Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ பராசர ஸ்மிருதி-

May 24, 2026

முதல்‌ அத்தியாயம்‌: ஆசார காண்டம்.

அதாதோ ஹிம ஸைலாக்ரே தேவ தாரு வநாலயே
வ்யாஸ மேகாக்ர மாஸிந மப்ருச் சந் ந்ருஷய புரா
மாநுஷாணாம் ஹிதம் தர்மம்‌ வர்த்தமாநே கலெள யுகே
சவ்சாரம் யதாவச்ச வத ஸத்யவதீஸுத.

முன்னொரு காலத்தில்‌ மகரிஷிகளெல்லாம்‌ தேவதாரு மரங்களால்‌ நிறைந்த இமய மலையில்‌ ஒரே மனதாய்‌ உட்‌ கார்‌ந்து கொண்டிருக்கும்‌ வியாஸரைப் பார்த்து ஓ ஸத்யவத குமாரரே! இந்தக் கலியுகத்தில்‌ மனிதர்களுக்கு ஹிதமான தர்மத்தையும்‌ சுத்தமான வாசாரத்தையும்‌ சிரமப்பட சொல்லுவிரென்று கேட்டார்கள்

தச் ச்ருத்வா முநிவாக்யந்து ஸஸிஷ்யோக்ந்யர்க ஸந்நிப:
ப்ரதயுவாச மஹாதேஜாஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி விஸாரத
ந சாஹம் ஸர்வ தத்வஜ்ஞ கேதம் தர்மம் வதாம் யஹம்‌
அஸ்மத் பிதைவ ப்ரஷ்டவ்ய இதி வ்யாஸஸ் ஸுதோ ப்ரவீத்

சிஷ்யர்களோடு கூடியும்‌ அக்நிக்கும்‌ ஸூரியனுக்கும்‌ சமமானவராயும்‌ அதிக தேஜோ வானவராகவும்‌ ஸ்ருதி ஸ்மிருதி இவைகளை உணர்ந்தவராகவும் பராசரருக்குப் புத்திரராயுமிருக்ற வியாஸர்‌ அந்த ரிஷிகளின்‌ வாக்யக்தைக் கேட்டு நான்‌ எல்லாத் தத்துவங்களையும் உணர்ந்தவன் அல்லேன் எவ் வண்ணம்‌ தர்மம் உரைக்கக் கடவேன்‌ என்‌ பிதாவைக் கேளுங்கள்‌ என்று பதில்‌ சொன்னார்

ததஸ்தே ருஷயஸ் ஸர்வே தர்ம தத்துவ ஸித்த காங்க்ஷிணா
ருஷிம் வ்யாஸம் புரஸ்க்ருத்ய கத்வா பத்ரிகாஸ்ரமம்‌

பிறகு அம் முனிவர்களெல்லாரும்‌ தர்மத்தினுண்‌மைப் பொருளை யறிய விரும்பினவர்களாய்‌ வியாஸ மகரிஷியை முன்‌னிட்டுக்கொண்டு பதரிகாச்ரமத்தை நோக்கிச் சென்று

நாநா புஷ்ப லதா கீர்ணம்‌ பல புஷ்பைர லங்க்ருதம்‌
நதீ ப்ரஸ்ரவணோ பேதம்‌ புண்ய தீர்தோப ஸோபிதம்‌

ம்ருக பஷி நிநா தாட்யம்‌ தேவதாய தநா வ்ருதம்‌
யஷ கந்தர்வ ஸித்தைஸ் ச ந்ருக்‌த கீதை ரலங்க்ருதம்

(அந்த பதரிகாஸ்ரமம்‌) அனேகம்‌ புஷ்பக் கொடிகளால்‌ நிறைந்தும்‌ பழங்களாலும்‌ புஷ்பங்களாலு மலங்கரிக்கப்‌ பட்டதாயும்‌ ஆறுகளோடும்‌ மலை யருவிகளோடும்‌ கூடினதாயும்‌ பரிசுத்த தீர்த்தங்களால்‌ விளங்குகிறதாயும்‌, மான்களுடையவும்‌ பஷிகளுடையவும்‌ சப்தங்களால்‌ பூர்ணமாகவும்‌ கோயில்களால்‌ சூழப்‌ பட்டதாயும்‌ யக்ஷர்கள்‌ கந்தருவர்‌ சித்தர்கள்‌ இவர்களுடைய ஆடல் பாடல்களால் அலங்கரிக்கப் பட்டதாயும்‌ விளங்குகிறது

தஸ்மிந் ருஷி ஸபா மத்யே ஸக்தி புத்ரம் பராஸரம்‌ –
ஸூகாஸீநம் மஹா தேஜா முநி முக்ய கணா வ்ருதம்‌
க்ருதாஞ்ஜலி புடோ பூத்வா வ்யாஸஸ்‌ து ருஷிபிஸ் ஸஹ
ப்‌ர தஷிண அபிவாதைஸ் ச ஸ்‌துதி பிஸ் ஸம பூஜயத்

அவ் விடத்தில்‌ ரிஷிகளின்‌ சபை நடுவில் சுகமாக உட்கார்‌ந்து மகரிஷிகளால்‌ சூழப்பட்டு சக்தி புத்திரராக விளங்கும் பராசரரை (மகா தேஜோவானான வியாஸர்‌ ரிஷிகளோடு கூடிக்‌ கை கூப்பிக் கொண்டு பிரதஷிண நமஸ்காரங்களாலும்‌ ஸ்தோத்திரங்களாலும் பூஜித்தார்

ததஸ் ஸந்துஷ்ட ஹ்ருதய பராஸர மஹா முநிர்
ஆஹ ஸுஸ்வாகதம் ப்ரூஹீ த்யாஸீநோ முனி புங்கவ

பிறகு சந்தோஷத்‌துடன்‌ பராசரர் முனிவர்களுக்குள்‌ உயர்ந்தவராதலால்‌ உட்கார்ந்தபடியே ஷேமமாக வந்தாயோ சொல்‌ என்று விசாரித்தார்-

குஸலம் ஸம்யகித் யுத்வா வ்யாஸ ப்ருச் சத்யத பரம்‌
நல்ல க்ஷேமம்‌ தானா வென்று விசாரித்த பிறகு வியாஸர்‌ கேட்கிறார்

யதி ஜாநாஸி பக்திம்‌ மே ஸ்‌நேஹாத்வம் பக்த வத்சல
தர்மம் கதய மேதா தஹ்‌ய நுக்‌ராஹ் யோப்யஹம் தவ.

நீர்‌ பக்த வத்சலனாதலால் தேவரிர் விஷயமான என்‌னுடைய பக்கியை யறிந்தாவது , எனக்குத்‌ தகப்பனாதலால்‌ புத்திர ஸ்நேகத்தாலாவது எனக்குத்‌ தர்மத்தைச்‌ சொல்ல வேண்டும்‌,-எவ்விதத்திலும் நான் தேவரீருடைய அனுக்ரஹம் பெறத்தக்கவன்-

ஸ்ருதாமே மாநவா தர்மா வாஸிஷ்டா காஸ்யபாஸ் ததா
கார்கீயா கெளதமீயாஸ் ச ததா செளஸந ஸாஸ் ஸூருதா
அத்ரேர் விஷ்ணோஸ்ச ஸம்வர்‌தாத் தஷா தங்கிரஸஸ் ததா
ஸாதாத பாச்‌சஹாரி தாத் யாஜ்ஞவல்க்யாத் ததைவ ச
ஆபஸ்தம்ப க்ருதா தர்மாஸ் ஸங்கஸ்ய லிகிதஸ்ய ச காத்யாயந க்ருசதாஸ் சைவததா ப்ராசேத ஸாந் முநே

மநு – வசிஷ்டர்‌ – காசிபர்‌ -கர்க்கர்‌ – கெளதமர்‌ -உசநஸ்‌-அத்திரி – விஷ்ணு – ஸம்வர்‌ததர்‌-தக்ஷர்‌ – அங்கிரஸ்‌ – சாதாதபர்‌-ஹாரீதர்‌-யாக்ய வல்க்யர்‌-ஆபஸ்‌தம்பர்‌-சங்கர்‌ -லிகிதர்‌-காத்தி யாயனர்‌ – பிரசேதஸ்‌ இவர்களால்‌ செய்யப்பட்ட ஸ்மிருதிகளை நான் அறிந்திருக்கிறேன்

ஸ்ருதாஹ் யேதேபவத் ப்ரோக்தாஸ் ஸ்ருத்யரத்தாமேந விஸ்ம்ருதா, அஸ்மிந் மந்வந்தரே தர்மா க்ருத த்ரேதாதிகே யுகே

தேவரிரால்‌ ஓதுவிக்கப்பட்ட வேதார்த்தங்களும்‌ – க்ருதம்‌ த்ரேதா முதலிய யுகங்களின்‌ தர்மங்களும்‌ எனக்கு மறக்க வில்லை-

ஸர்வே தர்மா க்ருதே ஜாதாஸ் ஸ்ர்வே நஷ்டா கலெள யுகே
சாதுர்வர்ணய ஸமாஸாரம்‌ கிஞ்சித் ஸாதாரணம் வத

எல்லாத் தர்மங்களும்‌ க்ருத யுகத்தில் உண்டானவை -தேச குல சாதி வயஸூ குண தேக கால ஆபத் தர்மங்களைக் போல் பலவும் உள்ளன-யுகம் தோறும் ஒரு கால் உடைந்து கலியுகத்தில் ஒரே கால் மட்டுமே இருப்பதால் அவைகள்‌ கலியுகத்தில்‌ நாசமடைந்தன. நான்கு வர்ணங்களுக்கும்‌ சில பொதுவான தர்மங்களைச்‌ சொல்ல வேண்டும்-சாமான்ய விசேஷ தர்மங்கள் இரண்டு வகைப்படுத்தலாம்-

சதுர்ணாமபி வர்ணா நாம் கர்‌தவ்யம் தர்ம கோவிதை
ப்ரூஹீர் தர்ம ஸ்வருபஜ்ஞ ஸூஷ்மம் ஸ்‌ தூலஞ்ச விஸ்தராத்‌ .

தர்மங்களுடைய ஸ்வரூபம்‌ தெரிந்த தேவரீர்‌ நான்கு வர்ணங்களுக்குள்‌ தர்மம் தெரிந்தவர்களால்‌ செய்யத் தகுந்த நுட்‌பமாயும்‌ பெரிதாயுமிருந்துள்ள தர்மங்களை விஸ்தாரமாக வுரைக்க வேண்டும்

வ்யாஸ வாக்யா வஸாநேது முநி முக்ய பராஸர
தர்மஸ்ய நிர்ணயம் ப்ராஹ ஸூக்ஷ்மம் ஸ்தூலம் ச விஸ்‌தாராத்

வியாஸருடைய வார்த்தையின்‌ முடிவில்‌ ரிஷிகளுக்‌குள் உயர்ந்தவரான பராசரர்‌ நுட்பமாயும்‌ பெரிதாயுமிருக்கற தர்‌மத்தினுடை.ய வாஸ்தவத்தை விரிவாக வுரைக்‌கலுற்றார்

ஸ்ருணு புத்ர ப்‌ரவஹ்யாமி ஸ்ருண்வந்‌து முநயஸ் ததா
புத்திரா! சொல்லுகிறேன் கேள்‌. அப்படியே ரிஷிகளும்‌ கேட்கட்டும்‌.

கல்‌பே கல்‌பே க்ஷய உத்பத்யா ப்ரஹ்ம விஷ்ணு மஹேஸ்வரா
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸமாசார நிர்ணே தாரஸ் ச ஸர்வதா

பிரமன்‌ விஷ்ணு ருத்திரன் இம் மூவரும்‌ ஸ்ருதி ஸ்ம்‌ருதிகளி னர்த்தங்களை நிச்சயிக்கற மநு முதலியவர்களும்‌ கல்பங்‌கள் தோறும்‌ நாசம்‌ உத்பத்திகளோடு கூடியிருக்கிறார்கள்-இவ்வண்ணம் ஸ்மிருதியை நிர்ணயித்தவர்கள் மனு, ஆங்கீரசு, வியாசர், வசிஷ்டர், பராசரர், போதாயனர், ஆபஸ்தம்பர் முதலாக முப்பத்தாறு ரிஷிகளென்று பைடீநசி ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும், வத்ஸர், மரீசி, முதலானவர்களும் அவரவர் சொல்லிய தருமங்களும் உண்டென்று
பாரதம் அசுவமேத பருவத்தில் சொல்லியிருக்கிறது.

ந கஸ்சித் வேத கர்த்தா ச வேதம் ஸ்ருத்வா சதுர்முக
ததைவ தர்மாந் ஸ்மரதி மநு கல்பாந்த ரேந்தரே

ஒருவரும்‌ வேதத்தைச் செய்தவர்களல்லர்‌ பிரம்மா வேதத்கைக் கேட்‌ட அப்படியே ஸ்மிருதிகளைச் செய்கிறார்‌. கல்பங்களுக் கிடையிடையில்‌ மனுவும்‌ ஸ்மிருதிகளைச் செய்கிறார் -அந்த ஸர்வேஸ்வரனும் அநாதியான வேதத்தைத் தோற்றுவித்தவரே யன்றிச் செய்தவரல்ல வென்று மச்சபுராணம் கூறுகின்றது. பிரமன் ஸ்மிருதிகளைச் செய்து தனக்குக் கற்பித்தாரென்று ஸ்வாயம்புவ மனு கூறினார்.

அந்யே க்ருதயுகே தர்மா ஸ்த்ரேதாயாம் த்வாபரே யுகே அந்யே கலி யுகே ந்ரூணாம்‌ யுக ருபாநுஸாரத
கிருத யுகத்தில்‌ தர்மங்கள்‌ வேறு, திரேதாயுக,துவாபர, கலி யுகங்களில்‌ தர்மங்கள் வெவ்வேறு. யுகங்களுக்கு அனுகுணமாகவே தர்மங்கள் இருக்கின்றன-தர்மத்தின் அனுஷ்டானம் வேறு பட்டிருக்கு மென்பது கருத்து

தபஸ் பரம் க்ருதயுகே த்ரேதாயாம் ஜ்ஞாந முச்யதே திவாபரே யஜ்ஞமேவாஹுர் தாந மேவ கலெள யுகே–
தபஸ்ஸே கிருத யுகத்திலும்‌,திரேதா யுகத்தில்‌ ஞாநமும்‌, துவாபர யுகத்தில் யஜ்ஞமும்‌,கலியுகத்தில் தானமுமே சிறந்ததென்று சொல்லுவார்கள்

க்ருதேது மாநவா தர்மா ஸ்‌த்ரேதாயாம் கெளதமா ஸ்ம்ருதா
த்வாபரே சங்க லிகதா கலெள பாராஸரா ஸ்ம்ருதா

கிருத யுகக்தில்‌ மனு ஸ்ம்ருதியும்‌ திரேதா யுகத்தில்‌ கெளதம ஸ்மிருதியும்‌ திவாபர யுகத்தில்‌ சங்‌க ஸ்மிருதியும்‌ கலியில்‌ பராசர ஸ்மிருதியும்‌ முக்யமானவை

த்யஜேத் தேஸம் க்ருத யுகே த்ரேதாயாம் க்ராமமுத் ஸ்ருஜேத்‌
த்வாபரே குலமேகந்து கர்தாரந்து கலெள யுகே

கிருதயுகத்தில்‌ பாபிஷ்டனிருக்கும்‌ தேசத்தையும்‌ திரேதா யுகத்தில்‌அவனிருக்கும்‌ கிராமத்தையும்‌ த்வாபர யுகத்தில்‌ அவனுடைய குலத்தையும்‌ கலி யுகத்தில்‌ பாபம்‌ செய்தவனையும்‌ விட வேண்டும்-

க்ருதே ஸம்பாஷணாதேவ த்ரேதாயாம் ஸ்பர்‌ஸநெந ச த்வாபரேத் வந்நமாதாய கலெள பததி கர்மணா:
கிருத யுகத்திற்‌ பாபியோட வார்த்தை சொல்வதாலும்‌, த்ரேதா யுகத்தில்‌ அவன்‌ மேல்‌ படுவதாலும்‌, த்வாபரத்தில்‌ அவனன்னம் வாங்குவதாலும்‌, கலியில்‌ பாபம்‌ செய்தாலும்‌ பதிதனாகிறான்-

க்ருதே தாத்ஷணிகஸ் ஸாபஸ் த்ரேதாயாம்‌ தஸபிர்‌ திநை
த்வாபரே சைகமாஸேந கலெள ஸம்வத்ஸரேண து

பெரியார்கள்‌ சபித்தால்‌ கிருத யுகத்தில்‌ தத் க்ஷணத்திலும் , திரேதா யுகத்தில்‌ பத்து நாளிலும்‌, துவாபர யுகத்தில்‌ ஒரு மாஸத்திலும் , கலி யுகத்தில்‌ ஒரு வருஷத்திலும்‌ பலிக்கும்-

அபிகம்ய க்ருதே தாநம் த்ரேதாஸ் வாஹு பதீயதே த்வாபரே யாசமாநாய ஸேவயாதீயதே கலெள
கிருத யுகத்தில்‌ கொடுப்பவன்‌ யாசகனிருக்கும் இடத்தில் சென்றும்‌, திரேதா யுகத்தில்‌ யாசகனை வரவழைத்தும் த்வாபரத்தில் தன்னிடத்தில்‌ வந்து யாசிப்பவனுக்கும்‌, கலி யுகத்தில்‌ தனனை யடுத்துக்‌ காத்திருப்பவனுக்கும்‌ தானம் செய்யப்படுகிறது-

அபிகம்யோத்தமம் தாநமாஹுயைவது மத்யமம்‌ அதமம் யாச மாதாய ஸேவா தாநந்து நிஷ்பலம்‌
தான்‌ சென்று கொடுக்கும்‌ தானம்‌ உயர்ந்தது -யாசகனை வரவழைத்துக் கொடுப்பது மத்திமம்‌ – யாசிப்பவனுக்கு கொடுப்பது அதமம்‌-அடுத்து காத்து இருப்பவனுக்குக்‌ கொடுப்பது பயனற்றது-கடலுக்கும் அளவு உண்டு தானே சென்று கொடுக்கும் தானத்தினாலும் கேட்காமல் கொடுக்கும் தானத்தினாலும் உண்டாகும் பலனுக்கு அளவில்லை யென்று புராண ஸாரம் கூறுகின்றது-

ஜிதோ தர்மோஹ்ய தர்மேண ஸத்யம் சைவா ந்ருதேந ச
ஜிதாஸ்‌ சோரைஸ்து ராஜாந ஸ்‌த்ரீ பிஸ்ச புருஷா கலெள

அதர்மத்தால்‌ தர்மமும்‌ அசத்தியத்தால்‌ சத்தியமும்‌ திருடர்களால்‌ அரசர்களும்‌ ஸ்திரிகளால்‌ புருஷர்களும்‌ கலியுகத்தில்‌ ஜயிக்கப்படுகிறதுகள்-

ஸீதம்திச அக்னி ஹோத்ராணி குரு பூரஜா ப்ரணஸ்யதி
குமார்யஸ்ச ப்ரஸூ பந்தே தஸ்மி்ந் கலி யுகெஸதா

அக்நி ஹோத்திரங்கள்‌ குறைகின்றன. ஆசார்ய சிஸ்ரூஷை நாசமடைகிறது. கன்னிகைகள்‌ பிரஸவிக்கிறார்கள்‌; அந்த கலி யுகத்திலிவ் வண்ணமாகவே எப்போதும்‌ நடக்கும்-

க்ருதேத் வஸ்தி கதா ப்ராணாஸ் த்ரேதாயாம் மாம்ஸமாஸ்ரிதா
த்வாபரே ருதிரம் சைவ கலெள த்வந் நாதி ஷுஸ்‌திதா?

கிருத யுகத்தில்‌ பிராணங்கள்‌ எலும்பைப்‌ பத்தியும்‌ திரேதா யுகத்தில்‌ மாம்ஸத்தைப்‌ பற்றியும்‌ துவாபர யுகத்தில் ரத்தைப் பற்றியும்‌ கலி யுகத்தில்‌ அன்னம்‌ முதலியவற்றைப் பற்‌றியும் இருக்கின்றன –

யுகே யுகே சயே தர்மாஸ் தத்ர தத்ர சயே த்விஜா
தேஷாம் நிந்தா நகர் தவ்யா யுக ரூபாஹிதே த்விஜா

யுகங்கள் தோறும்‌ எந்த தர்மங்கள்‌ ஏற்பட்டனவோ; அத் தர்மங்களைச்‌ செய்கிறவர்கள்‌ எந்த த்விஜர்களோ ; அவர்களை நிக்திக்கக் கூடாது, ஏனெனில்‌ அவர்கள்‌ யுகத்துக்‌கு அநு குணமாக நடப்பவர்கள்-

யுகே யுகேது ஸாமர்த்யம்‌ ஸேஷம் முநி விபாஷிகம்‌
பராசரேண சாப் யுக்தம்‌ ப்ராயஸ் சித்தம் விதீயதே

யுகங்கள் தோறும்‌ பராசரரால்‌ சொல்லப் படாத யுகத்தின்‌ சாமர்த்தியம்‌ மற்ற ரிஷிகளால்‌ கூறப் பட்டிருக்கறது – முன்‌ விருத்த பராசரரால்‌ சொல்லப்பட்ட பிராயச் சித்தங்கள்‌ விதிக்கப்‌ படுகிறது –

அஹமத்யைவ தத் ஸர்வ மநு ஸ்ம்ருத்ய ப்ரவீமிவ சாதுர் வர்ண்ய ஸமாஸாரம்‌ ஸ்ருண் வந்து முநிபுங்கவா –முநீஸ்வரர்களே ௮ந்த சகலமான நான்கு வர்‌ணங்களுடைய தர்மங்களையும்‌ நான் இப்பொழுதே யறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன் –

பராஸர மதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்‌
சிந்திதம் ப்ராஹ்மணார்‌ தாய தர்ம ஸம்ஸ்தாபநாயச

புண்ணியமானதும்‌ பரிசுத்த மானதும்‌ பாபங்களைப்‌ போக்க வல்லதுமான இந்த பராசரருடைய ஸாஸ்த்ரமானது பிராமணர்களுக்காகவும்‌ தர்மத்தை நிலை நிறுத்துகைக்காகவும்‌ ஆரம்‌பிக்கப் படுகிறது –

சதுர்ணாமபி வர்ணாநா மாசாரோ தர்ம பாலக
ஆசாரப்ரஷ்ட தேஹாநாம்‌ பவேத் தர்ம பராங்மக:

நான்கு வர்ணங்களுக்கும்‌ ஆசாரமே தர்மத்தைக்‌ காப்பாற்றுகிறது -ஆசாரமில்லாத தேகம் உடையவனுக்கு தர்மம் பலப்படாது –

ஷட் கர்மாபிரதோ நித்யம்‌ தேவதா திதி பூஜக ஹுத?ஸேஷம் துபுஞ்ஜாநோ ப்ராஹ்மணோ நாவ ஸீததி
யஜனம்‌ முதலிய ஆறு தொழிலில்‌ எக் காலத்திலும்‌ சிரத்தை யுள்ளவனாகவும்‌ தேவர்‌ அதிதி யிவர்களைப்‌ பூஜிப்பவனும்‌ ஹோமம் பண்ணின மீதி ஹவிஸ்ஸை சாப்பிடுகிறவனுமான பிராமணன்‌ துன்பப்படான் –

ஸந்த்யா ஸ்நாநம் ஜபோ ஹோமோ தேவதாநாஞ்ச பூஜநம்‌
ஆதித்யம் வைஸ்வ தேவம்‌ ச ஷட் கர்மாணி திநே திநே

ஸ்நானத்தோடு கூடின சந்தியாவந்தனம்‌ ஜபம் ஹோமம்‌ தேவதா பூஜை அதிதி பூஜை வைச்வதேவம்‌ இவை யாறு கருமங்களும்‌ பிரதி தினமும்‌ செய்ய வேண்டியது –

இஷ்டோவா யதிவா த்‌வேஷ்யோ மூர்க பண்டித ஏவ வா
ஸம்ப்ராப்தோ வைஸ்வதேவாந்தே ஸோ திதிஸ் ஸ்வர்க ஸங்க்ரம

மித்திரனானாலும்‌ சத்தருவானலும்‌ தெரியாதவனானாலும்‌ தெரிந்தவனானாலும்‌ வைச்வ தேவத்தின் முடிவில்‌ வந்தவ னெவனோ அவனே ஸ்வர்க்கக்தை யடைவிக்கும்‌ அதிதி-

தூரார்த்வோபகதம் ஸ்ராந்தம்‌ வைஸ்வ தேவ உபஸ்திதம்‌ அதிதிம் தம் விஜாநீயாந்நா திதி பூர்வமாகத
வெகுதூரம்‌ வழி நடந்து வருந்தி வைச்வதேவ காலத்தில்‌ எவன்‌ வருகிறானோ அவனே அதிதி யென்‌றறிய வேண்டும்‌ முன் வந்தவன் அதிதியாகான்-

நைகக்ராமீணமதிதிம் ஸம்‌ ருஹ்ணீ தகதாசந அநித்யமாகதோ யஸ்மாத் தஸ்மாத் அதிதிருச்யதே
ஒரே கிராமத்திலிருப்பவனை யொரு போதும் அதிதியாக வெண்ணக் கூடாது. தினந்தோறும்‌ வருகிறதில்லை யாதலால்‌ அவனுக்கு அதிதி என்று பெயர்‌ வந்தது. திதி யென்றால் தினம் –

அதிதிம் தத்ர ஸம் ப்ராப்தம்‌ பூஜயேத் ஸ்வாகதாதிநா
அர்க்யாஸந ப்ரதாநேந பாத ப்ரஷாள நேநச
ஸ்ரத்தயா சாந்நதாநேந ப்ரிய ப்ரஸோத்தரேணச
கச்சந்தம் சாநு யாநேந ப்ரீதி முத்பாத யேத்த்க்ஹீ

அந்த வைஸ்வ தேவ காலத்தில்‌ வந்த அதிதியை குசலப் பிரசனம்‌ முதலியதுகளாலும்‌ அர்க்யம்‌ அந்நம்‌ இவைகளைக் கொடுப்பதினலும்‌ கால்‌ கழுவுகிறதினாலும்‌ சிரத்தையோடு அன்‌னம் இடுவதாலும் பிரியமாகக் கேட்டு பதில் சொல்வதாலும்‌, போகிறவனைப் பின்‌ செல்வதினாலும்‌ கிரகஸ்தன்‌ பிரிதி யுண்டு பண்ணி பூசிக்‌கக் கடவன் –

அதிதிர் யஸ்ய பக்நாஸோ க்ருஹாத் ப்‌ரதி நிவர்த்ததே
பிதரஸ் தஸ்ய நாஸ்நந்தி தஸ வர்ஷாணி பஞ்சச
காஷ்டபார ஸஹஸ்ரேண க்ருத கும்பஸதே நச
அதிதிர் யஸ்ய பக்நாஸஸ் தஸ்ய ஹோமோ நிரர்‌தக

எவனுடைய வீட்டில்‌ அதிதி தன்னாசை நிறைவேறாமல்‌ திரும்பிப் போகிறானோ. அவனுடைய விட்டில் பதினைந்து வருஷம்‌ பித்ரு தேவதைகள்‌ அன்னம்‌ வாங்குகிறதில்லை. எவன்‌ வீட்‌டில்‌ வந்த அதிதியின்‌ ஆசை நிறைவேற வில்லையோ, அவன்‌ ஆயிரம் பாரம்‌ கட்டைகளைக் கொண்டும்‌ நூறு குடம்‌ நெய்யைக் கொண்டும்‌ ஓமம்‌ செய்த போதிலும்‌ அது பயன் படாது –

ஸூ ஷேத்ரேவாபயேத் பீஜம்‌ ஸூபாத்ரே நிக்ஷிபேத்தநம்‌
ஸுுஷேத்ரே ச ஸாுபாத்ரே சஹ் யுப்தம் தந்ந விநஸ்யதி

நல்ல பூமியில்‌ விதையை விதைக்க வேண்டும்‌; நல்ல பாத்திரத்தில்‌ தானம்‌ செய்ய வேண்டும்‌; நல்ல பூமியிலும்‌ நல்ல பாத்திரத்திலும்‌ செய்யப் பட்டது கெட்டுப் போகிற தில்லை –

ந ப்ருச்சேத் கோத்ர சரணே ந ஸ்வாத்யாயம் ஸ்ருதம் ததா ஹ்ருதயே கல்பயே தேவம்‌ ஸர்வ தேவ மயோ ஹிஸ- அதிதியாக வந்தவனுடைய கோத்திரத்தையும்‌ ஆசாரத்தையும்‌ வேகத்தையும்‌ சாஸ்திரத்தையும்‌ கேட்க வேண்‌டியதில்லை. அதிதி – எல்லா தேவதைகளுடைய ஸ்வரூபர்‌ என்பதொன்றையுமே மனதில்‌ வைக்க வேண்டியது-

அபூர்வஸ் ஸுவ்ரதீவி ப்ரோஹ்ய பூர்வச்சா திதிஸ் ததா
வேதாப்யா ஸரதோ நித்யம்‌ த்ரய பூஜ்யாதி நேதிநே

நல்ல விரதமுள்ள சன்னியாசியும்‌ முன்‌ வந்தவனல்‌லாத வதிதியும்‌ தினந் தோறும்‌ வேதமோதுகிற பிரம்மசாரியும்‌ இம் மூவரும்‌ தினந்தோறும் பூஜிக்கத் தக்கவர்கள் –

வைஸ்வதேவேது ஸம்ப்ராப்தே பிஷுகே க்ருஹமாகதே
உத்ருத்ய வைஸ்வதேவார்தம்‌ பிஷுகம் து விஸர்ஜ்யேத்‌

வைஸ்வதேவம்‌ செய்வதற்கு முன்‌ பிஷுகர்‌ வந்தால்‌ வைஸ்வதேவத்தின்‌ பொருட்டு தனியாக வெடுத்து வைத்து விட்டு, பிஷுகரை யனுப்ப வேண்டும் –

தத் யாச்ச பிஷா த்ரிதயம்‌ பரிவ்ராட் ப்ரஹ்ம சாரிணாம்‌
இச்ச யாசததோ வித்வாரந் விபவே ஸத்ய வாரிதம்‌

சன்னியாசிக்கும்‌ பிரம்ம சாரிகளுக்கும்‌ மூன்று தரம்‌ பிச்சை யிட வேண்டும்‌! தனது சக்திக்கும்‌ இச்சைக்கும்‌ ௮னுகுணமாக மேல்‌ எவ்வளவிட்டாலுமிடலாம்‌. அது விலக்கப் பட வில்லை –

யதி ஹஸ்தே ஜலம் தத்யாத்பி க்ஷரம் தத்வா புநர்ஜலம்‌ தத்பைக்ஷம் மேருணா துல்யம்‌ தஜ் ஜலம் ஸாகரோபமம்‌ – சன்னியாசி கையில் முன்னமே ஜலத்தைக் கொடுத்த பிறகு பிச்சை யிட்‌டு மறுபடியும்‌ ஜலத்தைக் கொடுக்க வேண்டும்‌ அப்படியிட்ட பிச்சை மேருவைக்‌ கொடுத்ததோடொக்கும்‌ அந்த ஜலம்‌ சமுத்திரத்தைக்‌ கொடுத்ததோடொக்கும்‌-

யஸ்ய சத்ரம் ஹயச்சைவ குஞ்சரா ரோஹ ம்ருத்திமத்‌ ஐந்தரம் ஸ்தாந முபாஸீத தஸ்மாத் தந்ந விசாரயேத்
எவன்‌ குடை குதிரை இதுகளுடன்‌ அதிதியாக வந்‌தானே அவனை யாதரித்தவன்‌-யானையிலேறி சம்பத்தோடு கூடிய விந்திர பதத்தை யடைவன்‌. ஆதலால் அதை யவன்‌ விசாரிக்க வேண்‌டிய தில்லை-

வைஸ்வதேவ க்ருதம் பாபம் ஸக்தோ பிஷுர் வ்யபோஹிதும்‌
நஹி பிஷு க்ருதம் தோஷம்‌ வைஸ்வ தேவோ வ்யபோஹிதும்‌

வைஸ்வதேவம்‌ செய்யாகதாலுண்டான பாவத்தை பிஷுர்‌ போக்கடிப்பார்கள்‌-பிச்சையிடாததால் உண்டான தோஷத்தை-வைஸ்வதேவம்‌ போக்காது –

அக்ருத்வா வைஸ்வதேவந்து புஞ்சதேயேத் விஜாதீய
தேஷாமந்நம் ந புஞ்ஜீத காக யோநிம் பஜந்திதே
அக்ருத்வா வைஸ்வதேவம் து புஞ்ஜதேயே த்விஜாயமா
ஸர்வேதே நிஷ்பலாஜ்யேயா பதந்தி நரகே ஸூசெள

எந்த பிராமணர்கள்‌ வைச்வதேவம்‌ செய்யாமல்‌ போஜனம்‌ செய்கிறார்களோ,. அவர்களுடைய அன்னத்தை புஜிக்‌கக் கூடாது, அப்படி புசித்தவர்கள்‌ காக்கையாக பிறப்பார்கள்‌. எந்த கெட்ட பிராமணர்கள்‌ வைஸ்வதேவம்‌ செய்யாமல்‌ போஜனம்‌ செய்கிறார்களோ அவர்கள்‌ பயனற்றவர்களாய்‌ அசுத்தமான நரகத்தில்‌ விழுகிறார்கள் –

வைஸ்வதேவ விஹீநாயே ஆதித்‌யேந பஹிஷ் க்ருதா
ஸர்வேதே நரகம் யாந்தி காக யோநிம் வரஜந்திச –

எவன்‌ வைஸ்வதேவத்தை விட்டும்‌ அதிதி பூஜை செய்யாமலகிருக்கிறானோ, அவர்களெல்லாரும்‌ நரகத்தை யடைகிறார்கள்‌; காக்கையின்‌ சன்மத்தையும்‌ அடைகிறார்கள் –

புஷ்ப மாத்ரம் விசு துயாந் மூலச் சேதம் ந காரயேத்‌
மாலாகார இவாராமேநய தாங்கார காரக

மாலை தொடுப்பவன்‌ பூந் சோட்டத்தில்‌ எப்படி பூக்களை மாத்தரம்‌ கொய்து கிளைகளை விறகு வெட்டுகிறவனைப் போல்‌ வெட்ட மாட்டானே. அப்படியே பிரஜைகளிடத்தில்‌ பகுதி மாத்‌திரம் பெற்று ஹிம்சிக்கக் கூடாது –

லாப கர்மததா ரத்நம்‌ கவாஞ்ச பரிபாலநம்‌ . க்ருஷி கர்மச வாணிஜ்யம் வைஸ்ய வ்ருத்தி ருதாஹ்ருதா
வட்டி வாங்குவதும்‌ ரத்ந வ்யாபாரமும்‌ பசுக்களை ரக்ஷிப்பது பயிரிடுதல்‌ இதர வியாபாரங்கள்‌ இவைகள்‌ வைச்ய விருத்தியாகக்‌ கூறப் பட்டது –

ஸூத்ரஸ்ய த்விஐ ஸூஸ்ரூஷா பரமோ தர்ம உச்யதே
அந்யதா குருதே கிஞ்சித் தத் பவேத் தஸ்ய நிஷ் பலம்‌ –

சூத்திரனுக்கு த்‌விஜர்களுடைய ஸூஸ்ரூஷையே பரம தர்ம மாகச்‌ சொல்லப் படுகிறது; வேறு ஏதாவது செய்தானே யாகில்‌ அது அவனுக்குப்‌ பயன்படாது

லவணம் மது தைலம்‌ ச ததி தக்ரம்க்ருதம் பய ந துஷ்யேச்ரூத்ர ஜாதீநாம்‌ குர்யாத் ஸர்வேஷுு விக்ரயம்‌ -உப்பு தேன்‌ எண்ணை தயிர்‌ மோர்‌ நெய்‌ பால்‌ இவைகளை நான்கு வர்ணங்களுக்குள்‌ சூத்திரன் விற்கலாம்‌, அதினால்‌ அவனுக்கு தோஷமில்லை –

விக்ரீணந் மத்ய மாம்ஸா நிஹ்ய பக்ஷ்யஸ்யச பக்ஷணம்‌
குர்வந் ந கம்யாகமநம் ஸூத்ர பததி தத்க்ஷணாத்
கபிலா க்ஷீர பாநேந ப்ராஹ்மணீ கமநே ந து
வேதாஷர விசாரேண ஸூத்ரஸ்ய நரகம் த்ருவம்‌

மத்யம்‌ மாம்ஸம்‌ இவைகளை விற்பதாலும்‌ சாப்‌படத் தகாதவைகளை சாப்பிடுவதாலும்‌ சேரத் தகாத ஸ்த்ரிகளைச்‌ சேர்வதாலும்‌ சூத்திரன்‌ அக்கணமே பதிதனாகிறான்‌, காராம்பசுவின் பால்‌ குடித்தலாலும்‌ பிராமண ஸ்திரியைப்‌ புணர்தலாலும்‌ வேத அஷரங்களை விசாரிப்பதாலும்‌ சூத்திரனுக்கு நரகம்‌ சம்பவிக்கும்‌.

முதல்‌ அத்தியாயம்‌ முற்றிற்று

இரண்டாவது அத்யாயம்

௮த:பரம் ஹ்ருஹஸ்‌ தஸ்ய கர்மாசாரம் கலெளயுகே
தர்மம் ஸாதாரணம் ஸக்தயா சாதுர்வர்ண் யாஸ்ரமாகசம்‌
தம் ப்ரவஹ்யாம் யஹம் பூர்வம் பராசர வசோ யதா

இதின்‌ பிறகு – இந்த கலியுகத்தில்‌ நான்கு வர்ணங்களுக்கும்‌ கிரகஸ்தனுடைய ஆசாரங்களுக்கும் உரியதாயும்‌ தர்மமான ஆசாரமாயும்‌ பொதுவாயுயிருக்கிற- தொழிலை விருத்த பராசர வாக்யானு குணமாகவே, முன்னிட்டுச் சொல்லுகிறேன்-

ஷுதிதம் க்ருஸிகம் ஸ்ராந்தம் பலீ வர்தநம் யோஜயேத் ஹீநாங்கம் வ்யாதிதம் க்லீபம் வ்ருஷம் விப்ரோ ந வாஹயேத்‌ –
பசித்தும் க்ருஸித்தும்‌ சிரமப்பட்டுமிருக்கற எருதை உழக்கூடாது. மேலும்‌ குறைந்த அங்கங்களுடையதும்‌ வியாதியுடன்‌ கூடினதும்‌ விரை யடித்ததுமான எருதை பிராமணன்‌ கட்‌டக் கூடாது

ஸ்‌திராங்கம் நீருஜம் த்ருப்‌தம் ஸூநர்‌தம் ஷண்ட வர்ஜிதம்‌ வாஹ யேத்தி வஸஸ் யார்‌தம் பச்சாத் ஸ்நாநம் ஸமாசரேத்‌ –
அங்கம் பழுதில்லாமலும்‌ மற்றதும்‌ கொழுப்புடையதும்‌ விரை யடியாததுமாய் இருக்கிற எருதை மத்தியானத்தின்‌ பாதி வரையிலுழ வேண்டியது – பிறகு அதற்கு ஸ்நானம்‌ செய்து வைக்க வேண்டியது-

ஜபம் தேவார்ச்சநம் ஹோமம் ஸ்வாத்யாயம் சைவமப்யஸேத்‌
ஏக த்வி த்ரி சதுர் விப்ராந் போஜயேத் ஸ்நாதகாந் த்விஜ-

பிராமணன்‌, ஐபம் செய்‌தல்‌ தேவதை பூசித்தல்‌ ஹோமம் செய்தல்‌ வேதமோதல்‌ இவைகளைச் செய்ய வேண்டியது பிறகு ஒன்று-இரண்டு-மூன்று நான்கு ஸ்நாதகப் பிரராமணர்களுக்கு அன்னம்‌ போட வேண்டும்-

ஸ்வயம் க்ருஷ்டே ததா ஷேத்ரே தாந்யைச் ச ஸ்வயமார்ஜிதை
நிர்வபேத் பஞ்ச யஜ்ஞாம் ஸ்சக்ரது தீஷாஞ் சகாரயேத்

பிராமணன்‌ தானே உழுது பயிர்‌ செய்தாலும்‌ ௮ல்‌லது வேறொருவர்‌ பயிர்‌ செய்து தான் சம்பாதித்து வந்தாலும்‌ அந்த தானியங்களால்‌ பஞ்ச மகா யஜ்ஞங்களைச்‌ செய்யக் கடவன்‌ அல்‌லது வேறொருவருக்குக் கொடுத்து செய்விக்கக் கடவன் –

திலா ரஸாந விக்ரே யா தாந்ய தஸ் ஸமா விப்ரஸ் யைவம் விதா வ்ருத்திஸ் த்ருண காஷ்டாதி விக்ரயம்‌
பிராமணன்‌ – எள்ளு-ரஸ வர்க்கங்க ளிவைகளை விற்‌கக் கூடாது-அப்படி அவஸ்யம்‌ விற்க வேண்டுமானால்‌ தானியங்களுக்குத்‌ துல்யமாகில்‌ விற்கலாம்‌ இந்த விருத்தி பிராமணனுக்கு உரியது. புல்‌ கட்டை முதலியவற்றை விக்கிரயம்‌ செய்யலாம் –

ப்ராஹ்மணச் சேத் க்ருஷிம் குர்யாந் மஹா தோஷ மவாப்நுயாத்‌ –
பிராமணன்‌ தானே யுழவு செய்து பயிரிட்டால் மஹா தோஷத்தை யடைவன் –

ஸம்வத்ஸரேண யத் பாபம் மத்ஸ்யகாதீ ஸமாப்றநுயாத்‌
அயோ முகேந காஷ்டே நததேகாஹே நலாகங்கலி

ஒரு வருஷ காலமாய்‌ மத்ஸ்யங்களைக் கொன்ற சூத்தரன்‌ எவ்வளவு பாபத்தை யடைவனே அந்த பாபத்தை கலப்பை யெடுத்த பிராமணன்‌ இலும்பை முளையிற் கொண்ட கட்டையால்‌ ஒரே தினத்தில்‌ அடைகிறான் –

பாஸகோ மத்ஸ்ய காதீச வ்யாதச் சாகுநிகஸ் ததா அதாதா கர்ஷ கச்சைவ பஞ்சைதே ஸம பாகிந
வலை வீசுகிறவன்‌ – மத்ஸ்யங்களைக் கொல்லுகிறவன் வேடன்‌ – பக்ஷிகளைக் கொல்லுகிறவன்‌ தானம்‌ செய்யாமல் பயிரிடுபவன்‌-இவர்களைவரும்‌ சமமான பாவமுள்ளவர்கள்-

வ்ருஷாம்ச் சித்வா மஹீம் பித்வா ஹத்வா து க்ரிமி கீடகாந் கர்ஷக கலயஜ்‌ஞேந ஸர்வ பாபை ப்ரமுச்யதே
விருக்ஷங்களை வெட்டியும்‌ பூமியைப் பிளந்தும்‌ புழு பூச்சிகளைக் கொன்றும்‌ பயிரிடுகிறவன்‌ களப் பிச்சை யிடுவதால்‌ எல்லாப் பாவத்தையும்‌ போக்கடிக்கிறான் –

யோந தத்யாத் த்விஜாதிப்யோ ராஸி முல முபாகத
ஸ சோரஸ்சை பாபிஷ்டோ ப்ரஹ்மக்நம்‌ தம் விநிர்திஸேத்‌

யாதொருவன்‌ தானிய ராசியினருகில் உட்கார்ந்து பிராமணர்களுக்குத் தானம்‌ செய்ய வில்லையோ அவன்‌ திருடன்‌-அவனே பாவி-அவனை பிர்ம்மஹத்தி செய்தவனாகச் சொல்ல வேண்டும் –

ராஜ்ஜே தத்வாது ஷட் பாகம் தேவாநாம் சைக விம்சகம்‌ த்ரிம் சத் பாகம் ப்ராஹ்‌மணாநாம் க்ருஷிம் குர்வந்ந தோஷ பாக்‌ –
ஆறில்‌ ஒரு பாகம்‌ அரசர்களுக் கிட்டும்‌ தேவதைகளுக்கு இருபத் தொன்றிலொரு பாகமிட்டும்‌ முப்பதில்‌ ஒரு பாகம்‌ “பிரரமணர்களுக்குக் கொடுத்தும்‌ பயிர்‌ செய்பவன்‌ தோஷமடைய மாட்டான் –

ஷத்ரியோபி க்ருஷிம் க்ருத்வா தேவாந் விப்ராம்ச் ச பூஜயேத்‌
வைஸ்யஸ் ஸூத்ரஸ் ததா குர்யாத் க்ருஷி வாணிஜ்ய ஸில்பநம்‌ –

க்ஷத்திரியனும்‌ பயிர் செய்து பிராமணர்‌-தேவதைகள் இவைகளைப்‌ பூசிக்கக் கடவன்‌ வைஸ்யனும்‌ சூத்திரனும்‌ பயிர் வர்த்‌தகம்‌ சித்திர வேலைகளைச் செய்து தேவாதிகளுக்கு பூஜை செய்யக்‌ கடவர்கள் –

விகர்ம குர்வதே ஸுத்ர சித்விஜ ஸூஸ்ரூஷ யோச்சிதா பவந்த் யல்பாயுஷஸ் தேவை நிரயம் யாந்ய ஸம்ஸயம்‌
பிராமண ஸூஸ்ரூஷையை விட்டு சூத்திரன்‌ தனக்கடைத்த கருமத்தைச் செய்யாமல்‌ விட்டால்‌ ஆயுள் குறைந்தவனாகிறான்‌ -பிறகு நரகத்தையுமடைவான்‌= இதில்‌ ஸம்சயமில்லை
சதுர்ணாமபி வர்ணாநாமேஷ தர்‌மஸ் ஸநாதந
நான்கு வர்ணங்களுக்கும் இந்த தர்மமே யநாதியானது-

இரண்டாவது அத்தியாயம்‌ முற்றிற்று.

மூன்றாவது அத்தியாயம்

அதஸ் ஸூத்திம் ப்ரவஹ்யாமி ஜநநே மரணே ததா –
இனி பிறப்பிலும்‌ இறப்பிலு முண்டாகும்‌ ஆசெளசத்‌திற்கு ஸூத்தி சொல்லுகிறேன்

திந த்ரயேண ஸூத்யந்தி ப்ராஹ்மணா ப்ரேத ஸூதகே ஷத்ரியோ த்வாதஸா ஹேந வைஸ்ய்ய பஞ்சத ஸாஹகை ஸூத்ரஸ் ஸூத்யதி மாஸேந பராஸர வசோ ததா
மரணத் தீட்டில்‌ சமானோதகனான பிராமணன் மூன்று தினத்திலும்‌ க்ஷத்திரியன்‌ பனிரெண்டு தினத்திலும்‌ வைச்யன்‌ பதினைந்து தினத்திலும்‌ சூத்திரன்‌ ஒரு மாதத்திலும்‌ வ்ருத்த பராசரர் வாக்‌கின்படி சுத்தி யாகிறான் –

உபாஸநேது விப்ராணா மங்கஸூத்திச் ச ஜாயதே –
பிராமணர்கள்‌ சந்தியா வந்தனம்‌ முதலியவற்றை யனுஷ்டிக்கும்‌ காலத்தில்‌ சரீர ஸூத்தி யுண்டாகிறது

மாதாவின்‌ வர்ணம்‌ வெவ்வேறாக விருந்தாலும்‌ (தகப்பன்‌) அதாவது மூல புருவனுடைய சமான பிண்டர்களான தாயாதிகள்‌ பிறப்பிலு மிறப்பிலும்‌ மூல புருஷ வர்ணத்துக்குரிய தீட்டையே யனுஷ்டிக்கக் கடவர்-

தாவத் தத் ஸூதகம் கோத்ரே சதுர்த்த புருஷேணது
கீழ்ச் சொல்லிய அன்னிய வர்ண ஸ்திரீயின்‌ சந்ததிக்கு மூன்று புருஷன்‌ வரையில்‌ தீட்டிருந்து நான்காம்‌ புருஷனில்‌ விடப்படும்-

தாயாத் விச்சேத மாப்நோதி பஞ்சமோ வாத்மவம் ஸஜ.
தன்‌ வம்சத்தில்‌ பிறந்த ஐந்தாம் தலைமுறைப்‌ புருஷனும்‌ பிண்டத்தில்‌ நின்றும்‌ நீக்க்கப் படுகிறான்-

சதுர்‌தே தஸ ராத்ரம் ஸ்யாத் ஷண்ணிஸா பும்ஸி பஞ்சமே
ஷஷ்டே சதுர ஹாச் சுத்திஸ் ஸப்‌தமே துதி நத்ரயாத்‌ –

புருஷ சந்ததியில்‌ நாலாம் தலைமுறையில்‌ பத்து நாளும் செளசமும்‌ ஐந்தாம் தலை முறையில்‌ ஆறு நாளும்‌ ஆறாவது தலை முறையில்‌ நாலு நாளும்‌ ஏழாவது தலைமுறையில்‌ மூன்று நாளும்‌ ஆசெளசம்‌

ப்ருக் வக்நி மாணே சைவ தேஸாந் தரம்ருதே ததா பாலே ப்ரேதேச ஸ்ந்யஸ்தே ஸத்யஸ்சவ் சம்விதீயதே
மலையிலிருந்து விழுந்தும்‌ நெருப்புப் பட்டும் இறந்தாலும்‌ தேசாந்தராத்தில் இறந்தாலும்‌ அதிக பாலனிறந்தாலும்‌ சந்நியாசியாய் இறந்தாலும்‌ ஸ்நான மாத்திரத்தால் ஸூத்தி –

தேசாந்தர ம்ருத கச்சித்ஸ கோத்ர ஸ்ரூயதேயதி ந த்ரி ராத்ர மஹோ ராத்ரம் ஸத்ய ஸ்நாநேந ஸூத்யதி
சமான கோத்திரன்‌ தேசாந்திரத்தில் இறந்ததாகக் கேள்விப்பட்டால்‌ அதாவது ஒரு வருஷமான பிறகு கேள்விப் பட்‌டால்‌ மூன்று நாளுமில்லை. ஒரு தினமுமில்லை. அப்பொழுது ஸ்நாந மாத்திரத்தால் ஸூத்தி –

அஜா ததந்தாயே பாலாயே ச கர்ப்பாத் விநிஸ்ருதா
ந தேஷா மக்நி ஸம்ஸ்காரோ நா சவ்சம் நோதகக்ரியா
– பல் முளைக்காத குழந்தைகளுக்கும்‌ சர்ப்பத்திலிருந்து நழுவி யிறந்த சிசுக்களுக்கும்‌ அக்நி ஸமஸ்காரம் கிடையாது தீட்‌டுமில்லை, தர்ப்பணமுமில்லை –

யதி கர்ப்போ விபத்யே தஸ்ரவ தேசாபி யோஷித யாவந் மாஸம் ஸ்த்திதோ கர்ப்போதிநம் தாவத் து ஸூதகம்‌-
கர்ப்பம்‌ கலைந்தாலும்‌ ஸ்ரவித்தாலும்‌ அந்த கர்ப்பம்‌ எத்தனை மாஸமிருந்ததோ அத்தனை நாள்‌ அதின் மாதாவுக்கு ஆ செளசம் –

ஆசதுர் தாத்பவேத் ஸ்ராவ பாத பஞ்சம ஷஷ்டயோ அத ஊர்த்வம் ப்ரஸுதிஸ் யாத்த ஸாஹம் ஸூதகம்பவேத்‌ –
நாலு மாதத்தில்‌ கர்ப்பமழிந்தால்‌ ஸ்ராவமென்றும்‌ ஐந்து ஆறில்‌ பாதமென்றும் பெயர்‌ அதின்‌ பிறகு பரஸவ மென்‌னப் படும்‌’ அப் பிரஸவத்தில்‌ பத்து நாள்‌ ஆசெளசம் –

தந்த ஜாதேநுஜா தேச க்ருதா ஸூடேச ஸம் ஸ்த்திதே
அக்நி ஸம்ஸ்கரணே தேஷாம் த்ரி ராத்ரம ஸூஸிர் பவேத்

பல் முனைத்தவனா யிருந்தாலும்‌ அவனுக்குப்‌ பின்‌ பிறந்தவன்‌, (அதாவது) பல் முளையாதவனா யிருந்தாலும்‌ செளனம்‌ செய்யப்பட்டவனா யிருந்தாலும்‌ அவன்‌ மரணமடைக்தால்‌, அவனுக்கு அக்நி ஸம்ஸ்காரம் செய்தால்‌ ஞாதிகளுக்கு மூன்று நாள்‌ ஆசெளசம் –

ஆ தந்த ஜந்மநஸ் ஸத்ய ஆசூடாந்நை ஸிகீக்ரியா திரி ராத்ர மா வ்ரதா தேஸாத் தஸ ராத்ரமத பரம்‌
ஜனனம் முதல்‌ பல்‌ முளைக்கும் வரையில்‌ ஸத்ய சுத்தி. அது முதல்‌ செளளம் வரையில்‌ ஒரு தினம்‌ ஆசெளசம்‌. ௮து முதல்‌ உபநயனம்‌ செய்யும் வரையில்‌ மூன்று நாள்‌ தீட்டு, பிறகு பத்து நாள்‌ தீட்டு.

ப்ரஹ்மசாரி க்ருஹே யேஷாம் ஹுய தேச ஹுதா ஸந ஸம்பர்க்கஞ்ச ந குரவந்தி ந தேஷாம் ஸூத கம்பவேத்‌
பிரம சாரியும்‌ – எவன்‌ அக்னி ஹோத்ரம்‌ செய்கிறானோ, அவனும்‌ தீட்டுக் காரரிடத்தில்‌ சேராமலிருந்தால்‌ அவர்களுக்‌குத் தீட்டில்லை-

ஸம்பர்க்காத் தூஷ்ப தேவி ப்ரோஜநநே மரணே ததா
ஸம்பர்க்காச்ச நிவ்ருத்தஸ்ய ந ப்ரேதம் நைவ ஸூதகம்‌ கன–

தீட்டுக் காரர்களோடு சேர்வதனால்‌ பிராமணன்‌ பிறப்பிலும் இறப்பிலும்‌ தீட்டுடையவனாகிறான்‌- சேர்க்கையை விட்‌டவனுக்கு ஜனன மரண செளசங்கள்‌ கிடையா –

ஸ்ல்பிந காருகா வைத்யா தாஸீ தாஸாச்சநா பிதா
ராஜாந ஸ்‌ரோத்ரியாச் சைவ ஸத்யஸ் செளசா ப்ரகீர்த்திதா
ஸவ்ரதஸ் ஸத்ர பூதச்ச ஆஹிதாக் நிச்சயோ த்விஜ
ராஜ்ஞச்ச ஸூதகம் நாஸ்தி யஸ்ய சேச்சதி பார்ததிவ
உதயதோ நித நேதாநே ஆதர்தோ விப்ரோ நிமந்தரித
ததை வருஷிபிர் த்ருஷ்டம் யதா காலேந ஸூத்யத –

சித்திர வேலை செய்கிறவன்‌ சமயல்காரன்‌ வைத்தியர்கள்‌ தாஸிகள்‌ வேலைக் காரர்கள்‌ ராஜாக்கள்‌ ஸ்ரோத்ரியர்கள் இவர்‌கள்‌ தந்தம் தொழிலைச்‌ செய்யுங் காலத்தில்‌ சுத்தர்கள்‌. பின்னும்‌ யஜ்ஞத்தில்‌ சங்கல்பித்தவனும்‌ யாகம் செய்கிறவனும்‌ அக்ந்யா தானம்‌ செய்தவனும்‌ அரசன்‌ தன்‌ கருமம் முடியக்‌ கோறினவனும்‌ ஆசெளசிகனல்ல. யுத்தத்தில் சென்ற அரசனும்‌ தானங்களில்‌ பிரவேசித்தவனும்‌ ஆபத்தை யடைந்தவனும்‌ நிமந்திரணம்‌ சொல்லப்‌ பட்டவனும்‌ அப் பொழுது சுத்தர்கள்‌. பிறகு அவரவர்களுக்கு விதித்த காலத்தில்‌ திட்டு நீங்கும் –

பிரணவ நிமித்தமான தீட்டில் கிருகஸ்தனானவன் (பிதாவானவன்) பிரஸவித்த ஸ்திரியுடன் ஸம்ஸர்க்கத்தைச் செய்யாதவனாயிருந்தால் பிரஸவித்தவுடன் ஸ்நாநத்தினால் சுத்தனாகிறான். மாதா பத்து நாட்களால் சுத்தியை அடைகிறாள்.

ஸகல ஸபிண்டர்களுக்கும் கர்மத்தில் அதிகாரத்தைப் போக்குவதான ஆசௌசம் மாதா பிதாக்களுக்கும் உண்டு; ஆனால் ஸ்பரிசிக்கத் தகாததான பிரஸவத் தீட்டு மாதாவுக்கே யுள்ளது. பிதா
வானவன் புத்திர ஜனநத்தில் ஸ்நாநத்தினால் சுத்தனாகிறான்.

பிரஸவித்தவளான பத்திநி யிடத்தில் பிராம்மணன் ஸம்பந்தத்தை அதாவது ஸ்பரிசிப்பது முதலியவைகளைச் செய்தானே யானால் அந்தப் பிராம்மணன் ஆறு வேதங்களையும். சகல கர்மங்களையும் அறிந்தவனான போதிலும் அவனுக்குப் பத்து நாள் ஸ்பரிசிக்கத் தகாத சூதகமுண்டு.

பிரஸவித்தவளான பாரியையினுடைய ஸம்பந்தத்தினால் பிராம்மணனிடத்தில் ஸ்பரிசிக்கத் தகாத தோஷம் ஸம்பவிக்கிறது. வேறு விதமான தோஷம் பிரஸ்வ நிமித்தத்தில் புருஷனுக்கில்லை. ஆகையால் பண்டிதனானவன் பிரஸவித்த ஸ்திரீயோடு சயநிப்பது உட்காருவது தாம்பூலம் முதலியவைகளைப் புசிப்பது முதலிய ஸம்பந்தத்தைப் பிரயத்தனப் பட்டாவது ஒழிக்கக் கடவன்

விவாகம், தேவோத்ஸவம், யக்கிய்ம் இவைகள் முன்னமே தொடங்கப்பட்டுச் செய்து வருகையில் இந்தக் கிரியைகளின் நடுவில் ஜநந மரணங்கள் ஸம்பவித்தால் முன்னமே இவைகளுக்கென்று மனதினால் உத்தேசித்து வைத்திருக்கும் திரவியமானது பிராம்மணாதிகளுக்கும் தேவதைகளுக்கும் கொடுக்கப்பட்டால் தோஷத்தை அடைகிறதில்லை.

ஒருவன் அனுஷ்டிக்கிற பத்து நாள் தீட்டின் நடுவில் ஜநந மரண நிமித்தமான வேறு ஆசௌசம் நேரிட்டால் முன் அநுஷ்டித்து வருகிற ஆசெளசமானது எவ்வளவு காலத்திற்குள் பத்துநாட்களைக் கடந்ததாகாதோ அவ்வளவு காலம் வரையில் பிராம்மணன் அசுசியாகிறான்-

பிராம்மணன் நிமித்தமாக அதாவது அவன் பிராணனை ரக்ஷிப்பதற்காக மரித்தவர்கள் விஷயத்திலும் சிறையில் வைக்கப் பட்டவர்களையும் ஆபத்தை அடைந்த பசுவையும் விடுவிப்பதற்காக
மரித்தவர்கள் விஷயத்திலும் யுத்தத்தில் தைரியமாய் எதிர்த்து மரித்தவர்கள் விஷயத்திலும் ஸபிண்ட ஞாதிகளுக்கு ஒருநாள் செளசம் அநுஷ்டிக்கத் தக்கதாகும்.

யோகத்தினால் ஸர்வேஸ்வரனை உபாஸிப்பவனான ஸந்நியாசி, யுத்தத்தில் பின் வாங்காமல் எதிர்த்துச் சத்துருக்களால் கொல்லப்பட்டவன் ஆகிய இவ் விரண்டு புருஷர்களும் சூரிய மண்டலத்தைப் பேதிப்பவர்கள்-சூரிய மண்டலத்தின் வழியாகப் ப்ரஹ்ம லோகத்திற்குச் செல்லுகிறார்களென்பது கருத்து.-

ஆயுத பாணிகளான அநேகம் சத்துருக்களால் நன்றாகச் சூழப்பட்டவனாகி அவர்களை எதிர்த்துப் பயமின்றி யுத்தம் செய்கிற சூரனானவன் அதைரியத்தைத் தோற்றுவிப்பதான வார்த்தையைச் சொல்லாமல் யுத்தம் செய்து சத்துருக்களால் அடிக்கப்பட்டு மரித்தால் அவன் அழியாத உத்தம லோகங்களை அடைகிறான்.

சத்துருக்களால் சேனையிலிருக்கும் ஐநங்கள் அடிக்கப்பட்டு நாலு புறமும் சிதறி யோடுகையில் ஏந்தச் சூரனானவன் அவர்களை ரக்ஷிப்பதற்காக மிகுந்த தைரியத்தினால் சத்துருக்களை எதிர்க்கிறானோ அவன் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவான்.

ஒருவனை ரக்ஷிப்பதற்காகச் சத்துரு சேனையில் புகுந்து யுத்தம் செய்கிற எவனுடைய சரீரமானது முத்கரமென்னும் இரும்புலக்கை,பாணம், தடி இவைகளால் கை கால் முதலிய அவயவங்களில் அடிக்கப் பட்டுக் காயமுள்ளதாகிறதோ சூரனான அவனைத் தெய்வப் பெண்கள் கிரகித்துக் கொண்டு அவனுடன் க்ரீடிக்கிறார்கள்.

யுத்தத்தில் மரணமடைந்த சூரனைக் கண்டு தெய்வப் பெண்கள் ஆயிரம் பேர் கூடி வேகத்தை யுடையவர்களாகி இவன் என் பர்த்தா இவன் என் பர்த்தா வென்று சொல்லிக் கொண்டு ஓடுகிறார்கள்.

பலனை இச்சிக்காதவர்களும் ஸ்வர்க்க போகத்தை இச்சிப்பவர்களுமான புருஷர்கள் அனேக விதங்களான யக்கியங்களாலும் தவத்தினாலும் எந்தப் புண்ணிய லோகத்தை எப்படி அடை கிறார்களோ, யுத்தங்களில் எதிர்த்துச் சண்டையினால் பிராணனை ஒழித்த வீரர்கள் ஒரு க்ஷணத்தினால் அப்படியே தெய்வப் பெண்களால் கொண்டாடப்பட்டு அந்தப் புண்ணிய லோகங்களை அடைகிறார்கள்-

யுத்தத்தில் ஜயத்தினால் ஸம்பத்தானது பெறப்படுகிறது. மரணத்தினால் தெய்வப் பெண் அடையப் படுகிறாள். ஆதலால் க்ஷண காலத்தில் நசித்துப் போவதாகிய இந்தச் சரீர விஷயத்தில் ஆசை வைத்து யுத்தத்தில் மரிப்பதில் சிந்திக்க வேண்டுவதில்லை-

யுத்தத்தில் அடிபட்ட நெற்றியினின்று எந்த ரக்தம் வடிகிறதோ அது வாயில் புகுந்ததாகில் ஸோம பாநத்தோடு சமானமாகும். இது யுத்தமென்னும் யாக்கியத்தில் விதிக்கப்பட்ட ஸோம
பாநமாக அறியப்பட்டது.-

பந்துக்களில்லாதவனும் தனக்கு ஞாதியாகாதவனுமான பிராம்மணனுடைய சவத்தைப் பிரதி யுபகாரத்தை எதிர்பாராமல் எந்த இரு பிறப்பாளர் சுமந்து போய்க் கொளுத்துகிறார்களோ அவர்கள் அடி வைப்புகள் தோறும் கிரமமாக யக்கியம் செய்த பலனைப் பெறுகிறார்கள் -அவர்களுக்குச் சிறிதும் அசுபமில்லை. நல்ல காரியத்தைச் செய்கிற அவர்களுக்குப் பாபமுமில்லை. ஜலத்தில் முழுகுவதினால் அப்பொழுதே அவர்களுக்குச் சுத்தி விதிக்கப்படுகிறது.

தன்கோத்திரனாகாதவனும் (ஞாதியாகாதவனும்) பந்துக்களில்லாதவனுமான பிராம்மணனுடைய சவத்தைச் சுமந்து தகித்தவன் பிராணாயாமத்தினால் சுத்தியை அடைகிறான்.

பிரேதமான ஞாதியையும், அதாவது பந்துவையும்,ஞாதியாகாதவனையும் அதாவது பந்துவாகாதவனையும் பின் சென்றவன் ஸசேல ஸ்நாநத்தைச் செய்தும் அக்நியை ஸ்பரிசித்தும் நெய்யைக் குடித்தும் சுத்தனாகிறான் –

எந்தப் பிராம்மணன் மரித்த க்ஷத்திரியனைத் தெரியாமையினால் பின் செல்லுகிறானோ அவன் ஒருநாள் ஆசௌசத்தை அநுஷ்டித்துப் பஞ்ச கவியத்தைப் புசிப்பதினால் சுத்தி யடைகிறான். வைசிய சவத்தைத் தெரியாமையினால் பிராம்மணன் பின் தொடர்ந்தானாகில் அவன் இரண்டு நாள் ஆசௌசத்தை அநுஷ்டித்து ஆறு பிராணா யாமங்களைச் செய்யக் கடவன். சூத்திர சவத்தைப் பின் சென்றவனான மூடப் பிராம்மணன் மூன்று நாள் ஆசௌசத்தை அநுஷ்டித்துப் பின்பு சமுத்திரத்தை யடைகிற மஹாந்தியில் ஸ்நாநம் பண்ணி நூறு பிராணாயாமங்களைச் செய்து நெய்யைக் குடித்தால் சுத்தனாகிறான்-

சூத்திரர்கள் எப்போது தர்ப்பண முதலிய வியாபாரங்களை முடித்து (ஆசௌசத்தை முடித்து) இருக்கிறார்களோ, அந்தக் காலத்தில் அவர்கள் பிராம்மணர்களால் அனுசரிக்கத் தக்கவர்கள் . இது அநாதியான தர்மமாகும்.-

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.
ஆசாரகாண்டம் ஸம்பூர்ணம்.

பிராயச்சித்தகாண்டம்.-முதல் அத்தியாயம்.-

தாய்,மனைவி, முதலானவர்களுடைய கடுஞ் சொல்லினால் உண்டான மாநஹாநி, புத்திர மித்திராதிகள் செய்த சில அபராதங்களுக்காக உண்டான பெருங் கோபம்,அதிகமான சிநேஹம், அதிகமான பயம், இந்த ஹேதுக்களிலேதேனு மொன்றினால் ஸ்திரீ அல்லது புருஷன் உச்சுருக்கிட்டுக் கொண்டு மரணமடைந்தால் அவர்களுக்கு அடுத்த சுலோகத்தில் சொல்லப் போகிற கதி (நரக யாதனை) விதிக்கப்படுகிறது.

உச்சுருக்கினால் மரித்தவன் சீயினாலும், ரக்தத்தினாலும் நிறைந்து கோரமாயிருக்கிற அந்ததாமிஸ்ரமென்னும் நரகத்தில் முழுகி அதில் தானே அறுபதினாயிரம் வருஷ காலம் இடைவிடாமல் வசிக்கிறான்.

(துர்மரணமடைந்தவனுடைய சவத்தை) எடுத்தவர்கள்,அக்கினியினால் ஸம்ஸ்காரம் செய்தவர்கள், உச்சுருக்கிட்டிருந்த கயிற்றை அவிழ்த்தவர்கள் (தில தர்ப்பணாதிகளைச் செய்தவர்கள்) ஆகிய இவர்கள் தப்தகிருச்சிரம் என்னும் விரதத்தினால் சுத்தியை அடைகிறார்களென்று பிரஜாபதி சொன்னார்.

எருதினால் அல்லது பசுவினால் கொல்லப்பட்டவன்(அத்துடன் விளையாட்டினால் எதிர்த்து மரித்தவன்),ஒருவனால் உச்சுருக்கிட்டுக் கொல்லப்பட்டவன், பிராம்மணனால் கொல்லப்பட்டவன், இவர்களை ஸ்பரிசித்தவர்கள், சுந்தவர்கள், அக்கிநி தகநம் செய்தவர்கள், அந்தச் சவத்தைப் பின் தொடர்ந்தவர்கள், உச்சுருக்குக்கயிற்றை அவிழ்த்தவர்கள் , ஆகிய இந்தப் பிராம்மணர்கள் தப்கிருச்சிரத்தால் சுத்தர்களாகிப் பிராம்மணபோஜனம் செய்வித்து ஒரு பிராம்மணனுக்கு விருஷபத்துடன் பசுவைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவர்கள்

தப்தகிருச்சிரமென்பது மூன்றுநாள் ஆறு பலம் விழுக்காடு உஷ்ண ஜலத்தையும், பின்பு மூன்றுநாள் மூன்று பலம் விழுக்காடு உஷ்ணமாகிய பாலையும், பின்பு மூன்று நாள் ஒரு பலம் விழுக்காடு உஷ்ணமாகிய நெய்யையும், குடித்துப் பின்பு மூன்று நாள் வாயுவைப் பக்ஷிப்பவனாகிச் (உபவாஸமிருந்து) செய்யும் விரதம்.

மஹாபாதகம்,உபபாதகம் முதலான பாபங்களைச் செய்தவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் முதலானவர்களுடன் அவர்கள் பாபிகளென்றறியாமல் பிராம்மண க்ஷத்திரியாதிகள் ஐந்து நாள், அல்லது பத்துநாள், அல்லது பனிரண்டுநாள், அல்லது அரைமாஸம், அல்லது ஒருமாஸம், அல்லது இரண்டுமாஸம், அல்லது அரை வருஷம், அல்லதுஒரு வருஷம் ஸம்ஸர்க்கத்தைச் செய்தால் பாபிகள் ஆகிறார்கள். ஒரு வருஷத்திற்கு மேற்பட்டால் அவர்களோடு சமானமாகிறார்கள்-

பதித ஸம்ஸர்க்க விஷயத்தில் கீழே சொன்ன எட்டு பக்ஷங்களில் முதல் பக்ஷமான ஐந்து நாளைக்கு த்ரிராத்ர கிருச்சிரத்தையும் (மூன்றுநாளுபவாஸத்தையும் ) இரண்டாவது படிமான பத்து நாளைக்கு கிருச்சிரத்தையும் (பிராஜாபத்திய கிருச்சிரத்தையும் ) செய்ய வேண்டும். ராஜாபத்திய கிருச்சிரமாவது மூன்றுநாள் பகவிலும் பினபு மூன்றுநாள் இரவிலும் பின்பு மூன்றுநாள் தான் யாசிக்காமல் வந்ததையும் புசித்துப் பின்பு மூன்றுநாள் புசிக்காமலிருப்பதென்று மனுகூறினார். பின்னும் மூன்றாவது பக்ஷமான பன்னிரண்டு நாளைக்கு ஸாந்தப கிருச்சிரத்தைச் செய்ய வேண்டும்.-

ஸ்திரீகளுக்கு ரஜ உண்டான நாள் தொடங்கிப் பதினாறு திநங்கள் ருது காலமாம்.அவைகளில் நாலாவது நாளில் ஸ்நாநம் செய்த ஸ்திரீ பர்த்தாவினால் அழைக்கப்பட்டும் புத்திரனை உண்டாக்குவதற்காக எவள் தன் பர்த்தாவை அடைய வில்லையோ அவள் மரித்து நரகத்தை யடைந்து பின்பு அடிக்கடி ஜனித்து விதவை யாகிறாள். இது போலவே ருது ஸ்நாநம் செய்த பாரியை அருகிலிருந்தும் வியாதி முதலிய தோஷமற்றிருக்கும் புருஷன் அவளைச் சேரா விட்டால் கோரமான ப்ரூணஹத்தி (சிசுஹத்தி)தோஷத்தில் ஸங்தேகமின்றிச் சேருகிறான்-

பெரு வெள்ளம் பெருங்காற்றுக்கள் இவைகளால் ஒருவனுடைய விரை வேறொருவனுடைய க்ஷேத்திரத்தில் தள்ளப்பட்டு முளைத்தெழுந்து பலித்தால் அந்த நிலக்காரன் ( ஷேத்திர) அந்தப் பலனை அடைகிறான். அந்த விரைக்கு உடையவன் (பிஜி) அந்தப் பாகத்தை அடைவதில்லை. (இது லோகப் பிரசித்தம்). இந்த நியாயத்தினால் குண்டனென்றும் கோளகனென்றும் சொல்லப்படுகிற பிள்ளைகளிருவரும் பர ஸ்திரியின் புத்திரர்களே (பீஜிக்குச் சம்பந்தமில்லை)

ஒவ்ரஸன்,க்ஷேத்திரஜன், தத்தன், கிருத்திரிமன்-என்றுபுத்திரர்கள் நாலுவகைப் பட்டவர்கள்-மனு இவர்களையுஞ் சேர்த்துப் பன்னிரண்டு பிள்ளைகளைச் சொல்லி யிருக்கிறார். -மாதா அல்லது பிதா (புத்திரனில்லாத ஒருவனுக்கு)எந்தப் பிள்ளையைக் கொடுக்கிறார்களோ அவன் தத்தனென்று சொல்லப்படுவன்-இங்குத் தாநங் கொடுப்பது போல் பிரீதியுடன் தாரா பூர்வகமாகக் கொடுக்கப்பட்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மூத்தவன் விவாகமில்லாதிருக்க இளையவன் விவாகம் செய்து கொண்டால் அவன் பரிவேத்தாவென்றும், மூத்தவன் பரிவித்தி யென்றும், விவாகம் செய்து
கொண்ட பெண் பரிவேதிநீ யென்றும்,அந்தப் பெண்ணைக் கொடுத்தவன் பரிதாதாவென்றும், விவாகம் செய்வித்த புரோஹிதன் பரியஷ்டா வென்றும் சொல்லப்படுவார்கள். ஆக இந்த ஐவரும் நரகத்தை அடைகிறார்கள். இவர்களில் பரிவித்திக்கு இரண்டு கிருச்சிரமும், அந்தப் பெண்ணுக்கு ஒரு கிருச்சிரமும், பெண் கொடுத்தவனுக்குக் கிருச்சிராதிகிருச்சிரமும், பிராயச் சித்தமாம். ஹோமம் செய்வித்த புரோஹிதன் சந்திராயண விரதத்தைச் செய்யக் கடவன்.

முதுகில் மாம்ஸ மிகுதியால் விகார சரீரத்தை யுடையவுனாகிய கூனன், சித்திர குள்ளன், நபும்ஸகன், நாவில் குற்றத்தினால் விரைவாகப் பேசச் சக்தி யற்றவன், எந்தக் காரியங்களையும் செய்ய வல்லமை யில்லாத ஜடன், பிறவிக் குருடன், பிறவிச் செவிடன், ஊமை, இவர்களில் ஒருவனாகத் தன் தமையன் இருக்கும் பக்ஷத்தில் அவனுக்கு விவாக யோக்கியதை யில்லாமையால் அவனுக்கு முன் கநிஷ்டன் விவாகம் செய்து கொண்டால் முன் சொன்ன பரிவேதன தோஷமில்லை .தமையன் சன்னியாசியாய் விட்டாலும் தேசாந்தரத்தை அடைந்திருந்தாலும் தம்பி விவாகம் செய்து கொள்ளலாம்.

சிறிய தகப்பனுடைய பிள்ளை, தனக்குச் சக்களத்தித் தாயார் பிள்ளை, தத்த மகன், இவர்கள் தனக்கு மூத்தவர்களா யிருந்தாலும், அவர்களுக்கு முன் கனிஷ்டனான தான் விவாகம்,யக்கியம் இவைகளைச் செய்து கொள்வதினால் பரிவேதந தோஷமில்லை.

ஜேஷ்டப் பிராதா இருந்து அவன் யக்கியத்தைச் செய்யாவிட்டால் அவனுடைய அநுமதி பெற்று இளையவன் அக்கிநியை ஆதாநம் செய்யலாம் (பக்கியம் செய்யலாம்),இவ்விதமாகச் சங்கர்சகமிருக்கிறது-இது போல் யக்கியம் செய்யாத பிதாவின் அனுமதியினால் புத்திரன் யக்கியம் செய்வதை மநு விலக்கினார்.

தன்பதியானவன் தேசாந்தரமடைந்து அவன் சங்கதியே தெரியாமலிருத்தல், மரணமடைதல், சன்னியாசி யாகுதல், நபும்ஸகனாயிருத்தல்,பதிதனாகுதல், ஆக இந்த ஐந்து விதமான ஆபத்துக்களில் ஸ்திரீகளுக்கு வேறு பதி விதிக்கப்படுகிறான்-

எந்த ஸ்திரியானவள் தன் பர்த்தா மரித்து விட்ட பின் பிர்ம்மசரிய விரதத்தை அநுஷ்டிக்கிறாளோ அவள் பிர்ம்மசாரிகள் மரித்தால் ஸ்வர்க்கத்தை அடைவது போல் மரித்த பின் ஸ்வர்க்கத்தை அடைகிறாள் –

எந்த ஸ்திரீ மரணமடைந்த தன் பதியை அநுகமநம் செய்கிறாளோ (உடன் கட்டை ஏறுகிறாளோ) அவள் ஒரு மனுஷியனுடைய தேகத்தில் மூன்றரை கோடி கணக்குள்ள எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அத்தனை கோடி காலம் ஸ்வர்க்க லோகத்தில் வசிக்கிறாள்-

பாம்பு பிடிப்பவன் புற்றின் ரந்திரத்திலழுந்திக் கிடக்கிற பாம்பைத் தன் பலத்தினால் எப்படி வெளியில் எடுத்து விடுகிறானோ அப்படி அநுமரணம் செய்த பதிவிரதை யானவள் (நரகத்திற்குச் செல்லுகிற பர்த்தாவைத் தன் புண்ணிய பலத்தினால் மீட்டுப் புண்ணிய லோகத்தில் சேர்த்து அவனுடன் ஆநந்திக்கிறாள்-

முதலாவது அத்தியாயம் முற்றிற்று.

இரண்டாவது அத்தியாயம்.

செந்நாய், நாய், குள்ள நரி, பன்றிமுதலான ஐந்துக்களால் பிராம்மணோத்தமன் கடிக்கப்பட்டால் அவன் ஸ்நாநம் செய்து வேதமாதாவும் பரிசுத்தமுமாகிய காயத்ரியை ஜபிக்கக் கடவன்

பின்னும் கோசிருங்க ஜல ஸ்நாநஞ் செய்தல், மஹாநதி சங்கமத்தில் ஸ்நாநம் செய்தல், சமுத்திரத்தைப் பார்த்தல் இவைகளைச் செய்தால் நாயால் கடிக்கப்பட்டவன் சுத்தனாகிறான்

வேதத்தை முழுதுமோதிப் பிராஜாபத்தியம் ஸௌம்மியம் முதலான விரதங்களை அநுஷ்டித்தவனான பிராம்மணன் நாயால் கடிக்கப்பட்டால் ஸ்வர்ணத்தோடு கூடின ஐலத்தில் ஸ்நாநம் செய்து நெய்யைக் குடித்தால் சுத்தானாகிறான்-

சாந்திராயணம்முதலான விரதத்தோடு கூடி யிருப்பவன் (விரதாநுஷ்டாந காலத்தில் ) நாயால் கடிக்கப்பட்டால் மூன்று நாள் உபவாஸமிருந்து நான்காவது தினத்தில் நெய்யையும் தர்ப்ப ஜலத்தையும் குடித்துப் பின்பு விரத சேஷத்தைச் செய்து முடிக்கக் கடவன்.

விரதத்தை அநுஷ்டிக்காதவன், விரதத்தோடு கூடினவன், இவர்களில் எவனாகிலும் நாயால் கடிக்கப் பட்டானே யாகில் அவ்விருவர்கவளும் பிராம்மணரைச் சேவித்து அவர்களால் பரிசுத்தமான பார்வைகளால் பார்க்கப்பட்டும் தகுந்த பிராயச் சித்தங்களைச் செய்தும் பரிசுத்தர்களாகிறார்கள்

எவன் நாயால் கடிக்கப்படாமல் மூக்கினால் முகரப்பட்டும் நாக்கினால் நக்கப்பட்டும் அல்லது நகங்களால் கீறப்பட்டுமாவது இருக்கிறானோ அவன் அந்த இடத்தை மண்ணினாலும் ஜலத்தினாலும் நன்றாக அலம்பி நெருப்பில் காய்ச்சினால் பரிசுத்தனாகிறான்.

பிராம்மண ஸ்திரீயானவள் நாய், குள்ளநரி, செந்நாய் முதலியவைகளால் கடிக்கப்பட்டால் அப்போது அந்தஸ்திரீ ராத்திரியில் உதயமாகின்ற சந்திரன் முதலான கிரகங்களையும் கிருத்திகை
முதலான நக்ஷத்திரங்களையும் பார்த்தால் சுத்தையாகிறாள்,

கிருஷ்ண பக்ஷத்திலும் மேகத்தால் ஆகாசம் மறைக்கப்படுகிற காலத்திலும் சந்திரனும் நக்ஷத்திரங்களும் காணப் படாவிட்டால் சாஸ்திர விதிப்படி அப்போது சந்திரன் இருக்கும் திசையையாவது பார்க்க வேண்டும்.

எந்த ஊரில் பிராம்மணர்கள் இல்லையோ அந்த ஊரில் நாயால் கடிக்கப்பட்டவன் பிராம்மணர்களைப் பற்றிச் செய்ய வேண்டிய பிரதக்ஷிணம் முதலான ஆசாரங்களை விருஷத்தினிடத்தில்
செய்து பின்பு ஸ்நாநம் பண்ணினால் சுத்தனாகிறான்-

சண்டாளனால் அல்லது சுவபாகனால் அல்லது பசுக்களால் அல்லது பிராம்மணர்களால் அடிக்கப்பட்டாவது தானே விஷந் தின்றாவது யாகஞ்செய்த பிராம்மணன் மரணமடைந்தால் அவனை அவனுடைய ஏழு தலைமுறைக்குட்பட்ட ஞாதிகளில் ஒரு பிராம்மணன் லௌகிகாக்நியில் மந்திரமில்லாமல் தகநம் செய்யக் கடவன். அந்தச் சவத்தை ஸ்பரிசித்தாலும் சுமந்தாலும் பின்பு பிராம்மணருடைய அநுமதி பெற்றுப் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக் கடவன்-

துர் மரணமடைந்த யாக சீலனுடைய சவத்தைத் தகநம் செய்த ஸமீப ஞாதியான பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்து கொண்ட பின்பு, முன் லௌகிகாக்நியில் மந்திரமின்றித் தகநம் செய்யப்பட்ட அஸ்திகளை எடுத்து அவைகளைப் பாலினால் அலம்பிக் காருபத்தியம் முதலான அக்நிகளாலே யாகஞ் செய்கிறவனுக்குச் சொல்லிய விதிப்படி புநர் ஸம்ஸ்கார மந்திரங்களைச் சொல்லி அந்த அஸ்திகளைப் பிரேதத்தைப் போல் தஹநம் செய்யக் கடவன்-

ஆஹிதாக்நியான ஒரு பிராம்மணன் தேசாந்தரம் சென்றவியத்தில் காலகதியினால் மரணமடைய அவனுடைய அக்னி வீட்டிலிருந்தால் அந்தப் பிரேதத்தை அக்நியினால் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டிய விதியைச் சொல்லுகிறேன் ரிஷிகளே கேளுங்கள். மான் தோலைப் பரப்பி அதன் மேல் தர்ப்பங்களாலும் எழு நூறு கணக்குள்ளது சிறிய பலாசம் சமித்துக்களாலும் அல்லது பலாசமரத்தின் இலைக்காம்புகளாலும் ஒரு புருஷாகாரத்தைச் செய்து பிறகு, முகத்தில் சடத்துக்கள் நாற்பது, கழுத்தில் பத்து, கைகளில் நூறு, விரல்களில் பத்து, தொப்புளின் கீழ் குயஸ்தநத்தில் நூறு, வயிற்றில் இருநூறு, ஜங்களில் எட்டு, ஆண் குறியில் ஐந்து, தொடைகளில் இருபத்தொன்று, முழங்கால் அதின் கீழ் ஐங்கைகளில் இருநூறு, கால விரல்களில் ஆறு, இவ்விதமாகச் சமித்துக்களை அல்லது இலைக் காம்புகளை வைத்துக் கட்டப்பட்ட அந்தப் புருஷ சரீரத்தில் சம்மியையை ஆண் குறியி லும் அரணிக் கட்டையை விருஷணத்திலும், ஐஹூ என்னும் பாத்திரத்தை வலது கையிலும்,உப்பிருத் என்னும் பாத்திரத்தை இடது கையிலும், உரல் உலக்கைகளை முதுகிலும், திருஷத் என்னும் பாத்திரத்தை (அம்மியை) மார்பிலும், அரிசி,நெய்,எள், இவைகளை முகத்திலும், புரோக்ஷ பாத்திரத்தைக் காதிலும், நெய்ப் பாத்திரத்தைக் கண்களிலும் தங்கத் தகடுகளைக் காது, கண், முகம், மூக்கு இந்த இடங்களிலும் இவ்விதமாக யக்கிய பாத்திரைங்களை எல்லாம் வைத்து மந்திரத்தால் ஒரு ஆகுதி(நெய்யாகுதி) செய்து புத்திரன் அல்லது பிராதா அல்லது வேறொரு சமீப பந்துவாவது சமர்த்தனாக இருந்து விதிப்படி தஹந ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்

இவ்விதமான ஆஹிதாக்நி ஸம்ஸ்கார விதியைச் செய்தால் அந்த ஆஹிதாக்நி ப்ரஹ்ம லோகத்தை நிச்சயமாய் அடைகிறான்.எந்தப் பிராம்மணர்கள் இவ்விதமாகத் தஹநம் செய்தார்களோ அவர்களும் உத்தம கதியை அடைகிறார்கள்

இவ்விதமாகச் செய்யாமல் தங்கள் புத்திக்குத் தோன்றின படியே எவர்கள் இந்தக் கருமத்தைச் செய்கிறார்களோ அவர்கள் அல்பாயுசுக்களாகி அசுசியான நரகத்தில் விழுகிறார்கள் –

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று

மூன்றாவது அத்தியாயம்.

பிரகீர்ணக பாபங்களுக்குப் பிராயச் சித்தத்தைச் சொல்லிய பின் விருத்த பராசரராலும் மனுவினாலும் விஸ்தரித்துச் சொல்லப்பட்டதும் மலிநீ கரண ரூபங்களான பிராணிஹத்திகளில் செய்ய வேண்டியதுமான பிராயச்சித்தத்தைச் சொல்லுகிறேன். (என்கிறார் பராசரர்)

கிரௌஞ்சம், வண்டாழ்வான், ஹம்ஸம், சக்கிரவாகம், கோழி, வாத்து, சரபம் ஆகிய இந்தப் பக்ஷிகளைக் கொன்றவன் ஒரு நாள் முழுதும் உபவாசமிருந்தால் சுத்தனாகிறான்-ஹம்ஸம் முதலிய பக்ஷிகளைக் கொன்றவன் கோ தாநம் செய்யக்கடவனென்று மனு யாக்கிய வல்கியர்கள் சொன்னது உபவாஸமிருக்க அசக்தனான தநிகன் விஷயமென்று கருத்து.

நாரை, சிறு குருவி, கிளி, மாடப்புற, ஸர்ப்பம், முதலை, இவைகளைக் கொன்றவன் பகலில் உபவாஸ் மிருந்து ராத்திரியில் போஐநம் செய்வதால் சுத்தனாகிறான்-

விருகம் என்னு மொருவித பக்ஷி, காக்கை, புறா பெண் கிளி, சிச்சிலவு இவைகளைக் கொல்லுகிறவன் ஜலத்தின் நடுவில் இரண்டு ஸந்தியைகளிலும் இடை விடாமல் அந்தந்த ஸந்தியைகள் முடியுமளவும் எவ்வளவுப் பிராணாயாமங்களைச் செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தால் சுத்தனாகிறான்-

கழுகு, பருந்து, முயலடிப்பா னென்னும் பக்ஷி,கோட்டான் இவைகளைக் கொல்லுகிறவன் அக்நியில் பசநம் செய்யப்படாத கிழங்கு, பழம் முதலியவற்றை ஒரு திநம் புசித்துப் பின்பு மூன்று காலம் ( ஓன்றரை நாள்) உபவாஸ மிருக்கக் கடவன்.-இவைகளைக் கொல்லுகிறவன் ஒரு நாள் உபவாஸமும் ஸகலவிதமான விரை தாநமும் செய்ய வேண்டுமென்று காசியபர் விதித்தது அசக்தனைப் பற்றியதென்று கருத்து.

வல்குலி என்னும் பக்ஷி,நாரையின் பேதம் அல்லது மீன் குத்திக்குருவி, குயில், வலியன், லாவிகை என்னும் பக்ஷி, கருடபக்ஷி,இவைகளைக் கொன்றவன் பகலில் உபவாஸ மிருந்து இரவில் புசிப்பதினால் சுத்தனாகிறான்.

நீர்க் காக்கை, சகோரமென்னும் நிலாமொக்கி, பெண் கோட்டான், அன்றில் பக்ஷி, பரத்துவாஜ பக்ஷி இவை முதலிய பக்ஷிகளைக் கொன்றவன் சைவ மந்திர கல்பத்தில் சொல்லியபடி சிவனைப் பூஜித்தால் சுத்தனாகிறான்

கெண்டபேரண்டம், காடை, தங்கம் போன்ற தலைக் கொண்டையை யுடைய ஒரு பக்ஷி, ஓர்வகைப் புறா,சித்திரவர்ணமான் இறகை யுடைய பக்ஷி, இவைகளைக் கொன்றவனும், மற்ற எல்லாப் பக்ஷிகளையும் கொன்றவனும் ஒரு பகலு மிரவும் சுத்தோபவாஸமிருக்க வேண்டும்.

பெருச்சாளி, அதின் பேதங்கள், பூனை, கீரிப் பிள்ளை, ஸர்ப்பம், மலைப் பாம்பு, தண்ணீர்ப்பாம்பு, இவைகளை அடித்துக் கொன்றவன் எள் பயறு இவைளோடு பசநம் செய்விக்கப்பட்ட கிருஸர மென்கிற அன்னத்தைப் பிராம்மணருக்குப் போஜனம் செய்வித்து எஃகினால் செய்த தடியைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவன்.

நீர்க் குரங்கு அல்லது ஒருவித முதலை, உடும்பு, ஆமை, சல்லியக மென்னும் ஒருவகை மத்ஸ்யம், முள்ளம் பன்றி, இவைகளைக் கொன்றவன் ஒரு பகலும் இரவும் கத்தரிக்காயை மாத்திரம்
புசித்தால் சுத்தனாகிறான்-இவைகளின் வதத்திலும் காசியபர் முதலானவர்கள் சொன்ன பிராய சித்த பேதங்கள் முன் சுலோகத்தில் சொல்லியபடி சில நிமித்தங்களால் வந்தன வென்று கண்டு கொள்க.-

செந்நாய், குள்ள நரி, கட்டி,சிவிங்கி, நாய் இவைகளைக் கொன்றவன், ஒரு படி எள்ளைப் பிராம்மணனுக்குக் கொடுத்து மூன்று நாள் சுத்தோபவாஸ மிருக்க வேண்டும்.-நாயைக் கொன்றவனுக்கு மூன்று நாள் உபவாஸத்தை விஷ்ணுவும், சூத்திரவத்திற்குரிய பிராயச் சித்தத்தைப் பைடீநஸியும் சொன்னது நெடு நாளாக இந்தப் பாதகத்தைச் செய்து கொண்டிருப்பவன் விஷயமென்று கொள்ள வேண்டும்.

யானை,குதிரை, எருமைக்கடா, ஒட்டகம், இவைகளைக் கொன்றவனுக்கு மூன்று கால ஸ்நாநத்தோடு கூடிய ஒரு நாள் உபவாஸம் பிராயச்சித்தமாம்.

மான், குரங்கு, சிங்கம், புலிபோன்றதான ஒருசித்திர மிருகம்,புலி இவைகளைக் கொன்றவன் பிராம்மண போஜநத்தைச் செய்விப்பதோடு மூன்று நாள் உபவாஸத்தால் சுத்தனாகிறான்.

மான் ஜாதிகள், குதிரையைப் போன்ற சரீரத்தையும் மூன்று கொம்புகளை யுமுடையதான ஒருவிதமான்,பன்றி, சண்டை செய்கிற அப்பியாஸமுடைய ஆட்டுக்கடா, பெண் ஆடு, இவைகளைக்
கொன்றவன் ஒரு நாள் உபவாஸ மிருந்து உழுத நிலத்தில் விளையாத செந்நெல் அரிசியைச் சமைத்துப் பாரணை செய்ய வேண்டும்-

நியாயத்தை உள்ளபடி அறிந்து பாப பேதங்களுக் கீடாகப் பிராயச்சித்தங்களை ஊஹித்து இவ் விதமாகக் கீழ சொல்லப்படாத சகல காட்டு மிருகங்கள் வதத்திலும் (ஐாதவேதஸம் என்
னும் மந்திர ஜபத்துடன் ஒரு நாள் உபவாஸ மிருக்க வேண்டும்.-மூன்று நாள் உபவாஸமும், ஸ்வர்ண தானமும் செய்ய வேண்டுமென்று கசியபர் சொன்னது தனிகனா யிருந்து இந்தப் பாபத்தை
அடிக்கடி செய்து கொண் டிருப்பவன் விஷயம்.

சித்திரம் எழுதுகிறவன் முதலானவன், சமையல் செய்கிறவன் முதலானவன், சூத்திரன்,ஸ்திரீ ஆகிய இவர்களைக் கொன்றவன் இரண்டு பிராஜாபத்திய கிருச்சிரங்களைச் செய்து பத்து பசுக்களையும் பதினோராவதாக ஒரு விருஷபத்தையும் தஷிணையாகக் கொடுக்கக் கடவன்.

தோஷமற்றவனா யிருக்கிற வைசியணை அல்லது அப்படிப்பட்ட க்ஷத்திரியனை எவன் கொல்லுகிறானோ அவன் இரண்டு அதி திருதிச்சி யங்களைச் செய்து இருந்து பசுக்களைத் தஷிணையாகக் கொடுக்கக் கட்டவன்.

அல்ப பாகம் நல்ல நடத்தையோடு கூடின வைசியனையும்,தன் நிலை தவறாத சூத்திரனையும், பிராம்மண வதம் முதலிய விருத்த கருமங்களைச் செய்பவனாகிய ஷத்திரியனையும், விருத்த கருமங்களில் நிலைத்திருப்பவனாகிய பிராம்மண சிரேஷ்டனையும், கொன்றவன் சாந்திராயண விரதத்தை அநுஷ்டித்து முப்பது பசுக்களைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவன்-

சண்டாளர்களில் ஒருவனைக் கொன்ற பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தையும் இரண்டு கோதாநத்தையும் செய்தால் சுத்தனாகிறான். க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பிராம்மண ஸ்திரிக்கு க்ஷத்திரியனால் பிறந்த ஜாதியான ஸூத வம்சத்தான் முதலானவர்கள் ஆகிய இவர்கள் சண்டாளனைக் கொன்றால் பாதிப்பிராஜாபத்திய கிருச்சிரத்தால் சுத்தராகிறார்கள்.

சண்டாளன், சக்கிலி, இவர்கள் திருடராகவர அவர்களைப் பிராம்மணன் கொன்றால் ஒருநாள் உபவாஸமிருந்து பஞ்சகவியத்தைப் புசிப்பதினால் சுத்தனாகிறான்.

சுவபாகனென்னும் சக்கிலி, சண்டாளன் இவர்களோடு பிராம்மணன் ஸம்பாஷித்தால் அவன் அதற்குப் பிராயச்சித்தமாகப் பூர்ணமாய் வேத மோதின மஹா பிராம்மணர்களோடு ஸம்பாஷணம் செய்யக் கடவன், அல்லது காயத்திரியை ஒரு தரம் ஜபிக்கக் கடன்.

சண்டாளர்களுடன் சயனித்துத் தூங்கினவனுக்கு மூன்று நாள் உபவாஸத்தை விதிக்க வேண்டும். சண்டாளனுடன் வழி நடந்தவன் காயத்திரியை ஸ்மரித்தால் சுத்தனாகிறான்-

சண்டாளனைப் பார்த்தவன் சூரியனைப் பார்க்கக் கடவன்,சண்டாளனைத் தொட்டவன் ஸசேல ஸ்நாநத்தைச் செய்யக் கடவன்.-

சண்டாளன் வெட்டுவித்து கிணறுகளில் அல்லது நடைபாவிகளில் பிராம்மணன் அறியாமல் தண்ணீர் குடித்தால் ஒருவேளை ஆஹார விரதத்தினாலும் அறிந்து குடித்தால் ஒரு உபவாஸத்தினாலும் சுத்தனாகிறான்.

சண்டாளன் பாண்டத்தினால் எந்தக் கிணற்றினின்று ஜலம் எடுக்கப் படுகிறதோ அந்தக் கிணற்று ஜலத்தைக் குடித்த பிராம்மணன் மூன்று நாள் கோ மூத்திரத்தைக் குடிப்பதோடு யவ அரிசி மாவையும் புசித்தால் சுத்தனாகிறான்

சண்டாளனுடைய பாண்டத்து ஜலத்தைப் பிராம்மணன் அறியாமல் குடித்து உடனே அறிந்து அதைக் கக்கினால் அப்போது பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக் கடவன். அது வெளிப்படாமல் ஜெரித்து விட்டபஷத்தில் ஸபா ஐநங்கள் அவனுக்குப் பிராஜாபத்திய கிருச்சிரத்தைப் பிராயச்சித்தமாக விதிக்கக்கூடாது, ஸாந்தபநமென்னும் கிருச்சிரம் விதிக்கத்தக்கது.

சண்டாள பாண்ட லத்தை அறிந்து குடித்த பிராம் மணனுக்குஸாந்தப கிருச்சிரத்தையும், க்ஷத்திரியனுக்குப் பிராஜாபத்திய கிருச்சிரத்தையும், வைசியனுக்கு அதில் பாதியும், சூத்திரனுக்குக் கால்வாசியையும் பிராயச்சித்தமாக விதிக்க வேண்டும்.

அந்தியஜாதிகளுடைய பாண்டத்திலிருக்கின்ற ஜலம்,தயிர், பால்,இவைகளைப் பிராம்மணன் க்ஷத்திரி
யன் வைசியன் சூத்திரன் இவர்கள் அறியாமல் குடித்தார்களாகில் இருபிறப்பாளருக்குப் பிர்ம்மகூர்ச்சபாநத்துடன் உபவாஸமும், சூத்திரனுக்கு உபவாஸமும் சக்திக்கீடானதாமும் பிராயச்சித்தமாம்

அஞ்ஞாநத்தினால் சண்டாளாந்கத்தைப் புசித்த பிராம்மணன் கோமூத்திரத்தில் பசநம்செய்த யவஅரிசி அன்னத்தைப் பத்துநாள் புசித்தால் சுத்தனாகிறான்.

(அஞ்ஞாநத்தினால் சண்டாளார்கத்தைப் புசித்தவன்) கோமூத்திரத்தில் பசநம்செய்த யவஅரிசி அன்னத்தைத் திநம் ஒவ்வொரு கவளமாகப் பத்துநாள் புஜிக்கக்கடவன்.நியமத்திலிருப்பவனுக்கு அதாவது, ஸ்நாநம், மெளநம், உபவாஸம், யாகம், வேதமோதல், இந்திரியத்தை அடக்குதல், ஆசாரியன்பணிவிடை, செளசம், கோபமில்லாமை,மனம் நிலைத்திருக்கை இவைகளுடன் கூடி
யிருப்பவனுக்கு) இந்த யாவக ஆஹாரவிரதத்தை உபதேசிக்கவேண்டும்.

சண்டாளன் அறியப்படாதவனாகி எவனுடைய வீட்டில் வசிக்கிறானோ அந்தவீட்டுக்காரன் அவனைச் சண்டாளனென்றறிந்த பின்பு தங்களை அடுத்தானாகில் பிராம்மணர்கள் அவனுக்குப் பிராயச் சித்தோபதேசமாகிறஅநுக்கிரகத்தைச்செய்கிறார்கள்-

சகலவேதங்களையும் ஓதியும் தர்மங்களை அறிந்துமிருக்கிற பிராம்மணர்கள் மஹரிஷிகள் சொல்லியிருக்கின்ற தர்மங்களைச் சொல்லிப் பாபராசியினின்று பாபிஷ்டனைக் கரையேற்றுகிறார்கள்-

தயிரோடும் நெய்யோடும் பாலோடும்கூட்டிக் கோமூத்திரத்தில் பசநம் செய்த யவ அரிசி அந்நத்தைச் சண்டாள ஸஹவாசம் நேரிட்ட வீட்டுக்குடையவனும் அந்த வீட்டில் வசிக்கிற குழந்தை கிழவர் முதலிய எல்லாரும் புசிப்பதுடன் மூன்று காலத்திலும் ஸ்நாநமும் செய்யவேண்டும்.

கோமூத்திர பசந மான யவ அரிசி அந்நத்தைத் தயிரோடு கலந்து மூன்றுநாளும், நெய்யோடு கலந்து மூன்றுநாளும்,பாலோடுகலந்து மூன்றுநாளும் பின்பு இந்தவிதமாக ஒவ்வொருநாளும் ஆகப் பன்னிரண்டு நாள் புசித்தலாகிய இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்.

இந்தப்போசாத்தில் பாவதுஷ்டமானதையும், எச்சில், புழு, இவைகள் விழுந்து தூஷிக்கப்பட்டதையும், புசிக்கக்கூடாது.-எந்த அந்நம் பார்க்கும்போது அமேத்தியம் முதலானதுகளோடு பலவகையாலும் சமமாக புத்தியில் தோன்றுகிறதோ அது பாவதுஷ்டமானது அதாவது எண்ணத்தினால் தோஷமடைந்தது என்னப்படும்.

தயிர்ப் பால்களைத் திநத்திற்கு மூன்றுபலம் அளவாகவும் நெய்யை ஒருபலம் அளவாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாம்பிரம் வெண்கலம் இவைகளுக்குச் சாம்பலினால் சுத்தியும் வஸ்திரங்களுக்கு ஜலத்தில் அலம்புவதினால் சுத்தியும் உண்டாகும்.-மண்பாத்திரத்திற்கு அதைவிட்டுவிடுவதே சுத்தியாம். தாம்பிர பாத்திராதிகளுக்குப் போல் மண்பாத்திரத்திற்கு வேறு சுத்தியில்லை.

குசும்பம் (தைலசாதநமான ஒருதானியம்), வெல்லம், பஞ்சு,உப்பு,எண்ணெய்,நெய், தானியம் இவைகளைச் சண்டாள சகவாசம் நேரிட்ட வீட்டுவசற்படியில் வைத்து அந்த வீட்டை நெருப்பிட்டுக் கொளுத்தவேண்டும்.

இவ்விதமாகத்தானும் தன் ஜநங்களும் தன்வீடும் சுத்தி அடைந்தபின் பிராம்மணபோ நம் செய்வித்து முப்பது பசுக்களை ஒரு விருஷபத்துடன் பிராம்மணர்களுக்குத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்

பாண்டத்தை விடுவதுபோல் சண்டாளன் வசித்த பூமியை விடவேண்டுவதில்லை. அந்த வீட்டுச்சுவருக்கு மறுபடி பூசுதல், அந்தவீட்டுமண்ணைவெட்டி எடுத்தல் இவைகளைச்செய்வித்துப்
பிராம்மணர்களை அந்தவீட்டில் புகச்செய்து சாந்திஜபங்களையும் சாந்திஹோமங்களையும் செய்தால் அந்தப்பூமி சுத்தமாகிறபடியால் பூமிக்கு விடத்தக்க தோஷமில்லை.

சண்டாளர்களோடு ஒருமாஸம் அல்லது அரைமாஸம் ஸகவாஸம்செய்த பிராம்மணன் கோமூத்திர பாகமான யவ அரிசி அந்நத்தைப் புசிப்பதாகிய விரதத்தை ஒருமாஸதோஷத்திற்கு ஒரு மாஸமும் அரை மாஸ தோஷத்திற்கு அரை மாஸமும் பிராயச்சித்தமாகச் செய்யவேண்டும்.

வண்ணாத்தி, முச்சியின்ஸ்திரீ வேடுவச்சி,மூங்கில்பாய் நெசவுகளால் ஜீவநம்பண்ணுகிற ஒரு ஜாதிஸ்திரீ இவர்கள் பிர்ம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் வீட்டில் அறியப்படாதவர்களாக
வசிக்கப் பின்புஅவர்களை அறிந்தால் முன் சண்டாள ஸகவாஸத்திற்குச் சொன்ன பிராயச் சித்தத்தில் பாதியே செய்ய வேண்டும், வீட் டைக் கொளுத்த வேண்டியதில்லை. பாத்திரங்களைச் சுத்தி செய்வது முதலிய மற்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் .

பிராம்மணாதிகளுடைய வீட்டில் சண்டாளன் உள்ளேபுகுந்தால் அவனை அந்தவீட்டினின்று அப்புறப்படுத்தி மண்பாத்திரங்ககளை எடுத்தெறிந்து விடவேண்டும். எண்ணெய், நெய்முதலான ரஸங்களின் பாண்டங்களை எறியவேண்டியதில்லை .சாணி லத்தினால் அந்த வீட்டை நன்றாக அலம்ப வேண்டும்.

எந்தப் பிராம்மணனுக்குத் தேகத்தில் சீயும் ரக்தமும் பெருகிக் கொண்டிருக்கிற புண் வாயில் புழு உண்டாகிறதோ அவனுக்குப் பிராயச்சித்தம் எப்படி ஆகும்?-

சுக்களுடைய மூத்திரம் சாணி இவைகளாலும் தயிர் பால் நெய்களாலும் அதாவது பஞ்சகவியத்தால் மூன்றுநாள் ஸ்நாநம்பண்ணி மூன்றுநாள் பஞ்சகவியத்தைக் குடித்தால் புண்ணில் புழுத்தவன் சுத்தனாகிறான்.

ஷத்திரியனுக்கானால் ஐந்துமாஷம் அளவுள்ள ஸ்வர்ணதாநமும் வைசியனுக்கானால் கோதக்ஷிணையும் உபவாஸமும் விதிக்கவேண்டும். சூத்திரனுக்கு உபவாஸம் இல்லை, ஆனால் தாநத்தினால் சுத்தனாகிறான்

பூமிதேவர்களான பிராம்மணர்கள் அச்சித்ரம் (பரிபூர்ணம் என்று எந்தவாக்கியத்தைச் சொல்லுகிறார்களோ, அந்த வாக்கியமானது அக்கிஷ்டோமமென்னும் யாகத்தினால் கிடைத்த பலன் போன்றதாகையால் ஒருவன் அதைவணங்கிச் சிரத்தினால் கிரகித்துக்கொள்ள வேண்டும்.
ஒருபிராயச்சித்தத்தை அனுஷ்டிக்குங்காலத்தில் அதினுடைய ஏற்றக் குறைவுகளின் பூர்த்திக்காக ஸம்பூர்ணமாகட்டுமென்று பிரமாண வாக்கியத்தை அவசியம் பிரார்த்தித்துப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது கருத்து.

ஜபத்திலுண்டான சித்ரம் (குறைவு), தபஸிலுண்டான சித்ரம், யக்கியத்திலுண்டான சித்ரம் இவைகளெல்லாம் பிராம்மணர்களால் அச்சித்ரம் (ஸம்பூர்ணம்) என்று சொல்லப்பட்டனவாகி
அப்படியே ஸம்பூர்ணமாகின்றன.

ஒருவன் வியாதியினால் பீடிதனாயிருக்கையிலும் நெடுந் தூரம் வழி நடந்து இளைத்திருக்கையிலும் தெய்வீகமான துர்ப்பி காலத்திலும் அந்நிய ராஜாவினால் தன்தேசத்திற்குத் துன்பம்
உண்டாயிருக்கையிலும் தான்செய்யவேண்டிய உபவாசம்,விரதம், ஹோமம் இவைகளைப் பிராம்மணர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்ளலாம். தன் பிதா முதலியவர்களும் தனக்காகச் செய்யலாம்.

ஒன்றையும் செய்து கொள்ளக் கூடாத விசேஷ ஆபத்து நேரிட்ட பக்ஷத்தில் வேதத்தை முழுதுமோதின பெரியோர்களான பிராம்மணர்கள் இவன் முன் செய்திருந்த உபகாரத்தினால் சந்தோஷித்தவர்களாகி ஆபத்தை அடைந்திருப்பவனை நோக்கி நீ தோஷ மற்றவனாகக் கடவை யென்று அனுக்கிரகிக்கிறார்கள். அவ்வளவு மாத்திரத்தினால் ஒருவன் ஒரு விரதத்தையும் அனுஷ்ட்டிக்காமலே குரு பிதா முதல்வர்களாக யுள்ள பிராம்மணர்களுடைய ஆசீர்வாதத்தினால் ஸகல இஷ்டங்களையும் அடைகிறான்.

முன் சொல்லியபடி வியாதி முதலான காரணங்களால் பிராயச் சித்தத்தைச் செய்யச் சக்தியற்றவன் விஷயத்திலும், அப்படியே பால விருத்தர்கள் விஷயத்திலும்,பெரியோர்கள் அவர்களை அனுக்கிரகிக்கத் தக்கவர்கள். அப்படி யில்லாமல் சக்தி யுள்ளவன் விஷயத்தில் அநுக்கிரகித்தால் தோஷம் ஸம்பவிக்கும், ஆகையால் அப்படிப் பட்டவர்கள் விஷயத்தில் அனுக்கிரகம் செய்யத் தக்கதன்று.-தர்ம சாஸ்திரத்தை அறியாதவனும் ஒருத்தனாயிருப்பவனும் அந்த அநுக்கிரகத்தைச் செய்யக் கூடாதென்றும் தர்மங்களை அறிந்த பிராம்மணர்கள் அநேகர் கூடி அனுக்கிரகிக்க வேண்டுமென்றும் தேவலர் சொன்னார்.

புத்திரமித்திராதிகள் விரதத்தை அனுஷ்டிக்கச் சக்தி யுள்ளவர்களாயிருக்க அவர்களிடத்தில் ஸ்நேகத்தாலாவது தன்னிடத்தில் பொருளாசையிலாவது ராஜா முதலியவர்களிடத்தில்
பயத்தினாலாவது துர்ப்பலன் விஷயத்தில் அனுக்கிரகம் செய்ய வேண்டுமென்கிற சாஸ்திரத்தை அறியாமல் எவர்கள் கீழ்ச் சொன்ன சக்தர்கள் விஷயத்திலும் அநுக்கிரகத்தைச் செய்கிறார்களோர் அவர்களிடத்தில் அனுக்கிரகம் செய்யப்பட்டவர்களுடைய பாபம் சேருகிறது.

ஒருவன் பாபியாயிருந்து அவனுடைய சரீரத்திற்கு அந்தியம்வந்தால் (மரணகாலம் ஸம்பவித்து பூமியில் படுத்திருக்கை நேரிட்டால்) அந்தத்தசையில் அவனுக்குச்செய்ய அசாத்தியமான
பிராயச்சித்தத்தை எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்கள் மரிக்கப் போகிறஅந்தப்பாபியானவன் அருகேயிருக்கின்ற பந்துக்கள் வாக்கியத்தினால் அப்போதுசெய்கிற தேவதாத்தியானத்தைத் தடுப்பதினால் அவனுடைய பாபம் அவர்களிடத்தில் சேருகிறது. சுகமான சரீரத்தை யுடையவனுக்குக் கீழ்ச் சொன்ன தேவதாஸ்மரண விரோதமில்லாமையால் பிராயச்சித்தத்தைச் சொல்லலாம்

வியாதி முதலிய ஆபத்துக்களை யுடையவனுக்கு மாத்திரம் பதிலாக மற்றொருவன் விரதங்களை அனுஷ்டிக்கலாமென்கிற சாஸ்திரத்தைஅறியாதவர்களாகிச் சுகமாக இருக்கிற ஒரு தனிகனு
க்குப் பதிலாக விரதத்தை எவர்கள் அநுஷ்டிக்கிறார்களோ அவர்களும்,இது சாஸ்திரவி திதானென்று எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்களும், அவனுடைய பாபம் நீங்கும் விஷயத்தில் தடை செய்தவர்களாகையால் அசுசியான நரகத்தில் விழுகிறார்கள-

சாஸ்திரத்தில் சொல்லிய நியமத்தைவிட்டு அதைச் சொல்லுகிற பிராம்மணனையும் அலட்சியம் செய்து தனக்குத் தோன்றியபடி பிராயச்சித்தத்தைச் செய்பவன் பிராயச்சித்த பலனான புண்ணியத்தை அடைகிறதில்லை. அவனுடைய உபவாஸமும் வீணாகும்.

பிராம்மணர்களுடைய விதி வாக்கியத்தின்படி பிராயச்சித்தம் அனுஷ்டிக்கத்தக்கது, வெகு பிராம்மணர்கள் கிடையாதபக்ஷத்தில் ஒரு பிராம்மணனாவது சொல்லுகிறபிராயச்சித்தத்தைச் செய்ய
வேண்டும், அப்படிப் பிராம்மணர்களுடைய அனுமதியின்றியே தானாகச் சாஸ்திரங்களை ஆலோசித்துப் பிராயச்சித்தங்களைச்செய்பவன் புரூணத்தியின்தோஷத்தை அடைகிறான்.

பிராம்மணர்கள் ஐங்கமங்களான (ஸஞ்சரிப்பவைகளான) புண்ணிய தீர்த்தங்களென்னப்படுகிறார்கள். பெரியோர்கள் பரிசுத்தர்களாகையால் அவர்கள் தீர்த்தங்களுக்கு ஸமானமானவர்கள். அவர்கள் விதிக்கிறவாக்கியமென்னும் ஜலத்தினால் பாபமாகிய அழுக்கடைந்த மனிதர்கள் பரிசுத்தர்களாகின்றனர்.

பிர்ம்மம் என்பது வேதம், அதில் நிஷ்டையுடையவர் பிராம்மணர். அவர்கள் எந்த வசநங்களைச் சொல்லுகிறார்களோ அந்த வசகங்களைத் தேவதைகள் அப்படியே அநுமதிசெய்கிறார்கள்.
ஸகலதேவதைகளையும் சொல்லுகிற வைதிகமந்திரங்களைத் தரிக்கிறபடியால் பிராம்மணர் ஸகல தேவதா ஸ்வரூபியாகிறார்கள். அவர்கள்சொல்லுகிற வசநம் வேறாகிறதில்லை.

உபவாஸம், வேறுவிரதம்,நாநம், ஸ் தீர்த்தயாத்திரை,ஜபம், தவம், இவைகள் எவனுக்குப் பிராம்மணர்களுடைய அனுமதியினால் செய்யப்படுகின்றனவோ அவைகளுடைய பலன் அவனுக்குப்
பரிபூர்ணமாகக் கிடைக்கிறது

பக்குவமான அந்நமானது சமைத்த பாண்டத்தில் அல்லது போஜந பாத்திரத்தில் புழு ஈ மயிர் இவைகளால் தோஷத்தை அடைந்திருந்தால் அந்த அந்நத்தின் நடுவில் தீர்த்தத்தினால் புரோக்ஷித்துக்
கொஞ்சம் பஸ்மத்தைச் சேர்க்க வேண்டும்.

எந்தப்பிராம்மணன் இடதுகையினால் தன் பாதத்தைத் தொட்டுக்கொண்டு புசிக்கிறானோ அவனும் இரண்டு வகையான இலைகளைச் சேர்த்துத் தைத்த இலையில் எவன் புசிக்கிறானோ
அவனும் இடது கையால் போசந பாத்திரத்தை ஸ்பர்சிக்காமல் எவன் புசிக்கிறானோ அவனும் தங்களுடைய எச்சிலைத் தாங்களே புசிக்கிறவர்களாகிறார்கள்.

பீடத்தில் கால்களை வைத்துக்கொண்டுஉட்கார்ந்தும்,) பாதக்குறட்டின் மேலிருந்தும், படுக்கையிலிருந்தும், நின்று கொண்டும், புசிக்கலாகாது. புசிக்கும் போது நாய் சண்டாளன் முதலியவர்களைப் பார்க்கும்படி நேரிட்டால் அந்த அந்நத்தை விட்டுவிடவேண்டும்.

(ஓ ரிஷிகளே) எந்த அந்நம் நிஷதிக்கப்பட்டதோ அதையும்,அந்நத்திற்குச் சுத்தி எதினாலேயோ அதையும் முன் விருத்த பராசரர் எந்தவிதமாகச் சொல்லியிருக்கிறாரோ அப்படியே உங்களுக்கு நான் சொல்லுகிறேன் (என்கிறார் பராசரர்).இதனால் கல்பங்கள் தோறும் அதிகாரிபுருஷர்களான மனு வஸிஷ்டாதிகள் சிருஷ்டிக்கப்படுவது போலக் கலியுக தர்ம சாஸ்திராதிகாரியாகப் பராசர முனிவரும் அந்தந்தக் கல்பங்களில் சிருஷ்டிக்கப் படுகிறாரென்பதும் அவருடைய வாக்கியம் பிரமாணமா மென்பதும் பெறப்பட்டன.

துரோணம் ஆடகம் என்னும்அளவை மேலே சொல்லப் போகிறார்.ஒரு துரோணம் ஒரு ஆடகம் அளவுள்ள நெல்லின் சம்பந்தமான பக்குவாந்நமானது காக்கை, நாய் இவைகளால் நக்கப்படுதல் முதலிய சேஷ்டைகள் நேரிட்டுத்தூஷிக்கப்பட்டால் இந்த அந்நம் எதினால் சுத்தமாகுமென்று பிராம்மணர்களுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.

காக்கை நாய்இவைகளால் தூஷிக்கப்பட்டதான் கீழே சொன்ன துரோணாநத்தைத் தர்மத்தைஅறிந்த பிராம்மணன் பரித் தியாகம் செய்யக்கடவனல்லன்.

வேதங்கள் வேதாங்கங்கள் இவைகளைக் கற்றுணர்ந்தபெரியோர்களும் தர்மசாஸ்திரத்தைப் பரிபாலநம் செய்கிறவர்களுமான பிராம்மணர்களால் முப்பத்திரண்டுபடி அளவுள்ளது துரோணமென்றும் இரண்டுபடி அளவுள்ளது ஆட மென்றும் நிச்சயிக்கப்பட்டது.

வேதம் ஸ்மிருதி இவைகளை அறிந்தவர்கள் கீழ்ச்சொன்ன துரோண ஆடக அளவையுடைய அந்நம் சுத்தமானதென்று நிச்சயிக்கிறார்கள்

காக்கை நாய் இவைகளால் நக்கப்பட்டதும் கவ்வப்பட்டதும் கழுதையால் முகரப்பட்டதுமான துரோண ஆடக அளவுள்ள அந்நத்தில் ஸ்வல்ப பாகத்தை எடுத்தெறிந்துவிடுவதினால் அதற்குச் சுத்தியுண்டாகும்

துரோணாடகமளவையுடைய அந்நத்தில் எவ்வளவு பாகம் நாய் காக்கைகளால் கவ்வப்பட்டதோ அவ்வளவு பாகத்தையும் அப்போது நாயின் வாய்ச் சொள்ளு நீர் எவ்வளவு அந்த்தில் விழுந்திருக்குமென்று தோன்றுகிறதோ அவ்வளவு அந்நத்தையும் எடுத்தெறிந்துவிட்டு மிகுந்த அந்நத்தை ஸ்வர்ணத்தோடு சம்பந்தப்பட்ட ஜலத்தினால் புரோக்ஷித்துப் பின்பு ஒருதரம் அக்நியில்
சுடவைக்கவேண்டும். இவ்விதமாக ஸ்வர்ண ஐலத்தினாலும் அக்நியினாலும் ஸ்பர்சிக்கப்பட்டதும், பின்பு பிராம்மணர்களுடைய “பவமாக ஸக்தம்” முதலான வேதகோஷத்தினால் சுத்தி செய்யப் பட்டதுமான அந்த அந்நமானது பிராம்மணர்களுடைய அநுமதியினால் அப்பொழுதே புசிக்கத் தக்கதாகும்.

எண்ணெய் முதலிய ரஸம்,பால் முதலானவை ஆகிய இவைகளுக்கு நாய் காக்கை முதலானவைகளால் தோஷம் ஸம்பவித்தால் வஸ்து அல்பமாயிருந்தால் அதைப் பரிகரிப்பதினாலும் அதிகமாயிருந்தால் எண்ணெய் முதலிய ரஸங்களைக் காய்ச்சுவதினாலும் பால் முதலிய கோ ரஸங்களை அக்நி ஜ்வாலையில் காட்டுவதினாலும் அல்லது காய்ச்சுவதினாலும் சுத்தி விதிக்கப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

நான்காவது அத்தியாயம்.

அந்நத்திற்கும் ரஸத்திற்கும் சுத்தியைச் சொன்ன பின்பு கீழ்ச் சொன்ன பிராயச்சித்தம் முதலியவை திரவிய சுத்தி யன்றிச் சிறந்தவைகளாக மாட்டாவாகையால் விருத்த பாரசரார் கூறியபடி திரவிய சுத்தி சொல்லப்படுகிறது.

மரத்தால் செபய்யப்பட்ட ( ஸ்ருக்கு, ஸ்ருவை முதலிய ) பாத்திரங்களுக்கு மல மூத்திரப் பிரதேசங்களின் அதிக சம்பந்தத்தால் துர்க்கந்தமுதலிய அசுத்தி ஸம்பவித்து மண்ஜலங்களால் அலம்பியும் அந்தத் தோஷம் நீங்கா விட்டால் வாசிமுதலிய ஆயுதங்களைக்கொண்டு சீவுகிறதினால் அவைகளுக்குச் சுத்தி உண்டாகிறது.

வெண்கலம் பஸ்மத்தினாலும் தாம்பிரம் புளியினாலும் சுத்தமாகின்றன.-புளியாலும் உப்பாலும் ஈயம், ஸீஸம், தாம்பிரம் இவைகளுக்குச் சுத்தி யுண்டாகுமென்று யாக்கிய வல்கியர் சொன்னார்.

வியபிசாரம் செய்கிற ஸ்திரீ வியபிசாரத்தினால் கர்ப்பம் தரியாதவளாயிருந்தால் அவள் மாஸ ருதுவினால் சுத்தையாகிறாள்.

ஓடிக்கொண்டிருக்கிற நதியானது அகத்த மான வஸ்துக்களின் ஸம்பந்தம் வெள்ளத்தில் காணப்படாத பக்ஷத்தில் வேகத்தினால் சுத்தியை அடையும்.

நடைபாவி கிணறு குளம்இவைகள் தோஷத்தையடைந்தால் அவைகளினின்று நூறு குடம் ஐலத்தை எடுத்து வெளியே கொட்டுவதினாலும் பஞ்சகவியத்தை அவைகளில்சேர்ப்பதினாலும் சுத்தி யுண்டாகிறது.

எட்டுவயதினை யுடையவள் கௌரி, ஒன்பது வயதினை யுடையவள்ரோஹிணி, பத்துவயதினை யுடையவள் கந்நிகை, பத்துவயதிற்கு மேல்பட்ட வயதினையுடைய வள் ரஜஸ்வலை என்னப்படுவார்கள்.

பனிரண்டாவது வயதுவந்தபின் (ருது உண்டாவதற்குமுன்) எவன் தன் கந்நிகையைத் தாநம் செய்யவில்லையோ அவனுடையபிதிர்கள் அந்தப்பெண்ணினுடைய பிரதிமாத ருது
மலத்தைப் புசிக்கிறார்கள்

விவாகம் செய்வதற்கு முன் பெண்ணைத் தன் வீட்டில் ரஜஸ்வலையாகப் பார்த்த அந்தப் பெண்ணினுடைய தாய், தந்தை, மூத்த சகோதரன் இம் மூவரும் நரகத்தை அடைகிறார்கள்-இதனால் ருதுவாவதற்கு முன் கந்நியாதாநம் செய்யாதவன் தன் பிதிர்க்களை நரகத்தில் தள்ளுவது போல் தானும் குடும்பத்துடன் நரகத்தில் விழுகிறானென்பது சொல்லப்பட்டது.

பிதிர் கிருகத்தில் ருதுவான பெண்ணை எவன் மதத்தினால் விவேக மற்றவனாகி விவாகம் செய்கிறானோ அவன் ஸம்பாஷணம் செய்யத் தக்கவனன்று, அந்தப் பிராம்மணன் விருஷளீபதி என்னப் படுவன்-

எந்தப் பிராம்மணன் ருதுவான பெண்ணை விவாகம் செய்து அவளுடன் ஒரு நாள் சங்கமம் செய்கிறானோ அவன் மூன்று வருஷம் பிக்ஷாந்தத்தைப் புசித்தும் நித்தியமும் (காயத்திரியை)
ஜபித்தும் சுத்தனாகிறான்- இங்கு இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டுமென்று சொல்லாமையால் ஸர்வ பிராயச்சித்தமான காயத்திரி ஐபமே சொல்லப்பட்ட தென்று அறிக.

சூரியன் அஸ்தமனமானபின் சண்டாளன் பதிதன் பிரஸவித்த ஸ்திரீ இவர்களையும் பிணத்தையும் தொட்டவனுக்குச் சத்தி எதினால் விதிக்கப்படுகிறது (என்றால்) அக்கிநி,பொன், சுக் கிலபக்ஷத்தில் சந்திரன் அல்லது சந்திரனிருக்கும் மார்க்கம் இவை களில் எதாவதொன்றைப் பார்த்துப் பிராம்மணர்களின் அநுமதி பெற்று ஸ்நாநம் செய்வதினால் அவனுக்குச் சுத்தி யுண்டாகிறது.

ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரி அப்படிப்பட்ட பிராம்மணஸ்திரீயைத் தொட்டால் அவள்தொட்டதுமுதல் ஸ்நாங்காலம்வரையில் ஆகாரமில்லாமலிருந்து திரிராத்திர கிருச்சிரத்தைச்
செய்வதால் சுத்தையாகிறாள். இந்தவிஷயம் தொட்டவளுக்கும் தொடப்பட்டவளுக்கும் சரியானதே. ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மண ஸ்திரி அப்படிப்பட்ட க்ஷத்திரியஸ்திரீயை ஸ்பர்சித்தால் பிராம்மண ஸ்திரீ பிராஜாபத்திய கிருச்சிரத்தில் பாதியும், க்ஷத்திரியஸ்திரி அதில் பாதியும், அதாவது கால்வாசியும் செய்யக்கடவர்கள். ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரீ அப்படிப்பட்ட வைசியஸ்திரீயை ஸ்பர்சித்தால் அவள் பிராஜாபத்திய கிருச்சிரத்தைக் கால்பாகத்திற்குக் குறைந்ததாகவும், வைசியஸ்திரீ கால்பாகமும்,செய்யக்கடவர்கள். ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரீ அப்படிப்பட்ட சூத்திரஸ்திரீயை ஸ்பர்சித்தால் பிராம்மணஸ்திரீ பிராஜாபத்தியகிருச்
சிரத்தாலும் சூத்திரஸ்திரீதானத்தினாலும் சுத்தைகளாகிறார்கள்.-

ரஜஸ்வலையானஸ்திரீ நாலாவது நாளில் ஸ்நாநம்செய்வதினால் சுத்தையா கிறாள். அன்றைய திநத்தில் ரஜஸ் ஒழிந்திருந்தால் அவள் தைவகர்மத்தையும் பிதிர்கர்மத்தையும் செய்யத்தக்கவள்.

ஸ்திரீகளுக்கு ரோகத்தினால் தினந்தோறும் யாதொரு ரஜஸானது உண்டாகிறதோ, அந்த ரஜஸானது அகாலத்தில்உண்டானதாகையால் அதனால் அந்தஸ்திரீ அசுத்தையாகாள்.

ஸ்திரீக்கு எவ்வளவுகாலம் ரோகத்தினால் ரஜஸானது ஒழியாமலிருக்கின்றதோ அவ்வளவு காலம் அந்தஸ்திரீ தைவகர்மத்திற்கும் பிதிர்கர்மத்திற்கும் செய்யத்தக்க சமைத்தல்முதலிய நல்ல
காரியத்தைச் செய்யத் தக்கவளன்று. அந்த ர ஸானது ஒழிந்துவளவில் புருஷனால் அடையத்தக்கவளாகவும் கீழ்ச்சொன்ன சமைத்தல் முதலிய கிரு கிருதியங்களைச் செய்யத் தக்கவளாகவும் ஆகிறாள்.

ரஜஸ்வலையானவள் முதல்நாளில் சண்டாள ஸ்திரியாகவும் இரண்டாவது நாளில் பிர்ம்மஹத்தி செய்தவளாகவும் மூன்றாவதுநாளில் வண்ணார ஸ்திரீயாகவும் சொல்லப்படுகிறாள். நான்காவது திநத்தில் சுத்தையாகிறாள்

ஆதுரனென்றால் ஜ்வரம் முதலிய வியாதியால் பீடிக்கப்படுகிறவன். அவனுக்கு ரஜஸ்வலை முதலியவர்களுடைய ஸ்பர்சம் பந்துமரணம் இவைமுதலிய நிமித்தங்களால் ஸ்நாநம் செய்ய
நேரிட்டால் நோயில்லாத மற்றொருவன் ஆதுரனைத்தொட்டுத்தொட்டுப் பத்துதரம் ஸ்நாநம் செய்தால் ஆதுரன் சுத்தானாகிறான் –

உச்சிஷ்டனான பிராம்மணன்உச்சிஷ்டனான மற் றொரு பிராம்மணனால் தொடப்பட்டாலும் அல்லது நாயால் அல்லது சூத்திரனால் தொடப்பட்டாலும் ஓரிரவு மாத்திரம் உபவாஸமி ருந்து பஞ்சக வியத்தினால் சுத்தனாகிறான்.

உச்சிஷ்டனல்லாத சூத்திரனோடு பிராம்மணனுக்கு ஸ்பர்சம் நேரிட்டால் ஸ்நாநம் விதிக்கப்படுகிறது. உச்சிஷ்டனான சூத்திரனால் தொடப்பட்ட பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக்கடவன்

மத்தியத்தினால் நன்றாகப் பூசப்படாத வெண்கலபாத்திரமானது பஸ்மத்தினாலும் மத்தியத்தினால் நன்றாகப் பூசப்பட்ட வெண்கல பாத்திரமானது நெருப்பில் காய்ச்சுவதினாலும் ஆ த்தினால்
மேல்பாகத்தில் சீவுவதனாலும் சுத்தியையடைகின்றன.
மலமூத்திரங்களின் ஸம்பந்தத்திலும் இந்தச் சுத்தியேசெய்ய வேண்டுமென்றும் மாம்சத்தினால்தோஷத்தையடைந்தால் நெருப்பில் காய்ச்சுவதினால் சுத்தியென்றும் வேறுஸ்மிருதியில் சொல்லப்பட்டது.

பசுவினால் முகரப்பட்டதும் நாய் காக்கைகளால்தூஷிக்கப்பட்டதும்சூத்திரனுடைய எச்சில் அல்லது சூத்திரன் புசித்தசேஷம் இவைகளையுடையதுமான வெண்கலப்பாத்திரங்கள் பஸ்மத்தினால் பத்து தரம் அலம்பச் சுத்தங்களாகின்றன.

வெண்கலப் பாத்திரத்தினால் வாய் கொப்புளித்தலையும் கால்அலம்புவதையும் செய்தவன் அதை ஆறுமாஸம் பூமியில் புதைத்து வைத்துப் பின்பு எடுத்து உபயோகித்துக் கொள்ளக்கடவன்.

இரும்பினால் செய்த பாத்திரங்கள் தோஷத்தையடைந்தால் அவைகளை மற்றொரு இரும்பினால் ராவுவதினாலும் ஈய பாத்திரத்தை உருக்குவதினாலும் சுத்தி உண்டாகிறது.

யானையின் தந்தத்தி னால் செய்யப்பட்டபாத்திரம் யானையின் எலும்பினால் செய்யப்பட்ட கரண்டம்முதலியவை, எருமைக்கொம்பினால் செய்யப்பட்டகரண்டம், வெள்ளி பொன் இவைகளால் செய்யப்பட்ட பாத்திரம், ரத்திநங்களால் செய்யப்பட்ட பாத்திரம், சங்கம் ஆகிய இவைகளுக்கு அலம்புவதினாலும் கல்பாத்திரத்திற்கு அலம்புவதோடு மற்றொரு கல்லில் உரைத்தலாலும் சுத்தியுண்டாகிறதென்று சொல்லப்பட் டது.

மண் பாத்திரங்களுக்கு எச்சில் முதலிய தோஷம் சம்பவித்தால் நெருப்பில் கொளுத்துவத்தினாலும் தாநியத்திற்குப் புரோக்ஷணத்தினாலும் சத்தி உண்டாகிறது.

மூங்கில்,மூங்கிற்பாய், மூங்கில் விசிறிமுதலிய மூங்கிலால் செய்யப்பட்ட வஸ்துக்களுக்கும் காட்டில் வசிப்பவர்கள் தரிக்கிற மரவுரி, வெண்பட்டு,பருத்தி இவைகள்சம்பந்தமான வஸ்திரம் இவைகளுக்கும் கம்பளம் வன வாசிகள் தரிக்கின்ற பூர் மரப்பட்டை இவைகளுக்கும் புரோக்ஷணத்தினால் சுத்தி உண்டாகிறது.

முஞ்சிப்புல்லினால் செய்யப்பட்ட ஆஸநம் முதலியவைகள், முறங்கள், சணல்பிரியினாற் செய்த கோணி முதலியவைகள், மாம்பழம் முதலியவைகள், மான் தோல் முதலியவைகள், புல்,விறகு, கயிறு ஆகிய இவைகளுக்குப் புரோக்ஷிப்பதே சுத்தியாக நிச்சயிக்கப்பட்டது.

இலவம்பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தை,திண்டு, ஆஸநம், தலையணை, குஸ்-ம்பாசாயமேற்றின வஸ்திரம் முதலியவைகள் வெயிலில் உலர்த்துவதினாலும் புரோக்ஷணத்தினாலும் பரிசுத்தங்களாகும்.

பூனை,ஈ, பூச்சி, விளக்கு விட்டில்பூச்சி, புழு, தவளை இவைகள் பரிசுத்தமாயும் அபரிசுத்தமாயுமுள்ள வஸ்துக்களை ஸ்பர்சிப்பவைகளா யிருந்தபோதிலும் அவைகள் அசுத்தங்களன்றென்று மநு சொன்னார்.

கால்களை அலம்பும் போதும் ஆசமநம் செய்யும் போதும் பூமியில் விழுந்து பிந்துவாகத் தன்மேல்பட்ட ஜலமும் ஒருவர்க்கொருவர் ஸம்பாஷணம் செய்யும்போது முகத்தில் நின்று தேகத்தில் பிந்துவாக விழுந்த ஜலமும் போஜநம் செய்து கையை அலம்புகையில் விடாமலிருக்கிற நெய் எண்ணெய் இவைகளின்சிக்கும் எச்சிலல்லவென்று மநு சொன்னார் .

தாம்பூலம்,கரும்பு, பழம், புசித்தகையிலுள்ள நெய்ச்சிக்கு, மதுபர்க்கம், ஸோமம் இவைகளுக்குத் தர்மமாக எச்சில்தோஷமில்லை என்றறிகிறார்கள்.புசித்தகையிலுள்ள நெய் சிக்குக்கு எச்சில் தோஷமில்லாதது போல் தாம்பூலாதிகளை வாயில்வைப்பது விவாகத்தில் மதுபர்க்கபாநம்செய்வது யாகத்தில் ஸோமபாநம் செய்வது இவைகளுக்கும் எச்சில்தோஷமில்லை யென்று அறிக.

தெருவில் போகின்ற சேற்றுத்தண்ணீரும், ஓடங்களும், வழியும், புல்லும்,சுட்ட செங்கல் கட்டடங்களானமரத்தடியிலுள்ள மேடை முதலியவைகளும்,சண்டாளாதிகளால் தொடப்பட்டால் காற்றினாலும் சூரியனாலும் அவைகள் சுத்தியை அடைகின்றன.

கமண்டலம்முதலிய தீர்த்தபாத்திரங்களினின்று வாய்வரைக்கும் விடாமல் ஒரேதாரையாகவிழுகிற ஜலங்களும், பலஇடங்களினின்று காற்றினால் கிளப்பப்பட்ட தூளிகளும் சுத்தமானவைகளே. புருஷனைப்போல் பிராதஸ்நாநம்முதலியவைகளை அநுஷ்டிக்காதவர்களேயாகிலும் ஸ்திரீகளும், கிழவர்களும், பாலர்களும் ஒருகாலத்திலும் அசுத்தர்களாகமாட்டார்கள்-

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


ஐந்தாவது அத்தியாயம்.

கட்டுவதற்கு யோக்கியங்களான கயி களில் கட்டப்பட்ட பசுக்களுக்கு (இங்குமங்கும் சஞ்சரிக்கையில் கழுத்தில் உச்சுருக்கு நேரிட்டு) அறியாமல் மரணம் ஸம்பவித்தால் அறியாமல் செய்தகோவதரூபமான அந்தப் பாபத்திற்குப் பிராயச்சித்தம் எவ் விதமாகும் ?

பாப த்தைச்செய்தவன் வேதங்களையும் வேதாங்கங்களையும் அறிந்தவர்களும் தர்மசாஸ்திரத்தைக் கற்றுணர்ந்தவர்களும் தம் வர்ணாச்சிரமதர்மங்களை அன்புடன் அநுஷ்டிப்பவர்களுமான பிராம்மணர்களுக்குத் தன்பாபத்தை அறிவிக்கக்கட்டவன்

பிராஜாபத்தியம் ஸெளம்மியம் முதலிய விரதங்களை அனுஷ்டிக்காதவர்களும் வேதத்தை ஓதாதவர்களுமாகிப் பிராம்மண ஜாதியில் பிறந்ததை மாத்திரம் சொல்லிக் கொண்டு
பிழைக்கிறவர்கள் ஆயிரம் பேர்களாகச் சேர்ந்தாலும் அவர்களுக்குப் பரிஷத்தன்மை கிடையாது.

புத்திக்குறைவினால் கு மநியாயங்களில்மூடர்களும், தம்மைப் பண்டிதரென்று நினைத்துக் கொண்டவர்களும், இன்னபாகத்திற்கு இவ்விதமான பிராயச்சித்தமென்று அறியாதவர்களுமான
புருஷர்கள் எந்தப்பாபத்திற்குப் பிராயச்சித்தத்தை வேறாகச்சொல்லுகிறார்களேர் அந்தப்பாபமானது நூறுபங்கு அதிகமாகி அந்தப்பிராயச்சித்தம் சொன்ன மூடர்களையே அடைகிறது.

தர்மசாஸ்திரங்களைப் படியாமல் பெரியோர்களிடத்தில் பிராயச்சித்த விதிகளைப் பார்த்து அறிந்துகொண்டுஎவன் பிராயச்சித்தத்தை விதிக்கிறானோ அந்தப் பிராயச்சித்தம் பெரியோர்கள்
டத்தில் அறிந்து சொன்னதாகையால் அதைச்செய்துகொண்டவன் சுத்தனாகிறான், ஆனால் அதை விதித்தவன் பாபத்தை அடைகிறான்.

வேதம் முதலிய சாஸ்திரங்களைக் கரைகண்ட நான்கு அல்லது மூன்று பிராம்மணர்கள் சேர்ந்து எதைச் சொல்லுகிறார்கள்ளோ அது தர்மமென்று அறியத்தக்கது. அப்படியல்லாத மூடர்கள் ஆயிரம்பேர் கூடிச் சொன்னாலும் அது தர்மமாகாது.

பிரமாணமார்க்கமென்று சொல்லப்படுகிற தர்மசாஸ்திரத்தின் முக்கியமான கருத்தை நியாயங்களைக் கொண்டு நிச்சயித் துத் தர்மத்தைச்சொல்லுகிறவர்கள் சாஸ்திரங்களை அடிக்கடிப்பார்த்து ஒருவர்க்கொருவர் விசாரித்து மனதில் சலிக்காதவர்களாகி நிதாநத்துடன் நிச்சயித்ததும் வேறுபாட்டை அடையாததுமான ஸத்தானதர்மத்தை யுபதேசிக்கிறார்களாகையால் அவர்கள் விஷயத்தில்
பாபம் பயப்படுகிறது (நாசத்தைஅடையத்தக்கதாகிறது).

கல்லில் தேங்கிய ஜலமானது காற்றினாலும் சூரியனாலும் வற்றிப்போகிறதுபோல பரிஷத்
தானது சாஸ்திரவிதிப்படி பிராயச்சித்தத்தை யுபதேசிப்பதினால் பாபிஷ்டனுடைய பாபத்தை நசிக்கச்செய்கிறது. பிராயச்சித்தம் செய்துகொண்டபின்பு அந்தப்பாபமானது பாபம் செய்தவனைப் பற்றுகிறதில்லை. பரிஷத்தையும் அடைகிறதில்லை.வாயு, சூரியன், அக்நி இவர்களின் சம்பந்தத்தினால் ஜலம் தானே நசித்துப்போவதுபோல் பாபம் நசித்துப்போகிறது

வேதமோதிச் சிறந்தவர்கள்ளும் அக்நிஹோத்திரம் செய்தவர்களுமாகிய பிராம்மணர்களில் மிகுந்த சமர்த்துடையவர்களான நால்வர் முக்கியபரிஷத்தென்றும்,அப்படிக் கிடையாவிட்டால் முன்றுபேர்குறைந்த பக்ஷமான பரிஷத் தென்றும் சொல்லப்படுகிறார்கள். அக்கிஹோத்திரம் செய்யாதவர்களும் வேதவேதாங்கங்களைக் கரைகண்டவர்களும் தர்ம சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தவர்களுமான பிராம்மணர்களில் ஐந்துபேர் முக்கிய பக்ஷமான பரிஷத்தென்றும் மூன்றுபேர் குறைந்தபக்ஷமான பரி ஷத்தென்றும் சொல்லப்படுகிறார்கள். பிரமவித்தையை யோதின வர்களும் யக்கியசீலர்களும் பரமாத்துமாவைத் தியானிப்பவர்களும் வேதவிரதங்களை அநுஷ்டித்து ஸ்நாதகர்களுமான பிராம்மணர்களில் ஒருவன்மாத்திரமே பரிஷத்தாகச்சொல்லப்படுவான். அக்நி ஹோத்திரம்செய்தவர்களில் இரண்டுபக்ஷமும், அதைச்செய்யாதவர்களில் இரண்டுபக்ஷமும், ஆத்துமஞாநமுள்ளவர்களில் ஒருபக்ஷமுமென்று ஐந்துபக்ஷங்கள் என்னால்சொல்லப்பட்டன. அந்தப்பபக்ஷங்களுடைய அஸம்பவத்தில் (கிடையாத பக்ஷத்தில்) ஆயுதமுதலியவைகளால் பிழைக்காமல் தமக்குரியஜீவனோபாயங்களால் மூவர் பரிஷத்தென்று சொல்லப்படுவார்கள்.

கீழ்ச்சொன்ன பிராம்மணர்களன்றிப் பிராம்மணரென்கிற பேரைமாத்திரம் தரிக்கின்றவர்கள் ஆயிரம்மடங்கு அதிகமாகக் கூடினாலும் அவர்களிடத் தில் பரிஷத்தன்மைஉண்டாகாது.

வேதாத்தியயனம் செய்யாத பிராம்மணன் கட்டை யினால் செய்யப்பட்ட யானைபோலவும் தோலால் செய்யப்பட்ட மான்போலவுமாகிப் பிராம்மணனென்னும் பேரைமாத்திரம் தரிப்பவனாகிறான்.

மந்திரமறியாத (வேதமோதாத பிராம்மணனைப் பிராம்மணனென்றுசொல்லுவது ஐந சூந்யமான விடத்தைக் கிராமமென்றும் ஜலமில்லாத பள்ளத்தைக் கிணறென்றும் சாஸ்திர விதிப்படி சுத்தி செய்யப்படாமையால் அக்த்தன்மையையடையாத அக்நியாயாபாஸத்தில் ஹோமம் செய்யப்பட்டதை ஆஹுதிஎன்றும் சொல்வதுபோலாகும்.

ஸ்திரீகள் விஷயத்தில் ஆண் தன்மை யுடைய புருஷன் கிடையாத பக்ஷத்தில் புருஷாபாஸனான நபும்ஸகன் எப்படிப் புத்திரனை ஜநிப்பிப்பதாகிய பிரயோஜநத்தைத் தர மாட்டானோ, முக்கியமான நிலங்கிடையாத பக்ஷத்தில் களர்பூமியானது எப்படி விளைவாகிய பலனைத் தர மாட்டாதோ, ஞாநமில்லாத மூடன் விஷயத்தில் செய்த தாநம் எப்படித் தாந பலனைத் தரமாட்டாதோ, அப்படி ருக்குவேதம் முதலிய வேதங்களை ஓதாத பிராம்மணன் பிராயச்சித் தோபதேசத்தினால் பாப நிவிர்த்தியாகிய பலனைத் தரத் தக்கவனாக மாட்டான்.

சித்திர வேலையானது அநேகமாயுள்ள அங்கங்களால் அதாவது பலவிதவர்ணங்களை அந்தந்த இடங்களுக்குத்தக்கபடி கொடுக்கிறதினால் எப்படி மெள்ளமெள்ளப் பிரகாசத்தை அடைகிற தோ அப்படிப் பிராம்மணத் தன்மையும் உபநயநம்முதலிய மந்திர ஸம்ஸ்காரங்களால் பிரகாசத்தை (உத்கர்ஷத்தை) அடைகிறது.-இதனால் நாமதாரகப்பிராம்மணனுக்கும் ஸம்ஸ்காரங்கள் ஏற்றவைகளென்பது சொல்லப்பட்டது.

உபநய நம்முதவிய ஸம்ஸ்காரங்களைச் செய்துகொண்டவனான ஒரு உத்தமபிராம்மணனோடு கூடினவர்களாய் நாமதாரகப் பிராம்மணரென்னும் பேரைமாத்திரமுடைய எந்தப்பிராம்மணர்கள் பிராயச்சித்தத்தை விதிக்கிறார்களோ, பாபகிருத்தியத்தைச்செய்ப வர்களான அந்தப்பிராம்மணர்கள் நரகத்தை அடைகிறார்கள்

எந்தப்பிராம்மணர்கள் வேதாத்தியயநம்செய்து பஞ்சமஹாயக்கியங்களை அநுஷ்டிக்கிறார்களோ அவர்கள் ஐந்துவிதமான கர்மேந்திரியங்களுக்குப் பிரீதியைச்செய்பவர்களானகிருகஸ்தர்களாயிருந்த
போதிலும் மூன்றுலோகத்தையும்கரையேற்றுகிார்கள் பாபத்தினின்றும் ரக்ஷிக்கிறார்கள்

மயாநங்களில் சவங்களைக் கொளுத்துவதில் உபயோகப்பட்டிருக்கிற அக்கியானவன் சகலத்தையும்ப
க்ஷிப்பவனாயிருந்தபோதிலும்எப்படித் தெய்வத்தன்மையை விடாதவனாகவே பிரகாசிக்கிறாம்னோ அப்படி வேதங்களை ஓதி யுணர்ந்த பிரா) ம்மணன் சகலத்தையும் பக்ஷிப்பவனாயிருந்தபோதிலும் அதாவது-பராந்நம்முதலியவைகளைப் புசித்தாலும் அவன் பூமிதேவனேயாகிறான்.

சகலவித அசுத்தவஸ்துக்களும் எப்படி ஜலத்தில் போடப்படுகின்றனவோ அப்படியே சகலவிதபாதகமும் வேதமோதின பிராம்மணோத்தமனிடத்தில் போடப்படவேண்டும்.

காயத்ரி மந்திரமில்லாதவன் அதாவது ஆலஸ்யத்தினால் காயத்ரியை நித்தியமும் ஐபிக்காதவன் சூத்திரனைக்காட்டி லும் அசுத்தனாவான். காயத்திரி த்துவமான அங்கநியாஸம் தியாநம்
முதலியவைகளையும், பிரமதத்துவமான வைதிக்கர்மங்களை அநுஷ்டிப்பதையும் கிரமமாக அறிந்த பிராம்மணர்கள் ஜநங்களால்பூஜிக்கப்படுகிறார்கள்

இந்திரியபரவசனாகிக்கெட்டநடத்தையோடுகூடியிருந்தபோதிலும் பிராம்மணன் பூஜிக்கத்தக்கவ
னாகிறான். இந்திரியங்களை ஜயித்துச்சாஸ்திரமுறை தவறாதவனாயிருந்தபோதிலும் சூத்திரன் பூஜிக்கத்தகாதவனாகிறான், அதற்குத்திருஷ்டாந்தம்.உதைப்பது முதலிய சேஷ்டைகளால் துஷ்டையான பசுவைவிட்டுப் பாலுள்ளதென்று பெண்கழுதையை எவன்கறப்பன்?

பிராம்மணர்கள் (இந்திரிய யத்தைப் பெறாதவர்களாகிலும் ) தர்மசாஸ்திரமென்னும் ரதத்தில் ஏறினவர்களும் வேதங்களென்னும் கத்தியை கையிலேந்தினவர்களுமாகி விளையாட்டுக்காக வாகிலும் யாதொன்றைச் சொல்லுகிறார்களோ அதுவே உத்தம தர்மமாகும்.

நான்குவேதங்களையும் அங்கங்களின்றி முழுதும் ஓதினவன் சாதுர் வைத்தியனென்றும், தர்மம்,பரிஷத்து,பிராயச் சித்தத்தின் கிரமம் இவைகளை அறிந்தவன் விகல்பியென் றும்,சிக்ஷை, வியாகரணம், சந்த நிருக்தம், ஜோதிஷம், கல்பம் என் னும் ஆறு அங்கங்களையும் அறிந்தவன் அங்கவித் என்றும், வேதங்களை முழுது மோதி வேதவிரதங்களையும் அநுஷ்டித்து ஸ்நாதகனா
கி நல்லகுலம் ஆசாரம் இவைகளோடுகூடித் தர்மசாஸ்திரங்களை வெ குவாய்ப்படித்தவன் தர்மபாடகனென்றும், சொல்லப்பட்டுக் கார்ஹஸ்தியம் முதலிய மூன்றாச்சிரமங்களில் ஒன்றி விருப்பவர்களான இவர்கள் முக்யராவார்கள். கீழ்ச்சொன்ன குணங்களோடு கூடின பத்துபேரைத் தாழ்ந்தகணக்காக வுடையது பரிஷத்தென்று சொல்லப்படும்.

ஆறாவது அத்தியாயம்-விலங்குகளைக் கொன்றதற்கான பிராயச்சித்தம்:-75 வசனங்களைக் கொண்டுள்ளது. இது பிராணி ஹத்யாவிற்கான பிராயச்சித்தங்களைப் பற்றி விளக்குகிறது

ஏழாம் அத்தியாயம்–பொருட்களின் தூய்மையாக்கல்:–4 வசனங்கள் உள்ளன. அது, மரம் மற்றும் உலோகத்தால் ஆன பாத்திரங்கள் போன்ற பல்வேறு பொருட்களைத் தூய்மைப்படுத்துவது பற்றியும், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் பற்றியும் விளக்குகிறது .

எட்டாவது அத்தியாயம்–தர்மத்தைப் பின்பற்றுவதற்கான விளக்கம்:50 வசனங்களைக் கொண்டுள்ளது. விருப்பமின்றி பசுக்கள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கான பரிகாரங்களையும், பிராமணர்களின் பரிஷத்தை அமைப்பதையும் இது விவரிக்கிறது .

ஒன்பதாவது அத்தியாயம்–பசுக்களுக்கான சேவை:-60 வசனங்கள் உள்ளன. அது ஒருவரின் பசுக்களை முறையாகப் பராமரிப்பதைப் பற்றியது

அத்தியாயம் 10-ல் 43 சுலோகங்கள் உள்ளன. அது சந்திராயணம் மற்றும் சாந்தபானம் போன்ற சில பரிகாரங்களைப் பற்றி விளக்குகிறது-

அத்தியாயம் 11-ல் 55 வசனங்கள் உள்ளன. அது, உணவு உண்பது தொடர்பான விதிகளை மீறுவதற்கும், விலங்குகளால் அசுத்தமான கிணறுகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் செய்யப்படும் பரிகாரங்களைப் பற்றியது.

அத்தியாயம் 12-ல் 77 வசனங்கள் உள்ளன. அது பின்வருவனவற்றைப் பற்றி விவாதிக்கிறது:பல்வேறு வகையான குளியல்-தூய்மைப்படுத்தும் குளியல்-பிராமணரைக் கொலை செய்தல், மது அருந்துதல், தங்கம் திருடுதல் போன்ற மரணப் பாவங்களுக்கான பரிகாரங்கள்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஐத்ரேய உபநிஷத் —

August 28, 2025

ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத். நாந்யத் கிஞ்சன மிஷத். ஸ ஈக்ஷத லோகாந்நு ஸ்ருஜா இதி৷৷1.1.1৷৷

பர ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது -வேறு ஒன்றும் இமை கொட்டக் கூட இல்லை -ஸ்ருஷ்டிக்க சங்கல்பம் கொண்டது –

ஆத்மா என்ற சொல்லின் விசாரம்:இது நான்கு விதத்தில் விளக்கபடுகிறது. அவைகள்
1. ஆப்னோதி இதி ஆத்மா – அனைத்தையும் வியாபித்திருப்பது, எங்கும் இருப்பது.
ஸத்தா ரூபேன – ஸத் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது. இருத்தல் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது.
2. ஆதந்தே ஆத்மா (ஸர்வாதாரஹ) – எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது, எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.
3. அத்தி(eat) இதி ஆத்மா – அனைத்தையும் அனுபவிப்பதாக இருப்பது; ஞான ஸ்வரூபம்
4. அததி – நித்யஹ – என்றும் இருப்பது., நிலையாக இருப்பது

ஆப்தியும்‌ அந்தமும்‌ அதனமும்‌ ஆத்ம சப்‌தத்‌துக்கு அர்த்தம்‌. ஆப்தியாவது ஜ்ஞானமும்‌ எல்லா விடங்களிலும்‌ வ்யாபரித்து நிற்கையும்‌ தன்‌ நிலைமையாலும்‌ ஸ்புரணத்தாலும்‌ எல்லாவற்றையும்‌ வ்யாபரிக்கை யாகையாலே ஸர்வஜ்ஞமும்‌ ஸர்வ சக்‌தியுமான தென்கை – அந்தமானது ஜகத்தை ஸம்ஹரிகை -௮தனமாவது வஸ்து தேச கால பரிச்சேதமென்னும்‌ மூவகை அளவமில்லாதவனென்கை ,. ஆகவே ஸம்ஸார ஸம்பர்ஸ மற்றதும்‌ தோஷ லேசமுமில்லாததுமானது ப்ரஹ்மம் என்றதாயிற்று. பெயர்‌ ரூபம்‌ வியாபாரம்‌ இவைகளினால்‌ இப்போது பலவகையாகச்‌ தென்படும்‌ ஜகத்தானது முன்னே ப்ரஹ்மம் ஓன்றாகவே யிருந்தது . கீழ்ச் சொன்ன நாம ரூப கர்ம பேதமில்லாத போது ஆத்மா
ஒன்றேயாகவே விருந்தது. ஜலம்‌ ஒன்றே நுரை சுழி அலை என்னும்‌ பல பெயர்களினால்‌ ௮நேகம்‌ பொருளாகச்‌ தென்பட்டாலும்‌ தீர யோசித்தால்‌ ஜலமொன்றேயாக அறியப்‌படுவதுபோல வெளித் தோற்றத்திற்குப்‌ பலவகையாகத்‌ தென்பட்ட போதிலும்‌ நன்றாய் யோசிக்குமிடத்து ப்‌ரஹ்ம்மமொன்றே வென்று தெளிவாய்‌ விளங்கும்‌. சாங்க்ய மதஸ்தர்‌ சொல்லுகிறபடி ப்‌ரக்ருதி யாவது தார்க்கிகர்கள்‌ சொல்லுகிறபடி பரமாணுக்களாவது வேறெந்த வஸ்துக்களாவது இல்லை. **அபாணி பாதோ ஜவனொக்ருஹீதா?” என்கையாலே. கர சரணாதி அவயவங்களும்‌ சரீரமும்‌ இல்லாதிருந்தும்‌ ப்ரஹ்ம்மம்‌ ஸர்வஜ்ஞ ஸ்வபாவமாகையாலே ஜகத் ஸ்ருஷ்டி. செய்ய நினைக்கத் தடையில்லை யென்று கொள்க – ப்ராணிகன்‌ கர்ம பலத்தை அனுபவிக்கும் பொருட்டு ஜலம்‌ முதலியவைகளை ஸ்ருஷ்டிக்க நினைத்தது

————

ஸ இமா ఁல்லோகாநஸரிஜத. அம்போ மரீசீர்மரமாபோதோம்பஃ பரேண திவஂ த்யௌஃ
ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. பரிதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆபஃ৷৷1.1.2৷৷

அம்பஹ – சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யஹ என்கின்ற ஏழு மேலுலகங்கள்
மரீஹீ – மரம், புவஹ – பூலோகம்; ஆபஹ என்கின்ற – கீழுள்ள ஏழு உலகங்கள்,
இவ்வாறாக ஈஸ்வரன் பதினான்கு உலகங்களையும் முதலில் படைத்தார்.
இவைகள் கிரமமாக படைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அவைகள் அம்பஹ, மரீஸீ, மரம், ஆபஹ என்ற நான்கு பிரிவாக கூறப்பட்டுள்ளது.
அதோ அம்பஹ பரேண திவம்: சொர்க்கலோகத்திற்கு மேலேயுள்ள உலகங்கள் அம்பஹ என்று கூறுகிறது.
த்யௌ ப்ரதிஷ்டா- சுவர்க்க லோகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது
அந்தரிக்‌ஷம் மரீஸய – அந்தரக்‌ஷம் என்று அழைக்கப்படும் புவலோகம்
ப்ருத்வீமரோ – இது பூலோகத்தை குறிக்கிறது.
யாஹா அத4ஸ்தா தாஹா ஆபஹ : கீழேயுள்ள ஏழு உலகங்களை அப என்று குறிக்கிறது.

ஸ ஸரிஜத. இமான் லோகான் -அந்த பர ப்ரஹ்மம் இந்த லோகங்களை ஸ்ருஷ்டித்தது
அம்போ மரீசீர்மரமாபோ–அம்பஸ்-மரீசீர் -மரம் -ஆப –
அம்பஃ பரேண திவஂ த்யௌஃ ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. –அம்பஸ் –ஸ்வர்க்கத்துக்கும் மேலே -ஸ்வர்க்கம் இத்தை தாங்கி இருக்கும்
மரீசீர் -ஸ்வர்க்கத்துக்கும் கீழ் உள்ள ஆகாசம் -இங்கு தான் ஸூர்ய வெளிச்சம் -மரீசீர் -ஸூ ர்ய கிரணங்களால் வந்த பெயர்
பரிதிவீ மரோ -பிருதிவி அழிந்து மீண்டும் வருவதால் மரம் -மிரியந்தே-என்றவாறு
யா அதஸ்தாத்தா ஆபஃ- பாதாள லோகங்கள் அப -தண்ணீருக்குள் இருப்பதால் –

—————-

ஸ ஈக்ஷதேமே நு லோகாஃ லோகபாலாந்நு ஸரிஜா இதி. ஸோத்ப்ய ஏவ புரூஷஂ ஸமுத்தரித்யாமூர்ச்சயத்৷৷1.1.3৷৷

ஸஹ ஈக்‌ஷா – மீண்டும் அவர் சிந்தித்தார்.
இமே லோகஹா – இந்த உலகங்கள் என்னால் படைக்கப்பட்டது.
லோகபாலன் ஸ்ருஜா இதி – இனி உலகை பாதுகாக்கின்ற தேவதைகளை படைக்க வேண்டும்.
ஸ அத்ப்யஹ ஏவ புருஷம் – அவர் பஞ்ச பூதங்களை எடுத்து ஒரு மனித உருவமுடைய
அமூர்சயத் – தேவதையை படைத்தார், அதற்கு பெயர் விராட்.

லோகங்களை ஸ்ருஷ்டித்த பின்பு லோக பாலர்களையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தான் –
பஞ்ச பூதங்களை உண்டாக்கி பஞ்சீ கரித்து உண்டாக்கினான் –

பிராணிகள் கர்ம பலன்களை அனுபவிக்க இடமாக நாலுவகை உலகங்களைப் படைத்த பின்பு ப்ரஹ்மமானது இவ்வுலகங்கள் ரக்ஷகன் இல்லாதிருந்தால் நாசமாய் விடுமாகையாலே லோக பாலகர்களை ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்‌று நினைத்து ஜலம்‌ முதலிய பஞ்ச பூதங்களினின்றும்‌ தலை முதிலிய உறுப்புக்களோடு கூடிய விராட்‌ புருஷனை பூமியிலிருந்து மண்ணை யெடுத்துக்‌ குயவன்‌ பானை முதலியன செய்வது போல ஸ்ருஷ்டித்துத்‌ தன்னவயத்தோடு சேர்த்து வைத்தது-

———

அந்த ப்ரஹ்மமமானது அந்த விராட் புருஷனைக்‌ குறித்து ஸங்கல்பித்தது-ஸங்கல்பிக்கப்பட்ட அந்த விராட் புருஷனுக்கு பஷியின் முட்டை போல முகமானது தோன்றியது -அம்முகத்தினின்று வாக்கு உண்டாயிற்று, -வாக்குக்கு அக்னியானது அதிஷ்டான தேவதை வாக்கின்‌ அதிஷ்டான தேவதையான அக்னி யென்றும்‌ லோக பாலன்‌ வாக்கினின்றும்‌ தோன்றினான்‌ என்‌றும் பொருள்‌- மூக்குகள்‌ தோன்றின-அம் மூக்குகளில்‌ கின்றும்‌ க்ராண இந்திரியமும்‌ அந்த க்ராண இந்திரியத்தினின்றும்‌ அதன்‌ அதிஷ்டான தேவதையும்‌ லோக பாலகனுமான வாயுவும்‌ தோன்‌றின-கண்கள்‌- கண்களினின்‌றும்‌. நேத்ரேகந்திரியமும்‌ நேத்ரேந்திரியத்தினின்‌றும்‌ அதன்‌ அதிஷ்டான தேவதையும்‌ லோக பாலகனுமான ஸூர்யனும்‌ உண்டாயின காதுகள்‌- காதுகளினின்றும்‌ ஸ்‌ரவணேந்திரியமும்‌-ஸ்ரவணேந்திரியத்தினின்றும்‌, அதன்‌ ௮திஷ்டான தேவதையான திக்குகளும்‌ உண்டாயின-தோலானது அந்த த்வக்‌ இந்திரியத்தினின்‌றும்‌ உரோமங்களும்‌ அந்த உரோமங்களின்‌றும்‌ அவைகளின்‌ ௮திஷ்டான தேவதைகளான ஒவ்ஷதிகளும் வனஸ்பதிகளும்‌ தோன்றின-அந்தக்‌ கரணத்தின்‌ ௮திஷ்டானமான இருதயமானது -அவ்விரு தயத்தினின்றும்‌ அந்தக் கரணமும்‌- மனதினின்‌றும்‌ ௮தன்‌ அதிஷ்டான தேவதையான சந்திரனும்‌ தோன்‌றனார்கள்‌-நாபி ரந்திரமானது-நாபியினின்னும்‌ பாயுவென்றும்‌ இந்திரியமும்‌ அவ்வபானதின்றும்‌ அதன்‌ ௮திஷ்டான தேவதையான மிருத்தியுவும்‌ தோன்றின-புருஷ ஸிஹ்நமான குஹ்யமானது- அவ்வாண் குறியினின்றும்‌, ரேதஸ்ஸூடன் கூடிய குஹ்ய இந்திரியமும்‌, -அவ்விந்திரியத்தினின்றும்‌, ௮தன்‌ அதிஷ்டான தேவதையான ஜலமும்‌ தோன்றின –

———–

ப்ரளய காலத்தில்‌ லஷ்மியோடுங்கூட நாராயணன்‌ ஒருவனே யிருந்தார்‌. எக் காலத்திலும்‌ எங்கும்‌ பரந்த குணங்களை யடையவராகையால்‌ அவர்‌ ஆச்மாவே என்று ஸ்ருதிகளில்‌ சொல்லப்பட்டார்‌. காலத்தாலும்‌ குணத்தாலும்‌ இவ்வுலக மனைத்துற்‌கும்‌ முன்பே அவைகளுக்கு முதன்மையாயிருப்பவர்‌. அவரே லக்ஷ்மி. அவருடன்‌ கூடவே இருப்பவளாயினும்‌ குணத்தினால்‌ அவருக்குக்‌ குறைந்தவளாதலாலும்‌ விஷ்ணுவக்கு விதேயை யாகையாலும்‌ முன்னிருந்ததாகவாவது மேன்மையாயிருந்தாகவாது சொல்ல விடமில்லை. ப்ரம்மாவாவது சிவனாவது மற்ற வ்யாபாரமுடைய எந்த வஸ்துவாவது இல்லை. ப்ரம்மா சிவன்‌ முதலிய பத்த ஜீவர்கள்‌ தூங்குவதினாலும்‌ நித்ய முக்தர்களும்‌ லக்ஷ்மியும்‌ தூங்காமலிருந்தாலும்‌ பராதீனர்களாதலினாலும்‌ நாராயணன் ஓருவனே ஸர்ஜ்ஞானான காரண வஸ்து அவனல்லது ஸ்வ தந்திர குண சாலிகள்‌ யாருமில்லை-சந்யாசி பராதீனமான- தனத்தினாலே போஜனாதிகள்‌ செய்து வந்தாலும்‌ ௮வன்‌ தனவானென்று சொல்லப்படுவனா. அது போல லக்ஷ்மியும்‌ நித்ய முக்தர்களும்‌ பராதீனர்களாகையாலே இருந்தும்‌ இல்லாதவர்கள்‌ போலவே அந்தப்‌ பகவான்‌ உலகங்களையும் லோக பாலர்களையும்‌ தேவதைகளையும்‌ ஜட லோகங்களையும்‌ ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்று இச்‌சித்தார் –

————-

தேவதைகளும் சம்சாரிகள் என்று வர்ணிக்கப்படுகிறது.
தேவதைகளும், ஜீவர்களும் படைக்கப்பட்டு விட்டது.
சம்சாரமே மிகப்பெரிய கடலாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சம்சாரம் துயரமென்னும் நீரால் நிரம்பியிருக்கிறது.
இந்த பெரிய கடலில் எல்லா தேவதைகளும் வீழ்ந்திருக்கிறார்கள்.
சம்சாரம் என்ற சொல்லின் பொருள் சம்யக் தரதி – நன்கு அங்குமிங்கும் அலைகின்றார்கள்.

பசி-தாகத்துடன் (சம்சாரம்)கொடுத்தார்கள்.
மனதிற்கு ஞானேந்திரியங்கள் வழியாக விஷயங்களை உணவாக கொடுத்து பசியை அடக்குகிறோம்.
வயிற்றுப்பசியை ஸ்தூல உணவை கொடுத்து அடக்குகிறோம். பசி-தாகம் மனதின் நிறைவின்மை.
இதை எந்தப்பொருளினாலும் நீக்க முடியாது. பசி-தாகத்தை கொடுத்தவுடன் ஜீவர்கள் அதை போக்குவதற்கு ஸ்தூல உடலை கேட்கின்றார்கள்.
ஜீவர்கள் ஈஸ்வரனிடம் இவ்விதம் பேசினார்கள்.
எங்களுக்கு ஒரு இருப்பிடம் (சரீரம்) கொடுங்கள்.
எந்த உடலில் இருந்து அன்னத்தை சாப்பிட்டு பசி-தாகத்தை போக்கி கொள்ள முடியுமோ அதை எங்களுக்கு கொடுங்கள்.
ஜீவர்களுக்கு இந்த பசி-தாகம் மூலம் சம்சாரம் வந்து விட்டது.

இப்படி ஸ்ருஷ்டித்த அக்னி தேவதைகள் தங்கள் வசிக்கவும் உணவு உண்ணவும் இடங்களை பிரார்த்தித்தார்கள்-

ஸ்ருஷ்டிக்கப்பட்ட அக்னி முதலிய தேவர்கள்‌ இந்த பெரிதான ஸம்ஸார ஸமுத்திரத்தில்‌ விழுந்தார்கள்‌ இவைகளை உண்டாகக்‌ காரணமாயிருந்த முதல்‌ புருஷ பிண்டத்தை பசி தாகங்களோடு கூட்டிக் வைத்தான் எந்த ஸ்‌தானத்தில்‌ இருந்தவர்களாய அன்னத்தை புஜிப்போமோ அப்படிப்பட்ட ஸ்தானத்தை எங்களுக்கு ஏற்படுத்திக்‌ கொடுக்க வேண்டும்‌ என்று இப்படிப்‌ பசி தாகங்களாலே பீடிக்கப்பட்டவர்‌கள்‌ இந்தக்‌ காரண புருஷனைக் கேட்டார்கள்

——–

தாப்யோ காமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி. தாப்யோஷ்வமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி৷৷1.2.2৷৷

ஜீவர்களுக்கு இருப்பிடமாக சரீரமாக பசுவை கொண்டு வந்து காட்டப்பட்டது
இது எங்களுக்கு போதாது.
இப்பொழுது குதிரையை காட்டப்பட்டது
இதுவும் எங்களுக்கு போதாது என்று கூறினார்கள்.

அவர்களுக்கு மாடு ஒன்றை கொடுக்க -இது போதாது என்ன குதிரையையும் கொடுக்க அதுவும் போதாது என்றார்கள் –

இப்படிப்பட்ட ஈஸ்வரன அவர்களின்‌ பொருட்டு பசுவைக் காட்டினார் -எங்களுக்கு இப் பசு போதாதல்லவா என்று அவர்சள்‌ சொன்னார்கள்‌-அவர்களின்‌ பொருட்டு குதிரையைக் காட்டினார்‌;-எங்களுக்கு இந்தக்‌ குதிரை போதாதல்லவா என்று அவர்கள்‌ சொன்னார்கள்‌

வ்யஷ்டி தேஹ ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது. பசுவின்‌ ஆகாரமும்‌ குதிரையின்‌ ஆகாரமும்‌ அந்த ஜலங்களினின்றும்‌ முன் போல்‌ பிண்டமாகச்‌ சேர்த்து எடுத்துக் கட்டியாகக்‌ காட்டப்பட்டன. கோவிற்கு மேல் பல்லில்லை யாகையால்‌ அருகம்‌ புல் முதலியாவைகளை வேர் பிடுங்கச்‌ சாத்தியமில்லை யென்றும்‌ குதிரைக்கு இரண்டு வரிசைப்‌ பற்கள்‌ இருந்தாலும்‌ விவேகமின்மையால்‌ அயோக்யமென்றும்‌ தள்ளப்பட்டன-

—————

தாப்யஃ புரூஷமாநயத்தா அப்ருவந் ஸுகரிதஂ பதேதி புரூஷோ வாவ ஸுகரிதம். தா அப்ரவீத்யதாயதநஂ ப்ரவிஷதேதி৷৷1.2.3৷৷

அவர்களுக்காக மனுஷன் ஒருவனை கொடுக்க -சுக்ருத் என்றார்கள் –
அதானால் தான் ஸ்வதந்த்ர எண்ணம் இன்றும் மனிசர்க்கு மிக்கு உள்ளது என்பர் –
பின் தேவர்களை அவர்கள் அவர்கள் இடம் போக சொன்னான் –
அதாவது வாக் முதலியவற்றை பாலனம் பண்ண என்றவாறு –

பிறகு மனித சரீரத்தை காட்டபட்டது..
நன்றாக உருவாக்கப்பட்ட சரீரம் என்று கூறினார்கள்.
மனித சரீரம் உயர்ந்தது என்று சொல்வதற்கு காரணம் இதுதான்
பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மத்தை செய்வதற்கும், மோட்சத்தை அடைவதற்கும் சரியான கருவியாக இருக்கிறது.
ஈஸ்வரன் அந்த தேவதைகளிடம் உங்களுக்குரிய இருப்பிடத்தில் சென்று வசியுங்கள் என்று கூறினார்.

அவர்களின் பொருட்டு புருஷனைக் காட்டினார் -நன்றாகச் செய்யப்பட்டது -சந்தோஷம் என்று அந்தத் தேவதைகள் சொன்னார்கள் ஆகையாலே புருஷனே ஸூஹ்ருதம் என்று சொல்லப்படுகிறான் – உங்கள் காரியத்துக்கு உரிய ஸ்தானங்களில் பிரவேசியுங்கோள் என்று அந்த தேவதையைக் குறித்து ஈஸ்வரன் சொன்னான்

அக்நிர்வாக்பூத்வா முகஂ ப்ராவிஷத்வாயுஃ ப்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிஷதாதித்யஷ்சக்ஷுர்பூத்வாக்ஷிணீ ப்ராவிஷத்திஷஃ
க்ஷோத்ரஂ பூத்வா கர்ணௌ ப்ராவிஷந்நோஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசஂ ப்ராவிஷஂஷ்சந்த்ரமா மநோ பூத்வா ஹரிதயஂ
ப்ராவிஷந்மரித்யுரபாநோ பூத்வா நாபிஂ ப்ராவிஷதாபோ ரேதோ பூத்வா ஷிஷ்நஂ ப்ராவிஷந்৷৷1.2.4৷৷

அக்னி பகவான் வாய்க்குள்ளும் பேச்சாகவும் -வாயு பகவான் மூக்குக்குள் கந்தமாகவும் -ஸூரியன் கண்ணுக்குள் பார்வையாகவும் –
திக் தேவதைகள் காதுக்குள் கேள்வியாகவும் -மூலிகைகளும் மரங்களும் தோலில் மயிர்களாகவும் ஸ்பர்ச உணர்வாகவும் –
சந்திரன் ஹ்ருதயத்துக்குள் மனஸாகவும் -இத்யாதி -என்றவாறு –

அக்னியானது வாயில் சென்று அமர்ந்து பேசும் சக்தியாக இருக்கிறது.
வாயு மூக்கில் இருந்து கொண்டு நுகரும் சக்தியாக இருக்கிறது.
சூரியன் கண்களில் இருந்து கொண்டு பார்க்கும் சக்தியாக இருக்கிறது.
திசைகள் காதில் இருந்து கொண்டு கேட்கும் சக்தியாக இருக்கிறது.
மூலிகைகளும் தாவரங்களும் தோலில் இருந்து கொண்டு தொட்டுணரும் சக்தியாக இருக்கிறது.
இவ்வாறாக எல்லா இந்திரியங்-களும் அவரவர்களுக்குரிய இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்து கொள்கிறார்கள்.

இப்படியே ஒவ்வொன்றாய்க் காட்டப்பட்ட திர்யக் தேஹங்கள் எல்லாம் தள்ளப்பட்ட பின்பு விராட்புருஷ தேஹம் போன்ற புருஷ தேஹம்‌ காட்டப்ப ட்டது. அதைப் பார்த்து அவர்கள்‌ ஸூஹ்ருத மென்றதால்‌ புருஷனே ஸுஹ்ருத மென்‌னப்படுகிறான்‌, எல்லாப் புண்ய கர்மங்களுச்கும்‌ ஹேது வென்பது அல்லது தானே தன் மாயையால்‌ ஆத்மாவினால்‌ ஸ்‌ருஷ்டிக்கப்பட்டது தென்பது ஸுஹ்ருத மென்‌பதின்‌ அர்த்தம்‌. ௭ல்லாருக்கும்‌ ஸூவ யோநியில்‌ ப்ரீதியாகையால்‌ இவர்கள்‌ இதை ௮ங்கீகரித்தார்களென்று நினைத்து உங்கள்‌ காரியத்துக்கு உரிய ஸ்‌தானத்தைச்‌ சேருங்கள்‌ என்றான்‌, அக்னிக்கு வார்த்தைச்‌ சொல்வது காரியம்‌ ௮தற்குரிய ஸ்தானம்‌ முகம்‌ இப்படியே எங்கும்‌ கண்டு கொள்வது

வாக்கின்‌ அபிமானியான ௮க்னியானது; வாக்காகவாகி தன்‌ ஸ்தானமாக முகத்தை, ப்ரவஸித்தது-சஷுராபிமானியான ஸூர்யன்‌ கண்ணாகி நேத்ர ஸ்தானங்களை -ஸ்ரோத்ராபிமானிகளான திக்குகள்‌ காதுகளாகி ஸ்ரோத்ர இந்திரிய ஸ்தானத்தை-ஓஷதியும்‌ வனஸ்பதிகளும்‌ (ஸோமாபிமானியானவை) மயிர்களாகி , அவைகளின்‌ ஸ்‌தானமான த்வக் இந்த்ரியத்தை மனோபிமானியான சந்த்ரன்‌ மனமாகி இதயத்தை
அபான அபிமானியான ம்ருத்யு அபானமாகி நாபியை –ரேதஸ் அபிமானியான ஜலங்கள் ரேதஸ்ஸாகி குஹ்யத்தை

சேனாதிகாரிகள்‌ அரசன்‌ ஆஞ்ஜையின்படி நகரத்தில்‌ ப்ரவேஸிப்பது போலே ஸர்வேஸ்வரன்‌ ஆஞ்ஜையின்படி அதன்‌ ௮தன்‌ அபிமானிகளான அந்தந்தத்‌ தேவதைகள்‌, தந்‌ தம்‌ காரண ரூபங்களைக் கொண்டு தங்கள்‌ உத்பத்தி ஸ்தானத்தை அடைந்தார்கள் –

————

தமஷநாயாபிபாஸே அப்ரூதாமாவாப்யாமபிப்ரஜாநீஹீதி. தே அப்ரவீதேதாஸ்வேவ வாஂ தேவதாஸ்வாபஜாம்யேதாஸு பாகிந்யௌ கரோமீதி.
தஸ்மாத்யஸ்யை கஸ்யை ச தேவதாயை ஹவிர்கரிஹ்யதே பாகிந்யாவேவாஸ்யாமஷநாயாபிபாஸே பவதஃ৷৷1.2.5৷৷

பசியும் தாகமும் தங்களுக்கும் இடம் கேட்க -உங்களுக்கு தனியாக இல்லாமல் இந்த தேவதைகளை உங்களுக்கும் இடம் விட்டு கொடுக்க பண்ணுகிறேன் இதனாலே ஹவிஸ் கொடுக்கும் பொழுது இவர்களுக்கும் பங்கு உண்டு –

சம்சாரம் என்பது பசி-தாகம். இது இந்திரியங்களைச் சார்ந்து இருக்கின்றது-எனவே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்-இந்த பசி-தாகம் ஈஸ்வரினிடம் எங்களுக்கும் தங்குவதற்கு இடம் கொடுப்பதற்கு ஆலோசனை செய்யுங்கள் என்று வேண்டின-உங்களிருவரையும் இந்த தேவதைகளுக்குள்ளேயே இருக்கும்படி செய்கிறேன்-நீங்கள் இப்படி அங்கமாக இருப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அனுபவிப்பதே நீங்கள் தான்.

இப்படித்‌ தேவதைகள்‌ தம்தம்‌ ஸ்தாநங்களில் நின்ற பிறகு இடமில்லாதிருந்த — பசியும்‌ தாகமும்‌, எங்களுக்கு இடம்‌ ஏற்படுத்தக்‌ கொடுக்க வேண்டும் என்று அந்தப் ஈஸ்வரனை கேட்டதுகள்‌-உங்களை இந்தத் தேவதைளிடத்திலேயே பிரித்து இருக்கச்‌ செய்கிறேன்-இந்தத் தேவதைளிடத்திலே பாகமுடையவர்களாகச் செய்கிறேன் என்று அந்த ஈஸ்வரன்‌ சொன்னார் ஆகையால்‌ யாதாமொரு தேவதையின்‌ பொருட்டு ஹவிஸ்ஸானது கிரஹிக்கப்படுகிறதோ இந்தத் தேவதை இடத்தில்‌ பசியும்‌ தாகமும்‌ பாகமுடையனவாகவே ஆகின்றன –

நீங்கள் தர்மம் ஆகையால் சேதன னிடம் இப்பந்தமின்றிப் போஜனாதிகள் கிடையாதாகையாலே வ்யஷ்டி சேஹ கதங்களான அத்யாத்மமென்னும்‌ தேவதைகள் இடத்திலும்‌, ஸமஷ்டியான விராட் தேஹத்திலுள்ள அதி தேவதமென்னும்‌ அக்நியாதி தேவதைகளிடத்திலும்‌ பிரித்த இருக்கச் செய்கிறேன்‌-தேவதைகளிடத்தில் பாகம் வைக்கச் சாத்தியமில்லை யாகையால்‌ சேவதைகளின்‌ அம்சத்தால்‌ பாகம் செய்து வைக்கிறேன்-எந்தத் தேவதையின் பாகம் எதுவோ அந்தப் பாகத்தில் உங்களுக்கு அம்சம் கொடுக்கிறேன் என்று ஸ்ருஷ்டியின் முதலிலேயே ஈஸ்வரன் சங்கல்பித்ததினால் இவை சில காலத்தில் இந்திரிய தேவதைகளைக் கார்யான் முகமாக ஏசுவதுவும் சிலகாலத்தில் அது இல்லாமை யாகிய உபசாந்தியுமாய் இருக்கிறது -ஆகவே ஹவிஸ்ஸினால் தேவதா திருப்தி உண்டானால் அசனாயாபி யாசைகளும் திருப்தி யடைந்து உபசாந்தி உண்டாகிறது என்று கருத்து –

இந்த லோகங்களும் லோகபாலகர்களும்‌, [ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டார்களல்லவா-இவர்களின் பொருத்தும் அன்னத்தை ஸ்ருஷ்டிக்கிறேன் என்றும் அந்தப் ஈஸ்வரன் நினைத்தது –
லோகங்களையும்‌ லோக பாலகர்களையும்‌ ஸ்ருஷ்டித்‌துப்‌ பசி தாகங்‌களோடும்‌ சேர்த்து வைத்தோம்‌. அன்னாமில்லாமல்‌ இவர்கள்‌ நிலைபெறுவது அசக்யமாகையால்‌ இவர்க்குரிய உணவை உண்டாக்க வேண்டுமென ஈஸ்வரன்‌ நினைத்தான்‌. லோகத்திலும்‌ அரசன்‌ தானே ஸ்வதந்ரனாய்‌ நிக்ரஹ அநுக்ரஹ்ங்களைச்‌ செய்வதால்‌ ஸர்வேஸ்வரனான ப்ரஹ்மமும்‌ ஸ்வதந்த்ரமாகவே நிக்ரஹ அநுஹ்ரஹங்களைச் செய்கிறது –

ஸ ஈக்ஷதேமே நு லோகாஷ்ச லோகபாலாஷ்சாந்நமேப்யஃ ஸரிஜா இதி৷৷1.3.1৷৷

ஈஸ்வரன் ஆலோசித்தார் என்னால் உலகம் படைக்கப்பட்டுவிட்டது.
உலகத்தை பாதுகாப்பதற்கு தேவதைகளும் படைக்கப்பட்டு விட்டது.
இப்பொழுது இவர்கள் உண்பதற்கு உணவை தோற்றுவிக்க வேண்டும்.

அந்த ஈஸ்வரன் ஜலங்களைத் தபித்தான்‌-இவற்றினின்றும்‌ மனுஷ்யர்களுக்‌கு ஆஹாரமாகிய தான்யங்களென்றும்‌ ஸ்‌தாவரமான அன்னமும்‌ பூனை முதலானவைகளுக்‌கு ஆஹாரமாகிய ஐந்துக்களென்னும்‌ சரான்னமும்‌ உண்டாகட்டுமென்று ஸங்கல்பித்தான்‌ தபிக்கப்பட்ட அந்த ஜலங்களில் நின்‌றும்‌ கனமான ரூபத்தோடு ப்ராணாதாரமான சராசர ரூபான்னமானது உண்டாயிற்று,. எந்த அந்த மூர்த்தி உண்டாயிற்றோ அது அன்னமே அல்லவா-
இங்கு ஜலம் என்றது பஞ்ச பூதங்களையும்-

அங்கு அந்த அன்னமானது லோக பாலகர்களுக்கு எதிராக அனுப்பப்பட்டதாய்‌ கூச்சலிட்டுக் கொண்டு திருப்பு முகமாய்‌ அவர்களை விட்டு ஓடி விட நினைத்தது இவ்விதமான அன்னத்தின்‌ அபிப்பிராயத்தை அறிந்து கொண்ட லோக தால ஸமூகமானது அந்த அன்னத்தை, வாக்கினாலே கிரகிக்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்து அதை வாக்கினால்‌ கிரஹிக்க ஸமர்த்தமாக வில்லை-அந்த லோக பால சங்காதமானது இந்த அன்னத்தை வாக்கினால் கிரகிக்குமானால் அப்போது எல்லா லோகமும் அன்னத்தை சொல்லியே சொல்வதானாலேயே திருப்தி அடையும்

கண்ணாலே பார்த்தே –மற்றவை முன் போலவே
காதினாலே கேட்டே -மற்றவை முன் போலவே
த்வக் இந்த்ரியத்தினாலே தொட்டே மற்றவர் முன் போலவே
மனத்தினாலே த்யான செய்து –மற்றவை முன் போலவே –
சேதனமான்‌ சர அன்னம்‌ ஒடப் பார்த்தது. ௮சேதனமான தான்‌ இனி யன்னம்‌ முகத்தில்‌ ப்ரவேசியாமல்‌ வெளியே நின்று விட்டது. பிண்ட ரூபமாயிருந்த விராட் புருஷ தேஹத்தையே இங்கு லோக பாலகர்கள் என்கிறது – கார்ய காரணா அவஸ்தைகளாலே முகத்திலே க்ரஹிப்பதாவது வார்த்தை சொல்வதாலேயே அன்னத்தைப் புஜிப்பது -அதன் காரியமான சரீரம் சக்தியற்றதாகையாலே காரணமான சரீரத்துக்குச் சக்தியில்லை என்று தெரிந்தது -இவ்வுலகமெல்லாம் அன்னம் என்று சொல்வதினாலேயே திருப்தி அடைகின்றனவில்லையே -ஆதலால் அதன் காரணமான பிரதம சரீரமும் சக்தியற்றதாயிற்று என்று அறிகிறோம்

ஸோபோப்யதபத்தாப்யோபிதப்தாப்யோ மூர்திரஜாயத. யா வை ஸா மூர்தி-ரஜாயதாந்நஂ வை தத்৷৷1.3.2৷৷

பஞ்ச பூதங்களை வைத்து சிந்தித்த பிறகு அதிலிருந்து விதவிதமான உணவுகள், விதவிதமான ஜீவர்களையும் படைத்துவிட்டார்.

ததேநத்ஸரிஷ்டஂ பராங்த்யஜிகாஂஸத்தத்வாசாஜிகரிக்ஷத்தந்நாஷக்நோத்வாசா க்ரஹீதும்.
ஸ யத்தைநத்வாசாக்ரஹைஷ்யதபிவ்யாஹரித்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.3৷৷

நாம் உண்ணும் உணவை முயற்சி செய்துதான் அடைய வேண்டும்.
யாருக்கு எந்த வகையான பசி எடுக்கிறதோ அதற்கு தகுந்த இந்திரியத்தை பயன்படுத்தி அடைய வேண்டும்.
இவ்வாறு உணவு படைக்கப்பட்டது
அதை சாப்பிட போடும்போது அது ஓட ஆரம்பித்தது
பேசி அதை பிடிக்க என்று முயற்சி செய்தான். இப்படி பேச்சினால் அவனால் கிரகிக்க முடிந்து இருந்தால்
இவன் அதை பேசுவதனாலே திருப்தியடைந்து விடுவான். அப்படி முடியாததால் இவனுக்கு திருப்தி வரவில்லை.

மற்றவைகளும்‌ இப்படியே

தத்ப்ராணேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்ப்ராணேந க்ரஹீதும்.
ஸ யத்தைநத்ப்ராணேநாக்ரஹைஷ்யதபிப்ராண்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.4৷৷

பிராணன் இது நுகர்வதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

தச்சக்ஷுஷாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சக்ஷுஷா க்ரஹீதும்.
ஸ யத்தைநச்சக்ஷுஷாக்ரஹைஷ்யத்தரிஷ்ட்வா.ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.5৷৷

கண்ணானது பார்வையாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

தச்ச்ரோத்ரேணாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்ச்ரோத்ரேண க்ரஹீதும்.
ஸ யத்தைநச்ச்ரோத்ரேணாக்ரஹைஷ்யச்ச்ருத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.6৷৷

காதானது கேட்பதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

தத்த்வசாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்த்வசா க்ரஹீதும்.
ஸ யத்தைநத்த்வசாக்ரஹைஷ்யத்ஸ்பரிஷ்ட்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.7৷৷

தோலானது தொட்டுணர்ந்தே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

தந்மநஸாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோந்மநஸா க்ரஹீதும்.
ஸ யத்தைநந்மநஸாக்ரஹைஷ்யத்தயாத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.8৷৷

மனமானது எண்ணங்களாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

தச்சிஷ்நேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சிஷ்நேந க்ரஹீதும்.
ஸ யத்தைநச்சிஷ்நேநாக்ரஹைஷ்யத்விஸரிஜ்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.9৷৷

சிறுநீரகமானது கழிவை அகற்றுவதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

ததபாநேநாஜிகரிக்ஷத். ததாவயத். ஸைஷோந்நஸ்ய க்ரஹோ யத்வாயுரந்நாயுர்வா ஏஷ யத்வாயுஃ৷৷1.3.10৷৷

கடைசியில் உணவை எடுத்து வாயினுள்ளே போடுகிறார்கள். இப்படி உணவை பிடித்து விட்டார்கள்.
அபான பிராணன் மூலம் உணவை சாப்பிட்டு புரிந்து கொண்டார்கள்.

இவ்விதமாய்க்‌ கரண வ்யாபாரங்களினால்‌ அன்னத்தைக் கிரஹிக்க சக்தியற்ற லோக பால ஸமூஹமானது அந்த அன்னத்தை, முக மார்க்கமாக உள்ளே செல்லுகிற வாயுவினாலே கிரஹிக்க நினைத்தது-௮தை கிரஹித்துக் கொண்டது-௮பானமென்னும்‌ வாயு யாதொன்றோ அந்த இந்த வாயுவானது அன்னத்தை கிரஹிக்க சக்தியுடையது-அபான வாயு யாதொன்றோ இந்த வாயு அன்னத்தையே ஜீவன ஆதாரமாக உடையது –

ஸ ஈக்ஷத கதஂ ந்விதஂ மதரிதே ஸ்யாதிதி ஸ ஈக்ஷத கதரேண ப்ரபத்யா இதி. ஸ ஈக்ஷத யதி வாசாபிவ்யாஹரிதஂ
யதி ப்ராணேநாபிப்ராணிதஂ யதி சக்ஷுஷா தரிஷ்டஂ யதி ஷ்ரோத்ரேண ஷ்ருதஂ யதி த்வசா ஸ்பரிஷ்டஂ யதி மநஸா த்யாதஂ
யத்யபாநேநாப்யபாநிதஂ யதி ஷிஷ்நேந விஸரிஷ்டமத கோஹமிதி৷৷1.3.11৷৷

இதில் மூன்று கர்த்துக்கள் அடங்கியுள்ளது.
1. பரமாத்மா ஜீவாத்மாவில் பிரவேசம்
2. எந்த வழியாக உள்ளே நுழையலாம் என்று யோசிக்கிறார்.
3. ஜீவனுக்கு அத்மஞானம் வேண்டுமென்றால் எப்படி சிந்திக்க வேண்டும்.

கஹ அஹம் இதி – நான் யார் என்று சிந்திக்க வேண்டும்.
நாம் எப்பொழுதும் வெளி விஷயங்களைத் தான் சிந்தித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நான் யார்? இப்படி சிந்திப்பவன் யார்? என்று யோசிக்க வேண்டும்.
எந்த அறிவை பயன்படுத்தி வெளி விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாம் இவ்வாறு பார்ப்பவன் யார் என்று
விசாரம் செய்ய வேண்டும் என்றால் நம் மனதைக் கொண்டேதான் இவ்வாறு நம்மை விசாரிக்க வேண்டும்..
இந்த விசாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று உபநிஷத் இங்கே விளக்கியிருக்கிறது.
நம் இந்திரியங்களை யாரோ ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது.
இந்திரியங்கள் தன்னிச்சையாக செயல்பட்டால் நான் யார் என்ற கேள்வி எழும்.
இந்தக் கேள்வியிலிருந்து நான்தான் இவைகளை கட்டுப்படுத்துகிறேன் என்ற அறிவு கிடைக்கும்
இந்திரியங்களுக்கு நான்தான் தலைவன். நான் வேறு, இந்திரியங்கள் வேறு,
அவைகள் எனக்காக வேலை செய்கிறது என்ற மனப்பான்மையுடன் விவகாரம் செய்தல்
இந்திரியங்களுக்கு இந்திரியமாக இருக்கிறேன்.

ஈஸ்வரன் – ஜீவன் இந்த மாதிரி சிந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஒருவேளை வாயானது அது இஷ்டத்திற்கு பேசிக்கொண்டிருந்தால், காதானது அது இஷ்டத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தால்,
தோலானது அது விருப்பத்திற்கு தொடு உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்தால், மனமானது அதுபாட்டுக்கு சிந்தித்துகொண்டிருந்தால்,
பிறகு நான் யார்? என்ற கேள்விக்கு இவ்வாறு சிந்திக்க வேண்டும். இந்திரியங்கள் மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது,
மனது வேறொருவரின் கட்டுக்குள் இருக்கிறது. அந்த வேறொருவர் நான்தான்,
நான் சேதன ஸ்வரூபமானவன், நித்யமானவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்

இந்தக் காரிய ரூபமான ஜகத்தானது என்னையே விட்டு எப்படியாகும் என்றும் அந்தப் ப்ரஹ்மம் நினைத்தது -எந்த மார்க்கத்தால் இஜ்ஜீவ சரீரத்தில் பிரவேசிக்கலாம் என்றும் அந்த ப்ரஹ்மம் நினைத்தது -வாக்கினால் நிஷ் ப்ரயோஜனமாகச் சொல்லப்படுமேயானால் -க்ராண இந்த்ரியத்தினாலே விருதாவாக முகரப்பட்டால் -கண்ணால் வீணாகப் பார்க்கப்பட்டால் -கத்தினாள் விருதாவாகக் கேட்கப்பட்டால் -த்வக் இந்த்ரியத்தினால் வீணாகத் தொடப்பட்டால் -மனஸ்ஸினால் வீணாகத் த்யானம் செய்யப்பட்டால் -அபானம் என்னும் வாயுவினால் வீணாகவே ஆபானிக்குமே யானால் -குஹ்யேந்த்ரியம் விருதாவாக ஆனந்த கர்மத்தைச் செய்யுமானால் -அதன் பின்னர் யானும் யார் என்றும் நினைத்தது

ஸ ஏதமேவ ஸீமாநஂ விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத. ஸைஷா விதரிதிர்நாம த்வாஸ்ததேதந்நாந்தநம்.
தஸ்ய த்ரய ஆவஸதாஸ்த்ரயஃ ஸ்வப்நா அயமாவஸதோயமாவஸதோயமாவஸத இதி৷৷1.3.12৷৷

ஈஸ்வரன் தலை உச்சியில் ஓட்டையை போட்டு அந்த துவாரம் வழியாக நுழைந்தார்-இந்த கதவுக்கு விக்ருதி என்ற பெயரும் உண்டு-நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு, இது மகிழ்ச்சியை தரும் வழியாகும்-ஈஸ்வரனுடைய மூன்று விதமான இருப்பிடங்கள் (வலது கண், மனம், ஹ்ருதயம்) மூன்று விதமான கனவு நிலைகள் (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலை உறக்கம்) இந்த ஒன்றானது (வலது கண் முதலாவது)இருப்பிடம், மனதானது இரண்டாவது இருப்பிடம், இருதயமானது மூன்றாவது இருப்பிடம்.

ஈஸ்வரன் ஜீவனுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்று யோசித்தார்-தலை உச்சி (பிரம்ம அந்திரம்) வழியாக போகலாமா அல்லது அடிப்பாதம் வழியாக போகலாமா என்று யோசித்தப் பின்னர் தலையுச்சி வழியாகவே பிரவேசிக்கலாம் என்று முடிவெடுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்தார்-ஜீவன் உடலில் சிதாபாஸனாக தோன்றினார். ஈஸ்வரன் உள்ளே நுழைந்த கதவுக்கு (வழிக்கு) வித்ருதி என்று பெயர்-நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு.

அந்த ஜீவனுக்கு மூன்று இடங்கள் அளித்து மூன்று விதமான அவஸ்தைகள் மூலமாக உலகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும்-ஜாக்ரத் அவஸ்தையில் கண்ணை இருப்பிடமாக கொண்டு விவகாரம் செய்கின்றான்-கனவு நிலையில் தொண்டையில் உள்ள கண்ட ஸ்தானம், ஆழ்ந்த உறக்கத்தில் இதயத்தில் இருக்கின்றான்.

அந்தப் ப்ரஹ்மமானது இந்த எல்லையற்ற சிரஸ்ஸையே பிளந்து கொண்டு இந்த மார்க்கத்தினாலே உள்ளே பிரவேசித்தது -இந்த வழியே விக்ருதி என்றும் பெயர் பெற்றது -இந்த வழியே சந்தோஷத்தைத் தருவது -இது ஸ்தானம் இது ஸ்தானம் இது ஸ்தானம் என்றும் மூன்று ஸ்தானங்கள் -மூன்றுமே ஸ்வப்ன அவஸ்தை களேயாம்

ஸ ஜாதோ பூதாந்யபிவ்யைக்யத் கிமிஹாந்யஂ வாவதிஷதிதி.
ஸ ஏதமேவ புரூஷஂ ப்ரஹ்ம ததமமபஷ்யதிதமதர்ஷமிதீ 1.3.13৷৷

பரமாத்மா இப்போது ஜீவ ரூபமாக சம்சாரத்தில் இருக்கிறார். ஜீவனாக வெளிப்பட்டிருக்கிறார்.
இந்த அனைத்து ஜீவராசிகளை குறித்து
குரு, சாஸ்திரங்களின் துணைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்.
இந்த உலகத்தில் எனக்கு (பிரம்மத்திற்கு) வேறாக எதை சொல்ல முடியும் என்ற கேட்டால், நானே அனைத்துமாக இருக்கிறேன்
என்று அறிந்து கொண்ட பிறகு நான் தெரிந்து கொள்வதற்கு வேறொன்றுமில்லை.
இந்த ஜீவனையே பிரம்மன்
என்று அறிந்தான்.
இந்த பிரம்ம லட்சணமானது.
எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மனாகவே அறிந்து கொண்டான்.
இவ்விதமாக பிரம்மத்தை (ஞானியானவன்) அறிந்துக் கொண்டான்

———-

தஸ்மாதிதந்த்ரோ நாமேதந்த்ரோ ஹ வை நாம. தமிதந்த்ரஂ ஸந்தமிந்த்ர இத்யாசக்ஷதே பரோக்ஷேண.
பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ৷৷1.3.14৷৷

ஆகவே, ஜீவன் பிரம்மத்தை அபரோக்‌ஷமாக அறிந்த பிறகு,
பிரம்மத்திற்கு இன்னொரு பெயர். இதை அபரோக்‌ஷமாக அறிவதனால்தான் பிரம்மத்திற்கு இந்த பெயர்.
இதை இந்திரன் என்று மறைமுகமாக என்று அழைப்பதுண்டு. ஞானிகளும், தேவர்களும் தங்களை மறைத்துக் கொள்வதில்
தான் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரியக்கூடியதாக இருந்தாலும் ஜீவர்களுக்கு தெரியாமல்தான் இருக்கின்றார்கள்.
ஞானத்தை அடைந்தவனுக்கு அபரோக்‌ஷமாகவும், ஞானத்தை அடையாமல் அறிந்தவனுக்கு பரோக்‌ஷமாகவும் இருக்கிறது இந்த பிரம்மன்.
இது புலன்களால் அறிய முடியாததாக இருக்கிறது. ஞானிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

—————————-

புரூஷே ஹ வா அயமாதிதோ கர்போ பவதி. யதேதத்ரேதஸ்ததேதத்ஸர்வேப்யோங்கேப்யஸ்தேஜஃ
ஸஂபூதமாத்மந்யேவாத்மாநஂ பிபர்தி தத்யதா ஸ்த்ரியாஂ ஸிஞ்சத்யதைநஜ்ஜநயதி ததஸ்ய ப்ரதமஂ ஜந்ம৷৷1.4.1৷৷

கர்ம பலன் அனுபவித்த பின்பு மீண்டும் மழை-தானியம் -புருஷன் -சம்யோகத்தால் கர்ப்ப வாசம் பற்றி சொல்கிறது –

இந்த ஜீவன் முதலில் தந்தையின் உடலை இருப்பிடமாக கொண்டிருக்கிறது.
தந்தையின் விந்தில் இருக்கிறது. இந்த விந்தானது உடலினுடைய எல்லா அங்கங்களின் ஒட்டு மொத்த சாராம்சமாக இருக்கிறது.
தந்தை தன் குழந்தையைப் பார்க்கும்போது தன்னையே பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கின்றான்.
நான் இறந்தாலும் தன் குழந்தையின் உடலில் இருப்பேன் என்று நம்பி கொண்டு
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதைப் போன்று தன் குழந்தையை பாதுகாக்கின்றான்.
ஆணினுடைய விந்திலிருந்து பெண்ணின் கர்ப்பத்திற்குள் செல்கின்றது, இதுதான் அவனுடைய முதல் ஜென்மம்.

————-

தத்ஸ்த்ரியா ஆத்மபூயஂ கச்சதி யதா ஸ்வமங்கஂ ததா. தஸ்மாதேநாஂ ந ஹிநஸ்தி ஸாஸ்யைதமாத்மாநமத்ர கதஂ பாவயதி৷৷1.4.2৷৷

தாயின் கருப்பைக்குள் சென்ற ஜீவனானது அவளது அங்கமாகவே மாறிவிடும்.
அதனால் இந்த தாய்க்கு எந்த தீங்கும் செய்வதில்லை.
தன்னிடத்தில் வந்த அந்த ஜீவனை தாய் மிகவும் போற்றி பாதுகாக்கின்றாள்.

கர்ப்பத்தில் உள்ள சிசுவை தாய் மிகவும் கவனமாக போஷித்து -தானே அதற்காகவும் உண்டும் வளர்க்கிறாள் என்கிறது –

—————-

ஸா பாவயித்ரீ பாவயிதவ்யா பவதி தஂ ஸ்த்ரீ கர்பஂ பிபர்தி ஸோக்ர ஏவ குமாரஂ ஜந்மநோக்ரேதிபாவயதி. ஸ யத்குமாரஂ
ஜந்மநோக்ரேதிபாவயத்யாத்மாநமேவ தத்பாவயத்யேஷாஂ லோகாநாஂ ஸந்தத்யா ஏவஂ ஸந்ததா ஹீமே லோகாஸ்ததஸ்ய த்விதீயஂ ஜந்ம৷৷1.4.3৷৷

அவள் பாதுகாப்பவளாகிறாள்.
தாய் குழந்தையை பாதுகாக்கும்போது அவளை மற்றவர்கள் பாதுகாக்க வேண்டும்.
பிறப்பதற்கு முன் அவள்தான் குழந்தையை பாதுகாக்கின்றாள்.
பிறப்பதற்கு முன் தாயை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை பாதுகாக்க வேண்டும்.
அவர் தன்னுடைய குழந்தையை பிறப்பதற்கு முன்னும் பின்னும் அதை நன்கு கவனிப்பதற்குக் காரணம்
அவர் தன்னையே அந்த குழந்தையினிடத்தில் பார்ப்பதால் தன்னையே கவனிப்பதற்கு சமமானதாக இருக்கிறது.
இந்த உலகத்தில் தன்னுடைய சந்ததியானது தொடர்ந்திருப்பதற்காக இவ்வாறு தந்தை தன் குழந்தை பாதுகாக்கிறார்.
ஜீவன் தாயின் கர்ப்பதிலிருந்து உலகத்தில் வருவது இரண்டாவது ஜென்மம்.

கர்ப்பத்தில் தாய் ரஷித்து பிறந்த பின்பு தாயும் தந்தையும் ரஷித்து -இத்தால் உலகம் தொடர்ந்து -நடக்கிறது என்றபடி

—————-

ஸோஸ்யாயமாத்மா புண்யேப்யஃ கர்மப்யஃ ப்ரதிதீயதே. அதாஸ்யாயமிதர ஆத்மா கரிதகரித்யோ வயோகதஃ
ப்ரைதி ஸ இதஃ ப்ரயந்நேவ புநர்ஜாயதே ததஸ்ய தரிதீயஂ ஜந்ம৷৷1.4.4৷৷

தன்னுடைய ஸ்வரூபமாக மகனை கருதுகிறார் தந்தை
தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின் படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்
அதற்கு பிறகு
இந்த மகனுக்கு தந்தையானவர்
இந்த உலகத்தில் செய்ய வேண்டிய மூன்று கடமைகளிலிருந்து விடுபடுகின்றார்,
அவைகள் கடவுளுக்கு, ரிஷிகளுக்கு, தேவதைகளுக்கு செய்ய வேண்டியது மூன்று கடமைகள்-
பிறகு வயதாகி இறந்து விடுகின்றான்.
இந்த உலகத்தை விட்ட பிறகு மீண்டும் வேறொரு உடலை எடுக்கின்றான்.
இது அவனுக்கு மூன்றாவது பிறப்பு.
தன்னுடைய ஸ்வரூபமாக பாவிக்கும் மகனை புண்ணிய கர்மத்தை அவன் செய்யும் விதத்தில் வளர்க்க வேண்டும்.
தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின்படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்.
அவனும் அதே மாதிரி வளரத்-தொடங்கினான், தந்தை சொன்னபடி இந்த உலகில் தர்மப்படி வாழ்ந்து வயதான பிறகு இறந்துவிடுகின்றான்.
இது இவனுக்கு மூன்றாவது ஜென்மம்.

புத்ரனை ஜீவாத்மாவுடைய இரண்டாவது ஜென்மம் என்பர் -வேதங்களில் விதித்தித்த அனுஷ்டானங்களை தொடர்ந்து செய்ய
ஜீவன் சரீரம் விட்ட பின்பு கர்மத்தின் அனுகுணமாக மூன்றாவது ஜென்மம் எடுக்கிறான் என்கிறது –

—————-

ததுக்தமரிஷிணா. கர்பே நு ஸந்நந்வேஷாமவேதமஹஂ தேவாநாஂ ஜநிமாநி விஷ்வா. ஷதஂ மா புர ஆயஸீரரக்ஷந்நதஃ
ஷ்யேநோ ஜவஸா நிரதீயமிதி கர்ப ஏவைதச்சயாநோ வாமதேவ ஏவமுவாச৷৷1.4.5৷৷

ஸ்ரீ வாம தேவர் முந்திய ஜென்ம கர்ம -புண்ணிய கர்ம – பலத்தால் கர்ப்பத்தில் இருந்த பொழுதே -தனது முந்திய ஜென்மங்களை பற்றியும்
பர ப்ரஹ்மத்தின் பல் வேறு ஸ்வரூப ரூபங்களையும் தேவதைகளின் ஜென்ம பரம்பரைகள் விசேஷங்களையும் அறிந்ததாக சொல்கிறார் –

ஆத்ம ஞானத்தை அடைந்த ரிஷி ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது.
கர்ப்பதிலிருக்கும் போதே நான் என்னை அறிந்து கொண்டேன்.
அனைத்து தேவர்களின் பிறப்பையும், தேவ ரகசியத்தையும் (ஆத்ம ஞானம்) அறிந்து கொண்டேன்.
இதை அடைவதற்கு முன் 100 இரும்புக்கதவுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
பருந்தானது கூண்டிலிருந்து வெளியேறுவது போல நான் மாயை என்ற வலையிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று
வாமதேவர் என்ற ஞானி தான் கர்ப்பத்திலிருக்கும்போதே இந்த ஞானத்தை அடைந்துவிட்டதை கூறியிருக்கிறார்.

———————

ஸ ஏவஂ வித்வாநஸ்மாச்சரீரபேதாதூர்த்வ உத்க்ரம்யாமுஷ்மிந் ஸ்வர்கே லோகே ஸர்வாந் காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத்৷৷1.4.6৷৷

இப்படி கருவிலே திரு உள்ளவர் மீண்டும் பிறக்காமல்–ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார் –

யாரொருவன் வாமதேவர் அறிந்தது போல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டால்
இந்த சரீரத்திலிருந்து கொண்டே மனநிறைவைப் பெற்று மரணமற்ற நிலையை அடைவான்.

————————

கோயமாத்மேதி வயமுபாஸ்மஹே கதரஃ ஸ ஆத்மா . யேந வா பஷ்யதி யேந வா ஷரிணோதி யேந வா
கஂதாநாஜிக்ரதி யேந வா வாசஂ வ்யாகரோதி யேந வா ஸ்வாது சாஸ்வாது ச விஜாநாதி৷৷1.5.1৷৷

இப்படி உபாசித்து -கண்ணால் கண்ட -காதால் கேட்ட -மூக்கால் நுகர்ந்த -நாக்கால் சுவைத்த –

யார் இந்த ஆத்மா?
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சொல் “நான்”
எப்படிபட்டது இது? நிர்குண சைதன்யமா அல்லது சகுண சைதன்யமா?
ஸ்தூல, சூட்சும சரீரங்களை விசாரம் செய்து இவைகள் ஆத்மா அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார்கள்.
எந்த இந்திரியத்தால் பேசுகிறோமோ, கேட்கிறோமோ, வாசனையை நுகர்கின்றோமோ
இவைகள் ஆத்மா என்று விசாரம் செய்து இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இந்த சூட்சும சரீரம் மாற்றத்தை அடைவதால் அது ஆத்மா அல்ல என்று தெளிவடையலாம்.
காலம் செல்ல செல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி போன்ற இந்திரியங்களின் சக்திகள் குறைந்து கொண்டே போவதால்,
இவைகள் மாற்றத்திற்கு உள்ளாகின்றது
இதுவே நமக்கு விஷயமாக உள்ளது. ஏதாவது ஒரு பொருளை காட்டி இது தெரிகிறதா என்று கேட்டால், தெரிகிறது என்று கூறுவோம்.
எனவே பொருளும் தெரிகிறது அதை கண்ணால் அறிந்து கொண்டேன் என்று இந்திரியத்தின் செயலையும் தெரிந்து கொள்கிறோம்.
ஆனால் இந்திரியங்களின் விஷயங்களாகி வேறொருவன் அதைப் கவனிக்கின்றான்.
கரணமாக இருப்பதால், இதை பயன்படுத்தி வேறொருவன் பயனடைகின்றான்.
மேற்கூறிய காரணங்களால் சூட்சும சரீரங்கள் ஆத்மாவல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.

—————-

யதேதத் ஹரிதயஂ மநஷ்சைதத். ஸஂஜ்ஞாநமாஜ்ஞாநஂ விஜ்ஞாநஂ ப்ரஜ்ஞாநஂ மேதா தரிஷ்டிர்தரிதிர்மதிர்மநீஷா ஜூதிஃ
ஸ்மரிதிஃ ஸஂகல்பஃ க்ரதுரஸுஃ காமோ வஷ இதி. ஸர்வாண்யேவைதாநி ப்ரஜ்ஞாநஸ்ய நாமதேயாநி பவந்தி৷৷1.5.2৷৷

இந்த மனமும் (சித்தம், அகங்காரம், மனம்) புத்தியும் ஆத்மா அல்ல.
ஆத்மா என்பது சேதன ஸ்வரூபம், அறிவு ஸ்வரூபம், உணர்வு ஸ்வரூபம்.
நம்மிடத்தே எழுகின்ற எண்ணங்களுக்கு பின்னால் இந்த சைதன்யம் இருக்கிறது.
எண்ணங்கள் பலவாக இருப்பதற்கு காரணம் அதற்கு விஷயமாக இருக்கும் பொருட்களால் ஆனால்
இதையெல்லாம் அறிந்து கொண்டிருப்பது ஒரே ஒரு சைதன்யம்தான்.
நமது மனதில் வருகின்ற எண்ணங்களுக்கு சைதன்யத்திற்கு கொடுக்கப்படுகின்ற பெயர்கள்.
சம்ஞானம் – சாதாரண மனிதர்களிடத்திலே தோன்றும் எண்ணம், நான் இருக்கிறேன் என்ற அறிவு.
ஆஞானம் – யோகிகளிடத்தில் இருக்கின்ற ஞானம். மனிதர்களிடத்திலே இல்லாத ஞானம்.
விக்ஞானம் கலைஞானம், பிரக்ஞானம், புரிய வேண்டியதை அந்த நேரத்தில் புரிந்து கொள்ளும் திறமை.
மேதா4 – வாஸனைகள்; எண்ணப் பதிவுகள்
த்ருஷ்டி – இந்திரியங்களால் அடையப்படும் ஞானம்
த்ருத்ஹி – துணிவை கொடுக்கின்ற உறுதியான ஞானம்
மதிஹி – யோசிக்கும் திறமை (மனனம்)
மணிஷா – நாம் சுதந்திரமாக இருத்தல்
ஜூதிஹி – மனதினால் வலி வேதனைகளை அனுபவித்தல்
ஸ்மிருதி – எண்ணிப் பார்த்தல்
சங்கல்பஹ – உறுதி செய்தல்
க்ருதஹ – தீர்மானித்தல்
அஷூ – எச்சரித்தல்
காமோ – ஆசை வயப்படுதல்
இப்படி பலவிதமான எண்ணங்கள் நம்மிடத்தே இருக்கின்றது.
இவைகளெல்லம் சைதன்யத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர்களாகும்.

இது ஹிருதயம் அனைத்துக்கும் திரண்ட ஸ்தானம் -அதுக்கும் விட -மனஸ் -இதுவே அனைத்து இந்த்ரியங்களுக்கும் ஞான துவாரம்
சம் ஞானம் அஞ்ஞானம் விஞ்ஞானம் பிரஞ்ஞானம் -மேதாவிலாசம் -த்ரிஷ்ட்டி -திட புத்தி மதி -ஜூதி
ஸ்ம்ருதி -சங்கல்பம் -கருதி -காமம் -பல தசைகள் உண்டே –

———————

ஏஷ ப்ரஹ்மைஷ இந்த்ர ஏஷ ப்ரஜாபதிரேதே ஸர்வே தேவா இமாநி ச பஞ்ச மஹாபூதாநி ப஀ரிதிவீ வாயுராகாஷ ஆபோ
ஜ்யோதீஂஷீத்யேதாநீமாநி ச க்ஷுத்ரமிஷ்ராணீவ. பீஜாநீதராணி சேதராணி சாண்டஜாநி ச ஜாருஜாநி ச ஸ்வேதஜாநி
சோத்பிஜ்ஜாநி சாஷ்வா காவஃ புரூஷா ஹஸ்திநோ யத்கிஂசேதஂ ப்ராணி ஜங்கமஂ ச பதத்ரி ச யச்ச ஸ்தாவரஂ ஸர்வஂ
தத்ப்ரஜ்ஞாநேத்ரஂ ப்ரஜ்ஞாநே ப்ரதிஷ்டிதஂ ப்ரஜ்ஞாநேத்ரோ லோகஃ ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரஜ்ஞாநஂ ப்ரஹ்ம৷৷1.5.3৷৷

எல்லா ஜீவராசிகளும் சைதன்ய ஸ்வரூபமாகவே இருக்கின்றது.
பிரக்ஞானே ப்ரதிஷ்டிதம் – ஸ்ருஷ்டி காரணம்
பிரக்ஞானே நேதமா லோகா – ஸ்திதி காரணம்
ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா – லய காரணம்
மஹா வாக்கியம் : பிரக்ஞானம் பிரம்ம – ஜீவனுடைய சூட்சும சரீரத்திற்கு ஆதாரமாக இருப்பது பிரக்ஞானம்,
இதுவே பிரம்மனாக இருக்கின்றது.

பிரமன் இந்திரன் பிரஜாபதி -பஞ்ச பூதங்கள் -ஸ்தாவரங்கள் ஜங்கமங்கள்-பீப்பிலி வரை அனைத்துக்கும் -அனைத்து ஜீவனுக்குள்ளும் –
ப்ரஹ்மம் அந்தர்யாத்மா வாக இருந்து நடத்துகிறார் –
இப்படி ஒன்றை சொன்னால் ஜீவன் பர ப்ரஹ்மம் வரை செல்லும் என்று உணர வேண்டும் –

———————-

ஸ ஏதேந ப்ரஜ்ஞேநாத்மநாஸ்மால்லோகாதுத்க்ரம்யாமுஷ்மிந்ஸ்வர்கே லோகே ஸர்வாந்காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத். இத்யோம்৷৷1.5.4৷৷

ஸ்ரீ வாம தேவர் போல்வார் ஆத்ம சாஷாத்காரம் பெற்று அதற்கும் மேலே பர ப்ரஹ்மத்தை உணர்ந்து அந்தமில் பேரின்பம் பெற்றனர் –

இந்த பிரஹ்ம ஞானத்தின் பலன் இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது.
தான் எந்த அறிவை அடைந்தானோ அதிலேயே நிலைபெற்று இருத்தல், பிராரப்தம் முடிந்தவுடன்
இந்த உடலை விட்டு விட்டு எல்லா ஆசைகளையும் அடைந்தவனாக தன்னிடத்திலே இருக்கிறான், மரணமற்றவனாக உயர்ந்து விடுகிறான்.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாராயணோத்தரதாபிநீயோபநிஷத்

June 11, 2025

ஸ்ரீ நாராயணோத்தரதாபிநீயோபநிஷத்
ப்ரத²ம: க²ண்ட:³ ।
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா ஆநந்த³ம் ப்³ரஹ்மணோ வித்³வாந்
ஸச்சிதா³நந்த³ம்ப³ரூபோ ப⁴வதி ।
த்³வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா²யா ஸமாநம் வ்ரு’க்ஷம் பரிஷஸ்வஜாதே ।
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்³வத்த்யநஶ்நந்நந்யோ அபி⁴சாகஶீதி ॥
யோ வேதா³தௌ³ ஸ்வர: ப்ரோக்தோ வேதா³ந்தே ச ப்ரதிஷ்டி²த: ।
தஸ்ய ப்ரக்ரு’திலீநஸ்ய ய: பர: ஸ மஹேஶ்வர: ॥
அணோரணீயாந்மஹதோ மஹீயாநாத்மா கு³ஹாயாம் நிஹிதோऽஸ்ய ஜந்தோ: ।
தமக்ரதும் பஶ்யதி வீதஶோகோ தா⁴து: ப்ரஸாதா³ந்மஹிமாநமீஶம் ॥
வாஸநாத்³வாஸுதே³வஸ்ய வாஸிதம் ஹி ஜக³த்த்ரயம் ।
ஸர்வபூ⁴தநிவாஸோऽஸி வாஸுதே³வ நமோऽஸ்து தே ॥
பூ⁴ஶ்ச நாராயண: । பு⁴வஶ்ச நாராயண: । ஸுவஶ்ச நாராயண: ।
மஹஶ்ச நாராயண: । ஜநஶ்ச நாராயண: । தபஶ்ச நாராயண: ।
ஸத்யம் ச நாராயண: । நாராயண: பரம் ப்³ரஹ்ம । நாராயண ஏவேத³ம் ஸர்வம் ।
நாராயணாந்ந கிஞ்சித³ஸ்தி । ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்³ரஹ்ம । யோ வேத³ நிஹிதம்
கு³ஹாயாம் பரமே வ்யோமந் । தஸ்மாத்³வா ஏதஸ்மாதா³த்மந ஆகாஶ: ஸம்பூ⁴த: ।
ஆகாஶாத்³வாயு: । வாயோரக்³நி: । அக்³நேராப: । அத்³ப்⁴ய: ப்ரு’தி²வீ । ப்ரு’தி²வ்யா
ஓஷத⁴ய: । ஓஷதீ⁴ப்⁴யோऽந்நம் । அந்நாத்புருஷ: । நாராயண: ஸர்வபுருஷ
ஏவேத³ம் பரப்³ரஹ்ம । நாராயண: ஸர்வபூ⁴தாந்தர்யாம்யாத்மா । ஆத்மேத³ம் ஸர்வம்
நாராயண: । நாராயண: ஸ்வயம் ஜ்யோதி: । தஸ்மாத்ப்ரகாஶாத்மா ॥
நீவாரஶூகவத்தந்வீ பீதா பா⁴ஸ்வத்யணூபமா ।
தஸ்யா: ஶிகா²யா மத்⁴யே பரமாத்மா வ்யவஸ்தி²த: ॥
பாஶப³த்³த:⁴ ஸ்ம்ரு’தோ ஜீவ: பாஶமுக்த: ஸநாதந: ।
துஷேண ப³த்³தோ⁴ வ்ரீஹி: ஸ்யாத்துஷாபா⁴வேந தண்டு³ல ॥

பரப்³ரஹ்ம ஸ்வயம் சாத்மா ஸாக்ஷாந்நாராயண: ஸ்ம்ரு’த: ।
நாராயணமநாதி³ம் ச யோக³நித்³ராபராயணம் ॥
ஜாக்³ரத்ஸ்வப்நஸுஷுப்தீஷு ஸர்வகாலவ்யவஸ்தி²தம் ।
நாராயணம் மஹாத்மாநம் மஹாத்⁴யாநபராயணம் ।
ஸர்வவேதா³ந்தஸம்லக்ஷ்யம் தத்³ப்³ரஹ்மேத்யபி⁴தீ⁴யதே ॥
ஸ ஹோவாச ப⁴க³வாந் நாராயண ஏவேத³ம் ஸர்வம் ப்ரதிஷ்டி²தம் ய ஏவம் வேத³ ।
இத்யுபநிஷத் ॥
இத்யாத²ர்வணரஹஸ்யே நாராயணோத்தரதாபிநீயே ப்ரத²ம: க²ண்ட³ ।

த்ரு’தீய: க²ண்ட:³ ।
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா நாராயண: பரப்³ரஹ்மேதி ய ஏவம் வேத³ ।
நாராயணாத்மா வேத³ம் ஸர்வம் நிர்விகாரம் நிரஞ்ஜநவஸ்து ப்ரதிபாத்³யதே ।
ஸ நாராயணோ விராட்புருஷோ ப⁴வாதி । தே³வாநாம் வாஸவோ ப⁴வதி ।
இந்த்³ரியாணாம் மநோ
ப⁴வதி । ஸர்வேஷாம் வஸ்தூநாம் முக்²யவஸ்து ப⁴வதி । ௐ நமோ நாராயணாத³ந்யோ
மந்த்ர: நாராயணாத³ந்யோபாஸ்திர்நாஸ்தி । நாந்யந்நாராயணாது³பாஸிதவ்யம் ।
ஸர்வம்
நாராயண ஏவ ப⁴வதீதி விஜ்ஞாயதே । யோऽதீ⁴தே நித்யம் ஸர்வாந் காமாநவாப்நோதி

ஸ ப்³ரஹ்மஹத்யாயா: பூதோ ப⁴வதி । ஸுராபாநாத் பூதோ ப⁴வதி । ஸ்வர்ணஸ்தேயாத்
பூதோ ப⁴வதி । கு³ருதல்பக³மநாத் பூதோ ப⁴வதி । அக³ம்யாக³மநாத் பூதோ ப⁴வதி ।
அப⁴க்ஷ்யப⁴க்ஷாத் பூதோ ப⁴வதி । ஸ உபபாதகமஹாபாதகேப்⁴ய: பூதோ ப⁴வதி ।
ஸர்வவேத³மதீ⁴யாநோ ப⁴வதி । ஸர்வக்ரதுப²லம் ப்ராப்நோதி । ஸர்வகர்மகர்தா
ப⁴வதி । சது:ஸமுத்³ரபர்யந்தபூ⁴தா³நப²லம் ப்ராப்நோதி । த்³விஜோத்தமோ ப⁴வதி ।
சதுர்வர்க³ப²லம் ப்ராப்நோதி । ப்³ரஹ்மசாரீ ஜ்ஞாநவாந் ப⁴வதி । க்³ரு’ஹீ
புத்ரபௌத்ரமஹைஶ்வர்யவாந் ப⁴வதி । ஸம்ந்யாஸஈ மோக்ஷவாந் ப⁴வதி ॥
பட²நாச்ச்²ரவணாத்³வாऽபி ஸர்வாந் காமாநவாப்நுயாத் ।
நாராயணப்ரஸாதே³ந வைகுண்ட²பத³மஶ்நுதே ॥
இதி ஸ ஹோவாச ப⁴க³வாந் ய ஏவம் வேத³ । இத்யுபநிஷத் ॥
வேதா³க்ஷராணி யாவந்தி படி²தாநி த்³விஜோத்தமை: ।
தாவந்தி ஹரிநாமாநி கீர்திதாநி ந ஸம்ஶய: ॥
நாராயண ஹரே க்ரு’ஷ்ண வாஸுதே³வ ஜக³த்³கு³ரோ ।
முகுந்தா³ச்யுத தே³வேஶ மஹாவிஷ்ணோ நமோऽஸ்து தே ॥
பூ⁴தாநி தத்த்வஸம்ஜ்ஞாநி கூடஸ்தோ²ऽக்ஷரஸம்ஜ்ஞித: ।
உத்தமஶ்சாபி புருஷோ நாராயண இதீர்யதே ॥
இத்யாத²ர்வணரஹஸ்யே நாராயணோத்தரதாபிநீயே த்ரு’தீய: க²ண்ட:³
(வைஷ்ணவ-உபநிஷத:³)
இதி நாராயணோத்தரதாபிநீயோபநிஷத் ஸமாப்த ।

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-


த்³விதீய: க²ண்ட:³ ।
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா நாராயண: பரவஸ்து ப⁴வதீதி விஜ்ஞாயதே ।
ஸச்சிதா³நந்த³ரூபாய ஜ்ஞாநாயாமிததேஜஸே ।
பரப்³ரஹ்மஸ்வரூபாய நாராயண நமோऽஸ்து தே ॥
நித்யஶுத்³தா⁴ய பு³த்³தா⁴ய நித்யாயாத்³வைதரூபிணே ।
ஆநந்தா³யாத்மரூபாய நாராயண நமோऽஸ்து தே ॥
ௐ நமோ ப⁴க³வதே ஶ்ரீமந்நாராயணாய மஹாவிஷ்ணவே அமிதப³லபராக்ரமாய
ஶங்க²சக்ரக³தா³த⁴ராய லக்ஷ்மீஸமேதாய க³ருட³வாஹநாய த³ஶாவதாராய
ஸர்வது³ஷ்டதை³த்யதா³நவஸம்ஹரணாய ஶிஷ்டப்ரதிபாலகாய பரப்³ரஹ்மரூபாய
மஹாத்மநே பரமபுருஷாய புண்ட³ரீகாக்ஷாய புராணபுருஷாய ஶுத்³த⁴பு³த்³தா⁴ய
ஸச்சிதா³நந்த³ஸ்வரூபாய மஹாத்மநே க்⁴ரு’ணி: ஸூர்ய ஆதி³த்ய ௐ நமோ
நாராயணாய
ஸஹஸ்ரார ஹும் ப²ட் ஸ்வாஹா ॥
நாராயணாய ஶாந்தாய ஶாஶ்வதாய முராரயே ।
யஜ்ஞேஶ்வராய யஜ்ஞாய ஶரண்யாய நமோ நம: ॥
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா ஸர்வம் விஶ்வமித³ம் நாராயண: ய ஏவம் வேத³ ।
இத்யுபநிஷத் ॥
இத்யாத²ர்வணரஹஸ்யே நாராயணோத்தரதாபிநீயே த்³விதீய: க²ண்ட³ ।

தத் த்வம் அஸி விளக்கம்-

June 9, 2025

தத்துவம் என்றால் தத்+த்வம்=அது நீயே.-அது எது? நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள். -த்வம் என்றால்-தேடி அலைந்துகொண்டிருக்கும் நீ-நீ கடவுள் என்பதே தத்துவம் என்பதன் அர்த்தம்-மஹா வாக்கியங்கள்-என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மஹா வாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மஹா வாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
-1. பிரக்ஞானம் ப்ரஹ்மம் – “பிரக்ஞையே(அறிவுணர்வே) ப்ரஹ்மம்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])
-2. அயம் ஆத்மா ப்ரஹ்மம் – “இந்த ஆத்மா ப்ரஹ்மம்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
-3. தத் த்வம் அஸி – “அது(ப்ரஹ்மம்) நீ” (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)
தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது ‘நீ அதுவாக உளாய்’ என்றும் சொல்லலாம்.
-4. அஹம் ப்ரஹ்மாஸ்மி – “நான் ப்ரஹ்மம்” (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்)
-மேலே கூறப்பட்டுள்ள ப்ரஹ்மம்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் ‘ப்ரஹ்மத்தை’க் குறிக்கிறது தமிழில் கடவுள்,இறைவன் என்பதைக் குறிக்கிறது.
இந்த நான்கு மஹா வாக்கியங்களும் ஆத்மனுக்கும் ப்ரஹ்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது.
-சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் ஸ்வேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேத சாஸ்த்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்து விட்டுத் திரும்பும் வாலிபனிடம் “எதனால் கேள்விக் கேட்கப்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ் வுபதேசத்தை குருவிடம் தெரிந்து கொண்டாயா?”என்று கேட்கிறார்.
இதைத் தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்த முடிவாக இதே மஹா வாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.-ஒன்பது எடுத்துக் காட்டுகளில் சில-“எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகி விடுகின்றனவோ, -மற்றும் அவை அந் நிலையில் ‘நான் இது’என்று எங்ஙனம் அறிய மாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம் பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணு மாத்திரமான ஸூஷ்மப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“ஆலம்பழம் ஒன்றைப் பிளந்தால் அணு வடிவான விதைகள் காணப் படுகின்றன. அவ் விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த ஸூஷ்மப் பொருளிலிருந்தே பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கிறது. எது அணு மாத்திரமான ஸூஷ்மப் பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல் பாகத்தையோ நடுப் பாகத்தையோ அடிப் பாகத்தையோ உண்டு பார்த்தால் அது உப்பாகவே யிருப்பது தெரியும். அதே போல் முக் காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணு மாத்திரமான அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்”-“ஒருவனை கண்ணைக் கட்டி காந்தார தேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அப்பரம் பொருளுடன் ஒன்றுபடலாம். அணு மாத்திரமான் அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்.த

தத் தவம் அஸி-இந்த வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்தாபிக்கிறார் ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில். இதன் பொருள் என்ன என்பதை விளக்க சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது

ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.

தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.

வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.

இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.

இதில் உத்தாலகருடைய மகன் ச்வேத கேது குருகுலவாசம் முடிந்து தந்தையிடம் வருகிறான். அவனைப் பார்க்கும்போது எல்லாம் அறிந்தவான் போல் ஒரு பெருமிதம் காணப்படுகிறது. அதைப் பார்த்து உத்தாலகர் கேட்கிறார்.-எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ (ஏக விக்ஞானேன சர்வ விஞ்ஞானம்) அந்த ஞானத்தை அடைந்தாயா என்று,-அவன் அது என்ன என்று கேட்கிறான் . அவன் தந்தை சொல்ல ஆரம்பிக்கிறார். “ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.-தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.-இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.-ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.“ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்’

சௌம்ய– அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே 
ஆஸீத்– இருந்தது 
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது 
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை

அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.-சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது? 
தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார்.-அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது.-அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ 
அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.-அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)-இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.-அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.-இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ச்வேதகேது மேலும் விளக்கத்தைக் கேட்கவே எட்டு உதாரணங்கள் மூலம் அதை விளக்குகிறார்.ஒவ்வொன்றையும் சொல்லி “ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ” என்று முடிக்கிறார்.

1. ஒரு தேநீயானது பல புஷ்பங்களில் இருந்து தேனை சேகரிக்கிறது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த பின் எந்த மலரிலிருந்து எந்த தேன் வந்தது என்று தெரிவதில்லை. எல்லாம் ஒன்றாகவே ஆகிறது.

அதே போல ஜீவ ராசிகள் எப்படி அயர்ந்த தூக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய தனித் தன்மையை அறிய முடியவில்லையோ அது போல முடிவில் பிரம்மத்தில் லயித்து விடுகின்றன,. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.

அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை. 

2.ஆறுகள் சமுத்திரத்தை அடையும் முன் தனித் தனிப் பெயர்கள் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் கடலில் கலந்ததும் அவைகளின் தனித் தன்மை போய் விடுகிறது. கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி எல்லாமே உப்புக்கடலாக மாறிவிடுகிறது. ஆயினும் அவை ஆவியாகி மறுபடி பூமியில் மழையாக சேரும்போது அவைகள் மறுபடி தனித் தனி உருவம் பெறுகின்றன. அதே போல ஜீவராசிகள் பிரம்மத்தில் ஒடுங்கும்போது தனித் தன்மையை இழந்தாலும் மறுபடி ஸ்ருஷ்டியின்போது பழைய நிலையை அடைகின்றன.

3. இந்த மரம் உயிருள்ளவரை தண்ணீர் குடித்து வாழ்கிறது. வேரில் உறிஞ்சிய தண்ணீர் மரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. ஆனால் அதன் ஒரு கிளையை ஒடித்துவிட்டால் அந்த ஒடிக்கப்பட்ட கிளையானது வாடி விடுகிறது. அதாவது அந்தக் கிளையிலிருந்து ஜீவன் போய்விட்டது. மரம் முழுவதுமே வெட்டப்பட்டால் அது மறுபடி துளிர்ப்பதில்லை.

அதே போல இந்த உடலில் ஆத்மாவானது இருக்கும் வரை உடல் உயிருடன் இருக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் உடல் உயிரற்றதாகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது எது உறங்குவதில்லையோ அதுதான் ஆத்மா. அதன் அந்தராத்மாவாக இருப்பது பிரம்மம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உள்ளது.

ஆனால் ச்வேத்கேதுவின் கேள்வி இதல்ல. ஸத் அல்லது பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி சர்வவ்யாபி என்பதை உணர்ந்தாலும் எப்படி அது உலகமாக நாமரூப வடிவில் தோன்றுகிறது என்பதுதான் அவன் சந்தேகம். அதை மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்

4. ஒரு ஆலம்பழத்தை எடுத்து அதைப் பிளந்தால் சிறிய விதைகளைப் பார்க்கிறோம். அதில் ஒரு விதையை எடுத்துப் பிளந்தால் உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. தந்தை கூறினார். இந்த வெற்றிடம் போல் காணப்படுவதில் இருந்துதான் இந்த பெரிய மரம் வளர்கிறது. அதேபோல உருவம் இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் இந்த பிரபஞ்சம் ஸ்தூல உருவில் தோன்றுகிறது,

5. ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டி உப்பைப் போட்டால் அது கரைந்து விடுகிறது. அதில் உப்பு எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா? அது எங்கும் பரவி உள்ளது, அதை உணரலாமே தவிர பார்க்க முடியாது. அதுபோல் பிரம்மம் எங்கும் பரவியுள்ளதானாலும் அதைக் காண இயலாது. ஏனென்றால் அது சர்வாந்தர்யாமியாக பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கமுடியாததாடாக உள்ளது. ஆனால் எவ்வாறு தண்ணீரில் கரைந்த உப்பைக் காண முடியாவிட்டாலும் அதை சாப்பிட்டால் உணரமுடியுமோ அதைப் போல பிரம்மத்தை வேறுவிதமாக அறிய முடியும். எப்படி என்பதை இன்னும் சில உதாரணங்களுடன் விளக்குகிறார்

6. காந்தார தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனை கொள்ளைக்காரர்கள் அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் கண்களைக் கட்டி அவனை ஒரு மனித சஞ்சாரம் அற்ற ஒரு காட்டில் விட்டுவிடுகின்றனர்.

அவன் நான்குதிசைகளிலும் ஓடி என்னைக் கண்ணில் கட்டி இந்த இடத்தில் விட்டுவிட்டனர் என்று கூவுகிறான். அப்போது அதைக் கேட்ட ஏதோ ஒரு நல்ல வழிப்போக்கன் அவன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். திக்கு திசை தெரியாத அவனிடம் காந்தார தேசத்திற்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்கிறான். அதன்படி அவன் அந்த வழியிலே சென்று தன் இருப்பிடத்தை அடைகிறான்.

அதேபோல நாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இந்த உலகத்தில் இருக்கிறோம்.நம்முடைய ஆசைகளே திருடர்கள். அவைகள் நம் அறிவைக் குருடாக்கி உலகம் என்ற காட்டில் அலைய விடுகின்றன.நம்முடைய அறியாமையே நம் கண்களுக்குபோட்ட கட்டு. வழிப்போக்கன் அந்த மனிதனுக்கு உதவினது போல் நம் குரு நமக்கு அறியாமை என்னும் கண்கட்டை அவிழ்த்து நல்ல வழியைக் காட்டுகிறார்.

இந்த உடலில் உள்ளவரைதான் சம்சாரம். பிரம்மஞானத்தை அடைந்து விட்டால் இந்த உடலை விட்டதும் இறைவனிடம் போய் சேர்ந்து விடுவோம் அதாவது வந்த இடத்திற்கே சென்று விடுவோம். இதன் சாராம்சம் பிரம்மத்தை குருமூலம் தான் அடைய முடியும் என்பது.

7. அடுத்த உதாரணம் இறக்கும் நிலையில் உள்ள மனிதனைப் பற்றியது. அந்த நிலையில் “என்னைத்தெரிகிறதா ,” என்று சுற்றி இருக்கும் உறவினர் கேட்கின்றனர். எதுவரை அவனுக்கு தன்னைப் பற்றியும் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் உணர்வு இருக்கும்?

உத்தாலகர் சொல்கிறார். 
‘ எதுவரை வாக்கு மனதில் ஒடுங்கி மனம் பிராணனில் ஒடுங்கி, பிராணன் அக்னியில் ஒடுங்கி, அக்னியும் பரப்ரம்மத்தில் ஒடுங்கவில்லையோ அதுவரை அவனுக்கு பிரக்ஞை இருக்கும். அதற்குப்பிறகு அவன் ஆத்மா அந்தராத்மாவான பிரம்மத்தில் ஒடுங்குகிறது. அந்த பிரம்மமே எல்லா உயிர்கட்கும் ஆத்மா.”

இதை நாம் நடைமுறையில் காணலாம். மரணத்தருவாயில் முதலில் பேச்சு ஒடுங்குகிறது. மனது நினைத்தாலும் பேச முடிவதில்லை. அடுத்ததாக மனம் பிராணனில் ஒடுங்குகிறது. அதாவது மூச்சு மட்டும் இருக்கிறது. பிறகு பிராணன் அக்னியில் ஒடுங்குகிறது என்றால் பிராணன் போய் விட்டபோதும் உடல் உடனே சில்லிடுவதில்லை. ஏனென்றால் பிராணன அக்னியில் ஒடுங்குகிறது. எப்போது அக்னியும் ஆத்மாவில் ஒடுங்குகிறதோ அப்போதுதான் இறப்பு உறுதியாகிறது. அதாவது உடல் குளிர்ந்து போகிறது.

இதில் ஒரு சந்தேகம் எழலாம் . இது எல்லோருக்கும் உள்ளதுதானே ? ஆனால் பிரம்மத்தில் ஒடுங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிறகு ஏன் சில ஜீவர்கள் மறுபடி பிறக்கிறார்கள் சிலர் பிரம்மத்தை அடைந்து முக்தியடைகிறார்கள் ? என்று. இதற்கு பதில் அடுத்ததாக கூறுகிறார்.

8. ஒருவனை அவன் திருடியதாக சந்தேகித்து அழைத்து வருகிறார்கள். அவனை பழுக்கக் காய்ச்சிய கோடரியையைக் கையில் பிடிக்கச் சொல்கிறார்கள். அவன் குற்றவாளி என்றால் அவன் கையில் வெந்து விடும். அப்போது அவனைக் கொன்றுவிடுவார்கள். அவன் நிரபராதி என்றால் அவன் கைக்கு ஒன்றும் ஆகாது. அப்போது அவனை விடுவித்துவிடுவார்கள்.

இது ஒரு வேத கால தண்டனையைக் குறிக்கிறது. 
இது எப்படி ச்வேதகேதுவின் கேள்விக்கு பதிலாகிறது என்று பார்க்கலாம்.

குற்றம் செய்தவன் கோடரியால் தீய்க்கப் படுவது போல அறியாமையால் உலகப் பற்று கொண்ட ஜீவன் பழுக்கக் காய்ந்த கோடரி போன்ற உலகின் தொடர்பால் பிறப்பு இறப்பு என்று துன்புறுகிறது. ஆனால் எவ்வாறு ஒரு நிரபராதியை அந்தக் கோடரி சுடாதோ அதே போல ஒரு ஞானியை இந்த உலகம் பாதிப்பதில்லை. அதனால் மறுபிறப்பில்லை.

அதுவே நீயாக உளாய்’ என்ற வாக்கியத்தில், ‘அது’ என்ற பரம் பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே ‘நீ’ என்ற பிராணி யினிடத்தில் குடி கொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளி விட்டால், ‘அது’வும், ‘நீ’யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.
ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிஷ்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள ‘நீ’ என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம் பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம் பொருளின் ஒர் அம்சமே. ‘இது’ வும் ‘அது’ வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிஷ்ட என்னும் முன்னொட்டு உள்ளது
மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைதம் வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. ‘தத்துவமஸி’ என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, ‘ஸ ஆத்மாதத்துவமஸி’ என்பதை ‘ஸ ஆத்மா + அதத்துவமஸி’ என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் ‘நீ ‘அதத்’, அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்’ என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் ‘அதத்துவமஸி’ என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும்
சுத்தாத்வைதம் -இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்த அம்சம் கிடையாது. அதனால் ‘தத்துவமஸி’ என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, ‘தத்’ என்பது பரம்பொருள். ‘துவம்’ என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்
துவைதாத்வைதம் -இது நிம்பர்க்கரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள ‘பேதத்தில் அபேதம்’, ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத் துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்
அசிந்த்யபேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதா அபேதம் (ஒற்றுமை வேற்றுமைகள்) நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் ‘அது’வும் ‘நீ’யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, மற்றொன்று முடிவில்லாதது. இதற்கு தகுந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்

பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது?

தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய என்கிறார். அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. இதன் மூலம் மேற்கூறிய மூன்று காரணங்களும் பிரம்மமே என்று ஆகிறது.

வேதார்த்த சங்க்ரஹம்-9

அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான்.

எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ர்த்திகேத்யேவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது.

குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,

.இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.

பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.

இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,

எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை

 .பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.

எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.

பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள்.

எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.

சரி ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

வேதார்த்த சங்க்ரஹம்-10

ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

ராமானுஜரின் விளக்கத்தின்படி,

தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய

பிரம்மம் பலவாக ஆக சங்கல்பித்தது.

ஸ்வாம்ச ஏகதேசாதேவ வியதாதி பூதானி ஸ்ருஷ்ட்வா

தன்னுடைய ஒரு அம்சத்தினாலேயே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களை தோற்றுவித்து,

சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை.

அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.

அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)

இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

இப்போது ஜடவஸ்துக்களின் உளதாம் தன்மை (existence) அவற்றின் உள் பிரம்மம் அந்தர்யாமியாக இருப்பதனால் தான் என்று அறிகிறோம்.

இப்போது புலன் உணர்ச்சி கொண்ட உயிர்களும் உலகத்தில்(sentient) உள்ளவைதானே ? அவைகளுக்கும் பிரம்மமே ஜீவனாக இருக்கிறது அல்லவா? அத்தகைய ஜீவராசிகள் பிரம்மத்தின் உடல்லகவும் பிரம்மமே அவைகளின் உயிராகவும் உபநிஷத் வாக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

‘எது ஜீவாத்மாவின் உள் இருந்துகொண்டு அதை நடத்துகிறதோ, எதை ஜீவாத்மா அறியவில்லையோ,எதற்கு ஜீவாத்மா சரீரமாக உள்ளதோ அதுதான் உண்மையானஆத்மா, அந்தர்யாமியாகவும் நித்யமாகவும் இருக்கிறது. அதுதான் ப்ரஹ்மம்.’(brhd.up. 5.7)

அதனால் எல்லாவற்றிற்கும் பிரம்மமே அந்தராத்மா என்று அறிகிறோம். ‘ப்ரம்மாத்மகானி தானி ஸர்வாணி.’

ஆகையால் தேவர், மனுஷ்யர், யக்ஷர், ராக்ஷசர், பசு, ம்ருகம், பக்ஷி, வ்ருக்ஷம், கோடி, கட்டை, கல், புல், பானை, துணி, முதலிய எல்லா சொற்களும் அதனதன் உருவம், குணம் இவைகளால் அவற்றின் மூலமான பிரம்மத்தையே சுட்டுகின்றன.

இதை எளிதாக விளக்கலாம். இது ஒரு பசு என்று சொல்லும்போது நாம் அதன் உருவத்தை மட்டுமா குறிப்பிடுகிறோம்? அதன் குணங்கள், தன்மை மேலும் அதை ஒரு உயிருள்ள ஜந்துவாக அல்லவா காண்கிறோம்?

அதே போல இவன் தான் ராமசாமி அன்று சொல்லும்போது அவன் உருவம் மட்டுமா நம் மனதில் தோன்றுகிறது? அதற்கு அவன் படமே போதும். அவன் யார் எப்படிப்பட்டவன் என்ற எல்லா விஷயங்களும் நம் மனதிற்கு வருகின்றது. மேலும் அவனுடைய தேகத்தைத் தாண்டி அவன் ஒரு உயிருள்ள மனிதன் என்னும்போது தேகம் மனம் புத்தி எல்லாவற்றிற்கும் மேல் அவன் உயிர் அல்லது ஆன்மா என்பது தானே உண்மை. இல்லாவிட்டால் அவன் என்பது போய் அது என்றாகிவிடுமே.

அதனால் பெயர் உருவம் குணம் மற்ற சம்பந்தங்கள் எல்லாவற்றிற்கும் மேல் ஆன்மா என்பதே முக்கியம் ஆகிறது. அந்த ஆன்மாவிற்குள் அந்தராத்மாவாக இருப்பதே பிரம்மம்.

\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே .

,
‘க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ச ஜகத் தஸ்ய சரீரம். ‘

‘அதனால் பிரம்மம்தான் அகில உலகத்துக்கும் ஆத்மா. அகில உலகமும் பிரம்மத்தின் சரீரம் ‘ ‘த்வம்’ என்னும் சப்தத்தால் கூறப்படும் ‘நீ’ பிரம்மத்தினுடைய படிவமே. இதனால் எல்லாம் பிரம்மத்தையே ஆத்மாவாகக் கொண்டவை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

‘தத் த்வம் அஸி’ என்ற மஹாவாக்கியத்தின் பொருள், நீ என்ற ஜீவன் உன் அந்தராத்மாவான பிரம்மமே என்பது.

இந்த சரீர சரீரி பாவம்அதாவது பிரம்மம் தான் ஆத்மா ஜீவன் , ஜகத் இவை அதன் உடல் என்பதை பின்னும் விவரிக்கிறார் . அதைப் பின்னர் காண்போம்.

வேதார்த்த சங்க்ரஹம் -11

எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது ப்ரம்மமே என்பதனால் எப்படி ஒருவரின் பெயர் அவருடைய உடலை மட்டும் குறிக்காமல அவருடைய ஆத்மாவை குறிக்குமோ அதுபோல எந்தப் பொருளை குறிப்பிட்டாலும் அது பிரம்மத்தையே குறிக்கிறது.

இது எப்படி என்றால் இப்போது ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா போய்விட்டார் என்று சொல்கிறோம். அப்பா என்ற சொல் அவர் உடலை அல்ல அவர் ஆத்மாவைக் குறிக்கிறது என்று தெரிகிறது. அதே போல இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக உள்ள பிரம்மம்தான் எல்லாவற்றினாலும் குறிக்கப்படுகிறது.

‘யஸ்ய ஆத்மா சரீரம்’ என்ற உபநிஷத் வாக்கியமும் இதைத்தான் கூறுகிறது. அதனால் ‘ப்ரம்மாத்மகானி சர்வாணி’ எல்லாவிதமான உயிருல் உயிரில்லாத வஸ்துக்களும் பிரம்மத்திற்கு சரீரமாகவும் பிரம்மமே அவற்றின் ஆத்மாவாகவும் இருக்கிறது. அதனால் சொற்களின் மூலம் அறியப்படுவது எல்லாம் முடிவில் பிரம்மத்தையே சுட்டுகின்றன.

‘.ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்’ என்ற சாந்தோக்ய உபநிஷத் விளக்கத்தில் பிரம்மமே ஜகத்காரணம் என்று பார்த்தோம். அதற்குப்பிறகு ‘ஸந்மூலா: ஸௌம்ய இமா: ஸர்வா: பிரஜா: ஸதாயதனதா: ஸத்ப்ரதிஷ்டா:’ (சாந்தோக்ய-6.8., 4-6), இவை எல்லாம் ஸத், அதாவது பிரம்மத்தில் இருந்து தோன்றின, பிரம்மத்தில் இருக்கின்றன, பிரம்மத்தால் நிலைநிறுத்தப் படுகின்றன , என்ற வாக்கியம் காணலாம். 
எப்படி உடலுக்கு உயிர் காரணமோ , உயிரினால் உடல் வாழ்கிறதோ , உயிர் உடலை தாங்குகிறதோ அதேபோல பிரம்மம் இந்த உலகத்திற்கு உயிர் அல்லது ஆத்மாவாக இருக்கிறது,

எப்படி உடல் உயிரின் உடைமையோ அதே போல உலகம் பிரம்மனின் உடைமை. 
ராமானுஜர் மேலும் சொல்கிறார்

‘ஏதத் ஆத்ம்யம் இதம் ஸர்வம் தத் சத்யம்’ என்ற வாக்கியம் ‘தத் தவம் அஸி’ என்பதற்கு முன்பு காணப்படுகிறது. இதன் பொருள், பிரம்மம் ஜகத் காரணம் என்பதனால் இந்த உலகம் உண்மை ஏனென்றால் பிரம்மமே அதன் அந்தராத்மாவாக இருக்கிறது. பிறகு ‘தத் தவம் அஸி’ அந்த பிரம்மம்தான் உண்மையில் நீ என்று சொல்லப்படுகிறது.

க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ஜகத் தஸ்யசரீரம். அதாவது பிரம்மம் அகில உலகத்திற்கும் ஆத்மாவாக உள்ளது. அகில உலகமும் அதன் சரீரம்.

அதனால் தத் அந்த பிரம்மம் த்வம் அஸி நீதான். எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக் குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

தத் த்வம் அஸி என்பது ஏன் பிரம்மஜீவ ஐக்யத்தைக் குறிப்பதாக இருக்கக் கூடாது? ஏன் சரீர சரீரி பாவத்தை கொண்டுவரவேண்டும்

முதல் ஆறு அத்தியாயங்களும்  த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை, அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம் அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது  தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்

ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம் எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம்வெறும் பெயரளவில்  என்றும் கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில் அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப் பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றன” என்று யோகேஸ்வரன்  உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

May 12, 2025

1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
-ஶ்லோகம் 18 –)

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
||-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

(ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

பரமாத்மாவே தஹராகாஸம்
ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
:-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

(கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

(மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

நாம் அறியாத செல்வம்
தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

(உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறா)

றி2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
க₃தி சப்₃தா₃ப்₄யாம்
– “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
(தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
“எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
அஸ்ய-
இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
அதாவது
“இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
ஸமுத்பத்₃யந்தே )
அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
இதர பராமர்சாத் ஸ:
-பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
) அதாவது
“இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

————–

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
உத்தராத் சேத்
– “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
9-அநுக்ருதே : தஸ்ய ச –
தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
தகர -சிறிய இடைவெளி –

தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
॥ 8.1.5॥

அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
॥ 8.1.6॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

—————————————

காண்டம்1

இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
சங்கல்பத்தாலே அனைத்தும்
ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.6॥

அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.8॥

அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

—————

காண்டம்2

இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாத்து. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அவைகள் 1.       பாவமற்றது, 2.       வயதற்றது, 3.      மரணமற்றது, 4.       துயரமற்றது, 5.      பசியற்றது, 6.       தாகமற்றது, 7.       நிறைவேறுகின்ற ஆசை,8.       நிறைவேறுகின்ற சங்கல்பம்

ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———

காண்டம்-3

ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:

நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை.அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை, மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)

ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)

ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்

அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு

பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக

உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து

ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே

அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)

அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்

சத்யம் – உண்மை பேசுதல்

சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்

சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
ப⁴வதி ॥ 8.4.3॥

சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————

காண்டம்4

அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர். 

சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
॥ 8.5.1॥

அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்5

பிரம்மசர்ய சாதனையின் பெருமை

  •        குருவுக்கு சேவை செய்தல்
  •          வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
  •          குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
  •          எளிமையான வாழ்க்கை வாழ்தல்
  •          சிற்றின்பத்தை துறத்தல்

இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்

இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்

ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.

மௌனம்       – இதனால் அடையும் பலன்

அநாஸகாயனம் – உபவாசம்

அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
॥ 8.6.1॥

அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
॥ 8.6.2॥

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
॥ 8.6.4॥

அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

——————

காண்டம்6

சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  sUriyaninசூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
॥ 8.7.2॥

தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
॥ 8.7.4॥

-32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————

காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)

         ஞானி என்பவர் யார்?

         எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?

         ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?

         எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?

         ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

ஸ்லோகம்-1

மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

       ஆத்ம ஸ்வரூபம்

       ஞானத்தை அடையும் வழி

       ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது

விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது

விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது

விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது

விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது

அபிபாக – தாகமுமில்லை.

எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்

1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

ஸ்லோகம்-2

வித்யாkk க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார். கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?

பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
॥ 8.8.4॥

தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————

காண்டம்-‍8

தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்

ப்ரோவாசா – உபதேசம் செய்தல்

பரிசர்ய – காக்கப்படவேண்டும்- to take care of

இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
மீண்டும் -32-வருஷம்
ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.9.3॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்-‍9

ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்

தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்

தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்

நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

இந்திரனின் விசாரங்கள்:

இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.

தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)

தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
॥ 8.10.3॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.10.4॥

அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்-‍10

எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது. 

குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.  

தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் – ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.

தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.

ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
॥ 8.11.2॥

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

—————

காண்டம்-‍11

எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

————

காண்டம்-‍12

சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொருக்ஷணமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

ஆத்ம-சரீர சம்பந்தம்:

இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.

2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

சரீர அபிமான பலன்:

சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

கேள்வி-1

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?

பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம். சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

கேள்வி-2

ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?

குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்

ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா. இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்

மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

———————

காண்டம்-‍13 (பிரார்த்தனை)

ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

காண்டம்-‍14

ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

————————

இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

——————————————-

காண்டம்-‍15

பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்

2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்

3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.

4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.

5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥

॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

ஓம் தத் ஸத்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ புருஷ ஸூக்த வ்யாக்யானம்‌-ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்–

April 15, 2025

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌, துருவன்‌ பரந்தாமனை ஸ்தோத்திரம்‌ செய்‌யும்‌ ப்ரகரணத்தில்‌, புருஷ ஸூக்த மந்த்ரங்களை அனுஸரித்து ஸ்தோத்‌ரம்‌ செய்வதாகக்‌ காணப்படுகிறது. அவ்விடத்தில்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரும்‌, “எங்களாழ்வான்‌ *” என்று கீர்த்தி பெற்றவருமான ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌. விசேஷமாக வியாக்யானம்‌ செய்திருக்கிறார்‌.
அதை அனுஸரித்து செய்தருளிய வியாக்யானம்‌ –

“யோநூசாந த்‌,விஜம்‌ க,த்வா ஹதவாந்‌ அர்.த்த,லோப,த: | ஸ படேத்‌ பெளருஷம்‌ ஸூக்தம்‌ ஜலஸ்த்த,: சிந்தயங்‌ ஹரிம்‌ |”-எவனொருவன்‌ ஸாங்கமாக வேதாத்யனம்‌ செய்த ப்ராஹ்மணனை அடைந்து, பணப் பேயாட்பட்டு. அவனைக்‌ கொன்றானோ, அவன்‌ ஜலத்தில்‌ நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷஸு9க்தத்தைப்‌ படிக்கக் கடவன்‌.] என்றும்‌,
“ஜப்த்வாத, பெளருஷம்‌ ஸூக்தம்‌ முச்யதே கு,ருதல்பக_:’”[குரு பத்தியுடன்‌ சேர்ந்தவன்‌ புருஷ ஸூக்தத்தை ஜபித்து, அந்த மஹா பாபத்தினின்றும்‌ விடுபடுகிறான்‌.] என்றும்‌,
“ப்‌, ரஹ்ம யஜ்ஜஞே த்‌,விஐ: ஸூக்தம்‌ பெளருஷம்‌ சிந்தயந்‌ ஹரிம்‌ |
ஸ ஸர்வாந்‌ ஜபதே வேதாந்‌ ஸாங்க உபாங்காந்‌ த்‌;விஜோத்தம: lI”

[தினந் தோறும்‌ செய்ய வேண்டிய பஞ்ச மஹா யஜ்ஞத்தில்‌ ஒன்றான
ப்ரஹ்ம யஜ்ஞத்தில்‌ ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்‌தைப்‌ படிக்கும்‌ பிராம்மணன்‌ ஸாங்கோபாங்கமான எல்லா வேதங்‌களையும்‌ ஐபித்தவனாகிறான்‌.] என்றும்‌ பெரியோர்கள்‌ இதன்‌ பெருமையைப்‌ பேசி யிருக்கிறார்கள்‌. – செளநக பகவானும்‌ புருஷ
ஸூுக்தத்தின்‌ ருக்குகளினால்‌ ஸ்ரீமன் நாராயணனை ஆராதனம்‌ பண்ண வேண்டுமென்று உபதேசித்து,“ அர்ச்சிதம்‌ ஸ்யாத்‌ ஜக,தி;தம்‌’”என்று அதனால்‌ ஸகல லோகங்களையும்‌ ஆராதனம்‌ செய்யப் பட்டதாகிறது என்றும்‌ வெளியிட்டிருக்கிறார்‌.-மேலும்‌, “புருஷ ஸூக்தத்தின்‌ ருக்குகளைக் கொண்டு நெய்யினால்‌ அக்னியில்‌ ஹோமம்‌ செய்பவன்‌
ஸம்ஸாரத்துக்குக்‌ காரணமான பாபங்களை விட்டு மோக்ஷத்தை அடைவான்‌”’ என்றும்‌, ஜகத் காரணனாய்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்‌, ஸகல கல்யாண குண பூர்ணனாய்‌, தேவாதி தேவனாயிருக்கிற ஸ்ரீமந் நாராயணனை, புருஷ ஸுூ9க்தத்தினால்‌ : தியானம்‌ செய்பவன்‌ மோக்ஷத்தை யடைந்து, “ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌
ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா””
[முக்தி யடைந்தவன்‌, ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ கூட அவனுடைய ஸகல கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌] என்றபடி ப்ரம்மாநந்தத்தை அடைகிறான்‌ என்றும்‌ இதன்‌ மஹிமை விஸ்தாரமாக வெளியிடப் பட்டிருக்கிறது.

——————–

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

———

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
[புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.
“ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
[“ஸஹஸ்ர சீர்ஷா””
என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.
(ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.

பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌
‘சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.
(ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
(இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
காணா கண்‌ கேளா செவி,-
என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

(புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
“ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

[பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
“யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

[ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

(ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
(பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌. (தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌
என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

———-

2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

(புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
“இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. “யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌,
ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.
(யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”*
என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முத லியஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது. இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படு கின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

[புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

———-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
3-
[இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

(ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய
மஹிமா?…
) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
**யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.
(பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌ “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
[அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

————-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌
ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

(த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
(உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
(அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
(இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
(ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் -புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

————

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
–5-
[அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
[(“தஸ்மாத்‌ விராட்‌…
” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. (விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ “அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதி புருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

——————

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
[தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
“யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
[யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது. பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. (யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி
கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது. முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
[பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த
ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட்ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”]=இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌
பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
“*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

————

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறுதண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன. இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌. (த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌
அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன. (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகியயூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிர மனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

————

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
[முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌
பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌. (புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய
ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌. எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌
என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலையுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

———–

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
[ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற
மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது. “ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான
வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

————

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
[எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

———–

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
[அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு
சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

—————

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌
எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

————

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணான்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப்படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்க ளெல்லாவற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌ தார் . (பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌. இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌
போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌.. “ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌. இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌. போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே. பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌
உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

————-

சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
[மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. (சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌. (சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே. (ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

———-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
15-
[நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது) தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

———–

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
16-
[எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லு
கின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌
மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை. இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-(மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

————-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
[எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.
“யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று
பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

—————–

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது. (யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

————-

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. (ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌ ‘விஸ்வகர்மா’ முதலிய சப்தங்கள்‌ நாராயணனையே குறிக்கின்றன வென்று அறிகிறோம்‌. (தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

——–

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
“அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌
16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

———-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌. (கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய
ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த
படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

(அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
*ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

(தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

———–

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
–4-
[எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.
(யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌. (பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம:
என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌
. இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

———–

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

[பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய
ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
“*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

————–

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-(தே): உமக்கு.-

  1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
  2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
  3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
  4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
  5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
  6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
  7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
  8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
  9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
  10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
  11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
  12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
  13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
    14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
  14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

(லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

(ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

(பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
**யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

“லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

(அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
“சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

“ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

(நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது. (இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே'” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா,
ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண-யஜுர்-வேதத்தில் உள்ள ஸ்ரீ மஹா நாராயண உபநிஷத்

February 3, 2025

சுவாமி விமலானந்தரால் மொழிபெயர்க்கப்பட்டது
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது, சென்னை

ஹரி ஓம்! மித்ரா, வருணன், ஆரியமன், இந்திரன், பிருஹஸ்பதி
மற்றும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் விஷ்ணு நமக்கு அருள் புரியட்டும்
, மேலும் எங்களுக்கு நலத்தையும் பேரின்பத்தையும் வழங்குவாயாக.
நான் பிரம்மனை பயபக்தியுடன் வணங்குகிறேன்.
ஓ வாயுவே, நான் உன்னை வணங்குகிறேன்.
நீ மெய்யாகவே உணரக்கூடிய பிரம்மன்.
நான் அறிவிப்பேன்: நீங்கள் சொல்வது சரிதான்.
நீயே உண்மையும் நல்லவனும்.
வாயு என்று போற்றப்படும் அந்த உன்னதமானவன் என்னைக் காப்பாற்றட்டும்.
அவர் ஆசிரியரைக் காப்பாற்றட்டும்.
என்னை, அவர் பாதுகாக்கட்டும்; என் ஆசிரியரே, அவர் பாதுகாக்கட்டும்.
ஓம்! அவர் நம் இருவரையும் ஒன்றாகக் காப்பார்; அவர் நம் இருவரையும் ஒன்றாகப் போஷிப்பாராக;
நாம் மிகுந்த ஆற்றலுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்,
எங்கள் படிப்பு தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்;
நாம் பரஸ்பரம் தகராறு செய்யாமல் இருக்கலாம் (அல்லது யாரையும் வெறுக்காமல் இருக்கலாம்).
ஓம்! என்னில் அமைதி நிலவட்டும்!
என் சூழலில் அமைதி நிலவட்டும்!
என் மீது செயல்படும் சக்திகளில் அமைதி நிலவட்டும்!

I-1: சிருஷ்டியின் இறைவன், கரையில்லாத நீரில், பூமியில் மற்றும் வானத்திற்கு மேலே இருக்கிறவனும், பெரியதை விடப் பெரியவனும், விதை வடிவில் உயிரினங்களின் ஒளிரும் புத்திசாலித்தனத்தில் நுழைந்து, கருவில் (வளரும். பிறக்கும் உயிருக்குள்).

I-2: இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஒன்றாக இருப்பது மற்றும் அது கரைகிறது. எல்லா தெய்வங்களும் அந்தந்த சக்திகளை அனுபவித்துக்கொண்டே இருக்கின்றன – அது நிச்சயமாக கடந்த காலத்தில் இருந்தவை மற்றும் எதிர்காலத்தில் உண்மையில் வரவுள்ளன. பிரபஞ்சத்தின் இந்த காரணமான பிரஜாபதி, முழுமையான ஈதர் என விவரிக்கப்படும் அவரது சொந்த அழியாத தன்மையால் ஆதரிக்கப்படுகிறது.

I-3: வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள இடைவெளியும், வானமும் பூமியும் யாரால் சூழப்பட்டுள்ளன. எவரால் சூரியன் வெப்பத்தால் எரிந்து ஒளியைக் கொடுக்கிறதோ, எவரால் முனிவர்கள் தங்கள் இதயத்தின் ஈதரில் (தியானத்தின் சரத்தால்) பிணைக்கிறார்களோ, அவரில் – அழியாதவர் – அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன.

I-4-5: உலகத்தின் சிருஷ்டியான பிரகிருதி யாரிடமிருந்து பிறந்தது, நீர் போன்ற உறுப்புகளிலிருந்து உலகில் உயிரினங்களைப் படைத்தவன், மூலிகைகள், நாற்கரங்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட உயிரினங்களுக்குள் நுழைந்தவன், யார் பெரியவர். பெரியவர்களை விட, ஒரு நொடி இல்லாதவர், அழியாதவர், எல்லையற்ற வடிவங்கள் கொண்டவர், பிரபஞ்சம் யார், பழமையானவர், இருளுக்கு அப்பால் இருப்பவர் அல்லது பிரகிருதி மற்றும் உயர்ந்ததை விட உயர்ந்தவர் – அவரைத் தவிர, அல்லது நுட்பமான வேறு எதுவும் இல்லை.

I-6: முனிவர்கள் அறிவிக்கிறார்கள்: அதுவே சரி, அதுவே உண்மை: அதுவே ஞானிகளால் சிந்திக்கப்படும் மரியாதைக்குரிய பிரம்மம். வழிபாட்டுச் செயல்கள் மற்றும் சமூகப் பயன்களும் கூட அந்த உண்மைதான். அதுவே பிரபஞ்சத்தின் தொப்புளாக இருப்பதால், கடந்த காலத்தில் தோன்றிய பிரபஞ்சத்தை பன்மடங்கு நிலைநிறுத்துகிறது.

I-7: அதுவே நெருப்பு: அதுவே காற்று; அது சூரியன்; அது உண்மையில் சந்திரன்; அதுவே பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் அம்ப்ரோசியா. அதுதான் உணவு; அதுவே நீர் மற்றும் அவர் உயிரினங்களின் இறைவன்.

I-8-9: நிமிஷங்கள், காலங்கள், முஹூர்த்தங்கள், காஷ்டங்கள், நாட்கள், அரை மாதங்கள், மாதங்கள் மற்றும் பருவங்கள் அனைத்தும் சுய-ஒளிவான நபரிடமிருந்து பிறந்தன. ஆண்டும் அவரிடமிருந்து பிறந்தது. அவர் தண்ணீரைப் பால் கொடுத்தார், மேலும் வானமும் வானமும்.

I-10: இந்த பரமாத்மாவின் மேல்நோக்கிய வரம்பையோ, குறுக்கே உள்ள வரம்பையோ, அவரது நடுப் பகுதியையோ எந்த ஒரு நபரும் புரிந்து கொள்ளவில்லை. அவரது இயல்பை யாரும் வரையறுக்காததால் அவரது பெயர் ‘பெரிய மகிமை’.

I-11: அவரது வடிவம் பார்க்கப்படக்கூடாது; அவரைக் கண்ணால் பார்க்கும் எவரும் இல்லை. மனம் சிதறாமல், உள்ளத்தில் நிலைபெற்று அவரைத் தியானிப்பவர்கள் அவரை அறிவர்; அவர்கள் அழியாதவர்களாக மாறுகிறார்கள்.

[பரமாத்மா-சூக்தம் அல்லது ஹிரண்யகர்ப-சூக்தம் – யஜுர்-வேத-சம்ஹிதையிலிருந்து:
1. பிரபஞ்சம் விஸ்வகர்மனிடமிருந்து நீர், பூமி, நெருப்பு மற்றும் பிற கூறுகள் மூலம் எழுந்தது. அவர் ஆதித்யன், இந்திரன் மற்றும் பிற கடவுள்களை மிஞ்சினார். த்வஸ்தா எனப்படும் சூரியன் காலையில் உதயமாகி அவனது பிரகாசத்தை வெளிப்படுத்துகிறான். சிருஷ்டியின் தொடக்கத்தில் இருள் சூழ்ந்திருந்த அழிந்த உலகம் பரமாத்மாவின் மகிமையில் பிரகாசிக்கும் சூரியனிடமிருந்து தெய்வீகப் பிரகாசத்தைப் பெற்றது.
2. அறியாமைக்கும் இருளுக்கும் அப்பாற்பட்டவனும், சூரியனுடைய மகிமைக்கு நிகரான மகிமையும் உடையவனுமான இந்தப் பெரியவரை நான் அறிவேன். இவ்வுலகில் அவரை அறிந்தால், ஒருவன் மரணத்தைக் கடந்தான். விடுதலையை அடைவதற்கு வேறு பாதை இல்லை.
3. சிருஷ்டிகளின் அதிபதியான சூரியன் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட இடைவெளியில் இரவும் பகலும் உண்டாக்குகிறது. அவர் பிறக்காதவராக இருந்தாலும், எல்லாவற்றிலும் சுயமாக இருந்தாலும், அவர் பன்முகப் பிரபஞ்சமாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை, எங்கும் நிறைந்த பரமாத்மாவை உணர்கிறார்கள். முதல் பித்ருக்களான பிரஜாபதி, மரிச்சி மற்றும் பிற முனிவர்கள் அடைந்த பதவியை நாடினார்.
4. பரபிரம்மனின் மகனும், தேவர்களின் நன்மைக்காகப் பிரகாசிப்பவரும், தேவர்களுக்கு அருளும் தலைவனாகப் போற்றப்படுபவனும், தேவர்களுள் மூத்தவனுமாகப் பிறந்தவனுமான சூரிய பகவானுக்கு நமஸ்காரம்.
5. தேவர்கள் பிரம்மத்தைப் பற்றிய அறிவை ஏற்படுத்தியபோது, ​​பரம யதார்த்தத்தைப் பற்றி இவ்வாறு போதிப்பதாக அறிவித்தனர். – முன் விவரித்தபடி பரமாத்மாவை அறிந்த அந்த முனிவர் எல்லாருக்கும் உள்ளான ஆன்மாவாகிவிட்டதால், கடவுள்களின் மீது இறையாண்மையைப் பெறுவார்.
6. ஓ சூரியன், ஹ்ரி மற்றும் லக்ஷ்மி உனது மனைவிகள், நீயே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன். இரவும் பகலும் உனது இரு பக்கங்கள். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் உங்கள் சொந்த வடிவம். அஷ்வின்கள் உங்கள் வாய். அப்படி இருப்பதால், நான் விரும்புவதையும், ஆன்மீக ஒளியையும், மகிழ்ச்சியையும் மற்றும் பிற விருப்பப் பொருட்களையும் எனக்குக் கொடுங்கள்.]

[ஹிரண்யகர்ப்ப துதி – தைத்திரிய-சம்ஹிதை IV-1-8 இலிருந்து:
1. ஒளிமயமான பிரஜாபதி, படைப்பின் தொடக்கத்தில் மாயாவின் சக்தியுடன் கூடிய உன்னத சக்தியிலிருந்து பிறந்தார். அவர் பிறந்த பின்னர் அனைத்து உயிரினங்களையும் ஒரே ஆதரிப்பவராகவும் போஷிப்பவராகவும் ஆனார். அதே பரமாத்மா, இங்கே ஹிரண்யகர்பா என்று குறிப்பிடப்படுகிறார், பூமியையும் வானத்தையும் ஆதரிக்கிறார். பேரின்ப குணம் கொண்டவர் அல்லது யாருடைய குணாதிசயங்கள் விசாரிக்கப்பட முடியாதாரோ, அந்த பிரகாசிக்கிறவனை காணிக்கையுடன் வழிபடுவோம்.
2. பூமியில் வாழும் மற்றும் இருக்கும் அனைத்து உயிரினங்களின் இறையாண்மை ஆட்சியாளர் ஆனார்; பூமியில் உள்ள அனைத்து இரு கால்கள் மற்றும் நாற்கரங்களை உள்ளிழுக்கும் ஆவியாகக் கட்டுப்படுத்துபவர்;
3. சுயத்தை வழங்குபவர் யார் (உண்மையில் அனைத்து சுயங்களும் அவரே); (உணவின் மூலம் ஊட்டமளிப்பவராக) வலிமை அளிப்பவர்; யாருடைய கட்டளையை கடவுள்கள் கூட பெற ஆர்வமாக உள்ளனர்; அழியாமையும் மரணமும் நிழலைப் போல் கீழ்ப்படிகின்றன;
4. யாருடைய மகிமையை மலைகளும், இமயமலைகளும் மற்றவைகளும் அறிவிக்கின்றன; நதிகளுடன் கூடிய பெருங்கடல் யாருடைய பெருமையை பறைசாற்றுகிறது; நீதி வழங்குவதில் ஈடுபட்டுள்ள கைகளை எட்டு திசைகளையும் ஒப்பிடலாம்;
5. வானமும் பூமியும் ஆகிய இரு தெய்வங்கள் ஒளியால் பிரகாசிக்கின்றன, உலகத்தின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டவை யாரை மனதின் மூலம் தங்கள் மகத்துவத்தின் ஆதாரமாகக் கருதுகின்றன; சூரியன் உதயமான பிறகு மகிமையுடன் நகரும் யாரால் ஆதரிக்கப்படுகிறது;
6. இவரால் வலிமைமிக்க வானமும் நிலப்பகுதியும் உறுதியாக்கப்பட்டன; யாரால் பேரின்ப சொர்க்கம் புண்ணியவான்களுக்கு வழங்கப்பட்டது, யாரால் நல்லொழுக்கமுள்ளவர்களுக்கு விடுதலை நியமிக்கப்பட்டது; நடுப்பகுதியில் ராஜஸ படைப்பை உருவாக்கியவர்;
7. யாருடைய சக்தியின் மூலம் பெரிய காரணமான நீர் தனக்குள்ளேயே விரிவடையும் சக்தியும், நெருப்பை உற்பத்தி செய்யும் திறனும் தன்னை உலக வடிவமாக மாற்றிக்கொண்டதோ, அவரிடமிருந்து அனைத்து கடவுள்களின் ஒரே சுவாசம் உருவானது;
8. யார் – ஹிரண்யகர்ப்பன் – நெருப்பை உண்டாக்கும் மற்றும் வேத வழிபாட்டுச் செயல்களை ஆதரிக்கும் நீர்களைப் பார்த்தார் (அத்தகைய ஆற்றலைக் கொடுப்பதற்காக); மற்ற

அனைத்தையும் ஆளும் ஒரே கடவுள். தொடக்கத்தில் ஹிரண்யகர்ப்பனாகப் பிறந்த அவர் உண்மையில் பிரபஞ்சத்தின் உள்ளேயே கர்ப்பமாக இருக்கிறார். அவர் ஒருவரே படைப்பின் பன்மடங்கு உலகம் இப்போது உருவாகி, இன்னும் வரவிருக்கும் படைப்பு உலகின் பிறப்பை ஏற்படுத்துகிறார். எங்கும் முகம் கொண்டவராக, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்தும் உள்ளார்ந்த சுயமாக அவர் வாழ்கிறார்.

I-13: சுய-ஒளிரும் நிஜம் ஒரு நொடி இல்லாமல் ஒன்று மற்றும் வானத்தையும் பூமியையும் உருவாக்குகிறது. (அவராலேயே பிரபஞ்சத்தைப் படைத்து, தானே இருந்து.) பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து உயிரினங்களின் கண்கள், முகம், கைகள், கால்கள் ஆகியவற்றை உடையவராக ஆனார். அவை அனைத்தையும் அவர் தர்மம் மற்றும் அதர்மம் (தகுதி மற்றும் குறைபாடு) மூலம் கட்டுப்படுத்துகிறார், இது அவரது இரு கைகளாகவும், பிரபஞ்சத்தின் கூறுகளாகவும் குறிப்பிடப்படுகிறது, அவை ஆத்மாக்களுக்கு பதற்றம் அல்லது கால்கள் என குறிப்பிடப்படும் பொருள் உருவகத்தை வழங்கியுள்ளன.

I-14-15: இந்தப் பிரபஞ்சம் யாரில் உருவாகி அது உள்வாங்கப்படுகிறதோ அவர்; படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் வார்ப் மற்றும் வூஃப் என இருப்பவர்; எவரால் மூன்று நிலைகள் (விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம்) உயிரினங்களில் மறைந்திருக்கும் புத்தியில் நியமிக்கப்படுகின்றன; எவரில் பிரபஞ்சம் ஒரே இளைப்பாறுதலைக் காண்கிறதோ – அந்த பரமாத்மாவைக் கண்டு, வேணன் என்ற கந்தர்வன், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவனாக மாறி, (முதல்முறையாகத் தன் சீடர்களுக்கு) அந்த யதார்த்தத்தை அழியாதவன் என்று அறிவித்தான். எங்கும் நிறைந்தவன் என்பதை அறிந்தவன், தன் சொந்த தந்தையிடமிருந்தும் தந்தைக்கு உரிய மரியாதையைப் பெறத் தகுதியானவனாகிறான்.

I-16: யாருடைய சக்தியின் மூலம் சொர்க்கத்தின் மூன்றாம் பகுதியில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்த தேவர்களுக்கு அந்தந்த இடங்கள் ஒதுக்கப்பட்டனவோ, அவரே நமது நண்பர், தந்தை மற்றும் ஆணையாளர். படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் அவர் புரிந்துகொள்வதால் ஒவ்வொன்றின் சரியான இடங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.

I-17: அவர்கள் (அதாவது உயர்ந்த இறைவனுடன் தங்கள் அடையாளத்தை உணர்ந்தவர்கள்) உடனடியாக வானத்திலும் பூமியிலும் பரவினர். அவை மற்ற உலகங்களிலும், சொர்க்கத்தின் காலாண்டுகளிலும், சுவர்லோகம் எனப்படும் சொர்க்கப் பகுதியிலும் பரவுகின்றன. சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் எவரேனும் ரீட்டா அல்லது ‘உண்மை’ என்று பெயரிடப்பட்ட அந்த பிரம்மனை, ஒரு துணியின் நூல் போல இடைவிடாமல், மனதில் தியானிப்பதன் மூலம் படைப்பில் வியாபித்திருப்பதைக் காண்கிறாரோ, அவர் உண்மையிலேயே அதுவாக மாறுகிறார்.

I-18: உலகங்கள் மற்றும் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் அனைத்து காலாண்டுகள் மற்றும் இடைப்பட்ட பகுதிகளிலும் வியாபித்து, பிரஜாபதி அல்லது ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் பிரம்மனின் முதல் பிறந்தவர் பரமாத்மாவாக, தனிப்பட்ட ஆத்மாக்களின் ஆட்சியாளராகவும் பாதுகாவலராகவும் ஆனார்.

I-19: இந்திரனுக்கும் என் சுயத்துக்கும் பிரியமானவனும், பேராசைக்கு உரியவனும், வணக்கத்திற்கு உரியவனும், அறிவுச் சக்திகளை அளிப்பவனுமான பிரபஞ்சத்தின் வெளிப்படாத காரணத்தின் அற்புதமான சிறந்த இறைவனை அடைய நான் பிரார்த்திக்கிறேன். .

I-20: ஓ ஜாதவேதாஸ், என்னுடன் தொடர்புடைய பாவங்களை அழிக்கும் வகையில் பிரகாசமாக பிரகாசிக்கவும். கால்நடைகள் உட்பட பல்வேறு வகையான இன்பங்களை எனக்கு கொடுங்கள். எனக்கு வாழ்வாதாரத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து, எந்தத் திசையிலும் எனக்குப் பொருத்தமான வசிப்பிடத்தை ஏற்படுத்துவாயாக.

I-21: ஓ ஜாதவேதரே, உமது அருளால் எங்கள் பசுக்கள், குதிரைகள், மனிதர்கள் மற்றும் உலகில் உள்ள பிற பொருட்களை தீயவன் கொல்லக்கூடாது. ஓ நெருப்பே, ஆயுதங்களை உன் கையில் பிடிக்காமல், உன் மனதில் எங்கள் குற்றங்களைப் பற்றிய எண்ணங்கள் இல்லாமல் எங்களுக்கு ஆதரவாக வா. எல்லாப் பக்கங்களிலும் என்னைச் செல்வத்துடன் இணைத்துவிடு.

I-22: நாம் உன்னதமான நபரை அறிந்துகொள்வோமாக, அவருடைய அறிவை அடைவதற்காக ஆயிரம் கண்கள் கொண்ட பெரிய கடவுளாகிய அவரை தியானிப்போம். அறிவைத் தருபவரான ருத்திரன், அத்தகைய தியானத்திற்கு நம்மைத் தூண்டி, அதில் நம்மை வைத்திருக்கட்டும்.

I-23: பரம புருஷனை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லது உணரலாம். அதற்காக நாம் மகாதேவனைத் தியானிப்போம், அந்தத் தியானத்திற்கு ருத்திரன் நம்மைத் தூண்டலாம்.

I-24: நாம் உன்னதமான நபரை அறிவோம். அதற்காக வக்ரதுண்டாவை தியானிப்போம். டான்டின் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-25: தெய்வீக நபரை நாம் அறிவோம். அதற்கு நாம் சக்ரதுண்டாவை தியானிப்போம். நந்தி நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-26: அந்த தெய்வீக நபரை நாம் அறிவோம். அதற்காக மகாசேனனை தியானிப்போம். சண்முகர் நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-27: அந்த தெய்வீக நபரை நாம் அறிவோம். அதற்கு சுவர்ணபக்ஷ தியானம் செய்யலாம். கருடன் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-28: நான்கு முக பிரம்மமாகத் திகழ்ந்த வேதத்தை அறிவோம். அதற்காக ஹிரண்யகர்ப்பனை தியானிப்போம். பிரம்மன் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-29: நாம் நாராயணனை அறியலாம். அதற்காக வாசுதேவரை தியானிப்போம். அதை நோக்கி விஷ்ணு நம்மைத் தூண்டட்டும்.

-30: வஜ்ரநாகாவை நாம் அறியலாம். அதற்காக நாம் திக்ஷ்ணதாம்ஸ்திரத்தை தியானிப்போம். நரசிம்மர் அதை நோக்கி நம்மைத் தூண்டட்டும்.

I-31: பாஸ்கரை நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்காக, பேரொளியை உற்பத்தி செய்பவரைத் தியானிப்போம். அதை நோக்கி ஆதித்யா நம்மைத் தூண்டட்டும்.

I-32: வைஷ்வாணரை நாம் அறியலாம். அதற்காக லலிலாவை தியானிப்போம். அக்னி நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-33: நாம் காத்யாயனை அறியலாம். அதற்காக கன்னியாகுமரியை தியானம் செய்யலாம். துர்கி நம்மை அதை நோக்கித் தூண்டட்டும்.

I-34: தெய்வீக ஆவியைப் பிரதிபலிக்கும், ஆயிரம் சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு மேலானவர், எண்ணற்ற கணுக்கள் மற்றும் முளைகள் கொண்டவர் மற்றும் தீய கனவுகளின் விளைவுகளை அழிக்கும் துர்வா (பீதி புல்), எனது அனைத்து அசுத்தங்களையும் அகற்றட்டும்.

I-35: ஓ துர்வா, நீ வேர்களையும் புதிய தண்டுகளையும் முன்வைத்து ஒவ்வொரு முனையிலும் பெருக்கிக்கொண்டு எவ்வளவு தூரம் வளர்கிறாயோ, அதுபோலவே சந்ததிகள் நூறாயிரக்கணக்கில் வளர எங்களுக்கு உதவுங்கள்.

I-36: ஓ தேவி, பக்தர்களால் வணங்கப்படுகிறாயே, உன்னைப் பிரசாதம் கொடுத்து வணங்குவோம் – உன்னையே நூற்றுக்கணக்கில் பெருக்கி ஆயிரமாக வளர்பவளே.

I-37: குதிரையும், தேரும், விஷ்ணுவும் கடந்து செல்லும் பூமியே, நான் உன்னை என் தலையில் வைத்துக் கொள்வேன்; ஒவ்வொரு அடியிலும் என்னைக் காப்பாற்று.

I-38: பூமியானது கறவை மாடு போன்ற மகிழ்ச்சியை அளிப்பது, அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் மற்றும் ஆதரவு. (அவ்வாறு பூமி குறிப்பிடப்படுகிறது): நூறு கைகள் கொண்ட பன்றியின் அவதாரத்தில் கிருஷ்ணரால் நீ எழுப்பப்பட்டாய்.

I-39: ஓ சிறந்த பூமியே, என் தீய செயல்களையும் என்னுடன் தொடர்புடைய பாவங்களையும் அழித்துவிடு. ஓ சிறந்த பூமியே, நீ உயிரினங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு. காஷ்யபரால் நீ பிரார்த்தனை செய்யப்பட்டாய். ஓ சிறந்த பூமி எனக்கு செழிப்பைக் கொடுங்கள், எல்லாம் உன்னைச் சார்ந்திருக்கிறது.

I-40: அனைத்து உயிரினங்களும் ஆதரிக்கப்படும் சிறந்த பூமியே, என்னிடமிருந்து அனைத்தையும் (பாவம்) சுத்தப்படுத்து. ஓ சிறந்த பூமியே, என் பாவங்கள் உன்னால் அழிக்கப்பட்டு, நான் உயர்ந்த இலக்கை அடைகிறேன்.

I-41: ஓ இந்திரா, நாம் பயப்படுகிற (பாவம், எதிரிகள் மற்றும் நரகம் போன்ற காரணங்களுக்காக) எங்களை அச்சமின்றி ஆக்குங்கள். ஓ மகவானே, எங்களிடம் (உன் பக்தர்களில்) உள்ள பயத்தின் காரணத்தை அழித்துவிடு. எங்கள் பாதுகாப்பிற்காக, துன்புறுத்தும் எதிரிகளை அழிக்கவும்.

I-42: இந்திரன் எங்கள் துணைக்கு வரட்டும் – பூமியில் சுகத்தையும், மறுமையில் பேரின்பத்தையும் தருபவரும், மக்களுக்கு அதிபதியும், விருத்திரனைக் கொல்பவரும், எதிரிகளை அடக்கியவரும், அளிப்பவருமான இந்திரன். மழை, அமைதியானவர் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவர்.

I-43: புனிதமான பாடல்கள் மூலம் பக்தர்களால் பெருமளவில் துதிக்கப்படும் இந்திரன், அல்லது அடிக்கடி காணிக்கையுடன் வழிபடும் இந்திரன், நமக்குப் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் தருவானாக. அனைத்தையும் அறிந்த அல்லது அனைத்தையும் உடைய பூசன் எங்களுக்கு நல்வாழ்வை உறுதிப்படுத்தட்டும். த்ரிக்ஷாவின் மகனான கருடன், யாருடைய ரதமும் யாராலும் காயமடையாததால், நமக்குப் பாதுகாப்பு அளிக்கட்டும். தேவர்களின் ஆசானாகிய பிருஹஸ்பதி நமக்கு நல்வாழ்வை அளிப்பானாக.

I-44: லேசான கோபம் கொண்டவர், கல்லால் அடிப்பவர், எதிரிகளை உலுக்குபவர், பல செயல்களை உடையவர், ஆயுதம் ஏந்தியவர், சோம ரசத்தில் மகிழ்ந்தவர், காய்ந்த மரங்கள் மற்றும் புதர்களின் காடுகளை வளரச் செய்பவர். மழை பொழிவு). இந்திரனை ஒளியாக்கும் எதிர் எடைகள் எடைபோடுவதில்லை.

I-45: வேனா, சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரம்மனின் முதல் விளைவாகப் பிறந்தவனும், சிறந்த பிரகாசம் கொண்டவனுமான நண்பகல் சூரியன், அதன் எல்லை வரை உலகம் முழுவதும் பரவுகிறது. அவர் பரலோக உடல்களையும் ஒளிரச் செய்கிறார். அவர் தன்னைப் போன்ற தனது சொந்த வரையறுக்கப்பட்ட வடிவங்களில் பன்மடங்கு இருக்கிறார். புலப்படும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பிரபஞ்சம் வெளிப்படும் காரணப் பொருளின் மீதும் பரவி ஊடுருவிச் செல்கிறார்.

I-46: மனிதர்கள் உட்பட உயிரினங்களை உருவாக்குபவராகவும், அந்தந்தப் பகுதிகளில் அவை குடியேறியவராகவும், சகிப்புத்தன்மைக்கு மிகவும் புகழ் பெற்றவராகவும், ஓ பூமியே, எங்களுக்கு துக்கங்களின் முடிவாகவும், இங்கேயும் மறுமையிலும் பேரின்பத்தைத் தருபவராகவும் இருங்கள்.

I-47: நாற்றத்தால் அறியப்பட்டவர், அசைக்க முடியாதவர், என்றென்றும் செழிப்பானவர், பசுவின் சாணம் நிறைந்தவர் மற்றும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் எஜமானியான அனைவரின் ஆதரவான ஸ்ரீயை இந்த வழிபாட்டில் நான் அழைக்கிறேன்.

I-48: ஸ்ரீ எனக்கு சாதகமாக இருக்கட்டும். என்னையும் என்னையும் இணைத்த அழகர் அழிந்து போகட்டும். விஷ்ணுவைத் தங்கள் தலைவனாக (ஸ்ரீயின் நிரந்தர வாசஸ்தலமாக இருக்கும்) கொண்ட தேவர்கள், வேதங்களின் உதவியால் (வகுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம்) எதிரிகளின் பயம் இல்லாமல் தங்களுக்கு இந்த உலகங்களை வென்றனர். இடியுடன் கூடிய இந்திரன், வழிபடும் சந்திரன் நமக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

I-49: இந்திரன் நமக்கு நலம் தரட்டும். நமக்கு விரோதமான தீயவனை அழிக்கட்டும்.

I-50: ஓ ஜெபத்தின் ஆண்டவரே, உசிக்கின் மகனான காக்ஷிவன் போன்ற தேவர்களிடையே நன்கு அறியப்பட்ட சோம ரசத்தை அழுத்துபவர் என்னை ஆக்குங்கள். யாகங்களைச் செய்ய எனக்கு உடல் தகுதியை ஏற்படுத்துவாயாக. நமக்கு விரோதமாக இருப்பவர்கள் நரகத்தில் நீண்ட காலம் ‘அங்கே’ இருக்கட்டும்.

I-51: பழமையான, பரவலான, புனிதமான பாதங்களால் (அல்லது நல்லொழுக்கத்தால்) புனிதமானவர் தீய செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் கடந்து செல்கிறார். இறைவனின் இயற்கையான தூய்மையான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாதங்களால் (அல்லது நடத்தை) புனிதமானதாக ஆக்கப்பட்டதால், நாம் நமது எதிரிகளான பாவங்களை வெல்லலாம்.

I-52: ஓ இந்திரா, விருத்திரனைக் கொன்றவனே, ஓ வீரம் மிக்கவனும், அனைத்தையும் அறிந்தவனுமானவனே, உனது பரிவாரங்கள் மற்றும் தேவர்களின் கூட்டத்தினரிடையே எங்களின் சோமப் பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று, போரில் எங்களுக்கு வெற்றியைத் தந்து, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எங்களுக்கு பாதுகாப்பையும் அச்சமின்மையையும் வழங்குங்கள்.

I-53: நீர் மற்றும் மூலிகைகளின் ஆட்சியாளர்கள் நமக்கு நட்பாக இருக்கட்டும், நம்மை விரும்பாதவர்களிடமும், நாம் விரும்பாதவர்களிடமும் நட்பாக இருக்கட்டும்.

I-54: ஓ நீர்களே, நிச்சயமாக நீங்கள் பேரின்பம் தருபவர். அவ்வாறே, எங்களுக்கு உணவையும், சிறந்த அழகிய நுண்ணறிவையும் (உயர்ந்த உண்மை) வழங்குவாயாக. அன்பான தாய்மார்களைப் போல (தங்கள் அன்பான குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும்) மிகவும் மங்களகரமான உங்கள் மகிழ்ச்சியின் பங்கேற்பாளர்களாக எங்களை உருவாக்குங்கள். நீங்கள் எங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடையும் உங்களின் அந்த திருப்திகரமான வாசஸ்தலத்தை நாங்கள் அடைவோமாக. பூமியில் (நாங்கள் தங்கியிருக்கும் போது) உயிர் நீரையும், இன்பங்களையும் எங்களுக்காக உருவாக்குவாயாக.

I-55: தங்கப் பளபளப்பான அல்லது தங்கக் கிரீடத்தை உடைய வருணனிடம் நான் தஞ்சம் அடைகிறேன். ஓ வருணா, நான் வேண்டிக்கொண்டதால், காப்பாற்றும் அருளை எனக்கு வழங்குவாயாக. ஏனென்றால், கெட்டவர்களுடையதையும், பாவிகளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வரத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

I-56: இந்திரன், வருணன், பிருஹஸ்பதி, சவிதுர் ஆகியோர் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானும் என் மக்களும் செய்த பாவத்தை முற்றிலும் அழிக்கட்டும்.

I-57: தண்ணீரில் மறைந்திருக்கும் நெருப்புக்கு வணக்கம். இந்திரனுக்கு வணக்கம். வருணனுக்கு வணக்கம். வருணனின் துணைவியான வருணிக்கு வணக்கம். நீர் தெய்வங்களுக்கு வணக்கம்.

I-58: (இந்த மந்திரத்தின் சக்தியால்) தண்ணீரில் தீங்கு விளைவிக்கும், தூய்மையற்ற மற்றும் தொந்தரவான அனைத்தும் அழிக்கப்படட்டும்.

I-59: சட்டத்திற்குப் புறம்பாக உண்ணுதல், முறையற்ற குடிப்பழக்கம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நபரிடம் இருந்து பரிசுகளை வாங்குதல் ஆகியவற்றால் நான் செய்த பாவத்தை வருண மன்னன் தன் கையால் அழிக்கட்டும்.

I-60: இவ்வாறு பாவமற்றவனாகவும், துருப்பிடிக்காதவனாகவும், தீமை மற்றும் அடிமைத்தனத்தால் கட்டுப்படாதவனாகவும், நான் மகிழ்ச்சியான சொர்க்கத்திற்கு ஏறி, பிரம்மனுடன் சம அந்தஸ்தை அனுபவிப்பேன்.

I-61: ஆறுகள், குளங்கள் மற்றும் கிணறுகள் போன்ற பிற நீர் ஆதாரங்களில் வசிக்கும் பாவத்தை நீக்கும் வருணன் நம்மையும் தூய்மைப்படுத்தட்டும்.

I-62: ஓ கங்கா, ஓ யமுனா, ஓ சரஸ்வதி, ஓ சுதுத்ரி, ஓ மருத்வ்ருதா, ஓ அர்ஜிகியா, பருஷ்ணி, அசிக்னி, விட்டாஸ்தா மற்றும் சுஷோமா ஆகியோருடன் சேர்ந்து என்னுடைய இந்தப் பாடலைக் கேளுங்கள்.

I-63: அனைத்தையும் ஒளிரும் பரமாத்மாவிடமிருந்து, அவருடைய தீர்மானத்தால், உரிமையும் உண்மையும் உருவாக்கப்பட்டன. அவனிடமிருந்தே இரவும் பகலும் உண்டாயின. மேலும் அவனிடமிருந்தே மீண்டும் கடல் பல்வேறு நீருடன் உருவானது.

I-64-65: பின்னர், பரந்த கடல் உருவாக்கப்பட்ட பிறகு ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு, சிருஷ்டியின் முந்தைய சுழற்சிகளில் இருந்ததைப் போலவே, இரவும் பகலும் சூரியனையும் சந்திரனையும், வானம் மற்றும் பூமியையும், வளிமண்டலத்தையும், ஆனந்தமான சொர்க்கத்தையும் நியமித்த உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களின் உலகின் ஆட்சியாளர்.

I-66: பாவத்தைப் போக்கும் வருணன், நீருக்கு அதிபதியான தெய்வம், பூமியிலும், வளிமண்டலத்திலும், பூமிக்கும் வானத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் வசிக்கும் உயிரினங்களின் மீது சேரும் பாவத்தின் கறையைத் தூய்மைப்படுத்தட்டும். நாங்கள் (மதப் பணியைச் செய்பவர்கள்). வசுக்கள் நம்மை தூய்மைப்படுத்தட்டும். வருணன் நம்மை தூய்மையாக்குவாயாக. அந்தப் பெயரால் அழைக்கப்படும் அகமர்ஷண முனிவர் நம்மைத் தூய்மைப்படுத்தட்டும். அவர், வருணன், கடந்த மற்றும் எதிர்கால உலகங்களுக்கு இடையில் இருந்த உலகத்தையும், தற்போது இருக்கும் உலகத்தையும் பாதுகாப்பவர். புண்ணியச் செயல்களைச் செய்பவர்களுக்குத் தகுந்த உலகங்களையும், பாவிகளுக்கு ஹிரண்மயம் எனும் மரண உலகத்தையும் வழங்குகிறார். மீண்டும் வானத்திற்கும் பூமிக்கும் துணையாக இருக்கும் வருணன், சூரியனாக மாறியதால் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறான். அத்தகையவனாக, இயற்கையில் பேரின்பமாக இருப்பவனே, ஓ வருணா, உன் அருளை எங்களுக்கு அளித்து, எங்களை தூய்மையாக்குவாயாக.

I-67: துளிர்க்கும் ஊறவைத்த விதையைப் போல தன்னைத்தானே பிரபஞ்சமாக வெளிப்படுத்திய அந்த உச்ச ஒளி (அல்லது திரவ மூலகத்தின் அடிப்பொருளாக பிரகாசிக்கும் அந்த உச்ச ஒளி) – நான் அந்த உச்ச ஒளி. உள்ளவை அனைத்தின் உட்பொருளாகப் பிரகாசிக்கும் பிரம்மத்தின் உயர்ந்த ஒளி நானே. அறியாமையின் காரணமாக நான் ஒரு வரையறுக்கப்பட்ட சுயமாக என்னை அனுபவிக்கும் போது கூட உண்மையில் நான் அதே எல்லையற்ற பிரம்மன் தான். இப்போது அறிவின் தொடக்கத்தால் நான் உண்மையில் அந்த பிரம்மன், அதுவே எனது நித்திய சுபாவம். எனவே நான் எப்போதும் இருக்கும் எல்லையற்ற பிரம்மத்தின் நெருப்பில் என்னை, வரையறுக்கப்பட்ட சுயத்தை, ஒரு காணிக்கையாக ஆக்குவதன் மூலம் இந்த அடையாளத்தை உணர்கிறேன். இந்த பிரசாதம் நல்லபடியாக அமையட்டும்.

I-68: வேதத்தை மீறுபவன், மறுபிறவி செய்பவன், திருடன், கருவைக்கொலை செய்பவன் அல்லது தன் ஆசானின் மரியாதையை சீர்குலைப்பவன் அவனது பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறான்; வருணனுக்கு, நீரின் ஆட்சியாளர் மற்றும் பாவங்களை நீக்குபவர் (இந்த மந்திரத்தை மீண்டும் செய்வதன் மூலம் பாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்).

I-69: நான் பாவங்களின் நிலம். ஆதலால் நீ என்னை அழ வைக்கிறாய். புத்திசாலிகள் (என்னை அழ வைக்காதே, என் பாவங்களை அழித்து எனக்கு அருள் செய்) என்கிறார்கள்.

I-70: சமுத்திரமாக குறிப்பிடப்படும் சுப்ரீம் முழு படைப்புக்கும் நிரம்பி வழிகிறது. அவர் முதலில் உயிரினங்களை அவற்றின் பல்வேறு கடந்த கால செயல்களின் பாலைவனங்களுக்கு ஏற்ப படைத்துள்ளார். அவர் பிரபஞ்சத்தின் ஆட்சியாளர் மற்றும் பக்தர்களுக்கு வரங்களை வழங்குபவர். அவர் உமாவுடன் (ஆன்மீக ஒளியை வழங்கும் அவரது சக்தி) பக்தர்களின் இதயங்களில் தங்குகிறார், இது அவர்களின் உடலின் மற்ற பகுதிகளை விட (தெய்வீகத்தின் இருக்கை) புனிதமானது, எனவே உயர்ந்தது மற்றும் ஒரு சிகரம் போல உயர்ந்தது மற்றும் பாதுகாப்பை அளிக்கிறது. அவனது இருப்பிடமான ஜீவா எல்லையற்றதாக வளர்கிறது. ஒவ்வொரு ஆன்மாக்களையும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப வழிநடத்தி, அவர்களின் செயல்களின் பலனை அவர்களுக்கு அளித்து அவர்களை மகிழ்விப்பவர் அவர்.

II-1: ஜாதவேதருக்கு சோம பிரசாதம் வழங்கலாம். எல்லாம் அறிந்தவன் நமக்கு நட்பற்றதை அழிக்கட்டும். அனைவரையும் வழிநடத்தும் தெய்வீக நெருப்பு, ஒரு கேப்டன் கடலைக் கடந்து செல்வது போல, எல்லா ஆபத்துகளையும் கடந்து நம்மைக் காப்பாற்றட்டும். அவரும் நம்மை எல்லாத் தவறுகளிலிருந்தும் காப்பாற்றுவாராக.

II-2: துர்கா தேவியான அவளிடம் நான் தஞ்சம் அடைகிறேன், அவள் துர்கா தேவி, அவள் பளபளப்பிலும், தீவிரமான பிரகாசத்திலும் இருப்பவள், தன்னைப் பன்மடங்கு வெளிப்படுத்துகிற பரமாத்மாவுக்குச் சொந்தமான சக்தி, செயல்களில் தங்கியிருக்கும் சக்தி மற்றும் அவற்றின் பலன்கள் அவற்றைத் திறம்படச் செய்யும் (அல்லது பக்தர்கள் தங்கள் பணியின் பலனுக்காக வேண்டிக்கொள்ளும் சக்தி). காப்பாற்றுவதில் திறமையான தேவியே! நீங்கள் எங்களை சிரமங்களை சிறப்பாக கடந்து செல்கிறீர்கள். உமக்கு எங்களின் வணக்கங்கள்.

II-3: ஓ நெருப்பே, நீ புகழுக்கு உரியவன். மகிழ்ச்சியான முறைகள் எல்லா சிரமங்களுக்கும் அப்பால் நம்மை அழைத்துச் செல்கின்றன. எங்கள் சொந்த ஊரும், சொந்த நிலமும் விரிவடைந்து, (பயிர்களை வளர்ப்பதற்கு) நிலம் போதுமானதாக இருக்கட்டும். மேலும் எங்கள் குழந்தைகளுடனும் அவர்களது குழந்தைகளுடனும் மகிழ்ச்சியுடன் இணைவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

II-4: ஓ ஜாதவேதாவே, எல்லாப் பாவங்களையும் அழிப்பவனான நீ எங்களை எல்லா பிரச்சனைகளுக்கும் அப்பால் அழைத்துச் சென்று, ஒரு படகில் கடலைக் கடப்பது போல் எங்களைப் பாதுகாக்கிறாய். ஓ நெருப்பே, எப்பொழுதும் மனதளவில் மீண்டும் சொல்லும் அத்ரி முனிவரைப் போல (‘எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்’) எங்கள் உடலைக் காத்து, (அதன் பாதுகாப்பை) கவனத்தில் கொள்ளுங்கள்.

II-5: எல்லாவற்றுக்கும் தலைவனாகவும், எதிரிகளின் படைகளை வெற்றிகொள்பவனாகவும், வெல்பவனாகவும், உக்கிரமானவனாகவும் இருக்கும் நெருப்புக் கடவுளை நாங்கள் கூட்டத்தின் மிக உயர்ந்த இடத்திலிருந்து அழைக்கிறோம். அக்கினி-கடவுளான அவர், நம்முடைய கஷ்டங்கள் மற்றும் தவறுகள் மற்றும் அழியக்கூடிய அனைத்தையும் கடந்து நம்மைக் காப்பாராக.

II-6: தியாகங்களில் புகழப்படும் நீயே எங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறாய். யாகம் செய்யும் ஸ்தலங்களில், பழமையான மற்றும் அண்மைக்காலமாக, யாகங்களின் வடிவில் நீ தங்கியிருக்கிறாய். ஓ நெருப்பே, உனது சுயத்தை (எங்களை) மகிழ்ச்சியடையச் செய்வதில் நீ மகிழ்ச்சி அடைவாயாக. மேலும் எங்களுக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.

II-7: ஓ ஆண்டவரே, நீங்கள் (பாவம் மற்றும் துக்கத்துடன்) தொடர்பில்லாதவர், நீங்கள் (அனைத்து தியாகங்களிலும்) வியாபித்திருக்கிறீர்கள். (நல்ல அதிர்ஷ்டத்தை விரும்பும்) கால்நடைகளை உள்ளடக்கிய மற்றும் (அழியாத பேரின்பத்தின் நீரோட்டத்துடன்) நாங்கள் இடைவேளையின்றி உமக்குச் சேவை செய்வோம். சொர்க்கத்தின் மிக உயர்ந்த பகுதியில் வசிக்கும் தேவர்கள் என் விருப்பத்தை நிறைவேற்றி இங்கே பூமியில் விஷ்ணுவை (அன்புடன் வணங்கி) மகிழ்விக்கட்டும்.

III-1: (தெய்வம்) பூமி (எனக்கு) உணவு. அதற்காக நான் நெருப்புக்கும் பூமிக்கும் அர்ப்பணம் செய்கிறேன். வாழ்க! (தெய்வம்) வளிமண்டல (எனக்கு) உணவு. அதற்காக நான் காற்று மற்றும் வளிமண்டலத்திற்கு அர்ப்பணிக்கிறேன். வாழ்க! (தெய்வம்) சொர்க்கம் (எனக்கு) உணவு வழங்குவாயாக. அதற்காக நான் சூரியனுக்கும் சொர்க்கத்திற்கும் காணிக்கை செலுத்துகிறேன். வாழ்க! (தெய்வங்கள்) பூமி, வளிமண்டலம் மற்றும் சொர்க்கம் (எனக்கு) உணவு வழங்கட்டும். அதற்காக நான் சந்திரனுக்கும், காலாண்டுகளுக்கும் அர்ச்சனை செய்கிறேன். வாழ்க! தெய்வங்களுக்கு வணக்கம்! மனேஸுக்கு ஸ்வதா (வணக்கம்)! பூமி, வளிமண்டலம் மற்றும் சொர்க்கத்தின் தெய்வங்கள் (என் விருப்பத்தை ஓம் என்ற உச்சரிப்புடன் உறுதிப்படுத்தி, எனக்கு) உணவை வழங்கட்டும்.

IV-1: வாழ்க! முதல் வியாஹ்ரிதியால் வெளிப்படுத்தப்பட்ட பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட நெருப்புக்கும், அவரைச் சார்ந்திருக்கும் பூமிக்கும் நான் இந்தப் பிரசாதத்தை வழங்குகிறேன். வாழ்க! இரண்டாவது வியாஹ்ரிதியால் வெளிப்படுத்தப்பட்ட பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட காற்றிற்கும், அவரைச் சார்ந்திருக்கும் வளிமண்டலத்திற்கும் நான் இந்த காணிக்கையை சமர்ப்பிக்கிறேன். வாழ்க! மூன்றாவது வியாஹ்ரிதியால் வெளிப்படுத்தப்பட்ட பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட சூரியனுக்கும், அவரைச் சார்ந்திருக்கும் சொர்க்கத்திற்கும் நான் இந்த பிரசாதத்தை வழங்குகிறேன். வாழ்க! வியாஹ்ரிதிகள், புஹ், புவா மற்றும் சுவாஹ் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் பிரம்மனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட சந்திரனுக்கும், காலாண்டுகளுக்கும் நான் இந்த பிரசாதத்தை வழங்குகிறேன். எல்லா மண்டலங்களிலும் வசிக்கும் தெய்வங்களுக்கு வணக்கம்! மறைந்த முன்னோர்களுக்கு வணக்கம்! ஓம் மூலம் ஒற்றுமையாக வெளிப்படுத்தப்பட்ட பிரம்மன் மற்றும் மூன்று வியாஹ்ரிதிகளால் அவரது மூன்று அம்சங்களில் வெளிப்படுத்தப்பட்ட அந்த பிரம்மன் நான். தெய்வீக நெருப்பே, என் பிரார்த்தனைக்கு சம்மதம்.

வி -1: வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான தெய்வங்கள், பூ, நெருப்பு மற்றும் பூமிக்கு அர்ப்பணிக்கிறேன். வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான புவ, காற்று மற்றும் வளிமண்டலத்திற்கு அர்ப்பணிக்கிறேன். வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான சுவா, சூரியன் மற்றும் சொர்க்கமாகிய அபிமான பரமாத்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். வாழ்க! நான் இந்த காணிக்கையை அனைவருக்கும் மற்றும் அவரது பாகங்களான பூ, புவா, சுவா, சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் காலாண்டுகளுக்கு அர்ப்பணிக்கிறேன். தெய்வங்களுக்கு வணக்கம்! மானேஸுக்கு மரியாதை! ஓம் என்ற எழுத்து மற்றும் மூன்று வியாஹ்ரிதிகள், புஹ், புவஹ் மற்றும் சுவஹ் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் அந்த உயர்ந்த உண்மை நான். நான் உன்னதத்தை அடையட்டும்!

VI-1: ஓ நெருப்பே, பாவத்திலிருந்து எங்களைக் காக்கும். வாழ்க! நாங்கள் முழு அறிவைப் பெறுவதற்கு எங்களைக் காப்பாற்றுங்கள். வாழ்க! ஓ ரம்மியமானவரே, எங்கள் தியாகச் செயல்களைக் காப்பாற்றுங்கள். வாழ்க! ஓ சதக்ரது, (நமக்குச் சொந்தமானது) அனைத்தையும் காப்பாற்று. வாழ்க!

VII-1: ஓ தெய்வீக நெருப்பே, அனைத்து உயிரினங்களையும் குடியேற்றியே, முதல் வேதத்தின் துதிகளால் போற்றப்படுகிறவனே, எங்களைக் காக்க அருள்புரிவாயாக. வாழ்க! மேலும், இரண்டாம் வேதத்தின் துதிகளால் போற்றப்பட்டு எங்களைக் காக்க அருள்புரிவாயாக. வாழ்க! மூன்றாம் வேதத்தின் துதிகளால் போற்றப்பட்டு, நமது உணவைப் பாதுகாக்கவும், அதன் சாரத்தை வலுப்படுத்தவும் அருள் புரிவாயாக. வாழ்க! நான்கு வேதங்களின் துதிகளால் போற்றப்பட்டு எங்களைக் காக்க அருள்புரிவாயாக. வாழ்க!

VIII-1: இந்திரன், வேதங்களில் கற்பிக்கப்படும் மிகச்சிறந்த பிரணவமானவன், முழுப் பிரபஞ்சத்தையும் ஆற்றுப்படுத்துபவன், காயத்ரி மற்றும் பிற மீட்டர்களில் வேத உச்சரிப்புகளின் தொகுப்பை முன்னெடுத்துச் செல்பவன், அடையக்கூடியவன். வழிபாட்டாளர்களால் மற்றும் காரண இணைப்பில் முதன்மையானவர், சிந்திக்கும் ஞானிகளுக்கு உபநிடதத்தின் புனித ஞானத்தை அவரே கற்பித்தார். அறிவின் சக்தியால் அவர்களைப் பலப்படுத்துவதற்காக, அவர்களுக்குப் பாடமாக இருப்பது. என் பாதையில் உள்ள தடைகளை நீக்கியதற்காக நான் கடவுளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அதற்காக நான் மானேஸையும் வணங்குகிறேன். புஹ், புவா மற்றும் சுவா என்ற மூன்று பகுதிகளும் முழு வேதமும் ஓமில் உள்ளன.

IX-1: உச்சத்திற்கு எனது வணக்கங்கள். நான் என் எண்ணங்களை அவர் மீது ஒருமுகப்படுத்தட்டும் (நான் அவருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக). கவனச்சிதறல் இல்லாமல் சிந்தனையை ஒருமுகப்படுத்துபவராக நான் மாறட்டும். நான் என் காதுகளால் போதுமான அளவு கேட்டிருக்கிறேன் (மற்றும் மற்ற புலன்கள் மூலம் இன்பமான பொருட்களை உணர்ந்தேன்). ஓ என் புலன்களே, இப்போது என்னைத் தோல்வியடையச் செய்யாதீர்கள் (ஆனால், ஓம் என்ற தியானத்தின் மூலம் நான் என்னை ஐக்கியப்படுத்த விரும்பும் பரம பிரம்மத்தில் உங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

X-1: சரியானது சிக்கனம். உண்மை என்பது சிக்கனம். வேதத்தைப் புரிந்துகொள்வது துறவு. புலன்களை அடக்குவது துறவு. விரதம் போன்ற வழிமுறைகளால் உடலைக் கட்டுப்படுத்துவது துறவு. அமைதியான மனநிலையை வளர்ப்பது சிக்கனமாகும். சுயநல நோக்கமின்றி பரிசுகளை வழங்குவது சிக்கனமாகும். வழிபாடு என்பது துறவு. பரம பிரம்மன் தன்னை பூ, புவ, சுவா என்று வெளிப்படுத்தியுள்ளார். அவரை தியானியுங்கள். இது சிக்கனத்திற்கு இணையான சிறப்பு.

XI-1: ஒரு மரத்தின் நறுமணம் தொலைதூரத்திலிருந்து வீசும் காற்றால் எப்படி வீசுகிறதோ, அதே வழியில், புண்ணியங்களின் நறுமணம் – அவற்றால் ஏற்படும் நற்பெயர் – நீண்ட தூரம் (தூரம் வரை) பரவுகிறது. சொர்க்கமாக). இந்த உதாரணம் ஆதாயம் உள்ளது. ஒரு வாளின் வெட்டு முனை ஒரு குழியின் குறுக்கே போடப்பட்டுள்ளது. ‘நான் என் கால்களை அதன் மீது வைக்கிறேன், நான் அதை மிதிக்கிறேன். எனவே நான் அதன் மேல் நடந்தால், காயம் அல்லது குழியில் விழுந்து விடுமோ என்ற எண்ணத்தால் நான் குழப்பமடைவேன். அதே வழியில், வெளிப்படையான மற்றும் மறைக்கப்பட்ட பாவங்களுக்கு வெளிப்படும் ஒரு மனிதன் அழியாத தன்மையை அடைவதற்கு எதிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

XII-1: எல்லையற்ற சுயமானது நிமிடத்தை விட அதிக நிமிடம் மற்றும் பெரியதை விட பெரியது இங்குள்ள உயிரினங்களின் இதயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிருஷ்டிகரின் அருளால், மதிப்புகளின் அடிப்படையிலான ஆசைகளிலிருந்து விடுபட்டவர், மிக உயர்ந்தவர் மற்றும் அனைவருக்கும் உயர்ந்த ஆட்சியாளர் மற்றும் எஜமானர் யார் என்பதை உணர்ந்து, துக்கங்களிலிருந்து விடுபடுகிறார்.

XII-2: அவரிடமிருந்தே ஏழு பிராணங்கள், ஏழு தீப்பிழம்புகள், அவற்றின் எரிபொருள், ஏழு நாக்குகள் மற்றும் உயிர்-சுவாசங்கள் நகரும் ஏழு உலகங்கள் உருவாகின்றன. (மேலும் மற்ற விஷயங்கள்) இதயத்தின் இரகசிய இடத்தில் வசிக்கும் மற்றும் (அந்தந்த இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள அவரிடமிருந்து ஏழு மடங்குகளும் வெளிப்படுகின்றன.

XII-3: அவரிடமிருந்து அனைத்து கடல்களும் மலைகளும் எழுகின்றன. அவரிடமிருந்து எல்லா வகையான ஆறுகளும் ஓடுகின்றன, அவரிடமிருந்து அனைத்து மூலிகைகளும் சாரங்களும் வெளிப்படுகின்றன; மூலிகைகளின் சாரத்துடன் ஒன்றிணைந்து, நுண்ணிய உடலில் அமர்ந்திருக்கும் தனிப்பட்ட ஆத்மா, உயிரினங்களில் வாழ்கிறது.

XII-4: கடவுள்களில் நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், இசையமைப்பாளர்களிடையே சரியான வார்த்தைகளில் வல்லவராகவும், அறிவுள்ள மக்களிடையே பார்ப்பனராகவும், விலங்குகளில் எருமையாகவும், பறவைகளில் காத்தாடியாகவும், அழிக்கும் கருவிகளில் வெட்டுக் கோடரியாகவும் மாறினார். மற்றும் தியாகம் செய்பவர்களில் சோமா, ஒலியுடன் (புனித மந்திரத்தின்) அனைத்து சுத்திகரிப்பு முகவர்களையும் மீறுகிறது.

XII-5: ஒரு பிறக்காத பெண் (மாயா, பிரபஞ்சத்தின் காரணமற்ற பொருள்) சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு (சத்வா, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் குறிக்கும்) அதே இயல்பின் பன்மடங்கு சந்ததிகளை உருவாக்குகிறது. பிறக்காத ஒருவர் (பொதுவான அர்த்தத்தில் சில ஜீவாக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்) அவள் மீது மகிழ்ச்சியுடன் பொய் சொல்கிறார்; பிறக்காத மற்றொருவர் (பொதுவான அர்த்தத்தில் இணைக்கப்படாதவர்கள்) அவளை அனுபவித்த பிறகு அவளை விட்டு வெளியேறுகிறார்.

XII-6: தெளிவான வானத்தில் தங்கியிருக்கும் சூரியன், நடுப்பகுதியில் உள்ள வசு (அசையும் காற்று), பலிபீடத்திலும் வீட்டு அடுப்புகளிலும் விருந்தினராக வசிக்கும் நெருப்பு. மனிதர்களிலும் தேவர்களிடத்திலும் பிரகாசிக்கும் நெருப்பு, ஆன்மாவாக, யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பு, ஆகாயத்தில் காற்றாக வசிப்பது, நீர்மூழ்கிக் கப்பலாக நீரில் பிறந்தது வெப்பம், சூரியனின் கதிர்களில் பிறக்கிறது, நெருப்பு நேரடியாக ஒளியாகக் காணப்படுகிறது, மேலும் மலையில் உதிக்கும் சூரியனாகப் பிறக்கிறது – இதுவே உன்னத உண்மை, எல்லாவற்றிற்கும் அடிப்படையான உண்மை.

XII-6 (A): பிரஜாபதியிலிருந்து பிறந்தவர்கள் அவரிடமிருந்து பிரிந்தவர்கள் அல்ல. அவர்கள் பிறப்பதற்கு முன், அவரைத் தவிர வேறெதுவும் இல்லை, அவர் உலகின் அனைத்து உயிரினங்களிலும் தங்கள் சுயமாக நுழைந்தார். பிரஜாபதி உயிரினங்களுடன் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அக்கினி, சூரியன், சந்திரன், பிரகாசம் ஆகிய மூன்று ஒளிர்வுகளையும் அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவர் பதினாறு பாகங்களைக் கொண்டவர்.

XII-6 (B): படைப்பை பல வழிகளில் நிலைநிறுத்தும் மற்றும் மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு சாட்சியாக இருக்கும் பிரபஞ்சத்தின் படைப்பாளரை நாங்கள் அழைக்கிறோம். அவர் எங்களுக்கு ஏராளமான செல்வங்களை வழங்குவாராக.

XII-7: தியாகம் செய்பவர்கள் புனிதப்படுத்தப்பட்ட நெருப்பில் தெளிக்கப்பட்ட வெண்ணெயை ஊற்றினர். தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்பது இந்த ஒன்றின் தோற்றம் மற்றும் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அவரது ஆதரவாகும். உண்மையில் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அவரது ஒளிரும் மற்றும் குடியிருப்பு. ஓ அக்கினியே, ஒவ்வொரு காணிக்கையுடன் தேவர்களை இங்கே கொண்டு வந்து அவர்களை மகிழ்விப்பாயாக. ஓ உன்னதமானவனே, ஸ்வாஹாவுடன் நாம் செய்த காணிக்கைகளை தெய்வங்களுக்குத் தெரிவி.

XII-8: கடல் போன்ற பரந்து விரிந்த உச்ச நீரூற்றில் இருந்து, படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு இன்பத்தை அளிக்கும் அலைகளின் வடிவத்தில் பிரபஞ்சம் எழுந்தது. சுய-ஒளிரும் யதார்த்தத்தை குறிக்கும் பெயர் மற்றும் ஓம் என்ற எழுத்தை உள்ளடக்கியது வேதங்களில் மறைந்துள்ளது. அந்த நாமத்தை மெதுவாகத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், பரமாத்மாவைச் சிந்திப்பதன் மூலம், ஒருவன் அமரத்துவத்தை அடைகிறான். பரமாத்மாவின் இந்த பதவி தியான ஞானிகளின் உதடுகளில் உள்ளது மற்றும் அது அழியாத பேரின்பத்தின் மைய ஆதரவாகும்.

XII-9: நாம் எப்பொழுதும் நமது சிந்தனைத் தியாகங்களில் ஓம் என்ற பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்வோம், அதன் காரணத்திற்காக சுய-ஒளிரும் யதார்த்தம் உள்ளது, மேலும் அவரை வணக்கங்களுடன் நம் இதயங்களில் வைத்திருப்போம். நான்கு கொம்புகள் கொண்ட வெள்ளைக் காளை, நம்மால் போற்றப்பட்ட இந்த உன்னதப் பிரம்மத்தை இணைத் தேடுபவர்களின் செவிகளில் வெளிப்படுத்தியுள்ளது.

XII-10: காளையாகக் கருதப்படும் ஓம் என்ற எழுத்து நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் மற்றும் இரண்டு தலைகளைக் கொண்டுள்ளது. அவருக்கு ஏழு கைகள் உள்ளன. இந்த காளை மூன்று மடங்கு முறையில் இணைக்கப்பட்டு, உச்சத்தை சொற்பொழிவாற்றுகிறது. சுய ஒளிரும் தெய்வம் எல்லா இடங்களிலும் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. XII-11:

கடவுள் போன்ற முனிவர்கள் மூன்று உணர்வு நிலைகளில் அமைக்கப்பட்ட சுய ஒளிரும் யதார்த்தத்தை (அவர்களின் ஆன்மீக நடைமுறைகளின்) வரிசையில் அடைந்தனர், மேலும் வேத உரையில் (‘நீயே அது’ போன்ற சிறந்த சூத்திரங்கள்) மந்திரங்களால் அதைப் புகழ்ந்து பாடும் ஆசிரியர்களால் ரகசியமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டனர். காணக்கூடிய பிரபஞ்சத்தின் ஆட்சியாளரான இந்திரன் அல்லது விராட், கண்ணுக்குத் தெரிந்த உலகம் மற்றும் விழித்திருக்கும் உணர்வு ஆகியவற்றை உருவாக்கினார். தைஜஸ் மற்றும் ஹிரண்யகர்ப்பரை பிரதிநிதித்துவப்படுத்தும் சூரியன் ஒன்றை, அதாவது, கனவு உலகத்தை உருவாக்கினார், மீதமுள்ள ஒன்று, கனவில்லாத தூக்கம் வேனனிடமிருந்து வந்தது. தன்னை ஆதரிக்கும் பரமாத்மாவால் இந்த மூன்று பிரிவுகளும் உருவாக்கப்பட்டன.

XII-12: இறைவன், நன்மை பயக்கும் நினைவோடு நம்முடன் இணைவாராக – அனைவருக்கும் மேலானவர், வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டவர், உயர்ந்த பார்வை கொண்டவர், கடவுள்களில் முதன்மையானவர், மற்ற அனைவருக்கும் முன் பிறந்தவர் ஹிரண்யகர்ப்பரைக் காண்பவர். XII-13:

அவரைத் தவிர உயர்ந்தது எதுவுமில்லை, சிறியது எதுவுமில்லை, பெரியது எதுவுமில்லை, பரலோகத்தில் நிறுவப்பட்ட ஒரு மரத்தைப் போல அசையாமல் நிற்கும் அந்த புருஷனால் – இவை அனைத்தும் நிரப்பப்படுகின்றன.

XII-14: உழைப்பால் அல்ல, சந்ததியினரால் அல்ல, செல்வத்தால் அல்ல, அவர்கள் அழியாமையை அடைந்துள்ளனர். சிலர் துறவறத்தால் அழியாமையை அடைந்துள்ளனர். துறவிகள் அடைவது சொர்க்கத்திற்கு அப்பால் வைக்கப்பட்டுள்ளது; இருப்பினும் அது (சுத்திகரிக்கப்பட்ட) இதயத்தில் பிரகாசமாக பிரகாசிக்கிறது.

XII-15: பரமனுடன் அடையாளத்தைக் கொண்ட அழியாமையை அடைந்த பிறகு, சுயக்கட்டுப்பாட்டிற்காக பாடுபடும் அனைத்து ஆர்வலர்களும், நேரடி அறிவின் மூலம் வேதாந்தத்தால் கற்பிக்கப்பட்ட முடிவை கடுமையாக அடைந்தவர்களும், துறவுக்கு முன் பிரம்ம அறிவில் யோக ஒழுக்கம் மற்றும் உறுதியைப் பயிற்சி செய்வதன் மூலம் மனத் தூய்மையை அடைந்தவர்களும், தங்கள் இறுதி உடலின் கரைவில் பிரம்ம மண்டலத்தில் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.

XII-16: உடலின் கோட்டையில் பரமனின் வசிப்பிடமாக இருக்கும் இதயத்தின் சிறிய பாவமற்ற மற்றும் தூய தாமரை உள்ளது. மேலும் இந்த சிறிய பகுதியின் உட்புறத்தில் துக்கமற்ற ஈதர் உள்ளது. அதைத் தொடர்ந்து தியானிக்க வேண்டும்.

XII-17: வேதங்களை ஓதத் தொடங்கும் போது உச்சரிக்கப்படும் ஓம் என்ற எழுத்தை மீறும் உச்ச இறைவன் அவர். இது உபநிடதங்களில் நன்கு நிறுவப்பட்டது மற்றும் தியானத்தின் போது முதன்மையான காரணத்தில் கரைக்கப்படுகிறது.

XIII-1-3: இந்த பிரபஞ்சம் உண்மையிலேயே தெய்வீக நபர் மட்டுமே. எனவே, அது அவரையே சார்ந்துள்ளது – பல தலைகள் மற்றும் பல கண்கள் கொண்டவர், பிரபஞ்சத்திற்கு மகிழ்ச்சியை உற்பத்தி செய்பவர், பிரபஞ்சத்தின் வடிவத்தில் இருப்பவர், மனிதகுலத்தின் எஜமானரும் காரணமுமானவர், யாருடைய வடிவங்கள் பல்வேறு கடவுள்கள், யார் அழியாதவர், யார் அனைத்தையும் மிஞ்சிய ஆட்சியாளர் மற்றும் இரட்சகர், உலகத்தை விட உயர்ந்தவர், முடிவில்லாதவர் மற்றும் சர்வ வடிவமானவர், மனிதகுலத்தின் குறிக்கோள் யார், பாவத்தையும் அறியாமையையும் அழிப்பவர், பிரபஞ்சத்தின் பாதுகாவலர் மற்றும் தனிப்பட்ட ஆன்மாக்களின் ஆட்சியாளர், நிரந்தர, உயர்ந்த மங்களகரமான மற்றும் மாறாதவர், மனிதனுக்கு ஆதரவாக (உள்ளுணர்வாக) திகழ்பவர் உள்ளிழுக்கும் ஆவி), உயிரினங்களால் அறியப்படுவதற்கு மிகவும் தகுதியானவர், பிரபஞ்சத்தில் உள்ளவர் மற்றும் யார் என்பது உச்ச இலக்கு.

XIII-4: நாராயணா என்பது பிரம்மன் என்று குறிப்பிடப்பட்ட உயர்ந்த உண்மை. நாராயணனே உயர்ந்தவன் (சுயம்). நாராயணனே உயர்ந்த ஒளி (உபநிடதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது). நாராயணன் எல்லையற்ற சுயம். [நாராயணன் மிகச் சிறந்த தியானம் மற்றும் தியானம்.]

XIII-5: இந்த உலகில் புலனுணர்வு மூலம் அறியப்படும் (அவற்றின் அருகாமையின் காரணமாக) அல்லது அறிக்கையின் மூலம் அறியப்படும் (அவற்றின் தூரத்தின் காரணமாக), உள்ளேயும் வெளியேயும் நாராயணனால் வியாபித்துள்ள அனைத்தும். .

XIII-6: எல்லையற்ற, மாறாத, அனைத்தையும் அறிந்த, உலகின் மகிழ்ச்சிக்குக் காரணமான, தனது ஒரே இதயக் கடலில் வசிப்பவராக, எல்லா முயற்சிகளின் குறிக்கோளாகவும், பரமபிதாவை ஒருவர் தியானிக்க வேண்டும். அவரது தியானத்திற்கான இடம் இதயத்தில் உள்ள ஈதர் – தலைகீழ் தாமரை மொட்டுக்கு ஒப்பிடத்தக்க இதயம்.

XIII-7: ஆதாமின் ஆப்பிளுக்குக் கீழேயும் தொப்புளுக்கு மேலேயும் ஒரு விரல் இடைவெளியில் அமைந்துள்ள இதயம் பிரபஞ்சத்தின் மகத்தான உறைவிடம் என்பதை அறிய வேண்டும்.

XIII-8: தாமரையின் மொட்டு போல, தலைகீழான நிலையில், இதயம், தமனிகளால் சூழப்பட்டுள்ளது. அதில் ஒரு குறுகிய இடம் உள்ளது (அல்லது அதன் அருகில் சுசும்னா என்ற குறுகிய இடம் உள்ளது). அதில் எல்லாம் ஆதரிக்கப்படுகிறது.

XIII-9-11: அதன் நடுவில் (இதயத்தின் குறுகலான இடம் அல்லது சுசும்னா) அழுகாத, அனைத்தையும் அறிந்த, சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும், பெரிய நெருப்பு உள்ளது, இது ஒவ்வொரு பக்கத்திலும் தீப்பிழம்புகளைக் கொண்டுள்ளது, அது முன் அளிக்கப்பட்ட உணவை அனுபவிக்கிறது. , உண்ணும் உணவை ஒருங்கிணைத்துக்கொண்டே இருக்கும், (இதன் கதிர்கள் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பரவுகின்றன), மேலும் இது தன் உடலை இன்சோலில் இருந்து வெப்பமாக்குகிறது. கிரீடம். உடல் முழுவதும் ஊடுருவிச் செல்லும் அந்த நெருப்பின் மையத்தில், ஒரு நெருப்பு நாக்கு உள்ளது, இது ஒளிரும் தங்க நிறமும், இது நுட்பமானவற்றில் முதன்மையானது, இது ஒரு நடுவில் தோன்றும் மின்னலின் ஒளியைப் போன்றது. மழை பொழியும் மேகம், நெல் மணியின் வெய்யில் போல் மெல்லியது; மேலும் இது நுணுக்கத்தை விளக்குவதற்கு ஒரு ஒப்பீடாக செயல்படுகிறது.

XIII-12: பரமாத்மா அந்தச் சுடரின் நடுவில் வசிக்கிறார். (இவ்வாறு அவர் வரையறுக்கப்பட்டிருந்தாலும்) இன்னும் அவர் நான்கு முகம் படைத்தவர், சிவன், விஷ்ணு, இந்திரன், பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் திறமையான காரணம் மற்றும் உயர்ந்த சுய-ஒளிரும் தூய உணர்வு.

XIV-1: மெய்யாகவே ஆதித்யா அவர்தான்; அவருடைய இந்த உருண்டை ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது; நன்கு அறியப்பட்ட ரிக் வசனங்கள் உள்ளன; எனவே உருண்டை என்பது ரிக்களின் தொகுப்பு; அவர் ரிக் வாக்கியங்களின் இருப்பிடம். இப்போது சூரியனின் சுற்றுப்பாதையில் பிரகாசிக்கும் இந்த சுடர் சமணர் சங்கீதங்களின் தொகுப்பு; அதுவே சமணர் சங்கீதங்களின் உறைவிடமாகும். இப்போது சூரியனின் சுற்றுவட்டத்தில் உள்ள சுடரில் இருப்பவரே (தியானிக்கப்பட வேண்டியவர்) யஜுஸ் சேகரிப்பு; அந்த உருண்டையின் ஒரு பகுதி யஜுஸ் சேகரிப்பு; அதுவே யஜுஸ் தங்குமிடம். இவ்வாறாக இம்மூன்றால் முப்பெரும் அறிவு மட்டும் ஒளிர்கிறது. சூரியனுக்குள் இருப்பவனே பொன்னானவன்.

XV-1: சூரியன் மட்டுமே இவை அனைத்தும்: — ஆற்றல், பிரகாசம், வலிமை, புகழ், பார்வை, செவிப்புலன், உடல், மனம், கோபம், பார்ப்பான், தெய்வங்கள் மரணம், சத்யா, மித்ரா, காற்று, ஈதர் மற்றும் சுவாசம், ஆட்சியாளர்கள் உலகின், பிரஜாபதி, தீர்மானிக்க முடியாத ஒன்று, மகிழ்ச்சி, புலன்களைக் கடந்தது, உண்மை, உணவு, (ஆயுட்காலம்), விடுதலை அல்லது அழியாமை, தனி ஆன்மா, பிரபஞ்சம், பேரின்பம் மற்றும் சுயமாகப் பிறந்த பிரம்மன். சூரியனில் உள்ள இந்த நபர் நித்தியமானவர். அவர் அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன். அவரை இவ்வாறு தியானம் செய்பவன் பிரம்மனுடன் ஐக்கியம் அடைந்து அவனுடன் ஒரே இன்பப் பகுதியில் வாழ்கிறான்; அவர் இந்த கடவுள்களுடன் அவர்களின் உலகங்களில் ஐக்கியம், இணை வசிப்பிடம் மற்றும் போன்ற இன்பத்தை அடைகிறார். இரகசிய அறிவு இவ்வாறு வழங்கப்படுகிறது.

XV-2: பிரபஞ்சத்தின் உச்ச காரணமான ஆதித்யா, ஒளி மற்றும் நீரைக் கொடுப்பவர் மற்றும் அனைத்து ஆற்றலுக்கும் ஆதாரமாக இருக்கிறார். அவர் ஓம் என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறார். கடவுள்கள் அவரை தபஸாகவும் சத்தியமாகவும் வணங்குகிறார்கள். (இவ்வாறு வழிபடப்பட்டு) வழிபடுபவர்களுக்கு பேரின்பத்தை வழங்குகிறார். (அல்லது வழிபடுபவர்கள் அவருக்கு தேன் மற்றும் இனிப்புப் பிரசாதம் வழங்குகிறார்கள்). சூரியனின் அந்த வடிவம் பிரம்மம். அதுவே அனைத்திற்கும் வியாபித்திருக்கும் காரணம். அதுவே நீர், நெருப்பு, சுவை மற்றும் அமுதமாகும். மூன்று உலகங்களையும் குறிக்கும் மூன்று வியாஹ்ரிதிகளும், பிரபஞ்சத்தின் காரணத்தைக் குறிக்கும் பிரணவமும் அந்த பிரம்மத்தைக் குறிக்கிறது.

XVI-1: [இந்த இருபத்திரண்டு பெயர்களால் வணக்கத்துடன் முடிவடையும் அவர்கள் அனைவருக்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்கிறார்கள்] – சோம மற்றும் சூரியனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லிங்கம், மற்றும் புனித சூத்திரங்களை கையில் வைத்திருப்பது மற்றும் அனைவரையும் தூய்மைப்படுத்துவது:
நிதானபதயே நமஹ்! [பிரபஞ்சம் கரையும் இறைவனுக்கு நமஸ்காரம்!]
நிதானபதாந்திகாய நமঃ! [அனைத்து உயிரினங்களின் மரணத்திற்கும் காரணமான யமா) முடிவை உருவாக்குபவருக்கு வணக்கம்!]
ஊர்த்வாய நமஹ்! [பிரபஞ்சமாக பரிணமிக்கும் வகைகளின் தலையில் நிற்கும் மிக உயர்ந்தவருக்கு வணக்கம்!]
ஊர்த்வ-லிங்காய நமஹ்! [உளவுத்துறையின் சக்தியை உள்ளடக்கிய சதாசிவ கொள்கைக்கு வணக்கங்கள்!]
ஹிரண்யாய நமஹ! [உயிரினங்களுக்கு நன்மையும், வசீகரமும் உடையவனே!]
ஹிரண்ய-லிங்காய நமஹ்! [தங்கத்தால் செய்யப்பட்ட லிங்கமாக காட்சியளிக்கும் அவருக்கு நமஸ்காரம்!]
சுவர்ணாய நம! [அவருக்கு நமஸ்காரம், கவர்ச்சியான தேஜஸம் உடையவனே!]
சுவர்ண-லிங்காய நம! [சுவர்ணத்தால் (வெள்ளியால்) செய்யப்பட்ட லிங்க வடிவில் இருப்பவரே!]
திவ்யாய நமஹ்! [அவருக்கு நமஸ்காரம், பரலோகத்தில் பேரின்ப ஆதாரம்!]
திவ்ய-லிங்காய நமஹ்! [தெய்வீக முத்திரையாகப் போற்றப்படுபவரே!]
பாவாய நமஹ்! [பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் ஆதாரமான அவருக்கு நமஸ்காரம்!]
பவ-லிங்காய நமஹ்! [மனிதர்களால் லிங்கமாகப் போற்றப்படுபவரே!] ஸர்வாய
நமஹ்! [அவருக்கு நமஸ்காரம், அவர் இறுதி கலைப்பு நேரத்தில் பிரபஞ்சத்தை அடக்குபவர்!]
சர்வ-லிங்காய நமஹ்! [சர்வ லிங்க முத்திரையின் வடிவத்தை உடையவனே, பேரின்பத்தைத் தருபவனே!]
சிவாய நமஹ்! [அவருக்கு வணக்கம், அவர் மிகவும் மங்களகரமானவர்!]
சிவ-லிங்காய நமஹ்! [சிவலிங்க வடிவத்தை உடையவனே!]
ஜ்வாலாய நமஹே! [சுடர் பிரகாசத்தின் வடிவத்தை உடையவரே, அவருக்கு நமஸ்காரம்!]
ஜ்வாலா-லிங்காய நமஹ்! [புத்திசாலித்தனமான லிங்க வடிவத்தை உடையவனே!]
ஆத்மாய நமஹ்! [அவருக்கு நமஸ்காரங்கள், அவர் ஆத்மா – ஆத்மா – அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவர்!]
ஆத்மா-லிங்காய நமஹ்! [அவருக்கு நமஸ்காரம், எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும் மறைந்திருப்பவனே!]
பரமாய நம! [அவனுக்கு நமஸ்காரம், எவரும் மிஞ்சாதவர்!]
பரம லிங்காய நமஹ்! [லிங்கச் சின்னத்தால் குறிக்கப்பட்ட பேரின்பம் மற்றும் முக்தியின் பரமபிதாவான அவருக்கு நமஸ்காரங்கள்!]

XVII-1: நான் சத்யோஜாதத்தில் தஞ்சம் அடைகிறேன். சத்தியமாக நான் சத்யோஜாதாவை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். ஓ சத்யோஜாதா, மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு என்னை அனுப்பாதே; என்னை பிறப்பிற்கு அப்பால், பேரின்பம் மற்றும் விடுதலை நிலைக்கு அழைத்துச் செல்லுங்கள். திருநாம இருத்தலின் மூலகாரணமான அவரை நான் தலைவணங்குகிறேன்.

XVIII-1: வாமதேவருக்கு வணக்கம் [அழகான மற்றும் பிரகாசிக்கும் கடவுள் அல்லது தாராளமான கடவுள்]. ஜ்யேஸ்தாவிற்கு வணக்கம் [மூத்தவர், படைப்பிற்கு முன் இருந்தவர்]. ஸ்ரேஸ்தாவிற்கு வணக்கம் [மிகவும் தகுதியானவர் மற்றும் சிறந்தவர்]. ருத்ரனுக்கு வணக்கம் [உயிரினங்களை கரைக்கும் நேரத்தில் அழ வைப்பவன்]. காலாவிற்கு வணக்கம் [இயற்கையின் பரிணாமத்திற்கு காரணமான காலத்தின் சக்தி]. கலவிகாரனுக்கு வணக்கம் [பிரகிருதியில் தொடங்கி பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்]. பாலவிகாரனுக்கு வணக்கம் [வகைகள் மற்றும் வலிமையின் அளவுகளை உற்பத்தி செய்பவர்]. பாலாவுக்கு வணக்கம் [எல்லா வலிமைக்கும் ஆதாரமானவர்]. பலபிரமாதனுக்கு நமஸ்காரம் [பின்வாங்கும் நேரத்தில் எல்லா சக்தியையும் அடக்குபவர்]. சர்வபூதாதாமனுக்கு [படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் ஆட்சியாளர்] வணக்கம். மனோன்மனா [ஆன்மாவின் ஒளியை தூண்டுபவர்] வணக்கம்.

XIX-1: இப்போது, ​​ஓ சர்வா, உனது ருத்ர வடிவங்களுக்கு எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எனது வணக்கங்கள், தீங்கற்ற, பயங்கரமான, மிகவும் பயங்கரமான மற்றும் அழிவுகரமானவை.

XX-1: உன்னதமான நபரை நாம் அறியலாம் அல்லது உணரலாம். அதற்காக நாம் மகாதேவனைத் தியானிப்போம், அந்தத் தியானத்திற்கு ருத்திரன் நம்மைத் தூண்டலாம்.

XXI-1: எல்லா அறிவுக்கும் அதிபதியாகவும், படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும், வேதங்களைப் பாதுகாப்பவராகவும், ஹிரண்யகர்ப்பத்தின் அதிபதியாகவும் விளங்கும் உன்னதமானவர் எனக்கு அருளட்டும். இவ்வாறு விவரிக்கப்பட்டு பிரணவத்தால் குறிக்கப்பட்ட சதாசிவன் நான்.

XXII-1: ஹிரண்யபாஹுவுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் [கரங்களில் தங்க ஆபரணங்களை உடையவர் அல்லது தங்க நிறத்தை உடையவர்], ஹிரண்யவர்ணா [தங்கம் போன்ற விலைமதிப்பற்ற வேதங்களின் எழுத்துக்களுக்கு ஆதாரமானவர்] , ஹிரண்யரூப [பெருமையில் ஜொலிப்பவர்], ஹிரண்யபதி [ஆரோக்கியமான செல்வங்களின் இறைவன் வசீகரமானவர்], அம்பிகாபதி [பிரபஞ்சத்தின் தாயான அம்பிகாவின் மனைவி], உமாபதி [உமாவின் எஜமானர், பிரம்மா-வித்யா இப்படி உருவகப்படுத்தப்பட்டவர்], பசுபதி [படைக்கப்பட்ட உயிரினங்களின் இறைவன்].

XXIII-1: பரம பிரம்மன், முழுமையான உண்மை, உமா மகேஸ்வரன் வடிவில், அடர் நீலம் மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில், முற்றிலும் தூய்மையான மற்றும் அசாதாரணமான கண்களைக் கொண்ட ஒரு ஆண்ட்ரோஜினஸ் நபராக மாறியுள்ளார். பிரபஞ்சத்தின் ஆத்மாவோ அல்லது பிரபஞ்சத்தின் வடிவமோ அவருக்கு மட்டுமே வணக்கம்.

XXIV-1: இதெல்லாம் உண்மையில் ருத்ரா. அப்படிப்பட்ட ருத்ரனுக்கு நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரினங்களின் ஒளியாகவும் ஆன்மாவாகவும் இருக்கும் ருத்ரனையே மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். ஜடப் பிரபஞ்சம், உருவாக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உலக வடிவில் பன்மடங்கு மற்றும் ஏராளமாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் உண்மையில் இந்த ருத்ரமாகும். அப்படிப்பட்ட ருத்ரனுக்கு நமஸ்காரம்.

XXV-1: துதிக்கு உரியவனும், உயர்ந்த அறிவைப் பெற்றவனும், வழிபடுபவர்களுக்குப் பொருள்களை மிகச்சிறப்பாகப் பொழிபவனும், அதிக சக்தி வாய்ந்தவனும், வசிப்பவனுமான ருத்ரனுக்கு உயர்ந்த அளவில் மகிழ்ச்சியைத் தரும் ஒரு பாடலைப் பாடுகிறோம். இதயத்தில். உண்மையில் இதெல்லாம் ருத்ரா. அப்படிப்பட்ட ருத்ரனுக்கு நமஸ்காரம்.

XXVI-1: அக்னிஹோத்ரா சடங்கிற்காக விகங்கட (Flacourtia Spida) மரத்தால் செய்யப்பட்ட யாகம் செய்யும் கரண்டியை வைத்திருப்பவர் விரும்பிய பலனைத் தருவதில் திறம்பட காணிக்கைகளை வழங்குகிறார். மேலும், இந்த காணிக்கைகள் (மனத்தூய்மையின் மூலம் அவரது ஆன்மீக அறிவை) நிறுவ பங்களிக்கின்றன.

XXVII-1: க்ரிணுஷ்வ பஜ இதி பஞ்ச.

[லெம்மா க்ரினுஷ்வ பஜாவுடன் தொடங்கும் ஐந்து மந்திரங்கள் குறியீட்டு வார்த்தைகளைக் குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே உரைகளில் குறிப்பிடப்படுகின்றன. விரோத தாக்கங்களை அழிப்பதற்காக அவை ஓதப்படுகின்றன. அவை தைத்திரியா-சம்ஹிதை I-ii-14ல் இருந்து வந்தவை. முதலில் அவை ரிக்-வேதம் IV-iv-1-5.]

XXVIII-1: வசிஸ்த முனிவர் அதிதி, கடவுள்கள், வான மனிதர்கள், மனிதர்கள், மறைந்த மூதாதையர்கள், பேய்கள் மற்றும் பிறரின் தாய் மற்றும் பாதுகாவலர் என்று அறிவித்தார். ; அவள் கடினத்தன்மை அல்லது ஒருங்கிணைப்பு உடையவள், அவள் சிறந்தவள், கௌரவம் பெற்றவள், அவள் தெய்வீக ஆவிக்கு உரியவள், அவள் புகழப்படுவதற்குத் தகுதியானவள், தற்செயலாக, அனைவரையும் ஆதரிப்பவள், அவள் பயிர்கள் நிறைந்தவள், பரந்த மற்றும் செல்வத்தை உடையவள். பொருள்கள், அவள் உலகளாவிய மற்றும் முதன்மையான கூறுகளை உள்ளடக்கியது, அவள் மிகவும் ஆனந்தமானவள், உயிரினங்களின் உடல்களாக மாற்றப்பட்டவள், புகழ்பெற்ற, நீடித்த மற்றும் அதனால் அழியாத.

XXIX-1: உண்மையில் இவை அனைத்தும் தண்ணீர். படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் நீர். உடலில் உள்ள முக்கிய சுவாசம் தண்ணீர். நாற்கரங்கள் நீர். உண்ணக்கூடிய பயிர்கள் தண்ணீர். அம்ப்ரோசியா என்பது நீர். சாம்ராட் [நிரந்தரமாக ஜொலிக்கும்] நீர். விராட் [பன்மடங்கு பிரகாசிக்கும்] நீர். ஸ்வராத் [சுய ஒளி] நீர். மீட்டர்கள் தண்ணீர். ஒளிரும் நீர். வேத சூத்திரங்கள் நீர். உண்மை நீர். அனைத்து தெய்வங்களும் நீர். புஹ், புவ, சுவா என்று மூன்று உலகங்களும் நீர். இவை அனைத்திற்கும் ஆதாரம் ‘ஓம்’ என்ற எழுத்தால் குறிக்கப்படும் உச்சம்.

XXX-1-2: இந்த நீர் மண்ணால் ஆன எனது உடலை சுத்தப்படுத்தட்டும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட, மண்ணுலகில் உள்ள ஆத்மாவாகிய என்னைத் தூய்மைப்படுத்தட்டும். இந்த நீர் வேதங்களின் பாதுகாவலரான எனது ஆசானை தூய்மைப்படுத்தட்டும். சுத்திகரிக்கப்பட்ட ஆசிரியரால் கற்பிக்கப்படும் தூய்மையான வேதங்கள் என்னைத் தூய்மைப்படுத்தட்டும். (அல்லது பரமாத்மா என்னைச் சுத்திகரிக்கட்டும். உன்னதத்தால் சுத்திகரிக்கப்பட்ட நீர் என்னைத் தூய்மைப்படுத்தட்டும்). என்னுடைய அசுத்தம், தடைசெய்யப்பட்ட உணவு மற்றும் தவறான நடத்தை ஏதேனும் இருந்தால், வேதத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் பாவம் – இவை அனைத்திலிருந்தும் நான் விடுவிக்கப்படுவேன். நீர் என்னைச் சுத்திகரிக்கட்டும். வாழ்க!

XXXI-1: நெருப்பு, கோபம் மற்றும் கோபத்தின் பாதுகாவலர்கள் கோபத்தின் விளைவாக ஏற்படும் பாவங்களிலிருந்து என்னைக் காக்கட்டும். எண்ணம், வார்த்தை, கை, கால், வயிறு மற்றும் பிறக்கும் உறுப்பு ஆகியவற்றால் இந்த நாளில் நான் செய்த பாவம் அனைத்தையும் அந்த நாள் முழுவதுமாக அழிக்கட்டும். மேலும் நான் எந்த பாவச் செயலைச் செய்திருக்கிறேனோ, அதையும் நானே அழியாமையின் ஆதாரமான சுய-ஒளிமயமான சத்தியத்திற்கு நான் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். வாழ்க!

XXXII-1: சூரியன், கோபம் மற்றும் கோபத்தின் காவலர்கள் கோபத்தின் விளைவாக ஏற்படும் பாவங்களிலிருந்து என்னைக் காக்கட்டும். எண்ணம், வார்த்தை, கை, கால், வயிறு, பிறக்கும் உறுப்பால் நான் செய்த பாவம் அனைத்தையும் அந்த இரவு முழுவதுமாக நீக்கட்டும். மேலும், நான் எந்த பாவச் செயலைச் செய்திருக்கிறேனோ, அதையும் நானே அழியாமையின் ஆதாரமான சூரியனால் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச ஒளியில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். வாழ்க!

XXXIII-1: ‘ஓம்’ என்பது பிரம்மன். அக்னி அதன் தெய்வம். அதன் ரிஷியும் பிரம்மன்தான். அதன் மீட்டர் காயத்ரி. பன்முகப் பிரபஞ்சமாக இருக்கும் பரமாத்மாவுடன் இணைவதே அதன் பயன்.

XXXIV-1: வேதாந்தத்தால் தீர்மானிக்கப்பட்ட அழியாத பிரம்மனை (எங்களுக்கு அறிவுறுத்துவதற்காக) வரம் தரும் பாகுபாடு காயத்ரி நம்மிடம் வரட்டும். மீட்டர்களின் தாயான காயத்ரி, இப்போது குறிப்பிட்டுள்ள சுப்ரீம் மூலம் நமக்கு சாதகமாக இருக்கட்டும்.

XXXIV-2: ஓ அனைத்து எழுத்துக்களுக்கும் ஆதாரமாக இருப்பவனே, ஓ பெரிய தெய்வமே, ஓ அந்தி நேரத்தில் தியானத்தின் பொருளே, ஓ சரஸ்வதி, உனது பக்தன் பகலில் அவன் செய்யும் பாவத்திலிருந்து விடுபடட்டும். பகல் மற்றும் இரவில் அவர் செய்யும் பாவம் அதே இரவில்.

XXXV-1: ஓ காயத்ரி, நீ வலிமையின் சாரம். நீங்கள் பொறுமை அல்லது அடக்கும் சக்தி. நீங்கள் உடல் திறன். நீ மகிமை. நீங்கள் தெய்வங்களுக்கும் அவர்களின் பெயருக்கும் இருப்பிடம். நீங்கள் உணர்ச்சியற்ற பிரபஞ்சம். நீயே முழு வாழ்வு அல்லது அனைவருக்கும் இறைவன். நீயே ஒவ்வொரு உயிர். நீயே அனைவரின் ஆயுட்காலம். எங்களுக்கு விரோதமான அனைத்தையும் வென்றவர் நீயே. பிரணவத்தால் குறிக்கப்பட்ட உண்மை நீயே. நான் காயத்ரியை (என் இதயத்தில்) அழைக்கிறேன். நான் சாவித்திரியை அழைக்கிறேன். நான் சரஸ்வதியை அழைக்கிறேன். நான் மீட்டர்கள், ரிஷிகள் (மற்றும் கடவுள்களை) அழைக்கிறேன். (அனைத்து தெய்வங்களின்) மகிமையை நான் அழைக்கிறேன். காயத்ரியின் மீட்டர் காயத்ரி, ரிஷி விஸ்வாமித்திரர் மற்றும் தெய்வம் சவிதூர். நெருப்பு வாயைக் குறிக்கிறது; நான்கு முக பிரம்மா, தலை; விஷ்ணு, இதயம்; ருத்ரா, கிரீடம்-முடி; பூமி, ஆதாரம்; உள்ளிழுக்கும் சுவாசம், வெளிமூச்சு, பரவிய மூச்சு, மேல் மூச்சு மற்றும் நடு மூச்சு, மூச்சு. காயத்ரி சாயலில் சிகப்பு மற்றும் சாங்கியர்களால் அடையப்பட்ட பரமாத்மாவின் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் – ஒளிமயமான முனிவர்கள். காயத்ரி தெய்வம் (ஒரு சூத்திரமாக மேலும் விளக்கப்பட்டுள்ளது) இருபத்தி நான்கு எழுத்துக்களைக் கொண்டுள்ளது, இது மூன்றடிகள், ஆறு உறைகள் அல்லது துவாரங்கள் மற்றும் ஐந்து தலைகள் கொண்டது. இது உபநயனத்தில் பயன்படுத்தப்படுகிறது, அல்லது வேத கல்விக்கான தீட்சை.

XXXV-2: ஓம் பூமி. ஓம் வானம். ஓம் சொர்க்கம். ஓம் மத்திய மண்டலம். ஓம் பிறந்த இடம். ஆசிர்வதிக்கப்பட்ட ஓம் மாளிகை. ஓம் சத்தியத்தின் இருப்பிடம். ஓம் நம் புரிதலை விரைவுபடுத்தும் அந்த தெய்வீக ஜெனரேட்டரின் அபிமான ஒளியை தியானிப்போம். ஓம் அவரே நீர், ஒளி, சுவை, அமுதம் மற்றும் மூன்று உலகங்களும் ஆவார். பிரணவத்தால் குறிக்கப்படுபவன் இவை அனைத்தும்.

XXXVI-1: ஓ தேவி, பூமியின் மிக உயர்ந்த மற்றும் புனிதமான சிகரத்திலோ அல்லது பிராமணர்கள் உன்னை நினைத்துப் பார்க்கும் வரை எந்த உயரமான இடத்திலோ உமது விருப்பத்திற்குச் சென்று தங்கலாம்.

XXXVI-2: வேதங்களின் அன்னை, காற்றைப் போன்ற சிருஷ்டிகளை உந்தித் தூண்டுகிறவளும், இரண்டு பிறவிகளை உடையவளுமான, வேதங்களின் அன்னையே, எனக்கு அருளிச்செய்து, பிரமாதமாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம லோகத்திற்குப் புறப்படுவாயாக. பூமியில், நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் வேத கற்றலின் சக்தி.

XXXVII-1: பொலிவைத் தருபவரும், பிரபஞ்சத்தின் படைப்பாளருமான அழியாத ஆதித்யா தனது சொந்தக் கதிர்களைப் போல வானில் அசைகிறார். இனிமையான நீரின் வடிவில் உள்ள அவனது சாரம் நதிகளின் வடிவத்தில் பாய்கிறது. அவர்தான் சத்தியம். பிரபஞ்சத்தின் தலையாய காரணமான ஆதித்யா, ஒளி மற்றும் நீரை வழங்குபவர் மற்றும் அனைத்து ஆற்றலுக்கும் ஆதாரமாக இருக்கிறார். அவர் ஓம் என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறார். கடவுள்கள் அவரை தபஸாகவும் சத்தியமாகவும் வணங்குகிறார்கள். (இவ்வாறு வழிபடப்பட்டு) வழிபடுபவர்களுக்கு பேரின்பத்தை வழங்குகிறார். (அல்லது வழிபடுபவர்கள் அவருக்கு தேன் மற்றும் இனிப்புப் பிரசாதம் வழங்குகிறார்கள்). சூரியனின் அந்த வடிவம் பிரம்மம். அதுவே அனைத்திற்கும் வியாபித்திருக்கும் காரணம். அதுவே நீர், நெருப்பு, சுவை மற்றும் அமுதமாகும். மூன்று உலகங்களையும் குறிக்கும் மூன்று வியாஹ்ரிதிகளும், பிரபஞ்சத்தின் காரணத்தைக் குறிக்கும் பிரணவமும் அந்த பிரம்மத்தைக் குறிக்கிறது.

XXXVIII-1: சுப்ரீம் என்னை அடையட்டும். பேரின்பம் என்னை அடையட்டும். பேரின்பமாக இருக்கும் பரமாத்மா மட்டுமே என்னை அடையட்டும். ஆண்டவரே, உமது சிருஷ்டிகளில் ஒன்றான நான் உமது குழந்தை. நான் அனுபவிக்கும் அனுபவ இருப்பு பற்றிய மந்தமான கனவை அடக்குங்கள். அதற்காக என்னையே உமக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். ஆண்டவரே, மற்றும் உயிர் மற்றும் மன சக்திகள். நீங்கள் என்னிடம்

XXXVIII-2 ஐ வைத்துள்ளீர்கள்: கோரப்படாத பிராமணனுக்கு ஒருவர் திரிசுபர்ணத்தைக் கொடுக்கலாம். திரிசுபர்ணத்தை ஓதும் பிராமணர்கள் பிராமணக் கொலையின் பாவத்தைக் கூட அழிக்கிறார்கள். சோம யாகத்தின் பலனை அவர்கள் அடைகிறார்கள். (இரவு உணவின் போது) ஆயிரம் வரிசையில் அமர்ந்து பிரணவத்துடன் அதாவது இந்த மந்திரத்தின் தெய்வீகத்துடன் ஐக்கியம் அடையும் அனைவரையும் அவர்கள் தூய்மைப்படுத்துகிறார்கள்.

XXX-1: அந்த பிரம்மம் புத்திசாலித்தனத்தின் மூலம் அடையப்படுகிறது. அந்த பேரின்பம் புத்திசாலித்தனத்தின் மூலம் அடையப்படுகிறது. உண்மையில் பிரம்மமாகிய பேரின்பம் புத்திசாலித்தனத்தின் மூலம் அடையப்படுகிறது.

XXXIX-2: ஓ கடவுளே, படைப்பாளரே, இன்று சந்ததியினர் அடங்கிய செழிப்பு எங்களுக்கு உறுதியளிக்கிறது. (உலகின்) இந்த கெட்ட கனவை எங்களிடமிருந்து விலக்குவாயாக.

XXX-3: கடவுளே, படைப்பாளியே, எல்லா பாவங்களையும் என்னிடமிருந்து விலக்கு. பயனுள்ளதை என்னிடம் கொண்டு வாருங்கள்.

XXX-4: பரம சத்தியத்தின் பக்தனான எனக்கு, காற்று இனிமையாக வீசட்டும். ஆறுகள் இனிமையாக ஓடட்டும். மூலிகைகள் நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்.

XXXIX-5: இரவும் பகலும் இனிமையாக இருக்கட்டும். பூமியின் துகள்கள் இனிமையாக இருக்கட்டும். பரலோகம், எங்கள் தந்தை, எங்களுக்கு இனிமையாக இருக்கட்டும்.

XXX-6: பழம்தரும் மரங்கள் நமக்கு இனிமையாக இருக்கட்டும். சூரியன் நமக்கு இனிமையாகவும் நன்மையாகவும் இருக்கட்டும். பசுக்கள் நமக்கு இனிமையாக இருக்கட்டும்.

XXXIX-7: கோரப்படாத பிராமணனுக்கு ஒருவர் திரிசுபர்ணத்தைக் கொடுக்கலாம். திரிசுபர்ணத்தை ஓதும் பிராமணர்கள், வேதங்களையும், அவற்றின் துணைகளையும் நன்கு அறிந்த பிராமணரைக் கருவுறுதல் அல்லது காயப்படுத்துதல் போன்ற பாவங்களைக் கூட அழிக்கிறார்கள். சோம யாகத்தின் பலனை அவர்கள் அடைகிறார்கள். (இரவு உணவின் போது) ஆயிரம் வரிசையில் அமர்ந்து பிரணவத்துடன் அதாவது இந்த மந்திரத்தின் தெய்வீகத்துடன் ஐக்கியம் அடையும் அனைவரையும் அவர்கள் தூய்மைப்படுத்துகிறார்கள்.

XXXX-1: அந்த பிரம்மம் தியாகத்தின் மூலம் அடையப்படுகிறது. அந்த பேரின்பம் தியாகத்தின் சக்தியால் அடையப்படுகிறது. உண்மையில் பிரம்மமாகிய பேரின்பம் தியாகத்தின் சக்தியால் அடையப்படுகிறது.

XXXX-2: கடவுள்களில் நான்கு முகம் கொண்ட பிரம்மா, இசையமைப்பாளர்களிடையே சரியான வார்த்தைகளில் வல்லவர், அறிவுள்ள மக்களிடையே பார்ப்பனர், விலங்குகளில் எருமை, பறவைகளில் காத்தாடி, அழிவு கருவிகளில் வெட்டுக் கோடாரியாக மாறினார். மற்றும் தியாகம் செய்பவர்களில் சோமா, ஒலியுடன் (புனித மந்திரத்தின்) அனைத்து சுத்திகரிப்பு முகவர்களையும் மீறுகிறது.

XXXX-3: தெளிவான வானத்தில் தங்கியிருக்கும் சூரியன், நடுப்பகுதியில் உள்ள வசு (அசையும் காற்று), பலிபீடத்திலும், வீட்டு அடுப்புகளிலும் விருந்தினராக வசிக்கும் நெருப்பு. மனிதர்களிலும் தேவர்களிடத்திலும் பிரகாசிக்கும் நெருப்பு, ஆன்மாவாக, யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பு, ஆகாயத்தில் காற்றாக வசிப்பது, நீர்மூழ்கிக் கப்பலாக நீரில் பிறந்தது வெப்பம், சூரியனின் கதிர்களில் பிறக்கிறது, நெருப்பு நேரடியாக ஒளியாகக் காணப்படுகிறது, மேலும் மலையில் உதிக்கும் சூரியனாகப் பிறக்கிறது – இதுவே உன்னத உண்மை, எல்லாவற்றிற்கும் அடிப்படையான உண்மை.

XXXX-4: உனது வழிபாட்டிற்குத் தேவையான வேதங்களைப் பெறுவதற்காக நான் பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பில் எரிபொருளைக் குவிக்கிறேன், ரிக்-வேத வடிவில் உன்னைத் தியானிக்கிறேன். பற்றவைக்கப்பட்ட நெருப்பில் செலுத்தப்படும் தெளிந்த வெண்ணெயின் உடைக்கப்படாத நீரோட்டங்கள் – அன்பான மற்றும் இதயப்பூர்வமான எண்ணங்களால் புனிதமானவை – ஆறுகள் போல் பாய்கின்றன, அதில் உள்ள நீர் கடவுளுக்கு குடிக்கக்கூடியது. இதன் மூலம் நான் புனித நெருப்பின் மகிமையைக் காட்டுகிறேன்.

XXXX-5: அந்த அஹவனியா நெருப்பில், பிரசாதமாக வழங்கப்படும் அந்த தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் நீரோட்டங்களுக்கு மத்தியில்,

திரிசுபர்ணத்தில் மகத்துவமடைந்து, படைக்கப்பட்ட உயிரினங்களின் கூடுகளில் வசிப்பவர், உயிரினங்களுக்கு அவற்றின் தகுதிக்கேற்ப பேரின்பம் அளிப்பவர், மற்றும் தெய்வங்களுக்கு பிரசாதமான இனிப்பு அமுதத்தை பிரசாதமாகப் பகிர்ந்துகொள்பவர், மிகுந்த செல்வமும், மகத்துவமுமான பரமபிதாவைக் கொண்டிருக்கிறார். நெருப்பில் வழிபடுபவர்களால். அவர் அருகாமையில் ஏழு முனிவர்கள் அமர்ந்துள்ளனர், அவர்கள் வெறும் நினைவின் மூலம் பாவங்களை அழிக்கிறார்கள், மேலும் அவர்கள் விரும்பும் பல்வேறு கடவுள்களை மனதில் வைத்து அமிர்தத்தின் வடிவில் தொடர்ந்து பிரசாதங்களை ஊற்றுகிறார்கள்.

XL-6: இந்த திரிசுபர்ணா ஒரு பிராமணருக்கு கோரப்படாமல் கொடுக்கப்படலாம். திரிசுபர்ணத்தை பாராயணம் செய்யும் பிராமணர்கள் தகுதியான பிராமணனையோ அல்லது அபிஷேகம் செய்யப்பட்ட அரசனையோ கொன்ற பாவத்தை கூட அழித்து விடுகிறார்கள். சோம யாகத்தின் பலனை அவர்கள் அடைகிறார்கள். (இரவு உணவின் போது) ஆயிரம் வரிசையில் அமர்ந்து பிரணவத்துடன் அதாவது இந்த மந்திரத்தின் தெய்வீகத்துடன் ஐக்கியம் அடையும் அனைவரையும் அவர்கள் தூய்மைப்படுத்துகிறார்கள்.

XLI-1: நன்மையும், அனுகூலமும், மகிழ்வும் கொண்ட அனைத்து ஊடுருவும் அறிவுத் தெய்வம், எங்களைத் தரிசிக்கட்டும், ஓ தேவி, உமது வருகைக்கு முன் பயனற்ற பேச்சில் மகிழ்ந்த நாங்கள், இப்போது உமது மகிழ்ச்சியின் விளைவாக! நம்மில், ஞானமடைந்து, நமது வீர மகன்கள் மற்றும் சீடர்களுடன் சேர்ந்து பரம சத்தியத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களாக மாறுங்கள்.

XLI-2: ஓ புத்தியின் தெய்வமே, உன்னால் அனுக்கிரகம் செய்யப்பட்ட ஒருவன் பார்ப்பனனாகிறான்; ஒருவன் பிராமணனாக அல்லது பிரம்மத்தை அறிந்தவனாக மாறுகிறான். உன்னால் விரும்பப்பட்டவன் செல்வத்தையும் உடையவனாகிறான். உன்னால் விரும்பப்பட்டவன் பன்மடங்கு செல்வத்தைப் பெறுகிறான். அப்படி இருந்து, ஓ புத்தியின் தேவியே, எங்களில் மகிழ்ந்து செல்வத்தை எங்களுக்கு அளியுங்கள்.

XLII-1: இந்திரன் எனக்கு புத்திசாலித்தனத்தை வழங்கட்டும். சரஸ்வதி தேவி எனக்கு புத்திசாலித்தனத்தை வழங்கட்டும். தாமரை மலர் மாலைகளை அணிந்த இரண்டு அஷ்வின்கள் என்னுள் புத்திசாலித்தனத்தை உண்டாக்கட்டும்.

XLII-2: வாழ்க! அந்த புத்தி எனக்கு சாதகமாக இருக்கட்டும் – அப்சரஸ்கள் (வான பெண்கள்) உடையவர்கள், கந்தர்வர்களிடம் உள்ள மனோசக்தி (வானத்தில் உள்ளவர்கள்) தெய்வீக வேத சாஸ்திரமாக வெளிப்படுத்தப்பட்ட புத்திசாலித்தனமும், வாசனையாகப் பரவும் புத்திசாலித்தனமும்.

XLIII-1: புத்திசாலித்தனமான அந்த தெய்வம் மகிழ்ச்சியான முகத்துடன் என்னிடம் வந்து எனக்கு அருள் புரியட்டும் – நறுமணம் போன்ற வியாபித்திருக்கும், அனைத்து பொருட்களையும் ஆராயும் திறன் கொண்ட, எழுத்துக்களின் வடிவில் பொன் எழுத்துக்களை உடைய புத்திசாலித்தனமான அந்த தெய்வம். வேதங்கள் (ஆரோக்கியமான மற்றும் வசீகரமானவர்), தொடர்ந்து இருப்பவர், வாழ்க்கையின் மதிப்புகளைத் தேடுபவர்களால் நாடப்படுவதற்குத் தகுதியானவர். மீண்டும் மீண்டும், யார் சுவையையும் வலிமையையும் உடையவர் மற்றும் பால் மற்றும் பிற செல்வங்களால் என்னைப் போஷிப்பவர்.

XLIV-1: அக்னி என்னில் புத்திசாலித்தனத்தையும், சந்ததியின் தொடர்ச்சியையும், வேதப் படிப்பினால் பிறந்த மகிமையையும் அளிக்கட்டும். இந்திரன் எனக்கு புத்திசாலித்தனத்தையும், சந்ததியின் தொடர்ச்சியையும், ஆண்மையையும் அளிக்கட்டும். சூர்யா என்னில் புத்திசாலித்தனத்தையும், சந்ததியின் தொடர்ச்சியையும், எதிரிகளின் இதயங்களில் பயத்தை உண்டாக்கும் வீரத்தையும் வழங்கட்டும்.

XLV-1: மரணம் நம்மை விட்டு விலகட்டும். அழியாமை நமக்கு வரட்டும். வைவஸ்வத யமா எங்களுக்கு பாதுகாப்பை வழங்கட்டும். மரத்தின் வாடிய இலைகளைப் போல நம் பாவங்கள் அழிந்து போகட்டும். வலிமை தரும் செல்வம் நமக்கு வரட்டும்.

XLVI-1: ஓ மரணமே, தெய்வங்களின் வழி அல்லாத உனது பாதையில் திரும்பிச் செல். என்னைப் பார்க்கவும், நான் சொல்வதைக் கேட்கவும் வல்லவனான உன்னை நான் வேண்டுகிறேன்; எங்கள் சந்ததியை அழிக்காதே. எங்கள் மாவீரர்களை தாக்காதீர்கள்.

XLVII-1: பிரபஞ்சத்தின் பாதுகாவலராகவும், நமக்குள் உயிர் மூச்சாகவும், நமக்கு வெளியே வீசும் காற்றாகவும் செயல்படும் உயிரினங்களின் இறைவனிடம் மனப்பூர்வமாக மன்றாடுகிறோம். அவர் மரணத்திலிருந்து நம்மைக் காத்து, பாவத்திலிருந்து நம்மைக் காப்பாராக. நம் முதுமை வரை பிரகாசமாக வாழ்வோம்.

XLVIII-1: ஓ உன்னதமானவனே, யமனின் பயம் மற்றும் மக்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் இந்த உலகத்தில் இருப்பதன் அவசியத்திலிருந்து என்னை விடுவிக்கவும். ஓ அக்னி, இரண்டு தெய்வீக மருத்துவர்களான அஷ்வின்கள், சமயப் பணியின் வலிமையால் மரணத்தை எங்களிடமிருந்து விரட்டியடிக்கட்டும்.

XLIX-1: வேலைக்காரர்களைப் போலவே கடவுள்களும் பிரபஞ்சத்தின் அதிபதியான ஹரியைப் பின்பற்றுகிறார்கள், அவர் எல்லா எண்ணங்களையும் முதன்மையான தலைவராக வழிநடத்துகிறார் மற்றும் கலைக்கும் நேரத்தில் பிரபஞ்சத்தை தன்னுள் உள்வாங்குபவர் (அல்லது பக்தர்களின் பாவங்களை அழிப்பவர்). வேதங்களில் கற்பிக்கப்பட்ட இந்த முக்திக்கான பாதை, பிரம்மனைப் போன்ற வடிவத்தையே எனக்குத் திறக்கட்டும். அதை என்னிடம் பறிக்காதே. எனக்காக அதைப் பாதுகாக்க முயலுங்கள்.

எல்-1: பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பை மரச் சில்லுகளால் மூட்டுவதன் மூலம் (வணக்கத்தின் போது காணிக்கை செலுத்துவதற்காக) நான் இரு உலகங்களையும் அடைவேன். இம்மை மற்றும் மறுமையின் செழுமையை அடைந்த நான் மரணத்தைக் கடந்து செல்வேன்.

LI-1: ஓ கடுமையான மரணம், என் உயிரை துண்டித்து விடாதே. (என் ஆர்வத்தை) காயப்படுத்தாதீர்கள். என் பலத்தை முடக்காதே. என்னைப் பற்றாக்குறைக்கு ஆளாக்காதே. என் சந்ததியையும் உயிரையும் காயப்படுத்தாதே. காணிக்கைகளோடு உமக்குச் சேவை செய்வேன்; ஏனென்றால், நீ மனிதர்களின் செயல்களில் விழிப்புடன் இருக்கிறாய்.

LII-1: ஓ ருத்ரா, எங்கள் பெரியவர்கள், நம் குழந்தைகள், இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெரியவர்கள், தாயின் வயிற்றில் நாம் வைத்த கரு மற்றும் எங்கள் தந்தை மற்றும் தாய் ஆகியோரைக் காயப்படுத்தாதீர்கள். எங்கள் அன்பானவர்களை காயப்படுத்தாதீர்கள்.

LIII-1: ஓ ருத்ரா, எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், நம்மைச் சேர்ந்த மற்ற மனிதர்கள், எங்கள் கால்நடைகள் மற்றும் எங்கள் குதிரைகளின் விஷயத்தில் எங்களை காயப்படுத்தாதே. கோபத்தில் நம் ஹீரோக்களை காயப்படுத்தாதீர்கள். காணிக்கைகளுடனும், பயபக்தியுடனும் உமக்குச் சேவை செய்வோம்.

LIV-1: ஓ பிரஜாபதி, பிறக்கும் அனைத்தும் உன்னிடமிருந்து வேறுபட்டவை அல்ல. அவர்களுக்கு முன்னும் பின்னும் நீயே (அவர்கள் உன்னில் மீண்டும் உள்வாங்கப்படும் போது) படைக்கப்பட்ட உயிரினங்கள் உன்னை மிஞ்ச முடியாது. எத்தகைய ஆசையுடன் உமக்கு காணிக்கை செலுத்துகின்றோமோ அது நிறைவேறட்டும். செல்வத்தின் அதிபதிகளாக மாறுவோம்.

எல்வி-1: இந்திரன் எங்கள் துணைக்கு வரட்டும் – பூமியில் நலத்தையும், மறுமையில் பேரின்பத்தையும் அளிப்பவர், மக்களுக்கு அதிபதியானவர், விருத்திரனைக் கொல்பவர், எதிரிகளை அடக்குபவர் மற்றும் கொடுப்பவர். மழை, அமைதியானவர் மற்றும் பாதுகாப்பைக் கொடுப்பவர்.

எல்.வி.ஐ-1: நறுமணம் மிக்கவரும், பக்தர்களுக்குப் பெருகிய உணவளிப்பவருமான முக்கண் இறைவனை வணங்குகிறோம். பழுத்த வெள்ளரிக்காய் எளிதில் பிணைந்த தண்டிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்வது போல, அவரை வழிபடுவதால் மரணத்திலிருந்து எளிதில் நழுவுவோம். அழியாமையிலிருந்து நாம் ஒருபோதும் பிரிக்கப்படக்கூடாது.

LVII-1: ஓ மரணமே, மனிதனைக் கொல்வதற்காக நீ விரித்துள்ள ஆயிரம் பதினாயிரத்து பதினாயிரம் கண்ணிகளை, எங்கள் வழிபாட்டுச் செயல்களின் சக்தியால் அகற்றுகிறோம்.

LVIII-1: வாழ்க! இது மரணத்தை உண்டாக்கும் மிருத்யுவுக்கு செய்யப்படும் காணிக்கையாக இருக்கட்டும்.

லிக்ஸ்-1: ஓ அக்னி, தெய்வங்களுக்கு எதிராக நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீ. வாழ்க! மனிதர்களுக்கு எதிராக நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீரே. வாழ்க! மறைந்த முன்னோர்களுக்கு நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! நாங்கள் எங்களுக்கு இழைத்த குற்றங்களை நீக்குபவர் நீரே. வாழ்க! எங்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! எங்கள் உறவினர்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! இரவும் பகலும் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! கனவிலும் விழிப்பு நிலையிலும் செய்த குற்றங்களை நீக்குபவர் நீ. வாழ்க! ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்பு நிலையிலும் நாங்கள் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! உணர்ந்தும் அறியாமலும் செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க! பாவம் செய்பவர்களுடன் தொடர்பு கொண்டு செய்த குற்றங்களை நீக்குபவர் நீயே. வாழ்க!

எல்எக்ஸ்-1: ஓ கடவுள்களே, ஓ வாசுஸ், நம் நாக்காலும், புரிந்துணர்வாலும், செயல்களாலும் நாம் செய்த கடுமையான கடவுளைப் புண்படுத்தும் பாவம், நம்மை நெருங்கி வந்து நம்மை நோக்கி தீய வழியில் செயல்படுபவர்களிடம் வைக்கிறது. வாழ்க!

LXI-1: தெய்வங்களுக்கு வணக்கம். ஆசை செயலை நிகழ்த்தியது. ஆசை செயல் செய்தது. ஆசையே செயலைச் செய்கிறது, நான் அல்ல. ஆசையே முகவர், நான் அல்ல. ஆசையே செய்பவரைச் செயலாற்றச் செய்கிறது, நானல்ல. ஆசையே, தோற்றத்தில் வசீகரிக்கும் ஆசையே, இந்தப் பிரசாதம் உனக்கே வழங்கப்படட்டும். வாழ்க!

LXII-1: தெய்வங்களுக்கு வணக்கம். கோபம் அந்தச் செயலைச் செய்தது. கோபம் அந்த செயலை செய்தது. கோபம் செயலைச் செய்கிறது, நான் அல்ல. கோபம்தான் முகவர், நான் அல்ல. கோபம் செய்பவரைச் செயல்பட வைக்கிறது, நான் அல்ல. கோபம், இந்த பிரசாதம் உனக்கே வழங்கப்படட்டும். வாழ்க!

LXIII-1: ஓ உன்னத மனிதரே, புனிதமான தீயில் சிறிது மாவுடன் கலந்து சுவையான திலா (எள் இண்டிகம்) விதைகளை சமர்ப்பிக்கிறேன்; உச்ச ஆலங்கட்டி என்று கூறப்பட்டதில் என் மனம் மகிழ்ச்சியடையட்டும்!

LXIII-2: ஓ கடவுளே, உமது அருளால் நான் கால்நடைகள், தங்கம், செல்வம், உணவு மற்றும் பானங்கள் மற்றும் விரும்பிய பொருட்கள் மற்றும் அழகு மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறுவேன்; அதற்காக இந்த காணிக்கை உனக்கு அளிக்கப்படுகிறது. வாழ்க!

LXIII-3: கடவுள் எனக்கு அரச செழிப்பு, சுதந்திரம், ஆரோக்கியம், உன்னதமான நற்பெயர், தெய்வங்களுக்குக் கடனை அடைக்கும் திறன், பிரிந்த ஆத்மாக்கள் மற்றும் முனிவர்கள், ஒரு சிறந்த பிராமணனின் குணங்கள், பல மகன்கள், நம்பிக்கை, புத்திசாலித்தனம் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியவற்றைக் கொடுப்பார். . அதற்காக இந்த காணிக்கை வழங்கலாம். வாழ்க!

LXIV-1: ஓ ஆண்டவரே, உமது கருணையால், இந்த கருப்பு எள், வெள்ளை எள், ஆரோக்கியமான எள் மற்றும் சொந்த எள் விதைகள் என்னுடன் தொடர்புடைய எந்த பாவத்தையும் அல்லது என்னில் தவறு இருந்தாலும் அதை சுத்தப்படுத்தட்டும். அதற்காக நான் காணிக்கைகளை வழங்குகிறேன். வாழ்க!

எல்எக்ஸ்ஐவி-2: திருடினால் அளிக்கப்பட்ட உணவை உண்பது, சமீபத்தில் பிரிந்த ஒரு ஆன்மாவின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக உணவு பரிமாறப்படும் இடத்தில் உணவருந்துவது, பிராமணனைக் கொன்றது, மூர்க்கத்தனமானது போன்ற எனது பாவங்களை எள் விதைகள் நீக்கட்டும். ஆசானின் மரியாதை, கால்நடைகளை தூக்குதல், குடித்துவிட்டு ஒரு வீரன் அல்லது கருவைக் கொல்வது. எனக்கு அமைதி கிடைக்கட்டும். வாழ்க!

LXIV-3: கடவுள் எனக்கு அரச செழிப்பு, சுதந்திரம், ஆரோக்கியம், உன்னதமான நற்பெயர், தெய்வங்கள், பிரிந்த ஆத்மாக்கள் மற்றும் முனிவர்களுக்கான கடனை அடைக்கும் திறன், ஒரு சிறந்த பிராமணனின் குணங்கள், பல மகன்கள், நம்பிக்கை, புத்திசாலித்தனம் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியவற்றை வழங்குவாராக. . அதற்காக இந்த காணிக்கை வழங்கலாம். வாழ்க ஜாதவேதாஸ் [அனைத்தையும் அறிந்த பரமாத்மா]

எல்எக்ஸ்வி-1: [விரஜா ஹோமம்]: இந்த பிரசாதத்தால் எனது உள்ளிழுக்கும் சுவாசம், நமது சுவாசம், பரவிய மூச்சு, மேல் மூச்சு மற்றும் நடு மூச்சு ஆகியவை சுத்திகரிக்கப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXV-2: இந்த காணிக்கையால் எனது பேச்சு, மனம், பார்வை, செவிப்புலன், சுவை, மணம், விதை, புத்தி, எண்ணம் மற்றும் நோக்கம் ஆகியவை தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

எல்எக்ஸ்வி-3: இந்தப் பிரசாதத்தால் என்னுடைய ஏழு உடல் பொருட்கள் – வெளி மற்றும் உள் தோல், சதை, இரத்தம், கொழுப்பு, மஜ்ஜை, நரம்பு மற்றும் எலும்பு – சுத்திகரிக்கப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXV-4: இந்த பிரசாதத்தின் மூலம் என் உடலின் தலை, கைகள், கால்கள், பக்கவாட்டுகள், முதுகு, தொடைகள், தொப்பை, ஷாங்க்ஸ், உற்பத்தி உறுப்பு, உடலின் நடுப்பகுதி (அல்லது ஆண் மற்றும் ஆண் மற்றும் பெண் பிறப்பு உறுப்புகள்) மற்றும் ஆசனவாய் சுத்திகரிக்கப்படுகின்றன. என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXV-5: ஓ தெய்வீக நபரே, அடர் நீலமும் பழுப்பு நிறமும், கண்களில் சிவந்தவருமான எனக்கு தயவு செய்ய அவசரம். எனக்கு மேலும் மேலும் தூய்மையை வழங்குவாயாக. எனது ஆசான் மூலம் எனக்கு அறிவையும் தூய்மையையும் வழங்குவாயாக. என் எண்ணங்கள் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-1: [விரஜா ஹோமம்]: இந்தப் பிரசாதத்தின் மூலம் எனது உடலின் ஐந்து அங்கமான கூறுகளான பூமி, நீர், நெருப்பு மற்றும் ஈதர் – தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-2: இந்த பிரசாதம் மூலம் ஒலி, தொடுகை, நிறம், சுவை மற்றும் மணம் ஆகிய குணங்கள் (எனது உடலில் உள்ள மேற்கூறிய ஐந்து கூறுகளில் வசிக்கின்றன) தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-3: இந்த காணிக்கையால் எனது மனம், பேச்சு மற்றும் உடலால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உயர்ந்த ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-4: அகங்காரத்தின் அடக்கப்பட்ட உணர்வுகள் எதுவும் என்னிடம் இருக்கக்கூடாது. என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த பிரசாதம் அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-5: இந்த பிரசாதம் மூலம் என் உடல் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-6: இந்த பிரசாதம் மூலம் எனது உள் உறுப்புகள் சுத்திகரிக்கப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-7: இந்த காணிக்கையின் மூலம் எனது எல்லையற்ற சுயம் தூய்மைப்படுத்தப்படும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, இந்த காணிக்கை அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பில் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படலாம். வாழ்க!

LXVI-8: பசியின் தெய்வத்திற்கு இந்த பிரசாதம் வழங்கப்படட்டும். வாழ்க! பசி, தாகம் என்ற இணைந்த தெய்வங்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்பட வேண்டும். வாழ்க! எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் பரமாத்மாவுக்கு இந்த அர்ப்பணம் செய்யட்டும். வாழ்க! ரிக் மந்திரங்களை நியமித்த பரமாத்மாவுக்கு இந்த அர்ப்பணம் செய்யட்டும். வாழ்க! அவருடைய படைப்பில் ஆர்வமுள்ள பரமாத்மாவுக்கு இந்த காணிக்கையை அளிக்கலாம். வாழ்க! (பிரணவத்தால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் நானே. அதை உணர்ந்து இந்த பிரசாதம் அர்ச்சனை செய்யப்பட்ட நெருப்பில் அர்ப்பணிக்கப்படும். வாழ்க!)

LXVI-9: ஓ ஆண்டவரே, உமது அருளால் நான் பசி மற்றும் தாகம் போன்ற அசுத்தத்தை என்னிடமிருந்து அகற்றுகிறேன். , துரதிர்ஷ்டம் மற்றும் துன்பம், வறுமை மற்றும் முன்னேற்றமின்மை மற்றும் போன்றவை. என் பாவங்களை அழித்துவிடு. வாழ்க!

LXVI-10: இந்த காணிக்கையின் மூலம் உணவு, மூச்சு, மனம், புத்திசாலித்தனம் மற்றும் பேரின்பம் ஆகிய உறைகளால் ஆன எனது ஐந்து மடங்கு சுயம் தூய்மை அடையட்டும். என்னில் உள்ள அனைத்துத் தடையான பாவங்களையும், அவற்றின் காரணங்களையும், உணர்ச்சிகளையும் நீக்கி, உச்ச ஒளியாக நான் ஆக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த நோக்கத்திற்காக இந்த காணிக்கையை பிரதிஷ்டை செய்யப்பட்ட நெருப்பில் சமர்ப்பிக்கலாம். வாழ்க!

LXVII-1: அக்னயே ஸ்வாஹா [அக்கினிக்கான காணிக்கை]!
விஷ்வேப்யோ தேவேப்ய ஸ்வாஹா [தெய்வங்கள் அல்லது அனைத்து கடவுள்களின் மொத்த காணிக்கை]!
துருவயா பூமாய ஸ்வாஹா [நிரந்தர நிறைவை காணிக்கை]!
துருவக்ஷிதயே ஸ்வாஹா [நிரந்தர நிலத்திற்குப் பிரசாதம்]!
அச்யுதாக்ஷிதயே ஸ்வாஹா [மாறாத உறைவிடம்]!
அக்னயே ஸ்விஷ்டகிருதே ஸ்வாஹா [சரியான யாகம் செய்பவருக்கு காணிக்கை]!
தர்மாய ஸ்வாஹா [மதக் கடமைக்கான காணிக்கை]!
அதர்மய ஸ்வாஹா [மதக் கடமைக்கான அர்ப்பணம்]!
அத்ப்ய ஸ்வாஹா [நீருக்கான காணிக்கை]!
ஓஷோதி-வனஸ்பதிப்ய ஸ்வாஹா [மூலிகைகள் மற்றும் மரங்களுக்கு பிரசாதம்]!
ரக்ஷோ-தேவஜநேப்ய ஸ்வாஹா [அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் காணிக்கை]!
க்ரிஹ்யாப்ய ஸ்வாஹா [வீட்டு தெய்வங்களுக்கு பிரசாதம்]!
அவஸனேப்ய ஸ்வாஹா [வீட்டின் எல்லையில் வசிக்கும் தெய்வங்களுக்கு பிரசாதம்]! அவஸானபதிப்ய ஸ்வாஹா [அத்தகைய தெய்வங்களின் தலைவர்களுக்கு காணிக்கை]!
ஸர்வபூதேப்ய ஸ்வாஹா [அனைத்து ஆவிகள் அல்லது ஐந்து ஆதிமூலக் கூறுகளின் தெய்வங்களுக்கு அர்ப்பணம்]!
காமய ஸ்வாஹா [அன்பின் கடவுளுக்கு காணிக்கை]!
அந்தரிக்ஷய ஸ்வாஹா [வானத்தில் வீசும் காற்றுக்கு பிரசாதம்]!
யதேஜதி ஜகதி யச்ச சேஷ்டாதி நாம்னோ பகோயம் நாம்நே ஸ்வாஹா
[வேதத்தில் உள்ள வார்த்தைகளின் முழுமையும், மேலும் இந்த உலகில் உள்ள அனைத்தும் உணர்ச்சியற்றவையாக நகரும் மற்றும் உணர்வுபூர்வமாக செயல்படும் அனைத்தும்]!
ப்ரிதிவ்யை ஸ்வாஹா [பூமிக்கு காணிக்கை]!
அந்தரிக்ஷய ஸ்வாஹா [வானத்தில் வசிக்கும் ஆவிகளுக்கு பிரசாதம்]!
தேவே ஸ்வாஹா [சொர்க்கத்திற்கான காணிக்கை]!
சூர்யாய ஸ்வாஹா [சூரியனுக்கு பிரசாதம்]!
சந்திரமஸே ஸ்வாஹா [சந்திரனுக்குப் பிரசாதம்]!
நக்ஷத்ரேப்ய ஸ்வாஹா [நட்சத்திரங்களுக்கு அர்ப்பணம்]!
இந்த்ராய ஸ்வாஹா [தெய்வத் தலைவனுக்கு காணிக்கை]!
பிருஹஸ்பதயே ஸ்வாஹா [தெய்வ ஆசானுக்கு காணிக்கை]!
பிரஜாபதயே ஸ்வாஹா [உயிரினங்களின் அதிபதிக்கு]!
ப்ராஹ்மணே ஸ்வாஹா [நான்குமுகம் படைத்தவனுக்குப் பிரசாதம்]!
ஸ்வாத பித்ருப்ய ஸ்வாஹா [இறந்த முன்னோர்களுக்கு பிரசாதம்]!
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா
[உயிர்களின் அதிபதியான ருத்ரனுக்கு வணக்கம் மற்றும் அர்ப்பணம்]!
தேவேப்ய ஸ்வாஹா [தெய்வங்களுக்கு காணிக்கை]!
பித்ருப்ய ஸ்வதஸ்து [மேனிகளுக்குப் பிரசாதம்]!
பூதேப்யோ நமஹ் [பல்வேறு கடவுள்களுக்கு வணக்கம்]!
மனுஸ்யேப்யோ ஹந்தா [ஆண்களுக்குப் பிரசாதம்]!
பிரஜாபதயே ஸ்வாஹா [உயிரினங்களின் அதிபதிக்கு]!
பரமேஸ்தினே ஸ்வாஹா [பிரம்மலோகத்தில் வசிக்கும் நான்கு முகம் படைத்தவனுக்கு அர்ச்சனை]!

LXVII-2: ஒரு வற்றாத கிணற்றுக்கு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நீரூற்றுகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுவது போல, எனக்கு ஆயிரம் மூலங்களிலிருந்து வற்றாத தானியங்கள் கிடைக்கட்டும். அந்த நோக்கத்திற்காக, செல்வத்தை வைத்திருக்கும் தெய்வத்திற்கு நான் காணிக்கை செலுத்துகிறேன். வாழ்க!

LXVII-3: செழிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், ருத்ரனின் அடியார்கள் (தகன பூமியில் வசிப்பவர்கள்) உயிர்களுக்கு மரணம் மற்றும் துக்கத்தால் துன்பம் தருபவர்கள் மற்றும் தேடலில் இரவும் பகலும் அலைந்து திரியும் ஆவிகளுக்கு நான் உணவை வழங்குகிறேன். அஞ்சலி. செழிப்பின் இறைவன் எனக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். வாழ்க!

LXVIII-1: ஓம் என்பது பிரம்மம். ஓம் அதுதான் வாயு. ஓம் அதுவே வரையறுக்கப்பட்ட சுயம். ஓம் அதுவே பரம சத்தியம். ஓம் அவ்வளவுதான். ஓம் என்பது கோட்டைகளின் கூட்டம் 9 உயிரினங்களின் உடல்கள்). அவருக்கு வணக்கம்.

LXVIII-2: பன்மடங்கு வடிவங்களைக் கொண்ட சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களின் இதயத்தினுள் அந்த உச்சநிலை நகர்கிறது. ஓ உன்னதமானவனே, நீயே தியாகம், நீயே வசத், நீயே இந்திரன், நீயே ருத்திரன், நீயே பிரம்மா, நீயே பிரஜாபதி, நீயே அது, நீயே நதிகளிலும் கடலிலும் உள்ள நீர், நீயே சூரியன், நீ சுவை, நீயே அமுதம், நீயே வேதங்களின் உடல், நீயே முப்பொருள் உலகம், நீயே ஓம்.

LXIX-1: எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதத்தை பிராணனுக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுத பிரசாதத்தை அபானாவில் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் படையலைப் பயபக்தியுடன் வியானாவுக்கு வழங்குகிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை உதானாவில் மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை சமணருக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். இந்த நன்கொடைகளால் என் சுயம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி, நான் அழியாமையைப் பெறுவேன்.

LXIX-2: ஓ தண்ணீரே, அழியாத உணவான அன்ன-பிரம்மனின் பரந்த இருக்கை நீயே.

எல்எக்ஸ்ஐஎக்ஸ்-3: எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை பிராணனுக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். பிராணனுக்கு பிரசாதம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுத பிரசாதத்தை அபானாவில் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். அபனாவுக்கு பிரசாதம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் படையலைப் பயபக்தியுடன் வியானாவுக்கு வழங்குகிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். வியானாவுக்கு அர்ப்பணம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை உதானாவில் மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். உதானாவுக்குப் பிரசாதம். எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை சமணருக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். ஓ பிரசாதமான பொருளைப் பெற்றவரே, நான் பசியால் வாடாதபடிக்கு மங்களமாகி என்னில் லயித்துக்கொள்ளுங்கள். சமணருக்கு பிரசாதம். இந்த நன்கொடைகளால் என் சுயம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி, நான் அழியாத நிலையை அடையலாம்.

LXIX-4: ஓ தண்ணீரே, அழியாத உணவான அன்ன-பிரம்மனுக்கு நீயே உறை.

எல்எக்ஸ்எக்ஸ்-1: எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை பிராணனுக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ பிராணா, இந்த உணவின் மூலம் என் சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை அபானனுக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ அபனா, இந்த உணவின் மூலம் என் சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, இந்த அமுதப் பிரசாதத்தை நான் பயபக்தியுடன் வியானாவுக்கு அளித்துள்ளேன். ஓ வியானா, இந்த உணவின் மூலம் என் பரவிய சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை உதானுக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ உதானா, இந்த உணவின் மூலம் என் சுவாசத்தின் சக்தியை அதிகப்படுத்து. எனது மத நம்பிக்கையில் உறுதியாக, நான் இந்த அமுதப் பிரசாதத்தை சமணருக்கு மரியாதையுடன் அளித்துள்ளேன். ஓ சமணா, இந்த உணவின் மூலம் என் நடு மூச்சு சக்தியை அதிகப்படுத்து.

எல்எக்ஸ்எக்ஸ்ஐ-1: (இப்போது எடுத்த இந்த உணவால்) பரம பகவான் திருப்தியடையட்டும் – உலகம் முழுவதையும் ஆட்சி செய்பவர் மற்றும் அனைவரையும் அனுபவிப்பவர் யார், உடலில் வசிப்பவர், கட்டைவிரலின் அளவு மற்றும் உடலின் ஆதரவு யார் – கால்விரல் முதல் கிரீடம் வரை அதற்கு உணர்வையும் செயல்பாட்டையும் வழங்குதல்.

LXXII-1: ஓ ஆண்டவரே, எனது பேச்சு, சுவாசம், பார்வை மற்றும் செவித்திறன் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்த பிறகு, அந்தந்த நிலையங்களில், அதாவது வாய், நாசி, கண்கள் மற்றும் காதுகளில் உறுதியாக உள்ளன; அதனால் வலிமையும் உயிர்ச்சக்தியும் என் கைகளிலும் தொடைகளிலும் திரும்பியுள்ளன. எனது நுட்பமான உடலும், அனைத்து உறுப்புகளையும் கொண்ட எனது மொத்த உடலும் இப்போது போதாமையிலிருந்து விடுபட்டுள்ளன. உமக்கு என் வணக்கம். எனக்கும் எனக்கும் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தாதே.

LXXIII-1: அழகான இறகுகள் கொண்ட பறவைகளைப் போல, தியாக வழிபாட்டிற்கு (அல்லது அனைவரின் நன்மைக்காகவும்) அர்ப்பணிப்புடன் இருந்த முனிவர்கள் இந்திரனை அணுகி இவ்வாறு வேண்டினார்கள்: எங்கள் இருளையும் அறியாமையையும் நீக்குங்கள்; தகுதியான காட்சிகளால் எங்கள் கண்களை நிரப்பவும்; கண்ணிகளில் சிக்கிய பறவைகள் போன்ற அறியாமையின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை விடுவித்தருளும்.

LXXIV-1: ஓ ருத்ரா, நீ உடலில் செயல்படும் சுவாசங்கள் மற்றும் புலன்களின் உறுப்புகளின் பிணைப்பு முடிச்சு. துக்கங்களின் முடிவாக என்னை உள்ளிடவும், நான் உட்கொண்ட அந்த உணவின் மூலம் என்னைப் பெருக்கிக் காக்கவும்

. மரணத்திலிருந்து என்னைக் காத்தருளும்.

LXXVI-1: ஓ அக்னி, நீங்கள் பொதுவாக மனிதர்களின் பாதுகாவலராகவும், தியாகம் செய்பவர்களின் பாதுகாவலராகவும் தியாகத்தின் நாட்களில் பிறந்துள்ளீர்கள். நீங்கள் சுற்றி ஒளி பரப்பி, அல்லது வெறும் தொடுதலால் விரைவாக வலியை உண்டாக்கப் பிறந்தவர். நீ நீரிலிருந்து மின்னலாகவோ அல்லது கடலுக்கு அடியில் உள்ள வெப்பமாகவோ பிறந்திருக்கிறாய். நீ உராய்வு மூலம் மேகங்கள் அல்லது கற்களில் இருந்து பிறந்தாய். நீ காடுகளிலிருந்து பிறந்தவன். நீ மூலிகைகளிலிருந்து பிறந்தவன். நீ எப்போதும் தூய்மையாக அல்லது சூரியனாகப் பிறந்திருக்கிறாய்.

LXXVII-1: அனைத்து யாகங்களிலும் வழிபடப்படும் ஆண்டவரே, ஆழ்ந்த பயபக்தியுடன் உமக்கு முன்பாக வணங்குகிறேன்! நான் உனது முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! நான் உனது முன் சிரம் தாழ்த்துகிறேன்! மங்களகரமானதைக் கொடுப்பவனாக என்னுடன் இருக்க வேண்டும். இங்கே மகிழ்ச்சியை அளிப்பவனாக என்னுடன் இருக்க வேண்டும். நல்ல மற்றும் தெய்வீக குணங்களை வழங்குபவராக என்னுடன் இருக்க வேண்டும். வேதக் கற்றலால் பிறந்த சிறப்பைத் தருபவராக என்னுடன் நிலைத்திருக்க வேண்டும். நான் ஸ்தாபித்த யாகம் முழுவதுமாக செழிப்பாக இருக்கும் போது, ​​அதன் பலனை வழங்க என்னுடன் இரு.

LXXVIII-1: உண்மைத்தன்மை சிறந்தது. உண்மைத்தன்மை மட்டுமே சிறந்தது. சத்தியத்தால் பேரின்ப நிலையை அடைந்தவர்கள் அங்கிருந்து ஒருபோதும் வீழ்வதில்லை. எது சத், அதாவது நல்லவர்களுக்கு உரியதோ, அதுவே சத்தியம் (சத்தியம்). இந்த காரணத்திற்காக, உயர்ந்த நன்மையைத் தேடுபவர்கள் சத்தியத்தில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-2: சிக்கனமே விடுதலைக்கான வழி என்றும், மத விரதத்தை விட உயர்ந்த சிக்கனம் எதுவும் இல்லை என்றும் சிலர் கருத்துக் கொண்டுள்ளனர். இந்த சிறந்த சிக்கனத்தை நடைமுறைப்படுத்துவது கடினம். அதை நடைமுறைப்படுத்தும் ஒரு நபர் வெல்ல முடியாதவராக மாறுகிறார் (அல்லது அத்தகைய சிக்கனத்தை சாதாரணமாக நினைத்துப் பார்க்க முடியாது). எனவே சிக்கனத்தில் உயர்ந்த நல்ல மகிழ்ச்சியை நாடுபவர்கள்.

LXXVIII-3: தடைசெய்யப்பட்ட பொருட்களின் ஈர்ப்பிலிருந்து புலன்களை விலக்குவதே விடுதலைக்கான வழி என்று பரிபூரண சந்நியாசிகள் அறிவிக்கின்றனர். அதனால் அவர்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-4: காட்டில் வசிக்கும் துறவிகள் மன அமைதியே விடுதலைக்கான வழி என்று கருதுகின்றனர், எனவே அவர்கள் அமைதியில் மகிழ்ச்சியடைகின்றனர்.

LXXVIII-5: அனைத்து உயிரினங்களும் தன்னலமற்ற பரிசை உயர்ந்ததாகப் போற்றுகின்றன; ஏனென்றால், தன்னலமற்ற பரிசை வழங்குவதை விட கடினமான செயல் எதுவும் இல்லை. எனவே உயர்ந்த நன்மையை நாடுபவர்கள் தன்னலமற்ற பரிசுகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-6: வேதக் கடமையே விடுதலைக்கான வழி என்று சிலர் கருதுகின்றனர். வேதக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் உலகம் முழுவதும் ஒன்றாக நடத்தப்படுகிறது. வேதம் வகுத்துள்ள கடமைகளை விடக் கடினமானது எதுவுமில்லை. எனவே உயர்ந்த நன்மையை நாடுபவர்கள் வேதக் கடமையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-7: அதிக எண்ணிக்கையிலான மக்கள் இனப்பெருக்கம் என்பது விடுதலைக்கான வழிமுறை என்று கருதுகின்றனர். அதனால்தான் அதிக எண்ணிக்கையிலான இனிய நீரூற்றுகள் பிறக்கின்றன. இனப்பெருக்கம் என்பது அத்தகைய வழிமுறையாகக் கருதப்படுவதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இனப்பெருக்கத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

LXXVIII-8: வேத மதத்தின் மீது பக்தி கொண்ட ஒருவர், வேத நெருப்புதான் விடுதலைக்கான வழி என்று கூறுகிறார். எனவே வேத நெருப்புகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.

LXXVIII-9: வேத மதத்திற்கு அர்ப்பணித்த மற்றொரு நபர், அக்னிஹோத்ரமே விடுதலைக்கான வழி என்று கூறுகிறார். எனவே அக்னிஹோத்ர யாகத்தில் உயர்ந்த மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் சிலர்.

LXXVIII-10: வைதீக மதத்திற்கு அர்ப்பணித்த மற்றவர்கள் தியாகம்தான் விடுதலைக்கான வழி என்று கூறுகிறார்கள். உண்மையாகவே தேவர்கள் தங்களின் முந்தைய தியாகங்களால் சொர்க்கத்தை அடைந்துள்ளனர். எனவே யாகம் செய்வதில் உயர்ந்த நல்ல மகிழ்ச்சியை நாடுபவர்கள்.

LXXVIII-11: சில ஞானிகள் உள்நோக்கி வழிபடுவதே விடுதலைக்கான வழி என்று கருதுகின்றனர். எனவே ஞானமுள்ளவர்கள் உள்ளான வழிபாட்டில் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.

LXXVIII-12: பிரம்மா ஹிரண்யகர்பா சந்நியாசம் விடுதலைக்கான வழி என்று கருதுகிறார். ஹிரண்யகர்பன் உண்மையில் உயர்ந்தவர். ஹிரண்யகர்ப்பா (அவர் ஒரு ஆளுமையாக இருந்தாலும்) உயர்ந்தவர் மட்டுமே. நிச்சயமாக மேலே கூறப்பட்ட இந்த சிக்கனங்கள் தாழ்வானவை. சந்நியாசம் மட்டும் அனைவரையும் மிஞ்சியது. சந்நியாசத்தின் விலைமதிப்பற்ற அறிவின் அனைத்தையும் மீறிய சிறப்பை இவ்வாறு அறிந்தவருக்கு (வழங்கப்பட்டுள்ளது).

LXXIX-1: பிரஜாபதி மற்றும் சுபர்ணா ஆகியோரின் மகனான ஆருணி, தன் தந்தையான பிரஜாபதியை அணுகி – இவ்வாறு நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் – அவரிடம் கேள்வி எழுப்பினார், மரியாதைக்குரிய ஆசிரியர்கள் எதை விடுதலைக்கான உச்ச வழிமுறையாக அறிவிக்கிறார்கள்? அவருக்கு பிரஜாபதி இவ்வாறு பதிலளித்தார்:

LXXIX-2: உண்மையால் காற்று வீசுகிறது. உண்மையாகவே சூரியன் வானத்தில் பிரகாசிக்கிறது. உண்மையே பேச்சின் அடித்தளம். நடைமுறை வாழ்க்கையில் எல்லாமே உண்மையைச் சார்ந்தது. ஆகவே, உண்மையே விடுதலைக்கான மிக உயர்ந்த வழி என்கிறார்கள்.

LXXIX-3: கடவுள்கள் கடவுளை அடைந்த தொடக்கத்தில் செய்த தபஸ். தவத்தால் பார்ப்பனர்கள் படிப்படியாக சொர்க்கத்தை அடைந்தனர். தபஸ் மூலம் நமது கையகப்படுத்துதலுக்குத் தடையாக இருக்கும் எதிரிகளை அகற்றுவோம். எல்லாம் தபஸில் நிறுவப்பட்டது. எனவே அவர்கள் தபஸ் (விடுதலைக்கான வழிமுறை) என்று கூறுகிறார்கள்.

LXXIX-4: புலன்-கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் நபர்கள் தங்கள் பாவத்தை அதன் மூலம் அசைத்துவிடுகிறார்கள். முழுமையான துறவிகள் புலன் கட்டுப்பாட்டின் மூலம் படிப்படியாக சொர்க்கத்தை அடைந்தனர். புலன் கட்டுப்பாடு என்பது சாதாரண உயிரினங்களால் அணுக முடியாதது. எல்லாமே புலன் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்டுள்ளன. எனவே புலன்-கட்டுப்பாடுதான் உச்சம் (விடுதலைக்கான வழிமுறை) என்கிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-5: அமைதியான சுபாவம் உள்ளவர்கள் அமைதியால் மட்டுமே நன்மை செய்கிறார்கள். முனிவர்கள் மன அமைதியின் மூலம் சொர்க்கத்தை அடைந்துள்ளனர். மன அமைதி என்பது சாதாரண உயிரினங்களால் அணுக முடியாதது. எல்லாமே மன அமைதியை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் மன அமைதியே விடுதலையின் மிக உயர்ந்த வழி என்கிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-6: தட்சிணா வடிவில் பரிசு வழங்குவது தியாகங்களின் பாதுகாப்பான உறைவிடம். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கொடுப்பவரையே வாழ்கின்றன. மக்கள் தங்கள் மீது பொறாமை கொண்டவர்களையும் தீங்கிழைப்பவர்களையும் பரிசுகளால் அகற்றுகிறார்கள். அன்பளிப்பின் மூலம் நட்பற்றவர் நட்பாக மாறுகிறார். எல்லாம் பரிசில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, கொடையே விடுதலையின் உயர்ந்த வழி என்று கூறுகிறார்கள்.

LXXIX-7: தர்மம், மத நீதி, முழு பிரபஞ்சத்தின் ஆதரவாகும். எல்லா மக்களும் தர்மத்தில் முழு ஈடுபாடு கொண்ட ஒருவரை நெருங்குகிறார்கள். தர்மத்தின் மூலம் ஒருவன் பாவத்தை விரட்டுகிறான். அனைத்தும் தர்மத்தால் ஆதரிக்கப்படுகின்றன. ஆகவே, தர்மம்தான் விடுதலைக்கான உயர்ந்த வழி என்று சொல்கிறார்கள்.

LXXIX-8: இந்த உலகில் இனப்பெருக்கம் நிச்சயமாக இனத்தின் அடித்தளம். சாஸ்திர விதிகளின்படி, நீரூற்றுகளை வளர்ப்பதன் மூலம் சரியான வழியில் சந்ததியின் தொடர்ச்சியை நீட்டிக்கும் ஒரு நபர், தனது மறைந்த முன்னோர்களுக்கு தனது கடனை செலுத்துகிறார். அதுவே அவன் முன்னோர்களுக்குக் கடனை அடைக்க வழி. எனவே, மகப்பேறுதான் விடுதலையின் உயர்ந்த வழி என்று சொல்கிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-9: பெரிய தியாக நெருப்பு உண்மையில் மூன்று மடங்கு அறிவு மற்றும் கடவுளுக்கு வழிவகுக்கும் பாதை. அவற்றில், கர்ஹபத்ய நெருப்பு ரிக்-வேதம், பூமி மற்றும் ரத்தந்தர சமன் மந்திரம்; அன்வஹார்யபச்சனா என்பது யஜுர்-வேதத்தின் நடுப்பகுதி மற்றும் வாமதேவ்ய சமன் மந்திரம்; ஆஹவனியா என்பது சாம-வேதம், சொர்க்க லோகங்கள் மற்றும் பிரஹத் சமன் மந்திரம். எனவே, யாகத் தீயே முக்தியின் உயர்ந்த வழி என்று கூறுகிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-10: விடியற்காலையில் மற்றும் சூரிய அஸ்தமனத்தில் அக்னிஹோத்ரா நிகழ்ச்சியை நடத்துவது, வீட்டைப் பராமரிப்பது தொடர்பான பாவங்களுக்குப் பரிகாரமாகும். இது ஒரு நல்ல யாகம் மற்றும் ஒரு நல்ல ஹோமம் மற்றும் இது அனைத்து யாகங்கள் மற்றும் கிராதுகள் ஆகியவற்றின் தொடக்கமாகும். இது சொர்க்க உலகத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாகும். எனவே அக்னிஹோத்ரமே முக்திக்கான மிக உயர்ந்த வழிமுறை என்கிறார்கள்.

LXXIX-11: வைதீக மதத்திற்கு அர்ப்பணித்த மற்றவர்கள் தியாகமே விடுதலைக்கான வழி என்று கூறுகிறார்கள். தியாகம் என்பது கடவுளுக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே தேவர்கள் தங்கள் முந்தைய தியாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடைந்துள்ளனர். யாகத்தால் பேய்களை விரட்டியிருக்கிறார்கள். தியாகத்தால் பகைவர்கள் நட்பு கொள்கிறார்கள். எல்லாவற்றையும் தியாகம் ஆதரிக்கிறது. ஆகவே, தியாகம்தான் விடுதலையின் உயர்ந்த வழி என்கிறார்கள்.

LXXIX-12: உள்நோக்கிய வழிபாடு அல்லது மனச் செறிவு உண்மையில் பிரஜாபதி நிலையை அடைவதற்கான வழிமுறையாகும், அதனால் அது புனிதமானது. மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள் நல்லதைக் கண்டு உணர்கின்றனர். மனச் செறிவு மூலம், விஸ்வாமித்திரர் போன்ற பார்ப்பனர்கள் வெறும் விருப்பத்தால் பாடங்களை உருவாக்கினர். அனைத்தும் மனதின் இந்த சக்தியைப் பொறுத்தது. எனவே உள்நோக்கிச் செறிவூட்டும் சக்தியே விடுதலையின் உச்சமான வழி என்று கூறுகிறார்கள்.

எல்எக்ஸ்எக்ஸ்ஐஎக்ஸ்-13: முக்திக்கான உயர்ந்த வழிமுறையாகக் குறிப்பிடப்பட்ட சந்நியாசம் பிரம்மம் என்றும், பிரம்மன் பிரபஞ்ச ஆவி என்றும், மேன்மையான ஆனந்தம் உடையவர், சுயமாகப் பிறந்தவர், படைக்கப்பட்ட உயிரினங்களின் பாதுகாவலர், காலத்தின் ஆன்மா என்றும் அறிவாளிகள் அறிவிக்கிறார்கள். அதனால் முன்னும் பின்னுமாக.

LXXIX-14: ஆண்டு சூரியன். சூரியனில் இருப்பவர் ஹிரண்யகர்ப்பன்; அவர் பரமேஷ்தின் (பிரபஞ்சத்தின் பாதுகாவலர்) மற்றும் பிரம்மாத்மன் – அனைத்து உயிரினங்களின் உள்ளார்ந்த சுயமாக இருக்கும் உச்ச உண்மை.

LXXIX-15: சூரியன் வெப்பத்தை அளிக்கும் கதிர்கள், அதே கதிர்கள் தண்ணீரை மழை-மேகமாக மாற்றுகின்றன, இது மழையைப் பொழிகிறது. மழை மேகங்களால் மூலிகைகளும் மரங்களும் தோன்றுகின்றன. மூலிகைகள் மற்றும் மரங்களில் இருந்து உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவைப் பயன்படுத்துவதன் மூலம் சுவாசம் மற்றும் உணர்வுகள் ஊட்டமடைகின்றன. உயிர்மூச்சு ஊட்டமடையும் போது உடல் வலிமை பெறுகிறது. உடல் வலிமை தபஸ் (சுயக்கட்டுப்பாடு, மத விரதம் மற்றும் பலவற்றின் வடிவத்தில்) பயிற்சி செய்யும் திறனை அளிக்கிறது. இத்தகைய தவங்களின் விளைவாக, வேதப்பூர்வமான உண்மைகளில் நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கையின் மூலம் மன ஆற்றல் வருகிறது. மன சக்தியால் புலன் கட்டுப்பாடு சாத்தியமாகிறது. புலன்-கட்டுப்பாடு மூலம் பிரதிபலிப்பு உருவாகிறது. பிரதிபலிப்பின் விளைவாக மனதில் அமைதி ஏற்படுகிறது. சத்தியத்தின் உறுதியான அனுபவம் அமைதியைப் பின்பற்றுகிறது. உறுதியான அனுபவத்தின் மூலம் சத்தியத்தை நினைவு கூர்வது உண்டாகிறது. நினைவாற்றல் தொடர்ச்சியான நினைவை உருவாக்குகிறது. தொடர்ச்சியான நினைவின் விளைவாக உண்மையை உடைக்காத நேரடி உணர்தல். அத்தகைய உணர்தல் மூலம் ஒரு நபர் ஆத்மாவை அறிவார். இதனாலேயே, உணவு கொடுப்பவன் இவை அனைத்தையும் தருகிறான். ஏனெனில், உயிரினங்களின் உயிர் சுவாசமும் புலன்களும் உணவில் இருந்து வந்தவை, அந்த பிரதிபலிப்பு உயிர் மூச்சு மற்றும் புலன்களுடன் செயல்படுகிறது, உடைக்கப்படாத நேரடி உணர்தல் பிரதிபலிப்பிலிருந்து வருகிறது மற்றும் பேரின்பம் உண்மையின் உடைக்கப்படாத நேரடி உணர்தலில் இருந்து வருகிறது. இவ்வாறு பேரின்பத்தை அடைந்து, பிரபஞ்சத்தின் ஆதாரமான பரமாத்மாவாக மாறுகிறார்.

LXXIX-16: யாரால் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறதோ – பூமி மற்றும் நடுப்பகுதி, வானம் மற்றும் கால்பகுதிகள் மற்றும் துணை காலாண்டுகள் – அந்த நபர் ஐந்து மடங்கு மற்றும் ஐந்து பொருட்களால் ஆனது. சந்நியாசத்தின் மூலம் உயர்ந்த ஞானத்தை அடைந்தவர் உண்மையில் இந்த நபர். தற்போது உணரக்கூடிய அனைத்தும், கடந்த காலத்தில் இருந்தவை, எதிர்காலத்தில் இருக்கும் அனைத்தும் அவனே. வெளித்தோற்றத்தில் மனிதனின் மூலம், அவனது உண்மையான இயல்பே, வேதங்களை விசாரிப்பதன் மூலமும், சரியான அறிவில் அவனுடைய புதிய பிறப்பால் அடையப்படுவதாலும் ஆகும். அவர் தனது குருவால் வழங்கப்பட்ட அறிவின் செழுமையிலும், அவரது நம்பிக்கையிலும் உண்மையிலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டவர். அவர் சுய பிரகாசமாகிவிட்டார். அப்படிப்பட்டவராக அவர் அறியாமை இருளுக்கு அப்பால் இருக்கிறார். ஓ ஆருணி, சன்யாசத்தின் மூலம் உன்னதமான அவரை உணர்ந்து, உங்கள் மனதை இதயத்தில் நிலைநிறுத்தி, மீண்டும் ஒரு மரணத்திற்கு இரையாகி விடாதீர்கள். சந்நியாசம் உணர்தலின் மிக உயர்ந்த வழிமுறையாக இருப்பதால், ஞானிகள் மற்ற எல்லா முக்தி வழிமுறைகளுக்கும் மேலானதாக அறிவிக்கிறார்கள்.

LXXIX-17: ஓ உன்னதமானவனே, நீ எங்களுக்கு உன்னதமான அறிவின் செல்வத்தைக் கொடுப்பவன். நீயே எல்லாமாகிவிட்டாய். நீங்கள் தனிப்பட்ட ஆத்மாக்களை சூத்ராத்மனில் ஒன்றிணைக்கிறீர்கள். நீ பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறாய். நெருப்புக்குப் பொலிவைத் தருபவன் நீயே. சூரியனுக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருபவன் நீயே. நீயே சந்திரனுக்கு ஒளிச் செல்வங்களை வழங்குபவன். உபயமா பாத்திரத்தில் சோம ரசமாக பிரசாதமாக எடுத்துக் கொள்ளப்பட்டாய். ஒளியின் வெளிப்பாடாக விளங்கும் உன்னதமான உன்னை வணங்குகிறோம்.

LXXIX-18: (சந்நியாசி பரமாத்மாவை தியானித்து) ஓம் என்ற எழுத்தை உச்சரிப்பதன் மூலம் அவர் மீது தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். இது, ஓம் என்ற எழுத்து, பல பெரிய உபநிடதங்களின் உட்பொருளாகவும், தகுதியற்றவர்களுக்கு வழங்காமல் தெய்வங்களால் பாதுகாக்கப்பட்ட ரகசியமாகவும் உள்ளது. சந்நியாசத்திற்குப் பிறகு பிரணவத்தின் துணையுடன் பரமாத்மாவைத் தியானிப்பவர் எல்லையற்ற பரமாத்மாவை அடைகிறார். அதன் மூலம் அவன் பிரம்மத்தின் மகத்துவத்தை அடைகிறான். இவ்வாறு இரகசிய அறிவு வழங்கப்பட்டுள்ளது.

எல்எக்ஸ்எக்ஸ்எக்ஸ்-1: யாகத்தை நிறுவியவர், ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ள விதத்தில் உயர்ந்த அறிவைப் பெற்ற ஒரு சன்னியாசியால் அர்ப்பணிக்கப்பட்ட தியாகத்தின் விஷயத்தில், அவருடைய சுயமே உள்ளது. அவருடைய விசுவாசம் அவருடைய மனைவி; அவரது உடல் அவரது தியாக எரிபொருள்; அவன் மார்பே அவனுடைய பலிபீடம்; அவருடைய முடிகள் அவருடைய பரிசுத்த புல்; அவன் கற்ற வேதம் அவனுடைய கூந்தல்; அவரது இதயம் அவரது தியாக பதவி; அவரது விருப்பம் அவரது தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்; அவரது கோபம் அவரது விலங்கு எரிக்கப்பட வேண்டும்; அவனுடைய சிக்கனம் அவனுடைய நெருப்பு; அவனுடைய புலன்-கட்டுப்பாடு அவனுடைய இம்மோலேட்டர்; அவனுடைய பரிசுகள் அவனுடைய தக்ஷிணை; அவரது பேச்சு அவரது ஹோதிர் பாதிரியார்; அவரது மூச்சு அவரது உட்கதிர் பூசாரி; அவன் பார்வை அவனுடைய அத்வர்யு பூசாரி; அவனுடைய மனம் அவனுடைய பிராமண ஆசாரியன்; அவன் கேட்டல் அவனுடைய அக்னிட் பூசாரி; அவரது ஆயுட்காலம் அவரது ஆயத்த சடங்கு; அவன் எதை உண்கிறானோ அது அவனுடைய பிரசாதம்; அவர் குடிப்பது சோமா ஜூஸைக் குடிப்பது; அவர் தன்னை மகிழ்விக்கும் போது அதுவே அவரது உபாசத் சடங்கு; அவர் நடக்கும்போது, ​​​​உட்கார்ந்து, நிற்கும்போது அது அவருடைய பிரவர்க்ய சடங்கு; எது அவனுடைய வாயோ அது அவனுடைய ஆஹவனிய நெருப்பு; அவனுடைய சொல்லாடல் அதுவே அவனுடைய காணிக்கை; அவனுடைய அறிவே அவனுடைய ஹோம யாகங்கள்; அவர் மதியம் மற்றும் முற்பகல் சாப்பிடும் போது அது அவரது சமித்-ஹோமம் (நெருப்பில் எரிபொருள் பிரசாதம்); பகலின் மூன்று பிரிவுகள் – முற்பகல், மதியம் மற்றும் மாலை – அவருடன் தொடர்புடையவை; இரவும் பகலும் அவருடைய தர்சபூர்ணமாச யாகங்கள்; அரை மாதங்கள் மற்றும் மாதங்கள் அவரது சாதுர்மாஸ்ய யாகம்; பருவங்கள் அவனுடைய பசுபந்த யாகம்; ஸம்வத்ஸரங்களும் பரிவத்ஸரங்களும் அவருடைய அஹர்கண யாகம்; மொத்த தியாகம், உண்மையில், அவரது சாத்திரம்; மரணம் என்பது அவப்ரிதா அல்லது அவரது தியாகத்தின் நிறைவு. அக்னிஹோத்திரம் முதல் சத்திரம் வரையிலான அனைத்துக் கடமைகளையும் மறைத்து, முதுமையால் மரணம் அடைந்து, சூரியன் வடக்கே சஞ்சரிக்கும் காலத்தில் இறந்தால், சந்நியாசியின் நடத்தை – இதை அறிந்தவன் தேவர்களின் ஆதிக்கத்தை அடைகிறான். இந்திரனைப் போல, பின்னர் சூரியனுடன் அடையாளம் அல்லது தோழமையை அடைகிறது. மறுபுறம், சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலத்தில் இறந்தவர் மேனிகளின் மகத்துவத்தை மட்டுமே பெறுகிறார், பின்னர் சந்திரனுடன் அடையாளத்தை அல்லது தோழமையை அடைகிறார். சூரியன் மற்றும் சந்திரனின் மகத்துவத்தை தனித்தனியாக அறிந்த ஒரு பிராமணன் இந்த இரண்டையும் உணர்கிறான்; ஆனால் ஹிரண்யகர்ப்பனை அறிந்தவன் மேலும் வெற்றி பெறுகிறான். ஹிரண்யகர்ப்ப லோகத்தில் பெற்ற அந்த அறிவிலிருந்து, ஹிரண்யகர்ப்ப லோகம் கலைக்கப்படும்போது, ​​இருப்பு-அறிவு-ஆனந்தமாகிய பிரம்மனின் பேரருளை அடைகிறான். இவ்வாறே இங்கும், இந்த உபநிடதத்திலும் உள்ள இரகசிய அறிவு முடிவடைகிறது.

ஹரி ஓம்! மித்ரா, வருணன், ஆரியமன், இந்திரன், பிருஹஸ்பதி
மற்றும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் விஷ்ணு நமக்கு அருள் புரியட்டும்
, மேலும் எங்களுக்கு நலத்தையும் பேரின்பத்தையும் வழங்குவாயாக.
நான் பிரம்மனை பயபக்தியுடன் வணங்குகிறேன்.
ஓ வாயுவே, நான் உன்னை வணங்குகிறேன்.
நீ மெய்யாகவே உணரக்கூடிய பிரம்மன்.
நான் அறிவிப்பேன்: நீங்கள் சொல்வது சரிதான்.
நீயே உண்மையும் நல்லவனும்.
வாயு என்று போற்றப்படும் அந்த உன்னதமானவன் என்னைக் காப்பாற்றட்டும்.
அவர் ஆசிரியரைக் காப்பாற்றட்டும்.
என்னை, அவர் பாதுகாக்கட்டும்; என் ஆசிரியரே, அவர் பாதுகாக்கட்டும்.
ஓம்! அவர் நம் இருவரையும் ஒன்றாகக் காப்பார்; அவர் நம் இருவரையும் ஒன்றாகப் போஷிப்பாராக;
நாம் மிகுந்த ஆற்றலுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்,
எங்கள் படிப்பு தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்;
நாம் பரஸ்பரம் தகராறு செய்யாமல் இருக்கலாம் (அல்லது யாரையும் வெறுக்காமல் இருக்கலாம்).
ஓம்! என்னில் அமைதி நிலவட்டும்!
என் சூழலில் அமைதி நிலவட்டும்!
என் மீது செயல்படும் சக்திகளில் அமைதி நிலவட்டும்!

கிருஷ்ண-யஜுர்-வேதத்தில் உள்ள மஹாநாராயணோபநிஷத் இங்கே முடிகிறது.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈஸா உபநிஷதம். விளக்கம்:

January 18, 2024

ஸ்ரீ ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

பூர்ணம் – முழுமை: அத: – அது: இதம் – இங்கே: பூர்ணாத் – முழுமையிலிருந்து: உதச்யதே உதித்தது அல்லது வந்தது: பூர்ணஸ்ய முழுமையிலிருந்து: ஆதாய எடுக்கப்பட்டது: பூர்ணம் ஏவ முழுமையாகவே: அஸிஷ்யதே – இருக்கிறது.

ஓம் என்ற பிரணவத்தோடு துவங்குவது வேதகால மரபு என்றாலும் இந்த சாந்தி பாடத்தில் அதுவும் பொருளோடு இயைந்து நிற்கிறது.

ஓம் என்ற பிரணவம், அது முழுமையானது. இங்கு (படைக்கப்பட்டிருக்கும் பிரபஞ்சமும்) முழுமையானது. (அந்த) முழுமையிலிருந்தே (இந்த) முழுமை உதித்தது. முழுமையிலிருந்து எடுக்கப்பட்டது (பிரிந்து வந்தும்) முழுமையாகவே இருக்கிறது.

வாக்கு, மனம் மற்றும் உடலியக்கத்தில் அமைதி நிலவட்டும்.

முழுமையானது என்று நாம் சொல்லும் ஒன்றிலிருந்து, ஒரு பகுதியை எடுத்துவிட்டால், அந்த மூலப்பொருளும். எடுக்கப்பட்டதும் இரண்டுமே முழுமையாக இருக்க முடியாது. ஆனால், பிரம்மம் முழுமையானதாக இருக்கிறது. பிரம்மத்திலிருந்து தோன்றிய இந்த பிரபஞ்சமும் முழுமையானதாக இருக்கிறது. இது நிகழ முடியாதது. ஆனால் பிரிதல் என்பதில்லாமல் ஒரு மூலப்பொருள் உருவமும் பெயரும் மாறுமானால் அப்பொழுது இந்த நிகழ்வு பொருந்தும். அதாவது, களிமன் உருண்டையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து விட்டால், இரண்டு பகுதிகளும் முழமையானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதே களிமன் பானையாக உருமாற்றம் அடையுமானால் இரண்டுமே முழுமையான தாகும். எனவே பிரபஞ்சத்தை பிரம்மம் படைத்தது என்பதல்ல, பிரம்மமே பிரபஞ்சமாக உருவெடுத்தது என்பதே உண்மை. இதை நுட்பமாக தெரிவிக்கிறது இந்த சாந்தி பாடம்.

———

ஓம் ஈசா வாஸ்யமிதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன பூஞ்சிதா மா க்ருதாக கஸ்யஸ்வித் தனம் (1)

ஈசா பிரம்மத்தின்: வாஸ்யம் – சுவாஸம்: இதம் – இங்கு: ஸர்வம் – சகலமும்: யத்கிம் ச எதுவானாலும்: ஜகத்யாம்- அசைகின்ற: ஜகத்- பிரபஞ்சம்: தேன அதனால்: த்யக்தேன ஓதுக்கி: பூஞ்சிதா காத்துக்கொள்: மா க்ருத: எடுத்துக்கொள்ளாதீர்கள்: கஸ்யஸ்வித் – பிறருடைய: தனம் – செல்வம்.

அசைகின்ற எதுவானாலும் சகலமும் இங்கு பிரம்மத்தின் சுவாஸமே. இந்த ஞானத்தால் (பற்றை) ஒதுக்கி (உன்னை) காத்துக்கொள். பிறர் பொருளை

கைக்கொள்ளாதே.

மிக அற்புதமாக சூக்தம் இது. அதிரடியான துவக்கம். பேருண்மையை அநாசயமாக வெளியிடுகிறது. ஈசனின் சுவாசமே சகலமும் என்பதால், இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் அதிர்வுகளால் ஆனது மட்டுமே (ஏiடிசயவழைn ளை வாந ழடெல டியளந) என்று இன்றைய அறிவியல் கூறும் உண்மையை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர் நம் ஞானிகள்.

சுவாஸம் உருவாக்கப்படுவதல்ல என்பதால் படைப்பு என்று ஒன்று இல்லை. எல்லாமே சங்கிலித்தொடர் நிகழ்வுகள். படைப்பிற்கு முன்னால் என்று கூறப்படுவது ஒடுக்க நிலையைத்தான் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது.

பிறர் பொருளை கைக்கொள்ளாதே என்ற வரிகள் அற்புதமானவை. இங்கு பொருள் என்பது செல்வம் அல்ல. அறிவே இங்கு செல்வமாக குறிப்பிடப்படுகிறது. பிறர் அறிவில் – ஞானத்தில் – குளிர்காயாதீர்கள் என்று எச்சரிக்கிறது.

(எல்லாமே பிரம்மத்தின் சுவாஸம் என்ற) இந்த ஞானத்தால் (பொருட்கள், செயல்கள், செயல்களின் விளைவுகள் இவற்றின் மீதான பற்றை) ஒதுக்கி உன்னைக் காப்பாற்றிக் கொள் என்கிறார் ரிஷி. உலக வாழ்;க்கையே உயர்வு என்றோ துறவு வாழ்க்கையே சிறந்தது என்றோ எந்த கருத்தும் இல்லாமல் யதார்த்த உண்மையையே ஏற்கச் சொல்கிறார். இதைத்தான் ஸன்யாஸம் என்று வேதகால மக்கள் குறிப்பிட்டனர். எல்லாமே பிரம்மத்தின் மூச்சு என்றால் எதை துறப்பது, எதை அடைவது.

———–

குர்வன்னேவஹ கர்மாணி ஜிஜீவிஷேசச்சதம் ஸமா:

ஏவம் த்வயீ நான்யத்தேதோsஸ்தி ந கர்மா லிப்யதே நர: (2)

குர்வன் – செய்வதால்: இஹ இவ – இங்கு இப்பொழுது: கர்மாணி செயல்களை: ஜிஜீவிஷே ச வாழ்வதற்கு: சதம் ஸமா: – நூறாண்டு காலம்: ஏவம் – ஒன்றே: த்வயீ நீங்கள்: ந – இல்லை: அன்யத் – மற்றபடி: ஏத உ – இதனை விட: அஸ்தி – இருக்கிறது: ந – இல்லை: கர்மா செயல்: லிப்யதே பற்று கொள்ள: நர மனிதன்.

இங்கு இப்பொழுதே செயல்களை செய்வதால் மட்டுமே நூறாண்டு காலம் வாழ முடியும். மனிதர்களாகிய நீங்கள் செயல்களில் பற்று கொள்வதற்கு வேறு ஒன்றும் நிச்சயமாக இல்லை.

பற்றற்று செயலாற்றுவது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், செயலின்மை கண்டிக்கப்படுவதும் உணரத்தக்கது. இறைவனை நம்புங்கள் நீங்கள் நூறாண்டுகள் வாழலாம் என்று சொல்லாமல், செயல்படுங்கள் என்று உலகத்தின் இயக்கத்திற்கு ஊக்கம் தருகிறது இந்த மந்திரம்.

———-

ஸுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா

தாமஸ்தே ப்ரேத்யபிகச்சந்தி யே கே சாத்மஹ்னோ ஜனா: (3)

ஸுர்யா அசுரர்களின்: நாம பெயரில்: தே அந்த: லோகா உலகங்கள்: அந்தேன பார்வையற்றவர்களைப் போல: தமஸா அறியாமையால்: வ்ருதா – சூழப்பட்டு: தாம் – இடம்: அஸ்தே அடைகிறார்கள்: ப்ரேத்ய உயிர் பிறிந்தபின்: அபிகச்சந்தி அடைகிறார்கள்: யே கே ச யாராகிலும் கூட: ஆத்ம ஹநோ ஆத்மாவை அழித்துக்கொள்ளும்: ஜனா: – மனிதர்கள்.

; அறியாமையால் சூழப்பட்டு அசுரர்களின் பெயரில உள்ள இடங்களான அந்த உலகங்களை, ஆத்மாவை அழித்துக்கொள்ளும் யாராகிலும், பார்வையற்றவர்களைப் போல, உயிர் பிரிந்தபின் அடைகிறார்கள்.

பிரம்மத்தின் – ஆத்மாவின் இருப்பை அனுபவமாக உணர்ந்துகொள்ளும் ஆத்மஞானத்தை இந்த மந்திரமும் வலியுறுத்துகிறது. ஒரு பொருளின் இருப்பை நாம் அறிந்தால் மட்டுமே அது இருக்கிறது. நாம் இருப்பை உணரவில்லையென்றால் அது இல்லை என்பது தானே உண்மை. புவி ஈர்ப்பு விசை எப்பொழுதும் இருந்ததுதான்.ஆனால் அதை நாம் அறியாத வரை அப்படி ஒன்று நம்மை பொருத்தவரை இல்லையல்லவா? அது போலவே ஆத்மா எல்லாவற்றிற்குள்ளும் இருந்தாலும், நாம் அதை உணரும் வரை அது இல்லாததே. இதைத்தான் ஆத்மாவை அழித்துக்கொள்பவர்கள்என்று கூறுகிறது உபநிஷத்.

அசுரர்களின் பெயரில் உள்ள உலகங்கள் என்று கூறியதால், பெயர் மாறி இருந்தாலும் அதுவும் பிரம்மமே என்பதை நுட்பமாக குறிக்கிறது.

இந்து மதத்தில், பாதாளம் அல்லது கீழ் உலகங்கள் என்பது நரகம் அல்ல. உலகியல் வாழ்க்கையின் வெளிப்புற உன்னதங்களில் சிறந்து விளங்கும் உலகங்களாகவே அவை குறிப்பிடப்படுகின்றன.

பிரம்ம ஞானத்தை வலியுறுத்தி, ஞானமின்மையின் விளைவுகளையும் கூறிய பின், அந்த ஆத்மா அடுத்து வரும் சூத்திரங்களில் விவரிக்கப்படுகிறது.

——-

அனேஜதேகம் மனஸோ ஜவியோ

நைநத்தேவ அப்னுவன் பூர்வமர்ஷத்

தத்தாவதோsன்யானத்யேதி திஷ்ட்டத்

தஸ்மின்னபோ மாதரிஸ்வா ததாதி (4)

அனேஜத் – அசைவற்றது அல்லது மாறுதலற்றது: ஏகம் – ஒன்று: மனஸா உ மனதை விட: ஜவியோ வேகமானது: ஏனத் – அவற்றால்: ஏவ – கூட: ந அப்னுவன்-

அடைய இயலாதது: பூர்வம் – முன்னே: அர்ஷத் – சென்றுவிட்டது: தத் – அது: தாவத ஓடுதல்: அன்யான் – மற்றவை: அத்யேதி சுற்றி வருபவை: திஷ்ட்டத் – நிலையானது: தஸ்மின் – அதன் இருப்பால்: அப: உ எல்லா செயல்களையும்: மாதரிஸ்வா வெளியாக: ததாதி தாங்குகிறது.

ஆத்மா அல்லது பிரம்மத்தின் இயல்பு இங்கே விவரிக்கப்படுகிறது.

மாற்றமில்லாத ஒன்றான (அந்த பிரம்மம்) மனதை விட வேகமானது. மனதால் எட்டப்பட முடியாதது. (ஏனெனில்) முன்னே சென்றுவிட்டது. சுற்றி உள்ள மற்றவற்றை தான்டி ஓடுவது. வெளியாக, நிலைத்து இருக்கும் அதன் இருப்பால் எல்லாவற்றின் செயல்பாடுகளைத் தாங்கி நிற்கிறது.

மனம் செல்வதற்கு முன்பே இருப்பதால் பிரம்மம் மனதை விட முன்னே சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. எங்கெங்கும் ஒரே நேரத்தில் இருப்பதால் மனதை விட வேகமானது எனப்பட்டது. தனக்கென்று ஒரு உருவமோ பரிமானமோ இருந்தால் மற்றவற்றின் செயல்பாட்டினை அது தடுக்கக்கூடும். வெளியாக இருப்பதால், செயல்பாடுகளுக்கு அது இடமளிக்கிறது.

———

ததேஜதி தந்நைஜதி தத்தூரே தத்வந்திகே

ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யஸ்ய பாஹ்யத: (5)

தத் – அது: ஏஜதி அசைகிறது: தத் – அது: ந ஏஜதி அசைவதில்லை: தத் – அது: தூரே தூரத்தில் உள்ளது: தத் – அது: அந்திகே அருகில் உள்ளது: தத் – அது: அந்தரஸ்ய உள்ளீடாக: ஸர்வஸ்ய யாவற்றிலும்: ஸர்வஸ்யஸ்ய – இருக்கின்ற எல்லாவற்றிற்கும்: பாஹ்யத: – அன்னியமாக இருக்கிறது.

இந்த சூக்தத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

அந்த பிரம்மம் (அனைத்தையும் அசைவிப்பதற்காக) அசைகிறது. தானாக அசைவதில்லை. அது (புலன்களால் எட்டமுடியாததால்) தூரத்தில் உள்ளது. (இதயத்தாமரைக்கு) அருகில் உள்ளது. எல்லாவற்றிற்கும் உள்ளீடாக உள்ளது.(அதன் இருப்பை நாம் அறியாமலிருப்பதால்) அது யாவற்றிற்கும் அன்னியமாக இருக்கிறது.

ஆத்ம ஞானத்தால் ஏற்படும் மாற்றங்களை விளக்குகின்றன பின்வரும் இரண்டு சூக்தங்கள்.

———–

யஸ்து ஸர்வாணி பூதான்யாத்மன்யேவானுபஸ்யதி

ஸர்வபூதேஷ{ சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே (6)

ய து யாரொருவன்: ஸர்வாணி எல்லா: ப+தானி பொருட்களிலும்: ஆத்மன் – ஆத்மாவை: ஏவ மட்டுமே: அனுபஸ்யதி பார்க்கிறானோ: ஸர்வபூதேஷ{ – எல்லாவற்றிலும்: ச – கூட: ஆத்மானம் – ஆத்மத் தன்மையை: தத உ அதனாலேயே: ந விஜுகுப்ஸதே வெறுப்பதில்லை.

யாரொருவன் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஆத்மாவை பார்க்கிறானோ, ஆத்மத்தன்மையை மட்டுமே உணர்கிறானோ, (அவன்) அந்த பார்வை காரணமாக எதனையும் வெறுப்பதில்லை.

ஆத்ம ஞானம் உள்ளவன் தன்னிலை இழக்கிறான். தன்னுள் இருக்கும் ஆத்மாவே எங்கும் இருக்கக் காண்பவன், எந்த பொருளையும் தன்னிலிருந்து வேறாகப் பார்க்க முடியாது. இதனால் அவன் எதையும் வெறுப்பதில்லை.

——–

யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஞ்ஞானத:

தத்ர கோ மோக: க: சோக ஏகத்வமனுபஸ்யத: (7)

யஸ்மின் – எப்பொழுது: ஸர்வாணி எல்லா: பூதானி உள்ளவற்றில்: ஆத்மா ஆத்மா: ஏவ ஒன்றையே: அபூத் – ஆனது: விஞ்ஞானத: – அறிந்தவன்: தத்ர அப்பொழுது: க உ என்னதான்: மோக: – மோகம்: க: -என்ன: சோக துயரம்: ஏகம்வம் – ஒருமைத்தன்மை: அனுபஸ்யத: – ஆதாரமான ஒன்று.

ஆத்மா ஒன்றையே எல்லாவற்றிலும் அறியும்பொழுது, ஆத்மா ஒ;ன்றே எல்லாமாகியிருப்பதை அறியும்பொழுது, அந்த அறிவாளிக்கு மோகம் என்ன? துயரம் என்ன? ஒருமைத் தன்மை (பிரம்ம ஞானத்திற்கு) ஆதாரமான ஒன்று.

உலகியலில் நாம் ஆனந்தத்தை வெளியில் தானே தேடுகிறோம்? தானல்லாத ஒரு பொருள் வேண்டும் என்று ஓடுகிறோம். கிடைக்கவில்லையென்றால் துக்கம் கொள்கிறோம். எல்லாவற்றையும் ஆத்மாவாக, தானாகவே காண்பவன், எந்த பொருளை விரும்பித் தேட முடியும்? எது கிடைக்கவில்லை என்று துயரம் அடைய முடியும்?

ஆனால், எல்லாம் பிரம்மம் என்று வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு, செயல்களை துறக்கலாமா? கூடாது. பல்வேறு நியதிகளையும், செயல்பாட்டு விதிகளையும் அந்த பிரம்மமே ஏற்படுத்தியது என்கிறது அடுத்து வரும் சூக்தம்.

———

ஸ பர்யகட்சுக்ரமகாயமவ்ரண மஸ்னாவிரம் ஸுத்தமபாபவித்தம்

கவிர்மனிஷி பரிபூ: ஸ்வயம்பூர்யாதாதத்யதோsர்தான் வ்யததாத்சாஸ்வதீப்ய: ஸமாப்ய: (8)

அது: பர்யகட் – எங்கும் இருப்பது: சுக்ரம் – ஒளிர்வது: அகாயம் – உடலற்றது: அவ்ரணம் – முழுமையானது: அஸ்னாவிரம் – தசைகளற்றது: ஸுத்தம் – தூய்மையானது: அபாப- பாவங்களால் தீண்டப்படாதது: அவித்தம் – அறியாமைஇல்லாதது: கவி: – எல்லாவற்றையும் பார்ப்பது: மனிஷி எல்லாம் அறிந்தது: பரிபூ:-யாவற்றையும் உள்ளடக்கியது: ஸ்வயம்பூர் தானாகி நிற்பது: யதா தத் யத உ சரியான முறையில்: அர்தான் – கடமைகளை: சாஸ்வதீப்ய: – நிரந்தரமாக: ஸமாப்ய: – காலங்களுக்கு: வ்யதாத் – வகுத்துள்ளது.

அது ( அந்த பிரம்மம்) எங்கும் இருப்பது, ஒளிர்வது, உடலற்றது, முழுமையானது, தசைகளற்றது, தூய்மையானது, பாவத்தாலும் அறியாமையாலும் தீண்டப்படாதது, எல்லாவற்றையும் (சாட்சியாக) பார்ப்பது, எல்லாம் அறிந்தது, யாவற்றையும் உள்ளடக்கியது, தானாகி நிற்பது. அது மிகச் சரியான முறையில் நிரந்தரமாக கால காலத்திற்கும் தொடருமாறு- பிரபஞ்சத்தை வகுத்துள்ளது.

தசைகளற்றதுஎன்று ஏன் குறிப்பிடவேண்டும்? நம் வினைப்பதிவுகள், பல்வேறு ரசாயணங்களாக நம் உடலில் உள்ள தசைகள், எலும்புகள் போன்ற திடத்தன்மை உள்ளவற்றில் உறைகின்றன. அவை ஆழமாக சென்றால் மரபு அனுக்களிலும் வியாபிக்கின்றன. தசைகளற்றது என்று சொல்வதால், பிரம்மம் இத்தகைய பதிவுகளற்றது என்பது குறிப்பிடப்படுகிறது.

இன்றைய விஞ்ஞானம் இத்தகைய பதிவுகளை நபெசயஅளஎன்று குறிப்பிடுகிறது.

———

அந்தம் தம: பிரவிஸந்தி யேsவித்யாமுபாஸதே

ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாம் ரதா: (9)

அந்தம் – பார்வையற்று: தம: இருளில்: பிரவிஸந்தி நுழைகிறார்கள்: யே எவர்: அவித்யா அறியாமை: உபாஸதே எண்ணுகிறார்களோ: ததோ அதனுடன்: பூய அதைவிட: இவ – இங்கே: தே அவர்கள்: தமோ – இருளில்: ய யார்: உ ஆனால்: வித்யாம் – ஞானத்தில்: ரதா: – திளைக்கிறார்களோ.

அறியாமையில் (பிரம்மத்தைப் பற்றிய ஞானமற்று) இருப்பவர்கள், பார்வையை குருடாக்கும் அடர்ந்த இருளில் நுழைகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அதை விட இருளில் இங்கே இருக்கிறார்கள். ஆனால் யார் ஞானத்தில் திளைக்கிறார்களோ (அவர்கள் அல்ல).

முந்தைய சூக்தங்களை படித்து விட்டு, அறியாமையிலேயே இருந்தால் என்ன? உலக வாழ்க்கை சுகம் தானே முக்கியம் என்று பேசுபவர்களுக்கான எச்சரிக்கை இது.

பிரம்மத்தைப் பற்றிய அறியாமை, உயிர் பிரிந்த பின் அடர்ந்த இருளில் நுழைக்கும். ஆனால், அதைவிட இருளில், அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். அதாவது, பிறப்பு இறப்பு சங்கிலிக்கு காரணமான தன் வினைப்பதிவுகளை அழித்துக்கொள்ள வழி தெரியாமலும், அடுத்தடுத்து கீழான உலகங்களில் பிறப்பதால், எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் போகிறது. இதைத்தான் அடர்ந்த இருளில் நுழைகிறார்கள்என்கிறது மந்திரம். இதெல்லாம் உயிர் பிரிந்த பின்னர்தான் என்று நினைக்கவேண்டாம். இங்கேயே, இந்த வாழ்க்கையிலேயே அவர்கள், அந்த வினைப்பதிவுகளால் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பார்கள். ஆனால் ஞானத்தில் திளைப்பவர்கள், அல்லது ஞானத்திற்கான முயற்சியில் இருப்பவர்கள் இத்தகைய துன்பங்களை அனுபவிப்பதில்லை.

ஞானத்தேடலில் இருக்கும் ஒருவன், ஞானமடைவதற்கு முன்னர் இறந்துவிட்டாலும், தன் அடுத்தடுத்த பிறவிகளில்; முயன்று ஞானம் அடைகிறான்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு

எழுமையும் ஏமாப் புடைத்துஎன்கிறாரே திருவள்ளுவர்.

———

அன்யதேவாஹுர் வித்யயா அன்யதாஹுரவித்யயா

இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத்விசசக்ஷிரே (10)

அன்யத் ஏவ ஒன்றையே: ஆஹுர் சொல்கிறார்கள்: வித்யயா ஞானத்தால்: அன்யத் – மற்றொன்றை: ஆஹுர் சொல்கிறார்கள்: அவித்யயா அறியாமையால்: இதி- இவ்வாறு: சுச்ரும உபதேசித்தார்கள்: தீராணாம் – விழிப்புற்றவர்கள்: யே யார்: நஸ்த எங்களுக்கு: விசசக்ஷிரே விளக்கினார்களோ.

ஒன்றை மட்டுமே ஞானத்தால்என்று சொல்கிறார்கள். மற்றதை அஞ்ஞானத்தால்என்று சொல்கிறார்கள். இவ்வாறே எங்களுக்கு (இதனை) விளக்கிய ஞானிகள் உபதேசித்தார்கள்.

முந்தைய சூக்தத்தின் தொடர்ச்சி இது. அறியாமையால் இருளில் நுழைகிறார்கள்என்று சொன்னால் எதை அறியாமையால்’ ?. இந்த கேள்விக்கு விளக்கம் தான் இந்த சூக்தம். ஒன்றையே அதாவது பிரம்மத்தைப் பற்றியதையே ஞானத்தால் என்று சொல்கிறார்கள். அதைத்தவிர மற்றவற்றை அஞ்ஞானத்தால் – அறியாமையால் – என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்.

அன்யத் ஏவஎன்பதற்கு மற்றபடி ஒன்றான (பிரம்மத்தையே)என்றும் பொருள் கொள்ளலாம்.

———

வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத்வேதோபயம் சஹ

அவித்யாயா ம்ருத்யும் தீர்த்வா வித்யாயாsம்ருதமஸ்னுதே (11)

வித்யாம் ச ஞானத்தையும்: அவித்யாயாம் ச அஞ்ஞானத்தையும்: ய யார்: தத் – அதனை: உபயம் – சேர்த்து: சஹ – இரண்டையும்: அவித்யாயாம் – அஞ்ஞானத்தால்: ம்ருத்யும் – மரணத்தை: தீர்த்வா கடந்து: வித்யாயாம் – ஞானத்தால்: அம்ருதம் – மரணமற்ற நிலை: அஸ்னுதே அடைகிறார்கள்.

ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் இரண்டையும் சேர்த்து யார் ஒருவன் அறிகிறானோ, அவன் அஞ்ஞானத்தால் மரணத்தைக் கடந்து, ஞானத்தால் மரணமற்ற நிலையை அடைகிறான்.

ஞானத்தை அடைந்தவன் அஞ்ஞானத்திலிருந்து விடுபடுகிறான். அஞ்ஞானத்தில் இருப்பவன் ஞானத்தின் அருகில் செல்வதில்லை. அப்படியானால் இரண்டையும் ஒரு சேர அறிந்தவன் யார்?. ஞானிகள், ஞானம் அடைந்த பின்னும் தன் சீடர்களும் மற்றவர்களும் பயன்பெறுவதற்காக, தன் மனமற்ற நிலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். அதற்காக அவர்கள் சிறிது அஞ்ஞானத்தையும் வைத்துக் கொள்கிறார்கள். அந்த அஞ்ஞானம் இருப்பதாலேயே அவர்கள் உலகத்தில் வாழ்க்கை நடத்த முடிகிறது. இந்த நிலையையே இந்த சூக்தம் குறிப்பிடுகிறது.

இவ்வாறு இருக்கும் ஞானிகள், அந்த நூலளவு அஞ்ஞானத்தால் மரணத்தின் வசப்பட்டு, அதனைக் கடந்து, ஞானத்தால் மரணமற்ற நிலையை அடைகிறார்கள். இந்த நூலளவு எண்ணவோட்டம் அவர்கள் இந்த பூமியில் வாழ்க்கை நடத்துவதற்காக மட்டுமின்றி, உலகத்தார்க்கு நன்மை செய்யும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவர்களை அவதரிக்கச் செய்வதும் ஆகும்.

———

அந்தம் தம: பிரவிஸந்தி யேsஸம்பூதிமுபாஸதே

ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாம் ரதா: (12)

அந்தம் – பார்வையற்று: தம: இருளில்: பிரவிஸந்தி நுழைகிறார்கள்: யே எவர்: அஸம்பூதி பிரம்மம் பிரபஞ்சமாக வெளிப்படுவதற்கு முந்தைய நிலை: உபாஸதே எண்ணுகிறார்களோ: ததோ அதனுடன்: பூய அதைவிட: இவ – இங்கே: தே அவர்கள்: தமோ – இருளில்: ய யார்: உ ஆனால்: ஸம்பூத்யாம்- பிரம்மம் பிரபஞ்சமாக வெளிப்பட்ட நிலை : ரதா: – திளைக்கிறார்களோ.

பிரம்மம் பிரபஞ்சமாக வெளிப்படுவதற்கு முந்தைய சலனமற்ற நிலையை எண்ணி வழிபடுபவர்கள், பார்வையை குருடாக்கும் அடர்ந்த இருளில் நுழைகிறார்கள். பிரம்மம் தான் பலவாக ஆகவேண்டும்என்ற நூலளவு எண்ணத்துடன் இருக்கும் நிலையை எண்ணி களிப்பவர்கள் அதனினும் கடுமையான இருளை அடைகிறார்கள்.

பிரம்மம் தான் பலவாக ஆகவேண்டும்என்ற நூலளவு எண்ணத்துடன் இருக்கும் நிலை: இந்த நிலையை பிரம்மா, சூத்ராத்மா, கார்ய பிரம்மம், ஹிரண்யகர்ப்பம், சாம்பசிவம் என்று பலவாறாக குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையை ஊர்ணநாபி என்கிறது முண்டக உபநிஷதம். இந்த நிலையை வழிபடுபவர்கள் ஏன் இருளை அடையவேண்டும்? இந்த நிலையை வழிபடுபவர்கள், ஒரு துடிப்பை வழிபடுவதால் அஷ்டமா சித்திகளை அடைகிறார்கள். அந்த சித்திகளால் உந்தப்பட்டு அவர்கள் அஞ்ஞானத்தில் மூழு;கி இருளில் நுழைகிறார்கள்.

இதற்கு முந்தைய நிலையான அஸம்பூதிநிலையை சலனமற்ற நிலையை உபாஸிப்பவர்கள், ஒடுக்க நிலையை தியானிப்பதால் ப்ரக்ருதிஅல்லது மாயையால் கவரப்பட்டு இருளில் மூழ்குகிறார்கள்.

———

அன்யதேவாஹுர் ஸம்பவத் அன்யதாஹுரஸம்பவத்

இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத்விசசக்ஷிரே (13)

அன்யத் ஒன்றை: ஏவ மட்டும்: ஆஹுர் சொல்கிறார்கள்: ஸம்பவத் – ஸாம்பசிவ நிலையால்: அன்யத் – மற்றொன்றை: ஆஹுர் சொல்கிறார்கள்:அஸம்பவத் – ஸாம்பசிவ நிலைக்கு முந்தைய நிலை: இதி- இவ்வாறு: சுச்ரும உபதேசித்தார்கள்: தீராணாம் – விழிப்புற்றவர்கள்: யே யார்: நஸ்த எங்களுக்கு: விசசக்ஷிரே விளக்கினார்களோ.

ஒன்றை மட்டும் ஸாம்பசிவ நிலையால்என்று சொல்கிறார்கள். மற்றதை ஸாம்பசிவ நிலைக்கு முந்தைய நிலையால்என்று சொல்கிறார்கள். இவ்வாறே எங்களுக்கு (இதனை) விளக்கிய ஞானிகள் உபதேசித்தார்கள

ஸாம்பசிவ நிலை முந்தைய மந்திரத்தின் விளக்கத்தில் விளக்கப் பட்டது.

———-

ஸம்பூதிம் ச விநாசம் ச யஸ்தத்வேதோபயம் சஹ

விநாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாsம்ருதமஸ்னுதே (14)

ஸம்பூதிம் – சாம்பசிவ நிலை: ச மற்றும்: விநாசம் ச பேரழிவு அல்லது ஒடுக்க நிலை: ய யார்: தத் – அதனை: உபயம் சஹ – இரண்டையும் சேர்த்து: வேத அறிகிறார்களோ: விநாசேன ஒடுக்க நிலையால்: ம்ருத்யும் – மரணத்தை: தீர்த்வா கடந்து: ஸம்பூத்யா சாம்பசிவ நிலையால்: அம்ருதம் – மரணமற்ற நிலையை: அஸ்னுதே அடைகிறார்கள்.

ஒடுக்க நிலை மற்றும் சாம்பசிவ நிலை இரண்டையும் சேர்த்து அறிபவர்கள், ஒடுக்க நிலை அறிவதால் மரணத்தை கடந்து, சாம்பசிவ நிலையை அறிவதால் மரணமற்ற நிலையை அடைகிறார்கள்.

அடுத்து வரும் சூக்தங்கள் பிரார்த்தனைகளாகவே இருக்கின்றன.

————-

ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம்

தத் த்வம் பூஷனபவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்டயே (15)

ஹிரண்மயேன பொன்னொளி பொருந்திய: பாத்ரேன – மூடியால்:

சத்யஸ்ய பேருண்மையின்: முகம் – நுழைவாயில்: அபிஹிதம் – மூடப்பட்டுள்ளது. தத் – அதனை: த்வம் – நீங்கள்: பூஷன் – சூரியன்: அபவ்ருணு திறந்திடுங்கள்: ஸத்ய தர்மாய – ஸத்தியத்தையும் தர்மத்தையும் அனுசரித்தவனுக்கு: த்ருஷ்டவே காண்பதற்காக.

பொன்னொளி பொருந்திய தகட்டால் பேருண்மையின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. ஸத்தியத்தையும் தர்மத்தையும் அனுசரித்தவனான நான் காண்பதற்காக, சூரியனே அதனை நீங்கள் திறந்திடுங்கள்.

ஒடுக்க நிலையை தியானித்தாலும், சாம்பசிவ நிலையை தியானித்தாலும் இருளையே அடைகிறான் என்று முந்தைய சூத்திரத்தில் சொல்லப்பட்டது. இங்கே பிரம்மத்தை எந்த நிலையில் தியானிப்பது என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது.

சூரியன் என்பது படைக்கப்பட்டது, ஒளி பொருந்தியது. பிரம்மத்தையும் – வெளிப்பட்ட நிலையில் – ஒளிர்வதாக தியானிக்க வேண்டும். எதை தியானிக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். அதனால் தான் இருள் செறிந்த ஒடுக்க நிலையையும் சாம்பசிவ நிலையையும் விட்டு ஒளி பொருந்திய நிலையை தியானிக்க சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூரியனின் ஒளியால் கவரப்பட்டு இதுவே பிரம்மம் என்ற அறிவு மயக்கத்திலும் விழக்கூடாது. இதனை அடுத்த சூக்தம் தெரிவிக்கிறது பாருங்கள்.

————–

பூஷனேகர்ஷே யம சூர்ய ப்ரஜாபத்யா

வ்யூக ரஸ்மின் ஸமூக தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம்

தத் தே பஸ்யாமி யோsஸாவஸெள புருஷ: ஸோsகமஸ்மி

பூஷன் – தாங்குபவன்: ஏக்ர்ஷே – தனியாக நடப்பவன்: யம கட்டுபடுத்துபவன்: சூர்ய – சூரியன்: ப்ரஜாபத்ய பிரஜாபதியின் மகன்: வ்யூக விலக்கு: ரஸ்மின் – கதிர்களை: ஸமூக விலக்கிக்கொள்: தேஜோ ஒளிமயமான: யத் – எந்த: தே உங்கள்: கல்யாணாதமம் – மிக உன்னதமான: ரூபம் – உருவம்: தத் – அது: தே உங்கள்: பஸ்யாமி அடைகிறேன்: யோ யார்: அஸெள அந்த: புருஷ: – புருஷன்: ஸ உ அவரும்: அகம் – நான்: அஸ்மி – இருக்கிறேன்.

சூர்யனே, தனியாக வானவெளியில் சஞ்சரிப்பவன், எல்லாவற்றையும் தாங்குபவன், கட்டுபடுத்துபவன், பிரஜாபதியி;ன் மகன். உன் கிரணங்களை விலக்கிக்கொள். உன் ஒளியை குறைத்துக்கொள். உன் அருளால், ஒளிமயமான உன் உன்னத உருவத்தை நான் கண்டேன் (அல்லது அடைந்தேன்). அங்கு (உன்னுள்) உறைந்திருக்கும் புருஷனும் நானாகவே இருக்கிறேன்.

தன் ஆத்மாவே பிரம்மமாக இருப்பதை காண்பதாக சொல்வதன் மூலம், ஒளிப்பொருள் என்றதால் சூரியனை பிரம்மமாக கருதிவிடக் கூடாது என்பது நுட்பமாக உணர்த்தப்பட்டது.

———–

வாயுரனிலமம்ருதமதேதம் பஸ்மாந்தம் சரீரம்

ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர (17)

வாயு மூச்சு: அநிலம் – எங்கும் நிறைந்திருக்கும் காற்று: அம்ருதம் – அழிவற்றது: அத – இப்பொழுது: ஏதம் – அந்த: பஸ்மாந்தம் – சாம்பலாகட்டும்: சரீரம் – உடல்: ஓம் – ஓம்: க்ரதோ – (செயல்படத் தூண்டும்) மனம்: ஸமர எண்ணிப்பார்: க்ருதம் – செயல்களை.

மூச்சு, அழிவற்று எங்கும் நிறைந்திருக்கும் காற்றோடு கலக்கட்டும். உடல் சாம்பலாகட்டும். மனமே! நற்செயல்களை நினை. நற்செயல்களை நினை.

இறக்கும் தருவாயில் உள்ள மனிதனின் பிரார்த்தனைக் குரலாகவே இந்த சூக்தம் அமைந்திருக்கிறது. தன் மூச்சு காற்றில் கலக்கப்போவதையும், உடல் சாம்பலாவதையும் தீரத்துடன் ஏற்கும் அந்த மனிதன், தன் மனதை நற்செயல்களை நினைக்குமாறு வேண்டுகிறான். ஒருவனின் மரணத்தருவாயில் அவன் மனதில் பிரதானமாக வியாபித்திருக்கும் எண்ணமே அவனது மறுஜென்மத்தை நிர்ணயிக்கிறது. எனவே, நற்செயல்களை நினைக்குமாறு மனதை வேண்டுகிறான்.

————–

அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்

விஸ்வானி தேவ வயூனானி வித்வான்

யுயோதஸ்மாஜுஹுராணமேனோ

புயீஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம (18)

அக்னே அக்னியே: நய எடுத்துச்செல்: ஸுபதா நியாயமான வழியில்: ராயே கருமங்களுக்கான பலன்களின் படி: அஸ்மான் – என்னை: விஸ்வானி எல்லாம்: தேவ தேவனே: வயுனானி செயல்களை: விதவான் – அறிந்தவன்: யுயோதி அழித்திடு: ஜுஹுராணம் – மனக்கோணல்கள்: ஏன போன்ற: புயீஷ்ட்டம் – பலமுறை: தே உமக்கு: நம வணக்கம்: உக்திம் – சொற்களை: விதேம அளிக்கிறேன்.

அக்னியே, என்னை (என்) கருமங்களின்படி நியாயமான வழியில் (மேல் உலகத்திற்கு) எடுத்துச்செல். எல்லா நிகழ்வுகளையும் அறிந்த தேவனே, என் மனக்கோணல்கள் போன்ற பாபங்களை அழித்திடு. உனக்கு வணக்கச் சொற்களை பலமுறை சமர்ப்பிக்கிறேன்.

அக்னிக்கு ஜாத வேதன்’ – எல்லாம் அறிந்தவன் – என்று ஒரு பெயர் உண்டு.

———–

சாந்தி பாடம்

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஈஸாவாஸ்யம் உபநிஷத் -ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

ஈஸாவாஸ்யம் உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை
மீமாம்ஸ என்கின்ற பூஜ்ய விசாரமானது வணங்கத்தக்கதும், போற்றுதலுக்கு உரியதான மேன்மையான விசாரம்.  வேதத்தை ஜெய்ம்னி மகரிஷியும், .வியாஸ பகவானும் விசாரம் செய்துள்ளார்கள்.  ஜெய்மினி வேதத்தின் முதல் பாகத்தை எடுத்துக் கொண்டு விசாரம் செய்துள்ளார்.  அதற்கு பூர்வமீமாம்ஸம் என்று பெயர். அதை பின்பற்றுபவர்கள் பூர்வமீமாம்ஸகர்கள் என்று கூறுவர். வியாஸ பகவான் வேதத்தின் இறுதிபகுதியான வேதாந்தத்தை விசாரம் செய்துள்ளார். வேதாந்தம் என்பதை உபநிஷத் என்றும் அழைப்பர்.  இதற்கு உத்தரமீமாம்ஸ என்ற பெயரும் பிரம்மசூத்திரம் என்ற பெயரும் உண்டு.  உபநிஷத்திலுள்ள வாக்கியங்களுக்கு அர்த்தத்தை நிர்ணயம் செய்துள்ளார்.  உபநிஷத் கருத்துக்களுக்கு முரண்பாடாக உள்ள மற்ற மதங்களின் கருத்தை நிராகாரம் செய்துள்ளார். நான் மூன்று காரணங்களினால் இந்த விசாரம் செய்கின்றேன் என்று கூறியுள்ளார். அவைகள்.

  1. பரமாத்மாவை பற்றிய ஸ்வரூபத்தை உபநிஷத் விளக்குவதாலும்
  2. இந்த அறிவினால் மோட்சம் என்று பலன் கிடைப்பதாலும்
  3. இந்த அறிவையும், மோட்ச பலனையும் நாடும் சாதகர்களுக்காகவும்

இவைகளெல்லாம் ஏற்கனவே பூர்வ மீமாம்ஸத்திலேயே இருக்கின்றதே என்று கேட்கும் போது

  1. பூர்வமீமாம்ஸையில் விதவிதமான கர்மங்கள், யாகங்கள் கூறப்படுகின்றது. ஏதாவது ஒரு தேவதையைக் குறித்தும், பலனுக்காகவும் யாகங்கள் செய்வதால் ஈஸ்வரனைப்பற்றி ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது.
  2. தியாகம், உபாஸனை, யாகங்கள் மூலமாக சொர்க்கத்திற்கும்,பிரம்ம லோகத்திற்கும் செல்வதே மோட்சத்தை அடைவதாகும்
  3. இவைகளை நாடும் சாதகர்கள் எங்களிடத்தில்தான் இருக்கிறார்கள்

இதற்கு வியாஸ பகவான் அளிக்கும் பதில்:

  1. ஈஸ்வரன் என்ற சொல்லில் இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. அவரோடு மாயை சேர்ந்திருக்கின்றது. இந்த ஈஸ்வர தத்துவம் விசாரம் செய்யப்படுவதில்லை.  ஈஸ்வர நிர்குண ஸ்வரூபம், ஜீவனின் ஸ்வரூபம் உபநிஷத்தில்தான் பேசப்பட்டிருக்கிறது. எனவே இதை விசாரம் செய்கின்றேன்.
  2. சொர்க்கம், பிரம்மலோகம் இறுதி லட்சியமல்ல, இவைகளுக்கு அப்பால் அடைய வேண்டியது ஒன்று இருக்கிறது. பிரம்மத்தை அடைதலே மோட்சமாகும்.  பரம்பொருள் ஸ்வரூபமே நான் என்ற அறிவை அடைவதே பிரம்மத்தை அடைவதாகும்.  அதனால் சம்சாரம் முழுவதுமாக நீங்கிவிடும்.  ஆகவே உபநிஷத்துக்கு விளக்கம் எழுத வேண்டியதாக இருக்கிறது.  ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்றுதான் என்ற அறிவை அடைந்தவுடன் மனநிறைவை அடைகிறான்.  துயரங்களிலிருந்து விடுபடுகிறான்.
  3. இந்த பயனை அடைவதில் ஆசையுள்ளவர்களும் இருக்கிறார்கள். சொர்க்கலோக இன்பங்களில் வைராக்கியம் அடைந்தவர்களுக்காக இந்த விசாரம் செய்யப்படுகிறது.  வைராக்கியமானது இந்த உலகத்தை விசாரம் செய்வதினால் வருவது.

பூர்வமீமாம்ஸாவில் கூறப்பட்டுள்ள விதவிதமான உபாஸனைகள் யாகங்கள் விதவிதமான பலன்களில் வைராக்கியம் உடையவர்கள். உத்தரமீமாம்ஸாவிற்கு வருவான்.  மோட்சத்தை அடைய உதவும் சாதனம் பிரம்மஞானம் அதை அடைய விரும்புகின்றவனே அதிகாரியாக இருக்கின்றான்.  சாதன-சதுஷ்டய சம்பத்தி இந்த ஞானத்தை அடைவதற்கான தகுதிகளாகும்.  ஞானத்தை அடைய விரும்புபவனை முமூக்ஷு என்று அழைப்பர்.

இந்த உபநிஷத் ஶுக்ல யஜுர் வேதத்தில் அமைந்துள்ளது. உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்ற அர்த்தமாகின்றது.
உப – மிக அருகில் இருக்கின்றது; அபே4தம் – வேறில்லாதது
நி – நிச்சயமானது, உறுதியான அறிவு
ஷத் – சம்சாரத்தை நாசம் செய்தல்
உபநிஷத் – ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றுதான் என்ற உறுதியான அறிவு. இந்த அறிவு சம்சாரத்தை நாசம் செய்கின்றது..
ஶாந்தி – நீங்குதல், நமக்கு வரும் தடைகளிலிருந்து நீங்கி இருத்தல்

சாந்தி பாடம்
ஓம் பூர்ணமத3 பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஶிஷ்யதே ||
ஓம் ஶாந்தி! ஶாந்தி!! ஶாந்தி!!!

பூர்ணம் அத3:: – ஈஸ்வரன் வரையறுக்கப்படாத பூரண ஸ்வரூபமாக இருக்கிறார்
பூர்ணம் இதம் – இந்த ஜீவன் பூரண ஸ்வரூபமாக இருக்கிறான்
பூர்ணாத்      – பூரணமான ஈஸ்வரனிடமிருந்து
பூர்ணமுதச்யதே – பூரணமான ஜீவன் தோன்றுகிறான்
பூர்ணஸ்ய      – பூரணமான ஜீவனுடைய
பூர்ணமாதாய   – பூரண ஸ்வரூபத்தை எடுத்துவிட்டால்
பூரணமேவ     – பூரண ஸ்வரூபம் மட்டும்
அவஶிஷ்யதே  – எஞ்சியிருக்கின்றது

விசாரம்
பூரணம் என்றால் வரையறுக்கப்படாதது.  கால,தேச,வஸ்து, குணம் இவைகளால் வரையறுக்கப்படாதது.  பூரணம் என்ற சொல் பிரம்மனையும் குறிக்கும்.  எனவே பிரம்மன் மட்டும்தான் இருக்கிறது என்று குறிப்பிடப்படுகின்றது.  மற்றவைகள் எல்லாம் மித்யா, அபூரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நமக்கு ஈஸ்வரன், ஜீவன், ஜகத் என்கின்ற மூன்று தத்துவங்கள் தோன்றுகிறது.  இவைகளின் உண்மையான ஸ்வரூபம் சாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

பூரணமான பிரம்மத்திற்கு பொய்யான “காரணம்” என்ற தன்மையை தற்காலிகமாக கொடுக்கிறது.  காரண பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது.  இதையே ஈஸ்வரன் என்றும் கூறப்படுகிறது.  பிரம்மன் + காரணம் = ஈஸ்வரன்.  இதிலிருந்து பூரணத்திலிருந்து வந்த ஈஸ்வரன் பூரணமானவர். பூரணத்திற்கு காரியம் என்ற தன்மையும் கொடுக்கப்படுகிறது.  எனவே பூரணம் + காரியம் = ஜீவன் என்ற சமன்பாடு கிடைக்கின்றது.  காரணத்திலிருந்து வரும் காரியத்திற்கு காரணத்தின் தன்மை நிச்சயமாக இருப்பதைப்போல, பூரணமான ஈஸ்வரனிடமிருந்து வந்த காரியமான ஜீவன் பூரணமானவனே என்று அறிந்து கொள்ளலாம். கடலிலிருந்து அலைகள் தோன்றின என்ற வாக்கியத்தில் அலைகள் வெறும் நாம-ரூபம்தான்.    இரண்டிலும் பொதுவக இருப்பது நீர்தான்.  நாம-ரூபத்திற்கு வேறொரு பெயர் உபாதி.  அலைகளில் உள்ள நீரை நீக்கிவிட்டால் அலைகள் இருக்காது.  நாம-ரூபத்துடன் கூடிய ஜீவனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை எடுத்து விட்டால் பூரணம் மட்டும் இருக்கும்.  நாம-ரூபம் வெறும் தோற்றம் பொய் என்று சொன்னால் காரணம் பொய்யாகிவிடும். எனவே காரியமும், காரணமும் நீங்கி விட்டதால் எஞ்சியிருப்பது பிரம்மன், பூரணம் மட்டும்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

ஈஶா வாஸ்யம் இத3ம் ஸர்வம் யத்கிஞ்ச ஜக3த்யாக் ஜக3த் |
தேன த்யக்தேன பு4ஞ்ஜீதா2 மா க்3ருத4: கஸ்ய ஸ்வித்3த4னம் ||

இத3ம் ஸர்வம் – நம்முடைய அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரனால்,  பரமாத்மாவினால்
வாஸ்யம் – வியாபிக்கப்பட்டுள்ளது
யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் – இந்த பிரபஞ்சத்தில் உலகம் போன்ற எவைகள் உண்டோ அவைகள் அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரன் என்கின்ற அறிவினால்
வாஶ்யம் – மறைக்கப்பட வேண்டும்
தேன த்யக்தேன – தியாகத்தினால் உன்னை
புஞ்ஜீதா – காப்பாற்றிக் கொள்
கஸ்யவித் – யாருடைய
த4னம் – பொருட்களையும், செல்வத்தையும்
மா க்3ருத4: – அபகரிக்காதே, ஆசைக் கொள்ளாதே

களிமண்ணால் பானைகள் வியாபிக்கப்பட்டிருக்கிறது.  இந்த வாக்கியத்தில் களிமண் பானைகளுக்கு உபாதான காரணமாக இருப்பதைக் காணலாம்.  ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது உபாதான காரணம் என்று கூறுவர். நிமித்த காரணம் ஸ்ருஷ்டிக்கு மாத்திரம் காரணமாக இருப்பது. குயவன் பானை உற்பத்தி செய்வதற்கு நிமித்த காரணமாக இருக்கிறன்.  ஈஸ்வரனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அவர் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

களிமண் பானையை வியாபித்திருக்கிறது என்பது களிமண்ணே வெறும் நாம-ரூபமாக இருக்கும் போது அதற்கு பானை என்று கூறுகிறோம்.  உண்மையில் பானை என்ற ஒன்றுமில்லை.  அதேபோல இந்த ஜகத்தை ஈஸ்வரன் வியாபித்திருக்கிறார் என்றால் அவரேதான் நாம-ரூபங்களாக காட்சியளிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். பூரண ஸ்வரூபமான பரமாத்மா நாம-ரூபங்களாக தோன்றும்போது அவரே பரமேஸ்வரனாக உலகமாக காட்சியளிக்கின்றார்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புக்களையும் ஈஸ்வரன் என்ற அறிவைக் கொண்டு மறைத்துவிட வேண்டும் என்று சங்கரர் வலியுறுத்துகிறார்.  பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜகத் வெறும் நாம-ரூபங்கள்தான் என்ற அறிவுடன் பார்க்கும் போது ஜகத் மறைந்து பரமேஸ்வரன் தெரிவார்.  நாம-ரூபத்தில் திருஷ்டியை வைத்தால் உபாதானம் தெரியாது. அதை மறைத்து விட்டால் உபாதானத்தை உணர முடியும். கண் வழியே பார்க்கின்ற அனைத்துமே ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, மனதால் பார்ப்பவைகள் அனைத்தும் ஜீவன் ஸ்ருஷ்டி. நாம் மனதிலுள்ள ராக-துவேஷங்களினால் நாம் ஒரு உலகத்தையே படைத்து அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதனிடம் இருக்கும் ஆசைகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகள் மகன், சொத்து, உலகம் அதாவது தன்னுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இவைகளை துறப்பதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள். தியாகம் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதுதான் இதை தியாகம் செய்தல் இங்கு குறிப்பிடப்படுகிறது. நம்மிடம் இருக்கும் செல்வம், பொருட்கள் மீது ஆசைக் கொள்ளாதே. மற்றவர்கள் பொருட்கள் மீது ஏன் ஆசைப்படக்கூடாது என்ற கேள்வி வரும்போது இவ்வாறு எண்ணிப்பார்த்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாமும் ஈஸ்வரனுடையதாக இருக்கும் போது நானே ஈஸ்வரன் என்ற அறிவுடன் பார்க்கும்போது உலகிலுள்ள அனைத்துப் பொருட்கள் என்னுடையதாக நினைத்துக் கொள்வோம். இதுவே ஈஸ்வர திருஷ்டி. அனைத்தும் மித்யா என்ற அறிவுடன் இருத்தல்.

குர்வன்ன ஏவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தம் ஸமா: |
ஏவம் த்வயி நான்யதே2தோSஸ்தி ந கர்ம லிப்யதே நரே || 2 ||
 பிரவிருத்தி, நிவிருத்தி என்ற இரண்டுவிதமான வாழ்க்கைப் பாதைகள் உண்டு.  பிரவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் அறியாமையில் இருக்கின்றோம் என்பதே தெரியாது.  நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தன்னிடத்தில் இருக்கின்ற அறியாமையை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் இருப்பவர்கள். இந்த ஸ்லோகத்தில் பிரவிருத்தி மார்க்கத்திலிருப்பவர்கள் எப்படி வாழ்ந்தால் நிவிருத்தி மார்க்கத்திற்கு செல்ல முடியாது என்பதை கூறுகிறது.

குரவன் ஏவ இஹ – நாம் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது
கர்மாணி – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கடமைகளை செய்து கொண்டு,
ஶதம் ஸமா: – நூறு வருடங்கள் அதாவது எவ்வளவு வருடங்கள் வாழ்வதற்கு பிராரப்தம் இருக்கின்றதோ அவ்வளவு நாட்கள்
ஜிஜீவிஷேத் – வாழ்வதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.
ஏவம் – இப்படி வாழ விரும்புகின்ற
த்வயி நரே – மனிதனாகிய உனக்கு
இதஹ – இவ்விதம் செயல்பட்டு கொண்டிருப்பதை தவிர
அன்யதா ந அஸ்தி – வேறு வழி கிடையாது
கர்ம லிப்யதே – இவ்விதம் செயல் செய்து வாழ்வதினால் அந்த செயல்களினால் பந்தப்படாமல் இருக்கலாம்.
அதாவது கர்மயோகப்படி செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டும்.

அஸுர்யா நாம தே லோகா அந்தே4ன தமஸாவ்ருதா: |
தாம்ஸ்தே ப்ரேத்யாபி4க3ச்ச2ந்தி யே கே சாத்மஹனோ ஜனா: || 3 ||

அஸுர்யா நாம – அஸுர்யா என்ற பெயருடைய
தே லோகோ – எந்த லோகங்கள் உண்டோ அவைகள்
அந்தே4ன தமஸ – ஆத்மஞானம் இல்லாத அறியாமை என்ற அடர்ந்த இருளால்
ஆவ்ருதா – மூடப்பட்டுள்ளது
இங்கே லோகங்கள் என்பதற்கு சரீரங்கள் என்று பொருட் கொள்ளப்படுகிறது. அக்ஞானிகளுக்கென்று படைக்கப்பட்ட சரீரங்கள். இந்த உடலின் மீது அதிகப்பற்று கொண்டு வாழ்பவர்களே அசுரர்கள் என்று கூறப்படுகின்றனர்.
யே தே ஆத்மனஹ – எந்த மனிதர்கள் ஆத்மாவான தன்னை அழித்துக் கொள்கின்றார்களோ
தான் தே – அவர்கள் மேலே சொல்லப்பட்ட சரீரங்களை
ப்ரேத்ய அபி கச்சந்தி – இந்த சரீரத்தை விட்ட பிறகு அடைகிறார்கள்

ஆத்மாவை அழித்து கொள்வது என்பது அனாத்மாவை அதன் மீது ஏற்றி வைத்துக் கொள்வது என்று பொருட் கொள்ள வேண்டும். இதனால் சம்சாரத்தில் சிக்கி தவிப்பதையே ஆத்மாவை அழித்துக் கொள்பவர்கள், தன்னையே அழித்துக் கொள்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அனேஜத்3 ஏகம் மனஸோ ஜவீயோ நைனத்3தே3வா ஆப்னுவன்பூர்வமர்ஷத் |
தத்3தா4வதோSன்யானத்யேதி திஷ்ட2த் தஸ்மின்னபோ மாதரிஶ்வா ததா4தி || 4 ||
எப்படிபட்ட அறிவினால் ஒருவன் தன்னை அழித்துக் கொள்வதில்லையோ அப்படிபட்ட அறிவை இங்கு உபநிஷத் கொடுக்கிறது. இது இந்த ஞானத்தை நேரடியாக விளக்கவில்லை.  ஏனென்றால் அது ஒரு பொருளாக இல்லாமல் இருப்பதால் அதை மறைமுகமாக புகட்டுகிறது. அதாவது அத்யாரோப – அபவாதம் என்ற முறையில் ஆத்ம ஞானத்தை நமக்கு உபதேசிக்கிறது.
அத்யாரோபம் என்பது ஒரு பொருளின் மீது அதற்கப்பாற்பட்ட வேறொரு பொருளை தெரிந்தே ஏற்றி வைத்தலாகும்.  தெரியாமல் ஏற்றி வைத்தால் அதற்கு அத்யாஸம் என்று பெயர். அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை நீக்கி விடுதலாகும்.

அக்ஞானிகள் உண்மையான வஸ்துவின் மேல் அனாத்மா வஸ்துவை பார்த்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் உபநிஷத் இந்த முறையை கையாண்டு உபதேசிக்கிறது.  எனவே முதலில் ஜீவனின் பார்வையை, அவஸ்துவை இருப்பதாக ஏற்றுக் கொண்டு பிறகு அதனுடைய மித்யா தன்மையை உபதேசிக்கிறது.  அதன் மூலம் அவனிடத்தில் உள்ள அறியாமையை நீக்கி ஆத்ம தத்துவமானது விளக்கப்படும்போது நன்கு புரிந்து விடுகிறது. பிரம்மனான ஆத்மாவின் மீது நம்முடைய மூன்று சரீரங்களும் ஏற்றி வைக்கப்படுகிறது. அறியாமையில் இருப்பவர்கள் இந்த மூன்று சரீரங்களைத்தான் நான் என்று சுபாவமாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

தத்3- அந்த ஆத்மா
அனேஜத் – சலனமற்றது, அசைவற்றது, தன்னுடைய நிலையிலிருந்து என்றும் மாறாமல் இருப்பது
ஏகம் – ஒன்றாகவே இருக்கிறது
மனஸ: ஜவீயஹ – மனதைக்காட்டிலும் வேகமானது.
இவ்விதம் கூறி ஆத்மாவானது எல்லாவிடத்திலும் வியாபித்திருப்பதைக் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஏனத் – இந்த ஆத்ம தத்துவத்தை
தேவா: – நம்முடைய இந்திரியங்களால்
ந ஆபுனுவன் – அடைய முடியாது, அறிந்துக் கொள்ள முடியாது. இது புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அவைகளால் கிரகிக்க முடியாது
பூர்வம் அர்ஷத் – மனதுக்கு முன்னாடியே சென்றுவிடுவதால் புலன்களால் அறியப்பட முடியவில்லை. புலன்கள் மனதைச் சார்ந்திருப்பதால்தான் இந்த நிலை
தத்3 – இந்த ஆத்மா
தா4வத் அன்யானதஹ – ஓடுகின்ற மற்றவைகளையும்
அத்யேதி – கடந்து சென்று கொண்டிருக்கின்றது
திஷ்டத் – நின்று கொண்டிருக்கிறது. ஆத்மாவானது எங்கும் வியாபித்திருப்பதால் இதை தாண்டி வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிடப்படுகிறது
தஸ்மின் – ஆத்மா இருக்கின்ற காரணத்தால்
அபஹ – எல்லா செயல்களையும்
மாதரிஶ்வா ததா4தி – ஹிரண்யகர்ப்பன் பிரித்துக் கொடுக்கிறார்

ஈஸ்வரனே ஹிரண்யகர்ப்பனாக தோன்றி அனைத்து செயல்களையும் விதவிதமான தேவதைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றார்.  தானே விதவிதமான தேவதைகளாக தோன்றி கொண்டுமிருக்கிறார்.

தத்3 ஏஜதி தன் நைஜதி தத்3 தூ3ரே தத்3வந்திகே |
தத3 அந்தர அஸ்ய ஸர்வஸ்ய தத்3 உஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத: || 5 ||

இதில் ஆத்மாவை உபாதியுடனும், உபாதியை நீக்கியும் பார்க்கப்படுகிற்து
தத்3 ஏ3ஜதி – இந்த ஆத்மாவானது அசைகின்றது, செயல்படுகின்றது
தத்3 ந ஏஜதி – செயல்படாமலும், அசையாமலும் இருக்கின்றது
ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும் இருப்பதால் அசையாது, நகராது. அனாத்மாவானது ஜட ஸ்வரூபம் எனவே செயல்படும் சக்தியற்றது, இதுவும் நகராது. ஆனால் உடலோடு சிதாபாசனும் இருந்தால் அங்கே செயல்படும் தன்மையை பார்க்கலாம். அசைகின்ற தன்மையுடையதாக இருக்கும். நம்முடைய மனமும்,புலன்களும் செயல்படுவதற்கு காரணம் சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான். செயல்படும் பொருட்களுக்கு ஆத்மாதான் காரணம்.  ஆனால் அது செயலெதுவும் செய்யாமல் இருந்து கொண்டிருக்கின்றது

தத3 தூ3ரே – மிகவும் தொலைவில் இருக்கிறது
தத்3 அந்திகே – மிகவும் அருகிலும் இருக்கிறது
ஆத்மாவை பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது. அறிந்தவர்களுக்கோ மிகவும் அருகில் இருக்கிறது.
பத்தாவது மனிதனான தன்னை தேடுபவனுக்கு மிக தொலைவில் இருக்கிறது. அவனே தான்தான் அவன் என்று அறிந்தபிறகு மிகவும் அருகில் இருக்கின்றான்.  இதிலிருந்து அவன் தொலைவிலும் கிடையாது, அருகிலும் கிடையாது. ஏனென்றால் அவனே பத்தாவது மனிதானாக இருக்கின்றான். அதுபோல ஆத்மாவையும் புரிந்து கொள்ளலாம்.

தத்3 அந்தரஸ்ய ஸர்வஸ்ய – இது அனைத்திற்கும் உள்ளேயும் இருக்கிறது. அதே சமயம் அனைத்திற்கும் வெளியேயும் இருக்கிறது.
இதிலிருந்து நாம் ஆத்மா எங்கும் இருக்கின்றது என்ற அறிவை அடையலாம்.  பானைக்கு உள்ளேயும் ஆகாசம் இருக்கிறது வெளியேயும் இருக்கிறது என்று சொல்லும் போது பானையை உபாதியாக கொண்டு ஆகாசம் எங்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்வது போல ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய சரீரங்களை உபாதியாகக் கொண்டு உள்ளே, வெளியே என்று கூறப்படுகின்றது.

யஸ்து ஸர்வாணி பூ4தான்ய ஆத்மன்ய ஏவானுபஶ்யதி |
ஸர்வபூ4தேஶு சாத்மானம் ததோ ந விஜுகு3ப்ஸதே || 6 ||

யஹ து – யாரொருவன்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளையும், பூதங்களையும்
ஆத்மனி ஏவ – தன்னிடத்திலேயும்
ஸர்வ பூ4தேஷு – எல்லா பூதங்களிடத்திலும், ஜீவராசிகளிடத்திலும்
சாத்மானம் – தன்னை பார்க்கின்றானோ
தத3 – இப்படிபட்ட பார்வையினால்
ந விஜுகு3ப்தஸதே – யாரையும் நிந்திக்கவோ, வெறுக்கவோ மாட்டான், யாரிடத்திலும் பரிதாபப்படவோ மாட்டான் கருணையே கொள்வான்

யஸ்மின் ஸர்வாணி பூதான்ய ஆத்மைவாபூ4த்3 விஜானத: |
தத்ர கோ மோஹ:: க: ஶோக ஏகத்வம் அனுபஶ்யத: || 7 ||
விஜானத: – ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு
யஸ்மின் – எப்பொழுது, எந்தக் காலத்திலும்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஏகத்வம் அனுபஶ்யதஹ – ஒன்றையே பார்ப்பவனாக இருப்பதால்
தத்ர – அந்த காலத்தில்
கஹ மோஹ கஹ ஶோக – மோகமும் இல்லை, சோகமும் இல்லை

ஆட்சேப முறையில் சொல்லுதல் கருத்து அதன் இருப்பை ஆழமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஞானமானது அவ்வளவு சுலபமாக மனதில் பதியாது.  எனவே எந்த நேரத்தில் இந்த அறிவு மனதில் இருக்கிறதோ அந்த நேரத்தில் கோபமும், மோகமும் இருக்காது.  எந்த ஞானியிடத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தில் தானாகவே இருப்பதாக அறிவுடன் இருக்கின்றானோ அவனிடத்தில் சோகமும், மோகமும் இல்லை.

மோகம் – ஆத்ம ஆவரண லட்சணம், ஆத்மாவை மறைக்கும் நிலை
ஶோகம் – விக்ஷேபம் – பொய்யானவை தோற்றுவிக்கும், மனம் கொந்தளிப்பை கொடுப்பது.
ஆத்மாவைப்பற்றிய அக்ஞானம் இல்லை, தன்னைக் குறித்து எந்த சோகமும் இருக்காது. மோகத்துக்கும், சோகத்துக்கும் அனுபவங்கள், சம்பவங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அதை பொருட்படுத்துவதும் விதத்தில் அவைகளில் இல்லாமை உணரப்படும்.  அவைகளால் பாதிக்கப்படாமல் இருப்போம்.  சோகத்திற்கு காரணம் மோகத்தினால்தான் என்று சொல்லப்படுகிறது.

ஸ பர்யகா3ச சு2க்ரம் அகாயம்
அவரணம் அஸ்னாவிரம் ஶுத்3த4ம் அபாபவித்3த4ம்  |
கவிர்மனீஷீ பரிபூ4; ஸ்வயம்பூ4ர யாதா2தத்2யதோர்Sதா2ன்
வ்யத3தா4ச்சா2ஶ்வதீப்4ய: ஸமாப்4ய: || 8 ||

ஸஹ – மேற்சொன்ன ஆத்மதத்துவம்
பர்யகாத்3 – எல்லா இடத்திலும் பரவியிருப்பது, வியாபித்திருப்பது
ஶுக்ரம் – பிரகாச ஸ்வரூபமானது, சைதன்ய ஸ்வரூபமானது அறிவு ஸ்வரூபமானது
அகாயம் – சூட்சும சரீரங்களற்றது, மனது, புத்தி இவைகள் கிடையாது
அவரணம் – காயப்படுத்த முடியாதது
அஸ்னாவிரம் – நரம்புகள் கிடையாது
இவையிரண்டும் கிடையாது என்று சொல்வதிலிருந்து ஸ்தூல சரீரமும் அற்றது என்று புரிந்து கொள்ளலாம்
ஶுத்தம் – தூய்மையானது, காரண சரீரமற்றது.
மேற்கூறியதிலிருந்து மூன்று சரீரங்களும் கிடையாது என்பதை அறியலாம்.
அபாபவித்3த4ம் –  பாவ-புண்ணியங்களற்றது, தர்ம-அதர்மங்கள் இல்லாதது
கவி – அனைத்தையும் அறிந்தவன், எல்லோருடைய மனதிற்குள்ளேயும் இருப்பதால் அனைத்தையும் அறிந்ததாகிறது.
மனீஷீ – மனதை ஆள்வது, மனதை செயல்படுத்துவது
பரிபூ4 – எல்லாவற்றிற்கும் மேலானது, எல்லாமாகவும் இருக்கின்றது
ஸ்வயம்பூ4: – தானாகவே இருக்கிறது, தனக்கு காரணாமாக எதுவும் இல்லாதது
யாதா2தத்2யத: – அவரவர்கள் செய்த கர்ம உபாஸனைகளுக்கு தக்கபடி
அரா2ன் – ஆற்ற வேண்டிய கடமைகளை
ஶாஶ்வதிப்4ய ஸமாப4ய: வ்யத3தாத் – அதிக காலம் இருக்கின்ற தேவதைகளுக்கு, பிரஜாபதிகளுக்கு பிரித்துக் கொடுத்தார்
இயற்கை சக்திகள் நியமப்படி ஒழுங்காக இயங்குவதற்கு காரணமாக யாரோ ஒருவன் ஈஸ்வரன் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த4ம் தம: ப்ரவிஶந்தி யேSவித்3யாம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உவித்3யாயாம் ரதா: || 9 ||

கர்மங்கள் என்று சொல்வது வைதீக கர்மங்கள். உபாஸனா வேதத்தில் சொல்லப்பட்ட வைதீக தியானங்கள். கர்மத்தின் பலனில் ஆசைப்பட்டு செய்வது சகாம கர்மங்கள், இவைகளை செய்வதால் பித்ரு லோகத்தை அடையலாம்.  கர்மம் செய்பவர்களின் மனம் பரபரப்பாகவே இருக்கும்.  உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செயல்களையும், மனதால் செய்யப்படும் தியானம், போன்றவற்றையும் ஆசைவசப்பட்டு செய்வதால் அதன் பலனாக போகத்தை அனுபவிக்கிறான். அசுவமேத யாகத்தை செய்வதால் சொர்க்க லோகத்தை அடைகிறார்கள். இதே யாகத்தை பிராமணன் உபாஸனையாக செய்தாலும் அதே பலனை அடைகிறான்.

ஸமுச்சயஹ – சேர்த்தல் – கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்பவன் அடையும் பலன் பிரம்மலோகத்தை அடைவது கர்மத்தை நிஷ்காமமாக செய்தால் மனத்தூய்மை அடையலாம். நிஷ்காம உபாஸனையின் பலனாக அடைவது மன ஓருமுகப்பாடு.

யஹ – எவர்கள்
அவித்யாம் உபாஸதே – கர்மத்தை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்களோ
அந்தம் தம: – அவர்கள் அடர்ந்த இருளை, சொர்க்கலோகத்தை
பிரவிஶந்தி – அடைகிறார்கள்
சொர்க்கலோகத்கில் ஆத்ம வித்யாவை படிக்கமுடியாது. ஆத்ம ஞானத்தை அடைய முடியாத அறியாமையுடன் கூடிய உலகம் நான், என்னுடைய என்கின்ற அபிமானம் மட்டும் உடைய இருள் நிறைந்த உலகத்தை அடைகிறார்கள்.
ய உ – யார்
வித்யாயாம் ரதா – உபாஸனையை மட்டும் செய்து கொண்டு மகிழ்ந்திருக்கிறார்களோ
தத்2 பூ4ய இவ தே தம் – அவர்கள் அதைவிட அதிகமான அடர்ந்த இருளை அடைவார்கள்.
அதிகமான சுகத்தையும், மமகார, அகங்காரத்தையும் கொண்ட உலகத்தை அடைகிறார்கள்.

அன்யத்3 ஏவாஹுர் வித்3ய்யான் யத்3 ஆஹுர் அவித்3ய்யா |
இதி ஶுஶ்ரும தீ4ராணாம் யே நஸ் தத்3 விச்சக்ஷிரே || 10 ||

அன்யத்3 ஏவ ஆஹு வித்யயா – .உபாஸனை செய்வதினால் ஒரு வகையான பலன் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்
அனய்த்3 ஆஹு: அவித்3யயா – கர்மத்தை செய்வதனால் வேறொரு பலன் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்
தீராணாம் – கற்றறிந்தவர்களுடைய வார்த்தைகளாக
இதி ஶுஶ்ரும – இவ்விதம் நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம்
யே தத் விச்சக்ஷிரே – அவர்கள் எங்களுக்கு எடுத்து சொன்னார்கள்

வித்யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாம்ருதம் அஶ்னுதே || 11 ||

யாரொருவன் தியானத்தையும், கர்மாவையும் ஒன்று சேர்ந்து செய்யக்கூடியவை என்று புரிந்து கொள்கின்றானோ அவன் செயல் செய்வதனாலேயே மரணத்தையும் வென்று தியானத்தினாலேயே அழிவற்ற நிலையை அடைகின்றான். இங்கே ம்ருத்யு என்ற சொல்லானது நமக்கு இயல்பாகவே எந்த செயல்களை செய்ய விரும்பி செய்கின்றோமோ அதைக் குறிக்கிறது.  இதையே ஸ்வாபீக கர்மம் என்றும்  கூறப்படுகிறது.  நமக்கு என்ன செயல் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது. இந்த கர்மத்தின் பலனாக சுபாவமாக செய்யும் நிலையிலிருந்து விடுபட்டு சாஸ்திர தர்மப்படி இயல்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.  உபாஸனையின் மூலம் தேவதையை தியானித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்வரூபமாகவே உயர்ந்து விடுகின்றான். இதையே அம்ருதம் என்று கூறப்படுகிறது.

அந்தம் தம: ப்ரவிஶந்தி யேSஸம்பூ4திம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உ ஸம்பூ4த்யாம் ரதா: || 12 ||

எது தோன்றியுள்ளதோ அதை ஸம்பூதி என்று பொருட் கொள்ள வேண்டும்.. எது வெளித்தோற்றத்திற்கு வராமல் இருக்கிறதோ அதை அஸம்பூதி என்று பொருட்கொள்ள வேண்டும். இங்கே ஸம்பூதி உபாஸனம் என்பது ஹிரண்யகர்ப்ப உபாஸனம் என்று பொருட் கொள்ள வேண்டும்.  அஸம்பூதி என்பதை ப்ரகிருதி உபாஸனம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

யார் பிரகிருதியை மட்டும் உபாஸிக்கிறார்களோ அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள்.  யார் ஹிரண்யகர்ப்ப உபாஸனையில் மட்டும் பற்று உள்ளவர்களாக அதை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மேற்சொன்ன இருளை காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்

அன்யத்3 ஏவாஹு: ஸம்ப4வாத்3 அன்யத்3 ஆஹுர் அஸம்ப4வாத் |
இதி ஶுஶ்ரும தீராணாம் யே நஸ் தத3 விச்சக்ஷிரே || 13 ||

ஸம்பூதி உபாஸனையை செய்வதால் ஒருவகையான பலன் கிடைக்கின்றது.  அஸம்பூதி  உபாஸனை செய்வதால் வேறுவகையான பலன் கிடைக்கின்றது.  இது கற்றறிந்தவர்கள் எங்களுக்கு கூறியதையே நாங்கள் கேட்டிருக்கிறோம்.  இவ்விதம் எங்களுக்கு யார் சொன்னார்களொ அந்த தீரர்களுடைய வார்த்தையை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
ஸம்பூதி உபாஸனையின் பலன் – அஷ்டமகா சித்திகளை அடைவது
அஸம்பூதி உபாஸ்னையின் பலன் – பிரகிருதியுடன் லயத்தை அடைவது

ஸம்பூ4திம் ச வினாஶம் ச யஸ் தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
வினாஶேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூ4த்யாம்ருதம் அஶ்னுதே || 14 ||

யார் பிரகிருதி உபாஸனையையும், ஹிரண்யகர்ப்ப உபாஸனையும் சேர்த்து செய்கின்றானோ, அனுஷ்டிக்கின்றானோ அவர் ஹிரண்யகர்ப்ப உபாஸனையின் பலனாக மரணத்தை தாண்டி, பிரகிருதி உபாஸனையின் பலனாக பிரகிருதியுடன் லயமாகின்ற அடைகின்றார்.

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் |
தத். த்வம் பூஷன்ன அபாவ்ருணு ஸத்யத4ர்மாய த்3ருஷ்டயே || 15 ||

இந்த பிரார்த்தனை உபாஸனை செய்பவர்களால் செய்யப்படுகிறது. நல்ல உலகத்தை அடைய வேண்டும் என்பதற்காக செய்வது.  முமூக்ஷூவின் பிரார்த்தனையாகவும் இவைகளை விசாரம் செய்தால் அவன் மோட்சத்தை அடைவதற்காக செய்கின்றான் என்று புரியும்.

முமூக்ஷுவின் பிரார்த்தனை
உலகத்தில் இருக்கின்ற புலனுகர் போகப் பொருட்களால் பரபிரம்மத்தினுடைய உண்மையான இருத்தல் மறைத்திருக்கின்றது.  மாயையின் சக்தியால் மனதை கவர்ந்திழுக்கும்படி தோன்றியிருக்கின்ற பொருட்களின் மாயையில் விழுந்து விடாமல் என்னை பாதுகாப்பீர்களாக. நற்பண்புகளை பின்பற்றி கொண்டிருக்கும் முமுஷுவான என்னிடத்திலிருந்து மாயையை நீக்கி விடுவீர்களாக.

ஸத்யஸ்ய முக2ம் – ஹிரணயகர்ப்பனுடைய லோகத்தின் வாயில், பிரம்மத்தை அடைவதற்கான நுழைவாசல்
அபிஹிதம் – மூடப்பட்டிருக்கிறது
ஹிரண்மயேன பாத்ரேண – தங்கம் போன்ற ஓளிமயமான மறைப்பானால்
பூஷண் – சூரியதேவரே!
தத் த்வம் – அதை நீங்கள்
அபாவ்ருணு – நீக்கிவிடுங்கள், விலக்கி விடுவீர்களாக
ஸத்யதர்மாய – உண்மையான பிரம்மத்தை உபாஸிக்கின்ற,
திருஷ்டயே – என்னுடைய பார்வைக்காக
பிரம்ம லோகத்திற்கே சுக்லகதியாக செல்லும்போது தடையாக இருக்கும் ஒளிமயமான மறைப்பை எடுத்து வழி விடுவீர்களாக இது உபாஸனின் பிரார்த்தனை.

பூஷன்ன ஏகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய
வ்யூஹ ரஶ்மீன் ஸமூஹ தேஜ: |
யத் தே ரூபம் கல்யாணதமம்.தத் தே பஶ்யாமி
யோSஸாவ் அஸௌ புருஷ: ஸோSஹம் அஸ்மி || 16 ||

உபாஸகனின் பிரார்த்தனை ( கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்து கொண்டிருப்பவர்கள், பிரம்மலோகத்தை அடைவதற்காக உபாஸனை செய்பவர்கள் )
பூஷன் – சூரியதேவனே! உலகத்தை போஷிப்பவரே!
ஏகர்ஷே – ஒருவராகவே இருந்து செய்பவரே!
யம – எல்லாவற்றையும் தன்வசம் வைத்துள்ளவரே
ஸூர்ய – சூரிய பகவானே! எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டவரே!
ப்ரஜாப்த்ய – பிரஜாபதியின் புதல்வரே
ரஶ்மின் வ்யூஹ – உங்களின் ஒளிக்கதிர்களை விலக்கி கொள்வீர்களாக
தேஜ: ஸமூஹ – உங்களுடைய உஷ்ணமான ஓளியை ஒடுக்கிக் கொள்வீர்களாக
யத் தே கல்யாண தமம் ரூபம் – எந்த உங்களுடைய மங்களகரமான ரூபம் உண்டோ
தத் தே பஶ்யாமி – அதை உங்களுடைய அருளால் பார்க்க விரும்புகிறேன்
ய:: அஸௌ புருஷ: – யார் இந்த புருஷனோ, ஆதித்ய மண்டல தேவதையோ
ஸஹ அஹம் அஸ்மி – அவரே நானாக இருக்கிறேன்

உலகத்தில் மனதை கவர்ந்திழுக்கும் பொருட்களை நீக்கிக் கொள். மோட்சத்தை அறிய வேண்டும். அந்த ஆதித்ய மண்டலத்திலிருக்கின்ற பிரம்ம தத்துவம் நானாக இருக்கிறேன் என்ற அறிவை உடையவனாக இருக்கிறேன்

வாயுர் அனிலம் அம்ருதம் அதே2த3ம் ப4ஸ்மாந்தம் ஶரீரம் |
ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர || 17 ||

அக்னிதேவனை குறித்து, மனதிடமே பிரார்த்தனை. இப்பொழுது இறக்கும் தறுவாயில் இருக்கும் எனக்கு பிராணனானது.
அம்ருதம் – என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனான
அனிலம் – சமஷ்டி பிராணனுடன் கலந்து விடட்டும்.
அத இத3ம் – பிறகு இந்த உலகமானது
பஸ்மாந்தம் – அக்னியில் சாம்பலாகட்டும்
ஓம் க்ரதோ = ஹிரண்யகர்ப்பனே, அக்னிதேவனே
ஸ்மர க்ருதம் – நீங்கள் என்னால் செய்யப்பட்ட நற்காரியங்களை நினைத்துப்பார்த்து தகுந்த கதியை அடைய உதவ வேண்டும்
க்ரதோ க்ருதம் ஸ்மர – ஏ மனமே! இதுவரை செய்த நல்ல காரியங்களை, உபாஸனையை நினைத்துப் பார்ப்பாயாக
க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர – அக்னிதேவன், நான் செய்த உபாஸனைகளை, நற்காரியங்களை வைத்துக்கொண்டு நற்கதியை அடைய உதவி செய்வீர்களாக. ஏ மனமே நீயும் இதையே நினைப்பாயாக

அக்3னே நய ஸுபதா2 ராயே அஸ்மான் விஶ்வானி தே3வ வயுனானி வித்3வான் |
யுயோட்4ய அஸ்மஜ் ஜுஹுராணம் ஏனோ பூ4யிஷ்டா2ம் தே நம உக்திம் விதேம || 17 ||

ஓ அக்னிபகவானே எங்களை நற்கதியை அடையக் கூடிய நல்ல மார்க்கத்தில் அழைத்து செல்ல வேண்டும்.  திரும்பி வராத உலகமான பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
ராயே – செய்த கர்மபலன்களின் போகத்திற்காக
தேவ – அக்னிபகவானே
வஶ்வானி வ்யுனானி – நாங்கள் செய்த அனைத்து கர்மங்களையும், உபாஸ்னைகளையும்
வித்வான் – அறிந்துள்ள நீங்கள்
அஸ்மாத் – எங்களிடமிருந்து
ஜுஹுராணம் ஏனம் – கீழான பாவங்களை
யுயோதி4 – நீக்கிவிடுவீர்களாக
தே பூ4யுஷ்டாம் – உங்களுக்கு பலமுறை
நம: உக்திம் விதே4ம – நமஸ்காரத்தை சமர்ப்பிக்கின்றோம்
தொகுப்புரை

01-08   வேதாந்த கருத்துக்கள் உடையது

01-01:  இதில் வேதாந்தத்தின் மையக்கருத்து கூறப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் உள்ள படைக்கப்பட்ட அனைத்திலும் ஈஸ்வரனே வியாபித்திருக்கிறார். இந்த உலகத்திற்கு அவரே உபாதான காரணமாக இருக்கிறார். இந்த உலகத்தை ஈஸ்வரனைக் கொண்டு மூடி விடவேண்டும். இருமையை நீக்கி அனைத்திலும் ஈஸ்வர ஸ்வரூபத்தையே பார்க்க வேண்டும். இந்த அறிவை தியாகத்தினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தியாகம் என்பது அகங்காரம், மமகாரம் இவைகளை நீக்கிவிடுவதையே குறிக்கின்றது.  யாருடைய பொருளையும் அபகரிக்க கூடாது.

02-02   மேற்சொன்ன அறிவை அடைய தகுதியில்லாதவர்களுக்கு மனதிலுள்ள ராக, துவேஷங்கள் தடையாக இருந்தால் கர்மயோகத்தை செய்து தகுதிபடுத்தி கொள்ள வேண்டும்.  சாஸ்திர விதித்த கடமைகளை செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இப்படி வாழ்வதால் கர்மத்தால் பந்தப்படாமல் ராக, துவேஷங்கள் நீங்கி எது உண்மை எது பொய் என்று பிரித்தறியும் அறிவை அடைவோம்.  மேற்சொன்ன அறிவை அடைய தகுதிப்படுத்தும்

03-03   அறியாமையில் உள்ளவர்களை நிந்தனை செய்கின்றது.  இத்தகையவர்கள் தன்னைத்தானே கொலை செய்வது போன்ற நிலைக்கு சமானமாகும் என்று கூறுகிறது

04-05   ஆத்ம தத்துவத்தை அத்யாரோப அபவாதம் முறையில் உபதேசிக்கின்றது. இருப்பதை, அனுபவித்துக் கொண்டிருப்பதால் அவைகளை முதலில் ஏற்றுக் கொண்டு பிறகு அவைகள் மித்யா என்று நீக்கி பிரம்ம ஞானத்தை உபதேசிக்கிறது. பிரம்மத்தின் லட்சணங்களான அசைவற்றது, வேகமாக செயல்படக் கூடியது போன்றவற்றை எடுத்துக் கூறி பிரம்மத்தின் துணைக் கொண்டுதான் பிரபஞ்சம் செயல்படுகின்றது என்பதையும் விவரித்துள்ளது

06-07   இதில் பிரம்ம ஞானத்தினுடைய லட்சணங்களும், பலனும் கூறப்பட்டுள்ளது. யார் எல்லா ஜீவராசிகளையும் தன்னிடத்திலேயும், அவைகளில் தன்னையும் பார்ப்பதே ஞானபலன் லட்சணம்.  எந்த காலத்தில் இந்த அறிவு நிலைபெறுகின்றதோ அப்போதே அவனிடத்திலிருந்து மோகமும், சோகமும் விடைபெற்று சென்றுவிடும்

09-14   கர்ம-உபாஸனம்

 

ஓம் தத் ஸத்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –