Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ மணவாள மா முனிகள்‌ விஷயமான ஸ்தோத்ரங்கள்‌–

May 22, 2026

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-

ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –

ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –

ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரணம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்

சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-

போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்

———–

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-

முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –

————

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –

————

கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-

மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –

————–

ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-

ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்

——————–

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

————–

வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-

ஆதி ஸத்-ஆஜ்ஜை-

——————

யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-

ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
ஸ்ரீ சைல பாத்யம் லஷ்மி நாத பாத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை

—————-

பல ஸ்ருதி –

ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா

—————–

வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா

ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்

——————————————–

ஸ்ரீ பரவாதிகேசரியார்‌ அருளிய ஸ்ரீ சைல வைபவம்‌

கூறுகேன்‌ உலகீரே கும்குமத் தோளரங்கேசர்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ கேட்க மணவாள மாமுனியை
ஏறுமணை தனிலிருத்தி இருநிலத்தில்‌ தாமிருந்து வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி, –1-

ஏறுமணை–உயர்ந்த ஆஸனம்‌
இருநிலத்தில்‌ -பூமியில்‌
விரையடி-திருவடிகளை
பூசனை யாற்றி-தொழுது

ஆறு இரண்டு புறஞ்சூழ அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌
கூறியசீர்‌ சயிலத்தைக்‌ கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன்‌ பெருக்கெள்ன உன்னிஅதை உகந்துரைத்தான்‌
சேறுவளர்‌ கமலை மைந்தன்‌ சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே.—2–

ஆறு இரண்டு–இரண்டு காவேரிகள்‌
அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌ -திருவரங்கம்‌ முதலான 108 திருப்பதிகள்‌
சயிலத்தைக்‌ கொண்டாடி-ஸ்ரீ சைலேச …என்னும்‌ தனியன்‌
உன்னி-எண்ணி
மைந்தன்‌ -அன்பன்‌ (கமலை மைந்தன்‌ -லஷ்மீ காத்நன்‌; சரிய:பதி!
ஒருப்பட்டே–ஒப்புக்‌ கொண்டு,

பட்டர் பிரான்‌ முதலாய பதின்மர் கலை பழிச்சலிலும்‌
சிட்டார்களாய்த்‌ தினந் தோறும்‌ திருமணிடு வேளையிலும்‌
இட்டமுற உணும் பொழுதத்து ஓண்கரநீர்‌ ஏற்கையினும்‌
அட்டதிக்கும்‌ விளங்குரைத்தார்‌ ஆரியர்கள் அனைவருமே–3

பதின்மர்கலை -ஆழ்வார்கள்‌ பதின்மரும்‌ பாடியுள்ள புகழ் மாலைகள்‌
ஓண் கர நீர்‌ –பரிசேஷணத்தில் ஆசமநம்‌
ஆரியர்கள்னைவருமே, -ஆசாரியர்கள்‌

ஆரியர்கள்‌ கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்‌
பேரியலும்‌ தொண்டர் குழாம்‌ பெரும் பேறாக்‌ கொண்டனரால்‌
சீரியராய்‌ வாழ வெண்ணில்‌ செக தலத்தீர்‌ கற்றுணர்மின்‌
தாரியலும்‌ அரங்கருக்கும்‌ தமிழ் மறைக்கும்‌ மணமாமே
–4–தார்‌-பூமாலை

மணவாளமாமுனியை வழுத்துறவோர்‌ பயன்‌ பெறுவர்‌
குணமாகக்‌ கொண்மின்‌ இதைக்‌ கொடும் பிறவிப்‌ பிணி அகல்வீர்‌
பணவாளராவிவராம்‌ பகைத்தாரே யுய்தலிலர்‌
மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர்‌ தனியனையே–5
-(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்_
வழுத்துறவோர்‌ -துதிப்பவர்கள்‌
பணவாள்‌ அரா–(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்)-பணா மணிகளுடைய ஆதி சேஷன்‌;

தனியனென்று பேர்‌ சாற்றித்‌ தண்ணரங்கர்‌ முன்னர்‌
இனிய திருப் பவளத்தாலே –முனிவரானார்‌
மாறன்மறை முப்பத்தாறாயிரத்தின்‌ மாண் பொருளைக்‌
கூற உபதேசித்தார்‌ கொண்டு–6-

மா முனிவர்‌–சடகோப மா முனிகள்‌
ஈடுமுப்பத்தாறாயிரம்‌
மாண் பொருளை-உயர்ந்த அர்த்தங்களை

தேசமெங்கும்‌ இது திருப்பதிகள்‌ தோறுரைக்க
நேசமுற அரங்கர்‌ நேமித்தார்‌–ஏசுமவர்‌
பாதகராய்‌ எரிவாய்‌ பாழ் நகரில்‌ துய்ப்பர்‌ இன்னல்‌
வேதனார்‌ உள்ள மட்டும்‌ எய்த்து –7-

துய்ப்பர்‌ இன்னல்‌–இன்னல்‌ படுவர்‌
வேதனார்‌-பிரம்மா
எய்த்து-வருந்தி

எய்யத்‌ துணிய இராவணியைக்‌ கொன்றவன்‌ காண்‌
செய்ய நெறி விளங்கும்‌ சேஷனவன்‌–வையக்‌
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்‌
வினையறுத்து வீடருளும்‌ வேந்து–8-

இராவணியைக்‌ கொன்றவன்‌–ராவணன்‌ பிள்ளையான இந்த்தரஜித்தைக்‌ கொன்ற லக்ஷ்மணன்‌
வினையறுத்து–பாபங்களைப் போக்கி
வீடருளும்‌–மோக்ஷம்‌ தரும்‌
வேந்து–முனிவர்‌ பெருமான்‌

வேந்தராய்‌ மண்ணாண்டு விண்ணேறலாம்‌ எளிதாய்‌
தோய்ந்த உறவாயிருக்கில்‌ தொல்லுலகீர்‌–ஒர்ந்துய்ய
ஏதிகொடு காலனிழந்து அமர்மேவான்‌ விண்ணோர்‌
நாதனும்‌ வந்தே வணங்கு நன்‌கு — 9–

விண்‌-பரமபதம்‌
ஏதிகொடு–ஆயுதம்‌
நாதன்‌-பரமபத நாதன்‌

வணங்கினர்‌ சீர் பெற்றார்‌ வரன்‌ முறையால்‌ வீடணர் போல்‌
இணங்கினார்‌ ஒரொருவர்‌ இரு நிலத்தில்‌ சிறப்புற்றார்‌
பிணங்கினார்‌ பேய்ப் பிறவிப்‌ பேதையர்‌ கடமைக் கண்டே
உணங்கினார்‌ தாமதராய்‌ உட்சனந்தார்‌ தென்றவரே–10-

வீடணர்–விபிஷணன்‌
பிணங்கினார்‌ –மாறுபடுபவர்‌
பேதையர்‌ -அறிவிலிகள்‌
உணங்கினார்‌ -காய்கின்றவன்‌
தாமதராய்‌–மந்தர்‌

தென் கலையாம்‌ தமிழ் வேதச்‌ சீர்சைலத்‌ தனியனெனும்‌
நன்கலையும்‌ உள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்‌
மின் கலையும்‌ புரி நூலும்‌ மேனோக்கு புண்டரமும்‌
தென் கலையும்‌ வட கலையும்‌ திகழ் நாவர்‌ ஆகுவரே–11-

தென் கலை–அழகிய கலை
மின்‌-ப்ரகாசம்‌
மேனோக்கு புண்டரமும்‌ –ஊர்த்வ புண்ட்ரம்‌-திருமண்‌ காப்பு

ஆகுகலென்‌ இனி எனக்கோர்‌ ஆராவமுதாய்‌ என்‌
சோகமற உளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம்மலர்த் தாளும்‌ சீர்‌ சைலத் தனியனும் இன்று
ஓகையுறப்‌ பெற்றனெனால்‌ ஒலி கடல்‌ தாரணியீரே. –12-

சேகறு-துயாறு
ஓகை–மகழ்ச்சி

தாரணியோர்‌ வாழ வெண்ணித்‌ தானே திரு வநந்தன்‌
பேரணியும்‌ குருகை நகர்‌ பிறங்க நனிப்‌ பேரருளால்‌
சீரணியும்‌ மணவாள மா முனியாய்ச்‌ செனித்தனால்‌
தாரணியும்‌ அரங்கருக்குத்‌ தமிழ் மறைத்‌ தேசிகனெனவே–13–

பிறங்க–விளங்க
செனித்தனன் -அவதரித்தனன்‌

தமிழ் மறை ஓதுவரேல்‌ தனியனது மற்றில்லை
திமிரமற மெய்ஞ் ஞானச்‌ செழுஞ்சுடர் சேர்‌ மனமுடையீர்‌
அமிழாமல்‌ சமுசாரத்து ஆழ் கடலைக்‌ கடத்தி ஒரு
நிமிடத்தில்‌ நித்தியராய்‌ நிறுத்தும்‌ பேரின்பத்தே
–14-திமிரமற-மயர்வற-இருள் போக

பத்துத் திசைகளினும்‌ பண மணிகள்‌ சுடரெறிப்ப
முத்தி தரும்‌ அரங்கருக்கு மூவணையாய்‌ சூழ்ந்திலங்கும்‌
எத் திசையும்‌ பணிந்தேத்தும்‌ எம்‌ பெரிய முனியாகும்‌
அத்தனெழில்‌ வர யோகி ஆயிர வாய்‌ அரவரசே-
-15-அத்தனெழில்‌ வர யோகி–ஆசார்யனான அழகிய மணவாள மா முனிகள்‌

அரவேறு மேவி யறி துயில்‌ கொள்ளும்‌ அரங்க நகருரை
வர யோகி சீர்சைலத்தின்‌ பெருமாப் புகழ்‌ வைபவத்தை
விரகால்‌ இசை மறையோர்‌ திலகன்‌ தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே
–15-யோக நித்‌திரையில்‌ ஆழ்ந்த திருவரங்கன்‌ அருளிச் செய்த,

ஸ்ரீ மணவாள முனிகள் வைபவம் —ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா அருளிச் செய்த பாதாதி கேச மாலை -ஸ்ரீ மா முனிகள் விஷய ஸ்ரீ அமலனாதி பிரான் —

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-

புதுக்கணித்த -அலங்கரித்த
செய்ய தாமரைத் தாளிணை வாழியே போல்

—-

வேழக் குருத்தின் அழகைப் பழித்து விரை மருவும்
வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-

குறங்கு -தொடை
கேழற்ற-ஒப்பில்லாத

———–

தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
வீனமிலாத இளமையின் எழில் சகனம்
வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–

மருங்கு -இடை
சகனம்-தொடையின் உள் பாகம்
வான் -பெருமை
துவராடை -காவி யூட்டிய ஆடை

————

வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–

சூறை- கொள்ளை

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு நீர் கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டாரோ -கம்பர் —சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் -45-

———–

ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-

அம்புயம் -திருத்தோள்
கார் -மேகம்
சுரபி -காம தேனு
திருத்தண்டு -திருக்கையில் ஏந்தும் முக்கோல்
ஈரும் படி -அறும் படி

கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

————

தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைத் தார்
வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–

தார் –கிண்கிணி மாலை
வடம் -மணி வடம்
வண் புரி நூல் -முப்புரி நூல்
எழுதி வைத்தேன் -சுவர் வழி எழுதிக் கொண்டேன் -பெரியாழ்வார்

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே

————

மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-

மங்காது -குறையாது
மருவார் -வாசனை நிரம்பிய
தமியேன் -கதி அற்றவன்

சுந்தரத் திருத் தோளிணை வாழியே

———–

பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–

வழுத்தினேன் -தொழுதேன்

மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும் படி உரைக்கும் சீர்

கருணை பொங்கிய கண்ணினை வாழியே

————

பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-

புங்கவர் கோன் –ஆச்சார்ய சிகா மணி
நாலும் திருச்சிகை -தாழ் முடி
வருணம் -நிறம்

————

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த சாத்து முறைப் பாசுரத்துடன் ஒப்பு நோக்குக

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

—————

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
பேராளனை அடைந்த பேர் -தனியன் –

ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் -ஸ்ரீ வசன பூஷண ஸூர்ணிகை –308-
சிஷ்யனாக நினைக்காமல் ச ப்ரஹ்ம சாரியாக-தன்னுடனே கற்பவனாகவே – –
தனது ஆச்சார்யருக்கு சிஷ்யராக நினைத்து உபதேசிக்க வேண்டும்

பரமனைப் பயிலும் திருவுடையார் யாவராலும் அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர்
ஆழிப்பிரான் தன்னைப் பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடை நாதர்
கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம்
மத்யம பர்வம் ப்ரக்ருஷ்டம் அன்றோ
இந்தத் தனியன் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது
மா முனிகள் அருளிச் செய்த தனியன்

———-

சதாச்சார்ய சம்பந்தம் பெற்ற மா முனிகளைத் தாம்
அகதிகராய் ஆஸ்ரயித்த விஷயத்தை அருளிச் செய்கிறார்

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
குரு பரம்பரையும் அனுசந்தேயம்
சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –

மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
செம் முகமும் –
தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
தளிரேய் பதங்களும்
தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா தியானத்துக்கு —
சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்

பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் –
மா முனிகள் திருவடித்தாமரைகள் -பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-
ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

————-

ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே முதல் ஸ்லோகத்திலே எம்பெருமானாரை சரண் புகுந்து
அவர் உகப்புக்காக நம்மாழ்வாரை அடுத்த ஸ்லோகத்திலே சரண் புகுந்தால் போலவே இவரும்
அவர் உகப்புக்காக திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகளில் சரணம் புகுகிறார்

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்

உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ

இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் தானே

———————-

மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் கிடைத்த எம்பெருமானார்
திருவடிகளிலே ப்ராவண்யத்தைப் பேசி
யதீந்த்ர ப்ரவணரான மா முனிகளை வாழ்த்த வேண்டி இருக்க –
அப்படிச் செய்யாதவர்களை நிந்திக்கிறார் –

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –

பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே

துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்

பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

—————-

அனுகூலர் அல்லாதவர்களை நிந்தித்து
அனுகூலர்களுக்கு அவரே மோக்ஷ உபாயமாகும் தன்மையைப் பேசி மகிழ்கிறார் –

பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே

தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –

பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் தீண்டில்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

—————–

கீழே பாவநவத்தைப் பேசி இதில் போக்யத்வத்தைப் பேசுகிறார்
அல்லது
மோக்ஷம் அளிக்காமல் படுகொலை செய்தாலும் விட ஒண்ணாத
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் போக்யமான
திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகைப் பேசுகிறார்

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே

கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே —

கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –

முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-என்று
ஆச்சார்ய அபிமானத்தை தவம் என்றது போல் இங்கு புண்ணியம் என்கிறார்

ஞாலம் உண்ட ஞான மூர்த்தி நாராயணன் கோல மேனி
மா முனிகளுடையதோ பொற் கோல மேனி

தேசிகர் -த்ரிஜகத் புண்ய பலம் த்ரி தண்ட ஹஸ்தம் -என்றார் யதிராஜ சப்ததியில்
அதே போல் இங்கு பூதலத்தோர் செய்த புண்ணியமாம் முக்கோல் தரித்த மா முனி என்கிறார்

கோடி மூலை சிறு பகுதி -க்ஷணப் பொழுதாவது மா முனிகளின் திவ்ய மங்கள விக்ரஹ
சிந்தை செய்வோருக்கு யாரும் ஈடில்லை என்றவாறு

———————

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே

நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து

நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விளைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்

ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ

கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி

எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –

த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————-

ஐந்தாம் பாட்டில் மானஸீக தியானத்தையும்
அடுத்து வாசக ஸ்தோத்ரம்
இதில் காயிக பிராணாமம்
நினைப்பதும் பேசுவதும் வணங்குவதும் ஒரே வியக்தியான மா முனிகளே என்கிறார்

வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி

இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-

அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

————————-

வாழ்த்துவன் என்றாரே -நமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் என்கிறார்

பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –

பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்

குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்

கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –

தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –

அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –

அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

——————-

பெருமையை நினைந்து சிந்திப்பவர்களையே அன்றி
பொறாமை கொண்டு நிந்தித்தாலும் கூட விடாமல் உஜ்ஜீவிக்கப் பண்ணி அருள்வார் என்கிறார் –

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
அங்கு சென்று நித்ய கைங்கர்யம் பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே

சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்

நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்

மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –

புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்

தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்

விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்

மித்ர பாவேந -வேண்டாவே -நிந்திப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

——————–

பெரும் பாலோர் சிந்தித்து வந்தித்து வாழ்த்தி
ஸ்வாமியின் பெருமையை உள்ளபடி உணர்ந்து
இந்த சேவையே பரம பாவனம் போக்யம் என்று புகழ்ந்து நேசிக்கிறார்கள்

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்

வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச் செயல்களே இருந்தாலும் – –
மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற

நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை

இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

———————–

இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே

இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ

நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே

செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
நடையாடும் மதிள் போல் –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளையே வாய் வெருவிக் கொண்டு இருப்பாரே

மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

—————-

பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்

யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு

பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –

இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்

சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –

சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்

நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்

திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-

கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-

ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

————

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —

மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

————–

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்-1-
என்று த்யான முகத்தால்
ஸ்ரீ சைல தயா பாத்ரத்வம் கூறப்பட்டது -காருணிகரே த்யானிக்கப் பட வேண்டியவர்கள்

தொல்லருள் ஞானம் விளைத்து-6-என்றும்
இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு வாய் மொழியோடு
கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-என்றும்
தத்வ ஹித புருஷார்த்த ஞானத்தையும்
பகவத் விஷயார்த்த ஞானத்தையும் பிறருக்கு உண்டாகும் படி செய்வதைக் கூறும் முகத்தால்
மா முனிகளுக்கு உள்ள ஞானத்தையும்

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால் வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து
மெய்ம்மா மறையோர் புந்திக்குள் மேவும் வர யோகி–12-
என்று மா முனிகள் ஸ்ரீ ரெங்கநாத பக்தர்களால் த்யானம் செய்யப்படுகின்றமை கூறும் வாயிலாக
மா முனிகளுடைய ஸ்ரீ ரெங்கநாத பக்தியும் பேசப்பட்டன

முக் கோல் தரித்த மணவாள மா முனி -5-என்று வைராக்கியமும்
மணவாள மா முனிக் கார் முகிலை-2-என்று ஒவ் கார்யமும்
கருணை மணவாள யோகி-8- தயை என்று
தீ பக்த்யாதி -ஆதி யால் ஸங்க்ரஹிக்கிக்கப் பட்ட -தீ பக்த்யாதி குண ஆர்ணத்வம் கூறப்பட்டது

எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி-3-யதீந்த்ர ப்ரணத்வம் கூறப்பட்டது

மணவாள மா முனி -வரயோகி -மணவாள யோகி-பல இடங்களிலும் வருவதால்
ரம்ய ஜா மாத்ரு முனித்வம் கூறப்பட்டது

மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–என்றும்
வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம்-7- என்பதால்
வந்தே பதார்த்தம் சொல்லப் பட்டது

ஆக இப்பிரபந்தம் ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் விவரணம் என்பதும் தேறும்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி அஷ்டகம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

பர்யங்கேபி பரம் தத்வம் ரங்க ஷாயிந மேவய
உத்திஷ்டத் யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் –1-

உஷஸ் யுக்தாய லோகார்ய ப்ரமுக ஆச்சார்ய ஸூக்திபி
உச்சைஸ் ஸ்துத்வாத கோவிந்தம் தத் திவ்ய ஸ்தல காஞ்சிதம் –2-

காவேர்யா கமல உத்பாஸி ஸம்ஸ்ப்ருஷ்ய ஸலீலம் ஷுபம்
கோவிந்த குண ஷிலாதி த்யாத்வா அஷ்ரு கலிலாநந –3-

ரோமாஞ்சித சலத் காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவத் ஸாஸ்த்ர நிர்த்திஷ்ட விதி நைவ நிமஜ்ஜ்ய
திவ்ய காஷாய ஸூத்த ஊர்த்வ புண்ட்ர மாலாதி பூஷித –5–

மஹா மந்த்ராதி ஸம் ஜப்ய விஷிஷ்டைஸ் பரி வாரித
ஸ்ரீ ரெங்க தாம ஸம் ஸேவ்ய தத் தத்வாந் யுப ப்ரும்ஹ்ய ச –6–

ஆராத்ய ரங்க ராஜாதீந் அநு யோகம் விதாய ச
அபு நாத் அம்ருதைர் ஆர்யாந் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸுவ்ம்ய வராக்ரிய யோகிநம் அஹம் த்யான அம்ருதா ஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரி சார்யா குணை காந்திநம்
ஆஜ்ஜா ஸாஸ்த்ர விதேர விஸ்யதமலம் ஸம்ஸாரி கந்தாஸஹம்
காலே ஷு த்ரி ஷு சைவ காமித பல ப்ராப்த் யை குரூணாம் குரும் — 8-

இது ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ பூர்வ தினசரி சுருக்கம் –
த்யான ஸ்லோகம் -போல் அமைந்துள்ளது

———–

ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி
நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-

நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-

செய நாமமான திருவாண்டு தன்னில்
ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம்‌ அண்ணா அருளிச் செய்த்‌ ஸ்ரீ வரவர முநி ஸுப்ரபாதம்‌
வேதாத்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போகம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்‌ |
வத்ஸாந்வவாய மநவத்ய குணைருபேதம்‌
பக்த்யா பஜாமி ப்ரவாதி பயங்கரார்யம்‌ ॥

ரவிருதிகஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸத பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ ந மே |
வரவர யோகி வர்ய! வரணீய.! தயைகநிதே!
ஐயஜய தேவ ஜாக்ருஹி ஜநேஷு நிதேஹி தியம்‌ ॥–1-
ஸ்வப்‌நமிதம்‌ தவ ஸ்வ மஹிமா நுபவைக ரஸம்‌ ததாபி
ததாவிகம்‌ ததிதி ஜாது ந வேத்தி ஐந | வரவர யோகி வர்ய! ததிதப விஜஹாது பவாந்‌
அபரிமிதம்‌ ஹிதம்‌ த்ரிஜகதா மநு சிந்தயிதும்‌ ॥–2-
அவதரணம்‌ ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்‌
விவித ஹிதா வபோதந க்ருதே ஹி க்ருதம்‌ பவதா |
தத இஹ ஏஹி யோக ஸயநாத்‌ மம நாத
ஜநாந்‌ அம்ருத மயைர பாங்க வலயைரபி ஷேச யிதும்‌ –3-

ஸரதர வித்த ப்ருந்த ஸூஷமா பரிபோஷ ஜுஷா
தவ நயநேந கேசந பரே சரணே நிததா |
மது கபீர தீர சதுரை ருகிள நரி தரே வரத
துரம்‌ தரந்தி பவஸிந்துமமும்‌ தரிதும்‌ ॥–4–
பரம நபோ நிவாஸ! பணி புங்கவ! ரங்க பதே:
பவந மிதம்‌ ஹிதாய ஜூகோ பவதா ததிகதம்‌ |
ததபிஸ வை தேவ ந்ருகநிம் ப்ரசுபீகுருஷே
ததிஹ மஹத்‌ தவைவ குரு வைபவ யத் பிதுரம்‌ ॥–5-
த்வதபிமத ப்ரியஸ்த்வ தநு வர்‌த்தந தந்யதமாத்‌
அலமதிரிக்த இதயகில லோக ஸுபோ தமிதம்‌ |
அவநி தலம்‌ த்வதீப்ஸித மிதம்‌ ச ஹி தத்ர வஸந்
அயமகிலஸ்‌ததைவ நிருபாயமுபைதி பதம்‌ –6-

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம் புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந |
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸிதெளா தே
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே
ஸ்ரீ மத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே |
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥
–்ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேங்கடச ஸ்தோத்ரத்திலுள்ளவை)

ஸ்ரீ வரவர முநி விஷய முக்தகம்‌
ப்ரபத்யே பத பத்மாநி பரம ப்ரேம ஸம்பதாம்‌
ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணைக ஜுஷாம்‌ ஸதாம்‌
ஸம்பத் ஸ்வருபா நுகுணைக யஸ்மிந்‌ ஸர்வோத்தரோ யத்ர மந : ப்ரஸாத: |
ஸ்த்பிஸ் ஸமம் தேவ தமேவ தேஸம்‌ ப்ராப்யம்‌ ப்ரபத்யே பவதங்க்ரி மூலம்‌ ॥

யந் மூலாஸ் வயுஜமாஸ் யவதார மூலம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக ஸிந்தோ: |
ஆஸீதஸத் ஸூகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌
ததேவ ஐகதப் யுதயைக மூலம்‌ ॥

ஸ்ரீ மத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோ அபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை தாது விபவம்‌ தேஸிகோ தேஸிகோநாம்‌
காலே காலே வரவர முநி கல்பயந் மங்களாநி

அபகத மதமாதைரந்தி மோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தை ரர்த்த காமா நபேஷை : |
நிகல ஜந ஸுஹ்‌ருத்பிர் நிர் ஜிதக்‌ரோத லோபை:
வரவர முநி ப்ருக்யைரஸ்து மே நித்ய யோக ॥

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத்‌ நித்ய ஸ்ரீர்‌ நித்ய மங்களம்‌ ॥

—————-————————————————————————————————————–————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

May 14, 2026

ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மன ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம் |
பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: || (1)

ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

திவ்யதுனீ  மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே  |
ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய கேதச்சிதே வந்தே  || (2)

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க:  க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:  || (3)

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

உத்ருதநக நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே  |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: || (4)–(அந்தாதி வரிக்குள்ளே)

கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

மத்ஸ்யாதிபி  ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! ஹே பெருமாளே

தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் தரமபனயத்வம் மே (6)

தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

நாராயண கருணாய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

மனத் தூய்மை அடைந்து திருவடி தொழுது -ஸ்வாமி சொத்து உணர்ந்து -கடாக்ஷம் பிரார்த்தித்து அவன் செய்யும் உபகார பரம்பரைகளை உணர்ந்து -மோக்ஷத்துக்கு சரணம் அடைந்து -ஷட் பதம் -வண்டு வாயாகிய-தாமரை -ஆறு வார்த்தைகளை எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் திருவடித் தாமரையையே பேசிக் கொண்டே இருக்க அது போல் ஆவோம் அன்றோ –

இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.

பகவத் அனுபவமாகிய தேனையே பெருகிக் கொண்டே இருப்போம் -வாயைத் தாமரை யாக்கி பேச்சையே வண்டாக்கி வாழ்ந்தே போவோம்

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வீரராகவர் போற்றிப் பஞ்சகம்-

February 21, 2026

தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நக்ஷத்ர ஸூக்தம்-

November 29, 2025

ஸ்ரீ நக்ஷத்ர ஸூக்தம் (னக்ஷத்ரேஷ்டி)-நக்ஷத்ர ஸூக்யம் -கார்த்திகை தொடங்கி -அக்னி தேவதை -லோக திவாகரம் அவதரித்து அருளினார் அன்றோ

தைத்திரீய ப்³ராஹ்மண – அஷ்டகம் 3, ப்ரஶ்ன: 1,
தைத்திரீய ஸம்ஹிதா – காண்ட³ 3, ப்ரபாட²க: 5, அனுவாகம் 1

நக்ஷத்ரம் – க்ருத்திகா, தே³வதா – அக்³னி:
ஓம் அ॒க்³னிர்ன:॑ பாது॒ க்ருத்தி॑கா: । நக்ஷ॑த்ரம் தே॒³வமி॑ந்த்³ரி॒யம் ।
இ॒த³மா॑ஸாம் விசக்ஷ॒ணம் । ஹ॒விரா॒ஸம் ஜு॑ஹோதன ।
யஸ்ய॒ பா⁴ந்தி॑ ர॒ஶ்மயோ॒ யஸ்ய॑ கே॒தவ:॑ । யஸ்யே॒மா விஶ்வா॒ பு⁴வ॑னானி॒ ஸர்வா᳚ ।
ஸ க்ருத்தி॑காபி⁴-ர॒பி⁴ஸம்॒வஸா॑ன: । அ॒க்³னிர்னோ॑ தே॒³வஸ்ஸு॑வி॒தே த॑³தா⁴து ॥ 1

நக்ஷத்ரம் – ரோஹிணீ, தே³வதா – ப்ரஜாபதி:
ப்ர॒ஜாப॑தே ரோஹி॒ணீவே॑து॒ பத்னீ᳚ । வி॒ஶ்வரூ॑பா ப்³ருஹ॒தீ சி॒த்ரபா॑⁴னு: ।
ஸா நோ॑ ய॒ஜ்ஞஸ்ய॑ ஸுவி॒தே த॑³தா⁴து । யதா॒² ஜீவே॑ம ஶ॒ரத॒³ஸ்ஸவீ॑ரா: ।
ரோ॒ஹி॒ணீ தே॒³வ்யுத॑³கா³த்பு॒ரஸ்தா᳚த் । விஶ்வா॑ ரூ॒பாணி॑ ப்ரதி॒மோத॑³மானா ।
ப்ர॒ஜாப॑திக்³ம் ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ । ப்ரி॒யா தே॒³வானா॒-முப॑யாது ய॒ஜ்ஞம் ॥ 2

நக்ஷத்ரம் – ம்ருக³ஶீர்​ஷ:, தே³வதா – ஸோம:
ஸோமோ॒ ராஜா॑ ம்ருக³ஶீ॒ர்॒ஷேண॒ ஆக³ன்ன்॑ । ஶி॒வம் நக்ஷ॑த்ரம் ப்ரி॒யம॑ஸ்ய॒ தா⁴ம॑ ।
ஆ॒ப்யாய॑மானோ ப³ஹு॒தா⁴ ஜனே॑ஷு । ரேத:॑ ப்ர॒ஜாம் யஜ॑மானே த³தா⁴து ।
யத்தே॒ நக்ஷ॑த்ரம் ம்ருக³ஶீ॒ர்॒ஷமஸ்தி॑ । ப்ரி॒யக்³ம் ரா॑ஜன் ப்ரி॒யத॑மம் ப்ரி॒யாணாம்᳚ ।
தஸ்மை॑ தே ஸோம ஹ॒விஷா॑ விதே⁴ம । ஶன்ன॑ ஏதி⁴ த்³வி॒பதே॒³ ஶஞ்சது॑ஷ்பதே³ ॥ 3

நக்ஷத்ரம் – ஆர்த்³ரா, தே³வதா – ருத்³ர:
ஆ॒ர்த்³ரயா॑ ரு॒த்³ர: ப்ரத॑²மா ந ஏதி । ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்॒ பதி॑ரக்⁴னி॒யானாம்᳚ ।
நக்ஷ॑த்ரமஸ்ய ஹ॒விஷா॑ விதே⁴ம । மா ந:॑ ப்ர॒ஜாக்³ம் ரீ॑ரிஷ॒ன்மோத வீ॒ரான் ।
ஹே॒தீ ரு॒த்³ரஸ்ய॒ பரி॑ணோ வ்ருணக்து । ஆ॒ர்த்³ரா நக்ஷ॑த்ரம் ஜுஷதாக்³ம் ஹ॒விர்ன:॑ ।
ப்ர॒மு॒ஞ்சமா॑னௌ து³ரி॒தானி॒ விஶ்வா᳚ । அபா॒க⁴ஶக்³ம்॑ ஸன்னு-த³தா॒மரா॑திம் ॥ 4

நக்ஷத்ரம் – புனர்வஸு, தே³வதா – அதி³தி:
புன॑ர்னோ தே॒³வ்யதி॑³தி-ஸ்ப்ருணோது । புன॑ர்வஸூ ந:॒ புன॒ரேதாம்᳚ ய॒ஜ்ஞம் ।
புன॑ர்னோ தே॒³வா அ॒பி⁴ய॑ந்து॒ ஸர்வே᳚ । புன:॑ புனர்வோ ஹ॒விஷா॑ யஜாம: ।
ஏ॒வா ந தே॒³வ்ய-தி॑³திரன॒ர்வா । விஶ்வ॑ஸ்ய ப॒⁴ர்த்ரீ ஜக॑³த: ப்ரதி॒ஷ்டா² ।
புன॑ர்வஸூ ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ । ப்ரி॒யம் தே॒³வானா॒-மப்யே॑து॒ பாத:॑² ॥ 5

நக்ஷத்ரம் – புஷ்ய:, தே³வதா – ப்³ருஹஸ்பதி:
ப்³ருஹ॒ஸ்பதி:॑ ப்ரத॒²மஞ்ஜாய॑மான: । தி॒ஷ்யம்॑ நக்ஷ॑த்ரம॒பி⁴ ஸம்ப॑³பூ⁴வ ।
ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்॒ ப்ருத॑னாஸு ஜி॒ஷ்ணு: । தி॒³ஶோனு॒ ஸர்வா॒ அப॑⁴யன்னோ அஸ்து ।
தி॒ஷ்ய:॑ பு॒ரஸ்தா॑து॒³த ம॑த்⁴ய॒தோ ந:॑ । ப்³ருஹ॒ஸ்பதி॑ர்ன:॒ பரி॑பாது ப॒ஶ்சாத் ।
பா³தே॑⁴ தா॒ந்த்³வேஷோ॒ அப॑⁴யம் க்ருணுதாம் । ஸு॒வீர்ய॑ஸ்ய॒ பத॑யஸ்யாம ॥ 6

நக்ஷத்ரம் -ஆஶ்ரேஷம், தே³வதா – ஸர்பா:
இ॒த³க்³ம் ஸ॒ர்பேப்⁴யோ॑ ஹ॒விர॑ஸ்து॒ ஜுஷ்டம்᳚ । ஆ॒ஶ்ரே॒ஷா யேஷா॑மனு॒யந்தி॒ சேத:॑ ।
யே அ॒ந்தரி॑க்ஷம் ப்ருதி॒²வீம்-க்ஷி॒யந்தி॑ । தேன॑ ஸ்ஸ॒ர்பாஸோ॒ ஹவ॒மாக॑³மிஷ்டா²: ।
யே ரோ॑ச॒னே ஸூர்ய॒ஸ்யாபி॑ ஸ॒ர்பா: । யே தி³வம்॑ தே॒³வீ-மனு॑ஸ॒ஞ்சர॑ந்தி ।
யேஷா॑மாஶ்ரே॒ஷா அ॑னு॒யந்தி॒ காமம்᳚ । தேப்⁴ய॑-ஸ்ஸ॒ர்பேப்⁴யோ॒ மது॑⁴-மஜ்ஜுஹோமி ॥ 7

நக்ஷத்ரம் – மகா⁴, தே³வதா – பிதர:
உப॑ஹூதா: பி॒தரோ॒ யே ம॒கா⁴ஸு॑ । மனோ॑ஜவஸ-ஸ்ஸு॒க்ருத॑-ஸ்ஸுக்ரு॒த்யா: ।
தே நோ॒ நக்ஷ॑த்ரே॒ ஹவ॒மாக॑³மிஷ்டா²: । ஸ்வ॒தா⁴பி॑⁴ர்ய॒ஜ்ஞம் ப்ரய॑தம் ஜுஷந்தாம் ।
யே அ॑க்³னித॒³க்³தா⁴ யேன॑க்³னி-த³க்³தா⁴: । யே॑முல்லோ॒கம் பி॒தர:॑, க்ஷி॒யந்தி॑ ।
யாக்³க்³​ஶ்ச॑ வி॒த்³மயாக்³ம் உ॑ ச॒ ந ப்ர॑வி॒த்³ம । ம॒கா⁴ஸு॑ ய॒ஜ்ஞக்³ம் ஸுக்ரு॑தம் ஜுஷந்தாம் ॥ 8

நக்ஷத்ரம் – பூர்வப²ல்கு³னீ, தே³வதா – அர்யமா
க³வாம்॒ பதி:॒ ப²ல்கு॑³னீ-னாமஸி॒ த்வம் । தத॑³ர்யமன்வருண மித்ர॒ சாரு॑ ।
தம் த்வா॑ வ॒யக்³ம் ஸ॑னி॒தாரக்³ம்॑ ஸனீ॒னாம் । ஜீ॒வா ஜீவ॑ந்த॒முப॒ ஸம்வி॑ஶேம ।
யேனே॒மா விஶ்வா॒ பு⁴வ॑னானி॒ ஸஞ்ஜி॑தா । யஸ்ய॑ தே॒³வா அ॑னுஸம்॒யந்தி॒ சேத:॑ ।
அ॒ர்ய॒மா ராஜா॒ஜர॒ஸ்து வி॑ஷ்மான் । ப²ல்கு॑³னீனா-ம்ருஷ॒போ⁴ ரோ॑ரவீதி ॥ 9

நக்ஷத்ரம் – உத்தர ப²ல்கு³னீ, தே³வதா – ப⁴க:³
ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்᳚ ப⁴க³வோ ப⁴கா³ஸி । தத்த்வா॑ விது॒³: ப²ல்கு॑³னீ॒-ஸ்தஸ்ய॑ வித்தாத் ।
அ॒ஸ்மப்⁴யம்॑-க்ஷ॒த்ரம॒ஜரக்³ம்॑ ஸு॒வீர்யம்᳚ । கோ³ம॒த³ஶ்வ॑-வ॒து³ப॒ஸன்னு॑-தே॒³ஹ ।
ப⁴கோ॑³ஹ தா॒³தா ப⁴க॒³ இத்ப்ர॑தா॒³தா । ப⁴கோ॑³ தே॒³வீ: ப²ல்கு॑³னீ॒-ராவி॑வேஶ ।
ப⁴க॒³ஸ்யேத்தம் ப்ர॑ஸ॒வம் க॑³மேம । யத்ர॑ தே॒³வை-ஸ்ஸ॑த॒⁴மாத³ம்॑ மதே³ம ॥ 1௦

நக்ஷத்ரம் – ஹஸ்த:, தே³வதா – ஸவிதா
ஆயா॑து தே॒³வ-ஸ்ஸ॑வி॒தோ ப॑யாது । ஹி॒ர॒ண்யயே॑ன ஸு॒வ்ருதா॒ ரதே॑²ன ।
வஹ॒ன॒, ஹஸ்தக்³ம்॑ ஸு॒ப⁴க³ம்॑ வித்³ம॒னாப॑ஸம் । ப்ர॒யச்ச॑²ந்தம்॒ பபு॑ரிம்॒ புண்ய॒மச்ச॑² ।
ஹஸ்த:॒ ப்ரய॑ச்ச² த்வ॒ம்ருதம்॒ வஸீ॑ய: । த³க்ஷி॑ணேன॒ ப்ரதி॑க்³ருப்⁴ணீம ஏனத் ।
தா॒³தார॑-ம॒த்³ய ஸ॑வி॒தா வி॑தே³ய । யோ நோ॒ ஹஸ்தா॑ய ப்ரஸு॒வாதி॑ ய॒ஜ்ஞம் ॥ 11

நக்ஷத்ரம் – சித்ரா, தே³வதா – த்வஷ்டா
த்வஷ்டா॒ நக்ஷ॑த்ர-ம॒ப்⁴யே॑தி சி॒த்ராம் । ஸு॒ப⁴க்³ம் ஸ॑ஸம்யுவ॒திக்³ம் ரோச॑மானாம் ।
நி॒வே॒ஶய॑-ன்ன॒ம்ருதா॒-ன்மர்த்யாக்³க்॑³ஶ்ச । ரூ॒பாணி॑ பி॒க்³ம்॒ஶன் பு⁴வ॑னானி॒ விஶ்வா᳚ ।
தன்ன॒ஸ்த்வஷ்டா॒ தது॑³ சி॒த்ரா விச॑ஷ்டாம் । தன்னக்ஷ॑த்ரம் பூ⁴ரி॒தா³ அ॑ஸ்து॒ மஹ்யம்᳚ ।
தன்ன:॑ ப்ர॒ஜாம் வீ॒ரவ॑தீக்³ம் ஸனோது । கோ³பி॑⁴ர்னோ॒ அஶ்வை॒-ஸ்ஸம॑னக்து ய॒ஜ்ஞம் ॥ 12

நக்ஷத்ரம் – ஸ்வாதீ, தே³வதா – வாயு:
வா॒யு-ர்னக்ஷ॑த்ர-ம॒ப்⁴யே॑தி॒ நிஷ்ட்யாம்᳚ । தி॒க்³மஶ்ரு॑ங்கோ³ வ்ருஷ॒போ⁴ ரோரு॑வாண: ।
ஸ॒மீ॒ரய॒ன் பு⁴வ॑னா மாத॒ரிஶ்வா᳚ । அப॒ த்³வேஷாக்³ம்॑ஸி நுத³தா॒மரா॑தீ: ।
தன்னோ॑ வா॒யஸ்தது॒³ நிஷ்ட்யா॑ ஶ்ருணோது । தன்னக்ஷ॑த்ரம் பூ⁴ரி॒தா³ அ॑ஸ்து॒ மஹ்யம்᳚ ।
தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ ஜானந்து॒ காமம்᳚ । யதா॒² தரே॑ம து³ரி॒தானி॒ விஶ்வா᳚ ॥ 13

நக்ஷத்ரம் – விஶாகா², தே³வதா – இந்த்³ராக்³னீ
தூ॒³ரம॒ஸ்மச்ச²த்ர॑வோ யந்து பீ॒⁴தா: । ததி॑³ந்த்³ரா॒க்³னீ க்ரு॑ணுதாம்॒ தத்³விஶா॑கே² ।
தன்னோ॑ தே॒³வா அனு॑மத³ந்து ய॒ஜ்ஞம் । ப॒ஶ்சாத் பு॒ரஸ்தா॒-த³ப॑⁴யன்னோ அஸ்து ।
நக்ஷ॑த்ராணா॒-மதி॑⁴பத்னீ॒ விஶா॑கே² । ஶ்ரேஷ்டா॑²-விந்த்³ரா॒க்³னீ பு⁴வ॑னஸ்ய கோ॒³பௌ ।
விஷூ॑ச॒-ஶ்ஶத்ரூ॑னப॒பா³த॑⁴மானௌ । அப॒க்ஷுத॑⁴-ன்னுத³தா॒மரா॑திம் ॥ 14

பௌர்ணமாஸி
பூ॒ர்ணா ப॒ஶ்சாது॒³த பூ॒ர்ணா பு॒ரஸ்தா᳚த் । உன்ம॑த்⁴ய॒த: பௌ᳚ர்ணமா॒ஸீ ஜி॑கா³ய ।
தஸ்யாம்᳚ தே॒³வா அதி॑⁴ ஸம்॒ வஸ॑ந்த: । உ॒த்த॒மே நாக॑ இ॒ஹ மா॑த³யந்தாம் ।
ப்ரு॒த்²வீ ஸு॒வர்சா॑ யுவ॒தி-ஸ்ஸ॒ஜோஷா:᳚ । பௌ॒ர்ண॒மா॒ஸ்யுத॑³கா॒³-ச்சோ²ப॑⁴மானா ।
ஆ॒ப்யா॒யய॑ந்தீ து³ரி॒தானி॒ விஶ்வா᳚ । உ॒ரும் து³ஹாம்॒ யஜ॑மானாய ய॒ஜ்ஞம் ॥ 15

நக்ஷத்ரம் – அனூராதா⁴, தே³வதா – மித்ர:
ரு॒த்³த்⁴யாஸ்ம॑ ஹ॒வ்யை-ர்னம॑ஸோப॒-ஸத்³ய॑ । மி॒த்ரம் தே॒³வம் மி॑த்ர॒தே⁴ய॑ன்னோ அஸ்து ।
அ॒னூ॒ரா॒தா⁴ன், ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்த: । ஶ॒தம் ஜீ॑வேம ஶ॒ரத॒³-ஸ்ஸவீ॑ரா: ।
சி॒த்ரம்-னக்ஷ॑த்ர॒-முத॑³கா³-த்பு॒ரஸ்தா᳚த் । அ॒னூ॒ரா॒தா⁴ ஸ॒ இதி॒ யத்³வத॑³ந்தி ।
தன்மி॒த்ர ஏ॑தி ப॒தி²பி॑⁴-ர்தே³வ॒யானை:᳚ । ஹி॒ர॒ண்யயை॒-ர்வித॑தை-ர॒ந்தரி॑க்ஷே ॥ 16

நக்ஷத்ரம் – ஜ்யேஷ்டா², தே³வதா – இந்த்³ர:
இந்த்³ரோ᳚ ஜ்யே॒ஷ்டா² மனு॒ நக்ஷ॑த்ரமேதி । யஸ்மி॑ன் வ்ரு॒த்ரம் வ்ரு॑த்ர॒ தூர்யே॑ த॒தார॑ ।
தஸ்மி॑ன்வ॒ய-ம॒ம்ருதம்॒ து³ஹா॑னா: । க்ஷுத॑⁴ந்தரேம॒ து³ரி॑திம்॒ து³ரி॑ஷ்டிம் ।
பு॒ர॒ந்த॒³ராய॑ வ்ருஷ॒பா⁴ய॑ த்⁴ரு॒ஷ்ணவே᳚ । அஷா॑டா⁴ய॒ ஸஹ॑மானாய மீ॒டு⁴ஷே᳚ ।
இந்த்³ரா॑ய ஜ்யே॒ஷ்டா² மது॑⁴ம॒த்³து³ஹா॑னா । உ॒ரும் க்ரு॑ணோது॒ யஜ॑மானாய லோ॒கம் ॥ 17

நக்ஷத்ரம் – மூலம், தே³வதா – ப்ரஜாபதி:
மூலம்॑ ப்ர॒ஜாம் வீ॒ரவ॑தீம் விதே³ய । பரா᳚ச்யேது॒ நிர்ரு॑தி: பரா॒சா ।
கோ³பி॒⁴-ர்னக்ஷ॑த்ரம் ப॒ஶுபி॒⁴-ஸ்ஸம॑க்தம் । அஹ॑-ர்பூ⁴யா॒-த்³யஜ॑மானாய॒ மஹ்யம்᳚ ।
அஹ॑ர்னோ அ॒த்³ய ஸு॑வி॒தே த॑³தா⁴து । மூலம்॒ நக்ஷ॑த்ர॒மிதி॒ யத்³வத॑³ந்தி ।
பரா॑சீம் வா॒சா நிர்ரு॑திம் நுதா³மி । ஶி॒வம் ப்ர॒ஜாயை॑ ஶி॒வம॑ஸ்து॒ மஹ்யம்᳚ ॥ 18

நக்ஷத்ரம் – பூர்வாஷாடா⁴, தே³வதா – ஆப:
யா தி॒³வ்யா ஆப:॒ பய॑ஸா ஸம்ப³பூ॒⁴வு: । யா அ॒ந்தரி॑க்ஷ உ॒த பார்தி॑²வீ॒ர்யா: ।
யாஸா॑மஷா॒டா⁴ அ॑னு॒யந்தி॒ காமம்᳚ । தா ந॒ ஆப:॒ ஶக்³க்³​ ஸ்யோ॒னா ப॑⁴வந்து ।
யாஶ்ச॒ கூப்யா॒ யாஶ்ச॑ நா॒த்³யா᳚-ஸ்ஸமு॒த்³ரியா:᳚ । யாஶ்ச॑ வைஶ॒ந்தீரு॒த ப்ரா॑ஸ॒சீர்யா: ।
யாஸா॑மஷா॒டா⁴ மது॑⁴ ப॒⁴க்ஷய॑ந்தி । தா ந॒ ஆப:॒ ஶக்³க்³​ ஸ்யோ॒னா ப॑⁴வந்து ॥ 19

நக்ஷத்ரம் – உத்தராஷாடா⁴, தே³வதா – விஶ்வேதே³வ:
தன்னோ॒ விஶ்வே॒ உப॑ ஶ்ருண்வந்து தே॒³வா: । தத॑³ஷா॒டா⁴ அ॒பி⁴ஸம்ய॑ந்து ய॒ஜ்ஞம் ।
தன்னக்ஷ॑த்ரம் ப்ரத²தாம் ப॒ஶுப்⁴ய:॑ । க்ரு॒ஷி-ர்வ்ரு॒ஷ்டி-ர்யஜ॑மானாய கல்பதாம் ।
ஶு॒ப்⁴ரா: க॒ன்யா॑ யுவ॒தய॑-ஸ்ஸு॒பேஶ॑ஸ: । க॒ர்ம॒க்ருத॑-ஸ்ஸு॒க்ருதோ॑ வீ॒ர்யா॑வதீ: ।
விஶ்வா᳚ன் தே॒³வான், ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ: ।
அ॒ஷா॒டா⁴: காம॒ முப॑யாந்து ய॒ஜ்ஞம் ॥ 2௦

நக்ஷத்ரம் – அபி⁴ஜித், தே³வதா – ப்³ரஹ்மா
யஸ்மி॒ன் ப்³ரஹ்மா॒ப்⁴யஜ॑ய॒த்² ஸர்வ॑மே॒தத் । அ॒முஞ்ச॑ லோ॒க மி॒த³மூ॑ச॒ ஸர்வம்᳚ ।
தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³வி॒ஜித்ய॑ । ஶ்ரியம்॑ த³தா॒⁴த்வ-ஹ்ரு॑ணீயமானம் ।
உ॒பௌ⁴ லோ॒கௌ ப்³ரஹ்ம॑ணா॒ ஸஞ்ஜி॑தே॒மௌ । தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³விச॑ஷ்டாம் ।
தஸ்மி॑ன் வ॒யம் ப்ருத॑னா॒ ஸ்ஸஞ்ஜ॑யேம । தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ஜானந்து॒ காமம்᳚ ॥ 21

நக்ஷத்ரம் – ஶ்ரவணம், தே³வதா – விஷ்ணு:
ஶ்ரு॒ண்வந்தி॑ ஶ்ரோ॒ணா-ம॒ம்ருத॑ஸ்ய கோ॒³பாம் । புண்யா॑மஸ்யா॒ உப॑ஶ்ருணோமி॒ வாசம்᳚ ।
ம॒ஹீம் தே॒³வீம் விஷ்ணு॑பத்னீ மஜூ॒ர்யாம் । ப்ர॒தீசீ॑ மேனாக்³ம் ஹ॒விஷா॑ யஜாம: ।
த்ரே॒தா⁴ விஷ்ணு॑-ருருகா॒³யோ விச॑க்ரமே । ம॒ஹீம் தி³வம்॑ ப்ருதி॒²வீ-ம॒ந்தரி॑க்ஷம் ।
தச்ச்²ரோ॒ணைதி॒ ஶ்ரவ॑-இ॒ச்ச²மா॑னா । புண்ய॒க்³க்॒³ ஶ்லோகம்॒ யஜ॑மானாய க்ருண்வ॒தீ ॥ 22

நக்ஷத்ரம் – ஶ்ரவிஷ்டா, தே³வதா – வஸவ:
அ॒ஷ்டௌ தே॒³வா வஸ॑வஸ்ஸோ॒ம்யாஸ:॑ । சத॑ஸ்ரோ தே॒³வீ ர॒ஜரா:॒ ஶ்ரவி॑ஷ்டா²: ।
தே ய॒ஜ்ஞம் பா᳚ந்து॒ ரஜ॑ஸ: ப॒ரஸ்தா᳚த் । ஸம்॒வ॒த்²ஸ॒ரீண॑-ம॒ம்ருதக்³க்॑³ ஸ்வ॒ஸ்தி ।
ய॒ஜ்ஞம் ந:॑ பாந்து॒ வஸ॑வ: பு॒ரஸ்தா᳚த் । த॒³க்ஷி॒ண॒தோ॑-பி⁴ய॑ந்து॒ ஶ்ரவி॑ஷ்டா²: ।
புண்ய॒ன்னக்ஷ॑த்ரம॒பி⁴ ஸம்வி॑ஶாம । மா நோ॒ அரா॑தி-ர॒க⁴ஶ॒க்³ம்॒ ஸாக³ன்ன்॑ ॥ 23

நக்ஷத்ரம் – ஶதபி⁴ஷக், தே³வதா – வருண:
க்ஷ॒த்ரஸ்ய॒ ராஜா॒ வரு॑ணோதி⁴ரா॒ஜ: । நக்ஷ॑த்ராணாக்³ம் ஶ॒தபி॑⁴ஷ॒க்³ வஸி॑ஷ்ட:² ।
தௌ தே॒³வேப்⁴ய:॑ க்ருணுதோ தீ॒³ர்க⁴மாய:॑ । ஶ॒தக்³ம் ஸ॒ஹஸ்ரா॑ பே⁴ஷ॒ஜானி॑ த⁴த்த: ।
ய॒ஜ்ஞன்னோ॒ ராஜா॒ வரு॑ண॒ உப॑யாது । தன்னோ॒ விஶ்வே॑ அ॒பி⁴ஸம்ய॑ந்து தே॒³வா: ।
தன்னோ॒ நக்ஷ॑த்ரக்³ம் ஶ॒தபி॑⁴ஷக்³ ஜுஷா॒ணம் । தீ॒³ர்க⁴மாயு:॒ ப்ரதி॑ர-த்³பே⁴ஷ॒ஜானி॑ ॥ 24

நக்ஷத்ரம் – பூர்வப்ரோஷ்ட²பதா³, தே³வதா – அஜயேகபாத:³
அ॒ஜ ஏக॑பா॒- து³த॑³கா³த் பு॒ரஸ்தா᳚த் । விஶ்வா॑ பூ॒⁴தானி॑ ப்ரதி॒ மோத॑³மான: ।
தஸ்ய॑ தே॒³வா: ப்ர॑ஸ॒வம் ய॑ந்தி॒ ஸர்வே᳚ । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॑ அ॒ம்ருத॑ஸ்ய கோ॒³பா: ।
வி॒ப்⁴ராஜ॑மான-ஸ்ஸமிதா॒⁴ன உ॒க்³ர: । ஆந்தரி॑க்ஷ-மருஹ॒த-³த்³க॒³ந்த்³யாம் ।
தக்³ம் ஸூர்யம்॑ தே॒³வ-ம॒ஜமேக॑பாத³ம் । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॒ அனு॑யந்தி॒ ஸர்வே᳚ ॥ 25

நக்ஷத்ரம் – உத்தரப்ரோஷ்ட²பதா³, தே³வதா – அஹிர்பு³த்³த்⁴னிய:
அஹி॑-ர்பு॒³த்³த்⁴னிய:॒ ப்ரத॑²மான ஏதி । ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானா॑மு॒த மானு॑ஷாணாம் ।
தம் ப்³ரா᳚ஹ்ம॒ணா-ஸ்ஸோ॑ம॒பா-ஸ்ஸோ॒ம்யாஸ:॑ । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॑ அ॒பி⁴ர॑க்ஷந்தி॒ ஸர்வே᳚ ।
ச॒த்வார॒ ஏக॑ம॒பி⁴ கர்ம॑ தே॒³வா: । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸ॒ இதி॒ யான், வத॑³ந்தி ।
தே பு॒³த்³த⁴னியம்॑ பரி॒ஷத்³யக்³க்॑³ ஸ்து॒வந்த:॑ । அஹிக்³ம்॑ ரக்ஷந்தி॒ நம॑ஸோப॒ ஸத்³ய॑ ॥ 26

நக்ஷத்ரம் – ரேவதீ, தே³வதா – பூஷா
பூ॒ஷா ரே॒வத்யன்வே॑தி॒ பந்தா²ம்᳚ । பு॒ஷ்டி॒பதீ॑ பஶு॒பா வாஜ॑ப³ஸ்த்யௌ ।
இ॒மானி॑ ஹ॒வ்யா ப்ரய॑தா ஜுஷா॒ணா । ஸு॒கை³ர்னோ॒ யானை॒ருப॑யாதாம் ய॒ஜ்ஞம் ।
க்ஷு॒த்³ரான் ப॒ஶூன் ர॑க்ஷது ரே॒வதீ॑ ந: । கா³வோ॑ நோ॒ அஶ்வா॒க்³ம்॒ அன்வே॑து பூ॒ஷா ।
அன்ன॒க்³ம்॒ ரக்ஷ॑ந்தௌ ப³ஹு॒தா⁴ விரூ॑பம் । வாஜக்³ம்॑ ஸனுதாம்॒ யஜ॑மானாய ய॒ஜ்ஞம் ॥ 27

நக்ஷத்ரம் – அஶ்வினீ, தே³வதா – அஶ்வினீ தே³வ
தத॒³ஶ்வினா॑-வஶ்வ॒யுஜோ-ப॑யாதாம் । ஶுப॒⁴ங்க³மி॑ஷ்டௌ² ஸு॒யமே॑பி॒⁴ரஶ்வை:᳚ ।
ஸ்வன்னக்ஷ॑த்ரக்³ம் ஹ॒விஷா॒ யஜ॑ந்தௌ । மத்³த்⁴வா॒-ஸம்ப்ரு॑க்தௌ॒ யஜு॑ஷா॒ ஸம॑க்தௌ ।
யௌ தே॒³வானாம்᳚ பி॒⁴ஷஜௌ॑ ஹவ்யவா॒ஹௌ । விஶ்வ॑ஸ்ய தூ॒³தா-வ॒ம்ருத॑ஸ்ய கோ॒³பௌ ।
தௌ நக்ஷ॑த்ரம்-ஜுஜுஷா॒ணோ-ப॑யாதாம் । நமோ॒ஶ்விப்⁴யாம்᳚ க்ருணுமோ-ஶ்வ॒க்³யுப்⁴யாம்᳚ ॥ 28

நக்ஷத்ரம் – அபப⁴ரணீ, தே³வதா – யம:
அப॑ பா॒ப்மானம்॒ ப⁴ர॑ணீ-ர்ப⁴ரந்து । தத்³ய॒மோ ராஜா॒ ப⁴க॑³வா॒ன்॒, விச॑ஷ்டாம் ।
லோ॒கஸ்ய॒ ராஜா॑ மஹ॒தோ ம॒ஹான், ஹி । ஸு॒க³ன்ன:॒ பந்தா॒²மப॑⁴யம் க்ருணோது ।
யஸ்மி॒-ன்னக்ஷ॑த்ரே ய॒ம ஏதி॒ ராஜா᳚ । யஸ்மி॑ன்னேன-ம॒ப்⁴யஷி॑ஞ்சந்த தே॒³வா: ।
தத॑³ஸ்ய சி॒த்ரக்³ம் ஹ॒விஷா॑ யஜாம । அப॑ பா॒ப்மானம்॒ ப⁴ர॑ணீ-ர்ப⁴ரந்து ॥ 29

அமாவாஸி
நி॒வேஶ॑னீ ஸ॒ங்க³ம॑னீ॒ வஸூ॑னாம்॒ விஶ்வா॑ ரூ॒பாணி॒ வஸூ᳚ன்யா-வே॒ஶய॑ந்தீ ।
ஸ॒ஹ॒ஸ்ர॒-போ॒ஷக்³ம் ஸு॒ப⁴கா॒³ ரரா॑ணா॒ ஸா ந॒ ஆக॒³ன் வர்ச॑ஸா ஸம்விதா॒³னா ।
யத்தே॑ தே॒³வா அத॑³து⁴-ர்பா⁴க॒³தே⁴ய॒-மமா॑வாஸ்யே ஸம்॒வஸ॑ந்தோ மஹி॒த்வா ।
ஸா நோ॑ ய॒ஜ்ஞம் பி॑ப்ருஹி விஶ்வவாரே ர॒யின்னோ॑ தே⁴ஹி ஸுப⁴கே³ ஸு॒வீரம்᳚ ॥ 3௦

ஓம் ஶாந்தி:॒ ஶாந்தி:॒ ஶாந்தி:॑ ॥

நட்சத்திர அதிதேவதைகள்.

1.அஸ்வினி –சரஸ்வதி.
2.பரணி –துர்க்கை.
3.கார்த்திகை–அக்னி.
4.ரோகிணி– பிரம்மா.
5.மிருகசீரிடம்– சந்திரன்.
6.திருவாதிரை–பரமசிவன்.
7.புணர்பூசம் –அதிதி.
8.பூசம் –ப்ரஹஸ்பதி.
9.ஆயில்யம்– ஆதிஷேசன்.
10.மகம் –சுக்கிரன்.
11.பூரம்– பார்வதி.
12.உத்திரம் –சூரியன்.
13.அஸ்தம் –ஐயப்பன்.
14.சித்திரை– விஷ்வகர்மா.
15.சுவாதி –வாயு.
16.விசாகம் –முருகன்.
17.அனுஷம் –லட்சுமி.
18.கேட்டை–இந்திரன்.
19.மூலம்– அசுரர்.
20.பூராடம் –வருணன்.
21.உத்திராடம் –கணபதி.
22.திருவோணம்–விஷ்ணு .
23.அவிட்டம் –வசுக்கள் .
24.சதயம் –யமன்.
25.பூரட்டாதி–குபேரன்.

  1. உத்திரட்டாதி –காமதேனு.
    27.ரேவதி– சனி பகவான்.

நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு.

நக்ஷத்திர காயத்ரி மந்திரம் :

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி–ஸ்ரீ நரசிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்–

November 14, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
  3. ஓம் வஜ்ரிணே நம:
  4. ஓம் வஜ்ரதேஹாய நம:
  5. ஓம் வஜ்ராய நம:
  6. ஓம் வஜ்ரநகாய நம:
  7. ஓம் வாஸுதேவாய நம:
  8. ஓம் வந்த்யாய நம:
  9. ஓம் வரதாய நம:
  10. ஓம் வராத்மநே நம:
  11. ஓம் வரதாபயஹஸ்தாய நம:
  12. ஓம் வராய நம:
  13. ஓம் வரரூபிணே நம:
  14. ஓம் வரேண்யாய நம:
  15. ஓம் வரிஷ்டாய நம:
  16. ஓம் ஸ்ரீவராய நம:
  17. ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
  18. ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
  19. ஓம் பராத்பரபரேஶாய நம:
  20. ஓம் பவித்ராய நம:
  21. ஓம் பிநாகிநே நம:
  22. ஓம் பாவநாய நம:
  23. ஓம் ப்ரஸந்நாய நம:
  24. ஓம் பாஶிநே நம:
  25. ஓம் பாபஹாரிணே நம: 25
  1. ஓம் புருஷ்டுதாய நம:
  2. ஓம் புண்யாய நம:
  3. ஓம் புருஹூதாய நம:
  4. ஓம் தத்புருஷாய நம:
  5. ஓம் தத்யாய நம:
  6. ஓம் புராணபுருஷாய நம:
  7. ஓம் புரோதஸே நம:
  8. ஓம் பூர்வஜாய நம:
  9. ஓம் புஷ்கராக்ஷாய நம:
  10. ஓம் புஷ்பஹாஸாய நம:
  11. ஓம் ஹாஸாய நம:
  12. ஓம் மஹாஹாஸாய நம:
  13. ஓம் ஶார்ங்கிணே நம:
  14. ஓம் ஸிம்ஹாய நம:
  15. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  16. ஓம் ஜகத்வஶ்யாய நம:
  17. ஓம் அட்டஹாஸாய நம:
  18. ஓம் ரோஷாய நம:
  19. ஓம் ஜலவாஸாய நம:
  20. ஓம் பூதாவாஸாய நம:
  21. ஓம் பாஸாய நம:
  22. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
  23. ஓம் கட்கிநே நம:
  24. ஓம் கட்கஜிஹ்வாய நம:
  25. ஓம் ஸிம்ஹாய நம: 50
  1. ஓம் கட்கவாஸாய நம:
  2. ஓம் மூலாதிவாஸாய நம:
  3. ஓம் தர்மவாஸாய நம:
  4. ஓம் தந்விநே நம:
  5. ஓம் தநஞ்ஜயாய நம:
  6. ஓம் தந்யாய நம:
  7. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  8. ஓம் ஶுபஞ்ஜயாய நம:
  9. ஓம் ஸூத்ராய நம:
  10. ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
  11. ஓம் நிரஞ்சநாய நம:
  12. ஓம் நீராய நம:
  13. ஓம் நிர்குணாய நம:
  14. ஓம் குணாய நம:
  15. ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
  16. ஓம் நிர்வாணபதாய நம:
  17. ஓம் நிபிடாய நம:
  18. ஓம் நிராலம்பாய நம:
  19. ஓம் நீலாய நம:
  20. ஓம் நிஷ்கலாய நம:
  21. ஓம் கலாய நம:
  22. ஓம் நிமேஷாய நம:
  23. ஓம் நிபந்தாய நம:
  24. ஓம் நிமேஷகமநாய நம:
  25. ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
  1. ஓம் நிராஶாய நம:
  2. ஓம் நிஶ்சயாய நம:
  3. ஓம் நிஜாய நம:
  4. ஓம் நிர்மலாய நம:
  5. ஓம் நிபந்தாய நம:
  6. ஓம் நிர்மோஹாய நம:
  7. ஓம் நிராக்ருதே நம:
  8. ஓம் நித்யாய நம:
  9. ஓம் ஸத்யாய நம:
  10. ஓம் ஸத்கர்மநிரதாய நம:
  11. ஓம் ஸத்யத்வஜாய நம:
  12. ஓம் முஞ்ஜாய நம:
  13. ஓம் முஞ்ஜகேஶாய நம:
  14. ஓம் கேஶிநே நம:
  15. ஓம் ஹரீஶாய நம:
  16. ஓம் ஶேஷாய நம:
  17. ஓம் குடாகேஶாய நம:
  18. ஓம் ஸுகேஶாய நம:
  19. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  20. ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
  21. ஓம் ஜலேஶாய நம:
  22. ஓம் ஸ்தலேஶாய நம:
  23. ஓம் பத்மேஶாய நம:
  24. ஓம் உக்ரரூபிணே நம:
  25. ஓம் குஶேஶயாய நம: 100
  1. ஓம் கூலாய நம:
  2. ஓம் கேஶவாய நம:
  3. ஓம் ஸூக்திகர்ணாய நம:
  4. ஓம் ஸூக்தாய நம:
  5. ஓம் ரக்தஜிஹ்வாய நம:
  6. ஓம் ராகிணே நம:
  7. ஓம் தீப்தரூபாய நம:
  8. ஓம் தீப்தாய நம:
  9. ஓம் ப்ரதீப்தாய நம:
  10. ஓம் ப்ரலோபிநே நம:
  11. ஓம் ப்ரச்சந்தாய நம:
  12. ஓம் ப்ரபோதாய நம:
  13. ஓம் ப்ரபவே நம:
  14. ஓம் விபவே நம:
  15. ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
  16. ஓம் பாந்தாய நம:
  17. ஓம் ப்ரமாய நம:
  18. ஓம் அப்ரமிதாய நம:
  19. ஓம் ப்ரகாஶாய நம:
  20. ஓம் ப்ரதாபாய நம:
  21. ஓம் ப்ரஜ்வலாய நம:
  22. ஓம் உஜ்ஜ்வலாய நம:
  23. ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
  24. ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
  25. ஓம் ஜ்வாலிநே நம: 125
  1. ஓம் மஹோஜ்ஜவலாய நம:
  2. ஓம் காலாய நம:
  3. ஓம் காலமூர்த்திதராய நம:
  4. ஓம் காலாந்தகாய நம:
  5. ஓம் கல்பாய நம:
  6. ஓம் கலநாய நம:
  7. ஓம் க்ருதே நம:
  8. ஓம் காலசக்ராய நம:
  9. ஓம் சக்ராய நம:
  10. ஓம் வஷட்சக்ராய நம:
  11. ஓம் சக்ரிணே நம:
  12. ஓம் அக்ரூராய நம:
  13. ஓம் க்ருதாந்தாய நம:
  14. ஓம் விக்ரமாய நம:
  15. ஓம் க்ரமாய நம:
  16. ஓம் க்ருத்திநே நம:
  17. ஓம் க்ருத்திவாஸாய நம:
  18. ஓம் க்ருதஜ்ஞாய நம:
  19. ஓம் க்ருதாத்மநே நம:
  20. ஓம் ஸங்க்ரமாய நம:
  21. ஓம் க்ருத்தாய நம:
  22. ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
  23. ஓம் அரூபாய நம:
  24. ஓம் ஸரூபாய நம:
  25. ஓம் ஹரயே நம: 150
  1. ஓம் பரமாத்மநே நம:
  2. ஓம் அஜேயாய நம:
  3. ஓம் ஆதிதேவாய நம:
  4. ஓம் அக்ஷயாய நம:
  5. ஓம் க்ஷயாய நம:
  6. ஓம் அகோராய நம:
  7. ஓம் ஸுகோராய நம:
  8. ஓம் கோரகோரதராய நம:
  9. ஓம் அகோரவீர்யாய நம:
  10. ஓம் லஸத்கோராய நம:
  11. ஓம் கோராத்யக்ஷாய நம:
  12. ஓம் தக்ஷாய நம:
  13. ஓம் தக்ஷிணாய நம:
  14. ஓம் ஆர்யாய நம:
  15. ஓம் ஶம்பவே நம:
  16. ஓம் அமோகாய நம:
  17. ஓம் குணௌகாய நம:
  18. ஓம் அநகாய நம:
  19. ஓம் அகஹாரிணே நம:
  20. ஓம் மேகநாதாய நம:
  21. ஓம் நாதாய நம:
  22. ஓம் மேகாத்மநே நம:
  23. ஓம் மேகவாஹநரூபாய நம:
  24. ஓம் மேகஶ்யாமாய நம:
  25. ஓம் மாலிநே நம: 175
  1. ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
  2. ஓம் வ்யாக்ரதேஹாய நம:
  3. ஓம் வ்யாக்ரபாதாய நம:
  4. ஓம் வ்யாக்ரகர்மணே நம:
  5. ஓம் வ்யாபகாய நம:
  6. ஓம் விகடாஸ்யாய நம:
  7. ஓம் வீராய நம:
  8. ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
  9. ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
  11. ஓம் விஷ்வக்ஸேநாய நம:
  12. ஓம் ஸேநாய நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் பலாய நம:
  15. ஓம் விரூபாக்ஷாய நம:
  16. ஓம் வீராய நம:
  17. ஓம் விஶேஷாக்ஷாய நம:
  18. ஓம் ஸாக்ஷிணே நம:
  19. ஓம் வீதஶோகாய நம:
  20. ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
  21. ஓம் விதாநாய நம:
  22. ஓம் விதேயாய நம:
  23. ஓம் விஜயாய நம:
  24. ஓம் ஜயாய நம:
  25. ஓம் விபுதாய நம: 200
  1. ஓம் விபாவாய நம:
  2. ஓம் விஶ்வம்பராய நம:
  3. ஓம் வீதராகாய நம:
  4. ஓம் விப்ராய நம:
  5. ஓம் விடங்கநயநாய நம:
  6. ஓம் விபுலாய நம:
  7. ஓம் விநீதாய நம:
  8. ஓம் விஶ்வயோநயே நம:
  9. ஓம் சிதம்பராய நம:
  10. ஓம் வித்தாய நம:
  11. ஓம் விஶ்ருதாய நம:
  12. ஓம் வியோநயே நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் விகல்பாய நம:
  15. ஓம் கல்பாதீதாய நம:
  16. ஓம் ஶில்பிநே நம:
  17. ஓம் கல்பநாய நம:
  18. ஓம் ஸ்வரூபாய நம:
  19. ஓம் பணிதல்பாய நம:
  20. ஓம் தடித்ப்ரபாய நம:
  21. ஓம் தார்யாய நம:
  22. ஓம் தருணாய நம:
  23. ஓம் தரஸ்விநே நம:
  24. ஓம் தபநாய நம:
  25. ஓம் தரக்ஷாய நம: 225
  1. ஓம் தாபத்ரயஹராய நம:
  2. ஓம் தாரகாய நம:
  3. ஓம் தமோக்நாய நம:
  4. ஓம் தத்வாய நம:
  5. ஓம் தபஸ்விநே நம:
  6. ஓம் தக்ஷகாய நம:
  7. ஓம் தநுத்ராய நம:
  8. ஓம் தடிதே நம:
  9. ஓம் தரளாய நம:
  10. ஓம் ஶதரூபாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶத்தாராய நம:
  13. ஓம் ஶதபத்ராய நம:
  14. ஓம் தார்க்ஷ்யாய நம:
  15. ஓம் ஸ்திதயே நம:
  16. ஓம் ஶதமூர்த்தயே நம:
  17. ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
  18. ஓம் ஶாஶ்வதாய நம:
  19. ஓம் ஶதாத்மநே நம:
  20. ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
  21. ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
  22. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  23. ஓம் தேவாய நம:
  24. ஓம் திஶஶ்ரோத்ராய நம:
  25. ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
  1. ஓம் மஹாஜிஹ்வாய நம:
  2. ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
  3. ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
  4. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  5. ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
  6. ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
  7. ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
  8. ஓம் ஸ்தூலாய நம:
  9. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  10. ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
  11. ஓம் ஸுக்ஷுண்யாய நம:
  12. ஓம் ஸுபிக்ஷாய நம:
  13. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
  14. ஓம் ஸௌரிணே நம:
  15. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
  16. ஓம் தர்மாய நம:
  17. ஓம் லோகாத்யக்ஷாய நம:
  18. ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
  19. ஓம் ஶிக்ஷாய நம:
  20. ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
  21. ஓம் காலாத்யக்ஷாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணாய நம:
  23. ஓம் மூலாத்யக்ஷாய நம:
  24. ஓம் அதோக்ஷஜாய நம:
  25. ஓம் மித்ராய நம: 275
  1. ஓம் ஸுமித்ரவருணாய நம:
  2. ஓம் ஶத்ருக்நாய நம:
  3. ஓம் அவிக்நாய நம:
  4. ஓம் விக்நகோடி ஹராய நம:
  5. ஓம் ரக்ஷோக்நாய நம:
  6. ஓம் தமோக்நாய நம:
  7. ஓம் பூதக்நாய நம:
  8. ஓம் பூதபாலாய நம:
  9. ஓம் பூதாய நம:
  10. ஓம் பூதாவாஸாய நம:
  11. ஓம் பூதிநே நம:
  12. ஓம் பூதவேதாளகாதாய நம:
  13. ஓம் பூதாதிபதயே நம:
  14. ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
  15. ஓம் பூதஸம்யமிநே நம:
  16. ஓம் மஹாபூதவே நம:
  17. ஓம் ப்ருகவே நம:
  18. ஓம் ஸர்வபூதாத்மநே நம:
  19. ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
  20. ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
  21. ஓம் ஸர்வாதாராய நம:
  22. ஓம் ஶர்வாய நம:
  23. ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
  24. ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
  25. ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
  1. ஓம் ஸர்வாக்ஞாய நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் ஸர்வஶக்திதராய நம:
  4. ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
  5. ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
  6. ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
  7. ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
  8. ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
  9. ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
  10. ஓம் பிங்காக்ஷாய நம:
  11. ஓம் ஏகஶ்ருங்காய நம:
  12. ஓம் த்விஶ்ருங்காய நம:
  13. ஓம் மரீசயே நம:
  14. ஓம் பஹுஶ்ருங்காய நம:
  15. ஓம் லிங்காய நம:
  16. ஓம் மஹாஶ்ருங்காய நம:
  17. ஓம் மாங்கள்யாய நம:
  18. ஓம் மனோஜ்ஞாய நம:
  19. ஓம் மந்தவ்யாய நம:
  20. ஓம் மஹாத்மநே நம:
  21. ஓம் மஹாதேவாய நம:
  22. ஓம் தேவாய நம:
  23. ஓம் மாதுலுங்கதராய நம:
  24. ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
  25. ஓம் ப்ரஸ்துதாய நம: 325
  1. ஓம் மாயிநே நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் அநந்தரூபாய நம:
  4. ஓம் மாயிநே நம:
  5. ஓம் ஜலஶாயிநே நம:
  6. ஓம் மஹோதராய நம:
  7. ஓம் மந்தாய நம:
  8. ஓம் மததாய நம:
  9. ஓம் மதாய நம:
  10. ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
  11. ஓம் மாதவாய நம:
  12. ஓம் முராரயே நம:
  13. ஓம் மஹாவீர்யாய நம:
  14. ஓம் தைர்யாய நம:
  15. ஓம் சித்ரவீர்யாய நம:
  16. ஓம் சித்ரகூர்மாய நம:
  17. ஓம் சித்ராய நம:
  18. ஓம் சித்ரபாநவே நம:
  19. ஓம் மாயாதீதாய நம:
  20. ஓம் மாயாயை நம:
  21. ஓம் மஹாவீராய நம:
  22. ஓம் மஹாதேஜஸே நம:
  23. ஓம் பீஜாய நம:
  24. ஓம் தேஜோதாம்நே நம:
  25. ஓம் பீஜிநே நம: 350
  1. ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
  2. ஓம் சித்ரபாநவே நம:
  3. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் துஷ்டாய நம:
  5. ஓம் புஷ்டிகராய நம:
  6. ஓம் ஶிபிவிஷ்டாய நம:
  7. ஓம் ஹ்ருஷ்டாய நம:
  8. ஓம் புஷ்டாய நம:
  9. ஓம் பரமேஷ்டிநே நம:
  10. ஓம் விஶிஷ்டாய நம:
  11. ஓம் ஶிஷ்டாய நம:
  12. ஓம் கரிஷ்டாய நம:
  13. ஓம் இஷ்டதாயிநே நம:
  14. ஓம் ஜ்யேஷ்டாய நம:
  15. ஓம் ஶ்ரேஷ்டாய நம:
  16. ஓம் துஷ்டாய நம:
  17. ஓம் அமிததேஜஸே நம:
  18. ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
  19. ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
  20. ஓம் வைகுண்டாய நம:
  21. ஓம் விகுண்டாய நம:
  22. ஓம் கேஶிகண்டாய நம:
  23. ஓம் கண்டீரவாய நம:
  24. ஓம் லுண்டாய நம:
  25. ஓம் நிஶ்ஶடாய நம: 375
  1. ஓம் ஹடாய நம:
  2. ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
  3. ஓம் ருத்ராய நம:
  4. ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
  5. ஓம் ருதுத்வஜாய நம:
  6. ஓம் வஜ்ராய நம:
  7. ஓம் மந்த்ரராஜாய நம:
  8. ஓம் மந்த்ரிணே நம:
  9. ஓம் த்ரிநேத்ராய நம:
  10. ஓம் த்ரிவர்காய நம:
  11. ஓம் த்ரிதாம்நே நம:
  12. ஓம் த்ரிஶூலிநே நம:
  13. ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
  14. ஓம் த்ரிதேஹாய நம:
  15. ஓம் த்ரிதாத்மநே நம:
  16. ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
  17. ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
  18. ஓம் அக்ஷோப்யாய நம:
  19. ஓம் அநிருத்தாய நம:
  20. ஓம் அப்ரமேயாய நம:
  21. ஓம் பாநவே நம:
  22. ஓம் அம்ருதாய நம:
  23. ஓம் அநந்தாய நம:
  24. ஓம் அமிதாய நம:
  25. ஓம் அமிதௌஜஸே நம: 400
  1. ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
  2. ஓம் அபஸ்மார விகாதிநே நம:
  3. ஓம் அந்நதாய நம:
  4. ஓம் அந்நரூபாய நம:
  5. ஓம் அந்நாய நம:
  6. ஓம் அந்நபுஜே நம:
  7. ஓம் நாத்யாய நம:
  8. ஓம் நிரவத்யாய நம:
  9. ஓம் வேத்யாய நம:
  10. ஓம் அத்புதகர்மணே நம:
  11. ஓம் ஸத்யோஜாதாய நம:
  12. ஓம் ஸங்காய நம:
  13. ஓம் வைத்யுதாய நம:
  14. ஓம் அத்வாதீதாய நம:
  15. ஓம் ஸத்வாய நம:
  16. ஓம் வாகதீதாய நம:
  17. ஓம் வாக்மிநே நம:
  18. ஓம் வாகீஶ்வராய நம:
  19. ஓம் கோபாய நம:
  20. ஓம் கோஹிதாய நம:
  21. ஓம் கவாம்பதயே நம:
  22. ஓம் கந்தர்வாய நம:
  23. ஓம் கபீராய நம:
  24. ஓம் கர்ஜிதாய நம:
  25. ஓம் ஊர்ஜிதாய நம: 425
  1. ஓம் பர்ஜந்யாய நம:
  2. ஓம் ப்ரபுத்தாய நம:
  3. ஓம் ப்ரதாநபுருஷாய நம:
  4. ஓம் பத்மாபாய நம:
  5. ஓம் ஸுநாபாய நம:
  6. ஓம் பத்மநாபாய நம:
  7. ஓம் மாநிநே நம:
  8. ஓம் பத்மநேத்ராய நம:
  9. ஓம் பத்மாய நம:
  10. ஓம் பத்மாயா: பதயே நம:
  11. ஓம் பத்மோதராய நம:
  12. ஓம் பூதாய நம:
  13. ஓம் பத்மகல்போத்பவாய நம:
  14. ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
  15. ஓம் பூபத்மோத்தரணாய நம:
  16. ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
  17. ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
  18. ஓம் ப்ரஹ்மணே நம:
  19. ஓம் ப்ரஹ்மரூபாய நம:
  20. ஓம் பத்மநேத்ராய நம:
  21. ஓம் ப்ரஹ்மதாய நம:
  22. ஓம் ப்ராஹ்மணாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
  25. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
  1. ஓம் தேவாய நம:
  2. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
  3. ஓம் த்ரிவேதிநே நம:
  4. ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
  5. ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
  6. ஓம் அஶ்வஶிரஸே நம:
  7. ஓம் அதர்வஶிரஸே நம:
  8. ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
  9. ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் லோலாய நம:
  11. ஓம் லலிதாய நம:
  12. ஓம் லாவண்யாய நம:
  13. ஓம் லவித்ராய நம:
  14. ஓம் பாஸகாய நம:
  15. ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
  16. ஓம் லக்ஷாய நம:
  17. ஓம் லக்ஷணாய நம:
  18. ஓம் லஸத்தீப்தாய நம:
  19. ஓம் லிப்தாய நம:
  20. ஓம் விஷ்ணவே நம:
  21. ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
  22. ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
  23. ஓம் க்ருஷ்ணாய நம:
  24. ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
  25. ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
  1. ஓம் ஹாரிணே நம:
  2. ஓம் வநமாலிநே நம:
  3. ஓம் கிரீடிநே நம:
  4. ஓம் குண்டலிநே நம:
  5. ஓம் ஸர்வாங்காய நம:
  6. ஓம் ஸர்வதோமுகாய நம:
  7. ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
  8. ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
  9. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  10. ஓம் ஸதாதுஷ்டாய நம:
  11. ஓம் ஸமர்த்தாய நம:
  12. ஓம் ஸமரப்ரியாய நம:
  13. ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
  14. ஓம் பஹுயோஜந மாயதாய நம:
  15. ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
  16. ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
  17. ஓம் மஹாரூபாய நம:
  18. ஓம் மஹாவக்த்ராய நம:
  19. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  20. ஓம் மஹாபுஜாய நம:
  21. ஓம் மஹாநாதாய நம:
  22. ஓம் மஹாரௌத்ராய நம:
  23. ஓம் மஹாகாயாய நம:
  24. ஓம் மஹாபலாய நம:
  25. ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
  1. ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
  2. ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
  3. ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
  4. ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
  5. ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
  6. ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
  7. ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
  8. ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
  9. ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
  10. ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
  11. ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
  12. ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
  13. ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
  15. ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
  16. ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
  17. ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
  18. ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
  19. ஓம் புவநைகஸிம்ஹாய நம:
  20. ஓம் பவிஷ்ணவே நம:
  21. ஓம் ஸஹிஷ்ணவே நம:
  22. ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
  23. ஓம் ஜிஷ்ணவே நம:
  24. ஓம் ப்ருதிவ்யை நம:
  25. ஓம் அந்தரிக்ஷாய நம: 525
  1. ஓம் பர்வதாய நம:
  2. ஓம் அரண்யாய நம:
  3. ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
  4. ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
  5. ஓம் அஹோராத்ராய நம:
  6. ஓம் த்ரிஸந்த்யாய நம:
  7. ஓம் பக்ஷாய நம:
  8. ஓம் மாஸாய நம:
  9. ஓம் ருதவே நம:
  10. ஓம் வத்ஸராய நம:
  11. ஓம் யுகாதயே நம:
  12. ஓம் யுகபேதாய நம:
  13. ஓம் ஸம்யுகாய நம:
  14. ஓம் யுகஸந்தயே நம:
  15. ஓம் நித்யாய நம:
  16. ஓம் நைமித்திகாய நம:
  17. ஓம் தைநாய நம:
  18. ஓம் மஹாப்ரளயாய நம:
  19. ஓம் கரணாய நம:
  20. ஓம் காரணாய நம:
  21. ஓம் கர்த்ரே நம:
  22. ஓம் பர்த்ரே நம:
  23. ஓம் ஹர்த்ரே நம:
  24. ஓம் ஈஶ்வராய நம:
  25. ஓம் ஸத்கர்த்ரே நம: 550
  1. ஓம் ஸத்க்ருதயே நம:
  2. ஓம் கோப்த்ரே நம:
  3. ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
  4. ஓம் ப்ராணாய நம:
  5. ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
  6. ஓம் ஸுஜ்யோதிஷே நம:
  7. ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
  8. ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
  9. ஓம் ஸநாதநாய நம:
  10. ஓம் ஜ்யோதிஷே நம:
  11. ஓம் லோகஸ்வரூபாய நம:
  12. ஓம் ஜ்யோதிஷே நம:
  13. ஓம் ஜ்ஞாய நம:
  14. ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
  15. ஓம் ஸ்வாஹாகாராய நம:
  16. ஓம் ஸ்வதாகாராய நம:
  17. ஓம் வஷட்காராய நம:
  18. ஓம் க்ருபாகராய நம:
  19. ஓம் ஹந்தகாராய நம:
  20. ஓம் நிராகாராய நம:
  21. ஓம் வேகாகாராய நம:
  22. ஓம் ஶங்கராய நம:
  23. ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
  24. ஓம் ஓம்காராய நம:
  25. ஓம் லோககாரகாய நம: 575
  1. ஓம் ஏகாத்மநே நம:
  2. ஓம் அநேகாத்மநே நம:
  3. ஓம் சதுராத்மநே நம:
  4. ஓம் சதுர்ப்புஜாய நம:
  5. ஓம் சதுர்மூர்த்தயே நம:
  6. ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
  7. ஓம் சதுர்வேதமயாய நம:
  8. ஓம் உத்தமாய நம:
  9. ஓம் லோகப்ரியாய நம:
  10. ஓம் லோககுரவே நம:
  11. ஓம் லோகேஶாய நம:
  12. ஓம் லோகநாயகாய நம:
  13. ஓம் லோகஸாக்ஷிணே நம:
  14. ஓம் லோக பதயே நம:
  15. ஓம் லோகாத்மநே நம:
  16. ஓம் லோகலோசநாய நம:
  17. ஓம் லோகாதாராய நம:
  18. ஓம் ப்ரல்லோகாய நம:
  19. ஓம் லோகாலோகமயாய நம:
  20. ஓம் விபவே நம:
  21. ஓம் லோககர்த்ரே நம:
  22. ஓம் விஶ்வகர்த்ரே நம:
  23. ஓம் க்ருதாவர்த்தாய நம:
  24. ஓம் க்ருதாகமாய நம:
  25. ஓம் அநாதயே நம: 600
  1. ஓம் அநந்தாய நம:
  2. ஓம் அபூதாய நம:
  3. ஓம் பூதவிக்ரஹாய நம:
  4. ஓம் ஸ்துதயே நம:
  5. ஓம் ஸ்துதாய நம :
  6. ஓம் ஸ்தவப்ரீதாய நம:
  7. ஓம் ஸ்தோத்ரே நம:
  8. ஓம் நேத்ரே நம:
  9. ஓம் நியாமகாய நம:
  10. ஓம் கதயே நம:
  11. ஓம் மதயே நம:
  12. ஓம் பித்ரே நம:
  13. ஓம் மாத்ரே நம:
  14. ஓம் குரவே நம:
  15. ஓம் ஸக்யே நம:
  16. ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
  17. ஓம் மந்த்ர ரூபாய நம:
  18. ஓம் அஸ்த்ர ரூபாய நம:
  19. ஓம் பஹுரூபாய நம:
  20. ஓம் ரூபாய நம:
  21. ஓம் பஞ்சரூபதராய நம:
  22. ஓம் பஞ்சரூபாய நம:
  23. ஓம் ரூடாய நம:
  24. ஓம் யோகரூடாய நம:
  25. ஓம் யோகிநே நம: 625
  1. ஓம் ஸமரூபாய நம:
  2. ஓம் யோகாய நம:
  3. ஓம் யோகபீடஸ்திதாய நம:
  4. ஓம் யோககம்யாய நம:
  5. ஓம் ஸௌம்யாய நம:
  6. ஓம் த்யாநகம்யாய நம:
  7. ஓம் த்யாயிநே நம:
  8. ஓம் த்யேயகம்யாய நம:
  9. ஓம் தாம்நே நம:
  10. ஓம் தாமாதிபதயே நம:
  11. ஓம் தராதராய நம:
  12. ஓம் தர்மாய நம:
  13. ஓம் தாரணாபிரதாய நம:
  14. ஓம் தாத்ரே நம:
  15. ஓம் ஸந்தாத்ரே நம:
  16. ஓம் விதாத்ரே நம:
  17. ஓம் தராய நம:
  18. ஓம் தாமோதராய நம:
  19. ஓம் தாந்தாய நம:
  20. ஓம் தாநவாந்தகராய நம:
  21. ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
  22. ஓம் பேஷஜாய நம:
  23. ஓம் ஸீரத்வஜாய நம:
  24. ஓம் ஸீதாய நம:
  25. ஓம் வரதாய நம: 650
  1. ஓம் அப்ரமிதாய நம:
  2. ஓம் ஸாரஸ்வதாய நம:
  3. ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
  4. ஓம் அக்ஷமாலிநே நம:
  5. ஓம் அஸிதர்மதராய நம:
  6. ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
  7. ஓம் விகர்மாய நம:
  8. ஓம் ஸுகர்மாய நம:
  9. ஓம் பரகர்மவிதாயிநே நம:
  10. ஓம் ஸுகர்மணே நம:
  11. ஓம் மந்மதாய நம:
  12. ஓம் வர்மாய நம:
  13. ஓம் வர்மிணே நம:
  14. ஓம் கரிசர்மவஸநாய நம:
  15. ஓம் கராளவதநாய நம:
  16. ஓம் கவயே நம:
  17. ஓம் பத்மகர்பாய நம:
  18. ஓம் பூதகர்பாய நம:
  19. ஓம் க்ருணாநிதயே நம:
  20. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  21. ஓம் கர்பாய நம:
  22. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  23. ஓம் தூர்ஜடயே நம:
  24. ஓம் விஶ்வகர்பாய நம:
  25. ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
  1. ஓம் ஜிதாரயே நம:
  2. ஓம் ஹிரண்ய கர்பாய நம:
  3. ஓம் ஹிரண்ய கவசாய நம:
  4. ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
  5. ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
  6. ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
  7. ஓம் ஹிரண்யநயநாய நம:
  8. ஓம் ஹிரண்யரேதஸே நம:
  9. ஓம் ஹிரண்யவதநாய நம:
  10. ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
  11. ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
  12. ஓம் ஶ்ருங்கிணே நம:
  13. ஓம் பைரவாய நம:
  14. ஓம் ஸுகேஶாய நம:
  15. ஓம் பீஷணாய நம:
  16. ஓம் ஆந்த்ரமாலிநே நம:
  17. ஓம் சண்டாய நம:
  18. ஓம் ருண்டமாலாய நம:
  19. ஓம் தண்டதராய நம:
  20. ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
  21. ஓம் கமண்டலுதராய நம:
  22. ஓம் கண்டஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
  24. ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
  25. ஓம் பீதஸிம்ஹாய நம: 700
  1. ஓம் நீலஸிம்ஹாய நம:
  2. ஓம் நீலாய நம:
  3. ஓம் ரக்தஸிம்ஹாய நம:
  4. ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
  5. ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
  6. ஓம் மூலஸிம்ஹாய நம:
  7. ஓம் மூலாய நம:
  8. ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
  9. ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
  10. ஓம் பர்வதவாஶிநே நம:
  11. ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
  12. ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
  13. ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் சண்டஸிம்ஹாய நம:
  15. ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
  16. ஓம் அநந்தகதயே நம:
  17. ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
  18. ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
  19. ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
  20. ஓம் நரஸிம்ஹாய நம:
  21. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  22. ஓம் நரஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
  24. ஓம் ஸத்யாய நம:
  25. ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
  1. ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
  2. ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
  3. ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
  5. ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
  6. ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
  7. ஓம் ஸ்வச்சாய நம:
  8. ஓம் ஸ்வச்சரூபாய நம:
  9. ஓம் ஸ்வச்சந்தாய நம:
  10. ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
  11. ஓம் ஸுவேஷாய நம:
  12. ஓம் ஶ்ருதயே நம:
  13. ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
  14. ஓம் ஶுசிஸ்ரவாய நம:
  15. ஓம் ஶூராய நம:
  16. ஓம் ஸுப்ரபாய நம:
  17. ஓம் ஸுதந்விநே நம:
  18. ஓம் ஶுப்ராய நம:
  19. ஓம் ஸுரநாதாய நம:
  20. ஓம் ஸுப்ரபாய நம:
  21. ஓம் ஶுபாய நம:
  22. ஓம் ஸுதர்ஶநாய நம:
  23. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  24. ஓம் நிருக்தாய நம:
  25. ஓம் ஸுப்ரபாய நம: 750
  1. ஓம் ஸ்வபாவாய நம:
  2. ஓம் பவாய நம:
  3. ஓம் விபவாய நம:
  4. ஓம் ஸுஶாகாய நம:
  5. ஓம் விஶாகாய நம:
  6. ஓம் ஸுமுகாய நம:
  7. ஓம் முகாய நம:
  8. ஓம் ஸுநகாய நம:
  9. ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் ஸுரதாய நம:
  11. ஓம் ஸுதாய நம:
  12. ஓம் ஸாங்க்யாய நம:
  13. ஓம் ஸுரமுக்யாய நம:
  14. ஓம் ப்ரக்யாதாய நம:
  15. ஓம் ப்ரபாய நம:
  16. ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
  17. ஓம் கேடமுத்கரபாணயே நம:
  18. ஓம் ககேந்த்ராய நம:
  19. ஓம் ம்ருகேந்த்ராய நம:
  20. ஓம் நாகேந்த்ராய நம:
  21. ஓம் த்ருடாய நம:
  22. ஓம் நாக கேயூரஹாராய நம:
  23. ஓம் நாகேந்த்ராய நம:
  24. ஓம் அகமர்திநே நம:
  25. ஓம் நதீவாஸாய நம: 775
  1. ஓம் நக்நாய நம:
  2. ஓம் நாநாரூபதராய நம:
  3. ஓம் நாகேஶ்வராய நம:
  4. ஓம் நாகாய நம:
  5. ஓம் நமிதாய நம:
  6. ஓம் நராய நம:
  7. ஓம் நாகாந்தகரதாய நம:
  8. ஓம் நரநாராயணாய நம:
  9. ஓம் மத்யஸ்வரூபாய நம:
  10. ஓம் கச்சபாய நம:
  11. ஓம் யஜ்ஞவராஹாய நம:
  12. ஓம் நாரஸிம்ஹாய நம:
  13. ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
  14. ஓம் வாமநாய நம:
  15. ஓம் மஹௌஜஸே நம:
  16. ஓம் பார்கவராமாய நம:
  17. ஓம் ராவணாந்தகராய நம:
  18. ஓம் பலராமாய நம:
  19. ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
  20. ஓம் புத்தாய நம:
  21. ஓம் புத்தரூபாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
  23. ஓம் கல்கிநே நம:
  24. ஓம் ஆத்ரேயாய நம:
  25. ஓம் அக்நி நேத்ராய நம: 800
  1. ஓம் கபிலாய நம:
  2. ஓம் த்விஜாய நம:
  3. ஓம் க்ஷேத்ராய நம:
  4. ஓம் பஶுபாலாய நம:
  5. ஓம் பஶுவக்த்ராய நம:
  6. ஓம் க்ருஹஸ்தாய நம:
  7. ஓம் வநஸ்தாய நம:
  8. ஓம் யதயே நம:
  9. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  10. ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
  11. ஓம் தத்போக்த்ரே நம:
  12. ஓம் முமுக்ஷவே நம:
  13. ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
  14. ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
  15. ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
  16. ஓம் ஶிலாவாஸாய நம:
  17. ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
  18. ஓம் மஹாவாஸாய நம:
  19. ஓம் குஹாவாஸாய நம:
  20. ஓம் குஹ்யாய நம:
  21. ஓம் குப்தாய நம:
  22. ஓம் குரவே நம:
  23. ஓம் மூலாதிவாஸாய நம:
  24. ஓம் நீலவஸ்த்ரதராய நம:
  25. ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
  1. ஓம் ஶஸ்த்ராய நம:
  2. ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
  3. ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
  4. ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
  5. ஓம் துரந்தராய நம:
  6. ஓம் தூர்த்தாய நம:
  7. ஓம் துர்தராய நம:
  8. ஓம் தராய நம:
  9. ஓம் துர்மதாய நம:
  10. ஓம் துரந்தாய நம:
  11. ஓம் துர்தராய நம:
  12. ஓம் துர்நிரீக்ஷாய நம:
  13. ஓம் நிஷ்டாய நம:
  14. ஓம் துர்தர்ஶாய நம:
  15. ஓம் த்ருமாய நம:
  16. ஓம் துர்பேதாய நம:
  17. ஓம் துராஶாய நம:
  18. ஓம் துர்லபாய நம:
  19. ஓம் த்ருப்தாய நம:
  20. ஓம் த்ருப்தவக்த்ராய நம:
  21. ஓம் அத்ருப்த நயநாய நம:
  22. ஓம் உந்மத்தாய நம:
  23. ஓம் ப்ரமத்தாய நம:
  24. ஓம் தைத்யாரயே நம:
  25. ஓம் ரஸஜ்ஞாய நம: 850
  1. ஓம் ரஸேஶாய நம:
  2. ஓம் அரக்தரஸநாய நம:
  3. ஓம் பத்யாய நம:
  4. ஓம் பரிதோஷாய நம:
  5. ஓம் ரத்யாய நம:
  6. ஓம் ரஸிகாய நம:
  7. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  8. ஓம் ஊர்த்வரூபாய நம:
  9. ஓம் ஊர்த்வரேதஸே நம:
  10. ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
  11. ஓம் ஸிம்ஹாய நம:
  12. ஓம் ஊர்த்வபாஹவே நம:
  13. ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
  14. ஓம் ஶங்கசக்ராய நம:
  15. ஓம் கதாபத்மதராய நம:
  16. ஓம் பஞ்சபாணதராய நம:
  17. ஓம் காமேஶ்வராய நம:
  18. ஓம் காமாய நம:
  19. ஓம் காமபாலாய நம:
  20. ஓம் காமிநே நம:
  21. ஓம் காமவிஹாராய நம:
  22. ஓம் காமரூபதராய நம:
  23. ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
  24. ஓம் ஸோமபாய நம:
  25. ஓம் ஸோமாய நம: 875
  1. ஓம் வாமாய நம:
  2. ஓம் வாமதேவாய நம:
  3. ஓம் ஸாமஸ்வநாய நம:
  4. ஓம் ஸௌம்யாய நம:
  5. ஓம் பக்திகம்யாய நம:
  6. ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
  7. ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
  8. ஓம் பீஷ்மாய நம:
  9. ஓம் பீஷதாய நம:
  10. ஓம் பீமவிக்ரமணாய நம:
  11. ஓம் ம்ருகக்ரீவாய நம:
  12. ஓம் ஜீவாய நம:
  13. ஓம் ஜிதாய நம:
  14. ஓம் ஜிதகாரிணே நம:
  15. ஓம் ஜடிநே நம:
  16. ஓம் ஜாமதக்ந்யாய நம:
  17. ஓம் ஜாதவேதஸே நம:
  18. ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
  19. ஓம் ஜப்யாய நம:
  20. ஓம் ஜபிதாய நம:
  21. ஓம் ஜராயுஜாய நம:
  22. ஓம் அண்டஜாய நம:
  23. ஓம் ஸ்வேதஜாய நம:
  24. ஓம் உத்பிஜாய நம:
  25. ஓம் ஜநார்தநாய நம: 900
  1. ஓம் ராமாய நம:
  2. ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
  3. ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
  4. ஓம் ப்ரத்யும்நாய நம:
  5. ஓம் ப்ரமோதிநே நம:
  6. ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
  7. ஓம் ருத்ராய நம:
  8. ஓம் வீரபத்ராய நம:
  9. ஓம் சித்ரூபாய நம:
  10. ஓம் ஸமுத்ராய நம:
  11. ஓம் கத்ருத்ராய நம:
  12. ஓம் ப்ரசேதஸே நம:
  13. ஓம் இந்த்ரியாய நம:
  14. ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
  15. ஓம் இந்த்ராநுஜாய நம:
  16. ஓம் அதீந்த்ரியாய நம:
  17. ஓம் ஸாராய நம:
  18. ஓம் இந்திராபதயே நம:
  19. ஓம் ஈஶாநாய நம:
  20. ஓம் ஈட்யாய நம:
  21. ஓம் ஈஶித்ரே நம:
  22. ஓம் இநாய நம:
  23. ஓம் வ்யோமாத்மநே நம:
  24. ஓம் வ்யோம்நே நம:
  25. ஓம் வ்யோமகேஶிநே நம: 925
  1. ஓம் வ்யோமாதாராய நம:
  2. ஓம் வ்யோமவக்த்ராய நம:
  3. ஓம் அஸுரகாதிநே நம:
  4. ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
  5. ஓம் வ்யோமவாஸாய நம:
  6. ஓம் ஸுகுமாராய நம:
  7. ஓம் ராமாய நம:
  8. ஓம் ஶுபாசாராய நம:
  9. ஓம் விஶ்வாய நம:
  10. ஓம் விஶ்வரூபாய நம:
  11. ஓம் விஶ்வாத்மகாய நம:
  12. ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
  13. ஓம் ஜ்ஞாநாய நம:
  14. ஓம் விஶ்வேஶாய நம:
  15. ஓம் பராத்மநே நம:
  16. ஓம் ஏகாத்மநே நம:
  17. ஓம் த்வாதஶாத்மநே நம:
  18. ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
  19. ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
  20. ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
  21. ஓம் நித்யாய நம:
  22. ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
  23. ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
  24. ஓம் விரக்தாய நம:
  25. ஓம் பாவஶுத்தாய நம: 950
  1. ஓம் ஸித்தாய நம:
  2. ஓம் ஸாத்யாய நம:
  3. ஓம் ஶரபாய நம:
  4. ஓம் ப்ரபோதாய நம:
  5. ஓம் ஸுபோதாய நம:
  6. ஓம் புத்திப்ரியாய நம:
  7. ஓம் ஸ்நிக்தாய நம:
  8. ஓம் விதக்தாய நம:
  9. ஓம் முக்தாய நம:
  10. ஓம் முநயே நம:
  11. ஓம் ப்ரியம்வதாய நம:
  12. ஓம் ஶ்ரவ்யாய நம:
  13. ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
  14. ஓம் ஶ்ரிதாய நம:
  15. ஓம் க்ருஹேஶாய நம:
  16. ஓம் மஹேஶாய நம:
  17. ஓம் ப்ரஹ்மேஶாய நம:
  18. ஓம் ஸ்ரீதராய நம:
  19. ஓம் ஸுதீர்த்தாய நம:
  20. ஓம் ஹயக்ரீவாய நம:
  21. ஓம் உக்ராய நம:
  22. ஓம் உக்ரவேகாய நம:
  23. ஓம் உக்ரநேத்ராய நம:
  24. ஓம் உக்ரகர்மரதாய நம:
  25. ஓம் வ்யக்ராய நம: 975
  1. ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
  2. ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
  3. ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
  4. ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
  5. ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
  6. ஓம் வ்ருஷத்வஜாய நம:
  7. ஓம் வ்ருஷண்யாய நம:
  8. ஓம் வ்ருஷாய நம:
  9. ஓம் வ்ருஷபாய நம:
  10. ஓம் உக்ரஶ்ரவாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶ்ருதிதராய நம:
  13. ஓம் தேவதேவேஶாய நம:
  14. ஓம் மதுஸூதநாய நம:
  15. ஓம் புண்டரீகாக்ஷாய நம:
  16. ஓம் துரிதக்ஷயாய நம:
  17. ஓம் கருணாஸிந்தவே நம:
  18. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
  19. ஓம் நரஸிம்ஹாய நம:
  20. ஓம் கருடத்வஜாய நம:
  21. ஓம் யஜ்ஞநேத்ராய நம:
  22. ஓம் காலத்வஜாய நம:
  23. ஓம் ஜயத்வஜாய நம:
  24. ஓம் அக்நிநேத்ராய நம:
  25. ஓம் அமரப்ரியாய நம: 1000
  1. ஓம் மஹாநேத்ராய நம:
  2. ஓம் பக்தவத்ஸலாய நம:
  3. ஓம் தர்மநேத்ராய நம:
  4. ஓம் கருணாகராய நம:
  5. ஓம் புண்யநேத்ராய நம:
  6. ஓம் அபீஷ்டதாயகாய நம:
  7. ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
  8. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  9. ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
  10. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  11. ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

பரப்ரஹ்மணே நம:  1011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:

———-

ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:

இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே

மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்

ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.

ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்

ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்

ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.

ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே

வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்

நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம். 

நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே

ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச

கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்

த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே

நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே

ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்

ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.

ஸ்ரீ வானர கீதை – ஸ்ரீ பராசர சம்ஹிதையிலிருந்து ஸ்ரீ அனுமனின் ஸ்துதி :

October 21, 2025

வானர கீதை என்பது கிஷ்கிந்தாவில் உள்ள 38 வானரர்களால் அனுமனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் .
இந்திரன் முன்னிலையில் அனைத்து ரிஷிகளுக்கும் மகரிஷி அகஸ்தியரால் விவரிக்கப்பட்டது மற்றும் பராசரம் சம்ஹிதையின் ஒரு பகுதியாக எழுதப்பட்டுள்ளது . இது அனுமன் , அவரது வெவ்வேறு அவதாரங்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்களைக் கொண்டுள்ளது .
மராஷி பராசரர் பின்னர் இதை மைத்ரேய முனிவரிடம் கூறினார் .

பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது , உங்கள் இடது உள்ளங்கையை உங்கள் இடது முழங்காலில் வைத்து , வலது உள்ளங்கையை ஞான முத்ராவைக் காட்டி , உங்கள் இதயத்தின் அருகில் வைத்து , ரிஷிகளால் போற்றப்பட்ட அனுமன் , வாழை மரங்களுக்கு நடுவில் 10 மில்லியன் உதய சூரியனைப் போல பிரகாசிக்கிறார் . பரபிரம்மத்தை தியானிப்பது என் மனதையும் ஆன்மாவையும் அழிக்க வேண்டும் .

சஞ்சீவனி மலையை தூக்கியவர் , என் மனதில் உள்ள துயரத்தை நீக்குங்கள் . சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட ஒருவர் , என்னை ஆசீர்வதியுங்கள் . வானரங்களில் சிறந்தவர் , என்னைக் காப்பாற்றுங்கள் .

சுக்ரீவா கூறுகிறார் , அனுமனைப் பார்த்ததற்கு சமமான ( அவருடைய தரிசனம் ) 100 தங்க மலை சிகரங்களை , 100 கோடி மாடுகளை தானம் செய்வதை விட அதிகம் என்கிறார் .

அனுமானின் பெயரை எடுத்துக் கொள்வது எனக்கு புனித நீராடுவது போன்றது என்று கந்தமாதனா கூறுகிறார் . அனுமனின் பெயர் என் ஜபம் ( பாராயணம் ) . அனுமனின் பெயர் எனது தியானம் . நான் எப்போதும் விரும்புவது அனுமனைப் புகழ்வது தான் என்று கூறுகிறார் .

சுஷேனா கூறுகிறார் , ஸ்ரீ ராம பக்தனான அனுமனின் கதையைக் கேட்டு , அவருடைய குணங்களைப் பாராட்டி , ஓ ராமசதா , என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பாதங்களை வணங்க விரும்புகிறேன் என்கிறார் .

அங்கதா சொல்கிறார் , சுவர்ச்சலா தேவி என் தாய் , வாயுதேவரின் மகன் , அனுமன் என் தந்தை . அனுமன் பக்தர்கள் அனைவரும் எனது உறவினர்கள் . அவரது நிலை 3 உலகங்களுக்கு சமம் என்கிறார் .

நிலா சொல்கிறார் , தன் பக்தர்களுக்கு கல்பவரிக்கையைப் போன்றவர் , இனிமையானவர் , நல்ல குணங்கள் கொண்டவர் , வாயுவின் மகன் சுவார்சலையின் கணவர் , வரம் தருபவர், நான் அந்த அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

மகாத்மா அனுமன் என்ன சொன்னாலும் நான் அதை பின்பற்றுவேன் என்று கவக்ஷா கூறுகிறார் . இதைத் தவிர வேறு எந்த பெரிய தர்மமும் எனக்குத் தெரியாது . ஓ ஆஞ்சநேயா , என்னையும் என் தர்மத்தையும் காப்பாற்று என்கிறார் .

மைண்டா கூறுகிறார் , வாயுவின் மகனே , உன் கட்டளைகளைப் பின்பற்றி , உன்னால் தோற்றுவிக்கப்படுகிறேன் , உன்னால் தூண்டப்பட்ட உணர்வுகள் மற்றும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதுவாக இருந்தாலும் , அவை அனைத்தும் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் மற்றும் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்கிறார் .

த்விவிதா சொல்கிறார் , இராவணனையும் அவனுடைய ஆட்களையும் கொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருந்தது , ஆனால் ராமச்சந்திராவுக்கும் அவருடைய சகோதரனுக்கும் புகழ் சேர்க்க , நீங்கள் அவர்களை அவர்களுக்காக விட்டுவிட்டீர்கள் . அத்தகைய பெரிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

சரபா கூறுகையில் , செவ்வாய்க்கிழமை அனுமனின் பூஜை செய்ய வேண்டும் . அத்தகைய நபர் தெளிவான மனம் , நீண்ட ஆயுள் , செல்வம் , நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களைப் பெறுவார் என்கிறார் .

கவயா கூறுகையில் , சூரியனை இறைச்சியாகவும் , பெருங்கடலை மாடு மாட்டு வண்டியால் ஆன குழியாகவும் , ராவணனை புல் வைக்கோலாகவும் கருதிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன்  என்கிறார் .

பிரஹஸ்தா கூறுகையில் , கடலில் எளிதில் பாய்ந்தவர் , ஜானகி தேவியின் துயர் என்ற நெருப்பை எடுத்து , அதனுடன் இலங்கையை எரித்தார் , நான் அத்தகைய அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

நளன் கூறுகையில் , நான் அனுமனின் தாமரை பாதத்தை வணங்குகிறேன் . சிறந்த முடிவுகளை ஏற்படுத்தும் அவருடைய பெயர்களை நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என்கிறார் .

தர்மகா கூறுகையில் , போரில் கொல்லப்பட்ட 67 கோடி வானரர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தவர் , அத்தகைய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

கஜா சொல்கிறார் , யார் உடலுடன் வால் இணைத்திருக்கிறார்கள் , அவருடைய தந்தை பார்வதியின் கணவர் சங்கரா , பளபளக்கும் கைகள் , வஜ்ராயுதா போன்ற பற்கள் ( தந்தங்கள் ) , அவருடைய தாய் அஞ்சனா தேவி , எனக்கு அத்தகைய அனுமனை மட்டுமே தெரியும் என்கிறார் .

ஞானம் , வலிமை , புகழ் , தைரியம் , அச்சமின்மை , நோய் எதிர்ப்பு சக்தி , துன்பம் இல்லை , நல்ல பேச்சு ஆகியவை அனுமனை தியானிப்பதன் மூலம் அடையப்படுகின்றன என்று ரிக்ஷராஜாசா கூறுகிறார் .

சம்பாதி கூறுகையில் , சீதை , ராமரின் துயரத்தை நீக்கிய மற்றும் பக்தர்களுக்கு இன்பமாக தோன்றும் அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

வேகவன் கூறுகையில் , முழு உலகிலும் வருங்கால பிரம்மாவிலும் ( படைப்பாளர் ) ஸ்ரீராமருக்கு மிகவும் பிரியமான அஞ்சனா தேவியின் மகனான அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

இந்த பூமியில் அனுமனுக்கு இணையான கடவுள் இல்லை என்று ருந்திரகிரீவா கூறுகிறார் . இது பிரம்மா , பார்வதி , பரமேஸ்வரரால் அறிவிக்கப்பட்டது , அவர்களும் அவரை வணங்குகிறார்கள் என்கிறார் .

முழு வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் ஆழமான பகுப்பாய்விற்குப் பிறகு , மகரிஷிகள் ஒருமனதாக அனுமனை விட பெரிய கடவுள் இல்லை என்று முடிவு செய்துள்ளனர் என்கிறார் .

அனுமன் என்றென்றும் சுபகாரியமாக இருக்கட்டும் என்று சுதாம்ஷ்டரா கூறுகிறார் . வானரர்களின் நாயகனே , நீங்கள் என்றென்றும் சுபமாக இருக்கட்டும் . அஞ்சனாவின் மகனே , உனக்கு எப்பொழுதும் ஐஸ்வர்யம் வரட்டும் ! ராமருக்கு மிகவும் பிரியமானவளே , நீங்கள் எல்லா நேரங்களிலும் மங்களகரமானவர்களாக வெளிப்படுவீர்களாக ! என்கிறார் .

இந்த முழு பிரபஞ்சமும் அனுபவித்த ஆனந்தத்திற்கு ( ஆனந்தம் ) காரணமான கருணையின் ( கருணராசா ) உணர்வுகளால் நிறைந்திருக்கும் அனுமானுக்கு நான் வணங்குகிறேன் என்று ரிஷபன் கூறுகிறார் . பிரம்மாவைத் தவிர வேறு யாருமல்ல என்கிறார் .

பிருது கூறுகிறார் , அனுமன் எல்லாவற்றையும் அருளும் கடவுள் . கொடுக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் அவர் காரணம் . அவர் இருப்புக்கான அனைத்து விமானங்களின் பாதுகாவலர் . அவர் நல்ல செயல்களின் செயல்திறனை ஊக்குவிப்பவர் . அவர்தான் நல்ல செயல்களைச் செய்கிறார் மற்றும் செயல்களின் பலனை அனுபவிப்பவர் அவர்தான் என்கிறார் .

ஜாம்பவான் கூறுகிறார் , ஓ அனுமன் ! இந்த உலகில் உள்ள முட்டாள்தனமான , அறிவற்ற மக்கள் உங்கள் தெய்வீக பெயரை கூட மறந்துவிட்டன ர், இது ஒரு நபருக்கு உலக இன்பங்கள் ( புக்தி ) மற்றும் விடுதலை ( முக்தி ) ஆகிய இரண்டையும் ஆசீர்வதிக்கிறது . இதை விட வித்தியாசமாக என்ன இருக்க முடியும் ? என்கிறார் .

ஜோதிர்முக கூறுகிறார் , ஓ மகாத்மா ஹனுமந்தா ! நீங்கள் இறைவனின் அனைத்து பக்தர்களிடமும் மிக உயர்ந்த பாரிஜாத மலர் ( இரவு பூக்கும் மல்லிகை ) ஆவீர் . இந்தப் பிறவியில் , என்னுடைய எல்லா பிரார்த்தனைகளுக்கும் ஒரே ஒரு வெகுமதியை நான் தேடுகிறேன்  –  உங்கள் தாமரை பாதத்தில் சேவை செய்யும் பக்தர்களின் பாதங்களிலிருந்து வரும் தூசி , எனக்கு அதிர்ஷ்டத்தைத் தரட்டும் . இதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை என்கிறார் .

சுமுகா கூறுகிறார் , ஓ நாக்கு , அனைத்து சுவைகளின் ( ராசா ) சாரத்தை அறிந்த நீங்கள் , மிகவும் அமிர்த சுவைகளை அனுபவிக்க நித்தியமாக ஏங்குகிறீர்கள் . அனுமனின் பெயர் என்று அழைக்கப்படும் சுவையான தேனை தயவுசெய்து குடிக்கவும் என்கிறார் .

கோலங்குலா சொல்கிறார் , ஒரு அசுத்தமான நாள் பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது , ஒரு சுப நேரம் , நட்சத்திரம் ( நட்சத்திரம் ) , யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பஞ்சாங்கத்தை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் எங்கே ? அனுமானின் பாதங்கள் ? அத்தகைய நபர் எதற்கும் பயப்படத் தேவையில்லை ; ஒவ்வொரு கணமும் அவருக்கு ஒரு நல்ல தருணம் மட்டுமே என்கிறார் .

குமுதா சொல்கிறார் , எல்லா உயிர்களுக்கும் புகலிடமாக இருக்கும் அனுமனின் பாதங்கள் இந்த பூமியில் வசிக்கின்றன . ஓ நாக்கு , உங்களுடன் அனுமானை நோக்கிச் செல்லும் பாடல்களும் பிற பாதைகளும் உள்ளன . பூமியின் மக்களிடையே குறைபாடு பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது ? என்கிறார் .

சதாபலி கூறுகிறார் , ஹனுமந்தா ! உங்கள் தாமரை பாதங்களுக்கு சேவை செய்யும் இந்த வாய்ப்பைப் பெறுவதன் மூலம் நான் முற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டேன் . நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள் . என் மீதுள்ள இந்த கருணையால் , நான் தகுதியுள்ளவனாகவும் பெரியவனாகவும் ஆனேன் என்கிறார் .

கேசரி ( அனுமனின் தந்தை ) , அனுமானே ! உன்னைத் தவிர எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை . நீங்கள் மட்டுமே என் பாதுகாவலர் . எனவே முழுமையான இரக்க உணர்வுடன் , தயவுசெய்து என்னை எப்போதும் பாதுகாக்கவும் என்கிறார் .

மாரீச்சா , அனுமனே ! நான் எப்போதும் பாவங்களில் மூழ்கி இருக்கிறேன் . என்னுடைய இந்த மனம் பாவம் செய்வதிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது மற்றும் அதை நோக்கி ஆழமாக சாய்ந்துள்ளது . நான் , பயங்கரமான பாவி , மோசமான பாவங்களை செய்கிறேன் . ஆயினும் , ஆண்டவரே , நான் உங்கள் நித்திய பாதுகாப்பை நாடுகிறேன் என்கிறார் .

சதா பாபோகா என்றால் ‘ நித்தியமாக பாவங்களில் மூழ்குவது ‘ . நிஷ்டியூதம் என்பது செய்த பாவங்களின் மூலம் அறியப்படுவதாகும் . பாபாத்மா ஒரு ‘ பாவம் ’ என்கிறார் .

தருணா கூறுகிறார் , ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று அனுமன் ஆணையிட்டால் , அது தவிர்க்க முடியாமல் நிறைவேறும் ! ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று அனுமன் விரும்பினால் , அது ஒருபோதும் நிறைவேறாது ! இதை எதுவும் மாற்ற முடியாது . இது இப்படியிருக்க , நாம் அத்தியாவசியமான மற்றும் கட்டாயமானதாகக் கருதும் இந்த உடல் உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் உண்மையில் தேவையற்றதாக இருக்கலாம் என்கிறார் .

கோமுக கூறுகிறார் , ஓ அனுமன் ! முடிவற்ற இரக்கத்தால் நிரம்பி வழிகின்ற இறைவா ! என்னை உங்கள் வேலைக்காரனாக கருதி , தயவுசெய்து என்னை மன்னியுங்கள் , பாதுகாக்கவும் , ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தவறுகளைச் செய்துகொண்டிருக்கும் அந்த துரோகி என்கிறார் .

பரமேஸ்வராவுக்கு ஒரே மாதிரியான அர்த்தம் கொண்ட மிகவும் பிரபலமான பாடல் உள்ளது –

அபாரதா சஹஸ்ராணி க்ரியந்தே ஆஹர்நிசம் மாயா ,
தஸோ யம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வர

பொருள் : ஓ கடவுளே ! நான் ஆயிரக்கணக்கான தவறுகளை செய்து வருகிறேன் . என்னை உமது அடியாளாக கருதி , தயவுசெய்து என்னை மன்னித்து பாதுகாக்கவும் .

எல்லோரும் தவறு செய்கிறார்கள் . இருப்பினும் , சிலர் மட்டுமே தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் . மகாத்மாக்கள் அவர்கள் செய்யாத தவறுகளை கூட ஏற்றுக்கொள்கிறார்கள் .

பவனசா ( பனசா ) கூறுகிறார் , முழுமையான உண்மையின் கோணத்தில் பார்க்கும்போது , அனுமனை விட பெரிய உண்மை இல்லை ! அவரை விட உயர்ந்தது எதுவுமில்லை ! எனவே வேறு எந்த சிந்தனையையும் மகிழ்விக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்  .

பனசா என்றால் பலாப்பழம் என்பது முட்கள் நிறைந்த மற்றும் கடினமான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது , ஆனால் , விரிசல் திறந்தால் , உள்ளே பல்ப் போன்ற சதைப்பழங்கள் உள்ளன . இந்த சதைப்பற்றுள்ள பழங்கள் ஒவ்வொன்றும் வடிவம் மற்றும் இனிப்பில் ஒரே மாதிரியானவை . (ப லாப்பழத்திற்குள் உள்ள அனைத்து சதைப்பழங்களிலும் ஒரே சாரம் பாய்கிறது ) . அதேபோல் , பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த பன்முக வடிவங்கள் இரட்டை அல்லாத இறைவனின் வடிவங்கள் .

சுஷேனா கூறுகையில் , அனுமன் தாய் , தந்தை , அண்ணன் , சகோதரி , கல்வி , பணம், இறைவன் , எல்லாம் எனக்கு என்கிறார் .

ஹரிலோமா கூறுகிறார் , அனுமன் இங்கே , அங்கே , எல்லா இடங்களிலும் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்திலும் இருக்கிறார் . அனுமனைத் தவிர வேறு யாரிடமும் நான் பிரார்த்தனை செய்வதில்லை என்கிறார் .

ரங்கா கூறுகிறார் , நான் சரணடைந்து எல்லாவற்றையும் அனுமனுக்கு வழங்குகிறேன் , அவரிடம் நான் மன்னிப்பு எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

விதுஷ்டா கூறுகையில் , அனுமன் என்னை நிலத்திலும் , நீரின் கீழும் , காற்றிலும் பாதுகாக்கட்டும் . காடுகளிலும் எல்லா இடங்களிலும் வாயுவின் மகன் என்னைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

வானர கீதா என்பது வானரர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் . ஒவ்வொரு பாவத்தையும் கழுவும் ஒரு சிறந்த சக்திவாய்ந்த பாடல் இது ! அது அந்த நபருக்கு ஒவ்வொரு விதமான அறிவையும் அளிக்கிறது ! இந்த வானர கீதை அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் அதிகரிக்கும் திறன் கொண்டது . இது உச்ச அறிவை அளிக்கிறது . வானர கீதையை மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் அனுமனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள் .

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ  பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்!–

October 21, 2025

விஷ்ணு ஸ்தவராஜம்” என்பது பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட விஷ்ணுவைப் போற்றும் பல துதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும். இது பொதுவாக ‘கல்கி புராணம்’, ‘நரசிம்ம புராணம்’ மற்றும் ‘மகாபாரதத்தின் சாந்தி பர்வம்’ போன்ற நூல்களில் காணப்படுகிறது. இந்த ஸ்தோத்திரங்கள் விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களையும், அவரின் மகிமையையும், அவரைத் துதிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் விவரிக்கின்றன.  

கல்கி புராணத்தில்: விஷ்ணுவின் யோக சக்தியைப் பற்றியும், லட்சுமியைப் பற்றியும், பக்தர்களின் துதி ஆகியவற்றையும் விவரிக்கும் ஒரு துதிப்பாடலாக அமைந்துள்ளது. 

நரசிம்ம புராணத்தில்: நரசிம்மபுராணத்தின் ஒரு பகுதியாக வரும் துதிப் பாடல்களில், நரகம் போன்ற கொடிய இடங்களில் தர்மம் மற்றும் ஞானம் இல்லாதவர்கள் அடையும் துன்பங்களைப் பற்றியும், யமலோகத்தைப் பற்றியும் கூறுகிறது. 

      மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில்: பீஷ்மர் விஷ்ணுவை வணங்கிப் பாடும் துதிப்பாடலாக உள்ளது.

      ————

      பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! – சாந்திபர்வம் பகுதி – 47-பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்…

      ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?” என்று கேட்டான்.(1)

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)

      கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)

      பீஷ்மர், “ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட “அது” நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)

      பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)

      மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)

      ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)

      ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே” என்று துதித்தார் {பீஷ்மர்}”.(99)

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், “கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[22].(108)“இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்”

      ——————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

      ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்-

      October 7, 2025

      ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண

      ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண

      குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்களகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்களத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

      நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
      பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
      ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
      நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே

      நாராயணா… குருவாயூரப்பா… கோவிந்தா… முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்குபவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

      ப்ராஹ்மேமுஹூர்த்தே பரிதஸ்வபக்தை:
      ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
      ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே
      வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

      விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

      பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
      திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
      ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்
      ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே

      தங்கள் சந்நிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்றுகிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

      நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய:
      நித்யம் திவிஸ்த்தைர்நிஸிபூஜிதாய
      மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
      ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

      வஸுதேவர், உத்தவர்- இவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீபகவான் வைகுண்டம் போனதும், சமுத்திரத்தினால் துவாரகை மூழ்கியது. இந்த விக்ரஹம் மட்டும் சமுத்திரத்தின் அலையினால் மிதந்து மேற்கு சமுத்திரம் வந்து சேர்ந்தது. குருவும் (ப்ரஹஸ்பதியும்), வாயுவும் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்று பிரசித்திபெற்றது.)

      குருவாதபுரீஸ பஞ்சகாக்யம்
      ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
      ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து
      ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி

      குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்களம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார்.

      ————————————————————————————–

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

      ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்.-ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள்-

      September 18, 2025

      ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகளவர்கள் ப்ரம்ஹசாரியாயிருந்து வரும் பொழுது துவாதசீ திதி யன்று ஒரு ஏழைப் பிராம்ஹணன் கிருஹத்துக்குப் பிக்ஷை வாங்குவதற்காகச் சென்றனர்.அங்குச் சென்று ஸம்பிரதாயப்படி ” பவதி பிக்ஷாம் தேஹி” என்று சொன்னார்-இதைக் கேட்டு- அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியும் மஹா பதிவிரதையுமரன ஸ்திரீ வெளியில் வந்து ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் நமது ஆசார்யாளைப் பார்த்து,தனக்கு பிஷை போடுவதற்குக் கூட சக்தி யில்லாமையை நினைத்து மிகவும் வருந்தி தெய்வ ஸங்கற்பத்தால் தற்சமயம் கையிற் கிடைத்த ஒரு நெல்லிக் கனியை ஆசாரியாளின் பிக்ஷா பாத்திரத்தில் போட்டாள். இதைக் கவனித்த ஆசாரியாள் உடனே கருணையை யடைந்து எவ்விதத்திலாவது இந்த உத்தமியின் தாரித்திரியத்தை விலக்க வேண்டுமென்று திருடமாய்ச் சங்கற்பித்துக் கொண்டு ஸ்ரீ தேவியை ஸ்துதி செய்தனர். அந்த ஸமயத்தில் நமது ஆசாரியாளின் முகார விந்தத்தினின்றும் வெளி வந்த ஸ்லோகங்களுக்கே கனகதாரா ஸ்தோத்திரம் என்று பெயர். இந்த 16 ஸ்லோகங்களைப் படித்தவுடன் ஸ்ரீ தேவி நேரில் பிரஸன்னையாகி வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். நீ என் விஷயத்தில் பிரஸன்னையாயிருப்பது நிச்சயமானால் எனக்கு இன்றைய தினம் பிக்ஷா தானஞ்செய்த இந்த உத்தமியின் தாரித்திரியம் விலகுமாறு அருள் புரிய வேண்டு மென்று ஆசாரியாள் பிரார்த்தித்தவுடன், நெல்லிக்கனிப் பிரமாணமுள்ள தங்கக் கட்டியை ஒரு முஹூர்த்த காலம் அவ்வுத்தமியின் கிருஹத்தில் வர்ஷிக்கும்படிச் செய்தாள் என்று சங்கர திக் விஜயம் முதலியவைகளிற் கூறப்பட்டிருக்கிறது.

      அங்கம் ஹரே: புளக பூஷண மாஸ்ரயந்தி
      ப்ருங்காங்க நேவ முகுளாபரணம் தமாலம்
      அங்கீ க்ருதாகில விபூதிரபாங்கலீலா
      மாங்கள்ய தாஸ்து மம மங்கள தேவ தாயா : ! (1)

      மொட்டுகளை அலங்கார மாயுடைய-தமாலம் என்ற மரத்தை பெண் வண்டு போல உரோமாஞ்சத்தை அலங்கார மாயுடைய : நினைத்த மாத்திரத்தால் எல்லாப் பாபங்களையுமப ஹரித்துக் கொள்ளுகிற ஸ்ரீமந் நாராயணனுடைய தோள், மார்பு, கை, முதலிய அங்கங்களை அடைகிறதாயும் அங்கீகாரம் செய்யப்பட்ட ஸகல விதமான ஐஸ்வர்யங்களை யுடையதாயு மிருக்கிற கல்யாணம், மங்களம்,க்ஷேமம்,என்று சொல்லக் கூடியதற்கு அபிமானி தேவதையான ( யஜமானி யான) ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய கடைக்கண்ணின் லீலையானது (பார்வையானது) எனக்கு மங்களத்தைக் கொடுப்பதாக இருக்கட்டும்

      ஹே ஸ்ரீ தேவியே ! தாங்கள் ஸ்ரீமந்நாராயணனுடைய அங்க ஸௌந்தர்யத்தைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக, வெட்கத்துடன் கடைக் கண்ணால் பார்க்கின்றீர்கள்
      கருவண்டு போல் கருத்ததாயும், குளுமை பொருந்தியதாயுமிருக்கிற தங்களது கடாக்ஷம் நீருண்ட மேகம் போல் கருத்த பகவானுடைய திருமேனியிற் பட்டதும் அவரது சரீரமெல்லாம் ரோமாஞ்சமடைந்து முன்னிலும் அதிக சோபை வாய்ந்ததாயாகிறது. அதில் மறுபடியும் தங்கள் கடாக்ஷம் ஸஞ்சரிக்கின்றது.இவ்விதம் ஒவ்வொரு அங்கத்திலும் ஸஞ்சரிக்கும் தங்கள் கடாக்ஷமானது மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கருநிறமுள்ள தமாலம் என்ற மரத்தில் ஆங்காங்கு பறந்து சென்று கொண்டிருக்கும் பெண் வண்டுக்குச் சமானமா யிருக்கின்றது,அஃதுடன் தன்னை உபாஸிப்பவர்களுக்கு ஸகல விதமான ஸம்பத்தையும் கொடுப்பதில் திருடமான ஸங்கற்பமுள்ளதாயு மிருக்கிறது. அந்தத் தங்களது கடைக்கண்பார்வை யானது எனக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்..

      முக்தா முஹுர் விதததீ வதநே முராரே
      ப்ரேமத்ர பாப்ரணி ஹிதா நி கதாகதாநி 1
      மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
      ஸா மே ஸ்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா : (2)

      அழகு வாய்ந்ததாயும் நாராயணனுடைய முகத்தில் ஸ்நேஹம், லஜ்ஜை இவைகளால் உண்டான போக்குவரத்துக்களை லீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல செய்கின்ற தாயுமிருக்கிற ஷீர ஸமுத்திரத்தினின்றும் ஆவிர்ப்பவித்த ஸ்ரீதேவியினுடைய எந்த கண்களுடைய வரிசை யுண்டோ -அந்த வரிசை -எனக்கு ஸம்பத்தைக் கொடுக்கட்டும்.

      ஹே ஸ்ரீ தேவியே! மலர்ந்த நீலோத் பல புஷ்பம் போலுள்ள பகவானுடைய முக மண்டலத்தின் அழகைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக தங்களால் அனுப்பப்பட்ட கடாக்ஷமானது மத்தியில் பகவானின் கடாக்ஷத்தைச் சந்தித்து வெட்கத்துடன் திரும்பி விடுகிறது. கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பகவன் முகத்தில் ஸஞ்சரிக்கின்றது. பகவத் கடாக்ஷத்தை மறுபடியும் ஸந்தித்து வெட்கத்தால் திரும்பி விடுகிறது. இவ்விதம், மலர்ந்த நீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல் பகவன் முக மண்டலத்தில் சஞ்சரிக்கும் தங்களுடைய கடாக்ஷ பரம்பரையானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      விஸ்வா மரேந்திர பதவிப்ரமதா தக்ஷ
      மாநந்த ஹேது ரதிகம் முரவி த்விஷோபி 1
      ஈஷந் நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
      மிந்தீ வரோதர ஸஹோதர மிந்திராய : (3)

      எல்லா தேவ ஸ்ரேஷ்டர்களுடைய ஸ்தானத்தையும் விளையாட்டாகவே கொடுப்பதில் திறமை வாய்ந்ததாயும் அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீமந் நாராயணனுக்கும் மிகவும் ஸந்தோஷத்திற்குக் காரணமாயும் நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகத்திற்குச் சமானமாயு மிருக்கிற ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கடாக்ஷத்தின் பாதியானது என்னிடம் க்ஷண காலம் கொஞ்சம் உட்காரட்டும்.

      ஹேஸ்ரீ தேவியே ! எந்த தங்களது கடாக்ஷமானது இந்திரன், வருணன், குபேரன், பிரம்ஹா, முதலிய தேவ ஸ்ரேஷ்டர்களின் ஸ்தானங்களை விளையாட்டாகவே கொடுப்பதற்குச் சக்தி வாய்ந்ததோ, அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ மந் நாராயணனுக்கும் அதிகமாய் ஆனந்தத்தைப் பெருக்கக் கூடியதோ, நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகம் போல்
      கருத்ததான அந்தக் கடாக்ஷத்தின் ஏக தேசமானது கொஞ்ச காலம் அடியேன் மேல் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ஆமீலிதாக்ஷ மதிகம்ய முதா முகுந்த
      மாநந்த கந்தம நிமேஷம நங்கதந்திரம்
      ஆகேகரஸ்திக நீநிகபஷ்ம நேத்ரம்
      பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:1 (4)

      ஸந்தோஷத்தால் (சுக விசேஷத்தினால்) கொஞ்சம் மூடப்பட்ட கண்களை யுடைய ஸ்ரீ மந் நாராயணனை அடைந்து இருக்கிறதாயும் ஸந்தோஷத்தின் கிழங்காயும்- அதாவது ஸந்தோஷத்தை விளைவிக்கின்றதாயும் இமைக்கொட்டுத லில்லாததயும் மன்மதனைப் பிரதானமா யுடையதாயும் (மன்மதனை விருத்தி செய்கின்றதாயும்) கொஞ்சந் திறந்த கடைக் கண்ணில் இருக்கிற கருவிழியுடன் கூடின இமைமயிரை யுடையதாயும் ஆதி சேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்ணானது எனக்கு ஸம்பத்தின பொருட்டு ஆக வேண்டும்.

      ஹே லக்ஷ்மீ தேவியே ! ஸ்ரீ நாராயணன், மன்மதனை விருத்தி செய்கிறதாயும் சுக விசேஷத்தைப் பெருக்குகிற தாயுமிருக்கிற தங்களது கடாக்ஷாமிருதத்தில் முழுகி ஆதிசேஷ தல்பத்திற் படுத்து நிரதிசயமான சுகத்தை அனுபவிக்குங்கால் அவரது இரண்டு கண்களும் தானாகவே மூடிக் கொண்டு விடுகின்றன. அப்பொழுது எந்த தங்களது கடாக்ஷமானது எவ்வித தடையுமில்லாமல் இமைக் கொட்டுதலைக் கூட விலக்கி பகவானுடைய ஒவ்வொரு அவயவங்களிலும் யதேச்சமாய் சஞ்சரிக்கின்றதோ, அந்தக் கடாக்ஷமானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      பாஹ் வந்தரே மது ஜித : ஸ்ரித கௌஸ்துபே யா
      ஹாராவளிவ ஹரி நீல மயீ விபாதி
      காம ப்ரதா பகவதோபி கடாக்ஷ மாலா
      கல்யாண மாவஹது மே கமலாலயாயா : 1 (5)

      கௌஸ்துபம் என்ற சிறந்த ரத்தினத்துடன் கூடின ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு
      மார்பில் எந்த கடாக்ஷமாலை யானது இந்திர நீல ரத்தின மயமான மாலைகளின் வரிசை போல விளங்குகின்றதோ ஸமக்கிரமான ஐஸ்வர்யம் வீர்யம், யசஸ் முதலிய ஆறு குணங்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனுக்கும் காமனைக் கொடுக்கிறதாயும் (அபீஷ்டங்களைக் கொடுக்கிறதாயும்) இருக்கிற ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய அந்தக் கடாக்ஷங்களுடைய வரிசையானது எனக்கு கல்யாணத்தை அல்லது ஸ்வர்ணத்தை கொடுக்கட்டும்.

      ஹே லக்ஷ்மீ தேவியே ! தங்களுடைய இந்திர நீலம் போல் கருத்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கெஸ்துபம் என்ற ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு மார்பில் விழுகிறது.இவ்விதம் விழுந்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கௌஸ்துப ரத்தினத்தை நடு நாயகமாய் வைத்து இந்திர நீல ரத்தினத்தாற் கட்டப்பட்ட ஹாரங்கள் போல் விளங்குகின்றது. அவாப்த சமஸ்த காமனான பகவானுக்கும் காமனைக் கொடுக்கக் கூடிய அந்தத் தங்களது கடாக்ஷமானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.
      (காம என்ற பதத்திற்கு அபீஷ்டம் என்றும், மன்மதன் என்றும் இரண்டு விதமான பொருள் உண்டு. இவ் விரண்டு அர்த்தங்களும் இவ் விடத்தில் சிலேடையால் கூறப்பட்டிருக்கின்றன.ஸ்ரீமந் நாராயணனுக்கு ஏற்பட்ட வைபவங்க ளெல்லாவற்றிற்கும் தங்களது கடாக்ஷமே காரணமென்று ஒரு அர்த்தம்.தங்களது கடாஷ பாதத்தால் பகவானுக்கும் மன்மத விருத்தி(போகேச்சை) உண்டாகிறது என்று மற்றுமோர் அர்த்தம்.)

      காலாம்புதாளி லலிதோரஸி கைடபாரேர்
      த்தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
      மாதுஸ் ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்திர்
      ப்பத்ராணி மேதி ஸது பார்க்கவ நந்தநாயா (6)

      ஸ்ரீ தேவியினுடைய எந்த ஸ்ரீ மூர்த்தியானது ஸ்ரீ மந் நாராயணனுடைய கருத்த மேகங்களுடைய வரிசை போல் அழகான மார்பில் நீருண்ட மேகத்தில் மின்னலாகிற ஸ்திரீ போல பிரகாசிக்கின்றதோ எல்லா லோகங்களுக்கும் மாதாவான ஸ்ரீ தேவியினுடைய அந்த அழகு பொருந்திய ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு க்ஷேமங்களைக் கொடுக்கட்டும்

      ஹே ஸ்ரீ லக்ஷ்மீ தேவியே! கருத்த மேகம் போல் அழகு வாய்ந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமார்பில் எந்த தங்களது திருமேனியானது நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதோ அந்த ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு ஷேமங்களைக் கொடுக்க வேண்டும்.தாங்கள் ஜகந் மாதாவா யிருப்பிதால் எங்களது பிரார்த்தனையை அசட்டை செய்வது நியாயமல்ல. பாலர்களான நாங்கள் மாதாவான தங்களைத் தவிற வேறு யாரிடம் அபீஷ்டங்களை யாசித்துப் பெற்றுக் கொள்வது.ஆதலால் தாங்கள் தாமதமின்றி அருள் புரிய வேண்டு மென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ப்ராப்தம் பதம் பிரதமத : கலு யத் ப்ரபாவாத்
      மாங்கள்ய பாஜி மது மாதி மந்மதேந
      மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
      மந்தாலஸம் ச மகராலய கந்யகாயா : l (7)

      எந்த கடாக்ஷத்தின் மஹிமையால் கல்யாணத்தை யடைந்த வராயாகிய மதுவைக் கொன்ற பகவானிடம் எந்த கடாக்ஷ பலத்தாலேயே மன்மதனால் இடமானது முதலில் அடையப்பட்டதோ மெதுவாய் ஸஞ்சரிக்கிறதாம் வேறு விஷயத்தை யடைவதற்கு விருப்ப மில்லாததாயும் வெட்கத்தால் அபீஷ்ட வஸ்துவினிடமிருந்து திரும்புகிறதாயு மிருக்கிற அந்த சமுத்திர ராஜ குமாரியான ஸ்ரீ தேவியினுடைய நேத்திரத்தின் பாதியானது (கடாக்ஷமானது ) இந்த என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும்.

      ஹே ஸ்ரீ தேவியே! மதுவைக் கொன்றவரா யிருப்பதால் பயமடைந்த மன்மதன் எந்த தங்களது கடாக்ஷத்தால் ஸ்ரீ மந் நாராயணனையும் ஜயித்தானோ, மங்களமான வஸ்துக்களுக்கும் மங்களத்தைக் கொடுப்பவர் என்றபடி பரம மங்களமாயிருக்குந் தன்மையானது ஸ்ரீ நாராயணனுக்கு எந்த தங்களது கடாக்ஷ விசேஷத்தால் ஏற்பட்டதோ, அந்தத் தங்களுடைய கடாக்ஷமானது என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது-( மது என்ற பதத்திற்கும் வஸந்த ருது என்றும் மது என்று பெயர் கொண்ட அசுரன் என்றும் அர்த்தம். மது என்ற அசுரனை பகவான் கொன்றவரா யிருந்த போதிலும் சிலேடையால் வசந்தனையும் சம்ஹரித்தவர் என்ற அர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு,அதனால் தனது சுஹிருத்தான வசந்தனை பகவான் கொன்றிருப்பதால் அவனது சுஹிருத்தான நம்மையும் கொன்று விடுவார் என்று மன்மதன் பயந்து வெகுகாலம் வரையிலும் நாராயண னிருக்குமிடம் செல்லாமலிருந்தான், ஸ்ரீலக்ஷ்மீ கடாஷ பலத்தால் பிறகு ஐயித்தான் என்ற கருத்தைக் கொள்ள வேண்டும்.)

      தத்பாத் தயாநுபவநோ த்ரவிணாம்புதாரா
      மஸ்மிந் நகிஞ்ச விஹங்க ஸிஸவ் விஷண்ணே
      துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
      நாராயண ப்ரணயிநீ நயநாம்புவாஹ : 1 (8)

      தயையாகிற அனுகூலமானகாற்றை யுடையதாய் இருக்கிற ஸ்ரீ மந்நாராயணனின் பத்னியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்களாகிற நீருண்ட மேகமானது கஷ்டப்படுகின்ற இந்த ஏழையான சாதகக் குஞ்சினிடத்தில் வெகு காலமாய்(இருந்து வருகின்ற) பாபங்களாகிற கோடையை வெகு தூரத்தில் விலக்கி சம்பத்தாகிற மழையைக் கொடுக்க வேண்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே! அனுகூலமான காற்றினால் தூண்டப்பட்ட நீருண்ட மேகம் அதிகமாய் மழையைப் பொழிந்து தாகத்தைப் பொருத்துக் கொள்ள சக்தி யற்ற சாதக சிசுவிற்கு நீண்ட கோடைக் காலத்தால் ஏற்பட்ட தாஹத்தைத் தீர்த்து எவ்விதஞ் சுகத்தைக் கொடுக்குமோ
      அவ்விதம் தங்களுடைய கடாக்ஷமானது ஏழையான என் விஷயத்தில் தயையால் ஏவப்பட்டதாய்க் கொண்டு அதிகமான ஸம்பத்தை வர்ஷித்து வெகு காலமாய் அனுபவிக்கப்பட்டு வருந் தாரித்திரிய கஷ்டத்தை விலக்கி சுகத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
      திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
      தருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
      புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா : (9)

      பூஜை செய்வதின் முறையை நன்றாய் யறியாத புத்தியை யுடையவர் களாயினும் உனது பக்தர்கள் எந்த தயா ரஸத்தால் நனைந்த கடாக்ஷத்தால் ஸ்வர்க்கத்தை (பரம பதத்தை) –
      சிரமமின்றியே அடைகிறார்களோ நன்றாய் மலர்ந்த தாமரைப் புஷ்பத்தினுடைய மத்தியின் சோபையை யுடையதும் தாமரைப் புஷ்பத்தை ஆஸனமாயுடைய ஸ்ரீ தேவியினுடையதுமான அந்த கடாக்ஷமானது எனக்கு விரும்பிய புஷ்டியை செய்யட்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே ! சாஸ்திரங்களிற் சொல்லிய முறைப்படி ஆராதனஞ் செய்யத் தெரிந்து கொள்ளாமல், அவரவர்களுக்குத் தோன்றியபடி பூஜை செய்யும் பக்தர்களுக்கும் தயா ரஸத்தால் நனைக்கப்பட்ட எந்த தங்களது கடாக்ஷமானது ஸ்வர்க்காதி போகங்களைக் கொடுக்கின்றதோ அத்தகைய மஹிமை வாய்ந்ததும் மலர்ந்த தாமரைப் புஷ்பம்
      போலிருப்பதுமான அந்த அழகிய கடாக்ஷமானது தனம் தான்யம் ஸந்தானம் முதலியவைகளின் ஸமிருத்தியைச் செய்யட்டுமென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      கீர்த்தேவதேதி கருட த்வஜ ஸு ந்தரீதி
      ஸாகம்பரேதி ஸிஸிஸேகர வல்லபேதி
      ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
      தஸ்யை நம: த்ரி புவநைக குரோஸ் தருண்யை ( 10)

      எந்தப் பரா சக்தியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியானவள் படைப்பது, காப்பது,அழிப்பது என்ற லீலையைச் செய்யுங் காலத்தில் ( முறையே) ஸரஸ்வதி தேவி என்றும் நாராயணனின் பார்யை என்றும் சாகம் பரை என்று பெயர் கொண்ட பரமேஸ்வரனின் பார்யை என்றும் வெவ்வேறு நாம ரூபங்களுடனிருக்கிறாளோ அந்த மூன்று லோகத்திற்கும் பிதாவான பகவானுடைய யுவதியான (பத்நியான ) ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்-

      எந்த துரீயையான ஸ்ரீ தேவியானவள் உலகங்களைப் படைக்கும் ஸமயத்தில் ஸரஸ்வதீ என்ற பெயருடனும், பரிபாலிக்கும் ஸமயத்தில் ஸ்ரீ லஷ்மீ என்ற பெயருடனும்,ஸம்ஹரிக்குங் காலத்தில் சாகம்பரை என்ற பெயருடனும் விளங்கி படைப்பது காப்பது அழிப்பது என்ற லீலைகளைச் செய்து கொண்டிருக்கிறாளோ அந்த பர ப்ரும்ஹத்தின் மஹிஷியான (சக்தியான) ஸ்ரீ தேவிக்கு மூன்று கரணங்களாலும் நமஸ்காரம் செய்கிறேன் என்று இதனால் கூறப்பட்டது.

      ஸ்ருத்யை நமோஸ்து ஸூப கர்ம பல ப்ரஸுத்யை
      ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
      ஸக்த்யை நமோஸ்து ஸத பத்ர நிகேததாயை
      புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
      –11-

      கர்மங்களை அனுஷ்டிக்கும்படி உபதேசித்து, அதன் மூலம் நல்ல பலனை உண்டு பண்ணுகிற வேத மாதாவாய் இருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கூட்டும்-ரூபம்,லாவண்யம், மாதுர்யம் முதலிய நல்ல குணங்களுக்கு ஸமுத்திரமா யிருப்பவளான ரதி தேவியின் உருவமா யிருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சக்தியின் வடிவமாயிருப்பவளும் தாமரைப் புஷ்பத்தை வீடாக வுடையவளுமான ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -புஷ்டியின் ரூபமாயிருப்பவளான ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் –

      நமோஸ்து நாளீக நிபாநந்நாயை
      நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை
      நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
      நமோஸ்து நாராயண வல்லபாயை 1 (12)

      தாமரைப் புஷ்பத்திற்குச் சமானமான முகத்தையுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்காட்டும்-சமுத்திரத்தைப் பிறப்பிடமாயுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சந்திரன், அமுதம் இவைகளைச் சஹோதரர்களாக உடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -ஸ்ரீ நாராயணனின் பத்னியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-
      திருமேனியின்-அழகும், உத்தம குலப் பிரஸுதியும், சிறந்த ஸஹோதரர்களுடன் கூடி இருக்குகையும் , அதன் மூலம் அவர்களுடைய திவ்ய ஸ்வபாவாதிகளுடன் கூடி யிருக்குகையும் என்றதால் பதி மூல முண்டான கௌரவமும் தெரிவிக்கப்பட்டதா யறிய வேண்டும்.

      ஸம்பத்கராணி ஸகலேந்த்ரி யந்தநாநி
      ஸாம்ராஜ்ய தாந விபவானி ஸரோருஹாஷி
      த்வத் வந்தநாநி துரிதாஹரணோந் யதாநி
      மாமேவ மாதர நிஸ்ரம் கலயந்து மாந்யே
      !(13)

      அனைவராலும் பூஜிக்கத் தகுந்தவளும் தாமரைப் புஷ்பம் போலுள்ள கண்களை யுடையவளும் ஜகன் மாதாவுமான ஹே ஸ்ரீதேவியே ஸம்பத்தைக் கொடுக்கின்றவைகளும்
      எல்லா இந்திரியங்களையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவைகளும் சக்கிரவர்த்தியா யிருக்குந் தன்மையைக் கொடுப்பதில் ஸாமர்த்ய முள்ளவைகளும் பாபங்களை நாசம் செய்வதில் தயாராக இருக்கின்றவைகளுமான தங்களை வணங்குவதற்குரிய முயற்சிகள் என்னை எப்பொழுதுமே அடையட்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே ! தங்களை எவன் மூன்று கரணங்களாலும் நமஸ்கரிக்கின்றானோ அவனுக்கு அதிகமான ஸம்பத்து உண்டாகும். எந்த இந்திரியத்திற்கும் கெடுதல் ஏற்படாது. அந்தந்த இந்திரியங்கள் வாயிலாக அனுபவிக்க வேண்டிய ஸூகங்களை அனுபவிக்கலாம். பாபங்கள் விலகிவிடும். சக்ரவர்த்தியாய்க் கூட ஆகி விடலாம். தங்களை நமஸ்கரிப்பதால் இவ்வளவு உத்கிருஷ்ட பலன்கள் ஏற்படுவதாயிருந்த போதிலும் தங்கள் தூண்டுதலில்லா விடில் தங்களை நமஸ்கரிப்பதில் பிரவிருத்தி உண்டாகாது. ஆதலால் ஜகந் மாதாவாக யிருப்பது பற்றி என்னிடம் கிருபை கூர்ந்து நமஸ்காரம் செய்வதில் பிரவிருத்தியை உண்டு பண்ண வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
      தவள தராம் ஸூக கந்த மால்ய ஸோபே
      பகவதி ஹரி வல்லபே மநோஜ்ஞே
      த்ரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம் (14)

      தாமரைப் புஷ்பத்தை வீடாக உடையவளே ! தாமரைப் புஷ்பத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவளே மிகவும் வெளுத்ததான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற அழகை யுடையவளே நிறைந்த ஐஸ்வரியம், முதலிய ஆறு குணங்களுடன் கூடினவளே விஷ்ணுவுக்குப் பிரியமாயிருப்பவளே! (பத்னியாயிருப்பவளே ) மனதைக் கவருகின்றவளே! மூன்று உலகத்துக்கும் ஸம்பத்தைக் கொடுப்பவளே =என்னையும் பொருட்டு பிரஸன்னையாக ஆக வேண்டும்.

      திக்கஸ்திபி : கநக கும்பமுகாவ ஸ்ருஷ்ட
      ஸ்வர்வாஹிநீ விமல சாருஜலாப்லு தாங்கீம்
      ப்ராதர் நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
      லோகாதி நாத க்ருஹிணீ மம்ருதாப்தி புத்ரீம்
      (15)

      திக் கஜங்களினால் தங்கக் குடத்தினுடைய முகத்தினால் கொட்டப்பட்ட ஆகாச கங்கையினுடைப்பதும் – சுத்தமானதும் -மனோ ஹரமானதுமான தீர்த்தத்தினால் நனைக்கப்பட்ட அங்கங்களை யுடையவளும் லோகங்களுக்கு மாதாவா யிருப்பவளும் பாற்கடலின் பெண்ணாக அவதரித்தவளும் எல்லா லோகங்களுக்கும் நாதனான ஸ்ரீ நாராயணனுடைய பத்தினியுமான ஸ்ரீ தேவியை காலையில் நமஸ்காரம் செய்கிறேன்

      காலையில் எழுந்தவுடன் ஸ்ரீ தேவியை திக் கஐங்கள் தனது துதிக்கையில் தங்க மயமான குடத்தைத் தாங்கி ஆகாச கங்கையின் சுத்தமான தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வதாகவும், ஸர்வ ஜகந் மாதாவாகவும், சமுத்திரத்தின் பெண்ணாகவும், சர்வ ஜகத் பாலகனான ஸ்ரீ நாராயணனுடைய பார்யையாகவும் தியானம் செய்து நமஸ்கரிக்க வேண்டு மென்று இதனால் உபதேசிக்ப்பட்டது-

      கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
      கருணா பூர தரங்கிதைர பாங்கை:
      அவலோக்ய மாமகிஞ்சநாநாம்
      பிரதமம் பாத்ரம க்ருத்ரிமம் தயாயா : (16)

      செந்தாமரைக் கண்ணனான நாராயணனுடைய பாரியையான ஓ ஸ்ரீ தேவியே-தயா ரஸப் பிரவாஹத்தால் அலையுள்ள(நிறைந்த) கடாக்ஷங்களால் ஏழைகளுக்குள்ளே சிறந்தவனாயும் தயைக்கு பொருத்தமான பாத்திரமாயுமிருக்கிற என்னைப் பார்க்க வேண்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே! தயையுள்ளவர்களுக்குள் தங்களை முதலாவதாகவும் தீனர்களுக்குள் என்னை முதலாவதாகவும் கணிக்க வேண்டி யிருப்பதால் உண்மையில் மிகவும் ஏழையான என்னிடம் தயா ரஸம் நிறைந்த தங்களுடைய கடாக்ஷத்தைச் செலுத்தி அருள் புரிய வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ஸ்துவந்தி யே ஸ்துதி பிரமீ பிரந்வஹம்
      த்ரயீ மயீம் த்ரி புவந மாதரம் ரமாம் !
      குணாதிகா குரு தர பாக்யபாஜிநோ
      பவந்தி தே புவி புத பாவிதாஸயா : (17)

      எவர்கள் இந்த ஸ்தோத்திரங்களால் மூன்று வேத ஸ்வரூபையாயும் மூன்று லோகங்களுக்கும் தாயாயுமிருக்கிறகின்ற ஸ்ரீ தேவியை தினந்தோறும் துதிக்கின்றனரோ ( அவர்கள்) பூலோகத்தில் நல்ல குணங்களால் அனைவர்க்கும் மேலானவர்களாகவும் . –
      அதிகமான பாக்கியத்தைப் பெற்றவர்களாகவும் வித்வான்களால் பூஜிக்கத் தகுந்த அபிப்பிராய முள்ளவர்களாகவும் ஆகின்றனர்

      எவர்கள் இந்த ஸ்லோகங்களால் ஸ்ரீதேவியைத் தினந்தோறும் ஸ்துதிக்கின்றனரோ அவர்கள் நல்ல ஓழுக்கத்தால் எல்லோருக்கும் மேலாக இருக்கும் தன்மையையும்,
      தனம், தான்யம், ஸந்தானம் முதலிய பாக்கியங்களையும், வித்வான்களாற் போற்றத் தக்க புத்தி வலிமையையும் ஸ்ரீ தேவியின் பிரஸாதத்தால் பெற்று இம்மையில் சுகமாய் வாழ்ந்து
      மறுமையிலும் ஸ்வர்க்காதி போகங்களை யனுபவிப்பார்கள் என்று இதனால் உபதேசிக்கப்பட்டது.

      ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் அவர்களால் செய்யப்பட்ட கநக தாரா ஸ்தோத்திரம் முற்றிற்று.

      ————————————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
      ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


      மாத்ரு ஷோடசி

      August 28, 2025

      ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

      ஜீவதோர்  வாக்ய கரணாத்
      ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
      கயாயாம் பிண்ட தாணாத்
      த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய’

      ‘ அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ”புத்” என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் ‘புத்ரன்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை.

      “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் ‘திருப்தியத’, திருப்தியத’  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். ‘வடம்’ (தமிழில் சின்ன ‘ட”) ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு –  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

      இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

      1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

      2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

      3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே.

      4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  — ஒரு பரிசு —  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.

      5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ” .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

      6.   ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்”  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

      7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..

      8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

      9.  ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம்.
      .
      10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ”கடிக்காதேடா..” .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

      11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.”  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.’

      12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

      13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா.

      14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது.

      15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ”தன்னலமற்ற”   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே.

      16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

      மஹா பூதாந்தரங்கஸ்தோ
      மஹா மாயா மயஸ்ததா
      ஸர்வ பூதாத்மகச்சைவ
      தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

      ( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

      ————————————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –