திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

எனதுஆவி யுள்புகுந்த பெருநல் உதவிக்கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வது என்பது உண்டே?
எனதாவி ஆவியும் நீ, பொழில்ஏழும் உண்டஎந்தாய்!
எனதுஆவி யார்? யான் ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.3

    பொ – ரை : ‘எழுவகைப்பட்ட உலகங்களையும் பிரளயதகாலத்தில் திருவயிற்றில் வைத்துப் பாதுகாத்த என் சுவாமியே! என் உயிருக்குள்வந்து ஒரு நீராகக் கலந்த பெரிய நல்ல உதவிக்குப் பதில் உதவியாக என் உயிரை உனக்கே உரியதாகத் தந்தேன்; தந்த பின்னர், உன்னிடத்தினின்றும் மீள்வது என்பது உளதோ? ‘இன்று,’ என்றபடி, என்

உயிருக்குள் உயிராக இருப்பவனும் நீ ஆவாய்; என்னால் கொடுக்கப்பட்ட உயிர் யாருடையது? அவ்வுயிரை உனக்குக் கொடுக்கிற நான் யார்? கொடுத்த நீயே கொடுக்கப்பட்ட பொருளினை உனக்கு உரிமையாக்கிக்கொண்டாய்’ என்றவாறு.

    வி -கு : கைம்மாறு – பிரதியுபகாரம். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு’ என்பது திருக்குறள். ‘தந்தொழிந்தேன்’ ஒரு சொல். மீள்வது தொழிற்பெயர், உண்டே -ஏகாரம், எதிர்மறை. ‘ஆர்’ என்பது, வினா வினைக்குறிப்பு முற்று. இது, ‘யார்’ என்பதன் மரூஉ; ஈண்டு அஃறிணைக்கண் வந்தது.

        ‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்துஎம்
கோதைகூட்டு உண்ணிய தான்யார்மன் -போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு?’

என அஃறிணைக்கண் வருதலும், ‘நானார்’ என்னுள்ளமார்?’ என ‘யார்’ என்பது ‘ஆர்’ என மரீஇ வருதலும் புதியனபுகுதலாம் என்பது நன்னூல் விருத்தி, சூ. 349.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘வைத்தாயால்’ என்று அவன் செய்த உபகாரத்தைச் சொல்லி, ‘இங்ஙனே கிடந்து நெஞ்சாறல்பட நில்லாதே, பிரதியுபாகாரமாக உம்மதாய் இருப்பது ஒரு பொருளைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ?’ என்ன, ‘அப்படியன்றோ செய்வது?’ என்றுஅவன் திருவடிகளிலே ஆத்தும சமர்ப்பணத்தைப் பண்ணி, தகழிவிரக்கங்கொள்ளுகிறார்.

    எனது ஆவியுள் புகுந்த – அநாதிகாலம் சமுசாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்தும வஸ்துவிலே அன்றோ வந்து கலந்தான்? வசிஷ்டன் சண்டாளச் சேரியிலே புகுந்தது போன்று தம்மைச் சொல்லுகிறார் ‘எனதாவி’ என்று; 2‘நீசனேன்’ என்று அன்றோ தம்மை அநுசந்திப்பது? அவ்வாறு கலக்கும் இடத்திலும்3கடக்க நின்று சில போக மோக்ஷங்களைத் தந்து போதல் அன்றி,

1‘எல்லாம் தன்னுளே கலந்தொழிந்தோம்’ என்னும்படி கலந்தானாதலின், ‘உள்கலந்த’ என்கிறார். பெருநல் உதவிக் கைம்மாறு – இப்பெரிய உபகாரத்துக்குப் பிரிதியுபகாரமாக; உதவி, நல்லுதவி, பெருநல்லுதவி: உதவியாவது,உபகரித்தல். நல்லுதவியாவது, 2பச்சை கொள்ளாதே உபகரித்தல். பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல். எனது ஆவி தந்தொழிந்தேன் – என்னுடைய ஆத்மவஸ்துவைத் தேவரீருடைய திருவடிகளிலே சமர்ப்பித்தேன். ‘அழகிது; இதுதான் 3எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன். இனி மீள்வது என்பது உண்டே –4சத்தோதஸாகமாகத் தந்தேன். ‘அழகிது, நீர்தாம் யாரதை யாருக்குத் தந்தீர்? ஆராய்ந்து பார்த்தீரோ!’ என்றான் ஈஸ்வரன். ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது. ‘எனது ஆவி ஆவியும் நீ’ என்கிறார்; அதாவது, ‘என் ஆத்துமாவுக்கு அந்தாரத்துமாவாய்ப் புகுந்து நின்றாயும் நீயாய் இருந்தாய்,’ என்றபடி.

    ‘பகவானுக்கு உரிமைப்பட்ட பொருளை நெடுநாள் ‘நம்மது’ என்றிருந்து, இத்தை இன்று அவன் பக்கலிலே சமர்ப்பித்தோம்; முற்றறிவினான சர்வேஸ்வரன் என் நினைந்திருப்பான்?’ என்று தாம் அதனையறிந்து அதற்கு நாணுகிறார், ‘எனது ஆவி யார்? யானார்?’ என்று. ‘நன்று; ஆத்தும சமர்ப்பணம் செய்யாவிடில் 5சர்வமுத்தி பிரசங்கமாம்; சமர்ப்பிக்கில் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாம்; அப்படியாயின், செய்ய அடுப்பது என்?’ என்னில்,

1மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீ ஆளவந்தார்திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.

    பொழில் ஏழும் உண்ட எந்தாய் -‘இயல்பாகவே அமைந்த சேஷியாய் இருக்குந்தன்மையைக் கொண்டு சொல்ல வேண்டுமோ? பிரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கின அது போதாதோ நீ சேஷி என்கைக்கு?’ இனி, ‘பிரளயாபத்திலே நசியாதபடி உலகத்தைப் பாதுகாத்தது போன்று, பிரிந்து நசியாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவன்’ என்பார், ‘பொழில் ஏழும் உண்ட எந்தாய்’ என்கிறார் எனலுமாம்.

    எனது ஆவி யார் யான் ஆர்  – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

உபகாரம் அனுசந்தித்து பிரத் உபகாரம்–ஆத்மா சமர்பிக்க நான் யார் -என்கிறார் .

அங்குற்றேன் அல்லேன் -ஐவர் -கதறின இடங்கள் பல உண்டு -அறியா காலத்து -பிள்ளான் திக்கம்

பிரகரணத்து வைத்து அர்த்தம்-எம்பெருமானார் கவனித்து –
கீழும் மேலும் பிரீதிகரம் -நடிவில் துக்கம் பொருந்தாது
உபகாரமாக தான் சொல்கிறார் -அறியா மா மாயத்து அடியேனை -ஆரம்பித்து அந்வயம்-
வாமன சரித்ரம் திருஷ்டாந்தம் -மனோ ஹாரி சேஷ்டித்தால் வஞ்சித்து –
வைத்தையால்– உபசாரம் அனுசந்தித்து சந்தோஷ பட்டு
ஆனந்த அதிசய சூசகம் -பதில் உம்மதே உள்ள வஸ்து கொடுத்து -அஆத்மா சமர்ப்பணம் பண்ணி
அதுக்கும் வருத்தம்-அதுவும் அவனது தானே -துக்கப்படுகிறார் –
கிருதக்ஜமாக சமர்ப்பிக்கவும் வேண்டும் துக்கிக்கவும் வேண்டும்
என்னுள் கலந்த உதவிக்கு -பொழில் எழும் உண்ட எந்தாய் உடைமை அவனது ஆவியும் அவனது தான்
ஆவி யார் யான் யார் உன்னுடையவன்
நீயே கொடுத்தனை நீய எடுத்துக் கொண்டார்
எனது ஆவி சம்சாரத்தில் அநாதி காலம் போன -காகுச்ஸ்வரம்
வசிஷ்டர் சண்டாள ரேழியில் புகுந்தால் போலே -வரிஷ்டனான சிஷ்ட ஆசாரம் உள்ளவர்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் எனது ஆவியில்
உள் கலந்த -அது தன்னிலும் கடக்க  நின்று போக மோஷங்கள் கொடுத்துப் போகாமல்
ஒன்றுக்கு ஓன்று கலந்து
உதவி நல் உதவி பெரு நல் உதவி
உபகரிக்கை
பச்சை கொள்ளாமல் உபகரிக்கை நல் உதவி
பேறு தன பேறாக உபகரிக்கை
அது இன்றி தரிக்க மாட்டாமல் -உபகரிக்கை
எனது தாவி -வெளிறு கழிந்த ஆத்மாவை -ஆசாரம் நீக்கி சாரமனத்தை சமர்பித்தேன்
நீ  என்னை உனக்கு ஆக்கினாய் நான் என்னை உனக்கு ஆக்கினேன்
அழகு இது இத்தனை குளிக்கு நிற்கும் -வாசனாதி த்ரவ்யங்கள் -அன்று -இதை கொண்டே பல குளியலுக்கு நிற்கும் –
வார்த்தைப் பாடு —
இனி மீள்வது எனபது உண்டோ சத்யோதசாகமாக தந்தேன் இப்பொழுதே கொடுத்தேன்
கிரயம் -10 நாள் கெடு அன்று அவதி -சத்யாக தசாகம் அது போல் 10 நாள் கெடு இன்றி கொடுத்தேன் –
இதுவும் வாய்ப்பாடி –
ஆதசாம்நிவர்த்தந்தே -ஸ்லோகம் அரும்பதத்தில்
யாரத்தை யாருக்கு  தந்தீர் ஆராய்ந்து பாரும்
ஆராய்ந்தவாறே
எனது ஆவி ஆவியும் நீ அந்தர்யாமியும் நீயும்
நெடு நாள் நம்மது என்று நினைத்து -சமர்ப்பிக்க சர்வக்ஜன் என்ன நினைப்பான் என்று லஜ்ஜிக்கிறார் –
ஆத்மா சமர்ப்பணம் சமர்ப்பிக்காவிடில் சர்வ முக்தி பிரசங்கம்
விசித்ரா தேக சம்பந்தம் ஈஸ்வரா நிவர்த்தந்தி –
ஹேது இன்றிதன் கிருபையால் கொடுப்பவன் அனைவருக்கும் கொடுக்க வேண்டுமே
கொஞ்சம் ப்ரீதி அத்வேஷம் ஆபி முக்கியம் இருக்கா
சர்வ முக்தி பிரசங்க பரிகாரார்த்தம் -வியாஜ்யம் -இவை சாதனம் இல்லை –
அவனது வஸ்துவை சமர்ப்பித்தால் -பிராந்தி சமயத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும் தெளிந்தால்
இதை கொடுத்தோமே நினைக்கவும் வேண்டும்
ஆள வந்தார் -தவ பாத பத்மம் -வபுரா யோகி கோபிவா எது வாக இருந்தாம்
தேகமாக இருந்து தொலையட்டும் -குணங்கள் தோஷங்கள்  இருந்து போகட்டும்
மயா சமர்ப்பிதாக
அடுத்த ஸ்லோகம் மம நாத -ததைவம் -கிம் சமர்ப்பயாமி தே-
ஸ்லோக த்வயம்-சமர்ப்பண சப்தம் ஸ்வாபாவிக தாஸ்ய குணம் –
இரண்டும் வேண்டும் -சேஷி -பதவி மட்டும் இல்லை செயலும் உண்டே –

எங்கே பொழில் ஏழும் உண்ட எந்தாய் -அனைத்து வச்துக்களையும்நோக்கி
எந்தாய் எனக்கு ஸ்வாமி பிரிந்து நசியாத படி என்னை கலந்து ரஷித்தான்
பிரளய ஆபத்தில்
யானும் தானும் எல்லாம்தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
பிரதேயமான வஸ்து -பிரதாயா கொடுத்தவனும் கொடுத்த வஸ்துவும் உன்னதே தான் –
உண்டாக்குவதுநித்ய வஸ்துவை
இச்சா விஸ்வா பதம் -இச்சையால் தான் வஸ்துவின் நித்யத்வம் –
சரீரம் உடன்சேர்த்து வைப்பது -பிறப்பு –
தந்தான் -எந்த வஸ்துவையும் எதாவாது மாற்ற முடியும்
நித்யம் அணு ஸ்வரூபம் ஸ்வாபாவம்
மாறாமல் இருக்க அவன் சங்கல்பித்தான் -சக்தி உண்டு –
நித்ய தத்வமாக இருக்க அவன் சங்கல்பம் தான் காரணம்
நித்ய சூரிகளாக இருப்பதும் இதனால் தான்
நச புன ஆவார்த்ததே வேதம் சொல்வதும் இது போல் தான் –
கழுத்தை பிடித்து தள்ளலாம் ஆனால் மாட்டான் -சங்கல்பித்ததால் -அதிகாரம் பிரயோகம் செய்ய மாட்டான்
அநாவிருத்தி சப்தாத்வேதம் சொல்லி -அதனால் –
இச்சா ஏவ தேவ விஸ்வ பதார்த்தா சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
தந்த நீ கொடுத்தாய் நீயே கொண்டாய் -பிதா உபநயனம் பிள்ளை க்கு கொடுத்து தானே கொள்ளும் பிதா போல்
தந்த நீ கொண்டாக்கினாயே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading