Archive for April, 2017

அஞ்சிலே ஓன்று பெற்ற –உள்ளுறை பொருள் –

April 26, 2017

அஞ்சிலே ஓன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஓன்று ஆறாறாக ஆரியர்க்காக
அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கைக் கண்டு
அயலார் ஊரில் அஞ்சிலே ஓன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் -கம்பர்

கடலை தாவி-வாயு மார்க்கமாக சென்று -பூமி மாதா வைக் கண்டு தீயை வைத்து வாயு பெற்ற பிள்ளை –

உள்ளுறை பொருள்
-பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு
-வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாதம வஸ்துவை ஜனிப்பித்து

இரண்டாவது அஞ்சு –அர்த்த பஞ்சகம்
-அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே
-விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி-

-மூன்றாவது அஞ்சு –உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –-அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்

ஐந்தாவது அஞ்சு— லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்

ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து –சரம உபாயத்தைக் கடைப் பிடித்து —
அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று –

திருவடி தானே ஆச்சார்ய ஸ்தானம் நம் சம்பிரதாயத்தில் –

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவையில் ஆழ்வார்களை திருப்பள்ளி உணர்த்துவது ஸூசகம் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் –

April 26, 2017

திருப்பாவையில் உறங்குமவர்கள் -மத்சித்தா பரர்கள்– வெளியில் இருந்து திருப் பள்ளி உணர்த்துபவர்கள் மத்கதப்ராணா பரர்கள்-
-எல்லே இளம் கிளியே -போதயந்த பரஸ்பரம் பரமான பாசுரம்
பிள்ளாய்ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெரும் -இந்த அஜ்ஞ்ஞானம் காரணமாக
பெரியாழ்வார் பிள்ளாய் என்று அழைக்கப் படுகிறார்
தஸ்மாத் ப்ரஹ்மணா பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத்-பிருஹுதாரண்யம் –5-5-1-பரிபூர்ண ஜ்ஞானம் பெற்று
பால்யத்துடன் இருக்க வேணும் அநா விஷ் குர்வன் அந்வயாத்–ப்ரஹ்ம சூத்ரம் -3-4-49- ப்ரஹ்ம வித்யை அதிகரித்தவன்  செருக்கு
கொள்ளாமல் இருக்க வேண்டும் -இதனாலும் பிள்ளாய் -என்றதாயிற்று
புள்ளும் சிலம்பின காண் -இவருக்கும் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கும் சேருமே அதனாலே இந்த அடையாளம் மீண்டும் வரும்
புள்ளரையன் -வைனதேயாம்ச சம்பூதம் விஷ்ணு சித்த மஹம் பஜே -த்யான ஸ்லோஹம் -செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் -திருத் தேர் க்ருத்மான் வடிவம்-க்ருத்யம்சமான பெரியாழ்வார்
-புள்ளரையன் உடைய அம்ச பூதர் -கோயில் வெள்ளை விளி சங்கு -கோ இல் பாண்டிய ராஜன் சபா மண்டபம்
-பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத –
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் எனது கையன் -4-1-7- என்றாரே –இவரே பாட்டுக்கு விஷய பூதர்
-என்று வெள்ளை விளி சங்கு சொல் தொடர் ஸூ சிப்பிக்கும்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் முதலில் -பிறங்கிய பேய்சசி முலை சுவைத்து உண்டிட்டு -1-2-5-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்—1-2-11- என்று கள்ளச் சகடம்
கலக்கழிய காலோச்சியதையும் அனுபவிக்கிறார் –வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்தினை உள்ளத்துக் கொண்டு
-பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -என்றும்
-அரவத் தமளியினோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத்திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற
பிரானை பரவுகின்றான் விட்டுசித்தன் -என்று சொல்லிக் கொள்கிறார் –முனிவர்களும் யோகிகளும் -பாசுரங்கள் பாடிய முகத்தால்
குணானுபவ நிஷ்டர் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்த தனத்தைக் கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரகார கோபுர
மண்டபங்கள் நிர்மாணித்து –கைங்கர்ய நிஷ்டர் –மெள்ள எழுந்து –பெருமாள் நினைப்பூட்ட -எழுந்து அரி என்ற பேர் அரவம்
ஓம் ஹரி சொல்லியே வேதங்கள் ஆரம்பம்

பேய்ப்பெண்ணே -பெருமாள் திருமொழி மூன்றாம் பதிகம் –மையல் கொண்டு ஒழிந்தேன் -நரகாந்தகன் பித்தனே -உன்மத்தன் காண்மினே
-மணவாளன் தன பித்தனே -எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –பித்தனாய் ஒழிந்தேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
-தனிப் பெரும் பித்தனாம் குலசேகரன் – ஒன்பதில் கால் சொன்ன பெயர்
நாயகப் பெண் பிள்ளாய் –கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் —ஆழ்வார்  கோஷ்டியில் நடுநாயகம் –
பெண்ணே பெண் பிள்ளாய் –ஏர் மலர் பூம் குழல் -ஆலை நீள் கரும்பு –மன்னு புகழ் –கோபிகள் தேவகி கௌசல்யை பாவனை உண்டே
தேசமுடையாய் -தேஜஸ் மிக்கு –ஷத்ரிய தர்மம் –கொல்லி நகர்க்கு இறை -கூடல் கோமான் குலசேகரன்
தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே –பண்டை நாளில் பிறவி உண்ணாட்டு தேசு இ றே -ஆழி யம் கை பேர்
ஆயற்கு ஆளாம் பிறப்பு –உண்ணாட்டு தேசன்றே –கைங்கர்ய அனுரூபமான ஏதேனும் ஆவேனே -என்கிறார்
ஆனைச்சாத்தம் எங்கும் கலந்து கீசு கீசு என்று பேசின பேச்சரவம் -கிருஷ்ணா கிருஷ்ணா -எங்கும் திரு நாம சங்கீர்த்தனம் –மலையாளப் பேச்சு
காசும் பிறப்பும் கல கலப்ப -ஆபரணம் –ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே வாரம் கொடு குடம் பாம்பில் கை இட்டவன்
-ஆபரண பிரஸ்தாபம் -கை இட்டது உண்டே -குறை சொல்லிய மந்த்ரிகள் கைகளை பேர்த்ததாகவும் கூளலாம்
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவக் கதை -தயிர் கடைய ஒல்லை நானும் கடைவன் -6-2-
நாரணன் மூர்த்தி கேசவனைப் பாட -நிகமத்தில் -வள்ளல் நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே -மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –
நீ கேட்டே கிடத்தியோ -ஸ்ரீ இராமாயண சரிதை கேட்ட சரித்ரம்

கோதுகலமுடைய பாவாய் -அழகும் பாத்விரதையும் உள்ளதால் பாவாய் -ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் அழகு -உன்னால் அல்லால் யாவராலும்
ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -கோதுகலமுடைய பாவாய் நம் ஆழ்வாருக்கே பொருந்தும் -க்ருஷ்ணா த்ருஷ்ணாதத்வம் இவோதிதம் -கிருஷ்ணே த்ருஷ்ணா -க்ருஷ்ணச்ய த்ருஷ்ணா –குதுகலமே வடிவாக –எம்பிரானும் என் மேலானே
-ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –எம் பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே —சூழ் வினையாட்டினேன் பாவையே —
எழுந்திராய் -இவர் வீற்று இருப்பதால் —கீழ் வானம் வெள்ளென்று –தஸ்மை நமோ வகுள பூஷண பாச்கராயா-ஆதித்ய ராமதிவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் வற்றி விகசியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே
கீழ் வானம்மேல் வானம் –மேல் என்ற்றது உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
வானம் மேகம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -அடியார்க்கு இன்ப மாரியே-
எருமைரஜஸ் தமஸ் குண பிரசுரர்கள் -சிறு வீடு -கைவல்யம் -சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் –தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
-இவர் திருவவதரிப்பதற்கு முன்பே கைவல்ய ஐஸ்வர் யார்திகளாகவே இருந்தார்கள்
மிக்குள்ள பிள்ளை-மேம்பட்ட -இவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இ றே
போவான் போகின்றாரை போவதே பரம புருஷார்த்தம் போவான் வழிக் கொண்ட மேகங்களே -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
-கூவிக் கொள்ளை வந்தந்தோ –வீற்று இருந்த –-ஏற்ற நோற்றேர்க்கு -வண் தமிழ் நோற்க நோற்றேன் –-வெம்மா பிளந்தான் தன்னை –
வான நாயகனே அடியேன் தொழ வந்தருளே -இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி
ஆவா வென்று -ஆவா வென இரங்கார் அந்தே வலிதே கொல் மாவாய் பிளந்த மனம் -அடியேற்கு ஆவா வென்னாயே –
ஆராய்ந்து -ஆர் என்னை ஆராய்வார் -உம்முடைய குறையும் தீரும் அருள் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் அன்றோ

மாமன் மகளே -கமலாமி வான்யாம் கோதாம் -ஸ்ரீ மகா லஷ்மி -யானால் -பார்க்கவீ லோக ஜனனீ ஷீர சாகர சம்பவ –
-ஆண்டாள் ப்ருகு குலத்தில் தோன்றியவள் -திரு மழிசைப் பிரானும் ப்ருகு குலம் -ரிஷி குலத்தில் பிறந்து பிரம்பன் குடியானவர்
ஆண்டாள் ப்ராஹ்மண குலத்தில் ஆவிர் பவித்து ஆயர் குலத்தை ஆஸ்தானம் பண்ணினாள்
தூ மணி மாடத்து -உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிற்றே –
சுற்றும் விளக்கு எரிய -ஜ்ஞான விளக்கு -சாக்கியம் கற்றோம் –யான் அறிந்தவாறு ஆர் அறிவார் -என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை
தூபம் கமழ -பரிமளம் -மறந்தும் புறம் தொழாதவர் –வலத்திருவடி பெருவிரல் கண்ணைத் திறந்து நெற்றிக்கண் திறந்த
-பெரும் தீயைக் கிளப்பி விட்டு புகை சூழப் பண்ணி
துயில் அணை மேல் கண் வளரும் -நாகணைக் குடந்தை –கிடக்குமாதி நெடுமால் –
துயில் அணை மேல் கண் வளரும் மாமானுடைய மகளே -மஹா மகன் -யதோத்தகாரி ஆராவமுத ஆழ்வார்
மாமீர் -இவருக்கு ஞான போதம் அருளிய –பேயாழ்வார் -மாமீர் என்கிறது
கிருஷ்ணா நாம் வ்ரீஹீனாம் நக நிர்ப்பின்னம் –ஊமையோ -செவிடோ அக்ரபூஜை –சிசுபாலா பிரப்ருதிகள் வசையைக் கேளாமல்
அனந்தல் -பரமைகாந்தி -புற விஷயங்களில் நெஞ்சு செலுத்தாமல் -தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும்
பூசித்தும் போக்கினேன் போது என்றும் தொழில் எனக்கு தொல்லை மால் தன்னாமம் -ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் –
மந்திரப் பட்டாளோ -இவர் ஒருவருக்கு தான் பேயாழ்வார் இடத்தில் மந்திரப் பட்டது பிரசித்தம்
மா மாயன் -மாயம் என்ன மாயமே -மாயமாய மாக்கினாய் உன் மாய முற்றும் மாயமே –மாதவன் -மாதவனை ஏத்தாதார் ஈனவரே
வைகுந்தன் -வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு –

நோற்று -பேயாழ்வார் -திருக்கண்டேன் -மற்ற இருவரும் விளக்கு ஏற்ற -இவரே வாசல் திறவாதார்நாற்றத் துழாய் முடி
-இரண்டாம் பாசுரம்–பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அடுத்து -மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் –
-நிகமத்தில் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் –நாராயணன் –திருத் துழாய் -கண்ணன் சேர்த்து பாசுரம் உண்டே
நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு
உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண்
-கும்பகர்ணன் தோற்றது –அகஸ்த்ய கும்ப சம்பவ -கும்பத்தை ஜன்ம பூமியாக -தஷிண திக்குக்கு தலைவர் அவர் -இவர் தமிழ் தலைவன்
இவரது திருவந்தாதியிலும் –நடுவில் -அவனே இலங்கா புரம் எரித்தான் எய்து –என்றும் -எய்ததுவும் தென் இலங்கை கோன் வீழ
அரும் கலமே -எம்பெருமான் மிதுனம் பெற்ற அருள் -சத்பாத்ரமே -திருக் கண்டேன் –இத்யாதி
தேற்றமாய் வந்து திற -பேய்த் தனமாக வராமல் என்றபடி –

யோநிஜ்த்வம் என்னும் குற்றம் இல்லாத -கோவலன்திருக் கோவலூர் ஸூ சகம் –மூவரில் பொற் கொடி பூதத்தாழ்வார்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
கணம் -வடசொல்லில் சிறிய -வெண்பாவில் பாடி அருளி –முதல் திருவந்தாதி கறவைக் கணம் –
இரண்டாம் திருவந்தாதி சேர்ந்து கறவைக் கணங்கள் -மூன்றாம் திருவந்தாதி சேர்த்து கற்றுக் கறவை கணங்கள் பல
செற்ற திறல் அழியச் சென்று செருச் செய்யும் –
தீர்த்த கரராமின் திரிந்து –என்றார் புற்றரவல்குல்-இடை அழகு —ஞானம் பக்தி வைராக்கியம் -இடையில் பக்தி
அன்பே தகளியா -தொடங்கி–யாமுடைய அன்பு -நிகமித்து
புன மயில் பொழில் இடத்தே வாழும் மயில் இவரும் திருக் கடல் மல்லை -கடி பொழில் சூழ் கடல் மல்லை
சுற்றத்து தோழிமார் -சுற்றம் பொய்கை பேய் ஆழ்வார் தோழிமார் மற்றைய ஆழ்வார்கள்
முகில் வண்ணன் பேர் பாட -உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பூம் பாடகத்து உள்ளிருந்தானை ஏத்தும் என் நெஞ்சு
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்

நங்காய் -வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே -தாமரைப் பூவில் தோன்றிய பொய்கை யாழ்வார்
நனைத்து இல்லம் சேறாக்கும்பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுத –கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -இவர் இல்லம் பொய்கையும் சேறானது தானே
கனைத்து -முதலிலே அருளிய ஆழ்வார் -அங்கியான நம்மாழ்வாருக்கு அங்கமான இவர் கனைத்த படி
இளம் கற்று எருமை -எருமை மகிஷி -தேவ தேவ திவ்ய மகிஷி -இவரும் தாமரை மலரில் திருவவதரித்து
இளம் கன்றுடைய -இவர் மாத்ரு ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள் வத்சம்
கன்றுக்கு இரங்கி -வையத்து அடியவர்கள் வாழ அருளிச் செயல் நினைத்து முலை வழியே நின்று பால் சோர -பகவத் குணங்களை நினைத்தவாறே ஹர்ஷம் உள் அடங்காமல் அருளிச் செயல்கள் வெளி வந்த படி
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி –பொய்கை என்பதால்
திருக் கோவலூர் வாசல் கடை பற்றியதும் ஸூ சகம்
சினத்தினால் –ஸ்ரீ ராம சரிதைவாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு -நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே -மனத்துக்கு இனியானை
இனித் தான் எழுந்திராய் -பழுதே பல பகலும் போயின என்று இழந்த நாளைக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லையே
அனைத்து இல்லாதாரும் அறிந்து -அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
நல செல்வன் தன்னுடைய கை -நம் ஆழ்வார் உடைய மதுர கவி ஆழ்வார் -நல செல்வன் எம்பெருமானார் தங்கை ஆண்டாள் என்றுமாம்

போது அரிக் கண்ணினாய் -புஷ்பங்களை ஹரிப்பதில் திருஷ்டி கொண்டவர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துளபத் தொண்டாய
தொல் சீர் தொண்டர் அடிப் பொடி -தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
பாவாய் –பதி வரதா சிரோ மணி –அரங்கனுக்கே -சோழியன் கெடுத்தான் காணும்
புள்ளின் வாய் கீண்டானை கண்ணன் ராமன் கீர்த்திமை பாடி -கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறல் அயோத்தி எம்மஅரசே அரங்கத்தம்மா -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –
-கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
பிள்ளைகள் எல்லாம் –பாவைக் களம் புக்கார்இரவியர் –மணி நெடும் தேரோடு இவரோ –அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று சுடர் ஒளி பரந்தன
பள்ளிக் கிடத்தியோ -அரங்கத்தம்மா பள்ளி எழுது அருளாயே
நன்னாளால் மார்கழி கேட்டை திருவவதாரம்
கள்ளம் தவிர்ந்து -சூதனாய் கள்வனாய்கள்ளமே காதல் செய்து -கள்ளத்தேன் உன் தொண்டாய்-பொன் வட்டில் களவு விருத்தாந்தம்
பூம் பொழில் வாசம் -புள்ளும் சிலம்பின குள்ளக் குளிர -குளித்து மூன்று அனலை -ஓம்பும் -இத்யாதி –

நங்காய் குண பூரணை -பாரதந்த்ர்யம் மிக்க திருப் பாண் ஆழ்வார் -லோக சாரங்க முனிவர் தோள்களிலே ஏறிக் கொண்டாரே
நாணாதாய் நாண் அஹங்காரம் செருக்கு இல்லாமல் –அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன்
நாவுடையாய் -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள்
பாண் பெருமாள் பாடிய தோர் பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்
புழக்கடை தோட்டத்திலே வாழ்ந்தவர்
கோயில் திரு மஞ்சனக் காவேரி அருகே வாழ்ந்தவர் வாவி -நீர் நிலை
ஒரு வாய் மலர மற்று ஒரு வாய் மூடின படி ஐயோ அபசாரம் பட்டோமே லோக சாரங்கர்
சன்யாசி பிரஸ்தாபம் இவர் சரிதையில்
சங்கிடுவான் சங்கம் பலர் அறியும்படி
எங்களை –எழுப்புவான் -எழச் செய்கை தூக்கிக் கொள்கை
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் –கரியவாகிப் –அப்பெரியவாய கண்கள் சங்கோடு சக்கரம் ஏந்திய –பங்கயக் கண்ணானைப் பாட

எல்லே -சம்பாஷனை உண்டே திருமங்கை ஆழ்வார் இரு தோழிகள் பாடும் பாசுரங்கள் நிறைந்தவை
இளம் கிளியே -கிளி போல் மிழற்றி நடந்து –மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே
வல்லை –ஆசுகவி சித்ர கவி மதுர கவி விஸ்தார கவி
உன் கட்டுரைகள் -வாசி வல்லீர் -வாழ்ந்தே போம் நீரே
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நாண் உற்றத் உன் அடியார்க்கு அடிமை
மடலூராது ஒழியேன் நான் -உனக்கு என்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ -கடைக்குட்டி ஆழ்வார்
வல்லானை கொன்றானை -கவள யானை கொம்பொசித்த கண்ணன்-நான்கு யானைகள் -தென் ஆனாய் இத்யாதி –
அரட்ட முக்கி அடையார் சீயம் கொற்ற வேல் பரகாலன் மாற்றாரை மாற்று அழிக்க
மாயன் -மாயனைப் பாடிய மாயன் அன்றோ மாயர்கள் நால்வர் நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் உஊதுவான்
புத்த விக்ரஹம் கூட வைதிகமாக்கிய மாயம் உண்டே

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பாவையும் திவ்ய தேச அனுபவ ஸூசகமும்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

April 25, 2017

1-மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

2-வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

3—ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்-

4-ஆழி –பழியம் தோளுடைப் பத்ம நாபன் –திரு வநந்த புரம்-

5-மாயனைவடமதுரை அனுபவம் -மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத –

6-புள்ளும் சிலம்பின -திரு வண் வண்டூர் அனுபவம் –வைகல் பூங்கழிவாய்-விடிவை சங்கொலிக்கும் திரு வண் வண்டூர்
அடிகள் கை தொழுது -அகாரம் -உணர்தல் உடல் உணர்ந்து -உகாரம் -மின் கொள் சேர் புரி நூல் -மகாரம் போலே இங்கும் அரி–உங்கள் -முனிவர்கள்

7-கீசு கீசு -தயிர் ஒலி -உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நா நாம் திவம் அஸ்ப்ருசத் த்வனி நிர்மந்தன சப்தம் இஸ்ரிதோ நிரஸ்யதே
யேன திசாம் அமங்கலம் -ஆய்சிகளின் பாட்டு ஒலி-மதத்தின் ஒலி -சகாரத்தால் ஆபரண த்வனி -இத்தால் திருவாய்ப்பாடி அனுபவம்-

8-கீழ் வானத்தில் தேவாதி தேவன் –திருவத்தியூர் அனுபவம் -நம்மாழ்வார் திருப்பள்ளி -உணர்த்தப் படுகிறார் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி

9-தூ மணிதிருக்கடிகை –மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய

10-நோற்றுச் சுவர்க்கம் -திருக் காட்கரை -அனுபவம் -யமவைஷவ்ருணுதே தேன லப்ய -பரகத ச்வீகாரம் -செய்த வேள்வியர் வையத் தேவர்
-தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை -இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும்

11-கற்றுக் கறவை -திரு மோகூர் -முகில் வண்ணன் பேர்பாட -தாள தாமரையில் -காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே
-நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
-ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே-

12-கனைத்து இளம் கன்று -சித்ரகூட அனுபவம் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் -சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான்
-மனத்துக்கு இனியான் -திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்

13-புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை -பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -நாகத்தணைக் குடந்தை –திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இறே

14-உங்கள் புழக்கடை -வாவியுள் செங்கழுநீர் -நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர்
நாவுடையாய் -செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய்

15-எல்லே இளம் கிளியே -திரு வல்லிக் கேணி அனுபவம் –வல்லானை கொன்றானை –விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்-
வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப –

16-நாயகனாய் -திருக் குறுங்குடி அனுபவம் -துயில் எழப் பாடுவான் –வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -நம்பாடுவான் –விரதத்துக்கு
பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சப்தங்களைச் செய்து நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் –

17-அம்பரமே தண்ணீரே -காழிச் சீராம விண்ணகரம் -அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் -ஒரு குறளாய் இரு நிலம்
மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன்-

18-உந்து -திரு நறையூர் அனுபவம் -மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் —-ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்
ஆங்கிடையே–அன்ன திருவுருவம் நின்றது –பந்தார் விரலி –பந்தார் விரலாள் – பெரிய திருமொழி -6-6-8-

19-குத்து விளக்கு -திருவிடவெந்தை -கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூ ப்தம் -திவளும்
வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் –

20-முப்பத்து மூவர் -திருப்பாடகம் -அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு –

21-ஏற்ற கலங்கள் -திருக் கண்ண மங்கை- திரு நாராயண புரம்–பெரியாய் -பெரும் புறக் கடல் –விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர்
பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே
-ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்-வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா-
ஆற்றப் படைத்தான் மகனே -யதிராஜ சம்பத் குமாரனே -பல்கலையோர் -பெரும் பசுக்கள் -தோற்றமாய் நின்ற சுடர்
-புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே-

22-அம் கண் மா ஞாலம் -திரு மால் இரும் சோலை –அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை -கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன்
தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹ-ஆழ்வான்-

23-மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம் -உன் கோயில் நின்று இங்கனே -கோயில் -திருவரங்கம் -ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
-நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம்-

24-அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம் -குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி –செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில –திருவுகிர் நொந்துமில-

25-ஒருத்தி -திருக்கண்ணபுரம் -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு
உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்-

26-மாலே -ஸ்ரீ வில்லி புத்தூர் -ஆலினிலையாய் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன்

27-கூடாரை திருவேங்கடம் –விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே –குளிர் அருவி வேங்கடம் –

28-கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம் –கானம் சேர்ந்து உண்போம் -கானம் என்றும் வேணு காந கோஷ்டியில் என்றுமாம்

29-சிற்றம் சிறு காலை-ஸ்ரீ மத்  த்வாராபதி -உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில்
நாயகராய் வீற்று இருந்த மணவாளர் -பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ –

30-வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -அணி புதுவை -மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர்
-ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி –

April 24, 2017

ஓம் நமோ ராமாநுஜாய

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம

சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ  ததாமி  ஏதத் விரதம் மம –

——————————-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ –காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ

ஸ்ரீ மத ராமானுஜ குரவே நம

வரதார்ய குரோ புத்ரம் தத் பாதாப்ஜ ஏக தாரகம்
ஞான பக்த்யாதி ஜலதிம் வந்தே ஸூந்தர தேசிகம்

பாதுகே யதி ராஜஸ்ய கத யந்தி யாதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

மகரே ஹஸ்த நக்ஷத்ரே சர்ப்ப நேத்ராம்ச சம்பவம்
ஸ்ரீமத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் ஸாங்கம் உபாசமஹே

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்திம் அதீமஹீ
யதுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

——————————-

திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய —

-இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ–காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே
தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி சபதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்யா பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாச்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே நிரசித்து
ஈஸ்வர சத்பாவத்தை அங்கீ கரிப்பித்து
சகல ஜகத் காரண பூதனான ஈஸ்வரனை உண்டாக்கின படியாலும்
ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிற ஈஸ்வர வாக்யத்தாலே
ஈஸ்வரன் சரீரமும் எம்பெருமானார் சரீரியுமாகையாலே
சரீரத்துக்கு உண்டான காரணத்வம்
சரீரிக்கே ஆகையாலும் –ஆதி காரணத்வம் எம்பெருமானாருக்கே -என்று சொல்லலாம் –

அதிகாரி நியமம் இன்றிக்கே-ப்ரஹ்ம ஷத்ரிய வைஸ்ய சூத்ராதிகளையும்
ஸ்திரீ பால வ்ருத்த முக-ஜட-அந்த -பதிர -பங்கு -பசு பஷி மிருகாதிகளையும்
ரஷிக்கையாலே சர்வ ரஷகத்வமும் உண்டு என்க-

உகாரார்தம்அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்-அனந்யார்ஹா சேஷத்வமும்
இவ்விடத்தில் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி ஈஸ்வர சேஷத்வத்தை சொல்லுகிறது
வடுக நம்பி -அடியேன் -உங்கள் பெருமாளை சேவிக்க வந்தால்
எங்கள் பெருமாள் பால் பொங்கிப் போகாதோ -என்ற வார்த்தையை நினைப்பது
நித்ய சத்ருவாய் இ றே இது இருக்கும்

மன ஜ்ஞானே–மகாரோ ஜீவா வாசக–ஜாத்யேகவசனம்-அனைவரையும் குறித்தாலும்
மகராஸ்து தயோர் தாச -என்று யதீந்திர பிரவணர் -மணவாள மா முனியையே சொல்லும் என்பர் ஞானாதிகர்கள்

நமஸ் -அர்த்தம்–ததீய பாரதந்த்ர்யமே சொல்லும்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யத் தத் தாஸ தைகரசதா விரதா மமாஸ்து -எதி ராஜ விம்சதி -16-
ஈஸ்வர பாரதந்த்ர்யம் சர்வாத்ம சாதாரணம்-எம்பெருமானார் பாரதந்த்ர்யம் -கதிபய சாதாரணம்-ததீய பாரதந்த்ர்யம் -அசாதாரணம்
எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்–அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே-ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்யா அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே
இதுவே நமஸ் பதார்த்தம்

ராமானுஜ -பதார்த்தம் -அகார விவரணம் என்பதால்-பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அர்ஜுனன் ஒருவனுக்கே உபதேசித்து அருளிய குறைகள் தீர-ஸ்ரீ பார்த்த சாரதியே ராமானுஜராக வந்து அவதரித்து
பூரிதானமாக எல்லாருக்கும் பிரசாதித்து அருளினார்-
ராமானுஜ–ராமா பதம் ஸ்திரீ வாசகம் ஆகையாலே சூடிக் கொடுத்த நாச்சியாரை சொல்லி
அனுஜ -பதத்தாலே அவளுக்கு தம்பி -சந்த அனுவர்த்தித்வம் நினைவு அறிந்து நடந்ததால்
நாறு நறும் பொழில் -வந்தாரோ நம் கோயில் அண்ணர் -கோதை தங்கை யானாள் எவருக்கோ அவர் என்னவுமாம் –
அனுஜ -பதத்தால் சந்த அனுவர்த்தித்வம் சொல்லுகையாலே-
சேஷோ வா சைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை-விதர்க்காய மகா ப்ராஞ்ஞை எதிராஜாயா மங்களம்
நித்ய கைங்கர்யரான நித்ய சூரிகளை உடையவர் என்பதாலுமாம் –
அடையார் கமலத்து -33-திவ்ய பஞ்சாயுதங்களும் இவரே -என்பதாலுமாம் –
அநந்த பிரதமம் ரூபம் லஷ்மணஸ்ச தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி
சதுர்த்த பதத்துக்கு பொருள் நாமே -என்று தாமே அருளிச் செய்தார் இ றே-

திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்-வைத்துக் கொண்டு இருக்குமே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது-எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்-பிராட்டிமார் பூர்த்தியும்-நித்ய சூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்-ஆச்சார்யர்கள் உடைய சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு –

—————————-

த்வய பிரகரணம் 

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –

இந்த த்வய மந்த்ரம்-மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்
திருவடிகளும் ஸ்ரீ பாத தீர்த்த கிணறும் இன்றும் சேவிக்கலாம்
எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாச்சார்யர் ஆகையாலே-ஸ்வா ச்சார்ய பரதந்திர பரகாஷ்டைதையை-உடையவராய் இருக்கையே-
எம்பெருமானாருக்கு மிகவும் உகந்த திரு உள்ளம் ஆகையாலே-இந்த அனுஷ்டானத்தில் நிற்கையே த்வயார்த்துக்கு தாத்பர்யம்

பிரதம பதம் ஸ்ரீ மத் -சம்பத் வாசகம் –உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம் -கைங்கர்ய ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம்-
இத்தனை சொன்னாலும் பிரதம அஷர வாச்யர் –ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யர் -கூரத் ஆழ்வான் ஒருவரையே குறிக்கும் என்று -நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஆழ்வான் யஞ்ஞோபவீத ஸ்தானம் -என்பது பிரசித்தம் இ றே –
சரண பதம் -திரு மேனியை குறிக்கும்–இங்கே மணவாள மா முனியை குறிக்கும்-

———————————————

சரம ஸ்லோக பிரகரணம் 

சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம

இவ்வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்-இரவு காலத்தில்
முதலியாண்டான்-எம்பார்-திரு நாராயண புரத்து அரையர்-மாருதி யாண்டான்-உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள-மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து-மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –

இவன் அவனை பெற நினைக்கும் போது பிரபத்தியும் உபாயம் அன்று–இவன் இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்தனந்த்ய பிரஜைக்கு வியாதி உண்டானால் அது தனது குறையாக நினைத்து-தான் ஔ ஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே
இவனுக்குகாக தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல-பரம தாயளன் ஆன பாகவதன் நிழலிலே -அபிமானத்திலே -ஒதுங்கி
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும்-போலே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்காக்குகை -என்பதால்
ஆசார்ய அபிமான நிஷ்டனுக்கு பிரபத்தியும் த்யாஜ்யம் என்றது ஆயிற்று-
ராமானுஜ -ஸ்மரண மாத்ரமே அமையும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -வேண்டாவோ என்னில்
மன கரணம் பிரதானம்-மற்ற இரண்டும் இதுக்கு சேஷம்-ஜ்ஞானான் மோஷம்-ராமானுஜ -என்று மனசிலே நினைவு உண்டாகவே அமையும் –
எம்பெருமானார் சம்பந்தம் ஒருவனுக்கு உண்டானால்-அவன் சம்பந்த சம்பந்திகளுக்கும் பரம பதம் சித்தம் -என்று தாத்பர்யம்
ஏதத் விரதம் மம –
ரஷிக்கையே ஸ்வபாவம் உள்ள எம்பெருமானார் அருளிய வார்த்தை-நீங்கள் நிர்பரராய் இருக்க வேண்டும் -என்று அருளிச் செய்து அருளினார்-

——————————-

இந்த ரகஸ்ய த்ரயம் நமக்கு வந்த படி
திருமலை நம்பி -எம்பாருக்கு -விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -என்றதும் மீண்டருளிய பின்பு-
எம்பெருமானாரே எம்பாருக்கு உபதேசித்து அருள
அவர் பட்டருக்கு
அவர் நஞ்சீயருக்கு
அவர் நம்பிள்ளைக்கு
அவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு
அவர் பிள்ளை லோகாச்சார்யருக்கு
அவர் கூர குலோத்தம தாசருக்கு
அவர் திருவாய் மொழிப் பிள்ளைக்கு
அவர் மணவாள மா முனிக்கு
அவர் வானமா மலை ஜீயர்- கோயில் கந்தாடை அண்ணன் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -அப்பிள்ளை –
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -எறும்பி அப்பா –
போரேற்று நைனாராச்சாரியர் -அத்தங்கி சிங்கராச்சார்யர்
முதலான அஷ்ட திக் கஜங்களுக்கும் பிரசாதிக்க
அஸ்மத் ஆச்சார்யர் கோயில் கந்தாடை அப்பன் சுவாமிகள் மூலம் நம்மளவும் வரப் பெற்றோமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -சாரம்/

April 22, 2017

பூ மன்னு/ மூ வகை பூ -வண்டுகளோ வம்மின் –நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு –/
மற்றும் மூவகை -எம்பெருமான் திருமேனியில் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் / கள்ளார் துழாயும் கண்வலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் -போல்வன
/வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் -போல்வனவும்
மன்னு –புன்னை மேலுறை பூம் குயில்கள் — குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி பாவின் இன்னிசை
பாடிக் களிக்கும் குயில்கள் -மதுரகவி ஆழ்வார் போல்வார் –

————————————-

ஸ்ரீ பரமான பாசுரங்கள்
1–பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
2–கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
3–அரங்கன் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
4—பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
5–நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன்
6–அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
7–மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா
8—மா மலராள் நாயகன் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன்
9—மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி
10–ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
11—-நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் பொருத்தப் படாது எம்மிராமாநுச மற்றோர் பொய்ப் பொருளே
12—அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் –

——————————-

இராமானுச நூற்றந்தாதியில்-12- திவ்ய தேச மங்களா சாசனம் –

1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/
கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/ செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-
2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-
3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-
4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-
5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-
6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-
7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-
8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-
9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-
10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-
11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-
12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம் /தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –

——————————-

இதத்தாய் ராமானுஜன் -மறை யாதனின் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே –மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே –
மா முனிகளாக புனர் அவதாரத்தில் செய்து அருளினாரே
சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற -ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் அன்றோ அனந்தாழ்வான் வணங்குகிறார்
இராமானுச முனியே –மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கும் மனம் நீ எனக்குத் தா -எம்பார் பிரார்திக்கிறார்
இராமானுச நூற்றந்தாதியில் -25-பாசுரங்களில் ஆழ்வார் திருவடிகளில்– அருளிச் செயலில்
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் புக்கும் இராமானுசன் –

——————————–

சொல்லுவோம் அவன் நாமங்கள் -குணங்களை சொல்வதே திரு நாமம் -அருளிச் செய்த குணங்கள்

1-மிக்க சீலம் /
2-பொருவரும் சீர் /
3-மன்னிய சீர் /
4-பெரும் கீர்த்தி
5-பிறங்கிய சீர் /
6-வள்ளல் தனம் /
7-நயப் புகழ் /
8-தன் ஈறில் பெரும் புகழ்
9-வாமனன் சீலன் இராமானுசன் /
10-தூயவன் தீதில் இராமானுசன் /
11-திசை அனைத்தும் ஏறும் குணனை
12-தொல் சீர் எதித்தலை நாதன் /
13-அற்புதன் -என்னை ஆள வந்த கற்பகம் /மண்ணுலகில் ஈட்டிய சீலத்து
14-பார்த்து அருளும் கொண்டல் /
15-உத்தமன்
16-புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி
17-சுடர் மிக்கு எழுந்த தொல் புகழ்
18-உன் பெரும் கருணை
19-வண்மை இராமானுசர்
20-மிக்க வண்மை
21-வண்மை –மா தகவு /மதி புரையும் தண்மை/
22-கொண்டல் அனைய வண்மை
23-மொய்த்து அலைக்கும் நின் புகழே
24-சீர் ஒன்றிய கருணை
25-தெரிவுற்ற கீர்த்தி
26-கார் கொண்ட வண்மை
27-சீர் வெள்ள வாரி
28-உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
29-போற்ற யரும் சீலம்
30-ஈண்டிய சீர்
32-அனைத்தும் தரும் அவன் சீர்
33-கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
34-மெய்யில் பிறங்கிய சீர்
35-இன்புற்ற சீலம்
36-பொங்கிய கீர்த்தி

———————-

சௌகர்ய ஆபாத குண சதுஷ்டயமும்
கார்ய ஆபாதக குண சாதகமும்
இங்கே அனுசந்தேயம் -அது எங்கனே என்னில்
இப்படியைத் தொடரும் இராமானுசன் -என்னும்படி அவர் பின் படரும் குணனாய்
தீம்பன் இவன் என்று நினைத்து என்னை இகழார் எதிராசர் அன்று அறிந்து அங்கீ கரிக்கையால் -என்கிற வாத்சல்யமும்
அண்ணல் இராமானுசன் -என்னும்படி உடையவர் ஆகையால்
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த படியாலே-
வைத்து இருந்த இடத்தே வந்து வந்து நோக்கும் படியான ஸ்வாமித்வமும்
என்னருவினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை யுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த சௌசீல்யமும்
என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற -தென்று சொல்லும்படி சௌலப்யமும்
மெய்ஞானத்து இராமானுசன் -கதி இராமானுசன் -உண்மை நன்ஞானம் உரைத்த இராமானுசன் -என்று
அறியாதன அறிவிக்கைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டுமதுவும் தவிர்க்க வேண்டுமதுவும் அறிக்கைக்கும் ஈடான ஜ்ஞானமும்
நிலத்தை செறுத்து யுண்ணும் நீசக்கலியை நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் என் பெய்வினை தென் புலத்தில்
பொறித்தவப் புத்தகச் செம்மை பொறுக்கியும் போருகிற பாப விமோசகத்வ சக்தியும் –
சலியாப் பிறவிப் பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரம் தாமம் என்னும் திவம் தரும் -என்னும்படி
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் பிராப்தியை உண்டாக்கிக் கொடுக்கும்தான சக்தியும்
பகவத் விஷயத்தை அண்டை கொண்ட பூர்த்தியும்
எந்தை இராமானுசன் வந்து யெடுத்தனன் இன்று என்னை -என்கிற பிராப்தியும்
காரேய் கருணை என்கிற காருணிகத்வமும்-
கொண்டலனைய வண்மை–உன்னுடைய கார் கொண்ட வண்மை–உன் வண்மை என் பால் என் வளர்ந்ததுவே -என்று
அபேஷா நிரபேஷமாக உபகரிக்கும் ஔதார்ய ஸ்வ பாவமும் ஆகிற
ப்ரபத்ய அபேஷித குணங்கள் எல்லாம் -குணம் திகழ் கொண்டல் இராமானுசன் இடத்திலே கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இ றே –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் -யென்னும்படியாய் இருக்கும்
சரனௌ சரணம் -இராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் -என்கிற உபாயத்வ அத்யாவச்யத்தை சொல்லுகிறது
ப்ரபத்யே -என்று உபாய ச்வீகாரம் சொல்லுகிறது
நையும் மனம் யுன் குணங்களை யுன்னி என்னாவிருந்து எம்மையன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன் கையும் தொழும்-
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத -என்னும்படி
த்ரிவித கரணத்தாலும் பற்றுகிறார்
இராமானுசனை உன்னும் திண்மை -என்று எல்லார்க்கும் மானஸ அத்யாவசாயம் ஆகலாம்
இவர் பூர்ண அதிகாரி ஆகையாலே த்ரிவித கரணத்தாலும் பூர்ண பிரபத்தி பண்ணுகிறார்
இந்த ச்வீகாரம் பிராப்யம் ஆகையாலே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -என்று வர்த்தமானமாய் நடக்கின்றது-

-மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு- 2- என்று முதலில் சீல குணத்தில் ஈடுபட்டவர்–இன்புற்ற சீலத்து இராமானுச -என்று முடிவிலும் ஈடுபடுகிறார் .

————————————————

ஸ்வாமியை விளித்து அருளும் ஸ்ரீ ஸூக்திகள் –

1-எம் இறையவனே/
2-மா முனியே /
3-உறு துணையே /
4-எனக்கு ஆரமுதே /
5-மா நிதியே /
6-சேம வைப்பே
7-கார் தன்னையே /
8-விளங்கிய மேகத்தை /
9-அன்பன் அனகன் /
10-பூண்ட அன்பா
11-குடி கொண்ட கோயில் /
12-மெய்ம்மதிக் கடலே
13-குணம் திகழ் கொண்டல்
14-குலக் கொழுந்து
15-அரு முனிவர் தொழும் தவத்தோன்
16-மிக்க பண்டிதனே
17-ராமானுஜ முனி வேழம்
18-ஆர் உயிர்க்கு அரண்
19-கீதையின் செம்மைப் பொருள் தெரிய பாரினில் சொன்ன இராமானுசன்
20-எந்தை இராமானுசன்
21-இராமானுசர் எம் பெரும் தகையே
22-சீர் முகில்
23-புண்ணியனே
24-வலி மிக்க சீயம்
25-மிக்க புண்ணியனே
26-அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த மெய்த்தவன்
27-நீணிலத்தே பொற் கற்பகம்
28-செழும் கொண்டல் –

————————–

ஸ்வாமியை புகழும் பெரியோர்களை விளித்து அருளும் ஸ்ரீ ஸூக்திகள் –

1-புகழோதும் நல்லோர்/
2-திருவுடையார் என்றும் சீரியரே /
3-சார்ந்தவர் தம் காரிய வண்மை /
4-இறைஞ்சும் திரு முனிவர் /
5-கவி பாடும் பெரியவர் /
6-நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும்மேவு நல்லோர்/
7-பெரியவர் சீரை /
8-இனியவர் தம் சீர் /
9-மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள்
10-புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசர் /
11-குணம் கூறும் அன்பர் /
12-எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
13-புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச /
14-முழுது உணர்ந்த அடியவர்க்கு அமுதம் /
15-கற்றவர் காமுறு சீலன்
16-தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன் /
17-உதிப்பன உத்தமர் சிந்தையுள் –இணை யடியே /
18-கொண்டலை மேவித் தொழும் குடி
19-நற்றவர் போற்றும் ராமானுஜன்
20-பெரும் தேவரைப் பரவும் பெரியோர்
21-இராமாநுசனைப் பணியும் நல்லோர்
22-இராமானுசர் யுன்னைச் சார்ந்தவர்
23-உள்ளம் நைந்து அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோர்
24-நல்லார் பரவும் இராமானுசன்
25-இராமானுசனைத் தொழும் பெரியோர்
26-ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமாநுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் —
27-எம்மை நின்று ஆளும் பெரியவரே
28-இரும்கவிகள் புனையும் பெரியவர்
29-இராமாநுசனை உற்றவர் எம் இறைவரே
30-இராமானுசனைத் தொழும் பெரியோர் –

—————————

ஸ்வாமி -அருளிய -அநிஷ்ட நிவ்ருத்திகள் பற்றி -ஸ்ரீ ஸூக்திகள் –

1-புலைச்சமயங்கள் நிலைத்தவியக் கைத்த மெய்ஞ்ஞானத்து இராமானுசன்
2-கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே மாறன் பணித்த மறை யுணர்ந்தோன்
3-பொய்ம்மை அறு சமயம் போனது
4-பொன்றி இறந்தது வெங்கலி
5-ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன –இணை யடியே
6-பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப
7-நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
8-மருள் சேர்ந்தோர் சிதைந்து ஓட வந்த
9-வாதியார்கள் உங்கள் வாழ்வற்றதே /
10- வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு
11-தீய சமயக் கலகரைக் கைத்தனன்
12-கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன்
13-நாதன் என்று அறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமானுசன்
14-பிறவியை நீக்கும் பிரான்

———————————-

ஸ்வாமி -அருளிய -இஷ்ட ப்ராப்திகள் பற்றி -ஸ்ரீ ஸூக்திகள் –

1-தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
2-ஆனது செம்மை அற நெறி
3-நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது–வண் தமிழ் மறை வாழ்ந்தது
4-பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்து அருளும்
5-மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தான்
6-மறையவர் தம் தாழ்வற்றது
7-தாரணி தவம் பெற்றது
8-தத்துவ நூல் கூழற்றது
9-அத் தானம் கொடுக்கும் தன் தகவு என்னும் சரண்
10-தூய மறை நெறி தன்னை காசினிக்கே உய்த்தனன்
11-உண்மை நல் ஞானம் உரைத்த இராமானுசன்
12-ஈயாத இன்னருள் ஈந்தனன்
13-கீர்த்தியினால் அனைத்தும் ஈந்தனன்

————————————–

பாசுர வகைகள் –

1-தான் பெற்ற பேறு பற்றி -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
2–தன் நெஞ்சுடன் சம்வாதம் -நெஞ்சு -பற்றி -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
3-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று பரிதபித்து -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
4-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று -அவர்களுக்கு உபதேசித்து அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்–
5-இராமானுசர் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
6-இராமானுஜர் இடம் நேராக சம்போதானம் -இப்படி ஆறு வித பாசுரங்கள் உண்டே –

———————————————

1-தான் பெற்ற பேறு -விவரணம் –

1–ராமானுஜ முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்க கீழ் என்னை சேர்த்தான் –
2–என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி —
3– மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து –
4–ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்
5–என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகம்
6–கொழுந்து விட்டு ஓங்கிய யுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
7–என் பெய்வினை தேன் புலத்தில் பொரித்த வைப்புத்தகச் சும்மாய் பொறுக்கிய பின் இராமானுசன் தன் நாயக் புகழ் நலத்தைப் பொறுத்தது
8–என்னை ஆக்கி யடிமை நிலைப்பித்தனை இன்று
9–இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தண்ணீரில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து செய்த சேமங்கள்
10—ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்றில் அழுந்தி மாயும் என்நாவியை இன்று வந்து எடுத்தான்
11– மதியிலேன் தெரியும்படி என் மனம் புகுந்தான்
12–என் அருவினையின் திறம் செற்றான்
13–இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற்ற விருந்தான்
14–இராமானுசன் தன் இணை அடியே – கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன
15– ராமானுஜன் என்னை ஆழ வந்து இப்படியில் பிறந்தது -மாற்று இல்லை காரணம் பார்த்திடிலே
16—புன்மையினேன் இடைத் தான் புகுந்தான்
17–இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணை யோடு ஆர்த்தான்
18— என்னை ஆள வந்த கற்பகம் –
19–ராமானுசனை இந்நாணிலத்தே பெற்றனர் -பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே
20–கொழுந்து விட்டு ஓடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்து அழுந்தியிட்டேனை வந்து ஆட்க்கொண்டான்
21—வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன்
22–அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தானது தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே
23–உன்னி உள்ளம் நைந்து அன்போடு இருந்து ஏத்தும் நிரை புகழோருடனே வைத்தனன் என்னை மிக்க வண்மை செய்தே
24– ஈயாத இன்னருள் ஈந்தனன்
25—என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன்
26–கருத்தில் புகுந்து -உள்ளில் கள்ளம் கழற்றினாய்
27 -கருத்தரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கினாய்
28–தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெருத்தினாய்
29—வெந்தீ வினையால் உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொலித்தீன் பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றான்
30–உன்னுடைய கார் கொண்ட வண்மையால் உன் பாத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்
31–உன்னை கண்டு கொண்டேன் காண்டலுமே தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் –
32–காண்டலுமே என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன்
33—காண்டலுமே அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன்
34—இந்நீணிலத்தே எனை ஆள வந்த ராமானுசன்
35– இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே
36—என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன்
37–மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை-துயர் அகற்றி -உயக் கொண்டு நல்கினான்
38—என் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தனர் கையில் கனி என்னவே –
39–இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தன்னோடும் வந்து
-இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே –
40–இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும் இன்புற்ற நோயுடன் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று வீயினும்
சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே -என்று அருளி தலைக் காட்டுகிறார் –

——————————–

2–தன் நெஞ்சுடன் சம்வாதம் -நெஞ்சு -பற்றி -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்-

1–பூ மன்னு –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -ராமானுசன் சரணாரவிந்தம் தாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-
2—குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத வன்பன் ராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளது என்னெஞ்சு
3–பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை
4–பத்தியில்லாத வென் பாவி நெஞ்சால் முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே
5–ஒப்பார் இல்லாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது வவன் மொய் புகழ்க்கே
6— மனம் நீ புகுந்தாய் வெள்ளைச் சுடர் விடு முன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுசா என் தனி நெஞ்சமே
7–மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மாற்றுளார் தரமோ
8–இராமானுசனை அடைந்த பின் என் வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே
9—இராமானுசனைப் பணியும் நல்லோர் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே
10–சார்ந்தது என் சிந்தை யுன் தாளிணைக் கீழ்
11–திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்நெஞ்சில் பொருத்தப் படாது எம்மிராமானுசா மற்றோர் பொய்ப் பொருளே –
12–அவருக்கே எல்லாவிதத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே
13–என் மனம் ஏத்தி யன்றி ஆற்ற கில்லாது
14–இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக்காரணம் கட்டுரையே
15–இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு உவந்து இருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே
16–இனி நம்மிராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே
17–போந்து என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
18—நையும் மனம் உன் குணங்களை யுன்னி
19–மாயன் இராமானுசன் – இன்று வவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே
20—பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம் தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே –

————————————

3-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று பரிதபித்து அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் -விவரணம் –

1–கள்ளார் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா மனிசர்-
2–பேய்ப் பிறவிப் பூரியர்
3–எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா மனக்குற்ற மாந்தர்
4–பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள்
5—பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்
6–பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே மருள் கொண்டு இளைக்கும்
7—நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக் கல்லார் அகல் இடத்தே எது பேறு என்று காமிப்பரே
8–ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட இராமானுசன் தன் இணை அடியே மாறி நடப்பன
9–பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று ஓதி மற்று எல்லா யுயிரும் அஃது என்று
உயிர்கள் மெய் விட்டு ஆதி பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அல்லல்
10–எம்மிராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்
11—ராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொல்ல வல்ல தெய்வம் இங்கு யாது என்று அலர்ந்து அவமே ஐயப்படா நிற்பர் வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே
12–ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதனுச்சி மிக்க சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
13—-பிறவியை நீக்கும் பிரானை நினையார்
14–ராமானுசனை இரும் கவிகள் புனையார்
15–பெரியவர் தாள்களில் பூந்தொடையல் வனையார் –

——————————-

4-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று -அவர்களுக்கு உபதேசித்து அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்–விவரணம் –

1—பொருந்திய தேசம் போரையும் திரளும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் –எங்கள் ராமானுசனை யடைபவர்க்கே
2–காசினியோர் இடரின் கண் வீழ்ந்திடத் தானும் அவ் வொண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணம் எம்மிராமாநுசன்
3–சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம் பரக்கும் இரு வினை பற்றற வோடும் படியில் உள்ளீர் உரைக்கின்றனன் உமக்கு யான்
4–அறம் சீறும் கலியைத் துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே
5–எண்ணரும் சீர் நல்லார் பரவும் ராமானுசன் திரு நாமம் நம்புமின்
6–என்றார் குணத்து எம்மிராமாநுசன் அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே
7–இராமானுசன் மறை தேர்ந்து உலகில் புரியும் நல் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே
8— தவம் தரும் செல்வம் தரும் தகவும் தரும் சலியாப் பிறவிப் பவம் தரும் தீ வினை பாற்றித் தரும் பரம் தாமம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு
9–பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலத்து உதித்து மறை நாலும் வளர்த்தனனே

—————————————

5-இராமானுசர் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் -விவரணம் –

1—தொல் உலகில் மன் பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்தான் அன்பன் அனகன் இராமானுசன்
2—நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் ஆறாம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன்
3—மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன்
4—இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
5—கருதரிய பல் பல் உயிர்களும் பல் உலகி யாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந்நாநிலத்தே வந்து நாட்டினான்
6—மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்தான்
7—தெய்வத் தெரிநிலை செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
8—மதி புரையும் தண்மையினாலும் இத்தாரணி யோர்கட்க்குத் தான் சரணாய் உண்மை நல் ஞானம் உரைத்த இராமானுசன்
9—எண்ணில் மறைக் குறும்பைப் பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் –
10–இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன்
11– ஓதிய வேதத்தின் உட்ப்பொருளாய் அதனுச்சி மிக்க சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமானுசன்
12—உலகிருள் நீங்க தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான்
13—என் தன் மெய்வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே

————————————

6-இராமானுஜர் இடம் நேராக சம்போதானமாக -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் -விவரணம் –

1–காரேய் கருணை இராமானுச –25-
2–வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் –சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுசா என் தனி நெஞ்சமே –27-
3–இராமானுச நின்னருள் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே –38-
4–உன்னைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடுலே –45-
5–இராமானுச இனி நாம் பழுதே அகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆனபின்னே –48-
6–யான் உன் பிறங்கிய சீர் அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் –இராமானுச மிக்க பண்டிதனே –63-
7–சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் –வண்மை இராமானுசா வெம் பெரும் தகையே –71-
8–நின் புகழே மொய்த்து அலைக்கும் வந்து இராமானுசா வென்னை முற்று நின்றே –75-
9–நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற் கடலும் உன் தனக்கு
எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள் என் தனக்கும் அது இராமானுசா இவை ஈந்தருளே –76-
9–திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்நெஞ்சில் பொருத்தப் படாது எம்மிராமானுசா மற்றோர் பொய்ப் பொருளே -78-
10–அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச இனி யுன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே -81-
11–உன் பதயுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வண்மை இராமானுசா இது கண்டு கொள்ளே -83-
12–போற்ற அரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து சாற்றுவனேல் அது தாழ்வு -89-
13—எண்ணரும் கீர்த்தி இராமானுச இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக்காரணம் கட்டுரையே -92-
14–உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே ஈந்திட வேண்டும் இராமானுச இது வன்றி ஒன்றும் மாந்தகில்லாது-100-
15–துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுச வென்றது உன்னை யுன்னி பயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லார் -101-
16–இராமானுச –உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-
17–உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104-
18–இன்புற்ற சீலத்து இராமானுச –உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி யங்கு ஆட்படுத்தே -107-

———————————————

ஆழ்வார்கள் சம்பந்த கிரமம்-காரணம் 

பெயர் ஊர் பலன் சொல்லா ஐவரையும் முதலில் சொல்லி –முதல் ஆழ்வார்கள் -திருப் பாண் ஆழ்வார் -திரு மழிசை ஆழ்வார் –
திருமழிசை -சம்பந்தம் சொல்வதற்கு முன் திருப் பாண் ஆழ்வார் –பெயர் பலன் சம்பந்தம் இல்லாத இவர்கள் பிரசித்தம் என்பதால் –
-பின்பு –தொண்டர் அடிப்பொடி – குலசேகரர் -பெரியாழ்வார் ஆண்டாள் சம்பந்தம் சொல்லி -மீண்டும் கலியன் / மதுரகவி /நம்மாழ்வார் -அருளிச் செயல்களின் சம்பந்தம் சொல்லி பிரபந்தம் ஆரம்பம் என்றபடி –

ஓடித் திரியும் யோகிகள் முதல் ஆழ்வார் -இடை கழி இருந்த இடத்தில் சேவை-
தான் இருப்பிடம் அழைக்கப்பட்டு -அடுத்து சேவை சாதிக்க-திருப் பாண் ஆழ்வார்
ஆழ்வார் சொன்ன படி இருந்ததை காட்டி -அர்ச்சாவதார சமாதி கடந்து-திரு மழிசை ஆழ்வார்
அதிலே இருந்து அழகை காட்டி ஆள் கொண்ட தொண்டர் அடி பொடி ஆழ்வார்-
கர்ம ஆராதனம் பொய்கை நீர் வேண்டுமே பொய்கை ஆழ்வார் முதலில் சொல்லி –
அடுத்து -இதயத்து இருள் கெட இறை -உடையவன் காட்டி -அடுத்து சொல்லி -நாராயணன் -பர்யந்தம்-பூதத்தாழ்வார் சம்பந்தம் –
அடுத்து மா மலராள் தன்னோடு மாயன்-திருமால் காண்பித்த –பேயாழ்வார் சம்பந்தம் –
சாஸ்திரம் தான் -அனுபவித்து அருளி செயல்-சீரிய நான் மறை செம்பொருளை செம் தமிழால் அளித்த பாண் பெருமாள்-
இடம் கொண்ட கீர்த்தி -உலகு வைத்து எடுத்த பக்கம்-புலவர் புகழ் கோலால் அளக்க -கற்று தெளிந்து
இனி அறிந்தேன் -காரணம் நீ கற்றவை நீ-தேறின பொருள் பரமத நிரசன பூர்வகமாக அருளியவர் –
சரீரம் ஆத்மா உடன் அவனை அணைந்து இருக்க வேண்டுமே அவன் என்று அறிந்த பின் –
தோளில் மாலை சரீர பிரத்யுக்தம் செம் தமிழ் மாலை ஆத்மா -விட்டு பிரியாமல் –
உற்றமும் உன் அடியார்க்கு அடிமை கொல்லி காவலன் -ஆழ்வாருக்கு விசேஷணம் இங்கே சொல்ல வில்லை –
உயிர் கொல்லி அஹங்காரதிகள் கொன்று பாகவத நிஷ்டை அருளியவர் -அவர்களுக்கு வரம் கொடுத்த
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என் ஆவதே –
கர்ம நிஷ்டையுடன் பல்லாண்டு காப்பு -இடுவது -பெரியாழ்வார் நிஷ்டை சொல்லி/ஆண்டாள்– சம்பந்தம் /
விசிஷ்ட அத்வைதம் காட்டிய கண்ண மங்கை நின்றான் நீலன்
மிக்க வேதத்தின் உள் பொருள் நிறுத்தினான்-‘திருவாய் மொழியே தாரக போஷாக போக்யங்கள் –

————————————————

 

1–மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன்
2–குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத வன்பன்
3–ஷரம் பிரதான அம்ருத அஷரம் ஹா -இத்யாதி பேத ஸ்ருதிகளின் உண்மை பொருளை உணர்ந்த இராமானுசன்
4- என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி -மருள் சுரந்த முன்னை பழ வினை வேர் அறுத்த ராமானுசன்
5–எனக்குற்ற செல்வம் இராமானுசன்
6—பெரிய பிராட்டியாரால் கடாக்ஷிக்கப் பெற்ற -அஸ்து தே -சதைவ சம்பத்யே -பெறும் கீர்த்தி யுடைய இராமானுசன்
7—பழியைக் கடத்தும் இராமானுசன் –திருவடி சம்பந்திகளுக்கு மோக்ஷம் நிச்சயம்
8—பொய்கைப்பிரான் அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் இராமானுசன் எம் இறைவனே
9–பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்தாளும் இராமானுசன்
10—தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்
11–பாண் பெருமாள் சரணம் பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்
12—மழிசைக்கிறைவன் இணையடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன்
13–சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் இராமானுசன்
14—கொல்லி காவலன் சொல் பாதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன்
15—பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத யுள்ளத்து இராமானுசன்
16–சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன்
17–நீலன் தனக்கு இனியான் எங்கள் இராமானுசன்
18–சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை யுயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும் இராமானுசன்
19–உறு பெறும் செல்வமும் –மாறன் விளங்கிய சீர் –செந்தமிழ் ஆரணமே என்று –அறிதர நின்ற இராமானுசன்
20–நாத முனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்
21–யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
22–வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
23–வைப்பாய் வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்
24—புலச் சமயங்கள் நிலைத்தவியக் காய்த்த மெய்ஞ்ஞானத்து இராமானுசன்
25—காரேய் கருணை இராமானுச
26–திக்குற்ற கீர்த்தி இராமானுசன்
27–வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் புகுந்த இராமானுசன்
28—பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அறிய இராமானுசன்
29–தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
30—பல்லுயிர்கட்க்கு இறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுசன்
31–காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசன்
32— செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன் எங்கள் இராமானுசன்
33—இந்த பூதலம் காப்பதற்கு என்று –கை யாழி – நாந்தகமும் தண்டும்- வில்லும் – சங்கமும் -இடையே யான இராமானுச முனி
34–என் பெய்வினை தென் புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய புகழ் யுடைய இராமானுசன்
35–பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
36–ஒண் பொருள் கொண்டு –படரும் குணம் இராமானுசன்
37–படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்
38–புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுச
39–வெந்துயர் மாற்றித் தண்ணீரில் பெறும் புகழே தெருளும் தெருள் தந்த இராமானுசன்
40—கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன்
41–உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே
42–அழுந்தி மாயும் என்னாவியை வந்து எடுத்து -மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன்
43–அறம் சீறும் உறு கலியைத் துரைக்கும் பெருமை இராமானுசன்
44–சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் ராமானுசன்
45—நின் சரண் அன்றி பேறு ஓன்று மற்று இல்லை ஆறும் ஒன்றும் இல்லை என்று இப்பொருளை தேறும் அவர்க்கும் எனக்கும் உன்னைத் தந்த செம்மை –இராமானுசன்
46–மாறன் பணித்த மறை யுணர்ந்தோன் –மதியிலேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -திசையனைத்தும் ஏறும் குணம் இராமானுசன்
47–பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
48—இராமானுசா என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகழ் ஒன்றும் இல்லை -அருட்க்கும் அஃதே புகல்
49–தென்னரங்கன் கழல் சென்னி வைத்து– மன்னும் இராமானுசன்
50—இராமானுசன் தன் இணை யடியே உதிப்பது யுத்தமர் சிந்தையுள் -ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன
51–தேர் விடும் கோனை முழு உணர்ந்த அடியார்க்கு அமுதம் இராமானுசன்
52–இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் இராமானுசன்
53–பற்பல உயிர்களும் பல்லுலகியாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந்நாநிலத்தே வந்து நாட்டின இராமானுசன்
54—மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்வு கண்டே
55–தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன்
56–மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் இராமானுசன்
57—நல் தவர் போற்றும் இராமானுசன் -அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவராக் தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
58—உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம் வாதில் வென்றான் எம்மிராமாநுசன்
59–நான்மறையின் சுடர் ஒளியால் –கலி இருளை துரந்த இராமானுசன் -உயிரை யுடையவன் நாரணன் என்று உற்று உணர வைத்தான்
60—மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தோறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன்
61—அரு முனிவர் தொழும் தவத்தோன் இராமானுசன்
62–இராமானுசன் மன்னு மலர்த்தாள் பரவும் பெரியோர் கழல் பிடித்து இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்
63–மருள் செறிந்தோர் சிதைந்து ஒட வந்து இப்படியைத் தொடரும் இராமானுசன்
64–பண்டாரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
65–இராமானுசன் தந்த ஞானத்திலே தொல்லை வாத்தியார் வாழ்வு அற்றது -மறையவர் தாழ்வு அற்றது -தாரணி தவம் பெற்றது
66–தன்னை எய்தினார்க்கு – தன் தகவு என்னும் சரண் கொடுத்து -அத்தானும் கொடுக்கும் இராமானுசன்
67–மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு அன்று என்று உயிர்கட்க்கு அரண் அமைத்த இராமானுசன்
68–கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
69–அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து இன்று என்னை வந்து எடுத்த எந்தை இராமானுசன்
70– -எண்ணில் பல் குணத்த இராமானுசா
71–இராமானுசா நீ செய்வினை யதனால் முன் செய்வினை பேர்ந்தது
72–தூய மறை நெறி தன்னை காசினிக்கே உய்த்தனன் இராமானுசன்
73—தான் சரணாய் உண்மை ணங்கினானாம் உரைத்த இராமானுசன்
74–கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம்மிராமாநுசன்
75–இராமானுசா நின் புகழே என்னை முற்று நின்று மொய்த்தலைக்கும்
76–நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் இராமானுசா
77–ஈந்தனன் ஈயாத இன்னருள் வண்மை இராமானுசன்
78–இராமானுசா நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கினாயே
79-இந்த பூதலத்தே – மெய்யைப் புரக்கும் இராமானுசன்
80–நல்லார் பரவும் இராமானுசன்
81–அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி பெறுத்தும் இராமானுசன்
82–பொருவற்ற கேள்வியனாக்கி நின்ற சீர் முகில் இராமானுசன்
83–கார் கொண்ட வண்மை இராமானுச
84–எம் இராமானுசனை கண்டு கொண்டேன் -காண்டலுமே அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்
85–வேதத்தின் உச்சி மிக்க சோதியை நாதன் என்று அறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமானுசன்
86–ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசன்
87—உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமானுசன்
88–கலைப் பெருமான் ஒளி மிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
89–போற்ற அரும் சீலத்து இராமானுச
90–இன் நீணிலத்தே எனையாள வந்த இராமானுசன்
91–அருள் சுரந்து எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன்
92—செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி இராமானுச
93–என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாள் யுருவி வெட்டிக் களைந்த இராமானுசன்
94–பரம் தாமம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன்
95–பரனும் பரிவிலானாம் படி பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்த இராமானுசன்
96—எம் இறைவர் இராமானுசன் தன்னை யுற்றவரே
97–இராமானுசன் தன்னை உற்றாரை உற்று ஆட் செய்ய என்னை உற்றான் இன்று
98–நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே விடான்
99–நீசர்கள் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம்மிராமாநுச முனி போந்த பின்னே
100–இராமானுசா உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி என் நெஞ்சு என்னும் பொன் வண்டு போந்தது
101–துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுசன் என்றது உன்னை யுன்னி நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லார்வர் என்று நைந்தே
102 —இராமானுச உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
103–வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசன்
104—இராமானுச என் செழும் கொண்டலே
105–நல் வேதியர்கள் தொழும் திருப் பாத்தான் இராமானுசன்
106—மாயன் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை அவை தன்னோடும் வந்து இருப்பிடம் இராமானுசன் மனத்து -இன்று அவன் வந்து என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே இருப்பிடம்
107—இன்புற்ற சீலத்து இராமானுச
108—பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ நம் தலை மிசையே மன்னவே பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் –

—————————————–

பாவனம்-32/42/52 பாசுரங்களால்/தந்த அரங்கனும் தந்திலன் தான் அது தந்து-வள்ளல் தனம்/போக்கியம் -பொன் வண்டு தேன் உண்டு அமர்ந்து/காமமே -கண்ணனுக்கு புருஷார்த்தம்-/பர மத கண்டனம் பல பாசுரங்கள்/திருவிலே தொடங்கி திருவிலே முடிக்கிறார்/திரு கண்டேன்- தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு – திரு பேய் ஆழ்வார் போல

அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு -அணி யாகமன்னும் — – என்றார்
அங்கு -இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -1- – என்றார்

இங்கு -தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் .
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு –நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .

நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 – என்று இப் பேற்றின்
சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –
நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்ன
நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று
சரணாரவிந்தம் எப்போதோ என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருக்கிற
நம் தலையிலே -என்றபடி ..பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் -திக்குற்ற கீர்த்தி -என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-அவதாரிகை-பாசுர பிரவேசம்- தொகுப்பு -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி —

April 21, 2017

1-சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்-தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் -சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

2-ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்-ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள
நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் –என்கிறார்
தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

3-ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்-முட்டக் காண வல்லார் இல்லை-நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் –என்கிறார்-

4-சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று-ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –
பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் -என்கிறார் என்றுமாம் –

5-நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து
திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் -எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இ றே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று எம்பெருமான்
அருளிச் செய்ய-ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் -இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-
சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் -ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –

6-இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத-பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார்

7-அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –

8-நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –

9-அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –
எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –
நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –

10-எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்-ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-

11-ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

12-எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன-நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆச்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –

13-மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்-எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

14-இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு-அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –

15-இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்-ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் –என்கிறார் –

16-உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன -நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் –என்கிறார்-

17-நம்மளவே அன்று –எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-

18-பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

19-எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

20-இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –

21-ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார்

22-ஆனபின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

23-அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்-அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–

24-ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

25-ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே-அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –

26-இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று-அவன் படியை வெளியிடுகிறார்

27-எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ –என்கிறார்-

28-பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-

29-ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்
ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய்- பேர் அழகாய் – இருக்கும் -என்கிறார் –

30-அப்பேர் அழகோடு –கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன்என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில்
புகாதபடி காப்பான் –அவ்வளவு அன்றிக்கே-நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்-
இனி திருப் பாற் கடலில் திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை –என்கிறார்-

31-எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் எம்பெருமானே யான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில்
உள்ளார் எல்லாரும் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

32-அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் -ஆனபின்பு –
ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

33-தாம் கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –

34-என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –

35-திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் 

36-எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம்
என்று பார்த்துத் திருக் குடந்தை தொடக்கமான-திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –

37-எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே –என்கிறார் –
ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-

38-மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே –ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –

39-லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-தமக்குத் திருமலையையும்
அங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-

40-திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் -நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

41-எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-நான் திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

42-நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள்
நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

43-பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

44-ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –

45-அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற திருமலையை-எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-

47-திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி திருமலையை அனுபவிக்கிறார் –

48-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து-பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

49-பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் –என்கிறார் –

50-சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-

51-அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை –என்கிறார் –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ –என்கிறார் ஆகவுமாம்-

52-எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-

53-ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

54-சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் –என்கிறார்-

55-இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து
-ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

56-இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –

57-அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –அவனுடைய விஷயீகார பஹிஷ்காரங்களே
புண்ய பாபங்கள் ஆகிறன-அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-

58-அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-

59-தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை –என்கிறார்-

60-இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

61-எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-

62-எம்பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-

63-நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –

64-அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

65-ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே-பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய-ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-

66-நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்-அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

67-நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை -ஏத்துகையே உத்தேச்யம்
-என்கிறார் –நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் -இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-

68-யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் –

69-செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்-பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்-

70-இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-

71-எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை-அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

72-ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் -இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –

73-அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று -வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

74-தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் –என்கிறார் ஆகவுமாம்-

75-ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

76-லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

77-என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

78-உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்-அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ –என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க-நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

79-எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் –என்கிறார்

80-லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது -இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –

81-நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –

82-ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் -இது போலே இருக்கும் நன்மை யுண்டோ –என்கிறார்-

83-ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று -தரிக்க மாட்டாதே இருக்கும்
-சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று- என்கிறார்-

84-ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-

85-சர்வ காலமும் ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிமிது எனக்குத் தொழில் -என்கிறார் –
என் நெஞ்சிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் திரு நாமம் ஏத்தப் போரும் போது என்கிறார் ஆகவுமாம்-

86-நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

87-நம் அளவிலே அன்று-ஈஸ்வரத்வேன அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே கூடின ஜகத்துக்கு எல்லாம் ரஷகன் அவனே –என்கிறார்
தம்மை ஒக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனாம் படி காட்டுகிறார் ஆகவுமாம் –

88-தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு சரீர விஸ்லேஷ தசையில் யம வச்யதை தொடக்கமான துக்கங்களைப் போக்கும் பெருமானை
ஆஸ்ரயிக்கும் அவர்கள் க்ருதார்த்தராவர் -ஷூத்ர சமயவாதிகள் உடைய வாழ்வு வ்யர்த்தம் -என்கிறார் –

89-எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் -இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் – ஆகவுமாம் –

90-பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்- பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-

91-தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் ப்ரஹ்மா தொடக்கமானவர் எல்லாருக்கும் நிர்வாஹகர் -என்கிறார் –
எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உபய விபூதியில் உள்ளாருக்கும் நிர்வாஹகராம் படியான
பெருமையை யுடையவர்கள் என்கிறார் -என்றாகவுமாம்-

92-கர்ப்பாவஸ்தையே தொடங்கிசர்வ காலத்திலும் ரஷித்துக் கொண்டு போருகையாலே சர்வேஸ்வரனை-நான் ஒரு நாளும் மறந்து அறியேன் -என்கிறார் –

93-சேதனராய் இருப்பார் -சர்வ சேஷியாய்-குணாதிகனான உன்னை விடத் துணியார் -என்கிறார் –

94-அத்யந்த ஹேயனே யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேணும் -என்னில் தண்ணியாரையும் -யதி வா ராவணஸ் வயம் -யுத்த -18-33-என்னும்படியாலே
வஸ்து ஸ்தியையை அழகிதாக அறியுமவர்கள் விஷயீ கரிப்பர் -என்கிறார்-

95-எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

96-சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் –என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்-அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக
உபபாதித்துக் கொண்டு போந்து-அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -அவதாரிகை தொகுப்பு –பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

April 20, 2017

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

1-ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

2-விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய-நிர்ணயமும் இவ்வளவே -எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

3-அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-

4-தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் -சர்வ சப்த வாச்யன் ஆனவனை-எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை-தொகுத்து சொன்னேன் –

5-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே-அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற இவ்வர்த்தம் தேவரே அறிந்து அருள வேணும் –

6-வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்-

7-அகிஞ்சநனாக -எனக்கு உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை -பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்-விடப் போகாது –

8-உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –

9-வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு-தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

10-அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திரு மேனி-ச்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ -ப்ரஹ்மருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-

11-சர்வேஸ்வரன் உடைய-திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குமின்கள்-என்று பர உபதேசம் செய்கிறார்

12-உன்னை மதியாதவர்களை– சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு அன்றோ நினைத்தாய் –

13-மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் -நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் -நாராயணன் -சர்வேஸ்வரன் -என்கிறார் –

14-சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப்பெறாதே -இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்-அனர்த்தப் படுவார் என்றும்-பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

15-மார்கண்டேயனும் கரியே என்று காட்டி அருளுகிறார் –

16-ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு-நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என்–என்கிறார் –

17-ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்-

18-குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு-பற்றுகை சீரீயது- என்கிறார் –

19-பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு-எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-

20-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்
ப்ருதுக் உபலம்பமும் இல்லை -உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு மட்டுமே நிலை நிற்பது -என்கிறார் –

21-இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது -நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

22-ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது -ஆஸ்ரயிக்க பாருங்கோள்–என்கிறார்-

23-அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூ க்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

24-ஆஸ்ரிதர் உகந்த வண்ணத்தன்ஆச்ரித பக்ஷபாதி என்கிறார் –

25-ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்

26-நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு ஆள் பிடித்துத்-தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி -ஸ்ரமஹரமான வடிவை
உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும்

27-பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –

28-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிப்பது போலே -ஈடுபட்டு அருளுகிறார்-

29-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிக்கும் ஈடுபாடு தொடர்கிறது இதிலும் –

30-என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ

31-நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-ருத்ராதிகளுக்கும் -இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-அவனை அன்றோ பற்ற அடுப்பது –என்கிறார் –

32-ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார்-

33-அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க-விரோதியைப் போக்குமவன்- என்கிறார் –

34-உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –

35-பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
நீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-மங்களாசாசனம் பண்ணாத -லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ –என்கிறார்-

36–பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் -பல திவ்ய தேசங்களில்
கண் வளர்ந்து அருளுகிறதும்-தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில்ப புகுருகைகாக-என்கிறார் –

37-ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

38-தேவதாந்தரங்கள்-ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே-பண்ணும் அபிமானமும்-அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா
பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்-அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும்

39-இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-திருக் கூடல் இழைப்பன் -என்கிறார் –

40-அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி-திருமலை-சொல்ல-ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்-என்கிறார் –

41-திருமலை யை உடைய நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் -நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்-என்கிறார் –

42-பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-என்கிறார் –

43-சதுர் முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று -சமாராதான காலங்கள் தோறும்
சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

44-அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

45-வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

47-திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது

48-திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே-இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-

49-சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

50-உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்-

51-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

52-என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்-என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

53-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன்

54-சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

55-ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி-ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர்

56-காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு-அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே-

57-அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே -அனாயாசேன -நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
-ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

58-என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறான்

59-அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும்

60-தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும்

61-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்-தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது -அது தானும் இன்று-

62-ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்-கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த-அறிவு கேடராக எண்ணி இழக்கிறார்கள்

63-கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை -இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

64-நமக்கு உத்பாதகனானவன் -ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே-இவ்வாத்மாவுக்கு உறுவது –

65-பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே-ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா-

66-கூரியர் ஆனவர்கள்-சார அசார விவேகஞ்ஞர்கள்- தேவதாந்தர பஜனம் பண்ணார்கள் இ றே-என்கை-

67– சர்வ ஸ்வாமியாய்-என் நாவுக்கு நிர்வாஹனாய்-ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்-இருக்கிறவனை-ஏத்துகையே உத்தேச்யம்-

68-பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை-ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்-படியே விவரிக்கிறார்-

69-கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்-குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக-லபித்தேன்
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்-அத்தனையே –

70-வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்-நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ-பிரசித்தம் அன்றோ -என்கிறார் –

71-பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது-அறியாது இருந்த அளவேயோ -சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்-அறியப் போமோ -என்கிறார்-

72-நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்-என்னச் சொல்லுகிறார்

73-அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது- என்றுமாம்-

74-ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன –ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –

75-நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்கிறார்-

76-ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம்
ஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடையவை -என்கிறார்-

77-வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

78-அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்-

79-பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று
-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை -சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-

80-பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த-கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் -என்கிறார்-

81-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி-பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –

82-எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –

83-இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு-எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்-என்கிறார்-

84-கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று -என்கிறார்-

85-எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க-இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

86-அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்-நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

87-தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்

88-இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

89-இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் -என்கிறது-

90-விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்
-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்-

91-நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்கிறார்-

92-கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க-நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் -என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

93-ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான-சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்-

94-அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்-என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் -என்கிறார்-

95-ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-
ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-
ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி-இப்போது பரபக்தி யுக்தனானேன்- என்கிறார்-

96-இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு-கை வந்தது -இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன் -சர்வத்துக்கும் காரணன் நீ-
இதுக்கு முன்பு அறிந்தனவும்-இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு- -நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ–இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது -என்கிறார்-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜர் —960-திரு நக்ஷத்ரம் -பிங்கள வருஷம் -24-4–1977-சித்திரை செய்ய திருவாதிரை –

April 20, 2017

ஸ்ரீ ராமானுஜர்-ஸ்ரீ கூரத் தாழ்வான் அருளிச் செய்த தனியன் –
யோ நித்யம் -ய-திக்குற்ற கீர்த்தி -பிரசித்தமான வைதிக ஸார்வ பவ்வ்மர் / நித்யம் -எப்போதும் -எந்நாளும்
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம -வ்யோமோஹத-தத் இதராணி த்ருணாய மேநே-தென்னத்தியூர் கழலிணைக் கீழ் பூண்ட அன்பாளன் -/
அரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் / பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்கர்க்கு அரிய இராமானுசன்
-பக்தி விரக்திகள் குடி கொண்ட கோயில் அன்றோ
அஸ்மத் குரோ பகவத –உண்மை நல் ஞானம் உரைத்த -மெய் மதிக் கடல் அன்றோ -மெய் ஞானத்து இராமானுசன்
அஸ்ய தயைக ஸிந்தோ -அஸ்ய ராமாநுஜஸ்ய -உன் தன் பெரும் கருணை -எதிராசர் இன்னருள் -காரேய் கருணை –
கார் கொண்ட வண்மை -குணம் திகழ் கொண்டல் -சேஷ ராமானுஜன்
சரணவ் சரணம் பிரபத்யே -நையும் மனம் உன் குணங்களை யுன்னி -என் நா இருந்து -எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் கையும் தொழும்/
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் –
——————
-பிங்கள வருஷம் –சித்திரை செய்ய திருவாதிரை -சக வருஷம் -939-/-கி பி -1017-/-திருவவதாரம் -120-திரு நக்ஷத்ரம் –
இவரது -16-திரு நக்ஷத்திரத்தில் திருத் தகப்பனார் ஆசூரி கேசவ சோம யாஜியார் -பரம பதம் அடைந்தார் என்பர் –
முதலாம் குலோத்துங்க சோழன் காலம் -1070-முதல் -1118-/ திரு நீற்றுச் சோழன் -என்றும் இவனுக்கு பெயர் /
தில்லை கோவிந்த ராஜர் சந்நிதியை இடித்து மூலவர் விக்ரஹத்தை கடலில் எறிந்தவன் –
தில்லை நடராஜர் சன்னிக்கு பொன் வேய்ந்து -பொன் வேய்ந்த பெருமான் என்ற பெயரும் இவனுக்கு உண்டு –
எம்பெருமானார் -திரு நாராயண புரத்துக்கு -79-திரு நக்ஷத்ரம் -கி பி-1096-சென்று -20-வருஷங்கள் –எழுந்து அருளி இருந்தார் –
-1118-வரை இங்கேயே எழுந்து அருளி இருந்தார் –
பிட்டி தேவன் –1104–1141 —
-1098-பஹு தான்ய வருஷம் -திரு நாராயண பெருமாள் பிரதிஷ்டை–
பேலூர் ஸ்ரீ நாராயணன் திருக் கோயில் ஸ்ரீ முதலியாண்டான் -சக வருஷம் –1039- /கி பி 1017-பிரதிஷ்டை –
கி பி -1116-விஷ்ணு வர்த்தன்-அதிகமான் என்னும் அரசனை -குலோத்துங்க சோழன் இவனே -கங்கபாடி போரில் தோற்கடித்தான் –
மாருதி ஆண்டான் -திருவனந்த புர தாசர் / யதிராஜ தாசர் /மேலாக தாசர் / திருக்குறுங்குடி தாசர் / வஞ்சி புரம் தாசர் / ஸ்ரீ ரெங்கம் பட்டர் / விஷ்ணு வர்த்தன்
-ஆகிய எழுவருக்கும் ஸ்வாமி தானே திரு நாராயண புரத்தில் ஓலைச் சுவடியில் ஸ்ரீ வைஷ்ணவ ஆஞ்ஞா பத்திரிகை எழுதி அருளி கொடுத்துள்ளார்
–1118-வருஷம் குலோத்துங்கன் கழுத்தில் புண்ணாகி புழுத்து மாண்டான்
அதன் பின்னே ஸ்ரீ ராமானுஜர் மீண்டும் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளினார் –
அவன் மகன் விக்ரம சோழன் அகளங்கன் -என்றும் இவனுக்கு பெயர் –தனது தந்தை செயல்களுக்கு வருந்தி –
-ஸ்ரீ ராமாயணமும் திருவாய்மொழியும் உள்ளவரை வைஷ்ணவம் அழிவே அழியாது என்றான்
எம்பெருமானார் இவனுடைய ஆதரவால் மீண்டும் இடிந்த கோயில்களை கட்டி அருள -இன்றும் அகளங்கன் திருச் சுற்று உண்டே –
ஸும்ய வருஷம் –கி பி -1130-கட்டி தேவ யாதவ ராயன் -என்பவன் ஆதரவுடன் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த ராஜர் உத்சவரை பிரதிஷ்டை செய்து அருளினார் –
முன்பே இங்கே ஸ்ரீ பார்த்த சாரதி பெருமாள் எழுந்து அருளி இருந்தார் –

முதல் குலோத்துங்க சோழன் -1070- -1118-/ விக்ரம சோழன் -1118–1123-/ இரண்டாம் குலோத்துங்க சோழன் -1123–1146-/ கருணாகர தொண்டைமான் -1111-/

—1047-/-1050-பஞ்ச சம்ஸ்காரம் -மதுராந்தகம் -ஸ்ரீ பெரிய நம்பி –/ ராமானுஜ -தாஸ்ய திருநாமம் -ஸ்ரீ -பெரியநம்பி சாதித்து அருளினார்
ஸ்ரீ யதிராஜர் /ஸ்ரீ லஷ்மண முனி -சந்யாச ஆஸ்ரமம் ஸ்ரீ காஞ்சி / ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளியது
-1120-/-1125-ஸ்ரீ கத்ய த்ரயம் -சாதித்து நமக்காக சரணாகதி அனுஷ்டானம் –
தஞ்சம்மா திருக்கல்யாணம் -16-திரு நக்ஷத்திரத்தில் / சந்யாச ஆஸ்ரமம் -32-திரு நக்ஷத்திரத்தில் /
–40–90-ஆக -50-வருஷங்களில் பாதி ஸ்ரீ ரெங்கம் -பாதி திக் விஜயம் செய்தார்
ஆதி சங்கரர் -300-வருஷங்களுக்கு முன் அவதாரம் /
ஸ்ரீ ரெங்கத்துக்கு முதலில் ஸ்வாமி -25-திரு நக்ஷத்ரம் -ஆளவந்தார் உடைய சரம விமலா திவ்ய மேனி தர்சனம் கண்டு திரும்பினார் –
ஆளவந்தார் 125-திருநக்ஷத்ரம் -917-தொடங்கி -1042-வரை /-917- தாது வர்ஷ திருவவதாரம் /
கோவிந்த ராஜர் -பிரதிஷ்டை -பங்குனி உத்தரம் -சௌம்ய வருஷம் -1130-ஸ்வாமிக்கு -113-திரு நக்ஷத்ரம் -கத்தி தேவா அரசன் உதவியுடன் /

ஆக -கி பி -1017-பிங்கள வருஷம் திருவவதாரம் -சித்திரை சுக்ல பக்ஷம் பஞ்சமி வியாழக்கிழமை -திருவவதாரம்
-8-திரு நக்ஷத்ரம் உபநயனம் -/-16-திரு நக்ஷத்ரம் – திருக் கல்யாணம் /-25-வருஷம் திக் விஜயம் /-110-திரு நக்ஷத்ரம் ஸ்ரீ கோவிந்த ராஜர் பிரதிஷ்டை /
கிபி –1096-மேல் நாடு எழுந்து அருளும் பொழுது –79-திரு நக்ஷத்ரம் –1118-வரை -இருந்து /-22-வருஷங்கள் –
–1098-பஹுதான்ய வர்ஷம் -திரு நாராயணன் பிரதிஷ்டை /-81-திரு நக்ஷத்ரம்
-1117-ஹேவிளம்பி வருஷம் -பஞ்ச நாராயணர்கள் பிரதிஷ்டை -கேசவ நாராயணன் /கீர்த்தி நாராயணன் /வீர நாராயணன் /விஜய நாராயணன் /ஸ்ரீ லஷ்மி நாராயணன் -தொண்டனூர்
-1118-ஸ்ரீ ரெங்கம் திரும்புதல் /–101-திரு நக்ஷத்ரம்
–1130-ஸும்ய வருஷம் -திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜன் பிரதிஷ்டை –113-திரு நக்ஷத்ரம்
–1137-பிங்கள ஆண்டு மாசி மாசம் – திரு நாடு அலங்கரித்தல் –120-திரு நக்ஷத்ரம் –

தீர் லப்தா –தகாரம் -ஒன்பது / லகாரம் மூன்று / தகாரம் ஒன்பது -939-/ சக ஆண்டு -78-கூட்டி 1017-புத்தி ஏற்பட்டது –
தர்மோ நாஷ்டா -1137-/ தகாரம் ஒன்பது -மகாரம் ஐந்து -நகரம் -பூஜ்யம் /டகாரம் ஓன்று –9501-/ மாற்றி -1059 -78- கூட்டி 1137–

மகா காருணீகர் திரு குருகை காவல் அப்பன் திரு குமாரர் -திருக் குமாரர் -வரத விஷ்ணு நடாதூர் அம்மாள் -ஒரு மருமகன் –
மாசி சுக்ல பக்ஷம் தசமி சனிக்கிழமை -எம்பார் மடியில் திருமுடி வைத்து -வடுக நம்பி மடியில் திருவடி வைத்து –தன்னுடைச் சோதி எழுந்து அருளி
பசுபதி கோயில் -தஞ்சாவூர் ஐயம்பேட்டை -அருகில் பெரிய நம்பி ஆச்சார்யர் திருவடி அடைந்த தேசம் –

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராயாகி லாத்மநே
ஸ்ரீ மதே நிர்மலா அனந்த அதன்வதே விஷ்ணு வேதமே –ஸ்ரீ வேதாந்த சாரம் மங்கள ஸ்லோகம் –

ஸ்ரீய காந்த அனந்தோ வர குண கணை காஸ் பதவபு
ஹதா சேஷா வத்ய பரம கபதோ வாங்மனசயோ
அபூமிர் பூமிர்யோ தனஜனத்ருசாமதி புருஷோ
மனஸ்தத் பாதாப்ஜே பரிசரண சக்தும் பவதுமே –ஸ்ரீ வேதாந்த தீபம் மங்கள ஸ்லோகம்
—————-
ஸ்ரீ பாஷ்ய ரஸ அனுபவம் -ஸ்ரீ உ. வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் –

அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பக்தி ரூபாபன்ன ஞானம் -எம்பெருமான் பக்கல் ஸ்ரீ பாஷ்யகாரர் விரும்புவது மேல் எழுந்த பொருள் –ஐந்து விசேஷணங்கள்
சகல லோகங்களையும் படைத்து அளித்து துடைப்பத்தை லீலையாக கொண்டவன்
தன்னை வணங்கும் வெவ்வேறு வகைப்பட்ட பிராணி சமூகங்களுக்கும் முக்தி அளிக்கும் ரக்ஷணத்தை விரதமாக கொண்டவன்
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு —வேதாந்தங்களில் மிக விளங்கு அருளுபவன்
ஸ்வரூபத்தாலும் திருக் குணங்களாலும் மிக பெரியவன் -திரு மகள் கொழுநன் -இத்தகைய பரம புருஷன் மதி நலம் அருள வேண்டும் என்ற பிரார்த்தனை –

நம்மாழ்வார் பரமாக -மேல்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே-
ஆதி -காரண பூதனான எம்பருமான் உடன் லீலா ரசம் அனுபவிக்கிறார் ஆழ்வார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -/ விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை —
அன்றிக்கே -அகிலம் -எல்லாமே எம்பெருமானாக கொண்ட ஆழ்வார்
-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -இதுவே முக்கிய யோஜனை
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே-
மந்த்ர ரத்ன பிரகிரியையாலும் / அ நதிக்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கிற நியாயத்தாலும் -ரக்ஷண பாரத்தை திருவடிகளே வஹிக்கும்
திருவடிகள் தானே ஸ்ரீ சடாரி -ஸ்ரீ சடகோபன் -ஜெகதாம் அபி ரஷனே த்ராயணாம் அதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ–ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -ப்ரபாவ பத்ததி -42-
ஸ்ருதி சிரஸி விதீப்தே
உபநிஷத் -தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ர்வாம்சஸ் சமிந்ததே -என்று ஆழ்வாரை சொல்லுமே
விப்ராஸ -விப்ரா -நசூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா-என்கிறபடியே விப்ரத்வ சித்தி பெற்றவர் ஆழ்வார்
வினன்யவ-ஸ்துதி கர்த்தாக்கள் -தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வத் கவிஞ்ன்-பாவில் சிறந்த திருவாய்மொழி பகற் பண்டிதனே –
ஜாக்ர்வாம்சஸ் -கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -உறக்கம் அற்று இருப்பவர் தானே ஆழ்வார்
அன்றிக்கே
ஸ்ருதியாம் தீப்தே ஸ்ருதி சிரஸி விதீப்த-என்று கொண்டு ஸ்ருதி -திருவாய்மொழி -அதில் தீப்தர் -ஆழ்வார்
-பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் -என்று விளங்குபவர் அன்றோ
திருவாய்மொழி முடிவில் அனுசந்திப்பதால் ஸ்ருதி சிரஸி–அதிலே விசேஷண தீப்தர் ஆழ்வார்
ப்ரஹ்மணி-
ஸர்வத்ர பிருஹத்த்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த -புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழியே புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
எம்பெருமான் ப்ரஹ்மம் -ஆழ்வார் பர ப்ரஹ்மம் என்பதையே பரஸ்மின் ப்ரஹ்மணி -என்கிறார் இங்கும் –
ஸ்ரீ நிவாஸே -பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
சது நாகவர ஸ்ரீ மான் / அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் / லஷ்மனோ லஷ்மி சம்பன்ன /
-கைங்கர்ய ஸ்ரீ ஆழ்ந்த ஆழ்வார் இடமே கைங்கர்ய சரியை பிரார்த்தித்து பெறுவோம் –
——————————–
ஜீவாத்வைதம்
ஸ்வ ஞானம் ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷூபி-ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நியம் நகிஞ்சன –
தஸ்ய ஆத்ம பரதேஹேஷூ சதோபி ஏகமயம் யத் விஞ்ஞானம் பரமார்த்தோஸு த்வைதிந அதத்ய தர்சின-
ஜடாபாரதர் ஆத்ம பரதேஹேஷூ -என்று ஒறுமையிலும்
இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபி தீயதே -ஏதத் ய வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ இதி தத்வித –
ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் வித்தி சர்வ க்ஷேத்ரேஷூ பாரத –ஸ்ரீ கீதை -13-1 /2-
சர்வ க்ஷேத்ரேஷூ -பன்மை -ஷேத்ரஞ்ஞன் -ஒருமை
நத்வேவாஹம் ஜாதி நாசம் நத்வம் நேமே ஜநாதிப-2–12-என்று
அஹம் த்வம் இமே -பிரித்து பல ஆத்மாக்களாக சொல்லி
ஒன்றே என்ற தெளிந்த அறிவு -இரண்டாக அறிபவர் பேத ஞானம் உள்ளவர்கள்
ஐததாத்ம்யம் இதம் சர்வம் ச ஆத்மா தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ
த்வைத சித்தாந்திகள் -அதைவ மஸி ஸ்வேதகேதோ என்று பிரித்து ஆத்ம பரமாத்மா பேதத்தை நிர்வஹிப்பர்
சரீரம் க்ஷேத்ரம் -ஜீவன் ஷேத்ரஞ்ஞன் -ஈஸ்வரன் -மாம் –சாமாநாதி கரணமாக பேசி விசிஷ்டாத்வைதம்
தர்சனம் பேத ஏவ ச -தேவ பெருமாள் –
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் தம் ஆத்மஸ்தம் யே அநு பஸ்யந்தி தீரா தேஷாம் சாந்தி ஸாஸ்வதீ நேத்ரேஷாம்-ஸ்ருதி
நித்யாநாம்– சேதநாநாம் -பஹு நாம் -பன்மையில் ஜீவாத்மாக்களை சொல்லி நித்ய சேதன ஏக -என்று பரமாத்மாவை சொல்லிற்று
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -மம சாதரம்யம் ஆகதா -ஐக்கியம் பேச வில்லை –
ஜீவர்கள் நித்யர்கள் -அணுக்கள் -ஞான ஸ்வரூபங்கள் -ஞான குணாக்கர்கள் -பகவத் சேஷ பூதர்கள் —
இப்படி வேற்றுமை அற்று இருத்தல் பற்றி ஜீவாத்வைதம் -பிரகாரத்வைதம் -பிரகாரானே அத்வைதம் -பிரகாரத்வைதம் -பிரகாரங்களால் வந்த ஒற்றுமை -என்றவாறு –
—————————————
இருளை போக்கும் ஆதித்யன் —
அஞ்ஞானத்தை அனுஷ்டானத்தால் போக்கும் ராம திவாகரன்
உபதேசத்தால் ஆந்தரமான அந்தகாரத்தை போக்கிய அச்யுத பானு
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -வகுள பூஷண பாஸ்கரர்
லோக திவாகரர் கலியன்
பாப த்வான் தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் ராமானுஜ திவாகர –
சாஷாத் ஆதி சேஷ அம்ச புத்தர் -நம் ராமானுஜன் -சேஷ ராமானுஜன் –
தஸ்மை ராமாநுஜார்யாய நம பரம யோகிநே -ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் ஆஸீஸமத் –
-தன் மத அநு சாரேண-பூர்வர்கள் திரு உள்ளபடியே வியாக்யானம்
சேமுஷீ பக்தி ரூபம் -மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –
தத்வம் ஏகோ ஹரி நாராயண பர -த்யேயோ நாராயண சதா -சர்வ ஸ்ருதிஷூ அநு கதம்
ஞான -தர்சன -ப்ராப்திகளுக்கு –பக்தி உபாயம் -சாஸ்திர சித்தம் –
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே –என்று -தமேவ விதித்வா-என்றும் உபநிஷத்துக்களில் சொல்லப் பட்ட ஞானத்துக்கும்
பக்த்யாது அநந்யயா சக்யா –என்று ஸ்ரீ கீதையில் சொல்லிய பக்திக்கும் சாமஞ்ஞஸ்தையைக் காட்டும் வகையில் ஸ்வாமி வியாக்யானம் –

-545-ஸூ த்ரங்கள் / சங்கரர் -555-/ மாதவர் –564-
ந இஹ நாநாஸ்தி கிஞ்சன / ம்ருத்யோஸ் சம்ருத்யுமாப் நோதி ய இஹ நா நேவ பஸ்யதி
ஸத்கார்ய வாதம் -தத் அந்நயத்வம் –ஸ்வம் இல்லாமல் ஸ்வாமி கிடையாதே -ப்ரஹ்மம் காரணம் / சித்துக்களும் அசித்துக்களும் கார்யம்
-ஸ்வரூப அந்யதா பாவம் அசித்துக்களுக்கும் / ஸ்வ பாவ அந்யதா பாவம் சித்துக்களும்
ஸ்வாமி -ஆதாரம் -நியந்தா -அசேஷமும் சேஷமாய் கொண்ட சேஷி -பிரகாரி -சரீரி -நீ -உன்னை தவிர வேறு ஒருவரும் இல்லையே
ஸ்வ சஜாதீய த்வதீய ராஹித்யம் உள்ளதாய் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணமாய் -ஸ்வ தந்திரனாய் -விசேஷயமாய்-பிரகாரியாய்
-சகல சேதன அசேதனத்தையும் தனக்கு பிரகாரமாகக் கொண்டுள்ளவன் பரமாத்மா –
தண்ட குண்டலங்கள் போல் அன்றிக்கே வஸ்த்ரத்தின் வெண்மை போலே பிரிக்க முடியாத -பிரகார பிரகாரி பாவம்
குருகூர் அதனுள் பரன் திறம் அன்றி மற்று இல்லை -இது தான் பிரகார்யத்வைதம் –ப்ரஹ்மாத்வைதம் –
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு -திரு மழிசை ஆழ்வார் என்றும்
வேணுர் அந்தர விபேதேந பேத -என்றும் -ஷட் ஜாதி சம்ஜித-த்வைதிந அதத்ய தர்சின –என்றும் ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகங்கள் –
வேணுவின் த்வாரங்கள் வழியே ஒரே காற்று -ஆறுவிதம் –
பகவத் சேஷத்வம் -ஏக ஆகாரம் -வைசிஷ்ட்யம் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநீ ஸூநிசைவ ஸ்வ பாகேச பண்டிதா சம தர்சின –ஸ்ரீ கீதையும் இதையே சொல்லும் –
இப்படி ஜீவாத்வைதம் ஆகிற ப்ரகாரத்வைத விஷயமாய் -எம்பெருமானார் -பூர்வாச்சார்யர்கள் திரு உள்ளக் கருத்து –
———————
ஸ்ரீ கீதா சாரம் – ஸ்ரீ உ வே -வேளுக்குடி ஸ்வாமிகள் –
சர்வ உபநிஷதோ -காவோ தோக்தா கோபால நந்தன –பார்த்தோ வத்சோ சுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் –ஸ்ரீ கீதை
-ஏகம் சாஸ்திரம் தேவகி புத்ர கீதம் -தத்வ உபதேசம் –
மத்த பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய –தானே மேலான தத்வம் பரம் பொருள் –
ஸ்வ தர்ம ஞான வைராக்ய ஸாத்ய பக்தி ஏக கோசர நாராயண பர ப்ரஹ்ம கீதா சாஸ்திர சமீரித -ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்த
ஸ்ரீ மன் நாராயணனே கீதையில் வர்ணிக்கப் பட்ட பரம் பொருள் –
வேதன உபாசன சேவா த்யா நாதிகள் என்று சொல்லுமது ஸாத்ய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம் –சாதன பக்தி பரமாக ஸ்ரீ கீதா சாஸ்திரமும்
சரம ஸ்லோகம் ஸ்வ தந்திரமான பிரபத்தியே -அங்க பிரபத்தி இல்லை என்பதை கத்ய த்ரயத்திலும் வெளியிட்டு அருளினார் எம்பெருமானார்
கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் -என்று கொண்டாடுகிறோம் –
தாத்பர்ய சந்திரிகையில் ஸ்ரீ தேசிகனும் -யதி பரிப்ருடோ யத்கீதா நாமதர்சய தஞ்சஸா -நிகம் பரிஷன் நேதீயாம் சம் நிரா மயமாசயம் –
ஜனன பதவீ யாதாயாத ஸ்ரமாபஹாரம்தியம் -ஜநயது சமே தேவ -ஸ்ரீ மான் தனஞ்சய சாரதி –ஆழ்வார் -ஸ்ரீ மன் நாத முனிகள்
உபதேச பரம்பரையா வந்த செம்மை பொருள்கள் அன்றோ –
-18-நாள் போர் -18-அத்தியாயங்கள் -அவாப்த ஸமஸ்த காமனும் ஆச்சார்ய பாதத்தை ஆசைப் படுகிறான் –
முதல் ஷட்கம் -கர்ம காண்டம் /நடுவில் -உபாசன ஷட்கம் /கடைசி ஞான ஷட்கம் /-என்பர் சிலர்
ஆனால் முதல் ஷட்கத்திலே ஞான உபதேசம் உண்டே -உபாசன ரூபமான ஞானமே உயர்ந்தது என்பதே நம் சித்தாந்தம் –
பூர்வ சேஷ அந்திமோதிதர -என்பர் சங்க்ரஹத்தில்
கட உபநிஷத்தில் -3-வல்லியோடே கூடிய முதல் அத்தியாயத்தில் சித்த அசித் ஈஸ்வர தத்வ த்ரய விவேகத்தை செய்து கர்ம ஞானங்களை அங்கமாக கொண்ட
உபாசன ரூப பக்தி யோகத்தை மோக்ஷத்துக்கு சாதனமாக உபதேசித்து -இரண்டாம் அத்தியாயத்தில் கீழ் சொன்ன அர்த்தங்களை விளக்கினால் போலே இங்கும்
கீழ் இரண்டு ஷடகங்களில் சொன்ன அர்த்தங்களை விளக்கி அவைகளுக்கு உபயுக்தமான வற்றையும் காட்டா நின்றது
அந்திம ஷட்கம் என்பதே பரமாச்சாரியார் திரு உள்ளம் -அந்த கட்டளையிலே ஸ்ரீ கீதா பாஷ்ய நிர்ணயம் –

1-அர்ஜுனன் விஷாத யோகம் -கண்ணன் யோகங்களை உபதேசிக்க காரணமே இது தானே -துரியோதனன் சோகத்துக்கு அர்ஜுனன் சோகத்துக்கு வாசி உண்டே –
அபர்யாப்த்தம்-ஸ்லோகத்துக்கு-ஸ்ரீ பாஷ்யம் –துர்யோதன-ஸ்வயம் ஏவ பீமாபி ரஷிதம் பாண்டவஞ் நாம் பலம் ஆத்மீயம் ச பீஷ்மா
பிரஷிதம் பலம் அபீவீஷ்ய ஆத்ம விஜயே தஸ்ய பலஸ்ய பர்யாப்த்ததாம் ஆசார்யாய நிவேத்யாந்தர் விஷன்னோபவத் –
ஆசூரத் தன்மை யால் வந்த சோகம் துரியோதனனுக்கு / தெய்வத் தன்மையால் வந்த சோகம் அர்ஜுனனுக்கு –
தெய்வ சம்பத்தை உடையவனாய் -போகங்களில் விரக்தி உடைய முமுஷு தானே ஆத்ம ஞான உபதேச பாத்திரம் ஆவான்
கீதா உபதேசம் பெற அதிகார பூர்த்தி முதல் அத்தியாயத்தில் சொல்லப் பட்டது -என்றவாறு –
2–நத்வேவாஹம் ஜாது நாசம் -சர்வேஸ்வரன் கிருஷ்ணன் நான் -நீ -இவர்கள் -ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதத்தையும் -ஜீவ பர பேதத்தையும் குறித்து –
தர்சனம் பேத ஏவ ச -என்பதையே மெய் மதிக் கடல் -பர மதத்தைத்தை நிரசித்து ஸச் சம்ப்ரதாயம் -அருளிச் செய்கிறார் –
3–ஞான யோகத்துக்கு அதிகாரிகளானாலும் சிஷ்டர் உலக நன்மைக்காக கர்மா யோகம் அனுஷ்ட்டிக்க வேண்டும் –சயத பிரமாணம் குருதே லோகஸ் தத் அநுவர்த்ததே –
மேலையார் செய்வனகள் வேண்டுவன -நாச்சியார் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே பொருள் பணித்தார்
4–உள்ளுவார் உளுத்து உடன் இருந்து அறிபவன் ஆகையால் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் -தானே கல்ப ஆதியில் சூரியனுக்கு உபதேசித்ததையும்
திரு வவதார ரகசியத்தையும் -காலம் -காரணம் -பிரயோஜனம் -திவ்யம் -இச்சையால் அவதரிப்பதையும் அருளிச் செய்கிறான்
-அவதார ரகஸ்யம் உள்ளபடி அறிந்தவனுக்கு மறு பிறவி இல்லை -அவன் என்னையே அடைகிறான்
-பிறப்பிலியான நான் பிறந்த பின்பு இவர்களும் பிறக்க வேண்டுமோ -என்கிறான் –
5–அத்தியாயத்தில் கர்மா யோகமே ஞான யோகத்தை விட சீக்கிரம் ஆத்ம சாஷாத்காரம் யோகம் உண்டாக்கும் என்று சிறப்பை அருளிச் செய்கிறான்
6–யோக ப்ரஷ்டனுக்கும் நல் கதி நாளடைவில் உண்டு -என்று சொல்லி -யோகம் அனுஷ்ட்டிக்கும் க்ரமத்தையும் உபதேசித்து
-கடைசியில் கைவல்ய ஞான யோகியை காட்டிலும் தன்னை அடைய வேண்டிய பக்தியை செய்யும் ஞான யோகியே சிறந்தவன் —
பக்தனைக் காட்டிலும் கேவல ஞானி சிறந்தவன் என்று மதிக்கும் மதம் கண்ணன் திரு உள்ளத்துக்கு மாறு படும் என்றவாறு
முதல் ஷடகத்தில் கர்மா ஞான யோகங்களை பரக்க உபதேசித்து அருளுகிறார் –
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தான யஞ்ஞாதி சேவனம்–ஞான யோகோ ஜிதஸ் வாந்தை பரிசுத்தாத்மனி ஸ்திதி
-பக்தி யோக பரை காந்த்ய ப்ரீத்யா த்யாநாதி ஷூ ஸ்திதி –என்று மூன்று யோகங்களின் ஸ்வரூபத்தையும் அருளிச் செய்கிறார் –
நடு ஷட்கம் சாரமானது –
7–தன்னிடம் பெற்று செல்லும் மூன்று வகை அதிகாரிகளும் உதாரண -என்றும் ஞானி தன் ஆத்மா -மம மதம் என்றும் அருளிச் செய்கிறான் –
ஞானிகள் தன்னை விட்டு க்ஷணம் காலமும் பிரியாமல் இருக்குமா போலே தானும் பிரிய மாட்டாமல் -அதனால் தாரகன் -ஆத்மா என்கிறான் –
ஞானி -பகவத் சேஷனாதக ரஸ ஆத்ம ஸ்வரூப வித் -கேவல அதிகாரி பகவத் சம்பந்தத்தை சாணிச் சாரோபாதி சுத்திக்காக நினைக்கிறான் –
வாஸூதேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப
8–கீழ் சொன்ன மூன்று அதிகாரிகளும் -உபாசிக்கும் பிரகாரங்களை -அந்திம ஸ்ம்ருதியையும் -ஐஸ்வர்யார்த்திக்கு புனராவ்ருத்தியையும்
-கைவல்யார்த்திக்கு புணராவ்ருத்தி இல்லை என்னும் இடத்தையும் அருளிச் செய்கிறான்
9–மன்மனா பவ மத பக்த -ஸ்லோகத்தால் பூர்ண பக்தி யோகம் -உபதேசம் -மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவம்
-மனுஷ்யத்தவே பரத்வம் -திண்ணன் வீடு திருவாயமொழிக்கி இதுவே மூலம்
பஜனத்வத்தை ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -/ பத்ரம் புஷ்டம் -ஸ்வ ஆராத் யத்தை யும் / சமுகம் சர்வ பூதேஷூ -சமத்துவ நிலையும் காட்டி அருளுகிறார்
10–திருக் குணங்களை அனுசந்திக்க பக்தி உண்டாகும் என்றும் விபூதியை பரக்க அனுசந்திக்க பக்தி வெள்ளம் பெருகும் என்றும் கூறப்படுகிறது
11–திவ்ய சஷூ ஸையும் அருளி விஸ்வரூபமும் காட்டி அருளுகிறார் -பக்தியினாலேயே -உள்ளபடி -அறிந்து -கண்டு -அடைய -முடியும் -ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள்
சாதனமாக சொன்ன ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே -பக்தி சம்பிரதாயத்துக்கு வளி காட்டி அருளுகிறார்
-12-அதிகாரிகள் தங்கள் சக்திக்கு அனுகுணமாக உபாயங்களை பற்றும் படிகளை கூறி அருளுகிறார் –
13–க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞம் -வாசி காட்டி அருளி -சரீராத்மா பாவம் -விசிஷ்டாத்வைத அசாதாரணம் என்று காட்டி அருளுகிறார்
14–முக்குண சம்பந்தமே சம்சார ஹேது -பந்தம் தொலைய பக்தியே சிறந்த சாதனம் –
15–ஷர -பத்தன் -அக்ஷர-முக்தன் -புருஷோத்தமன் இதர ஸமஸ்த விலக்ஷணன்
16–தேவாசுர பேதம் -காம க்ரோதாதிகளை விட்டு ஆஸ்திகனாய் சாஸ்திர விதிப்படி நடக்க வேண்டும்
17–சாஸ்திரீய கர்தவ்யங்களில் சிரத்தை வேண்டும்
18–ரஜஸ் தமஸ் இரண்டையும் கழித்து சத்வத்தில் ஒன்றி -அவன் இடம் தஞ்சமாக பற்றி சரம ஸ்லோகார்த்தம் படியே
-சம்சார பந்த நிவ்ருத்தியையும் பரமபதத்தையும் பெறலாம் பக்தி நெறியை காட்டி அருளுகிறார் –
——————————————
ஸ்ரீ சரணாகதி கத்யம் -ப்ருது கத்யம் -பெரிய கத்யம் / ஸ்ரீ ரெங்க கத்யம் -மித கத்யம் -சின்ன கத்யம் / ஸ்ரீ வைகுண்ட கத்யம்
பெரிய கத்யம்-சாமான்ய பகவத் விஷயத்தில் -ஸ்வ பிரார்த்தனை / ஸ்ரீ ரெங்க கத்யம் பெரிய பெருமாள் விஷயமாக -ஸ்வ பிரார்த்தனை /
ஸ்ரீ வைகுண்ட கத்யம் பிறருக்கு கர்தவ்ய உபதேசம்
அஸ்துதே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே –ஸ்வ சம்பந்தி சம்பந்தி திஸ்தரணம் அபி சர்வ சப்த அபிப்ரேதம்
———————————–
வைஷ்ணவன் / ஏகாந்தி / பரமை காந்தி /–ஸ்ரீ உ . வே . திருமலை நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்-
வைஷ்ணவன் -உபாயம் வேறு பலன் வேறு -என்று கொண்டு ஸ்ரீ மன் நாராயணனை உபாசிப்பவன்
யஸ்து உபாயதயா நித்ய நைமித்தி காதிகம் -ஸத்க்ரு த்யம் குருதே விஷ்ணு வைஷ்ணவஸ் ச உதாஹ்ருத/
ஏகாந்தி -பகவானே உபாயமும் பலனும் -நித்ய நைமித்திக கர்மாக்கள் அவன் முக மலர்த்திக்காக -கைங்கர்ய ரூபேண
-பகவத் ஆராதன ரூபமாய் -வகுத்த கைங்கர்யம் என்று எண்ணி செய்யும் வைஷ்ண உத்தமன்
விஷ்ணோர் ஆஞ்ஞா தயா யஸ்து ஸத்க்ருத்யம் குருதே புத -ஏகாந்தீதி சமுநிபி ப்ரோஸ்யதே வைஷ்ணவ உத்தம –
பரமை காந்தி -ஏகாந்தியிலும் மேம் பட்டவன் -ஏக அந்தம் -பகவானே உபாயம் உபேயம் என்று இருப்பவன் போலே அன்று
-போக ரூபமாக பகவத் ஆஞ்ஞா ரூபமான கைங்கர்யம் பண்ணாமல் தரித்து இருக்க மாட்டாதவன்
யஸ்து போகதயா விஷ்ணோ ஸத்க்ருத்யம் குருதே சதா ச ஏவ பிரமை காந்தீ மஹா பாகவதோத்தம —
பகவான் பரம போக்யம் போலே கைங்கர்யமும் பரம போக்கியம்
இத்தகைய பரமைகாந்திக்காக நித்ய கிரந்தம் சாதித்து அருளுகிறார் ஸ்வாமி
அத பரமை காந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஹ்யே –முதல் வாக்கியம்
அத -கத்யத்தில் பிரபத்தி அனுஷ்டானம் பர்யந்தம் உபபாதித்த பின்பு –
அபிகமனம் -உபாதானம் –இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -ஐந்து வித கைங்கர்யம் -பஞ்சகால பராயணா
ஸ்நாணம் நித்ய நைமித்திக கர்மாக்கள் -அபிகமனம்
தீர்த்தம் கந்தம் புஷ்ப்பம் பூஜாத்ரவ்யங்கள் சுத்தீகரித்தல் உபாதானம்
இஜ் யை -திருவாராதனம் -பிரதானம்
ஸ்வாத்யாயம் -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா யாவச்சரீர பாதம் அதிரைவ ஸ்ரீ ரெங்க ஸூ கம் ஆஸ்வ-என்கிறபடி
த்வய அனுசந்தான ரூபமான சாஸ்திரங்கள் -அருளிச் செயல்கள் -வேதாந்த விசாரம் -பகவத் விஷய விசாரம் -கற்றல் கற்பித்தல்
யோகம் -மனசை ஒருமை படுத்தி பகவத் த்யானம் -ஏவம் சரணம் தமேவ பகவந்தம் த்யாயன் ஆஸீத
எம்பெருமானே தனக்கு சேஷ பூதனான அடியேனை கொண்டு தனக்கு ப்ரீதி விளைவிக்கும் கார்யங்களை செய்வித்துக் கொள்கிறான் -என்ற சாத்விக தியாக எண்ணம் வேண்டும்
மூல மந்த்ரம் திருமந்திரம் -பகவத் த்யானம் -சஹஸ்ரோல்காய ஸ்வாஹா வீர்யாய அஸ்திராய பட்-அஸ்திர மந்த்ரம் -கங்கையாக பாவித்து ஸ்நானம்
சரணாகதி ப்ரகாராச்ச பூர்வ யுக்த / பகவந்தம் அஷ்டாங்கேன ப்ரணாமேன ப்ரணம்ய சரணம் உபகச்சேத்/
அனுபவ ஜனித்த அதி மாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத –
ஸ்ருதி ஸூ கை ஸ்தோத்ரை ஸ்துத்வா -என்று அருளிச் செயல் அனுசந்தானம் நியமிக்கிறார்
அநு யாகம் -பகவத் ஆராதனம் முடித்து அதிதி ஸத்காரத்துடன் பிரசாதம் சுவீகரித்து -இதுவும் பகவத் ஆராதனத்தில் சேரும்
————————————————————-
எதிகட்கு இறைவனும் எதிராசனும் –ஸ்ரீ உ வே ராமானுஜம் ஸ்வாமிகள்-
யத் பதாம் போருஹ த்யானம் வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமு நேயம் நமாமிதம் —
பரம் ப்ரஹ்மை வாஞ்ஜம் ப்ரமபரிகதம் சம்சாதிதத்
பர உபாத்யா லீடம் விவசம சுபமஸ்யாஸ் பதமிதி
ஸ்ருதி நியாய பேதம் ஜகதி விதிதம் மோஹநமிதம்
தமோயேநாபஸ்தம் சஹி விஜயதே யமுன முனி –ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த சங்க்ரஹ முதலில் ஸ்ரீ ஆளவந்தாரை
மாயாவாத புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடா மணி -நம் இராமானுஜர் அடி பணிந்து அருளிச் செய்த ஸ்லோகங்கள் –

ஸ்ரீ வைகுண்ட கத்ய ஆரம்பத்திலும் -யாமு நார்ய ஸூ தாம் போதி ஆவகாஹ்ய யதா மதி -ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்சயாம் யஹம் -என்று
பக்தி யோகம் -பிரபத்தியையே ஆளவந்தார் அனுக்ரஹத்தால் தாம் பிரகாசப் படுத்துவதாக அருளிச் செய்கிறார் –
தத் பாதாம் புஜ த்வய பிரபத்தே அந்யத் நமே சாதனமஸ்தி-என்று இந்த கத்யத்தில் அருளிச் செய்கிறார் –

ஆ முதல்வன் இவன் -என்று கடாக்ஷித்து அருளினார்
ஒரு நாளாகிலும் கூடி இருந்தேன் ஆகில் பரம பதத்துக்கு சுருளும் படியும் கட்டி இருப்பேன் -என்று அருளிச் செய்யும் படி அன்றோ கடாக்ஷ வீக்ஷணம்
வியாசர் -போதாயனர் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -திரு உள்ளக் கருத்துக்கள் படியே -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் நிலை நாட்டி அருளுகிறார்
புருஷ நிர்ணயம் / சதுஸ்லோகி /ஸ்தோத்ர ரத்னம் /கீதார்த்த சங்க்ரஹம் /ஆகம ப்ரமாண்யம் /
சித்தி த்ரயம் –ஆத்ம சித்தி -ஈஸ்வர சித்தி – சம்வித் சித்தி -என்ற மூன்று பிரிவுகள் /
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்தாயதிச்சா மநுவிதத நித்யம் நித்ர சித்தைர நேகை
ஸ்வ பரி சரண போகை-ஸ்ரீ மதி ப்ரீயமானே பவது மம பரஸ்மின் பூருஷே பக்தி பூமா –மங்கள ஸ்லோகம் –ஆகம சித்தி –
பாமாத்மா ஸ்வரூபம் -இத்தை பின் பற்றியே -அகில புவன -ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகம் –பக்தியை பிரார்த்திக்கிறார் –
தேஹ இந்திரிய மன பிராண தீப்ய அந்யோ அநந்ய சாதன
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரமாத்மா பின்ன ஸ்வதஸ் ஸூகீ –ஆத்ம பற்றி சித்தாந்தம்
ஏக பிரதான புருஷம் விவாதாத்யா சிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதேசவத் –ஈஸ்வர சித்தி முடிவில் -ஸ்ரீ மன் நாராயண ஏக ராஜர் ரக்ஷணத்தில் அனைவரும் என்றபடி
சம்வித் சித்தியில் -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் நிலை நாட்டி அருளுகிறார் –
தத்வ த்ரயம் -ஞானம் -ஞாதா -ஜேயம்-மூன்றும் உண்டு / பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே -/ அத்விதீயன் /
இவருடைய ஆத்ம சித்தி சம்வித் சித்தி ஸ்ரீ ஸூ கைதிகளையும் ஸ்ரீ தேவ பெருமாள் அருளையும் கொண்டே
-யஞ்ஞ மூர்த்தியை அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கி அருளினார் -சித்தி த்ரயமே ஸ்ரீ பாஷ்யத்துக்கு வித்து
ஸ்தோத்ர ரத்னம் -65-ஸ்லோகங்கள் மந்த்ர ரத்ன வியாக்யானமாகவே அமைந்துள்ளது -சதாச்சார்ய சம்பந்தம் கொண்டே
அடியேனை அங்கீ கரித்து அருள வேண்டும் என்றே இவர் பிரார்த்தனை
வேதமும் -காரணந்து த்யேய-என்று உபதேசித்து -தம் தேவம் முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்று வேத புருஷனின் அனுஷ்டானம் மூலம் காட்டித் தந்து
நியாஸ இதி ப்ரஹ்மா -என்றும் -தஸ்மாத் ந்யாஸமேஷாம் தபாஸாம் அதிரிக்த மாஹு -என்று பிரபத்தியின் மேன்மையை நிஷ்கரிஷித்து உள்ளதே –
கதா ப்ரகர்ஷயிஷ்யாமி–தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே போலே -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு பேறு அன்றோ
இத்தைக் கொண்டே -ஸ்ரீ பாஷ்யம் கடைசியில் -நச பரம புருஷ -சத்ய சங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞானிநாம் லப்தவா
கதாசிதாவர்தயிஷ்யதி -கை விடான் அன்றோ என்று அருளிச் செய்கிறார் –
மாமேகம் பரம காருணிகம் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யம் ஆச்ரித வாத்சல்ய ஜலதிம் சரணம் பிரபத்யஸ்வ -என்று சரம சுலோகத்துக்கு ஸ்வாமி
சர்வலோக சரண்யாய ராகவாய -என்றும் -காகுத்ஸா க்ருபயா பர்ய பாலயத் -என்றும் -தர்மஞ்ஞா சரணாகத வத்சலா-என்றும் —
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே இந்த ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்லோகம் –
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா ஸாஸ்த்ரீ சமீரித –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -32-ஸ்லோகங்களை கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஈச்வரே கர்த்ருத்வ புத்தி சத்வோபாதே யந்தி மே
சர்வ கர்மா பரிணாமச்ச சாஸ்திர சாரார்த்த உச்யதே –18-அத்யாய சார ஸ்லோகம் –
பிரபன்னர்களுக்கு பக்தி தேஹ யாத்ரா விசேஷம் -வாஸூ தேவஸ் சர்வம் –எல்லாம் கண்ணன் என்று இருப்பவர் –
————————–
மாறன் அடி பணிந்து உய்ந்தவரும் மாறனும் -ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்-
1-துயர் அறு சுடர் அடி -அவன் துயரையே அறுக்கும்/
2-அறியாக் காலத்துள்ளே அடிமைக்கு கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல் -பிரகரணத்துக்கு அனுகுணமாக உபகார ஸ்ம்ருதியுடனே
அறியா மா மாயத்தை –அடியேனை -அறியாக் காலத்து அடிமைக்கு கண் அன்பு செய்வித்து -வைத்தாயேல் -ப்ரீதியுடனே -அருளிச் செய்கிறார்
3-விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை -2–7–5—கீழே எம்பெருமான் ஆழ்வாரை தனக்கு ஆக்கின படி சொல்லி –
இப்பாட்டில் தனக்கு ஆக்கின எம்பெருமானுடைய அவயவங்கள் உடைய அழகை ஆழ்வார் வர்ணிக்கிறார் -என்ன –
உடையவர் இப்பாட்டால் தன் அவயவ ஸுந்தர்யத்தாலே என்னைத் தனக்கு ஆக்கினான் -என்று அருளிச் செய்கிறார் –
4–முந்நீர் ஞாலம் எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவானே – -3–2–1-நிராசை யுடன் பேசுவதாக சொல்ல
நான் கிட்டும் நாளை – அடியேன் தரிக்கும் படி -அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
5—எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் -2-9-8-ஒரு நொடி போதாகிலும் –
அனுபவிக்க பார்ப்பதாக திருமாலை ஆண்டான்
ஆழ்வார் பிரக்ருதிக்குச் சேர -பகவத் விஷயத்தில் சிறுக கோலா மாட்டாரே -சேஷி சேஷ முறை தப்பாமல் என் ஹிருதயத்தில் புகப் பெற்றால்
-இப்படிக்கு கலக்கும் இக்காலம் எல்லா வற்றிலும் -இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் -என்று
மாறன் அடி பணிந்து உய்ந்தவர்க்கு அன்றோ மாயன் திரு உள்ளம் தெரியும் –
6–அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான்- இது வல்லால் – பொருள் தான் எனில் மூ உலகும்
பொருள் அல்ல மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே – -8–7–3–இங்கு -இது -நாட்டார் தலையாக மதிக்கும் ஐஸ்வர்யம் -என்ன
-வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பை –சேதன லாபம் ஈஸ்வரனுக்கு பேறு -என்பதையே எம்பெருமானார் காட்டி அருளுகிறார் –
7—அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -10- 6-1-என்பதற்கு
நம்முடைய பாக்ய அனுகுணம் -என்ன -ஆஸ்ரித பரதந்த்ரம் -இவர் நியமன பிரகாரம் கார்யம் செய்வானாய் -அவன் பிரணயித்வம் -காட்டுகிறான்
இதையே ந ச பரம புருஷ அத்யர்த்த பிரியம் ஞானிநம் லப்த்வா கதாசித் ஆவிர்த்தயிஷ்யதி -ஸ்ரீ பாஷ்யம் இதை திரு உள்ளம் கொண்டே –
8–தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா வென்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் –5–1–9-இதற்கு
திவ்ய ஆயுதங்கள் உடன் பொருந்தினால் போலே என்னுடன் பொருந்தும் படி கலந்தான் -என்ன
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6–9–1-என்று ஆசைப்பட்ட படி வந்து கலந்தான் -சேஷித்வம் குறையாமல்
அந்த ரூபத்தோடு சொத்தான அடியேனோடும் ஆனான் –என்றார் –
9—வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் –5–10–4-என்பதற்கு -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்
-மத்யே விரிஞ்ச கிரிசம் விஷ்ணு பிரதம அவதாரம் -எளிமை தோற்ற -நின்ற -வஞ்சகம் -களவு என்றபடி
புரம் புக்கவாறும்-என்று முதல் அடியிலே திரிபுரம் அழித்த சரித்திரம் பேசுவதால் -கங்கை தரித்தது -பெருமானுடைய உத்க்ருஷ்டம் பேசும்
-அவன் ருத்ரனுக்கு அந்தராத்மாவாகவும் -வில் -பாணம்-இவற்றுக்கும் அந்தராத்மாவாகவும் -திரிபுர சம்ஹாரம் இவன் செய்தான் என்ற
புகழ் வரும்படி அருளினான் -இந்த சரித்திரம் ஆழ்வார் திரு உள்ளத்தில் ஓடுவதை சொல்வதே பிரகரணத்துக்கு சேரும் –
10–பொலிக பொலிக –நித்ய சூரிகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண வர -அவர்களுக்கு மங்களா சாசனம் -என்ன
ஆதிப்பிரானுடைய பரத்வத்தை பேசி -மற்றது தெய்வம் நாடுதிரே -என்று கீழே சொல்லி
இந்த உலகும் விண்ணாடும் வாசி இல்லாமல் அவர்களும் இங்கே வரலாம் படி இருக்கும் இருப்புக்கு மங்களா சாசனம்
-ஆழ்வார் உபதேசம் கார்யகரமாயிற்று -என்பதை எடுத்துச் சொல்வதில் நோக்கு –
11–என்றைக்கும் என்னை –இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ -7-9–1-
அர்ஜுனன் தலையில் விஜயத்தை ஏறிட்டால் போலே சர்வேஸ்வரன் அவ லீலையாக பாடி முடித்தான் –
எம்பெருமானார் இதை மேலும் பரிஷ்கரித்து -இவர் தாம் சொன்னார் ஆகிலும் ஒரு படி போகச் சொல்லித் தலைக் காட்டுவர்
-அவனும் தானே சொன்னான் ஆகில் நிரவத்யமாகத் தலைக் கட்டும் –
சிறு பிரஜை எழுத்து இடப் புக்கால் தானே ஏதேனும் ஒரு படி இட்டுத் தலைக் கட்டும் -பிதாவாதல் -உபாத்யாயன் ஆதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும் —
அங்கண் இன்றிக்கே இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே-இவன் ஓர் இடத்தே இழுக்க குதறிக் கொட்டியாய் ரூபம் அழிந்து சிதறிப் போம் –
அப்படியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும் எந்நாள் வரும் தோஷம் தன் பக்கல் ஸ்பர்சியாத படி பாடுவித்தான் -என்று
இந்த உபகாரத்தை நினைத்து தரிக்க முடியவில்லை -தரித்து நின்று சொல்லவும் முடியவில்லை –
12–கிளர் ஒளி இளமை –திருமலையை ஆச்ரயிக்கிறார் -அழகரை ஆச்ரயிக்காமல் திருமலையை ஆஸ்ரயிப்பான் என் -எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம்
பெறுகைக்கு திருமலையை ஆஸ்ரயிக்கிறார்-திருமாலை ஆண்டான் பணிக்க -எம்பெருமானார் -இவர் பாட்டுத் தோறும் -ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று
த்வரிக்கப் புக்க வாறே -இவருக்கு நாம் நினைத்த படி பரிமாறுகைக்கு ஏகாந்த தேசம் ஏதோ -என்று ஞாலத்தூடே நடந்து உழக்கிப் பார்த்து வரச் செய்தே –
இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாக இருந்தது என்று திருமலையில் சந்நிதி பண்ணி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நின்றோம் –
நீர் இங்கே வந்து நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க -இவரும் அத்தை அனுசந்தித்து
பகவான் பிராப்யம் ஆனால் அவன் வர்த்திக்கும் தேசமும் ப்ராப்யம் -திருமலையும் -திருமலையோடு சேர்ந்த அயன் மலையோடு -புற மலையோடு -திருப்பதியோடு
போம் வழியோடு -போகக் கடவோம் என்ற துணிவும் துணிவோடு வாசி யற ப்ராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியர் ஆகிறார் —
திவ்ய தேசம் அடைவதே நமக்கு கருமம் ஆகும் –இதுவே உடையவர் திரு உள்ளம் –
13–தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே –2–3–1-
ஏக ஜாதி த்ரவ்யங்கள் தன்னிலே கலந்தால் போலே -திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
தானும் நானுமாக கலவிக்கு உள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும் படி ஸம்ஸ்லேஷித்தான் என்கிறார் –
சர்வ கந்த சர்வ ரஸ -இந்த கலவி பிரிக்கப் போகாது என்பதற்கு த்ருஷ்டாந்தம் –
14—ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-6–1–10-/ நானும் இருக்கிறேன் -திருமாலை ஆண்டான் கருத்து /இத்தலையை பிரிந்தால்
இருப்பார் இல்லை என்று தன் பெருமையை நினைந்து அவன் வராமல் இருந்தானாக வேணும் -இத்தலையில் சத்தையை-உயிருடன் இருப்பதை அறிவிக்க சொல்கிறாள் –
எம்பெருமானார் பணிக்கும் படி -அழகான பொருள் தான் –ஆயினும் தமிழர் இன்றியமையாமை என்பது ஓன்று உண்டு உண்மையான ப்ரேமம் உள்ள இடத்தில் –
தலைமகன் இருக்கும் வரை தலைவியும் இருந்தே தீரும் -ஓன்று இருவரும் இருக்க வேண்டும் -அன்றேல் இருவரும் முடிய வேணும் –
ஒருவர் முடிந்தால் மற்றவர் அதுவே காரணமாக முடிந்து விடுவர் – எம்பெருமான் உளராகையால் இங்கு இவ்வாத்மா வஸ்துவும் உண்டு என்பது நிச்சயம் –
ரஷ்ய வர்க்கங்கள் எல்லாரையும் ரஷித்தால் யாயிற்று -சேஷம் இல்லை என்று இருக்கிறராக வேணும் -இன்னும் அவன் ரக்ஷணத்தை அபேக்ஷிக்கும்
நான் ஒருத்தி இருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லுங்கோள்-
இதே போலே -என் தத்துவனை –நாச்சியார் -5-6–எனக்கு சத்தா ஹேதுவானவனை வரும்படி கூவாய் -குயிலை வேண்டுகிறாள் –
தன் சத்தை அவன் என்று இருக்கிறாள் -ராவணன் மாயா சிரசை காட்டின போது-உயிர் விடாமல் பிராட்டி தரித்து இருந்தது –
ஞானம் அன்று இவள் ஜீவனத்துக்கு ஹேது -பெருமாள் சத்தை யாயத்து -அவள் உளர் ஆகையால் இவளும் இருந்தாள் காணும் என்று –
15–செங்கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் -8–9–3-
அசுரரைக் கொன்று குவித்ததால் வந்த புகரைச் சொல்கிறது–ஹேதி பிச்சேத நாவாத்பி ருதீரித ஜயஸ்வநம்–திவ்ய ஆயுதங்கள் தான் அவனை புகழா நிற்கும்
-புகழும் பொரு படை -பற்றி -இங்கு எம்பெருமானார் நிர்வாகம் -சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை -ராவணன் போன்ற சத்ருக்களும்
கையும் ஆயுதமும் பொருந்த இருந்த படி என் என்று புகழும் படியை சொல்கிறது -அனுகூலரான சேதனர்கள் புகழ்வதில் வியப்பு ஒன்றும் இல்லையே
-பிரதிகூலர் புகழும் படி அன்றோ இவன் பெருமை –
16—மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆ நிரை காய்த்தாய் -பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவேனே-9–4–3-
வரையாதே ரஷித்த மஹா குணம் எனக்கு உதவாமையாலே இழக்கப் புகா நின்றாய் என்று பேகனியா நின்றேன் -உனக்கு அவத்யம் -ஆழ்வாருக்கு துக்கம் இதனால் –
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன் -இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் -பெரியாழ்வார் -5–9–3-
எம்பெருமானார் -இது அழகான பொருள் தான் -ஆயினும் அவன் வாராமையால் தம் இழவுக்கு நோவு பட்டு இருக்கும் ஆழ்வார்
அவன் இழவுக்கு -அவத்யம் வரும் -என்று நோவு பட்டார் என்பது இப்போது உள்ள நிலைக்கு சேராது -இந்த மஹா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ -என்று துக்கமே –
17—வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும் -3-3–6- இதற்கு கடன்கள் -ரிஷிகள் தேவதைகள் பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடைமைகள் என்றும்
– -மெய்ம் மேல் வினை -சரீர சம்பந்தம் அடியாக வரும் பாபங்கள் -வேம்-நசிக்கும்
இதற்கு எம்பெருமானார் -பூர்வமாக நாசமும் உத்தராக அஸ்லேஷமும் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -தீயினில் தூசாகும் –
-கடன்கள் மேல் வினை முற்றவும் -இது மெய் -சத்யம் -என்று வேதாந்த கட்டளை படியே
உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாசவ் -என்றும் -ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூயந்தே -என்றும் சொல்லுகிறபடியே -ஏதம் சாரா என்னுமா போலே –
18–முடிவு இவள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் -மூ வுலகு ஆளியே என்னும் -கடி கமழ் கொன்றைச் சடையன் என்னும் –
நான் முகக் கடவுளே என்னும் -வடிவுடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கன் என்னும் -7–2–10-
இத்யாதிகளால் சொல்லப் படுகிற வானோர் தலைவனே -என்பர்
எம்பெருமானார் -சாமாநாதிகரண்யத்தால் அந்தர்யாமியாய் இருந்து உபய விபூதி நாதத்வம் என்று பொருள் என்பர் –
19-அறுக்கும் வினை -9–8-1- குறுக்கும் -நாட்டில் நடையாடும் சொல்லால் அருளிச் செய்வதே
20-பணிமானம் பிழையாமே –அடியேனைப் பணி கொண்ட –4–8–2-ஆச்சான் தண்ணீர் அமுது -விருத்தாந்தம்
—————————–
லோக திவாகரும் ராமானுஜ திவாகரும் -ஸ்ரீ உ. வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் –
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்-
குறையல் பிரான் அடிக்கீழ் வில்லாத அன்பன் இராமானுசன் /கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –
மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர் –
ஜைநேப கண்டீரவ -மத யானைகளுக்கு சிங்கம் -ஸ்ரீ ராமானுஜ சிங்கம்
அங்கமலத்து தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன்
பரகாலனும் ஸ்ரீ பெரும்பூதூர் மா முனியும் சீயங்கள் –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் -பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-
தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித் என்று -கலியும் கெடும் போல் ஸூ சிதம் –
-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையால் -கலியும் கெடும் என்று திருமங்கை ஆழ்வார் உடையவர் அவதரித்து
கலியுக ஸ்வ பாவம் கைலியும் என்று மேல் வரும் அம்சத்தை தரிசித்து அருளிச் செய்தார் –
பூண்ட நாள் சீர்க் கடலை யுத்க்கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து ஞானஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி
வாழ நிதி சொரிந்து -கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூரும் அடியவர்
-உறையில் இடாதவர் -புயல் கை அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும்
காரார் புயல் கை கலி கன்றி -அங்கமலத்து தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி–குணம் திகழ் கொண்டல் / இராமானுசா எம் செழும் கொண்டல் –
-சீர் முகிலே -காரேய் கருணை இராமானுசா — –உதார குணத்தால் மேக துயர் இருவரும் –

1-உண்ணும் சோறு -6–7-திருவாய்மொழி போலே -கள்வன் கொல்-3–7-தலைமகள் பிரிவுக்கு ஆற்றாத திரு தாயார் பதிகங்கள்
-அது தனிப் போக்கு -இது உடன் போக்கு -என்ற வாசி உண்டு
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் அரக்கர் குழப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்க்கில் -3-7-4–
மகளின் மூக்கை அரிவான் என்ற அச்சம் இல்லை -பெருமாள் பிராட்டி பிரிவு நினைவூட்டப் படுகிறது -பிராட்டியை கவர்ந்து செல்ல
மூல காரணமே அங்க பங்கம் தானே -முன்பு இருவருமாக புறப்பட்டுச் சென்று பிரிவு நேர்ந்தால் போலே இப்பொழுதும் இத் தம்பதிகளுக்கு
விதி வசத்தால் பிரிவு நேர்ந்து பரிதவிக்க நேருமோ என்றே அச்சம் கொள்கிறாள் -என்று எம்பெருமானார் நிர்வாகம் –
2-ஓழியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஓண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் -6–7–4-
எம்பெருமானார் -வங்கி புரத்து நம்பி –திருவாராதன கிராமம் உபதேசிக்க பிரார்த்திக்க -காலம் தாழ்த்து -கூரத் தாழ்வானுக்கும் ஹனுமத் தாசருக்கும்
உபதேசிக்கும் பொழுது வர அஞ்சி நடுங்கின உடையவர் -விம்மி அழுதான் -என்றும் -அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -என்று
ஆழ்வார்கள் அருளிச் செய்யா நிற்க -உண்மையில் இப்படி இருக்குமோ -நியாமகன் -நியாம்யர் ஆனவர் இடத்தில் அஞ்சி வருந்தத்தக்க கூடுமோ என்று
சந்தேகம் உண்டாய் இருந்தது -இப்போது உம்மிடத்தில் நான் அஞ்சி வருந்தினேன் ஆகையால் அது சம்பாவிதமே என்று துணியப் பெற்றேன் என்றாராம் –
3-தன் குடிக்கு ஏதும் -நம் குடி என்னாதே -தன் குடி என்கிறாள் ஆயிற்று -எம்பெருமானார் தர்சனம் -என்னுமா போலே –
நம் பிரதிபத்தியால் சொன்னமாகை அன்றிக்கே பெருமாள் இராமானுசன் உடையார் -என்றே அருளிச் செய்வர் –
பெரு விலையனான ரத்னத்தை நடுவே இட்டுக் கோத்தால் முன்னும் பின்னும் ஓக்க விலை போமாப் போலே காண் -என்பர் பிள்ளான் –
4-தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை –மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –பெரிய திருமடல் –
எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த ராஜர் பிரதிஷ்டை தில்லை திருச் சித்ர கூடம் போலவே செய்து அருளினார் –
———————-

திருக்கோட்டியூர் நம்பி –
திருக் குருகைப்பிரான் இயற பெயர்-வைகாசி ரோஹிணி திருவவதாரம் –987-செல்வ நம்பி வம்சம் –
செல்வநம்பி குலம் தழைக்கச் சாய்த்து உதித்தோன் வாழியே -வாழி திரு நாம பாசுரம் உண்டே –
105-திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திருநாங்கூர் மணிமாடக் கோயில் -மூலவர் உத்சவர் சேவை இன்றும் உண்டு
திருக் கோஷ்ட்டியூர் நம்பி சந்நிதியில் பவிஷ்யகார எம்பெருமானார் உத்சவம் இன்றும் சேவை
இவர் திருக் குமாரத்தி தேவகிப் பிராட்டியார் -திரு க் குமாரர் தெற்கு ஆழ்வான்-இருவரையும் உடையவர் சிஷ்யர்கள் ஆக்கினார் –

—————————————————
ஸ்ரீ பார்த்த சாரதி கிருபா லப்த நிஜ அவதார வைபவம் உண்டே நம் ராமானுஜருக்கு -/ ஆத்மாநம் ஸ்ருஜாமி -என்றும் -ஞானீ து ஆத்மைவ மே மதம் -என்றும்
யதா யதாஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத அப்யுத்தா நமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம் யஹம் -என்றும்
தானே வந்து திருவவதரித்தமை காட்டி அருளுகிறான் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச–பரமம் ரஹஸ்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர சாரம் -என்பர் நம் பூர்வர்கள் கத்ய த்ரயத்தை –
பெரிய கோயில் நம்பி -திருத்திப் பணி கொண்டு -ஆழ்வானால் – திருவரங்கத்து அமுதனார் –
—————————
கல் தச்சன் ஐதிக்யம் -கோசாலை காட்டும் பொழுது கல்லின் நடுவில் தேரையும் தண்ணீரும் இருக்கக் கண்டு -கல்லின் நடுவில் உள்ள தேரைக்கு
ஜீவனம் கல்பித்த ஈஸ்வரன் நமக்கும் நடத்துவன் என்று தொழிலை விட்டு பரந்யாசம் பண்ணி திரு முடி குறையிலே நிர் வியாபாரனாய் இருக்க
அழகிய மணவாள பெருமாள் பிரதி தினம் இராமாறு திருவொத்த சாதத்தை கொண்டு போய் அவனை புஜிப்பித்துக் கொண்டு இருக்க சில காலத்துக்கு பின் அவன்
மரித்த செய்தியைக் கேட்டு உடையவர் -இற்றைக்கானாலும் அழகிய மணவாள பெருமாள் வெறும் தலையாய சோறு சுமவாமல் ஸூ கமாய் இருப்பர் -என்று அருளிச் செய்தார் –
————————–
யாதவ ராஜன் -காலத்தில் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தார் –
வில்வ நிலையையாக பிராட்டி பேசப்படுகிறாள் / ஸ்ரீஸூக்தியிலும் -ஆதித்ய வர்ணே தபசோதி ஜனதா வனஸ்பதிஸ் தவ வ்ருஷோ அத பிளவை -என்று
உன் சங்கல்பத்தினால் உனக்கு என்று இட்டுப் பிறந்தது -என்று ஓதப்படுவதால் வில்வ தளத்தினால் அர்ச்சிக்கப் படுவது பொருத்தமே
உத்சவ மூர்த்தி -தேவாதி தேவன் -ரக்ஷித்து சிலர் எழுந்து அருள பண்ணி இருக்க -யாதவ ராஜனைக் கொண்டே
மூலவரையும் திருச் சித்ர கூடம் போலவே எழுந்து அருள பண்ணி அருளினார்
ஆனந்த நிலையம் விமானம் புதுப்பித்து -ஸ்ரீ வைகாசன ஆகமம் படி -ஸ்ரீ வராக -ஸ்ரீ நரசிம்ம -ஸ்ரீ வைகுண்டநாத -ஸ்ரீ வேங்கடேசர்களை ப்ரதிஷ்டை செய்வித்து
ஆதி சேஷன் விஷ்வக் சேனன் கருடன் த்வார பாலகர் -ஆகியவர்களை அந்தந்த ஸ்தானங்களில் ஏறி அருள பண்ணுவித்தார்
திருவேங்கடமுடையானுக்கு ஐஸ்வர்யா ஸம்ருத்திக்காக திரு மார்பில் ஸ்ரீ வ்யூஹ லஷ்மியை -உத்தர பல்குனி -வெள்ளிக் கிழமை -சுக்ல பக்ஷ துவாதசி -ஒன்றாக
சேர்ந்த ரத்ன மாலிகா யோகத்தில் -திருமார்பில் உள்ள ஸ்வர்ண கண்டிகையில் பிரதிஷ்டை செய்வித்தார்
இதனால் -வேங்கடேச ஸ்வசுராபிதானர்-மாமனாராகவும் போற்றப் படுபவர் –
திரு மஞ்சனத்தின் பொழுது நாச்சியார் திருமொழி சேவையும் ஏற்படுத்தி அருளினார்
மலையப்பனை உத்சவ பேரமாகவும்-வேங்கடத்துறைவாரை கௌதுக பேரமாகவும் -ஏற்பாடு செய்து அருளினார்
வீர நரசிம்ம தேவன் திரு நாகாபரணங்கள் திரு ஹஸ்தங்களுக்கு சமர்ப்பித்தார் –
திரு வேங்கடத்து அரி -தனிக் கோயிலில் திருமலையில் -இருக்க
பெருமாளுக்கு ஈசான்யத்தில் விமான அபிமுகமாய் இருக்கும் படி எழுந்து அருள பண்ணி பிரதிஷ்டிப்பித்து அருளினார்
தண்ணீர் அமுது வழி திருத்தல் உத்சவம் -பெரிய திருமலை நம்பிகள் -நினைவாக -அத்யயன உத்சவம் அனந்தரம் -ஏற்பாடு செய்து அருளினார்
புரட்டாசி ஏழாம் திரு நாள் அனந்தாழ்வான் -லீலை -ஸ்மாரகமாக-அப்ரதக்ஷிணமாக எழுந்து அருளி உத்ஸவம் –
————————
இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி -பரன் அடி மேல் குருகூர்ச் சட கோபன் —
இன்றும் அர்ச்சா ஆழ்வார் திரு மார்பில் ஞான முத்திரை உடன் சேவை உண்டே இங்கு –
கலியனும் -மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்குப் பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான் –1–4–4-என்று உபக்ரமித்து
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரானை –4–3–1-என்றும்
வானவர் கோனைட் கண்டமை -4–3–10-என்றும்
(தேவ பெருமாளையே தாம் செம் பொன் கோயிலிலே கண்டாராக அருளிச் செய்கிறார் -பரமபத நாதனை சொல்லிற்று ஆகில்
கண்ணால் கண்டமை சொல்ல முடியாதே -தொழுது எழு என்னவும் கூடாதே -அஹம் ஏவ பர தத்வம் -என்றார் இ றே –
ஸ்ரீ ஹஸ்த கிரியின் மேல் கையும் திரு வாழியுமாய் நிற்கிற பெருமாளே ப்ரமேயம் -என்றவாறு )
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவ பிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளன் பெருமை பேசிக் கற்றவன் காமரு சீர்க் கலியன் -9–5–10-என்று முடிவிலும் அருளிச் செய்கிறார் –
————————-
தொண்டனூர் ஏரி -திருமலை சாகரம் -என்ற பெயர்
சரவண பெவகுலா ஜைன சன்னதியில் எம்பெருமானார் சந்நிதியின் தாடீ பஞ்சகம் கல் வெட்டும் இன்றும் உண்டே
குகன் தண் மகளான -கனகமாலிகை -யதிசேகரன் -என்னும் யது குல அரசனுக்கு திருக்கல்யாணம்
-ஸ்ரீ ராம பிரியன் -ஸ்ரீ கிருஷ்ணன் உத்சவ பிரதிஷ்டை செய்ய – நாராயணராத்ரி யாதவ கிரி ஆனதே /
யதிராஜ சம்பத்குமாரார் –பீபீ நாச்சியார் திருவடியில் சேவை / தமர் உகந்த திருமேனி /-

கோதற்ற ஞானத் திருப்பாவை பாடிய பாவை தங்கை
வாதுக்கு வல்லவன் ஆண்டான் மருமான் தம்பி எம்பார்
தீதற்ற செல்வப் பிள்ளையோ பிள்ளை நம்பி சிச்சன்
ஏதுக்கு இராமானுசனை எதி என்று இயம்புவது இரு நிலமே-

கஜினி முகமத் துருக்கியில் இருந்து வந்து பஞ்சாபில் ஜெயபாலன் அரசனை வென்றது -1001-/ யமுனையை கடந்தது -1018-/
லாகூர் முழுவதும் துலுக்க ராஜ்ஜியம் ஆனது -1022-/ சோம்நாத் கோயில் கொள்ளை -1024-/ கஜினி இறந்து அவன் பிள்ளை அகமது பட்டம் -1030-/
துலுக்க ராஜ்ஜியம் -1100-பலமாகவே இருந்தது -/ ராமானுஜர் பாதுஷா இடம் சென்றது -1097-முதல் -1100-வரைக்குள் இருக்க வேண்டும் -/
தொண்டனூர் -அருகில் கல் வெட்டு -முகமது வீரன் புதை யுண்டு இருப்பதாக -உள்ளது -அதனால் முகமது படை எடுத்து
ஸ்ரீ ராம பிரியர் விக்ரகம் தலை நகர் டெல்லிக்கு கொண்டு சென்று இருக்க வேண்டும் –
திருக்குறுங்குடியிலும் எம்பெருமானார் ஞான முத்திரை உடன் சேவை –

யஸ் ஸ்வாபாகலே கருணாகரஸ்சான் பவிஷ்ய தாசார்ய பர ஸ்வரூபம்
சந்தரசயா மாச மஹாநுபவம் தம் காரி ஸூ நும் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆழ்வார் விஷயமாகவும் பவிஷ்யதாசார்யர் விஷயமாகவும் அருளிச் செய்தது –

திருக் கோஷ்ட்டியூர் நம்பி திருக் குமாரத்தி தேவகி நாச்சியார் இடம் தமது சரம தசையில் பவிஷ்யதாசார்ய விக்கிரஹத்தை சேர்த்து –
அவர்களே திருக் கோஷ்ட்டியூர் நம்பி அர்ச்சா மூர்த்தியையும் எழுந்து அருள பண்ணினார் -அந்த திவ்ய தேசத்திலே –
ஆழ்வார் விக்கிரஹத்துக்கு முன்பே எழுந்து அருள பண்ணியதால் -அண்ணர் -பின்பு ஆண்டாள் -கோயில் அண்ணர் -அதிசயத்தக்க திரு நாமம் அமைந்தது —
யத்ய தாசாரதி சிரேஷ்ட தத்த தேவ இதரோ ஜனா ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே —-ஸ்ரீ கீதை -3–21- என்பதற்கு
-பலர் -ச யத் பிரமாணம் குருதே -சிரேஷ்டர் யாது ஒன்றை பிரமானமாகக் கொள்ளுகிறார்களோ அத்தையே லோகமும் பிரமாணமாக கொள்ளும்
என்று சாமான்ய அர்த்தம் சொல்ல நம் பாஷ்யகாரர் –ஸ்ரேஷ்டர்கள் செய்வனவற்றையே லோகம் பிரமாணமாக கொள்ளும்
-மேலையார் செய்வனகள் -வேண்டுவன கேட்டியேல் -என்பதையே கொண்டு வியாக்யானம் –
சாஸ்திரத்தில் – வேண்டாதனவற்றை விட்டு வேண்டுவன மட்டுமே ஸ்ரேஷ்டர்கள் செய்வார் என்றே தாத்பர்யம் –
பஞ்சாசார்ய பதாஸ்ரயர்/ ஸ்ரீ பெரும்பூதூரில் மணவாள மா முனி சந்நிதியில் -இன்று சேவை சாதிக்கும் மண்ணளந்த பெருமாளே
ஸ்வாமிக்கு முதல் ஆச்சார்யர் -வித்யாப்யாஸம் இவர் திரு முன்பு தான் தொடங்கிற்று என்பர்
தீ மனம் கெடுத்தும் மருவித் தொழும் மனமே தந்தும் அறியாதன அறிவித்த ஆச்சார்யனே உபாயம் உபேயம் என்று விஸ்வஸித்து
பீதக வாடைப் பிரானார் பரம குருவாக வந்து -என்கிறபடியே உறங்கும் பெருமாளே தானே உலாவும் பெருமாளாய் வந்தார் –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -உத்தாரகத்வத்தை நிஸ்சம்சயமாக அறுதியிட்டார் -இதற்கு மேல் உயர்ந்த மந்த்ரம் இல்லையே

விஷ்வக்ஸேனா யதிபதி ஆவீர்பூத நேத்ர சாரஸ் த்ரிதண்ட –ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை மங்காமல் ரசிக்க தாசாரதியை நியமிக்க
-அவர் முதலியாண்டான் ஆனார் -த்ரிதண்ட ஸ்தானீயரானார் –
——————
யதீந்த்ரர் -எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்-நாராயண வைபவ பிரகாசர் –
யதீந்த்ர பிரவனர்-பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் அனைத்துளுக்கும் வாழப் பிறந்த
யதிராச மா முனிவன் என்னும் அர்த்தம் சுரந்தார் -ராமானுஜ வைபவ பிரகாசர் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே யதீந்த்ர பிரவனர்
உடையவர் -பராங்குச பாத பக்தம் -சடகோபர் தே மலர் தாட்க்கு எய்ந்து இனிய பாதுகாமாம் எந்தை எதிராசன் –

யதிராஜ விம்சதி பிராபக -உபாய பரமான பிரபந்தம் -ராமானுஜம் எதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா-என்று தொடங்கி
-தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதீ மத்வா-என்று தலைக் கட்டுகிறார் அதில்
ஆர்த்தி பிரபந்தம் -ப்ராப்ய பரம் -வாழி எதிராசன் என்று தொடங்கி -இந்த வரங்கத்து இனிது இரு -என்று தலைக்கட்டு -த்வயம் உத்தரார்த்தம் சரம நிஷ்டை -தாத்பர்யம்
நடுவிலும் -சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -30-/ அறு சமயச் செடி யதனை அடி யறுத்தான் வாழியே -31–என்றும் அருளி
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்கும் ஆகி -எம்பெருமானார் பிரசாதத்தை பெற்று நித்ய விபூதியில் நிரந்தர கைங்கர்ய சாம்ராஜ்யத்தை
பெற்று வாழ்வார்கள் என்பதே ஆர்த்தி பிரபந்தத்தில் தேறிய அர்த்தம்
உன் தன் அபிமானம் உத்தாரகம் என்று சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ அந்தோ எதிராசா சதிராக நின் திருத் தாள் தா -56-என்றும்
இந்த அத்யாவஸ்யம் பிறப்பித்த -மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால் நின் பால் சேர்த்தார் -12-என்றும்
அவர்க்காய் எதிராசர் எம்மை கடுக பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே -21-என்று துணிவை வெளியிட்டு அருளி
எதிராசர் தம் அபிமானம் என்னும் போதத்தை ஏறிப் பவமாம் புணரி தன்னைக் கடந்து பாதக கரையைக் குறுகுவனே-22-என்று பெருமிதத்துடன் அருளிச் செய்கிறார் –

அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராசன் மா முநிவன் -41-வாழியே –
ராமானுஜோ விஜயதே யதிராஜ ராஜ-
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . திருமலை நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே -வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே ராமானுஜம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருச்சந்த விருத்தம் -அவதாரிகை / பாசுர பிரவேஸ -தொகுப்பு –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

April 17, 2017

ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்-ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து-
இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக –மயர்வற மதி நலம் அருளி – உபய விபூதி
நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே -பகவத் அனுபவ ஏக போகராய்-
சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளிஇருந்த இவர்
ப்ராப்தமுமாய் -ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று
அவர்கள் பக்கல் கண் வைத்தார்-பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே-பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே
நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் -பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் -ஜகத் காரண பூதனாய் -பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே-அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி-அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய்
-சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்-அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து
-ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி
-ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி
-பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட
இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று-தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –
—————————–
1–அண்ட காரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்-நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம்
-இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத-பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

2-காரண பூதனான உன்னாலே-ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்-சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும்
-அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித-போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க-வல்லர் -என்கிறார்-

3-முதல் பாட்டில் சொன்ன ஜகத் காரணத்வ பிரயுக்தமான லீலா விபூதி யோகம் என்ன -இரண்டாம் பாட்டில் சொன்ன உபாயத்துக்கு பலமான நித்ய விபூதி யோகம் என்ன –
ஆக இந்த உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட-வருத்தமற நான் கண்டாப் போலே- வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

4-பிரணவத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்-சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு-காரணம் அற்றவன் -அதனால் துளக்கமில் விளக்கம் –
எனக்கு நிருபாதிக சேஷி யானவனே -என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ -என்ன நீர்மை-என்கிறார்-

5-ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள-அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட
நான் கண்டால் போலே ஏவம்விதன்-என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்-

6-சகல அந்தர்யாமித்வத்தால் வந்த சகல ஆதாரத்வம் சொல்லிற்றாய் நின்றது கீழ் -அந்த பதார்த்தங்களுக்கும் தேவரீரே தாரகம் என்று வேதாந்த பிரசித்தமான இவ்வர்த்தம்
தேவரீர் பக்கலிலே வ்யவச்திதம் அன்றோ-இஸ் சர்வ ஆதாரத்வமும் ஸ்வ சாமர்த்யத்தாலே வேறு ஒருவருக்கும் காண முடியாது என்கிறார் –

7-நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது-ஜ்ஞான சக்திகளின் குறை யன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது என் என்ன –
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்-அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்-

8-ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்-

9-இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான-ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான
சாத்விக ஜனங்களும் உன்னையே-ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் —

10-சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே -காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது-என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

11-நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன –
உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச-ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்ய பரம் என்கிறார் –

12-ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி-அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து
ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்-நினைக்க வல்லார் என்கிறார் –

13-இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர
-உன் வைலஷண்யம் காணும்-அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

14-நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் -பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை
பரிச்சேதித்து அறிய மாட்டேன் ஆகிலும் -அவ்வடிவு வேதைக சமதிகம்யம் என்று-அறிந்தேன் என்கிறார் –

15-வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக-அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி
அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த-உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார் –

16-திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்-அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி-இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –

17-பரமபத நிலயனாய் இருந்து -நித்ய விபூதியை நிர்வஹித்து-வ்யூஹம் முதலாக ஸ்தாவர பர்யந்தமாக அவதரித்துலீலா விபூதியை நிர்வஹித்தும் –
போகிற இவை ஒரொன்றே பிரமாணங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்க-அதுக்கே மேலே அர்ச்சாவதார ஸூலபனாய் -ஆஸ்ரிதருடைய இச்சாதீநனாய்
தன்னை நியமித்த இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறதோ என்று அதிலே வித்தராகிறார் –

18-நாக மூர்த்தி சயனம் -என்றும் -தடம் கடல் பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த -என்றும் அவதார கந்தமான ஷீராப்தி சயனம் ப்ரஸ்துதமானவாறே –
திரு உள்ளம் அங்கே தாழ்ந்து -அர்த்திதோ மாநுஷே லோகே -என்கிறபடியே அவதாரங்களில் உண்டான-அர்த்தித்வம் அன்றிகே இருக்க விசத்ர்ச தேசத்தில்
வந்து கண் வளர்ந்து அருளிகிற தேவரீர் உடைய வாசியை ஆரறிந்து ஆச்ரயித்து கார்யம் கொள்ள -என்கிறார் –

19-அர்த்தித்வ நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற இது என்ன நீர்மை என்றார் கீழ் -இங்கு-பண்ணின ஜகத் ரஷணங்களைக் கண்டு –
நஹி பாலான சாமர்த்யம்ர்தே சர்வேச்வரம் ஹரிம் -பாலன தர்மத்துக்கு வேறு சக்தர் இல்லாமையாலும் -ஜகத்துக்கு தேவரீர் அனந்யார்ஹ சேஷம்
ஆகையாலே ரஷிக்கும் இடத்தில் அர்தித்வம் மிகை யாகையாலும் -வந்து கண் வளர்ந்து அருளுகிற-இத்தனை என்று -அந்த ரஷணங்களைப் பேசி
சாமான்ய த்ர்ஷ்டியால் சஹஜ சத்ருகளாய்-தோற்றுகிற பெரிய திருவடியும் திருவநந்த ஆழ்வானும் ஏக கண்டராய் தேவரீருக்கு பரியும்படியாகக்
கண் வளர்ந்து அருளுகிற இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

20-பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஏத்த திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற-இம் மேன்மை தானே நீர்மைக்கு எல்லை நிலமாய் இரா நின்றது
அமிர்த மதன வேளையிலே மந்தர தாரண அர்த்தமாக ஆமையான நீர்மை தானே மேன்மைக்கு-எல்லை நிலமாய் இரா நின்றது –
இவைகளைப் பிரித்து என்னெஞ்சிலே பட வருளிச் செய்ய வேணும் என்கிறார் –

21-சமுத்ர மதன வேளையில் ஆமையான நீர்மைக்கு மேல் -சகல வியாபாரங்களையும்-தேவரீரே செய்து அருளி -தேவர்கள் கடல் கடைந்தார்கள் -என்று தேவர்கள் தலையில்
ஏறிட்டு கொண்டாடினபடி -ராவணனை அழியச் செய்து முதலிகள் தலையிலே விஜயத்தை-ஏறிட்டு கொண்டாடினாப் போலே இருந்தது -இவ் வாஸ்ரித பஷபாதத்தை
வேறாக தெரிய அருளிச் செய்ய வேணும் என்கிறார் -சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க இதொரு பஷபாதம்-இருந்தபடி என்ன என்று விஸ்மிதர் ஆகிறார்-

22-பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ –என்கிறார் –

23-பிரளய ஆபத்சகன் ஆகைக்கு வட தள சாயி யான அகடிதகடிநா சாமர்த்ய அளவு அன்றியே -தேவரீர் உடைய அசாதாராண விக்ரஹத்தை
நாஸ் யர்த்ததநும் க்ர்த்வா சிம்ஹஸ் யார்த்தத நுந்ததா -என்கிறபடியே ஏக தேகத்தை மனுஷ்ய சஜாதீயம் ஆக்கியும் -ஏக தேகத்தை திர்யக் சஜாதீயம் ஆக்கியும்
இப்படி யோநி த்வயத்தை ஏக விக்ரஹமாக்கி -அர்த்தித்வ நிரபேஷமாக பிதாவாலே புத்ரனுக்கு-பிறந்த ஆபத்தை தேவரீர் பொறுக்க மாட்டாமையாலே
தூணிலே தோற்றின அகடிதகடநா சாமர்த்யத்தை அனுசந்தித்து -இத்தை யாவர் பரிச்சேதித்து அறிய வல்லார் -என்கிறார் –

24-பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல-பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக
திவ்ய-விக்ரஹத்தை அழிய மாறி வந்து தோற்றின இவ் வேற்றத்தை-நித்யசூரிகள் அறிதல் -பிராட்டி அறிதல் -ஒழிய
-வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார் –

25-அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுடைய விரோதியைப் போக்கினபடியை-அநுபாஷித்துக் கொண்டு -அவனுடைய அளவு அன்றிக்கே –
பிரயோஜனாந்தர பரரான-இந்திரனுக்காக அர்த்தியாயும் -அவ்வளவும் புகுர நில்லாதே விமுகரான சம்சாரிகளை-பிரளய ஆபத்தில்
திரு வயிற்றில் வைத்து ரஷித்த இவ் வாபத் சஹத்வத்தை-அறிய வல்லார் யார் –என்கிறார் –

26-சர்வ நிர்வஹானான நீ ஸூரி போக்யமான வடிவை ஆஸ்ரித அர்த்தமாக தேவ சஜாதீயம் ஆக்கியும் கோப சஜாதீயம் ஆக்கியும் அவதரித்துப் பண்ணின
ஆச்சர்யங்களை ஆர் அறிய வல்லார் என்கிறார் -வாமன அவதாரத்தோடே கிருஷ்ண அவதாரத்துக்கு-ஒரு வகையில்
சாம்யம் சொல்லலாய் இருக்கையாலே அனுசந்திக்கிறார் –

27-அபரிச்சின்னமான ஸ்வரூப வைபவத்தை உடையையாய்-அந்த ஸ்வரூபத்துக்கும்-ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசமான திவ்ய விக்ரஹ உக்தனாய்
வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையையாய்-உன்னுடைய ஆச்சர்ய சக்தி ப்ரேரிக்க – வந்து
பூமியை அளந்து கொண்ட உன்னை-இவற்றை ஒன்றை ஒருத்தராலே பரிச்சேதிக்கப் போமோ –

28-சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ -ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக
உன்னை அழிய மாறி அநேக அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் ஆகிற
இவ் வாச்சர்யங்களை ஒருவரும் அறிய வல்லார் இல்லை என்கிறார் –ஒருத்தரும் நின்னது தன்மை இன்னதென்னெ வல்லரே -என்கிற மேலில் பாட்டில் க்ரியை இதுக்கும் க்ரியை –

29-கீழில் பாட்டில் -மநசைவ ஜகத் ஸ்ர்ஷ்டிம் -என்கிறபடியே சங்கல்ப லேசத்தாலே ஜகத் ஸ்ர்ஷ்டி-சம்ஹாரங்களைப் பண்ண வல்லவன் -ஆஸ்ரித அனுக்ரஹங்கத்தாலே
எளிய கார்யங்களுக்கு அநேக விக்ரஹ பரிக்கிரஹங்களைப் பண்ணி ரஷிக்கும் என்கிறது–இதில் -இவ் வனுக்ரஹத்துக்கு ஹேது-1– சர்வாதிகத்வத்தால் வந்த பூர்த்தியும்
2-ஸ்ரீயபதித்வத்தால் வந்த நீர்மையும் -3-அவர்ஜநீயமான சம்பந்தமும் -என்றும் -4-அனுக்ரஹ கார்யம் வியூக விபவாத்யவதாரங்கள் என்றும் சொல்லி –
இப்படி பட்ட அனுக்ரஹம் ஏவம்விதம் என்று பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார் –

30-கீழில் பாட்டிலே நரத்தில் பிறத்தி -என்று மனுஷ்ய யோநியில் அவதாரங்கள்-ப்ரஸ்துதம் ஆகையாலும் -அதுக்கு கீழ் பாட்டிலே -அது உண்டு உமிழ்ந்து -என்று
வட தள சாயி அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலும் -வட தள சாயி உடைய-மௌக்த்யத்திலும் சக்தியிலும் -சக்கரவர்த்தி திருமகன் உடைய அவதாரத்தின்
மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யத்திலும் வீரஸ்ரீ யிலும் ஈடுபடுகிறார் -இப்பாட்டில் –

31-கீழில் பாட்டில் அவதாரங்களில் உண்டான ரஷகத்வத்தை அனுபவிக்கிறார் இதில்-
ஆஸ்ரயேண உன்முகர் ஆனவர்கள் திறத்தில் அவதார கார்யமான உபகார பரம்பரைகளை-அனுபவிக்கிறார் –

32-ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணும் இடத்தில் சக்கரவர்த்தி திருமகன் செவ்வைப்-பூசலாலே ராஷசரை அழியச் செய்தால் போலே விரோதி வர்க்கத்தை போக்கவுமாம் –
மகாபலி பக்கலில் வாமனனாய் அர்த்தித்துச் சென்று வஞ்சித்து அழித்தால் போலே அழிக்கவுமாம் –ஆஸ்ரித விரோதி நிரசநத்தில் ஸ்வபாவ நியதி இல்லை-

33-ஆஸ்ரித ரஷணத்தில் ஸ்வபாவ நியதி இல்லாதவோபாதி ஆஸ்ரயிப்பாருக்கும்-ஜாதி நியதி இல்லை என்கிறார் –

34-கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு-பார்க்காதே -விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை
அனுபவித்தார் -இதில் -கார்ய காரணங்கள் என்ன -பிரமாண ப்ரமேயங்கள் என்ன -சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு
ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன-ஆச்சர்யம் -என்கிறார் –

35-அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கி ருசி ஜனகனாய்-கொண்டு அவதரித்த ஏற்றத்தை அனுபவித்தார் கீழில் பாட்டில் –
இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவும் விடவுமாம் படி ந்யாம்யனான-குணாதிக்யத்தை அனுசந்தித்து திரியவும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார் –

36-கீழ் சொன்ன பரதந்த்ர்யத்தை அநுபாஷித்து அவ்வதாரங்களின் ஆச்சர்ய சேஷ்டிதங்களில்-ஈடுபடுகிறார் –

37-பின்பு க்ருஷ்ணாவதாரத்தில் விதக்த சேஷ்டிதங்களையும் -முக்த சேஷ்டிதங்களையும்-அனுபவிக்கிறவர் -மௌக்த்யத்தாலும் சௌலப்யத்தாலும் -வரையாதே எல்லாரையும்
தீண்டின படியாலும் க்ருஷ்ணாவதாரமான ஸத்ர்சமான வட தள சாயியையும்-ஸ்ரீ வராஹ வாமன ப்ராதுர்பாவங்களையும் க்ருஷ்ணாவதாரத்தொடு ஒக்க-அனுபவிக்கிறார் –

38-பரித்ராணாய சாதூநாம் விநாசாயச துஷ்க்ர்தாம் – என்கிறபடியே பிரதிகூலரை அழியச்செய்தும்-
அனுகூலரை உகப்பத்திம் செய்தருளின கிருஷ்ணாவதார சேஷடிதங்களை-அனுபவிக்கிறார் –

39-சாது பரித்ராணமும் துஷ்க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ்-இதில் -இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதிகளுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை அழியச் செய்து
அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான் ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது
அவனை அழியச் செய்யாதே முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –

40-ஈஸ்வர அபிமாநிகளான தேவதைகள் உடைய ரஷண பிரகாரம் சொல்லிற்று கீழ் -இப்பாட்டில் -அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில்
நித்ய ஸூரிகளுக்கு மேல் எல்லையான பிராட்டிமாரோடே -சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன் வாசியற –
தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக விரோதி நிரசன பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார் –

41-நீ உகந்தாரை -தத் சஜாதீயனாய் வந்து அவதரித்து ஸ்வரூப அநுரூபமாக ரஷிக்கும்-படியையும் விமுகரான சம்சாரிகளை சங்கல்பத்தாலே
கர்ம அநுகூலமாக ரஷிக்கும் படியையும் அநுசந்திக்கப் புக்கால் பரிச்சேதிக்க முடியாததாய் இருந்ததீ -என்கிறார் –

42-நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -என்று ஸ்ர்ஷ்டி சம்ஹாரங்கள் சேர ப்ரஸ்துதம்-ஆகையால் -ஏக ஏவ ருத்ர சர்வோஹ்யே ஷ ருத்ர -என்று
சுருதி பிரசித்தராய் இருப்பாரும் உண்டாய் இருக்க -நம்மையே அபரிச்சின்ன ஸ்வபாவராகச் சொல்ல கடவீரோ என்று-பகவத் அபிப்ராயமாக –
அந்த ருத்ரனனுக்கு வந்த ஆபத்தை அவதரித்து தாழ நின்று அந்நிலையிலே போக்கின தேவரீருக்கு இது பரிஹரிக்கை பரமோ என்கிறார் –

43-ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கின வளவே யன்றிக்கே -க்ருஷ்ணனாய் வந்து அவதரித்த-பூபாரமான கம்சனை சபரிகரமாக நிரசிக்கையாலும் –
அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடாதிகளோடு வாசியற ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலைகளிலும் திருவடிகளை-வைத்து உன் சேவை சேஷித்வத்தை
பிரகாசிப்பித்தபடியாலும் ஜகத் காரண பூதன் நீயே என்கிறார் -காலநேமி ஹதோயோ சௌ -என்று பூமி கம்சனை பூபாரமாகச் சொன்னாள் இறே-

44-மண்ணளந்து கொண்ட காலனே -என்று முறை அறிவித்தபடியும்-அஞ்சன வண்ணன் -என்று முறை அறிந்தவர்கள் ஆஸ்ரயிக்கைக்கு சுபாஸ்ரயமான
வடிவும் ப்ரஸ்துதமாய் நின்றது கீழ்-க்ருத்யாதி யுகங்களிலே சேதனர் சத்வாதி குண அநுகூலமாக ச்வேதாதி வர்ணங்களை-விரும்புகையாலே
அந்த காள மேக நிபாஸ்யமான நிறத்தை யழிய மாறி அவர்களுக்கு வர்ணங்களைக் கொண்டு அவ்வவ காலங்களிலே முகம் காட்டச் செய்தேயும்
சம்சாரிகள் காற்கடைக் கொள்ளுவதே -இது என்ன துர்வாசநா பலம் -என்கிறார் –

45-பகவத் சௌலப்யத்தையும் அதிசயத்து இருந்துள்ள சம்சாரிகளுடைய துர்வாசனையால்-வந்த இழவைச் சொன்னார் கீழ் -இதில் அவர்களில் அந்யதமனான
எனக்கு தேவரீர் உடைய பரத்வ சௌலப்யங்களையும் -ஆஸ்ரிதருக்கு எளியனாய் அநாஸ்ரிதருக்கு அரியனாய் இருக்கிற படியையும் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்குவதே -இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் –

46-அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்று ஸ்வரூபத்தை அறிவிக்கையாலே-சம்சாரத்திலே வந்து ஆவிர்பவித்தும் -அவதரித்ததும் –
பெரிய திருவடி தோளிலே ஏறி ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே சென்று ரஷித்த காலம் எல்லாம் இழந்தேன் –
இனி இழவாதபடி -விரோதி நிவர்த்தி பூர்வகமாக நான் உன்னைப் பெரும் விரகு அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

47-பர வியூஹ விபவங்கள் அடங்க ஆஸ்ரயணீய ஸ்தலம் அன்றோ -அதிலே ஓர் இடத்தைப் பற்றி ஆஸ்ரயித்து நம்மைப் பெற மாட்டீரோ என்ன –
அவ்விடங்கள் எல்லாம் நிலம் அல்ல -இனி எனக்கு பிரதிபத்தி பண்ணி-ஆஸ்ரயிக்க வல்லதோர் இடத்தை அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

48-ஆஸ்ரயணீய ஸ்தலங்களை சாமான்யேன பாரித்து வைத்தோம் ஆகில்-அவற்றில் ஒன்றைப் பற்றி ஆஸ்ரயிக்கும் ஆஸ்ரய பூதருக்கு ஆஸ்ரயண
அநுகூலமாக பல ப்ரதராய் இருக்கும் அது ஒழிய – ஆஸ்ரயணீய ஸ்தலத்தை-விசேஷித்து சொல்லுகை நமக்கு பரமோ என்ன –ஆஸ்ரிதர் நாஸ்ரிதர்
விபாகம் அன்றிக்கே நின்ற நின்ற நிலைகளிலே பர ஹிதமே-செய்யும் ஸ்வபாவனான பின்பு என் அபேஷிதம் செய்கை உனக்கே பரம் அன்றோ –என்கிறார்-

49-சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே -என்று இவருக்கு இவர் இருந்த-பூமியிலே சஷூர் விஷயமாய் –அவதாரங்களில் உண்டான
நீர்மைகளும் இழக்க வேண்டாதபடி -குண பூர்த்தியோடே கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸம்ர்தியைக் காட்ட கண்டு -அனுபவிக்கிறார்-

50-ஆந்தர விரோதத்தை போக்க வல்ல அவதார வைபவத்தையும் -பாதக பதார்த்த சகாசத்திலே நிர்பயராய் வர்திக்கலாம்படி அபாஸ்ரயமான தேச வைபவத்தை
சொன்னார்-கீழில் பாட்டில் -இதில்-பாஹ்ய விரோதத்தைப் போக்கவல்ல அவதார வைபவத்தையும்-சர்வ சமாஸ்ரயணீயமான தேச வைபவத்தையும் அருளிச் செய்கிறார் –

51-உபயபாவ நிஷ்டனான ப்ரஹ்மாவானவன் தன் அதிகாரத்துக்கு வரும் விரோதிகளை-பரிஹரிகைக்கு -ப்ரஹ்ம பாவனைக்கும் -பலமான மோஷத்துக்குமாக-
சதுர்தச புவன ஸ்ரஷ்டா என்றும் நாலு வேதங்களையும் ஒருக்காலே உச்சரிகைக்கு ஈடான நான்கு முகத்தை உடையன் அஜன் –

52-ராமாவதாரதுக்கு பிற்பாடர்க்கு கோயிலிலே வந்து உதவினபடி சொல்லிற்று -கீழ் மூன்று பாட்டாலே-இனி -இரண்டு பாட்டாலே கருஷ்ணாவதாரதுக்கு பிறபாடர்க்கு
உதவும்படி சொல்லுகிறது -அநந்தரம் கீழில் பாட்டோடு சங்கதி என் என்னில் -சதுர்தச புவநாத் யஷனாய் ஜ்ஞானாதிகனான ப்ரஹ்மாவுக்கு ஆஸ்ரயணீ யமான
அளவு அன்றிக்கே -அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருந்துள்ளவர்களுக்கு-அனுபவ ஸ்தானம் கோயில் -என்கிறார் –

53-அநிருத்த ஆழ்வானுடைய அபிமத விரோதியாய் -ப்ரபலமான பாண ப்ரமுக வர்க்கத்தை-போக்கினாப் போலே -இன்று ஆஸ்ரிதருடைய
போக விரோதியைப் போக்குகைக்கு அந்த க்ருஷ்ணன் நித்ய வாஸம் பண்ணும் தேசம் கோயில் -என்கிறார் –

54-சம்சாரத்தில் தன பக்கல் ருசி இல்லாதாருக்கு ருசி ஜநகனாகைக்கும்-ருசி பிறந்தாருக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்-
ஆஸ்ரிதரை அஹங்கார ரஹீதமாக அடிமை கொள்ளுகைக்கும் உரியவன் -என்கை-

55-இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி -லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து
எனக்கு மறக்க ஒண்ணாதபடி என்னை அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் -இவ்வாறு 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –

56-இனி மேல் ஆறு பாட்டாலேதிருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் -இதில் -முதல் பாட்டில் –
ஆஸ்ரித விரோதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன் பின்புள்ளாரான -அநந்ய பிரயோஜனருக்கு ஸ்வ ப்ராப்தி-
விரோதிகளைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளுகைகாக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற-படியை அனுபவிக்கிறார் –

57-ப்ராப்தி விரோதியைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளும் அளவு அன்றிக்கே-நித்ய அநபாயிநியான பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான ராவணனை-
அழியச் செய்தாப் போலே –பிற்பாடரான ஆஸ்ரிதருக்கு அநுபவ-விரோதிகளைப் போக்குகைகாகத் திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை-அநுபவிக்கிறார் –

58-ஆஸ்ரித அர்த்தமாக யமளார்ஜுநங்கள் தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தைப்-போக்கின நீ -அக்காலத்துக்கு பிற்பாடருக்கு உதவுகைக்காக
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே வந்து கண் வளர்ந்து அருளினாய் அல்லையோ –என்கிறார்-

59-பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து-அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் –
பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –

60-உகந்து அருளின நிலங்கள் ஆஸ்ரயணீய ஸ்தலம்-போக ஸ்தானம் ஒரு தேச விசேஷம் என்று இராதே-நிலையார நின்றான் -என்று நிலை யழகிலே
துவக்குண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும் இப்படி செய்து அருளிற்று-போக்தாக்களான ஆஸ்ரிதர் பக்கலிலே உள்ள வ்யாமோஹம் இறே -என்கிறார்-

61-இப்படி போக ஸ்தானம் ஆகையாலே ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில் தாம்-அனுபவிக்க இழிந்த இடத்தில் -வாய் திறத்தல் -அணைத்தல் -செய்யாதே –
ஒரு படியே கண் வளர்ந்து அருளக் காண்கையாலே -ஸூகுமாரமான இவ்வடிவைக் கொண்டு த்ரைவிக்ரமாதி சேஷ்டிதங்களைப்-பண்ணுகையாலே -திருமேனி
நொந்து கண் வளர்ந்து அருளுகிறாராக-தம்முடைய பரிவாலே அதிசங்கித்து-என் பயம் கெடும்படி ஒன்றை நிர்ணயித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்கிறார்
இது ஒழிய -ப்ராங்ந்யாயத்தாலே -அர்ச்சாவதார சங்கல்பம் என்ன ஒண்ணாது இறே -இவர்க்கு –

62-திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின இதுக்கு ஹேது நிச்சயிக்க மாட்டாதே பீதர்-ஆனவருக்கு –ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தோடே
திருக் குறுங்குடியிலே நின்று அருளின படியை காட்டக் கண்டு தரித்து -நம்பி உடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து
முரட்டு ஹிரண்யனை -அழியச் செய்தாய் என்பது உன்னையே என்று விஸ்மிதர் ஆகிறார் –

63-தேவரீர் சௌகுமார்யத்தை பாராதே ஸ்ரீ ப்ரஹலாதன் பக்கல் வாத்சல்யத்தால் ப்ரேரிதராய்-ஹிரண்யனை அழியச் செய்யலாம் -விமுகரான சம்சாரிகளுடைய
ஆபிமுக்யத்தை அபேஷித்து-உன் மேன்மையைப் பாராதே -கோயில்களிலே நிற்பது -இருப்பது -கிடப்பது -ஆகிற இது-என்ன நீர்மை என்று ஈடுபடுகிறார் –

64-கீழ்ச் சொன்ன நீர்மையை உடையவன் -எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக-திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணுகையாலே-கீழ்ச் சொன்ன நீர்மை பலித்தது என் பக்கலில் -என்கிறார் –

65-தம் திறத்தில் ஈஸ்வரன் பண்ணின உபகாரமானது தம் திரு உள்ளத்தில் நின்றும் போராமையாலே-பின்னும் அதிலே கால் தாழ்ந்து –திருமலையில் நிலையும்
பரம பதத்தில் இருப்பும் -ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளின இதுவும் எனக்குத் தன் திருவடிகளில் ருசி-பிறவாத காலம் இறே –என்கிறார்-

66-பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய் இருக்க -பகவத் சமாஸ்ரயணம்
அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர்-ஆகிறார் –

67-சம்சாரிகள் தங்களுக்கு ஹிதம் அறிந்திலரே ஆகிலும் -இதில் ருசி பிறந்த வன்று இத்தை இழக்க ஒண்ணாது என்று பார்த்து -இவர்கள் துர்கதியைக் கண்டு
-பரோபதேச ப்ரவ்ர்த்தர் ஆகிறார் -மேல் ஏழு பாட்டாலே -இதில் முதல் பாடு –அர்ச்சிராதி கதியிலே போய் -நிலை நின்ற புருஷார்த்தத்தை லபிக்க வேண்டி இருப்பீர் –
ப்ராப்யமும் ப்ராபகமும் ஆன பகவத் விஷயத்தை ஆஸ்ரயித்து-உங்கள் விரோதியைப் போக்கி-உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

68-சம்சாரிகள் குணத்ரய ப்ரசுரர் ஆகையாலே குண அநுகூலமாக ராஜச தாமச-தேவதைகளை ஆசரயித்து உஜ்ஜீவிக்கப் பார்க்கிறவர்களை நிஷேதியா நின்று கொண்டு –
ஆத்ம உஜ்ஜீவநத்தில் ருசியை உடையராய் -சாத்விகர் ஆனவர்கள் சர்வாதிகனை-ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க பாரும் கோள் -என்கிறார்-

69-எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்-தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்-ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள-வல்லிகோள் -என்கிறார் –

70-வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அவர்களுக்கு சக்தி வைகல்யம்-சொல்லுவான் என் -அவர்களை ஆஸ்ரயித்து தங்கள் அபிமதம் பெற்றார் இல்லையோ
என்ன –ருத்ரனை ஆஸ்ரயித்து அவனுக்கு அந்தரங்கனாய்ப் போந்த பாணன்-பட்ட பாடும் -ருத்ரன் கலங்கிய படியும் தேவர்களே அறியும் அத்தனை இறே -என்கிறார்-

71-பாணனை ரஷிக்க கடவேன் என்று பிரதிக்ஜை பண்ணி ஸபரிகரனாய் கொண்டு-ரஷணத்தில் உத்யோகித்து எதிர் தலையில் அவனைக் காட்டிக் கொடுத்து தப்பி-
போன படியாலும் -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று லஜ்ஜித்து-க்ர்ஷ்ணன் கிருபை பண்ணி அவன் சத்தியை நோக்கின படியாலும்
அவன் ரஷகன் அல்ல என்னும் இடமும்-க்ருஷ்ணனே ரஷகன் என்னும் இடமும்-ப்ரத்யஷம் அன்றோ -இவ்வர்த்தத்தை ஒருவர் சொல்ல வேண்டி இருந்ததோ –என்கிறார் –

72-ருத்ரன் லோகத்திலே மோஷ ப்ரதன் என்று ஆச்ரயிப்பாரும்-ஆகமாதிகளிலே பரத்வத்தை பிரதிபாதித்தும் அன்றோ போகிறது என்னில்-நிர்தோஷ ஸ்ருதியில்
அவனை ஷேத்ரஞ்ஞனாகச் சொல்லுகையாலே லோக-பிரசித்தி வடயஷி பிரசித்தி போலே அயதார்தம் -ஆகமாதிகள் விப்ரலம்பக வாக்யவத்-அயதார்த்தம் -என்கிறார்

73-ஸ்ரீயபதியே ஆஸ்ரயணீயன்-ப்ரஹ்ம ருத்ராதிகள் ஷேத்ரஞ்ஞர் ஆகையாலே அநாஸ்ரணீயர் -என்றதாய் நின்றது கீழ் -இதில் -அந்த ஸ்ரீயபதி தான் தாழ்ந்தாருக்கு
முகம் கொடுக்கைகாக மனுஷ்ய சஜாதீயனாய் தன்னை தாழ விட்டுக் கொண்டு நின்ற நிலையிலே-ப்ரஹ்ம ருத்ரர்கள் உடைய அதிகாரத்தில் நின்றாருக்கு
மோஷ ப்ரதன் என்று கொண்டு –தேவதாந்தரங்களுக்கும் சர்வேஸ்வரனுக்கும் உண்டான நெடுவாசியை அருளிச் செய்கிறார் –

74-ஆஸ்ரயணீயனுடைய பிரசாதமே மோஷ சாதனம் ஆகில் -முமுஷுவான இவ் வதிகாரிக்கு-பிரசாதகமான கர்த்தவ்யம் ஏது என்னில் ஸ்ரீ வாமனனுடைய திருவடிகளில்
தலை சாய்த்தல் -ஷீராப்தி நாதனுடைய சீலத்துக்கு வாசகமான திரு நாமத்தை வாயாலே சொல்லுதல் செய்யவே-புருஷார்த்த சித்தி உண்டு -என்கிறார் –

75-இப்படி அவனை ஆஸ்ரயித்து -அவனுடைய கடாஷத்தாலே பிரதிபந்தக நிரசன-பூர்வகமாக அவனைப் பெறுகை ஒழிய -உபாயாந்தரஙககளிலே இழிந்து
ஆஸ்ரயிப்பாருடைய அருமையை அருளிச் செய்கிறார் -மேல் ஏழு பாட்டுக்களாலே -இதில் முதல் பாட்டில் -கர்ம யோகமே தொடங்கி
-பரம பக்தி பர்யந்தமாக -சாதிக்குமவர்களுடைய துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –

76-த்ரவ்ய அர்ஜநாதி க்லேசம் என்ன -பர ஹிம்சாதி துரிதம் என்ன -இவற்றை உடைத்தாய் –இந்த்ரிய வ்யாபார ரூபமான கர்ம யோகத்தில் காட்டில் –
இந்த்ரியோபாதி ரூபமான ஜ்ஞான யோகத்தில் பிரதமத்தில் இழியுமவர்கள் உடைய-துஷ்கரதையை அருளிச் செய்கிறார்

77-கர்ம ஜ்ஞானன்களை சஹ காரமாகக் கொண்டு ப்ரவர்த்தமான பக்தியாலே-பகவத் லாபத்தை சொல்லிற்று -கீழ் -சர்வ அந்தர்யாமியாய் -ஜகத் காரணபூதனான
சர்வேஸ்வரனை அஷ்டாங்க ப்ரணாமம் முன்னாக -திரு மந்த்ரத்தை கொண்டு பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கிறார் –
இப்பாட்டு முதலாக இதிஹாச புராண ப்ரக்ரியையாலே பகவத் பஜனத்தை அருளிச் செய்கிறார் –

78-உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன -கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி நாதனை சுபாஸ்ரயமாகப்
பற்றி மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து -ஆஸ்ரயித்து -இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள்-பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –

79-ஸ்வேத த்வீப வாசிகளை ஒழிந்த சம்சாரிகளுக்கு அது நிலமோ என்ன -அவதார கந்தமான ஷீராப்தியில் நின்றும் தன் மேன்மை பாராதே-தச ப்ராதுர்பாவத்தை
பண்ணி சுலபனானவன் திருவடிகளிலே-அவதார ரஹச்ய ஜ்ஞானம் அடியான பக்தியை உடையவர்களுக்கு அல்லது-முக்தராக விரகு உண்டோ –என்கிறார்-

80-அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் -இதில் அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை
அநுவதித்து -அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு-ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை –என்கிறார் –

81-வ்யூஹ விபவங்கள் -தேச கல -விபகர்ஷத்தாலே நிலம் அன்று என்ன வேண்டாதபடி-பிற்பாடர் இழவாமைக்கு -திருமலையிலே வந்து நின்று அருளினான் 
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகப் பாரும் கோள் என்று உபதேசத்தை-தலைக்கட்டுகிறார் –

82-இதுக்கு முன்பு பரோபதேசம் பண்ணினாராய் -மேல்-ஈஸ்வரனைக் குறித்து -தேவரீர் திருவடிகளிலே ப்ரேம உக்தர் நித்ய ஸூகிகள் -என்கிறார்
இதுக்கு அடி -பிறருக்கு சாதகமாக தான் உபதேசித்த பக்தி -தமக்கு ஸ்வயம் பிரயோஜனம்-யாகையாலே -தமக்கு ரசித்த படியைப் பேசுகிறார்
இப்பரபக்தி தான் -சாதகனுக்கு உபாயத்தின் மேல் எல்லையாய்-பிரபன்னனுக்கு ப்ராப்யத்திலே முதல் எல்லையாய் -இருக்கும் இறே
இதில் முதல் பாட்டில் –மனுஷ்யத்வே பரத்வத்தையும் -அவதார கந்தமான ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையையும் -அனுசந்தித்து
தேவரீர் திருவடிகளில் ப்ரவணர் ஆனவர்களுக்கு சர்வ தேசத்திலும் ஸூகமேயாம் –என்கிறார்-

83-அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்-உண்டாகக் கூடுமோ -என்னில்-ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்-பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –

84-வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே -என்று கீழ் ப்ரஸ்துதமான பக்தி-தம் பக்கல் காணாமையாலும் -தம்மை பிரக்ர்தியோடே இருக்கக் காண்கையாலும் –
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலும் -அவன் நினைவாலே பேறாகையாலும் –என்திறத்தில் -என் நாதன் தன் திருவடிகளில் பரம பக்தி உக்தனாம்படி
பண்ண நினைத்து இருக்கிறானோ – நித்ய சம்சாரியாகப் போக நினைத்து இருக்கிறானோ -திரு உள்ளத்தில் நினைத்து இருக்கிறது என்னோ -என்கிறார் –

85-என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் –முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே
திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி -இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

86-உம்மை நம் பக்கலில் நின்றும் அகற்றி ப்ரகர்தி வஸ்யர் ஆக்குவோமாக நம் பக்கலிலே-அதிசங்கை பண்ணுவான் என் -என்ன -விரோதி நிரசன
சமர்த்தனான நீ -என் ப்ரகர்தி சம்பந்தத்தை யறுத்து-என் நினைவைத் தலைக் கட்டாது ஒழிந்தால்-அதிசங்கை பண்ணாதே செய்வது என் –என்கிறார் –

87-செய்ய பாதம் நாளும் உள்ளினால் -என்று நீயே எனக்கு அபாஸ்ரயம் என்கையாலே-நம்மை ஒழியவும் எனக்கு வேறு ஒரு பற்று இல்லையோ என்ன –
அபாஸ்ரயமாக சம்பாவனை உள்ள ப்ரஹ்ம ருத்ரர்கள் ஸ்வ அதிகார ஸித்திக்கு-தேவரீர் கை பார்த்து இருக்கும்படியாய் இழிந்த பின்பு -சர்வாதிகரான
தேவரீரை ஒழிய வேறு ஒரு பற்றை உடையேன் அல்லேன் என்று-தம்முடைய அதிகாரத்துக்கு அபேஷிதமான அநந்ய கதித்வ க்யாபநம் பண்ணுகிறார் மேல் –

88-ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரம் ஈச்வரனாலே என்றார் கீழே -இதில் –அவர்கள் தங்கள் ஆபநநிவ்ருத்திக்கு தேவரீர் கை பார்த்து
இருக்கும்படி பரம உதாரரான தேவரீரை ஒழிய வேறு ஒருவரை தேவதையாக மதிப்பேனோ -என்கிறார் –

89-ப்ரஹ்மாதிகளையும் மேன்மை குலையாதபடி நின்று ரஷித்த அளவு அன்றிக்கே -க்ருஷ்ணாஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ -என்கிறபடியே
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யந்களைப் பண்ணி-தாழ நின்று-சத்ய சங்கல்பனாய்க் கொண்டு-விரோதி வர்க்கத்தை அழியச் செய்து
ராஜ்யத்தை கொடுத்த -உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் உண்டு என்று-நான் நினைத்து இருப்பேனோ –என்கிறார் –

90-உன்னை ஒழிந்தார் ஒருவரை ஆஸ்ரயணீயர் என்று இரேன் என்று தம்முடைய-அநந்ய கதித்வம் சொன்னார் கீழ் -இப்பாட்டில் -ஆஸ்ரயணீயர் தேவரீரே ஆனாலும்
தேவரீரை லபிக்கைக்கு-தேவரீர் திருவடிகளை ஒழிய-என் பக்கல் உபாயம் என்று சொல்லல் ஆவது இல்லை என்று-தம்முடைய ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –

91-சாஸ்திரபலம் ப்ரயோக்த்ரி -என்று பேறு உம்மதானால் உம்முடைய விரோதி நிவ்ர்திக்கு-நீரே கடவர் ஆக வேண்டாவோ -நின்னிலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் –
என்கிறது எத்தாலே என்ன -ப்ராங் ந்யாயத்தாலே -அது என் என்னில் -அசோகவ நிகையிலே இருந்த பிராட்டி தேவரீரை லபிக்கைக்கு ராஷச வதத்தாலே
அவள் யத்னம் பண்ணும் அன்று அன்றோ நான் என்னுடைய விரோதியை போக்குகைக்கு யத்னம்-பண்ணுவது -ஆனபின்பு-
அநந்ய கதியாய்-அகிஞ்சனான என்னை-ஸ்வ ரஷணத்தில் மூட்டி அகற்றாது ஒழிய வேணும் -என்கிறார் –

92-நின்னை என்னுள் நீக்கல் -என்றீர்-நாம் உம்மை அகலாது ஒழிகைக்கு நம் அளவிலே நீர் செய்தது என்ன-நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன -நிருபாதிக
சரண்யரான தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை-உன்னுடைய கார்யம் எனக்கு பரம் -நீ பயப்பட வேண்டாம் -என்று-பயம் தீர –மாசுச -என்ன வேணும் –என்கிறார் –

93-அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்று பயம் கெட -மாசுசா -என்ன-வேணும் என்றீர் கீழ்-இவ்வளவே அமையுமே என்ன –உபாயாந்தரங்களைக் காட்டி
என்னை அகற்றாது ஒழிக்கைகாக சொன்ன வார்த்தை யன்றோ யது-தேவரீர் உடைய நிரதிசய போக்யதைக் கண்டு அனுபவிக்கிற ஆசைப்படுகிற எனக்கு விஷயாந்தர
நிவ்ர்த்தி பூர்வகமாக -தேவரீரையே நான் அனுபவிக்கும்படி-என் பக்கலிலே இரங்கி யருள வேணும் என்று பெரிய பெருமாள் திருவடிகளில்-அனுபவத்தை அபேஷிக்கிறார் –

94-த்வத் அநுபவ விரோதிகளைப் போக்கவும் -அதுக்கு அநுகூலங்கள் ஆனவற்றை உண்டாக்கவும் -அநுபவம் தன்னை அவிச்சின்னமாக்கவும் வேணும் என்று
அபேஷிக்க ப்ராப்தமாய் இருக்க-இரங்கு -என்று-இவ்வளவு அபேஷிக்க அமையோமோ -என்ன-உனக்கு பிரகாரமாய் இருக்குமது ஒழிய ஸ்வ தந்த்ரமாய்
இருப்பதொரு பதார்த்தம்-இல்லாமையாலே என் அபிமத ஸித்திக்கு உன் இரக்கமே யமையும் -என்கிறார் –

95-எம்பிரானும் நீ யிராமனே -என்று நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல சக்தனுமாய்-ஸ்வ தந்த்ரனனுமான சக்கரவர்த்தி திருமகனே உபாயம் என்றார் -கீழ் –
இதில் -உபாயத்தில் தமக்கு உண்டான அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் -பாஹ்ய விஷய ருசியைத் தவிர்த்து-உன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
கைங்கர்யத்தை பிரார்த்திக்கும்படி-புகுர நிறுத்தின நீ -என்னை உபேஷித்து விஷயாந்தர ப்ரவணனாம் படி கை விட்டாலும்-
உன்னை ஒழிய வேறொரு கதி இல்லை என்று-தம்முடைய அத்யவசாயத்தை யருளிச் செய்கிறார் –

96-தம்முடைய வ்யசாயத்தை அருளிச் செய்தார் கீழ் பாட்டில் -இதில் -அஞ்சேல் என்ன வேண்டுமே -என்றும் இரங்கு அரங்க வாணனே -என்றும்
பல படியாக அபேஷியா நின்றீர் -உம்முடைய ப்ராப்யத்தை நிர்ணயித்து சொல்லீர் –என்ன-நான் சம்சாரத்தை அறுத்து நின் திருவடிகளில்
பொருந்தும்படியாக பிரசாதத்தைப்-பண்ணி யருள வேணும் என்று தம்முடைய ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறார்-

97-வரம் செய் புண்டரீகனே –என்னா நின்றீர் -நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய பக்கல் ஒரு முதல் வேண்டாவோ -என்ன
திரு மார்பிலே பிராட்டி எழுந்து அருளி இருக்க -திருக் கையிலே திவ்ய ஆயுதங்கள் இருக்க-ஒரு முதல் வேணுமோ
அங்கனம் ஒரு நிர்பந்தம் தேவரீருக்கு உண்டாகில்-என் விரோதியைப் போக்கி-உன்னைக் கிட்டி அடிமை செய்கைக்கு
ஹேதுவாய் இருப்பதோர் உபாயத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார்-

98-நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய தலையிலே ஒரு முதல் வேணுமே-என்னை நீயே தர வேணும் என்னக் கடவீரோ -என்று பகவத் அபிப்ராயமாக
புருஷார்த்த ருசியாலே வந்த ப்ராதிகூல்ய நிவ்ர்த்தியும் புருஷார்த்த ருசியுமே-ஆலம்பநமாக நான் சம்சார துரிதத்தை தப்பும்படி நீயே பண்ணியருளவேணும் -என்கிறார் –

99-புருஷார்த்த ருசி பிறந்த பின்பு -அத்தாலே வந்த பிரதிகூல்ய நிவ்ர்த்தியை உம்முடைய-பக்கல் முதலாக சொல்லா நின்றீர் -அநாதி காலம் நரக ஹேதுவாகப் பண்ணின
ப்ராதிகூல்யங்களுக்கு போக்கடியாக-நீர் நினைந்து இருந்தது என் -என்ன -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்ற
உன்-திருவடிகளில் ந்யச்த பரனான இது ஒழிய வேறு போக்கடி உண்டோ -ஆனபின்பு-கீழ் சொன்ன கர்மம் அடியாக வருகிற யம வச்யதையை தவிர்த்து –
எனக்கு உன் திருவடிகளிலே அவிச்சின்னமான போகத்தை தந்து அருள வேணும் -என்கிறார்-

100-இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன –அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –

101-நீர் நம்மை ப்ரார்த்திக்கிற பரபக்தி -விஷயாந்தரங்களின் நின்றும் நிவ்ர்த்தமான-இந்திரியங்களைக் கொண்டு -நம்மை அநவரத பாவனை பண்ணும் அத்தாலே
சாத்தியம் அன்றோ -என்ன -அங்கனே யாகில் ஜிதேந்த்ரியனாய் கொண்டு அநவரத பாவனை பண்ணுவேனாக-தேவரீர் திரு உள்ளமாக வேணும் -என்கிறார்-

102-விச்சேத ப்ரசங்கம் இல்லாத அநவரத பாவனைக்கு சரீர சம்பந்தம் அற வேணும் காண் -என்ன–எனக்கு ருசி உண்டாய் இருக்க –
தேவரீர் சர்வ சக்தியாய் இருக்க -அனுவர்த்திக்கிற இந்த அசித் சம்சர்க்கத்தை தேவரீர் அறுத்து தந்து அருளும் அளவும்-நான் தரித்து இருக்கும்படி
-இன்னபடி செய்கிறோம் என்று -ஒரு வார்த்தை யாகிலும்-அருளிச் செய்ய வேணும் -என்கிறார்-

103-அசித் சம்பந்தம் தேக அவஸானத்திலே போக்குகிறோம் -நீர் பதறுகிறது என் -என்ன -அங்கனே ஆகில் –தேவரீர் உடைய-மேன்மைக்கும்-நீர்மைக்கும்-
வடிவு அழகுக்கும்-வாசகமான திரு நாமங்களை நான் இடைவிடாது மனநம் பண்ணிப் பேசுகைக்கு-ஒருப்ரகாரம் அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

104-யத் கரோஷியதச் நாஸி -என்றும் -த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும்-இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி –
சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே -நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ -உரை செய் -என்கிறது என் -என்ன –
நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க-நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ-
நீயே என் விரோதியைப் போக்கி -உன்னை நான் மேல் விழுந்து -இடைவிடாதே-அனுபவிக்கும்படி பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

105-நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும்-நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும்-ஹேது என் என்ன –
பிராட்டி புருஷகாரமாக -குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே-தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே-
உபாயாந்தர அபேஷை இல்லை –தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –

106-நின்ன வண்ணம் அல்லதில்லை -என்று தாம் வடிவு அழகிலே துவக்குண்டபடி சொன்னார் கீழ் –இதில் -தேவரீர் உடைய ஆபத் சகத்துவத்துக்கு
அல்லது நான் நெகிழிலும் என்னெஞ்சு வேறு ஒன்றில் ஸ்நேஹியாது என்கிறார் –

107-கீழ் இரண்டு பாட்டாலும் -தமக்கும் தம் உடைய திரு உள்ளத்துக்கும் உண்டான பகவத் பிரேமத்துக்கு அடியான-வடிவு அழகையும்-ஆபத் சகத்வத்தையும்
பேசினார் -இதில் –அந்த சங்க விரோதியான பிரபல ப்ரதிபந்தங்களை பிரபலமான அசுரர்களை அழியச் செய்தாப்-போலே போக்கின உன் திருவடிகளுக்கு அல்லது-வேறு ஒரு விஷயத்தில் நான் சங்கம் பண்ணேன் என்கிறார்

108-நின் புகழ்க்கலால் ஒரு நேசம் இல்லை நெஞ்சம் -என்றும் -நின் கழற் கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் -என்றும் -சொல்லக் கடவது இ றே
இதுக்கு விஷயமாக நம்மைக் கிட்டி அநுபவிக்கப் பார்த்தாலோ என்ன -போக மோஷ சுகங்களை அனுபவிக்கப் பெற்றாலும்
உன்னை ப்ராபிக்க வேணும் என்னும் ஆசை ஒழிய-மற்று ஒன்றை விரும்பேன் -என்கிறார் –

109-கீழ்-நம் பக்கல் உமக்கு உண்டாகச் சொன்ன ஆசை -ஸ்வ யத்னத்தாலே அநவரத பாவனை-பண்ணியும் -சததம் கீர்த்தனம் பண்ணியும் பெறுவார் உடைய ஆசை போல் இருந்ததீ –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும் -திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவனே -என்றும் தொடங்கி-நின் நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது
உரைக்குமாறு உரை செயே -என்றும் -கூடும் ஆசை யல்லதொன்று கொள்வேனோ -என்றும்-பேசினீரே என்ன –உன்னுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் என்னைப் ப்ரேரிக்க
காலஷேப அர்த்தமாக பேசி நின்ற இத்தனை -அது தானும் வேதங்களும் -வைதிக புருஷர்களும் பேசிப் போரக் காண்கையாலே-பேசினேன் இத்தனை -என்கிறார்-

110-தத்விப்ராசோ விபந்யவ -என்கிறபடியே -அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரும் -தேவர்களும் -முநிக் கணங்களும் -ஏத்திப் போந்த விஷயத்தை -நித்ய சம்சாரியாப் போந்த நான் ஏத்தக்
கடவேன் அல்லேன் -தான் செல்லாமையால் புகழ்ந்தான் என்று திரு உள்ளம் பற்றி-பொறுத்தருள வேணும் என்று -கீழ்-ஏத்தினேன் -என்றதற்கு ஷாபணம் பண்ணுகிறார் –

111-தம்முடைய தண்மையை அனுசந்தித்து –பொறுத்து நல்க வேணும் -என்றார் -கீழ் பாட்டில் -இதில் -பகவத் ப்ரபாவத்தை அனுசந்தித்து கால ஷேப அர்த்தமாக
பண்ணின அநுகூல வ்ர்த்தியால் வந்த குற்றத்தையும் -ப்ராமாதிகமாக செய்த குற்றத்தையும் -குணமாக கொள்ள வேணும் –என்கிறார் –

112-கீழ் இரண்டு பாட்டாலே -இத்தலையில் குற்றத்தை பொறுக்க வேணும் என்று ஷாபணம்-பண்ணி -அக் குற்றங்களை குணமாக கொள்ள வேணும் என்றார் -இப்பாட்டில்-
-திரு உள்ளத்தை குறித்து -ஆயுஸூ எனக்கு இன்ன போது முடியும் என்று தெரியாது -அவன் திருவடிகளில் வணங்கி வாழ்த்தி கால ஷேபம் பண்ணப் பார் –என்கிறார் –

113-மீள்விலாத போகம் நல்க வேண்டுமே -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்ய போகமே-பாரதந்த்ர்யத்தினுடைய எல்லையிலே பெறுமதாய் இருக்க -தத் விருத்தமான
துர்மாநாதிகளாலே அபஹதராய் இருந்த நமக்கு அந்த பேறு-பெருகை கூடுமோ -என்ன -திரு உள்ளத்தைக் குறித்து-துர்மாநத்தாலே ப்ரஹ்ம சிரஸை யறுத்த
ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவனே நமக்கு பாரதந்த்ர்ய விரோதியான துர்மாநத்தைப் போக்கிப் பேற்றைத் தரும்-
நீ அவனை உபாயம் என்று புத்தி பண்ணி இரு –என்கிறார் –

114-இப்படியானால் நமக்கு கர்த்தயம் என் -என்ன -ஜ்ஞான ப்ரதானமே தொடங்கி-பரமபத ப்ராப்தி பர்யந்தமாக-நம் பேற்றுக்கு உபாயம்-நஷ்டோத்தரணம் பண்ணின
ஸ்ரீவராஹ நாயனார் திருவடிகளே என்று நினைத்து-சரீர அவசாநத்து அளவும்-காலஷேப அர்த்தமாக-அவனை வாழ்த்தப் பார் -என்கிறார் –

115-அவன் -அவாக்ய அநாதர என்கிறபடியே ஸ்வயம் நிரபேஷன் -நாம் அநேக ஜன்மங்களுக்கு அடியான கர்மங்களைப் பண்ணி வைத்தோம் –
அவன் திருவடிகளே உபாயம் -என்று நினைத்த மாத்ரத்தில் நம்மை ரஷித்து அருள-கூடுமோ என்று -சோகித்த திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வவித பந்துவுமாய் -சகல விரோதிகளையும் போக்கி -தன்னைத் தருவானாக-ஏறிட்டுக் கொண்டான் -நீ இனி சோகிக்க வேண்டாம் என்று –
திரு உள்ளத்தைக் குறித்து -மாசுச -என்கிறார்

116-மேலுள்ள ஜன்ம பரம்பரைகளுக்கு அடியான கர்மத்தைப் போக்கி அடிமை கொள்ளுவானாக-ஏறிட்டு கொண்டான் -என்றார் -கீழ்-இதில் –
நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி-நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து-நமக்கு தஞ்சமான
சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு -யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ –என்கிறார்-

117-யம வஸ்யதா ஹேதுவான கர்மங்கள் போனாலும் -தேக ஆரம்பகமாய் இருந்துள்ள-ப்ராரப்த கர்மம் கிடந்தது இல்லையோ -என்ன -அந்த பிராரப்த கர்மாவையும்
-தத் ஆச்ரயமான தேகத்தையும் போக்கி -பரம பதத்தில் கொண்டு போவான் ஆன பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறை இல்லை-என்கிறார் –
பூர்வாஹகம் ஆகிறது-தேக பரம்பரைக்கு ஹேதுவாகவும் -நரக ஹேதுவாயும் -ப்ராரப்தமாய் -அநுபவ விநாச்யமாயும் -மூன்று வகைப்பட்டதாய்த்து இருப்பது –
அதில் -உபாசகனுக்கு -பிராரப்த கர்மம் ஒழிந்தவை நஷ்டமாகக் கடவது -பிராரப்த கர்மம் அநுபவ விநாச்யமாகக் கடவது –
பிரபன்னனுக்கு -பகவத் ப்ரசாதத்தாலே த்ரிவித கர்மங்களும் அநுபவிக்க வேண்டியது இல்லை –

118-வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி -என்று பிராரப்த கர்ம அவஸாநமான விரோதி நிவ்ர்த்திக்கும்-மீள்விலாத போகம் நல்க வேண்டும் -என்றும் –
நம்மை ஆட்கொள்வான் -என்றும் -வானில் ஏற்றுவான் -என்றும் –சொன்ன ப்ராப்ய ஸித்திக்கும்-ஈச்வரனே கடவான் என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டில் -ஈஸ்வரனை நோக்கி -தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான ப்ராப்ய ருசியை-ஆவிஷ்கரிக்கிறார் -இதில்

119-கரணதுக்கும் க்ர்தர் பாவம் பிறக்கும்படியாக உமக்கு நம் பக்கல் பிறந்த அபிநிவேசம்-சம்சாரத்தில் கண்டு அறியாத ஒன்றாய் இருந்தது -இவ் வபிநிவேசதுக்கு
அடி என் -என்று – பெரிய பெருமாள் கேட்டருளஉம்முடைய வடிவு அழகையும் சீலத்தையும் காட்டி -தேவரீர் பண்ணின க்ர்ஷி பலித்த பலம் அன்றோ -என்கிறார் –

120-உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு -என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை
சொன்னார் -கீழ்-இதில் -கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே-நிர்ஹேதுகமாக-பெரிய பெருமாள்
தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே-விரோதி வர்க்கத்தை அடையப் போக்கி -அபுநா வ்ர்த்தி லஷணமாய்
நிரதிசய ஆநந்த ரூபமான-கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று -என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -77-108-/அவதாரிகை /-ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

April 15, 2017

77-தாம் அபேஷித்த படியே திருவடிகளை கொடுத்து அருளப் பெற்று க்ருத்தார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து
-இவை எல்லாம் செய்த பின்பு-இனிச் செய்வதாக நினைத்து அருளுவது ஏதோ ?–என்கிறார்-

கீழ் பாட்டிலே எம்பெருமானாரை குறித்து -தேவரீருடைய திருவடிகளை சர்வதா அனுபவித்துக்-கொண்டு இருக்கும் படி எனக்கு தந்து அருள வேணும் -என்ன –
அவரும் உகந்து அருளி-தாம் அபேஷித்த படியே விலஷணமான கிருபையை பண்ணி -திருவடிகளைக் கொடுக்க -அவரும் க்ர்த்தார்த்தராய் -வேத பிரதாரகரான
குதர்ஷ்டிகளை பிரமாண தமமான அந்த வேதார்த்தங்களைக் கொண்டே நிரசித்தும் -பூமிப் பரப்பு எல்லாம்-தம்முடைய கீர்த்தியை எங்கும் ஒக்க வியாபித்தும் -என்னுடைய ப்ராப்தி பிரதிபந்தக கர்மங்களை வாசனையோடு ஒட்டியும் -இப்படி பரமோதாரரான எம்பெருமானார் எனக்கு
இன்னமும் எத்தை உபகரித்து அருள வேணும் என்று நினைத்து இருக்கிறார் -என்கிறார் –

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ –என்கிறார் –
————————–
78-இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் -தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி -இப்படி என்னைத் திருத்தி
தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -லோகத்தை எல்லாம் பிரமித்து அளித்த குத்ர்ஷ்டிகளை பிரபல பிரமாணங்களாலே-நிரசித்து -தம்முடைய பாபங்களை எல்லாம் போக்கி
இன்னும் அதுக்கு மேலே சிறிது கொடுக்க வேணும் என்று நினைத்தார்-என்று எம்பெருமானார் செய்த உபகார பரம்பரையை அடைவே அனுசந்தித்து -இதிலே
தரிசு கிடந்த தரையை செய் காலாகும் படி-திருத்தும் விரகரைப் போலே -இவ்வளவும் விஷயாந்தர ப்ரவணனாய் போந்த என்னைத் திருத்துகைக்காக –
படாதன பட்டு -அரியன செய்து -திருத்தி -தேவரீருக்கு வகுத்த விஷயமான ஸ்ரீயபதிக்கு ஆளாகும்படி பண்ணி அருளின பின்னும்-
வேறு சில அயதார்த்தங்களை என்னுடைய மனசில் வலிய பொருத்திலும் – பொருந்தாதே இருப்பன் –என்கிறார் –

இங்கனம் தமக்கு செய்து அருளிய உபகாரங்களை அனுசந்தித்த பிறகு -தம்மைத் திருத்துவதற்காக அவர் பட்ட வருத்தங்களைச் சொல்லி
இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-வேறு ஒரு பொய்ப் பொருளை
என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் –
—————————-
79-எம்பெருமானார் யதார்த்த ஜ்ஞானத்தை கொடுக்கையாலே அயதார்த்தங்கள்-தமக்கு பொருந்தாத படியாயிற்று என்று ஸ்வ நிஷ்டையை யருளிச் செய்தார் கீழ்
உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க -அருமந்த ஜ்ஞானத்தை இழந்து –இவ்விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து–இன்னாதாகிறார் இதில் –

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் தம்முடைய மனோ தோஷத்தைப் போக்கி –அது தன்னைத் திருத்தி –சம்யஜ்ஞ்ஞானத்தை பிறப்பித்து-ஸ்ரீயபதிக்கு சேஷம் ஆக்கின பின்பு
என்னுடைய மனசு வேறு ஒன்றைத் தேடித் போமோ-என்று தம்முடைய அத்யாவச்ய தார்ட்யத்தை அருளிச் செய்து -இதிலே -அந்தப்படியே சம்சாரி சேதனருக்கும்-
அத்யாவசிக்க ப்ராப்தமாய் இருக்க -அது செய்யாதே -ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வம் -ஷணிகத்வம்-தொடக்கமான வேதார்த்த விருத்தார்ந்தகளை
வாய் வந்தபடி பிரலாபிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத-ப்ரேமேயத்தை வாசனையோடு ஒட்டி விட்ட பின்பு -அந்த மறைக் குறும்பாலே வ்யாப்தமான
பூ லோகத்திலே-சத்யமான அர்த்தத்தை -எம்பெருமானார் இருக்கச் செய்தேயும் சஜாதீய புத்தியாலே-அவரை விட்டு அகன்று வேறு ஒரு தேவதை நம்மை
ரஷிக்க-கடவது உண்டோ என்னும் உள் வெதுப்பாலே சுஷ்கித்துப் போய் வ்யர்த்தமே சம்சயாத்மாக்களாய் நசித்துப்-போகிறவர்கள் படியைக் கண்டு இன்னாதாகிறார் –

எம்பெருமானார் உண்மை யறிவை  உபதேசித்தமையால் எனக்குப் பொய்ப் பொருள்-பொருந்தாத நிலை ஏற்பட்டதென்று -தன் நிலை கூறினார் கீழே-
உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும்
எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் –இப்பாசுரத்தில் –
—————————-
80-இவ்விஷயத்தை ஆஸ்ரயிக்க இசையாத சம்சாரிகள் நிலையைக் கண்டு இழவு பட்டார் கீழ் .-உம்முடைய நிஷ்டை தான் இருக்கும் படி என் -என்ன –இவ்விஷயமே
உத்தேச்யம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-ஒழிவில் காலத்தில் -திரு வாய் மொழி – 3- 3-1 – படியே நான் அடிமை செய்வேன் -என்கிறார்-

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணியும் -பிரமாணிகமாக வேத மார்க்க-பிரதிஷ்டாபநம் பண்ணியும் இருக்கச் செய்தே அஜ்ஞான பிரசுரமான இந்த பூலோகத்திலே
இருந்துள்ள சேதனர் அவரை ஆஸ்ரயிக்க இசையாதே -வேறொரு ரஷகாந்தரம் உண்டோ என்று தேடித் தடுமாறி திரிந்து -அவசன்னராய் விட்டாட்கள் என்று அவர்கள் படியை சொல்லி
-இதிலே -அவர்களை போல் அன்றி -அவர்களைக்காட்டில் அத்யந்த விலஷணராய் எம்பெருமானார் திரு நாமத்தையே விஸ்வசித்து இருக்கும் மகாத்மாக்கள் இடத்தில்
பக்த ச்நேகராய் -ஒருக்காலும் அவர்களை விஸ்மரியாதே இருக்குமவர்கள்யாவர் சிலர் –அந்த ததீயர்க்கே சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
சர்வ வித கைங்கர்யங்களையும் -சர்வ கரணங்களாலும்-சர்வரும் அறியும்படி -பண்ணக் கடவேன் என்று தம்முடைய நிஷ்டையை சொல்லுகிறார் –

எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி உய்வுறாதவர்களும்-சொன்னாலும் -அதனுக்கு இசையாதவர்க்களுமான-சம்சாரிகள் நிலையைக் கண்டு தாம் இழவு பட்டார் கீழே –
சம்சாரிகள் நிலை கிடக்கட்டும் -உம்முடைய நிலை எவ்வாறு உள்ளது -?என்பாரைநோக்கி-எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு-இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் –
———————————
81-எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தி சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருத்திகளும்-பண்ணுவேன் என்றார் கீழே .
இந்நிலைக்கு -முன்பு இசையாத தமக்கு இந்த ருசி உண்டாயிற்று -எம்பெருமானார் பிரசாதத்தாலே
ஆகையாலே -தமக்கு அவர் செய்த உபகாரத்தை -அவர் தம்மைக் குறித்து விண்ணப்பம் செய்து -தேவரீர் உடைய கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

கீழ்ப் பாட்டில் சர்வோத்தமரான எம்பெருமானார் உடைய சம்பந்தி சம்பந்திகளுக்கே-சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ கரணங்களாலும்
சர்வ வித கைங்கர்யங்களும் செய்யக் கடவேன் என்று அவர்கள் பக்கலிலே தமக்கு உண்டான ஊற்றத்தை சொல்லி -இதிலே –
எம்பெருமானார் திரு முக மண்டலத்தைப் பார்த்து இவ்வளவும் தேவரீருக்கு சேஷ பூதராய்-இருக்கிறவர்கள் திறத்திலே அடிமை தொழில் செய்ய இசையாத என்னை
தாம் உகந்தாரை-தமக்கு அந்தபுர பரிகரமாக்குகிறவர்கள் விஷயத்தில் அடிமை படுத்துகைக்கு உத்தேசிக்கலாய்-தன் அடியார்க்கு அடிமை படாதே இருக்கிறவர்களுக்கு
அந்த திருவடிகளை கொடுக்க இசையாது-இருக்கிற பெரிய பெருமாளுடைய திருவடிகளில் சேர்த்து அருளின தேவரீர் உடைய பரமகிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

எம்பெருமானார் அடியார் அடியார் கட்கே -எல்லா அடிமைகளும் செய்வேன் என்றார் கீழே -இதனில் இந்நிலை ஏற்படுவதற்கு முன்பு ஏனைய சம்சாரிகள் போலே
இவ் விஷயத்தில்-இசைவில்லாமல் இருந்த தமக்கு –எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை-நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை -நேரே அவரைநோக்கி –
விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை –என்கிறார் .
—————————————————-

82-அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் -என்று கீழ்ச் சொன்ன-பேற்றுக்கு உடலாக தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து –
வித்தராய் -எம்பெருமானார் என்ன தார்மிகரோ –என்கிறார் –

அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச -என்று-கீழ் பிரஸ்த்துதமான பரம புருஷார்த்தத்துக்கு உறுப்பாக சம்சார ப்ரவ்ருத்திகளிலே மண்டி இருந்து
சம்யஜ்ஞ்ஞானத்தை பெற மாட்டாதே -அதி குரூரமான துஷ் கர்மத்தாலே தேகாத்மா அபிமானியாய் கொண்டு -ஒன்றிலும் ஒரு நிலை இன்றிக்கே தட்டித் திரிகிற என்னை
ஆண்டுகள் நாள் திங்கள் -என்றால் போல் சிர காலம்-கூடி இன்றி அன்றிக்கே ஒரு ஷண மாத்ரத்திலே தானே நிஸ் சம்சயமாக தத்வ ஹித புருஷார்த்தங்களை
தத் யாதாம்யத்தளவும் உபதேசித்து -உபமான ரஹீதமான ஸ்ருதயத்தை உடை யேனாம் படி பண்ணி-சர்வ விஷயமாக வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் என்னலாம் படி
பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ என்று அனுசந்தித்து வித்தார் ஆகிறார்-

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –
——————————-
83-பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன-உம்முடைய ச்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன –
-நான் பிரபத்தி பண்ணி பரமபதம் பெறுவார் கோடியில் அன்று -தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலெ பெருமவன் -என்கிறார்

கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் –என்று சொன்னவாறே -அத்தைக் கேட்டருளி
உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார்-என்று நீர் நம்மை ச்லாகித்தீர் -உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது
ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில்-கொண்டு போகைக்கு பக்த கங்கனராய் அன்றோ நாம் அவதரித்தது -ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும்
தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று -எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்-பார்த்து நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும்
போலே பகவத் சரணா கதியைப் பண்ணி பரம பதத்தை பிராப்பிப்போம்-என்று இருந்தேன் அல்லேன் காணும் –தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை
தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார் –

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் -ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன -ஏனையோர் கேள்வி அறிவு
பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி-அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் -அவர் கூட்டத்தில் சேராது
தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை –என்கிறார்-
————————–
84-மேல் பெரும் அம்சம் கிடக்கச் செய்தே இதுக்கு முன்பு தான் பெற்றவை தனக்கு-ஒரு அவதி உண்டோ -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பிரதம பர்வ கோஷ்டியிலே அந்வயியாதே இருக்கிற என்னை சரம பர்வமான-எம்பெருமானார் திருவடிகளை பரம ப்ராப்யமாக இவர்
அத்யவசித்து இருக்கிறார் என்று லோகத்தார் எல்லாரும்-அறியும் படி பண்ணி யருளினார் என்று சொல்லி -இதிலே -எனக்கு வகுத்த சேஷியான எம்பெருமானாரை
கண்ணாரக் கண்டு -அந்த காட்சி கொழுந்து விட்டு ஓடிப் படர்ந்து -ததீய பர்யந்தமாக வளருகையாலே-அவர்கள் திருவடிகளில் அடிமைப் பட்டு அதி குரூரமான
துஷ் கர்மங்களை கட்டடங்க விடுவித்துக் கொண்டு -அவருடையகல்யாண குணாம்ர்தத்தை வாயார அள்ளிக் கொண்டு பருகா நின்ற நான்
இன்னமும் பெற்றவற்றை சொல்லப் புக்கால் -மேல் பெற வேண்டுமவற்றுக்கு ஒரு தொகை இன்றிக்கே இருக்கச் செய்தே இவை தன்னை
ஒரு வாசகம் இட்டு என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்கிறார் –

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை-ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ -என்கிறார்-
———————————-
85-இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் —அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றீர் -இரண்டில் உமக்கு ஊற்றம் எதிலே என்ன –
எம்பெருமானாருக்கே அனந்யார்ஹ்யமாய் இருப்பார் திருவடிகள் ஒழிய-என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

இராமானுசன் –தன்னை கண்டு கொண்டேன் -என்றும் -அவர் தொண்டர் பொற்றாளில்-தொண்டு கொண்டேன் –என்றும் தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும் ஈடுபடா நின்றீர்
ஆனால் இவ்விரண்டிலும்-வைத்துக் கொண்டு உமக்கு எந்த விஷயத்தில் ஊற்றம் அதிசயித்து இருக்கும் -என்ன -அருகே இருந்து கேட்டவர்களைக் குறித்து -தாம் அதிகரித்துப் போந்த வேதத்தின் உடைய பொருளாய் கொண்டு -அந்த வேத ஸ்ரச்சுக்களான வேதாந்தங்களிலே-ப்ரதிபாத்யனான அவனே நமக்கு வகுத்த சேஷி என்று அறிய பெறாதே
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டும்-கதாகதங்களாலே இடர்பட்டும் போருகிற சம்சாரிப்ராயருடைய அறிவுகேட்டை விடுவித்த எம்பெருமானாருக்கு
அனந்யார்ஹரர் ஆனவர்களுடைய திருவடிகளை ஒழிய என் ஆத்மாவுக்கு வேறு ஒரு அபாஸ்ர்யம் இல்லை என்கிறார் –

இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் -என்றும்-அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் சொன்னீர் இவ்விரண்டு விஷயங்களிலும்
உமக்கு எதனில் ஈடுபாடு அதிகம் -என்பாரை நோக்கி –எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார்-
—————————————
86-இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு-யாதொன்றும் பற்று இல்லை -என்ற அநந்தரம் -முன்பு அப்ராப்த விஷயங்களை
பற்றி இருப்பாரை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவிலே தாம் ப்ராவண்யராய்-போந்த படிகளை யனிசந்தித்து -இனி அது செய்யேன் –
எம்பெருமானாரை சிந்திக்கும் மனச்சு உடையார் ஆரேனும் ஆகிலும் அவர்கள் என்னை யாள உரியவர் என்கிறார்-

இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று-இல்லையே -என்று தம்முடைய நிஷ்டையை சொன்னார்
இப்பாட்டிலே -முற் காலம் எல்லாம் அப்ராப்த விஷயங்களை-தங்களுக்கு அபாஸ்ர்யமாக பற்றிக் கொண்டு -போந்து அவர்களை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவில்
தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்கிற படியே தாம் அதி மாத்ரா ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து-பீத பீதராய் அப்படி செய்யக் கடவேன் அல்லேன்
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறியக் கடவரான பெரியோர்களாலே ஸ்துத்திக்கப் படுகிற எம்பெருமானாரை சிந்திக்கும் மனசை –
நிதி பெற்றால் போலே லபித்தவர்கள் ஆரேனும் ஆகிலும் அவர்களே என்னை ஆள உரியவர்கள் என்கிறார் –

இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் வேறு எதுவும் பற்று இல்லாத-நிலை எனக்கு இன்றையது -முன்போ -வேறு விஷயங்களில் ஈடுபட்டு
ஒன்றுக்கும் உதவ மாட்டாத அற்ப மனிசர்களை அண்டி -அந்நிலையை விட மாட்டாது -அவர்களை உறவினராக நினைத்து -அவர்கள் மிக பரிவு கொண்டு இருந்த நிலை .
இனி-அந்நிலை எனக்கு மீளாது -எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர்-எவராயினும் -அவர் -மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு -உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –
—————————–
87-சேதனருடைய ஜ்ஞான வ்யவசாயங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள-கலி காலத்திலே – உமக்கு இந்த வ்யவசாயம் ஒருபடிப் பட நில்லாது இறே-என்ன –
அது ஆக்கிரமிப்பது எம்பெருமானாராலே உபக்ருதமான ஜ்ஞானத்திலே அனந்விதராய்-இருந்துள்ளவர்களை -என்கிறார் –

அவர் எம்மை நின்று ஆளும் என்று ததீயர் விஷயமாக உமக்கு உண்டான ப்ராவண்யத்தை சொன்னீர்-ஆனால் சேதனருடைய ஜ்ஞான வ்யவஸாய பிரேமங்கள்
கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள இந்த கலி காலத்திலேயே-உமக்கு இப்படிப்பட்ட அத்யாவசியம் என்றும் ஒக்க ஒருபடி பட்டு இருக்கக் கூடுமோ என்று அருகே இருப்பார் சிலர் கேட்க –
பரத்வ சொவ்லப்யாதி குண பரிபூர்ணர் ஆகையாலே -அளவுடையாராயும் அறிவிலிகளாயும் இருக்கிற அதிகாரிகள்-ஸ்தோத்ரம் பண்ணப் புக்கால் -அவர்களுடைய அதிகாரத்துக்கு தகுதியானபேச்சுக்களாலே பேசுகைக்கு ஈடான-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையரான எம்பெருமானாராலே உபகரிக்கப்பட்ட விலஷண-ஞானத்தை பெறா இருந்தவர்களை
அந்த கலி காலம் ஆக்கிரமித்து ஞான பிரசாதத்தை பண்ணும் இத்தனை ஒழிய-அந்த ஞானத்தை பெற்ற என்னை ஆக்ரமிக்க மாட்டாது
ஆகையாலே எனக்கு இந்த வ்யவசாயம் யாதாத்மா பாவியாக-நடக்கத் தட்டில்லை என்று திரு உள்ளமாக அருளிச் செய்கிறார் –

யாவரையும் கலக்குறும் இக் கலி காலத்திலே-குல கோத்ரம் பாராது -இராமானுசனை கருதும்-உள்ளம் பெற்றவரை -ஆளும் பெரியவராக ஏற்கும் துணிபு நிலை நில்லாதே
-என்பாரை நோக்கி -எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு-உண்டாகும் என்கிறார் –
————————————————-
88-எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை-கலி தோஷம் நலியும் என்றார் கீழே -அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து
அவதரித்த படியை யனுசந்தித்து -எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை-நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி-பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி -இதில் –
அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்-உபதேசிக்கைக்காக –அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து –செந்நெல்
விளையா நின்றுள்ள வயல்களை உடைய திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய-திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை
அனுபவித்து களித்து – பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார்
வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக-இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி
லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்-தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை
நிரசிக்கைக்காக அவர்கள்-நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் நல் ஞானத்தில் சேராதாரைக் கலி-நலியும் என்றார் கீழ் ..யாவரும் சேர்ந்து கலியை விலக்கலாம் படியான –
அத்தகைய நல் ஞானத்தை உபகரிப்பதற்காக-அவர் இவ் உலகில் வந்து அவதரித்த படியை-அனுசந்தித்து -அதனால் இத்தகைய வைதிக ஞானம்
உலகினருக்கு கிடைக்க ஒண்ணாதபடி-வேதத்திற்கு -அவப் பொருள் கூறும் குத்ருஷ்டிகள் தொலைந்தமை கண்டு –எம்பெருமானார் ஆகிற சிம்மம்
குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக-இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –
——————————
89-போற்றுவன் -என்று புகழ்வதாக ஒருப்பட்டவர் -அது நிமித்தமாக-தமக்கு உண்டான பலத்தை எம்பெருமானார் தமக்கு-விண்ணப்பம் செய்கிறார்

கீழ்ப் பாட்டிலே வேத ப்ரதாரகராய் -லோகத்தார் எல்லாரையும் விபரீத ஞானராக பிரமிப்பித்து-நசித்துப் போந்த குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை -பக்னர் ஆக்குக்கைக்கு
அவதரித்த -வலி மிக்க சீயமான-எம்பெருமானாரை -ஸ்துதிக்கிறேன் என்று ஸ்வ அத்யாவசாயத்தை ஆவிஷ்கரித்து -இதிலே -தம்முடைய பூர்வ வ்ர்த்ததை
அனுசந்தித்துக் கொண்டு -புகழ்ந்து தலைகாட்ட வரிதான சீல குணத்தை உடையரான-எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து மகா பிரபாவம் உடைய தேவரீரை
அத்யந்த-அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே ஸ்துதியாது-ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே
-ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என்மனசு ஆறி இராது -இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில்
என்ன வோடுகிறதோ என்று நான் அத்தை-நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்-ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும்
என் மனம் தாங்குகிறது இல்லை -போற்றியே யாக வேண்டி இருக்கிறது –தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார்-
———————-
90-இவர் -அஞ்சுவன் -என்றவாறே இவர் பயம் எல்லாம் போம்படி குளிரக் கடாஷிக்க-அத்தாலே நிர்பீகராய் -கரண த்ரயத்திலும் -ஏதேனும் ஒன்றால்-
இவ் விஷயத்தில் ஓர் அநு கூல்யத்தை பண்ணி-பிழைத்து போகலாய் இருக்க சேதனர் ஜன்ம கிலேசத்தை அனுபவிப்பதே என்று இன்னாதாகிறார்-

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உடைய மதிப்பையும் -அவரை ஸ்தோத்ரம் பண்ணாமைக்கு-தமக்கு உண்டான அயோக்யதையும் அனுசந்தித்து -இவ் விஷயத்திலே
-நான் ஸ்துதிப்பதாக போர சாஹாச-கார்யத்துக்கு உத்யோகித்தேன் என்று அணாவாய்த்து -இவர் அஞ்சினவாறே -எம்பெருமானார் –
இவருடைய அச்சம் எல்லாம் தீரும்படி குளிர கடாஷிக்க -அத்தாலே நிர்பரராய் -ஸ்தோத்ரம் பண்ண ஒருப்பட்டு -இதில் லவ்கிகர் படியை கடாஷித்து
-எம்பெருமானார் யோக்யா அயோக்யா விபாகம் அற சர்வரையும்-கடாஷிக்கைக்காக வந்து அவதரிக்கச் செய்தே -இந்த லவ்கிகர் தம்மை ஒருக்கால் ப்ராசுரிகமாக-நினைத்தவர்களுடைய -சோஷியாத பவக்கடலை சோஷிப்பிக்குமவரான -இவரை நினைக்கிறார்கள் இல்லை -என்னை ரஷிக்கைக்காக நான் இருந்த இடம் தேடி வந்த இவரை
-ஈன் கவிகளால் ஸ்துதிக்கிரார்கள் இல்லை -அப்படி ஸ்துதிக்கைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் ஸ்துதிக்கும் அவர்களுடைய திருவடிகளை-ஆராதிக்கிறார்கள் இல்லை
ஐயோ இவற்றுக்கு எல்லாம் உறுப்பான ஜென்மத்தை பெற்று இருந்தும் அறிவு கேட்டாலே-ஜன்ம பரம்பரைக்கு அது தன்னை ஈடாக்கி கிலேசப்பட்டு போனார்களே என்று இன்னாதாகிறார் –

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் -மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு -எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான
செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல் மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார்
—————————————-
91-இவர்கள் இப்படி இருக்கச் செய்தே இவர்களுடைய உஜ்ஜீவனார்த்தமாக-எம்பெருமானார் செய்தருளின க்ருஷியை யனுசந்தித்து அவரைக் கொண்டாடுகிறார் –

கீழ்ப் பாட்டிலே நித்ய சம்சாரிகளாய் இருக்குமவர்களையும் -அல்ப அநு கூலமுடையாரையும் -ஒக்க உத்தரித்த சர்வோத்தமரான எம்பெருமானாரை அநு வர்த்தியாதே -கர்ப்ப நிப்பாக்யராய் போந்தார்கள்-என்று அவர்கள் படியை அடைவே சொல்லி -இதிலே -தமோ குண முஷித சேமுஷீகராய்-ருத்ர ப்ரோக்தமான-ஆகமத்தை உத்தம்பகமாகக் கொண்டு பௌ த்த்யாத்த சாரங்களாய் ருத்ர பஷ பாதிகளான பாசுபதர்-சொல்லுகிற துஸ் தர்க்கங்கள் ஆகிற அந்தகாரத்தை பூ லோகத்தில் நின்றும் அகன்று போம்படி-பண்ணி அருளின எம்பெருமானார் –தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையை ஒரு பாட்டம் மழை-பொழிந்தால் போல் லோகத்தில் எங்கும் ஒக்க ப்ரவஹிப்பித்து -சகல ஆத்மாக்களுக்கும் சுலபனாய்-கண்ணுக்கு இலக்காய் இருக்கிற பெரிய பெருமாளே வகுத்த சேஷி என்னும் அர்த்தத்தை நமக்கு எல்லாம்-பூரி தானம் பண்ணினார் –இவர் எத்தனை தார்மிகரோ என்று
-அவர் உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து-அவர் தம்மை கொண்டாடுகிறார் –

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார் கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் –
——————————-
92-சேதனர் இவ் விஷயத்தில் அல்ப அனுகூல்யத்தாலே உஜ்ஜீவிக்கலாய் இருக்க –ஜென்மாதி துக்கங்களை அனுபவிக்கிறபடியையும் -இவர்களுக்கு உஜ்ஜீவன அர்த்தமாக
-எம்பெருமானார் செய்த க்ருஷியையும் அனுசந்தித்தார் -கீழ் -இரண்டு பாட்டாலே –இப்பாட்டில் –தாம் அறிய ஒரு ஹேது அன்றிக்கே -இருக்க -தம்மை அங்கீ கரித்து
அருளுகைக்கும் -அருளுகையும் -அங்கீகரித்து அருளி பாஹ்யாப் யந்தர கரண விஷயமாய் -எழுந்து அருளி இருக்கிறபடியையும்-அது –அனுசந்தித்து -வித்தராய்
-இதுக்கு காரணம் இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

எம்பெருமானாரை ஆஸ்ரியாத கர்ப்ப நிர்பாக்யரை நிந்தித்தும் சமயக் ஞான ஹீனராய்-நிஷித்த மார்க்க நிஷ்டர் ஆனவர்களுடைய துர் உபதேசத்தாலே அவசன்னராய் போந்த
சேதனருடைய-அஞ்ஞானத்தை மாற்றி சர்வருக்கும் ஸ்ரீ ய பதியே சேஷி என்று உபதேசித்த பரம தார்மிகர் எம்பெருமானார்-என்று சொல்லிப் போந்தார் கீழ் இரண்டு பாட்டுக்களிலும்
இதிலே எம்பெருமானார் உடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து -அடியேன் இவ்வளவும் நான் அறிந்ததாக ஒரு சத் கர்மமும் பண்ணினேன் அல்லேன்
அப்படியே உத்தாரகமாய் இருப்பதோர் சூஷ்மமான விசேஷார்த்தத்தை கேட்பதாக பிரசங்கிப்பித்தும் செய்திலேன் -இது என் ரீதியாய் இருக்கச் சாஸ்திர
ப்ரவர்த்தகரானவர்களுக்கும் தொகை இட்டு சொல்ல வரிதான குணவத்தா-பிரதையை உடையரான தேவரீர் இவ்வளவும் வெறுமனே இருந்து -இன்று என்னுடைய
சமீபத்திலே பிரவேசித்து உட் கண்ணுக்கும் கட் கண்ணுக்கும் விஷயமாய் நின்றீர் -இதுக்கு ஹேது தேவரீரே சொல்ல வேணும் என்று-விண்ணப்பம் செய்கிறார் –

தம்மிடம் உள்ள மூன்று கரணங்களுள் -ஏதேனும் ஓன்று கொண்டு -எளிதில் மாந்தர் உய்வுற வழி இருந்தும் -பிறப்பிற்குள்ளாகி வருந்துவதையும் -அத்தகையோரும் உய்வதற்காக எம்பெருமானார் அருள் சுரந்து –மெய்ப் பொருள் சுரந்து -உபகரித்ததையும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலே அனுசந்தித்தவர் -இப்பாட்டில் -தாமறியத் தம்மிடம்
ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் -பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் -நிலை நின்று
எழுந்து அருளி இருப்பதைக் கண்டு –மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் –
—————————
93-அவர் இதுக்கு ஒன்றும் அருளிச் செய்யாமையாலே –நிர்ஹேது கமாகாதே -என்று தெளிந்து-என் பிரபல கர்மங்களை தம்முடைய கிருபையாலே அறுத்து அருளின எம்பெருமானார்
ஒருவர் அபேஷியாது இருக்க -தாமே வந்து -குத்ருஷ்டி மதங்களை நிராகரித்தவர் அன்றோ –அவர் செய்யுமது வெல்லாம் நிர்ஹேதுகமாக வன்றோ -விருப்பது -என்கிறார்-

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து இத்தனை-நாளும் என்னை அங்கீ கரிக்கையில் கால் கண்டித்து கொண்டு இருந்த தேவரீர்
-இப்போது அடியேன் பக்கல்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க -இப்படி அங்கீ கரிக்கைக்கு ஹேது ஏது-அத்தை சொல்லிக் காணீர்-என்று இவர் மடியைப் பிடித்தாலும்
அதுக்கு அவர் மறு உத்தரம் சொல்லாதே கவிழ்ந்து தலை இட்டு இருந்தவாறே –இப்படி நிர்ஹேதுகமாக கண்டிடுமோ என்று நினைத்து இதிலே
என்னுடைய பிரபல பாதகங்களை வாசனையோடு கூட தம்முடைய கிருபை யாகிற கட்கத்தை-சங்கல்பம் ஆகிற-உறையில் – நின்றும் உருவி அத்தாலே சேதித்து பொகட்டு
பிரபன்ன குலத்துக்கு எல்லாம் ஒக்க உத்தாரகரான-எம்பெருமானார் ஸ்வ அஞ்ஞான விஜ்ர்ம்பிதமான அபார்த்தங்களை எல்லாம் வேதார்த்தங்கள் என்று
பரம மூடரான குத்ருஷ்டிகள் சொலுகிற ப்ராமக வாக்யங்களை நிவர்ப்ப்பித்த பரம உபாகரர் ஆகையாலே
அவர் செய்வது எல்லாம் நிர்ஹேதுகமாக அன்றோ இருப்பது என்று தெளிந்து தம்மிலே தாமே சமாஹிதராய்-சொல்லுகிறார் –

தாம் கருதிய படியே பதில் கிடையாமையாலே -தம் வினைகளை வேரற களைந்து-தம்மை ஏற்று அருளியது -ஹேது வற்றது-என்று தெளிந்து -அத்தகைய எம்பெருமானார்
எவருமே வேண்டாது இருக்க தாமாகவே வந்து -குத்ருஷ்டி மதங்களை களைந்து –
உலகினர்க்கு உதவினவர் அன்றோ -அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார்-
——————————-
94-தம்மை நிர் ஹேதுகமாக அங்கீகரித்து -கர்மங்களைப் போக்கின படியை அனுசந்தித்தார் கீழ் ..இப்பாட்டில் எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தார்க்கு-
பிரபத்தி நிஷ்டை தொடங்கி-பரமபதம் பர்யந்தமாக கொடுத்து அருளுவாரே ஆகிலும் –நான் அவர்கள் குணங்களை ஒழிய ஒன்றையும் விரும்பி புஜியேன் -என்கிறார்-

தம்மை நிர்ஹேதுகமாக அங்கீ கரித்து அநாதியான பாபங்கள் மறுவலிடாதபடி-தம்முடைய கிருபை யாகிற கடாக்ஷத்தாலே சேதித்து அத்தாலே பிரபன்ன ஜன கூடஸ்தரான
எம்பெருமானார் லோகத்திலே அபசித்தாந்தங்களை வேதார்த்தங்களாக பிரமிப்பிக்கும் குத்ருஷ்டிகளை நிரசித்த உபாகரகர் என்று கொண்டாடினார் – கீழ்ப் பாட்டில் –
இப் பாட்டில் -அந்த எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்க்களுக்கு சர்வோத்தரக ஹேதுவான பிரபத்தி உபாயத்தையும் -தத் உத்தர கால க்ர்த்யமான கைங்கர்ய ரூப சம்பத்தையும்
சரீர அநுரூப சம்பந்தத்தை அறுத்து பொகட்டு –பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் அடைவே கொடுத்து அருளுவரே ஆகிலும் -அடியேன் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறொன்றை ஆதரித்து புஜியேன் என்று ஸ்வ அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –

காரணம் இன்றி தம்மைக் கைகொண்டு -கன்மங்களை கழலச் செய்தமையைக் கூறினார் கீழே –இப்பாட்டில் எம்பெருமானார் –தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி
திவம் முடிய அளிப்பரே யாயினும்–நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –
——————————-
95-எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு வேண்டுவது எல்லாம்-தாமே உண்டாக்கி உஜ்ஜீவிப்பித்து விடுவர் என்றார் கீழ் .
இப்படி இருக்கிறவருடைய ஜ்ஞான சக்தியாதிகளை அனுசந்தித்த வாறே -இந்த லோகத்தில் உள்ளார்படி யன்றிக்கே -வ்யாவ்ருத்தமாய் இருக்கையாலே –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவர் பரார்தமாக சம்சாரத்தில் அவதரித்தாராகவே நினைத்து அருளிச் செய்கிறார் -இதில் –

எம்பெருமானார் தம்மை ஆஸ்ரித்தவர்களுக்கு உத்தாரண ஹேதுவான உபாய விசேஷத்தையும் -அத்தாலே உண்டாக கடவ -பகவத் ப்ரீதி ரூப சம்பத்தையும்
ப்ராப்தி பிரதி பந்தகமான பாப விமோசனத்தையும் -தத் அனந்தர பாவியான பரம பத ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுப்பாரே யாகிலும் -நான் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒன்றை விரும்பி அனுபவியேன் -என்று அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டிலே –
இப்பாட்டிலே -சகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமியாய் -அவர்களுடைய சகல பிரவர்த்தி நிவ்ருத்திகளையும்-பண்ணிக் கொடுக்கிற சர்வேஸ்வரனும்
இவரைப் போலே ஆஸ்ரித வ்யாமுக்தன் அல்லன் என்னும் படியாயும் -ஞான வைராக்யாதிகளாலே சம்சாரிகளைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ர்த்தர் என்னும் படியாயும்
இவர் தான் இருக்கையாலே –பரம பதத்தின் நின்றும் அந்த பரம ப்ராப்யத்தை எல்லார்க்கும் கொடுப்பதாக அச்பர்ஷ்ட சம்சார கந்தரில் ஒருவர் பரார்த்தமாக
இந்த லோகத்தில் -எம்பெருமானாராய் அவதரித்து -சர்வ காலமும் வேதார்த்தத்தை-ப்ரவர்த்திப்பித்தார் என்று அருளிச் செய்கிறார் –

தம்மை சார்ந்தவர்கட்கு உய்வுற வேண்டுமாவை யாவும் தானே உண்டு பண்ணி உதவி-எம்பெருமானார் உய்விப்பதை கூறினார் கீழே .இங்கனம் உய்விக்கும் அவருடைய
அறிவாற்றல்களைக் கண்டு உலகத்தாருக்கு உள்ளவை போன்றவைகள் அல்ல இவை -தனிப்பட்டவையாய் விளங்குகின்றன -ஆதலின் இவர் இவ் உலகத்தவர் அல்லர் .
சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய சூரிகளில் ஒருவர் -வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் -என்று
தீர்மானித்து -அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –இந்தப் பாசுரத்திலே –
————————————-
96-மறை நாலும் வளர்த்தனன் -என்றீர்-அவர் சேதனருக்கு உஜ்ஜீவன உபாயமாக வேதாந்த பிரக்ரியையாலே அருளிச் செய்தது-பக்தி பிரபத்தி ரூப உபாய த்வயம் இறே-
அதில் ஸூகர உபாயமான பிரபத்தியிலேயோ உமக்கு நிஷ்டை -என்ன -அதுவும் அன்று –தாம் அபிமத நிஷ்டர் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவாய் தண்டதரனான-சர்வ ஸ்மாத் பரனிலும்-அஞ்ஞான நிக்ரஹராய் – பரம பதத்தில் நின்றும் ரஷண ஏக தீஷிதராய் வந்து –
அவதரித்த எம்பெருமானார் -நிர்ஹேதுக கிருபையை உடையவர் ஆகையாலே -சேதன சம்ரஷணார்த்தமாக-வேத வேதாந்த பிரவர்த்தனம் பண்ணி அருளினார் என்று
இவர் அருளிச் செய்ய கேட்டு -அருகில் இருப்பார் அந்த வேதாந்தந்களிலே-முமுஷூர்வை சரணமஹம் பிரபத்யே -என்று மோஷ அதிகாரிகளுக்கு சொன்ன
சரணாகதியில் நிஷ்டராய் இருந்தீரோ என்ன -சரணா கதி பெருகைக்கு பிரதி பந்தங்களான பிரபல கர்மங்களாலே -அது தன்னிலும் -மகா விசுவாசம் கிடையாதே
துர்கந்த பிரசுரமாய் -மாம்ஸா ஸ்ர்காதி மயமான சரீரம் கட்டுக்குலைந்து போம் அளவும் சுக துக்க அனுபவம் பண்ணிக் கொண்டு சகாயம் இன்றிக்கே இருக்கும் எனக்கு
அந்த சரமோ உபாயமான எம்பெருமானாரிலும் -சுலபமாய் -சேஷிகளாய் -எனக்கு ஸ்வாமியான அவர் தம்மையே
தந்தை நல் தாயம் தாரம் -இத்யாதிப்படியே சர்வ வித பந்துவாய் அத்யவசித்து -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும்
மகாத்மாக்களே வழித் துணையாய் -ரஷகராய் -இருப்பார் என்று அத்யவசித்தேன் -ஆகையால் -நான் ததீய அபிமான நிஷ்டன்-என்று அருளிச் செய்கிறார் –

மறை நாலும் வளர்த்தனன் என்றீர்-அவர் வேதாந்தத்தில் கூறிய முறையைப் பின் பற்றி உயிர் இனங்கள்-உய்வதற்கு உபாயங்களாக பக்தியையும் -பிரபத்தியையும்
அன்றோ அருளிச் செய்தார் -அவற்றில் எளிய உபாயமான பிரபத்தியையோ நீர் கைக் கொண்டது -என்ன-
நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்-எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான்-என்கிறார் –
—————————
97-இப்படி எம்பெருமானார் தம்மள வன்றிக்கே-அங்குத்தை க்கு அனந்யார்ஹராய் இருப்பார்-உத்தேச்யர் என்று இருக்கைக்கு இந்த ருசி உமக்கு
வந்த வழி தான் என் என்ன –அதுவும்-எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே வந்தது என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம் இறைவர் -இராமானுசனை உற்றவரே -என்று சர்வம் யதேவ நியமே ந மதந்வயாநாம் -என்றால் போலே எம்பெருமானாரை- தேவு மற்று அறியேன்
என்று பற்றி இருப்பாரே -தமக்கு உறு துணை -என்று இவர்-சொன்ன வாறே -உமக்கு அவர்தம் அளவில் அன்றிக்கே -அங்குத்தைக்கு -நிழலும் அடிதாரும் போலே
அனந்யார்ஹராய்-இருப்பாரும் கூட உத்தேச்யர் என்று இருக்கைக்கு ஈடான இந்த ருசி வந்த வழி தான் ஏது என்ன -திக்குற்ற கீர்த்தி -என்னும்படியான இவர்
தம்முடைய வைபவத்தை -கண்களால் கண்டும் செவிகளால் கேட்டும் -தம் பக்கலிலே-அடிமைப்படுவாரை இத்தனை ஒழிய -தமக்கு அனந்யார்ஹராய் இருப்பார்
பிறர்க்கு அடிமைப் படுவார் கிடக்க-தக்கார் என்று திரு உள்ளமாய் –முந்துற முன்னம் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலே என்னை-
அடிமைப்படுத்தினர் ஆகையாலே -இந்த ருசி அடியேனுக்கு அவருடைய கிருபையாலே வந்தது -என்கிறார் –

இப்படி எம்பெருமானார் அளவோடு நில்லாது -அவர் தம்மை உற்றவர்-அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் -எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –
—————————————-
98-இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது -நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே
தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர -எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்-
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் –

இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின-உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே -இவருடைய திரு உள்ளமானது
நீர் இப்படி சொன்னீரே யாகிலும் -சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை-கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே -இவ்வளவும் ஸ்வர்க்க நரக-கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை-கடாஷித்து அன்றோ
அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே-துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான -துஷ்கர்மங்களிலே
அன்வயிக்கவும் -யோக்யதை உண்டே -ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க -எம்பெருமானார் தம்மை சரணம் என்றால்
அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்-ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே -இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –
——————————
99-நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையேல் -என்றவாறே -ஆனாலும் -ஜ்ஞான வ்யவசாயங்களை பங்கிக்கும் பாஹ்ய குத்ருஷ்ட்டி பூயிஷ்டமான
தேசம் அன்றோ -என்ன –எம்பெருமானார் அவதரித்த பின்பு -அவர்கள் எல்லாரும் நஷ்டர் ஆனார்கள் என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -நம்மை நம் வசத்தே விடுமே -என்று-இவர் மகா விச்வாசத்தோடே சொன்னவாறே -அது சத்யம் -ஆனாலும்
சமயக் ஞானமும் -தத் அனுரூபமான அனுஷ்டானமும் -இவ்விரண்டையும் அடைவே அறிவிப்பிக்க கடவதான-வேதம் நடையாடாதபடி -அத்தை மூலை யடியே
நடப்பித்துக் கொண்டு உபத்ராவாதிகளான-பாஹ்ய குத்ருஷ்டிகள் தனிக்கோல் செலுத்தும் தேசம் என்பது என்ன -சமஸ்த புருஷார்த்த-பிரதத்வத்தாலே -கற்பகம்-என்று
சொல்லப்படுகிற எம்பெருமானார் இந்த மகா பிர்த்வியில்-அவதரித்த பின்பு அப்படிப்பட்ட நீச சமய நிஷ்டர் எல்லாரும் சமூலகமாக நஷ்டமாய் போனார்கள் -என்கிறார் –

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ்-நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே-அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் –
——————————-
100-இப்படி தாம் உபதேசிக்கக் கேட்டு க்ருதார்த்தமாய் -தம்முடைய திரு உள்ளம் -எம்பெருமானார் திருவடிகளிலே போக்யத அனுபவத்தை ஆசைப் பட்டு
மேல் விழுகிற படியை கண்டு –அதின் ஸ்வபாவத்தை அவர்க்கு விண்ணப்பம் செய்து -இனிவேறு ஒன்றைக் காட்டி தேவரீர் மயக்காது ஒழிய வேணும் -என்கிறார்

கீழ்ப் பாட்டில் பிராப்தி நிமித்தமாக தளரா நின்ற தம்முடைய நெஞ்சினாரைக் குறித்து நாம்-சரம பர்வமானவரை ஒருக்கால் தொழுதோமாகில் நம்மை நம் வசத்தே
காட்டிக் கொடார் என்று உபதேசித்து தேற்றி -பூ லோகத்திலே பாஹ்ய குத்ருஷ்டிகள் வியாபித்து -லோகத்தாரை எல்லாரையும் அழிக்கப் புக்கவாறே
வேத-மார்க்க பிரதிஷ்டாபன முகேன -அவர்களை எல்லாரையும் ஜெயித்து -தமக்க கல்பக ஸ்த்தாநீயராய் இருந்த படியை-சொன்னவாறே -ஸ்ரீ ருக்மிணி பிராட்டியார்
கிருஷ்ணனுடைய வைபவத்தை கேட்டு அவனை வரிக்க வேணும் என்று-துடித்தால் போலே -இவருடைய திரு உள்ளமானது எம்பெருமானார் உடைய திருவடித் தாமரைகளில்
உள்ள மகரந்தத்தை வாய் மடுத்து பருகுவதாக பிர்யன்காயமாநமாய் இருக்கிறபடியை கடாஷித்த எம்பருமானார் உடன்-அதனுடைய தசையை விண்ணப்பம் செய்து
இனி வேறு ஒரு விஷயத்தை காட்டி என்னை தேவரீர் மயக்காது ஒழிய-வேணும் என்கிறார் –

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-அதனது இயல்பினை
எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார்-
————————–
101-இப்படி எம்பெருமானாருடைய போக்யதையிலே நெஞ்சு வைத்தவாறே-முன்பு இவ் விஷயத்தில் தாம் பண்ணின பாவனத்வ அனுசந்தானம்
அவத்யமாய்த் தோற்றுகையாலே-நான் தேவரீருடைய பாவனத்வத்தை-பேசினதானவிது தேவரீர் போக்யதையை அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு
அவத்யம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்-என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாருடைய போக்யதையிலே –அருவினையேன் வன் நெஞ்சு –என்னும்படியான தம்முடைய திரு உள்ளமானது -ஈடு பட படியைச் சொல்லி
இப்பாட்டுக்கு கீழ் பல-இடங்களிலும் –தீதில் இராமானுசன் -என்றும் –தூயவன் –என்றும் –எங்கள் இராமானுசன் -என்றும்-தாம் அனுபவித்த பாவநத்வத்தை ஸ்மரித்து
இந்த போக்யதைக்கும் -அந்த பாவனத்வத்துக்கும் -நெடு வாசி உண்டாகையாலும் -இப்படி இருந்துள்ள இவ்விஷயத்துக்கு அது அவத்யமாய்தலைக் கட்டுவதாலையாலும்
அப்போது அத்தை தப்பைச் சொன்னோம் -அத்தாலே அவர்க்கு என் பக்கல்-ப்ரீதி மட்டமாய் போகிறதோ என்று திரு உள்ளம் புண்பட்டு -இதிலே
-பந்தாயா விஷயா சங்கி -என்னும்படியான-மனசை உடையனான -தீர கழிய செய்த துஷ் கர்மத்தாலே -ஜன்ம பரம்பரைகளில் தட்டி திரியா நிற்கிற என்னை
அந்த துஷ் கர்ம பலமான ஜன்ம பரம்பரையாகிற துக்கத்தைப் போக்கி உஜ்ஜீவிக்கும் படி கைக் கொண்டு-கிருபை பண்ணியருளின எம்பெருமானாரே என்று
தேவரீர் உடைய பாவநத்வத்தை கீழ் பல இடங்களிலும்-நான் சொன்ன இது -தேவரீரை அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே சிதிலமாய் போமவர்களுக்கு
அவத்யமாய் என்று ஞானாதிகரானவர்கள் சர்வ காலமும் சொல்லுவார்கள் என்று எம்பெருமானாரைப்-பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம்-அவர் திறத்து பண்ணின –பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை
குற்றமாகப் பட -எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் –பாவனர் -என்னும்பாவனையுடன் பேசினது
குற்றமாக தோன்றும் என்று -நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார் –
—————————-
102-இப்படி பாவனத்வ அனுசந்தானமும் அசஹ்யமாம்படி -பரம போக்யபூதரான -எம்பெருமானார்-விஷயத்தில் -தம்முடைய அந்தக் கரணத்தொடு-பாஹ்ய கரணங்களோடு
-வாசி யற-அதி மாத்திர ப்ரவண மாய்ச் செல்லுகிற படியைச் சொல்லி –இந்த பூமிப் பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே
தேவரீர் ஔ தார்யம் என் பக்கலிலே வர்த்திக்கைக்கு ஹேது என் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானாருடைய போக்யதையில் ஈடு பட வேண்டி இருக்க –அப்படி இராதே -அவருடைய பாவனத்தைக் கொண்டாடினது -அவரை அனுசந்தித்து சிதிலராய் இருக்குமவர்களுக்கு-அசஹ்யமாய் இருக்கும் என்று சொல்லி -இதிலே -அவர்கள் விஷயத்தால் குற்றம் தீரும்படி-அந்த கரணத்தொடு பாஹ்ய கரணங்களோடு வாசி யற -எல்லாம் எம்பெருமானார் பக்கலிலே-அதி மாத்ர ப்ராவன்யத்தாலே சக்தங்களாய் ஆழம்கால் பட்டன என்று சொல்லா நின்று கொண்டு -இந்த பூ லோகத்தில் இருக்கும்
எல்லா சேதனரும் இருக்கச் செய்தே -தேவரீருடைய திவ்ய ஔதார்யம் என் ஒருவன் பக்கலிலும் கிளர்ந்து வருகைக்கு ஹேது என் என்று -அவர் தம்மையே கேட்கிறார் –

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து -தம் உட் கரணமும் -புறக் கரணங்களும்
எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் –
——————————
103-இப்படி சர்வ கரணங்களும் தம் பக்கலிலே ப்ரவண மாகைக்கு உறுப்பாக-எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே உமக்கு உபகரித்த
அம்சத்தை சொல்லீர் -என்ன-என்னுடைய கர்மத்தை கழித்து -அழகிய ஜ்ஞானத்தை விசதமாகத் தந்து அருளினார் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே தம்முடைய சர்வ கரணங்களையும் எம்பெருமானார் தம் விஷயத்தில்-அதி பிரவணராகும்படி பண்ணி -அனிதர சாதாரணமாகத் தம்முடைய ஔதார்யத்தை தம்மிடையே
வர்ப்பித்து அருளினார் -என்று சொல்லி வித்தரானவாறே -ஆக இப்படி சர்வ கரணங்களும் தம் விஷயத்திலே-யதி ப்ரவணராம் படி ஈடு படுகைக்கு உடலாக அவருடைய
ஔ தார்யத்தாலே இன்னமும் உமக்கு உபகரித்தமை ஏதாகிலும் உண்டோ என்ன -இதிலே -அத்யந்த கோபோவிஷ்டமாய் -அத்விதீயமான-நரசிம்ஹ அவதாரத்தை கொண்டாடி
ஸ்வ ஆஸ்ரிதரான தேவதைகளுடைய ஸ்தானங்களை-ஆக்கிரமித்து -லோகத்தை எல்லாம் பாதிக்கைக்காக கடக ஹஸ்தனாய் தனிக் கோல் செலுத்திக் கொண்டு திரிகிற
ஹிரண்யா சுரனுடைய ஸ்வரூபமான சரீரத்தை துரும்பைக் கிழிக்குமா போலே அநாயாசேன கிழித்துப் பொகட்ட-சர்வேச்வரனுடைய திவ்ய கீர்த்தியை தம்முடைய திரு உள்ளத்திலே எம்பெருமானார் உடைய –ஆத்யாத்மிகாதி துக்கங்களை வாசனையோடு ஒட்டி விட்டு -கரதலாமலகமாக -தத்வ ஹித புருஷார்த்த-யாதாம்ய ஞானத்தை கொடுத்து அருளினார் என்கிறார் –

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்-தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் –
————————–
104-உபதேச ஜ்ஞான லாப மாத்ரம் ரசிக்கிற படி கண்டால் -பகவத் விஷயத்தைசாஷாத் கரித்தீர் ஆகில் உமக்கு எப்படி ரசிக்கிறதோ என்று -எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு –பகவத் விஷயத்தை விசதமாகக் காட்டித் தரிலும் -தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன் –
இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதியிலும்-கால் பாவுவன் -அல்லது தரியேன் -என்கிறார்-

கீழ்ப் பாட்டில் தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய ஞானத்தை சுவ்யக்தமாம்படி-உபதேசித்தார் என்று இவர் இனியராய் இருந்தவாறே -அத்தைக் கண்டு உபதேச மாத்ரத்துக்கே
இப்படி-இனியராய்க் கொண்டு ரசித்து இருந்தீர் –பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்கும்படி பண்ணிக்-கொடுத்தோம் ஆகில் எப்படி ரசித்து இனியராக கடவீரோ என்று
எம்பெருமானாருக்கு கருத்தாக-நினைத்து -தேவரீர் சகல ஜன மநோ ஹாரி -திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணிக் கொண்டு போந்த-கிருஷ்ணனை கரதலாமலகமாக
காட்டித் தரிலும் தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்திலே பிரகாசியா நின்றுள்ள-கல்யாண குணங்களை ஒழிய அடியேன் வேறு ஒரு விஷயத்தை வேண்டேன் என்ன
இவன் இப்படி-மூர்க்கு பேசலாமோ என்று சீறிப்பாறு செய்து அடியேனை சம்சாரமாகிற நரகத்தில் விழப் பண்ணினாலும் -நம்மையே பற்றி இருக்கிறான் இறே என்று
கிருபையாலே –நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்திலே-கொண்டு போய் சேர்த்திடிலும்-வர்ஷூ கவலாஹம் போலே பரம உதாரரான எம்பெருமானாரே -தேவரீர் உடைய
திவ்ய மங்கள விக்ரகத்தை அனுபவிக்கைக்கு உடலான நிர்ஹேதுக பரம கிருபையாலே தேவரீர்-செய்து அருளின விபூதி த்வயத்திலும் வைத்துக் கொண்டு
ஏதேனும் ஓர் இடத்தில் கால் பாவி நின்று-தரிப்பன் – இல்லை யாகில் தரிக்க மாட்டேன் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக்-காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ -என்று-எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு –கண்ணனை நன்றாக காட்டித்-தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை-ஒழிய நான் வேண்டேன்
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் -சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் -இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார்-
———————–
105-எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்யதேசம் அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன அருளிச் செய்கிறார்

கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து-மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-தேவரீர் சுலபனான கிருஷ்ணனை
கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தை கொடுத்தாலும் -அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் –தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக-அனுபவம் ஒழிய அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன
அத்தைக் கேட்டவர்கள் -ஜ நிம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச ந பசி பரஸ்மின் நிரவதிகா-நந்த நிர்ப்ப ரெலிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம்-உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக ஆசைப்படா நிற்க -நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –
இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –திருப்பாற் கடலிலே-கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா
நல் தவ முனிவராலே விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே – தொழுது முப்போதும் -என்கிறபடியே-அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள
திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் -என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுது அருளி இருக்குமிடம்
அவர்கள் அடியேனான-எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே
போய் இருக்க ஆசைப்படா நிற்பர் -நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும்
ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –
அது தன்னை அருளிச் செய்கிறார் –

——————————-
106-இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு -எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் –

திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் –அவர் தம்முடைய குண அனுபவ ஜனித-ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு
வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து -இப்பாட்டிலே -வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை தென் திருமலை-தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட
எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி வர்த்திக்குமா போலே –இப்போது –அந்த திவ்ய தேசங்களோடும் – அந்த திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்-தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் -அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி -அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .
—————————-
107-இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற-எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து -தேவரீருக்கு விண்ணப்பம்
செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட-நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே
அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே-அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு -அசந்க்யேயமான துக்கங்களை அனுபவித்து
உரு மாய்ந்து முடியிலும் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய்
அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்-கொண்டு அடிமைப்படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார்

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்-இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று –அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற -அவரை விளித்து -தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்-ஆட்படும்படியாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை-விண்ணப்பம் செய்கிறார்-
————————-
108-நிகமத்தில்-இப்ப்ரபந்த ஆரம்பத்திலே-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம் தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் -அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 -என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் –

நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக-அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற
படியையும் -அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ-வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய-அபிமத்தை அருளிச் செய்து -இப்பாட்டிலே –எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை-நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து ஸ்தாவர-பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார்
இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக்கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே-இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் -அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்-கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி-அனுபவித்து தலை கட்டுகிறார் –

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றுதாம் அருளிச் செய்த பேறு -தமக்கு ஆத்மா உள்ள அளவும்
கைப்படவும் -அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் –விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி-
உயரினம் அனைத்துக்கும் சார்வகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-