Archive for March, 2012

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–94/95/96/97/98/99/100/101/102/103/104—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 31, 2012

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

ஏவம் பூதமான பிராவண்யம் விஷய வைலக்ஷண்ய அதீனம் அத்தனை அன்றோ –
சம தமாதி ஆத்ம குணங்கள் அன்றோ அதிகாரத்தை மினுங்குவிப்பது என்ன –
அவை தன்னையும் இது தானே உண்டாக்கும் என்கிறார் -மேல் –

சமதம நியதாத்மா –
அமாநித்வம் –
இத்யாதியில் சொல்லுகிறபடியே -இச் சேதனனுக்கு உண்டாக்க தக்க ஆத்ம குணங்கள் தான் அநேகம் உண்டு இறே–
இவை எல்லாவற்றுக்கும் இந்த பிராவண்யம் -பிரதானம்  ஹேது ஆகையாவது –
அனுகூல சஹவாச-சாஸ்த்ராப்ய-சா சாரய உபதேசிகளான- ஹேத்வந்தரங்களில் காட்டில் -முக்ய ஹேதுவாய் இருக்கை–

——————————————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

இவ் அர்த்தத்தில் பிரமாண உபாதாநம் பண்ணுகிறார் –

மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு-நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் –மூன்றாம் திரு வந்தாதி -13 –
என்று சர்வேஸ்வரன் பக்கலில் -ஹிருதயம் பிரவணமாக-போக்யைகளான ஸ்திரீகளுடைய தோளுடன் அணைகையில்
நசை அற்று -பிரமாணங்களில் மனசை  வைக்க எளிதாம் என்றும் –
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி-என்று பரமாத்மாவின் பக்கலிலே ரக்தனாய் –
அத்தாலே பரமாத்ம இதர விஷயத்தில் -விரக்தன் ஆவான் என்றும் –
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு கேட்டு உற்று
மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் –திருவாய் மொழி -என்று
பெரிய பிராட்டியாரும் தேவருமாய் ஒரு  தேச விசேஷத்திலே-எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியை கண்டு -அங்கே பிரவணனாய்-
ஐஸ்வர்ய கைவல்யங்களில் விரக்தன் ஆனேன் என்றும் –
பகவத் பிராவண்யம் இதர விஷய விரக்தி ஹேதுவாக சொல்லப் பட்டது இறே –

———————————————————–

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

பகவத் பிராவண்யம் ஆத்ம குணங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது என்று பிரஸ்தாவித்து-
இதர விஷய விரக்தி -ஹேதுத்வ மாத்ரத்தில் -பிரமாணங்களை தர்சிப்பான் என் என்கிற சங்கையில் –
அருளிச் செய்கிறார் –

சமம் ஆவது -அந்த கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமச்சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணச்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளி செய்தது –
மாறி சொல்லும் இடமும் உண்டு –
இந்த சம தமங்கள் உண்டான இடத்தில் -அல்லாத குணங்கள் தன்னடையே வரும் ஆகையால் –
பிரதானமான இவற்றுக்கு ஹேது என்னும் இடத்தில் பிரமாணம் காட்டப் பட்டது என்று கருத்து –
அன்றிக்கே –
கீழ் சொன்ன விரக்தி ஹேதுத்வம்-சகல ஆத்ம குண உத்பத்திக்கும் ஹேது என்னும் இடத்துக்கு உப லஷணமாக்கி-
இவ் ஆத்ம குணங்களில் பிரதானம் எது என்கிற சங்கையில் -ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -என்று அருளி செய்தார் ஆகவுமாம்-

——————————————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இந்த சம தமங்கள் உண்டானால் -இவனுக்கு உண்டாக கடவ-பல பரம்பரையை
அருளிச் செய்கிறார் மேல் –

பகவத் ப்ராவண்யம் அடியாக வரும் -பரி பூரணமான சம தமங்களை கீழ் சொல்லிற்றே ஆகிலும் –
இவ் இடத்தில் ஆச்சார்ய அங்கீகாரத்துக்கு பூர்வ பாவியான அளவில் ஒதுக்கிச் சொல்லுகிறது –
இந்த சம தமங்கள் இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுருகை யாவது –
இவ் ஆத்ம குணம் கண்டு உகந்து -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசிக்கும் படி இவனுக்கு வச்யனாகை-
தஸ்மை ஸ வித்வான் உபசந்தாய சமயக் பிரசாந்த சித்தாய சமான்விதாய –
யேனா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம்தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
சம தம உபேதனாய்கொண்டு உபசன்னானவனுக்கு இறே ப்ரஹ்ம வித்யையை -தத்வத -உபதேசிக்கச் சொல்லிற்று –
இந்த ஸ்ருதியில் ஆசார்யுபதேசதுக்கு உடலாக சொன்னசம தமங்களுக்கு -ஏதேன ஸ்ரவண உபயுக்தம் அவதானம் விவஷிதம் –
-நதூபாச நோபயுக்தாத் யன்தேந்த்ரிய ஜயாதி -என்று இறே சுருதி பிரகாசிகாகாரர் வியாக்யானம் பண்ணிற்று –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுருகை யாவது –
மந்த்ரா தீநஞ்ச தைவதம் -என்று -திருமந்தரம் இட்ட வழக்காய் இருக்கும்
அவனாகையாலே -அர்த்த சஹிதமாக அது கை புகுந்தவாறே -தத் ப்ரதிபாத்யனான தான் இவனுக்கு –
அநிஷ்ட நிவ்ருத்த பூர்வ இஷ்ட ப்ராப்திக்கு ப்ராபகனான – ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறபடியே
பிராப்ய பூமி  கை புகுருகை யாவது -தைவாதீனம் ஜகத் சர்வம் -என்று உபய விபூதியும்
ஈஸ்வரன் இட்ட வழக்கு ஆகையாலே -அவன் பிராபகனாய்  கை புகுந்தவாறே –
பிராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்டம் இவனுக்கு அத்யந்த சுலபமாகை-

——————————————–

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இப்படி சம தமங்கள் உண்டாகவே -உத்தரோத்தரம் இவை எல்லாம் சித்திக்கும் பிரகாரத்தை ஆரோஹா க்ரமத்தாலே அருளி செய்து –
இதில் யாதொன்றுக்கு யாதொன்று ஹேதுவாக சொல்லிற்று ஆக நியதம்-என்னும் இடத்தை அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார் –

இது தனக்கு பிரயோஜனம் -இது ஹேது பரம்பரையில் பிரதம ஹேது– சம தமங்கள்ஆகையாலே-அவஸ்யம் 
இவை இரண்டும் இவனுக்கு உண்டாக வேணும் என்கை –
ஈச்வரனே பிராபகன்  ஆகையாலே -பிராப்ய லாபம் ஈச்வரனாலே என்கிற -ஸ்தானத்திலே-பிராபகத்தாலே -என்று அருளிச் செய்தது-

——————————————–

சூரணை -99
இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

இந்த சமதமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் –
ஐஸ்வர்ய காமர்க்கு சப்தாதி காமமே புருஷார்த்தம் ஆகிலும் -தத் சாதன அனுஷ்டான தசையில் -சம தமதாதிகள் வேணும் –
இந்திரியாணி புராஜித்வா ஜிதம் திரிபுவனம் த்வயா-என்றும் –
படி மன்னு பல்கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று –திருவாய்மொழி -4 -1 -9-என்னக் கடவது இறே –
ஐம்புலன் வென்று -என்றது -மனோ நியமனத்துக்கு உப லஷணம்-
உபாசகருக்கு வித்யாங்கதையா சமாதி வேணும் –
தஸ்மா தேவம் வித் சாந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சமாஹிதோ பூத்வாத்மன்யே வாத்மானம் பச்யேத் -என்றும்
புன்புல வழி அடைத்து அரக்கிலிச்சினை  செய்து நன்புல வழி திறந்து ஞான நல்சுடர் கொளீ இ–திரு சந்த விருத்தம் -96-என்னக் கடவது இறே –
பிரபன்னர்க்கு அதிகார அரர்த்தமாக சமாதி வேணும் –
ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை-பக்தி உபாயம் சமம் – கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ணைக சாதன – என்றும்
அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி யாசை யாமாவை-துடக்கறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற என்னை -திரு சந்த விருத்தம் – 95–என்னக் கடவது இறே –

——————————————

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படி அதிகாரி த்ரயத்துக்கும் அபேஷிதமே ஆகிலும் -அதிகமாக
வேண்டுவது பிரபன்னனுக்கு என்கிறார் –

இவனுக்கு இதில் ஆதிக்யம் சொல்லுகைக்கு ஆக இறே
அல்லாதவர்களை இவ்விடத்தில் பிரசங்கித்ததும்-

—————————————————

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

அவ் ஆதிக்யம் தன்னை அருளி செய்கிறார் –

அதாவது
சப்தாதி போக பரனான ஐஸ்வர்ய காமனுக்கும் -சாதனாந்தர பரனான உபாசகனுக்கும் –
சாஸ்திர நிஷித்த விஷயமான பர தாராதியில் நிவ்ருத்தி மாதரம் அமையும் –
தத் உபய வ்ருத்தனாய் இருக்கிற பிரபன்னனுக்கு -சாஸ்திர விஹித விஷயமான
ஸ்வ தாரத்தில் நிவ்ருத்தி -அவர்களை பற்ற ஏற்றம் என்கை –
அவர்கள் இருவரிலும் ஐஸ்வர்ய காமனுக்கு ஸ்வ தாரத்தில் சாதன தசையில்
தர்ம புத்த்யா பிரவ்ருத்தியும் -பல தசையில் போக்யதா புத்த்யா பிரவ்ருத்தியுமாய் இருக்கும் –
உபாசகனுக்கு பலம் பகவத் அனுபவம் ஆகையாலே அவனை போலே பல தசையில்
அன்வயம் இல்லையே ஆகிலும் -உபாசன தசையில் தர்ம புத்த்யா பிரவ்ருத்தி வேணும் –
பிரபன்னனுக்கு தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும் ஸ்வ அதிகார பஞ்சகம் ஆகையாலே
விஹித விஷயத்திலும்  நிவ்ருத்தி வேணும் என்றது ஆய்த்து–

———————————————

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

தர்ம புத்த்யா பிரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா-பிரவ்ருத்தி தான் தவிர்ந்தால் அன்றோ –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த விஷயங்களில் -நிவ்ருத்தி தான் பிறக்கும் படி எங்கனே என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

சிலருக்கு  அழகாலே பிறக்கும் -என்றது -சாஷத்க்ருத  பகவத் தத்வரான-பக்தி பாரவச்ய பிரபன்னருக்கு –
சகல ஜகன் மோகனமான தத் விக்ரக சௌந்தர்ய அனுபவத்தாலே பிறக்கும் என்ற படி –
சிலர்க்கு அருளாலே பிறக்கும் -என்றது -தத்வ யாதாத்ம்ய தர்சிகளான-ஞானதிக்ய பிரபன்னருக்கு –
நம்மை அனுபவிக்க இட்டு பிறந்த வஸ்து இப்படி-அந்ய விஷய பிரவனமாய் அநர்த்த படுவதே -என்று அந்ய விஷய சங்கம் அறும்படி
அவன் பண்ணும் பரம கிருபையாலே பிறக்கும் என்றபடி –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் -என்றது -அளவிலிகளான-அஞ்ஞான  பிரபன்னருக்கு அவதாரங்களில் –
மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸா-என்கிறபடியே -அதிகார அனுகுணமாக அவன் ஆசாரித்தும் ஆசாரிப்பித்தும் போந்த படிகளையும் –
அளவுடையரான பூர்வாச்சார்யர்கள் ஆசரித்து போந்த படிகளையும் -சாஸ்திர முகத்தாலும் -ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலும் அறிகையாலே –
அவ் ஆசாரங்களை அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும் -என்றபடி —

—————————————-

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ்வோ ஹேதுக்களால் பிறக்கும் க்ரமத்தை தஜ் ஜிஜ்ஞாசூ  பிரச்னத்தை
அனுவதித்து கொண்டு அருளிச் செய்கிறார் –

அழகு அஞ்ஞானத்தை விளைக்கை யாவது -சித்த அபஹாரி ஆகையாலே விஷயாந்தரம் தன்னை ஒன்றாக அறியாதபடி  ஆக்குகை –
அருள் அருசியை விளைக்கை யாவது -விஷயாந்தரங்களை காணும் போது அருவருத்து காரி உமிழ்ந்து போம் படி பண்ணுகை-
ஆசாரம் அச்சத்தை விளைக்கை யாவது -ருசி செல்லச் செய்தே -அவர்கள் ஆசாரித்தபடி செய்யாத போது நமக்கு அனர்த்தமே பலிக்கும்  என்று
விஷய ஸ்பர்சத்தில் இழிய நடுங்கும் படி பண்ணுகை –
ஆகையால் இக் க்ரமத்தில் பிறக்கும் என்று கருத்து —

——————————————-

சூரணை -104-

இவையும் ஊற்றத்தை பற்ற  சொல்லுகிறது –

இந்த த்ரிவித பிரபன்னருக்கும் -சௌந்தர்யாதி த்ரயத்தில் ஒரொன்றே
விரக்தி ஹேதுவாக சொல்லுகிறதுக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் -இத்யாதியால் -இவர்களுக்கு சொன்ன பிரபத்தி
ஹேதுக்களானவை ஒரோன்றின்  ஊற்றத்தை பற்றிச் சொன்னாப் போலே –
அழகாலே பிறக்கும் -என்று தொடங்கி சொன்ன -விரக்தி ஹேதுக்களான இவையும்
ஒரோன்றின்  ஊற்றத்தை பற்றி சொல்லுகிறது -என்கை-
இத்தால்-பக்தி பாராவச்ய பிரபன்னருக்கு -அருசிக்கு அடியான கிருபையும் –
அச்சத்துக்கு அடியான ஆசார அனுசந்தானாமும் உண்டாய் இருக்கச் செய்தே –
பகவத் விக்ரஹ வைலஷண்யத்தை சாஷாத்கரித்த்து அனுபவிப்பவர்கள் ஆகையால் –
எப்போதும் நெஞ்சு பற்றி கிடைக்கையால் -விஷயாந்தரங்களை அறியாதபடி பண்ணும் அவ் அழகே அவர் பக்கல் உறைத்து இருக்கும் –
ஞானாதிக்ய பிரபன்னருக்கு -அஞ்ஞான ஹேதுவான விக்ரஹ சௌந்தர்யத்தை
அர்ச்சாவாதாரத்தில் கண்டு அனுபவிக்கையும் -பய ஹேதுவான ப்ராக்தன சிஷ்ட ஆசார
அனுசந்தானம் உண்டாய் இருக்கச் செய்தே -அவன் தன கிருபையை முழுமடை செய்து எடுத்த
விஷயங்கள் ஆகையாலே -அருசிக்கு அடியான கிருபை அவர்கள் பக்கல் உறைத்து இருக்கும் –
அஞ்ஞான பிரபன்னருக்கு -அர்ச்சாவாதாரத்தில் காதாசித்கமகா -விக்ரஹ சௌந்தர்யாஅனுபவமும் –
அருசி ஹேதுவான கிருபையும் -ஒரு மரியாதை உண்டாய் இருக்க செய்தே -பூர்வர்கள் ஆசாரங்களையே
பலகாலம் அனுசந்தித்து கொண்டு போருகையாலே -பய ஹேதுவான அவ் ஆசாரங்கள் அவர்கள் நெஞ்சில் ஊன்றி  இருக்கும் –
இவ் ஊற்றத்தை பற்ற ஒரொன்றே  விரக்தி ஹேதுவாக சொல்லுகிறது -என்று ஆய்த்து-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–86/87/88/89/90/91/92/93–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 29, 2012

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யாஜிகலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

விஷ்ணோ கார்யம் சமுதிச்ய தேக த்யாகோ
யதா கருத ததா வைகுண்ட மாசாத்ய முக்தோ பவதி மானவே -என்று
ஆக்நேய புராணத்திலும் –
தேவ கார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் யா பரித்யஜேத் சாயாதி  விஷ்ணு
சாயுஜ்யமபி பாதக க்ருன்  நர -என்று வாயவ்யத்திலும் –
ரங்கநாதம் சமாஸ்ரித்ய தேஹத்யாகம் கரோதிய
தஸ்ய வம்சே ம்ருதாஸ் சர்வே  கச்சந்த்யாத்யந்திகம் லயம் -என்று வாம நீயத்திலும் –
சொல்லுகையாலும் -விசேஷித்து ஆச்வமேதிக பர்வதத்தில் -வைஷ்ணவ தர்மசாஸ்த்ரத்தில்
பஞ்சம அத்யாயத்திலே -அக்னி பிரவேசம் யச்சாபி குருதே மத்கதாத் மனா ச யாத்யக்னி
ப்ரகாசென வ்ரஜென் யானென மத க்ருஹம் -என்று பகவான் தானே அருளி செய்கையாலும் –
இப்படி மோஷ சாதனமாக சொல்லப் படுகிற -பகவத்தர்தமானே ஸ்வ தேக தியாகம் –
அநந்ய சாதனான இவனுக்கு த்யாஜ்யம் அன்றோ –
பிரபன்னரராய் இருக்கிற பிள்ளை  திரு நறையூர் அரையர் இத்தை அனுஷ்டிப்பான் என் -என்ன
அருளி செய்கிறார் –

அதாவது-
இதம் குர்யாத் -என்று ஒரு விதி பிரயுக்தமாய் வருமது இறே –
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இவனுக்கு கை விடல் ஆகாது
அங்கன் இன்றிக்கே தன் விரஹத்தால் ஆற்ற போகாதபடி
போக்யமுமாய் பிராப்தமுமான விஷயத்தில் ராக பிரயுக்தமாய்
வருமது வருந்தியும் கை விடப் போகாது இறே -என்கை–

————————————————————————-

சூரணை -87
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

வைதவம் வரும் அளவில்  சூத்யஜமாய் -ராக ப்ராப்தமாய் -வரும் அளவில் -துஸ்த்யஜமாவான் என் என்ன -அருளி செய்கிறார் –

உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது –
வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை
சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றது
ராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வர கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று -தேக த்யாகம் தன்னை புருஷார்த்தமாக
அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே –
வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு நிவர்தகமாம் –
ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

————————————————-

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய பரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

இப்படி ஒரு சாதன புத்த்யா அன்றிக்கே -தத் விஷய ப்ரவண்ய அதிசயத்தாலே –
ஸ்வ தேகத்தை விடும்படியான நிலை விளையக் கூடுமோ என்ன -அருளி செய்கிறார் –

அதாவது -ஸ்வரூப பிராப்தம் அல்லாத தேக விஷயங்களிலே பிரவணன் ஆனவன் –
தன்னை அழிய மாறி யாகிலும் -அவ் விஷயத்தை லபிக்க வேணும் என்று –
ஸ்வ தேக த்யாகத்தில் பிரவர்தியா நின்றால்-ஸ்வரூப பிரப்தமான விலக்ஷண விஷயத்தில் பிரவணன் ஆனவனுக்கு -அவ் விஷயத்தை பற்றி அழிய
மாறுகை யாகிற இது கூடுமோ என்னும் இடம் கிம்புனர் நியாயம் சித்தம் அன்றோ -என்கை-
ஒரு வேச்யை அளவில் ஒருவன் அதி சக்தனாய்க் கொண்டு போருமவனாய் -அவளுக்கு வியாதி கனக்க வந்த அளவிலே -இவள் ஆறி எழுந்தவாறே நான் என்
தலையை அரிந்து தருகிறேன் -என்று ஒரு தேவதைக்கு பிரார்த்தித்து -பின்பு தலையை அரிந்து -கொடுப்பது செய்தான் என்று பிரசித்தம் இறே –

——————————————————-

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

உபாய உபேய அதிகாரங்களுக்கு உடலாக மற்றும் சொன்ன அனுஷ்டானங்கள்போல் அன்றிக்கே –
உபாய தயா சாஸ்திர சித்தம் ஆகையாலே -அநந்ய சாதனனுக்கு அந் அனுஷ்டானமான இந்த தேக த்யாகம் ராக ப்ராப்தம் ஆகையாலே –
துஸ்த்யஜமாய் இருந்ததே ஆகிலும் -உபாய கோடியிலே-அன்வயித்தது அன்றி -நில்லாதே -என்ன – அருளி செய்கிறார் –

அதாவது –
அனுஷ்டானமாக சொன்ன ஸ்வ சக்தி த்யாகாதிகளும் -ப்ரேமாதி களும் –
உபாய உபேய அதிகார அந்தர்பூதம் ஆகையாலே -உபாய கோடியிலே அன்வயிதாப் போலே –
அந் அனுஷ்டானமாக சொன்ன -ஸ்வ தேக  த்யாகமும் -உபாய புத்தியா அனுஷ்டிதம் அன்றிக்கே –
ராக பிராப்தம் ஆகையாலே உபாய கோடியில் அன்வயியாது -உபேய அதிகாரத்தில் அந்தர் பாவிக்கும் அத்தனை -என்கை –
உபாயதயா சாஸ்திர சித்தமே ஆகிலும் உபாய புத்த்யா அனுஷ்டிதம் ஆனதுக்கு இறே
உபாயத்வம் உள்ளது -அங்கன் அன்றாகில் -பிரபன்னனான அவன் உபாய புத்தி அற உபேய புத்த்யா பண்ணுகிற
புண்ய தேச வாசாதிகளும்-(ஆதி சப்தம் -நித்ய கைங்கர்யங்கள் ) உபாய கோடியிலே அன்வயிக்க வேணும் இறே –

————————————————-

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

அன்றிக்கே -இப் பிரவ்ருத்தி தான் -உபாய கோடியிலே அன்வயித்தது ஆகிலும் –
அநந்ய உபாயத்வத்துக்கு குலைதல் வரும் இத்தனை இறே -அது பிரேம பரவசருக்கு
அவத்யம் அன்று என்கைக்காக-பிரேம பரவசர் பிரவ்ருத்திகளை தர்சிப்பிக்கிறார் –

அநந்ய உபாயத்வம்  குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
திருந்தவே தோற்கின்றேன் –
நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் –
குதிரியாய் மடலூர்த்தும் -குஸ்தித ஸ்திரீயாய் நேர் வழியாக போகாமல் –
ஓதி நாமம் –
ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –
உலகறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
(சாத்தியம் கைப்பட்டபின்பும் சாதனம் கை விடாமல் இன்றும் மடலை அஞ்சலி ஹஸ்தங்களுக்குள் வைத்து சேவை சாதிக்கிறார் -உபாயாந்தரம் என்ற நினைவால் இல்லையே )
என்று -நோன்பு நோற்கை-மடல் எடுக்கை -முதலான வியாபாரங்களில் இழிகை-
அநந்ய உபேயத்வம் குலையும் படியானபிரவ்ருத்தி யாவது –
அத தலைக்கு அதிசயத்தை விளைகையே புருஷார்த்தம் என்று இருக்கை தவிர்ந்து –
நமக்கே நலமாதலில் -என்றும்
தூ மலர் தண்  அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும்
(பர கத அதிசயம் இல்லாமல் ) தனக்கு அதிசயம் தேட தொடங்குகை –
அநந்ய தைவத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
காம தேவா உன்னையும் உம்பியையும் தொழுதேன் –
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் -என்று
காமன் பக்கலிலே தேவதா புத்தி பண்ணி ஆராதிக்கை –
காணா நின்றோம் இறே -என்றது -பிராப்ய வஸ்துவின் ப்ராவண்ய அதிசயத்தாலே-
பேரளவு உடையவர்கள் பக்கலில் உண்டாக காணா நின்றோம் இறே என்கை –
முன்பு சொன்ன பிரவ்ருத்திக்கு உபாய கோட்ய அன்வயம் வச்துகதையா வரும் என்று
கொள்ளுகிற மாதரம் இறே -அங்கன் இன்றிகே நேரே உபாய புத்த்யா அனுஷ்டிதமானவை இறே இவை –
ஆகையால் பிரேம பரவசருக்கு இது அவத்யம் அன்று என்று கருத்து –

—————————————————–

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

இத்தனையும் கலக்கத்தாலே வந்தவை இறே –
அஞ்ஞானம் மூலமாய் வருமவை ஒன்றும் ஆதரணீயம் அன்றே என்ன –
அருளி செய்கிறார் –

ஞான விபாகம் ஆவது -ஞானம் கனிந்த நலம் -என்கிறபடியே
ஜ்ஞானத்தின் உடைய பரிபாக ரூபையான பக்தி -அதன் கார்யமான அஞ்ஞானம் ஆவது –
அந்த பக்தி அதிசயத்தாலே வரும் ப்ராப்த அப்ராப்த விவேக அபாவம் -அத்தாலே வரும்
பிரவ்ருத்தி  விசேஷங்கள் எல்லாம் -அடிக் கழஞ்சு பெறும் -என்றது -அதி ச்லாக்யங்களாய்
இருக்கும் என்றபடி –
கர்ம நிபந்தனமான அஞ்ஞாநத்தாலே வருமவையே ஹேயங்கள் என்று கருத்து

——————————————–

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

ஆனாலும் இவ்வதிபிரவ்ருத்தி  -இத் தலையில் பிரவ்ருத்தியில் ஒன்றையும்
சாஹியாத சித்த உபாயத்தின் கார்ய  கரத்வத்துக்கு பிரதி பந்தகம் ஆகாதோ என்ன –
அருளி செய்கிறார் –

உபாய பலம் -என்றது சித்த உபாயம் ஆனவன் பண்ணின கிருஷி பலம் என்றபடி –
மயர்வற மதி நலம் அருளினன் –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்றும்-
ஏவம் பூத பிரவ்ருத்தி ஹேதுவான பக்திக்கு உத்பாதகனும் வர்த்தகனும் அவனே இறே –
ஆகையால் பக்தி பாரவச்ய நிபந்தனமான இப் பிரவ்ருத்தியை -உபாய பலம் -என்கிறது –
உபேய அந்தர் பூதமாய் இருக்குமது -என்றது –
பிராப்ய தசையில் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு -இத் தலைபடுகிற
அலமாப்பு எல்லாம் -நம்மை ஆசைப்பட்டு இப்படி படப் பெறுவதே என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பு ஆகையாலே –
மடல் எடுக்கை தொடக்கமான இந்த பிரவ்ருத்திகள் அவன் முக மலர்திக்காக பண்ணும்
கைங்கர்யத்தோ பாதியாக கொண்டு உபேயத்தில் அந்தர் பூதமாய் இருக்கும் என்கை –
உபாய பிரதி பந்தம் ஆகாது -என்றது-ஏவம் பூதமானது -உபாயத்தின் உடைய கார்ய
கரத்வதுக்கு விலக்காகாது-என்றபடி-

——————————————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இப்படி மடல் எடுக்கை முதலானவை சித்த  உபாய பிரதி பந்தகம் ஆகாது என்னும் இடம் சொல்லி –
அவை தனக்கு சித்த உபாய சாம்யத்தை விவஷித்துஅருளி செய்கிறார் மேல் –

சாத்ய வஸ்துவே சாதனம் ஆகையாலே -சாத்தியத்துக்கு சமானம் என்றும் –
பல விளம்பத்தை சஹியாதே சீக்கிரமாக கார்யம் செய்து கொடுக்கும் என்று இறே –
இதர சாதனங்களில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்தியத்தில் பிராவண்யம் அடியாக இறே இந்த சாதக பரிக்ரகம் தன்னில் இழிகிறது –
அவை இரண்டும் இவற்றுக்கு உண்டு என்று கருத்து -எங்கனே என்னில் -மடல் எடுக்கை முதலான
பிரவ்ருத்திகள் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே -கைங்கர்ய ரூப சாத்தியத்துக்கு
சமானங்களாய் இருக்கை யாலும் –
மடலூர்தல்-நோன்பு நோற்க்குதல்-செய்வன் என்று துணிந்தபோதே –
சர்வேஸ்வரன் த்வரிதது கொண்டு வந்து இவர்கள் காலிலே விழும்படி
பண்ணிக் கொடுக்கையாலே -பல விளம்ப அசஹங்களாய் இருக்கையாலும் –
சித்த சாதனம் போலே இதர சாதனங்களில் காட்டிலும் ஏற்றத்தை உடையதாய் –
சாத்ய ப்ராவண்யம் அடியாக இவற்றில் இழிகிற ஆகாரமும் ஒத்து
இருக்கையாலே -இத்தால்-சித்த உபாயத்தை ஒழியவும் இது தானே கார்யம் செய்யவற்று ஆகையாலே
தத் பிரதிபந்தகம் என்னும் தூஷணம் இல்லை என்று கருத்து –
அன்றிக்கே -(பாவானத்வ மாத்திரம் இல்லாமல் போக்யமாயும் இருக்குமே இவை )
உபாய பிரதி பந்தகம் ஆகாது -என்றத்தை இன்னமும் முக பேதத்தால் உபபாதிக்கிறார் –
சாத்ய -இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே -அதாவது -பால் மருந்தாம் போலே
சாத்ய வஸ்து தானே சாதன ஆகையாலே-சாரச்யத்தில் சாத்யத்தோடு ஒத்து இருக்கும் என்றும் –
சாத்தியத்தை பிராபிக்கும் அளவில் கால விளம்பத்தை பொறாது கடுக பிராபித்து விடும் என்றும் அன்றே
சாதனாந்தரத்தில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம்-இப்போது இது சொல்லுகிறது-இவ் ஆகார த்வயமும்
சாத்ய ப்ராவண்ய ஹேதுவாம் என்று தோற்றுகைக்காக-இப்படி ஆகையாலே –
தன் அடியாக விளைந்து -க்ஷண கால விளம்பம் பொறாமல்  துடிக்கும் படி முறுகடி இடுகிற
சாத்ய ப்ராவண்யம் அடியாக இறே மடல் எடுக்கை  முதலான இஸ் சாதனத்தில் இழிகிறது என்கை –
ஆகையால் ஏவம் பூத ப்ராவண்யத்தின் முறுகுதலாலே  கண்ணாஞ்சுழலை இட்டு செய்கிற இப் பிரவ்ருத்திகள்
உபாயம் மேல் விழுந்து கார்யம் செய்கைக்கு உடலாம் இத்தனை அல்லது-தத் பிரதி பந்தகம் ஆகாது என்று கருத்து –

ஆக
இவனுக்கு வைதமாய் வருமது இறே த்யஜிக்க  லாவது -சூரணை – 86-என்று தொடக்கி –
இவ்வளவு வர -பிள்ளை திரு நறையூர் அரையர் பிரவ்ருத்தி  வ்யாஜத்தாலே –
பகவத் பிரபன்னனாய் இருந்தானே ஆகிலும் -உபேய பரன் ஆனவனுக்கு
தத் விஷய ப்ராவண்யத்தால் வரும் ஸ்வ தேக த்யாகம் துச்த்யஜம் –
உபாய புத்தா அனுஷ்டிதம் அல்லாமையாலே -அது தான் உபாய கோடியில் அன்வயியாது –
வச்துகத்யா அன்வயித்தது ஆகிலும் பிரேமபரவஸ்ருக்கு  தோஷாயவன்று-
புத்தி பூர்வகமாக வனன்ய   உபாயத்வாதிகள் குலையும் படியான ப்ரவ்ருத்திகள்
தெளிய கண்டவர்கள் பக்கலிலும் காண்கையாலே–இவை தான் அஞ்ஞான மூலமே ஆகிலும்
பிரேம கார்யமான அஞ்ஞாநத்தாலே வந்தவை ஆகையாலே -அதி ச்லாக்யங்கள் –
சித்தோ உபய பிரதி பந்தகம் ஆகாது -அவ்வளவு அன்றிக்கே அத்தோடு ஒக்க
சொல்லலாம் படி அன்றோ இவற்றின் பெருமை என்று சொல்லுகையாலே
உபேய அதிகாரத்தில் -தன்னை பேணாமை -என்று சொன்ன இது -அநந்ய
சாதனத்வத்துக்கு சேருமோ என்னும் அதி சங்கா பரிஹாரம் பண்ணப் பட்டது –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை–80/81/82/83/84/85–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 29, 2012

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-
அதிகாரி நிஷ்டா க்ரமம்–80-307

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்[படி பிரித்து அனுபவம் –

———————————

சூரணை -80-

உபாயத்துக்கு-
பிராட்டி யையும்
த்ரவ்பதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —
உபேயத்துக்கு-
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

அனந்தரம் அதிகாரி சோதனம் பண்ணுகிறது -உபாயம் உபேயார்த்தம் ஆகையாலும் –
உபேயத்தில் உகப்பு என்றும் –
பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம் -தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம் -என்றும் –
உபேய அதிகாரமும் கீழ் பிரசக்தம் ஆகையாலும் –
த்வய நிஷ்டன் ஆன அதிகாரிக்கு -உபயமும் -அபேஷிதம் ஆகையாலும் –
உபாய உபேய அதிகாரங்களில் இச் சேதனன்  இன்னபடி இருக்க வேணும் என்னும் அத்தை
தத் தந் நிஷ்டரை நிதர்சனம் ஆக்கி கொண்டு அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வயத்தாலே –

உபாயத்துக்கு -என்றது -உபாயதுக்கு அதிகாரி யாம்போது என்ற படி-
உபாய அதிகாரிக்கு -என்னவுமாம் –
அப்படியே உபேயதுக்கு -என்றதுவும் –
உபாயத்தில் -என்ற பாடம் ஆன போது-உபய விஷயத்தில் -என்ற படி-
இப்படி மற்றையதுவும் –

———————————————————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும்
வாசி
சக்தியும் அசக்தியும் –

அவர்களை போலே இருக்க  வேணும்   என்றதின் கருத்தை தர்சிப்பிக்கைகாக
அவர்கள் தங்கள் படிகளை அடைவே அருளி செய்கிறார் மேல் –
அதில் பிராட்டி உடையவும் -திரௌபதி உடையவும் படிகளைஅருளி செய்கைக்கு உடலாக பிரதமத்தில்
உபயருக்கும் வாசியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்த பிராட்டிக்கும் –
ரஷமாம் -என்ற திரௌபதிக்கும் தம்மில் வாசி –
சீதோ பவ -என்று நெருப்பை நீர் ஆக்கினால் போலே -தக்தோ பவ -என்று
விரோதி வர்க்கத்தை பஸ்மம் ஆக்கி தன்னை ரஷித்து கொள்ள வல்ல சக்தி உண்டாகியும் –
ஸ்வ யத்னத்தாலே விரோதிகளைத் தள்ளி தன்னை நோக்கி கொள்ளப் பார்த்தாலும்-(இச்சை இருந்தாலும் )
நோக்கிக் கொள்கைக்கு ஈடான சக்தி தனக்கு இல்லாமையும் என்கை-

————————————

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

ஏவம் பூதர் ஆனவர்கள் செய்தவை தன்னை அருளி செய்கிறார் –

ஸ்வ சக்தி விடுகை யாவது -நாயகரான பெருமாள் ரஷிக்கும் அத்தனை அல்லது
நம்முடைய சக்தியால் நம்மை ரஷித்து கொள்ளுகை நம் பாரதந்த்ர்யத்துக்கு
நாசகம் என்று -ஸ்வ சக்தியை கொண்டு கார்யம் கொள்ளாது ஒழிகை –
அசந்தேசாத்து  ராமஸ்ய தபசஸ் சானுபாலநாத்ந த்வாம் குர்மி தசக்ரீவ பாசமா பச்மார்ஹா தேஜஸா என்றாள் இறே–
லஜ்ஜையை விடுகையாவது -துச்சாசனன் சபாமத்யே துகிலை உரிக்கிற அளவில் –
லஜ்ஜா விஷ்டையாய் கொண்டு -தானொரு தலை இடுக்குகை அன்றிக்கே -இரண்டு கையும் விடுகை –
பேர் அளவு உடையாள் ஆகையாலே- பிராட்டிக்கு -பெருமாளே ரஷகர் -என்று விஸ்வசித்து ஸ்வ சக்தியை விட்டு இருக்கலாம் -அத்தனை அளவு இன்றிகே இருக்க செய்தே –
மகாஆபத்து தசையிலே– -இவ்வளவிலே கிருஷ்ணனே ரஷகன் -என்று மகா விசுவாசம் பண்ணி –
மகா சபா மத்யே இவள் லஜ்ஜையை விட்டது இறே அரிது –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் -அதாவது –
ஸ்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வ வியாபாரங்களை விட்டான் –
ஒரு சேவகனுடைய நாயை -ஒரு சேவகன் அடிக்க -அவன் அது பொறாமல் -அடித்தவனோடே எதிர்த்து பொருது -அவனையும் கொன்று -தானும் குத்தி கொள்வதாக-
இருக்கிற படியைக் கண்டு -ஒரு சூத்திர சேதனன் தந் அபிமானத்தில் ஒதுங்கினது என்னும்
இவ்வளவுக்காக தன்னை அழிய மாறின படி கண்டால்-பரம சேதனன் அபிமானத்தில் ஒதுங்கினால்
அவன் என் படுமோ என்று -ஸ்வ ரக்ஷண வியாபாரங்களை விட்டு அந்த நாயோபாதி யாகத் தம்மை அனுசந்தித்து கொண்டு
அப்போதே வந்து திரு கண்ண மங்கையில் பத்தராவி திரு வாசலில் கைப் புடையிலே புகுந்து கண் வளர்ந்தார் என்று பிரசித்தம் இறே-

———————————————————————–

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

இனி உபேய அதிகாரிகளில் பிரதானரான -இளைய பெருமாள் படியை விஸ்தரேண அருளி செய்கிறார் –

அதாவது –
பசியராய் இருப்பவர் -தங்கள் பசியின் கனத்தாலே -இதுக்கு
முன்பு ஆக்கின சோறும் -இப்போது ஆக்குகிற சோறும் -எல்லாம் நாமே உண்ண வேணும்
என்று மனோ ரதிக்குமா போலே -பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
பால்யாத் ப்ரப்ருதி சூசநிக்தரான இளைய பெருமாள் -படை  வீட்டில் நின்றும் புறப்படுவதற்கு
முன்பே கூடப் போவதாக உத்யோக்கிற படியை கொண்டு -நீர் நில்லும் -என்று நிர்பந்தித்து அருள –
குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் நேக வித்யதே க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்பதே -என்றும் –
கங்கை கடந்து  ஏறின அன்று மீள விடுகைக்கு உறுப்பாக அவர் அநேகம் அருளி செய்ய-
ந ச சீதா த்வயா ஹீனா ந சாஹமபி ராகவ -முகூர்த்தமபி ஜீவாவோ ஜலான்  மத்ஸ்யா விவோத்ருத்ருதவ் -என்றும் சொல்லுகையாலே –
பிரியில் தாம் உளராக மாட்டாமையை முன்னிட்டு -குருஷ்வ மாம் -என்று அனந்தரத்தில்-
தனுராதாய சகுணம் கனிதர பிடகாதர அக்ரதாஸ் தே கமிஷ்யாமி பந்தா நமனு தர்சயன் ஆஹாரிஷ்யாமி தே நித்யம்
மூலாநிச பலாநிச வந்யாணி யாநி சாத்யணி ச்வஆகாராணி தபச்வினாம் -என்கையாலே
ஸ்வ சேஷ அநு குணமாக -அடிமை செய்ய வேணும் -என்றும்
தத் அனந்தரத்திலே-பவாம்ச்து சஹா வைதேஹ்யா கிரிசா அனுசூ ரம்ச்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ச்வபதச்ச ச -என்கையாலே –
அது தன்னிலும் இன்ன இன்னடிமை என்றுஒரு நியதி இன்றியே எல்லா அடிமையும் செய்ய வேணும் –
பஞ்சவடியில் எழுந்து அருளின  போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு -பிரதேசத்தை பார்த்து -பர்ண சாலையை சமையும் என்ன-
ஏவ முக்தச்து ராமேன லஷ்மணஸ் சம்யதாஞ்சலி சீதா சமஷம் காகுத்ஸ்மிதம் வசதம பிரவீத் -என்று
நம் தலையிலே ச்வாதந்த்ர்யத்தை வைத்த போதே -பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் -பிராட்டி முன்னிலையாக கையும் அஞ்சலியுமாக நின்று –
பரவா நஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேச  க்ரிய நாமிதி மாம் வத-என்கையாலே அடிமை செய்யும் அளவில் –
ச்வாதந்த்ர்யம் ஆகிற தோஷம் கலசாதபடி -உசித கைங்கர்யன்களிலே ஏவிக் கொள்ள வேணும் என்று -பிரார்த்தித்தார் -என்கை –
படை வீட்டில் -இத்யாதி -திருப் படை வீட்டில் எழுந்து அருளி வந்து புகுந்து திரு அபிஷேகம்
பண்ணி அருளின போது -தம்மோடு கூட அடிமை செய்கைக்கு ஒருவரும் இல்லாத ஒரு
தனிக் காட்டில் -தாமேஅடிமை செய்து -கைங்கர்ய அபிநிவேசத்தை பெருக்குகையாலே –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினவன் ஒப்பூண் உண்ண மாட்டாதவன் போலே –
ஸ்ரீ பரதாழ்வான் தொடக்கமனவர்களோடு  ஒக்க தாமும் ஒரு அடிமை செய்து நிற்க மாட்டாதே —
திரு வெண் குற்றக் கொடியை எடுக்கை -திரு வெண் சாமரம் பரிமாறுகை –
ஆகிய இரண்டு  அடிமையை -ஏககாலத்தில் செய்தார் -என்கை –
இந்த விருத்தாந்தம் தான் -ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை –
சத்ர சாமர பாணி ஸ்து லஷ்மண அனுஜகாமாகா-என்கிறது ஸ்ரீ ராமாயணம் அன்றோ என்னில் –
காட்டுக்கு எழுந்து அருளுவதற்கு முன்னே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து –
தம்முடைய திவ்ய அந்தபுரத்தில் நின்றும் புறப்பட்டு -சக்கரவர்த்தி திரு மாளிகையை நோக்கி
திரு தேரில் ஏறி பெருமாள் எழுந்து அருளின போது -இளைய பெருமாள் செய்த விருத்தாந்தமாக
திரு அயோத்யா காண்டத்தில் சொல்லப் பட்டது ஆகையாலே -இவ்விடத்துக்கு அது சேராது –
ஆனால் இவர் என் கொண்டு இப்படி அருளி செய்தார் என்னில் -பாத்ம புராணம் பிரக்ரியையாலே அருளி செய்தார் –
அத தஸ்மின் தினே புன்யே சுப லக்னே சுன்விதே
ராகவச்ய அபிஷேகார்த்தம்  மங்களம் சக்ரிரே ஜனா -என்று தொடங்கி பரக்க
சொல்லி கொண்டு வந்து -மந்திர பூத ஜலைஸ் சுத்தைர் முநயஸ் சம்ஸ்ரித வ்ரதா-
ஜபந்தோ வைஷ்ணவான் சூக்தான் சதுர்வேத மயான் சுபான்
அபிஷேகம் சுபஞ்ச்சக்று காகுஸ்தம் ஜகதாம் பதிம்
தஸ்மின் சுபதமே லக்னே தேவ துந்துபயோ திவி
நிநேது புஷ்ப வர்ஷாணி வவர்ஷூச்ச சமந்ததா
திவ்யாம்பரைர்  பூஷணைச்சதிவ்யகாந்த்  தானுலே பனை
புஷ்பைர்  நானா விதர் திவ்யர் தேவ்யா சஹா ரகூத்வஹா –
அலங்க்ருதச்ச சுசுபே முநிபிர் வேதபாரகை
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் லஷ்மணஸ் ததா
பராச்வே  பரத சத்ருனவ் தாளவ்ருந்தம்  விவேஜது
தர்ப்பணம்  ப்ரதவ் ஸ்ரீ மான் ராஷசேந்தரோ விபீஷண
ததார பூர்ண கலசம் சூக்ரீவோ வானரேச்வர
ஜாம்பவாம்ச்ச  மகாதேஜோ புஷ்பமாலாம் மநோ ஹரம்
வாலி புத்ரஸ்து தாம்பூலம்  ச கர்ப்பூரம்  தாத்தாவ் பிரியாத்
ஹனுமான் தீபிகாம் திவ்யம்  சூஷேணச்து த்வஜம் சுபம்
பரிவார்யா  மகாத்மானாம் மந்த்ரினஸ் சமுபாசிரே -என்று
பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாம் அத்யாத்தில்-சொல்லப் பட்டது இறே-
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் -என்றது தோற்ற இறே –
திரு வெண் கொற்றகுடையும் திரு வெண் சாமரத்தையும் தரித்து -என்று அருளி செய்தது –

—————————————

சூரணை -84
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

பெரிய உடையாரும்  பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள் –
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை பெரிய உடையார் -என்று ஆய்த்து நம் முதலிகள் அருளி செய்தது –
இவர்தாம் -பஞ்சவடியில் பெருமாள் எழுந்து அருளி -தம்மை அங்கீகரித்து –
இஹா வத்ச்யாமி சௌமித்ரே  சார்த்த மேதென பஷிணா-என்றவன்று தொடங்கி
திருவடிகளுக்கு மிக்கவும் பரிவராய் -பெருமாள் எழுந்து அருளி இருக்கிற திவ்ய ஆஸ்ரமத்துக்கு
காசன்னமாக வர்த்தியா நிற்க செய்தே -அசிந்திதமாக ராவணன் வந்து பிராட்டியை பிரித்து கொண்டு போக-
அப்போது  பிராட்டி இவரை ஒரு வ்ருஷத்தின் மேல் கண்டு  -என்னை இவன் இப்படி
அபஹரித்து போகா நின்றான் -என்று இவர் பேரை சொல்லி கூப்பிட -உறங்குகிறவர் இந்த
ஆர்த்த த்வனியை கேட்டு உணர்ந்து -ராவணன் கொண்டு போகிற படியை கண்டு –
உனக்கு இது தகாது காண்-என்று தர்ம உபதேசம் பண்ணின அளவில் அவன்கேளாமையால்-
நம் பிராண னோடே இது கண்டு இருக்கக் கடவோம் அல்லோம் -யுத்தம் பண்ணி மீட்குதல் –
இல்லையாகில் முடிதல் செய்ய கடவோம் -என்று அத்யவசித்து -அதிபல பராக்ரம் ஆகையாலே
அவனோடே மகா யுத்தத்தை பண்ணி -அவன் கையாலே அடி பட்டு -விழுந்து தந் திரு மேனியை விட்டார்  -இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ குடும்பமாக -திரு நாராயண புரத்தில்
வேத நாராயண பெருமாளை -சேவிக்க சென்று புகுந்த அளவில் -பர சமயிகள்
அந்த கோவிலிலே அக்னி பிரஷேபத்தை பண்ணி உள்ளு நின்றார்கள் எல்லாரும்
புறப்பட்டு ஓடி போகசெய்தே -அந்த எம்பெருமான் திரு மேனிக்கு அழிவு வருகிற படியை கண்டு
சகிக்க   மாட்டாதே பிரேமாதிசயத்தாலே -தாமும் ஒக்க முடிவதாக அத்யவசித்து இவர் நிற்க்கையாலே –
பிள்ளைகளும் இவரை விட்டு போகோம் என்று நிற்க -அவர்களும் தாமும் கூடுவதுக்கு உள்ளே நின்று
திரு மேனியை விட்டார் என்று பிரசித்தம் இறே –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று -அதாவது –
காசித்  ஆவச தச்யாந்தே  ச்தித்வ த்ருஷ்ட்வா  பஹிர் குரும்
தன்மயத்வேன கோவிந்தம்  தத்யவ் மீலித லோசன
தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததாததப்ராப்தி
மகா துக்க விலீ நாசேஷ பாதகா –
சிந்தயந்தீ ஜகத்சூதிம்  பர ப்ரஹ்ம  ஸ்வரூபினம்
நிருச்ச்வா சதயா முக்திம் கதாநயா கோப கன்யகா-என்கிறபடியே
திரு குரவை யினன்று -திரு குழலோசை கேட்டு -ஸ்ரீ பிருந்தாவனம் ஏற
போவதாக புறப்பட்ட அளவிலே -குரு தர்சனத்தால் போக மாட்டாமல் நின்று –
கிருஷ்ணனை த்யானம் பண்ணி -தத்கதசித்தை யாகையாலே வந்த நிர்மல சுகத்தாலும் –
தத் அபிராப்தி நிபந்தனமான நிரவதிக துக்கத்தாலும் –ப்ரஷீண அசேஷ புண்ய பாபையாய்-
தத் ஸ்மரணம் செல்லா நிற்க -தத் பிராப்த்ய அலாப க்லேசத்தால் தரிக்க மாட்டாமல்
மூச்சு அடங்குகையாலே -இவளுக்கு தான் உபேஷிக்க வேண்டாதபடி
தேஹம் தன்னடையே விட்டு கொண்டு நின்றது -என்கை –

———————————————151

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —
உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும் —

ஆக -இப்படி நிதர்சன பூதர் படிகளை சொல்லி  -இனி இவர்களைப் போலே இருக்க வேணும்
என்றதின் கருத்தை அருளிசெய்கிறார் –

அதாவது –
உபாயத்துக்கு அதிகாரி யாம் போது –
தன்னுடைய ரக்ஷணம் தானே பண்ணிக் கொள்கைக்கு உறுப்பான சக்தியும் –
தான் பரிகிரஹிக்கிற உபாயத்துக்கு விரோதிகள் ஆனவற்றை விடும் அளவில்
நாட்டார் சிரிக்கும் அதுக்கு கூசும் லஜ்ஜையும் –
தந் பாரதந்த்ர்யா விரோதியான ஸ்வ யத்னமும் கை விட வேணும் —
உபேயத்துக்கு-அதிகாரி ஆகும் போது
சேஷியை பிரியாது நின்று -எல்லா அடிமையும் அவன் ஏவின படி செய்ய
வேணும் என்ற பிரேமமும் –
அத் தலைக்கு ஒரு தீங்கு வரில் அது கண்டு ஆற்ற மாட்டாமல்
தந் உடம்பை உபேஷிக்கையும் –
தத் விக்ரஹ அனுபவ அலாபத்தில் தரித்து இருக்க மாட்டாமல் மூச்சு அடங்கும்படி யாகவும்
வேணும் என்றபடி –
ஆகையாலே அவர்களை போலே இருக்கை யாவது -இவ் வதிகாரங்களை உடையார் ஆகி-என்று கருத்து –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-73/74/75/76/77/78/79—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 29, 2012

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

சேஷத்வாதிகளும் -ஜ்ஞாத்ருவாதிகளும் -ஆத்மா தர்மங்களாய்  இருக்க செய்தே –
சேஷத்வாதிகளை பிரதானம் ஆக்கி -ஜ்ஞாத்ருவாதிகளை தத் அநு குணமாக யோஜிக்கைக்கு நியாமகம் எது -மற்றை படி தானானாலோ என்ன –
அருளி செய்கிறார் –

அஹம் அர்த்தமாவது –
பிரத்யக்த்வேன அஹம் புத்தி  வியவ ஹாரார்ஹமான ஆத்ம வஸ்து -ஞான ஆனந்தங்கள் ஆவன -தத்கதமான பிரகாசத்வ அநு கூலத்வங்கள் –
ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் ஞானாந்தைக லஷணம்-என்று இவற்றை இட்டு இறே வஸ்துவை நிரூபிப்பது –
தடஸ்தம் என்னும் படி -என்றது -பஹிரங்க நிரூபகதயா புற விதழ்  என்னும் படி -என்றபடி –
தாஸ்யம் ஆவது -சேஷத்வம் –
இது அந்தரங்க நிரூபகம் ஆகையாவது –
பகவத் ஸ்வரூபத்துக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு தன் சத்தையாம் படி இருக்கும் வஸ்து ஆகையாலே -பிரதமம்
சேஷத்வத்தை இட்டு நிரூபித்து கொண்டே மற்றுள்ள ஆகாரங்களை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கை –
இத்தால் நிரூபகம் ஆகையாவது –
வஸ்துவை வஸ்துவந்தரத்தில் காட்டில் வ்யவர்த்திப்பிக்கும் அது ஆகையாலே –
தாஸ்யம் ஈஸ்வர வ்யவர்த்தகமாய் -ஞாநானந்தங்கள் அசித் வயாவர்த்தங்களாய்  இருக்கும் –
இப்படி நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேஷிதமாய் இருக்க செய்தே
பகவத் பிரகார தயா லப்த சாத்தாகமான  வஸ்துவுக்கு அசித்தில் காட்டில் உண்டான வாசியை
அறிவிக்கிற மாத்ரமான ஞாநானந்தங்கள் புற இதழாம் படி
பிரகாரத்வ பிரயுக்தமான  சேஷத்வமே அந்தரங்க நிரூபகமாய் இருக்கும் என்றது -ஆய்த்து இறே -என்று -இவ் அர்த்தத்தில் பிரமாண பிரசித்தி –
பிரதமம் சேஷத்வத்தை இட்டு வஸ்துவை நிரூபித்து கொண்டு -பின்னை
ஞான ஆனந்த  லஷணமுமாய்-ஞான குணகமுமாய்-அசித் வ்யாவிருதமுமாய் –
இருக்கும் என்னும் இடத்தை த்ருதீய  பதத்தாலே நிரூபிக்கிற பிரணவமும் –
சமஸ்த வஸ்துகளும்  சர்வேஸ்வரனுக்கு பிரகாரம் என்னும் அத்தை பிரதிபாதிக்கிற நாராயண பதமும் -முதலானவை இதில் பிரமாணம் –
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மானா பரமாத்மன ந அன்யதா லஷணம் தேஷாம் பந்தே  மோஷே ததைவச -ஹரிதஸ் ஸ்ம்ருதி -இத்யாதிகளும்  உண்டு இறே –
அடியேன் உள்ளான் -என்றார் இறே ஆழ்வாரும்
திரு கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆறு மாசம் ஆழ்வான் சேவித்து நின்று மகா நிதியாய் பெற்ற அர்த்தம் இறே இது –
இப்படி சேஷத்வம் அந்தரங்க நிரூபகம் ஆகையால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞாத்ருவாதிகளையே
தத் அநு குணமாக யோஜிக்க வேணும் என்று கருத்து –

—————————————————————

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

இது ஸ்வரூப நிரூபகம் ஆகில் -ஆத்மா உள்ள வன்றே தொடங்கி உண்டாய் -போர வேண்டாவோ
இதுக்கு முன்பு இன்றிக்கே -இப்போது உண்டாகையாலும் -லோகத்தில் இது தான் ஓவ்பாதிகமாய் நடக்க காண்கையாலும்-
தாஸ்யம் ஆத்மாவுக்கு வந்தேறி அன்றே என்ன -அருளி செய்கிறார் –

இது தான் -என்று பிரக்ருதமான தாஸ்யத்தை பராமர்சிக்கிறது –
வந்தேறி -யாவது -ஆகந்துகம் –
அன்று -என்கையாலே -ஸ்வாபாவிகம் -என்ற படி –
ச்வோஜ் ஜிவநேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்மதாச்யம் ஹரேஸ் ஸ்வாம்யம்  ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் –
நானும் உனக்கு பழ வடியேன் -என்ன கடவது இறே-

————————————————

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்
அந்ய சேஷத்வமும்
வந்தேறி —

ஆனால் வந்தேறியாக விவஷிதங்கள் எவை –
இதுக்கு விரோதிகள் ஆனவை எவை -என்று அருளிசெய்கிறார் –

ஸ்வாதந்த்ர்யம் ஆவது -நான் எனக்கு உரியன் என்று இருக்கை-
அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் அந்ய விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கை-
இவற்றை வந்தேறி என்கிறது -இவனுடைய அவித்யாதிகள் அடியாக வந்தவை ஆகையாலே –

———————————————

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-
தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இவை இதுக்கு விரோதிகள் ஆனமையை உபபாதிக்கிறார் மேல் –

சேஷத்வ  விரோதி ஸ்வாதந்த்ர்யம் -என்றது நான் எனக்கு உரியேன் என்று இருக்கும் அளவில் –
ஒரு விஷயத்திலும் சேஷத்வம் இல்லாமையாலே -ஸ்வாதந்த்ர்யம் சேஷத்வத்தை உதிக்க ஒட்டாது என்ற படி –
தத் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் -என்றது -ஸ்வாதந்த்ர்யம் குலைந்து –
சேஷத்வத்துக்கு இசைந்தாலும் -பகவத் வ்யதிரிக்த  விஷயங்களிலே ஒன்றுக்கு தன்னை சேஷம் என்று இருக்குமது –
நிருபாதிக சேஷியாக-அவன் பக்கலிலே சேஷத்வத்தை தலை எடுக்க ஒட்டாது என்றபடி –

——————————————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –
ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

இது தான் வந்தேறி அன்று -என்று தொடங்கி –உபபாதித்த அர்த்தத்தை முதலிக்கிறார் மேல் –

அஹங்காரம் தான் –
தேக ஆத்மா அபிமான ரூபமாயும் –ஸ்வாதந்த்ர்ய ரூபமாயும் –
இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
அதில் இங்கே -ஸ்வாதந்த்ர்யத்தை சொல்லுகிறது –
ஆர்ப்பு -என்கையாலே -அதனுடைய திரோதாயாகத்வமும் -ஆகந்துகத்வமும் -தோற்றுகிறது –
அத்தை -துடைக்கை யாவது -சதாசார்யா உபதேசாதி களாலே சவாசனமாக போக்குகை-
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் -என்றது ஒவ்பதிகமான வர்ண ஆஸ்ரமாதி களாலே வந்து அழிந்து போம் நாமங்கள் போல் அன்றிக்கே –
யாவதாத்மா அநு வர்த்தியான நாமம் தாசன்  -என்னும் அது என்ற படி – இறே -என்று இவ்வர்த்தத்தில் -பிரமாண பிரசித்தி  –
தாச பூதாஸ் ஸ்வத-
ஆத்மா தாஸ்யம் –
இத்யாதிகள் இவ்விடத்தில் விவஷிதங்கள் –
ஆகையால் -ஸ்வா தந்த்ர்யாதிகள் ஒவ்பாதிகம் -தாஸ்யம் ஸ்வாபாவிகம் -என்ன-குறையில்லை என்று கருத்து –

——————————–

சூரணை -78-

க்ராம குலாதிகளால்
வரும்பேர்
அநர்த்த ஹேது –

அது என்-க்ராம குலதிகளால் வரும்  வ்யபதேசம் அன்றோ நடந்து போகிறதோ என்ன
அருளி செய்கிறார் –

அதாவது
க்ராம குலாதி வ்யபதேசம் அஹங்கார ஜனகம் ஆகையாலே
ஸ்வரூப ஹானி ரூப அநர்த்த கரம் என்ற படி –
ஆகையால் -அவற்றால் இவன்  வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்று கருத்து –

———————————-

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

உக்தார்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -இத்தால் –
பகவத் ஏக பரனாய் இருக்கும் அவன் -க்ராம குலாதி சம்பந்தங்களை இட்டு -சொல்லப் படும் அவன் அல்லன் -பகவத் சம்பந்தத்தை இட்டு  சொல்லப் படுமவன் –
அவனுக்கு அந்த க்ராம குலாதிகள் எல்லாம் பகவானே என்கிறது –

ப்ராப்தாவும் -இத்யாதி வாக்யத்திலே
இச் சேதனனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தாதிகளை-தோற்றினபடியால் இவற்றுக்கு இன்னது நிதானம் என்றும் –
ஏவம் பூதனுடைய -பிரயத்ன -சைதன்ய -பிரயோஜனமும் –
சேஷத்வாதி பிரதான்ய  ஹேது -ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய தாஸ்யம் அந்தரங்க-நிரூபகத்வம் என்றும் –
இப்படி இருக்கிற இது ஸ்வாபாவிகம் -ஏதத் விரோதிகள் ஒவ்பாதிகம் என்றும் –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யமே நித்ய நிரூபகமாய் இருக்கும் என்கையாலே – இவ் அர்த்தத்தை மூதலித்தும்-
க்ராம குலாதிகளால் இவன் வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்றும் –
உத்தார்த்தத்தில் பிரமாணமும்  சொல்லுகையாலே –
ஸ்வ யதன நிவ்ருத்தி -இத்யாதி வாக்கியம் தொடங்கி-இவ்வளவும் பிராசங்கிகம்-

ஆக இப் பிரகரணத்தால் –
பிரபத்திக்கு தேசாதி நியமங்கள் இல்லை -விஷய நியமமே உள்ளது என்னும் இடமும் –
அவ் விஷயம் தான் என்னது என்னும் இடமும் –
அவ் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் –
அதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் உடைய த்ரைவித்யமும் –
பிரபத்தியை உபாயம் ஆக்கினால் வரும் அவத்யமும் –
பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபாதிகளும்-
பிரபத்தவ்யனே உபாயம் என்னும் இடமும் –
பிரதி பாதிக்கப் பட்டது –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை-61/62/63/64/65/66/67/68/69/70/71/72.–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 28, 2012

சூரணை-61-

அல்லாத போது
பந்தத்துக்கும்
பூர்த்திக்கும்
கொத்தையாம் –

இப்படி அன்றிக்கே -பல சாதனமாக இவனுக்கு சில செய்ய வேணும் என்றால்
வரும் தீங்கு என் என்ன -அருளி செய்கிறார் –

அல்லாத போது -என்றது -இவ்வளவு அன்றிக்கே பல ஹேதுவாக இவன் சில செய்ய வேண்டும் போது என்றபடி –
பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாகை -யாவது -இவனுடைய ரஷணம் தன் பேறாம் படியான
அவனுடைய நிருபாதிக நிரபேஷ உபாயத்வத்துக்கு-அவத்யமாய் தலை கட்டும்-என்கை–

———————————————-

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –
அத்தை விளைத்து கொள்ளாது
ஒழிகையே வேண்டுவது –

ஆனாலும்–அநந்த க்லேச பாஜனமான -சம்சார சாகரத்தில் அழுந்தி கிடந்து
அலைகிற தன் ஆபத்தை உணர்ந்தால்-ஆபத் சகனான ஈஸ்வரனை
ஸ்வ  பிரபத்தியால் வசீகரித்து -தத் பிரசாதத்தாலே இத்தை
கழித்து கொள்ள வேண்டாவோ -என்ன -அருளி செய்கிறார்-

அதாவது –
சர்வேஸ்வரன் திருவடிகளிலே பிரபத்தி பண்ணி -சம்சாரம் ஆகிற ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம்
என்று -தான் பண்ணுகிற பிரபத்தியாலே தன் ஆபத்தை போக்கி கொள்ளுகிறனாக பிரமித்து –
தத் ஏக பார தந்த்ர்யா ரூப ஸ்வரூப ஹானியாகிற-ஆபத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே
தந் நிவ்ருத்திக்கு இவன் செய்ய வேண்டுவது என்ற படி –
ஓர் ஆபத்தை பரிஹரிக்க புக்கு-ஓர் ஆபத்தை விளைத்து கொள்ளாதே-
இவன் ஸ்வ யத்னத்திலே நிவ்ருத்தனாய் இருக்கவே -எம்பெருமான் தானே ரஷிக்கும் என்று கருத்து –
அத்தை -என்றது -ஆபத் சாமான்யத்தை பற்ற -அல்லது- பர க்ருதாபத்து தன்னையே பராமர்சித்த படி என்று ..

—————————————————

சூரணை -63-

ரஷணத்துக்கு
அபேஷிதம்
ரஷ்யத்வ
அனுமதியே –

ஆனாலும் -ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்று ரஷகனான சர்வேஸ்வரன்
ரஷ்ய பூதனான இச் சேதனனுடைய அபேஷையை பார்த்து இருக்கும் -என்கையாலே –
அவன் பண்ணும் ரஷணத்துக்கு இவன் அபேஷையும் வேண்டும் அன்றோ இருக்கிறது -என்ன-அருளி செய்கிறார் –
அதாவது –
நிருபாதிக ரஷகனானவன் பண்ணும் ரஷணத்துக்கு -இச் சேதனன் பக்கல்  வேண்டுவது –
நீ எனக்கு ரஷ்யம் என்றால் -அல்லேன் என்னாதே–
தன்னுடைய ரஷ்யத்வத்தை இசையும் இவ்வளவே என்கை –
ரஷ்யா அபேஷாம் -என்கிற இடத்தில் -சொல்லுகிற அபேஷை
ரஷ்யத்வ அனுமதி த்யோதகம் இத்தனை -என்று கருத்து –
யாச்னா பிரபத்தி பிரார்த்தனா மதி -என்கிற ச்வீகாரத்தை அப்ரேதிஷேத த்யோதகம்
என்று இறே இவர் தாம் அருளி செய்தது -முமுஷுபடி -சூரணை -233 –

————————————————–

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூபாதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாகக ஒண்ணாது —

இப்படி அனுமதி சாபேஷனாய் ரஷிக்கும் ஆகில் –
இவ் அனுமதி தான் சாதனம் ஆகாதோ -என்ன -அருளி செய்கிறார் –

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் –
நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே –
சகல உபாய சாதாரணமாய் இருக்கை-இத்தால் ஓர் இடத்திலும் இவ் அனுமதிக்கு
இவ் அதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பலசாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –
சைதன்ய கார்யம் ஆகை யாவது -ரஷ்யத்வம் -சேதன அசேதன சாதாரணமாய்
இருக்க செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் ஆகாரத்தை அறிகிக்கைக்கு
யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே –
அத்தை அறிக்கைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் -பக்கல் உண்டான அனுமதி –
இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை -இத்தால் இவ் அனுமதி இச் சேதனனுடைய
வாசியை பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –
பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் –
அவன் வ்யாமோஹா அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி –
கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்
பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –
ஸ்வரூபாதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ
பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் அனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –
இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூபாதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —
அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில்
வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் ஆகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி –
இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது -இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்
அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –
அசித் வ்யாவ்ருத்தி வேஷம் -என்று பாடம் ஆகில் -ஜ்ஞான சூன்யமான அசித்தில் காட்டில்
ஆத்மாவுக்கு உண்டான ஜ்ஞாத்ருத்வ ரூப வ்யாவிருத்தியின் வேஷமான அனுமதியை-என்று சப்தார்த்தம் –

—————————————–

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்
உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்
உபேயத்தில் உகப்பும் –

ஆனால் இவ் அசித் வ்யாவிருத்தி தனக்கு ஒரு பிரயோஜனம் வேண்டாவோ என்ன –
அருளி செய்கிறார் –

உபாயத்தில் உபகார ஸ்ம்ருதி யாவது –
என்னை தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி – 2- 7- 8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி – 2- 7- 7-என்கிறபடியே
சித்த உபாயமான எம்பெருமான் தன் திறத்தில் பண்ணின உபகாரங்களை அனுசந்திக்கை –
உபேயத்தில் உகப்பு யாவது -அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் –
உகந்து பணி செய்து -திருவாய்மொழி -10 -8 -10 -என்ற உகப்பும் –
அத்தால் அவனுக்கு விளைகிற ப்ரீதியை கண்டு தனக்கு விளைகிற ப்ரீதியும் –

———————————————-

சூரணை -66
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
பிராப்திக்கு உபாயம்
அவன் நினைவு —

இப்படி இவன் பக்கல் உள்ளது ஒன்றும் உபாயம் அன்று ஆகில் –
இவனுக்கு தத் பிராப்தி உபாயம் தான் எது என்ன அருளி செய்கிறார்-

அதாவது –
இத் தலையில் உள்ளது ஒன்றும் பேற்றுக்கு உபாயம் அல்லாமையாலே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2 -7 -1 -என்று
கை கழிந்தவற்றுக்கும் ஒரு போக்கடி  பார்த்து இருக்க கடவ –
உன் திரு உள்ளத்தால் நினைத்து இருந்தது என் என்று -ஹிதைஷியான அவன் நினைவே உபாயம் என்று ஆழ்வார் அநு சந்தித்தபடியே-
அவனை பிராபிக்கைக்கு உபாயம் -சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தியாய் -பிராப்தனாய் –
பரம தயாளுவாய்-இருக்கிற அவனுடைய -இச் சேதன உஜ்ஜீவன அர்த்தமான நினைவு -என்றபடி –

——————————————–

சூரணை -67
அது தான் எப்போதும் உண்டு –

அந் நினைவுதான் அவனுக்கு எப்போது உண்டாவது என்ன –
அருளி செய்கிறார் –

எப்போதும் -என்றது -இவன் யாதானும் பற்றி நீங்கி திரிகிற-திரு விருத்தம் -96 – காலத்தோடு
இன்றோடு வாசி யற-சர்வ காலத்திலும் -என்றபடி –

——————————————-

சூரணை -68-

அது பலிப்பது
இவன் நினைவு மாறினால் –

ஆனால் இது நாள் வரை பலியாது இருப்பான் என் -என்ன
அருளி செய்கிறார் –

அதாவது –
அவன் நினைவு இவனுக்கு கார்ய கரமாவது
இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறின காலத்தில் -என்றபடி –

————————————-

சூரணை -69
அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இவ் அர்த்தத்தினுடைய ஆப்த் யர்த்தமாக நஞ்சீயர் வார்த்தையை அருளி செய்கிறார் –

அதாவது –
நஞ்சீயர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ளார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -நோவறிகைக்காக
சென்று எழுந்து அருளி இருக்கிற அளவில் -அந்த ஸ்ரீ வைஷ்ணவர் -அடியேனுக்கு அந்திம
காலத்துக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிசெய்ய வேணும் -என்ன –
அந்திம காலத்துக்கு தஞ்சம் நமக்கு இப்போது தஞ்சம் என் என்கிற
தன்னுடைய ஸ்வ ரஷண சிந்தை குலைகை காணும் -என்று அருளி செய்த வார்த்தை –
ஆகையால் ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு  உறுப்பாக பண்ணும் சிந்தை
பலிப்பது இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறினால் என்றது ஆய்த்து-

—————————————–

சூரணை -70
பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

பிராபகன் ஈஸ்வரன் ஆனாலும் -பிராப்தாவும்  பிராப்திக்கு  உகப்பானும் இவன் அன்றோ –
ஆன பின்பு இவன் நினைவை  இப்படி நேராக துடைக்கலாமோ என்ன –
அருளி செய்கிறார் –
அன்றிக்கே –
இச் சேதனன் கையில் உள்ளவற்றில் உபாயத்வ கந்தம் அற துடைத்து
ஈஸ்வரனை உபாயம் என்று நிஷ்கரிஷித்த  போதே -பிராப்த்ருத்வமும் -பிராப்தியில் வரும் உகப்பும் -இவனது அன்றிகே –
உபாய பூதனான ஈச்வரனேதயதாய் பலித்து விடுகையாலே -பிராப்தாவும் -ப்ராபகனும் -பிராப்திக்கு உகப்பானும் -அவனே -என்று
நிகமித்து அருளுகிறார் ஆகவுமாம்–

ப்ராப்தா அவன் ஆகையாவது –
ஸ்வ த்வமாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம்  ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிற
ஸ்வதஸ் சித்தமான ஸ்வ ஸ்வாமித்வ சம்பந்தம் அடியாக -உடைமையை பிராபிக்கும் உடையானை போலே
இவ் ஆத்மாவை பிராபிப்பான் தானாய் இருக்கை –
பிராபகன் அவன் ஆகையாவது -தான் இவனை பிராபிக்கும் இடத்தில் பிராப்திக்கு உபாயமும் –
சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வ சத்ய சங்கல்பத்வாதி குண விசிஷ்டனாய் -நிரந்குச ஸ்வதந்த்ரனான-தானாய் இருக்கை –
பிராப்திக்கு  உகப்பான் அவன் ஆகையாவது -ஸ்வத்தினுடைய லாபத்திலே தத்-போக்தாவான ஸ்வாமி ஹ்ருஷ்டனாப் போலே -இவனை பிராபித்தால் பிராபிக்க
பெற்றோமே -என்று உகப்பானும் -இவ் ஆத்மாவுக்கு நித்ய போக்தாவான தானாய் இருக்கை –
இவை மூன்றும் -அவனே -என்கிற அவதாரணத்தாலே-இவற்றில் இவனோடு அன்வயிப்பது ஒன்றும் இல்லை என்கை –
இதில் -பிராப்தாவும்  பிராபகனும்  அவனே -என்கையாலே -இவனுக்கு ஸ்வ யத்னத்திலே-அன்வயம் இல்லை என்னும் இடமும் –
பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கையாலே-ஸ்வ பிரயோஜனத்தில் என்னும் இடத்தில் அன்வயம் இல்லை என்னும் இடமும் சித்தம் ஆய்த்து –

——————————————

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

ஆனால்  ஜ்ஞாத்ருத்வ கார்யமான -கர்த்ருத்த்வ  போக்த்ருத்வங்களை உடையவன் ஆகையாலே
ஸ்வயத்ன ஸ்வ பிரயோஜனங்களுக்கு அர்ஹனாய் இருக்க -இவை இரண்டின் உடைய நிவ்ருத்தி
இவனுக்கு எவ் வழியாலே வருகிறது  என்கிற சங்கையில் அத்தை அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வத்தாலே –

அதாவது –
ஜ்ஞாத்ருத்வ  நிபந்தநமான கர்த்த்ருத்வம் உண்டாய் இருக்க செய்தே –
பகவத் பிராப்திக்கு தானொரு யத்னம் பண்ணாமல் இருக்கை யாகிற –
இந்த ஸ்வ யத்ன நிவ்ருத்தி -பராதீன ஸ்வரூப ஸ்தித்யாதி மத்தவமாகிற-பாரதந்த்ர்யத்தின் கார்யம் –
அப்படியே –
போக்த்ருத்வமுண்டாய் இருக்க செய்தே -அத தலையை ரசிப்பிக்கும் அது ஒழிய
தனக்கு என்று ஒன்றில் ரசம் இன்றிக்கே இருக்கை யாகிற -ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி –
பராதிசய ஆதாயகத்வமே வடிவாய் இருக்கை யாகிற சேஷத்வத்தின் கார்யம் –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் இரண்டும் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலே –
அவ்வாகாரங்களை அறியவே -இவை இரண்டும் தன்னடையே வரும் என்றது -ஆய்த்து –

——————————————————-

சூரணை -72
பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

ஆனால் இப்படி ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜனங்களில் அன்வயம் அற்று
இருக்கும் ஆகில் -இவனுடைய பிரயத்னத்துக்கும் -சைதன்யத்துக்கும் -பிரயோஜனம் என்ன-என்ன
அருளிச் செய்கிறார்-இந்த வாக்ய த்வயத்தாலே –

அதாவது –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் –
உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்கிறபடி
பரனுக்கு பிரயோஜனமாக பண்ணும் கைங்கர்ய ரூப பிரவ்ருத்தி – இவனுடைய பிரவ்ருத்தி  உத்யோக ரூபமான ப்ரயத்னத்துக்கு பிரயோஜனம் –
நித்ய கிங்கர ப்ரஹர்ஷ இஷ்யாமி-ஸ்தோத்ர ரத்னம் -என்கிறபடியே -அத தலையில் உகப்புக்கு உறுப்பாக
தான் பண்ணுகிற கைங்கர்யத்தாலே -அத்யந்த ஹ்ருஷ்டனாய் இருக்கிற அந்த பரனை விஷயமாக உடைத்தான ப்ரீதி-
இவனுடைய அசித் வ்யாவிருத்தி ரூபமான சைதன்யதுக்கு பிரயோஜனம் -என்கை –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்னக் கடவது இறே –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்களாலே பலித்த
ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜன நிவ்ருத்திகளை உடையனான சேதனனுடைய-பிரயத்ன சைதன்யங்களுக்கு –
பாரதந்த்ர்ய சேஷத்வ அனுகுணமாக பிரயோஜனங்கள் சொல்லிற்று -ஆய்த்து –
——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்—-சூர்ணிகை–51/52/53/54/55/56/57/58/59/60–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 28, 2012

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே
இது தான் குலையகடவதாய் இருக்கும் –

ஆக –
பிரபத்திய அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணம் காட்டினாராய் நின்றார் கீழ் —
இந்த த்ரிவித பிரதிபத்தியிலும் -பக்தி பாரவச்ய பிரதிபத்யே முக்கியம் என்று இறே கீழ் சொல்லிற்று –
ஏவம் பூத பிரபத்தி நிஷ்டர் ஆனவர்கள் -தந் நிஷ்டை குலைந்து -பகவல் லாப அர்த்தமாக
ஸ்வ யத்னத்திலே மூளுவது -அவன் வரக் கொள்ள அவனையும் உபேஷிப்பதாகிற இவற்றுக்கு
நிதானம் ஏது என்ன -அருளி செய்கிறார் –

பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறக்கை யாவது –
கரண சைதில்யத்தாலே ஸ்வயத்ன ஷமர் அன்றிக்கே அவனே உபாயமாக அத்யவசித்து
அவன் வரவு பார்த்து இருக்கும் அவஸ்தை அளவு அன்றிக்கே –
கண்ணாஞ் சுழலை இட்டு –
ஏதேனும் ஒருபடி ஆகிலும் -அவனை இப்போதே பெற வேண்டும் என்னும்
அதிமாத்ர த்வரை அவஸ்தை விளைகை-
இது -என்று பிரபத்தியை சொல்லுகிறது –
தாத்ருசாவஸ்தை பிறந்தால் பிரபத்தி குலைகையாவது -என்னான் செய்கேன் -என்று
ஸ்வ பிரபத்தியில் அந்வயம் அற்று பகவதி நியச்த பரராய் இருக்கும் இருப்பு குலைகை–

————————————————

சூரணை -52
தன்னைப் பேணவும் பண்ணும் –
தரிக்கவும் பண்ணும் –

இப்படி பிரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் –
அவஸ்தா பேதம் விளைக்கும் அத்தை அருளி செய்கிறார் –

தன்னை பேணப் பண்ணுகை யாவது -காறை பூணும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -3 -7 -8 – இத்யாதியில்  படியே
அவன் வரவுக்கு உடலாக தன்னை அலங்கரிக்கும் படி பண்ணுகை –
அதாவது பகவத் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூட்டும் என்ற படி –
இது -மடல் எடுக்கை -முதலான வற்றிலே மூட்டும் அதுக்கும் உப லஷணம் –
தரிக்க பண்ணுகை யாவது -அரை ஷணம் அவனை ஒழிய தரிக்க மாட்டாமையாலே –
அவன் வரவுக்கு உடலாக ஸ்வ யத்னத்திலே மூளும்படி பண்ணுவது தானே –
அவன் வர கொள்ள விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பி –
கழக மேறேல் நம்பி –
என்று அவனையும் உபேஷித்து தள்ளி தரித்து இருக்கும் படி பண்ணுகை –
ஆகை இவை இரண்டாலும் -என்னான் செய்கேன் -என்றும் –
தரியேன் இனி -என்றும் –
இருக்கும் இருப்பு பிரதிகோடியை விளக்கும் என்றபடி –
ஆகையாலே பிரபத்தி நிஷ்டை குலைந்து ஸ்வ பிரவர்த்தி யாதிகளில் இழிகைக்கு அடி
பக்தி யினுடைய அவஸ்தா பேதம் என்று கருத்து –

——————————————————

சூரணை -53
இந்த ஸ்வாபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திரு குழல் ஓசையிலும்
காணலாம் –

தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்று எம்பெருமான் வருகைக்கு உடலாக
க்ருஷி பண்ணுகையும்-அவன்  வரக் கொள்ள அவனை உபேஷிக்கை-யுமாகிற பரஸ்பர விருத்த
ஸ்வபாவங்களை விளைக்கும் படியை இறே சொல்லிற்று -இப்படி பக்தியானது
ஸ்வ அவஸ்தா விசேஷங்களாலே சேதனருக்கு விளைக்கும் பரஸ்பர விருத்த ஸ்வபாவங்கள்
தத் விஷய மாத்ரத்தில் அன்றிக்கே -தத் சம்பந்தி வஸ்துக்கள் விஷயமாகவும்
காணலாம் என்கிறார் மேல் –

இந்த ஸ்வபாவ விசேஷங்கள் -என்று -கீழ் சொன்னவை தன்னையே சொல்லுகிறது என்று  –
இப்படி பட்ட ஸ்வபாவ விசேஷங்கள் -என்றபடி –
அவை யாவன -அநு பாவ்ய விஷயம் ஒருபடி பட்டு இரா நிற்க செய்தே –
அத்தை அநு பவிக்கிறவர்களுக்கு தாரகமாய் தோற்றுகையும்-
பாதகமே தோற்றுகையும் –
கல்யாண குணங்கள்-இத்யாதி –
கோவிந்தன் குணம் பாடி யாவி காத்து இருப்பேனே –நாச்சியார் திரு மொழி – 8- 3- -என்று தாரகமாகவும் –
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திரு வாய் மொழி – 8- 1- 8-என்று-பாதகமாகவும் -சொல்லுகையாலும்
கல்யாண குண விஷயம் ஆகவும் –
சரங்கள் ஆண்ட தந் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –பெரிய திரு மொழி -7 -3 -4-என்று தாரகமாகவும் –
சரங்களே கொடியதாய் அடுகின்ற-என்று பாதகமாகவும் –பெரிய திருமொழி -10- 2- 9-சொல்லுகையாலே
திரு சர விஷயம் ஆகவும் –
திரு மாலை பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி  வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14 -என்று தாரகமாகவும் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -திரு வாய் மொழி -9 -5 -8 என்று பாதகமாகவும் -சொல்லுகையாலே
திரு நாம விஷயம் ஆகவும் –
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத வுன் குழலின் இன்னிசை போதராதே –பெருமாள் திரு மொழி -6 -9 -என்று தாரகமாகவும் –
அவனுடை தீம் குழலும் ஈருமாலோ -திரு வாய் மொழி -9 -8 -5 -என்று பாதகமாகவும் சொல்லுகையாலே –
திரு குழலோசை விஷயமாகவும் காணலாம் என்றபடி -என்றும் ஒக்க போக்யங்களாய் இருந்துள்ள கல்யாண குணாதிகள்
தாரகமாக தோற்றுவது பாதகமாக தோற்றுவது ஆகிறது –அது போக்தாக்களான
இவர்களுடைய பிரேம ஸ்வாபவ விசேஷங்களாலே இறே -அல்லது
குணாதிகளின் ஸ்வரூப பேதத்தால் அன்றே -ஆகையால்-பகத் த்வய அவஸ்தா பேத ஜநிதங்களான
ஸ்வபாவ விசேஷங்கள் இவ்வோ வஸ்துகள் விஷயமாகவும் காணலாம் என்கிறது –
குணாதிகள் தாரகங்களாகவும் பாதகங்களாகவும் பேசுகிற இடத்தில்-இரண்டும் ஒருவர் பேச்சு
அன்றிக்கே இருந்ததே ஆகிலும் -ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரகிருதிகள் ஆகையாலும் –
எல்லாருடைய பக்தியும் -பகவத் பிரசாத லப்தை யான பர பக்தி ஆகையாலும் -அந்த
பக்தி ஸ்வபாவ விசேஷங்கள் காட்டுகிற மாத்ரமே இவ்விடத்தில்-அபேஷிதம் ஆகையாலே விரோதம் இல்லை –
சரங்களே கொடிதாய்  அடுகின்ற -என்கிற இது பராஜித ராஷசர் பாசுரம் அன்றோ -அத்தை
சரங்கள் ஆண்ட-என்கைக்கு பிரதி கோடியாக சொல்லாமோ என்னில் -ராம விஜயம் தனக்கு இஷ்டம் ஆகையாலே
அந்த விஜயத்துக்கு இலக்காய்-தோற்ற ராஷசர் தசை பிறந்து -பிராட்டிமார்  தசை பிறந்து பேசுமாப் போலே
தாமான தன்மை தோற்றாதே தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -விஜயத்தை பேசி அனுபவிக்கிறார்
என்று இறே இத் திரு மொழிக்கு வியாக்யானம் பண்ணி அருளுகிற ஆச்சார்யர்கள் அருளி செய்வது –
ஆகையால் தம்முடைய பிரேம ஸ்வபாவத்தாலே ததஸ்தாபன்னமான பின்பு -திரு சரங்கள்
பாதகமாய் ஆய்த்தும் தமக்கே யாய் தோற்றி பேசுகையாலே அப்படி சொல்லக்குறை இல்லை –

அதவா –
தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்ற இவை இரண்டாலும் –
அவன் தானே வரும் அளவும் தரியாமல் வரவுக்கு உடலாய் யத்னிக்கப் பண்ணுவது –
வரக் கொள்ள ப்ரணய ரோஷத்தால் தள்ளித் தரித்து இருக்கப் பண்ணுவதாம் படியை  இறே சொல்லிற்று –
இப்படி விருத்த ச்வபாவங்களை ஓன்று தானே செய்கிறார் -இந்த -என்று தொடங்கி –
அதாவது –
இப்படிப் பட்ட  ஸ்வபாவ விசேஷங்கள் -கோவிந்தன் குணம்  பாடி -என்று தொடங்கி –
கீழ் சொன்ன படியே -ஒரு தசையில் தாரகமாகபேசுவது-ஒரு தலையில் பாதகமாக போவதாம் படி –
இவர்களுக்கு தரிப்பும் பாதையும் ஆகிற விருத்த ஸ்வபாவன்களை விளைவிக்கிற கல்யாண குணாதிகளிலேயும் காணலாம் என்கை –
ஆக
பிரபத்திக்கு –சூரணை – 37-என்று  தொடங்கி இவ்வளவாக
பிரபத்தி வைபவத்தையும்
தத் விஷய வைபவத்தையும்
தத் அதிகாரி த்ரை வித்யத்தையும்
த்ரிவித பிரபத்தியிலும்  பக்தி பாரவச்ய ஹேதுக பிரபத்தி யினுடைய முக்க்யத்தையும்
அது தனக்கு ஸ்வ ஹேது பூத பக்த்ய அவஸ்தா பேதத்தால் வரும் குலைதலையும்
அந்த பக்த்யா அவஸ்தா பேதம் செய்விக்கும் சங்கை களையும்
அருளி செய்தார் –

——————————————–

சூரணை -54
இது தன்னை பார்த்தால்
பிதாவுக்கு புத்ரன்
எழுத்து வாங்குமா போலே
இருப்பது ஓன்று –

இப்பிரபத்தி  தனக்கு -தர்ம புத்ராதிகளும்-என்று தொடங்கி -கீழ் உக்தரான அதிகாரிகள்
பக்கலிலே -சாதன தயா அனுஷ்டானம் காண்கையாலும்-
கர்ம ஞான பக்தி பிரபத்திகள் -என்று உபாயங்களோடே சகபடிதமாய் போருகையாலும் –
யத் யேன காமகாமேன ந சாத்யம் சாதனந்தரை
முமுஷூணா யத் சாந்க்யேன யோகேன  நச பக்தித
ப்ராப்யதே பரமம் தாம யதோ நவர்த்ததே புன
தேன தேனாப்யதே தத் தந்ந்த்யா சேனைவ மகாமுனே
பரமாத்மாச தேனைவ சாத்யதே புருஷோத்தம -என்றும் –
இதம் சரணம் அஞ்ஞானம் -என்றும்
இப்படியே சாஸ்த்ரங்களில் இத்தை சாதனமாக சொல்லுகையாலும் –
உபாயத்வ பிரதிபத்தி யோக்யதை உண்டாகையாலே -அத்தை வ்யாவர்த்திக்கைக்காக –
அதுக்கு உடலான பலவற்றையும் அருளி செய்கிறார்-மேல் –
அதில் -பிரதமத்திலே -இப் ப்ரபத்தியை உபாயமாக கொண்டால் – வரும் அவத்யத்தை தர்சிப்பிக்கிறார் –

இதுதன்னை பார்த்தால் -என்றது-இச் சேதனர் ஈஸ்வர விஷயத்தில் பண்ணும் இப் பிரபத்தி –
தன்னை உபாயம் என்ன பார்த்தால் என்றபடி -ஈஸ்வரன் தன்னை ரஷிக்கைக்கு ஹேதுவான இச் சேதனன்
பண்ணும் இப் பிரபத்தி தன்னை நிரூபித்தால் என்று இங்கனே அனத்யாஹாரேன யோஜிக்க்கவுமாம் –
அப்போதும் அர்த்தம் ஒக்கும் இறே –
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று -என்றது –
உத்பாதகன் ஆகையால் -ஹிதைஷி யாய் -தான் அறியாத தசையிலும் -தன்னை
ரஷித்துகொண்டு போரும் தம் அப்பனுக்கு  புத்ரன் ஆனவன் -தான் அறிந்த தசையிலே நீ என்னை ரஷிக்க வேணும்
என்று எழுத்து வாங்கினால் -இரண்டு தலைக்கும் உண்டான உறவு கொத்தை யாம் போலே –
சத்தாகாரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு -பொறுக்கிற -அகார வாச்யனான
சர்வேஸ்வரனுக்கும்-மகார வாச்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி –
எழுத்து வாங்குகையாவது-ரஷகன் பேரை தந் மார்பில் எழுதி கொள்ளுகை

————————————-

சூரணை -55
இது தனக்கு ஸ்வரூபம்
தன்னை பொறாது
ஒழிகை –

ஆனால் இது தனக்கு ஸ்வரூபம்  ஏது என்ன அருளி செய்கிறார் –

இது தனக்கு ஸ்வரூபம் -என்றது -இப் பிரபத்தி தனக்கு அசாதாராண காரம் என்றபடி –
தன்னை பொறாது ஒழிகையாவது-உபாய வரண ஆத்மகமான தன்னை -உபாயம் -என்ன-சஹியாத படியாய் இருக்கை –
அதாவது –
ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் -ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதி பத்திக்கு
யோக்யமாக மாட்டாத படி இருக்கை -என்றபடி –
அன்றிக்கே –
தன்னை பொறாது ஒழிகை -என்கிற இடத்தில் -உபாயத்வேன ப்ரதீதிமான தன்னை
பொறாது ஒழிகை என்று அநத்யா ஹாரேன யோஜிக்கவுமாம் -இப்படி சொன்னாலும்
ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதிபதி அசஹத்வமே பொருளாம் இறே –

——————————————–

சூரணை -56
அங்கம் தன்னை
ஒழிந்தவற்றை
பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –

யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன –
அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  –
இது தன்னை அருளி செய்கிறார் –

தன்னை ஒழிந்தவற்றை போறது ஒழிகை யாவது -ஸ்வீகார ரூபமான தன்னை
ஒழிந்த சேதன பிரவ்ருத்திகள் ஒன்றையும் சஹியாத படி இருக்கை –
சாதன ரூப சகல பிரவ்ருத்திகளின் உடையவும் சவாசனத் யாகமிறே இதுக்கு அங்கம் –
யத் யத் சாங்கம் -என்கிற இடத்தில் -பிரவ்ருத்தி  ரூப அங்க சஹிதமனவற்றை  இறே
சாதனமாக சொல்லுகிறது –
அப்படி இன்றிக்கே –
இதனுடைய அங்கம் நிவ்ருத்தி ரூபம் ஆகையாலே -இது தானே இதனுடைய
அனுபாயத்வ சூசகம் என்று கருத்து-

———————————————

சூரணை -57
உபாயம் தன்னை பொறுக்கும்-

இதனுடைய அனுபாயத்வத்தை  த்ருடீகரிக்கைக்காக -சித்த சாத்திய உபாயங்களின்
படிகளை சொல்லி -அவை இரண்டையும் பற்ற -இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
அருளி செய்கிறார் -மூன்று சூரணைகளால்-/இது -அதிகார விசேஷணமாய் ஸ்வீ கார வர்ணம் /

உபாயம் தன்னை பொறுக்கும் -என்றது –
சித்த உபாயமான சர்வேஸ்வரன் -இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும்
ஸ்வயமேவ நிர்வாகன் ஆகையால் -தன்னை உபாயம் என்றால் -அதுக்கு தகுதியாய் இருக்கும் -என்றபடி –
உபாய உபேயத்வ ததிஹா தவ தத்வம்  நது குநௌ-என்று
உபேயத்வோபாதி வஸ்துவுக்கு ஸ்வரூபமாய் இறே உபாயத்வமும் இருப்பது –
ஏச வேதவிதோ விப்ரா யோசாத் யதமவிதோ ஜனா
தே வதந்தி மகாத்மானாம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் –
சரண்யம் சரணஞ்ச த்வமாகூர்  திவ்யா மகார்ஷய
அம்ருதம் சாதனம் சாத்யம் சம்பச்யந்தி மநீஷிணா-என்ன கடவது இறே
தன்னை பொறுக்கும் -என்கிற இவ்வளவே சொல்லி விடுகையாலே –
தன்னை ஒழிந்தவற்றை பொறாமை அர்த்தாத் சித்தம் –
இந்த சித்த உபாயம் சஹாயாந்தர  சம்சர்க்க அசஹமாய் இறே இருப்பது –
இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமா இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே
அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத சுவேதம் போலே
சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை
பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

————————————————–

சூரணை-58
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

சித்தோ உபாய தரமான சாத்திய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்யா ஞான ரஹீதராய் –
ஸ்வ யத்ன பரராய் இருப்பார்க்கு -மோஷ சாதன தயா -சாஸ்திர விகிதம் ஆகையாலே –
ஸ்வ ஸ்மின் உபாயத்வ பிரதி பத்தி சஹமூகமாய் ச்வோத் பத்யாதிகளில்
பிரவ்ருத்தி ரூப அங்க சாபேஷம் ஆகையாலே ஸ்வ வ்யதிரிதக்தங்களையும்
சஹிக்குமதாய் இருக்கும் என்ற படி –
பக்த்யா லப்யஸ் தவ நன்யயா –
உபாயபரிகர்மித  ச்வாந்தச்ய ஐ காந்தி காத்யந்திக  பக்தி யோகைக லப்யா-
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி
நராணாம் ஷீன பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –
என்னக் கடவது இறே-

—————————————–

சூரணை -59
இது இரண்டையும் பொறாது

இது இரண்டையும் பொறாது -என்றது-

சித்தோ உபாய வர்ண ரூபமாய் –
நிவ்ருத்தி சாத்திய ரூபமாய் –
அதிகாரி விசேஷணமாய்-
ஸ்வரூப அனதிரேகையாய் –
இருக்கிற இந்த பிரபத்தி
உபய அசஹமாய் இருக்கும் என்ற படி –
ஆகையால் சித்த சாத்திய உபாய வ்யாவிருத்த வேஷையாய்
இருக்கிற இந்த பிரபத்திக்கு
உபாயத்வம் அசம்பாவிதம் என்றது ஆய்த்து-

அன்றிக்கே –
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதிக்கு -ஆனால் சாங்கமாக சாஸ்திர விஹிதமான
இந்த பிரபத்திக்கு ஸ்வரூபம் எது -இதுக்கு சொல்லுகிற அங்கம் தான் என்ன -அவை
இரண்டையும் அடைவே அருளி செய்கிறார் -இது தனக்கு -இத்யாதி வாக்யத்தாலே –
ஆனால் தன்னை பொறுப்பது எது என்ன அருளி செய்கிறார்-உபாயம் -இத்யாதி –
தன்னையும் தன்னை ஒழிந்தவற்றையும் பொறுக்கும் அது எதுஎன்ன
அருளி செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதி-
இந்த சித்த சாத்திய உபாயங்கள்  இரண்டிலும் -இப் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
தர்சிப்பியா நின்று கொண்டு உக்தார்த்தை நிகமிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதி –
என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
அதவா –
இதன் அனுபாயத்தை சாதிக்கைக்காக இதனுடைய ஸ்வரூப அங்கங்கள் இரண்டையும்
தாமே அருளி செய்கிறார் -இது தனக்கு-இத்யாதி வாக்யத்வயத்தாலே-
இதன் அனுபாயத்வத்தை ஸ்புடம் ஆக்குகைக்காக சித்த சாத்திய உபாயங்களின் படிகளை
தர்சிப்போம் என்று திரு உள்ளம் பற்றி -பிரதமம் சித்த உபாயத்தின் படியை அருளி
செய்கிறார்-உபாயம்-இத்யாதியால் –
அநந்தரம்-சாத்திய உபாயத்தின் படியை அருளி செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதியால்
இவை இரண்டிலும் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதியால்-
என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
இவ் உபய சங்கதிக்கும் வாக்யங்களுக்கும் அர்த்தம் பூர்வவத் –

————————————————

சூரணை -60
பலத்துக்கு ஆத்ம ஞானமும்
அப்ரதிஷேதமுமே
வேண்டுவது –

இப்படி இப் பிரபத்தி உபாயம் அல்லவா விட்டால் பல சித்திக்கு இவன் பக்கலிலும்
சில வேண்டாவோ என்ன -அருளிசெய்கிறார் –

பலத்துக்கு -என்றது -பல சித்திக்கு -என்றபடி –
ஆத்ம ஞானம் ஆவது -ஸ்வ ஸ்வரூப ஞானம் -அதாவது
தத் ஏக சேஷத்வ-தத் ஏக ரஷத்வங்களை அறிகை-
அப்ரதிஷேதம் ஆவது -நிருபாதிக சேஷியாய்-நிருபாதிக ரஷகன் ஆன அவன்
பண்ணும் ரஷணத்தை விலக்காமை-அதாவது
ஸ்வ ரக்ஷணே ச்வான்வய நிவ்ருத்தி –
அவதாரணத்தால்-இவை இரண்டும் ஒழிய பின்னை ஒன்றும் வேண்டாதபடி –
சரம பதத்தில் சொல்லுகிற பலத்துக்கு -பிரதம பதத்தில் சொலுகிற
ஆத்ம ஞானமும் -மத்யம பதத்தில் சொல்லுகிற அபிரதிஷேதமும் இறே வேண்டுவது..

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-41/42/43/44/45/46/47/48/49/50–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 27, 2012

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

பிரபத்திக்கு தேச நியமம் -என்று -சூரணை -23 – தொடங்கி இவ்வளவும்
உபாய வர்ணாத்மிகையான பிரபத்தி யினுடைய தேச காலாதி நியம அபாவத்தையும் –
விஷய நியமும் தர்சிக்கப் பட்டது -இப்படி விஷய விசேஷத்தை தர்சிப்பித்த அநந்தரம் –
பகவத் சாஸ்த்ராதி சித்தமான அதிகாரி விசேஷங்களையும் பிரகாசிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -அதிகாரி விசேஷத்தை அருளி செய்கிறார் –
அதாவது –
சௌலப்யாதி குண பூர்த்தி யாலே பிரபத்திக்கு நியத விஷயமான இச் அர்ச்சாவதாரத்தில்
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் -பிரபதன ஹேது பேதத்தாலே -மூன்று வகை பட்டு
இருப்பர்கள்-என்கை–

————————————————–

சூரணை -42
அஞ்ஞரும்
ஞானாதிகரும்
பக்தி பரவசரும் —

அவர்கள் யார் என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார் –

அஞ்ஞர் ஆகிறார் -பகவல் லாபத்துக்கு உறுப்பாக சாதனா அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான
ஞானம் இல்லாதவர்கள் -அஞ்ஞானம் அசக்திக்கும் உப லஷணம்-
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் அஞ்ஞான அசக்திகள் அன்று-சூரணை – 115- -என்று மேலே இவர் தானே
அருளி செய்கிறார் இறே –
ஞானாதிகர் ஆகிறார் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தேயும் -பகவதத்யந்த
பரதந்த்ரமான ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனத்தாலே -உபயாந்தரங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று
பரித்யஜிக்கைக்கு ஈடான ஞான பூர்த்தி உடையவர்கள் –
பக்தி பரவச்ர் ஆகிறார் -ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க ஷமர் அல்லாதபடி
பகவத் பிரேமா அதிசயத்தாலே சிதில காரணராய் இருக்கும் அவர்கள் –

———————————————

சூரணை -43
அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இப்படி இவ் வஞ்ஞானாதிகள்  அடியாக பிரபத்தி பண்ணினவர்கள் இன்னார் என்னும் இடம்
காணலாம் இடம் உண்டோ என்னும் ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் -என்றது -இதர உபாய அனுஷ்டானத்தில் இழிகைக்கு
ஈடான ஞானாதிகள் முதலிலே இல்லாமையாலே -அநந்ய கதிகளாய் கொண்டு -பகவத் விஷயத்திலே
பரந்யாசம் பண்ணினவர்கள் என்ற படி —
அஸ்மாதாதிகள்  -என்று ஸ்வ நைச்ய அனுசந்தனத்தாலே மந்த அதிகாரிகளோடே
தம்மையும் கூட்டி அருளி செய்கிறார் –
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்றது -உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாசகம் என்று
நடும்கும் படியான ஸ்வரூப யாதாத்ம்ய  தர்சனத்தாலே வந்த ஞான பூர்த்தி யாலே
அநந்ய கதிகளாய் கொண்டு ஸ்வரூப  அனுரூபமாக பகவதி நியச்த பரர ஆனவர்கள் -என்றபடி –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் -என்றது -பகவத் பிரேமா பௌ ஷ்கல்யத்தாலே –
கால் ஆலும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-என்றும் –
இட்ட கால் இட்ட கை –திருவாய் மொழி -7 -2 -4 -என்றும் சொல்லுகிறபடி
சிதில கரண ராய் இருக்கையாலே -சாதனா அனுஷ்டானத்துக்கு ஆள் அன்றிக்கே –
அநந்ய கதிகளாய் கொண்டு -அவன் பக்கலிலே பர சமர்ப்பணம் பண்ணினவர்கள் என்ற படி –
பக்தி பரவசருக்கு சாதனா அனுஷ்டானம் பண்ண போகாது என்னும் இடம் –
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்கு உற்றேனும் அல்லேன் –திரு வாய் மொழி -5 -7 -2 -என்றும் –
என் கொள்வன் –திருவாய் மொழி -5 -1 -4 -என்ற பாட்டிலும் ஆழ்வார் சூச்பஷ்டமாக அருளி செய்தார் இறே

—————————————

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இப்படி அஞ்ஞாதிகள் ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக
சொல்லுகைக்கு  மூலம்  இன்னது என்கிறார் –

அதாவது
அஞ்ஞான அசக்திகளும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்
பகவத் பக்தியும் –
இவை மூன்றிலும் மூவருக்கும் அன்வயமுண்டாய் இருக்க செய்தே
ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும்
இவற்றில் ஒரொன்றே இவ் அதிகாரிகள் பக்கல் உறைத்து இருக்கையாலே என்கை
இத்தால் முற்பட்டவர்கள் பக்கல் ஞான பக்திகள் இரண்டும் குறைந்து -அஞ்ஞானமே விஞ்சி இருக்கும்
நடுவில் அவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அல்பமாய் -பக்தியும் அளவு பட்டு -ஞானமே விஞ்சி இருக்கும் –
பிற்பட்டவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அல்பமாய் -ஸ்வரூப ஞானமும் குறைவற்று இருக்க செய்தே –
ப்ரேமமே கரை புரண்டு இருக்கும் –
ஆகையால் எல்லாம் எல்லார் பக்கலிலும் உண்டே ஆகிலும் -அல்பங்களானவை கிடக்க செய்தே
அதிகமானதுவே அவ்வவருக்கு பிரபதன ஹேதுவாம்  என்றது ஆய்த்து –
இந்த யோஜனைக்கு ஒரு குறை உண்டு –
மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களுக்கும் அஞ்ஞானம் சிறிது கிடக்கிறது உண்டு என்று
கொள்ள வேண்டி வருகையாலே -ஆனால் செய்வது என் என்னில் –
ஊற்றத்தை பற்ற -என்கிற இத்தை அனுசந்தான பரமாக்கி யோஜிக்கும் அளவில் இவ் விரோதம் இல்லை –
அப்போது -இப்படி -இத்யாதிக்கு -அஞ்ஞான  அசக்திகளும் -ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும் -பகவத் பக்தியும் –
ஆகிய இம் மூன்றின் உடையவும் அனுசந்தானம் மூவர்க்கும் ஏதேனும் ஒருபடி உண்டாய் இருக்க செய்தே
ஒரொன்றே இவ் அதிகாரிகளுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும் -இவற்றில் ஒரொன்றே இவ்  அதிகாரிகளுக்கு
ஊற்றம் ஆகையாலே என்று பொருளாக கடவது -அதாவது -அநந்ய கதிகளாய் பிரபன்ன ராகைக்கு உடலான
அஞ்ஞானாதி த்ரய அனுசந்தாநாமும் மூவர்க்கும் உண்டானாலும் -மூன்றிலும் வைத்து கொண்டு
பிரசுரமானதே தம்தாமுக்கு அநந்ய கதிகளாய் பிரபத்தியில்  இழிகைக்கு ஹேதுவாக அனுசந்தித்து-இருக்கையாலே என்றபடி –
இதில் -பிரதம அதிகாரிகளுக்கு அஞ்ஞான அனுசந்தானம் ஸ்வ ரசம் –
நடுவு சொன்னவர்களுக்கு பிரமாணிகர் ஆகையாலே -அஞ்ஞானத்தின் உடைய சவாசன நிவ்ருத்தி கூடாமையால்
அஞ்ஞான அனுசந்தானம் கூடும் –
பிற்பட்டவர்கள் மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஆகையாலே அஞ்ஞான அனுசந்தானம் நைச்ய நிபந்தநமாம் இத்தனை-

—————————————–
சூரணை -45
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

இவஞ்ஞானாதி த்ரயத்துக்கு காரணம் இன்னது என்கிறார் –

மூன்று தத்வத்தையும் பற்றி வரும் -என்றது –
சாதன அனுஷ்டானத்திலே அஞ்ஞான அசக்திகளுக்கு மூலம் -கர்ம நிபந்தனமான
அசித் சம்பந்தம் ஆகையாலே -அஞ்ஞானம் அசித் தத்தவத்தை பற்றி வரும் –
இதர சாதனங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று பரித்யஜ்யைக்கு உடலான ஞான பூர்த்திக்கு அடி
மத்யமபதத்தில் சொல்லுகிற ஆத்மா ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனம் ஆகையாலே
ஞானாதிக்யம் ஆத்மா தத்தவத்தை பற்றி வரும் –
ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாதபடி கரண சைதில்யத்தை பண்ணும்
பக்தி வ்ருத்திக்கு காரணம் -காதல் கடல் புரைய விலை வித்த காரமர் மேனி -திருவாய் மொழி -5- 3- 4-
என்னும் பகவத் விக்ரஹ வைலஷண்யம் ஆகையாலே -பக்தி பாரவச்யம் பகவத் தத்தவத்தை பற்றி வரும் -என்றபடி –

——————————————

சூரணை -46
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

அதிகாரி த்ரயத்துக்கும் -அஞானாதி   த்ரயத்திலும் அந்வயம் உண்டாய் இருக்க
ஒரொன்றே பிரபதன ஹேதுவாக சொல்லுகிறது-ஊற்றத்தை பற்ற -என்று இறே சொல்லிற்று –
இப்படி ஏக அதிகாரி பக்கலிலே இம் மூன்றும் உண்டு என்னும் இடம் காணலாம் இடம் உண்டோ
என்ன-அருளி செய்கிறார் –

அதாவது-
எம்பெருமான் தம்முடைய  ஆர்த்தி கண்டு இரங்க காணாமையாலே –
தன்னை பெரும் இடத்தில் சில சாதன அனுஷ்டானம் பண்ண வேணும் என்று இருந்தானாக கொண்டு –
உபயாந்தர அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாதபடி அஞனான நான் என் செய்கேன் –
ஞானம் தந்தோமே என்னில் -நீ தந்த ஞானத்தால் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து
சாதன அனுஷ்டானம் அப்ராப்தம் என்று இருக்கிற -நான் என் செய்கேன் –
ஸ்வரூபத்துக்கு சேராதாகிலும்-உன்னை பெறலாமாகில்-இது தன்னை அனுஷ்டிக்கலாய்த்து இறே
ஞான மாத்ரத்தை தந்தாய் ஆகில் -பக்தி ரூபாபன்ன ஞானத்தை தருகையாலே -ஒன்றையும் அடைவு பட
அனுஷ்டிக்க ஷமன் அல்லாதபடி -பக்தி பரவசனான -நான் என் செய்கேன் -என்று
இம் மூன்றும் ஆழ்வாருக்கு விவஷிதம் ஆகையாலே அவ்விடத்தில் இம்  மூன்றும் உண்டு என்கை –
ஆகையால் -இவ்விடத்திலே காணலாம் -என்று கருத்து –

———————————-
சூரணை -47
அங்கு ஒன்றை பற்றி இருக்கும் –

ஆனால் இம் மூன்றும் அவ்விடத்தில் பிரபத்தி காரணம் ஆகிறதோ -என்ன –
அங்கு ஒன்றை பற்றி இருக்கும் -என்கிறார் –

அதாவது –
அவ்விடத்தில் பிரபத்தி யானது மூன்றிலும் வைத்து கொண்டு
ஊன்றி இருக்கிற பக்தி பாரவச்யத்தையே தனக்கு ஹேதுவாக
பற்றி இருக்கும் என்றபடி –

——————————————
சூரணை -48
முக்கியம் அதுவே –

இந்த ஹேது த்ரயமடியாக வரும் பிரபத்திகளில் முக்கியம் எது என்ன அருளி செய்கிறார் –

அதாவது பக்தி பாரவச்யம் அடியாக பிரபத்தி பண்ணும் இடத்தில்
ப்ராப்ய ருசி கண் அழிவு அற உண்டு ஆகையாலே -அதுவே முக்கியம் என்றபடி –

————————————————-

சூரணை -49
அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

இவ் அதிகாரி த்ரயத்துக்கு பிரமாணம் உண்டோ என்ன -பிரதமம் பட்டர் அருளி செய்த
ஒரு ஸ்லோகத்தை யுதாஹரிக்கிறார் –

அவித்யாதோ தேவ பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம் நாவா ஜகதி கதி மன்யா மவிதுஷாம்
கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –
இச் ஸ்லோக அர்த்தம் -ஜிதந்தா வ்யாக்யானோ போத்காதத்திலே –
பிரபத்திக்கு அதிகாரிகள் -அஞ்ஞரும் சர்வஞ்ஞரும் பக்தி பரவசரும் என்று
த்ரிவிதமாக பட்டர் அருளி செய்தார் இறே -என்று தொடங்கி –
அஞ்ஞன் ஆகிறான் -பகவல்  லாபத்துக்கு தன் பக்கல் ஞான சக்திகள் இல்லாதவன் –
சர்வஞ்ஞன் ஆகிறான் -தேச கால வஸ்துகளால் பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை
உடையவன் ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்தியம் என்று இருக்கும் அவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தே -அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும்-பகவத் விஷயமொழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு பிராபகனுமாய் பிராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தை என்று பேரை உடைத்தான மந்திர ரஹச்யத்தை  சர்வஞ்ஞானான  ஸ்ரீ  ஸௌநக பகவான்
வியாக்யானம் பண்ண பெறுவதே -என்கிறார் -என்று ஆச்சான் பிள்ளை அருளி செய்தார்
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்ற இடத்தில் ஸ்வரூப யாதாத்ம்ய  ஞானம் பிரபதன
ஹேதுவாக சொல்லிற்று -இந்த ஸ்லோகத்தில் பகவத் அநந்ய சாத்யத்வ ஞானம் பிரபத்ன ஹேதுவாக
சொல்லிற்று -ஆகையால்-இரண்டும் ஞானாதிகருக்கு அநந்ய கதித்வ பூர்வகமான பிரபதனதுக்கு
ஹேதுவாம் என்று கொள்ள  வேண்டும் –
கீழும் இது தானே அர்த்தமானாலோ என்னில் -ஒண்ணாது -இம் மூன்றும் மூன்று தத்வத்தையும்
பற்றி வரும் -என்றத்தோடு சேராமையாலே

———————————————-

சூரணை -50
இதம் சரணம் அஜ்ஞானாம் –

அநந்தரம் -இவ் அர்த்த விஷயமாக -அகில ஜகன் மாதாவாய் -ஆப்த தமையான -பிராட்டி
லஷ்மீ தந்த்ரத்தில் அருளி செய்த வசனத்தை உபாதானம் பண்ணுகிறார் –

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம் -இந்த ஸ்லோகத்தில் –
இதம் என்று பராமர்சிக்கிறது -கீழ் சொன்ன சரணா கதியை –
அபாய உபாய நிர்முக்தா மத்யமாம் ஸ்திதி மாஸ்திதா-சரணாகதி ரக்ர்யைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ–99 -என்று இறே கீழ் சொல்லி நின்றது –
இயம் -என்று ஸ்திரீ லிங்க நிர்த்தேசம் அன்றிக்கே -இதம் -என்று நபும்சக லிங்க வ்யத்யயம்
சரண சப்த விவஷையாலே-இதில் அஞ்ஞா சர்வஞஞர்களை-ஸ்புடமாக சொல்லுகையாலே –
மேல் பக்தி பரவசரை சொல்லுகிறது  என்று கொள்ள  வேணும் –
இதம் திதீர்ஷதாம் பாரம் -என்றது -சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும்-த்வரையை உடையார்க்கு என்றபடி –
ஆனந்த்ய மிச்சதாம் -என்றது ஸ்வரூப ப்ராப்த பரிபூர்ண பகவத் அனுபவத்தை பெற்றால் அல்லது
தரிக்க மாட்டாதார்க்கு என்ற படி -இவை இரண்டும் பக்தி யினுடைய பூமாவாலே வரும் அவை இறே –
பக்தி பாரவச்யம் உபாயாந்திர அனுஷ்டானத்தில் -அசக்திக்கும் உறுப்பாய் -அநிஷ்ட நிவ்ருத்தியிலும் –
இஷ்ட பிராப்தியிலும் உண்டான விளம்பா ஷமதைக்கும் உடலாய் இறே இருப்பது –
அதில் விளம்ப அஷமதைக்கு உடலான ஆகாரத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறது –
ஆனால்-கீழ் அசக்திக்கு உடலாய் அன்றோ சொல்லிப் போந்தது -அதுக்கு இது பிரமாணமோ என்னில் -அதிகாரி த்ரைவித்யாம் தர்சிப்பிக்கிற இவ்வளவே-
இவ்விடத்தில் அபேஷிதம் ஆகையாலே இது பிரமாணமாக சொல்ல தட்டில்லை –
அவித்யாதா -என்கிற ஸ்லோகத்தில் -ஞானாதிக்யதுக்கு  உடலாக சொன்னதும் -கீழ் சொல்லி வந்ததும்
பின்னமாய் இருக்க செய்தே -அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணமாக அத்தை சொன்னாப் போலே –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–33/34/35/36/37/38/39/40–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 27, 2012

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷன ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

அநந்தரம் பல யம அபாவ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

இத்தால் கீழ் அதிகாரி நியம அபாவத்துக்கு உடலாக காட்டப் பட்டதர்ம புத்ராதிகள் தொடக்கமான
பிரபத்தாக்கள் ஆனவர்கள் –
ராஜ்ய அர்த்தமாகவும் –
வஸ்த்ர அர்த்தமாகவும் –
பிராண அர்த்தமாகவும்
கைங்கர்ய அர்த்தமாகவும்
ராம பிராப்தி அர்த்தமாகவும்
சமுத்திர தரண அர்த்தமாகவும்
ராம அனுவ்ருத்தி அர்த்தமாகவும்
பிரபத்தி பண்ணுகையாலே பிரபத்திக்கு பல நியமம் இல்லை என்றது ஆய்த்து–

————————————————–

சூரணை -34
விஷய நியமம் ஆவது
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளத்தும் அர்ச்சாவதாரத்திலே –

ஆக பிரபத்திக்கு தேச காலாதி நியம அபேஷை இல்லை என்ற பிரதிஞ்ஜையை உபபாதித்தார் கீழ் –
விஷய நியமமே உள்ளது -என்ற பிரதிஞ்ஜையை உபபாதிக்கிறார் மேல் –

குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை -என்றது
பரத்வாதிகள் ஐந்திலும் வைத்து கொண்டு ஸௌலப்யாதி குண பூர்த்தி உள்ள இடமே
விஷயமாகை என்ற படி –அந்த குண பூர்த்தி தான் உள்ளது எங்கே என்ன -பூர்த்தி உள்ளதும்
அர்ச்சாவதாரத்திலே என்கிறார் –
அர்ச்சாவதார விஷயே மயாப் உத்தேச தஸ் ததா உக்தா
குண நசக்யந்தே வக்தும்  வர்ஷ சதைரபி -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞனான தானே சொல்ல புக்காலும் சொல்லி தலை கட்ட
அரிதாம் படி இறே அர்ச்சாவதார குண பூர்த்தி இருப்பது –

—————————————————-

சூரணை -35
ஆழ்வார்கள் பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்றும்
அர்ச்சாவதாரத்திலே –

இக் குண பூர்த்தி உள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு அடைத்த விஷயம்
என்னும் அத்தை -பிரபன்னஜன கூடஸ்தருடைய அனுஷ்டானத்தாலும்
பிரகாசிப்பிக்கிறார் மேல் –

-மயர்வற மதிநலம் அருளி பெறுகையாலே-பரத்வாதிகளை எல்லாம் கரதலாமலகமாக
கண்டு இருக்கிறவர்கள் இறே ஆழ்வார்கள் -இப்படி இருக்கிறவர்கள் பிராப்யத் த்வரா அதிசயத்தாலே
பலகாலும் பிரபத்தி பண்ணுகிற அளவில் பல இடங்களிலும்  அர்ச்சாவதார த்திலே இறே
பிரபத்தி பண்ணிற்று -ஸ்தலாந்தரத்தில் க்வாசித்  கமித்தனை இறே –
எங்கனே என்னில் -ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம் ஆழ்வார் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக  தந்து ஒழிந்தாய்-
கழல்களையே சரணாக கொண்ட –
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று இப்படி பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்று அர்ச்சாவதாரத்தில் இறே –
பிறந்தவாறும் -ஒன்றிலும் இறே அவதாரத்தில்சரணம் புக்கது –
திரு மங்கை ஆழ்வாரும் –
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரனியத்துள் எந்தாய் –
விரையார் திருவேம்கடவா நாயேன் வந்து அடைந்தேன் –
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –
என்று இப்படி அர்ச்சாவதாரத்திலே இறே பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்று –

மற்றை ஆழ்வார்களுக்கும்  இப்படி தத்தத்  பிரபந்தங்களில் கண்டு கொள்வது –
பிரபந்தம் பண்ணிற்றும் என்கிற இந்த ச சப்தத்தாலே -பூர்த்தி உள்ளதும் -என்று
கீழ் சொன்னதை சமுச்சயிக்கிறது –

———————————————-

சூரணை -36
பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

இப்படி இவ் ஆழ்வார்கள் பிரபத்தி பண்ணும் இடங்களில் -பரத்வாதிகள் எல்லாம் இருக்க –
அர்ச்சாவதாரத்திலே பண்ணுகைக்கு அடி -இதின் குண பூர்த்தி இறே -அந்த குண
பூர்த்தி தன்னை ச பிரமாணமாக அருளி செய்கிறார் -மேல் –

பூர்ணம் என்கையாலே -என்றது –
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஷ்யதே சர்வம் பூர்ணம் சஹோம் -என்று
சுருதி சொல்லுகையாலே என்ற படி –
எல்லா குணங்களும் புஷ்கலங்கள் -என்றது –
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குணங்களோடு -ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
குணங்களோடு வாசியற சகல கல்யாண குணங்களும் -இவ் விஷயத்திலே சம்பூர்ணம் -என்றபடி

———————————————–

சூரணை-37
பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்
இருட்டறையிலே விளக்கு போலே
பிரகாசிப்பது இங்கே –

ஆனால்-வாசு தேவோசி பூர்ண -என்ற பரத்வத்தில் காட்டில் -இங்குத்தைக்கு ஏற்றம்
என் என்ன -அருளி செய்கிறார்-

பிரபத்திக்கு அபேஷிதங்களான -என்றது -உபாயமாக பற்றும் இடத்தில் வேண்டும் அவையான -என்றபடி –
சௌலப்யாதிகளாவன-கண்டு பற்றுகைக்கு உறுப்பான சௌலப்யமும் –
மேன்மை கண்டு அகலாமைக்கு உறுப்பான சௌசீல்யமும்-
கார்யம் செய்யும் என்று விச்வசிக்கை உறுப்பான ஸ்வாமித்வமும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு உறுப்பான  -வாத்சல்யமும் —
நிகரில் புகழாய்  -இத்யாதியாலே -இந் நாலு குணத்தையும் இறே ஆழ்வார் அருளி செய்தது –
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே -என்றது -பரத்வத்தில் இக்
குணங்கள் எல்லாம் உண்டாய் இருக்க செய்தே -பரம சாம்யாபன்னருக்கு
முகம் கொடுக்கிற இடம் ஆகையாலே பகல் விளக்கு போலே பிரகாசம் அற்று இருக்கும் –
அர்ச்சாவதாரமான இடத்தில் தண்மைக்கு எல்லை நிலமான சம்சாரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கையாலே -அந்தகாரத்திலே தீபம் போலே அத்யுஜ்வலமாய்
தோற்றும் என்றபடி -விஷயம் உள்ள இடத்தே இறே குணங்கள் பிரகாசிப்பது –
அங்கு உள்ளாரும்  சீலாதி குணம் அனுபவம் பண்ணுகைக்கு வருவது இங்கே இறே –
சௌலப்யம் முன்னாக அருளி செய்தது -கண்டு பற்றுகைக்கு உறுப்பான
சௌலப்யமே பிரபத்திக்கு பிரதான அபேஷிதம் என்று தோற்றுகைக்காக —

———————————————

சூரணை -38
பூர்த்தியையும் ஸ்வா தந்தர்ய த்தையும்
குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை
தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இக் குணங்கள் பிரகாசிப்பது இங்கே -என்றதை உபபாதிக்கிறார் –

பூர்த்தி யாவது -அவாப்த சமஸ்த காமத்வம் -அத்தை குலைத்து கொள்கையாவது –
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டும் படி சாபேஷனாய் இருக்கை-
ச்வாதந்த்ர்யம் ஆவது -சுவாதீன ஸ்வரூபதிமத்த்வம்-அத்தை குலைத்து கொள்கையாவது –
ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி  யாதிகளை உடையவன் ஆகை   –
ததிச்சயா மகாதேஜோ புங்க்தேவை பக்தவத்சல
ஸ்நானம் பானம் ததா யாத்ரம்  குரு தேவை ஜகத்பதி
ஸ்வதந்த்ரஸ் ச ஜகன்னாத ப்யஸ் வதந்த்ரோ யதா ததா சர்வ சக்திர்
ஜகத் தாதாப்யசக்த இவ சேஷ்டதே-என்ன கடவது இறே –
அர்ச்சக பராதீனா கிலாத்மா ஸ்திதி -என்று அருளி செய்தார் இறே பட்டர்-
தன் இச்சை ஒழிய இவற்றை குலைக்கைக்கு ஹேது இல்லாமையாலே –
குலைத்து கொண்டு -என்கிறார் –
தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரித்து நிற்கிற இடம்-என்றது –
தான் இப்படி சுலபனாய் வந்து நின்றாள்-அரியவன் எளியவனாய் -நிற்க பெற்றோமே என்று
விரும்பி மேல் விழுகை அன்றிக்கே -அவ எளிமை தானே ஹேதுவாக உபேஷிக்கிற
சம்சாரிகளை -தான் விட மாட்டாத அளவு அன்றிக்கே -அவர்களை ஒழிய
செல்லாமை தோற்றும் படி நிற்கிற ஸ்தலம் அர்ச்சாவதாரம் என்கை –
பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யத்தையும் குலைத்து கொண்டு நிற்க்கையாலே –
சௌலப்ய சொவசீல்யங்களும்-தன்னை அநாதரிக்கிறவர்களை தான்
ஆதரித்து நிற்க்கையாலே-ச்வாமித்வ வாத்சல்யங்களும் இங்கே தோற்ற நின்றது இறே -அன்றிக்கே –
பூர்த்தியையும் -என்று தொடங்கி இவ் வாக்கியம் எல்லா வற்றாலும் –
குண சதுஷ்டைத்திலும் பிரதானமான ஸுலப்யத்தையே யோட வைத்தார் ஆகவுமாம்-
அப்போது இவ் விஷயத்தினுடைய சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பிகிறார்
என்று வாக்ய சங்கதியாக கடவது – கண்ணுக்கு விஷயமாம் படி நித்ய
சந்நிதி பண்ணுகிற அளவு அன்றிக்கே -சர்வ பிரகார பரி பூர்ணனாய் -நிரந்குச ச்வதந்த்ரனாய்
இருக்கிற தன்னை சாபேஷனும் பரதந்த்ரனும் ஆக்கி கொண்டு -தன்னை அநாதரிக்கிற சம்சாரிகளை
தான் ஆதரித்து நிற்க்கைக்கு மேல்பட்ட சௌலப்யம் இல்லை இறே –
ஏவம் பஞ்ச பிரகாரோஹா மாத்மானாம் பததாமத
பூர்வஸ் மாதபி பூர்வ ஸ்மாஜ் ஜ்யாயாம்சை வோத்தரோத்த்ர
சொவ்லாப்யதோ  ஜகத்ச்வாமீ ஸோலபொஹ் யுத்தரோதர -என்று பரத்வாதிகள் ஐந்திலும்
சௌலப்யம் உண்டாய் இருக்க செய்தே -பூர்வ பூர்வத்தில் காட்டில் உத்தர உத்தரத்துக்கு
சௌலப்யம் அதிசயித்து இருக்கும் என்று தானே அருளி செய்கையாலே –
சொவ்லப்யதுக்கு  எல்லை நிலம் அர்ச்சாவதாரம் இறே –

———————————————-

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

பரத்வாதிகளுடைய து-த்வர்லப்யத்தையும் -அர்ச்சாவதார சௌலப்யத்தையும்
திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் மேல் –

த்ருஷ்ணார்த்தனுக்கு தேசாந்தரித்தில் போக வேண்டாதபடி நிற்கிற இடம் தன்னிலே –
உண்டாய் இருக்க செய்தேயும் -கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது
குடிக்க கிடையாத பூகத ஜலம் போலே ஆய்த்து-கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு
ஹிருதயத்திலே இருக்க செய்தேயும் -கட்கிலீ -என்கிறபடியே -கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே –
அஷ்டாங்க யோக ரூபா யத்னத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம் –
அவனுக்கு -அண்டத்துக்கு புறம்பே பெருகி கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆய்த்து -இவனுக்கும் அப்பால் –
முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்கிறபடியே லீலா விபூதிக்கு அப்பால் பட்டு இருக்கிற பரத்வம் –
அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் அன்றியே – அண்டாந்தர்பூதமாய் இருக்க செய்தேயும் அவனுக்கு துஷ்ப்ராபமான
பால் கடல் போலே ஆய்த்து -இவனுக்கும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம்  கேட்டேயும் -என்கிறபடியே
கேட்டு இருக்கும் அத்தனை அல்லது சென்று காண அரிதாம்படி இருக்கிற வ்யூஹம் –
ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பச்சாத் யனானவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே
ஆய்த்து -மண் மீது உழல்வாய் -என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் -தத் காலவர்த்திகளுக்கு ஆஸ்ரயநீயமாய்
பிற் காலத்தில் உளனான இவனுக்கு கிட்டாத படியான விபவம் –
முன்பு சொன்னவை போல் அன்றிக்கே -அவனுக்கு விடாய் கெட  பருகலாம் படி -பெருக்காற்றிலே தேங்கின
மடுக்கள் போலே ஆய்த்து –இவனுக்கும் தேச கால காரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே –
கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற –
பின்னானார் வணங்கும் ஜோதி -யான அர்ச்சாவதாரம் –
பௌ மதி கேத நேஷ்வபி குடி குஞ்செஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும்
சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறே -மடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே
அருளி செய்தது -அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் –
அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்
-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –

——————————————————-

சூரணை -40
இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இப்படி ஆச்ராயண ருசி பிறந்தார்க்கு ஆச்ரயணீயத்வே சுலபமாய் இருக்கும் அளவே அன்றிக்கே –
ருசி ஜநகத்வாதிகளும் -இவ் அர்ச்சாவதாரத்துக்கு உண்டு என்று இதன் வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –

பிரக்ருதமான சௌலப்யாதி குண யோகத்தை உள் கொண்டு -இது தான் -என்று பராமர்சிக்கிறார் –
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாமை யாவது -ஹித அனுசானம் பண்ணுகிற சுருதி ஸ்ம்ருதி யாதி
சாஸ்திரங்கள் ஆனவை -அருசி பிறக்கும் படி இதர விஷயங்களை விட்டு இவ் விஷயத்தை பற்றும் படி
பண்ண போகாமை துர் வாசன பலம் உபதேசத்தை நிரர்தகம் ஆக்கி விடும் இறே-
ஜன்மாந்திர  சகஸ்ரேஷூ யா புத்திர் பாவிதா நிருணாம்
தாமேவ பஜதே ஜந்துருபதேசோ நிரர்தக-என்ன கடவது இறே –
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போருகை யாவது –
சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனா யறத்தையே மறந்து புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கி -என்றும் –
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து கண்டவா திரிந்து -என்றும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -என்றும் சொல்லுகிறபடி –
இதர விஷயங்களிலே அத்யபி நிவிஷ்டராய் -யாதேனும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டு கொண்டு –
பகவத் விஷயத்தில் முகம் வைக்க இசையாதே வர்திக்கை-இப்படி போரும் சேதனருக்கு –
வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கை -யாவது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன பல்ஆதரம் பெருக வைத்த அழகன் -என்கிறபடியே
ஸ்வ சௌந்தர்யாதிகளாலே -சித்த அபஹாரம் பண்ணி -தன்னை காண வேண்டோம் என்று
இருக்கும் இருப்பை குலைத்து கண்ட கண் மாற வைக்க மாட்டாதபடி பண்ணுகை-
ருசி பிறந்தால் உபாயம் ஆகையாவது -இப்படி தன லக்ஷண்ய  தர்சனத்தாலே
தன்னை நித்ய அனுபவம்பண்ண பெற வேணும் என்னும் ருசி பிறந்த அநந்தரம்-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -என்கிறபடி
சம்சார நிவ்ருத்தி பூர்விகையான  ஸ்வ ப்ராப்திக்கு தானே சாதனம் ஆகை-
உபாய பரிகிரகம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கை ஆவது –
தன்னை உபாயமாக பரிகிரகித்தால் உபேய சித்திக்கு ஒரு தேச விசேஷத்திலே போம் அளவும் பார்த்து இருக்க வேண்டாதே –
அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாதே -என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே  திரு மால் இரும் சோலை கோனே -என்றும்
சொல்லுகிறபடியே நிரதிசய போக்யமாய் இருக்கையாலே தானே உபேயமுமாய் இருக்கை–

ஆக-
பிரபதிக்கு குண பூர்த்தி  உள்ள இடமே விஷயமாக வேணும் என்றும் –
அது தான் உள்ளது அர்ச்சாவதாரத்திலே என்றும் –
அத்தை பற்ற ஆழ்வார்கள் எல்லோரும்  பிரபத்தி பண்ணிற்று இவ் விஷயத்தில் என்றும் –
இவ் விஷயத்தில் எல்லா குணங்களும் புஷ்கலங்கள்  என்றும் –
விசேஷித்து ப்ரபத்திக்கு அபேஷித குணங்கள் விசதமாக பிரகாசிப்பது இங்கே என்றும் –
இது தான் தன்னுடைய நைர பேஷ்யாதிகளை அழிய மாறி –
தன்னை அநாதரிப்பாரை ஆதரித்தது கொண்டு நிற்கிற ஸ்தலம் என்றும் –
பரத்வாதிகள் ஒரொரு பிரகாரத்திலே துர்லபம் -இது சர்வ பிரகார சுலபம் என்றும் –
இவ்வளவே அன்றி இவ் விஷயம்
ருசி ஜநகமுமாய்
உபாய
உபேயமுமாய்
இருக்கும் என்றும் சொல்லப் பட்டது –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை-23/24/25/26/27/28/29/30/31/32—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 26, 2012

சூரணை -23
பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

கீழ் உக்தமான உபாயத்தின் உடைய ஸ்வீகார ரூபையாய்-பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் -என்று
ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதையான பிரபத்தி யினுடைய படியை -விஸ்தரேண அருளி செய்கிறது மேல் –

அதில் பிரதமத்தில் அர்ஜுனனுக்கு பிரபத்தி உபதேசம் பண்ணுகிற அளவில் -யுத்த பூமியில் -ஒரு கால
விசேஷம் பாராமல் -ச்நாநாதிகளும் இன்றிகே இருக்க -உபதேசிப்பான் என் –
இதுக்கு தேசாதி நியமங்கள் இல்லையோ -என்கிற சங்கையிலே அருளி செய்கிறார் -பிரபத்தி யாவது -பகவச் சரண வரணம்-
தேச நியமம் ஆவது -புண்ய தேசங்களில் செய்ய வேணும்
அந்ய தேசங்களில் ஆகாது என்னும் அது –
கால நியமம் ஆவது -வசந்தாதி காலங்களிலே செய்ய வேணும் –
அந்ய காலங்களில் ஆகாது என்னும் அது –
பிரகார நியமம் ஆவது -ஸ்நான பாத ப்ரஷாள நாதி பூர்வகமாக செய்ய வேணும் –
பிரகாரா ந்தரத்தாலே செய்ய ஒண்ணாது என்னும் அது –
அதிகாரி நியமம் ஆவது -த்ரை   வர்ணிகராக வேணும் –
அத்ரை வர்ணிகராக ஒண்ணாது என்னும் அது –
பல நியமம் ஆவது -த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் இன்ன பலத்துக்கு இது சாதனம் –
அந்ய பலத்துக்கு சாதனம் அன்று என்னும் அது –
தேச கால சாத்குண்யா வை குண்யங்கள் அடியாக வரும் அதிசய அனதிசயங்களை
உடைத்தாவது ஓன்று அல்லாமையாலும் –
தீர்த்தத்திலே அவஹாகிக்கும் அளவில் -சுத்த அசுத்த விபாகம் அற அவஹாக்கிக்கலாய் இருக்குமா போலே
ஸ்வயமேவ பவித்ரமாய் -சுத்த அசுத்த விபாகம் அற –
தன்னோடு அன்வயிகலாம் படி இருக்கையாலும் –
வர்ணாத் அநு ரூபமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலும் –
செதனருடைய ருசி அநு குணமான பல விசேஷங்களுக்கு சாதனம் ஆவது ஒன்றாலும் –
இந் நியமங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்கிறது –
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம்
பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம்  சர்வகாம பலப்ரதா -என்று
பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

———————————————-

-சூரணை -24
விஷய நியமமே உள்ளது –

இவை இல்லையாகில் -மற்றும் சில நியமங்கள் இதுக்கு உண்டோ என்ன
அருளி செய்கிறார் –

அதாவது
இன்ன விஷயத்தில் செய்ய வேணும் என்கிற நியமமே இதுக்கு உள்ளது என்ற படி –
இவை எல்லாம் தாமே மேலே உபபாதித்து அருளுகிறார் இறே

—————————————————–
சூரணை-25
கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த் ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இதுக்கு இவை ஒன்றும் இல்லை யாகில் பின்னை எதுக்கு தான் இவை எல்லாம் உள்ளது என்ன –
அருளி செய்கிறார் –

கர்மம் ஆவது ஜியோதிஷ்டோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் ஆவன சாஸ்த்ரங்களில் பாவன தயா அபிஹிதங்களான தேசங்கள் –
வசந்தாதி -என்கிற இடத்தில் ஆதி சப்தாதாலே -க்ரீஷ்ம சரச்சுக்ல கிருஷ்ண பஷ
பூர்வாஹ்ன அபராஹ்னாதி காலங்களை சொல்லுகிறது –
வசந்தே வசந்தே ஜியோதிஷா யஜதே -இத்யாதிகளாலே
கால நியமம் சொல்லப் படா நின்றது இறே-
சாஸ்த்ரோத்தங்கள் ஆன தத்வத் பிரகாரங்களான ஸௌ சாமசமான -ஸ்நான -வ்ரத-ஜபாதி
ரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநு குணமாக சாஸ்திர விஹிதங்களானஅவ்வவ பிரகாரங்கள் –
த்ரை வர்ணிகர் -என்றது உபநயன சம்ஸ்கார பூர்வகமாக வேதாதி  அதிகாரிகளான வர்களுக்கே
வைதிக கர்ம அதிகாரம் உள்ளது ஆகையாலே –
இது தான் -க்ருக மேதித்வ கிருஷ்ண கேசித்வ வேத வேதாங்க உக்த த்வாதிகளுக்கும் உப லஷணம்-
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் -என்றது -நியதங்களாய் இருக்கும் என்ற படி-

——————————————–

சூரணை -26
ச ஏஷ தேச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை –

பிரபத்திக்கு இவை ஒன்றும் இல்லை என்று கீழ் பண்ணின பிரதிக்ஜையை
உபபாதிகையிலே பிரவ்ருத்தராய் -பிரதமம் தேச கால -நியம
ராஹித்யத்தை உபபாதிக்கிறார் –

பத்த வைராச்ச பாபச்ச ராஷ செந்தராத் விபீஷண
அதேச கால சம்ப்ராப்தஸ் சர்வதா சங்க்யதா மயம்-என்று முன்பு  ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர்
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்த பஷத்தை தூஷிக்கிற திருவடி –
அதேச காலே சம்ப்ராப்த இத்யயம் ச விபீஷண
விவஷா சாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி
ச ஏஷ கால தேச
காலச்ச  பவதீஹ யதா ததா
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி
தவ் ராத்மயம்  ராவேணா த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச  ததா த்வயி
யுக்தம் ஆகமனம்  தஸ்ய சத்ருசம் தஸ்யபுத்தித -என்று ராவண னாலே அவமாநிதனாய்  ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு கொண்டு
சரணம் என்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அதேசத்திலே அகாலத்திலே வந்தான் என்று
தேவருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப் பட்டது -இந்த பஷத்திலே விசேஷித்து
எனக்கு இந்த விவஷை உண்டாகா நின்றது -அவன் வருகிற அளவில் யாதொரு தேசத்திலே
யாதொரு காலத்திலேயே வந்தான் -அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமும்
யாதொரு படி -அப்படி பட்ட விவஷையை நான் அறிந்த அளவு விண்ணப்பம் செய்ய கேட்டு அருள வேணும் –
எங்கனே என்னில் –
தம பிரகிருதி ஆகையாலே -பர ஹிம்சையே யாத்ரை யான ராவணனில் காட்டில்
சத்வோத்தர் ஆகையாலே -பரரஷணம் யாத்ரை யாய் இருக்கிற தேவரீரை பிராப்யராக புத்தி பண்ணி
அப்படியே அவனை விட்டு போராது ஒழிந்தால் அவனுடைய அக்ருத்யத்துக்கு சஹகாரியாய்-அந்த
ப்ராதிகூல்யத்தோடே முடிந்து போகிற தோஷத்தையும் -தார்மிகரான தேவரீர் உடன் கூடப் பெற்றால்
தத் பலமாக தேவரீர் உடைய திருவடிகளில் கைங்கர்யத்தை லபித்து வாழுகை யாகிற நன்மையையும்-புத்தி பண்ணி
அப்படியே தேவரீர் திரு உள்ளத்தில் புண் படும் படி குற்றத்தை தீர கழிய செய்து நிற்கிற ராவணன்
தவ் ராத்மத்தையும் -துராத்மாக்களை அநாயேசன அழிக்க வல்ல தேவரீர் ஆண் பிள்ளை
தனத்தையும் கண்டால் விசேஷ ஞானன் அவனுக்கு இவ் வரவு பிராப்தம் –
நியாயத்திலே சஞ்சரிக்கும் அவனுடைய புத்திக்கும் இது சத்ருசம் என்றான் இறே-
ஆக இப்படி பாவ சுத்தியை உடையனான ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் சரணம் என்று வந்த
தேச கால ங்களில் குறை பார்க்க கடவது அல்ல -அவன் வந்த அதுவே தேசமும் காலமும்
என்று சரணாகதி  தர்மஜ்ஞனான திருவடி நிர்ணயிக்கையாலே பிரபதிக்கு தேச கால நியமம் இல்லை என்கை-

—————————————————–

சூரணை-27
இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்

இது தான்  பிரபத்திய அனுஷ்டான ரூபமான த்வ்யத்தில்
பிரதம பதத்தில் காணலாம் என்கிறார் –

அதாவது
சகல உபநிஷத் சாரமாய்–சர்வாதிகாரமாய் – -அவிளம்ப்ய பல பிரதமாய் -சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய் -சர்வ மந்த்ர உத்க்ருஷ்டதயா-
என்கிறபடியே மந்திர ரத்னாக்க்யமாய் இறே த்வயம் இருப்பது –
அந்த வைபவம் தோற்றுகைகாக-மந்திர ரத்னம் என்கிறார் -த்வயம் – என்னாதே
அதில் பிரதம பதத்தில் மதுப் அர்த்தமான -புருஷகார உபாய நித்ய யோகத்துக்கு பிரயோஜனம் –
ஏதேனும் ஒரு தேசத்தில் -ஏதேனும் ஒரு காலத்தில் -ஒரு சம்சாரி சேதனனுக்கு சமாஸ்ராயண ருசி விளைந்தால் –
சஞ்சலம் ஹி மன –
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-
என்கிற படியே சூறாவளி காற்று போலே சுழன்று வருகிற நெஞ்சு தளமாக அங்குரித்து
க்ஷண பங்குரையான ருசி தீருவதற்கு முன்னே -தத் உத்பத்தி ஷணத்திலே ஆஸ்ரயிகலாய் இருக்கை இறே-
ஆகையாலே பிரபத்தி யினுடைய தேச கால நியம ராஹித்யம்-அந்த பதத்தில் நன்றாக தோற்றும் என்கிறார்-

———————————————

சூரணை-28
பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

பிரகார நியம ராஹித்யத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

எங்கும் காணலாம் -என்றது –
இத்தை அனுஷ்டிப்பார்
ஸ்ரவிப்பார் –
எல்லார் பக்கலிலும் காணலாம் என்ற படி –

——————————

சூரணை-29-
திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

அது எங்கே கண்டது என்ன -பூர்வ பிரக்ருத விஷயங்களிலே தர்சிப்பிக்கிறார் –

திரௌபதி இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே -ஸ்நாததையா
ரஜஸ் வலைக வச்த்ராஹம் நது மாம் நேது  மர்ஹசி குரூணாஞ்ச புரச்ஸ்தாதும்
சபாயாம் நாஹா முத்சஹே-என்னும் படி அசுத்தையாய் இருக்கிறவள் ஸ்நானம் பண்ணி அன்றே பிரபத்தி
பண்ணிற்று என்றபடி -இத்தால் பிரபத்தி பண்ணுவார்  பிரயதராய் பண்ண வேணும் என்னும்
நியதி இல்லாமை காட்டப் பட்டது -நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது -என்ற இடத்தில்
நீசர் என்கிறது -நெடும் தகையை நினையாதார் நீசர் -பெரியதிரு மொழி -11 -6 -8 –
ஆழ்வார் அருளிச் செய்த ஸௌரி சிந்தா விமுகரான ஹேயரை-
விஷ்ணு பக்தி விஹிநச்து யதிச்ச ச்வபசாதம
விப்ராத் த்விஷட்குனயுதா தரவிந்த நாப பாதாரவிந்த விமுகாஸ் ச்வபசம் வரிஷ்டம் -என்று
பகவத் விமுகரை ச்வபசதமராக சொல்லிற்று இறே –
அதுக்கு மேல் சரணாகதையை  பரிபவித்தும் சரணா கதரான பாண்டவர்கள் திறத்திலே
தீங்குகளை செய்தும் போருகையாலே -சத்யஸ் சண்டாலதாம் வ்ரஜேத் -என்கிற கர்ம சண்டாளர் இறே
கை கலந்து நிற்கிறது –
நீசர் நடுவே என்கையாலே நீசஸ்   ப்ருஷ்டியால் இவனுக்கு உண்டான அசுத்தியும்
நீச சகாசத்திலே என்னும் இடமும் தோற்றுகிறது-
இத்தால் பிரபத்தி ஸ்ரவணம் பண்ணும் போது-நீசர் மத்யத்தில் ஆகாது என்னும் நியதி
இல்லாமை காட்டப் பட்டது-

—————————————————

சூரணை -30
ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

இத்தால் பலித்ததை சொல்லா நின்று கொண்டு இவ் அர்த்தத்தை நிகமிக்கிறார் –

ஆகையால் -என்றது -அனுஷ்டான தசையிலும் சரவண தசையிலும் இவர்கள் இருவரும் இப்படி
செய்கையால் என்றபடி –
சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா -என்றது -பிரபத்தியில் அன்வயிக்கும் அளவில்
அசுத்தனாய் இருக்கும் அவனுக்கு சுத்தி சம்பாதிக்க வேண்டா –
சுத்தனாய் இருக்கும் அவனுக்கு அசுத்தி சம்பாதிக்க வேண்டா என்றபடி –
அசுத்திதேட வேண்டாம் என்றது -கீழ் சொன்ன வர்கள் இருவரும் அசுத்தமான தசையில்
பிரபத்தியில் அன்வயித்தமை சொல்லுகையாலே -அசுத்தி தான் இதுக்கு வேணும் என்று
சங்கியாமைக்கு-
இருந்தபடியே அதிகாரி யாம் இத்தனை -என்றது -பிரபதன காலத்தில் அசுத்தனாய் ஆதல் –
சுத்தனாய் ஆதல் -யாதொரு படி இருந்தான் -இருந்ததொரு பிரகாரத்திலே -இதுக்கு
அதிகாரி யாம் இத்தனை என்றபடி
திரௌபதியும் அர்ஜுனனும் -பிரபத்தி அனுஷ்டான -தத் ஸ்ரவண தசைகளில் –
தத் அங்கமாக சுத்தி சம்பாதியாதவோபாதி அசுத்தியும் சம்பாதித்து கொண்டமை இல்லை இறே –
இருந்தபடியே அதிகாரிகளான இத்தனை இறே –

————————————————

சூரணை -31
இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

இவ் அர்த்த விஷயமாக ஆப்த வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –

அதாவது -வேல் வெட்டி பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்
பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே –
இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று
நம்பிள்ளையை கேட்க -பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு
உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி –
என்று உபதேசித்தான் ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில்
கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய்  இருக்கையாலே –
தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் –
இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் –
ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளி செய்த வார்த்தை –

———————————————–

சூரணை -32
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அநந்தரம்-
அதிகாரி நியம அபாவத்தையும் உபபாதிப்பதாக -தத் -ஞிஜ்ஜாஸூ  பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் -என்று –
அதுக்கு உத்தரம் அருளி செய்கிறார் -தர்ம புத்ராதிகளும் -என்று தொடங்கி-

அதாவது
திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம்
என்று ஷத்ரியரான தர்ம புத்ராதிகளும் –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்த புண்டரீகாஷம்
ரஷமாம் சரணா கதாம் -என்று ஸ்திரீயான திரௌபதியும் –
ச பித்ராச பரித்யக்தஸ் சூரைச்ச சமஹர்ஷிபி
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத-என்று
தேவ ரூபத்தை மறைத்து வந்து மகா அபராதத்தை பண்ணின காகமும் –
சோஹந்தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ச்துதவ் நச
சாமர்த்யவான் க்ருபாமாத்ர மனோவ்ருத்தி ப்ரசீத மே-என்று-திர்யக் யோநி ஜனாய் பிரதிகூலனுமான காளியனும் –
பரம பதமா பந்தோ மனசா சிந்த யத்ஹரிம் சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண -என்று
திர்யக் ஜன்மாவாய் அனுகூலனுமாயும் இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும் –
சொஹம் பருஷிதஸ் தேன தாச வச்சாவமா நித
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று-ராக்ஷஸ சஜாதீயனான  ஸ்ரீ விபீஷண  ஆழ்வானும் –
பாஹும் புஜக போகாப முபதாயாரி சூதன
அஞ்சலிம் பிரான்முக க்ருத்வா  பிரதிசிச்யே மகோததே -என்று-சர்வ சரண்யரான பெருமாளும் –
சப்ராதுஸ் சரணவ்காடம் நிபீட்ய ரகு நந்தன
சீதா முவாசா தியசா ராகவஞ்ச மகா வரதம் -என்று
அக்கரையராய் தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாளும் –
தொடக்கமானவர்கள் -என்கையாலே-
சோஹம் த்வாம் சரண மபார மப்ரமேயம் சம்ப்ராப்த
பரமபதம் யதோ ந கிஞ்சித்  சம்சார ஸ்ரம பரிதாப தப்த செத்தா நிர்வானே
பரிணததாம் நி சாபிலஆஷா -என்ற முசுகுந்தனும் –
மூடோய மல்பமதி ரல்ப விசேஷ்டி தோயம் க்லிஷ்டம் மனோச்ய விஷயர் நமயிப்ரசங்கி
இத்தம் க்ருபான் குரு மயிபிரண தே கிலேச தவாம் ஸ்தோது மம்புஜ பவோபிஹி  தேவ நேச -என்று ஷத்ர பந்துவும் –
பகவந்தம் பிரபன்நாஸா பகவன் தமவாப ஹ என்று மாதவியும் –
தம் பிரபன்ன சிரோக்ரீவம் ஆச்யேப்ய ஸ்ருத சோணிதம் விலோக்ய சரணம் ஜக்முஸ்
தத் பத்ன்யோ மதுசூதனம் -என்று காளிய பத்நிகளும் –
பிரணாம பரவண நாத தைத்ய சைனா பராஜித
சரணம் த்வா மனு பிராப்தாஸ் சமஸ்தா தேவதா தேவதா கணா-என்று இந்திராதி தேவர்களும் –
ராஷசைர் வைத்திய மாநானாம் வாநாரானாம் மகாசமூ
சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -என்று ஸ்ரீ வானர சேனையும்
முதலாய் உள்ளவர்கள் எல்லாரும் சரணம் புகுருகையாலே –
பிரபதிக்கு இன்னார் அதிகாரிகள் என்ற ஒரு நியதி இல்லை –
ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் என்கை-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-15/16/17/18/19/20/21/22.–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

March 25, 2012

உபய சாதாரண வைபவம்
சூரணை-15
புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

ஆக புருஷகார உபாயங்கள் இரண்டுக்கும் அசாதாராண வைபவத்தை அருளி செய்தார் கீழ்-
உபய சாதாரண வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –
தத்தத் சாதாராண வைபவம் சொல்லுகையாலே -புருஷகாரத்தையும் -உபாயத்தையும் -தனித்தனியே உபாதானம் பண்ணி அருளி செய்தார் கீழ் –
இது உபயத்துக்கும் சாதாரண-வைபவ கதனம் ஆகையாலே -புருஷகரத்துக்கும் உபாயத்துக்கும் -என்று தந்த்ரே னோபாதனம்
பண்ணி அருளி செய்கிறார் -உபயத்துக்கும் அசாதாராண வைபவம் சொல்லுகிற இடங்களில்
-இருவரையும் திருத்துவது -இத்யாதியாலே சாப்தமாக புருஷகார ஸ்வரூபமும் –
உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொள்கையாலே -என்கையாலே -ஆர்த்தமாக-உபாய ஸ்வரூபமும் சொல்லப் பட்டது –
இங்கு உபய ஸ்வரூப கதன பூர்வகமாக வைபவத்தை அருளி செய்கிறார் –

தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-என்று -தோஷம் ஆவது -அக்ருத்ய  கரணாதி  நிஷித்த அனுஷ்டானம் –
குனஹாநியாவது -விஹிதாகரணம் –
இவை இரண்டையும் -மநோ வாக் காயை -இத்யாதி சூர்னையாலே எம்பெருமானார் அருளி செய்தார் இறே –
இதம் குரு -இதம் மா கார்ஷீ -என்று விதி நிஷேதாத்மகமான சாஸ்திரம் தான் பகவத் ஆஞ்ஞா ரூபமாய் இறே இருப்பது –
ஸ்ருதிஸ் சம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று தானே அருளி செய்தான் இறே –
ஏவம் பூதம் சாஸ்த்ரத்தில் நிஷித்தத்தை செய்கையும் -விஹிதத்தை செய்யாமையும் இறே –
அநாதி காலம் ஷிபாமி ந ஷமாமி -என்னும் பகவன் நிக்ரகத்துக்கு இலக்காய் போருகைக்கு காரணம் –
இவை இரண்டையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே -என்றது –
ஆஸ்ரஎன உந்முக சேதன கதனங்களான இவற்றை தர்சித்து -இவனை வேண்டாம் என்று கைவிடாதே –
அங்கீகரிக்கும் மாத்ரம் அன்றிக்கே என்றபடி –

அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-யாவது –
அப்படிப் பட்ட தோஷ குண ஹானிகள் தன்னையே -முகம் மலர்ந்து
அங்கீகரிகைக்கு உறுப்பான உபகாரமாக கொள்ளுகை-
உபேஷியாமைக்கு ஹேது -தயா ஷாந்திகள்
பச்சை யாக கொள்ளுகைக்கு ஹேது -வாத்சல்யம் –
சுவடு பட்ட தரையில் புல் கவ்வாத பசு -தன் கடையில் நின்றும் விழுந்த கன்றின் உடம்பில்
வழும்பை போக்யமாக விரும்புமா போலே -இருப்பது ஓன்று இறே இது –
இக் குணத்துக்கு ஒப்பதொரு குணம் இல்லை இறே-ஆகையால் இறே -நிகரில் புகழாய் -என்று ஆழ்வார் அருளி செய்தது –
உடையவரும் -அபார காருண்யா சௌசீல்ய வாத்சல்ய என்று குணாந்தரங்கள் உடன்
ஒக்க அருளி செய்தே -இதன் வ்யாவ்ருத்தி தோற்ற மீளவும் -ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -என்றார் இறே –
இவ் வாத்சல்யம் தான் மாத்ருத்வ சம்பந்தத்தாலே ஈச்வரனிலும் பிராட்டிக்கு
அதிசயித்து இறே இருப்பது –
ஆகையால் இருவரும் தம் தாம் அங்கீகரிக்கும் தசையில் இச் சேதனனுடைய
தோஷ குண ஹானிகளை பச்சையாக கொண்டு அங்கீகரிப்பார்கள் என்கை-

———————————————————

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இப்படி புருஷகாரமும் -உபாயமும் -தோஷ குண ஹானிகள் குலைவதற்கு  முன்னே அங்கீகரிக்கிறது என் –
அவை குலைந்தே அங்கீகரிக்க கடவோம் என்று இருந்தால் வருவது என்என்ன -அருளி செய்கிறார் –

இரண்டும் என்கிறது -புருஷகார உபாயங்களை –
இரண்டும்  குலைய வேணும் என்று இருக்கை யாவது -இவனை அங்கீகரிக்கும் போதைக்கு இவனுடைய
தோஷ குண ஹானிகள் இரண்டும் -போய் கொள்ள வேணும் என்று நினைத்து
ஆஸ்ர்யேன உன்முகனாக இவனை அங்கீகரியாது இருக்கை-இப்படி இருக்கில் –
இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது -புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும்-தோஷ குண ஹானிகள்  இரண்டும் வருகை –
எங்கனே என்னில் -தோஷம் வருகை யாவது –
தவம் மாதா சர்வ லோகானாம்
தேவதேவோ ஹரி பிதா
அகில ஜகன் மாதரம்
பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய-என்கிறபடியே
சகல சேதனருக்கும் நிருபாதிக மான தாயும் தகப்பனும் ஆகையாலே இச் சேதனனுடைய நன்மை தீமைகள் இரண்டும்
தங்கள் தாம் படியான உறவு உண்டாய் இருக்க -இச் சேதனனுடைய
தோஷாதிகளை பார்த்து அங்கீகரியாமையாலே-தாத்ருசா சம்பந்தத்ததுக்கு-கொத்தை விளைகை-
குண ஹானி வருகை யாவது -இவனுடைய துக்கம் கண்டு இரங்காமையாலும் –
இவனுடைய தோஷத்தை போக்யமாக கொள்ளாமையாலும்-க்ருபா வாத்சல்யங்களுக்கு ஹானி வருகை –
அதவா –
இரண்டும் உண்டாய்த்தாம் -என்கிற இடத்திலும் -தோஷ குண ஹானிகள் ஆவன –
அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்கள் ஆகவுமாம்
புருஷகாரத்துக்கு அக்ருத்யகரணமாவது-ஈஸ்வரனையும் உள் பட தோஷம்
காண ஒட்டாத  தான் -தோஷாதிகள் குலைந்து அன்று அங்கீ கரியேன்-என்று இருக்கை-
க்ருத்ய அகரணம் ஆவது -இவனுடைய தோஷாதிகள் பாராதே -கை கொண்டு
ஈச்வரனோடு சேர்பிக்கை ஆகிற ஸ்வ க்ருத்யத்வத்தை செய்யாமை –
ஈஸ்வரனுக்கு அக்ருத்ய கரணமாவது-சம்சாரி சேதனருடைய தண்மையை பார்த்து கை விடாதே –
நித்ய -நிருபாதிக சம்பந்தம் அடியாக -அத் வேஷமே உண்டாக்குகைக்கு -எதிர் சூழல் புக்கு திரிகிற சர்வ பூத சூக்ருதனான தான்
இச் சேதனனை அங்கீகரிக்கும் அளவில் இவன் தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீகரியேன் என்று இருக்கை –
க்ருத்ய அகரணமாவது-இவனுடைய தோஷாதிகளை பாராதே கை கொண்டு ஸ்வ க்ருத்யமான
அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை பண்ணாமை –
இது தான் சேதனனுக்கு சொன்ன அக்ருத்ய கரணாதிகளை சாஸ்த்ரத்தை பற்ற சொல்லுகிறது அன்றே –
இவர்கள் ஸ்வபாவத்தை பற்றி சொல்லுகிற இவை இத்தனை இறே-விமுகரையும் உள் பட தோஷ குண ஹானிகள் பச்சையாக மேல் விழுந்து அங்கீகரிக்கும்
ஸ்வபாவரான இவர்களுக்கு -அபிமுக சேதனர்களை அங்கீகரிக்கும் அளவில் தோஷாதிகள்
குலைய வேணும் என்று இருக்கை தான் முதலிலே கூடாமையாலே இவர்களுக்கு இவை
வருகைக்கு அவகாசம் இல்லை இறே-ஆயிருக்க செய்தே இப்படி அருளி செய்தது –
இவ் அர்த்த தத்வம் அறியாதவர்களுக்கு ஆச்ராயண உந்முக சேதன கதங்களான
தோஷ குண ஹானிகள் குலைய வேணும் என்று இராமல் அவற்றுடனே அங்கீகரிக்கை
இவர்களுக்கு அவஸ்ய கரணீயம் என்று அறிவிக்கைக்காக

————————————————-

சூரணை-17
இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இப்படி தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீ கரியோம் என்று இருக்கில்
அத் தலைக்கு அவை இரண்டும் வரும் என்னும் இடம் சொல்லி –
தோஷாதிகள் குலைய பட்டு அன்றோ நம்மை அங்கீகரித்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இவை இரண்டும் வரும் என்கிறார் மேல் –

இரண்டும்  குலைந்தது என்று இருக்கை யாவது –
இத்தனை நாளும் நம்மை அங்கீகரியாதவர்கள்-இன்று அங்கீகரித்தது -நம் தோஷாதிகள்
குலையைப் பட்டு அன்றோ -ஆகையால் நமக்கு அவை குலைந்தது என்று அநு சந்தித்து இருக்கை –
இப்படி இருக்கில் -இத் தலைக்கு இரண்டும் உண்டாகையாவது –
அக்ருத்ய கரணமும்-க்ருத்ய அகரணமும் வருகை –
எங்கனே என்னில் -இவ் வதிகாரிக்கு -அநாதி காலம் அங்கீகரியாதவர்கள் இன்று நம்மை
அங்கீகரித்தது நம்முடையதோஷ ஹானிகள் இரண்டும் குலைந்த வாறே அன்றோ
என்று அநு சந்திக்கை -அக்ருத்யமாய் இருக்க -அத்தை செய்கையாலும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -திரு வாய் மொழி – 3-3 -4-
அமர்யாத
புத்தவாச நோச
அதிக்ரம அந் நாஜ்ஞம்-இத்யாதிபடியே
நம்முடைய தோஷ குண ஹானிகள்  இப்போது அளவாக ஒன்றும் குலைந்தது இல்லை என்றும் –
இப்படி இருக்க செய்தே தோஷாதிகளே பச்சையாக நம்மை அவன் அங்கீகரித்து அருளுவதே
என்றும் அநு சந்திக்கை க்ருத்யமாய் இருக்க அத்தை செய்யாமையாலும்-இரண்டும் வரும் இறே

————————————————

சூரணை -18
ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இப்படி புருஷகாரமும் உபாயமும் -தோஷாதிகள் பச்சையாக அங்கீகரித்த இடம் உண்டோ
என்னும் அபேஷையிலே-தத் தத் அங்கீகாரம் பெற்ற ராஷசிகள் உடையவும் –
அர்ஜுனன் உடையவும் –
தோஷங்களை தர்சிப்பிக்கவே அது சித்திக்கும் என்று நினைத்து
ப்ரதமம் ராஷசிகள் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –

ஏகாஷி ஏக  கரணி முதலான ஏழு நூறு ராஷசிகளும் பரஹிம்சை பண்ண பெறில் உண்ணாதே
தடிக்கும் படி ப்ரக்ருத்ய  பாப சீலைகளாய்-பத்து மாசம் ஒரு படி பட்ட தர்ஜன பர்த்ச்னம் பண்ணி
நலிந்து போந்தவர்கள் இறே –
இவர்கள் தோஷம்  பிரசித்தம்-என்றது -ஸ்ரீ ராமாயணம் நடையாடும் தேசத்தில்
அறியாதார் இல்லை என்ற படி -ஏவம் பூதைகள் ஆனவர்களை குறித்து
ராஜ சம்ஸ்ரைய வச்யானாம் –பாபானாம் வா சுபானாம் வா -என்று
குற்றத்தை குணமாக உபபாதித்து -திருவடியோடே மன்றாடி –
ரஷிக்கையாலே -தோஷமே பச்சையாக அங்கீகரித்தமை
பிரசித்தம் என்று கருத்து –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது -தோஷம் பச்சை யாம் இடத்தில்
குண ஹானி பச்சை யாம் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே என்று –
இவர்கள் தங்களுக்கு குண ஹானி யாவது –
இடைவிடாது நலிந்து போகிற இடத்தில் இவளும் நம்மோபாதி ஒரு பெண் பிறந்தவள்
அன்றே என்றாகிலும் மறந்தும் அல்பம் நெஞ்சில் இரக்கம் உண்டாதல் –
பவேயம் சரணம் ஹி வ -என்றதற்கு பின்பு நலிகிற இடத்தில் -ஐயோ இப்படி சொன்னவள் அன்றோ –
என்று சற்றும் நெஞ்சு உளுக்குதல் செய்யாமை -முதலானவை –

————————————————

சூரணை-19
ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

இப்படி தோஷ பிரசுத்தி அர்ஜுனன் பக்கல் இல்லாமையாலும் -குண பிரதை உண்டாகையாலும் –
இவனுக்கு தோஷம் எது என்கிற சங்கையை அனுவதித்து கொண்டு தத் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –

ஜிதேந்திரியரில் தலைவன் என்றது –
ஆரணச்ய ஆபரணம் பிரசாதன விதே பிரசாதன விசேஷ
உபமானாச்யாபி சகே பிரத்யுபமானம் வாபஸ் தஸ்யா -என்னும் வைலஷண்யம் உடைய
ஊர்வசி வந்து மேல் விழ முறை கூறி நமஸ்கரித்து கடக்க நின்றவன் ஆகையாலே
இந்திரிய ஜெயம் பண்ணினாரில் தனக்கு மேல் பட்டார் இல்லாதவன் -என்கை
ஆஸ்திக அக்ரேசன் -என்றது
தர்ம அதர்ம பர லோக சேதன ஈச்வராதிகளுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில்
ப்ரமாண்ய புத்தி உடையவர்களுக்கு முன் நடக்கும் அவன் என்கை –
கேசவச்யாத்மா என்று கிருஷ்ணனுக்கு தாரகமாய் இருக்கிற -என்றது
அர்ஜுன கேசவச்யாத்மா கிருஷ்ணஸ் சாத்மா கிரீடின-என்று அன்யோன்யம் பிராண பூதராய்
இருப்பார்கள் என்கையாலே -இவனை பியில் கிருஷ்ணன் தரிக்க  மாட்டான் என்னும் படி
அபிமத விஷயமாய் இருக்கும் அவன் என்கை

இப்படி இருக்க -அர்ஜுனனுக்கு தோஷம் எது என்ற சங்கை -என்னில் -என்றது -அநு வாதம் -தோஷங்கள் தன்னை சொல்லுகிறது –
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும் -என்று –
இவற்றில் சிநேக காருண்யங்கள் தோஷங்கள் ஆகிறது -அஸ்தானே க்ருதங்கள் ஆகையாலே –
வத பீதி தோஷம் ஆகிறது -ஸ்வ தர்மத்தில் அதர்ம புதத்யா வந்தது ஆகையாலே –
அஸ்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம த்யாகுலம் -என்று இறே ஆளவந்தாரும் அருளி செய்தது –
தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே சமவேதா யுயுத்சவ -என்கிறபடியே யுத்த இச்சையிலே இரண்டு தலையும்
வந்து அணைந்து நின்ற பின் -யுத்தமே கர்த்தவ்யமாய் இருக்க -அத் தசையில் –
ந கான்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் சூகாநிச கிம் நோ ராஜ்யேன
கோவிந்த கிம் போகைர் ஜீவதேநவா ஏஷாமர்த்தே கான்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் சூகாநிச
த இமே வச்திதாயுத்தே ப்ரானான் த்யக்த்வா தநாநிச -இத்யாதி படியே
இவர்களை கொண்டு நான் ஜீவிப்பதொரு ஜீவனம் உண்டோ என்று பந்துக்கள் பக்கல்
பண்ணின சிநேகம் -ஸ்வ வர்ண வ்ருத்தம் ஆகையாலே நிஷித்தம் இறே –
தான் சமீஷ்ய  ச கௌ ந்தேயஸ் சர்வான் பந்தூ ந வஸ்திதான்
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந் நித மப்ரவீத் -என்னும்படி
அத் தசையில் பண்ணின காருண்யமும் -பஸ்வா லம்பநத்தில் காருண்யம் போலே நிஷித்தம் இறே –
கதம்  நஞ்ஞேய மச்மாபி பாபா தஸ்மா ந் நிவர்த்திதம்  குலஷய
க்ருதம் தோஷம் பிரபச்யத்பிர் ஜனார்த்தன -என்று தொடங்கி-
அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவசிதா வயம்
யத் ராஜ்ய  சூகலோபேன ஹந்தும் ஸ்வ ஜன முத்திதா -என்னும் அளவும்
ஸ்வ வர்ண தர்மமான வாதத்திலே அதர்மபுத்த்யா பண்ணிய பீதியும் அப்படியே இறே

—————————————————-

-சூரணை-20
திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது
கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இவை எல்லாம் அப்ரதானம் -இன்னும் பிரதான தோஷம் வேறே என்கிறார் –

முன்பு திரௌபதியை துர்யோதநாதிகள் பரிபவிக்கிற படியை கண்டு இருக்க செய்தே –
சூதிலே தோற்றமையை நினைத்து -அதர்ம பீதியாலே பொறுத்து இருந்தாலும் –
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணாம் கதம் -என்று கிருஷ்ணனை சரணம் புகுந்த பின்பு
பரிபவிக்கிற அளவில் -பகவத் ஆஸ்ரயிரை பிறர் பரிபவிக்க கண்டால் சக்தன் ஆகில் விலக்க வேண்டும் –
அசக்தன் ஆகில் இழவோடஅவ்வருகே போக வேணும் என்னும் விசேஷ சாஸ்திர மரியாதை பார்த்தாதல் –
தன் அளவில் கிருஷ்ணனுக்கு உண்டான சிநேக பஷ பாதங்களை நினைத்து -அவனை சரணம்
புகுந்தவள் பரிபவிப்பட பார்த்து இருந்தால் அவன் முகத்தில் நாளை விழிக்கும் படி என்-என்றாதல் –
சரக்கென எழுந்து இருந்து விலக்க இறே அடுப்பது –
அத்தை செய்யாதே முன்புத்தையில் காட்டில் ஒரு விசேஷம் அற இருந்தான் இறே –
இதுவே ஆய்த்து இவன் தோஷங்கள் எல்லா வற்றிலும் பிரதானமாக கிருஷ்ணன் திரு உள்ளத்தில்
பட்டுக் கிடப்பது -அத்தை பற்ற -கிருஷ்ணன் அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் -என்கிறது –
தோஷத்துக்கு பிரதாந்யம் க்ரௌர்யத்தால் இறே –
அல்லாதவை போல் அன்றிக்கே -ந ஷமாமி -என்னும் படி யான தோஷம் இறே இது –

—————————————————-

சூரணை -21
பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க
வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

இத் தோஷத்தின் கொடுமையை உபபாதிக்கிறார் மேல் –
அன்றிக்கே இத் தோஷம் ஐவர்க்கும் ஒவ்வாதோ -ஆன பின்பு இத்தலையையும்
நிரசித்து பொகடாமல் வைத்தது என் என்கிற சங்கையில் அருளி செய்கிறார் ஆகவும்-

முற்பட சங்கதிக்கு அர்ஜுனனை என்னாதே -பாண்டவர்களையும் -என்றது இத் தோஷம் ஐவர்க்கும்
ஒக்கும் என்று தோற்றுகைக்காக என்று யோஜிக்க கடவது –
அனந்தர சங்கதிக்கு தானே தன்னடைவே சேரும் இறே
பரிபவித்த துர்யோதனாதி களோபாதி பரிபவம் கண்டு இருந்த இவர்கள்
நிரசநீயர் என்கிறது  -ச சப்தத்தாலே –
நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது -என்றது -இவர்கள் செய்த கொடுமைக்கு
தலையை அறுத்து பொகட வேண்டி இருக்க -பிராணனனோடே இருக்கும் படி -வைத்தது என்ற படி –
திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக -என்றது -அவளுக்கு அபிமதமான மங்கள சூத்ரம்
போகாமைக்கு என்ற படி -விரித்ததலை காண மாட்டாதவன் -வெறும் கழுத்து காண மாட்டான் இறே –
இத்தால் ஆஸ்ரிதரை பரிபவித்தோரோ பாதி அது கண்டு இருந்தாரும் நிரசன நீயர் என்னும் இடமும் –
அவர்கள் தாங்களே ஆஸ்ரிதர்க்கு விட ஒண்ணாத தொரு பந்தம் உடையார் ஆகில்
அவர்களுக்காக அவனால் ரஷிக்க படுவர் என்னும் இடமும் -பிரகடிதம் ஆய்த்து –

——————————————————–

சூரணை -22
அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

ஆனால் இப்படி நிரச நீயன் ஆனவனுக்கு இழி தொழில் செய்ததும்
பரம ரஹச்யத்தை உபதேசித்ததும் -என் செய்ய என்ன -அருளி செய்கிறார் –

தூது போய்த்தது-பொய் சுற்றம் பேசி நின்று பேதம் செய்து பூசல் விளைக்காக-பெரியாழ்வார் திருமொழி
சாரத்தியம் பண்ணிற்று -ஆயுதம் எடுக்க ஒண்ணாது ஆகையாலே -கொல்லா மா கோல் கொலை செய்து
பாரத போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவிக்கைக்காக -திரு வாய் மொழி -3- 2- 3-
பிரபத்தி உபதேசம் பண்ணிற்று -ந யோத்ச்யாமி -என்று இருந்தவனை -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி
யுத்தே பிரவ்ருத்தன் ஆக்குகைக்காக –
இவை எல்லாம் செய்தது -சரணாகதையான இவள் சங்கல்பத்தின் படியே
துர்யோநாதிகளை அழிய செய்து இவள் குழலை முடிப்பைக்காக இறே –
ஆக அர்ஜுனன் திறத்தில் செய்த தூத்யாதி த்ரயமும் இவளுக்காக செய்தான் என்கிறது –
பாண்டவர்களையும் என்று தொடங்கி -இவ்வளவும் கீழ் சொன்ன பிரதான தோஷ
க்ரௌர்யமும் உபபாதிதம் ஆய்த்து -ஆக இப்படி
அஸ்தான ச்நேகாதிகளும் -சரணாகதை பரிபவம் கண்டு இருந்த மகா தோஷமும்
இவனுக்கு உண்டாய்  இருக்க –
சர்வ குஹ்யதமம் பூய –
ஸ்ருணுமே பரமம் வச –
இஷ்டோசி மே த்ருட இதி ததோ வஹ்யாமி தேஹிதம் –
மன் மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ்  குரு மமே வைஷ்யசி சத்யம் தே
பிரதி ஜானே ப்ரியோசி மே -என்று
இவன் அளவில் உகப்பு தோற்ற அருளி செய்கையாலே இவன் தோஷங்களை பச்சையாக கொண்டு
அங்கீகரித்தமை பிரசித்தம் என்று கருத்து –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது -தோஷம் பச்சையாம் இடத்தில் குண ஹானி பச்சை யாம் என்னும் இடம்
கிம்புனர் நியாய சித்தம் ஆகையாலே —
இவன் தனக்கு குண ஹானிகள் ஆவன –
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -என்று அருளி செய்த போதே –
கரிஷ்யே வசனம் தவ -என்று எழுந்து இருந்து ஸ்வ க்ருத்யமான யுத்தத்தை பண்ணாமையும் –
கிருஷ்ணனை சரணம் புகுந்தவளை பரிபவிக்க விட்டு பார்த்து கொண்டு இருந்தோமே என்னும்
அநு தாப லேசமும் நெஞ்சில் இல்லாமையும் தொடக்கமானவை –
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காகா வாகில்-
இவன் தோஷத்தை பச்சையாக கொண்டு அங்கீகரித்தான் என்னும் அது கூடாதே-என்னில் -அதுக்கு குறை இல்லை –
இவள் கார்யார்த்தமாக இவனை குறித்து இவை எல்லாம் செய்கிற இடத்தில் -இவன் தோஷங்களை
பார்த்து முகம் சுளியாமல் உகப்போடே செய்கையாலே -அர்ஜுனனை குறித்து ஆச்சார்யா க்ருத்யாதிகளை
ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அவன் தோஷத்தை பச்சையாக கொண்டும் -சாரதியாக புரை யற கலந்து நின்றும்
செய்கை முதலானவை உண்டாகையாலே –
அறியாத அர்த்தங்களை -இத்யாதியாலே -ஆஸ்ராயண சௌகர்ய ஆபாதங்களான வாத்சல்யாதி குணங்கள் சூசிதம் –
இங்கே -தூத்ய சாரத்வங்கள் பண்ணிற்றும் -என்கிற இத்தாலே –
அஸ்மாத் வேத்த பரான் வேத்த  வேத்தார்த்தம் வேத்த பாஷிதம் யத் யதஸ் மத்திதம்
கிருஷ்ண தத் தத் வாச்யஸ் சூயோதன -என்கிறபடியே
கார்ய அகார்யா ஞான னான   தான் போனால் அல்லது கார்ய சித்தி உண்டாகாது என்று
இத்தலையை ரஷிக்கைகாக தான் தூது போனமையும் –
ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்கையாலே -சாரத்யத்தில் ப்ரவர்தனாய் கொண்டு தேர் காலாலே
பிரதி பஷத்தை அழிய செய்தமையும்  தோற்றுகையாலே – ஆஸ்ரித கார்ய ஆபாதங்களான
ஞான சக்தி யாதிகள் சூசிதம் –
இன்னமும் -பிரதி பத்தி பண்ணிற்றும் -என்கையாலும்-சரம ஸ்லோகத்தில் -மாம்-அஹம் -என்கிற
பதங்களால் சொல்லப் படுகிற உபயவித குணமும் சூசிதம் இறே-
ஆகையால் புருஷகார வைபவம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ மத் பதார்த்தம் பிரகடிதமானவோபாதி –
உபாய வைபவம் சொல்லுகிற இடத்தில் நாராயண பதார்த்தம் பிரகடிதம் –
உபாயத்வம் -சொல்லுகையாலே -சரணவ் சரணம் -என்றதும் சூசிதம் –
ஆக -இதிஹாச ஸ்ரேஷ்டம் -என்று தொடங்கி -இவ்வளவும் -ஸ்ரீ இராமாயண மகா பாரத
உக்தங்களான புருஷகார உபாய வைபவங்கள் தத் தத் ஸ்வரூபங்களோடே விசதமாக பிரதி பாதிக்க பட்டது –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்