிபாத்‌யன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்றறியாதவர்‌ குங்குமம்‌ சுமந்த கமுதையோ பாதி என்றும்‌, ‘“விஷ்ணு பக்தி விஹீநஸ் சேத்‌ யதிஸ்ச ஸ்வபசாதம?’‘ என்று யதியே யாகிலும்‌ பகவத்‌ பக்தி இன்றிக்கே இருக்குமாகில்‌ அவன்‌ ஸ்வபாகனிற் காட்டில்‌ தண்ணிய னென்றும்‌, “’தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்‌யா யா விமுக்தயே ! ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌யாந்யா ஸில்பநைபுணம்‌” (வி.பு. 1 – 19) என்று மோக்ஷார்த்த,மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்‌; அல்லாத ஜ்ஞாநம்‌ செருப்புக்குத்தக்‌ கற்றவோபாதி என்றும்‌, ”ஆம்நாயாப்‌யபஸ நாந்யரண்யருதி,தம்‌ வேத வரதாந் யந்வஹம்‌ மேத,ஸ்சேத,ப,லாநி பூர்த்த விதய? ஸர்வே ஹுதம்‌ பஸ்மநி | தீர்த்தா நாம வகாஹதாநி ச கஜஸ்நாதம்‌ விநா யத்பத த்‌வந்தவாம் போருஹ ஸம்ஸ்ம்ருதீர் விஐயதே தேவஸ் ஸ நாராயண??‘ (முகுந்தமாலை 25) என்றும்‌ பகவஜ் ஜ்ஞாதமில்லாதவர்களுடைய கர்மாதிகளெல்லாம்‌ பஸ்மா ஹுதி போலே நிஷ் ப்ரயோஜநமென்றும்‌,

    தேசவா? புருஷா லோகே யேஷாம்‌ ஹ்ருதி, ந கேஸவ? । கேஸவார்ப்பித ஸர்வாங்கா ந பாவா ந புநர்ப வா?”, “யஸ்யாகி லாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிஸ்ரா குண கர்ம ஜந்மபி ! ப்ராணந்தி ஸூம்பந்தி புநந்தி வை ஜகத்யாஸ் தத்‌ வியுக்தா ஸவ ஸோபநா மதா?” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாதவர்கள்‌ ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள்‌ ஸவ ப்ராயரென்றும்‌, ““ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோதே வதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபி ச குண தஸ்தாத்‌ ருஸோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத்‌ புவநப வந த்ராணதோந்யேஷு வித்‌யா வ்ருத்த ப்ராயோ பவதி வித வாகல்பகல்ப? ப்ரகர்ஷூ” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாத வர்களுடைய வித்‌யாதி,கள்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாந மென்கிற ஸெளமங்கல்ய மில்லாமையாலே விதவால்ங்காரமென்று இந்த ஜந்மாதிகளை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள்‌ அநாதரிப்பர்க ளென்கிறார்‌. பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதிகள்‌ தயாஜ்யமென்னுமிடம்‌ சொல்லிற்று–

    முதல்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

    ————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–ஸ்ரீ திருவாய் மொழி -முதல் 500 பாசுரங்களின் சாரம்-ஸ்ரீ ரகுநாதாசார்யன் ஸ்வாமிகள்-

    September 3, 2024

    காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
    பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
    யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
    தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

    பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

    ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.  இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று. * மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது. அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள். இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர். கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர். (1) கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று, இங்கு கோதாவது (கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை. இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி. அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை). இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி * (8-2-11) என்றார் ஆழ்வாரும். (2) இனி * கோதிலவாம்* என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி.

    நம்மாழ்வார் வைபவம்

           இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.   

        * தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.  இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகார்கள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான். 

       ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள். * இப்படி யிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக் கடவார் ஒருவருமில்லை. இவற்றை யுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ் வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான். * ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது! பகவான் இவ்வாழ்வாரை விசேஷ கடாக்ஷம் பண்ணி யருளியதால் தத்வங்களை விசதமாக அறிந்தார் நம்மாழ்வார். இனி மற்றைய ஆழ்வார்களும் இதே போன்றுதான் அருளப்பட்டார்கள் என்பதனால்,  அவர்களிடம் இருந்து வ்யாவ்ருத்தி தோற்ற இவரது சீர்மையை அருளிச் செய்கிறார் அடுத்த வரியினால். அப்படிப்பட்ட ஆழ்வார்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்றபடி! * பூதம் ஸரஸ்ச்ச * என்கிற தனியனாது அருளிச்செயல் ஸேவிக்கும் காலங்களில் முன்னே ஓதப்பட்டு வரப்படுகிறது. இதன் ஸாராம்ஸமாவது => ஏனைய ஆழ்வார்களும் எம்பெருமானாரும் நம்மாழ்வாருக்கு அவயவ பூதர்கள் என்பதாகும்.  தம்படி தாமுமறியார் => ஏதேனும் ஒரு ஸாதனைத்தை அனுஷ்டித்து வைத்து அதனால் பலிக்கப் பெற்றது இல்லாமையினாலே தம்முடைய பெருமையினைத் தாமும் அறியார் ! எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் ஆயிற்று இவ்வாழ்வார்க்கு வந்த நன்மைகள் யாவும். ஸம்ஸாரிகளுமறியார்கள் => இவரைப் போன்று ஒரு வ்யக்தி ஸம்ஸாரத்தில் காணமாட்டாமையினாலே ஸம்ஸாரிகளும் இவரது ப்ரபாவத்தினை அறியார்கள்ஸர்வேஶ்வரனும் அறியான் => தன்னுடைய க்ருஷிபலங்களும் திருக்குணங்களும் இவரிடத்தில் பலித்தது போல் வேறொருவரிடம் பலிக்காமையினாலே எம்பெருமானும் அறியான்.

         ஸம்ஸாரிகளைக் காட்டில் ஆழ்வார் பெருமை படைத்தவர் என்று ஒப்புக் கொண்டாலும், நித்ய ஸூரிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தர் என்று சொல்லலாமோ என்னில் – * விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் வ்யாவ்ருத்தரே ! யாவர்நிகர் அகல்வானத்தே (4-5-8) => எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் , என்று ஆழ்வாரும் தம்மைப் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவரது புகழ்.

    வேதம் தமிழ் செய்த மாறன்

                ஸ்ரீ நம்மாழ்வாருக்கு * வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமம். அவரது வாழித் திருநாமத்தில் * வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே * என்றே ஓதிவரப் படுகின்றது. ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய உபதேசரத்தின மாலையினில் ஆழ்வாரை * வேதம் தமிழ் செய்த மாறன் * என்று கொண்டாடுகிறார். அதாவது தன்னை அதிகரிக்கைக்கு (கற்கைக்கு) அநேகமான அதிகாரங்களை உடைத்தாய் இருத்தல், த்ரைகுண்ய விஷயமாயிருத்தல் (முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்காயிருத்தல்) அன்றிக்கே, ஸர்வரும் அதிகரிக்கும்படியாகவும், உத்தரபாகத்தின் அர்த்தத்தை மாத்திரம் ப்ரதிபாதிக்கும்படியாய் இருப்பது ஆயிற்று இவ்வாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி. இப்படி அருளிச் செய்யுமிடத்து இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள். ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम् * – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு அது தன்னையே பிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !

              இதனை அமுதனாரும் * எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * என்றருளினார்.  எய்தற்கு அரிய மறைகள் – அடைவதற்கு அரிதாய் உள்ள மறைகள். தன்னுள்ளே கொண்டுள்ள அர்த்தங்களை மறைப்பதினால் மறை ஆயிற்று. இதன் அர்த்தங்களை அறிவதற்கு ந்யாய ஸஞ்சாரம் பண்ணும் மஹரிஷிகளே அர்ஹர்கள். மற்றையோர்களுக்கு அது கைகூடாது என்றபடி. இதனை அதிகரிக்கவும் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம், மீமாம்ஸா இவற்றின் உதவி வேண்டும்.  * வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே * (2) என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரமும் அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இதனை விவரிக்கின்றன. மேலும் * அநந்தா வை வேதா: * என்று வேதங்களை முழுவதுமாக அதிகரிப்பதும் இயலாத காரியம். ஆயிரம் இன்தமிழால் – இனி ஸ்ரீசடகோப வாங்மயமான திருவாய்மொழி எய்தற்கரியதாய் இல்லாதல் சொல்லப்பட்டது. ஆயிரம் – என்பதினால் திருவாய்மொழியின் அளவுபட்டமையும், இன்தமிழால் – என்பதினால் அனைவரும் அதிகரிக்கலாம்படியும், அதுவும் இன்தமிழாகையினாலே எய்தற்கு எளியதாய் இருக்கிறது.

    யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா * [ யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.

    அருளிச் செயல் வைலக்ஷண்யம்

    இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள். அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது. இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய், போக்யமுமாய், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய், ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய், ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

    பகவதேகபரமாய் – எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே, * மாற்றங்களாய்ந்து கொண்டு * (6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

    போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் * என்கிறார். அதாவது திருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும். பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம்.  * தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள் *. இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது. திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம். முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.” இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும். இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே * என்றவிடத்தில் அருளினார். இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்ய ஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

    ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. * அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

    மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
    தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
    ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
    யாழினிசை வேதத்தியல்

    என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும், வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

    ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் * தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே * என்றருளினார். 

    ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் * என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.* (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி.

    பகவத் விஷயம்

           இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம். உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது. இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் *….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் * அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா * என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள  பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது. 

    இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

    வடதல தேவகீ ஜடர வேதஶிர: கமலாஸ்தந ஶடகோப வாக் வபுஷி ரங்க க்ருஹே சயிதம்
    வரதமுதார தீர்க்க புஜலோசந ஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்தி ஹரம் || ( பூர்வ சதகம் – 78)

    என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச் செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப் பெற்ற அர்த்தமாகும்.! 

    நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

         வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ் வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

    • நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
    • ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
    • கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
    • நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கணவளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)

    அர்ச்சாவதாரம்

          மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவனான பேயாழ்வார், அர்ச்சாவதாரத்தைப் பற்றுகையே சுலபமானதும், நாம் உய்வதற்கும் வழியாகும் என்பதனை,

    பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
    வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

      என்கிற பாசுரத்தினால் நமக்கு உணர்த்தினார். அதாவது மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், பஞ்சாக்நி நடுவில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட உடலை வருத்தித் தவம்புரிவது பாவங்கள் தொலைந்து நற்கதி அடையவேண்டும் என்பதனாலே. அவ்வாறு வருந்தவேண்டா! திருவெஃகாவில் உள்ள ஸ்வாமியின் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராய்ப் புஷ்பங்களைப் ஸமர்ப்பித்து ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.

    வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
    வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

    இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம். வேதத்தினால் அறியப்படுபவன் எம்பெருமான். *சுடர் மிகு சுருதியுள் உளன்* என்று இதனை அருளினார் நம்மாழ்வார். * ஶ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே * என்றார் எம்பெருமானார். அப்படி வேதத்தினால் அறியப்படுபவனான எம்பெருமான் தசரதனுக்குக் குமாரனாக திருவவதரித்த போது, வேதமும் வால்மீகி முனிவரிடம் இருந்து ஸ்ரீராமாயணமாகத் தோன்றிற்று. இதனை * வேத வேத்ய ந்யாயம் * என்று உரைப்பர்கள் பூர்வர்கள்.  இந்த ந்யாயத்தாலே நோக்கினால், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கு நோக்கு அர்ச்சாவதாரம் என்னலாம்படியிருக்கும். நித்ய முக்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலை பரமபதம். க்ஷீராப்தியில் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அபயம் கொடுத்துக் கொண்டு இருப்பவன் எம்பெருமான். ராமக்ருஷ்ணாதி அவதாரங்களோ குறிப்பிட்ட தேசகாலத்தவர்களுக்காய் இருக்கும்.  * தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே * என்று ஆச்ரிதர்கள் விரும்பிய திருமேனியையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஸர்வஸுலபனாய் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமானை ப்ரதிபாதிப்பது, ஸுலபமான ஆழ்வாருடைய திருவாய்மொழியே.  இதனுடைய ஸுலபத்வமும் கீழேயே சொல்லப்பட்டது.

    ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது *செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

    செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
    துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் – எய்துமவர்க்கு
    இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
    பன்னு தமிழ் மாறன் பயின்று
    (26)

    என்று ஸங்க்ரஹித்தார்.  இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் * என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி. இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். * ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளோபாதி கூறு கொள்ளலாம்படி நின்ற நிலையிறே * …. * இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

    ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

    “புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
    விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
    உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
    புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

    वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥

    வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

    வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள். அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும். அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார். பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் *  (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை *ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார். ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

    இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வ பரமாயும், உபாஸந பரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம் தான் இருப்பது; அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸந பரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது.

    வ்யாக்யானங்கள்

           ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அவதரித்த வ்யாக்யானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். ஸ்ரீ அபயப்ரதராஜர் எனப்படும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையே அனைத்து திவ்யப்ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். * மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில * என்று மாமுனிகள் குறிப்பிடும்படி ஸ்வாமி பிள்ளை லோகாசார்யருக்குத் திருத்தம்பியாரான ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் சில அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். இவ்வ்யாக்யானங்கள் திவ்ய ப்ரபந்தங்களின் ஆழ்ந்த பொருள்களையும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் திருவுள்ளத்தை ப்ரதிபாதிப்பதாயும் இருக்கும். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய உபதேச இரத்தினமாலையிலே * பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை மணவாளயோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளரென்று நெஞ்சே கூறு * என்ற பாசுரத்திலே அருளிச்செய்தார். * திருவாய்மொழியைக் காத்த * என்றருளினார். இத்தால் ப்ரமாண ஶ்ரேஷ்டமான திருவாய்மொழிக்கு அபார்த்தங்கள் வாராமல் காத்தருளிய குணவாளர்கள் இவர்கள் என்று திருவுள்ளம் பற்றியருளினாராயிற்று. இத்திருவாய்மொழிக்கு மட்டும் 5 வ்யாக்யானங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் ஏற்றம் விளங்கும்.

    இன்பமிகும் ஆறாயிரம் * என்று முதல் வ்யாக்யானம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸங்கையையிலே (எண்ணிக்கையிலே) * தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளானாலே * அருளிச் செய்யப்பட்டது.

    ஏர் ஒன்பதினாயிரம் * என்று * வேதாந்தி நஞ்சீயரால் * திருவாய்மொழிக்கு அதன் அர்த்த கௌரவம் தோற்ற அருளிச்செய்யப்பட்டது. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்யையிலே இருக்கும் இதன் எண்ணிக்கை. * மாய வாதியர் தான் அஞ்சப் பிறந்தவன் சீ மாதவனான * வேதாந்தியன்றோ இவர்!

    இன்பா வரு பத்தி மாறன் * – இன்பமாக வருகிற கடாக்ஷத்தாலே வந்த பக்தியை யுடைய மாறனின் மறைப்பொருளச் * இருபத்திநாலாயிரமாகச் * சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் தாமும் ஸ்ரீராமாயணத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது ஸுப்ரஸித்தம். அதனாலேயே * ராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் * என்ற சாயையிலே பாசுரம் அமைத்தார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.

    ஶ்ருத ப்ரகாஶிகா ஸங்க்யையிலே * வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை * யினாலே ஏடுபடுத்தப்பட்டது * ஈடு முப்பதாறாயிரம் *. இதுவும் கேட்ட அர்த்தத்தை ப்ரகாஶப்படுத்தப்பட்டது தான்! இது தானும் * இந்த நாடறிய * என்று ஸர்வரும் கொண்டாடும்படி * தெள்ளியதா நம்பிள்ளை * யினால் அருளிச்செய்யப்பட்டது.

    அடுத்தது * பன்னீராயிரமாக * அழகிய மணவாளச் சீயரால் அருளிச் செய்யப்பட்டது. * இத்தை யொழிய நாலு வ்யாக்யாநம் உண்டானாலும் ஶப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தை கொண்டே ஸாதிக்கவேண்டுமிறே * என்று இதன் ஏற்றம் ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயரால் அருளப்பட்டது. * த்ரமிடோபநிஷத் ஸங்கதியும் * இவராலேயே அருளிச்செய்ய்யப்பட்டது.

    எப்படி வேதஶிரோபாகமான உபநிஷத்துக்களுக்கு வ்யாஸ பகவானால் ஸூத்ரங்களாக அர்த்தம் நிர்ணயிக்கப் பட்டதோ அதே போன்று ஸ்வாமி அழகிய மணவாள்ப் பெருமாள் நாயனாரால் * ஆசார்ய ஹ்ருதயத்தில் * திருவாய்மொழியின் அர்த்தங்கள் ஸூத்ர ரூபங்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளன.

    ஸ்வாமி வேதாந்தாசார்யரால் * த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும் த்ரமிடோபநிஷத் ஸாரமும் * ஶ்லோக ரூபங்களாக திருவாய்மொழியின் அர்த்தங்களைப் ப்ரதிபாதிப்பதாக அனுக்ரஹிக்கப்பட்டன.

    ஸ்ரீமத் வரவரமுனிகளால் * திருவாய்மொழி நூற்றந்தாதி * ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஸாரமாக இன்பம் பயக்கும்படி * சொல்லும் பொருளுமாகத் * தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.

    இத்தனை வ்யாக்யானங்கள் மற்றும் பூர்வர்கள் க்ருதியினாலேயே இத்திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

    பெண் பேச்சு

    திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய பேச்சாக மட்டும் இன்றி * பெண் பேச்சு * ஆகக் கூறியுள்ளதும் பாசுரங்கள் உள. வடமொழி மறையான வேதத்தின் ப்ரதம ப்ரவர்த்தகனான ப்ரஹ்மாவிற்கு நான்குமுகங்கள். * யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் .. * என்று ஸ்ருஷ்டியில் எம்பெருமான் முதலில் பிரமனுக்கே வேதத்தை ஓதிவைத்தருளினான். கல்பந்தோறும் மாறாமல் வரும் திருவாய்மொழியினை நம்மாழ்வாரைக் கொண்டு ப்ரவர்ப்பித்து அருளினான். இவருக்கும் நான்கு முகங்கள் என்னலாம்படி இருக்கும்!

    1. தாமான தன்மையில் பாடியருள்வது.
    2. தலைவிப் பேச்சாகப் பாடியருள்வது.
    3. தோழி முகத்தினால் பாடியருள்வது.
    4. அன்னை முகத்தினால் பாடியருள்வது

    இப்படி பெண் பேச்சு ப்ரேம தஶையிலே என்பதை * ஜ்ஞானத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண் பேச்சு  * (118) என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் காட்டப்பட்டுள்ளது. இவர் இப்படிப் பெண்கள் நிலைமை அடைவதன் காரணமானது எம்பெருமானின் * அப்ராக்ருத விக்ரஹமே * ஆகும். அதுவே இவருடைய ஆண் தன்மையை அழித்து பெண்கள் பாவனையினை ஏறிட்டுக் கொள்ளும்படி செய்யும். பெருமாளைக் குறித்து * ஆடவரும் பெண்மையினை அவாவுறும் தோளினாய் * என்றார் கம்பநாட்டாழ்வார். பெருமாளை ஸேவித்த மாத்ரத்தில் ஆடவர்களும் கூட ஸ்த்ரீத்வத்தை ஆசைப்பட்டார்களாம்! அதே போன்று இவ் வாழ்வார் ஈடுபட்ட திருமேனியானது * குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு * (5-5-10) என்றன்றோ இருப்பது. திரள் திரளாக நித்தியசூரிகள் கைகோத்துக்கொண்டு இழியும்படி – சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-* தேஜஸாம் ராஶிம் ஊர்ஜிதம் * (ஸ்ரீ விஷ்ணு புராணம்) [ பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது, அந்த ப்ரஹ்மாதி தேவர்கள், திருச்சங்கு திருவாழி கதை முதலான திவ்யாயுதங்களை தரித்திருப்பவனும், இதுவரை காணப்படாத ரூபஸந்நிவேஶத்துடனும் தேஜஸ்ஸுக்களுடைய (ஒளிக்கற்றைகளின்) ஸமூஹமாயிருக்கிற அந்த விஷ்ணுவைக் கண்டார்கள் ]என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது.

    இந்த ஸ்த்ரீத்வமும் வந்தேறியா? (இயல்பாக இல்லாததா?) என்னில், அது வந்தேறியன்று. எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள் தான்! இதனை விஶதமாக * வித்யை தாயாகப் பெற்று * (121) என்கிற ஆசார்ய ஹ்ருத்ய சூர்ணிகையினாலே. தாய்ப் பேச்சாக, தோழிப் பேச்சாகப் பேசுவது எதனால் எனில், 

    தோழி – நாயகன் மற்றும் நாயகிகளை சேர்ப்பவள் – ஆழ்வாருக்கு ஸம்பந்த ஜ்ஞானம் தலையெடுக்கும் அவஸ்தையிலே தோழிப் பாசுரம்.

    தாய் – நாயகி படிகடந்து செல்லக் கூடாது என்று உரைப்பள் ஆகையினால் – ஆழ்வாருக்கு உபாய அத்யவஸாயம் (எம்பெருமான் தன்னை வந்து ரக்ஷிப்பன்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தாய்ப் பாசுரம்.

    நாயகி – நாயகனோடு கூடி இருக்க ஆசைப்படுபவள் ஆதலின் – ஆழ்வாருக்கு எம்பெருமானை கிட்டி அனுபவித்தல்லது தரியாமை (இதனை ப்ராப்ய த்வரை என்பர் ஆசார்யர்கள்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தலைவி பாசுரம்

    இம்மூன்று அவஸ்தைகளும் முறையே திருமந்த்ரத்தில் உள்ள பதத்ரயங்களின் ப்ரதிபாத்ய விஷயம் – ஆசார்யமுகேந அதிகரிக்க வேண்டுவது. இவை அனைத்தும் * ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி * (133) * ஸகி வெறிவிலக்கி * (134) என்கிற இரண்டு ஆசார்ய ஹ்ருத்ய ஸூர்ணிகைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

    உபதேசப் பத்து

         திருவாய்மொழி ஒவ்வொரு 100 பாசுரங்களிலும் 10 பாசுரங்கள் பிறர்க்கு உபதேசம் பண்ணும் திருவாய்மொழிகளாக ஆயிற்று. அதாவது ஒவ்வொரு பத்திலும் ஒரு திருவாய்மொழி முழுமையும் உபதேச பரமாக ஆயிற்று. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் * பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து * (216) என்ற ஸுர்ணிகையில் அருளினார்.  அவையாவன

    1. முதல் பத்தில் * வீடுமுன் முற்றவும் * (1-2) [பகவத் பக்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோள் என்று உபதேசம்]
    2. இரண்டாம் பத்தில் * கிளர் ஒளி இளமை *  (2-10) [எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தத்தைப் பெறும் பொருட்டுத் திருமாலிருஞ்சோலையை ஆச்ரயிக்கும்படி பிறர்க்கு உபதேசித்தல் ]
    3. மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதம் * (3-8) [மன்னா மனிசரைப் பாடாமல் பரமனைப் பாடித் துதிக்கும்படி புலவர்க்கு உபதேசித்தல் ]
    4. நான்காம் பத்தில் * ஒன்றும் தேவும் * (4-10) [ ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகையால் மற்ற தெய்வங்களை விட்டு அவனையே பற்றுங்கள் என்று உபதேசித்தல் ]
    5. ஐந்தாம் பத்தில் * பொலிக பொலிக * (5-2) [ஸ்ரீவைஷண்வர்கள் திரளைக்கண்டு வாழ்த்தி, அல்லாதாரை உபதேசித்துத் திருத்துதல்]
    6. ஆறாம் பத்தில் *நல்குரவும் செல்வமும் * (6-3) [ ப்ரணய கலஹத்தில் முரண்பட்ட தம்மை வசீகரித்தவன் விருத்த விபூதி ஐச்வர்யம் , அதாவது முரண்பட்டது அனைத்தையும் செல்வமாகக் கொண்டு திருவிண்ணகரில் உறைபவன் – அவனது * கழல்களன்றி மற்றோர் களை கணிலம் * * வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே  ]
    7. ஏழாம் பத்தில் * இன்பம் பயக்க * (7-10) [ இன்பக்கவி பாடுவித்த ஸ்ரீமந்நாராயணனை – உள்ளித் தொழுமின் தொண்டீர் – தீவினை உள்ளத்தின் சார்வல்லவே என்று உபதேசம் ]
    8. எட்டாம் பத்தில் * எல்லியும் காலையும் * (8-6) [ ஆழ்வாரது பெருவிடாய் தீரக் கலக்கக் கருதி திருக்கடித்தானத்தில் இருக்கும் எம்பெருமானை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடரே என உபதேசம்.]
    9. ஒன்பதாம் பத்தில் * மாலை நண்ணி * (9-10) [ நீர் விரும்பியவை யாவும் உமது இவ்வுடம்பு முடியும் பொழுது தருவேன் என்று ஆழ்வார்க்கு எம்பெருமான் அருள, அவர் உவந்து, திருக்கண்ணபுரத்திலே சென்று அவனைச் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் ]
    10. பத்தாம் பத்தில் * கண்ணன் கழலிணை * (10-5) [ ஆழ்வார் எம்பெருமானிடத்து பக்தியுடையார் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் சுருங்கச்சொல்லி, பரோபதேசத்தை நிறைவுபடுத்தல் ]

    இந்த உபதேசப் பத்தும் அந்த நூறு பாசுரங்களுக்கு, பாட்டுக்கு க்ரியா பதம் போல ப்ரதானம் என்று. இந்த உபதேசமும் அந்த நூறு பாசுரங்களின் தாத்பர்யத்தை ஒட்டியும் இருக்கும்.

    தூது

    இத்திருவாய்மொழியில் எம்பெருமானைக் குறித்துத் தூது விடும் பதிகங்கள் 4. அவற்றில் தூது விடுவதற்குப் பக்ஷிகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஸ்வாபதேஶத்தால் அவை ஆசார்யர்களையே குறிக்கும். இவ்விஷயம் ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த தூது பதிகங்களின் தாத்பர்யத்தினையும் * தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வத்வ்ய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் * (156) என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

    இப்படி தூது விடப்படும் பதிகங்கள் அஞ்சிறைய மடநாராய் (1-4), வைகல் பூங்கழிவாய் (6-1), பொன்னுலகாளீரோ (6-8) எங்கானலகங்கழிவாய் (9- ) ஆகும். இவற்றுள்

    1. அஞ்சிறைய மட நாராய் – *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் * என்று வ்யூஹ நிலையில், *என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு * என்று அபராதங்களைப் பொறுக்கும் தன்மை பற்றாசாகத் தூது;
    2. வைகல் பூங்கழிவாய் – *மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த * என்று விபவத்தில், *புணர்த்த பூந்தண்துழாய் முடி * என்று ஆர்த்தர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று தீக்ஷை யுடைமையைப் பற்றாசாகக் கொண்டு தூது;
    3. பொன்னுலகு ஆளீரோ – * வானவர் கோனைக் கண்டு * என்று பரத்வத்திலும், * எங்குச் சென்றாகிலும் கண்டு * என்று அந்தர்யாமித்வத்திலும் தூது;
    4. எங்கானலகங்கழிவாய் – * திருமூழிக்களத்தார்க்கு * என்று அர்ச்சாவதாரத்திலே தூது

    ஒவ்வொரு பத்திலும் வெளியிடப்படும் திருக்குணங்கள்

    எம்பெருமானது திருக்குணங்களை விசதமாகக் காண்பிப்பது திருவாய்மொழியிறே! அமுதனார் முதல் பாசுரந்தன்னிலேயே * புகழ் மலிந்த பா மன்னு மாறன் * என்றாரிறே! * உயர்நலமுடையவன் * (1-1-1), * ஈறிலவண்புகழ் * (1-2-10) என்று உபக்ரமித்து (ஆரம்பித்து), * உலப்பில் கீர்த்தி * (6-101) என்று மத்யத்திலும் (நடுவிலும்) *சுடர்ஞான இன்பம் * (10-10-10) என்று முடிவிலும் திருக்குணங்களே அருளிச் செய்யப்பட்டிருக்கை காணத்தக்கது. * சீர்த்தொடை ஆயிரமிறே * திருவாய்மொழி

    எம்பெருமானுடைய தசாவதாரம் போன்று 10 பத்துக்கள் கொண்டதான திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்திலும் ஒரு திருக் குணம் ப்ராதான்யேன இருக்கும். அவையாவன

    1. முதல் பத்தில் – பரத்வம்
    2. இரண்டாம் பத்தில் – காரணத்வம்
    3. மூன்றாம் பத்தில் – வ்யாபகத்வம்
    4. நான்காம் பத்தில் – நியந்த்ருத்வம்
    5. ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம்
    6. ஆறாம் பத்தில் – சரண்யத்வம்
    7. ஏழாம் பத்தில் – சக்தத்வம்
    8. எட்டாம் பத்தில் – ஸத்யகாமத்வம்
    9. ஒன்பதாம் பத்தில் – ஆபத்ஸகத்வம்
    10. பத்தாம் பத்தில்  – ஆர்த்திஹரத்வம்

    திருமந்த்ர ப்ரதிபாதனம் திருவாய்மொழி

    திருமந்த்ரமாவது மந்த்ர ராஜன் என்று அழைக்கப்படுவதாகும். முமுக்ஷுக்களுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்களிலே வைத்து முதலாவதாக இருப்பதாகும். இதில் உள்ள * பதத்ரயமும் – ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும், தத் ஸம்பந்த விரோதியான ஸ்வ ஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாபல்ய ஹேது பூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது. *, என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரால் பரந்தபடியில் அருளிச் செய்யப்பட்டது.  ஆதலால் திருமந்த்ரத்தால் அறியப்படுவது அர்த்த பஞ்சகம் ஆகும். திருவாய்மொழியினால் அறியப்படுவதும் அர்த்தபஞ்சகமாகும். இப்படி ப்ரதிபாத்ய விஷயங்கள் இரண்டினுக்கும் ஒன்றாய் இருக்கும்.

    இன்னமும் * கண்கள் சிவந்து * (8-8) பதிகத்தில் முதலிரண்டு திருவாய்மொழிகள் வழியாக எம்பெருமானின் ப்ரஸ்தாவமாக அகாரார்த்தமும், பின்பு ஜீவ ஸ்வரூபம் சொல்லும் முகத்தாலே மகாரார்த்தமும், * கருமாணிக்க மலைமேல் * (8-9) பதிகந்தன்னில் * அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் * இத்யாதிப் பாசுரங்களால் உகாரார்த்தமும், * நெடுமாற்கடிமை செய்வேன்போல் * (8-10) பதிகத்தால் பாகவத சேஷத்வம் அறிவிக்கும் ப்ரகாரமாக நமப் பதார்த்தமும், * கொண்ட பெண்டிர் * (9-1) பதிகத்தால் எம்பெருமானை ஒழிந்தவர்கள் ஆபாஸ பந்துக்கள் என்று நாராயணார்த்தமும், * பண்டை நாளாலே * (9-2) பதிகத்தால் கைங்கர்ய ப்ரார்த்தனையான வ்ய்க்த சதுர்த்தியுமாக திருமந்த்ரம் ப்ரதிபாதிக்கப்பட்டது என்னவுமாம்.

    த்வயார்த்த ப்ரதிபாதனம் திருவாய்மொழி

    திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் விஷயம் த்வயம் என்னலாம்படியும் இருக்கும். இதனை ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் – * த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸார ஸங்க்ரஹத்திலே * என்று அருளிச் செய்தார். பகவானாகிய ஸர்வேஶ்வரன் தன்னுடைய கருணையினாலே சேதனர்க்கு ரஹஸ்ய த்ரயங்களையும் ப்ரகாஶிப்பித்து அருளினான். அதன் அர்த்தங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு 18 ரஹஸ்யங்களாக அருளிச் செய்தார் ஸ்ரீ லோகதேஶிகன். அவற்றில் * ஸார ஸங்க்ரஹம் * என்பது ஒரு ரஹஸ்யம். அதனில் திருவாய்மொழியில் த்வயார்த்தம் சொல்லப்படுகிறது என அழகாகக் காட்டியருளியுள்ளார்.

    • ஶ்ரிய:பதித்வம்
    • நாராயணத்வம்
    • ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான அவனுடைய சரணாரவிந்தயுகளத்வம்
    • அதினுடைய ப்ராபகத்வம்
    • சேதனனுடைய பற்றுதல்
    • லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம்
    • ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம்
    • ஸர்வஸ்வாமித்வம்
    • நித்ய கைங்கர்யத்வம்
    • கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதலும்

    ஆகிய இப்பத்து விஷயங்களே திருவாய்மொழிக்கும் த்வயத்திற்க்கும் நோக்கு!

    ஶ்ரிய:பதித்வம் தெரிவிக்கப்பட்டது, * மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் * (1-3-1) – தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிமடாக உடைய பிராட்டி அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்; * மலராள் மைந்தன் *(1-5-9) திருமகள் கொழுநன்; * திருமகனார் தனிகேள்வன் * (1-6-9) தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக் கேள்வன் ; * திருவின்மணாளன் * (1-9-1) பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்; * பூமகளார் தனி கேள்வன் * (1-9-4) பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்; * மலராள் மணவாளனை * (1-10-4) திருமகள் நாதனுமான எம்பெருமானை

    ஆகிய பாசுரங்களால்.நாராயணத்வம் தெரிவிக்கப்பட்டது * எம்பெருமான்நாரணற்கு * (2-1-7) எனக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு; * எம்பிரானெம்மான்நாராயணனாலே * (2-7-1) வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே ; * நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன் * (2-7-2) எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் ஆகிய பாசுரங்களால்

    எம்பெருமானுடைய ஸர்வலோக ஶரண்யமான திருவடித் தாமரைகள் சொல்லப்பட்டது * நாண்மலராமடித்தாமரை * (3-3-9); * அங்கதிர் அடியன் * (3-4-3) அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளையுடையவன்; * அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் * (3-6-9) அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய பெருமானாயுமிருக்கின்ற க்ருஷ்ணனுடைய திருவடிகளை; * சீர் அடியானே * (3-8-1) சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே ஆகிய பாசுரங்களால்

    அதினுடைய ப்ராபகத்வம் சொல்லப்பட்டது * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் * (4-2-8) இலங்காபுரியில் அம்புகளில் இருந்து கிளம்பும் அக்னியை செலுத்தின இராமபிரானுடைய; * வல் வினை தீர்க்கும் கண்ணனை * (4-4-11) ஸகல பாபங்களையும் போக்குமியல்வினனான க்ருஷ்ணனை ; * வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே. * (4-5-2) கொடிய க்லேசங்கள் அனைத்தும் நசிக்கும்படியாக; * மேவி நின்று தொழுவார் வினை போக * (4-5-4) நெஞ்சு பொருந்தியிருந்து அனுபவிப்பாருடைய பாபங்கள் யாவும் நசிக்கும்படி; * வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் * (4-9-9) விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து ஆகிய பாசுரங்களால்

    சேதனனுடைய பற்றுதல் சொல்லப்பட்டது * தமியேனுனக்கு அருளாய் * (5-7-2) இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருள் புரிய வேணும்; * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * (5-7-10); * உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் * (5-8-3) “என்னான் செய்கேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி ; * கழல்கள் அவையே சரணாக் கொண்ட * (5-8-11) திருவடிகளையே சரணமாகப் பற்றின; * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் * (5-9-11) சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று ஆகிய பாசுரங்களால்

    லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம் சொல்லப்பட்டது * திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து * (6-5-8) * அடிமை செய்வார் திருமாலுக்கே * (6-5-11) * ஒசிந்த வொண் மலராள் கொழுநன் * (6-7-8) * என் திருமார்வற்கு * (6-8-10); * கோலத் திருமாமகளோடு * (6-9-3) ஆகிய பாசுரங்களால்

    ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம் சொல்லப்பட்டது * கன்னலே அமுதே * (7-1-2) பரமபோக்யனே!; * கொடியேன் பருகின்னமுதே * (7-1-7) பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!; * அலைகடல் கடைந்தவாரமுதே * (7-2-5) அலையெறிகின்றகடலைக் கடைந்த ஆராவமுதமே!; * திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ * (7-9-9) பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு அநுபவித்தாலும் ஆரமாட்டேன் ஆகிய பாசுரங்களால்

    ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது – * அடியனேன் பெரியவம்மான் * (8-1-3) * விண்ணவர்கோன் நங்கள்கோன் * (8-2-2) * அமர்ந்த நாதனை * (8-4-10) * மூவுலகாளி * (8-9-5) ஆகிய பாசுரங்களால்

    நித்யகைங்கர்யத்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது  * பண்டைநாளாலே நின் திருவருளும் * (9-2-1) * குற்றேவல் செய்து * (9-2-2) * கொடுவினையேனும் பிடிக்க * (9-2-3) * ஆட்கொள்வானொத்து * ( 9-6-7) * அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் * (9-8-4) ஆகிய பாசுரங்களால்

    கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதல் ப்ரதிபாதிக்கப்பட்டது   * துயர் கெடுங்கடிது * (10-1-7) * எழுமையும் ஏதஞ்சாரா * (10-2-2) * அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் * (10-8-7)  ஆகிய பாசுரங்களால்

    ப்ரபந்தைகார்த்யம்

    திருவாய்மொழி ஆயிரத்திற்கும் ப்ரமேயமாக * அவித்யா நிவர்த்தக * (234) என்கிற சூர்ணிகையில் ஆசார்ய ஹ்ருதய கர்த்தாவான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸங்க்ரஹிக்கும் அர்த்தமாவது – ஸம்ஸாரத்திற்குக் காரணமான அஜ்ஞானத்தைப் போக்குவிப்பதான ஜ்ஞானத்தை (* மயர்வற மதிநலம் அருளினன் * ) அருளிய பகவானது நிர்ஹேதுகமான அநுக்ரஹத்தாலே (*அவாவற்று வீடு பெற்ற * ) ஸம்ஸாரம் அகல எம்பெருமானின் கைங்கர்ய ரூபமான மோக்ஷம் லாபம் என்பதாகும். எந்த எம்பெருமானுடைய ப்ரஸாதத்தினால் ஜ்ஞானம் கிடைக்கிறதோ, அதே ப்ரஸாதமே மோக்ஷம் தனையும் அருளவல்லது – அது நிர்ஹேதுகம் என்றபடி

    ————-

    திருவாய்மொழி என்றால் மேன்மையுடைய வாயினால் சொல்லும் சொற்களாலாகிய நூல் என்பது பொருள். இது ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்ரங்களுள் நான்காவதான சரமப்ரபந்தம். இது ஸாமவேத ஸாரமாகும்.

    ஆழ்வார் இப்ரபந்தத்திலே நமக்காக, நாம் உஜ்ஜீவிப்பதற்காக பல பல அத்யத்புதமான விஷயங்களை ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்களில் கூறியிருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு அனுபவம் ஏற்படும் போதும் அதை பாசுரமாக வெளியிட்டுள்ளார்.

    ஆழ்வார் சொல்வதாவது,

    மக்களில் பெரும்பாலோர் நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவார்களேயொழிய தமக்கு ஆன்மீக ஞானம் இல்லையே என்று குறைபடுவதில்லை.

    அதனாலேயே கண்ணபிரான் உலகமெல்லாம் அறியும்படி அர்ச்சுனனை வ்யாஜமாக்க்கொண்டு पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् என்று பார்த்தனுக்கு மட்டுமல்லாமல், அறிவினால் தமக்கு குறைவு இருக்கிறது என்ற ஞானமும் இல்லாத உலக மக்களுக்கு நெறியெல்லாம் சொல்லி பகவத் கீதையை அவர்கள் உஜ்ஜீவிக்க உபதேசித்தான். –

    அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,

    குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
    கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

    ——–

    பெருமானிடம் நமக்குள்ள பக்தி பரிணமிப்பதற்கு நமக்கு ஸம்ப்ரதாய ஞானம் ஏற்படவேண்டியது மிகவும் அவச்யம். நாம் ஸம்ப்ரதாய ஞானம் பெற நாம் முதலில் அர்த்த பஞ்சகத்தை அறிய வேண்டும். இந்த அர்த்த பஞ்சகம் ஐந்து விஷயங்களை நமக்கு போதிக்கிறது. அவையாவன

    1. எம்பெருமானின் ஸ்வரூபம்
    2. நம் ஸ்வரூபம்
    3. நம் லக்ஷ்யம் என்ன
    4. நம் லக்ஷ்யத்தை அடையும் வழி என்ன
    5. நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை

    மேற்சொன்னவைகளுக்கு விடைகளாவது,

    1. ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள், வேறு தெய்வமில்லை என அறிய வேணும்
    2. எம்பெருமானுக்கும் அவன் மெய்யடியார்க்கும் நாம் அடிமை என உணர வேணும்
    3. பெருமானின் திருவடிகளில் அடிமை செய்கையே நம் லக்ஷ்யம் என அறிய வேணும்
    4. எம்பெருமானை அடைய அவன் திருவடிகளே நமக்கு உபாயம் என உணர வேணும்
    5. அவனை அடைய நம்முன் இருக்கும் தடைகளை அறுக்க வேண்டும் என உணர வேணும்

    ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை உணர்ந்து தெளிவு பெற்று பேதமை தீர்ந்தாலேயே நாம் நம் பக்தியை சரிவர செய்யமுடியும். –

    அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
    நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
    பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
    நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

    இதை கருத்தில் கொண்டு, இத் திருவாய்மொழி ஸாரம் என்னும் தொகுப்பை கீழ்க்கண்ட தலைப்பகளில் நாம் அணுகுவோம்.

    1.1. எம்பெருமானின் ஸ்வரூபம் – அத்யாயம் 1
    1.2. பெருமானை அடைய ஆழ்வாரின் ப்ரார்த்தனைகள்-அத்யாயம் 2
    1.3. பெருமானை அடைய ஆழ்வாரின் துடிப்பு – அத்யாயம் 3

    2. நம் ஸ்வருபம் – அத்யாயம் 4
    3. நம் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்யம் என்ன – அத்யாயம் 5
    4. நமது லக்ஷ்யத்தை அடையும் வழி – அத்யாயம் 6
    5. நமது லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை – அத்யாயம் 7

    1. எம்பெருமானின் ஸ்வரூபம்

    1.1 எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம்

    1. முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்தவன்
    2. அப்போதலர்ந்த செங்கமலங்கள் போன்ற திருக்கண்களை உடையவன்
    3. சிவந்து கனிந்த அதரங்களை உடையவன்
    4. செம்பவளப்பெட்டியிலே முத்துக்கள் வைத்தாற்போல பற்களை உடையவன்
    5. திவ்யமான ஒளியுடைய செம்பொன் திருமேனி கொண்டவன்
    6. திவ்ய பீதாம்பரத்தை தரித்தவன்
    7. பொன் நிறமுடைய மலர்மகளை திரு மார்பில் உடையவன்
    8. தன் நாபி கமலத்தில் பிரமனை அமர்த்தியுள்ள பத்மநாபன்
    9. நீங்கிய இடத்தை ருத்ராதி தேவர்களுக்குக் கொடுத்தவன்
    10. நான்கு திருக் கைகளில் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்கள் தரித்தவன்
    11. பஞ்சாயுதங்களையே ஆபரணமாகக் கொண்டவன்
    12. யக்ஞோபவீதம், திருவாபரணங்கள், அழகிய ஹாரங்கள் அணிந்தவன்
    13. திருத்துழாய் மாலையை விரும்பி அணிந்தவன்
    14. செந்தாமரையை தோற்கடிக்கும் கழல்களுடைய பத்மபாதன்
    15. நம் துயர் தீர்க்கும் ஜோதிமயமான திருவடிகளை உடையவன்
    16. தேவிமார்கள் பாத ஸேவை செய்ய சயனித்து இருப்பவன்

    17. சுடர் மிகு மரகத மலை போன்ற அழகுத் தோற்றம் உடையவன்
    18. சூர்யனும் மங்கும்படியான தேஜோமயமான தேவதேவன்

    19. வேதாத்மாவான கருடனை தன் வாகனமாகக் கொண்டவன்

    அவன் மார்வம் திரு இருக்கும் இடம். தாமரை பூவில் பிறந்த பிராட்டி அதைவிட்டு இவன் திருமார்பை பற்றிக்கொண்டு ‘அகலகில்லேன்’ என்று கிடக்கின்றாள்; அவன் கொப்பூழ் பிரமன் இருக்கும் இடம்;. நீங்கினவிடமோ ருத்ரனுடையதாயிருக்கின்றது.

    திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
    திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
    ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
    ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

    பிராட்டி பிரமன் சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகல லோகங்களும் ஸகல சேதநாசேதநங்களும் அவனைப் பற்றியே நிலைநிற்கின்றன. அவனுள் கலவாதது எப்பொருளுமில்லை.

    என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
    மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
    மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
    தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே
     –2-5-3-

    அமரர்களென்ன, ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லா நாரங்களையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவனானான்

    அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
    அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
    அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
    அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

    இப்படி தான் ஒரு மரகத மலையோ என்னலாம்படி யிருக்கிறான்.

    இப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் ஸர்வகாலமும் அபூர்வ வஸ்துபோலே பரம போக்யனாய் புதியனாயிருந்து தெவிட்டுகின்றானில்லை;

    எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
    அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
    எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
    அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

    வானோர்க்கும் மண்ணோர்க்கும் கொள்ளக் கொள்ளக்குறையாத மஹாநிதிபோல * கொள்ளமாளாவின்ப வெள்ளமாய் எப்போதும் அநுபவிக்க உரியனாயிருக்கும் எம்பெருமானை எத்தனைகாலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாது.

    வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
    எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

    பரமபத்த்திலிருக்கும் பரம் பொருளான இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு பலபல விலக்ஷணமான நாமங்களும் ரூபங்களும் உண்டு; .

    யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
    யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
    பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
    பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

    அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபல. அவன் ஞானமும் பலபலவே.

    கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் பொன்மணியும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே அவன் திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.

    இவனுடைய கண்டுகளிக்கப் பெறுவதான திருவடிவுகளும் பல பல.

    நாம் அவனை அனுபவிக்குங் காலத்தில் நம் பஞ்சேந்திரியங்களும் திருப்தி பெரும் விதமும்
    கண்டு இன்பம், கேட்டு இன்பம் என்று பலவகைப்பட்டது.

    இப்படி எம்பெருமான் நித்ய ஆநந்த த்ருப்தனாய் “தாம் தம் பெருமையறியார்” என்றும் “தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்னும் சொல்லுகிறபடி எழுந்தருளியிருக்கிறான். 2.5.6

    பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
    தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
    என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
    சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

    இப்படி வெள்ளை வெள்ளத்தின் மேலே ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்றது எங்கள் பெருமானே.

    பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
    காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
    தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
    பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

    ஆக அத்வைதிகள் சொல்வதுபோல் நம் பெருமான் நிராகார ப்ரம்மம் இல்லை. அவன் திவ்யமங்கள் விக்ரஹத்தை உடையவன்.

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

    1.2. எம்பெருமானின் பரத்வம்

    எம்பெருமான் நித்யஸூரிகளுக்கு நியாமகன்.
    எதிர் நிகழ் கழிவு என்னும் முக்காலங்களிலும் ஒப்புயர்வற்றவன்
    ஆனால் கண்களால் காணப்பட முடியாதவன்.
    அதே போல். காதுகளால் கேட்கப்பட முடியாதவன்.
    நம் இந்திரியங்களுக்கும் விஷயமாகாதவன்.

    மற்ற ஜீவாத்மாக்கள் நம்மால் க்ரஹிக்கப்படுவதுபோல் பரமாத்மா க்ரஹிக்கப்பட முடியாதவன்.

    நேராக அவனை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானந்தாலேயே அறியப்படுபவன். அவனுக்கு ஸமானமானவர்களோ, மேற்பட்டாரோ யாருமில்லை.

    மனனக மலமற மலர் மிசை எழு தரும்
    மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
    இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
    இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

    இவனிடம் இது இல்லை என்று சொல்ல முடியாதபடி, எல்லாம் தன்னகத்தே கொண்டவன். ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீநம்.

    இவற்றின் ஸ்வரூபம் அவனதீதமாயிருக்கையாவது ஸ்ருஷ்டி காலத்திலே எம்பெருமான்தானே இவற்றை யுண்டாக்கியவன்.

    எம்பெருமான் எல்லா உலகங்களுக்கும் ஸர்வ ஸ்வாமி.

    1.3. எம்பெருமானே ஸர்வ ச்ருஷ்டி கர்த்தா

    ஸ்ருஷ்டியையும் ஸம்ஹாரத்தையும் பிரமனும் சிவனும் செய்வதாக சிலர் நினைப்பது தவறு.

    சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
    வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
    புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
    அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

    எதுவுமே இல்லாமலிருந்த காலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப்படைத்து,
    நீ வானோர் பலரும் முனிவருமான யோனிகளைப் படை யென்றான்- அதாவது, ஸப்த ரிஷிகள் தச ப்ரஜாபதிகள் ஏகாதச ருத்ரர்கள் த்வாதசாதித்யர்கள் அஷ்டவஸுக்கள் என்றிப்படிச் சொல்லப்பட்டுள்ளவர்களும் விலக்ஷண ஜன்மங்களை யுடையவர்களும் தத்தமது அதிகாரங்கட்கு ஏற்ற ஸ்ருஷ்டி முதலியவற்றை நன்கு அறிந்திருப்பவர்களுமான சிறந்த வ்யக்திகளை நீ படையென்றான். 1.5.3

    மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
    நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
    சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
    தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

    எல்லாம் ஸ்ருஷ்டித்து பிரமன் ருத்ரன் தேவஜாதிகள் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் மூவுலகங்களையும், சேதநவர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தது இவனே.

    பஞ்சபூதங்களாகிய ஆகாசம் அக்நி வாயு ஜலம் பூமி என்கிற ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானே.

    திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
    படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
    உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

    மூவகைக் காரணமுமாயிருந்து ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியை பண்ணினது அவனே
    தனிமுதலாகிய மூலப்ரக்ருதியும் அவனே
    முக்கட்பிரான் அவனே, திசைமுகன் அவனே,
    அமரரும் அவனே, அமரர்கோனும் அவனே.

    ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலிய ஸகல புருஸார்த்தங்களுக்கும், நரகம் முதலிய அபுருஷார்த்தங்களுக்கும், தேவாதி ஸகல ஆத்மவர்க்கத்துக்கும், தாரகனாய்க் காரண பூதனாய், நியாமகனாய், ஸஹகாரி காரணம் நிமித்த காரணம் உபாதாந காரணம் என்கிற மூவகைக் காரணங்களும் தானேயாய் நிற்பவன்.

    சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
    ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
    வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
    கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

    1.4. எம்பெருமானின் வ்யாபகத்வம்

    ஒருவனைப் பிடிக்க வேண்டி ஊரை வளைவாரைப்போல தம்மை விஷயீகரிப்பதற்காக எங்கும் வியாபித்து ஸர்வாந்தர்யாமியாயிருப்பவன் ஸ்ரீமந்நாராயணன்.

    சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
    எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

    எங்கும் பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த் திவலைகள் தோறும் வியாபித்திருப்பவன். பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே. எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான்.

    பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
    பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
    கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
    கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

    ஸர்வலோகங்களிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமான் அதீநம். புலப்படும் ஒரு வஸ்துவு மொழியாமல் ஸகல வஸ்துக்களிலும் வியாபித்து அந்தர்யாமியா யிருப்பவன்.

    அவரவர் தமதமது அறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
    அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

    ஆனால் ஸகல பதார்த்தங்களோடும் அந்தராத்மாவாயக் கலந்து நின்றானேயாகிலும் அவைகளின் தோஷங்கள், ஸுகதுக்கங்கள் தன்மேல் தட்டப்படாமல் இருப்பவன்.

    இலனது உடையனிது என நினைவரியவன்
    நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
    புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
    நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

    எங்கும் பரந்துள்ள ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருக்கிறான் எம்பெருமான்.

    வஸ்துக்களின் உட்புகுந்து அவைகளை ஒரு வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவும் ஆக்கினவன் இவனே.

    நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
    தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
    வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
    ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

    அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய தெய்வங்களெல்லாவற்றிற்கும் அந்தர்யாமி இவனே.

    அவரவர் தமதமது அறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
    அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

    இவர்கள் எல்லோரையும் நிர்வஹிப்பவனும் அவனே

    பிரமன் முதலானார்க்கு இட்ட காரியங்களை அவர்கள் வழியாலே தானே நடத்தியும், தன் தலையில் வைத்துக் கொண்ட காரியங்களையும் தானே நடத்தியும் போகையாலே அவனுடைய தொழில்கள் எங்கும் காணலாயிருக்கும்.

    புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
    புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
    புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
    புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

    ப்ரம்ம ருத்ராதி கடவுளர்களென்ன, ஸகல சேதன ஆசேதனப்பொருள்களென்ன, ஆகிய எல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி செய்து அதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவன்.

    அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
    அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
    அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
    அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

    இங்கு ஒரு ரஸமான விஷயம் தெறிந்து கொள்ளத் தக்கது.

    எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான் என்று ப்ரஹ்லாதாழ்வான் சொன்னதை இரணியன் நம்பவில்லை. அதை சோதிக்கப்போய் அவன் மாண்டான் என்பது ஜகத் ப்ரஸித்தம்

    வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி, அந்த இரணியன் தானே நாட்டிய தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,

    வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,

    அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,

    அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை நிலையை மறுக்கக் கூடுமாகையாலே, அதற்கு இடம் அறும்படி கர்ப்பம், கரு முதிர்தல், ப்ரஸவித்தல் குழந்தாயாய் ஜனித்தல், பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல், இரணியனைவிட பருத்து வளர்ந்த வடிவையுடையவனாய், அப்பொழுதே தோன்றினனென்பதும்

    அங்ஙனம் தோன்றியவிடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால், ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும், பரத்வம் ஸித்தியாமற் போய்விடுமாதலால், அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தனனென்பதும்,

    இவைபோன்ற பல விசேஷங்கள் நரஸிம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.

    ஆகவே எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே ஸந்தேகம் உடையோர் இரணியன் கதையிலிருந்து பெருமான் எங்கும் வ்யாபித்துள்ளான் என்பதில் தெளிவு பெறவேண்டும் என்கிறார் ஆழ்வார். எம்பெருமானுடைய வ்யாபகத்வத்தை நம்பாதவர்கள் இரணியன் அடைந்த கதியையே அடைவார்கள் என்றும் ஆழ்வார் சொல்கிறார்.

    எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
    இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
    அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
    சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

    1.5. எம்பெருமானே ஸர்வ ரக்ஷகன்

    ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ரக்ஷணமும் அவன் அதீநம்.

    பிரளய காலத்திலே இவற்றையெல்லாம் தன் வயிற்றிலே வைத்து காத்தவன் இவனே.

    நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
    தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
    வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
    ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

    இவ்வுலகில் ரக்ஷகர்களென்று பேர் சுமப்பவர்கள் பலவகைப்பட்டு இருப்பர்.
    ஒருவன் ஒரு வீட்டுக்கு ரக்ஷகனென்றிருப்பன்;
    ஒருவன் ஒரு க்ராமத்துக்கு ரக்ஷகனென்றிருப்பன்;
    ஒருவன் ஒரு நாட்டுக்கு ரக்ஷக்னென்றிருப்பன்;
    ஒருவன் மூவுலகுக்கு ரக்ஷகனென்றிருப்பன்
    ஒருவன் பதினாலுலகுக்கும் ரக்ஷ்கனாயிருப்பன்,

    இந்த வ்யக்திகளில் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலேயே இந்த ரக்ஷணங்கள் நடக்கின்றன. இவனுடைய அநுப்ரவேசமின்றி ஒருவராலும் ஒரு ரக்ஷணமும் பண்ண முடியாது. ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை.

    சேதநர்களினால் ஆச்ரயிக்கப்படும் மற்ற தெய்வங்கள் எம்பெருமான் தங்களிடத்தில் உள்புகுந்த்தனால்தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்கள்.

    ஆக உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே.

    அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து வழிபாடுகள் செய்து அவரவர்கள் தாம் தாம் கோரிய பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் தானே அத்தெய்வங்களுக்கு உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமே. அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று.

    அவரவர் தமதமது அறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
    அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

    மகாப்ரளய காலத்திலே மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் விழுங்கி வயிற்றில் வைத்து ரக்ஷித்த்தும் இவனே.

    ஸம்ரக்ஷணம் ஸம்ஹாரம் முதலான எல்லாவற்றிற்கும், அத்விதீய காரணபூதன். ஸகல வஸ்துக்களுக்கும் தனி முதல்வன். மூவுலகுங் காவலோன் இவனே.

    ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
    மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
    மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
    தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

    ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் எம்பெருமான் அதீநம். அதாவது, ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் காரியங்களெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்துக்கு அதீனம்.

    கருமங்கள் யாவும் அவனிட்ட வழக்கு.
    செய்கையும், பயனும் அவனிட்ட வழக்கு.
    அந்தந்த க்ரியைகளை அனுட்டிக்கின்ற கர்த்தாக்களைப் படைப்பவனும் அவனே
    சுவர்க்கமும் நரகமும் அவனிட்ட வழக்கு.

    அதாவது, ஸகல சேதநாசேதநங்களுள்ளும் எம்பெருமான் அந்தர்யாமியாய் நிற்றலால் சரீர-சரீரி भाव ஸம்பந்தம் என்கிற விசிஷ்டாத்வைதக் கோட்பாடு. இங்கு புரிந்து கொள்ளத் தக்கது. 1.1.6

    திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
    படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
    உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

    எம்பெருமானது அற்புதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காண முடியாதவை அவன் தானே காட்ட காண்பார்க்குக் காணலாமே யல்லது, ஸ்வ ப்ரயத்நத்தாலே காணப் புகுவார்க்கு ஒரு நாளும் காணமுடியாது.

    காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
    ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
    சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
    ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

    1.6. அழிப்பவனும் அவனே

    நல்லோர்களைக் காப்பவனான அவன் தீயோர்களை அழிக்கவும் செய்கிறான். அவன் செய்த ஸம்ஹாரங்கள் ஜகத் ப்ரஸித்தம். மற்ற தேவனான பிரமன் வரம் கொதுத்து செருக்கெடுத்துத் திரிந்த இரணியனையும் ராவணனையும் அழித்தவன் நாராயணனே. யார் கொடுத்த எந்த வரமும் இவன் முன் பலிக்காது.

    தேவர், மனிதர், விலங்குகள், தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்கிளிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் சாகாதபடியும் அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற் பெற்ற வரம் பழுதுபடாமைக்காக, நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல், தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றினனென்பதும்

    அஸ்த்ரஸஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும், ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும், பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும்,

    பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி, அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,

    பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம் மெய்யாகும்படி, தன் மடிமீது வைத்துக் கொன்றனென்றதும்,

    வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி, வாசற்படி மீது வைத்துக் கொன்றானென்பதும்,

    இவைபோன்ற பல விசேஷங்கள் நாதாயணனின் நரஸம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.

    மற்றொரு தேவனான ருத்ரன் கொடுத்த வரத்தைக்கொண்டு ருத்ரனையே தாக்கிய பஸ்மாஸுரனை அழித்தவனும் நாராயணனே. எம்பெருமான் புத்தாவதாரம் எடுத்ததும் ருத்ரன் கொடுத்த வரத்தினால் நாசம் விளைவித்த அசுரர்களை அழிக்கவே.

    1.7. எம்பெருமானின் எளிமை

    மேற்சொன்ன ஒப்புயர்வற்ற மேன்மை இருக்கச்செய்தேயும் அதனை யெல்லாம் மறைத்துக்கொண்டு கோபால க்ருஷ்ணனாய்த் திருவவதரித்தவன்

    வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
    எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

    தான் இப்படி ஸர்வேச்வரனாக இருப்பினும் தன் மேன்மை பாராதே நீசர் திறத்திலும் வந்து தன்னைத் தாழவிட்டுக் கொடுக்கும் சீலம் எம்பெருமானுக்கு உண்டெண்பது குஹப்பெருமாள். ஸுக்ரீவன், சபரீ, குசேலர், கூனி, இடைச்சிகள், மாலாகாரர் என்று இப்படிப்பட்டவர்களின் சரிதங்களில் காணலாம். நீரின் ஸ்வபாவம்போன்ற ஸ்வபாவத்தையுடைய எம்பெருமான். நீரை நாம் எப்படியிழுத்தாலும் அப்படியெல்லாம் அது ஓடிவரும்; அதுபோலே எம்பெருமான் யார்க்கும் உடன்பட்டு வருபவன்.

    நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
    நேர்தல் ஆயிரத்து
     ஓர்தல் இவையே –1-8-11-

    மேலும் எம்பெருமானே, எனக்கு மகனாய் நீ வரவேண்டும் என்று கேட்காதவர்களுக்கும் மகனாக பிறந்தான். அவன் திருவடி ஸம்பந்தம் கேட்காதவர்க்கும் த்ரிவிக்ரமனாக உலகளக்கும்போது, அவர்கள் சிரஸின்மீது திருவடி வைத்து அருளினான்.

    ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
    தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
    கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

    இன்ன யோநியில் தான் பிறப்பதென்று ஒரு ஸ்யவஸ்தை கொள்ளாமலே இன்ன சேஷ்டி தந்தான் செய்வது என்று ஒரு வ்யவஸ்தை கொள்ளாமையாலே பலவகைப்பட்ட அவதாரங்களைச்செய்து எளியனாய் நின்றான்.

    இருந்தும் நாம் அவனைக் கண்டு கொள்ள வேண்டி, அவ்வப்போது தன் பரத்வத்தையும் காட்டி நின்றான். அர்ஜுனனுக்குச் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் விச்வரூபத்தைக் காட்டினான். ஏழு பிராயத்திலே கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தான்.

    எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
    ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
    தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
    அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

    எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களில். அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லை க்ருஷ்ணாவதாரத்திலே. வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தி ஏங்கி நின்ற நிலையிலே அகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோ. ‘உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவு எத்திறம்?’ என்று சொல்லிக் கொண்டே ஆழ்வார் ஆறுமாஸம் மோஹித்துக் கிடந்தாராம்.

    அவன் அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவன் ஆனாலும் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனா யிருப்பவன்

    பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
    வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
    மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
    எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

    நல்ல எண்ணமில்லாதார்க்கு எட்டாதவன்.

    பக்தியையுடையார்க்கு எளியன், பக்த பராதீனன். ஆனால், எளியவனாயிருக்குந்தன்மை எல்லாரிடத்துங் காட்டப்பட்டால் அனர்த்தமாகுமே. ஆகவே உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், உகவாதார்க்கு அருமைப்பட்டவனாக இருந்தால்தானே அன்பர் தேறியிருக்க முடியும்; ஆகவே, பிறர்களுக்கு அரிய வித்தகன்.

    களவு வழியிலே வெண்ணெயை அள்ளி அமுது செய்து, பிடியுண்டு உரலோடே கட்டப்பட்டு, அழுது ஏங்கி நின்றதுபோலே தன் ஆப்தர்களான யசோதைப்பிராட்டி முதலானார்க்கு விதேயனாயிருந்து உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், பூதனை, சகடம், மருதம் முதலிய உகவாதார்க்கு அணுகவுமொண்ணாது இருப்பவன்.

    பாண்டவர் போல்வார்க்குக் கையாளாயிருந்தாலும் துரியோதனாதியர்க்கு அரியவன் .

    எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
    ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
    தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
    அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

    இப்படிப்பட்ட எம்பெருமானுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியப் போகாது.

    அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
    அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
    அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
    அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

    ஆனால், அதிசயிக்கத்தக்க ஞானத்தையுடையவர்களாலும் அறியவொண்ணாத இந்த எம்பெருமான் தன் க்ருபைக்கு பாத்திரர்களாகில் அவர்களாலே பல பல திருநாமங்களாலும் பலபல திருவுருவங்களாலும் எளிதிலறியக்கூடியவன்.

    யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
    யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
    பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
    பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

    1.8.எம்பெருமானின் திருக் கல்யாண குணங்கள்

    எம்பெருமான் உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றைக்காட்டிலும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படி உயர்ந்த கல்யாணகுணங்களை யுடையவன். ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்தவன்.

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

    எம்பெருமானது குணங்களிலே புகுந்து விட்டால் ஒவ்வொரு குணத்தினுடைய அதிசயமும் எல்லை காண வொண்ணாததாயிருக்கும்;

    பரத்வத்திற்கு ஈடான குணங்களும், ஸௌலப்யத்திற்கு ஈடான குணங்களுமாக வகுக்கப்பட்டுள்ள குணங்களிலே ஒருவர் ஒரு குணத்தை அநுபவித்து அதன் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டாட, மற்றொருவர் மற்றுமொரு குணத்தை யனுபவித்து அதன் அருமை பெருமைகளை யெடுத்துரைத்துக் கொண்டாடலாம்படி இருப்பவன் அவன்.

    அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
    பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

    எம்பெருமானைப் பற்றி சொல்லுகின்ற சாஸ்த்ரங்கள் அவனை ‘அகில ஹேய ப்ரத்யநீகன்’ என்கின்றன; தீய குணங்கள் எல்லாவற்றிற்கும் அவன் எதிர்த் தட்டானவன் என்றபடி. அவனிடத்திலுள்ளவை யெல்லாம் கல்யாண குணங்களே யன்றி ஒரு வகையான தீய குணமும் இல்லாமையால் அங்ஙனஞ் சொல்லுகிறது.

    வேறொரு பலனையும் விரும்பாமல் எம்பெருமானையே பரம ப்ரயோஜனமாக விரும்ப வேண்டுவது ஸ்ரீவைஷ்ணவர்களின் கடமை.

    அங்ஙனம் தன்னை விரும்பாமல் வேறொரு அற்ப பலனை விரும்பி அது பெறுவதற்காகத் தன்னைவந்து பணிவாருண்டாகில், இவர்கள் பெருமாளையே பரம உத்தேச்யமாக்க் கொள்ளும் உத்தமாதிகாரிகளாக இல்லா விட்டாலும், அப் பலனைப் பெறுவதற்கு வேறொரு க்ஷுத்ர தேவதையைத் தேடி ஓடாமல் நம்மிடம் வந்தார்களே; நம்மை உபேயமாகக் கொள்ளாவிடினும் உபாயமாகவாவது கொண்டார்களே’ என்று திருவுள்ளமுவந்து அருமையான காரியங்களைச் செய்து அவர்களது மனோரதத்தை நிறைவேற்றுபவன் எம்பெருமான்.

    பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
    அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை
    பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
    வறுமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே –3-7-5-

    எம்பெருமான் நரஸிம்ஹாவதாரம் செய்தருளினதைப்பற்றி ஒரு விசேஷார்த்த்த்தை ஆழ்வார் சொல்கிறார்.

    அதாவது, ஒருவன் எம்பெருமானைத் துதி செய்கிறான், ஒருவன் நிந்தனை செய்கிறான், என்று வைத்துக் கொள்வோம்

    துதி செய்பவன் நாபியிலிருந்தெழுந்த அன்போடே துதி செய்கிறானா அல்லது கபடமாக மேலெழத் துதி செய்கிறானா, என்று ஆராய்ந்து பார்ப்பதில் எம்பெருமான் ப்ரவர்த்திப்பதில்லை;

    பக்தனென்று கைக்கொள்வதற்கு, ஸஹ்ருதயமாகவோ அஹ்ரூதயமாகவோ துதிசெய்தாலும், ‘இவன் துதிசெய்பவன்’ என்று துணிகிறான். பக்தன் என்று கணக்கிட சிறிது வியாஜம் கிடைத்தாலும் போதும் பெருமானுக்கு.
    .
    நிந்தனை செய்பவனிடத்திலோ வென்னில், இவனுக்குப் பகை உள்ளுற இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்து, அப்படி யிருப்பதாகத் தெரிந்தாலொழியத் தண்டிப்பதில்லை.

    ஆகவேதான், இரணியனை நெஞ்சு தொட்டுப் பிளந்து உள்ளிலும் ஆராய்ந்து பார்த்தானாம். பகவத் விஷயத்தில் அவன் பகை மேலெழ இல்லாமல் உள்ளுறவே யிருந்ததாம். அது தெரிந்த பின்பே அவனைத் தண்டிக்கலானான்.

    இதன் மூலம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்வதாவது, எம்பெருமானுக்கு அநுக்ரஹத்திலேயே அதிக நோக்கு என்கிறார்.

    உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
    முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
    முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

    எம்பெருமான் அடியார்கள் துயர்தீர, தான் துயர் தீர்ந்து இருப்பவன். அதாவது ஆச்ரிதருடைய துக்க நிவர்த்தியை தன்னுடைய துக்க நிவ்ருத்தியாக் கொள்ளுமியல்வினன்.

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

    “பிறர் படும் துக்கத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை” அவன் ஸ்வபாவம். ஸ்ரீராமாயண, அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமபிரானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டு வரும் பிரகரணத்தில் “பிரஜைகள் துக்கப்படுங் காலங்களில் ஸ்ரீராமன் மிகவும் துக்கப் படுகிறான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    மடுவின்கரையிலே முதலை வாய்ப்பட்ட ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடரை பிற்பாடு எம்பெருமான் தீர்த்தருளினானேலும் அவன் பட்ட பரிதாபம் அறிந்து கெட்டேன், கெட்டேன் என்று நொந்துகொண்டே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்தானென்றால் பாருங்களேன்!

    பிறர் படுந்துயரத்தைக் கண்டு தான் துயரப்படுவது என்று நிற்காமல் அத்துயரை நீக்கவல்ல சக்தியுடைமையும் அவனிடம் உண்டு. துச்சாஸனன் கையிலே த்ரௌபதி பரிபவப்பட்டுக் கூவினபோது கண்ணபிரான் ஒருவாறு அவளது துயரைத் தீர்த்திருக்கச் செய்தேயும் ‘ஐயோ! அவள் கூவின போது நான் நேரில் சென்றிருந்து உதவாதொழிந்தேனே!, ஐயோ! அவளுக்குப் பரிபவம் நேர்ந்து அவள் கதறினபின்பு நான் அதைப் போக்கினேனேயன்றி, முதல் தன்னிலே பரிபவமே உண்டாகாதபடி ஜாகரூகனாயிருக்கை தவிர்ந்தேனே! அவளுக்கு நான் பெரிய கடனாளியாய்விட்டேனே! என்று மிகவும் வருத்தப்பட்டானாம்.

    ஸஹஸ்ரநாமத்திலே விகர்த்தா என்னும் திருநாமத்தின் தாத்பர்யமாவது, தமக்காக இன்பதுன்பங்கள் இல்லாமலிருந்தும் பிறர் இன்பதுன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களையடைந்து விகாரப்படுகிறவர் என்று பொருள்.

    அதற்கேற்ப, குறையாத செல்வங்களையுடையவனும் நித்யஸித்தங்களான திருக்குணங்களையுடையவனான எம்பெருமான் பரமபதத்தில் ஸம்ஸாரிகளகிற நாம் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து திருவள்ளத்தில் க்லேசத்தோடே இருக்கிறான். – 4.10.2

    நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
    வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
    மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
    பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

    பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
    கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
    சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
    பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

    1.9. எம்பெருமான் உபகாரகன்

    எம்பெருமான் அவனையே பரம ப்ரயோஜனமாகப் பற்றி நிற்கும் அடியார் விஷயத்திலே மஹோபகாரம் செய்தருள்பவன்;

    வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
    எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

    அவனை அநுபவித்துக்கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்துபோவர்கள்.

    தேவர்களுண்ணும் அமுதமானது இறப்பை மட்டுமே நீக்கும். ஆனால் இவனைப் பற்றிய அமுதத்தை பருகினால் மறு பிறவி நீங்கும்.

    ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
    தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

    எம்பெருமான் எவ்விதத்திலாவது நம்மைத் தன் வலையில் அகப்படுத்திக் கொள்ளும் வழியையே பார்ப்பன்; நாம் அவன்பால் நாலடி கிட்டச் சென்றால் நம்முடைய அபிநிவேசத்துக்கும் மேலாகவே அபிநிவேசங்கொண்டு அவன் நம்மைச் சூழ்ந்து கொள்வான்.

    பக்தர்களைப் பொருத்த மட்டில் இப்படி எளியனாக இருப்பவன், யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே பக்கர்களின் இடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப் பேறு என நினைத்து அவர்களின் இடுப்பிலே வந்தும் அமருவான். கண்ணன் என் ஒக்கலையானே-1.9.4
    அங்கிருந்து அவர்கள் நெஞ்சிலே வந்து புகுவான். என் நெஞ்சின் உளானே-1.9.5
    அநுகூலர்க்கு எளியனான எம்பெருமான் அவர்கள் நெஞ்சிலிருந்து தோளின் மீதேறி –என்னுடைத் தோளிணை யானே-1.9.6
    அவர்கள் நாவிலே கலப்பான். நாவில் உளானே-1.9.7
    நாவிலே கலந்த பிறகு, புஷ்பஹாஸ ஸுகுமாரனாய், சதுர்ப்புஜனாய், சங்க சக்ரகதாகரனாய், இந்தீவரதளச்யாமனாய்ப் புண்டரீகாக்ஷனாய் தன் வடிவை அவர்கள் கண்களுக்கு இலக்காக்குவான். கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே-1.9.8

    இதுவரையில் அவனைக் காண முடியாதபடி நிரம்பிக்கிடந்த தோஷங்கள் அவனது கடாக்ஷ வீக்ஷணத்தாலே மாய்ந்தனவாதலால் அவனடியார்களும் அவனை கண்ணாரக் காணப்பெருவர். இப்படியே மற்றுமுள்ள செவி முதலிய காரணங்களாலும் அவனை அநுபவிக்கப் பெறுவார்கள். என் நெற்றி உளானே -1.9.9

    அவனும் தன்னுடைய குளிர்ந்தழகிய திருக் கண்களாலே அவர்களுடைய ஸகல தாபங்களும் தீரும்படி அவர்களை குளிர நோக்கி யருள்வான்.

    இப்படிப்பட்ட அடியார்களின் நெற்றியிலே திருமண் ரூபமாக இருந்து கொண்டு அவர்களை ஸ்ரீவைஷ்ணவதிலகமாக ஆக்கி பிரமன், சிவன், இந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய் இருக்கிறவன் தான் அந்த அடியார்களைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்துவந்து அவர்கள் தலைமீது தன் திருவடி வைத்து அனுக்ரஹிப்பான். என் உச்சி உளானே-1.9.10

    ஆனால் அவனுடைய உபாயங்களையெல்லாம் பழுதாக்கி நாம் அவனது வலைக்கு அகப்படாமல் அகன்று போவதையே விரதமாகக் கொண்டிருப்போமாகில், ஐயோ! நம் முயற்சி பலிக்கவில்லையே! என்று கண்ணீர்விட்டழுதுகொண்டே விலகி நிற்பவன்

    ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
    நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

    துன்பம் சிறிதுமில்லாத எம்பெருமான் பரமபதத்திலே நித்யஸூரிகளோடே ஒரு நீராகக்கலந்து பரிமாறுகிறான் ஸேவை ஸாதிக்கிறான் என்றால் இதற்கு ஒரு பொருளில்லையே; ஸம்ஸாரிகளான நமக்கன்றோ துன்பம் உள்ளது. இங்கு வந்து நம்மோடு பரிமாறுகிறானென்றால் அல்லவோ பொருந்தும்;

    ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
    நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

    அதற்காகவே இந்நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் கண்ணனாக வந்து பரிமாறினான் அன்றோ. இப்படி க்ருஷ்ணாவதாரஞ்செய்தருளினது மாத்திரமன்றியே இன்னமும் எத்தனையோ அவதாரங்களை செய்து தனது ருஜுத்வத்தை வெளியிட்டுக் கொண்டானென்பது ப்ரஸித்தம்.

    அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
    வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

    இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தைகட்கும் முலை கொடுக்கப்பாங்காக நடுவே கிடக்குமாபோலே நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒருசேர முகந்தருவதற்காகவே திருவேங்கடமலையிலே நின்றருள்கிறான்.

    மேலுள்ளவர்கள் சிறிதுதூரம் பயணமெடுத்துவந்து சேரும்படியாய் கீழுள்ளவர்களும் சிறிதுதூரம் சென்று சேரும்படியாய் வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு என்கிறபடியே இருவர்க்கும் நிதியாகவுள்ள திருவேங்கட மலையில் ஸந்நிதிபண்ணியிருக்கிறான் எம்பெருமான்.

    திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாயிருப்பதாலேயே இது ‘விண்ணோர்வெற்பு’ என்றது ஏனென்னில்; ஸம்ஸாரிகளைக் காட்டிலும் நித்யஸூரிகளே பெரும்பான்மையாக இங்கு வந்து அநுபவிப்பவர்களாதல் “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்யநின்றான்” என்பர் திருப்பாணாழ்வாரும்.

    திருமலையிலுள்ள பசு பக்ஷி திர்யக் ஸ்தாவரங்களையுமெல்லாம் நித்யஸூரிகளே என்று கருதுவர் பெரியோர்.

    கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
    தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

    இந்திரன் மேகங்களை ஏவி மழைபெய்வித்துத் திருவாய்பாபடியிலுள்ள சராசரங்கள் அனைத்துக்கும் பெருத்த தீங்கை விளைவித்தபோது கண்ணபிரான் சீற்றமுற்று அவ்விந்திரன் தலையை அறுத்தெறிய வல்லமை பெற்றிருந்த போதிலும், அப்பிரான் அவனிடம் சீற்றங் கொள்ளாமல் பெரும்பசியாற் பிறந்த கோபத்தினால் இப்போது இவன் தீங்கிழைக்கிறான், சிறிதுபோது கழிந்தவாறே தானே ஒய்வன். இவனது உணவைக் கொள்ளைகொண்ட நாம் அவன் உயிரையுங் கொள்ளைகொள்ளக் கூடாது எனப் பேரருள் பாராட்டி தன் அடியாரை மலை எடுத்துக்காத்து நம்போன்றவர்களுடன் நீர் போல் கலந்த ருஜுத்வகுணம் அறியத்தக்கது.

    வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
    நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

    திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருந்த்தோ அவ்வளவு போக்யாமயிருந்தது பக்தர்களின் சரீரம் அவனுக்கு. ஆதலாலேயே ஆயர்களை மலை தூக்கிக்காத்தான்.

    வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
    பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

    மஹாபலியைத் தன் வசப்படுத்தி, அவன் தன்னதாக அபிமானித்திருந்த பொருள்களைத் தன்னதாக்கிக் கொண்டதுபோலவே நம்மோடே ஒரு நீராகக் கலந்து நம் ஆத்மாவைக் கொண்டு நாம் நமக்காக வாழ்கிறோம் என்கிற விருப்பைத் தவிர்ப்பான்.

    கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
    புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

    நப்பின்னைப் பிராட்டியோடு சேர, அதற்கு இடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே நம்மோடு கலவிசெய்ய விரும்பி நம்முடைய பாபம் முதலிய பிரதிபந்தகங்களைப் போக்கியருளுவான்.

    பிரளயங்கொள்ளப்புகுந்த பூமண்டலத்தைத் தனது திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்த்துபோல் நம்மைத் தன்னுள்ளே வைத்துக்காப்பான்.

    பரமபதத்திற்குச் செல்லவேணும்’ விரஜையாற்றிலே முழுகவேணும் அங்கே ஸாமகானம்பண்ணி அவனை யநுபவிக்கவேணும், என்றிப்படியெல்லாம் நாம் பாரித்துக்கொண்டிருக்க, நம்மை ஆட்கொள்ளவேணும் என்று அவன், தான் பாரித்துக்கொண்டு நம்மிடம் ஓடிவருவான்.

    கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
    தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

    நம்மை அகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை.
    தன்னுடைய திவ்யாவதாரங்களுமெல்லாம் நாம் அனுபவிப்பதற்காக செய்தருளினான்

    ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
    தான் ஆனான் என்னில் தானாய சங்கே 1.8.8

    இப்படி நமக்காக மீன், பன்றி என்று ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவன். சிலரை வசப்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள் கையிலே மருந்தை வைத்துக்கொண்டு திரியுமாபோலே அவதாரங்கள் தோறும் திவ்யாயுதங்களோடே வந்து அவதரிப்பவன் அவன்.

    மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருகோலங்கொண்டு எழுந்தருளப்போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே சென்று நின்றாப்போலே (திருவீதி புரப்பாடு கண்டருளி நம் தெருவில் நம் வீடுமுன்) தானே வந்து தன் வடிவழகை திவ்யாயுதங்களை ஏந்தின அவ்வழகையும் தன் திருவடியையும் அனைவருங்கண்டு தொழும்படியாக நம் கண்ணுக்கு இலக்காக்கும் நிர்ஹேதுக க்ருபை செய்பவன்.

    பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
    திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
    ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
    கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

    பிரிவில் தரிக்கமாட்டாத பக்தியோடு தொழுதால் அவர்களது கண்வட்டத்துக்கு அப்பால் போகமாட்டாதேயிருப்பான். ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் “இருபத்தாறு” என்னுமளவில் (இருபத்தினான்கு தத்துவங்களுக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, இருபத்தாறாவது தத்துவம் பரமாத்மா என்பது சாஸ்திரஸித்தாந்தமாதலால்), தன்னைக்குறித்ததாகக் கொண்டுவந்து நிற்பன்; இப்படி ஏதேனுமொரு காரணம் காட்டி எம்பெருமான் நம்மைக் கைக்கொள்வதில் மிக்க வூற்றமுடையவன். ஸர்வேச்வரனுடைய இயல்பு இதுவானபின்பு இனி நமக்கொரு குறையிருக்க வாய்ப்புண்டோ?

    கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
    ண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
    மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
    விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

    எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டோவென்னில்; எங்குமுண்டு; உகவாதார் கண்ணுக்கு தோற்றாது, உகந்தார் கண்ணுக்குத் தோற்றும்.

    ராஜாக்கள் நகரசோதனைக்காக மாறுவேஷத்தில் புறப்பட்டால் அந்தரங்கர்களும் வேண்டிய நேரத்திலே முகங்காட்டுகைக்காகப் பின்னாடியே இருளோடேயிருளாகத் திரிவர்கள்; ஆனால் அவர்கள் கூடவே இருக்கமாட்டார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று வந்து அணுகி நிற்கும்படியாக எங்கேனும் மறைந்து திரிவர்கள்; அதுபோலே திருவாழி திருச்சங்கு முதலான அந்தரர்களும் எம்பெருமானுடைய எந்த அவதாரத்திலும் மறைந்து கூடனிருப்பர்கள்.

    சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
    எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

    திருத்துழாய் மாலையை திருமுடியிலணிந்துள்ள ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய திருவடிகளை நோக்கி மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே பக்தர்களை துன்புறுத்தும் எந்த நோய்க்கும் அருமையான மருந்தாகும்.

    இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
    எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
    மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
    அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

    இலேசான ப்ரபத்தி அனுஷ்டானத்துக்கு கனமான பேறாகிய பரமபதத்தை நமக்கு தருகிறார்ப்போலே, எம்பெருமானுக்கு நாம் नमः என்று சொன்னாலே “भूयिष्टांते नम उक्तिं विधेम” என்கிறபடி தனக்கு இயல்பான வாத்ஸல்யத்துடன் அவன் அதைச்சுமையாக ஏற்று “போயிற்று வல்லுயிர்ச் சாபம்” என்னும்படி நம் அனைத்து பூர்வக்ருத பாபங்களும் வெந்து போகும்படி செய்கிறான். எதிர்கால பாபங்களும் ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறான்.

    பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
    வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
    தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
    ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

    தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணின மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரத்திலே அவன் செய்த உபகாரம் யாதெனில், அவனையநுபவிப்பதற்கு வழிவராத தன் நெஞ்கை மாற்றிப் பதஞ்செய்வித்ததுவே மஹோபகார மென்கிறார்

    முன்பெல்லாம் பெருமான் திருநாமஞ் சொல்லுவதென்றால் வேப்பங்கஷாயம் குடிப்பது போல் வெறுத்துக்கிடந்த நான், இப்போது ஒரு நொடிப்பொழுதும் இடை வீடின்றி, வாமனனே! என் மரதகவண்ணனே! புண்டாரிகாக்ஷனே! என்று பலபல திருநாமங்களையே சொல்லி உன் திருவடிகளைப்பாடியே பணிந்து, ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாத சுத்தமான ஹ்ருதயத்தையுடையேனாய், இனியொருநாளும் ஸம்ஸாரபந்தம் நேராதபடியாகப் பழைய தீயமனம் கெட்டுப்போம்படி பண்ணினாயே!. இங்ஙனே பண்ணின உபகாரத்தின் கனத்தைப் பார்த்தாலோ ஏதேனுமொரு கைம்மாறு செய்யாமல் தரிக்க மாட்டேன்; என்ன கைம்மாறு செய்வதென்று அறிகிலேன்; திருமகள் கொழுநனாய் அவாப்த ஸம்ஸ்தகாமனாயிருக்கின்ற உனக்கு, நான் செய்யத்தக்க தொன்றுமில்லையே! என்கிறார்.

    வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
    காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
    தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
    தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

    வேட்டையின் போது காட்டிலே தொலைந்துபோன ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர் புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமாப் போலே, நானும் ஸம்ஸாரத்தில் அகப்பட்டு “திருமாலே நான் உன் புத்திரன்” என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனென்கிறார்.

    பெருமானே, தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு வருந்துகிறார். என்னாலே நான் கெட்டேன் என்கிறார்,

    நான் ஒரு சூழலிலே அகப்பட்டுக்கிடக்க எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழலிலே புகுந்து வந்தான் என்கிறார். 2.9.9

    சேதநாசேதந வர்க்கங்களையெல்லாம் ஸ்ருஷ்டி ஸமயத்திலே உண்டாக்கியும், ஸ்ருஷ்டிக்கப்பட்டவற்றுக்கு நேரும் ஆபத்துக்களைப் போக்கியும் வேண்டியதைக் கொடுத்து ரக்ஷித்தும் அவற்றினுள்ளே அந்தராத்மாவாயும் ஸ்வாமியுமாய், ஸம்ஹார ஸமயத்திலே தன்னுள்ளேயாம்படியாயும் வைத்து கண்ணபிரானான எளிமையைக்காட்டி நமக்குப் பரம போக்யனாய் ரஸிகனான எம்பெருமான் பிராட்டியோடுகூட நம்முடைய சூழலிலேயே இருக்கின்றான்.

    இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
    எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
    அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
    சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

    இப்படி சூழ்த்துக்கொண்ட காரியம் ஸம்ஸாரிகளான நம்மை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்தது. நாம் பல பிறவிகள் எடுக்கும்போது எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்து என்று பல பல திருவவதாரங்கள் செய்து பலபலமுறை நம்மை சூழ்ந்து நம்மை அகப்படுத்திக் கொள்வதற்காக முயல்கிறான். நாமும் பல பிறவிகள் பிறக்கிறோமானாலும் கருமங்காரணமாகப் பிறக்கின்றோம்; எம்பெருமான் பிறப்பது தன் கருணை காரணமாகப் பிறக்கின்றான்.

    சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
    கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
    வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
    ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

    அவன் பரமபதமாகிய தன் நித்யவிபூதியை இங்கேயிருந்து கொண்டே நிர்வஹிக்கிறான் போலும் என்னும்படி நம்மை ஒரு நொடிப்பொழுதும் விடுகிறானில்லை.

    அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
    கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
    பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
    ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

    குற்றமே வடிவான நம்மீது எம்பெருமான் இவ்வளவு விஷே கடாக்ஷஞ் செலுத்தக் காரணமில்லையே! என்ன காரணமென்று ஆராய்ந்து பார்த்தால் எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று உணர்வீர். அவன் வெறும் மால் அல்லவே, அவன். அவன் திருமால் அன்றோ.

    எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
    தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
    கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
    எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

    உலகுக்கெல்லாம் நிர்வாஹகன். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவன். , எண்ணிறந்த திருக்குணங்களையுடையவன். அக்குணங்களைக்காட்டி நம்மை ஈடுபடுத்திக் கொள்பவன். ஒருநாளுமழியாத பரமபதம் முதலிய ஸகல லோகங்களையும் தன் விபூதியாகவுடையவன். அந்த கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன்.

    திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
    எண்ணின் மீதியன் எம்பெருமான்
    மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
    கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

    இங்ஙனே தாழவிட்டுப் பிறக்கிறது நமக்கு மோக்ஷமளிப்பதற்காக. ‘ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், அஃது எங்களால் கடக்கப்போகாது; வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’ என்று வேண்டுவார்க்குக் காரியம் செய்பவன்.

    அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
    புணர்வது இருவரவர் முதலும் தானே
    இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
    புணைவன்  பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

    பக்தர்களனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலை யிட்டுக்கொண்டு அத்விதீய நாயகனாக விளங்குபவனுமான எம்பெருமானோடுண்டான ஸம்பந்தம் போதும் துயரங்களை விளைப்பதான பிறவி முதலாக மற்றும் அபாரமான ஜராமரணாதிகளான எவ்வகைப்பட்ட துக்கமும் ஸ்பர்சியாத மோக்ஷமளிப்பதற்கு. .

    நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
    நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
    பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
    பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –-2-8-2-

    எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு நான்செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; “ஊன்வாட வுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொத்து, தான் வாடவாடத் தவஞ்செய்யவேண்டா”என்று திருமங்கையாழ்வார் சேதநர்கட்கு உபதேசிப்பதுபோலே, எம்பெருமான் ஆழ்வார்க்கு உபதேசிப்பன்போலும்.

    “உன்னை யாதொரு தபஸ்ஸிலும் கொண்டு க்லேசப்படவில்லை. மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டான். எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருந்தாலும், பிராட்டி ஸம்பந்தத்தை முன்னிட்டிருக்கின்ற திருநாமத்தில் அவனுக்கும் ஒரு ப்ரிதியுண்டு ஆக மாதவன் என்பதன் பொருளாவது, மா-பிராட்டிக்கு, தவன்- நாயகன் என்றபடி. பெருமானின் பல பெயர்களையும் வாயாற் சொல்லிவருமடைவிலே மாதவனென்கிற ஒரு உக்தியும் என் வாக்கில் வந்துவிட்டது; இதையே அவன் பெரிய ஸாதநமாகக் கொண்டான்போலும்.

    மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
    யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
    தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
    கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

    என்னை மாத்திமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமர்த்தியம் என்னே! இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே என்னை நித்யஸூரியென்னலாம்படி திருத்தித் தன்னுடையவனாகக் கைக்கொண்டு, தன்னுடைய அங்கீகாரத்திற்கு விரோதியாயிருந்த என்னுடைய பாபங்களையும் ஓடிப்போம் படி துரத்தி, என்னோடு ஸம்பந்தமுள்ளவர்கள் ஏழேழு ஜன்மமும் தன்னை அண்டும் தன்மையையுடையோமாம்படி செய்யுவிட்டானே! இப்படியும் ஒரு வல்லமை யுண்டோ. !

    இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நம் நெஞ்சுக்கு உரைக்கிறார்.

    நெஞ்சமே, பலபடியாலும் நமக்கு எம்பெருமான் செய்தருளிய உபகாரங்களை அநுஸந்தானஞ் செய்து கொண்டே, அவனை வணங்கு.

    1.10 அவன் லக்ஷ்யம் – நம்மை அடைவதே

    நமக்காக க்லேசப்படுகின்ற எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்திலோ அல்லது திருப்பாற்கடலிலோ எழுந்தருளியிருக்குமிருப்பு நமக்கு இவ்வுலகத்தில் உபயோகப்படுவதன்று;

    ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாம் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்;

    அப்படியாக, அவன் நமக்காக எங்கோ இருந்துகொண்டு க்லேசப்படுவதனால் நமக்கு என்ன ப்ரயோஜனம்?’

    இந்த கேள்விக்கு விடையாக ஆழ்வார் சொல்வதாவது,

    ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப் போலே நம்மை பிடிப்பதற்காக நம்மைச்சுற்றி எங்கும் வ்யாப்தனாகி நின்கிறான்.

    என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
    துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
    உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
    இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

    மேலும் நம்மை அடைவதற்காக அவன் அர்ச்சாரூபியாகி நம்மிடையே திருமலை பெருமாள் கோயில் முதலான கோயில்களில் காத்துக்கிடக்கிறான்.

    பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், திருமலை பெருமாள் கோயில் முதலான கோயில்களிலும் எம்பெருமான் இருப்பதன் நோக்கமே ஸமயம்பார்த்து பக்தர்களின் நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே. எம்பெருமானுக்கு, பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாயும் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே அவன் லக்ஷ்யமாயும் உள்ளது.

    கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
    புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
    நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
    அடியேனது உள்ளத் தகம்–பெரிய திருவந்தாதி 68-

    மேலும் நாம் யாதொன்றை அவனுக்கு ரூபமாக நினைக்கிறோமோ அதையே தன் திவ்யரூபமாகக் கொண்டருளி நம் க்ருஹங்களிலே சித்திரமோ, விக்ரஹமோ, ஸாளக்ராமமோ, நாமுகந்ததொரு த்ரவ்யத்தில் எழுந்தருளப்பண்ணி ஆச்ரயித்தால் அதையே தன் திருமேனியாகக்கொண்டு உகந்து எழுந்தருளி நம்மை அனுக்ரஹிக்கிறான். 3.6.9

    தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
    எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
    அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
    நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

    தன்னைப்பொருத்தவரையில் ஆழ்வார் சொல்வதாவது, இதுவரையில் தான் பல யோனிகளிற் பிறந்தும் அப்பெருமானுக்கு தன்னை வசீகாரிக்கைக்கு உறுப்பான சிறு வ்யாஜமுங் கிடைக்கவில்லையாம். இந்தப் பிறவியில்தான் இவரைக் கைக்கொள்வதற்கு ஒரு சிறு வ்யாஜம் அவனுக்கு கிடைத்ததாம். இப்படி ஜீவாத்மாக்களை அனுக்ரஹிக்காமல் விஷயீகாரிகாமல் இருப்பது அவனால் முடியாது என்கிறார் ஆழ்வார். 2.7.6

    மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
    துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
    எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
    விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

    அநாதிகாலந் தொடங்கி இன்றளவும்வரை எம்பெருமான் எடுத்த அவதாரங்களெல்லாம் அவன் பக்கலிலே நாம் ஊன்றுகைக்காக. அதற்காக அவனைத் தவிர வேறு எந்த உபேயமும் உபாயமும் நாம் வேண்டாதபடி அவனையே துதித்துப்பாடி ஆடும்படியாக நம்மை திருத்திப் பணிகொள்ளும் பொருட்டு, நாம் பிறந்த பிறவிகள் தோறும் தானும் எதிரே வந்து நம்மை வசீகாரிக்கைக்கீடான வடிவுகளைக் கொண்டு பிறந்தருளி நமக்கு வலை போடுகிறான். இதற்கு காரணம் அவன் பரம க்ருபையே.

    ஒரு சேதநனை எம்பெருமான் வசப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அதற்காக அவன் பல திருவவதாரங்கள் செயயவேணுமோ? அவன்தானே வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ளுமளவில் தடுப்பாரில்லையே. அப்படியிருக்க, இவரை வசீகாரிக்க அவன் பல பிறப்புகளை பிறந்தருளினதாகச் சொல்லுகிற இது எப்படி? என்று சிலர் சங்கிப்பதுண்டு.

    இதற்குப் பெரியோர் பணிப்பதாவது-எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்திரம் உள்ளவனேயாகிலும் ஒரு வ்யாஜ மாத்திரமாவது ஒரு காரணமாவது வேண்டும் என்று ஒரு வரம்பு இட்டுக் கொண்டிருக்கிறான்; 2.7.5

    விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
    விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
    விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
    விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

    இவ்வித்தில் மற்றொரு கேள்வி. பக்தர்களை ரக்ஷிக்க எம்பெருமான் அவதாரம் செய்ய வேணுமோ?

    ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையெல்லாம் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹித்துப் போகின்ற பரம சக்தியுக்தனான எம்பெருமான் அந்த ஸங்கல்பத்தைக் கொண்டே ஸாது பரித்ராணமும் செய்தருளக் கூடாதோ;

    “மஹர்ஷிகள் வாழ்க; ராவணாதிகள் மாள்க.” என்று பரமபதத்தில் வீற்றுருந்தபடியே ஸங்கல்பிக்குமளவால் தலைக்கட்டமாட்டாத காரியமில்லையே.

    அப்படியிருக்க, ஏதுக்கு நாட்டில் பிறந்து படாதன படவேணும்?

    அதற்கு ஆழ்வார் சொல்வதாவது,

    ஸாதுக்களை ரக்ஷிப்பதாவது என்ன? அவர்களது அநிஷ்டங்களைத் தவிர்த்து இஷ்டங்களைக் குறையறக் கொடுத்தருள்வதுதானே அவர்களை ரக்ஷிப்பது.

    எம்பெருமானை நேரில் ஸேவிக்கப் பெறவேணும் என்பதுதானே அவர்களின் ப்ரார்த்தனை. இதை எங்ஙனே ஸங்கல்பத்தினால் தலைக்கட்ட முடியும்? நேரில் எழுந்தருளி ஸேவை ஸாதித்தேயாக வேண்டுமன்றோ.

    ஸ்ரீகஜேந்திராழ்வான் முதலையின் வாயிலகப்பட்டுத் துடித்து ‘ஆதிமூலமே’ என்று கதற அக்கூக்குரல் கேட்டு அரை குலையத் தலைகுலைய மடுவின் கரையிலே வந்துநின்ற எம்பெருமானை நோக்கி என்றேனுமொருநாள் அழிந்தே போகக்கூடியதான இந்த வுடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நான் கரைந்தேனில்லை; எம்பெருமானே உன்னை நேரில் ஸேவித்து உன்றன் பொன்னடிகளில் இத்தாமரை மலர்களைப் பணிமாறுவதற்காகவே கரைந்தேன் என்றான்.

    இப்படிப்பட்ட பக்தசிரோன்மணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்டுதல் எங்ஙனே ஸாத்யமாகும்? இருந்தவிடத்தேயிருந்து ஸங்கல்பத்தைக்கொண்டே ரக்ஷித்தால் அடியார்க்காக ஓடிவந்து உதவுமவன்’ என்கிற ப்ரஸித்தியாலுண்டாகும் தேசு மறைந்தொழியுமன்றோ 3.1.9

    மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
    தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
    மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
    தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

    2. எம்பெருமானை அடைய ஆழ்வாரின் ப்ரார்த்தனைகள்

    2.1 நான் கெட்டுத்திரிகின்றேனே. என்னைக்காப்பாத்து

    1. பரமனே, இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.
    என்னை இந்த விஷயாந்தர வேட்கைகளில்லாதபடி செய்து என்னை உன் திருவடிகளிலேயே கைங்கர்யம் செய்யும்படி செய்துகொள்ள வேணும்.

    2. எம்பெருமானே நீ கொடுத்தருளின சரீரத்தினுடைய வழியிலேயே நடந்து கெட்டுத் திரிகின்றேன். என் மன வ்யாதிகள் தீரும்படி கரும பந்தங்களை வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று அடியேன் மஹோபகாரனான) உன்னை அடையப் பெறுவது இனி என்றைக்கோ. 3.2.1

    முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
    அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
    வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
    எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

    3. என்னுடைய புலன்கள் பெரும் குழிகள். எத்தனை விஷயபோகம் அனுபவித்தாலும் இவை நிறம்பா. மேலும் மேலும் ஆசை பெருகியே நிற்கும். பெருமானே நீர் ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான என் தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்வழி தந்தருள வேணும் பிரானே! 3.2.4, 5.8.4, 5.8.6

    சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
    ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
    வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

    செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
    உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
    அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

    சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
    ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
    யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

    4. உன் அவதாரங்களுக்கும் நான் தப்பினபடியால் உன் திருவடிகளொழியப் புறம்புண்டான விஷயங்களில் என் நசையெல்லாம் அற்று உன்றன் பொன்னடிகளில் பரம போக்யமான கைங்கரியத்தை நான்பெறும்படி இன்னுமோர் திருவவதாரம் பண்ணியாகிலும் செய்தருளவேணும்.

    5. எம்பெருமானே!, பிரளயத்துக்குள்ளிருந்து பூமியை उदधृतासि वराहेण कृष्णेन शतबाहुना என்று நிர்ஹேதுகமாக வராஹவுருக்கொண்டு எடுத்தாப்போலே, என்னிடம் ஒரு காரணம், உபாயம், ஸாதனம் என்று நோக்காமல் ஸம்ஸார வெள்ளத்துக்குள்ளே அலைந்துழல்கின்ற என்னையும் எடுத்தருளி நானும் உன் அடிமை செய்யும்படியாக செய்யவேண்டும். 5.7.6

    ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
    வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
    தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
    வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

    6. தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே. யானே என்னாலே நான் கெட்டேன்.

    எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழலில் வந்து புக்குத் திரிய, நானே விநாசத்தைச் தேடிக்கொன்டேனே.

    ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர் புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமா போலே, நானும் ஸம்ஸார சூழலில் சிக்கி நாண் திருமாலுக்கு அடியேன்” என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனே.

    ஆனால் நான் என்னதான் திருந்திவிட்டாலும், நான் இரக்குமிடம் இந்த ஸம்ஸாரமேயாகையால் இப்போதிருக்கும் என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? இப்போது நான் “யானே நீ யென்னுடைமையும் நீயே” என்றிருப்பதுபோலவே முற்றிலும் இருப்பேனென்று நம்பமுடியாதே.

    இப்போது திருந்தியிருக்கின்ற நான், அநாதி காலமாக அஹங்காரமமகாரங்களினால் மாய்ந்து போனேனே. என்னைத் உன் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’. 2.9.9

    யானே என்னை யறியகிலாதே
    யானே என் தனதே என்று இருந்தேன்
    யானே நீ என்னுடைமையும் நீயே
    வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

    7. என்னிடத்துள்ள நீசத்தன்மையைநோக்கி அகன்றுபோக என் பல்வினையை ஸௌசீல்யகுணத்தாலே போக்கி என்னை அபிமுகனாக்கிக் கொண்டவனே! நித்யாநுபவம் பண்ணிக்கொண்டிருக்கிற நிதய் முக்தாகளின் திரளிலிருந்து, என்னை சீலகுணத்தாலே அகப்படுத்திக்கொள்ள இங்கு வந்தவனே! என்னை இன்னமும் சிக்ஷியாதே உடனே உன் தேனேமலரருந்திருப்பாதம் சேருமாறு அருளாய். 1.5.6

    வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
    மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
    சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
    இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

    2.2 என்னிடம் அனுஷ்டானம் ஒன்றில்லையே. என்னைக்காப்பாற்று

    1. உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களானவற்றை எப்படியாவது நினைக்கவே நான் பார்க்கின்றேன்;

    இவை ஒவ்வொன்றும் சிந்திக்கும் போதெல்லாம் என் மனம் நெருப்பிலேயிட்ட மெழுகுபோலே நின்று நெஞ்சை உருக்குகின்றனவே. நெஞ்சு சிதிலமாகாதலிருந்தாலன்றோ நினைக்க முடியும். இப்படிப்பட்ட விலக்ஷணகுண சேஷ்டிதங்களைக் கேட்குந்தோறும் என்னெஞ்சம் நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவிபோலே சொரிகின்றதே; இதனால் ஒன்றும் ஒழுங்குபட நினைக்க முடியவில்லையே!

    உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ?

    பிரானே! உருகாதே கரையாதே தரித்துநின்று உன்னைப் பேசி உன்னையநுபவிக்க வல்லேனாம்படி பண்ணி உன்னை மகிழும்வகைக்கு நீயே உபாயம் சொல்லியருளவேணும். 5.10

    பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணா! உன்
    சிறந்த
     குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
    சேர்ந்தனுபவிக்கும்
     நிலை செய் என்ற சீர் மாறன்
    வாய்ந்த பதத்தே மனமே! வைகு–59-

    2. ஒரு ஸதானுஷ்டானம் பண்ணி உன்னை அடைய முடியாதபடி உன் ஸௌந்தர்ய குணங்களில் ஈடுபட்டு சிதிலனாகிவிட்டேன். ஆகவே பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்களது வகுப்பிலே சேர்ந்து உன்னை அநுபவிக்க முடியாதவனாகிவிட்டேன் ஆதலால் அங்குற்றேனல்லேன்.

    உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்;
    உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடந்து, எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேனாகையினாலே உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன்

    ஆகவே இங்குற்றேனும் அல்லேன்.

    ஆக, பரமபத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவன் அல்லேன்.

    உன்னையே உபாயமாக நம்பியிருந்த சீதா பிராட்டியை தடையெல்லாம் நீக்கி காத்தருளினபடியே என்னையும் நீ காத்தருளவேணும்.5.7.2

    அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
    எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
    திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
    சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

    3. சரண்யனே, பலன் பெரும் வகையில் எனக்கு யோக்யதை என்று ஒன்றுமில்லை. என் கையிலே கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் இல்லை.

    கர்மாநுஷ்டானத்தின் மூலமேயே ஸ்வஸ்வரூபஞானம் ஏற்படும். ஆகவே ஸ்வஸ்வரூபஞானம் இல்லை. ஸ்வஸ்வரூபஞானம் இல்லாத்தால் பரஸ்வரூபஞானம் இல்லை. ஆனாலும் உன்னை மறந்து பிழைக்கமாட்டிற்றிலேன். உன்னையும் அறியாதே

    என்னையும் அறியாதே இருந்த அன்று உன்னை இழந்தேன். உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்று உன்னை இழக்கமாட்டேன்.

    2.3 எனக்கு நீயே சரண். என்னை ஏற்றுக்கொள்

    1. நான் இறக்கும் தருவாயிலும், நான் உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணியருள வேணும். கையும் திருவாழியுமாயிருக்கிற இருப்பைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமானே! நான் உம்மிடத்து துக்க நிவ்ருத்தியை விரும்புகின்றேனல்லேன்; நெஞ்சிலே கோழைகட்டிப் போய்த் தடுமாறும்படியான நிலைமை நேர்ந்தாலும் நேருக; அப்போதும் உன் திருவடிகளில் பக்தி குலையாமே துதிக்கும்படி செய்தருளினாற்போதும். எம்பெருமானே! எனக்கு எப்படிப்பட்ட துர்க்கதி நேர்ந்தகாலத்தும், சிந்தனைமாத்திரம் உன்னைவிட்டு அகலாதிருக்குமாயின், அவ்வளவே நான் உய்யப் போதுமானது 2.9.3

    செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
    கையார் சக்கரக் கண்ண பிரானே
    ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
    எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

    2. என்னை நியமித்துக் கொண்டு, நீ என்னெஞ்சினுள்ளேயே வந்து கிடக்கவேணும் நிலாத்தென்றல் சந்தனம் தண்ணீர்முதலிய பொருள்கள் போல, தனககேயாக என்னைக் கொள்ளவேணும் இவ்வளவே நான் விரும்பும் புருஷார்த்தம். 2.9.4

    எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
    மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
    தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
    எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

    3. ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; தேவரீர் கர்மம் காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்தும் ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிற்றே, அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாக நிலை நிறுத்த வேணும். 2.9.5

    சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
    இறப்பில் எய்துக எய்தற்க யானும்
    பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
    மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

    4. என்னை உன்னை அநுபவிப்பது நியதஸ்வபாவமாகும்படி பண்ணியருள வேணும். விசித்ர ஸ்ருஷ்டிகளைப் பண்ணவல்ல நீ, என்னுடைய ஹ்ருதயம் உன்னையநுபவித்து மகிழ்ச்சியையுடையதாம்படி பண்ணவேணும். என்னுடைய வாக்கும் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ணவேணும். என்னுடைய வியாபாரமும் உகப்போடு செய்யும் கைங்காரியமாகவேணும். நானுன்னையநுபவிக்குமாறு வந்தருளவேணும். 2.9.6

    மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
    மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
    மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
    மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

    எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன்’ 2.9.8

    எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
    எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
    மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
    அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

    5. கஜேந்திராழ்வானுக்கு உதவ ஆகாசத்தில் நின்றும் வந்து தோன்றினாப்போலே எனக்காகவும் வந்து தோன்றுகிறாயோவென்று அகாசத்தை நோக்குகிறேன்காண். நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவதும் தொழுவதும் செய்து நிற்கிறேன். சிறுவர்களைப்போலே அழுவது, பெரியார்களைப்போலே தொழுவது எல்லாம் செய்கிறேன்.

    குடந்தைகிடந்த மாமாயா திருக்குடந்தையிலேவந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண்வளர்ந்தருளுகிறது எதற்காக? நான் உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணியருளவேணும். என் உடலும் கட்டுக்கலைந்து தளர்ந்துகொண்டே போகிறது. என் ப்ராணனும் விரைவில் நீங்கும், ஆனால் உன் சக்திக்கு குறையொன்றுமில்லையே. நீ உன் சரமச்லோக ப்ரதிக்ஞா வார்த்தையை காப்பாற்றமாட்டாயோ. 5.8.8

    களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
    வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
    தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
    இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

    6. பெருமானே! என்னையும் எல்லோரையும் அடிமை கொள்வதற்காக எவ்விடத்தும் வியாபித்து விருக்கிறவனே! உன் இந்த அருளும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே காட்டியருள வேணும்.

    7. உன் திருவடியே சுமந்துழல பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்தாபோல எனக்கும் அருளவேணும். 4.9.9

    கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
    ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
    வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
    கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

    8. சேதநர்கட்குப் புருஷகாரஞ் செய்வதையே தொழிலாகவுடைய பெரிய பிராட்டியாரை திருமார்பிலே கொண்டு அதனால் மாதவனென்னுந் திருநாமமுடையோனே! கூனியின் கூன் நிமிர்ந்தவனே!, மதுசூதனே!, உன்னுடைய பரம போக்யமான திருவடிகளை நான் பெறும்படி அருள்புரியவேணும். பிராட்டி திருமார்பிலே நித்ய ஸந்நிதாநம் பண்ணியிருக்கும்போது அருளாமைக்குக் காரணமில்லையே ! 1.5.5

    மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
    கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
    வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
    தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

    9. பிரானே! உன் திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; நின் திருவடியை என் தலைமேல் சேர்த்தால், ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்யம், ஸாயுஜ்ய மென்கிற நான்கு மோக்ஷ ஸாம்ராஜ்யங்களும் இதிலேயே அடங்கிவிட்டனவாகும். வேறு எதுவும் நான் எஞ்ஞான்றும் வேண்டமாட்டேன். 2.9.1

    எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
    செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
    கைம்மா துன்பம் கடிந்த பிரானே
    அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

    10. தம்முயற்சியால் ஒருவர்க்கும் அணுக வொண்ணாத உம் திருவடிகளை, நான், அணுகும்படி பண்ணவேணும்.2.9.2

    ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
    மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
    எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
    கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

    11. உன் திருவடிகளின் நிழல்போலவும் ரேகை போலவும் என்னை ஆக்கி வைக்க வேணும். 2.9.10

    ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
    நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
    தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
    வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

    2.4 எம்பெருமானே, செவி சாய்க்க மாட்டாயா?

    1. பெருமானே, இவ்வளவு கூவியும் நீ செவிசாய்க்கவில்லை என்றால் என் பாபம் தானே காரணமாக இருக்கவேண்டும். நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லிப்போனாலாகாதோ.4.7.3

    ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
    தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
    கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

    2. அநுக்ரஹம் செய்யத் திருவுள்ளமில்லையாகிலும் ‘நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று நிக்ரஹித்து விட்டேனென்றாவது கண்முன்னே வந்து நின்று சொல்லிப்போனாலாகாதோ? சொல்லுகிற இந்த வார்த்தையாவது என் முகத்தை நோக்கி நீ சொல்லுவாயாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே.

    எம்பெருமானே, எனக்கு மகனாய் நீவரவேண்டும் என்று கேட்காதவர்களுக்கும் மகனாக பிறந்தாய். உன் திருவடி ஸம்வந்தம் கேட்காதவர்க்கும் த்ரிவிக்ரமனாக உலகளக்கும்போது, அவர்கள் சிரஸின்மீது திருவடி வைத்து அருளினாய். உலகம் முழுமைக்கும் க்ருபை செய்த நீ என்மீது க்ருபை செய்யலாகாதோ. கண்ணெதிரே வந்து ஸேவைத்தந்தருளலாகாதோ?

    என்னை நீ பாவியென்றாலும் அதில் எனக்கொரு ஆக்ஷேபமில்லை; உன் திரு மிடற்றோசை கேட்கவேண்டுவதே எனக்கு அபேக்ஷிதம்; ஆகவே நீ என் கண்ணுக்கு இலக்காகி வந்து சொல்லவேணும்.உன்னைக்காணாதவளவில் என் உயிர் பிரிய வேண்டுமோ.

    எம்பெருமானே, நீ எனக்கு ஞானம் கொடுத்தருளினாய். ஆனால் அதைக்கெண்டு உன்னை அடையவிடாமல், என் ஆத்மாவை ஓர் அழுக்குடம்பில் வைத்து புண்யபாபரூபங்களான பலவகைப் பாசங்களால் கட்டி மாம்ஸம், மேதஸ், இவைகளால் நாற்புறமும் சுவர் எழுப்பி நான் உன்னை அநுபவிக்க விரோதியாய் நிற்கச்செய்து உன்னை அடைய ஸாத்யமாகாதபடி ஸீதையை அசோக வனத்தில் வைத்தாற்போல் புறமே போர வைத்திருக்கின்றாயே, இது ந்யாயமா !.5.1.5

    கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
    நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
    திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
    புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

    3. எம்பெருமானை அடைய ஆழ்வாரின் துடிப்பு

    இப்போது ஆழ்வார் தாமான தன்மையில் இல்லை; எம்பெருமானின் நாயகியாக, பராங்குசநாயகியாகி பெருமான் மீது காதல் கொண்டுள்ளார்.

    எம்பெருமானும் பராங்குசநாயகியின் காதலுக்குத் தான் இலக்காகப் பெற்று அதையே தனக்குப் ஸூவர்ணமயமான ஒளிமிக்க கிரிடம் முதலாகிய திருவாபரணங்களாகவும். பீதாம்பரமாகவும் அபிமானித்திருந்தான்.

    எம்பெருமான் தன் பூமாலைகளாக ஆழ்வாரின் சொல்மாலைகளை ஏற்றுக் கொண்டான். ஆழ்வாரின் அஞ்ஜலியால் தன்னை ஸர்வாபரண பூஷிதனாகக் கருதினான்,

    அது கண்டு ஆழ்வார், பெருமானைப்பார்த்து, என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய் ஏழுலகமும் முற்றுமாகி நின்றவனே,
    ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப்போலே என்னைப்பிடிக்கைக்காகவே வ்யாப்தனானவனே,
    என்னை பெற்ற ப்ரீதியாலே அந்தவ்யாப்தி ஸபலமானதாக நினைத்து மிகுந்த ஆனந்தம் அடைந்தவனே!
    என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு உன் ஸவ்ரூபம் நானிட்ட வழக்கு என்கு களித்துக் கூத்தாடினார்.

    ஆனால் இவை எல்லாம் வெறும் பாவனையாகவே இருக்க, ஆழ்வார் எம்பெருமானோடு உண்மையாகவே சேர ஆவலாக உள்ளார்.

    3.1 பராங்குச நாயகியின் பரவை விடு தூது- 1

    3.1.1. ஆண்டாளைப் போலே .பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குச நாயகி தன் ஸமீபத்திலிருப்பதொரு நாரையைப் பார்த்து, ‘நாராய்! நீ என் நிலைமையை எம்பெருமானுக்கு அறிவித்து என்னையும் அவனையுஞ் சேர்க்க வேணும்’ உன் நீ அழகிய சிறகுகள் படைத்திருப்பது எனக்காக விரைந்து தூது செல்லுவதற்கன்றோ. அவன் என்னை புறக்கணித்து விட்டுப் போயிருக்கும் ஸமயத்திலே என் வருத்தங்களை முறையிட்டுக் கொள்ளலாம்படி வந்து முகங்காட்டின உன் கருணையே கருணை. அவனோடே கலந்து பிரிந்து அவனை மீண்டுங் கண்ணாலே காண்பதெப்போதொவென்று விடாய்த்துக் கிடக்கிற என் விஷயத்தில் கருணைகூர்ந்து, விரஹம் தின்ற என் வடிவைக் கண்டு இரங்கி நீயும் நின் சேவலுமாய் பெண்ணும் ஆணும் விட்டுப்பிரியாமல் தூதுபோகவேணும். அடியார்களை நோக்குவதற்கென்றே அவர் கொடிகட்டிக் கொண்டு இருக்கின்றாராதலால் நீங்கள் சென்று சிறிது ஞாபகப் படுத்தினாலேயே, யானைக்கு ஓடி வந்ததுபோல் அரை குலையத் தலைகுலைய ஓடிவருவார். இராமபிரான் மாருதியை இலங்கைக்குத் தூதுவிட்டான்; ஆதலால் என்விடு தூதாய்ச் சொல்வது உங்களுடைய பாக்கியமேயாகும்.

    அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
    அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
    வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
    வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

    3.1.2 இனககுயில்காள்! = என்னைப்போலே நீங்களும் தனியாயிருக்கவில்லையே; கூடிக்களித்திருக்கின்ற நீங்கள் ஸந்தோஷமாக இது செய்யலாமே. அவனோடு கலந்து பிரிந்து வெறுந்தரையாயன்றோ நானிருக்கிறேன்; இப்படிப்பட்ட தாமரைககண் பெருமானாரிடம் எனக்குத் தூதாய்ச் செல்லுகை தருமமன்றோ. எனக்காக அவன் பக்கலிற்சென்று என் நிலைமையை அறிவித்தால் போதும்; அநாதிகாலமாகத் ஸதநாநுஷ்டானம் பண்ணாத நான் திரட்டின பாபத்தாலே அவன் திருவடிவாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுதற்கு ஏற்கவே பாக்யம் பெறவில்லை. இப்போது திருவடியைவிட்டு விலகியே போய்விட்டேனே. என் கையிலே ஒன்று மின்றியே அவன் கையையே எதிர்பார்த்திருக்குமிந்த நிலைமையிலும் அவனை இழப்பதுண்டோ? என்று கேளுங்கோள்.

    என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
    என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
    முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
    முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

    3.1.3 மென்னடைய அன்னங்காள் உங்களுடைய பாக்கியமே பாக்கியம்! நீங்கள் சாஸ்திரப்படியே மணந்து கொண்டதனாலன்றோ பிரிவுத்துயரம் விளையப்பெறாமலிருக்கின்றீர்கள்; நான் அப்படியன்றியே காந்தர்வ விவாஹம்போல் மனப்பாங்கினால் கூடினபடியாலன்றோ இப்போது இங்ஙனம் பிரிவாற்றாமையெய்திப் பரிதபிக்கின்றேன். தலைவன் பிரிந்துபோம்போது அங்ஙனம் போகவொண்ணாதபடி வளைத்துத் தடுத்து நிறுத்திக்கொள்ளாமற்போனேனே! மதிகேடியானேனே! தன் புத்தி சாதுர்யத்தினால் வாமன்னாய் சென்று, உலகை மீட்ட கள்வனிடம் தூது செல்லவேண்டும். ஒருத்தி அறிவழிந்து வருந்திக் கிடக்கின்றாளென்று சொல்லுங்கோள். அளவில்லாத பாபங்களை அநுவரதமும் செய்கின்ற ஜனங்கள் நிறைந்த இவ்வுலகின்கண் தானொருத்தி செய்த பாவந்தானா அனுபவித்தும் மாளாதது? என்று கேளுங்கோள். அரைகுலையத் தலைகுலைய ஆனைக்கு உதவ ஓடிவந்தாப்போலே கடுக ஓடி வரும்படி சொல்லுங்கோள்.

    விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
    மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
    மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
    மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

    3.1.4 பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறிது அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? பிரிவில் தரிக்கமாட்டாத என்னுடைய ஸ்வபாவத்தை நன்றாகக் கண்டு வைத்தும் ‘ஐயோ? இப்படிப்பட்டவளையோ விட்டுப் பிரிவது!, ஒருகாலும் பிரியத்தகாது’ என்றிராத என் நீலமுகில்வண்ணர்க்கு என்ன ஸமாசாரம் சொல்லுவேன். நான் இங்கே நிறம் இழந்து பசலையால் பீடிக்கப்பட்டு தவிக்கிறேன். என்னோடு முன்பு கலந்ததனாலே நீலமுகில் வண்ண மேனி நிறம் பெற்றவர் ‘என்னைவிட்டுப் பிரிந்தபின்பும் நிறம் அழியாமல் நீலமுகில் வண்ணராமேயிருக்கின்றாரே. என் நிறம் மட்டும் போய் அவர்க்குப் பிரிவாற்றாமையுமில்லையே, பசலை நிறம் வந்து அவர் வெளுத்துப்போகவில்லையே. அவருக்கு என் சொல்லி யான் சொல்லுகேன். நான் சொல்லியனுப்பவேண்டம்படியாக இருக்கிறவர் உங்கள் வார்த்தைகேட்டா வரப்போகிறார்? இன்றளவும் ஒருவாறு தங்கியிருந்தாலும் இனி ஒரு நொடிப்பொழுதும் தங்காதென்று சொல்லுங்கோள்.

    என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
    என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
    நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
    நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4

    3.1.5 நீர் நிறைந்திருக்கும் படியான கொடித்தோட்டங்களிலே இரைதேடுகின்ற குருகே! எப்போதும் நீர் வெள்ளமிட்டுக்கொண்டேயிருக்கின்ற கண்களையுடைவளான என்னைப் பாருங்கள். கூடியிருக்குங்காலத்திலோ ஆனந்தக்கண்ணநீர்; பிரிந்திருக்குங்காலத்திலோ சோகக்கண்ணீர். யாரும் கேட்காமலேயே உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்கு உதவலாகாதோ. ஸர்வ ஜந ரக்ஷணம் பண்ணுகிறவர் ஸ்வ ஜந ரக்ஷணம் பண்ணலாகாதோ? நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்த:புரத்துக்கு அரிதாகவேணுமோ? ’

    நாராயணன் என்ற சொல் ஸகல சேதநங்களுக்கும் தான் இருப்பிடமாய் அவற்றையும் தான் இருப்பிடாகவுடையனாயிருக்கும் பெருமானையன்றோ குறிக்கிறது. நார-பதத்தின் அர்த்தத்தினாலே நான் அவரைச் சேர்ந்தவளல்லேனோ? என்னைவிட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்?. நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல்லோக ஸம்ரக்ஷகனென்றும் விருதுசுமக்கின்ற அவர்க்கு என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் பெற்ற பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக்கொள்ளும்படி சொல்லவேணும்.

    கள்ளிச்செடிக்கு மஹாவ்ருக்ஷமென்று பேர் இருப்பதுபோலே அவர்க்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டதோ? அவர் திருநாமத்திற்கு அர்த்தபுஷ்டி இல்லையோ என்று கேளுங்கோள்.

    நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
    நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
    மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
    மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

    3.1.6 கம்பீரத்தன்மையும் அழகும் பொருந்திய வண்டே! எம்பெருமான் இப்படி உபேக்ஷிக்கும்படி என்ன பாவம் பண்ணினோம்!; எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து கெட்டபெயர் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே சரி என ஒருகால் திருவுள்ளம் பற்றி இருக்கக்கூடும். அப்படியானால், அவருக்கும் அவத்யம்வராமல் எனக்கும் அவர் ஸம்பந்தம் கிடைக்க ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு பராங்குசநாயகி இருக்கிற வீதிவழியாகக் கருடனை ஒருநாள் செலுத்தவேணுமென்று சொல்லவேணும். எங்கள் தெருவே போனால் அவருக்கும் அவத்யம் வாராது. ஜன்னல் வழியே அவரை நோக்கி நானும் என் ஆசை தணிந்து ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய்.

    அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
    அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
    அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
    அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

    3.1.7 நான் வளர்த்த இளங்கிளியே! வடிவில் பசுமையாலும் வாயில் பழுப்பாலும் மழலைச் சொற்களாலும் எம்பெருமானை அநவரதம் நினைப்பூட்டிக்கொண்டு என்னை வருத்துகின்ற கிளியே! என்னால் வளர்க்கப்படுகிறவர்கள் எல்லாரும் எனக்குத் தீங்கிழைப்பதென்றே வழக்கமாய்விட்டது; எம்பெருமான் இப்போது எனக்குத் தீங்கிழைப்பதும் என்னுடைய ஸம்பந்தமே காரணமாகவன்றோ; அதுபோலே என்னுடைய ஸம்பந்தமே காரணமாக நீயும் எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருப்பது வியப்பன்று; என்னால் வளர்க்கப்பட்டவனன்றோ நீ.
    அபராத ஸஹத்வமென்று, குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர்தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்கவேண்டவோ. எனது பிழைகளை மாத்திரம் நினைந்தாரேயல்லது, பிழை பொறுக்கவல்ல தமது க்ஷமாகுணத்தை நினைத்தாரில்லையே. அதனை மறந்தாப்போலே எனது பிழைகளையும் மறந்தாலாகாதோ?

    பிழையுடையார் பக்கலிலே அருள் செய்யாவிடின் இவர் எங்ஙனம் திருமாலாக இருக்கமுடியும்? அநுக்ரஹமே வடிவெடுத்தவளென்றும் நிக்ரஹமென்பதைக் கனவிலுங் கண்டறியாதவளென்றும் புகழ் பெற்றவளான பிராட்டிக்கு இவர் மணவாளராகில் அவளது உபதேசத்தின்படி நடக்கவேண்டியவரன்றோ இவர். பிழைசெய்யாதவனே உலகில் இல்லை என்று சொன்ன ஸீதா பிராட்டியோடே இவர் ஸம்பந்தம் பெற்றுவைத்து இங்ஙனே பிழைகண்டு உபேக்ஷித்தல் தகுதியோ இப்படி அவர் பிழைகண்டு ஒதுங்குகின்றாரென்பதைப் பிராட்டியறிந்தால் அவள் தானும் பிறகு இவர் முகத்திலே விழிப்பளோ?
    இளங்கிளியே! ‘இப்படி அருளாதிருக்கலாமா?’ என்று அவரிடத்துச் சென்று கேள்;

    அதற்கு அவர், “குற்றங்களை அளவில்லாதபடி செய்து வைத்திருந்தால் நாம் எப்படி அருள் செய்யக்கூடும். அங்ஙனஞ் சொன்னால் தேவரீருடைய கருணைக்கு இடையூறாக என்ன பிழை செய்தாள்? “தேவரீருடைய கருணை தாராளமாகப் பெருகலாம்படி அவள் இருக்கிறாளேயொழிய அக்கருணை தடைபடும்படி ஒரு அதிப்ரவ்ருத்தியுஞ் செய்த்தில்லையே. ’தேவரீருடைய கருணைக்கும் அப்பால் அவள் என்ன பிழை செய்தாள் என்று கேள்.

    இந்த வொரு வார்த்தையை மாத்திரம் நீ அங்குச்சென்று சொல்லவேணும். நீ என்னால் வளர்க்கப்பட்டவனாயிருந்து இவ்வளவு உபகாரமுஞ் செய்யலாகாதோ?

    என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
    என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
    என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
    என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

    3.1.8 நான் வளர்க்கும் பூவை பக்ஷியே. என் தலைவரோ பக்தர்கள் பக்கலில் பைத்தியம் பிடித்தவர். நானும் தூதுவிட வேண்டுமளவான பைத்தியம் பிடித்தவள்; ஆகவிப்படி இருவரும் அன்பார்ந்திருக்கும்போது இடையிலே சேரவிடுவார் வேண்டுமத்தனையே. அது உன்னாலாகக் கூடியதாதலால் ‘என் நோயை அங்குச்சென்று தெரிவிப்பாய்’ என்று உன்னைப் பல்காலும் வேண்டினேன். இருந்தும் என்னை நீ உபதேக்ஷித்திருந்துவிட்டாய்.
    நான் எதுசொன்னாலும் விரைந்து செய்து முடிப்பதே இயல்பாக, ‘எப்போதும் உத்ஸாஹமாகவேயிருக்கு மியல்வுடைய நீ இப்போது என் நிலைமையைக் கண்டு வருந்தாமல் ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்ட பிறகும் எனக்காகத் தூது செல்லாமல் இருக்கிறாயே. நீ இதுவரையில் இருந்த மாதிரியில்லையே. நானோ இப்போது என் நிறம் நீங்கி, பசலை நோயால் பீடிக்கப்பட்டு மிக மெலிந்து முடியும் நிலையில் இருக்கிறேன். இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய்.

    நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
    நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
    சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
    வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

    3.1.9 ஓ வாடைக்காற்றே! அங்குமிங்கும் திரிகின்ற குளிர்ந்தகாற்றே! என்றபடி அங்கே அந்தரங்கமாய்த் திரியவல்ல காற்றே. இப்போது எனது சரீரம் எலும்பும் நரம்புமேயாம்படி மிகவும் மெலிந்து போயிற்று. எலும்பிலே துளைத்து நூலைக் கோத்தால் எவ்வளவு ஹிம்ஸையாயிருக்குமோ, அவ்வளவு ஹிம்ஸையைச் செய்கின்றையே.

    பகவானை ஆராதிப்பதற்கென்றே நமது கரணகளேபரங்கள் ஏற்பட்டுள்ளன. மலர்போலே எம்பெருமானுக்குப் பரமபோக்யமான ஆத்மபுஷ்பத்தை ஸமர்ப்பித்து எம் பெருமானின் இணையடிக்கீழ்“ அடிமை செய்வதற்காகவே நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட நான் இங்ஙனே எம்பெருமானைவிட்டுப் பிரிந்து துரத்ருஷ்டத்தில் இருப்பது ஏனோ! “நித்யகைங்கர்யத்துக்கு இட்டுப்பிறந்தவஸ்து இப்படியிருக்கக்கடவதோ”. ஏதுக்காக இவ்வாத்மா இப்படி அநர்த்தப்பட்டு கிடக்கவேணும்? என்கிற இவ்விஷயத்தை எம் பெருமானிடத்து விண்ணப்பஞ் செய்து, அதற்குப் பிறகும் அவன் காது கொடாது, என்னிடம்ருந்து வரும் கைங்கரியம் நமக்குவேண்டா’ என்றிருந்தானாகில் நீ அவனோட்டைப் பிரிவுக்குச் சிளையாத என்னுடலை நீ அவச்யம் வந்து முடித்துவிட வேணுமென்று காலைப்பிடித்து வேண்டிக்கொள்கிறேன்.

    நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
    வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
    வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
    ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

    3.1.10 என் நெஞ்சே! நம் காரியம் ஒருவிதமாக முடியும்வரை நீ அவனை விடாதே யிருக்கவேணும். ஆச்ரித விரோதிகளைத் தொலைப்பதற்காகத் திருவாழியுங் கையுமாகவே கண்வளர்ந்தருளுகிறான் பெருமான். . அப்படிப்பட்ட எம்பெருமானைக் காண்பது அரிது; பாக்யவசத்தாலே அவனை காணப்பெற்றால் இவ்வாத்மா ஸம்ஸாரத்திலிருந்து விட்டு நீங்கி மோக்ஷம் அடைவதற்கன்றோ தேவரீரும் முயற்சி செய்கின்றது என்பதாகச் சொல்லவேண்டும்.

    சுழன்று வருகிற பேதை நெஞ்சே! நாம் பிறந்ததற்குப் பயன் அவரைக்கிட்டி அடிமை செய்கையாயிருக்க. அது செய்யாதே இங்ஙனம் பிரிந்து பரிதபிக்கும்படியான பாபத்தைப் பண்ணிக்கிடக்கிற நாம் அவரோடே சேருகிறவரையில் அவரை நீ விடாதே அநுவர்த்தித்து என்னைச் சேர்க்கப்பாராய்.

    உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
    கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
    அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
    விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

    3.2. தன் விரஹத்தை எங்கும் காணுதல்

    3.2.1 கடற்கரைச் சோலையில் உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, பராங்குச நாயகி அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் வெளுத்துவிட்டதாகக்கொண்டு

    என்தாய் உறங்கினாலும் நான் உறங்குவதில்லை. என் உறக்கமின்மை கண்டு வருந்தி என் தாயும் உறங்காள். என்னைப்பெற்ற தாயும், உறங்காதிருக்கும் தேவலோகமும் உறங்கினாலும் நீ உறங்குவதில்லையே! இதற்குக் காரணம் என்ன;

    உள்ளம் உருகி நைந்து அதனாலே பயலை நிறம் விஷமேறினாற்போலே உடம்பிலே வியாபித்து, நான் நோவுபடுவது பகவத் விஷயத்திலீடுபட்டதனாலே;

    என்னைப்போல் நாயும் வெளுத்திருக்கிறாயே. என்னைப்போலவே நீயும் திருமாலால் நெஞ்சு கொள்ளை கொள்ளப் பெற்றாயோ. நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ.

    வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
    ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
    நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
    நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

    3.2.2 அன்றில் பறவை ஆணும் பெண்ணும் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாய் அலகைக் கோத்துக்கொண்டு உறங்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் கூவும். அப்படி அவை கத்துகிற குரல் பராங்குச நாயகியின் திருச்செவியிலே விழுந்தது.

    தழதழத்த குரலையுடைத்தான அன்றிற்பறவையே! நெஞ்சு பறியுண்டு நெடும் போதாக வருந்திக்கிடக்கின்றாயே! அடிமைப்பட்ட என்னைப்போலே பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற நீயும் அரவணைமேல் பள்ளிகொண்ட முகில் வண்ணணுடைய துழாய் மாலையை ஆசைப்பட்டு இப்பாடுபடுகிறாயோ?

    கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
    சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
    ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
    தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

    3.2.3 கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவதும் வடிவதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லயிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வந்து கரையேறமாட்டாதே கத்துகின்றதாகக்கொண்டு,

    உறங்குவதற்கென்று ஏற்பட்டது இரவு; விழித்துக் கொண்டிருபப்பதற்கென்று ஏற்பட்டது பகல் கடலே! இந்த வித்யாஸத்தை உன்னிடத்து கண்டிலோம். நீ எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாயே. எம்பெருமானின் விரஹத்தாலே என் நெஞ்சைப்போலே உன் நெஞ்சும் உருகிப்போய் நீ எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாயோ. நான் அந்த இராமபிரானிடத்து ஈடுபட்டிருக்குமாபோலே நீயும் ஈடுபட்டு வருந்துகிறாயோ?

    ஸீதை யென்பவளும் நம்மைப்போலே ஒரு பெண் பிள்ளையாயிருக்க அவளுக்காக மாத்திரம் உண்ணாது உறங்காது படாதபாடுகளும்பட்டவர் நம்மைப் பற்றி ஒரு சிந்தனையுஞ் சிந்திக்கின்றிலரே !

    காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
    நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
    தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
    யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

    3.2.4 காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும். உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனையும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜன்னி ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு

    வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயோ. என்போல் கடலும் மலையும் ஆகாயமும் துழாவி அப்பெருமானைக் காணவேண்டி நின்றவாறு நில்லாதே, எங்குப்போய்த் தேடினால் எம்பெருமான் கிடைப்பனென்று, திருப்பாற்கடலில் சென்று தேடலாமா? திருமலையிற் சென்று நாடலாமா? பரமபதத்திற்கே போய்ப் பார்க்கலாமா என்று இங்ஙனே பலவிடமும் துழாவி அலைகிறாயோ.

    இங்ஙனே கடலும் மலையும் விசும்பும் அவனை துழாவித் திரிகின்றவர்கள் நாங்கள் சிலரே என்றிருந்தேன்; காற்றே! நீயும் எங்களைப்போலவே எங்குத் திரிகின்றாய்; இரவு பகல் கண்ணுறங்காதே அலைகிறாயே. கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரனை நீயும் காண ஆசைப்பட்டு அதனால் இப்பாடு படுகிறாயோ.

    கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
    சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
    அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
    உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

    3.2.5 மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர்விட்டு அழுகிறபடியாக எண்ணி,

    நீயும் நீயும் மதுசூதன் பாழிமையிற்பட்டு அவன்கண் பாசத்தால் என்னைப்போலே அவனுடை. குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு உலகம் வெள்ளங் கோக்கும்படியாகக் கண்ணீர்விட்டு அழுகிறாயோ.

    ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
    தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
    வாழிய வானமே நீயும் மதுசூதன்
    பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

    3.2.6 கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு

    அந்தோ! முன்பு பூர்ணணாயிருந்த சந்திரனே!’ நேற்றுவரையில் நீ உதித்தவுடனே இருள் சிதறி ஓடுதலைக் கண்டிருந்தோம் இன்று அங்ஙணம் காண்கின்றிலோம் நீ ஒளி மழுங்கிக் குறையுடன் இருக்கிறையே. இப்படி நீயும் எம்மைப்போலே மேனிமெலிந்தமைக்கு என்ன காரணம்? உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே!

    அவர் வசனங்களை நம்பி நான் கெட்டதுபோலே நீயுங் கெட்டாயோ? அவர் இயற்கையாக ஸத்யமே சொல்லுகிறவராயினும் இரட்டை நாக்கு படைத்த பாம்பரசனோடே ஸஹவாஸம் உள்ளவர் அன்றோ.

    நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
    மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
    ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
    மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

    3.2.7 ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து

    இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிக்கிறாயே.

    நாரையென்ன, அன்றிற் பறவையென்ன, கடலென்ன, வாடைக்காற்றென்ன, மேகமென்ன, இளம்பிறைச் சந்திரனென்ன இங்ஙணம் சேதன அசேதனமாகிய நாங்களெல்லோரும் பகவத் விஷயத்திலீடுபட்டு நெஞ்சிழந்து எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கதறியழுதுகொண்டிருக்க,

    இருளே ! நீயும் எங்களைப்போலே எங்கள் திரளிலே சேர்ந்து கதறியழவேண்டியிருக்க. அது செய்யாதது மட்டுமல்லாமல் கொடிதாக நின்று எங்களை நீ ஹிம்ஸிக்கின்றாயே! இப்படியும் ஒரு கொடுமையுண்டோ?

    தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
    ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
    வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
    மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

    3.2.8 ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி ஜ்வரம் பற்றியிருக்கிறது கண்டு
    நொந்தாராக்காதல்நோய் தமக்கு இருப்பது போலவே விளக்குக்கு இருப்பதாக்க்கொண்டு,

    நந்தாவிளக்கமே! நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ. நாட்டுக்குக் கண்காட்டியான உனக்குப் உடம்பிலே இப்படி நோவு வருவதே!

    நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
    நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
    செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
    அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

    3.3 பராங்குச நாயகியின் தாயின் வருத்தம்

    3.3.1 ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பராங்குச நாயகி ஆற்றாமையாலே துடித்து நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகி கண்ணீராய் வழிந்தோடி அசோகவனத்தில் சிம்சுபா வ்ருக்ஷத்தின் கீழே பிராட்டி வருந்தினார்ப்போல் வருந்தி திக்குக்கள்தோறும் கண்களைச் சுழலவிட்டு எம்பெருமான் ஆபத்திலே வந்து உதவத் தவறமாட்டான், திடீரென்று ஓடிவந்தே தீருவன் என்று நிச்சயித்துச் சுற்றிலும் பார்த்தபடியே ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்குத்தான் உதவவேணும், மற்றையோர்க்கு உதவலாகாது என்று ஏதேனம் ஸங்கல்பமுண்டோ வென்று சொல்லிவாடுகின்றாள்.

    வந்து உதவவேணுமென்று திருவுள்ளங்கொண்டால் ஒரு தூணிலோ துரும்பிலோ தோன்றியும் உதவலாமே; அவனுக்கு அசக்யமான தொன்றில்லையே! என்று சொல்லியும் உயிரை ஒருவாறு தரித்துவைத்துக் கொண்டு வாடுகின்றாள் என்று அவள் திருத்தாய் சொல்லுகிறாள்.

    ஆடி யாடி யகம் கரைந்து இசை
    பாடிப் பாடி கண்ணீர் மல்கி எங்கும்
    நாடி நாடி நரசிங்கா வென்று
    வாடி வாடும் இவ்வாணுதலே –2-4-1-

    3.3.2 பாணாசுரனின் ஆயிரந்தோள்களையுந் துணித்து உஷைக்கும் அநிருத்தாழ்வானுக்கும் மணம் செய்தருளின நீர் இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது ஏனோ.

    இவளுடைய நெற்றியழகைக் கண்டால் ஒரு நொடிப்பொழுதாகிலும் இவளைவிட்டுப் பிரிந்திருக்கமுடியாதே. பெற்ற தாயான எனக்கே ஆகர்ஷகமாயிருக்கின்ற இவள் அழகு உமக்கு அநாதர விஷயமானது எங்ஙனனேயோ.

    இவளை நீர்மறந்தாலும் உம்மை நீர்மறக்கலாமோ? உம்முடைய குணம் உமக்குத் தெரியாதோ? நம்மைப் பிரிந்தவர்கள் பிழையார்கள் என்று நீர் அறியமாட்ரோ? உம்மைக்காணும் ஆசையுடன் நைகின்றாள். நீர் இவளைக்காண ஆசைப்படவேண்டியது ப்ராப்தமர்யிருக்க விபாரீதமாக நீர் இருப்பது என்னே!

    உடைமையக்காண உடையவனன்றோ ஆசைப்படவேண்டும் உடையவனைக் காண உடைமை ஆசைப்படும்படியாயிற்றே!

    ஆசை யென்பது ஒரு கடலாகச் சொல்லத்தக்கதாதலால், இவள் கடலிலே வீழ்ந்து துடிக்கிறாளே. தடைகள் கனத்திருக்கின்றனவோ. தடைகளை தொலைப்பது உமக்கு ஒரு பெரிய காரியமோ என்கிறாள்.

    வாணுதல் இம்மடவரல் உம்மைக்
    காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
    வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
    காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

    3.3.3. பிரானே! நீர்ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகிபோல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்த்தினாலன்றோ இப்பெண்பிள்ளை துடித்து நிற்கிறாள்;

    ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்கவிட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறுகிறாள்.

    இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு.

    இரக்கமே வடிவெடுத்தாற்போலிருக்கின்ற நெஞ்சையுடைய இவள் நெருப்போடே சேர்ந்த அரக்கும் மெழுகும்போலே உருகுகின்றாள். இவளுடைய நிலையோ இது; நீரோ இரக்கமென்பது சிறிதுமில்லாம லிருக்கிறீர். உம்மைப்போலே இவளும் இரக்க மற்றவளாக இருக்கும்படி செய்துவிட்டால் இடையில் நான் துடிக்க வேண்டியதில்லை; இவளோ இரக்கமனத்தினள்; நீரோ இரக்கமில்லாதவர். இதற்கு என்ன செய்வேன்?

    உம்முடைய இரக்கந்தவிர வேறொன்றால் போக்கக்கூடியதாக இல்லையே இவளுடைய வருத்தம். வேறு எதைச்செய்வேன் நான்? ‘நாம் யாருக்கும் யாதொரு காரியமும் செய்வதில்லை; என்று நீர்சொல்வதற்கும் இடமில்லாதபடி ஒரு பிராட்டிக்காக எவ்வளவு செய்தீர். பக்ஷபாதச் செயல் செய்யாதே இவளைக் கொள்ளும்.

    இரக்க மனத்தோடு எரியணை
    அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
    இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
    அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

    3.3.4 மகளே! பதாறாதே எம்பெருமான் தன்பால் மோகித்திருக்குமவர்களுக்கு காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ?
    அவளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது. அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை வென்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு

    -என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக்கொண்டு ஒருவாறு தாரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளே.

    நீ நினைத்தபோதே அடியாரிருக்குமிடத்தே கொண்டுவந்து சோக்கவல்ல பெரிய திருவடியை ஊர்தியாகவுடைய வனல்லையோ அப்படியிருக்கச் செய்தேயும் வரக்காணாமையாலே நெஞ்சு கலங்கி நெடுமூச்செறிந்து நிற்கிறாள்; கண்ணீரைத் தாரைதாரையாகப பெருகவிட்டு நிற்கிறாள். கலங்கினவளாய் உன்னைத்தொழுவதும் செய்யா நிற்கிறாள். இவளையோ உபேக்ஷை செய்வது. என்செய்வேன்.

    இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
    வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
    மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
    கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

    3.3.5 இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? இரவும் பகலும் இவள் விஷயமாக நீர் வாய் வெருவவேண்டியது போய் உம் விஷயமாக இவள் வாய் வெருவ வேண்டும்படியாயிற்றே!

    அவ்வளவேயோ! ஆனந்தக் கண்ணீர்; பெருக வேண்டிய கண்கள் சோகக் கண்ணீர் பெருகிநின்றனவே! இவள் ஏதேனும் அதிகமாக ஆசைப்பட்டதுண்டோ? விரஹஜ்வரத்தாலே வாடின இவள் மார்விலுள்ள மாலையை வாங்கி, உம்முடைய மார்விலுள்ள மாலையைக் கொடுத்தால் போதுமே; வண்டு பண்ணின தவமும் இவள் பண்ணவில்லை போலும் ஒரு வண்டாகப் பிறக்கப் பெற்றிலேனே யென்று துவண்டு நிற்கின்றாள் காணும்.

    இவள் அலமாபபுத்தீர இத்தனை திருத்துழாய் ப்ரஸாதமும் கொடுக்கின்றீர் இல்லையே. உம்முடைய ஸ்வபாவம் நிஷ்கல்மஷமன்றோ; இப்படி இரக்கமற்றவராக நீர் இருக்கிற வழக்கமில்லையே; உம்முடைய இரக்கம் எங்கே போயிற்று?

    இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
    குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
    திவளும் தண்ணம் துழாய் கொடீர் என
    தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

    3.3.6 எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் கேட்கப்பொறாமல்

    ‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? பெருமாளுக்கு ஒருநாளும் தயவு இல்லாமற் போகாது; என்னுடைய தெளர்ப்பாக்யத்தினால் இங்ஙனம் ஸந்தேஹிக்க வேண்டியதாகிறதவ்வளவே. என்று சொன்னாள்.

    நீ தயாளுதான் என்று அறுதியிட்டுவிட்டால் விருப்பம் வளரச் சொல்லவேண்டாவோ. பிரான் என்னும் நீ அடியார்க்கு உபகாரஞ்செய்வதையே தொழிலாகவுடையவனல்லனோ.

    தகவுடையவனே யென்னும் பின்னும்
    மிக விரும்பும் பிரான் என்னும் என
    தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
    உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

    3.3.7 தன்னுடைய நெஞ்சிலுள்ளது பிறரறியாதபடி மறைத்துக்கொண்டிருக்கு மியல்வுடைய இவள் இப்போது படும்பாடு என்னே வஞ்சனை !

    பிராட்டி திருவடியிடத்தில் “ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்று சொல்லியனுப்பினாள்’ அதைக் கேட்ட நீர் பிராட்டியைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் தாரித்திருக்க என்னால் முடியவில்லையே என்றாயே. இப்படி நீர் அவளிடம் தோற்க வேண்டியது ப்ராப்தமர்யிருக்க இப்போது இவள் தோற்றிருப்பது ஏதோ வஞ்சனையாக நடந்த காரியமே யன்றி ருஜூவாக நடந்தபடியன்று.

    உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
    வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
    வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
    கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

    உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கும் இவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ?

    மிடுக்கையுடைய கம்ஸன் நினைத்த நினைவு அவனோடே போம்படிபண்ணி அவனை முடித்தீர்; உம்மைத் தோற்பிக்க நினைத்தவர்களை நீர்தோற்பிக்கின்றவராயிருந்தீர்; பிரதிகூலர்களிடத்திலே வெற்றிபெறுவதும் அநுகூலர்களிடத்திலே தோல்விபெறுவதும் உமக்கு ப்ராப்தமர்யிருக்க இரண்டிடத்திலும் வெற்றி உம்முடையதாகவே யிருக்கத்தகுமோ?

    உம்மையே தஞ்சமாகப் பற்றினவிவள் இப்பாடுபடலாமோ? இவள் படும்பாடுகளைச் சொல்லப்புகுந்தால் ஒரு மஹாபாரதத்திற்காகுமே.

    ஸம்ஸாரிகளைப்போலே உண்டியே உடையே உகந்தோடித்திரியும்படியாக வைத்தீரல்லீர்; நித்யமுக்தர்களைப்போலே நித்யாநுபவம்பண்ண வைத்தீருமல்லீர்;
    கம்ஸனைப்போலே முடியச் செய்தீருமல்லீர்;
    உம்மையே தஞ்சமாகப்பற்றின விவளை எத்தனை பாடு படுத்த வேணுமோ!.

    வஞ்சனே என்னும் கை தொழும் தன்
    நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
    கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
    தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

    3.3.9 உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர்செய்ய நினைத்திருப்பது என்ன?.

    ஸூர்யன் அஸ்தமிப்பது உதிப்பது யாதொன்றுமறியாள். ஸம்ஸாரிகள் உதயமானவாறே யதேஷ்டமாகத் திரிந்து வேண்டிய பொருள்களை ஆர்ஜிக்கலாமென்று களிக்கிறார்கள்; அஸ்தமித்தவாறே ஆர்ஜித்த பொருள்களைக்கொண்டு யதேஷ்டமாக விஷயபோகங்கள்; செய்யலாமென்று களிக்கிறார்கள்;

    இப்பெண்பிள்ளையோவென்னில் உதயாஸ்தமயங்களில் வித்யாஸமில்லாதவளா யிருக்கின்றாள். சைதந்யமற்றவளோவென்னில், அல்லள்; பாரிமளமும் தேனும் நிறைந்த திருத்துழாய் விஷயமான வார்த்தையாகவே யிருக்கின்றாள்.

    கூர்மையையுமுடைய திருவாழியை நீர் ஏந்தியிருப்பது எதற்காக? அத்திருவாயுதத்தைக்கொண்டு அநுகூலரை வாழ்விக்கவும் வல்லீர், பிரதி கூலரை அழியச்செய்யவும் வல்லீர்; இவள் திறத்து நீர்செய்யநினைத் திருப்பது எதுவோ. இவள் பேற்றில் நீர்நினைத்திருக்கிறதென் ?”

    பட்டபோது எழுபோது அறியாள் விரை
    மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
    வட்ட வாய் நுதி நேமியீர் நும்
    திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

    3.3.10 இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் மீந்துக்கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர்நோக்கிக்கொள்ளவேணும்.

    இது நமக்கு துர்லபம்’ என்றறிந்தாலும் ஆசையை விடமாட்டாத இளம்பருவமுடையவள். ஆக இப்படிப்பட்ட இவள் இரவும் பகலும் கண்ணுங் கண்ணீருமுர்க இருக்கின்றாள். தாமைரையிலே முத்துப்பட்டாற்போலே இக்கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற இருப்பபைக் காட்டிலெறித்த நிலாவாக்காமல் நீர்ஒடிவந்து காணவேண்டாவோ?

    அவளிடம் நாம் வந்து கலப்பதற்கு தடைகள் கனக்கவுண்டே என்கிறீரேல், இராவணனிலும் வலிதோ இவளுடைய விரோதி வாக்கம்? அவனுடைய ஐச்வர்யமெல்லாம் நீறாகும்படி இலங்கையைப் பாழாக்கினீர்; ஒன்றை அழிக்க நினைத்தால் கிழங்குகூட மிகுந்திராதபடி அழிக்குமாவராயிருக்கின்றீர்; அப்படியே இவளையும் அழிக்க நினைக்து விட்டீரோ? எவ்வளவு அழித்தாலும் இவளுடைய கண்ணழகை மாத்திரமாவது குலையாமே நோக்கி யருளவேணும். உயிர்போகாதபடி நோக்கிக் கொள்ளவேணும்.

    ஏழை பேதை இராப்பகல் தன்
    கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
    வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
    மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10-

    3.4 பராங்குச நாயகி தன்னையே பெருமானாக பாவித்துக் கொள்ளல்

    நாயகி நாயகனைப் பிரிந்து வருந்தும் காலத்திலே அனுகரித்து தரித்தல் என்றொரு முறையுண்டு. அதாவது, ராஸக்ரீடை செய்த காலத்திலே கண்ணன் தன்னை மறைத்திட, கோபியர்கள் தங்களையே கண்ணனாக பாவித்து நான் குழலூதுகிறேன், நான் காளிங்க நர்த்தனம் ஆடுகிறேன், நான் கோவர்ர்ரன மலை தூக்குகிறேன் என்று தரித்து இருந்தாற்போலே, நாயகனாக தன்னையே நினைத்து நாயகி போதுபோக்குவது உண்டு.

    ஆண்டாள் திருப்பாவை பாடியது, கோபியராக தன்னை அனுகரித்து தானே.

    இப்போது, விரஹதாபத்திலிருக்கும் பராங்குச நாயகி, தன்னையே எம்பெருமானாக பாவித்துக்கொண்டு அவனை அனுகரிக்கிறாள். 5.6

    கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
    உடனா
     அனுகரிக்கல் உற்று – திடமாக
    வாய்ந்தவனாய்த்
     தான் பேசும் மாறன் உரை அதனை
    ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்–46-

    1. ஜகத் ச்ருஷ்டி, ஸம்ஹாரம்

    கடல் சூழ்ந்த ஞாலம் முழுவதையும் படைத்தவன் நானே
    பஞ்ச பூதங்களும் நானே
    ப்ரபஞ்சஸ்ருஷ்டியை பண்ணினது நானே
    நிகழ் எதிர் இறந்தகாலங்கள் நானே.
    முக்கட்பிரான் யானே,
    திசைமுகன் யானே,
    அமரரும் யானே, அமரர்கோன் யானே,
    இவர்கள் எல்லோரையும் நிர்வஹிப்பவனும் நானே
    பிரளய காலத்திலே எல்லாரையும் வயிற்றிலே வைத்து ரக்ஷித்ததும் நானே

    2. விபவாதாரம்

    மந்தரம் நாட்டி அமிர்தம் கடைந்தெடுத்தது நானே
    மஹாவராஹமாகி பூமியை காத்தது நானே.
    ஞாலம் அளந்தவன் யானே
    ராவண ஸம்ஹாரம் செய்ததும் நானே
    கன்று மேய்த்தேனும் யானே
    ஆநிரை காத்தேனும் யானே
    ஆயர் தலைவனும் யானே
    கோவர்த்தனமலையைக் தூக்கி நின்றவன் நானே
    ஏழு எருதுகளையும் வலியடக்கி நப்பின்னை பிராட்டியை மணஞ்செய்து கொண்டவன் நானே
    பஞ்சபாண்டவர்களை ரக்ஷித்தருளினவன் நானே

    இப்படி பராங்குசநாயகியின் பெருமான் பால் வ்யாமோஹம் அதிகமாகி பித்தை அடைந்துவிட்டாள்.

    3.5 தாய்மார்களின் சீற்றம்

    பராங்குசநாயகியின் பெருமான் பால் வ்யாமோஹம் கண்டு உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார்கள் சீரினார்கள். தாய்மார் நாயகியின் காதலை புரிந்துகொள்ளாமல் வையவும், பழிதூற்றவும் தொடங்கினார்கள்;. நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் பெருமானை ஸேவிக்கவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்றும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

    அவள் முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்த்தை கண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று மேலும் கைசுடுக்கி வையத் தொடங்கினாள் தாய்.

    பராங்குச நாயகியின் பதில்

    தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் அந்த பெருமானின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று அவனைச் சீறில் சரியேயொழிய என்னைச் சீறுவது முறைமையன்று.

    நான் ஏதேனும் ஒரு சாதாரண புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறேனோ?
    குறைவற்ற கீர்த்தியையுடைய பெருமானின் பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது.
    நீங்கள் என்னெஞ்சைக்கொண்டு அவனை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே வையமாட்டீர்கள். இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்?

    என்னை அப்பெருமானைக் காணவொண்ணாதபடி செய்து விடுவது என்கிற உங்கள் எண்ணம் அந்தோ! தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்குமாபோலேயிருக்கிறது.
    இது நான் அவனை காணப்பெறுவதற்கு முன்னமே சேய்திருக்கவேணும்;
    அது செய்யாதே இன்று மறுக்கப் பார்ப்பது பயன் தராது.

    அம்மா, அவன் என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ. விலக்ஷணமான திருமேனியழகும், அவன் திருவாழியேந்திய அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென்? பாவமென்றாலென்? நானோ சிளைப்பது என்றாள்.

    3.6. தாய் மனம் கலங்குகிறாள்

    எம்பெருமான்பால் பராங்குச நாயகியின் வ்யாமோஹம் மேலும் அதிகரித்தது.

    சந்திரனைச் காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கலானாள்.
    மலையைப்பார்த்து, உலகங்களை அளக்க நிற்கிற ஸர்வேச்வரன் என்கிறாள்
    தெருவில் திரியும் கன்றைப்பிடித்து கண்ணபிரான் மேய்த்த கன்று இது என்கின்றாள். ஸர்ப்பத்தைக்காட்டி ‘எம்பெருமானுடைய திருப்பள்ளி மெத்தை இது’ என்கின்றாள்.

    இப்படி எம்பெருமானையே கண்டு, அவன் நினைவாகவே இருந்து வாய் வெருவிக்கொண்டேயிருக்கும் மகளைப்பார்த்து மனம் கலங்குகிறாள் தாய்.
    அநுபவித்து முடிக்க அரிய பாபத்தை யுடையேன்
    நான்பெற்ற இவளை எம்பெருமான் மயக்கி பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு எவ்வளவில் ஆகும் என்று ஒன்றும் அறிகிலேன் என்கிறாள்

    இப்படி வ்யாகுலப்பட்டு, பராங்குசநாயகியின் தாய், குறத்தியை அழைத்து குறி விசாரிக்க, அவள் தேவதாந்தர பூஜை செய்ய ஆயத்தமானாள்.

    அது கண்டு, உண்மை அறிந்த பராங்குச நாயகியின் தோழி,

    தாய்மார்களே! நீங்கள் இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு ஸ்வரூப விருத்தமானதைச் செய்து மதுவையும் மாம்சஸத்தையும் ஆராதனையாக வைக்கவேண்டா.

    இப்பெண்பிள்ளை ஒரு காலத்திலும் தேவதாந்தர பஜனம் பண்ணியறியாள்.
    ஆகவே நீங்கள் திருத்துழாய் மாலையை அணிந்துள்ள ப்ரபுவினுடைய திருவடிகளை நோக்கி மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே இப்பெண்பிள்ளையடைந்திருக்கிற நோய்க்கு அருமையான மருந்தாகும்
    அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை துதியுங்கோள்:
    துதித்தவுடனே இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத் தொழுது கூத்தாடுவாள் நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமானே என்ற்றிந்தவர்கள் வேதம் வல்லார்கள். அப்படிப்பட்ட வேதவித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளாமல் அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மையென்கிறாள்.

    3.7 ஆழ்வாரின் கோபம்

    விச்லேஷத்தின் எல்லையில் நின்ற பராங்குச நாயகி, நான் இவ்வளவு ப்ரார்த்தித்தும் கெஞ்சியும் அவன் வரவில்லை

    ஆய்ச்சியரோடு ராஸக்ரீடை செய்த அன்று மறைந்து நின்று அவர்களுக்கு மிகவும் அலமாப்பை விளைத்து, பின்னை புன்முறுவல் காட்டிவந்து புகுந்துநின்றாற்போலே நமக்கும் வந்து முகங்காட்டுவன் என்றிருந்தால் அப்போதும் அவன் வந்து தோன்றவில்லையே யென்று கதறினாள்.
    நிரந்தரம் துக்கத்தையேஅனுபவித்தாலும் முடியாதே நிற்கின்ற இந்த ஆத்மாவை இந்நிலையில் ரக்ஷிப்பார் யார் என்று விசனப்பட்டாள்.

    எம்பெருமான் என்பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளைகொண்டு எட்டா நிலத்திலிருக்கிறான். அவன் எங்குச் சென்றால்தானென்ன? சபதஞ் செய்துகிடக்கிற எனக்குத் தப்பிப் பிழைக்கவொண்ணுமோ அவனால்?

    தோழி, கேள். ! நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.

    மடலூரப்போகிறேன் நான்; என்னை ஊரார் பழி சொல்லும்படி பண்ணின அவனை லோகமே பழி சொல்லும்படி நான் பண்ணக்கடவேன் என்று தன் கோபத்தை வெளியிடுகிறாள்.

    4-நம் ஸ்வரூபம்

    4.1 நாம் பல வகைப்பட்டவர்கள்

    மக்களில் பலவகை உண்டு. நம்மில் நல்லோர்களும் உண்டு, தீயோர்களும் உண்டு.

    ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே’ என்று அனைவரும் கூடி கலங்கவேண்டியிருக்க, உகந்து சிரிக்கும்படியும் சிலர் உண்டு.

    பிறரைக் கெடுக்கவேணுமென்று கோலி தாங்களே கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

    ஒரு பிறர்மனையிலே புகுந்து திருடுவதற்காகச் சென்று, மற்றெருவன் இவன்தன் வீட்டிலே புகுந்து இவன் பலகாலமாகக் களவுகண்டு திரட்டிவைத்திருந்த பொருள்களைலெல்லாம் கவர்ந்து சென்ற கதைகளும் உண்டு.

    செல்வம் இல்லாவிடில் உறவினனாக இவனை சொல்லிக்கொள்வது நமக்கு நிறக்கேடு என்று அவனை விட்டு ஒதுங்குபவர்கள் உண்டு.

    அப்படி விடப்பட்டவன் சிறிது செல்வம் பெற்றவாறே உறவினர்கள் அல்லாதாரும் கூட
    இவனுடைய ஞாதிகளாக நம்மைச் சொல்லிக்கொள்ளுதல் நமக்கு மேன்மை என்று நினைத்து ‘இவரும் நாங்களும் ஒரே குடும்பம்’ என்று சொல்லி அணுகுபவர்களும் உண்டு.

    4.2 செல்வத்தின் பின்னே

    நெருப்பு தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது போலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் கண்டும் “பகல்கண்ட குழியிலே இரவில் விழுவாரைப் போலே” அச்செல்வத்தை மேலும் மேலும் சேர்த்து அச்செல்வத்தினாலேயே மன அமைதி இழந்தவர்கள் உண்டு.

    கையிலே நாலுகாசு உள்ளவர்களைக் கண்டால் அதைப் பறிக்கவெண்ணிச் சில உபாயங்கள் செய்து வயிறு வளர்ப்பர்கள் உண்டு.

    பணத்தின் பின் அலையும் தன்மை நம் எல்லோரிடமும் இருக்கிறது. பணம் ஸம்பாதிப்பதே நம் லக்ஷ்யமாக இருப்பதால், நமக்கு பகவானை சிந்திக்க நேரமோ மனமோ இருப்பதில்லை. பணம் ஸம்பாதிப்பதே நம் லக்ஷ்யமாக இருப்பதால் நாம் குறுக்கு வழிகளில் சென்று தவறுகள் செய்து பாபத்தையும் ஸம்பாதிக்கிறோம். இந்த தாழ்ந்தும், கெட்டும் பணம் ஸம்பாதித்தவர் க்எத்தனை பேர்?

    ஒன்று, அந்த பணம் தீர்ந்த பின்னும் நாம் இருப்போம். அல்லது நாம் இறந்த பின்னும் அந்த பணம் இருந்து அந்த பணத்திற்காக நம் குழந்தைகளே பரஸ்பர விரோதிகளாகி நம்மையே தூஷிப்பார்கள். இப்படி இரண்டு விதத்திலும் அந்த பணம் நமக்கு உபயோகமில்லை என்று ஆகிறது. இப்படி நமக்கு உபயோகமில்லாத பணம் நமக்கு தேவைதானா?

    4.3. பதவியின் பின்னே

    அடுத்தது, பதவி ஆசை. பெரிய பெரிய பதவிகள் பெற ஆசை கொண்டு நம் நிம்மதி இழந்து, அவை பின் ஓடி ஓடி, தாழ்ந்தும், கெட்டும் ஸம்பாதிக்கும் பதவிகள் பின் ஓடியவர்
    பெரும் செல்வத்தில் திளைத்த பெரிய பெரிய அரசர்கள் இன்று எங்கே? ஓர் படை எடுப்பில் தோற்று தன் தேசத்தை விட்டு, தன் மனைவி மக்களை எதிரிகளின் பிடியில் விட்டு ஓடி காட்டில் மறைந்து வாழ்ந்து ஒரு வேளை சோற்றுக்கு அலைந்தவர்களின் சரித்திரங்கள் நமக்கு போதிப்பது என்ன?

    இன்றும் கூட, ஒரு காலத்தில். பெரிய பெரிய பதவிகளில் இருந்தவர்கள் இன்று எந்த மூலையில் கிடக்கிறார்கள்?

    4.4. சிற்றின்பங்களின் பின்னே

    அடுத்தபடியாக சிற்றின்பங்கள். சிற்றின்பங்களே வாழ்க்கை என்று இந்த சிற்றின்பங்களில் சிக்கி தன் வாழ்வையே பாழாக்கிக்கொண்டவர்கள் எத்தனை பேர்?

    உண்மை இப்படி இருக்க, நித்யமான பகவானை விட்டு அந்த அநித்யமான பணம், பதவிகள், சிற்றின்பங்கள் பின் சென்று நாம் நம் அரிய மனித வாழ்வை வீண் அடித்தவர் எத்தனைபேர்?

    ஒவ்வொரு சேதனருடைய ருசி, ஞானம் ஒவ்வொரு விதமாகையினாலே ஒருவன் போகத்திலே, ஒருவன் உழைப்பதிலே, இன்னொருவன் மற்றொன்றிலே ஈடுபய்யிருப்பான்.

    இப்படி உலகத்திலுள்ள சேதநர்கள் ஸாத்விகராகவும் ராஜஸராகவும் தாமஸராகவும் இருப்பார்கள்.

    4.5 அஹங்கார மமகாரங்களுடன்

    1. உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்கள்
    2. எம்பெருமானாகவே தம்மைப் பாவித்திருந்த அரசர்கள்

    3. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் நம்பக்கலில் கப்பஞ் செலுத்தி வாழ்ந்துபோங்கள்’ என்று ஒரு கட்டளை தெரிவித்தமாத்திரத்திலேயே பகைவர்கள் பணிந்து நின்று வணங்கப்பட்டவர்கள்

    4. ஒலிக்கின்ற பேரிகைகள் தமது மாளிகை முற்றத்திலே சப்திக்க, பெரு மிடுக்காக உலகத்தை ஆண்ட ஸார்வபௌமர்கள்

    5. சிற்றரசர்கள் கொண்டுவரும் உபஹாரங்களைத் தங்கள் கையாலே நேராக வாங்காமல் ஆளிட்டவர்கள்
    6. மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே ஆடல் பாடல் கண்டு போதுபோக்கி வாழ்ந்தவர்கள்

    7. நெடுநாள் மதிப்போடே ஜீவித்துக்கிடந்தவர்கள்

    8. தம் காலிலே குனிந்தவர்களை லக்ஷியம் பண்ணாதிருந்தவர்கள்

    9. உலகமெல்லாம் கொண்டாடும்படியான புகழையுடையனராயும், பரம்பரையாகவே ப்ரபுக்களாக வாழ்வர்கள்

    இப்படி எத்தனைபேர்கள் இருந்திருப்பார்களென்று நினைக்கத் தொடங்கினால், கடல் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை எண்ணி முடித்தாலும் முடிக்கலாம்; இவர்களை எண்ணி முடிக்கப்போகாது. நாளடைவிலே இவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்த்தால்………………..

    1. இப்படிப்பட்டவர்களில் பலர் தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கண்கூடாகக் காணப்பெற்றது உண்டு.

    2. பட்டினி கிடக்கமுடியாமல் பலருங்காண வெளியில் புறப்படமாட்டாமல் இருட்டு வேளைகளிலே புறப்பட்டு பிச்சைக்கு இருளிலே செல்ல வழியிலே கருநாய் கிடப்பதறியாதே அதன் மேலே காலை வைத்திட அவை கடித்திட, அந்த உபாதை பொறுக்கமாட்டாமல், கையிலிருந்த பிச்சைப் பானையைக் கீழே நெகிழ விட பிச்சைப்பானை கீழே விழுந்து உடைந்த வோசை கேட்டும் நாய் கத்தின வொலி கேட்டும் ஓடிவந்து காணத்திரள் திரண்டு “முன்பு கொற்றக்குடையின் நிழலிலே வாழ்ந்தவனுக்கா இக்கதி வந்திட்டது!” என்று சொல்லும் நிலைமை நேர்ந்த்தும் உண்டு.

    3. வெண்கொற்றக்குடை நிழிலிலே இனிதாக வாழ்ந்தவர்கள் அந்த நிலைமையை யிழந்து காடுகளுக்கு ஓட, அங்குந் தொடர்ந்து பகைவருடைய ஆட்கள் வர என்று ஆனதும் உண்டு

    4. ஏழைமைக் கொடுமையும் உடன்சேர்ந்து அரையில் எட்டம் போராதே முன்பக்கத்திலே மாத்திரம் குஹ்யத்திற்கு ஆவரணமாகச் சிறிது துணி தொங்க, தேஹயாத்திரைக்காக யாசிக்கப் புக, ஏளனம் செய்யப்பட்டவர்கள் உண்டு.

    வாழ்ந்தவர்களாக உங்களால் நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்திருந்தாலும் மழைப்பெருக்கிலுண்டாகும் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்து, அதோகதியிலே விழுந்து ஒழிந்துபோனவர்களே தவிற ப்ரஹ்மஸ்ருஷ்டி ஏற்பட்ட காலம்முதல் இன்றளவும் வாழ்ந்தவர்கள் ஒருபடியாக வாழ்ந்தே போந்தார்கள் என்பது கிடையாது. 4.9

    நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
    எண்ணாராத்
     துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
    கண்டிருக்க
     மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
    உண்டு
     நமக்கு உற்ற துணை ஒன்று–39-

    4.6 ஆஸ்திகமும் நாஸ்திகமும்

    ஆத்திகத்தைப்பொருத்த அளவிலே, சிலர் ஆஸ்திகர்களாயும், சிலர் நாஸ்திகர்களாயும் இருப்பார்கள். மற்றும் பலர் ஆஸ்திகமும் இல்லாமல் நாஸ்திகமும் இல்லாமல் நடுவே இருப்பார்கள்.

    சுத்த ஸாத்வீகர்களாக இருப்பவர்கள் எம்பெருமானையன்றி மற்றொரு தெய்வத்தையும் தொழாதவர்களாயும் வேறொரு பிரயோஜனத்தையும் விரும்பாதவர்களாய் இருப்பார்கள்;

    ஆனால் மற்ற குணங்கட்கு வசப்பட்டவர்கள் ஐச்வர்யம், ஆரோக்யம், ஸந்தானம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்புபவர்களாய், அப்படிப்பட்ட பலன்களையும் நேரே எம்பெருமானிடத்துச் சென்று கேட்டாமல், தாம் தாம் அபிமானித்திருக்கிற மற்ற தெய்வங்கள் பக்கலிலே சென்று விரும்புபவர்களாயிருப்பார்கள்.

    அப்படிப்பட்ட ருசிபேதங்களினால் அவர்கள் கோலின பலன்களுக்காக அனுஷ்டிக்கும் ஸாதனங்களும் பலவகைப்பட்டிருக்கும். சிலர் த்யானத்தினாலும், சிலர் யஜ்ஞங்களினாலும், சிலர் அர்ச்சனையினாலும், சிலர் திருநாமஸங்கீர்த்தநங்களினாலும், சிலர் அபிஷேகத்தினாலும் ஆகவிப்படி வெவ்வேறுபட்ட வகைகளாலே தெய்வங்களை வழிபடுவார்கள். . 1.1.5

    இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே அஸாதாரணமாயினும், சேதநர்களின் அபிமானத்தயடியொற்றி இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் இப்படி ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வாமியாகக் கொள்வர். 1.1.5

    அவரவர் தமதமது அறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
    அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

    ஆக, நாம் ஒவ்வொருவரும் நம் குணம் என்ன, ருசி என்ன, ஸ்வரூபம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஸ்வஸ்வரூபஞானம் எற்பட்டு, ஆத்திகத்தில் ருசி எற்பட்டாலேயே பரஸ்வரூபஞானம் ஏற்படும். 5.7.1

    நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
    ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
    சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
    வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

    —————

    5–நம் லக்ஷ்யம்

    நம் லக்ஷ்யம் – எம்பெருமானை அடைவதே

    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொன்னது போல் நாம் எல்லோரும் அடைய வேண்டிய இலக்கு ஸ்ரீவைகுண்டமே. ஸ்ரீ வைகுண்டம் சென்றடைந்து, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம் பெற்று, எம்பெருமானுடன் கலந்து, அவன் திருவடிவாரத்திலே வழுவிலா அடிமையாகிய கைங்கர்யம் செய்வதே நம் லக்ஷ்யம்.

    நாம் அடையவேண்டிய லக்ஷ்யமாகிய எம்பெருமானைப்பற்றி முதல் அத்யாயத்தில் நாம் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். ஆனாலும் எம்பெருமானைப்பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் குறைவேயாதலால், நம் லக்ஷ்யமாகிய எம்பெருமானைப்பற்றி மேலும் சில வார்த்தைகள்:

    1. ஸ்ரீமன் நாராயணனனே பரத்வம்

    1. மோக்ஷத்தின் ஸ்வாமியான பரமபதநாதன் ஸ்ரீமன் நாராயணனே
    2. அவன் எல்லாம் அறிந்த மேம்பட்ட தேவர்களான நித்ய சூரிகளின் தலைவன்
    3. தானே மூன்று மூர்த்தியான ஆதி முதல்வன்
    4. படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றையும் தானே செய்பவன்
    5. எல்லா தேவதைகளிலும் மேம்பட்டவன்
    6. வேதத்தால் பரம புருஷன் என்று அழைக்கப்படுபவன்
    7. ஸகல தேவதைகளாலும் ஆராதிக்கப்படுபவன்
    8. நித்யவிபூதியையும் லீலா விபூதியையும் தனதாகக் கொண்டவன்
    9. ஆதி மூலமே என்ற கூட்ட குரலுக்கு ஓடி வந்தவன்
    10. ஆதியும் அந்தமும் இல்லாதவன்
    11. முக்காலமும் தானே ஆகி காலத்தினால் யௌவனம் மாறாதவன்
    12. நம் புலன்களால் அறியமுடியாதவன்
    13. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் வ்யாபித்த விராட் புருஷன்.
    14. எல்லா ஞானங்களும் அவனே
    15. அவன்தான் பர ப்ரம்மம்

    2. அவன் வ்யூஹ புருஷன்

    16. நம் குறை கேட்பதற்காகவே திருப்பாற்கடலில் இருப்பவன்
    17. திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது நமக்காக சிந்தித்துக் கிடப்பவன்
    18. பாற்கடலின் அலைகள் ஆதிசேஷனை ஊஞ்சல் போல் ஆட்ட பள்ளியிருப்பவன்
    19. ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாகமணிகளில்
    தன் திருமேனி ப்ரதிபலிக்கும் கண்ணாடியறையில் துயில் கொள்பவன்
    20. சயனிக்கும்போது ஆதிசேஷனை துயிலணையாகக் கொண்டிருப்பவன்
    21. ஆமர்ந்திருக்கும்போது ஆதிசேஷனை சிம்மாசனமாகக்கொண்டிருப்பவன்
    22. செல்லும்போது ஆதிசேஷனை குடையாகக்கொண்டிருப்பவன்

    3. அவனே ஸ்ருஷ்டி கர்த்தா

    1. திருப்பாற்கடலிலிருந்து ச்ருஷ்டி முதலிய கார்யங்களை செய்பவன்
    2. தான முக்காரணமுமாகி தன்னிடமிருந்தே உலகை ச்ருஷ்டிப்பவன்
    3. மூலப்ரக்ருதி முதலாக ஸகல வஸ்துக்களுக்கும் காரணபூதன்
    4. ப்ரபஞ்சத்துக்கு தானே தனி வித்தானவன்
    5. வானம், ஒளி, காற்று, நீர், நிலம் எல்லாம் தானே ஆனவன்
    6. சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தமாகிய தன்மாத்ரைகளாகியும் நின்றவன்
    7. சூர்யனாகவும் சந்திரனாகவும் இருந்து நமக்கு ஒளி தருபவன்
    8. பிரமனுக்கு நாபியியில் இடம் கொடுத்து பத்மநாபன் ஆனவன்
    9. ருத்ரனுக்கும் தன் திருமேனியில் இடம் கொடுத்தவன்
    10. தான் சரீரியாகி உலகத்தை தன் சரீரமாகக்கொண்டவன்
    11. தேவன், மனிதன், திர்யக், தாவரம் ஆகிய நால்வகை படைப்பு செய்பவன்
    12. காய் கனிகளுடைய ப்ரம்மாண்டமான மரத்தை ஒரு வித்தில் வைத்திருப்பவன்
    13. பெரிய சரீரத்தை ஸூக்ஷ்மமாகவும், ஸூக்ஷ்மத்தை பெரிதாகவும் ஆக்குபவன்
    14. ஸமஸ்த வஸ்து ஸ்வரூபத்தையும் தன் அதீனமாகக்கொண்டவன்
    15. அகர முதல எழுத்தெல்லாம் தானே ஆனவன்
    16. ஓங்கார ஸ்வரூபியானவன்
    17. சொற்களாகி, வாக்கியங்களாகி, வேதமாக நிற்பவனும் அவனே
    18. வேதமாகவும் வேதங்களின் பொருளாகவும் இருப்பவன்
    19. வேதாந்தங்களை தன்னுடைய அங்கங்களாகக்கொண்டவன்

    4. அவனே காப்பவன்

    20. நாராயணனான தானே விஷ்ணுவாக அவதரித்து காக்கும் கடவுளானவன்
    21. நாராயணன் என்ற பெயராலேயே தன்னை நமக்கு புகலாக காட்டியவன்
    22. தான் படைத்த உலகைக் குத்தி எடுத்து அளந்து, உண்டு, காத்தவன்
    23. நிலம், நீர், ஒளி, காற்று, ஆகாயங்களுக்கு நியாமகன்
    24. ஆச்ரிதர்களை மலையையும் தூக்கி ரக்ஷித்தவன்
    25. ஏழுலகும் காப்பதையே சிந்தையில் வைத்திருப்பவன்
    26. ஜகத் ரக்ஷணார்த்தமாகவே அவதாரங்கள் செய்பவன்
    27. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்றபடி எங்கும் வியாபித்து இருப்பவன்
    28. நான் எங்கும் இருக்கிறேன் என்று ப்ரஹ்லாதன் மூலம் காண்பித்தவன்
    29. உலகங்களுக்கெல்லாம் ஆதாரமாய் நிற்பவன்

    5. அவனே அழிப்பவனும்

    30. அவன் அழித்தலும் காத்தலே
    31. ப்ரளய காலத்தில் ஸமஸ்த சேதன அசேதனங்களை தன் வயிற்றில் வைப்பவன்
    32. இப்படி ஏழு உலகங்களையும் விழுங்கி தன்னுள் இருத்துபவன்
    33. ஏழுலகும் உண்டு தனக்கு ஓர் ஆலிலை மட்டும் வைத்துக்கொண்டவன்
    34. பின் பாலகனாகி அந்த ஆலிலையில் துயின்ற ஆதிதேவன்
    35. கடலில் தோன்றி கடலிலேயே மறையும் அலைகளை போலே தன்னுள் தோன்றி தன்னுள் மறையும் ஸ்ருஷ்டியும் அப்படியே என காட்டியவன்
    36. மார்க்கண்டேயனுக்கு தன் வயிற்றினுள் ஏழுலகும் காட்டியவன்
    37. ஏழு உலகங்களையும் யசோதைக்கு தன்னுள் காண்பித்தவன்

    38. ப்ரளயம் முடிந்த பின் அவைகளை வெளிக்கொணர்ந்து மறுபடி ஸ்ருஷ்டிப்பவன்
    39. இப்படி உலகங்களைப் படைத்து, காத்து, அளந்து, உண்டு உமிழ்பவன்

    40. ப்ரம்ம ருத்ராதி தேவர்களின் காலத்தை நிர்ணயிப்பவன்
    41. கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தும் தீயோரை அழிப்பவன்

    6. அவன் விபவ அவதாரங்கள்

    42. இவ்வுலகைப்படைத்து அதனுள்ளே தானும் உதிப்பவன்
    43. இஷ்டமான திரு உருவங்களை தரிப்பவன்
    44. ஆமை, பன்றி, சிங்கம், ஆயன், அரசன் என்று பல பிறப்பெடுப்பவன்
    45. ஒவ்வொரு பிறப்பிலும் நமக்கு உயர்ந்த குணங்களை கற்பிப்பவன்
    46. ஆச்சர்யமான நம்பமுடியாத கார்யங்களையும் செய்பவன்
    47. சூரியனையே மறைத்து வானிலும் பெரிய மாயைகள் செய்பவன்

    மீனாய்

    48. மீனாய் அவதரித்து ப்ரளய ஜலத்தில்ருந்து வேதத்தை மீட்டவன்

    கூர்மனாய்

    49. அமரர்கள் வேண்டுதலுக்கு இணங்கி அலைகடல் கடைந்தவன்
    50. ஆமையாய் அவதரித்து மந்தர மலையை தன்மீது தாங்கி நின்றவன்
    51. கடலில் அமுதம் பிறக்க, அவ்வமுதுடன் பிறந்த பெண்ணமுதை மணந்தவன்

    வராஹனாய்

    52. வராஹனாய் அவதரித்து நம் பூமியை வெளிக்கொணர்ந்தவன்
    53. ஞானப்பிரானாய் நாமஸங்கீர்த்தனத்தின் பெருமை உணர்த்தியவன்
    54. நான் என் பக்தனை நினைவில் வைத்திருப்பேன் என்றவன்

    நரசிங்கனாய்

    55. ஒரு பக்தன் சொல்லுக்காகவே அவதாரம் எடுத்தவன்
    56. தன் பக்தனுக்காக சிங்கமாயும் மனிதனாயும் இணைந்து அவதரித்தவன்
    57. ராமனைப்போல் தேடி, அணைகட்டி என்று தாமதியாமல் உடனே வந்தவன்

    வாமன, த்ரிவிக்ரமனாய்

    58. மகாபலி கொள்ளைகொண்ட உலகங்களை மீட்பதற்கு வாமனனாவன்
    59. வாமனனாய் வந்து தான் படைத்த நிலத்தை தானே தானம் கேட்டவன்
    60. சிறு குரளாய் இருந்து நெடிது வளர்ந்து பெரு நிலம் கடந்து அளந்தவன்
    61. த்ரிவிக்ரமனாய் நம் எல்லோர் சிரஸிலும் தன் திருவடி வைத்தவன்
    62. அவனை நாம் தொடமுடியாததால் அவனே வந்து நம்மை தொட்டவன்
    63. கங்கையை உண்டாக்கி நமக்கு தன் ஸ்ரீபாத தீர்த்தத்தை அருளினவன்
    64. தம் திருவடி ஸம்பந்த்தால் கங்கைக்கு நம் பாபம் தீர்க்கும் திறன் கொடுத்தவன்
    65. ருத்ரன் தலை மீது கங்கை நீர் சேர்த்து அவனை சிவன் ஆக்கியவன்

    வீர ராமனாய்

    66. கடலைப் படைத்து, படுத்து, கடைந்து, அணை கட்டி, தாண்டியவன்
    67. இராட்சசனுக்கும் அபயம் கொடுத்து அவனை சிறந்த பக்தனாக்கியவன்
    68. இன்று போய் நாளை வா என்று சொல்லி திருந்த வாய்ப்பு கொடுத்தவன்
    69. முன்னவனை முடித்து சரணடைந்த பின்னவனை அரசனாக்கியவன்
    70. வானரப்படை கொண்டு அசுரப்படை வென்றவன்
    71. யாராலும் எதிர்க்க முடியாதவன்

    தர்ம ராமனாய்

    72. மனிதனாக வாழ்ந்து நல்வழி சென்று தர்ம நெறி புகட்டியவன்
    73. தந்தையின் வாய்ச்சொல் காக்க முடி துரந்து கானகம் சென்றவன்
    74. பட்சிக்கு ஈமக்ரியை செய்தவன்
    75. குரங்குகளுக்கு நண்பனாவன்
    76. அணிலிடம் அன்பு காட்டியவன்

    மாயக்கண்ணனாய்

    77. இரு தாய் பெற வேண்டி இரு குலத்தில் வந்துதித்த மாயன்
    78. வசுதேவனுக்கு தன்னையும் நந்தகோபனுக்கு தன் அனுபவத்தையும் கொடுத்தவன்
    79. பேய்ச்சி பாலை உண்டு, வெண்ணை உண்டு, மண்ணை உண்டவன்
    80. பேய்ச்சி பாலை குடித்து அவள் உயிரையும் குடித்தவன்
    81. விஷப்பாம்பின்மேல் நடனமாடியவன்
    82. ஆச்ரித விரோதிகளை தன் விரோதியாக பாவித்து பாரதப்போரை வென்ற மாயன்
    83. மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பல கொண்டவன்

    எளியனாய்

    84. வெண்ணை உண்டு, பாண்டம் உடைத்து, ஓசை கேட்டு களித்தவன்
    85. வெண்ணை களவாடி, அகப்பட்டு, கட்டுண்டு, அழுது நின்ற எளியவன்
    86. இடையனாக கன்றுகளை மேய்த்தவன்
    87. அஞ்ஞானிகளான இடையர்களிடையே தோன்றி கலந்து பழகியவன்
    88. ஆய்ச்சிகளால் அனுபவிக்கப்பட்ட ஆயர் கொழுந்தாய் நின்றவன்
    89. குசேலருக்கு பாத பூஜை செய்த எளியவன்
    90. பார்த்தனுக்கு தேர் செலுத்தி பக்தர்களுக்கு தாழ்ந்து செல்பவன்

    ஆசார்யனாய்

    91. கீதோபதேசம் செய்து தன் தெய்வத்தன்மையை காட்டியவன்
    92. கீதை உபதேசித்து தர்மத்தின் விளக்கம் தந்தவன்
    93. உன் கடமையை செய். பலனை நான் கொடுக்கிறேன் என்றவன்
    94. நம் அறியாமை போக்கி பக்தி கலந்த ஞானத்தை கொடுப்பவன்
    95. நம் துயக்கு, மயக்கு, மயர்வை போக்குபவன்
    96. நல்லோர்களின் எண்ணமே தன் எண்ணம் என்று சொன்னவன்
    97. நல்லோர் பயிலும் நூலாக இருப்பவன்

    பல அவதாரங்கள்எடுத்து…

    98. விஷ்ணுவாய் அவதாரம் எடுத்து காக்கும் கடவுளானவன்
    99. ஹயக்ரீவனாய் அவதரித்து ஞானம் புகட்டியவன்
    100. தன்வந்த்ரியாய் அவதரித்து ஆரோக்யத்துக்கு வழி காட்டியவன்
    101. ஹம்ஸமாய் அவதரித்து வேதம் ஓதியவன்
    102. வ்யாஸர் போன்ற மகர்ஷிகளாகவும் அவதரித்தவன்
    103. அவன் பேரும், ஊரும் ஆதியும் யாரும் நினைக்க முடியாதவன்

    7. அர்ச்சா மூர்த்தியாய்

    104. பரமபதத்தில் குறாயுள்ளோர் இல்லையாகையாலே நம்மில் கலக்க வந்தவன்
    105. எல்லா ஊர்களிலும் தனக்கு இடம் பிடித்து ஸன்னிதி கொண்டிருப்பவன்
    106. எண்ணற்ற அவதாரங்களாக, திவ்ய மங்கள விக்ரஹங்களை உடையவன்
    107. அர்ச்சையில் நம் கோயில்களில் இருந்து நம்ம மனதுள் புக வந்திருப்பவன்
    108. ஒவ்வொரு ஊரிலும் இருந்து நம்மை நல்வழிப்படுத்த மறியல் செய்பவன்
    109. கருணை, பொறுமை, அன்பு என்னும் ஸ்ரீ, பூ, நீளா தேவிகளுடன் இருப்பவன்
    110. பக்த பராதீனனாக பக்தர் சொல் கேட்டு எழுந்தருளியிருப்பவன்
    111. ஆழ்வார் சொன்னவண்ணம் செய்த பெருமான் அவன்
    112. நாம் செய்யும் பல்வகை ஆராதனத்தையும் ஏற்பவன்
    113. ஆயிரம் நாமங்களால் அறியப்பட்டு வணங்கப்படும் ஸஹஸ்ர நாமன்

    8. அவன் பன்னிரு நாமங்கள்

    114. அயனுக்கும் அரனுக்கும் ஸ்வாமியானதால் கேசவன் ஆனவன்
    115. சேதன அசேதனங்களுக்கு புகலிடமானதால் நாராயணன் ஆனவன்
    116. திருமகளை மார்பில் கொண்டதால் மாதவன் ஆனவன்
    117. பசுக்களையும் பூமியையும் ரக்ஷிப்பதால் கோவிந்தன் ஆனவன்
    118. எங்கும் வியாபித்து இருப்பதால் விஷ்ணு ஆனவன்
    119. அரக்கர்களை வென்றதால் மதுசூதனன் ஆனவன்
    120. மூவுலகையும் அளந்திடும் திருமேனி எடுத்ததால் த்ரிவிக்ரமன் ஆனவன்
    121. குரளாய் வந்து யாசித்து நின்றதால் வாமனன் ஆனவன்
    122. நமக்காக பரிந்துபேசும் ஸ்ரீயை தரித்து இருப்பதால் ஸ்ரீதரன் ஆனவன்
    123. நம் மனதை தன்பால் ஈர்ப்பதனால் ஹ்ருஷீகேசன் ஆனவன்
    124. பத்மத்தை நாபியில் கொண்டதால் பத்மநாபன் ஆனவன்
    125. யசோதையிடம் கயிற்றினால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனவன்

    9. அவன் நீர் போன்ற நற்குணமுடையவன்

    நீர் கீழ் நோக்கி பாயும்.
    அவன் தாழ்ந்தோரிடத்தில் எளிதாகச்செல்வான்

    நீர் மேல் நோக்கி பாயாது.
    நான் உயர்ந்தவன் என இறுமாப்பு கொண்டால் அவன் நம்மிடம் வரமாட்டான்.

    எந்த காரியத்துக்கும் நீர் வேண்டும்.
    எந்த காரியத்துக்கும் அவன் அனுக்ரஹம் வேண்டும்.

    நீர் வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.
    அவனை வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.

    நீரின் தன்மை குளிர்ச்சி.
    அவனும் குளிர்ந்த தன்மை உடையவன்

    நீர் கொதித்தால் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும்.
    அவன் கோபம் கொண்டாலும் அவனையே பற்ற வேண்டும்.

    நீரை நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
    அவனையும் நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

    நீரை எப்பாத்திரத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
    அவனையும் எந்த ரூபத்திலும் வைத்துக்கொள்ளலாம்.

    நீரைக்கொண்டு மற்ற பண்டங்களை சமைக்கலாம்.
    பெருமானைக் கொண்டு மற்ற பலன்களைப்பெறலாம்.

    நீரை நீருக்காகவே பருகலாம்.
    எம்பெருமானையே புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்.

    நீரில் ஐந்து வகை. மேகம், கடல், மழை, கிணறு, நிலத்தடி நீர்.
    பெருமானும் ஐந்து வகை. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி.

    நீர் ஆகாயம், பூமி, பூமிக்கு கீழே என்று எங்கும் வ்யாபித்திருக்கும்
    பெருமானும் அப்படியே எங்கும் வ்யாபித்திருப்பவன்

    நீரைக்கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.
    பகவன் நாமம் கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.

    தோண்டத் தோண்ட சுரக்கும் நீர்.
    கொள்ளக் கொள்ள இன்பம் தருவன் பகவன்

    நீர் நமக்காக இருக்கிறது.
    பகவான் நமக்காக இருக்கிறான்.

    நீர் தடாகங்களை எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.
    பகவானையும் எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.

    நீரில் இறங்கி. படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கலாம்
    அவனும் படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கக்கூடியவன்

    குழாமாகச்சென்று நீரை அனுபவிப்பது மிகவும் இன்பம் தரும்.
    குழாமாகச்சென்று அவனை அனுபவிப்பதும் மிகவும் இன்பம் தரும்.

    படகில் சிறிது த்வாரம் இருந்தாலும் நீர் உள்ளே புகுந்துவிடும்.
    சிறிது இடம் கொடுத்தாலும் பகவான் நம்முள்ளே புகுந்து விடுவான்.

    எல்லா நீரும் நீரே. ஆனால் நதிகளின் நீர் விசேஷம். எல்லார் மனதிலும் பகவான் உள்ளான். ஆனால் கோயில்களில் உள்ளவன் விசேஷம்.

    கோயில்களில் உள்ளவன் விசேஷம். ஆனால் திவ்ய தேசங்களில் உள்ளவன் மிகவும் விசேஷம்.

    தாகம் உள்ளவர் நீர் பருகுவர்.
    தாபம் ( மன வருத்தம் ) உள்ளவர் பகவானைப் பருகுவர்.

    இப்படிப்பட்ட மேம்பட்டவனை அடைவதே நம் லக்ஷ்யம்.
    இப்பேற்பட்டவனை அடைய நாம் நித்யம் ஆராதிப்போமாக.

    அடையவேண்டியவனும் அவனே
    அவனை அடையும் வழியும் அவனே

    6–நாம் நம் லக்ஷ்யம் அடையும் வழி என்ன?–

    விஷயபோகங்களுக்கு ஆயதனமாகப் பற்றியிருக்கிற சரீரங்களானவை மின்னல் போலவுங்கூட நிலைத்திராதவை. ஆகவே விடவேண்டியதையும் செய்யவேண்டியதையும் உடனே செய்யுங்கள்.

    6.1 விடவேண்டியவை

    1. எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விடுங்கள்
    2. அஹங்கார மமகாரங்களையும் விட்டொழியுங்கள் 1.2.3.
    3. இந்த்ரியங்களை அடக்கி வாஸநைகளின்மேலுள்ள பற்றுக்களை விடுங்கள் 1.2.4.
    4. விஷயங்களிலே நீ வைத்திருக்கிற பற்றை விட்டு அவனுள் முற்றிலடங்குங்கள் 1.2.6
    5. உண்டியே உடையே என்று அவைகளிலேயே மூழ்கியிருக்காதீர்.
    6. ஸ்ரீவைஷ்ணவ ஸ்வரூபத்திற்கு சேராத விஷயங்களையும் விடுங்கள் 1.2.3
    7. நான் ஸ்வதந்த்ரன், எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினையாதீர்கள் 1.2.9
    8. ஐச்வர்யம் ஸந்தானம் முதலான அற்பபலன்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அவனைவிட்டுப் பிரிந்து போய்விடாதீர்கள் 1.6.1

    தொண்டு செய்து அமுதமுண்ண விரும்பியிருப்பீர்களாகில் புறம்பான பற்றுக்களில் நசையைத் தவிருங்கோள்; அங்ஙனம் தவிர்த்து அப்பெருமானைத் தொழுங்கோள். அங்ஙனம் தொழுதால் இவ்வாத்மாவோடே பொருந்திருக்கின்ற கருமங்களை வாஸநையோடே போக்கி மீட்சியற்ற செல்வமாகிய மோக்ஷ புருஷார்த்தத்தை அவன் தானே கொடுத்தருள்வான். 1.6.8

    6.2 செய்யவேண்டியவை

    1. அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுங்கள்
    2. எல்லையில்லாத ஆநந்தமயமாயிருக்கும் பரம் பொருளை பற்றுங்கள்
    3. அவனையே என் மாதா பிதாவும் ஸகலவித பந்துவாகவும் பற்றுங்கள் 1.2.6
    4. அவனுக்கு ஸகலவித கைங்கரியங்களிலும் செய்வதில் ஊக்கமுற்று இருங்கள்.1.2.6

    பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-
    5. எம்பெருமானின் குணானுபவம் செய்யுங்கள்
    6. அவனுடைய வீர சரிதங்களைக் கேட்டு போதுபோக்குங்கள்
    7. நான் பெருமானுக்கு அடிமை என நினையுங்கள்
    8. அஞ்சலியுடன் மனம் செலுத்தி ஸ்தோத்திரம் சொல்லுங்கள் 4.3.2

    பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடையவாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-
    9. கரணங்களுக்கு பகவதநுபவமே யாத்ரையாகும்படி செய்யுங்கள்
    10. திருவாராதனம் செய்யுங்கள்
    11. அர்ச்சா முர்த்திக்கு மனத்தாலும் வாயாலும் சரீரத்தாலும் பணிவிடை செய்யுங்கள்
    12. எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோள். 1.2.1. 1.2.2

    வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
    வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

    மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
    என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-
    13. ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கும்படி
    இருங்கோள்.

    [1] எம்பெருமானே சரண் என்பதைத்தவிர மற்ற உபாயங்கள் சிறிதும் அற்றிருக்கை ஆகிஞ்சந்ய மெனப்படும்.
    [2] எம்பெருமானின் அனுக்ரஹம் உடனே கிடைக்காவிடினும் பிறர்மனைதேடி ஓடப்பாராதே. இவ்விடமொழிய வேறுயபுகலில்லை” என்கிற திண்ணிய அத்யவஸாயத்து டனிருக்கை அநந்யகதித்வமெனப்படும்.

    உன்காரியத்தில் நீ எவ்வளவு தாமதித்தாலும் என் காரியத்தில் நான் நிஷ்டை குலையமாட்டேன். என்னைப்பற்றியவரையில் நீதான் எனக்கு உபாயம். எனக்கு உன்னுடைய அனுபவம் கிடையாமற்போனாலும் உன் திருவடியே தஞ்சம். எனக்கு வேறு களைகண் இல்லை என்னும் விச்வாஸமே ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்பவை.

    ராமபிரான் வருவதற்கு தாமதமானாலும் சீதாப்பிராட்டி அவன் நிச்சயம் வருவான் என்று காத்திருந்தாள் அல்லவா?. சீதா பிராட்டியை தன் முதுகிலே ஏற்றிச்செல்லுகிறேன் என்றதை நிராகரித்தாளல்லவா? –

    களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
    வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
    தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது

    இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–திருவாய்மொழி –5-8-8-

    தாளும் தடக்கையும் கூப்பி என்று, கால் கூப்புகை, கை கூப்புகை. இவையிரண்டாலும் ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் தெரிவிக்கப்பட்டவாறாம்:

    கால்களை ஒன்று சேர்த்து நின்றால், கூப்பிவிட்டால், வேறெங்கும் எனக்குப் போக்கிடமில்லையென்று ஸூசனையாதலால் அதனால் அநந்யகதித்வம் தெரியும்;

    கைகூப்பிவிட்டால் என்கையில் ஒன்றுமில்லை என்கிற ஸுசனையாதாலால் அதனால் ஆகிஞ்சந்யம் தெரியும்.

    அவன் தான் ஸர்வேச்வரனாயிற்றே, நமக்கு அவன் முகந்தருவானோவென்று யோசிக்க வேண்டாம்

    1. அவன் ஸௌசீல்யமே வடிவாயிருப்பவன். .
    2. அவன் ஸர்வேச்வரனேயாகிலும் ஆச்ரிதர் பக்கல் ஸ்நேஹ ஸ்வபாவனாயிருப்பவன்
    3. ஆச்ரிதர்களுடன் புரையறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவன்
    4. மேன்மையடன் நீர்மையும் உள்ளவன்.
    5. ஸகலவித பந்துவுமாகவும் இருப்பவன்.
    6. அடியார்களிலே , அறிவு ஒழுக்கம் ஜாதி முதலிய ஏற்றத்தாழ்வு பாராதவன். எவ்வகுப்பினர்க்கும் ஆச்ரயணீயன்.

    6.3. எம்பெருமானின் திருவாராதனம் செய்வது எப்படி ?

    உலகத்தில் ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும்போது இதை இவன் ஸ்வீகரித்து என்ன குறை சொல்லப் போகிறானோ என்று நெஞ்சு தளும்பியிருக்க வேண்டிவரும்.

    ஆனால் புத்திரன் பிதாவுக்கு விருந்திட்டால் ஏதேனுங் குறையிருந்தாலும் அது கண்டு தகப்பன் வெதும்பமாட்டான். அவனுக்கு வேண்டுவதெல்லாம் மகனின் அன்பே.

    அதுபோன்ற ஸம்பந்தம் எம்பெருமானுக்கும் நமக்குமுண்டு. ஆக, பெருமான் ஆராதிக்க ஸுலபன்

    1. தன்னை ஆராதிக்க மனம் கண் உடல் மொழி போதுமானவன்
    2. தம் பெருமைக்கு குறைவாக செய்யும் ஆராதனத்தையும் உகப்பவன்
    3. நம் அபசாரங்களைப் பொறுத்து நாம் செய்யும் ஆராதனத்தை ஏற்பவன்
    4. எவராலும் தொழக்கூடியவன்
    5. யாரும் எளிதில் ஆச்ரயிக்கக்கூடியவன்
    6. செவ்வைக்கேடான மக்களுக்கும் திவ்ய தரிசனம் தருபவன்
    7. நாம் அவனைப் பல்லாண்டு பாடுவதை மிகவும் விரும்பவன்
    8. ஒரு வேளை தொழுதாலும் அந்தமில்லா பேரின்பம் தருபவன்
    9. காசு செலவில்லாமல் சுலப வஸ்துக்களாலே ஆராதிக்கக்கூடியவன்
    10. பூக்களை கோராமல் இலையை (துளசியை) விரும்புபவன்
    11. நாம் இட்டது கொண்டு திருப்தி அடைபவன்
    12. நாம் உகந்து உண்ணும் வெண்ணையை தானும் திருடி உண்டவன்
    13. அங்க ப்ரதக்ஷிணம் போன்று உடல் வருத்தி உபாஸிக்க வேண்டாதவன்
    14. நாம் அஞ்சலி செலுத்தினாலேயே மிகவும் ஸந்தோஷப்டுபவன்

    நாம் கண்களினின்று நீர் வெள்ளமிட நெஞ்சு குழைய ஓர் அஞ்ஜலி பண்ணினால் எம் பெருமான் தன்னை ஸர்வாபரண பூஷிதனாகக் கருதுகிறான் அதுவே ஹ்ருதயபூர்வமாக இருந்தால் அதை சந்தனமாகவும் உகக்கிறான். நாம் வாயால் சொல்லும் ஸ்தோத்திரங்களாகிற சொல் மாலைகளை எம்பெருமான் பூமாலைகளாக ஏற்கிறான். அதுவும், ஆழ்வார் அருளிச்செயல்களை சொன்னோமானால் அவைகளை தான் பீதாம்பரமாக அணிகிறான்.

    பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
    வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
    தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
    ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த
     எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

    ஆக எம்பெருமானின் பூஜையிலே சுத்தமான தீர்த்தத்தை அர்க்ய, பாத்ய, ஆசமனீய, ஸ்நாநீயமாக ஸமர்ப்பித்து ஏதேனுமொரு சுத்தமான பூவையிட்டு ஏதூப தீபங்களை காட்டினாலும் போதும். ஆராதனை எளிமையாக இருந்தாலும் போதும்.

    1. ஏற்கனவே அமைந்துள்ள மனம், மொழி, மெய்கள் மூன்றும் அவன் விஷயத்தில் உபயோகப் படுத்துவதற்காகவே தந்தருளப்பட்டவை. இந்த உறுப்புகளை, அவன் விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கள். இத்தனையே வேண்டுவது

    உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
    உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

    2. தன்னைவந்துபணிகின்றவர்களைத் தான் பரீக்ஷித்துப்பார்ப்பன், இவரகள் ஏதேனும் க்ஷுத்ரபலன்களைப்பெற்றுக்கொண்டு போய்விடுவார்களா? அல்லது அவற்றில் நசையற்று நம்மையே பரமப்ரயோஜநமாகப் பற்றுகிறவர்காள? என்று பார்ப்பன், எம்பெருமான் பார்ப்பது இவ்வளவே.

    அகன்று போகிறவர்களாயிருந்தால், க்ஷுத்ரபலன்களைத்தந்து அவர்களை அகற்றிவிடுவன்,

    அங்ஙனல்லாதவர்களுக்கு தானே முற்றுமாக இருப்பான். அப்படிப்பட்டவர்களுக்கு அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே என்னும்படியாயிருப்பன்.

    கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
    விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

    3. அடுத்தது, எம்பெருமானை ஆச்ரயித்து எம்பெருமானே என் மாதா பிதாவும் ஸகலவித பந்துவும் என்றும் கொள்ள வேண்டும். எம்பெருமானே என் மாதா பிதாவும் என்று ஆனபிறகு, இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை என்றவொரு அத்யவஸாயமும் கொள்ள வேண்டும்.

    இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;

    பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்; சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள். ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ?

    பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும் தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
    அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
    சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
    மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
    யாதாகில் யாதே யினி
    –பெரிய திருவந்தாதி 70

    4. பாவங்கள் நம்மை நரகம் அனுப்பும். நரகத்தில் தண்டனை அனுபவித்தபிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறப்பைக் கொடுக்கும்,

    புண்ணியங்கள் நம்மை ஸ்வர்கம் அனுப்பும். ஸ்வர்கத்தில் சுகம் அனுபவித்தபிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறப்பைக் கொடுக்கும்,

    பரம புருஷார்த்தமாள மோக்ஷம் விரும்பி நிற்பார்க்கு ஸ்வர்க்க நரகங்களிரண்டும் தடையே. ஆதலால் நாம் மோக்ஷம் அடைய புண்ய பாபங்களிரண்டும் தொலைய வேணும்.

    தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
    பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

    நம் லக்ஷ்யமாவது புண்யத்தினால் கிடைக்கும் ஸுகங்களையும் வெறுத்து பாப கார்யங்களையும் செய்யாமல் எம்பெருமானை அடைந்து அவனுக்கு தொண்டு செய்வதே.

    ஆகவே ஈடிலா திருக்கல்யாண குணங்களையுடைய நாராயணனுடைய அடியவர்களை ஒரு நாளுங் கைவிட மாட்டாத திருவடிகளைச் சேருங்கள்.

    எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
    வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

    நீங்கள் இப்படி எம்பெருமானை ஆச்ரயிப்பதாக முயன்றவளவிலே விரோதி கருமங்கள் அனைத்தும் தொலைந்து போம்; அவற்றைத் தொலைக்கப் பிராட்டி இருக்கிறாளல்லவா. பிராட்டியை புருஷகாரமாகப் பற்றினாருடைய குற்றங்களைக் கணிசியாதே கைக் கொள்ள வல்ல திருவடிகள் அல்லவோ எம்பெருமானின் திருவடிகள்.

    நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
    மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
    நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
    மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

    6.4. பாகவதர்களைப் புருஷகாரமாகக்கொன்டு எம்பெருமானைப் பற்றுங்கள்

    பகவானை ஸேவிப்பதைவிட பாகவதர்களை ஸேவிப்பது மிகவும் உயர்ந்த்து. பகவத் சேஷத்வத்தின் எல்லை பாகவத சேஷத்வம் எனப்படுகிறது. இந்த பெரும் ஸ்ரீவைஷ்ணவ தத்வத்தை விளக்கி ஆழ்வார் கூறுவதாவது: திருவாய்மொழி 3.7

    பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
    தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
    ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
    ஆளாகார் சன்மம் முடியா–27-

    1. பாகவத சேஷத்வம் பரம விசேஷம்.

    A. ஏனெனில், பகவானே பாகவத சேஷத்வத்தை தானே அனுஷ்டித்துக்காட்டினானல்லவோ. பாகவதர்களில் தலைவனான ஆதிசேஷனுக்குப்பின் பலராமனுக்குப்பின் பிறந்து “பாகவதற்கோர் கீழ்க்கன்றாய்” என்னும் அவனளவிலே தன் பாரதந்திரியத்தைக் காட்டினான்.

    B. பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரித பக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினான்.

    C. ஆச்திதர்களுக்கு தன்னையே கொடுக்க அவன். கண்ணனாய்த் திருவவதரித்து ஒவ்வொருவர்க்கும் தன்னை முற்றுமாகக் கொடுத்தான்.

    D. அடியார்க்கு தன்னையே கொடுப்பதுபோலத் தனது திவ்யாயுதத்தையும் அவர்களுக்கே தந்தவனாயிற்றே அவன். அம்பரீஷ சக்வர்த்திக்கும் தொண்டமான் சக்வர்த்திக்கும் தன் சக்ராயுதத்தையே தந்து உபகரித்தது இதிஹாஸ புராணப்ரஸித்தமன்றோ.

    2. ஆகவே நாங்கள் பாகவதர்கேட்கே ஆட்பட்டவர்கள்.

    A. எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள்
    B. எம்பெருமானைத் தாளும் தடக்கையுங்கூப்பிப் பணியுமவர்கள்
    C. எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.
    D. எப்பொழும் எம்பெருமானின் பரத்வத்திலே யீடுபட்டு பேசுமவர்கள்
    E. அவன் திருப்பாற்கடலில் சாய்ந்தருளும்படியை வாயாரப்பேசி அந்தக் கிடையழகிலே யீடுபட்டிருக்குமவர்கள்.
    F. அற்ப பலன்களுக்காக எம்பெருமானை அணுகி அப்பலன் கைபுகுந்தவாறே விலக நினைக்காமல் எம்பெருமானோடு இடைவிடாது பழகுவதையே பெருஞ் செல்வமாக வுடையவர்கள்

    இவர்கள் எனக்கு எக்காலத்தும் பிறவி தோறும் ஸ்வாமிகளென்கிறார். இவர்களே பிறவி தோறும் எம்மை ஆட்கொள்ளவல்ல நாதர்கள் என்கிறார்.

    மேலும்

    3. நாங்கள் எம்பெருமானின் அடியார்க்கு அடியாருக்கும் அடியார்களே

    A. எம்பெருமானுடைய அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள்
    B. எம்பெருமானுக்கு தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள்

    இவர்களும் எனக்கு எக்காலத்தும் பிறவிவேதாறும் ஸ்வாமிகளென்கிறார்.
    இப்படியாக தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்று தாம் சேஷத்வத்தின் எல்லையிலே நிற்க விரும்புகிறார் ஆழ்வார்.

    त्वद् भृत्य भृत्य परिचारक भृत्य भृत्य भृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ என்ற முகுந்தமாலையும் காண்க.

    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
    பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
    பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்
    பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே –3-7-1-

    ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
    தோளுமோர் நான்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
    தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
    நாளும் பிறப்பிடை தோறும் எம்மை யாளுடை நாதரே –3-7-2-

    நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்போதனை
    பொன்னெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
    பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
    ஓதும் பிறப்பிடை தோறும் என்னை யாளுடையார்களே –3-7-3-

    உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்
    புடையார் பொன்னூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
    நடையாவுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
    இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே –3-7-4-

    பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
    அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை
    பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
    வறுமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே –3-7-5-

    அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
    துளிக்கும் நறும் கணனித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
    ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
    சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே –3-7-6-

    சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
    தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
    தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
    நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

    நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
    உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
    கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
    எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

    குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
    நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
    வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
    கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

    அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
    படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
    அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
    அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-

    அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
    நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
    அடியார்ந்த வாயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல்
    முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே –3-7-11-

    4. ஆழ்வார் மேலும் சொல்வதாவது

    A. எம்பெருமானை ஏத்துமவர்கள் நரகத்திற்குச் செல்லுதற்குரிய பாவங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் அவர்கள் எமது தொழுகைக்கு உரிய சிறந்த குலத்திற் பிறந்தவர்களாகக் கொள்ளப்படுபவர்கள்.

    B. ப்ராஹ்மண க்ஷத்ரிய ஆதி நான்கு ஜாதிகளைத்தாண்டி (திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், நம்பாடுவான் போல்) மிக நீச ஜாதியராக இருந்தாலும் அவர்கள் பரமனைப் பயிலுந் திருவுடையவர்கள் ஆகில் அவர்கள் பிறந்த வருணம் தொழில் எதுவானாலும், அவற்றைக் கணிசிக்கத் தேவையில்லை; அவர்களிடத்துப் பரமனைப் பயிலுந் திரு உள்ளதா என்பதொன்றே பார்க்கத்தக்கது.

    C. மேன்மேலும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பது எமக்கு வேண்டாததாயினும் பாகதவதர்கட்கு ஆட்பட்டிருத்தலாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெறுவதாகில் எத்தனை பிறப்புகள் நேர்ந்தாலும் உத்தேச்யமே என்கிறார்

    ஆக நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் எம்பெருமானே என்றறிந்தவர்கள் பெருமானின் அடியார்களை புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிய வேண்டும்.

    ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் ஸ்ரீராம ஸந்நிதானத்திலே புகும்போது வானர முதலிகளைப் பணிந்து அவர்கள் மூலமேயே எம்பெருமானை பற்றினாரன்றோ.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் மூலம் பகவதாச்ரயணம் பண்ணுவானேன் என்னில்,
    இங்கு ஸ்ரீ நம்பிள்ளை சொல்வதாவது,

    மதுரகவிகள், சத்ருக்னன் அனுஷ்டித்த்துபோலே ஸ்ரீவைஷ்ணவர்களே ஆச்ரயணீயர்; அவர்களுக்கு மேற்பட்டு எம்பெருமானளவிலே சென்றுகூட ஆச்ரயிக்கவேண்டியதில்லை.

    ஆனாலும் ஸஜாதீயர்களிடத்திலே ருசி விச்வாஸங்கள் உண்டாவது அரிதாகையாலே, யானையின் மீது ஏறவிரும்புமவர்கள் யானைப் பாகனுடைய அநுமதி கொண்டு புக வேண்டுமாபோலே, அவர்களைப் புருஷகாரமாக வாகிலும் கொள்ளப் பாருங்கோளென்று அருளிச்செய்கிறார்-

    தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
    பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
    மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
    அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

    ————–

    6.5. யார் எம்பெருமானைத் தொழ அதிகாரிகள்

    அவன் நாம் கேட்காமலேயே எல்லோர்க்கும் அருளும் பகவனாகையினாலே நாம் எவரும் எவ்வளவு நீசர்களாக இருப்பினும் அவனை அணுகத் தடையில்லை. தம் தம் க்ருஹங்களிலே அவனுக்கு யாரும் ஆராதனம் செய்யலாம்.

    மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
    எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

    ஆழ்வார் மேலும் சொல்வதாவது எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்க தகுதியானவர்களே. ஜாதியைவிட பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம். –

    உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
    விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
    ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
    பேராயற்கு ஆளாம் பிறப்பு –பெரிய திருவந்தாதி 79 .-

    குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
    நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
    வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
    கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

    மிகவும் நிஹீன்னர்களின் மேல் பாசம் வைத்துள்ளான் எம்பெருமான். ஆனால் மேலும் நீசனான ஒரு வ்யக்தியைத் தேடிப் பார்த்து, அப்படிப்பட்ட வ்யக்தி உலகத்தில் கிடைக்காமையாலே என்றைக்காவது அப்படிப்பட்டவொரு வ்யக்தி கிடைக்காமற் போக மாட்டானா என்கிற நசையினால் திருமலையில் வீற்றிருத்தலும் சயனித்தலும் இல்லாமல் நின்று கொண்டே தேடுகிறான் அவன்.

    ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
    தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
    நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
    பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

    மேடும் பள்ளமுமான நிலத்திலே பெரு வெள்ளம் பெருகினால் மேடு பள்ளங்கள் நீங்கி ஸம நிலைமாக ஆகும் படியைக் காண்கிறோம். அவ் வண்ணமாகவே அருள் வெள்ளத்தால் எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடு பள்ளமும் நிரவப்படக் கூடியதே.

    அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
    எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
    கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
    மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

    இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாமலிருக்கப் பெற்றிருப்பதுபோலே, மோக்ஷம் இன்பங்களுக்கு அந்தமில்லாதிருக்கப் பெற்றது. பக்தி யற்றவர்களால் பெறலாகாத இம் மோக்ஷத்தை யளிப்பபவன், மோக்ஷ தானத்திற்கு நிர்வாஹகன் அவனே.

    சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
    எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
    நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
    அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

    ‘உங்களுடைய விரோதிகளை அவன் நிச்சேஷமாகப் போக்கவல்லவன்’ ‘அஸூர வர்க்கங்கள் தடுமாறி முடியும்படி அவற்றைத் தொலைத்தாப்போலே, உங்கள் விரோதிவர்க்கங்களை முடிப்பவனான அப்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலே ஈடுபடுங்கோள்’

    புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
    நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
    அலமந்து வீய அசுரரைச் செற்றான்
    பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

    புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று என்கிறபடியே அர்ச்சாவதார ஸ்தலத்திலே கிடந்தும் மிருந்தும் நின்றும்” நிலையையும் அநுஸநிதியுங்கோள்.

    கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
    இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
    தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
    மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

    தன்னிடம் ஆசையுடையாரெல்லாரையும் அடிமைப் படுத்திக்கொள்ளு மியல்வினன் அவன். இங்ஙனம் பரம போக்யனான மனத்துக்கினிய எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது அதாவது, அனுமானைப் போலே அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு போது போக்கி ஸம்ஸார நிலத்திலிருக்கும் வரையில் கடல் போலே பெருகிச் செல்லுகின்ற நாள்களைத் தொலையுங்கோள் –

    நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
    தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7

    இன்ப மயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புற இடைவிடாது எம்பெருமானுடைய திருக் குணங்களிலே அவகாஹியுங்கள்.-

    இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
    முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
    தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
    மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

    தேவர்களுண்ணும் அமுதமானது இறப்பை நீக்கும். ஆனால் பகவத் விஷயமாகிற அமுதம் பிறப்பை நீக்கும். இதனை ஆரப்பருகி என் மாயப் பிறவி அறுங்கள்.

    விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
    தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

    அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும். யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யனாயிருக்கும் ஆரா அமுதன் அவன். ஸர்வகாலமும் அபூர்வ வஸ்துபோலே புதியனாயிருந்து தெவிட்டாதிருப்பான்–

    பலபலவே யாபரண பேரும் பலபலவே
    பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
    பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
    பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

    6.6. எம்பெருமானிடம் நம் ப்ரார்த்தனை என்னவாக இருக்கவேணும்?

    நாம் எம்பெருமானை ப்ரார்த்திக்க வேண்டியது “தனக்கேயாக வென்னைக் கொள்ளுமீதே” என்பதே. அதாவது,

    1. பெருமானே,தேவரீர் என்னுள் சாச்வதமாக எழுந்தருளியிருக்கவேணும்,

    2. ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’

    3. நீர் அடியேனை தம் குற்றேவல்களை நிறைவேற்ற நியமித்துக் கொள்ள வேணும்,

    4. நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் முதலிய பொருள்கள் போலத் தனக்கேயாக என்னைக் கொள்ள வேணும்.

    5. இது தவிற அடியேன் ப்ரார்த்திப்பது ஒன்றுமில்லை.

    எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
    மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
    தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
    எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

    ———————-

    7-நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை?

    முன் அத்யாயத்தில் நாம் நம் லக்ஷ்யம் அடைய வழி என்ன என்று விவரிக்கப்பட்டது. அங்கே நாம் செய்யவேண்டியவை யாவை, செய்யக்கூடாதவை யாவை என்றும் சொல்லப்பட்டன. இவைகளை நன்கு அறிந்து அவைகளை நன்கு அனுஷ்டித்து வாழ்பவர்கள் காலக்ரமத்தில் இகலோக வாழ்க்கை முடிந்து எம்பெருமானை நிச்சயம் அடைவர்.

    ஆனால் ஸம்ஸாரிகளில் பெரும்பாலோர் பரமபதத்தில் வாத்ஸல்யம் ஸௌசீல்யம் முதலிய எண்ணில் பல்குணங்கள் உபயோகப்படாமே கிடந்ததனால் இந்நிலத்தில் வந்து தன்னுடைய ஒப்பற்ற வடிவழகைக் காட்டி அர்ச்சாவதாரத்திலே நமக்கு அருகிலேயே மேன்மையுடனும் தேஜஸ்ஸுடனும் நமக்கு உபகாரம் செய்வதற்காக அமையக்கிடக்கின்ற அவனை மறந்து உண்டியே உடையே என்று அவைகளிலேயே மூழ்கி, செய்யவேண்டியவைகளை செய்யாமலும், செய்யக் கூடாதவை களைச் செய்தும் வாழ்க்கை நடத்தும் மக்களே. இப்படிப்பட்ட கேடான வாழ்க்கையே அவர்கள் எம்பெருமானை அடைய தடை என்று சொல்லவும் வேண்டுமோ.

    நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
    செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
    உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
    எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

    முன் அத்யாயங்களில் செய்யக் கூடாதவை என்று சொல்லப்பட்டவைகளுக்கும் மேலே, தேவதாந்தரங்களைத் தொழுதல் நாம் நம் லக்ஷ்யம் அடைய பெரும் தடையாகும். ஏனெனில்

    7.1 ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தெய்வம். இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே ஒக்கும். மற்றெல்லோரும் தேவதைகளே.

    7.2 மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனனுக்குப் பாசுபதாஸ்த்ரம் வேண்டியிருந்தது; சிவபிரானை ஆராதித்து அதனைப் பெறவேணுமென்று அவன் முயற்சி செய்யப் போகையில், கண்ணபிரான், அவ்வாஜூனனை நோக்கி, ‘ருத்ரனிடத்தில் நீ செய்ய நினைத்திருக்கிற ஆராதனையை என் காலிலே செய்து வேண்டுவதை பெறுவாயாக’ என்று கட்டளையிட்டுத் தனது முழந்தாளைக் காட்ட, அங்கே அவன் சில புஷ்பங்களையிட்டு அர்ச்சிக்க, அன்று இரவு கனவிலே ருத்திரன் அந்த புஷ்பங்களைத் தனது தலையிலே அணிந்து கொண்டு வந்து காட்சி தந்து, அஸ்த்ர ப்ரதானம் பண்ணினதாகச் சொல்லப்படுகிற கதை இங்கு உணரத்தக்கது.

    இப்படியாக தேவாதி தேவன் நம்பெருமானே என்பது மகாபாரதத்திலே முன்பே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயம்.

    7.3 த்ரிவிக்ரமாவதாரத்தின் போது, பெருமானின் திருவடி ப்ரம்மலோகம் புக, பிரமன் பெருமானின் திருவடிக்கு பாதபூஜை செய்ய, ருத்ரன் எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை முடிமேல் தரித்து சிவனாயினான் என்பதும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

    தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
    சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
    பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
    பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

    7.4 ருத்ரன் எம்பெருமானுடைய வலப்பக்கத்தை ஆச்ரயித்திருப்பவன். நான்முகக் கடவுளும் பெருமானின் திருநாபிக்கமலத்திலே பொருந்தியிருப்பவன். இதனால் இவர்களே பற்றியிருக்கும் பெருமான் பரதத்துவமான ஸ்ரீமந் நாராயணனே. 1.3.9

    7.5 உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே. அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து அவரவர்கள் வழிபாடுகள் செய்து தாம் தாம் வேண்டிய பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலேதான். அவை, தானே அத்தெய்வங்களுக்கு ஆத்மாவாக / உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமேயன்றி அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று. ஆக அந்தத் தேவதைகளுக்கு ஸ்வதந்திரமாக ஒரு சக்தியுண்டென்று நினையாதீர்கள்.

    வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
    தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
    புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
    சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

    7.6 ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை.

    அவரவர் தமதமது அறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
    அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

    7.7 நாராயணனென்றும் நான்முகமெனன்றும் ருத்ரனென்று முள்ள மூன்று தேவர்களில் நாராயணனே படைப்பவன். மற்ற இருவரும் படைக்கப்படுமவர்கள்.

    7.8 நாராயணனே ஸாத்விகன். மற்றோர் ராஜஸ தாமஸர்கள்.

    உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
    உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

    7.9 நம் பாபங்களை க்ஷமித்து நம்மை உய்விக்கக்கூடியவன் நாராயணனே. மற்ற தேவதைகளினால் அது நடவாது. உலகங்களின் பாவங்களை அழியச்செய்வது கிடக்கட்டும் உலகுக்குத் தலைவனாக அபிமானிக்கப்படுகிற சிவபிரானுடைய பாவத்தையும் தொலைத்தவன் நாராயணனே.

    ஏ பாவம் பரமே யேழு லகும்
    ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
    மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
    கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

    சிவபிரானுடைய பல நாமங்களிலே, கபாலி என்பதும் ஒன்று. ஒரு காலத்திலே பரமசிவன் பிரமனுடைய சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொண்டு, அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ப்ரார்த்திக்க, அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கபாலம் கையைவிட்டு அகன்றது என்பது வரலாறு.

    கொலையுண்டவன் பிரமன். கொலை செய்தவன் ருத்திரன். கொலையுண்டவனும் கொலை செய்தவனும் பரதெய்வமாக எப்படி இருக்கமுடியும். ப்ராயச்சித்தமாக பிச்சை எடுத்தவன் பரதெய்வமாக எப்படி இருக்கமுடியும்.

    7.10 மார்கண்டேயன் நெடுநாள் வாழ்ந்துவருகையில், மஹா ப்ரளயத்தைத் தான் காண வேணும் என்று ஆசைகொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும்போது, மஹாப்ரளயத்தில் திருமாலொருவனை யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைதத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங்கண்டஆன் என்பதும் புராணம்.

    7.11 ஆக, எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே.

    கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
    னுள்ளே தோற்றிய இறைவ என்று
    வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்

    புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

    கேள்வி 1

    ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்து வைத்தது ஏன்?

    ஆழ்வார் சொல்லும் பதிலாவது, அவரவர்கள் பண்ணின புண்யபாபரூப கருமங்களுக்குத் தக்கபடியு பலன் கொடுப்பதென்ற ஒரு சாஸ்த்மரியாதை ஏற்பட்டிருக்கின்றது; முற் பிறவிகளில் புண்யம் செய்தோரை ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணம் செய்யும்படி பண்ணுகிறான். அஃதே போல் முற் பிறவிகளில் பாபம் செய்திருந்தவர்களுக்கு அவற்றின் பலனாக இப் பிறவியில் அவர்களை க்ஷுத்ர தேவதா பஜனம் பண்ணும்படி செய்கிறான் எம்பெருமான். 4.10.6

    போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
    தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

    உலகில் பாபம் செய்பவர்களே அதிகமாகையினால், பாஹ்யமதங்களும் குத்ருஷ்டிமதங்களும் மலிந்து கிடக்கின்றன. உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதிபோல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி ஸ்ரீவைஷ்ணவமதம் மிக விரளமாயிருக்கிறது.

    இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
    தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
    கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
    நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

    கேள்வி 2

    ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களும் தேவதாந்தரங்களின் பெயரில் ஹோமங்கள் செய்கிறார்களே. ஏன்.

    எப்படி என்றால், சக்கரவர்த்திக்கு ( இப்போது அரசாங்கத்துக்கு ) செலுத்தவேண்டிய கப்பம் / வரிகளை நாம் நேராகவே சக்ரவர்த்திக்குச் செலுத்துகிறோமோ? இல்லையே. ஆங்காங்குப் பல அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்களாதலால் அவர்களிடம் நாம் செலுத்துகிறோம்; ஆனாலும் அவை அவர்களுக்குச் சேருவனவல்ல.

    இவ்வண்ணமாகவே ஸகலதேவதாநாயகனான எம்பெருமாள் தானும், நாம் செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்துவதற்காக இதர தேவதைகளை லோகமடங்கலும் பரப்பிவைத்துள்ளான். 5.2.8

    அவர்கள் எம்பெருமானுக்கு சேரவேண்டியவைகளை நம்மிடமிருந்து வாஙகி, அவனிடத்தில் சேர்க்கின்றன. இக்காரணத்தாலேயே,

    आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् सर्व देव नमस्कारः केशवं प्रतिगच्छति என்று சொல்கிறோம்.

    ஆனால் எம்பெருமானை ஆராதனை செய்யும் விஷயத்தில் ஸாக்ஷாத்தாகவே அவனை ஆச்ரயித்தல் உசிதமாதலால் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜநராய் ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள். 5.2.8

    இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
    நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
    மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
    வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

    7.12 ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாகவுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்தும். தனது ஸங்கல்பத்தினாலே தேவஜாதி முதலான ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கின ஆச்சர்ய பூதனான ஸர்வேச்வரனையன்றி மூன்று லோகங்களையும் நிலைபெறுமாறு திருத்தித் தன் ஸங்கல்பத்திலே வைத்துக்கொண்டு காக்கும் ஸ்வபாவமுடையவர் வேறு யாரேனுமுளரோ?

    கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
    வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
    திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
    இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

    7.13 ஆக, இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் அலையாது, ஸ்ரீமன் நாராயணனையே வழிபடுங்கள்.

    7.14 சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திருவயிற்றிலே வைத்து ரக்ஷக்கையாலே, வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான இவனே ஈச்வரன்.

    யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
    கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
    பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
    அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

    பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
    வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
    உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
    கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-

    7.15 உங்களுக்கு இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறவி வேண்டாமல் மோக்ஷம் தான் லக்ஷ்யம் என்றால் मोक्षमिच्छेत् जनार्दऩात् என்ற படி மோக்ஷம் தர வல்லவன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே.

    7.16 ஆக தேவதாந்தர பஜனம் பண்ணுவது மோக்ஷம் போகாமல் இவ்வுதகத்திலேயே மறுபடியும் மறுபடியும் ஜன்மம் எடுத்து ‘பிள்ளைவேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி இவை கொடுப்பார் யாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிந்து நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு முயல்வதேயன்றி வேறில்லை

    ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
    தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
    தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
    கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
    தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே
    .–திரு ஆசிரியம் 6-

    7.17 ஆக, மற்ற இரு மூர்த்திகளிலே யுள்ள பசையை யறுத்து ஸ்ரீமன் நாராயணனையே ஆச்ரயித்தல் நலம்.

    ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
    நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
    ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
    நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

    ———-

    8-முடிவுரை

    எம்பெருமானருளாலே அர்த்த பஞ்சகத்தை தாம் அறிந்ததாகவும் அதில் ஒவ்வொன்றிலும் நல்தெளிவு பெற்றதையும் இத்திருவாய்மொழியிலே கூறுகிறார் ஆழ்வார். ஆகவேதான் இத்திருவாய்மொழி ஸாரமும் அர்த்த பஞ்சகத்தை ஒட்டியே தொகுக்கப்பட்டது.

    வ்யாக்யாதாக்கள் சொல்வதாவது,
    அர்த்த பஞ்சகம் அறிதல், முதல் நிலை.
    தெளிதல், கடை நிலை.

    அதாவது,

    1. பர ஸ்வரூபஜ்ஞானம் என்பது
    எம்பெருமானின் பரத்வம் அறிதல்,
    அவன் ஆச்ரித பாரதந்த்ரியம் கண்டு தெளிதல்

    2. ஸ்வ ஸ்வரூபஜ்ஞானம் என்பது,
    நாம் எம்பெருமானுக்கு அடிமை என அறிதல்
    பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என தெளிதல்

    3. உபாய ஸ்வரூபஜ்ஞானம் என்பது
    எம்பெருமான் திருவடிகளே உபாயம் என அறிதல்
    அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகமென்று தெளிதல்

    4. புருஷார்த்த ஸ்வரூப ஜஞானம் என்பது
    வழுவிலாவடிமை செய்கை புருஷார்த்தம் என அறிதல்
    கைங்கர்யம் அவன் ஆநந்தத்துக்காக என தெளிதல்

    5. விரோதி ஸ்வரூப ஜ்ஞானம் என்பது
    அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் என அறிதல்
    கைங்காரியம் என்னை அவன் செய்விக்கிறான் என தெளிதல்

    ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை ஸாமாந்யரூபேணவும் விசேஷ ரூபேணவும் உணர்ந்து தெளிவு பெற்றபடியை அறிந்தறிந்து தேறித்தேறி என்றதனால் தான் பேதமை தீர்ந்தொழிந்ததாக அருளிச்செய்கிறார் ஆழ்வார்.

    ஆழ்வார் உலகத்தோர் படும் துன்பங்களைப்பார்த்து மிகவும் மனம் நொந்தார்.
    ஆராய்ந்து பார்க்கையில், மக்கள் துன்பப்படுவதற்குக் காரணம் தேவதாந்திர பஜனமே என்று கண்டறிந்தார். 5.2.1

    பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
    நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
    கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
    மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

    எம்பெருமான் கீதையிலே मामेव ये प्रपद्यंते मायां एतां तरंति ते என்று சொன்னபடி, மக்கள் எம்பெருமானின் பரத்வம் அறிந்து, தேவதாந்திர பஜனம் தவிர்த்து, ஸ்ரீமந்நாராயணனையே தொழுதார்களானால் அவர்கள் துன்பம் நீங்குமே என்று நினைத்து எம்பெருமான் பரத்வம் பற்றி இத்திருவாய்மொழியிலேபரக்கப்பேசசுகிறார் ஆழ்வார்.

    திருவாய்மொழியானது தொண்டர்கட்கு ஆனந்தத்தைப் பொழியும் இன்பமாரி.
    திருவாய்மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகம் ஸ்வாமி நமமாழ்வார்.

    ஏடு பார்த்துக் கற்கையன்றிக்கே ஆசார்யனிடத்தில் நன்கு அத்யயநத்தைப் பண்ணி, அர்த்த ஜ்ஞானமும் பிறந்து அதற்கேற்றவாறு அனுஷ்டிப்பவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவத்வ ஸித்தி யுண்டாகுமென்கிறார் ஆழ்வார்.

    அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
    நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
    குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
    அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

    இத்திருவாய்மொழியை மக்தள் அனுஸந்தித்தார்களேயானால் தான் பரக்கப்பேசிய எம்பெருமானின் பரத்வம் புரிந்து மக்கள் எல்லோரும் திருந்துவர், அதனாலே ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தி ஏற்பட்டு எங்கும் பகவதனுபவம் ஏற்படும். பாபங்கள் தொலையும். நரகம் புல்லெழுந்தொழியும் என்று நமக்கு சொல்லியருளினார் ஆழ்வார்.

    இப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேணும் என்று விரும்பிய ஆழ்வார் நமக்காக ஒரு ப்ரார்த்தனையும் செய்கிறார். அப்ரார்த்தனையாவது,

    இமையோர்தலைவா தேவாதிராஜனே!, அடியேன் வணக்கத்துடன் சொல்லிக் கொள்ளும் வார்த்தையை மெய் நின்று அங்குமிங்கும் போய்விடப் பாராமல் நிலைத்து நின்று என் விண்ணப்பத்தை முடிய திருச்செவி சார்த்தியருள வேணும்.

    விண்ணப்பம் செய்பவன் அடியேன் ஒருவனே யாகிலும், இவ்விருள் தருமா ஞாலத்தில் துவள்கின்ற மற்றும் பல ஸம்ஸாரிகளின் அநர்த்தமும் நீங்கவேணுமென்று அனைவர்க்கும் பிரதிநிதியாய் அடியேன் விண்ணப்பஞ்செய்கிறேன்.

    சேஷபூதர்களான எங்களை உத்தரிக்கச் செய்வதற்காகவே,
    எந்நின்ற யோனியு மாய் நாங்கள் கேட்காமலேயே இவ்வுலகில் அவ்வப்போது அவதரிக்கும் எங்கள் சேஷியான நீ,
    இந்த ஸம்ஸாரநிலத்தில் பொய்யான விபரீத ஞானம் கொண்டு அஹங்கார மமகாராதிகள்கூடே, விபரீதானுஷ்டானமாகிற பொல்லாவொழுக்கம் செய்து கொண்டு திரியும் எங்களுக்கு
    இவ்வழுக்கடம்புடனே திரியும் அடியோங்களுடைய ஸம்ஸாரபந்தம் தொடர்ந்து வராமல் இவ்வளவோடு அற்றுப் போகுமாறு பிறப்பு நீக்கி, ‘மோக்ஷம் தந்து
    அன்ய சேஷபூதர்களான நித்யமுக்தர்களை அடிமைகொண்டு எழுந்தருளியிருக்குமாப்போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும்.

    ———–

    உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
    உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
    திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
    ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

    ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
    ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

    ——————————————————————————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பராங்குச பரகால மஹாத்ம்யம்–

    August 30, 2024

    ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
    இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

    வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
    அங்க உபாங்கங்கள் போலே
    இந் நாலுக்கும்
    இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
    மற்றை எண்மர் நன் மாலைகளும்-
    (இருமை -பெருமை -)

    அதாவது
    ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
    சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
    மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
    (ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
    இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
    இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
    ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
    கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
    கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்
    மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

    நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை-முதல் திருவந்தாதி -57- -என்று
    முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

    (அங்க உபாங்க சேவை உண்டே -பவித்ர உத்சவம் பொழுது -ஜ்யேஷ்டாபிஷேகம் -அங்கங்கள் உப அங்கங்கள் சேவிக்கிறோம்
    அத்யயன உத்சவம் தமிழர் திரு நாள் -247-பாசுரங்கள் மங்களா சாசனம் திருவரங்கத்துக்குத் தானே – )

    1-பொய் நின்ற ஞானமும்-திருவிருத்தம் -1– –இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
    வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
    பிரதமத்திலே -வாடினேன் வாடி–பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
    வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
    2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
    பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
    உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
    கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
    அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
    3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
    செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
    அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
    விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
    காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
    ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
    4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
    5-அந்ய உபதேச பேச்சும்
    6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்
    7-தூத ப்ரேஷணமும்
    8-அநுகாரம்
    9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
    10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
    இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
    திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
    கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
    பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
    அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
    எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
    13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
    14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
    அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
    தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
    தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
    15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
    ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
    திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
    தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
    16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
    மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
    17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
    மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
    ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

    ———–

    நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கி அருளும் இடங்கள்-

    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –தாய்ப் பாசுரமாக நம்மாழ்வார் ஸர்வேஸ்வரனாக அநு கரித்து அருளிச் செய்த பதிகம் –5-6

    திருமங்கை ஆழ்வார் –8-2-6-ஒரே பாசுரத்தில் அநு கரித்து அருளிச் செய்த பாசுரம்
    வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் –
    இதுவும் தாய் பாசுரம்

    ——-

    இதே போல் தூத ப்ரேஷணமும்
    அஞ்சிறைய மடநாராய்
    வைகல் பூங்கழிவாய்
    பொன்னுலகு ஆளீரோ
    எங்கானல் அகம் கழிவாய் -நான்கு பதிகங்களில் முழுவதும் அருளிச் செய்துள்ளார்

    திரு மங்கை ஆழ்வாரோ
    தூவிரிய மலருழக்கி -3-6-பதிகத்தில் தூது விடுவதில் இறங்கி -நான்கு பாசுரங்களே அருளிச் செய்தார்
    இதே போல் -காவார் மடற் பெண்னை -9-4- பதிகத்தில் இரண்டே பாசுரங்களே தூது விடல் அருளிச் செய்தார்

    ——

    சொன்னால் விரோதம் –3-9-பதிகம் முழுவதும் சோறு கூறைக்காக -நர ஸ்துதி பண்ணி ஸ்வரூபம் நாசமடையும் சம்சாரிகளை நோக்கி -நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்

    திரு மங்கை ஆழ்வாரோ
    ஒரே பாசுரத்தால் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் -சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற் பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் -நாராயணா என்னும் நாமம் -என்று அவற்றையே சுருக்கிப் பேசி அருளுகிறார்-

    இதே போல் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் –9-1-sஆபாச பந்துக்களின் ஹேயத் தன்மைகளை விரித்து அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்
    இவற்றையே-பெரிய திருமொழி-8–9-7-பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மாற்றாரும் பற்றிலேன் -என்று சுருக்கி அருளிச் செய்துள்ளார்

    இதே போல் உயர் திண்ணன் அணைவது ஒன்றும் தேவும் -நான்கு பதிகங்களால் பரத்வத்தை அருளிச் செய்து இருப்பவற்றையே சுருக்கி
    மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி –11-6-ஒரே பதிகத்தால் அருளிச் செய்துள்ளார்

    ———-

    2-நம்மாழ்வார் சுருக்கமாக அருளிச் செய்தவற்றுக்கு திரு மங்கை ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்தவை
    மாசறு சோதி -5-3 பதிகத்தில் -குதிரியாய் மடலூர்துமே -என்றும்
    யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கையனைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்றும்
    இரண்டு துண்டுகளால் மடலூர்தலைப் பிரஸ்தாபித்தார் –
    இவ்வாறு சுருக்கி அருளிச் செய்தவற்றையே இரண்டு மடல்களாக விஸ்தரித்து அருளிச் செய்துள்ளார்

    ——–

    நாராயண மந்திரத்தின் சிறப்பை
    எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
    கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -10-5-1- என்றும்
    சுருக்கமாக அருளிச் செய்தவற்றையே
    பெரிய திருமொழியில்
    வாடினேன் வாடி -1-1-என்றும்
    கிடந்த நம்பி குடந்தை மேவி -6-10 என்றும்
    இரண்டு பதிகங்களில்
    நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றும்
    நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்றும்
    ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் அருளிச் செய்துள்ளார்

    ————-

    தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
    அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
    மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
    ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –


    இன்னமும் எம்பருமான் ஸம்ஸாரி சேதன ஸம் ரக்ஷணார்த்தமாக பல திரு அவதாரங்கள் செய்து அருளும்படியை
    எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1- என்றும்
    மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் கானோர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-என்றும்
    சுருக்கமாய் அருளிச் செய்தவற்றை
    வானோர் அளவும் முது முந்நீர் –8-8-என்றும்
    நிலையிடம் எங்கும் இன்றி –11-4- என்றும்
    இரண்டு பதிகங்களாலே மிக விஸ்தாரமாக அருளிச் செய்துள்ளார்

    —————-

    நம்மாழ்வாருக்கு அபிநிவேச அதிசயம் வராஹ அவதாரம் என்பதை
    திருவிருத்தத்தின் முடிவிலே -ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
    திருவாய் மொழியின் முடிவிலும்-கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்றும்
    ஈடுபட்டு அருளிச் செய்தவற்றை ஒட்டியே
    பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே -பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே -என்று அருளிச் செய்துள்ளார்

    ———–

    இதே போல் அர்ச்சாவதாரங்களில் திருக் குடந்தை யில் ஈடுபாட்டை
    திருவாய் மொழியின் இறுதியிலும் -குடந்தை யங்கோவலன் குடி குடியார்க்கு தொடர்ந்து எங்கும் ஸ்தோத்திரம் சொல்லினர் -என்று அருளிச் செய்து
    கோயில் திருமலை பெருமாள் கோயில் -எல்லாம் கிடக்க மூவரில் முதலான ஆராவமுத ஆழ்வாரின் மேல் ஈடுபாடு நாலாயிரமும் புனராவதாரம் செய்யப்பட்டு அருளப் போவதை ஸூசிப்பித்து அருளிச் செய்தவாறு
    இந்த அபிநிவேச அதிசயத்தை உணர்ந்தே திருமங்கை ஆழ்வாரும்
    சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2- என்றும்
    சூழ் புனல் குடந்தையே தொழுமின் –1-1-7-என்றும் முதலிலேயே அருளிச் செய்து
    சரம ப்ரபந்தமாகிய திருநெடும் தாண்டகத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமித்தும் அருளிச் செய்துள்ளார் –

    மேலும் அடுத்த பாசுரத்திலேயே
    அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -என்று
    நம்மாழ்வாருக்கு திரு நாட்டில் திருக்குடந்தை நினைவு வருவதற்கு உறுப்பான ஐதிக்யத்தையும் காட்டி அருளுகிறார்
    நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -151-
    அன்னமாயும் முனிவராயுமுள்ள நாதமுனிகளுடன் திருக்குடந்தை நிலத்தேவர்களான ஸ்துதிக்க –
    அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை-என்று நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே –என்றபடி
    அரும் தமிழ் மறையை வெளிப்படுத்தி அருளிய நம்மாழ்வார்
    ஆராவமுதாழ்வாருக்கு பதிகம் அருளி சமர்ப்பித்த பின்னர் -தாமும் அவ்வாறு செய்யக் கூடாது என்று திரு உள்ளம் பற்றியே துணுக்குப் பாசுரங்கள் பரவி அருளிச் செய்துள்ளார்

    ———–

    3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

    3-1- ததீய சேஷத்வம்

    பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
    நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

    3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

    மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
    கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
    இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

    3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

    கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
    திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

    ————————————————————————————————

    4- கட்டுவிச்சி பேச்சு

    தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
    சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

    ——————————————————————————————-

    5- திருத் தாயாரை விட்டு செல்வது

    உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
    கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘-

    —————–

    ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –
    தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
    அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —

    சம்பந்த உபாய பலங்களில்
    உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
    ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
    தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

    (சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
    உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
    பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

    (ஞானத்தில் தம் பேச்சு வேதாந்தம் ஞானம் -என்றவாறு-திருமந்திர ஞானம் -பெண் பேச்சு
    சம்பந்த ஞானம் -தோழி -/ உபாய அத்யாவசியம்–தாய் / பேற்றுக்கு த்வரிக்கை மகள்
    பிரஞ்ஞா வேறே ஞானம் வேறே -எப்பொழுதும் உள்ள ஞானத்துக்கு பிரஞ்ஞா அவஸ்தை –
    மூன்றுமே எப்பொழுதும் இருக்கும் -ஓன்று உந்த மூன்று அவஸ்தைகள்
    நமக்கு முக்குணங்களும் இருந்து ஒவ் ஓன்று ஒவ் ஒரு காலத்தில் உயருமா போலே — )

    சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
    அதாவது –
    தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –
    திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
    அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
    ஹேது -சம்பந்தம்-ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
    (ஆதி -காரண கார்ய பாவம் -ரக்ஷக ரஷ்ய பாவம் -சேஷ சேஷி சம்பந்தம் இத்யாதிகள்)

    உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
    அதாவது
    தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே-
    அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய –
    படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே –
    சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே –
    சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் –
    அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் –
    இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து –
    சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற
    மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

    பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்
    அதாவது
    தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு –
    குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே
    பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு –
    சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து –
    தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக்
    கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு
    மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

    ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
    திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–
    பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
    எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

    ——

    இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –
    தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை
    ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–
    (தோழி -கடகர் ஸமாச்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
    அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
    ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

    சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்
    அனந்யார்ஹத்வமும் —

    வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று
    சார்வதே வலித்தமை ஸாதனம் ஆமோ என்று
    மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யவசாயமும் –

    புத்ரி பலகால் ஆள் விட்டு – ஆற்றாமை சொல்லி -கவராதமை விட்டு
    இரைக்க மடல் எடுத்து – கண் புதைய போக்கற்று- உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
    தாழ்ந்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று – சூழவும் பகை முகம் செய்ய- தடை நில்லாதே
    புயக்கற்று – மாலையும் – காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரையும் தெரியும் —சூரணை -134-

    சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
    அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை )
    அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்-
    வெறி விலக்கி-
    அதாவது
    எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் –
    மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி –
    இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே –
    பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு –
    இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி -வெறியாடல் உற –
    இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
    நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து –
    அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி –
    தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் –
    உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே

    (தலைமகள்) பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் ( தாயார் )கலங்கி-
    தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -–
    ( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே –
    தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு –
    இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட –
    அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ( தோழியானவள் )இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக –
    அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே
    இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் —
    அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

    ஆசை அறுத்து –
    அதாவது
    திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை
    மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்-
    இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
    திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் –
    இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
    ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –

    அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் –
    அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
    உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
    அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
    விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது —
    பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
    இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
    ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த
    துவளில் மா மணியும் —

    அறத்தொடு நின்ற
    அதாவது
    தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க-
    திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை
    இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் –
    இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய்
    இருக்கிற இவளைக் கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள்
    பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது –
    தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
    ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –

    அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு
    அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று
    மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை
    உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே –
    அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க –
    அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –
    சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும்
    இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –
    கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான
    இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை —

    ஆக இத்தால்
    வெறி விலக்கியும் ,
    ஆசை அறுத்தும் ,
    அறத்தோடு நின்றும் –
    இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன
    இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

    வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
    ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
    அதாவது

    1-வாடி –
    ஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
    பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
    ( காசை இழந்ததுக்கும் மேலும் பொன்னை இழந்ததுக்கும் மேலே மணியை இழந்த தசை அன்றோ )

    2-மெலிந்து
    பாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று
    கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
    (என்னுடை கோமளம் என் சொல்லும் என் வசமும் இல்லை நங்கைமீர் -உடல் மெலிய திருவடி மேலே சாத்திய
    திருத்துழாய் கிடைக்காமல் -கை கழிந்தவற்றையும் ஆசைப்பட்டு -முடியானே -3-8-உடன் சங்கதி இதுக்கு –
    இதில் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் –உலகமுண்ட பெரு வாயா போலே இங்கும் உண்டே -)

    3-பித்தேறி –
    மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
    சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
    ( ஏறிய பித்துடன் எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் -என்று சொல்லுவாள் -ஞானம் முற்றிய பித்து தானே இது
    தேறியும் தேறாமல் மாயன் திறத்தனள் இவள் )

    4-ஏறப்பேசி
    கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே
    அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
    (திருக்குறுங்குடிக்கும் வானமா மாலைக்கும் தூரம் கடல் ஞாலம் உண்டே -சாடுவாகச் சொல்வர்
    அநுகாரமும் ஆவேசமும் -கீழே தரிப்பும் தளர்வும் போலே )

    5-கட்டு அழிந்து
    மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
    பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
    (துவளில் மா மணி மாடம் ஆசை அறுத்து -அதில் இருந்து தாய் பாசுரம் -மாலுக்கு சென்றதுக்கு அவதாரிகை –
    த்வரை மிக்கு அனுபவ அலாபம்–ஆற்றாமை முறுகி-தோழி தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உறுப்பாகாமல்
    தளர்ச்சிக்கு உறுப்பாக -உபாய அத்யாவசாயம் இத்தனைக்கும் கலங்காமல் இருந்து –
    மாலுக்கு பாரவஸ்யத்தால் எறாளும் வேண்டாம் என்று உபேக்ஷித்தவை தன்னடையே இழந்தவற்றை அன்றோ அருளிச் செய்கிறார் )

    6-அகன்று –
    உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
    கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
    (மூன்றாவது சேர்ந்தால் போலே பிரேம தசை திருவாய்மொழி
    தன் சொத்தை பார்த்து போனவள் என் சொத்தையும் எடுத்து போக வேண்டுமோ –
    கண்ணும் கண்ண நீருமான இவள் திரு முகம் தானே தாயாருக்கு சொத்து
    தன் திருவும் என் திருவும் -திருமாலைத் தேடித் போனாள்-என் திருமகள் சேர் மார்பனே 7-2- )

    7-சார்வதே வலித்தமை
    கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி
    அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
    (வலித்தமை-அத்யாவசியம் -உறுதி உடைமை -சிக்கனவே -அவன் முன்னே முடியும் நிலை -பதினாறாயிரப்படி )
    உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும்
    க்லானி கார்ச்யாதிகள் (வாட்டமும் மெலிவும் -துரும்பாக இளைத்து போவது ) போல சாதனத்தில்
    மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
    குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –
    முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று
    ( முகில் வண்ணன் -அரங்கன் -7-2-திருவாய் மொழிக்கும் இந்த திரு விருத்த பாசுரத்துக்கும் சம்பந்தம் உண்டே
    உபாய அத்யாவசியம் ப்ராப்யம் அந்தர்கதம் ஒழிய உபாயாந்தரம் இல்லையே )
    அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை –
    (பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு -இதுவே கிருபை -பக்தி உபாயம் இல்லை -)

    ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
    போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் –
    உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-
    இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
    உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

    புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
    இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
    தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
    புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —
    அதாவது –

    1-2-3-4-புத்ரி பல கால் ஆள் இட்டு
    தலைமகள் ஆனவள்-
    அஞ்சிறை மடநாராய்-1-4-
    வைகல் பூம் கழி-6-1–
    பொன் உலகு ஆளீர்-6-8–
    எம் கானல்-9-7–
    என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
    ( திருவாய் மொழி முழுவதுக்கும் மூன்று ஸங்க்ரஹம் -அதுக்கு முதல் மூன்று பாசுரங்கள் ஸங்க்ரஹம் –
    அதுக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் )

    5-ஆற்றாமை சொல்லி –
    வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
    பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-

    6-கவராதவை விட்டு –
    ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
    (ஏறாளும் இறையோனில்-4-8 -ஆத்மாத்மீயங்கள் வைராக்யம்
    என்னையும் என் உடைமையையும் சக்கரைப்பொறி ஒற்றிக் கொண்டு-பெரியாழ்வார் –
    மாம் மதியஞ்ச அகிலம் – -தேசிகன்-அனைத்தும் சேஷம் -இது இல்லை என்றால் வேண்டாமே ஆழ்வார்
    லோக யாத்ரை வைராக்யம் கீழே-ஐஸ்வர்ய கைவல்யம் ஒரு நாயகம் )

    7-இரைக்க மடல் எடுத்து –
    மாசறு சோதியிலே-5-3- -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
    (ஹஸ்திகிரி பிரதிவாதி பயங்கரம் அண்ணா-மா முனிகள் சார்பில் அவர் முன்னிலையில் -வேங்கடேச ஸூப்ரபாதம் – ஸ்தோத்ரம் –
    மங்களம் இத்யாதி சமர்ப்பித்து -ஒன்றும் தேவும் பதிக வியாக்யானம் கேட்டு சமஸ்க்ருத பாண்டித்யம் அறிந்து அடி பணிந்தார் –
    உபதேசம் கேட்டு பொலிக பொலிக பொலிக மங்களாசானம் -5-2-)

    8-கண் புதைக்கப் போக்கற்று-
    ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
    முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
    ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
    ( கிருஷ்ணை ரஷித்த இருள் அங்கு க்ருஷ்ண த்ருஷ்ண தத்துவத்தை சிஷித்த இருள் இங்கு-
    பேர் அமர் காதல் பின்நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் 5-3-/-4-/-5-மொத்தமான நாயகி –
    பின்பு மொத்தமாக தானான தன்மையில் சரணாகதி -நாயகி பாவத்திலும் சரணாகதியும் உண்டே – )

    9-உரு நெஞ்சு உள் எழ
    எங்கனேயோ அன்னைமீர்காள் -திருவாய்மொழியிலே -5-5– -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
    என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
    அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –

    10-கூடு நாள் தேடி
    மானேய் நோக்கிலே-5-9- -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
    என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
    ( அடி பிரஸ்தாபம் ஏழு பாசுரங்கள் இந்த பதிகத்திலும் உண்டே )

    11-தாழ்த்ததுக்கு ஊடி
    மின்னிடை மடவாரிலே-6-2- -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
    (தானான தன்மை -ஞானத்தால் சரணாகதியும் பண்ணி -பிரேமத்தால் நாயகி பாவத்தால் தூதும் விட்டு
    சற்றே காலம் தாழ்த்து வந்ததால் பிரணாய ரோஷம் )

    12-உசாத் துணை அற்று
    வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –
    என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —

    13-சூழவும் பகைமுகம் செய்ய
    ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
    என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –

    14-தடை நில்லாதே –
    நங்கள் வரி வளையிலே-8-2- -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
    என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –

    15-புயக்கற்று
    இன் உயிர் சேவலிலே–9-5 -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
    என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்

    16-17- மாலையும் காலையும் பூசல் இடுகிற-
    ( முழு இரவு வியசனம் ஊரெல்லாம் துஞ்சி–5-4-இப்பொழுது மிகவும் தளர்ந்து அவ்வளவும் தங்க மாட்டாரே )
    மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
    முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
    வேய் மரு தோள் இணையிலே-10-3- -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
    போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால்
    நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

    பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —
    இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
    பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

    திருமங்கை ஆழ்வார் தலைமகள் திருத்தாயார் பதிகங்களும் 27 ஆகும்
    மானமரும் மென்னோக்கி பதிகம் தோழிமார் இருவரும் பரஸ்பரம் ஸம்பாஷிக்கும் முகத்தாலே பரத்வ ஸுலப்யங்களை வெளியிட்டு அருளுகிறார் -அது தோழி பதிகம் அன்று –
    திருத்தாயார் பதிகங்கள் ஒன்பது -அவை
    1-திவளும் வெண் மதி போல்
    2-கள்வன் கொல் நான் அறியேன்
    3-கவள யானை கொம்பு ஒசித்த
    4-வெருவாதாள் வாய் வெறுவி
    5-சிலையிலங்கு பொன்னாழி
    6-தெள்ளியீர் தேவருக்கும் தேவர்
    7-மூவரில் முன் முதல்வன்
    8-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த
    9-திருநெடும் தாண்டகத்தில் பட்டுடுக்கும் பதிகம்

    தலை மகள் பதிகங்கள் -18
    1- திரிபுரம் மூன்று எரித்தானும்
    2-தூ விரிய மலர் உழக்கி
    3-தந்தை காலில் பெரு விலங்கு
    4-கரையெடுத்த சுரி சங்கம்
    5-விண்ணவர் தங்கள் பெருமான்
    6- தந்தை காலில் விலங்கற
    7-பொன்னிவர் மேனி மரகதத்தின்
    8-தன்னை நைவிக்கிலென்
    9-காவார் மடற் பெண்ணை
    10-தவள விளம்பிறை துள்ளு
    11-காதில் கடிப்பிட்டு
    12-திருத்தாய் செம்போத்தே
    13-குன்றம் ஓன்று எடுத்தேந்தி
    14-குன்றம் எடுத்து மழை தடுத்து
    15-மன்னிலங்கு பாரதத்து
    16-சிறிய திருமடல்
    17-பெரிய திருமடல்
    18- திருநெடும் தாண்டகத்தில் மை வண்ண நறுங்குஞ்சி -பதிகம்
    ஆக இரண்டும் சேர்ந்து -அந்யாபதேச பதிகங்கள் 27 ஆயிற்று
    இவற்றின் ஸா தர்ம்ய வைதர்ம்யங்களைப் பார்ப்போம் –

    திவளும் வெண் மதி போல் பதிகம் கங்குலும் பகலும் போல்
    அவருடைய தாய்ப்பேச்சில் அது முடிவு பதிகம்
    இவருடைய தாய்ப் பேச்சில் இது உபக்ரமம்
    இவள் திறத்து என் செய்கின்றாயே -என்று வினவுதல் அங்கு
    நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று வினவுதல் இங்கு
    இவ்வினா பாட்டுத்தோறும் ஒக்கும்

    கள்வன் கொல் யான் அறியேன் -உண்ணும் சோறு பருகும் நீர்
    தாயை விட்டு மகள் பிரிந்து போதல் இரண்டிலும் உண்டு
    திருக்கோளூரை வினவிக்கொண்டு தனியாகப் போனாள் பராங்குச நாயகி
    வயலாலி மணவாளன் கொண்டு போகப் போனாள் பரகால நாயகி

    கவள யானை கொம்பு ஒசித்த –ஆடியாடி அகம் கரைந்து
    இரண்டிலும் இசை பாடிப்பாடி உருகுதல் ஒக்கும்
    என் வள்ளலே கண்ணனே என்னும் என்றாள் பராங்குச ஜனனி
    கவள யானை கொம்பு ஒசித்த கண்ணனே என்கிறாள் பர கால ஜனனி

    வெருவாதாள் வாய் வெருவி திருமொழி –பாலனாய் ஏழுலகு திருவாய் மொழியைப் போலவே
    என் செய்கேன் என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்–என்றாள் பராங்குச ஜனனி
    இதில் -தாய் வாயில் சொற் கேளாள் தன்னாயத் தோள் அணையாள் -என்கிறாள் பர கால ஜனனி

    ——-

    சிலையிலங்கு திருமொழி–கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
    அதில் ஈசன் வந்தேறக் கொலோ –பாட்டுத்தோறும்
    இங்கு -கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -பாட்டுத் தோறும்

    தெள்ளியீர் தேவர்க்கும் திருமொழியும் கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
    அதில் யானே யானே என்று எம்பெருமானுடைய தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத்தாயார் அருளிச் செய்த படியே
    இதில் -வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் -என்று தத் தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத் தாயார் அருளிச் செய்கிறாள்

    —-

    மூவரில் முன் முதல்வன் திரு மொழியும் -மண்ணை இருந்து துழாவி திருவாய் மொழியும்
    அதில் பிரான் கிடக்கும் கடல் என்னும்
    இதில் முழங்கார் கடலுள் கிடந்தது
    அதில் எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
    இதில் பூவலருமுந்தி தன்னுள் புவனம் படைத்து -என்றும் மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை –

    புள்ளுருவாகி நள்ளிருள் திருவாய் மொழியிலும் -பட்டுடுக்கும் -திரு நெடும் தாண்டக பதிகத்திலும் பராங்குச ஜனனியின் பேச்சுக்களின் பிரபஞ்ச ப்ரணாளிகள் உய்த்து உணரத் தக்கது
    திரு விருத்தத்தில் -அருளார் திருச்சக்கரத்தால் -என்னும் தாய்ப் பாசுரத்தில் -ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ -என்ற வார்த்தையே
    புள்ளுருவாகியில் ஒன்பது பழமொழிகளால் விஸ்தரிக்கப்பட்டு அருளிச் செய்கிறார்

    பட்டுடுக்கும் பாசுரத்தில்
    மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் என்று பர கால நாயகி -வர்ணிக்கப் படுகிறாள்
    நாம ஏகதேச க்ரஹண நியாயத்தாலே மணி வண்டு திருநாமம் ப்ரஸித்தம் ஆகிறது-
    பெரிய திருமொழி-அம்பரமும் பெரு நிலமும் என்று தொடங்கும் திருநறையூர் பதிகத்தில் -6-6-
    வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று மணி வண்டானது முந்துற செண்பகப் பூவை அநுபவித்து விட்டுப் பிறகு மகிழ மலரிலேயே படுகாடு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது
    யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதஸ் வகுலா மோத வாஸிதம் –யதிராஜ ஸப்ததி -என்றபடி திருவாய் மொழி அனுபவத்திலேயே ஊன்றி இருப்பதைக் குறித்த படி
    இவர் கடைக்குட்டி ஆழ்வாராகையாலே மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அனுபவங்களில் -செண்பகத்தின் வாஸம் உண்டு -என்று முதலில் குறிப்பிட்டு பின்பு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று திருவாய் மொழி அனுபத்திலேயே கால க்ஷேபம் செய்தமையைச் சொன்னவாறு
    இங்கு மணி வண்டு -என்று தம்மையே அருளிச் செய்து கொள்கிறார்
    இத்தை முன்னமே உணர்ந்து அறிந்த நம்மாழ்வார் திரு விருத்தத்தில்
    வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகன் வாரும் மலருளவோ நும்மியல் இடத்தே -என்று
    வண்டுகளோ வம்மின் என்று திருமங்கை ஆழ்வாரையே விளித்து
    நீர் உகந்து அருளின திருப்பதிகள் தோறும் உழல்கின்றீரே -திருவாய் மொழி போல் பரம போக்யமான பிரபந்தம் கடல் சூழ்ந்த மண்ணுலகம் எங்கேனும் கண்டதுண்டோ -என்ற வினாவுக்கு இவர் விடை இறுத்து அருளுகிறார் —
    ஸ்வாமிந் கண்டதில்லை-ஆனது பற்றியே வகுளத்தின் மலர் மேலே தானே வைகிக் கிடக்கிறேன் -என்று
    இதுவரை திருத்தாயார் பதிகங்களில் விசேஷப் பொருத்தங்களை அனுபவித்ததோம்

    ————–

    மேல் விசேஷப் பொருத்தங்களைப் பார்ப்போம்

    1-தைத்ரிய யஜுர் ப்ராஹ்மண்யத்தில் –கிருத்திகா ப்ரதமம் விசாகே உத்தமம் -என்று இவருடைய திருவவதார திரு நக்ஷத்ரங்களும் விசேஷித்து ஒதப்பட்டுள்ளது
    2-பாஹ்ய குத்ருஷ்டிகளின் செருக்கை அடக்கும் திறமையினால் பரகாலன் என்றும் பராங்குசன் என்றும் திரு நாமங்கள்
    3-அடியார்களை உகப்பிக்கும் திறமையினால் -இன்ப மாரி
    என்றும் அருள் மாரி என்றும் திருநாமங்கள்
    வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -4-5-10-
    அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி அடையார் சீயம் -3-4-10
    ஆனந்த வர்ஷுகர்- -இன்ப மாரி
    கருணா வர்ஷுகர்–அருள் மாரி
    4-தன்னொப்பார் இல் அப்பன் -6-3-9-என்ற மங்களா ஸாஸனத்துக்கு ஏற்ப-ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா -8–1-2-என்று அதற்குச் சேமக் காப்பு சாற்றி அருளினார்
    5-திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே -என்னும் -4-4-8-என்று பகவத் பக்தர்களான அரசர்களை மதித்து அருளிச் செய்ததை அடியொற்றியே
    தென்னன் தொண்டையர் கோன் -மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடிமாலை வயிர மேகன் -பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழற் பல்லவன்-துளங்கு நீண் முடி அரசர் தங்குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவன் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் —
    இருக்கிலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்
    என்று இப்படி பகவத் பக்தரான சில சக்ரவர்திகளைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார்
    6-கண்ணபிரான் திருவாய்ப்படியில்
    படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் களவு காணப் புகும் இடத்தில்
    தன்னிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெய் இருக்கும் இடம் தெரியாமல் தடவா நிற்கையில் யாதிருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த் தாழி தட்டின உவப்பினாலே பல்லைத் திறந்து சிரிக்க நேரும் -பூர்ண சந்த்ரனுடைய கிரணம் போலே திரு முத்துக்களின் ஒளி புறப்பட -அந்த ஒளியைக் கை விளக்காகக் கொண்டு வெண்ணெயை வாரி விழுங்குவான்
    நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவனே –3-8-3-
    உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானே -2-10-6-
    7-தீர்ப்பாரை யாமினி -7-6- தேவதாந்தர கட்டுவிச்சி
    சிறிய திருமடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பகவத் ப்ரவணை
    8-முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் –திருவிருத்தம்
    முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
    9-பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை போல் இவரும்
    நண்ணாத வாள் அவுணரிலும் கண் சோர வெங்குருதியிலும் ததீய மஹாத்ம்யம்
    10-ஊரெல்லாம் துஞ்சியிலே தனிமைக்கு வருந்தியது போல் இவரும்
    தந்தை காலில் விலங்கற -திருக் கண்ணபுர பதிகத்தில் வருந்துகிறார்

    11-ஒரு நாயகம் -பதிகம் ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம்
    பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ -6-2-5- சுருக்கமாக அருளிச் செய்கிறார்
    12-குரவை ஆய்ச்சியாரோடு -கிருஷ்ணாவதாரம் விரித்த பதிகம் போல் இவரும்
    மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -திருமொழியில் அருளிச் செய்கிறார்
    13-இன்னுயிர் சேவலில் -என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் -என்று இன்னாப்புடன் அருளிச் செய்தது
    இவரும் திருத்தாய் செம்போத்திலே வெறுப்பின்றியே அநு நயமாக அருளிச் செய்கிறார்
    14-மின்னிடை மடவார் ஊடல் ரஸம்
    காதில் கடிப்பிட்டில் அதே ரஸம்
    15-உண்ணிலாய ஐவரில் இந்திரியங்களுக்கு ஆற்ற உண்ணாமல் ஓலமிட்டபடியே திருவுக்கும் திருவாகிய திருமொழி
    16-ஆழி எழ -திருவாய் மொழி போல் பல அவதான அனுபவ ரஸம் ஏழை ஏதலனிலும்
    17- கடியன் கொடியன் நெடியமால் –ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்Kkruthamக்ருத தாஸ்யம் இன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யத்தை
    வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்று நயவேன் -என்று அருளிச் செய்கிறார்
    18-சூட்டு நன் மாலைகள் –பாசுரத்தில் -கண்ணன் வெண்ணெய் தொடு உண்பதற்க்காகவே-திருவாய்ப்பாடியில் திருவாவதரித்தான் என்று அருளிச் செய்தது போல்
    இவரும்-கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் -என்று அருளிச் செய்கிறார்
    19- எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஒருகால் சொல்லித் தரைப்பட்டார்
    இவரோ அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே -என்று ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லித் தரைப்படுகிறார்
    20- பக்தாம்ருதம் –நெஞ்சுக்கு இருள் கடி தீபம் -இரண்டு தனியன் களிலும் அமைந்த ஐந்து விசேஷணங்களும் தேனிலும் இனியவை
    சீரார் சடகோபன் செந் தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெறவும்
    பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
    மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் பெறவும்
    இராமானுச முனியை வணங்கி வேண்டுதல் ஒக்கும்

    சதுர் முக சமாக்கயாபி சடகோப முனவ் ஸ்திதா -ஸ்வ வாஸா மாத்ரு துஹித்ரு ஸஹி வாஸா ச வர்ணநாத்
    தாஸத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலவே ஸ்த்ரீத்வமும் ஸ்வா பாவிகமே -இயற்கையே -வந்தேறி அல்ல
    பதி பத்நி பாவ சம்பந்தம் -ப்ரணவத்தில் உகாரத்தாலே அவதாரண அர்த்த்தாலே அவனுக்கே ஆட்ப்படும் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
    கண்டார் இகழ் வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்-போல் இருக்க வேண்டும் அன்றோ
    பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -6-5-10- தோழி பாசுரம்
    பெரிய திருமொழியில்-காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் -திருத்தாயார் பாசுரம்
    மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –

    ————————————————————————

    மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
    அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

    ஆக -சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
    சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
    முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
    புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே –
    (சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
    வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
    சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
    ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
    கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
    தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
    புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
    இந்த வேத அங்கங்களோடே வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன -என்றவாறு )
    அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
    இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

    ———————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆழ்வார்‌ திருவுள்ளம்‌-பகுதி -2-

    January 25, 2024

    தமிழ்‌ அகப்பொருள்‌ முறையும்‌ உள்ளுறைப்‌ பொருளும்‌

    பத்திநெறியைப்‌ பாடும்‌ தமிழ்நாட்டுப்‌ பத்தர்களின்‌ பாடல்களில்‌ அகப்பொருள்‌ நூற்கருத்துகளை ஒட்டிய பாடல்‌கள்‌ கலந்து விளங்குவது யாவரும்‌ அறிந்ததே.

    வைணவ சமயச்‌ சார்பான நூல்களில்‌ அம்முறை தப்பாய்‌ வளர்ந்‌துள்ளமையும்‌, அகப்பொருட்டுறையில்‌ அமைந்த பாடல்‌களுக்கு
    அழகுற உள்ளுறைப்‌ பொருளை விரிவுரையாளர்கள்‌ எழுதியுள்ளமையும்‌ தமிழுலகம்‌ அறியும்‌,
    பத்தர்கள்‌ இறைவனை அநுபவிக்கும்‌ பல வகை முறைகளில்‌ தலைவன்‌ தலைவி முறையும்‌ (நாயக நாயகி பாவம்‌) ஒன்றாகும்‌.
    இம்‌ முறை உலகத்துப்‌ பிற நாட்டுச்‌ சமய இலக்கியங்களிலும்‌ காணக்கூடியதே, ்‌ .

    வைணவ பரம்பரையில்‌ முதல்‌ ஆசாரியரான நம்மாழ்‌வார்‌ நூல்கள்‌ நாலிலும்‌ முதலதான திருவிருத்தத்தில்‌ முதற்‌ பாட்டும்‌ கடை எட்டுப்‌ பாட்டுகளும்‌ தவிர
    மற்றவை யாவும்‌ அகப்பொருள்‌ களவித்‌ துறையில்‌ அமைந்த பாடல்‌களே.
    கடை.சியில்‌ தோன்றிய நாலான திருவாய்மொழியிலும்‌ 100 திருவாய்மொழிகளில்‌ 27 திருவாய்மொழிகள்‌
    (பதிகங்கள்‌) அகப்பொருட்‌ பாடல்‌ முறையில்‌ அமைந்‌துள்ளன.
    அவற்றில்‌ ஆழ்வார்‌ தாமான தன்மை நீங்கிப்‌ பெண்‌ தன்மை அடைந்து இறைவனைத்‌ தம்‌ தலைவனாகக்‌கொண்டு அநுபவிக்கின்றார்‌.
    அவர்க்கு அந் நிலையில்‌ “பராங்குசநாயகி’ என்று பெயர்‌ வழங்குகின்றார்கள்‌ விரிவாளர்கள்‌.

    அப்பாசுரங்கள்‌ “தோழி பாசுரம்‌, தாய்‌ பாசுரம்‌,(தலைவி பாசுரம்‌” என மூன்று வகையாக அமையும்‌. பேச்சு மூன்றுவகையாக இருப்பினும்‌, அநுபவம்‌ ஆழ்வாருடையதே.
    பல வகையாகப்‌ பிரியினும்‌ அவர்‌ அநுபவத்திற்குக்‌ குறைவு ஓன்றும்‌ நேர்வதில்லை. *பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை. நோக்குமா போலே” ஆழ்வார் தம்‌ அன்பு பல பிரிவு
    களாகப்‌ பிரியினும்‌ கடலையே சென்று சேரும்‌ என்று ஆசார்ய ஹிருதய ஆரியர்‌ விளக்குகின்றார்‌. (ஸூ . 131)
    *இறைவனைப்பற்றிப்‌ பேச வேண்டிய இடத்தில்‌ உலகியற்‌ காமத்தை–காதலைப்‌ பற்றிப்‌ பேசுவது சிறப்பாக இல்லையே!? என்பது சிலர் எழுப்பும்‌ தடை.
    இதே தடையை நான்காம்‌ திருவாய்மொழியின்‌ தொடக்கத்தில்‌ முதன்‌ முதல்‌ ஆழ்வார்‌ பெண்‌ தன்மை
    அடைந்து பேசும்‌ பாடல்‌ வரும்போது ஈட்டின்‌ ஆரியர்‌ எழுப்பி, விடையும்‌ தருகின்றார்‌.
    *இது காமுகர்‌ பேச்சு அன்று; இறைவன்‌ கேட்கத்‌ தக்கவன்‌, நினைக்கத்‌ தக்கவன்‌, தியானம்‌ செய்யத்‌ தக்கவன்‌, பார்க்கத்‌ தக்கவன்‌” என்று
    பிரஹதாரண்ய உபரிடதம்‌ கூறுவதுபோலக் கொள்ளப்படும்‌ பகவத்‌ காமம்‌- நல்வினை உள்ள ஒருவனே இப்‌ பேறு பெறுகின்றான்‌”, என்பது அவர்‌ கூறும்‌ விடை.

    ————-

    அகப்பொருள்‌ நூல்களையே வெறுப்பாரும்‌ உண்டு,-திருக்குறள்‌ போன்ற நூலிலும்‌ காமத்துப்பால்‌ அமைந்‌ இருப்பது குறையே எனக்‌ கொள்பவர்‌ சிலர்‌ உண்டு,
    *பத்தியையும்‌ ஞானத்தையும்‌ சொல்லும்‌ நூல்களில்‌ இன்பச்சுவை அடிப்படையில்‌ அமைந்த பாடல்‌ எதற்கு?” என்று ஐய வினா எழுப்புவர்‌ சிலர்‌.
    அதற்கு மாறாக, “அகப்பொருள்‌ வெறுக்கத்‌தக்க பகுதியன்று. என்றைக்கும்‌ நிலைத்துள்ள இயல்புகளை அழகுற
    இன்பச்‌ சுவைப்ட எடுத்துச்‌ சொல்லும்‌ பாடல்கள்‌ அவை. அம்முறைக்கு இலக்கணம்‌ வகுத்தமை தமிழின்‌ சிறப்பு”, என்பர்‌ மற்றொரு சாரார்‌.
    திருவள்ளுவர்‌ தம்‌ பொதுமறையில்‌ அம்முறையை ஒழுங்குபடுத்தி அமைத்திருக்கும்‌ தன்மையே அப்பொருளின்‌ ஏற்றத்தினை விளக்குமென்பர்‌ சான்றோர்‌.
    “அது தன்னளவில்‌ முடிவது அன்று, கசப்பு மருந்தை உண்ண மாட்டாதார்க்கு வெல்லக்‌ கட்டி பூசி மருந்துண்ணச்‌ செய்வது போலச்‌
    சிற்றின்பத்தைக்‌ கூறும்‌ முறையில்‌ பேரின்பத்திற்கு வழிகாட்டுவதே அப்பாடல்களின்‌” நோக்கு”, என்று பெரியோர்‌ சிலர்‌ பணிப்பர்‌,”
    இக்‌ கருத்து இறையனார்‌ களவியலுரைக்‌ கருத்தை ஒட்டி அமைகின்றது.-சுருக்கமாக அகப்பொருள்‌ தமிழுக்கு உயிர்நிலையாகும்‌-
    இறையனார்‌ அகப்பொருள்‌ உரையே அதன்‌ உண்மையை அறிவது ஆண்டவனுக்கன்‌றி மற்றையோருக்கு அரிது எனப்‌ புலப்படுத்துகின்றது”,” மீனாட்சிசுந்தர
    மேலும்‌, அகப்பொருள்‌ நூல்கள்‌ எப்படியிருந்த போதிலும்‌, இங்கு ஒப்பற்ற இறைவனே நாயகனாய்‌ வருவதால்‌ இச்சமயப்‌: பாடல்கள்‌ முழுச்‌சிறப்புப்‌ பெறுகின்றன.
    இங்கு மக்களை ஏமாற்றி அழைத்துச்‌ செல்லும்‌ நிலைமை எதுவும்‌ இல்லை என்பதும்‌ குறிக்கொள்ளத்‌ தக்க சிறப்பாகும்‌.

    ———

    பெண்ணாதற்‌ சிறப்பு
    ஆழ்வார்‌ ஏன்‌ பெண்தன்மை ஏறிட்டுக்‌ கொள்ள வேண்‌டும்‌ என்றால்‌, அவர்‌ வலிந்து அம்மாற்றம்‌ பெறுதல்‌ இல்லை.
    அந்நிலை தானாக வந்தடைகின்றது.
    இறைவனது ஆண்மையும்‌ வடிவழகும்‌ சீல குணமும்‌ படுத்தும்‌ பாடு அது.-இறைவனாய தலைவன் முன்‌ எல்லா உயிர்களும்‌ பெண்‌ தன்மை அடைந்து விடுகின்றன.
    உயிரின்‌ – சேதனனின்‌ – இயல்பு*அவனுடைமையாம்‌ தன்மை யாதலின்‌” பெண்‌ தன்மை இயல்பாக வந்து விடுகின்றது.
    “பெண்களுக்கு மோட்ச நிலை இல்லை”, என்ற நூல் கருத்து உண்டு- ஆனால்‌, இங்கு ஆழ்வார்‌ பெண்‌ நிலையடைந்து இறைவனை அநுபவித்தலை நாம்‌ காண்‌கின்றோம்‌.
    இராமாவதாரத்தில்‌ முநிவர்களாய்‌ இருந்தவர்‌களே இராமன்‌ அழகில்‌ ஈடுபட்டு அவனை வேண்டிக்‌ கொண்டு,
    அவன்‌ கண்ணனாய்‌ அவதரித்த போது கோபியர்களாக அவதரித்தார்கள்‌- அவனைக்‌ கூடி மகிழ்த்தார்கள்‌. என்பர்‌,
    அது ஏற்றுக் கொள்ளப்‌ படுமானால்‌ ஆழ்வார்‌ அப்போதே (பெண்ணிலை யடைந்து இறைவனை அநுபவிப்பது அதனினும்‌ சீரியதே யன்றோ?

    ————

    அகப்‌ பாடலும்‌ பத்திப்‌ பாடலும்‌
    திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ பெண்ணிலை அடைந்து பேசும்‌ பாசுரங்கட்கு அமைந்துள்ள ‘உள்ளுறைப்பொருளை
    யெல்லாம்‌ ஒருசேரத்‌ தொகுத்து விளக்கமுற அமைக்கின்றார்‌ இந்நூலாசிரியர்‌.
    பாசுரங்களில்‌ வரும்‌ கொங்கை முதலிய உறுப்புகள்‌, தூதுவிடும்‌ பறவை முதவியவை யாவற்றுக்கும்‌ உள்ளுறைப் பொருளை விளக்குதலைக்‌ காண்கின்றோம்‌.
    தமிழ்‌ அகப்பொருள்‌ இலக்கணத்தோடு இப்பாடல்களில்‌ குறிக்கப்‌ படும்‌ தத்துவம்‌ ஓரளவு ஒத்துள்ளமையும்‌ காணலாம்‌.
    இம்‌முறை பற்றிக்‌ குறைவாக நினைப்பவர்க்கு “அப்படியன்று”,என்பதை விளக்குவதற்கே ஆரியர்‌ இவ்வளவும்‌ எழுதுகின்றார்‌ என்பது தோன்றுகின்றது.
    இராமாயணத்தில்‌ வரும்‌ பிராட்டி நிலையை ஆழ்வார்‌. அடைந்து பேசுவதாக இவர்‌ எடுத்துக் காட்டுவதும்‌ அதனை வலியுறுத்தும்‌,
    உலகியற்‌ காமத்திலும்‌ இங்குப்‌ பேசப்படும்‌ பகுதி வேறானது என்பதை அகப்பொருள்‌ இலக்கணத்திற்கு
    மாறாகப்‌ பராங்குச நாயகி மடலேறுவதாகச்‌ சொல்வதும்‌ காட்டுமெனலாம்‌.
    அதுபற்றியே பின்னா்‌ எழுந்த பன்னிரு பாட்டியல்‌ அதற்கு விதியும்‌ அமைக்‌கின்றது.

    ———–

    ஆசாரிய ஹிருதய ஆரியர்‌ கூறும்‌ விளக்கங்களை இனிக்‌காண்பாம்‌:
    “ஞானத்தில்‌ தம்‌ பேச்சு: பிரேமத்தில்‌ பெண்‌ பேச்சு”என்பது ஸூத்ரம் -1-8-.
    பிரேமம்‌-அன்பு.காதல்‌ மிகும்‌ போது தான்‌ ஆழ்வார்‌ பெண்ணான நிலையில்‌ பேசுகின்றார்‌.

    நேரிற்‌ கண்டாற் போன்று இறைவனை மனத்தாற்கண்டு அநுபவிப்பது “புணர்ச்சி” எனப்படும்‌.
    கண்களால்‌ காண வேண்டுமென்ற புற அநுபவம்‌ பெறாமை பிரிவு எனப்படும்‌,
    அகப்‌ பொருட்‌ பாடல்களிற்‌ பெரும்பாலன, ஆற்றாமை காரணமாக எழுந்தவைகளாகவே உள்ளன. -ஒரு திருவாய்மொழி மட்டும்‌ மகிழ்ச்சிப்‌ பேச்சாய்‌ உள்ளது.
    தாமான தன்மைப்‌ பேச்சின்‌ போதும்‌ பெண்‌ தன்மைப்‌ பேச்சின்‌ போதும்‌ ஆழ்வாரின்‌ மனப்பாங்கு ஒரே தன்மையதாகத் தான்‌ இருக்கின்றது.
    அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌” என்பது பெண்‌ பேச்சாகும்‌ போது
    “*அடிச்சியோம்‌ அடிக்கீ க்‌ குற்றேவல்‌” என்று மாறுகின்றது.
    எனவே, அப்‌ பேச்சும்‌ ஆழ்வார்க்கு இயல்பான பேச்சே) வந்தேறியன்று என்பது விளங்கும்‌ (ஸூ 4–21).

    ————

    அழகிய உருவகம்‌
    “பெண்ணொருத்தி திருமணம்‌ செய்து கொண்டு தன்‌ நாயகனைச்‌ சேர்வதும்‌ ஓர்‌ ஆன்மா
    இறைவனை அடைவதும்‌ ஒரே தன்மையன என்பதை உருவகமாகக்‌ காட்டுகின்றார்‌ ஆசிரியர்‌.
    தாய்‌, தந்‌தை , உடலை வளர்க்கும்‌ உணவு, கைப்‌ பிடிக்கும்‌ கணவன்‌, திரு நாண்‌ முதலிய பலவும்‌ ஆங்கு எடுத்‌துக்‌ காட்டப்படுகின்றன.
    வித்தை தாய் -; பாலும்‌ அமுதுமாய்‌ இருந்து வளர்த்தது திருமால்‌ திருநாமம்‌-
    ஆன்மா திரு மகள்போல ஆசாரியனாகிய தந்தையால்‌ வளர்க்கப்படுகிறது.
    வேறொருவருக்கு உரிமை பேசும்‌ நிலலை ஏற்படாமல்‌, உலகின்‌ தலைவனும்‌ காப்பவனும்‌ ஆன அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயகர்‌ ஆவர்‌. அவரை மணம்‌ முடித்தவர்‌ தந்‌தையாய ஆசாரியர்‌.
    எட்டு இழையும்‌ மூன்று புரியும்‌ கொண்டது மங்கல நாண்‌: அதைப் போன்றதே *இறைவனைச்‌ சேர்ந்தது ஆன்மா” என்ற தொடர்பை
    உணர்த்துகிற எட்டு எழுத்துகளால்‌ ஆகி மூன்று சொற்களாய்‌ இருக்கின்ற பிரணவமாகிய திருமந்திரம்‌,
    மந்திரம்‌ உணர்ந்த பின்னரே இறைவனோடுள்ள தொடர்பு

    இவ்வாறு பரமபுருடன்‌ ஆன்மாவைக்‌ கைக் கொண்டபின்‌
    திருமணம்‌ முடிந்து எஞ்சிய ஓமம்‌ முடியுமளவும்‌ நாலுநாள்‌ பெண்‌ தன்‌ நாயகனை அணுகுதலும் அகலுதலும் இன்றி வேறொருவர்க்கு உரியவரல்லாத அடிமைத்‌ தன்மைக்குப்‌
    பொருந்த அவன்‌ அநுபவத்திற்குத்‌ தாக்கவளாக அமைவள்‌.
    திருமந்திரதிதல்‌ உள்ள ‘ஓம்‌* என்பது வேரொருவரருக்கு உரியதல்லாத அடிமைத் தன்மையை உணர்த்தும்‌.
    ஏற்றுக்‌ கொள்ளப்பட்டு இறைவனை நெருங்கி அவனோடு கலவா விடினும்‌, அகலுதலும்‌ அணுகுதலுமில்லாமல்‌
    கைங்கரியத்தை வேண்டுதலை *(நாராயணாய’” என்பதிலுள்ள சதுரத்தி-நான்‌காம்‌ வேற்றுமை–உணர்த்துகின்றது.
    மணமக்கள்‌ ஒரே படுக்‌கையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌, நெருங்கிப் பழகும்‌ வாய்ப்‌பின்றி சோமன் முதலியவர் நடுவே இருப்பதாகச் சொல்லப்படும்‌ நாலு நாட்கள் போல, அடிமைத்‌ தன்மை அறிதலும்‌ கைங்கரியம்‌ செய்ய வேண்டும்‌ என்ற விருப்பமும்‌ இருப்பதால்‌, இருவருக்கும்‌ நெருக்கம்‌ உண்‌டாயிருக்கவும்‌,
    சேர்ந்து அநுபவிக்க இயலாதவாறு. அநுபவ விரோதியான உடம்புடன்‌ கூடி யிருக்கும்‌ நாலு நாள்‌ களையும்‌ ஆன்மா ஒருவாறு கழிக்கின்றது.

    பெண்‌, பிறந்த வீட்டைத்‌ துறந்து புக்ககம்‌ செல்லுதல்‌ போல, ஆசாரியன்‌ உபதேசித்த திரு மந்திரத்தால்‌ ஆன்மா
    பிறவியை அடை.ந்தது இங்கேயாகையால்‌,
    பிறப்பிடமான இவ்வுலகை இறைவன் பாலுண்டான அன்பின்‌ மிகுதியாலே முன்பு தனக்கு ஆதரவாய்‌ இருந்த பல பொருள்களோடும்‌ கை விடுகன்றது
    சூழ்‌ விசும்பு” என்னும்‌ திருவாய்மொழியில்‌ சொல்லுகிறபடி அர்ச்சிராதி மார்க்கத்திலே வழியிலுள்ள
    அனைவரும்‌ போற்ற நாயகன்‌ அழைத்துச்‌ செல்ல, அவனோடு உடன்‌ செல்கின்றது;
    கணவன்‌ வீடு செல்லும்‌ பெண் அவனூரின் எல்லையை அடைந்த பின் அவர்கள் குளிப்பாட்டக் குளிக்குமாறுபோல,
    அமுத வெள்ளத்தை. உடைய விரசை என்ற ஆற்றிலே இப்பாலுள்ள அழுக்கெல்லாம்‌ நீங்க நீராடுகின்றது-
    குளித்த பெண்ணை நாயகனுடைய உற்றார் உறவினரான மகளிர்‌ அலங்கரிப்பது போன்று, துழாய் மாலை,.அஞ்சனத்தின்‌ நீறு, நண ப்பொடி, ‘ பீதக வாடை,
    பல அணிகலன்‌ முதலியவற்றால்‌ மானேய்‌ நோக்கியரான மகளிர்‌ இறைவன்‌ நுகருதற்கேற்றவாறு, அவளை அணி செய்வர்‌
    தம்‌ ஈடுபாடு தோன்ற அனைவரும்‌ கூடி நின்று அவளைப்‌ போற்றி”புரைப்பர் – சாமரம்‌ ப்ணிமாறி மகிழ்விப்பர்‌,

    மணப் பெண்‌ கணவனின்‌ இல்லத்தை அணுகியவுடன்‌ அங்குள்ள மகளிர்‌ மங்கல விளக்கு முதலியன ஏந்தி வந்து
    வரவேற்பது போல, ஆன்மாவை
    *நிதியும்‌ நற் சுண்ணமும்‌ நிறைகுட விளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌ ஏந்தினர்‌”(10-9-9) என்கிறபடியும்‌,
    *சதிரிள மங்கையர்‌ தாம் வந்து எதிர்கொள்ள? (நா. திரு. 6-5) என்கிறபடியும்‌
    மங்கலப்பொருள்‌களுடன்‌ தெய்வ மகளிர்‌ எதிர் கொள்வர்‌. பாராட்டோடு சென்ற பெண்‌ கணவன்‌ இல்லில் புகுமாறு போல,
    *மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரீ” (நா, திரு.10) என்கிறபடி திருமகள்‌ கேள்வனானவனுக்கு
    இன்பந்தருமிடமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்து அவனோடே. கூடியிருக்கும்‌.

    பின்‌ கணவன்‌ வீட்டிற்கு வந்த பின்‌ மண மக்களும் மற்றுமுள்ள உறவினர்களும்‌ கூடியிருந்து பெரும் களிச்சி உண்ணுமாறு போல,
    அடியார்‌ குழாங்களும்‌ அவனுமாக இருக்கிற சேர்த்‌தியிலே பெருங்களிச்சியாக முழுக்க அநுபவிக்கும்‌;
    *கட்டெழில்‌ வானவர் போகம்‌ உண்பரே” (6-6-11) என்றபடி நித்திய ஸூரிகள்‌ : அநுபவிக்கிற இன்பத்தை
    *அவன்‌ பிரமத்‌துடன்கூட இணை பிரியாமல்‌: எல்லா இன்பங்களையும் (கல்யாண குணங்களையும்‌) அநுபவிக்கின்றான்‌” என்கிறபடியே அநுபவிக்‌கும்‌.

    கணவனோடு கூடு வதற்கு கட்டிலிலே ஏறுமாறு போல, மிகச்‌ சிறப்பாகச்‌ செய்யப்பட்ட அவனது கட்டிலிலே
    பாத பீடத்திலே அடியிட்டேறி இராமனாய்‌ இருந்து பரதனையும்‌ திருவடியையும்‌. அணைத்துக் கொண்டதும்‌,
    கண்ண பிரானாய் இருந்து அக்குரூரனை அணைத்துக்‌ கொண்டதும்‌ ஆன கெளத்‌துப மணிக்கும்‌ அழகு செய்யும்‌
    இறைவனது திருமார்பிலே இறைமையின்‌ அடையாளமான கெளத்துபம் போல இன்பப்‌ பொருளாய்‌ ஒளி செய்வதாய்‌ அணைவது ஆன்மாவாகிய பொருள்‌.
    அதற்குப்‌ பெண்‌ தன்மையால்‌ உண்டானதாக வரும்‌ பேச்சு, வந்தேறியன்று; பெண் தன்மை இயல்பாக உண்டாவதாகைபாலே
    அதனை. உள்ளபடி பெற்ற இவருக்கு அதனால் உண்டான பேச்சும்‌ இயல்பான ‘ பேச்சே என்பது தேற்றம்

    ———

    மூவகை நிலை

    பெண்‌ பேச்சாகப்‌ பேசும் இடத்திலும் ஆழ்வாருடைய பேச்சு மூன்று விதமாக அமைந்திருப்பதைக்‌ காண்கிறோம்‌.
    ஆழ்வார்‌ தோழியாகவும்‌ தாயாகவும்‌ மகளாகவும்‌ இருந்து பேசுகின்றார் -இதன்‌ கருத்து யாது?

    தோழியாவாள்‌ தலைவனையும்‌ தலைவியையும்‌ இணக்கிச் சேர்ப்பவள்‌,
    திருமந்திரத்தில்‌ முதற் சொல்லான பிரணவத்‌தால்‌ இறைவனோடு ஆன்மாவுக்குச்‌ சொல்லப்பட்ட:
    வேறொன்றிற்கு உரியதல்லாத அடிமைத்தன்மை முதலான
    சம்பந்தத்தை அறிதலே அவனோடு ஆன்மா சேருதலுக்கு ஹேது
    ஆகையால்‌, அந்தச்‌ சம்பந்த ஞானம்‌ என்கிற அறிவு நிலை.
    *தோழி” என்று சொல்லப்படுகின்றது. ்‌

    தாயாவாள்‌ பெற்று வளர்த்துப்‌ பெண் பிள்ளை பருவ:மடைந்து தலைவனிடம்‌ கொண்ட அளவற்ற ஈடுபாட்டால்‌.
    அவனிருந்த இடத்திற்குப்‌ போக வேண்டுமென்று பதறுமளவிலும்‌, அவன் தானே வரக்‌ கண்டிருத்தலொழியப்‌ படி.
    கடந்து போதல்‌ குல மரபுக்கு ஏற்றதன்று என்று கூறித்‌தடுத்து நிறுத்துபவள்‌.
    *சித்தோபாயம்‌ என்கிற இறைவனையே உபாயமாகப்‌ பற்றினவர்க்கு அடையப்படு பொருளின்‌ கால தாமதத்துற்குக்‌
    காரணம்‌ இல்லாமையால்‌, விரைவாகப்‌. பேற்றைப்‌ பெற வேண்டும்‌ என்ற பதற்றம்‌ தோன்றும்‌.
    பேற்றின்‌ சிறப்பைக் க ண்டறிந்ததாலே முறைப்படி – படிப்‌.தடியாக… அவனை அடைதல்‌ வேண்டுமென்று இராமல்‌,
    மிக்கு. நடக்கிற அளவில்‌ இது பிரபன்ன குல .மரபுக்ருச்‌ சேராது?
    தலைவனானவன்‌ தானே வந்து ஆட்கொள்ளப்‌ பார்த்திருக்க வேண்டும்‌ என்று துடிப்பை அடக்கப்‌ பார்க்கின்ற
    உபாயத்‌ துணிவு ஆகிற அறிவு நிலையே தாயார்‌ என்று பெயர்பெறும்‌–இந் நிலையைத்‌ திருமந்திரத்தில்‌ நடுச்சொல்‌ உணர்த்தும்‌,

    தலைமகளாவாள்‌ இயற்கையில்‌ தலைவனைக்‌ கூடி அவன்‌ சிறப்புகளிலே ஈடுபட்டுக்‌ ‘குல மரபுகளையும்‌ நோக்காது
    அவனை அடை,ந்தல்லது ஆற்றேன்‌ என்னும்‌ பதற்றத்தைஉடையவள்‌. -தலைவனும்‌ சரணடையத்‌ தகுந்தவனுமன் இறைவனுக்குத்‌
    திருமந்திரத்தின்‌ கடைச்‌ சொல்லால் ‘சொல்லப்படுவதான அவன்‌ இயல்பு வடிவு குணம்‌ செல்வங்களால்‌ வந்த சிறப்பு இவற்றை எண்ணி, அவனை அநுபவித்‌தலில்‌ தாமதத்தைப்‌ பொறாமையாலே்‌,
    அவன் ஒருவனே உபாயமானவன் – என்கிற துணிவையும்‌ மீறி அவனை அடைந்து அநுபவித்தல்லது தரியாதபடி
    நடக்கிற *பேற்றில்‌ பதற்றம்‌” ஆகிய அறிவு நிலையை மகள்‌ என்று பெயரிட்டு வழங்குவர்‌.

    இம்‌ மூன்றுவித நிலைமைகளும்‌ எக்காலத்தும்‌ ஆழ்வார்‌ தம்‌ உள்ளத்திலே உண்டு. அதனால்தான்‌ இவை *அறிவு நிலை”(பிரஜ்ஞா அவஸ்தை) என்று சுட்டப் பெறுகின்றன.’
    திருவாய்மொழி நூலில்‌ தோழியின்‌ பேச்சாய்‌ உள்ளவை மூன்று. திருவாய்‌ மொழிகள்‌–அவை:
    தீர்ப்பாரை யாமினி (4-6),
    “துவளில்‌ மாமணி” (6-5),
    கருமாணிக்க மலை: (8-9) என்பனவாம்‌,

    தீர்ப்பாரை யாமினி :
    இயற்கையாய்த்‌ தலைமகனைக்‌ கூடிப்பின்‌ அவனைப்‌ பிரிதலால்‌ வந்த ஆற்றாமையாலே மயக்க மடைந்த தலைமகளின்‌
    நிலையைக்‌ கண்டு தாய்மார்‌ கலந்த *இவளது நோய்‌ இன்னது” என்பதும்‌, “அதன்‌ காரணம் இன்னது” என்பதும்‌,
    (அதனைப்‌ போக்கும் விதம்‌ இன்னது”என்‌யதும்‌ அறியாதே ஒரு கட்டு விச்சியின்‌ சொற்‌ கேட்டு, அவள்‌ ‘நோய்‌ நீங்குதற்காக வெறியாடத்‌ தொடங்கினார்
    அப்போது தலைமகனின்‌ இயல்பை நன்கு அறியும்‌ அவன்‌ உயிர்த்‌ தோழி,”வேறு ஒருவருக்கும்‌ உரியள் அல்லாத இவட்டுப்‌ பிறர் தொடர்பு கூறுவதை இவள்‌ ஆற்றாள்‌,
    நாம்‌ இதனை விலக்காவிடில்‌ இவளை இழக்க நேரும்‌” என்று எண்ணி, அப்பொழுது தான்‌ தான்‌ ஆராய்ந்து அறிந்தவள்‌ போன்று
    இவள்‌ நோவையும்‌ அதற்குக்‌ காரணத்தையும்‌ அவர்கட்குச் சொல்லித்‌ தக்க மருந்துகளையும்‌ விதித்து,
    “அங்கோர் கள்ளும்‌ இறைச்சியும்‌ தூவேன்‌ மின் (4-6-3)என்று இவை முதலியவற்றால்‌ வெறி’ விலக்கிப்‌ பேசும்‌ பாடல்கள்‌ இதில்‌ அமைந்துள்ளன.

    இதன்‌ உள்ளுறைப்பொருள்‌:
    பேற்றினை அடைய உள்‌ளம்‌ பதற்றம்‌ கொண்ட நிலையிலும்‌ அது கிட்டாமையால்‌ ஆற்றாமை மிக்கது
    அது காரணமாக அவனையே உபாயமாகக்‌ கொண்ட உபாயத்தில்‌ துணிவு கலங்கியது;
    தர்மம்‌ மேற் கொண்டு ஒழுகுதலாலே இந் தோயைப்‌ போக்கலாம்‌-என்று அந்தரியாமியான இறைவனுக்குச்‌ செய்யும்‌ கருமங்களைச்‌ செய்தலில்‌ ஈடுபாடு தோன்றிற்று,
    அப்போது சம்பந்த ஞானமானது- அவனுடன்‌ உள்ள தொடர்பு பற்றிய அறிவானது–இந்நோய்‌ கருமத்தின்‌ பலனாக உண்டானதன்று
    தற்செயலாக ஏற்பட்ட இறைவனது அருள்‌ நோக்கின்‌ பயனால்‌ உண்டானது. சிறந்த திருமேனியோடு கூடியவனான இறைவனை
    அநுபவிக்கையாலே வந்த எடுபாட்டின்‌ விளைவு இது. ஆகையால்‌, கருமம்‌ புரிதல்‌ இதனைப்‌ போக்கும்‌ வழி யன்று.
    வேறொருவர்க்‌ குரியதல்லாத அடிமைத் தன்மையாகிய ஆன்மாவின்‌ இயல்புக்கு அது முரணான செயலாகும்‌?
    எனவே, அதனியல்பை அழிப்பதாகும்‌. இவ்வாறு பிற உபாயங்களை மேற்கொள்ளுதலை விலக்குவதே இதன்‌ உட்கோள்‌ ஆகும்‌.

    துவளில்‌ மாமணி :
    திருத்தொலை வில்லிமங்கலம்‌ என்னும்‌ திருப்பதியிலே மிக்க ஈடுபாடு கொண்டுள்ள ஒரு தலைமகளை
    அந்நிலைமையி லிருந்து மீட்கப்‌ பார்க்கின்றனர்‌ அவள்‌ தாய்மார்‌.
    தோழி யானவள்‌ அவர்களை நோக்கி , “இவளை நீரினி அன்னைமீரீ1 உமக்கு ஆசையில்லை விடுமினோ!” என்கிறாள்‌.
    நீங்களன்றோ திருத் தொலை வில்லிமங்கலத்தில்‌ இவளைக்‌ கொண்டுபோய்‌ இவட்கு இந்த ஈடுபாட்டை விளைத்தீர்கள்‌?
    இனி அடையப்‌ பட்ட பொருளில்‌ ஈடுபட்டவளான இவளை உங்களால்‌ மீட்க இயலாது.
    ஆகையால்‌, நீங்கள்‌ இவள் மேல் கொண்ட ஆசையை விடுங்கள்‌!’ என்று அறிவுறுத்துகின்றாள்‌.

    இதன்‌ உள்ளுறைப்‌ பொருள்‌ –
    அர்ச்சாவதாரமான எளிய பொருளே உபாயமாகையால்‌, எப்போதும்‌ அதிலே நோக்காயிருக்கும்‌ உபாயத்தைப்‌ பற்றிய துணிவு,
    அப்பொருளின்‌ சிறப்பை உணர்தலால்‌ வந்த ஈடுபாட்டின்‌ விளைவான பதற்றம்‌ உபாயத்திலே ‘பொருந்துகிறதோ–சேர்கின்றதோ.-. என்ற வேண்டாத ஐயப்பாட்டாலே அதைத்‌ தடுக்க முயல்கிறது.
    அச் சமயம்‌,“சம்பந்த ஞானம்‌– அடிமைப்‌ பொருளின் பால்‌ உண்டான இவ் வீடுபாடு–தலைவனின்‌ உகப்புக்குத்‌ தக்கதே:
    உபாயப்‌ பகுதியில்‌ சேராது? அடையப்பட்ட பொருளின்‌ சிறப்புக்‌ காரணமாய்‌ வந்தது; இதனைத்‌ தடுத்தலும்‌ இயலாது? தடுக்கக் கூடுமென நினைத்திருக்கின்ற உரிமையே எண்ணம்‌ நெருங்கிய
    அவனுடைமை யாதலகின்ற (பாரதந்தரியமாகிற) இயல்புக்கு மாறானது ஆகையாலே விடத்தக்கது-
    என்று தன்‌ தொடர்பை நீக்கும்படி. சொல்லியது இத் திருவாய்‌ மொழியின்‌ பொருளாகும்‌.

    கருமாணிக்க மலை :
    தலைமகளின்‌ பருவத்தைக்‌ கண்ட உறவினர்‌, சுயம்வரத்‌திற்கு அரசர்களை யெல்லாம்‌ திரட்டுகைக்கு மண முரசு அறை விக்கின்றனர்‌.
    திருப்புலியூர்‌ என்னும்‌ திவ்விய தேசத்து இறைவனோடே. இவளுக்குச்‌ சேர்க்கை உண்டாய் விட்டது என்பதை
    இவள்‌ வடிவிலும்‌ பேச்சிலும்‌ உண்டான வேறு பாட்டாலே அறிகின்றாள்‌ உயிர்த்தோழி,
    அவள்‌, *இம்‌ முரசொலி பெண் பிள்ளை செவியிற்‌படுமாகில்‌, “மானிட வர்கென்று பேச்சுப்படில்‌
    வாழாத்‌ தன்மையளா யிருக்கினற இவள்‌, உயிர் தரியாள்‌, ஆகையால்‌, அதனைத்‌ தடுக்க வேண்டும்‌” எனக்‌ கருதுகிறாள்
    உறவினர்களிடம் , *இவளுக்குத்‌ திருப்புலியூர்‌ நாயனாரோடே சேர்க்கை உண்டாயிற்றுப்போல இருக்கின்றது?
    அவனுடைய குணம்‌ செயல்களையே எப்‌ பொழுதும்‌ சொல்லிச்‌ சொல்லிப்‌ புலற்றுகின்றாள்‌? எனவே, நீஙிகள்‌ செய்வது முறையற்ற செயல்‌? என்று ‘தெரிவிக்‌கின்றாள்
    அவரிகள்‌, “அப்படியானால்‌ இவளுக்குத்‌ தக்க உறுப்பழகு, அணியழகு முதலான நாயக லக்ஷணங்கள் அவனுக்கு உண்டோ?” என்று கேட்கின்றார்கள்‌,
    அவைகளில்‌ எக்குறைவும்‌ இல்லை. அவற்றுள்‌ ஒன்றும்‌ இல்லையே யானாலும்‌, இவளிடம்‌ அவனுக்கள்றிப்‌ பிறரக்குரியள்‌ அல்லாதவளானமைக்கு அடையாளம்‌ தெளிவாகக் காணலாம்
    ஆன பின்பு உங்கள்‌ முயற்சியை விடுங்கள்‌! என்று நடுவு நிலயளாய்‌ நின்று அறம்‌ சொல்லுபவளாய்‌ வேறு மணம்‌ விலகினைமை சொல்லப்‌ பெறுகின்றது
    இத்‌ திருவாய்‌ மொழியில்‌, அறத்தொடு நின்ற நிலையே இங்குப்‌ பேசப்‌ படுவது,

    உள்ளுறைப்பொருள்‌ :
    அடையப்படுகின்ற பொருவின்பால்‌ பதற்றம்‌ கொண்ட நிலையை பேற்றின்‌ கண்‌ பதற்ற நிலையின்‌ முதிர்வை.
    உபாயத்‌ துணிவு நிலையிலே நின்று கண்ட பிறகு,
    அந் நிலை இறைவனை யன்றி வேறு பிறர்குத்‌ தகுதியற்றதான தன்மையை அறியாதே, *மற்றையோர்க்கும்‌ தகுதியோ” என்ற ஆராய்ச்‌சி எழுந்தது.
    அவ்வளவில்‌ சம்பந்த ஞானம்‌ இதற்கு வேறு பிறர்க்கு அடிமை என்ற பேச்சுக்கூட இதன்‌ இயல்பை அழிப்பதாகும்‌.
    தலைவனுடைய இனிமையாலும்‌ மற்றும்‌ இயல்பாகவே அவனுக்கு அடிமையாம்‌ தன்மையாலும்‌ இவ்வான்மா
    அவனுக்கே அடிமை” என்று அறுதியிடப்‌ படுவது இத்திருவாய்மொழியின்‌ பொருள்‌,

    ஆக, தோழியானவள்‌ வெறிவிலக்கியும்‌, ஆசையறுத்தும்‌,
    அறத்தொடு நின்றும்‌, “இவ்வான்மா பிறர்க்கு அடிமைப்‌ பட்டதுமன்று? தனக்குத் தானே உரியதுமன்று:
    இறைவன்‌ ஒருவனுக்கே அடிமை” என்று சொன்ன மூன்று திருவாய்‌ மொழிகளும்‌ சம்பற்த ஞான நிலையில்‌ பேச்சு என்பது தெளிவு.

    தாய்‌ பேச்சான திருவாய்மொழிகள்‌—7 :
    *ஆடியாடி” (2-4) என்ற திருவாய்மொழியில்‌ அடியார்கள்‌ குழாங்களை உடன்கூடப்‌ பெருமையால்‌ வந்த வருத்தத்தாலே கொழுகொம்பை இழந்த தளிர் போலத்‌ தலைமகள்‌ வாடுகின்றாள்‌.
    *பாலனாய்‌ ஏழுலகில்‌? (4-2) என்ற திருவாய்மொழியில்‌
    “கண்ணனது அடியில்‌ சூடிய துழாய்க்கு மெலியும்‌”?என்றபடி. கடந்த போனதை ஆசைப்பட்டு மெலிகின்றாள்‌.
    “மண்ணையிருந்து துழாவி” (4-4) யிலே *என்‌ பெண்‌
    கொடி ஏறிய பித்தே* (4-4-6) என்னும்படி அவனுக்கு”ஒப்பான பொருள்களையும்‌ உறவான பொருள்களையும்‌ அவனாக எண்ணி, அவற்றைக்‌ கிட்டும்படி பித்தேறிப்‌ பேசுகின்றாள்‌.
    ‘கடல் ஞாலத்திலே (5-6) “ஈசன்‌ வந்தேறக்கொலோ*”(5-6-1) என்று ஆற்றாமையாலே *அவனைப் போலப்‌ பாவித்‌தலை–அநுகரித்தலைத்‌ தெரிந்து கொள்ளாதே இறைவன்‌ இவள் மீது ஆவேசித்தானோ!” என்று கருதும்படி, அவனாகப்‌ பேசுகின்றாள்‌...

    “மாலுக்கு வையத்திலே” (6-6) *கற்புடையாட்டி இழந்தது கட்டே” (6-6-10) என்னும்படி இறைவளை அடையாது துன்பத்தாலே கட்டடங்க இழக்கிறாள்‌.
    “உண்ணும்‌ சோற்றில் *(6-7) *இன்றெனக்கு உதவாதகன்ற”(6.7.6) என்று தன்னைப்‌ பிரிந்து
    துன்புறுகின்ற தாய்‌, “அந்த ஆபத்தான நிலையில்‌ ‘எனக்கு உதவாதே போனாள்‌” என்னும்படி அகல்‌கின்றாள்‌.
    “கங்குலும்‌ பகலிலே” (7-2) *சந்தித்து’ உன்‌ சரணம்‌. சார்வதே வலித்த தையல்‌” (7-2-5) என்னும்படி “அவனை அடைந்து அவன்‌ முன்னிலையில்‌ முடிய வேண்டும்‌” என்றஉறுதி பூண்டவளாகின்றாள்‌.

    பத்தியால்‌ வழிபடுவோர்க்குப்‌ பரபத்தி தசையிலுண்‌டாம்‌ வாட்டம்‌, மெலிதல்‌ முதலியவைய போலத்‌ தலைமகளின்‌ இந்நிலமை
    உபாயத்தில்‌ கொண்டு சேர்க்குமோ என்று தாயானவள்‌ அஞ்சி, இறைவனையும்‌ வினவ வந்தவர்களையும்‌ பார்த்து
    வாடா நின்றாள்‌? மெலியா நின்றாள்‌? என்றாற்போன்று
    முறையிடுகின்றாள்‌; “உம்முடைய கிருபை தவிர இவள்பக்கல்‌ உள்ள ஒன்றும்‌ ஹேதுவன்று
    ஆனபின்பு இவளை “இப்படித்‌ துடிக்க விட்டிருத்தல்‌ உம்முடைய கி ருயைக்கும்‌ காக்கும்‌ தன்மைக்கும்‌ தக்கதாமோ? என்று
    கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உபாயத்‌ துணிவு அல்லது உறுதிநிலை தோன்றும்‌.-ஆகையால்‌, தாய்ப்‌ பேச்சான ஏழு திருவாய்‌மொழிகளும்‌ உபாயத்‌ துணிவு நிளையில்‌ பேச்சு என்பது தெளிவு .

    தலைமகள்‌ தன்மையில்‌ ஆழ்வார்‌ பேசும்‌ திருவாய்மொழி-17

    தலைமகள்‌ *அஞ்சிறைய மட நாரை” (1-4), *வைகல் பூங்கழி” (6.1)) *பொன்னுலகாளீர்‌* (6-8), *எங்கானல்‌”(9-7) என்கிற
    நான்கு திருவாய்மொழிகளிலும்‌ அவன்‌ வருகின்ற வரையிலும்‌ பொறுத்திருக்கப்‌ பொறாமல்‌ பதறித்‌ தூது விடுகின்றாள்‌.

    “வாயும்‌ திரையுகளிலே (2-1) “ஆற்றாமை சொல்லி அழுவோமை”: என்று எல்லாப்‌ பொருள்களும்‌ இறைவனைப்‌ பிரிந்த காரணத்தினால்‌
    துன்புறுகின்றனவாகக்‌ கருதி அவற்றைத்‌ தன்னோடொத்த துபரமுடையனவாகக் கொண்டு அழுகிறாள்‌.

    *ஏறாளு மிறை யோ’னில்‌ (4-8) *மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலம்‌?” என்று அவன்‌ விரும்பாதவற்றை வேண்டாவென்று வெறுத்துரைக்கிறாள்‌.

    “மாசறு சோதி*யிலே (5-3) “நாடும்‌ இரைக்கவே யாம்‌ மடலூர்தும்‌” என்று (உலகம்‌ முழுவதும்‌ கலக்கமடையும்படி மடல்‌ ஊர்வேன்‌!’ என்று சொல்கிறாள்‌.

    ஊரெல்லாம்‌ துஞ்சி*யிலே (5–4) காதல் தோயும்‌ இரவாகிய கறிபமும்‌ முன்னரே உடன்பாடு செங்து கொண்டாற் போன்று சூழ நின்று பொருதலால தப்ப வழியற்றவள் ஆகின்றாள்

    எங்ஙனேயோ”லில்‌ (5-5) சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர்‌ உருவம்‌ விருப்பும்‌ வெறுப்பும்‌ சமமாம்படி ௨ரு வெளிப்பாடாய்‌ வெளிப்படும்‌ நிலையளாகின்றாள்‌.

    *மானேய்‌ நோக்கிலே: (5-9) திருவல்ல வாழுறையும்‌ ‘தலைவரைக் கூடும்‌ நாளை வேண்டுகின்றாள்‌. : .

    “மின்னிடை மடவாரிலே” (6–2) அவன்‌ காலம் தாழ்த்து வரவே, ‘போகு நம்பீ? என்று காதலால்‌ ஊடலை மேற்‌ கொள்கிறாள்‌ *

    *வெள்ளைச்‌ சுரி சங்கிலே” (7-3) *என்‌ நெஞ்சும்‌ அவன்‌ பின் போய்‌ விட்டது! ஆகையால்‌, ஒரு துணையுமற்றேன்‌! என்று உசாத் துணையுமற்றவளாகின்றாள்‌.

    ஏழையர்‌ ஆவி’யிலே (7–7) கண்ணனது உருவமும்‌ உறுட்புகளும்‌ உருவெளிப்பாட்டாலே இவளை ஒரு சேர நலிகின்றன.

    “நங்கள்‌ வரிவளை*யிலே (8–2) *காலம் பல சென்றும்‌ காண்பது ஆணை உங்களோடு எங்களிடையில்லை!‘ என்று நன்மை சொல்கிற்‌ தாய்மார்‌ தோழிமார்களையும்‌ தாண்டிச்‌
    செல்லும்‌ நிலை பெறுகின்றாள்‌.

    *இன்னுயிர்ச்‌ சேவ*லிலே (0-5) போலியான பொருள்‌களைக்‌ கண்டு நொந்து முடிதலில்‌ துணிந்தவளாகின்றாள்‌.

    *மல்லிகைகமழ்‌ தென்றலில்‌ (9-9) மாலைக்‌ காலத்தில்‌ கண்ணன்‌ பசுக்களின்‌ முற்கொழுந்தில்‌ வரக்‌ காணாமையால்‌, பகையாய்‌ நின்று துன்புறுத்தும்‌ பொருள்களாலே நலிவு யடுகின்றாள்‌.

    *வேய்மரு தோளிணை”யிலே (10-3) விடியற்காலையிலே கண்ணன்‌ பசு மேங்க்கப்‌ போனானாகத் தவறாக நினைத்துக்‌ கொண்டு அவன்‌ முகத்தைப்‌ பார்த்து, ‘பசு மேய்க்கப்‌ போனால்‌ நலியக்‌ கூடிய பகைப்‌ பொருள்கள்‌ நலியா நின்றன” என்று கூப்பீடு செய்கின்றாள்‌.

    இவ்வாறு பதினேழு திருவாய்‌மொழிகளிலும்‌ பேற்றில்‌ பதற்றம்‌ தோன்றும்‌.
    இதனால்‌,தலைமகள்‌ பேச்சான பதினேழு திருவாய்‌ மொழிகளும்‌ பேற்‌றில்‌ பதற்ற நிலையில்‌ பேசுமிடம்‌ என்பது தெளிவாம்‌.

    இவ்வாறு மூன்று திருவாய்‌ மொழிகளில்‌ பிறர்க்கு உரிய தல்லாத அடிமைத்‌ தன்மையும்‌,
    ஏழில்‌ உபாயத்தில் துணிவும் பதினேழு திருவாய்‌ மொழிகளில்‌ பேற்றில்‌ பதற்றமும்‌ ஆகியமூன்று நிலைப்‌ பேச்சுகள்‌ அமைந்துள்ளன (ஸூ 134), இவை யாவும்‌ தோழி, தாய்‌, மகள்‌ பேச்சாய்‌ உள்ளன.

    ஆழ்வார்‌ பாசுரங்களில் பல இடங்களில்‌ *தோழிமாரீ”என்றும்‌, *அன்னையா்‌* என்றும்‌ பன்மைக்‌ குறிப்புகள்‌ உள்ளன.
    “தோழி” என்பது சம்பந்த ஞானத்தையும்‌, “தாய்‌! என்பது உபாயத்தில்‌ துணிவையுமாயின்‌, இவ்வாறு பன்மையாகக்‌ கூறுவது ஏன்‌ என்னும்‌ கேள்வி எழுவது இயல்பே,
    ஆன்மாவோடு இறைவனுக்கு உள்ள சம்பந்தம்‌ ‘ரக்ஷகத்துவம்‌,-சேஷித்துவம்‌, காரணத்துவம்‌,சரீரத்துவம்‌” எனப் பல உண்டு.
    ஆகையால்‌, அந்த அந்தச்‌ சம்பந்தகளின்‌ ஞானம்‌ குறித்த தன்மைக்‌ கேற்பத்‌ தோழியரும்‌ பலராயினர்‌.
    உபாயமாக இருக்கின்றவனான இறைவனுடைய தன்மையும்‌ வாத்சல்யம்‌, ஸ்வாமித்துவம்‌, செளசல்யம்‌, செளலப்பியம்‌, ஞானம்‌, சக்தி, கிருபை முதலான பல, -அத்தன்மைகள்‌ பற்றித்‌ துணிவு வரும்‌.
    அத்தன்மைகளின்‌ பன்மைக்கேற்பத்‌ தாய்மாரும்‌ பலராகப்‌ பேசப்படுவது பொருந்தமேயாகும்‌.

    இதைப் போன்ற தலைமகளுடைய பருவங்கள்‌, பேதை பெதும்பை, மஙகை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்‌ பெண்‌” என ஏழு ஆம்‌.
    பேற்றில்‌ பதற்றம்‌ கொள்ளும்‌ ஏழு நிலைமைகளை பத்தியின்‌ முதல்நில்‌ தொடங்க கடை நிலை முடியவுமுள்ள நிலை வகைகளின்‌ ஏழு பிரிவுகளை–அவ்‌வேழு பருவமாகக்‌ கொள்ளலாம்‌.
    அவையாவன:
    ஓரு பொருளைப்‌ பார்த்தவுடன்‌ பிறக்கும்‌ விருப்பம்‌(அபிலாஷை),
    அப்‌ பொருளைப்பற்றிய சிந்தனை,
    அது இடையராது நடைபெறுகின்ற தொடர்ந்த நிளைப்பு (அநுஸ்ம்ருதி),
    அப்பொருளை எப்படியும்‌ பெற்று நுகர வேண்டுமென்கின்‌ற இச்சை,
    வேறொன்றாலும்‌ மாற்ற முடியாதபடி முதிர்கின்ற:சுவை,
    “அப்பொருளைப்‌ பெறின்‌ இன்பம்‌, பிரியின்‌ துன்பம்‌” என்கிற பரபக்தி ,
    பிரிந்த அளவில்‌ உயிர்‌ பிரியும்‌ தன்மைய்தான பரமபத்தி என இவை ஏமு நிலைமைகளாம்‌ (ஸூ 136.)

    அருளிச்செயலில்‌ தலைமகளின்‌ உடல்‌ . உறுப்புகளாக எடுத்துச்‌ சிறப்பித்துக்‌ கூறும்‌ ஒவ்வொன்றுக்கும்‌உட்கருத்து உண்டு. அவையாவன ;
    1, கூந்தல்‌ பரப்பை ஆதாரமாகக்‌ கொண்டு பெண்களை மயில்‌ என்பர்‌.–இது ஞான மலர்ச்‌சியைச்‌ சொல்கின்றது.-
    2..வெண்மையான ஒளியுடைமையால்‌ நெற்றியைப்‌ பிறை என்பர்‌.–இது பிறர்க்கு அடிமை யாகாமை: என்ற தூய்மையைக்‌ குறிக்கும்‌
    3… வளைவை யுடைமையால்‌ புருவத்தை வில்‌ என்பர்‌.–இது அகமும்‌ புறமும்‌ ஆய கரணங்களை அடக்கி ஆளுதலாகிய தாந்தியைக் குறிக்கும்‌.
    4, இலக்கை நோக்கச்‌ செல்லும்‌ தன்மையால்‌ கண்ணை அம்பு என்பர்‌,–இது தனக்காக வகுத்த இறைவனையே நோக்கும்‌ ஞானத்தைச்‌ சொல்வது.
    5: ஆனந்தத்தைத்‌ தரும்‌ தன்மையால்‌ வெண் முறுவலை முத்து என்பர் ,(முத்‌” என்ற வடசொல்‌ *ஆனந்‌தம் ” என்ற பொருள்‌ தரும்‌) இது அப்பொருளை அநுபவித்தால்‌ உனதாகும்‌ ஆனந்தத்தைச்‌ சொல்லும்‌.
    6–செத்றிறமுடைமையால்‌ இதழைப்‌ பவளம் என்பர் –இது அவளைப்‌ பற்றுதலில்‌ உண்‌டான அனு ராகத்‌தைச்‌ (ராகம்‌.ஆசை– சிவப்பு ) சொல்லும்‌.
    7-நன்கு வளர்ந்த முலையைச்‌- செப்பு என்பர்‌.-இது தலைவனது. அநுபவத்திற்கு ஏற்ற பக்குவமான பக்தியைக்‌ காட்‌.டும்‌
    8-நுண்மை உடைமையால்‌ இடையை மின்‌ என்பர்‌.–இது ஞான நிலைச் சிறப்புகளுக்‌கெல்‌லாம்‌ ஆதாரமான ஆன்மாவின்‌ அணுத்‌ தன்மையைக்‌ காட்‌டும்‌.
    9-அழகிய அல்குலைத்‌ தேர்‌ என்பர்‌,-இது ஆன்மாவின்‌ இன்பத்தைக்‌ காட்டும்‌,
    10-நடை அழகால்‌ அன்னம்‌ என்பர்‌.-இது யாவரும்‌. போற்றும்படி தன்‌னியல்புக்கு ஏற்ப நடக்கிற கதியைக் காட்டும்‌.

    ஆக , ஞான மலர்ச்சி , தூய்மை முதலியவைகட்கு இருப்பிடமாய்‌ உள்ளே யிருக்கின்ற ஆன்ம சொரூபத்தின்‌ வகுப்பு இத்தகையது என்பதாம்‌.
    ஆன்மா ஒன்றே தோழி, தாய்‌, மகள்‌ என்ற மூவர்‌ தன்மையிலும்‌ மூன்று நிலைகள்‌ அடைவதால்‌,
    (பேற்றின்‌ பதற்றமாகச்‌ சொன்ன மகளின்‌ ஆன்ம சொரூபத்‌தைப்‌. பொருளாகக் கொண்டு இங்குப்‌ பேசப்‌ படுகின்றது–அது பொருத்தமேயாகும்‌.)

    தோழி, தாய்‌, தலைமகள்‌ என்கிற மூன்று நிலைகளின்‌ செயல்‌ வேறுபாடு: ்‌
    தாய்‌ தோழி மீது, “இவளைக்‌ கொண்டு போய்ச்‌ செய்த சூழ்ச்சியை யார்க்கு எடுத்துரைப்பேன்‌!* என்று பழி கூறுவது,.
    தோழி தாய்மார் மேல்‌, அவளைத்‌ தொலை வில்லிமங்கலம்‌ அழைத்துக்‌ கொண்டு போனவர்கள்‌ நீங்களே!’ என்று பழி கூறுவது,
    ஆக இப்படி ஒருவர்‌ மீது ஒருவர்‌ பழி கூறிக் கொள்வதும்‌?

    “தோழிமார்‌ என்னை இணக்கி விளையாட அழைக்க நான்‌ போந்தேன் ”, என்றும்‌,
    தாய்மார்‌ என்னை “அழைத்துக் கொண்டு போக நான்‌ போந்தேன் ” என்றும்‌,
    இருவர் மேலும்‌ பழி உண்டு என்று தலைவி இசைந்து காட்டி மேலெழுத்திடுவதும்‌ ஆகிய இரண்டும்‌ .முதல்நிலை, -‘

    “பலர்‌ காண வீட்டின்‌ முன்னின்றாய்‌!*? என்று தோழி. தலைமகளைக்‌ கடிவது;
    *இவளை விட்டு விடுங்கள்‌” என்று தாய்‌மார்க்குக்‌ கூறுவது போலத் தலைமகளுக்குத்‌ துணை செய்வது
    ஆக. இப்படி இ ருபடைகளுக்கும்‌ தன்னை அநுகூலமாககக்‌ கொள்வதும்‌?
    *ஆரென்னை ஆராய்வார்‌”–என்ற பாசுரத்தால்‌ தாய்மார்‌ தோழிமார்‌. இருவகையரோடும்‌ தலைமகட்கு உடன்பாடு இருப்பதாகக்‌ காட்டப்படுவதும்‌? ஆகிய இரண்டும்‌ இரண்டாவது நிலை.

    அவ் விருவகையரோடும்‌ தனக்கு ஒரு தொடர்புமில்லை என்று இரு வகையரையும்‌ தலைமகள்‌ உத.றிவிடுகையும்‌;
    இவள்‌ என்றும்‌ அவன்‌ பெயரே கூறி நைந்து. இரங்கும்‌” என்று தலைவியின்‌ ஈடுபாட்டைத்‌ தோழி கொண்டாடுவதும்‌,.
    “இவள்‌ திருக்கோளூர்க்கே. நடந்தாள் என்று திருத்தாயர்‌ கொண்டாடுவதும்‌ ஆகிற உதறுதலும்‌ கொண்டாடுதலும்‌. மூன்றாவது நிலை.

    இதில்‌ *பழி, மேலெழுத்து” என்ற இரண்டாலும் சம்பந்த ஞானமும்‌ உபாயத்தில்‌ துணிவும்‌ ஆகிய இவை இரண்டும்‌,பேற்றில்‌ பதந்றத்திற்குக்‌ காரணமாக இருப்பது முதல் நிலை.

    இருபடை மெய்க்காட்டு, உடன்பாடு என்ற இரண்டாலும்‌. சம்பந்த ஞானம்‌ மற்ற இரண்டிற்கும்‌ துணை புரிகிறது; பேற்றில் பதற்றத்துக்குக் காரணமான சம்பந்த ஞானமும் -உபாயத்‌தில் துணிவும்‌ இட வேறுபாட்டால்‌ அதற்கு உறவாக. அமைவது இடைநிலை.

    உதறுதல்‌, கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ பேற்றில்‌ பதற்றமானது சம்பந்த ஞானத்தையும்‌ உபாயத்தில்‌ துணிவையும்‌ மீறுதலும்‌,
    அங்கனம்‌ மீறுவது கொண்டாடத் தக்கதாதலும்‌ ஆகிய இது இறுதிநிலை.

    இவ்வாறு சம்பந்தஞானம்‌, ‘ உபாயத்தில்‌ துணிவு, . பேற்றில்‌ பதற்றம்‌ ஆகிய மூன்று நிலைகளின்‌ செயல்‌ விசேடங்கள்‌ நடைபெறும்‌.

    தாயாரான உபாயத் துணிவு நிலையில் ஏதிலராகச் சொல்வது சித்தோபாய நிலைக்குப்‌ பகையான சாத்ய உபாய: நிலையினரை
    உறவாகச் சொல்லுவது அநுகூலரான சித்த உபாய நிலையினரை.

    தலைமகளான பேற்றின்‌ பதற்றமாகிற திலையில்‌ நெருங்கிய பகைவராகச்‌ சொல்லுவது; இறைவனையே உபாயமாகப் பற்றி நின்று பின்னும்‌ பதறுதல்‌’
    பாரதந்தரிய நிலைக்குச்‌ சேராது என விலக்கும்‌ சித்த சாதன பரரை.
    “என்‌ துணையான தோழிமார்‌” என்று தன்‌ துணையா”கச்‌ சொல்லுவது தன்னைப் போலே அவனுடைய உபேயத் தன்மையில்‌ உடன்பட்டிருக்கும்‌ சாத்திய பரரை. .

    நாணி இனியோர்‌ கருமமில்லை நாலயலாரும்‌ அறிந்‌ தொழித்தார்‌” (நர. தி, 12-:2) என்கிற பாட்டில் நாலயலார்‌..என்பது, “கருமம்‌, ஞானம்‌, பத்தி, பிரபத்தி ” ஆகிய நான்கு உபாயங்களிலும்‌ ஊன்றி நிந்பவர்களை யாகும்‌.

    “அயற்சேரி மீர்காள்‌?. (7-3-2) என்பது, : அர்ச்சாவ தரத்தில்‌ ஈடுபாடின்றி வேறான அந்தர்யாமித்வத்‌ தன்மைஇல்‌ ஊன்றி யிருப்பவர்களையாகும்‌.

    ‘கீழையது மேலையது வடக்கிலது* என்று குறிக்கப்படும்‌ “கருமம்‌, ஞானம்‌, பத்தி? என்கிற வேறு உபயன்களானவை உபாயஙநிகளரனவை

    சித்த சாதந பரர்க்கு- இறைவனையே உபாயம்‌ என்று கொள்பவர்க்குப்‌ புறப்புறமாம்‌: அதாவது புறப் பகைகளாம்‌.
    பிரயத்தியும்‌ புறம்‌ (அயல் ) எனப்பட்டது முன்னர் . பிரபத்தி நெறியில்‌, தான்‌ அவனைப்‌ பற்றுதலும்‌ அவன்‌ தன்னைப்‌ பற்றிக்‌”கொள்ளுதலும்‌ என்னும்‌ இருநிலை்‌ உண்டு,
    அவற்றில் அவனைப்‌ பற்றிக் கொள்ளுதலாகிற தன்பற்று, “அகப்புறம்‌ அல்லது “உட்பகை” ஆகும்‌ என்பதாம்‌. ்‌

    “ஊரார்‌” என்பது ஆன்ம அநுபவம்‌ . விரும்பும் கேவலரை,.
    “நாட்டார்‌” என்பது இவ்வுலகச்‌ செல்வங்களை விரும்‌புபவர்களை.
    உலகர்‌” என்பது ஸ்வர்க்கம்‌ முதலான மேலுலகச்‌(செல்வங்களை விரும்புகின்ற தன் முனைப்புள்ளவர்களை,
    “இறுகவிறப்பு” என்பது குவிந்த நிலைமையதாயிருக்றை மோட்சமாகும்‌. இதனை அனுபவிக்கும்போதும்‌ இந்தப்‌ பிரகிருதி மண்டலத்திற்கு அப்பாலான பரமாகாசத்திலே யிருந்து அநுபவிக்க வேண்டும்‌.-ஆகையால்‌,. இதுவும்‌ இறந்தால்‌ போய் வாழும்‌ தேசத்தை ஒக்கும்‌. எனவே, இதனைத்‌ *தனிஊர்‌” என்றார்‌ மேல்‌,

    *சிறுசுளகு” என்பது, பெரு மணலையும்‌ நுண்மணலையும்‌ பிரித்தெடுக்கும்‌ கருவி.
    எனவே, இது உடல்‌ ஆன்மா ஆய இரண்டையும்‌ பகுத்தறிதற்குத்‌ துணையான .அளவையைக்‌ குறிக்கும்‌.

    “சீரார்‌ சுளகு” என்பது, நெல்லையும்‌ மணலையும்‌ பிரித்‌தெடுப்பது இது ஆன்மா வேறு; பரமாத்மா வேறு. என்று பருத்தறிவதற்குத் துணையான அளவை.
    மற்றைத்‌ தெய்வங்‌களும்‌ ஆன்மாக்கள்‌ பிரிவில்‌ அடங்குவனவே

    மாலை: பொருள்கள்‌ தெளிறவு அறிந்து கொள்ள இயலாது மயங்கும்படி செய்யும்‌ காலம்‌; இது பொருள்களைத்‌ தெளிவுறத்‌ தெரிந்து கொள்ளற்‌கியலாததான ராஜஸ ஞானத்தைக்‌ குறிக்கும்‌.

    கங்குல்‌: ஒன்றும்‌ தோன்றாதபடியும்‌ மாறுபாடாகத்‌ தோன்றும்‌ படியும்‌ உள்ள காலம்‌.
    பொருளை அறிவியாதது மட்டுமின்றி, மாறுபாடாகக்‌ கொள்ளுதற்கும்‌ உறுப்பான தாமத ஞானத்தை இது காட்டும்‌.
    காலை: பொருள்களை உள்ளவாறு தோற்றமளிக்கச்‌ செய்யும்‌ காலம்‌. அதனால்‌, பொருள்களை உள்ளவாறு அறிவதற்குறுப்பான சாத்துவிக ஞான்த்தை இது குறிக்கும்‌.

    பகல்‌: ஐயம் திரிபுகட்கு இடமின்றிப்‌ பொருள்களைத்‌ “தெளிவுற விளக்‌கிக்‌ காட்டும்‌ காலம்‌.
    இறைவனைக்‌ தெளிவாக அறிதற்குறுப்பான சுத்த சத்துவ ஞானம்‌ இவ்வாறு கூறப்‌படும்‌.

    நிலா முற்றம்‌: மாடத்தின்‌ உயரத்தில்‌ ஏறி எல்லாவற்‌றையும்‌ காணுதற்கு உறுப்பான இடம்‌.
    இறைவன்‌ தொடர்‌புடைய கண்ணபுரத்தையும்‌ பிறர்‌ காணுதற்கு அமைந்தது இது- எல்லை நிலமான புருஷார்த்த ஞானத்தைக்‌ குறிக்கும்‌.

    கலை, வளை: இறைவனை அனுபவிப்பதற்குப்‌ பகையான யான்‌, எனது” என்னும்‌ செருக்குகள்‌;-இவ்விரண்டையும்‌ களைந்த நிலைமையில் தான்‌ அவன்‌ அனுபவம்‌ கிட்டுகின்றது.
    சில இடங்களில்‌ “வளைபூரிப்ப அவனைக்‌ காணுதல்‌” என்று வரும்‌.
    அவ்விடங்களில்‌ “நான்‌ அவனுக்கு அடிமை”; *என்னுடைய திருவரங்கர்‌? என “வரும்‌ “நான்‌, எனது”என்பவைகளைச்‌ சொல்லுவதாகக்‌ கொள்ள வேண்டும்‌. இவை விடத்தக்கன வல்ல.

    பட்டம்‌, சூடகம்‌:. “பட்டம்‌” என்பது, முதலில்‌ ஆன்மாவினை அங்கீ கரித்த ஆசாரியன்‌ உண்டாக்கும்‌ பெயர்‌, வடிவம்‌, இறைவழிபாடு முதலான ஆன்ம அலங்காரங்கள்‌;
    “சூடகம்‌” என்பது பின்னர்‌ ஆசாரியனுடைய பெருமையை உணர்த்தி, அவ்விறைவன்‌ உண்டாக்கும்‌ ஆன்மா இறைவனுக்கு அடிமை என்ற அறிவு முதலான ஆன்ம அலங்காரங்கள்‌.

    பந்து, சிற்றில்‌: பந்து நூலாற்‌ கட்டப்பட்டு விளையாட்டுக்‌ கருவியாவது;– விழுதல்‌ எழுதல்‌ முதலிய இயற்புகளை யுடையது அதே போன்று, முக் குணங்களடியாக வரும்‌ வினையால்‌ அமைந்த உடல்‌ இறைவன்‌ விளையாட்டுக்கு உறுப்‌பாவது
    கருமத்திற்கு ஏற்ப மேலுலகம்‌ கீழுலகம்‌ போவது மீளுவது ஆகும்படி, இறைவன்‌ தன்‌ நினைவால்‌ தூண்டத்‌ தாழ விழுதல்‌, உயரப்போதல்‌,
    சக்கரத்தின்‌ சுழலுதல் போலச்‌ சுழலுகல்‌, போனதில்‌ மீண்டும்‌ போய்‌ வந்து உழலூதல்‌ செய்கின்ற ஆன்மாவோடு உண்டான தொடர்பாலே விழுதல்‌ எழுதல்‌ முதலிய இயல்புகளோடு கூடியது.
    “சிற்றில்‌” என்பதும்‌ இன்பத்‌திற்குரிய இடத்தைக்‌ குறிக்கும்‌.

    கழல்‌, தூதை, கழல்‌ ஐந்தாக இருந்து இன்ப விளையாட்‌ டுக்கு உறுப்பாவது. இஃது இன்ப அனுபவத்திற்குரிய ஐந்து பொறிகளைக்‌ குறிக்கும்‌.
    *தூதை” சோறிடுவதற்கேற்ற கருவி. இது இந்திரியங்களின்‌ வேறான மற்ற இன்பக்‌ கருவிகளைக்‌ குறிக்கின்ற ஒன்று.
    பாவை, குழமணன்‌ — இவை விளையாட்டுக்‌ கருவி வகைகள்‌.
    யாழ்‌, பென்றல்‌, மதியம்‌, அடிசில் சாந்தம் இவை ஐந்தும்‌ முறையே ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்‌ -என்ற ஐம்புல இன்பப்‌ பொருள்‌ களைக்‌ குறிக்கும்‌.

    பூண்‌, அகில்‌ — இவையிரண்டும்‌ மேலே குறித்த வற்றிலேயே “ஒளி, நாற்றம்‌ என்ற இருவகை இன்பப்‌ பொருள்‌ பற்றிய பிரிவினவாம்‌.

    ‘இவ் வின்ப நுகர்ச்சிக்குரிய பொருள்களும்‌, இன்பத்திற்குக்‌ ௧ருவிவியான பொருள்களும்‌, விளையாட்டுக்‌ கருவியான பொருள்‌களும்‌ யாவும்‌
    இறைவன்‌ தன்னுடைய போகத்திற்கு விரோதிகளென்று விடுவித்தால்‌ விடுபட்டும்‌, சுவை குறைந்தனவாயும்‌,
    ‘இறைவனிடத்தினின்றும்‌ அகற்றுபவைகளாயும்‌, தன்‌ தொடர்பு சேர்த்துப்‌ பார்க்கும் போது விடத்தக்கனவாயும்‌,
    இறைவனோடு தொடர்பு படுத்தி நோக்கும்போது கொள்ளத்‌ தக்கனவாயும்‌, அவனுறவின்போது அநு௩லங்களாயும்‌
    அவனின்றிக்‌ காணும்போது துன்பம்‌ விளைவிப்பனவாயும்‌ ‘சொல்லப்படுதல்‌ அருளிச்‌ செயலிலும்‌ காணலாம்‌.

    இறைவன் பால்‌ தூது விடப்படும்‌ பறவைகளுக்கு உள்ளுறை:

    ஆன்மாவை இறைவனோடு சேர்க்கின்றவர்களான குரு முதலானவர்களையே பறவைகள்‌ என்று கூறுவர்‌.
    விரைவில்‌ அவனை அடைவதற்கு ஞானமும்‌ அனுட்டானமும்‌ (ஒழுக்‌கமும்‌) வேண்டும்‌.
    அவையே *சிறகுகள்‌” என்று சொல்லப்‌ படுகின்றன. சேர்ப்பவர்கள்‌ குருக்கள்‌, பிரமசாரிகள்‌, புத்திரர்கள்‌, சீடர்கள்‌ என்ற நான்கு நிலைகளில்‌ வைத்துப்‌ பேசப்‌ படுவார்கள்‌.

    பறவைகளுள்‌ அன்னமாகப்‌ பேசப்படுபவர்கள்‌ ‘இன்னார்‌ இன்னார்‌ என்று கூறுகையில்‌ கீழ்க் காணும்‌ பொதுத்‌ தன்மைகளை அறியலாம்‌.

    அன்னத்தின்‌ செயல்‌ உள்ளுலறயான ஆசாரியன்‌ செயல்‌
    1-பாலும்‌ நீரும்‌ பகுத்தறியும் — சாரமள்ளதும்‌ சாரமில்லாததும்‌ அறிவர்‌.
    2. இறைவன்‌ அன்னமாய்‌ “அற நூலுரைத்தான்‌–கேட்பவர்கட்கு நூல்களை உரைப்பர்‌.
    3–சேற்று நிலத்தில்‌ பொருந்தாது.-வன் சேற்று அள்ளல் என்கிற இவ்வுலக வாழ்வில் பொருந்தார்
    4-மகளிர்‌ பின்பற்றி அவ்வாறே நடக்குமென்று கூறுவர் –அன்னம் போன்ற நடையை யுடைய பிராட்டியின்‌ *வேறு பிறர்‌க்‌குரிய தல்லாத அடிமைத் தன்மை” முதலானவும்‌
    புருஷ்காரமாதலும்‌ ஆகிய ஒழுக்கத்தைப்‌ பின்பற்றுவர்‌
    5–தாமரையிலை குடையாகவம்‌, பழுத்த செந்‌நெற் பயிரின்‌ அசைவு கவரியாகவும்‌, சங்கின்‌ முழக்கம்‌ வெற்றிப்‌ பெருமுழக்கமாகவும்‌,
    வண்டுகளின்‌ இன்னிசை பாட்டாகவும்‌ கொண்டு மானச சரசிலுள்ளதாமரையை இருப்பிடமாகக்‌ கொண்டிருக்‌கும்‌ அன்னம்‌.
    தாமரை இலை போன்ற இறைவன்‌ திருமேனியை, உலகத்‌ துன்பங்களாய சூரியஒளி தம்‌மைத்‌ தாக்காதபடி நிழலாகஉடையர்‌
    பக்குவமான ஞானியரால்‌ பணி செய்யப் படுவர்‌: தூய பெரியோர்‌களால்‌ போற்றப்படுவர்‌.-எப்போதும்‌ ஆசாரியனின்‌ இணைத் தாமரை யடிகளை
    நெஞ்‌சிற்‌ கொள்ளும்‌ சீடர்களின்‌ உள்ளத் தாமரையைத்‌ தங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொள்ளு,வர்‌.
    6-விதிப்படி மணந்து இடரில்லாமலும்‌ அந்‌தரம்‌ சிறிதுமின்‌றியும்‌ மிக இன்பம்‌ பொருந்த ருடிச்சீர்மையுடன் இருப்பன அன்னங்கள்
    ஸாஸ்த்ர முறைப்படி. இல்லறத்தில்‌ இருந்து, உலகியல்‌ தீமைகள்‌ தட்டாதபடியும்‌, சிறிதும்‌ இடையீடு இன்றி
    மேலும்‌ மேலும்‌ இன்பம்‌ பெருகும்படியும்‌ மனைவி மக்களுடன்‌ அமர்ந்து பகவத்‌ அநுபவம்‌ செய்வர்‌.

    இல்வாறு இருப்பவர்‌ செல்வ நம்‌பி, பெரியாழ்வார்‌, முற்றத்‌ துறந்த துறவிகள்‌ போன்ற நாதமுனி, ஆளவந்தார்‌ முதலான வர்கள்
    அன்னோர்பால்‌ இத்தகைய குண வொற்றுமை உள்ளமையால்‌, இது மிகப்‌ பொருத்தமேயாம்‌.

    வண்டு, தும்பி
    1-இவை : மலரில்‌ சென்று தேனுண்ணும்‌; பிற இடத்‌தும்‌ செல்லும்‌.–தமக்கு என்று ஏற்படாத பொருள்களை இன்பமென்று மருளார்‌ (இது வேற்றுமைர்‌
    2-தேன்‌ தவிர மற்றொன்றை விரும்பாமையாலே **மதுவிரதம்‌” என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
    உளங்கனிந்த அடியவர்‌உள்ளத்துள்‌ ஊறிய தேனான இறைவனை அநுபவிப்பதையே விரதமாகக்‌ கொண்டவர்‌.
    3-தூய தேனுண்ட வாய்‌ கொண்டது.–இறை இன்ப அந;பவத்‌தால்‌ தூய இனிதான வாய்‌ மொழி பேசுவர்‌.
    4-கூந்தலில்‌ வைத்த வ்குள மலரின்‌ சாரத்தை உண்‌ணும்‌.
    வருளமாலை தரித்த ஆழ்வாரின்‌ பாடல்களாகிய சாரத்‌தை ஏற்று, அதன்‌ வழியாக இன்பம்‌ அநுபவிப்பர்‌.
    5-தேனுண்டு தேதென என்று இசை பாடும்‌; சுழலும்‌.
    இறையின்பம்‌ ..அடிவயர்‌ இன்பம்‌ இலற்றை நுகர்ந்த செருக்குக்குப்‌ போக்கு வீடாக அளத்தி வைப்பர்‌.
    (யாழினிசை வேதத்தியலை வாயாரச்‌ சொல்லிக்‌ 6-கொண்டிருப்பர்‌ என்பர்‌ பெரியோர்‌ சிலர்‌.)
    6-காலத்திற்கேற்ற பண்களை அல்லும்‌ பகலும்‌ இறைவன்‌ இவை பாடும்‌.
    அல்லும் பகலும் இறைவனின் குணங்களில் ஈடுபட்டவராய்ப் பல பண்களைத் தலைமை பெறும்படி பண்ணுவர்
    7-மிகவும்‌ நெருக்கமுடையதும்‌ புக முடியாததுமான இடங்‌களிலும்‌ வண்டுகள்‌ தடையின்றிச்‌ சென்று புகும்‌.
    பிற தேவர்களும்‌ புகுதற்‌கரிய பலர்‌ நெருக்கிக்‌ கொண்டுள்ள இடங்களிலும்‌ “கதவைத் திற* என்று வேண்டிக்கொண்டு எளிதில்‌ உரிமையோடு புகுவர்‌
    8-தன்னை ஒத்த கருநிறக்‌ கூந்தலிலே வண்டு சென்று சங்‌கையின்றிப்‌ படியும்‌.
    இறைவன்‌ பக்கலிலும்‌ அடியவர்‌ புக்சலிலும்‌ கூச்௪ மின்றிச்‌ சென்று நிற்பர்‌
    9-தூது விட்ட தலைவியின்‌ ஆசையையும்‌ வேட்கையை யும்‌ அவனுக்கு அறிவித்து, அவனுக்கு முன்னம்‌ அவன்‌ வரவை அறிவிக்க விரைந்து . வந்து; தம்‌ வரவால்‌ இவள்‌ பால்‌, பிறந்த செவ்வியை நுகர்ந்து, அங்குத்‌ தாம்‌ நுகர்ந்த இன்பத்தை இவஞக்கு வெளியிட்டு ஆறுதல் அளிக்கும்‌…
    அதே செயலை ஆசார்யர்‌களும்‌ செய்வார்கள்‌
    10-கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் என்கிற படியே அவன் வந்து சாட்சியாக வந்ததாகப் பேசப்படும்
    சாரத்தை அறிபவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிட்டு இறைவன் உயிர்களை ஏற்றுக் கொள்வான்

    இறைவன் தெய்வ வண்டு (9-9-1)-என்று பேசப்பெறுவன்
    அவனை அடையச் செய்பவர்களான இறைவன் குணங்களை அனுபவித்த ஆனந்தத்தால் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கும்
    நாரதர் -முனி வாஹனரான திருப்பாண் ஆழ்வார் -இன்னிசை பாடும் போல்வாரை -வண்டுகள் தும்பிகள் என்பர் -அரையர்கள்

    ————-

    கிளி பூவை
    1-கிளிகள் வலையில் அகப்படும்
    மாதரார் கண்ணாகிய வலையுள் அகப்படாது இறைவனின் தாமரைக் கண்களின் அகவலையில் அகப்படுவர்
    2- வளர்ப்பவர் கையில் அமரும்
    விருப்பத்தோடு வளர்க்கும் ஆச்சார்யருக்கு அன்பார் ஆவர்
    3-வளர்ப்பவர் ஊட்டும் பால் தயிர் நெய் அமுது உண்ணும்
    காலம் தகுதிக்கு ஏற்ப தாரக போஷக போக்யங்களாக ஆச்சார்யர்கள் அனுபவிக்கும் பொருள் சிறப்புக்களை பகவத் குணாதிகளை அனுபவிப்பர்

    4-சொல்லியதையே சொல்‌லும்‌ கிளிப்‌ பிள்ளைகள்‌.
    ஆச்சார்யர்களாகிய முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் தாமும் பேசும் தன்மையர் இவர்கள்
    5. “போற்றி இரந்தேன்‌”(6-1-6) என்பது போன்று அன்பு தோன்றச்‌ சொன்ன நிலையிலும்‌, சிறிது வருத்தந்‌ தோற்ற உரைத்த நிலையிலும்‌,
    உன்னைத்‌ துரப்பன்‌ அவன்‌ வரக்‌ கூவாயேல்‌” என்று கண்டிக்துச் சொன்ன நிலையிலும்‌ உகந்திருப்பது கிளியின இயல்பு.
    ஆச்சார்யன் ஆதரவாகப் பேசிய நிலையிலும் இன்னாதாகப் பேசிய நிலையிலும் வெஞ்சொல் கூறிய
    ஆச்சார்யன் செய்த செயல் எதுவாயினும் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று உகப்பர்
    6-“திரு நாமத்தைச்‌ சொல்‌? என்று தன்‌ கிளிக்குச்‌ சொல்‌லத்‌ தொடங்‌கி , அது இயலாது போசவே, “முன்‌ கற்‌பித்த நாமத்தைச்‌ சொல்‌”என்ன,
    அது அதனைப் பாடக்‌ கேட்டுவளர்க்ததனால் பயன்‌ “பெற்றேன்‌” என்று கிளியை வணங்கினாள்‌ என வருகின்‌றது
    ஆசாரியர்களும் கை கூப்பி வணங்கும்படி சீடர்களான இவர்கள் பாட வல்லவர்

    3. மயில்கள்‌. ஆலுதலும்‌ ்‌ அழைத்தலும்‌ செய்யும்‌
    அரங்கா? என்று ஆலித்தலும்‌ செய்வர்‌.
    8. குயில்‌ வேறொன்றின்‌ கூட்டிலே ஒதுங்கி வளரும்‌
    தேவு மற்றறியேன்‌. என்று ஆசாரியன்‌ ஈடுபாட்‌,டிலும்‌ அடியவர்‌ அன்பிலும்‌ ஒதுங்கி வளர்பவர்‌.

    இத்தகைய இயல்புடையவரான தென்குருகூர்‌ நம்பிக்கு .அன்ப்ரான மதுர கவிகள்‌, தொண்டரடிப்‌ பொடியார்‌,
    உடையவருக்கு உரிமைப்‌ பட்டவரான கூரத்தாழ்வான்‌,
    ஆண்டான்‌, எம்பார்‌, அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ போன்றோரைக்‌
    கிளி பூவை மயில்‌ குயில்‌ என்று சொல்‌லுதலுண்டு.

    ————

    நாரை கொக்கு
    1-குற்றமற்ற வெள்ளைத் தூவிகளை உடையது குருகு
    உள்ளும் புறமும் ஒத்த தூய்மை யுடையவர்
    2-அலைகளுக்குச் சலியாத இயல்புடையன நாரைகள்
    இறைவன் பால் ஒன்றிய உள்ளத்தால் பிறவியாம் கடல் அலைகளுக்கு இடையாதவர்
    3-தன் வாயால் இரை எடுத்து உண்பிக்க உண்ணும் தன் பிள்ளைக்கு வாயுக்கு அடங்கும் இரை தேடியிடும் கொக்கு
    சீடர்களின் தகுதிக்கு ஒத்ததாக இறையவனைப் பற்றிய வற்றை ஸாஸ்த்ரங்களிலே தேடி ஆராய்ந்து உதவுவர்

    4-நாள் தோறும் பூம் கழிகளில் தம் இனத்தோடு போய் மேய்வனே குரு கினங்கள்
    எப்பொழுதும் கால ஷேபம் செய்யும் இடங்களுக்கு தாங்களே சென்று தங்களை பிரிய இயலாத சீடர்களுடன் கூட இறைவன் குணங்களை அனுபவிப்பர்

    5-தாரைகளே நும் கால்களை நுமரோடே சேர்ந்து என் மீது வையுங்கோள் என்றும்
    கைம்மாறாகப் பைங்கானம் ஈது எல்லாம் உமக்கேயாகத் தருவன் என்றும் பேசப் பெறுதல் உண்டு
    சீடர்களால் நன்றி உணர்வால் தலை மீதும் தோள்கள் மீதும் தாங்கிக் கொள்ளப் பெறுவர்
    உடல் பொருள் ஆவி முதலான யாவற்றையும் அவர்கள் அன்புடன் கொடுக்க ஏற்றுக் கொள்வார்கள்

    நல்ல பதத்து மனை வாழ்வையும் இன்பம் தரு செல்வத்தையும் அரசாட்சியும் வேண்டேன் என்று அரங்கன் அடியிணை தங்கும்
    தனிப்பித்தரான குலசேகரர் –ஆச்சார்ய நிலையரான நம் முதலிகள் போல்வாரை இக்குண ஒப்புமையாலே நாரை கொக்கு என்று சொல்லுதலும் உண்டு

    ——–

    தூது அனுப்பப்படும் மேகம் என்பதை யாரை
    முதல் ஆழ்வார்கள் திருமங்கை மன்னன் எம்பெருமானார் போல்வாரையாம்
    ஒப்புமைகள் ஆவன

    (1)மேகம் பொழிதற்கு ஏற்ற காலங்களில் கடலில் புகுந்து நீரைப் பருகும்
    நாள் தோறும் திருமால் கண் வளர்கின்ற கடலில் புகுந்து திருமகள் கேள்வனான அவனது குணக்கடலைத் தம் மனத்திலே கொள்வர்

    (2)மேகம்‌ திருமாலின்‌ திருமேனியை ஒக்கும்‌ நிறத்தது.
    கார்வண்ணனான இறைவனை உள்ளத்‌துக்‌ கொண்டிருத்தலால்‌ அவன்‌ நிறமே: நிழலிட்டுத்‌ தோன்‌றும்படி நிறத்தில்‌: அவனோடு ஓப்புடையர்‌.

    (3)மேகம் மழை பொழிந்து உயிர்‌களைக்‌ காத்தற்‌காக விண் எங்கும் உலவித் திரியும் :
    உலகில் பிறந்த உயிர்களைக் காப்பதன் பொருட்டும்‌ நல்வழி” காட்டுவ ற்காகவும்‌ எங்கும்‌ சுற்றித்‌ திரிவார்‌.

    (4)மழையாலே குளங்களை நிறைக்கும்
    ஞானமாகிற மடுவைத்‌ தாங்கள்‌ பொழிகின் இறைக்‌ “குணங்களாகின்ற: நீராலே நிறைப்பர்‌.

    (5)தீங்கின்றி நாடு எல்லாம் வாழ மழை பொழிந்து முத்துக்களாகிய நிதியைச் சொரியும்
    கேடு சிறிதும்‌ பற்றாது: அனைவரும்‌ வாழும்‌படி இறை குணமாகிய மணிகளைப் பொழிவர் .

    (6) தான்‌ பொழிந்ததை நினையாது இன்னமும்‌ மிகுதியாகச்‌ செய்ய இயலவில்லையே என்று மேகம்‌ நாணமுறும்
    எக்காலமும்‌ பொருட்‌ சிறப்புகளை எடுத்‌துரைைத்தாலும்‌ அதை நினையாது இன்னும்‌ உதவ இயலவில்லையே என்று நாணமுறுவர்‌,

    (7). உதவாத போது உடம்பு உபதேசம்‌ செய்யாத வெளுத்து ஓளிந்து கொள்ளும்‌.
    உபதேசம் செய்யாத காலத்து உடம்பு வெளுத்து வெளித்‌ தோன்ற மாட்டார்‌கன்‌.

    (8) தனக்சென்று காரியம்‌ செய்‌யாது பிறர்‌ நலம்‌ கண்டு உவந்து அந்த வளமையைப்‌ பெரும்‌ பேறாகக்‌ கொள்ளும்‌.
    உதவும்போது பெறுபவர்‌ மலர்ச்சி கண்டு உவக்கும்‌ இன்ப உள்ளத்த்னர்‌.

    “இவ்வாறான குண ஒற்றுமையால்‌ அன்பு கூருமடியவரான முதலாழ்வார்‌,
    உருவின வாளை உறையிலிடாது இறைவனது பரத்துவத்தை வலியுறுத்தும்‌ திருமழிசைப்‌ பிரான்‌,
    மேகம்‌ ஒத்து அருள் புரியும்‌ திருமங்கை மன்னன்‌, குணந்திகழ்‌ கொண்டலான எம்பெருமானார்‌ போல்வாரை மேகம்‌ என்று சொல்லுவர்‌.

    ————

    பகுதி : இரண்டு திருவாய்‌ மொழியில்‌ காணும்‌: தத்துவக்‌ கருத்துக்கள்‌

    1.. இறைவன்‌ குணங்கள்‌:

    திருவாய்‌ மொழியின்‌ ஒவ்வொரு பத்திலும்‌ ஒல்வொரு குணம்‌ சிறப்பாக எடுத்துரைக்கப்‌ பட்டுள்ளது.
    முதல்பத்தில்‌ பரத்துவம்‌ கூறப்பட்டுள்ளது. : இறைவன்‌ எல்லாவற்றையும்‌ விடே மேலானவன்‌ என்பது பொருள்‌.
    அந்த மேன்மை வெளிப்படும்படி சித்து, அசித்து என்னும்‌ இரண்டிற்கும்‌ மூன்று விதக்‌ காரணமாய்‌. அவன்‌ உளன்‌ எனினும்‌, எல்லாப் பொருள்களிலும்‌ பரவி நின்று, அவற்றின்‌ குறைபாடுகள்‌ தன்னைப்‌ பாதிக்காதபடி. இருப்பவன்‌.
    அவனது பரவும்‌ தன்மை: ஆகாயம்‌ போன்று அல்லாமல்‌, அக்குணம்‌ : நிறம்‌ பெறும்படியாக அவன்‌ இரண்டு உலகிலும்‌ தன்‌ கட்டளைப்‌ படி யாவும்‌ நடக்கும்படி. செய்யும்‌ ஈசன்‌:
    இவ்‌:வேற்றத்தைக்‌ கண்டு யாவும்‌ அஞ்சி விலகாதவாறு யாரிடமும்‌ மிக்க கருணையுடையவன்‌.(பரம காருணிகன்‌)
    அதனால்‌, யாவரும்‌ தன்னைச்‌ சரணடையும்படி. நிற்கும்‌: தன்மையன்‌; தன்‌ அருளாற்‌ செய்யும்‌ உபாயத்தை எத்தகையவர்க்கும்‌ தன்‌ பகைவர்க்குங்‌ கூட ஆக்கவல்ல சர்வ சத்தி யோடு கூடியவன்‌ (வரம்பிலாற்றலுடையவன்‌);
    அந்தச்‌ சத்தியாலே நிலையானதாகக்‌ கற்பித்துக்‌ கொள்ளப்பட்ட பத்தினி, பரிஜனம்‌ முதலானவைகளை உடையனாகையால்‌ அவன்‌ சத்தியகாமன்‌.
    இன்பத்திலேயே ஈடுபட்டிருந்து விடாது, உலகைப்‌ பிரளயம்‌ முதலிய ஆபத்துகளில்‌, ‘ ஒன்றையும்‌ எதிர்பாராது உதவிக்‌ காப்பவன்‌.
    ஆபத்துக்குக்‌ துணையான:வனாதலால்‌, அதற்கேற்றவாறு தான்‌ மேற்கொள்ளும்‌ விக்கிரகங்‌களுக்கெல்லாம்‌ மூலமானவனாய்‌, ஓப்பற்ற விக்ரக வடிவமாய்த்‌ : “தோன்றி அடியவர்களின்‌ துன்‌பத்தைப்‌ போக்கும்‌ இயல்பினன்‌:
    இவை முறையே பத்துப்‌” பதிகத்திலும் கூறப்படும்‌ முக்‌யக்‌ குணங்களாம்‌.

    மற்றும்‌ பல இயல்புகளும்‌ ஆங்காங்கே சொல்லப்படும்‌. அவை:
    (1 )பல அவதாரங்கள்‌ எடுத்து வெளிவரும்‌ இயல்பினன்‌;-பிழைகளைப்‌ பொறுக்கும்‌ தன்மையன்‌–தகுதி யில்லை என்று யாரையும்‌ விட்டுவிடாது எல்லாருடனும்‌ கலக்கும்‌ சீல குணத்‌தினன்
    அடியவர்‌ எது தரினும்‌ ஏற்றுக்‌ கொள்ளும்‌ நிறையுடையவன்‌; பிறவி அறுக்கும்‌ இனிய மருந்தானவன்‌; நீர்புரை வண்‌ணன்‌?
    (உயிர்கட்கு ஏற்பத் தன்னை அமைத்துக்‌ கொள்‌ளும் இயல்பினன்‌]. தன்‌ இன்பத் ஏற்கத்‌ தக்க அளவு சிறிது சிறிதாகக்‌ தருபவன்‌;
    பரமபத்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஓக்க முகம்‌ காட்டுபவன்‌.

    ——————-

    (2). எல்லாப்‌ பலன்களையும்‌ அளிக்க வல்லவன்‌; உலகுகள்‌ தெய்வங்கள்‌ யாவற்றிற்கும்‌ எல்லா வகையான காரணமும்‌ ஆனவன்‌?
    ஆழியில்‌ உள்ள அனந்தனில்‌ அறிதுயில்‌ புரிபவன்‌?திருமகள்‌ கேள்வனாம்‌ தன்மையன்‌.
    எல்லாவற்றிற்கும்‌ ஆன்மாவாய்‌ உள்ளவன்‌; செய்ய தாமரைக்‌ கண்ணன்‌; அமரர்குலமுதல்‌;
    நெஞ்சினால்‌ நினைப்பவர்க்கு நினைத்தவாறே வத்து தோன்றும்‌ அர்ச்சாவதாரமாய்‌ :இருப்பவன்‌
    பிறர்க்கு உதவுவதற்காகவே வழியைத்‌ தருவதற்காகவே–என்றும்‌ நின்று கொண்டிருப்பவன்‌.

    (4). திருவிக்ரமன் -குறட்கோலப்‌ பிரான்‌; மூன்றடி. மண்ணை இரந்த கள்வன்‌. திருவேங்கடத்தில்‌ நிற்பவன்‌
    *அகலகில்லேன்‌!” என்று அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌.
    அகற்ற மாய வல்லைம்புலன்‌ ஈந்தவன்‌
    நலிவான்‌ சுமடு தந்தவன்‌; தன்‌ மகிழ்ச்சிக்காக விரும்பி ஆழ்வாரை இவ்வுலகில்‌ வைத்தவன்‌. ..

    (6) ஆத்ம லாபத்தால்‌ அதீவ விளங்கிப்‌ பணைத்தவன்‌-சீதள குணங்களால்‌ பிரீதி வளர்ந்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து ஆழ்வாரை இன்புறுத்தியவன்‌.

    (7)அமுதம் அளித்தவன் -தயரதன் பெற்றவன் -கோவலன் -வான் ஏறும் கதிக்கு நிழல் தடங்கள் ஆக்கியவன் -வழித்துணை ஆனவன்
    விண்ணுலகம் தர விரைபவன் -ஆக்கையில் சபலன் -வானே தரக் கருத்தின் கண் பெரியவன் -தனி நின்ற சுதந்திரன்
    உயிர் உறவுடையவன் கடல் போன்ற ஆதாரத்தோடு வந்து பேரவா குளப்படியாம்படி தாபங்களை எரிக்கும் இயல்பினன்

    —————-

    2-ஆழ்வார் பெற்ற நிலை

    (1)-இறைவன் இவருக்கு மயர்வற மதி நலம் –அஞ்ஞானத்தைப் போக்கி பக்தி ரூபமாக உருவெடுத்த ஞானம் -அருளி
    இவர் திரு உள்ளத்திலே புகுந்து -இவர் பண்ணிய பாபங்களான வினைகளை போக்கி தன்னை எப்போதும் மறவாதபடி பண்ணி அருளி
    இவர் திரு உள்ளத்திலே நிலையாய் இருந்தான் -அதனால் இவர் தூய அழுத்தமான அவனைப் பருகிப் பருகி தத்வ ஞானத்தை -இறைவனிப் பற்றிய யாதாத்ம்ய ஞானத்தை உடையவரானார்
    அவ்வனுபவம் தனியிருந்து அனுபவிக்க ஒண்ணாதபடி மிகவும் போக்யமாக இருந்தபடியால் மற்றவர்களையும் திருத்தி  அனுபவிக்க
    அவர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளுவதற்காக அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்

    (2)தாம் பெற்ற ஞானத்தின் பலனான மோக்ஷத்தை இவர் தேடி வாட-அவன் எம்மா வீட்டைத் தர
    இவர் அவன் தனக்கேயாக எனைக் கொள்ள வேண்டும் -அவன் செம்மா பாத பதுமம் என் தலை சேர்த்து
    அருளுவதே மோக்ஷம் என்று உறுதி செய்தார்

    (3)மோக்ஷத்துக்குப் பலன் அவனை அனுபவித்தலும் -அவனுக்கு கைங்கர்யம் செய்தலும் ஆகும்
    முதலில் அனுபவித்தார் -ஆனாலும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனதுக்கு காரணம்
    அவனுடைய அளவிட முடியாமை என்பதை அவன் காட்டிக் கொடுக்கவே ஆறுதல் பெற்றார் -பின்பு
    ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் என்று ஆர்வமுற்றார்
    அவன் எங்கும் பரந்துள்ளமையைப் புகழ்ந்தார்

    மனம்‌ மொழி மெய்‌ மூன்றாலும்‌ களிப்புற்றாடும்படி பிரீதி மிக்கவரானார்‌. அப்பிரீதி மிக்குத்‌ தனக்கு அடையத்‌ தக்கவர்‌,
    இறைவனின்‌ அடியவருக்கு அடியவர்‌ என்னும்‌ நிலை பெற்றார்‌. அந்நிலையால்‌, ஒவ்வொரு கரணமும்‌ மற்றொரு கரணத்தின்‌ செயலை அடையும்படி. அவனை அனுபவிப்பதில்‌ பெருவிடாயை உடையரானார்‌.
    *மானிடம்‌ பாடாது இறைவனையே பாடும்‌ கவியான்‌? என்று: கூறும்‌ நிலை பெற்றார்‌. எவ்விதக்‌ குறைகளுமின்றி இறை யனுபவமான ஆனந்தக்‌ கடலிலே மூழ்கினவனரானார்‌ ஆம்வார்‌.

    (4) இவர்‌ தம்‌ விருப்பத்திற்‌ கேற்பக் கடந்த கால நிகழ்ச்சிகளையும்‌ சமகாலமாக்க இறைவன்‌ அனுபவிக்க அனுபவித்‌தார்‌;
    அவன்‌ தம்பால்‌ காட்டிய ஈடுபாட்டைக்‌ கண்டு அவன்‌ பால்‌ காதல்‌ மிக்கவரானார்‌; அவன்‌ இறிது விலகி நிற்க..
    பித்தேறியவரானார்‌.
    “நான்‌ காணுமாறு வருக! அல்லது என்னைச்‌ கூவிக்‌ கொள்க” என வேண்ட, அவன்‌ தன்னைக்‌ காட்டினன்‌.
    அவன்‌ அடியைச்‌ சேர்த்ததாக மனத்தால்‌ ஒரு பேறு பெற்றார்‌. உறுதிப்‌ பொருளைப்‌ பெற்றதற்குப்‌ பலனாக.
    வேறு தெய்வங்களிடம்‌ பற்றின்மையும்‌,
    ஆன்மாவிலும்‌ ஆன்‌மாவைச்‌ சேர்ந்தவற்றிலும்‌ பற்றின்மையும்‌ உற்றார்‌ . உலக வாழ்வு வாழ்தலிலும்‌, செல்வத்திலும்‌, ஆத்ம அனுபவத்‌திலுங்கூடப்‌ பற்றற்ற தன்மை உடையவறானார்‌ ஆழ்வார்‌.

    (5 )இவர்‌ பெற்ற வைராக்‌யத்திற்குப் பலன்‌ பரமாத்மாவினிடம்‌ பிறந்த அளவற்ற அன்பானது நெஞ்சை முடிக்கும்படியாய்க்‌
    கழிய மிக்கதோர்‌ காதல்‌ என்று பக்கத்துள்ளவர்களும்‌ பேசும்படி எல்லை கடந்தது.
    இறைவன்‌ செய்த அற்புதச்‌ செயல்களையெல்லாம்‌ தாமே செய்ததாகப்‌ பேசும்‌ நிலை பெற்றார்‌. அவனை ஓழிய ஒரு கணமும்‌ ஆற்றமாட்டாதவரானார்‌.
    பொருளின்‌ இன்ப மிகுதியால்‌:வந்த ஈடுபாட்டால்‌, உயிரும்‌ மனமுமின்‌றி உடலும்‌ சதிலமாம்‌:படியானார்‌; மெலிந்தார்‌.
    அவனைப்‌ பற்றிய நினவு தெஞ்சில்‌: புகுந்து உயிரை உருக்கி. உண்ணும்படி அளவற்ற அன்பாக வளர்ந்தது.
    இவ்வாறு பகலத்‌ பத்தியும்‌ அடியவர்‌ இணக்கமும்‌ பெற்றவரானார் ஆம்வார்‌.

    (6 முன்‌ பிறந்த காதல்‌ மிகுதி காரணமாக இவர்‌ வேறுஉபாயங்களில்‌ செல்லாத நிலையரானார்‌. (இதற்குக்‌ காரணம்‌
    வேறு உபாயங்களை அறியாமையும்‌ அவற்றைக்‌ கடைப்‌பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமையும்‌ அல்ல. உண்மை உணர்‌தலினாலும்‌ அந்நிலை ஏற்படலாம்‌.
    ஆழ்வார்க்கு அதுவும்‌காரணமன்று.] அத்தகையவருக்கு, இறைவன்‌ தன்‌ அடியை உபாயமாகக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌.
    அத்திருவடி.களையே உபாயமாகக்‌ கொண்டு, மாறுபடாத ஒரு நோக்கமுடையரானார்‌
    தம்‌ கருக்தைத்‌ தூது மூலம்‌ இறைவனுக்கு அறிவுறுத்தினார்‌. அவன்‌ தாழ்ந்து வந்தான்‌.
    வந்தபோது அவனுடன்‌ ஊடல்‌ கொண்டு, பின்‌ அவன்‌ வடிவழகில்‌ ஈடுபட்டு, அவனோடு பொருந்தினார்‌. முன்னர்‌ தனித்திருந்து அவனை அனுபவிக்க வேண்டுமென்று பிரபத்தி செய்தமைக்காக அப்‌பேறு பெற்று அனுபவித்தார்‌.
    மற்ற எல்லா உபாயங்‌களையும்‌ கைவிட்டுச்‌ சித்தோபாயம்‌ மேற்கொள்ளுதலை ஒரு தரமேனும்‌ செய்ய வேண்டுமென்று நினைத்தார்‌.
    எனவே புராணங்களில்‌ கூறப்பட்டனவும்‌, பழமையோர்‌ நடை முறையிற்‌ காட்டியவையும்‌ ஆன, தாய்‌ தந்‌தை முதலாகவும்‌, மணி பொன்‌ முதலாகவும்‌, கர்ம அனுட்டானங்கள்‌ முதலாகவும்‌,
    கூறப்படுகின்ற அறிவுடையவையும்‌, அறிவற்றவையுமான. எல்லாப்‌ பேறுகளாகவும்‌, உபாயங்களாகவும்‌
    உள்ள போலிகளை யெல்லாம்‌ கைவிட்டுப்‌ பரமபதம்‌ உட்பட அவன்‌ அடியவர்க்குப்‌ பரிரிலாக அளித்தார்‌.
    உலகியற்‌ பொருள்‌களோடு தம்மைச்‌ சேர்த்துப்‌ பேசுவது கூடத்‌ தம்முடைய இறுதிக்குக்‌ காரணமாகுமென்ற நிலை பெற்றார்‌.
    அவனே தந்தை அவனே தாய்‌ -அவனே தாம்‌ உண்ணும்‌ சோறு-தமது மாநிதி முதலிய யாவும்‌ என்று கொண்டார்‌;
    அவனையே எண்ணிப்‌ புலம்பினார்‌… அவனுடைய இணையடித்‌ தாம்ரைகளைக்‌ காண, இமையவரும்‌ வரும்படி
    அழகிய வேங்கடமலையில்‌ சென்று சேர்ந்த இறைவனை, அங்கே சென்று கண்டு, *த்வயம்‌’ என்ற மந்திரத்தின்‌ முற் பகுதியில் சொல்லப்‌படுவது போன்று,
    சித்தோபாயத்தை மேற் கொள்ளுதலாகிய
    **உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்‌?” என்று உபாயவரணம்‌ (பிரபத்தி) பண்ணினார்‌ ஆழ்வார்‌.

    (7) அவன் தன்‌ திருப் பாதம்‌ விட்டுப்‌ பிரிய இயலாதவரான தம்மை அவன்‌, தன்னை விட்டு விலக்கி யோட்டும்படியான
    ஐம்புலன்கனின்‌ நடுவே இவ்வுடம்போடே இருக்கும்‌ ப டி வைத்துள்ளானே என்று வருந்திப்‌ புலம்பினார்‌.
    சித்தோபாயத்தைப்‌ பற்றிக்‌ கொண்ட பின்‌, பலன்‌ கிடைக்கு மளவும்‌ அவனைக்‌ கூப்பிட்டுக்‌ கொண்டேயிருப்ப தொழிய,
    வேறு செய்யலாவது யாதொன்றும்‌ இல்லாமையாலே, அவன்‌ மீது பழியிட்டுக்‌ கூப்பிட்டார்‌;
    தம்‌ நிலையைத்‌ தாமே எடுத்துச்‌ சொல்ல முடியாத நிலையை அடைந்துவிட்டார்‌;
    தேற்ற முடியாதபடி நெஞ்சச்தைப்‌ பறி கொடுத்தார்‌. இறைவன்‌ தன்‌ வீரச்‌ செயல்களைக்‌ காட்டித்‌ தரிப்பித்தான்‌;

    ஆனாலும்‌, உலக மக்களின்‌ இழவை அவர்‌ சிந்தை கூர்ந்ததால்‌ அந் நிலையும்‌ நீங்கியது. மீண்டும்‌ அவனை நினைந்து அலறினார்‌.
    எங்கும்‌ அவன்‌ மேனி அவயவங்கள்‌ தோன்றிப்‌ பகையாய்‌ நின்று நலிந்தன. இவ்வாறு துக்கமானது எடுப்பும்‌ சாய்ப்புமாய்‌ நடக்க, அவன் பாலும்‌ தம்மிடமும்‌ எவ்விசச்‌ குறைபாடும்‌ இல்லாதிருக்கவும்‌,
    மீண்டும்‌ தம்மை இந்நிலைமையிலே வைத்தது ஏன்‌ என்று காரணத்தைக்‌ கேட்டார்‌. அவனும்‌ இப்படி விடை கூறினான்‌;
    கருமங்‌ காரணமாக வன்று, தானாக விரும்பித்‌ தனக்கும்‌ தன்‌ அடியாருக்கும்‌ கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தானாம்‌.
    இது கேட்டு ஆழ்வார்‌ வியந்தார்‌! விம்மித மெய்தினார்‌! வியாசர்‌ முதலான முனிவர்களும்‌ முதலாழ்வார்களும்‌ இருக்கவும்‌, தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்திக் கொள்ள இறைவன்‌ எண்ணிய உப கார்த்திற்குப்‌ பெரிதும்‌ உவகையரானார்‌.

    இதற்குக்‌ கைம்மாறாகத் தம்‌ ஆன்‌மாவைக்‌ கொடுக்கலாம்‌ அவனுக்கு என்றால்‌, அதுவும்‌ தம்முடையது அன்று; அவனுடையது:
    ஆகையாலே, இரு வேறு உலகிலும்‌ தாம்‌ செய்யக்‌ கூடுவது ஒன்றுமேயில்லை என்று தடுமாறும்‌ நிலையரானார்‌.

    பிராட்டியும்‌ பெருமானும்‌ சேர்ந்த சேர்த்தியால்‌ உலகம்‌ முழுவதும்‌ வாழும்படி தலைமை தோன்ற வீற்றிருந்த திருவாறன்விளை என்னும்‌
    திவ்விய தேசத்தில்‌ வைணவர்‌ கூட்டத்திலே திருவாய்மொழி கேட்.பித்து அடிமை செய்ய விரும்பினார்‌.
    அந் நிலையில்‌ இறைவன்‌ இவருக்குப்‌ பரம பதத்தை வழங்குவதாகக்‌ கூறினன்‌. தாம்‌ திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்யக்‌ கருதிய கைங்கரியத்திற்குக்‌ கேடு வந்ததே என்று கருதியமையாலே, “பரமபதம்‌” என்று அதன்‌ பேர்‌ சொல்லுதலையும்‌ சகித்துக்‌ கொள்ள இயலாதவரானார்‌.
    திருவாறன்‌ விளையிலே உள்ளே ஆழ்வார்‌ திருக்‌கூட்டம்‌ போன்றே, தாம்‌ களிக்கும்‌ வண்ணம்‌ தாளம்‌ இசைத்து
    இறைவன்‌ புகழேத்தும்‌ தெய்வ யாழோர்‌ கூட்‌டத்தார்‌ பரமபதத்தே சாமகானம்‌ பாடுகின்றார்‌.
    அவர்‌ கூட்டம்‌ இனியது என்பதைக்‌ கூடச்‌ சிந்திக்க இயலாத
    அளவு அவர்‌ துக்கம்‌ எல்லை மிகந்தது. அந்தத்‌ துயர வாதையாலே அனைத்தையும்‌ மறந்தவரானார்‌ ஆழ்வார்‌.

    8. தாம்‌ மேற்கொண்ட சொல்லின்‌ தொண்டாகிய திருவாய்மொழி பாடுதலையும்‌ ஆழ்வார்‌ மறக்கும்படி செய்த அந்தக்‌ கலக்கமும்‌,
    கண்ணால்‌ அவனைக் காண இயலாமையால்‌ வந்த கலக்கமும்‌, அவன்‌ அடியவருக்குப்‌ பரதந்திரன்‌தானா என்றும்‌,
    எல்லாப்‌ பொருள்களையும்‌ அவன்‌ உடலாக உடையவன்‌ (பிரகாரி)தானா என்றும்‌ உண்டான ஐயங்களும்‌, இங்கேயே நிலைத்தால்‌ உலகக்‌ குற்றங்களில்‌ உழல வேண்டுமே என்பதால்‌ உண்டான அச்சமும்‌ ஆகிய இவையெல்லாம்‌ தீரும்படி இறைவன்‌ அவர்க்கு, அவரைச்‌
    சொல்லின்‌ தொண்டு செய்யும்‌ அடிமையாகக்‌ கொண்ட நிகழ்ச்சியை மெதுவே அன்போடு நினைவூட்டினன்‌.
    ஆக அவ்வளவில்‌ ஆழ்வார்‌ மீண்டும்‌ தம்மை மறந்தார்‌. முன்பு மறந்த நிலைவேறு; இந்த நிலை வேறு. இப்போது வந்த மறதியிலே அறிவின்‌ வாதமெல்லாம்‌ இல்லை.-மறதி! மறதி மறதிதான்‌! பித்தன்‌ போலும்‌ வள்ளல்‌ போலும்‌ செயல்களைச்‌ செய்யும்‌ பாலனை காண்கிறோம்‌ இங்கே. ஆழ்வார் தமக்குரிய பணியை -தொண்டை- இறைவன்‌ நினைவுறுத்திய மாத்திரத்தே, உவகைக்‌ கடலில்‌ ஆழ்ந்து, தம்மை மறத்து, முன்பு எந்த ஆன்மாவை
    *இது நம்முடையதன்று ; அவனுடையதே. இதை எடுத்து எப்படி அவனுக்கே வழங்க இயலும்‌?? என்று வாதம்‌ செய்து, எண்ணிக்‌ கலங்கினாரோ,
    அதே ஆன்மாவை இப்போது அது தம்முடையது அன்றாய்இருக்கவும்‌, அதை உடையவனான அந்த எம்பிரானுக்கே
    தானம்‌ வழங்குவது அசட்டுத் தனமாய்‌ இருக்கவும்‌,
    அவை யெல்லாம்‌ மனத்தே உறைக்காமல்‌ மறதிக்‌ களிப்பாலே தம்‌மதல்லாத அதைத்‌ தம்மதாகலே பாவித்து,
    இல்லாதவனுக்கு வழங்குவது போல, உடையவனுக்கே…- எல்லாம்‌ உடையவனுக்கே–அந்த ஆன்மாவையும்‌ உடையவனுக்கே! அந்த ஆன்மாவுக்கு உரிமையும்‌ உடையவனுக்கே அவர்‌ வழங்குகின்றார்‌.
    அந்த இறைவனோ, அது தன்னதே யானாலும்‌ தன்னதல்லாத ஒன்றனைத்‌ தானம்‌ பெறுவான்‌ போல, எவனுக்குத்‌ தானே ‘தந்தானோ, அவனிடமிருந்தே பெற்றுக்‌ கொள்கிறான்‌.
    வழங்கியலனுக்கோ சொந்தம்‌ அல்லாதது அது; ஏற்றுக்‌ கொள்வானுக்கோ தொடர்பற்ற பரிசிற் பொருள்‌ அன்று அது;
    அவனுடைய உரிமைப்‌ பொருளே. தானம்‌ வழங்கு வானும்‌, தானம்‌ ஏற்றுக்‌ கொள்வானும்‌ விந்தையான முறையில்‌ வியத்தகு தானத்தால்‌ தொடர்பு கொள்கின்றனர்‌
    இங்கே. தன்னதல்லாததைத்‌ தானமாகப்‌ பெற்றவன்‌ எங்கனம்‌ பூரிப்பானோ, அங்ஙனமே தன்னதைப்‌ பெற்ற பகவானும்‌ பூரித்து, ஒளிவிஞ்சி நிற்கின்றான்‌? மிக்க ஒளியுடை யனானான்‌.
    *சோதி’ என்றும்‌, ‘தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌! பேர்களாயிர;த்தாய்‌!” என்றும்‌
    தம்மை அந்த மகழ்ச்சிப் பேரொளியில்‌இழந்தபடி, தூ மலர்க்‌ கவிதை பொழிகின்றார்‌ ஆழ்வார்‌.
    சீதையின்‌ தன்மைகளான பிறந்த இடப்‌பாசம்‌ விடல்‌, பெருமாளுக்கு மங்களாசாசனம்‌ பண்ணுதல்‌, அவன்‌ வீரம்‌ கண்டு அனுபவித்தல்‌, பிரிவில்‌ துயர்‌ உறல்‌ போன்றவற்றை யெல்லாம்‌ ஆழ்வார்‌ பெற்றார்‌.
    இறைவனும்‌,அவரது அவ்வான்ம குணங்களைக்‌ சுண்டு மகிழ்ந்து , ஆழ்வார்‌ தம்‌ உள்ளத்தே அமர்ந்து, அவர்‌ தன்னை நன்கு அனுபவிக்‌கும்படி அருள்‌ செய்தான்‌.
    பின்‌, அவர்‌ தன்னைவிட்டு அகன்று போகாதவாறு சிறுமை என்று அவர்‌ பேசிய ஆன்மாவின்‌: பெருமையை அவர்க்குக்‌ காட்டினன்‌.
    ஆன்மா உடலின்‌ வேறானது; ஞான மயமானது; பிராட்டி போன்று பிறக்கு உரியதல்லாத இயல்‌பினது. இறைவனுக்கே யன்றி அவன்‌ அடியவர்‌ அளவும்‌ செல்லும்படியான பரதந்திர இயல்புடையது என்று
    அதன்‌ சிறப்பியல்பை (தம்மியல்பை)இடையறாது சிந்திப்பவரானார்‌ ஆழ்வார்‌.

    (9) ஆன்மாவின்‌ சிறப்பியல்பைக்‌ கண்டதற்குப்‌ பலனாக,அவர்‌, அவனை இடையீடின்றி அனுபவிக்கின்றதான அந்த
    அனுபவத்தின்‌ தொடர்ச்சியை அவாவுகின்றார்‌.
    அந்த ௮வா-அந்த ஆசை–முறைப்படி காலப்‌ போக்கில்‌ தானே அமையும்‌ என வாளா இராது, பொறுமையுடன்‌ ஆறி இராமல்‌, அவனிடம்‌, *நான்‌ அங்கு வந்து அடிமை செய்ய வேண்டும்‌.-அல்லது நீ இங்கே வரவேண்டும்‌” என்று இரக்கலானார்‌-
    அந்த ஒரே நினைவினரானார்‌- அவனைக்‌ கண்ணார எந்நேரமும்‌ காணக்‌ கருதினார்‌;
    அவனை நினைப்பூட்டும்‌ பொருள்‌களைக்‌ கண்டு நோவுபடுதலால்‌ வாழ்வை முடித்துக்கொள்ள முயன்றார்‌;
    அவனது சீலத்தை நினைக்குந்தோறும்‌ நெஞ்சு கரையலானார்‌; ஆற்றாமையால்‌ அரற்றினார்‌. இருதலைத்த
    மனமின்றி மிக்க பதற்ற முடையரானார்‌.
    அந் நிலையில்‌ மரணம்‌ அடைதலே பேறு என்று நாள்‌ குறிக்கப்‌ பெற்று மகிழ்ச்சி மிக்கவரானார்‌ ஆழ்வார்‌.

    (10)பேறு பெறும்‌ காலம்‌ அணித்தானதற்குப்‌. பலன்‌ அர்ச்சிராதி மார்க்கத்தில்‌ வைகுந்தம்‌ ஏறுவதாகும்‌.
    அந்தப்‌ பயணத்திற்குக்‌ காளமேகம்‌ போன்ற இறைவனை வழித் துணையாகப்‌ பற்றினார்‌ ஆழ்வார்‌.
    அவன்‌ தம்மை விட்டுச்‌ சிறிதும்‌ பிரிதலாகாது என்று பேசி, இனித்‌ தாம்‌ பேறு பெறுவதில்‌ தடையில்லை என்றும்‌,
    பிறவித்‌ துன்பம்‌ மீண்டும்‌ வாராது என்றும்‌ உறுதி கொண்டவராய்‌, உலகினரக்குத்‌ தாம்‌ சொல்ல வேண்டுவனவற்றை யெல்லாம்‌,
    மரண தசையானவாறே மறைத்து வைத்த செல்வங்களை மக்கட்குக்‌ காட்டுதல்‌ போன்று, உபதேசிக்கத்‌ தொடங்குகிறார்‌.

    ——————–

    3. ஆழ்வார்‌ செய்யும்‌ உபதேசங்கள்‌:

    (1) ஆழ்வார்‌ உலகினரை நோக்கி, உலகில்‌ விடத்தக்கது இன்னது என்றும்‌, அதன்‌ சுற்றம்‌ இத்தகையது என்றும்‌, அதனை விடும்‌ முறை இது என்றும்‌ கூறினார்‌.
    அவ்வாறே கொள்ளத்‌ தக்கது இன்னது என்றும்‌, அதனுடைய குணம்‌ இன்னது என்றும்‌, அதில்‌ ஆன்மாவை ஈடுபடுத்தும்‌ முறை இது என்றும்‌ சொன்னார்‌.
    இதற்குச்‌ செய்யத்தக்கது பஜனை.-அத்தப்‌ பஜனைக்கு ஆதரவாக -அடித்தளமாக–ஆதாரமாகநிற்பது திருமந்திரம்‌.
    *அது இது* என்று அதையும்‌ உபதேசித்தார்‌.
    இவ்வாறு பஜனை செய்வதற்கு ஏற்ற அவனுடைய பல்வேறு பண்பு நலன்களையும்‌ எடுத்துக்‌ கூறினார்‌.
    “அத்தகு பெரியவனைப்‌ பற்றுவது எளியதும்‌ இனியதும்‌ ஆகும்‌”என்றார்‌;
    *அன்னவனைத்‌ தொழுதால்‌ வழியில்‌ நிற்கும்‌ தடைகளை யெல்லாம்‌ சுட்டெரித்து அரிய பயன்களை நமக்‌குத்‌ தருவான்‌” என்றார்‌.
    “நாள்தோறும்‌ ஆன்மாவை முடிக்க முயல்கிற கொடிய வினைகள்‌ எல்லாம்‌ அவன்‌பால்‌ பத்திசெய்ய முயலுமளவிலேயே மடிந்து விடும்‌” என்று உபதேசித்தார்‌;
    கண்ணன்‌ கீதையிலே சொல்லி யுள்ள வழியில்‌ நின்று, “பரம்பொருள்‌ ஒருவனே” என்னும்‌ உணர்வு பெற்று, வேறு பயன்‌ கருதாது பக்தி செய்யுங்கள்‌” என்றார்‌.
    இறைவன்‌ தமது அஞ்ஞானத்தைப்‌ போக்கிப்‌ பத்தி வடிவான ஞானத்தைக்‌ கொடுத்தது போன்று,
    இவரும்‌ உலகினர்க்குத்‌ தம்‌ அருட்குணத்தாலே அஞ்ஞானத்தைப்‌ போக்கி, ஞானத்தையும்‌ பத்தியையும்‌ உபதேசித்தார்‌?
    உலகர்‌ அனைவரும்‌ பகவத்‌ வழிபாட்டில்‌ (பஜனையில்‌) மூழ்கிக்‌ களிக்கும்படி ஊக்குகின்றார்‌.

    ———-

    (2)– தாம்‌ கண்டறிந்து, இவை தாம்‌ எல்லை! என்று உறுதி செய்தபடி, -இறைவன்‌ மேன்மைக்‌ குணங்களை யெல்‌லாம்‌ வெளியிட்டார்‌.
    “அடையத்‌ தக்கோன்‌ அவன்‌”என்றார்‌; அதனை நிலை நாட்ட,மற்றத்‌ தெய்வங்கள்‌ அவனை வணங்கி வழிபட்டுப்‌ போற்றும்‌ நூற் சான்று காட்டினார்‌;
    அந்தப்‌ பரம்பொருளின்‌ பெருமையை அர்ச்சுனன்‌ நேரில் கண்ணாற்‌ கண்டதான காட்டிப்‌ பிரமாணத்தையும்‌ எடுத்து உரைத்தார்
    அவனை அடைய எண்ணுபவர்களுக்கும்‌, முனைபவர்க்கும்‌ அத் துறையில்‌ ஒரு சுவை பிறக்க வேண்டும்‌ என்பதற்காக மேலும்‌ பல சொன்னார்‌.
    விட்டு ஒழிக்க வேண்டிய இந்த உலகின்‌- பிறப்பு இறப்புச்‌ சக்கரத்தின்‌ பயனால்‌ விளையும்‌ துயரங்களும்‌, துன்பங்களும்‌ பற்றியும்‌
    “இவை யெல்லாம்‌ நீத்து இறைவனைச்‌ சென்‌றடைந்தால்‌ பெறுகின்ற பேறு எந்நாளும்‌ எல்லையற்ற பேரின்ப ஞான வெள்ளம்‌”என்றும்‌ விளக்கினார்‌;
    *இறையருள்‌ நெறிச் செல்வார்‌ மேற்‌ கொள்ள வேண்டிய உபாயத்தின் சாரஸ்யம்‌–இனிமை– சிறப்‌பமைதி இவை” என்றும் கூறி,
    இறைவன்‌ குணங்களைச்‌ சிந்தை செய்து, அந்தத்‌ திருக் கல்யாண குணங்களிலே மூழ்குங்கள்‌(குணோபாஸநம்‌ செய்யுங்கோள் )” என்றும்‌ விரித்துரைத்தார்‌.
    இதற்கு அங்கமாக, விலக்கியவற்றைச்‌ செய்து, இளமையைப்‌ பாழ்‌ போக்காமல்‌, மாலிருஞ்சோலை சேர்வது, ஏத்துவது, தொழுவது ௮ந்நெறியிலே செல்ல நினைந்திடுவது,
    இவை போல்வனவாகிய ஷேத்திர வாசம்‌, சங்கீர்த்தனம்‌, அஞ்சலி, வலம்‌ வருதல்‌, கதி சிந்தனை ஆகியவற்றையெல்லாம்‌ மேற் கொள்ளுமாறு உபதேசிக்கிறார்‌ ஆழ்வார்‌.

    ———–

    (3.)*அமரர்‌ குலமுதல்‌ அவன்‌! அம்மா பெரியன்‌!” என்று உலகினர்‌ அவனை அஞ்சி நீங்காதபடி, அவனது
    அவதார எளிமையை எடுத்துப்‌ பேசுகின்றார்‌.
    முன்னர்‌ பேசிய அவதார எளிமை பரத்துவமாகத்‌ தோன்றும்படியும்‌, அர்ச்சையில்‌ எழுந்தருளும்‌ எளிமையை எடுத்துரைத்து
    அவன்‌ நமக்கு மிக அண்மையன்‌ என்று உணர்த்தும்‌ அழகு ‘போற்றத் தக்கதே ! “நல்லதோர்‌ கதிதர–வழி தர–அவன்‌
    நமக்காகக்‌ காத்து நிற்கின்றான்‌.
    இழிந்த மனிசரைப்‌ பாடி நிலை இழக்க நினைப்பது ஏன்‌? அவனோ, வேண்டிற்றெல்லாம்‌ தரும்‌ நிறைவாளன்‌.
    தன்னைப்‌ போலவே ஆக்கும்‌ வல்லவன்‌. அவனைக்‌ கவிபாட வாருங்கள்‌” என்று அழைத்தார்‌.
    முத்தியைக்‌ கொடுத்தல்‌ எனும்‌ அவனது அருஞ்செயலைக்‌ குறிப்பிட்டு, மானிடரைப்‌ பாடுதலாிய நாய்த்‌ தொழிலை விட்டு
    இறைவனுக்குச்‌ சொல்‌ தொண்டு புரிதலாகிய ஆன்ம இயல்பிற்கு ஓத்த தொழிலிலே சுவையை ஊட்டித்‌
    தாம்‌”அவன்‌ கவியானது போன்றே மற்றவர்களையும்‌ இறைத்‌ தொண்டு செய்பவராக்குகின்றார்‌ ஆழ்வார்‌.

    ————-

    (4), வைராக்கியம்‌ பெற்ற பற்றின்மை அடைந்த. ஆழ்வார்‌, அரச போகத்தின்‌ அற்பத்‌ தன்மையையும்‌, துர்க் கதியின்‌ நிலையாத தன்மையையும்‌,
    கைவல்லியம்‌ எனப்படும்‌ ஆன்ம அனுபவத்தின்‌ சிறுமையையும்‌ கூறுகின்றார்‌ முதலில்‌;
    பிறகு ஆடுகளின்‌ இறைச்சி முதலாய படைத்துச்‌ சிறு தேவதைகளை வழிபடும்‌ கீழ்மையைசக் கூறுகின்றார்‌;
    பிறகு மற்ற தெய்வங்களாக மக்கள்‌ போற்றுகின்ற தெய்வர்களின்‌ அறியாமை, ஆற்றலற்ற தன்மை,
    மேலோனை விரும்பாமை முதலிய பண்புகள்‌ பற்றியும்‌, புறமதங்கள்‌ பற்றியும்‌, வைதிக தெறியிலேயே கோணல்‌ தோக்குடைய மதங்கள்‌ பற்றியும்‌,
    அவற்றில்‌ தாமஸ குணமே மேலோங்கியிருத்தல்‌ பற்றியும்‌ எடுத்துக்‌ கூறுகின்றார் :
    **வேறு தேவதைகளைப்‌ பணிந்து அதன்‌ பலனும்‌ கண்டீர்கள்‌; இறைவன்‌ தன்‌ செயல்‌களை நூல்கள்‌ கூறுவது கொண்டு
    அவற்றை அறிந்தும்‌, இவனே பற்றத்‌ தகுந்தவன்‌ என்று தெளிய கில்லீர்‌*
    அதற்குக்‌ காரணம்‌ யாதென்பதையாயினும்‌ அறிவீர்களா?
    பிரகிருதியை அமைத்து அவன்‌ உங்களை மயக்கி வைத்துள்‌ளான்‌ என்பதுதான்‌ காரணம்‌ என்பதை அறியுங்கள்‌!

    அந்த மாயையை விலக்கவும்‌ அவன்‌ பாதமே சரணம்‌ உபாயம்‌ என்பதை அறியுங்கள்‌.
    அந்தத்‌ திருப்‌ பாதம்‌. பற்றி அந்த மாயையினின்றும்‌ தப்பப்‌பாருங்கள்‌! அவனுக்கு அடிமை செய்வதே இந்த ஆன்மாவுக்கு உறுதிப்பாடு-உறுதிப்‌ பொருள்‌–என்பதை அறியுங்‌கள்‌’” என்று இவ்வாறெல்லாம்‌ உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.
    இவ்வாறு உபதசித்துத்‌ தாம்‌ பெற்ற வைராக்கியம்‌ போன்று மற்றவர்களுக்கும்‌ வைராக்யம்‌ உண்டாக்க முயல்‌கின்றார்‌;
    வேறு தேவதைகள்‌, வேறு பயன்கள்‌, புறமதங்கள்‌, கோணல்‌ மதங்கள்‌ ஆகியவற்றில்‌ பற்றின்மையை உண்‌டாக்குகின்றார்‌;
    அந்தப்‌ பற்றின்மை வாய்த்த பின்னே மீட்டும்‌ சக்கரத்தைச்‌ சுழல வைத்து இறைவன்‌ மேல்‌ பற்றை உண்டாக்குகின்றார்‌.
    அதில்‌ தேனார்ந்த தீஞ்சுவை தோன்றச்‌ செய்கின்றார்‌ ஆழ்வார்‌.

    ————–
    (5). அடிமை புக்க வைணவரையும்‌, அவர்களைத்‌ திருந்தும்படி செய்த தம்மையும்‌ காணுதற்கு
    வைகுந்தத்திலிருந்தும்‌ வேறு உலகங்களிலிருந்தும்‌ அமரரும்‌ முத்தரும்‌ வந்தனர்‌.
    அவர்களைக்‌ கண்டு காப்பிட்டார்‌. ஆழ்வார்‌.
    பிரகலாதன்‌ சொல்லைக்‌ கேளாத அவன் தந்தையும்‌, வீடணன்‌ சொல்லைக்‌ கேளாத அவன்‌ தமையனும்‌ போன்று,
    தமது உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தாத அசுரர்‌, அரக்கர்‌ இருக்‌கிறார்‌களா என்று தேடிப்‌ பிடித்து,
    “நாட்டிலே தோன்றும்‌ குறைபாடுகளும்‌, கலிகாலத்தின்‌ குறைகளும்‌ நீங்க வேண்டின்‌, எங்கும்‌ பரந்துள்ள இறைவனடியார்களை
    அடைத்து வாழ்வு பெறுங்கள்‌” என்றார்‌? (வேறு தெய்வங்‌ களின்‌ பாலுள்ள ஈடுபாட்டால்‌ எம்பெருமான்‌ பெருமையை
    அறியமாட்டாத நீங்கள்‌,
    நீங்கள்‌ வழிபடும்‌ தெய்வங்களைப்‌ பற்றி யறியவேண்டும்‌. அந்தத்‌ தெய்வங்களை அந்நிலையில்‌ நிறுத்தியவனும்‌ எம்பெருமானே என்பதையும்‌,
    அந்தத்‌ தெய்வங்களும்‌ அவ்விறைவனையே வணங்குகின்றார்கள்‌ என்‌ பதையும்‌ அறிந்து கொள்ளுங்கள்‌.
    அந்தத்‌ தெய்வங்களைப்‌ போலவே நீங்களும்‌ அவனைத்‌ தொழுதால்‌ பொல்லாத காலத்தின்‌ குறைபாடுகள்‌ உங்களைப்‌ பொருந்தா” என்று
    இவ்வாறெல்லாம்‌ உபதேசித்து அவர்களை விஷ்ணு பத்தி நிலையில்‌ நிலை நிற்பவராக்கினார்‌.
    *திருந்தினவர்கள்‌ என்பவர்கள்‌, உபாயத்தில்‌ துணிவு பிறந்தவர்கள்‌.-அவர்களும்‌ பதற்ற நிலையில்‌ நிற்கும்போது ஆழ்வாரை இடித்துரைப்பவர்களே.
    காணக்கூடாதவற்றையும்‌ காண வைக்கும்‌ ஆற்றல்‌ உடையதான பத்தி எனும்‌ சித்தாஞ்‌ சனத்தை அவர்களுக்குப்‌ பூசுகிறார்‌ ஆழ்வார்‌.
    இந்தப்‌ பத்தியாகிய மையை மனக் கண்ணிற்குப்‌ பூசினால்‌ பெறுதற்‌கரிய பேறாம்‌ இறைவன்‌ வீறுகள்‌ எல்லாம்‌ தோன்றும்‌.
    அத்தகைய பத்தியை உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.

    ————

    (6). பிரபத்தி பண்ணின ஆழ்வார்‌, முன்‌ ஐந்து பத்துகளிலும்‌ சாத்தியத்தை அடைதற்குச்‌ சாதனமான சாதன பத்தியை உபதேசித்தார்‌.
    அந்தப்‌ பத்தியானது ஆன்மாவின்‌ உண்மையான இயல்பிற்கு மாறாக இருப்பதை நினைத்து வருந்துகிறார்‌.
    அந்தப்‌ பத்தியின்‌ அருமைப்பாட்டை எண்ணி வருந்தி, இயற்கையின்‌ போக்கில்‌ ஓடும்‌ மனிதனை நிறுத்தி,
    அவன்‌, ஆன்மாவை மேலே உயர்த்தி, அவனை ஈடேற்ற முடியாதோ என்று கலங்குகின்றார்‌ ஆழ்வார்‌.
    அந்தக்‌ கலக்கத்தாலே, தம்மைப்‌ போலே…தாம்‌ முன்பு இருந்தது போலே, இப்போது இருக்கின்ற இந்தத்‌ தம்‌மொத்த நிலயினருக்கு
    அவர்‌ தமது சொந்த வாழ்வின்‌ அனுபவத்தைக்‌ கூறத்‌ துணிகின்றார்‌.
    “உங்களை அறைகூவி என்‌ பக்கல்‌ அழைக்கின்றேன்‌! ஏன்‌ தெரியுமா? எப்படி. இது கை வசமாயிற்றென்பதை அறிவீர்களா?
    அவன்‌ தனது தாள்‌ நிழலைத்‌ தந்தனன்‌. அவன்‌ கழல்களன்றி மற்றோர்களைக்‌ காண்டிலேன்‌ என்று இருந்தேன்‌.
    மற்றும்‌ அவன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேன்‌” என்று கூறுகின்றார்‌. இப்படிக்‌ கூவித்‌ தம்‌ பேச்சாலும்‌ நடைமுறையைச்‌ சொல்லுவதாலும்‌
    தமது சித்தோபாயத்தில்‌ நிலைத்திருக்கும்‌ நிலையை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்‌.

    ————

    (7)முன்பு தாம்‌ உபதேசித்த கடைசி உபாயம்‌ எனப்‌படும்‌ சித்தோபாயத்தில்‌ ஊன்றி நிற்பவர்களுக்கு, ஆழ்வார்‌
    பேற்றின்‌ கடைசி எல்லையையும்‌
    அதை அடையும்‌ சாதனத்‌தின்‌ கடைசி எல்லையையும்‌ அவர்கள்‌ தெரிந்து கொள்ளும்படி உகப்பால்‌ வெளியிடுகின்றார்‌.
    இப்போது “நீள்‌ நகரம்‌”என்பது திருவாறன்விளை. அதுவே பேற்றின்‌ எல்லை. எம்‌பெருமானைக்‌ காட்டிலும்‌
    அவனுடைய தொடர்பு பெற்ற ஒன்றே பேற்றின்‌ கடைசி எல்லை. வாணனைத்‌ தோள்‌ துணித்தான்‌ சரணன்றி மற்றொன்றிலம்‌ என்று
    அர்ச்‌சாவதார நிலையே உபாயத்தின்‌ கடைசி நிலை எனக்‌ குறிக்கின்றார்‌.

    ———–
    (8) ஆன்மாவின்‌ உண்மை இயல்பை அறிந்த–எண்‌ணிய. -ஆழ்வாருடைய உபாயமும்‌, உபேயமுமே தமக்கும்‌
    உபாயமும்‌ உபேயமும் * என்று இருக்கும்‌ அவர்களை நோக்கி ஆழ்வார்‌, அவர்கள்‌ யாரும்‌இருகரையர்‌ ஆகாதபடி–அதாவது, உபாயம்‌ வேறு உபேயம்‌ வேறு என்று– இரண்டும்‌ தனித்தனி என்று-இரண்டினைக்‌ கொள்ளாது,
    பேறு என்று குறித்த திவ்விய தேசமே உபாயமும்‌ உபேயமும்‌ என்று ஒன்றிலேயே ஊன்றி நிற்கும்படி செய்கின்றார்‌.

    ———-

    (9.)பேற்றுக்கு நாள்‌ குறிக்கப்‌ பெற்ற ஆழ்வார்‌, தம்‌ உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தினவர்கள்‌ தவிர, மற்றுள்ளவரான
    உபதேசம்‌ கேட்க இயலாத–கேளாத…இருந்த அவர்களையும்‌ விட முடியாத பரம கிருபையால்‌ அறிவு கேடர்களான — அறிவிலிகளான — அவர்களுக்கும்‌ உபதேசிக்‌கின்றார்‌.
    *உலகத்து மனைவி மக்கள்‌ உறவினர்‌ முதலியோர்‌ உண்மையான அன்பினர்‌ அல்லர்‌* என்றும்‌,
    இறைவனே ஆபத்துக்கு வந்துதவும்‌ அவனே–உண்மை அன்பினன்‌ என்றும்‌, அவனே மேலான உறவு” என்றும்‌,
    “அவனே காப்பவன்‌, “அவனே இனியன்‌”, “அவனே இன்பவடி.வினன்‌ *என்றும்‌,
    *அவன்‌ ஒருவனே உபாயம்‌” என்றும்‌, “அவனை ஒழிந்த மற்றையாரும்‌ அத்தகையர்‌ அல்லர்‌” என்றும்‌,மெய்ப்பிக்கின்றார்‌.,
    கண்ணன்‌ ஒருவனே மேலாந”தெய்வம்‌. அவன்‌ ஒருவனே மாநிலத்து எவ்வுயிர்க்கும்‌ உபாயம்‌” என்று முடித்துச் சித்தோபாயத்தை உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.

    அந்தச்‌ சித்தோபாயத்தில்‌ நம்பிக்கை பிறக்க வேண்டும்‌.-அது பிறக்கைக்குப்‌ பேறு வேண்டும்‌. அப்படி
    அச்சித்தோப௱பத்தில்‌ நம்பிக்கை பிறக்கைக்கு அடியான பேறு இல்லாதார்‌ அதில்‌இழியார்‌–அதில்‌ இழியாதார்‌ இழியமாட்டார்‌- அறிவுக்‌ குறைவு உடையார்‌.
    ஆகவே, “அத்தகையவர்கள்‌ செய்யக்‌ கூடுவது யாது?” என்பதும்‌ ஒரு வினாவாகின்றது. ஆழ்வார்‌ அவர்களையும்‌ விட்டு விடவில்லை.
    காலையும்‌ மாலையும்‌ மலர்‌ முதலியன கொண்டு, அவனை வழிபட்டு, பத்தி நிலையில்‌ நிற்பவர்‌ ஆகுங்கள்‌? என்று
    அங்கங்களோடு கூடிய பத்தியைஅத்தகையோருக்கு உபதேசிக்கின்றார்‌.

    செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ உண்டேனும்‌, செய்ய இயலாமை காரணமாகவும்‌, வேறு உடனே கிட்டாமை:காரணமாகவும்‌
    அப் பத்தியை அனுட்டிக்க ஆற்றலற்றவர்‌ உளர்‌ அன்றோ?*அவர்கள்‌ செய்யக்‌ கூடியதுயாது?” என்பது மற்றொரு வினா.
    அவருக்கும்‌ ஆழ்வார்‌ கைவசம்‌ விடை. வைத்துள்ளார்‌.*இன்பம்‌ அளிப்பதும்‌, யாவருக்கும்‌ தகுதியானதும்‌,
    எடுத்த பிறவியின்‌ (உடலின்‌) இறுதியிலே பலன்‌ அளிப்பதும்‌ ஆன பிரபத்தி மார்க்கம்‌ பயிலுங்கள்‌” என்று அவர்களுக்கும்‌ உபதேசம்‌ செய்கின்றார்‌ ஆழ்வார்‌.

    மற்றும்‌, சிலர்‌ ஐயப்பாடுடையோர்‌. உபாயமோ சிறிது; பலனோ பெரிது; மிகப் பெரியது! நினைத்துப்பார்க்க ஒண்ணாத அளவுபெரியது!
    தடைகளோ மிகுதி!மேலும்‌ அவைஉடைக்‌க முடியாத அளவு வலியன. நிலைமை இவ்வாறு இருத்தலால்‌,
    இது எவ்வாறு கூடும்‌ என்று ஐயம்‌ கொண்டு
    பிரபத்தியில்‌ துணிவு. கொள்ளார்‌. அத்தகைய துணிவு கொள்ளுதற்கு ஏற்ற சத்தி அவர்கள் பால்‌ இல்லை. எனவே இத்தகைய துணிவற்றவர்க்கு வழி யாது? என்றால்‌, ஆழ்வார்‌ விடை. தருகின்றார்‌.
    *திருக் கண்ணபுரம்‌ சொல்ல நாளும்‌ ‘துயர்பாடு சாராமே; என்கின்றபடி
    அந்த இறைவன்‌ பெயரையோ ஊரையோ சொல்லுங்கள்‌” என்று உச்சாரணத்தை விதிக்கின்றார்‌ ஆழ்வார்‌.
    வேறு சிலரையுங்கூட ஆழ்வார்‌ தமது திரு நோக்கில்‌அளந்தே வைத்திருக்கன்றார்‌.

    பெயர்‌ சொல்லவும்‌ மாட்டாதார்‌, ஒருமைப்‌ பாட்டோடு உச்சாரணம்‌ செய்யவும்‌ இயலாதார்‌,
    தாமே ஒரு பாசுரம்‌ சொந்தமாய்ச்‌ சொல்லுதற்கும்‌ ‘இயலாதார்‌ ஆகிய இவர்களுக்கு-
    தகுதி குறைந்தவர்சளுக்கு-அவர்‌ சொல்வது இது: இத்‌ திருவாய்மொழியைப்‌ பத்தியோடு பாடி அவன்‌ திருவடி.களிலே விழுங்கள்‌
    கீதாசாரியன்‌ கண்ணன்‌ செய்தது போன்றே ஆழ்வாரும்‌ தமக்குப்‌ பேறு அணித்தானவுடன்‌ உலகினர்‌ ஒருவரும்‌
    இழக்க வொண்ணாது இதை என்ற பரம கிருபையாலே
    அவரவர்‌ தருதிக்‌ கேற்பப்‌ பலவகை உ.பாயங்களையும்‌ முறையாக எடுத்து உபதேசிக்கக்‌ காண்கின்றோம்‌.

    ——————-
    10, தம்மினும்‌ இறைவன்‌ பால்‌ மிக்க ஈடுபாடுடையது தம் தெஞ்சு என்பது அவர்‌ கருத்து- ஆதலால்‌, தம் மனத்‌திற்கு முதலில்‌ பணி நெஞ்சே!” என்று ஆணையிட்டார்‌.
    அடுத்து, “மருள்‌ ஒழி” என்கின்றார்‌. இவ்வாறு செய்ய “வேண்டுவனவற்றையும்‌ தவிர்க்க வேண்டுவனவற்றையும்‌ விதித்தவர்‌,
    நெஞ்சு போல்வாரைகத் *(தொண்டீர்‌” என்று அழைத்துச்‌ செய்யத்‌ தக்கதும்‌, நினைக்கத்‌ தக்கதும்‌, பேசத்‌ தக்கதும்‌,
    கேட்கத்‌ தக்கதும்‌, காணத்‌ தக்கதும் , போதற்கு ஏற்ற இடமும்‌ இவை என்று வெளியிடுகின்‌றார்‌,
    திருவாய்‌ மொழியின்‌ தொடக்கத்தில்‌ முதற் பத்தில்‌ *பிணக்‌ கற” என்ற பாட்டில்‌ (1-2-5) *வணக்குடைக்‌ தவநெறி”
    என்று தொடங்கிய பத்தி யோகத்தை
    இறுதிப்‌ பத்தில்‌**சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்‌?? (10-4) என்று அது தன்‌ பேற்றுடனே பொருந்தின படியைச்‌ சொல்லி முடித்தார்‌.

    —-
    முன்னார்‌ முதற்பத்தில்‌ **எண்‌ பெருக்கு (1-2-10) என்ற பாடலில்‌ வழிபாடு செய்தற்குப்‌ பற்றுக்‌ கோடாகச்‌ சொல்லப்‌ பட்டதும்‌,
    *எண்ணும்‌ திருநாமம்‌?” (10-5-1) என்று வழிபாட்டின் போது இடையறாது நினைக்கும்‌ திரு நாமமும்‌ ஆன திரு மந்திரத்தின்‌ சொல்லையும்‌ (ஒலியையும்‌),
    அதன்‌ பொருளையும்‌ ‘*நாரணம்‌” என்றும்‌ **எம்மான்‌”” என்றும்‌ சுருங்க உபதேசிக்கின்றார்‌.
    **மாதவன்‌?”(1-10-7) என்று தெடாங்கித்‌ திரு மத்திரத்தை **த்வயம்‌*’ என்ற மந்திரமாக வெளியிடு கிறார்‌. ்‌

    இறைவன்‌ தம்மைச்‌ கொண்டு போவதற்கு விரைகின்ற படியாலும்‌, கேட்கிறவர்களுக்த ஈடுபாடு பிறக்கும்‌ பொருட்டும்‌
    “தாள்வாய் மலரிட்டு நாடீர்‌* என்றும்‌,
    பாடீர்‌அவன்‌ தாமம்‌” என்றும்‌,
    *நன்‌ மலரிட்டு நினைமின்‌” என்றும்‌
    மனம்‌ மொழி மெய்‌ ஆகிய முக் கரணங்களாலும்‌ இறைவனை வழிபடுதலை உலகினர்க்குக்‌.
    கையோலையில்‌ குறித்துக்‌ கொடுப்பது போன்று சுருக்கமாகக்‌ காட்டுகின்றார்‌, ஆழ்வார்‌.

    தம்மைப்‌ போன்று அனுபமும்‌ கைங்கரியமும்‌ செய்‌பவர்க்கு அவர்‌, (அவனுடைய சீல குணத்திலே அகப்பட்டு அழுந்தி விடாது,
    உங்கள்‌ உயிரைக்‌ காவல்‌ காத்துக்‌ கொள்ளுங்கள்‌” என்று கூறுகின்றார்‌. இப்படிக்‌ கூறுவதால்‌ அவர்‌களை அவன்‌ உள்கலந்து அழிக்கும்‌ வழிக்குக்‌ காவலிட்டார்‌.
    இவர்தம்‌ மனத்தைத்‌ திருத்தினான்‌ இறைவன்‌, திருத்தியபின்‌,*இனியும்‌ இவரை இங்கே இவ்வுலகில்‌ இருக்க விடலாகாது*என்று இவருக்காக வீடு திருத்தப்போனான்‌?
    போய் , அது செய்து திரும்புவதுற்கு முன்‌ இவர்‌ தம்‌ உபதேசத்தால்‌ ஊரும்‌ நாடும்‌ திருந்தி இவர்‌ இங்குச்‌ செய்ய வேண்டுவனவன
    செயல்‌ எல்லாம்‌ செய்து முடிவுற, இவரைப்‌ பரம பதத்திலே கொண்டு போகப்‌ பதறினான்‌.
    இவர்‌ எடுந்த இவ்வுடல்‌ கடைசி உடலாகையால்‌, அதில்‌ தமக்குண்டான மோகத்‌தாலே தன்‌ பதற்ற மிகுதியை மறந்து, தன்‌ பரிவாரங்களுடன்‌ அவ்வுடலில்‌ புகுந்து,
    திவ்ய தேசங்களில்‌ செய்யும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ அதிலே காட்டி, ஆழ்வாரின்‌ பல உறுப்புக்களையும்‌ அனுபவிக்கும்படி அவர்‌ உடலில்‌ சபலனான்‌ இறைவன்‌.
    அந்த இறைவனுக்கே, ஆழ்வார்‌, உடலின்‌ மாயையை எடுத்து விளக்கி அதனைக்‌ கைவிடும்படி செய்தார்‌.

    காரணமின்‌றியும்‌ தம்மைக்‌ கொண்டு போதலில்‌ இன்று மிக்கு ஈடுபட்டவனான அவனை இதுகாறும்‌ தம்மை விட்டு
    வைத்ததற்குக்‌ காரணம்‌ கூறும்படி கேட்கின்றார்‌ ஆழ்வார்‌.
    அவனும்‌, :*இந்திரியங்கட்கு அடிமைப்பட்டுப்‌ புலன்கள்‌ வழியே போனீர்‌?? என்பது முதலாய காரணங்களைக்‌ காட்ட எண்ணுகின்றான்‌.
    ஆனால்‌, அவையெல்லாம்‌ அவன்‌ செயலே என்று அறியும்‌ அறிவாளர்‌ ஆழ்வார்‌ என்று எண்ணி, ஒரு. விடையும்‌ கூறாது நின்றான்‌.
    தன்‌ தவறுகளை மறைப்பான்‌ போன்றும்‌ இவரைத்‌ தன்னிடத்துக்கு ஏற்றுக்‌ கொள்வதன்‌ அறிகுறியாகவும்‌
    சில முழக்கங்களை சூழ் விசும்பு அணி முகிலில்‌ உண்டாக்கினான்‌.
    அல்வொலி செவிப்பட்டதும்‌ அர்ச்சிராதி வழி பல்லக்குத்‌ தூக்குவார்‌ வழிபாடு, திவ்வியதேசப்‌ பேறு, அங்குள்ளார்‌ பாராட்டு
    முதலியவற்றைப்‌ பெற்றவராய்ப்‌ பேசும்படி, மேலான பேற்றை மனநிலையில்‌ (மானசீகமாக) பெற்றார்‌. ஆழ்வார்‌.
    அந்நிலையை அகத்தே-மனத்தே மாத்திரமன்றிப்‌ புறக்‌ கரணங்களாலும்‌ பெற வேண்டுமென்று பதறி
    அவனுக்குத் திருவாணை இட்டு-அவனைத்‌ தடுத்து, அது பெறாத ஆணை யல்லாமைக்குப்‌ பல ஏதுக்களையும்‌ எடுத்துரைத்து அவா மிக்கவரானார்‌.

    இந்தப்‌ பரம பத்தி நிலையும்‌ அற்பமானது என்று சொல்‌லும்படி. மிகக்‌ பெரியதாயிருந்தது இறைவன் தன்‌ ஈடுபாடு.
    ஆழ்வாரின்‌ அவாவின்‌ அளவைச்‌ இறு குளம்பின்‌ அடி போன்ற அளவினதாகக்‌ குறிப்பிட்டால்‌,
    இறைவனோ, கடல் .போன்ற மிகப்‌ பெரிய அளவினதான ஆசையுடன்‌ வந்தான்‌ என்றுதான்‌ கூறவேண்டும்‌.
    வந்தவன்‌, இவருடன்‌ கலந்து தன்‌ விடாய்‌ தீர இவரை அனுபவிப்பித்து, இவர்‌ அலறிய அந்த.வாயாலேயே *அவாவற்று வீடு பெற்ற?” என்று பேசும்படி,
    அரி என்ற தன்‌ பெயருக்கு ஏற்ப எல்லாத்‌ தாபங்களையும்‌
    ஹரித்தமையை.-அழித்தமையை- யாவரும்‌ அறிய வெளி யிடடுன்றார்‌ ஆழ்வார்‌ இறுதிப்‌ பத்தால்‌.

    ———–

    4. ஐய வினாக்களும்‌ அவற்றின்‌ விடைகளும்‌

    1. காரணமற்ற தன்‌ பரம கிருபையால்‌ ஆழ்வார்க்குஅஞ்ஞானம்‌ நீக்கிப்‌ பத்தி வடிவான ஞானத்தைத் தந்து,
    பின்னும்‌ அவர்க்கு அவர்‌ விரும்பிய பேற்றையும்‌ இறைவன்‌ அளித்தலைக்‌ காண்கின்றோம்‌.
    தம்‌ பிரபத்தங்களில்‌ முதல்‌ பிரபந்தத்தில்‌ முதல்‌ பாட்டில்‌ ஆழ்வார்‌ பொய்ஞ்ஞானம்‌,பொல்லா ஒழுக்கு, அழுக்குடம்பு ஆகியவற்றை நீக்க வேண்‌டும்‌ என்று வேண்டுகின்றார்‌.
    *இறுதியில்‌ அவ்வேண்டுதல்‌ நிறைவேதியதாகப்‌ பேசும்‌ ஆழ்வாருக்கு, முன்னரே இறைவன்‌ அருளாமைக்கு யாது காரணம்‌?” என்பது வினா.

    இதற்குக்‌ காரணங்களாவன இவை.
    (1) தன்னுடைய பல முயற்சிகளாலும்‌ திருந்தாத உலகு ஆழ்வாருடைய உபதேசங்களாலேனும்‌ திருந்தட்‌டுமே என்பதால்‌,
    (2) வேண்டியவடனே வீடு கிடைத்துவிட்டால்‌, பிரபத்தி என்பது தன்பால்‌ வந்தவர்களை உடனே மாய்த்து விடும்‌
    நச்சுப்‌ பொய்கையோ என்று மக்கள்‌ ஐயம்‌ கொண்டு, தன்‌ பக்கம்‌ யாரும்‌ வந்து எதுவும்‌ வேண்டுதல்‌ செய்யாது போய் விடுவர்‌ என்பதால்‌.
    (3) தானும்‌ தன்‌ அடியவர்களும்‌ மகிழ இவரைக்‌ கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளத்‌ தொடங்கிய செயல்‌ முழுதும்‌ முடிவதற்காக.
    (4) வேர்‌ சூட்டிக்கொள்பவர்கள்‌ வாசனையின்‌ விருப்பத்தாலே அதில்‌ பற்றிய மண்பற்றையும்‌ கழற்றாது சூட்டிக்‌ ‘கொள்வதுபோல்‌,
    இவர்‌ தம்‌ உடம்பில்‌ இறைவன்‌ கொண்ட விருப்பத்தால்‌. என்று இப்படி பல விதமான காரணங்கள்‌ கூறலாமாயினும்‌,
    இலை முக்கியமானவை அல்ல.

    (5)*இவருடைய ஆர்த்தி.-ஆர்வம்‌–பெருகித்‌ தகுதி யுடையராக வேண்டும்‌” என்பதே முக்கியமான காரணமாகும்‌.
    அது இவர்தம்‌ நூலில்‌ 20 (இருபது) இடங்களில்‌ *இனி, இனி” என்று பேசுவதனால்‌ தெளிவாகும்‌.
    முதற்‌ பாடலிலும்‌ ஆரத்தி இருப்பினும்‌, அது படிப்படியாக முற்றிக் கொண்டு போய்‌, இறுதியில்‌ பரமார்த்தியாகி, பேற்றிற்குத்‌ தகுதிபெற்றார்‌ என்பதாம்‌.

    மேலும் (6)ஒரு காரணம் -வீடு நிறுத்துவான் -இவரைக் கூட்டிப்போவதற்கு முன்பு பரமபதம் ஆகிய பெரிய வீட்டைத் திருத்த வேண்டுமே -அதுவும் ஒரு காரணம்

    2. *பர பக்தி பர ஞானம்‌, பரம பக்தி என்பன பக்தியின்‌ நிலைகள்‌.
    ஆழ்வார் தம்‌ பத்தியிலும்‌ அந்நிலைமைகள்‌உண்டா? அவை எங்கெங்குப்‌ புலப்படுகின்றன?

    பல பாடல்களில்‌ ஆழ்வார்‌ * கண்ணனைக்‌ கண்டேன்‌”என்று பேசுகின்றார்‌.
    வேறு பல பாடல்களில்‌ *பாவியேன் காண்கின்‌றிலேன்‌” என்பது போலவும்‌ பேசுகின்றார்‌.
    மேலாக நோக்கும்போது, இவை, முரண்படுவது போன்று தோன்றலாம்‌.
    கண்டேன்‌ என்பது; உட் கண்ணால்‌ கண்டதாகவும்‌, *காண்கின்றிலேன்‌* என்பது புறக் கண்ணாலும்‌
    காண ஆசைப்பட்டு அப்பேறு பெருமையைக்‌ குறிப்ப தாகவும்‌ கொள்ளவேண்டும்‌.

    அப்படியானால்‌, முதற்‌ பத்திலிருந்து முடிவு வரும்‌ வரை அலர்‌ நிலை என்ன? என்ற ஐயம்‌ எழும்‌.
    கண்டேன்‌” என்ற பேச்சு பத்துத்‌ தரமும்‌,-அதனினும்‌ இருமடங்கு *காண அவாவுவன்‌” என்ற பேச்சும்‌ வருதலால்‌;
    பர ஞானம்‌ உள்ளே ஓடிக்கொண்டிருக்கிற பரபக்தியே ஆழ்வார்‌ நிலை என்பது தெரியவரும்‌.
    கண்டு களிப்பக்‌ கண்ணுள் நின்று அகலான்‌”? (10—8–7} என்பது வரை இந் நிலைமை.

    பரபக்தி முதல்‌ நிலை. பரஞானம்‌, அவனை .அறிகின்ற நிலை-. உள்ளே ஓடிக் கொண்டிருந்த பர ஞானம்‌ எப்பொழுது முழுமை பெறுகின்றது?
    **அந்தமில்‌ பேரின்பத்து அடியாரோடு இருந்தமை”” (10-9-11 )என்று நித்திய ஸூரியர்‌ திரளில்‌ தாம்‌ இருப்பதாக
    ஆழ்வார்‌ பேசும்‌ பாசுரம்‌, அவர்‌ பர ஞானம்‌ முழுமையாகப்‌ பெற்ற நிலையைக்‌ காட்டும்‌. *சூழ்‌ விசும்பு? திருவாய்‌ மொழியில்‌ காணலாம்‌.

    இதுவும்‌ மானச அனுபவமே. பெருவிடாய்‌ பிறந்து, கூப்பிட்டு, ஆற்ற மாட்டாமல்‌ திருவாணை யிட்டு,
    அவனைத்‌ தடுத்துப்‌ பேற்றோடு கூடின. “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து”? என்னும்‌
    “முனியே நான்முகன்‌- பதிகமே பத்தியின்‌ கடைசி எல்லையான பரமபத்தி நிலை கூறும்‌ பகுதி.

    3. பர பத்தி பர ஞானம்‌ பரம பத்தி என்னும்‌ மூன்று நிலைகளைப் பற்றி யார்‌ எங்கே பேசி யிருக்கின்றார்‌?
    கண்ணன்‌ தேர்த்‌ தட்டில்‌ வீற்றிருந்து அருச்சுனனுக்குக்‌ கீதையாகப்‌ பேசினான்‌;
    அவனே சேர பாண்டியன்‌ என்று அரியணை மீதிருந்து எம்பெருமானார்க்கு உரைத்தான்‌. அது கத்தியமாய்‌ (உரைநடை) உள்ளது. அவற்றில்‌ இவை விளக்கப்பட்டுள்ளன :

    *பரபத்தி? என்பது ஞான நிலை. அது “எம்பெருமானுடன் கூடுவது இன்பம்‌; பிரிவது துன்பம்‌” என்று இருக்கும் நிலை

    “பர ஞானம்‌” என்பது, தர்சனநிலை. இறைவனுடைய இயல்பு, வடிவு, குணம்‌, செல்வங்களை மிகவும்‌ தெளிவாக
    நேருக்கு நேர்‌ காண்பது போல அறிகின்ற நிலை. ்‌

    *பரமபத்தி* என்பது, பேறு பெற்ற நிலை. அது உணர்ந்த பொருளை அப்பொழுதே பெறாவிடில்‌ முடிவுஎன்னும்படியான நிலை.

    4. திருவாய்‌ மொழியில்‌ ஆழ்வாருடைய பலவான பத்திநிலைகள்‌ பேசப்படுன்றன.– இறைவன்‌ குணங்கள்‌ கூறப்படுகின்றன.
    ஆழ்வாருடைய பலவாய உபதேசங்கள்‌ உள்ளன. -ஐம்பொருள்‌ பற்றிய உண்மை உள்ளது.
    ஒவ்வொரு திருவாய்‌ மொழியிலும்‌ (ஒருபதிகம்‌) ஒரு கருத்து உணர்த்தப்பட்டுள்ளது.
    ஒரு பத்தில்‌ -அதாவது நாறு பாடல்களில்‌ ஒன்றுபட்டதொரு கருத்து உணர்த்தப்பட்டு உள்ளதும்‌ தெரிகின்றது.
    எனில்‌, ஆயிரம்‌ பாட்டிலும்‌ கூறப்படும்‌ ஒன்றான திரண்ட கருத்து -அதாவது தத்துவம்‌ யாது?
    பிறவிக்குக்‌ காரணமான அஞ்ஞானத்தைப்‌ போக்குவ்தான மதி நலத்தை ஞான நிறைவை–அருளிய இறைவனது
    காரணமற்ற. அருளாலேயே இறைவனை அடைதலாகிய மோக்ஷம்‌ பெறுதலும்‌ உண்டாகும்‌ என்று தெளிவித்தலே
    “மயர்வற மதி நலம் என்று தொடங்கி வீடுபெற்ற” என்று முடியும்‌பிரபந்தத்தின்‌ ஒன்றான திரண்ட கருத்தாகும்‌,
    எந்த இறை யருள்‌ ஞானத்தை அருள்கின்றதோ, அதுவே வீட்டையும்‌ அருள வல்லது” என்பது இங்கு விளங்கும்‌ தெளிபொருள்‌ என்பதாயிற்று.

    ——————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ஆழ்வார்‌ திருவுள்ளம்‌-பகுதி -1-

    January 25, 2024

    ஸ்ரீ வைண்ணவ சம்பிரதாயத்தை விளக்க எழுந்த இரகசியக்‌ கிரந்தங்களுள்‌ இறந்தது. ஆசாரிய இருதயம்‌:

    ஆழ்வார்களின்‌ அருளிச்செயவில்‌ ஈடுபாடு கொண்டு, திருமாலின்‌ தீதில்‌ நன்னெறியை வளர்த்தவர்கள்‌,-

    நம்மாழ்வாரையே முதலாசாரியர்‌-மற்ற ஆழ்வார்களை நம்மாழ்வாருக்கு. அங்கங்கள்‌ எனக்‌ கூறுதல்‌ மரபாதலால்‌, “நம்மாழ்வார்‌
    திருவுள்ளம்‌” எனக்‌ கொள்வதே சாலவும்‌ பொருத்தமாம்‌..-ஈட்டு உரையின்‌ போக்கினை ஒட்டியே ஆசார்யஹிருதயம்‌ எழுந்தது.

    முதற்‌ சூர்ணையில்‌ (மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கில்‌ கொளுத்‌தின” என்னும்‌ சொற்றொடர்‌ வருகின்‌றது.
    மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை” என்பது திருமங்கையாழ்வார்‌ பாசுரம்‌.
    “தோன்று சோதி மூன்று மாய்த்‌ துளக்கமில்‌ விளக்கமாய்‌”?என்றருளிச்‌ செய்‌திருப்பவர்‌ திருமழிசையாழ்வார்‌.
    இவ்விரு தொடர்களில்‌ ஒவ்வொரு பகுதியை எடுத்து இணைத்து *மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கு” என்றமைத்தார்‌
    முன்‌ பாசுரங்கட்கு உரை வகுத்தவர்கள்‌ *விளக்கு” என்பது இறைவனைக்‌ குறிப்பதாகவே கொண்டுள்ளனர்‌.
    எல்லாச்‌ சொற்‌களுக்கும்‌ வித்தான அகரத்தையே மறையாய்‌ விரிந்த விளக்‌கென்று இவ்வாசிரியர்‌ கொள்வது உரையால்‌ விளங்குகின்றது.
    *விரிந்த என்ற” என்ற சொல்லாட்சி, இவர்‌ கொள்ளும்‌ பொருளின்‌ பொருத்தத்தை உணர்த்தும்‌, அகரத்‌ திற்கும்‌ எம்பெருமான்‌ பொருளாயிருப்பவன்‌ என்ற காரணத்‌ தால்‌ *விளக்கு” என்பது இலக்கணையாய்‌ இறைவனை உணர்த்துவதெனக்‌ கூறுவதாகக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌,

    ——-

    50 சூர்ணையில்‌ “பண்ணார் பாடல்‌ பண்புரை இசை கொள்‌ வேதம்‌ போலே” என்ற தொடர்‌ வருகின்றது.
    பண்ணார் பாடல்‌” என்பதற்குப்‌ “பண்ணோடு சேர்ந்துள்ள இசையை யுடைய திருவாய்மொழி ” என்பது பொருளாகும்‌.
    இத்தொடர்‌ திருவாய்மெ௱ழியில்‌ வருவது.”
    “பண்புரை இசை கொள் வேதம்‌? என்பது பண்புரை வேதம்‌,-இசைகொள்வேதம்‌ என்று பொருந்தும்‌.
    அருளிச்‌ செயலிலும்‌ அதன்‌ உரை களிலும்‌ ;பண்புரை வேதம்‌” என்ற தொடர்‌ எங்கும்‌ வரவில்லை.
    ஆனால்‌ “பண்புடை. வேதம்‌”* என்ற தொடர்‌ எடுத்‌ தாளப்பட்டுள்ளது.
    “பண்புரை” என்பது, பண்ணைஃ-இசையைப்‌ புரைந்திருக்கின்ற–பண்ணுக்கு ஆதரவாயிருக்கின்ற வேதம்‌ என்னும்‌ பொருள்‌ தரும்‌,
    இது ஒரு புதிய ஆட்சி என்றே உரையாசிரியரும்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.

    திருவாய் மொழியின் வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
    இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,

    ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
    அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
    மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .

    ——–

    சூர்ணை, 75ல்‌(வீட்டு இன்ப இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில்ஆராய்ச்சி)  “இன்ப மாரியில்‌ ஆராய்ச்சி” என்ற தொடர்‌ வருகின்றது.
    அடியார்க்கு இன்ப மாரியே” என்பது திருவாய்மொழிப்‌ பாசரப்பகுதி.
    இந்த உலகமெல்லாம்‌ தனக்கு. உரிமையானது என்று சொல்லும்படி நின்ற இறைவனைப் பற்றி
    வளப்பமான தமிழ் நூலைச்‌ செய்தற்கு நான்‌ புண்ணியத்தைச்‌ செய்தவன்‌.
    இந்நால்‌ “அடியார்க்கு இன்பத்தை உண்டாக்கும்‌ மழையாகும்‌–மேகமாகும்‌”என்பது அதற்கு முன்னோர்‌ வகுத்துள்ள உரை.
    இது தமக்கு இனிப்பதனால்‌ மற்றவர்கட்கும்‌ அவ்வாறே இனிக்குமென்பது ஆழ்வார்‌ எண்ணம்‌,

    இன்ப மாரி -(திருவாய் மொழி ஈட்டில் )
    ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல் உத்பத்தி நிரூபணம் என்கை-

    திருவாய்மொழி பரமாக ஈடு கூற,–ஆழ்வார்‌ பரமாகக்‌ கொண்டு இவர்‌ பொருள்‌ அமைக்கின்றார்‌.
    இவ்வாறு ஆழ்‌வார்‌ பாடல்களுக்கு முன்னோர்‌ கொண்ட. பொருளுக்கு சற்று மாறான பொருள்‌ இவர்‌ அமைத்துக்‌ காட்டலை நாம்‌ காண்‌கின்றோம்‌.

    திருவாய்மொழியின்‌ நாலாம்பத்து ஐந்தாம்‌ திருவாய்‌ மொழியின்‌ மற்றப்‌ பாடல்களை நோக்கும்போது
    “இன்பமாரியே? என்பதற்கு நான்‌ அடியவர்க்கு இன்ப மாரிஆயினேன்‌”,” என்று ஆழ்வார்‌ தமக்குள்‌ மகிழ்வதாகச்‌
    கொள்ளும்‌ பொருளே, பொருத்தமுடையதாகவும்‌ சிறப்‌ புடையதாகவும்‌ தோன்றுகின்றது.
    அப்பாடலின்‌ அவதாரிகையில்‌ அதன்‌ உரையாசிரியர்‌ இப்பொருளையும்‌ குறித்தல்‌ அறியத் தகும்‌.

    ————

    (4) சூர்ணை 99, இறைவனை அடைவதற்குச்‌ சாதனமாகக்‌ கொண்டொமுகும்‌ சாதன பத்தியின்‌ இயல்பை விளக்குகின்றது.
    அதில்‌ முறைப்படி. இறை வழிபாடு செய்து, அவனை இடையறாது நினைப்பதனால்‌ அந்தக் கரண்ங்கள்‌ தூயராகப்‌ பெற்று,
    இந்திரியங்களை அடக்கி, அவற்றை இறைவனைப்‌ பற்றியதாகிய செந்நெறியிலே நிறுத்தி,
    அவற்றின்‌ போக்கினைத் தடுத்து, ஐந்து வகைக்‌ துன்பங்களையும்‌ போக்கி, “விளக்கினைக்‌ கண்டு” என்பது வருகின்றது.
    விளக்கினை விதியில்‌ காண்பார்‌‘” என்பது திருமங்கை மன்னன்‌ பாசுரம்‌.
    அங்கு “விளக்காகிய இறைவன்‌? என்றே பொருள்‌ கொள்ளப்பட்டுள்ளது.
    ஆனால்‌ ஆசார்ய இருதயத்‌தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஆத்தும தரிசனம்‌ செய்து” என்றே பொருள்‌ கொள்கின்றார்‌.
    அதற்குரிய காரணத்தையும்‌ அவர்‌ அங்கு எழுதியுள்ளார்‌.

    விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள்
    வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் –
    பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —
    விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது ..
    யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

    அதே சூர்ணையில்‌ பிற்பகுதியில்‌
    அரும்‌ பெருஞ்‌ சுடரைக்‌ கண்டு” என்றும்‌,-“கனவில்‌ மிக்க தர்சன சமமாய்‌” என்றும்‌
    வரும்‌ தொடர்களால்‌ இறைவனைக்‌ காணுதல்‌ பற்றிச்‌ ‘சொல்லுகையால்‌
    இங்கு :விளக்கினைக்‌ கண்டு என்பது ஆன்மாவினைக்‌ காணுதல்‌ அல்லது அறிதல்‌ என்றே கொள்ளவேண்டும்‌.

    ——–

    சூர்ணை 184 -வளம்‌ மிக்க வாட்டாற்றில்‌ காணும்‌ அர்ச்சாவதாரச்‌ சிறப்பை விளக்குவது.
    அடியவர்களுக்குமுத்தியைக்‌ கொடுக்குமளவில்‌ அவர்கள்‌ விதித்தபடி நிற்கிற‘ஆஸ்ரித பாரதந்தர்யம்‌? அங்கு அளவற்ற வகையில்‌ ஒடும்‌ என்‌கின்றார்‌.
    மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்” என்பது சூர்ணை.
    பிரணத பாரதந்தர்யமாவது, அடியவர்‌ விரும்புகிறவாறு நடந்து கொள்ளும்‌ தன்மை. அஃதாவது, அவர்கள்‌ உடைமையாம்‌ தன்மையை இறைவன்‌ அடைதல்‌.

    அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –திருவாய்-10-6-1-என்றும் –
    விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும்
    திருவாய்மொழியில்‌ “அருள்‌ தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதிவகையே ” என்ற பகுதிக்கு முன்னோர்கள்‌ கூறும்‌ உரை, :
    நமது புண்ணியத்திற்குத்‌ தகுதியாக அவன்‌ அருள்‌ தருவான்‌” என்பது.
    ஸ்ரீ உடையவர்‌ அது கேட்டு இது முன்‌ பாசுரங்களில்‌ வரும்‌ பொருளுக்கு ஏற்றவாறு இல்லையாகையால்‌,
    “நாம்‌ விதித்தபடியே செய்வானாய்‌ இருந்தான்‌” என்று அருளிச்‌ செய்தாராம்‌. ஈடு இவ்விரு பொருள்களையும்‌ தருகின்றது.
    இவ் வாசிரியர்‌ உடையவர்‌ கூறும்‌ பொருளே பொருத்தமுடையது எனக்‌ கொண்டு அதனையே தம்‌ நூலில்‌ அருளிச் செய்வதைக் காண்கின்றோம்‌.

    தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆழ்வார் கேட்டபடியே கொடுத்து அருளினான் -ஆஸ்ரித ப்ரணய பாரதந்தர்யம் )

    ———-

    சூர்ணை 205 ஆழ்வாருடைய உபதேசம்‌ பயனுடைய தாயிற்று என்பதை விளக்க எழுந்தது.

    (க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று –
    மலர் நாடி யாட் செய்ய- உய்யக் கொண்டு என்கிற இழவும் – ஆரைக் கொண்டு என்கிற இழவும் –
    வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது
    மூன்றிலும் ஆசை அற்று மூன்று இழவுகளும் தீரப்பெற்றார் -)
    அதில்‌ புகழில்‌ விருப்பமும்‌ செல்வ ஆசையும்‌ பிறர்‌ போற்ற வேண்டுமென்ற அவாவும்‌ இன்றி
    மலர்நாடி, ஆட்செய்ய உலகர்‌ யாவரும்‌ திருந்தினர்‌.
    அதனால்‌ உலகினர்‌ நல்வாழ்வு பெறவில்லையே என்று இவர்‌ கொண்ட வருத்தமும்‌,
    தமக்குப்‌ பேச்சுத்‌ துணை பில்லாமையால்‌ வந்த ஏக்கமும்‌,
    அவன்‌ மென்மைத்‌ தன்மையறிந்து பரிவு காட்டுவதற்கு ஒருவருமில்லையே என்ற இழவும்‌
    தீரப்‌ பெற்றன என்கின்றார்‌.
    இங்கு “மலர்நாடி” என வரும்‌:தொடர்‌ *நறிய நன்மலர்‌ நாடி”? என வரும்‌ திருவாய்மொழிச்‌ சொற்றொடராகும்‌.
    இதற்கு ஈட்டிலும்‌ மற்ற உரைகளிலும்‌ “மணமுடையதாய்‌ நன்றாயிருப்பதான மலர்கள்‌ போலே யிருக்கின்ற
    சொற்களை ஆராய்ந்து சொன்ன ஆயிரம்‌” என்னும்‌ பொருள்‌ உள்ளது.
    நூலின்‌ சிறப்புக்‌ கூறுவதாகவே இத்தொடர்‌ அமைந்துள்ளது. அப் பொருளை இங்குக் கொள்ள இயலவில்லை. எனவே, *ஆத்தும மலர்களைத்‌ தேடி” என்று”
    கொள்ளுதலே ஆரியர்‌ நினைவாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌,
    ஆத்தும மலர்களைத்‌ தேடிக்‌ கைங்கரிய வடிவமாக இவர்‌ உபதேசிக்கையால்‌ நாடெல்லாம்‌ திருந்திற்று என்று கொள்ளல்‌ வேண்டும்‌.

    மலர் நாடி யாட் செய்ய-அதாவது-நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே –
    சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —
    ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று-கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —

    சர்வ வ்யாக்யானங்களிலும் -பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள்
    போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே –
    இவருக்கு நினைவு-(ஸ்ரீ நாயனார் நினைவு ) ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..
    அன்றிக்கே
    மலர்நாடி -என்கிற இது –
    நாடாத மலர்-1-4-9– -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..
    வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே-ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-

    ——–

    தமிழ்‌ மொழி பற்றிய ஆசிரியர்‌ கருத்து

    தமிழைத்‌ திராவிடம்‌” என்ற சொல்லால்‌ குறிக்கின்றார்‌ —இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

    இரண்டும்‌ ஒத்த சிறப்புடையன என்பதையும்‌ விளக்குகின்றார்‌. தமிமுக்கு“ஆகஸ்தியம்‌”, என்பது ஒரு பெயர்‌.
    அதற்கு அகத்தியரால்‌ செய்யப்பட்டது” என்று பொருள்‌ கொண்டு, “ஒரு முனிவரால்‌ உண்டாக்கப்பட்ட மொழியை
    அநாதியான வடமொழிக்கு ஒப்பாகக்‌ கூறுவது எவ்வாறு பொருந்தும்‌?? என்ற கேள்வியை எழுப்பி, விடையும்‌ தருகின்றார்‌

    செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

    அகத்தியரால்‌ வெளிப்படுத்தப்பட்டது என்பதால்‌, தமிழ்‌ அப்பெயர்‌ பெற்றதே யன்றித்‌ தமிழ்‌ அகத்தியர்க்கு முன்னும்‌ உள்ளதே.
    அதுவும்‌ அநாதி ஆனதே” என்பதே அவர்‌ தரும்‌ விடை.-இவ்வாறே வேதப் பாடல்கள்‌ எல்லாம்‌ இருடிகள்‌ வழியே
    வெளியானதைக்‌ காணலாம்‌.
    கவிச்சக்கரவர்த்தியாரான் கம்பரும்‌ (என்றுமுள தென் தமிழ்‌ இயம்பி இசை கொண்டான்‌” என்று அகத்தியரைச்‌ சொல்லும்‌ முறையால்‌ “தமிழ்‌ என்று முள்ளது. அநாதி* என்பது தெளிவிப்பர்‌,

    (நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
    தழர் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் -என்றும் –
    என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் -என்றும் -கம்ப நாட்டு ஆழ்வார் –
    ஆழ்வார்‌ பாடல்களைச்‌ சான்று காட்டித்‌ தம்‌ கருத்தை நிலைநாட்டுகின்றார்‌ நம்‌ ஆசிரியர்‌,
    இறைவனைப்பற்றிப்‌ பேசும்‌ ஆழ்வார்‌கள்‌ அவன்‌ பலபல வடிவங்களில்‌ அமைந்திருப்பதாகக்‌ கூறுவார்கள்‌.
    இல இடங்களில்‌ அவ்விறைவன்‌ தமிழும்‌ வடமொழியுமாய்‌ இருப்பதாகப்‌ பேசப்பட்டுள்ளது…
    செந்திறத்த தமிழோசை வட.சொல்‌லாக: என்று திருமங்கை மன்னன்‌ பாடல்‌” கூறுவதை எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.
    இதன்கண்‌ தமிழும்‌ வடமொழியும்‌ சேர்த்துச்‌ சொல்லப்பட்டுள்ளமை, அவை இரண்டும்‌ ஒத்த தன்மையன என்பதனை உணர்த்தும்‌,

    வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
    ஒத்தனவேனும்‌, அவற்றுள்ளும்‌ தமிழே ஏற்றமுடையது” என்பது, “செந்திறத்த தமிழ்‌” என்று அடைமொழி கொடுக்கப்பட்டும்‌,
    இரண்டிலும்‌ முதலிற்‌சொல்லப்பட்டும்‌ இருப்பது காட்டும்‌ என்பது விளக்கப்படுகின்றது.
    தமிழிலும்‌ வேதம்‌ உண்டு என்பர்‌ இந் நூலாசிரியர்‌..“வட மொழி மறை-திருவாய் -8-9-8-:” என்று வரும்‌ தொடர்‌ அக் கருத்தை வலியுறுத்தும்‌ என்கிறார்‌.
    தென்மொழியாய தமிழிலும்‌ மறையில்லை என்றால்‌, வடமொழிமறை என்று அடை, கொடுத்துச்‌ சொல்ல வேண்டாவன்றோ?
    மறைகள்‌ அநாதி யானவை: அவை ப்ரஹ்மம் பிரமனுக்கு உபதேசம் மூலமாக வந்தன. அதே போன்று,
    ஆழ்வார் மூலம்‌ தென்மொழி மறை எழுந்தது.

    கருத்துகள்‌ என்றும்‌ உள்ளனவே. ஞானம்‌–உண்மை ஞானம்‌–என்றும்‌ உள்ளது.
    நூல்‌ வடிவில்‌ பாராத போது அஃது ஆண்டவன்‌ திரு வுள்ளத்‌திற் கிடந்தது எனலாம்‌?
    இருடிகளும்‌ கவிகளும்‌ அதனை வெளிப்படுத்துவதால்‌ அவ்வுண்மைகளை அவர்களோடு இணைத்துக்‌ கூறும்‌ வழக்கம்‌ உண்டு.
    “நியூட்டன்‌ நியதிகள்‌”அல்லது “சட்டங்கள்‌” அவர்‌ வெளியிட்டது. உண்மையானாலும்‌, அவருக்கு முன்‌ இயற்கையில்‌ அவை விளங்கவில்லை என்று கூற இயலாது.-அவர்‌ அதன்‌ இருப்பினை முதலில் கண்டு.விளக்கியதால்‌, அவர்‌ பெயரால்‌ அந்த நியதிகள்‌
    இன்று வழங்குதலை இங்கே மனங்கொளல்‌ தகும்‌. சுவாமி விவேகாகந்தர்‌ இத்தகைய விளக்கம்‌ தந்துள்ளார்‌.
    இதனால்‌, மொழிப்‌ போராட்டமின்றி உண்மைகளை அனைவருக்கும்‌ உரிமையாக்கும்‌ பரந்த மனப்பான்மை தெரிகின்றது.

    தமிழ் மா முனி திக்கு சரண்யம்‌” என்ற குறிப்பு, தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே
    க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-சூர்ணை 91ல்‌ வருகின்றது.

    வண்தமிழ்‌ மாமுனி* என்று அகத்தியரைக்‌ குறிக்கின்றார்‌ குலசேகர ஆழ்யார்‌.
    அந்த முனிவர்க்கு இருப்‌பிடமாதலால்‌, தென்திசை யாவர்க்கும்‌ புகலிடமானது என்பது கூறப்படுகின்றது.

    சர்வருக்கும் புகல் இடம் என்ற மக ரிஷிகளால் –( வால்மீகி போலே சுகர் சொன்னதால் என்றவர்களாலே -என்கிறார்
    அத்தகைய சிறப்புக்‌ கூறப்படுவதற்குக்‌ காரணம்‌, அவர்‌ தமிழ்‌ மாமுனிவராய்‌ இருப்பது தான்‌.
    தமிழ்‌ நூல்களின்‌ மரபே இங்கு விளக்கப்படுவது தெளிவு.

    —-

    தமிழிலே அமைந்த ஆழ்வார்‌ பாடல்களின்‌ பெருமை பெறிதும்‌ விரிவாக இந்நூலில்‌ எடுத்துக்‌ காட்டப் படுகின்றது.
    அவை *திவ்வியப்பிரபந்தம்‌* என்றும்‌ (சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-சூ. 44),
    அருளிச்‌ செயல்‌” என்றும்‌ (ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
    பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,திரு மால் அவன் கவி என்றே ,வாயோலை படியே
    மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்
    போலே அருளிசெயல் சாரம்-சூ. 63) குறிக்கப்படுகின்றன.

    நம்மாழ்‌வாருடைய நூல்கள்‌ நான்கும்‌ நான்கு வேதங்கள்‌ஆகுமென்றும்‌, திருமங்கையாழ்வருடைய நூல்கள்‌ ஆறும்‌
    “சிக்ஷ, வியாகரணம்‌, நிருக்தம்‌, சந்தம்‌, கற்பம்‌, சோதிடம்‌ ஆகிய ஆறு அங்கமும்‌ ஆகுமென்றும்‌,
    மற்ற ஆழ்வார்‌ எண்மரின்‌ நூல்களும்‌ எட்டு உபாங்கங்கள்‌ ஆகுமென்றும்‌ சொல்லப்படுகின்றன.
    மங்கை மன்னனுடைய நூல்களின்‌போக்கு, நம்மாழ்வாரின்‌ நூல்களின்‌ போக்கைப்‌ பெரிதும்‌ ஒத்திருப்பதால்‌, அவற்றை “அங்கங்கள்‌” என்பர்‌,
    மற்றவர்‌ நூல்களும்‌ அப்பொருள்களையே வெளிப்படுத்துபவையாய்‌ அவற்றை விளக்கம்‌ செய்வதற்கு உறுப்பாவதால்‌, அவை ‘உப அங்கங்கள்‌?–துணை உறுப்புகள்‌ எனப்‌ படுகின்றன

    (வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
    இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)சூ. 43),

    வேதம்‌ தோன்றிய பின்னரே அங்கம்‌ முதலியன தோன்றின என்றாலும்‌,

    முதலும்‌ விளக்கமும்‌ ஒன்றாய் இயைந்து பொருள்‌ விளக்கம்‌ பெற்று உயிரோடு நிலவும்‌ ஒர் உறுப்பாய்‌ ஒளிர்வதனைஉள்ளத்தே கொண்டு இவ்வாறு விளக்குவது தவறன்று.
    நம்மாழ்வார்‌ பாடல்களே முழு வடிவம்‌ தர வருகின்றன.அந்த உயிர்ப்பில் முன்னோர் விளக்கங்கள்‌ என்றுமுள உண்மையின்‌ விளக்கங்களாதலின்‌, ஒன்றாய்த்‌ திரண்டு திகழ்‌கின்றன.

    எனவே, வரலாற்றோடு முரணுமாறு இல்லை. மரக்‌கட்டை. முன்னே அமைந்து கிடந்ததேனும்‌ செம்மை யாக்கப்‌
    பட்ட மரத்தாலானமேசை முதலியன முன்னதான மரத்‌தினும்‌ சிறப்புப்‌ பெறுதலை இங்கு நினைதல்‌ தகும்‌.

    தன்‌ தந்தையான எம்பெருமானிடத்தில்‌ நான்முகன்‌ வேதங்களை ஓதி உணர்ந்து, அவற்றைத் தன்‌ மூத்த புதல்வனான ருத்திரன்‌ முதலியவர்க்கு ஓதுவித்தான்‌.

    அது போன்றே தம்‌ தந்தையான எம்பெருமானிடத்திலே ஆழ்வாரும்‌ வேதங்‌களைக்‌ கற்று அவற்றை மதுர கவிகள்‌ போல்வார்க்குப்‌ பயிற்றுவித்தார்‌.

    வேதம்‌ முதலில்‌ ஓதுகின்றவர்களையிட்டுப்‌ பெயர்‌ கூறப்படும்‌. அதனால்‌, ஆழ்வார்‌ அருளிய வேதமும்‌
    சடகோபன்‌ சொல்‌”? என்னும்‌ பெயர்‌ பெற்றது,

    இருக்கு வேதமே சாமமாய்‌ விரிந்தது. அது போன்றே திருவிருத்தம்‌ நூறுமே திருவாய்மொழி ஆயிரமாய்‌ விரிந்தது.
    சாம வேதத்திலும்‌ சாந்தோக்கியம்‌ என்னும்‌ பிரிவை ஓக்கும்‌ திருவாய்மொழி(சூ. 52, 53),

    சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து(சாமான்யம் ஆகாமல் -முதலிலே -சந்தோகன் என்று பிரித்து )
    யாழ் பயில் கான ஸ்வரூபியை-பாலையாகி என்று விசேஷிக்கையாலே வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற
    உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி சரம கதி முடிவாக தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி
    மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..சூரணை-52-

    உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின்
    கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் ..

    புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே திரு சக்கரம் ஒத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி
    அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும் மந்தேஹர்க்கு செம் தீயும் முக்தி மார்க்கத் தலை வாசலும்
    கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண் தாமரை சுமக்க
    தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியும்
    செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற
    செய்யாளான வித்தை யோடே அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின் சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான
    ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே
    தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று வேத குரு உபதேசம் .–சூரணை -53-

    வேதத்திற்கு ஒப்பாதலே அன்றி வேதத்தை விளக்கும்‌ வேத உப ப்ரஹ்மணத்திற்கு ஒப்பான தன்மையும்‌ திருவாய்மொழிக்கு உண்டு (சூ. 54)

    1-ஸ்வரூப குணங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ரம் போலேயும்
    2-விபூதியை விசதமாக்குகிற புராணங்கள் போலேயும்
    3-சேஷ்டிதங்களை விசதமாக்குகிற இதிகாசங்கள் போலேயும்
    நீலபாரூப உக்தியைத் தெரியச் சொன்ன-இத்திருவாய் மொழியை வேத உப ப்ருஹ்மணம்-என்பர்கள்-சூரணை -54-

    வேதத்தில்‌ இறைவனின்‌ இயல்பு, பண்பு, விபூதி(இருப்பு), செயல்‌ யாவும்‌ சேர்த்துச்‌ சொல்லப்பட்டிருக்கும்‌.
    ஆனால்‌, இயல்பையும்‌ பண்பையும்‌ முதன்மையாகவும்‌ விரிவாகவும்‌ விளக்குவது வைணவாகமங்களுள்‌ ஒன்றானபாஞ்சராத்திரம்‌:
    விபூதியை முதன்மையாக விளக்கி உரைப்‌பது புராணம்‌;
    அவன்‌ செயல்களை முதன்மையாக விளக்குவது இதிகாசம்‌.
    அதே போன்று இறைவனது திருவுருவ அழகினை விளக்குதலை முதன்மையாகக்‌ கொண்டது திருவாய்மொழி,
    அவ்வகையில்‌ பாஞ்சர௱த்திரம்‌ முதலியன போன்று இதுவும்‌ ஒர்‌ உப பிரம்மணம்‌ ஆகும்‌. அந்த உப பிரம்மணங்கள்‌ (விளக்க நூல்கள்‌) யாவற்றிலும்‌ இதற்கு உள்ள ஏற்றம்‌ அவை அவை தோன்றிய முறையை நோக்க விளங்கும்‌. .

    இருடிகளிலும்‌ ஆழ்வார்க்குள்ள சிறப்‌. பினை விளக்குவன சூர்ணைகள்‌ 58 முதல்‌ 62 முடிய உள்ள ஐந்தும்‌.

    தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றி
    அருளின பக்தியாலே உள் கலங்கி சோகித்து மூவாறு மாசம் மோஹித்து
    வருந்தி ஏங்கி தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-சூரணை -58-

    (பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே
    தொடுப்பாரைப் போல் அன்றே -பக்திஸ்த ஞான விசேஷம் )

    ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
    இன்னும் ஆசாபாச பத்தர் அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
    கட்கரிய அரும் பொருளை கண்ட போதே யாமுறாமை என்னும் படி இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று ..சூரணை -59-

    (ஸ்வாத்யாயம் -வேதம் –ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –
    ( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3-மையாக்கும்-மயங்கும் என்றபடி )இன்னும் ஆசாபாச பத்தர்-
    அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)

    அவர்களுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள் ..
    இவர்க்கு எல்லாம் கண்ணன் இறே-சூரணை -60-

    அழுநீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துழாய் திரு மால் என்று எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு ,
    அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே ..சூரணை -61-

    பல சாதன தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்-சூரணை -62-

    நூலின்‌ சிறப்பை நோக்கும் போதும்‌ இத்திருவாய்மொழி அருளிச்‌ செயலின்‌ சாரமாய்‌ விளங்குவதை அறியலாம்‌.
    திருமால்‌ பற்றிய செய்திகளன்றிப்‌ புறச்செய்தியொன்றும்‌ கலசாத தூய்மையது இந்நூல்‌.
    இருடிகளின்‌ நூல்களில்‌குருவின்‌ நூலுக்கும்‌ சீடனின்‌ நூலுக்கும்‌ வேறுபாடுகள்‌ காணப்படும்‌.
    ஆனால்‌, ஆழ்வார்களின்‌ பாடல்கள் யாவும்‌ ஒரே கருத்துக்‌ கொண்டவை: பேசிற்றே பேசும்‌ ஏக கண்டர்‌கள்‌ இவர்கள்‌.
    எனவே,வேதங்களிலும்‌ உப ப்ரஹ்மணங்களிலும்‌ ஐயத்திற்கு இடமான பொருள்களை, இவர்‌ தம்‌ மொழியின்‌
    துணை சொண்டு ஐயம்‌ திரிபின்றி உறுதி செய்தல் வேண்டும்‌.
    இந்நூலுக்கு மாறுபட்டவை மனுவின்‌ நூலுக்கு மாறு பட்டவை கழிக்கப் படுமாறு போல ஓதுக்கப்படும்‌,
    மூன்றாவதாக, வேதம்‌ பரத்துவம்‌ பற்றியும்‌ பாஞ்சராத்‌திர்ம்‌ (ஒதினாய்‌ நீதி ) வியூகம்‌ பற்றியும்‌ கேட்ட. மனு எனப்‌
    பட்ட மனு முதலிய ஸ்மிருதிகள்‌ அந்தர்யாமியாய்‌ நின்ற பரவிய நிலை பற்றியும்‌
    படுகதை எனப்பெற்ற இதிகாசங்கள்‌ அவதாரங்களைப் பற்றியும்‌ பேச எழுந்தது போன்று,
    பண்ணிய தமிழில்‌ ஆக மூர்த்தியான அர்ச்சாவதாரம்‌ பேசப்பட்டது என்பது வேறும்‌ ஒரு முறை,
    அதன்படி வேதமே திராவிட மாக்கப்பெற்றது நம்மாழ்வாரால்‌ என்பது உணர்த்தப்‌ பெற்றது. ‘
    வேதம் வெறு நிலை பெற்றதால்‌ கலங்கிப்‌ பொருளை விளக்கும்‌ தன்மை குன்றப் பெறாதோ!” என்ற ஐயம்‌ எழுதல்‌ இயல்பு.
    சொல்வோன்‌ சிறப்பால்‌ அது கலக்கமடைவதற்கு மாறாகத்‌ தெளிவு பெற்றது என்றும்‌, ஆழ்‌பொருளையும்‌ தெளிவுற விளக்கும்‌
    இயல்பினது ஆயிற்‌றென்றும்‌ ஆற்றினை எடுத்துக்‌ காட்டாகக்‌ க௱ட்டி விளக்குகின்றார்‌ ஆரியர்‌.
    மேலும்‌, அதனால்‌ (1) எல்லோருக்கும்‌ பயன்படுதல்‌, (2) எவரும்‌ எளிதில்‌ பயன்‌ கொள்ளுமாறு அமைதல்‌
    ஆகிய இரண்டு பெரும் பயன்களும்‌ ஏற்பட்டன என்பது உதாரணங்களோடு விளக்கப்படுகின்றன (சூ. 72,73, 74).

    மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
    சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-

    ( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

    ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
    நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
    கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
    ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

    ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
    இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
    மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
    இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
    இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
    இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
    அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
    இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
    ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    ம்ருத் கடம் போல் அன்றே பொற்குடம்-சூரணை -73-

    (பொன்-தங்கம் என்றவாறு – தங்கமும் மண்ணிலே வந்தது தானே ஆகவே கார்யம் இது மண் காரணம் )

    பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில்
    அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-சூரணை -74-

    (பெரும் புறக் கடல் -இறைவன் -பிருஹத் பஹி சிந்து -திருக்கண்ண மங்கை -அபிஷேக வல்லித்தாயாய் -திருக்கல்யாணம் -தேன் வண்டுகள் தேவர்கள்-
    அலைந்து நிற்கும் இடத்திலும் -வியூக நிலை -/ஆழ்ந்து நிற்கும் இடத்திலும் -உயிர்க்கு உயிராய் அந்தராமியாய் நிற்கும் நிலை
    ஓடும் இடத்திலும் -அவதாரங்கள் /அயோக்யருக்கு சமைத்த மடு மேய சரமம்-அர்ச்சாவதாரம் -ப்ரமேய சரமம்
    ஸ்ருதி சாகரம் -வேதக்கடல்
    அலைத்து நிற்கும் இடத்திலும் -வியூகத்தை பேசும் பாஞ்சராத்ரம் /ஆழ்ந்து நிற்கும் இடத்திலும் -அந்தராமியைப் பேசும் மனு ஸ்ம்ருதிகள்
    ஓடும் இடத்திலும் -அவதாரங்களை பேசும் இதிகாச புராணங்கள் /
    அயோக்யருக்கு சமைத்த சாய் கரம்-அர்ச்சாவதாரத்தை அருளிச் செய்யும் திருவாயமொழி -பிரமாணங்களில் சரமம் –
    சாய் கரகம் -சாய்க்கப்பட்ட கரகம் -திருக்காவேரி திரு உள்ளமா-தண்ணீர் வேண்டுமா -)

    வேதங்களிலும்‌ உபநிடதங்களிலும்‌ புராண இதிகாசங்களிலும்‌ காணும்‌ அனைத்தும்‌ ஆழ்வார்‌ பாடல்களில்‌ இருப்பதை இவர்‌ விளக்கக்‌ காண்கிறோம்‌.
    இறைவனிடத்தும்‌ அவன்‌ அடியவரிடத்தும்‌ அவர்களை அவன் பால்‌ சேர்ப்பிக்கும்‌ தமிழ்ப்‌ பாடலிடத்தும்‌
    இவர்‌ கொண்டிருந்த காதல்‌ அளவிடற்கரியதென்பதும்‌ விளங்குகின்றது.

    —————-

    திருவாய்மொழியும்‌- கீதையும்‌? ஒற்றுமையும்‌ வேற்றுமையும்‌
    கீதை: கண்ண பெருமானால்‌ அருச்சுனனுக்கு உரைக்கப்‌பட்ட நூல்‌) 18 அத்தியாயங்களை உடையது-பல நெறிகளையும்‌ அழகுற எடுத்து விளக்குவது; சுருங்கிய அளவினது?எல்லாச்‌ செய்திகளையும்‌ தன்னுட்‌கொண்டதாய்‌ விளங்குவது. ‘ வேதத்‌ததின்‌ முடிவு-சாரம்‌” என்று போற்றிக்‌ கொண்‌ பாடப்படுவது,
    திருவாய்மொழி:
    நீர்‌ பாலாய்‌, பால்நெய்யாய்‌,நெய்‌ அமுதமாய்‌, அதனால்‌ நிறைந்ததோர்‌ ஏரி கரை பொறாது நெளிந்து உடைபடும்‌.
    அது போன்று ஆழ்வாருக்கு இறைவன்‌ ஞானம்‌ அருளினன்‌. அது பரபக்தி வடிவு பெற்றது. அப்‌ பரபக்தி , பரஞானமாயிற்று, பரஞானம்‌, பரம ஞானமாய்‌ மலர்ந்தது.
    அமுதக்‌ கடலானது, தான்‌ உள்ள இடத்தை அழித்து விடாமல்‌ இருப்பதற்காக வெள்ளமெடுப்பது போன்று, ஆழ்வார்‌ உள்ளம்‌ வெடித்துவிடாமல்‌ இருப்பதற்காக, அவர்தம்‌ ஆர்வம்‌ பாடல்கள்‌ வடிவாய்‌ வெள்ளமிட்டு *அவாவில்‌ அந்தாதி: என்று பக்தியின்‌ வலிமையால்‌ பிறந்த
    அந்தாதியான ஆயிரம்‌ என்ற சிறப்புடைய நூலாயிற்று

    முன்னது தத்துவ ஞானத்தை அறிவுறுத்தும்‌ நூல்‌- பின்னது பக்தியை வெளியிடும்‌ நூல்‌ என்று பொதுவாக எண்ணத்‌ தோன்றும்‌.
    திருவாய்மொழி பத்திநூல்‌ மட்டுமன்று? தத்துவ ஞானமும்‌ கூறுன்றது. என்பதனை ஒப்புமை கூறத்‌ தொடங்கும்‌
    சூர்ணையின்‌ தொடக்கத்திலேயே ஆசிரியர்‌ உணர்த்துகின்றார்‌.

    திருவாய்மொழியின்‌ முதல்‌ நடு இறுதி மூன்று இடங்களிலிருந்து மூன்று பாடலை எடுத்துக் காட்டி
    ஆழ்வார்‌ இறைவனின்‌ இயல்பை நன்கு அறிந்தவர்‌ என்பது உணர்த்தப்‌பட்டுள்ளது.
    மேலும்‌, ஆழ்வார்‌ ஒரு ஞானியார்‌, அவர்‌ சிந்தை செய்தது நிறைந்த ஞான மூர்த்தியை? அவர்‌ கண்டு கொண்டது ஞானப் பிரானை;
    உபதேசம்‌ செய்தது (ஞானப்‌ பிரானை ஞானத்து வைம்மின்‌” என்பது. எனவே, திருவாய்‌மொழி ஒரு ஞான தூலும்‌ ஆகும்‌ என்பது காட்டப்படுகின்‌றது.

    பின்னர்க்‌ கீழ்க்காணும்‌ 18 பொருள்களையும்‌ சொல்லுதலில்‌ இரண்டிற்கும்‌ ஒற்றுமை உள்ளமையை உணர்த்துகின்றார்‌. அவையாவன:
    1-2-3. உண்மைப்‌ பொருளினைப்‌ பகுத்தறியும்‌ ஆராய்ச்சி,இறைவன்‌ உயிர்‌ இவற்றிடையே உள்ள வேறுபாடு,
    உயிர்‌களுக்குள்‌ உள்ள வேறுபாடு, அறிவுள்ளவை அறிவற்றவைஇவற்றிடை. உள்ள வேறுபாடு.
    4, உயிரின்‌ நிலைத்த இயல்பும்‌ உடலின்‌ அழியும்‌ தன்மையும்‌.-5, எல்லாவற்றையும்‌ நடத்துகின்ற இறைவனின்‌ தலைமைத்‌ தன்மை. தியாய மகத்துவம்‌.
    6. அதே சமயத்தில்‌ அடியவர்‌ உள்ளத்தே உறைதலும்‌ அவதாரம்‌ எடுத்தலும்‌ ஆகிய அவனது எளிமைத்தன்மை.
    7. ஏற்றுக் கொள்ளும்‌ போது யாவரையும்‌ ஒரே தன்மை யாகக்‌ கொள்ளும்‌ சமத்துவக்‌ தன்மை-8. ஆணவமாகிய குற்றம்‌-9. பொறிகளின்‌ வலிமை
    10, பொறிகளினும்‌ மனத்திற்குள்ள முதன்மை-11. புலனடக்கும்‌ முறை-12. வழி படுவோரின்‌ வகை -13. அசுரர்‌ அமரர்‌ என்னும்‌ வேறுபாடு
    14. இறைவன்‌ உலகு பல உடையனாதல்‌-15. இறைவனுடைய விசுவரூபக்‌ காட்சி-16, அங்கங்களோடு கூடிய பத்தி 17-18, இருவகையான பிரபத்தி
    இப் பதினெட்டுப்‌ பொருள்‌ பற்றியும்‌ கீதையும்‌ பேசுகின்றது;-திருவாய்மொழியும்‌ செப்புகின்றது. ஓரே பொருளை ஒரே தன்மையாக விளக்கும்‌ இவ் விரு நூல்களும்‌ ஒத்தன என்பதற்குக்‌ தடை யாது இருக்க இயலும்‌?

    1. ஆக்கியோன்‌ –தத்வ தர்ஸி அருளிச் செய்த ஏற்றம் திருவாய் மொழிக்கே

    2. தோன்றிய நோக்கம்‌

    கீதை, “ஐவரான பாண்டவர்‌ வெற்றிபெற வேண்டும்‌:நூற்றுவர்‌ மடியவேண்டும்‌”, என்ற நோக்கத்தோடு எழுந்‌தது.
    திருவாய்மொழி, *ஊரும்‌ நாடும்‌ எல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ நெஞ்சு தோற்கும்படியாகவும்‌, 24 தத்துவங்‌களான அசத்திலும்‌ 25 ஆம்‌
    தத்துவமான ஆன்மாவின்‌ அனுபவத்திலும்‌ பற்று முடியும்படியாக அருளிச்‌ செய்யப்‌பட்டது.
    இரண்டும்‌ வீடு பேறளிக்குமாயினும்‌, வீடு பேறளிக்‌ கும்‌ பொருட்டாக வன்றி வேறு ஒன்றின்‌ பொருட்டாகத்‌
    தோன்றிய கீதையினும்‌ திருவாய்மொழி ஏற்றமுடைமை தெளிவு.

    3. தொடக்க நிலை, முடிவு நிலை இவற்றால்‌ மாறுபட்டுள்ள சிறப்பு

    கீதையில்‌ உபதேசம்‌ தொடங்கும்போது, “நான்‌ உன்னுடைய சிடன்‌: உன்னைச்‌ சரணடை.ந்த என்னை ஏவுக!” என்றுஅருச்சுனன்‌ பணிய,
    அதனால்‌ உபதேசிப்பவனின்‌ விருப்‌போடு–உகப்போடு–கீதை தோன்றியது.
    முடிவில்‌ அருச்‌சுனன்பால்‌ மன ஒருமைப்பாடு காணாமையால்‌, விருப்பக்‌ குறை ஏற்பட்டது, இதை அநு கீதையில்‌ காணலாம்‌.
    திருவாய்மொழியிலோ என்னில்‌, பராமுகமாக விருப்பமற்றவராக-இருப்பாரை நோக்கி ஆழ்வாரின்‌ உபதேசம்‌ தொடங்குகின்றது.
    அருள்‌ உள்ளம்‌ மிக்க அவர்‌, *ஏ பாவம்‌ பரமே??? (என்ன அருமைப்பாடு! இவர்கட்கு உபதேசம்‌ செய்ய நேர்ந்ததே!)
    என்று வெறுப்போடு தொடங்குதலினால்‌, உபதேசம்‌ உகப்பின்றித்‌ தொடக்கம்‌ ஆயிற்று,
    அறிவுரை கேட்டு உலகம்‌ முழுவதும்‌ திருந்திவிட்டபடியால்‌, யாவரையும்‌ கண்டு மகிழ்ந்து , *பொலிக! பொலிக! பொலிக!1 என்றுவாழ்த்துக்‌ கூறுகின்றார்‌.
    “உற்றேன்‌ உகந்து? என்று உகப்‌போடு முடிச்கின்றார்‌.
    சித்த தா்மத்தின்‌ அளவும்‌ உபதேசம்‌ பலன்‌ அளிக்கவில்லை கீதையில்‌? அருச்சுனன்‌ போர்‌ செய்யும்‌ நிலைமையே ஏற்பட்டது.
    திருவாய்மொழியில்‌, பலன்‌ முழுவதும்‌ கை கூடிய . உகப்பு உளது. எனவே, இதுவும்‌ திருவாய்மொழியின்‌ ஏற்றத்துக்குரிய காரணங்களுள்‌ ஒன்றாதலில்‌ தடையில்லை.

    4. கூறப்படும்‌ பொருளில்‌ மேன்மை
    கீதையில்‌, “என்னையே சரணமாக அடைவாய்‌”? என்று சித்த தர்மத்தைப்‌ பற்றும்படி, விதித்தலே உள்ளது.
    திருவாய்‌மொழியில்‌ *திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்து உய்மினோ!?1* என்று விதியும்‌,
    “அடியேன்‌ உன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே!’ என்று தன்‌ நடைமுறையும்‌ ஆகிய இரண்டும்‌ கூறப்பட்டுள்ளன.
    எது சிறப்புடையது என்பதை எடுத்து ஆராயவும்‌ வேண்டுமோ?

    5. பிரமாணமாக ஏற்றுக் கொள்ளப்படும்‌ பெருமை
    “ஆதியம்‌ பகவன்‌ வணக்குடைத்‌ தவதெறி:* என்றும்‌,
    *ஞானவிதி ? என்றும்‌,
    “பண்டே. பரமன்‌ பணித்த பணி வகை? என்றும்‌ வரும்‌ பாசுரப்‌ பகுதிகளில்‌ ஆழ்வார்‌ கீதையைப்‌ பிரமாணமாகக்‌ கொள்ளுகிறார்‌.
    அதனால்‌, கீதைக்கு உயர்வு வருகின்றது. புத்த முனியாயும்‌ கபிலமுனியாயும்‌ நின்று இறைவன்‌ அருளிய நூல்களும்‌ வைதிகரால்‌ ஏற்றுக்‌ கொள்ளப் படாமையால்‌, அவை பிரமாணமல்லவாயின.
    அவை போற்றப்படுதல்‌ இல்லை. *கீதைக்குப்‌ பெருமை ஆழ்வார்‌ அதனை ஏற்றுக் கொண்டமையாலே”, என வேண்டும்‌.
    ஆழ்வார்‌ செயலுக்கு வேறு பிறர்‌ ஏற்றுக் கொள்ள வேண்டு மென்ற நியதி இல்லை. எனவே, இந்த வகையில்‌ நோக்கும்‌ போதும்‌ திருவாய்மொழியின்‌ ஏற்றம்‌ விளங்கும்‌.

    ————-

    சாதி முதலியன பற்றிய விளக்கம்‌
    சாதி ஆச்சிரம இகைரகளில்‌ பேதிக்கும்‌ தருமங்கள்‌ போலே” என்பது 31ஆம்‌ சூர்ணையில்‌ வரும்‌ ஒர்‌ உவமை,
    இதனால்‌ பிராமணர்‌, க்ஷத்திரியர்‌, வைசியர்‌, சூத்திரர்‌ என்னும்‌ நான்கு சாதி வேறுபாட்டையும்‌, பிரம சரியம்‌
    இல்லறம்‌ வானப் பிரக்தம்‌ துறவறம்‌ என்னும்‌ நான்கு ஆஸ்ரமங்களையும்‌,
    ஜோதிஷ்டோமம்‌ முதலிய தீஷைகளையும்‌ இந் நூலாசிரியர்‌ உடன்படுகின்றார்‌:

    அந்த அந்தச்‌ சாதி ஆஸ்ரமங்கட்குக்‌ கூறப்படும்‌ தருமங்கள்‌ அவரவர்களாலே செய்ய வேண்டுபவை என்ற வேதக்‌கருத்தினை இவர்‌ ஏற்றுக் கொள்ளுகின்றார்‌ என்பது தெளியலாம்‌.
    பிராமணியம்‌ என்றும்‌ வைண்வத்துவம்‌ என்றும்‌ இருநிலைகளை (ஸூ . 37) இவர்‌ குறிப்பிடுகின்றார்‌. இவ் விரண்டிலும்‌ வைண்வக்துவமே முக்கியமானது என்றும்‌, வைணவத்துவம்‌ பெறாத போது பிராமணியம்‌ ஐயப்படும்‌ தன்மையதாய் விடும்‌ என்றும்‌ கூறுகின்றார்‌ (ஸூ . 38).
    இதனால்‌, திருமால்‌ வழிபாட்‌டி.ற்கு முதன்மை வழங்குவது தெரிய வரும்‌. “பிறப்பால்‌ வந்த சாதியால்‌ உயர்வு த௱ழ்வு இல்லை?
    திருமால்‌ அடியவர்‌,அடியார்‌ அல்லாதவர்‌ என்பதாலேயே உயர்வு தாழ்வு அமைகின்றன” என்று ஆழ்வார்கள்‌ கூறுவதையே இவ்வாசிரியர்‌ தம்‌ கொள்கையாக வற்புறுத்தி உரைக்‌கின்றார்‌.
    வைணவத்துவம்‌ கைகூடுவது *சந்தங்களாயிரமும்‌ அறியக்‌ கற்று வல்லாரானால்‌? (ஸூ 37), என்பதால்‌ தமிழில்‌ அமைந்த திருவாய்மொழியான சந்தங்களாயிரத்திற்கும்‌ இவர்‌ தரும்‌ ஏற்றம்‌ விளங்கும்‌,
    இஃதுணராதாரை *அயற்சதுப்பேதிமார்‌* என்கின்றார்‌ ஆசிரியர்‌. *சதுர்வேதி” என்பது நால்‌ வேதம்‌ உணர்ந்தாரைக்‌ குறிக்கும்‌ சொல்‌
    “சதுப்பேதி” என்பது, அதன்‌ திரிபே: தமிழ்‌ நால்‌ வேதம்‌ அறியாதவர்‌ *அயல்‌ சதுப்‌பேதிமார்‌” எனப்பட்டனர்‌. இத்தொடர்‌ ஓரளவு இகழ்ச்சிப்‌ பொருளில்‌ வழங்கப் பட்டிருத்தலும்‌ கூடும்‌,

    ஆழ்வார்‌ பன்னிருவருள்‌ பல சாதியினரும்‌ உளர்‌. அவர்‌களில்‌ தலைவராம்‌ நம்மாழ்வார்‌ நாலாம்‌ வருணத்திற்‌ பிறந்‌தவர்‌?
    அவர்‌ தம்‌ பிறவியை ஆராயலாகாது என்பதை இவ்‌வாசிரியர்‌ வற்புறுத்துகின்றார்‌. இன்ப மாரியான ஆழ்வார்‌ தம்‌ பிறவியை ஆராய்வது
    இல்லங்களில்‌ வைத்து வணங்கும்‌ இன்பப்‌ பொருளான இறைவன்‌ உரு எந்த உலோகத்தால்‌ ஆனது?” என்று ஆராய்வதை ஓக்கும்‌,
    மற்றும்‌ இறைவன்‌ மொழி என்று சொல்லும்படி. இருக்கின்ற இன்ப வாழ்வான திருவாய்‌ மொழி எந்த மொழியில்‌ அமைந்தது என்று ஆராய்‌வதையும்‌ அது ஒக்கும்‌,
    இம்‌ மூன்று செயல்களும்‌ மிகப்‌ பாவமானவை என்பதும்‌ செய்யக் தகாதன என்பதும்‌ அவர்‌ அறுதியிட்டு உரைக்கும்‌ கருத்தாம்‌.
    இச்செயல்‌, ஒருவன்‌ தன்னைப்‌ பெற்ற தாயின்‌ பிறப்பு உறுப்பினை ஆராய்வதனை ஒத்ததாகும்‌ என்று வரும்‌ வட,மொழிச்‌ சுலோகம்‌ ஒன்று இங்கு எடுத்துக்‌ காட்டப்படுகின்றது

    நாலாம்‌ வருணத்தவரான ஆழ்வாரல்‌ செய்யப்‌பட்டது என்ற காரணத்தால்‌ அவர்‌ தம்‌ பாடல்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட.வில்லை யானால்‌,
    மீனவர்‌ குலத்து உதித்த மச்சகந்தியின்‌ மைந்தரான வியாசர்‌ கூறிய ஐந்தாம்‌ வேதமான பாரதம்‌ தள்ளத்தக்கது ஆதல்‌ வேண்டும்‌.
    அவ்வாறே இடை.க்குலத்துதிக்த கண்ணன்‌ கூறிய கீதை என்ற அறு மூன்று அத்தியாயங்களைக்‌ கொண்ட உபறிஷக்‌ நூலும்‌ தள்ளத்‌ தக்கதாதல்‌ வேண்டும்‌ (ஸூ . 76).
    இவை ஒருவருக்கும்‌ உடன்பாடல்ல. இரு நூல்களும்‌ யாவராலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்‌ பட்டவையே. எனவே, ஆழ்வார்‌ பாடல்களை மட்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளாமை, ஒவ்வாத செயலாம்‌.
    நூல்‌ செய்த ஆசிரியனது பிறவி அடிப்படையில்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளுதலும்‌ தள்ளுதலும்‌ செய்யத் தகாதன என்பது போதரும்‌.

    வியாசர்‌, கண்ணன்‌ ஆகிய இவர்‌ தம்‌ பிறப்பிலும்‌ ஆழ்‌வார் தம்‌ பிறப்பு சிறந்ததாதலை அவர்களைப்‌ பெற்ற தாய்மார்‌, அவர்‌ பிறப்பிடம்‌,
    அவர்க்குரிய ஆறு, துறை, ஊர்‌ இவை முதலியவற்றின்‌ வேறுபாடுகளை எடுத்துக்காட்டி. அழகுற விளக்குகின்றார்‌ ஆசிரியர்‌ (ஸூ 77, 78, 79, 80).

    தேவர்க்கும்‌ தேவனான இறைவன்‌, உலகினைக்‌ காத்தற்‌ பொருட்டு மானிடனாய்‌ அவதரித்தான்‌. அவன்‌ இராமாவதாரத்தில்‌ இராவணனைக்‌ கொன்றான்‌. அப்போது பிரமன்‌ முதலான தேவர்கள்‌ அவனைப்‌ பார்த்து, “நீவிர்‌ நாராயணராகிய தேவர்‌” என்று புகழ்ந்தார்கள்‌. அதற்கு அவன்‌, நான்‌ என்னை மனிதனெனவே நினைக்கின்றேன்‌? தயரதன்‌ பிள்ளை யாகிய இராமன்‌ நான்‌”” என்று விளக்கினான்‌.
    கோவர்த்தன மலையைக்‌ தூக்கத்‌ தங்களைக்‌ காத்த வியக்கத்தக்க செயலைக்‌ கண்ட ஆயர்கள்‌ பலவாறு அவனைப்‌ புகழ ,
    அதைப்‌ பொறாமல்‌, யான்‌ தேவனும்‌, கந்தருவனும்‌, இயக்கனும்‌, அசுரனும்‌ அல்லேன்‌?
    இடையர்களுக்கு உறவிளனாய்ப்‌ பிறந்த என்னை வேறாக நினைக்கவும்‌ கூடாது” என்று அறிவுறுத்தினாள்‌
    தேவனான அவன்‌, உலகில்‌ பிறந்ததனாலேயே. உயர்ந்தவனாகின்றான்
    பிறவிகளினாலேயே அவன்‌ குணங்கள்‌ ஒளி பெறுகின்றன, ஆகையால்‌ பிராமணக்‌ தன்மைக்கு எல்லை நிலமான பிரமனாய்ப்‌ பிறத்தலும்‌ அடிமைத்‌ தன்மைக்குப்‌ பகையான ஆணவத்திற்கு ஏதுவாகையாலே அஃது ஆன்மாவுக்கு இழிவைச்‌ செய்வது என்று இகழத் தக்கதாகும்‌.
    இறைவனுக்குச்‌ செய்யும்‌ தொண்டின்‌ சுவை அறிந்தவர்க்குப்‌ பண்டை நாளாலே” (9-2-1) என்னும்‌ திருவாய்மொழியில்‌’ கூறப்படும்‌ செருக்கற்றதும்‌ இறைவனது கைங்கரியத்திற்கு ஏற்றதுமான குடிப்பிறவியே ஆன்மாவிற்கு ஒளியைச்‌ செய்வது.-அதுவே பரமபதத்தில்‌ மேற்கொள்ளும்‌ உடல்‌ போன்றதுமாகும்‌.
    ஆழ்வாரது பிறவியால்‌ உலகிற்கு ஏற்பட்ட நன்மைகள்‌ மிகப் பலவாம்‌ (ஸூ 82, 83), இறைவன்‌, சாபத்தால்‌ இழிவடை.ந்த யதுகுலத்தை உயர்த்த ஆயர்குலத்தில்‌
    கோபாலனாய்ப்‌ பிறந்தான்‌. பிரளய வெள்ளத்தில்‌ மூழ்கிய பூமியை மேலே கொணரக்‌ கேழல்‌ ஆனான்‌.
    அவ்வாறே,“நாங்கள்‌ உயர் குலத்தவர்கள்‌” என்ற பற்றுதலாலே கீழ்மை யடைந்தவர்களை அந் நிலையிலிருந்து மாறி உயர்வடையச்‌ செய்வதற்காகவே
    அகங்காரத்திற்குக்‌ காரணமல்லாததான நாலாவது வருணத்தில்‌ ஆம்வார்‌ பிறந்தார்‌.
    “பிறவியால்‌ வரும்‌ அகங்காரம்‌ கூடரது’ என்பதை இது தெளிவுற உணர்த்தும்‌.
    “பிறப்பில்‌ உயர்வு தாழ்வு இல்லை? அவ்வாறு கொள்ளலாகாது” என்பதைப்‌ பல எடுத்துக் காட்டுகள்‌ மூலம்‌
    ஆசிரியர்‌ விளக்குகின்றார்‌ (ஸூ 85). அவற்றை மூறையே காண்போம்‌:

    (1) என்‌ அடியவர் பால்‌ அன்பும்‌, என்‌ வழிபாட்டில்‌ உகப்பும்‌, தானே என்னை வழிபடுதலும்‌, என்பக்கல்‌ ஆரவார மற்றிருக்கையும்‌, என்‌ கதையைக்‌ கேட்பதில்‌ ஈடுபாடும்‌,
    பத்தியின்‌ காரியமான குரல்‌ தழுதழுத்தலும்‌, கண்ணீர்‌ பெருக்குதலும்‌, மயிர்க்குச்செறிவதும்‌, இடையறாது என்னை நினைப்பதும்‌,
    என்னிடமிருந்து வேறு பயன்களைக்‌ கொள்ளாமையும்‌ ஆகிய இவ்வெட்டுவகைப்‌ பத்திகள்‌ எந்த மிலேச்‌சனிட.மிருக்கிறதோ”!* என்கிறபடி
    இழிகுலத்தவனானாலும்‌ இந்த எட்டுவிதப்‌ பத்தியை உடையனானால்‌ அவன்‌ உத்தமப்‌ பிராமணன்‌- முனிவன்‌: செல்வம்‌ மிக்கவன்‌. அவனே துறவி-
    அவனே பண்டிதன்‌-அவனுக்கு ஞானம்‌ அளிக்கத்தக்கது, அவனிடமிருந்து ஞானம்‌ கொள்ளத்‌ தக்கது,
    அவனும்‌ என்னைப்‌ போற்றுவது போன்றே போற்றத்‌ தக்கவன்‌, என்று கூறியவாறு அவன்‌ வழிபடப்பெறுவான்‌.
    “அவனுடைய திருவடிகளைக் கழுவிய நீரானது ஒப்பற்ற தீர்த்தம்‌? அவன்‌ அமுது செய்த மிச்சில்‌ மிகக்‌ தூயது?” என்று கொள்ளப்படும்‌.
    இது இறைவன்‌ அருளிய திருமுகப்பாசுரம்‌. இக்கருத்தே பொருந்த ஆழ்வார்கள்‌ அருளிய பாசுரங்களும்‌ இங்கு நினைவு கொள்ளத் தக்கன:

    பழுதிலா ஒழுக லாற்றுப்‌ பல சதுப்‌ பேதிமார்கள்‌ இழி குலத்‌தவர்க்ளேனும்‌, எம்‌ அடி யார்க ளாகில்‌, தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌ (திருமாலை,– 42)
    “போனகம்‌ செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே-(திருமாலை,– 41)
    ““கடல்‌ மல்லைத்‌ தலசயனத்‌ துறைவாரைக்‌ கொண்டாடும்‌ நெஞ்சுடையார்‌ அவரெங்கள்‌ குல தெய்வமே”? (பெ, தி 2-6-4)

    (2) விசுவாமித்திரர்‌ இராம பிரானைத்‌ துயில்‌ எழுப்பினார்‌?பெரியாழ்வார்‌. ஆயரேற்றை அம்மம்‌ (முலை) உண்ணத்‌ துயில்‌ எழுப்பினார்‌;
    தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அரங்கத்‌ தம்மானைத்‌ துயில்‌ உணர்த்தினார்‌. இவர்களோடு நிலைக்கச்‌ சொல்லும்‌ தன்மையரான
    நான்கு சாதியிலும்‌ இழிந்த நலமொன்றுமில்லாத சண்டாளராய்ப்‌ பிறந்து, திருங்குறுங்குடி, தம்பியைத்‌ திருப்பள்ளி உணர்த்தியும்‌,
    “சக்கரத்‌ தண்ணல்‌ ம்ணிவண்ணற்கு ஆள்‌” என்று பயன்‌ கருதாது பாடுதல்‌ தொழிலில்‌ சேர்ந்தும்‌,
    “எம்‌ தொழுகுலம்‌ தாங்களே: (3-7-8) என்று நம்மாழ்வார்‌ போன்றவர்களாலே ஆதரிக்கும்‌ ஏற்றத்‌ தைப்‌ பெற்றும்‌ வாழ்ந்த அடியவர்‌ நம்பாடுவான்‌ என்பவர்‌.
    சரவ குலத்தில் பிறந்தவன்‌ “வேடன்‌” சோம சர்மா என்ற பிராமண்ன்‌, அவன்‌ தான்‌ தொடங்கிய வேள்வியை முறையாக நடத்தி முடிப்பதற்குமுன்‌ இறந்து போயினன்‌,
    அதனால்‌ பிரமராட்சதனாய்ப்‌ பிறந்து அலைந்து திரிந்தான்‌,
    அவன்‌ சண்டாளனான நம்பாடுவானைப்‌ பார்த்து, “நீ உன்‌ பாட்டின்‌ பெருமையால்‌ இப்பாவத்திலிருந்து என்னை மீட்கும்‌ தகுதி யுடையவன்‌,” என்று சொல்லிச்‌ சரணடைந்தான்‌.
    கைசிகம்‌ என்னும்‌ பண்ணின்‌ பலத்தால்‌ இந்தப்‌ பாவத்திலிருந்தும்‌ விடுவிக்கின்றேன்‌* என்று பாடி, பிராமணனுடைய வேள்விக்‌ குறையால்‌ வந்த
    இராட்சகக்‌ தன்மையைப்‌ போக்கி யாகத்தை முடித்தார்‌*நம்பாடுவான்‌’ என்னும்‌ இழிகுலப்‌பிறப்புடைய பக்தர்‌, இது கைசிக புராணத்தால்‌* அறிவது,

    (3) வேடர்‌ குலத்தில்‌ பிறந்தவராகையாலே “ஏழை: ஏதவன்‌ கீழ் மகன்‌”” என்னும்படி. பிறவி, தொழில்‌, அறிவுஇவற்றால்‌. இழிந்தவரான குகப்பெருமாள்‌,
    அயோத்தியா்‌ கோமானாகையால்‌ இவை எல்லாவற்றாலும்‌ உயர்ந்தவராயிருக்கின்ற அளவுமன்றிக்கே தருமத்தோடு ஒன்றின தன்மையாலே
    “வானோர்‌ தலைமகனா:யிருக்கின்ற இராம பிரானுக்கு.“உகந்த தோழன்‌ நீ* என்று சொல்லும்படி ஓத்து தோழனானான்‌.
    இராம பிரானே அவனைப்‌ பார்த்து “உம்பி எம்பி,* என்கையாலே இவர்‌ தம்பியான இலக்குவனுக்கு முன்‌ பிறந்தவரானார்‌.
    இவ்வாறு தம்மை ஏற்றுக்கொண்ட அன்று இரவே, பெருமாள்‌ பள்ளிகொண்டிருந்த காலை அவர்‌ அழகில்‌: ஈடுபட்டுக்‌
    கண்ணுறக்கமற்றுக்‌ கையும்‌ வில்லுமாய்க்‌ காத்து தின்றார்‌ இளையபெருமாள்‌.
    பின்னர்ப்‌ பரதன்‌ பிரிவுத்துன்பத்‌துடன்‌ சித்திரகூடத்திற்கு வந்தபோது தம்பியான இளைய பெருமாளுடை.ய அடிமைத்‌ தன்மையின்‌ சிறப்பியல்பை அவனுக்கு எடுத்துரைத்தார்‌ குகப்பெருமாள்‌.
    இப்படித்‌ தாழ்குலத்திலே பிறந்தும்‌, தன்‌ பத்தியின்‌ ஈடுபாட்டின்‌ சிறப்பாலே இராமபிரானுடைய இஷ்வாகு வமிசத்திலே ஒருவர்‌ ஆனார்‌ குகப்பெருமான்‌.
    இது திருமங்கை மன்னர்‌ பாடலிற்‌ கண்டதாகும்‌.-கவிச்சக்கரவர்த்தியாரான கம்பரும்‌ இவ்வாறே கூறுவர்‌

    4) “தூது வாரைத்தின்‌ வாயில்‌ மொழிந்து” என்கிற:படி. பிராட்டிக்குத்‌ தூது மொழியை அனுமாவிடம்‌ சொல்லியனுப்பிய இராமபிரான்‌,
    தசரதன்‌ பிள்ளையான இராமபிரான்‌ சபரியினால்‌ வழிபடப்பட்டான்‌.–வான்மீகம்‌ கூறுகிறபடி சபரி கையில்‌ நல்ல விருந்துண்டான்‌.
    பாண்ட வருக்குத்‌ தூது சென்ற கண்ணன்‌, வீடுமர்‌ துரோணர்‌ முதலியவர்‌ மாளிகைகளை விட்டு, “பயனை எதிர்‌ பாராததால்‌
    தூய்மையுடையதும்‌ குணமுடையதுமான விதுரனுடைய அன்னத்தை உண்டான்‌,” என்று பாரதம்‌ கூறுகிறபடி
    பிறவியில்‌ பெருமையில்லாக விதுரர்‌ திருமானியையில்‌ குணத்தோடு கூடிய விருந்துண்டான்‌.
    தூது வந்த குரங்கான திருவடி, “சீதாதேவியார்‌ பார்க்கப்பட்டாள்‌!” என்ற பிரியத்‌தாலே
    “உதவி விரும்பிச்‌ சுக்ரீவனும்‌ அரசை வீடணனும்‌ ஒரு பயனும்‌ கருதாது அனுமானும்‌ கைங்கரியம்‌ செய்தனர்‌?
    ஆதலால்‌, அனுமானுடன்‌ உண்பது தக்கது”* என்று
    எண்ணி” “கோதில்‌ வாய்மையினாயொடும்‌ உடனே உண்பன்‌ நான்‌”? என்றபடி பெருமாள்‌ அனுமானுடன்‌ உணவுண்டார்‌.
    கீழ்க்குலம்‌, குரங்கு, காற்றின்‌ மகன்‌ என்று அவன்‌ விலக்கப்‌ படவில்லை. இவ்வெடுத்துக்‌ காட்டுகள்‌ பலகாலம்‌பலராலும்‌ எடுத்து ஆளப்படுவதுண்டு.
    அவர்கள்‌ கண்ணன்‌ இராமன்‌ முதலானோர்‌. பெருமையையும்‌ எளிமையையும்‌ உணர்த்த எடுத்தாள்வர்‌.
    இவ்வாசிரியர்‌ குகன்‌, சபரி, விதுரன்‌, அனுமன்‌ என்னும்‌ இவர்‌ தம்‌ குலம்‌ இகழப்படாது, இவர்‌ தம்‌ பத்தியால்‌
    இவர்கள்‌ மற்றவர்களினும்‌ உயர்வாக மதிக்கப்‌ பட்டமையை விளக்க இவற்றை எடுத்துக்‌ காட்டுவது அறிதற்பாலது.

    (5) ஒரு பிறவியில்‌ இரு பிறவி ஆனார்‌ இருவர்‌; கண்ணபிரானும்‌ திருமழிசைப்பிரானும்‌.- அவர் தம்‌ செய்தி சொல்லப்‌ படுகின்றது இங்கு.
    யதுகுலத்தில்‌ பிறந்து ஆயர்‌ குலத்தில்‌ அக்குலத்தவனைப் போல வளர்ந்த கண்ணனுக்குத்‌ தருமர்‌ தாம்‌ செய்த இராசசூய யாகத்தில்‌ முதல்‌ தாம்பூலம்‌ வழங்க மரியாதை செய்தார்‌.
    ருஷியின்‌ மகனாய்ப்‌ பிறந்து மற்றோரிடத்திலே பொருந்தாதாரிடத்திலே பிரம்பன்‌ குடியிலே அந்த இனத்தராய்‌ வளர்ந்த திருமழிசைப்பிரானுக்குப்‌
    பெரும்புலியூரில்‌ உள்ள பிராமண உத்தமர்கள்‌, தாங்கள்‌ செய்த யாகத்தில்‌ முதல்‌ மரியாதை கொடுத்தார்கள்‌.

    (6) பாண்டவர்‌ ஐவரில்‌ முதல்வரான தரும புத்திரர் விதுரர்க்கு அவர்‌ தம்‌ ஞானமிகுதியைக்‌ கண்டும்‌ அசரீரி
    மொழி நினைத்தும்‌ ஐயப் படாமல்‌ இறுதிக் கடன்‌ செய்தார்‌.
    தசரதர்‌ மக்கள்‌” நால்வரில்‌ முதல்வரான பெருமாள்‌ உடன்‌ பிறந்த இளையபெருமாள்‌ உடன்‌ இருக்கச்‌ செய்தேயும்‌
    அவரை செய்யச்‌ சொல்லாது தானே தம்பொருட்டு உயிர்விட்ட, கழுகரசனான சடாயுவுக்கு இறுதிக்கடன்‌ செய்தார்‌.
    பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி, பெரியதிருமலை நம்பி என்னும்‌ மூவர்‌ ஆளவந்தாருக்குச்‌ சீடர்‌, இம்மூவரும்‌ உடையவர்க்கு ஆசாரியராகும்‌ பேறு பெற்றவர்‌.
    இம்மூவரில்‌ முதல்வரான பெரியதம்பி, கீழ்க்குலத்திற்‌ பிறந்தவரான மாறனேரிநம்பிக்கு ஆளவந்தார்‌ கட்டளையின் படியே இறுதிக் கடன்‌ செய்தார்‌.
    இவை பிறவி காரணமாக நல்லோர்‌ விடப்படாமல்‌ பெருமை செய்‌யப்படுவர்‌ என்பதை வலியுறுத்தும்‌,

    7) புஷ்ய மண்டபம்‌ என்னும்‌ *சிந்துபூ மகிழும்‌,” திருவேங்கட மலையில்‌ குயவளாய்ப்‌ பிறந்து பானைகள்‌ செய்யும்‌ போது மிகுந்ததாகிய
    மண்ணைப்‌ பூலாகத்‌ திருத்திப்‌ பணிப்‌ பூவும் கையுமாகத்‌ திருவேங்கட.நாகனை வழிபட்ட குறும்பறுத்த நம்பியை
    அந்தாட்டின்‌ அரசனான தொண்டைமான்‌ சக்ரவர்த்‌தியர்‌ பின்பற்றினார்‌.
    தியாகமண்டபம்‌ என்னும்‌ கச்சிப்பதியில்‌ திருவால வட்டமும்‌ கையுமாய்ப்‌ பேரருளாளனுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பிகளாகிய
    குலச்சிறப்பில்லாதாரை வைதிக உத்தமரான உடையவர்‌ பின்பற்றினார்‌.
    போக மண்டபமான திருவரங்கம்‌ டெரிய கோவிலில்‌ வீணையும்‌ கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கராய்‌
    வாழ்ந்த திருப்பாணாழ்வாரை உலோக சாரங்க மாமுனிவர்‌ என்னும்‌ அந்தணார்‌ சார்ந்து ஒழுகினர்‌.
    இம்முறைகளை அறிபவர்‌ எது உயர் பிறவி எது தாழ்‌ பிறவி என்பதை நன்கு அறிவர்‌.

    (8) யாகம்‌ எனப்படும்‌ திருவாராதனத்தில்‌ பிள்ளை உறங்கா வில்லிதாசர்‌ என்பவரைத்‌ தொடுதலால்‌ தமக்கு உடல்‌ தூய்மை அமையுமென்று கொண்டார்‌?
    அநுயாகம்‌”எனப்படும்‌ பிரசாதம்‌ கொள்ளுதலில்‌ பிள்ளை யேறு திருவுடை தாசர்‌ கரம்படுதலால்‌, அன்னம்‌ தூய்மை பெறுகின்றதென்று கொண்டார்‌.
    நம்பிள்ளை . வடக்குத்‌ திருவீதியில்‌ புதிதாகக்‌ கட்டிய தம்‌ வீட்டில்‌ குடிபுகும்போது பிள்ளை வான மா மலைத்‌
    தாசர்‌ நடத்தலாலே தம்‌ புது வீட்டைத்‌ தூய்மையுடைய தாக்கிக்கொண்டார்‌ நடுவில்‌ திருவீதிப்‌ பிள்ளைபட்டர்‌.
    இந்த ஞானம்‌ மிக்க பெரியோர்களின்‌ ஒழுக்க முறையை அறிந்தவர்‌களுக்கே உலகில்‌ எந்தப்‌ பிறவி உயர்ந்தது, எப்‌ பிறவி தாழ்ந்தது என்பது விளங்கும்‌,
    மற்றவர்‌ உயர்வு தாழ்வு என்று கொள்வன தவறுடையன என்பது இதனால்‌ விளங்கும்‌-

    ——————-

    வருணம்‌, ஆச்சிரமம்‌, ஞானம்‌, அநுட்டானம்‌-இவற்றின்‌ உயர்வும்‌ தாழ்வும்‌

    இறைவனுக்கு அடிமைத்‌ தொழில்‌ செய்வதேஆன்மாவிற்குரிய சிறப்பியல்‌–இலக்கணம்‌ என்பதை அறிந்து,
    அதற்கு ஏற்பக்‌ கொள்ளத்‌ தக்கனவும்‌ தள்ளத்‌ தக்கனவும்‌ பகுத்தறி கின்ற அறிவினைப்‌ பெறாதவர்‌, உயர்‌ பிறவி எது? தாழ்‌ பிறவி எது? என்பதை அறியார்‌.
    இறைவனோடு தொடர்பற்றது எதுவாயினும்‌, அது இழிவானது. “எந்த மறையவன்‌ நான்கு வேதங்கள்‌ அறிந்தவனாயினும்‌, வாசுதேவனான இறையவனை
    அறியாமலிருக்கின்றானோ,
    அவனே வேதங்களாகிற சுமையால்‌ அழுந்துகின்ற பிராமணக்‌ கழுதை”, என்றபடி
    வேதத்தின்‌ உட்பொருளான இறைவனை அறியாதவன்‌, வேதம்‌ அறிந்‌திருப்பினும்‌, குங்குமத்தின்‌ மணம்‌ அறியாத குங்குமம்‌ சுமந்த கழுதைக்கு ஒப்பாவன்‌?
    அவன்‌ வருணம்‌ உயர்ந்தது அன்று.“மன்னரே! நாய்‌ தின்னும்‌ புலையனும்‌, திருமால்‌ பத்தனானால்‌, பிராமணனிலும்‌ மேலானவன்‌;
    துறவியேயாயி னும்‌ திருமால்‌ பத்தியில்லாவிடில்‌ நாய்‌ தின்னும்‌ புலையவினும்‌ கீழானவன்‌,’- என்றபடி, இறுதி ஆச்சிரமத்தைச்‌ சேர்ந்த வனானாலும்‌-
    இறைபத்தி இல்லாதவன்‌ புலையனினும்‌ கீழ்மையன்‌ என்பதை ஆச்சிரமம்‌ தன்னளவில்‌ உயர்ந்ததன்று என்பது விளக்கப்படுகின்றது.
    எக்கருமம்‌ உலக பந்தத்தின்‌ பொருட்டு இல்லையோ அதுவே நற்கருமம்‌; எந்த வித்தை மோட்சத்தின்பொருட்டு ஆகின்ற்தோ, அதுதான்‌ வித்தை;
    பொருள்‌ இன்பங்களின்‌ பொருட்டுச்‌ செய்கிற வியாபாரமானது, உடலுழைப்பே ஆகின்றது.
    வேறு வித்தையானது திறமான இந்திர ஜால வித்தை போலப்‌ பயனற்றது!3” என்பதனால்‌,
    “இறைவனைப்‌ பொருளாக உடைமையால்‌ மோட்சத்தை வேண்டுவதே வித்தை? அல்லாதது செருப்புத்‌ தைக்கக்‌ கற்றதைப்‌ போன்றது,” என்று வித்தையின்‌ தன்மை விளக்கப்படுகின்றது.
    “எந்த நாராயண்னுடைய்‌ திருவடி.த் தாமரையிணைகளின்‌ நினைவில்லாமல்‌ செய்யும்‌ வேதப்‌ பயிற்சி காட்டில்‌ அழுதல்‌ போன்றதோ,
    வேதத்திற்‌ கூறப்படும்‌ நாட் கடனாய விரதங்கள்‌ தசை குறைதலை மட்டும்‌ பலனாக உடையனவோ, குளம்‌ வெட்டல்‌ முதலியவெல்லாம்‌ சாம்பலில்‌ செய்த ஆகுதியோ,
    தீர்ததங்களில்‌ நீராடல்‌ யானை முழகுவது போன்றதோ அந்த நாராயணன்‌ என்ற தேவன்‌ வெல்க- என்றபடி, இறைவன்‌ நினைவு இல்லாதவர்களுடைய தருமங்களும்‌ ஒமுகலாறுகளும்‌ சாம்பலில்‌ இட்ட ஆகுதி போன்ற பயனற்றவை ஆம்‌.

    “எல்லோருடைய பாவங்களையும்‌ போக்குவனவும்‌ நலங்‌களைக்‌ கொடுப்பனவும்‌ ஆன கண்ணபிரானுடைய குணம்‌ செயல்‌
    அவதாரங்களுடன்‌ சேர்ந்‌த சொற்கள்‌ உலகை வாழச்‌ செய்கின்‌ றன? ஒளிபெறச்‌ செய்கின்றன? தூயதாக்குகின்‌றன?
    அவைகளால்‌ விடப்பட்டவை பிணத்திற்குச்‌ செய்யப்பட்ட அலங்காரங்களே என்று கருதப்படுகின்றன!”?? என்றும்‌,
    “திருமால்‌ பத்தி யில்லாதவனுடை.ய வேதமோதுதலும்‌ நூல் அறிவும்‌ ஜபமும்‌ தவமும்‌ முதலானவை, உயிரற்ற உடலுக்கு
    உலகத்தவர்‌ மகிழும் பொருட்டுச்‌ செய்த அழகு போன்‌றவை என்றும்‌ சொல்லுகிறபடியே இறைவன்‌ தொடர்பற்ற பேச்சுகளும்‌, இறைபத்தியில்லாதவனுடைய கல்வி ஒழுக்கங்‌களும்‌ பிணத்திற்குச்‌ செய்த அலங்காரங்கள்‌ போன்றவை என்பதாம்‌.

    இறைவன்‌, அவதாரங்களால்‌ தேவனும்‌ மனிதனும்‌ ஆகின்றான்‌? இறையடியார்களும்‌ சாதியினாலும்‌ நடவடிக்கைகளாலும்‌ குணங்களாலும்‌ அப்படியே ஆகின்றார்கள்‌.
    இதில்‌ ஒரு குறையுமில்லை. ஆனால்‌, இப்படி. அவதரிப்பது எல்லா வகையிலும்‌ உயர்ந்தது; எதனாலென்றால்‌, அது இவ்வுலகின்‌ நன்மைக்காக நடைபெறுவதால்‌. இறைவன்‌
    அடியவர்களல்‌லாத பிறரிடத்தில்‌ உள்ள கல்வியாலும்‌ தொழில்‌ திறனாலும்‌ ஆய மேன்மை, விதவைக்குச்‌ செய்த அலங்காரம்‌ போலே நிந்தனைக்குரியதாம்‌
    .”இறைவன்‌ தொடர்பே திருமாங்கல்‌யம்‌ போன்றது, அது இல்லாதபோது அவர்களது மேன்மையை விதவையின்‌ அலங்காரம்‌ போன்றது என்று மேலோர்‌ இகழ்வர்‌.
    ஆகவே, இறைவன்‌ தொடர்புடைய வருணம்‌, ஆச்சிரமம்‌, கல்வி, செயல்‌ ஆகியவைகளே உயர்வுடையன என்பதும்‌,
    அத் தொடர்பில்லாத நிலையில்‌ உயர்வுடையதாக மக்களால்‌ எண்ணப்படும்‌ வருணம்‌ முதலானவை
    தாழ்வுடை.யனவாகவே மேலோர்களால்‌ கொள்ளப்படும்‌ என்பதையும்‌, அவர்‌ உயர்வால்‌ பயனில்லை; அவை இகழத் தக்கவை என்பதையும்‌ ஆசிரியர்‌ ஐயத்திற்கு இடமின்றி விளக்குகிறார்‌.
    “உயர்ந்த பிறவி எது?” என்பதன்‌ விளக்கம்‌ ஆன்மாவின்‌ இறப்பியல்பான இறைவனுக்கு அடிமை செய்யும்‌ தன்மைக்கு ஏற்றதான பிறவி எதுவாயினும்‌,
    அதுவே உயர்ந்த பிறவி என்பதைப்‌ பெரியோர்களின்‌ செயல்‌களையும்‌ பேச்சுகளையும்‌ சுட்டிக்‌ காட்டி விளக்குகிறார்‌ ஆசிரியர்

    இறைவன்‌ கண்வளர்தற்கு ஏற்றதான அரவணையாயும்‌, அவன்‌ ஏறி ஊர்தற்கு ஏற்றதான கருடப்‌ புள்ளாயும்‌, அவன்‌ விரும்பி அணிதற்குத்‌
    தகுதியான திருத்துழாயாயு மிருச்கும்‌ விலங்கு பறவை தாவரப்‌ பிறவிகளைப்‌ பெருமக்களாகிய நித்திய ஸூரிகள்‌ இறைவனுக்குத்‌ தொண்டு செய்யும்‌ இச்சையாலே மேற்கொண்டார்கள்‌.
    “உயிர்களுக்குத்‌ தலைவனான பிரம்மனுடைய அல்லது பசுபதியான சிவனுடைய செல்வங்களை நான்‌ விரும்பவில்லை?
    யமுனைக்‌ கரையில்‌. கடம்ப மரமோ, குருந்த மரமோ ஆகச்‌ கட்வேன்‌”,?” என்கிறபடியும்‌?
    “எந்த மகளிர்‌ விடமுடியாத தங்கள்‌ சுற்றத்தார்களையும்‌ பெரியோர்‌ சென்ற நெறியையும்‌ துறந்து வேதங்களால்‌ தேடப்படுபவனான
    கண்ணன்‌ சென்ற வழியைப்‌ பின்‌ தொடர்ந்தனரோ, அம் மகளிரின்‌ பாத தூளிபட்ட பிருந்தாவனத்திலுள்ள செடி. கொடிகளில்‌ ஏதேனும்‌ ஒன்றாகக்‌ கடவேன்‌”, என்றபடியும்‌:
    “கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே!”?*
    “மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையே னாவேனே!’**
    “*செண்பகமாய்‌ நிற்கும்‌ திருவுடையே னாவேனே!:”?
    “தம்பகமாய்‌ நிற்கும்‌ தவமுடையே னாவேனே!**
    எம்பெருமான்‌ பொன்‌ மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே!*?*
    என்று திருமலையோடு தொடர்புடைய பறவை, விலங்கு பிறவிகளில்‌ ஏதேனுமொன்றாவேனாக என்றார்‌ குலசேகரர்‌.
    உன்‌ தொண்டு: புரிதலுண்டாகிய இன்பாமொன்றிலேயே விருப்புடையவர்களுடைய திருமாளிகைகளிலே புழுவாகிய பிறவியேனும்‌ எனக்கு உண்டாகட்டும்‌”?(ஆள. ஸ்‌. 55) என்றபடி,
    இறைவனுக்குத்‌ தொண்டிலேயே இன்பம்‌ கொள்ளும்‌ விருப்புடையரான ஸ்ரீவைணவர்‌திருமாளிசைகளிலே
    பிறப்பும்‌ இறப்பும்‌ ஆம்படியான புழுப்‌பிறவியே எனக்கு உண்பாக வேண்டும்‌”, என்கிறார்‌ ஆளவந்தார்‌.
    இவ்வாறு இறைவன்‌ அடிபடவும்‌, அவனை அணைத்தார்‌ அடியில்‌ பொடிபடவம்‌ அவன்‌ உகந்தருளின நிலத்திலேயாதல்‌
    அவனடியார்‌ விரும்பிய நிலத்திலேயாதல்‌ வாழுதற்குப்‌ பிறக்கிற புள்‌ விலங்கு தாவரப்‌ பிறவிகளில்‌
    பெரியோர்களான சுகமுனிவர்‌, உத்தவர்‌, குலசேகரப்‌ பெருமாள்‌, ஆளவந்தார்‌ வேண்டினார்கள்‌ என்பது தெரிகின்றது.

    விளக்கம்‌
    உலகில்‌ விலங்கு பறவை தாவரப்‌ பிறவிகள்‌ ‘மொழியாலும்‌ உடலாலும்‌ ‘ஏற்படுகின்ற குற்றங்களின்‌ பலனாக வருவன என்று நூல்கள்‌ சொல்லுகின்றன.
    ஆனால்‌, இங்கு இறைவன்‌ விருப்பப்படி. அவனுக்குப்‌ பயன்ப்டத்தக்க இப்‌பிறவிகளை நித்திய ஸூரிகள்‌ விரும்பி ஏற்பார்கள்‌ என்றும்‌,
    கைங்கரியத்தை இன்பமென அறிகின்றவர்‌, முக்தி விரும்புவோர்‌ இறைவன்‌ தொடர்பும்‌ அவனடியார்‌ தொடர்பும்‌ கொண்ட. விலங்கு தாவரப்‌ பிறப்புகளை வேண்டுவார்கள்‌ என்பதும்‌ கூறப்படுகின்றது.
    ஆகையால்‌, கைங்கரியம்‌ செய்‌தற்கு ஒத்த பிறவியே உயர்ந்தது என்பது விளங்கும்‌. மரம்‌, பறவை, புழு முதலானவற்றை மக்களினும்‌ உயர்வுடையன என மதிக்க முடியாது தான்‌, எனினும்‌ அவையும்‌ மாண்புடை. யனவாகின்றன
    இறைபணியில்‌ ஈடுபடும்போது, உலகத்துப்‌ பிறவிகளில்‌ உள்ள. உயர்வு தாழ்வுகள்‌ பொருட்படுத்தத்‌ தகாதவை; அதுபற்றி இழிவில்லை என்பதை உணர்த்துவதே இதன்‌ கருத்தாம்‌.

    வருணம்‌ முதலானவை மாறும்‌ தன்மையனவா?இறைவனுக்கு அடிமை செய்தலே ஆன்மாவின்‌ சிறப்பி’யல்‌.-அதற்குப்‌ பகையான ஆணவத்திற்குக்‌ காரணமரக உள்ளமையால்‌ வருணம்‌ விடத்தக்கது.
    கருமத்திற்கு உட்‌பட்டதாகையால்‌ காரணத்திற்கு ஏற்ப மாறுபடுவதாயிருக்‌கின்றது அது. எனவே முத்தி விரும்புவோரான பெரியோர்‌ வருணம்‌ முதலியவற்றை ஆதரியார்‌.
    வருணம்‌ மாறுபடும்‌ தன்மையது.என்பது கீழ்வரும்‌ நிகழ்ச்சியால்‌ நன்கு விளங்கும்‌:
    அரச குலத்திற்‌ பிறந்த விசுவாமித்திரன்‌ பிரமரிஷி ஆக விரும்பினன்‌: நெடுங்காலம்‌ தவம்‌ செய்து, வசிட்டன்‌ உதவி யால்‌ மறைமுனிவன்‌ ஆயினன்‌.
    அவ்வசிட்டனை அவமதித்த காரணத்தால்‌, இட்சுவாகு குல மன்னனான திரிசங்குவை வசிட்டன்‌ புதல்வர்‌ சண்டாளனாமாறு சாபமிட்டனர்‌.

    அத்திரிசங்கு மன்னனை அவன்‌ அணிந்திருந்த வாரையே வேள்வி உறுப்பாகக்‌ கொண்டு வேட்டுத்‌ தன்‌ தவ வலிமையால்‌ விசுவாமித்திரன்‌ துறக்கமேறப்‌ பண்ணினன்‌.
    இவை புராணம்‌ கூறும்‌ செய்திகள்‌,
    ஒர்‌ அரசன்‌ நல்வினைச்‌ சிறப்பால்‌ அந்த உடவிலேயே மறை முனிவன்‌ ஆயினன்‌-வேறு ஓர்‌ அரசன்‌, தன்‌ தீ வினை வலிமையால்‌ அந்த உடலோடே. சண்டாளனாயினன்‌?: மற்றும்‌ அரசத்‌ தன்மை போய்‌ பிரம ரிஷியானவன்‌ அரசகோலம்‌ நீங்கச்‌ சண்டாளன்‌ வடிவாய்‌ நிற்கின்றவனை “அந்தக்‌ கோலத்‌தோடே வேள்வி செய்து துறக்கத்திலே ஏற்றினான்‌: இச்செயல்‌களால்‌ வருணம்‌ கருமத்திற்கு ஏற்ப மாறும்‌ தன்மையது என்பது குன்றிலிட்ட விளக்குப்‌ போன்று தெளிவாம்‌.(ஸூ . 89).

    இறைபத்தி உடையவரே உயர்ந்தவர்‌; பிறப்பு உயர்வு தாழ்வு-அங்கில்லை

    “இறை பத்தர்‌ சூத்திரர்‌ அல்லர்‌? அடியவரான பிராமணரென நினைக்கத்‌ தக்கவர்‌?
    எல்லா வருணங்களிலும்‌ எவர்‌ இறை பத்தி இல்லாதவரோ, அவரே சூத்திரர்‌,”?* (பாரத–ஆச்வ.-..118-32) என்பதால்‌ இறைபத்தி இல்லாதவர்‌ விடத்‌தக்கவர்‌ என்பது விளங்கும்‌. ்‌
    “மன்னனே” தாய்‌ இறைச்சி தின்பவனும்‌, திருமாலிடம்‌ பத்தி உடையவன்‌ ஆனால்‌, பிராமணனைக் காட்டிலும்‌ மேலானவன்‌,- என வரும்‌ பிரமாணத்தால்‌,
    இறைவனிடம்‌ செலுத்‌தும்‌ பத்தியான செல்வமுடையவர்களே கொள்ளத்‌தக்கவர்கள்‌.
    இவ்வுண்மை அறிபவர்கள்‌, பரமபதத்தை அடைவார்கள்‌. அப்படி அல்லாது : அடியவர்‌ பிறப்பை ஆராய்பவர்‌ *அமரவோ ரங்கமாறும்‌??? என்ற பாட்டின்‌ நிலையை
    வைணவர்களைப்‌ பிறப்பு முதலியன காட்டி இகழ்வாராகில்‌, அவர்கள்‌ வேறு காலத்தில்‌ வேறு நாட்டில்‌ அன்றிக்கே அப்போதே அவ்விடத்திலேயே, தாம்‌ உயர்‌ பிறப்பினராயினும்‌ சண்டாளரேயாவர்‌.

    இவ்வாறு பெரியார்களுடைய ஓழுகலாற்றையும்‌ நூல்கள்‌ கூறும்‌ செய்திகளையும்‌ எடுத்துக்‌ காட்டிப்‌ பிறவி காரணமாக
    எவ்விதக்‌ குறைபாடும்‌ எவர்க்கும்‌ இல்லை: பிறவியால்‌ உயர்வு தாழ்வு பாராட்டலாகாது? தெய்வ பத்தி யாவரையும்‌ உயர்‌வுடையராக்கும்‌ என்று சாதிபற்றி உயர்வு தாழ்வு இன்மையையும்‌ கடவுள்‌ முன்னிலையில்‌
    யாவரும்‌. ஒரு தன்மையரே என்‌பதையும்‌ அழுத்தம்‌ திருத்தமாக இவ்வாசிரியர்‌ விளக்குகிறார்‌.

    ———————-

    ஆழ்வார்‌ கூறும்‌ சமயக் கொள்கைகளும்‌ தத்துவ விளக்கமும்‌

    பகுதி 1–ஆழ்வார்‌ நெறியும்‌ பிறநெறியும்‌

    இந்நூலின்‌ முதல்‌ அத்தியாயங்களில்‌ தத்துவங்களும்‌-மதமும்‌ பற்றிய முக்கியமான கருத்துகள்‌ விளக்கப்படுகின்றன.
    பிற் பகுதியிலும்‌ ஆங்காங்கே வரும்‌ பல பகுதிகள்‌ தத்துவத்தை உணரத்‌ துணை செய்வனவாகும்‌,
    சிறப்பாக ஆழ்வார்‌ அருளிச்செயல்களும்‌, முன்‌ ஆசிரியர்களுரைத்த வேத உபநிஷதங்களும்‌ இதிகாச புராணங்களும்‌
    ஆயஇவற்றில்‌ காணப்படும்‌ கருத்துகளின்படியே தத்துவம்‌ கூறப்‌ படுகிறது. வேத உபநிடதங்களில்‌ ஐயப்பாடுகள்‌ தோன்றும்‌ போது
    ஆழ்வார்களின்‌ அருளிச் செயலைக் கொண்டு அவை உறுதி செய்யப்படும்‌, இவற்றிற்கு மாறான கருத்துகள்‌ இருப்‌பின்‌, அவை தவிர்க்கப்பட்டு ஆழ்வார்தம்‌ கருத்துகளே ஏற்றுக்‌: கொள்ளப்படும்‌.
    அதுவே, இராமானுசர்‌ மேற்கண்ட நெறி என்பதைச்‌ ஸூர்ணை 64, 65, 66 விளக்கும்‌,

    “இறைவன்‌ உளன்‌; மனிதர்‌ இருக்கின்றனர்‌,” என்னும்‌ செய்தி முதற் ஸூர்ணேயிலேயே சொல்லப்படுகிறது,
    இறைவன்‌ கருணை வடிவினன்‌; மனிதர்‌ இருளாற்‌ சூழப்பட்டுள்ளனர்‌ என்னும்‌ இரண்டு கருத்துகளும்‌ அதிலேயே குறிக்கப்படுகின்றன.
    இவர்கள்‌ இருளை -விட்டு நீங்க வேண்டும்‌;-இறைவனைக்‌ காண்‌ வேண்டும்‌ அடைய வேண்டும்‌.
    அதற்குக்‌ காரணமானது அவனது கருணையே என்பதும்‌ மிகவும்‌ அழுத்தமாக முதற்‌ ஸூர்ணையிலேயே சொல்லப்படுகின்றது,
    அக் கருணையினால்‌ மக்கள்‌ அவனைப்‌ பற்றுதலும்‌ இருள்‌ உலகை விடுதலும்‌ செய்ய–பகுத்தறிய–அவன்‌ சாத்‌திரங்களை அருளினான்‌.

    உயிர்கள்‌–மனிதர்கள்‌–அநாதியாக அசித்தோடு சம்‌பந்தம்‌ கொண்டதால்‌, அவித்தை பெற்றார்கள்‌. அதனால்‌ புண்ணியமும்‌ பாவமும்‌ ஆன செயல்கள்‌ புரிந்தனர்‌:
    அதனால்‌, இருள்‌ எனப்பட்ட. அஞ்ஞானம்‌ நிரம்பிய உலகில்‌ பிறந்தனர்‌;-அது காரணமாக இராஜச தாமத குணங்களாற்‌ பற்றப்‌ பட்டனர்‌:
    அதனால்‌, அவர்கள்‌ ஐம்பொருள்‌ (இறைவன்‌ நிலை, உயிர்நிலை, பகை நிலை, உபாயநிலை, மெய்ந்நிலை ஆகிய ஐந்து அறிவு) இல்லாதவர்களானார்கள்‌?
    எனவே, பல இன்பங்களிலே அகப்பட்டு எல்லையற்ற துன்பங்களுக்கு இருப்பிடமான சம்சாரத்திலே (பிறந்து இறத்தலிலே) அழுந்தினார்கள்‌.
    இத்‌தகைய துக்கம்‌ விடத்தக்கது என்பதை அறிதல் வேண்டும்‌.-உயிர்களுக்கு அநாதியாக நாராயண்னோடு சம்பந்தம்‌ உண்டு.
    இறைவனோடு கொண்ட அந்தச்‌ சம்பந்தத்தால்‌ இறைவனுக்கு உயிர்கள்பால்‌ அருள்‌ புரிந்த சிந்தை (செளஹார்தம்‌) உண்டு.
    அதனால்‌, அவன்‌ அருள்‌ புரிவன்‌.-அவ்வருளால்‌ அவன்‌ தூய்மையைச்‌ செய்யும்‌ கடைக்கண்ணாற்‌ காண்பன்‌.
    அதன்‌ பயனாகச்‌ ௪த்துவ குண மிகுதி ஏற்படும்‌,-அதன்‌ பயனாக உண்மை அறிவு ஏற்பட்டு ஐம்பொருள்‌ அறிவு உண்டாகும்‌,
    அதனைப்‌ பெற்ற காரணத்தால்‌ பேரின்பமாகிய (வீடாய்‌) சுகம்‌ கிட்டும்‌, இச் சுகம்‌ பற்றத் தக்கது என்பதை அறிதல்‌ வேண்டும்‌.

    மேற்‌ கூறிய அசித்துச்‌ சம்பந்தம்‌ தன்னோடே. சேர்ந்த மாணிக்கத்தை ஒளியத்தின்று உரு அழித்துத்‌ தன்னைப் போலவே ஆக்கும்‌ சிட்டம்‌ போலத் தானும்‌
    ஆன்மாவின்‌ சீர்மை பாராதே தன்னைப்‌ போலாம்படி அதன்‌ அறிவு சிறிதும்‌ இல்‌லாதபடி தின்று, அதற்கு ஒரு முடிவை உண்டாக்கும்‌.
    இறைவனோடு உள்ள சம்பந்தம்‌, எதேனும்‌ ஒரு புழுவைக்‌ கொண்டு வந்து வைத்து ஊதித்‌ தன்னை ஓத்ததாக்கும்‌ வேட்டுவேளான்‌ என்ற குளவியைப்போல,
    பொருளல்லாததாய்க்‌ கிடக்கிற ஆன்மாவின்‌ சிறுமையைப்‌ பாராதே இயல்பாகவே எங்கும்‌ பரந்துள்ள தன்னோடு ஒத்ததன்மையை
    ஞானம்‌ வழியாகப்‌ பெறும்படி தன்னிறமாக வூதி வாழ்வாகிற சத்தை (இருப்பை)உண்டாக்கும்‌.

    இந்த இரு சம்பந்தங்களும்‌ ஆன்மாவிற்கு அநாதியாகவே இருக்கின்றன என்றால்‌, ஆன்மா எந்தச்‌ சம்பந்தத்தைப்
    பற்றி எவ்வாறு கடைத் தேறுவது என்னும்‌ கேள்வி எழுகின்றது.
    இதில்‌ அசித்தின்‌ சம்பந்தம்‌ ஆன்மாவிற்கு இயல்பாகவே உள்ளதன்று. அது பின்னர்‌ வந்து ஆன்மாவைப்‌ பற்றிக்‌’கொண்ட.தே .
    “பெருந்துயர்‌ இடும்பையில்‌ பிறந்து கூடினேன்‌”, என்பதால்‌ அது விளங்கும்‌. அது எல்லாம்‌ வல்ல இறைவன்‌
    போக்க, வாசனையும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌ தன்மையது.
    ஆனால்‌, இறைவனோடு கொண்ட. உறவு, “உறவேல்‌ நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது”, (திருப்பாவை 28) என்றபடி
    உயிர்‌களாலும்‌ இறைவனாலும்‌ அவ்லது இருவர்‌ தம்‌ உடன்பாட்டாலும் ஒழிக்க இயலாத ஒரு தொடர்பாகும்‌.
    எனவே, அது தாய்க்கும்‌ அவள்‌ குழவிக்கும்‌ உள்ளது போன்ற நிலையான சம்பந்தமாம்‌.

    “ஆனால்‌, பின்னர்‌ வந்த அசித்துச்‌ சம்பந்தத்தை அநாதி என்று மேலே சொல்லியது ஏன்‌?” என்று கேட்கலாம்‌.
    பின்னர்‌ வந்தது என்பது உண்மையானாலும்‌, அது என்று வந்தது என்பது தெரியாமையால்‌, “அதையும்‌” என்று கூறினர்‌ என்பதை அறிதல்‌ வேண்டும்‌.
    இந்த இறைவனோடு கொண்ட தொடர்பு தான்‌ அவன்‌ சாஸ்த்திரங்கள்‌–வேதங்கள்‌–அருளியதந்கு ஏது என்பது அறியத்தக்கது.
    நாராயணன்‌ என்பதற்கு எல்லா உயிர்‌களுக்கும்‌ .: பிற பொருள்களுக்கும்‌ இருப்பிடமானவன்‌ என்பதும்‌ எல்லாப்‌ பொருள்களிலும்‌ உறைபவன்‌ என்பதும்‌ ஆகிய இரு பொருளும்‌ உண்டு. -இக்கருத்தை,
    அறிகிலேன்‌ தன்னுள்‌ அனைத்துலகம்‌ நிற்க-நெறிமையால்‌ தானும்‌ அவற்றுள் நிற்‌கும் பிரான்‌ (9- 6- 4) என்னும்‌ நம்மாழ்வார்‌. வாக்கில்‌ காணலாம்‌.
    இந்தக்‌“குடல்‌ துடக்கு” தான்‌–அயந சம்பற்தந்தான்‌–அவன்‌ சாஸ்த்திரம்‌ அருளக்‌ காரணம்‌. அப்படியானால்‌, அவன்‌ உயிர்களை மோக்ஷம்‌ பெறுவிக்கும்‌ சாஸ்த்திரங்களை
    மட்டுமருளாமல்‌, கட்டுவிக்கும்‌ பந்தக சாத்திரங்களையும்‌ அருளியது “ஏன்‌,” என்னும்‌ கேள்வி எழுகின்றது.

    அதுவும்‌ அவன்‌? மிக்க அன்பாலே வாச்ஸல்யத்தாலே–செய்தான்‌.
    அன்பு மிக்க தாயானவள்‌ தன்‌ பிள்ளை, மண்‌ தின்னப்‌ போனால்‌ அதைத்‌ தடுத்தால்‌ அதன்‌ முகம்‌ வாடும்மென்று அதைத்‌ தின்ன விட்டுவிட்டுப்‌
    பின்‌ அம்‌ மண்ணால்‌ கேடு வாராதவாறு வேறு மருந்து கொடுத்து நோயைச்‌ சரி செய்வாள்‌. அதே போன்று, இறைவனும்‌ எல்லா உயிர்களுக்கும்‌ தாயினும்‌
    சாலப்பரிந்த தன்மையன்‌ ஆகையினால்‌, உயிர்களின்‌ சுவைக்குத்‌ தக்கவாறு பந்தத்தையும்‌ காட்டி, அதை அறுக்கும்‌ மருந்தினையும்‌ காட்டுகின்றானாம்‌.
    இவ்வாறு செய்வது முறைப்படி. அவர்களை ஈடேற்றுவதற்கு ஆன வழி. விடுதலை (மோக்ஷம்‌) உண்‌டாக்கும்‌ சாஸ்த்திரத்தை மட்டும்‌ காட்டினால்‌,
    அறிவற்றுப்‌ பொருள்‌ நாட்டம்‌ கொண்டு, பிற உயிர்களுக்கு இன்னா செய்யும்‌ தன்மையருக்கு அவற்றின்பால்‌ சுவை தோன்றாது.
    அவர்களையும்‌ வளைத்துப்‌ பிடிப்பதற்காக அவர்களுக்குச்‌-சுவை தரும்‌ பிற உயிர்களுக்குத்‌ துன்பம்‌ தரும்‌ சாயலில்‌ அமைந்த அபிசார கருமத்தை (ஏவல்‌ வினைகளை)ச்‌
    செய்‌யும்படி விதித்து, அவற்றால்‌ பலன்‌ ஏற்படும்போது அவருக்குச்‌ ஸாஸ்த்ரம் உண்டு என்கிற நம்பிக்கை (ஆஸ்திக்யம்‌) ஏற்படுகின்றது.

    பின்பு சுவர்க்கம்‌ முதலிய உறுதிப்‌ பொருள்களைப்‌ பெறுதற்கேதுவான கருவிகளை விதித்து, அவ்வழியால்‌
    “ப்ரக்ருதி ஆன்மா” என்பவற்றைப்‌ பகுத்துணரும்‌ அறிவை உண்டாக்கியும்‌,
    அப்படி பகுத்தறிவு பிறந்த பின்பு ஆன்‌மாவின்‌ இன்பத்திற்கு வழிகாட்டி, அவ்வழியாலே பிறர்க்கு அடிமையாயிருக்தலை நீக்க ,
    அதன்‌ பிறகு இறை இன்பத்தின்‌ தனிச் சிறப்பையும்‌, அதனை அடையும்‌ கருவியான பக்தியையும்‌ காட்டி, அவ்வழியாலே தன்னுரிமை நீக்கத்தை உண்‌டாக்கியும்‌, அதன்பின்‌ வேறு வழிகளில்‌ சென்று செயற்‌கருமை முதலியவற்றால்‌ அவர்கள்‌ தளருமளவில்‌ தன்‌ முயற்சி நீக்கமான சரணாகதி அடை.தலிலே செலுத்தி, ஆன்மாவின்‌ உண்மை இயல்பானதும்‌, அதற்கு உரிமையுடையதுமான
    “அவனுக்கு உடைமையாதல்‌” (பாரதந்தியம்‌) பான்மையை உண்டாக்கியும்‌ இப்படி முறையாக ஈடேற்றுவதற்காகவே
    இறைவன்‌ பந்தக சஈஸ்த்திரங்களையும்‌-பற்று விளைக்கும்‌ சாஸ்த்‌திரங்களையும்‌ அருளினன்‌. _சூ.–15)

    இறைவன்‌ கருணை காரணமாக இவற்றை வெளியிட்‌டாலும்‌, உயிர்கட்கு இவற்றைக்‌ கற்கப்‌ பல தகுதிகள்‌ வேண்டும்‌?
    அவை யெல்லாம்‌ பெற்றுக்‌ கற்பது அரிது என்று எண்ணி, எளிய வழி ஒன்றையும்‌ காட்டியருளினன்‌.
    வேதங்‌களின்‌ சாரம்‌. உபநிடதங்கள்‌ அவற்றின்‌ தெளிந்த சஈரம்‌ நாராயண அனுவாகம்‌. அதன்‌ மிகத்‌ தெளிந்த சாரம்‌, காயத்திரி மந்திரம்‌. அதன்‌ முகுலில்‌ சொல்லப்படுவது பிரணவம்‌. அதுவே வேதத்தின்‌ சுருக்கம்‌.
    “மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே வேதத்தின்‌ சுருக்கு”.
    பிரணவ மந்திரத்தை தெய்வ வண்டாகய இறைவன்‌ வேதச்‌சாகைகளிலிருந்து தேனெடுப்பது போல எடுத்தும்‌ அன்னமாய்‌ அவன்‌ நீரிலே கலந்து கடக்கும்‌ பாலைப்‌ பிரித்தெடுப்பதுபோல எல்லோருக்கும்‌ தக்கதான பாலான இதனை எடுத்தும்‌,
    தேவா்‌களைக்‌ காத்தலின்பொருட்டுப்‌ பாற்கடலிலிருந்து அமுது மெடுத்தவாறு நால்வேதக்‌ கடலிலிருந்து பிறப்பை அஞ்சுபவர்‌களைக்‌ காக்க இதனை எடுத்தும்‌,
    தன்‌ பேரருளையே பரவும்படி பண்ணினன்‌. எனவே, சாஸ்த்திரங்களைவிடத்‌ திருமந்திரம்‌ சிறந்தது என்பதனைக்‌ கீழ்க்‌ காணுமாறு காட்டுகின்றார்‌.

    சாஸ்த்திர நெறியும்‌ திருமந்திர நெறியும்‌

    1-சாஸ்த்திரம்‌ முனிவர்‌ வழியாக வெளிப்படுத்‌தியது.–திருமந்திரம் அவனே அருளியது
    2-உடலிலே நோக்குடையது.-ஆன்ம வடிவிலே நோக்குடையது
    3-பழுதிலாத்‌ தகுதியுடையரே பின்பற்றற்குரியர்‌.-மனமுடைய அனைவரும்‌ பின்பற்றத்‌ தகுதியுடையர்‌
    4-சாஸ்த்திரமறிந்தவர்‌ தெப்பத்தின்‌ துணை கொண்டு கையால்‌ நீந்திக்‌ கடல்‌ கடக்கும்‌ நிலையினர்‌.
    சாரமறிந்தவர்‌ தெப்பத்தின்‌ விட்‌.ட.த்திலேறிக்‌ கரை குறுகும்‌ காலம்‌ கருதிக் கொண்டிருக்‌கும்‌ தன்மையர்‌,
    5-இதற்குக்‌ காரணம்‌, இவர்கள்‌ ஆன்மாவின்‌ இயல்பை அறிந்‌துள்ள வகையே.
    இதற்குக்‌ காரணம்‌, ஆன்மாவை இவர்‌கள்‌ அறிய வந்த வகையே
    6-ஆன்மா உடலினும்‌ வேறுபட்டதாய்‌, அறிதல்‌ தன்மை-செய்தல்‌ தன்மை அனுபவிக்கும்‌ தன்மைகளை உடையதாயிருக்குமென்று அறியும்போது அத்நிலைமை
    உண்டாகும்‌.
    எல்லாம்‌ அழிபவை என்ற உணர்வைப்‌ பெறும்படி இறைவன்‌ செய்ய, அவனுக்கு உடைமையாதலும்‌-அநுபவப்‌ பொருளாதலும்‌
    ஆகியவையே ஆன்‌மாவின்‌ உண்மைத்‌தன்மை என உணரும்போது இந்‌ நிலைமை ஏற்படும்‌.
    7–இவ்வுணர்வு இவர்களை உமாயத்‌தைச்‌ செய்தலில்‌ மூட்டும்‌.
    இவ்வுணர்வு அதுபவப்‌ பொருளான்‌ தன்னைப்‌ பெற இறைவனே முயல வேண்டும்‌ என்று எண்ணி உபாயமாக ஒன்றும்‌ செய்யாது நிலையராக்கும்‌, .-
    8-இவர்களுடைய கருமங்கள்‌ உண்‌மை யற்றதும்‌ நிலை யற்றதுமான சாதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்‌,
    இவர்களது செயல்‌ உண்மையானதும்‌ நிலயானதுமான அடிமைத்‌ தன்‌மைக்கு ஏற்ற கைங்‌கரியமாய்‌ இருக்கும்‌.
    9-இவர்களைக்‌ கருமம்‌ செய்யத்‌ தூண்டுவது சாஸ்த்திரமாகும்‌,
    இவர்களைக்‌ கைங்‌கரியம்‌ செய்யத்‌ தூண்டுவது இறை அனுபவத்தில்‌ உண்‌டான உகப்பேயாகும்‌.
    10-இவ்வாறு செல்பவர்கள்‌ இறைவனைப்‌ பல்வேறு சாதனங்களால்‌ வழிபாடு செய்பவர்கள்‌,
    இறைவன்‌ அர்ச்சாவதாரமாய்‌ விளங்‌கும்‌ பல திவ்ய தேசங்களிலே ஈடுபட்ட பிரபந்தர்‌ ஆவார்‌.
    11-இவர்களுக்கு இலக்கு எப்படிப்‌பட்ட தவத்தைச்‌ செய்தவர்‌களுக்கும்‌ பலனை அளிப்பது ஆழியான்பால்‌ உண்டான அருளே என்னும்படி.
    பல்‌ தெய்‌வங்களாகவும்‌ நிறுத்தி மக்கள்‌ விதிகளின்படி. தன்னை யடையும்படி. அந்தர்‌யாமியாய்‌ நின்ற இடம்‌.
    இவர்க்கு இலக்கு தனது அருளினாலே மிகவும்‌ எளியனாய் வந்து அர்ச்சாவதாரமாய்‌ நிற்கிற இடம்‌,
    12-அந்தார்யாமியாய்‌ உள்ள வடிவு“பொது? என்று பெயர்‌ பெறும்‌.-அதைப்‌ பொருளாகக்‌ கொண்டு செய்யும்‌ கருமமும்‌ பொது என வழங்கப்படும்‌.
    திவ்விய மங்கள விக்‌கிரகத்தே௱டு கூடிய *சிறப்பு வடிவு”எனப்‌படும்‌. அதை தம்‌ பொருளாகக்‌ கொண்டு செய்யும்‌ கைங்கரியம்‌ சிறப்பு” எனப்படும்‌.
    (அந்தரங்க சேவை செய்கின்ற இவர்‌களுக்குப்‌ பொதுவான கருமம் செய்ய வேண்டுவதில்லை-அவை தாமே கழியும்‌.)
    13-மேற்கண்ட கருமம்‌ சாதனத்‌தில்‌ முதல்நிலைய்ஈகும்‌,-இவர்கள்‌ வருணத்திற்கேற்ற தர்மம்‌ செய்‌யும்‌ வர்ண தர்மிகள்‌ எனப்‌ பெறுவர்‌.
    கைங்கரியம்‌ பேற்‌றில்‌ முடிந்த நிலை.-இவர்கள்‌ தொண்டு புரிபவர்களாகிய தாச விருத்திகள்‌ எனப்படுவார்கள்‌.
    14-வேதத்தை அறிந்தவர்கள்‌ செய்து பிறப்பிக்கும்‌ அது இவர்க்குச்‌ சிறந்த பிறப்பு -இவருக்கு உபநயனச் சடங்கு உண்டு
    வேதத்தின்‌ கருத்‌தினை உணர்ந்த மிக்க வேதியர்‌ வேதங்களின்‌ சுருக்கமாகையால்‌ காயத்‌திரிக்கும்‌ தாயாய்த்‌தாயினும்‌ ஆயின செய்யும் ஞானத்தை உண்டாக்கும்‌,
    15. இவர்கள்‌ அந்தணர்கள்‌ என்றும்‌, மறையோர்‌ என்றும்‌ வருணமும்‌ அது காரண்மாக வந்த வேத நம்பிக்கையும்‌ பற்றிச்‌ சிறப்பான பெயரில்‌ வழங்கப்படுவார்கள்‌.
    அடியார்‌ என்றும்‌ தொண்டர்‌ என்றும்‌ ஆன்மாவாகிய பொருட்கு ஞானம்‌ ஆனந்தம்‌ இவற்றினும்‌ நெருங்கிய சிறப்பியலான அடிமைத்‌ தன்மையும்‌ அது காரண்மாய்த்‌
    தோன்றிய கைங்‌கர்யமும்‌ பற்றிச்‌ சிறப்பான பெயரால்‌ வழங்கப்படுவார்கள்‌.
    16. கிராமம்‌, குலம்‌ இவற்றின்‌ அடிப்படையில்‌ பெயரிட்டு வழங்‌கப்படுவார்கள்
    அது பழியென்று இறைவனோடு கூடியுள்ள தேசத்தையிட்டு அல்லது அடியவர்‌ சம்பந்தத்தையிட்டு வழங்கப்‌படுவர்‌,
    17-அந்தணர்க்குக்‌ கோத்திரமும்‌ சரணமும்‌ சூந்திரம்‌–. இவற்றின்‌ தலைவர்‌ முறையே பராசரர்‌, பராங்குசர்‌,போதாயனர்‌ முதலானவர்‌
    அடியவர்க்கு பிரபந்தர்க்கு முதல்வர்‌ -பராங்குசர் பரகாலர் லார்‌, யதிராசர்‌ முதலானவர்‌
    18.–வேதங்களை ஆசாரியர்‌ வாயிலாக ஓதுதல்‌-பொருளறிதல்‌ கடைப்பிடித்தல்‌ ஆகிய இவற்றால்‌ அந்தண்மை (பிராமணியம்‌) அமையும்
    சந்தங்கள் ஆயிரம் எனப்பட்ட வேத வடிவான திருவாய்‌ மொழியை ஒதிஅமையும்‌. உணர்ந்து அதன்‌ படி ஒழுகவும்‌ வல்‌லாரானால்‌ ஸ்ரீ வைஷ்ணவத்துவம்‌ கை கூடும்‌

    இப்படிச்‌ சாஸ்த்திர நெறியை, ஒரு பிரிவாகவும்‌ சாரஞர்‌ வேறு ஒரு பிரிவு போலும்‌ ஆசிரியர்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌,
    இரண்டும்‌ இருவேறு துறைகள்‌ என்று வேறுபடுத்தியும்‌ கூறப்‌ படுகின்றன. ஆனால்‌ ஓர்‌ ஆற்றிலுள்ள இருதுறைகள்‌
    என்பதையும்‌ அவர்‌ குறிப்பாக உணர்த்துகின்றார்‌.
    கருமம்‌ ஞானம்‌ பத்தி என்பவற்றை முன் நெறியைச்‌ சேர்ந்தனவாகவும்‌ பிரபத்தியைப்‌ பின்னெறியாகவும்‌ கொள்ளலாம்‌ என்பது தெரிகின்றது.
    முன்னது வருணத்திற்கேற்ப அமைந்தது; சில தகுதிகளை உடையவர்களுக்கு மட்டும்‌ அமைந்தது.
    பின்னது, வருணம்‌ ஆச்சிரமம்‌ முதலிய பமிரிவுகளற்றறு;-எத் தகுதி யுடையவர்க்கும்‌ கைக் கொள்ளத்‌ தக்கது; எளிமை உடைய நெறி.

    *இவந்றில்‌ எது உயர்ந்தது?” என்னும்‌ கேள்வி எழுதல்‌ கூடும்‌. *வேதந்தானே பெரியது; அதனைப் பின்பற்றும்‌
    நெறி உயர்ந்தது”, எனின்‌ அதற்கு விடை பகர்வன ஸூர்‌38, 39.
    வேதங்கள்‌ இருவகைய: ஒன்று வடமொழி வேதம்‌) மற்றொன்று தமிழ்‌ வேதம்‌. இரண்டிலும்‌ சொல்லப்பெறும்‌
    கருத்து ஒன்றே. எனினும்‌ எளிமை, தெளிவு எல்லோர்க்கும்‌ உரிமையாதல்‌ ஆய ஒரு சில வகைகளில்‌ தமிழ்‌ வேதம்‌
    ஏற்றமுடையது என்பது விளக்கப்படுகின்றது,
    அந்த:முறையிலே பிரபத்தி நெறி சிறப்புடையது என்பதும்‌ ஆசிரியர்‌: கருத்தாகும்‌,

    வேதங்கள்‌ நான்கும்‌ கற்று உணர்ந்து ஒழுகுகலை ஒருவன்‌: செய்யினும்‌, இந்தச்‌ சந்தங்களாயிரத்தின்‌ பொருள்‌ கற்று உணர்ந்து உயர்ந்தவனாகாவிடில்‌ அசலானவன்‌ என்று கூறி,.
    அவர்கள்‌ அந்தணர்கள்‌ தாமா என்பதும்‌ ஆராயப்படும்‌. என்று தெரிவிப்பதன்‌ மூலம்‌ வேதாந்திகளும்‌ தமிழ்‌ வேதம்‌. கற்றல்‌ வேண்டுமென்றும்‌,
    இல்லையேல்‌ அவர்கட்கு வைணவத்மே யன்‌றி பிராமணத்‌ தன்மையிலும்‌ குறைவு ஏற்படுமென்றும்‌ நூலாசிரியர்‌ தெளிவுறவே இதில்‌ கூறுகின்றார்‌,
    அதன்‌ மூலம்‌ இந்த நெறி யாரேர சிலர்‌ இழிந்த நிலையில்‌: உள்ளவர்கட்கு மட்டுமே என்ற எண்ணம்‌ கடியப்படுகின்றது: என்பது தெளிவுற அறியலாம்‌.

    மேலும்‌ வியாசர்‌ எழுதிய ப்ரஹ்ம ஸூத்திரங்கள்‌ போன்ற:வற்றில்‌ குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ உள்ள வேறுபாடுகளைக் காரணம்‌ காட்டி நீக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
    ஆழ்வார்‌ அனைவரும்‌ ஒரே குரலில்‌ பேசுபவர்‌..-இவர்‌ தம்‌ நூற் செய்திகளுக்குப்‌ பொருந்தாதன வேறு சாஸ்த்திரங்களில்‌ இருந்தால்‌ அவை நீக்கத்தக்கன. சொல்லப்‌:படும்‌ பொருளைத்‌ திறம்பட, எடுத்துச்‌ சொல்லும்‌ இதற்குச்‌ சேராதவை மனுவின்‌ நூலுக்கு மாறானவை புகழப்படாதவாறு போலப்‌ புகழப்படாது தள்ளப்படும்‌ :ஸூ .-64),
    இதுவும்‌ மேலே சொல்லிய கருத்தை வலியுறுத்தும்‌ மற்றும்‌ ஆளவந்தார்‌ பாடிய குறிப்பை ஒட்டி இராமநுஜரும்‌ தம்‌ பாஷ்‌யத்தில்‌ ஐயப்பாடான பொருள்களையெல்லாம்‌ இத்‌ திருவாய்‌மொறிப்‌ பாடல்களின்‌ துணை கொண்டு உறுதி செய்து, இதற்குப்‌ பொருந்த விடுவர்‌ (சூ. 65) என்பதாலும்‌ முன்‌ ஆசிரியர்கள்‌ ஆழ்வார்‌ நூல்‌ பற்றியும்‌ -அதில்‌ கூறும்‌ நெறி’ பற்றியும்‌ கொண்டிருந்த கருத்து மிகவும்‌ தெளிவுறும்‌.

    மேலும்‌ வியாசர்‌ எழுதிய ப்ரஹ்ம ஸூத்திரங்கள்‌ போன்ற:வற்றில்‌ குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ உள்ள வேறுபாடுகளைக் காரணம்‌ காட்டி நீக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
    ஆழ்வார்‌ அனைவரும்‌ ஒரே குரலில்‌ பேசுபவர்‌..-இவர்‌ தம்‌ நூற் செய்திகளுக்குப்‌ பொருந்தாதன வேறு சாஸ்த்திரங்களில்‌ இருந்தால்‌ அவை நீக்கத்தக்கன. சொல்லப்‌:படும்‌ பொருளைத்‌ திறம்பட, எடுத்துச்‌ சொல்லும்‌ இதற்குச்‌ சேராதவை மனுவின்‌ நூலுக்கு மாறானவை புகழப்படாதவாறு போலப்‌ புகழப்படாது தள்ளப்படும்‌ :ஸூ .-64),
    இதுவும்‌ மேலே சொல்லிய கருத்தை வலியுறுத்தும்‌ மற்றும்‌ ஆளவந்தார்‌ பாடிய குறிப்பை ஒட்டி இராமநுஜரும்‌ தம்‌ பாஷ்‌யத்தில்‌ ஐயப்பாடான பொருள்களையெல்லாம்‌ இத்‌ திருவாய்‌மொறிப்‌ பாடல்களின்‌ துணை கொண்டு உறுதி செய்து, இதற்குப்‌ பொருந்த விடுவர்‌ (சூ. 65) என்பதாலும்‌ முன்‌ ஆசிரியர்கள்‌ ஆழ்வார்‌ நூல்‌ பற்றியும்‌ -அதில்‌ கூறும்‌ நெறி’ பற்றியும்‌ கொண்டிருந்த கருத்து மிகவும்‌ தெளிவுறும்‌.

    இறைவனுடைய அருட்பார்வைதான்‌ ஆழ்வாருடைய எல்லாப்‌. பெருமைக்கும்‌ உயர்வுக்கும்‌ காரணம்‌ ஆகும்‌-(ஸூத்‌, 91).
    இறைவனான இராமபிரானுடைய திருக்கண்‌ பார்வையால் வேடுவச்சியான சபரி தூய்மை பெற்றவளானாள்‌.
    “அழகே செந்தாமரைக்‌ கண்ணா என்று பகைவனாலும்‌ பாராட்டப் பெறும்‌ கண்ணனுடைய அருட்பார்வையில்‌
    (அவன்‌ தன்‌ வீட்டில்‌ உணவு உட்கொள்ளுதலால்‌) விதுர ருடைய கேடுகளெல்லாம்‌ நீங்கி அவர்‌ தூயரானர்‌,
    பக்த விலோசனத்தில்‌ முனிவர்களின்‌ மகளிரை அப்போதே வீடு பெறும்படி செய்தது இறைவனுடைய அருட்பார்வை. இவ்‌வாறு இவர்களை யெல்லாம்‌ பூ.தராக்கிய (தூயராக்கின) புண்டரிகாட்சன்‌ நெடுநோக்கு யாவர்மீது படினும்‌ அநுபவித்தாலல்லது நசிபாத அவர் தம்‌ பாவங்களெல்லாம்‌ ஓழிந்து போம்‌*,

    ஆனிரைகளைக்‌ காப்பதற்காசக்‌ கண்ணன்‌ நெருஞ்சிக்‌ காடாய்‌ இருந்த இடத்தையெல்லாம்‌ பசும்புல்‌ நிறைந்த காடாக்கினான்‌.
    அதே போன்று, உலக நன்மையின்‌ பொருட்டு எல்லா உயிர்களிடமும்‌ செலுத்தும்‌ அருளையெல்லாம்‌ ஒரு மடையாக்கி
    இவரைத்‌ தன்னைப்‌ போன்ற ஞானமும்‌ சத்தியும்‌ உடையராம்படி செய்தான்‌.
    அதனை இவரே “எதீர்‌ சூழல்புக்கு எனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய விதி சூழ்ந்‌தால்‌ எனக்கேல்‌ ௮ம்மான்‌ திரிவிக்ரமனையே (2-7-0) என்று பாடுகின்றார்‌.
    இப்படிச்‌ செய்ததால்‌ இவர்‌ ஊர்களையும்‌ நாட்டையும்‌ உலகத்தையும்‌ தம்மைப்போல அவனுடைய
    பேர்களையும்‌ தார்களையும்‌ பிதற்றி அவன்‌ பால்‌ ஈடுபடும்படி செய்யும்‌ தன்மை யரானார்‌.
    இவர்க்குச்‌ செய்த அருளாவது இவர்க்கு மயர்வற மதிநலமருளியதே யாகும்‌. அதாவது
    அஞ்ஞானத்தை அடியோடு போக்கி ) பத்தி வடிவான ஞானத்தை இவர்க்கு அருளினன்‌ இறைவன்‌ என்பது.

    சாஸ்த்திரங்களிலே “சாதனபத்தி, சாத்தியபத்தி’ என இரண்டு சொல்லப்படுகின்றன. அவ்விரண்டிலும்‌ சேராதது ஆழ்வார் தம்‌ பத்தி ,
    அது திருத்துழாய்க்கு மணம் போல, ஆழ்வார்‌ பிறந்த போதே அவருடன்‌ ஓக்கப்‌ பிறந்து விட நினைத்தாலும்‌ விட வொண்ணாதபடி. உடன்‌ வந்தது.
    அநுபவிக்கத்‌ தக்க பொருளை விரும்பியவாறு அநுபவிக்காத போது உணவு பெறாத நிலையில்‌ பசி போன்று கஷ்டத்தையும்‌ நோயையும்‌ பெறும்படி செய்வது;
    அவனை அறுபலிக்க வேண்டுமென்ற ஆசையால்‌ வற்றாத இயல்புடைய ஆன்மாவையும்‌ குருத்து வற்றும்படி செய்வது? இன்பமான அவனைக்‌ காணவேண்டுமென்று அலமறும்படி செய்வது
    அதற்கு மேலும்‌ இதர உபாயங்களை யெல்லாம்‌ விட்டு அவனையே உபாயமாக உறுதியுடன்‌ பற்றியிருக்கும்‌ இவரை
    ‘குதிரியாய்‌ மடலார்தும்‌” என்று விடத்தக்க உபாயத்திலே இழியமாறு செய்கையாலே விட.த்தக்கதில்‌ நிலையாக நிற்கும்‌ கேட்டைப்‌ பெறச்‌ செய்யும்‌ தன்மையது. –

    *நாகணைமிசை தம்பிரான்‌ சரணே சரண்‌’ என்று ஒரு தரம்‌ செய்ய வேண்டிய ‘பிரபத்தியை-சரணாகதியை-மீண்டும்‌மீண்டும்‌ செய்யும்படி செய்கையாலே
    கொள்ளத்‌ தக்கதில்‌ நிளையாக நிற்றலிலிருந்து விலகச்‌ செய்யும்‌ தன்மையது, இவ்‌வாறு இருப்பதால்‌, இவர்‌ தம்‌ பத்தி
    இறைவனை நினையாமை என்றும்‌,சத்துச்கேடு என்றும்‌ இரண்டு இல்லை என்று இருக்கும்‌
    இவர்க்கு எப்பொழுதும்‌ அவனைப்‌ பற்றியே நினைப்பதற்கு ஏதுவாகையாலே, இவர்தம்‌ சத்தைக்‌குத் துணையானது ஆகும்‌?
    “எல்லாம்‌ கண்ணன்‌” என்றிருக்கும்‌ இவர்க்கு அவனை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசையை மேன்மேலும்‌ விளைக்‌ கையாலே,
    அவனை அநுபவிப்பதற்குத்‌ துணையானது ஆகும்‌;
    *வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌” என்றிருக்கும்‌ இவர்க்கு முடிவில்லாத அடிமைத்‌ தன்மையாகிய ஒரே ஆசைக்குக்‌ காரணமாகையாலே,
    தொண்டு செய்தற்குத்‌ துணையானதாயிருக்கும்‌. இப்படி மூன்றுக்கும்‌ துணையானது இவர்தம்‌ பத்தியாம்‌.
    இறைவனது காரணமற்ற அருளே அவன்‌ உயிர்களை ஆட்‌ கொள்ளுதற்கு ஏது என்பது இவர்கள்‌ கருத்து.
    அதற்கு உயிர்கள்‌ இப்பிறலியிலோ, அல்லது முன்‌ பிறவியிலோ மேற்‌கொண்ட கர்மம்‌, ஞானம்‌ உபாயமான பத்தி யாதொன்றும்‌ ஏதுவாகாது.
    இறைவனுடைய முயற்சியின்‌ பலனாலேயே இப்‌ பத்தி ஆம்வார்க்கு உண்டாயிற்று என்பதனை
    உருவகித்துஅழகுறக்‌ கூறுகின்றது (ஸூ 104).

    “ஒரு நல்வினையும்‌ இல்லாத போதும்‌ இறைவன்‌ அருள்‌ பாவித்தலுண்டோ?” என்னும்‌ வினா எழுகின்றது,
    கோசல்‌ நாட்டிலிருந்த புல்‌ எறும்பு முதலிய யாவும்‌ ஓர்‌ ஏதுவு மின்றியே நல்ல நிலை இராமனால்‌ பெற்றன. கோகுலத்தில்‌ கண்ணன்‌ குமலூதினபோது கண்டவர்‌ “அற்புதம்‌!* என்று வியக்குமாறு அங்கிருந்த சராசரங்கள்‌ யாவும்‌ இறைவன்‌ பால்‌ ஈடுபட்டன.
    ஆகையால்‌ காரணமின்றியே இறைவனது அருள்‌ பலிக்குமென்பது விளங்கும்‌,
    *அப்படியானால்‌ இறைவன்‌ காரணமின்றி ஆட்கொள்வதானால்‌-அவன்‌ எல்லாரையுமன்றோ ஆட்கொள்ள வேண்டும்‌!
    ஒருவரை மட்டும்‌ ஆட்கொள்வானேன்‌?” என்னும்‌ கேள்வி எழுகின்றது,-அதற்கு ஆசாரிய ஹிருதயக்காரர்‌ கூறும்‌ விடை,

    ‘பட்டத்‌துக்குரிய யானையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது” (ஸூ 106.என்பதுதான்‌. ‘ஆட்சியற்ற நாட்டில்‌ பட்டத்துக்குரிய ஆனையைக்‌ கண்ணைக்கட்டி விட்டால்‌,
    அவ்வானையால்‌ எடுக்கப்பட்டவன்‌. அரசனாவான்‌… மற்றவர்களை. விட்டு இவனை மட்டும்‌ எடுக்கக்‌ காரணமென்‌?” என்று ஆராய்தல்‌ கூடாது.
    அதே போன்று அரச குமாரன்‌ தன்‌ செருக்காலே ஒருத்தியைத்‌ தனக்குப்‌ பட்டத்தரசியாகக்‌ கொண்டால்‌
    இவளைப்‌ போன்ற பலர்‌ இருக்கவும்‌ இவளைத் தேர்ந்தெடுப்‌பானென்‌ என்று ஆராய்தல்‌ ஆகாது.
    அது போன்று குறைவற்ற உரிமை உடையவனான இறைவன்‌ தனக்கு அடிமைப்‌பட்டனவும்‌. தனக்கே உரியனவும் ஆன ஆன்மாக்களில்‌ ஒன்றினைத்‌ தன்‌ அநுபவத்திற்கு உரியதாம்படி ஏற்றுக்‌ கொண்டால்‌, அதற்குரிய காரணம்‌ ஆராயப்படாது எனப்‌ படுகின்றது.

    “இறைவனுக்கு உரிமை உண்டு என்பது.ஏற்றுக்‌ கொள்ளலாம்‌. ஆயினும்‌, அவனுக்கு ஒரு தலை நோக்கு (பட்சபாதம்‌) என்ற குறையாகாதோ?”* என்று வினவலாம்‌, அதற்கு விடை. காணும்‌ முன்‌ இறைவன்‌ தன்பால்‌ யாவர்‌ பிரபத்தி செய்கின்றாரோ அவரையே ஆட்கொள்ளுகின்றான்‌ என்பதும்‌ அறியத்தக்கது.
    ஆழ்வார்க்கு இறைவன்‌ மயர்வற மதிநல மருளினான்‌. அந்நிலையடைந்து பின்‌, அவர்‌ *புகலொன்றில்லா அடியேன்‌, அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!” என்று
    சரணாகதி யடைந்த பின்னரே அவரைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துப்‌ பின்‌ அவரையும்‌ ஆட் கொள்கிறான்‌ இறைவன்‌.
    அவன்‌ இவரை ஆட்கொள்ளுதற்கு உபாயமாக இவர்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்பது 107 முதல்‌ 113 முடிய 7 ஸூர்ணைகளில்‌ எடுத்துக்‌ காட்டப்‌ பெற்றுள்ளது.
    இவர்‌ அறிந்து செய்த நல் வினையுமில்லை. இவர்‌ அறியாது தானே வந்தமைந்த நல் வினையும்‌ இருத்தற்கு இடமில்லை.
    இவருக்குத்‌ தீ மனம்‌ கெட்டதற்கும்‌ மருவித்தொழும்‌ மனம்‌ வந்ததற்கும்‌ காரணமும்‌ அவனருளே; இவர்தம்‌ நல்வினை யன்று,
    இறைவன்‌ எண்ணினும்‌ வரும்‌ எளியனாயினும்‌, இவருக்கு எண் தானுமின்றியே அருள்‌ செய்தான்‌. அவன்‌ மனத்தில்‌ தங்குதற்கு அனுமதி செய்தாரே,
    அதற்கு இவரும்‌ உள்ளமும்‌ ஒத்துக்‌ கொண்டனவோ?” என்றால்‌, இல்லை, அவ்விரண்டும்‌ அவன்‌ முயற்சியின்‌ பலனே என்பதும்‌ அவர்‌ பாகரங்களிலேயே கூறப்‌ பெற்றுள்ளது.

    மாதவன்‌” என்றும்‌ “திருமாலிருஞ்சோலை” என்றும்‌ இவர்‌பேச அவன்‌ தன்‌ பெயரையும்‌ தன்‌ ஊர்ப்‌ பெயரையும்‌சொன்னதாக ஏறிட்டுக்‌ கொண்டு வந்து
    இவர்‌ நெஞ்சில்‌ புகுந்ததாகவும்‌, மற்றும்‌ அவ்வாறே இவர்‌ வேறு செயல்‌களையும்‌ அவனைக்‌ கருதிச்‌ செய்ததாகக்‌ கொண்டு இவரை வந்து ஆட்கொண்ட தாகவும்‌ சொல்லலாமென்றால்‌, அதுவும்‌ பொருந்தாது.
    ஏனென்றால்‌ இவை முறையே வேறுபாடு தோன்றச்‌ சொல்லிய சொற்கள்‌; வேறு காரணம்‌ பொருட்‌’டாகச்‌ சொல்லியவை? மனத்தோடு: மொழிந்தன அல்ல?பலத்திற்காக நூல்களில்‌ விதித்தனவமாகா.
    பெரும் பேற்றுக்கு ஏற்ற ஏதுமாகா; பல பயன்களுக்குக்‌ காரணமானால்‌ ஆகலாம்‌.-ஆகையால்‌, இவையும்‌ பேற்றுக்குக்‌ காரணமானவை: யல்லவாம்‌. ்‌
    மற்றப்படி இறைவனே. ஒரு காரணமின்றியே, “இவன்‌அடியான்‌? எனறு வந்து ஆரருள்‌ செய்தான்‌. “இவர்‌ தாம்‌அடியவர்‌ என்பதற்குச் சான்று என்‌?” என்று கேட்க,
    இறைவன்‌ வேதத்தைப்‌ பிரமாணமாகக்‌ காட்ட, இவர்‌, “அது ஓலைப்‌ படாததனால்‌ பிராமாணமாகது,” என்று மறுக்க,
    இறைவன்‌ தன்‌ பல காலமாக வரும்‌ அநுபவத்தை வலிமையாகக்‌ கருதி அதைக்‌ கூற, அதற்கும்‌ சான்று கேட்ட பொழுது அவன்‌ உண்மை உணர்ந்தவர்களான ஞானிகளைக்‌ காட்ட, அதற்கும்‌
    “அவர்கள்‌ உன் பக்கம்‌ நோக்குடையவர்கள்‌–பட்சபாதிகள்‌,* என்று இவர்‌ மறுத்துவிட்டார்‌. இப்படி அழகானதொரு கற்பனையை ஆசிரியர்‌ தருகின்றார்‌.

    அந்த நிலையில்‌ எல்லையற்ற காலமாக நான்‌ என்னுடை,யவன்‌ என்று இருந்த அநுபவம்‌ வவிய களவாலே வந்துதென்று இவர்‌ இரக்கப்படும்படி
    இந்திர ஞாலங்கள்‌ போலே கண்ணையும்‌ கருத்தையும்‌ கவரும்‌ வடி .வழகையும்‌ சீல குணத்‌தையும்‌ காட்டி அவரைக்‌ கைக்கொள்ளும்படி
    இறைவனைத் தடுக்க முடியாதபடி. இயல்பான அருள்‌ வளைத்துச்‌ கொண்டது (ஸூ . 112). அதனால் தான்‌ ஆழ்வாரும்‌ வரவாறு ஓன்றில்லையால்‌ வாழ்வினிதால்‌” என்றும்‌,
    “வெறிதே அருள்‌ செய்வார்‌ செய்வார்கட்கு” (6-7-8) என்றும்‌ அறுதியிட்டுப்‌ . பேசுகின்றார்‌.
    ஆகையால்‌ வாழ்க்கைக்கு ஒப்பற்ற முதலாகிய அவன்‌ தன்னை ஒழிய வேறு நினைத்துப்‌ பார்த்தற்கு ஏற்றதான காரணமும்‌ இல்லை என்பது தெளிவாகும்‌.
    “இவ்வாறு காரணமின்றி அவன்‌ கருணை புரிவது ஏன்‌ அப்படிச்‌ செய்பவன்‌ எல்லாருக்கும்‌ செய்யாமை குறை வுடையதாகாதோ?” என்பது சிந்திக்க வேண்டுவதாகும்‌.
    நல்ல தந்தையானவன்‌ எந்த வித உதவியும்‌ காரணமும்‌ எதிர்‌ பார்த்துத்‌ தன்னைச்‌ சார்ந்தவர்களுக்கு அருள்‌ காட்டுதல்‌ இல்லையே!
    அதே போன்று பல மடங்கு புரிவுடைய உலகின்‌ தந்தையும்‌ செய்யக் காண்கின்றோம்‌. அவனும்‌ தன்னையே
    சுதியென அடைந்துள்ள தன்‌ மக்களுக்குத்தான்‌ முதலில்‌நலம்‌ செய்வனன்றோ!
    அப்படியே தன்னையே நம்பிச்‌ சரணமடைந்தவர்களுக்கு மட்டுமே அவன்‌ முதலில்‌ அருள்‌ செய்‌ கின்றான்‌,
    மற்றவர்கள்‌ நிலை பின்னால்‌ வரும்‌. தக்கதொன்றைத்‌ தன்‌ பிள்ளை கேட்டுவிட்டால்‌, அதை எப்படியும்‌ தந்துவிட வேண்டுமென்று தந்தை அவாவுறுதலில்‌ வியப்‌பில்லை யன்றே?
    சில சமயங்களில்‌ தந்தையை தேரே அணுகுவதகைக்‌ காட்டிலும்‌ தாய்‌ மூலம்‌ அணுகும்போது அச்‌ செயல்‌ முடிவது எளிதாகன்றதன்றோ?
    அம்முறைப்படியே பிராட்டியின்‌ புருஷகாரமும்‌ பேசப்படுகின்றது. இப்படியேஉலகியலை
    ஒட்டிக்‌ காணும்போது பல கருத்துகளின்‌ பொருத்தம்‌ தெளிவாய்‌ விளங்கக்‌ காணலாம்‌,

    இறைவனுக்குப்‌ *பரத்துவம்‌, அந்தரியாமித்துவம்‌, வியூகத்துவம்‌, அவதாரம்‌, அர்ச்சை” என்னும்‌ ஜந்து நிலைகள்‌ உண்டு.
    நிலை ஐந்து ஆனாலும்‌, பொருள்‌ ஒன்றே, அரசன்‌ ஒருவன்‌, தன்‌ உடன்‌ கூட்டத்தாரால்‌ வழிபாடு செய்யப்படுபவனாய்க்‌
    தன்‌ வீறு தோற்றப்‌ பகலோலக்கமிருப்பன்‌: தன்‌ தாட்டிலுள்ள குணங்‌ குறைகளை அறிவதற்காக இரவிலே பிறர்‌ அறியாதவாறு கறுப்புடையுடுத்து
    நகர சோதனை செய்து வருவன்‌: தன்‌ ஆட்டியின்‌ கீழுள்ளவர்களில்‌ குற்றம்‌ செய்தவரைக்‌ தண்டிக்கவும்‌ நல்லோரைக்‌ காக்கவும்‌ தான்‌ செய்ய வேண்டிய செயல்களை ஆராய்வன்‌?
    தீய விலங்குகளை அழிக்க வேட்டை. ஆடுவன்‌?களைப்பு நீங்கச்‌ சோலைகளிலே தன்‌ உரிமைச்‌ சுற்றத்தோடு உலாவி வருவன்‌,
    இப்படி. அவன்‌ தன்‌ அரச நீதி (முறை) செலுத்தி வருவது போன்றே, இரு உலகுகளிலும்‌ அரசு செலுத்தும்‌ வானிளவரசான இறைவனும்‌ செய்வான்‌.

    விண்‌ மீதிருப்பாய்‌” என்றபடி அவன்‌ பரமபதத்தில்‌ தன்‌ தேவியுடன்‌ நித்ய முத்தர்‌ வழிபட ஓலக்கமிருப்பன்‌,
    “இவற்றுள்‌ எங்கும்‌ மறைந்துறைவாய்‌? என்றபடி. பரந்து பல பொருள்களுக்கும்‌ தெரியாதபடி அவன்‌ அவற்றுள்‌ உறையும்‌ பொருளாய்‌ இருந்து அவை செய்யுமவற்றை பெல்லாம்‌ அறிவான்‌,
    *சுடல்‌ சேர்ப்பாய்‌” யென்றபடி, பாற்கடலில்‌ சேர்ந்து அறி துயில்‌ புறிந்து உலகத்துயிர்களைக்‌ காக்கும்‌ வழியை– உபாயத்தைச்‌ சிந்தித்துக்‌ கொண்டிருப்பான்‌.
    *மண்மீ துழல்‌வாய்‌” என்றபடி. அவ்வுயிர்களைக்‌ காத்தற்‌ பொருட்டு உலகில்‌ வந்து அவதரித்து அடியவர்க்குப்‌ பகையானவர்களை அழிக்கையாகிற வேட்டையாடுவன்‌,
    *மலைமேல்‌ நிற்பாய்‌* என்றபடி. பகை அழித்த களைப்புத்‌ தீரச்‌ சோலை சூழ்ந்த:கோயில்‌, திருமலை முதலான இடங்களிலே வாழ்வன்‌.
    இப்படி இவ்வைத்து வகை யாகவும்‌ இறைவன்‌ ஒருவனே விளங்குவதைக்‌ காணலாம்‌.

    இப்படி எல்லா நிலைகளிலும்‌ அவன்‌ இருப்பினும்‌, *பின்‌னானார்‌ வணங்கும்‌ சோதி” என்றபடி. அவதாரங்களுக்கும்‌ பிற்‌பட்டவர்களும்‌
    இழக்காதபடி அமைந்த அர்ச்சாவதார,த்தில்‌ பரத்துவம்‌ முதலான எல்லா நிலைகளிலும்‌ அநுபவிக்கும்‌
    எல்லாக்‌ குணங்களும்‌ நிறைந்திருக்கும்‌ (ஸூத்‌, 158).
    அத்‌தகைய திவ்விய தேசங்கள்‌ பல உள்ளன. அவற்றுள்‌ ஒவ்‌’வொன்றிலும்‌ ஒவ்வொரு குணம்‌ பொலிந்துவிளங்கும்‌.
    என்பதும்‌ தெளிவுற எடுத்து விளக்கப்படுன்றது (ஸூ . 159முதல் 186 முடிய),

    ஆழ்வார்‌. அடிக்கடி பரோபதேசம்‌ செய்வர்‌. -திரு விருத்தம்‌ முதல்‌ பாட்டிலேயே, *அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌ கேட்டருளாய்‌’ என்று சொல்லுகிறவர்‌,
    *பொய் நின்ற ஞானம்‌ முதலியவற்றை யாமுறாமைச்‌ செய்ய வேண்டும்‌” என்று பன்மையில்‌ பேசுகிறார்‌,
    தனக்கு மட்டும்‌ ஓன்று வேண்டுமென்று கேளாது, தம்மைச்‌ சேர்ந்தவர்‌ யாவர்க்குமாக வேண்டுகின்றார்‌!
    பிறர் துன்பங்கண்டு பொறாதவர்‌ ஆகையால்‌, பிறர்க்காகத்‌ தாம்‌ மன்றாடுகின்றார்‌-என்று எடுத்துக்‌ காட்டுவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை என்ற உரையாசிரியர்‌.
    திருவாய்மொழி என்ற நூலின்‌ முதற்‌ பத்து இரண்டாம்‌. திருவாய்‌ மொழியும்‌, ஓவ்வொரு பத்திலும்‌ ஒவ்வொரு திருவாய்‌ மொழியும்‌ பரோபதேசமாக அமைந்‌துள்ளன. ‘
    பெற வேண்டுவதெல்லாம்‌ பெற்று விட்டாரோ! பிறர்க்கு உபதேசம்‌ செய்யத்‌ தொடங்கி விட்டாரே!” என்னும்‌ கேள்வி எழலாம்‌.
    பிறர்‌ துன்பங்கண்டு பொறாமையும்‌, ஞாலத்தார்க்கு இறைவன்பால்‌ உள்ள,தொடர்பை அறிந்துள்ளமையும்‌, மிக்க கிருபையும்‌ ஆகிய இம்மூன்றுமே
    இவரை உபதேசம்‌ செய்யச்‌ செய்வன.-செல்வம்‌ அழிவிற்குக்‌ காரணமாக இருத்தலைக்‌ கண்டும்‌, பின்னும்‌ அதனையே பெற வேண்டுமென்ற அறியாமையில்‌
    நிலைத்து நிற்கும்‌ உலகினர்க்குத்‌ தம்‌ உபதேசத்தாலே
    இறை.பக்தியைத்‌ தோற்றுவிப்பது, தம்‌ சம்பந்தம்‌ அடியாக அவர்‌களையும்‌ விடாது இருத்தித்‌ தம்மைப்போல இறை அநுபவத்‌தில்‌ ஈடுபட்டவராக்க வேண்டுமென்கிற ஞானத்தாலாகும்‌.
    உலகினார்க்கு மட்டுமேயன்றி, ஆழ்வார்‌ இறைவனுக்குமே அடிக்கடி உபதேசம்‌ செய்தலை நாம்‌ காண்கின்றோம்‌.

    எல்லாம்‌ அறிந்தவனான அவனுக்கு இவர்‌, ‘உனக்கொன்று உணர்த்‌துவன்‌” (6. 2. 3.) என்று உபதேசம்‌ செய்வது அவன்‌ மாட்டுள்ள அன்பின்‌ மிகுதியாலேயாகும்‌, ‘
    கர்மத்திற்கு உட்பட்டவராய்‌ சாதனம்‌ இன்னது சாத்தியம்‌ இன்னது என்று அறியாதே கலங்கி நிற்கிற உலகினரான
    சேதனர்க்கு, *வீடுமின்‌ முற்றவும்‌? (திரு, 1, 2) என்று தொடங்கி *சுனை நன்‌ மலரிட்டு நினைமின்‌ நெடியானே” (திரு, 10.5) என்னுமளவும்‌ விட.த்தக்கவற்றையும்‌ கொள்ளத்‌தக்கவற்றையும்‌ உபதேப்பர்‌.
    அன்புக்கு அடியவனாய்ச்‌ சாதன சாத்தியம்‌ இன்ன வென்றறியாது கலங்கும்‌ இறைவனுக்குத்‌ “தன்னைத்‌ தகுதி யற்றவன்‌ என்று எண்ணி
    ஆழ்வார்‌ தன்னை விட்டுவிட்டால்‌ என்‌ செய்வது என்று ஐயங்கொண்டு அலமறும்‌ அளவில்‌ *உன்னை நான்‌ பிடித்தேன் கொள்‌ சிக்கெனவே!,
    “உன்னை நானடைந்தேன்‌ விடுவனோ!” என்று சொல்லி, மேலும்‌ அவனுக்குச்‌ சாதன சாத்தியங்கள்‌ அறிவிப்பது,
    ‘செய்யத் தகாதவற்றைச்‌ செய்யாதே” என்பது, “செய்ய வேண்டுமவற்றைச்‌ செய்‌” என்பது இப்படிப்‌ பல இடங்களிலும்‌ உபதேசித்தலும்‌,
    நன்மை தீமைகள்‌ சொல்லுதலும்‌ ஆழ்வார்‌ செய்தலைக்‌ காணலாம்‌. ஆழ்வாருடைய முதற்சீடர்‌ இறைவரே.
    இறைவர் பால்‌ நல்ல சீடனுக்குரிய குணங்கள்‌ யாவும்‌ அமையப் பெற்று இருக்கின்றமையை(ஸூ த்‌. 202) தெளிவுறுத்தும்‌.

    இப்படிப்‌ பரோபதேசம்‌ பல காலும்‌ நடந்தாலும்‌, உள்ளே இறை யநுபவம்‌ நடந்து கொண்டே யிருக்கும்‌. உள்ளே அனுபவம்‌ நடந்துகொண்டேயிருக்கவே, புறத்தே உபதேசமும்‌ நடை பெறா நிற்கும்‌.-எனவே, அநுபவ இடையீடு இராது என்பதும்‌ வற்புறுத்தப்‌ படுகின்றது. உபதேசப்‌ பகுதிகளே திருவாய்மொழியின்‌ முக்கியமான பகுதிகள்‌. அவை திருவாய்மொழி 1.2,– 2.10,–3.9, –4.10, –5.2, –6 3, –7.10, –8.6,– 9.10,– 10.5 ஆகும்‌.

    *பயிலுஞ்சுடரொளி”, *நெடுமாற்‌ கடிமை: என்னும்‌
    இரண்டு திருவாய் மொழிகள்‌ அடியவா்களைப்‌ பற்றியவை. இவை. யல்லாமல்‌, மற்ற இறைவன்‌ தோத்திரமாக அமைந்த திருவாய்‌ மொழிகள்‌ முடிவுபெறாவே .
    எனவே, இவை இன்றியமையாத திருவாய்மொழிகளே என்பது அறியத் தக்கது
    (ஸூத்‌. 217). இறைவன் பக்‌தி , பக்தியின்‌ முதல்‌ நிலை; அடியவர் பக்தி, பத்தியின்‌ முடிந்தநிலை. அதுவே, “கோதில்‌ அடிமை” என்று பேசப்படுகின்றது.
    இது வைணவ தத்துவமும்‌ சமயமும் மனிதாபிமானத்தை எவ்வ௱று மதித்து வந்தது என்பதை நன்கு விளக்கும்‌.

    —————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    பல சதுர் விதமான அர்த்த விசேஷங்கள் —

    May 30, 2023

    சதுர்-விதா பஜந்தே மாம்mஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
    ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப

    பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

    ————

    அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த

    ——–

    ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-16-

    இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
    ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
    ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
    வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

    கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
    அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
    அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
    அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
    அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
    ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
    எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
    அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
    அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
    அருளிச் செய்கிறார் இதில் –

    சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
    பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
    கிரியாதிகளை அறிவிக்கிற
    பாட்டுப் பரப்புக்கு
    பெரிய தீவினில்
    ஒன்பதாம் கூறும்
    மானிட பிறவியும்
    ஆக்கை நிலையும்
    ஈரிண்டில் ஒன்றும்
    இளைமையும்
    இசைவும் உண்டாய்
    புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
    விக்னமற
    நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே

    வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
    முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
    தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
    ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
    வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

    சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

    அதாவது
    1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
    2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
    3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
    4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
    5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
    6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
    (சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
    7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
    8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
    9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
    10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
    கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
    த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
    11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
    12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
    வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
    13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
    ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
    14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
    -சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
    பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
    அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
    15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
    நாலு வகைப் பட்ட வியூக ஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
    ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-

    பாட்டுப் பரப்புக்கு
    அதாவது-
    பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
    மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

    பெரிய தீவினில் –
    அதாவது –
    நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
    த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-

    ஒன்பதாம் கூறும்
    அதாவது
    நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
    வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
    ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
    ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
    காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
    ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
    என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
    பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-

    மானிட பிறவியும்
    அதாவது
    துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
    அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
    என்றும் சொல்லுகிற படியே
    மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

    ஆக்கை நிலையும்-
    அதாவது –
    துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
    மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
    சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –

    ஈரிண்டில் ஒன்றும்-
    அதாவது –
    நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
    சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
    பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

    இளைமையும்
    அதாவது
    அந்தணர் குலத்திலே பிறப்பினும்
    தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
    புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-

    இசைவும் உண்டாய்
    அதாவது –
    இளமைப்பருவத்தோடு இருப்பினும்
    யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
    எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
    இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

    புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
    அதாவது –
    வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
    சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
    மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –

    விக்னமற
    அதாவது
    அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
    ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
    சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-

    நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
    அதாவது
    நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
    சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
    ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
    மனசை கொண்டு அறக் கற்கை
    -கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
    சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
    ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
    தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
    என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

    அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
    ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
    பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
    திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-

    (ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
    சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
    நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
    வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
    அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
    -சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)

    வேத சார உபநிஷத் என்றது
    பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
    அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
    சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
    சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
    ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
    சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
    சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
    மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

    அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
    தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
    உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

    சார தர அநுவாகம்
    அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
    பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
    விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
    பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
    பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

    சார தம காயத்ரியில்
    அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
    அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
    அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
    வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

    முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
    வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
    (எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
    வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
    நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
    ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
    மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
    வேதாந்த தாத்பர்யமாய் –
    ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
    சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-

    வேதங்களின் சாரமாய் —
    தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
    என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
    கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –

    தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
    தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
    பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
    1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
    2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
    3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
    பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –

    தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
    அதாவது
    தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
    சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
    (விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
    திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
    சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
    எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
    இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
    பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –

    அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
    அதாவது –
    அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
    ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
    பாலை விவேகித்து எடுக்குமா போலே
    நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
    (ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
    இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
    ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
    பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

    அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
    அதாவது –
    அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
    அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
    விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
    நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
    கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
    பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

    பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
    அதாவது –
    ஆக
    இப்படி வேத சாராமான இத்தை
    ஸ்வயமேவ எடுத்து
    அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
    நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
    பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
    நிர்ஹேதுக கிருபையால்
    நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
    ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
    தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
    சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-

    அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

    சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
    சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
    இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
    சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
    சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
    திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி

    ——————————————-

    ஸ்ரீ சதுர் வேத விளக்கம் –

    ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
    ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
    அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
    வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
    அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
    அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
    அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.

    ‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
    ‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
    வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
    இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
    பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
    ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
    முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
    காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

    ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
    நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
    இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
    ‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
    சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
    “வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
    உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

    கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
    தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
    பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
    அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
    உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.

    ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
    பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
    இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.

    தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
    முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
    உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.

    ‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
    ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
    கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
    அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
    ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
    ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
    இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
    ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
    ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
    ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
    பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
    ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
    யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
    தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .

    ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
    யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
    ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
    “வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.

    அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
    அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
    அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
    ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
    ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
    மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
    மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

    ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
    லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

    யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
    இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
    தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
    ‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
    முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
    அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

    மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
    மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
    இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
    பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
    பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
    அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
    அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
    அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
    அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
    மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
    இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
    ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.

    நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.

    ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
    ‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
    கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.

    ———————-

    ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

    ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
    அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

    சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
    வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14

    லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
    சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15

    ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
    அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

    ———————————————————-

    இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது

    கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன

    இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
    அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –

    அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
    இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

    ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
    பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்

    பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
    பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
    நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
    வ்யூஹஸ் ச
    முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
    ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
    த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
    கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
    முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்

    விபவஸ் ச
    தச்சாய ஸூர நர திர்யக்காதி
    ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க

    ததா ச ஸ்ரீ ஸாத்வதே

    ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
    ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
    பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
    ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
    நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
    ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
    அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
    அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
    இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
    இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
    வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
    முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

    தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
    மத்ஸ்ய கூர்மாதயா
    அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
    பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
    அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
    இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
    யதா அர்ச்சாவதார
    இதி சதுர்த்தா

    நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
    ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
    அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

    சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

    புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

    நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
    தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
    ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
    ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
    ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
    பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
    அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
    தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

    ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
    வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
    தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
    சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
    ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
    அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
    பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

    இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
    விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

    இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
    விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
    அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

    அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

    ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய

    யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
    சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
    தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
    யுகங்களின் முடிவில்
    சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
    இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

    அத்ராந்தர ஸப்தோ பேத வசந
    இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்

    ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

    ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
    ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
    ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
    ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
    மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
    ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

    அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
    அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
    புநரபி தாத்ருஸ லக்ஷணம்
    ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
    யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
    ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

    ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
    அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
    இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

    ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச

    ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
    யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
    முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

    யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
    அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
    ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
    வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
    ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
    ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
    வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
    தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

    ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
    து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
    பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

    இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
    விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
    வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
    நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
    காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
    வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
    பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
    முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
    ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
    ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
    வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
    சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
    சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
    பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
    மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

    அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
    ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
    ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

    ———–

    இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
    பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
    மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
    மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

    வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
    பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
    சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
    பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
    அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

    சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
    பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
    அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

    ———-

    139-சதுராத்மா –
    நான்கு ரூபங்கள் –

    இத்தம் சதுராத்மா
    வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
    மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

    வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

    சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

    பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் சதுராத்மா நம

    ——————-

    140-சதுர்வ்யூஹ –
    நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
    மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்

    கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
    சதுர்வ்யூஹ
    யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
    ச ஸமஸ்தவ் யஸ்தேந குண ஷட்கந -தத் வ்யஞ்ஜகவ்ய அவஸ்தித
    அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்ஜா
    கரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
    சதுர்த்தா வ்யூஹத இதி

    த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
    அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
    பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
    சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
    வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

    மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
    வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
    அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

    ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

    வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

    வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் சதுர் வ்யூஹயா நம

    ———————

    141-சதுர்த்தம்ஷ்ட்ர-
    நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

    வ்யூஹ மூலேந பரேண ரூபேண
    சதுர் தம்ஷ்ட்ர
    சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
    யதா

    சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
    14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்

    வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

    சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
    14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
    இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –

    நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

    நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம

    —————–

    142-சதுர் புஜ –
    நான்கு திருக்கைகள் உடையவன்

    ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ 

    சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
    நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
    திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்

    தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
    அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்

    புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்

    ஈரிரண்டு மால் வரைத் தோள்
    நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

    பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

    நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

    தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
    தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

    ஓம் சதுர் புஜாய நம
    தாமரை -பரம புருஷார்த்தம்
    நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு

    ————

    139 வது திருநாமம் சதுராத்மா – பெருமான் தன்னையே வாஸீ தேவன் ப்ரத்யும்னன், ஸங்காஷணன் அநிருத்தன் என நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்தில் பகவான் ஒருவர் தான் தன்னை ராம லஷ்மணர் பரத சத்ருக்கன் என பிரித்துக் கொண்டார் என்கிறது . பிதரம் ரோஜயா மாஸ்ய எனது வங்கும் ப்ரமாணத்தின் படி பகவான் தசரதனை தனக்கு தந்தையாக வரித்தார். ராமன் என்பது ஒரு நாமம் தானே என்றால் அவரவர் செய்வதை பொறுத்து நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றார். லக்ஷமணன் செய்வது ஒன்று. பரதனின் அவதார நோக்கமே வேற . அது போல் சத்ருக்கன் அவதார நோக்கமே வேற. அது போல் இப்போது பார்க்கும் நான்கு பேரும் தன்னை வெவ்வேறு தொழிலுக்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவரே பண்ணலாம் என்றாலும் நாம் அனுபவிக்க ஹேதுவாய் 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு படைப்பது பிடிக்கும், மற்றெருவருக்கு அழிப்பு தொழில் பிடிக்கும். ஆக ஆஸ்திரிகர்களின் விருப்பப்படி சேவை சாதிக்க தகுந்தார் போல் அந்தந்த ரூபத்தில் வணங்கத்தக்கவராய் தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டார்கள் என சாதித்தார். ராமனின் அவதார நோக்கமே லோகத்தில் தர்மம் சீர்குலைந்து போயிற்று. பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்பதில்லை என ஆயிற்று இது போல க்ருத த்ரேதா யுகத்தில் தாய் சொல்வதை மகள் கேட்பது கிடையாது . ஆச்சராயன் சொன்னால் சிஷ்யன் கேட்பது கிடையாது. இந்த மாறுபட்ட கருத்தை சரி பண்ணத்தான் இராமன் அவதரித்தார் என்றார். தந்தை சொல்மிக்க மந்தரமில்லை என தந்தை சொன்னார் என்பதற்காக காட்டிற்கு ராமன் சென்றனர். ஆதிசேஷன் அவதாரமான லக்ஷ்மணன் பகவானுக்கு கைங்கரியம் சேஷத்துவம் புரியவே இருந்தார். ஸ்வயம்புது. எனது வங்கும் ப்ரமாணப்படி நீ ஆணையிடு ராமா அதை நான்பின் தொடர்ந்து கைங்கரியம் புரிவேன். ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமாத்வாவின் சேஷர்கள். ஆக கைங்கர்யம் புரிவதல் லக்ஷ்மணன் நோக்காக கொண்டுள்ளார். பரதனின் அவதார நோக்கம் நிறைய கைங்கரியம் செய்வார். ஆனால் ராமனுடன் கூட செல்லவில்லை. ஆனால் ஆச்சார்யர்கள் பரதனையே லக்ஷ்மணனை விட உயர்நதவன் என கொண்டாடுகிறார்கள் . லக்ஷ்மணன புரிந்த கைங்கர்யத்திற்கு சேஷத்துவம். என்று பெயர் பரதன் ராமன் இட்ட வழக்காய் கைஙகர்யம் புரிந்ததற்கு பாரதந்திரியம் என்று பெயர். சேஷத்துவத்தை விட பாரதந்திரிய மே போற்றத் தகுந்தது . பரதனுக்கு மட்டும் நாட்டில் இருக்க விருப்பமா? ராமன் கூறினான் என்பதற்காக நாட்டில் இருந்தார். நாமும் பகவானுக்கு கைங்கரியம் பண்ணும் போது அவர் திருவுள்ளம் கோணாதபடி நடக்க வேண்டும் என அறுதியிட்டார். பகவானுக்கு கைங்கர்யம் புரிவதைவிட அவர் அடியார்களான பாகவதோத்தமர்களுக்கு அத்யந்த பார தந்திரியனாய் கைங்கர்யம் புரிவதை வெளிக்காட்டவே சத்ருக்கன் அவதாரம். ராமனின்றி இருந்த பரதன். பரதன் அன்றியிருந்த சத்குக்கனன். இதைத்தான் அடியார்க்கு அடியார்- தம் அடியார்க்கு அடியார் – தமக்கு அடியார்க்கு அடியர் – தமக்கு அடியோங்களே ஆக அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியன் என்பதையை சத்ருக்கன் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். சதுராத்மா – 4 ஆக பிரிந்தார் போல் வாஸுதேவன் முழுவதுமாய் இருந்து பின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என நான்காக இருக்கிறார்

    140 வது திருநாமம் – சதுர்வியூ ஹ : வியூகம் என்றால் பிரித்தல் வகுக்கிறது என அர்த்தம். துவாபரயுகம் வரை மொத்த வேதமும் ஒன்றாக இருந்தது. வேதவியாசர் பிறந்த பின் தான் மொத்த வேதத்தையும் பிரித்தார். வேதங்கள் 4 ராம லக்ஷணாதிகள் – 4 ஆக எதிலும் 4. இங்கு வாஸுதேவன் ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன், அநிருத்தன் என 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ததம் ஏகஸ்ய ….என பட்டர் சாதித்தபடி எதற்காக ஒருவரே தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். த்யேய ஆராத்ய … குணஷட் கேண..6 குணங்களாய் தன்னைப் பிரித்துக் கொண்டு ஞான பலம் – சங்கர்ஷணன் ஐஸ்வர்யம் வீர்யம் – ப்ரத்யும்னன் சக்தி தேஜஸ் – அநிருத்தன் என்றும் தலா ஒவ்வொருவரும் 2 குணங்களை கொண்டுள்ளார். அப்போது அநிருத்தனுக்கு ஞானம் கிடையாதா என கேள்வி எழ எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. ஆனால் அந்தந்த 2 குணங்கள் ப்ரதானமாய் மேலோங்கி இருக்கும் என சாதித்தார். திருவேங்கடமுடையான் எளிமையின் நீர்மையின் ஸ்வரூபமாய் திகழ்கிறார் என்றால் ஸ்ரீரங்கநாதனுக்கு எளிமை கிடையாது என்று அர்த்தமில்லை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கேற்ப முக்கியமான 2 குணங்களை எடுத்துக் கொள்கிறார். தத்வியஞ்ச விவஸ்தித… எனது வங்கும் ப்ரமாணத்தின் படி அவரவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம், அவரவர்கள் திருமேனி வர்ணம், அவரவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வாகனங்கள் எல்லாம் வேறாக இருக்கும். இதற்கு சான்றாய் நிறைய ஹோம குண்டங்கள் கொண்டுள்ள யாகசாலையில் நிறைய படங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு படங்களிலும் இந்த 3 பேர்களின் படம் தான் வரையப்பட்டிருக்கும். சங்கம், கதை சக்கரம் என ஒவ்வொருவரும் தரித்துக் கொண்டு இருப்பர். இதை பாஞ்சராத்ர ஆகமத்தில் விவரித்து கூறப்பட்டு இருக்கிறது. முன் குறிப்பட்டது போல் கையில் பிடித்திருக்கும் ஆபரணம், திருமேனி வர்ணம் ஒவ்வொன்றும் மாறி இருக்கும். விசாக வியூக ஸ்தம்பம் என்று ஒன்று உள்ளது. இதே போல் ஸ்ரீரங்கத்திலும் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் நீளமாய் தூணை கட்டி வைத்துள்ளார்கள். அந்த தூணில் கீழே 4 கிளை. நடுவில் 4 கிளை மேலே 4 கிளை – 4.4-4-4 என 16 கிளைகள் இருக்கும். இதை ஒவ்வொரு கிளையாக பிரித்திருப்பதின் நோக்கம் – கீழ் களையிலிருந்து அடுத்த களைக்கு போகும் போது ஒரு தெளிவு பிறக்கும். இப்போது எல்லாம் முழித்துக் கொண்டு இருக்கோம். இந்த தசைக்கு பெயர் ஜாக்ரதா தசை. (விழித்திருக்கும் தசை) மனசு வேலை பார்க்கிறது. கண் காது போன்ற இந்த்ரியங்கள் வேலை பார்க்கிறது. இதற்கு அடுத்த தசை தூங்குவது. தூங்கி விட்டோம் என்றால் ஸ்வப்னம் காணும் நிலை . இதை யே ஸ்வப்னதசை என்கிறார்கள். மனது மட்டும் வேலை பார்க்கும். கண்காது எல்லாம் மூடிக்கொண்டு விடும். ஆனால் உள்ளே இருக்கும் உலகம் தெரிகிறது. மனது வேலை செய்கிறது. இது ௨வது தசை. ஸ்வாபதசை . 3வது தசைக்கு ஸீஸுக்தி என்று பெயர். நல்ல ஆழ் நிலை உறக்கம். மனசு, கண் காது எல்லாம் தூங்கிவிட்டது நன்றாக தூங்கின தசை .3வது .அடுத்து 4வது தசை துரியதசா. துரிய தசா என்பது மயக்க தலை இப்போது மயக்கநிலை அந்த தூரத்தில் ஒன்று உள்ளே வரப்போவது தெரியும். சுமாராகத் தெரியும். இன்னும் அருகில் வந்தால் நேற்று பார்த்தது போல் தோன்றும். அதன் பின் சற்று அருகாமையில் மேலும் வரும் போது இவர் தான் என ஊர்ஜிதமாகிறது. வந்து உட்கார்ந்தவுடன் அங்க அடையாளங்கள் தெரிந்து விட்டது. தள்ளி இருக்கும் போது சுமாராக காட்சி அளித்தது எல்லாம் கிட்டக்க அருகாமையில் வர வர தெளிவாய் தெரியும். அது போல் ப்ரஹ்மத்தை நோக்கி போக போக தெளிவு பிறக்கும். ஆக படிப்படியான எல்லா தசைகளையும் அடைந்து முடிவில் நன்றாக தூங்கிவிட்டால் நன்றாக பெருமானை ஒன்றி அனுபவிக்கிறோம். அதாவது பெருமானுடன் ஒன்றிவிடுகிறோம். இதைத்தான் விசாக வியூக ஸ்தம்பம் என அழைப்பர்

    ———

    தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள்
    ராமர்-சீதை
    லெட்சுமணர்-ஊர்மிளை
    பரதர் – மாண்டவி
    சத்ருக்னன் -ஸ்ருதகீர்த்தி

    வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் நாலு
    ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்
    ருக் – பைலர்
    யஜூர் – ஜைமினி
    சாம – வைசம்பாயன
    அதர்வண – சுமந்து

    மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள்
    பிரம்மசர்யம் (மாணவன்)
    கிருஹஸ்தன் (இல்லறத்தான்)
    வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு)
    சந்யாசம் (துறவு)

    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
    வெண்பா (4 வரிகள் உடையது),
    இரண்டு வரிகளை உடையது குறள்.

    பிரம்மாவின் நாலு மானச
    புத்திரர்கள் யாவர்?
    சநகர்
    சநாதனர்
    சநந்தனர்
    சனத் குமாரர்

    நான்கு வகைப் பூக்கள் யாவை
    கோட்டுப் பூ, கொடிப் பூ,
    நிலப் பூ, நீர்ப் பூ

    க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர் ஜன்மம் இல்லை
    கங்கை
    கோவிந்தன்
    கீதா
    காயத்ரி

    கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள்
    ஹரித்வார்
    அலகாபாத் (பிரயாகை திரிவேணி
    த்ரிவேணி
    சங்கமம்)
    நாசிக்
    உஜ்ஜையினி.

    ரத, கஜ, துரக, பதாதி
    (தேர், யானை, குதிரை,
    காலாட் படைகள்)

    உபநிஷத்தில் கூறப்படும் நாலு
    மஹா வாக்யங்கள்
    அஹம் ப்ரஹ்மாஸ்மி
    தத்வம் அஸி
    ப்ரஹ்ஞானம் ப்ரஹ்ம,
    அயமாத்ம ப்ரஹ்ம

    ———————–———————————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
    ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்