Archive for February, 2025

ஸ்ரீ ஷட் பதீ ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றியது ….

February 27, 2025

ஷட்பதீ ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றியது ….

1.அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்!
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !!

ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2.திவ்யதுனீ மகரந்தே பரிமல பரிபோகஸச்சிதானந்தே !
ஸ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே !!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வைசனையாகக் கொண்டதும், உலகில் துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகின்றேன்.

3.ஸத்யபிபேதாப்கமே நாத!தவாஹம் நமாமகீனஸ்த்வம்!
ஸாமுத்ரோ U தரங்க:க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: !!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான எனக்கும் உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே:தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டிது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4.உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே !
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: !!

கோவர்தன மலையை தூக்கியவரே!இந்திரனின் இளையவரே!அசுரக்கூட்டத்தை அழித்தவரே!சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே!தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையைக் காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5.மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாஷிவதாஸதா வஸுதாம் !
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோஷிஹம் !!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ!ஹே பெருமாளே!

6.தாமேதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த!
பவஜலதிமதன மந்தர பரமம் தரமபநய த்வம் மே !!

தாமோதரனே!குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையத்த முகம் கொண்டவனே!கோவிந்த!ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7.நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ
சரணௌ !
இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது !!

ஹே நாராயண!கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது. 

பதங்கள் ஒவ்வொன்றும் அந்தாதி வடிவில் அமைந்த ஸ்லோகம்-நான்காவது ஸ்லோகம்

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே சங்கர பகவத் பாதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் -காதல்–பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும் –

February 19, 2025

கற்பக காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – 1-9-9-நாலாயி:116/1,2

தேவ லோகத்தில் இந்திரனுடைய காவினில் நிற்கிற கற்பகக் காவை –
சசி பண்ணின அவமதியடியாக -பிடிங்கிக்  கொண்டு போய் பூ லோகத்தில் என்னுடைய
நிலா முற்றத்தில் நாட்டுத் தர வேணும் -என்று ஆசைப் பட்ட அபிமதையான
சத்ய பாமை பிராட்டிக்கு –
நாளை என்னுதல் -பின்னை என்னுதல்-செய்யாதே –
இப்போதே தரக் கடவன் என்று பிடுங்கிக் கொண்டு போரா நிற்க்கச் செய்தே –-அவள் திரு உள்ளம் பிசகும் என்று நாளை என்ன மாட்டான்-தன்னுடைய த்வரையாலே பின்னை என்ன மாட்டான்-பிரதி நியத சங்கல்பம் பாராதே -நீர் ஏவின கார்யம் இப்போதே செய்து தரக் கடவேன் -என்று தன்னிலத்த்லே இந்த்ரன் மதர்தமாக ரஷிக்கக் கடவேன் என்று
பஹூ மானம் பண்ணி ரஷிக்கிற கற்பகக் காவை கொடு போரா நிற்கச் செய்தே

————

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி -4-9-6– நாலாயி:417/1

மைத்துனமாரான  பாண்டவர்களுக்கு அபிமதையான திரௌபதியை குழல் முடிப்பித்து –
சாஹம் கேச க்ரஹம் ப்ராப்தா பரிக்லிஷ்டா சபாகதா -என்கிறபடியே-துச்சாதனன் வந்து மயிரைப் பிடித்து இழுக்க –அன்று முதலா –என்னை இது செய்தவனையும் – இதுக்கு ப்ரவர்த்தகர் ஆனவர்களையும் கொண்டு களப்படுத்தினால் ஒழிய குழல் முடியேன் -என்று இறே இவள் இருந்தது-பதினாலு சம்வத்சரம் காட்டிலே திரிந்த காலத்தோடு மீண்டு –
நாட்டிலே வந்த காலத்தோடு வாசி அற – இவள் விரித்த தலையும் தானுமாய் திரிகிற படியைக் கண்டு – இவள் சங்கல்பத்தின் படியே கார்யம் செய்து கொடுத்து –
இவள் குழல் முடித்த அன்றே -நாம் சரணாகத ரஷகன் என்று பேர் படைப்பது -என்று இறே
ஸ்ரீ கிருஷ்ணன் திரு உள்ளம் இருந்தது-தூது போனதும் சாரத்தியம் பண்ணிற்றும்
பரம ரகஸ்யமான ப்ரபத்தியை உபதேசித்ததும் -எல்லாம் இதுக்காகாவே இறே-இவை எல்லாம் இவள் குழலை முடிப்பிக்கைகாக செய்தவை-முந்துற அர்த்தம் அருளிச் செய்து வைத்து – பின்னை இத்தை அருளிச் செய்வான் என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரை கேட்க-திரௌபதி குழல் விரித்து கிடக்கையாலே செய்வது அறியாமல் மூலையில் கிடந்தாரை முற்றத்தில் இடுவாரைப் போலே பரம ரகஸ்யமான அத்தை வெளி இட்டுக் கொண்டு நின்றான்-பின்னை அர்த்தத்தின் சீர்மையை அனுசந்தியா – கைப்பட்ட மாணிக்கத்தை கடலிலே பொகட்டோம் -என்று பதண் பதண் என்றான் காணும் –என்று இறே அருளிச் செய்தது

—————-

காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் –5-3- நாலாயி:547/4

மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –-தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே-உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே

———

காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – -2-6-நாலாயி:663/4

என்னை அனந்யார்ஹம் ஆக்கின ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே பக்தி உண்டாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு-அநேக ஜன்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆசைப் படா நின்றது என் நெஞ்சு –

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி –1-9-
தூராக் குழி தூற்று எனை நாள் அகன்று இருப்பன் -என்று சம்சாரிகள் சப்தாதி விஷயங்களிலே அனுபவித்தாலும் இந்த்ரியங்களைத் திருப்தி யாக்கப் போகாதாப் போலே
பகவத் அனுபவம் ஒருக்காலும் ஆராது இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாத்திலே
என்னையும் கூடிக் கலசி –

———–

கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்–1-11-நாலாயி:657/2,3-

ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை-கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்னும் ஆசைப் பாட்டோடு-

————

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் –5-2- நாலாயி:689/1

தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்
பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-காதலன் –பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல- இவ் வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

————-

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – -5-4-நாலாயி:-691/2

அஹிதங்களை மேல் மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும்-பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு தனது சர்வஸ்தையும் கொடுத்து அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

————-

ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/3

என் தூத வாக்கியம் கொண்டு வந்தவளோடே நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்-உன்னை ஆசைப் பட்டு வை வர்ண்யத்தை உடைய நான் இருக்க –மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ-என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே நல்ல போக ரஸங்களை நன்றாக அனுபவித்தாய்-

—————-

வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2

வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து

———————

புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – 19-நாலாயி:770/4

சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ-சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ-அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைக ரசரான நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –

————

கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் – 67-நாலாயி:818/2

பரம பதத்தை லபித்து-மேல் -வீடிலாத காதல் இன்பம் -கண்டு நாளும் எய்துவீர் –
ப்ராப்ய பலமாய் -யாவதாத்மபாவி விச்சேத சங்கை யன்றியே -ஸ்வரூப அநுபந்தியாய்-
பகவத் அனுபவ ஜனித பக்தி காரித கைங்கர்ய சுகத்தை சாஷாத் கரித்து -யாவதாத்மபாவி லபிக்க வேண்டி இருப்பீர் –

————–

சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – 78-நாலாயி:829/1

சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர்
ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை -பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் –ஸ்ம்ரதிலம்பே சர்வ கரந்தீநாம் விபர மோஷ –என்கிற அளவைச் சொல்லுகிறது–

————

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே —83- நாலாயி:834/4

திருஅஷ்டாஷரம் -த்வயம் – எட்டும் இரண்டும் கூட்டு –பத்தாய் -அத்தை பக்தி -என்கிறது
பகவத் பக்தியிலே தமக்கு உள்ள கௌரவாதி அதிசயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார் –கயிறு -என்று பந்தகம் என்றபடி –மனம் தனைக் கட்டி –சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரதானமான மனசை விஷயாந்தரங்களில் போகாதபடி பந்தித்து –வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே- விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த  ப்ரேமம் சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே தானே சுகமாய் இருக்கும் –

——–

விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து – நாலாயி:853/1

பிரயோஜனாந்தரன்களைப் பற்றி நெகிழாத –-அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு -திருவடிகளில் பண்ணின பிரேமத்தாலே – விள்கை விள்ளாமை விரும்பி -என்னக் கடவது இறே-அந்த பிரேமத்தால் உஜ்வலமான திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரிதர் உடைய சந்நிதியிலே அலரும் அது இறே திருவடித்-தாமரைகள் –இத்தால் – நான் பிரயோஜனாந்த பரனாய் -அசித் சம்பந்தம் அனுவர்த்திக்கிறதோ – தேவரீர் ஆஸ்ரித வத்ஸலர் அல்லாமே அனுவர்த்திக்கிறதோ -என்கை –

———–

கள்ளமே காதல்செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே – திரு மாலை-24–-நாலாயி:895/4

உனக்கு ப்ரக்ருதி விஷயத்தில் பண்ணிப் போந்த வாசனை இங்கும் அனுவர்த்தித்து போந்த இத்தனை ஒழிய இவ் விஷயத்துக்கு ச்த்ருசமாய் ஸ்நேஹித்தாய் அல்லையே – விஷயாந்தரங்களில் பண்ணிப் போந்ததும் பலபக்தி யாகையாலே இங்கும் பலபக்தி பண்ணிற்று-விஷயாந்தரகளோபாதியாக இது தன்னையும் நினைத்தாய் இத்தனை போக்கி
இவ் விஷயத்துக்கு அனுரூபம் அன்று இறே உன்னுடைய பிரேமம் -என்கிறார் –

————–

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே – நாலாயி:897/3

காதல் அடியாக வரும் அன்பு இதற்கு முன்பு நெஞ்சில் ஸ்பர்சித்தது இல்லை –-அதாகிறது –
சங்காத் சஜ்ஞாயதே காம -என்கிற ப்ரேமம் – புறம்பே ஒரு விஷயத்தில் உண்டாகில் இறே அத்தை அங்கு நின்றும் மீட்டுப் போந்து தேவரீர் பக்கலிலே ஆக்க வேண்டுவது –முன்பு ஸ்திரீ பதார்த்தங்களிலே பண்ணிப் போந்த ப்ரேமம் அவர்கள் பக்கல் அர்த்தாதிகளை அபஹரிக்கைக்காக வாய்த்தது அல்லது – அவர்களே உத்தேச்யம் என்னும் பிரேமம் இல்லை –ஸ்மாபாவசோ வஞ்சன பர -என்னக் கடவது இறே – பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததனய ப்த்ர் மாத்ர் பர்த்ய வர்க்கே சடமதி ரூப யாதியோர்த்த த்ர்ஷ்ணாம் தம தமசேஷ்ட மவேஹி நாச்ய பக்தி   -என்னக் கடவது இறே –

————-

தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

எல்லா மேன்மையும் சொன்னாலும் தகுதியான ஆழ்வார் எல்லாம் சொன்னாலும் அங்குத்தை பிரபாவத்தை-எல்லை காண ஒண்ணாத படி இறே ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –இவர் திருவடிகளில் உண்டான பக்தி யன்றோ இவருக்கு அடியேன் ஆனதில் உண்டான பிரயோஜகம் –(நான் -அடிமை யானதால் பலன் பக்தி -அடியேன் ஆனதால் ருசி ஏற்பட்டது –ருசி வந்தால் தானே அடிமை ஆவோம் )-அடிமையாக வேணும் என்று எனக்குப் பிறந்த ருசி – அடிமையாகிற பிரயோஜனத்தொடே வ்யாப்தமாய் இருக்கும்
பகவத் விஷயத்தில் ருசி இவர்க்கு சரீர விச்லேஷம் பிறந்தால் அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே-சென்றால் பெறக் கடவதே இறே இருப்பது
ஆழ்வார் விஷயத்தில் பிறந்த ருசி அங்கன் அன்றிக்கே இச் சரீரத்தோடு ஆழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமைகளும்-செய்யலாம் படி பண்ணும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகே இ றே பேறு ஆய்த்து
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பம் இல்லை என்கிறது
அன்றே -என்றது ஆமே என்றபடி -அன்று எனக் கிளவியாம் எனத் தகுமே –

அவருக்கு அடிமை புக்கத்தால் உண்டான ஆதரம்–அடிமையே பிரயோஜனமாக யுடையதன்றோ–முற்பட அடிமை புக்கு –அநந்தரம் ஆதரம் நடந்து– பின்பு அடிமை செய்யுமதுவே அவருக்கு பிரத்யுபகாரம்-
முற்பட சேஷ பூதனாய் -பின்பு ப்ரேமம் நடந்து -ப்ரேம அனுரூபமான கிஞ்சித் காரமும் நடக்க வேணும்-
ஆசார்யபவ்யதையும் -ஆசார்ய ப்ரேமமும்– ஆசார்ய கிஞ்சித் காரமும் -இம்மூன்றும் அபேஷிதம் இ றே சிஷ்யனுக்கு
அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து-
அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து-அடிமை பிரயோஜனம் என்னும் இடம் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே கற்றார்-அந்த வழுவிலா வடிமை செய்கிறதில் காட்டில் இது ஆட்புக்க காதல் அடிமைப் பயன் -வன்றோ உறுவது –

—————–

காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் –1-6-3– நாலாயி:1000/2

சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து–இப்படி த்ரவ்யார்ஜனம் பண்ணினால் அது கொண்டு கொள்ளும் கார்யத்தை சொல்லுகிறது –விரி குழலாரில் பட்டு (திருமாலை) -என்கிறபடியே மயிர் பேணாதே இருக்கில் அதிலே ஈடுபடுபவர்-மயிர் சுழன்று முடித்து இருக்கில் அதிலே ஈடுபடுபவர் ( சுரி குழல்–விரி குழல் )-ஏதேனுமாக அவர்கள் இருந்த படியே அமையும் ஆயிற்று இவர் ஈடுபடுகைக்கு-என்னையும் உன் செய்கை நைவிக்கும் -என்னுமா போலே –( இங்கிதம் –தாவகம் -கூரத்தாழ்வான் )ந்ரு பசு -என்னுமா போலே –கண்ணுக்கு தோற்றின விஷயங்களில்-இவை சாஸ்திரங்கள் நிஷேதித்த விடம் என்று மீண்டு அறிவது இல்லை-தோற்றின படி மூலை யடியே திரிந்த இத்தனை –

——–

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை தான் கற்று வல்லார்கள் – நாலாயி:1007/3

திரு நைமிசாரணியத்துள் வந்து சந்நிஹிதன் ஆன ஸ்வாமியை ஹிருதயத்தில் வைத்து –-பகவத் விஷயத்தில் ஆசை  மிகுந்து வருகிற ஆழ்வார் அருளிச் செய்த சப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் – இருந்தவனுக்கு ஒதுங்க நிழல் பண்ணிக் கொடுத்தபடி ஆயிற்று –சிந்தையுள் வைத்து -இருந்தவர் -நைமிசாரண்ய எந்தை -ஒதுங்க இடம் -வெப்பம் தவிர்த்து காதலே நிழல் அவனுக்கு-வா ஸூ தேவாய தருச் சாயா
கோவர்த்தனம் எடுத்து நிழல் கொடுத்தவன்-நம்மிடம் நிழல் தேட கொடுக்க வேண்டாமோ

———–

காசை ஆடை மூடி ஓடி காதல்செய் தானவன் ஊர் – 2-2-1–நாலாயி:1058/1

காஷாய வஸ்த்ரத்தை இட்டு-உடம்பு எங்கும்  மறையும்படி மூடி ராம பயத்தாலே பயந்து நடந்து போய் ஜநநீ என்று பாராதே – வீத ராக வேஷத்தைத் தரித்து வைத்து ராகத்தைப் பண்ணின –பையலுடைய ஊரானது

——–

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் -2-2-2- நாலாயி:1059/1

நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் பக்கலில்-ஜநநீ என்று பாராதே அப்ராப்தமான சங்கத்தைப் பண்ணினான் ஆயிற்று –அதுக்கடி ஆசூர பிரக்ருதியாகைலே -யாயிற்று

———

பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் -3-7-7 நாலாயி:1214/2

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்-போக நினைத்தால் பழி இட்டுப் போக வேணுமோ –-அடியோமான எங்களை தாயும் தமப்பனும் என்று பேரிட்டு இரங்கிற்றிலள் – நியாம்யரை நியாமகர் என்று பேரிட்டுப் போக வேணுமோ –பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – இங்கே இருவரைக் கை விட்டால் அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே நம்மை விடுகைக்கு அடி அங்கு அனுபாவ்ய விஷயத்தின் உடைய பெருமை யாகாதே-

————-

இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் –3-8-8– நாலாயி:1225/2

விளையாட்டுக்கு அவ்வருகு கார்யம் கொள்ள ஒண்ணாதபடி பருவத்தை உடையவர்கள்
யௌவனம் ஊசாடாத பருவம் அவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட அவர்களுக்கு பிரேம சாகரத்தை விளைத்த சர்வேஸ்வரன் உடைய வாசஸ் ஸ்தானம்-

———

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – நாலாயி:1278/1

த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று அருளிச் செய்த படி-தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும் மிடுக்கும் திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்-சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப- என்னும்படி அவர்கள் ஸ்திரீகள் உடைய மங்கள ஸூத்ரமும்

———–

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் – 4-8-9-நாலாயி:1326/1

கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக்  கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன்

——————-

பெருகு காதல் அடியேன் உள்ளம் – -5-2-9-நாலாயி:1366/1

நாள் செல்ல நாள் செல்ல ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது கூடலூரே––( உருக்கவே புகுந்தார் )

————-

காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு – 5-3-4–நாலாயி:1371/2

மூங்கில் மிக்கு இருந்துள்ள திருவேங்கடம் ஆகிய மலையை உடையவனே –தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண  வர்த்தியான பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –

———–

வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக – —5-4-5–நாலாயி:1382/1

பிராட்டியோடு சக்கரவர்த்தி திருமகன் அனுபவிக்க தானும் மண்டோதரி கூட அனுபவிக்கை அன்றிக்கே-வழி கெட அனுபவிப்பதாகப் பாரித்த ராவணன் ஆனவன் சித்ர வதத்தாலே  வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க-

——–

உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – 5-8-2–நாலாயி:1419/2

உகந்து– அதாவது சேஷ பூதனுக்கு கைங்கர்யத்தை உண்டாக்குக்கையும்-அவனுக்கு பிராப்தம் என்று நினைத்து இருக்கையும் அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கையும்
பிரத்யுபகாரம் தேடித் தடுமாற வேண்டாமையும் உகப்பை உபபாதிக்கிறது மேல் –காதலாதரம் – இது புனர் உக்தம் அன்றோ என்னில் – அவ்யாப்தி அதிவ்யாப்தி ரஹீதமான லஷண வாக்யத்தில் புனருக்தி தோஷமாவது-ஆற்றாமையும் ஆதரமும் சொல்லுவிக்கச் சொல்லுகிறது ஆகையாலே தட்டில்லை – கிஞ்ச அபிசந்தி பேதத்தாலே புனர் உக்தமும் அன்று –பல காலும் சொல்லுகிறதுக்கு-காதலின் உடைய கார்யம் இறே ஆதரம் ஆகிறது-சங்காத் சஞ்ஜாயதே காம -என்கிறபடியே கர்ம நிபந்தனமாக சிலவர்க்கு வருமத்தை இறே
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சொல்லுகிறது-பிராட்டிக்கு பெருமாளைக் கண்ட போதே வில்லை முறித்துக் கைப் பிடிக்க வல்லவரே -என்று சங்கம் பிறந்தது பின்பு அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத தசை -காமம்-அவருக்கு பித்ரு க்ருத தாரம் -என்று பிறந்தது சங்கம்-குணேண ரூபேண விலாஸ சேஷ்டிதை-என்கிறபடியே குண ரூப சேஷ்டிதங்களை பற்றப் பிறந்தது காமம்-கடலினும் பெருக கடல் குளப்படியுமாம் படி பெருகுகிற சமயத்திலே
இரண்டு ஆஸ்ரயமும் கடல் போலே காணும்-பெருகுகை யாவது  – மர்யாதா பங்கம் பிறக்கை இறே அதாவது தத் தஸ்ய -என்கிற நிலை குலைந்து வேண் யுத் க்ரத நத்திலே ஒருப்படுகையும் – அவாக்ய அநாதர-என்னும் நிலை கழிந்து அவகாஹ்ய அர்ணவம்  ஸ்வப்ஸ்யே-என்னும்படி யாகையும்-

—————

காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – –5-8-7-நாலாயி:1424/2-

காதல் தான் வடிவு கொண்டது என்னும் படியான புத்திரன்-நரகத்திலேயோ -கர்ப்பஸ்தனோ-எங்கே புக்கான் -என்று அறிகிறிலேன் –சர்வ சக்தியான நீ ஆராய்ந்து தர வேணும்-வித்யா க்ரஹண தாரணத்திலே கண்டான் இறே சக்தி மத்தையை-காதல் என் மகன் என்ற இவனை இறே-கோதில் வாய்மையினான் -என்கிறது-அதுக்கு கருத்து என் என்னில் -குரு வசன மலங்க நீயம்-என்கிற கிருஷ்ண அபிப்ராயத்தாலே – இருவரும் பிரிந்து இருக்கிற அளவில் -த்ருஷ்டா சீதா -என்கிற திருவடி அளவில் சொல்லும் வார்த்தையை இறே இவன் அளவில் சொல்லுகிறது –(பிரயோஜனந்த பரராயும் அத்தையே கண்ணன் இடம் கேட்டதால் கோதில் வாய்மையினான் என்றுமாம் )

————–

காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப – –5-8-8-நாலாயி:1425/2

பிள்ளைகள் பக்கலில்  ஸ்நிக்த்தையாய் போரும்-செய்வது எல்லாம் செய்து பத்து மாசம் வயிற்றிலே தரித்துப் பெற்ற அளவிலே காணப் பெறுகிறிலள்-இப்படி இருப்பதொரு தேவதையை இதுக்கு முன்பு நான் கண்டு அறியேன் -யமனும் உடல் கிடக்க இறே கொண்டு போவது(இங்கு சரீரத்தோடு -பஸ்யதோ ஹரத்வம் )
பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்னே-பார்த்துக் கொண்டு நின்று கொண்டு போவாரைப் போலே வடிவோடே கொண்டு போய் ஒளியா நின்றது
கிருஷ்ணன் உடைய வடிவு அழகைக் காண வேணும் என்று நாச்சிமார் செய்தது இறே –
(சூட்டு நன் மாலைகள் -இத்யாதிப்படி –திரு அவதரிக்க -காண ஆசைப்பட்ட பிராட்டிமார் கார்யம் அன்றோ -)

———–

தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் – நாலாயி:1443/1
பிராட்டியோடு கூடப் போகை-நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து –
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடி யால்–பெரிய திருமடலில்
பெருமாளைப் பற்றாசாகக் கொண்டு பிராட்டி என்று அவள் தனக்கு இருக்குமா போலே

——–

காதல்செய்து இளையவர் கலவி தரும் –6-1-8- நாலாயி:1455/1

இளையவர் காதலைப் பண்ணிக் கொண்டு ஸ்திரீகள் ஆனவர்கள் சங்கத்தை உடையராய்க் கொண்டு தருகிற துக்காத்மகமான ஸம்ஸ்லேஷத்துக்கு ஹேதுவாய் இருக்கிற கர்மத்தை அனுசந்திக்க  அநுசந்திக்க எனக்கு பயமாகா நின்றது –

———-

காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் -6-1-9– நாலாயி:1456/2

மரண சமயத்தில் படும் வியசனம் பின்பு நரகானுபவம் பண்ணப்படும் வியசனம்
பஞ்சாக்னி வித்யையில் சொல்லுகிறபடியே  கர்ப்ப ரூபத்தாலே படக்  கடவ வியசனம்
இவற்றை அனுசந்தித்து ஜன்மாதிகளில் ஆசை பண்ணாதே இவற்றைத் தவிர்த்து அருளும் தேவரீர் திருவடிகளை வந்து கிட்டினேன்

——–

கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய –7-3-6- நாலாயி:1573/3

கை தொட்டு நெருக்குகையால் வரும் செவ்விக் கேடு இன்றிக்கே அக் கரும்பின் உடைய ரசமாய் யுள்ளவனை –இதுக்கு முன்பு ஒதப் போகாதவன்-அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –

————

கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே – 7-3-8-நாலாயி:1575/4

சம்சாரத்தில் முமுஷூக்கள் உண்டு -தம் பக்கல் ருசி உடையராய் இருப்பார் அவர்களுக்கு கண்ட போதே அனுபவிக்கலாம் படியாய் பக்வ பலமாய் உள்ளவனை –அவை ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –

————-

புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும் —–7-5-4- நாலாயி:1591/3

குட்டிக்கு இரை தேடித் போகிற புள்ளானது தனியே போகாதே காதலை இட்டு நிரூபிக்க வேண்டும் பெடையோடே போய்-அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –   சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை- அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து பிரளயம் என்று பாராதே ஜகத் ரஷணத்துக்காக மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –

———-

கண்ண மங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த – 7-10-10-

ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை சம்சாரத்திலே திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –

நல் விரை மலர் கோதிய மது கரம் குலவிய மலர் மகள் காதல் செய் கண புர மடிகள் தமிடமே –8-7-4-

மிக்க பரிமளத்தை உடைத்தான பூவிலே மது பானம் பண்ணின வண்டுகளானவை
தம்தாம் செருக்காலே அவற்றைக் கோதி  – அது -ஆத்த சாரமான வாறே -அத்தைவிட்டுப் போந்து கொண்டாடி சூழ பரவா நின்றுள்ள பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார்
விரும்பி வர்த்திக்கிற தேசம் – புனிதரான அடிகளுக்கு ஸ்தானம் –

————-

காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து – நாலாயி:1863/2

ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும்
அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –

————

கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – 10-9-1-நாலாயி:1932/3

இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டு நீர் காதலிக்கக் கடவ இத்தை அன்றோ
இவள் காதலிக்கிறது –(இவை எல்லாம் உமக்காக அன்றோ – உன்னைப் பிரிந்து -சருகாய் உலர இருக்கிறாளே ) பிராப்த விஷயத்தில் காதல் அன்றோ -என்று இராதே இத்தைப் பழியாக சொல்லுகிற ஊரில் ஸ்திரீகள் உடைய துணிவையும் புத்தி பண்ணாதே –

————-

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2

என் காதல்–தம்முடைய காதல் போல் அன்று என்று சொல்லுங்கோள்- மின்னிலங்கு திருவுருவு என்று -உடம்பு குறி அழியாத படி அன்றோ நீர் காதல் பண்ணிற்று – பொங்கார் மென்னிளம் கொங்கை பொன்னே பூக்கும்படி அன்றோ அவள் காதல் பண்ணிற்று(17-பாசுரம்) என்னுங்கோள் –யா ப்ரீதிர் அவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயினி (ஸ்ரீ விஷ்ணு புராணம் )- என்கிறபடியே நாட்டார் காதல் போல் அன்று – முக்தர் காதல் போல் அன்று காணும் இவளுடைய காதல்-ஞானம் பிறந்தவாறே த்யாஜ்யமான காதல் இறே சம்சாரிகளது –ஸூக ஹேதுவான காதல் இறே முக்தரது –(‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.)(மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என் காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை, நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.)

————

காண கழி காதல் கை மிக்கு காட்டினால் – 56-நாலாயி:2237/1

சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால் நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ – கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் –
ஸாபராதன் என்று மீளவும் போகாது

—————

மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப் பெண் அகலம் காதல் பெரிது – நாலாயி:2335/4

அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை உடைத்தான பூமியைக் கொண்டு ஏறினான் ஆய்த்து –பெரிய பிராட்டியார் விரும்பும்படியான மார்வை உடையவன் –ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம் சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம்  -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே பிச்சேறி இருக்கும் படி –-தன்னை யாசைப் படுவார் விடாயிலும்-மிக்கு இருப்பதே தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய்-அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-அவள் பக்கல் காதலாலே இறே அவள் அபிமானித்த பூமியை எடுத்தது –

——–

மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை – நாலாயி:-2373/2

அவன் மகன் தன் காதல் மகனை சிறை செய்தான் ஆய்த்து-புத்ரனில் காட்டில் பௌத்ரன் பக்கலிலே ச்நேஹம் உண்டு இறே ஸ்நிக்தனுமாய்- பௌத்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே கொண்டு புக்கு வைத்த வாணன் உடைய –

—————

அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழ காதல் பூண்டேன் தொழில் -84- நாலாயி:2465/4

ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் – ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –

———

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து -13– நாலாயி:2490/3

துக்கத்தை வளர்ப்பதான காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற குளிர்ந்த வாடையைத் துணித்து-துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி-

————-

உள பெரும் காதலின் நீளியவாய் உள ஓங்கு முந்நீர் –59 நாலாயி:2536/2

தோளில் இட்ட மாலை – அதுக்கு என் உள்ளத்திலே உண்டாய் – சர்வாதிகத்வத்தையும் விளாக்குலை கொண்ட-காதலினும் பெருத்து இருப்பனவாய் உள்ளது –அழகிய குளிர்ந்த திருத்துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன-காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)

———-

கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – 63– நாலாயி:2540/3,4

கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு-தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து-தனக்கே சேஷமான என்னோடே கூட-க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

———

 கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – நாலாயி:2574/4

கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்–காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு-அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ-பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்–

——————

உருகி உக்க நேரிய காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத-2- – நாலாயி:2579/3,4

அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால் அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்-அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய் ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்-அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது-த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

————-

வேகவதி என்றுரைக்கும் –கன்னி-தன் இன் உயிராம் காதலனை காணாது – நாலாயி:2742/3

பிராட்டியைப் பேசின வாயாலே பின்னையும் பேசலாவாள் ஒருத்தி-பிராட்டியைப் போலே
சமா த்வாதச தத் ராஹம் ராகவச்ய நிவேசனே புஞ்ஞ்ஜா நாமா நுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ –சுந்தர 33-17-என்றால் – போலே அனுபவித்தவள் அல்லள்  –

——–

மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய் – நாலாயி:2749/2

எம்பெருமான் உடைய ச்நேஹத்தை ஒரு வடிவாக வகுத்தது -என்னும்படி இருக்கும்
பேரனான அநிருத்த ஆழ்வான்-பெண்கள் களவு காண்பார்கள் -என்று காவலோடு கண் வளர்ந்து அருளுகிறவனைப் பீட்கன்று போலே    படுக்கையோடு கொடு போந்த படி –உஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி இவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –

————-

கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யா திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே -12- நாலாயி:2802/3,4

நசம்சயச்து தத் பக்த பரிசர்ய ரதாத்மனாம் -என்றும் – குருரேவ பரப்ரம்ம -என்றும் –
நீக்கமில்லா யடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்களுக்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – என்றும் சொல்லுகிறபடியே -பிராப்யம் என்று அத்யவசித்து ஆஸ்ரயிக்கும் –கடம் -பிராப்யம்-கொள்கை -அத்யவசிக்கை –இப்படிப் பட்ட நிரவதிக சம்பத்தை உடையராய் கொண்டு -அதில் உபகார ச்ம்ருதியால் – அத்தையே மனனம் கொண்டு இருக்கிற ஞானாதிகர் –த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரன்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலின –என்னும்படியானவர்களுக்கு ஒழிய-ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திருவடிகளுக்கு உறைவிடமான திரு உள்ளத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றும் திருவாளரை ஒழிய மற்றவரை விரும்பாத உறுதிப்பாடு வாய்ந்த ஞாநியரையே தாம் விரும்புவதாக கூறுகிறார் –

——–

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் – நாலாயி:2805/1

வாடாதே -சங்குசிதமாகாதே இருக்கிற பக்தி -பரி பூர்ண பக்தி-என்றபடி -புநர் விஸ்லேஷ பீருத்வா பரமாபக்தி ருச்யதே -என்னும்படியான பக்தி-அவ்யபிசாரினியான பக்தி-அவர் பட்ட-சுழி தான் சங்குசிதம் அன்று காணும்-பரி பூரணையான பக்தி கரை புரண்டவோ பாதி
அதினுடைய மகா பிரவாகத்தின் நடுவே பிறந்தது ஆகையாலே -மகா வேக கர்த்தத்தோடு கூடி – அதி விஸ்தாரமாய் இருக்கிற சுழியிலே அகப்பட்டு -ஆழம் கால் படுகையாலே –காதலின் பெரும் சுழிப்புஎன்னவே பெருக்கு எடுத்தோடும் பெரு வெள்ளமாகக் காதல் உருவகம்-செய்யப் பட்டமை தெரிகிறது –வெள்ளத்தில் பெரும் சுழிப்பில் அகப்பட்டவர் -ஒன்றும் தோன்றாது தப்ப வழி இன்றி -தத்தளிப்பது போல் –பெரியாழ்வாரும் -காதல் வெள்ளப் பெரும் சுழியில் அகப்பட்டு ஒன்றும் பாராது தப்ப வழி இன்றி தத்தளிக்கிறார் -அங்கனம் தத்தளித்தல் ஆவது -திரு மாலின் மீது அளவு கடந்த ப்ரேமம் மீதூர்ந்து அதி ஸ்நேக பாபசங்கீ-அளவு கடந்த ச்நேஹம் தீங்கு நேருமா என்னும் சங்கையை உண்டு பண்ணும் என்றபடி தமக்கு புலனாய் -இவ் உலகில் தோன்றிக் காட்சி தரும் அவனுடைய திரு மேனி அழகு -மென்மை –என்னும் இவற்றில் ஈடுபாடாகிய சுழியில் ஆழ்ந்து -யாராலே இவற்றுக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று தீங்கை சங்கித்து-எவராலும் தீங்கு இழைக்க ஒண்ணாத சூரத் தன்மை முதலிய வற்றைப் பாராது சங்கையில் இருந்து தப்ப வழி இன்றி அலமருதலே யாம் –அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் என்க-

————-

பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா – நாலாயி:2818/2

பஞ்சிய மெல்லடி பின்னைப் பின்னை -பெரிய திரு மொழி – 3-4 4- –என்கிறபடியே -பஞ்சு போலே சுகுமாரமான திருவடிகளை உடையாளான -அன்றிக்கே-அத்யந்த-புஷ்பகாச சுகுமாரி ஆகையாலே -கடினமான பூமியிலே -திருவடிகளை வைத்தால் வாடும் என்று நினைத்து –பஞ்சு மேல் அடியை இட்டு திரியும்படியான திருவடிகளை உடையாள்-இப்படிப்-பட்ட சௌகுமார்யத்தை உடையளான நப்பின்னை பிராட்டிக்கு-என் போல்வார் எல்லார்-உடையவும் ஈஸ்வர நிக்ரஹா ஹேதுவான அபராதங்களை -அவனாலே பொறுப்பித்து நம்மை ஆஸ்ரயிப்பைக்காக அவனோடு அநேக அவதாரங்களை பண்ணினாள் -நப்பின்னை பிராட்டியைப் பார்த்து – அவள் திறத்திலே அதி வ்யாமுக்தனாய் கொண்டு -அவளோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தங்களான
சப்த வ்ர்ஷபங்களையும் -ஒருக்காலே ஊட்டியாக தழுவி -சம்ஹரித்தான் என்று புராணங்களிலே பிரதிபாதிகமான இந்த அபதாநத்தைக் கொண்டு -காதலன் -என்று அருளிச் செய்கிறார் – தள வெழ் முறுவல் பின்னைக்காய்-வல்லானாயர் தலைவனாய் – இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் – என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம்-பெரிய திரு மொழி – 3-7 7- – என்றும்
திரு மங்கை மன்னன் அருளிய திரு மொழியை அடி ஒற்றிய படி –தன் வடிவு அழகாலே கண்ணனை துவக்கி -நம் குற்றம் அவன் கண்ணில் படாதவாறு செய்து –குற்றவாளராகிய நாம் சற்றும் கூசாது -கண்ணனைப் பற்றும் படி செய்து தன் அபிமானத்தை நம் மீது-காட்டலின் –நங்கள் பின்னை-என்கிறார்-விண்ணோர்கள் தூபம் தரா நிற்க ஓர் மாயையினால் அடலாயர் தம்கொம்பினைக் காதலித்து வல்லானாயர் தலைவனாய் வந்ததும் -முறையே இதுகாறும் பேசப்பட்டன –

————-

ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி – நாலாயி:-2832/1

அதி ஹேயமாய் இருக்கிற தேஹத்தின் உடைய ஹேயதை தெரியாதபடி -ஸ்ரக் வஸ்த்ர ஆபரண- ஆதிகளாலே அலங்கரித்துக் கொண்டு – ஆபா தரமனியைகளான தருணீ ஜனங்கள் உடைய –ஆய்தல்-நெரிதல் – இழை-ஆபரணம்-இழையார் -ஸ்திரீகள் -அகவாயில் தோஷம் ஒன்றும் தோற்றாதபடி -கைப் பாணி இட்டால் போலே –காணும் இவர்கள் அலங்கரித்து கொண்டு இருப்பது –மாம்சா சர்ன்மயமான ஸ்தனங்களிலே சக்தனாய் -அவற்றின் தோஷத்தை தெரிய மாட்டாதே –போக்யதா புத்தியைப் பண்ணி -அவற்றுக்கு அவ்வருகே போக அசக்தனாய் -த்ர்ஷ்டார்த்தனானவன் – தண்ணீர் பந்தலிலே விழுந்து கிடக்குமா போலே அவற்றிலே தான் நித்ய வாசம் பண்ணும்படியான –அந்த விஷயம் போலே அதி ஹேயமான வ்யாமோஹம் என்கிற அள்ளல் தரையிலே மக்நனாய்-வாக்குக்கு நிலம் ஆகாதபடி -கை கழிந்த காதல் -நசித்துப் போந்த -என் ஆவியை -கீழே லவ்கிகர் எல்லாரையும் உத்தரித்தபடி அருளிச் செய்தீர் 

————

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் ––1-9-4– நாலாயி:-2990/1

உடனே அமர வேண்டும்படியான காதலையுடைய ஸ்ரீ பிராட்டிமார் –
அகலகில்லேன் இறையும் என்று ஆயிற்று இவர்கள் இருப்பது -அவர்கள் யார் என்னில்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் – ந கச்சின் ந அபராத்யதி –என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய் பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி-அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே
குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி-திருமகள் அவன் ஐஸ்வர்யம்
மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-

————-

நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த –2-1-9- நாலாயி:-3017/1

‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல் இருக்கிற ப்ரேம -காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்து வற்றாக -முதல் வற்றும் படி -உலர்த்த,

————

ஆராத காதல் குருகூர் சடகோபன் – நாலாயி:–2-1-11-3019-/2

இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.-காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார். ‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. -(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே – இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

———–

தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே –3-1-9- நாலாயி:-3129/2

சதுர் தந்தி என்னுமா போலே காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் -சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது
மெய்யானை -மெய்ய மலையானை சங்கு ஏந்தும் கையானை -ஆர்த்தமாக சக்கரம் அங்கு கொள்ள வேண்டும் —அஞ்சலிக்கும் கை -ஆழ்வார்கள் ஆச்சார்யர்களை இப்படியே சேவிக்கிறோமே இன்றும் –அளிப்பான் -இதன் கையிலே பூ செவ்வி அழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுகைகாக-

———-

காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே –3-9-8- நாலாயி:3216/3,4

பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி -இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு.-அவன் தாள் இணைக் கீழ்ப் புகும் காதலன்
இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணியிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்.

——————

கண்ணி எனது உயிர் காதல் கனக சோதி முடி முதலா –4-3-5- நாலாயி:-3257/1

எனது உயிர் கண்ணி –‘நான் ‘என்னது’ என்று இருக்கிறதை அன்றோ அவன் தனக்கு மாலையாகக் கொண்டது?’ என்பார்,‘எனது உயிர் கண்ணி’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மார்வத்து மாலை’ என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை தக்கது;
அஃது ஒழிய என் உயிரை அன்றோ தனக்கு மாலையாகக் கொண்டான்?’ என்பார்,
‘கண்ணி எனது உயிர்’ என்கிறார் என்னலுமாம்.
கனகம் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் காதல் – விரும்பத் தக்கதாய் ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி முதலான எண் இறந்து பல வகைப்பட்ட திரு ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாம்.
‘இவருடைய காதல் அவனுக்கு ஆபரணமாவது என்?’ என்னில், இவருடைய அன்பிற்குத் தான் விஷயமாகப் பெற்ற இதனையே,-தனக்குப் பல ஆபரணங்கள் சாத்தினால் பிறக்கும் புகர் உண்டாக அவன் நினைத்திருக்கையாலே, அதனை நோக்கிச் சொல்லுகிறார்.
குணம் த்ரவ்யம் ஆகுமா -இவற்றைக் கொண்டு பெரும் உகப்பு இவர் அபி நிவேசம் கண்டு அடைகிறார் -என்றபடி-அத்ருஷ்ட ரூபமான மானஸ அனுபவம் காதல் ப்ரேமமே வேண்டுவது – பூவை –பூம் புட்டில் யாவையும் திருமால் திரு நாமங்களை போலே –அதே பிரியம் இவள் திருநாமத்தால் அடைகிறாள் -என்றபடி போலே-

——

கரை கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன்4-3-9- நாலாயி:3261/2

அனுபவிக்கப்படும் பொருள் பேசத் தட்டு என்?’ என்ன, ‘உன் கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.-உரைக்க வல்லன் அல்லேன்
உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டு போமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகின்றிலேன்.-‘எல்லாம் பேச ஒண்ணாதாகில், பேசக்கூடிய கூற்றினைப் பேசினாலோ?’ என்னில், உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் நான் என்று செல்வன் – உன்னுடைய முடிவில்லாத காதல் குணத்தால் வந்த கீர்த்திக் கடலினுடைய கரையிலே தான் என்னாலே செல்லப் போமோ?’‘இப்படிக் கரை அருகும் செல்ல அரிய விஷயத்தில் நீர் பேசுவதாக முயற்சி செய்வான் என்?’ என்னில்,-காதல் மையல் ஏறினேன்
‘என்னுடைய ஆசையாலே மிக்க கலகத்தை உடையவன் ஆனேன்; பிச்சு ஏறினாரை ‘நீர் இப்படிச் செய்வான் என்?’ என்னக் கடவதோ?-இவ் விஷயத்தில் மயங்குவான் என்? மயங்குவார்க்கு ஒரு பற்றுக்கோடு வேண்டாவோ?’ என்ன,
‘நித்தியசூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே செய்தேன்,’ என்கிறார் மேல் :
நித்தியசூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வேற்றுமை இன்றி அன்றோ இவ்விஷயம் இருப்பது? முற்றறிவினனாய் எல்லாவற்றையும் முடிக்கவல்ல ஆற்றலையுடையனான தான் அறியப் புக்காலும் தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் அன்றோ இருப்பது? தன்னை அறியப் புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும்.

————

மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே4-4-10- நாலாயி:-3273/4

மயக்கத்தைச் செய்யக் கூடியதான பெரிய காதலை யுடைய என்னுடைய இளம் பெண்ணுக்கு,-என் செய்கேன் – இவள் மயங்காதபடி செய்யவோ? நான் இதனைப் பொறுத்திருக்கவோ?-வல் வினையேனே – இவளை இப்படிக் காணும்படி மஹா பாவத்தைப் பண்ணினேன்! ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவு பட்டாற்போலே காணும் திருத் தாயார் திரு வுள்ளமும் படுகிறது-

————

மட வல் நெஞ்சம் காதல் கூர வல் வினையேன் அயர்ப்பாய் -–4-7-9– நாலாயி:-3305/3

மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்து கொண்டு நிற்கை.-வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்கு நின்றும் மீட்க அரிதாய் இருக்கை.-இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் –அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்;-இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்;-என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.

————

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை – –4-7-11–நாலாயி:3307/1

‘நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே.-தாமரைக் கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்திர பூதரைச் சொல்லுகிறார்.-அந்தரங்கர் -என்றுமாம் –

————-

நெஞ்சப் பெருஞ் செய்யுள் –பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -–5-3-4– நாலாயி:-3366-/3-

நெஞ்சப் பெருஞ் செய்யுள் – நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.
ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.-பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி ஆத்மாவோடு கட்டுப் பட்டிருக்கின்ற காதல் என்றபடி.
இங்கே ‘கடல் புரைய’ என்றது, கடலின் மிகப் பெரிதால்” -7. 3 : 6.என்னா நின்றது;
அதனில் பெரிய என்னவா” -10. 10 : 10 என்று, ஈச்வரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது;
ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட காரியம் இதுவாயிற்று.-கைங்கர்யத்திற்கு முன் ஷணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது.-அது உண்டாக வேணுமே அன்றோ அவ் வருகு போம் போது; அங்கே போன பின்னர் அங்குள்ளாரது ஒரு படியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே.
முதலிலே மயர்வற மதி நலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று.
அன்றிக்கே,-பெரிய போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது,
ஊர்ப் பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,-காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல்.
நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில்,
“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே ஸங்காத் ஸம்ஜாயதே காம:
காமாத் குரோத: அபிஜாயதே”- என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.
“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது, அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே, அதிலே ஓர் அவஸ்தா விசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம் வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

—————

பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் – -–5-4-6-நாலாயி:3379/1

புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது. இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.-நெஞ்சினை மிகவும் நோவு படுத்தா நின்றது.
நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;
அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று-காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக் கொண்டு வந்தாற் போலே இரா நின்றது.
நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்து கொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.
எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று இத் தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட் கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட் கண்ணை இரவு மறைத்தது.

————

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்-–5-5-10- – நாலாயி:3394/1

எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்; -இதர விசஜாதீய காதல்-
அன்றிக்கே, நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல்.
“ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி
மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4.
நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.-அன்னை காணக் கொடாள்-‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.
ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில்,
தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,
சரீரம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது – அநுசந்தித்தல்.
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
கட் கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட் கண்ணேல் காணும் உணர்ந்து.-என்றது, பெரிய திருவந். 28.
“நெஞ்சு என்னும் உட் கண்” என்னக் கடவதன்றோ. நெஞ்சையுங் கூட வாய் கட்டா நின்றாள்.

————

காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்6-1-2- நாலாயி:3452/1

“நான் ஒரு மாதத்திற்கு மேல் ஜீவித்திருக்க மாட்டேன்” என்றால்,
“கண நேரத்திற்கு மேல் நான் ஜீவித்திருக்க மாட்டேன்” என்பாரும் உண்டு ஆகாதே.
கடக்க நின்று சொல்லளவேயாய்ப் போகாமல்,
(100 யோஜனை தாண்டி கடலுக்கு அக்கரையில் இருந்து சொன்ன வார்த்தை )
அது தன்னை அநுஷ்டான பர்யந்தமாக்கித் தலைக் கட்டுவாரையும் கிடைப்பதே.நிரூபித்துப் பார்த்தால் காதலுக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே யிருத்தலின் ‘காதல் பெடை’ என்கிறாள். என்றது,-காதலை வடிவாக வுடைத்தா யிருக்கை
மென் பெடை-கலக்கவும் கூடப் பொறாத மிருதுத் தன்மையை யுடைத்தா யிருத்தலின் ‘மென் பெடை’ என்கிறாள்-காதல் உடைய மென் பெடை இல்லை –காதல் மென் பெடை அன்றோ -காதலே ஸ்வரூப நிரூபக தர்மம் காதல் என்றவாறு –
புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக் கொள் வற்றே பசப்பு”-என்ற திருக் குறள் நினைவு கூர்தல் தகும்.

———–

மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே–6-8-2- நாலாயி:3529/4

அவன் திருமேனியிலே நான் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்;
என்னுடம்போடே அவன் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்.‘தம்மைப் போலே பொய்யுமாய் நிலை நில்லாததுமான காதல் அன்று எங்களது என்று
சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-சத்தியமான காதல் என்றபடி.
அன்றிக்கே,
ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
“மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.

—————

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்_வண்ணா கடியை காண் என்னும்7-2-4–நாலாயி:3575/2

சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடாதன்றோ?
பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே ப்ரேமம் – அன்பு- தண்ணிது என்கிறாள்.

———-

காலம்பெற என்னை காட்டு-மின்கள் காதல் கடலின் மிக பெரிதால் – –7-3-6-நாலாயி:-3588/1

இந்தக் காதல் அளவு பட்டோ இருக்கிறது? முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.
கடல் புரைய’ திருவாய், 5. 3:4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
‘ஆனாலும், காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
கார்யார்த்தமாக விளைந்த சாதன பக்தி-கடல் போன்ற முன்னம் -இங்கே வளர்ந்த –
ஜகத்தை வைத்து திருத்த -கார்ய அர்த்தமாக முன்பு -ஈர நெல் வித்து -அன்னை நீர் -ஊரவர் கவ்வை-ராக பிராப்தமான காதல் -ஸ்வயம் வை லக்ஷண்யம் பார்த்து வளர்ந்த காதல் –

———-

கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ —7-3-8- நாலாயி:3590/2

இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் சுகமே இரேனோ?
நான் பழிக்கு அஞ்சி மீளுவேன் என்று காணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது.
அலர் தூற்றிற்று – அலர் தூற்றினார்கள்.-அது முதலாக் கொண்ட என் காதல் -அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.-தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
‘எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும் இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி.‘யதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது, தைத்தீரியம்.
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?-‘சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,‘அதனிற்பெரிய என்னவா’ என்றார் அன்றோ?(ஆர்த்தி ஹரத்வம் பத்தாம் பத்தின் குணம் )

————-

கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -8-3-9– நாலாயி:3701/4

வடிவு அழகாலே என்னை சேர்த்துக் கொண்ட இது அன்றோ என்னை கலங்கப் பண்ணிற்று-என் காதல் கலக்கவே –என்னுடைய காதலானது நான் அஞ்சும்படி கலங்கப் பண்ண-
உன் வடிவு அழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்ன அத்தனை போக்கி உன் சௌகுமார்யத்தை எல்லை கண்டு சொன்னேன் –அன்றே – இவ்வளவே என்னளவும் என்றது -உன் ஸூகுமார்யத்துக்கு தக்க படி சொல்ல வல்லேன் அல்லேன் — என்றபடி –வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களான பிரமன் சிவன் முதலானோர்கள் பரிவும் உனக்கு ஒத்தது அன்று –காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரேமாந்தகனான அடியேனாலும் உனக்கு சத்ருசமாக பரிய ஒண்ணாதே-

———-

கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை –9-1-1- நாலாயி:3781/2

இவனைக் கண்ட போது சிநேகிக்கும் அது ஒழிய -என்னுதல் –
கையிலே பொருள் கண்ட போது அதனை நோக்கி ச்நேகிக்குமது ஒழிய -என்னுதல் –பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்-மற்று -எனபது
காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –

————

அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் – 9-7-2-நாலாயி:3848/2

ஒன்றுக்கு ஓன்று பொருந்தின காதலை உடைய குருகு இனங்களே -என்றது
ஆசையிலே பிரிவினை உண்டாக்காத ஆசை உண்டே -அன்றோ
ஆசையிலும் குறைவு அற்று பிரிவு இன்றிக்கே கருத்து அறிந்து கலக்கவும் கூடியவர்களாய்
இருப்பதே-நீங்கள் என் முன்னம் – என்கிறாள் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் விளக்கு பத பிரயோகங்களும் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளும் —

February 17, 2025

ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே – -2-2-5-நாலாயி:132/4-

திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –-அணி-அழகு-இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –(ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கே இவர் திருமகளார் )-விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –-இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில் ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும் ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு –-அணி விளக்கு -என்னுதல்-அன்றியிலே
அபூதம்  என்னுதல்   –(இல் பொருள் உவமை அணி )

————-

உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் –2-8-9- நாலாயி:200/4

உன் திரு மேனியைக் காட்டும் திரு அந்திக் காப்பு ஏற்றுவார் ஏற்றி இறே எடுப்பது
(ஸ்தோத்ரம் பண்ணியே அன்றோ எடுப்பது ) நிரதிசய போக்யமான திரு மேனி காண்கை புருஷார்த்தமாக இறே-ஆகையால் உருக் காட்டும் என்கிறது-(பிரதிபந்தகங்களைப் போக்கியே புருஷார்த்தம் அடைய முடியும்
நம -பின்பு தானே நாராயணாயா –-த்ருஷ்ட்டி தோஷம் -அகற்றி விட்டுத் தானே காண வேண்டும் –-காண்பதற்காக விளக்கு ஏற்ற வில்லை-கண் எச்சில் போக்கவே இது –
நிரதிசய போக்யமாகையாலே
–-இதனால் தான் ஹாரத்தி தட்டை கண்ணில் ஒத்திக் கொள்வது நம் சம்ப்ரதாயம் அல்ல )-இப்பொழுது ஒளியை உடைத்தாம் படி ஏற்றா நின்றேன் –இத்தைக் கண்டு அருளும்படி கடுக வாராய் –திருக் காப்பு நான் உன்னைச் சாத்த -உருக்காட்டும் அந்தி விளக்கு – இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் -என்று அந்வயம்-ரத்நாதிகளுடைய தேஜஸ்ஸை அதிக்ரமித்து இறே இவன் -(தீப -)தேஜஸ்ஸூ இருப்பது-இன்று -என்றது இப்போது என்றபடி –திருவந்திக் காப்பு ஏற்றுவார் ஏற்றி எடுப்பது
நிரதிசய போக்யமான திருமேனி காண்கை புருஷார்த்தமாக இறே-அது இறே அவனுக்கு ரக்ஷை ஆவது-

———-

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4

கோவிந்தன் தன் அடியார்களாகி-மூன்று எழுத்துடைய கோவிந்தன் தன் அடியார்களாகி-எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்
1-எட்டுத் திக்கு என்னுதல்
2-எண்ணப் பட்ட தசா விசேஷங்கள் என்னுதல்
3-எட்டு அர்த்தத்தை பிரகாசிப்பதான வியாபக மந்த்ர விசேஷ பிரதானம் என்னுதல்
(ஜகத் காரணம்– சேஷி– ரக்ஷகம் –அநந்யார்ஹம்– ததீய சேஷத்வம் -சகல வித பந்து -ஸமஸ்த கைங்கர்யம் )-விளக்காகி நிற்பார் -எத் தசைகளுக்கும் ப்ரகாசகராய் இருப்பார்-இணை அடி என் தலை மேலனவே-ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகள்-என் தலை மேலாரே -என்னுமா போலே அனுசந்திக்கிறார்-இவருடைய பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்க்கு அடிமையும் இது தான் இறே-அந்தத் திருவடிகளுக்கு வஸ்தவ்ய பூமி தம் திரு முடி –
என்கிறார் –

————-

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை – நாலாயி:347/2

விட்டு விளங்க –மிகவும் பிரகாசிக்க-அதாவது-பார்த்த பார்த்த இடம் எங்கும் இவர்களுடைய திரளின் பிரகாசமேயாய் இருக்கை-வீற்று இருந்த –(இருந்த-இறந்த காலம்
ஆஸ்தே இருக்கும் என்று இருந்தால் ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சா ரூபம் ஆகும் )
இவர்கள் நடுவே தன் வ்யாவர்த்தி தோற்றும்படி ஸ்ரீமத் த்வாரகையில் எழுந்து அருளி இருந்த-அதாவது இத்தனை யாரோடும் பரிமாறுகிற இடத்தில் ஒரோருவரே -என்னை ஒழிய அறியான்-என்னை ஒழிய அறியான் -என்னும்படி பரிமாறுகையால் வந்த வீறு  உடைமை தோற்ற இருந்தவன் -என்கை-விமலன்-இப்படி பரிமாறின இதில்-தன் ஸ்வார்த்த பிரபத்தி யாகிற தோஷம் இல்லாதவன் -என்கை-இவனுடைய சமஸ்த வியாபாரங்களும்
ஆஸ்ரிதரை ரசிப்பிக்கைக்காக உறுப்பாய் இறே இருப்பது –இப்படி இருந்துள்ள பாரதந்த்ர்யம் தான் பிரணயித்வ பிரயுக்தம் ஆகையால் இவன் தனக்கு ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை -இறே-மலை-– 4-2 -10-ஏவம் பூதனான இந்த ஸ்வாபம் எல்லாம் பிரகாசிக்கும்படி வர்த்திக்கிற மலை-வீற்று இருந்த விமலன் மலை-வேறுபாடு தோன்ற இருந்த விமலன்-ஒருவனுக்கு பகவத் ஸம்ருத்தி உண்டானால் அத்தால் வந்த ஸம்ருத்தி
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் வேணும் என்று இருந்த போது இறே தனக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது-விமலன் -ஸ்வார்த்த பிரதிபத்தி இல்லாமையால் விமலத்வமான வேறுபாடு தோன்ற இருந்தவன் என்கிறது-இப்படி இருக்கிறவன் நித்ய வாஸம் செய்கிற திருமலை

———–

மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை-4-3-11-அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -( திரு நெடும் தாண்டகம் )
இத்தால் பிரணவத்தைச் சொல்லுகிறது-மேலிருந்த விளக்கை-வேதாந்தத்தில் ஸர்வ ஸ்மாத் பரன் என்று ப்ரகாசகன் ஆனவனை-அதாவது அகாரார்த்தம் ஆனவனை–விட்டு சித்தன் விரித்தனவே-பகவத் ஸ்வரூப குணங்களிலே வியாபித்த திரு உள்ளத்தை யுடைய ஆழ்வார் இப் பிரபந்தத்திலே வெளியிட்டு அருளினார்

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை – வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள ஸ்வயம் பிரகாச வஸ்து வானவனை –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்கள் ஆவன –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஸ்வேதாஸ்வரம்
ஷரம் ப்ரதானம் அம்ர்த  அஷரம்    ஹர ஷராத்மாநா வீசதே தேவ ஏக –
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச –இத்யாதிகளாலே சொல்லப் படுகிற தத்வ த்ரயமும்-மேல் இருந்த என்றது – இந்த தத்வ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு- மேலாய் இருந்துள்ள என்றபடி-அதாவது சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாக -தான் பிரகாரியாய் –
நதத் சமஸ் அப்யதிகச்ச தர்ச்யதே    -என்னும்படி சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்கைவிட்டு சித்தன் விரித்தனவே –இப்படி இருக்கிறவனை –அரவத்தமளிப் -படியே – திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கையாலே – விஷ்ணு சித்தன் -என்னும் திரு நாமத்தை உடைய
பெரியாழ்வார் விஸ்த்ரேண அருளிச் செய்தவை

————

சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4

நித்ய விபூதியிலே ஆநந்த நிர்பரராய் இருக்கும்     நித்ய முக்தரும்-முமுஷுக்களை சொல்லவுமாம்(நிலத் தேவர் விண்ணுள்ளாரிலும் சீரியர் அன்றோ )–அஞ்சலி பிரணமாதிகளை பண்ணும் படியாக–பக்தாஞ்சலி புடாஹ்ருஷ்டா நம இத்யே வாதிந -என்று
அஞ்சலி பூர்வகமாக ப்ரணாமத்தைப் பண்ண -சர்வ திக்குகளுக்கும் பிரகாசமாய் கொண்டு நிற்கிற ஏதேனும் ஓர் இடத்தில் இருந்தாலும் அத் திக்கை நோக்கி வணங்கும் படி இறே
இதனுடைய பிரகாசம் இருப்பது-தேசாந்தர கதோவாபி த்வீபாந்தர கதோபிவா ஸ்ரீ ரெங்க
அபிமுகோ பூத்வா ப்ரணி  பத்ய ந சீததி-
(ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் )என்னக் கடவது இறே-திருவரங்கமே-இப்படி இருந்துள்ள ஸ்ரீ திருவரங்கமே –-4 9-6- உயிர் ஆளன் உறையும் ஸ்ரீ கோயில்-திக்குக்கள் தோறும் பிரகாசகமான கோயில் என்னுதல்-சேதனருக்கு ஞான பிரகாசகம் (ப்ரணவாகார விமானமன்றோ )என்னுதல்-இது வாய்த்து உயிராளன் உறையும் கோயில் –

———-

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை – நாலாயி:478/3,4

பரம பதத்தில் காட்டில் குணங்கள்-இடைச் சேரியிலே அத்யுஜ்ஜ்வலம் ஆனபடி
அந்த காரத்தில் தீபம் போலே-தோன்றும் – கர்ப்பத்தில் தொற்று இல்லாமை-
கீழைத் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம் இவளோடு அவனுக்கு உள்ளது –
ஸ்ரீ மதுரையிலே திரு அவதரித்து இருக்க செய்தே- திரு அவதார பிரகாசம் திரு ஆய்ப்பாடியிலே சென்றது என்றுமாம் –அணி விளக்கை- திரு ஆய்ப்பாடிக்கு மங்கள தீபம் என்றுமாம் –ஆயர் குலத்தினில் தோன்றும் –-பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் – முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது-தோன்றும் –
ஆவீர் பூதம் மஹாத்மநா – கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி – பிறந்தது குணமாகைக்காக –பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்-“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி யென்க:அணி விளக்கை –-ஸ்ரீ வைகுண்டத்திலும்
ஸ்ரீ மதுரையிலும் அனுஜ்ஜ்வலனாய் போலே இருப்பது-இவர்களுக்கு கண் காட்டியாய் இருக்கை – அந்தகாரத்தில் தீபம் போலே தாழ்ந்தார் பக்கலில் இறே குணம் பிரகாசிப்பது –
பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே (ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )-மணி விளக்கு என்ற போது – இங்கே புகுந்த பின்பு பரமபதத்தில் அழுக்கற்ற படி
(மாயன் அங்கு இங்கு வந்து விளக்கு ஆனான் அவன் அழுக்கு போந்ததாம் )பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி தான் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் பண்ணுகையாலும், பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும், தன்னைக் கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க.

———

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய – நாலாயி:482/1

துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத- நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் – சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை –நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் –அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –இது பரமாத்வானுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –இவ்வூரில் கழிந்த ரத்தினங்கள் கொண்டு போலே காணும் திருத் துலை வில்லி மங்கலத்தில் மாளிகைகள் செய்தது –ராஜாக்கள் அந்தப்புரத்தில் கழித்தவை கொண்டு இறே தங்களுக்கு மாளிகைகள் செய்வது— இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –ஆழ்வான் –ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்-சுற்றும் விளக்கெரியத் – மாணிக்கத்தின் ஒளியாலே பகல் விளக்கு பட்டிருக்கச் செய்தே-
மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது –கிருஷ்ணன் வந்தால் தன் கையைப் பிடித்து உலாவும் இடம் அடைய- படுக்கையும் விளக்கும் ஆக்கி வைத்தபடி – புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளே விளக்கு எரிந்தது தெரிகிறபடி எங்கனே என்னில்- மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நிற்கும்-இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது – புறம்பு நிற்கிற நம்முடைய ஹிருத்யங்கள் இருண்டு கிடக்க உள்ளுக்கு விளக்கு எரிகிறது வெறுமனே அன்று இறே கிருஷ்ணன் சன்னிஹிதனாக வேணும் இறே – திருச் சித்ர கூட பரிசரத்திலே-பிராட்டியைக் கைப் பிடித்துக் கொண்டு பெருமாள் உலாவினால் போலே இவள் கையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணன் உலாவும் இடம் இறே – அவ்வோபாதி இடம் எங்கும் படுக்கைகளும் விளக்குமாய் கிடக்கிற படி-(தானாக நடந்து போகும் விளக்கு போல் -சேர்த்திக்கு மட்டும் விளக்கு -சர விளக்கு தொங்கும் விளக்குகள் போல் அல்லவே இங்கு)-சர்வதோ முகமாக ஜ்ஞான தீபம் பிரகாசிக்க-

———-

கோல விளக்கே கொடியே விதானமே -499/7

அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் -பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்

—————-

தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1

செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று அறிவது ஒரு நாள் உண்டாகில் கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே-இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –தரை விளக்கித் திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி – சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே – பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

——–

வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே – நாலாயி:506/4-

பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் – மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து –
குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே-வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து-அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

——-

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/1,2

பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே--அயோத்யா -2-26-என்று
திரு அயோ த்யை ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு – மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து திரு வாய்ப்பாடியில் உள்ளார் கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி-ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்-பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று
சொல்லும் படி பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –ஆயர்பாடிக்கு அணி விளக்கை-இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ராம குணங்கள் வேம்பாய் இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது

———

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதிவெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை – நாலாயி:–10-1- நாலாயி:741/1-2-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய் ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே-அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்- சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-

———

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் –3-8-1- நாலாயி:1218/1

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் -மெய் மதிக் கடலே -ஸ்வரூப நிரூபகம் –விச்சேதியாத விளக்கு-பிரபா பிரபாவான்களாய் இருக்கை இறே-விளக்காகிறது -நித்யமாய் ஸுயம் பிரகாசமாய் – ஜ்ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன் -என்ற படி –ஞானத்தை–குணமாகவும் ஸ்வரூபமாகவும் கூட்டுவது – -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் – அவனே ஞானமாகவும் உள்ளான் ஞானம் உடையவனாயும் இருப்பான் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டும் உண்டே-ஆத்மாவும் இதே போலவே -ஆனால் கர்மத்தால் மழுங்கும் தர்ம பூத ஞானம்-

————–

மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே –4-3-8- நாலாயி:1275/2,3-

தன் பேரனோடு பகைத்த பாணனுடைய ஆயிரம் தோள்களும் கழியும்படி
அன்று திரு வாழியை ஸ்பர்சித்தவனை-இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைக சமதி கம்யனாய் ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
கிருஷ்ண அவதாரத்துடன் திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்

————

வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – 4-7-5-நாலாயி:–1312/1,2

பரிவுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் குறைவற்று திருமலையில் நின்றும் பூமியிலே இழயில் குடிப் பழியாய் இருக்கும்-திரு வேடுவராலே நிறையப் பெற்ற திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு  தானே பிரகாசன் ஆனவனே

————

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் -4-9-2– நாலாயி:-1329/3

ஒரு விச்சேதம் இல்லாத தீபத்தில் திரியும் எண்ணையும் புகையுமான அழுக்கு இன்றிக்கே
புகர் தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்வரூபத்தை உடையவனே –திரு நறையூரில் வந்து சந்நிஹிதனாய் ஆஸ்ரயநீய வஸ்துவுக்கு இன்னம் ஓன்று கூட்டுப் பெற்றது இல்லை என்னும் குறை தீரும்படி இருக்கிற பூரணன் ஆனவனே-என் எந்தாய் இந்தளூராய் – திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணி எனக்கு சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தவனே-திருவாலி யானைக் கைப்பிடித்து-திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் -நண்ணு நறையூர் நான் தொழுதும் எழு நெஞ்சமே திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பித்தவன்

——–

முனியே திருமூழிக்களத்து விளக்கே இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/2,3

இச் சேதனர் அறியாது இருக்கச் செய்தே-எப்போதும் ஒக்க இவர்களுக்கு-ஹிதத்தை அனுசந்திக்குமவனே –திரு மூழிக் களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயே பிரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே –இனிமைக்கு பிரகாசத்தைப் பண்ணுகை-அன்றிக்கே இனிமை தானேயாய் இருக்கை –தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே –காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு -உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –

——–

விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை – நாலாயி:1646/2

த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய நித்ய விபூதி உக்தன் ஆனவனை –விளங்கும் சுடர்ச் சோதியை -அங்கே நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –வேள்வியை-அத் தேசத்தை பிராபிக்கைக்கு சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –விளக்கின் ஒளி தன்னை – ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை – (தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )

———

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை- -–8-9-4–நாலாயி:1731/1

சர்வாதிகனை –-வேறு ஒன்றால் காண வேண்டாதே-தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –-பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று-அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –என் ஹிருதயத்திலே தானே புகுந்தவனை –புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை- ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே
அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே – இது ஒரு நீர்மை இருக்கும்படியே -என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை  –மறையாயும் பரவிய விளக்காகவும் -தன்னைத் தானே விளக்கி -மற்றவற்றையும் விளங்குபவர்
வேதத்தால் சொல்லப் படுபவரை தானே விளங்குபவர் என்னலாமோ என்னில்
ஸப்த பிரமாணம் பரிச்சேதிக்க ஒண்ணாதே -ஆகவே விரிந்த விளக்கே என்கிறார் –
எல்லை காண முடியாமல் இருப்பவன் என்று காட்டும் ப்ரமாணமே வேதம்

——————

அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே –10-1-4- நாலாயி:1851/4

அபரிச்சேத்யமான போக்யதையை உடையனாய் அத்தை அயர்வறும் அமரர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்து அத்தாலே உஜ்ஜ்வலனானவனை –நித்ய ஸூரிகளுக்கு பிரகாசமாய் இருப்பதோர் அருளாய் இருக்கிறவனை-அளப்பில் ஆரமுதை
அளப்பில் அருள்–அருள் ஆகிய விளக்கு-விளக்கான அளப்பில் அருள் -என்று இரண்டும்-திரு வெள்ளறையிலே காணக் கடவோம் –

——-

தோன்றலும் சுடர் விட்டு விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே – 18-நாலாயி:2049/4

சுடர் விட்டு தோன்றலும் –இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேத விளக்கினைவேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

————-

மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்-1- – நாலாயி:2052/1

இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும் எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் – விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவஸ் சேந்த்ரிய உத்பவம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –விளக்கு ஒளியாய் திங்கள் தானாய் -என்கிற இத்தால் ஸ்ரவண மனன நிதித்யசங்களாலே பரமாத்மாவைக் காணுமா போலே இவற்றால் இங்கே ஜீவாத்மாவைக் காணும் படி சொல்கிறது-ஸ்வயம் பிரகாசம் -ஆனந்த மயம் -அவன் அருளால் அறியப் பெற்றேன் –

————

விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – 14-நாலாயி:2065/3-

தன் வடிவு அழகைக் காட்டி அஹங்காரத்தையும் விஷயாந்த்ர ப்ராவண்யத்தையும் போக்கி விடுகை அன்றியே நெஞ்சிலே புகுந்து முறை உணர்தினவனை-விளக்கொளியை-
பிரகாசமானவனை – அதாகிறது – ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களையும்-தத் விரோதி ஸ்வ ரூபத்தையும்-விரோதி நிவர்த்தி பூர்வகமாக புருஷார்த்தம் சித்திக்கும் படியான-உபாய ஸ்வ ரூபத்தையும் பிரகாசிப்பிக்கை -என்கை –மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே
இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய ஸ்ரீ தீப ப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்;-ஸ்ரீ திருத்தண்கா ‘விளக்கொளி கோயில்‘ என்றே வழங்கப் பெறும்.
இத் தலத்துப் பெருமான் பண்டைக் காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரை யினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது

———-

வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய – நாலாயி:2082/2

ஆதித்யன் ஆயிற்று தீபமாகப் புக்கு அன்வயித்தான் – தன்னையும் காட்டி -பதார்த்தங்களையும் காட்ட வற்றாகை-யதா சூர்யஸ் ததா ஜ்ஞானம் –இனித் தான் இருபத்து ஒன்பதிலே அஸ்தமித்தல் முப்பத்தொன்று என்ற அளவும் நிற்றல் செய்ய மாட்டாதே
முப்பது வடம் இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே வருகையினாலே இவனும் ஒருவன் உடைய ஆஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணுகிறான் -யென்று தோற்றுகிறது-பீஷாஸ்மாத் வாதப் பவதே,-பீஷோ தேதி ஸூர்யபீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ் ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம தைத்ரிய உபநிஷத் –என்னக் கடவது இறே-

————-

புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் – -37-நாலாயி:2118/2

இனி ஸ்ரவண விஷயமாக ஒரு கர்த்தவ்யம் இல்லை இறே-அனந்தரம்-வ்ருத்தியிலே அந்வயிக்கும் இத்தனை இறே-பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்த பின்பு தொட்டதும் தீண்டினதும் கைங்கர்யமாம் இத்தனை இறே-அது தான் போக ரூபமாய் இருக்கையாலே எப்போதும் சமாராதன உப கரணங்களைத் தரித்துக் கொண்டு –

———–

புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3

மங்கள தீபம்-அணி விளக்கு -என்று பாடமான போது அழகிய தீபம் -என்னவுமாம்-ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்னும் போது மங்கள தீபமாய் இருக்கும்-ஒரு வல்லித் தாமரையாள் சென்று ஒன்றிய சீர் மார்வனுமாய் திருவல்லிக் கேணி யானுமானவன் எந்தை –அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்

—————-

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி –94- நாலாயி:2375/1

உணர்வாகிற தைல வர்த்திகளால் உண்டான வழுக்கின்றிக்கே தினுங்கின தேஜஸ் சை உடைத்தான விளக்கை ஏற்றி –

————–

வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று – நாலாயி:2427/1

பெரிய சந்த்ரனை அழகிய விளக்காக வைப்ப திருவேங்கடமுடையானுக்கு என்றே
எப்போதும்-வாங்குகைக்குக் கை  நீட்டா நின்றுள்ள யானையை எங்கும் வேடு சூழ்ந்து கொள்ள அவர்களோடு எதிர்த்துக் குறவர் வில்லெடுக்கும் திரு மலையை-ஸ்லாக்யமான சந்திரனை ஸர்வேஸ்வரனுக்கு மங்கள தீபமாக வைப்பேன் என்று எப்போதும் தும்பிக்கையை நீட்டிக் கொண்டு இருக்கிற யானையை-சந்தரன் அணியனாய் இருக்கையாலே- சர்வேஸ்வரனுக்கு திரு நந்தா விளக்காக வைப்பன்-என்று ஒரு கால் நீட்டிக் கிடைக்காது ஒழிந்தால் மீள அறியாதே – எப்போதும் கை நீட்டின படியே-அந்ய பரமாய் நிற்கிற யானையை- வேடர் எங்கும் போக ஒட்டாமல் சுற்றிக் கொள்ள அத்தைக் கண்டு குறவர் வில்லை எடுக்கிற திருமலையையே நாட்டார் எல்லாம் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கூத்தாடினால் நலமாய் இருக்கும் —

———–

உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் – நாலாயி:2521/3

மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய-தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தை யுடைய வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)-எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப் பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.–விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி
விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய் பர ப்ரகாசமுமாய் ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி–இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார்-என்றும்-எங்கும்-இல்லையே–தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை

————–

உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா – நாலாயி:2535/3

உழன்று சஞ்சரிப்பதால்-அலர்ந்து-விகஸிதமான-ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்-இத்தாலே ஈஸ்வரனுடைய ஞானமும்-அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் –திருவாய் -4-1-8-என்கிற கணக்கிலே ஸகல வியாபார மூலமாய் ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும் ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும் என்றும் சொல்லிற்று ஆயிற்று-

————

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை மன்னும் விளக்காக வேற்றி

நெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள ஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-
ஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்
ஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி ஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –இரு  சுடரை மன்னும் விளக்காக வேற்றி – இவன் போன இடம்  எங்கும்  கூடப் போமவர்கள் இ றே ஆழ்வார்கள் –
ஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி
அங்கன் அன்றிக்கே-சந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-
ஏகார்ணததிலே  சிருஷ்டி உன்முகனாய்க் கண்  வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில் அதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று
அன்றியே-கவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இறே –

————

மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – நாலாயி:2726/3

மாணிக்கத்தின் அழுக்கை கழற்றி-நிலை விளக்காக வைத்து –அடுத்து ஒரு கால் பார்க்க-கால தத்வம் உள்ளதனையும் வவ்வலிடும்படி பண்ணும்

—————-

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை – நாலாயி:2781/1,2

சர்வ ஸ்வாபகாரம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிறவனை –நித்ய சூரிகளுக்கும் கூட அனுபவித்து முடிய ஒண்ணாத படி இருக்கிறவனைஎதோ வாசோ நிவர்த்தந்தே –பூர்வோ யோ தேவேப்ய –உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை-பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய் -1-3-2–ஸ்ரேயான் பவதி ஜாயமான –

————–

நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து – 9-நாலாயி:–2799 /2

பர ஞானம் ஆகிற பரிபூர்ண தீபத்தை-அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியா நன்புருகி ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு -என்று தம்முடைய பக்தியை தகளியாக பண்ணி -அபிநிவேச அதிசயத்தை நெய்யாக்கி
பகவத் அனுபவ ஆனந்தத்தாலே உருகிக் கிடக்கிற மனசை திரியாக்கி –நாராயணனுக்கு பர ஞானம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றினேன் நான் –என்று தொடங்கி -தாம் இட்டு அருளின
திவ்ய ப்ரபந்தம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி -சர்வர்க்கும் உபகாரமாகும்படி பிரகாசிப்பித்த-பூதத் தாழ்வார் என்கிற ஸ்வாமி களுடைய திருவடிகள் –அம் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் இவ் உலகு இருள் நீங்க வந்து உதித்த –என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே –நிறை விளக்கு– நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை–நேரே தெளியக் காட்டுகின்றது என்க-ஆன்மாவைப் பற்றிய அறியாமையை ஒழித்த பர ஞானம் கதிரவன் போலப் புலனாம் பொருளை முழுதும் உள்ளபடி காட்டுகிறது -என்னும் பொருள் கொண்ட-ஜ்ஞானே நது ததஜ்ஞானம் ஏஷாம் நாசித மாத்மன-தேஷாமாதித் யாவத் ஞானம் பிரகாசயதி தத்பரம் -என்னும் கீதா ஸ்லோகம் இங்கு நினைவுக்கு வருகிறது –பர ஞானம் ஆவது சுருக்கம் இன்றி ஞானம் விரிந்து கிடத்தலால் பொருளைக் காட்டுவதில்-அளவு படாமை -என்பது கீதா பாஷ்ய சந்த்ரிகை –ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை –ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –சுடர் விளக்கு -என்பதை நிறை விளக்கு –என்கிறார் –விளக்கு ஏற்றுதல்-இரண்டாம் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தம் அருளி செய்தல் –திருவடி–பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவதுமரபு-

————–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை – நாலாயி:2969/1

ஸ்வ விஷயமான அஞ்ஞான அந்தகாரம் போம்படி – அறிவின்மையாகிற இருள் போகும்படி-
நிர்ஹேதுகமாக – என்னிடத்து ஒரு விதக் காரணமும் இன்றி,- தன்னுடைய ஸ்வரூபம் உருவம் குணம் உலகம் முதலான விபூதிகளை எனக்கு விளங்கச் செய்தவனை.
விளக்காவது, தன்னையுங் காட்டிப் பொருள்களையுங் காட்டுவது ஒன்று அன்றோ?
அது போன்று, இறைவனும் இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.
என் விளக்கை என்பான் என்? அல்லாதார்க்கும் ஒவ்வாதோ?’ என்னில்  இவரைப் போன்று மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?-ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.

————

நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் – நாலாயி:-3017/2

கெடாத விளக்கே! ‘ஒன்றன் பின் ஒன்று மாறிக்கொண்டே அழிகின்ற ஜ்வாலையை ‘நந்தா விளக்கே’ என்றது என்னை?’ எனின், விச்சேதம் இல்லாத விளக்கு -நந்துதல் -சிந்துதல்
தான் மயக்கம் கொண்டவள் ஆதலின், மிக நுண்ணியதாக ஆய்ந்து அறியக்கூடிய ஜ்வாலையினுடைய வேறுபாட்டினை -பேதத்தை -அனுமானித்து -பார்க்கின்றாள் அல்லள்;
ஜ்வாலையானது கெடுதல் இன்றித் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போலத்-சந்தான விச்சேதம் இன்றிக்கே – தோற்றுதலின், அதனைப் பார்த்து, ‘நந்தா விளக்கே’ என்கிறாள்.-நாட்டுக்குக் கண் காட்டியான அருமந்த நீயும்.-பதார்த்த தர்சன சாதனமான கண்ணுக்கு விஷயங்களைக் காட்டுகிற -என்றபடி-

——————-

மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் —2-6-2- நாலாயி:3065/3

புகுந்ததன் பின் மிக்க ஞானச் சுடர்விளக்காய்த் துளக்கு அற்று –இவரோடே வந்து கலந்து, அக்கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று,விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது. என்றது,தனக்கு நித்திய தர்மமான ஞானத்தை யுடைத்தான ஆத்ம வஸ்து, கர்மம் காரணமாக ஒரு சரீரத்தை பரிக்ரஹித்து – மேற்கொண்டு இந்திரியங்களாகிய வழியை விரும்பிக்கொண்டு சஞ்சரிக்க வேண்டும்படி போந்தது,ஒரு நாள் வரையிலே பகவானுடைய திருவருளும் பிறந்து ஞானக் குறைவும் கழியக் கடவதாய் இருக்கும் அன்றே?அங்ஙனம் ஓர் ஹேதுவும் இன்றிக்கே இருக்கிற சர்வேஸ்வரனும் இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு-சங்குசித- குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு-விகசிதமான- மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்;திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி.துளக்கு அறுதலாவது,ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல்-விஜ்வர ‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி.இனி, துளக்கு அறுதலாவது,‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது என்று கூறலுமாம்.

————–

மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என் – நாலாயி:3306/3

நிறைந்த ஞானத்தையே சொரூபமாக உடையவனான.வேத விளக்கினை – வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை.-அன்றிக்கே, ‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’ என்னலும் ஆம்; என்றது,’ வேதத்திற்கு விளக்காய் இருப்பவன்’ என்றபடி.
வேத விளக்கினை’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்:
முதலது, ‘வேதத்தைத் தனக்கு விளக்காகவுடையவன்’ என்பது; ‘வேதத்தாலே பிரதிபாதிக்கப்படுகின்றவன்’ என்றபடி.-இரண்டாவது, ‘வேதத்துக்கு விளக்கு’

————-

பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – -5-2-9-நாலாயி:3360/3

ஞானவிதி பிழையாமே- பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.பூவின் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – பூவோடே கூடின புகை தொடக்கமான சமாராதந உபகரணங்களை மிகுத்துக் கொண்டு.

—————

வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –-5-10-4- நாலாயி:-3443/3

“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் – சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,-இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.

———–

மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே – 7-7-2- நாலாயி:3628/4

மாட்டிய –‘சுடர் வெட்டிய’ என்னுதல்:-‘ஏற்றிய’ என்னுதல்,-வல் விளக்கின் சுடராய்-பெரிய விளக்காய் – விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று.
‘‘ஏற்றிய பெரு விளக்கு’ என்று ஒரு தமிழ் புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச் செய்வர்.-நிற்கும் வாலியதே –வலிதாய் நின்று நலியா நிற்கும்.-விளக்காகிறது-தான் சிறிது நேரம் இருப்பதுமாய்-ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது?-இது அங்ஙன் அன்றிக்கே,-எப்போதுமாய் எங்கும் உண்டாய் இரா நின்றது:-பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

————

புகையால் விளக்கால் புது மலரால் நீரால் –10-4-10- நாலாயி:3933/2

கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே- தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் – பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே- பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –

—————

நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10- நாலாயி:3988/3,4

அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து-எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும் திருச் சுண்ணப் பிரசாதத்தையும் நிறை குபங்களையும்-மங்கள தீபங்களையும் -ஏந்தி –வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்-தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்யார்த்தம் -ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் –(ஸ்ரீ மெய் விரத மான்யம்)–பாசுரங்கள்-

February 17, 2025

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1- ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று
சாஸ்திரங்களில் விளக்கிக் கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து –
அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள
சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள் முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது
பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற
பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் –
சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொள்ளாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்
சித்தரத்தொழிலை-என்பதால் பிரகிருதி சம்பந்தத்தினால் ஆத்மாக்களுக்கு தேவாதி பேதங்கள் என்பது த்யோதிதம் –
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில்
ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின் பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால்
வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் ஜகத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே –எல்லையில்லா பெருமை உடையவன் என்றதாயிற்று –

———

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை
ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை
பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள்
நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும்
பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை
வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள்
கர்ம இந்திரியங்கள் மனஸ் முழுதும் தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

———

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும்
லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில் சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் –
அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும்
வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

———–

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான
ஸ்ரீ ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த
ஸ்ரீ பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்-

ஸ்ரீ பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

————

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் விலக்ஷண -மற்று-பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

February 4, 2025

மற்று (166)
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு –
3-1-7-நாலாயி:229/3

என்னுடைய நாதனானவனே- இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –

———–

ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை –  3-3 1- –-நாலாயி:244/4-

பிள்ளை வாசி அறியும் குண பூர்த்தி உடையவர்களே-லோகத்தில் புத்ரனை பெற்றவர்களில் — நல்ல பிள்ளையை பெற்றவள்-என்று சொல்ல தக்கேன் நானே –-மற்று ஒருவரும் இல்லை –என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் -என்று
கொண்டாடப் பட்டார் என்னை ஒழிய மற்று ஒருவர் உண்டோ -என்கை –(கௌசல்யா ஸூ பிரஜா -அங்குஇவன் இருந்த திருவயிற்றையும் கொண்டாடி இங்கு-நோன்பு நூற்றதையும் சேர்த்து இங்கேயே தானே-மூன்று ஜென்மம் திருச்னி ஸூதபா –அடுத்து அதிதி காஸ்யபர் வாமனன் – இப்பொழுது இங்கு )

———–

மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – 3-4-5-நாலாயி:258/3-

இப்படிப் பட்டவனுக்கு ஒழிய -வேறு ஒருவர்க்கு என்று -என்னை சொல்ல ஒட்டேன் –
நீங்கள் நினைத்து இருக்கிறது செய்யல் ஆவது இல்லை –-நீங்கள் வாய் விடில் நான் முடிவன்-மனிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்(நாச்சியார் 1-5-) -என்னுமா போலே சொல்லுகிறாள் –இப்படி இவள் சொன்னவாறே -இவள் தன் நினைவை இவள் வாயாலே கேட்கைகாக எவனுக்கு ஒழிய என்று நீ சொல்லுகிறது -என்ன –மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால் -என்கிறாள்- ஸ்ரீ கிருஷ்ணனுக்கு -என்னாதே -இப்படி சொல்லிற்று
இவனுக்கு ஓரடி உடைமையை சொல்லுகைக்காக – அடி உடைமை சொல்லும் போது –ஒரு கோத்ர சம்பந்தம் சொல்ல வேணும் இறே(கோத்ரம் -மலை என்றும் அர்த்தம் )ஸ்ரீ மால் இரும் சோலை போலே என்னையும் தன்னை அசாதாரணை ஆக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தி உக்தனுக்கு ஒழிய என்றபடி –ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலும் காட்டில் ஸ்ரீ திரு மால் இரும் சோலை அவனுக்கு அசாதாரண தேசம் போலே காணும்-அவதார காலம் இத்தனையும் இறே அங்கு
நித்ய சந்நிதி இங்கே இறே-

————-

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3

நின் கண் மற்று அல்லால்-மற்று-விழிக்கும் கண்ணிலேன்-உன்னுடைய கடாஷம் ஒழிய -வேறு நோக்குகைக்கு (ரஷிக்கைக்கு ) ஒரு மறு விழி உடையேன் அல்லேன் –-உன்னை ஒழிய வேறு ஒரு ரஷகரை உடையேன் அல்லேன் –நம்மைப் போலே ரஷகருமாய் -போக்யருமாய் -இருப்பார் உண்டானால் –பற்றக் குறை இல்லையே என்ன –வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது –குண க்ருத தாஸ்யம் அன்றிக்கே – ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆகையாலே -புறம் போகாது

—————

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை-12-1-நாலாயி:617/1

மற்று –வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

உரைப்பது எல்லாம் – அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு – நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்-மற்று –உரைப்பது எல்லாம் –
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்-ஊமையரோடு செவிடர் வார்த்தை-என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை-எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை-ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை-செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை-செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்-

————

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் – நாலாயி:688/3-

அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை
வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து-எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு-வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது-ஈன்ற தாய் -என்கையாலே
பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும்
என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே
வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே
அவள் தான் அகல விடினும் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகழ் இல்லை என்கிறார் –மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –
இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை –
அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது –
ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –

ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து
இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –
ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே
பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –
ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –
ஸ்ரீ நாத நான் எங்கே போவது -என்றார்

————

மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – 5-7–நாலாயி:694/2

கார் காலத்திலே வர்ஷியாதே மேகங்கள் மறுத்த காலத்திலும் -பைம் கூழ்கள்-உண்டு -பயிர்கள் –ஆகாசத்திலே கறுத்த மேகங்களைப் பார்த்து இருக்கும் அத்தனை அல்லது
நீர் நிலம் தேடித் போக வறியாதாப் போலே-

———

புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – -5-8-நாலாயி:695/2-

ஜல ராசி எல்லாம் திரண்டு ஒளியை உடைத்தாய் -பார்த்த இடம் எங்கும் பரந்தோடி-ஆழ்ந்த கடலிலே சென்று புக்கு அல்லது புறம்பு நிற்க மாட்டாத ஆறுகள் போலே –
சமுத்திர இவ சிந்துபி என்னுமா போலே இவை புக்கால் கடல் நிறையும் இல்லையாகில் குறைப்படுகிறதும் அன்று இறே- இவற்றுக்கு புறம்பு தரிப்பது அரிதாய் இறே புகுகிறன-

———–

மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து -5-10– நாலாயி:697/2-

இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்-வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு-பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய ஸ்ரீபெருமாள் சொன்னவை –-பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து – ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்-

————-

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
–6-5-

இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே – அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –

————–

மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2

எக்காலத்தில் இடம் குறித்து விட்டான் என்று தெரியாது – அவள் அங்கே குடில் கட்டி காத்துக் கிடக்கிறது -அவளோடு சம்ச்லேஷிக்கப் புக்கு-ஒரு மஹா பாரதத்தை பாரித்துக் கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்து இருந்தான் –

—————

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – 10-8-நாலாயி:747/4-

ஸ்ரீ பிராட்டியோடு கூட பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும் படி இனிது அமர்ந்து அருளிய
ஐஸ்வர்யம் உடையவன் தன்னை-ராஜ்ஜியம் பண்ணி இருக்கிறவன் திருவடிகளைக் கொடுக்கை யாகிற ராஜ்ஜியம் ஒழிய அதற்கு எதிர்த்தட்டாக ஸ்வ தந்த்ர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக வேண்டேன் –

——-

உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே –10-9– நாலாயி:749/4-

இப்படிப்பட்ட சௌலப்யத்தை அநவரத பாவனை பண்ணி இருக்கிற நமக்கு –
ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு இனி இல்லை –

————–

பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – திருச்சந்த விருத்தம்-52-நாலாயி:803/2

மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –

———-

ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே – -72-நாலாயி:823/4-

ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று
வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச் சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

—————

வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – -88-நாலாயி:839/4-

உதாராஸ் சர்வ ஏவைத -என்கிற ஔ தார்யத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனை  ஒழிய
அநந்ய பிரயோஜனனாய்-அநந்ய சரண்யனனாய் இருந்துள்ள நான் வேறு ஒரு தெய்வத்தை ஆஸ்ரயணீயமாக நினைப்பேனோ –

————

இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – -90-நாலாயி:841/4-

இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விளங்கா நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-

———

கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் –91- நாலாயி:842/3-

லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்கிற தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் – தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சம் -என்கிறார் –
நத்வா குர்மி தசக்ரவ பச்ம  -என்று-பிராட்டிக்கு சக்தி உண்டாய் இருக்க ப்ராப்தி இல்லாதே-தவிர்ந்தாள் –எனக்கு சக்தியும் இல்லை என்கிறார்-நெஞ்சுக்கு பொருந்தின பந்து வர்க்கத்தை வேறு உடையேன் அல்லேன் –உத்பாதகரான மாதா பிதாக்கள் தைவம் ரஷிக்கிறது என்று காட்டில் விட்டுப் போனார்கள்-வளர்த்தவர்களை -பிதரம் மாதரம் தாரான் -என்கிறபடியே நான் விட்டேன் –ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதாச மம ராகவ -என்கிறபடியே சர்வ பந்தும் தேவரீரே என்கிறார் –பிராட்டிக்கு தனி இருப்பிலே திருவடி வந்து முகம் காட்டினார்-அப்படியே இருப்பதொரு  குளிர்ந்த  விழியும் தேவரீரை ஒழிய எனக்கு இல்லை என்கிறார்-

—————-

மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98- நாலாயி:849/4

சம்சாரத்தில் நான் பட்ட துக்கத்தையும் என்னுடைய பூர்வ வ்ர்த்தத்தையும்
தேவரீருடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் பார்த்து விஸ்மரியாதே – அபேஷா மாத்ரத்தையும் சம்பந்தத்தையும் பார்த்து – விரோதி நிரசனத்திலே அசக்தனான எனக்கு -தன்நிவ்ர்த்தி பூர்வகமாக புருஷார்த்தத்தை தந்து அருள வேணும் –மற்று -என்கிறது விரோதி நிவ்ர்த்தி சமநந்தரத்தில் லபிக்குமது ஆகையாலே-மாய –மமமாயா -என்கிறபடியே சம்சார சக்கரத்தை அறுத்து -நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனே-

———–

ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை – ஸ்ரீ திரு மாலை-29 -நாலாயி:900/1-

இவை இன்றிக்கே ஒழிந்தால் கண் பழகி இருப்பார் ஒரு பந்துக்கள் உண்டோ -வென்னில்
அதுவும் இல்லை என்கிறார் -திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப் போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.-

————-

அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4

அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
இவர்களை வஸ்த்வய இடம் வைத்து -பிரபன்னர் அநந்ய பிரயோஜனர்களை -கேசவன் தமர் -போல –
நந்தகோபாலன் கோவில் காப்பான்- தொண்டர் அடி பொடி-மண்டம் குடியார் இல்லை-கேசவன் தமர்-
மாதவன் தமர் -விதி வகை புகுந்தனர்-பகவத் பக்தர்களுக்கு பக்தி கைங்கர்யம் கொண்டே பெயர்-
தேவர்கள்- தேவ பட்டணம் உசத்தி என்று அந்தரத்து அமரர்கள் வர்த்திக்கும் இடத்தை இட்டு சொல்லும் இத்தனை-
திரு வேங்கடமுடையான்-தேசத்து இட்டு சொல்வது போல ஸ்வாதந்த்ர்யம் அகங்காரம் இவர்களுக்கும் உண்டு என்பதால்/-

—————–

கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே – நாலாயி:936/4-

இவர் –கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும் வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது-காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே-தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில் கரை மேலே நின்ற அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் -அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்-நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்-பலம் -சதா பஸ்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம் வேணுமோ என்று சொல்லிற்று இலர்-இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
1-இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
2-வடிவில் பசை இல்லை என்று போகவோ –
3-சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
4-நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
5-மேன்மை இல்லை என்று போகவோ –
6-சௌலப்யம் இல்லை என்று போகவோ –
7-போக்யதை இல்லை என்று போகவோ –
8-அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ 

பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும் ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம் இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

————-

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/3-

வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை-பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –சாஸ்திர வாசனையாலே யாதல் –ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்-மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது-ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை-

—————

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – -1-3-10–நாலாயி:977/4-

ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே-நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –

———

பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:–1-4-5–982/1

யசோதை பிராட்டி உடைய வடிவைக் கொண்டு-வந்த பூதனை உடைய மடியிலே இருந்து –
அதுக்கே மேலே அவளுடைய பெரிய முலையையும் உண்டிட(அஹங்காரம் மமகாராம் -காம க்ரோதங்கள் போலே)

———

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – -1-10-8-நாலாயி:1045/4-

திருமலையை வாஸஸ் ஸ்தானமாக உடைய – நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன்
என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது -இதர நிர பேஷனான அவன்-அநந்ய கதியாய் கொண்டு-என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான்-அவனை விட்டுப் போவேனோ –

————–

ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து – -2-7-5-நாலாயி:1112/1

முதல் தன்னில் வார்த்தை சொல்லாதே இருக்கும் போதே –பெரியது சொன்னாலோ-ஐயர் ஆய்ச்சி என்னத்தை தவிர்ந்தாள்-

—————–

தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – 2-8-8-நாலாயி:1125/2-

முந்நீர் மடந்தை என்று-பெரிய பிராட்டியார் ஆகவுமாம்–ஸ்ரீ பூமி பிராட்டியார் ஆகவுமாம் –
(முந்நீரில் பிறந்த மடந்தை -முந்நீர் சூழ்ந்த மடந்தை )-ஸ்ரீ பூமி பிராட்டியார் ஆன போது அவ்விடத்தில் அதிருகிற சங்கம் என்றது ஆகிறது – பெரிய பிராட்டியார் ஆனபோது அவர் இருக்கிற விடத்துக்கு மற்றை இடத்திலே அதிருகிற சங்கம்-ஓர் இடத்தில் நின்றால்
மற்றை இடத்தை இப்பால் என்னக் கடவது இறே –இவருடைய நிறத்தை பார்க்கில்
காவி போலேயும் கடல் போலேயும் இரா நின்றார் –

———-

அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4

இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே-ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்-அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை
உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்

————

மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ -3-7-8– நாலாயி:1215/4-

தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே-(எல்லாம் பந்தும் பூவையும் கூட தொழும் படி)தன்னை காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ
அங்கன் அன்றிக்கே எல்லா போகங்களும் உண்டாம் படியான தேசம் என்னவுமாம்-

உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – 3-8-6–நாலாயி:1223/2

விஷம் ஆகையாலே வேறு சிலர் உண்டார் இல்லை இறே –அப்படிப் பட்ட முலை –விஷத்தை வாங்குகை அன்றிக்கே அது ஆஸ்ரயமான பிராணனையும் கூட ஒரு காலே அமுது செய்தவன் வர்த்திக்கிற தேசம் –

———

வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் –4-1-3- நாலாயி:1250/1-

பரம பதமும் சம்சாரமும்-அவ்வவ தேசங்களே அன்றிக்கே அவற்றில் உண்டான பல ஆத்மாக்களுக்கும் தான் என்ற சொல்லுக்கு உள்ளே தனக்கு பிரகாரமாய் அடங்கும்படி இருக்கிற சர்வேஸ்வரன்-தானும் குடும்பமுமாய் கல நெல் ஜீவிப்பான் ஒருவனை
உனக்கு என்ன வேணும் என்றால் – எனக்கு கல நெல் வேணும் -என்னும் இறே
தன் அபிமானத்துக்கு உள்ளே அடங்குகையாலே அப்படியே தானே அதுக்கு எல்லாம் அபிமானியாய் இருக்கிற சர்வேஸ்வரன்

————-

வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – -4-2-8-நாலாயி:1265/1

மிக்க ஒளியை உடைத்தாய்-பரந்து இருந்துள்ள கண்களை உடைய தேவிக்கு தன் உடம்பில்
ஒரு பார்ஸ்வத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற தேவன் உடைய வலிய சாபம் நீங்க-லோக குருவுமாய்-பிதாவுமாய் இருக்கிற வனுடைய தலையை ஒரு ஹேது இன்றிக்கே இருக்க அறுக்கையாலே ஒன்றால் பரிகரிக்க அரிதாம் படியான பாதகமானது அவனை விட்டுப் போம் படியாக ரக்த ஸ்பர்சம் ஒன்றும் இன்றிக்கே
வெறும் அஸ்தியேயாய் இருக்கிற தலை ஓட்டிலே -மூளை ஆர் எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின மகா உதாரனானவன் வர்த்திக்கிற தேசம்

————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் – 4-4-1–நாலாயி:1278/1

த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது-உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று அருளிச் செய்த படி-தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய
ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும் மிடுக்கும் திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்-சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப- என்னும்படி
அவர்கள் ஸ்திரீகள் உடைய மங்கள ஸூத்ரமும்-

———–

தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை -5-4-2– நாலாயி:1379/3

குழலிலே பூக்களை வைத்து முலையை குங்குமத்தால் அலங்கரித்து இருந்துள்ளவர்கள் படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில் ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்-குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி ஓடா நிற்கும் யாய்த்து –நல்லார் -என்கையாலே வெள்வரைப் பதன் முன்னம் துறை படிந்து -என்கிறபடியே சாத்விக காலத்திலே துறை படிந்தமை   நன்மை –

————–

ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய -5-7-6– நாலாயி:1413/2-

திரண்டு இருந்துள்ள தோள்கள் ஆயிரமும் துணியும்படியாக யுத்தத்திலே கையிலே மழுவைத் தரித்து மற்று அவன் உண்டு -சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் – ஸ்வ ஹஸ்த வதத்தாலே வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க –

———-

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – 5-8-1-நாலாயி:1418/1

மற்று அவர்க்கு –-அவனுக்கு அதுக்கு மேலே –இன்னருள் சுரந்து – இவ் விஷயீ காரத்துக்கு மேலே இனிய அருளைச் சுரந்து இன்னருள் – தன் பேறான அருள்-சுரந்து – வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை சுரக்குமா போலே குணங்களைச் சுரந்து –

—————

வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – 5-8-2-நாலாயி:1419/1-

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி –மற்றோர் சாதி-விலங்கு-மற்கடம்-வாத மா மகன்-மற்றோர் சாதி– விஷயீ காரத்துக்கு நிகர்ஷத்தை முன்னிடுகிறவோ பாதி
கைங்கர்யத்துக்கும் நிகர்ஷத்தை முன்னிட வேணும் இறே – விசஜாதியர் நிகர்ஷம் சொல்லும் போதும் -மற்றோர் சாதி -என்ன அமையும் இறே-நிகர்ஷம் முன்னிட்டு
ஏழை ஏதலன் கீழ் மகன் உத்தர உத்தர நிகர்ஷ ஆதிக்யம் வேண்டுமோ என்னில்
அதே போல் இங்கும் வாத மா மகன் அகங்கார ஹேது எனவே இறுதியில்-

———

முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2

மற்றது –பின்னை அந்த ஆனை யானது-கஜ  ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்கிறபடியே-அநேக காலம் முதலை நீருக்கு இழுக்க-ஆனை கரைக்கு இழுக்க நோவு பட்டு மிடுக்கு அற்றது அஹங்காரம் இறே பல ஹானிக்கு அடி – அத்தைப் பொகட்டு ஈஸ்வரனைப் பற்றினவாறே  பலவானாம் இறே – (பலம் அற்றுப் போய் திருவடி பற்றுகிறோம் என்று தவறாக நினைக்கிறோம் வில்லை கீழே போட்டதும் ராவணன் வீரன் -வெறும் கை வீரன்
அஞ்சலி பரமாம் முத்ரா )-

———

ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – 5-8-8-நாலாயி:1425/3

உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –-உன் மக்கள் இவர்களே -என்று தேறும்படியாக அவயவப்படியே கொடு வந்து கொடுத்தாய் –

—————

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – 5-8-9-நாலாயி:1426/3

வளம் கொள் மந்திரம்-அழகாதல் –சஞ்சாரித்வமாதல் –வளம் ஆகிறது சகல பல பிரதனான ஈஸ்வரனைப் போலே எல்லார் பக்கலிலும் சஞ்சரிக்கை-கர்மாதிகளுக்கு உபகாரகமாய்
பிரபன்னனுக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி அக்கரைப் படுத்தும் இறே-மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு –அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது (பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே
தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )

———-

மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து –6-3-5– நாலாயி:1472/1

மநோ ரத சமயத்திலும் வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டாக நினையேன்-சர்வாதினகாய் இருக்கிற் உன்னை விலக்காமை மாத்ரத்தாலே என்னுடைய ஹிருதயத்திலே வைத்து ஓர் அலாப்ய லாபம் பெற்றேன் –

————

உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – 6-3-6–நாலாயி:1473/3

நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்
இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன்   –
இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத
படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –
(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )

————-

கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் – 6-3-7–நாலாயி:1474/3

நான் ஒரு அநந்ய கதி -என்கிறார் இதர தேவதைகளை வாயாலே பேசேன் –
அவ்வளவே அன்றிக்கே நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விஸ்வசியேன் –சர்வாதிகனாய் இருக்கிற நீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்-நீயே ஆஸ்ரயணீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –

————-

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – –7-3-3–நாலாயி:1570/1

பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய் அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

————–

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – –7-7-2-நாலாயி:1609/4

வேதங்களாலே சொல்லப்படுகிற ஆதிக்யத்தை யுடைய சர்வாதிகனே –வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று – உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் – அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————–

ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-3-நாலாயி:1610/4-

நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே – நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

———–

வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – 7-7-4–நாலாயி:1611/2

தன்னை அழிய மாறியும் அடைந்தாரை நோக்கும் துணை உன்னை ஒழிய
வேறு ஒருவரை யுடையேன் அல்லேன் –

————-

அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-5–நாலாயி:1612/4-

அண்டத்துக்கு நிர்வாஹகனானவனே-அன்றிக்கே இடையருக்கு நிர்வாஹகனானவனே என்றுமாம் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல்
பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

————

ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – –7-7-6–நாலாயி:1613/4-

கலௌ கிருதயுகம் தஸ்ய -என்ன ஒண்ணாதோ யுனக்கு –காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –
உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன் (யார் உள்ளத்தில் கோவிந்தன் உள்ளானோ அவனுக்கு கலி யுகத்தில் க்ருத யுகம் வந்தது போல் இல்லை என்றால் கிருதயுகத்தில் கலி யுகம் போலவே )அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு  அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது –

——————

மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – 8-1-1-நாலாயி:1648/2

மற்று அவனுக்கு ஆபரணம் – ஆபரணத்துக்கு   ஆபரணமாய் இருப்பன-தோள் நாலும் என்னா நின்றாள் –திவ்ய ஆயுதங்களை அனுசந்தித்த இது அவ்வாயுதங்களின் வழியே -அவற்றைத் தரித்து இருக்கும் திருத் தோள்கள் அளவும் கொண்டு போய் மூட்டிற்று –
(சம்ஸ்லேஷத்துக்கு முன்னால் ஆயுதமாக தோற்றும் பின்பு ஆபரணமாகவே தோற்றும் முன்பே பார்த்தோம் )புறம்பு ஓர் இடத்திலும் போக வேண்டாத படி இறே விஷயம் தான் இருப்பது – சர்வ பூஷண பூஷார்ஹா -என்று ஆபரணங்களுக்கும் ஆபரணமாகைக்கு அர்ஹமாய்  இறே தோள் தான் இருப்பது-ஆயுதங்களை ஆபரணமாக சொல்லிற்று இறே
ஆயுதங்கள் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்குமா போலே தோள்களும் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்கிற படி – (எடுத்த பிரமாணம் பூஷணங்களுக்கே ஆயுதங்களுக்கு இல்லையே என்று சங்கை வர இவள் இவற்றை ஆயுதமாகவே பார்க்க வில்லையே )மற்று -எனபது -துல்ய விகல்பங்களை இறே – (துல்ய -ஒரே பெருமை உள்ளவை -விவஸ்திதம் -சமம் இல்லாதவை -இப்படி இரண்டு விகல்பங்கள் )
கீழே திவ்ய ஆபரணங்களைச் சொல்லி -இங்கே -மற்று -என்கையாலே –
தோள்களும் ஆபரணமாக இருக்க வேணும் இறே –
திவ்ய ஆத்மா குணங்களிலும்
திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டிலும் அனுபாவ்யமாய் இருப்பது திவ்ய விக்ரஹம் இறே
ஸூபாஸ்ரய  ப்ரகரணங்களில் த்யேயமாக சொல்லுகிறதும் அது தன்னையே இறே –
(தோள் நான்கே -ஏவகாரத்துக்கு இங்கு விளக்கம் -த்யேயம் ஸ்ரீ பதி ரூபமே -)தந்தாமுடைய தபஸ்ஸாலே ஷீண பாபரான ருஷிகளைப் போலே அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக ஜ்ஞானம் பிறந்த ஆழ்வார்கள்
திவ்ய விக்ரஹம்  அல்லது அறியார்கள் இறே –

————

பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – –8-1-2-நாலாயி:1649/2-

இக் கைக்கு வில்லானால் மற்றக் கை ஒழிந்து இருந்தது -என்று நான் ஆறி இருக்கிறேனோ – பிரணயிநி களுடைய விரோதியைப் போக்கி நோக்குமதுவே யாய்த்தான் ஆறி இருக்கிறேனோ – நாட்டுக்காக வந்த நலிவை போக்கினதுவும் இல்லையோ எனக்கு -என்கிறாள் – சிறகு எழுந்து பொருது கொடு திரிகிற மலைகளை பண்டு   யுத்தத்திலே முடித்த அழகிய திருவாழி யன்றோ மற்றைக் கையிலே எடுத்திருக்கிறது –இந்தரனுக்கு தம்பியாய் உபேந்திர மூர்த்தியாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே அவற்றின்-பர்வதங்களின்- பஷங்களை திருவாழி இட்டு சேதித்தனாகச் சொல்லக் கடவது இறே –

———–

ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – —8-5-3–நாலாயி:1690/1-

கிருஷ்ணன் பிரிகிற போது -பிரியேன் -பிரியில் ஆற்றேன் -என்று பிரிந்து போனான் –
அங்கன் இன்றிக்கே இவை சடக்கென பிரிந்து கொடு நின்றது – (ஆயன் மாயத்துக்கும் மேல் அன்றோ இவற்றின் மாயம் )அனு ராகேண சைதில்யம் உபயாந்த்யா ஸூ கரேஷூ வலயான்யபி ஆஸூ–(ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-18)-என்னுமா போலே ஆஸூ சைதில்யம் உபயாந்தி –கடுகப் பிரிந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –கைப் பட்டார் அடைய விட்டுப் போகிற காலம் ஆகாதே –(கைப் பட்டார்-வளையல்களும் உற்றாரும் )

——–

வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே – –—8-10-2– நாலாயி:1739/3-

பிரளயம் வந்த போதாக உன் வயிற்றிலே போய்ப் புக்கு நீ வெளிநாடு காணப் புறப்பட விட்டவாறே நான் ஆஸ்ரயணீயன் என்று வருவதொரு தேவதை உண்டாக நான் அறியேன் –
(அகில காரணம்-அத்புத காரணம் -நிஷ் காரணம் -என்றதும் கஜேந்திர ஆழ்வானை ரக்ஷிக்க வந்தவர் உங்கள் தேவனோ )பிரளய ஆபத்தை பரிஹரித்து இன்று ஆஸ்ரயணீயன் என்னும் இடம் தோற்ற நீ வந்து சந்நிஹிதனாக நான் எங்கனே வேறு சிலரை ஆஸ்ரயணீயன் என்று இருக்கும் படி – சம்சார பிரளயத்தை பரிஹரிக்கைகாக இறே நீ இங்கே வந்து நிற்கிறது –

—————

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே
— 8-10-3–நாலாயி:1740/3-

தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை-திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும் அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –
அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-

—————–

மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – -8-10-5-நாலாயி:1742/2-

நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி – (கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )ஆதலால்  நின் அடைந்தேன்-நிராலம்பநாய் விழுமவனுக்கு ஒரு தரையிலே விழ வேணுமே- சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )

————-

என் கொங்கை மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா – –9-5-9–நாலாயி:1796/3-

அவனும் வந்து அணையவும் பெற்றாலும் கழிந்த பருவத்தை மீட்க ஒண்ணாதே
காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –நமே துக்கம் பிரியா தூரே –வயோஸ் யாஹ்யாத் அதி வர்த்ததே -என்னுமா போலே அவனுடைய ஸ்ப்ருஹநீயமான மார்வோடே அணையப் பெறாதே வ்யர்த்தமே இருந்து செவ்வி அழியா நின்றது ஆயிற்று –
முன்னிருந்து மூக்கின்று (பெரிய திருமடல் )-என்னக் கடவது இறே  –
கண்ணுக்கு இலக்காய் இருந்து காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –

—————

சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் கொலையார் கொம்பு கொண்டான் – —9-6-10-நாலாயி:1807/1

அங்கன் ஓர் ஆயுதமும் இன்றிக்கே வெறும் கை உடனே போய் மிக்க சினத்தை உடைத்தாய் –கொன்று கொடு திரிகிற குவலயா பீடத்தின் உடைய கொம்பை அனாயாசேன முறித்து –
அவ்விரண்டு அவதாரத்திலும் பிற்பட்டாருக்கு இழக்க வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற திருக் குறுங்குடி-

———-

காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் ஏவலம் தவிர்த்தான் – —9-10-6–நாலாயி:1843/1-

ஈஸ்வரனோடு ஒக்க நானும் காவலன் என்று திக் பாலர்களைத் தவிர்த்து ஜகத்துக்கு ரஷகன் தானேயாய் இலங்கைக்கு நிர்வாஹகன் மலங்கும்படி சரங்களை செல்ல நடத்தி –ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே  என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –

—————-

மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை -10-7-2– நாலாயி:1909/2-

ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய(நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ ) இது செய்யக் கடவார் இல்லை –

—————

மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து – —10-8-5–நாலாயி:1926/2

சுற்றும் குழல் தாழ-மயிர் முடித்து அதில் ஈடுபடாமையாலே குழலைப் பேணாதே வந்தான் ஆயிற்று –சுரிகை அணைத்து-உகப்பாருக்கும் உகவாதாருக்கும் கருவி ஒன்றாயிற்று –
சத்ருக்களை இரு துண்டமாக விட்டு முடிக்கும் அனுகூலரை அழகாலே கொல்லும்-
(திவ்ய ஆயுதங்கள் திவ்ய ஆபரணங்களாக இருக்குமே அனுகூலருக்கு )ஆபரண கோடியோடு ஒக்க சொல்லுகையாலே அதுவும் அழகுக்கு உடலாம் இத்தனை –
பெரு விலையனான ரத்னங்களை உடைத்தான திரு வாபரணங்களைச் சாத்தி –

———–

தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – –11-4-1-நாலாயி:1982/2(தலை இடம் அற்று என்றுமாம் –)

மேலாய் இருப்பதொரு  இருப்பிடம் அற்று எங்களுக்கு ரஷகர் இல்லை யென்ன –நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேணுமோ – நான் ரஷகனாய் இருக்கிறேன் – என்னும் படியான  கிருபையாலே –

———–

துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய – 11-4-9-நாலாயி:1990/1

நமக்கு வேறே ஒரு துணை உண்டு என்று இராதே தொழும் கோள்  –பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –

———–

போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – —11-6-6-நாலாயி:2007/3

நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர்   – (தன்னை வணங்க வைத்த கரணம் இவை -இராமானுஜர் காட்டிக் கொடுக்க )அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –

——————

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – திரு நெடும் தாண்டகம்–24–நாலாயி:2075/3-

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று இறே மேன்மைக்கு எல்லை –
வடிவார் சோதி வலத்து  உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ற பெரியாழ்வாரைப் போலே காணும் இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறபடி –என் கையைப் பிடித்த கையும் என் காலைப் பிடித்த கையும்

——–

வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை
–முதல் திருவந்தாதி-பாசுரம் -31 – நாலாயி:2112/3,4

சிறுக்கன் உடைய விரோதியைப் போக்கி அவன் பக்கல் வ்யாமுக்தனாய் இருந்துள்ள வனுடைய திருவடிகளை ஒழிய ஷண காலம் வேறு ஒன்றை என்னலாமோ -தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவின குணம் புறம்பு ஒன்றை எண்ண ஒட்டுமோ-

——–

தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து —44 – நாலாயி:2125/2-

ரூபத்துக்கு மேலே மற்றும் திரு நாமங்களும் அவர்கள் உகந்ததாய் இருக்கும்-கஞ்சனூரிலே வண் துவரைப் பெருமாள் என்று ஒருத்தன் தன் நாயனாரை-சதங்கை யழகியார்  -என்று திரு நாமம் சாத்தினான் – அந் நாயனார் ஸ்வபனத்திலே சதங்கையும் தானுமாய் அவன் முன்னே நின்றாடினார்-நாயனை -நீர் ஆர் -என்று கேட்க – நான் சதங்கை யழகியார் -என்றாராம்-எங்கள் ஆழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற் பழம் வேண்ட -நீ யார் -என்ன
நான் ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை குடி இருக்க  வொட்டுகிறிலன் -என்றார் –

———-

பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது – —60–-நாலாயி:2141/3-

ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்-அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி

————–
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – –89–நாலாயி:2170/2-

எனக்கு ஒப்பாக வல்லார் ஒருவர் உண்டோ-என் தான் ஈஸ்வரன் உமக்கு ஒப்பாக மாட்டானோ -என்னில் சர்வேஸ்வரன் தான் தனக்கு ஒப்பாம் இத்தனை போக்கி எனக்கு ஒப்பாக வல்லனோ –அதாகிறது-சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு-

———–

மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் –94– நாலாயி:2175/2-

தன் பக்கலிலே சேர்ந்து கிடக்கிறதான ஏழு உலகங்களையும் –மற்றிவையா வென்று வாய் அங்காந்து – அவையாகிறன இவை தான் என்று வாயை அங்காந்து காட்டினான் ஆய்த்து
தத பஸ்ய மஹம் சர்வம் தஸ்ய குஷு மகாத்மான -பார ஆரண்ய காண்டம் -191-123  -என்னும்படியே-அன்றிக்கே -வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை -திருவாய்மொழி -8-7-9-என்னக் கடவது இறே-

————-

தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து2- நாலாயி:2183/2-

அசாதாராணமான நாராயணாதி நாமங்களை – விபூதி யோகத்தைப் பற்றின நாமங்களை –பக்தியாலே உணர்ந்த படியே சொன்னால் –பிரமன் ருத்ரன் இந்திரன் வாயு ஆகாசம் போன்றவை அவனுடைய விபூதிகளைக் காட்டி -சரீரீ யான அவன் அளவும் பர்யவசிக்குமே-அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்றபடி முறை கெடக் கூப்பிட்டால்
அல்லது அறிந்த அளவு சொல்லுதல்-தானம் – ஸ்தானம் -பக்தி ஸ்தானம்-மற்று – இதைக் காட்டிலும் வேறான குண யோகத்தை காட்டும்-

————-

மாரி யார் பெய்கிற்பார் மற்று16--நாலாயி:2197/4-

காட்டில் திடரை கல்லிக் குளமாக்கும் அது ஒழிய வர்ஷத்தை இவனால் பெய்விக்கப் போமோ-இத்தால் ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை ஒழிய
ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று -(பெரிய திருமலை நம்பி நிர்வாஹம் இது -ருசி -குளம் வெட்டுவது -மழை பெய்வது ப்ராப்தி )அன்றிக்கே
ஏரியாம் வண்ணம் இயற்றுமது-மற்று வர்ஷிப்பிக்குமது இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம்ருசி உத்பாதகனும் தானே-கூரத்தாழ்வான் நிர்வாஹம்-பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம்

———

மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் – ––17--நாலாயி:2198/1-

மற்று ஆஸ்ரயணீயர் ஆவார் ஆர் –லோகத்தில் பிரதானனான இந்த்ரனோடு கூடின ப்ரஹ்மாதிகள் இறே அவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தம்தாமுடைய அபிமதங்கள் பெறுகிறது இந்த்ரன் ப்ரஹ்மா நேர் கொடு நேர் ஆஸ்ரயிகப் போகாதே பாடே பக்கே சென்று வணங்கும் ஆஸ்ரயண பிரகாரங்களை உடையனாவனை-

————–

மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்38–– நாலாயி:2219/3-

நமக்கு என்றும் அனுபாவ்யம் ஸ்ரீயபதி என்னும் நெஞ்சைப் படைத்தது அம் மிதுனத்துக்கு வாசகமான சப்தத்தை சொல்லுகை வாக் இந்த்ரியத்துக்கு ஒத்து ஆவது-ந பிபேதி குதஸ் சந -தைத்ரியம் -பரம புருஷனைப் பற்றி இருப்பவன் எத்தைக் கண்டும் பயப்பட மாட்டான்
சேதனர் அனைவர்க்கும் அறிந்த நிலையோடு அறியாத நிலையோடு வாசி இல்லாமல் நிரந்தரமான பற்றுக் கொம்பு தானே அவன் எல்லாக் காலத்திலும் அவனே தாரக போஷக போக்யம் -உபாயம் உபேயம் என்ற துணிந்த மனத்துடன் மாதவன் ஸ்ரீ தரன் போன்ற இம் மிதுனத்தின் பெயரைச் சொல்வதே நாவுக்கு ஓதத் தக்கது -புருஷார்த்தமாக அவளும் ப்ராப்யமாக அவனும் ப்ராபகமாக மிதுனமும்-

——–

அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் —47--நாலாயி:2228/3-

சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –மற்று நீங்கள் அனுசந்திக்கும் படி எல்லாத்தையும் உணர்ந்து காலை தொழுது எழுமின்-மற்று எல்லாம் இதி பாடாந்தரம்-

—————

மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய்–51– நாலாயி:2232/2-

கண் வளருகைக்கு போரும்படி பெரிதான திருப் பாற் கடலிலே நின்றும் பேர்ந்து
பின்னை அத்தை கடைவதும் செய்து நீரை உடைத்தான கடல் போலே இருக்கிறவனுடைய
திரு நிறத்தை அனுசந்தி-

————

மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – -9-நாலாயி:2290/2-

கண்ணிலும் ஸ்பர்சத்திலும் தோற்று விழும் திருவடிகள் –காடும் ஓடையுமான பூமியை யளந்ததுவும் பூவைக் கொண்டே –எண்ணில்- ஆராய அரிது -என்கை- எண்ண ஒட்டாதே கலக்குமே அழகு –

————

பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் – -55-நாலாயி:2336/3

பாண ஜாதியாக லஜ்ஜித்து ஒடுங்கும் படிக்கு ஈடாக வண்டுகள் ஆனவை சப்தியா நின்றுள்ள பங்கயமே காட்டும் –எத்தை என்னில் – மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் –அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-

—————-

இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற -8- நாலாயி:2389/1

ஒன்றுக்கு ஓன்று சேராதே கொத்தான பத்துத் தலையை யுடைய ராவணனதான
அப்ரவிஷ்டமான லங்கையைக் கிட்டி யழித்த கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது
நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –

—————-

ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை – நாலாயி:2399/3

சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்-தவம் -ஸூஹ்ருதம்–ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆபாஸ்ரயமாகப் பற்றும் – ந்யஸ்த பரராய் -சரம அதிகாரிகளுடைய தபஸ்ஸூ வெல்லும் –கையைப் பற்றி அபேக்ஷித்தால் மறுக்கலாம் காலைப் பற்றி அபேக்ஷிக்க மறுக்க முடியாது அன்றோ-அடியார்கள் திருவடி ஸ்தானம் அன்றோ சித்திர் பவதி வா நேதி சம்சயோ அச்யுத சேவிதாம் ந சம்சயோ அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்ம நாம் –பரமார்த்தம் இப் பாசுர தாத்பர்யம்-பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-

————

வயிர வழக்கு ஒழித்தாய் மற்று – நாலாயி:2406/4

வயிரம் வைரம் -சத்ருத் தன்மை – வயிர வழக்கு -எதிரியாய் இருக்கும் முறை-அஹங்காரமான தன்மை-ஒரு உபாயத்தாலே வைரத்தை புஜித்து அத்தாலே மிடுக்கனாக அபிமானித்து இருக்கிற மகா பலி உடைய சாத்ரவ முறையைத் தவிர்த்து- மகாபலி பக்கலில் நின்றும் ராஜ்ஜியம் மீட்டுக் கொடுத்து உபகரித்தாய்-

—————

மற்று தொழுவார் ஒருவரையும் யான் இன்மை -–26- நாலாயி:2407/1

நான் உன்னை ஒழிய வேறே ஒருவரையும் ஆஸ்ரயணீயராக உடையேன் அல்லேன்
இதற்கு ஆள் பிடித்துத் தொழுவித்துக் கொள்ளும் -சாதகன் என்பதைக் காட்டும் ஜடையும் தானுமாய் சாதன அனுஷ்டானம் பண்ணிப் போகும்-நெருங்கின ஜடையையுடைய ருத்ரன் ஸாக்ஷி-

——–

தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே –51- நாலாயி:2432/2

ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே
அவனும் எனக்கு ஒப்பு அன்று –ஸர்வேஸ்வரனும் தான் தனக்கு ஒப்பாமது ஒழிய எனக்கு ஓப்பான் அல்லன் என் புத்திக்கு பரமபதம் எல்லாம் கூடத் தான் விலை யாகுமோ-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-
விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –ப்ராப்ய ஏக பரராய் இருக்கும் அவர்கள் இடம் ப்ராபக-உபாய – பாவம் விலை செல்லப் பெறாமல்
குமரி இருந்து போம் அத்தனையே –

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே–திரு விருத்தம் –79-
இனி யாவர் நிகர் அகல் வானத்தே –திருவாய் –4-5-8-
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே –திருவாய் –6-4-7-
எனக்கு இவ்வுலகம் நிகரே –திருவாய் –6-4-2-
ஒருவர் நம் போல் வருங்கேழ்பவர் உளரே -திரு விருத்தம் —-44-
பகவத் சம்பந்தம் அடியாக வரும் அஹங்காரம் உபாதயமே –

———-

மாந்தராய் மாதுவாய் மற்று எல்லாமாய் சார்ந்தவர்க்கு – நாலாயி:2464/2

அனுக்தமான எல்லாவுமாய்(போக்ய போக்ய உபகரணமாய் போக்ய ஸ்தானமாய் போக்ய பிரதானனுமாய் -ஸ்ரீ மத்தாய் )

———-

பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த – –85–நாலாயி:2466/2-

நாங்களும் எல்லா கார்யம் செய்து- பகவத் நாம சங்கீர்தனமும் பண்ணுகிறிலோமே-என்ன-
எனக்கு ராம வ்ருத்தாந்தம் கிடக்க வேறு ஒன்றுக்கு-போது போராது-அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்
ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்
பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை
லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்
எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு
அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்-
என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி

—————

வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3

திருவேங்கடமுடையான் விஷயமாக அநேக புஷ்பங்களைச் சோதித்து ஸமர்ப்பித்தவர்களே
அத்யாதிக மஹிமையுடன் இருந்து பரமபதத்தைப் பரி பாலநம் செய்ய வேண்டுவார்கள் ஆவார்-ஸர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் இருப்பதைச் செவ்வையாய் அறிந்து ப்ரீதி யுக்தராய் அந்த ஸர்வேஸ்வரனுக்கே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாஸரான
பாகவதர்கள் இன்னம் அதிகமாக ஸூ கிப்பார்கள் —யதோ உபாசனம் பலம் -என்கிறபடியே
பகவத் ஸமாஸ்ரயணத்தாலே பகவானைப் பெறுவார்-பாகவத் ஸமாஸ்ரயணத்தாலே பாகவதர்களைப் பெறுவார் என்கிறது இப் பாட்டு-

————-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் – -43-நாலாயி:2520/3-

சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் – அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –
அதுக்கு அவ் வருகான முக்தர் –நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-
எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன்-

————

மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா —85- நாலாயி:2562/3

முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு–மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே 

————-

அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே –94- நாலாயி:2571/4

ஊரில்  பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே – குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே – அப்படி யானும் சொன்னேன் – அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ – நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –அன்றிக்கே
அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –

————-

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும் –99- நாலாயி:2576/3-

ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி – அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கும் அவன் வேணும் – அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே -தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே   – ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம்
பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்-ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத் தலையில் உண்டான அறிவு அசத் சமம் என்கை –

————

ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே -7– நாலாயி:2584/9-

இப்படி இவற்றை திரு வயிற்றிலே வைத்து தான் முகிழ் விரியாதே பவனாய் இருபத்தொரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்த நம்முடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை ஒழிய-இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது – பெரு மா மாயன் -என்று-அவனை ஒழியப் புறம்பே கால் காணித் தெய்வம் உடையோமோ நாம்-பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் –
இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே – இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே-ஆகவே ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்-

—–

இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம்
– -—2–நாலாயி:2586/2,3

மற்று -என்கிறது-புகழோம் என்கிறதில் காட்டில் இகழ்வோம் என்றதினுடைய பிரிவைக் காட்டுகிறது-மற்று இகழ்வோம் என்ற படி (வாக் வியாபாரத்தில் மாறி மானஸ வியாபாரம் என்கிறது )-

————

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
– -4–நாலாயி:2588/1,2

ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ-தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி ஸூலபனாய் அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே-இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி-

——————

அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1

திருப்பாற்கடல் நாயகன் -துர்லபனாய் இருக்கும்-அர்ச்சாவதாரம் ஸூல பனாய் இருக்கும்
அப்படியே இருக்கும் -உம்பர் மேலாய் -பரமபத நாதன் இப்படியே இருக்கும்-அதுக்கு மேலாய் இருக்கும் என்று சம்சயித்துக் கை விடப் பாராதே-ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்-அவனே எவனேலுமாம்-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்-

வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே – 40–நாலாயி:2624/1

இத்தோடு ஒக்கும் நேர் பாடு மற்று இலை நெஞ்சே-அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்-பெற்ற தாய் வேஷத்தைக் கொண்டு வந்த பேயினுடைய உயிரைப் பாலோடே கலசி யுண்டு அவள் உயிரை முடித்தவனை
வாழ்த்துகை நமக்கு மிடுக்கு-வாழ்த்துகையிலே துணி என்றுமாம்-

————–

கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது –52- நாலாயி:2636/3

கண்ணுக்கு அவா ஊண் பாவித்து உண்டானதோர் உருவம் காண்பான்-அது ஒன்றும் காண்கை செய் -என்று காண்கை நாணி வேறே ஓன்று காணாமையே முடியும்-

————

வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – -53-நாலாயி:2637/3

உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம் ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்-இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்-

—————

நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் -77– நாலாயி:2661/3-

உரைக்கப் படுவது எல்லாம் உன்னை ஒழிய வேறே ஒருவர் இல்லை
துணையாக உரைக்கப்படுவது எல்லாவற்றிலும் உன்னை ஒழியத் துணை இல்லை -துர்த் தசையில் மா ஸூச என்று நற் சொல்லு சொல்லும் அத்தனை

————

சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3-

இத்தை லபிக்கும் சம்பத்தை வுடையவர்கள் இதுக்கு கலா மாத்ரமான தர்ம அர்த்தங்கள் இரண்டையும் லபித்தாராகக் கடவர்-சாத்தியத்தை லபித்தவர்கள் -சாதனத்தையும் அனுஷ்டித்தாராக கடவது இறே-இவற்றுக்கு சீர்மை யாவது -இதுக்கு சாதனம் ஆகையாலே
ஒரூருக்கு போகவென்று ஒருவன் மனோரதித்தால் அவ் ஊரிலே அவனைக் கண்டால் நடுவு பட்ட வழியும் வந்தானாகக் கடவது இறே-அறிவில் குறைந்த யாரோ சிலர் நிலையான மோஷம் என்று மற்று ஒரு புருஷார்த்தம் இருப்பதாகச் சொல்லுவார்கள் –
அல்ப அஸ்தரம் என்று இப் புருஷார்த்தங்களை தூஷித்து ஆனந்தா வஹமாய் -அந்தமில் பேரின்பமாய் நிலை நின்ற புருஷார்த்தம் உண்டு என்பார்கள் –
இப்படி காண ஒண்ணாதே அவர்கள் வசஸ் சமுத்ரத்திலே கேட்டுப் போம் இத்தனை என்கை –ஆரானும்-என்கையாலே -அவ்யப தேச்யருமாய் அவ்யுத்பன்னருமாய் சிலர் -என்கை

————–

வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே – நாலாயி:2681/2-

நிறம் வரும் என்கைக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே நிறம் வந்ததில்லை -என்றாள் இறே – என் ஆற்றாமை கண்டால் நிறம் தானே வர வேணும் -என்று இருக்கிறாள் காணும்-தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்-

————–

ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்
– நாலாயி:2684/6,7

ஒருத்திக்காக -உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து-இப்படி அரியன செய்து கைக் கொள்ளுமவன் இவளை நோவு பட்டு இருக்க விடான் பசிக் கோபத்தாலே இந்த்ரன் வர்ஷிக்க -அவ்வர்ஷம் நோக்கப் பட்டது ஆராலே அவ்வர்ஷத்திலே அகப்பட்ட இடையராலும் பசுக்கலாலுமோ –இத்தால் தன்னால் வந்த நலிவும் தானே பரிஹரிக்கும் என்றபடி –

————

வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து – நாலாயி:2688/3-

முதலிகள் இலங்கையை எனக்கு எனக்கு என்றால் போலே கிடீர்-தன்னேராயிரம் பிள்ளைகளும் காளியனை -எனக்கு எனக்கு -என்று நின்றபடி – அவர்கள் நடுவே எனக்கு வாராய் என்றான் –மற்றதன் மத்தகத்து –அக்காளியன் பணத்திலே-சீரார் திருவடியால் பாய்ந்தான் –பிராட்டி திரு முலைத் தடங்களில் வைத்துக் கொள்ளும் கூச வேண்டும்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு விஷ த்ருஷ்டியான பணத்திலே பாய்ந்தான்
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலை மகள் பிடிக்கும் மெல்லடி இறே –

——–

தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/4-

இவளுக்கு சர்வேஸ்வரன் அடியாக வந்த நோயாகிறது தீரில் செய்வது என் -என்று
அவர்கள் பயப்படுகிறார்களாக கருதி –தீரா நோய் -என்கிறாள் காணும் – இப்போது தீரா நோய் -என்கிறது பக்தியை இறே –யாவதாத்மா பாவியான நோய் இறே-ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்கும் இறே-தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே இருக்கிறது காணும் தனக்கு இனிதான படி-என்றும் இந்நோய் கொண்டால் ஆகாதோ இவள் புகுந்து இப்படி பரிஹாரம் சொல்லப் பெறில்-இந்நோவு பேராயிரம் உடையான் அடியாக வந்தது -என்று சொன்னாள் கட்டுவிச்சி-என்னைப் பெற்ற தாயாரும் -தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை இறே -என்று பலகாலும் கேட்டு –

——-

தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை
– நாலாயி:2696/3,4

அபேஷிதம் ஆனவை தானாகச் செய்யாது ஒழிந்தாலும் காலைக் கட்டியாகிலும் செய்வித்துக் கொள்ள ப்ராப்தி இல்லையோ -என்று இப்படி தோழிமார்க்குச் சொல்லி-தேவதாந்த்ரமான நாய் தீண்டிற்று இல்லை இ றே -என்று தானே தெளிந்து நிர்ப்பரை யானாள் –எம்பெருமானோடே சம்பந்தம் உடைய இவளுக்கு நான் கரைய வேணுமோ என்று
தளப்பம் அற்றாள்-

———-

ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு – நாலாயி:2701/1

தங்கள் அபிமத சித்தி சாதன அனுஷ்டானத்தாலே என்று இருக்குமவர்களைப் போலே
என் அபிமதத்துக்கும் நான் உத்சாஹிக்கும் படி யானேன் –அவனாலே பேறு என்று இருந்த இவள் கண்டாயே உண்டபடி இவளைப் போலே உண்ணும் அத்தனை அவன் கை பார்த்து இருந்தவர்கள் -என்பார்களே -அவர்கள் –என்நெஞ்சம் எனக்கு உதவாது இருக்க
வேறு நமக்கு இங்கு உசாத் துணை உண்டோ –மற்று இல்லை -என்கையாலே இன்னமும் அவனே வந்து ஆராயில் ஆராயும் அத்தனை -என்கை-அவ்வருள் அல்லன அருளும் அல்ல -என்றும்-வையகத்துய்ப் பல்லார் அருளும் பழுது -என்றும் இறே இவர்கள் தாங்கள் அறுதி இட்டு இருப்பதும்-

————–

ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3

அப்படி அவன் பின்னே போனவளை ஊரார் கொண்டாடின வித்தனை யல்லது பழி சொன்னார் உண்டோ –இத் துணிவுக்கு புறம்பான வார்த்தை சொல்லிக் கற்பிப்பார் எனக்கு நாயகர் அல்லர்-பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே -என்று இருக்கும் நிலை தவிர்ந்தேன்-இத் துணிவுக்கு உடன்பட்டார் எனக்கு நாயகர்-க்ரம ப்ராப்தி பொறுக்க வேணும் -என்று இருப்பார் எனக்கு நாயகர் அல்லர் – அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என்-

————

முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும் – நாலாயி:2715/5-

அச் செவ்விப் பூவிலே நாலு பூ தோன்றினால் போலே-சிருஷ்டி காலத்திலேயே சதுர்முகனைத் தான் உண்டாக்க –மற்றவனும்- இவன் சிருஷ்டித்த அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று மசக்குப் பாலிடலாம் படி  பெருத்த அந்தச் சதுர முகனும் –முன்னம் படைத்தனன் நான்மறைகள் –அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை
ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று
வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே
யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே
அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி-
பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –

————–

மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4

நாட்டில் ஒருவரை ஒழியாமே எழுதிக் காட்ட இது வன்று இது வன்று என்று போந்து
கிருஷ்ணன் பக்கலிலே வந்தவாறே இவன் ஒரு பார்வையாய் இருந்தான் -என்று -பின்பு
அநிருத்தனைக் கண்ட வாறே இவன் இறே என்ன
இவனாகில் அரியனோ- என்று அப்போதே யோக பலத்தாலே போய்ப் படுக்கையோடு பீட்கன்றாக எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் –மற்று  அவனோடு – இவளுக்கு ஸ்வப்னத்தில் கண்டு  பிறந்த ச்நேஹம் எல்லாம் அவனுக்கு இவளைக் கண்டவாறே பிறந்தது-இருவர் காலிலும் விலங்கிட்டு வைக்கவும் அனுபவிக்கப் பெற்று இலர்களோ –மற்றிவை தான் என்னாலே கேட்டீரே – மடலூர என்று ஒருப்பட்டு அது தானும் மாட்டாத படி துர்பலையாய் இருக்கிற என்னைக் கொண்டு-இவை கேட்க இருக்கிறிகோள் இறே

————

நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே – நாலாயி:2759/2

நல நறு வாசம் உண்டு –அத்யந்த விலஷணமாய் செவ்வி அழியாத பரிமளம் –தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட  வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –

———–

மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10

தேஜோ பதார்த்தங்கள் எல்லாம் தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய –யாவதாத்மபாவியான தாரித்ர்யம்-பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்பட –மற்றன்றியும்-பிரதாபத்துக்கு எதிர்த்தட்டான தாழ்வுகள் பேசுகிறது –

————–

மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4-

ஸூ க்ர பகவான் உள்ளிட்டார் – நெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6- ராஜாவே -என்ன-திரியப் பார்க்க-மூவடி -என்ன-என்னன்புது -என்ன மண் -என்ன-ஆர் காலாலே -என்ன-என் காலாலே -என்ன-பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன
என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன-பேசாது இருந்தான்-இவன் பேச்சை கேட்க்கைக்காக-இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட-அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே-வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –

———–

தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் – நாலாயி:2789/1

தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்-ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது-இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்-மா முனி-அவன் ஒருவன் படி இருந்த படி என்-ஸ்ரீ ஜனக ராஜன்  திருமகள் உடைய ஆற்றாமைக்கு உதவ கடுகக் கொடு சென்றவன் கையும் மடலுமாய் இருக்கிற  என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –

——–

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – -39-நாலாயி:2829/2

அஞ்ஞான யுத்தமான க்ரூர துக்கங்களை நீக்கித்–தம்முடைய நித்தியமாய் நிரவதிகமான கல்யாண குணங்களையே அறியும்படி யான அறிவைத் தந்து எம்பெருமானார் செய்யும் ரஷைகள்-நெஞ்சே -மற்று உண்டான வர்கள் செய்யும் அளவோ –ராமனும் கண்ணனும் அருளாதவற்றை அன்றோ ராமானுஜர் அருளுகிறார் நமக்கு-

தென்னரங்கர் தமக்காமோ தேவியர்கட்காமோ சேனையர்கோன் முதலான சூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறனருள் மாரி தனக்காமோ மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவர்க்கு முடியும் எதிராசா வுனக்கு அன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன் – என்று இவ் அர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார்-

——————

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்குஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை -– 45- – நாலாயி:2835/1

ஆசார்யத்வம் ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே தானே வ்யவஸ்த்திதமாய் இருக்கையாலும்
அவருடைய திருவடிகளே பிராப்யம் என்று நிஷ்கரித்து அருளினார் –வகுத்த சேஷியான தேவரீருடைய திருவடிகளே புருஷார்த்தம் என்று இருக்கிற-நமக்கு அத் திருவடிகளை ஒழிய வேறு ஒரு பிராப்யம் இல்லை –

———-

படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4

ஸ்ரீ எம்பெருமானார் இந்தப் பூமியில் வந்து அவதரித்து -என்னை ஆளுகைக்காக –
ஆராயில் வேறு ஒரு காரணம் இல்லை –இவ்வமுதம் இப்படியில் பிறப்பதற்கு காரணம் அதன் கருமம் அன்று-ஸ்ரீ ஸ்வாமி இந்த லோகத்தில் அவதரித்து -திவ்யம்- அமுதம்- அருளிற்று என்னை அடிமை கொள்ளுகைக்காக–வேறு ஒரு ஹேதுவும் இல்லை..

—————

வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4

லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது – என்னுடைய மனஸ்சானது-ஸ்ம்ரியாது –முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் – பண்ணிக் கொண்டு போந்த என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய – வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை ஆஸ்ரயித்த பின்பு –
அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து-வகுத்த ஸ்ரீ எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு –பேருவகை கொண்டு உறவு பாராட்டி – என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –

———

மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் – நாலாயி:2847/1

அரங்கன் மலர் அடிக்கே ஆளுகையே பேறு-அடிகள் நிரதிசய போக்யமாய் மலர் போன்று இருத்தலின் ஆளுறுகை பெரும் பேறாயிற்று – திரு வரங்கத்தில் அரங்கன் திருவடி வாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-மற்ற புருஷார்த்தங்கள் புருஷார்த்தமாக மதிக்கத் தக்கன அல்ல என்று ஆளுற்றவர் கருதுகின்றனர் -திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் -அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது

பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4

எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது –

——————

ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/2

ப்ரஹ்மமே விலஷணம் என்று வேதாந்த வாக்யங்களாலே பிரதிபாதித்து –
தத் வ்யதிரிக்த சமஸ்த ஜீவர்களும் அந்த ப்ரஹ்மம் தானே என்று -இப்படி தத்தவ நிர்ணயத்தை பண்ணி – மோஷ நிர்ணயம் பண்ணுகிற அளவிலும் –

அப்படிப்பட்ட ஜீவ வர்க்கங்கள் அடங்கலும் தேஹாத் யுபாதி விநிர்முக்தமானவாறே -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி – பரஞ்சோதி ரூப சம்பந்த்ய ஸ்வேன ரூபேணபி நிஷ்பஷ்யதே -இத்யாதி ஸ்ருதிகளுடைய தாத்பர்யத்தை அறிய மாட்டாதே – அவற்றுக்கு காரண பூதனான சர்வ ஸ்மாத் பரனோடே ஏகீபவித்து இருக்கும் என்கிற
அபார்த்தத்தை சொல்லும் –

————–

அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – -67-நாலாயி:2857/4

அருமையான இவ் ஆத்மா அழியாது காக்க வேறு எவரும் இலர்

——–

திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4

ஸ்ரீ எம்பெருமானாரே ரஷகர் என்று அத்யவசித்து இருக்கும் பலம் ஒழிய –
திண்மை -திண்ணிமை -அதாவது-மிடுக்கு –நன்றாக கொண்டு நிரூபித்து பார்த்தால் -என்னுடைய ஞானமும் ப்ரேமம் தொடக்கமான வேறு சிறிதும் எனக்கு இல்லை –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கிற எனக்கு தாரகமாய் மாட்டாது என்று
தம்முடைய பாரமை காந்த்யத்தை யருளிச் செய்தார் ஆய்த்து –

பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – -78-நாலாயி:2868/4

எனக்கு அஞ்ஞா தாஜ்ஞாபனம் பண்ணி உபகரித்து அருளின எம்பெருமானாரே –தேவரீர் அறிவித்த யதார்த்த ஜ்ஞானம் ஒழிய அதற்க்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தமான அர்த்தத்தையும் -ஜீவாத்மா பர ப்ரஹ்ம ஐக்யமடைதல் -அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன––வலியப் பொருத்தினாலும் பொருந்தாது –ஞானம் புக்க-இடத்தில் அஞ்ஞானம் புகுர வழி இல்லை என்றது ஆய்த்து –

———

மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4

இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி மோகிப்பிக்க வேண்டா –
மயக்கம் -மோகம் –பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி –என்று சொல்லுகிறார் காணும் –மற்று ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதும் செய்ய வேண்டா என்கிறார் –பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ – நெறி காட்டி நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே –தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது ஸ்ரீ அமுதனார் உட் கருத்து .-ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளின் இனிமையை உணர்த்தி என்னை மயக்கி விடக் கூடாது என்கிறார் .-இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று .

————–

மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி-2-7-6- – நாலாயி:3080/1

விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது-அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும் ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்-

———–

நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – 2-8-2-நாலாயி:3089/1-

நீந்தும் – என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜனனம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்தும் –நீந்திக் கொண்டே இருக்கிறோமே –

————

ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும் – நாலாயி:3092/1

கீழே நீந்தும் துயர்ப்  பிறவி -என்கிறார் -அங்கே யானைக்கு துயர் விட்டுப் போனதே அது போலே இல்லாமல் இதிலே ஒரு கால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை-உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும்-ஷட்பாவ விகாரம் என்கிறார் –

————

சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3

உயர்த்தியே ஸ்வபாவமாக உடைத்தான பரம பதம் என்ன -முக்தாத்மா ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான தேவாதிகள் என்ன -இவற்றை உடைத்தான-

————-

ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் – நாலாயி:3097/2

ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்

———

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
– நாலாயி:3106/1,2

மற்று எக் காலத்திலும் இது தன்னையும் வேண்டா என்கிறார் -என்பர் ஆளவந்தார்
எக்காலம் என்றது -எல்லாக் காலத்திலும் என்றபடி-ஜ்வர சந்நிபதிதர் -ஒரு கால் நாக்கு நனைக்க -என்னுமா போலே–இது பொருள் அழகியது –இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது–பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார்–பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –எக்காலத்திலும் ஈது ஒன்றும் ஒழிய மற்று ஒன்றும் வேண்டேன் என்கிறார் –என்று எம்பெருமானார்-

———-

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் பரஞ்சோதி –3-1-3- நாலாயி:3123/1

உன்னை ஒழிய வேறொரு பரஞ்சோதிஸ்ஸூ இல்லாமையாலே உபமான ரஹிதனாய்க் கொண்டு வர்த்தியா நின்றுள்ள பரஞ்சோதிஸ்ஸூ நீ 

———-

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – –3-2-4–நாலாயி:3135/3-

யாதானும் பற்றி’ என்கிறபடியே,-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து-உன்னை ஒழிந்த ஸமஸ்த விஷயங்களிலும் கால் தாழ்கை தவிர்ந்து-வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே- ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகள் இரண்டின் கீழே -உன் திருவடிகளிலுண்டான கைங்கரியத்தை.-பரதந்த்ரனாய் வாழும் வாழ்க்கை-

—————

தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – -3-6-8–நாலாயி:3183/4

மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார்-போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –-பாவனே சர்வ லோகானாம் -அகஸ்த்யர் சொல்லி உள்ளாரே -அகஸ்த்யரும் நம்மாழ்வார் உடன் ஒத்தார் -அவர் பாவனத்வத்துக்கும் இவர் ஒழிய இல்லை என்கிறார்-எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.-இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.

————

ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் – –3-9-7–நாலாயி:3215/2

ஜமபில என்று ஒரு சந்தஸியிலே வைத்து கவி பாட ஒண்ணாதாய் இருக்கை இன்றிக்கே கவி பாடுகைக்கு விஷயமான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் அசங்க்யேயமான திரு நாமங்களை உடையவனை ஓராயிரம் –ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கும் படி அத்விதீயமாய் இருக்கை-பிரானை – அவற்றை எனக்கு பிரகாசிப்பித்த மஹா உபகாரகனை-அல்லால்,மற்று யான்கிலேன்;-வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அல்லேன்-

—————

மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் 4-1-4- நாலாயி:3234/3-

வாழ்ந்த மனையிடம் -மருங்கு -பார்ஸ்வம் -அற-இரண்டுக்கும் பேதம் தெரியாதபடி
கனக்க ஜீவித்தான் ஆகில் அசலிட்டு பார்வஸ்த்தர்க்கும் அநர்த்தமாம் பெரு மரம் விழும் போது அருகு நின்றவற்றையும் நசிப்பிக்கும்-நசிக்குமது ஒழிய ஸ்திதரராய் இருப்பார் ஒருவரையும் கண்டிலோம்-

————-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல் – நாலாயி:3263/1-

இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;-இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-

——————

அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே – நாலாயி:3291/4-

இவளை பெறுகைக்கு வேறு பரிஹாரம் இல்லை –இவ் வப்ராக்ருத ஸ்வபாவைக்கு மற்று ஓன்று பரிஹாரம் ஆகாதே -இதுவே பரிஹாரம் ஆம்படி அன்றோ இவள் வைலக்ஷண்யம்

——————-

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் – நாலாயி:3295/1

தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-

————

நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் – நாலாயி:3325/2-

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லாத படி சர்வத்தையும் பிரகாரமாகக் கொண்டு நீ பிரகாரியாய் நிற்கையாலே -நேஹா நா நாஸ்தி கிஞ்சன –சரீரத்தில் வந்த துக்கங்கள் சரீரி போக்குமா போலே எனக்கு வரும் துக்கங்கள் போக்குகை உனக்கே பரம்-அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே
அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்-வேறு ஓன்று கொண்டு வேறு ஒன்றையும் பார்க்க முடியாதே –

————–

பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே – நாலாயி:3332/4-

ஸ்வதந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை -தேவதைகளுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறார் அல்லர் -ஈஸ்வர விபூதி யாகையாலே ஸ்வாதந்தர்ய நிஷேதம் பண்ணுகிறார்
அவனுக்கு பிரகாரம் என்று ஆச்ரயிக்கில் அவனுடைய ஆசிரயணீயத்திலே புகும்
ஸ்வதந்த்ர புத்தி பண்ணில் ஸ்வதந்திரமாய் இருப்பது ஓன்று இல்லை –எவர்கள் பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ, அவர்கள் எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தரியாமி யாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ 

—————

போற்றி மற்று ஓர் தெய்வம் பேண புறத்திட்டு உம்மை இன்னே – நாலாயி:3335/1-

மற்றோர் தெய்வம் – அருச்சுனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தி யுடையவர்களாய்க் கொண்டு சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ, அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,-உங்களுடைய ஆச்ரயணத்தில் ஒரு குறை இல்லை -அப்ராப்தம் ஆனதுவே குறை-

———–

ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து – நாலாயி:3336/1

ஈஸ்வரனை ஒளியும் அத்தனையே வேண்டுவது -ஆரேனுமாக அமையும்-இப்படி அநாதியாகத் தொடர்ந்து போதருகிற பிறவிகளிலே ஒரு பிறவி ஒழியாமல் மற்றைத் தேவர்களை அடைக்கலமாக அடைந்து போந்தீர்கள்;அது செய்கிற விடத்தில் முக் கரணங்களாலும் செய்தீர்கள்; ஆதலால், பற்றுகிற தன்மையில் குறையால் பலியாது இருந்தது அன்று;

———-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி – நாலாயி:3343/1-

ஹிருதயத்தில் உள்ளன வேறு சில உளவாக -அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்க –

————

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் – நாலாயி:3425/1-

உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-

————-

திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே – நாலாயி:3496/3-

ஸ்தபதை யானால் போலே இருக்கும் -வியாபார க்ஷமை இன்றியே இரா நின்றாள் -ஸ்தப்தோ சாஸ் யுத தாமாதேச மபிராஷ்ய -என்கிறபடியே பரிபூர்ண ஞானரைப் போலே இரா நின்றாள்-வேறு இவள் வார்த்தை சொல்லப் புக்காள் ஆகில் -இங்கே கண்டாலும் அயர்வரும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து ஸூலபனானான் -என்றாயிற்று இவள் புத்தி பண்ணுவது-

————–

பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் – நாலாயி:3536/1-

உங்களை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் -கடகர் பக்கலிலும் அநந்ய கதித்தவமே ஆவிஷ்கரிக்கக் கடவது-தன் பரிகரங்களிலே ஒன்றைக் கொண்டு போது போக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது.-வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ ததீயர் பக்கலிலும். உங்களை ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்.
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -வெறுமை முன்னிட்டே -ஆச்சார்ய அபிமானத்துக்கு –
ஸ்வ அபிமானம் குலைத்த நமக்கு -பரதந்த்ரன் அபிமானமே உத்தாரகம் –
ஆச்சார்ய உபதேசம் எதிர் பார்த்து அவன் கார்யம் செய்ய இவர் அதுவும் இல்லாமல் அருளுவாரே –மற்றிலேன் என்னாமல் மற்று ஓன்று இலேன் என்பதற்குத் தாத்பர்யம் மேலே –பிராட்டிக்கு இலங்கைக்குள்ளே ஒரு திரிசடையாகிலும் இருந்தாள்;-காட்டிலே விட்டுப் போந்த தனிமையிலே ஒரு வால்மீகி பகவானாகிலும் இருந்தான்; கணவன் பொகட்டால் ஒரு தந்தையாகிலும் உண்டாக வேணுமன்றோ? அங்ஙனம் ஒருவரும் இலர் என்பாள் ‘ஓர் களை கண்’ என்கிறாள்.-

————–

மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் –-–7-1-6- நாலாயி:3566/2-

இந்திர வஸ்யத்தையை போக்காக கடவ நீ யும் உபேக்ஷித்தால் எல்லா அநர்த்தமும் படுத்தாவோ –விழுந்து தரிக்கும் பூமியான நீயும் விட்டால் -காகாசுரன் -ரக்ஷித்தாயே –
இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’-நாமி பலம் அங்கு நாம பலம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கு –‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது,
‘தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்’-என்பது, ஸ்ரீகீதை, 6:34.
‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி.இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று அருளிச் செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம். – மத் பர -என்று அர்ஜுனனுக்கு சொல்லி அருளினாய் –

————-

அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/2-

ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்-பிரத்யுபகாரம் பண்ணி யல்லது நிற்க மாட்டாத தசையில் -உபகாரத்தை அனுசந்தித்து ஆத்ம சமர்ப்பணத்தில் இழிவர்-ஸ்வரூபத்தை உணர்ந்து அத்தை அநு சயிப்பர் -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -என்னா -எனது ஆவி யார் யான் ஆர் என்றார் இ றே -மயா சமர்ப்பித்த-என்னா அதவா கின்னு சமர்ப்பயாமிதே -என்ன கடவது இ றே -பிராந்தி சமயத்தில் ஆத்மசமர்ப்பணம் போலே போலே இருப்பது ஓன்று இ றே -பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் பண்ணின இதுவும் –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக பிரதமத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ண கடவன் -ஸ்வரூபத்தை உணர்ந்தால்-அவனத்தை அவனதாக இசையும் அத்தனை -இவை இரண்டும் ஞானம் பிறந்தார்க்கு பேற்று அளவும் அனுவர்த்திக்க கடவதாய் இருக்கும் –

———-

வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4

அவன் கடகன்; திருவாறன்விளையே பிராப்பியம்.-பிராப்பியனானவன் வந்து எழுந்தருளி யிருக்கும் தேசம் ஆகையாலே அவனுடைய சம்பந்தத்தாலே-அத் தேசமும் பிராப்பியம் என்கைக்குத் தட்டு இல்லை.-ஓர் அறப் பெரியவன் உபாயமாய்ப் பலத்தைக் கொடுக்கிறவனாக வேணுமே:-ஆகையாலே, அவன் உபாயம்; அத் தேசம் பிராப்பியம்.-வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்-சரண் –

————-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1

உன் திருவடிகளை அல்லது வேறு ஒரு பற்று உடையேன் அல்லேன் என்று. என்றது,
புறம்பே சிலர் இரட்சகராக மயங்கி இருக்குமதுவும் தவிர்ந்து,-கஜ ஆகர்ஷதே என்கிற ஸ்வ சாமர்த்தியம் கார்யகரம் ஆகாத அளவிலே உன் திருவடிகளை ஒழிய வேறு பற்று உடையேன் அல்லேன் என்கிறாள்-தான் தன்னை இரட்சகமாக நினைத்திருக்குமதுவும் தவிர்ந்து.‘மனத்தால் எண்ணிற்று’ என்கையாலே, ‘கூப்பிடுங்காரியகரமாம் எல்லையுங்கழிந்தது-அவனைப் பார்த்தால் தானும் அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?-ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப் பதம் கிடக்கச் செய்தே அன்றோ திரு மந்திரத்தில் நடுப் பதம் ஜீவிக்கிறதும்?-ஆகைச் சுட்டி’ என்றது, ‘தன்னுடைய இரட்சணத்தில் தனக்குச் சம்பந்தம் இல்லாமையாலே அன்றோ?’ என்றபடி.
பிரணவத்தில் நடுப்பதம், உகாரம், திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது.’
‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத் தவிர்க்கிறது.’-65-
‘ஆக, நம: என்கிற இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’
ஈஸ்வரன் தனக்கே யாயிருக்கும்; அசித்துப் பிறர்க்கே யாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட நினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமஸ்ஸால்’ –91.என்பன போன்ற சூத்திரங்களைஇங்கு அநுசந்திக்கத் தகும். முழுக்ஷூப்படி, திருமந்திரப் பிரகரணம்

———–

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1

தன் அழகைக் காட்டி புறம்புள்ள பற்றை யறுத்தவனுக்கே யாகத் துணிந்த பின்பு-வேறு ஒரு தஞ்சம் இல்லை என்று அனுசந்தித்து-பாஹ்ய ருசியை தவிர்த்தவனுக்கே துணிந்த திரு உள்ளத்தை உடையராய்–இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.-தீர்த்தமாவது, தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.-அவனை ஒழிய இரட்சகர் இலர் என்று தெளிந்தார் ஆயிற்று.-

—————

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் – நாலாயி:3671/1-

உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான தேவிமாராவார் – – உனக்கு நிரதிசய சம்பத் ரூபையான ஸ்ரீ லஷ்மியும் -ஸமஸ்த விபூத்ய அபிமானியான பூமியும் – அதுக்கும் மேலே பின்னையும் இவர்களோடு கூட இருக்கிற நீ ஏவ -நியோயிக்க கைங்கர்யம் பண்ணுவார்கள் நித்ய ஸூரிகள்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்யஸூரிகள்-கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை -க்ரியதாம் இதி மாம் வத –-மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திருமுலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் -ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூகங்கள் இருப்பது -வேதம் வல்லார்களைக் கொண்டு என்கிறபடியே அவர்களும் புருஷகார பூதராய் இறே இருப்பது-

————

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – நாலாயி:3695/2

வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –பின் செல்வார் மற்றில்லை -என்கிறது-பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக-

—————

அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே -8-4-2- நாலாயி:3705/4

அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற வூர் –-சர்வ காரண பூதனானவன் -என்னுதல் -எனக்கு சத்தா ஹேதுவானவன் என்னுதல் -பிரஜைக்கு பிரத்யா சன்னையாய் வர்த்திக்கும் தாயை போலே -என் சத்தையை நோக்கிக் கொண்டு இருக்கிறவன் –-இவனை ஒழிய வேறு எனக்கு சேர்ந்த துணை இல்லை -அல்லாதார் கழுத்து கட்டி யாதல் -துணை என்று பேராய்-ஆபத்தில் கூட விழுதல் செய்யும் அத்தனை -என்கை –

——————

திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/4-

என் உள்ளே வந்து புகுந்து-பெறாப் பேறு பெற்றவனாய் நிலை பெற்று புகர் உடையானாய்-கால் வாங்கிப் போக மாட்டாதே விளங்கா நின்றுள்ள ஒரு ரத்ன மலை போலே நின்றான் –-விளங்கா நின்றதொரு நீல மலை போலே என்னுள்ளே நின்ற இம் மஹா குணத்தை அல்லது மற்று ஒரு புகழை ஒரு புகழாக மதியேன் —என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த குணத்தையும் இனி நான் ஒரு சரக்காக நினைத்து இரேன்-

——————–

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்க – நாலாயி:3742/1-

பேறுகளில் வேறே கனத்தது ஒரு பேற்றினை-எனக்கு தந்து விட்டால்-பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் – பின்னை இப் பொருள் கடிதாக கை கொள்வார் உளரோ-கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே –என்றது இவ் வேப்பங்குடி நீரை புறம்பு பருகுவார் உளரோ -என்றபடி-வ்யதிரேக லக்ஷணை பரம போக்யம் என்றவாறு –

———–

அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4

அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இறே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

————

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1

மற்று அருள் அறியேன்-வேறு ஒரு அருளும் அறியேன் –

—————-

உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம்–8-8-3-– நாலாயி:3750/3

விஷய ஞானமும்-பஞ்ச விருத்தி பிராணனும் -பிராணன் – அபானன் -உதானன் – சமானன் விதானன் -ஐந்து பிராணனான உயிர் –சரீரமும் –மற்று உலப்பு இல்லனவும்-மற்றும் எல்லை இல்லாதனவான மகத்து முதலான-மூலப் பகுதியின் விகாரங்களும் –மூலப் பகுதியும் –இவை எல்லாம் தாழ்ந்தவை என்னும்படியான-அறிவை நான் பெறும்படி நடத்தி –அன்வர்த்த பிரயோஜன தேர் ஊருமாரு போலே -என்றது-இவை புருஷார்த்தங்கள் அல்லாதவை என்னும் உணர்வு உண்டு -மயர்வு அற்ற மதி-அதனை நான் உடையேனாம்படி செய்து -என்றபடி-

————–

கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை – நாலாயி:3781/2-

சந்நிதியில் ஸ்நேஹிக்கும் அது ஒழிய -என்னுதல் -கையிலே த்ரவ்யம் கண்ட போது அத்தைப் பற்றி ஸ்நேஹிக்குமது ஒழிய -என்னுதல் –காணாத போது மெய்யான ஸ்நேஹம் ஒன்றும் இல்லை -என்னுதல் -ஸ்நேஹமும் அதிர்க்கு எதிர் தலையான துவேஷமும் இல்லை என்னுதல் -ஸ்நேஹமும் அதுக்கு அடியான பந்தமும் இல்லை என்னுதல்-

——————–

மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/2-

போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே-பேதை பாலகன் அது ஆகும் -யுவனம் சொல்லாமல் -போலே –- மற்று ஓன்று -என்கிறார்-

—————-

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – –9-1-10--நாலாயி:3790/4

உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம்-உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுமவை அனைத்தும்-
உங்கள்தலையில் கிடக்கின்றன அல்ல –எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கின்றன-

———–

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து9-1-11-நாலாயி:3791/1-

அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து-சதுரம் -என்ற பாட்டில் -மதுர போகம் -உபேயம் என்றும் -மற்று ஒன்று இல்லை -உபாயம் அவனே -என்றத்தை அத்யவசித்து –

—————

அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4-

பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே-ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –

————-

ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே –10-1-6- நாலாயி:3896/4-

நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –-வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —

————-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1

இவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை

————–

மற்றுத்தான் (2)

வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் – நாலாயி:2633/2

கண்ட நாள் உபமானங்களைக் கண்டால் உபமேயம் என்று நம்மை விட்டு நெஞ்சு ஓடா நின்றது-மேகத்தை – கறுத்த மலையை -கடலை -கூரிய இருளை -வண்டு மாறாத பூவை -என்கிற வ்ருக்ஷத்தைக் கண்ட போது –காருருவம் காண்டோறும் நெஞ்சோடும்
(மாற்றுக் கார் உருவம் என்று கூட்டி அருளிச் செய்கிறார் )அனுக்தமான கருத்த பூங்குவளை நீலம் காயா இத்யாதி காணும் தோறும் என்றுமாம்-வடிவு கண்டால் இதுக்கு அவன் அன்று காண் -என்று கேட்டு அறிந்தாலும் பின்னையும் கண்ட போது எல்லாம்

விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே
– நாலாயி:3720/3,4

மற்றுத் தான்-தூணிலே வந்து தோற்றினால் போல் ஆதல் -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தில் ஆசை கொண்ட யான்-எனக்கு உய்விடமான திருவடிகளைக் காண –பல நாள் வேண்டும் -என்று நிர்பந்திக்கிறேனோ-என் ஆத்துமா கிடக்கைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேண்டும்-

———————–

மற்றது (2)
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/4

உன் திருவடிகளை அபாஸ்ரயமாக இருக்கும் அது ஒழிய எனக்கு வேறு ஒரு
அபாஸ்ரய ஸ்பர்சம் இல்லை –உறுதல் -தீண்டுதல்-உரைக்கிலே – தேவதாந்தர ஸ்பர்சம் இல்லை என்று சொல்லுகையும் எனக்கு அவத்யம் -என்கை –

—————-

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4

சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்-பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்
மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்


மற்றதுவும் (1)
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் பேறாக கொள்வனோ பேதைகாள் நீறாடி – நாலாயி:2408/1,2

காண வல்லேனான எனக்கு- இது ஒழிய வேறு ஒன்றை பேறாக கொள்வேனோ –

—————–

மற்றவர்க்கு (1)
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே – நாலாயி:1196/3,4

அதில் மந்திர ரூபமானவற்றைக் காணக் கடவராய் இருக்கிற ருஷிகளுடைய உத்பத்தி
இவற்றைச் சொல்லி எல்லாருக்கும் ஒக்க காரண பூதனாய் இருக்கிறவனே

————–

மற்றவர்க்கும் (1)
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் –
நாலாயி:1582/1

பௌத்தர்களும்-வந்தே -என்றால் போலே சொல்லுவார்கள் போலே  காணும்   –

மற்றவன் (2)
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
25- நாலாயி:776/1,2

சத்ருவானவன் –சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே

————–

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு – நாலாயி:3692/1

திருவடிகளை கிட்டுகையில் உண்டான விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-என்றது-
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே-
திருவடிகளின் பற்றாலே -ஒரு காரணம் பற்றி வந்த புறம்பு உண்டான பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி

————–

மற்றவனோடு (1)
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3

உஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி
இவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –

——————–

மற்றவையும் (1)
மாசு_இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
– நாலாயி:2291/2

குற்றம் அற்ற பிறப்பும் -அநுக்தமான அவையும் -நிரவதிகமான சம்பத்தும் -அழகிய ரூப ஸ்ரீயும் -குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–
மற்றும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும்-

—————–

மற்றாரும் (1)
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட – நாலாயி:1891/3

அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –

———————-

மற்றும் (44)
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன்
– நாலாயி:119/1,2

தனித் தனியே எண்ணி முடியாமையாலே மற்றும் இவர்களோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருப்பர் அநேகர் என்கிறார் –பதினோர் அஷோகினியானால் அதில் எத்தனை சூரர் உண்டாய் இருக்கும் – ஆகையால் சமுச்சயித்து சொல்லும் இத்தனை –

———————–

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் – -4 -1-9 –- நாலாயி:336/1

சர்வ ஆதாரையான பூமியும் -அது தனக்கு ஆதாரமான பர்வதங்களும் -பூமிக்கு ரஷகமாக சூழ்ந்து திரை மறிகிற சமுத்ரங்களும் -மற்றும் உண்டான சர்வ பதார்த்தங்களுமான இவை எல்லா வற்றையும் 

————-

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – -4-10-6-நாலாயி:428/2

பூமியோடு ஜலமும் அக்னியும் வாயுவும் ஆகாசமும் மாயிறே ஜகத் காரண பூத பஞ்சகமுமாய் –மற்றும்-கார்ய ரூபமான ஜகத்து-ஆகி நின்றாய்-தானும் -நீ -என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி உனக்கு பிரகாரமாக – இவற்றுக்கு பிரகாரியாக கொண்டு நின்றவனே-இத்தால்-சர்வ காரண பூதனாய்–சர்வ பிரகாரயாய் -இருக்கையாலே உனக்கு விதேயம் அல்லாதது ஒன்றும் இல்லை இறே – ஆன பின்பு  இந்த யமபடரால் வந்த நலிவை நீயே மாற்ற வேணும்-

—————–

எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
-5-3-6– நாலாயி:458/1,2

அறிவு கேட்டுக்கு எல்லை நிலமான ரிஷபத்தை த்வஜமாக உடைய ருத்ரனும் –
காரணா கருளக் கொடியானே –சம்சார காரணமான அவித்யை போக்குகையிலே கொடி கட்டினான் என்கையாலே –இவன் கொடி ஞான ஹீனமான கொடி என்கையாலே தாமச தேவதை என்கிறது-அவனுக்கு பிதாவாய்- அமரர்க்கும் அறிவியந்து -என்கிறபடியே
ஞானம் உடைய பிரம்மாவும்-த்ரை லோக்யதுக்கு ராஜாவான இந்திரனும்–மற்றும் –-முமுஷுகளாக பாவித்து இருக்கிற தேவ ஜாதியும் –ஒரு சேதனரும் இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை-

————

மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் –3-8– நாலாயி:531/1

ஒருராக நோற்கப் போந்த இடத்தில் வெறும் மாமியார் மக்களாய் இருப்பார்களோ –அவர்களைப் பெற்ற வர்களும் உண்டாய் இராதோ – நீ நினைத்தவர்கள் அல்ல காண் இங்குப் போந்தார்–உனக்கு கூச்சு முறை உடையார் எல்லாரும் போந்தார்கள் காண் –

—————

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் –
நாலாயி:652/1,2

வண்டுகள் படிந்த அரவிந்தத்தின் மேலே இருக்கிற ப்ரஹ்மாவும்-அவன் மகனான ருத்ரனும் –அவர்களோடு சஹ படிக்கப்பட்ட இந்த்ரனும் -இவர்களுடனே-அவர்கள் மூவரையும் ஒழிந்த தேவர்கள் திரளும்-ரம்பை முதலான அப்சரஸ் ஸூக்களும்-ப்ரஹ்ம பாவனையாகச் சொல்லும் சனகாதிகள் திரளும்-

—————

நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்–87-– நாலாயி:838/2-

ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய் அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாகபுக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட
ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று -அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக-

—————-

மற்றும் ஓர் தெய்வம் உண்டே மதி இலா மானிடங்காள் –திரு மாலை-9 நாலாயி:880/1

நான் சொல்லுகிற இவனை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய தத்வம் உண்டே –
ஈஸ்வரோஹம் -என்று இருப்பார் உண்டானாலும் ஆஸ்ரயணீயனுமாய் பிராப்தனமுமாய் இருப்பன் வேறு ஒருவன் இல்லை – யே த்வந்ய தேவதா பக்தா -என்று அந்யராக விறே இவன் சொல்லும் போதும் சொல்லுவது –அவர்களும் -அவர்களுக்கு அந்தர்யாமியாய் உள்ள என்னையே எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்ற உனர்வுடன் யாகாதிகளைச் செய்ய வேண்டும்-கட்டைக் குடியனாய் சிறிது போதைக்கு போலியாய் நின்று பின்னை விவேகித்தால் கழிக்கலாவது ஓன்று இல்லை –இவனோடு சமானமாய் இருப்பார் உண்டோ என்று கேட்கிறார் அல்லர் –கிம் -ஷேபார்த்தம் ஆதல்ஏழு உலகு மீ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார் -என்றால் அவன் -என்று எதிரிகளுக்கு உத்தரமாம் படி ஸூபிரசித்தமான அர்த்தம் என்கிறார் ஆதல் சம்ப்ரதிபன்னமான அர்த்தத்தை ஒருவராலும் இசையாது ஒழிய ஒண்ணாது இறே –

———

வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் – -1-1-9-நாலாயி:956/3-

மற்றும் தந்திடும்-இவனுக்கு ஹிதமாய் இவன் அறியாதனவற்றை தானே கொடுக்கும் –
இவன் கார்யம் தான் அறிந்தானோ -நாம் அன்றோ கடவோம்  என்று தானே கொடுக்கும் –
கோவிந்த ஸ்வாமி தன்னைக் கண்ட அநந்தரம் நாம் கூடப் போரும் -என்று அவன்
முன்புத்தை நினைவை அறிந்து- நீ இங்கே இருந்து சிறிது நாள் அனுபவித்து வா -என்று போனான் இறே-

———

மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – 2-10-1நாலாயி:1138/1

மேகங்கள் சஞ்சரியா நிற்பதாய் பூமிக்கு ஆணி அடித்தாற் போலே இருக்கிற மலைகள் ஏழும்
இதுக்கடைய அகழி போலே சூழ்ந்து கொடு நிற்கிற கடல்கள் ஏழும் இவற்றுக்கு அடைய அவகாசம் பிரதானம் பண்ணுகிற ஆகாசமும் இவற்றுக்கு ஆதாரமான பூமியும்
இவற்றுக்கு உட்பட்ட அநுக்தமான சர்வ பதார்த்தங்களும் –
( உம்மைத் தொகை –தனித்தனியே பிரதானம் உள்ளவை என்பதைக் காட்டவே )

————–

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய –
4-3-3-நாலாயி:1270/1,2

மற்றும் -படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் மற்றும் அனுக்தமான தேவ திர்யக் ஸ்தாவரங்களுமாய்க் கொண்டு விஸ்த்ருதனாய் நின்றவனை-தத் த்ருஷ்ட்வா ததேவ அநு பிராவிசத் -இத்யாதிப் படியே இவற்றை அடைய உண்டாக்கி இவற்றின் உள்ளே தான் அனுபிரவேசித்து அத்தாலே இவை எல்லாம் தான் என்னலாம் படி நிற்கிறவனை
தத்வமஸி ஸ்வேதகேதோ –அயமாத்மா ப்ரஹ்ம-ப்ரஹ்ம தாஸா-என்றும் சொல்லுகிறபடியே ( அப்ருத் சித்த விசேஷணமாய் )

—————

வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
– நாலாயி:1429/1,2

மரக் கலங்களை கடல்களுக்கு ஏற்றமாக சொல்வது உண்டே – மிக்கு இருக்கும் கடல்கள் ஏழும் பூமிக்கு ஆணி அடித்தால் போல் குல பர்வதங்கள் அவற்றுக்கு அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும் இவற்றை வேலியாக கொண்ட பூமிப் பரப்பு முழுவதையும் பிரளய காலத்தில் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது என்று நிதியை விழுங்கி உமிழ்ந்து பார்ப்பாரைப் போலே உமிழ்ந்து வெளி நாட காண என்னுடைய ஸ்வாமி-

————-

மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு – -8-10-3-நாலாயி:1740/1

தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-இது அன்றோ நீ இங்கே வந்து இருந்து ஓதுவித்த அர்த்தம் –

———–

மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – —9-5-3–நாலாயி:1790/3-

பெரியவன் என்று கை வாங்க ஒண்ணாதே –மேல் விழுந்து பெற வேண்டும்படியான வடிவைப் படைத்தவன் –அவன் விபூதியில் ஆச்சர்யமான பாதக பதார்த்தங்களுக்கு எண்ணில்லை –அன்றில் -தென்றல் -கடலோசை -என்றால் போலே சொல்லுகிறவற்றுக்கு ஒரு எண்ணில்லை இறே –

———–

மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் – நாலாயி:2008/1

பூமியும் ஸ்வர்க்கமும் தேவர்களும் அசுரர்களும் மற்றும் உண்டான பதார்த்தங்களும்
எல்லாம் கூட –உண்ணப் போகாது என்று தகைய ஒண்ணாது என்று பெரு வெள்ளம் உண்ணாத படிக்கு ஈடாக தான் விழுங்கி உய்யக் கொண்ட-

—————–

தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் – நாலாயி:2011/1

————–

மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும்
-28–-நாலாயி:2209/1,2

விவஷிதர் எல்லாம் (வேத புருஷனும் வைதிகர்களும் )அயர்வறும் அமரர்கள் அதிபதி என்ன
பிரசித்தனானவன் ஜகத் ரஷணதுக்காக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து கிருஷ்ணனாய் அவதரித்து விரோதி நிரசனம் பண்ணி வருவது போவதாக ஒண்ணாது என்று
திருமலையிலே வந்து நின்ற தேவாதி தேவன் என்றும் பரிச்சேதிக்கப் போகாத பரப்பை உடைத்தான கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் –என் நெஞ்சை விரும்பி புறம்பே போகிறிலன்

—————-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
– நாலாயி:2213/1,2

என்னுடைய மனஸ் தத்வம் மநோ ரதித்து-அத்யவசித்து ஸ்ரீயபதி யானவனுடைய திருவடிகளைப் போற்றி மகிழ்ந்தது-மற்றும் என்றது வாக்கும் என்றபடி

———–

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே வகையால்
– நாலாயி:2406/1,2

நல்ல உபாயத்தாலே அவனை ஒரு சரக்காக மதியாதே பூமியை வாங்கிக் கொண்டாய்-வெறும் இவ் வுபாயத்தாலே சித்திப்பது ஓன்று யுண்டோ –
அங்கன் அன்றிக்கே – ஈச்வரனான எனக்கு ஏற்கப் போருமோ என்று நினையாதே அழகைக் காட்டி மஹாபலி மதியைக் கெடுத்து இருந்த அவ்விரகாலே-மண்ணை அளந்து கொண்டு இந்த்ரனுக்குக் கொடுத்தாய் -என்றுமாம்-

—————

ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் – நாலாயி:2516/3-

முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே-தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்-

—————

வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:2946/2

வானோர் பலரும் தேவ ஜாதியும் முனிவரும் மந்திர சூத்ர த்ரஷ்டாக்களான மகார்ஷிகளும்
மற்றும் மற்றும் மனுஷ்ய திர்யக்குகளும் முற்றுமாய் அனுக்தமான ஸ்தாவராதிகளும்
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஆய்-என்கிறது பஹூச்யாம் -என்றால் போலே –

——–

மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே -1-9-6- நாலாயி:2992/1

இது என்ன பெறாப் பேறு -ஆச்சர்ய பூதனானவன் என் நெஞ்சைப் பற்றி வர்த்திக்கை யாகிற இது என்ன சேராச் சேர்த்தி-மற்றும் யவர்க்குமதுவே–புறம்பு யாரேனும் இது பெற்றார் உண்டோ –

————–

மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த – -3-5-6-நாலாயி:3170/1

மற்றும் -என்கிறது தேவர்களை -முற்றும் என்கிறது திர்யக் ஸ்தாவரங்களை-தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே,
மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய்.-குப்ஜா மரமாகவும் –ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன். கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.-ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம்.

—————

வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்3-6-1- நாலாயி:3176/2

வையம்’ என்றது, பூமியை. ‘வானம்’ என்றது, மேலே உள்ள உலகங்களை. ‘மனிசர்’ என்றது, வையத்தில் உள்ளாரை-‘தெய்வம்’ என்றது, வானத்தில் உள்ளாரை. ‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.-மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.-மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, மேற்கூறியவை எல்லாவற்றையும்.
‘முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை,

————-

எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்–3-6-5-– நாலாயி:3180/2

எரியும் தீயோடு இரு சுடர் – பிரகாசமான சூர்யா சந்திர-தெய்வம் -ஆஸ்ரயித்து -மழை-வருணன் – -அபிமத சித்தி-மற்றும் மற்றும் முற்றுமாய் -ஆஸ்ரயிக்கும் -மனுஷ்யர்-அவர்களை நம்பிய திர்யக்குகள் –இத்தை நாம் தானே வருத்துகிறோம் சொல்லலாம் படி அவன் தோற்றம் -சரீரியாய் -ஜகதாகாரன்-

———-

புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்–3-7-4- – நாலாயி:3190/2-

‘தேர் கடவிய பெருமான்’ என்கிறபடியே, அடியார்கட்கு ஆட்செய்கைக்கு முடி கவித்திருக்கின்றவன்; பொன் முடி – அழகிய முடி.-ஒரு நூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒரு தலை சேர்த்து விடுகை நிச்சயம் அன்றோ?
மற்றும் பல் கலன் நடையாவுடை – வேறு விதமான திரு ஆபரணங்களையும் இயற்கையாக உடையவன்;ஒரு தலை சேர்ந்தால் பின்னை எல்லாம் வேண்டினபடி அனுபவிக்கலாம் அன்றோ? மின்மினி பறவா நிற்கிறதாதலின், ‘மற்றும் பல் கலன்’ என்கிறார்.
அன்றிக்கே,-‘அளவு இறந்தன ஆகையாலே முடியச் சொல்லமாட்டார்;
ஆசையாலே, சொல்லாதொழிய மாட்டார்; இதுவன்றோ படுகிற பாடு!’ என்னுதல்.

————

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா-4-10-1-– நாலாயி:3330/1

தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று
ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் –காரியத்துக்குக் காரணத்திலே இலயமாகச் சொல்லுகையாலே, காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று ஒன்றுகின்ற தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று’ என்னவுமாம். -நாம ரூபங்கள் இல்லாமல்
சதேவ -சத்தாகவே இருக்கும் –அழிந்து போகாதே -சதேவ சோம்யே-‘சத்து ஒன்றே இருந்தது’ என்னக் கடவது அன்றோ?
அல்லாதார் ரஷிக்கும் பொழுது கைம் முதல் -கொண்டு பண்ணுவது போலே இல்லாமல் -ஆகிஞ்சன்யம் -ஒன்றையே-பச்சையாகக் கொண்டு ரஷிக்கும் சர்வேஸ்வரன் அன்றோ இவன்-

————

வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் –4-10-5- நாலாயி:3334/2

உங்களோடு நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு வாசி அற ஆத்மதயா நின்றான் ஈஸ்வரன் அத்தேவதைகளுக்கு உத்கர்ஷம் சொல்லும் போதும் அவற்றினுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் இவன் அதீனம் ஆகையால் இவனுடைய பரத்வத்தை இசையை வேணும் -ருத்ரனுடைய அதி மானுஷம் பகவாதத்தாம பாவத்தால் என்றது இறே
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய-அதர்வ சிரசில் ருத்ரன் தன்னுடைய சர்வாத்ம பாவம் சொல்லுகைக்கு அடி-சோந்தராதந்தாரம் ப்ராவிசத் -என்ற பரமாத்மா அநு பிரவேசத்தாலே என்று ஸ்ருதி தானே பரிஹரித்தது
அஹம்மனுரபம் ஸூ ரயச்ச-மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிற உபாசகர் பக்கலிலே பரத்வ சங்கை பண்ணினால் யாயிற்று -ருத்ரன் பக்கல் பரத்வ சங்கை பண்ணலாவது

————–

விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் – நாலாயி:3338/1

பேச்சே போக்கி உள்ளீடான அர்த்தம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் -பிரமாணம் அனுகுணம் சுஷுக தர்க்கங்களாலே யுக்தி சாரமேயாய் இருக்கை-மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும் -தமோ நிஷ்டாஹி தாஸ் ஸ் ம்ருதா
தன்பால்-அளந்து காண்டற்கு அரியன் ஆகிய-தன்பக்கல் வந்தால் அவர்கள் இல்லை என்கைக்கும் -இவ்வளவு என்று பரிச்சேதிக்கைக்கும் ஒண்ணாத படி இருக்கும் -இல்லை என்னும் போது இன்னது இல்லை என்ன வேணும் -அதாகிறது இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிஸால்யமாய் இருக்கும் என்கை –

—————-

உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால்-4-10-10- – நாலாயி:3339/1-

எல்லா தேவதைகளும் அது தேவதைகளுக்கு போக ஸ்தானமான எல்லா லோகங்களும் -மற்றும் உண்டான சேதன அசேதனங்களும்-

————–

வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே5-1-2--நாலாயி:3342/4-

யஸ் யைதே தஸ்ய தத்தனம் -என்கிறபடியே விபூதியும் தான் இட்ட வழக்கு ஆயிற்று –ச விபூதிகனாய்க் கொண்டு உள்ளே புகுந்தான் – வானே மா நிலமே -பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்
மற்றும் -அவற்றின் கார்யமான அண்டங்களும்
முற்றும் -நித்ய விபூதியும்
என்னுள்ளனவே.-நித்ய ஸூ ரிகள் செல்லாமை பார்த்து அங்கே இராதே லீலா விபூதி அழிந்த படி பார்த்து இங்கே புகுந்தான்-உபய விபூதியில் உள்ள நிர்வாஹமும் என் பக்கலிலே இருந்து பண்ணும் அத்தனையாய் விட்டது-

—————-

உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3484/2

வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –
நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –
உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை
பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்
இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்-

—————

வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல6-4-2-– நாலாயி:3485/2-

பசு மேய்த்த விடாய் தீருவது நப்பின்னை பிராட்டி தோளோடு அணைந்தாயிற்று -நப்பின்னை பிராட்டி முக்தமான அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலில் பரிமளத்தாலே திருமேனியை வாசிதமாக்கி -பசு மேய்த்து வந்த சிரமம் தீர -பர்த்தாராம் பரிஷஸ் வஜே–என்கிறபடியே அணைக்க அவள் தோளோடு கலந்ததும்
மற்றும் பல-மற்றும் உண்டான பிராட்டிமாரோடு கலந்த படி

——————–

உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல ––6-4-6– நாலாயி:3489/2-

ஓங்கி தழைத்து இருந்துள்ள குருந்தை முறித்ததுவும் -தர்ச நீயமான ஸ்தாவர வேஷத்தைக் கொண்டு வந்த மஹா ஸூரனை முடித்ததுவும்-உட்பட மற்றும்பல கன்றாயும் விளாவாயும் வந்த அஸூரர் முதலாக -வேறும் நிரசித்தவை அநேகங்கள் -இந்த திர்யக் ஸ்தாவரங்களை நித்ய ஸூ ரிகள் கைங்கர்யத்துக்காக பரிக்ரஹிப்பார்கள் -இங்கு பிராதிகூல்யத்துக்கு உறுப்பாக கொண்ட வடிவுகள் இ றே -இதுக்கு பாப பிராசர்யம் அடி -அதுக்கு இச்சை அடி –

————

வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல -6-4-8– நாலாயி:3491/2-

அபிராப்த விஷயத்தில் அஞ்சலி பண்ணினத்துக்கு பிராயச்சித்தம் பண்ணுவாராய்ப் போலே பாணனுடைய பாஹு வனத்தை சேதித்ததும் -உஷை பித்ருஹீனை யாகாமைக்காக இறே கொல்லாது ஒழிந்தது-உட்பட மற்றும்பல
பாணனை ரக்ஷிக்கிறேன் -என்று ஏறட்டுக் கொண்டு பசலும் குட்டியும் தானுமாக முதுகிட்டுப் போன படியும் -கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜானோ த்வாம் புருஷோத்தமம்-என்று முதுகிலே அம்பு தைத்த பின்பு சர்வேஸ்வரனாக அறிந்த படியும் -வேறும் அநேகம் –

————

உலக்க தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல –6-4-9- நாலாயி:3492/2-

தமஸ்ஸூ க்கு அவ்வருகே செல்ல முடியாத தேரைக் கொண்டு சென்ற ஆச்சர்யமும் —உலக்க – முடிய / கார்ய ரூபமான தேரைக் காரண த்திலே கார்ய ஆகாரம் குலையாமல் நடத்தின ஆச்சர்யம்-உட்பட மற்றும்பல-வைதிக புத்திரர்களை இத்தேசத்தில் நின்றும் கொடு போருகையும்-போன செவ்வியில் கொடு வந்து சேர்க்கையும் -பிரதாசாவனத்துக்கு மாத்யந்தினசவத்துக்கு முன்னே இது அடங்கச் செய்கையும் –

———-

அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் – நாலாயி:3602/3

அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,-மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்துமாக்கள், மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள்.

———–

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நாலாயி:3605/1-

ஒருவன் ஒன்றைக் கற்பது -அப்போதை இனிமைக் காதல் -விபாகத்தில் புருஷார்த்தத்தை தரும் என்றாதல் இ றே -பிரியவாதீச பூதா நாம் என்றும் -ராமோ ராமோ ராம இதி -என்றும் -லோகா நாம் த்வம் பரோ தர்ம -என்றும் -ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் பிரிய ஹிதங்கள் இரண்டும் ஒரு தலைத்த விஷயமாய் -நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது -பாவோ நான்யத்ர கச்சதி –

————-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1-

செவி யுடையார் கேசி ஹந்தாவினுடைய கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றைக் கேட்பரோ -பிரிய ஹிதங்களுக்கு ப்ரகாசகமாய் இருபத்தொரு சப்தத்தை கேட்க வேணும் என்று இருப்பார் –கற்கை யாகிறது -சாஸ்திரத்தில் அர்த்தத்தை வுயுத்பத்தி பண்ணுகை -கேட்க்கை யாகிறது அறிவுடையார் பக்கலிலே பிரிய ஹிதங்களை கேட்டு அறுதி இடுகை
மற்றுங் கேட்பரோ?-ராமாவதாரத்தில் இழிவார்க்கு அவர் பக்கல் உத்தேச்ய புத்தியைக் கொண்டு இழிய வேணும் -ப்ராதிகூல்யமே பரிகரமாக தன்னை கொடுத்த அவதாரம் இறே இது -வெளிச்சிறந்த காலத்திலே இறே ராமாவதாரம் -கலிகாலம் பிரத்யா சன்னமாய் இருக்கிற காலத்திலே இறே கிருஷ்ணாவதாரம் –

——————

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் –
நாலாயி:3908/1,2

சம்ஹரிக்கை -அப்யய பூர்விகை யாய் இறே ஸ்ருஷ்ட்டி இருப்பது -கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் —லோகத்தையும் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும் யுண்டாக்கினவன் -இவை அதிப்ரவ்ருத்த மான வன்று சம்ஹரித்து -பின்பு புருஷார்த்த உபயோகியான கரணங்களைக் கொடுத்து ரஷித்த-வெம் பரம மூர்த்தி-ஆச்ரித பவ்யனான சர்வேஸ்வரன் –

————

மற்றுமாய் (2)
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் –
நாலாயி:3482/2

சுழல்வன நிற்பன -ஸ்தாவர ஜங்கமங்கள்-மற்றுமாய் -அநுக்தமான சர்வமுமாய்-சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது.-
அநுக்த சமுச்சயம்–அவை அல்லனுமாய்-தத் கத தோஷைரஸம்ருஷ்டனாய் இருக்கை-அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று-மூவுலகங்களுமாய் அல்லனாய்-6-3-6- சொல்லப்பட்டதே அன்றோ; இனி, இங்கு என்? என்னில்,-அவற்றிற்கு வரும் அவஸ்தைகளை யுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி.-அவை: சேதனனிடத்தே உள்ள சுக துக்கங்களும், அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம்.-அகர்ம வச்யத்வம் அங்கே சொல்லி – அவற்றுக்கு வரும் அவஸ்தைகள் – பாப புண்ய ரூப கர்மங்களுக்கு வரும் சுக துக்கங்களும் அல்லன் என்கிறார் இங்கே

———–

தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் – நாலாயி:3638/3

காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இறே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இறே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இறே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –-முற்றுமாய்-அநுக்தமாய் ஸ்வ சம்பந்தியாய் உள்ள சேதன அசேதனங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –

—————

மற்றே (2)
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே
– நாலாயி:3535/4-

கிலேசப் படா நின்றாள் என்னுதல் -பிறர் ஏசும் எல்லை கடந்தாள் என்னுதல் -நும்மை அல்லால் மறு நோக்கு இலள் பேர்த்து மற்று -என்று கீழில் பாட்டோடு சேரக் கடவது -நும்மை அல்லால்-பேர்த்து -மற்று மறுநோக்கிலள் -உம்மை ஒழிய வேறு குளிர பார்ப்பார் இல்லை -சகீ பிஸ் ஸூ க மாஸ்வ -என்று குண கீர்த்தனம் பண்ணி ஜீவிக்கும் எல்லையும் கழிந்தது –இப் பாசுரத்திற்கு முடிபு-சென்ற பாசுரத்திலே யாதல், மேல் வரும் பாசுரத்திலே யாதல் கொள்க.-தமிழர், வினை, எச்சமாய்க் கிடக்கிறது என்று சொல்லுவர்கள். என்றது,
‘மறு நோக்கிலள், பேர்த்து மற்று, என்று சொல்லுவாய்’ என்னுமித்தனையும் இட்டுச் சொல்ல வேண்டும் என்றபடி.-

———–

புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4

வேத கோஷமும் வேதார்த்த விசார யுக்தர் கோஷமும் -அலர்ந்த தாமரை பொய்கைகளாலே அலங்க்ருதமான வயலுமான திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் நின்று இராப்பகல்-அவ் ஊரில் உள்ளார் உடைய வேத ஒலியும்-வேத விசாரம் செய்கின்ற ஆரவாரமும்-அவ் ஊரில் இனிமையுமே அன்றோ இவள்-அடைவு கெடச் சொல்லா நிற்பது-

————–

மற்றேல் (1)
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே –
நாலாயி:1036/2-

ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –
அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி

————–

மற்றை (11)
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா
– நாலாயி:178/4

ஆன பின்பு சொன்னது செய்யாமையாலே உன்னைச் சீறி மற்றைக் கண்ணையும் பரியாதபடியாக விரைந்து  கோல் கொண்டு வா-நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனாய் ஸ்வா தந்த்ர்யத்தில் பூர்ணனானவனுக்கு ஓர் கோல் கொண்டு வா –

———————

மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:502/8-

நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்-நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்-இவை இரண்டும் விரோதி யாகையாலே அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் – (நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்-அப்பாஞ்ச ஜன்யம் )ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்ப்பமான அடிமையும் அபுருஷார்த்தம் இறே-நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது

————–

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1

சம்ஹாரத்துக்கு இவன் கடவன் ஆனால் தான் சிருஷ்டிக்க கடவனாய் இவனுக்கும் ஜனகனாய் திரு நாபி கமலத்திலே அவயவதாநேந பிறந்து இதர விசஜாதீயமான ஜென்மத்தை உடையன் ஆகையாலே அஜன் என்று சொல்லப்படுகிற ப்ரஹ்மாவும்-

———-

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட –
நாலாயி:1122/1,2

வேதத்தில் உபரிதன பாகத்தையும் வேதாந்த ஸூத்ரங்களையும்-பூர்வ பாகமும்-அவற்றை உப ப்ரும்ஹிக்க கடவ இதிகாசங்களும்-கல்ப ஸூத்தரமும்-பதங்களை நிர்வஹித்துக் கொடுக்கக் கடவ வ்யாகரணமும்-அர்த்த விசாரம் பண்ணக் கடவ மீமாம்சையும்-இவற்றில் சொல்லுகிற சாதனங்களை அனுஷ்டித்தாருக்கு ப்ராப்யமாக சொல்லுகிற பூமிகளும்

————-

ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை
திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே –
நாலாயி:1176/3,4

கண்ணனை சொல்வதால் இங்கே நீளா தேவி முதல் மற்றை திரு மகள் கடைசியில் காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய் பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து
சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-

—————

மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – -1-9-10–நாலாயி:2996/4

ஒரு கலையோடு கூடிய சந்திரனைச் சடையிலே தரித்துச்-ஸூக பிரதானனாய் -ஸூகத்தில் மிகுந்தவனாய் இருக்கிற சிவபெருமானும்-அவனுக்குத் தந்தையான பிரமனும்.-தேவர்களை மெய்க்காட்டுக் கொண்டிருக்கிற இந்திரனும்.-மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம்-தேவர்கள் தன்னைப் பெறுகைக்கு இப்படித் தடுமாறா நிற்க, என்னைப் பெறுகைக்கு அவற்றை எல்லாம் தான் பட்டு வந்து, என் உச்சியிலுள்ளவன் ஆகின்றான்.
இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், 
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –

————–

கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2

தாமஸ அன்னமும் -அத்தோடு தோள் தீண்டியான ராஜஸ அன்னமும்-இராஜச தாமச தேவதைகளுக்கு அவ்வத்தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் இடங்களிலே
இராஜசமாயும் தாமசமாயுமுள்ள சோற்றினைக் கொண்டு இடச் சொல்லுகிற முறையிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும்.-

————

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/4-

புத்ரன் விமுகன் ஆனாலும் முகம் பார்க்குமோ என்ற பெற்ற மாதா நசை பண்ணி நிற்குமா போலே தன்னை உண்டாக்கின உபகாரகன் சந்நிஹிதனாக நிற்க –ஆசயா யதிவா ராம -புனஸ் சப்தா பயேதி தி -என்றால் போலே நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு –
ந நமேயம் என்னாதே வணங்குதல் விலக்காது ஒழி தல் செய்வார்களோ -என்று அவசர பிரதீஷனாய் நின்ற படி-லோகம் அடங்க கும்பிடுவாரும் கும்பீடு கொள்வாருமாய் ஆழி மூழையாய் செல்லா நிற்க -இவர் ஒருத்தரையும் காண் கிறிலர் யாயிற்று அப்ரஹ்மாத்மகமாய் இருபத்தொரு வஸ்து இல்லாமையால்
நாடுதிரே –தேடித் திரியும் அத்தனை ஒழிய ஆஸ்ரயணீயரைக் கிடையாது
ப்ராப்தனாய் ஸூ லபனாய் ஸ்வாராதனான இவனை விட்டு -அப்ராப்தமாய் துர்லபராய் துராதரராய் ஆராதித்தாலும் பலிப்பது ஓன்று இன்றிக்கே இருக்கிறவர்களை தேடித் திரிகிறிகோளே -என்று ஷேபிக்கிறார்-

—————-

மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – -4-10-8-நாலாயி:3337/4

சர்வாதிகனாய் -ஜகத் காரண பூதனானவன் திரு நகரியிலே ஸூ லபனாய் நிற்க
மிக்க– ஆஸ்ரயண காலத்தில் ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு பல வேளையில் வேறு ஒருவன் வாசலிலே கொடு போக வேண்டும் படி குறைவாளன் இன்றிக்கே இருக்கை –
மற்றைத் தெய்வம் -நாரங்களிலே ஒன்றை ஈஸ்வரன் என்று பற்றவோ -பிரகாரமாய் கொண்டு அல்லது வஸ்துத்வம் இல்லாதவற்றை பிரகாரியாக பிரமிக்கிறி கோள் இறே
விளம்புதிரே!–இவனை ஒழிய வ்யவஹார யோக்யமாய் இருப்பது ஓன்று இல்லை என்று இருக்கிறீர் –

————–

வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – -–8-1-9–நாலாயி:3679/2-

சம்சாரத்தில் உண்டான சேதன அசேதனங்களுக்கும் என்னோபாதி உன்னோட்டை பிராப்தி உண்டு -நான் நீ இட்ட வழக்காய் இருக்கிறவோபாதி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு –
யானால்-அர்த்த ஸ் திதி இதுவான பின்பு –வானுயரின்பம் யெய்திலென்-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –மற்றை நரகமே யெய்திலென் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் -சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-

————–

வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று -தஞ்சேயம் அஸி தேஷணா-என்று ஏற்றமாய் நின்றது இறே-மற்றை நிலமகள்-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்-பூத்தொடுவாரைப் போலே-கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –

——————–

மற்றையார் (2)
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே
– நாலாயி:666/4-

அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –மற்றையார் முற்றும் பித்தரே–இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –

————-

மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ – நாலாயி:2589/2-

ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது
உத்பாதகன் பிதாவே இறே ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே-மற்றையர் யாவாரும் நீ – ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே-மாதா நாராயண பிதா நாராயண-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே-அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்-உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி-அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி –

—————-

மற்றையார்க்கு (1)
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/4

அவனூரான உலகம் ஏத்தும்-திருக் கண்டியூர்-கோயில்-திரு மெய்யம்-திருக் கச்சி
திருப் பேர்-திருக் கடல் மல்லை –என்றும்-மண்டினார் உய்யல் அல்லால்–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது-மற்றை யார்க்கு உய்யலாமே –அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

————–

மற்றையோர்க்கு (1)
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் –
நாலாயி:1072/2

நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற பதுமத்தலர் மகள் உண்டு – தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார் அவளுக்கு இன்பனானவன் –எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –சர்வேஸ்வரனான தனக்கும் கூட பொறைக்கு உவத்தாய் இருக்கிற பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )தன்னையே துணையாக உடையாளான ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் – (சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –

—————

மற்றொருத்திக்கு (1)
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து –
நாலாயி:700/2

நெய்தது இருண்டு பூவை உடைத்தாய் இருக்கிற மயிர் முடியை உடையாள் ஒருத்தியை –
தான் அவள் மயிர் முடியில் தோற்றமை தோற்றச் சிறாங்கணித்துப் பார்த்து —
நேராக பார்த்தான் ஆகில் இறே போது நோக்கு என்று இருக்கலாவது –இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே – அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –சொன்ன வார்த்தையை விஸ்வசித்து -அகவாய் அறியாதாள் ஒரு முக்தைக்கு இன்ன இடத்திலே போய் நில்லு – நான் அங்கே வருகிறேன் என்று இடம் குறித்து-மயிர்முடி அலைதிகுலைதியாய் பேணாதே போக யோக்யதையாய் இருப்பாள் ஒருத்தி யோடு சம்ச்லேஷித்து-அதுவும் மித்யா பரி ரம்பணம் -அதாவது -பொய்யே தழுவுகை –

—————

மற்றொருவர் (1)
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே – நாலாயி:3218/4

காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?
‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,
பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான்
கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும்
இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக்
கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்

கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று
தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.

—————-

மற்றொருவர்க்கு (2)
என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே – நாலாயி:413/4

இச் செயலுக்கு தோற்று அடிமை புக்கு எழுதிக் கொடுக்கிறார்-மற்று ஒன்றினை காணா -என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருத்தர்க்கு ஆளாவாரோ-ஆகையால் சிதகுரைத்தார் ஸ்ரீ ரெங்க நாயகியாரும் நன்று செய்தார் -என்று மன்றாடினார் ஸ்ரீ பெரிய பெருமாளாயும்-இருந்தது இறே -அன்றே தந்தையும் தாயும் ஆவார் -ஸ்ரீ திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி உளார் தாமே இறே-ஆட்கொள்வான் அமருமூர் அணி அரங்கம் -என்று
ஆட்கொள்வார் ஸ்ரீ பெரிய பெருமாள் இறே-அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா -(பெரிய திருமொழி -11-8 )-

————

ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை –
நாலாயி:2626/3,4

பாரிடம் ஆவானும் தானானால் ஜகத்தாகிறான் ஈஸ்வரன்-ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்-ஸ்வரூபத -அன்று-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்யம் )-என்று (ப்ரதிஜ்ஜை சொன்னால் போலே )-பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி-தஜ்ஜலாநிதி (தஜ்ஜ -தல்ல -தத்தனு இதி )-என்று ஹேது சொன்னால் போலே –ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்-உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா-

————–

மற்றொருவரை (1)
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே –
நாலாயி:3181/4

எம்வானவர்ஏற்றையே-நித்ய ஸூ ரிகளுக்கு எல்லா போக்யமும் தானே யாய் இருக்குமா போலே–எனக்கும் ஆகி நின்றான்.-அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.– கால தத்வம் உள்ள தனையும் வேறே சிலரை உத்தேச்யமாக உடையேன் அல்லேன் –காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க,-நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக
நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?

————–

மற்றொன்றின் (1)
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் – நாலாயி:3669/1

திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும்-நெஞ்சானது பரம பதம் என்று பேச்சு தன்னையும்-ப்ரசங்கமும் -நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.-பரம பதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.-

—————–

மற்றொன்று (4)
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே – நாலாயி:3786/4

அங்கே வந்து அவதரித்தவனுடைய சீரிய புகழையே –வாயாலே சொல்லி பிழைத்து போமது ஒழிய –புறம்பே நின்று பரக்க-காடுகைக்கலாவதுண்டு -வாய் கைக்கும் படி வர்ணித்தல் –
வாய்க்கு கேடாக சொல்லுதல் -இத்தனை போக்கி-சுருங்க ஒரு பாசுரத்தாலே சொல்லலாவது இல்லை-

————-

மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் -9-1-7- நாலாயி:3787/1-

இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் –ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரபத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –

—————–

காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே – நாலாயி:3891/4

வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இ றே இருப்பது -சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் -இராஜாக்கள் போகும் போது முன்னே மேகம் நீர் விடுமா போலே- முன்னே காளமேகம் வனப்பாகிய அமிருதத்தை-பெய்து கொண்டு போக- பின்னே அக்குளிர் வாசத்தை அனுபவித்துப் போகலாம்படி-இருக்குமாயிற்று விண்ணீல மேலாப்பு -மேக ஜாதி நீர் -விடுமே -ராஜாக்கள் வரும் முன்னே-மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடு விடும் -சூர்ணிகை -182-

————-

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் – நாலாயி:3892/1

எம்மைக்கும் –மற்று ஓன்று—இலம் கதி–இவ்வார்த்தை ஒரு ஜன்மத்துக்கு அன்றிக்கே எல்லா ஜென்மத்துக்கும் இதுவே வார்த்தை -என்கை –எம்மைக்கும்–எப்பிறப்புக்கும் -எல்லாக் காலங்களிலும் என்றபடி –இவ்வார்த்தை ஒரு பிறவியில் அன்றி-எல்லா பிறவிகளிலும் இதே வார்த்தை –எல்லா காலத்துக்கும் இது ஒழிய-வேறு துணை உடையோம் அல்லோம் –

———-

மற்றோர் (5)
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
– நாலாயி:456/2

அவன் அடி நிழல் தடம் -( 10-1-2 )-என்னக் கடவது இறே –வாஸூதேவ தருச்சாயை ஒழிய வேறு நிழல் உண்டோ-மூச்சு விடுகைக்கு ஓரிடம் காண் கிறிலேன் உன் திருவடிகளை ஒழிய

—————

இல்லை காண் மற்றோர் இறை – நாலாயி:2644/4

ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை-அவனை அநு வர்த்தி-ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –

——————

நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் – 1-10-6-நாலாயி:3003/1,2

அந்தப் புள்ளின் பின் போன நீயும், உன்னைத் துணையாக வுடைய-பரிகரமாக – நானும்.-பலத்தை அனுபவம் பண்ண இருக்கிற நாம் இப்படி விலக்காதே இருக்கில்.
இனி, இதற்கு–ந நமேயம் – ‘நான் ஒருவர்க்கும் உரியவன் அல்லேன்’ என்னும் மாறுபட்ட எண்ணம் இன்றிக்கே ஒழியில் என்று கூறலுமாம்.-நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல்,
அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல்,
வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல்,
முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல்
செய்ய விட்டுக் கொடான்.

——————

கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/4

நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-அவன் திருவடிகளை ஒழிய வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம்.
“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே,
திருவடிகள் தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்’ என்கிறார்.
“மா மேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.-இது அர்த்த வாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.-ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகள் –
அவன் விட்டாலும் அவள் விட மாட்டாள் -இருவரும் விட்டாலும் விடாத திண் கழல் –
ததீய சேஷத்வமே திண்மை-

————-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1

வேறு மற்று ஓர் உபாயம் உண்டோ –
இவள் -அழகியதாய்-குழிந்த திருத் துழாய் நாறுகைக்கு –இராச புத்திரனை அணையாதார்க்கு கோயில் சாந்து
நாறுகைக்கு விரகு உண்டோ –
என் உடம்பாதல்-உங்கள் உடம்பாதல்-திருத் துழாய் நாறுகின்றதோ –
அம்தண் துழாய் கமழ்தல் –என்கிறதற்கு –
அங்கீ காரத்துக்கு அறிகுறியாய் இருக்கிறது -என்பது-உள்ளுறை பொருள் -ஸ்வாபதேச பொருள

—————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண-யஜுர்-வேதத்தில் உள்ள ஸ்ரீ மஹா நாராயண உபநிஷத்

February 3, 2025

சுவாமி விமலானந்தரால் மொழிபெயர்க்கப்பட்டது
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது, சென்னை

ஹரி ஓம்! மித்ரா, வருணன், ஆரியமன், இந்திரன், பிருஹஸ்பதி
மற்றும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் விஷ்ணு நமக்கு அருள் புரியட்டும்
, மேலும் எங்களுக்கு நலத்தையும் பேரின்பத்தையும் வழங்குவாயாக.
நான் பிரம்மனை பயபக்தியுடன் வணங்குகிறேன்.
ஓ வாயுவே, நான் உன்னை வணங்குகிறேன்.
நீ மெய்யாகவே உணரக்கூடிய பிரம்மன்.
நான் அறிவிப்பேன்: நீங்கள் சொல்வது சரிதான்.
நீயே உண்மையும் நல்லவனும்.
வாயு என்று போற்றப்படும் அந்த உன்னதமானவன் என்னைக் காப்பாற்றட்டும்.
அவர் ஆசிரியரைக் காப்பாற்றட்டும்.
என்னை, அவர் பாதுகாக்கட்டும்; என் ஆசிரியரே, அவர் பாதுகாக்கட்டும்.
ஓம்! அவர் நம் இருவரையும் ஒன்றாகக் காப்பார்; அவர் நம் இருவரையும் ஒன்றாகப் போஷிப்பாராக;
நாம் மிகுந்த ஆற்றலுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்,
எங்கள் படிப்பு தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்;
நாம் பரஸ்பரம் தகராறு செய்யாமல் இருக்கலாம் (அல்லது யாரையும் வெறுக்காமல் இருக்கலாம்).
ஓம்! என்னில் அமைதி நிலவட்டும்!
என் சூழலில் அமைதி நிலவட்டும்!
என் மீது செயல்படும் சக்திகளில் அமைதி நிலவட்டும்!

I-1: சிருஷ்டியின் இறைவன், கரையில்லாத நீரில், பூமியில் மற்றும் வானத்திற்கு மேலே இருக்கிறவனும், பெரியதை விடப் பெரியவனும், விதை வடிவில் உயிரினங்களின் ஒளிரும் புத்திசாலித்தனத்தில் நுழைந்து, கருவில் (வளரும். பிறக்கும் உயிருக்குள்).

I-2: இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஒன்றாக இருப்பது மற்றும் அது கரைகிறது. எல்லா தெய்வங்களும் அந்தந்த சக்திகளை அனுபவித்துக்கொண்டே இருக்கின்றன – அது நிச்சயமாக கடந்த காலத்தில் இருந்தவை மற்றும் எதிர்காலத்தில் உண்மையில் வரவுள்ளன. பிரபஞ்சத்தின் இந்த காரணமான பிரஜாபதி, முழுமையான ஈதர் என விவரிக்கப்படும் அவரது சொந்த அழியாத தன்மையால் ஆதரிக்கப்படுகிறது.

I-3: வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள இடைவெளியும், வானமும் பூமியும் யாரால் சூழப்பட்டுள்ளன. எவரால் சூரியன் வெப்பத்தால் எரிந்து ஒளியைக் கொடுக்கிறதோ, எவரால் முனிவர்கள் தங்கள் இதயத்தின் ஈதரில் (தியானத்தின் சரத்தால்) பிணைக்கிறார்களோ, அவரில் – அழியாதவர் – அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன.

I-4-5: உலகத்தின் சிருஷ்டியான பிரகிருதி யாரிடமிருந்து பிறந்தது, நீர் போன்ற உறுப்புகளிலிருந்து உலகில் உயிரினங்களைப் படைத்தவன், மூலிகைகள், நாற்கரங்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட உயிரினங்களுக்குள் நுழைந்தவன், யார் பெரியவர். பெரியவர்களை விட, ஒரு நொடி இல்லாதவர், அழியாதவர், எல்லையற்ற வடிவங்கள் கொண்டவர், பிரபஞ்சம் யார், பழமையானவர், இருளுக்கு அப்பால் இருப்பவர் அல்லது பிரகிருதி மற்றும் உயர்ந்ததை விட உயர்ந்தவர் – அவரைத் தவிர, அல்லது நுட்பமான வேறு எதுவும் இல்லை.

I-6: முனிவர்கள் அறிவிக்கிறார்கள்: அதுவே சரி, அதுவே உண்மை: அதுவே ஞானிகளால் சிந்திக்கப்படும் மரியாதைக்குரிய பிரம்மம். வழிபாட்டுச் செயல்கள் மற்றும் சமூகப் பயன்களும் கூட அந்த உண்மைதான். அதுவே பிரபஞ்சத்தின் தொப்புளாக இருப்பதால், கடந்த காலத்தில் தோன்றிய பிரபஞ்சத்தை பன்மடங்கு நிலைநிறுத்துகிறது.

I-7: அதுவே நெருப்பு: அதுவே காற்று; அது சூரியன்; அது உண்மையில் சந்திரன்; அதுவே பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் அம்ப்ரோசியா. அதுதான் உணவு; அதுவே நீர் மற்றும் அவர் உயிரினங்களின் இறைவன்.

I-8-9: நிமிஷங்கள், காலங்கள், முஹூர்த்தங்கள், காஷ்டங்கள், நாட்கள், அரை மாதங்கள், மாதங்கள் மற்றும் பருவங்கள் அனைத்தும் சுய-ஒளிவான நபரிடமிருந்து பிறந்தன. ஆண்டும் அவரிடமிருந்து பிறந்தது. அவர் தண்ணீரைப் பால் கொடுத்தார், மேலும் வானமும் வானமும்.

I-10: இந்த பரமாத்மாவின் மேல்நோக்கிய வரம்பையோ, குறுக்கே உள்ள வரம்பையோ, அவரது நடுப் பகுதியையோ எந்த ஒரு நபரும் புரிந்து கொள்ளவில்லை. அவரது இயல்பை யாரும் வரையறுக்காததால் அவரது பெயர் ‘பெரிய மகிமை’.

I-11: அவரது வடிவம் பார்க்கப்படக்கூடாது; அவரைக் கண்ணால் பார்க்கும் எவரும் இல்லை. மனம் சிதறாமல், உள்ளத்தில் நிலைபெற்று அவரைத் தியானிப்பவர்கள் அவரை அறிவர்; அவர்கள் அழியாதவர்களாக மாறுகிறார்கள்.

[பரமாத்மா-சூக்தம் அல்லது ஹிரண்யகர்ப-சூக்தம் – யஜுர்-வேத-சம்ஹிதையிலிருந்து:
1. பிரபஞ்சம் விஸ்வகர்மனிடமிருந்து நீர், பூமி, நெருப்பு மற்றும் பிற கூறுகள் மூலம் எழுந்தது. அவர் ஆதித்யன், இந்திரன் மற்றும் பிற கடவுள்களை மிஞ்சினார். த்வஸ்தா எனப்படும் சூரியன் காலையில் உதயமாகி அவனது பிரகாசத்தை வெளிப்படுத்துகிறான். சிருஷ்டியின் தொடக்கத்தில் இருள் சூழ்ந்திருந்த அழிந்த உலகம் பரமாத்மாவின் மகிமையில் பிரகாசிக்கும் சூரியனிடமிருந்து தெய்வீகப் பிரகாசத்தைப் பெற்றது.
2. அறியாமைக்கும் இருளுக்கும் அப்பாற்பட்டவனும், சூரியனுடைய மகிமைக்கு நிகரான மகிமையும் உடையவனுமான இந்தப் பெரியவரை நான் அறிவேன். இவ்வுலகில் அவரை அறிந்தால், ஒருவன் மரணத்தைக் கடந்தான். விடுதலையை அடைவதற்கு வேறு பாதை இல்லை.
3. சிருஷ்டிகளின் அதிபதியான சூரியன் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட இடைவெளியில் இரவும் பகலும் உண்டாக்குகிறது. அவர் பிறக்காதவராக இருந்தாலும், எல்லாவற்றிலும் சுயமாக இருந்தாலும், அவர் பன்முகப் பிரபஞ்சமாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை, எங்கும் நிறைந்த பரமாத்மாவை உணர்கிறார்கள். முதல் பித்ருக்களான பிரஜாபதி, மரிச்சி மற்றும் பிற முனிவர்கள் அடைந்த பதவியை நாடினார்.
4. பரபிரம்மனின் மகனும், தேவர்களின் நன்மைக்காகப் பிரகாசிப்பவரும், தேவர்களுக்கு அருளும் தலைவனாகப் போற்றப்படுபவனும், தேவர்களுள் மூத்தவனுமாகப் பிறந்தவனுமான சூரிய பகவானுக்கு நமஸ்காரம்.
5. தேவர்கள் பிரம்மத்தைப் பற்றிய அறிவை ஏற்படுத்தியபோது, ​​பரம யதார்த்தத்தைப் பற்றி இவ்வாறு போதிப்பதாக அறிவித்தனர். – முன் விவரித்தபடி பரமாத்மாவை அறிந்த அந்த முனிவர் எல்லாருக்கும் உள்ளான ஆன்மாவாகிவிட்டதால், கடவுள்களின் மீது இறையாண்மையைப் பெறுவார்.
6. ஓ சூரியன், ஹ்ரி மற்றும் லக்ஷ்மி உனது மனைவிகள், நீயே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன். இரவும் பகலும் உனது இரு பக்கங்கள். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் உங்கள் சொந்த வடிவம். அஷ்வின்கள் உங்கள் வாய். அப்படி இருப்பதால், நான் விரும்புவதையும், ஆன்மீக ஒளியையும், மகிழ்ச்சியையும் மற்றும் பிற விருப்பப் பொருட்களையும் எனக்குக் கொடுங்கள்.]

[ஹிரண்யகர்ப்ப துதி – தைத்திரிய-சம்ஹிதை IV-1-8 இலிருந்து:
1. ஒளிமயமான பிரஜாபதி, படைப்பின் தொடக்கத்தில் மாயாவின் சக்தியுடன் கூடிய உன்னத சக்தியிலிருந்து பிறந்தார். அவர் பிறந்த பின்னர் அனைத்து உயிரினங்களையும் ஒரே ஆதரிப்பவராகவும் போஷிப்பவராகவும் ஆனார். அதே பரமாத்மா, இங்கே ஹிரண்யகர்பா என்று குறிப்பிடப்படுகிறார், பூமியையும் வானத்தையும் ஆதரிக்கிறார். பேரின்ப குணம் கொண்டவர் அல்லது யாருடைய குணாதிசயங்கள் விசாரிக்கப்பட முடியாதாரோ, அந்த பிரகாசிக்கிறவனை காணிக்கையுடன் வழிபடுவோம்.
2. பூமியில் வாழும் மற்றும் இருக்கும் அனைத்து உயிரினங்களின் இறையாண்மை ஆட்சியாளர் ஆனார்; பூமியில் உள்ள அனைத்து இரு கால்கள் மற்றும் நாற்கரங்களை உள்ளிழுக்கும் ஆவியாகக் கட்டுப்படுத்துபவர்;
3. சுயத்தை வழங்குபவர் யார் (உண்மையில் அனைத்து சுயங்களும் அவரே); (உணவின் மூலம் ஊட்டமளிப்பவராக) வலிமை அளிப்பவர்; யாருடைய கட்டளையை கடவுள்கள் கூட பெற ஆர்வமாக உள்ளனர்; அழியாமையும் மரணமும் நிழலைப் போல் கீழ்ப்படிகின்றன;
4. யாருடைய மகிமையை மலைகளும், இமயமலைகளும் மற்றவைகளும் அறிவிக்கின்றன; நதிகளுடன் கூடிய பெருங்கடல் யாருடைய பெருமையை பறைசாற்றுகிறது; நீதி வழங்குவதில் ஈடுபட்டுள்ள கைகளை எட்டு திசைகளையும் ஒப்பிடலாம்;
5. வானமும் பூமியும் ஆகிய இரு தெய்வங்கள் ஒளியால் பிரகாசிக்கின்றன, உலகத்தின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டவை யாரை மனதின் மூலம் தங்கள் மகத்துவத்தின் ஆதாரமாகக் கருதுகின்றன; சூரியன் உதயமான பிறகு மகிமையுடன் நகரும் யாரால் ஆதரிக்கப்படுகிறது;
6. இவரால் வலிமைமிக்க வானமும் நிலப்பகுதியும் உறுதியாக்கப்பட்டன; யாரால் பேரின்ப சொர்க்கம் புண்ணியவான்களுக்கு வழங்கப்பட்டது, யாரால் நல்லொழுக்கமுள்ளவர்களுக்கு விடுதலை நியமிக்கப்பட்டது; நடுப்பகுதியில் ராஜஸ படைப்பை உருவாக்கியவர்;
7. யாருடைய சக்தியின் மூலம் பெரிய காரணமான நீர் தனக்குள்ளேயே விரிவடையும் சக்தியும், நெருப்பை உற்பத்தி செய்யும் திறனும் தன்னை உலக வடிவமாக மாற்றிக்கொண்டதோ, அவரிடமிருந்து அனைத்து கடவுள்களின் ஒரே சுவாசம் உருவானது;
8. யார் – ஹிரண்யகர்ப்பன் – நெருப்பை உண்டாக்கும் மற்றும் வேத வழிபாட்டுச் செயல்களை ஆதரிக்கும் நீர்களைப் பார்த்தார் (அத்தகைய ஆற்றலைக் கொடுப்பதற்காக); மற்ற

அனைத்தையும் ஆளும் ஒரே கடவுள். தொடக்கத்தில் ஹிரண்யகர்ப்பனாகப் பிறந்த அவர் உண்மையில் பிரபஞ்சத்தின் உள்ளேயே கர்ப்பமாக இருக்கிறார். அவர் ஒருவரே படைப்பின் பன்மடங்கு உலகம் இப்போது உருவாகி, இன்னும் வரவிருக்கும் படைப்பு உலகின் பிறப்பை ஏற்படுத்துகிறார். எங்கும் முகம் கொண்டவராக, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்தும் உள்ளார்ந்த சுயமாக அவர் வாழ்கிறார்.

I-13: சுய-ஒளிரும் நிஜம் ஒரு நொடி இல்லாமல் ஒன்று மற்றும் வானத்தையும் பூமியையும் உருவாக்குகிறது. (அவராலேயே பிரபஞ்சத்தைப் படைத்து, தானே இருந்து.) பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து உயிரினங்களின் கண்கள், முகம், கைகள், கால்கள் ஆகியவற்றை உடையவராக ஆனார். அவை அனைத்தையும் அவர் தர்மம் மற்றும் அதர்மம் (தகுதி மற்றும் குறைபாடு) மூலம் கட்டுப்படுத்துகிறார், இது அவரது இரு கைகளாகவும், பிரபஞ்சத்தின் கூறுகளாகவும் குறிப்பிடப்படுகிறது, அவை ஆத்மாக்களுக்கு பதற்றம் அல்லது கால்கள் என குறிப்பிடப்படும் பொருள் உருவகத்தை வழங்கியுள்ளன.

I-14-15: இந்தப் பிரபஞ்சம் யாரில் உருவாகி அது உள்வாங்கப்படுகிறதோ அவர்; படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் வார்ப் மற்றும் வூஃப் என இருப்பவர்; எவரால் மூன்று நிலைகள் (விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம்) உயிரினங்களில் மறைந்திருக்கும் புத்தியில் நியமிக்கப்படுகின்றன; எவரில் பிரபஞ்சம் ஒரே இளைப்பாறுதலைக் காண்கிறதோ – அந்த பரமாத்மாவைக் கண்டு, வேணன் என்ற கந்தர்வன், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவனாக மாறி, (முதல்முறையாகத் தன் சீடர்களுக்கு) அந்த யதார்த்தத்தை அழியாதவன் என்று அறிவித்தான். எங்கும் நிறைந்தவன் என்பதை அறிந்தவன், தன் சொந்த தந்தையிடமிருந்தும் தந்தைக்கு உரிய மரியாதையைப் பெறத் தகுதியானவனாகிறான்.

I-16: யாருடைய சக்தியின் மூலம் சொர்க்கத்தின் மூன்றாம் பகுதியில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்த தேவர்களுக்கு அந்தந்த இடங்கள் ஒதுக்கப்பட்டனவோ, அவரே நமது நண்பர், தந்தை மற்றும் ஆணையாளர். படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் அவர் புரிந்துகொள்வதால் ஒவ்வொன்றின் சரியான இடங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.

I-17: அவர்கள் (அதாவது உயர்ந்த இறைவனுடன் தங்கள் அடையாளத்தை உணர்ந்தவர்கள்) உடனடியாக வானத்திலும் பூமியிலும் பரவினர். அவை மற்ற உலகங்களிலும், சொர்க்கத்தின் காலாண்டுகளிலும், சுவர்லோகம் எனப்படும் சொர்க்கப் பகுதியிலும் பரவுகின்றன. சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் எவரேனும் ரீட்டா அல்லது ‘உண்மை’ என்று பெயரிடப்பட்ட அந்த பிரம்மனை, ஒரு துணியின் நூல் போல இடைவிடாமல், மனதில் தியானிப்பதன் மூலம் படைப்பில் வியாபித்திருப்பதைக் காண்கிறாரோ, அவர் உண்மையிலேயே அதுவாக மாறுகிறார்.

I-18: உலகங்கள் மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் அனைத்து காலாண்டுகள் மற்றும் இடைப்பட்ட பகுதிகளிலும் வியாபித்து, பிரஜாபதி அல்லது ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் பிரம்மனின் முதல் பிறந்தவர் பரமாத்மாவாக, தனிப்பட்ட ஆத்மாக்களின் ஆட்சியாளராகவும் பாதுகாவலராகவும் ஆனார்.

I-19: இந்திரனுக்கும் என் சுயத்துக்கும் பிரியமானவனும், பேராசைக்கு உரியவனும், வணக்கத்திற்கு உரியவனும், அறிவுச் சக்திகளை அளிப்பவனுமான பிரபஞ்சத்தின் வெளிப்படாத காரணத்தின் அற்புதமான சிறந்த இறைவனை அடைய நான் பிரார்த்திக்கிறேன். .

I-20: ஓ ஜாதவேதாஸ், என்னுடன் தொடர்புடைய பாவங்களை அழிக்கும் வகையில் பிரகாசமாக பிரகாசிக்கவும். கால்நடைகள் உட்பட பல்வேறு வகையான இன்பங்களை எனக்கு கொடுங்கள். எனக்கு வாழ்வாதாரத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து, எந்தத் திசையிலும் எனக்குப் பொருத்தமான வசிப்பிடத்தை ஏற்படுத்துவாயாக.

I-21: ஓ ஜாதவேதரே, உமது அருளால் எங்கள் பசுக்கள், குதிரைகள், மனிதர்கள் மற்றும் உலகில் உள்ள பிற பொருட்களை தீயவன் கொல்லக்கூடாது. ஓ நெருப்பே, ஆயுதங்களை உன் கையில் பிடிக்காமல், உன் மனதில் எங்கள் குற்றங்களைப் பற்றிய எண்ணங்கள் இல்லாமல் எங்களுக்கு ஆதரவாக வா. எல்லாப் பக்கங்களிலும் என்னைச் செல்வத்துடன் இணைத்துவிடு.

I-22: நாம் உன்னதமான நபரை அறிந்துகொள்வோமாக, அவருடைய அறிவை அடைவதற்காக ஆயிரம் கண்கள் கொண்ட பெரிய கடவுளாகிய அவரை தியானிப்போம். அறிவைத் தருபவரான ருத்திரன், அத்தகைய தியானத்திற்கு நம்மைத் தூண்டி, அதில் நம்மை வைத்திருக்கட்டும்.

I-23: பரம புருஷனை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லது உணரலாம். அதற்காக நாம் மகாதேவனைத் தியானிப்போம், அந்தத் தியானத்திற்கு ருத்திரன் நம்மைத் தூண்டலாம்.

I-24: நாம் உன்னதமான நபரை அறிவோம். அதற்காக வக்ரதுண்டாவை தியானிப்போம். டான்டின் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-25: தெய்வீக நபரை நாம் அறிவோம். அதற்கு நாம் சக்ரதுண்டாவை தியானிப்போம். நந்தி நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-26: அந்த தெய்வீக நபரை நாம் அறிவோம். அதற்காக மகாசேனனை தியானிப்போம். சண்முகர் நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-27: அந்த தெய்வீக நபரை நாம் அறிவோம். அதற்கு சுவர்ணபக்ஷ தியானம் செய்யலாம். கருடன் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-28: நான்கு முக பிரம்மமாகத் திகழ்ந்த வேதத்தை அறிவோம். அதற்காக ஹிரண்யகர்ப்பனை தியானிப்போம். பிரம்மன் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-29: நாம் நாராயணனை அறியலாம். அதற்காக வாசுதேவரை தியானிப்போம். அதை நோக்கி விஷ்ணு நம்மைத் தூண்டட்டும்.

-30: வஜ்ரநாகாவை நாம் அறியலாம். அதற்காக நாம் திக்ஷ்ணதாம்ஸ்திரத்தை தியானிப்போம். நரசிம்மர் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-31: பாஸ்கரை நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்காக, பேரொளியை உற்பத்தி செய்பவரைத் தியானிப்போம். அதை நோக்கி ஆதித்யா நம்மைத் தூண்டட்டும்.

I-32: வைஷ்வாணரை நாம் அறியலாம். அதற்காக லலிலாவை தியானிப்போம். அக்னி நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-33: நாம் காத்யாயனை அறியலாம். அதற்காக கன்னியாகுமரியை தியானம் செய்யலாம். துர்கி நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-34: தெய்வீக ஆவியைப் பிரதிபலிக்கும், ஆயிரம் சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு மேலானவர், எண்ணற்ற கணுக்கள் மற்றும் முளைகள் கொண்டவர் மற்றும் தீய கனவுகளின் விளைவுகளை அழிக்கும் துர்வா (பீதி புல்), எனது அனைத்து அசுத்தங்களையும் அகற்றட்டும்.

I-35: ஓ துர்வா, நீ வேர்களையும் புதிய தண்டுகளையும் முன்வைத்து ஒவ்வொரு முனையிலும் பெருக்கிக்கொண்டு எவ்வளவு தூரம் வளர்கிறாயோ, அதுபோலவே சந்ததிகள் நூறாயிரக்கணக்கில் வளர எங்களுக்கு உதவுங்கள்.

I-36: ஓ தேவி, பக்தர்களால் வணங்கப்படுகிறாயே, உன்னைப் பிரசாதம் கொடுத்து வணங்குவோம் – உன்னையே நூற்றுக்கணக்கில் பெருக்கி ஆயிரமாக வளர்பவளே.

I-37: குதிரையும், தேரும், விஷ்ணுவும் கடந்து செல்லும் பூமியே, நான் உன்னை என் தலையில் வைத்துக் கொள்வேன்; ஒவ்வொரு அடியிலும் என்னைக் காப்பாற்று.

I-38: பூமியானது கறவை மாடு போன்ற மகிழ்ச்சியை அளிப்பது, அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் மற்றும் ஆதரவு. (அவ்வாறு பூமி குறிப்பிடப்படுகிறது): நூறு கைகள் கொண்ட பன்றியின் அவதாரத்தில் கிருஷ்ணரால் நீ எழுப்பப்பட்டாய்.

I-39: ஓ சிறந்த பூமியே, என் தீய செயல்களையும் என்னுடன் தொடர்புடைய பாவங்களையும் அழித்துவிடு. ஓ சிறந்த பூமியே, நீ உயிரினங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு. காஷ்யபரால் நீ பிரார்த்தனை செய்யப்பட்டாய். ஓ சிறந்த பூமி எனக்கு செழிப்பைக் கொடுங்கள், எல்லாம் உன்னைச் சார்ந்திருக்கிறது.

I-40: அனைத்து உயிரினங்களும் ஆதரிக்கப்படும் சிறந்த பூமியே, என்னிடமிருந்து அனைத்தையும் (பாவம்) சுத்தப்படுத்து. ஓ சிறந்த பூமியே, என் பாவங்கள் உன்னால் அழிக்கப்பட்டு, நான் உயர்ந்த இலக்கை அடைகிறேன்.

I-41: ஓ இந்திரா, நாம் பயப்படுகிற (பாவம், எதிரிகள் மற்றும் நரகம் போன்ற காரணங்களுக்காக) எங்களை அச்சமின்றி ஆக்குங்கள். ஓ மகவானே, எங்களிடம் (உன் பக்தர்களில்) உள்ள பயத்தின் காரணத்தை அழித்துவிடு. எங்கள் பாதுகாப்பிற்காக, துன்புறுத்தும் எதிரிகளை அழிக்கவும்.

I-42: இந்திரன் எங்கள் துணைக்கு வரட்டும் – பூமியில் சுகத்தையும், மறுமையில் பேரின்பத்தையும் தருபவரும், மக்களுக்கு அதிபதியும், விருத்திரனைக் கொல்பவரும், எதிரிகளை அடக்கியவரும், அளிப்பவருமான இந்திரன். மழை, அமைதியானவர் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவர்.

I-43: புனிதமான பாடல்கள் மூலம் பக்தர்களால் பெருமளவில் துதிக்கப்படும் இந்திரன், அல்லது அடிக்கடி காணிக்கையுடன் வழிபடும் இந்திரன், நமக்குப் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் தருவானாக. அனைத்தையும் அறிந்த அல்லது அனைத்தையும் உடைய பூசன் எங்களுக்கு நல்வாழ்வை உறுதிப்படுத்தட்டும். த்ரிக்ஷாவின் மகனான கருடன், யாருடைய ரதமும் யாராலும் காயமடையாததால், நமக்குப் பாதுகாப்பு அளிக்கட்டும். தேவர்களின் ஆசானாகிய பிருஹஸ்பதி நமக்கு நல்வாழ்வை அளிப்பானாக.

I-44: லேசான கோபம் கொண்டவர், கல்லால் அடிப்பவர், எதிரிகளை உலுக்குபவர், பல செயல்களை உடையவர், ஆயுதம் ஏந்தியவர், சோம ரசத்தில் மகிழ்ந்தவர், காய்ந்த மரங்கள் மற்றும் புதர்களின் காடுகளை வளரச் செய்பவர். மழை பொழிவு). இந்திரனை ஒளியாக்கும் எதிர் எடைகள் எடைபோடுவதில்லை.

I-45: வேனா, சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரம்மனின் முதல் விளைவாகப் பிறந்தவனும், சிறந்த பிரகாசம் கொண்டவனுமான நண்பகல் சூரியன், அதன் எல்லை வரை உலகம் முழுவதும் பரவுகிறது. அவர் பரலோக உடல்களையும் ஒளிரச் செய்கிறார். அவர் தன்னைப் போன்ற தனது சொந்த வரையறுக்கப்பட்ட வடிவங்களில் பன்மடங்கு இருக்கிறார். புலப்படும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பிரபஞ்சம் வெளிப்படும் காரணப் பொருளின் மீதும் பரவி ஊடுருவிச் செல்கிறார்.

I-46: மனிதர்கள் உட்பட உயிரினங்களை உருவாக்குபவராகவும், அந்தந்தப் பகுதிகளில் அவை குடியேறியவராகவும், சகிப்புத்தன்மைக்கு மிகவும் புகழ் பெற்றவராகவும், ஓ பூமியே, எங்களுக்கு துக்கங்களின் முடிவாகவும், இங்கேயும் மறுமையிலும் பேரின்பத்தைத் தருபவராகவும் இருங்கள்.

I-47: நாற்றத்தால் அறியப்பட்டவர், அசைக்க முடியாதவர், என்றென்றும் செழிப்பானவர், பசுவின் சாணம் நிறைந்தவர் மற்றும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் எஜமானியான அனைவரின் ஆதரவான ஸ்ரீயை இந்த வழிபாட்டில் நான் அழைக்கிறேன்.

I-48: ஸ்ரீ எனக்கு சாதகமாக இருக்கட்டும். என்னையும் என்னையும் இணைத்த அழகர் அழிந்து போகட்டும். விஷ்ணுவைத் தங்கள் தலைவனாக (ஸ்ரீயின் நிரந்தர வாசஸ்தலமாக இருக்கும்) கொண்ட தேவர்கள், வேதங்களின் உதவியால் (வகுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம்) எதிரிகளின் பயம் இல்லாமல் தங்களுக்கு இந்த உலகங்களை வென்றனர். இடியுடன் கூடிய இந்திரன், வழிபடும் சந்திரன் நமக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

I-49: இந்திரன் நமக்கு நலம் தரட்டும். நமக்கு விரோதமான தீயவனை அழிக்கட்டும்.

I-50: ஓ ஜெபத்தின் ஆண்டவரே, உசிக்கின் மகனான காக்ஷிவன் போன்ற தேவர்களிடையே நன்கு அறியப்பட்ட சோம ரசத்தை அழுத்துபவர் என்னை ஆக்குங்கள். யாகங்களைச் செய்ய எனக்கு உடல் தகுதியை ஏற்படுத்துவாயாக. நமக்கு விரோதமாக இருப்பவர்கள் நரகத்தில் நீண்ட காலம் ‘அங்கே’ இருக்கட்டும்.

I-51: பழமையான, பரவலான, புனிதமான பாதங்களால் (அல்லது நல்லொழுக்கத்தால்) புனிதமானவர் தீய செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் கடந்து செல்கிறார். இறைவனின் இயற்கையான தூய்மையான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாதங்களால் (அல்லது நடத்தை) புனிதமானதாக ஆக்கப்பட்டதால், நாம் நமது எதிரிகளான பாவங்களை வெல்லலாம்.

I-52: ஓ இந்திரா, விருத்திரனைக் கொன்றவனே, ஓ வீரம் மிக்கவனும், அனைத்தையும் அறிந்தவனுமானவனே, உனது பரிவாரங்கள் மற்றும் தேவர்களின் கூட்டத்தினரிடையே எங்களின் சோமப் பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று, போரில் எங்களுக்கு வெற்றியைத் தந்து, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எங்களுக்கு பாதுகாப்பையும் அச்சமின்மையையும் வழங்குங்கள்.

I-53: நீர் மற்றும் மூலிகைகளின் ஆட்சியாளர்கள் நமக்கு நட்பாக இருக்கட்டும், நம்மை விரும்பாதவர்களிடமும், நாம் விரும்பாதவர்களிடமும் நட்பாக இருக்கட்டும்.

I-54: ஓ நீர்களே, நிச்சயமாக நீங்கள் பேரின்பம் தருபவர். அவ்வாறே, எங்களுக்கு உணவையும், சிறந்த அழகிய நுண்ணறிவையும் (உயர்ந்த உண்மை) வழங்குவாயாக. அன்பான தாய்மார்களைப் போல (தங்கள் அன்பான குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும்) மிகவும் மங்களகரமான உங்கள் மகிழ்ச்சியின் பங்கேற்பாளர்களாக எங்களை உருவாக்குங்கள். நீங்கள் எங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடையும் உங்களின் அந்த திருப்திகரமான வாசஸ்தலத்தை நாங்கள் அடைவோமாக. பூமியில் (நாங்கள் தங்கியிருக்கும் போது) உயிர் நீரையும், இன்பங்களையும் எங்களுக்காக உருவாக்குவாயாக.

I-55: தங்கப் பளபளப்பான அல்லது தங்கக் கிரீடத்தை உடைய வருணனிடம் நான் தஞ்சம் அடைகிறேன். ஓ வருணா, நான் வேண்டிக்கொண்டதால், காப்பாற்றும் அருளை எனக்கு வழங்குவாயாக. ஏனென்றால், கெட்டவர்களுடையதையும், பாவிகளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வரத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

I-56: இந்திரன், வருணன், பிருஹஸ்பதி, சவிதுர் ஆகியோர் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானும் என் மக்களும் செய்த பாவத்தை முற்றிலும் அழிக்கட்டும்.

I-57: தண்ணீரில் மறைந்திருக்கும் நெருப்புக்கு வணக்கம். இந்திரனுக்கு வணக்கம். வருணனுக்கு வணக்கம். வருணனின் துணைவியான வருணிக்கு வணக்கம். நீர் தெய்வங்களுக்கு வணக்கம்.

I-58: (இந்த மந்திரத்தின் சக்தியால்) தண்ணீரில் தீங்கு விளைவிக்கும், தூய்மையற்ற மற்றும் தொந்தரவான அனைத்தும் அழிக்கப்படட்டும்.

I-59: சட்டத்திற்குப் புறம்பாக உண்ணுதல், முறையற்ற குடிப்பழக்கம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நபரிடம் இருந்து பரிசுகளை வாங்குதல் ஆகியவற்றால் நான் செய்த பாவத்தை வருண மன்னன் தன் கையால் அழிக்கட்டும்.

I-60: இவ்வாறு பாவமற்றவனாகவும், துருப்பிடிக்காதவனாகவும், தீமை மற்றும் அடிமைத்தனத்தால் கட்டுப்படாதவனாகவும், நான் மகிழ்ச்சியான சொர்க்கத்திற்கு ஏறி, பிரம்மனுடன் சம அந்தஸ்தை அனுபவிப்பேன்.

I-61: ஆறுகள், குளங்கள் மற்றும் கிணறுகள் போன்ற பிற நீர் ஆதாரங்களில் வசிக்கும் பாவத்தை நீக்கும் வருணன் நம்மையும் தூய்மைப்படுத்தட்டும்.

I-62: ஓ கங்கா, ஓ யமுனா, ஓ சரஸ்வதி, ஓ சுதுத்ரி, ஓ மருத்வ்ருதா, ஓ அர்ஜிகியா, பருஷ்ணி, அசிக்னி, விட்டாஸ்தா மற்றும் சுஷோமா ஆகியோருடன் சேர்ந்து என்னுடைய இந்தப் பாடலைக் கேளுங்கள்.

I-63: அனைத்தையும் ஒளிரும் பரமாத்மாவிடமிருந்து, அவருடைய தீர்மானத்தால், உரிமையும் உண்மையும் உருவாக்கப்பட்டன. அவனிடமிருந்தே இரவும் பகலும் உண்டாயின. மேலும் அவனிடமிருந்தே மீண்டும் கடல் பல்வேறு நீருடன் உருவானது.

I-64-65: பின்னர், பரந்த கடல் உருவாக்கப்பட்ட பிறகு ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு, சிருஷ்டியின் முந்தைய சுழற்சிகளில் இருந்ததைப் போலவே, இரவும் பகலும் சூரியனையும் சந்திரனையும், வானம் மற்றும் பூமியையும், வளிமண்டலத்தையும், ஆனந்தமான சொர்க்கத்தையும் நியமித்த உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களின் உலகின் ஆட்சியாளர்.

I-66: பாவத்தைப் போக்கும் வருணன், நீருக்கு அதிபதியான தெய்வம், பூமியிலும், வளிமண்டலத்திலும், பூமிக்கும் வானத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் வசிக்கும் உயிரினங்களின் மீது சேரும் பாவத்தின் கறையைத் தூய்மைப்படுத்தட்டும். நாங்கள் (மதப் பணியைச் செய்பவர்கள்). வசுக்கள் நம்மை தூய்மைப்படுத்தட்டும். வருணன் நம்மை தூய்மையாக்குவாயாக. அந்தப் பெயரால் அழைக்கப்படும் அகமர்ஷண முனிவர் நம்மைத் தூய்மைப்படுத்தட்டும். அவர், வருணன், கடந்த மற்றும் எதிர்கால உலகங்களுக்கு இடையில் இருந்த உலகத்தையும், தற்போது இருக்கும் உலகத்தையும் பாதுகாப்பவர். புண்ணியச் செயல்களைச் செய்பவர்களுக்குத் தகுந்த உலகங்களையும், பாவிகளுக்கு ஹிரண்மயம் எனும் மரண உலகத்தையும் வழங்குகிறார். மீண்டும் வானத்திற்கும் பூமிக்கும் துணையாக இருக்கும் வருணன், சூரியனாக மாறியதால் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறான். அத்தகையவனாக, இயற்கையில் பேரின்பமாக இருப்பவனே, ஓ வருணா, உன் அருளை எங்களுக்கு அளித்து, எங்களை தூய்மையாக்குவாயாக.

I-67: துளிர்க்கும் ஊறவைத்த விதையைப் போல தன்னைத்தானே பிரபஞ்சமாக வெளிப்படுத்திய அந்த உச்ச ஒளி (அல்லது திரவ மூலகத்தின் அடிப்பொருளாக பிரகாசிக்கும் அந்த உச்ச ஒளி) – நான் அந்த உச்ச ஒளி. உள்ளவை அனைத்தின் உட்பொருளாகப் பிரகாசிக்கும் பிரம்மத்தின் உயர்ந்த ஒளி நானே. அறியாமையின் காரணமாக நான் ஒரு வரையறுக்கப்பட்ட சுயமாக என்னை அனுபவிக்கும் போது கூட உண்மையில் நான் அதே எல்லையற்ற பிரம்மன் தான். இப்போது அறிவின் தொடக்கத்தால் நான் உண்மையில் அந்த பிரம்மன், அதுவே எனது நித்திய சுபாவம். எனவே நான் எப்போதும் இருக்கும் எல்லையற்ற பிரம்மத்தின் நெருப்பில் என்னை, வரையறுக்கப்பட்ட சுயத்தை, ஒரு காணிக்கையாக ஆக்குவதன் மூலம் இந்த அடையாளத்தை உணர்கிறேன். இந்த பிரசாதம் நல்லபடியாக அமையட்டும்.

I-68: வேதத்தை மீறுபவன், மறுபிறவி செய்பவன், திருடன், கருவைக்கொலை செய்பவன் அல்லது தன் ஆசானின் மரியாதையை சீர்குலைப்பவன் அவனது பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறான்; வருணனுக்கு, நீரின் ஆட்சியாளர் மற்றும் பாவங்களை நீக்குபவர் (இந்த மந்திரத்தை மீண்டும் செய்வதன் மூலம் பாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்).

I-69: நான் பாவங்களின் நிலம். ஆதலால் நீ என்னை அழ வைக்கிறாய். புத்திசாலிகள் (என்னை அழ வைக்காதே, என் பாவங்களை அழித்து எனக்கு அருள் செய்) என்கிறார்கள்.

I-70: சமுத்திரமாக குறிப்பிடப்படும் சுப்ரீம் முழு படைப்புக்கும் நிரம்பி வழிகிறது. அவர் முதலில் உயிரினங்களை அவற்றின் பல்வேறு கடந்த கால செயல்களின் பாலைவனங்களுக்கு ஏற்ப படைத்துள்ளார். அவர் பிரபஞ்சத்தின் ஆட்சியாளர் மற்றும் பக்தர்களுக்கு வரங்களை வழங்குபவர். அவர் உமாவுடன் (ஆன்மீக ஒளியை வழங்கும் அவரது சக்தி) பக்தர்களின் இதயங்களில் தங்குகிறார், இது அவர்களின் உடலின் மற்ற பகுதிகளை விட (தெய்வீகத்தின் இருக்கை) புனிதமானது, எனவே உயர்ந்தது மற்றும் ஒரு சிகரம் போல உயர்ந்தது மற்றும் பாதுகாப்பை அளிக்கிறது. அவனது இருப்பிடமான ஜீவா எல்லையற்றதாக வளர்கிறது. ஒவ்வொரு ஆன்மாக்களையும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப வழிநடத்தி, அவர்களின் செயல்களின் பலனை அவர்களுக்கு அளித்து அவர்களை மகிழ்விப்பவர் அவர்.

II-1: ஜாதவேதருக்கு சோம பிரசாதம் வழங்கலாம். எல்லாம் அறிந்தவன் நமக்கு நட்பற்றதை அழிக்கட்டும். அனைவரையும் வழிநடத்தும் தெய்வீக நெருப்பு, ஒரு கேப்டன் கடலைக் கடந்து செல்வது போல, எல்லா ஆபத்துகளையும் கடந்து நம்மைக் காப்பாற்றட்டும். அவரும் நம்மை எல்லாத் தவறுகளிலிருந்தும் காப்பாற்றுவாராக.

II-2: துர்கா தேவியான அவளிடம் நான் தஞ்சம் அடைகிறேன், அவள் துர்கா தேவி, அவள் பளபளப்பிலும், தீவிரமான பிரகாசத்திலும் இருப்பவள், தன்னைப் பன்மடங்கு வெளிப்படுத்துகிற பரமாத்மாவுக்குச் சொந்தமான சக்தி, செயல்களில் தங்கியிருக்கும் சக்தி மற்றும் அவற்றின் பலன்கள் அவற்றைத் திறம்படச் செய்யும் (அல்லது பக்தர்கள் தங்கள் பணியின் பலனுக்காக வேண்டிக்கொள்ளும் சக்தி). காப்பாற்றுவதில் திறமையான தேவியே! நீங்கள் எங்களை சிரமங்களை சிறப்பாக கடந்து செல்கிறீர்கள். உமக்கு எங்களின் வணக்கங்கள்.

II-3: ஓ நெருப்பே, நீ புகழுக்கு உரியவன். மகிழ்ச்சியான முறைகள் எல்லா சிரமங்களுக்கும் அப்பால் நம்மை அழைத்துச் செல்கின்றன. எங்கள் சொந்த ஊரும், சொந்த நிலமும் விரிவடைந்து, (பயிர்களை வளர்ப்பதற்கு) நிலம் போதுமானதாக இருக்கட்டும். மேலும் எங்கள் குழந்தைகளுடனும் அவர்களது குழந்தைகளுடனும் மகிழ்ச்சியுடன் இணைவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

II-4: ஓ ஜாதவேதாவே, எல்லாப் பாவங்களையும் அழிப்பவனான நீ எங்களை எல்லா பிரச்சனைகளுக்கும் அப்பால் அழைத்துச் சென்று, ஒரு படகில் கடலைக் கடப்பது போல் எங்களைப் பாதுகாக்கிறாய். ஓ நெருப்பே, எப்பொழுதும் மனதளவில் மீண்டும் சொல்லும் அத்ரி முனிவரைப் போல (‘எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்’) எங்கள் உடலைக் காத்து, (அதன் பாதுகாப்பை) கவனத்தில் கொள்ளுங்கள்.

II-5: எல்லாவற்றுக்கும் தலைவனாகவும், எதிரிகளின் படைகளை வெற்றிகொள்பவனாகவும், வெல்பவனாகவும், உக்கிரமானவனாகவும் இருக்கும் நெருப்புக் கடவுளை நாங்கள் கூட்டத்தின் மிக உயர்ந்த இடத்திலிருந்து அழைக்கிறோம். அக்கினி-கடவுளான அவர், நம்முடைய கஷ்டங்கள் மற்றும் தவறுகள் மற்றும் அழியக்கூடிய அனைத்தையும் கடந்து நம்மைக் காப்பாராக.

II-6: தியாகங்களில் புகழப்படும் நீயே எங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறாய். யாகம் செய்யும் ஸ்தலங்களில், பழமையான மற்றும் அண்மைக்காலமாக, யாகங்களின் வடிவில் நீ தங்கியிருக்கிறாய். ஓ நெருப்பே, உனது சுயத்தை (எங்களை) மகிழ்ச்சியடையச் செய்வதில் நீ மகிழ்ச்சி அடைவாயாக. மேலும் எங்களுக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.

II-7: ஓ ஆண்டவரே, நீங்கள் (பாவம் மற்றும் துக்கத்துடன்) தொடர்பில்லாதவர், நீங்கள் (அனைத்து தியாகங்களிலும்) வியாபித்திருக்கிறீர்கள். (நல்ல அதிர்ஷ்டத்தை விரும்பும்) கால்நடைகளை உள்ளடக்கிய மற்றும் (அழியாத பேரின்பத்தின் நீரோட்டத்துடன்) நாங்கள் இடைவேளையின்றி உமக்குச் சேவை செய்வோம். சொர்க்கத்தின் மிக உயர்ந்த பகுதியில் வசிக்கும் தேவர்கள் என் விருப்பத்தை நிறைவேற்றி இங்கே பூமியில் விஷ்ணுவை (அன்புடன் வணங்கி) மகிழ்விக்கட்டும்.

III-1: (தெய்வம்) பூமி (எனக்கு) உணவு. அதற்காக நான் நெருப்புக்கும் பூமிக்கும் அர்ப்பணம் செய்கிறேன். வாழ்க! (தெய்வம்) வளிமண்டல (எனக்கு) உணவு. அதற்காக நான் காற்று மற்றும் வளிமண்டலத்திற்கு அர்ப்பணிக்கிறேன். வாழ்க! (தெய்வம்) சொர்க்கம் (எனக்கு) உணவு வழங்குவாயாக. அதற்காக நான் சூரியனுக்கும் சொர்க்கத்திற்கும் காணிக்கை செலுத்துகிறேன். வாழ்க! (தெய்வங்கள்) பூமி, வளிமண்டலம் மற்றும் சொர்க்கம் (எனக்கு) உணவு வழங்கட்டும். அதற்காக நான் சந்திரனுக்கும், காலாண்டுகளுக்கும் அர்ச்சனை செய்கிறேன். வாழ்க! தெய்வங்களுக்கு வணக்கம்! மனேஸுக்கு ஸ்வதா (வணக்கம்)! பூமி, வளிமண்டலம் மற்றும் சொர்க்கத்தின் தெய்வங்கள் (என் விருப்பத்தை ஓம் என்ற உச்சரிப்புடன் உறுதிப்படுத்தி, எனக்கு) உணவை வழங்கட்டும்.

IV-1: வாழ்க! முதல் வியாஹ்ரிதியால் வெளிப்படுத்தப்பட்ட பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட நெருப்புக்கும், அவரைச் சார்ந்திருக்கும் பூமிக்கும் நான் இந்தப் பிரசாதத்தை வழங்குகிறேன். வாழ்க! இரண்டாவது வியாஹ்ரிதியால் வெளிப்படுத்தப்பட்ட பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட காற்றிற்கும், அவரைச் சார்ந்திருக்கும் வளிமண்டலத்திற்கும் நான் இந்த காணிக்கையை சமர்ப்பிக்கிறேன். வாழ்க! மூன்றாவது வியாஹ்ரிதியால் வெளிப்படுத்தப்பட்ட பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட சூரியனுக்கும், அவரைச் சார்ந்திருக்கும் சொர்க்கத்திற்கும் நான் இந்த பிரசாதத்தை வழங்குகிறேன். வாழ்க! வியாஹ்ரிதிகள், புஹ், புவா மற்றும் சுவாஹ் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட சந்திரனுக்கும், காலாண்டுகளுக்கும் நான் இந்த பிரசாதத்தை வழங்குகிறேன். எல்லா மண்டலங்களிலும் வசிக்கும் தெய்வங்களுக்கு வணக்கம்! மறைந்த முன்னோர்களுக்கு வணக்கம்! ஓம் மூலம் ஒற்றுமையாக வெளிப்படுத்தப்பட்ட பிரம்மன் மற்றும் மூன்று வியாஹ்ரிதிகளால் அவரது மூன்று அம்சங்களில் வெளிப்படுத்தப்பட்ட அந்த பிரம்மன் நான். தெய்வீக நெருப்பே, என் பிரார்த்தனைக்கு சம்மதம்.

வி -1: வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான தெய்வங்கள், பூ, நெருப்பு மற்றும் பூமிக்கு அர்ப்பணிக்கிறேன். வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான புவ, காற்று மற்றும் வளிமண்டலத்திற்கு அர்ப்பணிக்கிறேன். வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான சுவா, சூரியன் மற்றும் சொர்க்கமாகிய அபிமான பரமாத்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான பூ, புவா, சுவா, சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் காலாண்டுகளுக்கு அர்ப்பணிக்கிறேன். தெய்வங்களுக்கு வணக்கம்! மானேஸுக்கு மரியாதை! ஓம் என்ற எழுத்து மற்றும் மூன்று வியாஹ்ரிதிகள், புஹ், புவஹ் மற்றும் சுவஹ் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் அந்த உயர்ந்த உண்மை நான். நான் உன்னதத்தை அடையட்டும்!

VI-1: ஓ நெருப்பே, பாவத்திலிருந்து எங்களைக் காக்கும். வாழ்க! நாங்கள் முழு அறிவைப் பெறுவதற்கு எங்களைக் காப்பாற்றுங்கள். வாழ்க! ஓ ரம்மியமானவரே, எங்கள் தியாகச் செயல்களைக் காப்பாற்றுங்கள். வாழ்க! ஓ சதக்ரது, (நமக்குச் சொந்தமானது) அனைத்தையும் காப்பாற்று. வாழ்க!

VII-1: ஓ தெய்வீக நெருப்பே, அனைத்து உயிரினங்களையும் குடியேற்றியே, முதல் வேதத்தின் துதிகளால் போற்றப்படுகிறவனே, எங்களைக் காக்க அருள்புரிவாயாக. வாழ்க! மேலும், இரண்டாம் வேதத்தின் துதிகளால் போற்றப்பட்டு எங்களைக் காக்க அருள்புரிவாயாக. வாழ்க! மூன்றாம் வேதத்தின் துதிகளால் போற்றப்பட்டு, நமது உணவைப் பாதுகாக்கவும், அதன் சாரத்தை வலுப்படுத்தவும் அருள் புரிவாயாக. வாழ்க! நான்கு வேதங்களின் துதிகளால் போற்றப்பட்டு எங்களைக் காக்க அருள்புரிவாயாக. வாழ்க!

VIII-1: இந்திரன், வேதங்களில் கற்பிக்கப்படும் மிகச்சிறந்த பிரணவமானவன், முழுப் பிரபஞ்சத்தையும் ஆற்றுப்படுத்துபவன், காயத்ரி மற்றும் பிற மீட்டர்களில் வேத உச்சரிப்புகளின் தொகுப்பை முன்னெடுத்துச் செல்பவன், அடையக்கூடியவன். வழிபாட்டாளர்களால் மற்றும் காரண இணைப்பில் முதன்மையானவர், சிந்திக்கும் ஞானிகளுக்கு உபநிடதத்தின் புனித ஞானத்தை அவரே கற்பித்தார். அறிவின் சக்தியால் அவர்களைப் பலப்படுத்துவதற்காக, அவர்களுக்குப் பாடமாக இருப்பது. என் பாதையில் உள்ள தடைகளை நீக்கியதற்காக நான் கடவுளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அதற்காக நான் மானேஸையும் வணங்குகிறேன். புஹ், புவா மற்றும் சுவா என்ற மூன்று பகுதிகளும் முழு வேதமும் ஓமில் உள்ளன.

IX-1: உச்சத்திற்கு எனது வணக்கங்கள். நான் என் எண்ணங்களை அவர் மீது ஒருமுகப்படுத்தட்டும் (நான் அவருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக). கவனச்சிதறல் இல்லாமல் சிந்தனையை ஒருமுகப்படுத்துபவராக நான் மாறட்டும். நான் என் காதுகளால் போதுமான அளவு கேட்டிருக்கிறேன் (மற்றும் மற்ற புலன்கள் மூலம் இன்பமான பொருட்களை உணர்ந்தேன்). ஓ என் புலன்களே, இப்போது என்னைத் தோல்வியடையச் செய்யாதீர்கள் (ஆனால், ஓம் என்ற தியானத்தின் மூலம் நான் என்னை ஐக்கியப்படுத்த விரும்பும் பரம பிரம்மத்தில் உங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

X-1: சரியானது சிக்கனம். உண்மை என்பது சிக்கனம். வேதத்தைப் புரிந்துகொள்வது துறவு. புலன்களை அடக்குவது துறவு. விரதம் போன்ற வழிமுறைகளால் உடலைக் கட்டுப்படுத்துவது துறவு. அமைதியான மனநிலையை வளர்ப்பது சிக்கனமாகும். சுயநல நோக்கமின்றி பரிசுகளை வழங்குவது சிக்கனமாகும். வழிபாடு என்பது துறவு. பரம பிரம்மன் தன்னை பூ, புவ, சுவா என்று வெளிப்படுத்தியுள்ளார். அவரை தியானியுங்கள். இது சிக்கனத்திற்கு இணையான சிறப்பு.

XI-1: ஒரு மரத்தின் நறுமணம் தொலைதூரத்திலிருந்து வீசும் காற்றால் எப்படி வீசுகிறதோ, அதே வழியில், புண்ணியங்களின் நறுமணம் – அவற்றால் ஏற்படும் நற்பெயர் – நீண்ட தூரம் (தூரம் வரை) பரவுகிறது. சொர்க்கமாக). இந்த உதாரணம் ஆதாயம் உள்ளது. ஒரு வாளின் வெட்டு முனை ஒரு குழியின் குறுக்கே போடப்பட்டுள்ளது. ‘நான் என் கால்களை அதன் மீது வைக்கிறேன், நான் அதை மிதிக்கிறேன். எனவே நான் அதன் மேல் நடந்தால், காயம் அல்லது குழியில் விழுந்து விடுமோ என்ற எண்ணத்தால் நான் குழப்பமடைவேன். அதே வழியில், வெளிப்படையான மற்றும் மறைக்கப்பட்ட பாவங்களுக்கு வெளிப்படும் ஒரு மனிதன் அழியாத தன்மையை அடைவதற்கு எதிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

XII-1: எல்லையற்ற சுயமானது நிமிடத்தை விட அதிக நிமிடம் மற்றும் பெரியதை விட பெரியது இங்குள்ள உயிரினங்களின் இதயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிருஷ்டிகரின் அருளால், மதிப்புகளின் அடிப்படையிலான ஆசைகளிலிருந்து விடுபட்டவர், மிக உயர்ந்தவர் மற்றும் அனைவருக்கும் உயர்ந்த ஆட்சியாளர் மற்றும் எஜமானர் யார் என்பதை உணர்ந்து, துக்கங்களிலிருந்து விடுபடுகிறார்.

XII-2: அவரிடமிருந்தே ஏழு பிராணங்கள், ஏழு தீப்பிழம்புகள், அவற்றின் எரிபொருள், ஏழு நாக்குகள் மற்றும் உயிர்-சுவாசங்கள் நகரும் ஏழு உலகங்கள் உருவாகின்றன. (மேலும் மற்ற விஷயங்கள்) இதயத்தின் இரகசிய இடத்தில் வசிக்கும் மற்றும் (அந்தந்த இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள அவரிடமிருந்து ஏழு மடங்குகளும் வெளிப்படுகின்றன.

XII-3: அவரிடமிருந்து அனைத்து கடல்களும் மலைகளும் எழுகின்றன. அவரிடமிருந்து எல்லா வகையான ஆறுகளும் ஓடுகின்றன, அவரிடமிருந்து அனைத்து மூலிகைகளும் சாரங்களும் வெளிப்படுகின்றன; மூலிகைகளின் சாரத்துடன் ஒன்றிணைந்து, நுண்ணிய உடலில் அமர்ந்திருக்கும் தனிப்பட்ட ஆத்மா, உயிரினங்களில் வாழ்கிறது.

XII-4: கடவுள்களில் நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், இசையமைப்பாளர்களிடையே சரியான வார்த்தைகளில் வல்லவராகவும், அறிவுள்ள மக்களிடையே பார்ப்பனராகவும், விலங்குகளில் எருமையாகவும், பறவைகளில் காத்தாடியாகவும், அழிக்கும் கருவிகளில் வெட்டுக் கோடரியாகவும் மாறினார். மற்றும் தியாகம் செய்பவர்களில் சோமா, ஒலியுடன் (புனித மந்திரத்தின்) அனைத்து சுத்திகரிப்பு முகவர்களையும் மீறுகிறது.

XII-5: ஒரு பிறக்காத பெண் (மாயா, பிரபஞ்சத்தின் காரணமற்ற பொருள்) சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு (சத்வா, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் குறிக்கும்) அதே இயல்பின் பன்மடங்கு சந்ததிகளை உருவாக்குகிறது. பிறக்காத ஒருவர் (பொதுவான அர்த்தத்தில் சில ஜீவாக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்) அவள் மீது மகிழ்ச்சியுடன் பொய் சொல்கிறார்; பிறக்காத மற்றொருவர் (பொதுவான அர்த்தத்தில் இணைக்கப்படாதவர்கள்) அவளை அனுபவித்த பிறகு அவளை விட்டு வெளியேறுகிறார்.

XII-6: தெளிவான வானத்தில் தங்கியிருக்கும் சூரியன், நடுப்பகுதியில் உள்ள வசு (அசையும் காற்று), பலிபீடத்திலும் வீட்டு அடுப்புகளிலும் விருந்தினராக வசிக்கும் நெருப்பு. மனிதர்களிலும் தேவர்களிடத்திலும் பிரகாசிக்கும் நெருப்பு, ஆன்மாவாக, யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பு, ஆகாயத்தில் காற்றாக வசிப்பது, நீர்மூழ்கிக் கப்பலாக நீரில் பிறந்தது வெப்பம், சூரியனின் கதிர்களில் பிறக்கிறது, நெருப்பு நேரடியாக ஒளியாகக் காணப்படுகிறது, மேலும் மலையில் உதிக்கும் சூரியனாகப் பிறக்கிறது – இதுவே உன்னத உண்மை, எல்லாவற்றிற்கும் அடிப்படையான உண்மை.

XII-6 (A): பிரஜாபதியிலிருந்து பிறந்தவர்கள் அவரிடமிருந்து பிரிந்தவர்கள் அல்ல. அவர்கள் பிறப்பதற்கு முன், அவரைத் தவிர வேறெதுவும் இல்லை, அவர் உலகின் அனைத்து உயிரினங்களிலும் தங்கள் சுயமாக நுழைந்தார். பிரஜாபதி உயிரினங்களுடன் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அக்கினி, சூரியன், சந்திரன், பிரகாசம் ஆகிய மூன்று ஒளிர்வுகளையும் அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவர் பதினாறு பாகங்களைக் கொண்டவர்.

XII-6 (B): படைப்பை பல வழிகளில் நிலைநிறுத்தும் மற்றும் மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு சாட்சியாக இருக்கும் பிரபஞ்சத்தின் படைப்பாளரை நாங்கள் அழைக்கிறோம். அவர் எங்களுக்கு ஏராளமான செல்வங்களை வழங்குவாராக.

XII-7: தியாகம் செய்பவர்கள் புனிதப்படுத்தப்பட்ட நெருப்பில் தெளிக்கப்பட்ட வெண்ணெயை ஊற்றினர். தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்பது இந்த ஒன்றின் தோற்றம் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அவரது ஆதரவாகும். உண்மையில் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அவரது ஒளிரும் மற்றும் குடியிருப்பு. ஓ அக்கினியே, ஒவ்வொரு காணிக்கையுடன் தேவர்களை இங்கே கொண்டு வந்து அவர்களை மகிழ்விப்பாயாக. ஓ உன்னதமானவனே, ஸ்வாஹாவுடன் நாம் செய்த காணிக்கைகளை தெய்வங்களுக்குத் தெரிவி.

XII-8: கடல் போன்ற பரந்து விரிந்த உச்ச நீரூற்றில் இருந்து, படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு இன்பத்தை அளிக்கும் அலைகளின் வடிவத்தில் பிரபஞ்சம் எழுந்தது. சுய-ஒளிரும் யதார்த்தத்தை குறிக்கும் பெயர் மற்றும் ஓம் என்ற எழுத்தை உள்ளடக்கியது வேதங்களில் மறைந்துள்ளது. அந்த நாமத்தை மெதுவாகத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், பரமாத்மாவைச் சிந்திப்பதன் மூலம், ஒருவன் அமரத்துவத்தை அடைகிறான். பரமாத்மாவின் இந்த பதவி தியான ஞானிகளின் உதடுகளில் உள்ளது மற்றும் அது அழியாத பேரின்பத்தின் மைய ஆதரவாகும்.

XII-9: நாம் எப்பொழுதும் நமது சிந்தனைத் தியாகங்களில் ஓம் என்ற பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்வோம், அதன் காரணத்திற்காக சுய-ஒளிரும் யதார்த்தம் உள்ளது, மேலும் அவரை வணக்கங்களுடன் நம் இதயங்களில் வைத்திருப்போம். நான்கு கொம்புகள் கொண்ட வெள்ளைக் காளை, நம்மால் போற்றப்பட்ட இந்த உன்னதப் பிரம்மத்தை இணைத் தேடுபவர்களின் செவிகளில் வெளிப்படுத்தியுள்ளது.

XII-10: காளையாகக் கருதப்படும் ஓம் என்ற எழுத்து நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் மற்றும் இரண்டு தலைகளைக் கொண்டுள்ளது. அவருக்கு ஏழு கைகள் உள்ளன. இந்த காளை மூன்று மடங்கு முறையில் இணைக்கப்பட்டு, உச்சத்தை சொற்பொழிவாற்றுகிறது. சுய ஒளிரும் தெய்வம் எல்லா இடங்களிலும் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. XII-11:

கடவுள் போன்ற முனிவர்கள் மூன்று உணர்வு நிலைகளில் அமைக்கப்பட்ட சுய ஒளிரும் யதார்த்தத்தை (அவர்களின் ஆன்மீக நடைமுறைகளின்) வரிசையில் அடைந்தனர், மேலும் வேத உரையில் (‘நீயே அது’ போன்ற சிறந்த சூத்திரங்கள்) மந்திரங்களால் அதைப் புகழ்ந்து பாடும் ஆசிரியர்களால் ரகசியமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டனர். காணக்கூடிய பிரபஞ்சத்தின் ஆட்சியாளரான இந்திரன் அல்லது விராட், கண்ணுக்குத் தெரிந்த உலகம் மற்றும் விழித்திருக்கும் உணர்வு ஆகியவற்றை உருவாக்கினார். தைஜஸ் மற்றும் ஹிரண்யகர்ப்பரை பிரதிநிதித்துவப்படுத்தும் சூரியன் ஒன்றை, அதாவது, கனவு உலகத்தை உருவாக்கினார், மீதமுள்ள ஒன்று, கனவில்லாத தூக்கம் வேனனிடமிருந்து வந்தது. தன்னை ஆதரிக்கும் பரமாத்மாவால் இந்த மூன்று பிரிவுகளும் உருவாக்கப்பட்டன.

XII-12: இறைவன், நன்மை பயக்கும் நினைவோடு நம்முடன் இணைவாராக – அனைவருக்கும் மேலானவர், வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டவர், உயர்ந்த பார்வை கொண்டவர், கடவுள்களில் முதன்மையானவர், மற்ற அனைவருக்கும் முன் பிறந்தவர் ஹிரண்யகர்ப்பரைக் காண்பவர். XII-13:

அவரைத் தவிர உயர்ந்தது எதுவுமில்லை, சிறியது எதுவுமில்லை, பெரியது எதுவுமில்லை, பரலோகத்தில் நிறுவப்பட்ட ஒரு மரத்தைப் போல அசையாமல் நிற்கும் அந்த புருஷனால் – இவை அனைத்தும் நிரப்பப்படுகின்றன.

XII-14: உழைப்பால் அல்ல, சந்ததியினரால் அல்ல, செல்வத்தால் அல்ல, அவர்கள் அழியாமையை அடைந்துள்ளனர். சிலர் துறவறத்தால் அழியாமையை அடைந்துள்ளனர். துறவிகள் அடைவது சொர்க்கத்திற்கு அப்பால் வைக்கப்பட்டுள்ளது; இருப்பினும் அது (சுத்திகரிக்கப்பட்ட) இதயத்தில் பிரகாசமாக பிரகாசிக்கிறது.

XII-15: பரமனுடன் அடையாளத்தைக் கொண்ட அழியாமையை அடைந்த பிறகு, சுயக்கட்டுப்பாட்டிற்காக பாடுபடும் அனைத்து ஆர்வலர்களும், நேரடி அறிவின் மூலம் வேதாந்தத்தால் கற்பிக்கப்பட்ட முடிவை கடுமையாக அடைந்தவர்களும், துறவுக்கு முன் பிரம்ம அறிவில் யோக ஒழுக்கம் மற்றும் உறுதியைப் பயிற்சி செய்வதன் மூலம் மனத் தூய்மையை அடைந்தவர்களும், தங்கள் இறுதி உடலின் கரைவில் பிரம்ம மண்டலத்தில் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.

XII-16: உடலின் கோட்டையில் பரமனின் வசிப்பிடமாக இருக்கும் இதயத்தின் சிறிய பாவமற்ற மற்றும் தூய தாமரை உள்ளது. மேலும் இந்த சிறிய பகுதியின் உட்புறத்தில் துக்கமற்ற ஈதர் உள்ளது. அதைத் தொடர்ந்து தியானிக்க வேண்டும்.

XII-17: வேதங்களை ஓதத் தொடங்கும் போது உச்சரிக்கப்படும் ஓம் என்ற எழுத்தை மீறும் உச்ச இறைவன் அவர். இது உபநிடதங்களில் நன்கு நிறுவப்பட்டது மற்றும் தியானத்தின் போது முதன்மையான காரணத்தில் கரைக்கப்படுகிறது.

XIII-1-3: இந்த பிரபஞ்சம் உண்மையிலேயே தெய்வீக நபர் மட்டுமே. எனவே, அது அவரையே சார்ந்துள்ளது – பல தலைகள் மற்றும் பல கண்கள் கொண்டவர், பிரபஞ்சத்திற்கு மகிழ்ச்சியை உற்பத்தி செய்பவர், பிரபஞ்சத்தின் வடிவத்தில் இருப்பவர், மனிதகுலத்தின் எஜமானரும் காரணமுமானவர், யாருடைய வடிவங்கள் பல்வேறு கடவுள்கள், யார் அழியாதவர், யார் அனைத்தையும் மிஞ்சிய ஆட்சியாளர் மற்றும் இரட்சகர், உலகத்தை விட உயர்ந்தவர், முடிவில்லாதவர் மற்றும் சர்வ வடிவமானவர், மனிதகுலத்தின் குறிக்கோள் யார், பாவத்தையும் அறியாமையையும் அழிப்பவர், பிரபஞ்சத்தின் பாதுகாவலர் மற்றும் தனிப்பட்ட ஆன்மாக்களின் ஆட்சியாளர், நிரந்தர, உயர்ந்த மங்களகரமான மற்றும் மாறாதவர், மனிதனுக்கு ஆதரவாக (உள்ளுணர்வாக) திகழ்பவர் உள்ளிழுக்கும் ஆவி), உயிரினங்களால் அறியப்படுவதற்கு மிகவும் தகுதியானவர், பிரபஞ்சத்தில் உள்ளவர் மற்றும் யார் என்பது உச்ச இலக்கு.

XIII-4: நாராயணா என்பது பிரம்மன் என்று குறிப்பிடப்பட்ட உயர்ந்த உண்மை. நாராயணனே உயர்ந்தவன் (சுயம்). நாராயணனே உயர்ந்த ஒளி (உபநிடதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது). நாராயணன் எல்லையற்ற சுயம். [நாராயணன் மிகச் சிறந்த தியானம் மற்றும் தியானம்.]

XIII-5: இந்த உலகில் புலனுணர்வு மூலம் அறியப்படும் (அவற்றின் அருகாமையின் காரணமாக) அல்லது அறிக்கையின் மூலம் அறியப்படும் (அவற்றின் தூரத்தின் காரணமாக), உள்ளேயும் வெளியேயும் நாராயணனால் வியாபித்துள்ள அனைத்தும். .

XIII-6: எல்லையற்ற, மாறாத, அனைத்தையும் அறிந்த, உலகின் மகிழ்ச்சிக்குக் காரணமான, தனது ஒரே இதயக் கடலில் வசிப்பவராக, எல்லா முயற்சிகளின் குறிக்கோளாகவும், பரமபிதாவை ஒருவர் தியானிக்க வேண்டும். அவரது தியானத்திற்கான இடம் இதயத்தில் உள்ள ஈதர் – தலைகீழ் தாமரை மொட்டுக்கு ஒப்பிடத்தக்க இதயம்.

XIII-7: ஆதாமின் ஆப்பிளுக்குக் கீழேயும் தொப்புளுக்கு மேலேயும் ஒரு விரல் இடைவெளியில் அமைந்துள்ள இதயம் பிரபஞ்சத்தின் மகத்தான உறைவிடம் என்பதை அறிய வேண்டும்.

XIII-8: தாமரையின் மொட்டு போல, தலைகீழான நிலையில், இதயம், தமனிகளால் சூழப்பட்டுள்ளது. அதில் ஒரு குறுகிய இடம் உள்ளது (அல்லது அதன் அருகில் சுசும்னா என்ற குறுகிய இடம் உள்ளது). அதில் எல்லாம் ஆதரிக்கப்படுகிறது.

XIII-9-11: அதன் நடுவில் (இதயத்தின் குறுகலான இடம் அல்லது சுசும்னா) அழுகாத, அனைத்தையும் அறிந்த, சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும், பெரிய நெருப்பு உள்ளது, இது ஒவ்வொரு பக்கத்திலும் தீப்பிழம்புகளைக் கொண்டுள்ளது, அது முன் அளிக்கப்பட்ட உணவை அனுபவிக்கிறது. , உண்ணும் உணவை ஒருங்கிணைத்துக்கொண்டே இருக்கும், (இதன் கதிர்கள் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பரவுகின்றன), மேலும் இது தன் உடலை இன்சோலில் இருந்து வெப்பமாக்குகிறது. கிரீடம். உடல் முழுவதும் ஊடுருவிச் செல்லும் அந்த நெருப்பின் மையத்தில், ஒரு நெருப்பு நாக்கு உள்ளது, இது ஒளிரும் தங்க நிறமும், இது நுட்பமானவற்றில் முதன்மையானது, இது ஒரு நடுவில் தோன்றும் மின்னலின் ஒளியைப் போன்றது. மழை பொழியும் மேகம், நெல் மணியின் வெய்யில் போல் மெல்லியது; மேலும் இது நுணுக்கத்தை விளக்குவதற்கு ஒரு ஒப்பீடாக செயல்படுகிறது.

XIII-12: பரமாத்மா அந்தச் சுடரின் நடுவில் வசிக்கிறார். (இவ்வாறு அவர் வரையறுக்கப்பட்டிருந்தாலும்) இன்னும் அவர் நான்கு முகம் படைத்தவர், சிவன், விஷ்ணு, இந்திரன், பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் திறமையான காரணம் மற்றும் உயர்ந்த சுய-ஒளிரும் தூய உணர்வு.

XIV-1: மெய்யாகவே ஆதித்யா அவர்தான்; அவருடைய இந்த உருண்டை ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது; நன்கு அறியப்பட்ட ரிக் வசனங்கள் உள்ளன; எனவே உருண்டை என்பது ரிக்களின் தொகுப்பு; அவர் ரிக் வாக்கியங்களின் இருப்பிடம். இப்போது சூரியனின் சுற்றுப்பாதையில் பிரகாசிக்கும் இந்த சுடர் சமணர் சங்கீதங்களின் தொகுப்பு; அதுவே சமணர் சங்கீதங்களின் உறைவிடமாகும். இப்போது சூரியனின் சுற்றுவட்டத்தில் உள்ள சுடரில் இருப்பவரே (தியானிக்கப்பட வேண்டியவர்) யஜுஸ் சேகரிப்பு; அந்த உருண்டையின் ஒரு பகுதி யஜுஸ் சேகரிப்பு; அதுவே யஜுஸ் தங்குமிடம். இவ்வாறாக இம்மூன்றால் முப்பெரும் அறிவு மட்டும் ஒளிர்கிறது. சூரியனுக்குள் இருப்பவனே பொன்னானவன்.

XV-1: சூரியன் மட்டுமே இவை அனைத்தும்: — ஆற்றல், பிரகாசம், வலிமை, புகழ், பார்வை, செவிப்புலன், உடல், மனம், கோபம், பார்ப்பான், தெய்வங்கள் மரணம், சத்யா, மித்ரா, காற்று, ஈதர் மற்றும் சுவாசம், ஆட்சியாளர்கள் உலகின், பிரஜாபதி, தீர்மானிக்க முடியாத ஒன்று, மகிழ்ச்சி, புலன்களைக் கடந்தது, உண்மை, உணவு, (ஆயுட்காலம்), விடுதலை அல்லது அழியாமை, தனி ஆன்மா, பிரபஞ்சம், பேரின்பம் மற்றும் சுயமாகப் பிறந்த பிரம்மன். சூரியனில் உள்ள இந்த நபர் நித்தியமானவர். அவர் அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன். அவரை இவ்வாறு தியானம் செய்பவன் பிரம்மனுடன் ஐக்கியம் அடைந்து அவனுடன் ஒரே இன்பப் பகுதியில் வாழ்கிறான்; அவர் இந்த கடவுள்களுடன் அவர்களின் உலகங்களில் ஐக்கியம், இணை வசிப்பிடம் மற்றும் போன்ற இன்பத்தை அடைகிறார். இரகசிய அறிவு இவ்வாறு வழங்கப்படுகிறது.

XV-2: பிரபஞ்சத்தின் உச்ச காரணமான ஆதித்யா, ஒளி மற்றும் நீரைக் கொடுப்பவர் மற்றும் அனைத்து ஆற்றலுக்கும் ஆதாரமாக இருக்கிறார். அவர் ஓம் என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறார். கடவுள்கள் அவரை தபஸாகவும் சத்தியமாகவும் வணங்குகிறார்கள். (இவ்வாறு வழிபடப்பட்டு) வழிபடுபவர்களுக்கு பேரின்பத்தை வழங்குகிறார். (அல்லது வழிபடுபவர்கள் அவருக்கு தேன் மற்றும் இனிப்புப் பிரசாதம் வழங்குகிறார்கள்). சூரியனின் அந்த வடிவம் பிரம்மம். அதுவே அனைத்திற்கும் வியாபித்திருக்கும் காரணம். அதுவே நீர், நெருப்பு, சுவை மற்றும் அமுதமாகும். மூன்று உலகங்களையும் குறிக்கும் மூன்று வியாஹ்ரிதிகளும், பிரபஞ்சத்தின் காரணத்தைக் குறிக்கும் பிரணவமும் அந்த பிரம்மத்தைக் குறிக்கிறது.

XVI-1: [இந்த இருபத்திரண்டு பெயர்களால் வணக்கத்துடன் முடிவடையும் அவர்கள் அனைவருக்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்கிறார்கள்] – சோம மற்றும் சூரியனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லிங்கம், மற்றும் புனித சூத்திரங்களை கையில் வைத்திருப்பது மற்றும் அனைவரையும் தூய்மைப்படுத்துவது:
நிதானபதயே நமஹ்! [பிரபஞ்சம் கரையும் இறைவனுக்கு நமஸ்காரம்!]
நிதானபதாந்திகாய நமঃ! [அனைத்து உயிரினங்களின் மரணத்திற்கும் காரணமான யமா) முடிவை உருவாக்குபவருக்கு வணக்கம்!]
ஊர்த்வாய நமஹ்! [பிரபஞ்சமாக பரிணமிக்கும் வகைகளின் தலையில் நிற்கும் மிக உயர்ந்தவருக்கு வணக்கம்!]
ஊர்த்வ-லிங்காய நமஹ்! [உளவுத்துறையின் சக்தியை உள்ளடக்கிய சதாசிவ கொள்கைக்கு வணக்கங்கள்!]
ஹிரண்யாய நமஹ! [உயிரினங்களுக்கு நன்மையும், வசீகரமும் உடையவனே!]
ஹிரண்ய-லிங்காய நமஹ்! [தங்கத்தால் செய்யப்பட்ட லிங்கமாக காட்சியளிக்கும் அவருக்கு நமஸ்காரம்!]
சுவர்ணாய நம! [அவருக்கு நமஸ்காரம், கவர்ச்சியான தேஜஸம் உடையவனே!]
சுவர்ண-லிங்காய நம! [சுவர்ணத்தால் (வெள்ளியால்) செய்யப்பட்ட லிங்க வடிவில் இருப்பவரே!]
திவ்யாய நமஹ்! [அவருக்கு நமஸ்காரம், பரலோகத்தில் பேரின்ப ஆதாரம்!]
திவ்ய-லிங்காய நமஹ்! [தெய்வீக முத்திரையாகப் போற்றப்படுபவரே!]
பாவாய நமஹ்! [பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் ஆதாரமான அவருக்கு நமஸ்காரம்!]
பவ-லிங்காய நமஹ்! [மனிதர்களால் லிங்கமாகப் போற்றப்படுபவரே!] ஸர்வாய
நமஹ்! [அவருக்கு நமஸ்காரம், அவர் இறுதி கலைப்பு நேரத்தில் பிரபஞ்சத்தை அடக்குபவர்!]
சர்வ-லிங்காய நமஹ்! [சர்வ லிங்க முத்திரையின் வடிவத்தை உடையவனே, பேரின்பத்தைத் தருபவனே!]
சிவாய நமஹ்! [அவருக்கு வணக்கம், அவர் மிகவும் மங்களகரமானவர்!]
சிவ-லிங்காய நமஹ்! [சிவலிங்க வடிவத்தை உடையவனே!]
ஜ்வாலாய நமஹே! [சுடர் பிரகாசத்தின் வடிவத்தை உடையவரே, அவருக்கு நமஸ்காரம்!]
ஜ்வாலா-லிங்காய நமஹ்! [புத்திசாலித்தனமான லிங்க வடிவத்தை உடையவனே!]
ஆத்மாய நமஹ்! [அவருக்கு நமஸ்காரங்கள், அவர் ஆத்மா – ஆத்மா – அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவர்!]
ஆத்மா-லிங்காய நமஹ்! [அவருக்கு நமஸ்காரம், எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும் மறைந்திருப்பவனே!]
பரமாய நம! [அவனுக்கு நமஸ்காரம், எவரும் மிஞ்சாதவர்!]
பரம லிங்காய நமஹ்! [லிங்கச் சின்னத்தால் குறிக்கப்பட்ட பேரின்பம் மற்றும் முக்தியின் பரமபிதாவான அவருக்கு நமஸ்காரங்கள்!]

XVII-1: நான் சத்யோஜாதத்தில் தஞ்சம் அடைகிறேன். சத்தியமாக நான் சத்யோஜாதாவை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். ஓ சத்யோஜாதா, மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு என்னை அனுப்பாதே; என்னை பிறப்பிற்கு அப்பால், பேரின்பம் மற்றும் விடுதலை நிலைக்கு அழைத்துச் செல்லுங்கள். திருநாம இருத்தலின் மூலகாரணமான அவரை நான் தலைவணங்குகிறேன்.

XVIII-1: வாமதேவருக்கு வணக்கம் [அழகான மற்றும் பிரகாசிக்கும் கடவுள் அல்லது தாராளமான கடவுள்]. ஜ்யேஸ்தாவிற்கு வணக்கம் [மூத்தவர், படைப்பிற்கு முன் இருந்தவர்]. ஸ்ரேஸ்தாவிற்கு வணக்கம் [மிகவும் தகுதியானவர் மற்றும் சிறந்தவர்]. ருத்ரனுக்கு வணக்கம் [உயிரினங்களை கரைக்கும் நேரத்தில் அழ வைப்பவன்]. காலாவிற்கு வணக்கம் [இயற்கையின் பரிணாமத்திற்கு காரணமான காலத்தின் சக்தி]. கலவிகாரனுக்கு வணக்கம் [பிரகிருதியில் தொடங்கி பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்]. பாலவிகாரனுக்கு வணக்கம் [வகைகள் மற்றும் வலிமையின் அளவுகளை உற்பத்தி செய்பவர்]. பாலாவுக்கு வணக்கம் [எல்லா வலிமைக்கும் ஆதாரமானவர்]. பலபிரமாதனுக்கு நமஸ்காரம் [பின்வாங்கும் நேரத்தில் எல்லா சக்தியையும் அடக்குபவர்]. சர்வபூதாதாமனுக்கு [படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் ஆட்சியாளர்] வணக்கம். மனோன்மனா [ஆன்மாவின் ஒளியை தூண்டுபவர்] வணக்கம்.

XIX-1: இப்போது, ​​ஓ சர்வா, உனது ருத்ர வடிவங்களுக்கு எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எனது வணக்கங்கள், தீங்கற்ற, பயங்கரமான, மிகவும் பயங்கரமான மற்றும் அழிவுகரமானவை.

XX-1: உன்னதமான நபரை நாம் அறியலாம் அல்லது உணரலாம். அதற்காக நாம் மகாதேவனைத் தியானிப்போம், அந்தத் தியானத்திற்கு ருத்திரன் நம்மைத் தூண்டலாம்.

XXI-1: எல்லா அறிவுக்கும் அதிபதியாகவும், படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும், வேதங்களைப் பாதுகாப்பவராகவும், ஹிரண்யகர்ப்பத்தின் அதிபதியாகவும் விளங்கும் உன்னதமானவர் எனக்கு அருளட்டும். இவ்வாறு விவரிக்கப்பட்டு பிரணவத்தால் குறிக்கப்பட்ட சதாசிவன் நான்.

XXII-1: ஹிரண்யபாஹுவுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் [கரங்களில் தங்க ஆபரணங்களை உடையவர் அல்லது தங்க நிறத்தை உடையவர்], ஹிரண்யவர்ணா [தங்கம் போன்ற விலைமதிப்பற்ற வேதங்களின் எழுத்துக்களுக்கு ஆதாரமானவர்] , ஹிரண்யரூப [பெருமையில் ஜொலிப்பவர்], ஹிரண்யபதி [ஆரோக்கியமான செல்வங்களின் இறைவன் வசீகரமானவர்], அம்பிகாபதி [பிரபஞ்சத்தின் தாயான அம்பிகாவின் மனைவி], உமாபதி [உமாவின் எஜமானர், பிரம்மா-வித்யா இப்படி உருவகப்படுத்தப்பட்டவர்], பசுபதி [படைக்கப்பட்ட உயிரினங்களின் இறைவன்].

XXIII-1: பரம பிரம்மன், முழுமையான உண்மை, உமா மகேஸ்வரன் வடிவில், அடர் நீலம் மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில், முற்றிலும் தூய்மையான மற்றும் அசாதாரணமான கண்களைக் கொண்ட ஒரு ஆண்ட்ரோஜினஸ் நபராக மாறியுள்ளார். பிரபஞ்சத்தின் ஆத்மாவோ அல்லது பிரபஞ்சத்தின் வடிவமோ அவருக்கு மட்டுமே வணக்கம்.

XXIV-1: இதெல்லாம் உண்மையில் ருத்ரா. அப்படிப்பட்ட ருத்ரனுக்கு நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரினங்களின் ஒளியாகவும் ஆன்மாவாகவும் இருக்கும் ருத்ரனையே மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். ஜடப் பிரபஞ்சம், உருவாக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உலக வடிவில் பன்மடங்கு மற்றும் ஏராளமாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் உண்மையில் இந்த ருத்ரமாகும். அப்படிப்பட்ட ருத்ரனுக்கு நமஸ்காரம்.

XXV-1: துதிக்கு உரியவனும், உயர்ந்த அறிவைப் பெற்றவனும், வழிபடுபவர்களுக்குப் பொருள்களை மிகச்சிறப்பாகப் பொழிபவனும், அதிக சக்தி வாய்ந்தவனும், வசிப்பவனுமான ருத்ரனுக்கு உயர்ந்த அளவில் மகிழ்ச்சியைத் தரும் ஒரு பாடலைப் பாடுகிறோம். இதயத்தில். உண்மையில் இதெல்லாம் ருத்ரா. அப்படிப்பட்ட ருத்ரனுக்கு நமஸ்காரம்.

XXVI-1: அக்னிஹோத்ரா சடங்கிற்காக விகங்கட (Flacourtia Spida) மரத்தால் செய்யப்பட்ட யாகம் செய்யும் கரண்டியை வைத்திருப்பவர் விரும்பிய பலனைத் தருவதில் திறம்பட காணிக்கைகளை வழங்குகிறார். மேலும், இந்த காணிக்கைகள் (மனத்தூய்மையின் மூலம் அவரது ஆன்மீக அறிவை) நிறுவ பங்களிக்கின்றன.

XXVII-1: க்ரிணுஷ்வ பஜ இதி பஞ்ச.

[லெம்மா க்ரினுஷ்வ பஜாவுடன் தொடங்கும் ஐந்து மந்திரங்கள் குறியீட்டு வார்த்தைகளைக் குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே உரைகளில் குறிப்பிடப்படுகின்றன. விரோத தாக்கங்களை அழிப்பதற்காக அவை ஓதப்படுகின்றன. அவை தைத்திரியா-சம்ஹிதை I-ii-14ல் இருந்து வந்தவை. முதலில் அவை ரிக்-வேதம் IV-iv-1-5.]

XXVIII-1: வசிஸ்த முனிவர் அதிதி, கடவுள்கள், வான மனிதர்கள், மனிதர்கள், மறைந்த மூதாதையர்கள், பேய்கள் மற்றும் பிறரின் தாய் மற்றும் பாதுகாவலர் என்று அறிவித்தார். ; அவள் கடினத்தன்மை அல்லது ஒருங்கிணைப்பு உடையவள், அவள் சிறந்தவள், கௌரவம் பெற்றவள், அவள் தெய்வீக ஆவிக்கு உரியவள், அவள் புகழப்படுவதற்குத் தகுதியானவள், தற்செயலாக, அனைவரையும் ஆதரிப்பவள், அவள் பயிர்கள் நிறைந்தவள், பரந்த மற்றும் செல்வத்தை உடையவள். பொருள்கள், அவள் உலகளாவிய மற்றும் முதன்மையான கூறுகளை உள்ளடக்கியது, அவள் மிகவும் ஆனந்தமானவள், உயிரினங்களின் உடல்களாக மாற்றப்பட்டவள், புகழ்பெற்ற, நீடித்த மற்றும் அதனால் அழியாத.

XXIX-1: உண்மையில் இவை அனைத்தும் தண்ணீர். படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் நீர். உடலில் உள்ள முக்கிய சுவாசம் தண்ணீர். நாற்கரங்கள் நீர். உண்ணக்கூடிய பயிர்கள் தண்ணீர். அம்ப்ரோசியா என்பது நீர். சாம்ராட் [நிரந்தரமாக ஜொலிக்கும்] நீர். விராட் [பன்மடங்கு பிரகாசிக்கும்] நீர். ஸ்வராத் [சுய ஒளி] நீர். மீட்டர்கள் தண்ணீர். ஒளிரும் நீர். வேத சூத்திரங்கள் நீர். உண்மை நீர். அனைத்து தெய்வங்களும் நீர். புஹ், புவ, சுவா என்று மூன்று உலகங்களும் நீர். இவை அனைத்திற்கும் ஆதாரம் ‘ஓம்’ என்ற எழுத்தால் குறிக்கப்படும் உச்சம்.

XXX-1-2: இந்த நீர் மண்ணால் ஆன எனது உடலை சுத்தப்படுத்தட்டும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட, மண்ணுலகில் உள்ள ஆத்மாவாகிய என்னைத் தூய்மைப்படுத்தட்டும். இந்த நீர் வேதங்களின் பாதுகாவலரான எனது ஆசானை தூய்மைப்படுத்தட்டும். சுத்திகரிக்கப்பட்ட ஆசிரியரால் கற்பிக்கப்படும் தூய்மையான வேதங்கள் என்னைத் தூய்மைப்படுத்தட்டும். (அல்லது பரமாத்மா என்னைச் சுத்திகரிக்கட்டும். உன்னதத்தால் சுத்திகரிக்கப்பட்ட நீர் என்னைத் தூய்மைப்படுத்தட்டும்). என்னுடைய அசுத்தம், தடைசெய்யப்பட்ட உணவு மற்றும் தவறான நடத்தை ஏதேனும் இருந்தால், வேதத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் பாவம் – இவை அனைத்திலிருந்தும் நான் விடுவிக்கப்படுவேன். நீர் என்னைச் சுத்திகரிக்கட்டும். வாழ்க!

XXXI-1: நெருப்பு, கோபம் மற்றும் கோபத்தின் பாதுகாவலர்கள் கோபத்தின் விளைவாக ஏற்படும் பாவங்களிலிருந்து என்னைக் காக்கட்டும். எண்ணம், வார்த்தை, கை, கால், வயிறு மற்றும் பிறக்கும் உறுப்பு ஆகியவற்றால் இந்த நாளில் நான் செய்த பாவம் அனைத்தையும் அந்த நாள் முழுவதுமாக அழிக்கட்டும். மேலும் நான் எந்த பாவச் செயலைச் செய்திருக்கிறேனோ, அதையும் நானே அழியாமையின் ஆதாரமான சுய-ஒளிமயமான சத்தியத்திற்கு நான் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். வாழ்க!

XXXII-1: சூரியன், கோபம் மற்றும் கோபத்தின் காவலர்கள் கோபத்தின் விளைவாக ஏற்படும் பாவங்களிலிருந்து என்னைக் காக்கட்டும். எண்ணம், வார்த்தை, கை, கால், வயிறு, பிறக்கும் உறுப்பால் நான் செய்த பாவம் அனைத்தையும் அந்த இரவு முழுவதுமாக நீக்கட்டும். மேலும், நான் எந்த பாவச் செயலைச் செய்திருக்கிறேனோ, அதையும் நானே அழியாமையின் ஆதாரமான சூரியனால் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச ஒளியில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். வாழ்க!

XXXIII-1: ‘ஓம்’ என்பது பிரம்மன். அக்னி அதன் தெய்வம். அதன் ரிஷியும் பிரம்மன்தான். அதன் மீட்டர் காயத்ரி. பன்முகப் பிரபஞ்சமாக இருக்கும் பரமாத்மாவுடன் இணைவதே அதன் பயன்.

XXXIV-1: வேதாந்தத்தால் தீர்மானிக்கப்பட்ட அழியாத பிரம்மனை (எங்களுக்கு அறிவுறுத்துவதற்காக) வரம் தரும் பாகுபாடு காயத்ரி நம்மிடம் வரட்டும். மீட்டர்களின் தாயான காயத்ரி, இப்போது குறிப்பிட்டுள்ள சுப்ரீம் மூலம் நமக்கு சாதகமாக இருக்கட்டும்.

XXXIV-2: ஓ அனைத்து எழுத்துக்களுக்கும் ஆதாரமாக இருப்பவனே, ஓ பெரிய தெய்வமே, ஓ அந்தி நேரத்தில் தியானத்தின் பொருளே, ஓ சரஸ்வதி, உனது பக்தன் பகலில் அவன் செய்யும் பாவத்திலிருந்து விடுபடட்டும். பகல் மற்றும் இரவில் அவர் செய்யும் பாவம் அதே இரவில்.

XXXV-1: ஓ காயத்ரி, நீ வலிமையின் சாரம். நீங்கள் பொறுமை அல்லது அடக்கும் சக்தி. நீங்கள் உடல் திறன். நீ மகிமை. நீங்கள் தெய்வங்களுக்கும் அவர்களின் பெயருக்கும் இருப்பிடம். நீங்கள் உணர்ச்சியற்ற பிரபஞ்சம். நீயே முழு வாழ்வு அல்லது அனைவருக்கும் இறைவன். நீயே ஒவ்வொரு உயிர். நீயே அனைவரின் ஆயுட்காலம். எங்களுக்கு விரோதமான அனைத்தையும் வென்றவர் நீயே. பிரணவத்தால் குறிக்கப்பட்ட உண்மை நீயே. நான் காயத்ரியை (என் இதயத்தில்) அழைக்கிறேன். நான் சாவித்திரியை அழைக்கிறேன். நான் சரஸ்வதியை அழைக்கிறேன். நான் மீட்டர்கள், ரிஷிகள் (மற்றும் கடவுள்களை) அழைக்கிறேன். (அனைத்து தெய்வங்களின்) மகிமையை நான் அழைக்கிறேன். காயத்ரியின் மீட்டர் காயத்ரி, ரிஷி விஸ்வாமித்திரர் மற்றும் தெய்வம் சவிதூர். நெருப்பு வாயைக் குறிக்கிறது; நான்கு முக பிரம்மா, தலை; விஷ்ணு, இதயம்; ருத்ரா, கிரீடம்-முடி; பூமி, ஆதாரம்; உள்ளிழுக்கும் சுவாசம், வெளிமூச்சு, பரவிய மூச்சு, மேல் மூச்சு மற்றும் நடு மூச்சு, மூச்சு. காயத்ரி சாயலில் சிகப்பு மற்றும் சாங்கியர்களால் அடையப்பட்ட பரமாத்மாவின் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் – ஒளிமயமான முனிவர்கள். காயத்ரி தெய்வம் (ஒரு சூத்திரமாக மேலும் விளக்கப்பட்டுள்ளது) இருபத்தி நான்கு எழுத்துக்களைக் கொண்டுள்ளது, இது மூன்றடிகள், ஆறு உறைகள் அல்லது துவாரங்கள் மற்றும் ஐந்து தலைகள் கொண்டது. இது உபநயனத்தில் பயன்படுத்தப்படுகிறது, அல்லது வேத கல்விக்கான தீட்சை.

XXXV-2: ஓம் பூமி. ஓம் வானம். ஓம் சொர்க்கம். ஓம் மத்திய மண்டலம். ஓம் பிறந்த இடம். ஆசிர்வதிக்கப்பட்ட ஓம் மாளிகை. ஓம் சத்தியத்தின் இருப்பிடம். ஓம் நம் புரிதலை விரைவுபடுத்தும் அந்த தெய்வீக ஜெனரேட்டரின் அபிமான ஒளியை தியானிப்போம். ஓம் அவரே நீர், ஒளி, சுவை, அமுதம் மற்றும் மூன்று உலகங்களும் ஆவார். பிரணவத்தால் குறிக்கப்படுபவன் இவை அனைத்தும்.

XXXVI-1: ஓ தேவி, பூமியின் மிக உயர்ந்த மற்றும் புனிதமான சிகரத்திலோ அல்லது பிராமணர்கள் உன்னை நினைத்துப் பார்க்கும் வரை எந்த உயரமான இடத்திலோ உமது விருப்பத்திற்குச் சென்று தங்கலாம்.

XXXVI-2: வேதங்களின் அன்னை, காற்றைப் போன்ற சிருஷ்டிகளை உந்தித் தூண்டுகிறவளும், இரண்டு பிறவிகளை உடையவளுமான, வேதங்களின் அன்னையே, எனக்கு அருளிச்செய்து, பிரமாதமாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம லோகத்திற்குப் புறப்படுவாயாக. பூமியில், நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் வேத கற்றலின் சக்தி.

XXXVII-1: பொலிவைத் தருபவரும், பிரபஞ்சத்தின் படைப்பாளருமான அழியாத ஆதித்யா தனது சொந்தக் கதிர்களைப் போல வானில் அசைகிறார். இனிமையான நீரின் வடிவில் உள்ள அவனது சாரம் நதிகளின் வடிவத்தில் பாய்கிறது. அவர்தான் சத்தியம். பிரபஞ்சத்தின் தலையாய காரணமான ஆதித்யா, ஒளி மற்றும் நீரை வழங்குபவர் மற்றும் அனைத்து ஆற்றலுக்கும் ஆதாரமாக இருக்கிறார். அவர் ஓம் என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறார். கடவுள்கள் அவரை தபஸாகவும் சத்தியமாகவும் வணங்குகிறார்கள். (இவ்வாறு வழிபடப்பட்டு) வழிபடுபவர்களுக்கு பேரின்பத்தை வழங்குகிறார். (அல்லது வழிபடுபவர்கள் அவருக்கு தேன் மற்றும் இனிப்புப் பிரசாதம் வழங்குகிறார்கள்). சூரியனின் அந்த வடிவம் பிரம்மம். அதுவே அனைத்திற்கும் வியாபித்திருக்கும் காரணம். அதுவே நீர், நெருப்பு, சுவை மற்றும் அமுதமாகும். மூன்று உலகங்களையும் குறிக்கும் மூன்று வியாஹ்ரிதிகளும், பிரபஞ்சத்தின் காரணத்தைக் குறிக்கும் பிரணவமும் அந்த பிரம்மத்தைக் குறிக்கிறது.

XXXVIII-1: சுப்ரீம் என்னை அடையட்டும். பேரின்பம் என்னை அடையட்டும். பேரின்பமாக இருக்கும் பரமாத்மா மட்டுமே என்னை அடையட்டும். ஆண்டவரே, உமது சிருஷ்டிகளில் ஒன்றான நான் உமது குழந்தை. நான் அனுபவிக்கும் அனுபவ இருப்பு பற்றிய மந்தமான கனவை அடக்குங்கள். அதற்காக என்னையே உமக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். ஆண்டவரே, மற்றும் உயிர் மற்றும் மன சக்திகள். நீங்கள் என்னிடம்

XXXVIII-2 ஐ வைத்துள்ளீர்கள்: கோரப்படாத பிராமணனுக்கு ஒருவர் திரிசுபர்ணத்தைக் கொடுக்கலாம். திரிசுபர்ணத்தை ஓதும் பிராமணர்கள் பிராமணக் கொலையின் பாவத்தைக் கூட அழிக்கிறார்கள். சோம யாகத்தின் பலனை அவர்கள் அடைகிறார்கள். (இரவு உணவின் போது) ஆயிரம் வரிசையில் அமர்ந்து பிரணவத்துடன் அதாவது இந்த மந்திரத்தின் தெய்வீகத்துடன் ஐக்கியம் அடையும் அனைவரையும் அவர்கள் தூய்மைப்படுத்துகிறார்கள்.

XXX-1: அந்த பிரம்மம் புத்திசாலித்தனத்தின் மூலம் அடையப்படுகிறது. அந்த பேரின்பம் புத்திசாலித்தனத்தின் மூலம் அடையப்படுகிறது. உண்மையில் பிரம்மமாகிய பேரின்பம் புத்திசாலித்தனத்தின் மூலம் அடையப்படுகிறது.

XXXIX-2: ஓ கடவுளே, படைப்பாளரே, இன்று சந்ததியினர் அடங்கிய செழிப்பு எங்களுக்கு உறுதியளிக்கிறது. (உலகின்) இந்த கெட்ட கனவை எங்களிடமிருந்து விலக்குவாயாக.

XXX-3: கடவுளே, படைப்பாளியே, எல்லா பாவங்களையும் என்னிடமிருந்து விலக்கு. பயனுள்ளதை என்னிடம் கொண்டு வாருங்கள்.

XXX-4: பரம சத்தியத்தின் பக்தனான எனக்கு, காற்று இனிமையாக வீசட்டும். ஆறுகள் இனிமையாக ஓடட்டும். மூலிகைகள் நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்.

XXXIX-5: இரவும் பகலும் இனிமையாக இருக்கட்டும். பூமியின் துகள்கள் இனிமையாக இருக்கட்டும். பரலோகம், எங்கள் தந்தை, எங்களுக்கு இனிமையாக இருக்கட்டும்.

XXX-6: பழம்தரும் மரங்கள் நமக்கு இனிமையாக இருக்கட்டும். சூரியன் நமக்கு இனிமையாகவும் நன்மையாகவும் இருக்கட்டும். பசுக்கள் நமக்கு இனிமையாக இருக்கட்டும்.

XXXIX-7: கோரப்படாத பிராமணனுக்கு ஒருவர் திரிசுபர்ணத்தைக் கொடுக்கலாம். திரிசுபர்ணத்தை ஓதும் பிராமணர்கள், வேதங்களையும், அவற்றின் துணைகளையும் நன்கு அறிந்த பிராமணரைக் கருவுறுதல் அல்லது காயப்படுத்துதல் போன்ற பாவங்களைக் கூட அழிக்கிறார்கள். சோம யாகத்தின் பலனை அவர்கள் அடைகிறார்கள். (இரவு உணவின் போது) ஆயிரம் வரிசையில் அமர்ந்து பிரணவத்துடன் அதாவது இந்த மந்திரத்தின் தெய்வீகத்துடன் ஐக்கியம் அடையும் அனைவரையும் அவர்கள் தூய்மைப்படுத்துகிறார்கள்.

XXXX-1: அந்த பிரம்மம் தியாகத்தின் மூலம் அடையப்படுகிறது. அந்த பேரின்பம் தியாகத்தின் சக்தியால் அடையப்படுகிறது. உண்மையில் பிரம்மமாகிய பேரின்பம் தியாகத்தின் சக்தியால் அடையப்படுகிறது.

XXXX-2: கடவுள்களில் நான்கு முகம் கொண்ட பிரம்மா, இசையமைப்பாளர்களிடையே சரியான வார்த்தைகளில் வல்லவர், அறிவுள்ள மக்களிடையே பார்ப்பனர், விலங்குகளில் எருமை, பறவைகளில் காத்தாடி, அழிவு கருவிகளில் வெட்டுக் கோடாரியாக மாறினார். மற்றும் தியாகம் செய்பவர்களில் சோமா, ஒலியுடன் (புனித மந்திரத்தின்) அனைத்து சுத்திகரிப்பு முகவர்களையும் மீறுகிறது.

XXXX-3: தெளிவான வானத்தில் தங்கியிருக்கும் சூரியன், நடுப்பகுதியில் உள்ள வசு (அசையும் காற்று), பலிபீடத்திலும், வீட்டு அடுப்புகளிலும் விருந்தினராக வசிக்கும் நெருப்பு. மனிதர்களிலும் தேவர்களிடத்திலும் பிரகாசிக்கும் நெருப்பு, ஆன்மாவாக, யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பு, ஆகாயத்தில் காற்றாக வசிப்பது, நீர்மூழ்கிக் கப்பலாக நீரில் பிறந்தது வெப்பம், சூரியனின் கதிர்களில் பிறக்கிறது, நெருப்பு நேரடியாக ஒளியாகக் காணப்படுகிறது, மேலும் மலையில் உதிக்கும் சூரியனாகப் பிறக்கிறது – இதுவே உன்னத உண்மை, எல்லாவற்றிற்கும் அடிப்படையான உண்மை.

XXXX-4: உனது வழிபாட்டிற்குத் தேவையான வேதங்களைப் பெறுவதற்காக நான் பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பில் எரிபொருளைக் குவிக்கிறேன், ரிக்-வேத வடிவில் உன்னைத் தியானிக்கிறேன். பற்றவைக்கப்பட்ட நெருப்பில் செலுத்தப்படும் தெளிந்த வெண்ணெயின் உடைக்கப்படாத நீரோட்டங்கள் – அன்பான மற்றும் இதயப்பூர்வமான எண்ணங்களால் புனிதமானவை – ஆறுகள் போல் பாய்கின்றன, அதில் உள்ள நீர் கடவுளுக்கு குடிக்கக்கூடியது. இதன் மூலம் நான் புனித நெருப்பின் மகிமையைக் காட்டுகிறேன்.

XXXX-5: அந்த அஹவனியா நெருப்பில், பிரசாதமாக வழங்கப்படும் அந்த தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் நீரோட்டங்களுக்கு மத்தியில்,

திரிசுபர்ணத்தில் மகத்துவமடைந்து, படைக்கப்பட்ட உயிரினங்களின் கூடுகளில் வசிப்பவர், உயிரினங்களுக்கு அவற்றின் தகுதிக்கேற்ப பேரின்பம் அளிப்பவர், மற்றும் தெய்வங்களுக்கு பிரசாதமான இனிப்பு அமுதத்தை பிரசாதமாகப் பகிர்ந்துகொள்பவர், மிகுந்த செல்வமும், மகத்துவமுமான பரமபிதாவைக் கொண்டிருக்கிறார். நெருப்பில் வழிபடுபவர்களால். அவர் அருகாமையில் ஏழு முனிவர்கள் அமர்ந்துள்ளனர், அவர்கள் வெறும் நினைவின் மூலம் பாவங்களை அழிக்கிறார்கள், மேலும் அவர்கள் விரும்பும் பல்வேறு கடவுள்களை மனதில் வைத்து அமிர்தத்தின் வடிவில் தொடர்ந்து பிரசாதங்களை ஊற்றுகிறார்கள்.

XL-6: இந்த திரிசுபர்ணா ஒரு பிராமணருக்கு கோரப்படாமல் கொடுக்கப்படலாம். திரிசுபர்ணத்தை பாராயணம் செய்யும் பிராமணர்கள் தகுதியான பிராமணனையோ அல்லது அபிஷேகம் செய்யப்பட்ட அரசனையோ கொன்ற பாவத்தை கூட அழித்து விடுகிறார்கள். சோம யாகத்தின் பலனை அவர்கள் அடைகிறார்கள். (இரவு உணவின் போது) ஆயிரம் வரிசையில் அமர்ந்து பிரணவத்துடன் அதாவது இந்த மந்திரத்தின் தெய்வீகத்துடன் ஐக்கியம் அடையும் அனைவரையும் அவர்கள் தூய்மைப்படுத்துகிறார்கள்.

XLI-1: நன்மையும், அனுகூலமும், மகிழ்வும் கொண்ட அனைத்து ஊடுருவும் அறிவுத் தெய்வம், எங்களைத் தரிசிக்கட்டும், ஓ தேவி, உமது வருகைக்கு முன் பயனற்ற பேச்சில் மகிழ்ந்த நாங்கள், இப்போது உமது மகிழ்ச்சியின் விளைவாக! நம்மில், ஞானமடைந்து, நமது வீர மகன்கள் மற்றும் சீடர்களுடன் சேர்ந்து பரம சத்தியத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களாக மாறுங்கள்.

XLI-2: ஓ புத்தியின் தெய்வமே, உன்னால் அனுக்கிரகம் செய்யப்பட்ட ஒருவன் பார்ப்பனனாகிறான்; ஒருவன் பிராமணனாக அல்லது பிரம்மத்தை அறிந்தவனாக மாறுகிறான். உன்னால் விரும்பப்பட்டவன் செல்வத்தையும் உடையவனாகிறான். உன்னால் விரும்பப்பட்டவன் பன்மடங்கு செல்வத்தைப் பெறுகிறான். அப்படி இருந்து, ஓ புத்தியின் தேவியே, எங்களில் மகிழ்ந்து செல்வத்தை எங்களுக்கு அளியுங்கள்.

XLII-1: இந்திரன் எனக்கு புத்திசாலித்தனத்தை வழங்கட்டும். சரஸ்வதி தேவி எனக்கு புத்திசாலித்தனத்தை வழங்கட்டும். தாமரை மலர் மாலைகளை அணிந்த இரண்டு அஷ்வின்கள் என்னுள் புத்திசாலித்தனத்தை உண்டாக்கட்டும்.

XLII-2: வாழ்க! அந்த புத்தி எனக்கு சாதகமாக இருக்கட்டும் – அப்சரஸ்கள் (வான பெண்கள்) உடையவர்கள், கந்தர்வர்களிடம் உள்ள மனோசக்தி (வானத்தில் உள்ளவர்கள்) தெய்வீக வேத சாஸ்திரமாக வெளிப்படுத்தப்பட்ட புத்திசாலித்தனமும், வாசனையாகப் பரவும் புத்திசாலித்தனமும்.

XLIII-1: புத்திசாலித்தனமான அந்த தெய்வம் மகிழ்ச்சியான முகத்துடன் என்னிடம் வந்து எனக்கு அருள் புரியட்டும் – நறுமணம் போன்ற வியாபித்திருக்கும், அனைத்து பொருட்களையும் ஆராயும் திறன் கொண்ட, எழுத்துக்களின் வடிவில் பொன் எழுத்துக்களை உடைய புத்திசாலித்தனமான அந்த தெய்வம். வேதங்கள் (ஆரோக்கியமான மற்றும் வசீகரமானவர்), தொடர்ந்து இருப்பவர், வாழ்க்கையின் மதிப்புகளைத் தேடுபவர்களால் நாடப்படுவதற்குத் தகுதியானவர். மீண்டும் மீண்டும், யார் சுவையையும் வலிமையையும் உடையவர் மற்றும் பால் மற்றும் பிற செல்வங்களால் என்னைப் போஷிப்பவர்.

XLIV-1: அக்னி என்னில் புத்திசாலித்தனத்தையும், சந்ததியின் தொடர்ச்சியையும், வேதப் படிப்பினால் பிறந்த மகிமையையும் அளிக்கட்டும். இந்திரன் எனக்கு புத்திசாலித்தனத்தையும், சந்ததியின் தொடர்ச்சியையும், ஆண்மையையும் அளிக்கட்டும். சூர்யா என்னில் புத்திசாலித்தனத்தையும், சந்ததியின் தொடர்ச்சியையும், எதிரிகளின் இதயங்களில் பயத்தை உண்டாக்கும் வீரத்தையும் வழங்கட்டும்.

XLV-1: மரணம் நம்மை விட்டு விலகட்டும். அழியாமை நமக்கு வரட்டும். வைவஸ்வத யமா எங்களுக்கு பாதுகாப்பை வழங்கட்டும். மரத்தின் வாடிய இலைகளைப் போல நம் பாவங்கள் அழிந்து போகட்டும். வலிமை தரும் செல்வம் நமக்கு வரட்டும்.

XLVI-1: ஓ மரணமே, தெய்வங்களின் வழி அல்லாத உனது பாதையில் திரும்பிச் செல். என்னைப் பார்க்கவும், நான் சொல்வதைக் கேட்கவும் வல்லவனான உன்னை நான் வேண்டுகிறேன்; எங்கள் சந்ததியை அழிக்காதே. எங்கள் மாவீரர்களை தாக்காதீர்கள்.

XLVII-1: பிரபஞ்சத்தின் பாதுகாவலராகவும், நமக்குள் உயிர் மூச்சாகவும், நமக்கு வெளியே வீசும் காற்றாகவும் செயல்படும் உயிரினங்களின் இறைவனிடம் மனப்பூர்வமாக மன்றாடுகிறோம். அவர் மரணத்திலிருந்து நம்மைக் காத்து, பாவத்திலிருந்து நம்மைக் காப்பாராக. நம் முதுமை வரை பிரகாசமாக வாழ்வோம்.

XLVIII-1: ஓ உன்னதமானவனே, யமனின் பயம் மற்றும் மக்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் இந்த உலகத்தில் இருப்பதன் அவசியத்திலிருந்து என்னை விடுவிக்கவும். ஓ அக்னி, இரண்டு தெய்வீக மருத்துவர்களான அஷ்வின்கள், சமயப் பணியின் வலிமையால் மரணத்தை எங்களிடமிருந்து விரட்டியடிக்கட்டும்.

XLIX-1: வேலைக்காரர்களைப் போலவே கடவுள்களும் பிரபஞ்சத்தின் அதிபதியான ஹரியைப் பின்பற்றுகிறார்கள், அவர் எல்லா எண்ணங்களையும் முதன்மையான தலைவராக வழிநடத்துகிறார் மற்றும் கலைக்கும் நேரத்தில் பிரபஞ்சத்தை தன்னுள் உள்வாங்குபவர் (அல்லது பக்தர்களின் பாவங்களை அழிப்பவர்). வேதங்களில் கற்பிக்கப்பட்ட இந்த முக்திக்கான பாதை, பிரம்மனைப் போன்ற வடிவத்தையே எனக்குத் திறக்கட்டும். அதை என்னிடம் பறிக்காதே. எனக்காக அதைப் பாதுகாக்க முயலுங்கள்.

எல்-1: பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பை மரச் சில்லுகளால் மூட்டுவதன் மூலம் (வணக்கத்தின் போது காணிக்கை செலுத்துவதற்காக) நான் இரு உலகங்களையும் அடைவேன். இம்மை மற்றும் மறுமையின் செழுமையை அடைந்த நான் மரணத்தைக் கடந்து செல்வேன்.

LI-1: ஓ கடுமையான மரணம், என் உயிரை துண்டித்து விடாதே. (என் ஆர்வத்தை) காயப்படுத்தாதீர்கள். என் பலத்தை முடக்காதே. என்னைப் பற்றாக்குறைக்கு ஆளாக்காதே. என் சந்ததியையும் உயிரையும் காயப்படுத்தாதே. காணிக்கைகளோடு உமக்குச் சேவை செய்வேன்; ஏனென்றால், நீ மனிதர்களின் செயல்களில் விழிப்புடன் இருக்கிறாய்.

LII-1: ஓ ருத்ரா, எங்கள் பெரியவர்கள், நம் குழந்தைகள், இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெரியவர்கள், தாயின் வயிற்றில் நாம் வைத்த கரு மற்றும் எங்கள் தந்தை மற்றும் தாய் ஆகியோரைக் காயப்படுத்தாதீர்கள். எங்கள் அன்பானவர்களை காயப்படுத்தாதீர்கள்.

LIII-1: ஓ ருத்ரா, எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், நம்மைச் சேர்ந்த மற்ற மனிதர்கள், எங்கள் கால்நடைகள் மற்றும் எங்கள் குதிரைகளின் விஷயத்தில் எங்களை காயப்படுத்தாதே. கோபத்தில் நம் ஹீரோக்களை காயப்படுத்தாதீர்கள். காணிக்கைகளுடனும், பயபக்தியுடனும் உமக்குச் சேவை செய்வோம்.

LIV-1: ஓ பிரஜாபதி, பிறக்கும் அனைத்தும் உன்னிடமிருந்து வேறுபட்டவை அல்ல. அவர்களுக்கு முன்னும் பின்னும் நீயே (அவர்கள் உன்னில் மீண்டும் உள்வாங்கப்படும் போது) படைக்கப்பட்ட உயிரினங்கள் உன்னை மிஞ்ச முடியாது. எத்தகைய ஆசையுடன் உமக்கு காணிக்கை செலுத்துகின்றோமோ அது நிறைவேறட்டும். செல்வத்தின் அதிபதிகளாக மாறுவோம்.

எல்வி-1: இந்திரன் எங்கள் துணைக்கு வரட்டும் – பூமியில் நலத்தையும், மறுமையில் பேரின்பத்தையும் அளிப்பவர், மக்களுக்கு அதிபதியானவர், விருத்திரனைக் கொல்பவர், எதிரிகளை அடக்குபவர் மற்றும் கொடுப்பவர். மழை, அமைதியானவர் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவர்.

எல்.வி.ஐ-1: நறுமணம் மிக்கவரும், பக்தர்களுக்குப் பெருகிய உணவளிப்பவருமான முக்கண் இறைவனை வணங்குகிறோம். பழுத்த வெள்ளரிக்காய் எளிதில் பிணைந்த தண்டிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்வது போல, அவரை வழிபடுவதால் மரணத்திலிருந்து எளிதில் நழுவுவோம். அழியாமையிலிருந்து நாம் ஒருபோதும் பிரிக்கப்படக்கூடாது.

LVII-1: ஓ மரணமே, மனிதனைக் கொல்வதற்காக நீ விரித்துள்ள ஆயிரம் பதினாயிரத்து பதினாயிரம் கண்ணிகளை, எங்கள் வழிபாட்டுச் செயல்களின் சக்தியால் அகற்றுகிறோம்.

LVIII-1: வாழ்க! இது மரணத்தை உண்டாக்கும் மிருத்யுவுக்கு செய்யப்படும் காணிக்கையாக இருக்கட்டும்.

லிக்ஸ்-1: ஓ அக்னி, தெய்வங்களுக்கு எதிராக நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீ. வாழ்க! மனிதர்களுக்கு எதிராக நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீரே. வாழ்க! மறைந்த முன்னோர்களுக்கு நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! நாங்கள் எங்களுக்கு இழைத்த குற்றங்களை நீக்குபவர் நீரே. வாழ்க! எங்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! எங்கள் உறவினர்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! இரவும் பகலும் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! கனவிலும் விழிப்பு நிலையிலும் செய்த குற்றங்களை நீக்குபவர் நீ. வாழ்க! ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்பு நிலையிலும் நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! உணர்ந்தும் அறியாமலும் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! பாவம் செய்பவர்களுடன் தொடர்பு கொண்டு செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க!

எல்எக்ஸ்-1: ஓ கடவுள்களே, ஓ வாசுஸ், நம் நாக்காலும், புரிந்துணர்வாலும், செயல்களாலும் நாம் செய்த கடுமையான கடவுளைப் புண்படுத்தும் பாவம், நம்மை நெருங்கி வந்து நம்மை நோக்கி தீய வழியில் செயல்படுபவர்களிடம் வைக்கிறது. வாழ்க!

LXI-1: தெய்வங்களுக்கு வணக்கம். ஆசை செயலை நிகழ்த்தியது. ஆசை செயல் செய்தது. ஆசையே செயலைச் செய்கிறது, நான் அல்ல. ஆசையே முகவர், நான் அல்ல. ஆசையே செய்பவரைச் செயலாற்றச் செய்கிறது, நானல்ல. ஆசையே, தோற்றத்தில் வசீகரிக்கும் ஆசையே, இந்தப் பிரசாதம் உனக்கே வழங்கப்படட்டும். வாழ்க!

LXII-1: தெய்வங்களுக்கு வணக்கம். கோபம் அந்தச் செயலைச் செய்தது. கோபம் அந்த செயலை செய்தது. கோபம் செயலைச் செய்கிறது, நான் அல்ல. கோபம்தான் முகவர், நான் அல்ல. கோபம் செய்பவரைச் செயல்பட வைக்கிறது, நான் அல்ல. கோபம், இந்த பிரசாதம் உனக்கே வழங்கப்படட்டும். வாழ்க!

LXIII-1: ஓ உன்னத மனிதரே, புனிதமான தீயில் சிறிது மாவுடன் கலந்து சுவையான திலா (எள் இண்டிகம்) விதைகளை சமர்ப்பிக்கிறேன்; உச்ச ஆலங்கட்டி என்று கூறப்பட்டதில் என் மனம் மகிழ்ச்சியடையட்டும்!

LXIII-2: ஓ கடவுளே, உமது அருளால் நான் கால்நடைகள், தங்கம், செல்வம், உணவு மற்றும் பானங்கள் மற்றும் விரும்பிய பொருட்கள் மற்றும் அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறுவேன்; அதற்காக இந்த காணிக்கை உனக்கு அளிக்கப்படுகிறது. வாழ்க!

LXIII-3: கடவுள் எனக்கு அரச செழிப்பு, சுதந்திரம், ஆரோக்கியம், உன்னதமான நற்பெயர், தெய்வங்களுக்குக் கடனை அடைக்கும் திறன், பிரிந்த ஆத்மாக்கள் மற்றும் முனிவர்கள், ஒரு சிறந்த பிராமணனின் குணங்கள், பல மகன்கள், நம்பிக்கை, புத்திசாலித்தனம் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியவற்றைக் கொடுப்பார். . அதற்காக இந்த காணிக்கை வழங்கலாம். வாழ்க!

LXIV-1: ஓ ஆண்டவரே, உமது கருணையால், இந்த கருப்பு எள், வெள்ளை எள், ஆரோக்கியமான எள் மற்றும் சொந்த எள் விதைகள் என்னுடன் தொடர்புடைய எந்த பாவத்தையும் அல்லது என்னில் தவறு இருந்தாலும் அதை சுத்தப்படுத்தட்டும். அதற்காக நான் காணிக்கைகளை வழங்குகிறேன். வாழ்க!

எல்எக்ஸ்ஐவி-2: திருடினால் அளிக்கப்பட்ட உணவை உண்பது, சமீபத்தில் பிரிந்த ஒரு ஆன்மாவின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக உணவு பரிமாறப்படும் இடத்தில் உணவருந்துவது, பிராமணனைக் கொன்றது, மூர்க்கத்தனமானது போன்ற எனது பாவங்களை எள் விதைகள் நீக்கட்டும். ஆசானின் மரியாதை, கால்நடைகளை தூக்குதல், குடித்துவிட்டு ஒரு வீரன் அல்லது கருவைக் கொல்வது. எனக்கு அமைதி கிடைக்கட்டும். வாழ்க!

LXIV-3: கடவுள் எனக்கு அரச செழிப்பு, சுதந்திரம், ஆரோக்கியம், உன்னதமான நற்பெயர், தெய்வங்கள், பிரிந்த ஆத்மாக்கள் மற்றும் முனிவர்களுக்கான கடனை அடைக்கும் திறன், ஒரு சிறந்த பிராமணனின் குணங்கள், பல மகன்கள், நம்பிக்கை, புத்திசாலித்தனம் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியவற்றை வழங்குவாராக. . அதற்காக இந்த காணிக்கை வழங்கலாம். வாழ்க ஜாதவேதாஸ் [அனைத்தையும் அறிந்த பரமாத்மா]

எல்எக்ஸ்வி-1: [விரஜா ஹோமம்]: இந்த பிரசாதத்தால் எனது உள்ளிழுக்கும் சுவாசம், நமது சுவாசம், பரவிய மூச்சு, மேல் மூச்சு மற்றும் நடு மூச்சு ஆகியவை சுத்திகரிக்கப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXV-2: இந்த காணிக்கையால் எனது பேச்சு, மனம், பார்வை, செவிப்புலன், சுவை, மணம், விதை, புத்தி, எண்ணம் மற்றும் நோக்கம் ஆகியவை தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

எல்எக்ஸ்வி-3: இந்தப் பிரசாதத்தால் என்னுடைய ஏழு உடல் பொருட்கள் – வெளி மற்றும் உள் தோல், சதை, இரத்தம், கொழுப்பு, மஜ்ஜை, நரம்பு மற்றும் எலும்பு – சுத்திகரிக்கப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXV-4: இந்த பிரசாதத்தின் மூலம் என் உடலின் தலை, கைகள், கால்கள், பக்கவாட்டுகள், முதுகு, தொடைகள், தொப்பை, ஷாங்க்ஸ், உற்பத்தி உறுப்பு, உடலின் நடுப்பகுதி (அல்லது ஆண் மற்றும் ஆண் மற்றும் பெண் பிறப்பு உறுப்புகள்) மற்றும் ஆசனவாய் சுத்திகரிக்கப்படுகின்றன. என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXV-5: ஓ தெய்வீக நபரே, அடர் நீலமும் பழுப்பு நிறமும், கண்களில் சிவந்தவருமான எனக்கு தயவு செய்ய அவசரம். எனக்கு மேலும் மேலும் தூய்மையை வழங்குவாயாக. எனது ஆசான் மூலம் எனக்கு அறிவையும் தூய்மையையும் வழங்குவாயாக. என் எண்ணங்கள் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-1: [விரஜா ஹோமம்]: இந்தப் பிரசாதத்தின் மூலம் எனது உடலின் ஐந்து அங்கமான கூறுகளான பூமி, நீர், நெருப்பு மற்றும் ஈதர் – தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-2: இந்த பிரசாதம் மூலம் ஒலி, தொடுகை, நிறம், சுவை மற்றும் மணம் ஆகிய குணங்கள் (எனது உடலில் உள்ள மேற்கூறிய ஐந்து கூறுகளில் வசிக்கின்றன) தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-3: இந்த காணிக்கையால் எனது மனம், பேச்சு மற்றும் உடலால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-4: அகங்காரத்தின் அடக்கப்பட்ட உணர்வுகள் எதுவும் என்னிடம் இருக்கக்கூடாது. என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-5: இந்த பிரசாதம் மூலம் என் உடல் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-6: இந்த பிரசாதம் மூலம் எனது உள் உறுப்புகள் சுத்திகரிக்கப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-7: இந்த காணிக்கையின் மூலம் எனது எல்லையற்ற சுயம் தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-8: பசியின் தெய்வத்திற்கு இந்த பிரசாதம் வழங்கப்படட்டும். வாழ்க! பசி, தாகம் என்ற இணைந்த தெய்வங்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்பட வேண்டும். வாழ்க! எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் பரமாத்மாவுக்கு இந்த அர்ப்பணம் செய்யட்டும். வாழ்க! ரிக் மந்திரங்களை நியமித்த பரமாத்மாவுக்கு இந்த அர்ப்பணம் செய்யட்டும். வாழ்க! அவருடைய படைப்பில் ஆர்வமுள்ள பரமாத்மாவுக்கு இந்த காணிக்கையை அளிக்கலாம். வாழ்க! (பிரணவத்தால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் நானே. அதை உணர்ந்து இந்த பிரசாதம் அர்ச்சனை செய்யப்பட்ட நெருப்பில் அர்ப்பணிக்கப்படும். வாழ்க!)

LXVI-9: ஓ ஆண்டவரே, உமது அருளால் நான் பசி மற்றும் தாகம் போன்ற அசுத்தத்தை என்னிடமிருந்து அகற்றுகிறேன். , துரதிர்ஷ்டம் மற்றும் துன்பம், வறுமை மற்றும் முன்னேற்றமின்மை மற்றும் போன்றவை. என் பாவங்களை அழித்துவிடு. வாழ்க!

LXVI-10: இந்த காணிக்கையின் மூலம் உணவு, மூச்சு, மனம், புத்திசாலித்தனம் மற்றும் பேரின்பம் ஆகிய உறைகளால் ஆன எனது ஐந்து மடங்கு சுயம் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக இந்த காணிக்கையை பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பில் சமர்ப்பிக்கலாம். வாழ்க!

LXVII-1: அக்னயே ஸ்வாஹா [அக்கினிக்கான காணிக்கை]!
விஷ்வேப்யோ தேவேப்ய ஸ்வாஹா [தெய்வங்கள் அல்லது அனைத்து கடவுள்களின் மொத்த காணிக்கை]!
துருவயா பூமாய ஸ்வாஹா [நிரந்தர நிறைவை காணிக்கை]!
துருவக்ஷிதயே ஸ்வாஹா [நிரந்தர நிலத்திற்குப் பிரசாதம்]!
அச்யுதாக்ஷிதயே ஸ்வாஹா [மாறாத உறைவிடம்]!
அக்னயே ஸ்விஷ்டகிருதே ஸ்வாஹா [சரியான யாகம் செய்பவருக்கு காணிக்கை]!
தர்மாய ஸ்வாஹா [மதக் கடமைக்கான காணிக்கை]!
அதர்மய ஸ்வாஹா [மதக் கடமைக்கான அர்ப்பணம்]!
அத்ப்ய ஸ்வாஹா [நீருக்கான காணிக்கை]!
ஓஷோதி-வனஸ்பதிப்ய ஸ்வாஹா [மூலிகைகள் மற்றும் மரங்களுக்கு பிரசாதம்]!
ரக்ஷோ-தேவஜநேப்ய ஸ்வாஹா [அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் காணிக்கை]!
க்ரிஹ்யாப்ய ஸ்வாஹா [வீட்டு தெய்வங்களுக்கு பிரசாதம்]!
அவஸனேப்ய ஸ்வாஹா [வீட்டின் எல்லையில் வசிக்கும் தெய்வங்களுக்கு பிரசாதம்]! அவஸானபதிப்ய ஸ்வாஹா [அத்தகைய தெய்வங்களின் தலைவர்களுக்கு காணிக்கை]!
ஸர்வபூதேப்ய ஸ்வாஹா [அனைத்து ஆவிகள் அல்லது ஐந்து ஆதிமூலக் கூறுகளின் தெய்வங்களுக்கு அர்ப்பணம்]!
காமய ஸ்வாஹா [அன்பின் கடவுளுக்கு காணிக்கை]!
அந்தரிக்ஷய ஸ்வாஹா [வானத்தில் வீசும் காற்றுக்கு பிரசாதம்]!
யதேஜதி ஜகதி யச்ச சேஷ்டாதி நாம்னோ பகோயம் நாம்நே ஸ்வாஹா
[வேதத்தில் உள்ள வார்த்தைகளின் முழுமையும், மேலும் இந்த உலகில் உள்ள அனைத்தும் உணர்ச்சியற்றவையாக நகரும் மற்றும் உணர்வுபூர்வமாக செயல்படும் அனைத்தும்]!
ப்ரிதிவ்யை ஸ்வாஹா [பூமிக்கு காணிக்கை]!
அந்தரிக்ஷய ஸ்வாஹா [வானத்தில் வசிக்கும் ஆவிகளுக்கு பிரசாதம்]!
தேவே ஸ்வாஹா [சொர்க்கத்திற்கான காணிக்கை]!
சூர்யாய ஸ்வாஹா [சூரியனுக்கு பிரசாதம்]!
சந்திரமஸே ஸ்வாஹா [சந்திரனுக்குப் பிரசாதம்]!
நக்ஷத்ரேப்ய ஸ்வாஹா [நட்சத்திரங்களுக்கு அர்ப்பணம்]!
இந்த்ராய ஸ்வாஹா [தெய்வத் தலைவனுக்கு காணிக்கை]!
பிருஹஸ்பதயே ஸ்வாஹா [தெய்வ ஆசானுக்கு காணிக்கை]!
பிரஜாபதயே ஸ்வாஹா [உயிரினங்களின் அதிபதிக்கு]!
ப்ராஹ்மணே ஸ்வாஹா [நான்குமுகம் படைத்தவனுக்குப் பிரசாதம்]!
ஸ்வாத பித்ருப்ய ஸ்வாஹா [இறந்த முன்னோர்களுக்கு பிரசாதம்]!
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா
[உயிர்களின் அதிபதியான ருத்ரனுக்கு வணக்கம் மற்றும் அர்ப்பணம்]!
தேவேப்ய ஸ்வாஹா [தெய்வங்களுக்கு காணிக்கை]!
பித்ருப்ய ஸ்வதஸ்து [மேனிகளுக்குப் பிரசாதம்]!
பூதேப்யோ நமஹ் [பல்வேறு கடவுள்களுக்கு வணக்கம்]!
மனுஸ்யேப்யோ ஹந்தா [ஆண்களுக்குப் பிரசாதம்]!
பிரஜாபதயே ஸ்வாஹா [உயிரினங்களின் அதிபதிக்கு]!
பரமேஸ்தினே ஸ்வாஹா [பிரம்மலோகத்தில் வசிக்கும் நான்கு முகம் படைத்தவனுக்கு அர்ச்சனை]!

LXVII-2: ஒரு வற்றாத கிணற்றுக்கு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நீரூற்றுகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுவது போல, எனக்கு ஆயிரம் மூலங்களிலிருந்து வற்றாத தானியங்கள் கிடைக்கட்டும். அந்த நோக்கத்திற்காக, செல்வத்தை வைத்திருக்கும் தெய்வத்திற்கு நான் காணிக்கை செலுத்துகிறேன். வாழ்க!

LXVII-3: செழிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், ருத்ரனின் அடியார்கள் (தகன பூமியில் வசிப்பவர்கள்) உயிர்களுக்கு மரணம் மற்றும் துக்கத்தால் துன்பம் தருபவர்கள் மற்றும் தேடலில் இரவும் பகலும் அலைந்து திரியும் ஆவிகளுக்கு நான் உணவை வழங்குகிறேன். அஞ்சலி. செழிப்பின் இறைவன் எனக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். வாழ்க!

LXVIII-1: ஓம் என்பது பிரம்மம். ஓம் அதுதான் வாயு. ஓம் அதுவே வரையறுக்கப்பட்ட சுயம். ஓம் அதுவே பரம சத்தியம். ஓம் அவ்வளவுதான். ஓம் என்பது கோட்டைகளின் கூட்டம் 9 உயிரினங்களின் உடல்கள்). அவருக்கு வணக்கம்.

LXVIII-2: பன்மடங்கு வடிவங்களைக் கொண்ட சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களின் இதயத்தினுள் அந்த உச்சநிலை நகர்கிறது. ஓ உன்னதமானவனே, நீயே தியாகம், நீயே வசத், நீயே இந்திரன், நீயே ருத்திரன், நீயே பிரம்மா, நீயே பிரஜாபதி, நீயே அது, நீயே நதிகளிலும் கடலிலும் உள்ள நீர், நீயே சூரியன், நீ சுவை, நீயே அமுதம், நீயே வேதங்களின் உடல், நீயே முப்பொருள் உலகம், நீயே ஓம்.

LXIX-1: எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதத்தை பிராணனுக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுத பிரசாதத்தை அபானாவில் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் படையலைப் பயபக்தியுடன் வியானாவுக்கு வழங்குகிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை உதானாவில் மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை சமணருக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். இந்த நன்கொடைகளால் என் சுயம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி, நான் அழியாமையைப் பெறுவேன்.

LXIX-2: ஓ தண்ணீரே, அழியாத உணவான அன்ன-பிரம்மனின் பரந்த இருக்கை நீயே.

எல்எக்ஸ்ஐஎக்ஸ்-3: எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை பிராணனுக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். பிராணனுக்கு பிரசாதம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுத பிரசாதத்தை அபானாவில் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். அபனாவுக்கு பிரசாதம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் படையலைப் பயபக்தியுடன் வியானாவுக்கு வழங்குகிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். வியானாவுக்கு அர்ப்பணம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை உதானாவில் மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். உதானாவுக்குப் பிரசாதம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை சமணருக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். சமணருக்கு பிரசாதம். இந்த நன்கொடைகளால் என் சுயம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி, நான் அழியாத நிலையை அடையலாம்.

LXIX-4: ஓ தண்ணீரே, அழியாத உணவான அன்ன-பிரம்மனுக்கு நீயே உறை.

எல்எக்ஸ்எக்ஸ்-1: எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை பிராணனுக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ பிராணா, இந்த உணவின் மூலம் என் சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை அபானனுக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ அபனா, இந்த உணவின் மூலம் என் சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை நான் பயபக்தியுடன் வியானாவுக்கு அளித்துள்ளேன். ஓ வியானா, இந்த உணவின் மூலம் என் பரவிய சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை உதானுக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ உதானா, இந்த உணவின் மூலம் என் சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை சமணருக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ சமணா, இந்த உணவின் மூலம் என் நடு மூச்சு சக்தியை அதிகப்படுத்து.

எல்எக்ஸ்எக்ஸ்ஐ-1: (இப்போது எடுத்த இந்த உணவால்) பரம பகவான் திருப்தியடையட்டும் – உலகம் முழுவதையும் ஆட்சி செய்பவர் மற்றும் அனைவரையும் அனுபவிப்பவர் யார், உடலில் வசிப்பவர், கட்டைவிரலின் அளவு மற்றும் உடலின் ஆதரவு யார் – கால்விரல் முதல் கிரீடம் வரை அதற்கு உணர்வையும் செயல்பாட்டையும் வழங்குதல்.

LXXII-1: ஓ ஆண்டவரே, எனது பேச்சு, சுவாசம், பார்வை மற்றும் செவித்திறன் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்த பிறகு, அந்தந்த நிலையங்களில், அதாவது வாய், நாசி, கண்கள் மற்றும் காதுகளில் உறுதியாக உள்ளன; அதனால் வலிமையும் உயிர்ச்சக்தியும் என் கைகளிலும் தொடைகளிலும் திரும்பியுள்ளன. எனது நுட்பமான உடலும், அனைத்து உறுப்புகளையும் கொண்ட எனது மொத்த உடலும் இப்போது போதாமையிலிருந்து விடுபட்டுள்ளன. உமக்கு என் வணக்கம். எனக்கும் எனக்கும் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தாதே.

LXXIII-1: அழகான இறகுகள் கொண்ட பறவைகளைப் போல, தியாக வழிபாட்டிற்கு (அல்லது அனைவரின் நன்மைக்காகவும்) அர்ப்பணிப்புடன் இருந்த முனிவர்கள் இந்திரனை அணுகி இவ்வாறு வேண்டினார்கள்: எங்கள் இருளையும் அறியாமையையும் நீக்குங்கள்; தகுதியான காட்சிகளால் எங்கள் கண்களை நிரப்பவும்; கண்ணிகளில் சிக்கிய பறவைகள் போன்ற அறியாமையின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை விடுவித்தருளும்.

LXXIV-1: ஓ ருத்ரா, நீ உடலில் செயல்படும் சுவாசங்கள் மற்றும் புலன்களின் உறுப்புகளின் பிணைப்பு முடிச்சு. துக்கங்களின் முடிவாக என்னை உள்ளிடவும், நான் உட்கொண்ட அந்த உணவின் மூலம் என்னைப் பெருக்கிக் காக்கவும்

. மரணத்திலிருந்து என்னைக் காத்தருளும்.

LXXVI-1: ஓ அக்னி, நீங்கள் பொதுவாக மனிதர்களின் பாதுகாவலராகவும், தியாகம் செய்பவர்களின் பாதுகாவலராகவும் தியாகத்தின் நாட்களில் பிறந்துள்ளீர்கள். நீங்கள் சுற்றி ஒளி பரப்பி, அல்லது வெறும் தொடுதலால் விரைவாக வலியை உண்டாக்கப் பிறந்தவர். நீ நீரிலிருந்து மின்னலாகவோ அல்லது கடலுக்கு அடியில் உள்ள வெப்பமாகவோ பிறந்திருக்கிறாய். நீ உராய்வு மூலம் மேகங்கள் அல்லது கற்களில் இருந்து பிறந்தாய். நீ காடுகளிலிருந்து பிறந்தவன். நீ மூலிகைகளிலிருந்து பிறந்தவன். நீ எப்போதும் தூய்மையாக அல்லது சூரியனாகப் பிறந்திருக்கிறாய்.

LXXVII-1: அனைத்து யாகங்களிலும் வழிபடப்படும் ஆண்டவரே, ஆழ்ந்த பயபக்தியுடன் உமக்கு முன்பாக வணங்குகிறேன்! நான் உனது முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! நான் உனது முன் சிரம் தாழ்த்துகிறேன்! மங்களகரமானதைக் கொடுப்பவனாக என்னுடன் இருக்க வேண்டும். இங்கே மகிழ்ச்சியை அளிப்பவனாக என்னுடன் இருக்க வேண்டும். நல்ல மற்றும் தெய்வீக குணங்களை வழங்குபவராக என்னுடன் இருக்க வேண்டும். வேதக் கற்றலால் பிறந்த சிறப்பைத் தருபவராக என்னுடன் நிலைத்திருக்க வேண்டும். நான் ஸ்தாபித்த யாகம் முழுவதுமாக செழிப்பாக இருக்கும் போது, ​​அதன் பலனை வழங்க என்னுடன் இரு.

LXXVIII-1: உண்மைத்தன்மை சிறந்தது. உண்மைத்தன்மை மட்டுமே சிறந்தது. சத்தியத்தால் பேரின்ப நிலையை அடைந்தவர்கள் அங்கிருந்து ஒருபோதும் வீழ்வதில்லை. எது சத், அதாவது நல்லவர்களுக்கு உரியதோ, அதுவே சத்தியம் (சத்தியம்). இந்த காரணத்திற்காக, உயர்ந்த நன்மையைத் தேடுபவர்கள் சத்தியத்தில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-2: சிக்கனமே விடுதலைக்கான வழி என்றும், மத விரதத்தை விட உயர்ந்த சிக்கனம் எதுவும் இல்லை என்றும் சிலர் கருத்துக் கொண்டுள்ளனர். இந்த சிறந்த சிக்கனத்தை நடைமுறைப்படுத்துவது கடினம். அதை நடைமுறைப்படுத்தும் ஒரு நபர் வெல்ல முடியாதவராக மாறுகிறார் (அல்லது அத்தகைய சிக்கனத்தை சாதாரணமாக நினைத்துப் பார்க்க முடியாது). எனவே சிக்கனத்தில் உயர்ந்த நல்ல மகிழ்ச்சியை நாடுபவர்கள்.

LXXVIII-3: தடைசெய்யப்பட்ட பொருட்களின் ஈர்ப்பிலிருந்து புலன்களை விலக்குவதே விடுதலைக்கான வழி என்று பரிபூரண சந்நியாசிகள் அறிவிக்கின்றனர். அதனால் அவர்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-4: காட்டில் வசிக்கும் துறவிகள் மன அமைதியே விடுதலைக்கான வழி என்று கருதுகின்றனர், எனவே அவர்கள் அமைதியில் மகிழ்ச்சியடைகின்றனர்.

LXXVIII-5: அனைத்து உயிரினங்களும் தன்னலமற்ற பரிசை உயர்ந்ததாகப் போற்றுகின்றன; ஏனென்றால், தன்னலமற்ற பரிசை வழங்குவதை விட கடினமான செயல் எதுவும் இல்லை. எனவே உயர்ந்த நன்மையை நாடுபவர்கள் தன்னலமற்ற பரிசுகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-6: வேதக் கடமையே விடுதலைக்கான வழி என்று சிலர் கருதுகின்றனர். வேதக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் உலகம் முழுவதும் ஒன்றாக நடத்தப்படுகிறது. வேதம் வகுத்துள்ள கடமைகளை விடக் கடினமானது எதுவுமில்லை. எனவே உயர்ந்த நன்மையை நாடுபவர்கள் வேதக் கடமையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-7: அதிக எண்ணிக்கையிலான மக்கள் இனப்பெருக்கம் என்பது விடுதலைக்கான வழிமுறை என்று கருதுகின்றனர். அதனால்தான் அதிக எண்ணிக்கையிலான இனிய நீரூற்றுகள் பிறக்கின்றன. இனப்பெருக்கம் என்பது அத்தகைய வழிமுறையாகக் கருதப்படுவதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இனப்பெருக்கத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

LXXVIII-8: வேத மதத்தின் மீது பக்தி கொண்ட ஒருவர், வேத நெருப்புதான் விடுதலைக்கான வழி என்று கூறுகிறார். எனவே வேத நெருப்புகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.

LXXVIII-9: வேத மதத்திற்கு அர்ப்பணித்த மற்றொரு நபர், அக்னிஹோத்ரமே விடுதலைக்கான வழி என்று கூறுகிறார். எனவே அக்னிஹோத்ர யாகத்தில் உயர்ந்த மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் சிலர்.

LXXVIII-10: வைதீக மதத்திற்கு அர்ப்பணித்த மற்றவர்கள் தியாகம்தான் விடுதலைக்கான வழி என்று கூறுகிறார்கள். உண்மையாகவே தேவர்கள் தங்களின் முந்தைய தியாகங்களால் சொர்க்கத்தை அடைந்துள்ளனர். எனவே யாகம் செய்வதில் உயர்ந்த நல்ல மகிழ்ச்சியை நாடுபவர்கள்.

LXXVIII-11: சில ஞானிகள் உள்நோக்கி வழிபடுவதே விடுதலைக்கான வழி என்று கருதுகின்றனர். எனவே ஞானமுள்ளவர்கள் உள்ளான வழிபாட்டில் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-12: பிரம்மா ஹிரண்யகர்பா சந்நியாசம் விடுதலைக்கான வழி என்று கருதுகிறார். ஹிரண்யகர்பன் உண்மையில் உயர்ந்தவர். ஹிரண்யகர்ப்பா (அவர் ஒரு ஆளுமையாக இருந்தாலும்) உயர்ந்தவர் மட்டுமே. நிச்சயமாக மேலே கூறப்பட்ட இந்த சிக்கனங்கள் தாழ்வானவை. சந்நியாசம் மட்டும் அனைவரையும் மிஞ்சியது. சந்நியாசத்தின் விலைமதிப்பற்ற அறிவின் அனைத்தையும் மீறிய சிறப்பை இவ்வாறு அறிந்தவருக்கு (வழங்கப்பட்டுள்ளது).

LXXIX-1: பிரஜாபதி மற்றும் சுபர்ணா ஆகியோரின் மகனான ஆருணி, தன் தந்தையான பிரஜாபதியை அணுகி – இவ்வாறு நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் – அவரிடம் கேள்வி எழுப்பினார், மரியாதைக்குரிய ஆசிரியர்கள் எதை விடுதலைக்கான உச்ச வழிமுறையாக அறிவிக்கிறார்கள்? அவருக்கு பிரஜாபதி இவ்வாறு பதிலளித்தார்:

LXXIX-2: உண்மையால் காற்று வீசுகிறது. உண்மையாகவே சூரியன் வானத்தில் பிரகாசிக்கிறது. உண்மையே பேச்சின் அடித்தளம். நடைமுறை வாழ்க்கையில் எல்லாமே உண்மையைச் சார்ந்தது. ஆகவே, உண்மையே விடுதலைக்கான மிக உயர்ந்த வழி என்கிறார்கள்.

LXXIX-3: கடவுள்கள் கடவுளை அடைந்த தொடக்கத்தில் செய்த தபஸ். தவத்தால் பார்ப்பனர்கள் படிப்படியாக சொர்க்கத்தை அடைந்தனர். தபஸ் மூலம் நமது கையகப்படுத்துதலுக்குத் தடையாக இருக்கும் எதிரிகளை அகற்றுவோம். எல்லாம் தபஸில் நிறுவப்பட்டது. எனவே அவர்கள் தபஸ் (விடுதலைக்கான வழிமுறை) என்று கூறுகிறார்கள்.

LXXIX-4: புலன்-கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் நபர்கள் தங்கள் பாவத்தை அதன் மூலம் அசைத்துவிடுகிறார்கள். முழுமையான துறவிகள் புலன் கட்டுப்பாட்டின் மூலம் படிப்படியாக சொர்க்கத்தை அடைந்தனர். புலன் கட்டுப்பாடு என்பது சாதாரண உயிரினங்களால் அணுக முடியாதது. எல்லாமே புலன் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்டுள்ளன. எனவே புலன்-கட்டுப்பாடுதான் உச்சம் (விடுதலைக்கான வழிமுறை) என்கிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-5: அமைதியான சுபாவம் உள்ளவர்கள் அமைதியால் மட்டுமே நன்மை செய்கிறார்கள். முனிவர்கள் மன அமைதியின் மூலம் சொர்க்கத்தை அடைந்துள்ளனர். மன அமைதி என்பது சாதாரண உயிரினங்களால் அணுக முடியாதது. எல்லாமே மன அமைதியை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் மன அமைதியே விடுதலையின் மிக உயர்ந்த வழி என்கிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-6: தட்சிணா வடிவில் பரிசு வழங்குவது தியாகங்களின் பாதுகாப்பான உறைவிடம். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கொடுப்பவரையே வாழ்கின்றன. மக்கள் தங்கள் மீது பொறாமை கொண்டவர்களையும் தீங்கிழைப்பவர்களையும் பரிசுகளால் அகற்றுகிறார்கள். அன்பளிப்பின் மூலம் நட்பற்றவர் நட்பாக மாறுகிறார். எல்லாம் பரிசில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, கொடையே விடுதலையின் உயர்ந்த வழி என்று கூறுகிறார்கள்.

LXXIX-7: தர்மம், மத நீதி, முழு பிரபஞ்சத்தின் ஆதரவாகும். எல்லா மக்களும் தர்மத்தில் முழு ஈடுபாடு கொண்ட ஒருவரை நெருங்குகிறார்கள். தர்மத்தின் மூலம் ஒருவன் பாவத்தை விரட்டுகிறான். அனைத்தும் தர்மத்தால் ஆதரிக்கப்படுகின்றன. ஆகவே, தர்மம்தான் விடுதலைக்கான உயர்ந்த வழி என்று சொல்கிறார்கள்.

LXXIX-8: இந்த உலகில் இனப்பெருக்கம் நிச்சயமாக இனத்தின் அடித்தளம். சாஸ்திர விதிகளின்படி, நீரூற்றுகளை வளர்ப்பதன் மூலம் சரியான வழியில் சந்ததியின் தொடர்ச்சியை நீட்டிக்கும் ஒரு நபர், தனது மறைந்த முன்னோர்களுக்கு தனது கடனை செலுத்துகிறார். அதுவே அவன் முன்னோர்களுக்குக் கடனை அடைக்க வழி. எனவே, மகப்பேறுதான் விடுதலையின் உயர்ந்த வழி என்று சொல்கிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-9: பெரிய தியாக நெருப்பு உண்மையில் மூன்று மடங்கு அறிவு மற்றும் கடவுளுக்கு வழிவகுக்கும் பாதை. அவற்றில், கர்ஹபத்ய நெருப்பு ரிக்-வேதம், பூமி மற்றும் ரத்தந்தர சமன் மந்திரம்; அன்வஹார்யபச்சனா என்பது யஜுர்-வேதத்தின் நடுப்பகுதி மற்றும் வாமதேவ்ய சமன் மந்திரம்; ஆஹவனியா என்பது சாம-வேதம், சொர்க்க லோகங்கள் மற்றும் பிரஹத் சமன் மந்திரம். எனவே, யாகத் தீயே முக்தியின் உயர்ந்த வழி என்று கூறுகிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-10: விடியற்காலையில் மற்றும் சூரிய அஸ்தமனத்தில் அக்னிஹோத்ரா நிகழ்ச்சியை நடத்துவது, வீட்டைப் பராமரிப்பது தொடர்பான பாவங்களுக்குப் பரிகாரமாகும். இது ஒரு நல்ல யாகம் மற்றும் ஒரு நல்ல ஹோமம் மற்றும் இது அனைத்து யாகங்கள் மற்றும் கிராதுகள் ஆகியவற்றின் தொடக்கமாகும். இது சொர்க்க உலகத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாகும். எனவே அக்னிஹோத்ரமே முக்திக்கான மிக உயர்ந்த வழிமுறை என்கிறார்கள்.

LXXIX-11: வைதீக மதத்திற்கு அர்ப்பணித்த மற்றவர்கள் தியாகமே விடுதலைக்கான வழி என்று கூறுகிறார்கள். தியாகம் என்பது கடவுளுக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே தேவர்கள் தங்கள் முந்தைய தியாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடைந்துள்ளனர். யாகத்தால் பேய்களை விரட்டியிருக்கிறார்கள். தியாகத்தால் பகைவர்கள் நட்பு கொள்கிறார்கள். எல்லாவற்றையும் தியாகம் ஆதரிக்கிறது. ஆகவே, தியாகம்தான் விடுதலையின் உயர்ந்த வழி என்கிறார்கள்.

LXXIX-12: உள்நோக்கிய வழிபாடு அல்லது மனச் செறிவு உண்மையில் பிரஜாபதி நிலையை அடைவதற்கான வழிமுறையாகும், அதனால் அது புனிதமானது. மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள் நல்லதைக் கண்டு உணர்கின்றனர். மனச் செறிவு மூலம், விஸ்வாமித்திரர் போன்ற பார்ப்பனர்கள் வெறும் விருப்பத்தால் பாடங்களை உருவாக்கினர். அனைத்தும் மனதின் இந்த சக்தியைப் பொறுத்தது. எனவே உள்நோக்கிச் செறிவூட்டும் சக்தியே விடுதலையின் உச்சமான வழி என்று கூறுகிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-13: முக்திக்கான உயர்ந்த வழிமுறையாகக் குறிப்பிடப்பட்ட சந்நியாசம் பிரம்மம் என்றும், பிரம்மன் பிரபஞ்ச ஆவி என்றும், மேன்மையான ஆனந்தம் உடையவர், சுயமாகப் பிறந்தவர், படைக்கப்பட்ட உயிரினங்களின் பாதுகாவலர், காலத்தின் ஆன்மா என்றும் அறிவாளிகள் அறிவிக்கிறார்கள். அதனால் முன்னும் பின்னுமாக.

LXXIX-14: ஆண்டு சூரியன். சூரியனில் இருப்பவர் ஹிரண்யகர்ப்பன்; அவர் பரமேஷ்தின் (பிரபஞ்சத்தின் பாதுகாவலர்) மற்றும் பிரம்மாத்மன் – அனைத்து உயிரினங்களின் உள்ளார்ந்த சுயமாக இருக்கும் உச்ச உண்மை.

LXXIX-15: சூரியன் வெப்பத்தை அளிக்கும் கதிர்கள், அதே கதிர்கள் தண்ணீரை மழை-மேகமாக மாற்றுகின்றன, இது மழையைப் பொழிகிறது. மழை மேகங்களால் மூலிகைகளும் மரங்களும் தோன்றுகின்றன. மூலிகைகள் மற்றும் மரங்களில் இருந்து உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவைப் பயன்படுத்துவதன் மூலம் சுவாசம் மற்றும் உணர்வுகள் ஊட்டமடைகின்றன. உயிர்மூச்சு ஊட்டமடையும் போது உடல் வலிமை பெறுகிறது. உடல் வலிமை தபஸ் (சுயக்கட்டுப்பாடு, மத விரதம் மற்றும் பலவற்றின் வடிவத்தில்) பயிற்சி செய்யும் திறனை அளிக்கிறது. இத்தகைய தவங்களின் விளைவாக, வேதப்பூர்வமான உண்மைகளில் நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கையின் மூலம் மன ஆற்றல் வருகிறது. மன சக்தியால் புலன் கட்டுப்பாடு சாத்தியமாகிறது. புலன்-கட்டுப்பாடு மூலம் பிரதிபலிப்பு உருவாகிறது. பிரதிபலிப்பின் விளைவாக மனதில் அமைதி ஏற்படுகிறது. சத்தியத்தின் உறுதியான அனுபவம் அமைதியைப் பின்பற்றுகிறது. உறுதியான அனுபவத்தின் மூலம் சத்தியத்தை நினைவு கூர்வது உண்டாகிறது. நினைவாற்றல் தொடர்ச்சியான நினைவை உருவாக்குகிறது. தொடர்ச்சியான நினைவின் விளைவாக உண்மையை உடைக்காத நேரடி உணர்தல். அத்தகைய உணர்தல் மூலம் ஒரு நபர் ஆத்மாவை அறிவார். இதனாலேயே, உணவு கொடுப்பவன் இவை அனைத்தையும் தருகிறான். ஏனெனில், உயிரினங்களின் உயிர் சுவாசமும் புலன்களும் உணவில் இருந்து வந்தவை, அந்த பிரதிபலிப்பு உயிர் மூச்சு மற்றும் புலன்களுடன் செயல்படுகிறது, உடைக்கப்படாத நேரடி உணர்தல் பிரதிபலிப்பிலிருந்து வருகிறது மற்றும் பேரின்பம் உண்மையின் உடைக்கப்படாத நேரடி உணர்தலில் இருந்து வருகிறது. இவ்வாறு பேரின்பத்தை அடைந்து, பிரபஞ்சத்தின் ஆதாரமான பரமாத்மாவாக மாறுகிறார்.

LXXIX-16: யாரால் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறதோ – பூமி மற்றும் நடுப்பகுதி, வானம் மற்றும் கால்பகுதிகள் மற்றும் துணை காலாண்டுகள் – அந்த நபர் ஐந்து மடங்கு மற்றும் ஐந்து பொருட்களால் ஆனது. சந்நியாசத்தின் மூலம் உயர்ந்த ஞானத்தை அடைந்தவர் உண்மையில் இந்த நபர். தற்போது உணரக்கூடிய அனைத்தும், கடந்த காலத்தில் இருந்தவை, எதிர்காலத்தில் இருக்கும் அனைத்தும் அவனே. வெளித்தோற்றத்தில் மனிதனின் மூலம், அவனது உண்மையான இயல்பே, வேதங்களை விசாரிப்பதன் மூலமும், சரியான அறிவில் அவனுடைய புதிய பிறப்பால் அடையப்படுவதாலும் ஆகும். அவர் தனது குருவால் வழங்கப்பட்ட அறிவின் செழுமையிலும், அவரது நம்பிக்கையிலும் உண்மையிலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டவர். அவர் சுய பிரகாசமாகிவிட்டார். அப்படிப்பட்டவராக அவர் அறியாமை இருளுக்கு அப்பால் இருக்கிறார். ஓ ஆருணி, சன்யாசத்தின் மூலம் உன்னதமான அவரை உணர்ந்து, உங்கள் மனதை இதயத்தில் நிலைநிறுத்தி, மீண்டும் ஒரு மரணத்திற்கு இரையாகி விடாதீர்கள். சந்நியாசம் உணர்தலின் மிக உயர்ந்த வழிமுறையாக இருப்பதால், ஞானிகள் மற்ற எல்லா முக்தி வழிமுறைகளுக்கும் மேலானதாக அறிவிக்கிறார்கள்.

LXXIX-17: ஓ உன்னதமானவனே, நீ எங்களுக்கு உன்னதமான அறிவின் செல்வத்தைக் கொடுப்பவன். நீயே எல்லாமாகிவிட்டாய். நீங்கள் தனிப்பட்ட ஆத்மாக்களை சூத்ராத்மனில் ஒன்றிணைக்கிறீர்கள். நீ பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறாய். நெருப்புக்குப் பொலிவைத் தருபவன் நீயே. சூரியனுக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருபவன் நீயே. நீயே சந்திரனுக்கு ஒளிச் செல்வங்களை வழங்குபவன். உபயமா பாத்திரத்தில் சோம ரசமாக பிரசாதமாக எடுத்துக் கொள்ளப்பட்டாய். ஒளியின் வெளிப்பாடாக விளங்கும் உன்னதமான உன்னை வணங்குகிறோம்.

LXXIX-18: (சந்நியாசி பரமாத்மாவை தியானித்து) ஓம் என்ற எழுத்தை உச்சரிப்பதன் மூலம் அவர் மீது தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். இது, ஓம் என்ற எழுத்து, பல பெரிய உபநிடதங்களின் உட்பொருளாகவும், தகுதியற்றவர்களுக்கு வழங்காமல் தெய்வங்களால் பாதுகாக்கப்பட்ட ரகசியமாகவும் உள்ளது. சந்நியாசத்திற்குப் பிறகு பிரணவத்தின் துணையுடன் பரமாத்மாவைத் தியானிப்பவர் எல்லையற்ற பரமாத்மாவை அடைகிறார். அதன் மூலம் அவன் பிரம்மத்தின் மகத்துவத்தை அடைகிறான். இவ்வாறு இரகசிய அறிவு வழங்கப்பட்டுள்ளது.

எல்எக்ஸ்எக்ஸ்எக்ஸ்-1: யாகத்தை நிறுவியவர், ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ள விதத்தில் உயர்ந்த அறிவைப் பெற்ற ஒரு சன்னியாசியால் அர்ப்பணிக்கப்பட்ட தியாகத்தின் விஷயத்தில், அவருடைய சுயமே உள்ளது. அவருடைய விசுவாசம் அவருடைய மனைவி; அவரது உடல் அவரது தியாக எரிபொருள்; அவன் மார்பே அவனுடைய பலிபீடம்; அவருடைய முடிகள் அவருடைய பரிசுத்த புல்; அவன் கற்ற வேதம் அவனுடைய கூந்தல்; அவரது இதயம் அவரது தியாக பதவி; அவரது விருப்பம் அவரது தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்; அவரது கோபம் அவரது விலங்கு எரிக்கப்பட வேண்டும்; அவனுடைய சிக்கனம் அவனுடைய நெருப்பு; அவனுடைய புலன்-கட்டுப்பாடு அவனுடைய இம்மோலேட்டர்; அவனுடைய பரிசுகள் அவனுடைய தக்ஷிணை; அவரது பேச்சு அவரது ஹோதிர் பாதிரியார்; அவரது மூச்சு அவரது உட்கதிர் பூசாரி; அவன் பார்வை அவனுடைய அத்வர்யு பூசாரி; அவனுடைய மனம் அவனுடைய பிராமண ஆசாரியன்; அவன் கேட்டல் அவனுடைய அக்னிட் பூசாரி; அவரது ஆயுட்காலம் அவரது ஆயத்த சடங்கு; அவன் எதை உண்கிறானோ அது அவனுடைய பிரசாதம்; அவர் குடிப்பது சோமா ஜூஸைக் குடிப்பது; அவர் தன்னை மகிழ்விக்கும் போது அதுவே அவரது உபாசத் சடங்கு; அவர் நடக்கும்போது, ​​​​உட்கார்ந்து, நிற்கும்போது அது அவருடைய பிரவர்க்ய சடங்கு; எது அவனுடைய வாயோ அது அவனுடைய ஆஹவனிய நெருப்பு; அவனுடைய சொல்லாடல் அதுவே அவனுடைய காணிக்கை; அவனுடைய அறிவே அவனுடைய ஹோம யாகங்கள்; அவர் மதியம் மற்றும் முற்பகல் சாப்பிடும் போது அது அவரது சமித்-ஹோமம் (நெருப்பில் எரிபொருள் பிரசாதம்); பகலின் மூன்று பிரிவுகள் – முற்பகல், மதியம் மற்றும் மாலை – அவருடன் தொடர்புடையவை; இரவும் பகலும் அவருடைய தர்சபூர்ணமாச யாகங்கள்; அரை மாதங்கள் மற்றும் மாதங்கள் அவரது சாதுர்மாஸ்ய யாகம்; பருவங்கள் அவனுடைய பசுபந்த யாகம்; ஸம்வத்ஸரங்களும் பரிவத்ஸரங்களும் அவருடைய அஹர்கண யாகம்; மொத்த தியாகம், உண்மையில், அவரது சாத்திரம்; மரணம் என்பது அவப்ரிதா அல்லது அவரது தியாகத்தின் நிறைவு. அக்னிஹோத்திரம் முதல் சத்திரம் வரையிலான அனைத்துக் கடமைகளையும் மறைத்து, முதுமையால் மரணம் அடைந்து, சூரியன் வடக்கே சஞ்சரிக்கும் காலத்தில் இறந்தால், சந்நியாசியின் நடத்தை – இதை அறிந்தவன் தேவர்களின் ஆதிக்கத்தை அடைகிறான். இந்திரனைப் போல, பின்னர் சூரியனுடன் அடையாளம் அல்லது தோழமையை அடைகிறது. மறுபுறம், சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலத்தில் இறந்தவர் மேனிகளின் மகத்துவத்தை மட்டுமே பெறுகிறார், பின்னர் சந்திரனுடன் அடையாளத்தை அல்லது தோழமையை அடைகிறார். சூரியன் மற்றும் சந்திரனின் மகத்துவத்தை தனித்தனியாக அறிந்த ஒரு பிராமணன் இந்த இரண்டையும் உணர்கிறான்; ஆனால் ஹிரண்யகர்ப்பனை அறிந்தவன் மேலும் வெற்றி பெறுகிறான். ஹிரண்யகர்ப்ப லோகத்தில் பெற்ற அந்த அறிவிலிருந்து, ஹிரண்யகர்ப்ப லோகம் கலைக்கப்படும்போது, ​​இருப்பு-அறிவு-ஆனந்தமாகிய பிரம்மனின் பேரருளை அடைகிறான். இவ்வாறே இங்கும், இந்த உபநிடதத்திலும் உள்ள இரகசிய அறிவு முடிவடைகிறது.

ஹரி ஓம்! மித்ரா, வருணன், ஆரியமன், இந்திரன், பிருஹஸ்பதி
மற்றும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் விஷ்ணு நமக்கு அருள் புரியட்டும்
, மேலும் எங்களுக்கு நலத்தையும் பேரின்பத்தையும் வழங்குவாயாக.
நான் பிரம்மனை பயபக்தியுடன் வணங்குகிறேன்.
ஓ வாயுவே, நான் உன்னை வணங்குகிறேன்.
நீ மெய்யாகவே உணரக்கூடிய பிரம்மன்.
நான் அறிவிப்பேன்: நீங்கள் சொல்வது சரிதான்.
நீயே உண்மையும் நல்லவனும்.
வாயு என்று போற்றப்படும் அந்த உன்னதமானவன் என்னைக் காப்பாற்றட்டும்.
அவர் ஆசிரியரைக் காப்பாற்றட்டும்.
என்னை, அவர் பாதுகாக்கட்டும்; என் ஆசிரியரே, அவர் பாதுகாக்கட்டும்.
ஓம்! அவர் நம் இருவரையும் ஒன்றாகக் காப்பார்; அவர் நம் இருவரையும் ஒன்றாகப் போஷிப்பாராக;
நாம் மிகுந்த ஆற்றலுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்,
எங்கள் படிப்பு தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்;
நாம் பரஸ்பரம் தகராறு செய்யாமல் இருக்கலாம் (அல்லது யாரையும் வெறுக்காமல் இருக்கலாம்).
ஓம்! என்னில் அமைதி நிலவட்டும்!
என் சூழலில் அமைதி நிலவட்டும்!
என் மீது செயல்படும் சக்திகளில் அமைதி நிலவட்டும்!

கிருஷ்ண-யஜுர்-வேதத்தில் உள்ள மஹாநாராயணோபநிஷத் இங்கே முடிகிறது.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வைவர்த்த புராணம்

February 3, 2025

ஸ்ரீ ப்ரஹ்ம வைவர்த்த புராணம்

பதினெண் புராணங்களில் பத்தாவது புராணமாகும். இந்த புராணம் பதினெட்டாயிரம் (18,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இப்புராணம் பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைக் கொண்டதாகும்.
வைவர்த்தம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பரிணாம வளர்ச்சி என்று பொருள். எனவே பிரம்மனின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கின்ற புராணமான இது பிரம்ம வைவர்த்த புராணம் என்று அழைக்கப்படுகிறது.
இக் காண்டத்தில் விநாயகரின் வரலாறும், பெருமைகளும் கூறப்படுகின்றன. பார்வதி கிருஷ்ண விருதம் இருந்து கிருஷ்ணனையே குழந்தையாக பெற்றார். அக் குழந்தை பிறந்த நாளில் கைலாசத்தில் பெரும் விழா நடந்தது. அதற்கு முனிவர்கள், தேவர்கள், யட்சர்கள் என அனைவரும் வந்தார்கள். அவர்களில் சூரியனின் குமாரனான சனியும் வந்தார். ஆனால் குழந்தையை காணாமல் இருந்தார். அதைக் கண்ட பார்வதி சனிபகவானை குழந்தையை காணும் படி கூறினார்.

சனியின் பார்வையால் குழந்தையின் தலை விழுந்தது. அதன் பிறகு கிருஷ்ணன் கருடனாக மாறி பூமியை வலம் வந்தார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதை கண்டு அதன் தலையை சக்ராயுதத்தினால் கொய்தார். அதன் தலையை கைலாயத்தில் இருந்த தலையில்லா குழந்தையுடன் இணைத்தார்.

கஜானனன் , லம்போதரன் , ஏகதந்தன், விக்கினஹரன் என விநாயகரின் பல பெயர்களுக்கான காரணங்களை இப்புராணம் விளக்குகிறது இதனால்.

இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள்,  ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் – சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். “இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.

“வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் “ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’’ என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது. 

முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

செளதி முனிவர், “தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.

பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. ஸ்ரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது.

இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள்,  ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் – சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். “இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.

“வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் “ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’’ என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது. 

முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

செளதி முனிவர், “தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.

இராதா வல்லப சம்பிரதாயம் மற்றும் அரிதாசி சம்பிரதாயத்தில், இராதை மட்டுமே பிரம்மமாக வணங்கப்படுகிறார்.மற்ற இடங்களில், நிம்பர்க சம்பிரதாயம், புஷ்டிமார்க்கம், மகாநாம சம்பிரதாயம், சுவாமிநாராயண் சம்பிரதாயம், வைணவ-சஹாஜியா, மணிப்பூரி வைணவம் மற்றும் சைதன்யருடன் தொடர்புடைய கௌடிய வைணவ இயக்கங்களில் கிருட்டிணனுடன் அவரது முக்கிய துணைவியாக இராதை வணங்கப்படுகிறார்.
இராதை விரஜபூமியில் வாழ்ந்த கோபியர்களின் தலைவியாக விவரிக்கப்படுகிறார். மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். இவர் பல இலக்கியப் படைப்புகளுக்கு ஊக்கமளித்துள்ளார். மேலும் கிருட்டிணனுடன் இவரது இராசலீலை நடனம் பல வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்துள்ளது.
இந்து மதத்தின் வைணவ மரபுகளில் இராதை ஒரு முக்கியமான தெய்வம். இவருடைய குணாதிசயங்கள், வெளிப்பாடுகள், விளக்கங்கள் மற்றும் பாத்திரங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடுகிறது. இராதை கிருட்டிணனுடன் உள்ளார்ந்தவர். ஆரம்பகால இந்திய இலக்கியங்களில், இவரைப் பற்றிய குறிப்புகள் பரவலாக காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் சகாப்தத்தில், கிருட்டிணன் மீதான இவரது அசாதாரணமான காதல் வெளிப்பட்டதால், இராதை மிகவும் பிரபலமானார்.
ஜெயதேவரின் 12ஆம் நூற்றாண்டு சமசுகிருத இலக்கியமான கீத கோவிந்தத்திலும் நிம்பர்காச்சாரியரின் தத்துவப் படைப்புகளிலும் இராதையின் முதல் முக்கிய தோற்றம் வெளிப்படுகிறது.

கிருட்டிணனுடன் இராதை இருப்பது போன்ற எம்.வி.துரந்தர் வரைந்த 1915 ஆம் ஆண்டு ஓவியம் .
இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள கோகுலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் பர்சானாவின் யது குல ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார்.ஆனால் இவர் பர்சானாவில் இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது. பிரபலமான புராணத்தின்படி, யமுனை ஆற்றில் மிதந்து வந்த தாமரையில் இராதாவை விருசபானு கண்டுபிடித்தார். இராதை கிருட்டிணனை விட ஒன்பது மாதங்கள் மூத்தவர்.நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை.

பிரம்ம வைவர்த்த புராணம் மற்றும் கர்க சம்கிதை ஆகியவை பிருந்தாவனத்தை விட்டு வெளியேறும் முன் கிருட்டிணன் பண்டீர்வன் காட்டில் பிரம்மனின் முன்னிலையில் இராதையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று குறிப்பிடுகின்றன. பிருந்தாவனத்தின் புறநகரில் அமைந்துள்ள பண்டீர்வன், இராதா கிருஷ்ண திருமணத் தலம், இவர்களது திருமணம் நடந்த இடமாகக் கருதப்படுகிறது

இராதை இந்து மதத்தின் முக்கிய மற்றும் கொண்டாடப்படும் தெய்வங்களில் ஒருவராகும். இவருடன் தொடர்புடைய பண்டிகைகளின் பட்டியல் பின்வருமாறு –

இராதா ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இராதாட்டமி, இராதை அவதரித்த ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில், இவ்விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. கிருட்டிண ஜெயந்திக்கு 15 நாட்களுக்குப் பிறகு, இராதா சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் ஒரு அம்சமாக இருப்பதைக் குறிக்கிறது. இவ்விழா குறிப்பாக விரஜபூமி பகுதியில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்படுகிறது. பர்சானா இராதையின் பிறப்பிடமாக கருதப்படுவதால் அங்குள்ள இராதா ராணி கோவிலில் இந்த விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. பர்சானாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள பிருந்தாவனம் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது பல வைணவப் பிரிவினருக்கு முக்கிய திருவிழாவாகும்.

கோலி’ அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (“வசந்தகாலத் திருவிழா”) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் விரஜ் சமூகத்தினரால் கிருட்டிணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம், நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.

சரத் பூர்ணிமா என்பது இலையுதிர் காலத்தின் முழு நிலவைக் குறிக்கிறது. இந்த நாளில், பிருந்தாவனத்தின் பசு மேய்க்கும் பெண்களான ராதை மற்றும் கோபியர்களுடன் இராச லீலை என்ற அழகான நடனத்தை கிருட்டிணன் ஆடுவதை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில், கோவில்களில் இராதா கிருட்டிணன் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, மலர் மாலைகள் மற்றும் பளபளக்கும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறார்.

வைணவ மதத்தில், கார்த்திகை பூர்ணிமா, இராதையை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிரம்ம வைவர்த புராணத்தின் படி, கிருட்டிணனும் இந்த நாளில் இராதையை வணங்குவார் என நம்புகின்றனர். இராதா கிருட்டிணன் கோவில்களில், கார்த்திகை மாதம் முழுவதும் இது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் இராசலீலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன

மிகவும் பிரபலமான இந்திய பாரம்பரிய நடனமான மணிப்புரி இராசலீலை முதன்முதலில் 1779 ஆம் ஆண்டில் மன்னர் பாக்யச்சந்திரன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மன்னன் இராதா கிருட்டிணனின் இராசாலீலையில் ஈர்க்கப்பட்டு, மகா இராசலீலை, குஞ்ச் இராசலீலை மற்றும் வசந்த ராசலீலை என நடனத்தின் மூன்று வடிவங்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் மணிப்பூரின் கலை மற்றும் கலாச்சாரத்தில் அடுத்தடுத்த மன்னர்களால் நித்ய ராசலீலை மற்றும் வேத ராசலீலை ஆகிய இரண்டு வகையான ரசங்கள் சேர்க்கப்பட்டன. இந்த நடன வடிவங்களில், நடனக் கலைஞர்கள் இராதை, கிருட்டிணன் மற்றும் கோபியர்களின் பாத்திரத்தை சித்தரிக்கின்றனர். இந்த நடன வடிவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் இன்றும் பரவலாக உள்ளன. மேலும் அவை மேடைகளிலும் கார்த்திகை பூர்ணிமா மற்றும் சரத் பூர்ணிமா (முழு நிலவு இரவுகள்) போன்ற மங்களகரமான நிகழ்வுகளிலும் நிகழ்த்தப்படுகின்றன.

மற்றொரு இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதகளியும் வைணவம் மற்றும் இராதா கிருட்டிணன் அடிப்படையிலான கீத கோவிந்த பாரம்பரியத்தின் தாக்கத்தால் இந்த நடன வடிவத்தின் பரிணாம வளர்ச்சியில் பங்களித்தது. வட இந்திய கதக் நடனத்தின் முக்கிய கருப்பொருள் இராதை மற்றும் கிருட்டிணனின் தோற்றம் மற்றும் நீண்ட கதைகளில் உள்ளது. கிருட்டிணன் மற்றும் அவரது பிரியமான இராதையின் புனிதமான காதல், கதக் நடனத்தின் அனைத்து அம்சங்களிலும் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இசை, உடைகள் மற்றும் இறுதியாக கதக் நடனக் கலைஞரின் பாத்திரம் பற்றிய விவாதங்களின் போது இவை தெளிவாகத் தெரியும்

இராசியா என்பது உத்தரபிரதேசத்தின் விரஜபூமி பிராந்தியத்தில் உள்ள பிரபலமான இந்திய நாட்டுப்புற இசை வகையாகும். இது பொதுவாக விரஜ் பகுதியின் கிராமங்கள் மற்றும் கோவில்களில் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது. இராசியாவின் பாரம்பரிய பாடல்கள் இராதை மற்றும் கிருட்டிணனின் தெய்வீக சித்தரிப்பு மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. இவை அடிக்கடி இராதாவின் பெண் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டு கிருட்டிணனும் இராதாவும் ஊர்சுற்றுவதையும் சித்தரிக்கின்றன

சைதன்யர், வல்லபாச்சார்யர், சண்டிதாஸ் மற்றும் வைணவத்தின் பிற மரபுகளில் உள்ள கோவில்களின் மையமாக இராதா மற்றும் கிருட்டிணன் உள்ளனர். இராதா பொதுவாக கிருட்டிணனுக்கு அருகில் நிற்பதாகக் காட்டப்படுகிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வ்யாஸர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ துளசிதாஸ் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மூலம்-ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

February 3, 2025

ஶ்ரீ ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பக்தி பாடலாகும். 16 ஆம் நூற்றாண்டு கவிஞரான துளசிதாஸ் அவதி மொழியில் ஹனுமான் சாலிஸா எழுதியுள்ளார் என்று நம்பப்படுகிறது – தேவநகரி (முக்கியமாக உத்திரப் பிரதேசத்தில் அவந்த் பிராந்தியத்திலும் நேபாளத்தின் டெரேய் பகுதியிலும் பேசப்படும் இந்திய-ஆரிய மொழி).

“சாலிசா” என்ற வார்த்தை ஹிந்தி சொல் “சாலிஸ்” என்பதிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் நாற்பது (40). இது பாடல்களில் இடம்பெறும் 40 பத்திகளை பிரதிபலிக்கிறது (பூர்வாங்க ஸ்லோகங்கள் 2 பத்திகளை தவிர).

ஸ்ரீ துளசிதாஸ் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மூலம்:

தோஹா

ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி
பரனஊ ரகுவர விமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்தி ஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகாரி

த்யானம்

அதுலித ப³லதா⁴மம் ஸ்வர்ண ஶைலாப⁴ தே³ஹம் ।
த³னுஜ வன க்ருஶானும் ஜ்ஞானினா மக்³ரக³ண்யம் ॥
ஸகல கு³ண நிதா⁴னம் வானராணா மதீ⁴ஶம் ।
ரகு⁴பதி ப்ரிய ப⁴க்தம் வாதஜாதம் நமாமி ॥

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம்
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

மனோஜவம் மாருத துல்யவேக³ம் ।
ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴ மதாம் வரிஷ்டம் ॥
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம் ।
ஶ்ரீ ராம தூ³தம் ஶிரஸா நமாமி ॥

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)

ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தியாக வீரன் தயா வீரன் வித்யா வீரன் தான வீரன் ரண வீரன் -ஐந்தும் இருப்பதால் மஹா வீரன் இவரே –

கம்சன வரண விராஜ ஸுவேஶா
கானன கும்டல கும்சித கேஶா || 4
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை
காம்தே மூம்ஜ ஜனேஊ ஸாஜை || 5
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா
ராமலகன ஸீதா மன பஸியா || 8
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா || 9
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே || 11
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)

ரகுபதி கீன்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாஈ || 12
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

ஸஹஸ வதன தும்ஹரோ ஜாஸ காவை
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14

மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

ஜம(யம) குபேர திகபால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15

எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா
லம்கேஶ்வர பஏ ஸப ஜக ஜானா || 17

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18

கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)

துர்கம காஜ ஜகத கே ஜேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20

உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

ராம துஆரே தும ரகவாரே
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23

உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

னாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)

ஸம்கட தேம்(ஸேம்) ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26

மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

ஸப பர ராம தபஸ்வீ ராஜா
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

ஔர மனோரத ஜோ கோஇ லாவை
ஸோஈ அமித ஜீவன பல பாவை || 28

அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)

ஸாது ஸன்த கே தும ரகவாரே
அஸுர னிகன்தன ராம துலாரே || 30

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)

அஷ்டஸித்தி னௌ(னவ) னிதி கே தாதா
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32

ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜனம ஜனம கே துக பிஸராவை || 33

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)

அம்த கால ரகுவர புரஜாஈ
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாஈ || 34

ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)

ஔர தேவதா சித்த ன தரஈ
ஹனுமத ஸேஇ ஸர்வ ஸுக கரஈ || 35

என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)

ஸம்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈ
க்றுபா கரோ குருதேவ கீ னாஈ || 37

ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)

ஜோ ஶத வார பாட கர கோஈ
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோஈ || 38

“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39

சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40

அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தோஹா

பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப்
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாஈ ஸப ஸன்தனகீ ஜய

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல,
கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர்,
தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்
அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் சமேத ஸீதா பத்தி சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு -சகல வியாக்யான பிரமாணத் திரட்டு–

February 1, 2025

ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித |
பக்திஶ்ச நியதா வீர பாவோ நன்யத்ர கச்சதி ||

ஸ்வாமியே தேவரீர் இடத்திலே எனக்கு மேலான அன்பானது எப்போதும் நிலை நிற்கிறது -வீரரே -உம்மிடத்தில் பக்தியும் நித்தியமாய் இரா நின்றது -என் நினைவு ஸ்ரீ வைகுண்ட நாதன் இடத்திலும் செல்லுகின்றதில்லை –

——-

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

என்னுடைய வம்சத்தவர்களுக்கு எப்போதும் தாய் தந்தையரும் மாதரும் மக்களும் பெரும் செல்வமும் மற்றுமுள்ள எல்லாமுமே எந்த ஆழ்வாருடைய திருவடி இணையேயோ -நமக்கு முதல்வரும் குலபதியுமான அவருடைய மகிழ மலராலே அலங்கரிக்கப் பட்டதும் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையும் யுடையதுமான அந்தத்திருவடி இணையைத் தலையால் வணங்குகிறேன் –

———-

ஸ து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ராஹ்மண அர்த்தாயா தவா க்ராஹயத ப்ரபு –
பால-4-6-

அந்த வால்மீகி பகவான் மேதாவிகளாய் -வேதங்களில் தேர்ந்தவர்களான அவர்களைக் கண்டு -வேதத்தை விவரிப்பதற்காக அவர்களைச் சேர்த்துக் கொண்டார் –

———

ஸ ஜகாம வனம் வீர ப்ரதிஜ்ஞா மநு பாலயன்
பிதுர் வசன நிர்தேசாத் கைகேய்யா ப்ரிய காரணாத்
–பால -1-24-

வீரரான அந்தப் ராமர் ப்ரதிஜ்ஜையைப் பரிபாலித்துக் கொண்டு பிதாவினுடைய ஆஜ்ஜையாலும் கைகேயிக்குப் பிரியமாய் இருக்கையாலும் வனத்துக்குச் சென்றார் –

———————

அகஸ்த்ய வசநாச ச ஏவ ஜக்ராஹ இந்த்ரம் ஸராஸநம்
கட் கஞ்ச பரம ப்ரீதஸ் தூணீ சாஷய ஸாயகவ்–
5-

அகஸ்தியருடைய நியமனத்தின் பேரில் ராமபிரான் இந்திரனுடைய வில்லையும் கத்தியையும் குறையாத அம்புகளையும் யுடைய இரு தூணிகளையும் ஏற்றுக் கொண்டான்-

————

ததஸ் ஸூக்ரீவ வஸனாத் தத்வா வாலிந மாஹவே
ஸூக்ரீவம் ஏவ தத் ராஜ்யே ராகவ ப்ரத்யபாதயத்
–6-

அதற்குப் பின் ஸூக்ரீவன் சொன்னதற்கு இணங்கி வாலியைச் சண்டையில் கொன்று ஸூக்ரீவனையே அவனுடைய ராஜ்யத்திலே நிலை நிறுத்தினான் –

————-

தர்ஸ யாமாஸ சாத்மானம் ஸமுத்ர சரிராம் பதி
ஸமுத்ர வஸனாத் ச ஏவ களம் சேதும் ஆகாரயத் —
7-

நதிகளின் பதியான கடல் அரசன் ராமபிரான் முன் தோன்றினான் -அக்கடல் அரசன் சொன்னபடி நளனைக் கொண்டு அணை கட்டுவித்தான் ராமன் –

————

குருஷ்வ மாம் அநு சரம் வை தர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்தோ அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த ப்ரகல்பதே
-அயோத்யா -31-24—8-

அடியேனைக் கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும் -இதில் தவறு ஒன்றுமே இல்லை -இதனால் நான்முகன் தன்யனாவேன் -உம்முடைய காரியமும் நடை பெறும் –

———-

பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச் ச தே
–பால–31-25-

நீர் வைதேஹியுடன் கூட மலைத் தாழ்வாரையில் விளையாடுவீர் -அடியேன் நீர் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் –

—————-

ராஜ்யம் ச தவ ரஷேயம் யஹம் வேலே வ சாகரம்
ப்ரதிஜா நாமி தே வீர மாபூவம் வீர லோக பாக் –
அயோத்யா -23-27-

வீரனே கடலுக்கு கரைப்போலே உள்ள நான் உம்முடைய அரசையும் ரஷிக்கக் கடவேன் -அப்படிச் செய்ய வில்லையாகில் உம் ராஜ்யத்திலே வாழக் கடவேன் அல்லேன் -வீரரான தசரதன் சென்ற உலகிற்குச் செல்லக் கடவேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் –

————-

தம் மத்த மாதங்க விலாஸகாமீ கச்சந்த மவ்யக்ரமநா மஹாத்மா
ஸ லஷ்மணோ ராகவன் இஷ்ட சேஷ்டா ரரஷ தர்மேணே பலேந ச ஏவ
-கிஷ்கிந்தா -1-128-

மதம்கொண்ட யானையினுடையது போன்ற நடையை யுடையவனும் -ராம பிரானைத் தவிர வேறு ஒன்றில் ஈடுபடாத மனத்தை யுடையவனும் -மஹா புருஷனும் -ராம கைங்கர்யத்தை இனிதாகக் கொண்டவனுமான லஷ்மண தனக்கும் முன் செல்லும் ராமபிரானை தர்மத்தாலும் பலத்தாலும் ரக்ஷித்தான் –

——–

கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

———

பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் –சாகுந்தலம் -7-

ராஜ்யத்தைப் பரித்து-தாங்கி -நின்றதாலே பரதன் எனப்படுகிறான் –

———

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –மங்களமான -3-1-3-

பரம புருஷனை சாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு -ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்றவனாய் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் –

———-

ரூப ஒவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் –அயோ -3-29-

வடிவழகு -வண்மை -குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்ணையும் நெஞ்சையும் அபஹரிக்கும் ராமனை –

———-

மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –
கீதை -10-9-

என்னிடம் நிறைந்த மனத்தை யுடையவர்களாய் -என்னிடமே தங்கள் உயிரை வைத்தவர்களாய் -என்னுடைய குணங்களை ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய் -என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் -சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள் –

—————

த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவ அர்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய சத்வஸ்தோ நிர்யோக ஷேம ஆத்மவாந்
–2-45-

அர்ஜுனா முக்குணங்களில் ஒற்றொன்றை அதிகமாக யுடைய புருஷர்களுக்காக ஏற்பட்டது வேதங்கள் -நீ ஒன்றோடு ஓன்று கலந்த முக்குணங்கள் அற்றவனாய் -ஸத்வ குணத்தையே பெருக்கிக் கொள்வாயாக – ஸூக துக்காதிகளாகிற சாம்சாரிக ஸ்வ பாபங்கள் அற்றவனாய் -எப்போதும் சத்வத்திலேயே நிலை நிற்பவனாய் -இல்லாத புறப் பொருளை அடைவது -இருப்பவற்றை ரக்ஷிப்பது என்னும் இரண்டுமே இல்லாதவனாய் -உட்ப்பொருளான ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபாடு யுடையவனாக ஆவாயாக –

———–

ப்ராஜா பத்யம் க்ருஹஸ்தாநம் ப்ரஹ்மம் ஸந்யாஸிநாம் ஸ்ம்ருதம்
யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷி காரிணாம்
ஏகாந்திநா ஸதா ப்ரஹ்ம அத்யாயிநோ யோகிநோ ஹியே
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-37-38-

இல்லற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரஜாபதி லோகமும்
துறவற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரமனின் உலகமும்
தன் ஆத்மாவில் இனிமை காணும் கைவல்ய நிஷ்டனுக்கு அழியாத கைவல்ய ஸ்தாநமும்
எப்போதும் ப்ரஹ்மத்தைத் தியானிக்கும் ஏகாந்திகளான யோகிகளுக்கு நித்ய ஸூரிகள் எப்போதும் அனுபவிக்கும் மேலான பரமபதமாகிற ஸ்தானமும்
அடையத் தக்கதாகிறது-

———-

த்ரயோ குணாஸ் த்ரை குண்யம் ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
ஸத்வ ரஜஸ் தமஸ் ப்ரசுரா புருஷா த்ரை குண்ய சப்தேக உச்யந்தே
தத் விஷயா வேதா
-ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-45-

ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற முக்குணங்களும் த்ரை குண்யம் என்றும் சொல்லப் படுகின்றன -அம் முக் குணங்களை அதிகமாக கொண்ட புருஷர்கள் த்ரை குண்யர் எனப்படுகின்றனர் -அவர்களுக்காக இருப்பவை வேதங்கள் –

————–

கோ தர்ம ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத –
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்ம அதிக தமோ மத
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச் சேந்நர ஸதா
–ஸஹஸ்ர நாம அத்யாயம்

எல்லா அறங்களினுள்ளும் எந்த அறம் மிகச் சிறந்தது என்று தேவரீர் நினைக்கிறீர்
மனிதன் பக்தியோடு தாமரைக் கண்ணனை ஸ்துதிகளால் எப்போதும் அர்ச்சிப்பதாகிய இதுவே எல்லா அறங்களினுள்ளும் மேலான அறம் என்றும் என் நினைவு –

———-

மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ –ஸூந்தர –35-11-

உலகத்தின் வரம்புகளைச் செய்பவனும் செய்விப்பவனும் ராமபிரானே –

————

ஸ ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன
ஸீதாம் உவாஸா தியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் –
-அயோத்–31-2-

ரகுகுலத்தை உகப்பிப்பவனும் -மிகுந்த கீர்த்தியையும் யுடையனான அந்த லஷ்மண தமையனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ஆஸ்ரித ஸம் ரக்ஷணமான விரதத்தை யுடைய ராகவனையும் பார்த்துச் சொன்னான் –

———–

நதஸ் ஸிரஸி க்ருத்வா து பாதுகே பரதஸ் ததா
ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்நேந ஸமந்வித
–அயோத்–113-1-

பிறகு சத்ருக்நனோடு கூடிய பரதன் தனது தலையிலே ராம பாதுகைகளை வைத்துக் கொண்டு மிக உகந்தவனாய் அப்போதே தேரில் ஏறினான் –

—————–

புஷ்யே ஜாதஸ்து பரதோ மீந லக்நே ப்ரஸந்நத்
ஸார்ப்பே ஜாதவ் ச ஸுவ் மித்ரீ குலீரே அப்யுதிதே ரவவ்
–பால –20-13-

தெளிந்த அறிவையுடைய பரதன் மீன லக்னத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் பிறந்தான்
சுமித்ரையின் புத்ரர்களான லஷ்மண சத்ருக்நர்கள் கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தனர்-

—————

அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்
சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய
தூத்வா ஸரீர மக்ருதம் க்ருதாத்மா
ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவா மீத்யபி சம்பவா மீதி
–சாந்தோக்யம் –8-13-1-

குதிரை மயிர்களை உதிர்த்து போலே பாபத்தை விட்டு ராஹுவின் வாயிலிருந்து நீண்ட சந்திரன் போல் சரீரத்தை விட்டு நித்தியமான பகவல் லோகத்தை க்ருதார்த்தனாய் இருந்து கொண்டு அடையக் கடவேன்-

———

ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய ஸ்வ அனுக்ரஹஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மா கார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –
அயோத்–40-5-

குழந்தாய் நீ வம்சத்தில் வசிப்பதற்காகவே ஸ்ருஷ்டிக்கப்பட்டு இருக்கிறாய் -உன்னுடைய ஸூஹ்ருத்தான ராமனிடம் மிகவும் அன்பு பூண்டவனாய் இருக்கிறாய் -உனது தமையனான ராமன் நடந்து செல்லுகையில் -அந்த நடை அலகிலா ஈடுபட்டு -அவனை ரக்ஷிப்பதில் கவனமில்லாமல் இருந்து விடாதே –

————

ஜக்ராஹ பரதோ ரஸ்மீன் சத்ருக்நச் சத்ரமாததே
லஷ்மணோ வ்யஜனம் தஸ்ய மூர்த்தினி சம்பர்ய வீஜயேத்
-யுத்த -131-28

ராமபிரானுடைய தெற்குதிரையின் கடிவாளங்களை பரதன் பிடித்துக் கொண்டான் -சத்ருக்கனன் ராமனுக்கு குடை பிடித்தான் -அந்த ராமபிரானுடைய திருமுடியில் லஷ்மணன் விசிறியால் வீசினான் –

————-

ராமம் ஏவ அநு சிந்தையன்

ராமனையே நினைத்துக் கொண்டு

————

ஸ்வ தந்த்ர கர்த்தா -அஷ்டாத்யாயீ -1-4-54-

ஒரு செயலில் ஸ்வா தந்தர்யம் உள்ளவனாகக் கருதப்படுபவனே கர்த்தாவாவான்-

————-

கதாந் வஹம் சமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
-ஆரண்ய -16-40-

ரகுகுலக் குழந்தாய் -மஹாத்மாவான பரதனுடனும் வீரனான சத்ருக்நனோடும் உன்னோடும் என்றும் தான் கூடி வாழப் போகிறேன் –

————-

ததஸ்ய த்ரிவிதஸ்யா அபி துக்க ஜாதஸ்ய வை மம
கரப்ப ஜென்ம ஜராத்யேஷு ஸ்தாநேஷு ப்ரபவிஷ்யத
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவ ஏக லஷணா
பேஷஜம் பகவத் ப்ராப்திர் ஏகாந்தாத் யந்திகீ மதா-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-58-59-

கரப்பம் பிறப்பு கிழத்தனம் முதலிய அவஸ்தைகளில் உழலும் என்னுடைய ஆத்யாத்மீக ஆதிதைவீக ஆதிபவ்திக ரூபமான தாப த்ரய துக்க ஸமூஹத்துக்கு
தனக்கும் மேலில்லாத ஆனந்தரூபமான ஸூகமாய் இருக்கையை லக்ஷணமாக உடையதும் துக்கமற்றதும் முடிவற்றதுமான பகவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப் படுகிறது –

———–

தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ந கர்தவ்ய பண்டிதைர் நரை
தத் ப்ராப்தி ஹேதுர் ஞானஞ்ச கர்ம சோக்தம் மஹாமுநே
–6-5-60-

மஹா முனிவரே -கீழ்க் கூறிய காரணத்தாலேயே அந்த பகவானை அடைய அறிவாளிகளான மனிதர்களால் முயற்ச்சி செய்யப்பட வேண்டும் -அவனை அடைவதற்கு ஞானமும் கர்மமும் உபாயங்களாகச் சொல்லப் படுகின்றன –

———

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண —ஸூபால-16-

நாராயணன் தாயாகவும் தந்தையாகவும் தன்னுடன் பிறந்தவனாகவும் தங்கும் இடமாகவும் மோக்ஷ உபாயனாகவும் நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையப்படு மவனாகவும் இருப்பவன் –

————-

யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா ஸ்நிக்தேந பந்துநா
ஸ ஸ பாபா த்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம்
–சாகுந்தலம் -6-23-

குடிகள் எந்த எந்த அன்பு மிக்க உறவினரை இழக்கின்றனரோ -ஸ்திரீக்குப் பதியாய் இருக்கும் அந்தப் உறவைத் தவிர அந்தப் அந்தப் உறவினராக துஷயந்தனே இருப்பானோ என்றும் கோஷிக்கப் படட்டும் –

———–

கதிர் பர்த்தா ப்ரபுஸ் சாஷீ நிவாஸ சரணம் ஸூஹ்ருத்
ப்ரபவ பிரளய ஸ்தாநம் நிதானம் பீஜம் அவ்யயம்
–கீதை -9-18-

அசையும் இடமும் -தாங்கி நிற்பவனும் -நியமிப்பவனும் -அனைத்தையும் நேரே காண்பவனும் -இருப்பிடமும் -உபாயமும் நண்பனும் -ஒவ்வொருவருக்கும் உத்பத்திக்கும் -அழிவுக்கும் ஸ்தானமாய் இருப்பவனும் -உத்பத்திக்கும் பிரளயத்துக்கும் விஷயமாகும் வஸ்துக்களும் அழியாத காரணமும் நானே –

————-

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ
–தைத்ரியம் சீஷா –11-2-

அகில ஜன மாதாவான பிராட்டியையும் -அழிவற்ற தந்தையான அச்சுதனையும் -அறியாதன அறிவித்த ஆச்சார்யனையும் விருந்தாகும் பெரும் தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

——–

உபாயே க்ருஹ ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே ஸாம் ப்ரதம் சைஷ உபாயார்த்த ஏக வாசக
–அஹிர்புத்ந்ய சம்ஹிதை -37-29-

சரணம் என்னும் இவ்வார்த்தை உபாயம் வீடு காப்பாற்றுபவன் என்னும் அர்த்தங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது -இப்போது இது உபாயம் என்னும் அர்த்தத்தையே சொல்லுவதாய் இருக்கிறது –

———–

அதிதிர் யத்ர பக்நாஸோ க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே
ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-9-15-3-11-66-

யாதொரு வீட்டின் நின்றும் விருந்தாளி விருப்பம் நிறைவேறப் பெறாதவனாய்த் திரும்புகின்றானோ அந்தப் விருந்தாளி வீட்டுக்காரனுக்குத் தன் பாபத்தைக் கொடுத்து அவனுடைய புண்ணியத்தை எடுத்துக் கொண்டு செல்கிறான் –

—————

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரவ்
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா ப்ரகாஸந்தே மஹாத்மந
–ஸ்வே –6-23-

எவனுக்குப் பரமபுருஷனிடம் மேலான பக்தி உள்ளதோ -பரமனிடன் போல் ஆச்சார்யனிடமும் மேலான பக்தி உளதோ அப்படிப்பட்ட மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்டால் தான் இந்த அர்த்தங்கள் புலப்படும் –

————-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே —
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-

அசேதனத்தைப் போல் அல்லாமல் விகாரம் அற்றவனாகவும் -ஸம்ஸாரி சேதனனைப் போல் அல்லாமல் அசத்தி இல்லாதவனாகவும் -முக்தாத்மாவைப் போல் அல்லாமல் நித்ய சுத்தனாகவும் -நித்ய ஸூரிகளை போல் அல்லாமல் தனக்கும் மேல் ஒருவன் அற்றவனாகவும்-எப்போதும் ஒருபப்பட்டு இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாவும் -ஸர்வ வ்யாபியாகவும் -எல்லாவற்றையும் ஜெயிப்பவனுமாயுள்ள பகவானுக்கு நமஸ்காரங்கள் –

———

ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞபதிர் குணேச ஸம்ஸார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது —ஸ்வே -6-16-

ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஸ்வாமியாய் -குணங்கள் நிறைந்தவனாய் -ஸம்ஸாரம் விடுபதற்கும் நிலை நிற்பதற்கும் கட்டுவதற்கும் காரணமாய் இருப்பவன் பரமாத்மாவே –

——–

இத் யுக்த்வாத நிஜம் கர்ம ஸ சகார குடும்பிநீ —ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-

துறு துறுக்கைத்தனம் யுள்ளவனே உன்னால் முடியுமானால் இப்போது போ என்று குடும்பினியான அவள் வீட்டு வேலைகளைச் செய்யலுற்றாள் –

—————–

ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே –
சாந்தோக்யம் -1-15-1-

அந்தப் முமுஷுவானவன் ஆயுள் முடியும் வரையில் இப்படி வாழ்ந்து ஆயுள் முடிந்த பின் ப்ரஹ்மத்தின் உழகைப் அடைகிறான் -இங்கு திரும்பி வருவதே இல்லை –

———-

ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் பிரியம் பவதி
ஆத்மநஸ்து காமாய ஸர்வம் பிரியம் பவதி
–ப்ருஹதா -6-5-6-

எல்லாப் பொருள்களில் விருப்பத்திற்காக எல்லாமே இனியவை ஆகின்றன அல்ல -ஆத்மாவின் விருப்பதற்க்கே எல்லாமே இனியவை யாகின்றன –

———

ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி கோ ஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவ நந்தயாதி
–தைத்-ஆனந்த -7-

ரஸ-ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்தப் பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்த இந்த ஜீவன் ஆனந்தத்தை உடையவனாகிறான் -பிரகாசிப்பவனும் -ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸூகத்தையோ மோக்ஷ ஸூகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –

——-

வைகுண்ட சரணாம்போஜ ஸ்மரண அம்ருத ஸேவிக–

ஸ்ரீ வைகுந்தனின் திருவடித் தாமரை இணையின் நினைவாகிற அம்ருதத்தைப் பருகுமவர்கள் –

———

கச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –

நெடுவழி நடப்பவர்களும் தாஹத்தால் மயங்கிய நெஞ்சை யுடையவர்களுமான அவர்களுக்குத் தாமரைக் கண்ணனின் திருநாம சங்கீர்த்தனம் கட்டுச் சோறாகும் –

———

வாஸூ தேவோ அஸி பூர்ண

ஞாநாதி குணங்கள் ஆறும் நிறைந்த பர வாஸூ தேவனாய் இருக்கிறாய் –

———-

க்ருஷிர் பூ வாசக சப்தோ ணச்ச நிர்வ்ருதி வாசக
விஷ்ணுஸ் தத் பாவ யோகாச்ச க்ருஷ்ண இதயபீதியதே

கிருஷி சப்தம் கிருஷி விஷயமான பூமியைச் சொல்லும் சொல் -ஆனந்தத்துக்கு விளைநிலமாய் இருக்கும் அத் தன்மையை உடையவனாகையாலே விஷ்ணுவானவர் கிருஷ்ணன் என்றும் சொல்லப் படுகிறார் –

————

பக்தி க்ராஹ்யோ ஹி கேசவ

பக்திக்குக் கட்டுப்பட்டவன் கேசவன்

——–

அபங்குர பக்திபவ்ய

அசையாத பக்திக்கே வசப்படுமவன்

——-

பக்த்யா மாம் அபி ஜாநாதி யாவாந் யஸ்ஸாஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே தத் அநந்தரம்
–18-55-

ஸ்வரூப ஸ்வ பாவங்களில் நான் எவனோ -குண விபூதிகளில் நான் எவ்வளவு பட்டவனோ -அப்படிப்பட்ட என்னை பக்தியினால் உள்ளபடி அறிகிறான் -என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பின் பக்தியினாலேயே என்னுள் நுழைகிறான் –

————-

பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-
11-54-

அர்ஜுனா எதிரிகளை அழிப்பவனே -ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம்மாதிரியான நான் உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் நுழைவதற்கும் தக்கவன் –

—————

புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்–
8-2-

பார்த்தனே யாவன் ஒருவனுக்குள் ஸகல பூதங்களும் உள்ளனவோ -எவனால் இது எல்லாம் வியாபிக்கப் பட்டதோ அந்தப் பரம புருஷன் வேற்றிடம் செல்லாத பக்தியினாலேயே அடையத் தக்கவன்-

———–

நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||
–கட வல்லி –1-2-23-

இந்தப்‌ பரமாத்மாவானவர்‌ -பக்தி யற்ற ஸ்ரவணம் மனனம் த்யானத்தாலும் அடையற் பாலரன்‌று; இந்தப்‌ பரமானத்மாவானவர்‌ எவனை விரும்பி வரிக் கின்றாரோ, அவனாலேயே அடையப்படுகின்றார்‌; அவனுக்கு இந்தப்‌ பரமாத்மாவானவர்‌ தமது ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டிகின்றார்‌-

———-

அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –பரத்வாஜ ஸம்ஹிதை

வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும் அஞ்சலி மேலான அடையாளமாய் இருக்கிறது –

————

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்த்ரேண அஞ்சலிம் பக்த்வா லஷ்மணஸ்ய ப்ரஸாத நாத் -கிஷ்கிந்தா
-32-17-

ராமனிடம் அபராதம் செய்த உனக்கு கைகூப்பி லஷ்மணனை உகப்பித்தைத் தவிர வேறு ப்ராயச்சித்தத்தை நான் காண்கிறேன் அல்லேன் –

———-

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத –கிஷ்கிந்தா -4-12-

நான் இவர் நினைவால் இவருக்குத் தம்பி -உண்மையில் இவருடைய குணங்களால் அடிமைப்பட்டவன் –

————-

பஞ்ச சக்தி மயே திவ்ய ஸூத்த ஸத்வே ஸூக ஆகரே த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே பகவான் ஹரி –

பஞ்ச சக்திமயமாய் -அப்ராக்ருதமாய் -ஸூத்த ஸத்வ குண மயமாய் -ஸூகத்திற்கு இருப்பிடமான பரமபதத்தில் ஈஸ்வரான பிராட்டியாரோடே கூட பரம புருஷனாய் ஞாநாதி பூர்ணனான இந்த ஹரி நித்ய முக்தர்களுக்கு அநு பாவ்யனாய் இருக்கிறான் –

———–

அசித் அவிசேஷிதான் பிரளய ஸீமநி ஸம்ஸாத கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா
வரத நிஜேச் சயைவ பரவா நகரோ ப்ரக்ருதிம் மஹத் அபிமான பூத கரணா வலி கோரகிணீம்
–ரெங்கராஜ ஸ்தவம் -2-41-

வரம் தரும் பெருமானே -பிரளய காலத்தில் அசேதனத்தைக் காட்டிலும் வாசி யற்றவராய் உழலுகின்ற ஜீவராசிகளை இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும் சேர்க்கத் திரு உள்ளம் இரங்கியவனாய் -தனது சங்கல்ப வசப்பட்டவனாய் -மூலப்பிரக்ருதியை மஹான் அஹங்காரம் பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் ஆகிய இவற்றில் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –

———–

விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வரஸ்ய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
–விஷ்ணு தத்வம் -6-

ப்ராஹ்மணரே கை கால் முதலியவைகளுடன் கூடியதும் விசித்திரமான தேஹமாகிற இச்செல்வம் சர்வேஸ்வரனுக்கு சமர்ப்பித்தற்காக ஆதிகாலத்திலே செய்யப்பட்டு இருக்கிறது –

—————

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–
-ரெங்க ராஜ ஸ்தவம்-2-1-

கருணைக் கடலான எம்பெருமான் அஞ்ஞானமாகிற இருளை நீக்கிக் கொள்ளவும் -நன்மை தீமைகளை ஆராய்வதற்கும் -இருட்டைப் போக்கடிப்பதற்கும் -உள்ளவற்றையும் இல்லாதவற்றையும் ஆராய்ந்து அறிவதற்கும் சாதனமான விலக்கைப் போன்ற வேதத்தைக் கொடுத்தான் -பாக்கியவான்கள் அந்தத் திருவிளக்கைக் கொண்டு அந்த சர்வேஸ்வரனைக் கண்டு அனுபவிக்கிறார்கள் -சில சபலர்கள் அந்தப் விளக்கிலேயே வீட்டில் பூச்சியைப் போலே விழுந்து மடிகிறார்கள் –

———

உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம்யுதா

எப்படி துளஸீ உலகில் வாசனையுடன் கூடவே உண்டாகிறதோ

—————

நாஹம் புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சையா வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன

நான் புருஷகாரத்தாலேயே அல்லது வேறொரு காரணத்தாலோ அல்லாமல் எனது விருப்பத்தாலேயே ஒரு சேதனனை ஒரு போது கடாஷிக்கிறேன் –

———

பால ஆஷோட சாப்தாத்து மகபாவம் கமிஷ்யசி

குழந்தையான நம்மாழவார் பதினாறு வயது வரையில் ஊமையாகவே இருப்பார்-

———–

அவ்யுச்சிந்நாஸ் ததஸ் த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்த ஸம்யமா

உலகை ஆக்கல் அளித்தால் அழித்தல் என்னும் இந்த நியமங்கள் இடைவிடாமல் ஏற்படுவன-

————

1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும்
தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர்
இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-

பக்திர் அஷ்ட விதா ஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே
ஸ விப்ரேந்த்ரோ முனி ஸ்ரீமான் ஸ யதி ஸ ச பண்டித
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்
–காருடம் –219-6-10-

என் பக்தர்களிடம் வாத்சல்யம் -என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல் -தானே என்னைப் பூஜித்தல் -எனது விஷயத்தில் ஆடம்பரம் அற்று இருத்தல் –எனது கதைகளைக் கேட்பதில் அன்பு -எனது கதைகளைக் கேட்க்கும் போது குரல் தழ தழத்தும் கண்ணீர் மல்கி உடம்பு மயிர்க்கூச்சு எறிந்தும் இருக்கை -எப்போதும் என்னையே நினைத்து இருக்கை -என்னிடம் வேறு ப்ரயோஜனத்தைக் கேளாது இருக்கை

இப்படி எட்டுவிதமான பக்தி யானது எந்த மிலேச்சனிடம் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஸ்ரேஷ்டன் -அவனே முனிவன் -அவனே தனவான் -அவனே பண்டிதன் -அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம் – அவனிடமிருந்து ஞானம் உபதேசம் பெறலாம் -அவன் என்னைப்போலவே பூஜிக்கத் தக்கவன் –

————-

உதாரஸ் ஸர்வ ஏவைத ஞாநீத் வாத்மைவ மே மதம் –7-18-

இவர்கள் எல்லோரும் உதாரமானவர்களே -ஞானியோ எனக்கே ஆத்மா –தாரகன் -என்று எனது ஸித்தாந்தம் –

————–

ததோ அகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா
தேவகீ பூர்வ ஸந்த்யாம் ஆவிர்பூதம் மஹாத்மநா-
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1-

மஹாத்மாவாகிற அச்யுத ஸூர்யன் அனைத்தும் உலகமாகிற தாமரை மலருவதற்காக தேவகியாகிற கீழைத்திக்கில் தோன்றினான் –

————–

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்கு சக்ர
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய
-பரங்குச அஷ்டகம்

இருளைப் போக்கும் ஸூரியனுடைய ஆயிரம் கிரணங்களைப் போலே எவருடைய ஆயிரம் திருவாய் மொழிப் பாசுரங்களும் மனிதர்களின் அகவிருளைப் போக்குகின்றனவோ
ஸூர்ய மண்டலத்தைப் போலே நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடியவனாய் இவரிடத்தில் வஸிக்கிறானோ
வேதத்தில் காணும் ஸூர்ய மண்டலத்தை வணங்குவது போல் எவருடைய பிறப்பிடமான குருகூரை -குருகூர் சடகோபன் முதலிய பாசுரங்களில் காதில் கேட்ட மாத்திரத்தில் அந்தணர்கள் வணங்குகின்றனரோ அப்படிப்பட்ட வகுள பரணரான நம்மாழ்வாராகிய ஸூர்யனுக்கு நமஸ்காரம் –

—————

தேவம் இவா ஆச்சார்யம் உபாஸீத –ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம்

பரமாத்மாவைப் போலவே ஆச்சார்யனையும் உபாஸிக்கக் கடவன் –

——–

குரு ரேவ பர ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி
குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரம் தனம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பரா யணம்
யஸ்மாத் தத் உபதேஷ்ட அசவ் தஸ்மாத் குரு தரோ குரு
–சாத்வித ஸம்ஹிதை

குருவே மேலான ப்ரஹ்மம் -குருவே மேலான அறம் -குருவே மேலான கல்வி -குருவே மேலான பொருள் -குருவே மேலான இன்பம் -குருவே மேலான ப்ராப்யம் -அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அவனிலும் உயர்ந்தவன் –

———

ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாஷாத் சர ரூபி ந சம்சய

ஆச்சார்யனே நேரில் நடமாடும் பரம புருஷன் -இதில் ஐயமில்லை –

———

ஏஷ வை பகவான் ஸாஷாத் ப்ரதாந புருஷேஸ்வர —

ப்ரக்ருதி புருஷர்களுக்கு ஈசனான ஸாஷாத் பரமபுருஷன் இவ்வாச்சார்யனே –

———–

யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்

யோகியர் தலைவராலே தேடப்படும் பரம்பொருளை இவ்வாச்சார்யனை இவ்வுலகம் மனிதனாக நினைக்கிறது –

———-

ஸாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும்
மக்ந அநுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா
-ஜ்யாக்ய ஸம்ஹிதை -சாண்டில்ய வசனம்

ஸாஷாத் பரமபுருஷனே தனது கருணையினாலேயே ஆச்சார்யனாகிற மனித உருவை எடுத்துக் கொண்டு –சாஸ்த்ரங்கள் ஆகிற கைகளால் ஸம்ஸாரக்கடலில் முழுகி இருக்கும் உலகங்களைக் கைதூக்கி விடுகிறான் -ஆகையால் சம்சாரக்கடலைக் கண்டு பயந்தவன் குருவிடம் பக்தி செய்ய வேண்டும் –

———

த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச –

ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்-த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
கலியுகத்தில் நம்மாழ்வாராய் சூத்ர வர்ணத்திலே தேவனே தோன்றுகிறான் –

க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா –

கொடிய கலியுகம் வந்தடைந்து நாஸ்திகர்களால் உலகம் கலங்கி இருக்கையில் சர்வேஸ்வரனுடைய ஓர் அம்ச அவதாரமாய் -வேதங்களுடைய உண்மைப் பொருளை நன்கு உணர்ந்த தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு நல்லோர் தலைவரான ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார்

———-

கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -திருக்குருகூர் மஹாத்ம்யம்

பாவிகள் விஞ்சி நிற்கும் கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் அடியார்களிடம் வாத்சல்யத்தாலே பக்த ரூபேண வந்து அவதரிப்பான்

கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -ஸ்ரீ மத் பாகவதம் -11-38-39-40-

நாராயணனையே பரம ப்ராப்யமாகக் கொண்ட ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து-தாமிரபரணி க்ருதமாலா பாலாறு பெரும் புகழ் பெற்ற காவேரி மேற்கு நோக்கிப் பாயும் பிரதீசி -மஹா நதி -போன்ற நதீ விசேஷங்களிலே -ஜல பானம் பண்ணுபவர்களுக்கு நாராயணனிடத்திலே தடையற்ற பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகிறது – பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே இவரே ப்ரபந்ந ஜன கூடஸ்தர் என்றதாயிற்று –

த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –திருக்குருகூர் மஹாத்ம்யம்

பிரமனின் இந்த இரண்டாவது பரார்த்தத்தில் சிறந்ததான முதல் தினத்தில் நடக்கும் வைவஸ்வத மன்மந்த்ரத்தில் இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் காளியின் தொடக்கத்தில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை கடக லக்னத்தில் பவுர்ணமி திதியில் மிக மங்களகரமான விசாக நக்ஷத்திரத்தில் காஸ்யப ப்ரஜாபதியான மறுபிறப்பான காரிக்குப் பிள்ளையான வேதம் தமிழ் செய்வதற்காக சடகோபர் என்னும் பக்தனாக நானே ஆவேன் –

———

தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி

தாமிரபரணியின் வடகரையில் குற்றமற்ற ஷேத்ரத்தில் பிறப்பார்

——-

நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம்

தூக்கமில்லாத திருவனந்த ஆழ்வானே -நீ சென்று திருக்குருகூரில் திருப்புளி ஆழ்வாராக எல்லாமே விருப்பங்களையும் எல்லோருக்கும் எப்போதும் அளிப்பாயாக – தேவதேவனான பரமம் சடகோபன் முனிவராகி எல்லாமே மனிதரையும் காப்பாற்றுவார் -இங்கு எல்லாமே வேதங்களும் தமிழ் பாஷையாகி அங்கங்கள் உப ப்ரஹ்மணங்களோடே கூடிய தேவதேவனான மாதவனைத் தெளிவாகத் தெரிவிக்கும் –

———–

அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ-

பெருமை பெற்ற பாண்டிய தேசத்திலே தாமிரபரணி நதிக்கரையில் மங்களகரமான திருக் குருகூர் உள்ளது -அங்கே பரம புருஷன் நேரே காணப் பட்டான் அன்றோ –

——–

ஸ்ரீ தரா யாதி குரவே

ஆதி குருவான ஸ்ரீதரனுக்கு

———

ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணா மஸாவஸா விதி ஆபகவத்த -ரஹஸ்யம் நாய ப்ராஹ்மணம்

ஸ்ரீ லஷ்மீ நாதனிடம் தொடங்கி இவர் இவர் என்றும் ஒருவர் விடாமல் ஆச்சார்யர்களுடைய அந்த குரு பரம்பரை அறியத் தக்கது –

———-

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய து துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபந அர்த்தாயா ஸம்பவாமி யுகே யுகே –
-4-8-

சாதுக்களை ரக்ஷிக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும் வைதிக தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் யுகம் தோறும் பிறக்கிறேன் –

———–

விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ்
யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் –
-ப்ரஹ்மாண்ட புராணம்

விஷ்ணுவின் அர்ச்சாவதாரங்களில் உலகம் என்னும் நினைவும் ஆச்சார்யனிடத்தில் மனிதன் என்னும் நினைவும் கொலுமவர்கள் இருவரும் நரகத்தில் விழுவார்கள் –

———–

அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பச்ச காலோ பஹுவச்ச விக்நா
யத் சார பூதம் தத் உபாஸி தவ்யம் ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம்
-உத்தர கீதை –3-1-

கரை காண ஒண்ணாத பல ஸாஸ்த்ரங்கள் அறியத்தக்கவை -காலமோ மிகக்குறைவு -இடையூறுகளோ பல -பாலுடன் கலந்த நீரில் பாலைப்பிரிக்கும் ஹம்சம் போல் சாஸ்திரங்களிலும் சாரமானவற்றை சேதனன் எடுத்துக் கொள்ள வேண்டியது –

———-

அஸாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதாரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே ரத்நாகர இவ அம்ருதம்

ஸாஸ்திரங்களிலும் சாரமற்றதாயும் -குறைந்த சாரமுள்ளதையும் -அதைக்குறிக்கும் அதிக சாரமுள்ளதையும் விடவேண்டியது -எல்லாவற்றையும் காட்டிலும் மிக அதிக சாரமுள்ளதையே கடலில் அமுதத்தைப் போலே ஆதரிக்க வேண்டியது –

———

த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா
உபாய உபேய பாவேந் தமேவ சரணம் வ்ரஜேத்
–ஸாத்விக சம்ஹிதை

ஆச்சர்யனை சிஷ்யன் த்யானிக்கத் கடவன் -ஜபிக்கக் கடவன் -பக்தியோடு வணங்கக் கடவன் -பஜனம் செய்யக் கடவன் -உகப்புடன் அர்ச்சிக்கக் கடவன் -அவனையே உபாயமாகவும் ப்ராப்யமாகவும் நினைத்து சரணம் அடையக் கடவன் –

——-

ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் –சாண்டில்ய ஸ்ம்ருதி

அச்சுதனைப் பற்றினாருக்கு மோக்ஷ சித்தி உண்டோ இல்லையோ என்பதைக் ஸந்தேஹம் உண்டு -அவனுடைய பக்தர்களின் கைங்கர்யங்களில் ஈடுபட்டவர்களுக்கு மோக்ஷ ஸித்தியில் ஐயம் இல்லை –

———-

குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து

ஆச்சார்யன் உருவில் இருக்கும் பகவானேயான புருஷோத்தமன் உபாயமாய் இருக்கும் தானாகிற இடத்திலே ஸம்ஸாரிகளை ஸம்ஸாரத்திலிருந்து தாண்டுவிக்கிறான் –

———-

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-

இந்தப் பரமாத்மாவுக்கு பல தரப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் -ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்று அறியப் படுகிறது –

——–

மநஸ் பூர்வோ வாக் உத்தர –தைத்-ஸம் -7-5-3-

முதலில் மனஸ்ஸும் அடுத்தபடியாக வாக் இந்த்ரியமும் ப்ரவர்த்திக்கின்றன –

———-

ப்ரத்யஷே குரவே ஸ்துத்யா பரோஷே மித்ர பாந்தவா
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச ந கதாசந புத்ரகா

ஆச்சார்யர்கள் நேரே ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நண்பர்களும் உறவினரும் கண் காணாமல் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -அவர்கள் செய்ய வேண்டிய கார்யங்கள் முடிந்த பின்பு நமக்குக் கீழ் இருப்பவர்களும் வேலைக்காரர்களும் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நம் பிள்ளைகள் ஓரு போதும் நம்மால் ஸ்துதிக்கத் தக்கவர் அல்லர் –

———-

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம்
||-57

ஸ்ரீ ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்ரீ ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

——–

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

———–

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||–2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————-

அவஸேநாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பாதகை
புமாந் விமுச்யதே ஸத்ய ஸிம்ஹ த்ரஸ்தைர் வ்ருகைர் இவ-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-

தன் வசத்தில் இல்லாத போதும் எந்த பகவானுடைய திருநாமங்களைக் கீர்த்தித்த அளவிலே சிம்ஹத்தைக் கொண்டு பயந்த ஓநாய் களிடமிருந்து விடுபடுவது போல் மனிதன் உடனே விடுபடுகிறானோ –

——

ஸ த்வாஸக்த மதி க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரதை
ந விவேதாத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸூஸ்திதா —
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-39-

மஹா நாகங்களினால் கடிக்கப்படு பவனும் கிருஷ்ணனிடத்தில் பக்தியைச் செலுத்துமவனுமான அந்தப் ப்ரஹ்லாதன் பகவானை நினைக்கையால் உண்டான ஆனந்தினால் நிலை நின்றவனாய் தன்னுடைய உடம்பை அறியவில்லை –

———

அஹம் அஸ்ய அபராதாநாம் அவயோ அகிஞ்சநோ அகதி
த்வமே உபாய பூதோ மே பவதி பரார்த்தநா மதி
சரணாகதிர் இத் யுக்தா ஸ தேவே அஸ்மின் ப்ரயுஜ்யதாம்
-அஹிர் புத்ன்ய ஸம்ஹிதை -37-30-

நான் குற்றங்களுக்கு இருப்பிடமாய் இருக்கின்றேன் -ஓர் உபாயமும் அற்றவனாய் இருக்கின்றேன் -உன்னை ஒழிய வேறு கதி இல்லாதவனாய் இருக்கின்றேன் -நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக -என்று பிரார்த்திக்கும் புத்தியே சரணாகதி எனப்படுகிறது -அது இந்தப்பாகவான் விஷயத்தில் செய்யப்படட்டும் –

———-

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–
22-

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை; என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

———-

அநந்ய தேவத்வம் இயம் ஷமா ச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருத்னேஷ்விவ மானுஷாணாம்

ராமபிரானைத் தவிர வேறு தெய்வம் அறியாது இருக்கை -இந்தப்பொறுமை -வெறும்தரையிலே படுக்கை -அறம் வழுவாது இருக்கை -பதிவ்ரதைத் தன்மை ஆகிய என்னுடைய குணங்கள் எல்லாமே செய்நன்றி கொன்ற மனிதர்க்குச் செய்தது போல் வீணாயின –

————-

ப்ராப்த ராஜஸ்ய ராமஸ்ய வால்மீகீர் பகவான் ரிஷி
சகார சரிரம் க்ருத்ஸ்னம் விசித்திர பதம் ஆத்மவான்
–பால -1-4-

ஞாநாதி குணங்கள் நிறைந்தவரும் நெஞ்சை அடக்கியவருமான வால்மீகி மகரிஷி ராஜ்யத்தை அடைந்த ராமபிரானுடைய சரித்திரத்தை முழுவதையும் விசித்ர பதங்களுடைய காவியமாக இயற்றினார்

————-

ஏதத் ஸாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-தைத் ப்ருகு –10-6-

முக்தாத்மா பரமாத்மாவை அடைந்து இந்த சாமத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறான் -பரமாத்மாவுக்கு அன்னமாய் இருப்பவன் -அன்னமாய் இருப்பவன்-அன்னமாய் இருப்பவன்-நான் பரமாத்மாவின் ப்ரீதி யாகிற அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் –

——–

பாணவ் க்ருஹீத்வா விதுரம் ஸாத்யகிஞ்ச மஹா யஸா
ஜ்யோதீம்ஷ் யாதித்ய வத் ராஜன் குருந் ப்ரச்சாதயன் ஸ்ரீயா
–உத் –94-45-

பெரும் கீர்த்தி யுள்ள கண்ணன் விதுரனையும் சாத்யகியையும் கையிலே பிடித்துக் கொண்டு ஸூர்யன் மற்ற ஜ்யோதிகளை மழுங்கச் செய்வது போல் கௌரவர்களைத் தன் தேஜஸ்ஸாலே மழுங்கச் செய்து கொண்டு வந்தார் –

———

தருணவ் ரூப ஸம் பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ்
புண்டரீக விசாலாக்ஷவ் சீர க்ருஷ்ணாஜிநாம் பரவ்
–ஆரண்ய-19-14-

ராம லஷ்மணர்கள் வாலிபரானவர்கள் -அழகு நிறைந்தவர்கள் -ஸுகுமார்யத்தை யுடையவர்கள் -அதிகமான பலமுள்ளவர்கள் -தாமரை போன்ற அகன்று கண்களை யுடையவர்கள் -மரவுரியையும் மான் தோலையும் உடுத்தவர்கள் –

————

தேஷாம் ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய –
-7-17-

என்னுடன் எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவனும் -என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞாநீ அந்த நால்வருள் மிகச்சிறந்தவன் -நான் ஞானிக்கு மிகவும் பிரியன் அன்றோ -அப்படியே அவனும் எனக்கும் பிரியமானவன் –

———-

மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிர் அப் யதிகா பவேத்
தஸ்மான் மத் பக்த பக்தாச்ச பூஜாநீய விசேஷத-
-ஆச்வ பர்வம் –116-23-

எனது பக்தனிடம் பக்தி உள்ளவர்கள் இடத்தில் எனக்கு அதிகமான அன்பு உண்டு -ஆகையால் எனது பக்த்தனிடம் பக்தியுள்ள அவர்களும் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவர்களே –

——–

ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே –
-ஜிதந்தா –1-5-

உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காக இருக்காதே -ஸ்வ தந்த்ரனான அது ஆஸ்ரிதர்களுக்குப் பரதந்த்ரமாக வன்றோ நீ ஆக்கி உள்ளாய் -திவ்ய மங்கள விக்ரஹமும் உனக்காக இராது -திவ்ய ஆயுதங்களும் உனக்காக இராதே -இருப்பிடம் ஸ்ரீ வைகுண்டமும் அப்படியே உனக்காக இராதே -இவை எல்லாமே உனது அடியார்களுக்காகவே கொண்டு உள்ளாய் – பக்தர்களுடைய உடைமையான நீ இப்படி ஆஸ்ரித பரதந்த்ரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவனாக இருந்த போதிலும் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட சர்வாதிகனாக இருக்கும் தன்மையுடன் விளங்குகிறாய் –

———–

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
-சாண்டில்ய ஸ்ம்ருதி -1-15-

மிருகமா மனிதனோ பஷியோ எவராய் இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவனைப் பற்றி நின்றார்களாகில் அத்தாலேயே அவர்கள் விஷ்ணுவினுடைய அந்தப் உயர்ந்த ஸ்தானத்தை அடைகின்றனர் –

————–

பூர்வ பாஷீ ப்ரஸன்ன ஆத்மா

முதலில் பேசுபவனாய் தெளிந்த மனத்தனனாய் இருப்பவன் –

———

விமல மதிரமத்ஸரஸ் ப்ரசாந்தஸ் ஸூசி சரிதோ அகில ஸத்வ மித்ர பூத
ப்ரியஹித வசநோ அஸ்தமாந மாயோ வசதி ஸதா ஹ்ருதி தஸ்ய வஸூ தேவ
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-24-

அழுக்கற்ற புத்தியை யுடையவனாய் -மாற்சரியம் அற்றவனாய் -மிகுதியான அடக்கத்தை யுடையனாய் -பரிசுத்தமான ஒழுக்கத்தை யுடையவனாய் -அனைத்து உயிர்க்கும் நண்பனாய் -இனியதும் நல்லதுமான வார்த்தை யுடையவனாய் – ப்ரக்ருதி சம்பந்தம் மறையப் பெறுகிறவனாய் உள்ளவனுடைய ஹ்ருதயத்தில் எப்போதும் வாஸூ தேவன் வஸிக்கிறான் –

——–

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரஷாம்ஸ்ய பயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத ரூப கேஸரீ மமாஸ்து மங்கள்ய விவ்ருத்தயே ஹரி
–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-28-

எந்தப் புருஷனைக் கீர்த்தனம் செய்வதால் அசுரர்கள் ஓடுகின்றனரோ -தேவர்கள் வணங்குகின்றனரோ -ராக்ஷஸர்கள் அழிகின்றனரோ -எதிரிகள் புறமுதுகு காட்டுகின்றனரோ -அற்புத ரூபமுள்ள அந்தப் நரஸிம்ஹனான ஹரி என் மங்களமாவதன் பொருட்டு ஆகட்டும் –

——-

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபிர் த்ரீன் லோகான் சாம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத-ஸூந்தர –38-33-

அந்தக் காகாசூரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான்-

———

ஸர்வேஷாம் ஏவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்சத்வம் ஏநம் சரணம் சரண்யம் புருஷ ரிஷப
-ஆசா பர்வம் -192-56-

புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லா உலகங்களுக்கும் தந்தையாயும் தாயுமாயும் ஸ்ரீ லஷ்மீ நாதனே -சரணம் அடையத் தக்க இவனை சரணம் அடையுங்கள்-

——–

பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ
வேத்யம் பவித்ரம் ஓங்கார ருக் சாம யஜுர் ஏவ ச
–9-7-

இந்த உலகிற்குத் தாயும் தந்தையும் தாதாவும் பாட்டனும் வேதத்தில் அறியப்படுவதும் பரிசுத்தப்படுத்துவதும் ப்ரணவமும் ருக் யஜுர் சாம ரூபமான வேதமும் நானே –

—————

பாஹு நாம் ஜென்மநாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லபன்-
-7-19-

பல புண்ய ஜென்மங்களுக்குப் பின்னர் ஞானியானவன் வாஸூ தேவனே எனக்கு எல்லாம் என்று என்னை உபாஸிக்கிறான் -அப்படிப்பட்ட மஹா புருஷன் மிகவும் துர்லபன் –

————

அபி சேத் ஸூ துராசாரோ பஜதே மாம் அந்ய பாக்
சாதுரேவ ஸ மந்தவ்ய சம்யக் வ்யவஸிதோ ஹி ஸ
–9-30–

மிக அதிகமான துர் நடத்தையை யுடையவனாயினும் வேறு ஒன்றிலுமே ஈடுபடாமல் என்னிடம் எவன் பக்தி செலுத்துகிறானோ -அவன் மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனாகவே எண்ணத் தக்கவன் -ஏன் எனில் நல்ல உறுதி பூண்டவன் அவன் அன்றோ –

———

மநஸா அநிஷ்ட சிந்தனம்

மனதினால் பிறருக்குத் தீமை நினைப்பது –

———–

அபகாரிஷ் வபி ஸதா சாதுஸ் சாத்வேவ வர்த்ததே —

அபகாரிகள் இடத்தும் நல்லோன் எப்போதும் நல்வனாகவே இருக்கிறான் –

———

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேந ந கச்சின் ந அபராத்யதி
–யுத்த -116-44-

வனரா -பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தக்கவர்களாய் இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேணும் -அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே-

———–

மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-

உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –

———-

மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-

உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –

———–

பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேதமாயான் நாஸ்த்ய க்ருத க்ருதேந
தத் விஞ்ஞாந அர்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
–முண்டக -1-2-12-

அங்கங்களோடு கூடிய வேதங்களை அத்யயனம் செய்த எவன் ஒருவன் கர்மத்தால் அடையப்பெறும் உலகங்களை ஆராய்ச்சி செய்து பார்த்து-நித்ய புருஷன் அநித்யமான கர்மத்தால் அடையப்பெற மாட்டான் – என்ற வருத்தத்தை அடைகிறான் -அவன் அப் புருஷனை அறிவதற்காக ஸமித்தைக் கையிலே கொண்டவனாய் -வேதாந்தம் அறிந்தவனும் -ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவனுமான ஆச்சார்யனையே அடையக் கடவன் –

————–

ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹ நஞ்ச
வேதைச் ச சர்வைர் அஹமேவ வேத்யோ வேதாந்தத் க்ருத் வேத விதேவ சாஹம்
–15-15-

எல்லாருடைய ஹ்ருதயத்திலும் நான் அமர்ந்து இருக்கிறேன் –என்னிடமிருந்து ஞானமும் மறதியும் உண்டாகின்றன -எல்லா வேதங்களிலும் அறியப்படுபவன் நானே -வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களைக் கொடுப்பவனும் -வேதங்களை அறிபவனும் நானே –

————-

ஹதோ அஸ்மி யதி மாமேவம் பகவான் அபி மன்யதே –அயோத்யா -90-15-

பரத்வாஜரே தேவரீரும் என்னை இப்படி நினைத்தீரானால் நான் கொல்லப்பட்டவனே ஆவேன் –

———–

அப்யேஷ மாம் கம்ஸ பரிக்ரஹேண தோஷ ஆஸ்பதீ பூதம தோஷ துஷ்டம்
கர்த்தாவ மாநோ பஹதம் திகஸ்து தஜ் ஜென்ம யத் ஸாது பஹிஷ் க்ருதம் ஸ்யாத்
—ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-17-31-

கம்சனோடு ஸம்பந்தத்தினால் தோஷத்துக்கு இருப்பிடமான என்னையும் தோஷம் இல்லாதவனாம் படி செய்வானா அந்தக் கமலக் கண்ணன் –நல்லோரால் தள்ளப்பட்டதும் அவமானத்தால் அடிக்கப்பட்டதுமான அந்தப் ஜன்மத்தைச் சுடு –

————-

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||–
56

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.-

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ – யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ-யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்

–———-

குருர் பிதா குருர் மாதா

குருவும் தந்தையும் குருவே தாயுமாவார்

———–

யோ அந்யதா சந்தமாத்மாநம் அந்யாதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாடம் சோரேணாத்ம அப ஹாரிணா
–உத் யோக பர்வம் -42-35-

பகவானுடைய உடைமையாய் இருக்கும் ஆத்மாவை எவன் ஒருவன் தனக்கு சொந்தமாக நினைக்கிறானோ -ஆத்மாவை அபஹரிப்பவனான அந்தத் திருடனால் செய்யப்படாத பாபம் ஏது —

———–

அநந்ய சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விச்வாஸ பூர்வகம்
தத் ஏக உபாயதா யாச்ஞா பிரபத்தி ஸரணாகதி —
விஷ்வக் சேந ஸம்ஹிதை

தன்னுடைய இஷ்டம் வேறு ஒன்றால் ஆகாத போது மஹா விச்வாஸத்தை முன்னிட்டு கொண்டு அவன் ஒருவனையே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பதே பிரபத்தி -அதுவே ஸரணாகதி –

————

த்ரவ்யம் குணஸ் ததா கர்ம ஜாதிச் சேதஸ் தத் ஆஸ்ரய

த்ரவ்யம் குணம் தர்மம் ஜாதி மணம் அதற்கு ஆஸ்ரயமான ஆத்மா –

————

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்-ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நியமானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

——

த்ரவ்யாணி நவ தே விது

ஆத்மா தொடங்கி த்ரவ்யங்கள் ஒன்பது என்பது வைசேஷிகர்களின் முடிவு-

—–

த்ருண காஷ்ட அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்வர்ண ரத்ந அபஹாரே அபி தாவாநேவ பவேத் கதம்
கதர்யஸ்வ அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்ரோத்ரியஸ்வ அப ஹாரேபி தாவாநேவ பவேத் கதம்
ஆத்ம வஸ்து யதோ அநர்க்கம் ஆத்மே ஸஸ்து பர புமான்
தஸ்மா தஸ்ய அப ஹரேண தோஷஸ் யாந்தோ ந வித்யதே

புல் கட்டை ஆகியவைகளை அபஹரிப்பதால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே தங்கம் ரத்னம் ஆகியவற்றை அபஹரிப்பதால் உண்டாகுமோ -நீசனுடைய சொத்தை திருடுவதனால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே வேதம் அறிந்த ப்ராஹ்மணனின் சொத்தைத் திருடுவதாலும் உண்டாவதாக சொல்ல முடியுமோ -ஆத்மவஸ்து விலை மதிக்க ஒண்ணாதது -ஆத்மாவை உடையவனோ பரம புருஷன் -ஆகையால் இதைத் திருடும் போது தோஷத்துக்கு எல்லையில்லை –

———-

சத்யஞ்ச அநிருத்தஞ்ச சத்யமபவத் –தைத்–6-3-

விகாரம் அற்றதாகையாலே -ஸத்யம் -உள்ளது -எனப்படும் ஆத்மாவாகவும் -விகாரம் உள்ளதாகையாலே -அநிருத்தம் -இல்லாதது -எனப்படும் அசித் யாகவதாகவும் -விகாரம் அற்றதாயே வாக ப்ரஹ்மம் இருக்கிறது –

நாஸதோ வித்யதே பாவோ ந அபாவோ வித்யதே ஸத
உபயோர் அபி த்ருஷ்டோந்தஸ் த்வநயோஸ் தத்வ தர்சிபிர்
–2-16-

இல்லாதாதான தேஹம் உள்ளதாகாது -உள்ளதான ஆத்மாவுக்கு இன்மை இல்லை -தத்வ ஞானிகளால் இவ் விரண்டுக்கும் இவ் விதமாக முடிவு காணப் படுகிறது –

———

பஞ்ச பூதாத்மகம வஸ்து

ஐந்து பூதங்களான பொருள் தேஹம்

———-

ஷரம் த்வ வித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே அஸ்து ஸோ அந்ய –ஸ்வே -5-1-

அழியும் அசித் வஸ்து அவித்யை எனப்படுகிறது -அழியாத ஆத்மா வித்யை எனப்படுகிறது -வித்யையும் அவித்யையும் எவன் நியமிக்கிறானோ அவன் அவர்களிலும் வேறுபட்டவன் –

———-

ஆத்மா நமஸ்ய ஜகதோ நிரலேபம குணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி
—ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-68-

பிராகிருத குணங்களும் அழுக்குகளும் அற்றவனாய் இவ்வுலகில் வியாபித்து இருக்கும் ஜீவனை பகவான் ஹரி யானவள் கௌஸ்துப மணி ரூபத்தில் தரிக்கிறார் –

————-

அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: |
|-3-

அகாரப்பொருளான அச்யுதனுக்கே நான் உடைமை -எனக்கு உரியேன் அல்லேன் -அழிவற்றவர்கள் ஆகையால் நரர்கள் எனப்படுமவர்களுக்கு அயனமாய் இருக்கிறபடியால் நாராயண பதம் எவனைச் சொல்லுகிறதோ -அவனுக்கு எல்லாக் காலமும் -எல்லா இடத்திலும் -எல்லா அவஸ்தைகளிலும் ஏன் கைங்கர்யங்கள் ஆவிர்பவிக்கக் கடவன் –

———

அ இதி ப்ரஹ்ம

அ எனப்படுவது ப்ரஹ்மம்

————

பர த்ரவ்யேஷ் வபித்யாநம்

பிறர் பொருளில் ஆசை வைப்பது

———–

ந ஜாது காம காமாநாம் உப போகநே ஸாம்யதி
ஹவிஷா க்ருஷ்ண வர்த்தமேவ பூய ஏவாபி வர்த்ததே
-ஸ்ரீ விஷ்ணு புராணம்

காமிகளுடைய காமம் அனுபவிப்பதாலேயே ஒரு போதும் சாந்தி அடைவதில்லை -ஹவிஸ்ஸாலே வளரும் அக்னி போல் மறுபடியும் வளர்கின்றது –

———–

அநாதிர் பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே —ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-2-26-

ப்ராஹ்மணரே பெருமை பொருந்தியதான காலம் அநாதியானது -இதற்கு முடிவும் கிடையாது-

———-

அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மநா
ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை
தத்ர கத்வா புநர் லோகம் ஆயந்தி பாரத
—-பாரதம் –ஆர -136-18-23–

மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்தப் ஸ்தானம் ஸூர்யனிடமும் அக்னியிடமும் உள்ள ஒளியை விஞ்சியது -அரசனே அது தன்னுடைய ஒளியாலே தேவர்களாலும் அசுரர்களாலும் காண அரிது -பரத வம்சத்தில் உதித்தவனே -அங்குபோய் மறுபடியும் இவ்வுலகிற்குத் திரும்புவதில்லை –

———

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச
–18-66-

பல சாதனமான எல்லாத் தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னையே ஒருவனையே சரணமாக அடை -நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் -துக்கிக்காதே –

———-

ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாம் உஷித்வா ஸாஸ்வதீ ஸமா
ஸூஸீ நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோ அபி ஜாயதே —

புண்ணியம் செய்தோரின் உலகை அடைந்து நெடும் காலம் வாழ்ந்து பரிசுத்தி உடையவர்களும் செலவமுடையவர்களுமான பெரியோர்களின் வீட்டில் யோகத்தில் இருந்து நழுவியவன் பிறக்கிறான் –

————

ஸமாதி பங்கஸ் தஸ்யாஸீத் தன்ம மத்வா த்ருதாத்மந
சந்த்யக்த ராஜ்ய போகர்த்தி ஸ்வ ஜநஸ் யாபி பூபதே
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-29-

அரசனே மானிடம் அஹங்காரம் கொண்ட மனத்தையுடைய அவருக்கு ராஜ்ஜியம் பெரும் செல்வம் உறவினர் ஆகிய அனைத்தையுமே விட்டவராய் இருந்த போதிலும் சமாதிக்கு இடையூறு ஏற்படுகிறது –

———-

பஹவோ துர் லபாச்சைவ யே த்வயா கீர்த்திதா குணா
முநே வஷ்யாம் யஹம் புத்தவா தைர் யுக்த ஸ்ரூயதாம் நர
-பால -1-7-

முனிவரே உம்மால் கீர்த்திக்கப்பட்ட குணங்கள் கிடைத்தற்கு அரியதாகவும் பலவுமாயும் இருக்கும் -நான் தெளிந்து நின்றும் சொல்லுகிறேன் -அந்த குணங்களோடு கூடிய மனிதரைப் பற்றிக் கேட்ப்பாயாக –

——–

ஆராப்யதே ந கலு விக்ந பயேந நீசை -ஆரப்ய விக்ந விஹதா விரமந்தி மத்யா
விக்நை புந புநரபி பிரதி ஹன்ய மாநா பிராப்தம் உத்தம குண ந பரி த்யஐந்தி
–நீதி சதகம் –72-

தாழ்ந்த குணத்தவர்கள் இடையூறுக்குப் பயந்து காரியத்தை ஆரம்பிப்பதே இல்லை -ஆரம்பித்த பின் இடையூறு வந்து தடுத்தால் காரியத்தின் நின்றும் பின் வாங்குகிறார்கள் மத்யமான குணத்தை யுடையவர்கள் -பல இடையூறுகளால் மறுபடியும் மறுபடியும் தடுக்கப்பட்டாலும் தொடங்கிய காரியத்தை உயர் குணத்தோர் கைவிடுவதே இல்லை –

———-

யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சநேதி —
தைத் -ஆ–9-1-

எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ -அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிபவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

———

தஸ்ய புத்ரா தாயம் உபயந்தி ஸூஹ்ருதஸ் ஸாது கிருத்யம் த்விஷந்த பாப கிருத்யாம்–சாட்யாயன சாகை

மோக்ஷம் அடையும் அம் மனிதனின் சொத்தைப் பிள்ளைகள் அடைகின்றனர் -புனியத்தை அனுகூலர்கள் அடைகின்றனர் -பாபத்தை எதிரிகள் அடைகின்றனர்-

———–

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி
-5-29-

யஜ்ஞங்களையும் தவங்களையும் புஜிப்பவனும் -எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரனும் -எல்லா ஜீவ ராசிகளுக்கும் நண்பனான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –

————

குரும் ப்ரகாஸயேந் நித்யம்

குருவை எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் –

———-

ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக
-சாந்தி பர்வம் -358-73–

பிறந்து கொண்டு இருக்கும் போதே எந்தப் புருஷன் மது ஸூதனனைப் பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவன் என்று அறியத் தக்கவன் -அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன் –

———-

முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்ச வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந
-சாந்திபர்வம் -344-15-

ஸ்வேத த்வீப வாஸிகளுக்கு எது லக்ஷணமோ அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும் -அதாவது எப்போதும் அஞ்சலி செய்து கொண்டே இருப்பார்கள் -அதனால் ஆனந்திப்பார்கள் -வாயால் நம என்றே சொல்லும் தன்மை யுடையவர்களாய் இருப்பார்கள் –

————–

ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம்

நல்லோர்களுக்கு வேதமே அழியாச் செல்வமாகும்

———–

சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்த்வான் ரிஷி
தத்ர சர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டநி ததோத்தரம்
–பால -1-2-

வால்மீகி ருஷி 24000 ஸ்லோகமாகவும் -500 சர்க்கமாகவும் -ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் கூடியதாக ஸ்ரீ இராமாயணம் அருளிச் செய்துள்ளார் –

————-

பாட்யே கேயே ச மதுரம் ப்ராமணைஸ் த்ரி ப்ரன்விதம் –பால -4-8-

ஸ்ரீ இராமாயணம் மூன்றுவிதமான அளவுகளுடன் கூடியதாய் படிக்கும் போதும் பாடும் போதும் இனியதாய் இருக்கிறது-

———

ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ

பரமபுருஷன் எல்லா நறு மணங்களையும் யுடையவன் -எல்லா நற் சுவைகளையும் யுடையவன்

———-

ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்த் வாந்தீ பவதி கோ ஹ்யே வான்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யே வாநந்தயாதி
-சாந்தோ -3-14-2-

ரஸ -ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்த பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து -இந்த ஜீவன் -ஆனந்தத்தை யுடையவன் ஆகிறான் -பிரகாசிப்பவனும் ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள சுகத்தையோ மோக்ஷ சுகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –

————-

தத்தேது வ்யபதேசாச்ச–1-1-15-

ஜீவனின் ஆனந்தத்துக்கு காரணமாகப் பராமனைச் சொல்லுகையாலே பரமன் ஜீவனிலும் வேறானவனே –

———

அம்ருதஸ்ய ஹி தாதாரம் தாமஸ பாரம் தர்சயதி ஸநத்குமார –

மோக்ஷம் அளிப்பவனும் ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான பரமனை சனத்குமாரர் காண்பிப்பார் –

————-

ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ் ந ச
சாமார்த்யவாந் க்ருபா மாத்ரமநோ வ்ருத்தி ப்ரஸீதி மே
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-70-

தலைவர்களுக்கும் தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் தலைவனே -இப்படிப்பட்ட நான் உன்னுடைய ஸ்துதியிலும் அர்ச்சனம் முதலியவற்றிலும் சாமர்த்தியம் உடையவன் அல்லேன் -அருள் கூர்ந்த திரு உள்ளத்துடன் கூடியவனாய் எனக்குத் தயை புரிய வேண்டும் –

———-

துர்ப்போதா வைதிகா சப்தா

வேதத்திலுள்ள சொற்கள் பொருள் உணர அரியவை

—-

த்வம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா ஆல்பம் ஆயாஸம் பலம் சீக்ரம் ப்ரதர்சய
-வராஹ புராணம் -10-36-

நீண்ட கையையுடைய ருத்ரனே நீ மயக்கம் ஆகம சாஸ்திரங்களை இயற்றுவாயாக -சிறுது சிரமத்தின் பேரிலேயே விரைவில் பலத்தைக் காண்பாயாக –

————-

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபி
த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ தம் நிபததிம் பூமவ் சரண்ய சரணாகதம்
வாதார் ஹமபி காகுத்ஸத கிருபயா பர்யபாலயத்
–ஸூந்தர –38-34-35

அந்தக்காகாசுரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித்திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான் -சரணம் அடைந்தவனும் பூமியில் விழுந்தவனுமான அவனைக் கொல்லத் தக்கவனாகவே இருந்தானே யாகிலும் சரணம் அடையத் தக்கவனாகிய ஸ்ரீ ராம பிரான் தன் அருளாலே காப்பாற்றி அருளினான்-

————–

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவதம் கேஸவாத் பரம்
-நாரதீய புராணம் -18-33-

உண்மை உண்மை முக்காலும் உண்மை என்று கைதூக்கிக் கொண்டு சொல்லுகிறேன்-வேதத்தில் உயர்ந்த ஸாஸ்த்ரம் இல்லை -கேசவனில் உயர்ந்த தெய்வம் இல்லை –

——————

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷

போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷

பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் – காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் – சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள் ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய் ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –அவிபஸ்சித் -புல்லறிவாளர்கள் என்று பெயர் கொடுக்கிறான் புஷ்பிதாம் வாசம்-பூப் போல் மலர்ந்து -கொண்டாட வில்லை -பூ மாத்திரமே -காய்க்காது பழுக்காது -ராமானுஜ பாஷ்யம் –

———

த்ரைவித்யா மாம் ஸோமபா பூத பாபா–யஜ்ஞை ரிஷ்ட்வா ஸ்வர்க்கதிம் ப்ரார்தயந்தே–
தே புண்ய மாஸாத்ய ஸுரேந்த்ர லோகம்–அஸ்நந்தி திவ்யாந் திவி தேவ போகாந்—৷৷9.20৷৷

தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விஸாலம் –க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஸந்தி.–
ஏவம் த்ரயீ தர்ம மநுப்ரபந்நா–கதாகதம் காமகாமா லபந்தே—৷৷9.21৷৷

வேதாந்தத்தில் இல்லாமல் மூன்று வேதங்களில் பூர்வ பாகத்தில் சொல்லப்பட்ட தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களாய் –
இந்த்ராதிகளைக் குறித்துச் செய்யப்பட யாகங்களின் சேஷமான சோமா ரசத்தை பருகுகின்றவர்களாய் –
ஸ்வர்க்கம் முதலானவற்றை அடையத் தடையாக இருக்கும் பாபங்களில் இருந்து நீங்கப் பெற்றவர்களாய் –
இந்த்ராதிகளை மாத்திரம் குறித்த யஜ்ஞங்களாலே -அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் இருக்கும்
என்னைக் குறித்தே உண்மையில் யாகம் செய்து -இந்த்ராதிகள் இடம் ஸ்வர்க்கத்தை வேண்டுகிறார்கள் –
அவர்கள் இவ்வுலகத் துன்பங்கள் இல்லாத தேவேந்திர லோகத்தை அடைந்து அங்குள்ள பல இடங்களில்
இவ்வுலக அனுபவங்களைக் காட்டிலும் சிறந்த தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள் –
அவர்கள் பரந்ததான அந்த ஸ்வர்க்கத்தில் உள்ள போகங்களை அனுபவித்து -அந்த அனுபவத்துக்கு காரணமான
புண்யம் அழிந்த அளவில் மறுபடியும் மனித உலகிற்கு வருகிறார்கள் –
இவ்வண்ணமாக வேதாந்த ஞானம் இல்லாமல் மூன்று வேதங்களின் பூர்வ பாகத்தில் சொன்ன யாகம் முதலிய
தர்மங்களை அனுஷ்டிப்பவர்களாய் -அவற்றில் சொன்ன விரும்பப்படும் ஸ்வர்க்காதிகளிலேயே விருப்பம் உடையவர்களாய் –
அல்பமும் அஸ்த்ரமுமான ஸ்வர்க்காதிகளையே அடைந்து மறுபடியும் மறுபடியும் திரும்பி வருகிறார்கள் –

————–

ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –தைத்ரியம்

ப்ரஹ்மத்தை அறிந்தவன் மேலான பலனை அடைகிறான்

——–

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்-

———–

ப்ரஹ்மணாநாம் தனம் வேத

அந்தணர் மாடு -அருமறையே அந்தணருக்குச் செல்வமாகும்

————-

யோ தத்யாத் பகவத் ஞானம் குர்யாத் வா தர்ம தர்சனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன
-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –70-78-

பார்வதி ஞானம் அளித்து அவனை அடைய உபாயம் அருளுபவனுக்கு பூமி முழுவதையுமே கொடுத்தாலும் அவன் அளித்ததற்கு ஒப்பு ஆகாதே-

————–

மித்ர பவ்யிகம் கர்த்தும் ராம ஸ்தானம் ப்ரீப் ஸதா
வதம் ச அநிச்சிதா கோரம் த்வயா அசவ் புருஷன் ரிஷப–யுத்த -21-19-

ராவணா நீ உனது குடியிருப்பை விரும்பினாயாகில் -கோரமான வதத்தை விரும்பாது இருந்தாயாகில் இந்த புருஷ ஸ்ரேஷ்டரான ராமபிரானை நண்பனாகக் கொள்ளத் தக்கது –

———–

யோ மா ததாதி ஸ இதேவ மாவா -தைத்ரி -பிருகு -10-6-

எவன் எனக்குப் பரமணி அளிக்கிறானோ அவனே எனக்கு ரக்ஷகன்-

————

தர்ம அர்த்தவ் யத்ர ந ஸ்யாதாம் ஸுஸ்ரூஷா வா ததாவிதா
தத்ர வித்யா ந வப்தவ்யா சுபம் பீஜமிவோஷரே –மனு ஸ்ம்ருதி -2-112-

அறமும் பொருளும் எந்த சீடனிடம் இல்லையோ -அப்படியே ஸுஸ்ரூஷையும் எவனிடம் இல்லையோ -நல்ல விதையை களர் நிலத்தில் விதைக்கக் கூடாதது போல் அவனிடம் வித்யையை விதைக்கக் கூடாது –

————–

அர்த்ததோ தர்மதஸ் ஸுஸ்ரூஷரத்யாப்ய-

பொருளை அளிப்பவனும் அறத்தை அளிப்பவனும் ஸுஸ்ரூஷை யுள்ளவனுமான சீடனே அத்யயனம் செய்யத்தக்கவன் –

———-

கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம்
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—
৷৷2.7৷৷

மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக

—————-

ஸ்ரூயதாம் பரமார்த்தோ வை தைதேயா தநு ஜாத்மஜா
ந சாந்யதைதக் மந்தவ்யம் நாத்ர லோபாதி காரணம் —

அசுர புத்ரர்களே என்னிடமிருந்து இவ் உண்மைப் பொருளை கேளுங்கோள் -இதை வேறு விதமாக எண்ணலாகாது –இவ் விக்ஷயத்தில் ஆசை முதலியவை காரணம் அல்ல-

—————

ந அகிஞ்சித் குர்வத சேஷத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-55-

கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை

———–

ஸா பேஷா இவ சேஷ்டத

அபேக்ஷை உள்ளவன் போல் அர்ச்சாவதாரத்தில் நடக்கிறான்

———-

ஸகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாம் அபி வத்ஸல
அப்யனுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதாக்தம்
-யுத்த –50-56-

நண்பரே ரகு குலத்தில் உதித்தவரே தர்மத்தை அறிந்தவரே சத்ருக்களுக்கும் வாத்சல்யத்தை யுடையவரே -விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் -வந்தவாறே போய் விடுகிறேன் –

————

தேவாநாம் தாநவாஞ்ச சாமான்யம் அதி தைவதம்
ஸர்வதா சரண த்வந்த்வம் வரஜாமி சரணம் தவ –
-ஜிதந்தா -2-

பக்தியுடைய தேவர்களுக்கும் பக்தியில்லாத அசுரர்களுக்கும் எப்போதும் பொதுவாகப் பற்றத்தக்க தேவதையாய் இருக்கும் உனது திருவடி இணையை உபாயமாக நிச்சயிக்கிறேன்-

உதாராஸ் ஸர்வ ஏவைத ஞாநீ த்வாத்மைவ மே மதம் -7-13-

இவர்கள் அனைவருமே உதாரர்கள் -ஞானியோ என்றால் எனக்கு தாயகம் -ஆத்மா -என்பதே எனது ஸித்தாந்தம்

———-

த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷத் அன்னம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஜஸே ராஜன் மம பிராணா ஹி பாண்டவா
-உத்யோக பர்வம் –74-27-

த்வேஷிப்பவன் அன்னம் புஜிக்கத்தக்கது அன்று-த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -பாண்டவர்கள் எனக்கு பிராணன் அன்றோ –

————

ஆச்சார்யவான் புருஷோ வேத

ஆச்சார்யனை யுடைய புருஷனே உண்மையை அறிகிறான்

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||-
-10-

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு. எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை-

————–

சீலாதி குண ஸம் பந்ந ஸர்வ லோக ஏக வத்ஸல

சீலம் முதலிய கல்யாண குணங்களை யுடையவன் -எல்லா உலகுக்கும் வாத்சல்யம் யுடைய ஒருவனாய் இருப்பவன் –

————

விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யது ஜீவிதம் இச்சஸி –
-ஸூந்தர –21-20-

ராவணா -ஸ்ரீ ராமபிரான் தர்மத்தை அறிந்தவராகவும் -சரணம் அடைந்தவர்களிடம் வாத்சல்யம் யுடையவர் என்றும் ப்ரஸித்தமானவர் -நீ உயிர் வாழ விரும்புவாயானால் அவரிடம் நட்பு காட்ட வேண்டும் –

————

மித்ர பாவேந ஸம் பிராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
–தத்தம் -18-3-

நண்பனாகிய பாவத்தோடு நெருங்கின இந்த விபீஷணனை ஒருபோதும் கைவிட மாட்டேன் -அவனிடம் தோஷம் இருந்தாலும் இருக்கட்டுமே -நல்லோர்களுக்கு இவனை ஸ்வீ கரிப்பது நிந்திக்கத் தக்கது அல்ல –

———–

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா
-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ-தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே-ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே-ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

————

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ
: ||–58-

கருணைக் கடலான ஸ்ரீ ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே!
வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத,
போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய
திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.

————

ஆஸ்ரித வாத்சல்ய ஏக மஹோ ததே —ஸ்ரீ ரெங்ககத்யம்

அடியார்களிடம் வாத்சல்யக்கடலாய் இருப்பவனே

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புத்தூர் கிருஷ்ண ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –