Archive for October, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-6-

October 31, 2018

‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-
ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கௌபீ நாச்சாத ந பிராயவாஞ்சா கல்பத்ருமாதபி-ஜாயதே யாத புண்யானாம் சோ அபராத ஸ்வ தோஷஜ-என்றது அனுசந்தேயம்
தேவராய மஹா ராயனை ஆஸ்ரயித்தவன் படிக்கல்லுக்கு ராயசம் கேட்க
கிராமத்துக்கும் படிக்கல்லுக்கும் ராயசம் கொடுத்த கதையையும் நினைப்பது

———————————-

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த
‘என்ன பரம உதாரனோ!’ என்கிறார்.
‘நீ வேண்டா; எங்களுக்குச் சாவாமைக்கு பரிஹாரம் – -உரிய பொருளை உண்டாக்கித் தரவேண்டும்,’ என்றவர்களுக்கு
அவர்கள் உகந்த பொருளைக் கொடுத்து விடுவதே!
அவர்கள் பிரயோஜனத்தை அருவருத்து, தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான-வ்யாவ்ருத்தி – வேறு பாட்டினை அருளிச் செய்கிறார்;

நிமிர் சுடர் ஆழி நெடுமால்-
இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது? 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?
தேவர்கள் விரும்பிய பலனைத் தலைக் கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு ஆழியிலே தோற்றும்படி இருத்தலின், 
‘நிமிர் சுடர் ஆழி’ என்கிறார்.
‘வேறு ஒரு பலனேயாகிலும் நம் பக்கல் கொள்ளப் பெற்றோமே!’ என்று கொண்ட பெரு மோகத்தின்
மிகுதி தோன்ற நிற்றலின், ‘நெடுமால்’ என்கிறார்.

அமுதிலும் ஆற்ற இனியன்-
தேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்?
ஆற்ற இனியன்-
மிகவும் இனியன். 
ஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று
கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.

நிமிர் திரை நீள் கடலானே –
அஸந்நிஹிதன் ‘அண்மையில் இலன்’ என்று தான் விடுகிறார்களோ!
அவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார், ‘கடலான்’ என்கிறார்.
‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய்,
ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார். 
‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈந்த என்றத்துக்குத் தாத்பர்யம் -பரம உதாரனோ -நம்மைக் கேட்க்கைக்கு இது தான் போருமோ-என்று விசாரியாமல்
அரித்தித்தையே ஹேதுவாக லோஷடத்தை யாகிலும் கொடுத்து விடுவதே -என்றபடி –
அமரர்களுக்கு -அமரர்கள் ஆகைக்கு என்றவாறு –
நிமிர் சுடர் -அபிவர்த்தமான தேஜஸ் ஸூ
உதாரஸ் சர்வ ஏவைதே
வெறும் மரையோ -கேவல அவயவமோ
தாமரையார்க்கும் அரவுடையார்க்கும் சது மறை நூல்
தாமரையார்க்கும் உயிராகுமாலியல் தண்ணம் துழாய்
தாமரையார்க்கும் உயிராம் முதல்வரைச் சாற்ற கில்லார்
தாம் மரையாகும் முது நீர் உடுக்கும் தலா தலத்தே
மரையோ -என்றது ஞான மாந்த்யத்தையும் கவிழ்ந்து கிடக்கையும் பற்ற
நிமிர் சுடர் ஆழி -என்ற அழகையும் அமுதிலும் ஆற்ற இனியன் என்ற போக்யத்தையும் பாராமல் –
மாலுகை -உகளுகை

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-5-

October 31, 2018

திரியட்டும் -மீண்டும்- தாம் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்திலே போந்து,
சர்வேஸ்வரன், தன் பக்கல் சிலர் வந்து கிட்டினால்
‘இவர்கள்-ப்ரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவர்களோ,
நம்மையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றுவார்களோ?’ என்று ஆராய்ந்து,
தன்னையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றினவர்களுக்குத்
தானும் -நிரதிசய போக்யனாய் -எல்லையற்ற இனியனாக இருப்பான் என்கிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை
அம்பரீஷனைப் பரீஷித்த பிரகாரத்தை அனுசந்திப்பது
ஆராய்ந்து -விரும்பி என்றதிலே நோக்கு –

—————————–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான்
விள்கல் விளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே–1-6-5-

கொள்கை கொளாமை இலாதான் –
‘இவன்-ஜென்ம – பிறவியாலும் -விருத்த -தொழிலாலும் -ஞானத்தாலும் உயர்ந்தவன் ஒருவன்;
இவனிடத்தில் அந்தரங்கத் தொண்டினைக் -விருத்தியைக் -கொள்வோம்;
இவன் அவற்றால் தாழ்ந்தான் ஒருவன்; இவனிடத்தில் புறத் தொழில் கொள்வோம்’ என்னுமவை இல்லாதான்.
திரு உள்ளத்தால் தானே நினைந்து இருக்குமோ என்னில் –

எள்கல் இராகம் இலாதான்-
திருவுள்ளத்தாலே சிலரை இகழ்ந்திருத்தல், சிலரை ஆதரித்தல் செய்யான். 
‘ஈடு எடுப்பும் இல் ஈசன்’ என்ற இடத்தில்-ஸ்வீகார சமயத்தில் – ‘ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் குறை பாரான்’ என்றார்;
இங்குக் ‘கைங்கரியம் கொள்ளுமிடத்தில் -பரிமாற்றத்தில் -தரம் இட்டுக் கொள்ளான்’ என்கிறார்.
அவன் பார்ப்பது இஃது ஒன்றுமேயாம்; அஃது, யாது?’ எனின்,

விள்கை –
பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை.

விள்ளாமை –
அநந்ய பிரயோஜனகை -வேறு பலன்களை விரும்பாமை.

விரும்பி-
ஆதரித்து.

உள் கலந்தார்க்கு-
அவனையே பிரயோஜனமாக-பலமாகப் பற்றி அவனுடனே ஒரு நீராகக் கலந்தார்க்கு.

ஓர் அமுதே-
அத்விதீயமான ஒப்பு அற்ற அமிர்தமாய் இருப்பான்; 
ஆரா அமுதே’ இறே –

———–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கொள்கை கொளாமை-அங்கீ கரிக்கையும் அங்கீ கரியாமையும் / எள்கல்-உபேக்ஷிக்கை / இராகம் -ஆதரிக்கை /
புனர் யுக்தி இல்லாமையை இங்கு பரிமாற்றத்தில் -கைங்கர்யம் கொள்ளும் இடத்தில் என்று அருளிச் செய்கிறார்
விள்கை விள்ளாமையை விரும்புகையாவது நிரூபிக்கை / விள்கை தன்னை விடுகை / விள்ளாமை -தன்னை விடாமல் இருக்கை
விள்ளாமல் உள் கலந்தார்க்கு -ஓரு நீராகக் கலக்கையாவது அவன் சந்தத்தை அறிந்து சந்த அனுவ்ருத்தி பண்ணுகை

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-4-

October 31, 2018

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் – காதற்பெருக்கு-
காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய சூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆடும் என் அங்கம் அணங்கே-என்றதை விவரிக்கிறதாய் அன்றோ இருக்கிறது –
இப் பாட்டுக்கு ஓரு வைஷம்யம் கண்டிலோமே என்கிற சங்கையிலே பிணங்கி அமரர் பிதற்றும் -என்கிற
விசேஷணத்தை கடாக்ஷித்து இது தானே யாத்திரையாக -என்று அருளிச் செய்கிறார்

———————-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே–1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் –
தெய்வம் ஏறியது என்னலாம்படி ஆடுகிற என் அங்கம் வணங்கி அது தானே
யாத்திரையாய்ச் செல்லும்படி இருக்கிற ஈசன்.

பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் –
தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி
நித்திய சூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப்போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.
அதாவது, ‘இரத்தினாகரம் போலே குணங்கள் சேருகைக்குக் கொள்கலமானவன்’ -ஆஸ்ரயமாக உள்ளான் என்றபடி.
இனி, ‘குணம் கெழு கொள்கையினான்’ என்பதற்கு,
குணங்கள் வந்து கெழுமுகையைச் ஸ்வபாவமாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம். கெழுமுகை-சேர்கை.

சர்வஞ்ஞரானவர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகா நின்றது கிடீர் என்கிறார் –

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வழிபடும்-பெயர் எச்சமுமாய் முற்று வினையுமாய் இருக்கும்
வணங்கி வழிபடுக்கைக்கு விஷயமான ஈசன் என்றவாறு –
கெழுமுகை -சேருகை / கொள்கை -ஆஸ்ரயிக்கைக்கும் ஸ்வ பாவத்துக்கு க்ரஹிக்கைக்கும் –
வழிபாடும் -வழி படா நிற்கிற -வர்த்தமானம்
என் அங்கம் -சரீரத்தைச் சொன்னது மநோ வாக்குகளுக்கும் உப லக்ஷணம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-3-

October 31, 2018

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை மறக்கும்படி
தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -காதற் பெருக்கினை
அருளிச் செய்கிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழும் மேலும் பரோபதேசமாய் இருக்க இப்பாட்டும் மேற்பாட்டும் ஸ்வ அனுபவமாய் இருக்கிறதுக்கு சங்கதி –
இஸ் ஸ்வபாவம் -என்றது கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன ஸ்வாராதந ஸ்வ பாவத்தை என்றபடி
தாம் அதிகரித்த கார்யம் -பரோபதேசம் –

——————

ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே–1-6-3-

ஈடும் எடுப்பும் இல் ஈசன்
சிலரை-உபேக்ஷித்தல் – வெறுத்தல், சிலரை-ஸ்வீ கரித்தல் – ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன்.
இறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே?
தேவா நாம் தானவா நாம் ச சாமான்யம் அதிதைவதம் ( ‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே,)
ஸ்வீ கரிக்கும் – ஏற்றுக்கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், 
‘ஈடும் எடுப்பும் இல் ஈசன்’ என்கிறார்.

ஈசன் மாடு விடாது என் மனனே –
ஒரு சாதனத்தைக் கருதிக் கிட்டினேனாகில் அன்றே பலம் கைப் புகுந்தவாறே விடுவேன்?
நான் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறது இன்று.
‘மனத்தின் துணை வேண்டுமோ உமக்கு’? 
‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை?
ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு?’ என்ன,

பாடும் என் நா அவன் பாடல் –
என்னுடைய வாக் இந்த்ரியமும் – நாவும் மனம் மேற்கொண்ட காரியத்தையே மேற்கொண்டது.
‘ஆயின், உம்முடைய ஹஸ்த முத்திரை அமையாதோ எங்களுக்குப் பொருள் நிச்சயம்-அர்த்த நிச்சயம் – பண்ணுகைக்கு?’ என்ன,

ஆடும் என் அங்கம் அணங்கே –
அதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.

———–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈடு -இட்டு வைக்கை -இடுதல் -உபேக்ஷிக்கை / எடுப்பு -ஸ்வீ காரம் / ஈசன் -சம்பந்தமே ஹேது இரண்டுக்கும்
நாவினுடைய உக்தியால் கான ரூபவான சந்தர்ப்பங்களை இட்டு ஏத்துகையாகிற நண்ணுதலைப் பெற்றேன் –
மனசைப் போலே பகவத் விஷயத்தில் ப்ரவணமாயிற்று என்றபடி
அணங்கு -தெய்வப்பெண்-அப்சரஸ் ஸூ போலே ஆடும் –தைவாவிஷ்டமும்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-2-

October 31, 2018

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –
நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
எது வேது என் பனி என்னாது -என்றதைக் காடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார்

——————–

மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-

மது வார் தண் அம் துழாயான்-
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;
‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’ எனின்,
பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;
வதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –
வதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –
இது தமிழர் போரச் சேரும் என்பர்-

மது வார் தண் அம் துழாயான் –
ஒரு வாடல் மாலையைக் கொணர்ந்து திருக்குழலிலே வளையமாக வைத்தால்,
திருக்குழலின் பரிசத்தால் செவ்வி பெற்று, மது நிரம்பிச் சினையாறு பட்டு,-வார்ந்து – ஒழுகி வெள்ளமிடாநிற்கும்.

முது வேத முதல்வனுக்கு –
இவ் வொப்பனை அழகினைப் பேசும் போது இன்னமும் பாசி பூத்த வேதம் பேச வேண்டாவோ?’ என்பார்,
‘மதுவார் தண்ணந்துழாயான்’ என்றதனை யடுத்து, முது வேத முதல்வன்’ என்கிறார்.
நித்தியமாய்ப் புருஷனால் செய்யப்படாததாய் உள்ள வேதங்களால் சொல்லப்பட்டவனுக்கு.
வேத முதல்வன் என்பது, வேத ப்ரதிபாத்யனாய் –
சாஸ்த்ர யோநித்வாத் –‘வேத வாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே,
வேதங்களால் சொல்லப்பட்டவன் என்கை. 
‘மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி, 
‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.

எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடு –
‘முதுவேத முதல்வனுக்கு எது பணி?’ என் பணி ஏது?’ என்னாததுவே ஆட் செய்கைக்கு அதிகாரமாவது
அதாவது,
நித்திய சூரிகள் அலரோ அவனுக்குத் தகுதியாக அடிமை செய்ய வல்லார்? நான் செய்யுமது ஏது?’ என்று
தன்னைக் கொண்டு கை வாங்காது ஒழியுமதுவே ஆட் செய்கைக்கு அதிகாரம் என்றபடி.
அன்றிக்கே –
இதற்கு ‘இது அவ் விறைவனுக்குத் தகுதி அன்று,’ என்று சிலவற்றை விடாதே,-
சகல கைங்கர்யங்களிலும் அந்வயிப்பதே – எல்லாக் கைங்கரியங்களிலும் சேர்ந்து அடிமை செய்வதுமே
ஆட் செய்கைக்கு அதிகாரமாவது என்னுதல் –

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பூவாகில் -பொருள் இசை அந்தாதிக்குச் சேரும் –
வதுவார் என்ற பாடமானால் இயல் இசை அந்தாதிக்குப் போரச் சேரும் –
மது வார் -திருத்துழாய் செவ்வி பெற்று வார்த்து வெள்ளம் இடா நிற்கும் –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -/ தழைக்கும் துழாய் -ப ரிம்லா நா / சர்வே ஸாபி மது ஸ்ரவா /
வேத முதல்வன் -வேத பிரதிபாத்யன் -வேதத்தை உண்டாக்கியவன் –
ஞாபக ஹேதுவாக உடையவன் என்றவாறு -பூர்த்தியையும் சொல்லும்
ஸாஸ்த்ர யோநித்வாத் -சாஸ்திரம் யஸ்ய யோனி -காரணம் -பிரமாணம் -தத் ஸாஸ்த்ர யோனி தஸ்ய பாவ –
ஸாஸ்த்ர யோனித்வம் தஸ்மாத் ப்ரஹ்ம ஞான காரணத்வாத் சாஸ்த்ரஸ்ய தத் யோனித்வம் ப்ரஹ்மண-இத்யர்த்த
பணி ஏது-என் பணி ஏது-என்னாதே – -அயோக்கியா அனுசந்தானம் –
கிரியையினுடைய அயோக்கியா அனுசந்தானமும் -கிரியா தாரதம்யம்
ஈடு -அதிகாரம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-6-1-

October 31, 2018

‘பரிவதில் ஈசனை’-பிரவேசம்
முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.

‘யாங்ஙனம்?’ எனின், 
ஷூத்ரரான – மிகச் சிறியோர்களான இம் மக்களாலே -ஷூத்ர உபகரணங்களை- மிகச் சிறிய பொருள்களைக் கொண்டு
சர்வேஸ்வரனான நம்மை அடைந்து தலைக் கட்டப் போகாமையாலே, கீழ் திருவாய்மொழியிலே, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்ற
இவரைப் பொருந்த விட்டுக் கொண்டோம்; ‘பெருந்த விட்டுக் கொண்டது தான் ஒரு பரிமாற்றத்துக்கு அன்றோ?
அதற்கு ஒரு பிரயோஜனம் கண்டோம் இல்லையே!’ என்று இருப்பான் ஒருவன் இறைவன்.
இனி, ‘சம்சாரியான இவனாலே நேர்கொடு நேர் ஆஸ்ரயித்து – அடைந்து தலைக்கட்ட ஒண்ணாதபடி, இறைவன் –
அவாப்த ஸமஸ்த காமனாய- ஒன்றிலும் விருப்பம் இல்லாதவனாய் இருக்கையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலும்
இவ்விரண்டற்கும் காரணமாகத் திருமகள் கேள்வனாய் -ஸ்ரீயப்பதியாய் இருக்கையாலும்
இவன் அவ்விறைவனை ஆஸ்ரயித்து – அடைந்து ஆராதனை புரிதல் முடியாதே?’ எனின்,
அங்ஙனம் அன்று;
இவன் இடுவதற்கு மேற்படத் தனக்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி எல்லாம் கைப் புகுந்திருப்பான் ஒருவன் ஆகையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனா யிருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு
முகங்காட்டுகைக்கு அதுவே காரணமாய் இருக்கையாலும்,
திருமகள் கேள்வனாகையாலே ஸூசீலனாய் இருக்கையாலும்,
இப்படிகள் அனைத்தும் ஆஸ்ரயணீயத்துக்கு- அடைவதற்கு உறுப்புகளேயாகும் என்கிறார்.

ஆக, இவன், தன் ஸ்வரூப லாபத்திற்கு உறுப்பாக-கிஞ்சித்க்கரிக்கும் – தொண்டினைச் செய்வான்;
இதனை இறைவன் தன் பேறாக நினைத்திருப்பான் என்றபடி.
ஆதலால், மற்றைத் தெய்வங்களை அடைதல் போன்று, பகவானை அடைதல் -ஸமாச்ரயணம் -அருமைப் பட்டு இராது என்கிறார் என்றபடி.
மேலும், பகவானை அடைந்த அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்: பகவானை அடைதல்-கிலேச – துக்க ரூபமாய் இராது, –
போக ரூபமாய் -இன்ப மயமாய் இருக்கும்;
வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உபகரணமாக இருக்கும்;
பகவானைப் பற்றுதல் ஆகையாலே-ப்ரத்யவாய பிரசங்கம் – வணங்கும் முறைகளில் சிறிது பிறழினும் கேடு வருவதற்கு இடன் இல்லை;
திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய
முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.
த்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,
இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.
மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,
இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், 
கேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்
என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், 
யதா ததா‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று
விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், 
ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம்
முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும், 
‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற
அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,
அசுபானி  ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும், 
அசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
சுபானி  ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
நஜாது ஹீயதே  ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற
தர்மங்களினின்று வேறுபடுத்தியும்
அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.

மற்றும்,முஷ்ணாதி  ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,
பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், 
புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி,
அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-

பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.
இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;
அஸ்னாமி- இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;
அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட
விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ணகும்பத்தைக்காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;
அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’
என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.
நச்சேதி- இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே
அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். 
ஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்
தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.

இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ்
ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,
அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,
ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.
ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழில் அஞ்சு திருவாய் மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணங்களை அனுபாஷியா நின்று கொண்டு
இதில் ப்ரதிபாத்யம் ஸ்வ ஆராததை என்னுமத்தை சங்கா பரிஹார முகேன அருளிச் செய்கிறார் –
அயோக்கியன் என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக் கொண்ட ஸுசீல்ய குணத்தை அனுசந்தித்து
எல்லாரும் ஆஸ்ரயித்துப் பரிசர்யை பண்ணுகைக்கு இறே என்றபடி-
வள வேழு உலகின் முதலாய வானோர் இறையை -5-1-அவாப்த ஸமஸ்த காம்தவம் யுக்தம்
ஏத்தி வணங்கினால் -5-2-பரிபூர்ணத்வம்
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வன் -6-2-என்றதிலே அவாப்த ஸமஸ்த காமத்வமும் பூர்த்தியும் சொல்லுகிறது –
அதாவது நிரபேஷத்வமும்-அபேஷா ஸத்பாவே அபி பூர்ணன் -என்றபடி
திருமகளார் தனிக்கேள்வன் -6-9-என்றதை பற்ற ஸ்ரீ யபதியாய்-என்றது
புகை பூவே -என்றதை பற்ற அருமைப்பட்டு இராது என்றது –
கடிவார் தீய வினைகள் நொடியாருமளவைக் கண் -6-10-என்றும் -வல்வினை மாள்வித்து -6-8-என்பதையும் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது –
உள் கலந்தார்க்கு ஓர் அமுது-6-5 –அமுதிலும் ஆற்ற இனியன் -6-6-என்றதை பற்ற போக ரூபமாய் இருக்கும்
பெற்றது உபகரணமாய் இருக்கும் என்றது புரிவதுவும் புகை பூவே என்றதை பற்ற -6-1-
முதல் இரண்டு பாட்டாலே த்ரவ்ய அதிகார நியமம் இல்லை என்றும்
மூன்றாம் பாட்டால் கால நியதி இல்லை என்றும் சொல்லுகிறது

———————————

எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்,’ என்கிறார்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈசனை -பரமபதத்தில் இருக்கும் இருப்பை முந்துறச் சொல்லி அனந்தரம் –
புரிவதுவும் புகை பூவே -அவனுடைய ஸ்வாராததையைச் சொல்லுகையாலே
அவனுடைய பூர்த்தி என்று விவஷித்து பரிபூர்ணன் ஆகையால் என்கிறார்
புரிவதுவும் புகை பூவே -என்று த்ரவ்ய நியதி இல்லாமையைச் சொல்லுகிறது-

—————————-

பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

பரிவது இல் –
துக்கம் இல்லாத.
‘நாம் இடுகிறவை அவன் ஏற்றுக்கொள்ளுவானோ, கொள்ளானோ!’ என்று இடுகிற இவன்
நெஞ்சிலே துக்கம் உண்டாம் அன்று;
அது இடப்படுகின்றவனுக்குத் துக்கமாம் ஆதலின், ‘பரிவது இல்’ என்கிறார்.
இனி, இதற்குப் ‘பக்ஷ பாதம் இல்லாத’ என்று பொருள் கூறலுமாம்;
அதாவது, ஒருவன்-குருவாக – அதிகமான பொருள்களைக் கொடுத்தால், அவன் பக்கல் அன்புடையனாய் இருப்பானாகில்,
அரிதல் அடையத்தக்கவன் என்று அடையப்படுகின்றவனுக்குக் குற்றமாம் அன்றோ?
அது இல்லை என்பார், ‘பரிவது இல்’ என்கிறார் என்றபடி.
இக் குற்றங்கள் இல்லாதபடி இருக்கையாலே ஹேயப்பிரத்ய நீகன் என்பதனைத் தெரிவித்தபடி.
ஹேயப்பிரத்ய நீகதை புக்க இடத்தே உப லக்ஷணத்தால் நற்குணங்களும் புகுமன்றோ?
ஆகவே, ஹேயப்பிரத்ய நீகதையும் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.
‘இங்ஙனம்,-தர தம விபாகம் பாராமல் – உயர்வு தாழ்வு பாராமைக்கு அடி என்?’ என்னில்,

ஈசனை –
‘வகுத்த ஸ்வாமி ஆகையாலே’ என்கிறார்.
புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால்,
‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ!’ என்று நெஞ்சாறலோடே தலைக் கட்ட வேண்டி வரும்;
மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல் பட வேண்டாத இருக்கலாம் அன்றே?
அப்படிப்பட்ட சம்பந்தத்தைப் பற்ற ‘ஈசன்’என்கிறார் என்றபடி.

பாடி –
சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கை யின்றி,
ஹர்ஷத்துக்கு -மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி.

விரிவது மேவல் உறுவீர். 
ஏதத் சாம காயன் நமஸ்தே -‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே,
பாடி விஸ்திருதர் ஆசையாகிற பேறு பெற வேண்டியிருப்பீர்!
‘பேறு கனத்து இருந்தது; நாங்கள் செய்ய வேண்டுவது என்?’ என்னில்,

பிரி வகை இன்றி –
பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, 
‘இமையோர் பலரும் முனிவரும், புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்,
உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.

நல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘
கேவலம் தண்ணீரும் அமையும்,’ என்றவாறு.

தூய் –
விரும்பியவாறு தூவி. -யதா தாதாவாபி –

புரிவதுவும் –
இவன் இறைவனுக்கு அருட்கொடையாகக் கொடுக்குமதுவும்.

புகை பூவே –
அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்.
இவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –
இங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –
இறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,
அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்! 
‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று
இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத்
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே!
இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே!

மற்றும், அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில்,
‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ?’ என்று அருளிச் செய்தார்.
பின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது 
‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும்
‘இது என்ன மெய்ப்பாடு தான்!’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே –
இப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் –
நாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பரிவதில் ஈசனை என்றத்தை பாடி விரிவது மேவலுறுவீர் -என்றத்துக்குச் சேர ப்ராப்ய பரமாகவும் –
நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே என்றத்துக்குச் சேர ப்ராபக பரமாகவும் யோஜிப்பது
ப்ராப்ய பாரமான பக்ஷத்தில் பருவத்தில் அகில சாம்சாரிக ஹேயபிரத்ய நீகதை – என்றும் ஈசனை -சேஷித்வமும்
ப்ராபகமான பக்ஷத்தில் ஈசனை -ஸ்வாமித்வம்
விரிவது -விஸ்த்ருதராகை / மேவல் -பெறுகை /ஆய் -அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு முத்தக்காசு -கோரைக்கிழங்கு –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-11-

October 31, 2018

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –
இறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –
இவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.

—————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பிரகரண அனுகுணமாக அவதாரிகை –

————————-

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

மாலே-
ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.

மாயப் பெருமானே –
குணத்தால் வந்த விபுத்வம் – உயர்வு.

மா மாயவனே –
சேஷ்டிதங்களால் -செயல்களால் வந்த -ஆதிக்யம் -மேன்மை.

என்று என்று மாலே ஏறி –
ஏவம் விதமான -இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து, ‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,

மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-
தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று,
அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

பால் ஏய் தமிழர் –
பால் போலே இனிய தமிழை யுடையவர்கள்.

இசைகாரர் –
இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீ மதுர கவிகளையும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்.

பத்தர் – பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்’ என்று இருக்குமவர்கள். 

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை 
‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

பரவும்-
இவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான உலகத்தாரின் பரிக்கிரகத்தைச் சொல்லுகிறார்.

ஆயிரத்தின் பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு –
‘கடலிலே முத்துப் பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே
பொருந்தி இருக்கிற இத் திருவாய்மொழியை வல்லார்க்கு.

பரிவது இல்லை-
‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, இறைவன்-சம்ச்லேஷ உன்முகன் ஆனவாறே –
வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

—————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மாலே என்றும் -மா மாயப் பெருமானே என்றும் -வானோர் இறையை -வெண்ணெய் தொடு உண்ட -என்ற பதங்களின் அனுவாதம் –
விபுத்வம் என்றது உத்கர்ஷம் என்றவாறு –
குண சேஷ்டிதங்கள் ஆச்சர்ய ரூபங்கள் ஆகையால் மாயா சப்த பிரயோகம் –
மாலே -ஸ்வரூப உத் கர்ஷம் / மாயப்பெருமானே -ஆச்சர்ய குணங்களால் அளவிறந்தவனே –
மா மாயனே -அபரிச்சின்னமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன் என்று சப்தார்த்தம் –
மால் அருளால் -பெரிய அருளால் என்று ஒன்பதினாயிரம் –

நின்ற நின்ற நிலைகள் தோறும்-சம்ஸ்லேஷ -விஸ்லேஷ -அயோக்கியா அனுசந்தானாதி தசைகள் எல்லாவற்றிலும் – அவன் அருளே –
முதல் தன்னிலே மயர்வற மதி நலம் அருளினன்-
அருளாத நீர் அருளி -அவன் வருவதும் அவன் அருளாலேயே
அல்லேன் என்றவரைப் பொருந்த விட்டுக் கொள்ளுகிறதும் அவன் அருளாலே
இவர் அகலவே -பின்னை மேல் திருவாய் மொழிகள் இல்லை இறே –
இத்தைக் கண்டு இயல் அறிவாரும் -இசை அறிவாரும் -பத்தராய் இருப்பாரும் கொந்தளிக்கிற படியைக் கண்டு
இப்படி இவர்களுக்கு உபகாரம் பண்ணப் பெற்றோமே என்று களித்துச் சொல்லுகிறார் என்றபடி –
சொன்ன என்னாதே ஆயிரத்தில் பாலே பட்ட – என்றதுக்கு பாவம் அருளிச் செய்கிறார் –
பட்டது உண்டாயிற்று -துவக்க -சேர்ப்பிக்க -புரிவது துக்கம் –

———————

முதற்பாட்டில், ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’ என்றார்;
மூன்றாம் பாட்டில், சில குணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்;
நான்காம் பாட்டில், ‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், அவன் அரைக் கணம் தாழ்க்க, ‘முடியப் புகுகின்றேன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று உம்முடைய சம்பந்தம் தாரகம்,’ என்றான் இறைவன்;
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன, ‘நஞ்சு தானே நமக்குத் தாரகம்?’ என்றான்;
பத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரம பதத்தை கோடிக்க- அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———————

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கு ஊடு உருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறன் மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடன் சேர்ந்தான் பரிந்து –திருவாய்மொழி நூற்றந்தாதி -5-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-10-

October 31, 2018

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
புதுமை -நூதனத்வம் அதிசயம் / கோடிக்க -அலங்கரிக்க

—————-

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து
தில தைலவத் தாரு வஹ்னி வத் ( ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ )என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து.
சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை,
விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,

மாயப் பற்று அறுத்து-
ருசி வாசனைகளையும் கழித்து.

தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.
இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி,
‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.

வீடு திருத்துவான் –
கலங்காப் பெரு நகரத்துக்கும் ஒருபுதுமை பிறப்பியா நின்றான்.

(‘தீர்த்து’ என்பதற்கு இரு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருளுக்கு, ‘தன்பால் மனம் வைக்கத் திருத்தித் தீர்ந்து வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக.
இரண்டாவது பொருளுக்கு ‘தீர்ந்து வைக்கத் திருத்தி வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக.
முதற்பொருளில், இறைவன் தொழில்;
இரண்டாவது பொருளில் ஆழ்வார் தொழில்..
ஆயின், ஐந்தாந் திருவாய்மொழியின் முடிவிலேயே இவரை அங்கீகரிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, இறைவன் வீடு திருத்துவானாயின்,
இப் பிரபந்தத்தையும் முற்றுப் பெறச் செய்து உலகத்தைத் திருத்திய வழியாலே
உலகத்திற்குப் பெரியதோர் உபகாரத்தைச் செய்தனன் ஆயினமை யாங்ஙனம்?’எனின்,
‘மனந்திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்திய வாறே வந்து’-என்கிறபடியே, இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால்
வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய
இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)

ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி –
பரிபூர்ண ஞான பிரபனாய் – ஒளியனாய்.

அகலம் கீழ் மேல் அளவு இறந்து-
பத்துத் திக்குகளிலும் வியாபித்து -நிறைந்து.

நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம்-
மிக்க ஸூக்ஷ்மமான-சேதன -அசேதனங்களுக்கும் – உயிர்ப்பொருள் உயிரல்பொருள்கட்கும் ஆத்துமாவாய் இருக்கிற.
இனி, -நேர்ந்த -கிட்டின -ப்ரத்யக்ஷ பரிதிஷ்டமான – பல பக்கங்களிலும் வெளிப்படையாகக் காணப்படுகிற
அசித்து சித்து இவற்றிற்கு உயிராய் இருப்பவன் என்று பொருள் கூறலும் ஒன்று.

நெடுமால்-
இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு –
புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய்
இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்

நெடுமாலே
‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். 
அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கூடின -என்னாதே- சார்ந்த என்கிறதுக்கும்
தள்ளி என்னாதே சரித்து என்கிறதுக்கும் தாத்பர்யம் அருளிச் செய்கிறார்-
மாயா சப்தம் ஞான பர்யாயம் ஆகையால் ருசி ரூப ஞானத்தைச் சொல்லுகிறது –
பற்று -ப்ரக்ருதி கார்யமான ருசி வாசனை –
மாயப்பற்று -என்றது சேதனனை வஞ்சித்து விஷயங்களில் மூட்டுகையாலே மாயமான பற்று என்னவுமாம் –
நேர்ந்த உருவாய் அருவாகும்-என்று காரண அவஸ்தமான ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களிலே வியாப்தி சொன்ன போது –
அகலம் கீழ் மேல் அளவிறந்து-என்று அபரிச்சின்னனாய் ஸ்தூல சித் அசித் வஸ்துக்களிலே வ்யாப்தி சொல்லுகிறது –
உரு -பிரகிருதி -அரு -சேதன –
அகலம் பஹிர் வ்யாப்தி என்றுமாம் -நேர்ந்த இத்யாதி அந்தர் வியாப்தி என்னவுமாம் –
நெடுமால் -சர்வாதிகன் என்றும் மிக்க வ்யாமோஹத்தை யுடையவன் என்றுமாம் –
தீர்ந்து -தனக்கே அற்றுத் தீர்ந்து –
ஈஸ்வரன் இவர் பக்கல் வியாமோஹத்தாலே வீடு திருத்துகையிலே விளம்பிக்க அது பற்றாமே
முனியே நான் முகனே அளவும் இவர் கூப்பிட்ட கூப்பீடு ஜகத் உபகாரமாய்த் தலைக் கட்டிற்று -என்றபடி-
அவன் தெளிந்து வந்து -இவர் திரு மேனியில் உண்டான பிச்சு அவனுக்குத் தெளிய வேணும் இறே-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-9-

October 31, 2018

‘நீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய
வெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்;
‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத் தாரகம்; அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்;
‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே?’ என்றான் இறைவன்;
இவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்;
‘ஆயின், பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும்,’ என்றான்;
என்ன, பொருந்துகிறார்.
இனி, ‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’ என்பாரும் உண்டு –

—————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகிறதுக்கு ஈஸ்வரன் சமாதானம் பண்ணுகிற பிரகரணத்திலே
பூதநா நிராசனம் சொல்லுகிறதுக்கு பாவம் இரண்டு வகையாக அருளிச் செய்கிறார் –
கீழ்ப் பாட்டோடு சங்கா சமாதான ரூபேண முந்தின அவதாரிகை –விடப்பால் அமுதாவில் நோக்கு
இரண்டாவது -கீழில் பாட்டில் சேர விட்டமையை சித்தவத்கரித்து த்ருஷ்டாந்த பரம் -இதில் தீய வஞ்சப் பேய் என்கிறதில் நோக்கு
தம்மான் என்னச் செய்தே என்னம்மான் என்றதின் தாத்பர்யம் –
தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு என்றான் கீழில் பாட்டிலே -என்றபடி –
விடப்பால் அமுதா என்றதின் தாத்பர்யம்-நமக்கு ஆகாதது இல்லை காணும் என்றான் என்னப் பொருந்துகிறார் இதில் என்கிறார்

——————

மாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-

மாயோம் –
இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்;
‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.
இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை
உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’
என்று பொருள் கூறலுமாம்.

தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-
ஸ்தந்யம் தத் விஷ சம் மிஸ்ரம் ரஸ்யமாஸீஜ் ஜகத் குரோ ( ‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த
உலக குருவான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவை யுடையதாயிற்று,’ ) என்கிறபடியே,
உலகத்துக்கு வேர்ப் பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையையுடையளாய், ஸ்ரீ யசோதைப் பிராட்டியைப் போன்று
அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு -ஜல்பித்திக் கொண்டு -வருகின்றவளாய், –
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின
பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.

தூய குழவியாய்-
ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடா நிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத் தனத்தை யுடையனாய்.
‘இவனுக்குப் பிள்ளைத் தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில்,

விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-
விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலே யாயிற்றுப் பிறந்தது.
‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், 
தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை –
ஆஸூரப் ப்ரக்ருதிகள் முடிய பிராப்தம் –

மாயன் –
விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.
எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –
‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில்,

வானோர் தனித் தலைவன் –
அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.

மலராள் மைந்தன்
‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே,
அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.

மைந்தன் –
அவளுக்கு மிடுக்கானவன்.
இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

எவ்வுயிர்க்குந் தாயோன் –
எல்லா உயிர்கட்கும் தாய் போன்று பரிவை யுடையவன் ஆனவன்,

தம்மான் –
சர்வேஸ்வரன்.

என் அம்மான் –
நான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.

அம்மா மூர்த்தியைச் சார்ந்து-
விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம்’ எனக் கூட்டுக.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பிரியோம் -இதி ஸ்தாநே -மாயோம்-
அலவலை-பஹு ஜல்பம் / பெரு -என்றும் மா என்றும் -மீ மிசைச் சொல் -மிகவும் வஞ்சனை என்றாய்
இவளுடைய வஞ்சனாத்திக்யத்தின் எல்லையை அருளிச் செய்கிறார்
வஸ்து ஸ்வரூபத்தாலே முடிந்தாள்-அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே-என்று அன்றோ தர்மி ஸ்வரூபம் என்று கருத்து
நம்மை உண்டாக்கின -என்றது நம் சத்தையை உண்டாக்கின என்றவாறு –
மைந்தன் -மிடுக்கன் -யவ்வனம் உள்ளவன் –
மூர்த்தி சப்தம் விக்ரஹத்துக்கும் ஸ்வாமிக்கும் வாசகம் –
அம்மா மூர்த்தியை -அந்த விலக்ஷண விக்ரஹ யுக்தனை -அந்த மஹா புருஷனை –
சஹஸ்ர சீர்ஷத்வாதி விஸிஷ்ட விக்ரஹ யுக்தனாகவும் வேதஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனாகவும்
ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளிலே அவனுக்கு பிரசித்தி உண்டு இறே
தீய அலவலை-என்று தொடங்கி -அம்மா மூர்த்தியைச் சார்ந்து மாயோம் என்று அன்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-8-

October 31, 2018

இவர் இப்படி அகலப் புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து,
‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ!’ என்ன,
கேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன் தான் அருளிச் செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும்
‘அடியேன் அறியேன்’ என்றார்.
‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம்;
பின்பு அதனை வெளி நாடு காண உமிழ்ந்தோம்;
அதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக் கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன,
‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ!
அது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன,
ஆஸ்ரிதர்கள் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் – ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தாரகமாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘
ஆயின், அவ் வெண்ணையினைப் போன்று உம்முடைய சம்ச்லேஷமும் சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்;
ஆன பின்னர், நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான்.
அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.

—————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நெய் யூண் மருந்தோ -என்கையாலே அவன் நெய் யூண் மருந்து -என்றான் என்று தோற்றுகையாலே
தத் அனுகுணமான அருளிச் செய்கிறார் –
விஷய வைலக்ஷண்யத்தாலும் யுக்தி வைலக்ஷண்யத்தாலும் அது கேட்க்கையில் உண்டான சிரத்தை என்கிறார் –
முன்னம் என்ற பதத்தைக் கடாக்ஷித்து சம காலத்தில் அமுது செய்யில் அன்றோ மருந்தாவது –
அவன் சொன்ன ஹேதுவை தூஷித்தால் அவன் ஹேத்வந்தரம் சொல்ல வேணும் இறே என்றது மாயோனிலே சித்தம் –
வெண்ணெய் விலக்கினார் போலே அநபிமதம் செய்தவர் ஆவீர்

——————————-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண்டான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே?–1-5-8-

முன்னமே உலகு ஏழ் உண்டாய்-
முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து திரு வயிற்றிலே வைத்தாய்.

உமிழ்ந்து-
பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து.

மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் –
இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய்.
ஈண்டு ‘மாயை’ என்றது, ‘மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை.
அது செய்யுமிடத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால்,

சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி –
ஷூத்ரரான-சிறிய மனிதர்களுடைய -ஹேயமான- தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப்
பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்துக்கு -உண்டாக்கிக் கொண்டு வந்து இப்படிச் செய்தாய்.
‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள
ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுது செய்தான் என்றபடி. 
சபலம் தேவி சஞ்சாதம் ஜாதோ அஹம் யத் தவோதராத் ( ‘தேவகியே நீ முற்பிறவியிற் செய்த நல்வினையானது இப்பொழுது
பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ )என்பதனால்
கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், 
நைஷ கர்ப்பத்வ மா பேதே ந யேன்யா மவ சத்பிரபு ( ‘இந்த ஸ்ரீ கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடைய வில்லை;
யோநியிலும் வசிக்க இல்லை,’ )என்று கூறப்படுகிறான் ஆதலின், ‘யாக்கை நிலை எய்தி’ என்கிறார்.
‘இது கூடுமோ?’ எனின்,
இட்சுவாகு குலத்தவருள் ஒருவன் யாகம் செய்துகொண்டிருக்கும்போது-பிபாஸை வர்த்தித்தவாறே – தாகம் உண்டானவாறே
மந்திரத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, கருத்தரித்தது;
இது-சுக்ல சோணித ரூபத்தாலே பரிணதமாய் அன்று இறே – ஆண் பெண் சேர்க்கையால் ஆனது அன்றே!
சத்தி அதிசயத்தாலே இப்படிக் கூடக் கண்ட பின்பு,-சர்வ சக்திக்கு – ‘வரம்பில் ஆற்றலையுடைய இறைவனுக்குக் கூடாதது இல்லை,’
என்று கொள்ளத் தட்டு இல்லை.
மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;
வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.

மண்தான் சோர்ந்தது உண்டேலும் மண் கரைய மனிசர்க்கு ஆகும் நெய் பீர் சிறிதும் அண்டா வண்ணம் ஊண் மருந்தோ-
பூமியைத் திருவயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது தங்கியிருந்தது ஏதேனும் மண் உண்டாகிலும்,
பிற்பட்ட மனிதர்கட்கு மிகச் சிறிதும் மீதி இல்லாதபடி நெய் அமுது செய்தது அதற்கு மருந்தோ?
அதாவது, ‘உண்ட மிச்சில் சிறிதும் இல்லாதபடி-ஒன்றும் சேஷியாத படி – முழுதும் அமுது செய்யிலோ மருந்தாவது?’ என்றபடி.
இனி,-பீர் என்பது வை வர்ணயமாய்
இதனை, ‘மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் நெய் உண் மண் கரைய மருந்தோ’ என்று கொண்டு கூட்டி,
‘உண்ட மண்ணிலே சிறிது வயிற்றிலே தங்கி இருந்தால் மனிதர்கட்கு வரக் கூடிய சோகை சிறிதும் வாராதபடி
நெய்யை உண்ணுதல் மருந்தோ? அன்றே?’ என்று பொருள் கூறலுமாம்.
‘ஆயின், பின்னை எதற்காகச் செய்தோம்?’ என்னில்,

மாயோனே –
ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான-
ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ என்பதாம்.

இந்த பாசுரம் தான் இந்த திருவாய் மொழிக்கு நிதான பாசுரம் –

—————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மாயா சப்தம் இச்சா ரூபா ஞானத்தைச் சொல்லுகிறது
உவலை -ஹேயம்-எய்தி -ஏறிட்டுக் கொண்டதுக்கு பிரமாணம் சாத்தி அருளுகிறார் –
உலகு எழும் உண்டாய் -வெண்ணெய் உண்டாய் -மாயோனை பதங்களைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –
பீர் -அற்பமாய் -சிறுது என்றும் அற்பமாய் அதி யல்பமாய் என்றபடி
பீர் -வெளுப்பு இத்யாதி என்றுமாம்
அது ஒரு காலத்தில் தேவ ஜாதியானாய் மண் உண்டதுக்கு-இக்காலத்தில் மனுஷ்ய ஜென்மத்தில்
வெண்ணெய் உண்டது மருந்தோ என்கை –
பிரதிகோடித்வேன காலாந்தரத்வமும் தேவத்வமும் சித்தம் -நெய்யும் வெண்ணெயையும் பர்யாயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்