ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –
———-
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –
முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –குருகூர் நம் மாறன் (பாட பேதம் -நம்மாழ்வார் என்றபடி )
(தனியனில் பெரிய திருவந்தாதி பற்றி நேராக இல்லையே
முயற்றி பதம் கொண்டே இப்படி -காலக்ஷேபத்தில் சாதித்ததை ஓராண் வழியாக உபதேசித்து அருளிச் செய்வார்கள் )
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே-என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது
(நெஞ்சைப் பார்த்து நினைக்கச் சொல்லாமல் கூறச் சொல்கிறார்
எங்கள் குலசேகரன் என்றே கூறு அங்கும் –
எல்லாக் கரணங்களும் மற்றவற்றின் செயல்களையே ஆசைப்படும்-
முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –
என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-
தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-
முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முத்ரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது
அநந்தரம் வாயார வாழ்த்தி
குரு பதாம்புஜம் த்யாயேத் -குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத்- ச அம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்ச சாரம் –
ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்
ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –
இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது
பா மன்னு மாறன் அடி பணிந்த- பராங்குச பாத பக்தரான -ஆழ்வாராலேயே சாஷாத்கரித்து
அருளப் பட்ட எம்பெருமானாரே –வளர்த்த இதத் தாயான –
பூதூரில் வந்து உதித்த புண்ணியனான
இதற்கும் பெருமாள் திருமொழிக்கும் தனியன் சாதித்து அருளி உள்ளார் –
தங்கும் மனம் நீ எனக்குத் தா -இவர் இடமே பிரார்த்தித்துப் பெற வேண்டுமே )
————-
ஓம் நம -திரு விருத்தம்
நாராயணாயா -திரு வாசிரியம்
சரம ஸ்லோகம் -பெரிய திருவந்தாதி -திருவடிகளே மாம் ஏகம் -நெறி காட்டி நீக்குதியோ கண்ணனாலேயே மனத் துக்கம் மாய்த்தேன்
த்வயம் -திருவாய்மொழி -சார ஸங்க்ரஹம் தீர்க்க சரணாகதி-
ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும் அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா
என்றார் திரு விருத்தத்தில்
உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல் கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்
ஆற்றாமையால் சொல்லியவையே நடுவில் உள்ள பாட்டுக்கள்
பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –வீடு திருத்தி கூட்டிப் போகைக்கும் –
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை
மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-
அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –
பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -திரு விருத்தம் –
சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை திருவாசிரியம்
நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை
இந்த பெரிய திருவந்தாதி
திரு விருத்தம் -பர பக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்
முண்டக உபநிஷத் —87-பகுதி என்பர் -அதர்வண வேத சாம்யம் பெரிய திருவந்தாதி
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி
பெரியவர் -ஆழ்வார் அருளிச் செய்த ஆழமான அர்த்தங்களை சொல்லும் பெரிய திருவந்தாதி
இன்ப மாரி இவர்-பண்டை நான் மறை -கண்டு இவர் வாயனவாறே சர்வ உஜ்ஜீவனம் ஆனதே
அருள் மாரி அங்கமான கலியன்
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –
விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும்
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )
உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ
நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-
அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்
பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –
ஸ்வரூப ஞானம் பெற்று குணக் கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
(ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே-)
இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் –குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே )
எண்பத்தேழு நேரிசை வெண்பாக்களைக் கொண்ட திவ்ய பிரபந்தம்
————-
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-
நயப்புடைய
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்-ஆசை கொண்ட நாவினால்-
அன்பு கொண்ட சொற்களால்
என்னால் தன்னைப் பதவிய வின்கவி பாடிய(7-9-10)-என்னுமா போலே
கவிக்கு நயப்புடைமை யாவது
நாயகனுக்கு முன்பு இல்லாத நீர்மை இக் கவியாலே யுண்டாகை
நாவீன்
நீயும் வேண்டா என்கிறார்
உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா-மநோ பூர்வ வாக் உத்தரம் அல்லவோ என்னில்
பக்தனுக்கு ந ஸாஸ்த்ரம் நைவ க்ரம
நெஞ்சிலே யூன்றி அனுபவிக்கைக்கு நீ யுண்டாக அமையும்-என்னால் தன்னைத் தானே பாடிக் கொண்டான்-
நற் பூவைப் பூ
பூவைப் பூ த்ருஷ்டாந்தம் ஆகாதே ஆகவே நல் பூவைப் பூ என்று விசேஷண விசிஷ்ட பூவைப் பூ
சேர்த்தி யழகு பொருந்திய இனிய சொற்களிலே பகவத் குணங்களை அமைத்துப் பாடும்படி நெஞ்சே!
நீ அநுகூலிக்க வேணுமென்றதாயிற்று.
——————
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-
அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக் கட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!
அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால்
அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு என்று சொன்னார்
எங்கள் மால்–இகழப் போகாத படி தம்முடைய பக்கலிலே வ்யாமுக்தனாய்-செங்கண் மால் -எங்கள் மால்
உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்
கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்–அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –
இகழ்வோம் மதிப்போம் = ‘மதிப்போம் இகழ்வோம்’ என மாற்றி அந்வயித்துக் கொள்வது.
இதன் கருத்தாவது- வாய் விட்டுப் புகழ்வதென்கிற விஷயம் அப்படி கிடக்கட்டும்;
தேவரீரை நாயினேன் நெஞ்சால் நினைப்பதாவது தகுதியோ என்று பார்த்தால், அதற்கும் யோக்யதை யில்லை;
நெஞ்சால் நினைப்பதுதானும் இகழ்ந்தவாறாகும் என்றபடி.
எங்கள் மால் கண்டாய் இவை-வை லக்ஷண்யத்தைக் கண்டு இழிவது-அயோக்யன் என்று அகல்வது
இவை எங்களுடைய பிராந்திகள் இறே
தேவரீரைப் புகழ்வோமென்றால் என்னுடைய அந்தராத்மா சீறுகிறது;
புகழாதிருப்போமென்றால் தேவரீர் சீறுகிறது;
இந்தப் பாவத்திற்கு என்ன பண்ணுவேன்; இது பெரிய தீவினையாயிரா நின்றதே!
————–
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-
இறையவனே-பரிக்ரஹவும் த்யஜிக்கவும் இது தன்னரசு நாடோ
நீயே பற்றுவித்து விடுவிக்கிறவனாய் இருக்க–நம்மால் செய்யத் தக்கவை ஒன்றுமே இல்லையே –
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார்
என் வாய் முதல் அப்பன் -என்றபடி-என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ —
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-
—————
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-
என்ன-–என்னுடையவனான-கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று
தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்
அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –
ஆள் பெற்று என்றது – ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி.
எம் பெருமானை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்ற கொண்டிருந்த கொள்கை நீங்கி
அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப் பெற்றதனால் நான் மஹாபாக்ய சாலியானேன் என்றாயிற்று.
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும்,
பண்ணின பிறகு அநுதாபங் காட்டுதலுமாகிற இரண்டும் அவிருத்தமென்று கொள்வது போல இதனையுங் கொள்க.
(மத்தத் பரம் நாஸ்தி கண்ணன் கீதையில்-இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும் )
—————–
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–
அயோக்கியன் என்ற என்னை அகலாதபடி பண்ணுகை- அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –
அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-
மற்றும் ஆசார்யரும் நீயே–
உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்
மூன்றாமடியின் முதலிலுள்ள மாய என்பது ஸம்போதநம் (விளி);
உன்னுடைய ஆச்சரிய சேஷ்டிதத்தை என்ன சொல்லுவேனப்பா! என்று கருத்து.
“புகழ்வோம் பழிப்போம்” என்ற கொண்டிருந்த எண்ணத்தைத் தவிர்த்து
“என்னில் மிகு புகழார் யாவரே” என்னும்படி பண்ணினவிது என்ன ஆச்சரியம்! என்கிறார்
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே
அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்
உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப் பிறவி
அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி
————-
ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.
நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-
கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப்பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )
பகவத் கீதையில் சரம ஸ்லோகத்துக்குக் கீழே விஸ்தாரமாகச் சொல்லப் பட்டுள்ள கர்ம ஜ்ஞாநாதி ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது.
என் செய்வான் எண்ணினாய்
மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ
அஜ்ஞனான அடியேன் நெறிகாட்டி நீக்குவதற்கு உரியவனல்லேன்;
கருமாமுறிமேனி காட்டுவதற்கே உரியேன்- என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் படும்படி சொல்கிறாரென்க.
யானையைக் குளிப்பாட்டி வைத்தாலும் நொடிப் பொழுதில் தும்பு தூசிகளையே வாரி மேற்கொள்ளுமாபோகே,
நீ செய்யும் நன்மையையும் கெடுத்துக் கொண்டு தீமையையே ஏறிட்டுக் கொண்டவனாவேன்- என்கிறார் என்னவுமாம்.
————–
நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-
1-பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து என்ற ஸ்ரீ லஷ்மீ பதித்வமும்
2-பாரிடந்த-அதி மானுஷ சேஷ்டித்வமும்
3-அம்மா-என்ற சர்வேஸ்வரத்வமும்
மூன்றுமே பிற்காலிக்கைக்கும் ஹேது-மேல் விழுகைக்கும் இவை தான் ஹேதுக்கள்
என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல் –
தான் மாதரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –
நல்ல பேறு பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –
—————-
நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்
அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு–8-
அருகும் சுவடும்–
1–நெருக்கமும் அதனால் பெற்ற இனிமையும்
2-அடைவதும் அதுக்கு உபாயமும் என்றுமாம்
சுவடுந் தெரிவுணரோம் — சுவடாவது அடையாளம்; உன்னுடைய ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைப்பதற்குரிய
அடையாளமு மொன்றும் கண்டிலேன். என்னிடத்தில் ஏதாவது யோக்யதையிருந்தால் அந்த யோக்யதை நிமித்தமாக
உன் ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைக்க வழியுண்டு; அப்படிப்பட்ட யோக்யதை ஒன்றும் என் பக்கம் இல்லாமையாலே
அந்த நினைவுக்கு ப்ரஸக்தியில்லை யென்கை. சுவடு என்பதற்கு போக்யதை என்கிற பொருளுங்கொள்ளலாம்.
நும்மை நுமக்கு
நும்மை -அருகும் சுவடும் தெரிவுணரோம்
நுமக்கு அன்பே பெருகும் மிக
இது என் பேசீர்
இது ஜீயர் பிள்ளை திரு நறையூர் அரையர் பக்கல் கேட்டதாகப்
பிள்ளை அருளிச் செய்தார்
நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க-ஆச்சார்ய ஹ்ருதயம் -228
அதாவது-
நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்- உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க -உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அற மிக்கு வாரா நின்றது –
————-
பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-
எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –
அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.
நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது
நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.
அவர் – நெறிகாட்டி நீக்கினாலும் நீக்கட்டும்,- கருமாமுறிமேனி காட்டினாலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு.
————-
இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
1-விலக்ஷண அதிகாரம் காண்
2-மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
3-தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்
(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –மூன்றாவது வெறுப்பு )
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-
ஏ பாவம்–1-அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யராய் இருந்த பாபம் என்றும்
2-அயோக்கியன் விலகிய பாவம் என்றும்
3-பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாத பாவம் என்றுமாம் –
நாமா மிகவுடையோம் நாழ்–நாழ்-குற்றம்.-நறு வட்டாணித் தனமாய் (நிரர்த்தமான வாக் ஸாமர்த்யம்)
ஸ்ரீ யபதி என்றால் நம் ஸ்வரூபத்தைப் பார்த்து அகல இறே அடுப்பது
ஸ்வரூபத்தைப் பாராதே கிட்டிற்று நம் அளவில் இல்லாமை இறே
நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்- நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-எதற்காக வீணாக நாக்கை நீட்டி இருக்கிறாய் – என்கிறார் நெஞ்சை பார்த்து-
பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று
சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார்
“எண்மர் பதினொருவ ஈரறுவரோரிவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையார் அருளிச்செய்த முப்பத்து மூன்று
தேவர்களையே இவரும் சப்த பேதத்தாலே அருளிச் செய்கிறார்.
ஆண்டாளும் “முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று” என்றருளினாள் இறே.
————
அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-
அயோக்யன் என்று அகலுமவர்கள்
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒப்பார்கள்
பிராட்டியைப் போலவே ஒவ்வொரு ஜீவனையும் விரும்பும் அவன் அன்றோ
கிம் கார்யம் சீதையா மம என்னுமவன்
கடிமா மலர்ப் பாவையோடே சாம்ய ஷட்கம் உண்டே
உனக்கு
உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேர விடுகை பணியோ
என்னுடைய உறுதியைப் போக்கினது வலியே யன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்ல காண் என்கை.
———
கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்
அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க
நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்
அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம்
(அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் )
———-
அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)
இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.
வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-
ஸ்வா பாவிக ஸ்வாமித்வம் உன்னது அன்றோ
என்னுடைய யுக்தி மாத்ரத்தையே பரிபூர்ண கைங்கர்யமாகக் கொண்டு -உன் மேனிச் சாயை நிறத்தை-யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு -கண்கள் தனக்கு காட்டு -என்றபடி
நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையே கொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே;
நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால்
நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை.
————
காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பழையபடியே நைச்சியம் சிந்தித்து-பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –
சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-
ஸாஸ்த்ர வஸ்யமான உன்னைப் பார்த்தால்-அறிவு கெட்டு ஈஸ்வரனை அழித்தாள் அவள் –
நீ சாஸ்த்ர வஸ்யமாய் இருக்கச் செய்தேயும் விஷயங்களிலே ஆத்மாவை மூட்டி
நசிப்பிக்கையாலே உனக்கு சமள் அன்று என்றபடி
பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
பாம்பின் வாயிலே கை நீட்டுமா போலே நாம் அவனைக் கிட்டுகை அவத்யம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கிட்டுகிற உனக்கு பூதனை சமளோ -என்றபடி –
“பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாளன்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத்தனையாயிறே;
உன்னைப் பார்த்தால் பூதனை நித்யஸூரிகளோடொக்குமிறே.”
————-
(நெஞ்சே )-உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )
கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப் பாட்டில்;
இப் பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.
கங்கையில் நீராடினால்-நாயின் பாபங்கள் தீரும் ஒழிய-கங்கையின் பெருமையில் ஒன்றுமே குறையாதே
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-
கடலானது ஆர்த்துக் கொண்டு தம்முடைய சிவந்த திருவடிகளை வருட
அவசர பிரதீஷனாய்க் கண் வளருகிறவருடைய குணங்களை
(ஆஸ்ரிதர் கிடைப்பாரா என்று எதிர் பார்த்து கண் வளர்கிறான் அன்றோ
சிவந்த கண் -எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் அநாதி காலம்
ஐஸ்வர்யம் வாத்சல்யம் ப்ரேமம் -கண் பூத்துப் போம் படி கிடக்கிறான் )
தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்,
அவனுடைய விலக்ஷணமாய் போக்யமான திருக் குணங்களை நோக்குமிடத்து
‘நம் வாயாலும் இக் குணங்களைச் சிறிது பேசி ஆநந்திப்போம்’ என்று ஒருப்படுவதும்
ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமென்றும் இவை ஒன்றோடொன்று விருத்தமல்ல-
————–
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ
(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )
அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ
பேராளா –கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார்
பேராளா –
1-மஹாநுபாவனான பெருமானே -பெருமை பொருந்தியவனே–
2–பல திரு நாமங்களை உடையவனே -என்றுமாம்
உனக்கே உடைமையாய் இரா நின்ற பூமியை
நீ பெற வேண்டி பிச்சை பெற்றது எங்கனே
உனக்கு திரு நாமங்கள் பலவாக இருக்க-
இந்த பெரிய வாமனன் மிகப் பெரிய குள்ளன் திரு நாமம் வைத்துக் கொள்ள வேணுமோ –
வேதத்தில் இந்த பவித்திரமான
சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும்
—————–
அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது
(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-
எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே-இவர்களை சூழ்ந்து
அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –
இவர்கள் உபேக்ஷித்தார் என்று பிராட்டிக்கு வாய் திறவார்
அடியாரானவர்கள் புத்தி பண்ணி உபாஸித்தாலும் தோன்றிற்று இலராகில்
சேஷ பூதன் சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை அன்றோ -என்று வெறார்கள்
பகவத் குண ஹானி சொல்லுமவர்களுக்கும் வாய் திறவார்
ராமாவதாரமாய்த் தோன்றுமவர் நமக்குத் தோன்றிற்று இலர் என்று வெறார்கள் –
ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே
தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே-சர்வஜஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இறே –
என்று அருளிச் செய்தது இப் பாசுரத்தைக் கொண்டேயாம்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார்
என்கிற-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே
சேதனர் செய்த குற்றங்களை தன் திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப் பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இறே-மா முனிகள் வியாக்யானம்-
————–
உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது
(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்றும்-எனக்கே தான் விஷப்பால் கொடுத்தாள் என்றும் – உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–
யசோதைப் பிராட்டி தாம்பாலே கட்டினாலும்
அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ சிஹ்னம் போலே இறே
காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே
பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ
நீயே சொல்லு
சேதனர் மேலே நப்பாசை கொண்டு சிருஷ்டித்து அருளுகிறான்-
சம்சாரிகள் நன்மையே நாடி இருக்கிற உன்னுடைய ஸ்வ பாவம் யாராலும் நிலை காண ஒண்ணாது
—————
கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )
சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டும் நீ காண் –19-
சூதறியா நெஞ்சமே–விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே
அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
“மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
சொல்லில் குறையில்லை-பகவத் குணங்களைப் பேசத் தொடங்கினால் அவற்றுக்கு ஓய்வே இல்லை; எவ்வளவு பேசினாலும் குறைவுபடாமல்
மேன் மேலும் பெருகுகின்ற குணங்கள் அவனுக்கு எல்லை யில்லாமலிருப்பதால் நாம் சொல்லி முடிக்கும் படியானவையல்ல
பகவத் குணங்கள் என்று கொள்ளலாம்.
பரமபுருஷனுடைய குணங்களை அயோக்யரான நாம் பேசினால் அவற்றுக்குக் குறைவு நேரிடுமென்பதில்லை என்றும் கொள்ளலாம்.
அவனுடைய குணங்களை நாம் சொல்லத் தொடங்கினோமாகில் நம்முடைய குறைகளெல்லாம் நீங்கிவிடும் என்பதாகவுங் கொள்ளலாம்.
அந்தக் குணங்கள் எல்லையற்றவை யாதலால் அவற்றைக் கரை காண்பதில் குறை யுண்டு என்பதாகக் கொள்ளுதல் சிறக்கும்.
காண்டும் நீ காண்-காண்போம் என்று காணப் புக்கது உள்ள படியே காணலாம் காண் –
எல்லிப்பகலென்னா தெப்போதும் என்பதை காத்தானை என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்,
காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்.
————–
நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி
(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-
மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்
(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )
திருவாகம் தீண்டிற்றுச் சென்று-தன்னை அறிந்தால் விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –
(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்றாற் போலே ஆழ்வார்கள் அருளிச் செய்வதும் காலக்ஷே பார்த்தமாகவே யொழிய வேறில்லை.
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்.-இந்த ஸம்ஸாரத்தில் நாம் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் பண்ணிப் போது போக்க வேண்டியது அவசியமாதலால்
அதற்காகப் பாசுரங்கள் பேசுவை அயுக்தமல்ல.
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்-என்னைப் பிடிக்கவே ஊராக வளைத்தான்-
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )
அன்று விஸ்தார இடங்களிலே சுகமாக வளர்ந்து விளங்கின அத் திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்த சிறிய நெஞ்சினால் இடுக்கப் பட்டன
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா”
(எம்பெருமானோடு கூடியிருக்கை ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருக்கை நரகம்) என்றபடி
நான் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக்கூடாதென்று திருவுள்ளம் பற்றித் தனது திருவடிகளை என்னெஞ்சினுள் அமைத்தான்-
————–
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்
(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-
“மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்யவாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.
மாலார் குடி புகுந்தார்-
திருமால் வந்து சேர்ந்து விட்டார்
அடியவர்கள் இடம் வ்யாமோஹம் கொண்ட எம்பெருமான்-இன்று என் நெஞ்சிலே குடி புகுந்தார்-
இருள் மூடி கிடந்த இடத்திலே பிரகாசம் வந்து சேர்ந்தால் போலே –
இந்நிலத்திலே கால் பாவுவதற்கு எங்கும் இடம் நேராமையாலே,
கத்துவராம் = ‘ஐயோ! எங்கள் குடியிருப்புப் போயிற்றே!’ என்று வாய்விட்டுக் கதறுகின்றனவாம்.
———-
இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார்-
அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விஸ்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-
ஸர்வ ரக்ஷகனானவன்
ரக்ஷகன் ரக்ஷணத்திலே நெகிழ நின்றான் என்று அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களைகண் மற்று இலேன் -என்னும்படியே
உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ
எக்காலத்திலும் அவனே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால்
நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அந்யவஸாயம் குலைந்தால் தளர்வடையாய்;
———–
அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-
பூமியில் அவனைப் பரிச்சேதிக்க வல்லார் உண்டோ
(அவனது உபகார பரம்பரைகள் ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே )
தானே தனிந்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம்
பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய,
வேறொரு காரணங் கொண்டு ஸேவை ஸாதிப்பவனல்லன்-தன்னருளால் தானே தோன்றுதலை யுடையவன்
————-
பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத் தன்னை இதர சஜாதீயனாக்கி
ஸூலபனான கிருஷ்ணனாலே
பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே
தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்
எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார்
துன்பங்களுக்கே நிலமான இவ்விபூதியில் நானோருவனாகிலும் இன்பம் பெற நேர்ந்ததே யென்று ஆநந்திக்கின்றேனென்றாராயிற்று.
———
மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ – என்னுடைய விலக்காமையே -என்கிறார் –
(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-
அவன் அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றி மேல்விழுந்து வந்தபோது நான்
இறாய்த்துப் பின்வாங்காமல் அவனுடைய அநுக்ரஹத்துக்கு அநுமதி பண்ணியிருந்தேனென்கை.
இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்
—————-
(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )
அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-
அவ் விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
காரணம் அறியோம் -ஸூ கமாக அனுபவிக்கிறோம் அவனது கிருபை அடியாகவே-
த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.
ஒரு திருவடியே மேலுலகங்களையும் அளந்ததென்பது உண்மையே; அந்தத் திருவடியோடு கூடத் திருமுடியும் ஓங்கி வளர்ந்தபடியாலும்,
எல்லாச் செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சிலாகுமென்று ஒரு செயலைத் திருவடியிலேறிட்டுச் சொல்லுவோமென்று
ஆழ்வார் திருவுள்ளம் பற்றினபடியாலும் முடியால் லிசும்பளந்த என்றவிதில் அநுபபத்தி ஒன்றுமில்லை யென்றுணர்க.
உலகளந்த காலத்தில் திருவடியும் திருமுடியும் முத்து மயமாயிருந்த படியால் அவயவங்கள் கண்ணுக்குத் தோன்றாமல் முத்துக்களே தோற்றின
—————
திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்
(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது-ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )
(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு காண்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன சமனாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பர ஞானம்
முனியே நான் முகனே-பரம பக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பர பக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று சொன்னாராகில்
உள் கண் காணாது ஒழிகை யாவது என் என்னில்
பரம பக்தி பிறந்து அவ்வஸ்துவை ஒழியச் செல்லாமை யாதொரு போது பிறக்கும்
அப்போது காணும் நம் கண்
அவ் வஸ்துவை ஒழியச் செல்லும் இன்று காணப் போகாது என்கிறது-
அகக்கண் திறந்து திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றோமாகில் பின்பு புறக்கண்ணாலே
திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸேவிக்கப் பெறுவோம் என்பதே இப் பாட்டின் கருத்தாகக் கொள்ளத் தக்கது.-
—————
எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )
ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-
இணரும்-சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்–இணர்தல்-கொத்து கொத்தாக அலர்தல் –
தனக்கு நல்லவர்கள் நினைத்த அளவிலே யமைக்கும் ஆகையாலே
என் ஸ்வாமி எனக்கு எளியன் –
தாழ்ந்தவர்களைச் சொல்வதான எளியர் என்ற சொல் இங்கு தாத்பர்ய வ்ருத்தியால் சேஷ பூதர்களைச் சொல்லுகிறது.
என்னுடைய அன்புக்குத் தக்க வளவு எனக்கு அவன் எளியனாகத் தடையில்லை என்றாராயிற்று.
—————-
அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –
இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-
அங்கே மடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு
அங்கே ஒரு மூலையிலே ஒதுங்கித் திரிந்தாலோ என்னில்
முதன்மை செய்த வூரிலே புடைவையை ஒதுக்கிக் கொடு திரிவதில்
அங்கு நின்றும் சடக்கெனக் கால் வாங்குகை யன்றோ அழகு– மடி -முந்தானை –
இங்கே என்று இல்லாமல் அங்கே என்றிருப்பதே அழகியது- ஆழ்வாருடைய நெஞ்சுக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க.
மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம்.
ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம்-
—————
ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –
(சென்றால் குடையாம் இத்யாதி -நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )
அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )
தன்னை -மன்றிலே -நாற்சந்தியிலே –ஸர்வ ஸ்வ தாநம் பண்ணிக் குடமாடின வேர்ப்புப் போகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற இவனுக்குச் சாயை போலவும் ஆனோம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்
இளைய பெருமாள் படை வீட்டிலும்-காட்டிலும் ஓக்க அடிமை செய்தால் போலே
கிருஷ்ண அவதாரத்திலும்
திருப்பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற இடத்திலும் ஓக்க அடிமை செய்யும் படி யானோம் –
நிழலானோம்’ என்று முதலில் சொன்னார்; அதில் த்ருப்தி பிறக்கவில்லை;
உலகத்திலே நிழலானது வ்யக்தியை விட்டுத் தனிப்படவும் காணப்படும்.
அப்படியல்லாமல் வ்யக்தியோடு உடன்பட்டே காணக்கூடியது பாதரேகையாகையால் “அடிதாறுமானோம்” என்று பின்னே சொன்னார்.
தாறு என்று அளவுக்கும் ரேகை (கோடு)க்கும் பேராகையாலே, பாதத்தளவான பாதுகையென்றும் பாத ரேகையென்றும் பொருள்-
ஸம்ப்ரதாயத்திலே எம்பாரைச் சொல்லும்போது ‘எம்பெருமானாருடைய திருவடி நிழல்’ என்றும்,
ஸ்ரீவானமா மலைச் சீயரைச் சொல்லும் போது ‘ஸ்ரீமணவாளமாமுனிகளுடைய திருவடி ரேகை’ என்றும்,
முதலியாண்டானைச் சொல்லும் போது ‘எம்பெருமானாருடைய பாதுகை’ என்றும் அவர்களுடைய தனியன்களில்
அநுஸந்திக்கப்பட்டு வருமாறு காண்க.
(“ராமாநுஜ பதச் சாயா” “ரம்ய ஜாமாத்ருநோகிந்தர் பாத ரேகா மயம்” “பாதுகே யதிராஜஸ்ய” இத்யாதிகள் தனியன்கள்.)
————
தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –ஆழ்வாருக்கு இது தானே தீ வினை-
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-
தாமோதரனார்–ஜக ஏக சேஷியாக இருக்க இட்டுப் பிறந்த எம்பெருமானே சேஷத்வத்தில் ஆசை கொள்ளுவதாக இருக்க–சேஷத்வதுக்கு இட்டுப் பிறந்த என் நெஞ்சானது இதன் ரசம் அறியாதே பிற்காலிக்கிறதே
யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது–தீந ஸ்வரப் பாசுரம்-
நம்முடைமையான நெஞ்சுக்கு ஆவோமோ-நம்மை யுடையவர்க்கு ஆவோமோ
தமக்கடிமை வேண்டுவோர்-எம்பெருமானுக்கு ஸ்வாமித்வம் அஸா தாரணமாயிருக்கச் செய்தேயும் சேஷத்வத்திலே அவனுக்கு ஆசை-அநுகூலையான தாயார்க்கு அடி யுண்பது கட்டுண்பதான விடத்திலே கண்டோம்”
பரம புருஷன் தனது பரத்துவத்தை மறைத்து ஸௌலப்ப குணத்தை எவ்வளவுதான் காட்டினாலும்,
*பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு முடையவர்களுக்கு ஸ்வ தோஷமே அடிக்கடி நெஞ்சில்பட்டுக்
கூச்சமுண்டாகுமென்பது இதனால் காட்டப்படுகின்ற தென்றுணர்க.
————-
அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –
ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க.
அந்தோ ‘அந்த பகவானை அணுகமாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார்.
ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-
யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-
ஒன்றை அறியவே தன்னை அறியப்படுமவனாய்
ஒன்றை யுகக்கவே தன்னை யுகக்கப் படுமவனாய்
விரோதி நிரஸனத்தைப் பண்ணுமவனாய்
இருக்கிறவன் பக்கலிலே-யாதானும் நேர்ந்து அணுகா வாறு என் கொலோ-
நைச்சியங் கொண்டாடிப் பிற்காலிக்க நேரிடுங் காலத்து எம்பெருமானுடைய அபார சக்தியை அநுஸந்தித்துத் தேறுதலடைந்து அணுக முயல வேண்டும் என்று உணர்த்துவது போலும் இப்பாட்டு.
———–
ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –
(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )
நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று
கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்;
திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும் போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-
நீலாழிச் சோதியாய் பாலாழி நீ கிடக்கும்
ஒரு வெள்ளைக் கடலிலே-ஒரு கருங்கடல் சாய்ந்தால் போலே இருக்கிறபடி
ஆதியாய்-வடிவு அழகேயாய் பிராப்தி இன்றிக்கே இருக்கிறதோ
இதுக்குக் காரணமானவனே
கேட்டவுடனே விகாரமடைந்தொழிந்தேன். காதால் கேட்டதற்கே இவ்வளவானால் கண்ணால் காணப்பெற்றால் என்படுவேனோ அறியேன் என்றாராயிற்று.
தொல்வினை எம்பாற்கடியும் நீதியாய!” என்பதற்கு- உபகாரகனுமானவனே
என்னுடைய விரோதியை என் பக்கலில் நின்றும் போக்குகையே
ஸ்வ பாவமாக யுடையவனே-என்றும்–நைச்சியம் கொண்டாடிப் பிற்காலிக்கையாகிற
பழைய பாவத்தைப் போக்கடிக்கு மியல்வினனே! என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
—————
இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–
(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )
கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில்
தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான்
“இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்ய வேணும்” என்று திருவுள்ளம் பற்றி
இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கி விட்டான்; அதைப் பேசுகிறாரிதில்
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-
எல்லாம் என்னைப் பெருகைக்காகவே–எல்லாம் செய்தும்-ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்
நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்னும் தொழில்களை ஓயாமல் செய்து கொண்டு என்னெஞ்சை விட்டுப் போகிறானில்லை.
ஆனால், பக்தர் திறத்தில் எம்பெருமான் இவ்வளவு அன்பு கொண்டிருக்கிறானென்பது புதிதான ஒரு ஆச்சரிய விஷயமல்ல.
பண்டே ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் அன்பு பூண்டு அரியன செய்து காட்டிய பெருமானுக்கு இவை ஒரு வியப்போ?
அன்பின் மிகுதியினால் இத்தனையும் செய்கிறான் என்றாயிற்று.
ஒன்றுமோவற்றான் = ஓவு அற்றான் எனப்பிரித்து, ஓய்வதை ஸஹிக்கமாட்டான் (அதாவது = ஓயமாட்டான்.) என்று பொருள் கொள்ளலாம்.
அன்றி, ஓ ஆற்றான் எனப் பிரித்து,ஓ என்பதை ஆச்சரியக் குறிப்பிடைச் சொல்லாகக் கொண்டு, ஆற்றான் – ஆறி யிருக்க மாட்டான்
(இன்னமும் ஏதேதோ செய்ய வேணுமென்று பாரித்திராநின்றான்) என்று முரைக்கலாம்.
பிதா பகையாக அவனில் அண்ணிய உறவாய் வந்து உதவினவன் அவனோ அன்புடையோன்
அயோக்யன் என்று அகலுகிற நாமோ அன்புடையோன்
அன்புடையன் அன்றே அவன்–அவனே மிக்க அன்புடையவன் என்றவாறு
யாதானும் பற்றி நீங்கும் நாம் அன்புடையோன் அல்லோம் –
——————-
அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )-அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது
அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-
ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்
அவனே எவனேலுமாம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்
ஸ என்றும் தத் என்றும் சொல்லப்பட்டுள்ள தெய்வம் கண்ணபிரானே என்று தெளிந்து அவனைப் பற்றினால்,
அப்பெருமானே தேவதாந்தரங்கள் அளிக்கும் பலன்களையும் வேண்டுவார்க்கு அளித்திடுவான்
அவன் அவனேயாகையாவது என்ன வென்றால், எம்பெருமானுடைய ஸ்வரூபமே ஸௌலப்யம் என்று தெரிவித்தபடி.
எம்பெருமான் நம்மால் உணரப்படும்போதே ஸௌலப்ய குணவிசிஷ்டனாகவே உணரப்படுவான்.
——–
இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது-நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்-பகவத் அனுக்ரஹத்தாலே பெறப்பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்-
எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்;
ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே
அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற
அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.
ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-
நாமே யதுவுடையோம்-நாம் நல்ல அறிவுடையோம்
(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )
மாலாரை என்றதனால் ஆஸ்ரிதர் திறத்திலே வ்யாமோஹங் கொண்டிருக்கையாகிற சீல குணம் சொல்லுகிறது.
அன்பினால் மங்களாசாஸநம் பண்ணுகையாகிற ஒரு காரியத்தையே சிக்கனப் பிடித்துக் கொள் என்று தம் திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று.
————
தாம் வாழ்த்தச் சொல்ல-நெஞ்சு இறாய்க்க-அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்-
அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-
ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில்
ஏச்சாகிலும் அவனைப் பேசாதே இருக்கும் இடமே தப்பு
ஏசுகை -ஸ்நேஹம் இன்றிக்கே சொல்லுகை –பரிஹாச உக்தியாகச் சொல்லியாவது-
தேனே இன்னமுதே –கூத்துக்களை சொல்ல-பொய்யே கைம்மை சொல்லி –மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏசிப் பேசியேயாகிலும் பிழைகளைப் போக்கிக் கொள்ளுகிறாயில்லை என்றும், பிழைகளைப் போக்கிக்கொள் என்றும் உரைக்கலாம்.
———–
பேச என்று புக்கவாறே-போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்யவில்லையே-நன்றாகவே செய்தோம் என்கிறார் –
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே
பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார்.
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று
முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித் கொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று
அங்கே நித்ய கைங்கரியம் பண்ண வேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு
அவனது திருக் குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறார் இப்பாட்டில் –
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே!” என்கிறார்; பிழைக்க என்றது- பிழை செய்ய என்றபடி.
‘நாம் தப்பாகச் செய்கிறோமோ’ என்று சொல்லுகிற ஸ்வரவகையில் ‘இது தப்பு அல்ல, என்றும் ‘இது தப்பவு ஆகலாம்’ என்றும் தோற்றுமாறிருக்கும்.
ஜ்ஞானம் பிறந்த பின்பு அடிமைக்கு அனுகூலம் அல்லாத சம்சார சம்பந்தம் விட்டு நீங்குவது எப்போதோ-என்று இந்நிலம் அடிக் கொதித்து
அனுகூலமான பரம பதத்திலே சென்று பரிபூர்ணமாக அனுபவித்து அடிமை செய்து வாழ்வோம் என்று அங்கே போகப் பாரியாமல்
இங்கே குணானுபவ மாத்ரத்திலே திருப்தி பிறந்து இருக்கை யாவது
பகவத் விஷயத்திலே கண் அழிவு அற்ற ருசி இல்லாமை இறே-என்று தாத்பர்யம் –
ஒருகால் போய் = நாம் எவ்வளவு கதறினாலும் எம்பெருமான் திருவுள்ளமிரங்கின காலத்திலன்றிப் பரமபதம் செல்ல
முடியாதாகையாலே அவனுக்குத் திருவுள்ளாமனதொரு காலத்திலே அங்குச் சென்று என்றபடி.
—————–
எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின்
மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில்.
வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-
அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்-நைச்யம் பாவித்து அகலுகையும் கொடிய நரகம்
வாழ்த்துகை நமக்கு மிடுக்கு-என்றும்-வாழ்த்துகையிலே துணி என்றும்-மாய்த்தவனை வலிதாக (நன்றாக) வாழ்த்து என்றுமாம்
யஸ் த்வய ஸஹ ஸ்வாக்கோ நிரயோ யஸ் திவ்யா விநா” என்று எம்பெருமானோடு கூடியிருப்பது சுவர்க்கம்.
அவனைப் பிரிந்திருப்பது நரகம் என்று இளையபெருமாள் (ஸ்ரீராமாயணத்தில்) கூறினது இங்கு உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமானை ஏத்துகை சுவர்க்கம்; ஏத்தாதிருக்கை நரகம் என்கைக்கும் உபலக்ஷணம்.
“நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க. நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி”
———–
பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –
(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
1-பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
2-சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
3-பரம சுகுமாரமான திருக்கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் -ஈடுபட்டு அழியாதே நிற்கும் என்னுதல்–என்று மூன்று நிர்வாகங்கள்)
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-
அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) இவ்வுலகமும் நிலை பெற்று நிற்கிறது
———–
ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ-இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே-
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-
உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா-ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்-ஆகான்
எல்லா பொருள்களும்-ப்ரஹ்மத்தை-ஆதாரமாகவும்-ரஷகமாகவும்-சேஷியாகவும்-
தாரகமாகவும் -கொண்டவை-
————
பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது
அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-அவையம் -அந்தாதிக்கு சேர பாட பேதம் -அப்போது இடைப் போலி-
ஈஸ்வரனைப் பற்றுவோமோ
அயோக்யன் என்று அகலுவோமோ
அகலாது ஒழிவோமோ
என்று இரண்டும் இன்றிக்கே இருக்கிற மனஸ்ஸிலே இவனை உயர வைத்து
மங்களா ஸாஸனம் பண்ணார்த்தாருக்கும் உண்டோ-மனத் துயரை மாய்க்கும் வகை-
கவை என்று இரண்டு பட்டிருக்கைக்குப் பெயர்–கவை யில்லாமையாவது ஒருபடிப் பட்டிருக்கை;
எம்பெருமானையே உபாயமாகவும் உயோகமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி.
பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன்பங்களை நீக்கிக்கொள்ள வழியில்லை யென்தாயிற்று.
————-
இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்
(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )
வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-
இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்-பராசர பட்டர் நிர்வாகம்-
இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்
———-
நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்
(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )
ஞானி நித்ய யுக்தர் -கூடவே இருக்கும் அபி நிவேசம் கொண்டவர்கள் தானே
மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன் என்கிறார் –
அவனைப் பிரிந்து ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்க மாட்டாமையினாலே,
வானோர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாராயிற்று.
கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –
(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூ ஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே-பிராட்டி கடாக்ஷ பலனாகவே இது சித்திக்கும் அன்றோ
(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-
இத்தால்
ப்ராப்ய ப்ராபகங்களும் அவனே என்னும் இடமும்
ப்ராப்தாவுக்கு பிரதிபத்தி மாத்ரமே என்னும் இடமும்
ப்ரபன்னனுக்கு இரு காலும் -மற்று ஒன்றும்- சொல்ல வேண்டுவது இல்லை என்னும் இடமும் சொல்லுகிறது
நினை என்கையாலே
பிரதிபத்தியும் –
அது தான் (அந்த நினைவும் )ஒரு கால் என்னும் இடமும் தோற்றுகிறது
கதி என்ற வடசொல் வ்யுத்பத்தி பேதத்தால்
கமநஸாதநம் என்கிற பொருளையும்
கந்தவ்ய ஸ்தலம் (அடைய வேண்டுமிடம்) என்கிற பொருளையும் தரக் கடவது.
—————
நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –
(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-
உன் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரயோஜனாந்தரத்திலே முதலடி இட வேண்டா
உன் கடாக்ஷம் இல்லாதார் இப்படிச் செய்தார் என்று உனக்கு வெறுக்க ஒண்ணுமோ
இத்தால்-உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு இலக்காகும்படி அதிகாரம் இருந்தால் கடைத்தேறலாம் -என்றபடி-
எவ்வளவரெவ்விடத்தோர் என்றதில், “எவ்விடத்தோர்” என்று முன்னே அந்வயித்து எவ்வளவர்’ என்று பின்னே அந்வயிருக்கவேணும்-
இவ்விருள்தருமான ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி
நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில்
இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிர்ஹேதுக கிருபைக்கு இலக்காகும்படியான அதிகாரமாவது இருந்தால் கடைந்தேறலாம்;
“நேரே நினைத்திறைஞ்ச எவ்வளவரெவ்விடத்தோர்” என்று இகழ்ந்துரைக்க
வேண்டும்படியான நிலைமை அடியேனுக்கு இதுவரையிலுமில்லை,
இனி மேலுமுண்டாகப்போகிறதில்லை என்றபடி.
———
எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –
எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-
அசாதாரணையாய் வேய் போலே விளங்கி மிருதுவான தோளை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக-வெவ்விய கோட்டை யுடைய எருதுகள் ஏழையும் உடனே செற்றவனையே நெஞ்சிலே கொண்டு-இவ் வனுபவத்தில் காட்டில் பரம பதம் வேண்டா என்று இருந்தோம்
வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு,
பரமபதம் பெறப் பாரித்திருக்கின்றோம் என்றும்
வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருள் உண்டே
அச்சுவை பெறினும் வேண்டேன்–பாவோ நான்யத்ர கச்சதி-எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-
நப்பின்னை மணந்த கண்ணனை -உன்னைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா -என்கிறார்
———-
அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது
இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்-பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-
இவை சிற்று உருவம்-அவன் பேர் உருவம்
இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –
மற்றுத்தான் என்றது- எம் பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய
கருநெய்தற்பூ குயில், மயில், கருவிளை, களங்கனி முதலிய பலவற்றைச் சொன்னபடி.
இப்பொருள்களைக் காணும்போதெல்லராம் கண்ணபிரானுடைய திருவுருவையே ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து-என்னுடைய நெஞ்சு என்னைப் பிரித்து அவ்வப்பொருள்களினருகே ஓடுகின்றது
ஒரு நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இது ப்ரமம்’ என்று பிறகு வெறுமனிருப்பதில்லை;
காருருவங்களைக் காண்கிற போதெல்லாம் இந்த ப்ரமம் உண்டாகியே தீரும்
———–
உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்
அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே
(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )
பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-
ஆஸ்ரிதர்கட்காகக் கேசி வதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பரம காருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன்-என் விஷயத்திலே கல் நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.
“உயர்வற வுயர் நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாகத் தம் வாயாலே சொல்லத் தக்க எம்பெருமானை
‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக் கூசி,
“அந்தோ! வலிதே கொல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி.
—————
(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )
சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-
வண் துழாம் சீர் என்கையாலே
சேஷி செய்தபடி கண்டிருக்கை ஒழிய வெறுக்கக் கூடாது என்கிறது
மாண்பு -அழகு -முறை என்றாய் பிராப்தம் என்றபடி –
வண்துழாம்சீரார்க்கு மாண்பு– பரமவிலிக்ஷணரான-ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீர்மை;-துழாம் என்றது- துழாவும் என்றபடி; துழாவுகை- பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி;
அழகிய விசாலமான நற்குணங்களமைந்த பாகவதர்களுக்கு என்கை.
இங்ஙனன்றி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதியன்று;
கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்சமென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாராயிற்று.
—————
(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத்தவிர வாழ்த்தாது போல் இங்கும் )
பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –
மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–
தாய் வேஷத்தைக் கொண்டு இவனுக்கு முலை கொடா விடில் தரியேன் -என்று
அவள் முலை கொடுத்தால் போலே
இவனும் உண்ணா விடில் தரியேன் என்று தாரமாகவே யுண்டான்-
அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று.
———-
(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )
என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –
இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம்-பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம்
இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-
————–
உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –
முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று
காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச் செய்கின்றார்;
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-
பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்
நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்
இவர் எங்கே புக்கு முடித்தார்-ஐயோ ஐயோ என்கிறார்
—————
(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )
மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-
ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்–என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக் காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று-
—————
(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )
எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—
நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்–இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்
‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன?
ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.
————-
பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–
வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
ஆஸ்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;
அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.
————-
இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-
ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது
ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்
ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –
பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும்
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும்
இப் பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமே யென்க.
——————
(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே -தத் அபிஷந்தி விராத மாத்ராத் –
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )
கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;
மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-
கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்;
இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது.
(“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.)
வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால்,
இனி அவ் வாசைக்கு இடமில்லை;
வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.
(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )
பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–
ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை
அவனை அநு வர்த்தி-ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –
——————-
லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது
சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்
ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை
(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )
இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-
எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல்
புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி.
நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணு பதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும்,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்த வரலாறு ஊன்றிக் கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.
————-
(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்
—————
அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )
முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்று வகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத் திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேய வாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேய வாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமான வாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்து முடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத் தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்து விடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி.
இக் கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர் திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொரு வகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-
நம்பிள்ளை காட்டியருளின இந்த யோஜநையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தவிர, மேகத்தை உபமேயமாக நிறுத்தி
யுரைத்தலாகிற ஸவாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோக யாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக்குப் பாங்கு.
—————–
உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )
பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-
மனஸ்ஸாலே மூன்று போது அவன் பரன் என்று அனுசந்திப்பராகில்
ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணினவனையே
அபிமானிகளான தேவர்களுடைய கையும் கலந்து தொழும் இறே
அபிமானத்தாலே தங்களோடு ஸஜாதீயனாக புத்தி பண்ணி அநர்த்தப் படுகிறார்கள் இறே
பாவிப்பாராகில் -என்கையாலே
அனுசந்தித்தால் தொழுவர்கள்
அநுஸந்தியாமையாலே தொழார்கள் என்றபடி –
மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான் திறத்திலும் பரத்வ புத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’
————
(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –
ஸ்ரீ ஸூக்தி –சொல் மாலை –மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –
பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும்
எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது.
உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே
எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.
————
(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )
(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மன்யே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை-எந்த ஆயுதமும் ஸூதர்சன அம்சம் தானே )
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-
இது சிலருக்குச் சொல்லுமது அன்று-நெஞ்சே –இத்தைப் புத்தி பண்ணு
பகவத் விஷயமொன்றே நமக்கு உணரத் தக்கது-“சொன்னேன் அது” என்றது அர்த்த கௌரவர் தோற்ற-
——————
(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
அவனுக்கு அது தருகையில் குறை இல்லை
நம்முடைய ஆபி முக்யம் அரிது
ஆசைப்பட்டு போகை அரிது
காணானதை ஆசைப் பட்டாலும் தரும் என்றபடி
அது என்கையாலே
அதுக்குப் பிரதி கோடியாய் இது ஸம்ஸாரம்
ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்
அவன் உபய விபூதியும் தந்தாலும்
நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப்
போது போக்குவதையே கல் என்றபடி –
———–
கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது
(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே-இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும்
பெரியவராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம் இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )
கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளி கொள்ளும் போது இப் பாசுரத்தைப்
பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.
கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்-
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-
வெல்ல நெடியான்
கடக்க நெடியான்
இனி நெடியான் இல்லை என்னும்படி நெடியவன்
வெல்ல –
ஜெயிக்க எண்ணுதல் –
மிகவும் என்னுதல்
நிறம் கரியான்
குணங்கள் இல்லை என்னிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளே நீங்குவானாய் இருக்கிறிலன்
புறம் படி இவனைக் கிடையாது என்னும்படி இரா நின்றான்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் கூடு பூரிக்கும்
—————–
இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்
(யதோ வாசோ நிவர்த்தந்தே -அவனது சீர்க் கடலையுமே அடக்கினேன் –
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )
எம்பெருமான் -மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-
மிகும் திரு மால் சீர்க் கடலை யுள் பொதிந்த
குணா நாமா கரோ மஹான் -என்று
அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன்
மிகும் திருமால் –மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால்
———————
(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-
தர்சநீயமாய்-ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை யுடையவனை
இவ் வழகுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவனை
ஸ்வரூப ப்ரதிபாத்யமான திரு நாமங்களை விட ரூப
அழகுக்கு ப்ரதிபாத்யமான திரு நாமங்கள் ஆழ்வாருக்கு உகந்தது
—————
(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னா நிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-
பதிம் விஸ்வஸ்ய–விஸ்வத்துக்குப் பதியாயும்
ஆத்மேஸ்வரம்–தானே தனக்கு ஈஸ்வரனாயும் –
தனி நின்றும் சார்வு இல்லாமலும் –நான் மற்றொரு தெய்வத்தைச் சாராத மூர்த்தி
இது தானே மறையை தமிழாக அருளிச் செய்தது
நின்னுந்தி முதல்-நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன்
————-
கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-
மத்யே விரிஞ்ச கிரிஸம்–நீர்மையைக் காட்டி அருளவே இந்த அவதாரம் -பரத்வத்தை வருந்தியும் மறைக்க முடியாதே –
ஸ்ரீமந் நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார்
ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனி கொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார்.
——————-
இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-
பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம்-எல்லாவற்றிலும் அந்வயம்
காண் தோறும் ” என்னுமளவே போதுமாயிருக்க, “என்றும் காண் தோறும்” என்றதென்னென்னில்;-ஓ! நாம் ப்ரமித்தோம்; இவை வெறும் புஷ்பங்களே யொழிய எம்பெருமானது திருவுருவமல்ல” என்று தெளிந்து கொண்டாலும்,
அடுத்த க்ஷணத்தில் இது மறந்து போய், பழைய ப்ரமமே அநுவர்த்திக்கும்;
இப்படியே ப்ரமிப்பதும் தெளிவதும், ப்ரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியம் செல்லுமென்பது தோன்றும்.
பிரான் உருவே என்று அறிவுடைய நெஞ்சு பூரிக்கை அன்றிக்கே –மெய் மிகவே பூரிக்கும்-உடம்பும் அகப் படப் பூரியா நின்றது
இங்கு ஆவி என்ற சொல்லால் நெஞ்சு-நெஞ்சும் உடம்பும் பூரிக்கிறதே என்கிறார்-
———-
சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )
என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-
உபகாரம் அறியாத பசுக்களுக்கும் உதவுமவர் கிடீர் நமக்கு உதவாது ஒழிகிறார்
அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இறே
மேடான இடத்தைப் புடையென்று சொல்வதுண்டாகையாலே-அவர் நீர்மை ஏறிப் பாயாததோர் இடம் தேடி எங்கே கிடந்தோம்-(புடை என்று குஹையாய்-அவன் கடாக்ஷ குஹையிலே கிடந்தோம் என்றபடி
—————
(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ-நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )
உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-
ஸ்ரீ ருக்மிணி தேவி புவந ஸூந்தர காதின் வழியே புகுந்து உள்ளே புகுந்தாய் என்றாள் அன்றோ
விஸ்வம் பர பரா -ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
யான் பெரியன் –தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே –
‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப் போகாது; நீ தான் ஆராய்ந்து அறிய வேணும்’ என்கை.
—————-
ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-
உன்னை அனுசந்திக்கில் ஸ்த்தூலமான தேகம் போலே அமூர்த்தமான ஹ்ருதயம் தடியா நின்றது
உள்ள உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
வியாபக தத்வம் இரண்டு ஆகிறது போலே
வியாபகத்வம் இரண்டு ஸ்வரூபமம் ஞானமும் -அவனைப் போலவே ஆனதே -ஸ்வரூப வியாப்தி அவனது- ஞான வியாப்தி இவரது
உலகத்தையெல்லாம் பூரிக்க வல்லதாம்படி உடல் தடிக்குமளவு ஆநந்தத்தை அடைந்திடுவேனன்றோ என்றவாறு.
—————–
அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-
“பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.
சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.
————-
முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )
கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –
துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-
நல் நெஞ்சே-ஸோபாதிக பந்துக்களுக்கும்-நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் எம்பெருமானைப் பற்று என்று-சொல்லப் பாங்கான நெஞ்சு -என்னவுமாம்
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை–ஓவாத ஊணாக வுண்
என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-விச்சேதம் இல்லாத போகமாக புஜி
ஸோத்ரைவ ஹநச்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதய சரிதம் தவ ஸேவதேஸௌ.” என்று அதிமாநுஸ்தவத்திலே
ஆழ்வானருளிச் செய்தபடி சிறிய திருவடி இன்றைக்கும் ஸ்ரீராம குணாநுபவமே போதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாராய்த்து.
ஓவாத– ஒரு க்ஷண காலமும் விட்டு நீங்காத ஊண்– உணவு “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருத” இத்யாதிகளை நினைப்பது.
——————
உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-
தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஒளி வரும் ஜனிகள் போலே-ப்ரஹ்ம ஜன்மமும்
இழுக்கு என்பார்க்கு பண்டை நாளில் பிறவி உள் நாட்டு தேசு இறே–ஆச்சார்ய ஹிருதயம்-81-
பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும்
பகவத் அனுபவ யோக்கியமான ஜென்மமே வேண்டுவது
இதுக்குப் புறம்பான ஜென்ம வ்ருத்தங்கள் அப்ரயோஜகங்கள்
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
—————
(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்-அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-
ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் (7-39) சொல்லியிருப்பதை அடியொற்றி,“பிறப்பிறப்பு மூப்புப் பிணி துறந்து” எனப்பட்டது. இறக்கவும்– மிகவும்; அளவில்லாமல் என்கை).
————-
(குண அனுபவ யோக்யதை பகல் -அயோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )
எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–
பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81
பகல் போது போக்குவது ஓன்று
இரா வைகும் போது போக்குவது ஓன்று என்று பாராதே
எல்லாப் போதும் ஒரு போகியாகத்
தம்முடைய குணங்களாலே
எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்
(மோஹன அஸ்திரம்- மயங்கி தூங்க வைத்து -அவன் இடம் ஈடுபாடு
ஜ்ரும்பனாஸ்திரம் -சிற்றம் சிறு காலை எழுந்து மற்றவர்களை எழுப்புகிறாள் )
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு
குணத்தால் ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இறே
————–
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-
விவேக உணர்ச்சி-சிறிதும் இல்லாமையினாலே-
1-உணர்வு இன்மையால்
2-உணர்வு ஓன்று இன்மையால்
3-தெரிந்து உணர்வு இன்மையால்
என்று மூன்று படியாக யோஜிக்க வேணும்
தேகாத்மா விவேகம் இல்லாமை -உணர்வு இன்மை
சேஷ வஸ்து ஆத்மா என்று அறியாமை -உணர்வு ஓன்று இன்மை
பாகவத சேஷத்வம் அறியாமை -தெரிந்த உணர்வு இன்மை
அது பத்து-இது எட்டு-என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்
தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம்
வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்
பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது
அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று-ஒருவன் கவி பாடவும்
எம்பெருமானார் கேட்டு அருளி
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்
———–
அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல வேண்டா-பயப்படாமல் வாழ்த்து என்றபடி –
நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்றவாறு
———-
(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )
வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-
அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே
(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )
பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
————-
பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)
தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-
என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள்
எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ
———–
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-
கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திரு நாமங்கள் என்றுமாம்
கார் கலந்த மேனியான் சீர்கலந்தசொல்–இராமபிரானைச் சொல்லும்போது** =மேகச்யாமம் மஹாபாஹும்” என்று முன்னே
நீலமேகவடிவுடைபவ னென்கையாலே, கார் கலந்த மேனியானென்று இராமபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீராமாயணம் என்றபடி.
(கைலந்தவாழியான் சீர்கலந்த சொல்.) ***- ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகநாதா!” என்று கண்ணபிரான் திருவவதரிக்கும்போது
கையும் திவ்யாயுதமுமாக திருவவதரித்தனனாதலால் கைகலந்தவாழியனென்று கண்ணபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீபாசுவதம், ஸ்ரீமஹாபாரதம், ஹரிவம்சம் முதலியனவென்க.
(பார்கலந்தவல்லவயிற்றான் சீர் கலந்த சொல்.) பிரளயகாலத்திலே எம்பெருமான் உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள்ளே
வைத்துக் காத்தருளினபடியைப் பேசுகிற புராணங்கள்.
(பாம்பணையான் சீர் கலந்த சொல்.) பாம்பணையான் என்று அரவணைமேற் பள்ளிகொள்ளும் அணியரங்கநாதனைச் சொல்லுகிறது;
அவனுடைய சீர்கலந்த சொல்- திருவாய்மொழி; “வான் திகழுஞ் சோலைமதிளரங்கர் வான்புகழ்லோன்ற தமிழ் மறைகாளியதரமும்”
(திருவாய் மொழியின் தனியன்) என்கிறபடியே திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று
நம் ஆசாரியர்கள் அருளிச் செய்கையாலே பாம்பனையான் சீர்கலந்த சொல்- திருவாய் மொழியாம்;
ஆக, ஸ்ரீராமாயண பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக் கொண்டும்,
திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களைக் கொண்டும் பாவத்தைப் போக்கிக் கொள்ளார்களாகில் போகட்டும்;
போதைப் போக்குவதற்கு இவையொழிய வேறொன்றும் ஸாதநமல்ல என்றாராயிற்று.
————-
லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –
(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-
ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-
ஈதே சொல்–
கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்
அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும்
திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.
எப்போதும்’ என்பதை நான்காமடியிலே கூட்டி உரைக்கவுமாம் ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று
மொய்கழலே ஏத்து” என்னாதே “ஏத்த முயல்” என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரை காண்பதென்பது இல்லை,
ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்யோக நிலைமையை எப்போதுமிருக்கும் என்பது காட்டப்பட்டதாம்
கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்