ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்-ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து-
இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக –மயர்வற மதி நலம் அருளி – உபய விபூதி
நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே -பகவத் அனுபவ ஏக போகராய்-
சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளிஇருந்த இவர்
ப்ராப்தமுமாய் -ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று
அவர்கள் பக்கல் கண் வைத்தார்-பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே-பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே
நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் -பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் -ஜகத் காரண பூதனாய் -பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே-அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி-அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய்
-சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்-அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து
-ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி
-ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி
-பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட
இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று-தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –
—————————–
1–அண்ட காரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்-நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம்
-இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத-பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –
2-காரண பூதனான உன்னாலே-ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்-சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும்
-அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித-போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க-வல்லர் -என்கிறார்-
3-முதல் பாட்டில் சொன்ன ஜகத் காரணத்வ பிரயுக்தமான லீலா விபூதி யோகம் என்ன -இரண்டாம் பாட்டில் சொன்ன உபாயத்துக்கு பலமான நித்ய விபூதி யோகம் என்ன –
ஆக இந்த உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட-வருத்தமற நான் கண்டாப் போலே- வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –
4-பிரணவத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்-சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு-காரணம் அற்றவன் -அதனால் துளக்கமில் விளக்கம் –
–எனக்கு நிருபாதிக சேஷி யானவனே -என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ -என்ன நீர்மை-என்கிறார்-
5-ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள-அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட
நான் கண்டால் போலே ஏவம்விதன்-என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்-
6-சகல அந்தர்யாமித்வத்தால் வந்த சகல ஆதாரத்வம் சொல்லிற்றாய் நின்றது கீழ் -அந்த பதார்த்தங்களுக்கும் தேவரீரே தாரகம் என்று வேதாந்த பிரசித்தமான இவ்வர்த்தம்
தேவரீர் பக்கலிலே வ்யவச்திதம் அன்றோ-இஸ் சர்வ ஆதாரத்வமும் ஸ்வ சாமர்த்யத்தாலே வேறு ஒருவருக்கும் காண முடியாது என்கிறார் –
7-நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது-ஜ்ஞான சக்திகளின் குறை யன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது என் என்ன –
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்-அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்-
8-ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்-
9-இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான-ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான
சாத்விக ஜனங்களும் உன்னையே-ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் —
10-சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே -காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது-என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –
11-நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன –
உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச-ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்ய பரம் என்கிறார் –
12-ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி-அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து
ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்-நினைக்க வல்லார் என்கிறார் –
13-இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர
-உன் வைலஷண்யம் காணும்-அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –
14-நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் -பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை
பரிச்சேதித்து அறிய மாட்டேன் ஆகிலும் -அவ்வடிவு வேதைக சமதிகம்யம் என்று-அறிந்தேன் என்கிறார் –
15-வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக-அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி
அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த-உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார் –
16-திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்-அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி-இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –
17-பரமபத நிலயனாய் இருந்து -நித்ய விபூதியை நிர்வஹித்து-வ்யூஹம் முதலாக ஸ்தாவர பர்யந்தமாக அவதரித்துலீலா விபூதியை நிர்வஹித்தும் –
போகிற இவை ஒரொன்றே பிரமாணங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்க-அதுக்கே மேலே அர்ச்சாவதார ஸூலபனாய் -ஆஸ்ரிதருடைய இச்சாதீநனாய்
தன்னை நியமித்த இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறதோ என்று அதிலே வித்தராகிறார் –
18-நாக மூர்த்தி சயனம் -என்றும் -தடம் கடல் பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த -என்றும் அவதார கந்தமான ஷீராப்தி சயனம் ப்ரஸ்துதமானவாறே –
திரு உள்ளம் அங்கே தாழ்ந்து -அர்த்திதோ மாநுஷே லோகே -என்கிறபடியே அவதாரங்களில் உண்டான-அர்த்தித்வம் அன்றிகே இருக்க விசத்ர்ச தேசத்தில்
வந்து கண் வளர்ந்து அருளிகிற தேவரீர் உடைய வாசியை ஆரறிந்து ஆச்ரயித்து கார்யம் கொள்ள -என்கிறார் –
19-அர்த்தித்வ நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற இது என்ன நீர்மை என்றார் கீழ் -இங்கு-பண்ணின ஜகத் ரஷணங்களைக் கண்டு –
நஹி பாலான சாமர்த்யம்ர்தே சர்வேச்வரம் ஹரிம் -பாலன தர்மத்துக்கு வேறு சக்தர் இல்லாமையாலும் -ஜகத்துக்கு தேவரீர் அனந்யார்ஹ சேஷம்
ஆகையாலே ரஷிக்கும் இடத்தில் அர்தித்வம் மிகை யாகையாலும் -வந்து கண் வளர்ந்து அருளுகிற-இத்தனை என்று -அந்த ரஷணங்களைப் பேசி
சாமான்ய த்ர்ஷ்டியால் சஹஜ சத்ருகளாய்-தோற்றுகிற பெரிய திருவடியும் திருவநந்த ஆழ்வானும் ஏக கண்டராய் தேவரீருக்கு பரியும்படியாகக்
கண் வளர்ந்து அருளுகிற இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –
20-பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஏத்த திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற-இம் மேன்மை தானே நீர்மைக்கு எல்லை நிலமாய் இரா நின்றது –
அமிர்த மதன வேளையிலே மந்தர தாரண அர்த்தமாக ஆமையான நீர்மை தானே மேன்மைக்கு-எல்லை நிலமாய் இரா நின்றது –
இவைகளைப் பிரித்து என்னெஞ்சிலே பட வருளிச் செய்ய வேணும் என்கிறார் –
21-சமுத்ர மதன வேளையில் ஆமையான நீர்மைக்கு மேல் -சகல வியாபாரங்களையும்-தேவரீரே செய்து அருளி -தேவர்கள் கடல் கடைந்தார்கள் -என்று தேவர்கள் தலையில்
ஏறிட்டு கொண்டாடினபடி -ராவணனை அழியச் செய்து முதலிகள் தலையிலே விஜயத்தை-ஏறிட்டு கொண்டாடினாப் போலே இருந்தது -இவ் வாஸ்ரித பஷபாதத்தை
வேறாக தெரிய அருளிச் செய்ய வேணும் என்கிறார் -சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க இதொரு பஷபாதம்-இருந்தபடி என்ன என்று விஸ்மிதர் ஆகிறார்-
22-பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ –என்கிறார் –
23-பிரளய ஆபத்சகன் ஆகைக்கு வட தள சாயி யான அகடிதகடிநா சாமர்த்ய அளவு அன்றியே -தேவரீர் உடைய அசாதாராண விக்ரஹத்தை
நாஸ் யர்த்ததநும் க்ர்த்வா சிம்ஹஸ் யார்த்தத நுந்ததா -என்கிறபடியே ஏக தேகத்தை மனுஷ்ய சஜாதீயம் ஆக்கியும் -ஏக தேகத்தை திர்யக் சஜாதீயம் ஆக்கியும்
இப்படி யோநி த்வயத்தை ஏக விக்ரஹமாக்கி -அர்த்தித்வ நிரபேஷமாக பிதாவாலே புத்ரனுக்கு-பிறந்த ஆபத்தை தேவரீர் பொறுக்க மாட்டாமையாலே
தூணிலே தோற்றின அகடிதகடநா சாமர்த்யத்தை அனுசந்தித்து -இத்தை யாவர் பரிச்சேதித்து அறிய வல்லார் -என்கிறார் –
24-பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல-பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக
திவ்ய-விக்ரஹத்தை அழிய மாறி வந்து தோற்றின இவ் வேற்றத்தை-நித்யசூரிகள் அறிதல் -பிராட்டி அறிதல் -ஒழிய
-வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார் –
25-அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுடைய விரோதியைப் போக்கினபடியை-அநுபாஷித்துக் கொண்டு -அவனுடைய அளவு அன்றிக்கே –
பிரயோஜனாந்தர பரரான-இந்திரனுக்காக அர்த்தியாயும் -அவ்வளவும் புகுர நில்லாதே விமுகரான சம்சாரிகளை-பிரளய ஆபத்தில்
திரு வயிற்றில் வைத்து ரஷித்த இவ் வாபத் சஹத்வத்தை-அறிய வல்லார் யார் –என்கிறார் –
26-சர்வ நிர்வஹானான நீ ஸூரி போக்யமான வடிவை ஆஸ்ரித அர்த்தமாக தேவ சஜாதீயம் ஆக்கியும் கோப சஜாதீயம் ஆக்கியும் அவதரித்துப் பண்ணின
ஆச்சர்யங்களை ஆர் அறிய வல்லார் என்கிறார் -வாமன அவதாரத்தோடே கிருஷ்ண அவதாரத்துக்கு-ஒரு வகையில்
சாம்யம் சொல்லலாய் இருக்கையாலே அனுசந்திக்கிறார் –
27-அபரிச்சின்னமான ஸ்வரூப வைபவத்தை உடையையாய்-அந்த ஸ்வரூபத்துக்கும்-ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசமான திவ்ய விக்ரஹ உக்தனாய்
வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையையாய்-உன்னுடைய ஆச்சர்ய சக்தி ப்ரேரிக்க – வந்து
பூமியை அளந்து கொண்ட உன்னை-இவற்றை ஒன்றை ஒருத்தராலே பரிச்சேதிக்கப் போமோ –
28-சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ -ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக
உன்னை அழிய மாறி அநேக அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் ஆகிற
இவ் வாச்சர்யங்களை ஒருவரும் அறிய வல்லார் இல்லை என்கிறார் –ஒருத்தரும் நின்னது தன்மை இன்னதென்னெ வல்லரே -என்கிற மேலில் பாட்டில் க்ரியை இதுக்கும் க்ரியை –
29-கீழில் பாட்டில் -மநசைவ ஜகத் ஸ்ர்ஷ்டிம் -என்கிறபடியே சங்கல்ப லேசத்தாலே ஜகத் ஸ்ர்ஷ்டி-சம்ஹாரங்களைப் பண்ண வல்லவன் -ஆஸ்ரித அனுக்ரஹங்கத்தாலே
எளிய கார்யங்களுக்கு அநேக விக்ரஹ பரிக்கிரஹங்களைப் பண்ணி ரஷிக்கும் என்கிறது–இதில் -இவ் வனுக்ரஹத்துக்கு ஹேது-1– சர்வாதிகத்வத்தால் வந்த பூர்த்தியும்
2-ஸ்ரீயபதித்வத்தால் வந்த நீர்மையும் -3-அவர்ஜநீயமான சம்பந்தமும் -என்றும் -4-அனுக்ரஹ கார்யம் வியூக விபவாத்யவதாரங்கள் என்றும் சொல்லி –
இப்படி பட்ட அனுக்ரஹம் ஏவம்விதம் என்று பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார் –
30-கீழில் பாட்டிலே நரத்தில் பிறத்தி -என்று மனுஷ்ய யோநியில் அவதாரங்கள்-ப்ரஸ்துதம் ஆகையாலும் -அதுக்கு கீழ் பாட்டிலே -அது உண்டு உமிழ்ந்து -என்று
வட தள சாயி அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலும் -வட தள சாயி உடைய-மௌக்த்யத்திலும் சக்தியிலும் -சக்கரவர்த்தி திருமகன் உடைய அவதாரத்தின்
மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யத்திலும் வீரஸ்ரீ யிலும் ஈடுபடுகிறார் -இப்பாட்டில் –
31-கீழில் பாட்டில் அவதாரங்களில் உண்டான ரஷகத்வத்தை அனுபவிக்கிறார் இதில்-
ஆஸ்ரயேண உன்முகர் ஆனவர்கள் திறத்தில் அவதார கார்யமான உபகார பரம்பரைகளை-அனுபவிக்கிறார் –
32-ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணும் இடத்தில் சக்கரவர்த்தி திருமகன் செவ்வைப்-பூசலாலே ராஷசரை அழியச் செய்தால் போலே விரோதி வர்க்கத்தை போக்கவுமாம் –
மகாபலி பக்கலில் வாமனனாய் அர்த்தித்துச் சென்று வஞ்சித்து அழித்தால் போலே அழிக்கவுமாம் –ஆஸ்ரித விரோதி நிரசநத்தில் ஸ்வபாவ நியதி இல்லை-
33-ஆஸ்ரித ரஷணத்தில் ஸ்வபாவ நியதி இல்லாதவோபாதி ஆஸ்ரயிப்பாருக்கும்-ஜாதி நியதி இல்லை என்கிறார் –
34-கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு-பார்க்காதே -விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை
அனுபவித்தார் -இதில் -கார்ய காரணங்கள் என்ன -பிரமாண ப்ரமேயங்கள் என்ன -சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு
ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன-ஆச்சர்யம் -என்கிறார் –
35-அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கி ருசி ஜனகனாய்-கொண்டு அவதரித்த ஏற்றத்தை அனுபவித்தார் கீழில் பாட்டில் –
இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவும் விடவுமாம் படி ந்யாம்யனான-குணாதிக்யத்தை அனுசந்தித்து திரியவும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார் –
36-கீழ் சொன்ன பரதந்த்ர்யத்தை அநுபாஷித்து அவ்வதாரங்களின் ஆச்சர்ய சேஷ்டிதங்களில்-ஈடுபடுகிறார் –
37-பின்பு க்ருஷ்ணாவதாரத்தில் விதக்த சேஷ்டிதங்களையும் -முக்த சேஷ்டிதங்களையும்-அனுபவிக்கிறவர் -மௌக்த்யத்தாலும் சௌலப்யத்தாலும் -வரையாதே எல்லாரையும்
தீண்டின படியாலும் க்ருஷ்ணாவதாரமான ஸத்ர்சமான வட தள சாயியையும்-ஸ்ரீ வராஹ வாமன ப்ராதுர்பாவங்களையும் க்ருஷ்ணாவதாரத்தொடு ஒக்க-அனுபவிக்கிறார் –
38-பரித்ராணாய சாதூநாம் விநாசாயச துஷ்க்ர்தாம் – என்கிறபடியே பிரதிகூலரை அழியச்செய்தும்-
அனுகூலரை உகப்பத்திம் செய்தருளின கிருஷ்ணாவதார சேஷடிதங்களை-அனுபவிக்கிறார் –
39-சாது பரித்ராணமும் துஷ்க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ்-இதில் -இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதிகளுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை அழியச் செய்து
அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான் ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது
அவனை அழியச் செய்யாதே முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –
40-ஈஸ்வர அபிமாநிகளான தேவதைகள் உடைய ரஷண பிரகாரம் சொல்லிற்று கீழ் -இப்பாட்டில் -அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில்
நித்ய ஸூரிகளுக்கு மேல் எல்லையான பிராட்டிமாரோடே -சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன் வாசியற –
தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக விரோதி நிரசன பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார் –
41-நீ உகந்தாரை -தத் சஜாதீயனாய் வந்து அவதரித்து ஸ்வரூப அநுரூபமாக ரஷிக்கும்-படியையும் விமுகரான சம்சாரிகளை சங்கல்பத்தாலே
கர்ம அநுகூலமாக ரஷிக்கும் படியையும் அநுசந்திக்கப் புக்கால் பரிச்சேதிக்க முடியாததாய் இருந்ததீ -என்கிறார் –
42-நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -என்று ஸ்ர்ஷ்டி சம்ஹாரங்கள் சேர ப்ரஸ்துதம்-ஆகையால் -ஏக ஏவ ருத்ர சர்வோஹ்யே ஷ ருத்ர -என்று
சுருதி பிரசித்தராய் இருப்பாரும் உண்டாய் இருக்க -நம்மையே அபரிச்சின்ன ஸ்வபாவராகச் சொல்ல கடவீரோ என்று-பகவத் அபிப்ராயமாக –
அந்த ருத்ரனனுக்கு வந்த ஆபத்தை அவதரித்து தாழ நின்று அந்நிலையிலே போக்கின தேவரீருக்கு இது பரிஹரிக்கை பரமோ என்கிறார் –
43-ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கின வளவே யன்றிக்கே -க்ருஷ்ணனாய் வந்து அவதரித்த-பூபாரமான கம்சனை சபரிகரமாக நிரசிக்கையாலும் –
அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடாதிகளோடு வாசியற ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலைகளிலும் திருவடிகளை-வைத்து உன் சேவை சேஷித்வத்தை
பிரகாசிப்பித்தபடியாலும் ஜகத் காரண பூதன் நீயே என்கிறார் -காலநேமி ஹதோயோ சௌ -என்று பூமி கம்சனை பூபாரமாகச் சொன்னாள் இறே-
44-மண்ணளந்து கொண்ட காலனே -என்று முறை அறிவித்தபடியும்-அஞ்சன வண்ணன் -என்று முறை அறிந்தவர்கள் ஆஸ்ரயிக்கைக்கு சுபாஸ்ரயமான
வடிவும் ப்ரஸ்துதமாய் நின்றது கீழ்-க்ருத்யாதி யுகங்களிலே சேதனர் சத்வாதி குண அநுகூலமாக ச்வேதாதி வர்ணங்களை-விரும்புகையாலே
அந்த காள மேக நிபாஸ்யமான நிறத்தை யழிய மாறி அவர்களுக்கு வர்ணங்களைக் கொண்டு அவ்வவ காலங்களிலே முகம் காட்டச் செய்தேயும்
சம்சாரிகள் காற்கடைக் கொள்ளுவதே -இது என்ன துர்வாசநா பலம் -என்கிறார் –
45-பகவத் சௌலப்யத்தையும் அதிசயத்து இருந்துள்ள சம்சாரிகளுடைய துர்வாசனையால்-வந்த இழவைச் சொன்னார் கீழ் -இதில் அவர்களில் அந்யதமனான
எனக்கு தேவரீர் உடைய பரத்வ சௌலப்யங்களையும் -ஆஸ்ரிதருக்கு எளியனாய் அநாஸ்ரிதருக்கு அரியனாய் இருக்கிற படியையும் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்குவதே -இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் –
46-அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்று ஸ்வரூபத்தை அறிவிக்கையாலே-சம்சாரத்திலே வந்து ஆவிர்பவித்தும் -அவதரித்ததும் –
பெரிய திருவடி தோளிலே ஏறி ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே சென்று ரஷித்த காலம் எல்லாம் இழந்தேன் –
இனி இழவாதபடி -விரோதி நிவர்த்தி பூர்வகமாக நான் உன்னைப் பெரும் விரகு அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –
47-பர வியூஹ விபவங்கள் அடங்க ஆஸ்ரயணீய ஸ்தலம் அன்றோ -அதிலே ஓர் இடத்தைப் பற்றி ஆஸ்ரயித்து நம்மைப் பெற மாட்டீரோ என்ன –
அவ்விடங்கள் எல்லாம் நிலம் அல்ல -இனி எனக்கு பிரதிபத்தி பண்ணி-ஆஸ்ரயிக்க வல்லதோர் இடத்தை அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –
48-ஆஸ்ரயணீய ஸ்தலங்களை சாமான்யேன பாரித்து வைத்தோம் ஆகில்-அவற்றில் ஒன்றைப் பற்றி ஆஸ்ரயிக்கும் ஆஸ்ரய பூதருக்கு ஆஸ்ரயண
அநுகூலமாக பல ப்ரதராய் இருக்கும் அது ஒழிய – ஆஸ்ரயணீய ஸ்தலத்தை-விசேஷித்து சொல்லுகை நமக்கு பரமோ என்ன –ஆஸ்ரிதர் நாஸ்ரிதர்
விபாகம் அன்றிக்கே நின்ற நின்ற நிலைகளிலே பர ஹிதமே-செய்யும் ஸ்வபாவனான பின்பு என் அபேஷிதம் செய்கை உனக்கே பரம் அன்றோ –என்கிறார்-
49-சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே -என்று இவருக்கு இவர் இருந்த-பூமியிலே சஷூர் விஷயமாய் –அவதாரங்களில் உண்டான
நீர்மைகளும் இழக்க வேண்டாதபடி -குண பூர்த்தியோடே கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸம்ர்தியைக் காட்ட கண்டு -அனுபவிக்கிறார்-
50-ஆந்தர விரோதத்தை போக்க வல்ல அவதார வைபவத்தையும் -பாதக பதார்த்த சகாசத்திலே நிர்பயராய் வர்திக்கலாம்படி அபாஸ்ரயமான தேச வைபவத்தை
சொன்னார்-கீழில் பாட்டில் -இதில்-பாஹ்ய விரோதத்தைப் போக்கவல்ல அவதார வைபவத்தையும்-சர்வ சமாஸ்ரயணீயமான தேச வைபவத்தையும் அருளிச் செய்கிறார் –
51-உபயபாவ நிஷ்டனான ப்ரஹ்மாவானவன் தன் அதிகாரத்துக்கு வரும் விரோதிகளை-பரிஹரிகைக்கு -ப்ரஹ்ம பாவனைக்கும் -பலமான மோஷத்துக்குமாக-
சதுர்தச புவன ஸ்ரஷ்டா என்றும் நாலு வேதங்களையும் ஒருக்காலே உச்சரிகைக்கு ஈடான நான்கு முகத்தை உடையன் அஜன் –
52-ராமாவதாரதுக்கு பிற்பாடர்க்கு கோயிலிலே வந்து உதவினபடி சொல்லிற்று -கீழ் மூன்று பாட்டாலே-இனி -இரண்டு பாட்டாலே கருஷ்ணாவதாரதுக்கு பிறபாடர்க்கு
உதவும்படி சொல்லுகிறது -அநந்தரம் கீழில் பாட்டோடு சங்கதி என் என்னில் -சதுர்தச புவநாத் யஷனாய் ஜ்ஞானாதிகனான ப்ரஹ்மாவுக்கு ஆஸ்ரயணீ யமான
அளவு அன்றிக்கே -அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருந்துள்ளவர்களுக்கு-அனுபவ ஸ்தானம் கோயில் -என்கிறார் –
53-அநிருத்த ஆழ்வானுடைய அபிமத விரோதியாய் -ப்ரபலமான பாண ப்ரமுக வர்க்கத்தை-போக்கினாப் போலே -இன்று ஆஸ்ரிதருடைய
போக விரோதியைப் போக்குகைக்கு அந்த க்ருஷ்ணன் நித்ய வாஸம் பண்ணும் தேசம் கோயில் -என்கிறார் –
54-சம்சாரத்தில் தன பக்கல் ருசி இல்லாதாருக்கு ருசி ஜநகனாகைக்கும்-ருசி பிறந்தாருக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்-
ஆஸ்ரிதரை அஹங்கார ரஹீதமாக அடிமை கொள்ளுகைக்கும் உரியவன் -என்கை-
55-இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி -லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து
எனக்கு மறக்க ஒண்ணாதபடி என்னை அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் -இவ்வாறு 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –
56-இனி மேல் ஆறு பாட்டாலே –திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் -இதில் -முதல் பாட்டில் –
ஆஸ்ரித விரோதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன் பின்புள்ளாரான -அநந்ய பிரயோஜனருக்கு ஸ்வ ப்ராப்தி-
விரோதிகளைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளுகைகாக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற-படியை அனுபவிக்கிறார் –
57-ப்ராப்தி விரோதியைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளும் அளவு அன்றிக்கே-நித்ய அநபாயிநியான பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான ராவணனை-
அழியச் செய்தாப் போலே –பிற்பாடரான ஆஸ்ரிதருக்கு அநுபவ-விரோதிகளைப் போக்குகைகாகத் திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை-அநுபவிக்கிறார் –
58-ஆஸ்ரித அர்த்தமாக யமளார்ஜுநங்கள் தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தைப்-போக்கின நீ -அக்காலத்துக்கு பிற்பாடருக்கு உதவுகைக்காக
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே வந்து கண் வளர்ந்து அருளினாய் அல்லையோ –என்கிறார்-
59-பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து-அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் –
பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –
60-உகந்து அருளின நிலங்கள் ஆஸ்ரயணீய ஸ்தலம்-போக ஸ்தானம் ஒரு தேச விசேஷம் என்று இராதே-நிலையார நின்றான் -என்று நிலை யழகிலே
துவக்குண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும் இப்படி செய்து அருளிற்று-போக்தாக்களான ஆஸ்ரிதர் பக்கலிலே உள்ள வ்யாமோஹம் இறே -என்கிறார்-
61-இப்படி போக ஸ்தானம் ஆகையாலே ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில் தாம்-அனுபவிக்க இழிந்த இடத்தில் -வாய் திறத்தல் -அணைத்தல் -செய்யாதே –
ஒரு படியே கண் வளர்ந்து அருளக் காண்கையாலே -ஸூகுமாரமான இவ்வடிவைக் கொண்டு த்ரைவிக்ரமாதி சேஷ்டிதங்களைப்-பண்ணுகையாலே -திருமேனி
நொந்து கண் வளர்ந்து அருளுகிறாராக-தம்முடைய பரிவாலே அதிசங்கித்து-என் பயம் கெடும்படி ஒன்றை நிர்ணயித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்கிறார்
இது ஒழிய -ப்ராங்ந்யாயத்தாலே -அர்ச்சாவதார சங்கல்பம் என்ன ஒண்ணாது இறே -இவர்க்கு –
62-திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின இதுக்கு ஹேது நிச்சயிக்க மாட்டாதே பீதர்-ஆனவருக்கு –ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தோடே –
திருக் குறுங்குடியிலே நின்று அருளின படியை காட்டக் கண்டு தரித்து -நம்பி உடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து –
முரட்டு ஹிரண்யனை -அழியச் செய்தாய் என்பது உன்னையே என்று விஸ்மிதர் ஆகிறார் –
63-தேவரீர் சௌகுமார்யத்தை பாராதே ஸ்ரீ ப்ரஹலாதன் பக்கல் வாத்சல்யத்தால் ப்ரேரிதராய்-ஹிரண்யனை அழியச் செய்யலாம் -விமுகரான சம்சாரிகளுடைய
ஆபிமுக்யத்தை அபேஷித்து-உன் மேன்மையைப் பாராதே -கோயில்களிலே நிற்பது -இருப்பது -கிடப்பது -ஆகிற இது-என்ன நீர்மை என்று ஈடுபடுகிறார் –
64-கீழ்ச் சொன்ன நீர்மையை உடையவன் -எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக-திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணுகையாலே-கீழ்ச் சொன்ன நீர்மை பலித்தது என் பக்கலில் -என்கிறார் –
65-தம் திறத்தில் ஈஸ்வரன் பண்ணின உபகாரமானது தம் திரு உள்ளத்தில் நின்றும் போராமையாலே-பின்னும் அதிலே கால் தாழ்ந்து –திருமலையில் நிலையும்
பரம பதத்தில் இருப்பும் -ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளின இதுவும் எனக்குத் தன் திருவடிகளில் ருசி-பிறவாத காலம் இறே –என்கிறார்-
66-பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய் இருக்க -பகவத் சமாஸ்ரயணம்
அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர்-ஆகிறார் –
67-சம்சாரிகள் தங்களுக்கு ஹிதம் அறிந்திலரே ஆகிலும் -இதில் ருசி பிறந்த வன்று இத்தை இழக்க ஒண்ணாது என்று பார்த்து -இவர்கள் துர்கதியைக் கண்டு
-பரோபதேச ப்ரவ்ர்த்தர் ஆகிறார் -மேல் ஏழு பாட்டாலே -இதில் முதல் பாடு –அர்ச்சிராதி கதியிலே போய் -நிலை நின்ற புருஷார்த்தத்தை லபிக்க வேண்டி இருப்பீர் –
ப்ராப்யமும் ப்ராபகமும் ஆன பகவத் விஷயத்தை ஆஸ்ரயித்து-உங்கள் விரோதியைப் போக்கி-உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –
68-சம்சாரிகள் குணத்ரய ப்ரசுரர் ஆகையாலே குண அநுகூலமாக ராஜச தாமச-தேவதைகளை ஆசரயித்து உஜ்ஜீவிக்கப் பார்க்கிறவர்களை நிஷேதியா நின்று கொண்டு –
ஆத்ம உஜ்ஜீவநத்தில் ருசியை உடையராய் -சாத்விகர் ஆனவர்கள் சர்வாதிகனை-ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க பாரும் கோள் -என்கிறார்-
69-எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்-தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்-ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள-வல்லிகோள் -என்கிறார் –
70-வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அவர்களுக்கு சக்தி வைகல்யம்-சொல்லுவான் என் -அவர்களை ஆஸ்ரயித்து தங்கள் அபிமதம் பெற்றார் இல்லையோ
என்ன –ருத்ரனை ஆஸ்ரயித்து அவனுக்கு அந்தரங்கனாய்ப் போந்த பாணன்-பட்ட பாடும் -ருத்ரன் கலங்கிய படியும் தேவர்களே அறியும் அத்தனை இறே -என்கிறார்-
71-பாணனை ரஷிக்க கடவேன் என்று பிரதிக்ஜை பண்ணி ஸபரிகரனாய் கொண்டு-ரஷணத்தில் உத்யோகித்து எதிர் தலையில் அவனைக் காட்டிக் கொடுத்து தப்பி-
போன படியாலும் -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று லஜ்ஜித்து-க்ர்ஷ்ணன் கிருபை பண்ணி அவன் சத்தியை நோக்கின படியாலும்
அவன் ரஷகன் அல்ல என்னும் இடமும்-க்ருஷ்ணனே ரஷகன் என்னும் இடமும்-ப்ரத்யஷம் அன்றோ -இவ்வர்த்தத்தை ஒருவர் சொல்ல வேண்டி இருந்ததோ –என்கிறார் –
72-ருத்ரன் லோகத்திலே மோஷ ப்ரதன் என்று ஆச்ரயிப்பாரும்-ஆகமாதிகளிலே பரத்வத்தை பிரதிபாதித்தும் அன்றோ போகிறது என்னில்-நிர்தோஷ ஸ்ருதியில்
அவனை ஷேத்ரஞ்ஞனாகச் சொல்லுகையாலே லோக-பிரசித்தி வடயஷி பிரசித்தி போலே அயதார்தம் -ஆகமாதிகள் விப்ரலம்பக வாக்யவத்-அயதார்த்தம் -என்கிறார்
73-ஸ்ரீயபதியே ஆஸ்ரயணீயன்-ப்ரஹ்ம ருத்ராதிகள் ஷேத்ரஞ்ஞர் ஆகையாலே அநாஸ்ரணீயர் -என்றதாய் நின்றது கீழ் -இதில் -அந்த ஸ்ரீயபதி தான் தாழ்ந்தாருக்கு
முகம் கொடுக்கைகாக மனுஷ்ய சஜாதீயனாய் தன்னை தாழ விட்டுக் கொண்டு நின்ற நிலையிலே-ப்ரஹ்ம ருத்ரர்கள் உடைய அதிகாரத்தில் நின்றாருக்கு
மோஷ ப்ரதன் என்று கொண்டு –தேவதாந்தரங்களுக்கும் சர்வேஸ்வரனுக்கும் உண்டான நெடுவாசியை அருளிச் செய்கிறார் –
74-ஆஸ்ரயணீயனுடைய பிரசாதமே மோஷ சாதனம் ஆகில் -முமுஷுவான இவ் வதிகாரிக்கு-பிரசாதகமான கர்த்தவ்யம் ஏது என்னில் ஸ்ரீ வாமனனுடைய திருவடிகளில்
தலை சாய்த்தல் -ஷீராப்தி நாதனுடைய சீலத்துக்கு வாசகமான திரு நாமத்தை வாயாலே சொல்லுதல் செய்யவே-புருஷார்த்த சித்தி உண்டு -என்கிறார் –
75-இப்படி அவனை ஆஸ்ரயித்து -அவனுடைய கடாஷத்தாலே பிரதிபந்தக நிரசன-பூர்வகமாக அவனைப் பெறுகை ஒழிய -உபாயாந்தரஙககளிலே இழிந்து
ஆஸ்ரயிப்பாருடைய அருமையை அருளிச் செய்கிறார் -மேல் ஏழு பாட்டுக்களாலே -இதில் முதல் பாட்டில் -கர்ம யோகமே தொடங்கி
-பரம பக்தி பர்யந்தமாக -சாதிக்குமவர்களுடைய துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –
76-த்ரவ்ய அர்ஜநாதி க்லேசம் என்ன -பர ஹிம்சாதி துரிதம் என்ன -இவற்றை உடைத்தாய் –இந்த்ரிய வ்யாபார ரூபமான கர்ம யோகத்தில் காட்டில் –
இந்த்ரியோபாதி ரூபமான ஜ்ஞான யோகத்தில் பிரதமத்தில் இழியுமவர்கள் உடைய-துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –
77-கர்ம ஜ்ஞானன்களை சஹ காரமாகக் கொண்டு ப்ரவர்த்தமான பக்தியாலே-பகவத் லாபத்தை சொல்லிற்று -கீழ் -சர்வ அந்தர்யாமியாய் -ஜகத் காரணபூதனான
சர்வேஸ்வரனை அஷ்டாங்க ப்ரணாமம் முன்னாக -திரு மந்த்ரத்தை கொண்டு பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கிறார் –
இப்பாட்டு முதலாக இதிஹாச புராண ப்ரக்ரியையாலே பகவத் பஜனத்தை அருளிச் செய்கிறார் –
78-உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன -கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி நாதனை சுபாஸ்ரயமாகப்
பற்றி மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து -ஆஸ்ரயித்து -இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள்-பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –
79-ஸ்வேத த்வீப வாசிகளை ஒழிந்த சம்சாரிகளுக்கு அது நிலமோ என்ன -அவதார கந்தமான ஷீராப்தியில் நின்றும் தன் மேன்மை பாராதே-தச ப்ராதுர்பாவத்தை
பண்ணி சுலபனானவன் திருவடிகளிலே-அவதார ரஹச்ய ஜ்ஞானம் அடியான பக்தியை உடையவர்களுக்கு அல்லது-முக்தராக விரகு உண்டோ –என்கிறார்-
80-அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் -இதில் அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை
அநுவதித்து -அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு-ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை –என்கிறார் –
81-வ்யூஹ விபவங்கள் -தேச கல -விபகர்ஷத்தாலே நிலம் அன்று என்ன வேண்டாதபடி-பிற்பாடர் இழவாமைக்கு -திருமலையிலே வந்து நின்று அருளினான்
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகப் பாரும் கோள் என்று உபதேசத்தை-தலைக்கட்டுகிறார் –
82-இதுக்கு முன்பு பரோபதேசம் பண்ணினாராய் -மேல்-ஈஸ்வரனைக் குறித்து -தேவரீர் திருவடிகளிலே ப்ரேம உக்தர் நித்ய ஸூகிகள் -என்கிறார்
இதுக்கு அடி -பிறருக்கு சாதகமாக தான் உபதேசித்த பக்தி -தமக்கு ஸ்வயம் பிரயோஜனம்-யாகையாலே -தமக்கு ரசித்த படியைப் பேசுகிறார் –
இப்பரபக்தி தான் -சாதகனுக்கு உபாயத்தின் மேல் எல்லையாய்-பிரபன்னனுக்கு ப்ராப்யத்திலே முதல் எல்லையாய் -இருக்கும் இறே
இதில் முதல் பாட்டில் –மனுஷ்யத்வே பரத்வத்தையும் -அவதார கந்தமான ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையையும் -அனுசந்தித்து
தேவரீர் திருவடிகளில் ப்ரவணர் ஆனவர்களுக்கு சர்வ தேசத்திலும் ஸூகமேயாம் –என்கிறார்-
83-அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்-உண்டாகக் கூடுமோ -என்னில்-ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்-பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –
84-வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே -என்று கீழ் ப்ரஸ்துதமான பக்தி-தம் பக்கல் காணாமையாலும் -தம்மை பிரக்ர்தியோடே இருக்கக் காண்கையாலும் –
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலும் -அவன் நினைவாலே பேறாகையாலும் –என்திறத்தில் -என் நாதன் தன் திருவடிகளில் பரம பக்தி உக்தனாம்படி
பண்ண நினைத்து இருக்கிறானோ – நித்ய சம்சாரியாகப் போக நினைத்து இருக்கிறானோ -திரு உள்ளத்தில் நினைத்து இருக்கிறது என்னோ -என்கிறார் –
85-என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் –முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே
திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி -இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –
86-உம்மை நம் பக்கலில் நின்றும் அகற்றி ப்ரகர்தி வஸ்யர் ஆக்குவோமாக நம் பக்கலிலே-அதிசங்கை பண்ணுவான் என் -என்ன -விரோதி நிரசன
சமர்த்தனான நீ -என் ப்ரகர்தி சம்பந்தத்தை யறுத்து-என் நினைவைத் தலைக் கட்டாது ஒழிந்தால்-அதிசங்கை பண்ணாதே செய்வது என் –என்கிறார் –
87-செய்ய பாதம் நாளும் உள்ளினால் -என்று நீயே எனக்கு அபாஸ்ரயம் என்கையாலே-நம்மை ஒழியவும் எனக்கு வேறு ஒரு பற்று இல்லையோ என்ன –
அபாஸ்ரயமாக சம்பாவனை உள்ள ப்ரஹ்ம ருத்ரர்கள் ஸ்வ அதிகார ஸித்திக்கு-தேவரீர் கை பார்த்து இருக்கும்படியாய் இழிந்த பின்பு -சர்வாதிகரான
தேவரீரை ஒழிய வேறு ஒரு பற்றை உடையேன் அல்லேன் என்று-தம்முடைய அதிகாரத்துக்கு அபேஷிதமான அநந்ய கதித்வ க்யாபநம் பண்ணுகிறார் மேல் –
88-ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரம் ஈச்வரனாலே என்றார் கீழே -இதில் –அவர்கள் தங்கள் ஆபநநிவ்ருத்திக்கு தேவரீர் கை பார்த்து
இருக்கும்படி பரம உதாரரான தேவரீரை ஒழிய வேறு ஒருவரை தேவதையாக மதிப்பேனோ -என்கிறார் –
89-ப்ரஹ்மாதிகளையும் மேன்மை குலையாதபடி நின்று ரஷித்த அளவு அன்றிக்கே -க்ருஷ்ணாஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ -என்கிறபடியே
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யந்களைப் பண்ணி-தாழ நின்று-சத்ய சங்கல்பனாய்க் கொண்டு-விரோதி வர்க்கத்தை அழியச் செய்து
ராஜ்யத்தை கொடுத்த -உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் உண்டு என்று-நான் நினைத்து இருப்பேனோ –என்கிறார் –
90-உன்னை ஒழிந்தார் ஒருவரை ஆஸ்ரயணீயர் என்று இரேன் என்று தம்முடைய-அநந்ய கதித்வம் சொன்னார் கீழ் -இப்பாட்டில் -ஆஸ்ரயணீயர் தேவரீரே ஆனாலும்
தேவரீரை லபிக்கைக்கு-தேவரீர் திருவடிகளை ஒழிய-என் பக்கல் உபாயம் என்று சொல்லல் ஆவது இல்லை என்று-தம்முடைய ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –
91-சாஸ்திரபலம் ப்ரயோக்த்ரி -என்று பேறு உம்மதானால் உம்முடைய விரோதி நிவ்ர்திக்கு-நீரே கடவர் ஆக வேண்டாவோ -நின்னிலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் –
என்கிறது எத்தாலே என்ன -ப்ராங் ந்யாயத்தாலே -அது என் என்னில் -அசோகவ நிகையிலே இருந்த பிராட்டி தேவரீரை லபிக்கைக்கு ராஷச வதத்தாலே
அவள் யத்னம் பண்ணும் அன்று அன்றோ நான் என்னுடைய விரோதியை போக்குகைக்கு யத்னம்-பண்ணுவது -ஆனபின்பு-
அநந்ய கதியாய்-அகிஞ்சனான என்னை-ஸ்வ ரஷணத்தில் மூட்டி அகற்றாது ஒழிய வேணும் -என்கிறார் –
92-நின்னை என்னுள் நீக்கல் -என்றீர்-நாம் உம்மை அகலாது ஒழிகைக்கு நம் அளவிலே நீர் செய்தது என்ன-நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன -நிருபாதிக
சரண்யரான தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை-உன்னுடைய கார்யம் எனக்கு பரம் -நீ பயப்பட வேண்டாம் -என்று-பயம் தீர –மாசுச -என்ன வேணும் –என்கிறார் –
93-அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்று பயம் கெட -மாசுசா -என்ன-வேணும் என்றீர் கீழ்-இவ்வளவே அமையுமே என்ன –உபாயாந்தரங்களைக் காட்டி
என்னை அகற்றாது ஒழிக்கைகாக சொன்ன வார்த்தை யன்றோ யது-தேவரீர் உடைய நிரதிசய போக்யதைக் கண்டு அனுபவிக்கிற ஆசைப்படுகிற எனக்கு விஷயாந்தர
நிவ்ர்த்தி பூர்வகமாக -தேவரீரையே நான் அனுபவிக்கும்படி-என் பக்கலிலே இரங்கி யருள வேணும் என்று பெரிய பெருமாள் திருவடிகளில்-அனுபவத்தை அபேஷிக்கிறார் –
94-த்வத் அநுபவ விரோதிகளைப் போக்கவும் -அதுக்கு அநுகூலங்கள் ஆனவற்றை உண்டாக்கவும் -அநுபவம் தன்னை அவிச்சின்னமாக்கவும் வேணும் என்று
அபேஷிக்க ப்ராப்தமாய் இருக்க-இரங்கு -என்று-இவ்வளவு அபேஷிக்க அமையோமோ -என்ன-உனக்கு பிரகாரமாய் இருக்குமது ஒழிய ஸ்வ தந்த்ரமாய்
இருப்பதொரு பதார்த்தம்-இல்லாமையாலே என் அபிமத ஸித்திக்கு உன் இரக்கமே யமையும் -என்கிறார் –
95-எம்பிரானும் நீ யிராமனே -என்று நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல சக்தனுமாய்-ஸ்வ தந்த்ரனனுமான சக்கரவர்த்தி திருமகனே உபாயம் என்றார் -கீழ் –
இதில் -உபாயத்தில் தமக்கு உண்டான அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் -பாஹ்ய விஷய ருசியைத் தவிர்த்து-உன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
கைங்கர்யத்தை பிரார்த்திக்கும்படி-புகுர நிறுத்தின நீ -என்னை உபேஷித்து விஷயாந்தர ப்ரவணனாம் படி கை விட்டாலும்-
உன்னை ஒழிய வேறொரு கதி இல்லை என்று-தம்முடைய அத்யவசாயத்தை யருளிச் செய்கிறார் –
96-தம்முடைய வ்யசாயத்தை அருளிச் செய்தார் கீழ் பாட்டில் -இதில் -அஞ்சேல் என்ன வேண்டுமே -என்றும் இரங்கு அரங்க வாணனே -என்றும்
பல படியாக அபேஷியா நின்றீர் -உம்முடைய ப்ராப்யத்தை நிர்ணயித்து சொல்லீர் –என்ன-நான் சம்சாரத்தை அறுத்து நின் திருவடிகளில்
பொருந்தும்படியாக பிரசாதத்தைப்-பண்ணி யருள வேணும் என்று தம்முடைய ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறார்-
97-வரம் செய் புண்டரீகனே –என்னா நின்றீர் -நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய பக்கல் ஒரு முதல் வேண்டாவோ -என்ன
திரு மார்பிலே பிராட்டி எழுந்து அருளி இருக்க -திருக் கையிலே திவ்ய ஆயுதங்கள் இருக்க-ஒரு முதல் வேணுமோ
அங்கனம் ஒரு நிர்பந்தம் தேவரீருக்கு உண்டாகில்-என் விரோதியைப் போக்கி-உன்னைக் கிட்டி அடிமை செய்கைக்கு
ஹேதுவாய் இருப்பதோர் உபாயத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார்-
98-நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய தலையிலே ஒரு முதல் வேணுமே-என்னை நீயே தர வேணும் என்னக் கடவீரோ -என்று பகவத் அபிப்ராயமாக
புருஷார்த்த ருசியாலே வந்த ப்ராதிகூல்ய நிவ்ர்த்தியும் புருஷார்த்த ருசியுமே-ஆலம்பநமாக நான் சம்சார துரிதத்தை தப்பும்படி நீயே பண்ணியருளவேணும் -என்கிறார் –
99-புருஷார்த்த ருசி பிறந்த பின்பு -அத்தாலே வந்த பிரதிகூல்ய நிவ்ர்த்தியை உம்முடைய-பக்கல் முதலாக சொல்லா நின்றீர் -அநாதி காலம் நரக ஹேதுவாகப் பண்ணின
ப்ராதிகூல்யங்களுக்கு போக்கடியாக-நீர் நினைந்து இருந்தது என் -என்ன -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்ற
உன்-திருவடிகளில் ந்யச்த பரனான இது ஒழிய வேறு போக்கடி உண்டோ -ஆனபின்பு-கீழ் சொன்ன கர்மம் அடியாக வருகிற யம வச்யதையை தவிர்த்து –
எனக்கு உன் திருவடிகளிலே அவிச்சின்னமான போகத்தை தந்து அருள வேணும் -என்கிறார்-
100-இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன –அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –
101-நீர் நம்மை ப்ரார்த்திக்கிற பரபக்தி -விஷயாந்தரங்களின் நின்றும் நிவ்ர்த்தமான-இந்திரியங்களைக் கொண்டு -நம்மை அநவரத பாவனை பண்ணும் அத்தாலே
சாத்தியம் அன்றோ -என்ன -அங்கனே யாகில் ஜிதேந்த்ரியனாய் கொண்டு அநவரத பாவனை பண்ணுவேனாக-தேவரீர் திரு உள்ளமாக வேணும் -என்கிறார்-
102-விச்சேத ப்ரசங்கம் இல்லாத அநவரத பாவனைக்கு சரீர சம்பந்தம் அற வேணும் காண் -என்ன–எனக்கு ருசி உண்டாய் இருக்க –
தேவரீர் சர்வ சக்தியாய் இருக்க -அனுவர்த்திக்கிற இந்த அசித் சம்சர்க்கத்தை தேவரீர் அறுத்து தந்து அருளும் அளவும்-நான் தரித்து இருக்கும்படி
-இன்னபடி செய்கிறோம் என்று -ஒரு வார்த்தை யாகிலும்-அருளிச் செய்ய வேணும் -என்கிறார்-
103-அசித் சம்பந்தம் தேக அவஸானத்திலே போக்குகிறோம் -நீர் பதறுகிறது என் -என்ன -அங்கனே ஆகில் –தேவரீர் உடைய-மேன்மைக்கும்-நீர்மைக்கும்-
வடிவு அழகுக்கும்-வாசகமான திரு நாமங்களை நான் இடைவிடாது மனநம் பண்ணிப் பேசுகைக்கு-ஒருப்ரகாரம் அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –
104-யத் கரோஷியதச் நாஸி -என்றும் -த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும்-இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி –
சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே -நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ -உரை செய் -என்கிறது என் -என்ன –
நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க-நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ-
நீயே என் விரோதியைப் போக்கி -உன்னை நான் மேல் விழுந்து -இடைவிடாதே-அனுபவிக்கும்படி பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –
105-நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும்-நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும்-ஹேது என் என்ன –
பிராட்டி புருஷகாரமாக -குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே-தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே-
உபாயாந்தர அபேஷை இல்லை –தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –
106-நின்ன வண்ணம் அல்லதில்லை -என்று தாம் வடிவு அழகிலே துவக்குண்டபடி சொன்னார் கீழ் –இதில் -தேவரீர் உடைய ஆபத் சகத்துவத்துக்கு
அல்லது நான் நெகிழிலும் என்னெஞ்சு வேறு ஒன்றில் ஸ்நேஹியாது என்கிறார் –
107-கீழ் இரண்டு பாட்டாலும் -தமக்கும் தம் உடைய திரு உள்ளத்துக்கும் உண்டான பகவத் பிரேமத்துக்கு அடியான-வடிவு அழகையும்-ஆபத் சகத்வத்தையும்
பேசினார் -இதில் –அந்த சங்க விரோதியான பிரபல ப்ரதிபந்தங்களை பிரபலமான அசுரர்களை அழியச் செய்தாப்-போலே போக்கின உன் திருவடிகளுக்கு அல்லது-வேறு ஒரு விஷயத்தில் நான் சங்கம் பண்ணேன் என்கிறார் –
108-நின் புகழ்க்கலால் ஒரு நேசம் இல்லை நெஞ்சம் -என்றும் -நின் கழற் கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் -என்றும் -சொல்லக் கடவது இ றே
இதுக்கு விஷயமாக நம்மைக் கிட்டி அநுபவிக்கப் பார்த்தாலோ என்ன -போக மோஷ சுகங்களை அனுபவிக்கப் பெற்றாலும்
உன்னை ப்ராபிக்க வேணும் என்னும் ஆசை ஒழிய-மற்று ஒன்றை விரும்பேன் -என்கிறார் –
109-கீழ்-நம் பக்கல் உமக்கு உண்டாகச் சொன்ன ஆசை -ஸ்வ யத்னத்தாலே அநவரத பாவனை-பண்ணியும் -சததம் கீர்த்தனம் பண்ணியும் பெறுவார் உடைய ஆசை போல் இருந்ததீ –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும் -திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவனே -என்றும் தொடங்கி-நின் நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது
உரைக்குமாறு உரை செயே -என்றும் -கூடும் ஆசை யல்லதொன்று கொள்வேனோ -என்றும்-பேசினீரே என்ன –உன்னுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் என்னைப் ப்ரேரிக்க
காலஷேப அர்த்தமாக பேசி நின்ற இத்தனை -அது தானும் வேதங்களும் -வைதிக புருஷர்களும் பேசிப் போரக் காண்கையாலே-பேசினேன் இத்தனை -என்கிறார்-
110-தத்விப்ராசோ விபந்யவ -என்கிறபடியே -அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரும் -தேவர்களும் -முநிக் கணங்களும் -ஏத்திப் போந்த விஷயத்தை -நித்ய சம்சாரியாப் போந்த நான் ஏத்தக்
கடவேன் அல்லேன் -தான் செல்லாமையால் புகழ்ந்தான் என்று திரு உள்ளம் பற்றி-பொறுத்தருள வேணும் என்று -கீழ்-ஏத்தினேன் -என்றதற்கு ஷாபணம் பண்ணுகிறார் –
111-தம்முடைய தண்மையை அனுசந்தித்து –பொறுத்து நல்க வேணும் -என்றார் -கீழ் பாட்டில் -இதில் -பகவத் ப்ரபாவத்தை அனுசந்தித்து கால ஷேப அர்த்தமாக
பண்ணின அநுகூல வ்ர்த்தியால் வந்த குற்றத்தையும் -ப்ராமாதிகமாக செய்த குற்றத்தையும் -குணமாக கொள்ள வேணும் –என்கிறார் –
112-கீழ் இரண்டு பாட்டாலே -இத்தலையில் குற்றத்தை பொறுக்க வேணும் என்று ஷாபணம்-பண்ணி -அக் குற்றங்களை குணமாக கொள்ள வேணும் என்றார் -இப்பாட்டில்-
-திரு உள்ளத்தை குறித்து -ஆயுஸூ எனக்கு இன்ன போது முடியும் என்று தெரியாது -அவன் திருவடிகளில் வணங்கி வாழ்த்தி கால ஷேபம் பண்ணப் பார் –என்கிறார் –
113-மீள்விலாத போகம் நல்க வேண்டுமே -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்ய போகமே-பாரதந்த்ர்யத்தினுடைய எல்லையிலே பெறுமதாய் இருக்க -தத் விருத்தமான
துர்மாநாதிகளாலே அபஹதராய் இருந்த நமக்கு அந்த பேறு-பெருகை கூடுமோ -என்ன -திரு உள்ளத்தைக் குறித்து-துர்மாநத்தாலே ப்ரஹ்ம சிரஸை யறுத்த
ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவனே நமக்கு பாரதந்த்ர்ய விரோதியான துர்மாநத்தைப் போக்கிப் பேற்றைத் தரும்-
நீ அவனை உபாயம் என்று புத்தி பண்ணி இரு –என்கிறார் –
114-இப்படியானால் நமக்கு கர்த்தயம் என் -என்ன -ஜ்ஞான ப்ரதானமே தொடங்கி-பரமபத ப்ராப்தி பர்யந்தமாக-நம் பேற்றுக்கு உபாயம்-நஷ்டோத்தரணம் பண்ணின
ஸ்ரீவராஹ நாயனார் திருவடிகளே என்று நினைத்து-சரீர அவசாநத்து அளவும்-காலஷேப அர்த்தமாக-அவனை வாழ்த்தப் பார் -என்கிறார் –
115-அவன் -அவாக்ய அநாதர என்கிறபடியே ஸ்வயம் நிரபேஷன் -நாம் அநேக ஜன்மங்களுக்கு அடியான கர்மங்களைப் பண்ணி வைத்தோம் –
அவன் திருவடிகளே உபாயம் -என்று நினைத்த மாத்ரத்தில் நம்மை ரஷித்து அருள-கூடுமோ என்று -சோகித்த திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வவித பந்துவுமாய் -சகல விரோதிகளையும் போக்கி -தன்னைத் தருவானாக-ஏறிட்டுக் கொண்டான் -நீ இனி சோகிக்க வேண்டாம் என்று –
திரு உள்ளத்தைக் குறித்து -மாசுச -என்கிறார் –
116-மேலுள்ள ஜன்ம பரம்பரைகளுக்கு அடியான கர்மத்தைப் போக்கி அடிமை கொள்ளுவானாக-ஏறிட்டு கொண்டான் -என்றார் -கீழ்-இதில் –
நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி-நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து-நமக்கு தஞ்சமான
சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு -யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ –என்கிறார்-
117-யம வஸ்யதா ஹேதுவான கர்மங்கள் போனாலும் -தேக ஆரம்பகமாய் இருந்துள்ள-ப்ராரப்த கர்மம் கிடந்தது இல்லையோ -என்ன -அந்த பிராரப்த கர்மாவையும்
-தத் ஆச்ரயமான தேகத்தையும் போக்கி -பரம பதத்தில் கொண்டு போவான் ஆன பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறை இல்லை-என்கிறார் –
பூர்வாஹகம் ஆகிறது-தேக பரம்பரைக்கு ஹேதுவாகவும் -நரக ஹேதுவாயும் -ப்ராரப்தமாய் -அநுபவ விநாச்யமாயும் -மூன்று வகைப்பட்டதாய்த்து இருப்பது –
அதில் -உபாசகனுக்கு -பிராரப்த கர்மம் ஒழிந்தவை நஷ்டமாகக் கடவது -பிராரப்த கர்மம் அநுபவ விநாச்யமாகக் கடவது –
பிரபன்னனுக்கு -பகவத் ப்ரசாதத்தாலே த்ரிவித கர்மங்களும் அநுபவிக்க வேண்டியது இல்லை –
118-வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி -என்று பிராரப்த கர்ம அவஸாநமான விரோதி நிவ்ர்த்திக்கும்-மீள்விலாத போகம் நல்க வேண்டும் -என்றும் –
நம்மை ஆட்கொள்வான் -என்றும் -வானில் ஏற்றுவான் -என்றும் –சொன்ன ப்ராப்ய ஸித்திக்கும்-ஈச்வரனே கடவான் என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டில் -ஈஸ்வரனை நோக்கி -தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான ப்ராப்ய ருசியை-ஆவிஷ்கரிக்கிறார் -இதில் –
119-கரணதுக்கும் க்ர்தர் பாவம் பிறக்கும்படியாக உமக்கு நம் பக்கல் பிறந்த அபிநிவேசம்-சம்சாரத்தில் கண்டு அறியாத ஒன்றாய் இருந்தது -இவ் வபிநிவேசதுக்கு
அடி என் -என்று – பெரிய பெருமாள் கேட்டருள –உம்முடைய வடிவு அழகையும் சீலத்தையும் காட்டி -தேவரீர் பண்ணின க்ர்ஷி பலித்த பலம் அன்றோ -என்கிறார் –
120-உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு -என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை
சொன்னார் -கீழ்-இதில் -கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே-நிர்ஹேதுகமாக-பெரிய பெருமாள்
தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே-விரோதி வர்க்கத்தை அடையப் போக்கி -அபுநா வ்ர்த்தி லஷணமாய்
நிரதிசய ஆநந்த ரூபமான-கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று -என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .