Archive for the ‘ஸப்த காதை’ Category

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் -ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ வார்த்தா மாலையில் வார்த்தை -441-

December 17, 2025

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ ஸூக்திகள்-

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே-“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே-உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’
என்றருளிச் செய்து,
இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.-இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.

அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,-இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||

எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது) என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.-இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்-வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே–நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;-பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே-அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.-அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.-நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,-கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம் உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் – ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் – பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –மண் பிடி எடுத்து காட்டுகிறார் – பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

——————–

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலைநம்பி

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்யதேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?“-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்று என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் –ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் – –

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது-அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள் )
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை வெளிமானால் வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தாவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நம் வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீ அப்பன் பிரணதார்த்திஹராச்சார்யர் ஸ்வாமிகளுடைய தனியன்-வாழித் திருநாம பாசுரங்கள்–

December 17, 2025

நம் வர்த்தமான ஸ்வாமி -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் ஸ்வாமிகள் தனியன்

வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

————–

மார்கழியில் விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
மாவளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேரருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகரப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்துதித்தான் வாழியே
ஆர்வமுடன் அருளிச்செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க் கோதை சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்துதித்த வள்ளல் வாழியே
தெண் திரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தானுகந்த எதிராசன் கழல் தொழுமவன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

அப்பன் ப்ரணதார்த்தி ஹராசார்யர் நாள் பாட்டு
கண்ணபுரம் கண்ணனையே கருத்தமைத்து ஓங்கிடு நாள்
கந்தாடை குலம் விளங்கக் காசினியில் தோன்றிடு நாள்
அண்ணிக்கும் அமுதூறும் ஆழ்வார்கள் அனுக்ரஹித்த
அருளிச்செயல் அனுதினமும் ஆதரிக்க வந்திடு நாள்
அண்ணல் அருளாளன் அடி தொழு நம் தேசிகராம்
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் அவதாரம் செய்திடு நாள்
வண்மை மிகு வாதூல குலமோங்க வந்திடு நாள்
மார்கழியில் விசாகம் சேர் மா வளரும் நன்னாளே

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக் கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

ஐப்பசி சுக்ல பக்ஷ சதுர்தசி – கோவில் கந்தாடை வதுல தேசிக அப்பன் ராமானுஜாச்சார் ஸ்வாமி தீர்த்தம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

—————

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மணம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

———

நாள் பாட்டு

சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

———

வெண்பா

மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ எழுபத்தி நாலு சிம்மாசனாதிபதிகள் வைபவ சுருக்கம்

July 31, 2025

1-ஆளவந்தார் .குமாரர் சொட்டை நம்பி

2-பெரிய நம்பி குமாரர் புண்டரீகர்

3-திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்

4-திருமலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையான்

5-பெரிய திருமலை நம்பி குமாரர்கள் ராமானுஜன் மற்றும் பிள்ளைத் திருமலை நம்பி

6-கூரத்தாழ்வான்

7-முதலியாண்டான்

8-நடுவிலாழ்வான்

9-கோமடத்தாழ்வான்

10-திருக்கோவலூராழ்வான்

11-திருமோகூராழ்வான்

12-பிள்ளைப் பிள்ளையாழ்வான்

13-நடாதூராழ்வான்

14-எங்களாழ்வான்

15-அநந்தாழ்வான்

16-மிளகாழ்வான்

17-நெய்யுண்டாழ்வான்

19-சேட்டலூர் சிறியாழ்வான்

20-கோயிலாழ்வான்

21-உக்கலாழ்வான்

22-அரணபுரத்தாழ்வான்

23-எம்பார்

24-கிடாம்பி ஆச்சான்

25-கணியனூர் சிறியாச்சான்

26-கொங்கிலாச்சான்

27-ஈச்சம்பாடியாச்சான்

28-திருமலை நல்லான்

29-சட்டம் பள்ளி ஜீயர்

30-ஈச்சம்பாடி ஜீயர்

31-திருவெள்ளறை ஜீயர்

32-ஆட்கொண்ட வில்லி ஜீயர்

33-திருநகரிப் பிள்ளான்

34-காராஞ்சி சோமயாஜியார்

35-அலங்கார வேடவர்

36-நம்பி கருந்தேவர்

37-செருப்புள்ளி தேவராஜ பட்டர்

38-பிள்ளையுறந்தையுடையார்

39-திருக்குருகைப்பிரான் பிள்ளான்

40-பெரிய கோவில் வள்ளலார்

41-திருக்கண்ணபுரத்தெச்சான்

42-ஆசூரிப் பெருமாள்

43-முனிப் பெருமாள்

44-அம்மங்கிப் பெருமாள்

45-மாருதிப் பெரியாண்டான்

46-மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்

47-சோமாசியாண்டான்

48-ஜீயராண்டான்

49-ஈஸ்வராண்டான்

50-ஈயுண்ணிப் பிள்ளையாண்டான்

51-பெரியாண்டான்

52-சிறியாண்டான்

53-குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்

54-அம்மங்கியாண்டான்

55-ஆளவந்தராண்டான்

56-அருளாளப்பெருமானார் எம்பெருமானார்

58-தொண்டனூர் நம்பி

59-மருதூர் நம்பி

60-திருக்குறுங்குடி நம்பி

61-குரவை நம்பி

62-முடும்பை நம்பி

63-வடுக நம்பி

64-வங்கிபுரத்து நம்பி

65-ஸ்ரீ பராங்குச நம்பி

66-அம்மங்கியம்மாள்

67-பருத்திக்கொல்லையம்மாள்

68-உக்கலம்மாள்

60-சொட்டையம்மாள்

70-முடும்பையம்மாள்

71-குமாண்டூர் பிள்ளை

72-குமாண்டூர் இளைய வில்லி

73-கிடாம்பிப் பெருமாள்

74-ஆற்காட்டுப் பிள்ளான்

——————————

சொட்டை நம்பி
தனியன்
மகரே சைகபாத்யேச யாமுனாசார்ய நந்தநம்
கூரநாதகுரோ: பிஷ்யம் ஸேவே பகுணார்ணவம் |

இவர் ஆளவந்தார் குமாரர். தை மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் கூரத்தாழ்வான்-சிஷ்யர்.-‘என்னாச்சான்‘ என்பவருக்குத் தமப்பனார் இவர் ஒரு சமயம் திருக்கோட்டியூர் நம்பியிடம் கடுமையாகப் பேசி நடந்து கொண்டார். அவர்இவரை”நீ இங்கு இருக்காதே போ” என்று சொல்லி விட்டார்.இவர் தலைநகர் சென்று அரசாங்க உத்யோகம் பார்த்தார்.கடைசி காலத்தில் இவருடைய ஈடுபாட்டை சோதிக்க ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இவரிடம் “தற்சமயம் தேவரீர் என்ன நினைக்கிறீர்” என்று கேட்டதற்கு இவர் சொன்ன பதில் ”ஆளவந்தார் சம்பந்தத்தால் எனக்கு பரமபத ப்ராப்தி உண்டு. அங்கு ஸ்ரீ வைகுண்டநாதன் திருமுகம் நம்பெருமாள் திருமுகம் போல் குளிர்ந்திரா விட்டால் பரமபதத்தில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே வந்து விடுவேன்.ஆனால் பரமபதம் போனவர்கள் திரும்பி வரமுடியாதே” என்பதுதான்.திருவாய் மொழி 4-5-7 பாசுரத்தில் “தன் தனக்கு இன்றி நின்றானை” என்ற சொல் தொடருக்கு ஒரு வித்யாஸமான விளக்கம் சொல்லி எல்லாரையும் வியக்க வைத்தார்.தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார்சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம். அதாவது “ஆத்மாநம் மாநுஷம் மந்யே”’ என்று சொன்ன ராமபிரானுக்கே இந்தப் பெருமை சேரும்” என்றார்.இவருடைய குமாரர் “என்னாச்சான்”. என்னாச்சானுடைய குமாரர் “பிள்ளையப்பன்”

ஸ்ரீ ஆளவந்தாருக்கு நான்கு குமாரர்கள். திருவரங்கப் பெருமாள் அரையர்,தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையாரசு நம்பி, சொட்டை நம்பி. -நாதமுனிகளின் வம்சத்துப் பெயரான ‘சொட்டை’ குலமே இவருடைய திருநாமம்.-பெருமாளுக்கு அலங்காரம் செய்யும்போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்துத் தைக்கும்போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல்-code word-. ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள்.-நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளும்போது அவருடைய திருவடிகளை இணைக்கும் கம்பிகளுக்குச் சொட்டை என்று பெயர்.-நம்பெருமாள் புறப்பாட்டுக்குண்டான சாமான்கள் அனைத்தும் ஓர் அறையிலிருக்கும். ஆனால் இந்தச் சொட்டை கம்பி, பாசக் கயிறு போன்றவை எல்லாம் நம்பெருமாள் கைலியினால் மூட்டைப் போலக் கட்டி அவை பெரிய பெருமாளின் திருவடிக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும். இந்த மூட்டைக்குப் பெயர் சொட்டை மெத்தை. -நம்பெருமாளைத் தழுவி நிற்கும் இந்தக் கம்பிகளையும், பெரிய பெருமாளின் திருவடிக்கருகில் இருக்கும் சொட்டை மெத்தையையும்  அவன் எப்போதும் சொட்டைக்குலமாகவே கருதுகிறான்.

——————-

புண்டரீகர்
தனியன்
ஸூசௌ மாஸ் யுத்தராஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸுதம் |
யதிராஜாங்க்ரி ஸத்பக்தம் புண்டரீகாக்ஷ மாச்ரயே

இவர் பெரிய நம்பிகள் குமாரர். அத்துழாயின் சகோதரர். இவர் ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர்ராமானுஜரின் சிஷ்யர். இவர் ஒரு சமயம் சேரக் கூடாத ஸஹவாஸத்தினால் போகக் கூடாத இடத்திற்குப் போய் விட்டார். உடையவர் இவரைத் தேடிக் கண்டுபிடித்து திருத்திப் பணி கொண்டார்.

—————

தெற்காழ்வான்
தனியன்
கர்கடே பரவணே ஜாதம் ராமானுஜ பதாசரிதம்
காயபாந்வய ஸம்பூதம் நாராயண குரும் பஜே

இவர் திருக்கோட்டியூர் நம்பியின் குமாரர். ஆடித் திருவோணத்தில் அவதரித்தவர். காச்யப கோத்ரம்.-தேவகிப் பிராட்டியின் சகோதரர். இவருடைய பேரன் தெற்காழ்வான். பட்டருடைய சிஷ்யர். இந்தப் பேரன் பற்றி ஒரு சிறு குறிப்பு உண்டு. திருக்கோட்டியூரில்
கோளரி ஆழ்வான் என்று ஒருவர் இவருடைய நண்பர். ஆசார சீலர். தெற்காழ்வானுக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது. ஒரு புண்ய தினத்தன்று தெற்காழ்வான் குளிக்காமல் இருந்தார். இதைப் பார்த்த கோளரி ஆழ்வான் இவரைப் பார்த்து “இன்றாவது குளித்து பாபத்தைப் போக்கிக் கொள்ளக் கூடாதோ” என்று சொன்னார். இதற்கு தெற்காழ்வான் “நம்முடைய பாபங்கள் குளிப்பதனால் போய் விடாது. சிங்கப்பிரானின் சக்ராயுதத்தால் மட்டுமே நம் பாபம் தொலையும்”-என்று பதில் சொன்னார். திருக்கோட்டியூரில் எழுந்தருளி
யிருந்த பொழுது இதைக் கேட்ட பட்டர் தெற்காழ்வானின் ஞானத்தையும் நம்பிக்கையையும் பாராட்டினார்.

சுந்தரத் தோளுடையான்
தனியன்
மாலாதாரகுரோ: புத்ரம் ஸௌந்தர்யபுஜதே மிகம்
ராமானுஜார்ய ஸத்சிஷ்யம் வந்தே வர கருணாநிதிம் I

இவர் திருமலையாண்டான் குமாரர். இவருக்கு பெரியாண்டான் என்று மற்றொரு திருநாமம் உண்டு.-காச்யப கோத்ரம். இவர் சித்திரை மாதம் சித்ரை நட்சத்திரத்தில் அவதரித்தார். திருமாலிருஞ்சோலை அழகர் சன்னிதியில் புரோகிதர். இவருடைய மூதாதையர்களில் ஒருவர் “கண்ணுக்கினியான்” திருமாலிருஞ்சோலை அழகரை ஒரு சமயம் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். அதனால் இந்த வம்சத்திற்கு ”ஆண்டான்”என்று பட்டப் பெயர் உண்டு. இவருடைய வம்சத்தில்“யாமுநாசார்யர்” என்ற மஹா வித்வான் வாதிகேசரி ஜீயரின் சிஷ்யர். யோக சாஸ்த்ரத்தில் மேதாவி.

————-

பிள்ளைத் திருமலை நம்பி
தனியன்
வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாச்ரிதம்
ஸ்ரீசைலபூர்ண சத்புத்ரம் ஸ்ரீசைலார்யமஹம் பஜே

இவர் பெரியதிருமலை நம்பி குமாரர். வைகாசி விசாகத்தில் அவதரித்தவர். இவருக்கு ராமானுஜன் என்ற சகோதரர் உண்டு. இவருடைய சகோதரியின் கணவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர் என்ற 74 சிம்மாசனாதிபதி
களில் ஒருவர் (வ.எண். 35). இவருடைய மருமகன் புகழ் பெற்ற “விஞ்சிமூர் தாதாசார்யர்.

நடுவிலாழ்வான்
தனியன்
யேந ப்ரோல்லஸதே நித்யம் கார்க்யவம் மஹாம்புதி:
மந்மஹே தம் ஸதா சித்தே மத்யமார்யம் கலாநிதிம் II

இவர் கண்ணபிரான் குலமாகிய யதுவம்ச புரோகித ராகிய கர்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். திருநாராயணபுரத்தில் உடையவர்இருந்த காலத்தில் இவர்அவர்கூடவே இருந்தார். இவர்ஸ்ரீபாஷ்யம் சாதித்த காலத்தில் வங்கிபுரத்து ஆச்சியும் சொட்டை அம்மாளும் ஸ்ரீபாஷ்யம்கேட்டு இது அற்புதமாக இருந்தது என்று சொன்னார்கள். அவர்களிடம் இவர் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள் என்று அருளிச் செய்தார்.
மணவாள மாமுநியின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான்ஜீயர் இவர் வம்சத்தில் தோன்றியவர்.-எம்பெருமானாருடைய சரம தசையிலே இவர் திருவரங்கம் எழுந்தருளினார். எம்பெருமானார் தன்னை ஆச்ரயித்த மாருதியாண்டான் மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான், அரணபுரத்தாழ்வான், ஆஸூரிப் பெருமாள், முனிப்பெருமாள், அம்மங்கிப் பெருமாள் முதலானோரை இவரை ஆச்ரயிக்கச் செய்தார்.
இவர்கள் அனைவரும் 74 சிம்மாசனாதிகளாக உடையவரால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவருடைய வம்ச பரம்பரை: – நடுவிலாழ்வான்ஆழ்வான் – வைத்த மாநிதி – அழகிய மணவாளர் -வரதாசார்யர் – வேங்கடத் துறைவார் – சடகோபாசாரியார் – போரேற்று நாயனார் – கோவிந்தாசார்யர் – கிருஷ்ணமாசார்யர் – ராமானுஜாசார்யர் – கோவிந்த தாஸரப்பர்என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்.

கோமடத்தாழ்வான்கோமடத்துப் பிள்ளான் என்றும் இவர்அழைக்கப்படுவார். இவருடைய சிஷ்யர் காக்கைப் பாடியாச்சான் பிள்ளை. இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யம் வாசித்தார்.
இவருடைய வம்ஸத்தில் பிறந்தவர் மணவாள மாமுநிகள். மணவாள மாமுநியின் தகப்பனார் “திகழக் கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணர். மணவாள மாமுநிகளின் பூர்வாஸ்ரம் பேரரான ஜீயர் நாயனார்-கோவில் கந்தாடை அண்ணனின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்.

பிள்ளைப் பிள்ளையாழ்வான்
இவர் உயர் குடியில் பிறந்த ஒரு வித்வான். கூரத்தாழ்வானுடைய சிஷ்யர். பாகவதர்களிடத்திலே கடுமையாகப் பேசி அபசாரப்படுபவர். ஒரு புண்ய தினத்தன்று இவர் தீர்த்தமாடி கரை ஏறுகையில் இவரிடம் கூரத்தாழ்வான் ஒரு தானம் கேட்டார். புண்ய தின
மானதால் இவரும் சம்மதித்தார். “மனம், மொழி,மெய் எதனாலும் பாகவத அபசாரப்படாமல் வாழக் கடவேன்” என்று சத்யம் பண்ணித் தருவதே அந்த தானம். இவரும் தண்ணீர் வார்த்து தானம் பண்ணிக் கொடுத்தார். இருந்தாலும் ஒரு சமயம் பாகவத அபசாரப்பட்டு மனம் வருந்தினார். கூரத்தாழ்வானை சந்திக்க மனம் கூசினார். இதை அறிந்து கூரத்தாழ்வான் இவர் வீடு சென்று மன்னித்து இவரை மனம் தேற்றினார்.
பராசர பட்டர் காலத்தில் இவருடைய திருமாளிகையை இடிக்கும்படி வீரசுந்தரப்ரும்மராயர் என்ற அரசு அதிகாரி கட்டளையிட்டார். பட்டர் தடுத்தார். இருந்தும் இவர் திருமாளிகை இடிக்கப்பட்டதால் பட்டர் திருக்கோஷ்டியூர் சென்று விட்டார்.
“புள்ளும் சிலம்பின காண்” – விளக்கம் – எம் பெருமானை நினைப்பதற்கு விடியற்காலை வேளையில் பறவைகளின் ஒலி மிகவும் உத்தேசயம் என்பதை இவர் தெரிவிப்பார்.
திருவிருத்தம் வ்யாக்யானத்தில் – “குழந்தை தாய்ப்பால் பருகி விட்டு தாய் முகம் நோக்குவது போல் அடியார்கள் எம்பெருமான் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு அவன் திருமேனி, குணங்களில் ஈடுபடுவார்கள்”’ என்பதை அடிக்கடி தெரிவிப்பார்.

நடாதூராழ்வான்
தனியன்
யஸ்மிந்பதம் யதிவரஸ்ய முகாத்ப்ரணேதுர், நிஷ்க்ராம தேவநிததே நிகமாந்த பாஷ்யம் |
தஸ்யைவ தம் பகவத: ப்ரிய பாகிநேயம், வந்தே குரும் வரதவிஷ்ணு பதாபிதாநம்

இவர் ராமானுஜருக்கு நித்ய அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்பவர். இவர் காஞ்சீ புரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தார். இவருக்கு வரத விஷ்ணு”என்ற பெயருண்டு. உடையவர் இவருக்கு ஸ்ரீபாஷ்ய சிம்மாசனாதிபதி என்ற விருது வழங்கினார். எங்களாழ்வான் இவருடைய சிஷ்யர். நடாதூரம்மாள் என்னும் வாத்ஸ்ய வரதாசார் இவருடைய பேரர். இவர் ராமானுஜரின் சகோதரியின் குமாரர். இவர் “மாநயாதாத்ம்ய
நிர்ணயம்” என்ற நூலை அருளியுள்ளார். இவருடைய அர்ச்சா விக்ரகம் திருவெள்ளறை கோவிலில் உள்ளது. இவரிடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் ஸ்ரீபாஷ்யம் கேட்டு மகிழ்ந்தனர்.

எங்களாழ்வான்
தனியன்
ஸ்ரீ விஷ்ணு சித்த பதபங்கஜ ஸங்கமாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண Iநோ சேத் மமாபி யதிசேகர பாரதீநாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: 1
வாழித் திருநாமம்

சீராரும் வெள்ளரையில் சிறந்துதித்தோன் வாழியே சித்திரை ரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே பார்புகழும் எதிராஜன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே தீதிலா பாடியத்தை தேர்ந்துரைப்போன் வாழியே தாரணியின் விட்ணுமதம் தழைக்க வந்தோன் வாழியே தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

இவர் திருவெள்ளறையில் சித்திரை மாதம் ரோஹிணி நட்சத்ரத்தில் அவதரித்தார். நடாதூர் அம்மாள் இவருடைய சிஷ்யர். ஸ்ரீபாஷ்ய உபந்யாஸத்தில் வல்லவர். விஷ்ணு புராணத்துக்கு “விஷ்ணு சித்தீயம்” என்னும் வ்யாக்யானத்தை அருளிச் செய்தவர். நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளாகிய ”ஆயர் தேவு” இவர் கனவில் வந்து நாவல் பழம் கேட்டு அடிக்கடி தூக்கத்தைக் கெடுக்க இவர் இது பற்றி நஞ்சீயரிடம் முறையிட்டார். திருநாராயண புரத்திலிருந்து ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்தபின் 7-8 வருடங்கள் கழிந்த பின் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவர் ஸ்ரீபாஷ்யம் எழுத உசாத் துணையாக இருந்தார். அதனால் இவருக்கு உடையவர்” எங்களாழ்வான்” என்று பெயரிட்டார். உடையவரை விட இவர் 80 வயது சிறியவர். “ப்ரமேய சங்க்ரஹம்”, “ஸங்கதி மாலா’, ”கத்ய வ்யாக்யானம்”. இவை இவர் அருளிய நூல்கள். நடாதூரம்மாள் இவருடைய சிஷ்யர். நடாதூர் ஆழ்வான் நடாதூரம்மாளை இவரிடம் ஆச்ரயிக்கும் படி அனுப்பினார். நஞ்சீயர், நம்பிள்ளை காலங்களில் இவர் வாழ்ந்துள்ளார். இவர் திருக்குருகைப் பிள்ளான் திருவடிகளில் திவ்யப்ரபந்த காலக்ஷேபம் கேட்டார். இவருடைய பெண் செங்கமல நாச்சியார். இவருடைய மாப்பிள்ளை வரதாசார்யர்.

மிளகாழ்வான்
இவருடைய தேசத்து அரசன் வித்வான்களுக்கு ஒரு பரீட்சை வைத்தான். இவர் அதற்காக அரச சபைக்கு சென்றார். வாயிற் காப்போன் உள்ளே விடவில்லை.நான் பண்டிதனாயிற்றே. ஏன் என்னை உள்ளே விட வில்லை என்று கேட்டார். “நீர் வைஷ்ணவராயிற்றே.- அதனால்தான்” என்று பதில் கிடைத்தது இவர் ஆனந்தக் கூத்தாடினார். தன்னைப் பிறர் வைஷ்ணவராக மதித்தது இவருக்கு மகிழ்ச்சியை தந்தது.
இவர் வித்வானாகையால் முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்தார். “தோற்றவர் மற்றவரை தோளில் சுமக்க வேண்டும்” என்பது நிபந்தனை. மிளகாழ்வான் தோற்றார். ஆகையால் முதலியாண்டானுடைய பாதங்களை தலையில் ஏற்றார். அவர் இவரை ராமானுஜரிடம் ஆச்ரயிக்கச் செய்தார். ராமானுஜரும் இவரை ஏற்று நல்ல கௌரவம் கொடுத்தார்.
முதலியாண்டான் மிளகாழ்வானை “நீர் ஏன் அடிக்கடி திருவானைக்காவுக்கு (சிவஸ்தலம்) செல்கிறீர்” என்று கேட்டார். அதற்கு இவர் சொன்ன பதில் “நான் அவர்களுக்கு பகவத் சம்பந்தமான வார்த்தைகள் சொல்வேன். அதனால் அவர்களைத் திருத்தி பணி கொள்வேன்”. “‘அப்படி யாராகிலும் திருந்தினார்களா?” என்ற கேள்விக்கு “நான் எல்லோரையும் நாராயண சம்பந்திகளாக நினைக்கிறேன். ப்ரக்ருதி சம்பந்திகளாக காணவில்லை. ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாக இராதே” என்று பதிலளித்தார்.

உக்கலாழ்வான்
இவர் ராமானுஜர் மடத்தில் பிரஸாத கலம் எடுக் கும் கைங்கர்யம் செய்வார்.

கணியனூர் சிறியாச்சான்
இவர் வங்கி புரத்து நம்பியின் சிஷ்யர். போசள நாட்டிலிருந்து இங்கு வந்தவர். மிகவும் சாது. பசும் புல்லைக் கூட மிதிக்க மாட்டார். நாச்சியார் திரு மொழியில் “ஈட்டீரிட்டு விளையாடி” என்ற சொல் தொடரை மிகவும் ரஸிப்பார். எல்லாம் வல்ல எம் பெருமான் தன்னுடைய எளிமையை காட்டி ரஸிப்ப தற்காக பிறவி எடுத்து ஆயர்களுடனும் மாடு கன்றுகளுடனும் எளிமையுடன் பழகி விளையாடுவதைக் கண்டு பரவசப்படுவார். இவர் சிறந்த அனுஷ்டானங்களை உடையவர். உடம்பெல்லாம் தழும்பாகும்படி எம்பெருமானைத் தொழுவார்.இவர் பற்றி கூரத்தாழ்வான் பட்டரிடம் “இவர் மேனி சிறுத்து ஞானம் பெருத்த சிறுமாமனிசர்” என்று கூறுவார்.ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இவர் அடிக்கடி சொல்லும் ஸ்லோகம் பின்வருமாறு:
ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ய: II
“ராம பிரானுக்கு எல்லாப் பெருமைகளும் இருந்தாலும் கண்ணனைப் போல தன் அடியார்களுக்காக தூது சென்ற பெருமை இல்லையே” என்று இவர் பட்டரிடம் கேட்டார். “இது ராமபிரானுக்கு குறை இல்லை.அவர் அரச குலத்தில் பிறந்ததாலும் நாட்டிலும் குறை இல்லாததாலும் இவரை தூது அனுப்புவார் யாரும் இல்லை” என்று பட்டர் பதிலளித்தார்.“ராமபிரானுடைய அழகுக்கு சுப்ரமண்யனையோ மன்மதனையோ ஒப்பாகச் சொல்லக் கூடாது” என்று இவர் ஒரு சந்தர்பத்தில் பட்டரிடம் தெரிவித்தார்.”வால்மீகி ரிஷி ராமாயணத்தில் ராமருக்கு கண் எச்சில் பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவருடைய அழகை கொஞ்சம் குறைத்து “தேவ குமார ரூபம்” என்று எழுதி விட்டார்” என்று பட்டரிடமிருந்து சாமர்த்யமான பதிலைப் பெற்றார்.

ஆட்கொண்ட வில்லி ஜீயர்
தனியன்
ஞான வைராக்ய ஸம்பந்தம் ராமானுஜ பதாசரிதம்
சதுர்த்தா ரம ஸம்பந்நம் ஸம்யமீந்தரம் நமாம்யஹம் |
இவர்சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். எம்பெருமானார் நியமனத்தால் முதலியாண்டானின் குமாரர் கந்தாடையாண்டான் இவரை ஆச்ரயித்தார்.
இவர் ஒருநாள் வெளியில் சென்று கொண்டிருந்த பொழுது நஞ்சீயர் இவரை தண்டனிட்டு வணங்கினார். இவர் அவரிடத்தில் “தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும் பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்றுதான்
பகவத் ருசி ஏற்பட்டது என்று அர்த்தம்” என்றும் தெரிவித்தார்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான்
தனியன்
“ஸிம்ஹே ம்ருகலிரோத்பூதம் ராமானுஜபதாச்ரிதம் |
த்ராவிடாம்நாய தத்வக்ஞம் குருகாதிப மாஸ்ரயே I
த்ராவிடஸாரக்ஞ்ம் ராமானுஜ பதாச்ரிதம் 1
ஸுதியம் குருகேஸார்யம் நமாமி ஸ்மிரஸாந்வஹம் |

இவர் ஆவணி மாதம் மிருக சீர்ஷ நட்சத்ரத்தில் அவதரித்தார். இவர் பெரிய திருமலை நம்பியின் மூன்றாவது குமாரர். (பிள்ளை திருமலை நம்பி -ராமானுஜன் -முதல் இருவர்)பெரிய திருமலை நம்பி இவரை ராமானுஜருக்கு அபிமாந புத்ரராக கொடுத்தார். இவர் ராமானுஜர் திக்விஜய யாத்ரையாக திருக்குருகூர் சென்றிருந்த பொழுது இவரும் அவர் கூடவே சென்றிருந்தார். நம்மாழ்வார் செய்தருளின பேருபகாரத்துக்காக அவர் திருநாமம் சாத்துகைக்கு அர்ஹமாக ஒருவரைத்
தேடிய பொழுது “பிள்ளான்” என்ற பெயர் கொண்ட இவரை தேர்ந்தெடுத்தார். இவருக்கு ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்று திருநாமம் சாத்தியருளினார்.
“திருக்குருகைப்பிரான்” என்று திருக்கோட்டியூர் நம்பிக்கு ஒரு பெயர் உண்டு. அவருடைய திருநாமமும் இவருக்குச் சேர்ந்திருப்பதைக் கண்டு எல்லா வித்வான்களும் மகிழ்ந்து இவரை கௌரவப்படுத்தினார்கள்.
இவர்சிறுபுத்தூரிலே எழுந்தருளியிருக்கும் பொழுது சோமாசியாண்டான் இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யம் வாசித்தார். அவர் இவரிடம் “தனக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று கேட்ட பொழுது இவர் “நீர் பாட்டம், ப்ரபாகரம், மீமாம்ஸை
இவையத்தனைக்கும் கர்த்தா, பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மையடித்திராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்று அருளிச் செய்தார்.
ராமானுஜர் கட்டளையின் பேரில் ஆறாயிரப்படி வ்யாக்யானம் எழுதியவர். (உபதேச ரத்னமாலை 41ம்பாசுரம்)-இவரிடம் எங்களாழ்வான் திவ்ய ப்ரபந்தத்துக்கு
அர்த்தம் கேட்டார். இவர் ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்தார்.
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்தருளிய பொழுது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யன் திருநாமத்தைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களையே சொல்லிக்
கொண்டிருந்தார்கள். அதனால் இவர் அந்தஇல்லத்தை விட்டு வெளியேறி விட்டார்.
“வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று உடையவர் சொல்லும் அளவுக்கு உடையவர், இவர்மீது அன்பு கொண்டிருந்தார்.
இவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் “கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ” என்று சொல்வதைக் கண்ட நஞ்சீயர், அழத் தொடங்கினார். அப்போது இவர் “சீயரே நீர்கிடந்து அழுகிறதென்? அங்குபோய் பெறுகிற பேறு இதிலும் தண்ணிது (தாழ்ந்தது)
என்று தோற்றி இருந்ததோ?” என்று அருளிச் செய்தாராம்.

திருக்கண்ணபுரத்தெச்சான்
ஒரு சமயம் திருக்கண்ணபுரம் கோவிலைச் சுற்றி விரோதிகள் சூழ்ந்து கொண்டனர். இவர் உடனே திருமங்கையாழ்வார் பாசுரமான “செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ கைத்தலத்தது” பாசுரத்தைப் பாடினார். உடனே எம்பெருமான் “இதோ ஒரு நொடியிலே
எதிரிகளை அழித்து விடுகிறேன்” என்று சொன்னாராம்.

17. அம்மங்கிப் பெருமாள்
இவர் ராமானுஜருக்கு பாலமுது காய்ச்சிக் கொடுப்பார்.

18. மாருதிப் பெரியாண்டான்
இவர் ராமானுஜருக்கு திருக்கைச் செம்பு பிடிப்பார்

19. மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
தனியன்
ஞாதும் கூரகுலாதிபம் க்ருமிகளாத் ப்ராப்தாபதம் ப்ரேஷித: 1
ஸ்ரீராமாவரஜேந கோஸலபதாத் த்ருஷ்ட்வா ததீயாம் ஸ்திதிம் |
ஸம்ப்ராதஸ்த்வரயா புராந்தகபுராத் கல்யாண வாபீதடே
யோ :ஸௌ மாருதிரித்ய ம்ஸத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே I
இவர் மடத்திற்கு அமுதுபடி, கனியமுது பால்,நெய் முதலானவை வாங்க ஏற்பாடு செய்வார்.
உடையவர் திருநாராயணபுரம் சென்ற பொழுது ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வான் பெரிய நம்பி ஆகியோர்களுடைய நிலமையை அறிந்து வர ராமானுஜர் இவரையும் சிறியாண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீரங்கத்தக்கு அனுப்பினார். இவர் அங்கு சென்று வந்து பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளியதையும் கூரத்தாழ்வான் கண்களிழந்ததையும் உடையவருக்கு தெரிவித்தார்.

சோமாசியாண்டான்
தனியன்
நௌமி லக்ஷ்மணயோகீந்த்ர பாதஸேனவக தாரகம் |
ஸ்ரீராமக்ரது நாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் |
இவர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ராமமிஸ்ரர்.-இவர் ஸோம யாகம் செய்ததால் சோமாசியாண்டன் என்று பெயர் வந்தது.
“எம்பெருமானாரே சரணம்” என்று சொல்வதில் இவருக்கு மிகவும் ஆர்வம்.-இவர் திருநாராயணபுரம் பெருமாள் செல்வப் பிள்ளைக்கு மிகவும் அந்தரங்கர். அவரைப் பாட்டுப்
பாடி மகிழ்விப்பார். ஒரு நாள் “தனக்கு மோக்ஷம் உண்டா” என்று செல்வப் பிள்ளையை கேட்டார். கிடையாது” என்று பதில் வந்தது. “நான் பாட்டுப் பாடி உம்மை மகிழ்வித்தேனே. அதற்கு பலன் கிடையாதா” என்று இவர் கேட்டார். “நீர் பாடினதுக்கு நான் ஆடினது சரியாகப் போய் விட்டது” என்று செல்வப்பிள்ளை பதில் சொன்னார். மேலும் “ராமானுஜரைப்
போல் அபிமானத்துடன் இருந்தால் மோக்ஷம் நிச்சயம்”. என்றும் சொன்னார். அது முதல் இவர் ராமானுஜரிடத்தில் மிகவும் ப்ரீதி விச்வாசமாக இருந்தார். ஸ்ரீரங்கத்தில் இவர் குலத்தைச் சேர்ந்தவர்களே வாக்ய பஞ்சாங்க மிராசு பெற்றவர்கள். இவர் “ஸ்ரீபாஷ்ய விவரணம்”,”குருகுணாவளி” ஆகிய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.

21. சிறியாண்டான்
இவர் மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானுடன் திருநாராயண புரத்திலிருந்து ஸ்ரீரங்கம் சென்று பெரிய நம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருடைய நிலையை அறிந்து வரச் சென்றார்.

22. தொண்டனூர் நம்பி
இவர் தொண்டனூரில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்வதையே இயல்பாகக் கொண்டவர். ஒரு சைவப் பண்டாரம் வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பான். ஒரு நாள் அவனுக்கு சோறு கிடைக்கவில்லை.ஒருவர் அவனை நோக்கி “நீ தொண்டனூர் நம்பி வீடு
சென்று “ஸ்ரீமதே ராமானுஜாய நம:” என்று சொல்லு.உனக்கு பிச்சை கிடைக்கும்” என்று சொன்னார். அவனும் அப்படியே பல முறை சொன்னான். நம்பி வெளியே வந்து பார்த்து “நீ சைவனாயிற்றே. ஏன் ராமானுஜர் நாமம் சொன்னாய்” என்று கேட்டார். அவன் நடந்த உண்மையை அப்படியே சொன்னான். நம்பி அவனுக்கு உணவு அளித்தார். இதற்காக ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பியை குறை கூறினார்கள். அவர்களுக்கு நம்பி ஆசார்யன் திருநாம மஹிமை பற்றி எடுத்துச் சொன்னார்.அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர் அந்த சைவப் பண்டாரம் ஸ்ரீவைஷ்ணவனாக மாறி கைங்கர்யங்களில் ஈடுபட்டான்.
“திருக்கோட்டியூரில் செல்வநம்பி தம்பதியர் போல் தொண்டனூர் நம்பி பாகவத சேஷத்வமே
யாத்ரையாய் போந்தார்” என்று திருவாய் மொழி-8-10-11 பாசுர வ்யாக்யானத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தொண்டனூர் நம்பி அநந்தாழ்வானுடன் ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜரை சந்தித்தார். ராமானுஜர் அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் ஆச்ரயிக்கும்படி கட்டளையிட்டார்.-இவர் ராமானுஜரிடம் விண்ணப்பித்து அந்த தேச அரசன் விட்டல தேவராயனுடைய மகளின் பிசாச பீடையைப் போக்கி அரசனை ஆச்ரயிக்கச் செய்தார்.

23. மருதூர் நம்பி
இவர் மைசூர் பிராந்தியத்திலிருந்து அநந்தாழ்வா னுடன் ஸ்ரீரங்கம் வந்து அருளாளப் பெருமாள் எம் பெருமானாரிடம் ஆச்ரயித்தார்.

24- மழுவூர் நம்பி
இவர் மைசூர் பிராந்தியத்திலிருந்து அநந்தாழ்வா னுடன் ஸ்ரீரங்கம் வந்து அருளாளப் பெருமாள் எம் பெருமானாரிடம் ஆச்ரயித்தார்.

25. முடும்பை நம்பி
தனியன்
ஸ்ரீராமானுஜ ஸம்யதீந்த்ரசரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்நப்ரியம் |
ஸேவே:ஹம் வரதார்ய நாமகமமும் ஸூக்த்யா ப்ரிஸித்தம் முதா 1
பால்யாத் பரிபூர்ண போத ஸடஜித் காதா ராகோஜ்வலம் 1
வாத்ஸ்யம் பூர்ணமுதாரம் ஆச்ரிதநிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம்
ஸ்ரீராமானுஜ யோகீந்த்ர பதபங்கஜ ஷட்பதம் |
முடும்பை பூர்ணமநகம் வந்தே வரதஸம் கஞ்கம்

இவர் காஞ்சிபுரத்துக்கருகில் முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர்.-இவருடைய இயற்பெயர் ஸ்ரீவரதாசார்யர். இவர் ராமானுஜரின் ஸஹோதரியின் கணவர். ராமானுஜரை ஆச்ரயித்தார். கூரத்தாழ்வானின் அன்புக்கு பாத்ரமானவர். நல்ல ஞான அனுஷ்டானங்களை உடையவர்.-இவர் குமாரர் ராமானுஜ நம்பி. ராமானுஜ நம்பியின் குமாரர் முடும்பையாண்டான் என்னும் தாசரதி.-தாசரதி முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்தார். இவருடைய வம்ச பரம்பரை கீழ்கண்டவாறு:

தாசரதி –தேவப்பெருமாள் என்னும் வரதாச்சார்யார் -இளையாழ்வார் என்னும் லஷ்மணாச்சார்யார் –
இங்கிருந்து இரண்டு கிளைகள் -முதலில் -ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் -அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் –
அடுத்தது -ராமானுஜ குரு -அழகப்பயங்கார் -தேவராஜ குரு என்னும் பேரருளாள ஸ்வாமி–ராமானுஜம் பிள்ளை -இவர் மா முனிகளின் சிஷ்யர் பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் -இவர் திருக்குமாரர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் ஸ்வாமி-

“காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” வம்ஸத் தினரும் முடும்பை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்களே.
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகா சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் யோரும் நாயனார் ஆகி முடும்பை நம்பி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆழ்வார் திருநகரியில் கீழ்த் திருமாளிகை, மேலத்திரு மாளிகை, வடக்குத் திருமாளிகைகளைச் சேர்ந்த ஆசார்யர்கள் முடும்பை நம்பி வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர். 

26. வடுக நம்பி
தனியன்
“சைத்ரேத்வஸ்விநி ஸஞ்ஜாதம் ஸம்ஸாரார்ணவ தாரகம் 
ராமானுஜார்ய ஸ்த்சிஷ்யம் ஆந்த்ரபூர்ணமஹம் பஜே
ராமாநுஜார்ய ஸத்சிஷ்யம் ஸாலக்ராம நிவாஸிநம்
பஞ்சமோ பாய ஸம்பந்தம் ஆந்த்ரபூர்ணமஹம் பஜே
இவர் கி.பி. 1047 சித்திரை மாதம் அஸ்வதி நட்சத்ரத்தில் திருநாராயணபுரம் அருகிலுள்ள “ஸாலிக்கிராமம்” என்ற ஊரில் அவதரித்தார். இவருக்கு ஆந்த்ரபூர்ணர் என்று மற்றொரு திருநாமம் உண்டு. ராமானுஜருக்கு பாலமுது கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு உத்ஸவ நாள் இரவு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி உடையவர் மடத்து வாசலில் எழுந்தருளும் போது உடையவர் பெருமாளை ஸேவிக்கப் போனார். அப்பொழுது வடுக நம்பியை பெருமாள் ஸேவிக்க அழைத்தார். “எனக்கு நீரே பெருமாள். உமக்காக பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். பால் பொங்கி விடும். ஆகையால் பெருமாள் ஸேவிக்க வரவில்லை” என்று சொன்னார். “தேவுமற்றறியேன்” என்பது இவர் நிலை.-கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் பெருமாளிடத்திலும் ஈடுபாடு, ராமானுஜரிடத்திலும்
ஈடுபாடு. அதனால் அவர்களை “இருகரையர்” என்று இவர் சொல்லுவர்.

தினந்தோறும் உடையவர் திருவடி நிலைகளை தண்டனிட்டு உடையவர்வெளியிடங்களுக்கு புறப்படும் பொழுது அவர் திருமுன்பே கொண்டு வைப்பார்.
இவர் உடையவருக்கு எண்ணைக் காப்பு சாத்தி அருளுவார்.தினந்தோறும் இரவு உடையவர்பாலமுது செய்தருளும் போது அவரை பள்ளிக் கட்டிலில் ஏறியருளப்
பணணி அவரிடம் சந்தை சொல்லிக் கொள்வார்.-பசுக்களுக்கு புல் கொண்டு போடுவார்.
ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர். இவர் பக்கத்தில் இருந்த பொழுது “ஓம் நமோ நாராயணாய” என்று சொன்னார். “ஸ்ரீமதே ராமானுஜாய நம: ‘ என்று சொல்ல வில்லையே என்று சொல்லி அவர் இருந்த இடத்திலிருந்து இவர் வெளியேறி விட்டார்.
இவர் உடையவருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைக் கொண்டு கீழ் நாட்டில் பஞ்சத்தைப் போக்கினார்.-இவர் உடையவரின் திருவடிச் சுவடுகளை திரு வாராதனம் செய்வார். ஒரு நாள் யாத்ரைக்கு புறப்படும் பொழுது உடையவர் திருவாராதநப் பெருமாளையும், உடையவர் திருவடிச் சுவடுகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தார். இதைக் கண்டு உடையவர் “‘வடுகா! இதென் செய்தாய்” என்ன. வடுக நம்பியும் “உங்கள் தேவரில் என் தேவருக்கு என்ன குறை?” என்று சொல்லி விட்டார்.-உடையவர் பெருமாளை ஸேவிக்கும் பொழுது”வடுகா; பெருமாள் கண்ணழகைப் பார்” என்று சொன்னார். வடுக நம்பி “என்னமுதனை (ராமானுஜரை)க்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று
சொன்னார்.-இவருடைய மடியிலே முடியை வைத்து எம்பார் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
“ராமானுஜ அஷ்டோத்தர ப தநாம ஸ்தோத்ரம்”, “யதிராஜ வைபவம்” (114 ஸ்லோகங்கள்) “யதிராஜ மங்களம்” (21 சுலோகம்) இவர் அருளியவை.
“வடுக நம்பி திருநாட்டுக்குப் போனார்” என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட அருளாளப் பெருமாள் எம்பெருமானார் “இவர் உடையவர் ஸ்ரீபாதத்துக்குப் போனார்” என்று சொல்ல வேண்டும் என்று திருத்தி யருளினார்.

27. வங்கி புரத்து நம்பி
தனியன்
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாசரிதம் |
வந்தே வங்கிபுராதீயம் ஸம்பூர்ணார்யம் க்ருபாநிதிம் |1
இவர் திருவாய் மொழியின் சாரம் “அர்த்தபஞ்சகம்” என்று அருளிச் செய்வார்.
பிராட்டிக்கு பதி என்பதே (ஸ்ரீயப்பதி) எம்பெருமானின் பெருமை. வைஷ்ணவ மதத்தின் பெருமையும்-அதுவே என்று அடித்துக் கூறுவார்.-இவருக்கு “திருவாராதநக்ரமம்” பற்றி சொல்லி கொடுப்பதில் ராமானுஜருக்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. அது பற்றி ராமானுஜர் இவரிடம் வருத்தம் தெரிவித்தார்.
எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்தார் என்பது இவர் கருத்து..
இவர்ஒரு சமயம்வீதியில் நம்பெருமாளைஸேவிக்க இடைச்சிகள் நின்ற பக்கம் சென்று ஸேவித்தார். அவர்கள் ஸேவிக்கும் பொழுது தமிழில் “பால் உண்பீர்! பழம் உண்பீர்” என்று சொன்னார்கள். இவர் “விஜயீபவ” என்று சொல்லி ஸேவித்தார். இது தெரிந்து கொண்ட முதலியாண்டான் இவரிடம் இவருடைய முரட்டு ஸம்ஸ்க்ருதத்திற்காக குறை சொல்லி விட்டு
“நாம் நாம்தான். அவர்கள் அவர்கள்தான்” என்று ஆய்ச்சியர்களின் பக்தியை மெச்சினார்.
எம்பெருமானாரும் வங்கி புரத்து நம்பியும் எழுந் தருளியிருந்த சமயத்தில் எம்பெருமானாரை ஸேவிக்க வந்தவர்களிடையே ஒரு விசாரம் ஏற்பட்டது. நமக்கு
தஞ்சமாக நினைத்திருக்கப்படுவது “க்ஷத்ரபந்துவின் வார்த்தை” என்று வங்கி புரத்து நம்பி சொன்னார்.-இல்லை காளியன் வார்த்தை” என்று எம்பெருமானார் சொன்னார். க்ஷத்ரபந்து சொன்னது “உன்னை வணங்குகின்ற எனக்கு அருள் புரிய வேண்டும்” என்பது. காளியன் சொன்னது “‘உன்னை வணங்கத் தெரியாத எனக்கு க்ருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும்”-என்பது. நிர்ஹேதுக க்ருபையின் பெருமையை எடுத்துரைக்க இந்த ஸம்வாதம் உதவியது. மணக்கால் நம்பியின் சிஷ்யரான வங்கி புரத்தாச்சியின் குமாரர் வங்கி புரத்து நம்பி.-74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான ‘சிறியாத்தான்” இவருடைய சிஷ்யர்.

28. பராங்குச நம்பி
தனியன்
கோவிந்த ராஜாவயஜோ மநீஷி பராங்குஸோ யாமுநவைமநஸ்யம் I
அபாசகார ப்ரஸபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்தமணி ப்ரதீப: ||
இவர் எம்பெருமாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டருடைய குமாரர். இவருடைய குமாரரான “கூரநாராயண ஜீயர்” பராசர பட்டருடைய சிஷ்யர்.
உடையவர் எம்பாரைப் பார்த்து “இந்தக் குழந்தைக்கு நம்மாழ்வார் திருநாமத்தைச் சாத்தும்” என்று கேட்டுக் கொண்டபடி இவருக்கு பராங்குச நம்பி என்று பெயர் சூட்டப்பட்டது.
தமிழில் வல்லவரான இவரை கூரத்தாழ்வான் “பாலேய் தமிழர்” என்று கூறுவார்.

29. அம்மங்கியம்மாள்
இவர் ஒருசமயம் நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்த்ரிக்கப்பட்ட யந்த்ரத்தை அவர் கையில் வைக்க முற்பட்டார். நம்பிள்ளை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
உடையவர் திருநாராயணபுரம் சென்ற பொழுது ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வான், பெரிய நம்பி இவர்களுடைய நிலைமையை அறிந்துவர மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானுடன் இவரும் சென்று வந்தார்.-இவர் நீதிப் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விப்பார்.
இவர் மரணத் தறுவாயில் இருக்கும் பொழுது இவர் படும் துன்பத்தைக் கண்டு நஞ்சீயர் வருத்தப்பட்டார். அப்பொழுது இவர்பெரிய திருமொழி 3.6.9 பாசுரத்தைச் சொல்லி நீயாள வளையாள மாட்டோமே “என்றார். நஞ்சீயரும் நம்பிள்ளையும் இவருடையநம்பிக்கைத் திறனைப் பாராட்டிப் பேசினார்கள். இவர்பல பாசுரங்களுக்கு ரஸமாக வ்யாக்யானம் செய்வார்.

30. பருத்திக் கொல்லையம்மாள்
உடையவர் திருமலைக்கு எழுந்தருளும் போது திருக்கோவலூர் சென்று அங்கிருந்து காஞ்சீபுரம் நோக்கி நடந்தார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு வழிகள் பிரிந்தன. அவை எங்கு போகும் வழிகள் என்று அங்கிருந்த இடையர்களைக் கேட்டார். அவர்கள்
“ஒன்று ராஜஸராயிருக்கும் எச்சான் இருப்பிடத்திற்குப் போகும் வழி. மற்றொன்று சாத்விகரான பருத்திக் கொல்லையம்மாள் இருப்பிடத்துக்குப் போகும் வழி என்று சொன்னார்கள். உடையவர் சாத்விகரான “பருத்திக் கொல்லை யம்மாள் குடிசைக்கு சென்றார். அவருடைய குடிசையில் அவர் இல்லை. அவருடைய தேவி சரியான புடவை இல்லாததால் கிழிந்த புடவையுடன் வெளியில் வர விரும்பவில்லை. இதை எப்படியோ
உணர்ந்த உடையவர் தனது உத்தரியத்தை எடுத்து குடிசைக்குள் எறிந்தார். பருத்திக் கொல்லையம்மாள் தேவி அதை உடுத்திக் கொண்டு வெளியில் வந்து உடையவரை தண்டம் சமர்ப்பித்தார். உடையவர் அவளை தளிகை பண்ணும்படி சொன்னார். தேவிகள் தளிகை பண்ணி முடித்தார். அவளுடைய கணவர் பருத்திக் கொல்லை யம்மாள் வந்து சேர்ந்து உடையவரை தண்டம் சமர்ப்பித்து விநயமாக ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ரீதராய் எழுந்தருளியிருந்தார். உடையவரும் அவருடைய ஞான, பக்தி, வைராக்யங்களைக் கண்டு
சந்தோஷப்பட்டு அவருடன் எல்லாருமாகச் சேர்ந்து அமுது செய்தருளினார்கள்.
இவருடைய தேவிக்கு தீங்கு நினைத்த வைஸ்யன் ஒருவனை உடையவருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தால் இவர் திருத்திப் பணி கொண்டார்.

31. உக்கலம்மாள்
இவர் உடையவருக்கு திருவால பட்டம் கைங்கர்யம் செய்வார்.

32. சொட்டையம்மார்
இவர் திருநாராயண புரத்தில் உடையவர் சந்நிதியில் நடுவிலாழ்வானிடத்தில் ஸ்ரீபாஷ்யம் கேட்டார்.-இவருடன் வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீபாஷ்யம் கேட்டு மகிழ்ந்தார். நடுவிலாழ்வான் இவர்களை ஆசீர்வதித்து“எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்றிருங்கோள்” என்று அருளுரை வழங்கினார்.

33. கிடாம்பிப் பெருமாள்
இவர் கிடாம்பி ஆச்சானுடன் சேர்ந்து திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்வார். அறுசுவை உணவு தயாரிப்பார்.-உடையவர் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தவுடன் இவரையும் கிடாம்பி ஆச்சானையும் ஸ்ரீபாஷ்ய ஸ்ரீகோசத்துடன் காஷ்மீர தேசத்துக்குச் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெறச் செய்தார்.

34. ஈச்சம்பாடி ஆச்சான்
ஈச்சம்பாடி என்னும் ஊர் திருமலைக்கு அருகில் உள்ளது. இவருடைய தகப்பனார் சுந்தரதேசிகர் அல்லது அழகப்பிரான். தாயார் திருமலை நம்பியின் குமாரத்தி. இருவரும் ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்கள். ராமானுஜர் திருமலைக்கு எழுந்தருளிய போது அவருக்கு சுந்தர தேசிகர் தாபநீய உபநிஷத்”, “ந்ருஸிம்ஹ மந்த்ரம்” இவைகளை உபதேசித்தார். திருமலை திருவேங்கடவ னுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த காலத்தில் சுந்தர தேசிகருக்கு கி.பி. 1026 தை மாதம் ஹஸ்த நட்சத் திரத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆச்சான் ஸ்ரீநிவாஸாசார்யர் என்று பெயர் சூட்டப்பட்டது.-பின்னர் இவருக்கு சௌளம், உபநயநம், விவாஹம் நடந்தன. பின்னர் இவருடைய தகப்பனார் சுந்தரதேசிகருடைய நியமனப்படி இவர் ராமானுஜரை ஆச்ரயித்து எல்லா சாஸ்த்ரங்களையும் கற்று புத்ர, பௌத்ர சிஷ்யாதிகளுடன் தர்சன ப்ரவர்த்தநம் செய்தருளினார்.

ஏராரும் தையத்தம் இங்குதித்தோன் வாழியே
சுந்தரேசன் திருமகனாய் துலங்குமவன் வாழியே
பார்புகழும் யதிராஜன் பதம்பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல்புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டுகக்கும் தொல்புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடிவாழ் நம்மாச்சான் வாழியே-வாழித் திருநாமம்

35.ஈச்சம்பாடி ஜீயர்
இவர் ஈச்சம்பாடி ஆச்சானின் இளைய சகோதரர்.-இவர் கி.பி. 1030 ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவெங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. செளள, உபநயந, விவாஹாதிகளுக்குப் பின் தந்தையின் நியமநப்படி ராமானுஜரை ஆச்ரயித்து
அவரிடம் எல்லா சாஸ்த்ரங்களையும் கற்று புத்ர, பௌத்ர சிஷ்யாதிகளுடன் தர்சந ப்ரவர்த்தநம் செய்து கொண்டிருந்தார். பின்னர் ராமானுஜரிடமே ஸந்யாஸாஸ்ரம
ஸ்வீகாரம் பெற்று அதுமுதல் ஈச்சம்பாடி ஜீயர் என்று பெயர் விளங்கி அதிவிரக்தராய் சிஷ்ய, ப்ரசிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய, திவ்ய ப்ரபந்த, ரஹஸ்ய, மந்த்ரார்த்தங்கள் ஸாதித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார்.

ஆனிதனில் ஓணத்தில் அவதரித்தோன் வாழியே
வேங்கடத்தை பதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர்கலை உட்பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரியுருவன் அடிதொழுவான் வாழியே
எப்பொழுதும் யதிபதியை ஏத்துமவன் வாழியே
முத்திதரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம்பாடி உறை ஜீயர்தாள் வாழியே-வாழித் திருநாமம்

36. காராஞ்சி சோமயாஜியார்
இவர் உடையவரை ஆச்ரயித்தவர். உடையவர் இருக்குமிடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால் தான் இருக்கும் இடத்திலேயே உடையவர் விக்ரஹத்தைப் பண்ணி பூஜை செய்ய விரும்பினார். விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறு ஒரு விக்ரகம் பண்ணினார். ஒரு நாள் இரவு ஸ்வப்நத்தில் உடையவர் தோன்றி “ஏன் இப்படிச் செய்கிறீர்” என்று கேட்டார். இவர் கண் விழித்து எழுந்து நேரே ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று உடையவரை தண்டம் சமர்ப்பித்து நடந்ததை சொன்னார்.
உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளை தீர்த்தார்.

37.ஆசூரிப்பெருமாள்
இவருக்கு ஆசூரி தேவர், ஆசூரி புண்டரீகாக்ஷர் என்ற திருநாமங்கள் உண்டு. இவர்ஹாரித கோத்ரத்தைச் சேர்ந்தவர். இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான நடுவிலாழ்வானின் சிஷ்யர். எம்பெருமானாரின் ஆறு உபதேசங்களில் நாலாவது உபதேசமான திருநாராயண
புரம் வாஸத்தை ஆதரித்து, அங்கு சென்று தர்சன நிர்வாஹம் செய்தார். இவர் வம்சத்தில் அவதரித்தவர் “ஆய்”,“ஜநந்யாசார்யர்” – திருவாய் மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுநிகள் காலத்தில் எழுந்தருளி யிருந்த ப்ரஸித்தி பெற்ற வித்வானாவார்.

37.ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வைபவ சுருக்கம்
தனியன்
ராமானுஜ பதாம்போஜயுகளீயஸ்ய தீமத: |
ப்ராப்யம் சப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும்
ஆஸ்திகாக்ரேஸரம் வந்தே பரிவ்ராட் குரு பாசகம்
யாசிதம் குருகே ந ப்ரணதார்த்திஹரம் குரும் 1
இவர் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்.-ஒரு சமயம் உடையவருக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் உஞ்சவிருத்தி பிக்ஷை சமர்ப்பிக்கும் பொழுது உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்து கொல்ல நினைத்தார். பகவத் கிருபையினால் உடையவர் உயிர் தப்பினார். இந்தச் செய்தி கேட்டு திருக்கோட்டியூர் நம்பி.கோட்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தார். அவரை எதிர்கொண்டு அழைக்க உடையவர் சென்றார். காவிரி ஆற்று மணலில் அவரை சந்தித்தார். கொதிக்கும் வெயிலில் ஆற்று மணலும் கொதித்தது. உடையவர் நம்பியை ஸேவிக்க ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்தார். நம்பி அவரை எழுந்திருக்கும்படி சொல்லவில்லை. அதனால் உடையவர் எழுந்திருக்கவில்லை. கொதிக்கும் மணலில் உடையவர் திருமேனி வாடி வதங்கியது. அருகிலிருந்த கிடாம்பி ஆச்சான் இதைக் கண்டு பொறுக்காமல் இது என்ன சிஷ்ய ஆசார்ய க்ரமம்? விஷம் வைத்தவர் செயலை விட இது மிகக் கொடுமை” என்று திருக்கோட்டியூர்
நம்பிக்குச் சொல்லி உடையவருடைய திருமேனியை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார். இதை எதிர்பார்த்த திருக்கோட்டியூர் நம்பி இவருடைய பரிவைக்கண்டு மெச்சி இவரை உடையவருக்கு தளிகைக் கைங்கர்யம் செய்ய நியமித்தார்.
ஒரு சமயம் கிடாம்பி ஆச்சான் திருமாலிருஞ்சோலை அழகரை ஸேவிக்கும் பொழுது ஆளவந்தாரின் “ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து”, “அபராத ஸஹஸ்ர பாஜநம்”’ என்னும் ஸ்லோகத்தைச் சொன்னார். அதில்-”அகதிம்” என்ற சொல்லைக் கேட்டு அழகர் கிடாம்பி ஆச்சானை கடாக்ஷித்து “நீ ராமானுஜரின் அடியவனாக இருக்கும் பொழுது “அகதி” என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் மடத்தில் ஸ்ரீவைஷ்ணவ ததி யாராதனம் நடந்து கொண்டிருந்த பொழுது கிடாம்பி ஆச்சான் ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்கு தாகத்திற்கு தீர்த்தம்
சாதித்தார். பக்கவாட்டில் நின்று கொண்டு தீர்த்தம் சாதித்தார். இதைப் பார்த்த உடையவர் இவர் முதுகில் அடித்து நேராக இருந்து கொண்டு தீர்த்தம் சாதிக்கச் சொன்னார். உடனே கிடாம்பி ஆச்சான் “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட” என்ற
பாசுரத்தைச் சொல்லி உடையவருக்கு நன்றி தெரிவித்தார்.
இளையாழ்வார் என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆச்சானிடம் “எம்பெருமானாருடைய சிஷ்யரான வயது முதிர்ந்த நீர் வயது குறைவான பட்டரிடம் தாழ நின்று பழகுவது ஏன்” என்று கேட்டார். ஆச்சான் “ஒரு சமயம் எம்பெருமானார் “நம்முடைய அடங்கலும் நம்மை
நினைத்திருக்குமாப் போலே இவனை (பட்டரை) நினைத்திருங்கோள்’ என்று சொல்லியிருக்கிறார்-என்று பதில் சொன்னார்.
உடையவர் ஸ்ரீபாஷ்யம் எழுதி முடித்தவுடன் அந்த ஸ்ரீகோசத்தை இவரிடம் கொடுத்து காஷ்மீரத்தில் ஸ்ரீசாரதா பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற்று வரும்படி சொன்னார். இவரும் அங்கு சென்று அங்கீகாரம் பெற்ற பொழுது சரஸ்வதி தேவி உடையவருக்கு “பாஷ்யகாரர்” என்ற பட்டம் வழங்கினார்.
காஷ்மீரம் போய் விட்டு திரும்பும் வழியில் ஒரு தயிர் விற்கும் கோபிகை தயிரை விலைக்குக் கொடுத் தாள். பணத்திற்கு பதில் மோக்ஷம் கொடுக்கும்படி கேட்டாள். மோக்ஷம் கொடுக்க திருவேங்கடவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் இவர் சொன்னார் -அந்த கோபிகை “அப்படியானால் திருவேங்கடவனுக்கு நீர் ஒரு சீட்டு கொடும்” என்று கேட்டு வாங்கி திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் சமர்ப்பித்தார்.-திருவேங்கடவனும் அவளுக்கு மோக்ஷம் கொடுத்தார்.-இவருக்கு “வேதாந்த உதயநன்” என்ற விருதுப்பெயரை ராமானுஜர் அனுக்ரஹித்தார். (ந்யாய சாஸ்த்ரத்தில் உதயநன் என்பவர் ஒரு சிறந்த நிபுணர்)இவர் குமாரர் கிடாம்பி ராமானுஜாசார்யர். அவருடைய குமாரர் கிடாம்பி ரங்க ராஜாசாரியர். அவருடைய குமாரர் கிடாம்பி அப்புள்ளார். கிடாம்பி அப்புள்ளாருடைய சகோதரி தோதாத்ரி அம்மையார் தோதாத்ரி அம்மையார் குமாரர் உலகம் புகழும் வேதாந்த தேசிகன்.-கிடாம்பி ஆச்சான் வம்சத்தில் பிறந்தவர். சமீப காலத்தில் இருந்த உ.வே. சிங்கப் பெருமாள் ஸ்வாமி யும் அவருடைய ஸ்வீகார புத்ரர் “காரப்பங்காடு வெங்கடாசார்யர் ஸ்வாமியும்” (1906-1971) தற்சமயம் திருமலை – திருப்பதி பெரிய ஜீயராக உள்ள “ஸ்ரீரங்க ராமானுஜ ஜீயர் ஸ்வாமி” கிடாம்பி யாச்சான் வம் த்தைச் சேர்ந்தவர்.
ராமானுஜருக்கு மாமாவான பெரிய திருமலை நம்பி கிடாம்பி ஆச்சானுடைய அத்தையின் கணவர். பெரிய திருமலை நம்பி கிடாம்பி ஆச்சானை ராமானுஜ ரிடம் ஆச்ரயிக்கச் செய்தார்.-நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள “திருவிருத்தத்திற்கு” கிடாம்பி ஆச்சான் தனியன் அருளிச் செய்துள்ளார்.

38.ஸ்ரீ அலங்கார வேங்கடவர் வைபவச் சுருக்கம்
தனியன்
ஸ்ரீமத் தயாபால முநேஸ்தநூஜம் தத்பாத ஸேவாதிகதப்ரபோதம் 1
ஸ்ரீமத் யதீந்த்ராங்க்ரி நிவிஷ்ட சித்தம், ஸ்ரீகௌஸிகம் வேங்கட சூரிமீடேII
ஸ்ரீராமாநுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத்கோஷ்டி 1
ப்ரேம்ணாலங்க்ருத வேங்கடே குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவாந்
யோஸௌ கௌஸிக தேரிகோ குணநிதி: ஸ்ரீவிஞ்சபுர்யாம் ஸ்தித:
தத்பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார ஸந்தாரகம்||

திருமருவும் விஞ்சைநகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாடியகாரரடி சேர்ந்துய்ந்தோன் வாழியே
அருளாள மாமுனிவனருள் மைந்தன் வாழியே
அருமறைநூல் மாறனுரை ஆய்ந்துரைப்போன்வாழியே
மருளில் திருமலைநம்பி மணவாளன் வாழியே–மார்கழியில் ஆதிரைநாள் மகிழ்ந்துதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணையின்றம் பகர்வோன் வாழியே
திருவேங்கடா சிரியன் திருவடிகள் வாழியே–வாழித் திருநாமம்

இவர் அருளாளப் பெருமாளெம்பெருமானாரின் குமாரர். கௌசிக கோத்ரம். இவர் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்ரத்தில் அவதரித்தார். உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தார். 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் உடையவரின் மாமாவான பெரிய திருமலை
நம்பியின் புதல்வியை மணந்தார். இவருடைய குமாரர் பிற்காலத்தில் விஞ்சிமூர் தாதாசார்யர் என்ற பிரஸித்தி பெற்ற மஹாவித்வான் ஆனார்.

40. ஸ்ரீ அருளாளப் பெருமாளெம்பெருமானார் வைபவச் சுருக்கம்
தனியன்
கார்த்திகே பர ஜாதம் யதீந்த்ராப்ரிதமாரயே |
ஞானப்பரமேய ஸாராபிவத்தாரம் வரதம் மும்
ஞாந பக்த்யாத்த வைராக்யம் ராமாநுஜபதா ரிதம் 1
பஞ்சமோபாய ஸம்பந்தம் ஸம்யமீந்த்ரம் நமாம்யஹம்!!
தயாபாலந்தேவாய ஞாநஸாரப்ரதாயிநே
ப்ரமேயஸாரம் தததே நமோஸ்து ப்ரேமஹாலிநே

திருவாழும் தென்னரங்கம் சிறக்கவந்தோன் வாழியே
தென்னருளாளரன்பால் திருந்தினான் வாழியே
தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே
தமிழ் ஞாநப்பிரமேயசாரம் தமர்க்குரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவிநிலை தெளிந்தோன் வாழியே
தேசுபொலி மடந்தன்னை சிதைத்திட்டான் வாழியே
அருளாளமாமுநியாம் ஆரியன்தாள் வாழீயே
அருள்கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே-வாழித் திருநாமம்

அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்ற நம் பூர்வாசார்யர் முன்னால் யக்ஞ மூர்த்தி என்ற பெயரோடு அத்வைத ஸந்யாஸியாய் வித்வான்களை வாதத்தில் வென்று விருதுகள் பல பெற்று ப்ரகடநப்படுத்தி வந்தார்.-அவர் உடையவரையும் வாதத்தில் வெல்ல வேண்டும்
என்று ஸ்ரீரங்கம் வந்து அவருடன் வாதம் செய்தார். 17நாட்கள் வாதம் நடந்தது. இருவரும் அவரவர் தரப்பிற்கு ப்ரமாணங்களை அள்ளி வழங்கினார்கள். யக்ஞமூர்த்தி அத்வைதமாகிய மாயாவாத சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயன்றார். உடையவர்விஷ்டாத்வைத சித்தாந் தத்தை நிலைநிறுத்த முயன்றார். 17வது நாள் வாதப்
போர் முடிவில் இருவருக்குமே வாதப் போரில் வெல்ல முடியாது என்ற அவநம்பிக்கை வந்து கலங்கினார்கள்.-உடையவர் தனது ஆராதநப் பெருமாளாகிய “அருளாளப் பெருமாளை” த்யானம் செய்து வணங்கி நின்றார்.-அன்று இரவு அருளாளப் பெருமாள் “எம்பெருமானாரே, உமக்கு ஸமர்த்தனாயிருப்பதொரு சிஷ்யனை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. நீர் ஆளவந்தாருடைய மாயாவாத கண்டனம் என்ற நூலில் உள்ள யுக்தியை சொல்லி யக்ஞ மூர்த்தியை வெல்வீராக” என்று அருளிச் செய்தார். 18வது நாள் வாதத்தில் உடையவர் தேவப்பெருமாளின் ஆணைப்படி வாதத்தில் வென்றார்.-வாதத்திற்கு முன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைப்படி யக்ஞ மூர்த்தி தன் ஸித்தாந்தத்தை விட்டு விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை ஏற்று ஏக தண்டத்தை முறித்துப் போட்டு சௌள (குடுமி) உபநயந, பஞ்சஸம்ஸ்கார, காஷாய த்ரிதண்டங்களை ஏற்றார். உடையவர் தன்னுடைய திருவாராதநப் பெருமாள் பெயரையும் தன்னுடைய பெயரையும் சேர்த்து. “அருளாளப் பெருமாள் எம்பெருமானார்” என்று திருநாமமிட்டு அவருக்கு ஒரு மடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து சிஷ்ய சம்பத்களையும் ஏற்படுத்தினார்.
உடையவர் தம்மிடம் ஆச்ரயிக்க வந்த அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி, மழுவூர் நம்பி ஆகியவர்களை இவரிடம் ஆச்ரயிக்கச்செய்தார். மேலும் தம்முடை ஆராதனப் பெருமாளுக்கு நித்திய ஆராதனம் செய்யும்படியும் நியமித்தார்.
இவர் ”ஞானசாரம்”, “‘பிரமேயாசாரம்” என்ற இரண்டு அற்புத நூல்களை அருளிச் செய்தார். பிள்ளைலோகாசார்யரும் வேதாந்த தேசிகனும் இந்த நூல்களில்உள்ள பாசுரங்களை மேற்கோள்களாகக் கையாண்டார்கள். மணவாள மாமுநிகள் இந்த இரண்டு நூல்களுக்
கும் உரை எழுதியுள்ளார்.
இவர் எம்பெருமானார் மடத்துக்கு சமமாக இன்னொரு மடம் இருக்கக் கூடாது என்று நினைத்து தன்னுடைய மடத்தை இடித்து விட்டார்.
கூரத்தாழ்வான் தமது குமாரரான பட்டருக்கு உபதேசம் செய்கையில் “இவரை சிறுமாமனிசர்” என்றுதெரிவித்து திருவாய் மொழி 8-10-3பாசுரத்தில் சொல்லப்பட்டபடி, “மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்தவர்” என்பதைச் சுட்டிக் காட்டினார்.
வடுக நம்பி “திருநாட்டுக்கெழுந்தருளியதாக ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து சொன்ன பொழுது. “அப்படிச் சொல்லக் கூடாது உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இவர் கடைசி காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த பொழுது இவரைப் பார்க்க கூரத்தாழ்வானும் உறங்காவில்லி தாஸரும் வந்தார்கள். கூரத்தாழ்வானுக்கு தாம்
விரும்பியவருக்கு பரமபதம் ஸாதிக்கும் சக்தி உண்டு.-இருந்தாலும் அவர் தனக்கு ஸாதிக்காமல் கஷ்டப்பட விடுகிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. ஆகையால்
அவரிடம் ‘தான் சீக்கிரம் ஆளவந்தார் திருவடியடைய வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
இவர்கௌஸிக கோத்ரத்தைசேர்ந்தவர். இவருடைய பூர்வாஸ்ரமத்தில் இவருக்கு “அலங்கார வேங்கடவர்”என்று ஒரு குமாரர் உண்டு. அவர் உடையவரை ஆச்ரயித்து 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரானார்.-அவர் பெரிய திருமலை நம்பியின் குமாரத்தியை திருமணம் செய்து கொண்டார். விஞ்சிமூர் தாதாசார்யர் இவருடைய பேரர்.

41.ஸ்ரீ குமாண்டூர் இளையவில்லி வைபவச் சுருக்கம்
தனியன்
ஸ்ரீகௌசிகா ந்வய மஹாம்புதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீபாஷ்யகார ஜ நீஸஹஜா தூநூஜம் 1
ஸ்ரீ சைலபூர்ண பதபங்கஜ ஸக்தசித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்ய மஹம் பஜாமி ||
ஸ்ரீயதீந்த்ர மாத்ஷ்வ ரீய: ப்ரதிதார்யபதே ஸ்தித: 11
மூலபூத: கௌசிகாநாம் தம் வந்தே பாலதந்விநம் II
இவர் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார். இவர் கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்தவர்.-ராமானுஜருடைய சிறிய தாயாரின் குமாரர். இவர்-பெரிய திருமலை நம்பியின் மருமகன். ஆகையால் அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் வட மொழியில்பாலதந்வி என்று அழைக்கப்பட்டார்.-இவருடைய வம்ச பரம்பரை கீழ்க்கண்டவாறு.”

————–

74 சிம்மாசனாதிபதிகளும் அஷ்டத்திக் கஜங்களும்
74 சிம்மாசனாதிபதிகளும் ராமானுஜரால் நியமிக்கப்பட்டவர்கள் (1017-1138). பிற்பட்ட 300 ஆண்டுகளில் கால மாறுபாட்டால் ஏற்பட்ட நிலைமைகளாலும் துருஷ்கருடைய படையெடுப்பால் ஏற்பட்ட விபரீதங்களாலும் 74 சிம்மாசனாதிபதிகளின் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டு ஸ்ரீவைஷ்ணவ மதம் நலிந்து காணப்பட்டது.
ஸ்ரீவைஷ்ணவ மதத்தின் ராஜதானியாகிய ஸ்ரீரங்கம் கோவிலில் கி.பி. 1310 முதல் 1371 வரை நம்பெருமாள் அங்கு எழுந்தருளியிருக்க முடியாமல் தெற்கு, மேற்கு, வடக்கு பிராந்தியங்களில் பாதுகாப்புக்காக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தெற்கே திருமாலிருஞ்சோலை மலை, ஜோதிஷ்குடி, மதுரை, மேற்கே கேரளம், கோழிக் கோடு, வடக்கே திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி ஆகிய இடங்களில் எழுந்தருளி, கி.பி. 1371ல்
தான் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடிந்தது. ஸ்ரீவைஷ்ணவ மதத்தை மீண்டும் உத்தாரணம் செய்ய 1370ல் மணவாள மாமுநி அவதரித்தார். அவர்கி.பி. 1414ல் ஸ்ரீரங்கம் எழுந்தருளி கோவில் நிர்வாகத்தையும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயங்களையும் மீண்டும் ஸ்தாபித்தார். அதற்காக, தானே அஷ்டதிக் கஜங்களை நியமித்து, மேலும் அவர்களில் ப்ரதானமானவர்களான வானமாமலை ஜீயருக்கும் கோவில் கந்தாடை அண்ணனுக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமிக்க அடிகோலினார். அவர்களில் பெரும்பாலோர் 74 சிம்மாசனாதிபதிகளின் வம்சங்களில் வழிவந்தவர்கள். இவர்கள் ஸ்ரீவைஷ்ணவமத புநருத்தாரணத்திற்கு செய்த சேவைகள் மிகவும் மதிக்கத் தக்கவை.

மணவாள மாமுநியின் அஷ்டதிக் கஜங்கள் விவரம்

1. வானமாமலை ராமானுஜ ஜீயர்

2. திருவேங்கடம் ஜீயர்

3. பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்– நடுவிலாழ்வான் வம்சம்

4-கோவில் கந்தாடை அண்ணன்–முதலியாண்டான் வம்சம்

5. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா–முடும்பைநம்பி வம்சம்
6. எறும்பியப்பா-

7.அப்பிள்ளார்
8. அப்பிள்ளை

வானமாமலை ராமானுஜ ஜீயரின் அஷ்டதிக் கஜங்கள்
1. அப்பாச்சியாரண்ணா முதலியாண்டான் வம்சம்
2. போரேற்று நாயனார் முதலியாண்டான் வம்சம்
3. சுத்தசத்வம் அண்ணா இளையவில்லி வம்சம்

4. ராமானுஜம் பிள்ளை முடும்பை நம்பி வம்சம்
5. சண்டமாருதம் மஹாசார்யர் இளையவில்லி வம்சம்
6. ஞானக்கண் ஆத்தான் முடும்பை நம்பி வம்சம்
7. திருக்கோட்டியூர் அரையர்
8. பள்ளக்கால் சித்தர்


கோவிலண்ணனின் அஷ்டதிக் கஜங்கள்
1. கந்தாடையப்பன் முதலியாண்டான் வம்சம்
2. திருக்கோபுரத்து நாயனார் முதலியாண்டான் வம்சம்
3. கந்தாடை நாயன் முதலியாண்டான் வம்சம்
4. சுத்த சத்வம் அண்ணன் இளையவில்லி வம்சம்
5. திருவாழி ஆழ்வார் பிள்ளை இளையவில்லி வம்சம்
6. ஜீயர் நாயனார் கோமடத்தாழ்வான் வம்சம்
7. ஆண்டபெருமாள் நாயனார்
8.ஐயன் அப்பா

—————-

அஷ்டதிக்கஜம் – திருவேங்கட ராமானுஜ ஜீயர் வைபவச் சுருக்கம்
தனியன்
ரம்யஜாமாத்ரு யோகீந்த்ர பதபங்கே ருஹா ரிதம்
ஸ்ரீவேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநவை முநிம் |
ராமானுஜர் திருமலையில் கி.பி. 1119ல் “ஜீயர்” மடத்தை ஸ்தாபித்து ஜீயரைக் கொண்டு கோவில் நிர்வாகம் சிறப்புற நடக்க ஏற்பாடு செய்தார். அப்பொழுது அந்த ஜீயருக்கு அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் என்று பெயர். அவர் 1119லிருந்து 1173 வரை பட்
டத்தில் எழுந்தருளி இருந்தார். அவருக்குப் பின் கி.பி. 1428 முதல் 1431 வரை மணவாள மாமுநிகளே 12வது பட்டமாக அந்த ஸ்தானத்தை அலங்கரித்தார். ஒரு ஜீயர் பரமபதம் எழுந்தருளிய பின் அடுத்த ஸ்வாமியை நியமிக்கத் தவறும் பொழுது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக மணவாள மாமுநியே தனக்குப் பின் ஒரு பெரிய ஜீயரையும் அவருக்குப் பின் பட்டம் ஏற்க ஒரு சின்ன ஜீயரையும் நியமிக்க ஏற்பாடு செய்தார். அதன்
படி 1431ல், அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயரை நியமித்து அவரைக் கொண்டே அடுத்த ஜீயர் “அப்பன் சடகோப ராமானுஜ ஜீயரையும்” நியமிக்கச் செய்தார்.-அது முதல் திருமலையில் பெரிய கேள்வி ஜீயர், சின்ன கேள்வி ஜீயர் என்று இரண்டு ஜீயர்கள் இருந்து வருகின்றனர்.

2. அஷ்டதிக்கஜம் – பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் வைபவச் சுருக்கம்
தனியன்
1. ரம்யாஜாமாத்ரு யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் :
பட்டநாத முநிம்வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் !
2-வ்ரு சிகே 5திதிபேஜாதம் பரவஸ்த்வம் பூஷணம் |
வரயோகி பதாதாரம் பட்டநாதமுநிம் பஜேI
3. வரயோகி பதாதாரம் பரவஸ்த்வம் பூஷணம் 1
பட்டநாதமுநிம் வந்தே தீபக்த்யாதி குணார்ணவம்
4. வ்ரு சிகே திதிபேஜாதாம் வரயோகி பதாச்ரிதம் |
கார்க்ய வம் ஸமுத்பூதம் பட்டநாதமுநிம் பஜோ
இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான நடுவிலாழ்வான் வம்பலத்தில் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்ரத்தில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் பெயர் ராமாநுஜாசார்யர். இவருடைய திருநாமம் கோவிந்த தாஸரப்பன்.
இவர் மணவாள மாமுநியையே தெய்வமாக கொண்டாடி அவரிடம் 30 ஆண்டுகள் விடாமல் தொண்டு செய்தார். இவருக்கு மாமுநிகள் ‘அழகிய மணவாளப் பெருமாளை” திருவாராதனப் பெருமாளாகக் கொடுத்தார். மேலும் ஒரு முக்யமான ரகஸ்யத்தையும் அருளிச்செய்தார். இவர் ஒரு திருவாடிப் பூரத்திலே “சூடிக்கொடுத்த நாச்சியார்” ப்ரஸாதங்களைக் கொண்டு வந்து ஆதரத்துடன் மாமுநியிடம் கொடுத்தார். அதனால்
மாமுநி இவருக்கு “பரவஸ்து பட்டர் பிரான் தாஸர்” என்று திருநாமமிட்டார். இவர் மாமுநியிடம் ஸந்யாஸ ஆஸ்ரம ஸ்வீகாரம் பெற்று “பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்” என்று திருநாமமிடப்பட்டார். இவர் “அந்திமோபாய நிஷ்டை’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
“பிள்ளை லோகம் ஜீயர்” என்ற ப்ரசித்தி பெற்ற ஸந்யாஸி, இவருடைய வம்ஸத்தில் பிறந்தவர். (கி.பி.1525) இவருடைய வம் பரம்பரை விவரம்:

இன்னுலகில் கச்சிதனில் வந்துதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர்பூசத்திங்குற்றான் வாழியே-மன்னுமறைத் தண்டமிழை மகிழ்ந்துரைத்தான்.வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன்அனுட்டானம் அறிவித்தான் வாழியே
பாரில் அட்டதிக்கயத்தில் பேர்பெற்றான் வாழியே
சொன்னநெறி மதுரகவி போலுமவன் வாழியே
தூய்மைமிகு பட்டர்பிரான் துணையடிகள் வாழியே–வாழித் திருநாமம்

————–

3.அஷ்டதிக்கஜம் ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் வைபவச் சுருக்கம்
தனியன்
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் 1
ருசிரஜாமாத்ரு யோகீந்த்ர பதாரயம்
வரத நாராயண மத்குரும் ஸம்ஸ்ரயோ

தேனமருமலர் முளரித் திருத்தாள்கள் வாழியே
திருச்சேலை யிடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்குதொங்கு முபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுநி சீர்பேசும்
மலர்ப்பவளம் வாய்வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந் திருநாம மணிநுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடையண்ணன் என்றும் வாழியே-வாழித் திருநாமம்

இவர் வாதூல கோத்ரத்தில் முதலியாண்டான் வம்சத்தில் கி.பி. 1389 புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் தேவராஜ தோழப்பர். இவருக்கு 7 சகோதரர்கள். இவருடைய இயற்பெயர் வரத நாராயணகுரு. இவருடைய பால்யத்திலேயே இவருடைய தகப்பனார் பரமபதம் அடைந்தார். அதனால் கோவிலில் இவர் வம்சத்தாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் கிடைக்காமல் போயிற்று. ராமானுஜர் இவருடைய கனவில் தோன்றி மணவாள மாமுநியை ஆச்ரயிக்கும்
படி தெரிவித்தார்.
கி.பி. 1310ல் முகம்மதியர் படையெடுப்பால் ஏற்பட்ட குழப்பத்தில் இவருடைய வம்சத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் நின்று போயிற்று. கி.பி. 1371ல் நம்பெருமாள் மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்த போதிலும் கி.பி. 1415 வரை இவர் வம்சத்திற்கு
அந்த மரியாதைகள் கிடைக்கவில்லை. மணவாள மாமுநி இந்த வம்சத்தாருக்கு மீண்டும் மரியாதைகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.-மாமுநிகள் இவருக்கு தம்மிடம் இருந்த அழகிய
சிங்கர் விக்ரஹத்தை திருவாராதநப் பெருமாளாக அளித்தார். மேலும் கீழ உத்தர வீதியில் 16 கால் மண்டபத்தை மடமாகக் கொடுத்தார். வேண்டும் பொழுது பண உதவிகளையும் செய்தார்.இவர் மணவாள மாமுநிகளிடம் மிகுந்த பக்தி விஸ்வாஸம் கொண்டிருந்தார். இவர் உத்தம நம்பியையும், அப்பிள்ளார், அப்பிள்ளை, எறும்பியப்பா (தேவராஜ குரு) ஆகியோரையும் மாமுநிகளிடம் ஆச்ரயிக்கச் செய்தார். மணவாள மாமுநிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியாரண்ணாவையும் தமையனார் போரேற்று நாயனாரையும் வான மாமலை ராமானுஜ ஜீயரிடம் ஆச்ரயிக்கச் செய்தார்.
இவர் மாமுநிகளின் பெருமையைக் கூறும் “கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலை இயற்றியுள்ளார். மேலும் ”வரவரமுநி அஷ்டகம்”,
“ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா” என்னும் நூல்களையும் அருளிச் செய்துள்ளார். மணவாள மாமுநியின் “உபதேசரத்ன மாலைக்கு” முன்னம் “திருவாய் மொழிப் பிள்ளை”
என்ற தனியனை அருளிச் செய்தார்.-மாமுநிகள் இவருடைய ஆசார்யனுக்குரிய நியம
நிஷ்டைகளைக் கண்டு இவருக்கு “பகவத் சம்பந்தாசார்யர்” என்று விருதுகொடுத்து அழைத்தார். தன்னுடைய-8 அஷ்டதிக் கஜங்களில் ஒருவராக நியமித்தார்.
எறும்பியப்பாவும், ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவும் தங்களுடைய ப்ரபந்தங்களான வரவரமுநி சதகங்களில்” இவருடைய பெருமையை எடுத்துக் கூறி யுள்ளனர்.
நம்பெருமாள் இவருக்கு “ஜீயர் அண்ணன்”என்று அருளப் பாடிட்டார்.
காஞ்சி பேரருளாளர் இவருக்கு “ஸ்வாமி அண்ணன்” என்று அருளப் பாடிட்டார்.

மாமுநிகள் இறுதிக் காலத்தில் இவர் திருக்கையினால் தளிகை சமைக்கச் செய்து விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்வார்.-இவருடைய வம்சத்தின் பெருமைகளைக் கண்டு
மாமுநிகள் இவர் வம்சத்தாரை கீழ்கண்ட 7 கோத்ரக்காரர்களிடமே சம்பந்தம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.
1. முதலியாண்டான் வம்சம் வாதூல கோத்ரம்
2. முடும்பை நம்பி வம்சம் ஸ்ரீவத்ஸ கோத்ரம்
3. முடும்பையம்மாள் வம்சம் கௌண்டின்ய கோத்ரம்
4. ஆசூரிப் பெருமாள் வம்சம் ஹாரித கோத்ரம்
5. கிடாம்பி ஆச்சான் வம்சம் ஆத்ரேய கோத்ரம்
6. குமாண்டூர் இளையவில்லி வம்சம் கெளசிக கோத்ரம்
7. வங்கி புரத்து நம்பி வம்சம் பாரத்வாஜ கோத்ரம்
இவர் வைணவ மதத்தையும் எம்பெருமானார் தர்சனத்தையும் நிலைநாட்ட கீழ்கண்ட 8 அஷ்டதிக் கஜங்களை நியமித்தார்.
1. கந்தாடையப்பன் தம்பி
2. திருக்கோபுரத்து நாயனார் அழகிய சிங்கர் தம்பி
3. சுத்தசத்வம் அண்ணன் மருமகன்
4. திருவாழி ஆழ்வார் பிள்ளை மருமகன்
5. கந்தாடை நாயன் குமாரர்- 6-ஜீயர் நாயனார்-மாமுநிகள் குமாரர்-
7. ஆண்ட பெருமாள் நாயனார்–குமாண்டூர் ஆச்சான் பிள்ளை பௌத்ரர்
8. ஐயன் அப்பா


இவருடைய குமாரர் கந்தாடை நாயன் கி.பி. 1408 மார்கழி மாதம் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.-இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியாரண்ணா காஞ்சீபுரம் கோவில் நிர்வாகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இவர்காஞ்சீபுரம் சென்றிருந்த பொழுது
அப்பாச்சியாரண்ணாவை தேவப் பெருமாளுக்கு நித்ய திருமஞ்சன கைங்கர்யம் செய்து வரும்படி அறிவுரை வழங்கினார்.
திருமலை அநந்தாழ்வான் வம்சத்தில் பிறந்த குன்னத்தூர் ஐயன் என்ற மகாவித்வான். இவரிடத்திலும் இவர் குமாரர் பேரர்களிடத்திலும் மிக்க அன்பு பூண்டு கைங்கர்யங்கள் பல செய்தார். இவர் விபவ வருஷம் (கி.பி. 1448) சித்திரை மாதம் கிருஷ்ணபக்ஷ திருதியை யன்று ஆசார்யன் திருவடிஅடைந்தார்.

4. அஷ்டதிக்கஜம் ஸ்ரீ ப்ரத்வாதி பயங்கரம் அண்ணா’ வைபவச் சுருக்கம்
தனியன்
கர்கடே புஷ்ய ஸஞ்ஜாத் வாதிபீகரமாச்ரயே 1
வேதாந்தாசார்ய ஸத்சிஷ்யம் வரயோகிபதாசரிதம் |

வேதாந்த தேரிக கடாக்ஷவிவ்ருத்த போதம்
காந்தோபயந்த்ருயமிந: கருணைக பாத்ரம்|
வத்ஸாந்வய மநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் 11
இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான முடும்பை நம்பி வம்சத்தில் அவதரித்தார். கி.பி. 1361ம் வருஷம் ஆடி மாதம் பூச நட்சத்ரத்தில் காஞ்சீபுரத்தில் அவதரித்தார். இவர் கோத்ரம் ஸ்ரீவத்ஸம். இவருடைய பெயர் “ஹஸ்தகிரிநாதரண்ணா”. இவருடைய தகப்பனார்
அனந்தாசார்யர். தாயார் ஆண்டாள். இவர் வேதாந்த தேசிகனின் குமாரரான நயநவரதா சார்யரிடம் ஸ்ரீபாஷ்யம் பயின்றார்.
இவர் க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீகரித்துக் கொண்டு பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றினின்றும் திரு மஞ்சன தீர்த்தம் கொணர்ந்து சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ப்ரதிவாதி பயங்கரர் என்ற திருநாமம் –நரஸிம்ம மிஸ்ரன் என்னும் மாயாவாதி ஒருவன்
இவருடைய குருவான நயநவரதாசார்யரை வாதப்போருக்கு அழைத்தான். அவர் இவரை தேர்ந்தெடுத்து வாதப் போருக்கு அனுப்பினார். நரசிம்ம மிஸ்ரனை இவர் வென்றார். இதைப் பாராட்டி இவருடைய குரு இவருக்கு “ப்ரதிவாதி பயங்கரர்” என்ற விருதை வழங்கி
கௌரவித்தார். மேலும் இவரை ஸ்ரீபாஷ்யத்தை இவ்வுலகில் விசேஷமாக ப்ரசாரம் செய்ய அறிவுறுத்தி விட்டு சில நாட்களில் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
குமாரர்கள் பிறந்தனர்
இவருக்கு ஸ்ரீனிவாஸாசார்யர், அநந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் என்று மூன்று குமாரர்கள் பிறந்தனர்.
அரசன் சிஷ்யரானான்
ஆந்த்ர தேசத்து அரசனான வீர நரஸிம்மராயன்” என்பவர் இவருடைய சிஷ்யனாகி பொன்களையும் பொருள்களையும் கொடுத்தான். இவர் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
திருமலை வாசம்
இவர்திருமலைக்குச் சென்று அங்கு நாள்தோறும் திருவேங்கடமுடையானுக்கு ஆகாச கங்கையிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்து ஏலாலவங்காதி ஸுகந்த த்ரவ்யங்களை சேர்ந்து சமர்ப்பிக்கும் கைங்கர்யத்தை செய்து வந்தார். இப்படிஇருக்கையில் ஒரு நாள் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்த பிறகு, அதில் பரிமள த்ரவ்யங்கள் சேர்ப்பதற்கு முன்னர், பக்தர் ஒருவர் மணவாள மாமுநியின் பெருமைகளைப் பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்த பொழுது அதையே கேட்டுக் கொண்டிருந்து விட்டார். திருமஞ்சனத் தீர்த்தத்தில் பரிமள த்ரவ்யங்களை சேர்ப்பதற்கு தவறி விட்டார். அர்ச்சகர் பரிமள த்ரவ்யங்கள் இல்லாத தீர்த்தத்தை எடுத்து பெரு மாளுக்கு திருமஞ்சனம் செய்து விட்டார். இது தெரிந்து”அண்ணா” மிகுந்த வருத்தத்தில் இருந்தார். ஆனால் திருவேங்கடமுடையான் “இன்று திருமஞ்சன தீர்த்தம் மிகவும் ருசியுடனும் வாசனையுடனும் இருந்தது”’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட அண்ணாவும் மற்றவர்களும் “மணவாள மாமுநியின் ப்ரபாவங்களை கேட்டபொழுது அந்த ப்ரபாவங்கள் திருமஞ்சன தீர்த்தத்தில்
கலந்தது தான் இதற்குகாரணம்” என்று தெரிந்து கொண்டனர். அது முதல் மாமுநியை ஸ்ரீரங்கம் சென்றுஸேவிக்கவேண்டும் என்று அண்ணாவுக்கு ஆவல் ஏற்பட்டது..
அண்ணாவின் சேவை அரங்கத்திற்கு தேவை
இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் மாயாவாதி ஒருவன் மாமுநியுடன் வாதப் போர் செய்ய விரும்பி அவருக்கு செய்தியனுப்பினான். மாமுநி தன்னுடைய சிஷ்யரான வேடலப்பை என்பவரைக் கொண்டு அவனை அடக்கினார். வேடலப்பை ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யமுடி
யாமல் தன் சொந்த ஊருக்குதிரும்பி விட்டார். மாமுநிக்கு வேடலப்பை போன்ற தர்க்க சாஸ்திர வித்வான் தேவைப்பட்டார். இதற்கு எல்லாத் தகுதிகளையும் உடையவர் ‘ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” தான் என்று தெரிந்து அவரை ஸ்ரீரங்கத்திற்கு வரவழைக்க மாமுநிகள் ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீரங்கத்தில் அண்ணா
அண்ணாவும் திருமலையிலிருந்து காஞ்சீபுரம் வந்து அங்கும் மாமுநிகளின் சிறப்பையும் விருப்பத்தையும்அறிந்து ஸ்ரீரங்கம் வந்தார். மாமுநிகளை ஆச்ரயித்து சிஷ்யரானார். ராமானுஜருக்கு கூரத்தாழ்வான் போலே மாமுநி க்கு “ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” உசாத் துணையாக இருந்தார்.
வெங்கடேச சுப்ரபாதம்
பின்னர் மாமுநி திருமலைக்கு எழுந்தருளினார். “அண்ணாவும் உடன் சென்றார். மாமுநி “அண்ணா”வைக் கொண்டு திருவேங்கடவனுக்கு சுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி மங்களா சாஸநம் இவைகளை அருளிச் செய்யும்படி செய்து அவைகளை தினந்தோறும் காலையில் அனுஸத்திக்கும்படி ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாடு இன்று வரை தொடர்ந்து வருகிறது.
ஸ்ரீபாஷ்ய சக்ரவர்த்தி
மாமுநிகள் ஸ்ரீரங்கம் திரும்பிய பிறகு அங்கே கந்தாடையண்ணன் முதலிய சிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதிக்கும்படி செய்து “அண்ணாவை” ஸ்ரீபாஷ்ய சிம்மாசனத்தில் அபிஷேகம் செய்து “ஸ்ரீ பாஷ்யாசார்யர்” என்ற பட்டம் வழங்கினார்.
திருமலையில் ஒரு வாதப் போர்
வடநாட்டிலிருந்து வந்த ஒரு அத்வைதவாதி ஸ்ரீவைஷ்ணவர்களை வாதப் போருக்கு அழைத்த போது மாமுநி ‘அண்ணாவை” திருமலைக்கு அனுப்பினார். ”அண்ணா” அந்த அத்வைதவாதியை வாதத்தில் வென்று அவனைத் தன் சிஷ்யனாக ஆகச் செய்தார்.மாமுநி திருநாட்டுக்கெழுந்தருளியது மீண்டும் “அண்ணா” ஸ்ரீரங்கம் திரும்பியபின் சில
நாட்களில் மாமுநி திருநாட்டுக்கெழுந்தருளினார். மாமுநி யின் பிரிவைத் தாங்க முடியாமல் ஆறுதலுக்காக இவர் பல திவ்ய தேசங்களுக்கு எழுந்தருளினார். திருநாராயணபுரத்தில் உபய வேதாந்த ப்ரவசனம் செய்தார். பின்னர் காஞ்சீபுரம் எழுந்தருளி அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கு ப்ரதான தர்ஸந நிர்வாகராய் இருந்து காலக்ஷேபங்கள் ஸாதித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் திருமலை வாசம்
“தெழிகுரல் அருவி திருவேங்கடத்தில் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யத்” திருவுள்ளம் பற்றி திருமலை சென்று “பரவஸ்து ஸ்ரீனிவாஸாசார்யர்” முதலான மகான்களுக்கு சாஸ்த்ரங்களை அதிகரித்துக் கொண்டிருந்தார்.
இயற்றிய நூல்கள்
ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீபாகவதம், சுபலோபநிஷத், அஷ்டஸ்லோகி, யதிராஜவிம்சதி ஆகிய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானமும், வரவரமுநி சதகம், வரவரமுநி சுப்ரபாதம், ராமானுஜ சுப்ரபாதம், ரங்கராஜ சுப்ரபாதம், 108திருப்பதி எம்பெருமான்கள் விஷயமாக சுப்ரபாதம்
ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களம், ஸ்ரீக்ருஷ்ணமங்களம்,ப்ரபத்தி யோக காரிகை, ப்ராசார்ய சப்ததி ரத்ந மாலை,நித்யாராதன விதி, விஜயத்வஜம், ஜீயர் வாழித் திருநாமம், இருபது வார்த்தை, பெரிய ஜீயர் பாதாதி கேசாந்தமாலை, வ்ருத்தி ஸ்தவம் ஆகியவை இவர் இயற்றியநூல்கள்.
திருநாடு எழுந்தருளல்
இவர் 92 ஆண்டுகள்வாழ்ந்து கி.பி. 1453 பங்குனி சுக்ல நவமி புஷ்ய நக்ஷத்ரத்தில் திருநாடு அலங்கரித்தார்.
20வது நூற்றாண்டில் புகழுடன் விளங்கிய “ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமிய இந்த வம்ஸத்தைச் சேர்ந்தவர்.

5. அஷ்டதிக்கஜம் – எறும்பியப்பா வைபவச் சுருக்கம்
தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகிபதாசரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாசார்ய மஹம்ஜே II
இவர் ஸ்ரீவத்ஸ் கோத்ரத்தில் முடும்பை நம்பி வம்சத்தில் ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையிலுள்ள எறும்பி என்னும் ஊரில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் பெயர் – பெரிய சரண்யாசார்யர். ஐயை என்றும் ஸ்ரீரங்கராஜர் என்றும் மேலும் இரண்டு திருநாமங்களும் உண்டு.
எறும்பியப்பாவிற்கு பெற்றோர் இட்ட திருநாமம் தேவராஜர்.

இவருடைய திருவாராதனப் பெருமாள் சக்ரவர்த்தித் திருமகன்.-மாமுநிகளின் பெருமைகளை இவர் தெரிந்திருந்த போதிலும் அவரை ஆச்ரயிக்க இவர் முதலில் விரும்ப
வில்லை. ஒரு சமயம் இவருடைய திருவாராதனப் பெருமாள் கோவிலாழ்வார் கதவு திறக்கப்பட முடியாமல் திருவாராதனம் செய்ய முடியாமல் போனது.
சக்ரவத்த்தித் திருமகன் இவர் கனவில் தோன்றி மணவாள மாமுநிகளை ஆச்ரயிக்கும்படி கட்டளை யிட்டார். கோவில் கந்தாடை அண்ணனும் இவரை மாமுநிகளை ஆச்ரயிக்கும்படி அறிவுறுத்தினார். அதனால் இவர்ஸ்ரீரங்கம் வந்து மாமுநிகளை ஆச்ரயித்தார்.
மணவாள மாமுநிகளிடம் ஈடுபாடு
மாமுநிகளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் விஷயமாக பூர்வதிநசரி, உத்தர திநசரி, ஸ்ரீபைலேசாஷ்டகம், வரவரமுநி சதகம் என்ற க்ரந்தங்கள் எழுதி யுள்ளார். மணவாள மாமுநிகள் அருளிச் செய்த உபதேசரத்ந மாலையின் கடைசியில் சொல்லப்படும் “மன்னுயிர்
காளிங்கே” என்னும் பாசுரம் இவர் இயற்றியது.-இவர் மேலும் 10 க்ரந்தங்களை இயற்றியுள்ளார்.

6. அஷ்டதிக்கஜம் – அப்பிள்ளார் வைபவச் சுருக்கம்
இவருடைய இயற்பெயர் ராமானுஜன்.-இவர் “சம்ப்ரதாய சந்த்ரிகை” என்னும் தமிழ்ப்
பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார். இது 11 பாசுரங்களைக் கொண்டது. இவை மணவாள மாமுநியைப் பற்றிய முக்கியச் செய்திகள் ஆண்டுகள் இவைகளைத் தெரிவிக்கிறது.
கோவில் கந்தாடையண்ணன் மணவாள மாமுநியை ஆச்ரயித்த பின்னர் அவருடைய பெருமைகளை தெரிந்து கொண்டு இவரும் மாமுநியை ஆச்ரயித்தார். “அந்திமோ பாய நிஷ்டை’யின் எல்லை நிலம் என்று சொல்லுமளவுக்கு மாமுநியிடம் பக்தி கொண்டு அவரையே இறைவனாகக் கருதி வாழ்ந்து வந்தார்.
இவருடைய மரபில் தோன்றியவர்கள் இன்றும் காட்டு மன்னார் கோவிலில் முதல் தீர்த்த மரியாதை களைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந்நாதமுனி சன்னிதியில் கைங்கர்யம் செய்து வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் பல்லவராயன் மடத்திலுள்ள (மணவாளமாமுநி சந்நிதி) மாமுநிகள் விக்ரகம், மாமுநிகள் உபயோகித்த திருக்கைச் செம்பைக் கொண்டு உருக்கி, இவரால் செய்யப்பட்டு திருவாராதனம் செய்யப்பட்டுவந்தது.

7. அஷ்டதிக்கஜம் – அப்பிள்ளை வைபவச் சுருக்கம்
இவருடைய இயற்பெயர் ப்ரணதார்த்திஹரர்”.-இவர்கோவில் கந்தாடையண்ணன்மூலம் மணவாள மாமுநிகளின் பெருமைகளை அறிந்து அவரை ஆச்ரயித்தார்.-இவர் 5 திருவந்தாதிகளுக்கும் யதிராஜ விம்சதிக்கும் உரை எழுதியுள்ளார்.
பத்து ஆழ்வார்கள், ஆண்டாள், மதுரகவி ஆகியோருக்கு வாழித் திருநாமங்கள் எழுதியுள்ளார். மேலும் 3பாடல்கள் சேர்த்து மொத்தம் 15 பாடல்கள் எழுதியுள்ளார்.
மணவாள மாமுநிகள் பற்றிய “செய்ய தாமரைத்தாளிணை வாழியே” என்று தொடங்கும் வாழித் திருநாமம் இவரால் அருளிச் செய்யப்பட்டது என்று சிலர் கருத்து.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வானமாமலை முதலாவது ஸ்வாமி விஷயமான மங்களாசாஸநம்‌, ப்ரபத்தி–ஸ்ரீ மஹார்யர்‌ என்ற ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளியவை-பண்டித ரத்னம்‌, ஸ்ரீ திருக் கண்ணபுரம்‌ ஸ்ரீ செள. ஸ்ரீநிவாஸாசார்யர்‌ (சிரோமணி) இயற்றிய உரையுடன்‌-

July 25, 2025

ஸ்ரீ வர மங்கா ஸமேத தேவ நாயக ஸ்வாமி நம :
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –
ஸ்ரீ மத்‌ வரவரமுநயே நம :
ஸ்ரீ மத் வாசாசல முநயே நம :

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌, தீபக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்ரப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முதிம்‌ |

ஸ்ரீ ஆதி சேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் பகவத் கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்தம்
முதல் பிரதான சிஷ்யர் -அஷ்ட திக் கஜங்களில் பிரதானம்

பாதுகா சில சமயம் பிரியலாம் –
பாதுகா சாயா -சில சமயம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம் –
பாத ரேகா இவர் என்பர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே–பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

இவர் கால் வைத்த காரணத்தால் சிஷ்ய ஸம்பத் பெருகியதால் பொன்னடிக்கால் ஜீயர் -செம் பொன் கழல் அடி -பொன்னடிக்கால் ஜீயர்
இவருக்கு அஷ்ட திக் கஜங்கள்
ஸ்ரீ சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்),
ஸ்ரீ சமரபுங்கவாசார்யர்,
ஸ்ரீ சுத்தசத்வம் அண்ணா,
ஸ்ரீ ஞானக்கண்ணாத்தான்,
ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை ,
ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்,
ஸ்ரீ கோஷ்டிபுரத்தய்யர்
மற்றும் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா.

—————-

அவதாரிகை
ஸ்ரீமத்‌ வாதூலகுல திலகராய்‌ ஸ்ரீநிவாஸார்யர்‌ என்ற அபர நாமத்தை யுடைய மஹார்யர்‌, கோயிலில்‌ அழகிய மா முனிகளை ஆஸ்ரயிக்க விருப்பமுற்று எழுந்தருள, மா முனிகளும்‌ இவரைத்‌ தமது ப்ரதம சிஷ்யரான வானமாமலை ராமாநுஐ ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்து மந்த்ர மந்த்ரார்த்த ரஹஸ்யாதி கிரந்தங்களையும்‌ ஸ்ரீபாஷ்ய பகவத்‌ விஷயாதிகளையும்‌ அவரிடம்‌ அதிகரித்துச்‌ சிறந்த ஞானமுடையராய்‌ ஸ்வாசார்ய சுச்ரூஷா பரராய்‌ எழுந்தருளி
யிருந்தார்‌. பிறகு மா முனிகள்‌ தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உண்டாக வேண்டுமென்று இருக்குமவராகையாலே, தம்மைப்‌ போலவே அவருக்கும்‌, அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து முதிர்ந்த ஞானமுடையவர்களில்‌ சிறந்த சிலரை ௮ஷ்ட திக்‌ கஜங்களாகக்‌ கல்பித்தருளினார்‌. அவ் வெண்மர்‌ திருநாமங்களும்‌ “:ஸ்ரீமந் மஹார்ய ரண புங்கவ” என்ற ஸ்லோகத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது. மாமுனிகள்‌ ஒரு நாள்‌ தமது திக்கஜங்களோடு’ தம்மை ஸேவித்து நிற்கும்‌ வானமாமலை ஜீயரையும்‌ அவருடைய ஸம்ருத்தியையும்‌ கடாக்ஷித்து அதி ஸந்துஷ்டராய்‌ எழுந்தருளியிருந்து, மஹார்யரைக்‌ குறித்து,-உமது ஆசார்‌யன்‌ விஷயமாய்‌ ஒரு ச்லோகம்‌ சொல்லிக்‌ காணும்‌” என்ன,
அவரும்‌ அவசராய்‌, “* ரம்ய ஜாமத்ரு…முநிம் பஜே ” என்று அருளிச் செய்ய அது தமது அபிமதத்திற்கு இசைகந்திருந்தபடியாலே ஸந்தோஷிக்க, மற்ற சிஷ்யர்களும்‌ இந்த ஸ்லோகத்தைக்‌ கேட்டு மா முனிகளைப்‌ பார்த்து, அடியோங்‌களுக்கு இற்றைக்கு ஓர்‌ மஹா நிதி ப்ராப்தமாயிற்று”’ என்று கொண்டாட, மாமுனிகளும்‌ தமது ஸ்ரீ சைலேச தயா பாத்‌ரத்‌ தனியனோடு இந்த ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர”” என்‌னும்‌ தனியனையும்‌ நியதமாகச்‌ சேர்த்து அநுஸந்திக்கும்படி. நியமித்துத்‌ தமது அம்சாவதாரமே வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ என்று அவர்‌ வைபவத்தை ப்ரகாசப் படுத்தினார்‌.

பிறகு அந்த மஹார்யர்‌, மணவாள முனிகளால்‌ அநேக ஸமயங்‌களில்‌ ஸூஸிப்பிக்கப்பட்ட தமது ஆசார்யன்‌ வைபவத்தையும்‌, உபய வேதாந்த மந்த்ர ரஹஸ்யாதி விஷயமான
ஸுஷ்ம ஞானத்தையும்‌, ஸெளலப்யம்‌, ஸெளஸீல்யம்‌, பக்தி, வைராக்யம்‌ முதலிய அவரது குண கணங்களையும்‌கண்டு அதிசயித்து, அக் குணங்களில்‌ ஆழ்ந்து பக்திபரவசராய்‌, மெய் மறந்து பல்லாண்டு பாடி யல்லது நிற்க வொண்ணாத நிலையை எய்தி, அவரது மங்களாசாஸநத்திலே ப்ரவ்‌ருத்தராகிறார்‌ இந்த கிரந்தத்திலே.. இந்த ராமாநுஜ முனி
விஷயமான ப்ரபத்தி கிரந்தத்தை ‘ அருளிச் செய்தவரும்‌ இவரேயாவர்‌. இவருக்குத்‌ தொட்டை அய்யங்கார்‌ அப்பை என்ற திருநாமமும்‌ உண்டு.

ரம்யோ பயந்த்ரு முநி வர்ய தயா நிவாஸம்‌,ராமாநுஜம்‌ யதிபதம்‌ கருணாம்ருதாப்‌திம்‌ வந்தே மநோஜ்ஞ வரதாஹ்வயம்‌ ஆத்மவந்தம்‌ ஆ ஜந்ம ஸித்த பரிபூத சரித்ர போதம்‌ –1-

பதவுரை:–
ரம்யோ பயந்த்ரு முநி வர்ய–அழகிய மணவாள மாமுனிகளது,
தயா நிவாஸம்‌-கருணைக்கு இருப்பிடமாயும்‌,
கருணாம்ருதாப்‌திம்‌-கருணை யென்னும்‌ அம்ருதத்திற்கு உறை விடமான கடல் போன்றவரும்‌,
ஆத்மவந்தம்‌-தைர்யத்தை.யுடையவரும்‌, (ஆஜந்ம ஸித்த…போதம்‌)
ஆ ஜந்ம ஸித்த – பிறப்பு முதலே யுண்டாகிய,
பரிபூத – மிகவும்‌ புனிதமான,
சரித்ர-ஆசரணையையும்‌,
போதம்‌-ஞானத்தையும்‌ உடையவரும்‌,
மநோஜ்ஞ வரதாஹ்வயம்‌-தமது பிதாவினால்‌ அழகிய வரதர்‌ என்ற திருநாமம்‌ சாற்றப் பெற்றவரும்‌,
யதிபதம்‌-யதிகட்டு இறைவருமான,
ராமாநுஜம்‌ – வாநாசல ராமாநுஜ முனி வரரை,
வந்தே – வணங்குகின்றேன்‌.

இந்த வாநாசல ராமாநுஜ முநிவர்‌, ஸ்ரீமணவாள மாமுனிகள்‌ கிரஹஸ்த தர்மத்தை அருஷ்டித்துத்‌ திருக்குருகூரில்‌ எழுந்தருளியிருந்த காலத்திலேயே அவரது
திருவடி.களில்‌ முதலில்‌ ஆஸ்ரயித்த முதலாவது சிஷ்யராவார்‌.-ஆகையால்‌ அவரது தயைக்கு இவரேஉறைவிடமாயினர்‌. இவர்‌ ஆத்மவானும்‌ ஆவர்‌. அதாவது ஓரிடத்திலும்‌ மழுங்‌காத தைர்யமென்னும்‌ குணத்தை உடையவர்‌. இத்தால்‌-தம்மை ஆஸ்ரயித்தவர்களை உய்விக்க இவர்‌ யத்னம்‌ செய்‌தால்‌ அது விஷயத்தில்‌ தளர்வை எய்தார்‌ ‘எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌.

ஸ்ரீ ராமாயணத்தில்‌ ‘* ஆத்மவாந் கோ ஜித க்ரோத: ” என்னுமிடத்தில்‌ இப் பதத்திற்ரு தைர்யவான்‌-என்ற அர்த்தமே கோவிந்தராஜரால்‌ கூறப்பட்டுள்ளது காண்க. அல்லது ஆத்ம சப்தம்‌ ஸ்வபாவத்தைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அபிமுகனான சேதநனை ரக்ஷிக்கும்‌
ஆசார்ய ஸ்வபாவத்தைக்‌ கூறி, அத்தகைய ரக்ஷண ஸ்வபாவம்‌ வாய்ந்தவர்‌ என்றுமாம்‌. அல்லது ஆத்ம சப்தம்‌ மனதைக்‌ கூறுமாகையால்‌ தமக்கு அதீநமாய்‌ தம்‌ வசத்திலாய மனத்தை யுடையவர்‌ என்றுமாம்‌. இத்தால்‌ இவரது வைராக்ய முடைமை கூறப்பட்டதாகும்‌.

இவர்‌ கருணையாகிய அம்ருதம்‌ நிறைந்த கடல்‌ போன்றவர் இவரைக்‌ கடலாகக்‌ கூறியதால்‌ கடலில்‌ தண்ணீரை ஒருவராலும்‌ வற்றச்செய்ய முடியாதாப்‌ போலவே இவர்‌ கருணையையும்‌ வற்றச்‌ செய்ய இயலாது என்பது ஸூசிதமாம்‌. கருணையை
அம்ருதமாகக் கூறியதால்‌, அம்ருதம்‌ தன்னை அருந்தியவருக்கு அமரத்‌ தன்மை யளிப்பது போலவே, இவரது கருணையும்‌ தமக்கு விஷயமானவர்களுக்கு அமரத்வத்தை
(நித்பத்வத்தை) அளிக்குமென்பது தேறுகிறது
. நிற்க இப்‌பொழுது இவர்‌ நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸத்தை எய்தி ராமாநுஜ முனி என்று திருநாமம்‌ உடையராயினும்‌,
தமது பால்யத்தில்‌ தமது பிதாவால்‌ மிகுந்த அழகு வாய்ந்திருந்தமை காரணமாக, இவர்‌ அழகிய வரதரென்று அழைக்‌கப் பட்டவராயிருப்பர்‌. பிறப்புடனே கூட உண்டாகிய மிகப்‌ பரிசுத்தமான அநுஷ்டானங்களையும்‌ ஞானத்தையும்‌ உடையவர்‌ இவர்‌. இத்தகைய பெருமை வாய்ந்த யதித்‌ தலைவரான ராமாநுஜ முனியை வணங்குகின்றேன்‌.

——-

அவதாரிகை.–
முதல்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜமுநிவர்‌ மணவாள மா முனிகளின்‌ தயைக்குப்‌ பாத்ரமானவர்‌ என்றார்‌. இதில்‌ இவருக்கு உண்டாகிய வாத்ஸல்ய ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களுக்கு ஊற்றுவாய்‌ மாமுனிகள்‌ எனக்‌ கூறி, இவரே எனது குலத்திற்கு நாதன்‌” எனவும்‌ கூறி வணங்குகின்றார்‌.

ரம்யோ பயந்த்ரு முநிவர்ய தயாநுபாவ ஸம் ஸித்த ஸத் குண கணஓக மஹார்ணவாய ராமாநுஜாய முநயே யமிநாம்‌ வராய மாமக நாதாய குலஸ்ய நம அஸ்து நித்யம் –2-

பதவுரை:–(ரம்யோ பயந்த்ரு…மஹார்ணவாய)
ரம்யோ பயந்த்ரு- அழகிய மணவாள னென்னும்‌,
முநிவர்ய – யதித்‌ தலைவனது,
தயாநுபாவ -.கருணையின்‌ ப்ரபாவத்தினால்‌,
ஸம் ஸித்த-நன்றாய்‌ ஸித்‌திக்கப் பெற்ற, ஸத் குண கண-சிறந்த குணங்களின்‌ திரளாகிற,
ஓக-ப்ரவாஹத்திற்கு,
மஹார்ணவாய – புகலிடமாகிய ஸமுத்ரம்‌ போன்றவரும்‌,
யமிநாம்‌-மனதை அடக்கியாளும்‌ யோகிகளுள்‌
வராய – தலை சிறந்தவரும்‌,
மாமக குலஸ்ய-எனது குலத்திற்கு,
நாதாய-யஜமானரும்‌,
ராமாநுஜாய – இராமாநுசன்‌ எனப்‌ பெயர் பூண்ட வருமான;
முநயே – முநிவரின்‌ பொருட்டு,
நம: – எனது நமஸ்காரம்‌,
அஸ்து – ஆயிடுக.

இந்த வாநாத்ரி முநிவர்‌ பிறப்பே தொடங்கி உண்டாகிய ஸதாசாரம்‌, ஞானம்‌ இவைகளை யுடையராயினும்‌ மணவாள மா முனிகளை ஆஸ்ரயித்த பின்னர்‌, அவரது கருணையின்‌ மஹிமையால்‌ உண்டாகிய வாத்ஸல்ய ஸவ்ஸீல்ய ஸவ்லப்யாதி குணத்‌ திரள்‌ ப்ரவாஹமாகச்‌ சென்று சேரும்‌ பெருங்கடலாயினர்‌. இவரை குணக்‌ கட.லாகக்‌ கூறியதால்‌, குணங்கள்‌ வற்றாத ஆகரம்‌ இவர்‌ என்றததாயிற்று. இவர்‌ இந்த்ரியங்களை அடக்கி மனதைத்‌ தம்‌ நிலையிலே நிறுத்தும்‌ யோகிகளுள்‌ சிறந்த தலைவர்‌. எனது குலத்தை நிர்வஹித்து நடத்திப் போரும்‌ நாதனுமாவார்‌-இப்‌ பெருமை வாய்ந்த இவ் வாநாசல முனிவருக்கு நித்யமாக எனது நமஸ்காரம்‌ உரித்தாகுக.

—————-

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இந்த ராமாநுஜ முநிவருக்கு உண்டாகிய ஸத் குணங்கள்‌ மணவாள மாமுனிகளின்‌ தயா ப்ரபாவத்தாலென்றார்‌. இதில்‌ இவருக்கு தாரக போஷகாதிகளும்‌ மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளே எனக்‌ கூறி, இவர்‌ தமது குலத்திற்கு நாதனானமையை விளக்‌கிக்‌ கூறுகிறார்‌.

ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர பாத கம்ஜாத ப்ருங்கம்‌ கருணாந்தரங்கம்‌ ராமாநுஜம்‌ முநிம்‌ நவ்மி மதீய ஹ்ருத்‌ சந்த்ர காந்தோ பல பூர்ண சந்தரம்‌ –3-

பதவுரை:–(ஸ்ரீரம்ய ஜாமாத்ரு…… ப்ருங்‌ தம்‌) ஸ்ரீரம்ய ஜாமாத்ரு முநீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
பாத – திருவடிகளாகிற,
கம்ஜாத – தாமரை மலர்களில்‌ படியும்‌,
ப்ருங்கம்‌ – வண்டு போன்றவரும்‌,
கருணாந்தரங்கம்‌-கருணையுடன்‌ கூடிய மனதை உடையவரும்‌,
மதீய- என்னுடையதான,
ஹ்ருத்‌ – மனதாகிற,
சந்த்ர காந்தோ பல – சந்த்ரகாந்தக்‌ கல்லுக்கு,
பூர்ண சந்தரம்‌ – கலைகள்‌ நிறைந்த சந்த்ரன்‌ போன்றவருமான,
ராமாநுஜம்‌ முநிம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ முநிவரை,
நவ்மி – துதிக்‌கின்றேன்‌.

இவ் விராமாநுஜ முநிவர்‌ மணவாள மாமுனிகளினுடைய திருவடித்‌ தாமரைகளில்‌ படிந்த வண்டு போன்றவர்‌ என்பதால்‌ அத் திருவடி மலர்களையே . தமக்கு தாரக போஷகங்களாகக்‌ கொண்டவர்‌ எனக்‌ கூறியவாறாம்‌.-வண்டுகளுக்கு மலரே தாரக போஷகங்களல்‌லவா? இவர்‌ கருணையோடு கூடிய மனது வாய்ந்தவர்‌, மேலும்‌ எனது மனதாகிற சந்த்ர காந்தக்‌ கல்‌லுக்கு கலா பூர்ணனான சந்திரன்‌ போன்றவர்‌. இவரைச்‌ சந்திரனாகவும்‌ மனதைக்‌ கல்லாகவும்‌ கூறியதால்‌, கல்லையும்‌ உருகச் செய்யும்‌ சக்தி வாய்ந்தவர்‌ இம்‌ முனிவர்‌ என்றும்‌, அக் கல்‌ சந்திரனுக்கன்றி மற்றொன்றைக்‌ கண்டு உருக மாட்டாதது போலவே, எனது கல் நெஞ்சம்‌ அவருக்கன்றி மற்றையோருக்குக்‌ கரையாது என்றும்‌, கலா பூர்ணனான சந்த்ரனென்று ரூபகமாகக்‌ கூறியதால்‌ இவரும்‌ ௮ச் சந்த்ரனைப் போலவே கலா பூர்ணர்‌ (வித்யைகள்‌ நிரம்பியவர்‌ ) என்றும்‌ கூறப்பட்டதாகும்‌. இதனால்‌ இவர்‌ கல்வியின்‌ பெருமை காரணமாகத்‌ தம்‌ நெஞ்சம்‌ உருகியதாகக்‌ கூறப்‌ பட்டதாகும்‌. கல்வி காரணமாகத்‌ தமது குலத்துக்கு நாதர்‌ என்று கீழில்‌ ஸ்லோகத்திற்கு இது விவரணமுமாகும்‌. இவ்‌வாறு சிறப்பு வாய்ந்த இராமாநுச முநியைத்‌ துதிக்‌கின்றேன்‌.

——————

அவதாரிகை:–இந்த ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கல்யாண குணங்களில்‌ சிலவற்றைக்‌ கூறி, இவர்‌ அழகிய மணவாள மாமுனிகளுக்கு அந்தரங்கராய்‌ -பஹி: சர:ப்ராண: என்னுமா போலே அம் முனிவரின்‌ ப்ராண ஸ்தாநீயருமாவார்‌ என்கிறார்‌.

வந்தே வாத்ஸல்ய ஸெளசீல்ய ஞாநாதி குண ஸாகரம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி ஜீவிதம்‌
ராமாநுஜ முநிம்‌ –
4-

பதவுரை :–
வாத்ஸல்ய -வாத்ஸல்ய குணமென்ன,
ஸெளசீல்ய – ஸெளசீல்ய குணமென்ன,
ஞான- ஞானமென்ன,
ஆதி – இவை முதலாய,

குண – குணங்கட்கு,
ஸாகரம்‌ – கடல்‌ போன்‌றவரும்‌
ரம்ய ஜாமாத்ரு முநி – அழகிய மணவாள மாமுனிகட்கு,
ஜீவிதம்‌ – ப்ராணன்‌ போன்‌றவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ முனியை, வந்தே – வணங்குகின்றேன்‌-

வாத்ஸல்யமென்பது – தன்னை ஆஸ்ரயித்தவர்‌கள்‌ இழைத்த குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌ மிகப்‌ பெரியோரின்‌ ௮ற்புத குணமாம்‌. இக்‌ குணம்‌ நமது குற்றங்‌களைக்‌ கண்டும்‌ அஞ்சாது அப் பெரியோரை நாம்‌ அணுகுவதற்கு உறுப்பாகும்‌. செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்ளுதல்‌ பெரியோரின்‌ இயல்பு.-ஸெளசீல்யமென்பது–தான்‌ எவ்வளவு பெருமை யுடையவனாயினும்‌ தன்‌ மேன்மையைக்‌ கொஞ்சமும்‌ தன்‌ மனத்தால்‌ நினையாது மிகத்‌ தாழ்ந்தோருடனும்‌ புரையறக்‌ கலக்கும்‌ குண விசேஷமாகும்‌.
இஃது நாம்‌ கட்ட விரும்பும்‌ பெரியோரின்‌ பெருமையைக்‌ கண்டு நாம்‌ அகல வேண்டாமைக்கு உரித்தாய குணம்‌-ஞானமென்பது தன்னை ஆஸ்ரயித்தவர்களின்‌ அபேக்ஷையை அறிய ஏதுவாய குணம்‌. ஆதி சப்தத்தால்‌ ஸ்வாமித்வம்‌, ப்ராப்தி பூர்த்தி முதலிய குணங்களும்‌ கூறப்‌பட்டனவாகும்‌. இக் குணங்கட்கு இவரைக்‌ கடலெனக்‌
கூறியதால்‌ இவைகள்‌ வற்றாது நிரம்பி இருக்குமிடமென்று கூறியதாகும்‌-
நிற்க -இம் முனிவரை மா முனிகளுக்கு ப்ராணன்‌ எனக்‌ கூறியதால்‌ இவரை க்ஷண காலமும்‌ விட்டுப் பிரிந்து மா முனிகள்‌ தரிக்க வல்லரல்லர்‌ என்றதும்‌, (ஸ்ரீராமபிரானுக்கு இளைய பெருமாள்‌ போல்‌ ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்‌ எல்லா விதக்‌ கைங்கர்யங்களையும்‌
செய்யும்‌ அந்தரங்கர்‌
என்ற அம்சமும்‌ தோற்றுகின்றன-இத்தகைய பெருமை வாய்ந்தவரை வணங்குகின்றேன்‌.

————

கீழ்‌ ஸ்லோகத்தில்‌ வாச்ஸல்ய ஸெளசீல்யாதி குணங்களுக்குக்‌ கடலென்றும்‌, மாமுனிகளை்‌ விட்‌டகலாதவர்‌ என்றும்‌ இவரது பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய வைராக்கியமென்னும்‌ முக்‌கிய குணம்‌ கூறப்படுகிறது.

வந்தே வாந மஹாசைல ராமாநுஜ மஹாமுமிம்‌ யத்‌ அநாதர ஸம் வ்ரீடம்‌ அந்தராளாஸ்ரம த்வயம்‌-5-

பதவுரை:–
அந்தராளாஸ்ரம த்வயம்‌ – ப்ரும்ஹசர்யத்‌திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ மத்தியிலுள்ள கார்ஹஸ்த்யம்‌,வாநப்ரஸதம்‌ என்னும்‌ ஆஸ்ரமங்களிரண்டும்‌,
யத்‌-எந்த முனிவரது,
அநாதர – ஆதரவின்மையாலே,
ஸம் வ்ரீடம்‌ – மிகுந்த லஜ்ஜையை உடையதாக, (ஆயிற்றோ);
வாந மஹாசைல-(அந்த) வானமாமாலை,
ராமாநுஜ மஹா முமிம்‌ – ராமானுஜனென்னும்‌ மா முனியை,
வந்தே-நமஸ்கரிக்கின்றேன்‌-.

இங்கு “வாந மஹாசைல ‘ எனக்‌ கூறியது-எம்பெருமானை. ** வானமாமலையே அடியேன்‌ தொழ வந்‌தருளே ‘* என்று நம்மாழ்வார்‌ அவனையே கூறியுள்ளார்‌,
அந்த வானமாமலை என்ற தழிழ்ப்‌ பதமே ஸம்ஸ்க்ருத பதமாக ** வாந மஹா சைல ”? என்று மஹார்யரால்‌ கூறப்பட்டதாகும்‌. எனவே அவ்வெம்பெருமானுக்கு உரிமை பூண்டவராய்‌ அவருடைய கல்யாண குணங்களையே அநவரதம்‌ அநு ஸந்தாநம்‌ செய்யுமவராகையாலே, **மஹாமுநிம்‌’” என்றார்‌–இந்த ஸ்லோகத்தின்‌ பிற்‌ பகுதியால்‌ இவரது சிறந்த வைராக்‌யம்‌ என்னும்‌ குணம்‌, மிகுந்த சமத்காரத்துடன்‌ கூறப்படுவது காணலாகும் -அதாவது, இந்த ராமாநுஜ முநிவர்‌ தமது பிதாவால்‌ உபநயன ஸம்ஸ்காரம்‌ பெற்று ப்ரும்ஹசர்‌யத்துடன்‌ வேத வேதாங்கங்களை நன்கு கற்றறிந்து வைராக்‌யத்தை எய்தி, அதன்‌ மேலீட்டால்‌ ப்ரும்‌ஹசர்யத்திற்கும்‌ ஸந்யாஸத்திற்கும்‌ நடுவிலுள்‌ள கார்‌ஹஸ்‌யம்‌, வானப்ரஸ்‌தம்‌ என்ற இரண்டு ஆஸ்ரமங்களையும்‌ கண்ணெடுத்தும்‌ பாராது இவர்‌ அநாதரவு செய்ததால்‌ அவைகள்‌ மிகுந்த வெட்கத்தை எய்தின என்‌கிறார்‌, மஹார்யர்‌ ரஸோக்‌தியாலே,-வைகுண்ட என்றும்‌ சப்தம்‌ எம்பெருமானையும்‌, அவருக்கு வாஸ ஸ்தானமான பரம பதத்தையும்‌ கூறுவதுபோல இங்‌கும்‌ வாநாசல என்ற பதம்‌ எம்பெருமானையும்‌ அவருடைய
திருப்பதியான ஸ்ரீ வரமங்கல நகரையும்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. தற்காலத்தில்‌ வ்யவஹாராமும்‌ இவ்வாறே உண்டாயிருக்கலாம்‌. “தேசிக சிகா மணிகளான எம்பெருமானார்‌ மணவாள மா முனிகள்‌ போன்‌றவரும்‌ சிறிது காலம்‌ க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்து நம்மை ஆதரித்திருக்க,-அந்தோ-நம்மை இவர்‌ கண்ணெடுத்து ஏற இறங்கவும்‌ பார்க்கவில்லையே” என்று இவரால்‌ ஏற்கப்படாத கிருஹஸ்‌தாஸ்ரமம்‌ வெட்கமுற்றதாம்‌. இது வாநப்ரஸ்தத்‌திற்கும்‌-உப லஷணம்‌. இத்தால்‌ அவ்விருவரிலும்‌ காட்டிலும்‌ வைராக்ய விஷயத்தில்‌ இவர்‌ சிறப்புற்றவர்‌ எனக்‌ கூறப்‌பட்டதாகும்‌. மணவாள மாமுனி கிருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்து வரும்‌ காலத்திலேயே அவரது ஸம்பந்தம்‌
பெற்ற இவர்‌, தமது வைராக்யத்தின்‌ மேலீட்டால்‌ . ஸந்யாஸாஸ்ரமத்தை எய்தினார்‌ என்பதை யதிந்தர ப்ரவண ப்ரபாவம்‌, ககநகிரிமுநி சரிதம்‌ முதலியவற்றில்‌ காணலாம்‌. இச்‌ சிறந்த வைராக்யம்‌ பூண்ட இராமாநுஐ முநியை வணங்குகின்றேன்

———

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ அழகிய மணவாள மா முனிகளின் திருவடிகளில்‌ முதலிலேயே இவர்‌ ஆஸ்ரயித்து, அவருடைய கருணை பாயும்‌ முதல்‌ மடையுமாவர்‌ இவர்‌ என்று கூறுகிறார்‌. அதாவது இவரே அவரது முதல்‌ சிஷ்யர்‌. இவரது கால்‌ நலத்தாலே மற்றெல்லா சிஷ்யர்‌களும்‌ தம்மை ஆச்ரயித்துத்‌ தாம்‌ பெருமை எய்தியதாக மாமுனிகளும்‌ நினைத்தன்றோ இவருக்கு “*பொன்னடிக்கால்‌ ஜீயர்‌ ‘” என்று திருநாமம்‌ சாற்றியதும்‌. எனவே அவர்‌ கருணைக்கு முதல்‌ இலக்கு இவர்‌. மேலும்‌ காமம்‌, கரோதம்‌ என்ற தீக்குணங்கள்‌ தம்மிடம்‌ இல்லாததோடு தம்மை அடுத்த மற்றையாரின்‌ அத் தீய குணங்களையும்‌ அகற்றுமவர்‌ இவர்‌ என்ற பெருமையையும்‌ கூறுகிறார்‌.

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர ப்ரஸாத ப்ரதமாஸ்பதம்‌
ராமாநுஜமுநிம்‌ வந்தே காமாதி துரிதாபஹம்‌-6-

பதவுரை :-
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாள மாமுனிகளின்‌, :
ப்ரஸாத -அருளுக்கு,
ப்ரதமாஸ்பதம்‌ – முதலாவது ஸ்தானமாகியவரும்‌,
காமாதி துரிதாபஹம்‌ – காமம்‌ முதலான பாபங்‌களை அகற்றுமவருமான, ராமாநுஜமுநிம்‌ – வாநாத்ரி-ராமாநுஜ முநிவரை,
வந்தே-வணங்குகின்றேன்‌.

மற்றைய சிஷ்யர்கள்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ பெருமையை உணர்ந்து அவரை ஆஸ்ரயிப்பதற்கு வெகு காலம்‌ முன்னமேயே அவர்‌ கிருஹஸ்தாஸ்ரமத்தை யுடையராய்‌ திருநகரியில்‌ எழுந்தருளியிருந்த போதே, இந்த ராமாநுஜ முனிவர்‌ அவர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து அவரது கருணைக்கு முதல்‌ பாத்திரமாய்‌ அவர்‌ பாத ரேகா ஸமராயிருந்து, பின்பு (மா முனிகளை) ஆஸ்ரயித்த அண்ணன்‌, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌ முதலியோருக்கு ஆஸ்ரயணத்தில்‌ இவர்‌ புருஷகாரமா யிருந்தமையாலும்‌ அவருடைய கருணைக்கு முதல்‌ விஷயம்‌ இவரே. மேலும்‌ இவர்‌ வைராக்ய சாலியாகையால்‌ காமம்‌, க்ரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ என்று சொல்லப்படும்‌ உடன்‌ பிறந்த சத்ருக்‌களாகிய ஆறு தீய குணங்களையும்‌ தாம்‌ அகற்றியதோடு தம்மைச்‌ சார்ந்தோரையும்‌ அத் தீய குணங்கள்‌ சாரா வண்ணம்‌ நீக்கும்‌ சக்தி வாய்க்தவர்‌. **காமாத்‌ க்ரோதோபி ஜாயதே க்ரோதாத்‌ பவதி ஸம்மோஹ :’”இத்யாதிகளாலே காமாதிகளின்‌ கொடுமை ஸ்ரீ கீதையில்‌ கண்ணனால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது. இவைகளைப்‌ பாப வாசகமான துரித சப்தத்தாலே கூறியது, அப் பாபத்துக்கு இத்‌ தீய குணங்கள்‌ காரணமாகையாலே. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ராமானுஜ முநியை வணங்குகின்றேன்‌.

————-

கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவர்‌ ராக த்வேஷாதிகள்‌ அற்றவரெனக்‌ கூறினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ராக த்வேஷங்களே, “இவர் நமக்கு நிலமன்று; நாம்‌ இங்‌கிருக்க இயலாது?” என்று இவரை விட்டுத்‌ தாங்களே கை வாங்கின’ என்றும்‌, இவர்‌ அழகிய குணங்களுக்கு உறைவிடமென்றும்‌, உத்தம புருஷ லக்ஷணம்‌ வாய்ந்தவரென்றும்‌ கூறுகிறார்

ராமாநுஜ முநிம்‌ வந்தே ரமணிய குணாகரம்‌
ராக த்வேஷ விநிர்முக்தம்‌ ராஜீ வதல லோசனம்‌-7-

பதவுரை:–
ரமணிய குணாகரம்‌ – அழகிய குணங்களுக்கு உற்பத்தி ஸ்தாநமாயும்‌, ராக த்வேஷ விநிர்முக்தம்‌ – ராக த்வேஷங்களால்‌ விடப் பெற்றவரும்‌,
ராஜீ வதல லோசனம்‌ – தாமரைப்‌ பூவின்‌ இதழ் போல்‌ அழகிய நீண்ட கண்களை யுடையவருமான,
ராமாநுஜ முநிம்‌ – ராமாநுஜ யோகியை,
வந்தே – வணங்குகிறேன்‌.

இம்‌ முனிவர்‌ அழகிய நற்குணங்கள்‌ உற்‌பவிக்கும்‌ கனியாவார்‌. ராக த்வேஷங்களால்‌ விடப்பெற்றவர்‌. அதாவது ௮வை இவரிடம்‌ முன்பிருந்து இவருடைய முயற்சியால்‌ அகற்றப் பட்டவையல்ல; அவைகளே இவரைக்‌ கண்டு பயந்து ஓடுங்க, **இவர்‌ ஈமக்கு நிலமன்று” என்று இவரை விட்டு நீங்க. இத்தால்‌ இவர்‌ ராக த்வேஷங்களின்‌ வாஸனையும்‌ அற்றவர்‌ எனக்‌ கூறப்பட்ட.தாகும்‌. தாமரை இதழ் போன்ற நீண்ட திருக்கண்களை யுடையவர்‌ எனக்‌ கூறியதால்‌ இவரது மஹா புருஷ லக்ஷணமும்‌, அழகிய வரதர்‌ என்ற திருநாமத்துக்குக்‌ காரணமான இவரது அழகும்‌ கூறப்பட்டனவாகும்‌. இத்தகைய ராமாநுஜ முநியை:
வணங்குகின்றேன்‌.

—————–

அவதாரிகை:-
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது தோஷமின்மையும்‌ கல்யாண குணங்களும்‌ ஸெளந்தர்யமுமாகியவை கூறப்பட்டன. இதில்‌ இவரது வைராக்யத்தின்‌
பெருமை
விஸ்தரிக்கப்படுகிறது.

உத்பத்திம்‌ பவநாத்மஜே அலபத யா வைராக்ய ஸம்பத்‌ புரா
சாந்தே சாந்தநவே நிரந்தரம்‌ அகாத்‌ வ்ருத்திம்‌ ஸம்ருத்தாம்‌ தத
ஸா இயம்‌ ஸம் ப்ரதி யம்‌ ஸமேத்ய புவநே வித்யோததே நைகதா
தம்‌ ராமாநுஐ யோகிநம்‌ குருவரம்‌ பஸ்யேம ஸஸ்வத்‌ வயம்‌
-8-

பதவுரை:–
யா – எந்த,
வைராக்ய ஸம்பத்‌ – வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
பவநாத்மஜே – வாயுவின்‌ புத்திரனான
அநுமானிடம்‌,
புரா – முற்காலத்தில்‌,
உத்பத்திம்‌ – உற்பத்‌தியை,
அலபத – அடைந்ததோ,
தத: – அதன் பிறகு,
(யா)எந்த வைராக்யமென்னும்‌ ஐஸ்வர்யம்‌,
சாந்தே – அடக்கப்‌ பட்ட மனதையுடைய,
சாந்தநவே – சந்தநு மஹாராஜனின்‌
புதல்வனான பீஷ்மரிடம்‌,
ஸம்ருத்தாம்‌ – பூர்ணமான,
ருத்திம்‌ – ஸம்ருத்தியை,
நிரந்தரம்‌ – இடைவிடாது, நித்யமாக-என்றபடி,
அகாத்‌ – அடைந்ததோ,
ஸா – அப்படிப்‌ பட்ட,
இயம்‌ – இந்த வைராக்யம்‌ என்னும்‌ ஐஸ்வர்யம்‌,
யம்‌ -எந்த ராமானுஜ முநியை,
ஸமேத்ய – அடைந்து,
புவநே -உலகில்‌,
நைகதா- அநேக விதமாக,
வித்யோததே – ப்ரகாசிக்‌கின்றதோ,
குருவரம்‌ – ஆசார்யர்களுள்‌ சிறந்தவரான,
தம்‌ -அந்த,
ராமாநுஐ யோகிநம்‌ – இராமானுஜ முநியை,
வயம்‌ -நாம்‌,
சச்வத்‌ – அடிக்கடி,
பஸ்யேம-பார்க்கக் கடவோம்‌-கண்டு
களிக்கக் கடவோம்‌ என்றவாறு.

வைராக்யம்‌ என்பது உலகில்‌ மிகச்‌ சிறந்த ஓர்‌ ஐஸ்வர்யமாகும்‌ ; அது எல்லோருக்கும்‌ கிடைத்தலரிது. அவ்வைஸ்வர்யம்‌ முதலில்‌ வாயு புத்ரனாகிய அநுமானிடமே உண்டாயிற்று- அதன்‌ பிறகு மனச்‌ சாந்தி பெற்ற சந்தநு மஹாராஜனின்‌ குமாரனாகிய பீஷ்மரிடம்‌ நிரந்தரமாக மிக விருத்தியைப்‌ பெற்றது. இவ்‌ விருவரை யொழிந்த மற்றையோருக்கு இவ்வைஸ்வர்யம்‌ இருந்ததில்லை என்பதை *:௮ந்யத்ர பீஷ்மாத்‌ காங்கேயா தந்யத்ர ச ஹ.நூமத: | ஹறிணீ குர மாத்ரேண சர்மண மோஹிதம்‌: ஐகத்‌ ‘” என்ற வசனத்தால்‌ அறிகிறோம்‌. : இந்த ஸ்லோகத்‌தின்‌ கருத்து ** கங்கா புத்திரனான பீஷ்மனையும்‌ அநுமானையும்‌ தவிர்த்து மற்றைய உலகம்‌ மானின்‌ குளப்படி போன்ற ஸ்திரீகளின்‌ அவய விசேஷத்தாலே மோஹமுற்றதேயாகும்‌”’ என்பதாம்‌. பீஷ்மரின்‌ வைராக்யம்‌ அநுமானது வைராக்யத்தை விடச்‌ சிறந்ததாகும்‌. ஏனெனில்‌, மிகுந்த வீர்யத்தையும்‌ ஐஸ்வர்யத்தையும்‌ உடையராய்‌ எல்லா போக்‌யங்களையும்‌ அனுபவிக்கத்‌ தகுதி வாய்ந்த அரசிளங்‌ குமாரரல்லவா அவர்‌? அத்தகையவர்‌ தமது பிதாவின்‌ விருப்‌பத்தை உணர்ந்து மேலும்‌ பிதா காம போகங்களை அநுபவிக்க வேண்டியதற்காகவே தமது யெளவனப்‌ பருவத்திலும்‌ தமது போகத்தை சபத பூர்வமாகத்‌ துறந்து உலகறியச் செய்து உயிருள்ளளவும்‌ ப்ரும்ஹசர்யத்தையே அநுஷ்‌டித்துப்‌ போந்த மஹா வைராக்யசாலி யாயிற்றே அவர்‌,-மேலும்‌ தமது ப்ராதாவான விசித்ர வீர்யன்‌ நிமித்தமாக ஸ்வயம்வரத்தில்‌ பலாத்காரத்தால்‌ கொண்டு வரப்பட்ட காசி ராஜன்‌ மகள்‌ அம்பா என்பவள்‌, தான்‌ ஏற்கனவே ஸால்வராஜனை வரித்திருப்பதாயும்‌ தனது மனம்‌ அவனையே விரும்புவதாகவும்‌ சொல்ல, பீஷ்மரும்‌ விசித்ர வீர்யனும்‌ அவளை அவள்‌ விருப்பப்படி செய்ய அநுமதித்தார்கள்‌.ஆனால்‌ அவள்‌ ஸால்வனைச்‌ சந்தித்து தன்னை மணக்கும்படி கேட்க பிஷ்மரால்‌ பலாத்கரித்து வீர்யத்தால்‌ கொண்டு போகப்பட்ட உன்னை நான்‌ விவாஹம்‌ செய்து கொள்ள மாட்டேன்‌ என்று திரஸ்கரித்து விட்டான்‌. பிறகு அவள்‌ பீஷ்மரிடம்‌ வந்து, “*“ஸால்வன்‌ நிராகரித்து விட்டபடியாலும்‌ நீரே வீர்யத்தால்‌ என்னைக்‌ கொண்டு வந்த படியாலும்‌ நீராவது என்னை விவாகம்‌ செய்து கொள்ள வேண்டும்‌; இல்லையேல்‌ தவம்‌ செய்தாவது உமது உயிரை மாய்க்கும்‌ உபா யத்தைக்‌ கைக் கொள்வேன்‌”” என்று சபதம்‌ பண்ணின விடத்‌திலும்‌ உயிரையும்‌ மதியாது தாம்‌ முன்‌ பண்ணிய சபதத்‌தின்படி ப்ரும்ஹசர்யத்தைப்‌ பேணிப்‌ போந்த மஹாநுபாவருமாவர்‌ அவர்‌. இப்படி அவ்விருவரிடமும்‌ காணப்பட்ட வைராக்யம்‌, இக்‌ கலிகாலத்திலும்‌ விரக்தர்களில்‌ தலைவரான இவரிடம்‌ காணப்படுவதால்‌ மிகவும்‌ ப்ரகாசிக்கிறது என்‌றார்‌. காம க்ரோதாதி தோஷமே நிறைந்த இக்‌ கலியிலும்‌ ஒருவரிட.ம்‌ அந்த வைராக்ய மிருந்ததால்‌ அது அபிவருத்‌தியை யடைந்து ப்ரகாசிக்கின்றது எனக்‌ கூறப்பட்டது.அத்தகைய வைராக்யம்‌ பூண்ட ராமாநுஐ முநிவரை அடிக்கடி காணக்கடவோம்‌; கண்டு களிப்பெய்தக்‌ கடவோம்‌ -என ப்ரார்த்தக்கிறார்‌. இக்காலத்தில்‌ அத்தகைய வைராக்யம்‌ வாய்ந்தவரை தர்சிப்பதும்‌, அதிலும்‌ அடிக்கடி தர்சிப்பதும்‌ கிடைக்கக் கூடியன வல்லவாகையால்‌ அதைப் ப்ரார்த்திக்கிறார்‌ மஹார்யர்‌.

—————

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது வைராக்‌யத்தின்‌ பெருமை கூறப் பெற்றது. இதில்‌ சிறந்த பண்டிதர்‌களாலும்‌ மெச்சப்படும்‌ இவரது கிரந்த வ்யாக்யான சக்தியும்‌ மிகவும்‌ தூய்மையான ஆசாரமும்‌ கூறப்படுகின்‌றன.

வ்யாக்யா யஸ்ய விதக்த ஸூரிபரிஷச் சித்த அபஹார க்ஷமா
யத்‌ தைநந்தின ஸத்க்ரியா யதிவராதி ஆசார ஸந் மாத்ருகா
தம்‌ ராமாநுஜயோ வர்யம்‌ அமலம்‌ ஞாநாதி பூர்ண ஆஸ்ரயம்‌
வந்தே ஸெளம்ய வரேச யோகி சரண த்வந்த அரவிந்த ஆஸ்ரயம்‌ -9-

பதவுரை:–
யஸ்ய – எந்த ராமாநுஜ முனிவருடைய,
வ்யாக்யா – உபய வேதாந்த கிரந்தங்களுக்கும்‌ மந்த்ர மந்த்‌ரார்த்தங்களுக்கும்‌ கூறப்படும்‌ தெளிவுரை வ்யாக்யானம்‌,
விதக்த – மிகவும்‌ ஸமர்த்தர்களான,
ஸூரிபரிஷத்‌ – பண்டித கோஷ்டியின்‌,
சித்த – மனத்தை,
அபஹார – கவர்வதில்‌,
க்ஷமா – தகுதி வாய்ந்ததாக ஆகிறதோ,
யத்‌ – எவரது,
தைநந்தின – ப்ரதிதினம்‌ அநுஷ்டிக்கப்பட வேண்டிய,
ஸத்க்ரியா-சிறந்த அநுஷ்டாநங்கள்‌, யதிவராதி- எம்‌பெருமானார்‌ முதலானாருடைய,
ஆசார-அநுஷ்டானங்களை
ஸந் மாத்ருகா:- ஸ்லாக்யமான மூல ப்‌ரமாணமாகக்‌ கொண்‌டனவாக,
பவந்தி-ஆகின்‌றனவோ,
ஸெளம்ய வரேச யோகி – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
சரண த்வந்த – இரு திருவடிகளாகிற,
அரவிந்த – தாமரை மலரை,
ஆஸ்ரயம்‌ – தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவரும்‌,
அமலம்‌-தோஷங்களற்றவரும்‌,
ஞாநாதி -ஞாநம்‌ பக்தி முதலியவற்றால்‌,
பூர்ண – நிறைந்த,
(ஆசயம்‌)-மனத்தை யுடையவருமான,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜயோ வர்யம்‌ – ராமானுஜ முனிவரை,
வந்தே – நமஸ்கரிக்கின்றேன்‌.

ஸ்ரீ பாஷ்ய, ‘ பகவத் விஷய, மந்த்ரார்த்த ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு இம்‌ முனிவர்‌ அருளிச்‌ செய்யும்‌ தெளி பொருள்‌ விளக்கம்‌ (வ்யாகீயானம்‌) மிகவும்‌ பாண்டித்‌யம்‌ பெற்ற பண்டித ஸமூகங்களின்‌ மனத்தையும்‌ கொள்ளை கொள்ளும்‌ தன்மை வாய்ந்தது. இது இந்த கிரந்தகாரருக்‌கும்‌ மற்றும்‌ இவரைப் போன்ற மற்ற மஹா வித்வான்‌௧ளான அஷ்ட திக் கஜங்களுக்கும்‌ நேரே அநுபவ விஷயமாதலால்‌ இவ்வாறு கூறினார்‌.-இவரது ஆசரணைகள்‌,
யதிகட்கிறைவனான ஸ்ரீ ராமானுஜமுநி முதலிய பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களைத்‌ தமக்கு மூல ப்ரமாண(க்ரந்த) மாகக்‌ கொண்டவை யாகும்‌. மாத்ருகா என்பது முதலில்‌ ஒருவரால்‌ எழுதப்பட்ட (மூல பூதமான) முதலாவதான சுவடி; அதுவே பின்னர்‌ பல சுவடிகளாக வெளி வருவதற்குக்‌ காரணமா யிருப்பதால்‌ அது அவ்வாறு மாத்ருகா
எனக்‌ கூறப்படும்‌. அது போலவே முன்னர்‌ எம்பெருமானார்‌ முதலிய யதிகள்‌ அனுஷ்டித்த அநுஷ்டானங்களே இவரது ஸத் கர்மாநுஷ்டாகங்களுக்கு மூலங்களாகும்‌. எனவே இவர்‌
பெரியோர்களின்‌ அநுஷ்டானங்களில்‌ எள்ளளவும்‌ பிறழாதவர்‌. ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருப்பாத மலர்களையே தமக்குப்‌ பற்றாசாகக்‌ கொண்டவர்‌. எனவே தோஷங்களற்றவர்‌. ஞானம்‌, பக்தி, விரக்தி என்னும்‌ குணங்கள்‌ நிறைந்த மனதை யுடையவர்‌. இப்படிப்‌ பெருமை வாய்ந்த ப்ரஸித்தி பெற்ற ராமாநுஐ முநிவரை வணங்குகின்றேன்‌.

—————-

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ எல்லா க்ரந்தங்‌களுக்கும்‌ இவர்‌ அருளிச்‌ செய்யும்‌ பொருள்‌ விளக்கம்‌ பண்டிதர்களின்‌ மனதையும்‌ கவரும்‌ தன்மையது;-அநுஷ்டானமும்‌ பெரியோர்களின்‌ அநுஷ்டாநங்களில்‌ நின்றும்‌ கொஞ்சமும்‌ நழுவாதது என்றார்‌. இதில்‌ இவரது தெளி பொருள்‌ விளக்கத்‌தால்‌ இவரது கோஷ்டியின்‌ பக்கத்திலிருந்து இதைக்‌ கேட்‌டுக்‌ கொண்டிருக்கும்‌ பக்ஷிகளும்‌, ** பர தத்வம்‌ ஸ்ரீமந் நாராயணனே ” என்று விளங்கச்‌ சொல்லும்‌ சக்தி வாய்ந்தனவாகின்றன என்று தாம்‌ ஆச்சர்யமுறுகிறார்‌.

யத்‌ கோஷ்டி ஸவித ஸ்திதா:சகுநா:ச தத்வம்‌ பரம்‌ ஸாஸ்வதம்
ஜ்யோதிர் வேத ரஹஸ்ய ஸார படிதம்‌ பரம்ஜ்யோதி: நாராயண: ஸ்ரீபதி:
கிம் சாந்யே சதுராநநாதி விபுதா:தத் சேஷபூதா:இதி
வ்யாகுர்வந்தி பரஸ்பரம்‌ யதிவரம் ராமாநுஜம்‌ தம்‌ பஜே –10-

பதவுரை:–
யத்‌ – எந்த ராமாநுஜ முனிவருடைய,
கோஷ்டி – காலக்ஷேப கோஷ்டியின்‌,
ஸவித – பக்கங்களிலே,
ஸ்திதா:- இருக்கின்ற,
சகுநா:ச -பக்ஷிகளும்‌,
பரம்ஜ்யோதி: – பரஞ்சோதியென்றும்‌,
பரம்‌ தத்வம்‌-பர தத்வமென்றும்‌,
வேத–வேத ரஹஸ்ய வேதங்களில்‌ ரஹஸ்யங்களான உ.பநிஷத்துக்களின்‌
ஸார – ஸாரமான நாராயணாநுவாகத்தில்‌,
படிதம்‌ -**நாராயண பர ப்ரஹ்ம’” என்றும்‌, ** நாராயண பரோஜ்‌யோதி என்றும்‌, : Bb. **தத்வம்‌ த்வம்‌ நாராயண பர:? என்றும்‌, *, ஸாஸ்வதம் சிவமச்யுதம்‌?” என்றும்‌ படிக்‌கப்பட்ட பொருள்‌,
ஸ்ரீபதி:- லக்ஷ்மீ வல்லபனான,
நாராயண:- நாராயணனே ஆவான்‌,
கிம் ச — மேலும்‌
சதுராநநாதி-பிரமன்‌ முதலிய,
விபுதா:- தேவர்கள்‌
தத் -அந்த நாராயணனுக்கு,
சேஷபூதா:- சரீரமாய்க் கொண்டுசேஷப் பட்டவர்கள்‌,
இதி – என்று,
பரஸ்பரம்‌ – ஒன்றுக்‌கொன்று, வ்யாகுர்வந்தி – வ்யாக்யானம்‌ செய்கின்றனவோ,
தம்‌ – அப்படி ப்ரஸித்தரான,
ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனியை,
பஜே – ஸேவிக்‌கிறேன்‌-

இந்த ராமாநுஜ முநிவர்‌ வைதிக வாக்யங்களில்‌
*ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்‌”, ஆத்மா வா இதமக்ர ஆஸீத்‌”, ““ப்ரம்ஹவா இதமக்ர ஆஸீத்‌” என்று ஸாதாரணங்களான “ஸத்‌, ஆத்ம, ப்ருஹ்ம’‘ சப்தங்களாலும்‌-விசேஷமான நாராயண சப்தத்தாலும்‌ ஜகத் காரண வஸ்துவைக் கூறிக்‌, “காரணந்து த்யேய:” என்று அதையே உபாஸ்ய தத்வம்‌ எனக்‌ கூறுவதால்‌, இவை வெவ்வேறு தத்வங்‌களா? அல்லது ஓன்றேயா? . என விசாரிக்கும் போது-வேதங்களின்‌ ஸாரங்களான உபநிஷத்துக்களிலும்‌ ஸாரமாகக்‌ கொள்ளப்படும்‌ நாராயணாநுவாகத்தில்‌ ** ஆத்ம, ப்ரஹ்ம, ஜ்யோதி’‘ முதலான சப்தங்களை நாராயண பதத்‌தோடு ஸமாந விபக்தி (வேற்றுமை) கமாய்‌ ** நாராயண பரம்‌
ப்ருஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோஜ்யோதிராத்மா நாராயண: பர:””
இத்யாதி வாக்யங்களால்‌ படிக்கப்பட்டிருப்பதால்‌ ஸாமாந்ய விசேஷ ந்யாயத்தாலே ஐகத்துக்‌குக் காரணமான பர தத்வம்‌ லக்ஷ்மீ பதியாகிய நாராயணனே;-மற்றய ப்ரும்ஹ ருத்ராதிகள்‌ பர தத்வமன்று; அவர்கள்‌ ஸ்ரீம்ந் நாராயணனிடமிருந்து உண்டானவர்கள்‌, அவனுக்கு
சரீரமாய்க்‌ கொண்டு சேஷ பூதர்கள்‌ என்று உபநிஷத்து வாக்கியங்களை விளங்கக்‌ கூறி பர தத்வ ஸ்தாபனம்‌ செய்வது:அவரது வழக்கமாகலால்‌, அவரது கோஷ்டியின்‌ பக்கங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்‌, ஞானத்திற்கு அடைவில்லாத பக்ஷி ஜாதிகளும்‌, அந்த வாக்கியங்களைச்‌ சொல்லி பர தத்வ’ஸ்தாபனம்‌ பண்ணா நின்‌றன” என்கிறார்‌. இதனால்‌ ஞானத்திற்கு இட்டுப்‌ பிறவாத பஷிகளும்‌ நன்கு அறிந்து
கொள்ளும்படி விஷயங்களைக்‌ கற்பிக்கும்‌ விஷயத்தில்‌ இவருக்குள்ள ஆற்றல்‌ நன்கு . வெளியிடப்பட்டது. இங்கு * பரஸ்பரம்‌ வ்யாகுர்வந்தி ” எனக்‌ கூறியதால்‌ அப் பஷிகளிலும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஞானத்தில்‌ குறைந்தவர்கள்‌ இல்லை;-ஆயினும்‌ ‘*போதயந்த: பரஸ்பரம்‌” என்ற’ கணக்கிலே’-“ஒன்றுக்கொன்று போதிக்கின்றன என்று கூறப்பட்டதாகும்‌.
ஸாமாந்ய விசேஷ நியாயமாவது *நிர் விசேஷம்‌ ந ஸாமாந்யம்‌ ‘” என்கிறபடியே ஒரு ஸாமான்ய பதத்தை விசேஷ போதக சப்தத்தைக்‌ கொண்டு விசேஷ விஷயமாக்கி இப்‌பொருள் கொள்வது. ** பசு நா யஜேத ”‘ என்று விதி வாக்‌யத்தில்‌ நாற்கால்‌ ஐந்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ கூறும்‌-பசு சப்தத்திற்கு **ச்சாகஸ்ய வபாயா:”” என்ற மந்த்ரத்தைக்‌ கொண்டு ௮ப் பசு என்பது **ஆடு” என நிர்த்தாரணம்‌ செய்வதாகும்‌.
இவ்வாறு ஞான ஹீநர்களையும்‌ ஞாந வான்களாக்கும்‌ ராமாநுஜ முனிவரை வணங்குகின்றேன்‌.

————

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸமீபத்தில்‌ இருக்கும்‌ பக்ஷிகளுக்கும்‌ வ்யாக்யானம்‌ செய்யும்படி, சக்தியை விளைவிக்கும்‌ இவரது ஞானத்தின்‌ பெருமை கூறப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில்‌ இவருடைய உபந்யாஸ கோஷ்டியில்‌ ‘சேரவும்‌ வேண்டா; பக்கத்‌ திலிருக்கவும்‌ வேண்டா. இவரது கருணை அலை யெறியும்‌ கடைக்‌ கண்ணால்‌’கடாக்ஷிக்கப் பெற்றவர்களே அர்த்த பஞ்சக ஞானம்‌ பெற்றவருள்‌ சிறந்தவர்களாவர் என்ற அதிசயத்தைக்‌ கூறி, வானமாமலை எம்பெருமானுக்கு இவர்‌ செய்த ஸாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌
இவர்‌ அதிகம்‌ பெருமை வாய்ந்தவர்‌
என்று கூறுகிறார்-

யத்‌ காருண்ய ஸுதா தரங்க விலஸத்‌ நேத்ராஞ்சல ப்ரேக்ஷிதா:
யேகேசித்‌த இமே அர்த்த பஞ்சக விதாம்‌ முக்யாஸ் து ஸங்கீயாவதாம்‌
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய மஹிதை:கைங்கர்ய ஜாதை:த்ருவை:
பூயாந் ஆஸ்ரித கல்பக: விஜயதே ராமாநுஜ: அயம்‌ முநி
-11-

பதவுரை:–
யேகேசித்‌ – எந்தச்‌ சில மனிதர்கள்‌,
யத்‌ – எந்த முனிவரின்‌,
காருண்ய – கருணையாகிற,
ஸுதா – அம்ருதத்தின்‌,
தரங்க – அலைகளாலே,
விலஸத்‌ – விளங்குகின்ற,
நேத்ராஞ்சல – கண்ணின்‌ கடை யினாலே,
ப்ரேக்ஷிதா: – பார்க்கப் பட்டனரோ,
தே – அப்படி பாக்யம்‌ பெற்ற,
இமே- இம்‌ மனிதர்கள்‌,
அர்த்த பஞ்சக விதாம்‌-ஐந்து அர்த்தங்களையும்‌ நன்கறிந்த,
ஸங்கீயாவதாம்‌ -பண்டிதர்களுள்‌,
முக்யா: – தலை சிறந்தவர்கள்‌ ஆகிறார்கள்‌,
ஸ்ரீமத் வ்யோம மஹாசலஸ்ய – ஸ்ரீ வான மா மலை எம்பெருமானுக்குச்‌ செய்தவையும்‌,
மஹிதை:-கொண்டாடத்தக்கவையும்‌,
த்ருவை:-ஸாஸ்வதங்களுமான,
கைங்கர்ய ஜாதை:-கைங்கர்‌யங்களின்‌ ஸமூகத்‌தினால்‌,
பூயாந் -சிறப்பு வாய்ந்தவரும்‌,
ஆஸ்ரிதகல்பக: – தன்னை ஆஸ்யரயித்தவருக்கு கல்பக வ்ருக்ஷம்‌
போல்‌ அபேக்ஷிதங்களைக்‌ கொடுக்குமவருமான,
அயம்‌-இந்த,.
ராமாநுஜ: – ராமானுஜன்‌ என்னும்‌,
முநி -முனிவர்‌,
விஜயதே – மற்றெல்லோரிலும்‌ சிறந்து விளங்குகின்றார்‌.

அர்த்த பஞ்சகமாவது:- (1) ஸ்வ ஸ்வரூபம்‌ எனப்படுவது, ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌, (2) பர ஸ்வரூபம்‌ எனப்படுவது, பரமாத்மாவின்‌ ஸ்வரூபம்‌, (3) புருஷார்த்த ஸ்வரூப மெனப்படுவது, முமுக்ஷுக்களின்‌ விருப்பத்திற்கு விஷயமான மோக் ஷஸ்வரூபம்‌, (4) உபாய ஸ்வரூபமெனப்‌படுவது, அம் மோஷத்தை அடைய சாஸ்த்ரங்களால்‌ ஸாதனமாகக்‌ கூறப்பட்டவை, (5) விரோதி ஸ்வரூபமெனப்படுவது ,மோக்ஷத்தைப்‌. பெற விரோதியாய்‌ இடைமறித்து நிற்‌கின்ற அவித்யை,ருசி வாஸநா ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்‌ முதலியனவாகும்‌. இவ் வர்த்த பஞ்சகத்தையே ஸகல வேத சாஸ்த்ர புராணங்களும்‌ கூறுகின்றன. இவ்வர்த்த பஞ்சக ஞானமின்றி உஜ்ஜீவனமில்லை. இத்தகைய அர்த்த பஞ்சக ஞாநமும்‌ வெகு கிலேசப்பட்டு சாஸ்த்ராப்யாஸங்களால்‌ ஸாதிக்கப்படவேண்டி யிருக்க, இந்த ராமாநுஜ முனிவருடைய கருணா பூர்ணமான கடாக்ஷ லேசத்தினாலே உண்டாகிறது. நிற்க- இவரது கருணா பூர்ணமான கடாக்ஷம்‌ தனக்கு விஷயமானவர்களை அர்த்த பஞ்சகங்களை நன்குணர்ந்த பண்டிதர்களுள்‌ ப்ரதாநர்களாகவும்‌ ஆக்குகிறது என்று இவருடைய பெருமை கூறப்பட்டது. (த இமே முக்யா:)இங்கு தாம்‌ நேரில்‌. கண்டறிந்ததுடன்‌ மற்றவருக்கும்‌
ப்ரத்யக்ஷிக்கலாம்‌ எனத்‌ தோற்றும்படி “*இமே”” எனக்‌ கூறுவதால்‌, இதில்‌ அர்த்தவாதமில்லை என்கிறார்‌. மேலும்‌ இந்த ஸ்வாமி ஸ்ரீ வானமாமலை எம்பெருமானுக்குச்‌ செய்‌துள்ள பல ஸாஸ்வதமான கைங்கர்யங்களாலும்‌ போற்றத்‌ தக்கவர்‌. தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு கல்பக விருக்ஷம்‌ போல்‌ அபேக்ஷிதங்களை அளிக்கவல்ல பெரியவர்‌. எனவே இந்த வானமாமலை ராமாநுஐ முனிவர்‌ மற்றையோர்களில்‌
சிறப்புடையராய்‌ விளங்குகின்றார்‌.

—————–

அவதாரிகை:–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரின்‌ கடாக்ஷம்‌ முக்தி ஸாதநமான அர்த்தபஞ்சக ஞானத்தை எல்லோருக்கும்‌ அளிக்க வல்லதென்று பொதுவாகக்‌ கூறியவர்‌, இதில்‌ மிகவும்‌ தண்ணியனாய்‌, அஹங்கார மமகாரங்கள்‌ நிறைந்தவனான என்னை. உஜ்ஜீவிப்பிக்க முயற்சிக்கும்‌ பெரியோரிடித்திலும்‌ விமுகனாய்த்‌ திரிகன்ற மேட்டு மடையான என்னிடமும்‌ இக்‌ கருணை பாலிபாயா நின்றது என்கிறார்‌.-

அஸ்தி ஸ்நாயு வஸா ௮ஸ்ர மாம்ஸ நிசிதே அநித்யே விகாராஸ்பதே அநஹமி
தேஹே அஸ்மிந் நஹம் யஹம்மதிகரே சப்தாதி ஸேவாப்ரே
ஸ்ரீமத்‌ வைஷ்ணவ மத்பர ஆர்ய விமுகே மயி அபி அகார்ஷீத்‌ தயாம்‌
யஸ்தம் வ்யோம மஹாகிரே:பரிபணம்‌ ராமாநுஜம்‌ தம்‌ பஜே
–12-

பதவுரை:–
அஸ்தி – எலும்பு என்ன,
ஸ்நாயு – சிறு நரம்புகள்‌ என்ன,
வஸா-வபை என்ன,
௮ஸ்ர-ரக்தமென்ன
மாம்ஸ – மாம்ஸமென்ன,
நிசிதே – இவைகள்‌ செறிந்ததும்‌,
அநித்யே – அநித்யமானதும்‌, விகாராஸ்பதே – பால்யம்‌ யவ்வனம்‌,பருப்பது,இளைப்பது முதலிய வேறுபாடுகளுக்கு உறைவிடமாயும்‌, அநஹமி – உண்மையில்‌ அஹம்‌ என்னும்‌
பதத்திற்கு அர்த்தமல்லாததுமான,
தேஹே – சரீரத்திலே,
அஹம்மதிகரே – நானென்று அஹம் புத்தியைப்‌ பண்ணுமவனும்‌, (ஆதலால்‌) சப்தாதி ஸேவாப்ரே-சப்தாதி விஷயங்‌களில்‌ ப்ராவண்யத்தால்‌ அவைகளை அனுபவித்துப்‌ போருமவனும்‌, (ஸ்ரீமத்‌ விமுகே) ஸ்ரீமத்‌ வைஷ்ணவ – பரம ஸாத்‌விகர்களாய்‌ பகவத்‌ ஸம்பந்தத்திலே மூட்டும்‌ அடியார்களிடத்திலும்‌,
மத்பர – ஆர்ய – என்னை உஜ்ஜீவிப்ப திலேயே நோக்குள்ள ஆசார்யர்களிடத்திலும்‌,
விமுகே – வைமுக்‌யத்தை யுடையனான,
மயி அபி- என்னிடத்திலும்‌,
ய:-எந்த முனிவர்‌,
தயாம்‌-தயையை,
அகார்ஷீத்‌ – செய்தாரோ”
வ்யோமமஹாகிரே: – வானமாமலை அப்பனுக்கு,
பரிபணம்‌-மூலத்ரவ்யம்‌,
முதல்‌- போன்ற,
தம்‌ ராமாநுஜம்‌ – அந்த ராமாநுஜ முனிவரை,
பஜே – ஸேவிக்கின்றேன்‌.

இந்த ஸ்லோகத்தின்‌ மூன்று பாதங்களாலும்‌ தமது தண்மையைக்‌ கூறி, நான்காவதால்‌. தம்மிடமும்‌ இம்‌முனிவரது கருணை ஏறிப்‌ பாய்ந்தது என்கிறார்‌. அதாவது நான்‌ எலும்பும்‌ சிறிய நரம்புகளும்‌ வபையும்‌ ரத்தமும்‌ மாம்ஸமுமாய்ச்‌ செறிந்தும்‌, அநித்யமாயும்‌, அடிக்கடி பருப்பது இளைப்பது முதலிய வேறுபாட்டுக்கு உறைவிடமாயும்‌, அஹம்‌ என்ற பதத்திற்கு அர்த்தமான ஆத்மா வல்லாததுமான சரீரத்தில்‌ ஆத்ம புத்தியைப்‌ பண்ணும்‌
ப்ரமத்தை யுடையவன்‌. நிற்க- இத்தகைய ப்ராந்த்தியால்‌ இந்த்ரியங்களுக்கு எப்பொழுதும்‌ இரை யிட்டுக்கொண்டு ஹேயமான சப்தாதி விஷயங்களைக்‌ கொண்டே பொழுது போக்குமவன்‌. ஸ்ரீ. வைஷ்ணவ ஸம்பத்து நித்யமாய்ச்‌ செல்‌லும் பரமபாகவதர்களைக் கண்டால்‌ முகத்தை மாற வைத்துச்‌ செல்‌லுமவன்‌. அதிகம்‌ சொல்லி என்‌? என்னை அங்கீ கரித்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று ப்ரயத்நம்‌ செய்யும்‌ ஆசார்‌யர்களைக்‌ காணிலும்‌ அவர்களைக்‌ கண்ணெடுத்தும்‌ ஸேவிக்‌கப்‌ பெறாத பாக்ய ஹீநனான தண்ணியன்‌. இப்படிப்பட்ட என்னிடத்தும்‌ இவர்‌ தயையைச்‌ செய்து என்னைத்‌ திருத்தி
ஆட்கொண்டவர்‌. இவரை வானமாமலை எம்பெருமானது மூலதனம்‌ (முதல்‌) எனக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌ ? மூல தனம்‌ உடையவன்‌ அந்த தநத்தைக்‌ கொண்டு தொழில்‌ வியாபாரம்‌ முதலியவற்றைச்‌ செய்து தனத்தைப்‌ பெருக்கிக்‌ கொள்ளுவது வழக்கமல்லவா? அதுபோலவே எம்பெருமானும்‌ இவரை அவதரிப்பித்து அம்முனிவராகிற மூல
தனத்தைக்‌ கொண்டு அநேக ஜீவாத்மாக்களை நல்வழிப்‌படுத்தி அவர்களைப்‌ பெறுகிறானாகையால்‌, அவ்வீசனது(பரிபணம்‌) ‘* மூலதனம்‌ ‘*, இம்‌ முனி வரர்‌ என்று கூறக்‌ குறையில்லை. இப்படிக்‌ கூறியதால்‌ **சேதந லாபம்‌ ஈஸ்வரனுக்கு” எனப்படும்‌ ஸார தமமான ஸம்ப்ரதாயார்த்தம்‌வெளியிடப் பட்டதாகும்‌. இப்படி ஈஸ்வரனுடைய லாபத்திற்‌கும்‌ காரணமான இம்‌ முனிவரை ஸேவிக்கின்றேன்‌.

அவதாரிகை:–கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இம்‌ முனிவரது கருணை தம்மிடமும்‌ ஏறிப்‌ பாய்ந்தது எனக்‌ கூறினார்‌.-இதில்‌ இம்முனிவரிடம்‌ காணப்படும்‌ சிறந்த கல்வி, விரக்தி,மற்றுமுள்ள ஸெளலப்ய ஸெளசில்யாதிகள்‌, பெரியோர்‌ வகுத்த வழியைப்‌ பேணிக்‌ காக்கும்‌ தன்மை, பகவத்‌ விஷயத்‌திலுள்ள ப்ராவண்யம்‌, இவைகளை விரித்துக்‌ கூறுகிறார்

வித்யாகேலிக்குஹம்‌ விரக்தி லதிகா விஸ்ராந்தி கல்பத்ருமம்‌
ப்ரோந்மீலத்‌ குண திவ்ய ரத்ன படலீ நிக்ஷேப மஞ்ஜுஷிகாம்‌
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய பதவீ ரக்ஷைக தீக்ஷா குரும்‌
ஸ்ரீமத் வ்யோம மஹாசலே ச நிரதம்‌ ராமாநுஜார்யம்‌ ஸ்ரயே
-13

பதவுரை:–
வித்யாகேலிக்குஹம்‌, வித்யைகளுக்கு (சாஸ்‌திரங்களுக்கு ) விளையாடு மிடமானவரும்‌,
விரக்தி-வைராக்யமாகிற,
லதிகா-கொடிக்கு,
விஸ்ராந்தி – விஸ்ராந்தியைக்‌ கொடுக்கும்‌,
கல்பத்ருமம்‌ – கல்பக வ்ருக்ஷமானவரும்‌,
ப்ரோந்மீலத்‌ – ந ன்றாக – ப்ரகாசிக்கிற, குண – கல்யாண குணங்களாகிற,
திவ்ய ரத்ன – ஸ்லாக்யமான ரத்நங்களுடைய,
படலீ – ஸமூஹத்திற்கு,
நிக்ஷேப மஞ்ஜுஷிகாம்‌-வைத்துக்‌
காப்பாற்றும்‌ பெட்டியாயும்‌,
ஸ்ரீமல் லஷ்மண யோகி வர்ய – ஸ்ரீராமாநுஜ முனிவரது,
பதவீ – மார்க்கமாகிற விசிஷ்டாத்வைத ஸித்தாந்த மார்க்‌கத்தை,
ரக்ஷைக தீக்ஷா – ரக்ஷிப்பதாகிற முக்ய தீக்ஷையில்‌,
குரும்‌ – ஆசார்யனாயும்‌,
ஸ்ரீமத் வான மஹாசலேச – லக்ஷ்மீ வல்லபனான வான மா மலை எம்பெருமானிடத்து,
நிரதம்‌ – மிகுந்த அன்பு பூண்டவருமான, ராமாநுஜார்யம்‌ – ராமாநுஜன்‌ என்னும்‌ ஆசார்யனை,
ஸ்ரயே -ஆஸ்ரயிக்கின்றேன்‌.

தன்னைப்‌ பேணி ஆதரித்த முனிவரின்‌ ப்ரபாவத்தைச்‌ சுருங்கக்‌ கூறுகின்றார்‌ இதில்‌. இந்த ராமாநுஜமுனிவர்‌ *வித்யாஹ்யேதா: சதுர்தச” என்ற பதினான்கு வித்யைகளையும்‌ கரை கண்டவராகையாலே, அவைகள்‌ இவரிடம்‌ களிநடம்‌ புரிகின்றன என்கிறார்‌. இவர்‌ அவைகளுக்கு ரங்கஸ்தலம்‌ (நடனமாடுமிடம்‌) போலும்‌, மிகுந்தவைராக்ய முடையவராதலால்‌ கொடி. மரத்தை மூடப்‌ படர்வது போல்‌ இவரது வைராக்யமென்னும்‌ கொடி தன்னிஷ்டப்படி மூடப்‌ படர்ந்து விஸ்ராந்தியைப்‌ பெற்று இளைப்பாறும்‌ கற்பக வருக்ஷம்‌ போன்றவர்‌ இவர்‌. மேலும்‌ ஆத்ம குணங்களாகிற இந்த ரத்நக்‌ குவியலை வைத்துப்‌ பூட்டிக்‌ காப்பாற்றும்‌ பேழை போன்றவர்‌. இத்தால்‌ இவர்‌ எண்ணிறந்த குணங்களுக்கு உறைவிடமென்பது கூறப்‌பட்டது. எம்பெருமானாராலே ஸ்தாபிக்கப்பட்ட விசிஷ்‌டாத்வைத ஸித்தாந்தத்தை ரக்ஷிக்கையாகிற முக்ய தீக்ஷையில்‌ ஆசார்யனாய்‌ வழிகாட்டுமவர்‌ இவர்‌. இப்படி இந்த தர்சனத்திற்கு வழிகாட்டியா யிருப்பது மாத்திரமன்றி
அவ்வழியே ஒழுகி எப்பொழுதும்‌ வானமாமலை தெய்வ நாயகனிடம்‌ நிரதிசய ப்ரீதி ரூபாபந்நமான பக்தி பூண்டவருமாவர்‌. இத்தகைய குணக்‌ கடலான ராமாநுஜ முனிவரெனப்படும்‌ எனது ஆசார்யனை ஸேவிக்கின்றேன்‌.

————–

அவதாரிகை :–
வாந மஹாத்திரி ராமாநுஜ யோகி மங்களாசாஸமென்னும்‌ ப்ரபந்தத்தின்‌ கடைசியான இந்த ஸ்லோகத்தில்‌ வாநாசல ராமாநுஜ முனிவரின்‌ பெருமைகள்‌
கீழ்க்‌ கூறியவை எல்லாம்‌ திரட்டிக்‌ கூறப்படுகின்‌றன-

காந்தோ பயந்த்ரு முநி வர்ய தயா நிவாஸம்‌ வைராக்யமுக்ய மஹநீய குண ௮ம்புராசிம்‌
ஸ்ரீதேவராயக பத ப்ரணய ப்ரவீணம்‌ ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி நித்யம்‌-14-

பதவுரை:–
காந்தோ பயந்த்ரு முநி வர்ய – அழகிய மணவாள மாமுனிகளின்‌,
தயா-கருணைக்கு,
நிவாஸம்‌ – உறைவிடமாயும்‌,
வைராக்யமுக்ய- வைராக்யம்‌ முதலிய,
மஹநீய-கொண்டாடத்‌ தகுந்த,
குண – குணங்கட்கு,
௮ம்புராசிம்‌ – கடலாயும்‌,
ஸ்ரீதேவராயக – வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகனுடைய,
பத – திருவடிகளில்‌,
ப்ரணய – ப்ரீதி செய்யும்‌ விஷயத்தில்‌,
ப்ரவீணம்‌ – சிறந்தவரும்‌,
யதிபதிம்‌ – யதித் தலைவருமாகிய, ராமாநுஜம்‌ – ராமாநுஜ முனிவரை, .
நித்யம்‌- எப்‌பொழுதும்‌,
ப்ரணமாமி – நன்கு வணங்குகின்றேன்‌. ‘

இந்த ஸ்லோகத்தின்‌ முதல்‌ பாதத்தால்‌ ஸ்ரீமத்‌ வரவரமுநிகளின்‌ கருணைக்கு வாஸஸ்தான மென்று இவரது பெருமையை யறிவித்தார்‌. அவ்வாசார்யனுடைய கடாக்ஷத்‌தால்‌ இவர்‌ வைராக்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ ஒருங்குகேரும்‌ குணக்கடலாயினர்‌ என்றார்‌; இரண்டாம்‌ பாதத்‌தால்‌. ‘ கடலாக ரூபித்ததால்‌ வைராக்யாதி குணங்கள்‌ ஒரு.நாளும்‌ இவரிடம்‌ குறைந்து காட்டியதில்லை என்பது தேறும்‌…-மூன்றாமடியால்‌ இவ்வாத்ம குணங்களடியாக உண்டாகும்‌
ஸர்வேஸ்வரன்‌ விஷயமான இவரது நிரதிசய ப்ரீதியை நிரூபித்தார்‌. நான்காமடியால்‌ கீழ்க்‌ கூறியபடி மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌ அதடியாக உண்டாகிய வைராக்‌யாதி குணங்களை யுடையராய்‌, அதடியாக உண்டாகிய பகவத்‌ ப்ரேமத்தை யுடையராகையாலே யதிகட்கிறைவரானார்‌ என்று இவரது ப்ரபாவங்களைப்‌ பணித்து, இத்தகைய பெருமை வாய்ந்த வானமஹாத்ரி யோகியாகிய ராமானுஜ.முனியை ப்ரதி தினம்‌ வணங்குகின்றேன்‌ எனக்‌ கூறி மங்களாசாஸநத்தை முடிக்கிறார்‌. இங்கு **ப்ரணமாமி’” என்ற வர்த்தமானத்தால்‌ தமது அதிகார மாந்த்யத்தைப்‌ பார்த்துத்‌ தான்‌ கலங்கிய போதெல்லாம்‌ ஆசார்யன்‌ திருவடிகளை இவர்‌:வணங்குகின்றார்‌ என்று தேறுகிறது. “ப்ர’? என்ற உபஸர்க்‌கத்தால்‌ வணக்கத்தில்‌ மநோ வாக் காயம்‌ என்ற கரணங்களின்‌பூர்த்தி கூறப்பட்டது. நித்யம்‌ என்பது ப்ரதி தினமும்‌ என்பதாகும்‌. இதில்‌ *’ஸ்வஸ்தி- பத்ரம்‌-மங்‌களம் என்பவை போன்ற பதங்கள்‌ காணப்படவில்லையே யென்று சிலர்‌ ஐயமுறலாம்‌.-எனினும்‌ “*நம:- ஜிதம்தே,தோற்றோம்‌, போற்‌றி, பல்லாண்டு ” என்னும்‌ இவை -பர்‌யாயம்‌ என்ற பெரியவாச்சான்‌ பிள்ளை ஸ்ரீஸூக்தியை நன்கு உற்று அநுஸந்திக்குமவர்கள்‌ இந்த நூல்‌ மங்களாசாஸந ரூபந்தான்‌ என்று எளிதில்‌ உணரலாகும்‌. இக் கிரந்தத்திலும்‌இம்‌ முனிவரது குணங்கட்கு தோற்று, வந்தே, நமோஸ்து,நவ்மி, விஜயதே என்ற ஸ்வரூப வாசியான பதங்களை
மஹார்யர்‌ ப்ரயோகித்திருப்பதும்‌ காணத் தக்கது.

——————-

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரபத்தி

முதல் 11 ஸ்லோகங்களில் சரண் அடைந்து
அடுத்து 3 ஸ்லோகங்கள் இவரே சரண் அடையத்தக்கவர்

அவதாரிகை:–
ஸ்ரீமத்‌ வானமாமலை ராமாநுஐ முனிவரின்‌ அஷ்ட திக் கஜங்களில்‌ ஒருவராகிய தொட்டையங்கார்‌’அப்பை எனப்படும்‌ மஹார்யர்‌, தமது ஆசார்யராகிய ராமாநுஜ முனிவரது கல்யாண குணங்களிலும்‌ விக்ரஹ ஸெளந்தர்‌யத்திலும்‌ ஆழ்ந்தார்‌. அவர்‌ பூர்வாஸ்ரமத்தில்‌ அழகிய வரதரிறே; எனவே முந்துற மங்களாசாஸநத்‌தில்‌ இழிந்தார்‌..
தற்பொழுது தாம்‌ ஸ்வாமியின்‌ கடாக்ஷ விஷயீகாரத்தைப்‌ பெற அவர்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌, இப்ரபந்தத்தில்‌,

ஸத்ய ப்ரபுத்த ஸரஸீ ருஹ துல்ய ஸோபோவ்
ஸம் பஸ்யதாம் நயந யோர் முதமாத தாநவ்
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீணவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–1-

பதவுரை :–
‘ ஸத்ய: – அப்‌பொழுதே,
ப்ரபுத்த- நன்றாக மலர்ந்த,
ஸரஸீருஹ – தாமரைப்பூவோடு,
துல்ய – ஒப்பான,
சோபெள – காந்தியையுடையதுகளும்‌, ஸம்பச்யதாம்‌ – நன்றாய்‌ ஸேவிப்பவர்களுடைய,
நயநயோ: – கண்களுக்கு,
முதம்‌-சந்தோஷத்தை,
ஆததாகெள -உண்டு பண்ணுமவைகளாயும்‌,
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
ஸாகர-ஸமுத்ரத்திலிருந்து,
ஸமுத்தரண – கரையேற்றுவதில்‌,
ப்ரவீணெள-மிக சாமர்த்யம்‌ வாய்ந்தவைகளுமான,
வாநாத்ரியோகி சரணெள -வானமாமலை ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும்,
காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவராகவும்,
சம்சாரக் கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடையராகவுமிருக்கும்
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வாநாத்ரி ராமாநுஐ முனிவரின்‌ திருவடிகளைப்‌ பற்றும்‌ மஹார்யர்‌ அதன்‌ பெருமைகளை விளக்குகிறார்‌ மூன்று பாதங்களாலே. முதல்‌ பாதத்தில்‌ அப்‌பொழுதே முழுதும்‌ அலர்ந்த செவ்வித்‌ தாமரை மலர்களோடொத்த சோபையை உடையன அத்திருவடிகள்‌ என்கிறார்‌-
இதனால்‌ ம்ருதுத்‌ தன்மை, ஸூகந்தம்‌, குளிர்த்தி இவைகளையுடையது அத்திருவடிகள்‌ என்று அதன்‌ போக்யதை உணர்த்தப்பட்டது. இரண்டாம்‌ பாதத்தில்‌ அத்‌திருவடி௧ளை நன்கு ஸேவிக்குமவர்களின்‌ கண்களுக்குக்‌ களிப்பூட்டுமவை அவை யென்கிறார்‌. இதனால்‌ அவற்றின்‌ அழகு கூறப்‌ பட்டதாகும்‌. மூன்றாவது பாதத்தில்‌ அவை ஸம்ஸாரமென்‌னும்‌ ஸமுத்ரத்தில்‌ ஆழ்ந்து கடக்கும்‌ ஸம்ஸாரிகளை அவற்‌றில்‌ நின்றும்‌ கரையேற்றுவதில்‌ மிகுந்த ஸாமர்த்ய்ம்‌ பெற்‌றவை என்கிறார் . இத்தால்‌ மென்மை, குளிர்த்தி, நாற்றம்‌,
அழகு போன்‌ற குணங்களை யுடையனவாய்‌ இம்மையில்‌ போக்யதையால்‌ களிப்பூட்டுவது மாத்திரமின்றி மறுமையிலும் மோக்ஷத்தையும்‌ அளிக்கும்‌ பெருமை வாய்ந்தவைஅவை யெனக்‌ கூறி, அவைகளைத்‌ தமக்கு உபாயமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌. இங்குக்‌ கூறப்பட்ட பற்றுதல்‌ யாயினும்‌ அமையும்‌ கார்ய கரமா கைக்கு.

——–

அவதாரிகை:–
முன்‌ ஸ்லோகத்தில்‌ ராமாநுஜ:முனிவரது ஸம்ஸார உத்தாரகத்வம்‌ கூறப்பட்டது. இந்த ஸ்லோகத்தில்‌ அதற்குக்‌ காரணமாகிய காம குரோதாதி: துஷ்ட குணங்களில்லாமை, நற்குணங்களுக்கு உறைவிடமாயிருத்தல்‌ முதலிய பெருமையையும்‌, ஸ்ரீ மணவாள மாமுனிவரின்‌ இன்னருளால்‌ அப்பெருமையை இவர்‌ பெற்றமையையும்‌ கூறி, இத்தகைய ப்ரபாவம்‌ வாய்ந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகள்‌, தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கல்பக வ்ருஷம்‌ போன்றவை எனக்‌ கூறி அவைகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

காந்தோ பயந்த்ரு முனி வர்ய தயாத்த பூம்ந
காமாதி நிக்ரஹ கரஸ்ய குணாம்பு ராஸே
வாநாத்ரி லஷ்மண முநேர் நத லோக கல்ப
வ்ருஷாயமாண சரணவ் சரணம் ப்ரபத்யே–2-

பதவுரை:–
காந்தோ பயந்தரு முநிவர்ய – அழகிய மணவாள மாமுனிவரின்‌,
தயா – கருணையினால்‌,
ஆத்த- பெறப்‌ பட்ட
பூம் ந – பெருமையை யுடையவரும்‌, காமாதி- காமம்‌ க்ரோதம்‌ முதலியவற்றை, நிக்ரஹகரஸ்ய- அடக்குமவரும்‌, குணாம்புராசே: – நற்குணங்களுக்‌குக்‌ கடல் போன்றவருமான,
வநாத்ரி லக்ஷ்மண முநே : – வானமாமலை ராமாநுஜ முனிவரது
நதலோக–தன்னை வணங்கிய ஜனங்களுக்கு,
கல்பவ்ருஷாயமாண் -கற்பக வ்ருக்ஷம் போல்‌ ஆசரிக்கின்‌ற,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌- உபாயமாக,
ப்ரபத்யே- பற்றுகிறேன்‌.

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய கருணையினால் பெருமை பெற்றவரும்,
காமம் முதலிய தோஷங்களை அழிக்கக் கூடியவரும்,
நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடி பணிந்தார்க்கு
கல்பக வ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இந்த ஸ்லோகத்தின்‌ முதலடியில்‌ -இம்முனிவர்‌ ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ கருணைக்குப்‌ பாத்திரமாய்‌ அதனால்‌ பெற்ற அதிசயத்தை உடையவர்‌ என்றார்‌. இரண்‌டாமடியில்‌ காமம்‌, குரோதம்‌, லோபம்‌, மோஹம்‌, மதம்‌,மாத்ஸர்யம்‌ என்று கூறப்படும்‌ ஸஹஜ சத்ருக்களையும்‌
அடக்குமவரென்றும்‌, நற்குணங்கள்‌ நிறைந்த கடல்‌ போன்றவர்‌ எனவும்‌ கூறினார்‌. இங்கு காமாதிகள்‌ சாரா வண்ணம்‌ துறத்துமவர்‌ என பொதுவாசுக்‌ கூறியதனால்‌ -தம்மை ஆஸ்ரயித்த பிறருடைய காமாதிகளையும்‌ துறத்தும்‌ ஆற்றல்‌ வாய்ந்தவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌. நற்குணங்‌களுக்குக்‌ கடலென்றதனால்‌ ஒருநாளும்‌ வற்றாத நற்குண ஸம்பந்நர்‌ இவர்‌ என்றதாயிற்று. இனி ஸ்லோகத்தின்‌ பிற்‌பகுதியால்‌ இப்படிப்‌ பெருமை வாய்க்த வாநாசல ராமாநுஜ முனிவரது, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குக்‌ கற்பக வ்ருக்ஷம்‌
போன்றதான திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறார்‌. இதில்‌ **நதலோக”’ **தம்மை வணங்கிய ஜனங்களுக்கு”’ எனப்‌ பொதுவாகக்‌ கூறியதால்‌ தம்மை வணங்கியவரின்‌ பெருமை சிறுமைகளைப்‌ பார்த்துக்‌ கொடுக்கும்‌ புன்மை திருவடிகளுக்கில்‌லாமை கூறப்பட்டதாகும்‌. கற்பக வ்ருஷமென அவைகளைக்‌ கூறியதால்‌ நினைத்த மாத்திரத்திலே இம்மை மறுமைப்‌ பயன்களை அர்த்தித்தார்‌ அர்த்தித்தபடியே கொடுக்கும்‌ பெருமையும்‌ கூறப்பட்ட தாகும்‌.

—————–

அவதாரிகை:–
இம்முனிவர்‌ மாமுனிகளின்‌ கருணைக்‌குப்‌ பாத்திரமாய்‌, அதனால்‌ இவர்‌ பெற்ற மிகச்‌ சிறந்த வைராக்ய குணத்தை விரித்துக்‌ கூறுகிறார்‌ இந்த ஸ்லோகத்தில்‌.

தாராத்மஜாதி ஜநிதம் ஸூகமை ஹிகம் ய
காராக்ருஹ ப்ரபவ துக்க சமம் விசார்ய
ஸவ்ம்யோ பயந்த்ரு முநி பாத யுகம் ஸ்ரிதஸ் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–3–

பதவுரை:–
தாராத்மஜாதி -பெண்‌டிர்‌ மக்கள்‌ முதலியோரால்‌,
ஐநிதம்‌-உண்டு பண்ணப் பெற்றதும்‌; ஐஹிகம்‌ – இம்மையில்‌ அநுபவிக்க வேண்டுமதான,
ஸுகம்‌ – சுகத்தை,
ய:-எந்த ராமாநுஜ முனிவர்‌
காராக்ருஹ – சிறைக்‌ கூடத்தில்‌,
ப்ரபவ – உண்‌டாகிய,
து:கஸமம்‌-துக்கத்தோடு ஓத்ததாக,
விசார்ய-நிர்ணயம்‌ செய்து,
ஸெளம்யோ பயந்த்ரு முநி -அழகிய மணவாள முனிவரின்‌,
பாதயுகம்‌-திருப் பா தங்களையும்‌,
ஸ்ரித: – ஆஸ்ரயித்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வாநாசல ராமாநுஐ முனிவரது திருவடி.களை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை,
சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து,
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆஸ்ரயித்த
ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.

இவ்வுலகில்‌ மற்றையோர்‌ ஸுகங்களென ப்ரமித்துக்‌ களிக்கும்‌, மனைவி மக்கள்‌ முதலியோரால்‌ உண்டாகக் கூடிய ஸுகங்கள்‌ சிறைக் கூடத்திலனுபவிக்கும்‌
துன்பத்தோ டொப்பானவை ** என இம் முனிவர்‌ தீர்மானித்து, மா முனிகளின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புக்கார்‌ என்கிறார்‌. அது எவ்வாறு எனில்‌ ? சிறைக்‌கூடமென்பது
ஓருவன்‌ செய்த தீச் செயலுக்குத்‌ தக்கவாறு அரசனால்‌ சிக்ஷை விதிக்கப் பெற்று அடைத்து வைத்திருக்கு மிடமாகும்‌. அது போலவே ஸம்ஸாரமமும்‌ சிறைக்கூடமே யென்‌னத்‌ தட்டில்லை. எப்படி எனில்‌ அவ்வவ ஜீவன்‌ முன் பிறவிகளில்‌ செய்த கன்ம பலங்களை யநுபவிக்க வேண்டியே ஈஸ்வரனால் ஸம்ஸாரத்தில்‌ பிறக்கும்படி. செய்யப்படுவதால்‌ அதுவும்‌ சிறைக்கூடமே. ஸம்ஸாரத்திலும்‌ சிலர்‌ நெடுநாள்‌ சுகவான்களாயும்‌ ஆரோக்யாதிகளை யுடையராயும்‌ ஸ்வதந்தரர்களாயும்‌ காணப்படவில்லையா ? எனவே எவ்வாறு இது சிறையாகுமெனில்‌, நன்கு ஆராய்ந்தால்‌ அதன்‌ உண்மை புலனாகும்‌. நாம்‌ ஸம்ஸாரத்தில்‌ சிறிது சுகம்‌ பெற்றாலும்‌ அது அற்பமும்‌ அஸ்திரமுமாகையாலும்‌, அதுவே மேலும்‌ பல பிறகளாகிய சிறைகளுக்குக்‌ காரணமாவதாலும்‌, அது மேலெழப்‌ பார்ப்பவர்களுக்கு ஸுகமாகத்‌ தோன்றினாலும்‌ உண்மையில்‌ துக்கமேயாகும்‌. எனவே தான்‌ நிரூபணத்தில்‌ இழிந்த ஆழ்வார்கள்‌ “*பெண்டிரால்‌ சுகங்களுய்ப்பான்‌ பெரியதோரி டும்பை பூண்டு” என்றும்‌, * ஒரு நாயகமாய்‌ ஒட உலகுடனாண்டவர்‌…பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ ‘” என்றும்‌ ஸம்ஸார ஸுகம்‌ துக்கமென்‌பதையும்‌, ஐஸ்வர்யம்‌ ௮ஸ்‌ திரமாகையால்‌ துக்காஸ்பதமென்‌பதையும்‌ கூறியுள்ளனர்‌. சிறைக்கூடத்திலும்‌ அரசன்‌ உதாரனாயிருந்தால்‌ சிறிது ஸுகமெய்தலா மல்லவா? அது போலவே தான்‌ ஸம்ஸார ஸுகமும்‌ என்னத்‌ தட்டில்லை.-இப்படித்‌ தீர்மானித்த இம் முனிவர்‌ செய்தது என்‌ என்னில்‌?’ஸாஸ்வதமான சுகத்தைப்‌ பெற அழகிய மணவாள முனிவரின்‌ திருவடியைச்‌ சரணமாகப்‌ பற்றினார்‌. அது போலவே யானும்‌ மாமுனியைச் சரணம்‌ புக்க, இம் முனிவரது திருவடிகளிலே:எனது தலையை மடுக்கிறேன்‌ என்‌கிறார்‌.

——–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தில்‌ இவருக்கு உண்டாகிய விரக்தி கூறப்பட்டதல்லவா ? இந்த ஸ்லோகத்தில்‌ அந்த விரக்தி என்னும்‌ குணமானது கிளைத்‌துத்‌ தழைத்துப்‌ படர்ந்ததும்‌,இம் முனிவரிடமே எனக்‌ கூறப்‌படுகிறது.

ஆதவ் ஹநூமதி விரக்தி லதா ப்ரஸூதா
பஸ்ஸாத் குருப்ரர வர மேத்ய விவ்ருத்தி மாப்தா
ஸாஹா ஸஹஸ்ர ருசிராய முபேத்ய தாத்ருக்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–4–

பதவுரை :–
ஆதெள – முதலிலே,
ஹநூமதி – ஆஞ்ச நேயரிடத்தல்‌,
ப்ரஸுூதா – உண்டானதும்‌,
பச்சாத்‌ -பிறகு,
குருப்ரவரம்‌ – குரு வம்சத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரான பிஷ்மரை ,
ஏத்ய- அடைந்து,
விவ்ருத்திம்‌ – மிகுந்த வ்ருத்தியை ,
அப்தா – ௮டைந்ததுமான,
விரக்தி லதா -விரக்தி யென்னும் கொடியானது,
யம்‌-எந்த ராமாநுஜ முனிவரை,
உபேத்ய – கட்டியடைந்து,
சாகாஸஹஸ்ர – ஆயிரக்கணக்கான அநேகம்‌ கிளைகளால் மனதைக்‌ கவர்வதாக இருக்கிறதோ,
தாத்ருக்‌ – அப்படிப்பட்ட,
வாநாத்ரி யோகி – வானகிரி முநி வரின்‌,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,.
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

முதலில் விரக்தியான கொடி ஸ்ரீ ஹனுமானிடத்தில் உண்டானது.
பின்னர் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ வானமாமலை ஜீயரை அடைந்து
பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது.
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாகப் பற்றுகிறேன்.

விரக்தி என்பது: செவி, வாய்‌, கண்‌, மூக்கு உடலெனப்படும்‌ இந்திரியங்களுக்கு விஷயங்களாகிய, சப்த ரஸ ரூப கந்த ஸ்பர்சங்களில்‌, அவ் விந்த்ரியங்கள்‌ புகாமல்‌ காத்தலே யாகும்‌. இந்த விரக்தியை ஓர்‌ கொடியாக நிரூபணம்‌ செய்கிறார்‌ மஹார்யர்‌. ஓரு கொடி முதலில்‌ விரையிவிருந்து உண்டாகிக்‌ கொள்‌ கொம்பில்‌ படர்ந்து பின்‌ பெரிய மரத்தைச்‌ சார்ந்து பூர்ணமாகப்‌ படர்வது போல்‌, இந்த விரக்திக் கொடியும்‌ இம்‌ முநிவரைப்‌ பற்றி அநேகக்‌ கிளைகளுடன்‌ பூர்ணமாகப்‌ படர்ந்து இலங்குகின்‌றது என்கிறார்‌. இக் கொடி
முன்பு த்ரேதாயுகத்தில்‌ அநுமானிடம்‌ முளைத்தது; பின்னர்‌ குருவம்சத்‌ தரசனாகிய பீஷ்மரிடம்‌ விருத்தியை யடைந்தது.
இக் கலியுகத்தில்‌ இந்த ராமானுஜ முனியிடம்‌ நன்கு படர்ந்து அநேகம்‌ கிளைகளோடு கூடியதாய்‌ கண்டவர்‌ மனதையும்‌ ஆகர்ஷிக்குமதாய்‌ இருக்கிறது என்கிறார்‌. அனுமானையும் காட்டில்‌ பீஷ்மரிடம்‌ வைராக்யம்‌ அதிகம்‌ என்பது, தமது உயிரையும்‌ த்ருணமாக மதித்து அவர்‌ ப்ரும்ஹசர்யத்தைப்‌ போற்றி வந்ததாலாகு மென்பது கீழ்‌ மங்களாசாஸந உரையில்‌ விரிவாய்க்‌ கூறப்பட்டி ருக்கிறது. அந்த பீஷ்மரைக் காட்‌டிலும்‌ ஸ்வாமி ராமாநுஐ முனிவரிடம்‌ ௮ந்த வைராக்யம்‌ அதிகம்‌ என்பது எவ்வாறு என்னில்‌? காம க்ரோதாதிகளே நிறைந்த இக்கலி காலத்திலும்‌ காமப்‌ பயனைப்‌ பெறுவிக்கும்‌
கிரஹஸ்தாஸ்ரமத்தை பீஷ்மர்‌ தமது தந்தையின்‌ சுகாநுபவத்துக்காகத்‌ துறந்தது போலல்லாமல்‌, **இல்லறம்‌ தமது ஆசார்யாநுவர்த்தன கைங்கர்யாதிகளுக்கு விரோதி ‘? என்று ஒரு நிர்ப்பந்தமுமின்றி தாமே அதைத்‌ துறந்து விரக்த்தியை ஏற்றுக் கொண்டதாலாகும்‌. இங்கு “சாகா ஸஹஸ்ர ருசரா ”’ என்று பல கிளைகளாய்க்‌ கிளைத்‌ததாலும்‌ இங்கு அது பூர்ணம்‌. அதாவது இவரது விரக்தியின்‌ ‘பெருமையைக்‌ கண்டு கிரஹஸ்தர்களான இவரது சிஷ்யர்களும்‌ மிகுந்த வைராக்யசாலி களானார்கள்‌
என்பது வர மங்கை முனி வைபவத்தில்‌ காணலாம்‌. ஸ்வாமியின்‌ ஞான புத்ரனான ராமானுஜம்‌ பிள்ளான்‌ மிகுந்த வைராக்ய முள்ளவராதலால்‌ ஓரு நாள்‌ அவருடைய பத்னீ ஸர்வபூஷணா லங்க்ருதையாய்‌ எதிரில்‌ நிற்க, **நீ எனக்கு ப்ரதி கூலையாகா நின்றாய்‌; பதி வ்ரதைக்குச்‌ சீலமன்றோபூஷணம்‌. இந்த பூஷணங்களால்‌ ஆவது என்‌?’” என்று
க்ஷேபிக்க, அவளும்‌ நடுநடுங்கி தனது ஆபரணங்களை யெல்லாம்‌ களைந்து பர்த்தாவிடம்‌ கொடுத்தாள்‌. அவரும்‌ எல்லாவற்றையும்‌ வாங்கி உருக்கி வானமாமலை தெய்வ நாயகப்‌ பெருமாளுக்குத்‌ திருமார்பு லக்ஷ்மியாய்‌ ஏறியருளப்‌ பண்ணி, தமது ஸ்வாமியின்‌ அநுமதியின்‌ பேரில்‌ ப்ரதிஷ்‌டிப்பித்துச்‌ சாத்தி யருளினர்‌” என்‌றதனால்‌ பல சிஷ்யர்கள்‌ இவரது வைராக்யத்தையே கடைப் பிடித்தனர்‌ என்பதற்குத்‌ தக்க சான்றாகுமல்லவா ? ஆதலால்‌ அநேகங்‌ கிளைகளுடன்‌ படர்ந்தது எனக்‌ கூறினர்‌. நிற்க ௮ந்த வானமாமலை
ராமாநுஜ முனிவரிடம்‌ அக் காலத்தில்‌ ஸந்யாஸம்‌ பெற்ற: வைராக்யசாலிகள்‌ சிலரும்‌, பிறகு நாளதுவரையில்‌ அந்தப்‌ பட்டத்தை அலங்கரித்து வரும்‌ ஸ்வாமிகள்‌ பலரும்‌ வைராக்ய பூர்ணராய்‌ ஸந்யஸித்து அவரது கைங்கர்யங்களை அநுஷ்டித்து வருவது அவர்‌ மூலமே யாகையாலும்‌ அவ்‌ வைராக்யம்‌ அவரை யாஸ்ரயித்துப்‌ பல கிளைகளுடன்‌ படர்ந்தது என்னக்‌ குறையில்லை. இத்தகைய வைராக்யம்‌ வாய்ந்த முனிவரின்‌ திருவடிகளைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறார்‌.

———-

அவதாரிகை:-இக்த ச்லோகத்தில்‌, முன்‌ கூறப்பட்ட. சிறந்த வவராக்யஸ்ரீ மாத்திரமின்றி பகவத்‌ கைங்கர்ய ஸ்ரீயும்‌ இம்முனிவரிடம்‌ குடிகொண்டது என்கிறார்‌,

வாநா ஸலஸ்ய வர மண்டப கோபுராதி
கைங்கர்ய மாரசி தவான் பணி நாத வத்ய
ப்ரீத்யை வரம் வரஸ்ய யதீஸி துஸ்தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–5-

பதவுரை:–
யதீசிது: – யதிகட்கு இறைவனாகிய,
வரவரஸ்ய -ஸ்ரீவரவர முனிவரது,
ப்ரீத்யை பரம்‌-ப்ரீதியை உத்தே.சித்தே,
ய: – எந்த வாநாசல முனிவர்‌,
பணிகாதவத்‌ – ஆதி சேஷனைப் போலே, வாநாசலஸ்ய – வானமாமலையான எம்‌ பெருமானுக்கு,
வரமண்டப – சிறந்த.
மண்டபங்களென்ன,
கோபுர – கோபுரங்களென்ன,
ஆதி-இவை முதலியவற்றின்‌,
கைங்கர்யம்‌ – திருப்பணியை,
ஆரசிதவான்‌ – செய்தனரோ,
தத்‌ – அந்த,
வாநாத்ரியோகி – வாநாசல முநிவரின்‌, சரணெள- திருவடிகளை.
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌.

யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உகப்புக்காக
ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை
ஸ்ரீ ஆதிசேஷனைப் போல் நன்றாகச் செய்தவரான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.

இதில்‌ இம்முனிவர்‌ யதிகட்கிறையாகிய. ஸ்ரீ மணவாள மாமுனிகளின்‌ திருவுள்ளத்தைப்‌ பின்‌ சென்று அவரது ப்ரீதிக்காகவே “*வானமாமலையே அடியேன்‌ தொழவந்தருளே” என்ற ஆழ்வார்‌ பாசுரப்படியே வானமாமலையாய எம்பெருமானுக்குச் சிறந்த மண்டபங்கள்‌, கோபுரங்கள்‌, ஆதி சப்தத்தால்‌ ப்ராகார வாஹநாதிகள்‌ என்ற பலவற்றையும்‌ உண்டாக்கி, பரமபத நாதனுக்கு அங்குப்‌ பரமபதத்தில்‌ சேஷன்‌ என்று கூறப்படும்‌ ஆதிசேஷன்‌
**சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாசுரப்படி அநேக கைங்‌கர்யங்களையும்‌ செய்யுமாபோலே, இவரும்‌ இங்கு அநேகம்‌ கைங்கர்யங்களைச்‌ செய்துள்ளார்‌ என்று இவருடைய அநந்‌த அவதாரத்தை ஸூ ஸிப்பிக்கிறார்‌. இங்கு **ப்ரீத்யை பரம்‌ வரவரஸ்ய ” எனக்‌ கூறியதால்‌ இவர்‌ இந்த கைங்கர்‌யங்களுக்காக மாமுனிகளைப்‌ பிரிய மனமில்லாவிட்டாலும்‌
அவருடைய உகப்புக்காக வானமாமலை யப்பனின்‌ கைங்கர்‌யத்தை ஏற்றுக் கொண்டார் எனத் தெரிகிறது. இங்ஙனன்றாகில் “ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு…
தேசாந்தரத்திலிருக்க மனந்தான் பொருந்தமாட்டாது”
என்று உபதேச ரத்னமாக உபதேசித்த மாமுனிகளின் அடிச் சுவட்டைப் பின்பற்றும் பாத ரேகா ஸமரான இவர் அவரை விட்டிருக்கவும் வல்லரோ? “வரம்” என்று பாடமான போது சிறந்த என்று பொருளாய் கைங்கர்ய பதார்த்தத்தில் அந்வயித்து சிறந்த கைங்கர்யத்தை எனக் கொள்ளத் தகும்; இப்பொழுது தூராந் வயமாகும். இங்கு உபமானமாகக் கூறப்பட்ட ஆதி சேஷனுக்கும் இவருக்கும் வாசி யுண்டு. அவர் நித்ய ஸூரிகளில் தலைவராகையாலே தமது ஸங்கல்ப மாத்திரத்தினாலேயே தமது திருமேனியைக் குடை, சிங்காஸநம் முதலிய உபகரணங்களாக அமைத்துக் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்தியையும் எம்பெருமானுடைய அவ்வவ நிலைகளுக்கு அநுகுணமாகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார். நமது ஸ்வாமியோ மநுஷ்யாவதாரத்திற்குச் சேர மெய் வருந்திப் பொருளீட்டி அநேக பரிச்ரமங்களோடு நெடு நாட்களில் செய்ய வேண்டி யிருந்தபடியால் அவர் கைங்கர்யங்களிலும் இவர்
திருப்பணிகளே மேலானவை என்னத் தட்டில்லை. ஆயினும் அவரைப் போல் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ததற்கு மாத்திரமே அவர் உபமானமாவார். இத்தகைய கைங்கர்ய நிஷ்டையை யுடைய கைங்கர்ய லக்ஷ்மீ ஸம்பந்நரான வானகிரி முனிவரைச் சரணம் புகுகிறேன் என்கிறார்

——–

அவதாரிகை:
இம்முனிவர் ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவுள்ளக் கருத்துப்படி கைங்கர்யங்களைச் செய்ததுமன்றி, பாஷாந்தரமான த்ராவிட பாஷையாகப் பரிணாமத்தை அடைந்து நம்மாழ்வார் திருமுகத்திலிருந்து வெளி வந்த திருவாய்மொழி முதலிய த்ராவிட வேதங்களின் அர்த்தங்களை அறிய விருப்பங்கொண்ட ஸாத்விகர்களுக்கும், அவற்றைத் தமது ஒளதார்யத்தால் உதவிய மஹோபகாரகர்‌, ஞான பரிபூர்ணர்‌ என்று இதில்‌ கொண்டாடுகிறார் –

பாஷாந்தரேண பரிணாம வதாக மாநாம்
யஸ் ஸ்ரீ சடாரி வசஸாம் ஸ்ரவண அம்ருதாநாம்
அர்தான் உபாதி ஸது தாரதர ஸதாம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--6-

பதவுரை:–
பாஷாந்தரேண – வேறு பாஷையான திராவிட பாஷையாக,
பரிணாவதாகமாகாம்‌ – மாறுபாட்டை யடைந்த வேதங்களாயும்‌,
ச்ரவணாம்ருதாகாம்‌- காதுகளுக்கு
அமுதம்‌ போன்றவைகளுமான,
ஸ்ரீ சடாரிவசஸாம்‌ – ஸ்ரீ சடகோபனின்‌ திருவாக்குக்களான திருவாய்மொழி முதலியவற்‌றின்
அர்த்தான் -அர்த்தங்களை,
உதார தர:-மிக உதாரரான,
ய:-எந்த முனிவர்‌,
ஸதாம்‌ – ஸாத்விகர்களுக்கு,
உபாதிசத்‌-உபதேஸித்தனரோ,
தத்‌ – அப்படிப்‌பட்ட,
வாநாத்ரி யோகி-வானகிரி முனிவரது,
சரணெள – திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே – பற்றுகிறேன்‌..

செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட
ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு
உபதேசித்தவரான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

வேத வேத்யனான பரம புருஷன்‌ ஜீவ ராசிகளை உஜ்ஜீவிப்பிக்க விரும்பி, தனது பெருமையைச்‌ சிறிதும்‌ பாராது தன்னை ௮ழியமாறி மானிட சாதியிலும்‌
மற்றும்‌ திர்யக்‌ ஸ்தாவர ஜாதிகளிலும்‌ அவதரித்தது போலவே, அவனை ப்ரதி பாதிக்கின்ற வேதமும்‌, சிலருக்கே அதிகாரமுடையதாகையாலும்‌,, அதன்‌ அர்த்தங்களும்‌
அநேக சாஸ்த்ர ஞாநா பேக்ஷமாய்‌ கிலேசப்பட்டே அறிய. வேண்டும்படி யிருக்கையாலும்‌, தன்னால்‌ உலகைத்‌ திருத்த இயலவில்லையே என்று வருந்தி, வ்யாஸ பராசராதிகள்‌ பக்கலில்‌ “* வேத: ப்ராசேதஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா ” என்கிறபடியே இதிஹாஸ புராணாதிகளாக அவதரித்தாப் போலே, ஸம்ஸ்கிருத பாஷையை யறியாதாரும்‌ உஜ்ஜீவிக்கவேணு மென்ற க்ருபாதிசயத்தாலே, திராவிட வேதமாகவும்‌ பரிணாமத்தை யடைந்தது. இப்படி மாறுபாட்டுடன்‌ உதித்தவை ஸ்ரீசடகோபன்‌ அருளிச் செய்த திருவாய்மொழி முதலியனவாம்‌.. இது மற்றய ஆழ்வார்களின்‌ ப்ரபந்தங்களுக்கும்‌ உபலக்ஷணமாகும்‌. அவையும்‌ நாதமுனி களுக்காக ஸ்ரீ சடகோபன்‌ முகமாக வெளிவந்தவையே.-இவற்றை ** ச்ரவணாம்ருதாநாம்‌. ” எனக்‌ கூறியது “*செவிக்‌கினிய செஞ்சொல்லே’? என்றதை அடியொற்றியபடி. அம்ருதம்‌ எனக்‌ கூறியதால்‌, இப்‌ரபந்தங்களே *உள்ளத்தை மாசறுத்து”,“இருவினைப்‌ பாசங்கள்‌ நீக்கி”, *வீடும்‌ தரும்‌”
என்ற விஷயம்‌ ஸூஸிப்பிக்கப்‌ பெற்றது. இப்படிப்‌ பட்ட அர்த்த விசேஷங்களை ஸத்துக்களுக்கு உபதேஸித்த உதாரர்‌ இம்முனிவர்‌. இங்கு ஸத்துக்களாகிறார்‌ *ஸந்தமேநம்‌ ததோ விது:” என்று கூறப்பட்ட வேதாந்த ஞானமுடைய பெரியோர்கள்‌. அப்படிப்பட்ட பெரியோர்களுக்கும்‌ இப்‌ப்ரபந்தார்த்தங்களி லுண்டாகக் கூடிய ஸம்சய விபர்யங்‌களைத்‌ தமது உபதேசத்தால்‌ அறவே நீக்கும்‌ சிறந்த ஞானி இவர்‌ எனக்‌ கூறப்பட்டதாகும்‌. இங்கு உதார : என்னாதே “உ தார தர:”” எனக்‌ கூறியதால்‌,-பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்த ஆழ்வாருடையதும்‌ அதற்குப்‌ பாஷ்யமாக ஈடு முதலிய வ்யாக்யானங்களை அருளிச் செய்த ஆசார்யர்களுடையதுமான, ஓளதார்யங்களைக்‌ காட்டிலும்‌, அந்த ஈடு முதலிய வ்யாக்யானங்களில்‌ துரூஹங்களுமான அர்த்தங்கள்‌ தெளிவு பெறும்படி. அருளிச் செய்யும்‌ ஆற்றல் வாய்ந்த ஆசார்யர்கள்‌ இல்லாதிருந்த காலத்திலே இவர்‌ எல்லாருக்கு முபதேசிக்கையாலே இவர்‌ சிறந்த ஓளதார்யமுடையவர்‌ எனக்‌ கூறினார்‌. இப்படிப்பட்ட அதிகாரி துர்லபமாயிருத்த படியால் தான்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை மாமுனிகளைப்‌ பகவத்‌ விஷயத்‌தையே பேணிப்‌ போரும்படி. நியமித்ததும்‌. ஆகையால்‌-“உதார தர:” என்னத்‌ தட்டில்லை. இங்ஙகனன்றியே தமது பீடத்தை உண்டாகத்‌ தமது பரம்பரையிலே இன்றளவு அலங்கரிக்கும்‌ முனிவர்களை யாவரையும்‌ ஸாதுக்களுக்கு உபதேஸிக்கும்படி நித்யமாய்‌ நியமித்த ஒளதார்ய விசேஷத்‌தாலே ** உதார தர:” எனக்‌ கூறினர்‌ எனவும்‌ கொள்ளலாம்‌. ஆக இவ்வாறு உதாரரான வானமாமலை முனிவரின்‌ சரணங்களைச்‌ சரணடைகின்றேன்‌:

—————

அவதாரிகை:–
கீழில்‌ இம் முனிவரின்‌ ஒளதார்யம்‌ பரக்கப்‌ பேசப்பட்டது. இந்த ஸ்லோகத்தில்‌, இவருடைய** ராமானுஜன்‌ ” என்னும்‌ திருநாமம்‌ விஷத்தைப்‌ பேர்க்கும்‌ மந்த்ரம்‌ போலே ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்க வல்லது என்றும்‌, தன்னை உச்சரிப்பவர்‌களுக்கு பரம புருஷனோடு பரம ஸாம்யத்தையும்‌ (முக்தியை)தரவல்லது என்றும்‌ திருநாமத்தின்‌ பெருமையைக்‌ கூறி,இவர்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகிறார்‌.

யந் நாம கீர்தநம் அநு க்ஷணம் ஆஹு ரார்யா
ஸம்ஸார போகி விஷ நிர்ஹரணாய மந்த்ரம்
பும்ஸாம் பரேண புருஷேண ச ஸாம் யதம் தத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–7–

பதவுரை :–
ஆர்யா: – பெரியோர்‌,
அநுக்ஷணம்‌ .-அநு ஷணந்தோறும்‌ செய்யப்படும்‌,
யத்‌-எந்த முனிவரது,
நாம கீர்த்தனம்‌ – திருநாம ஸங்கீர்த்தனத்தை
ஸம்ஸார-ஸம்ஸாரமாகிற,
போகி – ஸர்பத்தினுடைய,
விஷ- விஷத்தை,
நிர்‌ஹரணாய -போக்குவதன்‌ பொருட்டாகிய,
மந்த்ரம்‌-மந்தரமாக,
ஆஹு -சொல்லுகிறார்களோ,
பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு,
பரேண -பராத்பரனான,
புருஷேண ச – புருஷனோடும்‌,
ஸாம்யதம்‌ -ஸாம்யத்தை கொடுக்கவற்றோ
தத்‌-௮ப்படிப்பட்ட,
வாநாத்ரியோகி-வாநாத்ரி முனிவரின்‌,
சரணெள-திருவடிகளை;
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே–பற்றுகிறேன்‌.

யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய
விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ,
ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்க வல்லதோ,
அந்த ஸ்ரீ ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.

இம்முனிவரது ராமானுஜன்‌ என்னும்‌ திருநாமம்‌ ப்ரதி ஷணமும்‌ கீர்த்தனம் செய்யப்படுமானால்‌. அதுஒரு மந்த்ரத்தின்‌ கார்யத்தைச்‌ செய்ய வல்லது. அடிக்கடி ஜபித்து அதன்‌ ஸித்திக்கு உறுப்பாகச் செய்ய வேண்டிய எண்ணிக்கையோடு கூடி ஸித்தியைத்‌ தரும்‌ கருட மந்த்ரமானது, ஸ்மரண மாத்ரத்தாலே எப்படி ஸர்ப்பாதி துஷ்ட ஜந்துக்களின்‌ விஷத்தை நீக்குமோ அது போலவே அநவரதம்‌ சிந்திக்கப்படும்‌ இந்த ராமாநுஜன்‌ என்னும்‌ இவர்‌ திருநாமம்‌,ஸம்ஸாரமாகிற. ஸர்ப்பத்தின்‌ விஷத்தைப்‌ போக்கும்‌. அது “மாத்திரமே யன்றி பரம புருஷனான ஸ்ரீமந் நாராயணனோடு ஸாம்யத்தையும்‌ அளிக்கும்‌ என்று பெரியோர்கள்‌ கூறுகிறார்கள்‌. இங்கு ஸம்ஸாரத்தை ஸர்ப்பமாகக்‌ கூறியதால்‌ பாம்பு போலவே ஸம்ஸாரமும்‌ வக்ர கதியை உடையது என்‌றும்‌, அப் பாம்பால்‌ தீண்டப்பட்டவன்‌ மூர்ச்சை யுறுவது போலவே இந்த ஸம்ஸார ஸ்பர்சம்‌ பெற்றவனும்‌ உண்‌மையை உணராது மயங்குகிறான்‌ என்றும்‌ அதை நீக்கும்‌ கருட மந்த்ரம் போல்‌ ஸம்ஸார ஸ்பர்சத்தால்‌ வந்த மயக்‌கத்தை நீக்கி உண்மை உணர்வை அளிப்பது, அடிக்கடி. உச்சரிக்கப்படும்‌ இந்த முனிவரது திருநாமமே யாகையால்‌ அதை மந்த்ரமாகக்‌ கூறுவர்‌ ஞானவான்களான பெரியோர்‌. “* மந்‌தாரம்‌ த்ராயத இதி மந்த்ர:’” என்ற வயுத்பத்திப்படி தன்னை அநுஸந்திப்பவனைக் காப்பாற்றுவது மந்தரம்‌ அல்லவா? நிற்க இத் திருநாமம்‌ நான்கே அக்ஷ்ரமுள்ளதாயினும்‌ திருவஷ்டாஷரம் போலவே பரம புருஷனாகிய ஸ்ரீ மந் நாராயணனோடு**பரமம்‌ ஸாம்யாமுபைதி”என வேதத்தால்‌ கூறப்படும்‌ பரம ஸாம்யத்தையும்‌ தர வல்லது. **நமோ நாராயணேதி மந்த்ரோ பாஸக:, வைமுண்ட புவநம்‌ கமிஷ்யதீதி” என்ற ப்ரமாணத்‌தின் படியே அஷ்டாஷர மஹா மந்த்ரம்‌ ஸ்ரீவைகுண்‌டத்தைக்‌ கொடுத்து குணாஷ்டகத்தாலே பரமனோடு பரம ஸாம்யத்தையும்‌ கொடுட்பது போலவே இத் திருநாமமும்‌ என்று பணிப்பர்‌ பெரியோர்‌. பும்ஸாம்‌ என்‌றதனால்‌ அதிகாரி நியதி இல்லை என்‌ற படி. அப்படிப்‌ பெருமை வாய்ந்த திருநாமத்தை யுடையவரான வானாத்ரி முநிவரின்‌ திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌

———–

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகங்களில்‌ ஞான வைராக்‌யாதிகளாலும்‌ திரு நாம ப்ரபாவத்தாலும்‌ வந்த இம் முனிவரது பெருமையைக்‌ கூறி, திருவடிகளில்‌ சரணம்‌ புக்கார்‌.
இனி மேல்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ ஸாஷாத்தாகத்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்தையே கூறி, அவற்றைச்‌ சரணம்‌ புகுகிறார்‌..
அதிலும்‌ இந்த முதல்‌ ஸ்லோகத்தில்‌ ஸ்வாமியின்‌ திருவடிகள்‌ கேவல ஸ்மரணத்தாலே ஜந்மாந்தரத்தில்‌ உண்டான
பாப ஸமூஹத்தையும்‌ நசிப்பிக்கும்‌ பெருமை வாய்ந்ததெனக்‌ கூறிச்‌ சரணம்‌ புகுகிறார்‌.

பும்ஸாம் புராதந பவார்ஜித பாப ராஸி
ஸ்ம்ருத்யா யயோ ஸக்ருத் அபி ப்ரலயம் ப்ரயாதி
ஸத் வந்திதவ் பரம பாவந தைக வேஷவ்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே--8–

பதவுரை :–
பும்ஸாம்‌ – மனிதர்களுடைய,
புராதந -பழைமையான,
பவ-ஐன்மங்‌களில்‌,
ஆர்ஜித-ஸம்பாதிக்கப்பட்ட,
பாப ராசி:, பாபங்‌களின்‌ திரளானது,
யயோ: – எந்தத்‌ திருவடிகளினுடைய,
ஸக்ருத்‌-ஏக மாவகவே செய்யப்படும்‌,
ஸம்ருத்யா ௮பி-௮நுஸந்தானத்தாலும்‌,
ப்ரளயம்‌-நாசத்தை,
ப்ரயாதி-௮டைகிறதோ,
ஸத்வந்திதெள-பெரியோர்களால்‌ ஈமஸ்கரிக்கப்‌ பெற்றதும்‌,
பரம-மிகச்‌ சிறந்த,
பாவந-பரி சுத்தத்‌ தன்மையையே,
ஏக வேஷெள-முக்கிய ஸ்வரூபமாயுடையதுமான,
வாநாத்ரி யோகி சரணெள-வாநாத்ரி முனிவரின்‌ திரு வடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ப்‌ரபத்யே- பற்றுகிறேன்‌.

எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதி கால சம்ஸாத்ரதால் உண்டான
பாவக் குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும்,
சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும்,
பரம பாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

இம் முனிவரின்‌ திருவடிகள்‌ புராதனமான அநேக ஜன்மங்களில்‌ ஸம்பாதித்து மனிதர்களால்‌ கூடு பூரிக்‌கப்பட்ட
பாப ஸமூஹங்களையும்‌ ஒருக்கால்‌ ஸ்மரித்த மாத்‌திரத்திலேயே நசிக்கும்படி. செய்கின்றது”என்‌கிறார்‌.

**மனத்‌தினால்‌ சிந்திக்கப்‌ போய பிழையும்‌ புகு தருவான்‌ நின்றனவும்‌ -என்று ஆண்டாளருளிச்‌ செய்ததை
இவர்‌ தமக்கு வகுத்த விஷயத்திலே யாக்கி யருளுகிறார்‌.

பும்‌ஸாம்‌ என்றது ஸ்த்ரிகளுக்கும்‌ உபலக்ஷணம்‌.-ஆசார்ய சரணாரவிந்த சிந்தனத்தில்‌ அதிகார நியமம் யில்லை யிறே.
“*பும்ஸாம்‌” எனக்‌ கூறியதால்‌ வர்ணாசஸ்ரமாதி அதிகார நியதியில்லாமை கூறப்பட்டது.
இது ஸர்வே பரப்மாந: ப்ர.தூயந்தே ‘* என்ற உபநிஷத்‌ வாக்‌யத்தை நினைப்பூட்டுகிறது.
மேலும்‌ இத்திருவடிகள்‌ **ஸந்த மேநம்‌ ததோ-விது:’” என்று கூறப்படும்‌ ப்ரும்ஹ ஞானிகளான
அப்பாச்சியாரண்ணா, ராமானுஜம் பிள்ளான்‌ போன்றவர்களால்‌ வணங்கப்‌ படுமவை,
மிகுந்த புனிதத்‌ தன்‌மையையே தமக்கு ஸ்வரூபமாகக்‌ கொண்டவை.
இத்தால்‌ நித்ய ஸித்தமான அபஹதபாப்மத்வாதி கல்யாண குணங்‌களை யுடையவனே தன்னை ஆஸ்ரயித்தவனுக்கு
அக்‌ குணாஷ்டக ப்ராதுர்பாவத்தைச்‌ செய்விக்கச்‌ சக்தனாமாம் போலே
இத் திருவடிகள்‌ ஸ்மரித்தவர்களின்‌ பா பங்களையும்‌ போக்குவிக்கும்‌ சக்‌தி வாய்ந்தவை யாயின என்று
முற்கூறியதற்குக்‌ காரணமும்‌ இத்தால்‌ ஸூஸிப்பிக்கப் பட்டதாகும்‌.
** பரமபாவந தைகவாஸெள *’ என்று பாடங்‌ கொண்டால்‌ “புனிதத்‌ தன்மைக்கு முக்கியமான உறைவிடம்‌ ” என்பதாகும்‌.
தாத்பர்யத்தில்‌ அதிக பேதமில்லை. இத்தகைய திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

———–

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌ இத் திரு வடிகள்‌ தான்‌ வேண்டுமோ?

இவைகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாத தீர்த்தமே।தாப த்ரயமாகிற அக்னியை ௮ணைக்க வல்‌லது;
இவைகளின்‌ சம்பந்தம்‌ பெற்று உதிரும்‌ திருவடித்‌ துகளும்‌, உள்ளே உண்டாகும்‌ ரஜோ குணங்களையும்‌ சமகம்‌ ‘செய்யு மவையல்லவா ?
இத்தகைய பெருமை வாய்ந்த இம்‌ முனிவரின்‌ திருவடிகளில்‌ சரணம்‌ புகுகன்றேன்‌ என்கிறார்‌.

யத் தீர்த்தவாரி கலி கால ஸமீ ரணோத்த
தாபத்ரய அக்நி சமநம் விமலம் ஜநாநாம்
யத் ரேணுர் அந்தர ரஜஸ் ப்ரஸமாய சைதத்
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–9–

பதவுரை :–
யத் தீர்த்த வாரி – எந்தத்‌ திருவடிகளில்‌ நின்றும்‌ கிரஹிக்கப்பட்ட ஸ்ரீபாததீர்த்தம்‌,
விமலம்‌ – பரி சுத்தமானதாய்க்‌ கொண்டு,
கலிகால -கலியுகமாகிற,
ஸமீரண – காற்றினாலே,
உத்த – வ்ருத்தி யடைந்த,
தாப த்ரய – ஆத்யாத்மித ஆதிபெளதிக ஆதி தைவங்கள் என்னும்‌ தாபங்கள்‌ மூன்றாகிற,
௮க்நி -நெருப்பை,
சமகம்‌ – அணைக்கத் தகுந்ததோ,
யத் ரேணு: – எந்தத்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததுளி,
அந்தர – மனதில்‌ உண்டாகும்‌,
ரஜ: – ரஜோகுணத்தை,
ப்ரசமாய ௪ – நீக்குவதன் பொருட்டு ஆகிறதோ,
ஏத்த் வாநாத்ரி யோகு சரணெள – இத்தகைய சக்தி வாய்ந்த
வாநாத்ரி முனிவரது இத் திருவடிகளை,
சரணம்‌-உபாயமாக,
ட்ரபத்யே – பற்றுகிறேன்‌-

புனிதமான எந்த ஸ்ரீபாத தீர்த்தமானது ஜனங்களுடைய கலி காலமாகிற வாயுவினால் கிளர்ந்து
தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்க வல்லதோ,
எந்த ஸ்ரீபாத தூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்க வல்லதோ,
அத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கல்மஷ மற்று பரிசுத்தமான, இம்முனிவரின்‌ திருவடிகளின்‌ ஸம்பந்தம்‌ பெற்ற ஸ்ரீபாததீர்த்தம்‌
கலி யுகமாகிய காற்றின்‌ ஸஹாயத்தினால்‌ அபிவ்ருத்தி யடையும்‌,
ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகம்‌ என்னும்‌ அக்நியை அணைக்கும்‌ சக்‌தி வாய்க்தது.
ஆத்யாத்மிகமென்பது சரீரதீதிலுண்டாகும்‌ நோய்களாலான துன்பங்களும்‌ நாசமும்‌.
ஆதிபெளதிகமென்பது கரடி. புலி காளை முதலியவற்‌றால்‌ ஏற்படும்‌ துன்பம்‌ நாசம்‌ முதலியன.
ஆதி தைவிகமென்‌பது இடி. மின்னல்‌ முதலியவற்றால்‌ தெய்வீகமாய்‌ ஏற்படும்‌ துக்கங்களும்‌ நாசங்களுமாகும்‌.
இவைகளை அக்நி யாக நிரூப ணம்‌ செய்ததால்‌ அக்நி தனக்கு ஆதாரமான விறகுகளையும்‌ அழிப்பது போல்‌
இதுவும்‌ ஆஸ்ரயத்தை அழித்தே தீருமென்‌பதைக்‌ தெரிவிக்கிறது.
கலி காலத்தை வாயுவாகக்‌ கூறியதால்‌ அக்நிக்கு அநுகூலமாய்‌ அதை வ்ருத்தி செய்விக்கும்‌ வாயுவைப் போல்‌
கலிகாலம்‌ அந்தத்‌ தாப த்ரயங்களுக்கும்‌ அநுகூலமாய்‌ அவற்றை வ்ருத்தி செய்கிறது என்ற அம்சம்‌ கூறப்பட்ட தாகும்‌.
தாப த்ரயத்தை அக்நியாய்க்‌ கூறியதால்‌ இது சீக்‌கிரம்‌ பரவும்‌ ஸ்வபாவமுடையது என்றும்‌
தாமதித்தால்‌ அணைக்கக்‌ கூடாதவை எனவும்‌ தோற்றுகிறது.
எனவே அத்தகைய தீயை யணைக்கும்‌ தன்மை வாய்ந்தது இந்த முனிவ:ரின்‌ ஸ்ரீபாத தீர்த்தம்‌.
இப்படி ப்ரபாவம்‌ வாய்த்த ஸ்ரீபாத தீர்த்தம்‌ இன்றளவும்‌ நாம்‌ பெறும்படி யிருப்பதும்‌ நமது பாக்ய வசமேயாகும்‌. நிற்க
இத் திருவடிகளின்‌ துகளும்‌ மனிதனின்‌ உள்ளத்து உண்டாகும்‌ ரஜோ குணத்தைப்‌ “போக்கும்‌ தன்மை பெற்றதாயிருக்கிறது.
ஒரு ரஜஸ்௭ு மற்றொரு ரஜஸ்ஸைப்‌ போக்குிறபடி என்னே?
இப்படிப்‌ பெருமை வாய்ந்த இத் திருவடிகளைச்‌ சரண்‌ புகுகின்றேன்‌.

———

அவதாரிகை :–
கீழ்‌ திருவடிகளின்‌ ஸ்மரண ப்ரபாவமும்‌ தீர்த்த ப்ரபாவமும்‌ ரஜஸ் ப்ரபாவமும்‌ கூறப்‌பட்டன.
இந்த ஸ்லோகத்தில்‌ பெரியோர்களும்‌ இந்தத்‌ திரு
வடி.களில்‌ வந்து ஆஸ்ரயிப்பதால்‌ வந்த பெருமையைப்‌ பேசி அவற்றைச்‌ சரண்‌ புகுகிறார்‌.

வாதூல வம்ஸதி லகோ வரதார்ய வர்யோ
வாத்ஸல்ய ஸிந்துர் அகிலாத்ம குணோ பபந்ந
நிஷிப்தவான் நிஜ பரம் சகலம் யயோஸ் தத்
வாநாத்ரி யோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–10–

பதவுரை
வாதூல வம்ச திலக: – வாதூல குலத்‌திற்கு அலங்காரமான: திலகம்‌ போன்றவரும்‌,
வாத்ஸல்ய ஸிந்து: – வாத்ஸல்யமென்னும்‌ குணத்திற்கு கடல்‌ போன்றவரும்‌,
அகில ஆத்ம குண சமதமாதி களான எல்லா ஆத்ம குணாங்களாலும்‌,
உபபந்ந; – நிறைந்‌த தாயும் இருக்கிற,
வரதார்யவர்ய : –வரதாசர்ர்யர்‌ என்று திருநாமமுள்ள அப்பாச்சி யாரண்ணா என்பவர்‌,
யயோ : – எந்தத் திரு வடிகளில்‌,
சகலம் – எல்லாவிதமான,
நிஜ பரம்‌-“தம்முடைய பாரத்தை,
நிக்ஷிப்தவான்‌ – வைத்தனரோ,
தத் வாநாத்ரி யோகி சரணெள – அந்த வானமாமலை முனிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே –

வாதூல குல திலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய்,
வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய்,
அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான,
ஸ்ரீ அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ,
அந்த ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.

கந்தாடைத்‌ திருவம்சத்திற்குத்‌ திலகம்‌ போன்றவரும்‌,
கோயிலண்ணனின்‌ சிறிய தகப்பனார்‌ குமாரரூம்‌,
திருமஞ்சனம்‌ அப்பா என்பவருக்கு தெளஹித்‌தராயும்
ஆய்ச்சியின்‌ குமாரருமாய்‌, -வாத்ஸல்யமென்‌ னும்‌ குணத்திற்குக்‌ கடல்போன்றவரும்‌
சமதமாதி அநந்தாத்ம குண பரிபூர்ணருமான அப்பாச்சியா ரண்ணா என்று வழங்கும்‌ திருநாமமுடையவருமான்‌ வரதாசார்யர்‌ என்பவர்‌,
இம் முனிவரது திருவடிகளையே பற்றி அவைகளிலே தமது பரத்தை எல்லாம்‌ ஸமர்ப்பித்து நியஸ்த பரராயிருந்தார்‌.
அதாவது ஆகிஞ்சந்யம்‌ அநந்ய கதித்‌வம்‌ இவைகளை முன்னிட்டு இந்த ராமாநுஜ முனிவரின்‌ திருவடிகளையே உபாயமாகப்‌ பற்றிப்‌ பின்பு
ஸ்வ ரக்ஷணத்‌தில்‌ அந்வயமின்றி ஓடத்தில்‌ ஏறியவன்‌, தன்னைக்‌ காப்பாற்‌றும்‌ பொறுப்பை ஓடக்காரனிடம்‌ விட்டு விட்டுக்‌
கரை சேரும்‌ காலத்தையே சிந்தித்துக்‌ கொண்டிருப்பதுபோல்‌ இத் திரு வடி.களிலே தமது பொறுப்பை ஓப்புவித்தபடியால்‌,
**கூவிக் கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ ”” என்று இருந்தார்‌.
ஆசார்யரும்‌ ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அப்புறப்படுத்துமவனாகையால்‌ ஓடக்காரனாகவே கொள்ளப்படலாம்‌.
எனவே சிறந்த குடிப்‌ பிறப்பும்‌ ஆத்மகுணமும்‌ நிறைந்த பெரியோரும்‌ தமது பாரத்தை ஒப்புவிக்கும் பெருமையை யுடையரான வாநாத்ரி முனிவரின்‌
திருவடிகளைச்‌ சரணம்‌ புகுகிறேன்‌.

————

அவதாரிகை :–
இந்த ஸ்லோகத்தில்‌, போரேற்று நாயனார்‌ என்று சொல்லப்படும்‌ ஸமரபுங்க வாசாரியர்‌ என்‌ற
மற்றொரு பெரியோரால்‌ அர்ச்சிக்கப்பட்டது இம்முனி
வரின்‌ திருவடி என்று .அதன்‌ பெருமையைக்‌ கூறி,
அத்‌திருவடிகளையே சரணம்‌ புகுகிறார்‌.

ஸத் வ்ருத்த ஸம்பவபுவா ஸம தாந்தி ஸீம்நா
ஸத் வந்தி தேந நிகமாஞ்சல ஸார பூம்நா
ஸம் பூஜிதவ் ஸமர புங்க வதே ஸிகேந
வாநாத்ரியோகி சரணவ் சரணம் ப்ரபத்யே–11–

பதவுரை
ஸத்வருத்த – சிறந்த ஸதாசாரங்களுக்கு,
ஸம்பவபுவா – உத்பத்தி ஸ்‌தானமாயும்‌,
சம – மன அடக்கத்திற்கும்‌,
தாந்தி – மற்‌றைய இந்த்ரியங்களின்‌ அடக்கத்திற்கும்‌,
ஸீம்நா – எல்லை நிலமாயும்‌,
ஸத்வந்‌ தீதே – ஸாதுக்களால்‌ வணங்கப் பெற்றவரும்‌, நிகமாஞ்சல-வேதாந்தங்களின்‌,
ஸார–ஸாரார்த்தங்களால்‌, (அறிந்தமையால்‌-வந்த)
பூம்நா – பெருமையை யுடையவருமாயிருக்கிற,
ஸமர புங்கவ தேசிகேக – ஸமர புங்கவர்‌ என்னும்‌ ஆசார்யனாலே,
ஸம் பூஜஷிதெள -நன்கு! பூஜிக்கப்பட்ட,
வாநாத்ரி யோகி சரணெள – வாநாசல முநிவரின்‌ திருவடிகளை,
சரணம்‌ – உபாயமாக,
ப்ரபத்யே -பற்றுகிறேன்‌.

நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய்,
சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய்
நல்லோர்களால் வணங்கப்படுபவராய்,
வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான
ஸ்ரீ போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான
ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்
(ஸ்ரீ போரேற்று நாயனார் என்பார் ஒன்றான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்ட திக் கஜங்களிலே ஒருவர்)

போரேற்று நாயனார்‌ எனப்படும்‌ ஸமர புங்கவாசார்யர்‌, சிஷ்டர்களின்‌ மிகச்‌ சிறந்த ஆசாரங்களுக்கு விளையும்‌ பூமி எனப்‌ போற்றப்படுமவர்‌.
மனதை அடக்கி யாளுகையாகிற :*: சம’”மென்னும்‌ குணத்திற்கும்‌,
மற்றய கண்‌ முதலிய வெளி இந்த்ரியங்களை அடக்க யாளுகையாகிற.** தமம்‌ ” எனப்படும்‌ குணத்திற்கும்‌
எல்லை நிலமென்றும் மெச்சப்படுமவர்‌;
ஞானிகளான ஸாதுக்களும்‌ வணங்கும்‌ பெருமை வாய்ந்தவர்‌.
** வேதாந்த வாக்யங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ நன்கு உணர்ந்தவர்‌ ‘” ஏன்னும்‌ அதிசயம்‌ வாய்க்‌கப்‌ பெற்றவர்‌.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஸமர புங்கவராலும்‌ இம்முனிவரது திருவடிகள்‌ நன்கு பூஜிக்கப்‌ பெற்றன என்றால்‌
இதனில்‌ மிக்க பெருமையும்‌ உண்டோ ?’
அப்படிப்பட்ட இம்முனிவரின்‌ திருவடிகளை அடைக்கல மாகப்‌ பற்றுகிறேன்‌.
ஸதாசாரங்களும்‌ சமதமாதி குணங்‌களும்‌ ஞானிகள்‌ வணங்கும்‌ பெருமையும்‌ வாய்ந்து,
வேதாந்த.ஸாரார்த்த ஞானமு முடைய ஸமரபுங்கவரும்‌ இவர்‌ திருவடி.களை ஆஸ்ரயித்து அவற்றை பூஜிப்பர்‌ என்றால்‌,
இம்முனிவரிடம்‌ ஸதாசார ஞான வைராக்யாதி குணங்கள்‌ எவ்வளவு பூர்ணமாக இருக்க வேண்டுமென்பது,
கைமுதிக நியாயத்‌தாலே ஸித்தமான தொன்றன்றோ?
இத்தால்‌ “ஒப்பற்ற ஞான வைராக்யாதிகளை யுடைவர்‌ இத்த ராமாநுஜ முனிவர்‌’” என்றது ஸூஸிப்பிக்கப்‌ பட்டதாகும்‌.

——-

அவதாரிகை:–
இப்படித்‌ திருவடிகளின்‌ ப்ரபாவத்‌தைக்‌ கூறிப்‌ பின்னும்‌ இந்த வாநாத்ரி முனிவரின்‌ வைராக்‌யம்‌ பக்தி ஞானம்‌ என்ற குணங்களில்‌
ஓவ்வொரு குண விஷயத்திலும்‌ ஒருவரிருவரை உபமானமாகக்‌ கூறி
**இவருக்கு ஓப்பாமவர்‌ உலகில்‌ ஒருவரும்‌ இலர்‌” என்கிறார்‌.

வைராக்யம் யதி வாயு ஸந்தநு ஸூதாதி ஷேபதஷம் பரா
பக்திச் சேச்சட வைரி முக்ய பதவீ பத்தாநு ஸாரா பரம்
ஜ்ஞானம் யத்யபி நாத யாமுன யதி ப்ரவ்டாதி ஸைலீ யுதம்
தஸ்மாத் வாந மஹாத்ரி லஷ்மண முநே கோவா ஜகத்யாம் ஸம –12-

பதவுரை:–
வாநாத்ரி லஷ்மணமுநே –வாநாத்ரி ராமாநுஐ முனிவரது,
வைராக்யம்‌ – வைராக்யம்‌ என்னும்‌ குணம்‌,
யதி(வர்ண்யதே)-நிரூபணம்‌ செய்யப்படுமேயாலால்‌,
வாயு – வாயு தேவனுடையவும்‌,
சந்தனு- சந்தனு மஹாராஜனுடையவும்‌,
ஸுத-புத்ரர்களான அறுமானை

எம்பெருமானார்‌, மணவாள மாமுனிகள்‌ இவர்களின்‌ ஞாநத்‌தின்‌ ரீதியை இவரது ஞானம்‌ உடையதாக ஆகும்‌.
பூர்வாசார்யர்களின்‌ ஞானத்தோடொத்த ‘ ஞானத்தை: உடையவர்‌ எனத்‌ தேறிற்று.
இப்படிப்பட்ட ஞான பக்தி வைராக்யங்களை யுடையராய்‌ இருப்பதால்‌ உலகில்‌ இம்‌.முனிவர்க்கு ஓப்பாவார்‌ ஒருவருமில்லை என்கிறார்‌.
இங்கு.கீழே ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஓவ்வொன்றுக்கும்‌ உபமானமாக சிலரைக்‌ கூறியிருக்க

கோவாஜகத்யா ம்ஸம:–உலகில்‌ ஓப்பாவார்‌ மார்‌? எனக்‌ கேட்பது அஸம்பாவித மன்றோ?
எனச்‌ சிலர்க்கு சங்கை பிறக்கக்கூடுமல்லவா ? அதற்குப்‌ பரிஹாரம்‌ என்‌? என்னில்‌,.
வைராக்யத்திற்கு அனுமான்‌ பீஷ்மர்‌ இருவரையும்‌,
பக்திக்கு நம்மாழ்வார்‌ “முதலிய பல ஆழ்வார்களையும்‌,
ஞானத்திற்கு நாதமுனிகள்‌ முதலிய பல ஆசார்யர்களையும்‌ இவர்‌ உபமானமாகக்‌ கூறிய தால்‌,

ஓவ்வொரு குணத்திற்கே இவர்‌ குணப்‌ பெருமையால்‌ பலரை உபமானமாகக்‌ கொள்ளவேண்டி. யிருப்பது தெளிவு…
எனவே எல்லா குணங்களும்‌ சேர்ந்து திரண்டு இருக்கும்‌ இவரைப்‌ போன்ற அக்‌ குணங்களுக்கு ஆஸ்ரய மில்லாமை.
ஸித்திப்பதால்‌ இவருக்கு ஓப்பாவார்‌ யார்‌ என்றார்‌.
௮ன்‌றியே
இவரது வைராக்ய பக்தி ஞானங்களுக்கு தெய்வாம்சம்‌. பகவதாஞ்ஞையால்‌ ஆழ்வார்களும்‌ ஆசார்‌யர்களுமாய்‌
அவதரித்த நித்ய ஸூரிகளும்‌ ஒப்பாமதொழிய-இவ் வுலகில்‌ கர்மமடியாகப்‌ பிறந்தார்‌ ஓப்பாவரோ? என்றுமாம்‌.
அல்லது ௮க்காலத்திலுள்ளார்‌ ஒப்பாமதொழிய இக்‌.காலத்தவர்‌ ஒருவராவது இவரோடு ஓப்பாமவர்‌ உளரோ என்றுமாம்‌.
** ஐகத்யாம்‌”” (இவ்வுலகில்‌) எனக்‌ கூறிய தால்‌, அவ்வுலகில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ உள்ளவர்‌ ஒப்பாவர்‌ எனத்‌ தேறுகிறதல்லவா ?
எனவே கீழ்க்‌ கூறியவாறு ஆழ்வார்கள்‌ ஆசார்யர்கள்‌ உபமானமாசக்‌ கொள்‌ளப்படுவதில்‌ ஆக்ஷேபம்‌ ஏதுமில்லை என்பதும்‌ உணரத்‌ தக்கது.

ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வைராக்யமானது
ஸ்ரீ வாயு புத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது.
இவரிடமிருக்கும் பக்தி ஸ்ரீ சடகோபர் முதலான ஓராண் வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது.
இவர் யதி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ நாதமுனி ஸ்ரீ யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர்.
ஆகையால் இத்தகைய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!

————

அவதாரிகை :–
கீழ்‌ ஸ்லோகத்தில்‌ இவரது ஞான பக்தி வைராக்யங்களுக்கு ஒப்பாவார்‌ ஒருவருமில்லை என்றார்‌.
‘இந்த ஸ்லோகத்தில்‌ பகவத்‌ கைங்கர்ய விஷயத்திலும்‌, பகவத்‌ பஜந விஷயத்திலும்‌, பாகவத ஸேவா விஷயத்திலும்‌
ஆசார்ய சரண கமலார்ச்சன விஷயத்திலும்‌ ஓவ்வொன்‌றுக்கும்‌ ஓரொருவரை உபமானமாகக்‌ கூறி,
இவரது ஒப்பற்ற தன்மையை நிரூபணம்‌ செய்து, இவரே சிறந்த குணங்கட்‌கெல்லாம்‌ முக்கியமான உறைவிடம்‌ என்கிறார்‌.

கைங்கர்யம் யதி வாந ஸைல கமலா காந்தஸ்ய சேஷ க்ரமாத்
ப்ரீதி சேத் குலசேகரஸ்ய பஜநே தத் பக்த பூஜா விதவ்
ஆச்சார்ய அங்க்ரி ஸரோரு ஹார்ச்சந விதவ் யத் யுஜ்ஜ்வலா ப்ரக்ரியா
தாஸ்தா மஞ்ஜூ கவேர் குணைக ஸதநம் வா நாத்ரி யோகீஸ்வர--13-

பதவுரை :–
௮ஸ்ய-இந்த முநிவருடையதாய் ,- முனிவர்‌ செய்த என்றபடி,
வானசைல – வானமாமலை என்ற திருநாமமுள்ள,
கமலாகாந்தஸ்ய -லக்ஷ்மீ வல்லப விஷயமான,
கைங்கர்யம்‌ – மண்டப ப்ராகாராதி நிர்மாண ரூபமான திருப் பணிகள்‌,
நிரூப்யதே யதி ..ஆராயப்படுமாயின்‌,
சேஷக்ரமாத்‌ – ஆதிசேஷனுடைய**சென்றால்குடையாம்‌” என்ற கைங்கர்ய க்ரமத்தை அதுஸரித்ததாக,
ஸ்யாத்‌ – ஆகும்‌.
பஜே – அநத எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌,
தத் பக்த பூஜாவிதெள-அவ்‌ வெம்பெருமானிடம்‌ பக்தி பூண்ட பாகவதர்களை ஆராதிக்‌கும்‌ விஷயத்திலும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
ப்ரீதி: -சந்தோஷமானது,
நிரூப்யதே சேத்‌-ஆராயப்படின்‌,
குலசேகரஸ்ய (இவ) குலசேகர ஆழ்வாருடையது (போல),
ஸ்யாத்‌-ஆகும்‌,
அஸ்ய – இம்முனிவரது,
(சார்ய) -ஆசார்யனுடைய,
அங்கரிஸசரோருஹ – தாமரை போன்ற திருவடிகளின்‌,
அர்ச்சகவீதெள-அர்ச்சு ப்ரகாரத்‌தில்‌,
உஜ்வலா : – நன்கு விளங்குகின்ற,
தா : தா:-அந்தந்த
ப்ரக்ரியா : – ப்ரகாரங்கள்‌, அநுஷ்டானங்களென்றப்டி,
யதி நிரூப்யக்தே – ஆராயப்படுமானால்‌,
மஞ்ஜுகவே:((இவ)-ஸ்ரீமதுரகவிகளுடையது போன்றதாக, (ஸ்யாத்‌)ஆகும்‌,
(ஆகையால்‌) வாநாத்ரியோகீஸ்வர : – வாநாசல முநிவர்‌, குணைகஸதகம்‌-குணங்கட்கொல்லாம்‌ முக்யமான உறை விடமாக

ஸ்ரீ ஆதி சேஷனைப் போலே ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும்,
அவ் வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரைப் போலே ப்ரீதியை உடையவராகவும்,
தன் ஆசார்யருடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பதில் ஸ்ரீ மதுரகவி யாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும்
நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.

இம்முனிவர்‌ வானமாமலை எனத்‌ திருநாமம்‌ பூண்ட ஸ்ரீ ய :பதிக்குச்‌ செய்தருளிய பலவித கைங்கர்யங்‌களையும்‌ ஆராயின்‌,
அவை பலவாகையாலே, **சென்றால்‌.குடையாம்‌”, “நிவாஸசையாஸநக” என்கிற வசனங்களின்‌ படி
பல கைங்கர்யங்களையும்‌ செய்து போரும்‌ ஆதிசேஷ.னுடைய ரீதியை(கிரமத்தை) அநுஸரித்ததாகக்‌ கூறலாம்‌..
அவ்வானமாமலை எம்பெருமானை பஜிக்கும்‌ விஷயத்திலும்‌ அவனது பக்தர்களை பூஜிக்கும்‌ விஷயத்திலும்‌
இவரது ஆர்வத்தை ஆராய்ந்தால்‌ குலசேகர ஆழ்வாருடைய ஆர்‌வத்தை யொத்ததாகக்‌ கூறலாம்‌.
ஆசார்ய சரணாரவிந்தத்தை அர்ச்சிக்கும்‌ கிரமத்தில்‌ ஒப்புயர்வற்ற இம்‌ முனி’வரின்‌ அந்தந்த ப்ரகார விசேஷங்கள்‌
ஆராயப்படுமானால்‌: அவ்வவ அநுஷ்டானங்கள்‌ ஸ்ரீமதுரகவி யாழ்வாருடையன: போன்றனவாகும்‌.
எனவே இம்முனிவர்‌ சிறந்த குணங்களுக்குக்‌ கொள்கலமாவார்‌ என்கிறார்‌.
இங்கு **வாநசைல கமலா:- காந்தஸ்ய ‘? என்ற இடத்தில்‌ வானசைல என்று ஊரைச்‌ சொல்லி,
“*கமலாகாந்தஸ்ய’” என்று அங்கு எழுந்தருளி யிருக்கும்‌ எம்பெருமான்‌ எனக்‌ கொள்வது
**வானமா மலையே”” என்று எம்பெருமானையும்‌ ** சிரீவரமங்கலககர்‌ ‘? சிரீவரமங்கை என்று திருப்பதியையுங்‌ கூறிய ஸ்ரீ ஸூக்திகளோடு பொருந்தாது.
அன்றியே இந்த சப்தம்‌ * வைகுண்டோவிஷ்டரஸ்ரவா :” என்று எம்‌பெருமானுக்கும்‌,
* வைகுண்டேது பரே லோகே ?’ என்று: ஸ்தானத்திற்கும்‌ பேராகக்‌ கொள்ளப் படுமா போலே
அத்‌ திருப்பதிக்கும்‌: பேராகக்‌ கொள்ளப்படினும்‌ குற்‌றமில்லை-
இந்த ந்யாயத்தைக்‌ கொண்டுதான்‌ வானமா மலை என்று அவ்‌வூருக்கும்‌ பேராகத்‌ தற்காலம்‌ எல்லோரா லும்‌ வழங்கப்‌
பெற்று வருகிறது என்பது உணரத்தகும்‌.
இவ்விராமானுஐ .முனி பல சைங்கர்யங்களைச்‌ செய்ததால்‌, ஆதிசேஷனின்‌ கைங்கர்யத்தை யநுஸரித்தது இவரது கைங்கர்யம் என்கிறார்‌.
சேஷக்ரமாத்‌” என்பதற்கு “*சேஷக்ரம மநுஸ்ருத்ய ‘”என்று “ல்யப்லோபே பஞ்சமீ” எனக்‌ கொண்டு அர்த்தம்‌கூறப்பட்டது.
பகவத்‌ பஜனத்திலும்‌ ஸ்ரீவைஷ்ணவ பூஜா விஷயத்திலும்‌ மற்றை ஆழ்வார்களை விட்டு ஸ்ரீகுலசேகரரை
இவர்‌ உபமானமாகக்‌ கொள்வான்‌ என்‌? என்னில்‌,
அவ்வாழ்‌வாருடைய பஜந ப்ரகாரம்‌ விலக்ஷண்மல்லவா? பகவத்‌ ஸம்பத்‌தம்‌ பெற்ற தேசமே அமையும்‌-;

அத்தேசத்திலும்‌ ஞானத்‌திற்கு அடைவில்லாத திர்யக்‌ ஸ்தாவர ஜங்கமங்களும்‌ அமையும்‌ என்று நினைத்து
** குருகாய்ப்‌ பிறப்பேன்‌,” *மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையனாவேன்‌ ‘?,
“*தம்பகமாய்‌ நிற்கும்‌ தவ முூடையேன்‌ ஆவேன்‌ ,
“படியாய்க்‌ கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேன்‌ ”’ என்றாரல்லவா?
அது போலவே ‘இம்முனிவரும்‌ அவனுகந்த திருப்பதியில்‌ “ஏதேனுமாவேன்‌”என்‌ற அத்யவஸாயம்‌ பெற்றவர்‌ என்றபடி.
பாகவதர்களை ஆராதிக்கும்‌ விஷயத்திலும்‌ ““ஆரங்கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரெனக்‌ குடப்பாம்பில்‌ கையிட்ட” ஸ்ரீகுலசேகராழ்வாரைப்‌ போலே
ஸ்ரீவைஷ்ணவ விஷயத்தில்‌ கூறப்படும்‌ தோஷலே சத்தையும்‌ ஸஹியாது பரிந்து அவர்களை பூஜிக்குமவர்‌ என்று தோற்று கைக்காக இந்த உபமானம்‌
இனி இம் முனிவர்‌ தமது ஆசார்‌யனான மணவாளமாமுனிகளின்‌ திருவடிகளை அர்ச்சிக்கும்‌ க்ரமங்களும்‌,
அந்தந்த ப்ரகாரங்களும்‌ மதுரகவி நிலையை ஓத்ததாகும்‌. அதாவது–
அவர்‌ **தேவுமற்றறியேன்‌ ” என்று ஆழ்வாரையே தெய்வமாகப்‌ பற்றினாப் போலே
இவரும்‌ “*ஆசார்யதேவோ பவ” என்கிறபடியே ஆசார்ய ப்ரபத்தி யையே தேவனாகக்‌ கொண்டு அர்ச்சிக்கும்‌ நிலையாகும்‌,
ஆயின்‌ இவருக்கு பகவத்‌ கைங்கர்யத்தில்‌ ப்ரவ்ருத்தி சேருவது எங்‌கனே என்னில்‌ ?
ஆசார்ய முகோல்லா ஸார்த்தமாகச்‌ செய்கையாலே சேரும்‌.
இதுதான்‌ **ப்ரீத்யை பரம்‌ வர வரஸ்ய’” என்றவிடத்தே கூறப்பட்டதாகும்‌.
கவி :’” என்றது மதுரகவி என்றபடியாம்‌.

———

அவதாரிகை :–
ஆக இவ்வளவும்‌ வர வாநாத்ரி முனிவரது ஞானம்‌, பக்தி, வைராக்யம்‌, பகவத் கைங்கர்யம்‌,
பகவத் பாகவத ப்ராவண்யம்‌, ஆசார்ய பாதார்ச்சனம்‌ முதலியவற்றை உபமான முகத்தாலே சிறப்பித்துக்‌ கூறி
அவ்வழியாலே இவர்‌ ப்ரபாவத்தைக்‌ கூறியவர்‌ எம்பெருமானே நர நாரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தாப்‌ போலே,

ஞானப்ரதானம்‌ செய்து உலகினை உய்விக்க விரும்‌பிய ஆதிசேஷனே அநேகாவதாரம்‌ செய்தவர்‌ என்றும்‌
ஸ்ரீமந் மணவாள மாமுனிகளாகவும்‌ அவரது சிஷ்யரான வானமா மலை ராமானுஜ முநிவராயும்‌ அவரித்தவரும்‌ அவரே என்‌றும்‌
இவரது அநந்தாவதாரத்வத்தை அருளிச்‌ செய்து அவ்‌வழியாலே
அவரது ஓப்புயர்வில்லாப்‌ பெருமையை உணர்த்துகிறார்‌ இந்தக்‌ கடைசி ஸ்லோகத்தால்‌.

சிஷ்யாச்சார்ய தநுத் வயீம் நிர பஜத் ப்ராயேண லஷ்மீ பதி
ஹ்யேகோ அபூந் நர சஞ்ஜ்கஸ் தத பரோ நாராயணாக்ய புரா
அத்யத் வேக தர க்ருப அம்ருத நிதி ஸும்யோ பயந்தா முனி
தச் சிஷ்யாக்ர ஸரோ அபரோ விஜயதே ராமாநுஜாக்யோ முனி -14-

முன் காலத்தில் ஸ்ரீ யப் பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும்
இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான்.
அதில் சிஷ்யன் ஸ்ரீ நரன், ஆசார்யன் ஸ்ரீ நாராயணன்.
இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளாகவும்,
மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

லக்ஷ்மீபதி: – லக்ஷ்மீ வல்லபனான எம்பெருமான்‌,
ஆத்மாகம்‌-தன்னை (ப்ராயேண்‌) –அநேகம்‌ தடவை, சிஷ்யாசார்யதநுத்வயம்‌ -சிஷ்பனென்னும்‌ ஆசார்யனென்னும்‌ இரு சரீரங்களையுடையவனாக,
நிரபஜத்‌ – பகுத்தான்‌,
ஏக: – அவ்‌ விருவரில்‌ ஒருவன்‌,
புரா – முற்காலத்தில்‌
கரஸம்ஞக: –
நர நாராயணன்‌, நரநாராயணர்களென்கிற சிஷ்யாசார்யர்களாக அவதரித்தது போலவே
திருவநந்தாழ்வான்‌ மாமுனிகளும்‌ வானமாமலை “ ராமனுஜ முனிவருமாய்க்கொண்டு சிஷ்யாசார்யர்களாக அவதரித்தார்‌ எனக்‌ கொள்வதே தகுதியுடையதாகும்‌.
ஸ்ரீ மணவாளமாமூனிகளையும்‌. இந்த ராமானுஜ முனிவரையும்‌ ஈச்வராம்சமாகச்‌ சொல்லுமிடங்களில்‌
“ஸாக்ஷ£ந்‌ நாராயணோதேவ:”’ என்று ஆசார்ய ஸாமாந்யத்தையும்‌ பகவதம்சமாகக்‌ கூறும்‌ ஸாமாந்ய வசனத்தைக்‌ கொண்டே. சொன்னதாகக்‌ கொள்ள வேண்டும்‌.இல்லாவிடில்‌ எம்பெருமானார்‌ முதலியோருக்குக்‌ கூறப்படும்‌ சேஷாவதாரத்வம்‌ ஸித்தியாது.இந்த மஹார்யரென்றும்‌ தொட்டை ஐயங்கார்‌ அப்பை, இந்த “*மங்களாசாஸசம்‌ ப்ரபத்தி என்ற இரு கரந்தங்கள்‌ போலவே தமது ஆசார்யரான வானமாமலை ராமானுஜ ஜீயர்‌ விஷயமான *: தினசர்யை ‘” என்னும்‌ கீரந்தமும்‌ அருளிச்‌ செய்திருக்கிறார்‌ என்‌பது ஸ்ரீ வரமங்கைமுகி வைபவத்தால்‌ அறியப்படுகிறது.இந்த ப்ரபந்தங்களை ராமானுஜம்‌ பிள்ளான்‌ அருளிச்செய்ததாகவும்‌ சிலர்‌ கூறுவர்‌.

————————-————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டை யங்கார் அப்பை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜர் கவசம்-ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

January 27, 2025
  1. ஸ்ரீபெரும்புதூர் ஆளும் அரசே திருவடி அழகே தெள்ளிய துறவே
    மாபெரும் தருவாம் வைணவம் அதனை மண்ணில் வளர்த்த ராமானுஜனே
    2.உபய விபூதி செல்வமனைத்தும் உத்தமன் அரங்கன் அள்ளி வழங்க அபயம் அளிக்க அடியவர் மீது அருள் விழி காட்டும் ராமானுஜனே
    3.ஆம் இவன் முதல்வன் என்றொரு வார்த்தை ஆளவந்தாரின் திருவாய் மலர தாம் முதல்வன் என வைணவம் காத்து தரணியை ஆளும் ராமானுஜனே
    4.தன் குருவாகிய பெரிய நம்பியின் அன்பினை ஏற்ற சீடனும் நீயே தன் குருவும் தன் குருவாய் கண்ட தன்னிகரில்லா ராமானுஜனே
    5.திருக்கோட்டியூரின் நம்பியின் வாயால் திருமந்திரத்தின் பொருளை அறிந்து பெரு உலகத்தின் செவியில் உரைத்து பெருமை கண்ட ராமானுஜனே
    6.ஆண்டாண் அரையர் திருமலை நம்பி ஆசிரியர் குழு யாவும் உகந்து வேண்டிய ஞானம் யாவும் அளித்து வேண்டிய குருவே ராமானுஜனே
  1. அஞ்சலி செய்து அருகில் அழைத்து அன்புடன் எங்கள் துயர்கள் அழித்து அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும் அழகே யதியே வருக வருக!
  2. பரமபதத்தில் மாலவனுடனே பாக்கியம் கொண்டு நித்தமும் வாழ்வார் அமரர் அனைவரின் தலைவனும் ஆகிய அற்புத ராமானுஜனே வருக
    3.நரகம் அழுந்தா நற்கதி அருளும் நானிலமெங்கும் நன்மைகள் புரியும் உரமென அமையும் உயரிய அடிகள் உடையவன் நீயே வருக! வருக
    4.சடகோபனுக்கு முன்னே எழுந்த சத்திய உருவே ராமாநுஜனே கடலாம் பிறவியைக் கடந்து செல்ல கருணை காட்டிட வருக !வருக!
  3. தாமரை மலரால் தாங்கிய மார்பை தாங்கிய ஹரியை பாடிய முனியின் மாமலர் விந்தம் மாண்புடன் பணிந்த வடிவே ராமானுஜனே வருக
  4. காவிரி அழகன் நம்பெருமாளை கண்களில் வைத்து நெஞ்சில் நிறுத்தி பாவிரி கலியன் திருவடிபணியும் பரமா ராமானுஜனே வருக.

1.திசைகளில் ஒளிரும் கமலச்செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும் இசைவுடன் அதிலே இணைந்து அமைந்த இனிமை கூட்டிடும் இடது கழலும்

  1. இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற் கழலும் திடமெனஅழகை எல்லாம் சேர்த்த திவ்வியமான கணுக்கால் எழிலும்
  2. அதிசய ஒளி முகம் சுருளாய் இறங்கும் அழகைப் போலிரும் முழந்தாள்களும் புதிரென அமையும் திருத்தொடைகளும் பொன்னரை நாணைப் பூண்ட அழகும்
  3. அந்தி நிறத்தில் அமையும் ஆடையும் அஞ்சலி செய்யும் தடைக்கைகளும் உந்தி மலரும் உயரிய கரமும் உடன் இணைந்திடும் கணுக்கைகளும்
  4. தங்க வளையலை தாங்கிய அழகும் தானாய் மடிந்த முழங்கைகளும் அங்கம் விரிந்து நீண்டு அமைந்த அழகிய புஜங்கள் ஆடும் அழகும்
  5. பள பளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும் வளமாய் பிரிந்த முந்நூல் அழகும் வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்
  1. வலம்புரி சங்கின் சுழி போல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும் உலகை மயக்கும் மந்திர முகமும் உரையை வழங்கும் திருப்பவளமும்
  2. மந்தஹாசமும் ஸ்படிக மயத்தில் மண்டலம் போன்றிரும் கபோலங்களும் செங்கணகத்தில் செழித்து வளர்ந்து செவிமெல் அமைந்த கர்ணபாசமும்
  3. கொடி மூக்கழகும் கோலத் தாமரை குடி கொண்டாலும் இரு நயனங்களும் வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்
  4. சந்திர கிரணம் ஒன்று கலந்து சரியும் அழகாய் தாமரை நாமமும் இந்திரை மலராள் திருவடி போலே இலங்கி வரும் ஸ்ரீ சூர்ணமும்
  5. உயர்ந்து வளர்ந்த திருமுடி அழகும் உறைந்து தழைந்த திருக்கேசமும் நயந்து சுற்றிய நல்ல குழலினை நன்றாய் சுற்றிய சிகாபந்தமும்
  6. பின் எடுத்ததோர் பிடரியின் அழகும் பிரிந்து கூடிய முக்கோல் அழகும் கண்ணுடன் பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்
  7. காணக் காண திகட்டிடாது கவினாய்த் தோன்றும் ராமாநுஜனே தேனாம் உன் அடி சரணம் அடைந்தோம் தினமும் எம்மை காத்தருள் என்றே
  1. பெரியோய் உந்தன் திருவடி நிலைகள் பெரிய மனதுடன் எங்களை காக்க ஹரியின் அணையாய் அமையும் வடிவே அடியார் கால்களை அன்புடன் காக்க
  2. பாஷ்யகாரரே உங்கள் பரிவு பாதநிலைகளை பதமாய் காக்க பரமபதத்தை அருளும் முனியே பணியும் இடையை பரிந்து காக்க
  3. வயிற்றுப் பகுதியை ராமானுஜனே வண்ணத் திருவருள் வலிந்து காக்க அயர்வே அறியா இளையாழ்வாரே அன்புடன் மார்பு பகுதியை காக்க
  4. எம்பெருமானார் என்றும் துறவே எங்கள் முதுகுப் பகுதியை காக்க உம்பர்கள் போற்றும் உபய வேதமே உன்னை காணும் கண்களை காக்க
  5. பூதப் புரியிலே வாழும் அரசே புகழை கேட்கும் செவிகளைக் காக்க யாதுமாகிய எதிராஜா நீ எங்கள் நாசியை என்றும் காக்க
  1. உன்னை காணும் வதனம் தன்னை உயர்வே யதீந்த்ர முனியே காக்க உன்னைப் பேசும் வாயை நாவை உணர்வே லக்ஷ்மண முனியே காக்க
  2. பொன்னடி வணங்கும் சென்னிப்பகுதியை பூமன்னு மார்பன்அடியே காக்க உன்னிரு கண்ணின் கடைவிழியாலே உள்ளப்பிணிகள் வராது காக்க
  3. அரவின் வடிவே விஷங்கள்எதுவும் அடியார் பக்கம் வராது காக்க வரமாய் அருளும் உனது கரங்கள் வாழ்வில் பிணிகள் வராது காக்க
  4. மஞ்சனம் ஆடும் மறைமாமுனியே மண்டிய தோஷம் அகற்றிக் காக்க தஞ்சமளிக்கும் ராமானுஜனே சாபம் விலக்கி சதிருடன் காக்க
  5. முப்புரி அணிந்த முக்கோல் முனியே முப்பொழுதும் எனை முனைந்து காக்க அப்பனுக்கு சங்காழி அளித்தாய் அல்லல் ஏதும் வராது காக்க
  6. காக்க கனிவுடன் காக்க காக்க காக்க காரேய் கருணை முனியே காக்க காக்க பூதூர் கோனே காக்க காக்க கமலப் பதத்தால் – கமல பதத்தால்
  7. வேண்டிய எம்மை ஆண்டருள் செய்வாய் வேதச் செறிவாய் யோகம் புரிவாய் நீண்ட கரத்தால் நாளும் அருள்வாய் நின் திருவடியால் ஞானம் தருவாய்
  8. ராமானுஜனே என்னாரமுதே ராமானுஜனே என் உறுதுணையே ராமானுஜனே என் மாநிதியே ராமானுஜனே என் பெருந்தகையே
  9. சரணம் சரணம் ராமானுஜனே சரணம் சரணம் உனது மலர்த்தாள்சரணம் சரணம் ஸ்ரீ எதிராஜா சரணம் ஸ்ரீபெரும்பூதூர் முனியே

———————

ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.

தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்

மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.

ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே

வாஸரேஸ்வர:

என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித:

என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.

ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:

என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.

ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:

யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்

ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.

யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.

இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:

சூர்ய மங்கள ஸ்லோகம் !

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !

சூரிய பகவான் !

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரும் பூதூர்‌ வந்த வள்ளல்‌ மாலை-ஸ்ரீ எதிராஜ சதகம்-ஸ்ரீ ராமானுஜ மாலை–

December 8, 2024

உடையவராக மலரடிக் காட்படுவோர்க் கரும் பொன்‌
உடையவராக ரந்தந்தளிப்பானுறும்‌ வாதியர் வாழ்வு
உடையவராகந் துறந்து முக்கோல் கைக் கொண்டோங்கி நற்பேர்‌
உடையவராக விங்கெய்து எதிராசனை யுன்னு நெஞ்சே.

அம் பெருமானார் வயிற்றினாங் கருவி னாடாமல்
எம் பெரு மானார் இணை யடியை–நம்பாத்
துதித்திருப்பாய்‌ நின்றன்‌ றொழிலால் இடர்கள்‌
விதித்திருப்பாய்‌ நின்‌ற நெஞ்சமே.

யதிக் கோன்‌ கருணைக்‌ கிலக்காகி முத்தி
பதிக் கோவலனடியைப்‌ பற்ற–விதிக்கு
மறை யந்த வாசிரியர்‌ வண் பதஞ்சேர்ந் துய்வோத்
துறை யந்த வாசிரியத்‌ தான்‌.

பர சமய மெனும் வெய்ய கண்டக தருக்குலம்‌ பாழ்பட நிலத்திலங்கைப்‌ பற்று ௬டர்‌ வடிவாய பரசு வெனவும் பரம பாவனமுடைக் கமல மானரசனுயர்‌ மதநிலை பெறச்செய்‌து எடுத்ததொரு வம் பொன்‌ வெற்றித்‌ துவசமே யாமெனவும் ஓளிர்‌ துய்ய திரிவேணு தண்டமு மகன் மார்பி’ னுருவொடுற்றூ
விரவுமெழின்‌ மறை நாலெனத் திகழ கிற்குமுப வீதமுஞ்‌ சிகையு நேராய்‌
விரி புண்டரக்‌ குறியும்‌ வேறுதய வாதித்த விசயமென வார்த்த செம்மைப்‌
புரியாடையும்‌ பொருவி லெதிராசரிரு சரண புண்டரிகமும்‌ பணிகுவாம்‌
புகரிலா வரியைக்க ணலர் மீது மங்கை யடி புனைதமிழ்‌ நிதந் தழையவே.

ஈடரிய வியாச முனி தேர்ந்து ரைக்கு மிலகு வேதாந்த ஸூத்‌ திரங்களுக்குத்
தேடரிய பாடியந் தான்‌ றமிழ் வேதத்தின்‌ செழும் பொருள்கள் நேர்மை யுடன் ஆய்ந்த ளித்தோன்‌
பீடமையுங்‌ கண்ண பிரானருளிச்‌ செய்த பிறங்கு திருக்‌ கீதைக்குப்‌ பாடியத்தை
வீடளிக்கு மத் தமிழ் வேதத்தி னாலே மிலைச்சியரு ளுடையவர் தா டொழுது வாழ்வாம்‌.

தேசமெல்லாம் உகந்திடவே பெரும் பூதூரில்‌ சித்திரையில்‌ ஆதிரை நாள் வந்து தோன்றிக்‌
காசினி மேல்‌ வாதியரை வென்று அரங்கர்‌ கதியாக வாழ்ந்தருளும்‌ எதிராசா! முன்‌
பூசுரர் கோன்‌ திருவரங்கத் தமுதனார்‌ உன்‌ பொன்னடி மேல்‌ அந்தாதி யாகப் போற்றிப்‌
பேசிய நற் கலித்‌ துறை நூற்றெட்டுப் பாட்டும்‌ பிழை யறவே எனக் கருள் செய்‌ பேணி நீயே.

காலன்‌ குறுகான்‌ கடும் பிறவி சாராது
மாலின்‌ தனிச் சுகத்தின்‌ மன்னிடலாம்‌-சீலமுறும்‌
பாவமிலா நெஞ்சே !நீ பண் பனி ராமாநுசனாம்‌
நாவலன் செந் தாமரைத்தாள் நாடு.–தனியன்‌

தத்துவங்கண்‌ மூன்றுந்‌ தனி மந்திர மூன்றும்‌
இத்தகைய வென்றுணர்ந்த வென்னெஞ்சே! –நித்த நித்தம்‌
சாற்றுதி ராமாநுசனாஞ்‌ சாந்த குண நாவன் சீர்‌
போற்றுதி யன்‌னான் சரணப்‌ பூ.-தனியன்‌

உலகாக்கியே யுணவாக்கியே யுலை வாக்கியே யுலவா நலத்‌
தல மாக்கியே தணவாத வைந்‌ தாகும் பொரு டகையோ துறும்‌
கலை யாக்கியே காத்தாளுவான்‌ கவி நாதவென்‌ கடு வாணவ
வலை நீக்கியே வழி காட்டியாள்‌ வர யோகியே வர யோகியே. –காப்பு

என் சந்த மீசன் சந்த மா விருள் சந்த மவ்‌ விருணீக்குறும்‌
மன் சந்தமீ மகிழ் சந்தமும்‌ மறை மத்தமும்‌ மது வித்தையைத்‌
தன் சந்தமார்‌ தயை விம்மலாற்‌ றரை வீசு தாயானான் மிளிர்‌
தென் சந்தமார்ந்‌திட வேத்தினேன்‌ திருக் கோவலூர்‌ திருக் கோவலூர்—காப்பு

பூமாநிறம்‌ பொரு மா முதற்‌ பொன்னாரவிந்‌தப் பூ நலம்‌
நாமாறிலா வகை யுற்றுற நாராயணன்‌ தனையும் விடுத்
தாமாறி லோதிட வந்த பூதூரானை நீ யகமுன்னலில்‌
ஏமாறிடாதே நெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–1-

ஆருயிர முக மாறி யீராறாயிர நாமாறிவான்‌
பேராயிரம்‌ பெம்மானதாம்‌ பேறாக்கிட வந்தானவன்‌
சேராயிரம்‌ பேராசைதே வற்றாரிலாச்‌ சேறாழ்ந்தனம்‌
ஏராயிர மெணியேத்துவா யெதிராசனே யெதிராசனே–2-

மூலத்துமா யாவாணவ முதுநோயினான்‌ மொத்தாடினாம்‌
சாலத்துமா பதி காணருந்‌ தண்டாமஞ்சார்ந்‌ துறவாயினாம்‌
ஆலத்துவாய்‌ பவன் மெல்லணை யாகும் பிரா னெனினந் தமக்கு
ஏலத் துய ரென்னெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–3-

கடன் வெஃகுமா கமலைக் கிணை யாகக் கழ றுதலுக் கிணைத்
திடன் மண்டு நூல்‌ கடன் மாந்தினோன்‌ றெளி யாதவப்‌ பிரகாசனென்‌-
றிடு மன்னவ னிடமோதினா னிரண்டென்றவ னிருள் நீக்கினான்‌
எடல் வேறு சீரினை நெஞ்சமே யெதிராசனே யெதிராசனே–4-

காத்தூட்டுவான்‌ பொறி மாவுடன்‌ கலந்தோடியோர்‌ காட்டிற்குளே.
நாத்தூக்குதே நாரம்மிலேம்‌ நாமென்செய்கே மெனவந்தவர்‌
தீர்த்தங்கொளத்‌ தினமீய்ந்தனை திருவாதிரைத்‌ தினம் வந்தனை
ஏத்தற்கெனா லெண்ணாசுதீ ரெதிராசனே யெதிராசனே.–5-

புகை புக்கினும்‌ போகாக்குறும்‌ பொறை சூழுமா விந்தத்திலே
பகை புக்குணு மாயாமதப்‌ பாவக்குழு விற்கெட்டிடா
வகை புக்கி யெம்‌ மவர் வாழ்ந்திட வரதன் வழி வந்தாண்டவன்‌
எகை புக்கு நீ தொழு நா துதி யெதிராசனே யெதிராசனே.–6-

பரவாதிக ளேவற்பசா சங்கட்கெலாம்‌ படுதொண்டராப்‌
புரமோதிடப்‌ போவேற்கெலாம்‌ புணையாகிமீப்‌ புரமேற்றினாய்‌
குருவேகுரு பரனேபரன்‌ குளிர்வாசமாங்‌ கோயிற்பிரான்‌
எருதேறினான்‌ காணானடிக்‌ கெதிராசனே யெதிராசனே.–7-

மன்னாவிகண்‌ மாயாச்சுக மதுபெற்றிடப்‌ பேயின்றலைத்
தன்னாரவிந்‌ தம்மிட்டனை தகையாமண மகனாயினை
பன்னாளும் வெந்‌ தவமாற்றினாம்‌ பலியாத நின்‌. பத தாமரை
என்னாமன்மூ கற்காக்கிளை யெதிராசனே யெதிராசனே.–8-

முக் கோலமா முநியாயினை முநி யிந்திர னென வோங்கினை
அக் கோல மாயாவாதிகோ லடியுண்ணுமுக்‌ கோலீந்தனை
செக் கோலக்கூறைக் கட்டினாய்‌ திருக்கச்சி நம்‌ பிக்கன்பினாய்‌
எக்காலுமெற்‌ கேயத்தமா-மெதிராசனே யெதிராசனே.-9-

அன்பென்பதோ ரணுவும் மிலே ன துசொல்லவு மருளும்மிலேன்‌
துன்பென்பதோ தொலையாவிலேன்‌ தொலையாயெனச்‌ சொலவும்‌மிலேன்‌
முன்புள்ளவா ணவநீக்கியுன்‌ முத்தர்க்கடிப்‌ பொடி யாக்குவாய்‌
என்னின்பமே யென்றெய்வமே யெதிராசனே யெதிராசனே.–10-

தன் கண்ணுளே னானாற்பவந்‌ தணியேனென வென்றம்பிரான்‌
‘நின் கண்ணுளே யுறவாக்கினா னீயாரிய னிலைகாட்டினாய்‌
மன் கண்ணுள மநுவிட்டுமென்‌ வடிவின்னதாம்‌ வழி காட்டியும்‌
என் கண்ணுள நவை நீக்கிலே னெதிராசனே யெதிராசனே.–11-

உன் சொல்லையா முறுதிக்கொளா துலைவாகுவோ மென்றோவருள்‌
மன் சொல்லினோ ராறுப் பொருண்‌ மா கச்சி நம்‌பிக்கண்கொடுப்‌
பின் சொல்லு பா டியமாதியாற்‌ பேணிப் புர நீ தருண் மாதவ
என் சொல்லி யானிசை கூறுகே னெதிராசனே யெதிராசனே.-12

ஏனித்தனை நாளாவெனை யெண்ணாதபா தகனாயினை
நீ நித்தமென்‌ றிடின்யான்புரி நிலை யுற்ற தீ நெறி யெண்ணியே
நானித்தனை நாணாகினே னனிபீதியா லொளி வெய்தினேன்‌
ஈனத்தன் யா னென்செய்குவே னெதிராசனே யெதிராசனே.–13-

கலை மாது வாழ்த்‌ தெடு பாடியக்‌ கவிநாத செந்‌ தமிழ் வேதமாம்‌
அலை மீதெழு மம்மான் விழு மதிமோக மெல்‌லணை யாகிய
தலைவாகுருத் திரளுக்கெலாந்‌ தழலேமதத் தூலக்கெலாம்‌
இலையாயருட்‌ கெதிராயினே னெதிராசனே யெதிராசனே.–14-

அருளாளனீய்ந் தருள் வித்தமே யதியாள வந்‌த வரத் தமே
தெருளா மலர்ந்‌ திடவாக்கிய தெளி வேத வேதிய கோட்டியூர்‌
பெரியோனிடங்‌ கழலோய்ந்திடம்‌ பெயர்ந்தேமநுப்‌ பெற்றப்பினர்‌
எரி வீழ்கிலா தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே.–15-

வட வேங்கடத்‌ தப்பற்கு நல்‌ வளை யாழி தந்‌தனை தென்குறுங்‌
குடி நாரணக்‌ கோமாற்கு மந்‌ திரமோதி வான்‌ குறை நீக்கினை
செடி தீரு நா ரணனைக் களிச்‌ செல்வச் சுதனாப் பெற்றனை
இடி சேரு தீப்‌ பெறுவானரு ளெதிராசனே யெதிராசனே.–16-

நாயெத்தனைத்‌ துதி கூறினு நன்றாகுமோ நாயேன்றுதி
பேயத்தனைப்‌ பெண் கொண்டவன்‌ புவியத்தனைப்‌ பிழை கொண்டவன்‌
காயத்தனைத் தாணென்றவன்‌ காண் பூப் பொனே கதி யென்றவன்‌
ஏயத்தினை யுருவானவ னெதிராசனே யெதிராசனே.–17-

பத்தாறுவே டத்தானுமே பற்றாமன்மாழ்‌ குறுவான்மகி
ழத் தானு வெண்‌ கோடிப்‌ புனைந்‌ தகன் மா நிலத் தாவிக் குழு
வைத் தாழ்விலா வின்பாகுவை யத்தான் மகிழுற வீந்தருள்‌
எய்த்தேன் விடா தெனையாள்குவா யெதிராசனே யெதிராசனே.–18-

பல்லாயிரங்‌ கலை தேர்ந்தவ ராசீவக மத பண்டித
வல்லாருட னோர்வேலையே வலியாயிர வதநங் கொடோர்‌
சொல்லாடி வென்‌ற மணக் குழுச்‌ செக்கிற்றிரித் தரசன் முனே
எல்லாருங்கண்‌ டிறும் பூ துறு மெதிராசனே யெதிராசனே.–19-

முகமொன்றிலா யிரவாநந முந்தக் கொடோர்‌ பலபாடையால்‌
அகமொன்று நா நா பேதமா வறையும்மதத்‌ தவரீட்டமிக்‌
ககமொன்று நீட்‌ கழு மாமரங்‌ கவ்விக் கிடந் திடவா துவெல்‌
இகமொன்று வானக மீந்தரு ளெதிராசனே யெதிராசனே–20-

இன்தென்கலை யினிதோதின தெதுவோவது வன்றோமுனோ
மன்நின்பமா நூற்றெட்டென வழங்கும் பதி யவை மாசற
நன்றின்பமாப்‌ புதிதாக்கிட நாடெங்கினு மோடோடிவா
தென்றெங்கு நன்‌ றீவானெழு மெதிராசனே யெதிராசனே–21-

திருமாமுத லடியார் பவந்‌ தொலை யக்குலை தேவில்லெலாம்‌
ஒருமா முதற்‌ காமாறு நன்‌றுறவாக்கியே யொரு தேவனைத்‌
தெரியாது பற்‌ பல வெண்ணி மாழ்‌ குநர்க்கு உண்மையைத் தெளிவாக்‌கிய
எரி நாளில் வந்‌ தவன் றம்பியே யெதிராசனே யெதிராசனே–22-

சைவப் பெருஞ்‌ சைலாசநி சமணப் பனி தணி ஞாயிறு :
பொய்யொப்பிலா மாயா மதப்‌ பொதி சுட்டெரி தீப் புண்ணியர்‌
கை யொப்பிலா புத்தப் பணி கருகும்பெருங்‌ ககராட்டென
எய்தற்கரும்‌ பேறானவா வெதிராசனே யெதிராசனே.–23-

பொறியைப் பொலி யாதாக்கினாய்‌ புலனைச் சலி யாதாக்கினாய்‌
வெறியைச் செயுங்‌ கரணக் கரி வீவட்புலி வீறாக்கினாய்‌ ்‌
கறியைச் செயுங்‌ காமாதிகால்‌ கடி துண்ணு கட்‌ செவியாயினாய்‌
எறியைச் செயு மெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.–24-

பன் மா மத மாயாவிருள்‌ பாறச் சிவப்‌ புடை சுற்றியே
கன் மா மனம்‌ வாக்காக்கையை கலித்தாமெனு முக்கோல் கொடு
தன் மா மலர்ப்‌ பதஞ் சார்குவார்‌ சதிரான விண்‌ணாடேறுவார்‌
என்னாதனே பொன்னாதனா ரெதிராசனே யெதிராசனே–25-

உனை யேத்திலார்‌ பவமோ யுமோ வுனை வாழ்த்திலார்‌ நரகோயுமோ-
தனையே தனக்‌ கிணையானவன்‌ றரைவானுன தாணைக்குளே
நினையே நினைந்‌ தீந்துள்ளது நெறி தேர்ந்தவர்‌ நினை வுள்ள காண்‌
எனை யேன்று கொண்‌டுன்பத்தியீ யெதிராசனே யெதிராசனே.–26-

காமக் கொடுங்‌ கண்மாந்தினேன்‌ கதமாகுவெந்‌ தடி மேவினேன்‌
வாமப் பெரு மத மச்சர மாகுங் கலைப்‌ பூண் மேவினேன்‌
சீமத் தன் மாக்‌ களவாடி தீத் திறனானவ னக மேறினேன்‌
ஏமத்தனென்‌ றிகழா தரு ளெதிராசனே யெதிராசனே–27-

ஆசாரமோ சரகுண்ணி நல்‌ லநுட்டானமோ வூர்க்கோலமாம்‌
காசாசையோ நீரட்டையாங்‌ கனியாசவே சரியேசரி
பாசாசரோ பகர்தற் கொணொப்‌ பர தேசிகா பரிவோடெனை
ஏசாதுகாத் தருள் பூதூர்வா ழெதிராசனே யெதிராசனே–28-

எல்லே யிளங்‌ கிளியேயெனு மெமதம்மையா நீ தம்மண்ணரே
அல்லும் பகலும் மாழ்கிவீ ழாழ்வார் விடும்‌ வரி வண்டரே
சொல்லாது கொண்‌மின் காணெனாச்‌ சொன்னார் தமெம்‌ பெருமா வுனை
யில்லாதவ ரில்லாதவ ரெதிராசனே யெதிராசனே–29-

வஞ்சத்திலோ கடலானவன்‌ வளர் பொய்யிலோ மலையானவன்‌
பஞ்சத்தினும்‌ பதருந்தராப்‌ பழிலோபகாஞ்‌ சிரமானவன்‌
நஞ்சத்தினு நனிதீயன்யா னானும் பிறப்‌பற வெண்ணினேன்‌
எஞ்சத்துளே னெனை யாள்குவா யெதிராசனே யெதிராசனே–30-

ஒன்றேனுநன்‌ றுணராதவ னொரு போதுமே பணியாதவன்‌
பொன்றாத மூ வாசைச் சுழிப்‌ புரண்டாடு புன்‌ புலையர்க்குளேன்‌
நன்றீ துதீ தென்றோதுநூ னனி யோதிலேனினை யோதிலேன்‌
என்றாலு நீ யெனை விட்டிடே லெதிராசனே யெதிராசனே-31

பெண்ணாயினார்‌ கண்ணோயினும்‌ பிறழன்னரல்‌ குன்னோயினும்‌
அண்ணாந்தெழுங்‌ குயநோயினு மவர் வாயழகுடனோயினும்‌
பண்ணா வுடல்‌ பல கோடியான்‌ படு பீழை பாரதமாகுமே
எண்ணாதெனை யினிதாளுவா யெதிராசனே யெதிராசனே–32-

என் போல யா ரியானென்றவ னென்போல யா ரென தென்றவன்‌
என் போல யார்‌ பழி செய்தவ னென் போலயார்‌ நன்றற்றவன்‌
இன் பாநல மொன்றேனு நன்‌ றியலோடு தேர்ந்‌ திலனையனே
என் பாவமோ வென் சன்மமோ வெதிராசனே யெதிராசனே–33- .

என்றீமைகண்‌ டெமன்வெள்கினா னெழுத்தாடுவான்‌ கழுத்தாடினான்‌
நன்றாம் விதி குன்றாயினா னாராயண னலிவெய்தினான்‌
நின்றாகுமைந் தாம்பூதமு நெடு மூச்சு விட்‌ டுடல் சேர்ந்தன
இன்றாகு நின்‌ னடி வந்தநா ளெதிராசனே யெதிராசனே–34-

மண்ணுற்றவான்‌ நழையாவிகண்‌ மகன்றந்தைமா துலனாயினேன்‌
கண்ணுற்றகா தலனாதியாக்‌ கழறும் பிறப்‌ பினிலோய்ந்தனன்‌
எண்ணற்றதாய்‌ பெற்றேங்கின ளினிதீனுவா ளெவளும்மிலேன்‌
எண்ணற்க வென்‌ பிழையாரிய வெதிராசனே யெதிராசனே-35-

நானோ நினை நினைவிட்டிலே னாராயண னடியார்களா
நீ நோவு செய்‌ யுபகாரமே நினையாதவன்‌ பதையாதவன்‌
ஆனாலு நின்‌ னடியாரெனை யட பையலே யென்றார்கள் காண்‌
ஏனோ நின தாளெற்கிலை யெதிராசனே யெதிராசனே–36-

செய்ந் நன்றிகொன் றுளனாயினேன்‌ திருமாலடி யரை நோக்கிடின்‌
கைந் நின்றுகூம்‌ பிக்கால் விழாக்‌ கடையீனனாய்க்‌ கழுதைப் பிறப்‌
பைந் நின்ற நன்‌ றென்னே யுளே னருளாழியா ரியநாதனே
எந்நின்ற சீர்‌ நிறை வேதனே யெதிராசனே யெதிராசனே–37-

வட வேங்கடத் தவன் றொண்டனா வான் கானிலே யமுதங் கொடுன்‌
னிடம் வந்தனத்‌ துடன் பாத்தளித்‌ தினிதே கிடச்‌ சென்மாதவ
கடனஞ்சினுங்‌ கடையேனெனைக்‌ கை விட்டிடிற்‌ கதி விட்டனன்‌
எடலென் பிழை யருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–38-

ஈரொன்பது நாள் வாது செய்‌ யிகலெக்கிய னிகல்பட்டரோ
நீரென்பதே நிசமாகுமந் நிமலற்குமிச்‌ சீவற்குமே
சீரொன்றிரண்‌ டெனுமின்மினிற்‌ றிகழ் வாக்கியஞ்‌ சிதை வாதலில்
ஏரொன்‌றினை யார் தேர்குவ ரெதிராசனே யெதிராசனே–39-

நியோ பரன்‌ பாயாகியே நிலை காலமு நிற்கின்றனை
நாயேங்களவ்‌ வேதச் சிர நல் வாக்கியப்‌ பொருடேர்‌துமோ
ஆயாதுவே தாந்தப் பொரு ளகம் வந்தவா றலறிச் சொனார்‌
ஏயாதவ கிரி வாசனே யெதிராசனே யெதிராசனே–40-

ஒன்றே யுல கென்றாரதி னுட்டோன்றுறு பொருடேர்கிலார்‌
ஒன்றே யுல காதற்குள வேதென்னெனி லதுவுஞ் சொல்வார்‌
அன்றாதியா மரவாகிய வையாவெழுந்‌ தருளாயெனில்‌
இன்றேனு நன்‌ னெறி தேர்கிலே மெதிராசனே யெதிராசனே–41–

பரமே பெருஞ்‌ சதமாயிடின்‌ பதமேதெதிற்‌ பதிவாரெவர்‌
சிரமாகிய சுருதிப் பொரு டெரிவாரெவர்‌ தெரியாரெவர்‌
வரமாகுபத் திகளே துநீ வனை பாடிய மலையாவிடின்‌
இரவேது நற்‌ பகலேது காணெதிராசனே யெதிராசனே–42-

நீயேயவ தரியாவிடி னிகிலத்துளே நிறை சீவர்கள்‌
ஓயா துதந் தமையேபர மென்றெண்ணியோ வாமாலராய்‌
‘ஆயாவிர ணியராகியே ழாகக்கணி நிரயத்திலே
ஈயாவிழுந் தெரியாகுவா ரெதிராசனே யெதிராசனே–43-

ஈசோகமென்‌ பவர்யாருமி ராமாநுசற்‌ கினிதாகியே
தாசோகமென்‌ பவராக்கிமுத்‌ தாபத்தினைத்‌ தணிவித்தனை
ஆசாறிடு மைந்தாம் பொரு ளறிவித்திடுந்‌ திருமந்திரம்‌
ஏசாறிடா தீந்தாய் கொலெ மெதிராசனே யெதிராசனே–44-

அட்டாக்கரப்‌ பொருணீசொலா யானாலெமைப்‌ பரனைத் துணைக்‌
கட்டானதைப்‌ பகையானதைக்‌ கதியானதைத்‌ தெளிவேங்கொலோ
சிட்டாதிபா சித்தாதிபா செறிபன்மத விருளாதவா
இட்டாவெனை விட்டாலிலே னெதிராசனே யெதிராசனே–45-

உன்னன்பர்கள்‌ வைராகமு முறுபத்தி ஞாநக் கோவையும் .
பொன்னன்பர்பால்‌ மனமுள்ளவர்‌ புரி நீதியும்‌ பொல்லாக்கொடு
மன்னானவன்‌ வழி போகலு மகியார் தெளி வுற வெண்கலை
என்னே யசைத்‌ தனை யோதுமி னெதிராசனே யெதிராசனே–46-

உறங்கா விலிப்‌ பரிசத்தினா லுடல் பூக்கு நல்‌ லொளி யோங்கலே
கறங்கா மனப்‌ பொன்னாச்சியார்‌ கனி வெண்ணியே களி கன்னலே
பிறங்காத வெம்‌ பார்க்கின்னிருளே காந்தமின்‌ றெனப் பேணி வாழ்‌
விறங்காது காத்‌ தருணாதனே யெதிராசனே யெதிராசனே–47-

அளவற்ற சங்‌கர வாதிய ரளவற்ற மாயா வாதியர்‌
அளவற்ற காபில வாதிய ரளவற்ற கெளமாராதியர்‌
அளவற்ற வஞ்‌ஞாநங்கெடுத்‌ தரவிந்த நின்‌ னடி மேவினர்‌
இளவர்க்குளே னேதும்மிலே னெதிராசனே யெதிராசனே–48-

முன்னாரியர்‌ பத தாமரை முடி கொண்ட யான்‌ முடி பெற்ற பின்‌
என் பாதசம்‌ பந்தம்முளோ ரவர் பாதமே யினர்பின்னரும்‌
மன்னாகுபே ரின்பீசுக மலிவீடுறற்‌ கென்மாசுள :
என்றோது நங்‌ கருணாகர வெதிராசனே யெதிராசனே–49-

வடுகா வெனு நின்றாசனார்‌ வழி பட்டு வாழ்த்‌ துறுதேவனே
படுகாடெனுங்‌ காளத்தி சேர்‌ பத்தர்க்கு நல்‌ லமுதேயிலைத்‌
தொடுவேன் கொலோ வென்றேங்கினார்‌ தூங்கோங்கு தாமரைத் தாளனே
எடுவேம் பிறப்‌ பினில் விட்டிடே லெதிராசனே யெதிராசனே–50-

தன்னாரியன்‌ வெள்ளாட்டியாச்‌ சமைந்தானுணுந் தற்போதமே
தென்னன் கிழிச்‌ சென்றான் மக டெளிவாகுபா வைக்கானவா
பன்னாளுமத் திரு நாரணப்‌ பதி மேவி யாண்‌ டருடந்தவா
என் னாதனே யென் தேவனே யெதிராசனே யெதிராசனே–51-

அந்தோ பல வாஞ்சீவரு மம்மானடிக்‌ கேயன்‌ றியில்‌
சிந்தாகுலத்‌ தோடே பல தெய்வங்களைத் தொழுதோய்ந்தனர்‌
முந்தாகிய முறைமைப்படி முன்றொண்டரா கிடவைத்தனை
எந்தா யெனை யேனீக்குதி யெதிராசனே யெதிராசனே–52-

ததி தொண்டையூர்‌ கொண்டிக்கு விண்‌ டாரும்மெனத்‌ தன் கையினால்
பதி கொண்டதோர்‌ முறி போக்கினை பரனாகு வேங்‌ கட நாதனும்‌
விதி கொண்டனன்‌ வீடு ஈந்தனன்‌ விழை மங்கையும்‌ வீடுற்றனள்‌
எதி நாதனே கதி நீ யெனக்‌ கெதிராசனே யெதிராசனே–53-

மண் மா மலர்‌ மகிழீசனு மகிழாதுனைத்‌ தருமீசனும்‌
தண் மா முநி போகங்கொளுந்‌ தனியீசனுந் தடை யின்றியே
விண் மா நிலச்‌ செல்வங்கணின்‌ விதி நிற்பவா வெளியிட்டனர்‌
எண் மா பத கன்னென்னையா ளெதிராசனே யெதிராசனே–54-

குரு பூர்த்தியா வரு மூர்த்தி யெங்‌ குடியாவுநின்‌ னடியே யுள
ஒரு பூர்த்தியா வுறு ஞாநமு மோரார்த்தியா யுறு பத்தியும்‌
தரு பூர்த்தியாம்‌ வைராகமுஞ்‌ சாராததோர்‌ சடன் மேதை கூழ்‌
எரு பூர்த்தியா விட்டாள்குவா யெதிராசனே யெதிராசனே–55-

போகத்திலே பொலி தீயன் யான்‌ பொதி வேத வேதாந்தத் துறும்‌
யோகத்திலே கண்டுற்றதோ ரொளி மசுகப்‌ பொருளுற்ற நின்‌
பாகத்திலே படியாத யான்‌ பரமாகுமப்‌ பொருணச்சலெற்‌
கேகத்திலே நாணுக்குதே யெதிராசனே யெதிராசனே–56-

கழி ஞாநமாஞ்‌ சடகோபனார்‌ கலியுங் கெடுங்‌ காண்மின்னெனாப்‌
பழி ஞாநமில்‌ பதிகத் தினாற்‌ பரிவாக நின்‌ படி பாடினார்‌
வழிபாடு செய்‌ துய்வாக நின்‌ வடிவாக்கியாள்‌ விழியாக்கியே
இழி வாக்கிடா தெமை யாட்கொளா யெதிராசனே யெதிராசனே–57-

ஒரு மூலமந் திரவாச்சிய னோவாவவா வதிகாரங்கண்‌ :
யுரு மூல மந்‌ திரமீந்த நீ யெற்கோவருள்‌ செய்வாயெனப்‌
பெரு மாசையா லென் மாசினாற்‌ பெட் புற்று பேதுற்றோய்ந்தனன்‌
இரு மாசை முற்‌றுற நோக்கியா ளெதிராசனே யெதிராசனே -58-

சுரு வஞ்ஞனா லாகாத விச்‌ சகமுற்றுநின்‌ றாளேத்திட
ஒரு வஞ்சமு மில்லாமலே யொளி வேத மந்‌ திர மோதினை
கருமஞ்செயாப்‌ பிரபத்தியே கழியாச்‌ சுக நெறி யென்றனை
இரு மஞ்சிலா வெற்கஞ்சலீ யெதிராசனே யெதிராசனே–59-

முது சாம மா மறை யுச்சியின்‌ மொழியின் படிப்‌ பர சீவர்கள்‌
பொதுவாகுமா நந்தத்திலெப்‌ போதுந்தகா தொருபேதமென்‌
பதுவாகுமவ்‌ வசியின்பதம்‌ பரிந்தன்னதே பண்பென் றனை
இது யாவருந்‌ தெளிவுற்றன ரெதிராசனே யெதிராசனே–60-

தத்தொம்பதப்‌ பொருளாய் கிலார்‌ தானே பர மென்றாய் கிலா
வித்தைக்குளாய்ப்‌ பிறரேளன வேதைக்குளாய் வெள்குற்றனர்‌
தத்தென்னிறற்‌ பரமென்றனை தொம்மென்னிறா சனையென்றனை
இத் தன்மையா ரிசை செய்குவ ரெதிராசனே யெதிராசனே–61-

நீயே குரு பரனென்றவர்‌ நினை தாளினைப்‌ பணியாதவன்‌
நாயேனை நாரணன்றொண்டெனி னானாவனோ வென்றேங்குவன்‌
தாயேயரு டந்தாயொரு தானானவென்‌ற நமானவா
ஏயேயென விகழாதரு ளெதிராசனே யெதிராசனே–62-

மன்னாகுதி நினை நன்றென மதியென்றவா சகமெண்ணியே
தன்னாகுமுண்‌ மையை நாடியச்‌ சாமிக்கு நாஞ்‌ சொத்தாகுதும்‌
என்னா நினைந்‌ தின்பெய்திடா திறையானென விழிவெய்தினர்‌
இன்னாவிலா துன் பாதமீ யெதிராசனே யெதிராசனே–63-

மாயாமத வலைசிக்கியே மாய்ந்தார் பலர்‌ மதி சூடியை
நீயோ துதற்‌ பரமென்றெணி நீராய் நிலத்‌ தவிந்தார் சிலர்‌
ஈயாதிழி பல தேவரை யிறையோனெனா விறந்தார் சிலர்‌
ஏயாதவாத்‌ திரிவாசவா வெதிராசனே யெதிராசனே–64-

எம்மான்றரி சநமோங்கவே யென்னென்னவோ வினல்மேயினை
அம்மானு நின்‌ னாட்சிக்குளே யானா துவைத் தனனாதலால்‌
சும்மா விருந்‌ திடினாயினேன்‌ சுகிக்கற்கொரு சூட்சிக்கிலேன்‌
இம் மானிட னினை யேத்தல் செய்‌ யெதிராசனே யெதிராசனே–65-

அத்தா நினக்‌ கடியோமென வடியோமடிக்‌ குடிலுய்ந்தன
பித்தானவன்‌ பிழை செய்தவன்‌ பெரியோரை நிந்தனை யிட்டவன்‌
மொத்தாடுமைம்‌ புலவாசையே மூவாத பேறாக் கொண்டவன்‌
எத்தாலுமீ டேறற்கிலே னெதிராசனே யெதிராசனே–66-

ஒரு நாளு நின்‌ பேர் வேண்டிலே னொரு நாளு நின்‌ னூர் போற்றிலேன்‌
ஒரு நாளு நின்‌ னருவெண்ணிலே னொரு நாளு நின்‌ குணம் பன்னிலேன்‌
ஒரு நாளு நின்‌ விசயஞ் சொலி யுற்றாருட னுடல் பூத்திலேன்‌
இரு நாளு நின்‌ னொருபத்தியீ யெதிராசனே யெதிராசனே–67-

அருளாளனார்‌ தந்தாளும் பேரருளாளனார்‌ தந் தேசிகா
இருளாகு முத்‌ தடை மேவினே னிதினாலென தியானாயினேன்‌
ஒரு நாளு மீ தொழிவாகிலே னுன் காருணி யத்தாலென
திருணீங்கிட வருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–68-

மெய் வந்திலா நாவானினை மெய் போலவே துதி செய்தனன்‌
கைவந்திலாக்‌ கயவன்னெனைக்‌ கடுத்தே விடிற்‌ றடுப்பாரிலை
ஐவந்த நின்‌ னடியார்கள் கண்‌ ணெச்சிற் கழு விட வென்றனை
எய்யாது வைத்‌ தருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–69-

நின் பாத மெண்‌ ணி மலர்க்குளே நெடு நீசன் யானிற்கின்றது
புன்பாலதாம்‌ பைங்கூழ்க்குளேர்‌ புல்லாடவன்‌ போலாகுவேன்‌ :
அன்பாலெனை யவரேளன மாடிக்களித்‌ திடவாக்குவாய்‌
என்பாவவாக்‌ காற் போற்றினே னெதிராசனே யெதிராசனே–70-

அருளென்ப தோ ரணுவும் மிலே னடியார் முனந் தடி போலவே
மருளென்பது மாமய்ப்பானெணி மகிழோடு சேவித்தும்மிலேன்‌
தெருளேது மற்‌ றவனாகிடம்‌ பத்துக்குளே தெளிவெய்தினன்‌
இருளேது மற்‌ றவனாக்கியா ளெதிராசனே யெதி ராசனே–71-

நின் னாமமாந்‌ துவயத்தையே நீரன்னமா நிலை கொள்ளுநா
ளெந்நாளெனா வேங்குங்குணத் தெம்மான் களென்‌றனையும் மொருச்‌
சின்னானெனச்‌ சிறு புன்னகை செய்வாரெனி லுய்வேனையா
எந் நாளு நீ யே காப்பு காணெதிராசனே யெதிராசனே–72-

நான் வேண்டியா நீ யாள்குவாய்‌ நாய் வேண்டியா மழை பெய்வது
தான் வேண்டி வந்‌ தவனீ தலத்‌ தவராண வந்‌ தமை நீக்கியே
வான் வேண்டியீந் தவனீயெனை வாங்காணொனா தகல் வாய் கொலோ
ஏன் வேண்டலென்‌ னன்னாய் மிகை யெதிராசனே யெதிராசனே–73-

சித் அசித்தெனுந்‌ திரு மேனியுட்‌ டிகமும் பிரான்‌ றிருநாதனென்‌
றிதமுற்றவே தாந்தம் மெலா மிசைவிப்பதை யறிவிப்பதாய்‌
பதமுற்ற பாந்‌ தட்காதியாம்‌ பர நீ யெழுந்‌ தருளாயெனில்‌
எது முற்றவோர்ந்‌ துலகுய்யுமா லெதிராசனே யெதிராசனே–74-

ஐந்தாகு பேதத்தாவிக ளைந்தாகு மெம்‌மான் மேனிகள்‌
ஐந்தாறதா மவனைப் பெற வவையுட்கடை யாறே நலம்‌
நந்தாதிர்கோள்‌ பவ சாகர நமரங்காளென்‌ றருள் செய்தனை
எந்தாய் பிறந்‌ துய்ந்தோமிலை யெதிராசனே யெதிராசனே–75-

அனை யாற்றகி லாப்பாவமே யடியேன்புரிந்‌ துளனாதலில்‌
உனை யொப்புளா ரெவரென்பவ மொழிக்குந்திற முடையாரையா
புனை மாதவ னிந் நாளெனைப்‌ புரந்தே யருள்‌ புரிவானெணி
எனை யுன்னிடம்‌ விட்டானரு ளெதிராசனே யெதிராசனே–76-

அடியேனடி யேனென்ற சொ லறிவேனதன்‌ படியே யிலேன்‌
செடியே யுள னொரு நாளுமச்‌ செய்கைக் கிணங்‌கிலன்‌ றீயன்யான்‌
படியாக் கிடந்‌ துன்னாணை நான்‌ பார்ப்பேன் கொலோ வென்பேனலால்‌
எடுதீயனென்‌ வடிவாக்கியா ளெதிராசனே யெதிராசனே–77-

சுக சாரணர்‌ போலேவயி ணவவேடனா கினனேயலால்‌
அகமாரகத் தோடேநலோ ரகம்வேம்வினை யுடையேனையா
மகனாகிடி லென்செய்குவார்‌ மாதாபிதா மகன்‌ றீயனேல்‌
இகம் யாவும் வானகம் யாவுமீ யெதிராசனே யெதிராசனே–78-

உயிர் பாரதந்‌ திர சேடமே யுரு வென்ற மந்‌ திரமோ வறிந்
தயர் வெய்திடா தறிந்தே யுள னநுட்டானமோ வறியேனையா
பயமற்றவன்‌ பவமற்றவன்‌ பரிவற்றவன்‌ பரனே யிதென்‌
இயலுற்றிட வருடந்தரு ளெதிராசனே யெதிராசனே–79-

என்னாலடி யார்க்கேற்ற நன்‌ னடை மேவிட வியலாது காண்‌
உன்னால் வரு வித்தாள் கருணைக்கொப்பிலா வொரு மாதவா
பன்னாளுமுன்‌ பதம் விட்டிலார்‌ பார்த்தார் குளிர்‌ நோக்காலெனை
இன்னாதுள முதலூதிய மெதிராசனே யெதிராசனே–80-

தக்கானல னே யாயினுந்‌ தண் வெண் மணி லுன் போலவே
பொக்காக்குள மிட்டுண் மடிப்‌ பொறி மாவுடன்‌ பெருமானை யான்‌
எக்காலுமி.லக்காகவே விடும்பாக்கிய முடையேனையா
இக்காலெனை நீங்காதரு ளெதிராசனே யெதிராசனே–81-

இடும்பாக்கிய முடையேனெனு மிழிஞன் சொலை யெண்ணேலெணி
விடும்பாக்கிய னாக்காதுயிர்‌ விமலக் குணம்‌ மிளிர்வானருள்‌
தொடும்பாக்கிய னாக்கிப் பெரு நீ தொண்டர்க் கடி யானாக்கியே
எடும்பாக்கிய னாதற்கரு ளெதிராசனே யெதிராசனே–82-

நம வென்ற சொற்‌ சொலவுந் தகா நரனாயினு மதனுட்பொதி
தமதென்ற துந்‌ தாமென்றதந் தகுமா வெனதீ தடிந்தாவது
உமதன்பினா லுறுமென்ற வுத்‌ தமராய் மொழி யுலவாதுளேன்‌
எமன் வெள்கிட வெனையாக்கியா ளெதிராசனே யெதிரஈசனே–83-

நானுங்கரை மரஞ்சேறலுன்‌ னளினப்பத நாவாயினைத்‌ .
தானுஞ் சொல லாற்றான்மகிழ்ந் துளன் காண்டமி யேனையனே
வானும் புவி தானும் மறை யோனும் வழுத் திடுமாப்புக
வீனுங் குண கணனே யரு ளெதிராசனே யெதிராசனே–84-

எழு பத்து நான்‌ கெனும் தூம்பினா லியன் மந்திர வமுதானதைத்
தொழு பத்துறுந்‌ தொண்டர்க்கு வீடாக்கிக் களி துகளற்றவா
வழு வத்தனை யேனும் மிலா வாரித் தட வருண்மாரியே
இழி வெத்தனை யுளனாண்டருளே யெதிராசனே யெதிராசனே–85-

ஆழ்வார்கள் செந்‌ தமிழ் வேத நூ லருளும் பொருள் அறிவித்திலர்
ஊழ் வாங்கிட வரங்கத்தமா னுன் சீடனா வுற வெண்ணியாம்‌
வாழ்ந்தோங்குற வர யோகியாய்‌ வந்தே தமிழ்‌ மறையின் பொருள்‌
ஈந்தாண்டருள் தந்தாய் கொல் எம் எதிராசனே யெதிராசனே–86-

இதமாம் வட கலை வேத நூ லிலகும் பொரு ளெல்லாமு நின்‌
பதமாகிட வுன் பாடிய நூலாதியிற்‌ பகர்ந்தாய் பினர்ச்‌
சிதமாகிடா வெம் போலி கட்‌ கினிதாம் வர முநி யோகியாய்‌
இதமாகு தென்‌ கலை யீந்தரு ளெதிராசனே யெதிராசனே–87-

உயர் மாக்குலத் தவர்க் காரண முரை ஸூத்திரப்‌ பொருள் யாவையும்‌
அயல் மாழ்குற மா பாடிய மதனாலருள்‌ செய்தாய் கொடும்‌
மயல் மாய்ந்துள வாழ்வார் மறைப்‌ பிரசாதமே மகிழ்ந்‌ துண்ணுவான்‌
இயலீடுக ளீவானருளெ திராசனே யெதிராசனே–88-

எம்போலிய ரீடேற வென்‌ றியலுங் கரு ணையினான் மணத்
தம்போருகத் தாயாரடிக்‌ கடியார் மறைப்‌ பொருளைச் சொலச்‌
செம் பாகுவே செங் கன்னலே செங் கண்டுதே னே பாலதே
எம் மா முநி யெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.(89)

உலகாரிய னருணூநீபொரு ளோதாரெனின்‌ முன்னூற்றமி
ழிலகாரணங்‌ கடலிற் கரை யின்கன்னல தாகும் மெனா
அலவாவதன்‌ பொருட்டெங்குல வடிகாளென வடியோந் தொழ
எலமாக வந் தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே. (90)

சமக்காரமாத் திரமீந்துமுன்‌ றமிழாரணப்‌ பொருள் யாவையும்‌
எமக்கேனரு ளீந் தாயிலை யென்றான்‌ கொலவ்‌ வீசன் மிகத்‌
தமக்காகவோர்‌ தனியன் செய வவற்கோதினை தமிழின் பொருள்‌
எமக்கான வெங்‌ குல தெய்வமே யெதிரஈசனே யெதிராசனே–91-

தென்னாரணங்‌ கொண்டாடிடு சீர் பெற்ற தன்‌றோ திவ்வியம்‌.
என் போத மா தவமற்றவை யின்பாகநன்‌ றாக்கிக்களி
அன்பே யெம தருளே யுணு மமுதே மறைக்‌ கதிராசனாம்‌
இன்பே யெமை யெற்றா தரு ளெதிராசனே யெதிராசனே–92–

திரு மா மலைக்‌ கேகுந் தடங்‌ காட்டேற்றமா ரவனைக்களி
பெரு மா வுப காரன்னெனாப்‌ பேணிப் பெருங்‌ களி தூங்கினை
வரு மா வுறங்‌ காவில்லிகைப்‌ பரிசத்துமா மகிழ்வெய்தினை
இரு மாவுற வருளையனே யெதிராசனே யெதிராசனே–93-

உனையுங் கொல நஞ்சிட்ட விவ்‌ வுலகென்றிடி விதன் கண்ணினே
புனை ஞாநவை ராகத்தினிற்‌ பொலிவாரெவ ரருளையனே
நினை நிற்கப ராதம் புரி நிருபன்புழு நெளியாயினான்‌
எனையோரிக முற மாண்டன ரெதிராசனே யெதிராசனே–94-

இம் மாதரி சநத்திற்குயிர்‌ கண்ணீந்திடு பெரியாரருள்‌
தம் மா மதத் தருமம் மெணிதீ தாசன் செயாச்‌ சடன் யானையா
அம்மா விவ னென்னாதுத னருண் மேவினர்‌ சரணத் துகள்‌
எம் மா வினை யிறுவானரு ளெதிராசனே யெதிராசனே–95-

முதன்‌ மூன்று நல்‌ லாழ்வார்கள் செய்‌ முன்னூல் படித்‌ தறியேனினம்‌
இதன் மீதவ ரருளுங் கலை யென வோவது தெளியேனினம்‌
மதன்விண்டிடு கலவிக்குமா மறவெவ்வினை மாலைக்குமே
இதமாகிடு கடையேனையா ளெதிராசனே யெதிராசனே–96-

நாலாயிர மென்பாரத னாலாகிட லெனவோ சொலேன்‌
மேலார் வழி கேட்டன்னவை விள்வான்வழி மேவேனலேன்‌
ஆலால மன்‌ னார் கேண்மையி லன்பாயினே னாண்டாண்டெலாம்‌
ஏலாதழிந்‌ தொழிந்தேனரு ளெதிராசனே யெதிராசனே –97-

பலதேரினும்‌ பத்தர்க்குகப்‌ பாகும் பணி யொன்றும்மிலேன்‌
நலமாகிடு மென்றேனொரு நாளுஞ்செயே னானாயினேன்‌
அலதேலொரு வகையேனுநல்‌ லவனாகிட வெண்ணற்கிலேன்‌
இலையென்செய வல்லேனையா வெதிராசனே யெதிராசனே—98-

உன்றாண்மல ருறுகேசர னெனையாட்கொளா யெனில் யானையா
நின்றாகிட வலனென்பது நீயுஞ் சொல லாகாயையா
கன்றாகவென் ௧றை யுண்டுநின்‌ காந்றாமறைத் தேன்வாக்கியே
இன்றாகிட வேனும்மரு ளெதிராசனே யெதிராசனே–99-

சீருற்றொளி ரிராமாநுச செயஞாநவா ரியனார் சரண்‌
தாருற்றொளிர்‌ பரன் கையினிற்‌ றருதாதவென்‌று எனை யாண்டருள்
நீருற்றொளிர்‌ திருக் கோவலூர்‌ நில வெம்பெரு மானாரவர்‌
ஏருற்றொளிர்ந்‌ திடவோதினா ரெதிராசனே யெதிராசனே–100–

இனிதாகு நின்‌ பத தாமரை யினையூரிடை யுடை வாழியே
தனிதான்றகு முக்கோல்தடங்‌ கையஞ்சலி கைவாழியே
பனிதான்பர மன் வாழ் விழி யகடாநந முடி வாழியே :
எனையோதி யென்‌ றிடு மாபர னினியாரொடென்‌ றும் வாழியே–101-

பின்முனா முத்தர்‌ நித்தர்கள் வாழியே
பேணு நூற்றெட்டெம்‌ மான்றாயர் வாழியே
தன்முன்றானெனு மாதியிலாத் தமிழாரணங் கடழைப்புடன்‌ வாழியே
என் முன்னின்ற விறை வெண்மண்வாழியே
இலகு மஞ்சட்‌ பொடி மணி வாழியே
பொன் முன்றந்த மநு மூன்றைந்தேதி விபூதிரண்டும்‌ பொலிவுற வாழியே–102-

———-

ஸ்ரீ ராமானுஜ மாலை

இராமாநுஜ னடியை யென்றென்றும்‌ போற்றும்‌
இராமாநுஜன்‌ றன்னை யேத்த–வராதார
நற் சீனி வாசனையே நாடீச்சம்‌ பாடிகுரு
நற் சீனி வாசனையே நத்து. –தனியன்‌

இன்பம்‌ பமுதெனவே யெண்ணிறந்தோ ரிப்புவியி
லன்போடு செப்பு மறநெறியைத்–துன்னு
மிராமா நுஜன்மே லியம்புபா மாலைக்‌
கராமா னளி படைகள்‌ காப்பு. –காப்பு.

பூவிற்‌ றிகழ் மாது புட்கரமாய்ச்‌ சேர் மாலைப்‌
பாவிற்‌ புகழோங்கப்‌ பாடினா–னாவிற்கு
நற்சுவையு நற்கதியு நல்குமிரா மாநுஜன் செம்‌
பொற் பதத்தை நெஞ்சே புகல்‌.–1-

நள்ளிருளி னெஞ்சே நண்ண விடா வென் குருவைக்‌
கொள்ளாரி னின்று குறையறவே–கொள்ளுகின்ற
அன்பனிரா மாநுஜனல்‌ லம் புயமாம்‌ பாதங்க
ளன்றித்‌ துதியா தறி. –2

நெஞ்சே யடி பணிந்தே னின்னை யென்றும்‌ பேய்ப் பிறவி
யஞ்சப்‌ புலர்த்தி யருளவே–விஞ்சு புக
ழாரிய னிராமா நுஜ முனிக்‌ கன்பு செயுஞ்‌
சீரியர் காற்‌ கீழிற்‌ செறி–3-

என்னைப்‌ பொருளா யிருளா னது சுரந்த
முன்னை வினை வேர றுக்கு முன்னவனைப்‌–பன்னப்‌
பணித்த விராமா நுஜன்பரன்‌ பாதங்‌
கணித்துத் துதி மனமே காண்‌–4-

எனக்குற்ற செல்வ மிராமா நுஜனென்‌
மனத்துற்றுப்‌ போற்றுதற்கு மாயா–தெனக்குற்ற
அன்பனவ னாமத்தை யாதரவாய்‌ நன்னெஞ்சே
துன்பணுகா வென்றே துணி–5-

இயலும்‌ பொருளு மிசைவாகச்‌ சேர்த்து
மயல் கொண்டு வாழ்த்தி மதித்துப்‌–பயிலுங்‌
கவி யிரா மாநுஜன் மேற்‌ காதலித்து நெஞ்சே
புவி மாயம்‌ விட்டுப்‌ புகல்‌–6-

மொழியும்‌ புகமுடையான்‌ முக் குறும்பாம்‌ வஞ்சக்
குழியைக்‌ கடக்கு நங்‌ கூரன்‌–வழி கூடுஞ்‌
சீரிரஈ மாநுஜணனொண்‌ செங்கமல மல்லாமற்‌
சேரிரா நெஞ்சே திறம்‌–7-

வருத்துகின்ற மா விருளை மாற்று சீர்‌ வேதக்‌
குருத்தையுஞ்‌ செந்தமிழுங்‌ கூட்டி -யருத்தத்‌ திரித்தன்‌ றெரித்தத்‌ திரு விளக்கை நம்மி
லிருத்துமிரா மாநுஜனை யேத்து–8-

இறையவனைக்‌ காண விதயத்தி னுள்ளே
நிறை தீப மேற்றற்கு நெஞ்சத்‌ துறைய வைத்‌
தாளுமிரா மாநுஜனா மாரியனை வாழ்த்திமெத்த
நாளுந்‌ துதியவனை நன்று–9-

மன்னிய பேரிருளை மாற்றின பின்‌ மா மலரா
டன்னோடு காட்டுந்‌ தமிழ்த்தலைவன்‌–பொன்னடியைப்‌
போற்றுமிரா மாநுஜன்றாட்‌ பூண்டவர்க டம்பெருமை
யேற்றற்கு நெஞ்சே யிசை–10-

சீரிய நான்மறையைச்‌ செந்தமிழா லாதரித்தப்‌
பாரியலும்‌ பாண் பெருமாள்‌ பாதமலர்த் -தாரியலைச்‌
சூடுமிரா மாநுஜனைச்‌ சூழ்ந்தவர் தங்‌ காரியங்க
ணாடுதற்‌ கேலா நமக்கு–11-

சீர்த்தித்‌ திரு மழிசைச்‌ சேர் கோனின்‌ றாளகத்தி
லார்த்தி கெட வாழ்த்துகின்ற வான்றவன்‌ சீர்ப் பாதம்
போற்று மிரா மாநுஜன் செம்‌ பொன்னடியை யெந்நாளு
மேற்றுவாய்‌ நெஞ்சே யினி–12-

பசுந் துளவத்‌ தேன் மாலைப்‌ பைந் தமிழிற்‌ பெய்யும்
பசு மறையின்‌ பாமாலைப்‌ பாதத்‌–திசையுறவே
சாத்துமிரா மாநுஜன்‌ றண்கமலச்‌ சேவடியை
யேத்துபவர்‌ தம் பதமே யெண்ணு.–13–

கதியி னிலைக்கவெங்‌ கானங்கள்‌ யாவுங்‌
கொதிக்கத்‌ தவஞ்செய்வர்‌ கூடிப்‌–பதிக்குத்
தருமிரா மாநுஜனற்‌ றாட் கமல மேத்தும்‌
பெருமிதமாத்‌ தாசர்கடாள்‌ பேணு–14-

காதற்‌ பெருஞ்சுழியிற்‌ காதலித்துப்‌ பேணாத
தாதரடி சேரத்‌ தருசிந்தை-யாதரவா
யோதும் ராமாநுஜன் சீ ரோங்கு நறை கமலப்‌
போது தொழு நெஞ்சே புரிந்து–15-

தலமனைத்து மோங்கு கலி தாவுகின்ற நாளிற்‌
பலங்கொடு காக்கும்‌ பதுமன்‌–மலர் சூடு
மாதி னருளை மதி யிரா மாநுஜனா
மாதவனை நெஞ்சே வழுத்து–16-

முனியார்‌ துயரங்கண்‌ முந்தியு மின்பங்‌
கனியா ரவர்மன மாதே–தனியானைத்
தண்ணிரா மா நுஜனைச்‌ சார்ந்தவர் தஞ்‌ செங்கமல
நண்ணுதற்கு நன்னெஞ்சே நாடு–17-

அரிய திருமறையை யன்புடனே யீந்த
பெரிய குருகூரன்‌ பேணி–யுரிமையொடு
பாதமேற்‌ சாத்திப்‌ பரப்பிரம மாலடியை
யோதுமிரா மாநுஜனை யோர்ந்து–18-

தென் குருகை நாதன்‌ திருவாய்‌ மலர்ந் தருளுந்‌
தென்றமிழை யாதரித்‌துச்‌ சேவை செயப்‌ –பன்னரியத்‌
துன்பமது வந்தணுகாத் துய்ய விரா மாநுஜன்‌ றண்‌
ணின்புதரு பாத மிறைஞ்சு–19-

பெருஞ்செல்வந்‌ தந்தையொடு பேணு நற் றாயு
மரு குருவு மாகி வரு மாறன்‌–றருமறையை
நீணிலத்தோர்‌ தங்கட்கு நேருமிரா மாநுஜன்றான்‌
வாணிலத்து மாயுமே வண்டு–20-

யதிகளுக்கு நாதன்‌ யமுனைத்‌ துறைவன்‌
கதி தன்னைக்‌ கற்பிக்குங்‌ கர்த்த–னதி யுசித .
பாதனிரா மாநுஜனைப்‌ பன்னு மறையவர் தம்‌
பாதங்க ணெஞ்சே பணி–21-

கார்த்திகை வீரனொடு கக்குகனன்‌ முக்கண்ணா ்‌
மூர்த்தியு மோட முதுகிட்டுத் –தார்க்கியன் மேற்‌
பாவும்‌ பரனைப்‌ பணி யிரா மாநுஜனைத்‌
தாவுமே யென் மனதிற்‌ றான்‌–22-

வைப்பாய வான் பொருளை வைத்து மனத்தகத்தே
யெப்போது மேத்துகின்ற வென் குருவை–யொப்பா
ரிரு நிலத்தி லில்லா விராமா நுஜன் றன்‌
பெரு நெறியை நெஞ்சே பெறு–23-

தீவினையாற்‌ பற்பலவாந்‌ தேகங்க ளெய்தினதா
னோவினையிற்‌ பட்டுமிக நொந்திருக்கும்‌- வீவினையை
நீக்குமிரா மாநுஜன்றா னீணிலதீதிற்‌ றோற்றின பின்‌
போக்குவித்தான்‌ பொய்ச் சமயப்‌ பூட்டு–24-

கருணை யிரா மாநுஜ விக்‌ காண்டஞ்சூழ்‌ பூவிற்‌ :
றரு நின்‌ னருளினது தன்மை–யொருவருமே
நோக்கொணொா வல்லமையை நூல் வல்லோர்‌ செப்புதற்கு
நாக்கு கடா மேலுமோ நன்கு–25-

திக்குற்ற கீர்த்தி யிரா மாநுஜனைச்‌ செய் வினையா
மெய்க் குற்ற நீக்க நினை மேவு நல்லோ–ரெக்குற்ற
வாளராய்த் தோன்றி வரு பிறப்பை மாய்ப்பதற்‌ :
காளரா யெண்ணுவரே யாய்ந்து–26-

இரங்கி யிரா மாதுஜன்றா ளென்றனது நெஞ்சந்
திரங் கொண்டு பாவத்‌ திகைக்க–வரங்கொண்டு
சேதிக்க வந்தெழுந்த செம்மலடி யல்லாது
வாதிக்க வாகா மதித்து–27-

நெஞ்சிற்‌ கறை கொண்ட நீசன்‌ றனைக் காய்ந்து
தஞ்சமெனப்‌ போற்றி நிதஞ்‌ சார்ந்தவர்கட்‌–கஞ்சலென
நங்கள்‌ பெருமா ணவிலுமிரா மாநுஜன்றான்‌ :
கங்கில் புக ழாளனெனக்‌ காண்‌–28-

கூட்டும்‌ விதி யென்று கூடுமோ தென் குருகைப்‌
பாட்டென்னும்‌ வேதப்‌ பசுந்தமிந்தா–னாட்டமுடன்‌ ்‌
வீட்டின் கண்‌ வைக்கு மிரா மாநுஜன் சொன்‌ மெய் யுணர்ந்தோ
ரீட்டங்க ளெய்திடுவ ரின்பு. —29-

இன்பந்‌ தருமோக்க மெய்திடுவை யெண்ணிறந்த
துன்பந்‌ தரு நிரயத்‌ தொல்லுலகின்‌–மன் பல்‌
லுயிர்கட்‌ கிறை யிரா மாநுஜனென்‌ றோத
வுயிர்த் துணையா நெஞ்சே யுணர்‌–30-

ஆண்டுகனா டிங்களிலே யாய் நிகழுங்‌ காலமதி
லீண்டூ பல யோனி யுழ லின்‌ நிமனங்‌–காண்டகுதோ
ளண்ணலடி சேருமிரா மாநுஜனை யண்டினவர்க்‌
கெண்ணரிய பேரின்ப மேத்து–31-

பொருந்தும்‌ பொறையும்‌ புகழு நற்‌ றேசுந்
திருந்திய செல்வமுஞ்‌ சேர–வருந்தவன்றன்‌ .
வண்மையினா லீய வருமிரா மாநுஜன்றான்‌
றிண்ண நமக்‌ கென்றே தெளி–32-

அலர் மகளின்‌ கேள்வன்றன்‌ னாழி படர்‌ தண்டு
மில கொளி சேர்‌ சங்குடனே யேன்ற–பல படையும்‌
பூதலக்‌ காப்பினொடு போற்று மிரா மாநுஜனை
யாதரவாய்ப்‌ பன்ன வறி–33-

இராமா நுஜனை யிரவு பக னித்த
மராவுமதி பெற்றவர்க ளன்பிற் –றராதவற்றை
விண்ணினொடு மண்ணினும்‌ வேண்டா திரு நெஞ்சே
நண்ணிடுவை யின்ப நமக்கு–34-

அடலுறு நல்‌ லாழிகர னாருயிர்த்தே, வின்சொற்
கடல் போல நற்பொருளைக்‌ காட்டி–விடலரிய
தீ நெறிக் கண்‌ வீழ்விக்காத்‌ திண்ணி ரா மாநுஜன்றன்‌
பா நெறிக் கண்‌ ணெஞ்சே பரசு–35-

நானிலத்து மானுடத்தை நாடா னொரு தெய்வ
மானித்துப்‌ போற்ற மனமில்லான்‌–றானித்தம்‌
பொன்னரங்க மென்றே புகலி ரா மாநுஜன்‌ சொல்
லென்னரங்கங்‌ கொள்ள விசை–36-

படியிற்‌ புகழ் பெற்ற பண்புடையார்‌ கூறக்‌
குடி கொண்டு வாழுங்‌ குணத்தன்‌–கடி கொண்ட
மா மலர்த்தாள்‌ வைத்தி ராமாநுஜனைப்‌ போற்றுபவர்க்‌
காமலத்தைப்‌ போக்குமே யாய்ந்து–37-

புண்ணியர்க ணித்தம்‌ புரளாது நற்றுளபக்‌
கண்ணி யிடு மால் பதத்தைக்‌ கண்டு தொழும்‌–பண்டையர்கள்‌
போற்று மிராமாநுஜ நின்‌ பூ மலர்த் தாள்‌ சென்னியில் வைத்
தேற்ற மனத்‌ துள்ள விசை–38-

ஆர் தரமோ விந்த வயர் தரு மாவுலகிற்‌
சேரிருளின்‌ வெந்துயரஞ்‌ சேதிக்கத் –தார் மருவு
மீறிலிரா மாநுஜனை யென்றுந்‌ துதித்தவர்க்குக்‌
கோ றிடுவன்‌ பாவக்‌ குணம்‌–39-

அங்கையி னெல்லி யருங்கனி போற்‌ றோற்றுவிக்கு
நங்கை மலர்‌ சூடுகின்ற நாதன்றன்‌–பொங்கு புகழ்ச்
செம்மலி ராமாநுஜனாஞ்‌ சேம வைப்பை. நித்த நித்தந்‌
தம்மிலிடு வார் பவம் போந்‌ தான்‌–40-

பொருளொடு தன்‌ மக்களுடன்‌ பூங்குழலாட்‌ பூவு
மருள் கொண்‌டிளை நெஞ்சே மற்று–மிருள் கொண்ட
வெந் துயர நீங்குமிரா மாநுஜன்றன்‌ மெய்ப்பதமு
வந்து தரி னென்றே மதி–41-

வீடுடனே சொற் பொருளு மேவு நல வின்ப சுகந்
தேடுந்‌ தருமந்‌ திகழ் கண்ணன்‌–றாடமக்கா
மென்றுரைத்த வள்ளலி ராமாநுஜனா மிந்நிலத்தி
லென்று மின்ப மீகுவனென்‌ றேத்து–42-

மண் மிசையே யோனிகளில்‌ வந்து பிறந்‌ தெங்களிறை
கண்ணுற்று நிற்கினுமே காண்கில்லா–மண்ணிலத்தோர்க்‌
கண்ணலிரா மாநுஜன்வந்‌ தாதரித்துப்‌ பின்பவர் தா
ளண்ணடுமை கொண்டார்‌ நலம்‌–43-

ஆயிழையார்‌ கொங்கை யெனு மாரளற்றிற்‌ றங்கு மிக
மாயு நல்‌ லாவிக்கு வாழ்வு தர– நாயகனா
யெல்லா வுயிர்கட்கு மேலுமிரா மாநுஜனாத்
தொல்லோ னருளினது தோய்வு–44-

௬ரக்குந்‌ திருவுடனே சொல்லு முணர்வும்‌
பறக்கு மிரு வினையின்‌ பற்றுந் –தரைக்கு
ளுறு கலியைப்‌ போக்கு மிரா மாநுஜனென்‌ றோதப்‌
பெறு வரிவை மெய்யெனவே பேசு–45-

நல்லார்‌ பரவுமிரா மாநுஜன்‌ றன்‌ னாமநம்பிக்‌
கல்லா ரகலிடத்துக்‌ காமிப்பா–ரல்லாது
சொல்லார்‌ திரு மொழியைச்‌ சோதித் தவற்கு நிதம்‌
பல்லார் பல்‌ லாண்டு பரிந்து–46-

பேறொன்று மற்றில்லைப்‌ பேசுஞ்‌ சரணன்றி
யாறொன்று மின்றி மற்‌றச் சரணந்‌–தேறுமவர்க்‌
கெற்கு முனை தந்த வெழிலிரா மாநுஜனைக்‌
கற்குபவர்க்‌ கில்லை பவங்‌ காண்‌–47-

கூறுஞ்‌ சமயங்‌ குலையக் குவலயத்தே
மாறன்‌ மறை தேர்‌ மதியுள்ளான்‌–றேற
மனத்திற்‌ புக விரா மாநுஜனை யென்றுங்‌
கனத்திற்‌ கருதிடுவாய்‌ காண்‌–48-

நாடா தெனது மன நாடா தெனது கர
நாடா தெனது புய நானிலத்தி–னாடத்‌
தெரிக்கு மிரா மாநுஜன்றான்‌ செய்த கவி யொன்றிற்‌
கரிக்கும்‌ பவங்கள்‌ கனிந்து–49-

இறைஞ்சப்‌ படு பொருள் ஈசனரியென்‌
றறத்தை மொழியு நல்‌ லண்ணற்‌–றிறத்த
விரு வினையைப்‌ போக்கி யிதயத்தி னுள்ளே
வரு மிரா மாநுஜனை வாழ்த்து–50-

மாதவர்க ணித்தம்‌ வணங்கு திரு மாதின்‌ _
காதலனை நற்றோழி காமுறுவேற்‌–கேதமில்லாத்‌
தேன்றுளப மாலை தரத் தென் குருகை நாதன் மகிழ்க்‌
கோன்றிரு ராமாநுஜற்குக்‌ கூறு–51-

நிகரின்றி நின்ற நின தருளை யன்றி
புகலொன்று மில்லை புகற்‌ புன்மை–யகலு நெறிச்
செப்பு மிராமாநுஜற்குச்‌ சேர்ந்தடுமை யானபின்‌ 3
றப்பும்‌ பொருளென்னோ சாற்று–52-

குலத்தின் கட்‌ டோன்றின து தர்ம்ம நெறி புன்மைப்
பலத்த மதங்கள்‌ பறந்து–குலைந்திடவே
வந்துதித்த வெங்களி ராமா நுஜனைக்‌ கண்ட பின்‌ :
னெந்த வித மாயிற்றோ வெண்ணு–53-

தாழா தெனது சென்னித் தாழா தென துகரத்
தாழா தெனது தோட்‌ டாரணியிற்‌ –றாழ
மற்றொன்றும்‌ வேண்டா மதியிரா மாநுஜன்‌ றன்‌
பொற்றாளை வைத்தாளப்‌ போற்று–54-

இராமா நுஜன் றன்‌ னிணையடிகள்‌ பற்றா
தராதி மனங்க ளகன்று–பராகமா
யார் கலியிற்‌ றேங்கி யரு நரகில்‌ வீழ்வர் கொலோ
பார் மகட்குப்‌ பாரமெனப்‌ பார்த்து–55-

அடியைத்‌ தொழுத நல்‌ லைவர்கட்‌ காக
முடியப்‌ பரித்தேரை முன்ன–மடிய விட்‌
டாதரித்தக்‌ கண்ணனடி யண்டுமி ராமாநுஜ வெற்‌
காதரித்தக்‌ கண்டிரா தாக்கு–56-

பார்த்தா னறு சமையம்‌ பாரிற்‌ பதைத்து விடப்‌
போர்த்தான்‌ புகழைப்‌ புகுந்தெமது –தீர்த்தா
னிரு வினைக ளெம் மிராமாநுஜன் றாட்‌ செய்யும்‌
பெருமிதமா மற்புதத்தைப்‌ பேசு–57-

பற் பல்‌ லுயிர்களுடன்‌ பல்லுலகி யாவுமே
சொற் பரன்றா மென் றவிந்தச்‌ சோதனையைத்‌ -தொல்லுலகி
னாட்டு மிரா மாநுஜனை நானிலத்திற்‌ சேர்‌ந்தவர்கட்‌
கோட்டுமே தீ நெறியை யுன்னு–58-

நாட்டுஞ்‌ சமய நசிந்தனவே நாரணனைக்‌
காட்டு மறையுங்‌ களித்தனவே–வாட்டமிலாத்
தென் மறைகள்‌ வாழ்ந்தனவே செப்புமிரா மாநுஜன் செய்க்‌
கன்மடப்‌ போக்கியல்பு கண்டு–59-

தொண்டர்‌ குலாவு மிரா மாநுஜனைத் துய்ய மறை
யண்டங்க மஞ்சிட்‌ டனனாகி–மண்டலத்திற்‌
றோற்றிக்‌ கதிர் விடவே சூழ்பவன்றன்‌ கட்பார்வைக்‌
காற்றுகைம்‌ மாறென்‌ னறி –60-

கோக்குலத்து மன்னர்களைக்‌ கூர் மழுவா லிவ் வுலகிற்‌
போக்கிய தேவனைப்‌ போற்று நல–மாக்கிய வண்‌.
கீர்த்தி யிரா மாநுஜனைக்‌ கேட்க மன மற்றவர் தஞ்‌ :
சீர்த்தி யுரை யாதெனவே செப்பு–61-

மற்றொரு பேறு மதியா தரங்கனடி
யுற்றவரே தனக்‌ குற்றவராய்ப்‌–பெற்றவனை
நற்றவர்கள்‌ போற்று மிரா மாநுஜனை நானிலத்தே
பெற்ற பின்‌ னல்லவோ பேழ்‌–62-

தேடரிய வேதச்‌ சுடரொளியா லஞ்ஞான
மோடத் துரத்தினா னோங்காரங்‌–கூடாரைச்‌
செற்று மிரா மாநுஜன் றன்‌ செவ்வை தரு நற் கமலம்
பற்றுபவர்‌ நெஞ்சே பணி–63-

கொழுந்து விட்‌ டோடு வெங்‌ கோள் வினைக ளெம்மை
யழுந்தி விடா தாட் கொள்ளு மன்பன்‌–தொழு தவத்தோ
னெம் மிரா மாநுஜன் றா னின்போடு வீற்றிருந்‌
தெம் பொருளாய்‌ நின்றவனை யேற்று–64-

பெருந் தேவரைப் பரவப்‌ பேணு நல்‌ லெண்ணத்
திருந்தே னிரு வினைக ளேகப்‌–பொருந்தா
நிலை யுடைய புல்லரிட நின்று பிரி நெஞ்சே
நிலை யிரா மாநுஜற்கு நேர்‌–65–

உணருடைய ஞானிக ளுய்யு திரு தென் சொன்‌
மணந்தரு மின்னிசை கண்‌ மன்னப்‌–புணர்ந்த பொன்‌
மார்பன்‌ பொருந்து பதி வாழ்த்தி யிறைஞ்சி நிற்கு
மார்க்க மிரா மாநுஜன் றன்‌ வாழ்வு–66-

பிடியைக்‌ களிறு போற்‌ பின் பற்றி யானின்‌
னடியைத் தொடர வளிப்பாய்ப்‌–படியி
லறு சமயப்‌ பூண்டதனை யாளுமவர்‌ சிந்தைப்
பெறு மிரா மாநுஜ நற்‌ பேறு–67-

பண்டரு மாறன்‌ பசுந் தமிழ்கள்‌ பாழ் மதங்கள்‌
விண்டிட்டு மெய்ம்மை விளங்கிடவே–யண்டத்து
வேதக்‌ கொழுந்தேந்த மேதினியில்‌ வீற்றிருக்கு
நாதனி ரா மாநுஜனை நற்று–68-

வாழ்வற்‌ றது தொல்லை வாதியர்க்கு மன்னு மறை
தாழ்வற்‌ றது மிக்கத் தாரணியிற்‌-. -கூழற்‌
றது குற்ற மெல்லா மறத்தைத் தருமென்‌
னது விரா மாநுஜன்‌ றண்‌ ணன்பு–69-

சரண மடைந்தவர் தஞ்‌ சத்துருவை முன்ன
மரண மடைவித்த மாயன்‌–முரகரியை
வாழ்த்தக்‌ கரணங்கண்‌ மாநிலத்தி லென்றென்றுந்
தாழ்த்துமிரா மாநுஜனைச்‌ சாற்று–70-

யாரு மெனக்கு நிக ரின்றென்று பாண்டவர் தந்‌
தேரினின்று சொன்ன செழும் பொருளைப்‌–பாருலகிற்‌
செப்பு மிரா மாநுஜனைச்‌ சென்று தொழ வாவி கிந்தைத்
தப்புவிக்கு மார் நரகந்‌ தான்‌–71-

சிந்தை கரணஞ்‌ சிதைந்தனவே யென்று முனா
ளந்தமின்றித்‌ தாழ வவையேற்குத்‌-தந்தருள
வெந்தை யிரா மாநுஜனா யீங்குதித்த பேரடியைச்‌
சந்ததமுஞ்‌ சிந்தை தனிற்‌ சார்‌–72-

என்னியல்பைப்‌ பார்த்து மிக வெண்ணில்லாப்‌ பற் குணத்தா
யென்னை யினி நோக்கி யெனக்கு நலந்‌–தன்னை
யளியாத தென் னென்பா ராருலகி னல்லோர்‌
களி யிரா மாநுஜனைக்‌ கண்டு–73-

சார்ந்த தென்‌ சிந்தை யுன்‌ தாளிணைக் கீழன்பு மிகக்‌
கூர்ந்தது நின்‌ பாதக்‌ குணங்களுக்குத்‌ தீர்ந்ததென்‌
செய்கை யிரா மாநுஜன் றாட்‌ சேவடிக்கு முன் வினையு
முய்கையரி தன்‌ றனவே யுன்னு–74-

சமயக்‌ கலகரைச்‌ சாய்த்து மிக வுய்ய
வமையு மறையு மளித்‌துத்‌–தமரவன்ற
னுள்ளங்க ணெய்த் தேத்த வோங்கு புகழ் தரு மா
வள்ளலிரா மாநுஜனை வாழ்த்து–75-

தேரார்‌ மறையின்‌ நிற மறியாத்‌ தீயவரைக்‌
கூராழி கொண்டு குறை. கோபால–னேரார்‌
குணத்திரா மாநுஜன்றான்‌ கொள்ளு மெழின் மறையின்‌ மணத் திருந்‌ தாரை மதி–76-

ஈந்தனனே யின்னருளா லெண்ணின்‌ மறைப் பொருளை
யேய்ந்தனனே கீர்த்தி தனை யிப்படியிற் –காய்ந்தனனே
யென் வினைகள்‌ வேர் பறிய வீங்கி ரா மாநுஜன் றன்‌
னன்மை தரு பாதமே நச்சு–77-

பொய்ப் பொருளை யென்னிற்‌ பொருந்தாம லுன்றனது
மெய்ப் பொருளைப்‌ போற்றி விசுவமதி–லுய்யு
மருத்துந்‌ தரு மிரா மாநுஜ நின்‌ சேவடியாற்‌
கருத்தினது கள்ளங்‌ கழற்று–78-

நல்லார்‌ பரவு மிரா மாநுஜன் றன்‌ னாம நம்ப
வல்லார்‌ திறத்தை மறந்திடார்க்‌–கெல்லா
விடத்தினு மென்று நித மெத் தொழும்புஞ்‌ செய்யத்‌
திடத்திருக்கு நெஞ்சே தெளி–79-

சோர்வின்றி நின் றனக்குத்‌ தொண்டு பட்‌ டார்களிடஞ்‌
சார்வின்றி நின்ற வெற்குத்‌ தாளிணைகள்‌–பேர்வின்‌றி வாய்ப்பக்‌ கருணை யிரா மாநுஜன்‌ றண்‌ ணேரடிகட்‌
கேய்ப்ப தொன்‌ நின்றே யினி–80-

தெரிவரிய ஞானத்தைச்‌ சேர்ந்தொமுகப்‌ பேணாத்‌
திரு வற்ற வஞ்ஞானஞ்‌ சேரு–மரு வினையைப்‌
போக்கு மிரா மாநுஜனைப்‌ போற்றினா னன்னெஞ்சே
யாக்கிடுவ னற் பதவி யாய்ந்து–81-

சீர் கொண்ட பேரறத்தைச்‌ செய்பவர் தம்‌ புண்ணியத்தாற்
பார் கொள்ளு முன் றன்‌ பதயுகமா–மேர் கொண்ட
வீட்டை யிரா மாநுஜன்றான்‌ மேன்மை பெற வீகுமவன்‌ பாட்டை யறி மனமே பார்த்து–82-

கண் டுகொண்டே னுன் றன்‌ கருணை தனை நித்த நித்தந்‌
தொண்டு கொண்டேன்‌ றொண்டரது துய்யத்தாள்‌
விண்டு கொள வன்பவந்தா னெம்மிரா மா நுஜனை யேத்திட்டா
லென்னுலப்பு நெஞ்சே யினி–83-

ஓதிய வேதத்தி னுச்சியின்‌ மீதிலகு
சோதியை நாதனெனச்‌ சூழாதப்‌–பேதமையைத்
தீர்த்த விரா மாநுஜனைச்‌ சேர்ந்தொழுகு தொண்டர்‌ துகள்‌
போர்த்து நித நன்னெஞ்சே போற்று–84-

பற்றாத மாநுடரைப்‌ பற்றிய தீப்‌ பற்றை விடா
துற்றா ரெனவுழன்‌ றோடாது–கற்றார்‌
பரவு மிரா மா நுஜனைப்‌ பற்றுபவர்‌ பெற்றா
லரணமக்கு நெஞ்சே யறி–85-

பெரியவர்க ணன் மொழியைப்‌ பெட்புடனே சொல்லற்‌
குரிய மனதீதோ டிணங்கத்‌–தெரிவரிய
மானத் தரு மிரா மாநுஜன்‌ றண்‌ ணற் பதத்தைத்
தானமாய்‌ புன்னெஞ்சே சாற்று–86-

தென் மொழியை யுண்டு திறந்‌ தேர்ந்து தடித்ததனா
லன்பு மிகச்‌ சீயமிரா மாநுஜன்‌ றன்‌–னின்மொழிக்கு
வாதியராம்‌ வேங்கை கடம்‌ வாதனை கணிக்க வந்த
பாதநித நெஞ்சே பணி–87-

மாட்சித் தரு மிரா மாநுஜனே நின்னை யன்றிச்‌
சாட்சியொடு சாற்றுதற்குத்‌ தாழ்வில்லா–வாட்சி பெறு
மேற்ற மென்‌றே கொண் டிருக்கு மென்‌ சிந்தை தனக்‌
காற்று திறந்‌ தந்தளிப்ப தார்‌–88-

நினையார்‌ பிறவி தம்மை நீக்குகின்ற நாத
னெனை யாள வந்த விறையைப்‌–புனையா
ரிராமா நுஜன்மே லின்பு தரு பாக்க
ளராவும்‌ பவமதனை யாய்ந்து–89-

ஆகமத்தார்‌ கூறு மவப் பொருள்க ஞண்மை யுள
தாக மிகப் பயவா தண்டத்துக்‌–காகநதிச்‌
சேரு மரங்கனெனச்‌ சீவர்க்குச்‌ செப்பு பொருள்‌
பாரு மிரா மாநுஜன் றன்‌ பண்பு–90-

புண்ணிய நோன்பு பொருந்துமிலேன்‌ போற்றி செய
நுண்ணருங்‌ கேள்வி நுவன்றுமிலே–னெண்ணரிய
கீர்த்தி யிரா மாநுஜ நீ கேள்விகண்‌ ணெஞ்சில் புகுந்
தார்த்தி கெட வந்தருள்வை யாய்ந்து–91-

கட்டப்‌ பொருளாங்‌ கயவர் சொலும்‌ புன் மறையின்‌
பெட்டைக்‌ கெடுத்தவர் தம்‌ பேதமையை– வெட்டிப்‌
பவத்தை யிரிக்கு மிரா மாநுஜன் றன்‌ பாதத்‌
துவமித்தற்‌ கூடொணா வுய்த்து–92-

தவந் தருஞ்‌ செல்வந்‌ தகவுந்‌ தரு மெம்‌
பவந் தருந்‌ தீ வினைகள்‌ பாற்றித்‌–திவந்தருந்
தீதிலிரா மா நுஜனைச்‌ சேர்ந்தவர் க டம்பதத்தை
யோதிடுவாய்‌:நெஞ்சே யுணர்ந்து–93-

உண்ணின்‌ நுயிர்கடமக்‌ குற்றனவே செய்‌ துயர்வு
பண்ணும்‌ பரனும்‌ பரிவுடனே–யெண்ணு நன்‌
மாடளிப்பன்‌ றண்ணி ரா மாநுஜனிம்‌ மேதினி யிற்‌
றேடரிய வேததந் தெரித்து–94-

வளரும்‌ பிணி கொண்ட வல் வினையான்‌ மிக்கக்‌
கிளருந்‌ துணிவுங்‌ கெடுத்துத்‌–தளரு நிலை
யாய்ந்திரா மாநுஜன்று னன்போ டுவந்து பவஞ்‌
சாய்ந்திரா தென் கொலோ சாற்று–95-

போந்த தென்‌ னெஞ் சென்னும்‌ பொன் வண்‌ டுனதடியிற்‌
காந்தெளி தேனுண்‌ டகங்களிக்க–வீந்தருள
வேண்டு மிரா மாநுஜனே வேறொன்று காட்டி மயக்‌
காண்டிடினுஞ்‌ செல்லா தறி–96-

மயக்கு மிரு வினையாம்‌ வல்லி தனைப்‌ பூண்டு
துயக்கும்‌ பிறவித்‌ துயரி–லுயக் கொண்டு
நல்க விரா மாநுஜவித்‌ நானிலத்தி னின்னை யுன்ன
லல்லா திழுக்கெனவே நாட்டு–97-

உன் றன்‌ குணங்களையே யுன்னி யென்‌ னாவிருந்‌
தென்று மிரா மாநுஜவென்‌ றேத்த நித–நன்று தர
கையுந்‌ தொழுங் கண்‌ கருதிடுமே காணுதற்க
வைய மதனின்‌ மதித்து–98-

இருக்குமிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடமெண்‌ சோலைப்‌
பொருப்பிட மா மாயனுக்குப்‌ போற்‌றி –யிருக்குமிட
மாயனி ரா மாநுஜ நின்‌ மா மனத்‌ தின்றவன்றான்‌
றாயகமா யென்னகத்திற்‌ சார்வு–99-

அங்கயல்‌ சூழு மணி யரங்க நாதனொடு
பங்கயமாம்‌ பாவைப்‌ பழிச்சுதுந்‌– துங்கமதாய்தீ
தங்கிய பத்தித்‌ தலை மிசையே கீர்த்தி மிகப்‌
பொங்கு மிரா மாநுஜன் றண்‌ பூ–100-

பூதலமுந் தான் வாழிப்‌ பூ மகளுந்‌ தான் வாழி
வேதமுதன்‌ மற்றெவையும்‌ வீறுதற்கு–நாதனருட்‌
பெற்ற விரா மாநுஜனும்‌ பெட்பொடு சொன் மாலைக்‌
கற்றவரும்‌ வாழி நிதங்‌ காண்‌–101-

வாழி யிரா மாநுஜனும்‌ வாழி யவன்‌ பாமாலை
வாழியதைக்‌ கற்ற வரு மாநிலத்தில்‌–வாழியவன்‌
நற்றவரும்‌ வாழி யரு ணண்ணினரும்‌ வாழி யவன்‌
சொற்ற மொழி வாழித்‌ தொடர்ந்து–102-


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவான் -ஞானாதி ஷட் குண வர்ணனைகள்-நம் பூர்வாச்சார்யர்கள் விளக்கம்–

October 18, 2024

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே-மங்கள ஸ்லோகம்

யோ வேத்தி யுகபத் -உள்ளுவார் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்-

ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத் தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

நாத முனி
ஆதி முனி
ஓதும் முனி
கீதா முனி
தாத முனி
தூத முனி
ரெங்க நாத முனி
பாத முனி முனி
போத முனி
பேத முனி
அபேத முனி
மோத முனி
வேத முனி

——–

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–
1-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்
-2-

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன
-ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி-

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-
3-

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா
—24-

பகவந் –
ஜ்ஞானாதி குண பூரணரான
தேவருடைய பேறு என்னும் இடம்
நான் சொல்ல வேண்டுமோ -என்கை

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி
–39-

ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
இருவருமாய்ப் பரிமாறும் போது
அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு
ஆஸ்ரயமாய் இருக்குமவன் –
ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே
துகைத்துப் பரிமாறலாம் படியான
தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—
49-

பகவன்-
இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில்
ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும்
தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை
என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை –
இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப
—51-

பகவன் –
இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—
54-

பகவன் –ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால்
ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால் பூரணன் -என்கை –

பக்திமபி ப்ரயச்ச-யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்-அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –

—————————————-

ஓம் பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் பத்ம வநாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம் அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

பகவன் நாராயண –
பகவச் சப்தத்தாலே(-ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் ஸக்தி தேஜஸ்-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-அகில ஹேய ப்ரத்யநீகமும் சொல்லும் -இவனுக்கே முக்யார்த்தம் -மற்றவர்களுக்கு கௌண -இவன் சம்பந்தத்தால் லேசம் இருந்தாலும் பகவத் ஸப்த பிரயோகம் பண்ணுகிறோம்-சினத்தினால் செற்ற –மனத்துக்கு இனியான்   )
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது –

இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குண பூர்ணனுமாய்(ஸமஸ்த கல்யாண குண ஆர்ணவம் -குணக் கடல் )
பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் -என்கிறது-

நாராயண –
பகவச் சப்தத்திலே சர்வமும் இல்லையோ
இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்

அந்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு(ஸர்வத்ர ப்ருஹத் -இருப்பதிலேயே பெரியதாகியும் -ஆஸ்ரிதரை பெரியவராக்கி -அளவிலும் – குணங்களாலும் -ப்ருஹத்
ப்ரஹ்ம சப்தம் பிரக்ருதிக்கும் -ஆத்மாவுக்கும் பத பிரயோகம்
முடிவில் பெரும் பாழ் -நிர்தோஷ ஆத்மா முக்தனையும் ப்ரஹ்ம ஸப்தம் பிரயோகம் )

அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
யோக ரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
அத்தாலே விசேஷிக்கிறது-

(காரணப் பெயர் –பாசக -சமையல் காரர் –நாற்காலி போல் –யவ்க்கிகம்
இடுகுறிப் பெயர் -குடம் மாடு -புத்தகம் -பிரித்து அர்த்தம் கொள்ளாமல் இதுக்கு இந்தப் பெயர் -ரூடி -பிரசித்த
யோக ரூடம் -இரண்டும் -பங்கஜம் -சேற்றில் இருந்து தோன்றியவையும் -தாமரை -யோகமும் ரூடியும் உண்டே – நாற்காலி -பூனைக்கும் நான்கு கால்கள் இருந்தாலும் -பிரசித்த அர்த்தம் குறிப்பிட்ட வஸ்துவுக்கே
ஆக மூன்றுமே உண்டு-நாராயணன் யோக ரூடி -உலகில் உள்ள அனைத்துக்கும் இருப்பிடம் -காரணப் பெயர் -குறிப்பிட்ட வ்யக்திக்கே பிரயோகம் -ஆகவே ரூடி -)

(நார -அயன -பதங்கள் சேர்ந்து -நாராயண -ஆனதே
சூரப்ப -நகம் -சூர்ப்பணகை -முரம் போன்ற நகம் கொண்டவள் -இவளுக்கு மட்டுமே இவ்வாறு
தஷிணாயனம்
உத்தராயணம் -இங்கு மட்டும் ண)

ஆக –பகவன் நாராயண -என்று
சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனைச் சொல்லிற்று ஆயிற்று –

(பகவான் நாராயண
குண விபூதி புஷ்கல பரம் -ஸ்ருத ப்ரகாசகர்
ஈறில வண் புகழ் நாரணன் என்றும்
நாரணம் முழு ஏழு உலகுக்கும் நாதன் என்றும் சொல்லுமா போல்)

ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய சௌர்ய பராக்ரம சத்ய காம சத்ய
சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத் அசங்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

ஸ்வா பாவிக
ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை

அநவதிக அதிசய
நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
அவற்றில்

ஜ்ஞான –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –

பல –
சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய
சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்

வீர்ய
சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம் வேராத அநாயாமை
எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரதை என்னவுமாம்

சக்தி –
ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் என்னவுமாம்
ஜகத் உபாதான சக்தி என்னவுமாம் –

தேஜஸ் –
பராபிபவன  சாமர்த்தியம்-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல சத்ய காம சத்ய சங்கல்ப பர ப்ரஹ்ம பூத

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –3-பர ப்ரஹ்ம பூத –ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறது –யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -(ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்தி) என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கர்மீ பவித்து இருந்துள்ள அசங்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –

பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ஸ்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-

சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்-உபாதான சக்தி யாகவுமாம்

தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்

இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே

——————–

ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலம் அதுலம் ஐஸ்வர்யம் அகிலம்
விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச
பரம் தேஜஸ் ச இதி ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம்
குணா நாம் நிஸ்ஸீம் நாம் கணநவி குணாநாம் பிரசவ பூ –15-

ஹே வரத
ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் -சிறந்த ஞானம் என்ன
அதுலம் பலம் -ஒப்பற்ற பலம்
அகிலம் ஐஸ்வர்யம் -அநவதிகமான ஐஸ்வர்யம் என்ன
விமர்யாதம் வீர்யம் -எல்லை அற்ற வீர்யம் என்ன
பரமா சக்திரபி ச-ஸ்ரேஷ்டமான சக்தி என்ன
பரம் தேஜஸ் ச -சிறந்த தேஜஸ்ஸூ என்ன
இதி -ஆகிய இவையாகிற
பிரதமஜம் ப்ரவர குண ஷட்கம் -முதல் மூர்த்தியான ஸ்ரீ பர வாஸூ தேவ மூர்த்தி இடம் உள்ள சிறந்த ஆறு குணங்களானவை
நிஸ்ஸீம் நாம்-எல்லை அற்றதுகளும்
கணநவி குணாநாம்-எண்ணக் கூடாததுகளுமான
குணா நாம் பிரசவ பூ -கல்யாண குணங்களுக்குப் பிறப்பிடம் –

இந்த ஆறு குணங்களும் இன்ன இன்ன காரியத்தில் விநியோகம் என்னும் இடம்
ஸ்ரீ ரெங்க ராஜ சத்வ உத்தர சதகம் -யுகபத நிகமஷை -இத்யாதி சப்த ஸ்லோகங்களில் விசதம்

த்வ அநந்த குணஸ்யாபி ஷட் ஏவ ப்ரதமே குணா –இந்த ஆறுமே அஸங்க்யேயங்களான குண கணங்களுக்கு ஊற்றுவாய்
பிரதமஜம் -என்று குணங்களுக்குள் முதன்மையானது என்றுமாம்
நிஸ்ஸீம் நாம்-ஒரு பெரிய ராசியாகவும் எண்ண முடியாதவை —
ஒரு கூடை மண் ஒரு வண்டி மணல் போலே கூட முடியாதவை என்றவாறு –

————–

பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-

பகவாந் — அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர்
பகஹா — ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர்

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்},
(அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா},

563-பகவான் -குற்றம் அற்றதாய் குணங்களே நிரம்பிய ஸ்வரூபம் ஆனதால் பூஜிக்கத் தக்கவர் –
564-பகஹா -முன்னால் கூறியபடி ஜ்ஞானம் முதலிய ஆறு குணங்களை உடையவர் –

563-பகவான் –
பூஜைக்கு உரியவன் -உயர்வற உயர்நல உடையவன்

ஏவம் அஸேஷ தோ₃ஷ வித்₃வேஷி கல்யாண ஸ்வரூப தயா பரம பூஜ்யோ
ப₄க₃வான் ॥(அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண ஏக குண நிதி )

தீதில் சீர் நலம் திகழ் நாரணன்-உணர் முழு நலம் -அந்தமில் ஆதி அம் பகவன்
கணக்கறு நலத்தனன் அந்தமிலாதியம் பகவன் -1-3-5-

குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம் பகவதே நம:

‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.

ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்

பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. பகவான் – வழிபாட்டுக்குத் தகுதியானவர்

இந்த நாமத்திற்கு பின்வரும் அர்த்தங்கள் உள்ளன:

  • வணக்கத்திற்கு உரியவர்
  • ஆறு குணங்கள் அல்லது ஷட் குணங்கள் நிறைந்தவர். ஞானம் (அறிவு), சக்தி (ஆற்றல்), பலா (வலிமை), ஐஸ்வர்யா (இறையாண்மை அல்லது செல்வம்), வீரியம் (வீரம்), மற்றும் தேஜஸ் (பிரகாசம் அல்லது பிரகாசம்)
  • எல்லா உயிர்களின் தோற்றத்தையும் முடிவையும் அறிந்தவன்

பகவான் பின்வரும் 6 தெய்வீக குணங்களை போதுமான அளவில் பெற்றிருக்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் விளக்குகிறார். அவர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.74) மேற்கோள் காட்டுகிறார்:
ஐஸ்வர்யஸ்ய ஸமாக்ரஸ்ய தர்மஸ்ய யஷஸஸ் ஶ்ரியா |
ஞான வைராக்யயோஹ்ஸ் சைவ ஷன்னாம் பக இதீரணா ||
பக என்பது ஐஸ்வர்யம் (செல்வம்), தர்மம் (நீதி), யஷா (புகழ்), ஸ்ரீ (செழிப்பு), ஞானம் (அறிவு) மற்றும் இறுதியாக வைராக்யம் (இரக்கம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஆறு குணங்களும் பகவை வரையறுக்கின்றன, பகவை உடையவன் பகவான்’.

ஸ்ரீ சங்கரர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.78) மற்றொரு ஸ்லோகத்தின் அடிப்படையில் கூடுதல் விளக்கத்தை அளிக்கிறார்:
உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானம் ஆகதிம் கதிம்;
வேட்டி வித்யாம் அவித்யாம் ச ச வாச்யோ பகவான் இதி
எல்லா உயிரினங்களின் தோற்றம் மற்றும் முடிவு, வருகை மற்றும் வெளியேறுதல் மற்றும் அறிவு மற்றும் அறியாமை ஆகியவற்றை அறிந்தவர் என்பதால் அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து மங்களகரமான குணங்களையும் கொண்ட அவரது இன்றியமையாத இயல்பு காரணமாக அவர் வழிபாட்டிற்கு தகுதியானவர் என்று ஸ்ரீ பட்டர் நாமத்தை விளக்குகிறார். ‘பக’ என்ற சொல்லுக்கு ஆறு பண்புகளைக் குறிக்கும் சிறப்புப் பொருள் உண்டு, ஆனால் ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை விளக்குவதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்தவில்லை. மாறாக, “வணக்கத்திற்குரியவர்” என்று விளக்கம் தருகிறார். அமரகோஷத்தில், “பஜ்யத இதி பகஹ்” என்ற குறிப்பு உள்ளது, இது ஸ்ரீ பட்டரின் விளக்கத்திற்கு பொருத்தமானதாகத் தெரிகிறது.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. [2899]
இதயமே, எழுந்திரு, உயர்ந்த நன்மையை விட உயர்ந்தவனும், எப்போதும் இல்லாத வானங்களின் இறைவனுமான, எல்லா சந்தேகங்களையும் நீக்கி, தூய அறிவை வழங்குபவனின் பாதங்களை வணங்கு.

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. [ 2925 ]
வேதங்களின் வழிமுறையை ஏற்றுக்கொண்டு, அவரை உணர்தல் மூலம் அறிந்து கொள்ளுங்கள், அவர் ஆதியும் முடிவும் இல்லாத இறைவன் (பகவான்) எல்லையற்ற பண்புகளைக் கொண்டவர். எல்லா சந்தேகங்களையும் கைவிட்டு, அவரிடம் சரணடையுங்கள், ஏனென்றால் அவர் ஆறு சிந்தனைப் பள்ளிகளில் உள்ள மோதல்களைத் தீர்க்கிறார்.

ஸ்ரீ வைஷ்ணவ பள்ளிகளில் பழமையானது பாகவத மற்றும் பஞ்சராத்ர பள்ளிகள். பாஞ்சராத்ர பள்ளியின் வணக்கத்திற்குரிய பகவான் ‘வாசுதேவா’ என்ற பரா வடிவமாக இருக்கிறார் – இந்த நாமம் சர்வ வியாபக அல்லது அனைத்து வியாபகத்தையும் குறிக்கும். வாசுதேவரின் ஷட்-குணங்களின் காரணமாக, அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்:
ஞான-சக்தி-பல ஐஸ்வர்ய-வீர்ய-தேஜஸ் அஸ்யாஷே ஷதா |
பகவான் சாப்தவாச்யாநி வினா ஹேயைர்குணாதிபிஹ ||

பகவான் இந்த ஆறு குணங்களுடன் (அதாவது ஞானம், சக்தி, பலா, ஐஸ்வர்யம், வீரியம் மற்றும் தேஜஸ்) முழுமை பெற்றவர், மேலும் அவர் அனைத்து ஹேய குணங்களும் இல்லாதவர், எனவே அவர் பகவான் என்று குறிப்பிடப்படுகிறார்.


564-பகஹா
நல்ல குணம் உடையவன் -குண பூரணன்-ஹா அடைந்தவர் அர்த்தம் இங்கு

கு₃ணதோ(அ)பி ததா ₂,
ப₄க₃ஹா ।
ஐஸ்வர்யஸ்ய சமகர்ஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீயஸ் ஞான வைராக்ய யோச்சைவ ஷண்ணாம் பக இதீரனா–ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி செல்வம் ஞானம் வைராக்யம் ஆறுக்கும் பக என்று பெயர்

தம் ஹந்தி-க₃ச்ச₂தீதி; ஹந்திர் க₃மந கர்மா ।

அத்ர வைஷ்ணவே ஷஷ்டே ₂(அ)ஸே ப₄க₃வச் ச₂ப்₃த₃ நிர்வசந ப்ரகரணம் லேக்₂யம் ॥(ஆறாவது அம்சம் விரித்து உரைக்கும்-அங்கே கண்டு கொள்ளவும் )

வண் புகழ் நாரணன் -1-2-10-

நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

  1. ஓம் பகக்னே நம:

ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை

ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்

ஹந்தீதி அழிப்பதால்

பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.

————-

  1. பகஹா – அவர் மங்களகரமான பண்புகளை உடையவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஹா’ என்ற பின்னொட்டினால் அழிப்பவர் அல்லது நீக்குபவர் என்று விளக்குகிறார். ‘க்ரோதஹா – கோபத்தை அழிப்பவர்’ மற்றும் ‘காமஹா – ஆசைகளை அழிப்பவர்’ மற்றும் ‘துஷ்கிருதிஹா – தீயவர்களை அழிப்பவர்’ போன்ற நாமங்களை நாம் முன்பு பார்த்திருக்கிறோம். இதே ஒப்புமையால் சங்கரர் ‘ஐஸ்வர்யாதிகம் சம்ஹார ஸமயே ஹந்தி இதி பகஹா – பிரபஞ்சம் கரையும் அல்லது பிரளயத்தின் போது பகாவின் கீழ் வரும் 6 பண்புகளை அழிக்கிறார்’ என்கிறார். உயர்ந்த குணங்கள் உட்பட அனைத்தும் இறுதிப் பிரளயத்தில் செல்ல வேண்டும், பகவானைத் தவிர வேறு எதுவும் இந்த இறுதிச் செயலில் தப்பிப் பிழைக்காது.

பகஹாவிற்கு ஸ்ரீ பட்டரின் விளக்கம் ஆறு பண்புகளைக் குறிக்கும் பக என்ற பொருளைப் பயன்படுத்துகிறது, மேலும் ஸ்ரீ சங்கரரின் கடைசி நாமத்திற்கு (VP 6.5.74) பயன்படுத்தும் அதே விஷ்ணு புராணக் குறிப்பை இங்கே மேற்கோள் காட்டுகிறார். ஸ்ரீ பட்டர் தம் விளக்கத்தில் “ஹந்தி எனப் போகிறது” என்ற பொருளைப் பயன்படுத்தி, இந்த ஆறு தெய்வீக குணங்கள் பகவானுக்கு வழி காட்டுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ண தத்த பரத்வாஜும் இதே விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறார் – பாகம் மஹாத்ம்யம் ஜிஹிதே கச்சதி ப்ராப்நோதி இதி பகஹா.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த யோசனையின் ஒரு வித்தியாசமான விளக்கத்தைத் தருகிறார் – ‘பாகா’ என்பது பொருட்களின் பரந்த தன்மையைக் குறிக்கிறது, மேலும் ‘ஹா’ என்பது இந்த பரந்த தன்மையின் சுருக்கத்தைக் குறிக்கிறது. பிரளய நேரத்தில் அனைத்தையும் தன்னுள் சுருக்கிக் கொண்டு தனது படைப்பின் பரந்த தன்மையைக் குறைப்பதால் அவர் பக-ஹா என்று அழைக்கப்படுகிறார்.

சுவாமி சின்மயாஆனந்தா, இந்த அர்த்தத்தில், இது விஷயங்களை “அழித்தல்” அல்ல, ஆனால் முதலில் அவரிடமிருந்து வந்த விஷயங்களை தன்னிடமே உள்வாங்குதல் என்று சுட்டிக்காட்டுகிறார்.

செல்வம், புகழ் போன்றவற்றின் நிலையற்ற தன்மையே இங்கு நமக்குப் புகட்டப்படுவதாகவும், இதைப் புரிந்துகொண்டு இவற்றில் உள்ள பற்றுதலை நீக்கும் அளவுக்கு இந்த நாமத்தின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்றும் தர்மச் சக்கரம் எழுத்தாளர் கவனிக்கிறார். .

ஆறு குணங்கள் –

123- மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
126-பா நு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-

123-மஹா தபா –

சிறந்த ஞானம் உடையவன் –அதிகமாக பூஜிக்கத்தக்க ஞானம் யுடையவன்

தத்ர வராரோஹ இத்யேத தந்தைர்நாமபி ப்ரயாஸ பரத்வம் யுக்தம்
கிமேகம் தைவதம் லோகே கிம் வா அப் யேகம் பராயணம் இதி
ப்ராப்ய ப்ரஸ்நயோஸ் -தத் ப்ரதி வசனயோஸ் ச ப்ராயேணா மீஷ் மேவ விஸ்ராந்தி

அத ஸ்து வந்த கம் கம இத்யாதீநாம் உபாய -ப்ரஸ்ன ப்ரதி வசநாநாம் அதிகார வ்யூஹ

தத்ர வாஸூ தேவ பரத்வேந வ்யாக்யாத
இதா நீம் ஸங்கர்ஷண

இதுவரையில் அடையத்தக்க பர வஸ்து எது என்கிற வினாவுக்குத் தக்கபடி
பர ஸ்வரூபம் பெரும்பாலும் கூறப்பட்டது
இனி வ்யூஹத்தைக் கூறுவது
அந்த வ்யூஹம்
வாஸூ தேவன்
சங்கர்ஷ்ணன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
என நான்கு வகைப்படும்

அவற்றுள் வாஸூ தேவன் பர ரூபத்தில் சேர்ந்ததனால் தனித்துச் சொல்ல வேண்டியது இல்லை
ஆதலால் இதற்கு மேல் ஸங்கர்ஷண வ்யூஹம் சொல்லப்படுகிறது-

மஹா தபா
யஸ்ய ஞான மயம் தப -இதி மஹத் பூஜ்யம் ஞானம் அஸ்யேதி
ஷட் குணா வ்யாக்யாஸ் யந்தே
தேஷு ஞான பல சங்கர்ஷணஸ்ய குணவ் வ்யூடவ்
ஞானம் -ச ப்ராசீன பவ பரிஸ் ராந்தி ஸாந்தயே சஞ்ஜி ஹீர்ஷா லக்ஷண மாத்ர –

யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டக-1-1-ஞான மயமான தபம் கொண்டவன்

தொடர்ந்து ஆறு குணங்களும் கூறப்பட உள்ளன
இவற்றில் ஞானம் பலம் இரண்டும் சங்கர்ஷனின் தன்மையாக உள்ளன

இங்கு ஞானம் என்பது அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று தவிக்கும் ஜீவர்களைக் கரை ஏற்றும் செயலுக்குத் தக்க ஞானம்

ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்

சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரைப் போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் மஹா தபஸே நம

————

ஓம் மஹாதபஸே நம:

மஹத் மிகச்சிறந்த

ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும்

தபோ ‘தப’ என்றால்

ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்

மஹாதபா:பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யஸ்ய ஞானமயம் தப:’ (முண்டக உபநிஶத் 1.1.9)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின்

ப்ரதாபோ வா வீரத்தின்

தபோ காந்தி (ஒளி)

மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்

மஹாதபா:எனவே, பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் விளக்கத்தில் ‘தப’ என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் ‘தப’ என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

123. மஹாதபஹ்

மஹாதபா என்றால் சிறந்த அறிவை உடையவர் என்று பொருள். தபஸ் என்றால் பொதுவாக தவம் என்று பொருள், அது அறிவு என்றும் பொருள். உயர்ந்த தவம் இறுதி அறிவிற்கு வழிவகுக்கிறது, எனவே இரண்டும் சாராம்சத்தில் ஒத்ததாக இருக்கின்றன.

இந்தச் சூழலில் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘மஹத் ஸ்ரீஜ்ய விஷயம் தபோ ஞானம் அஸ்ய இதி மஹாதபாஹ் – அவருக்கு படைப்பின் உச்ச ஞானம் இருப்பதால் அவர் மஹாதபா‘ என்று விளக்குகிறார்.

இது முண்டக உபநிடதத்திலும் பிரதிபலிக்கிறது, இது ‘யஸ்ய ஞானமயம் தபஹ் – யாருடைய தபஸ் என்பது அறிவின் தன்மை.

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா ஆக்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் (இஹ லோக பர லோக ஐஸ்வர்யம் அளிக்கும் )- சாத்துவத சம்ஹிதை

ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதி விஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந –யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா

அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் -தத் அபேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்(நம் போல்வாரும் புல்லும் கூட விட்டுப்பிரியாமலே இருக்குமே )
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநாஸூ அபரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச(இவர்களும் படைக்கப்பட்டவர்களாகவே எண்ணப்படுகிறார்கள் )
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்(ஒரு லேச பிரபாவம் பெற்றவர்கள் )
ப்ராதுர் பாவ விசேஷ அதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே

அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்(அவதாரங்களில் இருந்து வேறுபட்டு உடைமையாக )
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் (ஆறாவது வேற்றுமை -அவனுடைய சேஷன் )தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் ச ஏதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதி இதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அனலசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ர அந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்(இனிப்பில் வேறுபாடு )

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச

புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வத் ஆகாராந்தரம்  ஆக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக்யைஸ் து கௌண முக்யை ஸூரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷுபிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் –ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நிஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

கோக்குல மன்னரை –போற்றும் புனிதன் ராமானுஜன்

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போகோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீநம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந் நியந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக

முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீமுதாச்சா அகிலா நாகா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ர அர்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி ஸாம்ய பண்டித ந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-128———2 திரு நாமங்கள்

முதல் 6-ஞானம் பலம் -சங்கர்ஷணனுக்கு –
அடுத்த 4 சங்கர்ஷணன் -ஸம்ஹாரம்
அடுத்த 2-ப்ரத்யும்னன் -ஸ்ருஷ்ட்டி
அடுத்த 4-அநிருத்தன் -ஸ்திதி
அடுத்த 8 -வாசுதேவன்

———-

124- ஸ்ர்வக –
எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது

தாரண ஸாமர்த்தய லக்ஷணேந பாலேந ஆத்மவத் தாரயன் ஸம் ஹ்ருதான் ஸர்வான் கச்சதீதி
ஸர்வக
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த ஷு ட
ஏவம் ஸங்கர்ஷணாத் தி ஸங்கர்ஷணம் நாம நிருச்யதே —அஷ்டாத்யாயீ -3-2-48-–செல்லுதல் என்ற பொருள் கொண்ட கம் என்பதன் பின் ட என்பதை இணைத்துக் கொள்கிறது -எப்போது என்றால்
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த -போன்ற சொற்களுடன் கூடும் போது ஆகும் –

கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
தாரண சாமர்த்தியம் -பலம் –சங்கர்ஷணன் -556-
அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று உயிர் படைத்தான் -4-10-1-
தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –

சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் -சம்ஹரிக்கப்பட்டவை எல்லாவற்றையும் தம்மிடம் வைத்துத் தாங்கும் வன்மை
இது கீழ் சொல்லிய ஞானத்துக்கு முக்கிய அங்கம் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆத்ம வடிவில் அனைவரையும் சென்று அடைபவன்
சங்கர்ஷம-556-அவன் தன்னில் அனைவரையும் வரவழைக்கிறான் என்றபடி

காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -கார்யமாதலால் காரணங்களில் எங்கும் வியாபித்து இருப்பவர் -சங்கரர் –

எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வகயா நம

————

ஓம் ஸர்வகாய நம:

ஸர்வத்ர எங்கும்

கச்சதீதி செல்வதால்

ஸர்வக: பகவான் ‘ஸர்வக’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்

வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்

ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் ‘ஸர்வக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

சர்வகா 

‘சர்வகா‘ என்றால் அனைவரையும் சென்றடைபவன் என்று பொருள். ‘சர்வத்ர கச்சதி இதி சர்வ-கா‘ என்றால் எல்லாவற்றையும் வியாபித்திருப்பவர் அல்லது எங்கும் செல்பவர். பகவான் அனைவரையும் சென்றடைகிறார், எல்லா இடங்களிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் அதை மேலும் விளக்குகிறார், ‘காரணத்வேன வியாப்தத்வாத் சர்வத்ரா – அவர் எங்கும் இருப்பது அவர் எல்லா இடத்தையும் ஆக்கிரமித்ததன் விளைவு.

நாராயண ஸூக்தம் சொல்வது போல் – ‘அந்தர் பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடங்களிலும் உறுதியாக நிற்கிறார்.’

தனது சம்கர்ஷண வியூகத்தில் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.


125- ஸர்வ வித் –
எல்லாவற்றையும் அடைபவன் –ஸ்ருஷ்டிக்க -ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யுமனுக்கு -இதில் ஐஸ்வர்யம் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்

அதஸ் ஸம் ஹ்ருதான் ஸிஸ்ரு ஷு –ப்ரத்யும்ந –ஸர்வ கார்ய விந்ததி ஸ்ருஷ்டயா லபதே இதி
ஸர்வ வித்
இதமத்ர ஜகத் க்ரியா ஸ்க்த் யுல்லாஸ ரூபம் ஐஸ்வர்யம்

யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –சர்வ வித் -ஞான பூர்த்தி

நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7–

சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியா சக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம்-மற்றும் பலம்-வீர்யம் -கூறப்படுகிறது -விசித்திரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை இங்கு கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி இருப்பவர் -ப்ரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -எல்லா இடங்களிலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி பிரகாசிப்பவர் -சங்கரர் –

அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வ வித் நம

————

ஓம் ஸர்வவித்பானவே நம:

ஸர்வம் அனைத்தையும்

வேத்தி அறிவதனாலும்

விந்ததீதி வா அடைவதனாலும்

ஸர்வவித் பகவான் ‘ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார்.

பாதீதி பானு: ஒளி வீசுவதால் ‘பானு’ என்று அழைக்கப்படுகிறார்.

தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்’ (கதோபநிஷத் 2.2.15)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).

இத்யாதிஸ்ம்ருதேஸ்சஇத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும்

பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும்

ஸர்வவித்பானு: பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

சர்வ-வித்

சர்வவித்‘ என்றால் அனைத்தையும் அறிந்தவர் என்று பொருள். ‘சர்வம் வேத்தி விந்ததா இதி வா சர்வ-வித்‘ – அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் பெறுபவர். முதல் விளக்கத்தில், பகவான் அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் அறிந்தவர். அவர் உள் ஆன்மா.

சர்வவித்தின் மற்றொரு விளக்கம் என்னவென்றால், அவர் ‘பிரத்யும்னா’ என்ற செயல்பாட்டைச் செய்கிறார் மற்றும் ‘சம்கர்ஷனா’ வடிவத்தில் தன்னுள் உறிஞ்சப்பட்ட அனைத்து ஜீவாக்களையும் மீட்டெடுக்கிறார் அல்லது பெறுகிறார்.


126-பாநு-
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்

வீர்யம் -ஸுர்யம் -பராக்ரமம்
தனக்கு விகாரம் இல்லாமல் செய்வதே வீர்யம்-நித்ய நிர்விகார தத்வம்

ஸர்வ நிர்மாணே அப் யவி குர்வாணோ பாதீதி
பாநு

உணாதி ஸூத்ரம் –தா பாப் யாம் நு –ஒளிர்தல் என்னும் பொருள் கொண்ட பா என்பதுடனும்
அளித்தல் என்னும் பொருள் கொண்ட தா என்பதடுடனும்
நு என்பது சேர்க்கிறது

ஸ ஏஷ ஸ்வயம் உத்வபவ் –அவன் தானாகவே ஒளிர்கிறான்

இதம் அவிகார ஆகாரம் வீர்யம் –தனது வீர்யம் காரணமாக மாறுபடாமல் உள்ளான்

வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் பானுவே நம

————

பானுஹ்

பானுஹ்‘ என்றால் பிரகாசிப்பவன் என்று பொருள். ‘பாதி இதி பானுஹ்‘ – அவரது படைப்பு மற்றும் பராமரிப்பு இருந்தபோதிலும், அவர் மாறாமல் இருக்கிறார் மற்றும் குறையாமல் தொடர்ந்து பிரகாசிக்கிறார். பகவத் கீதையில் (அத்தியாயம் 15, சுலோகம் 12) பகவான் கூறுகிறார், ‘யதாதித்ய கடம் தேஜஹ் ஜகத் பாஷயதே அகிலம் யத் சந்திரமஸி யத் ச அக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம்‘ சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பின் பிரகாசம் எனது முழு பூமியையும் ஒளிரச் செய்கிறது. அவற்றில் இருப்பு.

127-விஷ்வக்சேன
யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்-அவன் எஜமானனுடன் உள்ளதால் சேனன் ஆகிறான்

அநிருத்தன் -சக்தி- தேஜஸ் -ஜகத் ரக்ஷணம்-இரண்டும் வேண்டுமே –

அத ஸ்தாபகோ –அநிருத்தோ–
விஷ்வக் ஸேந
இநேந ஸ்வாமிநா ஸஹ வர்தத இதி ஸேநா (தலைவர் உடன் கூட இருப்பதால் சேனா )-ஸேஸ் வரேதி
யாஸ்க
அநேந ரக்ஷக வந்தோ ஜந்தவோ விஷ் வஞ்சோ -அஸ் யேதி
இயமத்ர ஸாமர்த்ய ஸரீரா ஸக்தி

ரஷிக்க சேனை உடையவன் –
அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –

எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -எதையும் ரக்ஷிக்கும் திறம் –இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுர சேனை சிதறி ஓடும்படி செய்தவர் -தன்னுடைய யோக சக்தியால் செய்பவர் -சங்கரர் –

பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் விஷ்வக் ஸேனாய நம

————

ஓம் விஶ்வக்ஸேனாய நம:

விஶ்வக் அவ்யயம் ‘விஶ்வ’ என்ற சொல்லிற்கு

ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள் |

விஶ்வ எங்கும்

கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று

தைத்யஸேனா அஸுரப் படைகளை

யஸ்ய எவர்

ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்

விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வ’ என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்


விஷ்வக்-சேனா

‘விஷ்வக்-சேனா’ என்றால் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக எல்லா திசைகளிலும் தனது படையை வைத்திருப்பவர் என்று பொருள். வைஷ்ணவ மரபில் விஷ்வக்சேனர் என்பது மகாவிஷ்ணுவின் படையின் உச்ச தளபதியின் பெயர். இந்த நாமம், தேஜஸ் மற்றும் சக்தி ஆகிய இரண்டு குணங்களைக் கொண்ட பாதுகாவலரான அநிருத்த வியூஹாவைக் குறிக்கிறது.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் இரண்டாவது பூர்வாங்க சரணம் கூறுகிறது:

யஸ்ய த்விரதா வக்த்ராத்யாஹ் பரிஷத்யாஹ் பரஸ்ஶதம்
விக்னம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேநம் தமாஶ்ரயே’

ஒருவரின் பாதையில் இருந்து தடைகளை அகற்ற அழைக்கப்படுவதால், இது விஷ்வக்சேனருக்கு ஒரு அஞ்சலி. இந்த நாமம் அவனுடைய சக்தி அல்லது அவனது திறனைக் குறிக்கிறது. அனிருத்தன் என்றால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதவன் என்று பொருள். இந்த நாமம் இறைவனின் குணத்தையும் குறிக்கிறது, அதன் மூலம் அவர் தனது பக்தர்களைக் காக்க எப்போதும் இருக்கிறார்.

திரௌபதி, பிரஹலாதா, கஜேந்திரன், அம்ப்ரீஷ் போன்றோரின் பக்தர்களின் அழைப்பை அவர் காப்பாற்றுகிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர், எதிர்க்கும் அசுரப் படையை போரில் எங்கும் ஓடச் செய்ததால், பகவான் விஷ்வக்சேனர் என்று அழைக்கப்படுகிறார் என்று விவரிக்கிறார்.


128-ஜனார்த்தன –
விரோதிகளை சம்ஹரிப்பவன் –தேஜஸ் -சொல்லும் -பராபிபவன சாமர்த்தியம்

வற்கலா ஜனார்த்தன பெருமாள் -ஜனி பிறப்பை அளிக்கும் ஜனார்த்தனன்-

ரஷா ப்ரதி பஷான் ஜநான் அநபேஷோ அர்த்தயதீதி
ஜனார்த்தந-

தஸ்யு த்ராணாத் ஜனார்த்தன -உத்யோக பர்வம்–71-6- –தீயவர்கள் இடம் ரக்ஷிப்பதால் ஜனார்த்தனன்
இதன் மூலம் யாருடைய உதவியும் இன்றி எதிரிகளை அளிக்கும் தேஜஸ் சொல்லப்படுகிறது

இதம் அநபேஷா லக்ஷணம் –தேஜஸ்
ப்ரதி மூர்தி குணா நாம் வ்யவஸ்தேயம் இயதாம் ஆவிஷ் காராத்
பகவதஸ் ஸர்வத்ரா நாவரண குணத்வாத் —

மூலே ஹி ஸ்ரூயதே–ஞாநேந ஐஸ்வர்யேன சக்த்யா (முதல் மூன்றையும் சொன்னது அடுத்த மூன்றுக்கும் உப லக்ஷணம் )இதி சர்வே பகவத அநூநா பூர்ணா –மூல ஸம்ஹிதை -பூரணமான ஞானாதி குணங்கள் கொண்டவன்

இதி ஏஷ ஆத்மா சதுர்வித
ஸர்வஞ்ஞ-ஸர்வ தர்சீ ஸர்வேஸ்வர ஸர்வ ஸக்திஸ் ஸம் ருத்தி மான் வா அக்ரன் திர நூந ஆப்தோ வஸீ ஸ்வாதீநோ அநாதி ரநந்தோ
வ்யபகத (ஒழிக்கப்பட்ட )நித்ரா பய க்ரோத தந்த்ரோ வ்யபகதேச்சா தம க்லம வியாதிர் நிர்தோஷா நிர நிஷ்டோ நிரவத்யோ யே பகவந்தம் வாஸூ தேவ மேவம் விது
ந தே விதுரிதி பகவான் வாஸூ தேவோ அநந்த ஏவ அபரிமிதோ அனந்தத்வேந அபரிமிதத்வேந பவதி(
முடிவற்ற அளவற்ற )-இதி ப்ரதி பர்யாயம் 

தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-

மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –

அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஜனார்த்தனாய நம

————

ஓம் ஜனார்தனாய நம:

ஜனான் துர்ஜனான் ‘ஜன’ என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்

அர்தயதி ஹினஸ்தி அவர்களை ‘அர்தனம்’ செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார்

நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை

அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக

நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த

யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

ஜனார்தனா

ஜனார்தனா என்ற நாமத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு.

  •   தீயவர்களை அழிப்பவர்;
  •   பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்காக அணுகுபவர்; மற்றும்
  •   துன்மார்க்கரிடமிருந்து பக்தர்களைக் காப்பவர்.

ஸ்ரீ ஆதி சங்கரர் பின்வரும் இரண்டு விளக்கங்களைத் தருகிறார்.

  •  முதல் விளக்கம் – தீயவர்களை அழிப்பவர். ‘ஜனன் துர்ஜனான் அர்தயாதி ஹினஸ்தி நரகாதீந் கமயதி இதி வா ஜனார்தனஹ் – தீயவர்களை அழிப்பவன் அல்லது அவர்களை நரகத்திற்குத் தள்ளுபவன்.’ பேய்களை வெல்ல அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை.
  • மற்றொரு விளக்கம் ‘அர்ட்’ என்ற மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது, இது பிச்சை எடுப்பது, கேட்பது – கதௌ யசநே ச ஜனைஹ் அர்த்யதே யச்யதே – தம் பக்தர்கள் எதைப் பெற விரும்புகிறாரோ அதை அணுகுபவர்.

ஸ்ரீ பராசர பட்டர் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி மூன்றாவது அர்த்தத்தை தருகிறார்.-‘தஸ்யு-த்ரானாத் ஜனார்தனா ( உத்யோக பர்வா 71.6) – தஸ்யுஸிலிருந்து (பேய்கள்) மக்களைப் பாதுகாப்பதால் அவர் ஜனார்தனா ஆவார்.’-

பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் பிரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப்பட்டு இருந்தாலும்
அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்து உரைத்தது-

——–

174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
178-மஹாத் யுதி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –

174-மஹாபல-
மிக்க வலிமை உடையவன் –

ஸஹாய அபேஷ கர்த்ரந்தர வ்யாவர்தகம் மஹத்₃ப₃ல மஸ்யேதி –
மஹா ப₃ல ।
அநேந ஹ்யய மபரிமித க்ரியோ(அ)ப்ய அநாகலித ஶ்ரம꞉ ஸ்வே மஹிம்நி திஷ்ட₂ன் அவதீ₄ரிதாத் –
ஆ₄ராந்தரோ து₃ர்வார வ்யாபார ஸந்தத ஸக்தி ஸமுல்லாஸ꞉
ஸரீரமிவ ஸகலம் பி₃ப₄ர்தி ।
*ப₃ஹுல யன் ப₃ஹு ம், இதி ச மௌல ꞉ ।
ஏதல் லேஸோ ஜீவந ஸமீரண- கி₃ரித₄ராதௌ₃ ॥(தண்ணீர் காற்று மண் மலை இவனது பலத்தில் ஏக தேசத்தால் தாங்கும் வலிமை கொண்டதாகும் )

பஹு ளயன் பஹுளம் –மவ்ல ஸம்ஹிதை –பல பொருள்களையும் உண்டாக்கி என்றபடி

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் -திறம்பாமல் மலை எடுத்தேன் என்னும் -திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் என்னும் -5-6-5-

வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———

ஓம் மஹாபலாய நம:

பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 

பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 

மஹாபல: பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——

மஹாபலா – அளவிட முடியாத வலிமை கொண்டவர் – சர்வ வல்லமை படைத்தவர்

ஸ்ரீ ஆதி சங்கரரின் வியாக்கியானம் “பலிநமபி பலவத்வத் மஹாபலஹ் – அவர் வலிமை மிக்கவர்களை விட வலிமையானவர் என்பதால் மஹாபலஹ் என்று அழைக்கப்படுகிறார். உண்மையில் அவர் அனைவருக்கும் பலத்தின் ஆதாரமாக இருக்கிறார். கீதை (7.11) சொல்வது போல் ‘பலம் பலாவதாம் சாஹம் – நான் வலிமையானவர்களின் பலம்’.

இந்த குணத்திற்கு பல உதாரணங்களைத் தருகிறார். மகாபலியை வெல்வதற்காக ராவணன் பாதாள லோகம் சென்றான். மகாபலியின் வாயில் காப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பகவான், தற்காலிகமாக தன்னை கண்ணுக்கு தெரியாதவராக ஆக்கிக் கொண்டார். நரசிம்ம பகவானால் வதம் செய்யப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதில் இருந்து விழுந்ததால் வீட்டு வாசலில் கிடந்த ஹிரண்யகசிபுவின் குண்டலத்தை ராவணன் நகர்த்த முயன்றான்.ராவணனின் கைகள் குண்டலத்தின் கீழ் சிக்கியது. பகவான் காட்சியில் தோன்றி, முயற்சியின்றி ராவணனை உதைக்க ராவணன் வெகுதூரம் பறந்து சென்றான்.

175-மஹா புத்தி –
எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –

அஸவர்ஜ்ஞ காரணமத வ்யவச்சே₂த₃மாஹ – மஹத் ஜ்ஞாநமஸ்யேதி
மஹா பு₃த்₃தி₄꞉ ।
இத₃ம் சாஸ்ய அசேஷ தேஸ கால ஸ்வ பாவ –விப்ரக்ருஷ்ட அவிப்ரக்ருஷ்ட விஷயம் ஸார்வஜ்ஞாத்-(மிச்சம் இல்லாமல் தேச கால வஸ்து இவற்றால் கட்டுப்படாத ஞானம் )
அவிஸய விபர்யா ஸதயா யதா₂ர்த₂ம்,-(உள்ளவற்றை உள்ளபடி அறிந்த ஞானம்)
க்லேஸ கர்ம விபாகா ஸயாத்₃ யபராமர்ஸாத் –ஸ்வ பா₄விகத் வாந்-(இயற்கையாகவே) -நித்யம் ச சக்ஷுராதி₃கரண நிரபேக்ஷம்
ச தத₃பேக்ஷம் ச ஸ்வாதந்த்ர்யேண, (ஸ்வ தந்த்ர ஸங்கல்ப சக்தியால் )புண்ட₃ரீகாக்ஷத்வ(ஆனாலும் தாமரைக் கண்ணன் -நாம் அனுபவிக்க-ஸாஸ்த்ரத்தால் திருத்த ஒண்ணாத நம்மை வைமுக்யம் மாற்றி -ஈடுபாடு உண்டாக்கி -உபாயமாகக் கொடுத்து -உபாயமாகப் பற்றினார்க்கு போக்யமாய் இருக்குமே  )ஸூசி ஶ்ரவஸ்த்வாதே ₃꞉ ।
ந ச ரூப ரஸாதி₃க்₃ரஹணே கரண நியம:, ஸர்வேண ஸர்வ கார்ய ஸக்தே (எல்லாப் புலன்களாலும் எல்லாம் அனுபவிப்பான் )꞉ ;
ஸர்போ (அ)பி ஹி திர்யக்ஷு சக்ஷுஷைவ பஶ்யதி ஶ்ருணோதி ச
கத₂மித₃ம் ஸர்வ ஸக்தே ꞉ து₃ஶ்ஸகம் ?

யதோ₂க்தம் ஜயாயாம்,
* ஸர்வத꞉ ஶ்ருதி மாம்-ஶ்சாஸௌ யதா₂ த்₃ருக்  ச்₂ராவ கோரக₃꞉ இதி ।
கர தல ஆமலக விலோகதவத் அபரோக்ஷம் ச வைஸைத்₃யாத், அமோக₄ம் ச ஸர்வ நிர்வஹணாத்(வீணாகாத ஞானம்-அனைத்தையும் நிர்வஹி க்கிறானே  )।

யதா–விஸ்வதஸ் சஷு உத விஸ்வதோ முக –தைத்ரியம் நாராயண வல்லி -1-12-
அவன் கண்களையும் முகத்தையும் எங்கும் கொண்டவன்

பஸ்யதி அசஷு ச ஸ்ருணோதி அ கர்ண–ஸ்வேதாஸ்வரா -3-19- கண்கள் உதவி இன்று காண்கிறான் -காதுகள் உதவி இன்றி கேட்கிறான்

ஸர்வதா அஷி ஸீரோ முகம் –ஸ்ரீ கீதை -13-13-எங்கும் கண்களும் தலையும் முகமும் உள்ளது

ஆஹுஶ்ச நாத₂முநிமிஶ்ரா꞉, –யோ வேத்தி 1-யுகபத் 2-சர்வம் 3-ப்ரத்யஷேண 4-சதா 5-ஸ்வத இதி (பல விசேஷணங்கள்)।
யத் கேசித் ஸர்வஜ்ஞமவஜஜ்ஞிரே ,–நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

எந்த ஹரி அனைத்தையும் ப்ரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறானோ

பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

ஸர்வஞ்ஞனான இவனை ஏளனம் பண்ணும் தொனியில்
ஏகே து ப்ரமாணேந சர்வஜ்ஜோ யேந கல்ப்யதே நூநம் ஸ சஷுஷா சர்வன் ரஸாதீன் ப்ரதிபத்யதே
ஒரு பிரமாணத்தின் மூலம் மட்டுமே அனைத்தும் அறிந்த ஸர்வேஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்று
அறிய முடிகிறது என்றால் அப்படிப்பட்டவன் தனது கண்கள் மூலமாகவே ருசி பார்ப்பது மற்றும்
இதர இந்திரியங்களை செய்யும் செயல்களை செய்பவன் என்று கொள்ளலாம் என்றும்
மேலும்

இதி, தத்₃
பவ் ₃த்₃தா₄த்₃ யநுமித ஸர்வஜ்ஞ விஷயம் (அனுமானத்தால் புத்த மத சர்வஞ்ஞத்வம் ); தத் ப்ரகரணாத், அந்யதா₂ ஸாஸ்த்ர விரோதா₄ச்ச ।
நித்யஸ் சேத அர்த்த வாதத்வம் தத் பரே ஸ்யாத் அநித்யதா 
ஸர்வேஸ்வரன் நித்தியமாக உள்ளவன் என்பது புகழ்ச்சிக்காகவே
அர்த்தவாதம் என்றால் அவன் நித்யன் அல்லன் ஸர்வஞ்ஞன் என்பவை இல்ல என்றதாகும் –

இதி ஸாஸ்த்ரீய
ஸர்வஜ்ஞத்வ வ்யுதா₃ஸநம் அத ஏவ அந்ய பரோக்தம் து₃ருக்தம் வா ;
சக்ஷு꞉ஶ்ரவ ꞉- ப்ரப்₄ருதிஷு காக உலூக க்₃ருதா₄தி₃ஷு(கழுகு கூர்மை கண் -காகம் ஏக கண் போல் )மந்த்ர ஸித்₃தௌ₄ஷத₄தப ꞉ ப்ரபா₄வாதி₃ஸம்ஸ்க்ருதேஷு ச கரணாநாம்
ஜ்ஞாந கார்ய வ்யதிஹார தந்த்ர தாப்ர கர்ஷ தாரதம்ய த₃ர்ஸ நாத் ;
ஸார்வஜ்ஞய ஸாஸ்த்ரஸ்ய அயோக்₃யார்த₂தா(அ)பி து₃ர்வதா₃ ।(இது தவறே ஆகும் -)

கு₃ணாந்தர வைசித்ரயே(அ)ப்யேஷைவ தி₃க் ।
அஸ்ய லவோ (சிறிய பகுதியாலேயே-சுடர் ஞான இன்பம் அன்றோ இவன்  )ப₃த்₃த₄முக்த நித்யேஷு சைதந்யம் ॥

எக் காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்லிக்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ஹரி அனைத்தையும் பிரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறான் –
நாகங்கள் கண்களாலே கேட்டு -காகம் ஒரே கண்ணால் காண்பது -ஆந்தை இரவில் காண்பது -கழுகு தூரத்தில் இருப்பதை காண்பது
நித்யர்களுக்கு உள்ள ஞானமும் இவனது ஞானத்தில் ஒரு அணு அளவே

ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாபுத்தயே நம:

புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும்

புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால்

மஹாபுத்தி:பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

மஹாபுத்தி – எல்லையற்ற அறிவை உடையவர்.

ஸ்ரீஆதிசங்கரர் இந்தச் சொல்லை ‘புத்திமாதம் அபி புத்திமத்வாத் மஹாபுத்திஹ் – அவர் கூர்மையை விட அறிவில் கூர்மையானவர்’ என்று விளக்குகிறார்.

பகவத் கீதை அத்தியாயம் 7 வது 10வது வசனத்தில், ‘புத்திர் புத்திமாதம் அஸ்மி – நான் புத்திஜீவிகளில் இருக்கும் புத்தி’ என்று பகவான் கூறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அவர் மஹாபுத்தி என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருடைய அறிவு அவரது புலன்களையோ அல்லது வெளிப்புற உதவியையோ சார்ந்து இல்லை.

புலன் உறுப்புகள் எதுவும் தேவையில்லாமல் அவர் ஒரே நேரத்தில் பார்க்கிறார், கேட்கிறார் மற்றும் உணருகிறார். இது போன்ற ஸ்ருதிகளின் பல பகுதிகள் ஆதரிக்கின்றன

  • விஷ்வதாஷ்சக்ஷுருதா விஷ்வதோமுகஹ் – எல்லாப் பக்கங்களிலும் கண்களையும், எல்லாப் பக்கங்களிலும் முகங்களையும் உடையவன் (தைத்ரிய நாராயண உபநிஷத் 1.12). பகவான் தனது அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தியாகும், எனவே அவர் மொத்தத் தொகையான மகாபுத்தி.
  • பஸ்யாத்_யசக்ஷு ச ஸ்ருநோதி அகர்ணஹ் – அவர் கண்கள் இல்லாமல் பார்க்கிறார் மற்றும் காதுகள் இல்லாமல் கேட்கிறார் (ஸ்வேதாஸ்வர உபநிஷத் 3.19);
  • ஸர்வதோக்ஷி சிரோமுகம் – அவருக்கு கண்கள், தலைகள், வாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன (பகவத் கீதை 13.13).

ஆச்சார்ய நாதமுனி கூறுகிறார் – ‘யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேந ஸதா ஸ்வதஹ் – அவர் நேரடியாகப் புலனுணர்வு மற்றும் அவரது விருப்பத்தின் மூலம் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்’ (நியாயதத்வா). பெயர் உருவான தாது வார்த்தை ‘புத்த ஞானே’ என்பது அறிவது, புரிந்துகொள்வது. பகவான் அவருடைய அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தி ஆவார், எனவே அவர் மகாபுத்தி ஆவார்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளின் நடத்தையும் அவர் அவற்றில் முதலீடு செய்த அறிவைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்தந்த நிலைகளிலும் சுற்றுப்பாதைகளிலும் நிலைநிறுத்தப்படுவது, பகவானின் மகா புத்தி அல்லது செயலில் உள்ள மகாபுத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நான்கு அந்த கரணங்களில் அல்லது மனிதனின் உள்ளார்ந்த திறன்களில் புத்தி மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டுகிறார். ‘அஹம்காரம்’ (ஈகோ) எடுத்துச் செயலைச் செயல்படுத்துவதற்கு முன், ‘சித்தம்’ (சிந்தனை) வழங்கிய அனைத்து முந்தைய அனுபவங்களின் நினைவுகளையும் கணக்கில் கொண்டு, ‘மனஸ்’ (மனம்) வழங்கிய விருப்பங்களுக்கு இடையே புத்தி தேர்வு செய்கிறார். புத்தி மோசமான தேர்வு செய்தால், அது அல்ப புத்தி அல்லது அற்ப புத்தியின் அடையாளம். புத்தி எப்பொழுதும் உன்னதமான விருப்பங்களைச் செய்தால், அது மஹாபுத்தியாகும், அதைத்தான் பகவான் உருவகப்படுத்துகிறார்.


176- மஹா வீர்ய –
மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

த₃தி₄பா₄வம் ஆபத்₃ய மாந து₃க்₃தா₄தி₃காரணேப்₄யோ (பால் தயிர் ஆவது போல் )பே₄த₃கம் ஸத்யபி ஹேது அவிகார லக்ஷணம் மஹத்₃ வீர்ய மஸ்யேதி
மஹாவீர்ய ꞉ ।
அக₃ரு ம்ருக₃மத₃ கஸ்தூரிகா- குஸும் ஆமோத₃வத் ஸம்நிதி₄மாத்ரேண நிர் மர்யாத₃கார்ய காரீ ஹ்யயம் । யதா₂

தஸ்ய சந்நிதி மாத்ரேண கந்த ஷோபாய ஜாயதே -மனசோ ந உப கர்த்ருத்வாத் ததா அசவ் பரமேஸ்வர —
நறு மணம் என்பது மனிதனின் அருகில் உள்ள போது அவனை இழுக்கிறது
இதே போல் எம்பெருமான் கஷ்டப்படாமல் சங்கல்பத்தாலே செயல் புரியுமவன்-

இந்தத் திறனில் ஓர் அனுவின் அளவு அவர்களிடம் உள்ளதால் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் உள்ளனர் –

இதி-ஏதத₃ணுர் யோகீ₃ஶ்வர ப்ரம்ருதிஷ்வஷு அப்₄யத்வம் (இவனது வீர்ய லேசத்தால் யோகிகள் )॥

பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் கரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாவீர்யாய நம:

மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)

உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான

அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்

வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான ‘வீர்யம்’ ஆதலால்

மஹாவீர்ய:பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————-

மஹா வீர்யா – மகத்தான சக்தி கொண்டவர்

அவர் மஹாவீர்யா, ஏனென்றால் அவர் காலப்போக்கில் மாறும் எல்லாவற்றையும் போல மாறாமல் இருக்கிறார். மலர்கள் எந்த முயற்சியும் இல்லாமல் தங்கள் சுற்றுப்புறங்கள் அனைத்திற்கும் நறுமணத்தை கொடுப்பது போல், பகவான் தனது அனைத்து செயல்களையும் சிறிய முயற்சியுடன் செய்கிறார், இது அவரது வீரியத்தின் அறிகுறியாகும்.

ஸ்ரீஆதிசங்கரர் கூறுகிறார் – ‘ஜகதுத்பத்தி காரணம் அவித்யாலக்ஷணம் வீர்யம் அஸ்ய இதி மஹாவீர்யஹ் – இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்குப் பின்னால் உள்ள அறியப்படாத சக்தி, பகவானின் அதீத வீரியத்திற்கு ஆதாரமேயன்றி வேறில்லை.

வீரியம் என்பது அனைத்து சுறுசுறுப்பு அல்லது படைப்புத் தூண்டுதலின் சாராம்சம் என்றும், படைப்பிற்கான அனைத்து ஆற்றல்களும் அவரிடமிருந்து மட்டுமே வெளிப்படும் உந்து சக்தியாக இருப்பதால் அவர் மகாவீர்யா ஆவார்.

எவ்வளவு கடினமாக இருந்தாலும் தன் குறிக்கோளை அடையும் குணம் வீரியம் என்று  விளக்குகிறார்கள். பகவானின் முதல் சாதனை, பிரகிருதி அல்லது ஆதிப் பொருளில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது, அவருடைய வீரியத்தின் விளைவாகும்.

தர்மச் சக்கரத்தில் உள்ள வியாக்கியானத்தில், வீரியம் அல்லது படைப்பாற்றல் கொண்ட ஒருவர், இந்த படைப்பாற்றலை மற்ற அனைவரின் நலனுக்காக கடத்த இந்திரியங்களின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பகவான் ஒருவரே மஹா வீர்யர் என்று அழைக்கப் படுவார்.


177-மஹா சக்தி –
மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

பஸூ பதிமதாவக₃தாே ந ஸக்தி விகல நிமித்த மாத்ர வ்யாவர்திகா மஹதீ।
ஸக்திரஸ்யேதி
மஹா ஸக்தி꞉ ।(பாசுபத நிரசனம் -நிமித்த மாத்திரம் என்பர் -தான் உலகம் ஆகாது என்பர்-உபாதான காரணமாகவும் உள்ள மஹா சக்தி -செய்தேனும் ஆவேனும் யானே என்னும்  )
ஸா ஹி ஸாத₄ந க்₃ராம விநியோக₃ லக்ஷணா ஸ்வ ஸரீர ஏகதேஸ –
ஶீக்ருத ப்ரக்ருதி பரிணாம யோக்₃யதா லக்ஷணா ஸத்யா (அ)ஸத்யா வா ஸாமக்₃ரயா
ஸர்வதா₃ ஸர்வ ஸம்பாதி₃நீ ।
ஊர்ணநாபி₄ப்ரப்₄ருதே ꞉ கீடஸ்யாபி நிமித்தஸ் யைவ உபாதா₃நா –
ஸக்திர் அதர்க்யா , கத₂மியம் ஸர்வஜ்ஞ ஸக்திஸ் தர்க்யா ? அஸ்யா விப்ருட் ப்ரதா₄ந த₃தி₄- து₃க்₃தா₄தௌ₃ ப்ரதி க்ஷண பரிணாமித்வம் ॥

தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாஶக்தயே நம:

மஹதி சிறந்த

ஶக்திஸாமர்த்யம் ‘ஶக்தி’ அல்லது திறமை உடையவர்

அஸ்யேதி எனவே

மஹாஶக்தி:பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், ‘ஶக்தி’ என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————

மஹாசக்தி – அவர் உலகத்தின் காரணம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அடிப்படை அர்த்தத்தை விவரிக்கிறார், ‘மஹாதீ சக்தி: சாமர்த்யம் அஸ்ய அஸ்தி இதி மஹாசக்தி: அவர் மஹாசக்தி, ஏனென்றால் அவர் செயல்படும் ஆற்றலுடன், அத்தகைய செயல்களுக்குத் தேவையான திறன்களைக் கொண்டவர்.

ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார், மகாசக்தி என்ற நாமம் பகவான் இந்த உலகத்திற்கு வெறும் உணர்வு காரணமல்ல, ஆனால் இந்த உலகத்திற்கு ஜடக் காரணமும் கூட, அதாவது, அவர் படைப்பின் மூளை மட்டுமல்ல, அவரே காரணமும் ஆவார். இது பிரகிருதியிலிருந்து இந்த உலகத்தை உருவாக்கியது.

கிரியா சக்தி (செயலின் சக்தி), இச்சா-சக்தி (ஆசையின் சக்தி) மற்றும் மூன்று சக்திகளின் தொடர்புக்கு காரணமானவர் என்பதால் அவர் மகாசக்தி என்று குறிப்பிடுகிறார். ஞான சக்தி (அறிவின் சக்தி). இந்த மூன்று சக்திகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் செல்கின்றன.

ஒரு சிலந்தி தனக்குள்ளிருந்து வலையை உருவாக்குவது போல, இறைவன் தனக்குள் இருந்து உலகைப் படைக்கிறான்.

முந்தைய நாமத்தின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டபடி, அவர் உலகின் நன்மைக்காக வலிமை மிக்க சக்தியைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்த சக்தியின் ஒவ்வொரு நிகழ்வும் அவருடைய மகாசக்தியை நமக்கு நினைவூட்ட வேண்டும்


178-மஹா த்யுதி –
மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்—பர நல் மலர் ஜோதி -ஜோதியாய் ஜோதி கீழ் உபாதான காரணத்வம் -இதில் சஹகாரி காரணத்வம்

ஸஹ கார்யபேஷா காரண வை லக்ஷண்ய கரம் தத₃ந பேக்ஷா லக்ஷணம் தேஜோ மஹத₃ஸ்யேதி
மஹாத்₃யுதி꞉ ।
யத் பா₃ஹ்யாந்தர தமோ விரோதி₄ ஸ்வ பர வர்க₃யோ꞉ க்ரமேண ரமணீயம் பீ₄ஷணம் ச ப₄வதி (அழகாகவும் பயங்கரமாயும் )।
அஸ்ய பி₃ந்து₃ர்  த்₄யு மணி மாணிக்யாதௌ₃ ப்ரகாஸ ꞉ ।

ஷட்ஸு சாமீஷு மஹத்த்வ விஸேஷேண (ஆறிலும் மஹத் அடைமொழி )நைதேஶே யத கு₃ணா꞉ கல யைவ பராவரம் கார்ய கலாபம் ப்ரவர்த்ய 
அஸேஷேண லப்₃தா₄மிஷா மஹோத₃தா₄விவ மஹௌகா₄ ப ₄க₃வத் யநந்தே மாந்தீதி நிவேத்₃யதே ।
அதி ப்ரதி₂தேயம் ப்ரகியா(மிகவும் பிரசித்தம் அன்றோ )

பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியா ச –ஸ்வேதாஸ்வர–6-8-
இவனுடைய சக்தி என்பது உயர்ந்ததும் பல விதமாகவும் காணப்படுகிறது
இவை இவனுக்கு இயற்கையாகவே உள்ளது
இப்படியாகவே இவனுக்கு ஞானம் பலம் ஸ்ருஷ்டிக்கும் திறன் போன்ற பலவும் உள்ளன

தேஜோ பல ஐஸ்வர்ய மஹா வபோத ஸூ வீர்ய சக்தியாதி குணைக ராசி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85-
தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் ஞானம் வீர்யம் மற்றும் சக்தி – ஆகிய பலவற்றுக்கும் இவனே இருப்பிடம் ஆவான்

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்சி அசேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-
தாழ்வான குணங்கள் என்பதற்கு எதிர்த்தட்டாகவும்
பூர்ணமாகவும் உள்ள ஞானம் பலம் சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்பதாகவும் உள்ள குணங்களே பகவான் என்ற பதம் மூலம் உணர்த்தப்படுகின்றது

இத்யாதௌ₃ ।
ப ₄க₃வச் சா₂ஸ்த்ராணி
காத்ஸ்ந்யேந இத₃மர்தா₂நி ।
ஏஷு ஷட்ஸ்வேவ ஸௌஶீல்ய வாத்ஸல்யாத₃யோ (அ)க₃ணித கு₃ணா꞉ கேநாபி ப்ரயோஜ(கே )ந அநந்தர் –
பா₄வ்யந்தே ॥

பகவத் ஸாஸ்த்ரம் இந்த பூரணமான ஆறு குணங்களும் இயற்கையாகவே இருப்பதையே காட்டும்
ஸுசீல்யாதி குணங்கள் இவற்றுக்குள்ளேயே அமைந்தவை –

173-தொடங்கி -178- வரை உள்ள ஆறு திரு நாமங்களிலும்
மஹா அடைமொழி –
எம்பெருமான் குணங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியே எத்தனை பெரிய செயல்களாக
இருந்தாலும் அல்பமாகவே முடிக்கும் படி ஆகும் என்பதைக் காட்டும்
பெரிய கடலில் நதி போலவே ஆகும் என்று காட்டும்

சோதியாய சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -திருச்சந்த -34-
பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
ஸூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது

இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

————

ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி மிகச்சிறந்த

த்யுதிர் ஒளி

பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும்

ச அஸ்யேதி உடையவராதலால்

மஹாத்யுதி:பகவான் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

ஜ்யோதிஶாம் ஜ்யோதி:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

மஹா த்யுதிஹ் – பெரும் தேகம் அல்லது பிரகாசம் கொண்டவர்

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘மஹாதீ த்யுதிஹ் பாஹ்யாப்யந்தரா ச அஸ்ய அஸ்தி இதி மஹாத்யுதிஹ் – அவர் அகத்திலும் வெளியிலும் மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவர்’ என்று வரையறுக்கிறார்.

இந்த நாமத்தின் தோற்றம் தாது த்யுத தீப்தௌ என்பதிலிருந்து பிரகாசிப்பது. த்யோததே இதி த்யுதிஹ் என்றால் பிரகாசிப்பவர் என்று பொருள். த்யுதி, த்யோதாயிதா வா த்யுதி – பொருட்களை பிரகாசிக்கச் செய்பவன் த்யுதி.

உபநிடதங்கள் அவரை ‘ஸ்வயம் ஜோதிஹ் – அவர் தனது சொந்த புத்திசாலித்தனத்தின் ஆதாரம்’ என்றும் ‘ஜோதிஷாம் ஜோதிஹ் – அவர் அனைத்து ஒளிகளையும் ஆற்றும் ஒளி’ என்றும் அழைக்கிறது. ‘தஸ்ய பாசா சர்வம் இடம் விபாதி – இங்குள்ள அனைத்தும் அவரது பிரகாசத்தால் பிரகாசிக்கின்றன’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார், இந்த நாமம் பகவானின் எந்தவொரு செயலுக்கும் வெளிப்புற உதவி தேவையில்லை என்பதை குறிக்கிறது, மேலும் அவரது தோற்றத்தில் உள்ள பெரிய தேஜஸ் (தேஜஸ்) இதை வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்திசாலித்தனம் நம்மில் உள்ள வெளி இருட்டையும் அக இருளையும் நீக்க வல்லது. சூரியனின் தேஜஸ் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளின் பிரகாசம் ஆகியவை இறைவனின் தேஜஸின் ஒரு சிறிய பகுதியாகும். இறைவனின் இந்த தேஜஸ் அவரது பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் அவரது எதிரிகளை மிகவும் பயமுறுத்துகிறது (நாம நரசிம்ம-வபுவின் விளக்கத்தை நாம் நினைவுகூரலாம், அவருடைய நரசிம்ம அவதாரத்தில் இந்த விஷயத்தை நாம் வலியுறுத்தினோம்). இதை ஆதரிக்கும் ஸ்ருதி குறிப்புகள்:

  • ஸ்வயம் ஜ்யோதிஹ் – அவரை பிரகாசிக்க வெளிப்புற வழிகள் தேவையில்லாமல் அவர் தூய்மையான பிரகாசமாக இருக்கிறார் (பிருஹதாரண்யக உபநிஷத் 4.3.9),
  • ஜோதிஷ்ஆம் ஜோதிஹ் என்றால் விளக்குகளுக்கு மத்தியில் ஒளி (முண்டக உபநிஷத் 2.2.9).

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மொத்தம் 43 பெயர்கள் ‘மஹா’ என்ற வார்த்தையில் தொடங்குவதாக சுட்டிக்காட்டுகிறார். இவற்றில், கடைசி ஆறு நாமங்கள் பகவானின் அதிபதி, வலிமை, அறிவு, வீரியம், சக்தி, பிரகாசம் ஆகிய குணங்களைக் குறிப்பிடுகின்றன. இந்த ஆறு குணங்களின் கலவையே பகவானை மஹாமாயா அல்லது அவரது விளையாட்டு அல்லது லீலா போன்ற அற்புதமான செயல்களைச் செய்பவராக ஆக்குகிறது.

இந்த உலகில் ஜொலிப்பவை அனைத்தும் அவருடைய பிரகாசத்தால்தான் –

யஸ்தே திவி ஸூர்யே மஹிமா ஸம்பபுவ|
தஸ்மை தே மஹிம்நே ப்ரஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா ||
யஸ்தே நக்ஷத்ரேஷு சந்த்ரமஸி மஹிமா ஸம்பபுவ |
தஸ்மை தே மஹிம்நே ப்ர்ஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா || (யஜூர் 23-2, 23-4)

இறைவனை வழிபடுவோருக்கு இயற்கையாகவே இந்த த்யுதியின் ஒரு பகுதி இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிறது என்பதை தர்மச் சக்கரம் விளக்குகிறது (முகம் என்பது மனதின் குறியீடு – அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் வாசகம்).

————-

227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –

227-விஸ்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து

தைஶ் ச தத் கார்ய ஜ்ஞாந க்ரியா ஸாமர்த்₂ய அநந்த்யம் லக்ஷ்யதே இத் யபி₄யுக்தா꞉ ;
ஔசித்யாத்₃ பஹு ஸாஸ்த்ர ஸங்க₃தேஶ்ச ॥
ஆப்₄யாம் ஜ்ஞாந ஸஹ நாப்₄யாம் விஶ்வ வ்யாபநாத்
* விஶ்வாத்மா; யதா₂

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா –புருஷ ஸூக்தம் —அனைத்து திசைகளிலும் பூமியை வியாபித்து

யேந ஏஷ பூத திஷ்டதி அந்தராத்மா –தைத்ரியம் –
யார் எங்கும் வியாபித்து உள்ளானோ அவனே அனைத்தின் அந்தர்யாமியாகவும் உள்ளான்

யேந ஸர்வம் இதம் ப்ரோதம் –தைத்ரியம்
ப்ரக்ருதி காலம் சம்சார ஜீவன் முக்த ஜீவன் மற்றும் நித்ய ஸூரிகள் பலருக்கும் இவனே அந்தராத்மா
அனைத்தும் இவனால் பரவப்பட்டு உள்ளன-ஆகியும் ஆக்கியும் -அவையுள் தனி முதல் அம்மான்

அஹமாத்மா குடாகேச ஸர்வ பூதா –கீதை -10-20-
சோம்பலை வென்ற அர்ஜுனா -அனைத்து உயிரிகளின் இருதயத்தில் நானே உள்ளேன்

உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

விஶ்வாத்மாபகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

விஷ்வாத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா
அவர் விஷ்வாத்மா, ஏனென்றால் அவர் தனது அறிவினாலும் பலத்தினாலும் முழு பிரபஞ்சத்தையும் வியாபித்துள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘விஸ்வஸ்ய ஆத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா‘ என்று விளக்குகிறார். உயிரற்ற பொருட்களை உயிருள்ள உயிரினங்களாக மாற்றும் முக்கிய சாரம் அவர். அவர் சர்வ வியாபி, எங்கும் இருப்பவர் மற்றும் சர்வ அந்தர்யமி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறார். அதனால்தான் சஹஸ்ரநாமத்தில் முதல் பெயர் விஸ்வம். அவர் பிரபஞ்சத்தை மைக்ரோகாஸ்மிக் மற்றும் மேக்ரோகோஸ்மிக் மட்டத்தில் அடையாளப்படுத்துகிறார்.

“அஹம் ஆத்மா குடாகேஷ ஸர்வபூதாஷாயஸ்திதா –10-20- அர்ஜுனா! நான் அனைத்து உயிர்களின் இதயத்திலும் வசிக்கும் ஆன்மா”.

நமது வெளித்தோற்றத்தில் உள்ள வேறுபாட்டையோ, எண்ணங்களில் உள்ள வேறுபாட்டையோ பார்க்காமல், எல்லா உயிரினங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை உணர்வதில்தான் இந்த நாமத்தின் உண்மையான முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்று தர்ம சக்கரத்தில் எழுதியவர் குறிப்பிடுகிறார். தோற்றம் அல்லது நம் எண்ணங்களில், காமம், க்ரோதா, லோபம், மோகம், மாதா மற்றும் மாத்சார்யம் மட்டுமே நம்மில் வளர்ந்து வளர்கின்றன. நம் உள்ளத்தின் பின்னால் உள்ள ஒற்றுமையைக் காணக் கற்றுக் கொள்ளும்போதுதான், அவருடைய தயாவைப் பெறத் தகுதி பெறுவோம்.

இதைத்தான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்கு உபதேசித்தார். ஒருவன் தன் மனைவியை நேசிக்கும் போது அவளுடைய தோற்றத்தை அல்ல, அவளில் உள்ள ஆத்மாவையே நேசிக்க வேண்டும். அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்.

—————————

454-சர்வஜ்ஞ -குறைவற்ற தன் மேன்மையை முற்றும் அறிந்தவர் –
455-ஜ்ஞானமுத்தமம் -பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அனைவரும் அறியக் காரணம் ஆனவர்

  • 454-ஸர்வஞ்ஞ-
    எல்லாமாகத் தன்னை அறிந்தவன்-ஞானம் உத்தமம் மேல் ஞானமாயும் –இங்கு ஞாதாவாகவும் -இருப்பவன் –ததா₂ ஸர்வாத்மநா(ஆ)த்மாநம் ஜாநாதீதி
    ஸர்வஜ்ஞ
    யுஞ்ஞானாம் ச ஸ்வமாத்மானம் பரஸ்மின் அவ்யயே பதே –
    அனைத்திற்கும் தான் ஆத்மாவாக அறிந்தும்
    தனது ஆத்மாவை அழியாத பரம பதத்துடன் இணைத்தும் உள்ளவன்இவர் சம்பந்தத்தால் தான் ஸ்ரீ வைகுண்டம் ஞானத்துக்கு தடுப்பே இல்லாமல் இருக்கும் கலங்காப் பெரு நகரம்கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -2-2-10-
    நிறைந்த ஞான மூர்த்தி
    மீண்டும் 821 வரும்தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –————
    1. ஓம்ஸர்வஜ்ஞாயநம:
    ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை————
  • சர்வஜ்ஞா – எல்லாம் அறிந்தவர்
  • ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘ஸர்வஶ்ச அஸௌ ஜ்ஞாஷ்ச இதி ஸர்வஜ்ஞாஹ் – அவரே எல்லாமும், அனைத்தையும் அறிந்தவர், எனவே அவர் சர்வஜ்ஞா’ என்று அழைக்கப்படுகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (2.4.6) ‘இடம் ஸர்வம் யதயம் ஆத்மா – இங்குள்ள அனைத்தும் பரமாத்மா’ என்கிறது.ஸ்ரீ பராசர பட்டர் எல்லாவற்றிலும் அந்தர்யாமி என்றும், அதனால் அவர் சர்வஜ்ஞா என்றும் அவர் அறிவார் என்று விளக்குகிறார். அவர் சிறந்த தர்மம், சிறந்த வழிமுறை மற்றும் சிறந்த குறிக்கோள் என்பதை அவர் அறிவார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் பெரிய திருமொழியை (4.9.6) ஆதரித்து மேற்கோள் காட்டுகிறார் – ‘உலகத்து எல்லாம் அறிவீர் – உலகில் நடக்கும் அனைத்தையும் அவர் அறிவார்’.ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ருதி பற்றி பல குறிப்புகளை கொடுத்துள்ளார் –
    • யாஹ் சர்வஜ்ஞா ஸர்வவித் – அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் அறிந்தவர் ( முண்டக உபநிஷத் 1.9);
    • ச சர்வஜ்ஞா ஸர்வோ பவதி – அவர் சர்வஞானம் மற்றும் அவர் அந்தர்யாமி ( பிரஷ்ண உபநிஷத் 10);
    • ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ ஸர்வஜ்ஞঃ ஏஷோ அந்தர்யமேஷ்ய யோநிঃ ஸர்வஸ்ய ப்ரபவ்யாப்யாயௌஹி பூதாநாம் – இதுவே அனைத்திற்கும் இறைவன். இவரே அனைத்தையும் அறிந்தவர். இது உள் கட்டுப்படுத்தி. இதுவே அனைத்திற்கும் ஆதாரம். இதுவே உயிரினங்களின் ஆரம்பமும் முடிவும். ( மாண்டுக்ய உபநிஷத் 6);
    • ——
    • 455-ஜ்ஞாநமுத்தமம்-
      மேலான ஞானமாய் இருப்பவன் –ஜ்ஞாயதே (அ)ஸ்மின் ஸர்வ꞉ பரோ வைஷ்ணவோ த₄ர்ம இதி
      ஜ்ஞாநமுத்தமம்படந்தம் அநிசம் சாஸ்திரம் பாஞ்சராத்ர புரஸ்சரம் –
      பாஞ்சராத்ரம் உள்ளிட்ட அனைத்து ஸாஸ்த்ரங்களையும் படிப்பவன்திரு மந்த்ரத்தை உபதேசித்து –
      இவனே பகவச் சாஸ்திரம் ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை வெளியிட்டான்
      மிக்க ஞான மூர்த்தியாய் வேத விளக்கு -4-7-10-இங்கு ஞானம் -அடுத்து ஸூவ்ரதஸ்-அனுஷ்டானம்-ஸ்ரோத்ரியனாயும் ப்ரஹ்ம நிஷ்டனாயும் இருக்க வேண்டுமேஎல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –————–
      1. ஓம்ஞானமுத்தமாயநம:
      ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்தஅஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாதஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியதுஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததானப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.
    • ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.இதிஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.—————
      1. ஞானம்-உத்தமம் – அவருக்கு மிகப்பெரிய அறிவு உள்ளது
    • இதை ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ஞானமுத்தமம் இதி ஏதத் சவிஷேஷணம் ஏகம் நாமம்; ஞானம் ப்ரகிருஷ்டம் ஆஜன்யம் அநவச்சின்னம் சர்வஸ்ய ஸாதகதம் இதி ஞானமுத்தமம் – அவனது ஞானமானது ஆரம்பம் இல்லாத, எல்லையற்ற, அனைத்தையும் அடையும் திறன் கொண்ட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது, எனவே அவர் ஞானம்-உத்தமம் என்று அழைக்கப்படுகிறார்.வைஷ்ணவ தர்மம் – சர்வ பரோ வைஷ்ணவோ தர்மா ஜ்ஞாயதே அஸ்மின் இதி ஞானம் – உத்தமம் – அனைத்து தர்மங்களிலும் மேலான தர்மத்தை வெளிப்படுத்தியவர் பகவான் என்று ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார். அவர் உத்தம ஞானம் – பத்தாந்தம் அனிஷம் சாஸ்திரம் பஞ்சராத்ர புரஸ்-சாரம் என்று பகவானால் பஞ்சராத்ரத்தை வெளிப்படுத்தியதையும் அவர் குறிப்பிடுகிறார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் திருவாய் மொழி (4.7.10) – மிக்க ஞான மூர்த்தியாகிய வேத விளக்கு – தூய அறிவின் சிறந்த சின்னம், வேதங்களின் ஒளி.ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் அதர்வ வேதத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து குறிப்பிடுகிறார் – “சூத்ரம் சூத்ரஸ்ய யோ வேதம், ச வேத ப்ராஹ்மணம் மஹத்” – எவன் பரம ஞானத்தைப் பற்றி அறிந்திருக்கிறானோ, அவன் அறிந்து கொள்ள வேண்டிய மிகப் பெரியதை அறிவான்.தைத்ரிய உபநிடதம் (2.1) கூறுகிறது ‘சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ஹ – பிரம்மன் என்பது சத்தியம், பிரம்மமே ஞானம், பிரம்மனே நித்தியம்’.பகவான் ஞானம்-உத்தமம், ஏனெனில் அவர் எல்லாம் அறிந்தவர் மற்றும் அனைத்து காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறார்.

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

யுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே
நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
கர தலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்
தத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-

ஹே ரங்காதி ராஜ

த்வம் -தேவரீர்

அக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்

ஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்

அஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்

நியமம் –ஒரு வியவஸ்தையோ

அநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே

ப்ராப்ய-அடைந்து

அநிசம்–எப்போதும்

அசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்

யுகபத் -ஏக காலத்தில்

கரதலவத்–உள்ளங்கையைப் பார்ப்பது போலே

பஸ்யசி–சாஷாத் கரிக்கிறீர்

ஸ்வ பிரகாசம்–ஸ்வமேவ பிரகாசிப்பதும்

அவரணம் –ஆவரணம் அற்றதும்

அமோகம்–யதார்த்தமுமான

தத் -அந்த சாஷாத் காரத்தை

ஞானம் ஆம்நாசிஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –

அனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று
எளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-

ஞானம் -என்பதை விளக்குகிறார் –

சஷுராதி த்வாரத்தால் ஆதல் –
தர்ம பூத ஞானத்தால் யாதல் –
இந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும்
அந்ய இந்திரிய விஷயங்களையும்
இப்படி சர்வத்தையும்-
க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக
ஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை
ஸ்வ ப்ரகாசமாயும் –
ஆவரண ரஹிதமாயும் –
யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –

——————

நயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது
கரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-

ஹே ரெங்க பதே

நயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்

த்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்

அத-பின்னையும்

கரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்

காம காரிண–இஷ்டப்படி செய்கின்ற

தே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு

கடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –

கண்களால் கேட்க முடியும்
காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –

தேவரீர் திருச் செவியால் பார்க்கிறது –
திருக் கண்களால் கேட்க்கிறது-
இப்படி கரணங்களால் யதேஷ்டமான
தேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்
போனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –

———————-

சார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்
சாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
அப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்
யத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-

ஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்

ஜகத்–இந்த உலகத்தை

அஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்

சார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –

யத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்

அப்ரேர்ய அந்யை–பிறரால் ஏவப்படாதவராய்

ஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ அதீனரான தேவரீர்

சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட

விஸ்வம் இச்சா லேசத-சகலத்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே

அகணயந்-அவலீலையாய் நினைத்தவராய்

யுகபத் –ஏக காலத்திலேயே

அப்ரதிஹதி -தடையின்றி

ஆவிச் சகர்த்த-படைத்தீரோ

சா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது

காரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை

சாங்க்ய யுக்தாத்–சாங்க்யரால் சொல்லப்பட்ட

சாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்

பரயதி–வேறு படுத்து கின்றது –

சாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் –

நீயோ சர்வஞ்ஞன்
ஸத்ய ஸங்கல்பன் –
சர்வ காரணன் –

இப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-

சாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்

நிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்

இவர்கள் பக்ஷம் நிரசித்து
பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்
புண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே
விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்
தேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய்
சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்

அபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்

——————–

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ

அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

சதா -எப்போதும்

யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

சிலந்தி த்ருஷ்டாந்தம்

———————

ஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருச க்ரிய அபி
அகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்
வபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்
தவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-

ஹே ஈச

ஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்

ப்ருச க்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்

அகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே

அசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்

வபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்

இதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –

தவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்

இதம் -இக் குணமானது

பர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது

வாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி

ஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே
சர்வ ஜகத்தையும் தேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது
அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு
காரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –

—————–

ம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்
நிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி
பிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே
ச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-

ஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே

த்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே

ஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே

நிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே

சகல அர்த்தாந்–சகல பதார்த்தங்களையும்

விக்ருனோஷி–விகாரப் படுத்துகின்றீர்

இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ

தத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று

வதந்தே–வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை
வியாவர்த்திக்க உரியது
விநிவாரயம் -வியவ

வீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு
சன்னிஹிதருடைய மனஸ்ஸூக்களை விகரிக்குமா போலே

தேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்

அத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்

—————-

ஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா
ரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்

ஹே ரங்க தந

ஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்

ஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு

இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத
காரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்

ஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று விளங்குகின்றது

இக் குணமானது

ப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்

பிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –

சிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –

தேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான
சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்
ஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு
இந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்

————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி–ஒன்றான ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்வாமிகளுடைய திருப் பேரானார் அருளிச் செய்த ஸ்லோகம்-

October 11, 2024

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே

வாழி திருநாமம்
திருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர்வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

——

1-ஸ்ரீ வாதூல வரத நாராயண குரு ஸ்வாமிகள் -ஒண்ணான அண்ணன் ஸ்வாமி –
புரட்டாசி -கன்னி-உத்திரட்டாதி திரு அவதாரம் -1371-
ஸ்ரீ பரம பதம் -சித்திரை த்ருதீயை திதி

2–ஸ்ரீ கோயில் கந்தாடை ஆயன் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -மார்கழி உத்தரட்டாதி

3-ஸ்ரீ ஸ்வாமி கோயில் அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் -புரட்டாசி உத்தரட்டாதி

4–(11th Swami as per Chart )ஸ்ரீ குமார கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் –ஆவணி மிருக சீர்ஷம் –
ஸ்ரீ பரம பதம் –பிலவங்க வருஷம் -1547-மார்கழி கிருஷ்ண சதுர்த்தசி திதி-

5-(12th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -பங்குனி ஆயில்யம்
ஸ்ரீ பரம பதம் -விச்வாவஸு -1605-மார்கழி சுக்ல பக்ஷ சப்தமி திதி-

6th (13th Swami as per Chart) ஸ்ரீ ஸ்வாமி குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஆடி சித்திரை
ஸ்ரீ பரம பதம் -சுக்ல வருஷம் -1629-மார்கழி -சுக்ல பக்ஷ தசமி திதி

7–(14th Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி வேதலப்பை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி திருவோணம்
ஸ்ரீ பரம பதம் -விளம்பி -1658-கார்த்திகை சுக்ல சதுர்தசி திதி

8-(15a Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி குமார அண்ணன் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மாசி புனர்பூசம்

9-(15b Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி ரோஹிணி
ஸ்ரீ பரம பதம் -பிங்கள -1677-ஆடி பவ்ர்ணமி திதி

10–(16a Swami as per Chart ) ஸ்ரீ கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆனி -சதயம் –
ஸ்ரீ பரமபதம் -ஸர்வஜித் –1707-வைகாசி -கிருஷ்ண பஞ்சமி திதி

11th- (17a Swami as per Chart)ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி உத்திராடம்

12th (17b Swami as per Chart) ஸ்ரீ குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வித்வத் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி அனுஷம்
ஸ்ரீ பரமபதம் -சுக்ல வருஷம் –1749-ஆவணி சுக்ல திரயோதசி திதி –

13–(18th Swami as per Chart) ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -வைகாசி பூரம்
ஸ்ரீ பரமபதம் -விரோதி -1769-மார்கழி -கிருஷ்ண பஞ்சமி

14–(19th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய அண்ணன் ஸ்வாமிகள் -சித்திரை -ரோஹிணி
ஸ்ரீ பரமபதம் -யுவ -1815-மார்கழி -சுக்ல -துவாதசி -திதி

15–(20th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மார்கழி பூராடம்
ஸ்ரீ பரமபதம் -ஈஸ்வர -1817-மார்கழி கிருஷ்ண த்ருதீயை திதி

16-(21st Swami as per Chart)ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி மூலம்

17 (22nd Swami as per Chart) ஸ்ரீ குமார அண்ணன் ஸ்வாமிகள் –ஸ்ரீ வரதாச்சார்ய ஸ்வாமிகள் -ஆங்கீரஸ வருஷம் பங்குனி ரேவதி
ஸ்ரீ பரமபதம் -சாதாரண வருஷம் -1850-ஆவணி சுக்ல தசமி திதி

18-(23rd Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஸோப கிருது வருஷம் -வைகாசி கேட்டை –
ஸ்ரீ பரமபதம் -கர -1891–3rd nov -ஐப்பசி சுக்ல த்விதீயை திதி

19-(24th Swami as per Chart)-ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -பவ வருஷம் -ஆவணி பூசம் [20-Jun-1874]
ஸ்ரீ பரமபதம் -பரிதாபி -ஆனி -சுக்ல அஷ்டமி -[22-Jun-1912]

20 (25th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -சாதாரண வருஷம் -ஆனி சித்திரை -[17-Jun-1910]
ஸ்ரீ பரமபதம் -[04-Dec-1992]-ஆங்கீரச கார்த்திகை சுக்ல தசமி –

21 (26th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -தாது வருஷம் மாசி திருவாதிரை -[20-Feb-1937]

22-(27th Swami as per Chart.)வர்த்தமான ஸ்வாமிகள் -ஸ்ரீ அண்ணன் திருவேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் -விரோதி வருஷம்-ஐப்பசி -உத்ராடம் [28-Oct-1949]

—————

ஸ்ரீ பராங்குஸ நுதிம் ய ஆதநோத் தத் பாதாப்ஜ பிரபத்தி சோதித
தம் வாதூல குல பூஷணம் தயா வாரிதம் வரத தேசிகம் பஜே

ஸ்ரீ மந் பராங்குச நிரங்குச தத்த்வ போத வாத்ஸல்ய பூர்ண கருணா பரிணாஹ ரூப
ஸுசீல்ய சாகரம் அநந்த குணாகரம் த்வாம் ஸம்ஸார தாப ஹரணம் வ்ருணே அஹம் –1-

காஸார ஸம்யமி முகா கமலா ஸஹாய பக்தா ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த
யஸ்யா பவந் அவயவா இவ பாரதந்தர்யாத் தஸ்மை நமோ வகுள பூஷண தேஸிகாய–2-

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன்

ஸ்ரீ ரங்கராஜ பத பங்கஜ ஸங்க ஸீலம் ஸ்ரேய பரம் மதுர பூர்வ கவேர பூர்வம்
நாதார்ய யாமுன யதீஸ்வர பாகதேயம் நாதம் குலஸ்ய மம நவ்மி பராங்குசார்யம் –3-

பாப க்ரியா ஸூ நிரதாஸ் ஸ்ருணு தாஸ் மதுக்தம் தாப த்ரயேண பவிந பரிதப்யமாநா
ஆபத் தநம் மதுரிபோர் பவ தாம வித்யா ஸ்வாப ப்ரஹாண நிபுணஸ் ஸரணம் ஸடாரி –4-

நித்யோத முக்த உததத் குணகோ முமுஷு வ்யாஸாதி வத் பகவதா கிமநு ப்ரவிஷ்ட
அத்ர்யாதி ஸூநுரிஹ வர்ண யுக க்ரமாத் கிம் ஆஸீத் புராண புருஷ ஸச வைரி யோகீ –5-

கர்மேதி கேஸித பரே மதிரித்ய தாந்யே பக்திம் பரே ப்ரபதநம் ப்ரவத ந்த்யுபாவம்
ஆம் நாய ஸார சதுராஸ் த்வமித அநு பாவம் த்வாமேவ யாந்தி ஸரணம் ஸடஜித் முநீந்த்ர –6-

பக்தாத் யுபாய ரஹித பதிதோபவாப் தவ் த்வத் பாத ஸேவ நரஸே அபி சதுர் பலோ அஹம்
இத்தம் ஸதீஹ ஸட கோப தயைக மூர்த்தே க்ருத்யம் கிமஸ்தி மம ஸம்ஸ்ருதி மோசநாய –7-

த்வத் திவ்ய ஸூக்தி பரி ஸீலந மாத்ர மேவ நிஸ்ரேய ஸாதி கமநே நிரபேஷ ஹேது
தச் சாஸ்தி மே ந ஸட வைரி குரோர் மஹாத்மந் உஜ்ஜீவநம் கதமஹோ மம ஜாக டீதி –8-

த்வந் நாம கீர்த்தந மக்ருத்ரிம மாதநோதி யஸ் தஸ்ய ஸம் ஸரண நிஸ் தரணம் கடேத
துர் வாஸநா கலுஷி தஸ்ய நமே அஸ்தி புத்தி தத்ராபி கேஸர விபூஷ கிமாத்ம நீநம் –9-

த்வத் கிங்கரத் வரஸிகாஸ்தவ தாஸ தாஸ தாஸ்ய ஏக ரஸ்ய முதி தாஸ் ச பஜந்தி முக்திம்
தத்ராப்யஹம் ஸகநவாந் ந ஸடாரி யோகிந் அத்யாஹிதம் கதமபைது பவோத்தி தம் மே -10-

த்வத் விக்ரஹே க்ஷண மதோ தவ ஸம் ஸ்ம்ருதிஸ் ச
முக்த்யை பவேதி திவ தந்தி பரங்குஸார்ய
நித்ரா ப்ரமாத மலி நீக்ருத மாந ஸஸ்ய
தத்ராபி ஸக்திரிஹ மே ந கதம்ப வேயம்–11

ஏவம் கதா சிதபி குத்ரசித ஸ்த்யுபாய
நைவாக நாசந விதவ் மமதாவ கஸ்ய
ஆகஸ்மிகீம் தவ க்ருபாமப ஹாய மாயா
கோலா ஹல ப்ரஸம நீம் குருகா புரீஸ –12-

அவ்யாஜ பந்தும் அவிஸேக்ஷம் அஸேஷ ஐந்தோ
உத்வேல வத்ஸல தயா க்ருபயா ச பூர்ணம்
த்வாமாம நந்தி ஸட வைரி முநே ததஸ் தே
ஹாதும் ந யுக்தம பராதி நமப்யஹோ மாம் –13-

யாவச் ச யச்ச துரிதம் ஸகலஸ்ய ஐந்தோ
தாவச் ச தத்தத திகம் ச மமாஸ்தி ஸத்யம்
ஏதத் வச கதமபூத் ஸததாந் ருதோக்தி
ஸீ லஸ்ய மே ஸட ரிபோ ததிதம் விசித்ரம் -14

ஸாஸ்த்ரேண யத் விஹித மா சரணீய மேதத்
ஸர்வைர் நிஷித்த மிஹ யத் ததுபேக்ஷணீயம்
இத்யாதி கம் ஸடரிபோ ஸதஸி ப்ரவீமி
ஹை ஸந்தநோமி ரஹஸி ஸ்வ வஸோ விருத்தம் –15-

ப்ரச்சந்ந பாதக ஸதா வ்ருத சேதஸோ மே
ஸம் ப்ரீணிதா ப்ரணதி பூமி கயாசித்
ஸத்கார மாதரப ரேண பரா வரஜ்ஞா
குர்வந்தி ஹந்த ஸட வைரி முநே ஹ தோஸ்மி –16-

பத்ப்யாம் ஸபே தவ ஸடாரி முநீந்த்ர யோ அபூத்
உத்தாம தோஷ கண நாந்திம கோடி நிஷ்ட
ஸோ அபி ப்ரக்ருஷ்ட விபவோ யத பேஷயா ஸ்யாத்
தஸ்மாச் ச பாப பரிதோ அஹமிதோ ந பாப –17-

பூர்வை ஸ்வ நைச்யம் அநு ஸம்ஹித மார்ய வர்யை
மாமேவ வீஷ்ய மஹதாம் ந ததஸ்தி தேஷாம்
நைச்யம் த்விதம் ஸடரிபோ மம ஸத்யமேவ
மத்தஸ் பரோ ந மலிநோ யத ஆவிரஸ்து –18-

உக்த்வா ஸ்வ தோஷ விஷயம் வசனம் த்வத க்ரே
ஸம்ஸாரா பீருரிவ தேந வஞ்சகோ அஹம்
ஸாமர்த்ய மேவ ஸட கோப விபாவ யாமி
ஸம் வீஷ்ய கம் குண மிஹாஸி மயி ப்ரசந்ந –19-

கிந்து க்ரியா ஸமபி ஹார க்ருதாபராத
ஹந்தாநு தப்ய புநரப்ய பராத காரீ
பத்மாஸ கஸ்ய பரிஹாஸ ரஸோசி தோ அஹம்
ஏதத் விலோக்ய ஸட கோப மயி ப்ரஸீத –20-

காம ப்ரமோஹ மத மத்ஸர மந்யுலோபை
பராம்பரீத உதிதை பரி பீட்யமாநம்
தைவாத் த்வதீ க்ஷண பதம் தயயா ஸடாரே
பாஹி ப்ரபந்ந மிமமுந்ந மதாக ஸம் மாம் –21-

கார்யா க்ருபா ஸூமதிபிர் கலு துக்கி தேஷு
துக்கீ மயா ந ஸத்ரு ஸோப்ருஸ துக்க பாஜாம்
தஸ்மாத் தவாகி லஜநேஷு சயா அநு கம்பா
மய்யே வதாம் ஸட ரிபோ நிப்ருதம் நிதே ஹி –22-

விஸ்வோ பகாரக மகார்ணவ தாரகம் த்வாம்
அப்ராப்ய ஹை ஸடரிபோ ஹத ஏவ பூர்வம்
அத்யத்வதீய க்ருபயா ப்ரதி லப்த ஸத்த்வ
த்வத் ஸேவ நாம் ருதர ஸேந ஸூகீ பவாநி –23

அத்ராப்ய முத்ர கரண த்ரிதய ப்ரவ்ருத்த்யா
த்வத் பாத பங்கஜ ஜூஷாம் விதுஷாம் ப்ரஸாதம்
நித்யம் லபே மஹி ந சாந்யத பேஷிதம் ந
ப்ரத்யக்ர கேஸர பரிஷ்கிருத காரி ஸூநோ –24-

வாதூல வேங்கட பதிம் வரதார்ய ஸூநும்
அஸ்மத் குரும் தவ பத ப்ரவணம் ஸமீஷ்ய
அஞ்ஞம் க்ருதாகஸம் அநாதம் அகிஞ்சநம் மாம்
த்வத் கிங்கரம் ஸட ரிபோ ஸததம் குருஷ்வ –25

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மாறன் பொன்னடி மேவுவோம் மெய்மையே-ஸ்ரீ வகுள மாலை–1937-May-June-

September 12, 2024

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவோமே

ஸாது
சந்திம் இச்சந்தி சாதவ -அன்பு பெருகும் சந்தியில் -நல்லன்பர் சாதுக்களாவார்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -இவன் அவனது திருநாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி செய்யும் நிலமே சடகோபர் தத்வம்
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்துக்கள் ஆவார்
ஸ்ரீ பாதுகை பெற்று மீண்ட பரதாழ்வானை பரத்வாஜர் -பேறு பெற்றீரோ -பரனை ஒன்றினீரோ -பரத்வாஜர் உசாவுகிறார்
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமான் –ஸ்ரீ வால்மீகி பகவான் புகழ்ந்தார்

ப்ரபந்ந ஐந கூடஸ்தர்
ஆத்யஸ்தன குல பதேர்
குல தனம்
குல தைவதம்
-என்று ஆர்ய ஜனங்கள் புகழ்ந்து போற்றுவதுக்கு மூலம் இவர் ஸ்ரீ ஸூக்தியே –

விண்ணுளார் போற்றித் தொழும் ஸ்ரீ வைகுந்தக் கோனுடைய திருப் பாதுகைக்கு ஸ்ரீ சட கோபன் என்று அன்றோ திரு நாமம் –
நிதி-பரன் என்பது பிரதம பர்வம் -சடகோபன் என்பது சரம பர்வம் –

தன் திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனை -அபய ப்ரதான ஸாரம்

ஸ்ரீ சடகோபன் நிற்கும் பாத பீடத்தளவும் சென்று -பரமபத ஸோபநம்

வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
மந்திரம் கொள் மறை முனிவன் -காயத்ரி கண்ட -ருஷி விஸ்வத்துக்கு மித்ரர்
அதன் பொருளை விரித்து அருளியவர் வால்மீகி கவி 24 அக்ஷரங்கள் கொண்ட -காயத்ரியை விளக்கும் ஸ்ரீ ராமாயணமும் 24 ஸ்லோகங்கள் கொண்டது
ஸரணாகதி ஸாஸ்த்ரமும் அதுவே
ஸரணாகதி தர்மத்தை விளக்கும் மறைகளுக்கு எல்லாம் காயத்ரியே தாய்
அத்தாய் மந்த்ரம் கண்ட இவரே ரிஷி
அதன் அர்த்தம் விரித்து அருளிய இவரே கவி
காயத்ரியே விஸ்வ ஜநநீ
பக்தைர் பாகவத சஹா என்றது ஆழ்வார் ஆச்சார்யர்களையே

மறைச்சிரம் மருவும் ஆன்antrumஅன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறனை அமிழ்தின் இணையடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழு மூதுவர் உலகு வாழ
நிறை யரித் திருவாய் ஓது நிதி எனும் நிலை விரித்தனமே

———

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர் புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

மகிழம் பூ

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம்[6]வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.

  • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.

இந்தப் பூவின் சிறிய உருவம் பற்றியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடிய ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

பேரிலேயே-மகிழ்”ச்சி தரும் “மகிழ”ம்பூ

பண்ணும் தமிழும் தவம் செய்தன!  பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! – என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!

மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்)  என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் “வகுளா பிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!”

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்

துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?

உளவோ பெருமான் உனக்கு?

கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற – நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம். 

மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரம உபாய நிர்ணயம் -பிரமாணத் திரட்டு-

June 1, 2024

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||
–நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்குருமீடே நிஜமாதரேண சாஹம் |ய இஹாகில லோக ஜீவநாதர:சரமோபாய விநிர்ணயம் சகார ||-நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற
ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர்.

இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || 
என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே  ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.

உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ;  இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. (யஶ்ச ராமம்  நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை  ஸம்பந்தம்  நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.  இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.

உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21 (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22 (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

23. (விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில்  இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே  இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

 (கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.
ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,-34. “ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம்  கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்

18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று  சதுரராய்  கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.–35. ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத்  தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,–36 (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன  குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37.  (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38.  (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே-41. (மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.

ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.

சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி  ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.