Archive for February, 2023

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ திருவாய் மொழி-தசக த்வந்த்வ- ஏக கண்ட்யம் —

February 28, 2023

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ  திருவாய் மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதி ஶத சஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி பிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ் ஸர்வாந் வ்யாஸ ரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணி யருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர் *  (65) என்று காட்டியருளினார்

ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில்

இதனை *ஆதௌ ஶாரீரகார்த்த க்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டி யருளினார்.

இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசக த்வந்த்வ ஐக கண்ட்யத்தில் வாதி கேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டி யருளி யுள்ளார்.

இவை யனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வ பரமாயும், உபாஸந பரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம் தான் இருப்பது; அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸந பரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது.

—————————-

ஸ்ரீ பாஷ்ய த்ராவிடாக மாத்யதசக த்வந்த்வ ஐக கண்ட்யம்–
ஸ்ரீ ஈட்டில் இரண்டாம் திருவாய் மொழி பிரவேசத்திலே அருளிச் செய்த பிரதம சங்கதி கிரந்தத்திற்கு விவரணம் –

முதல் திருவாய் மொழியும் இரண்டாம் திருவாய் மொழியும் அத்யாய சதுஷ்டயாத்மக சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ர சமாநார்த்தகமாய் இருக்கும் –
சாரீரகார்த்தம் தான் ப்ரஹ்ம காரணத்வமும் -ததபாத்யத்வமும் -முமுஷு உபாஸ்யத்வமும் -முக்த ப்ராப்யத்வமும் –
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா -என்னக் கடவது இறே-

இவ்விரண்டு திருவாய் மொழியும் வேதாந்த சாஸ்த்ர சமாநார்த்தம் என்னும் இடத்தை நம்பிள்ளை ஈட்டிலே-வீடுமின் முற்றின ப்ரவேசத்திலே –
தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது –
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியிலே –உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம்
சங்கரஹமாய் இருக்கிறது இத்திருவாய் மொழி என்று அருளிச் செய்தார் –
இத்தையும் கொண்டு வேதாந்தாசார்யரும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே
ஆதவ் சாரீரகாரத்த க்ரமமிஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா -என்று அருளிச் செய்தார் –

இன்னமும் –புரா ஸூத்ரைர் வ்யாசம் சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ச புநர் உபாவேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி பிரசவ்
புநர் ஜஜ்ஜே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர-என்று சாமானையென சாரீரகத்துக்கும் திருவாய் மொழிக்கும் உண்டான ஐகமத்யத்தை ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் –
ஆகையால் இரண்டு திருவாய் மொழியும் பூர்வ உத்தர த்விகாத்மகமான சாரீரக சாஸ்த்ர சமா நார்த்தம் என்று கொள்ள வேணும் –
இஸ் ஸம்ப்ரதாயார்த்தத்தை பாட்டுக்கள் உபபத்தியுடனே ஏறிட்டு பிரகாசிப்பிக்கிறோம் –

—————

முதல் திருவாய் மொழி பூர்வ த்விகத்தோடு சேரும்படியைத் தெரிவிக்கிறோம் -அது எங்கனே என்னில்-
முதல் பாட்டு -நாலடியும் சதுஸ் ஸூத்ர்யர்த்தமாகவும்
மனனகம் -என்கிற இரண்டாம் பாட்டு -ஈஷத்ய-ஆனந்த மய -அந்தராதித்ய அதிகரண அர்த்தமாகவும்
இலனது -என்கிற மூன்றாம் பாட்டு ஆகாச பிராண ஜ்யோதி இந்த்ர பிராணாதி கரண அர்த்தமாகவும்
நாமவன் -அவரவர் -நின்றனர் -என்கிற நாலாம் பாட்டு தொடங்கி மூன்று பாட்டும் த்ரிபாத் யர்த்தமாகவும்
ஆக -ஆறு பாட்டும் பிரதம அத்யாய அர்த்தமாய் –

திட விசும்பு என்கிற ஏழாம் பாட்டு த்வதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
சுரரறி -உளன் எனில் -என்கிற எட்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் தர்க்க பாதார்த்தமாகவும்
பரந்த தண் -என்கிற பத்தாம் பாட்டும் நிகமன பாட்டும் வியத்பாத துரீய பாதார்த்தமாகவும்
ஆக -ஏழாம் பாட்டு தொடங்கி நிகமத்து அளவும் த்விதீயாத்ய யர்த்தமாய்
இத்திருவாய் மொழி பூர்வ த்விகார்த்தமாகக் காணலாம் –

அதில் முதல் பாட்டில் -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -என்கிற சந்தை பிரதம அதிகரண சமாநார்த்தம் -அது எங்கனே என்னில்
பிரபாகர் மதரீத்யா சப்தத்துக்கு கார்யார்த்தத்திலே போதகதவை சக்தியாகையாலும்
பரிநிஷ்பந்ந வஸ்துவில் சப்தத்துக்கு போதகதவை சக்தி இல்லாமையாலும் வேதாந்தங்கள் பரிரிஷ்பந்நமான ப்ரஹ்மத்திலே பிரமாணம் ஆக மாட்டாது –

பிரமாணம் அல்லாமையாலே சாங்க அத்யயனம் பண்ணினவனுக்கும் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி வர மாட்டாது –

அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ் யயாஜி நஸ் ஸூக்ருதம் பவதி–இத்யாதி வாக்கியங்களில் சாதுர்மாஸ்யாதி கர்மங்களுக்கும் அக்ஷயமான பலம் ஸ்ருதம் ஆகையாலும் கர்ம அல்ப அஸ்திர பலத்தவ நிர்ணயம் ஸித்தியாது-

ஆகையால் கர்மணாம் அல்ப அஸ்திர பலவத்வ நிர்ணய ஸஹித அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப
விசிஷ்ட ஹேது சித்தியாமையாலே வேதாந்த ஆரம்பம் கடியாது என்கிற பூர்வ பக்ஷத்திலே-

அம்பா தாத மாதுலாதி சப்தங்களில் சித்த ரூபமான மாதா பித்ராத் யர்த்தங்களில் பிரதம வ்யுத்பத்தி காண்கையாலும்-அது கார்ய ரூப அர்த்தத்தில் என்கிற நிர்பந்தம் இல்லாமையாலும் வேதாந்தங்களுக்கு பரி நிஷ்பந்ந போதனா சாமர்த்தியம் யுண்டாய் அதுகள் பிரமாணம் ஆகையால் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப விசேஷயாம்சம் லபிக்கும்-

கர்ம விசாரம் பண்ணினவனுக்கு ஆவ்ருத்தி விதாநாதிகளாலே கர்மங்களுக்கு சாதிசய பலத்தவம் அவகதம் ஆகையாலும்
அக்ஷய்யத்தவ கீர்த்தனம் சிரகால ஸ்தாயித்வ அபிப்ராயமாக வாயுஸ் சாந்தரிக்ஷஞ்சை ததம்ருதம்-என்கிற இடத்தில் அம்ருதத்வம் போலே நிர்வஹிக்க வேண்டுகையாலும்
கர்மாணாம் அல்ப அஸ்திர பலத்வ நிர்ணய ரூப விசேஷணாம்சம் சித்திக்கும் –

இப்படி விசிஷ்ட ஹேது லபிக்கையாலே சாஸ்த்ர ஆரம்பம் கடிக்கும் என்று இறே பிரதம அதிகரணர்த்தம்-

இனி உயர்வற யுயர் நலமுடையவன் என்று அநவதிக ஆனந்த ஸ்திர பல ரூப குண விபூதி மத்தையைச் சொல்லி –
யவன் -என்று இவ்வர்த்தத்துக்கு -ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி -சுருதி பிராமண ப்ரஸித்தியையும் காட்டுகையாலே சித்த வஸ்துவான பர ப்ரஹ்ம
வேதாந்த வேத்யம் என்று சித்திக்கையால் இச்சந்தை விசேஷயாம்சமான அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதியை ஸூசிப்பிக்கிறது –

உயர்வற -என்கிற இது ப்ரஹ்மாதிகளுடைய கர்ம அதீன உச்சராயம் பகவத் உச்சராய அபேக்ஷயா இல்லை என்னும்படி இருக்கும் என்று
சொல்லுகையாலே கர்மங்களினுடைய அல்ப அஸ்திர பலத்வ நிர்ணயத்தை ஸூசிப்பிக்கிறது

ஆக –உயர்வற உயர்நலம் யுடையவன் யவன் -என்கிற அளவிலே விசிஷ்ட ஹேதுவை ஸூசிப்பிக்கையாலே –
சாரீரக ஆரம்ப சமர்த்தந பர பிரதம ஸூத்ரார்த்தம் இச்சந்தை என்னக் குறையில்லை –

கிஞ்ச-ப்ரஹ்ம சப்த ப்ரவ்ருத்தி நிமித்தமான நிரதிசய ப்ருஹத்த்வத்தை -உயர்வற உயர்நலம் யுடையவன் -என்று முக்த கண்டமாக அருளிச் செய்து –
அவன் துயரறு சுடரடி தொழுது எழு -என்று அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று ஜிஜ்ஞாசா பல நிர்ணய கார்ய யுக்தி முகேந
ஜிஜ்ஞாச சப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும் இச்சந்தை பிரதம அதிகரண அர்த்தம்

இப் பாட்டுத் தான் வாக்யைக வாக்கியமாக ஓர் அன்வயத்தையும் வாக்ய த்ரயமாக ஓர் அன்வயத்தையும் உடைத்தாகையாலே
வாக்ய த்ரய பக்ஷத்தில் இவ்வர்த்தம் ஸ்வ ரசமாய் சித்திக்கும் –

மயர்வற மதிநலம் அருளினன் யவன் -என்கிற இது ஜென்மாதிகாண ப்ரமேயமானபடி எங்கனே என்னில்-
ப்ரஹ்ம வித்தையில் வேதாந்தம் பிரமாணம் ஆனாலும் லக்ஷணம் ப்ரஹ்மத்துக்குக் கிடையாமையாலே ப்ரஹ்ம பிரதிபத்தி வர மாட்டாது -அது எங்கனே என்னில் –

யாதோ வா விமானி -இத்யாதி வாக்யம் ஜென்ம காரணத்வாதிகளை லக்ஷணமாக அறிவிப்பிக்க மாட்டாது –

ஜென்ம காரணத்வாதிகளை விசேஷணம் என்கிறீரோ உப லக்ஷணம் என்கிறீரோ –

விசேஷண பேத ப்ரயுக்த விசேஷ்ய பேதம் பிரசங்கிக்கையாலே விசேஷணம் என்னக் கூடாது –
உப லக்ஷய உப லக்ஷண வ்யதிரிக்த உப லஷ்ய கத ஞாதாம்சம் கிடையாமையாலே உப லக்ஷணம் என்னவும் கூடாது -என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகும் அளவில்
அநேக விசேஷண விசிஷ்ட விசேஷ ஐக்யஸ்ய-தேவதத்த ஸ்யாமோ யுவா லோஹிதாஷ-இத்யாதி ஷூ தர்சநாத் –

கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கவ்-இத்யாதிஷூ–கண்டத்வ முண்டத்வாதி விருத்த விசேஷணா நாமேவ விசேஷ்ய பேதகத்வ தர்சநாத் ஜென்மாதி காரணத்வாதே கால பேதேந ப்ரஹ்மணி அவிருத்த த்வாச்ச விசேஷணத்வம் உபபன்னம்-

உபலக்ஷண உப லஷ்ய வ்யதிரிக்த உப லஷ்ய கத ப்ரஹ்மத்வாதியான த்ருதீயாகாரம் லபிக்கையாலே உபலக்ஷணத்வமும் கூடும் –

இப்படி ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணம் ஆகையாலே லக்ஷணங்களால் ப்ரஹ்ம பிரதிபத்தி வருகையால் ப்ரஹ்ம விசாரம் கடிக்கும் என்று இறே ஜென்மாதிகரண ப்ரமேயம் –

இனி இவ்விடத்தில் -மயர்வற மதிநலம் அருளினன் எவன்-என்று அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ரூபமான மயர்வு போம்படி பக்தி ரூபாபன்ன ஞானத்தை அருளினன் என்று சொல்லுகையாலே அனுக்ராஹத்வம் த்யேயத்வ வ்யாப்தமாய் -காரணம் து த்யேய-என்கிறபடியே த்யேயத்வம் காரணத்வ அபேக்ஷகமாய் இருக்கையாலே
தத் அஷேபக த்யேயத்வ அஷேபகமான அனுக்ராஹ கத்வ ரூப தர்மகதந முகேந ஜென்ம காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்தை ஸூசிப்பிக்கையாலே
ஜென்மாதிகரண பிரமேயம் இச்சந்தை –

கிஞ்ச -மயர்வற என்று அஞ்ஞான நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ -என்கிற முக்தி காரகத்வம் கண்டா யுக்தமாய் இருக்கிறது –

அந்த மோக்ஷம் தான் ஜகத் உத்பவஸ்தி ப்ரணாச சம்சார விமோச நாதய-என்று உத்பவ ஸ்திதி ப்ரணாசங்களைப் போலே சம்சார விமோசனத்தையும்
ப்ரஹ்ம கார்யமாக அபியுக்தர் அருளிச் செய்கையாலே ப்ரஹ்ம கார்யம் இறே-அது தானும் ஜென்ம காரணத்வாதிகளைப் போலே ப்ரஹ்ம லக்ஷணம் –
யத் பிரயந்த்யபி சம்விசந்தி என்கிற ஸ்ருதியிலே யத் அபி சம்விசந்தி என்று ஜகத் பிரளய காரணத்வத்தையும் சம்சார விமோசன காரணத்வத்தையும் சொல்லிற்று இறே –

ஸ்ருத பிரகாசிகையிலே பட்டரும் அப்படியே வியாக்யானம் செய்து அருளினார் –

ஆனால் ஜென்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் ஜகத் சம்ஹார காரணத்வம் இவை இத்தனையும் விட்டு மோக்ஷ காரணத்வ மாத்ரத்தையே அருளிச் செய்வான் என் என்னில்
ஜென்ம காரணத்வாதிகள் சமுதிதமே ப்ரஹ்ம லக்ஷணம் என்கிற நிர்பந்தம் இல்லை -ஏகைகமும் லக்ஷணமாம் என்கிற அர்த்தத்தை ஸூசிப்பிக்கைக்காக –
மோக்ஷ காரணத்வ மாத்ரத்தை அருளிச் செய்தார் –

ஆனால் ஜென்ம காரணத்வாதிகளில் அந்நிய தமத்தை அருளிச் செய்தாலும் இந்த பிரயோஜனம் ஸித்திக்குமே-
விசேஷித்து மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்வான் என் என்னில்

வேதாந்த சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் மோக்ஷம் ஆகையாலும் தமக்கு எம்பெருமான்
மோக்ஷத்தை தந்து அருளுகையாலும் மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்தார் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்ருஷ்ட்டி காரணத்வாதிகள் ஏகைகமே சித்த அசித் வ்யாவருத்தமாய் இறே இருப்பது -ஸூத்ர பாஷ்யங்களில் ஜென்ம காரணத்தவாதிகளை
சமுதிதமாகச் சொல்லுகைக்கு பிரயோஜனம் ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய ப்ருஹத்த்வ சித்தி என்று
ஸ்ருத பிரகாசிகையிலே ஸ்பஷ்டமாக பட்டர் அருளிச் செய்ததை கண்டு கொள்வது –

ஆகையால் மயர்வற என்று சம்சார விமோசன காரணத்வத்தை முக்த கண்டமாக அறிவிப்பிக்கிற இச்சந்தை ஜென்மாதி கரண சமாநார்த்தம் என்னக் குறையில்லை –

ஆக எல்லாவற்றாலும் மயர்வற மதி நலம் அருளினான் என்கிற இரண்டாம் அடி ஜென்மாதி கரண ப்ரமேயம்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் -என்கிற மூன்றாம் அடி சாஸ்த்ர யோநித்வாதி கரண அர்த்தமானபடி எங்கனே என்னில்-
வேதாந்தங்களை ஸித்தமான ப்ரஹ்ம வஸ்துவில் போதகத்வ சக்தியுண்டாய் -ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணமாய் ப்ரஹ்ம பிரதிபத்தி லபித்தாலும் வேதாந்த ஆரம்பம் கடியாது –

சாஸ்த்ர ரூப பிரமாணம் -பிரமாணாந்தரா பிராப்தமுமாய் -பிரமாணாந்தரா விரோதமுமாய் இன்றிக்கே இருக்கிற அர்த்தத்தில் போதகமாய் இருக்கும் –

இனி ப்ரஹ்மத்தினுடைய நிமித்தத்வ அம்சம் -ஷித்யாதிகம் சகர்த்ருகம் காரயத்வாத் கடவத்-என்கிற அனுமானத்தாலே சித்திக்கும் –

உபாதான அம்சம் -நிமித்த பூதனான குலாலாதிகளில் உபாதாளத்வம் காணாமையாலே ப்ரத்யஷாதி பிராமண விருத்தமாகையாலே சாதக பாதக பிராமண விரஹிதமல்லாமையாலே
ப்ரஹ்ம கரணத்வத்தை வேதாந்தங்கள் போதிக்க மாட்டாமையாலே தத் விசாரம் அநாரம்பணீயம் என்கிற பூர்வ பக்ஷத்தில் -அனுமானத்தாலே
ப்ரஹ்மத்தினுடைய நிமித்த காரணத்வத்தை சாதிக்கும் அளவில் லோக த்ருஷ்ட குலாலாதி ஷேத்ரஞ்ஞ சஜாதீயனாய் சித்தப்பன் ஒழிய
விவஷிதனான ஈஸ்வரன் சித்தியாமையாலே அனுமானத்தாலே ஈசுவரனுடைய நிமித்தத்வ அம்சத்தை சாதிக்க ஒண்ணாமையாலே -அனுமானம் சாதிக்க மாட்டாது –

அபரிமித சக்திகனான நிமித்த ஈஸ்வரனுக்கே லோகா பரித்ருஷ்டமான உபாதானத்வ அம்சமும் ப்ரமாணாந்தர பாதிதம் அல்லாமையாலே உபாதானத்வ அம்சத்தில் ப்ரமாணாந்தரம் பாதகமாக மாட்டாது –

ஆகையால் சாதக பாதக பிராமண விரஹிதமான ப்ரஹ்ம காரணத்வத்தில் வேதாந்தமே பிரமாணமாக வேண்டுகையாலே தத் விசாரம் ஆரம்பணீயம் என்று இறே சாஸ்த்ர யோநித்யதி கரண ப்ரமேயம் –
இனி அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் -என்று பகவத் விஸ்ம்ருதி யற்ற நித்ய ஸூரி சேஷித்வத்தை அருளிச் செய்தார் –
ஸூரி சேவ்யம் தான் பிரமாணாந்தர பிராப்தமும் அன்று -பிரமாணாந்தர விருத்தமும் அன்று –

இப்படி சாதக பாதக பிராமண விரஹிதமான ஸூரி சேவ்யத்வத்தை அருளிச் செய்கையாலே -தத் சாமான்யாதி தரேஷூ ததாத்வம் -என்கிற நியாயமாக ஸர்வஞ்ஞத்வாதி குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்துக்கும்
வேதாந்தமே பிரமாணம் ஆகவேண்டும் என்று அறிவிப்பித்து அருளினாராம் அத்தனை –
ஆகையால் அப்ராப்தமும் அவிருத்தார்த்தமும் சாஸ்திரம் என்கிற அர்த்தத்தைக் காட்டுகிற இச்சந்தை சாஸ்த்ர யோந் அதிகரண பிரமேயம் என்னத் தட்டில்லை-
மிஞ்ச -அதிபதி -என்கிறவிடத்தில் -பதி என்கிற இத்தாலே பாலன கர்த்ருத்வ ரூப நிமித்தத்வத்தை அருளிச் செய்து –

அதிக பதி அதிபதி -என்று-அந்தப் பதி சப்த வாச்யனான நிமித்த பூதனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் –

அந்த ஆதிக்யம் தானும் லோக சித்த நிமித்த பூதரான குலாலாதி வைலக்ஷண்யம் –
தத் வை லக்ஷண்யம் தானும் -ஜகத் உபாதாநத்வம் முதலானவை -இப்படி நிமித்த உபாதான ஐக்யத்தை -அதிபதி -என்று அருளிச் செய்கையாலே
ப்ரமணாந்தாரா ப்ராப்த ப்ரமணாந்தாரா விருத்தார்த்தக சாஸ்த்ர ப்ராமாண்யத்தை இச்சந்தை ஸூசிப்பிக்கிறது –
ஆகை இவை எல்லா வற்றாலும் இது சாஸ்த்ர யோந் யதிகரண ப்ரமேயம் –

துயரறு சுடரடி தொழுது எழு என்கிற நாலாமடி சமன்வய அதிகரண சமா நார்த்தமான படி எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரமாய் இருக்கிற அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சேத்–மந்தாக்நிர் நாம்பு பிபேத் –ஸ்வர்க்காமோ யஜத–ந களஞ்சம் பஷயேத்-இத்யாதி வாக்யங்களுக்கே ப்ரயோஜன பர்யவசாயித்வம் உண்டு -சித்த வஸ்து போதக வாக்யங்களுக்கு அது இல்லை -ஆகையால் ஸித்தமான ப்ரஹ்ம ப்ரதிபாதக வாக்யங்களுக்கு ப்ரயோஜன பர்யவசானம் இல்லாமையாலே வேதாந்த சாஸ்திரம் அநாரம்பணீயம் என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாம் அளவிலே

நிதி போலே ப்ரஹ்மமே ஸ்வயம் பிரயோஜன ரூபம் –
தத் ப்ரதிபாதக வேதாந்த வாக்யங்களே சாஷாத் பிரயோஜன பர்யவாசிகள் –

இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார சாதன போதனத்வாரா ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பர வாக்யங்களுக்கு
ப்ரயோஜன பர்யவசாயித்வம் ஒழிய நேரே ப்ரயோஜன பர்யவசாயித்வம் இல்லை –

ஆகையால் அநந்த கல்யாண குண பரிபூரணமான ப்ரஹ்மமே ப்ரயோஜனமாய்
தத் ப்ரதிபாதிதமான சாஸ்திரம் பிரதானமாய் சித்திக்கையாலே சித்த ப்ரஹ்ம ப்ரதிபாதிதமான சாஸ்திரம் ஆரம்ப நீயம் என்று இறே சமன்வயதி கரணத்தின் பொருள் –

இனி துயரறு சுடரடி தொழுது எழு -என்று துக்க நிவர்த்தகமாய் விகேஸ்வர தேஜோ ரூபமான திருவடிகளில் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவி என்று அருளிச் செய்தார் –
அத்தாலே பொன்னடி -பெரிய திருமொழி -5–8–9-/ பெரியாழ்வார் -3–2–8-என்று சொல்லுகிற திருவடிகளே ப்ரயோஜனமாய் தத் பரிச்ரயையே புருஷார்த்தமாக பிரார்த்தித்து விலக்ஷணமான ப்ரஹ்மமே பரம பிரயோஜனம் என்று அறிவிப்பிக்கையாலே ப்ரஹ்மத்தினுடைய சாஷாத் ப்ரயோஜனத்வத்தை சாதித்து சாஸ்திரம் ஆரம்ப ணீயம் என்று சொல்லுகிற சமன்வயதி கரண அர்த்தம் இச்சந்தை –

ஆகையால் முதல் பாட்டு ஸ்வரூபமாக சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தந பரமான சதுஸ் ஸூத்ர் யர்த்தமாக சதாசார்ய பிரசாத லாபத்தை வேதாந்த த்வய சிரவணம்
யுடையவர்களுக்குக் கைக் கொள்ளக் குறையில்லை —

பக்தாம்ருதாத் யகாதாயாஸ் சதுஸ் ஸூத்ர் யேக கண்டதா
நிரூபித்த வேத மௌலி த்வய நிஷ்ட சதாம் முதே-

இதி பிரதமாகாதா சதுஸ் ஸூத்ர் யைக கண்ட்யம்-முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்டது –

—————–

முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்ட பின்பு மேல் இரண்டு பாட்டுக்கள் -ஈஷதேர் நா சப்தம் என்று தொடங்கி
பாத சேஷ சமாநார்த்தமாய் இருக்கும் படி உபபாதிக்கப் படுகிறது –
இப் பாத சேஷம் தானும் சாஷாத் காரண வாக்ய நிரூபண பரமான பிரதம பேடிகை அதிகரண பஞ்சகாத்மகமாய் த்விதீய பேடிகை அதிகரண த்வயாத்மகமாய் இருக்கும் –

பிரதம பேடிகையும்

சாமான்ய சப்தங்களுக்குப் பரமாத்ம ரூப விசேஷ பர்யவசாயித்வ ப்ரதிபாதகமாய் ஒரு பேடிகையும்

அர்த்தாந்தர ப்ரசித்தங்களான ஆகாச பிராணாதி விசேஷ சப்தங்கள் உட்படப் பரமாத்ம ரூப விசேஷ பரவசாயி என்று ஒரு பேடிகையும்

என்று இப்படி அவாந்தர பேடிகா த்வய யுக்தமாய் இருக்கும் –

இதில் –மனனகம் என்கிற இரண்டாம் பாட்டு காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள பிரதம பேடிகையில் சாமான்ய சப்தங்கள்
பரமாத்ம ரூப விசேஷ விசேஷ பர்யவசாயிகள் என்கிற ஈஷத்யாநந்த மயாந்த ராதித்யாதி கரண ரூப அவாந்தர பிரதம பேடிகா சங்க தார்த்தமாய் இருக்கும்

இலனது -என்கிற மூன்றாம் பாட்டு பிரதம பேடிகையில் அவாந்தர ரூபமான ஆகாச பிராணாதி கரண ரூப அவாந்தர த்விதீய பேடிகையோடும் காரணத்வ
சமவ்யாப்தமான தர்மகதந முகேந காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள ஜ்யோதிரிந்த்ர பிராணாதி கரண ரூபமான பிரதான த்விதீய பேடிகையோடும் சமாநார்த்தமாய் இருக்கும் –

மனனகம் -என்கிற பாட்டு -ஈஷத்ய ஆனந்தமய அந்தராதித்ய அதிகரண ப்ரமேயமான படி என் என்னில்-
இம்மூன்று அதிகரணங்களில் –ஈஷாத்யதி கரணத்தில் —
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யாதி வாக்கியத்தில் ஜகத் காரணதயா ப்ரதிபன்னமான ஸச் சப்த வாஸ்ய வஸ்து பிரதானமாக வேணும் –
இதம் சப்த வாஸ்யமான சத்வ ரஜஸ் தமோமய ஜகத்துக்கு தத் யுக்தமான பிரதானம் காரணமாம் ஒழிய சத்வ ரஜஸ் தமோ விதுரமான ப்ரஹ்மம் காரணமாக மாட்டாது –
இன்னமும் அனுமான ஆகார வாக்ய வேத்யதயா ஆனுமானிக பிரதானம் இவ்வாக்கியத்தில் காரணமாய்த் தோற்றுகிறது என்று பூர்வ பக்ஷம் வருமளவில்

ஜகத் சர்க்க உபயுக்த முக்யேஷணம் பிரதானத்துக்கு கூடாமையாலும் சர்வஞ்ஞமான ப்ரஹ்மத்துக்கு உள்ளது ஒன்றாகையாலும்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகையால் சரீரபூத சித் அசித்வாரா சத்வ ரஜஸ் தமோமய அந்வயம் கூடுகையாலே
ஜகத் சாலக்ஷண்யம் ப்ரஹ்மத்துக்கும் உண்டாகையாலும் அனுமான அன்வயங்களில் பிரதானமான ஹேத்வவயம் அனுபாத்தம் ஆகையாலே இவ் வாக்கியத்துக்கு அனுமான ஆகாரத்வம் அசித்தமாகையாலும் ஸச் சப்த வாஸ்யமான காரணம் பிரதானம் அன்று –
பரமாத்மா வென்று சித்தாந்தித்து ப்ரஹ்மத்தினுடைய அசித் வ்யாவ்ருத்தி ப்ரதிபாதிக்கப் பட்டது –

ஆனந்த மய அதிகரணத்தில் ப்ரஹ்மம் அசித் வ்யாவ்ருத்தமே யாகிலும் ஜீவ வ்யாவ்ருத்தமாக மாட்டாது –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -என்கிறவிடத்தில் ஆனந்தமய சப்த வாச்யன் ஜீவனாகையாலே
அவன் ஜீவனாகைக்கு அடி -தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்று சரீர சம்பந்த ஸ்ரவணமும் –

அநேந ஜீவேநாஸ் ஆத்மந அநு ப்ரவிஸ்ய-என்று சாமாநாதி கரண்யத்தாலே ஜீவ ப்ரஹ்மணோர் ஐக்யமும் –

ஆகையால் ஜகத் காரணதயா நிரதிஷ்டனான ஆனந்தமயன் ஜீவனே என்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாம் அளவில் –

சத குணிதோத்தர க்ரமேண அப் யஸ்யமாந ஆனந்தம் ஸூகலவ பாகியாய் அபரிமித கர்ம வஸ்யனான ஜீவனுக்கு கடியாமையாலும் பரமாத்வுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும்

சாரீரன் என்கிறது ஜகத் சரீரம் என்கிறதாய் கர்ம க்ருத சரீரத்வம் இல்லாமையாலும்

சாமாநாதி கரண்ய நிரதேசத்தாலே சரீராத்மா பாவ நிபந்தமான ஐக்யத்தைச் சொல்லுகிறது ஒழிய ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்லாமையாலே ஜீவ ப்ரஹ்ம பேதம் சித்திக்கையாலும்

ஜகத் காரண பூதனான ஆனந்த மயன் பக்த முக்த அவஸ்த்தை ஜீவன் அன்று -தத் விலஷணனான பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

அந்தராதித்ய அதிகரணத்திலே -கேவல ஜீவன் ஜகத் காரணமாக மாட்டானேயாகிலும்
உபசித புண்ய விசேஷர்களான ஆதித்யாதி சேதனர்களில் ஒருவன் ஜகத் காரணமாகலாம் -அது எங்கனே என்னில் –
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு-இத்யாதி சாந்தோக்ய வாக்யத்திலே
கர சரணாதி ரூப சரீர சம்பந்தம் காரண வஸ்துவுக்கு ப்ரதிபாதிதமாய் இருக்கையாலும்
அது உள்ளது கர்ம க்ருத சாரீர சம்பந்தமுடைய ஜீவனுக்கே யாகையாலும் விலக்ஷண ஜீவனே ஜகத் காரணம் என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில் –

சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று அபஹத பாப்மத்வம் ஸ்ருதம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கும் சுருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தமாய் அப்ராக்ருதமாய் இருந்துள்ள
திவ்ய மங்கள விக்ரஹங்கள் உண்டாகையாலும் விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் இவ்வாக்கியத்தில் ப்ரதிபாதிக்கப் பட்டவன்
உபசித புண்ய விசேஷனான ஜீவன் அல்லன்-தத் விலக்ஷணனான பரமாத்மா வென்று சித்தாந்திக்கிக்கப் பட்டது –

இனி பொறியுணர்வு அவையிலன் -என்று ஐந்த்ரியக ப்ரத்யக்ஷ விஷயமான அசித்தின் படி யல்லன் என்கையாலே இச்சந்தை அசித் வ்யாவ்ருத்தமான
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாதிக்கிற ஈஷாத் யதிகரணார்த்தம் என்று அறியலாம் –

மனனாக மலமற மலர்மிசை எழுதரு மனன் உணர்வு அளவிலன்-என்று மநோ நிஷ்டமான அவித்யாதிகள் யோகாப்யாஸ பலத்தாலே கழியக் கழிய
மேல் நோக்கி அபிவ்ருத்தமாய் வருகிற மானஸ ஞானத்துக்கு விஷயமான ஆத்மாவின் படியல்லன்-என்கையாலே ஸூத்ய அஸூத்ய யுபய அவஸ்த
ஜீவ வ்யாவ்ருத்தியை ப்ரஹ்மத்துக்கு அறிவிப்பிக்கிற ஆனந்த மய அதிகரண சமா நார்த்தம் இச்சந்தை என்னும் இடம் ஸ்பஷ்டமாக அறியலாம் –

உணர் முழு நலம் -என்று கட்டடங்க ஞானத்தவ ஆஸ்ரயனாயும் ஆனந்த ஆஸ்ரயனாயும் இருப்பான் என்று அருளிச் செய்கையாலே
காரண வஸ்துவுக்கு அசேதன பிராதான்னா வ்யாவர்த்தகமான ஜகத் சர்க்கே க்ஷணாதி தர்மத்தையும்
ஜீவ வ்யாவர்த்தகமான நிரதிசய ஆனந்த அப்யாஸத்தையும் ஸூசிப்பித்து அருளினார் –

ஆகையாலே -ஈஷதே-அப்யாசாத்-என்கிற ஹேத்வம்சம் இச்சந்தையாலே ஸூசிதம்-

எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் மிகுநரையிலன் -என்று கால த்ரயத்திலும் தன்னோடு ஒப்பாரையும் மிக்காரையும் உடையன் அல்லன் என்றும்
நிஸ்ஸமாப்யதிகன் என்றும் அருளிச் செய்கையாலே

புண்டரீகாக்ஷத்வ அபஹத பாப்மத்வாதி தர்ம யோகத்தால் நிஸ்சமாப்யதிகனான ஆதித்ய மண்டல அந்தரவர்த்தியான
புருஷன் விலக்ஷண ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்தித்த அந்தராதிகரணார்த்தம் இச்சந்தையிலே ஸூசிதம் –

ஆனால் ஈஷத் யதிகரண ப்ரமேயமான அசித் வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்யாதே ஆனந்த மயாதிகாரண ப்ரமேயமான
ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்கைக்கு அடி என் என்னில் –

பிரதான ஜீவா வ்யாவ்ருத்திகளில் பிரதான வ்யாவ்ருத்தி ஸூஷ்ம புத்திகளுக்கு எளிதாய்
அறியப்படும் ஆகையால் அவர்களுக்கு அறிக்கைக்கு அரிதான ஜீவ வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்தார் –

ஆனால் ஸூத்ர காரர் பிரதான வ்யாவ்ருத்தியை முந்துறச் சொல்லுவான் என் என்னில்

அசித் வ்யாவ்ருத்தியையும் அறிய மாட்டாத எளியரானவர்களுக்கு முந்துற தத் வ்யாவ்ருத்தியைக் காட்டி அவ்வளவு தெளிவு பிறந்தவனுக்கு அநந்தரம் அதிலும் ஸூஷ்மான சேதன வ்யாவ்ருத்தியைக் காட்டினார் –
ஆகையால் ஆழ்வார் அருளிச் செய்கைக்கு ஒரு க்ரமமும் ஸூத்ரகாரருக்கு மற்றப்படி ஒரு க்ரமமும் விவஷிதம் ஆகையால் இவ்விரண்டுக்கும் விரோதம் இல்லை –

ஆனால் அசித் வ்யாவ்ருத்தி ஸ்புடமாய் இருந்ததாகில் பொறி யுணர்வு அவையிலன் -என்று ஆழ்வார் அசித் வ்யாவ்ருத்தியை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஷ்டாந்த ரூபேண அருளிச் செய்தாராம் அத்தனை –
ஆகையால் இறே பிள்ளை -அசேதன வ்யாவிருத்தியோ பாதியும் சேதன வ்யாவ்ருத்தி என்கைக்காக பொறி  யுணர்வு அவையிலன் -என்று அருளிச் செய்தார் என்று த்ருஷ்டாந்த பரமாக வ்யாக்யானம் செய்து அருளினார் –
ஆகையால் மனனகம் என்கிற பாட்டும் இவ்வதிகரண த்வயமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

இலனது உடையனிது என்கிற மூன்றாம் பாட்டு ஆகாசாதிகரணம் தொடங்கி அதிகரண சதுஷ்டய சமாநார்த்தம் என்னுமிடத்தை தெளிய அறிவிக்கிறோம் –
ஆகாசாதிகரணத்தில்-சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஆகாச சப்தமாய்த் தோற்றுகிற
ஜகத் காரண வஸ்து பிரசித்த ஆகாசமேயாக வேணும் –

ஆகாச சப்தம் பிரசித்த ஆகாசத்தில் ரூடமாகையாலும் பரமாத்மாவினிடத்தில் ஆகாச சப்த வாச்யத்வம் அப்ரஸித்தமாகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்-

சர்வ சப்தத்தால் சொல்லப் படுகிற சேதன அசேதன க்ருத்ஸ்ன பிரபஞ்ச காரணத்வம் என்ன -பராயணம் என்று சொல்லப்படுகிற ப்ராப்யத்வ ப்ராபகங்கள் என்ன – இவை இத்தனையும் பிரசித்த ஆகாசத்துக்கு கூடாமையாலும் பரமாத்மாவுக்கே இது உள்ளது ஓன்று ஆகையால் ஆகாசதே ஆகாசயதி-என்கிற வ்யுத்பத்தியாலே ஆகாச சப்தம் பரமாத்மாவினிடத்திலும் கூடுகையாலும் ஆகாச சப்த வாஸ்யம் பிரசித்த ஆகாசம் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பிராணாதிகரணத்திலே-சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -இத்யாதி வாக்கியத்தில் பிராண சப்த வாஸ்யமான
ஜகத் காரண வஸ்து பிரசித்த பிராணனாக வேணும் -சர்வ வஸ்துவும் பிராணாதி நஸ்திதிகமாககே காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –

சிலாகாஷ்டாத்ய சேதனங்களிலும் சேதன ஸ்வரூபத்திலும் பிராணாதி நஸ்திதிகத்வம் கூடாமையாலே சர்வ ஜகத் காரணத்தையா நிர்திஷ்டமான பிராணன்
பிரசித்த பிராணன் அல்லன் -பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஜ்யோதிர் அதிகரணத்தில் -அத யதத பரோதிவோ ஜ்யோதிர் தீப்யதே -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாக வேணும்
ஸ்வ வாக்கியத்தில் பரமாத்மா வ்யாப்த லிங்க விசேஷம் காணாமையாலும் கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசத்தாலும்-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

சர்வ பூதங்களும் த்யுசம்பந்தியான ஜ்யோதிஸ் ஸூக்குப் பாதமாக வ்யபதேசிக்கையாலும் -கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசம் பளார்த்தமாக தாதாத்மகத்வ அநுசந்தான விதி பரமாகையாலும் நிரதிசய தீப்தி யுக்தமான ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்த ஜ்யோதிஸ் ஸூ அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

இந்த்ர பிராணாதிகரணத்தில் –பிரானோஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாமாயுரம் ருதமித்யுபாஸ்வ-இத்யாதி வாக்கியங்களில் ஹித தமோபாசன கர்மதயா நிர்திஷ்டனான இந்திரன் ஜீவனாக வேணும் –

இந்த்ர பதம் ஜீவ விசேஷத்திலே ரூடமாகையாலும் மாம் உபாஸ்வ என்று ஸ்வ ஆத்ம உபாசனத்தை அம்ருதத்வ பிராப்தி சாதனமாக
உபதேசிக்கையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –

ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டன் இடத்தில்
ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யம் அந்வயிக்க வேண்டுகையாலும் –
மாம் உபாஸ்வ என்று ஸ்வ சரீரக பரமாத்மா உபாசனத்தை விதித்தது ஒழிய கேவல ஜீவ உபாசனை விதி இல்லாமையாலும் ஹித தம உபாசன கர்மத்தயா
நிர்திஷ்டனான சேதனன் இந்திரன் அல்லன் – ஜகத்காரண பூதனான பரமாத்மா என்று நிர்ணயிக்கப் பட்டது –

இனி இலனது உடையனது என நினைவரியவன் -என்று தூரஸ்தமாய் இருப்பது ஒன்றைக் காட்டி
அத்தை உடையன் அல்லன் -சன்னிஹிதமாய் இருப்பது ஒன்றைக் காட்டி இத்தை யுடையவன் என்று நினைக்கவும் கூட அரியன் என்று சொல்லி –
நிலனிடை விசும்பிடை உருவினன் -என்று பூமி அந்தரிஷாதி சர்வ தேச வர்த்திகளான சர்வ சேதன அசேதனங்களையும் உடையவன் என்று அருளிச் செய்கையாலே
சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி –என்றும்
சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -என்றும்
பாதோஸ்ய சர்வா பூதாநி -இத்யாதி வாக்கியங்களில் உள்ள பிரசித்த ஆகாச பிராண ஜ்யோதிஸ் ஸூக்களுக்கு கடியாதபடியான
நிகில சேதன அசேதன காரணத்வ பிரகாரித்தவாதிகளை இவரும் வெளியிட்டு அருளினார் –

உருவினன் அருவினன் -என்று சித் அசித்துக்களுக்கு சேஷி என்று அர்த்தம் ஒழிய பிரபஞ்ச காரகத்வம் அர்த்தம் அன்றே என்னில்-
கார்யத்வமும் தத் சேஷத்வ பிரகாரமாகையாலே சேஷத்வ கதனத்தாலே ஜகத்துக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் சித்திக்கும் என்று உபஸர்ஜனத்வ ரூப சேஷத்வத்தை அருளிச் செய்தார் –
ஆனால் கார்ய காரண பாவேந சொல்லாமல் சம்பந்த சாமான்யாவ லம்பனம் பண்ணுவான் என் என்னில்
பாதோஸ்ய சர்வா பூதாநி -என்று ஜ்யோதிரதிகரண யுக்தமான ஜகத் சேஷித்வமும் சங்க்ருஹீதமாக வேணும் என்னும் கருத்தாலே அருளிச் செய்தார் –

ஆகையால் இவ்வதிகரண த்ரயத்துக்கும் இச்சந்தைக்கும் சமா நார்த்தவம் சித்தம்

அந் நலனுடை ஒருவனை -என்று அந்த ஆனந்த குணத்தையுடைய அத்விதீயன் என்கையாலே ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டனுக்கு ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யத்தாலே பரமாத்மாவை சாதித்த அர்த்தம் இச்சந்தையிலே ஸூசிதமாகையாலே இச்சந்தை இந்த்ர பிராணாதிகரண அர்த்தம் ஆகலாம் –

கிஞ்ச–நணுகினம் நாமே -நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று உபாசன பலமான ப்ராப்யத்வ கதந முகேந பரமாத்மாவினுடைய உபாஸ்யத்வத்தை ஸூசிப்பிக்கையாலே –
தம்மாமாயுர அம்ருதம் இத்யுபாஸ்வ-என்கிற இந்த்ர பிராண சப்த வாச்யனுக்குப் பரமாத்மத்வ சாதகமான உபாஸ்யத்வ ப்ரதிபாதக வாக்ய சமா நார்த்தகம்
இச்சந்தை என்று அறியலாம் -இப்படி மூன்று பாட்டும் அந்நாலதி கரணமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

ஆம்னாய மௌளி யுகளீ விஹாராணாம் சதாம் முதே நிரூபிதாஸ் அத்ய பாதஸ்ய காதாத்ரய சாமார்த்ததா —

இதி ஆத்யபாதகா தாத்ராயைக கண்ட்யம்-

நாலாம் பாட்டு தொடங்கி மேல் மூன்று பாட்டுக்களுக்கும் த்ரிபாதிக்கும் ஐகார்த்யம் உபபாதிக்கப் படுகிறது –
அதில் முதலிலே த்வதீய பாதமும் நாலாம் பாட்டும் ஏக கண்டமான படியை உபபாதிக்கப் படுகிறது –
த்வதீய பாதத்துக்குப் பொருளான ஜகத் சரீரத்வத்தை இப்பாட்டிலும் ஆழ்வார் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் உண்டு –
த்வதீய பதார்த்தம் ஜகத் சரீரகத்வம் என்னும் இடத்தை -த்வதீயே ஜகத் சரீரகத்வம் என்று ஸ்ருத பிரகாசிகையிலும் –
ஸ்ரஷ்டா தேஹி ஸ்வ நிஷ்டோ நிரவதி மஹிமா -என்று பிரதம அத்யாய பாத சதுஷ்ட்யத்துக்கும் அடைவே பொருள் சொல்லும் இடத்தில்
த்வதீய பாதத்தின் பொருளை தேஹீ என்று சாராவளியிலும் ஸ்ரீ மத் ஸூதர்சன பட்டரும் ஸ்ரீ மத் வேங்கட நாதரும் அருளிச் செய்தார்கள் –

இனி த்வதீய பாத பிரதம அதிகரணத்திலே –
சர்வம் கல்விதம் பிரம்மா தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -என்கிற சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் உபதிஷ்டமான
ப்ரஹ்மம் ஜீவனாக வேணும் –

நிர்துஷ்டனான பரமாத்மாவுக்கு ஹேயாகரமான சித்த அசித் ரூப சர்வ பாவம் கூடாமையாலும் தேவ மனுஷ்யாதி ரூபேண
கர்மக்ருதமாக ஜீவனுக்கு சர்வாத்ம பாவம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வருமளவில் –

சர்வ வேதாந்த பிரசித்தமான சர்வ ஜகத் காரணத்வத்தை உபதேசிக்கையாலும் –
தஜ்ஜத்வ தல்லத்வ ததன்வங்களாலே ப்ரஹ்மத்துக்கே தாதாம்யம் உபபன்னம் ஆகையால் -தேவ மனுஷ்யாதி பாவேந ஜீவனுக்குத் தாதாம்யம் உண்டானாலும் அவனுக்கு ஜகத் காரணத்வம் கூடாமையாலும்–ப்ரஹ்ம சப்த வாச்யன் ஜீவன் அல்லன்-சர்வ ஜகத் சரீரதயா சர்வ சப்த வாச்யனான பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்வதீய அதி கரணத்திலே —
ஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந –ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம்-இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஓதந உபசேசன ஸூ சிதனான அத்தா ஜீவனாக வேணும் –
போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் ஆகையாலும்-ஜீவனுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும் என்று பூர்வபக்ஷம் வருமளவில் –

சராசர ரூப க்ருத்ஸ்ன ஜகதத்ருத்வம் ஜகத் சம்ஹார கர்த்ருத்வம் ஒழிய கர்ம நிமித்த போக்த்ருத்வம் அல்லாமையாலும்

தாதருச சம்ஹார கர்த்ருத்வம் பரமாத்மா தர்மமாகையாலும்
இவ்வாக்கிய ப்ரதிபாத்யன் ஜீவன் அல்லன் –பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில்–
ய ஏஷோ அந்தரஷிணி புருஷ த்ருஸ்யதே-என்கிற சாந்தோக்யத்தில் அக்ஷய ஆதாரதயா நிர்திஷ்டனான புருஷன் ப்ரதிபிம்ப ஜீவா தேவதா விசேஷங்களில் அந்நிய தமனாக வேணும் –
ப்ரஸித்தவ நிர்தேசத்தாலும்-த்ருஸ்யதே -இதய ப்ரோஷ அபிதானத்தாலும் பிரதிபிம்பம் ஆகலாம் –
ஜீவனுக்குச் சஷூஸ்சிலே விசேஷ ஸந்நிதானம் உண்டாகையாலே ஜீவன் தான் ஆகலாம் – ரஸ்மிபி ரேஷோ அஸ்மின் ப்ரதிஷ்டித என்கிற ஸ்ருதி பிரசித்தியாலே
சஷூஸ் ப்ரதிஷ்டித தேவதா விசேஷம் தானாகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹமேத்யாசஷதே -இத்யாதி வாக்யத்தால் ப்ரதிபன்னமான கல்யாண குணங்கள் பரமாத்மாவுக்கே யுள்ளது ஒன்றாகையாலும்
யஸ் சஷூஷி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதி பிரசித்தமான சஷூர் வர்த்தித்வத்தை -ஏஷோ அஷிணி என்று பிரசித்தவந் நிர்தேசிக்கையாலும் –
த்ருஸ்யதே இத்ய அபரோக்ஷ அபிதானம் யோகி த்ருஸ்யத்வ அபிப்பிராயம் ஆகையாலும் ப்ரதிபிம்பாதிகளுக்கு நியமேந சஷூர் வர்த்தித்தவம் இல்லாமையாலும்
அஷி புருஷன் ப்ரதிபிம்பத்திகளில் அந்நிய தமன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருதிவீ சரீரம் -இத்யாதி வாஜசநேயக வாக்ய ச்ருதனான அந்தர்யாமி ஜீவனாக வேணும் –
வாக்ய சேஷத்திலே கரணாயத்த ஞானம் அந்தர்யாமிக்கு ச்ருதமாகையாலே -என்று பூர்வபக்ஷம் வருமளவில்

ஒருவனே சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் நியமிக்கிறார் என்கிற இது பரமாத்மா அசாதாரண தர்மமாகையாலும் -த்ரஷ்டா ஸ்ரோதா என்று ரூபாதி சாஷாத்காரத்தைச் சொல்லுகிறது ஒழிய கரணாயத்த ஞானவத்தைச் சொன்னது அல்லாமையாலும் அந்தர்யாமி ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஐந்தாம் அதிகரணத்தில் –
யத்த தத் ரேஸ்யமக்ராஹ்யம் -இத்யாதி வாக்யத்திலும் -அஷராத் பரத பர-என்கிற வாக்யத்திலும் ப்ரதிபன்னமான அத்ருஸ்யத்வாதி குணகமும் அஷராத் பரத பரனும் பிரகிருதி புருஷர்கள் ஆக வேணும் -அசேதன ப்ருதிவ்யாதிகதமான த்ருஸ்யத்வாதி ப்ரதிஷேதம் தத் சஜாதீய பிரதானத்தில் உசிதம் ஆகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு உசிதம் ஆகையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்

யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதி வாக்கியங்களில் அத்ருஸ்யத்வாதி குணக வஸ்துவுக்கு சர்வஞ்ஞத்வாதி குணங்கள் ஸ்ருதமாகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு கடியாமையாலும் இவ்விரண்டு வாக்யத்திலும் ப்ரக்ருதி புருஷர்கள் ப்ரதிபாத்யர் அல்லர் பரமாத்மாவே ப்ரதிபாத்யன் என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் —
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் யேஷி -இத்யாதி வாக்கியத்தில் ச்ருதனான வைச்வா நரன் பரமாத்மா என்று நிர்ணயிக்க ஒண்ணாது –
வைச்வா நர சப்தத்தை ஜாடராக்னி என்ன பூத த்ருதீயம் என்ன தேவதா விசேஷம் என்ன இவைகளில் பரமாத்மாவிலும் வேதம் பிரயோகிக்கையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்று உபக்ரமத்திலே சர்வாத்ம பூத பர ப்ரஹ்ம ஜிஜ்ஞாசயா உபசன்னரான ஓவ்ப மன்யவாதி முமுஷூக்களைக் குறித்து உபதேசிக்கப் படுகையாலும்
பரமாத்ம தர்மமான த்யுப்ரப்ருதி ப்ருதிவ்யந்த ஜகச் சரீரத்வம் ஸ்ருதம் ஆகையாலும் ஜாடராக்னியாதிகளில்
இஸ் சப்த பிரயோகம் உண்டானாலும் இவ்விடத்தில் வைச்வா நரன் பரமாத்மாவே என்று நிர்ணயிக்கப் பட்டது –

இப்பாத அர்த்தமான ஜகச் சரீரத்வம் பிரதம அதிகரணத்திலே -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்கிற விஷய வாக்யத்திலே காணலாம் –

த்வதீய அதிகரணத்தில் -குஹாம் ப்ரவிஷ்டவ் -இத்யாதி ஸூத்ர விஷயமான -தம் துர்தர்சம் கூடமநு ப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் இத்யாதி வாக்யத்திலே ஸுபரியைப் போலே ஜகத்து ஞானா திஷ்டித சரீரம் அன்று -ஸ்வரூபத்தாலே சர்வ சரீரங்களிலே ஹ்ருதய குஹ ப்ரவிஷ்டனான பரமாத்மாவுக்கு சரீரம் என்று சொல்லப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் -ய ஏஷோ அஷிணி புருஷ த்ருஸ்யதே -என்கிற விஷய வாக்யத்திலே இந்திரியங்களுக்கும் பரமாத்மா சரீரத்வம் சொல்லப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் -கேவலம் இந்த்ரியங்களே அல்ல ப்ரத்யேகம் சர்வ தத்துவங்களும் பரமாத்மா சரீரம் என்று சொல்லப் பட்டது

பஞ்சம அதிகரணத்தில் சர்வ தத்துவங்களும் சமுதாய ரூபத்தாலும் ப்ரஹ்ம சரீரம் என்று ரூபோபந் யாசாத் -என்கிற ஸூத்ரத்திலே சொல்லப் பட்டது

ஷஷ்ட்டி அதிகரணத்தில் ஜகச் சரீரத்வம் முமுஷூ உபாஸ்யம் என்று பிரபஞ்சிதம் –

இப்படி ஷட் அதிகரணியான இப்பாதத்தில் சொல்லப்பட்ட ஜகச் சரீரத்வத்தை ஆழ்வாரும்
நாம் அவன் இவன் யுவன் அவள் இவள் அவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது எது வீமவை இவை யுவை
அவை நலம் தீங்கவை ஆமவையாயவை ஆய் நின்ற அவரே -என்று -தம்தாமாயும்-அஸந்நிஹிதனாயும்-சந்நிஹிதனாயும்-அதூர-விப்ர க்ருஷ்டனாயும் இருந்துள்ள புருஷன் என்ன –
தூர வர்த்திநியாயும்-சந்நிஹிதையாயும்-அதூர-விப்ர க்ருஷ்டையாயும் -வினவப் படுகிறவளாயும் இருந்துள்ள ஸ்த்ரீ ஜாதி என்ன –
பஹுமந்தவ்யரில்-அவர் என்றும் இவர் என்றும் உவர் என்றும் சொல்லப் போடுகிறவர்கள் என்ன அது இது உத்து எது என்று நபும்சக லிங்க நிர்திஷ்டமான வஸ்துக்கள் என்ன –
நச்வர பதார்த்தங்கள் என்ன -நல்லதாயும் தீயதாயும் இருந்துள்ள வஸ்துக்கள் என்ன இவை இத்தனையுமாய்
காலத்ரய வர்த்தியான பதார்த்தங்களுமாய் இருக்கிற பூர்வோக்தரானவர் -என்று சாமாநாதி கரண்யத்தாலே
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் யுண்டான சரீராத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே இப்பாட்டுக்கு த்விதீய பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம் –
————-
அவரவர் தமதமது -என்கிற ஐந்தாம் பாட்டுக்கு த்ருதீய பதைகார்த்யம் உண்டான படி என் என்னில்
த்ருதீய பாதத்தில் ப்ரதிபாத்யமான சர்வாத்மத்வ பிரகாரத்தை இதிலும் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு –

இப்பாதார்த்தம் சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடத்தை –த்ருதீயே சர்வாத்மத்வ பிரகார -என்று ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –

இப்பாதத்தில் பிரதம அதிகரணத்திலே —
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனாஸ் சக பிராணைஸ் ச சர்வை -இத்யாதி அதர்வணிக வாக்கியத்தில் ஸ்ருதனான த்யுப்வாத்யாயதநன் ஜீவனாக வேணும்
மன பிராண சம்பந்த நாட்ய ஆதாரத்வ பஹுதா ஜாயமானத்வாதிகளாலே -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

அம்ருத ஹேதுத்வ ஆத்மத்வ சர்வஞ்ஞத்வாதி தர்ம வாசக பரமாத்மா அசாதாரண சப்தங்களாலே நிர்தேசிக்கையாலும்
சர்வ ஆதாரனுக்கு மன பிராண நாட்ய ஆதாரத்வம் கூடுகையாலும்
ஜச்சமான பஹுதா ஜாயமானத்வம் இவனுக்கும் உண்டாகையாலும் த்யுதிவாத்யாயதனன் ஜீவன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்விதீய அதிகரணத்தில் –
யத்ர நான்யத் பஸ்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜானாதி ச பூமா -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான பூம குண விசிஷ்டன் ஜீவனாக வேணும்
தரதி சோகமாத்மவித் -என்று ஆத்ம ஜிஜ்ஞாசயா உபசன்னனான முமுஷூவுக்கு பிராண ஸஹ சாரித்த்வ நிபந்த நேந பிராண சப்த நிரதிஷ்டனான ஜீவனிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தமாகையாலும்
அந்த ஜீவனுடைய முக்த அவஸ்தையில் ஆனந்த வைப்புலயத்தை பூமா சப்தத்தால் நிர்தேசிக்கையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்

யஸ் சத்யே நாதிவததி -என்கிற வாக்கியத்தில் சத்யா சப்தத்தாலே ஸ்ருதனான பரமாத்மாவினிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தம் ஒழிய
பிராண சப்த வாஸ்ய ஜீவ உபதேசத்தில் ஸமாப்த்தம் இல்லாமையாலும் -பரமாத்மாவினுடைய ஆனந்த வைபுல்யத்தை பூம சப்தத்தால் சொல்லுகையாலும்
பூம குண விசிஷ்டன் ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் —
ஏதத் வை ததஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி –இத்யாதி வாஜசநேய வாக்கியத்தில் ச்ருதமான அக்ஷரம் பிரதான ஜீவர்களாக வேணும்
அஷராத் தமஸி லீயதே –இத்யாதி ஸ்ருதிகளிலே பிரதான ஜீவர்களிலும் அக்ஷர சப்த பிரயோகம் காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

த்ரை கால்ய வர்த்தி விகார ஜாதாத ஆதார பூத ஆகாச சப்த வாஸ்ய பிரதான ஆதாரத்வத்தாலும்
பிரசாசன ஸ்ரவணத்தாலும் அக்ஷர சப்த நிர்திஷ்டம் பிரதானமும் அன்று ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் –
பரம் புருஷன் அபித்யாயீத-என்று தொடங்கி -புரிசயம் புருஷம் ஈஷதே-என்கிற வாக்கியத்தில் த்யாய ஈஷதி கர்மதயா நிரதிஷ்டனான பரம புருஷன் சதுர்முகனாக வேணும் –
மனுஷ்ய லோகத்துக்கும் அந்தரிக்ஷத லோகத்துக்கும் உபரிதனமான ப்ரஹ்ம லோகத்தில் -ஈஷணீ யத்வாதி லிங்கத்தாலே என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்

யத்தச்சாந்தம் அஜ்ரமம் அம்ருதம் அபயம் –இத்யாதி வாக்கியத்தில் சாந்தத்வ அஜரத்வ அம்ருதத்வாதி தர்மங்கள் ச்ருதமாகையாலும்
சர்வ பாப நிர்முக்தனான முக்தனுக்கு ப்ராப்யதயா யுக்தமான ப்ரஹ்ம லோகம் சதுர்முக ஸ்தானம் இல்லாமையாலும்
யத்தத் கவயோ வேத யந்தே-என்று கவி சப்த வாஸ்யரான நித்ய ஸூரி களாலே துருஸ்யமான வைஷ்ணவ பதத்தை ப்ரஹ்ம லோக சப்தத்தாலே நிர்தேசிக்கையாலும்
தத்ரயனானவன் சதுர்முகன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பஞ்சம அதிகரணத்தில் –
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச -இத்யாதி சாந்தோக்ய வாக்ய ஸ்ருதமான ஹ்ருதய புண்டரீக மத்திய வர்த்தி தகர ஆகாசம் பூத ஆகாசமாதல் ஜீவன் ஆதலாக வேணும்
பூத ஆகாசத்தில் ஆகாச சப்த பிரசித்தி பிராஸுர்யத்தாலே பூத ஆகாசம் ஆகலாம் -பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் ஸ்ருதமாகையாலும்
ப்ரகாசாதி யோகத்தால் ஆகாச சப்தம் ஜீவன் இடத்தில் கூடுகையாலும் ஜீவன் தான் ஆகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

அபஹத பாப்மாத்வாதிகள் பூத ஆகாசத்துக்கு கடியாமையாலும் -பிரஜாபதி வாக்கியத்தில் ஸ்ருதமான பரமாத்ம சம்பத்தி லப்த அபஹத பாப்மத்வாதிகள் ஜீவனுக்கு உண்டானாலும்
தஹர வாக்ய யுக்த அதிரோஹித நித்ய சித்த அபஹத பாப்மத்வாதி வைசிஷ்ட்யம் ஜீவனுக்கு கூடாமையாலும்
பரமாத்மாவினிடத்திலும் ஆகாச சப்த பிரயோகம் சுருதியந்தர சித்தமாகையாலும் தஹர ஆகாசம் பிரசித்த ஆகாசமும் அன்று -ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட அதிகரணத்தில் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்திய ஆத்மநி திஷ்டதி -இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஸ்ருதனான அங்குஷ்ட பிரமித்தான் ஜீவனாக வேணும் –
அங்குஷ்ட ப்ரமிதத்வம் ஜீவனுக்கு சுருதியந்தர சித்தமாகையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

பூத பவ்ய ஈஸா நத்வம் ஜீவனுக்கு அநு பன்னம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கே உள்ளது ஓன்று ஆகையாலும் அங்குஷ்ட பிரமிதன்
ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது

சப்தம அஷ்டம நவம அதிகரணங்களில் –
ப்ரஹ்ம வித்யையிலே அதிகார அநதிகார விசாரம் ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தம் ஆயிற்று –

தசம அதிகரணத்தில் –
ஆகாசோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான ஆகாச சப்த வாச்யன் முக்தாத்மாவாக வேணும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்-இத்யாத்ய அனந்தர வாக்யத்திலே முக்தன் ப்ரக்ருதன் ஆகையாலும்
முக்தனுக்கும் பூர்வ அவஸ்தையில் கர்மக்ருதமாக நாம ரூப நிர்வாஹம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

சகல ஜெகன் நிர்மாண துரந்தரனான பரமாத்மாவுக்கே நாம ரூப நிர்வோ ட்ருத்வம் ஸ்ருதி சத சமதிகதம் ஆகையாலும்
ப்ரஹ்ம லோக சப்த வாச்யனான பரமாத்மாவும் அனந்தர ப்ராக்ருதன் ஆகையாலும் ஆகாச சப்த நிரதிஷ்டன் முக்தன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சர்வாத்மத்வ பிரகாரத்தில் ஹேய அஸ்ப்ருஷ்டத்துவம் பிரதம அதிகரண யுக்தம் –
த்வதீய அதிகரணத்தில் நிரதிசய ஆனந்த யோகம் சொல்லப்பட்டது -இதுவும் சர்வாத்மத்வ பிரகாரம் இறே-
த்ருதீய அதிகரணத்தில் பிரசாசித்ருத்வம் பிரபஞ்சிதம் -இது சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடம் ஸ்புடம் இறே –
சதுர்த்த அதிகரணத்தில் முக்த ப்ராப்யத்வம் நிரூபிதம்-இதுவும் சர்வம் ஹா பஸ்ய பஸ்யதி–இத்யாதி படியே
சர்வ சரீரியான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே சர்வாத்மத்வ பிரகாரம் என்னகே குறையில்லை –
பஞ்சம அதிகரணத்தில் நிரதிசய பாக்ய குணத்வம் நிரூபிதம் -இதுவும் அபஹத பாப்மாத்வாதி குணவத்தம் ஆகையால் சர்வாத்மத்வ பிரகாரம் என்னலாம் –
ஷஷ்ட அதிகரணத்திலே மாதாவைப் போலே அந்தரவர்த்தியான எம்பெருமானுக்கு ஜூகுப்சை இல்லாமையும் பிதாவைப் போலே சிஷகத்வேந பய ஹேதுத்வமும் சொல்லிற்று –இதுவும் அந்தர்யாமித்வ பிரகாரம் என்னுமிடம் சித்தம் –
அதிகார அநாதிகார விசாராத்மக அதிகரண த்ரயமும் ப்ராசங்கிகம் ஆகையால் இதில் சர்வாத்மத்வ பிரகார ப்ரதிபாதனம் பண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –
சரம அதிகரணத்தில் ஸூ ஷூப்த்யாதி சர்வ அவஸ்தைகளிலும் பரமாத்மா சம்பந்தம் ப்ரோக்தம் -இதுவும் சர்வாத்ம பிரகாரம் என்னுமிடம் ஸ்பஷ்டம் இறே –

இப்படி த்ருதீய பாதத்தால் நிரூபிதமான சர்வாத்மத்வ பிரகாரத்தை –
அவரவர் தமதமது அறிவகை வகை அவரவர் இறையவர் என அடி யடைவர்கள் -அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-
தத்தத் அதிகாரிகள் தந்தாமுடைய ருசி பேதத்தாலே ராஜசராயும் தாமஸராயும் மிஸ்ர ஸத்வராயும் இருந்துள்ள தேவதைகளை ஆஸ்ரயிப்பார்கள் –
அந்தந்த தேவதைகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு அத்தேவதைகள் தத் தத் பல பிரதானத்தில் குறையுடையர் அல்லர் –
அதுக்கு அடி சர்வ சரீரியான சர்வேஸ்வரன் தத் தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் ஆஸ்ரயித்த மனுஷ்யர்க்கு
தத் தத் பலம் பெறும்படி இருக்கையாலே என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

அதில் பாதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தில் -பிரதம அதிகரண ப்ரமேயமான
ஹேய அஸ்ப்ருஷ்டத்வ ரூப பிரகாரத்தை இறையவர் என்கிற பதத்தாலே பிரகாசிப்பித்து அருளினார் -அது எங்கனே என்னில்
இறையவர் என்று ஈஸ்வரத்வம் சொல்லுகையாலே சகல ஹேய அஸ்ப்ருஷ்டன் என்று சித்திக்கும் –

த்வதீய அதிகரண ப்ரமேயமான
நிரதிசய ஆனந்தயோகம் சேஷித்வ வாசியான அந்தப்பதத்தாலே தானே ஸூசிதம் -சர்வ சேஷிக்கு இறே நிரதிசய ஆனந்தத்வம் உள்ளது -ஆகையால் இறே ஆனந்த வல்லியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் -இத்யாராப்ய வித்த பூர்ணையான சர்வ பிருத்வியுமுடையனாய் இருக்கையை மனுஷ்ய ஆனந்தமாகச் சொல்லிற்று –
இனி சர்வத்தையும் உடையவன் என்று சொல்லவே சர்வ சேஷித்வ ப்ரயுக்த நிரதிசய ஆனந்த யோகமும் தன்னடையே வரும் –

த்ருதீய அதிகரண பிரமேயமான பிரசாசித்ருத்வமும்
நியந்த்ரு ரூப சேஷிவாசி யாகையாலே அப் பதத்தாலே தானே ஸூசிதம் -இன்னமும் –அவரவர் விதிவழி யடைய நின்றனர் -என்று
தேவதை அந்தர்யாமித்வ கதந முகத்தாலும் பிரசாசிச்ருத்வம் யுக்தமாகலாம் –

சதுர்த்த அதிகரண ப்ரமேயமான முக்த ப்ராப்யத்வமும் –
இறையவர் -என்று -இன்னானுக்கு இறையவர் என்று விசேஷியாதே சாமாந்யேன சர்வ சேஷி என்று சொல்லுகையாலே –
இப் பதத்தாலே சொல்லப் பட்டது என்று அறியலாம் -ஆகையால் இறே ப்ராப்ய பரமான உத்தர வாக்கியத்தில் நாராயண பதத்துக்கு
சேஷித்வத்திலே நோக்கு என்று முன்புள்ள முதலிகள் வ்யாக்யானம் செய்து அருளிற்று –
இந்த இறையவர் என்கிற பதம் சாமாந்யேன சர்வ சேஷித்வ வாசி என்னும் இடத்தை கலிவைரி தேசிகர் -பொதுவில் இறையவர் என்கிறார் –
அவர்களோடு அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு தம்மோடு வாசியற எல்லார்க்கும் ஓக்க இறையவர் ஆகையால் -என்று பகவத் விஷயத்திலே வெளியிட்டு அருளினார் –

பஞ்சம அதிகரண ப்ரமேயமான நிரதிசய போக்ய குணத்வமும்
தேவதை அந்தர்யாமித்வ கதனத்தாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -யாவாந் வா அயம் ஆகாசா -என்றும் -உப்பிய அஸ்மின் த்யாவா ப்ருதிவீ –
உபாவக் நிஸ்ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம சாவுபவ் வித்யுந் நக்ஷத்ராணி -என்கிற வாக்யத்திலே
பிரக்ருத தஹர ஆகாசத்தை -அஸ்மின் -என்று பராமர்சித்து அந்த பிரம்மா உபாசனம் பண்ணுகிறவனுக்கு இஹ லோக லப்யமாயும் பரலோக லப்யமாயும்
மநோரத மாத்ர வர்த்தியாயும் இருந்துள்ள சர்வ போக்ய ஜாதமும் இந்த தஹர ஆகாசத்தில் உண்டாய் இருக்கும் என்று சொல்லிற்று –

இவ்விரண்டு வாக்யத்திலும் பூர்வ வாக்கியத்தில் சொன்ன அக்னி வாயு ஸூர்ய சந்த்ர ப்ரப்ருதி சர்வ ஆதாரத்வ ரூபமான சர்வ சரீரத்வத்தை –
இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனர் -என்று அருளிச் செய்கையாலே
தத் வ்யவஹிதாநந்தர த்விதீய வாக்கியத்தில் சொன்ன சர்வ ஆதார வஸ்துவினுடைய நிரதிசய போக்யத்வம் இச்சந்தையிலே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான மாத்ருத்வத் ஜூகுப்சா ராஹித்யமும் பித்ருவத் சிக்ஷகத்வேந பய ஹேதுத்வமும்
அந்தர்யாமித்வ கதனத்தாலே தானே சித்திக்கும் -கிஞ்ச -தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின அதி ஹீநரையும் விட மாட்டாதே ஜூகுப்ஸை யற்று
தத் தத் தேவதா முகேந ரஷிப்பான் என்று இச்சந்தையால் அருளிச் செய்கையாலும் ஷஷ்ட்டி அதிகரண பிரமேயம் இது என்று அறியலாம் –

அதிகார அநதிகார விசாராத்மகமான சப்தம அஷ்டம நவம அதிகரண ப்ரமேயமும் –
அவரவர் தமதமது -இத்யாதியாலே அதிகாரி வைவித்ய கதனத்தாலே ஸூசிதம் –

தசம அதிகாரண ப்ரமேயமான ஸூஷூப்த் யாதி சர்வ அவஸ்தாஸூ அப்ரஹாணமும்
ஸ்வேந ரூபேண நின்று ரசிக்கும் அளவன்றிக்கே தேவதாந்த்ர முகேநவும் ரஷித்து அருளும் என்கிற இப்பாட்டாலே ஸூசிதமாகலாம் –

இப்படி த்ருதீய பதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தை
இப்பாட்டாலே வெளியிட்டு அருளுகையாலே இப்பாட்டுக்கும் த்ருதீய பாதத்துக்கு ஐகமத்யம் சித்தம்
———————————
சதுர்த்த பாதத்துக்கும் -நின்றனர் இருந்தனர் -என்கிற ஆறாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில்
சர்வ வஸ்துவும் ப்ரஹ்ம கார்யமுமாய் -ப்ரஹ்ம சரீரமுமாய் -ப்ரஹ்ம ஆத்மகமுமாய் இருக்கையாலே
தத் கார்யமும் அன்றிக்கே தத் சரீரமும் அன்றிக்கே தத் ஆத்மகமும் அன்றிக்கே இருக்கிற வஸ்து இல்லை என்று
அப்ரஹ்மாத்மக வஸ்து நிஷேதம் இப்பாத ப்ரதிபாத்யர்த்தமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தையே இப்பாட்டில் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு -இப்பதார்த்தம் இது என்னும் இடத்தை
அதத் கார்ய -அதச் சரீர -அததாத்மக வஸ்த்வ சம்பவ ப்ரதிபாத்யதே -என்று ஸ்ருதி பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –
இத்தை முகாந்தரேண-நிரவதி மஹிமா -என்று சாரா வழியிலே வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இதில் பிரதம அதிகரணத்திலே
ஜகத்தினுடைய அதததீ நத்வம் -தததீ நத்வாதர்த்த வத் -என்கிற ஸூத்ரத்திலே ப்ரஹ்மாத்மகத்வம் ஜகத்துக்கு சாதிக்கையாலே நிரஸ்தமாயிற்று –

த்வதீய அதிகரணத்தில் –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் -இத்யாதி ஸ்வதாஸ்வதர மந்திரத்தில் ஜகத்தினுடைய அப்ரஹ்ம கார்யத்வம் தோற்றுகிறது என்று சங்கித்து
தைத்ரீயத்தில் -அஜா மேகாம் -இத்யாதி வாக்ய அநுகுண்யேந ப்ரஹ்ம கார்யத்வத்தை சாதித்து அதத்கார்யத்வத்தை நிரசித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா -இத்யாதி வாக்கியங்களில் சொல்லுகிற படியே சாங்க்ய ப்ரக்ரியையாலே ஜகத்து அப்ரஹ்மாத்மகம் என்று சங்கித்து
ப்ரஹ்மாத் மகத்வத்தை ஜகத்துக்கு சாதித்து அததாத் மகத்வத்தை நிரசித்தார் –
தமேவம் மந்ய ஆத்மாநம் -என்று இறே அந்தப் பிரகரணத்திலே வாக்யம்-

சதுர்த்த அதிகரணத்தில் -சதவ்யா க்ருதாதி சப்தத்தால் பிரதிபன்னமான வஸ்துவுக்கு அத தாத் மகத்வத்தை சங்கித்து அதுவும் ப்ரஹ்மாத்மகம் என்று பரிஹரித்து ஜகத்தினுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார்

பஞ்சம ஷஷ்ட அதிகரணங்களில்
விசேஷித்து சேதனன் அத தாத்மகன் என்று சங்கித்து ப்ரஹ்மாதிமகத்வத்தை சாதித்து ஜீவனுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார் –

சப்தம அதிகரணத்திலே சேஸ்வர சாங்க்ய யுக்தமான ஜகத்தினுடைய அப்ரஹ்மாத் மகத்வத்தை சங்கித்து ப்ரஹ்ம உபாதாநத்வ சமர்த்தந முகேந
ப்ரஹ்மாதி மகத்வத்தை சமர்த்தித்து அப்ரஹ்மாத் மகத்வத்தை நிரசித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
சமர்த்தித்த அர்த்தத்துக்கு சார்வத்ரிகத்வம் சொல்லப் பட்டது –

இப்படி ஸூத்ரகாரர் ஜகத்தினுடைய ப்ரஹ்ம அதீ நத்வ ப்ரஹ்ம கார்யத்வ ப்ரஹ்ம ஆத்மதத்வ பிரசாதந முகேந
அதாத் அதீந்ய -அதத் காரயத்வாதி நிராசனம் பண்ணி -ப்ரஹ்ம காரணத்வ ஸ்திரீ கரணம் பண்ணின அர்த்தத்தை ஆழ்வார் –
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவர் –
என்றும் ஓர் இயல்வொடு நின்ற வெந்திடரே-என்று
நிற்றலை யுடையவர் -இருத்தலை யுடையவர் -கிடைத்தலை யுடையவர் -திரிதலை யுடையவர்கள் இவை இல்லாதவர்கள் என்று சொல்லப் படுகிற
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் வஸ்துக்களையும் ஸ்வ அதீனமாக உடையவராய் என்றும் ஒரு படிப் பட்ட ஸ்வ பாவத்தை யுடையவர் என்று
நினைக்கவும் கூட அரியராய் இப்படி துர்ஜ்ஜேயராய் இருக்கும் இருப்பு என்றும் ஒருபடிப் பட்ட ஸ்வ பாவமாக யுடையராய் இருக்கிற என்னுடைய ஸ்வாமியாய்
த்ருட பிரமாணமாக வேதைக சமதிகம்யரானவரே -என்று
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் சர்வ வஸ்துக்களினுடையவும் ப்ரஹ்ம அதீனத்தவ ப்ரஹ்ம காரியத்த வாதிகளை சாமாநாதி கரண்யேந அருளிச் செய்கையாலே
இப்பாட்டுக்கும் சதுர்த்த பாதத்துக்கு ஐக மத்யம் ஸ்புடம் –

இங்கே எந்திடரே-என்று சாமாநாதி கரண ஸித்தமான பிராமண-தார்ட் யத்தோடே பிரதம அத்யாய அர்த்தத்தை நிகமித்தார் ஆயிற்று –

இப்படி முதல் ஆறு பாட்டுக்கும் பிரதம அத்யாயத்துக்கும் ஐகமத்யம் வேதாந்தத்வயா சம்ப்ரதாயம் யுடையவர்களுக்கு திக் பிரதர்சனம் பண்ணப் பட்டது
அநேக உபபத்திகளை உபபாதிக்கும் அளவில் கிரந்தம் விஸ்திருமாம் என்று ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

சாரீரக அத்யாயேந காதா ஷட்க சாமார்த்ததா
யதிராண் மத நிஷ்டாநாம் திங்மாத்ரம் தர்சிதா முதே-

இதி சாரீரக அத்யாத்யாய பிரதம காதா ஷட்கைக கண்ட்யம்-

———————————–

த்வதீய அத்யாய பிரதம பாதத்துக்கும் –ஏழாம் பாட்டுக்கும் ஐக மத்யம் உண்டாம் படி எங்கனே என்னில்
பிரதம பாதார்த்தமான பரோத்பாவித தோஷ பரிஹாரத்தை இப்பாட்டில் சொல்லுகையாலே ஐகமத்யம் உண்டு –
பரோத்பாவித தோஷ பரிஹாரம் இப்பாதார்தம் என்னும் இடத்தை –தத்ர பரை ருத்பாவி தாஸ்ச தோஷா பரிஹ்ருதா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் –

இப்பாதம் தான் தச அதிகரணாத்மகமாய் இருக்கும் -இப்பத்து அதிகரணங்களிலும் பிரதம அதிகாரணம் தொடங்கி அடைவே –
1-சாங்க்ய ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
2–சதுர்முக வக்த்ருகமான யோக ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
3–கார்ய காரணங்களான ஜகத் ப்ரஹ்மங்களுக்கு ம்ருத் கடாதிகளைப் போலெ சா லக்ஷண்யம் இல்லாமையாலும் –
4–அநேக தந்த்ர யுக்தமான பரமாணு ஜகத் காரணத்வ நிரூபணத்துக்கு ப்ராபல்யம் சொல்ல வேண்டுகையாலும் –
5–சித் அசித் ரூப கார்யகதமான பரிணாமித்வ-ஸூகித்வ -துக்கித்வாதி தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு பிரசங்கிக்கையாலும் –
6–கார்ய உபாதானங்களுக்கு நையாயிக மதரீத்யா பேதம் சொல்ல வேண்டுகையாலே நிமித்த உபாதான ஐக்யம் கூடாமையாலும் –
7–ஜீவன் ஸ்வ அபின்நனாகில் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கிக்கையாலும் –
8–லோகத்தில் தத் தத் கார்ய ஜனக சக்தி யுக்தனுக்கும் உபகரண அபேக்ஷை காண்கையாலே சர்வ சக்தி யுக்தமான பர ப்ரஹ்மமும் உபகரணம் இல்லாத போது காரணமாக மாட்டாமையாலும் –
9–ப்ரஹ்மம் கார்யமாகப் பரிணமிக்கும் போது நிரவயமான க்ருத்ஸ்ந ப்ரஹ்மமும் கார்யமாய் பிரசங்கிக்கையாலும்
10–பரிபூர்ண ப்ரஹ்மத்துக்கு -ஸ்ருஷ்டியாலே பிரயோஜனம் இல்லாமையாலும்
ஜகத் காரணத்வம் கூடாது என்று பூர்வ பக்ஷம் -ப்ராப்தமாம் அளவில் –

1–வேத விருத்த சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் பாதகம் இல்லாமையாலும்
2–யோக ஸ்ம்ருதியும் விலஷணனான சதுர்முக வக்த்ருகமாகிலும் வேத விருத்ததயா பிரமாணம் இல்லாமையாலும் –
3—கோமய வ்ருஸ்ஸிகாதி விலக்ஷண வஸ்துக்களுக்கும் கார்ய காரண பாவம் காண்கையாலே ச லக்ஷண நியமம் இல்லாமையாலும் –
4–அநேந மத நிரூபித பரமாணு காரணத்வம் கேவல தர்க்க மூலமாகையாலே வேத ப்ரதிபாத்ய ப்ரஹ்ம காரணத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் –
5–பிரளய காலத்தில் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரணமாய் ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரியமாய் இருக்கையாலே
சித் அசித் ரூப கார்யகத தோஷங்கள் விசேஷ்யமான ப்ரஹ்மத்தில் பிரசங்கியாமையாலும்
6—கார்ய உபபாதன ஐக்யம் சுருதி சத சமதிகதமாகையாலும்-
7–ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் விஸிஷ்ட ஐக்யம் ஒழிய ஸ்வரூப ஐக்யம் இல்லாமையால் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கியாமையாலும் –
8–ஷீராதிகளில் உபகரண நிரபேஷமாக தத் யாதி பாவேந பரிணாமம் காண்கையாலே பர ப்ரஹ்மத்துக்கு உபகரண நைரபேஷ்யேண காரணத்வம் கூடுகையாலும்
9—ஸ்ருதி சித்த அர்த்தத்திலே லௌகிக பிராமண ஸித்தார்த்த சாம்யம் பிரசங்கியாமையாலும்
10–பரிபூரணமான ஜகத் ஸ்ருஷ்ட்டி கேவல லீலார்த்தமாக கூடுகையாலும்
ப்ரஹ்ம காரண வாதத்தில் பரோத்பாவித தோஷங்கள் பிரசரிக்காமையாலே ஜகத்துக்கு ப்ரஹ்மம் காரணம் ஆகலாம் என்று சித்தாந்திக்கப் பட்டது –

இப்பாதத்தில் பத்து அதிகரணத்திலும் சொன்ன பரோத்பாவித தோஷங்களையும் தந்நிரசனத்தையும்-
சாங்க்ய ஸ்ம்ருதயா விரோதாத் விதிமத விஹதே கார்ய வைரூப்யதோ அஸ்மின் நேகார்த்தே அநேக தந்த்ரோதித விஹதிதயா தேஹ போகா வியுக்த்யா –
கார்ய உபாதான பேதாத் ஸ்வஹித விஹிதிதி காரகஸ்தோம ஹாநே க்ருத்ஸ் நாம் சாத்யூஹ பாதாத் க்ருதி விபலதயா வ்யர்த்திதம் ப்ரத்யவித்யத் –என்கிற
ஸ்ரக்தரையாலே சாராவளியிலே வேதாந்தச்சார்யார் ஸங்க்ரஹித்து அருளினார் –

இப்பாத அர்த்தமான பரோத் பாவித தோஷ பரிகாரத்தை –
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -என்று த்ருடமான ஆகாசம் தேஜஸ் ஸூ வாயு ஜலம் பிருத்வி தொடக்கமாய் விஸ்திருதமாய் இருந்துள்ள ஸமஸ்த பதார்த்தங்களும் காரணமாய் -அந்த வஸ்துக்கள் எல்லாவற்றிலும் சரீரங்கள் தோறும் ஆத்மா பிரவேசித்து இருக்குமா போலே அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் –
அவைகளால் தர்சிக்கப் படாதவனுமாய் -சர்வ பதார்த்தங்களில் பிரத்யேக ப்ரத்யேகம் பரிபூர்ண வர்த்தியாய்-அபவ்ருஷேயத்வ நித்ய நிர்தோஷத்வாதி குணங்களால் உஜ்ஜ்வல்யத்தை யுடைய வேதைக சமதி கம்யனாய் சராசராத்மக க்ருத்ஸ்ன பிரபஞ்ச ஸம்ஹாரியான தேவன் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

இதில் பிரதம த்விதீய சதுர்த்த அதிகரண யுக்தமான
சாங்க்ய யோக ஸ்ம்ருதயாத் அநு ரோதம் பண்ணி பிரம்மா காரணத்வத்தைச் சலிப்பிக்க ஒண்ணாது என்கிற அர்த்தத்தை
சுடர் மிகு சுருதியுள் உளன் -அப்ருஷேயத்வாதி உஜ்ஜவல்யாதிக்யத்தை யுடைய வேத ப்ரதிபாத்யன் -என்கிற இச்சந்தையாலே வெளியிட்டு அருளினார் –

த்ருதீய அதிகரண சா லாஷ்ண்ய நியமா பாவமும் –
திட விசும்பு எரி வளி- என்று தொடங்கி-விலக்ஷணமான ஆகாச வாயு வாதிகளுக்கும்
ப்ரஹ்ம காரணத்வம் ப்ரதிபாதிதம் ஆகையால் சித்திக்கிறது -கிஞ்ச -திட விசும்பு என்று காரணத்தவத்தால் வந்த தார்டயத்தை ஆகாசத்துக்கு அருளிச் செய்தார் –
ஆகாசாத் வாயு -என்று வாயு வாதி காரணத்வம் ஆகாசத்துக்குச் சொல்லப் பட்டது –
சாங்க்யாதிகளும்-ஆகாச வாயுக்களுக்கு சாரூப்பியம் இன்றிக்கே ஒழிந்தாலும் கார்ய காரண பாவத்தை அங்கீ கரித்தார்கள் –

அப்படியே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ச லக்ஷணம் இல்லாவிடிலும் கார்ய காரண பாவம் கூடும் என்று ஸூ சிப்பித்து அருளினார் -திட விசும்பு -என்கிற இச்சந்தையாலே –

ஆனால் ஸ்ரீ பாஷ்யகாரர் சா லக்ஷண்ய நியமாபாவத்துக்கு கோமய வ்ருஸ்ஸிகாதி திருஷ்டாந்தத்தை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஸ்யதே என்கிற சவ்த்ரபாதம் சாஸ்த்ர ப்ரத்யக்ஷ சித்தார்த்தங்களுக்குப் பொதுவாய் இருக்கிறது –

தர்சநாத் ஸ்ம்ருத்ஸ் ச -என்றும் -த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் -இத்யாதி ஸூத்ரங்களில் தர்சன த்ருஷ்ட சப்தங்கள் சுருதி பரமாகக் காண்கையாலே
த்ருஸ்யதே என்கிற இப்பதான் சுருதி சித்தார்த்தத்தைக் காட்டுகிறது –
அதிகரணாந்தரே —
உப சம்ஹார தர்சனான் நேதி சேந்ந ஷீரவத்தி –என்றும் -தேவாதிவதபி லோகெ -என்கிற ஸூத்ர த்வயத்தாலே லௌகிகமான
ஷீரத்வத்தையும் வைதிகரான தேவர்களையும் ப்ரஹ்மத்துக்கு சாமக்ரீ நைரபேஷயேண காரணத்வம் கூடும் என்னும் இடத்தை த்ருஷ்டாந்தமாக ஸூத்ரகாரர் உதாஹரித்தார் –
லௌகிக த்ருஷ்டாந்தத்தில் வைதிக த்ருஷ்டாந்தம் மிகவும் அலௌகிகமான ப்ரஹ்ம விஷயத்தில் பரிக்ராஹ்யம் என்னும் இடத்தை –
தேவாதீநாம் வேதாவகத சக்தீ நாம் த்ருஷ்டாந்த தயா உபாதா நாம் ப்ரஹ்மணோ வேதாவகத ஸக்தேஸ் ஸூக க்ரஹணாயேதி பிரதிபத்தவ்யம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
இப்படி லோக வேத சித்தங்களில் த்ருஷ்டாந்த கதநம் காண்கையாலே -திட விசும்பு -என்கிற இச் சந்தைக்கு கார்ய காரண சா லக்ஷண்ய நியமாபாவ ஸூசகத்வம் சித்தம்

பஞ்சம அதிகரண யுக்தமான சித் அசித் ரூப ஜகத்கத தோஷம் ப்ரஹ்மத்தில் பிரசங்கியாது என்கிற அர்த்தமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற சந்தையிலே சரீரங்களில் ஜீவாத்மாவைப் போலே சகல பாதாரத்திலும் வியாபித்து
அந்யைர த்ருஸ்யனாய் இருப்பன் என்று ஸ்புடமாகச் சொல்லப் பட்டது –

ஷஷ்டி அதிகரண யுக்தமான கார்ய உபாதான ஐக்யம் –
திட விசும்பு எரி வளி நீர் நிலமிவை மிசை படர் பொருள் முழுவதுமாய் -என்று ஜகத் ப்ரஹ்மணோஸ் சாமாநாதி காரண்ய கதநத்தாலே அதி ஸ்புடமாக அறியலாம் –

சப்தம அதிகரண யுக்தமான ஹிதா கரண -அஹித கரணாதி தோஷ பிரசங்க பரிஹாரமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து -என்று ஜீவ ஈஸ்வரர்களுக்கு சரீராத்ம பாவேந பேதத்தைச் சொல்லுகையாலே ஸ்புடமாக அறியலாம் –

அஷ்டம அதிகரண ப்ரமேயமான சாமக்ரீ நைர பேஷ்யமான ப்ரஹ்ம காரணத்வம் கூடும் என்கிற இதுவும்
இவை யுண்ட சுரனே -என்கிற இடத்தால் ஸூசிதம் –அது எங்கனே என்னில் -சுரனே -என்று ஆச்சர்ய சக்தி யோகம் சொல்லப்பட்டது –
சுரருக்கு இறே காரகா பேஷை இன்றிக்கே சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்ட்டி கூடுவது –
யதா தேவா தய ஸ்வே லோகே சங்கல்ப மாத்ரேண ஸ்வ அபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி ததா அசவ் புருஷோத்தம க்ருத்ஸ்னம் ஜகத் சங்கல்ப மாத்ரேண ஸ்ருஜதி -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் தேவாதி வதபி லோகே -என்கிற ஸூத்ர வ்யாக்யாநத்திலே அருளிச் செய்தது –

ஆக -சுரர் -என்கிற இப் பதத்தாலே சாமக்ரீ நைரபேஷ்யேண காரணத்வ ப்ரசாதனம் பண்ணின அஷ்டம அதிகாரண ப்ரமேய ஸூசகம் சித்தம் –

எங்கும் பரந்து –சுடர் மிகு சுருதியுள் உளன் -என்கிற இவ்வளவாலே நவம அதிகரண யுக்தமான
யதா சுருதி அ லௌகிக அர்த்த ஸ்வீகாரம் பண்ண வேணும் -என்கிற அர்த்தம் சொல்லப் பட்டது –

இவையுண்டா சுரனே -என்கிற இச்சந்தையாலே
பரிபூர்ணனுக்கும் லீலா ரஸா நிஷ்பாதந அர்த்தமாக ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்தார் -அது எங்கனே என்னில்

அமரா நிர்ஜரா தேவாஸ் த்ரிதசா விபுதாஸ் ஸூ ரா -என்று ஸூரா சப்தத்துக்கு தேவ சப்தம் பர்யாயமாக நாம அநு சாணம் இருக்கையாலே ஸூரன்-என்றால் தேவன் என்று சொல்லிற்றாம் –

தேவ சப்தத்துக்கு -தீவு கிரீடா விஜிகீஷா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ந காந்தி கதிஷூ -என்று தாது பாடம் உண்டாகையாலே
க்ரீடாவத்தவமும் தேவ சப்தார்த்தம் என்னும் இடம் சம்பிரதிபன்னம்-ஆகையால் இறே வேத புருஷன் ஜகத் சம்ஹாராதிகள்
கேவல லீலா ரூபம் என்கிற கருத்தால் ஸூபால உபநிஷத்தில் -தம பரே தேவ ஏகி பவதி -என்று காரண வஸ்துவில் தேவ சப்த பிரயோகம் பண்ணினான் –

ஆகையால் இச்சந்தை பரிபூர்ணனுக்கு லீலா ரூபேண ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்று சொல்லுகிற தசம அதிகரண அர்த்தம் என்னக் குறையில்லை –

இப்படி த்வதீய லக்ஷண பிரதம பாதத்துக்கு ஏழாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம்
————————–

தர்க்க பாதத்துக்கும் அஷ்டம நவம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில் –
தர்க்க பாதத்தில் பரபஷ ப்ரதிஷேபம் பண்ணப் படுகிறது –ஸ்வ பஷ ரக்ஷணாய பரபஷா பிரதி ஷிப்யந்தே -என்று இறே இப் பாத அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையால் பரபஷ ப்ரதிஷேப பரமான இவ் விரண்டு பாட்டுக்கும் தர்க்க பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு –

அதிகரண அஷ்டகாத்மகமாய் இருக்கிற இப் பாதத்தில்
பிரதம அதிகரணம் தொடங்கி -க்ரமமாக அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதிகளான சாங்க்யர்களுடைய
மத ப்ரக்ரியையையும் பரம அணு காரண வாதிகளான வைபாஷிகருடைய மத ரீதியையும்
புத்த மதஸ்தர்களில் வைத்துக் கொண்டு பாஹ்யார்த்தா ஸ்தித்வ வாதிகளான வைபாஷிக சவ்த்ராந்திகர்களுடைய ஜகத்தினுடைய
க்ஷணிகத்தவ வாதத்தையும் ஞான மாத்ரா ஸ்திதவ வாதியான யோகாசாரனுடைய ஞானாகார வ்யதிரிக்தமான அர்த்தாகாராபாவ ப்ரதிபாதனத்தையும்
மாத்யமிகனுடைய சர்வ ஸூந்ய உபபாதன பங்கியையும் -ஜைனர்களுடைய அநைகாந்திகத்வ ப்ரதிபாதன பிரகாரத்தையும்
பாஸூபதர்களுடைய வேத விருத்தச்சார தத்வ உபபாதனத்தையும் பல படிகளாலே நிரசித்து

பஞ்சம வேத பாராதாதி ப்ராசஸ்தமாய்
பரம புருஷ பிரணீதமாய் இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தினுடைய நிரங்குச ப்ராமாண்யத்தையும் ஸூத்ரகாரர் சாதித்தார்

இப்பாத அர்த்தத்தை –
பாதே அஸ்மின் காபிலஸ்தை கணபு கபி மதைர் புத்த வைபாஷிகாத் யைர் யோகாசாராபிதா நைஸ் ஸூகத மத ரஹஸ் ஸூந்யா வாத ப்ரசக்தை அர்ஹத்சித் தாந்த பக்தை பஸூபதி சமயஸ்தாயிபிஸ் சாவரோதம் ஷிப்த்வா அதோ பஞ்ச ராத்ரம் சுருதி பதமவதத் பஞ்சமாம் நாய தர்சீ -என்று ஸ்ரீ சாராவளியிலே ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இம்மதங்களில் சாங்க்ய வைசேஷிக பாஸூ பதர்கள்-
கபிலாகம அநுமாந பாஸூபாத சாஸ்திரங்களை வேதங்கள் அநுக் ராஹாகங்கள்-என்று அப்ரதானம் ஆகிலும் வேதத்தையும் அங்கீ கரித்தார்கள் –
தத் வ்யதிரிக்த மதஸ்தர்கள் வேதத்தை உபஸர்ஜன ப்ரமாணமாகவும் அங்கீ கரியாதே வேத அப்ராமாண்ய ப்ரசாதன பூர்வகமாக ஸ்வ மத உபாதானம் பண்ணுவார்கள் –

இப்படி இரண்டு வர்க்கமாய் இருந்துள்ள பாஹ்ய மாதங்களில் பிரதம வர்க்கத்தை நிரசித்தமையை எட்டாம் பாட்டாலே ஸூசிப் பிக்கிறார் –

த்வதீய வர்க்கத்தை நிரசித்தமையை ஒன்பதாம் பாட்டாலே ஸூசிப் பித்து அருளுகிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயாவை முழுதுண்ட பரபரன் புறம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அளித்து அமைத்து உளனே -என்று ப்ரஹ்மாதி களாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவத்தை யுடைய மூல ப்ரக்ருதி தொடக்கமான
சகல ஜகத்துக்கும் வரிஷ்ட காரணமாய் –அவற்றை எல்லாம் சம்ஹரித்து அருளின பராத்பரனான ஈஸ்வரன் ருத்ரன் அந்தர்யாமியாய்க் கொண்டு
திரிபுரத்தை சம்ஹரித்து ஜகத் சம்ஹாரமும் பண்ணுகிறான் -சதுர்முக அந்தர்யாமியாய்க் கொண்டு இவ்வருகு உள்ள ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து
தேவர்களுக்கு ஞான பிரதானத்தையும் பண்ணுகிறான் -என்று இப்பாட்டாலே

ஜகத்தினுடைய ப்ரஹ்மாத் மகத்துவத்தையும் ஷேத்ரஞ்ஞர்களான ப்ரஹ்ம ருத்ரர்களுடைய
ஸ்ருஷ்ட்ருத்வ ஸம்ஹ்ருத் வாதிகள் பகவத் அதீனம் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்கையாலே அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதியான சாங்க்ய மத ப்ரக்ரியையும்–ருத்ர பாரம்யா உப பாதகம் பண்ணுகிற பாஸூபத ப்ரக்ரியையும் –பரம அணு காரண விதியையும் நிரசித்து அருளினமை ஸூசிதம் –

அது எங்கனே என்னில்
சாங்க்ய யுக்தமான அப்ரஹ்மாத்மக பிரதான நிரசனம் –சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் -என்று –
பிரகிருதி மஹத் அஹங்காராதி தத்துவங்களுக்கும் பரமாத்மாவே காரணம்-என்று அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

அவை முழுதுண்ட பரபரன்-என்று சர்வ ஜகத் ஸம்ஹாரி என்கையாலே சாங்க்ய மாதத்தில் ஈஸ்வரனை
அங்கீகரியா விடில் கேவல பிரதானம் ஸ்வ தந்திரமாய்ப் பரிணமிக்கும் போது ஸ்வர்க்க வ்யதிரேகேண ப்ரதிஸர்க்க அவஸ்தை இன்றிக்கே ஒழிய
வேணும் என்று உபபாதனம் பண்ணுகிற -வ்யதிரேகாந அவஸ்தி தேஸ்சாந பேக்ஷத்வாத்-என்கிற ஸூத்ரா யுக்த தூஷணம் ஸூசிதம் –

நிரவயவமான பரம அணுக்களுக்கு ஜகத் காரகத்வம் கூடாது என்கிற நையாயிக தூஷணமும்
ப்ரக்ருதி மஹத் அஹங்காராதிகளுக்கும் ஈஸ்வரனே வரிஷ்ட காரணம் என்று அருளிச் செய்த இச்சந்தையாலே தானே ஸூசிதம் –

பாஸூபத யுக்தமான ருத்ர பாரம்ய ப்ரதிஷேதமும்-ருத்ரனுடைய சம்ஹர்த்ருத்வ திரிபுர தஹநாதிகளும்-அரன் எனப் புரமொரு மூன்று எரித்து உலகு அழித்து உளன் -என்று
பகவத் அந்தர்யாமித்வ க்ருதமாக அருளிச் செய்கையாலே வ்யக்தமாகச் சொல்லப் பட்டது –

ஸூத்ரகாரர் பண்ணின ருத்ர பாரம்ய நிஷேததக்கும் உப லக்ஷணம் என்னும் கருத்தாலே
சதுர்முகனுடைய ஸ்ரஷ்ட்ருத்வ ஞான ப்ரதத்வாதிகளும்பகவத் அனுபிரவேச க்ருதம் என்று ஆழ்வார் சதுர்முக பாரம்யத்தையும் நிஷேதித்தார் –
ஸூத்ரகாரர் சதுர்முக பாரம்ய நிஷேதம் பண்ணாமைக்கு அடி மஹா மல்ல நிராசன ந்யாயேன ருத்ர பாரம்ய நிஷேதம் பண்ணவே
சதுர்முக பாரம்ய நிஷேதமும் தன்னடையே வரும் என்று கருத்து -ஆழ்வார் மந்த விஷ ந்யாயேன சதுர்முக பாரம்யத்தையும் எடுத்து நிஷேதித்தார் –
———————————–
இனி இரண்டாம் வர்க்கத்தை
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என இவை குணமுடைமையில் உளன்
இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே -என்று ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ உளன் என்கிற சொல்லாலே சாதித்தாயாகில் உண்மையே சித்திக்குமது ஒழிய
உன்னுடைய மதமான இல்லாமை சித்தியாது –

உளன் அலன் என்கிற சொல்லாலே இல்லாமையை சாதித்தாயாகில் லோகத்தில் இல்லை என்கிற சொல்லுக்கு ஸ்தூல அவஸ்தை போய் ஸூஷ்ம அவஸ்தா பன்னமாய்
இருக்கின்றமை அர்த்தமாம் ஒழிய உன்னபிமதமான ஸூந்யத்வம் சித்தியாது –

இப்படி உண்மையும் இன்மையும் ஆகிற குண த்வய யுக்தமாக ஸ்வ பக்ஷ பர பக்ஷ ரீத்யா
சித்திக்கையாலே அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப குண விசிஷ்டமாக பர ப்ரஹ்மம் சித்திக்கும்

இப்படி அநபிமதமான அர்த்தம் அங்கீ கரிக்க வேண்டுகையாலே அனந்த குண விபூதிமானாகவும் எம்பெருமானையும் அங்கீ கரிக்கலாம் என்று நிரசித்து அருளினார் –

அதில் இந்த மதங்களில்
புத்த மதத்தில் ஜகத் க்ஷணிக வாதிகளான வைபாஷிக மதஸ்தர்கள் -பார்த்திப ஆப்ய தைஜஸ வாயவீய பரம அணுக்கள்
பிருதிவி அப் தேஜோ வாயு ரூபேண சம்ஹதங்களாகும் -அதில் நின்றும் சரீர இந்த்ரிய விஷய சங்காதங்கள் உண்டாம் -அதிலே
சரீர அந்தர்வர்த்தியாய் க்ராஹகாபிமாநா ரூடமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மா வென்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று உபபாதித்த அர்த்தத்தை

சமுதாய உபய ஹேதுகே அபி தத பிராப்தி -என்கிற ஸூத்ரத்திலே யாதொரு பரம அணு ஹேதுக ப்ருதிவ்யாதி பூத சமுதாயம் யுண்டு
யாதொரு ப்ருதிவ்யாதி ஹேதுக பூத இந்திரியாதி ரூப சமுதாயம் யுண்டு இவ்விரண்டு சமுதாயத்தின் நின்றும் ஜகத் ஆத்மக சமுதாய உத்பத்தி கூடாது
பரம அணுக்களும் ப்ருதிவ்யாதி பூதங்களும் க்ஷணிகம் என்று அங்கீ கரிக்கையாலே ஷணத்வம் சிகளான பரம அணுக்களும் பூதங்களும் எப்போதான் சம்ஹதங்களாகப் போகிறது –
எப்போதான் ஞான விஷயீ பூதங்களாய் ஹாந உபாதா நாதி வ்யவஹாராஸ் பதமாகப் போகிறது என்று இத்யாதி யுக்தியாதிகளாலே சாரீரகத்தில் சொன்ன க்ஷணிகத்தவ வாத நிரசன க்ரமத்தை-

ஆழ்வாரும் அஸ்தி நாஸ்த்ய உபய வ்யவஹார தசையிலும் ஸ்தூல ஸூஷ்ம உபய அவஸ்தா விசிஷ்டமாக வஸ்துவினுடைய ஸ்திரத்தவ ப்ரதிபாதகமாய் இருக்கிற
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்கிற இச்சந்தையாலே ஸூசிப்பித்து அருளினார் –

பிரதி சங்க்யா அபிரதி சங்க்யா நிரோத அப்ராப்திர விச்சேதாத் -என்கிற ஸூத்ர ஸ்ரீ பாஷ்யத்திலே
சத உத்பத்தி விநாசவ் நாம அவஸ்தாந்தராபத்திரேவ அவஸ்தாயோகி து த்ரவ்யமேகமேவ ஸ்திரமிதி காரணாத நந்யத்வம் கார்யஸ்யோப பாத யத்யபி ரஸ்மாபி –
தத் அந்நயத்வம் இத்யத்ர ப்ரதிபாதிநம் நிர்வாணஸ்ய தீபஸ்ய நிரன்வய விநாச தர்சநாத் அந்யத்ர அபி விநாசோ நிரன்வய அநுமீயத இதி சேந்ந –
கட சரவாதவ் ம்ருதாதி த்ரவ்ய அநு வ்ருத்தியுபா லப்தயா சதோ த்ரவ்யஸ்ய அவஸ்தாந்தரா பத்திரேவ விநாச இதி நிஸ்சிதே சாதி ப்ரதீபாதவ்
ஸூஷ்மத சாபத்த்யாப் யநுபலம் போப்பத்தேஸ் தத்ராபிய வஸ்தாந்தரா பத்தி கல்ப நஸ்யைவ யுக்தத்வாத் -என்று
உளன் எனில் உளன் -என்கிற இப்பாட்டுப் பாதியை உட்க்கொண்டு வ்யாக்யானம் செய்தமை ஸ்பஷ்டமாய் இருக்கையாலே இவ்வதிகரண பிரமேயம் இதிலே உண்டு என்னும் இடம் சித்தம் –

இனி சவ்ராந்திக மதத்தில் ஞான உத்பத்தி காலத்திலேயே அர்த்தம் இல்லாமையால் ஞான விஷயத்வம் இல்லை என்ன ஒண்ணாது
ஞான விஷயத்துவமாவது -ஞான உத்பத்தி ஹேதுத்வம் இறே-ஆனால் சஷூராதிகளுக்கும் ஞான விஷயத்வம் வாராதோ என்னில் ஸ்வாகார சமர்ப்பணேன ஞான ஹேதுவுக்கே ஞான விஷயத்வம் ஆகையாலே வாராது -அர்த்தமானது ஞானத்திலே ஸ்வாகாரத்தை சமர்ப்பித்து நஷ்டமாய்ப் போனாலும் ஞானகதமான நீலாத்யாகாரத்தாலே அநு மிக்கப் படும் –
ஆகையால் அர்த்த க்ருதமே ஞான வைச்சித்ர்யம் என்று உபபாதித்த பிரமேயத்திலே தர்மி நஷ்டமானால் தத் தர்மங்களுக்கு அந்யத்ர ஸங்க்ரமணம் கண்டது இல்லை –
அப்படியே அர்த்தம் நஷ்டமாய் தத் ஆகாரம் ஞானத்திலே ஸங்க்ரமிக்கிறது என்ன ஒண்ணாமையாலே ஞானத்தாலே அர்த்தம் அநு மிக்கப் படுகிறது என்ன ஒண்ணாது
என்று சாரீரிகத்திலே சொன்ன தூஷணமும்
அவனுருவம் இவ்வுருவுகள் என்று ஐந்த்ரியிகத்வத்தை விஷயங்களுக்கு அருளிச் செய்கையாலே விஷயங்கள் அநு மேயங்கள் என்று புலிக்கையாலே ஸூசிதமாயிற்று –

யோகாசார மதஸ்தர்கள் -விஞ்ஞான மாத்திரமே யுள்ளது -அர்த்தத்வம் இல்லை -அர்த்தத்துக்கும் வ்யவஹார யோக்யத்வம் ஞான ப்ரகாசாயத்தம் என்று கொள்ள வேணும் –
அந்யதா ஸ்வ பர வேத்யங்களுக்கு அதிசயம் அற்றுப் போம் -பிரகாசமான ஞானத்துக்கு நிராகாரத்துக்கு பிரகாசம் கூடாமையாலே சா காரத்வம் அங்கீ கரிக்க வேணும் –
இனி தோற்றுகிற ஆகாரம் என்று ஞானத்தினுடையது ஒழிய அர்த்தத்தினுடையது அன்று -இந்த ஆகாரத்துக்கு பஹிரவபாசம் பிரமக்ருதம் -இத்யாதி யுக்திகளாலே
அர்த்த ஸூந்யத்வ உபபாதனம் பண்ணினத்தை

ஞாதாவுக்கு விஷய வ்யவஹார ஹேதுவான ஞானத்தவம் முதலிலே நிர்விஷயமாகில் இல்லையாயே விடும் -இத்யாதி யுக்திகளாலே சாரீரகத்திலே நிரசித்தமையை –
அவனுருவம் -அவனருவம்- பரந்தே ஒழிவிலன்-என்கிற சந்தைகளாலே அர்த்த தத்வ அங்கீகார முகேன ஸூ சிப்பித்து அருளினார் –

இன்னமும் -நா பாவ உப லப்தே -என்கிற ஸூத்ரத்தில் -அர்த்த தத்வம் இன்றிக்கே ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாதந ஸ்வபாவமான ஞான தத்துவமும் சித்தியாது
என்று சொன்ன யுக்தியும் – உருவம் -என்கிற பதத்தால் சித்திக்கிறது -அது எங்கனே என்னில் –

உருவம் -என்கிற சப்தம் -ஸ்தூல பதார்த்த வாசி என்னும் இடம் சம்பிரதிபன்னம்
ஐந்த்ரியிகத்தவம் உள்ளதுக்கு இறே ஸ்தூலத்வம் உள்ளது -இந்த ஐந்த்ரியிகத்வ ப்ரதிபாதனத்தாலே -அது ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாவந
ஸ்வபாவமான ஞானத்தவம் இல்லாதே ஒழியும் என்கிற யுக்தியை ஸூசிப்பிக்கையாலே அது சித்திக்கிறது –

மாத்யமிக பஷ நிரஸா க்ரமம் இப்பாட்டு என்னும் இடம் சர்வ ஸம்ப்ரதிபன்னம் ஆகையாலே அதி ஸ்புடமாய் இருக்கும் –

ஜைன மதஸ்தர்கள் சொல்லுகிற ஜகத் அநைகாந்திகதவை நிராசமும் சத்தாயாகிலும் அசத்தாயாகிலும் இருக்கும் ஒழிய சத் அசத்தாய் இராது என்று –
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள் -என்கிற பாட்டுப் பாதியாலே அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

ஆனால் பிள்ளை -சர்வ ஸூந்யவாதியை நிரசிக்கிறார் இப்பாட்டாலே என்றும் -ஸர்வதா அநு பபத்தே என்கிற ஸூத்ர பாஷ்யம் இப்பாட்டை யுட் கொண்டு ப்ரவ்ருத்தமாயிற்று என்றும்
மாத்யமிக மத மாத்ர நிராச பரமாக வ்யாக்யானம் செய்து அருளுகையாலே இது அவருக்கு அநபிமதம் அன்றோ என்னில்-இப்பாட்டில் பாதங்களில் மாத்யமிக நிரசனம்
நேரே தோற்றுகையாலே தாமத நிராச பரமாக யோஜித்து அருளினார்

வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே -முதல் திருவாய்மொழி பூர்வத்விக அர்த்தம் -என்று அவர் தாமே அருளிச் செய்கையாலே இந்த பிரதம தசகத்திலே தத் ஸூசநம் ஆவஸ்யகம்
காதாந்தரத்திலே வைபாஷிகாதி மத நிராசம் அநவசரக்ரஸ்தமாய் இருக்கும்

இப்பாட்டில் பாதங்களும் பூர்வ யுக்த ப்ரக்ரியை யாலே வைபாஷிகாதி மத நிராச ஸூ சகங்கள் என்னும் இடம் ஸ்வரசதா ஸம்ப்ரதிபன்னம்
வைபாஷிக மத நிராச ஸூத்ர பாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளை உட் கொண்டு ப்ரவ்ருத்தம் என்னும் இடம்
பூர்வமேவ உபபாதிதம் ஆகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை –

பாஞ்ச ராத்ர ப்ராமாண்ய சமர்த்தந சாரீரக அம்சம் ப்ராசங்கிகம் ஆகையாலும்-வேத பாஞ்சராத்ரங்களுக்கு அபவ் ருஷேயத்வ நித்ய நிர்துஷ்டத்வ பரம புருஷ வக்த்ருகத்வங்கள்
நிரங்குச ப்ராமாண்ய ஹேதுக்களாய் இரண்டுக்கும் பாத்தாலே வந்த பேதம் ஒழிய பாஞ்சராத்ரத்துக்கும் வேத துல்ய ப்ராமாண்யத்தில் தட்டில்லாமை யாலே –
சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -என்று அபவ் ருஷேயத்வாதி உஜ்ஜ்வல்யவத் வேத ப்ராமாண்ய ப்ரதிபாதனத்தாலே தந் ந்யாயேந
பாஞ்சராத்ர ப்ராமாண்யம் சித்திக்கும் என்கிற கருத்தாலும் ஆழ்வார் உபேக்ஷித்து அருளினார்

ஸூத்ரகாரர் தந்த்ர சாமான்ய ப்ரயுக்தமான ம்ருது ப்ரபஞ்சர்களுக்கு உள்ள காலுஷ்ய சாந்த்யர்த்தமாக வேத துல்ய ப்ராமாண்யம் ஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
தத் ப்ராமாண்ய சமர்த்தனம் பண்ணினார் -ஆக அஷ்டம நவம காதைகளுக்கும் தர்க்க பாதத்துக்கு ம் ஐகமத்யம் சித்தம் –

பத்தாம் பாட்டுக்கும் நிகமனப் பாட்டுக்கும் த்ருதீய துரீய பாதங்களுக்கு ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில் –
ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை இப்பாட்டுக்களாலே அருளிச் செய்கையாலே ஐக்யம் உண்டு –

வியத்பாத பிரதம அதிகரணத்திலே –
சாந்தோக்யத்தில் வியதுத்பத்த்ய ஸ்ரவணத்தாலே வியத்து ப்ரஹ்ம கார்யம் அன்று என்று சங்கித்து
தைத்ரீயத்தில் வியதுத் பத்தி ஸ்ருதமாகையாலும் சாந்தோக்யத்திலும் சர்வ சாகா ப்ரத்யய ந்யாயேந வியதுத் பத்தி வருகையாலும் வியத்து ப்ரஹ்ம கார்யம் என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யவிஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகிறது என்று சங்கித்து
ஆகாசாதி சரீரக பரமாத்மாவின் இடத்தில் நின்றும் வாயுவாதி உத்பத்தி ஒழிய கேவல பூர்வ தத்துவத்தில் நின்றும் வாயுவாதி யுத்பத்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
தோயேந ஜீவான் வ்யஸஸர்ஜ -இத்யாதி ஸ்ருதிகளாலே ஜீவனுக்கும் உத்பத்தி யுண்டு என்று சங்கித்து
ந ஜாயதே ம்ரியதே-இத்யாதி ஸ்ருதிகளாலே நித்யத்வம் ஸ்ருதமாகையாலும் உத்பத்தி சுருதி ஞான சங்கோச விகாசத்தைச் சொல்லுகிறது ஒழிய
ஸ்வரூப அநித்யத்தைச் சொல்லாமையாலும் -ஜீவனுக்கு உத்பத்தியில்லை என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் —
ப்ராசங்கிகமாக– யோ விஞ்ஞாநே திஷ்டன் -இத்யாதி ஸ்ருதிகளாலே ஆத்மா கேவல ஞான ஸ்வரூபன் என்று சங்கித்து –
விஞ்ஞா தாரம் இத்யாதி ஸ்ருதிகள் ஜீவனை ஞாதா வென்று ப்ரதிபாதிக்கையாலும் ஸ்வரூபத்தை ஞானம் என்கிறது ஸ்வயம் பிரகாச த்ரவ்யத்வ ப்ரயுக்தமாய்
ஞாத்ருத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் ஆத்மா ஞாதாவே என்று பரிஹரித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் -ஹந்தா சேத் -இத்யாதி ஸ்ருதிகளாலே நிஷித்தமாகையாலே ஸ்வரூபம் அன்று என்று சங்கித்து
ஸ்வர்க்க மோஷாதி பல சாதன போதக சாஸ்த்ர ப்ரயோஜன சித்த்யர்த்தமாக கர்த்ருத்வம் அங்கீ கரிக்க வேண்டுகையாலும்
கர்த்ருத்வ நிஷேத சுருதி சாம்சாரிக கிரியைகள் சத்வ ரஜஸ் தமோ குண சம்சர்க்க க்ருதங்கள்-ஸ்வரூப ப்ரயுக்தங்கள் அன்று என்று
சொல்ல வந்தது ஆகையாலும் கர்த்ருத்வம் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
பூர்வ அதிகரண சித்த கர்த்ருத்வம் பராதீனம் என்று நிர்ணயித்தார்

சப்தம அதிகரணத்தில் –
ஜீவன் ப்ரஹ்மத்தோடு அத்யந்த பின்னனும் அன்று –ப்ராந்தப் ப்ரஹ்மமே ஜீவனாய் நிற்கிறதும் அன்று -சத்யோ பாத்யவச் சின்ன ப்ரஹ்மமே ஜீவனாய் இருக்கிறதும் அன்று –
வஸ்துதோ ப்ரஹ்ம அபின்னமாய் ப்ரஹ்மாம்சம் ஆகையாலே அத்யந்த பேதம் இன்றிக்கே இருக்கிறான் ஜீவன் என்று ஜீவ ஸ்வரூபத்தை நிர்ணயித்தார் –

துரீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவ உபகரணங்களான இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந பிரதி பாதந ஸ்ருதியாலே சித்தம் என்று சங்கித்து –
அந்த சுருதி சர்வஞ்ஞனான ஜகத் காரண ப்ரஹ்மத்தை ப்ரதிபாதிக்கிறது ஒழிய இந்திரியங்களை சொன்னது அல்லாமையாலும்
சுருதியந்தரத்தில் இந்திரிய உத்பத்தி கண்ட யுக்தமாகையாலும் நித்யத்வம் கூடாது என்று பரிஹரித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
ப்ராசங்கிக்கமாக இந்த்ரியங்களினுடைய சங்க்யா நிர்ணயம் பண்ணினார் –

த்ருதீய அதிகரணத்தில் –
இந்திரியங்கள் விபுக்களாக சுருதி பிரபன்னங்கள் என்று சங்கித்து உத்க்ரந்தி ஸ்ரவணத்தாலே-விபுக்கள் அல்ல அணு பரிமாணங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
ப்ராசங்கிகமாகவே முக்கிய பிராணன் கேவல வாயு மாத்ரமும் உசுவாச நிச்வாசாதி கிரியையும் அன்று -வாயுவே அவஸ்தாந்த்ர பன்னமாய்
பிராணன் என்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உதக்ரந்யாதி ஸ்ரவணத்தாலே பிராணனுக்கும் விபுத்வம் கூடாது -அணுத்துவமே முக்கிய பிராண பரிமாணம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஜீவனுக்கும் அக்னியாதி தேவதைகளுக்கும் இந்த்ரியாத் யதிஷ்டானம் ஸ்வா தந்தர்யேண உண்டு என்று சங்கித்து
பரமாத்மா அதீன அதிஷ்டானமே அவர்களுக்கு உள்ளது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பிராண சப்த நிர்திஷ்டங்கள் எல்லாம் இந்திரியங்கள் என்று சங்கித்து ஸ்ரேஷ்ட பிராண வ்யதிரிக்த ப்ராணன்கள் இந்திரியங்கள் என்று நிர்ணயித்தார்

அஷ்டம அதிகரணத்தில் –
பிரபஞ்ச வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி ஹிரண்ய கர்ப்ப கர்த்ருகமாக வேணும் என்று சங்கித்து அதுவும் தச் சரீரக பரமாத்ம கர்த்ருகம் என்று நிர்ணயித்தார் –

இப்படி பாத த்வயத்தாலே நிர்ணயித்த அர்த்தத்தை
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த வண்டம் இது என நில விசும்பு ஒழிவறக் கரந்த சில இடம்தோறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்டா கரனே -என்று -விஸ்திருதமாய் சைத்திய ஸ்வபாவமான சமுத்திர ஜல பரமாணுக்கள் தோறும் பரிசமாப்ய வர்த்தியாய்
விஸ்திருதமான அண்டம் என்னும்படியாய் பூமியாகாச விபாகம் இன்றிக்கே அத்யல்ப சரீரங்களிலும் அந்த அந்த சரீரங்களில் ஸ்வயம் ப்ரகாசத்வேந மிளிர்ந்து கொண்டு
இரா நின்றுள்ள ஆத்ம வஸ்துக்களிலும் அந்யைர த்ருஷ்யனாய் சர்வ பதார்த்தங்களில் ப்ரத்யேகம் பரிசமாப்ய வர்த்தியாய்
இந்த ஜகத்தை ஸ்வோதரஸ்தம் ஆக்கிக் கொண்டு இருக்கிறான் த்ருட பிராமண வேதைக சமதி கம்யனே -என்றும் –

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிர நிறை யாயிரத்து இவை பத்தும் வீடே
என்று -த்ருடமான ஆகாச தேஜோ வாயு ஜல ப்ருத்வீ கதமான வரிஷ்ட சப்த தாஹ கத்வ கமன சாமர்த்திய சைத்திய ஷமா ரூப ஜெகதாகாரனாய் இருக்கிற
சர்வ ஸ்மாத் பரனுடைய திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த சப்தார்த்த புஷ்கல்யத்தை யுடைய ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இத்திருவாய் மொழி மோக்ஷ ப்ரதம்-என்றும்

ஆழ்வார் இதில் ஒன்றரைப் பாட்டாலே ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை வெளியிட்டு அருளி மேல் பாட்டுப் பாதியாலே –

வீடுமின் முற்றத்தாலே வெளியிடப்படுகிற உத்தர தவிகார்த்தமான பரத்வ ஞானத்தினுடைய மோக்ஷ சாதனத்வத்தையும் உப ஷேபித்து அருளுகிறார் ஆதல் –
பூர்வ த்விக ப்ரதிபாத்யமான பரத்வ விஷயம் இத்திருவாய் மொழி என்று பிரதிபத் யார்த்தத்தை புத்தி சவ்கர்ய அர்த்தமாக ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் ஆதல் –

இனி வியத்பாத பிரதம அதிகரண நிர்ணீதாகா சோத்பத்தி –
நில விசும்பு ஒழிவற என்று பிருதிவ்யாதிகள் போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று அருளிச் செய்கையாலே சித்திக்கிறது –

இன்னமும் -ஆகாசஸ் ஸம்பூத என்கிற தைத்த்ரீய ஸ்ருதியிலே ஆகாச உத்பத்தி சொல்லி இருக்கையாலே
சாந்தோக்யத்திலும் வியதுத்பத்தி சர்வ சாகா ப்ரத்யய ந்யாயத்தாலே வரும் என்கிற அர்த்தமும்
பூமி ஆகாசம் என்கிற விசேஷம் இன்றிக்கே பூமி போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று சொல்லுகிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது –

அது எங்கனே என்னில்-ஆகாச உத்பத்தி கதனத்தாலே தைத்ரீய ஸ்ருத்யர்த்தம் தோற்றி அம்முகேந வியதுத் உத்பத்திய வசன சுருதி நிர்வாகமும் தோற்றுகையாலே ஸூசிதம் –

ஆக இவை எல்லாவற்றாலும் இச்சந்தை பிரதம அதிகரணார்த்தம் என்னக் குறையில்லை –

த்விதீய அதிகரண யுக்தமான
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகமாட்டாது என்று நிர்ணயித்த அர்த்தமும்
சர்வ தத்துவங்களுக்கும் ப்ரஹ்ம கார்யத்வ ப்ரதிபாதனம் பண்ணுகிற -பரந்த தண் பரவையுள் -என்று தொடங்கி முழுக்க இப்பாட்டாலே அறிவிப்பித்தமை அதி ஸ்புடமாய் இருக்கிறது –

த்ருதீய அதிகரண யுக்தமான ஜீவ உத்பத்தி நிஷேதமும் –
இடம் திகழ் பொருள்தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -இடம் திகழ் -என்று ஆத்ம தத்துவத்துக்கு வ்யாபகத்வம் சொல்லுகையாலே
வியாப்பிய பதார்த்தங்களினாலே நசிப்பிக்கப் படாது என்று சித்திக்கும் –

இவ்வர்த்தத்தைப் பரமபுருஷன் தானே –
அவிநாசிது தத் வித்தி யேந ஸர்வமிதம் தத்தம் -விநாசமவ்ய யஸ்யாஸ்ய ந கஸ்ச்சித் கர்த்துமர்ஹதி-என்று வெளியிட்டு அருளினான் –
இந்த ஸ்லோகத்தை –ஆத்ம நஸ்த்வ விநாசித்வம் கதமித்ய த்ராஹ– அவிநாசிது-இதி–தத் ஆத்ம தத்வம் அவிநாசீதி வித்தி –
யேந -ஆத்ம தத்வேந சேதநேந தத் வ்யதிரிக்தமித்தம் அசேதன தத்வம் சர்வம் தத்தம் வ்யாப்தம் -வ்யாபகத் வேந நிரதிசய ஸூஷ்மதவாத்
ஆத்மநோ விநாசா நர்ஹஸ்ய தத் வ்யதிரிக்தோ ந கஸ்ச்சித் பதார்த்தோ விநாசம் கர்த்துமர்ஹதி -தத் வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூலத்வாத்
நாஸகம் ஹி சஸ்த்ர ஜலாக்னி வாய்வாதிகம் நாஸ்யம் வ்யாப்ய சிதிலீ கரோதி முத் கராதயோ அபி ஹி வேக வத் சம்யோகேந
வாயுமுத்பாத்ய தத் த்வாரேண நாசாயந்தி அத ஆத்ம தத்வம் அவிநாசி -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் வ்யாக்யானம் செய்து அருளினார்

இப்படி ஜீவனுடைய வ்யாபகத்வ கதனத்தாலே ஜீவனுடைய நித்யத்வம் சித்திக்கையால் த்ருதீய அதிகரண ப்ரமேயம் இச்சந்தை என்னக் குறையில்லை –

சதுர்த்த அதிகரண நிர்ணீதமான ஜீவனுடைய ஞாத்ருத்வமும் –
திகழ் பொருள் தொறும்-என்கிற சந்தையாலே தானே ஸூசிதம் ஆகலாம் -அது எங்கனே என்னில் -திகழ் பொருள் -என்கிற இதுக்கு -ஞானத்தவ ஆஸ்ரயமான வஸ்து என்று
இறே அர்த்தம் -இனி சாஷாத் பரம்பரவ் தாஸீந்யேந ஞானத்தவ ஆஸ்ரயம் என்னும் போது-ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சித்திக்கும் –

ஆனால் ஞாதா என்று அருளிச் செய்யாதே திகழ் பொருள் -என்று ஞான த்ரவ்யம் என்று அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
ஞாதா என்றால் ஞான குணகத்வ மாத்ரம் தோற்றும் ஒழிய ஞான ஸ்வரூபத்வம் தோற்றாமையாலே -உபயமும் தோற்றுகைக்காக இங்கனே அருளிச் செய்தாராம் அத்தனை –

ஞான பதத்துக்கு உபய பரத்வம் உண்டு என்னும் இடம் ஜென்மாதி கரணத்தில்-சத்யம் ஞானம் -என்கிற சுருதி வ்யாக்யான ஸ்ருத பிரகாசிகையிலே
ஸூதீக்களுக்கு ஸூ வ்யக்தமாக அறியலாம் -ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னும் இடம் சித்தம்

தத்வ த்ரயம் -29-என்று ஜகத் குருவான பிள்ளை அருளிச் செய்த க்ரமத்திலே ஞாத்ருத்வ கதனத்தாலே கர்த்ருத்வமும் ஸூசிதம் ஆகையால்
ஜீவ கர்த்ருத்வ ப்ரசாதனம் பண்ணின பஞ்சம அதிகரண பிரமேயமும் –
திகழ் பொருள் தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது

ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான ஜீவனுடைய பகவத் அதீன கர்த்ருத்வ ப்ரசாதனமும்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -என்று ஜீவனுடைய பர அதீன உபயுக்த -அந்த பிரவேச உப லஷிதா நியமன கதனத்தாலே ஸூசிதமாகிறது –
ஜீவனுடைய கர்த்ருத்வம் பர அதீனம் ஆகிறது -பரமாத்மாவினுடைய அந்த ப்ரவிஸ்ய நியமனத்தாலே என்று ஹ்ருதீ கரித்து
பராத்து தச் ஸ்ருதே -என்கிற ஸூத்ரத்தத்தில் உள்ள சுருதி பதத்துக்கு அந்த ப்ரவிஷ்டா இத்யாதி ஸ்ருதிகளை ஸ்ரீ பாஷ்யகாரர் விஷயமாக உதாஹரித்து அருளினார் –

சப்தம அதிகரண யுக்தமான
ஜீவ வஸ்து ப்ரஹ்ம விசேஷண த்வேந ப்ரஹ்ம பின்னமுமாய் ஸ்வ நிஷ்டம் இன்றிக்கே ஒழிகையாலே அத்யந்த பின்னமும் அன்றிக்கே இருக்கும் என்கிற பொருள்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் என்று வ்யாப்ய வியாபக பாவ ரூப சரீராத்மா பாவ ப்ரதிபாதநத்தினாலே ஸ்புடமாக அறியலாம்-

துரீய பாத த்ருதீய சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்த அதிகரணங்களில் இந்திரிய சங்க்யாதி நிரூபணம் ப்ரசக்த அநு பிரசக்தமாகையாலே அத்தை உபேக்ஷித்து
அவசிஷ்ட பிரதம அஷ்டம அதிகரண நிரூபிதார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார் –

பிரதம அதிகரணத்தில் –
இந்த்ரியங்களுடைய நித்யத்வம் இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந ப்ரதிபாதந ஸ்ருதியாலே என்று சங்கித்து அந்த சுருதி பரமாத்மாவினுடைய
பிரளய கால அவஸ்தையைச் சொல்ல வந்தது ஒழிய இந்த்ரியங்களுடைய நித்யத்வத்தைச் சொல்ல வந்தது அன்று -என்று நிர்ணயித்த அர்த்தம் –
பரமாத்மாவினுடைய பிரளய கால ஸ்திதியை ப்ரதிபாதிக்கிற -இவையுண்ட கரனே –என்கிற சந்தையாலே சொல்லப்பட்டது என்று அறியலாம் –

அஷ்டம அதிகரணத்தில் –
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தா சதுர்முகன் அல்லன்-சமஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான பரமாத்மாவே என்று நிர்ணயித்த அர்த்தமும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரன்-என்று வ்யஷ்டி சமஷ்டி ஸாதாரணயேந
சர்வ ஜகத்தும் ப்ரஹ்ம கார்யம் என்கிற இச்சந்தையாலே அதி ஸ்புடமாக அறியலாம்

ஆனால் இச்சந்தைகளில் அநு ப்ரவேச கதனத்தாலும் சாமாநாதி கரண்ய நிர்தேசத்தாலும் சரீராத்மா பாவம் தோற்றும் ஒழிய கார்ய காரண பாவம்
தோற்றாமையால் இச்சந்தைகள் வியதாதிகளினுடைய ப்ரஹ்ம கார்யதா பிரகார சோதந பர அதிகரணங்களுக்கு ஸங்க்ராஹங்கள் ஆனபடி எங்கனே என்னில்-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய -என்றும் -தத் ஸ்ருஷ்வா ததேவ அநு ப்ராவிஸத்-இத்யாதி ஸ்ருதிகளில் அநு பிரவேச பூர்வகமாக ஸ்ருஷ்ட்டி உக்தையாகையாலே
கேவல ஸ்ருஷ்ட்டி ப்ரதிபாதந ஸ்தலங்களில் அநு பிரவேசமும் கேவல அநு பிரவேச ப்ரதிபாதன ஸ்தலங்களில் ஸ்ருஷ்டியும் சர்வ சாகா ப்ரத்யய நியாயத்தாலே
விவஷிதம் என்று ஸ்ரீ பாஷ்யாதிகளில் நீர்ணீதம் ஆகையாலே அநு பிரவேச உக்தயா ஸ்ருஷ்டியும் சித்தம் என்று இச்சந்தைகள் ஸங்க்ராஹகங்கள் ஆகலாம் –
ஆகையாலே பத்தாம் பாட்டுக்கும் நிகமன பாட்டுக்கும் த்வதீய லேசான த்ருதீய துரிய பாதங்களோடே ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

இப்படி பூர்வ த்விக ப்ரதிபாத்யமான ப்ரஹ்ம காரணத்வ –அபாத்யத்வங்களை –
ஆழ்வாரும் முதல் திருவாய் மொழியாலே வெளியிட்டு அருளினமை வேதாந்த த்வய சம்ப்ரதாயம் யுடையவர்க்குத் தெளியலாம் படி திங்மாத்ரேண தர்சித்தம் ஆயிற்று –

—————————–

சாரீரக உத்தர த்விகத்துக்கும் வீடுமின் முற்றத்துக்கும் ஐகமதியம் உண்டாம் படி எங்கனே என்னில்
உத்தர த்விக்கத்தில் ப்ரதிபாத்யமான சாதன தத் பலங்களை இத்திருவாய் மொழியிலும் பர உபதேச முகேந வெளியிட்டு அருளுகையாலே ஐகமத்யம் உண்டு –
ஆனால் நம்பிள்ளை இத்திருவாய் மொழி த்ருதீய அத்யாய ப்ரதிபாத்யமான உபாசன பரம் என்று அருளிச் செய்தாரே ஒழிய -த்ருதீய துர்ய அத்யாய ப்ரதிபாத்யமான
உபாய உபேய பரம் என்று அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில் -உபாசன சப்தம் பலத்துக்கும் பர தரிசன அர்த்தம் என்று அருளிச் செய்தார் –

யத்வா-இந்த உபாசன சப்தம் லக்ஷணையாலே ஞான சாமான்யத்தைச் சொல்லுகிறது – மோக்ஷ சாதநீ பூத உபாயமும் பல ரூப ப்ரஹ்ம அனுபவமும்
ஞான அவஸ்தா விசேஷம் ஆகையாலே இரண்டையும் இச்சப்தத்தாலே ஸங்க்ரஹித்து அருளினார் என்றும் காணலாம் –

இவ்விரண்டும் ஞான அவஸ்தா விசேஷம் என்னும் இடத்தை ரஹஸ்யத்ரய ஸாரத்திலே-இவர்களுக்கு கர்த்தவ்யமான உபாயமாவது -ஒரு ஞான விகாச விசேஷம் -இத்தாலே
சாத்யமாய் பிராப்தி ரூபமான உபேயமாவதும் ஒரு ஞான விகாச விசேஷம் -இவற்றில் உபாயமாகிற ஞான விகாச விசேஷம் -கரண சாபேஷமாய் -சாஸ்த்ர விஹிதமுமாய் –
ஸத்யத்வாதிகளான ஸ்வரூப நிரூபக தர்மங்களோடே கூடின அவ்வோ வித்யா விசேஷ பிரதிநியத குணாதிகளினாலே நித்ய ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபேயமாகிற ஞான விகாச விஷயம் கரண நிரபேஷமுமாய்-ஸ்வபாவ பிராப்தமுமாய் குண விபூதியாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
என்று உபாய விபாக அதிகாரத்தில் ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

அதவா -வீடு செய்ம்மினே -என்று தொடங்கி-திண் கழல் சசேரே -என்னும் அளவும் மோக்ஷ உபாயத்தை பாட்டுக்கள் தோறும் வாக்யார்த்த தயா பிரதானமாகவும்
ததங்க தத் பலங்களை பதார்த்த தயா அப்ரதானமாகவும் ஆழ்வாரும் அருளிச் செய்கையாலே -ஸ்வர்க்க காமோ யஜேத-என்கிற விதத்தில் ஸ்வர்க்க சாதனம்
வாக்யார்த்த தயா பிரதானமாய் சுவர்க்கம் பதார்த்த தயா அப்ரதானமாய் இருக்கிறதைப் பற்ற இவ்வாக்கியத்தை ஜ்யோதிஷ்டோம ரூப சாதன பரம் என்று
அபியுக்தர்கள் வ்யவஹாரிக்கும் க்ரமத்திலே ஸ்ரீ நம்பிள்ளையும் வ்யவஹாரித்து அருளினார் –

ஆகையாலே பல ப்ரதிபாதனம் உபஸர்ஜனதயா ஆழ்வார் அருளிச் செய்தமை நம்பிள்ளைக்கும் விவஷிதமாகையாலே உபாசன பரம் வீடுமின் முற்றவும் -என்கிற ஸ்ரீ ஸூக்தி யோடு உபாய உபேய ப்ரதிபாதக சாரீரக உத்தர த்விக சமா நார்த்தம் இத்திருவாய் மொழி என்கிற பிரமேயத்துக்கு விரோதம் இல்லை –

இதில் முதல் பாட்டு -த்ருதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
இரண்டாம் பாட்டும் மூன்றாம் பாட்டும் -த்வதீய பாதார்த்தமாகவும்
நாலாம் பாட்டு தொடங்கி மேல் நாலு பாட்டுக்களும் -3-3-குண உப சம்ஹார பாதார்த்தமாகவும்
எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்

ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் சதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

இதில் வைராக்ய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவன் ஸூக்ருத கர்மா பல அனுபவார்த்தம் தேஹாத் தேஹாந்த்ர பிரவேசம் பண்ணும் போது அவ்விடங்களில் தேஹாரம்பக பூத ஸூஷ்மங்கள் லபிக்கையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ் வக்தனாய் போக வேண்டினமை இல்லையென்று சங்கித்து பஞ்சாக்கினி வித்யோக்த ப்ரக்ரியையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ் வக்தனாய் தேஹாத் தேஹாந்தர பிரவேசம் பண்ணுகிறான் என்று நிர்ணயித்தார் –

இந்த அதிகரணத்தில் காதா சித்கமாயாகிலும் பூத ஸூஷ்ம பரிஷ்வங்கம் இன்றிக்கே நிர்த்துக்கனாய் இருக்கைக்கும் அவகாசம் இல்லை என்று
வைராக்ய ஜனன அர்த்தமாக யாவன் மோக்ஷம் ப்ரக்ருதி சம்பந்தம் அவர்ஜனீயம் என்று நிஷ்க்ருஷ்டமாயிற்று –

கிஞ்ச -பாக்தம் வா அனாத்மா வித்த்வாத்-என்கிற ஸூத் ரத்தாலே தேவ ப்ருத்ய பாவத்தை அவலம்பித்து தத் ப்ரயுக்த கிலேச கரம்பிதமாய் இருக்கிற
ஸ்வர்க்க போக அனுபவத்தினுடைய ஷயிஷ்ணுத்வம் சாதிசயத்வமும் ஆவிஷ்க்ருதம்-

த்விதீய அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அனுபவ அனந்தரம் ஜீவனானவன் க்ருத்ஸ்ன கர்ம பலமும் புக்தமாகையாலே கர்ம சம்பந்தம் அற்றே இழிகிறான் என்று சங்கித்து –
ரமணீய சரணர்கள் ரமணீய யோனியை அடைவர்கள் -கபூய சரணர்கள் குத்ஸித யோனியை அடைவார்கள் என்று சுருதி சொல்லுகையாலே
கர்ம சம்பந்தம் உடையனாயே இழிகிறான் என்று நிர்ணயித்தார் –

இதிலும் ஸூஷ்ம தேஹத்துக்கும் காரணதயா சகல சம்சார நிதான கர்ம சம்பந்தம்
முக்தி பர்யந்தம் அனுவ்ருத்தமாய் இருக்கிறது என்று சம்சார தோஷம் யுக்தமாயிற்று –

த்ருதீய அதிகரணத்தில் –
அநிஷ்ட அதிகாரிகளான பாப கர்மாக்களுக்கும் சந்த்ர பிராப்தி உண்டு என்று சங்கித்து இஷ்டா பூர்த்தாதி சத் கர்ம ரஹிதர்களுக்கு
பித்ருயான மார்க்கத்தாலே கமனம் இல்லாமையால் சந்த்ர பிராப்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

இதிலும் -க்ராமம் கச்சன் வ்ருஷ மூலான் யுபசர்ப்பதி-என்ற
நியாயத்தாலே யாகிலும் ஸ்வர்க்க பிராப்தி இல்லை -யமசத நத்திலேயும் ரவ்ரவாதி நரகங்களிலும் மிகவும் யாதநாநுபவமும் கீடாதி ஜென்ம பிராப்தியும் யுண்டு என்று சம்சார தோஷம் வ்யக்தமாகக் கீர்த்திதமாயிற்று –

சதுர்த்த அதிகரணத்தில் –
சுருதி ஸித்தமான ஆகாசாதி பாவம் ஜீவனுக்கு தேவ மனுஷ்யாதி பாவம் போலே தச் சரீரத்வ ரூபம் என்று சங்கித்து
ஆகாசாதி ப்ராப்தியிலே ஸூக துக்க அனுபவம் இல்லாமையால் தத் சாம்யா பத்தி ஒழிய தச் சரீரத்வம் இல்லை என்று நிர்ணயித்தார் –

இதிலும் ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுமவர்களுக்கு ஆகாசாதி பாவ ஸ்ரவணத்தாலே தத் அபிமானி தேவதைகளை போலே ஆகாசாதி சரீரத்வ ப்ரயுக்தமான-சில திவ்ய போகங்கள் உண்டு என்கிற சங்கா நிவ்ருத்தி யர்த்தமாக ஆகாசாதி சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று சொல்லுகையாலே தோஷ கீர்த்தனம் ஸ்புடம் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆகாச வாயு தூமா பிரமேக வர்ஷா பிராப்தி யுண்டாம் போது அவ்வோ இடங்களிலே அதி சீக்கிரமாக ஜீவனுக்கு கமனம் உண்டு என்கிற நியமம் இல்லை –
தத் தேது இல்லாமையாலே என்று சங்கித்து உத்தர த்ர வ்ரீஹ்யாதி ப்ராப்தியிலே -அதோ வை துர் நிஷ் ப்ரபதரம் -என்று விசேஷித்து க்ருச்ச்ரா நிஷ் க்ரமணம் சொல்லுகையாலே ஆகாசாதி ப்ராப்தியிலே அசிர நிஷ் க்ரமணமே உள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஆகாசாத் யவஸ்தாந விளம்ப நியம நிரசன வ்யாஜேந வ்ரீஹ் யாதிகளில் ஸூக போகம் அற்று அசிராவஸ்தாந ரூப தோஷம் த்ருடமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுகிற ஜீவர்கள் வ்ரீஹ்யாதி சரீரதயா ஜனிக்கிறார்கள் என்று சங்கித்து வ்ரீஹ்யாதி ஜென்ம ஹேது பூத கர்ம விசேஷம்
அஸ்ருதமாகையாலே அந்நிய ஜீவ அதிஷ்டித வ்ரீஹ்யாதிகளில் சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் வ்ரீஹ் யாதி பாவேந ஜனனம் என்னும் போது தல்லவந பயந்த மாத்திரமே துக்கம் யுக்தமாம் -அங்கன் அன்றிக்கே சம்ச்லேஷ மாத்திரம் என்று நிர்ணயித்த இத்தாலே
சோஷன குஸூலா வஸ்தாபந அவஹநந பலீ கரண பாக்க பஷணாதி தசைகளிலும் அனுவ்ருத்தி சித்திக்கையாலும் பஷண விஷயம் அன்றிக்கே இருக்கிற
வ்ரீஹ் யாதிகளிலும் பரிணாம பரம்பரையா சம்ச்லேஷம் சித்திக்கையாலும் தோஷ கீர்த்தனம் அதி ஸ்புடம் –

இப்படி சாரீரகத்தில் ஷட் அதிகரணியான இப்பாதத்தாலே பகவத் ஆஸ்ரயண உபயுக்த வைராக்ய சித்த்யர்த்தமாக நிரூபித்த அர்த்தத்தை -ஆழ்வார் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்று ஐஹிக ஆமுஷ்மிக சகல விஷயங்களையும் அதி ஹேயம் என்று
அத்யவசித்து அதில் போக்யதா புத்தியை விடுங்கோள்-
இப்படி விட்டுப் பரமபத நிலயனான சர்வேஸ்வரன் விஷயத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுங்கோள் -என்று பரப்பற்று ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் மந்த மதிகளுக்கும் தெளியலாம்படி ஒரு சொல்லாலே அருளிச் செய்தார் –

இனி ஸூத்ரகாரர் பரக்கத் சொன்னத்தை இவர் ஒரு சொல்லாலே அருளிச் செய்வான் என் என்னில்-ஏ பாவம் பரமே -என்கிறபடி
நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிற இவருக்குப் பரக்க சம்சார தோஷ கீர்த்தனமும் அஸஹ்யமாய்த் தோற்றுகையாலும்
நல்குரவும் செல்வமும் என்கிற திருவாய் மொழிப்படி சர்வ பதார்த்தங்களும் ப்ரஹ்மாத்மகதயா போக்யமாய்த் தோற்றச் செய்தேயும் சம்சாரிகள் பக்கல் கிருபையால் அவர்கள் பாக அனுகுணமாகத் தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையாலும் –முற்றவும் விடுமின் -என்று அக்ராமயமாக
பஹ்வதி கரண சித்தார்த்தையும் சாதுர்யத்தாலே அருளிச் செய்ய வந்தவராகையாலும் இப்படி ஒரு சொல்லாலே வெளியிட்டு அருளினார் –

ஆனால் இப்பாத அர்த்தமான வைராக்ய மாத்ரத்தை விதிக்க வேணும் ஒழிய பாதாந்த்ர அர்த்தமான உபாய ஸ்வீகாரத்தை விதிப்பான் என் என்னில்
பக்தி உபாயத்துக்கு விஷய வைராக்கியமும் பிரபத்தி யுபாயத்துக்கு உபாயாந்தர வைராக்கியமும் அங்கம் இறே –
இதுக்கு உள்ள அங்க அங்கி பாவத்தை வீடு செய்து -என்று ல்யப்பாலே அருளிச் செய்தார் –
ஆகையால் இப்பாட்டுக்கும் இப்பாதத்துக்கும் ஐகமத்யம் சித்தம் –

த்விதீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் ஜீவன் ஸந்நிஹிதன் ஆகையாலே-தத் ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று சங்கித்து சம்சார தசையில் ஸ்ரஷ்ட்ருத்வ உபயுக்த சத்ய சங்கல்பாதிகள் கர்ம திரோஹித்த ஸ்வரூபனான ஜீவனுக்கு கூடாமையாலே ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று பரமாத்மா கர்த்ருகை என்று நிர்ணயித்தார்

த்வதீய அதிகரணத்தில் –
நாடிகள் என்ன புரீதத் பிரதேசம் என்ன ப்ரஹ்மம் என்ன இவை மூன்றும் நைரபேஷ்யேண ஸூஷூப்தி ஸ்தானத்வேண ஸ்ருதமாகையாலே தத் ஸ்தானத்வம்
விகல்பேந வருகிறது என்று சங்கித்து பிராசாத கட்வா பர்யங்கங்கள் போலே கார்ய பேதேந சமுச்சயமே கூடும்படியாய் இருக்க
பாஷிக பாத கர்ப்ப விகற்பம் அயுக்தமாகையாலே சமுச்சயமே யுக்தம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
ஸூப்தனே ப்ரபோத காலத்திலே உத்திதனாகிறான் என்ன ஒண்ணாது -ஸூஷூப்தனுக்கு சர்வோபாதி விநிர்மோக பூர்வக ப்ரஹ்ம ஸம்பத்தி வருகையாலே- என்று சங்கித்து ஸூஷூப் திக்கு முன்னே ஆரப்தமான கர்மம் உத்திதனாலே சமாபனம் பண்ணப் படுக்கையாலும் ஸோ அஹம் என்று
ஸூப்தனே உத்திதன் என்று ப்ரத்யபிஜ்ஜை வருகையாலும் — இத்யாதி உக்திகளாலே ஸூப்தனுக்கே உத்திதத்வம் சமர்த்தித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
மூர்ச்சை சர்வ இந்திரிய பிராண வ்யாபாரோ பரதி தசையாய் இருக்கையாலே மரணம் என்று சங்கித்து ஆகார வைரூப்யத்தாலே
ஸூஷ்ம பிராணா ஸ்தித்வம் அவகதம் ஆகையாலே மரணாய அர்த்த ஸம்பத்தி -மூர்ச்சை என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
ஜீவனுக்குப் போலே பரமாத்மாவுக்கு ஜாகராதி சர்வ அவஸ்தைகளிலும் அவஸ்தானம் யுக்தமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவிக்கும் என்று சங்கித்து சர்வ அவஸ்தா வஸ்திதமான ப்ரஹ்மத்துக்கு அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதா நத்வமாகிற உபய லிங்கம் சுருதி சமதி கதமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவியாது என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
அசித் வஸ்து ரூபேண பரிணதம் ப்ரஹ்மம் தானாக வேணும் -அன்றிக்கே -ப்ரஹ்மத்திலும் அசித் வஸ்துவிலும் ஏக ஜாதி யோகத்தாலே ஐக ஜாதிக வாஸ்து தானாக வேணும் – பின்ன அபின்னத்வ உபய வ்யபதேசம் கூட வேண்டுகையாலே என்று சங்கித்து அம்சோ நாநா வ்யபதேசாத்-என்கிற அதிகரண ந்யாயேந
ஜீவனுக்குப் போலே சரீராத்மா பாவம் யுண்டாய் பாத்தாலே பின்ன அபின்னத்வ வ்யபதேசம் கூடுகையாலே அசித் வஸ்து பிரம்மா சரீரம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
ஜகஜ் ஜென்மாதி காரண தயா த்ருஷ்ட பர ப்ரஹ்ம வஸ்துவிலும் பர வஸ்து சேதூந்மான சம்பந்த பேத வ்யபதேசங்களாலே உண்டு என்று
சங்கித்து காரண வஸ்துவில் காட்டில் வஸ்வந்தரத்துக்குப் பரத்வம்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -இத்யாதி சுருதி நிஷித்தம் ஆகையால் சேது த்வயபதேசம் சர்வ லோகா அசங்கர்ய ஹேதுத்வ ப்ரயுக்தமாகையாலும்
அபரிச்சின்ன வஸ்துவுக்கு உன்மான வ்யபதேசம் உபாசன அர்த்தமாகையாலும் சம்பந்த வ்யபதேசம் தனக்கே ப்ராப்யத்வ ப்ராபகத்வ ப்ரயுக்தமாகையாலும்
ததோ யதுத்தர தரம் -என்கிற ஸ்ருதிக்கு பேத வ்யபதேசம் அர்த்தம் இல்லாமையாலும் ஜகத் காரண வஸ்துவிலும் பர வஸ்து இல்லை என்று நிர்ணயித்தார் –

சரம அஷ்டம அதிகரணத்தில் –
யாக தான ஹோம உபாசனாதி வைதிக கர்மங்கள் ஷணத்வம்ஸிகள் ஆகிலும் தஜ் ஜன்யா பூர்வ த்வாரா போக அபவர்க்க ரூப சர்வ பல சாதனங்கள் என்று சங்கித்து-கர்தவ்யதயா அவகதயா கோபாசனாதிகளுக்கும் பலப்ரதன் பரம புருஷனே என்று சுருதி ஸ்ம்ருதி சித்தமாகையாலே பரம புருஷனே பல ப்ரதன் என்று நிர்ணயித்தார்

இப்பாதத்தில் முந்துற அதிகரண சதுஷ்டயத்தாலே-
ஏதத் தேஹ மாத்ர அநுபத்த ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வ ஸூஷூப்தி ஸ்தாநாதி நிரூபண முகேந பிரதம பாத நிரூபித்த இஹா முத்ர சஞ்சார
தச அநு வ்ருத்த தோஷ வ்யதிரிக்த தோஷங்கள் வைராக்ய சித்த்யர்த்தம் யுக்தமாயிற்று –

உத்தர அதிகரண சதுஷ்டயத்திலும் –
பரமாத்மரக்தி ஜனன அர்த்தம் பகவத் கல்யாண குணங்கள் ப்ரதிபாதிதமாயிற்று-ஆனால் கல்யாண குண ப்ரதிபாதகமான இப்பாதத்தில்
நிரூபிக்க வேண்டிய தோஷங்கள் சங்கதமானபடி எங்கனே என்னில்-தோஷ கீர்த்தன பரமான இவ்வதிகரண சதுஷ்டயமும் பூர்வபாதம் போலே
நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரம் அன்றிக்கே கல்யாண குண ப்ரதிபாதகமும் ஆகையால் இப்பாதத்தில் சங்கதமாயிற்று

ஆகையால் இறே அதிகரண சாராவளியிலே –
பூர்வபாதம் நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரமாகவும் இப்பாதம் கல்யாண குண ப்ரதிபாதன பரமாகவும்
பாதே த்வர்த்தாஷ் ஷடஸ்மிந் வபுரிஹ விஜஹத் பூத ஸூஷ்மைஸ் சஹேயாத் புக்த ஸ்வர்க்க அவரோஹ அப்யநுசய சஹிதோ மாத்ரயா பின்ன மார்க்க
சந்த்ர ப்ராப்த்யாதி ந ஸ்யாந் நிரயபத ஜூஷாமம் பராதவ் சத்ருக்த்வம் தஸ்மாச் சீகே ராவரோஹ பரவபுஷி சிரம் வ்ரீஹாய் பூர்வே அபி யோக -என்றும் –
பாதே ஸ்வப்ன அர்த்த ஹேதுஸ் ததயமிஹ ஸூஷூப்த்யாத் ருதிஸ் ஸூப்த கோப்தா முக்தே போதாதிகர்த்தா த்வநக ஸூய குணோஸ் சித்பி ரம்சீ சதேஹ
பாரம்யஸ்யைக சீமா சகல பலத இத்ச்யுயதே பக்தி பூம்நே சத்யே ஹ்யேவம் குணா தாவத பர பஜநே ரூப பேதாதி சிந்த்யம் -என்றும்
இரண்டு ஸ்ரக்தரையாலே ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் வகுத்து அருளிச் செய்தார் –

இனி இரண்டாம் பாட்டு பூர்வ அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும் மூன்றாம் பாட்டு உத்தர அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும்இருக்கும் –
இதில் பூர்வ அதிகரண சதுஷ்டய நிரூபித வர்த்தமான தேஹ மாத்ர அநு பத்த ஸ்வப்னாத் யவஸ்தா அநு வ்ருத்த தோஷங்களை ஆழ்வாரும்
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே -என்று மின்னொடு ஒத்த ஸ்வபாவத்தையும் யுடையது அல்ல -ஆத்மவஸ்து பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்கிற இடத்தில் நீங்களே அல்பம் சிந்தியுங்கோள்-என்று
ஸ்வப்ன கல்ப தடிச் சஞ்சலமாய் இருந்துள்ள வர்த்தமான தேஹ தோஷ கீர்த்தன முகேந ஸூசிப்பித்து அருளினார் –

சரீராதி பதார்த்தங்களுக்கும்-ஸ்வப்நாத்ய அநு பூத பதார்த்தங்களுக்கும் ப்ரமக்ருத வைலக்ஷண்யம் ஒழிய நிரூபகர்க்கு வைலக்ஷண்யம் தோற்றாது இறே –
இன்னமும் ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாமைக்கு ஹேது -ஸத்ய ஸங்கல்பத்வ திரோதானம் -அதுக்கும் ஹேது பரமாத்மா நிக்ரஹம் –
அது தானும் தேஹத்தோடே சம்பந்திப்பித்து விட்டுத் திரோதானத்தைப் பண்ணும் -ஆகையால் ஸ்வப்ன கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாது என்கிற
பிரதம அதிகரண அர்த்தம் –மன்னுயிர் ஆக்கைகள் -என்று ஸத்ய ஸங்கல்பத்வ திரோதி ஹேது பூத தேஹ சம்பந்த ப்ரதிபாதனத்தாலே விசேஷித்து ஸூசிதமாயிற்று –

சதுர்த்த அதிகரண யுக்தமான ஸூப்தஸ்யைவ உத்திதத்வ நிரூபண முகேந நித்யத்வ சாதனமும் –மன்னுயிர் -என்கிற சந்தைக்கு நித்தியமான ஆத்மவஸ்து -என்று
வ்யாக்யாதாக்கள் ஒருபடி வ்யாக்யானம் பண்ணி இருக்கையாலே இச்சந்தையாலே யுக்தமாயிற்று –

இவ்வதிகரண சதுஷ்டயத்துக்கும் பகவன் மஹிம ப்ரதிபாதகத்வ ஆகாரமும் உண்டாகையாலே
அவ்வம்சத்தையும் நியந்த்ருத்வ ரூப மஹிமவாசியான இறை என்கிற பதத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –

முன்புள்ள முதலிகள் அனைவரும் இறை உன்னுமின் என்கிற சந்தைக்கு அல்பம் விசாரியுங்கோள் என்று அர்த்தம் விட்டார்களே யாகிலும் உரையில்
ஜீயர் ஸ்வாமியை மனனம் பண்ணுங்கோள் என்று ஒரு பொருள் இடுகையாலே
முன்புள்ள முதலிகளுக்கு அவிருத்த அர்த்தாந்தர கதனம் அபிமதம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-

இனி இப்பதத்துக்கு ஸ்வாமித்வ நியந்த்ருத்வங்கள் இரண்டும் அர்த்தம் என்னும் இடம் வ்யுத்பத்தி சித்தமாகையாலே இப்படியும் ஓர் அர்த்தம் சொல்லத் தட்டில்லை-

இனி உத்தர அதிகரண சதுஷ்டயர்த்தத்தையும் –
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை-என்று நீங்கள் என்றும் உங்களது என்றும் சொல்லுகிற அஹங்கார மமகாரங்களை–ச வாசனமாகப் போக்கி ஈஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு இத்தோடு ஒத்த அதிசயம் இல்லை என்று வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில்

பஞ்சம அதிகரண யுக்தமான
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வ ரூப உபய லிங்கத்தை –இறை என்று சித் அசித் வ்யாவ்ருத்த ஈஸ்வர ப்ரதிபாதனத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
பரமாத்மாவினுடைய சித் அசித் வ்யாவ்ருத்தி உபய லிங்கத்தாலே இறே -ஈஸ்வரனுக்கே இறே உபய லிங்கத்தவம் உள்ளது –

ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான –
அசித் த்ரவ்யம் ப்ரஹ்ம பரிணாமம் அன்று — ப்ரஹ்ம சஜாதீய த்ரவ்யமும் அன்று –ஜீவனைப் போலே ப்ரஹ்ம பிரகாரம் என்கிற அர்த்தமும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை -என்கிற அளவாலே ஸூசிதம் -எங்கனே என்னில்
ப்ரக்ருதி சம்சரக்க க்ருத அஹங்கார மமகாரங்களினுடைய த்யாஜ்யத்வ உக்தியாலே ப்ரக்ருதியும் த்யாஜ்யம் என்றதாய் அத்தாலே அசித் த்ரவ்யம்
உபாதேயமான ப்ரஹ்ம பரிணாமம் அன்று ப்ரஹ்ம சஜாதீயமும் அன்று என்கிற அம்சம் ஸூசிதமாகையாலும்
சித் அசித் நியந்த்ருத்வ வாசியான இறை என்கிற பதத்தாலே அசித்துக்கும் நியாம்யத்வ ரூப சரீரத்வ அபர பர்யாய அம்சத்வமே யுள்ளது என்கிற அர்த்தமும் ஸூசிதமாகையாலும்-ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான அசித் த்ரவ்ய ஸ்வரூப நிரூபணமும் ஸூசிதமாயிற்று –

சப்தம அதிகரண யுக்தமான
ஜகத் காரண வஸ்து உத்தீர்ண தத்வ ஸத்பாவ நிஷேத நிர்ணயமும் –இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை -என்று
ஜகத் காரண பூத ஈஸ்வர ஸமாச்ரயண உத்கர்ஷ ப்ரதிபாதனத்தாலே ஆஸ்ரணீய ஜகத் காரண வஸ்துவினுடைய நிஸ் சமாப்யதிகத்வம் யுக்தமாய்
அத்தாலே தத்வாந்தர நிஷேதம் பலிக்கையாலே ஸூசிதம் –

கிஞ்ச-இறை -என்கிற பதம் ஈசான சப்த பர்யாயம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் -ஜகத் காரண வஸ்து உத்தீர்ணத்வேந சங்க்யமான தத்வ வாசக சப்தத்தை
ஜகத் காரண வஸ்துவில் இறை என்று இவர் நிர்தேசிக்கையாலே தத் உத்தீர்ண வஸ்து நிஷேதமும் ஸூசிதமாகலாம்

அஷ்டம அதிகரண யுக்தமான
தேவதா ஆராதன ரூப யாக தான ஹோம உபாஸநாதிகளுக்கு பகவத் பிரசாத த்வாரா பலசாதனத்வம் ஒழிய அபூர்வத்வாரா பலசாதனம் இல்லை என்கிற அர்த்தமும்
இறை சேர்மினே -என்று பகவத் ஆராதனை ரூபமான ஆஸ்ரயணத்தை விதிக்கையாலே ஆராத்யனுடைய ப்ரீதியே பலப்ரதம் –
மற்றொரு அபூர்வாதிகள் பலப்ரதம் அன்று என்று சித்திக்கையாலே ஸூசிதமாகலாம்-

ஆகையால் த்ருதீய லக்ஷண த்வதீய பாதத்துக்கும் த்விதீய த்விதீய த்ருதீய காதைகளுக்கும் ஐகமத்யம் சித்தம் –

குண உபஸம்ஹார பாதத்துக்கும் சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில்
இப்பாதத்தில் நிரூபித்த உப சம்ஹார அநுப சம்ஹாரங்களை இவர் இப்பாட்டுக்களாலே ஸூசிப்பிக்கையாலே ஐகமத்யம் உண்டு –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
அநேக சாகாதீத வைச்வாநர வித்யாதிகள் சோதநாத்யா விசேஷத்தாலே ஏகம் என்று சாகாந்த்ர அதிகரண நியாயத்தை
வஹ்ய மாணார்த்த உபயுக்தமாக வித்யையிலும் காட்டினார் –

த்விதீய அதிகரணத்தில்
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான உத்கீதா வித்யையில் பிராண த்ருஷ்ட்யுபாஸ்தி சோதணாத்ய விசேஷத்தாலே ஏகம் என்று சங்கித்து ஒரு ஸ்தலத்தில்
உத்கீத அவயவமான ப்ரணவத்தில் ப்ராண திருஷ்டியும் ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்ன உத்கீதத்தில் பிராணாதிருஷ்டியுமாய் இருக்கையாலே
ரூப பேதாத் வித்யா பேதம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வாஜச நேய சாந்தோக்யங்களிலும் கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலும் ச்ருதமான பிராண உபாசனம் ரூப பேதத்தாலே பின்னமாக வேணும் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்ய குணகமான பிராணனுக்கு வாகாதி கத வசிஷ்டாத்வாதி குண சம்பந்தித்தவம் ச்ருதமாகையாலும்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் அது ஸ்ருதம் இல்லாமையாலும் என்று சங்கித்து கௌஷீதகியில் ச்ருதமான ப்ராணனுடைய ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்யங்கள்
வாகாதி கத வசிஷ்டத்வாதி குண அனுசந்தானத்துக்கும் ஸூசகமாகையாலே அதிலும் வாகாதி கத வசிஷ்டத்வாதி குண சம்பந்தம்
ப்ராணனுக்கு சித்திக்கையாலே ரூப ஐக்யம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகையாலே சர்வ வித்யையிலும் அநுப சம்ஹார்யங்கள்-என்று சங்கித்து
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகிலும் சர்வ வித்ய அநுயாயிகள் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ச்ருதமான பிராண வித்யையில் ஸ்ம்ருதி யாசார ப்ராப்தா சமனத்தில் காட்டிலும் வித்ய அங்கதயா ஆசமனாந்தரம்
விதிக்கப்படுகிறது என்று சங்கித்து ஆசமநீயாப்புக்களில் பிராண வாசஸ்த்வ அநு சந்தானம் அங்கதயா விதிக்கப் படுகிறது ஒழிய
ஆசமனாந்தர விதாந பரம் அன்று என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
வாஜச நேய அக்னி ரஹஸ்யத்திலும் ப்ருஹதாரண்யத்திலும் ஸ்ருதையான சாண்டில்ய வித்யை ஒரு ஸ்தலத்தில் ஸத்ய ஸங்கல்பம் ஸ்ருதமாய்
ஸ்தலாந்தரத்தில் வசித்வாதிகள் ஸ்ருதமாகையாலே ரூப பேதாத் பின்னை என்று சங்கித்து வசித்வாதிகள் ஸத்ய ஸங்கல்பத்வ விச்சித்தியாய்
ரூப பேதம் அல்லாமையாலே வித்யைக்யம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
ஆதித்ய மண்டலத்திலும் அஷியிலும் ச்ருதமான ஸத்ய ஸப்த வாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி சரீரத்வ உபாசனம் துல்யமாகையாலே
அஹம்-ஆஹா -என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேந அணிவித்தனர் ஆகின்றன என்று சங்கித்து
அஷ்ய ஆதித்ய ஸ்தான சம்பந்தித் வாகர பேதத்தால் ரூபம் பின்னமாய் வித்யை பேதிக்கையாலே இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்-
தைத்ரீயத்தில் அநாரப்ய அதீதங்களான சம்ப்ருதி த்யுவ்யாப்த்யாதி குணங்கள் சர்வ வித்யைகளிலும் உப சம்ஹார்யங்கள் என்று சங்கித்து
அல்ப ஸ்தான கோசாரங்களான வித்யைகளில் த்யுவ்யாப்த்யாதி குணங்கள் உபசம்ஹரித்தும் அஸக்யங்கள் ஆகையாலே அல்ப ஸ்தான விஷயங்களான
தஹராதி வித்யைகளில் அநுப சம்ஹார்யங்கள் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில் –
தைத்திரீயத்திலும் சாந்தோக்யத்திலும் ஸ்ருதையான புருஷ வித்யை சம்ஞ்ஞ ஐக்யத்தாலே ஏகை என்று சங்கித்து
ஸ்வதந்த்ர யஜமான பத்ந்யாதி கல்பன பிரகார பேத ப்ரயுக்த ரூப பேதத்தாலும் சதாயுஷ்ட்வ மோக்ஷ பிராப்தி ரூப பல பேதத்தாலும் பின்னை என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில் –
உபநிஷத் ஆரம்பத்திலே அதீதங்களான -சன்னோ மித்ரா -இத்யாதி மந்திரங்களும் ப்ரவரக்யாதி கர்மங்களும் வித்யா சந்நிதி சமாம்நாநத்தாலே
வித்யா அங்கங்கள் என்று சங்கித்து -அர்த்த சாமர்த்தத்தாலே அபிசாராத்யயநாதிகளில் விநியுக்தங்கள் ஆகையாலே வித்யா அங்கங்கள் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில் –
புண்ய பாபங்களினுடைய ஹானி சிந்தனமும் உபாயந சிந்தனமும் வித்யா அங்கத்வேந அந்வயிக்கும் போது விகல்பேந அந்வயிக்க வேணும் என்று சங்கித்து –
ஹானி உபாயங்கள் இரண்டும் ஏக விஷயங்கள் ஆகையாலே சமுச்சயிக்க வேணும் என்று நிர்ணயித்தார்

த்ரயோதச அதிகரணத்தில் –
எந்த உபாசன சந்நிதானத்திலே அர்ச்சிராதி கதி ஸ்ருதையாய் இருக்கிறதோ தன் நிஷ்டனுக்கே அர்ச்சிராதி மார்க்கம் நியதம் என்று சங்கித்து –
சர்வ உபாசன நிஷ்டர்களுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் சாதாரண தயா ஸ்ருதி விஹிதம் ஆகையாலே சர்வர்க்கும் நியதம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில் –
பிரபஞ்ச ப்ரத்யநீகதா ரூபங்களான அஸ்தூலத் வாதி தர்மங்கள் வித்யாந்தர ரூப பூத குணங்களுக்கு வித்யாந்தர ரூபத்வே பிரமாணம் இல்லாமையாலும்
ஆனந்தத்தவாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகங்கள் இல்லாமையாலும் சர்வ வித்யா அநுயாயி ரூபம் அன்று -அக்ஷர வித்யா ரூப மாத்ரமாக வேணும் என்று சங்கித்து
ஆனந்தத்தவாதிகள் போலே சித்த அசிதாத்மகா பிரபஞ்ச தர்மபூத ஸ்தூலாத்வாதி விபரீதமான அஸ்தூலத் வாதிகளும்
ஸ்வரூப நிரூபனம் ஆகையாலே சர்வ வித்யா அநு யாயிகள் என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில் –
உஷஸ்திக ஹோள ப்ரஸ்ன பிரதி வசனங்களில் பிராணநாதி ஹேதுத்வ அசனா யாத்யதீதத்வ ரூப உபாஸ்ய ஆகார பேதத்தாலே வித்யா பேதம் என்று சங்கித்து
உபய ப்ரஸ்னத்துக்கும் பரமாத்ம விஷயத்தில் பேதம் இல்லாமையாலும் பிரதி வசன த்வயகதமான ஆகார த்வயமும் பரமாத்மாவினிடத்தில் உபபன்னம் ஆகையாலும் வித்யா பேதம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஷோடச அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான தஹர வித்யை அபஹத பாப்மத்வ வசித்வாத் யுபாஸ்யாகார பேதத்தாலே பின்னை என்று சங்கித்து
வசித்வாதி குணங்கள் ஸத்ய ஸங்கல்ப த்வாந்தர்கதமாகையாலே உபாஸ்ய ஆகார பேதம் இல்லாமையாலே வித்யை அபின்னை என்று நிர்ணயித்தார் –

சப்த தச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாஸ்யங்கள் கர்மாங்க பூதோத் கீதாத் யாஸ்ரயங்கள் ஆகையாலே கர்மங்களிலே நியமேந உபஸம்ஹார்யங்கள் என்று சங்கித்து
கோதோஹ நாதிகளைப் போலே காம்யங்கள் ஆகையாலே நியமேந அனுப சம்ஹாரயங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டாதச அதிகரணத்தில் –
தஹர வித்யையில் குண சிந்த நத்திலே குணி சிந்தனா வ்ருத்தி வேண்டா -குணி சிந்தனம் ஸ்ருதம் ஆகையாலே என்று சங்கித்து
குணார்த்தமும் பிரதான ந்யாயேந குண்யா வ்ருத்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகோந விம்ச அதிகரணத்தில் –
நாராயண அணுவாகம் பூர்வ ஸ்ருத தகர வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம் என்று சங்கித்து
பிரகரணாத் பலவத்தான லிங்க பூயஸ் த்வத்தாலே சர்வ வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாராம் என்று நிர்ணயித்தார் –

விம்ச அதிகரணத்தில் –
மனஸ் சிதாதிகளான சாம்பாதி காக்நிகள் க்ரியாமயக்ரது ப்ரக்ருதமாகையாலே தத் அந்வயிகளாய் கிரியாமயங்கள் என்று சங்கித்து
வித்யா மயக்ரதுவும் ப்ராக்ருதமாகையாலே வித்யாமயக்ர த்வன்வயித்வேந வித்யா மயங்கள் என்று நிர்ணயித்தார் –

ஏக விம்ச அதிகரணத்தில் –
பரவித்யைகளிலும் உபாஸ்ய கோட்யநு ப்ரவிஷ்டமான ஜீவ ஸ்வரூபத்தில் ஞாத்ருத்வ கர்த்ருத்வ அம்சம் உபாஸ்ய ஆகாரம் என்று சங்கித்து
ப்ராப்ய தசையிலுள்ளவை எல்லாம் அநு சந்தேயம் ஆகையாலே அபஹத பாப்மத்வாதிகளும் உபாஸ்ய ஆகாரம் என்று நிர்ணயித்தார் –

துவாதச அதிகரணத்தில் –
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
தேஹ வியோகாந்தர அநு பாவ்ய ஸூக துக்கங்கள் இல்லாமையாலே தேஹ வியோக காலத்திலேயே நியமேந வருகிறது என்று நிர்ணயித்தார் –

த்வா விம்ச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாசனங்கள் ஸ்வர பேதத்தாலே உத்கீதாதிகள் ப்ரதிவேதம் பின்னங்களாய் இருக்கையாலே வ்யவஸ்திதங்கள் என்று சங்கித்து
பின்ன ஸ்வர வத்துக்களான சர்வ உத்கீதங்களும் -உத்கீதம் உபாஸீத -என்கிற இடத்தில் சாமான்யாத உபாசன விஷயங்களாகச் சொல்லப் படுக்கையாலே
உபாசனங்களுக்கு வ்யவஸ்தை இன்றிக்கே சர்வ உத்கீதா சம்பந்தம் உண்டு என்று நிர்ணயித்தார் –

த்ரயோ விம்ச அதிகரணத்தில் –
வைச்வா நர உபாசனத்தில் ஸ்வர்லோகாதித்ய வாயு வாகாச பிருதிவி அவயவனான வைஸ்வாநரன் உபாஸ்யதயா ச்ருதனாய் இருக்கிறான் –
அவ்விடத்தில் ஒவ்பமந்யா வாதிகளைக் குறித்து கேகயன் ஸ்வர்லோகாதிகளில் ஏகை கத்தையே உபாஸ்யமாகச் சொல்லுகையாலே வ்யஸ்தமே உபாஸ்யம் என்றும்
ஸமஸ்த உபாசனத்துக்கும் சர்வாத்ம வர்த்தியான ப்ரஹ்ம அநு பவத்தைப் பலமாகச் சொல்லுகையாலே ஸமஸ்த வ்யஸ்தங்கள் இரண்டும் தான் உபாஸ்யங்கள் என்றும் சங்கித்து
உபக்ரம உபஸம்ஹாரங்களில் ஸமஸ்த உபாசனத்தை விதிக்கையாலும் வ்யஸ்த உபாசனத்தில் தத் விதிக்குத் தாத்பர்யம் இல்லாமையாலும் சமஸ்தமே உபாஸ்யம் என்று நிர்ணயித்தார் –

சதுர் விம்ச அதிகரணத்தில் –
தஹர சாண்டில்யாதி வித்யைகளுக்கு பேதம் இல்லை -உபாஸ்ய ப்ரஹ்மமும் தத் பிராப்தி பலமும் ஏக ரூபம் ஆகையாலே என்று சங்கித்து
ஜகத் ஏக காரணத்வா அபஹத பாப்மத்வாத் யநு பந்த பேதங்களாலே வித்யை நாநா என்று நிர்ணயித்தார் –

பஞ்ச விம்ச அதிகரணத்தில் –
அக்னி ஹோத்ர தர்ச பூர்ணமா சாதிகள் ஸ்வர்க்க ஏகைக பலங்களாய் இருந்தாலும் தத் பூயஸ்த்தவ அபேக்ஷை யுள்ள புருஷன் இடத்தில் சமுச்சயம் உண்டாய் இருக்கிறாப் போலே
ப்ரஹ்ம அனுபவ பூயஸ்த அபேக்ஷை யுள்ள புருஷர் இடத்திலே ப்ரஹ்ம வித்யைகளுக்கு சமுச்சயம் கூடும் என்று சங்கித்து
ப்ரஹ்ம அனுபவித்திலே தாரதம்யம் இல்லாமையாலே தாரதம்யம் யுடைய ஸ்வர்க்க சாதனா பூத ஜ்யோதிஷ்டோம நியாயம்
இங்கே ப்ரசரியாமையாலே சமுச்சயம் கூடாது என்று பரிஹரித்தார் –

ஷட் விம்ச அதிகரணத்தில் –
சப்த தச அதிகரணத்தில் நிரூபித்த உத்கீதாத் யுபாசனங்களினுடைய காம்யதயா அநியதிக்கு அடியான பல சாதனத்வத்தை நிரூபித்தார் –

இப்படி ஷட் விம்சத்யதி கரணாத்மகமான இப்பாதத்தில்
1-த்விதீய த்ருதீய பஞ்சம சப்ததச விம்ச ஷட் விம்ச அதிகரணங்களிலே சங்கதி விசேஷத்தாலே ஷூத்ர உபாசனங்களை நிரூபித்தார் –
2-அவசிஷ்ட அதிகரண விம்சதியிலும் ப்ரஹ்ம உபாசன பிரகாரத்தை நிரூபித்தார் -இதிலும் தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபகங்களான
ஞானத்தவ ஆனந்த் வாதிகளும் பிரபஞ்ச ப்ரத்யநீ கதா ரூபமான அஸ்தூலத்வாதி குணங்களும் சர்வ வித்யா அநு யாயிகள் என்று சதுர்த்தத சதுர்த்த சாதி கரணங்களில் நிர்ணயித்தார் –
3-ஏகோந விம்சத்தில் லிங்க பூயஸ்த்வத்தாலே நாராயண அனுவாக ப்ரதிபாத்யனான தேவதா விசேஷமே தத் தத் வித்யா பிரதி நியதி குண விசிஷ்டானாய்க் கொண்டு சர்வ வித்யா வேத்யனாகிறான் என்று நிர்ணயித்தார் –
4-அவசிஷ்ட சப்த ராசாத்தி கரணங்களிலும் குண உப சம்ஹார அனுப சம்ஹார பலக வித்யா பேதங்களை நிரூபித்தார் –

இப்படி நாலுவகையாக ஸூத்ரகாரர் நிரூபித்த அர்த்தத்தை ஆழ்வாரும் -நாலாம் பாட்டுத் தொடங்கி மேல் நாலு பாட்டாலே வெளியிட்டு அருளுகிறார் –
இந்நாலு பாட்டிலே நாலாம் பாட்டாலே தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபக தர்மம் சர்வ வித்யா அநு யாயி என்கிற அம்சத்தை வெளியிடுகிறார் –
அஞ்சாம் பாட்டாலே ஷூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஆறாம் பாட்டாலே வித்யா பேத அபேத நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஏழாம் பாட்டாலே தேவதா விசேஷ நிர்த்தாரண பரமான அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் -அது எங்கனே என்னில்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்று அசித்தின் படியும் சித்தின் படியும் அல்ல அவன் ஸ்வரூபம் –
அபரிச்சின்ன ஆனந்த ரூபமாய் இருக்கும் அத்தை விஷய சங்கம் அற்று ஆஸ்ரயி -என்று ஆனந்தவல்லியிலும் ஆதர்வணிகத்திலும் யுக்தமான
ஆனந்தத்தவா ஸ்தூலத்வாதி தர்மங்களை தத் ப்ரகரணா சந்நிஹிதமான ந்யாஸ வித்யையிலும் வித்யா ஆகாரமாக அருளிச் செய்கையாலே
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யா அநு யாயிகள் என்கிற அர்த்த பிரகாசம் இப்பாட்டு என்னும் இடம் அதி ஸ்புடமாய் இருக்கிறது –

ஸூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சம் –
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே-என்று இதர விஷய சங்கம் அற்றது என்றால் ஆத்மா மோக்ஷ உன்முகமாய் இருக்கும் –
அத்யல்ப ஆனந்த ரூபமான ஆத்ம அனுபவ ரூப மோக்ஷத்தை ஹேயம் என்று அத்யவசித்து நிரதிசய புருஷார்த்த லாபத்தாலே புருஷாந்தர ருசி அற்று
நிலை யுண்டாக வேண்டில் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள்-என்று ஆத்ம உபாசன பலமான ஆத்ம அனுபவத்தை த்யாஜ்யமாக அருளிச் செய்கையாலே ஆத்ம உபாசன உபலஷித்தமாய் அப்ரஹ்ம உபாசனமாய் இருந்துள்ள உத்கீதாத் யுபாசனங்களுடைய ஸ்வரூப பலங்களும் த்யாஜ்யத்வேந யுக்தமாகையாலே ஸூசிதமாயிற்று –

அப்ரஹ்ம உபாசனங்களும் ஸ்ரீ கீதா பாஷ்யாதி யுக்த ரீதியா ப்ரஹ்ம உபாசன நிர்வ்ருத்த யுபயுக்த தேஹ தாரண த்வாரா மோக்ஷ பலத்தில் அந்தரபாவிக்கையாலே
உபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும் ஸ்வாதந்தர்யேண தூஷகர்மம் போலே த்யாஜ்யமாகையாலே அனுபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும்
ஸூத்ராகாரர் இப்பாதத்தில் நிரூபித்தார்

ஆழ்வாரும் இப்பாட்டால் அப்ரஹ்ம உபாசனங்கள் ஸ்வாதந்தர்யேண பரித்யாஜ்யங்கள் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார்
இறை பற்று -என்று ஆஸ்ரயண விதானத்தாலே உபாசன நிர்வர்த்த கதயா உபாதேயம் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார் –

பரவித்யா பேத அபேத நிரூபணம் –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே-என்று சங்கை காஸ்ரயனாய் ஈஸ்வரனுமான எம்பெருமான்
ஆஸ்ரயணீயத்வே சர்வசமனாகிறான் -நீயும் தத் விஷய சங்காதிக்யத்தை யுடையனாய் அவனுடைய எல்லாக் கைங்கர்யத்திலேயும் அன்வயி -என்று
ந்யாஸ வித்யா வித்யாகாரமான வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்யங்களையும் ஸ்வாமித்வத்தையும் சங்க ஸ்வ பாவந் என்கிற பற்றிலன் -என்கிற பதத்தாலும் –
ஸ்வாமித்வ வாசியான –ஈசன் -என்கிற பதத்தாலும் அருளிச் செய்கையாலே ந்யாஸ வித்யை வித்யாந்தரத்தில் காட்டில் பின்னை என்கிற அர்த்தம் ஸூசிதமாய்
மற்றும் உள்ள தஹர சாண்டில்ய உபகோஸல வித்யாதிகளிலும் இந்த ந்யாயத்தாலே பேதம் யுண்டு என்று ஸூசிதமாகையாலும்
தைத்ரீய ஸ்வேதாஸ்வதராத்ய நேகோபநிஷச் ஸ்ருதையான ந்யாஸ வித்யை ரூப ஐக்யத்தால் ஏகை என்று சித்திக்கையால் மற்றும் உள்ள வித்யைகளிலும்
ரூப ஐக்யம் உண்டானால் வித்யை ஐக்யமே உள்ளது என்று பலிக்கையாலும் ஸூசிதமாயிற்று –

அவன் முற்றில் அடங்கே -என்று சர்வ கைங்கர்யத்தையும் தாம் விதித்த ந்யாஸ வித்யைக்குப் பலமாக அருளிச் செய்கையாலே
வித்யாந்தர ஸாத்ய பலா அவிசிஷ்ட பலத்வாத் விகல்ப-என்கிற விகல்ப அதிகரணார்த்தம் யுக்தமாகிறது –

ஸூத்ராகாரர் அனந்த சாகா ஸ்ருத்தங்களான அநேக வித்யைகளில் பேத அபேத நிரூபணம் பண்ண வேண்டி இருக்கப் பண்ணாது ஒழிந்தது நியாய பிரதர்சன த்ருஷ்டியாலேயாமா போலே இவரும் ந்யாஸ வித்யைக்கு வித்யாந்தரத்தில் காட்டில் பேதத்தையும் தன்னில் பேதம் இல்லாமையையும் அருளிச் செய்து
ஏதந் ந்யாயேந வித்யாந்தரங்களிலும் பேத அபேதம் தன்னடையே சித்திக்கும் என்று திங்மாத்ர பிரதர்சனம் பண்ணினார் –

மயர்வற மதிநலம் அருள பெற்ற இவ்வாழ்வாருக்கு அநிதர லப்யமாய் ஒரு சாதுர்யம் யுண்டு -வேதாச்சார்யரான பாதராயணர் வேதார்த்தங்களை விசாரித்து
அடைவே தாமும் ஸூசிப் பித்துக் கொண்டு வருகிற இடங்களில் அவர் விஸ்தரித்த இடங்களிலே தாம் ஸங்க்ரஹித்து அருளுகையும் –
அவர் ஸங்க்ரஹித்த இடங்களில் ஈஷத் விஸ்தரிக்கையும் -அது எங்கனே என்னில்
ஸ்வர்க்க ஆரோஹ அவரோஹ மாத்ரு பித்ரு கர்ப்ப அந்வய ரௌரவாதி நன்றாக அனுபவ வாதிகளான சம்சார தோஷங்களை ஸூத்ராகாரர் பரக்கச் சொன்னத்தை –
வீடுமின் முற்றவும் -என்று ப்ரயோஜகத்திலே அக்ராம்யமாக அருளிச் செய்கையாலும்

பாஸூபாதாதிகரணத்தில் பஸூபத்தி பாரம்ய நிஷேதம் பண்ணினத்தை உப லக்ஷணம் ஆக்கி –புரமொரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளன் -என்று பஸூபத்தி ஹிரண்ய கர்ப்பர்களுடைய பாரம்யத்தை நிஷேதிக்கையாலும்
ஸூத்ராகாரர் விஸ்தரித்த அர்த்தத்தை ஸங்க்ரஹிக்கையும் தத் சங்கரஹீத அர்த்தத்தை விஸ்தரிக்கையும் இவருக்கு நியாமாய் இருக்கும் –
இதுக்கு அடி இவருக்கும் அவருக்கும் உள்ள ஐகமத்யம் –

சர்வ வித்யா வேத்யன் ஸ்ரீ மன் நாராயணாய தேவதா விசேஷம் என்று நிர்ணயித்த அர்த்தம் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக யுள்ளே -என்று கார்த்ஸ்ந்யேந நன்றான விபூதி விஸ்தாரத்தைக் கண்டு
அவை எல்லாம் சர்வேஸ்வரனுடைய கட்டடங்க நன்றான சம்பத்து என்று அத்யவசித்து நீயும் தத் ஐஸ்வர்ய அந்தர்பூதனாய் அடங்கு -என்று
ப்ரஹ்ம ருத்ர இந்திராதி ஸமஸ்த விலக்ஷண புருஷர்களும் பகவத் விபூதியாகவும் எம்பெருமான் விபூதிமானாகவும் இருக்கையாலே
வித்யாந்தரங்களிலே ஸ்ருதமான சம்பு சிவாதி சப்தங்கள் அபர்யவசான வ்ருத்த்யா நாராயண பர்யந்தமாக -ச ப்ரஹ்மா இத்யாதி வாக்கியத்தில் சொன்ன
அர்த்தம் ஸூசிதமாய் இத்தாலே சர்வ வித்யைகளிலும் நாராயண ரூப தேவதா விசேஷம் உபாஸ்யமாய் சொல்லிற்றாய் இருக்கையாலே ஸூசிதமாயிற்று –

இப்படி நாலு பாட்டுக்கும் குண உப சம்ஹார பாதத்துக்கும் ஐகமத்யம் கண்டு கொள்வது –

எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் வதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

————————

எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் உண்டான படி –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
வித்யை கர்ம கர்த்ரு பூதாத்ம ஞான ரூபதயா கர்மாங்கம்-கர்ம மோக்ஷ சாதனம் என்று சங்கித்து

கர்த்ரு பூதாத்மா ஞானம் கர்மாங்கமே ஆகிலும் தத் விலக்ஷண பரமாத்மா ஞான ரூப வித்யை கர்ம அங்கம் இல்லாமையாலும்

யஞ்ஞ தாநாதி கர்மங்கள் வித்யா அங்கதயா ஸ்ருதி சித்தமாகையாலும் வித்யை கர்ம அங்கம் அன்று –
கர்மமே வித்ய அங்கமாகையால் வித்யை மோக்ஷ சாதனம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
கர்ம அங்க உத்கீதாதிகளில் ரசதமத்வாதி ப்ரதிபாதக வாக்கியங்கள் ஜூஹ்வாதிகளை ப்ருத்வீத்வாதிநா ஸ்துதிக்கும் கணக்கிலே உத்கீத ஸ்துதி பரங்கள் என்று சங்கித்து –
ஜூஹ்வாதி விதி போலே உத்கீதாதி விதி சந்நிஹிதம் இல்லாமையாலும் –

உத்கீதாதி களுக்கு ரசதமத் வாதிகள் பிரமணாந்தரா ப்ராப்தங்கள் ஆகையாலும்
ஸ்துதி பரங்கள் அன்று –ரசதமத்வாதி த்ருஷ்ட்டி விதாயங்கள் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வேதாந்தங்களில் ஸ்ருதமான ஆக்யாநங்கள் பாரிப்லவே விநி யுக்தங்கள் என்று சங்கித்து –

சில ஆக்யா நங்களை பாரிப் லவத்திலே விசேஷிக்கையாலே
வேதாந்த சித்த ஆக்யானங்கள் வித்யா விசேஷ ப்ரதிபாதநார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
க்ருஹிவ்யதிரிக்தாஸ்ரமிகளில் யஜ்ஞ தாநாதிகள் இல்லாமையாலே தத் அங்க வித்யா அனுஷ்டானம் அவர்களுக்கு கூடாது என்று சங்கித்து
யஜ்ஞ தாநாதி ரூப அங்கங்கள் இல்லா விடிலும் தத் தத் ஆஸ்ரம உசித கர்மங்கள் அங்கமாய் தத் ஸாத்ய வித்யை கூடும் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
க்ருஹிகளுக்கும் யஞ்ஞாதி நிரபேஷமாகவே வித்யா அனுஷ்டானம் என்று சங்கித்து –

யஞ்ஞாத் யங்கத்வம் ஸ்ருதி சித்தமாகையாலே யஞ்ஞாத் அபேக்ஷம் வித்யா அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
க்ருஹி களுக்கு கரண வியாபார ரூபமான கர்ம அனுஷ்டானமும் தத் உபரதி ரூபமான சமதாதிகளும் விருத்தமாகையாலே
அவர்களுக்கு சமதாதிகள் வித்யா அங்கதயா அனுபாதேயங்கள் என்று சங்கித்து –

நிஷித்த விஷய நிவ்ருத்தி ரூபமான ஸமதாதிகளுக்கும் விகித விஷய ப்ரவ்ருத்தி ரூபமான கர்மங்களுக்கும் விரோதம் இல்லாமையாலே

சமதாதிகள் வித்யா அங்கதயா உபாதேயங்கள் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
பிராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வதா சர்வாந் நாநுமதி என்று சங்கித்து

சர்வாந்நாநுமதி ப்ராணாத்ய யாபத்தியிலே ஒழிய ஸர்வதா கூடாது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில் –
வித்யா அங்கங்களான கர்மங்கள் கேவல ஆஸ்ரம அங்கங்கள் அன்று -நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கையாலே -என்று சங்கித்து –
ஏக விநியோகத்தாலே உபய அங்கத்வம் உண்டாகில் நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கும் –

இவ்விடத்தில் விநியோக ப்ருதக்த்வேந ஜீவனாதிகார காமனாதிகாரம் போலே விரோதம் இல்லாமையாலே கேவல ஆஸ்ரம அங்கமும் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு ஆஸ்ரம தர்மேதி கர்த்த வ்யதாகமான ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அநாஸ்ரமிகளான ரைக்வ பீஷ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம வித்யா அனுஷ்டானம் காண்கையாலும் விதுராதிகளுக்கு தானாதிகளான
வித்யா சாதனங்களாக சில கர்மங்கள் உண்டாகையாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரமுண்டு என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில் –நைஷ்டிக வைகானச பரிவ்ராஜ காத்ய ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கும் விதுராதி ந்யாயேந ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று சங்கித்து
ஆஸ்ரம தர்ம பஹிஷ்க்ருதர்களுக்கு பிராயச் சித்தா பாவ ஸ்ரவணத்தாலும் சிஷ்டப் பஹிஷ்காரத்தாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
உத்கீதாத் யுபாசனம் வீர்ய வத்தரத்வ பல காமனான யஜமானனாலே தஹராத் யுபாசனம் போலே அநுஷ்டேயம் என்று சங்கித்து
கோதோஹநாதி களைப் போலே இந்த உபாசனம் கர்ம அங்க ஆச்ரயமாகையாலே கர்மங்களை போலே ருத்விக் கர்த்ருகம் என்று நிர்ணயித்தார்

துவாதச அதிகரணத்தில்
பால்யங்க பாண்டி த்யஞ்ச நிர்வித்யாத முநி -என்கிற இடத்தில் முநி சப்த யுக்தமான மௌனம் மனன ரூபம் ஆகையாலே

மந்தவ்ய என்கிற இடத்தில் போலே மனனம் அநு வதிக்கப் படுகிறது என்று சங்கித்து

ஸ்ரவண ப்ரதிஷ்டார்த்தமான மனனம் ப்ராப்தமானாலும் ஸூபாஸ்ரய சமசீலந ரூப மனனம் பிராப்தம் இல்லாமையால்
ஏவம் வித மனனம் வித்யா சஹகாரித்வேந விதிக்கப் படுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ரயோதச அதிகரணத்தில்
பால்யேந திஷ்டா சேத்-என்கிற இடத்திலும் உபாசகனுக்கு விதிக்கப் படுகிற பால கர்மம் காமசாராதிகள் ஆகையால் அவைகளும் வித்யா மஹாத்ம்யத்தாலே உபாதேயம் என்று சங்கித்து –

துஸ்சரிதம் வித்யோத்பத்தி விரோதி த்வேந ஸ்ருதமாகையாலும் பாண்டித்ய ப்ரயுக்த ஸ்வ மஹாத்ம்யா அநா விஷ்கரணம்
பால்ய சப்தார்த்தம் ஆகையாலும் கர்மசாராதிகள் அனுபாதேயம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில்
அநாமுஷ்மிக பல உபாசனங்கள் ஸ்வ சாதன பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியதி உத்பன்னங்கள் ஆகின்றன வென்று சங்கித்து

பிரதிபந்தகம் உண்டாகில் -விளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன பிரதிபந்தகம் இல்லையாகில் அவிளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யைகள் மஹாதிசய சாலிகளாகையாலே ஸ்வ சாதநீ பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியம உத்பன்னங்கள் ஆகின்றன என்று சங்கித்து அவைகளுக்கும் ப்ரஹ்ம விதபஸாராதி களான அதி க்ரூரமான பிரதிபந்தகங்கள் சம்பாவிதங்கள் ஆகையாலே அநியமேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

இதில் த்விதீய –த்ருதீய ஏகாதச அதிகாரணங்கள் ப்ராசங்கிகங்கள்

அவசிஷ்ட துவாதச அதிகாரணந்த்தில் –பத்து அதிகாரணத்தாலே
வித்யையே மோக்ஷ சாதனம் என்றும் –

தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்களே தத் தத் ஆஸ்ரமிகளுடைய வித்யைகளுக்கு நியதி அங்கங்கள் என்றும்

அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு தபோ தாநாதிகளான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் –

சமதாதிகள் வித்யா அங்கங்கள் என்றும் –

சம விசேஷ ரூபமான துஷ்ட அன்ன பரிஹாரமும் வித்யா அங்கம் என்றும் –

வித்யா அங்கங்களுக்கே ஆஸ்ரம அங்கத்துவம் உண்டு என்றும்

ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்குக் கேவல தபோ தாநாதிகள் வித்யா அங்கம் இல்லாமையால் வித்யையில் அன்வயம் இல்லை என்றும் –

ஸூபாஸ்ரய சமசீலந ரூபமான மனனம் என்ன பாண்டித்யா அநாவிஷ்கரண ரூபமான பால்யம் என்ன இவைகள் அங்கம் என்றும் அங்கங்களை நிரூபித்து –

அவசிஷ்ட சதுர்த்தச பஞ்ச தச அதிகரணங்களால் பிரதிபந்தகம் அற்ற தசையில் அங்கங்களால் அங்கியான உபாசன நிஷ்பத்தி என்று நிர்ணயித்தார் –

இப்படி நிரூபித்த அர்த்தத்தில் ப்ராசங்கிகமான அதிகரண த்ரயத்தையும் உபேக்ஷித்து அவசிஷ்ட துவாதச அதிகரண அர்த்தத்தை
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே–என்று மனனாதி ஹேதுவான மனஸ்ஸூம்
ஸ்துத்யாதி ஹேதுவான வாக்கும் -பிரணாமாதி கரணமான கார்யமுமாய் இருந்துள்ள இம்மூன்றையும் இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி பிரயோஜனத்தையும் நிரூபித்து
இதர விஷய அன்வயத்தை தவிர்த்து ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே ஒதுக்கு -என்று அங்க ஸ்வரூபத்தையும்
அங்கங்களாலே அங்கி சித்தி தசையையும் அருளிச் செய்து இப்பாட்டாலே வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில் –

வித்யையே மோக்ஷ சாதனம் என்று பிரதம அதிகரணத்தில் நிரூபித்த அர்த்தம் -இறை யுள்ளில் ஒடுங்கே-என்று அவன் விஷயத்தில் ந்யஸ்த பரனாய் இரு என்று சித்த உபாய சுவீகார ரூபமான ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கையாலே யுக்தமாயிற்று –

சதுர்த்த பஞ்சம நவம அதிகரணங்களில்
வானப்ரஸ்த பரிவ்ராஜகர்களுக்கு தத் தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும்

க்ருஹிகளுக்கு ஸ்வ ஆஸ்ரம உசிதமான யஞ்ஞாதிகள் அங்கம் என்றும்
விதுராதிகளுக்கு தாநாதிகம் வித்யா அங்கம் என்றும் -நிர்ணயித்த அர்த்தம் –

அகிஞ்சனான ந்யாஸ வித்யா நிஷ்டனுக்கு ப்ரயோஜனாந்தர சாதனாந்தர வைமுக்யத்தை –
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று அங்கமாக விதிக்கையாலே தன் முகேந தத் தத் அதிகார அநு குண அங்க அனுஷ்டானத்தாலே வித்யா நிஷ்பத்தி வரும் என்று சொல்லிற்றாய் அத்தாலே ஸூசிதமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான கர்ம சமாதிகளுக்கு விஹித நிஷித்த பேதேந விரோதம் இல்லை என்று நிர்ணயித்த அர்த்தமும் –
உள்ளம் உரை செயல் -இத்யாதியாலே பிரதிகூல விஷய நிவ்ருத்தியையும் அனுகூல விஷய ப்ரவ்ருத்தியையும் விதிக்கையாலே வ்யக்தமாக ஸூசிதம் –

மநோ வாக் காயங்களை அனுஷிதா விஷயங்களில் நின்றும் மீட்க வேணும் என்று விதிக்கிற இச்சந்தையாலே தானே
சப்தமாதி கரண யுக்தமான நிஷித்த பாஷாணம் பரிஹார்யம் என்கிற அர்த்தமும் ஸூசிதமாயிற்று –

அஷ்டம அதிகரணத்தில்
ஒரு தர்மத்துக்கே வித்யா அங்கத்தவமும் ஆஸ்ரம அங்கத்தவமும் கூடும் என்று நிரூபித்த அர்த்தம் -இதர விஷயங்களில் உள்ள
மநோ வாக் வ்ருத்திகளையே பகவத் விஷயத்திலும் ஒடுக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதமாகலாம்-

தசம அதிகரணத்தில்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கு வித்யா அதிகாரம் இல்லை என்று நிரூபித்த அர்த்தம் –உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று
நிஷித்த விஷயங்களை அவஸ்ய பரிஹரணீயன்கள் என்று தத் க்ரூர்யம் யுக்தமாய் அத்தாலே ஸூசிதம் –

துவாதச அதிகரணத்தில்
நிர்ணீதமான ஸூபாஸ்ரய சம்சீல நத்தினுடைய கர்த்தவ்யத்வமும்-இதர விஷய நிஷ்டமான
மநோ விருத்தியை பகவத் விஷயம் ஆக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதம் என்று காணலாம் –

த்ரயோதச அதிகரணத்தில் –
காமசாரம் பால்ய சப்தார்த்தம் அன்று -ஸ்வ மஹாத்ம்யா நாவிஷ்கரணமே பால்ய சப்தார்த்தம் என்று நிரூபித்த அர்த்தமும் கை வந்த படி செய்ய ஒண்ணாது
என்று நிஷித்த நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகலாம் –

சதுர்தச பஞ்ச தசங்களில் நிரூபித்தமான அங்க நிஷ்பத்த்ய நந்தரமே பிரதிபந்தகம் உண்டாகில் அங்கி நிஷ்பன்னமாக மாட்டாது –
பிரதிபந்தகம் அற்றால் அங்கி நிஷ்பன்னமாம்-என்கிற அர்த்தமும் -நிஷித்த விஷய நிஷ்ட மநோ வாக் வ்ருத்தி ரூப பிரதிபந்தகம் அற்றே
பகவத் ஆஸ்ரயணம் பண்ண வேணும் என்று சொல்லுகையாலே ஸூசிதம் –

ஆக இப்படி எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் யுண்டு என்று ஸூஷ்ம தர்சிகளுக்கு ஸூக்ரகமாக அறியலாம் படி ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

———————-

இனி மேல் சதுர்த்த அத்யாயத்துக்கும் மேல் இரண்டு பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டான படி –
இதில் ஒன்பதாம் பாட்டு பிரதம த்விதீய பாதார்த்தமாகவும்
பத்தாம் பாட்டு த்ருதீய சதுர்த்த பாதார்த்தமாகவும் இருக்கும் –

இதில் பிரதம பாத பிரதம அதிகரணத்தில்
மோக்ஷ சாதநீ பூத ஞானம் சக்ருதா வ்ருத்தம் என்று சங்கித்து நிரந்தர த்யான ரூபமான ஞானமே மோக்ஷ சாதனம் என்று
ஸ்ருதி சித்தமாகையால் அஸக்ருத் கர்த்தவ்யம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
ஆத்மேத்யேவோபாஸீத-இதி வாக்ய விசேஷ பிரதிபன்னமான உபாசன விசேஷத்திலே அந்யத்வேண ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அவ்விடத்திலும் ஆத்மத்வேந உபாஸ்யம் என்று நிர்ணயித்தார்

த்ருதீய அதிகரணத்தில்
மநோ ப்ரஹமேத் யுபாஸீத -இத்யாதி ப்ரதிகோபாசனங்களில் ப்ரஹ்ம உபாசனத்தவ சமயத்தாலே உபாசித்துராத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அந்த உபாசனங்களில் ப்ரதீகமான மந ப்ரப்ருதிகள் உபாஸ்யமாகையாலும் ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லாமையாலும்
இவ்விடங்களில் ஆத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் அன்று என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
பல சாதனத்வேந உத்க்ருஷ்டமான உத்கீதாதி த்ருஷ்ட்டி ஆதித்யாதிகள் என்று சங்கித்து ஆதித்யாதிகளே பல ப்ரததயா உத்க்ருஷ்டங்கள் ஆகையாலே
உத்கீதாதிகளிலே ஆதித்யாதி த்ருஷ்டியே உள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உபாசனை அனுஷ்டானம் ஆஸீ நத்வ சாயா நத்வ ஸ்திதி கமணாத்ய வஸ்தைகளிலும் விசேஷா பாவாத் உபபன்னம் என்று சங்கித்து
சயா நாத்ய வஸ்தைகளில் ஏகாக்ரத்வ சம்பவம் அனுபன்னம் ஆகையால் ஆஸீநத்வ அவஸ்தையில் ஒன்றிலுமே கடிக்கும் ஒன்றாகையாலும்
தத் அவஸ்தையிலேயே உபாசன அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பூர்வம் நிர்ணீத உபாசனம் ஏகாஹ மாத்ர சம்பாத்தியம் என்று சங்கித்து –
ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் -என்கிற ஸ்ருதியின் படியே –ஆப்ரயாணம் அனுவர்த்த நீயம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
வித்யா பலத்வேந ச்ருதங்களான பூர்வ உத்தராகங்களினுடைய அஸ்லேஷ விநாசங்கள் -ந புக்தம் -இத்யாதி வசன விரோதத்தாலே
வித்யா ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று சங்கித்து -அஸ்லேஷ விநாசங்கள் வித்யா பலத்வேந சுருதி பிரதிபன்னங்கள் ஆகையாலும்-
ந புக்தம் -இத்யாதி வசனங்கள் பல ஜனன சக்தி த்ரடிம ப்ரதிபாதன பரங்கள் ஆகையாலும் ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸூக்ருதம் சாஸ்த்ர சித்தமாகையாலே வித்யா விரோதி அன்று என்று சங்கித்து ஸூக்ருதமும் அதிகாரி பேதேந வித்யா விரோதி என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
சர்வ பூர்வாகங்களும் வித்யா மஹாத்ம்யத்தாலே வினாசயங்கள் என்று சங்கித்து அநாரப்த கார்யங்களுக்கே அது உள்ளது என்று என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில்
அக்னி ஹோத்ராதி நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம தர்மங்களும் தத் பலன்களும் அஸ்லேஷோக்த்யா அனுஷ்டானம் அப்ராப்தம் என்று சங்கித்து
வித்யா உத்பாதகங்களான ஸ்வ வர்ணாஸ்ரம உசித கர்மங்களுக்கு பாலாஸ்லேஷம் இல்லாமையால் அனுஷ்டானம் பிராப்தம் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
பிராரப்த கர்ம விநாசம் வித்யா யோனி சரீராவஸாநத்திலே நியமேந வருகிறது என்று சங்கித்து தச் சரீர அவசானத்திலே யாகிலும்
சரீராந்தர அவசானத்திலே யாகிலும் அநியமேந வரும் என்று நிர்ணயித்தார் –

த்வதீய பாத -பிரதம அதிகரணத்தில்
வாங்மனசி சம்பத்யதே -என்று வாக்குக்கு மனஸ் சம்பத்தியை ப்ரதிபாதிக்கிற சுருதி வாக்கு மனா உபாதாநகம் அல்லாமையாலே மனசிலே
வாக் ஸ்வரூப சம்பத்தியைச் சொல்லுகிறது அன்று -வாக் வ்ருத்தி மநோதீநை யாகையாலே தத் வ்ருத்தி சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து –
மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தில் ப்ரதிபாதனமானாலே ஸம்பத்தி சுருதி ஸ்வாரஸ்யம் சித்திக்கையாலும்

வாக்குக்கு மனஸ் ஸூ உபாதானம் அல்லாமையாலே லயம் கூடாதே இருந்தாலும் மனஸோடு வாக் சம்யோகத்தைச் சொல்ல வந்தது ஆகையாலும் மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தியை ப்ரதிபாதிக்கிறது என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில்
மன ப்ராணே-என்கிற இடத்தில் அன்ன ப்ராக்ருதமாகச் சொல்லப் படுகிற மனஸூக்கு அன்ன ப்ரக்ருதிக பூதாப் ப்ரக்ருதிகமான பிராணன் காரணமாக் கூடுகையாலே பரம்பரையா ஸ்வ காரணே லயரூப சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து
மன ப்ராணன்கள் அகங்கார ஆகாச விகாரங்கள் ஆகையாலும் அந்நாப் விகாரங்கள் இல்லாமையாலும் பரம்பரையா காரண லய ஸம்பத்தி ப்ரதிபதன பரம் அன்று –பூர்வ உக்தரீத்யா சம்யோக மாத்ரத்தைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
பிராணாஸ் தேஜஸி -என்கிற இடத்தில் கேவல தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று சங்கித்து ஜீவனோடே கூட தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தி அதிகரணத்தில் –
தேஜஸ் சப்த மாத்ர ஸ்ரவணத்தாலே ஜீவ சம்யுக்த ப்ராணனுக்கு கேவல தேஜஸ் ஸம்பத்தி என்று சங்கித்து தேஜ உபலஷித சர்வ பூதங்களிலும் ஸம்பத்தி என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அத்ரைவ அம்ருதத்வ வசனத்தாலே உத்க்ராந்தி இல்லாமையால் அப்ரஹ்ம நிஷ்டனுக்கே உதக்ராந்தி என்று சங்கித்து

ப்ரஹ்ம நிஷ்டனுக்கும் நாடீ விசேஷத்தாலே உத்க்ரமணம் சுருதி சித்தமாகையாலே அவனுக்கும் அது உண்டு என்று நிர்ணயித்தார் –

ஷஷ்டா அதிகரணத்தில்
ஜீவ பரிஷ்வக்தங்களான பூத ஸூஷ்மங்களில் ஸூக துக்க உபபோக ரூப கார்யம் காணாமையாலே அவற்றுக்குப் பரமாத்மா ஸம்பத்தி இல்லையென்று சங்கித்து
ஸூஷூப்தி பிரளய தசைகளில் போலே பரமாத்மா சம்பத்தியால் ஸூக துக்க உபபோக ஆயாச விஸ்ரம ரூப கார்யம் உதக்ரமண தசையிலும் உண்டாகையாலே
தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -என்று சுருதி ப்ரதிபன்னமான ஜீவ சம்யுக்த பூத ஸூஷ்மங்களுக்கு உள்ள பரமாத்மா சம்பத்தியை இல்லை செய்ய ஒண்ணாது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பூர்வ யுக்தமான பரமாத்மா ஸம்பத்தி காரணா பத்தி ரூபை என்று சங்கித்து
வாங்மனசி சம்பத்யதே -என்கிற இடத்தில் சம்பத்யதே -என்கிற பதம் சம்சாரக்க விசேஷ வாசியாகையாலும்

அநு ஷக்தமான அந்தப் பதத்துக்கு அபிதான வை ரூப்யத்தில் பிரமாணம் இல்லாமையாலும் சம்சர்க்க விசேஷாபத்தியைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸதாதிகையான மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்கிற நியமம் இல்லை -தோன்றிற்று ஒரு நாடியாலே நிஷ் க்ரமணம் உள்ளது என்று சங்கித்து
தயோர்த்வ மாயன்னம்ருதத்வமேதி -என்று மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று சுருதி சொல்லுகையாலே நியமேந மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
உத்க்ரமண அனந்தரம் ரஸ்ம்யநு சாரேண கதி என்கிற நியமம் இல்லை -நிசிம்ருதனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அது கிடையாமையாலே என்று சங்கித்து
நிசியிலும் ரஸ்மி சம்பவ ப்ரதிபாதக சுருதி இருக்கையாலே நிசிம்ருதனாகிலும் ப்ரஹ்ம நிஷ்டனுக்கு ரஸ்ம்யநு சாரேண கமனம் நியதம் என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில்
நிசா மரணம் சாஸ்த்ர கர்ஹிதம் ஆகையால் அப்போது ம்ருதனுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

கர்ம சம்பந்தம் யாவது தேஹ பாவியாகையாலே கர்ம விநாச அனந்தரம் சம்சாரம் கூடாமையாலும்

நிசா மரண க்ரஹை அவித்வத் விஷயை யாகையாலும்

நிசா ம்ருதனுக்கும் ப்ரஹ்ம பிராப்தி உண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
தஷிணாயன ம்ருதனுக்கு சந்த்ர பிராப்தி ஸ்ரவணத்தாலும்-சந்த்ர பிராப்தி யுடையவர்களுக்குப் புநரா வ்ருத்தி ஸ்ருதை யாகையாலும் அக்காலத்தில்
ம்ருதர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

பித்ருயாண பதத்தால் சந்த்ர பிராப்தி உடையவர்களுக்கே புநரா வ்ருத்தி ஒழிய சந்த்ர பிராப்தி
உடையவர்களுக்கு எல்லாம் புநரா வ்ருத்தி உண்டு என்கிற நியமம் இல்லாமையால் ப்ரஹ்ம பிராப்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

இதில் பிரதம பாதத்தில்
முதல் அதிகரண ஷட்கத்தாலே உபாசன ஸ்வரூப சோதனத்தைப் பண்ணி

ஏழாம் அதிகரணம் தொடங்கி மேல் உள்ள அதிகரண பஞ்சகத்தாலே -ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலத்தை நிரூபித்தார்

த்வதீய பாதத்தில் –
உத்க்ராந்தி நிரூபணம் பண்ணினார்

இப்படி பாத த்வயத்தாலே நிரூபித்த அர்த்தத்தை –
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்று ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகாரதயா அந்தர்பவிக்கவே
ஆத்மாவினுடைய அஞ்ஞானாதி ஸ்வபாவ சங்கோசமும் தத் தேதுவான அவித்யாதிகளும் எல்லாம் விட்டுக் கழியும் –
பின்னையும் ஆரப்த சரீர விசேஷத்தினுடைய முடிவைப் பார்த்து அத்தை விடும் பொழுது எண்ண வேணும் -என்று ஆழ்வாரும் வெளியிட்டு அருளினார் –

அது எங்கனே என்னில்
ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகார தயா அந்தர்பவித்து பஜிக்கவே என்று சொல்லுகிற –ஒடுங்க அவன் கண் -என்கிற முதல் அடியாலே
பிரதம பாத அதிகரண ஷட்க நிரூபிதமான உபாசன ஸ்வரூப சாதனம் பண்ணின அம்சம் ஸூசிதமாயிற்று –
ஒடுங்கே -என்கிற அம்சத்தை உரையில் பஜன பரமாகவும் யோஜித்தமை ஸ்பஷ்டமாய் இருக்கும் –

ஈடு -சதுர் விம்சதி சஹஸ்ரம் முதலான வியாக்யானங்களிலும் –
பஜநம் எளிதானாலும் -என்றும் –

பஜனமாவது தான் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு கொடுக்கை -என்றும் யுக்தமாகையாலே

இச்சந்தை பஜன பரமாகவே முன்புள்ள முதலிகளும் வ்யாக்யானம் பண்ணினமை ஸித்தமாய் இருக்கும்

வீடுமின் முற்றவும் -பிரபத்தி பரம் -பத்துடையடியவர் -பக்தி பரம் என்கிற வ்யவஸ்தைக்கு இது விருத்தம் அன்றோ என்னில்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு முன்புள்ள முதலிகள் இப்படி நிர்வகித்தார்களே யாகிலும் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு இவ்வருகுள்ள முதலிகள் இரண்டும் பக்தி பரம் என்று
நிர்வஹிக்கையாலும் வ்யாக்யாதாக்கள் அனைவரும் பஜன பரம் என்று தோற்றும்படியே வ்யாக்யானம் பண்ணுகையாலும் விரோதம் இல்லை –

ஆனால் வீடுமின் முற்றவும் -பக்தி பரமாயும் இச்சந்தை பஜன பிரகார ப்ரதிபாதன பரமாயும் இருந்ததே யாகிலும் ஸாத்ய பக்தி ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி என்று வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே க்ரந்தக்காரர் தாமே நிர்ணயம் பண்ணுகையாலே இச்சந்தை
சாதன பக்தி பிரகார ப்ரதிபாதன பர அதிகரண ஷட்க அர்த்த ஸூசகமான படி எங்கனே என்னில் –

நாதமுனி ப்ரப்ருதிகளான நம் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டித்த ஸாத்ய பக்திக்கும் உபாசகன் அனுஷ்டிக்கிற சாதன பக்திக்கும் சாதனத்வ புத்தி ராஹித்ய சாஹித்யங்களால்
வந்த பேதம் ஒழிய ஸ்வரூப வைலக்ஷண்யம் இல்லாமையாலும் யம நியம பிராணா யாமாதிகள் என்ன-கீர்த்தன யஜன நமஸ்காராதிகள் என்ன –
ஸூ சிதேசா வஸ்தாபித சேலா ஜின குசோத்தர ரூப ஆசனம் என்ன -ஏகாக்ர சித்ததா வஸ்தானம் என்ன -இவை முதலான அனுஷ்டானமும்
இரண்டுக்கும் ஒத்து இருக்கையாலும் இச்சந்தை ஸாத்ய பஜனத்தைச் சொன்னாலும் சாதன பஜன பிரகார ஸூசகத்வம் யுண்டாகத் தட்டில்லை-

இனி ஏழாம் அதிகரணம் தொடங்கி மேலுள்ள அதிகரண பஞ்சகத்தாலே நிரூபித்த ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலாம்சமும்
ஒடுங்கலும் எல்லாம் விடும் -ஆகந்துகங்களாய் ஸ்வரூப ப்ரயுக்தம் அன்றிக்கே இருக்கிற அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தங்கள் எல்லாம் விட்டுப் போம் -என்று
வித்யா பலமான சகல விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ப்ரகாசிதம் என்னும் இடம் ஸ்புடமாக அறியலாம் –

சரீர விஸ்லேஷ தசையை எண்ணுங்கோள்-என்று விதிக்கிற –ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்கிற சந்தையாலே உத்க்ராந்தி பாதார்த்தம் கார்த்ஸ்ந்யேந ஸூசிதமாயிற்று –

இதில் பிரதம அதிகாரணம் தொடங்கி அஷ்டம அதிகரண பர்யந்தம் நிரூபித்த
சர்வ இந்திரிய பூத ஸம்பத்தி ரூப உத்க்ரண அம்சம் -ஆக்கை விடும் -என்கிற அளவால் யுக்தமாயிற்று –

நவம அதிகரணம் தொடங்கி மேல் மூன்று அதிகரணத்தால் பிராரப்த கர்ம அவசான காலமே மோக்ஷ காலம் என்று நிர்ணயித்த அம்சமும்
க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு சரீர விஸ்லேஷ காலத்தை விசேஷம் இன்றிக்கே எப்போது வருகிறதோ என்று சிந்தி -என்கிற
விடும் பொழுது எண்ணே -என்கிற அளவால் ஸூசிதமாயிற்று –

இப்படி ஒன்பதாம் பாட்டுக்கும் சதுர்த்த அத்யாய பிரதம த்விதீய பாதங்களுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடத்தை உபபாதித்தோம் –

——————————-

இனிமேல் த்ருதீய துரீய பாதங்களுக்கு பத்தாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படியை -தெரிவிக்கிறோம் –

த்ருதீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம பிராப்தியில் அர்ச்சிராதி மார்க்கமும் -பின்னையும் சில மார்க்காந்தரங்களும் நைரபேஷ்யேண சாந்தோக்ய வாஜசநே யாதிகளிலே ச்ருதங்களாகையாலே -மார்க்கங்கள் விகல்பேந வருகிறது என்று சங்கித்து –

சர்வ அவஸ்தலங்களிலும் அர்ச்சிராதி பூதங்களான ஆதித்யாதி புருஷர்கள் வழி நடத்துகிறவர்களாகக் காண்கையாலே
அர்ச்சிராதி மார்க்கமே ப்ரத்யபிஞ்ஞாதம் ஆகையால் மார்க்கம் ஏகம் என்று சித்திக்கையாலும்

அத்தால் அந்நியத்ர உக்தங்களுக்கு அந்நியத்ர உபஸம்ஹாரம் ப்ரமாணிகம் ஆகையாலும்

அர்ச்சிராதி மார்க்க ஏணைவ முக்தஸ்ய ப்ரஹ்ம ப்ராப்யர்த்த கமனம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
பாட க்ரமத்தாலே வருண இந்திர ப்ரஜாபதிகளுக்கு வாயு வனந்தரம் நிவேசம் யுக்தம் என்று சங்கித்து பாட க்ரம அபேக்ஷயா அர்த்த க்ரமம் பலிஷ்டமாகையாலே மேகோதா வர்த்தித்தவ ரூப சம்பந்தத்தால் வித்யுத் உபரி வர்ண இந்த்ராதிகளுக்கு நிவேசம் யுக்தம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
அர்ச்சிராதிகள் மார்க்க சிஹ்னங்கள் என்று சங்கித்து கமயித்ருத்வம் ச்ருதமாகையாலே அர்ச்சிராதிகள் ஆதி வாஹிக புருஷர்கள் என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம உபாசகனுக்குப் பரிபூர்ண ப்ரஹ்ம ப்ராப்த்யர்த்தம் தேசாந்தர கமனம் அநபேஷிதம் ஆகையால் ப்ரஹ்ம உபாசகர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை –ப்ரதீக உபாசகர்களுக்கே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று சங்கித்து
தேச விசேஷ அவச்சின்ன ப்ரஹ்ம பிராப்தி யுடையவனுக்கே அவித்யா நிவ்ருத்தி சுருதையாகையாலே

நிஷ்க்ருஷ்ட ப்ரஹ்ம சரீர ஜீவ உபாசகர்களுக்கும்
ஜீவ சரீர ப்ரஹ்ம உபாசகர்களுக்குமே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று நிர்ணயித்தார் –

முக்த ஐஸ்வர்ய பிரகார சிந்தனம் பண்ணுகிற துரீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம ஸம்பத்தி யுடையவனுக்கு ஸ்வரூபம் நித்யாவிர்பூதமாய் இருக்கையால் அதுக்கு ஆவிர்பாவம் சொல்ல ஒண்ணாது –
அபூர்வமாய் இருபத்தொரு ஆகார நிஷ்பத்தியே உள்ளது என்று சங்கித்து -அபஹத பாப்மத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபம் அவித்யா திரோஹிதமாகையால்
தந் நிவ்ருத்தயா எப்போதும் உள்ள ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
முக்தன் ப்ரஹ்ம அனுபவ தசையில் ப்ரஹ்மத்தை விபக்தமாக அனுபவிக்கிறான் என்ன வேணும் -சுருதி சதங்களாலே தத் திசையிலும் பேதம் காண்கையாலே -என்று சங்கித்து -பிரகார பிரகாரி பேதத்தால் வந்த பேதத்தை சுருதி சதங்கள் சொல்ல வந்தது ஒழிய –

தத்வம்ஸயாதி சுருதி சித்த விஸிஷ்ட ஐக்யத்தை பாதிக்க வந்தது அல்லாமையாலே
தத் பிரகார தயா அவிபக்தமாயே அனுபவிக்கிறான் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
முக்தனுக்கு அபஹத பாப்மாத்வாதி குணவத்த்வந்தான் ஞானத்வந்தான் ஸ்வரூபம் என்று மத பேதத்தாலே சங்கித்து
உபயமும் சுருதி சித்தமாகையால் உபயமும் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
முக்தனுக்கு ஸ்ருதையான ஞாத்யாதி ப்ராப்தியில் ப்ரயத்தனாந்தர சாபேஷதை உண்டு என்று சங்கித்து
ஈஸ்வரனைப் போலே பிரயத்தன நிரபேஷமாகவே-ஞாத்யாதி பிராப்தி யுள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
கர்ம சம்பந்தம் இல்லாமையால் முக்தன் அசரீரனாய் இருப்பன் என்றும் -கர்ம சம்பந்தம் இல்லாவிடிலும் கேவல இச்சையா சரீரனாயே இருப்பன் என்றும் சங்கித்து –
சங்கல்பம் யுண்டாகில் ச சரீரனாய் இருக்கிறான் -அது இல்லையாகில் அசரீரனாய் இருக்கிறான் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பரம சாம்யா பத்தி ஸ்ருதியாலே ஜகத் ஈஸ்வரத்வமும் முக்தனுக்கு யுண்டு என்று சங்கித்து -அது உள்ளது ஜகத் காரண பூத ப்ரஹ்ம மாத்ரத்துக்கே யாகையாலே-போக மாத்ர ஸாம்யமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

சரம ஸூத்ரம் -அதிகரண அந்தரமான பக்ஷத்தில் சப்தம அதிகரணமான அதில் –
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் கதாசித் புநரா வ்ருத்தியையும் பண்ணக் கூடும் என்று சங்கித்து –

அநா வ்ருத்தி சுருதி சித்த மாகையாலும் ஸத்யஸங்கல்பனான ஈஸ்வரன்
ஸ்வ சங்கல்ப விருத்தமாகப் புநரா வ்ருத்தியைப் பண்ணாமையாலும் புநரா வ்ருத்தி வாராது என்று நிர்ணயித்தார் –

இப்படி இவ்விரண்டு பாதத்தாலேயும் நிஷ்கர்ஷித்த
அர்ச்சிராதி மார்க்கம் தொடங்கி பரம வ்யோம பிரவேசாநந்தரபாவி ப்ரஹ்ம அனுபவ பர்யந்தமாய் யுள்ள பலத்தை -ஆழ்வாரும் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே  -என்று ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே
எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருப்பதாய்

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான ஆனந்தாதி குணத்தை யுடைய அகாமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய்
ஆவீர்பூத ஸ்வ ரூபமான விலக்ஷண ஆத்மவர்க்கம் என்ன –

அஸங்க்யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையவனாகையாலே
நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய ஆஸ்ரிதரைக் கைவிடாதபடி ஸ்திரமான திருவடிகளை ஆஸ்ரயி -என்று வெளியிட்டு அருளினார் –

இதில் நலம் என்று ஈஸ்வரனோடு ஒத்த ஆனந்தத்தை யுடையனாக முக்தனைச் சொல்லுகையாலே

சர்வ ஸத்காரத்தால் வந்த ஈஸ்வர ஆனந்த சாம்யம் யுக்தமாய் –
அத்தாலே அர்ச்சிராதி புருஷ சதிகார ப்ரயுக்த ஆனந்தமும் சொல்லிற்றாக லபிக்கையாலே இச்சந்தையாலே அர்ச்சிராதி பாதார்த்தமும் ஸூசிதமாகலாம்

சரம பாத பிரதம அதிகரணத்தில்
ஸ்வரூப ஆவிர்பாவமே முக்த தசையில் உள்ளது என்று நிர்ணயித்த அர்த்தம் –

ஆவிர்பூத அபஹத பாப்மாத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டுகிற
ஒண் பொருள் -என்கிற சந்தையாலே ஸ்புடமாக ஸூசிதமாயிற்று-

நாரணன் -என்கிற சப்தம் -சர்வ காலத்திலும் சேதன ஈஸ்வரர்களுக்குள்ள அப்ருதக் சித்த சம்பந்தத்தைக் காட்டுகையாலே
முக்த தசையில் அவிபாகேந ப்ரஹ்ம அனுபவமே உள்ளது என்று நிர்ணயித்த த்வதீய அதிகரண அர்த்தம் ஸூசிதமாயிற்று –

ஒண் பொருள் -என்கிற இடத்தில் ஆத்ம வஸ்துவுக்கு ஒண்மையாவது

அசங்கோசாத் அபஹத பாப்மத்வாதிகளும் ஞான ஸ்வரூபத்வமும் ஆகையால் உபயம் ஸ்வரூபம்
என்கிற த்ருதீய அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம்

இது உரையில் சப்தார்த்த நிர்வாஹ பிரகாரத்தில் கண்டு கொள்வது –

ஈடு முதலான வ்யாக்யானங்களில் –நலத்து ஒண் பொருள் -என்கிற பதங்களுக்கு ஞானாதி குணகத்வமும் ஞான ஸ்வரூபமும் அர்த்தம் என்று வ்யாக்யானம்
பண்ணுகையாலே இப்பத த்வயத்தாலும் உபயமும் ஸ்வரூபம் என்கிற அதிகாரண அர்த்தம் சொல்லப் பட்டது என்று ஸ்புடமாக அறியலாம் –

ஒண்மைக்கு அபஹத பாப்மாத்வாதி குண அஷ்டக அந்தரகதமான ஸத்ய ண் அர்த்தமாகையாலே
சங்கல்பாதேவ ஞாத்யாதி பிராப்தி என்கிற சதுர்த்த அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம் –

ஒண் பொருள் –என்கிற சப்தத்தாலே அபஹத பாப்மாத்வாத் யந்தரகதமான சத்ய காமத்வம் யுக்தமாயிற்று –
சத்யகாமத்துவமாவது -இச்சை யுண்டாகில் அவ்ப்ரதிஹதமாய் இருக்கை-

இப்படி சத்ய காமத்வ உக்த்யா ஐச்சமாக சரீரத்வ அசரீரத்வங்கள் முக்தனுக்கு கூடும் என்கிற பஞ்சம அதிகாரண அர்த்தமும் –
ஒண் பொருள் –என்கிற சந்தையாலே தானே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட அதிகரண நிரூபிதமான ஜகத் வியாபாரம் இன்றிக்கே போக மாத்ர ஸாம்யமே உள்ளது -என்கிற அர்த்தம் –

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு ஒத்த ஆனந்தத்தை உடையவன் என்று ஆனந்த மாத்ர சாம்யத்தைக் காட்டுகிற –அந்நலம்-என்கிற பதத்தால் ஸூசிதம் –

சரம ஸூத்ரம் அதிகாரணாந்தரம் என்கிற பக்ஷத்தில் ஆஸ்ரிதரை ஒரு நாளும்  விடாத திண்மையை யுடைய திருவடிகள் என்று சொல்லுகிற –
திண் கழல் -என்கிற பதத்தாலே -ஈஸ்வர ஸ்வா தந்தர்ய சங்கீத புநரா வ்ருத்தியை
ஸத்ய ஸங்கல்ப காருண்யாதி குணவதீஸ்வர ஸ்வ பாவத்தாலே இவ்வதிகரண அர்த்தம் ஸூசிதம்

இப்படி பத்தாம் பாட்டுக்கும் இப்பாத த்வயத்துக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

——————————————–

இனி நிகமத்தில்
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த இப்பத்தே -என்று தடாகங்கள் சேர்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் அருளிச் செய்த பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ உபயோகங்களான கல்யாண குணங்களால் தொடுக்கப் பட்டு இருந்துள்ள
ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு இப்பத்தை நிரூபியுங்கோள் -என்று
உத்தர த்விக ப்ரதிபாத்யமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ ப்ரதிபாதனம் இத் திருவாய் மொழி என்று தலைக்கட்டி அருளினார் –

ஈட்டிலே உபாஸக அனுக்ரஹத்தாலே உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த என்று இறே-
சீர்த் தொடை -என்கிற சந்தைக்கு வ்யாக்யானம் செய்து அருளினது –

இப்படி வீடுமின் முற்றத்துக்கு உத்தர த்விகத்துக்கும் ஐகமத்யம் யுண்டு என்னும் இடம் சித்தம்

ஆக அத்யாய சதுஷ்ட்யாத்மகமாய் –
ஷோடச பாதாத்மகமாய் –
ஷாட் பஞ்சாசததிகசத அதிகரணாத் மகமாய்
இருந்துள்ள சாரீகாதாத்மகமாய் இருந்துள்ள பிரதம த்விதீய தசகங்களுக்கும் –
கலிவைரி நிகமாந்த தேசிக ப்ரப்ருதிகளான பூர்வாச்சார்யர்களுடைய ப்ரதிஞ்ஞா வாக்கியங்களின் படியே ஐகமத்யம் அநதி ஸங்க்ரஹ விஸ்தரேண உபபாதிதம் ஆயிற்று –

இனி பத்துடை அடியவர் -தொடங்கி -முனியே நான்முகன் அளவும் -இவ்விரண்டு திருவாய் மொழிக்கும் விவரணம் என்னும் இடம் ஸூதீக்களுக்கு ஸூவ்யக்தமாக அறியலாம்

—————————————————————————-——————————-

பாரம்பரீ பவபயோ நிதி பாத்ர பாத்ர சிஷ்டேதரேஷ்வ ஸூலபம் மம தேசிகா நாம்
தே யாத தயா நிதி ரமாசக பாத யுக்ம ருக்மாதி பாவந வி ஸூத்த ஸமஸ்த போதம்
ஜெயது வகுளதாரீ தேசிகோ தேசிகா நாம் ஜெயது யதி வரார்யோ மாயி மத்தேப சிம்ஹா
ஜெயது கலி ஜீதார்யோ வ்யாஸ சம்ஜ்ஜோ விபஸித் ஜெயது ஜெயது நித்யம் வேங்கடாசார்ய யுக்மம்

இதி-ஸ்ரீ மத் வாதூல குல திலகயோ காஞ்சீயதீசஜநீ பூமி க்ருதாவதாரயோ
ஸ்ரீ மத் வேங்கட தேசிகயோ அஹேதுக க்ருபாலப்தோபய வேதாந்த ஹ்ருதயேந ஸ்ரீ காஞ்சீ வர வர யோகிநா
ஸ்ரீ ராமாநுஜா தாஸேந விலிகிதம் சாரீரக த்ரமிடோபநிஷதைக கண்ட்யம் –

———————–

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி – ஓர் அறிமுகம்–ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்–

February 27, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள்.

இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

(1) கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது (கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை. இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி * (8-2-11) என்றார் ஆழ்வாரும்.

(2) இனி * கோதிலவாம்* என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி.

120188497.0p9mnWFF

நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.  இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகார்கள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள்.

இப்படியிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக்கடவார் ஒருவருமில்லை. இவற்றையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான். * ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது!

பகவான் இவ்வாழ்வாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளியதால் தத்வங்களை விசதமாக அறிந்தார் நம்மாழ்வார். இனி மற்றைய ஆழ்வார்களும் இதே போன்றுதான் அருளப்பட்டார்கள் என்பதனால்,  அவர்களிடம் இருந்து வ்யாவ்ருத்தி தோற்ற இவரது சீர்மையை அருளிச்செய்கிறார் அடுத்த வரியினால்.

அப்படிப்பட்ட ஆழ்வார்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்றபடி!

பூதம் ஸரஸ்ச்ச * என்கிற தனியனாது அருளிச்செயல் ஸேவிக்கும் காலங்களில் முன்னே ஓதப்பட்டு வரப்படுகிறது. இதன் ஸாராம்ஸமாவது => ஏனைய ஆழ்வார்களும் எம்பெருமானாரும் நம்மாழ்வாருக்கு அவயவ பூதர்கள் என்பதாகும்.

தம்படி தாமுமறியார் => ஏதேனும் ஒரு ஸாதனைத்தை அனுஷ்டித்து வைத்து அதனால் பலிக்கப் பெற்றது இல்லாமையினாலே தம்முடைய பெருமையினைத் தாமும் அறியார் ! எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் ஆயிற்று இவ்வாழ்வார்க்கு வந்த நன்மைகள் யாவும்.

ஸம்ஸாரிகளுமறியார்கள் => இவரைப் போன்று ஒரு வ்யக்தி ஸம்ஸாரத்தில் காணமாட்டாமையினாலே ஸம்ஸாரிகளும் இவரது ப்ரபாவத்தினை அறியார்கள்

ஸர்வேஶ்வரனும் அறியான் => தன்னுடைய க்ருஷிபலங்களும் திருக்குணங்களும் இவரிடத்தில் பலித்தது போல் வேறொருவரிடம் பலிக்காமையினாலே எம்பெருமானும் அறியான்.

ஸம்ஸாரிகளைக் காட்டில் ஆழ்வார் பெருமை படைத்தவர் என்று ஒப்புக் கொண்டாலும், நித்யஸூரிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தர் என்று சொல்லலாமோ என்னில் – * விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் வ்யாவ்ருத்தரே !

யாவர்நிகர் அகல்வானத்தே (4-5-8) => எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் , என்று ஆழ்வாரும் தம்மைப் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவரது புகழ்.

வேதம் தமிழ் செய்த மாறன்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு * வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமம். அவரது வாழித் திருநாமத்தில் * வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே * என்றே ஓதிவரப்படுகின்றது.

ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலையினில் ஆழ்வாரை * வேதம் தமிழ் செய்த மாறன் * என்று கொண்டாடுகிறார்.

அதாவது தன்னை அதிகரிக்கைக்கு (கற்கைக்கு) அநேகமான அதிகாரங்களை உடைத்தாய் இருத்தல்,

த்ரைகுண்ய விஷயமாயிருத்தல் (முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்காயிருத்தல்)

அன்றிக்கே, ஸர்வரும் அதிகரிக்கும்படியாகவும், உத்தரபாகத்தின் அர்த்தத்தை மாத்திரம் ப்ரதிபாதிக்கும்படியாய் இருப்பது ஆயிற்று இவ்வாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி.

இப்படி அருளிச்செய்யுமிடத்து இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள். ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम् * – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு அது தன்னையே பிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !

இதனை அமுதனாரும் * எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * என்றருளினார்.

எய்தற்கு அரிய மறைகள் – அடைவதற்கு அரிதாய் உள்ள மறைகள். தன்னுள்ளே கொண்டுள்ள அர்த்தங்களை மறைப்பதினால் மறை ஆயிற்று.

இதன் அர்த்தங்களை அறிவதற்கு ந்யாய ஸஞ்சாரம் பண்ணும் மஹரிஷிகளே அர்ஹர்கள். மற்றையோர்களுக்கு அது கைகூடாது என்றபடி.

இதனை அதிகரிக்கவும் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம், மீமாம்ஸா இவற்றின் உதவி வேண்டும்.

வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே * (2) என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரமும் அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இதனை விவரிக்கின்றன. மேலும் * அநந்தா வை வேதா: * என்று வேதங்களை முழுவதுமாக அதிகரிப்பதும் இயலாத காரியம்.

ஆயிரம் இன்தமிழால் – இனி ஸ்ரீசடகோப வாங்மயமான திருவாய்மொழி எய்தற்கரியதாய் இல்லாதல் சொல்லப்பட்டது.

ஆயிரம் – என்பதினால் திருவாய்மொழியின் அளவுபட்டமையும்,

இன்தமிழால் – என்பதினால் அனைவரும் அதிகரிக்கலாம்படியும், அதுவும் இன்தமிழாகையினாலே எய்தற்கு எளியதாய் இருக்கிறது.

யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா * [ யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.

ஆழ்வார் தமரே கேசவன் தமராகி தேஜஸ் மிக்கு -எழும் பிறப்புக்களிலும் -தாஸ்ய பூதராக இருப்பார்கள்

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்-மாசரிது பெற்று – அத்தாலே -நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் – என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ஸ்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின் அனுவாதமான கேசவனால் என்கிற இப் பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு -விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது -என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
ஏற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்-அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு-
மதுரகவி ப்ரக்ருதிகள் என்றுமாம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜர் உத்தாரகர் என்கிறார் ஆயிற்று என்றுமாம்

———————————

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள்.

அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.

இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய், போக்யமுமாய், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய், ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய், ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் – எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே, * மாற்றங்களாய்ந்து கொண்டு * (6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் * என்கிறார்.

அதாவது திருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம்.  * தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள் *.

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர்.

தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் முதலிலேயே (1–5–11) என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.

” இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும்.

இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே * என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. * அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும், வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் * தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே * என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் * என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.* (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி.

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம். உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் *….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் * அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா * என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள  பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

  • நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
  • ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
  • கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
  • நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கணவளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)

அர்ச்சாவதாரம்

 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவனான பேயாழ்வார்,

அர்ச்சாவதாரத்தைப் பற்றுகையே சுலபமானதும், நாம் உய்வதற்கும் வழியாகும் என்பதனை,

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

என்கிற பாசுரத்தினால் நமக்கு உணர்த்தினார். அதாவது மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், பஞ்சாக்நி நடுவில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட உடலை வருத்தித் தவம்புரிவது பாவங்கள் தொலைந்து நற்கதி அடையவேண்டும் என்பதனாலே. அவ்வாறு வருந்தவேண்டா! திருவெஃகாவில் உள்ள ஸ்வாமியின் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராய்ப் புஷ்பங்களைப் ஸமர்ப்பித்து ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

————-

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம். வேதத்தினால் அறியப்படுபவன் எம்பெருமான். *சுடர் மிகு சுருதியுள் உளன்* என்று இதனை அருளினார்

நம்மாழ்வார். * ஶ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே * என்றார் எம்பெருமானார். அப்படி வேதத்தினால் அறியப்படுபவனான எம்பெருமான் தசரதனுக்குக் குமாரனாக திருவவதரித்த போது, வேதமும் வால்மீகி முனிவரிடம் இருந்து ஸ்ரீராமாயணமாகத் தோன்றிற்று.

இதனை * வேத வேத்ய ந்யாயம் * என்று உரைப்பர்கள் பூர்வர்கள்.

இந்த ந்யாயத்தாலே நோக்கினால், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கு நோக்கு அர்ச்சாவதாரம் என்னலாம்படியிருக்கும்.

நித்ய முக்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலை பரமபதம்.

க்ஷீராப்தியில் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அபயம் கொடுத்துக் கொண்டு இருப்பவன் எம்பெருமான்.

ராமக்ருஷ்ணாதி அவதாரங்களோ குறிப்பிட்ட தேசகாலத்தவர்களுக்காய் இருக்கும்.

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே * என்று ஆச்ரிதர்கள் விரும்பிய திருமேனியையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஸர்வஸுலபனாய் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமானை ப்ரதிபாதிப்பது, ஸுலபமான ஆழ்வாருடைய திருவாய்மொழியே.

இதனுடைய ஸுலபத்வமும் கீழேயே சொல்லப்பட்டது.

thirucherai-nammazhwar-thiruvadi-thozhal-2013-27

ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது *செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)

என்று ஸங்க்ரஹித்தார்.  இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் * என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி. இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். * ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * …. * இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்-ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்-இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி–நியமங்களை யுடைத்தாய் பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸூலபத்தாலே ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –
நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை ஸ்ரீ பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் ஸ்ரீ பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம் இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது-சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஸ்ரீ ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

—————–

வ்யாக்யானங்கள்

ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அவதரித்த வ்யாக்யானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். ஸ்ரீ அபயப்ரதராஜர் எனப்படும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையே அனைத்து திவ்யப்ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

* மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில * என்று மாமுனிகள் குறிப்பிடும்படி ஸ்வாமி பிள்ளை லோகாசார்யருக்குத் திருத்தம்பியாரான ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் சில அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

இவ்வ்யாக்யானங்கள் திவ்ய ப்ரபந்தங்களின் ஆழ்ந்த பொருள்களையும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் திருவுள்ளத்தை ப்ரதிபாதிப்பதாயும் இருக்கும்.

இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய உபதேச இரத்தினமாலையிலே * பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை மணவாளயோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளரென்று நெஞ்சே கூறு * என்ற பாசுரத்திலே அருளிச்செய்தார்.

—————————

திருவாய்மொழியைக் காத்த * என்றருளினார். இத்தால் ப்ரமாண ஶ்ரேஷ்டமான திருவாய்மொழிக்கு அபார்த்தங்கள் வாராமல் காத்தருளிய குணவாளர்கள் இவர்கள் என்று திருவுள்ளம் பற்றியருளினாராயிற்று.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் 5 வ்யாக்யானங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் ஏற்றம் விளங்கும்.

இன்பமிகும் ஆறாயிரம் * என்று முதல் வ்யாக்யானம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸங்கையையிலே (எண்ணிக்கையிலே) * தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளானாலே * அருளிச் செய்யப்பட்டது.

ஏர் ஒன்பதினாயிரம் * என்று * வேதாந்தி நஞ்சீயரால் * திருவாய்மொழிக்கு அதன் அர்த்த கௌரவம் தோற்ற அருளிச்செய்யப்பட்டது. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்யையிலே இருக்கும் இதன் எண்ணிக்கை. * மாயவாதியர் தான் அஞ்சப் பிறந்தவன் சீமாதவனான * வேதாந்தியன்றோ இவர்!

இன்பா வரு பத்தி மாறன் * – இன்பமாக வருகிற கடாக்ஷத்தாலே வந்த பக்தியையுடைய மாறனின் மறைப்பொருளச் * இருபத்திநாலாயிரமாகச் * சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் தாமும் ஸ்ரீராமாயணத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது ஸுப்ரஸித்தம். அதனாலேயே * ராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் * என்ற சாயையிலே பாசுரம் அமைத்தார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.

ஶ்ருதப்ரகாஶிகா ஸங்க்யையிலே * வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை * யினாலே ஏடுபடுத்தப்பட்டது * ஈடு முப்பதாறாயிரம் *. இதுவும் கேட்ட அர்த்தத்தை ப்ரகாஶப்படுத்தப்பட்டது தான்! இது தானும் * இந்த நாடறிய * என்று ஸர்வரும் கொண்டாடும்படி * தெள்ளியதா நம்பிள்ளை * யினால் அருளிச்செய்யப்பட்டது.

அடுத்தது * பன்னீராயிரமாக * அழகிய மணவாளச் சீயரால் அருளிச் செய்யப்பட்டது. * இத்தை யொழிய நாலு வ்யாக்யாநம் உண்டானாலும் ஶப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தை கொண்டே ஸாதிக்கவேண்டுமிறே * என்று இதன் ஏற்றம் ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயரால் அருளப்பட்டது. * த்ரமிடோபநிஷத் ஸங்கதியும் * இவராலேயே அருளிச்செய்ய்யப்பட்டது.

எப்படி வேதஶிரோபாகமான உபநிஷத்துக்களுக்கு வ்யாஸ பகவானால் ஸூத்ரங்களாக அர்த்தம் நிர்ணயிக்கப் பட்டதோ அதே போன்று ஸ்வாமி அழகிய மணவாள்ப் பெருமாள் நாயனாரால் * ஆசார்ய ஹ்ருதயத்தில் * திருவாய்மொழியின் அர்த்தங்கள் ஸூத்ர ரூபங்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளன.

ஸ்வாமி வேதாந்தாசார்யரால் * த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும் த்ரமிடோபநிஷத் ஸாரமும் * ஶ்லோக ரூபங்களாக திருவாய்மொழியின் அர்த்தங்களைப் ப்ரதிபாதிப்பதாக அனுக்ரஹிக்கப்பட்டன.

ஸ்ரீமத் வரவரமுனிகளால் * திருவாய்மொழி நூற்றந்தாதி * ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஸாரமாக இன்பம் பயக்கும்படி * சொல்லும் பொருளுமாகத் * தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தனை வ்யாக்யானங்கள் மற்றும் பூர்வர்கள் க்ருதியினாலேயே இத்திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

பெண் பேச்சு

91009763.m2ijMhV6.Parangusa_nayaki_thirukkolam

திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய பேச்சாக மட்டும் இன்றி * பெண் பேச்சு * ஆகக் கூறியுள்ளதும் பாசுரங்கள் உள.

வடமொழி மறையான வேதத்தின் ப்ரதம ப்ரவர்த்தகனான ப்ரஹ்மாவிற்கு நான்குமுகங்கள். * யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் .. * என்று ஸ்ருஷ்டியில் எம்பெருமான் முதலில் பிரமனுக்கே வேதத்தை ஓதிவைத்தருளினான்.

கல்பந்தோறும் மாறாமல் வரும் திருவாய்மொழியினை நம்மாழ்வாரைக் கொண்டு ப்ரவர்ப்பித்து அருளினான்.

இவருக்கும் நான்கு முகங்கள் என்னலாம்படி இருக்கும்!

  1. தாமான தன்மையில் பாடியருள்வது.
  2. தலைவிப் பேச்சாகப் பாடியருள்வது.
  3. தோழி முகத்தினால் பாடியருள்வது.
  4. அன்னை முகத்தினால் பாடியருள்வது

இப்படி பெண்பேச்சு ப்ரேம தஶையிலே என்பதை * ஜ்ஞானத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண்பேச்சு * (118) என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவர் இப்படிப் பெண்கள் நிலைமை அடைவதன் காரணமானது எம்பெருமானின் * அப்ராக்ருத விக்ரஹமே * ஆகும்.

அதுவே இவருடைய ஆண்தன்மையை அழித்து பெண்கள் பாவனையினை ஏறிட்டுக் கொள்ளும்படி செய்யும். பெருமாளைக் குறித்து

ஆடவரும் பெண்மையினை அவாவுறும் தோளினாய் * என்றார் கம்பநாட்டாழ்வார். பெருமாளை ஸேவித்த மாத்ரத்தில் ஆடவர்களும் கூட ஸ்த்ரீத்வத்தை ஆசைப்பட்டார்களாம்!

அதே போன்று இவ்வாழ்வார் ஈடுபட்ட திருமேனியானது * குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு * (5-5-10) என்றன்றோ இருப்பது.

திரள் திரளாக நித்தியசூரிகள் கைகோத்துக்கொண்டு இழியும்படி – சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-* தேஜஸாம் ராஶிம் ஊர்ஜிதம் * (ஸ்ரீ விஷ்ணு புராணம்) [ பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது, அந்த ப்ரஹ்மாதி தேவர்கள், திருச்சங்கு திருவாழி கதை முதலான திவ்யாயுதங்களை தரித்திருப்பவனும், இதுவரை காணப்படாத ரூபஸந்நிவேஶத்துடனும் தேஜஸ்ஸுக்களுடைய (ஒளிக்கற்றைகளின்) ஸமூஹமாயிருக்கிற அந்த விஷ்ணுவைக் கண்டார்கள் ]என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது.

இந்த ஸ்த்ரீத்வமும் வந்தேறியா? (இயல்பாக இல்லாததா?) என்னில், அது வந்தேறியன்று. எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள் தான்! இதனை விஶதமாக * வித்யை தாயாகப் பெற்று * (121) என்கிற ஆசார்ய ஹ்ருத்ய சூர்ணிகையினாலே. தாய்ப் பேச்சாக, தோழிப் பேச்சாகப் பேசுவது எதனால் எனில்,

தோழி – நாயகன் மற்றும் நாயகிகளை சேர்ப்பவள் – ஆழ்வாருக்கு ஸம்பந்த ஜ்ஞானம் தலையெடுக்கும் அவஸ்தையிலே தோழிப் பாசுரம்.

தாய் – நாயகி படிகடந்து செல்லக் கூடாது என்று உரைப்பள் ஆகையினால் – ஆழ்வாருக்கு உபாய அத்யவஸாயம் (எம்பெருமான் தன்னை வந்து ரக்ஷிப்பன்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தாய்ப் பாசுரம்.

நாயகி – நாயகனோடு கூடி இருக்க ஆசைப்படுபவள் ஆதலின் – ஆழ்வாருக்கு எம்பெருமானை கிட்டி அனுபவித்தல்லது தரியாமை (இதனை ப்ராப்யத்வரை என்பர் ஆசார்யர்கள்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தலைவி பாசுரம்

இம்மூன்று அவஸ்தைகளும் முறையே திருமந்த்ரத்தில் உள்ள பதத்ரயங்களின் ப்ரதிபாத்ய விஷயம் – ஆசார்யமுகேந அதிகரிக்க வேண்டுவது. இவை அனைத்தும் * ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி * (133) * ஸகி வெறிவிலக்கி * (134) என்கிற இரண்டு ஆசார்ய ஹ்ருத்ய ஸூர்ணிகைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

உபதேசப் பத்து

திருவாய்மொழி ஒவ்வொரு 100 பாசுரங்களிலும் 10 பாசுரங்கள் பிறர்க்கு உபதேசம் பண்ணும் திருவாய்மொழிகளாக ஆயிற்று. அதாவது ஒவ்வொரு பத்திலும் ஒரு திருவாய்மொழி முழுமையும் உபதேச பரமாக ஆயிற்று. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் * பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து * (216) என்ற ஸுர்ணிகையில் அருளினார்.  அவையாவன

  1. முதல் பத்தில் * வீடுமுன் முற்றவும் * (1-2) [பகவத் பக்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோள் என்று உபதேசம்]
  2. இரண்டாம் பத்தில் * கிளர் ஒளி இளமை *  (2-10) [எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தத்தைப் பெறும் பொருட்டுத் திருமாலிருஞ்சோலையை ஆச்ரயிக்கும்படி பிறர்க்கு உபதேசித்தல் ]
  3. மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதம் * (3-8) [மன்னா மனிசரைப் பாடாமல் பரமனைப் பாடித் துதிக்கும்படி புலவர்க்கு உபதேசித்தல் ]
  4. நான்காம் பத்தில் * ஒன்றும் தேவும் * (4-10) [ ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகையால் மற்ற தெய்வங்களை விட்டு அவனையே பற்றுங்கள் என்று உபதேசித்தல் ]
  5. ஐந்தாம் பத்தில் * பொலிக பொலிக * (5-2) [ஸ்ரீவைஷண்வர்கள் திரளைக்கண்டு வாழ்த்தி, அல்லாதாரை உபதேசித்துத் திருத்துதல்]
  6. ஆறாம் பத்தில் *நல்குரவும் செல்வமும் * (6-3) [ ப்ரணயகலஹத்தில் முரண்பட்ட தம்மை வசீகரித்தவன் விருத்த விபூதி ஐச்வர்யம் , அதாவது முரண்பட்டது அனைத்தையும் செல்வமாகக் கொண்டு திருவிண்ணகரில் உறைபவன் – அவனது * கழல்களன்றி மற்றோர்களைகணிலம் * * வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும்வன்சரணே  ]
  7. ஏழாம் பத்தில் * இன்பம் பயக்க * (7-10) [ இன்பக்கவி பாடுவித்த ஸ்ரீமந்நாராயணனை – உள்ளித் தொழுமின் தொண்டீர் – தீவினை உள்ளத்தின் சார்வல்லவே என்று உபதேசம் ]
  8. எட்டாம் பத்தில் * எல்லியும் காலையும் * (8-6) [ ஆழ்வாரது பெருவிடாய் தீரக் கலக்கக் கருதி திருக்கடித்தானத்தில் இருக்கும் எம்பெருமானை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடரே என உபதேசம்.]
  9. ஒன்பதாம் பத்தில் * மாலை நண்ணி * (9-10) [ நீர் விரும்பியவை யாவும் உமது இவ்வுடம்பு முடியும் பொழுது தருவேன் என்று ஆழ்வார்க்கு எம்பெருமான் அருள, அவர் உவந்து, திருக்கண்ணபுரத்திலே சென்று அவனைச் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் ]
  10. பத்தாம் பத்தில் * கண்ணன் கழலிணை * (10-5) [ ஆழ்வார் எம்பெருமானிடத்து பக்தியுடையார் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் சுருங்கச்சொல்லி, பரோபதேசத்தை நிறைவுபடுத்தல் ]

இந்த உபதேசப் பத்தும் அந்த நூறு பாசுரங்களுக்கு, பாட்டுக்கு க்ரியா பதம் போல ப்ரதானம் என்று. இந்த உபதேசமும் அந்த நூறு பாசுரங்களின் தாத்பர்யத்தை ஒட்டியும் இருக்கும்.

தூது

இத்திருவாய்மொழியில் எம்பெருமானைக் குறித்துத் தூது விடும் பதிகங்கள் 4. அவற்றில் தூது விடுவதற்குப் பக்ஷிகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஸ்வாபதேஶத்தால் அவை ஆசார்யர்களையே குறிக்கும். இவ்விஷயம் ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தூது பதிகங்களின் தாத்பர்யத்தினையும் * தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வத்வ்ய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் * (156) என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி தூது விடப்படும் பதிகங்கள் அஞ்சிறைய மடநாராய் (1-4), வைகல் பூங்கழிவாய் (6-1), பொன்னுலகாளீரோ (6-8) எங்கானலகங்கழிவாய் (9- ) ஆகும். இவற்றுள்

  1. அஞ்சிறைய மட நாராய் – *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் * என்று வ்யூஹ நிலையில், *என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு * என்று அபராதங்களைப் பொறுக்கும் தன்மை பற்றாசாகத் தூது;
  2. வைகல் பூங்கழிவாய் – *மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த * என்று விபவத்தில், *புணர்த்த பூந்தண்துழாய் முடி * என்று ஆர்த்தர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று தீக்ஷையுடைமையைப் பற்றாசாகக் கொண்டு தூது;
  3. பொன்னுலகு ஆளீரோ – * வானவர் கோனைக் கண்டு * என்று பரத்வத்திலும், * எங்குச் சென்றாகிலும் கண்டு * என்று அந்தர்யாமித்வத்திலும் தூது;
  4. எங்கானலகங்கழிவாய் – * திருமூழிக்களத்தார்க்கு * என்று அர்ச்சாவதாரத்திலே தூது

ஒவ்வொரு பத்திலும் வெளியிடப்படும் திருக்குணங்கள்

எம்பெருமானது திருக்குணங்களை விசதமாகக் காண்பிப்பது திருவாய்மொழியிறே! அமுதனார் முதல் பாசுரந்தன்னிலேயே * புகழ் மலிந்த பா மன்னு மாறன் * என்றாரிறே! * உயர்நலமுடையவன் * (1-1-1), * ஈறிலவண்புகழ் * (1-2-10) என்று உபக்ரமித்து (ஆரம்பித்து), * உலப்பில் கீர்த்தி * (6-101) என்று மத்யத்திலும் (நடுவிலும்) *சுடர்ஞான இன்பம் * (10-10-10) என்று முடிவிலும் திருக்குணங்களே அருளிச் செய்யப்பட்டிருக்கை காணத்தக்கது. * சீர்த்தொடை ஆயிரமிறே * திருவாய்மொழி

எம்பெருமானுடைய தசாவதாரம் போன்று 10 பத்துக்கள் கொண்டதான திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்திலும் ஒரு திருக்குணம் ப்ராதான்யேன இருக்கும். அவையாவன

  1. முதல் பத்தில் – பரத்வம்
  2. இரண்டாம் பத்தில் – காரணத்வம்
  3. மூன்றாம் பத்தில் – வ்யாபகத்வம்
  4. நான்காம் பத்தில் – நியந்த்ருத்வம்
  5. ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம்
  6. ஆறாம் பத்தில் – சரண்யத்வம்
  7. ஏழாம் பத்தில் – சக்தத்வம்
  8. எட்டாம் பத்தில் – ஸத்யகாமத்வம்
  9. ஒன்பதாம் பத்தில் – ஆபத்ஸகத்வம்
  10. பத்தாம் பத்தில்  – ஆர்த்திஹரத்வம்

திருமந்த்ர ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருமந்த்ரமாவது மந்த்ர ராஜன் என்று அழைக்கப்படுவதாகும். முமுக்ஷுக்களுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்களிலே வைத்து முதலாவதாக இருப்பதாகும்.

இதில் உள்ள * பதத்ரயமும் – ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும், தத்ஸம்பந்தவிரோதியான ஸ்வஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாபல்யஹேதுபூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது. *, என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரால் பரந்தபடியில் அருளிச் செய்யப்பட்டது.

ஆதலால் திருமந்த்ரத்தால் அறியப்படுவது அர்த்த பஞ்சகம் ஆகும்.

திருவாய்மொழியினால் அறியப்படுவதும் அர்த்தபஞ்சகமாகும். இப்படி ப்ரதிபாத்ய விஷயங்கள் இரண்டினுக்கும் ஒன்றாய் இருக்கும்.

இன்னமும் * கண்கள் சிவந்து * (8-8) பதிகத்தில் முதலிரண்டு திருவாய்மொழிகள் வழியாக எம்பெருமானின் ப்ரஸ்தாவமாக அகாரார்த்தமும், பின்பு ஜீவ ஸ்வரூபம் சொல்லும் முகத்தாலே மகாரார்த்தமும், * கருமாணிக்க மலைமேல் * (8-9) பதிகந்தன்னில் * அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் * இத்யாதிப் பாசுரங்களால் உகாரார்த்தமும், * நெடுமாற்கடிமை செய்வேன்போல் * (8-10) பதிகத்தால் பாகவத சேஷத்வம் அறிவிக்கும் ப்ரகாரமாக நமப்பதார்த்தமும், * கொண்ட பெண்டிர் * (9-1) பதிகத்தால் எம்பெருமானை ஒழிந்தவர்கள் ஆபாஸ பந்துக்கள் என்று நாராயணார்த்தமும், * பண்டை நாளாலே * (9-2) பதிகத்தால் கைங்கர்ய ப்ரார்த்தனையான வ்ய்க்த சதுர்த்தியுமாக திருமந்த்ரம் ப்ரதிபாதிக்கப்பட்டது என்னவுமாம்.

த்வயார்த்த ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் விஷயம் த்வயம் என்னலாம்படியும் இருக்கும். இதனை ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் – * த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸார ஸங்க்ரஹத்திலே * என்று அருளிச் செய்தார். பகவானாகிய ஸர்வேஶ்வரன் தன்னுடைய கருணையினாலே சேதனர்க்கு ரஹஸ்யத்ரயங்களையும் ப்ரகாஶிப்பித்து அருளினான். அதன் அர்த்தங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு 18 ரஹஸ்யங்களாக அருளிச் செய்தார் ஸ்ரீ லோகதேஶிகன். அவற்றில் * ஸார ஸங்க்ரஹம் * என்பது ஒரு ரஹஸ்யம். அதனில் திருவாய்மொழியில் த்வயார்த்தம் சொல்லப்படுகிறது என அழகாகக் காட்டியருளியுள்ளார்.

  • ஶ்ரிய:பதித்வம்
  • நாராயணத்வம்
  • ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான அவனுடைய சரணாரவிந்தயுகளத்வம்
  • அதினுடைய ப்ராபகத்வம்
  • சேதனனுடைய பற்றுதல்
  • லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம்
  • ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம்
  • ஸர்வஸ்வாமித்வம்
  • நித்யகைங்கர்யத்வம்
  • கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதலும்

ஆகிய இப்பத்து விஷயங்களே திருவாய்மொழிக்கும் த்வயத்திற்க்கும் நோக்கு!

ஶ்ரிய:பதித்வம் தெரிவிக்கப்பட்டது, * மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் * (1-3-1) – தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிமடாக உடைய பிராட்டி அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்; * மலராள் மைந்தன் *(1-5-9) திருமகள் கொழுநன்; * திருமகனார் தனிகேள்வன் * (1-6-9) தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக்கேள்வன் ; * திருவின்மணாளன் * (1-9-1) பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்; * பூமகளார் தனி கேள்வன் * (1-9-4) பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்; * மலராள்மணவாளனை * (1-10-4) திருமகள் நாதனுமான எம்பெருமானை ஆகிய பாசுரங்களால்.

நாராயணத்வம் தெரிவிக்கப்பட்டது * எம்பெருமான்நாரணற்கு * (2-1-7) எனக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு; * எம்பிரானெம்மான்நாராயணனாலே * (2-7-1) வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே ; * நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன் * (2-7-2) எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் ஆகிய பாசுரங்களால்

எம்பெருமானுடைய ஸர்வலோக ஶரண்யமான திருவடித்தாமரைகள் சொல்லப்பட்டது * நாண்மலராமடித்தாமரை * (3-3-9); * அங்கதிர் அடியன் * (3-4-3) அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளையுடையவன்; * அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் * (3-6-9) அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய பெருமானாயுமிருக்கின்ற க்ருஷ்ணனுடைய திருவடிகளை; * சீர் அடியானே * (3-8-1) சிறப்புள்ள திருவடிகளையுடையவனே ஆகிய பாசுரங்களால்

அதினுடைய ப்ராபகத்வம் சொல்லப்பட்டது * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் * (4-2-8) இலங்காபுரியில் அம்புகளில் இருந்து கிளம்பும் அக்னியை செலுத்தின இராமபிரானுடைய; * வல்வினை தீர்க்கும் கண்ணனை * (4-4-11) ஸகல பாபங்களையும் போக்குமியல்வினனான க்ருஷ்ணனை ; * வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. * (4-5-2) கொடிய க்லேசங்கள் அனைத்தும் நசிக்கும்படியாக; * மேவி நின்று தொழுவார் வினைபோக * (4-5-4) நெஞ்சு பொருந்தியிருந்து அனுபவிப்பாருடைய பாபங்கள் யாவும் நசிக்கும்படி; * வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் * (4-9-9) விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து ஆகிய பாசுரங்களால்

சேதனனுடைய பற்றுதல் சொல்லப்பட்டது * தமியேனுனக்கு அருளாய் * (5-7-2) இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருள்புரியவேணும்; * ஆறெனக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * (5-7-10); * உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறைவேண்டேன் * (5-8-3) “என்னான் செய்கேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி ; * கழல்கள் அவையே சரணாக் கொண்ட * (5-8-11) திருவடிகளையே சரணமாகப்பற்றின; * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் * (5-9-11) சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று ஆகிய பாசுரங்களால்

லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம் சொல்லப்பட்டது * திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து * (6-5-8) * அடிமை செய்வார் திருமாலுக்கே * (6-5-11) * ஒசிந்த வொண்மலராள்கொழுநன் * (6-7-8) * என்திருமார்வற்கு * (6-8-10); * கோலத் திருமாமகளோடு * (6-9-3) ஆகிய பாசுரங்களால்

ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம் சொல்லப்பட்டது * கன்னலே அமுதே * (7-1-2) பரமபோக்யனே!; * கொடியேன் பருகின்னமுதே * (7-1-7) பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!; * அலைகடல் கடைந்தவாரமுதே * (7-2-5) அலையெறிகின்றகடலைக் கடைந்த ஆராவமுதமே!; * திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ * (7-9-9) பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு அநுபவித்தாலும் ஆரமாட்டேன் ஆகிய பாசுரங்களால்

ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது – * அடியனேன் பெரியவம்மான் * (8-1-3) * விண்ணவர்கோன் நங்கள்கோன் * (8-2-2) * அமர்ந்த நாதனை * (8-4-10) * மூவுலகாளி * (8-9-5) ஆகிய பாசுரங்களால்

நித்யகைங்கர்யத்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது  * பண்டைநாளாலே நின் திருவருளும் * (9-2-1) * குற்றேவல் செய்து * (9-2-2) * கொடுவினையேனும் பிடிக்க * (9-2-3) * ஆட்கொள்வானொத்து * ( 9-6-7) * அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் * (9-8-4) ஆகிய பாசுரங்களால்

கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதல் ப்ரதிபாதிக்கப்பட்டது   * துயர் கெடுங்கடிது * (10-1-7) * எழுமையும் ஏதஞ்சாரா * (10-2-2) * அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் * (10-8-7)  ஆகிய பாசுரங்களால்

ப்ரபந்தைகார்த்யம்

திருவாய்மொழி ஆயிரத்திற்கும் ப்ரமேயமாக * அவித்யா நிவர்த்தக * (234) என்கிற சூர்ணிகையில் ஆசார்ய ஹ்ருதய கர்த்தாவான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸங்க்ரஹிக்கும் அர்த்தமாவது – ஸம்ஸாரத்திற்குக் காரணமான அஜ்ஞானத்தைப் போக்குவிப்பதான ஜ்ஞானத்தை (* மயர்வற மதிநலம் அருளினன் * ) அருளிய பகவானது நிர்ஹேதுகமான அநுக்ரஹத்தாலே (*அவாவற்று வீடு பெற்ற * ) ஸம்ஸாரம் அகல எம்பெருமானின் கைங்கர்ய ரூபமான மோக்ஷம் லாபம் என்பதாகும்.

எந்த எம்பெருமானுடைய ப்ரஸாதத்தினால் ஜ்ஞானம் கிடைக்கிறதோ, அதே ப்ரஸாதமே மோக்ஷம் தனையும் அருளவல்லது – அது நிர்ஹேதுகம் என்றபடி

 

101183670_10157361177655893_5294547382829056000_o

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சன ஸ்தாபகரான -ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி அருளிய ஸந்த்யா வந்தன பாஷ்யம்‌–

February 26, 2023
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்த்த,ாம்‌  வா| 
ய: ஸ்மரேத்‌ புண்டரீகாகஷம்‌ ஸ பூாஹ்யாப்‌,யந்தர: ராசி: ॥ 
[இதன்‌ ~ பொருள்‌: பரிசுத்தனாயில்லாவிடிலும்‌, இருந்தாலும்‌, 
எந் திலையிலீருந்தாலும்‌, செந்தாமரைக் கண்ணணை நினைப்பவன்‌ 
உள்ளும்‌ புறமும்‌ சுத்தனாகிறான்‌. |
ஓம்‌ பூ ஓம்‌ புவ: ஓம்‌ न, ஓம்‌ மஹ:. 
ஓம்‌ ह, ஓம்‌ தப;:. ஓம்‌ ஸத்யம்‌ | 
ஓம்‌ தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ । ப;ர்க்கேோ தேவஸ்ய இமஹி। 
தி,யோ யோ एः ப்ரசோதஙஹாத்‌ || 
ஓம்‌ ஆப: ஜ்யோத ரஸ: அம்ருதம்‌ ப்‌,ரஹ்ம 
பூர்புவஸ்ஸுவரோம்‌ ॥ 


இது ப்ராணாயாமமந்திரம்‌. 'பூ4்‌ *புவ:"'.....'ஸத்யம்‌'என்பவை 

` ஏழு வ்யாஹ்ருதிகள்‌ எனப்படும்‌. ஓம்‌ பூ;:..ஓம்‌ ஸத்யம்‌” என்ற 
தால்‌, அந்த வ்யாஹருதிகளால்‌ சொல்லப்படுபவன்‌ ஒங்காரவாச்ய 
னான பகவானே என்று பொருளாகிறது. பூலோகம்‌ முதல்‌ ஸத்ய 
லோகம்வரை எல்லாம்‌ ஓங்கார வாச்யனான பகவானே; அதாவது, 


இவையனை த்துக்கும்‌ அவனே ஆத்மா என்று பொருள்‌, இனி. 
இதற்குமேல்‌ “தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ பரர்க்கேோே தே,வஸ்ய 
தீமஹி இ,யோ யோ ந: ப்ரசோதயாத்‌ ”” என்னும்‌ மந்திரப்பகுதி 
காயத்ரீமந்திரம்‌ எனப்படும்‌. அதன்‌ பதவுரை வருமாறு. 

1. ஸவிது-உல்கங்களை ஸ்ருஷ்டி த்தவனாகிய, தே,வஸ்ய- 
ஈாராயணனுடையவையும்‌. வரேண்யம்‌-எல்லாரா லும்‌ வரிக்‌ 
கத்தகுந்தவையுமர்ன, தத்‌ பர்க்க;- அந்தக்‌ கல்யராணகுணங்‌ 
களின்‌ ஸமூஹத்தை, தீமஹி-—தியானம்‌ செய்வோம்‌; ய: 
எந்த தேவன்‌, ந:-நம்முடைய. திய:-புத்திகளை, ப்ரசோத, 
யாத்‌-( தன்‌ விஜயமான உடபாளன கைங்கர்யங்களில்‌ ) 
ॐ चण : 

எ. தேவஸ்ய-ப்ரகாசம்‌ முதலிய குணங்களையுடைய, 
ஸவிது:- ஸூர்யனுக்குள்ளே எழுந்தருளியிருப்பவனும்‌, 
வரேண்யம்‌-எல்லாரா லும்‌ வரிக்கப்படுபவனும்‌, பர்க்க,:-ஜளி 
மயமான தஇிவ்யமங்கள விக்ரஹவீசிஷ்டனுமான பகவானை, 
தீமஹி- தியானம்‌ செய்கிறோம்‌. (மற்றவை முன்போல்‌) 


இனி, ''ஜமாப:”' என்று தொடங்கியுள்ள ப்ராணாயாமமந்திரப்‌ 
பகுதி காயத்ரீசிரஸ்‌ எனப்படும்‌. “அப்பு, ஜ்யோதி, ரஸம்‌, அம்ருதம்‌, 
ப்ரஹ்ம, பூட்‌, புவ:, ஸுவ!” என்று சொல்லப்படுபவன்‌ ஓங்கார 
வாச்யனான பகவானே” என்று பொருள்‌. ஆக, இம்மூன்று பகுதியும்‌ 
சேர்ந்தது ப்ராணாயாம மந்திரமாகும்‌, இதை வலதுகைப்‌ பெருவிர 
லாலும்‌ மோதிரவிரலாலும்‌ மூக்கைப்பிடித்துக்கொண்டு (பூரக கும்‌ பக 
ரேசகங்களுடன்‌)உச்சரிப்பது ப்ராணாயாமமாகும்‌. ஸந்த்யாவந்தனத்‌ 
தின்‌ தொடக்கத்தில்‌ “அபவித்ர:' என்னும்‌ மந்திரத்தை அநுஸந்‌ 
திந்து, ஓருதடவை ஆசமநமும்‌, ஒருதடவை ப்ராணாயாமமும்‌ 
செய்துவிட்டு, பின்வருமாறு ஸங்கல்பிக்‌ கவேண்டும்ஈ:- 

* ஸந்த்யாவந்தனத்தின்‌ தொடக்கத்தில்‌ ஆசமனம்‌ ஆனபிறகு 
சிலரும்‌, ப்ராணாயாமத்‌தற்குப்பின்‌ ஸங்கல்பீத்தன்‌ தோடக்கத்தில்‌ 
சிலரும்‌ அனுஸந்திக்கும்‌ ச்லோகங்கள்‌; 

८०० क 10119765 ,7 0 விஷ்ணும்‌ மாமபிவர்ணம்‌ சதுர்பு,ஜம்‌ | 
ப்ரஸந்கவத,நம்‌ த்யாயேத்‌ ஸர்வவிக்‌,நோபமராந்தயே || 

யஸ்ய த்‌,விரத,வக்த்ராத்யா: பாரிஷத்‌,யா: பரங்மதம்‌ ॥ 
விக்‌,நம்‌ நிக்‌,நந்தி ஸததம்‌ விஷ்வக்ஸேகம்‌ தமாங்ரயே || 
ஓம்‌ ஸ்ரீஅச்யுதாய நம:, ஓம்‌ ஸ்ரீ அநந்தாய நம:, ஓம்‌ ஸ்ரீகேோவிந் 
தாய நம:, ஸ்ரீப,க,வத;ாஜ்ஞயா ப, கவத்கைங்கர்யம்‌ ப்ராத: ஸந்த்யா 
முபாஸிஷ்யே. ( அல்லது ப்ராத: ஸீந்த்யாவந்த;நம்‌ கரிஷ்யே ) 
என்று காலையிலும்‌, *“'ப்ராத: ஸந்த்யாமுபாஸிஷ்யே '' என்ற 
ஸ்தானத்தில்‌, ““ஸாயம்‌ ஸந்த்‌யாமுபாஸிஷ்யே'' (அல்லது “ஸாயம்‌ 
ஸந்த்‌யாவந்த;,நம்‌ கரிஸ்யே') என்று மாலையிலும்‌, १०८०0 54५07 580 
கம்‌ கரிஷ்யே” என்று மத்யாந்ஹத்திலும்‌ ஸங்கல்பிக்கவேண் டியது. 
*'பகவானுவடம ஆணையினால்‌, அவனுக்குக்‌ கைங்கரியமாயிருக்கும்‌ 
அந்தந்தக்‌ கர்மங்களைச்‌ செய்கிறேன்‌” என்று பொருள்‌. 


* எரா: ஜலாபிமந்த்ரண மந்த்ர: 
(முக்காலத்திலும்‌ அநுஸ ந்‌ திக்கவேண்டியது) . 
२. आपो वा इदं सवै । विश्वाभूतान्यापः। प्राणा वा आपः पशव 
आपः। ARTE: अन्नमापः। संराडापः। विराडापः। खराडापः। छन्दांस्यापः। 
ज्योतीष्यापः। सत्यमापः। स्वा देवता आपः। த்தா ओं॥ 


2. ஆபோ வா @550 ஸர்வம்‌। விங்வா பூ,தாந்யாப: 
ப்ராணா வா ஆப:। (५०० ஆப:। அம்ருதமாப: | அந்நமாப: 
ஸம்ராடளப: ! விராடப்‌: | ஸ்வராடளப:। சுந்தாம்ஸ்யாப: 
ஜ்யோதீம்ஷ்யாப:। ஸத்யமாப:। ஸர்வர தே,வாதர ஆப: 
பூர்பு,வஸ்ஸுவராப ஓம்‌ ॥ 


இம்மந்திரத்தால்‌ ஜலத்தை அபிமந்த்ரணம்‌ செய்து மூன்று 
காலங்களிலும்‌ ஏ श्रीकेरावाय ண: ஓம்‌ ஸ்ரீகேயவாய நம: என்று 
நெற்றியில்‌ அந்த ஜலத்தால்‌ ஊர்த்வபுண்ட்ரத்தை தரிப்பது. 


பதவுரை:-ஆபோ வா இத;ம்‌ ஸர்வம்‌-( உயிரற்ற) இவை 
எல்லாம்‌ அப்பு" [மீர்‌] எனப்படும்‌ பகவானே; விங்வா 


* இம்மந்திரம்‌ ஆபஸ்தம்பஸ 9த்ரஸ்தர்களுக்கு இல்லை, 


जा ஆப:-எல்லர உயிர்களும்‌ அவனே; ப்ராணா: வா ஆப:- 
முக்கிய ப்ராணனும்‌ அவனே; (10००1; ஆப:-ஸம்ஸாரி சேதா 
ரும்‌ அவனே: அம்ருதம்‌ ஆப: மோக்ஷஸாுகமும்‌ அவனே; 
அந்நம்‌ ஆப:- இவ்வுலக ஸுகமும்‌ அவனே; ஸம்ராட்‌ ஆப:- 
மிகவிளங்கும்‌ பரமபதமும்‌ அவனே; விராட்‌ ஆப:- இவ்வுலக 
மும்‌ அவனே; ஸ்வராட்‌ ஆப;-சுதந்திரனான முக்த புருஷனும்‌ 
அவனே; சூந்தளம்ஸி ஆப:-வேதங்களும்‌ அவனே; ஜ்யோ 
தீம்ஷி ஆப:-—எல்லாச்சோ திகளும்‌ அவனே; ஸத்யம்‌ ஆப 
உண்மையும்‌ அவனே; ஸர்வா: தேவதா: ஆப:-எல்லா 
தேவதைகளும்‌ அவனே; ஓம்‌ பூர்பு,வஸ்‌ ஸுவராப ஓம்‌ 
மூவுலகங்களும்‌ ஓங்காரப்பொருளான அவனே. 


कालतयेऽपि प्रथमतः पोक्चषणमन्त 
` முக்காலத்திலும்‌ முதலில்‌ ப்ரோக்ஷண மந்த்ரம்‌ 

[இதைச்சொல்லி நீரைத்‌ தலையில்‌ ப்ரோக்ஷித்துக்கொள்ள 

வேண்டியது. ] 

३, என்‌ றாகி ता न उ दधातन। महे 
रणाय चक्षसे। यो वः रिषतमो रसः। तस्य भाजयतेह नः। उद्ती- 
रिवि मातरः। तखा अरं गमाम वः। यस्य क्षेयाय जिन्वथ। आपो 
जनयथा चनः 


3. ஆபோ ஹி ஷ்டனள மயோபு,வ:| தா ௩ ஊர்ஜே ததா 
த௩ । மஹே ரணாய சகக்ஷ்ஸே। யோ வ: ஸிவதமோ ரஸ: ! தஸ்ய 
ப,ாஜபதேஹ ए. । உமுதீரிவ மாதர:। தஸ்மா அரங்கஹமாம வ:। 
யஸ்ய க்ஷயாய ஜிந்வத,। ஆபோ 2०५१8 ௪ ந: ॥ 


இம்மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, ஜலத்தை சிரஸ்‌ முதலான 
விடங்களில்‌ புரோக்ஷித்துக்கொண்டபீன்‌ ஒம்பூர்பு,வஸ்ஸுஃவ: என்று 
ஜலத்தாலே ஆஃ்ம ப்ரதக்ஷிணம்‌ செய்துகொள்ள வேண்டியது. 


பதவுரை: ஆப:-ஜஐலங்களே. மயோபு,வ: ஹி ஸ்த,; 
(அனைவருக்கும்‌) ஸுகத்கை அளிப்பவையாயன்றோே இருக்‌ 


கறீர்கள்‌; தா:அ௮ப்படிப்பட்ட நீங்கள்‌. न्न 
ஊர்ஜே-உறுதியானவனும்‌, மர பெியல்னும்‌, नक 
அழகியவனும்‌. சக்ஷஸே-( அனைவர்க்கும்‌), கண்ணாயிருப்பவ 
னுமான பரமபுருஷனுக்கு. தஃளதர--மமர்ட்பியுங்கள்‌: 
(சரணமாகஅடைவியுங்கள்‌ ) ய: வ: ஸிவ தம: ரஸ:- மிகமங்கள 
மான உங்களுடைய ரஸம்‌ (பக்தி) யாதொன்று 1 
தஸ்ய அந்த அன்பில்‌ ஒரு சிறிதையாவ து. இஹ இவ்வுல 
திலேயே. ௩:-எங்களுக்கு. உம௰த்‌: மாதர: இவ அன்பு நிரம்‌ 
பிய தரய்மார்போல உள்ள நீங்கள்‌, பாஜ அவை வரியும்‌ 
கள்‌: யஸ்ய-எந்த பகவானுக்கு, அயரய- இருப்பிட 
யிருக்‌ துகொண்டு, ஜிந்வத-பிரீதியை न 
தஸ்மை-அந்‌தபகவானை அடையும்பொருட்டு, வ: உங்களை, 
அரம்‌ கஹாம-மிகவும்‌ தியானிக்கிறோம்‌; ஆப: ஜலங்களே! 
ந: எங்களை, ஜூயத-௨யீர்ப்பியுங்கள்‌. 


प्रातः तीर्थप्रारानमन्वः-१ லையில்‌ $ 55117 णण மந்த்ரம்‌ 
(ஜலத்தைக்‌ கையில்‌ எடுத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரித்‌ 
துப்‌ பருகி வேண்டியது.) 

४, दथ मा मन्युश्च TI मन्युकतेभ्यः। पापेभ्यो 
रन्ता । शद्राज्या पापमकार्षम्‌ । मनसा वाचा हस्ताभ्यां | TRE 
 हिश्चा। ena af दुरितं मयि। इदमद माममृत- 
योनौ र्ये ज्योतिषि ஏ खाहा ॥ 


4, कणे ५७०७ மா 0004005 மந்யுபதயங்ச ம்ர்புகரு 
தேப்‌ய:। பாபேப்‌,யோ ரக்ஷந்தாம்‌ ! யதராத்ர்யா பாபமகார்ஷூம்‌ | 
மஸ லாசா ஹஸ்தாப்யாம்‌| 11904017 00556 जण्ण छण | 
ராத்ரிஸ்தத;வலும்பது। யத்கிஞ்ச துரிதம்‌ மயிஇதமஹம்‌ पी 
ருதயோநெள ஸூிர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ॥ 


பதஏுரை- ஸூர்ய: ௪-கூரியனும்‌, மர்யு: ச-இந்திரனும்‌, 


மந்யுபதம: ௪ இந்திரனைத்‌ தலைவனாகக்‌ கொண்ட மற்ற 
தேவர்களும்‌, மா- என்னை, மத்யுக்ருதேப்‌,ய:-கோபத்தினால்‌ 


செய்யப்பட்ட, பாபேப்‌,ய:-பாபங்களிலிருந்து, ரக்ஷந்தாம்‌- 
காப்பாற்றட்டும்‌; மநஸா-மனத்தினாலும்‌. வாசா வாக்கி 
லும்‌, ஹஸ்தார!.,யாம்‌-கைகளினாலும்‌, பத்‌,ப்‌,யாம்‌-கால்களி 
லும்‌, உதரேண்ஃ-வயிற்றினாலும்‌, ரிங்கா குறியீனாலும்‌. 
யத்‌ ராத்ர்யா பாபம்‌ அகரர்ஷம்‌- யாதொரு பாபத்தை ராத்ரி 
யில்‌ நான்‌ செய்தேனோ, யத்‌ ஞ்ச துளித்‌ மயி-(அத ற்கு 
முன்‌ ) என்னால்‌ செய்யப்பட்ட மற்றும்‌ யாவை லெ பாடங்க 
ளூண்டோ. தத்‌-அந்த எல்லாப்பாபத்தையும்‌, ராத்ரி: 
ராத்ரிக்கு நிர்வாஹகனான பகவான்‌ , அவலும்பது-போக்கடிக்‌ 
கட்டும்‌. இதம்‌ மாம்‌-— இந்த என்னை. அஹம்‌-நான்‌, அம்ருத 
யோரெள-மோக்ஷ்காரணமாய்‌. ஸூர்யேு-ஸர்வகாரணனாய்‌, 
ஜ்யோதிஷி சோ தியுருவான பகவானிடம்‌, ஜுஹோமி— 
ஹோமம்‌ செய்கிறேன்‌ (அத்ம ஸமர்ப்டணம்‌ செய்கிறேன்‌ ) 
ஸ்வாஹா-(அதற்காக) நன்கு அழைக்கிறேன்‌. 


EE तीर्थप्रारानमन्लः -1०5५17 ஹ்௩த்தில்‌ தீர்த்தப்ராமம௩ மந்த்ரம்‌ 


५. आपः पुनन्तु पृथिवीं । परथिवी पूता पुनातु मां । पुनन्तु 
ब्ह्मणस्पतिः। saga पुनातु मां। यदुच्छिष्टममोञ्य। यदा दुरित 
मम। सवै पुनन्तु मामापः। असतां च प्रतिग्रहं खाहा॥ 


5. ஆப: புநந்து ५0 89०0 | ப்ருதி,வீ பூதா புநாது மாம்‌ | 
புநந்து ப்‌,ஹ்மணஸ்பதி: | ப்‌ஏஹ்மபூதா புநாது மாம்‌।| யது,ச்‌ 
சி,ஷ்டமபேோஜ்யம்‌ | யத்‌,வா துண்சரிதம்‌ 000 | ஸர்வம்‌ புநந்து 
மாமாப:! அஸ்தாம்‌ ௪ ப்ரதிக்‌,ரஹம்‌ ஸ்வாஹா।॥ 


பதவுரை:-ஆப:- ஜலம்‌. ப்ருதி,வீம்‌-( பூ, கங்களாலான ) 
என்‌ தேஹத்தை, புநந்து-டரிசு ததப்படுத்தட்டும்‌; ப்ருதி,வீ- 
என்‌ தேஹம்‌, பூதர-பரிசுத்தமா, மாம்‌-என்னை, புகாது 
பரிசுத்தப்படுத்தட்டும்‌; (ஆப:)--ஜலம்‌. (மாம்‌)-என்னை. 
புகந்து-(நேரேயும்‌) பரிசுத்தப்படுத் ட்டும்‌. ப்ஏஹ்மணஸ்‌ 
பதி: வேதத்திற்கு (அல்லது ப்ரஹ்மாவிற்கு) ஸ்வாமியா 
யிருப்பவராய்‌. ப்ரஹ்ம பூதா-௮அவ்வேதத்தை (அல்லது 


ப்ரஹ்மாவை) பரீசுத்கப்படுத்துமவருமான பகவான்‌, மாம்‌ 


புகாது-என்னைப்‌ பரிசுக்தப்படுத்தட்டும்‌. அபோஜ்யம்‌ யத்‌' 


உச்சிஷ்டம்‌-புசிக்ககச்தகாத யாதொரு சேஷத்தை (மான்‌ 
புசித்தேனே). யத்‌ வா மம துண்சரிதம்‌- ५, கொரு கெட்ட 
காரியம்‌ என்னால்‌ செய்யப்பட்டதோ, அஸதாம்‌ ச ப்ரதிக்‌, 
ரஹம்‌-— ஜீயவர்களிடமிருந்து (அல்லது இயபொருள்களை ) 
நான்‌ வாங்கியது யாகொன்‌ றுண்டோ. ஸர்வம்‌-(முற்கூ றிய) 
அனைத்தினின்‌ றும்‌, மாம்‌ ஆப: புரந்து என்னை பகவான்‌ 
பரிசுத்தப்படுத்தட்டும்‌. 
 सायन्तन तीर्थप्राशानमन्वः-८णक्षणकीर தீர்த்தப்ராரரக மந்த்ரம்‌ 
६, अग्निश्च मा मन्यु मन्युपतयश्च WA पपिम्यो 
Teall यदहया पापमकार्षम्‌ | मनसा वाचां ERA | पद्धयायुदरेण 
शिश्चा। अहस्तदवटम्पतु यक्किश्च TRG मथि। इदमहं माममृतयोनौ 
सत्ये ज्योतिषि जुहोमि खादा। 


6. அக்‌நிங்ச மா 100५10०5 மந்யுபதயங்ச மர்யுக்ருதேப்‌,ய:। 
பாபேப்‌,யோ ரக்ஷந்தாம்‌ | யத;ந்ஹா பாபமகார்ஷம்‌ | மாஸா 
வாசா ஹஸ்தாப்‌,யாம்‌ | பத்‌,ப்‌,யாமுத,ரேண ஸிங்கா ! அஹஸ்‌ 
தத,வலும்பது। யத்‌ இஞ்ச துரிதம்‌ மயி இதமஹம்‌ மாம்‌ 
அம்ருதயோநெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா!।! 

பதவுரை-காலையில்‌ சொல்லும்‌ மந்திரத்தைப்போலவே; ए 
என்றால்‌ அக்‌ நிக்கு அந்தர்யாமியான பகவான்‌ என்றோ அக்‌,ரநயனம்‌ 
செய்பவன்‌ (நற்கதிக்கு அழைத்துச்செல்பவன்‌) ஆன பகவான்‌ 
என்றோ கொள்வது: அஹு-என்றது பகலுக்கு நிர்வாஹகனன 
பகவான்‌ என்றபடி. ` * ஸத்யே' என்றது உண்மைப்பொருளான 
பரமபுருஷனிடத்தில்‌ என்றபடி. மற்றவை முன்போல. 


पुनः पोक्षणमन्तलः-०.१५५.५] ப்ரோக்ஷண மந்த்ரம்‌ (முக்காலத்திலும்‌) 
७, दधिक्राग्ण्णो अकाषं இணி वाजिनः। सुरभि नो 
UTE | प्रण आथूषि तारिषत्‌ | आपो दि छा. ..आपो जनयथा च नः || 


7. த.திக்ராவ்ண்ணோ அகார்ஷம்‌ ஜிஜஷ்ணோரங்வஸ்ய 
வாஜிந:| ஸுரபி,நேோ முகளகரத்‌ ப்ரண ஆயூம்ஷி தாரிஷத்‌ | 
ஆபோ ஹிஷ்ட ஏ, ...... ஆபோ ®" ௪ ஈ:॥ 

८ 


பதவுரை: தத$ி,க்ராவ்ண்ண:— தயிருக்குத்‌ தன்னேக்‌ 
கொடுத்தவனாய்‌. வாஜிந:-மிகவும்‌ வேகமுடைய, அங்வஸ்ப- 
குதிரையுருக்கொண்ட கேசியை, ஜிஷ்னோ:-ஜயித்தவனான 
கண்ணனுக்கு, அகார்ஷம்‌-(ஆத்மஸமர்ப்பணம்‌) செய்தேன்‌; 
ந:-எங்களுடைய. முகம்‌ முகங்களை, ஸுஈரபி-ஈல்ல மண 
முள்ளதாக. கரத்‌-(அந்த பகவான்‌) செய்யட்டும்‌; 
௩:-எங்களுடைய. ஆயூம்ஷி-ஆயுஸ்ஸுக்களை. ப்ரதாரிஷத்‌- 
வளரச்செய்யட்டும்‌. இதற்குப்பின்‌ அதுஸந்திக்கும்‌ 
“ஆபோஹிஷ்ட;ா'' என்று தொடங்கும்‌ மந்திரத்தின்‌ 
பதவுரையை ப்ரதம்ப்ரோ கஷணமமர்திரத்தில்‌ காண்க. 


அர்க்யப்ரத,ா௩ம்‌ 

“ஓம்‌ தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌, பர்க்கேளே தே,வஸ்ய தீமஹி, 
தியோ யே ந: ப்ரசோதஃயாத்‌'' என்னும்‌ காயத்ரிமந்திரத்தைச்‌ 
சொல்லிக்கொண்டு சூரியனை நோக்கிக்கொண்டு காலையிலும்‌ 
மாலையிலும்‌ மூன்‌ று தடவையும்‌, மத்யா ந்ஹத்தில்‌ இரண்‌ டுதடவையும்‌ 
இரண்டு கையாலும்‌ நின்றுகொண்டு அர்க்யப்ரதா நம்‌ செய்யவேண்‌ 
டும்‌. காலம்‌ கடந்து இதைச்செய்தால்‌, ஒரு ப்ராணாயாமம்செய்து, 
“காலாதிதப்ராயங்சித்தரர்த்தழம்‌ ஏகார்க்ய ப்ரத;ாநம்‌ கரிஷ்யே'* 
என்றுஸங்கல்பித்துக்கொண்டு முன்‌ போலவே காயத்ரிமந்த்ரோச்சா 
ரணத்துடன்‌ ஒரு அர்க்யப்ரதா நம்‌ செய்யவேண்டும்‌. இதற்குப்பின்‌ 
தீர்த்தத்தைக்‌ கையில்‌ எடுத்துக்கொண்டு '* ஓம்‌ பூர்பு,வஸ்ஸுஃவ: °» 
என்னும்‌ மந்திரத்தாலே ஓருதடவை ஆத்மப்ர தக்ஷிண ம்செய்து 
கொண்டு ''அஸாவாதி;த்யோ ப்ரஹ்ம” என்று அஞ்ஜலி செய்ய 
வேண்டும்‌.[இந்த ஸ-9ர்யன்‌ பரப்‌ஹ்மமே என்று இதன்பொருள்‌. | 
அதற்குப்பின்‌ ஆசமநம்செய்து, பின்வரும்‌ மந்திரங்களாலே 
முக்காலத்திலும்‌ (21) ஜலதர்ப்பணங்கள்‌ செய்யவேண்டும்‌. 


பொருள்‌ 


आदित्यं तपयामि ஆதி,த்யம்‌ தர்ப்பயாமி குரியனை த்ரூட்தி 
செய்விக்கிறேன்‌. 


10 
अङ्गारकं Oo. அங்க,ாரஃம்‌ க செவ்வாயை ,, 
डक க பமுக்ரம்‌ வெள்ளியை ,, 
सोमं श ஸோமம்‌ ड ட்ந்திரனை ७9 
बुघ > புடம்‌ ந்த ` புதனை ६ 
बृहस्पतिं .. (190 97०0. /9/2 =, வீயாழனை „+ 
शानैश्चरं ,, "०5७०७ ८2 ध சனியை வ 
राहु க ராஹாும்‌ FO ராஹுவை ஃ 
केत ५ கேதும்‌ 7 கேதுவை ஷ்‌ 
कैशाव १ கேசவம்‌ கேசவனை i 
नारायण .., நாராயணம்‌ भ நாராயணனை ,, 
माच्व ५ மாதவம்‌ பழ மா தவனை க 
गोविन्द्‌ ., கோவிந்தம்‌ ध கோவிந்தனை . 
विष्णु த்‌ விஷ்ணும்‌ ல வீஷ்ணுவை , 
NYA ,' ८0.5०४ 59510 =. ८०.5/9-ॐ.5 ष्ठा दण ,* 
लिविक्रमे ,, கீரிவிக்ரமம்‌ ५३ 57०9 @/ (८ छठा , , 
वामन i வாமம்‌ ` स வாமனனை श 
श्रीधरं ' 25402 oe ஸ்ரீகரனை „^ 
हषीकेदा ,' ஹ்ருஷீகேமம்‌ १, ஹ்ரூஷீகேசனை ,* 
पद्मनाभ (5 80571 42 ह பத்மநாடனை = ,, 
दामोदरं .. ` 53०८7530 च தாமோதானை .. 
தர்ப்பணம்‌ செய்தபின்‌ ஆசமநம்‌ செய்து, ''க்ருஷ்ணார்ப்பண 
மஸ்து'' '“*வாஸாுதேவார்ப்பணமஸ்து”” என்று தீர்த்தத்தால்‌ 


பகவதர்ப்பணம்‌ செய்யவேண்டும்‌. இத்துடன்‌ ஸந்த்யாவந்தனத்‌ 
தில்‌ ஜலபாகம்‌ முடிந்தது. இனி ஜபபாகம்‌. 
முக்காலத்திலும்‌ ஜபத்தின்‌ பூர்வாங்கங்கள்‌ 

முதலில்‌ ஒருதடவை ப்ராணாயாமம்‌ செய்து, 'ஓம்‌ ஸ்ரீஅச்யுதாய 
தம: ஒம்‌ ஸ்ரீஅநந்தாய நம: ஓம்‌ ஸ்ரீகேரவிந்த;ய நம: என்று 
ம்ரோத்ராசமனம்‌ செய்து பின்வருமாறு ஸங்கல்பிக்கவேண்டியது. 

श्रीभगवदाक्ञया भगवत्कैङ्कय Maar Aram करिष्ये 

“ஸ்ரீப,க,வதராஜ்ஞயா ப,க;வத்‌ கைங்கர்யம்‌ ப்ராதஸ்‌ 

ஸந்த்‌,யா களயத்ரீ மந்த்ரஜபம்‌ கரிஷ்யே" ` 


11 


[மத்யாந்ஹத்தில்‌ “ மாத்யா ந்ஹிக களயத்ரீ மந்த்ரஜபம்‌ கரிஷ்யே 

என்றும்‌, மாலையில்‌ ''ஸாயம்‌ ஸந்த்யா களயத்ரீ மந்த்ரஜபம்‌ 
கரிஷ்யே'' என்றும்‌ மாற்றிக்கொள்ளவேண்டியது. ஸங்கல்பித்த 
பிறகு ப்ராணாயாம /உந்திராவயவமான ப்ரணவத்திற்கும்‌ “பூ4:' முதல்‌ 
ஸத்யம்‌” வரையிலுள்ள ஏழு வ்யாஹ்ருதிகளூக்கும்‌ காயத்ரிக்கும்‌, 
காயத்ரீ சிரஸ்ஸஃக்கும்‌ ரிஷிச்சந்தோதேவதைகளைப்‌ பின்வருமாறு 


அநுஸந்திக்கவேண்டியது. 


प्रणवस्य ब्रह्मा ऋषिः देवी TTA छन्दः परमात्मा देवता। भूरादि 
सक्तवयाहतीनां अचिश्रगुक्कत्सवसिष्ठगोतमकादयपाङ्गिरसषयः गायच्युष्णिक- 
अनुष्टपशृहतीपङक्तिविष्टपजगत्यः छन्दांसि अग्निवाय्व Fanfare af 
देवा देवताः गायव्याः இனிச்‌: देवी गायत्री छन्दः सविता देवता । 
made: ब्रह्मा षिः GET छन्दः परमातमा देवता॥ सर्वेषां 
प्राणायामे विनियोगः 


ப்ரணவஸ்ய (आका ரிஷிர்‌. தேவீ களயத்ரீ சந்த; 
பரமாத்மா தேவதா! பூஏாதி, ஸப்த வ்யாஹ்ருதீநாம்‌ அத்ரி 
ப்‌, ரகு, குத்ஸ வஸிஷ்ட, கெளதம காங்யபாங்கிறஸ ரிஷய: 
காயத்ரீ உஷ்ணிக்‌ அநுஷ்டுப்‌ ப்‌,ருஹதீ பங்க்தி த்ரிஷ்டுப்‌ 
5०501; சர்தாம்ஸி அக்நி வாய்வர்க்க வா வரு 
ணேந்த்‌,ர விங்வேதே,வா தேவதா:। களயத்ர்யா: விஸ்வாமித்ர 
ரிஷி: தேவீ களயத்ரீ சந்த, ஸவிதா தே,வதா। கரயத்ரீமமிரஸ: 
ப்‌,ரஹ்மா ரிஷி: அநுஷ்டுப்‌ கூந்த; பரமாத்மா தேவதா | 
ஸர்வேஷாம்‌ ப்ராணாயாமே விநியோக; ॥ . 
[ப்ரணவத்திற்கு ரிஷி ப்ரஹ்மா: காயத்ரி சந்தஸ்‌; ` பரமாத்மா 
தேவதை; பூ: புவ: முதலிய ஏழு வியாஹ்ருதிகளுக்கும்‌ முறையே 
அத்ரி, ப்ருகு, குத்ஸர்‌, வஸிஷ்டர்‌, கெளதமர்‌, காய்யபர்‌, ஆங்கிரஸ்‌, 
ஆகிய இவர்கள்‌ ரிஷிகள்‌; காயத்ரி உலஷ்ணிக்‌. அ_நுஷ்டுப்‌, 
ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப்‌, ஜகதீ ஆகிய இவைகள்‌ சந்தஸ்‌ 
ஸுக்கள்‌; அக்நி, வாயு, ஸூர்யன்‌, ப்ருஹஸ்பதி, வருணன்‌, 
இந்திரன்‌, விச்வேதேவர்கள்‌ தேவதைகள்‌, காயத்ரிக்கு விங்வா 
மித்ரர்‌ ரிஷி; காயத்ரீ சந்தஸ்ஸு; ஸவிதா தேவதை; காயத்ரீ கிரஸ்‌ 
ஸுஃக்கு ப்ரஹ்மா ரிஷி; .அநுஷ்டுப்‌ சந்தஸ்‌; பரமாத்மா தேவதை 
அனைத்துக்கும்‌ ப்ராணாயாமத்தில்‌ விநியோகம்‌ (உபயோகம்‌).] 


12 


முற்கூறியவாறு ப்ராணாயாமமந்திரத்தின்‌ அவயவங்களின்‌ 
ரிஷி, ச௪ந்தஸ்ஸு தேவதைகளை அநுஸந்தித்தபின 10 தடவை 
ப்ராணாயாமம்‌ செய்யவேண்டும்‌. பிறகு “ஓம்‌ ஸ்ரீஅச்யுதாய 
நம; ஓம்‌ ஸ்ரீ அநந்தாய நம: ஓம்‌ ஸ்ரீ ப ரோவித்த,ாய நம: 
1.14 53921537 © @ए ५17 பூ,கவத்‌ கைங்கர்யம்‌ க;ாயத்ரீ மஹாமந்த்ரஜபம்‌ 
கரிஷ்யே” என்று அநுஸந்தித்து காயத்ரீ = 89 ०75 (காயத்ரியை 
அமைக்கும்‌) மந்திரமான ''ஆயாது'' என்னும்‌ அனுவாகத்தின்‌ 
ரிஷிச்சந்தோ தேவதைகளையும்‌, அவ்வ நுவாகத்தையும்‌ பின்வருமாறு 
அநுஸந்திக்கவேண்டும்‌. 

भआयास्विव्यद्वाकस्य ஏன்‌: अचुष्टप्‌ छन्दः गायत्री देवता ॥ 

ஆயாத்வித்யநுவாகஸ்ய 647 0653697 90; 

அநுஷ்டுப்‌ சந்த; க;ாயத்ரீ தே,வதா ॥ 

गायन्यावादनमन्वः- 57५७१००५) அழைக்கும்‌ மந்திரம்‌ 


८. आयातु वरदा சோர்‌ ब्रहमसंमितम्‌। गायतं छन्दसां 
मातेदं ब्रह्म जुषस्व नः॥ ओजोऽसि सहोऽसि aoa भ्राजोऽसि 
देवानां धाम नामासि । विश्वमसि विश्वायुः स्मसि सर्वायुः अभिभूरोम्‌ 
गायल्लीमावाहयामि ॥ सावित्रीमावाहयामि सरस्वतीमावाहयामि | 


8. ஆயாது வரத; தேவீ அக்ஷரம்‌ ப்‌,ரஹ்மஸம்மிதம்‌ | 
கரயத்ரீம்‌ ச,ந்த,ஸாம்‌ (07165550 ப்ரஹ்ம ஜுஷஸ்வ ௩: ॥ 
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்‌,ராஜோஸி தே,வாநமம்‌ தாம 
நரமாஸி। விங்வமஸி விங்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுரபி,பூ,ரோம்‌ 
க,யத்ரீமாவாஹயாமி || = ஸாவித்ரீமாவாஹயாமி ஸரஸ்வத- 
மாவாஹயாமி || 


பதவுரை: வரத;ா-வரங்களையளிக்கும்‌. தே,வீ- ஸ்ரீதேவி 
யானவள்‌. ஆயாது-(இங்கு) எழுந்தருளட்டும்‌; அக்ஷரம்‌ 
அழியா ததும்‌, ஸம்மிதம்‌-—௩ஈ௩ன்கு அறியப்பட்ட துமான, 
ப்‌ரஹ்ம-ப்ரஹ்மமும்‌ (எழுந்தருளட்டும்‌.) ச௪ந்தஹஸாம்‌- 
வேதங்களுக்கு. மாத:-தாயாயிருக்கும்‌. களயத்ரி-காயத்ரியே. 
ஈம்‌ ஸ்ரீ தேவியையும்‌, இதம்‌ ப்ளஹ்ம-பரப்ரஹ்மமான 
இரந்த ஈநாராயணனையும்‌, ௩:-எங்களுக்கரக, ஜுஷஸ்வ-அடை 


13 


விப்பாயாக; (ஸ்ரீமந்‌ நாராயணனே!) ஓஜ: அஸி காரண 
சக்தியை உடையவனாகிறாய்‌; ஸஹ: அஸி-ரியமனசக்‌ தியை 
உடையவனாகதிறாம்‌ , பலம்‌ அஸி- பலத்தை உடையவனாகிறாய்‌; 
ப்‌,ராஜ: அஸி-ஓளியை உடையவனாகிறாய்‌; தே,வாநாம்‌-தேவர்‌ 
களுக்கு. தாம-இருப்பிடமாகவும்‌, நாம-பெயராகவும்‌. அஸி- 
ஆகிறாய்‌. விங்வம்‌ அஸி-“விங்வம்‌'என்னும்‌ பெயரை உடைய 
வலைறாய்‌. விஸ்வாயு: (அஸி)-—எல்லாவம்றுக்கும்‌ சேருமிட 
மாகிறாய்‌; ஸர்வமஸி- எல்லாம்‌ ஆகிறாய்‌; ஸர்வாயு: (அஸி) 
எல்லாவற்றுக்கும்‌ ஜீவனம்‌ ஆகிறாய்‌, 94/61, (அஸி) 
(०9500 திகளை)வெல்‌ லுமவனாகிறாய்‌.ஓம்‌-இப்படிப்பட்ட அகார 
வாச்யனுக்கே அடிமையான நான்‌. களயத்ரீம்‌—கரயத்ரியை. 
ஆவாஹயாமி அழைக்கிறேன்‌; ஸாவித்ரீம்‌- ஸாவித்ரியை 
( ஸவிதாவை தேவதையாக உடையவளை ) ஆவாஹ 
யாமி அழைக்கி றன்‌ , ஸரஸ்வதீம்‌ ஆவாஹயாமி-வாக்ரூப 
மாயிருக்கும்‌ காயத்ரியை அழைக்கிறேன்‌. | 


இதற்குப்பின்‌ முக்காலத்திலும்‌ '' களயத்ர்யா: வின்வாமித்ர 
ருஷி: தேவீ க;யத்ரீ சந்த: ஸவிகா தே,வதா ण என்று ருஷிச்‌ 
சந்தோதேவதைகளை அநுஸந்தித்து 108, 32, 28 என்னும்‌ 
கணக்கில்‌ இயன்‌ றவரையில்‌ ப்ரணவத்தோடும்‌ மூன்று வ்யாஹ்‌ 
ருதிகளோடும்‌. ( அதாவது ஓம்‌ பூட்‌ புவ: ஸுவ: என்றதோடு ) 
கூடிய காயத்ரீமந்திரத்தை ஜபிக்கவேண்டியது. 

உபஸ்ததார ஸங்கல்பம்‌ 

காயத்ரி ஜபம்‌ முடிந்தவுடன்‌ ஒரு ப்ராணாயாமம்‌ செய்து, “ஓம்‌ 
ஸ்ீஅச்யுதாய நம, ஓம்‌ ப்ரீ அதந்தாயமும: ஓம்‌ ்ரீகேோவி ந்தராய நம!" 
எனறு ம்ரோத்ராசமநம்‌ செய்து, "ஸ்ரீப,க,வத,ாஜ்ளயா பகவத்‌ 
கைங்கர்யம்‌ ப்ராதஸ்ஸந்த்யா கராயத்ர்யுபஸ்த;ாநம்‌ கரிஷ்யே ”' 
என று காலையிலும்‌, ''மாத்யா ந்ஹிககராயத்ர்யுபஸ்த,ாநம்‌ கரிஷ்யே" 
என்னும்‌ மாறுதலுடன்‌ = மத்யாந்ஹத்திலும்‌, *' ஸாயம்‌ ஸந்த்யா 
கராயத்ர்யுபஸ்த,ாநம்‌ கரிஷ்யே '' எண்னும்‌ மாறுதலுடன்‌ மாலை 
யிலும்‌ ஸங்கல்பித்து எழுந்திருக்‌*வேண்டியது. பிறகு கைகூப்பிக்‌ 


கொண்டு பின்வரும்‌ காயத்ரீ உத்‌,வாஸநமந்திரத்தை முக்‌ 


காலத்திலும்‌ உச்சரிக்கவேண்டியது. 


14 


९, उत्तमे शिखरे देवि! भूम्यां पर्वतमूर्धनि । 
बाहणेभ्यो qT गच्छ देवि! यथासुखम्‌ ॥ 

9. உத்தமே ०59९ 08859 @ ५०५१५ (7 9.5 6 5598 | 

ப்‌,ராஹ்மணேப்‌,யோ ஹ்யநுஜ்ஞாநம்‌ 59559 தேவி == 

யதளஸுகழம்‌ |] 

பதவுரை: தே,வி-காயத்ரீதேவியே! ஸ்ரீ செவியே! 
ப்‌,ராஹ்மணேப்‌,ய: ஆநுஜ்ஞார௩ம்‌ ( த,த;ளாஸி ) ஹி-பட்ரஹ்ம 
ஜ்ஞானிகளுக்கு உன்‌ அனுக்ரஹத்தால்‌ வரும்‌ அறிவைத்‌ 
தருகிறாயன்றோ. தே,வி-ஸ்ரீதவியே! உத்தமே-மிஃவுயர்ந்க. 
பர்வதமூர்த்த,நி மரிக,ரே-( சித்ரகூடம்‌, வேங்கடாசலம்‌ முத 
லான)மலைகளின்‌ உச்சியிலள்ள சிகரங்களிலே, யத ஸுகஹ்‌- 
இஷ்டப்படி வீளையாடுவதற்காக, க,ச்ச-செல்வாயா க. 

இனி, சூரியனை நோக்கிக்‌ கைகூப்பி நின்றுகொண்டு, பரம 
புருஷனைக்‌ குறித்துச்சொல்லப்படும்‌ பின்வரும்‌ மூன்று உபஸ்தான 
மந்திரங்களை முறையே காலையிலும்‌. நடுப்பகலீலும்‌ மாலையிலும்‌ 
அநுஸந்திக்கவேண்டும்‌. 

प्रतख्पस्थानमन्वः-कण 2०66 உபஸ்த;ா மந்த்ரம்‌ 


१०. मिलस्य எரி: | श्रवो देवस्य सानसि । सत्यै चित- 
श्रवस्तमम्‌ ॥ मित्रो जनानू यातयति प्रजानन्‌ मित्रो दाधार पृथिवीमुत 
qa! मित्रः ष्टीरनिमिषाऽमिचष्टे सत्याय हव्य घृतवद्विधेम॥ प्र स॒ 
मित्र मतौ अस्तु प्रयस्वान्‌ यस्त आदित्य शिक्षति वतेन। न हन्यते न 
जीयते त्वोतो எபி अश्नोत्यन्तितो न | 

10. மித்ரஸ்ய சர்ஷணித்‌,ருத: | ங்ரவோ தே,வஸ்ய ஸாந 
ஸிம்‌। ஸத்யம்‌ சித்ரங்ரவஸ்தமம்‌ ॥ மித்ரோ ஜநாந்‌ யாதயதி 
ப்ரஜாநந்‌ மித்ரோ தளதனளர ப்ருதீவீமுத த்ணாம்‌ | மித்ர: க்ருஷ்‌ 
டீரநிமிஷா $பி,சஷ்டே ஸத்யாய ஹவ்யம்‌ க்‌,ருதவத்‌, விதேம ॥ 
ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வாம்‌ யஸ்‌ த ஆதித்ய 
ஸ்ரிக்ஷதி வ்ரதேந | ௩ ஹந்யதே ௩ ஜீயதே த்வோதேர நைந 
மம்ஹோ அங்நோத்யந்திதோ ௩ தூஏாத்‌॥ 


15 


பதவுரை சர்ஷணித்‌,௬ுத:-(ஸஞ்சரிக்கும்‌) உலகங்களை 
தரித்து நிற்பவனாய்‌. மித்ரஸ்ய- அனைவரையும்‌ காப்பாற்று 
மவனான., தேவள்‌ ய_பகவானுடைய, ஸாநஸிம்‌— விரும்பத்‌ 
தீக்கதும்‌, ஸத்யம்‌- -நிலைநிற்பதும்‌. சித்ரங்ரவஸ்தமம்‌ - பிக 
வுயர்ந்த வீசித்திரரர்த்தியை உடையதுமான. ஸஹ்ரவ:௪ஸம்‌ 
ஸார ரக்ஷ்ணத்தை (விரும்புகிறேன்‌); ப்ரஜாரத்‌-எல்லா மறிக்க 
மித்ர:-பகவான்‌. ஜநாந்‌-ஜீவர்களை, யாதயதி-௩டத்திவைக்‌ 
கிறான்‌; மித்ர;-அளவ,ற்றவனான பகவான்‌, ப்ருதி,வீம்‌ உத 
த்‌யாம்‌-— பூமியையும்‌ சுவர்க்கத்சையும்‌. தனளதார- தரித்து 
நிற்கிறான்‌; மித்ர: மூவுலகையுமளந்த பகவான்‌. க்ருஷ்டீ: 
பயிர்களால்‌ ஜீவிக்கும்‌ உயிர்களை. அநிமிஷா-கண்கொட்டா 
மல்‌. அபிசஷ்டே-கண்டுகொண்டிருக்கிறான்‌; ஸத்யாய- 
உண்மைப்டெொருளான அவனுக்கு, க்‌,ருதவத்‌-(அன்பாகி ற) 
நெய்யுடன்கூடிய. ஹவ்யம்‌- (ஆத்மாவாகிற) ஹவிஸ்ஸை. 
விதே,ம-ஹோமம்‌ செய்யக்கடவோம்‌. மித்ர-ஸர்வரகஷ்கனே! 
ஆதி;த்ய-அதிதியின்‌ பிள்ளையரான வாமனனே! ய: மர்த்த:- 
எவனொரு மனிசன்‌, தே வ்ரதே௩ மரிக்ஷதி- உன்‌ பரணாக,க 
ரகஷண விரதத்தை நினைத்துத்‌ தன்னைத்‌ தேற்றிக்கொண்‌ 
டிருக்கறுானோ, ஸூ:-அவன்‌, ப்ரஅதிகமாக, ப்ரயஸ்வாந்‌ 
அஸ்து- (உன்‌ அதுபவமாகிற) அந்கத்கை உடையவனா 
கட்டும்‌; த்வோத:-உன்‌ இடைய பக்தன்‌, ந ஹர்யதே- 
எவராலும்‌ ஹிம்ஸிக்கப்படுவதில்ல; ௩ ஜீயதே—(எவரா 
இம்‌) ஜயிக்கப்படுவதுமில்லை; ஏ௩ம்‌- இவனை. அம்ஹ- 
பாபம்‌, அந்தித:- அருகிலும்‌, ௩ அங்நோதி அணுகாது. 
தூஏராத்‌-வெகுதாரத்திலும்‌, ௩ அங்கோதி- அணுகா து. 


எனகக னானரா-மாத்‌,யாந்ஹிகோபஸ்த, நமந்த்ரம்‌ 
११. आ सत्येन रजसा என்‌ निवेदायन्नमृते मत्थश्च। 
हिरण्ययेन सविता रथेनादेवो याति भुवना विपश्यन्‌ ॥। Sed तमसस्परि 
Gad उ्योतिरुत्तरम्‌। देवं देवता aime ज्योतिरुत्तमम्‌ TT 
जातवेदसं देवे वहन्ति केतवः। दशो विश्वाय wg चित्रं देवानाभरद- 


16 


गादनीक எதன்‌ वरुणस्याभेः। आप्रा चावाप्रथिवी अन्तरिक्ष छथ 
आत्मा जगतस्तस्थुषश्च Taf पुरस्ताच्छकरमुचरत्‌।॥ पश्येम शर- 
दधतम्‌ । जीवेम WCET | नन्दाम शरदश्छत५। मोदाम INERT: 
तस | भवाम ETAT | शृणवाम शरदस्यतम्‌। प्रत्रचाम शरदश्शतम्‌ | 
अ्गीताःस्याम MEAT | उ्योक्च दष इशे ॥ य उदगान्महतोऽ्णंवा- 
दविभ्ाजमान्सरिरस्य मध्यात्‌। स मा व्रषभो रोहिताक्षस्छयों विपशचिन्म- 
नसा पुनातु ॥ 


11. ஆஸத்யேர ரஜஸா வர்த்தமாநோ நிவேமரயர்‌ அம்‌ 
ருதம்‌ மர்த்யஞ்ச ஹிரண்யயேக ஸவிதா ரதோதேவோ யாதி 
புவநா விபங்யர்‌।| உத்‌,வயம்‌ தமஸஸ்பரி பங்யந்தோ ஜ்யோதி 
ருத்தரம்‌।| தேவம்‌ தே,வத்ரா ஸூர்யமக,ந்ம ஜ்யோதிருத்தமம்‌।! 
உது,த்யம்‌ ஜாதவேதஸம்‌ தே,வம்‌ வஹுந்தி கதவ । 50५०० 
விங்வாய ஸூர்யம்‌। சித்ரம்‌ தே,வா நாமுதகா @38ि 80 சக்ஷார்‌ 
மித்ரஸ்ய வருணஸ்யாக்‌, க: | ஆப்ரா த்யாவா ப்ருதி,வி அந்‌ 
தரிக்ஷம்‌ ஸூர்ய ஆத்மா ஐக,தஸ்‌ தஸ்துஷங்ச। தச்சக்ஷார்‌ 
தே,வஹிதம்‌ புரஸ்தாச்சு,க்ரமுச்சரத்‌ || (४०९६५१५ மர & 8८०००७0 
ஜீவேம மாரத;்மமதம்‌ ७0510 ०ण¶ @ ३०७०५०७८ மோதம்‌ ण्ण 
தஸ்முதம்‌. ப,வாம 0७०१ தப்பமதம்‌, மருணவாம ஸரதம்மதம்‌. 
ப்ரப்‌,ரவாம एण @ ३००००७1४, அஜீதாஸ்‌ ஸ்யாம ८०08 80०५०७५४. 
ஜ்யோக்‌ ச ஸூர்யம்‌ # ११७५ ய 9-ॐ59587 மஹதோர்ணவா த்‌ 
விப்‌,ராஜமாநஸ்‌ ஸரிரஸ்ய மத்வாத்‌ ஸமா வ்ருஷபே ரோஹி 
தாக்ஷ்ஸ்‌ ஸூர்யோ விபங்சிந்‌ மாஸா புநாது ॥ 


“பர்யேம'” என்பது முதல்‌, “ஸூர்யம்‌ த்ருஸே' வரையில்‌ 
வ்யோமமுத்ரையால்‌ .ஸஏர்யனைப்‌ பார்த்துக்கொண்டு உச்சரிப்பது. 


பதவுரை: ஸத்யேர ரஜஸா-அழிவற்றகான பரம்பதத்‌ 
தில்‌, மர்த்யம்‌ ௪-(மரணத்கை இயற்கையா கக்கொண்ட ) 
ஸம்ஸாரியையும்‌, அம்‌ ரதம்‌ ிவேமயங்‌-மோக்ஷத்தை அடை 
விக்க விரும்பியவனாய்‌. பவா விபங்யந்‌_ உலகங்களை நன்‌ 


17 


<^ பார்த்துக்கொண்டு, ஆ வர்த்தமா௩:—எதிர்‌ குழல்புக்க 
வனாய்‌. ஸவிதா தேவ:ஸர்வலோகங்களையும்‌ ஸ்ருஷ்டித்த 
பகவான்‌,  ஹிரண்யயேர ரதேர_பொன்மயமான தரு 
மேனியோடு (கல்லது கருடனாறெ ரதத்தில்‌) ஆ யாதி 
எழுந்தருளுகறோன்‌. உத்‌ -- ெந்ததாய்‌. தமஸ: - மூல 
ப்ரக்ருதிக்கு. உத்தரம்‌-—மேலான பரமபதத்தில்‌ விளங்கும்‌. 
ஜ்யோதி:-சோ தயுருவனான. தே,வம்‌-தேவனாய்‌, தேவத்ரா- 
மற்ற தேவர்களனைவரையும்‌ காப்பா ற்றுமவனாய்‌. ஸ்‌ 9ர்யம்‌— 
(எங்களை ) ஈன்கு நியமிப்பவனாய்‌, உத்தமம்‌ ஜ்யோதி: பரஞ்‌ 
சோ தியான நாராயணனை... பரி பம்யந்தநேரேகாணும்‌ 
ஈாம்‌,அகரும-பரணமடைகந்தோம்‌; ஸூிர்யம்‌-ஸூர்யனெனப்‌ 
படுபவனாய்‌, ஜாதவேத,ஸம்‌—வேதங்களைப்பி றப்பித்தவனான 
த்யம்‌ உ-அந்தகேவனையே, கேதவ:-மஹான்கள்‌, உத்‌,வஹந்தி- 
தங்கள்‌ நெஞ்சிலே தரித்து நிற்கிறார்கள்‌. (எத ற்காகவெனில்‌:) 
விங்வாய த்ருமே-— உலகமெல்லாம்‌ காண்பதற்காக. (யஸ்‌ 
மாத்‌-எந்த பகவானிடமீருரந்து) சித்ரம்‌-வீசத்ரமான, அநீகம்‌- 
னேனை, தே,வாநாம்‌-தேவர்களை ரக்ஷிப்பத ற்காக, २.७5 57 5 - 
உண்டாயிற்றோ. ஸு: ஸூர்ய:—அந்தப்‌ பரமாத்மா, ஐக,த: 
தஸ்து,ஷ: சஸ்காவர ஜங்கமங்களுக்கு (அசைவனவும்‌, 
அசையா தனவுமான பொருள்களுக்கு) ஆத்மா அர்தர்யாமி 
யாவான்‌; த்‌ வாவா ப்ருதி,வீ அந்தரிக்ஷம்‌ஆப்ரா:-தேவலோகம்‌, 
பூமி,(இவற்றினிடையிஓள்ள ) அந்தரிக்ஷம்‌ ஆகிய அனைச்கை 
யும்‌, சுற்றிலும்‌ வியாபித்திருப்பவன்‌; தத்‌ சக்ஷா: 
(அனைவர்க்கும்‌) கண்ணாயிருக்குமவனாய்‌, தே,வஹிதம்‌— 
தேவர்களுக்கு ஈன்மையளிப்பவனாய்‌, மமாக்ரம்‌- அமுக்க ற்ற 
வனான பகவான்‌, புரஸ்தாத்‌- முன்னதாகவே, உச்சரத்‌- 
(அவதரித்துத்‌] இரிகிறான்‌. மாதம்‌ மாரத;; பங்யேம- 
(உன்னை) நூறு ஆண்டுகள்‌ காணக்கடவோம்‌. முதம்‌ 
பாரத: ஜீவேம- நூறு ஆண்டுகள்‌ வாழக்கடவோம்‌; மாதம்‌ 
0०758: ஈந்தனம- நூறு ஆண்டுகள்‌ இன்புறுவோமாக; 
४०७४ एण ऽः மோதளம- நூறு வருஷங்கள்‌ ஆநந்திப்போமாக; 
மதம்‌ மரத;: பவாம- தூறு வருடங்கள்‌ உய்வு பெறக்‌ 


18 


கடவோம்‌; முதம்‌ जणा छः ங்ருணவாம_ நூறு அண்டுகள்‌ 
கேட்போமாக; முதம்‌ மரரத,: ப்ரப்‌,த வாம நூறு வருஷங்கள்‌ 
பேசக்கடவோம்‌; முதம்‌ णा ॐ: அஜீதா: ஸ்ய, ம- நூ று வருங்‌ 
கள்‌ வெல்லப்படா தவர்களாயிருப்போம்‌: ஜ்யோக்‌ ௪ வெகு 
நீண்ட காலம்‌, ஸ9ர்யம்‌-பரமாத்மாவை, த்‌; ருமோ-அ௮ றியக்கட 
வோம்‌; ய:-எட்சப்‌ பரமபுருஷஜன்‌ , மஹத: அர்ணவாத்‌-பெரி 
தான பாற்கடலினின்றும்‌, உத,களத்‌-அவதரித்தருளினானோ, 
ஸரிரஸ்ய மத்‌,யாத்‌ விப்‌,ராஜமாந:- ( அவதரித்தபின்பும்‌ ) 
பா நற்கடலின்‌ ஈடுவிலும்‌ எவன்‌ விளங்குகறானோ, வ்ருஷப,:- 
மிகச்‌சிறந்தவனாய்‌, ரோஹிதா க்ஷ:-செர்தா மரைக்கண்ணனாய்‌, 
ஸ9ர்ய;-ஜகத்காரணனாய்‌, விபங்சித்‌-எல்லாமறிந்தவனான, 
ஸ:-அப்பரமன்‌. மநஸா-தன்‌ திருவுள்ளத்தாலே, மா 
என்னை, புநாது-—டரீசுத்தப்படுத்தட்டும்‌. 


सायमुपस्थानमन्लः-0017 2००५१०० உபஸ்த;,ா நமந்த்ரம்‌ 


१२. इम मे वरुण शरी हवमद्या च TET । त्वामवस्युराचके | 
त्वा यामि ब्रह्मणा बन्दमानस्तद्‌ाशास्ते यजमानो ERR! अहेडमानो 
वरुणेह MEA मा न आयुः प्रमोषीः ॥ यच्चिद्धि ते विशो यथा प्रदेव 
ஏன चतम्‌ । मिनीमसि चयविद्यवि ॥ यक्किञ्चेद वरूण दैव्ये என்‌: 
द्रोह मनुष्याधरामसि। अचित्ती यत्तव धर्मां युयोपिम मानस्तसादेनसो 
देव रीरिषः॥ कितवासो यद्िरिपुनं दीवियद्वाधा Teg यन्न विद । 
सवां ता विष्य िथिरेव देवाथाते स्याम वरुण प्रियासः।। 


12. இமம்‌ மே வருண ங்ருதீ, ஹவமத்யாச ம்ருடய! த்வா 
மவஸ்யுராசகே | தத்‌ த்வா யாமி ப்‌,ரஹ்மணா வந்த,மாஈஸ்‌ 
ததளமாஸ்தே யஜமா ௩ோ ஹவிர்ப்பி:। அஹேடஹாரோ 
வருணேஹபேதி, உருமம்ஸ மா ௩ ஆயு: ப்ரமோவீ:॥ யச்‌ 
8538, தே விமேோோ யத, ப்ரதே,வ வருண வ்ரதம்‌ | மிநீமஸி 
த்வவித்யவவி।॥। யத்‌ கிஞ்சேத;ம்‌ வருண தை,வ்யே ஐநே$பி, 
த்‌,ரோஹும்‌ மநுஷ்யாங்‌ சராமஸி। அசித்தீ யத்‌ தவ தர்மா 


19 


யுயோபிம மாஈஸ்‌ தஸ்மாதே,நஸோ தேவ ரீரிஷ:।॥ கிதவாஸோ 
யத்‌, ரிரிபுர்‌ நதீ,வி யத்‌, வாக, ஸத்யமுத யங்க வித்ம | ஸர்வா 
தா விஷ்ய மிதி,ரேவ தே,வாத,ாதே ஸ்யாம வருண ப்ரியாஸ:।| 


பதவுரை: வருண-வரிக்கத்தக்க பரமபுருஜஷனே! மே- 
என்னுடைய. இமம்‌ ஹவம்‌- இந்தத்‌ துதியை. ங்ருதி,-கேட்பா 
யாக; அத்ய, ச௪-இப்போதும்‌, மாம்‌-என்னை, ம்ருட,ய- 
இன்புறச்செய்‌; த்வாம்‌-உன்னை, அவஸ்யு:-—( உன்‌ ) 
க்ஷண த்தை விரும்பியவனாய்‌, ஆசகே-யாசிக்கிறேன்‌; தத்‌ 
நீண்ட ஆயுளுக்காக, த்வா-உன்னை, ப்‌,ரஹ்மணா வந்தமாந;- 
வேதத்தால்‌ வணங்கியவலாய்‌. யாமி-—மரணமடைகிழேன்‌; 
தத்‌-ஈான்‌ விரும்பும்‌ அவ்வாயுளையே. யஜமா௩:-யாகம்‌ செய்யும்‌ 
யஜமானனும்‌ ஹவிர்ப்பி,:- ஹவீஸ்ஸுக்களாலே.ஆமாாஸ்தே- 
வீரும்புகிறான்‌; வருண வருணனே! அஷஹேடமாந:-கோடங்‌ 
கொள்ளாமல்‌. இஹு இவ்விஷயத்தில்‌, பேதி 
ஸங்கல்பீப்பாய்‌; உருமம்ஸமிகவும்‌ புகழப்படுபவனே! षः 
ஆயு:- எங்களுடைய ஆயுளை, மா ப்ரமோஷீ:-அபஹரிக்காதே; 
ஹேதே,வ-தேவனே! வருண-வரிக்கத்தக்கவனே! சித்‌ ஹி- 
அறிவுடைய நாங்களும்‌. விம: யதள-ஜந்துக்கைப்போலே, - 
த்‌,யவித்‌,யவி-தினந்தோறும்‌. யத்‌ தே வ்ரதம்‌ ப்ரமிந்ம%ஸி- 
உன்னுடைய யாதொரு கைங்கர்யத்தை மிகவும்‌ அழித்‌ 
தோமோ. கிஞ்ச— மேலும்‌, தைவ்யே ஜறே-—தேவனாகிற 
உன்‌ அடியார்களிடம்‌. மநுஷ்யா:-— நீசமனிதராயிருக்கும்‌ ஈாங்‌ 
கள்‌. யத்‌ இதும்‌ அபி,த்‌,ரோஹம்‌ சராமஸி-யாதொரு பெரும்‌ 
தரோகத்தை இழைத்கோமே. அசித்தீ - அறியாமையால்‌, 
தவ தர்மா உன்‌ விஷயமான தர்மங்களை, யத்‌ யுயோபிம- 
அழியச்செய்தது யாதொன்று உண்டே. தஸ்மாத்‌ ஏகஸ:— 
அந்தக அந்கப்‌ பாபங்களினால்‌. மா ௩: ரீரிஷ:-எங்களை நீ ஹிம்‌ 
ஸிக்கவேண்டாம்‌; தீ,வி-(சொக்கட்டான்‌ முதலிய) சூது 
விளையாட்டுகளில்‌. கிதவாஸ: ௩-தஷ்டர்களைப்போல. யத்‌ 
அகரா ரிரிபு:_— யாதொரு பாபங்களை எங்களுக்கு ஒட்டவைத்‌ 
தார்களோ. யத்‌ வா ஸத்யம்‌-—எந்தப்பாபம்‌ அறிந்து செய்யப்‌ 


20 


பட்டதோ, உத யத்‌ ௩ வித்ம-—எதை நாங்கள்‌ அறியாமல்‌ 
செய்தோமோ. ஸபிதி,ரா இவ-ஏற்கனவே சிதைந்து இடக்கும்‌, 
ஸர்வா: தா:-அந்த எல்லாப்பாபங்களையும்‌. விஷ்ய-என்னை 
விட்டுப்பிரிர்து ஓடச்செய்வாய்‌; தே, வருண-வரிக்கத்‌ 
தக்க வாஸுதேவனே! அத அதற்குப்பின்‌, தே-உனக்கு, 
ப்ரியரஸ:-இனியவர்களாக. ஸ்யாம-கரங்கள்‌ ஆகக்கடவோம்‌. 


இப்படி காலையிலும்‌, நடுப்பகலிலும்‌, மாலையிலும்‌ அந்தந்த 
மந்திரங்களைச்‌ சொல்லி உபஸ்தாநம்‌ செய்தபிறகு, 


“सन्ध्यायै नमः। TASS नमः। sd नमः। aA 
नमः। सर्वाभ्यो देवताभ्यो नमः। कामोका्षीन्मन्युरकाषीन्नमो नमः। 
श्रीविष्णवे नमः। भूम्यै नमः। ब्रह्मणे नमः।" 


“ஸந்த்யாயை 19: | ஸாவித்ர்யை நம:। களயத்ர்யை 
நம:। ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்‌ யோ தே,வதாப்‌,யோ நம:| 
காமோகார்வீந்‌ மந்யுரகார்வீந்‌ ஈமோநம: । ஸ்ரீ விஷ்ணவே நம: | 
பூம்யை ஈம:| ப்ஏஹ்மணே நம: ॥ 


என்று கைகூப்பியவனாய்‌ நான்கு திக்குகளையும்‌ நோக்கி உச்சரித்துக்‌ 


கொண்டு, இரண்டுதடவை ஆத்மப்ரதக்ஷதிணம்‌ செய்துகொள்வது. 


இதற்குப்பின்‌ அபி, வாது மந்திரத்தைப்‌ பீன்வருமாறு 
“அபி, வாதயே 1..த்ர்யார்ஷேயப்ரவரார்வித 2१... 50; 
5, ७८97547 045 (அல்லது ஆபஸ்தம்ப) ஸூத்ர: 4, யஜு: 
ஸாகளத்யாயி' 5. ..அர்மாநாமாஹமஸ்மி பே: என்று 
தங்களுடைய [1.ப்ரவரம்‌ 2.கோத்ரம்‌. 8०००-४ क ८0. சகீ.பமாகை, 
9. ८ण ८0८ (பெயர்‌) ஆகியவற்றைச்‌ சொல்லி ஸாஷ்டாங்கமாக 
தண்டன்‌ ஸமர்ப்பிக்கவேண்டியது. அதற்குப்பின்‌ ஸ்ரீக்ருஷ்ண 
க்ருஷ்ணாய நம: என்று பத்துத்தடவை ஜபம்‌ செய்து. 


कायेन वाचा AAA बुद्ध्यात्मना वा प्रकृतैः खभावात्‌। 
करोमि यद्यत्सकलं परस्मै नारायणायेति समर्षयामि।॥ 


21 


காயே வாசர 1056 नण अ कक வா 
1558५017 @ षा வா ப்ரக்ருதேஸ்‌ ஸ்வபாவாத்‌ | 
கரோமி யத்‌; யத்‌ ஸகலம்‌ பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி | 
[மநோவாக்காயங்களாலும்‌, புத்தியினாலும்‌, ப்ரக்ருதியின்‌ ஸ்வ 
பாவத்தினால்‌ எதை எதைச்‌ செய்கிறேனோ அவையெல்லாம்‌ பர 
ப்ரஹ்மமான ஸ்ரீமந்நாராயணனுக்கேயென்று ஸமர்ப்பிக்கிறேன்‌.] 
என்று அநுஸந்தித்து ஆசமநம்செய்து, "ஸ்ரீக்ருஷணார்ப்பண 
மஸ்து'” “ வாஸுதே,வார்ப்பணமஸ்து ' என்று இரண்டு 
அர்க்யப்ரதாம்‌ செய்து பின்வரும்‌ பகவத்ஸ்தோ த்ரங்களை 
அனுஸர்திப்பது:— 


ध्येयः सदा सवितरमण्डलमध्यवतीं नारायणस्सरसिजासनसनिविष्टः। 
केयुश्वान्मकरङण्डलवान्किरीरी हागी हिरण्मयवपुः YATE: Il 


த்‌ யேயஸ்‌ ஸதா ஸவித்ருமண்ட,ல மத்ய வர்த்தி 
` நாராயணஸ்‌ ஸரஸிஜாஸ௩ ஸந்நிவிஷ்ட: | 
கேயூரவாந்‌ மகரகுண்ட,லவாந்‌ இரீடீ 
ஹாரீ ஹிரண்மயவபுர்‌ த்‌,ருதமரங்க,சக்ர: || 
[தோள்வளைகள்‌,: மகரகுண்டலங்கள்‌, கிரீடம்‌, ஹாரம்‌ முதலிய 
ஆபரணங்களை அணிந்தவராய்‌, சங்கசக்ரங்களை தரித்தவராய்‌. 
பொன்போன்ற மேனியராய்‌, பழத்மாஸனத்தில்‌ எழுந்தருளியிருப்‌ 
பவராய்‌, ஸ9ர்யமண்டலத்தின்‌ நடுவில்‌ வீளங்கும்‌ நாராயணர்‌ 
எப்போதும்‌ தியானிக்கத்தக்கவர்‌. 


TETRA द्वारकानिरयाऽच्युत। 
गोविन्द पुण्डरिकाक्ष रश्च मां TAT II 
பரங்க,சக்ரக,தாபாணே த்‌,வாரகாநிலயாச்யுத | 
கோவிந்த, புண்டளீகாக்ஷ ரக்ஷ மாம்‌ மாரணாகதாம்‌॥ 
[சங்கசக்ரகதைகளைக்‌ கையிலுடையவனே! த்வாரகாவாஸியான 


அச்யுதனே! கோவிந்தனே! புண்டரிகாக்ஷனே! ரைணமடைந்த 
என்னை ரக்ஷிப்பாயாக.] 


22 


नमो ब्रह्मण्यदेवाय गोनराह्मणहिताय च| 
जगद्धिताय தண गोविन्दाय नमो नमः। 
நமோ ப்ஏஹ்மண்யதேவாய கேளப்‌ஏா ஹமணஹிதாய =| 
ஜக,த்‌,தி,தாய க்ருஷ்ணாய கேளவிந்த,ாய நமோ நம: || 
[அக்தணர்க்கு அருந்தெய்வமும்‌. பசுக்கட்கும்‌, அந்தணர்க்‌ 
கும்‌ ஈன்மையைச்‌ செய்பவனும்‌, உலகிற்கு ஈன்மையைச்‌ 
செய்பவனும்‌. பசுக்களைச்‌ சென்றடைந்தவனுமான க்ருஷ்ண 
னுக்கு ஈமஸ்காரம்‌. | 


श्रीरङ्गमङ्कलनिधि करणानिबास श्रीवेङ्कटाद्िशिखरार्यकारमेषम्‌। 
श्रीहस्तिशिरशिखरोञ्ञ्यर्पारिजातं श्रीश्च नमामि शिरसा यदुशेरुदीपम्‌ |) 


ஸ்ரீரங்கமங்க,ளரிதி,ம்‌ கருணாநிவரஸம்‌ 

ஸ்ரீவேங்கடாத்‌,ரி மிகளாலயகாளமேக,ம்‌ | 

ஸ்ரீஹஸ்திமையல ஸிக,ரோஜ்ஜ்வல பாரிஜாதம்‌ 

ஸ்ரீராம்‌ நமாமி ஸிரஸா யது,பைல 8ம்‌ ॥ 
[கருணைக்கோரிருப்பிடமான திருவரங்கத்தின்‌ மங்களச்செல்வத்தை 
யும்‌, திருவேங்கடமலையுச்சியில்‌ விளங்கும்‌ கார்மேகத்தையும்‌, 
அத்திகிரி (காஞ்சி) மேல்‌ விளங்கும்‌ பாரிஜாதத்தையும்‌, யதுகிரி 
(திருநாராயணபுரம்‌) மேல்‌ விளங்கும்‌ விளக்கையும்‌ தலையால்‌ 
வணங்குகிறேன்‌ .] 


ஸந்த்யாவமர்‌ தந ம்‌ முற்றிற்று. 


E3 


* 
NANA 





2 °08009660060600000S 
ई முனனுரை 2 


ॐ ७७ $ॐॐॐॐॐॐऊॐ 


யஜுர்வேத ஸர்த்யாவந்தாபாஷ்யமாகிற இந்நூல்‌, 
கீர்‌ த்திமூர்த்தியாம்‌, ஸ்ரீவைஷ்ணவ ஸாுதர்சனம்‌ என்னும்‌ 
மிகச்சிறந்த மர்தப்பத்திரிகையைச்‌ சென்ற ஸர்வஜித்‌ 
வருஷம்‌ மார்கழியில்‌ திருவோணத்தில்‌ தொடங்கியவராய்‌. 
ஐந்து வருடங்களுக்குமேல்‌ அதைத்‌ தாமே ஆசரியரா 
யிருந்து ஈடத்திவந்தவராய்‌, எந்கையாரான ஸ்ரீ உ.வே 
௧. ஸ்ரீநிவாஸய்யங்கார்‌ ஸ்வாமியால்‌ ஸுதர்சனத்தின்‌ 
கொடக்க வருடங்களில்‌ அதிலேயே சிறிது சிறிதாக வெளி 
யிடப்பட்டுவந்து, பிறகு தனிப்புத்தகமாகவும்‌ வெளியிடப்‌ 
யட்டதாகும்‌. இப்போது இந்நூல்‌ இரண்டா து பதிப்பைக்‌ 
காண்கிறது. 


“ஸந்த்‌,யாஹீநோ 500கஇர்‌ நித்யம்‌ அநர்ஹஸ்‌ ஸர்வகர்மஸு | 
யத,ந்யத்‌ குருதே கர்ம ௩ தஸ்ய பலபாக்‌ பவேத்‌ |" 
[ஸந்த்யாவந்தனம்‌ செய்யா தவன்‌ எப்போதும்‌ அடரிசத்த 
னைவன; எந்த வைதிககர்மத்தையும்‌ செய்யக்‌ தகுதியற்ற 
வன்‌. எக்கருமக்தைச்‌ செய்தாலும்‌ தன்‌ பலனை 
அடையமாட்டான்‌. ] என்கிறபடியே மற்ற கர்மங்களை 
அநுஷ்ட்டிப்பதற்குத்‌ தகுதியை வினைக்கும்‌ பெருமை 
பெற்றது காலத்ரய ஸந்த்யா வந்தனம்‌. இகை பக ०580 दण 
கைங்கர்யமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌ அநுஷ்ட்டிக்க 
வேண்டும்‌ என்படத ஸகலபூர்வாசார்யர்களுடையவும்‌ 
ஸித்தாந்தமாகும்‌. இக்கருத்‌ தனலேயே ஆசார்யங்ரேஷ்ட்ட, 
ரான ०.१.९57 ८०४ .+4८- (7 எனனும்‌ ம்ருதப்ரகாிகாசார்யர்‌ 
ஸரந்த்ய! வந்தன த்திற்கு வடமொழியில்‌ மிகச்சிறந்ததொரு 
வியாக்கியானம்‌ அருளிச்செய்தள்ளார்‌. 


இவ்வரிய வியாக்கியான த்தையே முற்றிலும்‌ அழுவி, 
9.5 207 (9०४01 9.9 ஆஸ்தளனத்கை அலங்கரித்த ஜீயர்‌ 
ஸ்வாமிகளில்‌ ஒருவரான. ஸ்ரீமந்காராயண ஜீயர்ஸ்வாமி 
யின்‌ பாஷயக்தையும்‌ ஆங்காங்கு காட்டிச்செல்வது எந்தை 
யாரிய ற்றிய இந்க ஸந்த்யாவந்கநபாஷ்யம்‌. ஆழ்வார்களின்‌ 
அநளிச்செயல்களிலிருர்தும்‌ ஏராளமான மேற்கோள்களைக்‌ 


காட்டி உபயவேதரந்தங்கையும்‌ डक न्ला। - ५111 10.5.5 
யிருப்பது இந்த பாஷ்யத்தின்‌ சிறப்பாகும்‌. இக்காரணத்‌ 
தாலேயே இது யிகச்சிறந்ததொரு அதுபவக்ஸந்தமாகவும்‌ 
திகழ்கின்றது. 


ஸ்ரீ வைஷ்ணவாக்‌,ரஸரராய்‌. பூர்வாசார்யர்களோடு 
ஒத்த நிஷ்ட்பையை உடையவராய்‌, வைணவத்துக்குத்‌ 
தண்ணீர்ப்பந்தல்‌ வைத்ததுபோலே பெரியதொரு தர்ம 
நிதியைஏற்படுத்தி அதன்மூலம்‌ பூர்வாசார்ய க்ரந்தங்களும்‌. 
ஸ்ரீ வைஷ்ணவ ஸாதர்சன பத்திரிகையும்‌ ஸாங்வதமாக 
அச்‌சிட்டுவர ஏற்பாடு செய்திருப்பவராய்‌. பொருளல்லாத 
அடியேனை ஒரு பொருளாக்கு வியேஷேகடா க்ஷம்செய்து. 
தாம்‌ தொடங்கிய பணிகளைத்‌ தமக்குப்‌ பிறகும்‌ தொடர்ந்து 
நஈடைபெறும்படி செய்துவருபவரான. எந்தையார்‌ 
ஸ்ரீ வைஷ்ணவ ஸாுதர்சனத்தின்‌ மூலம்‌ தொடங்கிய நூல்கள்‌ 
பல. அவற்றுள்‌ அவலர நிறைவுபெறுத்தியவை இருப்‌ 
பல்லாண்டு வியாக்க்யானமும்‌. திருப்பாவை வியாக்‌ி 
யானமும்‌. இந்த ஸந்த்யாவந்‌ ககபாஷ்யமுமாகும்‌. அவற்றில்‌ 
திருப்பாவை வீயாக்கயானம்‌ முன்னமே வெளியிடப்‌ 
பட்டது. ஸந்த்யாவந்தநபாஷ்யம்‌ இப்போது வெளியிடப்‌ 
படுகிறது. திருப்பல்லாண்டு வியாக்கியானம்‌ விரைவில்‌ 
ஸாுதர்சனத்திலேயே வெளியிடப்பெறும்‌. அவரால்‌ தொடங்‌ 
கப்பெற்று. அடியேனால்‌ பூர்த்திசெய்யட்பெற்ற பெரியாழ்வார்‌ 
ப்ரபரவமும்‌ தொடர்ந்து எழுதட்பெற்றுவரும்‌ விஸ்ணுசித்த 
விஜயம்‌ முதலானவற்றின்‌ முதற்பகுதியும்‌ அடியேனிடமே 
இடைக்கும்‌. அன்பர்கள்‌ பெற்றுப்‌ பயனடையலாம்‌. 


ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌, 


ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்‌, 

 

ஸந்த்யாவந்த நபாஷயம்‌. 


[ ஸ்ரீ உ. வே. கி. ஸ்ரீரிவாஸய்யங்கார்‌ ஸ்வாமி 
ஸ்ரீவைஷ்ணவ 6४.०5 9 0७०९ ஸ்தாபகர்‌ | 
-@- 
அவதரரிகை 

“நரராயணபரா வேதள தேவா நாராயணாங்கஜா: | 
நாராயணபரா லோகா காராயணபரா மகள: |!" 
[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை; தேவர்கள்‌ 
நாராயணனுடைய அங்கத்திலிருந்து உண்டானவர்கள்‌; 
உலகங்களும்‌ நாராயணனையே பற்றியிருப்பவை; யாகங்களும்‌ 
நாராயணனையே ஆராதீப்பவை.] என்னும்‌, 


நாபிர்‌ போக்‌ நிர்‌ முகமம்பு, ரேதோ 
த்‌,யெள: ஸீர்ஷமாமமா: ம்ருதிரங்க்‌,ரிருர்வீ | 
சந்த்‌,ரோ மகோ யஸ்ய த்ருகள்க்க ஆத்மா 
ஹ்யஹம்‌ ஸமுத்‌,ரோ ஜடம்‌ பு,ஜேந்த்பா: ॥ 
ரோமாணி யஸ்யெளவத,யோம்பு,வாஹா: 
கேமரா விரிஞ்சோ தி,ஷணா விஸர்க்க;: | 
ப்ரஜாபதிர்‌ ஹ்ருதயம்‌ யஸ்ய தர்ம: 
ஸ வை பவார்‌ புருஷோ லோககல்ப: || 
[ாபியே ஆகாசம்‌; அக்நி முகம்‌; ஜலம்‌ ரேதஸ்‌, ஸ்வர்க்கம்‌ 
தலை: திக்குகளே செவிகள்‌; தஇருவடிகள்‌ பூமி; சந்த்ரன்‌ 
மனஸ்‌. ஸூர்யன்‌ கண்‌; அஹங்காரம்‌ சிவனாகிய நானே; 
சமுத்திரம்‌ வயிறு; இந்திரன்‌ புஜங்கள்‌; ` ஓஷதிகள்‌ 
ரோமங்கள்‌; மேகங்கள்‌ தலைமயிர்‌; பிரமனே புத்தி; பிரஜா 
பதியே அண்குறி; தர்மமே ஹ்ருதயம்‌; (இப்படிப்பட்ட) 
நீரே உலகத்தை சரீரமாகக்கொண்ட வீராட்புருஷனாக நீர்‌. ] 
என்றும்‌ ஸ்ரீபாகவதத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. 

“ஜ்யோதிம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணு: 
678 விஷ்ணுர்‌ கிரயோ திலுமச | 
நத்‌,யஸ்‌ ஸமுத்‌,ராமச௪ச ஸ ஏவ ஸர்பம்‌ 
யத,ஸ்தி யந்நாஸ்தி ௪ விப்ரவர்ய |!” 
[விப்ரச்ரேஷ்டரே! சந்திரன முகலிய சோதிகளும்‌ 
விஷ்ணுவே; உலகங்களும்‌ விஷணுவே; வனங்களும்‌, மலை 
களும்‌. திசைகளும்‌ விஷ்ணுவே. நதிகளும்‌, சமுக்திரங்களும்‌. 
விகாரமடைபவையும்‌,  விகாரமடையாதவையும்‌ ஆகிய 
எல்லாம்‌ அ௮வனே.] என்றும்‌. 


“ஸர்வரத்கமயோ மேரு: ஸர்வாங்சர்யமயம்‌ நப: | 
ஸர்வதீர்த்தமமி க,ங்கள ஸர்வதே,வமயோ ஹரி: |." 
[மேருமலை ஸர்வரத்னங்களையும்‌ கொண்ட து; ஆகாசம்‌ எல்லா 
அச்சரியங்களையும்‌ உடையது; கங்கை ஸர்வதிர்த்தமய 
மானது; ஹரி எல்லா கேவதைகளையும்‌ சரிரமாகக்‌ 
கொண்டவர்‌. / என்றும்‌ பராசரசெள௩காதி ரிஷிகள்‌ 
சொல்லியிருக்கிறார்கள்‌. 


“ஸு ஆத்மா அங்களந்யந்யர தேவதா: `` [அந்தப்‌ பரம 
புருஷன்‌ ( எல்லாருக்கும்‌ ) ஆத்மாவாயிருக்கறொோன்‌; மற்ற 
தெய்வங்கள்‌ அங்கங்களாகின்‌ றனர்‌.] என்று வேதமும்‌ 
விளம்பிற்று. ஸ்ரீமக்காராயணனே பரமாத்மாவென்றும்‌, 
மற்றவர்களெல்லாராம்‌ அவனுக்கு சரீரபூதர்களான ஜீவர்‌ 
களே என்றும்‌ ஸகலஃஸ்த்ரங்களும்‌ கோஷிக்கின்‌ றன. 
இதையே பாரரரீரகமீமாம்ஸாமாஸ்த்ரமும்‌ உத்கோஷிக்கறது. 
தேவமநுஷ்யதிர்யக்ஸ்தாவரசரிரங்களிலிருக்கும்‌ ஆத்மாக்களை 
யெல்லாம்‌ தரிப்பவன்‌ தாமோதரனே; நியமிப்பவன்‌ 
ஈாரரயணனே; ஸ்வாமியாயிருப்பவன்‌ ஸ்ரீதரனே. இப்படி 
ஜீவபரர்கள்‌ ஒருவரையொருவர்‌ பிரித்துப்‌ பார்க்கமுடி 
யாதபம்‌ ஒன்று சேர்ந்திருப்பதினால்‌ ஜீவாதக்மாக்களைச்‌ 
சொல்லும்‌ பதங்களெல்லாம்‌ அபர்யவஸாறவ்ரு த்‌ இயினால்‌ 
அந்தர்யாமிபகவான்‌ வரையிலும்‌ குறிக்கும்‌. இவ்விஷயங்க ளை 

“ய ஆத்மநி திஷ்ட்டந்காத்மகோந்தரோ யமாத்மா ந வேத, 
யஸ்யமத்மா மாரீரம்‌ ய ஆத்மா௩மந்தரோ யமயதி ஸ த ஆத்மா 
அந்தர்யாம்யம்ருத்‌: |!" [எவன்‌ ஆத்மாவிலிருந்தகொண்டு 
ஆச்மாவினாள்ளும்‌ இருக்றொனோ, எவனை ஆத்மா அறிய 
வில்லையோ. எவனுக்கு ஆத்மா ८०0 8८60, எவன்‌ ஆத்மாவை 
உள்ளிருக்துகொண்டு நியமிக்கறொனோ. அழிவற்றவனான 
அவனே உனக்கும்‌ ஆத்மாவாகவும்‌. உள்ளிருந்து நியமிப்ப 
வனாகவுமிருக்கிறான்‌.] என்றும்‌. ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா 
அபஹதபாப்மா தி,வ்யோ தேவ ஏகே நாராயண:'' [பரம 
பகத்திலிருக்கும்‌ இந்க நாராயணன்‌ ஒருவனே, தோஷ 
மற்றவனாகவும்‌ எல்லா ஜீவர! சிகளுக்கும்‌ அந்தராத்மாவாக 
வும்‌ விளங்குகிறான்‌. ] என்றும்‌. “யஸ்ய ப்ருதிீ மமரீரம்‌ ய: 
ப்ருதி,வீமந்தரே ஸஞ்சரர்‌ யம்‌ ப்ருதி,வீ ' வேத, [எவனுக்கு 
பூமி ५०१४ 8८67, எவன்‌ பூமியினுள்‌ ஸஞ்சரிறச்துக்கொண்டி 
ருக்கறானோ. . எவனை பூமியானது அ௮றியவில்லையோ........ J 
என்றும்‌. -அந்த: ப்ரவிஷ்ட: மராஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா'' 
[ஸர்வாந்தர்யாமியான நாராயணன்‌ ஜனங்களை உள்‌ 
நுழைந்து நியமிக்கறாோன்‌.] என்றும்‌, “ அந்தர்‌ ப,ஹிங்ச 
தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: कण्ठीः" [ஈாராயணன்‌ 
அவையெல்லா வற்றையும்‌ உள்ளும்‌, புறமும்‌ வியாபித்து 
நிற்கறொோன்‌.] என்றும்‌. + कछ ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்‌,ர: 
ஸோஃக்ஷர: பரம: ஸவராட்‌ "` / அவனே பிரமனுக்கும்‌. சிவ 
னுக்கும்‌, இந்திரனுக்கும்‌. அழிவற்றவனும்‌. கர்மவசப்படாத 
வனும்‌, மேலானவனுமான முக்கா த்ம/வுக்கும்‌ அந்தர்யாமி, | 
என்றும்‌. பல பல வாக்யங்களில்‌ வேதம்‌ விளக்கிற்று. 
எல்லாப்‌ பொருள்களுக்கும்‌  அந்தர்ய। மியாயிருப்பதால்‌ 
ஸ்ரீமந்காராயணன்‌ ஸர்வமப்தவாச்யலாயிருக்கறான்‌ என்று 
ஆசார்யர்களும்‌ நிர்வஹித்திருக்கிறார்கள்‌. 


இப்படிப்பட்ட ஸ்ரீமந்கநாராயணனை அடைவதற்கு பக்தி 
ரூபமான ஜ்ஞாநமே ஸாதநமென்பதை “'தமேவம்‌ வித்‌,வா 


ஈம்ருத இஹ ப,வதி'' [அவனை இம்மாதிரி அறிபவன்‌ இந்த 
ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌ அடைகறான்‌.] என்றும்‌. “யோ 
வேத, நிஹிதம்‌ கு,ஹாயாம்‌ பரமே வ்யேரமந்‌। ஸோூ$ங்நுதே 
ஸர்வாந்‌ காமாக்‌ ஸஹ ப்‌,ரஹ்மணா விபம்சிநேதி |” [ஹ்ருதய 
குலையிலிருக்கும்‌ பரமாத்மாவை எவன்‌ அறிறொனே, 
அவன்‌ பரமபதத்தில்‌ ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ அவ 
னுடைய கல்யாணகுணங்கள்‌ எல்லாவற்றையும்‌ அதநுபவிக்‌ 
கிறான்‌.] என்றும்‌ வேதீவாக்யங்கள்‌ விளக்குகின்‌ றன. 


ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும்‌. இந்த விஷயமே 


பிரஸித்தப்படுத்தப்பட்டிருக்கிறது. 

“த்‌ யாயந்‌ நாராயணம்‌ தே,வம்‌ ஸ்நாநாதிஷு ௪ = 10 6072 | 
ப்‌, ரஹ்மலோகமவாப்நோதி ௩ சேஹாஜாயதே புந: ||” 
[ஸ்நானம்‌ முதலிய எல்லாக்‌ கர்மங்களைச்‌ செய்யும்போதும்‌, 
தேவனாகிய நாராயணனை தியானிப்பவன்‌ ட்ரஹ்மத்தின்‌ 
உலகத்தை அடைகிழுன்‌ ; மறுபடியும்‌ இங்கு பிறப்பதில்லை. ] 
என்றும்‌. 


“அநந்யாம்‌ சிந்தயந்தோ மாம்‌ யே ஜரா: பர்யுபாஸதே | 
தேஷாம்‌ நித்யாபி,யுக்தாநாம்‌ யோக,க்ஷேம்‌ வஹாம்யஹம்‌।।”' 
[மற்ற எதையும்‌ நினையாதவர்களாய்‌. என்னையே எந்த 
ஜனங்கள்‌ உபாஸிக்கிறார்களேோ, எப்போதும்‌ என்னுடன்‌ 
சேர்ந்தருக்கையை வீரும்பும்‌ அவர்களுடைய யோக 
கேேமத்தை நான்‌ வஹிக்கறேன்‌.] என்றும்‌, 


“விசார்ய ச புராணார்த்த,ாம்‌ ஸவேதரநாத்மடி ஸ்திதம்‌ । 
விஷ்ணும்‌ ஸத,ா ஹ்ருதி, த்‌,யாயேத்‌ ஸம்ஸாராக,விமுக்தயே।/”' 
[வேதங்களுடன்‌ கூடிய புராணங்களின்‌ பொருள்களை 
விசாரித்து. ஆத்மாவினாள்ளிருக்கும்‌ விஷ்ணுவை. ஸம்ஸார 
பாபங்கள்‌ நீங்குவதற்காக எப்போதும்‌ ஹ்ருதயத்தினுள்‌ 
இயானிக்கவேண்டும்‌.] என்றும்‌, 


“ஆலோட்‌,ம ஸர்வமாஸ்த்ராணி விசார்ய ௪ (|; பு: | 
இத,மேகம்‌ ஸுநிஷ்பந்நம்‌ த்‌,யேயோ நாராயணஸ்ஸத,ா ॥!”' 
[எல்லா சாஸ்திரங்களையும்‌ பார்த்து, மறுபடியும்‌ மறுபடி 
யும்‌ விசாரம்‌ செய்தால்‌ நாராயணனே எப்போதும்‌ 
தஇயானிக்கத்தக்க௨ன்‌ '' என்னுமிது ஒன்றே ஈன்றாகத்‌ தேறி 
நிற்கும்‌.] என்றும்‌, 


“யஸ்ய த்வாபரோ மர்த்யோ ப்ஏஹ்மஹத்த்யாதி,தேோஷஜம்‌। 

ஈாமாயேத்‌ பாதகம்‌ ஸத்‌,ய: இம்‌ புக: கத்‌,யதே பரம்‌ |” 
[எவனை தியானிப்பதில்‌ ஈடுபட்டிருக்கும்‌ மனிதன்‌ ப்ரஹ்ம 
ஹத்தி முதலிய கோஷங்களாலேற்படும்‌ பாபத்தை உடனே 
போக்கடிக்கிறானோ, (அவன்‌ விஜயத்தில்‌) மற்ற பாபங்களைப்‌ 
பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?] என்றும்‌, 


“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: | 
அரிச்ச,யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: ॥” 
[கெட்ட மனமுடையவர்களாலும்‌ நினைக்கப்பட்ட ஹரி 
பாபங்களைப்‌ போக்கடிக்கறொோன்‌. இஷ்டப்படாமல்‌ தொடப்‌ 
பட்டபோதிலும்‌ நெருப்பு தஹித்தே தீருமன்‌ றே. ] என்றும்‌, 


“ர௬ுசோ யஜ9ம்ஷி ஸாமாரி யோதீ,தே$ஸக்ருத;ஞ்ஜஸா | 
ஸக்ருந்காராயணம்‌ ஸ்ம்ருத்வா பலம்‌ தஸ்ய ஸமங்நுதே |” 
[ எவனொருவன்‌. ருக்‌. யஜுஸ்‌ ஸாம வேதங்களைப்‌ பலதடவை 
நன்றாக அத்யயனம்‌ செய்கிறானோ. அவனுடைய டலனை ஒரு 
கடவை நாராயணனை நினைப்ப தினால்‌ அடைகஞறோன்‌. ] என்றும்‌, 


“வ்ரஜந்த்யகந்யமகஸோ ஜ்ஞாத்வா பூ,தாதிமவ்யயம்‌ | 

யே பஹந்தி து மாம்‌ ப,க்த்யா மயி தே தேஷு சரப்யஹம்‌ |॥'” 
[வேறொன்‌ நிலும்‌ செல்லா த மனமுடையவர்களரய்‌. என்னை 
பூகங்களுக்குக்‌ காரணபூகனாகவும்‌. அழிவம்றவனாயும்‌ அறிந்து 
எவர்கள்‌ பக்தியுடன்‌ ஆராதிக்கறோர்களோ. அவர்கள்‌ 
என்னிடத்திலிருக்கிறார்கள்‌; கானும்‌ அவர்களிடத்திலிருக்‌ 
கிறேன்‌.] என்றும்‌ சொல்லப்பட்ட தன்றோ. இந்த விதி 
வாக்கியங்களிலிருந்து நாராயணனையே நர்ம்‌ ( 17 ०००८० 
செய்யவேண்டுமென்றும்‌. தஇயானம்‌, மனனம்‌. பஜனம்‌. 
அஅஸ்மரணம்‌ முதலிய பதங்களினால்‌ சொல்லப்படும்‌ பக்தி 
அவனை அடைவதற்கு உபாயமென்றும்‌ ஏற்படுகிறது. 


இப்படிப்பட்ட இந்த பக்திக்கு அங்கம்‌ கர்மமே என்று 


ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ ப்ரஸித்தம்‌. மநோ வாக்‌ காய 


கர்மங்களால்‌ அந்த பகவானுக்கு ஆராதனம்‌ செய்ய 

வேண்டுமென்பது 
“தஸ்மாத;ுந்ய ப௱வஸ்த்வம்‌ தே,வதே,வம்‌ 77 क 555४ | 
ஆராதயரந்‌ ஹ்ருஷீகேமாம்‌ மநோவாக்காயகர்மபி,:॥ ' 

[ ஆகையால்‌. நீ வேறொன்றிலும்‌ நினைவில்ல: கவனாய்‌ தேவ 


தவனும்‌.இந்திரியங்களை நியமிப்பவனுமானஜநார்த்தனனை.. 


(08/50 வாக்‌ கரய கர்மங்களால்‌ ஆராதித்துக்கொண்‌டிருப்பா 
யாக.] என்றும்‌. 


“ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச்சித்தம்‌ யத்‌ தத£ர்ப்பிதம்‌| 
தாவேவ = கரெள ங்லாக்‌,யெள யெள தத்பூஜநதத்பரெள |!” 
. [எது ஹரியைத்‌ துதிக்கிறகோ அதுவே நாக்கு; அவனிடம்‌ 
எது செலுத்தப்பட்டிருக்கிற கோ அதுவே மனம்‌; எக்கை 
கள்‌ அந்தப்‌ பரமாத்மாவைப்‌ பூஜிப்பதில்‌ ஈடுபட்டிரறாக்‌ 
கின்‌ றன வோ, அக்கைகளே சிறந்தவை] என்றும்‌. 
“ம்ருதிஸ்ம்ருத்யுதி,தம்‌ ஸம்யக்‌ ஙித்யமாசாரமாசரேத்‌ |” 
[சீருதிஸ்ம்ருதிகளிற்‌ சொல்லப்பட்ட ஆசாரங்களை நன்றாக 
எப்போதும்‌ அநுஷ்டிக்கவேண்டியது.] என்றும்‌. 
“ஆசாரப்ரப,வோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: |!" 
[ஆசாரத்தைக்‌ காரணமாகக்கொண்ட ௧. தர்மம்‌; தர்மத்திற்கு 
௮அச்யுதனே ஸ்வாமி.] என்றும்‌ சொல்லப்பட்ட து. 


இப்படிப்பட்ட இந்தக்கர்மம்‌ நித்யமென்றும்‌,மறைமித்திக 
மென்றும்‌. காம்யமென்றும்‌ மூவகைப்படும்‌. ப்ராஹ்மண 
க்ூஷத்ரியவைங்யர்களாகிற மூன்று வர்ணத்தவரும்‌, ஸ்ருதி 
ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்ட நித்யறைமித்‌ திககர்மங்களை 
அனுஷ்டிப்பதே மேலான பகவதாரரதனமென்பதும்‌ மோக்ஷ 
ஹேதவென்பதும்‌, 

“ஸ்வகர்மணா தமப்யீர்ச்ய ஸித்‌,தி,ம்‌ விந்த,தி மாநவ:' 
[கன்னுடைய கர்மத்தனால்‌ பகவானை அர்ச்சனம்‌ செய்து 
மநுஷ்யன்‌ ஸித்தியை அடைகறோன்‌.] என்றும்‌. 
*'கர்மணைவ ஹி ஸம்ஸித்‌,திமாஸ்தி,தா ஜககாத,ய:' 
[கர்மத்தனலேயே, ஜனகர்‌ முதலியவர்கள்‌. மேலான 
ஸித்தியை அடைந்தார்கள்‌ ] என்று தையிலும்‌, 


“வர்ணாமங்ரமாசாரவதா புருஷேண பர: புமாந்‌ |. 
விஷ்ணுராராத்‌,யதே பந்த, நாந்யஸ்‌ தத்தோஷகாரக: |'' 
[வர்ணாச்ரமங்களுக்குத்‌ தகுந்த ஆசாரத்சகை உடையவனான 
புருஷனால்‌ பரமபுருஷனான விஷ்ணு ஆராதிக்கப்படுகிறார்‌. 
அவருக்குப்‌ பிரியத்தைக்‌ தரும்‌ வழி வேறில்லை. ] என்றும்‌. 
“வாஸுதே,வே மநோ யஸ்ய ஜபஹோமார்ச்சநாதி*| 
தஸ்யாந்தராயோ மைத்ரேய! தே,வேந்த்,த்வாதி,கம்‌ ப,லம்‌॥'' 
[ மைத்ரேயரே! ஐபம்‌, ஹோமம்‌, அர்ச்சனம்‌ முதலிய கர்மங்‌ 
களைச்‌ செய்கையில்‌ எவனுடைய மனம்‌ வாஸுதேவனீடத்‌ 
தில்‌ ००८१७. 5.08 57, அவனுக்கு கேவேந்திரனாயிருக்கை 


முதலிய பலங்கள்‌ டையூறாகவே தின்‌ றன.] என்றும்‌ 
(^ ய்‌ cB dD A 


விஷணுபுராணத்திலும்‌ பேசப்பட்டது. மேலும்‌, 


“ஸ்ருதிஸ்ம்ருத்யுதி,தம்‌ க்ருத்யம்‌ மநஸாபி ऊ யே ஈரா:। 
ஸ்முல்லங்க்‌,ய ப்ரவர்த்தந்தே ௩ பூத்தா மம (147 (99) || ` 

[ ங்ருதிஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்டகர்மத்கை नै ए = மனிகர்‌ 

கள்‌ மனஸ்ஸினாலும்‌ மீறி நடக்கிறர்களோ. அவர்கள்‌ என்‌ னுடைய பக்தர்களல்லர்‌.] என்றும்‌, 


“ஜக,த்கர்த்‌ துர்‌ மஹேமாஸ்ய தி,வ்யாஜ்ஞாகாரிணோ வயம்‌ | 
இதி நித்யக்ரியா:. குர்யுர்‌ ஈரா யே வைஷ்ணவாஸ்து தே ॥ 


[ஜகத்‌ காரணனும்‌, மேலான ஈச்வரனுமான பகவா 
னுடைய திவ்யா ஜ்ஞைப்படி நடப்பவர்கள்‌ நாங்கள்‌ ' ' என்று 
கொண்டு எந்த மனிதர்கள்‌ நீத்யகர்மங்க அதுஷ்டிக்ிறொர்‌ 
களோ. அவர்களே வைஷ்ணவர்கள்‌.]' என்றும்‌, 


“விஷ்ணுப,க்திஸமாயுக்தாந்‌ ங்ரெளதஸ்மார்த்தப்ரவர்த்தகார்‌ | 
ப்ரீதோ பவதி யோ த்ருஷ்ட்வா வைஷ்ணவோ 5ஸெள 
ப்ரகீர்த்தித: ॥'' 
[ச்ருதிஸ்ம்ருதிகளில்‌ விதிக்கப்பட்ட நித்யகர்மங்களைச்‌ செய்‌ 
பவர்களும்‌. விஷ்ணுடக்தியுடன்‌ கூடியிருப்ப்வர்களுமான 
மனிதர்களைக்கண்டு எந்த மனிதன்‌ ப்ரீதியடைகறானே. 
அவனே வைஷ்ணவனென்று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌, 
“ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:.... தமவேஹி விஷ்ணுப,க்தம்‌'” 
[எவன்‌ தன்னுடைய வர்ண தர்மத்தினின்றும்‌ நழுவ 
வில்லையோ. அவனையே வீஷ்ணுடக்தனென்று அறிவாயாக. ] 
என்றும்‌ நித்யறைமித்திகாதி கர்மங்களை அநுஷ்டிப்பது 
வைஷ்ணவ லக்ஷணமென்று சீர்த்திக்கப்படட்ட த. 


இப்படிப்பட்ட இரந்த நித்யகர்மங்களில்‌ ஸந்த்யா 
வந்தனம்‌ ப்ரதானமான து. இக்கர்மத்தை அநுஷ்டிக்கா தவன்‌ 
ஸகலகர்மங்களையும்‌ அதுஷ்டிக்கத்‌ தகரதவனாகிறானென்பது 


“ஹந்த்‌யாஹீநேோ 5மமாசிர்‌ நிச்யம நர்ஹஸ்‌ ஸர்வகர்மஸஈ | 
யத,ற்யத்‌ குருதே கர்ம ந தஸ்ய ப,லபாாக்‌ ப,வேத்‌ ||” 
[ஸரந்த்யாவந்தனம்‌ செய்யா தவன்‌ எப்போதும்‌ அசுத்தமான 
வன்‌; ஒரு கர்மத்திற்கும்‌ யோக்யகையற்றன்‌ ; வேறு எந்தக்‌ 
கர்மத்தைச்‌ செய்தா லும்‌ அதன்‌ பலனை அடையமாட்டான்‌ .] 
என்று தக்ஷஸ்ம்ருதியிலும்‌, 

“நோபதிஷ்ட)ி ய: பூர்வாமுபாஸ்தே ந = பங்சிமாம்‌ | 

ஸ एए ூத்‌,ரவத்‌, பஹிஷ்கார்யஸ்‌ ஸர்‌ வஸ்மாத்‌, த்‌,விஜகர்மண::।॥” 
[எவனொருவன்‌ காலையிலும்‌. மாலையிலும்‌ ஸந்த்யாவம்தனம்‌ 
செய்யவில்லையோ. அவன்‌ இருபிறப்பாளர்க்கு ஏற்பட்ட 

எல்லாக்‌ கருமங்களிலிருந்தும்‌, குத்ரனைப்போல்‌ நீக்கத்‌ 
தக்கவன்‌.] என்று மற்றொரு ஸ்ம்ருதியிலும்‌. 

“நியதஸ்ய து ஸநயாஸ: கர்மணோ நோபபத்யதே'' 

[ அவசியம்‌ செய்யவேண்டிய கர்மத்தை விடுதல்‌ பொரும்‌ 
தாது.] என்று கதையிலும்‌ சொல்லப்பட்டது. 


அழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌ இவ்‌ விஷயத்தைப்‌ 
பற்றிப்‌ பேசியிருப்டதை இனி ஆராய்வோம்‌. 


“நகரமருள்‌ புரிந்து நான்முகற்குப்‌ பூமேல்‌ 

பகர மறை பயந்த பண்பன்‌ -பெயரினையே 

புத்தியால்‌ சிந்தியாது ஓதி உருவெண்ணும்‌ 

அந்தியால்‌ ஆம்பயனங்கென்‌'்‌ 
என்று பொய்கையாழ்வார்‌ அருளிச்செய்தார்‌. “எம்பெருமா 
னுடைய திருநாமங்களை மனத்தால்‌ நினையாமல்‌ பிக்கப்‌ 
படும்‌ ஸந்த்யாவந்தனத்தால்‌ என்ன பயன்‌'' என்று 
அருளியதிலிருந்து. பகவத்‌ கைங்கர்யமாக நினைத்துச்‌ செய்யும்‌ 
ஸந்தக்யை மேலான பனைத்‌ தருவது என்றும்‌ ஏற்படுகிறது. 
திருமங்கையாழ்வார்‌ 


“சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித்‌(து) 
ஆதியாய்‌ வரும்‌ அந்தணாளரரறு அணியாலி அம்மானே! 
என்று அருளிச்செய்தார்‌. இங்கு “சந்தி' என்பது ஸந்த்யா 
வந்தனம்‌ முதலிய நித்யகர்மங்களையும்‌, 'வேள்வி' என்டது 
நையமித்த்க கர்மங்களையும்‌. சடங்கு” என்பது காம்ய 
கர்மங்களையும்‌ குறிக்கிறது. இதிலிருந்து அக்காலத்தில்‌ 
வ்யபதிஷ்டர்களாயிருந்த விப்ரர்கள்‌5 நித்ய: நையித்திக 
கர்மங்களையும்‌. ( காமரஹிதமான ) காம்யகர்மங்களையும்‌ 
பகவத்கைங்கர்யமாக அநுஷ்டித்தே வரந்தார்களென்று 
ஏற்படுகிறது. நம்மாழ்வாரும்‌ 
*“செந்தொழிலவர்‌ வேத வேள்வியறாச்‌ சிரிவரமங்கல நகர்‌ 
அந்தமில்‌ புகழாய்‌ 

என்று அருளிச்செய்தார்‌. ஸூத்ரகாரரான பாதராயணரும்‌, 
“அக்‌,நிஹோத்ராதி, து 55 500 017 ८।९/ 5 ॐ 8530 ८०/57 த்‌[ அக்னி 
ஹோத்ரம்‌ முதலியவைகள்‌ (அநுஷ்டிக்கப்பட வேண்டியவை 
களே); வீத்மையாகிற காரியத்தின்‌ பொருட்டு அவைகள்‌ 
காணப்படுவதால்‌.] என்று உபாஸகர்களுக்கு அக்நி 
ஹோத்ரம்‌ முதலிய நித்ய நைமித்திக கர்மங்கள்‌ 'அவசியம்‌ 
அநுஷ்டிக்கத்தக்கவை என்பகை உபதேசித்தார்‌. இங்கு 
ஆதி பாப்தத்தினால்‌ ஸந்த்யாவந்தநாதிகள்‌ சொல்லப்படு 
இன்றன. ஸ்ரீபாஷ்ய தாபாஷ்யா திகளில்‌ எம்பெருமானாரும்‌ 
இவ்விஷயங்களை விரித்துரைத்தார்‌. 


இனி, ப்ரபந்நர்கள்‌ இந்த சக்க சட ஸ்ம 
செய்யவேண்டுமா என்பதைப்‌ பற்றிய வீசரிரம்‌ செய்யப்‌ 
படுகிறது. பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்‌ னை பரந்த 
ரஹஸ்யத்தில்‌ தீவயப்ரகரணத்தில்‌ “ அகையால்‌ ஸந்த்யா 
வந்தநாதிகளோடாதி வீடவுமாம்‌; சிகாயஞ்ஞோபவீதாதி, 
களோபாதி கிடக்கவுமாம்‌ என்கற அறியமம்‌ அநுஷ்டராந 
தீவயத்திலும்‌ ப்ரகாசிக்கிறது,'' என்று அருளிச்செய்தார்‌. 
இதிலிருந்து ஸந்த்யா வந்‌ தநா திகளை ப்ரடந்நர்களில்‌ சிறந்தவர்‌ 
களான சில அதிகாரிகள்‌ வீட்டடாலும்‌. அவர்களுக்கு தோஷ 
மில்லை என்று ஏற்படுகிறது. இவ்வீஷய த்தைச்‌ சரமங்லோக 
ப்ரகரணத்திலும்‌ பின்வருமாறு வீவரித்திருக்கிறார்‌.— 


“ஆக, பஹுவசனத் தாலே மோக்ஷஸாத தயா ப்ரத 
மான தர்மங்களை எடுக்கையா ல. தர்மவிமேஷமான ஸர்வ 
பப்‌,த,ம்‌ தரைவர்ணிகஸாதாரணமாய்‌. ஸந்த்யாஹீ 
நோ$0ுகிர்‌ நித்யமநர்ஹஸ்‌ ஸர்வகர்மஸு ', £தே த்,வகம்‌ 
புஞஜதே பாபா யே பசந்த்யாத்மகாரணாத்‌ ' என்று யோக்‌, 
யதாபா த,கமான ஸந்த்யாவந்தன டஞ்சமஹாயஜ்ஞா தஇகனைச்‌ 
சொல்லுகிறது. ப்ரதானமான கர்மாதிகளைச்‌ சொன்ன 
போதே. இவற்றுக்கு ५75५115 7८7 58500 व्य அவையும்‌. 
"नण ऊ (017८147 மஹாபளஹோ नण 5 , 5; ம்‌ (4/ @८।॥ @5८2' 
என்று ப்ரயோழநாபாவத்தாலே தன்னடையே கழியும்‌ 
படியாயிருக்க,  த்யாஜ்யதயா ப்ருதங்கிர்தேமம்‌ பண்ணு 
கைக்கு ஹேதுவென்னென்னில்‌: *ஸர்வகர்ம பஹிஷ்க்ருத:" 
என்‌ று ஒரு கர்மத்தக்கும்‌ அர்ஹனல்லன்‌ என்கையாலே. மேல்‌ 
வக்ஷ்யமாணமான ஸ்வீகா ரா நுஷஸ்டரனத்துக்கும்‌ யோக்‌,ய தர 
பாதகமான இவை அபேக்ஷிதமாகாதோ? என்று உதிக்கிற 
சங்கையை வ்யாவர்த்திக்கைக்காக ப்ரு 59597 5 १५०८४ 
பண்ணுழெது. அந்த 62०95 ८ 0 ॐ ॐ1 5 & = சைதர்ய. மாத்ரமே 
५१०. அபேகவிதம்‌........ ஆக, அநுஷ்டிக்கப்புகுகிற ஸ்வீகாரத்‌ 
தக்கு ஸந்த்யாவந்தனம்‌ அந லீபக்ஷிதமென்கைக்காக ப்ரு கங்‌ 
நிர்த்தேசம்‌ பண்ணிற்று........ இந்க ஸர்வப்தர்‌ தன்னிலே 
“லோகஸங்க்‌,ரஹமீமவ। பி ஸம பமயர்கர்த்துமர்ஹஸி' என்று 
லோகஸங்க்‌ரஹார்த்கமாகக்‌ கர்த்தவ்யமான கர்மங்களும்‌, 
புத்ரார்த்தமாகப்‌ பண்ணும்‌ பும்ஸவநாதி வ்யாபாரங்களும்‌ 
த்யாஜ்யதயா அநுஸக்கதேயம்‌........ இனி ஆந்ருமும்ஸ்யமே 
இவற்றினுடைய அநுஷ்டாநத்துக்கு ஹேதுவாகக்‌ கடவது;.... 
அநந்தரம்‌ * பரித்யஜ்ய ' என்று அதினுடைய தீயாக, 
ப்ரகாரத்தைச்சொல்லுகிறது தர்மஸ்வரூபத்யாக,த்கதையோ? 
சுர்மபலாதி,த்யாக,த்தையோ? தர்மத்தில்‌உபாயத்வபுட ல்‌; தி, 
த்யாக,க்தையோ? என்னில்‌: இவ்வதிகாரிக்கு யாவச்சரீர 
பாதம்‌  காலகஷேபத்துக்காக பகவத்தோஷஹேதுபூத, 
மானவை அநுஷ்ட்டேயமாகையாலேதர்மஸ்வரூபத்யாகமாக 
மாட்டாது; பலா திகள்‌. ஸாததனுக்குங்கூட த்யாஜ்யமாகக்‌ 
கீழே உக்தமாகையாலே, பலாதி,த்யாகத்தைச்‌ சொல்லுகிற 
தகாகவொண்ணா து. ஆக, இங்கு தர்மந்களினுடைய உபாய 
தவப்‌ தி,த்யாகத்தைச்‌ சொல்லுறது. அந்த உபாயத்வ 
ப்த்‌;தித்யாகமாவது:- லாபஹேதுவான ` பகவத்ப்ரிதிக்கு 
ஸாதநமென்கிற ப்ரதிபத்தியைத்‌ தவிருகை, ஆகையாலே 
ஸ்வரூப த்யாகத்தால்‌ வரும்‌ குறையும்‌. பலாதித்யாக த்தைச்‌ 
சொல்லுகிறதென்கிறத்தால்‌ வரும்‌ பு£ருச்தியுமின்‌ றியிே 
ஓழியும்‌........ அவன்‌ (ஸாத,கன்‌) உபாயத்வபீத்யா அநுஷ்டிக்‌ 
கும்‌; இவன்‌ (ப்ரபன்னன்‌ ) போக;ப்டத்யா அநுஷ்டிக்கும்‌. 
அவன்‌ விதிப்ரேரிதனாய்‌ அநுஷ்டிக்கும்‌; இவன்‌ ராகப்ரேரி 
தனாய்‌ அநுஷ்டிக்கும்‌. அவனுக்கு வர்ணாம்ரமதர்மம்‌ நியமேக 
அநுஷ்டிக்கவேணும்‌; இவனுக்கு வர்ணாச்ரமதர்மா நுஷ்டாந 
மாகவுமாம்‌; வைஷ்ணவகஞ்சித்காரமாகவுயூம்‌.  ப்ராதி 
கூல்யறிவ்ருத்‌ தியிலே நியமம்‌; ஆறுகூல்யங்களில்‌ ஏதேனு 
மாம்‌. ஆகையிழே நம்மாசார்யர்கள்‌ இவற்றை அநுஷ்டிப்பா 
ரும்‌ அநுஷ்டியாதாருமாய்ப்‌ போருகிறது. அந்த நியம 
மில்லாமையிறே ஸாதகனான அக்ரூரன்‌ ஸாத்யவஸ்த 
ஸந்நிஹிதமாயிருக்கச்‌ செய்தேயும்‌. தன்னுடைய க்ருத்யத்‌ 
திலே அரந்வயித்த து" 


இரந்த ஸ்ரீஸமூக்திகளிலிருந்து பின்வரும்‌ விஷயங்கள்‌ 
தெளிவா கின்‌ றன:—(1) “ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய'' என்கிற 
வீடத்தில்‌ ஸர்வசப்தத்தாலே பலஸாதாமான கர்மயோகாதி 
களை அநுஷ்டிப்பதற்கு யோக்‌யதையைத்‌ தரும்‌ (யோக்‌ 
யதா$$பாத,கமான ) ஸந்த்யாவந்தனம்‌ முதலிய கர்மங்களை 
விடச்சொல்லுகிறது. (2) இங்கு வீடுகையா வது அவைகளை 
அதநுஷ்டியாமலே இருப்பதன்று. அவைகள்‌ எம்பெருமானை 
அடைய உபாயம்‌ என்னும்‌ புத்தியை விடுவதே இங்கு 
சொல்லப்படும்‌ பரித்யாகம்‌, (38) பகவத்கைங்கர்பரூபமாக 
இவைகளை ப்ரடன்னன்‌ அதநுஷ்டிப்பான்‌. (4) இவைகளை 
அநுஷ்டிப்பதற்கு லோகஸங்க்ரஹமும்‌ காரணமல்ல; லோகம்‌ 
க்ேமத்தை அடையவேண்டும்‌ என்னும்‌ இரக்கமே (ஆர்ரு 
५०८४०४५ 6) காரணம்‌. (5) குஜணகாலமும்‌ இடைவீடாமல்‌ 
பகவத்பாகவதகைங்கர்யத்திலே ஈடுபட்டிருக்கும்‌ சில 
அதிகாரிகள்‌ இந்த ஸந்த்யா வந்தனாதிகளை முழுவதும்‌ வீட்டா 
இம்‌ அதனால்‌ தோஷமில்லை. இம்மாதிரியான அதிகாரிகள்‌ 
நம்‌ ஆசாரியர்களிலும்‌ சிலர்‌ இருந்திருக்கிறார்கள்‌. திருக்‌ 
கண்ணமங்கையாண்டான்‌ என்னும்‌ மஹான்‌ அவர்களில்‌ 
ஒருவர்‌. ப்ரபன்னன்‌ பகவத்கைங்கர்யங்களையே செய்துவர 
வேண்டும்‌; அனால்‌ ஸந்த்யாவந்தநா திருபமான பகவத்‌ 
வகைங்கர்யத்தைத்‌ தான்‌ செய்யவேண்டுமென்னும்‌ கட்டாய 
யில்லை. ஆகையால்‌ பகவத்பாகவத கைங்கர்யத்‌ திலீடுபட்டி. 
ருக்கும்போது ஸந்த்யாவர்‌ தநா திகாலம்‌ வந்தால்‌, ப்ரபன்னன்‌ 
அந்த ஸந்க்யாவந்கநரதிகளை விடலாம்‌. ஆனால்‌ உபாஸகன்‌ 
அச்சமயங்களிலும்‌ ஸந்த்யாவந்தநா திகளை (` அநுஷ்டித்தே 
யாகவேண்டும்‌. திருக்கண்ணமங்கையாண்டானைப்‌ போன்ற 
அதிகாரிகள்‌ இக்காலத்தில்‌ ஒருவரும்‌ இலராகையால்‌ இக்‌ 
காலத்திலுள்ள ப்ரபன்னர்கள்‌ ஸந்த்யாவர்‌ தநா திகளை பகவத்‌ 
பாகவதகைங்கர்ய ந. துக்கு இடையூறாக இல்லாத காலங்களில்‌, 
பகவதாஜ்ஞையாகவும்‌, பகவத்கைங்கர்யமாகவும்‌ நினைத்து 
அநுஷ்டிக்கவேண்டிய தே என்பகே இந்த ஸ்ரீஸூக்திகளி 
லீருந்து ஏற்படும்‌. 

“பராமுரம்‌ முநிவரம்‌ க்ருதபெளர்‌ வாண்ஹிகக்ரியம்‌ | 
மைத்ரேய: பரிபப்ரச்ச, ப்ரணிபத்யாபி,வாத்‌,ய ௪ ॥'* 
[பகவானை மனனம்‌ செய்யும்‌ ரிஷிகளில்‌ சிறந்கவரும்‌. காலை 
யில்‌ செய்யவேண்டிய கர்மாநுஷ்டானங்களையெல்லாம்‌ செய்து 
முடித்தவரும்‌. வைதிகதர்மத்துக்கு விரோதிகளான பாஹ்ய 
குத்ருஷ்டிகளை ப்ரமாண தர்க்கங்களாகிற சரங்களாலே 
ஜயித்ததாலும்‌,உள்ளிருக்கும்‌ விரோதிகளான ராகத்வேஷாதி 
களை ५८८० 58.07 தி,களாலே ஜயித்ததாலும்‌ பராசரர்‌ என்று 
பெயர்‌ பெற்றவருமான முனிவரை மைத்ரேய மஹர்வி தன்‌ 
பெயரைச்சொல்லி "அபி. வாதனம்‌ செய்து. ஸாஷடாங்க 
ஈமஸ்காரம்செய்து நன்றாகக்‌ கேட்டார்‌. ] என்பது ஸ்ரீவிஷ்ணு 
புராண த்தில்‌ முதல்‌ மலோகமாகப்‌ படிக்கப்பட்டிருக்கிறது. 
இகற்கு பூர்வசிக ஸ்ர வைஷ்ணவ பரமாசார்யர்களான 
ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌ என்ற எங்களாழ்வானும்‌. ஸ்ரீமத்‌ 
க்ருஷ்ணஸ ரி என்ற திருகாமத்தையுடைய பெரியவாச்சான்‌ 
பிள்ளையும்‌ வ்யாக்யானம்‌ செய்திருக்கிறார்கள்‌. “ ஸ்வ 
தர்மா நுஷ்ட;நாவிருத்‌; தே, ம௩: ப்ரஸாத,கரஸமயே புராணாதி, 
ஆக்‌,யேயமிதி ஸ்ாஸ்த்ரதள்ஸநாத்‌ '' [தனக்கேற்பட்ட 
கர்மா நுஷ்டானத்திற்கு விரோதமில்லாமலும்‌, மனஸ்ஸுக்கு 
ஸந்தோஷத்தை அளிப்பதா கவுமிருக்கும்‌ காலத்தில்‌ புராணம்‌ 
முதலியவைகளைச்‌ சொல்லவேண்டும்‌ எவ்று சாஸ்த்ரத்தில்‌ 
காணப்படுவதால்‌] என்றும்‌. “ப,சுவித்ஸஹமாராதநாதிகா 
விமேோஷதோ விமலம௩ஸம்‌'' . [பகவானை (கர்மங்களால்‌) 
ஆராதிப்பது முதலியவைகளால்‌ மிகவும்‌ தூய்மையடைந்த 
மனஸ்ஸை உடையவரான பராசரரை.] என்றும்‌ 
எங்களாழ்வான்‌ வியாக்க்யோானம்‌ செய்‌ சருளீனார்‌. பெரிய 
வாச்சான்பிள்ளையும்‌ -“பரமாத்மோபாஸநத்துக்கு அங்கமாக 
०7 00.575 595८907८. ஜ்ஞாநபூர்வகமான அநுஸஷ்டானமும்‌ 
அநுஷ்டிதமான ஸமயத்திலே.'' என்றும்‌. *'பரபக்்ப்ரதி 
க்ஷேபம்‌ பண்ணுகிறபோ தும்‌ அவஸரமன் று; உபாஸாகால 
மும்‌ அவஸரமன்று; ககங்கமான அநுஷஸ்டானமையமும்‌ 
அவஸரமன்று. ஆகையாலே க்ருகக்ருத்யனாய்‌, தன்னுடைய 
ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவஸ்ரத்திலல கேட்டான்‌ 
என்கை என்று அருளிச்செய்தார்‌. இவைகளிலிருந்து 
நித்யகர்மானுஷ்டானமான ஸரந்த்யாவந்கனத்தை அவசியம்‌ 
செய்யவேண்டுமென்‌ றும்‌, அதன்‌ மூலமாக பகவான்‌ 
ஆரா திக்கப்படுகறானென்றும்‌. அப்படி ஆராதிப்பதினால்‌ 
மனஸ்‌ சுத்தி அடைதநெது என்றும்‌. நித்யகர்மங்கள்‌ 
அநுஷ்டிக்கப்படவேண்டுமென்று சாஸ்திரங்களில்‌ விதிக்‌ 
கப்பட்டிருக்கிறதென்றும்‌. கர்மாநுஷ்டானம்‌ பரமாத்மோ 
८47 ०४ 5.8. அங்கமென்‌ றும்‌ தெளிவாகிறது. 

அசார்யாக்ரேஸரரான பிள்ளை லோகசார்யர்‌ ஸ்ரீவசன 
பூணத்தில்‌ “கைங்கர்யந்தானிரண்டு; அதாவ து-இஷ்டஞ்‌ 
செய்கையும்‌. அநிஷ்டம்‌ தவிருகையும்‌; இஷ்டாநிஷ்டங்கள்‌ 
வர்னாங்ரமங்களையும்‌ ஆனத்மஸ்வரூபத்தையும்‌ அவலம்பிஜ்‌ 
இருக்கும்‌." என்று அருளிச்செய்தார்‌, அவ்விடத்தில்‌ மண 
வாள மாமுனிகள்‌ அருளிய பின்‌ வரும்‌ வ்யாக்யான ஸ்ரீஸ௫க்தி 
யும்‌ இவ்விடத்தில்‌ அதுஸந்திக்கவுரியது- ஸ்வவர்ண 
ஸ்வாங்ரமோசிதமான தர்மங்களை பரார்த்தயுக்‌த்யா 
அதுஷ்டிக்கை இஷ்டமாய்‌,ஸ்வார்‌ 5,51८.15 சத்வா அநுஷ்டிக்கை 
அநிஷ்டமாயிருக்கை. பரார்த்தபுத்யா அநுஷ்டிக்கையாவ.து:- 
லோகஸங்க்ரஹதயாவாகவும்‌ ०६८, புத்ரர்களுடைய உஜ்‌ 
ஜீவநார்த்தமாகவும்‌  ஆரந்ருமம்ஸ்யத்காலே அதுஷ்டிக்கை. 
இவ்வர்த்தத்ைகை * இனி இவற்றில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ 
அதுஷ்டிக்கிறவை மரிஷ்யபுத்ரர்களுடைய உஜ்ஜீவரார்த்த, 
மாக ஆரந்ருமம்ஸ்யத்தாலே அநுஷ்டிக்கிறார்களித்தனை; 
இப்படி அனுஷ்டியாதபோது பகலத்‌ விபூதிபூதரான 
சேதநர்க்கு நாசஹேதுவாகையாலே ஈச்வரனுக்கு அரபிமத 
பூசீனவான்‌;ஆகையால்‌ யாதோரளவாலே லோகஸங்க்‌,ரஹம்‌ 
பிறக்கும்‌. யரதோரளவாலே ஸிஷ்ய புத்ரர்களுக்கு உஜ்ஜீவ ந 
முண்டாம்‌ அவ்வளவும்‌ அநுஷ்டே,யமென்‌ றதாய்த்து;ப்ரவ்ருத்தி 
தர்மந்தானே அபிஸந்தி, ७८५ ०35 57@ நிவ்ருத்தி 
தர்மமானவோபாதி இந்த நிவ்விருத்திகர்மமும்‌ ப்ராப்யாந்‌ 
தர்க்க,தமாகக்கடவது; இவ்விடத்தில்‌ அகரணேப்ரத்யவாயம்‌ 
எம்பெருமானுடைய அஈபிமதத்வமும்‌, தன்‌ னுடைய 
புருஷார்த்த, ஹாநியுமாகக்‌ கடவது' என்று தனிங்லோகத்‌ 
தில்‌ இவர்‌ தாமே அருளிச்செய்தாரிறே. இனி ஸ்வார்த்த, 
பக்த்யா அநுஷ்டிக்கையாவ த :-ஸ்வவர்ணஸ்வாங்ரமோசித 
மாக விஹிகமாகையாலே நமக்கு இவையனுஷ்டியாதொழி 
யில்‌ க்ருத்யாகரணரூபபாபம்‌ வருமென்று நினைத்து 
அநுஷ்டிக்கை.....(இஷ்டாநிஷ்டங்கள்‌ ) இத்யாதிக்கு ஸ்வ 
வர்ணஸ்வாய்ரமோசிதங்களைச்‌ செய்கை இஷ்டம்‌; 5 55०9 55 
தங்களைச்‌ செய்கை அநிஷ்டம்‌' என்றும்‌ 'ஆத்மஸ்வரூபக்‌ 
தக்கு உசிதமானவற்றைச்‌ செய்கை இஸ்டம்‌; தத்‌,விருத்‌, 
தங்களைச்‌ செய்கை அநிஷ்டம்‌' என்றும்‌ யோலஜிக்கவுமாம்‌. 
அங்ஙனுமன்‌ 056 क. = -ஒளபாதிகமுமாய்‌. அமித்யமுமான 
வர்ணாய்ரமங்களிலே ஊற்றிருக்கை அநிஷ்டம்‌; நிருபாதிக 
நித்யபேஷமான ஆத்மஸ்வரூபத்தலே ஊற்றிருக்கை 
இஷ்டம்‌ என்றும்‌ யோலிக்கவுமாம்‌. இங்ஙன்‌ ஊற்றத்தை 
யிட்டுச்சொல்லுகையன்‌ றிக்கே, 'அநிஷ்டம்‌ வர்ணாங்ரமத்தை 
அவலம்பித்திருக்கும்‌; இஷ்டம்‌ ஆக்மஸ்வரூபத்தை அவலம்‌ 
பீத்திருக்கும்‌' என்று இங்ஙனே விப,ஜித்து வர்ணாங்ரமா 
சாரத்தை அநிஷ்டகோடியாகச்‌ சொல்லப்பார்க்கில்‌ “ஸ்ருதி: 
ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌ய வர்த்ததே। 
ஆஜ்ஞாச்சே,த, மம த்‌,ரேரஹீ மத்‌,ப,க்தோ 5பி ஈ வைஷ்ணவ; ॥ 
[வேதமும்‌, ஸ்ம்ருதிகளளும்‌ என்னுடைய ஆஜ்ஞையே; 
எவன்‌ அகை ।6.7 ஈடக்கிறுனோ அவன்‌ என்‌ கட்டனையை 
மீறினவனாகவும்‌ எனக்கு த்ரோஹியாகவுமிருப்பதனால்‌ 
எனக்கு பக்தனாயிருந்கபோதிலும்‌ வைஷ்ணவனல்லல்‌ ; ] 
என்றும்‌, 'அவிப்லவடய தர்மாணாம்‌ பாலகரய குலஸ்ய ௪| 
ஸங்க்‌,ரஹாய ௪ லோகஸ்ய மர்யாத,ாஸ்த,பநாய ச || ப்ரியாய 
மம விஷ்ணோங்ச தேவதேவஸ்ய ஸார்ங்கிண:। மநீஷீ 
வைதி,காசாரம்‌ மஸாபி ௩ லங்க,யேத்‌ ॥' [வர்ணாச்ரமதர்மங்‌ 
கள்‌ அழியாமலிருப்பகற்காகவும்‌. ` குலகர்மங்களைக்‌ காப்‌ 
பாற்றுவதற்காகவும்‌, லோகஸங்க்ரஹத்திற்காகவும்‌, சாஸ்த்ர 
மர்யாதைஃை நிலைநபிறுத்துவதற்காகவும்‌, எனக்கும்‌. தேவ 
தவனும்‌, சார்ங்கமென்னும்‌ வில்லாண்டவனுமான 
விஷ்ணுவுக்கும்‌ பீரியத்தைச்‌ செய்யும்பொருட்டும்‌ புத்தி 
மானானவன்‌ வேதத்தில்‌ சொல்லப்பட்ட ஆசாரத்தை 
மனத்தினாலும்‌ மீறலாகா த.] “யதா, ஹி வல்லபே௱ராஜ்ஞோ 
ஈதீ;ம்‌ ராஜ்ஞா ப்ரவர்த்திதாம்‌। லேோகோபயோகிஜீம்‌ ரம்யாம்‌ 
ப,ஹுஸஸ்யவிவர்த்‌,தி,£ீம்‌ || லங்க,யந்‌ மட லமாரோஹேத, 
பேக்்ஜோஃ5பி தாம்‌ ப்ரதி! ஏவம்‌ விலங்க,யந்‌ மர்த்யேோ மர்யா 
தரம்‌ வேத;,றிர்மிதாம்‌ || ப்ர்யோ$5 ௩ ப்ரியோ5ஸெள மே 
மதரஜ்ஞாவ்யதிவர்த்தநாத்‌ | உபாயத்வக்‌,ரஹம்‌ தத்ர வர்ஜயேந்‌ 
மாஸா ஸாுதீ,:॥'' [ராஜாவினால்‌ உண்டாக்கப்பட்ட தும்‌. 
உலகத்திற்கு உபயோகப்படுவ தும்‌, அழகியதும்‌, அதிகமான 
பயிர்களை வளரச்செய்வதுமான நதிக்கு, அர்நதியை அபே௯ூஷி 
யாதவனும்‌ ராஜாவுக்குப்‌ பீரியனாயிருப்பவனுமான ஒருவன்‌. 
கெடுதிகளைச்‌ செய்தானாகில்‌ எப்படி சூலத்தில்‌ ஏற்றப்படு 
வானோ. அப்படியே வேதங்களால்‌ சொல்லப்பட்ட தர்மங்‌ 
களின்‌ வரம்புகளை (4 8.0 மனிதன்‌ எனக்கு இஷ்டனானா 
ஓம்‌ என்‌ கட்டளையை மீறினபடியாலே எனக்குப்‌ பிரியனான 
வனல்லன்‌; புத்திமான்‌ அந்தக்‌ கர்மாநுஷ்டான விஷயத்தில்‌ 
மனத்தில்‌ உபாயத்வபுத்தியை விடக்கடவன்‌.] என்றும்‌ 
ஸர்வேண்வரனும்‌' பிராட்டியும்‌ அருளிச்செய்த வசனங்‌ 
களோடும்‌ பூர்வாசார்யர்களுடைய வசநா நுஷ்ட்டானங்‌ 
களோடும்‌ விரோதிக்குமி8ற; ஆனபின்பு ழ்ச்சொன்ன 
படியே இவ்வாக்யத்துக்குப்‌ பொருளாகக்சடவது.”' 


இந்த ஸ்ரீஸூக்திகளிலிருந்து பின்வரும்‌ வீஷயங்கள்‌ 
கெளிவாகின்‌ றன: (1) ஸந்த்யா வந்தம்‌ முதலிய வர்ணா 
மரமதர்மங்களை “பிறருக்கு நன்மையைத்‌ தருவது' என்னும்‌ 
நினைவுடன்‌ அநுஷ்டிக்க வேண்டும்‌; தனக்கு நன்மையைத்‌ 
தருவது' என்னும்‌ நினைவுடன்‌ அநுஷ்டிக்கலாகர து. 
(2) லோகஸங்க்ரஹமும்‌. சிஷ்யபுத்ரர்களுடைய உஜ்ஜீவன 
மும்‌ இவற்றை அநுஷ்டிக்கைக்கு ஹேது. (3) இவை 
ப்ரபந்நனுக்கு ப்ராட்யத்தில்‌ அடங்கி விடுகின்றன. (4) 
இவற்றை அறுஷ்டியாவீடில்‌ எம்பெருமானுடைய அப்ரீதி 
எற்படுகிறட்டியா லும்‌, ஸ்வயம்ப்ரயோஜுமும்‌, பகவத்‌ 
கைங்கர்யமுமான இவற்றை இழக்கை கைங்கர்யஹானி 
யாகையாலும்‌ இவை அவச்யம்‌ அநுஷ்டிக்கப்படவேண்டு 
மவையே. (5) வர்ணாங்ரமாசாரத்திலேயே ஊன்றி ஆத்ம 
ஸ்வரூபத்தை அறியாமலிருக்கை அநிஷ்டமேயொழிய. வர்ணா 
ம்ரமாசாராநுஷ்டானம்‌ அநிஷ்டமன்று. இவைகளிலிருந்து 
ஸந்த்யாவந்தநம்‌ முதலிய வர்ணாங்ரமதர்மங்களை அ நுஷ்டிக்க 
வேண்டுமென்பதே எல்லா ஆசார்யர்களுக்கும்‌ உகந்த பக்ஷ 
மென்று கெளிவாக விளங்குகிறது. 


இந்த ஸந்த்யாவந்தன த்தை அறுஷ்டிக்கும்போ து அர்த்‌ 
தத்தை அறிர்ஜே அதுஷ்டிக்கவேண்டும்‌. அர்த்தஜ்ஞூர ७ 
மில்லாமல்‌ இவற்றை அனதுஷ்டிப்பது நிஷஸ்ப்ரயோஜனம்‌ 
என்பதே. “அதிகமப்யத்வயநம்‌ அ௩நுபாஷிதம்‌ அவக, 
ॐ1717 5590 கஸ்ய சந்தரபனளர இவ கேவலம்‌ பரிங்ரமகரம்‌ 
[வேதமானது அத்யயனம்‌ செய்யப்பட்ட போதி 
னும்‌, திரும்பப்படிக்கப்படாமலும்‌. அர்த்தம்‌ அறியப்‌ 
படாமலுயிருந்தால்‌, கழுதைக்குச்‌ சந்தனக்கட்டையின்‌ 
சுமையைப்போல்‌ ங்ரமத்தையே தருவதாக ஆகிறது. ] என்று 
நிருக்திசாரரால்‌ சொல்லப்பட்டது. ய ஏதேந ஹவிஷா 
யஜேத ய வு சைததே,வம்‌ வேத, '' [எவன்‌ இந்த ஹவீஸ்ஸி 
னால்‌ யாகம்‌ செய்றொனோ எவன்‌ இதை இப்படி அறிகறொனோ 
(அவர்களிருவரும்‌ இந்தப்‌ பலனை அடைகிறோர்கள்‌.)] என்று 
வேதத்தில்‌ அநுஷ்டானத்தினால்‌ அடையும்‌ பலனை அர்த்‌ 
தத்தை அறிவதனலேயே அடையலாமென்‌ றும்‌ சொல்லப்‌ 
பட்டது. ஆகையால்‌ இந்த மந்த்ரங்களின்‌ அர்த்தத்தை 
அறியவேண்டியது அவசியம்‌. 


நாம்‌ அனுஷ்டிக்கும்‌ மந்த்ரங்களின்‌ அர்த்தம்‌ தெரியாத 
காரணத்தினாலேயே அதன்‌ அவசியத்தை அறியாமல்‌ 
அனுஷ்டிக்காமல்‌ இருக்கிறார்கள்‌. எனையாவது ஒன்றைச்‌ 
செய்யவேண்டியது என்று விதித்திரக்கிறது என்று 
சொன்னால்‌ அக்காரணத்தை மட்டும்‌ கொண்டு அனுஷ்டிக்‌ 
கும்‌ காலம்‌ இதுவல்ல. அப்படி அனுஷ்டித்தால்‌ அதை 
மூடநம்பிக்கை (प्लान) என்‌ கிறார்கள்‌. மந்த்ரத்தின்‌ 
அர்த்தம்‌ என்ன? அதை ஏன்‌ அனுஷ்டிக்கவேண்டும்‌ 2 
அனுஷ்டித்தால்‌ பலன்‌ என்ன? அனுஷ்டிக்காவீடில்‌ தோஷ 
மென்ன? என்கிற கேள்விகள்‌ ஏற்படுகின்றன. இக்கேள்வி 
களுக்கு பதில்‌ சொல்லாவிடில்‌ பலர்‌ இக்கர்மத்கை 
அனுஷ்டிப்பார்கள்‌ என்று எதிர்பார்க்கமுடியா,து. இம்மாதிரி 
கேள்வீகள்‌ கேட்கும்‌ தன்மை வேதத்திலும்‌ பல இடங்களில்‌ 
காணப்படுகிறது. 


“மந்தூரம்‌ த்ராயத இதி மந்த்ர: ˆ” மனனம்‌ செய்ப 
வனைக்‌ காப்பாற்றுவதல்லவேோ மந்த்ரம்‌. மந்த்ரத்தின்‌ 
அர்த்தத்தைத்‌ தெரியாமலும்‌. ரிஷி, சந்தஸ்‌. தேவதை 
இவைகளை அறியாமலும்‌ செய்யும்‌ மந்த்ரம்‌ விபரீதபலன்‌ கலை 
அல்லவோ கொடுக்கும்‌. கணெறு வெட்டப்பூதம்‌ புறப்பட்ட 
கதைபோல்‌ ஆகிவிடும்‌. மேலும்‌ மந்த்ரங்களோ ஸம்ஸ்க்ருத 
பாஜையில்‌ இருக்கின்றன. அதுவோ நமக்குத்‌ தாய்‌ பாஷை 
யல்ல. எந்த 'ஸமூஹுத்தினராலும்‌ அது இப்பொழுது 
பேசப்படும்‌ பாஷையாக இல்லை. இதனால்‌ மந்த்ரங்களுக்குத்‌ 
தமிழில்‌ அர்த்தம்‌ தெரியவேண்டியது அவசியமாயிருக்கிறது. 
८5.57 8८67 ஜபிக்கவேண்டிய விஷயம்‌. ஜஐபஃமே மந்த்ரத்தி 
னால்‌ சொல்லப்படும்‌ பரம்பொருளை தியானம்‌ பண்ணுவது. 
இயானமேோ அறியப்பட்ட வஸ்துவைப்பற்றித்தான்‌ செய்ய 
முடியும்‌. அர்த்தம்‌ கெரியாவிடில்‌  தயானிக்கப்படும்‌ 
வ்ஸ்‌.துவை அறியமுடியாது. இதனாலேயே மந்த்ரம்‌ 
அதுஷ்டேயார்த்சுப்ரகாயிகம்‌ என்றும்‌, (0/6 नथ 545८2 என்‌ 
அம்‌ ०८ 10 8८177 ॐ भा 7 @ சொல்லப்பட்டிருக்கறது. மந்த்ரங்‌ 
களின்‌ அர்த்தங்களை அறியாத புருஷனுக்கு தியானம்‌ என்பது 
முடியாத காரியம்‌. “ யோஹவா அவிதிதார்ஷேயச்ச,ந்தே- 
தை,வ்த ப்‌,ராஹ்மணே௩ மந்த்ரேண யஜதி யாஜயதி வர 
அத்‌,யாபயதி வர்‌ ஸ்தஎணுர்வர்ச்ச,தி க;ர்த்தம்‌ வா55பத்‌வயதே 
ப்ரவாமீயதே பாபீயாந்‌ ப,வதி யாதயாமந்யஸ்ய சரந்தாம்ஸி 
ப,வந்தி'' [எவன்‌ ரிஷி, சந்தஸ்‌, தேவதை, பிரயோகம்‌ 
இவைகளைத்‌ கெரிக்துகொள்ளாமல்‌ மந்த்ரத்தைக்கொண்டு 
மாத்திரம்‌ யாகம்‌ செய்றோனோ, யாகத்தைச்‌ செய்விக்றொனோ. 
அத்யயனம்‌ சேய்விக்கறுினோ, அவன்‌ பட்டுப்போன மர 
மாகிறான்‌; பள்ளத்தில்‌ விழுகிறான்‌; மரணத்கையாவ்து 
அடைகிறான்‌; = பாபியாகிறான்‌ இவனுடைய மந்த்ரங்கள்‌ 
வீர்யமற்றவைகளர்க ஆகின்‌ றன. ] । 
அவிதி,த்வா ருஷிம்‌ சந்தே தைவதம்‌ யோக,மேவ =| 
யோக5த்‌,யாபயேத்‌ யாஜயேத்‌, வா (யஜேத்‌, வா5பி) பாபீயாந்‌ 
ஜாயதே து 6४-॥ 
[ரஷியையும்‌.சந்தஸ்ஸையும்‌,தேவதையையும்‌, ப்ரயோக த்கை 
யும்‌ அறியாமல்‌ எவன்‌ அத்யயனம்‌ செய்விக்கிறானோ, யாகம்‌ 
செய்விக்கறானோ (செய்கிறழுனோ) அவன்‌ பாபியாக ஆகிறான்‌. ] 

“அத, யோ மந்த்ரே மந்த்ரே வேத,| ஸ ஸர்வமாயுரேதி | 

, ஸஸ்ரேயார்‌ ப,வதி। அயா தயாமாந்யஸ்ய ச,ந்த,ம்ஸி ப,வந்தி॥” 
[எவன்‌ மந்திரங்கள்‌ தோறும்‌, (ரிஷி சந்கஸ்‌ கேவகை 
ஆகிய) இவைகளை =9, 8 (7 छो, அவன்‌ பூர்ணமான ஆயுளை 
அடைகிறான்‌; அவன்‌ புகழுடன்‌ வீளங்குகிறான்‌; அவனுடைய 
மந்திரங்கள்‌ வீர்பமுடையவையாக ஆகன் றன. ] 


“ருஷிம்‌ சந்தே, தே,வதாங்ச த்‌,யாயேர்மந்த்ரஸ்ய ஸர்வத,ா। 
` யஸ்து மந்த்ரம்‌ ஜபேத்‌,கரர்க்‌,ய! क 55540 தஸ்ய பலம்‌ 

பவேத்‌ |!” 
[கார்க்யமுனிவரே! எவன்‌ மந்திரத்‌தினுடைய ருஷி. சந்தஸ்‌, 
தேவதை இவைகளை எப்போதும்‌ தியாடம்‌ செய்சறோனோ, 
எவன்‌ மந்திரத்தை ஓஜபிக்கறுனோ. அவனுக்குப்‌ பலஸம்ருத்தி 
(நிறைவு) உண்டாகும்‌. ] 

“ ஸ்தளாணுரயம்‌ ப௱ரவஹ: கில அதீ,த்ய வேதம்‌ ए 
விஜாகாதி யோரர்த்தம்‌। யோ5ர்த்தஜ்ஞ இத்‌ ஸகலம்‌ ப,த்ஸ 
100० 65 ஸ நாகமேதி ஜ்ஞாநவிதூ,தபாப்மா ॥|' ' 
[வேதத்தை அத்யயனம்‌ செய்தும்‌. எவனொருவன்‌ அதன்‌ 
பொருளை அறியவில்ல்யோ. அவன்‌ சுமைதாங்கி 
யாகிறா।னன்றோ. எவன்‌ பொருளை அறிகறுனோ அவன்‌ 
ஸகலமங்களங்களையும்‌ அடைகிறான்‌; ஜ்ஞானத்தால்‌ பாபம்‌ 
நீங்கப்பெற்றவனாய்‌ அவன்‌ ஸ்வர்க்கத்தை அடைகறொன்‌ . | 
என்று ங்ருதிஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்டிருப்பதால்‌., மந்தி 
ரங்களின்‌ அர்த்தமும்‌. ரிஷி, சந்தஸ்‌, தேவதை இவைகளும்‌ 
அவசியம்‌ அறியவேண்டியவைகள்‌ என்று ஏற்படுகிறது. 

ருஷி என்றால்‌ யார்‌? சந்தஸ்‌ என்றால்‌ என்ன? தகேவகை 
என்றால்‌ எது? இவைகளுக்குள்‌ என்ன ஸம்பந்தம்‌? எதற்‌ 
காக நாம்‌ இவைகளை அறியவேண்டும்‌? என்கிற கேள்வி 
கள்‌ ஏற்படுகின்றன. 


“யோ யஸ்ய வாக்யம்‌ மந்த்ர: ஸ தஸ்ய ருவி:"' 

[எந்த மந்திரம்‌ எவருடைய வார்த்தையோ. அவர்‌ அதற்கு 
ருஷி.] என்று பெள௩கபகவான்‌ சொல்லியிருப்பதிலிருந்‌ து 
மந்திரத்தை எவர்‌ முதலில்‌ அறிந்து வெளிப்படு த்தனரோ. 
அவர்‌ அந்த மந்திரத்திற்கு ருஷியெனப்படுகிறோர்‌ என்று 
ஏற்படுகிறது. அந்த மந்திரத்கை ஐபிப்பதற்கு முன்‌ 
அவருக்கு ஈம்முடைய நஈன்றியறிவைக்‌ காட்ட அவர்‌ 
பெயரைச்‌ சொல்லவேண்டியது கடமையே. ஆழ்வார்களின்‌ 
பிரபந்த ஆரம்‌்பத்திற்கு முன்னும்‌.  ஆசாரியர்களுடைய 
கிரந்தங்களின்‌ ஆரம்பத்திலும்‌, அவரவர்‌ தனயன்‌ களை 
அறுஸந்திப்பதும்‌ இந்த நியாயத்தனலேயே. 
“ச௪ந்தேோபி,ரேவாத்மாநம்‌ ச,௱த,ஙித்வா உபாயாக்த: 
ச,ந்த;ஸாம்‌ ச,ந்த,ஸ்த்வம்‌'* 
[வேதவாக்கியங்கள்‌, தங்களைச்‌ சந்தஸ்ஸாுக்களினால்‌ மறைத்‌ 
அக்‌ கொண்டு வந்தன. (ஆகையினால்‌) சந்தஸ்ஸாுக்களுக்கு 
சந்தஸ்‌ என்று பெயர்‌ எஏற்படுகிறது.] என்று ச்ருதி 
சொல்லிற்று. ப்ரஸித்தமான சந்தஸ்ஸுக்கள்‌ ஏழு. 'பூ!' முத 
லிய ஏழு வ்யா ஹ்ரு திகளுக்கு ஏழு சந்தஸ்ஸாக்கள்‌ சொல்லப்‌ 
பட்டிருக்கின்றன. சந்தஸ்ஸாகிற பெட்டியில்‌ மந்திரமாகிற 
தனம்‌ மறைத்து வைக்கட்பட்டிருக்கிறது. பெட்டியைத்‌ 
திறந்து தனத்தை எடுப்பதுபோல்‌ சந்தஸ்ஸின்‌ லக்ஷண த்தை 
யும்‌. ஸ்வரத்தையும்‌ அனுஸரித்து மந்திரத்தை உச்சரிக்க 
வேண்டும்‌. 
“யோ$ர்த்த, உச்யதே ஸா தேவதா'' 
[மந்திரத்தினால்‌ எந்த வஸ்து ப்ரதிபாதிக்கப்படுகிறதோ, 
அத தேவகை.] என்றார்‌ மெளநகர்‌. பலவிதமான மந்திரங்‌ 
களில்‌ பல பல கதேவதைகளைச்சொல்லும்‌ ~ சப்தங்கள்‌ 
சொல்லப்பட்டிருக்கின்‌ றன. அவைகள்‌ அவர்களை மட்டும்‌ 
குறிக்கன்‌ றனவா. அல்லது அவர்களுக்கு அந்தர்யாமியான 
ஈரராயணனையும்‌ குறிக்கன்‌ றனவா என்னும்‌ கேள்வி ஏற்படு 
கிறது. சாரிரகமீமாம்ஸாசாஸ்த்ரத்தில்‌ பகவான்டா தராயணர்‌ 
எல்லா தேவதைகளும்‌ பரமாத்மாவின்‌ சரீரமென்றும்‌, 

சரீரத்தைக்‌ குறிக்கும்‌ சப்தங்கள்‌ சரீரியரான பரமாத்மாவை 
யும்‌ குறிக்கும்‌ என்‌ றும்‌ நிர்ணயித்திருக்கறார்‌. மந்திரங்கள்‌ 
இரண்டு வகைப்பட்டவை. சல நேராகவே பகவானைச்‌ 
சொல்லுபவை; மற்றும்‌ சில பரமபுரறுஷனுடைய விபூதி 
(ஐங்வர்யம்‌) ஆகிய தேவைகளைச்‌ சொல்லி. அவர்கள்‌ மூல 
மாக அவர்களுக்கு அந்தர்யாமியான அச்சுகனையும்‌ சொல்லு 
பவை. ஸந்த்யாவந்கனமந்த்ரங்களில்‌ பெரும்பா ன்மை 
யானவை இரண்டாவது வகையைச்‌ சேர்ந்தவையே. 


ஸந்த்யாவந்தந! இகள்‌ அத்வைதத்திற்கு அநுகுணமா? 
வீசிஸ்டாத்வைதத்துக்கு ஏற்றவையா? என்கிற கேள்வி 
ஏற்படுறெது. அத்வைதிகள்‌ வேதத்தை அத்யயனம்‌ செய்‌ 
கிறார்கள்‌; அத்யயனமும்‌ செய்விக்றொர்கள்‌. வேதவாக்யங்‌ 
களில்‌ சிலவற்றிற்கு மஹாவாக்யங்களென்று மஹிமை 
கூறுகிறார்கள்‌. வர்ணாங்ரமதர்மங்களில்‌ சேர்ந்த ஸ்நாமம்‌. 
ஸந்த்யா வந்தனம்‌. யஜ்ஞம்‌ முசகலியவைகளை ப்ரஹ்மார்ப்ப 
ணம்‌ என்று சொல்லி அநுஸ்டித்தும்‌ வருகிறார்கள்‌ 
கநபாடிகள்‌. திக்ஷிதர்கள்‌ முதலிய பட்டங்களையும்‌ வைத்துக்‌ 
.கெொண்டிருக்கறொர்கள்‌. அப்படியிருக்க ஸந்த்யாவந்தனம்‌ 
அத்வைதத்திற்கு அநுகுணமான தல்லவென்கற ஸந்தேஹம்‌ 
எப்படி ஏற்படக்கூடும்‌? என்று கேட்கலாம்‌. 


“ந வர்ணா इह வர்ணாம்ரமாசாரதர்மா 
நமே தாரணா த்யாகயோகளத,யோ$பி | 
௩ வேதா ந யஜ்ஞா ௩ தீர்த்தும்‌ ப்‌,ருவந்தி 
௩ एए कणा ௩ ஸமாஸ்த்ரம்‌ ௩ ஸிஷ்யோ ந மபிக்ஷா!।! 
[எனக்கு வர்ணங்கள்‌. கிடையாது; வர்ணாங்ரமாசார தர்ம்ங்‌ 
களும்‌ கிடையாது; காரணையும்‌, சகுயானம்‌. யோகம்‌ 
முதலியவையும்‌ இல்லை; வேதமும்‌ -இல்லை; .யஜ்ஞங்களும்‌ 
இல்லை; திர்த்தங்களும்‌ இல்லையென்றே .( முன்னோர்கள்‌ ) 
சொல்லுகிறார்கள்‌: ஆஜ்ஞைசெய்பவனும்‌ இல்லை; சாஸ்த்ர 
மும்‌ இல்லை; சிஷ்யனும்‌ இல்லை; சிஷையும்‌ இல்லை: ] என்று. 
அக்வைதிகள்‌ தங்கள்‌ நெந்தங்களில்‌ எழுதி வைத்திருக்கிறார்‌ 
கள்‌. அத்வைதிகள்‌ ஸந்யாஸம்‌ வாங்கிக்கொண்டவுடன்‌ 
சிகையையும்‌. ஸூத்ரத்தையும்‌ விட்டுவிடுகிறார்கள்‌. உயி 
ருடனிருக்கும்‌ வரையில்‌ செய்யவேண்டியதான ஸந்த்யா 
வந்கனாதிகளையும்‌ விட்டுவிடுகிறார்கள்‌. இதை மனத்‌ திற்கொண்டே 

“ஹ்ந்த்‌யாவந்தரவேளாயாம்‌ ப்‌,ரஹ்மா5ஹமிதி மந்யஸே | 
கண்டல்ட்‌,டுகவேளாயாம்‌ தண்டலாத;ய தாவஸி 1" 

[ஸந்த்யாவந்தனம்‌ செய்யவேண்டிய வேளையில்‌ நான்‌ 
ப்ரஹ்மம்‌ ' என்று நினைக்கிறாய்‌. குஞ்ஜாலாடு விநியோகம்‌ 
செய்யும்‌ வேளையில்‌ தடியை எடுத்துக்கொண்டு தாவித்தாவி 
ஒடுரறோய்‌.] என்று ஒரு ஹாஸ்யரஸமுள்ள ங்லோகம்‌ ஏற்‌ 
பட்டிருக்கிறது. வைஷ்ணவ ஸந்யாஸிகள்‌ சிகை. ப்ரஹ்ஃ 
ஸூத்ரம்‌. ஸந்த்யாவந்தனம்‌ முதலியவைகளை வீடுவ தில்லை. 

“அஸ்மிக்‌ மமாஸ்த்ரே....ஆத்மைகத்வவிஜ்ஞர௩ம்‌ 

ப்ரதிபிபாதவிஷிதம்‌ । 
அஸ்ய ஹி பே,க,வலம்பி, கர்மஜ்ஞா௩ம்‌ க்வோபயுஜ்யதே ॥'' 
[இந்க மாஸ்க்ரத்தில்‌ ஆத்மா ஒன்றே என்னும்‌ அறிவே 
சொல்ல ப்படவேண்டியது. இதற்கு பேதத்தையே ஆகார 
மாகக்‌ கொண்ட கர்மஜ்ஞானம்‌ எங்கு உபயோகப்படும்‌? ] 
என்றம்‌, 

“ வர்ணாங்ரமவிமேோஷ = कणा 5५01 ஸாத,ந இதிகர்த்த- 
வ்யதாத்‌,யநந்தவிகல்பாஸ்பத;ம்‌ கர்ம ஸகலபே,த,தர் மந 
நிவ்ருத்திரூபா 5ஜ்ஞாருநிவருத்தே: கதஹமிவ ஸாதம்‌ பவேத்‌” 
[ வர்ணவிபோஷங்கள்‌. ஆங்ரமவியேோஷங்கள்‌. ஸாத்யம்‌. 
ஸாதனம்‌. இதிகர்த்தவ்யதை முதலிய எண்ணற்ற பேதங்‌ 
களுக்கு இருப்பிடமான கர்மம்‌ எல்லா பேத அறிவையும்‌ 
போக்கடிக்கையா கிற அஜ்ஞார௩ நிவ்ருத்திக்கு எப்படித்தான்‌ 
ஸாதனமாகும்‌?2] என்றும்‌ ஸ்ரீபாஸஷ்யம்‌ லகுயூர்வப்க்ஷத்‌ தில்‌ 
அத்வைதிகளின் மதம்‌ விவரிக்கப்பட்ட து. “ஜ்ஞானம்‌ ஒன்றே 
உண்மை; ஜ்ஞாதா. ஜ்ஞோயம்‌ முதவியவையெல்லாம்‌ பொய்‌” 
என்று சொல்லும்‌ அத்வைதிகளுக்கு ' ஸந்த்யாவந்கனம்‌ 
முதலியவை அநுகுணமானவையல்ல என்பது தெளிவாகும்‌. 

“"தஸ்யைவ வேதஸ்ய த்‌,யாஈரூபஸ்ய 
அஹர ஹர நுஷ்டீயமா நஸ்ய 
அப்‌,யாஸாதே,யா 5திரயஸ்ய ஆப்ரயாணாத,நுவர்த்தமா௩ஸ்ய 
ப்‌,ரஹ்மப்ராப்திஸாத,நத்வாத்‌ தது;த்பத்தயே ஸர்வாணி 
ஆஸரமகர்மாணி யா வஜ்லஜீவம்‌ அநுஷ்டே,யா௩ி |" 
( இனந்தோறும்‌ அதுஷ்டிக்கப்படுவ தும்‌, அப்பியாஸத்‌ தினால்‌ 
விருத்தியடைவிக்கத்தக்க தும்‌, சாகும்‌ வரையில்‌ தொடர்ந்து 
வருவதுமான த்யானரூபமான அவ்வறிவே ப்ரஹ்மத்தை 
அடைவதற்கு ஸா தன மாயிருக்கையால்‌. அது உண்டாவதின்‌ 
பொருட்டு எல்லா ஆங்ரமகர்மங்களும்‌ அனுஷ்டிக்க 
வேண்டியவையே.] என்று லகு ஸித்தார்த தீதில்‌ சொல்லப்‌ 
பட்டது. ஹாரீதஸ்ம்ருதியில்‌ ஆறாவது அக்தியாயத்தில்‌ 

“க்ருதஸந்த்யஸ்‌ ததோ ராத்ரிம்‌ ஈயேத்‌ தே.வக்‌ருஹாதி,ஷா.... 
த்ரித,ண்டபப்‌ ருத்‌ யோ ஹி ப்ருத,க்‌ ஸமாசரேத்‌ 
1 | ८००४ ए; பமறைர்‌ யஸ்து (4307 ८ कप ठव: | 
ஸம்முச்ய ஸம்ஸாரஸமஸ்தப,க்த,நாத்‌ 

ஸ யாதி விஷ்ணோரம்ருதாத்மந: பத,ம்‌ |" 
[ஸர்யாஸியானவன்‌, ஸாயம்‌ ஸந்த்யையைச்‌ செய்து. டிற்கு 
ராத்ரி வேளையை தேவாலயம்‌ முதவியவிடங்களில்‌ கழிக்கக்‌ 
கடவன்‌; தீரிதண்டத்தை தரித்த எந்த ஸர்யாஸியானவன்‌. 
இந்திரியங்களை வெளிவிஷயங்களில்‌ செல்லாமல்‌ அடக்க. 
க்ரமமாக இம்மாதிரி ௩டக்கறானோ. அவன்‌ ஸம்ஸாரத்தி 
வள்ள எல்லா பந்தங்களினின்றும்‌ விடுபட்டு அழிவற்ற 
ஸீவருபத்தையுடையவனான விஷ்ணுவின்‌ பரமபதத்தை 
அடைகறோன்‌ , ] என்று ஸரந்யாஸிகளுக்கும்‌ ஸந்த்யாவந்தனம்‌ 
விதிக்கப்பட்டது. அதே அத்தியாயத்தில்‌ அவர்கள்‌ ப்ராணா 
யாமம்‌, காயத்ரீ முதலியவைகளையும்‌ அநுஷ்டிக்கவேண்டு 
மென்‌ று சொல்லியிருக்கிறார்‌. அடுத்த அத்தியாயத்தில்‌ 
“யதராந்கம்‌ மது,ஸீம்யுக்தம்‌ மது,ர( ச? )ாந்நேக ஸம்யுதம்‌ । 
உபராப்‌யாமேவ பக்ஷாப்‌யாம்‌ யத; கே, பக்ஷிணாம்‌ க,தி: ॥ 
ததை,வ ஜ்ஞாஈகர்மப்‌,யாம்‌ ப்ராப்யதே (अ कण एणा ७०९७0 
[எப்படி இனிய 09४5 ॐ! ८ - न्न கலந்த உணவும்‌, உணவுடன்‌ 
கலந்த இனிய ரஸமம்‌ (உண்ண போக்யமாயிருக்‌ 
தின்றனவோே ). எப்படி இரண்டு இறக்கைகளுடன்‌ ஆகாயத்‌ 
தில்‌ பக்ஷிகள்‌ பறக்கின்றனவோ, அப்படியே ஜஞானத்தி 
னாலும்‌. கர்மத்தினாலும்‌ அழிவற்றதான ப்ரஹ்மம்‌ அடையப்‌ 
படுறது. ] என்று கர்மா துஷ்டானம்‌ மோக்ஷஸா தன மென்று 
சொல்லப்பட்டது. மற்ற ஸ்ம்ருதிகளிலும்‌ இம்மா திரிய 
சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளிலிருந்து கர்மாநுஷ்டா 
னம்‌ விஷ்டாத்வைதிகளாலும்‌. ஸ்ம்ருதிகர்த்தாக்களாலும்‌ 
ஆகரிக்கப்பட்டதென்றும்‌. ஸந்த்யாவந்தனம்‌ முதலிய 
கர்மா நுஷ்டானங்கள்‌, வீசிஷ்டாத்வைதஸித்தாந்தத்திற்கே 
பொருந்தியவையென்‌ றும்‌ வீளங்குகிறது. 
“ம்ருதிஸ்ம்ருத ச விப்ராணாம்‌ சக்ஷாஷீ தேநிர்மிதே | 
காணஸ்‌ தத்ரைகயா ஹீநோ த்‌,வாப்‌,யாமந்த, ப்ர8ீர்த்தித:॥”' 
[ வேதங்களும்‌. ஸ்ம்ருதிகளும்‌, ப்ராஹ்மணர்களுக்கு தெய்வத்‌ 
தனால்‌ ஏற்படுத்தப்பட்ட இரண்டு கண்கள்‌; அதில்‌ ஒன்றை 
அறியா தவன்‌ காணன்‌ (ஒரு கண்‌ பொட்டையன்‌ ) எனறும்‌ 
இரண்டுமறியா தவன்‌ அந்தன்‌ (முழுக்குருடன்‌) என்றும்‌ 
சொல்லப்படுறோன்‌.] என்று. ஹாரீதஸ்ம்ருதியில்‌ (1-2௦) 
சொல்லப்பட்டது. இருபிறப்பாளர்க்குப்‌ பல 
ஸம்ஸ்கா ரங்களைச்‌ செய்யவேண்டுமென்‌ ஓுங்ரு திஸ்ம்ரு திகளில்‌ 
சொல்லப்பட்டிருக்றெ அ. 
"एषह ஜாயதே முத்‌: கர்மணா ஜாயதே த்விஜ: 
[பிறக்கும்போது சூத்ரனாக்ப்‌ பிறக்றொன்‌; ஸம்ஸ்காரங்‌ 
களாலேயே த்விஜனாக छन्नेन, என்று படிக்கப்பட்ட. 
த்விஜர்களுக்கு முக்யமான ஸம்ஸ்காரம்‌ உபநயனமாயிருந்த 
போதிலும்‌ அதற்கு முன்னும்‌ பல ஸம்ஸ்காரங்களை அவசியம்‌ 
செய்யவேண்டியிருக்கிறது. அவைகளைச்‌ செய்யாமல்‌ உப 
நயனம்‌ செய்யமுடியாது. ஒரு சிசு உண்டாவதற்கு முன்‌ 
அவனுடைய தாய்தந்தையருக்கு மரஸ்த்ரப்படி விவாஹம்‌ 
ஆகியிருக்கவேண்டும்‌; விவாஹம்‌ தூர்மப்ரஜோத்பத்திக்‌ 
காகவே என்று ஸங்கல்பம்‌ செய்யப்படுகிறது. யிறகு 
கர்ப்பளதளா காலத்தில்‌ * விஷ்ணுர்யோரிம்‌ கல்பயது '' 
என்னும்‌ மந்திரத்தினால்‌ கர்ப்பதாஈ ஸம்ஸ்காரம்‌ செய்யப்‌ 
படுகிறது. கர்ப்பம்‌ தரித்தவுடன்‌ புருஷப்ரஜையாகப்‌ 
பிறக்கவேண்டுமென் பத்ற்காகப்‌ பும்ஸவநம்‌ என்னும்‌ 
ஸம்ஸ்காரம்‌ செய்யப்படுகிறது. ஆறு. அல்லது எட்டாவது 
மாதங்களில்‌ விஷ்ணு பலியுடன்‌ ஸீமந்தோந்றயயறம்‌ என்னும்‌ 
ஸம்ஸ்காரம்‌ செய்யப்படவேண்டும்‌. ஸீமந்கத்திற்கு முன்‌ 
சிசு ஜனித்துவிட்டால்‌. புண்யாஹவாசனத்திற்குப்‌ பிறகு 
ஸீமந்தம்‌ செய்தேயாகவேண்டும்‌. குழந்தை பிறந்தவுடன்‌ 
செய்யவேண்டிய முதல்‌ ஸம்ஸ்காரம்‌ ஜாதகர்மமாகும்‌. 
பிறந்த பதினோராவது நாள்‌ நாமகரணம்‌ செய்யவேண்டும்‌. 
நாலாவது மாதத்தில்‌ குழந்தை வீட்டிலிருந்து வெளியிற்‌ 
செல்லுவதாகிற நிஷ்க்ரமணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ 
செய்யவேண்மிம்‌. ஆறாவது மாதத்தில்‌ அந்£ப்ரானம்‌ 
(உணவு ஊட்டுதல்‌) என்னும்‌ ஸம்ஸ்காரம்‌ செய்யவேண்டும்‌. 
அதன்‌ பிறகு மூன்றாவது வயது பிறந்த பிறகு செளளம்‌ 
(சிகை வைத்தல்‌ ) என்னும்‌ ஸம்ஸ்காரம்‌ செய்யப்பட 
வேண்டும்‌. அவரவர்‌ குலாசாரப்படி பூர்வசிகையோ, மத்யம 
சிகையோ, அபரசிகையோ வைக்கவேண்டும்‌. அப்படிச்‌ 
செளளகர்மம்‌ செய்து சிகை வைத்தக்கொள்ளா தவர்களும்‌, 
வைத்துக்கொண்டு-விட்டவர்களும்‌. மறுபடி கைவைத்துக்‌ 
கொண்டாலொழிய அவர்களுக்கு உப௫யனம்‌ செய்யக்‌ 
கூடாது. செய்தாலும்‌ அது வ்யர்த்தமேயாகும்‌. உபநயனம்‌. 
விவாஹம்‌ முதலியவைகள்‌ ஆனபிறகு சிகாவிஸர்ஜாம்‌ 
செய்தவர்களுக்கு மறுபடி சிகைவைத் துக்கொண்டு புஈரு 


பயனம்‌ செய்துகொள்ளவேண்டும்‌. இல்லாவிடில்‌ அவர்கள்‌ 
பதிதர்களாகவும்‌ கர்மங்கள்‌ அநுஷ்டிப்பதற்கு யோக்யதை 
யற்றவர்களாஃவும்‌ ஆகிறார்கள்‌; செய்யும்‌ கர்மங்களும்‌ 
நிஷ்ப்ரயோ ஜனமா கன்‌ றன. 


மிகும்‌ புண்ட்‌,ஞ்ச ஸ9த்ரஞ்ச ஸமயா சாரமேவ ௪ | 

பூர்வைராசரிதம்‌ குர்யாத;்யத; பதிதோ ப,வேத்‌ ॥ 
[சகையையும்‌. புண்ட்ரத்கையும்‌., ப்ரஹ்மஸ௫த்ரத்தையும்‌, 
ஸமயாசாரங்களையும்‌. முன்னோர்களால்‌ அநுஷ்டிக்கப்பட்ட 
படியே செய்யவேண்டியது; இல்லாவிடில்‌ பதிதனாகறான்‌. ] 
என்றும்‌ 
“ஸதே,பவீ,தீ சைவ ஸ்யாத்‌ ஸதா பத்‌ தலபிகேள த்விஜ: 
[ப்ரரஹ்மணன்‌ எப்போதும்‌ யஜ்ஞோபவீதத்தை தரித்த 
வாயிருக்கவேண்டும்‌; எப்போதும்‌ முடிந்த சிகையுடனீருக்க 
வேண்டும்‌.] என்றும்‌ ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்ட அ. 
சிகையை விட்டவர்களின்‌ கதி முகற்கோணல்‌ முற்றும்‌ 
கோணல்‌ என்பதுபோலவேயாகும்‌. 


இம்மாதிரி ஸம்ஸ்காரங்கள்‌ பெண்களுக்கு உண்டா ? 
இர்த' ஸம்ஸ்கரரங்கள்‌ எதற்காகச்‌ செய்யப்படுகின்‌ றன ? 
என்னும்‌ கேள்விகள்‌ எழுகின்றன. மேலே கண்ட ஸம்‌ 
ஸ்காரங்கள்‌ பெண்களுக்கு மந்த்ரமில்லாமல்‌ செய்யப்படு 
இன்றன; விவாகம்‌ மட்டும்‌ அவர்களுக்கும்‌ மந்தரத்துடன்‌ 
செய்யப்படுகிறது. இந்த ஸம்ஸ்காரங்களைச்‌ செய்வதற்கு 
இரண்டு காரணங்கள்‌ உள: (1) ஸ்த்ரீ புருஷர்களின்‌ 
சுக்ல சோணிதங்களின்‌ சேர்க்கையினால்‌ மநுஷ்ய சரீரம்‌ 
ஏற்படுறெது. இக்காரணத்தினால்‌ அது அசுத்தியையும்‌ 
பாபத்தையும்‌ உடையது என்பத சொல்லாமலே வீளங்கும்‌. 
அவை போகாவிடில்‌ ப்ரஹ்மோபதேசத்திற்கு யோக்யதை 
கிடையாது. மேற்‌ சொன்ன ஸம்ஸ்காரங்கள்‌ இந்த 
அசுத்தியையும்‌. பாபத்தையும்‌ போக்கடிக்கின்‌ றன என்று 
ஸ்ம்ருதிகளில்‌ கோவிக்கப்படுகிற து.  


“கர்ப்பாத,ாம்‌ ருதெள பும்ஸ: ஸவரம்‌ ஸ்பந்த.ாத்‌ புரா | 
ஷஷ்டே,$ஷ்டமே வா ஸீமந்த: ப்ரஸவே ஜாதகர்ம =| 
அஹுந்யேகாத,;மே ௩ாம சதுர்த்தே, மாஸி நிஷ்க்ரம: | 
ஷஷ்டே,$ந்நப்ராமமகம்‌ மாஸி சூடன்‌ கா௩்யா யதராகுலம்‌ || 
ஏவமே௩: ७०७४ யாதி பீ,ஜகரர்ப்ப, ஸமுத்‌,ப,வம்‌ | 
தூஷ்ணீமேதா: க்ரியா: ஸ்த்ரீணாம்‌ விவாஹஸ்து ஸமந்த்ரக:।॥”' 

[ருதுகாலத்தில்‌ கர்ப்பாதான த்தையும்‌, கர்ப்பம்‌ அசைவ 

தற்கு முன்‌ பும்ஸவனத்தையும்‌. ஆறு அல்லது எட்டாவது 

மாதத்தில்‌ ஸீமந்தமும்‌, குழந்தை பிறந்தவுடன்‌ ஜாதகர்ம 
மும்‌, பிறந்தபின்‌ பதினோராவது நாள்‌ நாமகரணமும்‌, 
நரலாவது மாதம்‌ நிஷ்க்ரமணமும்‌, அறாவது மாதத்தில்‌ 
அந்கப்ராயனமும்‌. குலாசாரப்படி செளளமும்‌ செய்யப்பட 
வேண்டியது. இம்மாதிரி செய்வதனால்‌. சுக்லசோணிதங்‌ 
களினால்‌ உண்டாகும்‌ பரபமான ॐ சாந்தியடைகிறது. ஸ்த்ரீ 
களுக்கு“ இந்தக்‌ கர்மங்கள்‌ மந்த்ரமில்லாமல்‌ செய்யப்படு 
கின்றன ; “விவாஹம்‌ மட்டும்‌ மந்த்ரத்துடன்‌ செய்யப்படு 

8.7.51. என்று யாஜ்ளூவல்க்ய -ஸ்ம்ருதியில்‌ (1-11. 14, 13) 

சொல்லப்பட்டது (2) ஸம்ஸ்காரங்கள்‌ செய்யப்படுவ 
தற்கு: ஸூக்ஷ்மமும்‌. ரஹஸ்யமுமான மற்றொரு காரணமும்‌ 
உண்டு. .ப்ரஹ்மோடதேசமான்‌.து. பரமாத்மாவைப்‌ பற்றிய 
உபதேசம்‌ என்பது எல்லாரும்‌ ஒப்புக்கொண்டது. 


“காரராயணபரம்‌ ப்‌,ரஹ்ம தத்வம்‌ ஈநாராயண: பர: | 
நாராய்ணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: |!” 

என்று வேதம்‌ ஈாராயண்னையே- பர்ப்ரஹ்ம்மாகவும்‌. பர்‌ 
தத்வமாக்வும்‌. பரஞ்சோதியாகவும்‌” “பரமாத்மாவாகவும்‌ 
ஸர்தேஹத்‌திற்டெமில்லாமல்‌ நிர்ணயித்தது. ப்ரஹ்மமாகிற 
நாராயணனைப்‌ பற்றிய உபதேசத்தைப்‌' பெறுவதற்குத்‌ 
தகுந்த யோக்பதையமையும்‌ இந்த ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாக்கு 
கன்றன. பளீஹ்ய ( வெளி ) ` சத்தியை மட்டுமல்லாமல்‌ 
மநோவாக்கரயங்களா ७८“ த்ரிகரணங்களின்‌' சித்தியையும்‌ 
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ கொடுக்கின்‌ றன. மேலும்‌! அவைகள்‌ 
படிப்படியாக ஜீவாத்மாவை நாராயணனுக்கு தாஸனாக 
ஆக்குகின்‌ றன. “* லரநபக்ுஷ இவாண்டஹ: '' என்கறபடி 
சிறகொடிந்த பக்ஷி போல்‌ சரீரயில்லாமல்‌ திண்டாடித்‌ திரி 
யும்‌ ஜீவனுக்கு சரீரத்தைக்‌ கொடுப்பது கரர்ப்பாதரத்தின்‌ 
நோக்கமாகும்‌. ° பரிரமாத்யம்‌ கலு துர்மஸாதறீம்‌ ” [சரீர 
மன்றோ முதலாவதான தர்மஸாதனம்‌.] £ என்கிறபடியே 
சரீரமில்லாமல்‌ மோக்ஷோபாயங்களை அநுஷ்டிக்கமுடியா து. 
வைஷ்ணவ ०८८50 5८2 உண்டாகவேண்டுமென்று பகவான்‌ 
விஷ்ணுவிடம்‌ விஜ்ஞாபனம்‌ செய்வதே கர்ப்பதாஈ 
மந்த்ரங்களிலிருந்து தேறி நிற்கும்‌ பொருளாகும்‌. . = 


. அப்படி: உண்டான கர்ப்பம்‌ புருஷ ப்ரஜையாகவேண்டு 
மென்பதற்காக, புருஜஸூக்க உத்தரா நுவாகத்தின்‌ முதல்‌ 
ருக்கும்‌. “ ஸாபர்ணோ$ஸி கருத்மாக்‌ ' என்று தொடங்கும்‌ 
வேதமந்திரங்களும்‌ பும்ஸவநத்தன்போது அறநுஸந்திக்கப்‌ 
படுகின்றன. வேத ஸ்வரூப விஹங்கரா ஜனான கருடனையும்‌. 
கருட (வேத ) வாஹனனான நாராயணனையும்‌ வேதாந்த 
வித்தான வைஷணவ புருஷப்ரஜை உண்டரகவேண்டு 
மென்று பீரார்த்திப்பதே இதன்‌ ரஹஸ்யார்த்தம்‌. விஷ்ணு 
பலியாகிற பாயஸப்ரதானத்தினாலும்‌. ஸீமந்த மந்த்ரங்களா 
லும்‌. ` கர்ப்பத்தைக்‌ கடாக்ஷித்துக்‌ காப்பாற்றவேண்டு 
மென்று எம்பெருமானும்‌, புருஷகாரபூதையான ஸ்ரீதேவி 
யும்‌ பிரார்த்திக்கப்படுகிறோர்கள்‌. இரந்த ஸமயத்திலிருந்து 
ஜனனம்‌ வரையில்‌ ஸாத்விகனன வைஷ்ணவப்ரஜைக்கு 
எம்பெருமான்‌ ளேவை ஸாதிப்பதை 


“கருக்‌ கோட்டியுள்‌ கிட்‌ த கைதொழுதேன்‌ கண்டேன்‌ 
திருக்கோட்டியெந்தை நிறம்‌ 
என்று பூதத்தாழ்வார்‌ பாடினார்‌. 


ஜாயமாநந்து புருஷம்‌ யம்‌ (10०6५1४ மது,ஸஏத; | 
ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த,சிந்தக:।| 
[பிறக்கும்போது எந்த ஜீவனை மதுஸூதனன்‌ கடாக்ஷிக்‌ 
கிறானோ அவன்‌ ஸத்வ குணத்தையுடையவனென்று அறியத்‌ 
தக்கவன்‌. மோக்ஷத்தை அடையவேண்டுமென்ற சிந்தனை 
யுடையவன்‌ அவனே. ] என்றும்‌ சொல்லப்பட்டது. குழந்தை 
பிறந்தவுடன்‌ 


“விங்வஸ்ய கேதுர்‌ பு,வாஸ்ய கள்ப்பேோ 
2 ४559 ஆப்ருணாத்‌ ஜாயமா௩;”' 
முதலிய மந்திரங்களாலும்‌. 


“ஓம்‌ ஸத,ஸஸ்பதிமத்‌,பு,தம்‌ ப்ரியமிர்த்‌,ஸ்ய காம்யம்‌ 
ஸநிம்‌ மேதாமயாஸிஷம்‌ ஸ்வாஹா"' 

என்னும்‌ மந்திரத்தாலும்‌ ஞானமயனும்‌. ஜ்யோதிஸ்‌ ஸ்வ 
ரூபனுமான ஜீவாத்மா உலகத்திற்குக்‌ கொடிபோன்‌ றவனா 
கவும்‌, மால்‌ சமயத்திற்கோர்‌ மலையிட்ட திபமாகவுமாகி, பரம 
புருஷனுடைய அன்புக்குப்‌ பாத்ரமாகி நித்யஸுரிகளின்‌ 
கோஷ்டியில்‌ சேரக்கடவனென்று பிரார்த்திக்கப்படுகிறது. 
ரூபமற்றவனாயிருந்‌து. சரீரத்தைப்‌ பெற்று ரூபமடைக்த 
ஜீவனை அடையாளம்‌ கண்டு பிடிப்பதற்காக நாமகரணம்‌ 
செய்யப்படுகிற து. 


“ஏகாந்த வயபதே,ஷ்டவ்யோ நைவ க்,ராமகுலாதி,பி,: | 
விஷ்ணுநா வ்யபதே;ஷ்டவ்யச6்‌ தஸ்ய ஸர்வம்‌ ஸ ஏவஹி ||'' 
[பரமைகாந்தியானவன்‌. க்ராமம்‌. குலம்‌ முதலியவைகளால்‌ 
பெயரிட த்தக்கவனல்லன்‌ ; விஷ்ணுவின்‌ பெயரினாலேயே 
சொல்லத்தக்சுவன்‌; அவனுக்கு (உண்ணும்‌ சோறு பருகு 
நீர்‌ தின்னும்‌ வெற்றிலை முதலிய) எல்லாம்‌ அப்பெருமானே 
யன்றோ.] என்று பகவானுடைய பெயர்களை வைஷ்ணவ 
னுக்கு வைக்கவேண்டுமென்று சாஸ்திரம்‌ சொல்லிற்று. 
இப்படிப்‌ பெயர்‌ வைப்பது பாபம்‌ போவதற்கும்‌, 
வைஷ்ணவத்வஸித்திக்குமேயாகும்‌. “நாம மே தேஹி 
பாப்மகோ அபஹத்யை '' [(எம்பெருமானுடைய ) பெயர்களை 
என்னுடைய பாபங்கள்‌ போவதற்காகக்‌ கொடுப்பீராக. ] 
என்று ருக்ரன்‌ பிரமனைக்‌ கேட்டதாகவும்‌, அவன்‌ 
காராயணனுடைய எட்டு பெயர்களைக்‌ கொடுத்ததாகவும்‌ 
வேதத்தில்‌ உத்கோஷிக்கப்பட்டது. இப்படி நாமகரணம்‌ 
செய்வது தானும்‌ தன்னை அழைக்கும்‌ மாதாபிதாக்களும்‌, 
மற்றவர்களும்‌ உஜ்ஜீவிக்க ஹேதுவாதிறடு. நாராயண 
ஈரமஸ்மரணம்‌, உச்சாரணம்‌. லேகளும்‌ முதலியவையும்‌ 
உய்வதற்கு உபாயமாகின்றனவன்றோ. மாதவன்‌ மாதா 
மறலி உலகம்‌ புகாள்‌; நாரணன்‌ தமப்பன்‌ நரகம்‌ புகான்‌. 
நாமகரணத்தின்‌ மற்ற விசஹங்கள்‌ பெரியாழ்வார்‌ 
ப்ரபாவத்தில்‌ விஸ்தாரமாகக்‌ காணலாம்‌. “அர்நம்ப்‌ரஹ்மேதி . 
வ்யஜாநாத்‌'' எனப்பட்ட அந்நத்தை ஊட்டுவதாகிற அந்ந 
ப்ராணனமும்‌ பகவானை அடைவதற்கு ஒரு படியாகும்‌. 
செளளம்‌ எனப்படும்‌ ஸம்ஸ்காரம்‌ மூன்றாவது வருஷத்தில்‌ 
செய்யப்படுகிறது; ப்ரஹ்மம்‌ ப்ரவேசிப்பதும்‌. ஜீவன்‌ 
முக்தியடையும்‌ காலத்தில்‌ சிரஸ்ஸை பேதித்துக்கொண்டு 
போவதுமான இடம்‌ ப்மஹ்மரர்த்ரமெனப்படுகிறது, 
ஊர்த்‌,வக,திக்கு அடையாளமான ஊர்த்வ புண்ட்‌,ரத்தைப்‌ 
போன்ற ஊர்த்‌, வசிகை ப்ஸஹ்மரந்த்த்தில்‌ வைக்கப்பட 
வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற சிகை 
களுக்கும்‌ ஸ்களாங்கள்‌ விதிக்கப்பட்டிருக்கின்‌ றன. 


இனி உபாயனமென்னும்‌ ஸம்ஸ்காரத்தைப்பற்றி 
விசாரிப்போம்‌, உபநயனமென்னும்‌ பதத்திற்கு * உபஃ 
ஸமீபத்தில்‌, ஈயனம்‌-(சிஷ்யனை) அழைத்துச்‌ செல்லுதல்‌ ' 
என்று பொருள்‌. யாருக்கு ஸமீபத்தில்‌? என்கிற வினா 
ஏற்படுகிறது. ஸ்ம்ருத்யர்த்த, ஸ'ரத்தில்‌. “ஆசார்ய ஸமீப 
ஈயனம்‌ வா'' என்று சொல்லப்பட்டிருக்கறெது. ஆசாரியனை 
அண்டி, ஸாவித்ரியுப தசம்பெற்று. ப்ரஹ்மத்தின்‌ 
அருகில்‌ செல்வ த ற்கு உபரயனமென்‌ று பெயர்‌. இதனாலேயே 
அதற்கு ப்ரஹ்மோடதேசம்‌ என்று பெயரேற்பட்டது. 
அதற்குப்‌ பிறகு ப்ரஹ்மசாரி என்னும்‌ பெயரும்‌ 
சிஷ்யனுக்கு ஏற்படுகிறது. அவன்‌ தரிக்கும்‌ பூணூலுக்கு 
ப்ரஹ்மஸூத்ரம்‌ என்ற பெயர்‌ வழங்கி வருது. 
உடநயனத்திற்குப்‌ பிறகே வேதாத்மீனம்‌ ஆரம்பிக்க 
வேண்டும்‌. அதனால்‌ * வேதணைமீபாயரம்‌ '. (வேதத்திற்கு 
அருகில்‌. அழைத்துச்‌ செல்லல்‌) என்றும்‌ உபஈயனத்திற்குப்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌. வேதவேதாந்தங்களில்‌ உத்கோவிக்‌ 
கப்படும்‌ உண்மைப்‌ பொருள்கள்‌ (தத்துவங்கள்‌ ) யாவை? 
அவைகளில்‌ உயர்ந்த உண்மை . ( பரதத்துவம்‌ ) எது? 
என்பதே. ப்ரஹ்மோபதேசத்தில்‌ விளக்கப்படுகின்றது, 
உபாயனத்திற்கு யஜ்ஞோபவீக தாரணம்‌ ஒரு அவசியமான 
அங்கமாகும்‌. யஜ்ஞோடவீத தாரணத்திற்கு மந்த்ரம்‌ 
பின்வருமாறு: 


எள்ளி परमे पविते प्रजापतेथत्सहजे पुरस्तात्‌ 
आयुष्यमन्रयै प्रतिमुख शुभ्र यज्ञोपवीत बदमस्तु तेजः॥ 
யஜ்ஞோபவீதம்‌ பரமம்‌ பவித்ரம்‌ 
ப்ரஜாபதேர்‌ யத்‌ ஸஹஜம்‌ புரஸ்தாத்‌ | 
ஆயுஷ்யமக்,ர்யம்‌ ப்ரதிமுஞ்ச மமாப்ரம்‌ 
யஜ்ஞோபவீதம்‌ ப,லமஸ்து தேஜ: || 
[ உயர்ந்ததும்‌, பரிசுத்தமானதும்‌, ப்ரஜாபதியாகிய பிரம 
னுடன்‌ முதலில்‌ பிறந்ததும்‌, தீர்க்காயுஸ்ஸைக்‌ கொடுப்ப 
தம்‌. மிகவும்‌ அழகாயிருப்பதுமான யஜ்ஞோபடவீதத்தை 
தரிப்பாயாக; இரந்த யஞ்ஞோடவீதம்‌ (உனக்கு) பலத்தை 
யும்‌, தேஜஸ்ஸையும்‌ கொடுக்கட்டும்‌. ] 

யஜ்ஞனோபவீதமென்றால்‌ அர்த்தமென்ன? “யஜ்ஞோ 
வை வீஷ்ணு '' என்றும்‌. “யஜ்ஞோ யஜ்ஞ்பதிர்‌'' என்றும்‌ 
சொல்லுகிறபடியே பகவான்‌ விஷ்ணுவுக்கு : யஜ்ஞ: ' 
என்பது ஒரு திருராமம்‌. அவனைக்‌ குறித்தே கர்மங்கள்‌ 
செய்யப்படுகிறபடியால்‌ . கர்மங்களும்‌ யஜ்ஞமெனப்படு 
கின்றன... * உபவீதம்‌ ' என்றால்‌ சுற்றியிறாக்கும்‌ வஸ்து. 
யஜ்ஞ்மாகிய வீஷ்ணுவைச்சு ற்‌ றியிருப்ப தனால்‌ யஜ்ஞோபவீத 
மென்ற பெயர்‌ பொருந்தும்‌. இதிலிருந்து உள்ளே அந்தர்‌ 
யாமியான நாராயணன்‌ இருக்கறானென்றும்‌. அவனைச்‌ 
சுற்றியிருப்பத யஜ்ஞோடவீகம்‌ என்றும்‌ ஏற்படுகிறது. 
“" ५18 @१ १ 5 59८0 உடவீதம்‌ '' என்கிறபடியே யஜஞம்‌ செய்வ 
தற்கு அவங்யாபேக்ஷிதமான உபவீதம்‌ என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. இதிலிநந்து இந்த யஜ்ஞோடிபவீதமில்லாமல்‌ 
எக்கருமத்தையும்‌ அநுஷ்டிக்கமுடியாது என்று ஏற்படு 
கிறது. இதற்கு ப்ரஹ்மஸூக்ரமென்றும்‌ மற்றொரு 
பெயருண்டு. “ஸுூசநாத்‌ ஸ ூத்ரமித்யாஹாு: '' என்று 
சொல்லப்பட்டபடியே ப்ரஹ்மத்தை ஸூசிப்பது (உணர்த்து 
வது) ப்ரஹ்மஸுூத்ரமாகும்‌. இது எப்படி ப்ரஹ்மத்கைக்‌ . 
காட்டுகிறது? எனில்‌: ப்ரஹ்மஸூத்ரம்‌ முப்புரியூட்டின 
தாகவும்‌ ப்ரஹ்ம முடிச்சுடன்‌ கூடினதாகவும்‌ இருக்கது. 
இந்த மூன்று நூல்களும்‌ சித்‌. அசித்‌. ஈச்வரன்‌ என்னும்‌ 
மூன்று தத்துவங்களும்‌ ஒன்றாகச்‌ சேர்ந்திருக்கன்‌ றன 
என்பதைக்‌ காட்டுகிறது. சாரீரகமீமாம்ஸாசாஸ்த்ர த்தின்‌ 
தாத்பர்யம்‌ முழுவதும்‌ இதில்‌ அடங்கியிருக்கின்‌ றது. 
யஜ்ஞோபவீதகத்தை தரித்தி. ப்ரஹ்மோபகதகேசம்‌ செய்யப்‌ 
பெற்ற பின்பே ஸந்த்யாவந்தனத்தைச்‌ செய்வதற்கு 
யோக்யதை உண்டாகிறது. ப்ரஹ்மசாரிக்கு ஒரு பூணூலும்‌, 
க்‌,ருஹஸ்‌தரர்களுக்கு இரண்டு பூணூலும்‌, உத்தரீயார்த்தம்‌ 
மூன்றாவது பூணூலும்‌ தரிச்கவேண்டுமென்று விதிக்கப்‌ 
பட்டிருக்கிறது. ஊர்த்வகதிக்குக்‌ கொண்டுபோதற்கு அறி 
குறியாக யஜ்‌ஞோபவீதத்தின்‌ ப்ரஹ்மமுடிச்சு மேல்‌ நேக்கி 
யும்‌, அந்தர்யாமியான அச்யுதன்‌ அமர்ந்திருக்கும்‌ இருதய 
கமலத்திற்கு நேராகவும்‌ இருக்கவேண்டும்‌. 

छा பே, ரூர்த்‌, வமநரயுஷ்யமதேன நாபேஸ்‌ தபோக்ஷய: | 
தஸ்மாந்காபி,ஸமம்‌ குர்யாது,வவீதம்‌ விசக்ூஷண: || 
[யஜ்ஞோபவீதம்‌ நாபிக்கு மேலிருந்ததாகில்‌ ஆயுள்‌ குறைவு; 
நாபிக்குக்‌ கீமே தொங்கிற்றாகில்‌ தபோநாசம்‌ ஏற்படும்‌; 


ஆகையால்‌ அறிவாளியாயிருப்பவன்‌ யஜ்‌3ஞாபவீக த்தை 
5719 வரையில்‌ தொரங்கும்படியாகச்‌ செய்யக்கடவன்‌.] 
என்றும்‌, ' அதிக பருமனுடையதாயிருநதால்‌, சீர்த்தியை 
அபஹரிக்கிறது; மிகவும்‌ மெல்லியதாயிருந்தால்‌ தனத்தை 
அபஹரிக்கறது.'' என்றும்‌. யஜ்ஞோடவீதத்தின்‌ அளவு 
சொல்லப்பட்டமு. காத்யாயன ஸ்ம்ருதியிலும்‌(1-3) 
ப்ருஷ்ட,லம்மே ச ஈாப்‌,யாஞ்ச த்‌,ருதம்‌ யத்‌, ०95 55685 கடிம்‌ | 
தத்‌, தரார்யமுபவீதம்‌ ஸ்யாந்‌ ஈரதே,£ ® 01150 ௩ சோச்ச்ரிதம்‌ || 
[(பின்புறம்‌) முதுகெலும்பிலும்‌. (முஃ புறம்‌) ஈநாபிவரையி 
லும்‌ பொருந்தும்படியாகவும்‌. இடுப்பை அடைவதாகவும்‌ 
உபவீதம்‌ தரிக்கப்படவேண்டும்‌; இதைக்காட்டிலும்‌ ழே 
கதொங்கவும்‌ கூடாது; மேலே இருக்கவும்‌ கூடாத.] என்று 
சொல்லப்பட்ட த. 


“அஷ்டவர்ஷம்‌ ப்‌,ராஹ்மணமுபநயேத்‌ | கர்ப்பாஷ்டமே வா || 
ஏகாதஹுவர்ஷம்‌ ராஜந்யம்‌ | த்‌,வாத,மாவர்ஷம்‌ வையமயம்‌ | * 
[கர்ப்பம்‌ தரித்த பிறகாவது. பிறந்த பின்பாவது. எட்டு 
வயதான ப்ரரஹ்மணனுக்கும்‌, பதினொன்று வயதான 
க்ஷக்ரியனுக்கும்‌. பன்னிரண்டு வயதான வைங்யனுக்கும்‌ 
உபயனம்‌ செய்யவேண்டியது. ] என்று உடயன காலம்‌ 
விளக்கப்பட்டது. பதினாறு வயதிற்குள்‌ உபநயனம்‌ செய்யப்‌ 
படாதவன்‌ வ்ராத்யனாகிறான்‌. மாசி மாதத்திலிருந்து ஆனி 
மாதும்‌ வரையில்‌ உபநயனத்துக்குத்‌ தகுந்த கரலமாகச்‌ 
சொல்லப்பட்டிருக்கிறது.  உப௩யனகாலத்தில்‌ அந்தந்த 
மரக தி,பதிகள்‌ அஸ்தமள மாயிருக்கக்கூடா தவயஜுர்வேதத்‌ 
இற்கு சுக்ரன்‌ சாகா இபதி; ருக்வேதத்‌திற்கு குரு சாகாதிடத; 
ப்ராஹ்மணர்களுக்கு தேவகுரு அஸுரகுருவாகிய குரு 
சுக்ரர்கள்‌ பலமாயீருக்கவேண்டும்‌. க்ஷதீரியர்களுக்கு ஸேநாதி 
பதியான செவ்வாயும்‌, வைச்யர்களுக்கு தரர்யவ்ருத்தி 
செய்யும்‌ அம்ருதகிரணனான சந்த்ரனும்‌ சாகா திபதிகள்‌. 
இத வார ஈஷத்ரம்‌ முதலியவையெல்லாம்‌ பஞ்சாங்கத்தைப்‌ பார்த்து நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்‌. 
பிதர. பிதாமஹன்‌. மூத்த சகோதரன்‌. ஆசாரியன்‌ 
ஆகிய இவர்கள்‌ க்ரமமாக உபாயனம்‌ செய்ய அதிகாரிகள்‌. 
உபநயனமானவன்‌ மறு பிறவி பிறந்தவனாகக்‌ கருதப்படு 
கிறான்‌. தீ;விஜ:', என்னும்‌ பெயரே இருபிறப்பாளன்‌ 
என்னும்‌ பொருளையுடையது. இரந்த இரண்டாவது பிறப்‌ 
பிற்குப்‌ பிகா ஆசார்யன்‌; மாதா ஸாவித்ரீ, 


"° த்‌,வயமிஹ வை புருஷ்ஸ்ய ரேதோ ப்‌,ராஹ்மணஸ்ய 
ஊர்த்‌ வம்‌ ஈாபேரர்வாசீம்‌ மந்யத | தத்‌, ५। आ अआ 5 (०100 ஈாபேஸ்‌ 
தேநராஸ்ய அநெளரஸீ ப்ரஜா ஜாயதே யது,பநயதி யத்‌ ஸாத, 
கரோதி। அத, யதர்வாசீகம்‌ நாபேஸ்‌ தேரஸ்யெளரஸீ 
ப்ரஜா ஜாயதே| ஜ௩ந்யாம்‌ ஜநயதி! தஸ்மாத்‌ ங்ரோத்ரியம்‌ 
அநூசா௩ம்‌ அபுத்ரோ5$ஸீதி ௩ வதந்தி ॥ ”்‌ 
[வேதவித்தான புருஷனுக்கு, காபிக்கு மேற்பட்ட தும்‌, 
கீழ்ப்பட்டதுமான இருவகை வீர்யங்களிருக்கின்‌ றன; ஒருவ 
னுக்கு உபநயனம்‌ செய்து அவனைப்‌ பரிசுத்தமானவனாகச்‌ 
செய்யும்போது. இந்த ப்ராஹ்மணனுடைய நாபிக்கு மேற்‌ 
பட்ட வீர்யத்திலீருந்து ஞானபுத்திரன்‌ பிறக்கிறான்‌. 
ஈாபிக்குக்‌ கீழ்ப்பட்ட வீர்யத்தனால்‌ தராயாரிடத்தில்‌ இவ 
னுக்கு ஒளரஸபுத்திரன்‌ பிறக்றொன்‌. ஆஅகசையால்‌, வேத 
வேதாந்கங்களை அறிந்து. அத்யயனம்‌ செய்விப்பவனை 
நீ பிள்ளையற்றவன்‌ ' என்று பெரியோர்கள்‌ சொல்ல 
மாட்டார்கள்‌.] என்று வஸிஷ்டஸம்ஹிதையில்‌ இரண்டா 
வது அத்தியாயம்‌ ஆரம்பத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு 
அநுஸந்திக்கத்தக்கது. 

இனி ஸந்தியாவந்தனம்‌ என்னும்‌ சப்தத்தின்‌ அர்த்தம்‌ 
விசாரிக்கப்படுகிறது. ஸந்த்‌,யை என்பது ஒரு தேவதையின்‌ 
பெயர்‌; அதற்கு வந்தனமே ஸந்த்யாவந்தனம்‌ என்று 
மேலெழுந்தவாரியான பொருள்‌ கோன்றும்‌. ஸூர்ய 
னுடைய உதயாஸ்தமன வேளைகளில்‌ ஸந்த்யாகாலம்‌ ஏற்‌ 
பட்டிருப்பதால்‌ ஸர்யனைக்‌ குறித்து ஈமஸ்கா ரமே ஸந்த்யா 
வந்தனம்‌ என்று சிலர்‌ பொருள்‌ கொள்ளுகிறார்கள்‌. 

பபீஷா$ஸ்மாத்‌, வாத; பவதே பீ,ஷோதே,தி ஸூிர்ய:'' 
[இப்பரமபுருஷஜனிடம்‌ பயத்தினால்‌ காற்று வீசுறெது; 
ஸுூர்யனும்‌ இவனிடம்‌ பயத்தினால்‌ உதிககிறான்‌.] என்று 
வேதத்தில்‌ சொல்லப்பட்டது. புருஷோத்தமனுடைய 
அஜ்ஞாசக்ரத்திற்கு பயந்து, தினம்‌ தவறாமல்‌. அலுப்‌ 
பீல்லாமல்‌, சலிப்பில்லாமல்‌ ஸூர்யன்‌ உதிப்பதாகவும்‌. 
அஸ்தமிப்பதாகவும்‌ உடனிஷஜத்துகள்‌ உத்கோஷிக்கிறபடி 
யால்‌, மறந்தும்‌ புறந்தொழாமாந்தர்களாகிய முமுக்ஷாக்‌ 
களாலும்‌ அவசயெமனுஷ்டிக்கப்படவேண்டிய கர்மமாயெ 
ஸந்த்யாவந்தனம்‌ ஸூர்யனைக்‌ குறித்த உபாஸனமாக இருக்க 
முடியாது. ஸந்த்யாகாலமும்‌, காலத்துக்கு அதிதேவதை 
யும்‌ காலாதிதனன கண்ணனுக்குக்‌ கட்டுப்பட்டவையே 
யாகையால்‌, மேற்சொன்ன நியாயம்‌ இங்கும்‌ பொருந்தும்‌. 
ஸந்த்யாவந்தனத்தில்‌ படிக்கப்படும்‌ மந்திரங்கள்‌ ஒப்பாரும்‌ 
மிக்காரும்‌ இல்லாதவனான உலகளந்த உத்தமனையே குறிக்‌ 
கின்றன என்பதை ங்ருதிஸ்ம்ருததிறாஸபுராணங்களைக்‌ 
கொண்டு பின்னால்‌ விவரிப்போம்‌. ஆழ்வாரும்‌ 


“நகரம்‌ அருள்‌ புரிந்து கான்முகற்குப்‌ பூமேல்‌ 

பகர மறை பயந்த பண்பன்‌-—பெயரினையே 

புக்தியால்‌ சிந்தியாது ஓதி உருவெண்ணும்‌ 

அந்தியால்‌ ஆம்பயனங்(கு) என்‌? 

என்‌ று அருளிச்செய்தார்‌. இவைகளிலிருந்து ஸந்த்யாகாலத்‌ 
தில்‌ பரமாத்மாவான நாராயணனை நமஸ்கரிப்டதே ஸந்த்யா 
வந்தனத்தின்‌ ஸாரார்த்தமென்று விளங்குகிறது. ஸந்த்யோ 
பாஸூம்‌ என்னும்‌ பதத்திற்கு மற்றோரு விதமாகவும்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌: ஜீவனும்‌, பரமாத்மாவும்‌ சரீரசரீரி 
யாகச்‌ சேர்ந்திருப்பது ஸந்த்யை. இந்தச்‌ சேர்க்கையை 
தயானம்செய்வது ஸந்த்யோபாஸனம்‌ என்றும்‌ சொல்லலாம்‌. 


தியானயோகத்தில்‌ அமர்ந்து நூற்றுக்‌ கணக்கான 
வருஷங்கள்‌ தவம்‌ செய்த ரிஷிகள்‌ அக்காலங்களில்‌ பரம 
புருஜனும்‌. மற்றவையும்‌ ஒன்றுசேர்ந்திருக்கையை 
தியானிப்பதாகிற ஸந்த்யோபாஸன த்கையே செய்து வந்தார்‌ 
கள்‌. நாம்‌ செய்வதுபோல்‌, ஜலபாகமும்‌. ஜபபாகமும்‌ கூடிய 
ஸந்த்யாவந்தனத்சை அக்காலங்களில்‌ அவர்கள்‌ செய்யவு 
மில்லை: செய்திருக்கவும்‌ முடியாது. 


“ஹ்ருதளகாமே சித;ாதி;த்யஸ்‌ ஸதள பதி நிரந்தரம்‌ । 
ஈாஸ்தமேதி ௩ சோதே,தி கதம்‌ ஸந்த்‌யாமுபாஸ்மஹே ||” 
[ ஹ்ருதயாகாச த்தில்‌, ஞானஸ்வருூபியான பகவானாகய 
ஸூர்யன்‌ இடைவிடாமல்‌ எப்போதும்‌ பிரகாசிக்கறான்‌ ; 
அஸ்தமிப்பதுமில்லை: உதிப்பதுமில்லை: (அப்படியிருக்கும்‌ 
போது) எப்படி ஸந்த்யையை உபாஸீப்போம்‌.] என்ற 
பரமாணவசனமும்‌ இங்கு அநுஸந்திக்கத்தக்கது. இதே 
நியாய த்தனலேயே பகவத்கைங்கர்யம்‌ செய்பவர்கள்‌, 
ஸந்த்யாகாலம்‌ நேர்ந்தாலும்‌. அதை விடவேண்டுமேயொழிய 
பகவதீ கைங்கர்யத்தை விடலாகாது என்று சொல்லப்‌ 
பட்டது, இவர்கள்‌ அநுஷ்டியா த ஸந்த்யா நுஷ்டானங்களை, 
எண்ணிறந்த வாலகில்யர்கள்‌. இவர்களுக்கு பதிலாக 
அநுஷ்டிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்றெ து. 


வேதாத்யயனம்‌ செய்வதற்குச்‌ சில இதிகள்‌ விலக்காக 
இருக்கின்றன; வ்ருத்தி ்யங்களினால்‌ ஏற்படும்‌ திட்டு 
காலங்களில்‌ வேதாத்யயனம்‌ செய்யக்கூடாது. ஸந்த்யா 
வந்தனம்‌, வேதமந்திரங்கள்‌ நிரம்பியதாயிருந்தபோதிலும்‌, 
அதை அதுஷ்டிப்பதற்கு முற்கூறிய விலக்குகள்‌ கிடையாது. 
தினந்தோறும்‌ அவசியம்‌ அனுஷ்டிக்கவேண்டுமாகையால்‌ 
அதற்கு நித்யகர்மம்‌ எனப்பெயர்‌. 


இந்த ஸந்த்யாவந்தனம்‌ செய்வதினால்‌ பலன்‌ என்ன? 
செய்யாவிடில்‌ தோஷம்‌ (அகரணே ப்ரத்யவாயம்‌) என்ன? 
இதற்குத்‌ தனித்து ஒரு பலனும்‌ கிடையாது. மநுஸ்ம்ருதி 
५५० இதனால்‌ நீண்ட ஆயுளை முனிவர்கள்‌ பெற்றார்கள்‌ 
என்று இகன்‌ மஹிமை கூறப்பட்டிருக்கறது. இதை 
அநுஸ்டிப்பவர்கள்‌, நேயமற்ற வாழ்வையும்‌. குறைவற்ற 
செல்வத்தையும்‌. ப்ரஹ்மதேஜஸ்ஸையும்‌ அடைகிறார்‌ 
களென்று அநேக ஸ்ம்ருதிகள்‌ அறைகின்றன. “பகவா 
னுடைய ஆஜ்ஞையை அநுவர்த்தித்தோம்‌; கைங்கர்யத்தைச்‌ 
செய்தோம்‌' என்னும்‌ (015 नन துஷ்டியே பரமப்ரயோஜனம்‌. 
பகவதாஜ்ஞையை மீறுவதும்‌, கைங்கர்யஹாஙீயும்‌ செய்யா 
விடில்‌ வரும்‌ தோஷங்கள்‌. “தேறு ஞானத்தர்‌ வேத 
வேள்வியறாச்‌ சிரீவர மங்கலாகர்‌ '' என்ற ஈம்மாழ்வார்‌ 
பாசுரத்தின்‌ வியாக்கியானத்தில்‌ “இது அதுஷ்டிக்கறெதென்‌? 
என்னில்‌: ஈங்வராஜ்ஞாதுவர்த்தனம்‌ பண்ணினானாகறான்‌ ; 
இனித்தான்‌ நிஷித்தாசரணம்‌ ரஜஸ்தமஸ்ஸுக்களை வர்த்‌ 
இ,ப்பிக்குமாப்போலே, இதுவும்‌ ஸத்வவ்ரு த்தியையும்‌ 
பண்ணிக்கொழுக்கக்கடவதாயீருக்குமிறே. இனித்தான்‌ 
சேதானாகையாலே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணியன்‌ றி நில்லானே. 
“ஹத்வாத்‌ ஸஞ்ஜாயதே ஜ்ஞாரம்‌ ' என்று ஜ்ஞரநத்துக்கும்‌ 
அடியாயிருக்குமிறே. ஆகையாலே அநுஷ்டேயமாகக்‌ கடவது” 
என்று ஈம்பிள்ளை அருளியது இங்கு நினைக்கத்தக்க்‌ து. 
இந்த ஸந்த்யாவந்தனத்திற்கு பாஷ்யம்‌ செய்தவர்கள்‌ 

இருவர்‌. ச்ருதப்ரகாசிகாசாரியர்‌ என்று கீர்த்திபெற்ற 
ஸுதர்சன பட்டரும்‌. அடஹோபிமைடம்‌ இரண்டாவது 
பட்டத்தில்‌ எழுந்தருளியிருந்த ஸ்ரீமந்நாராயணயதிீந்த்ரரும்‌ 
இசற்கு ஸம்ஸ்க்ருதத்‌ தில்‌ வியாக்யானம்‌ செய்திருக்கிறார்கள்‌. 
அவர்களுடைய வியாக்க்யானங்களை அதுஸரித்து இங்கு 
தமிழில்‌ வியாக்கயானம்‌ செய்யப்படுகிறது. 


அவதாரிகை முற்றிற்று. 
------------

ஸந்த்யாவந்தக பாஷ்யம்‌ 

பூர்வாந்ஹிகங்கள்‌ 

ஸந்த்யாவந்தனம்‌ செய்வத ற்குமுன்‌ செய்யவேண்டிய . 
கரரியங்கள்‌ பல உள. அவைகளைச்‌ செய்யாமல்‌ 
ஸந்த்யாவந்தனம்‌ செய்யமுடியாதானபடியால்‌ அவைகளை 
இங்கு விசாரிப்பது அவசியமாகிறது. அந்ஹிசகமாவ து: 
*அஹஸ்‌' எனப்படும்‌ ஒருதினத்தில்‌ செய்யவேண்டிய 
காரியங்கள்‌. ஸாதாரணமாக 'அஹஸ்‌' என்பது பகல்‌ 
காலத்தைப்‌ பற்றியே பிரயோகப்படுத்தப்பட்டாலும்‌, 
ஸூர்யோதயத்திலீருந்து மறுநாள்‌ ஸர்யோதயம்‌ 
வரையிலுள்ள தின த்தையும்‌ குறிக்கும்‌. 

முதன்முதல்‌ செய்யவேண்டிய கர்மம்‌ தூக்கத்திலிருந்து 
எழுந்திருப்பது. இது ப்ராஹ்ம முஹூர்த்தகத்தில்‌ 
செய்யவேண்டிய காரியம்‌. ப்ராஹ்ம முஹூர்த்தம்‌ என்பது 
இரவின்‌ நாலாவது யாமத்தினுடைய பிற்பாதி. அதாவது, 
ஸுூர்யோதயத்திற்குமுன்‌ ஒன்றரை மணி காலம்‌. உல: 
காலம்‌ என்பது ஸூர்யோதயத்திற்குமின்‌ 5 நாழிகை 
(2 மணி) காலம்‌. இந்த விடியற்காலையில்‌ எழுந்திருந்து 
பளர்யையுடன்‌கூட விஷ்ணுவை தியானம்‌ செய்து 
தர்மார்த்தங்களைச்‌ சிர்திக்கவேண்டும்‌ என்பது 
“பத்ந்யா ஸஹ ஹரிம்‌ த்‌,யாத்வா தர்மமர்த்த,ம்‌ ௪ சிந்தயேத்‌'' 
என்‌ று ஒருஸ்ம்ரு தியில்‌ சொல்லப்பட்ட த. ஸ்ம்ருதிரத்ன த்தில்‌ 

“மஹாபாரதமாக்‌யாந௩ம்‌ க்ஜிதிம்‌ க,ம்‌ கஸரஸ்வதீம்‌ | 
ப்‌,ரரஹ்மணாந்‌ கேரமமவஞ்சைவ ப்ராதருத்தஎளய கீர்த்தயேத்‌ ॥ 
[மஹாபாரதத்தையும்‌. பூமியையும்‌. பசுவையும்‌, ஸரஸ்வதி 
தேவியையும்‌, ப்ராஹ்மணர்களையும்‌ விஷ்ணுவையும்‌ வீடியற்‌ 
காலையில்‌ எழுந்திருந்து கீர்த்தனம்‌ செய்யவேண்டியது. ] 
என்று உரைக்கப்பட்டது. 

“உச்சை: ஸ்வரேண ய: ப்ராத: ஸ்தோதுமிச்சே,த,நந்யதீ,:। 
வாஸுதே,வாதி,தே,வா௩ாம்‌ நாமஸங்கர்த்தநம்‌ சரேத்‌ ॥”' 
[ எவனொருவன்‌ மற்றோன்‌ நறிலும்‌ மனம்‌ செலுத்தாமல்‌ காலை 
வேளையில்‌ உரத்த குரலில்‌ பாட விரும்புறோனோ. அவன்‌ 
வாஸுீதவன்‌ . முதலிய தேவர்களுடைய .திருநாம ஸங்‌ 
கீர்த்தனத்கைச்‌ செய்யக்கடவன்‌.] என்று மாண்டில்ய 
ஸ்ம்ருதியிலும்‌ சொல்லப்பட்ட த. 
“ப்ராதர்‌ தே,வேதி க்ருஷ்ணேதி & कष ०9 6558 = ஜல்பதாம்‌ | 
மத்யாந்ஹே சாபராண்ஹே ச யோ5வஸாத,ஸ உச்யதாம்‌।!”' 
[“தேவனே! கிருஷ்ணா! கோவிந்தா!” என்று காலை வேளை 
யிலும்‌ மத்யாந்ஹத்திலும்‌ பிற்பகலிலும்‌ பிதற்றுமவர்களுக்கு 
என்ன அக்கம்‌ ஏற்படும்‌ என்று சொல்லுங்கள்‌.] என்று. 
விஷ்ணு தர்மத்தில்‌ உத்கோஷிக்கப்பட்ட த. 

“ப்ஏராஹ்மே முஹூர்த்த உத்தளய சிந்தயேத;த்மநோ ஹிதம்‌ | 
குரும்‌ விஷ்ணும்‌ நமஸ்க்ருத்ய மாதாபித்ரோஸ்‌ ததைவ =| 
[ப்ராஹ்ம முகூர்த்தத்தில்‌ எழுந்திருந்து ப்ரதமாசார்யரான 
விஷணுவையும்‌, தாய்‌ தந்தையரையும்‌ நமஸ்கரித்துத்‌ தனக்கு 
நன்மையை எண்ணக்கடவன்‌.] என்று செள௩கபகவான்‌ 

அருளிச்‌ செய்தார்‌. 
“வெள்ளத்தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை 
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்‌ யோகிகளும்‌ 
மெள்ளவெழுந்து அரியென்ற பேரரவம்‌ 

உள்ளம்‌ புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்‌" _என்று 
ஆண்டாளும்‌ இவ்விஷயத்தையே திருப்பாவையில்‌ அருளிச்‌ 
செய்தாளன்றோ. இவ்விடத்தில்‌ வியாக்கயானம்‌ செய்த 
பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ 
“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: |" 
[தஷ்டசித்தர்களால்‌ நீினைக்கப்பட்டபோதிலும்‌ ஹரியான 
வன்‌ பாடங்களைப்‌ டோக்கடிக்கீறான்‌ ./என்‌ ற ப்ரமாணத்தைக்‌ 
காட்டியருளினார்‌. 

“ப்ராஹ்மே முஹா9ர்த்தே தேவாநாம்‌ பித்ரூணாம்‌ ச ஸமாக,ம: 
ஜாக,ரஸ்தத்ர கர்த்தவ்ய: பித்ருஸம்மாநநம்‌ ஹி தத்‌ ॥'' 
[ப்ரஹ்ம முஹூர்த்தத்தில்‌. தேவர்களுக்கும்‌. பீத்றாக்களுக்‌ 
கும்‌ சேர்க்கை ஏற்படுகிறது, (ஆகையால்‌) அப்பொழுது 
விழிக்துக்கொண்டிருக்கவேண்டும்‌. அதுவே பித்ருக்களே 
கெளரவப்படுத்துவதாகும்‌.] என்‌ றும்‌ 

"901 (60 முஹூர்த்தே ஸேவேதரம்‌ பயநம்‌ யத்ர த,ம்பதீ | 
ரமமமா நதுல்யம்‌ தக்‌, வேங்ம பித்ருபி,: பரிவர்ஜ்யதே |” 
[ப்ரஹ்ம முஹுூர்த்தத்தில்‌, எந்த வீட்டில்‌ தம்பதிகள்‌ 
சயனத்திலிருக்றோர்களோ. அந்த வீடு சுடுகாட்டிற்குச்‌ 
சமானமான து. பித்ருகளால்‌ விலக்கப்படுகிறது.] என்றும்‌ 
ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்டிருப்பதிலிருந்து ப்ராஹ்ம 
முஹடூர்த்தத்தில்‌ யாவரும்‌ அவசியம்‌ விழித்திருக்கவேண்டும்‌ 
என்று @,0 98. 2/. 

“சத்வாரீமாநி கர்மாணி ஸந்த்‌,யாயாம்‌ பரிவர்ஜயேத்‌ | 
ஆஹாரம்‌ மைது,நம்‌ நித்ளாம்‌ ஸ்வாத்யரயம்‌ ச ததைவ ச॥ 
ஆஹாராத்‌ ஜாயதே வ்யாதி,: கர்ப்ப வேதம்ச மைதுநாத்‌ | 
95307857 ஜாயதே5லக்ஷமீ: ஸ்வாத்‌,யாயாதளயுஷ: க்ஷயம்‌।)” 

[ஆஹாரம்‌. (0515 0, தூக்கம்‌, படித்தல்‌ என்னும்‌ நான்கு 
கர்மங்களைபும்‌ ஸந்த்யாகா லத்தில்‌ விடவேண்டும்‌. ஆஹாரத்‌ 
தினால்‌ வியாதியும்‌. மைதன த்தினால்‌ கர்ப்பநாசமும்‌. நித்ரை 
யீனால்‌ மூதேவியும்‌, படித்தலால்‌ ஆயுட்குறைவும்‌ உண்டா 
கிறது.] என்று ப்ருஹந்மனுவால்‌ சொல்லப்பட்டது. 

இவைகளிலிருந்து நாம்ப்ரா ஹ்மமுஹ£ர்த்தத்தில்‌ எழும்‌ 
ந்‌ பரப்ரஹ்மமாயெ மந்கநாராயணனை யாரனிக்க 
५ 20 
வேண்டுமென்‌ று தெளிவாகிறது, வைகறையில்‌ தயிலெழுதல்‌ 
கேஹாரோக்யத்திற்கும்‌ நீண்ட ஆயுளை அடைவதற்கும்‌ 
அறுகுணமானது என்பது எல்லாரும்‌ அறிந்ததே, தீர்க்க 
தர்‌்சகளான நம்‌ முன்னோர்கள்‌ ஏற்படுத்திய நியமங்களும்‌ 
ஆசார அநுஷ்டானங்களும்‌ இஹபரஸா தூகங்கள்‌ என்பதை 
ஆகேபயில்லாமல்‌ ஓப்புக்கொள்ளலாம்‌ 


, அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ப,ஹிர்விஹார:' 
என்‌ று சொல்லப்பட்ட வெளி ஸஞ்சாரம்‌. தேஹச த்தியின்‌ 
பொருட்டு வீட்டுக்குத்‌ தென்‌ திசையில்‌ ஒரு அம்புபோய்‌ 
விழும்தூரத்திற்கப்பால்‌ மலஜலவீஸர்‌ ஜடம்‌ செய்யவேண்டும்‌. 
இதைப்பற்றியும்‌ ஸ்ம்ருதிகளில்‌ அநேக விதிகள்‌ சோல்லப்‌ 
பட்டிருக்கின்றன. பூணூலை மாலையாக வலது செவியில்‌ 
தரித்து, மெளனமாக சுத்தமான இடத்தில்‌ விஸர்ஜனம்‌ 
செய்யவேண்டும்‌. வலது செவியில்‌ பூணூலை தரிப்பது, 
பூனூல்‌ ழே தெரங்கி ௮சுத்தப்படரமலிருப்பத ற்காகவும்‌, 
சுத்தமாயிருப்பதற்காகவுமாகும்‌. விஸர்ஜனம்‌ செய்தபிறகு. 
ஜலம்‌. மண்‌ இவைகளால்‌ ஸெளசம்‌ (சுத்தி) செய்தகொள்ள 
வேண்டும்‌. 

அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது “ கண்டோம்‌ ' 
எனப்படும்‌ வாய்‌ கொப்பளித்தல்‌;ப்ராஹ்மணனுடைய வலது 
புறத்தில்‌ எப்போதும்‌ கேவதைகள்‌ வஸிக்கிறபடியால்‌, 
எப்போதும்‌ இடதுபுறத்திலேயே கொப்பளிக்கவேண்டும்‌ 
என்று சாஸ்திரம்‌ விதிக்கிறது. 


அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ' த,ந்தத,ாவமம்‌ ' 
எனப்படும்‌ பல்தலக்கல்‌, 


“ஆயுர்‌ (5600 யமேோ வர்ச்ச: ப்ரஜா பமமாவஸ நி ௪ | 
ப்‌,ரஹ்மப்ரஜ்ஞாம்‌ ௪ மேதராம்‌ ௪ த்வம்‌ நோ தேஹி 
வாஸ்பதே ॥'' 
[ஓ வ்ருக்ஷராஜனே! ஆயுள்‌. பலம்‌, £ீர்த்தி, காந்தி. ஸந்ததி, 
பசுக்கள்‌, தனங்கள்‌, ப்ரஹ்மஜ்ஞானம்‌. மரதியில்லாமை 
ஆகிய இவைகளை எங்களுக்குக்‌ கொடுப்பரயாக.] என்னும்‌ 
இந்த மந்திரத்தைச்‌ செசெொல்லி மரத்தைத்‌ தொட்டு 
அதிலிருந்து குச்சியை க்ரஹிக்கவேண்டும்‌. ஆலமரம்‌, வேல 
மரம்‌ முதலிய தவர்ப்பு, புளிப்பு. வரஸனை, பாலள்ளவை 
களான மரங்களின்‌ குச்சியை உபயோகப்படுத்தவேண்டும்‌ 
என்று மார்க்கண்டேயர்‌ விதித்தார்‌. 

அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ஸ்நானம்‌, ஒரு 
நாளில்‌ காலை, மத்யாந்ஹம்‌, மாலை ஆக ஷூன்று காலங்களி 
லும்‌ ஸந்த்யாவந்தனத்திற்கு முன்‌ ஸ்நானம்‌ செய்யவேண்டு 
மென்று சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளில்‌ ப்ராத: 
ஸ்நாநம்‌ மிகவும்‌ முக்கயமானகஅ. 


க்ஷாப்‌யந்தி ஹி ஸுஷுப்தஸ்ய இந்த்‌ரியாணி ஸ்ரவந்தி ச | 
அங்களுநி மைதரம்‌ யாந்தி ஹ்யுத்தமாந்யத,மைஸ்‌ ஸஹ ॥ 
அத்யந்தமலிந: காய: நவச்சித்ஸஸம ந்வித: | 
ஸ்ரவத்யேவ தி,வாராத்ரம்‌ ப்ராத:ஸ்நா௩ம்‌ விமேோத,நம்‌ ॥ 
ப்ராத:ஸ்நா௩ம்‌ ப்ரமாம்ஸந்தி த்‌,ருஷ்டாத்‌;ருஷ்டசுரம்‌ ஹி தத்‌ । 
அஸ்நாத்வா நாசரேத்‌ கர்ம ஜபஹோமாதி, கிஞ்ச௩ ॥ 
ஸர்வமர்ஹதி மரஈத்‌,தரத்மட ப்ராத:ஸ்௩ாயீ ஐபாதி,கம்‌ | 
ப்ராதருத்தளாய யோ விப்ர: ஸந்த்‌யாஸ்நாகம்‌ ஸமாசரேத்‌ || 
ஸப்தஜந்மக்ருதம்‌ பாபம்‌ த்ரிபிர்‌ வர்ஷைர்‌ வ்யபோஹதி ॥ 

குணா தம ஸ்நாநபரஸ்ய ஸாத்யா: 

ரூபம்‌ = தேஜங்ச படலம்‌ ச மெொளசம்‌ । 
ஆயுஷ்யமாரோக்‌,யமலோலுபத்வம்‌ 
ॐ: 9१००५४५ ए 7 ७०००० த்‌,ருதிங்ச மேதா ॥ 

[மனிதன்‌ தூங்கும்போது அவனுடைய இந்திரியங்கள்‌ 
கலக்கத்தை அடைகின்‌ றன; தாழ்ந்த இந்திரியங்களும்‌, 
உயர்ந்த . இந்திரியங்களும்‌ ஒரே நில்மையை அடைகின்‌ றன; 
ஒன்பது தவாரங்களுடைய உடம்பு, மிகவும்‌ அசுத்தியை 
அடைகின்றது. பகலிலும்‌ இரவிலும்‌ மிகவும்‌ தளர்ச்சியை 
உடைத்தான்றது. காலையில்‌ குளித்தல்‌ மிகவும்‌ பரிசுத்தி 
யைத்‌ தருவது. காலையில்‌ குளித்தலைப்‌ பெரியோர்கள்‌ 
மிகவும்‌ புகழ்கிறார்கள்‌. இஹபரஸுகங்களை அது ஸாதித்துத்‌ 
தருகின்‌ றதல்லவா, ஜபம்‌. ஹோமம்‌ முதலிய எதையும்‌ 
ஸ்நானம்‌ செய்யாமல்‌ அநுஷ்டிக்கக்கூடாது. சுக்தமான 
७5 27.55 உடையவனாயிருப்ப தினால்‌, காலையில்‌ குளிப்பவன்‌ 
ஜபம்‌ முதலிய எல்லாவற்றையும்‌ செய்யத்தகுந்தவன்‌ . எந்த 
ப்ரராஹ்மணன்‌ காலையில்‌ எழுந்து தினந்‌ தோறும்‌ 
ப்ராத;:ஸ்நானத்தகைச்‌ செய்கிறானோ. அவன்‌ ஏழு ஜன்மங்களில்‌ 
செய்த பாவத்தை மூன்று வருஷத்தில்‌ போக்கடிக்கிறான்‌. 
ரூபம்‌, காந்தி, பலம்‌, சுத்தி, நீண்ட ஆயுள்‌, ஆரோக்கியம்‌. 
க்ஷுத்ரவிஜயங்களில்‌ ஆசையின்மை, தஃஸ்வப்ஈநாசம்‌, 
தைரியம்‌, அறிவு; என்னும்‌ பத்து குணங்களும்‌ ஸ்நானம்‌ 
செய்பவனுக்கு எளிதில்‌ திட்டும்‌.] என்று தக்ஷஸ்ம்ருதியில்‌ சொல்லப்பட்டது. 

ஸ்நானம்‌ பலவி தமா கச்‌ சொல்லப்படுகிற து. அவைகளில்‌ 
முக்கியமானது வாருணஸ்நானம்‌. ஜலத்தில்‌ தலை முழுகும்‌ 
படி அமிழ்ந்து தீர்த்தமாடுவது வாருணஸ்நானம்‌ எனப்படு 
கிறது. *ம்ருத்திகே ஹந மே பாபம்‌' [பூமியே! என்னுடைய 
பாபத்தைப்‌ போக்கடிப்பாயாக] என்று ஆரம்பிக்கும்‌ 
மந்திரங்களைச்‌ சொல்லி சரீரம்‌ முழுவதும்‌ சுத்தமான 
மண்ணைப்‌ பூசிக்கொள்வது பார்த்திவ (ப்ருதிவீ ஸம்பந்த 
மான) ஸ்நானம்‌ எனப்படுகிறது. அக்நிஹோ த்ரச்‌ சாம்பலை 
உடம்பில்‌ பூசிக்கொள்வது ஆக்ரேயஸ்நானம்‌ என்று 
உரைக்கப்படுகிறது. பசுக்களின்‌ குளம்புத்தூள்களை 
.கோஸாவித்ரீ மந்திரத்தால்‌ உடம்பில்‌ படியவைத்துக்‌ 
கொள்வது வாயவீயஸ்நராம்‌ எனப்படும்‌. வெயிலுடன்‌ 
கூடி மழை பெய்யும்போது அதில்‌ நனைவது திவ்யஸ்நானம்‌ 
அல்லது அகாசஸ்நாநம்‌ என்று சொல்லப்படுகிறது. இப்படி 
பஞ்சபூ,தஸ்நானங்களைத்‌ தவிர ' ' ஆபோஹிஷ்டா'' என்னும்‌ 
மந்திரத்தின்‌ ஒவ்வொரு பாதத்தையும்‌ உச்சரித்துக்கொண்டு 
முறையே தலை, மார்பு: கால்‌ ஆகிய அங்கங்களில்‌ ப்ரோக௯கித்‌ 
தஅக்கொள்வது மந்த்ரஸ்க5ானம்‌ எனப்படுகிறது. ஸூர்ய 
மண்டல மத்யத்தில்‌ தங்கவர்ணத்‌ தருமேனியுடையவனாய்‌. 
ஸங்க,சக்ரசுரனாய்‌. கேயூரமகரகுண்டலங்களை தரித்தவனாய்‌ 
எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீமந்காராயணனுடைய திருவடித்‌ 
தாமரையிலிருந்து ப்ரவஹிக்கும்‌ கங்கை.ப்ரஹ்மரந்க்‌,ர த்தின்‌ 
வழியாக கேகத்தினுள்‌ புகுந்து ஸகல மலங்கனையும்‌ 
போக்கடிப்பதாக மனஸ்ஸினாலே தியானம்‌ செய்வதே மாரஸ 
ஸ்நானமாகும்‌, இரண்டு கால்‌. இரண்டு கை. முகம்‌ ஆகிய 
7.5! அங்கங்களையும்‌ ஜலக்தினால்‌ அலம்புயவது பஞ்சாங்க, 
ஸ்நானமாகும்‌, ஈர வஸ்த்ரத்தனால்‌ உடம்பு முழுவதும்‌ 
தடைச்துக்‌ கொள்வது காபில ஸ்நானம்‌ என்ப்படும்‌. 
ஊர்த்‌,வபுண்ட்ரத்தை தரித்து ஒங்காரத்தை ஜபிப்பது ஒரு 
விதமான ஸ்நானம்‌. ஸ்நானம்‌ செய்யும்போது ஸ்ரீமந்காரா 
யணனையே ஸ்மரிக்கவேண்டும்‌. 

“ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்‌ தா யத,ஸ்யாயர௩ம்‌ புக: | 
தஸ்மாந்‌ நாராயணம்‌ தே,வம்‌ ஸ்காஈகாலே ஸ்மரேத்‌, 11554: ॥' ' 
[ஈரனாயெ பகவானுக்கு இருப்பிடமாயிருத்தலால்‌ ஜலம்‌ 
"एण 72" எனப்படுகிறது. ஆகையால்‌ ஞானியானவன்‌ நாரா 
யணனாகிற தேவனை ஸ்நானகாலத்தில்‌ நினைக்கக்கடவன்‌. ] 
என்று ०9५८, ०९7 விதித்தார்‌. 

*த்யாயேரந்காராயணம்‌ தே,வம்‌ ஸ்நாநாதி,ஷு ௪ கர்மஸு | 

ப்ராயங்சித்தேஒு ஸர்வேஷு முச்யதே த,ஷ்க்ருதாத்‌ புமாந்।'' 
[ஸ்கானம்‌ முதலிய கர்மங்களின்‌்போதும்‌. எவ்விதமான 
ப்ராயங்சித்தங்கள்‌ செய்யும்போதும்‌ ஸ்ரீமந்நாராயணனை 
தியானம்‌ செய்யும்‌ மனிதன்‌ எல்லாப்‌ பாடங்களினின்‌ றும்‌ 
வீடுபடுகிறான்‌.] என்று செளனகர்‌ ஸ்தாபித்தார்‌. 

“த்‌ யாயேர்‌ நாராயணம்‌ தேவம்‌ ஸ்நாந்ாதிஷு ௪ கர்மஸஈ | 
ப்‌சஹ்மலோகமவாப்நோதி ந சேஹ ஐரயதே (ह; |” 
[ஸ்நானம்‌ முதலிய கர்மங்களின்போ து ஸ்ரீமந்நாராயணனை 
தியானம்‌ செய்யவேண்டியது, அப்படிச்‌ செய்பவன்‌ ப்ரஹ்ம 
லோகத்தை அடைகிறான்‌ , இங்கு மறுபடியும்‌ பிறப்பதில்லை. ] 
என்று தச்ஷர்‌ தெரிவித்தார்‌. 

“ஸோ$ந்தர்ஜலமாவிமய வாக்‌,வதோ நியமேர @ | 

ஹரிம்‌ ஸம்ஸ்ம்ருத்ய மநஸா மஜ்ஜயேச்‌ சோரவஜ்ஜலே |!” 
[ அவன்‌ , ஜலத்தில்‌ முழு, வாக்கை அடக்கனெவனாய்‌. ஹரியை 
நினைத்துக்கொண்டு. திருடன்‌ போல்‌ ஜலத்தில்‌ மறைந்திருக்க 
வேண்டும்‌. ] என்று ஹாரீதர்‌ விதித்தார்‌. 


“ஹங்கல்ப: ஸூக்தப்ட,நம்‌ மார்ஜும்‌ சாக மர்ஷணம்‌ | 
தே,வதாதர்ப்பணம்‌ சைவ ஸ்௩ர௩ம்‌ பஞ்சாங்கமுச்யதே |॥!'' 
[ஸங்கல்பம்‌ புருஷ क 50 திகளைப்‌ படிப்பது, உடம்பு 
தேய்த்துக்கொள்ளு தல்‌, அகமர்ஜஷணஸக்தஜபம்‌, தேவதை 
களுக்குத்கர்ப்பணம்‌ செய்தல்‌ என்ற ந்து அங்கங்களை 
உடையதாக ஸ்நானம்‌ சொல்லப்படுகிற து.]என்‌ று 950 व्ल ॐ 
திற்கு ஐந்து அங்கங்கள்‌ ஸ்ம்ருதியில்‌ விதிக்கப்பட்டன. 


அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது வஸ்த்ரதா ரணம்‌. 
காஷாயவஸ்த்ரம்‌. கறுப்புவஸ்த்ரம்‌. அழுக்குத்துணி, தலைப்‌ 
பில்லாத துணி, இரண்டு வஸ்த்ரங்களைச்‌ சேர்த்துத்‌ தைக்கப்‌ 
பட்டது. சிவப்பு. மஞ்சள்‌, புகை நிறமுள்ள வஸ்த்ரங்கள்‌ 
முதலியவை கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கிறது. 


“ஸப்தவாதாஹதம்‌ வஸ்த்ரம்‌ மராஈஷ்கவத்‌ ப்ரதிபாதி,தம்‌ | 
वधो छा ०7५4 த்‌,விஜாதீநாம்‌ ஆத்‌,ருதம்‌ கெளதமாதி,பி,:॥1 
ஜப்யே ஹோமே தத; ஸ்காநே 'தை,வே பித்ர்யே ச கர்மணி | 
பத்மீயாந்‌ நாஸாரீம்‌ கக்ஷயாம்‌ மேஷகாலே யதே,ச்ச,யா।॥'' 

[எழுதடவை காற்றில்‌ உதறப்பட்டதாகில்‌, அந்த வஸ்த்ரம்‌ 

ஈரமேயாயினும்‌ உலர்ந்ததுபோலவே கெளதமாதி மஹர்ஷி 

களால்‌ அங்கிகரிக்கப்பட்டிருக்கறது. ஜபம்‌. ஹோமம்‌. 
ஸ்நானம்‌, தேவபித்ருகார்யங்கள்‌ ஆகிய இவைகளில்‌ ஆஸுர 

மான (அ௮அஸா-ுரஸம்பந்தியான) கச்சங்களை தரிக்கக்கூடா த. 

மற்ற காலங்களில்‌ இஷ்டப்படி வஸ்த்ரத்தை தரித்துக்‌ 

கொள்ளலாம்‌.] என்று ஸ்ம்ருதி ரத்நாவளியில்‌ சொல்லப்‌ 
பட்டது. 'ப்ரஹ்மசாரிகள்‌ கீழ்வஸ்த்ரம்‌ ஒன்றை மட்டும்‌ 
கச்சமில்லாமல்‌ தரிக்கவேண்டும்‌. க்ருஹஸ்தர்கள்‌ இடுப்பில்‌ 
ஒரு வஸ்த்ரமும்‌. மேல்‌ ஒரு உத்தரீயமும்‌ தரிக்கவேண்டும்‌, 
உத்தரீயமில்லாவிடில்‌ மூன்றாவது பூணூல்‌ தரித்தால்‌ 
உத்தரீயத்திற்கு பதிலாக ஆகிறது. வானப்ரஸ்தர்களும்‌ 
க்ருஹஸ்தர்கள்‌ போலவே வஸ்ச்ரத்கை தரிக்கவேண்டும்‌. 
ஸந்யாஸிகள்‌ காஷாய வஸ்த்ரத்தகை ப்ர்ஹமசாரிகளைப்‌ 
போலவே தரிக்கலேண்டும்‌. வஸ்த்ரம்‌ தரிக்கும்‌ விதங்களைப்‌ 
பற்றி ஸ்ம்ருதிகளில்‌ விரிவாக வர்ணிக்கப்படவில்லை. 

அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ஊர்த்‌,வபுண்ட்‌,ா 
தப்ரணம்‌. இதை தரிக்காமல்‌ செய்யும்‌ நித்யறையித்திக 
கர்மங்களும்‌, தேவபித்ரு கார்யங்களும்‌, திருவாராதனமும்‌ 
நிஷ்டலமாகும்‌. இதர மதஸ்கர்கள்‌ அவரவர்‌ மதத்திற்கு 
அறுகுணமான புண்ட்ரங்களை தரித்துக்‌ கர்மங்களைச்‌ 
செய்யவேண்டும்‌. 

இனி ஸந்த்யாவட்‌ தத்தின்‌ ஆரம்பத்திலும்‌, இடையில்‌ 
பலவிடங்களிலும்‌. மற்று பல கர்மங்களிலும்‌ செய்ய 
வேண்டியதான ஆசம௩ம்‌ விவரிக்கப்படுகறது. ஸந்த்‌,யர 
வந்தனம்‌ ஜலபாகபென்‌ றும்‌. ஜபபாகமென்‌ றும்‌ இரண்டாகப்‌ 
பீரிக்கப்பட்டிருக்கறது. அதில்‌ ஜலபாகத்தின்‌ முதலில்‌ 
செய்யப்படுவது ஆசமனம்‌. ஆசமனத்தை அறுஷ்டிக்க 
வேண்டிய முறை பீன்‌ வருமாறு: வலது கையை கோகர்ணம்‌ 
( பசுவின்‌ காது ) போல்‌ .மடித்துக்கொண்டு உள்ளங்கையி 
லிருக்கும்‌ மாஷமென்னும்‌ ஒரு ரேகை முழுகுவத ற்கு மட்டும்‌ 
வேண்டிய ஜலத்தை எடுத்துக்கொண்டு : அச்யுதாய ஈம: " 
என்னும்‌ மந்திரத்தை உச்சரித்தத்‌ திர்த்கத்தை உட்‌ 
கொண்டு. தீர்த்தம்‌ மார்புத்‌ தலத்தை அடைந்த பிறகு, 
மறுபடியும்‌ அம்மா திரியே தீர்த்தத்தை எடுத்து : அ௩ந்தாய 
ஈம: ' என்று சொல்லி உட்கொண்டு. . மறுபடியும்‌ அம்‌ 
மாதிரியே ஜலத்தை எடுத்து ` கோவிந்தாய நம: ' என்று 
உட்கொள்ளவேண்டும்‌. பிறகு இரண்டு தடவை உதடு 
களைத்‌ துடைக்கவேண்டியது.

“அங்கு,ஷ்டமுூலே ததோ முகம்‌ வை ஸமுபஸ்ப்ருமேத்‌ | 
அங்குஷ்டநாமிகாப்‌,யாம்‌ து ஸ்ப்ருமேரந்ரேத்ரத்‌,வயம்‌ தத:॥) 
छं ०४५७००१५ 56५17 859१ ஸ்ப்ருமெந்கரஸாபுடத்‌,வயம்‌ | 
கநிஷ்டளங்குகஷ்டயோகே;ு ஸ்ர வணே ஸமுபஸ்ப்ருமேத்‌ |} 
ஸர்வாஸாமேவ ५१९७९ ஹ்ருதயந்து தலேந வா । 
ஸம்ஸ்ப்ருமேத்‌, வை ஸிரஸ்தத்‌,வத்‌ அங்குஷ்டேகா தவா 

த்‌,வயம்‌ |!" 

[ அதன்‌ பிறகு அங்குஷ்டமூலத்‌ தனால்‌ முகத்தையும்‌, கட்டை 

விரல்‌. பவித்ரவிரல்‌ இவைகளைக்‌ கூட்டி இருகண்களையும்‌. 

ஆள்காட்டிவிரல்‌. கட்டைவீரல்‌ இவைகளைக்‌ கூட்டி மூக்கின்‌ 
இரு பக்கங்களையும்‌, சிறு விரல்‌, கட்டைவிரல்‌ இவைகளைக்‌ 
கூட்டி இரு காதுகளையும்‌. எல்லா விரல்களையும்‌ சேர்த்தா 
வது அல்லது உள்ளங்கையாலாவது ஹ்ருதயத்தையும்‌. 
அம்மா திரியேயாவது. கட்டை வீரலாலாவது தலையையும்‌ 
தொடவேண்டியது.] என்று வ்யாஸஸ்ம்ருதியில்‌ ஆசம௩ 
ப்ரகாரம்‌ சொல்லப்பட்டது. 'கேசவாய ஈம:' என்று 
உச்சரித்துக்கொண்டு வலது கன்னத்தையும்‌. ` காராயணாய 
ஈம: ' என்று இட்து கன்னத்தையும்‌. வலதுகைப்‌ டெரு 
விரலாலும்‌,  மாதவாய நம: ' என்று வலது கண்ணையும்‌ 
* கோவிந்தாய நம: ' என்று இடது கண்ணையும்‌ வலது கை 
பவித்ர விரலாலும்‌, ` விஷ்ணவே நம:' என்று வலது 
மூக்கையும்‌, * மதுஸ9ததாய ஈம: ' என்று இடது மூக்கை 
யும்‌ வலதகை அள்காட்டிவிரலா லும்‌, ` த்ரிவிக்ரமாய நம: ' 
என்று வலது காதையும்‌. “வாமநாய நம: என்று இடது 
காதையும்‌ வலதுகை சிறுவீரலாலும்‌. .'ஸ்ரீத,ராய 010; ' 
என்று வலது தோளையும்‌, ` ஹ்ருஷீகேமசாய நம: ' என்று 

இடது தோளையும்‌ வலது @ 5 நடு விரலாலும்‌, ' (53107419 ५) 

10: " என்று ஐந்து விரல்களாலும்‌ ஹ்ருதயத்தையும்‌, 

* தளமோதராய ஈம: ' என்று ஐந்து விரல்களாலும்‌ தலையில்‌ 

ப்ரஹ்மரந்த்‌,ரப்ரதேசத்தையும்‌ छ = ८० 5 5 தின்‌ போது 

ஸ்பர்பிப்பது அநாதி, மிஷெடாசாரஸித்‌்தமாய்‌ இருந்து 
வருகிறது. 


“அங்கு,ஷ்டேர து தேறிந்யா நாபி,ம்‌ ச ஸமுபஸ்ப்ருமேத்‌ '' 
[வலது கை பெருவிரலையும்‌ ஆள்காட்டி வீரலையும்‌ சேர்த்து 
நாபியைத்‌ தொடவேண்டும்‌] என்று ஹாரிதர்‌ விதித்ததி 
லிருந்து : பத்ம௩ாப,ாய நம: ' என்று நாபியையும்‌ கொடலாம்‌ 
என்று ஏற்படுகிறது. இம்மாதிரியே வைஷ்ணவஸ்மார்த்த 
०9८47 55८0. ப்ராஹ்மண ஸமூஹத்தினர்‌ முழுவதும்‌ அச்யுத 
கேசவா திநாமங்களை உச்சரித்தக்கொண்டே ஆசமநத்தை 
அநுஷ்டிக்கறோர்கள்‌. சிற்சலர்‌ சிவனுடைய நாரமங்களை 
உச்சரித்துக்கொண்டு ஆசமாத்தைச்‌ செய்வதாகத்‌ தெரி 
கிறது. ஸ்ம்ருதிகளில்‌ நாமோச்சாரணத்தைப்‌ பற்றி விதிகள்‌ 
இருப்பதாகத்‌ தெரியவில்ல, அனால்‌,  தர்மஜ்ஞுஸமய: 
ப்ரமாணம்‌ வேதாயண்ச '' [தர்மத்தை அறிந்தவர்களுடைய 
ஆசாரமே முக்ய ப்ரமாணம்‌. வேதங்களும்‌ ப்ரமாணமாகின்‌ 
மன.] என்று தர்மஸூத்ரத்தில்‌ சொல்லியபடியே மஹான்‌ 
களுடைய அநுஷ்டானம்‌ வேதத்தைக்‌ காட்டிலும்‌ ப்ரபல 
ப்ரமாணமாகையால்‌ நமக்கு இவைகளெல்லாம்‌ அவசியம்‌ 
அநுஷ்டிக்கவேண்டியவையே. ம்ருதியும்‌ “ த்ரிராசாமேத்‌ | 
5569: பரிம்ருஜ்ய। ஸக்ருது,பஸ்ப்ருங்ய '' [மூன்று தடவை 
தண்ணீரைப்‌ பருகவேண்டும்‌. இரண்டு தடவை (உதடு 
களைத்‌) துடைக்கவேண்டும்‌. ஒரு தடவை (அங்க்ங்களை ) 
ஸ்பர்‌சிக்கவேண்டும்‌.] என்று ஆசமனத்தை வீதித்தது. 


“அங்கு ஷ்டே ஏ 5க்‌,நிரிதி க்‌,யாத: ப்ரோக்தா வாயு: ப்ரதே,மபிநீ | 
அநாமிகா தத; ஸூர்ய: கநிஷ்ட, மக,வா ஸ்ம்ருதா ॥ 


 ப்ரஜாபதிர்‌ மத்யமா து ஜ்ஞோயா மாாத்‌,திமபீ,ப்ஸதா |” 


[பெருவிரல்‌ ௮க்நியை தேவதையாக உடையது; ஆள்காட்டி 
வீரல்‌ வாயுவை தேவதையாக உடையதாகச்‌ சொல்லப்‌ 
பட்டது. பவித்திரவிரல்‌ ஸூர்யனை தேவதையாக வுடையது, 
சிறு விரல்‌ இந்திரனை தேவதையாக ' உடையது. ஈடுவிரல்‌ 
பிரஜாப தியை தேவதையாக உடையது. இவைகளை சத்தியை 
விரும்புமவன்‌ அறியவேண்டியது,] என்று ஹாரீதஸ்ம்ருதி 
யில்‌ சொல்லப்பட்டது.  “ முகளதிந்த்ரங்ச அக்‌,நிய்ச `" 
என்‌ கிறபடியே அக்னி முகத்திலிருந்து உண்டானவனாகை 
யாலும்‌, முகத்துக்கு அதிதேவதகையாகையா லும்‌, ௮அக்கியை 
தகேவதையாகக்‌ கொண்ட டெருவிரலால்‌ முகத்தைத்‌ தொட 
வேண்டும்‌. '' சோஸ்‌ ஸ9ர்யோ அஜாயத'' என்கிறபடியே 
கண்ணிலிருந்து ஸூர்யன்‌ பிறக்கையாலும்‌, கண்ணுக்கு 
தேவதையாகையா லும்‌, ஸூர்யனை தேவகையாகக்கொண்ட 
பவித்திரவிரலால்‌ கண்ணைத்தொடுவது பொருத்தமுள்ள த. 
ங்வாஸத்திற்கு உபயோகப்படும்‌ இந்திரியமான மூக்கை. 
ங்வாஸிக்கப்படும்‌ வாயு பவை தகேவதையாகக்கொண்ட 
ஒள்காட்டிவிரலால்‌ தொடுவது நியாயமே. சனிக்கு 
(இடிக்கு) அதிபதியான இந்திரனை தேவதையா கக்‌ கொண்ட 
சிறு விரலால்‌ சப்தத்தை கிரஹிக்கும்‌ இந்திரியமான காதை 
ஸ்பர்சிப்பதும்‌ பொருத்தமுடைய து. இப்படிப்‌ பல அங்கங்‌ 
களைத்‌ தொடுவதால்‌ அந்தந்த அங்கங்களுக்கு சுத்தி எற்‌ 
படுகிறது என்றும்‌ தெளிவாகிறது. 

“ய: க்ரியாம்‌ குருதே மோஹாத்‌ அநாசம்யைவ நாஸ்திக: | 
ப,வந்தி ஹி வருத தஸ்ய க்ரியா: ஸர்வா ந ஸம்மய:; ||” 
[ஈாஸ்‌திகனான எவனொருவன்‌. மயக்கத்தனால்‌ ஆசமனம்‌ 
செய்யாமல்‌ கருமங்களைச்‌ செய்கிறானோ. அவனுடைய 
கருமங்களெல்லாம்‌ வீணாகின்றன. இதில்‌ ஸந்தேஹே 
யமில்லை.] என்று சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்ட திலிருநீது 
ஆசமனம்‌ செய்யவேண்டிய தின்‌ அவசியம்‌ அறியப்படுகிற து. 

பாதெள ஹஸ்தெள ச ப்ரக்ஷாள்ய..யாதெள பூமெள ப்ரதிஷ்‌ 
பளப்ய பத்;த,கச்சஹிக, : புண்டளீகாக்மிஷ்டதை,வதம்‌ 

ஸ்ம்ருத்வாசாமேத்‌ ”' 
[பாதங்களையும்‌, கைகளையும்‌ அலம்பி, பரதங்களை பூமியில்‌ 
ஊன்றி, கக்சத்தையும்‌, சிகையையும்‌ முடிந்தவனாய்‌. இஷ்ட 
தெய்வமான புண்டரீகாகஷனை நினைத்து ஆசமனம்‌ செய்ய 
வேண்டும்‌.] என்று ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்‌ சொல்லப்‌ 


“அம்ஸெள ஸ்ப்ருஷ்ட்வா கராக்‌,ரேண தோயம்‌ 
ஸ்ப்ருஷ்ட்வா ஸமாஹித: | 
ஸம்ஸ்ம்ருத்ய பத்ம௩ாப,ம்‌ ச விப்ர: ஸம்யக்‌, சிமாத்‌,த்யதிர”' 
(क्छ. நுனியால்‌ தோள்களை ஸ்டர்‌சித்து, தண்ணீரையும்‌ 
ஸ்பர்சித்து. . பத்மநாபனை நினைப்பதினால்‌ ப்ரரஹ்மணன்‌ 
நன்கு பரிசுத்தமடைகிறான்‌.] என்று வ்யாக்ரபாதரால்‌ 
சொல்லப்பட்ட து. -' ஓங்காரேண ஸஹ யஜ்ஞபுருஷம்‌ மநஸா 
ஸ்மரேத்‌'' [ஓங்காரத்தை உச்சரித்துக்கொண்டு யஜ்ள 
ருஜனான விஷ்ணுவை மனஸ்ஸினால்‌ நினைக்கவேண்டிய ௧. | 
என்று நாராயணீயமென்‌ னும்‌ வீயாக்க்யோனத்தில்‌ சொல்லப்‌ 
பட்டது. இவைகளிலிருந்து பகவத்ஸ்மரணமும்‌. நாமோச்‌ 
சாரணமும்‌ ஆசமனத்தின்‌ போது செய்யவேண்டுமென்ப து 
ஸ்ம்ருதிகளிலிருந்தும்‌ ஏற்படுகிறது. 


“த்ரி: ப்ராங்நீயாத;போ யத்து ப்ரீதாஸ்தேநாஹ தே,வதா: | 
ப்‌,ரஹ்மா விஷ்ணுங்ச क भ ४०७ ப,வந்தீத்யநுமம்ரும: | 
கங்கள்‌ ௪ யமுநா சைவ ப்ரீயேதே பரிமார்ஜநாத்‌ | 
ஸம்ஸ்ப்ருஷ்டயோர்‌ லோசநயோ:; ப்ரீயேதாம்‌ 
ஸிப்‌ ாஸ்கரெள | 
நாஸத்யஸம்ஜ்ஞெள ப்ரீயேதே ஸ்ப்ருஷ்டே நாஸாபுடத்‌வயே| 
கர்ணயோ: ஸ்ப்ருஷ்டயோஸ்‌ தத்‌,வத்‌ ப்ரீயேதே 
சாஈலாநிலெள ॥ 
ஸம்ஸ்ப்ருஷ்டே ஹ்ருத,யே சாஸ்ய ப்ரீயந்தே ஸர்வதே,வதா:| 
07 58 ஸம்ஸ்பர்மநாத்‌, தே,வ: ப்ரீதஸ்து புருஷோ ப,வேத்‌।| 
ய ஏவம்‌ ப்‌,ராஹ்மணோ நித்யமுபஸ்பர்மாமாசரேத்‌ | 
ப்‌,ரஹ்மாதி, ஸ்தம்பபர்யந்தம்‌. ஐக,த்‌ ஸ பரிதர்ப்பயேத்‌ |" 
[மன்று தடவை தீர்த்தத்தை உட்கொண்டானாகல்‌. அதனால்‌ 
எல்லா தேவர்களும்‌, முக்கியமாக ப்ரஹ்மவிஷ்ணுருத்ரர்‌ 
களும்‌ திருப்தியடைறொர்கள்‌ என்று மஹான்‌ களிடமீருந்து 
கேள்விப்படுகிறோம்‌. உதடுகளை த்‌ துடைப்ப தினால்‌ கங்கையும்‌, 
யமுனையும்‌ பிரீ தியடை றார்கள்‌. இரு கண்‌ ளையும்‌ ஸ்பர்சிப்ப 
தால்‌ சந்த்ரஸூர்யர்கள்‌ ஸந்தோவிக்கிறார்கள்‌. இரு மூக்குப்‌ 
பக்கங்களையும்‌ பசகெொடுவதால்‌ அம்விநீதேவதைகள்‌ 
அரந்தத்தை அடை கறார்கள்‌. இரு காதுகளையும்‌ ஸ்பர்சிப்ப 
தால்‌ அக்நியும்‌, வாயுவும்‌ திராப்தியடை கன்‌ றனர்‌. இவ 
னுடைய ஹ்ருதயம்‌ தொடப்பட்டவுடன்‌ எல்லா தேவதை 
களும்‌ ஸந்தோஷிக்கிறாோர்கள்‌. தலையில்‌ தொடுவதால்‌ பரம 
புருஜனானநா ராயணன்‌ ப்ரீதியடைகறான்‌ எந்த ப்ராஹ்மணன்‌ 
இம்மாதிரி இனந்தோறும்‌ உபஸ்பர்னத்தை அறுஷ்டிக்‌ 
கிறானோ. அவன்‌ பிரமன்‌ முதலாகப்‌ புல்‌ வரையிலுள்ள 
எல்லா உலகையும்‌ திருப்தி செய்விக்கறான்‌.] என்று 
வ்யாஸஸ்ம்ருதியில்‌ ஆசமனத்தின்‌ பெருமை பேசப்பட்டது. 


“யத்‌ ப்ரதமும்‌ ஆசாமதி தேட ருக்‌,வேதம்‌ ப்ரீணாதி 
யத்‌, த்‌,விதீயம்‌ தே யஜுர்வேத,ம்‌ ப்ரீணாதி யத்‌ த்ருதீயம்‌ 
தே कण 00695300 | யத்‌ ப்ரதஹம்‌ பரிமார்ஷ்டி தேகாதள்வ 
९०15500 யத்‌, த்‌,விதீயம்‌ தேக இதிஹாஸபுராணம்‌ | யத்‌ ஸவ்யபம்‌ 
பாணிம்‌ ப்ரோக்ஷதி பாதென மபிரோ ஹ்ருதயம்‌ ஈாஸிகே 
சக்ஷஷீ ங்ரோத்ரே நாபிம்‌ சோபஸ்ப்ருமேத்‌ தேநெளவதி, 
வநஸ்பதய: ஸர்வாங்ச தே,வதா: ப்ரீணாத்யாப்நோதி। ஆசம௩ா 
தே,வ ஸர்வஸ்மாத்‌ பாபாத்‌ ப்ரமுச்யதே ” 

[முகல்‌ தடவை ஆசமனம்‌ செய்வதினால்‌ ருக்வேதத்தை 
50118 செய்விக்கறொன்‌. இரண்டாவது அசமனத்தினால்‌ 
யஜு-ர்வேதத்தையும்‌, மூன்றாவது ஆசமனத்தினால்‌ ஸாம 
வேதத்தையும்‌ திருப்தி செய்விக்கறான்‌. முதல்‌ தடவை 
துடைப்பதினால்‌ அதர்வணவேதத்தையும்‌. இரண்டவது 
தடவை துடைப்பதால்‌ இதிஹாஸ புராணங்களையும்‌ த்ருப்தி 
செய்விக்கறான்‌. இடதுகை, இருபா தங்கள்‌, தலை. ஹ்ருதயம்‌. 
நாசிதுவாரங்கள்‌. காதுகள்‌. நாடி இவைகளை ஸ்பர்சிப்பதால்‌ 
ஓஷதிகளையும்‌. வனஸ்பதிகளையும்‌, எல்லா தேவதைகளையும்‌ 

பிரீ தியடைவிக்கிறான்‌. அவர்களை அடை றோன்‌. ஆசமனத்‌ 
தினால்‌ எல்லாப்பாபங்களினின்‌ றும்‌ வீடுபடுகிறான்‌.] என்று 
போதாயனரால்‌ சோல்லப்பட்டது. 


இனி அச்யுதன்‌, அந்தன்‌ முதலிய திருநரமங்களின்‌ 
சப்தத்தின்‌ சீர்மையும்‌. அர்த்தத்தின்‌ பெருமையும்‌ 
விவரிக்கபட்படுகன்‌ றன. 


“அச்யுதா௩ந்தகே,ா விந்த, நாமோச்சாரணபேஜாத்‌ | 
நமங்யந்தி ஸகலா ரோக;ா: ஸத்யம்‌ ஸத்யம்‌ வதராம்யஹம்‌ |!" 
[ அச்சுதன்‌. அநந்தன்‌. கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களை 
உச்சரிப்பதாகிற மருந்தினால்‌. எல்லா வியாதிகளும்‌ நாச 
மடைகின்‌ றன. உண்மை உண்மை' என்று இருகால்‌ 
ஸத்யம்‌ செய்து சொல்லுகிறேன்‌ நான்‌.] என்று அச்யுதன்‌. 
அனந்தன்‌ , கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களின்‌ டெருமை 
வீஷ்னுதர்மத்தில்‌ உத்கோவிக்கப்பட்ட த. 


“ஆர்த்தா விஷண்ணா: மரிதி,லாங்ச பீ,தா: 
கேோோரேஷு ச வ்யாதிஜஷு வர்த்தமாரா: | 
ஸங்ர்த்ய காராயணமாப்‌,த,மாத்ரம்‌ 
விமுக்தது,:க்க,ா: ஸுகி,நேோர பவந்தி |" 
[ஆத்யாத்மிகம்‌, ஆதிபென திகம்‌, ஆதிதை,விகம்‌ என்னும்‌ 
தாபங்களினால்‌ தபிக்குமவர்களும்‌. பயந்தவர்களும்‌. கோர 
மான வியாதிகளினால்‌ துன்பமடைபவர்களும்‌ நாராயணன்‌ 
என்னும்‌ சப்தத்தை மட்டும்‌ சீர்த்தனம்‌ செய்வதாலேயே 
எல்லா துக்கங்களும்‌ நீங்கப்பெற்று, மோக்ஷ ஸுகத்தையும்‌ 
அடை சறார்கள்‌.] என்று பாரதத்தில்‌ பேசப்பட்டது. 


“நாராயணேதி மாப்‌,தே5ஸ்தி வாகஸ்தி வமவர்த்திநீ | 
ததராபி நரகே கேரரே பதந்தீதி கிமத்பு,தம்‌ ॥'' 

[ஈாராயணன்‌ என்னும்‌ சப்தமிருக்கறெது; வாயும்‌ வசத்தி 

லிருக்கிறது. அப்படியும்‌ கோரமான நரகத்தில்‌ பலர்‌ 
விழுகின்றனர்‌ என்பது என்ன ஒச்சரியம்‌!] என்று புராணங்‌ 
களில்‌ பேசப்பட்ட து. பொய்கையாழ்வாரும்‌ இதையே = ` 

“நரவாயிலுண்டே நமோ நாரணாவென்று 
ஓவா துரைக்கும்‌ உரையுண்டே-— மூவாத 
மாக்கதிக்கண்‌, செல்லும்‌ வகையுண்டே என்னொருவர்‌ 
தீக்கதிக்கண்‌ செல்லும்திறம்‌.”' —என்று அருளிச்செய்தார்‌. 


*“அவமேநாபி யந்நாம்ஙி கீர்த்திதே ஸர்வபாதகை: | 
புமாந்‌ விமுச்யதே ஸத்‌,ய: ஸிம்ஹத்ரஸ்தைர்‌ ம்ருகை,ரிவ |) 
யந்காம கீர்த்தநம்‌ ப,க்த்யா விலாயநமநுத்தமம்‌ | 
மைத்ரேயாபமோஷபாபாநாம்‌ த, தூ௩காமிவ பாவக: |" 
(०, பு. (6-8)] 
[அந்த பகவானுடைய திருநாமம்‌ யத்ருச்சையாகல்‌ கீர்த்‌ 
திக்கப்பட்டபோதிலும்‌. ஒரு மனிதனுடைய பாடங்கள்‌ 
ஸிம்ஹத்தினால்‌ பயமுறுத்தப்பட்ட ம்ருகங்கள்‌ விலகப்‌ 
போவதபோல்‌, விட்டோடிப்போ கன்‌ றன. மைத்ரேயரே! 
ஸுவர்ணம்‌ முதலிய தாதுக்களுடைய அழுக்கை நெருப்பு 
போக்குவதுபோல்‌, பக்திய்டன்‌ அப்பெருமானுடைய இரு 
நாமஸங்கீர்த்தனம்‌ செய்தல்‌ எல்லாப்பரடங்களையும்‌ 
போக்கடிக்கும்‌ ஒப்பற்ற ஸாதனமாகும்‌.] என்றும்‌. 


“த்‌ யாயாந்‌ க்ருதே யஜந்‌ யஜ்லஞை: த்ரேதாயாம்‌ 
த்‌,வாபரே 5ாச்சயக்‌ | 
५159 कष्ण ढी தத;,ாப்கோதி கலெள ஸங்கீர்த்ய கேமரவம்‌ ॥ 
[வி. பு. (6-2-17)] 
[-கவானை தியானிப்பதால்‌ கருதயுகத்திலும்‌, யஜ்ஞங்களைக்‌ 
காண்டு ஆராதிப்பதால்‌ த்ரேதாயுகத்திலும்‌. அர்ச்சனை 
செய்வதால்‌ த்வாபரயுகத்திலும்‌ எதை அடைகறானே அதைக்‌ 
கலியுகத்தில்‌ கேசவனை ஸங்கீர்த்தனம்‌ செய்வதாலேயே 
அடையலாம்‌.] என்றும்‌ 


“திம்‌. சித்ரம்‌ தத,க,ம்‌ ப்ரயாதி விலயம்‌ 
தத்ராச்யுதே ர்த்திதே'' 
[அச்யுகனுடைய ்‌ நாமம்‌ கீர்த்திக்கப்பட்டவுடன்‌ அவ்‌ 
விடத்திலேயே பாபங்கள்‌ நூசமடைகின்‌ றன என்னுமிவ்‌ 
விஷயத்தில்‌ ஆச்சரியம்‌ என்ன? ] என்றும்‌ வீஷ்ணுபுராணத்‌ 
தில்‌ உரைக்கப்பட்டது 


“அஜ்ஞாகதோ ஜ்ஞா௩தோ வா வாஸுதே,வஸ்ய கீர்த்தநாத்‌ | 

தத்ஸர்வம்‌ விலயம்‌ யாதி தோயஸ்த,ம்‌ லவணம்‌ யத |” 
[அறிந்தோ, அறியாமலோ வாஸுதேவனுடைய இரு 
நரமத்கைச்‌ சொன்னானாகில்‌ அவனுடைய பாபமெல்லாம்‌ 
'தண்ணீரினுள்ளிருக்கும்‌ உப்பைப்போல்‌ கரைந்து வீடு 
தன்றன.] என்றும்‌, 


“முமாயாலம்‌ ஜலம்‌ வந்ஹேஸ்‌ தமஸோ பாஸ்கரோதவ: | 

` ஸாந்தி: கலேரகெ,ளக,ஸ்ய நாமஸங்கீர்த்தகம்‌ ஹரே: ॥” 

[ செருப்பை அணைப்பதற்கு நீரும்‌. இருட்டைப்‌ போக்கடிக்க 
ஸூர்யோதய்மும்‌ பேரதுமானவை. (௮து போலவே ) 
கலிகோலாஹலத்தினாலண்டாகும்‌ ८4 ¶ (+न @ ना ना @ @ 5८ 
போக்கடிப்பது ஹரியின்‌ நாமஸங்கீர்த்தனமே,] என்றும்‌. 
"५1 710 ஸங்கீர்த்தநதோ விமுச்யதே'' [எவனுடைய இரு 

நாமஸங்கீர்‌ ததனத்தினால்‌ மோக்ஷ்மடை கிறு ] என்றும்‌. 
'யந்நாமஸங்கீர்த்தகதோ மஹாபயாத்‌,; விமோக்ஷமாப்நோதி 
ந ஸம்மாயம்‌ நர: ' [எவனுடைய திருநாமஸங்கீர்த்தன த்தால்‌ 
மனிதன்‌ யேறாபத்தினின்‌ றும்‌ ஸந்தேஹயில்லாமல்‌ வீடுதலை 
யடைகிறானலே........] என்‌ மறும்‌, 


“ஹக்ருது,ச்சரிதம்‌ யே ஹரிரித்யக்ரத்‌,வயம்‌ | 

பத்த, பரிகரஸ்தேர மோச௯்தாய கமம்‌ ப்ரதி” 

[ ஹரி என்னுமிவ்விரண்பெழுத்‌தும்‌ எவனால்‌ ஒருதடவை 
உச்சரிக்கப்பட்டதோ. அவன்‌ மோசத்துக்குப்‌ போவதற்‌ 
காகச்‌ செய்யவேண்டியவைகளைச்‌ செய்துவிட்டான்‌ ]என்றும்‌, 


“யஸ்ய ஈாம்நி ஸ்ம்ருதே மர்த்யஸ்‌ ஸமுத்க்ராங்தேர௩ந்தரம்‌ ! 
ப்ராப்நோதி வைஷ்ணவம்‌ ஸ்த;ா௩ம்‌ புநராவ்ருத்திவர்ஜிதம்‌ |!” 
[எவனுடைய இருநாமத்தை நினைத்த மனிதன்‌ இறந்த 
பின்பு: திரும்பிவருகையற்றதான விஷ்ணுவினுடைய பரம 
டத த்தை அடை றொலே........ ] என்றும்‌ விஷ்ணுதர்மத்தில்‌ 
பலவிடங்களில்‌ பேசப்பட்டதன்றோ. மற்றோரிடத்தில்‌ 


“ஹீர்வாந்‌ காமாந்‌ ப்ராப்நுவந்தே வியாலாந் 
த்ரைலோக்யே$ஸ்மிந்‌ க்ருஷ்ண நாமாபி,த,ாநாத்‌ '' 

[ இம்மூவுலகிலுமுள்ள மிகப்பெரிய இஷ்டவஸ்‌ தக்களெல்லா 

வற்றையும்‌ கிருஷ்ணனென்னும்‌ திருநாமத்தைச்‌ சொல்லு 

வதன்‌ மூலமாகவே அடைகீறோர்கள்‌] என்று கோவிக்கப்‌ 
பட்டது. வேறோரிடத்தில்‌ 

“ஹங்கீர்த்தயேஜ்ஜக,ந்காதம்‌ வேதம்‌ வா5பி ஸமீரயேத்‌'' 

[ ஜகந்கா தனான பெருமானை ஸங்சீர்த்தனம்‌  செய்ய்க்கடவன்‌; 
அல்லது வேதத்தையாவது ஒதக்கடவன்‌ . ] என்று நாராயண 
நாம ஸங்கீர்த்தனம்‌ வேதாத்யனத்தைக்காட்டிலும்‌ மேன 
சென்று உணர்த்தப்பட்டது, இவையெல்லாவற்றிற்கும்‌ 
மூலமான வேதத்திலும்‌ - த்ருவாஸோ அஸ்ய கீரயோ 
ஜ௩ாஸ: '' [இவனைக்‌ ூர்த்திக்கும்‌ ஜனங்கள்‌ நிலையான 
மோக்ஷஸ்தரனத்தை அடைகிறோர்கள்‌.] என்‌ று உத்கோ விக்‌ 
கப்பட்டது. 

“கெடுமிடராயவெல்லாம்‌ கேசவாவென்ன நாளும்‌ 
கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌ 
என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌. 


“கரவலிற்‌ புலனை வைத்துக்‌ கலிதன்னைக்‌ கடக்குப்பாய்ந்து 
நாவலிட்டுழிதருகின்றோம்‌ ஈமன்தமர்‌ தலைகள்‌ மீதே 
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்‌ நாமங்கற்ற 
ஆவலிப்புடைமை கண்டாய அரங்கமா நகருளானே! ५ | 
என்றும்‌,


“பச்சைமாமலைபோல்‌ மேனிப்பவளவாய்க்‌ கமலச்செங்கண்‌ 
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்‌ கொழுந்தே! என்னும்‌ 
இச்சுவை தவிர மான்‌ போய்‌ இந்திரலோகமாளும்‌ 
அச்சுவை பெறினும்‌, வேண்டேன்‌ அரங்கமா௩கருளானே!'' 
_என்றும்‌, 


“மொய்த்த வல்‌ வினையுள்‌ நின்று மூன்றெழுதீதுடைய பேரால்‌ 
கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான்‌ "என்றும்‌, 


“நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள்‌ கேட்க 
ஈரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய ஈம்பி'” 

என்றும்‌ தொண்டரடிப்பொடியாழ்வார்‌ தஇருநாமஸங்கீர்த்‌ 
தனப்ரபவத்தைப்‌ பலகால்‌ அருளிச்செய்தருளினார்‌. 
திருமங்கையாழ்வாரும்‌ முதல்‌ திருமொழியில்‌ நரராயண 
கநாமப்ரபாவத்தைப்‌ பலபடியாகப்‌ பேசியருளிஞார்‌. 


`" இத்திருநாமந்தான்‌ ப்ரயோஜநாந்தரபரர்க்கு ப்ர 
யோஜனத்தைக்‌ கொடுக்கும்‌; உபாயார்தரநிஷ்டரர்க்குப்‌ 
பாவநமாயிருக்கும்‌; ப்ரபந்ஈர்க்கு கேஹயாத்ராமேஷேமா 
யிருக்கும்‌; முத்துப்படும்‌ துறையில்‌ முழுகுவார்‌ முத்தைக்‌ 
கொடுத்துப்‌ பழங்கொள்ளுவர்கள்‌; செழுமுத்து வெண்ணெற் 
கெனச்‌ சென்று' மாறுவர்களிறே. விலையறியும்‌ செட்டிகள்‌ 
பக்கல்‌ புகுர்கவாறே பெருவிலையனாம்‌. செருக்கரானார்‌ 
இத்தைப்பூண்டு அதுபவிப்பார்கள்‌; அப்படியே ப்ர 
யோஜநார்‌தரபரர்க்கும்‌ உறுட்பாய்‌, ஸாத,நாந்தரநிஷடரர்க்‌ 
கும்‌ உறுப்பாய்‌,ப்ரடர்நர்க்கு ஸ்வயம்ப்ரயோஜாமுமாயாய்த்து 
இத்திருநாமமிருப்பது '" என்றும்‌. “ இப்படிச்‌ சேதனன்‌ 
தான்‌ மூலையடியே திரிந்தாலும்‌, அவ்ன்‌ தோஸங்களைப்‌ 
போக்கி, மேல்‌ செல்லுகிற நன்மைகளைக்‌ கொடுக்கும்படி 
யாய்த்‌து திருநாமத்தினுடைய ப்ரபாவமிருப்பத'' என்றும்‌, 
“ பக்தியினுடைய துஷ்கரகையோபர்‌ தி ப்ரபத்திநிஷ்டா 
ஹேதுவான மஹாவீங்வாஸமும்‌ சிலர்க்குக்‌ கட்டுகை 
ஸந்‌-8 
அரிதாகையாலே இதில்‌ இழியக்‌ கூசினவர்களுக்கு ஸர்வா £, 
கரரமான யாத்;ருச்சி,க பகவந்நாம ஸங்கீர்த்தனமே சேத 
ருடைய பாபத்தைப்‌ போக்கி ஸாக்ருதரீனுகூலமாகக்‌ கர்ம 
யோகாதிகளிலே கூட்டுதல்‌. ப்ரபச்தியிலே மூட்டுதல்‌, 
விரோதியைப்‌ போக்கி ப்ராப்யத்தைக்‌ கொடுக்கைக்குத்‌ 
தானே நிர்வாஹகமாதலாம்படியான வைபவத்தை உடைத்‌ 
தாயாய்த்து இருநாமத்தினுடைய வைபவயிருப்பது'' என்‌ 
மம்‌ பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச்‌ 
செய்தார்‌. இவையெல்லாவற்றையும்‌ வேதாந்தாசார்யரர்ன 
பட்டரும்‌ ஸ்ரீஸ்ஹஸ்ரநாமபாஷ்யத்திலே பரபக்ஷ ர திக்ேப 
பூர்வகமாகப்‌ பரக்க அருளிச்செய்தார்‌. அபியுக்தாக்‌்ரே 
ஸரரான பிள்ளைலோகாசார்யரும்‌, “ வாச்யப்ரபாவம்‌ 
போலன்று வாசகப்ரபளவம்‌. அவன்‌ தூரஸ்த்தனானாலும்‌ 
இது கிட்டி நின்று உதவும்‌. த்‌,ரெளபதிக்கு ஆபத்திலே 
புடவை சுரந்தது திருநாமமிறே. சொல்லும்‌ க்ரமமொழியச்‌ 
சொன்னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெடநில்லாது. இதுதான்‌ 
“குலந்தரும்‌' என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்‌ 
கொடுக்கும்‌. ஐம்வர்யகைவல்யப வல்லா ங்களை ஆசைப்‌ 
பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌. கர்மஜ்ஞாடபக்தி 
களிலே  இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி, 
அவற்றைத்‌ தலைக்கட்டிக்‌ கொடுக்கும்‌. ப்ரபத்தியிலே இழிந்‌ 
தவர்களுக்கு ஸ்வரூடஜ்ஞாகத்தைப்‌ பிறப்பிச்துக்‌ கால 
கேபத்துக்கும்‌ போக்த்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌'' என்று 
முமுக்ஷாப்படியில்‌ அருளிச்செய்தார்‌. இனி. அமுதிலும்‌ 
இனியவையான அச்யுதாதி நாமங்களின்‌ அரும்பொருள்கள்‌ 
அறிவிக்கப்படுகின்‌ றன. 


(அச்யுதன்‌) ** யஸ்மாத்‌ ப்ராப்தா ந ச்யவந்தே '' என்கிற 
படியே அடியவர்களை நழுவவிடா தவன்‌; எல்லாரையும்‌ எல்லா 
அவஸ்தைகளிலும்‌ ரக்ஷிக்குமவன்‌ ° 


“யஸ்மாந்க ச்யுதபூர்வோ5ஹமச்யுதஸ்தேந கர்மணா'' 

( அடியவர்களிட மிருந்து ஈழுவா மலீருக்கறேனாகையால்‌ நரன்‌ 
அச்சுத னெனப்படுகிறேன்‌ .] என்று சாஸ்திரம்‌ சொல்லிற்று. 
( அச்யுதன்‌ ) ப்ரீளயகரலத்தில்‌ இவர்கள்‌ படும்‌ நோவு 
பொறுக்கமாட்டாமல்‌. தன்‌ வயிற்றிலேவைத்து ரக்ஷிக்கு 
மவன்‌; ஸ்ருஷ்டி காலத்தில்‌ அசித்ஸமராய்க்‌ கிடக்குமிவர்‌ 
களைக்‌ கண்டு இரங்கிக்‌ கரணகளேபரங்கலைக்‌ (சரீரேர்திரி 
யங்களைக்‌) கொடுக்குமவன்‌.  “ஆதுமில்‌ காலத்தெந்தை 
அச்சுதன்‌ '' என்று இவ்வர்த்தத்தை ஆழ்வார்‌ அருளிச்‌ 
செய்தார்‌. (அச்யுதன்‌ ) தமர்கள்‌ நெருப்பிலே விழுந்தாலும்‌. 
அவர்களைத்‌ தீங்கு வாராதபடி காப்பா ற்றுமவன்‌. “அறியும்‌ 
செந்தியைத்‌ தழுவி அச்சுதன்‌ என்னும்‌ மெய்‌ வேவாள்‌'' 
என்றார்‌ ஆழ்வார்‌. (அச்யுதன்‌) தன்னடியார்களை நமன்‌ தமர்‌ 
கையிலே காட்டிக்‌ கொடாமல்‌ கரப்பாற்றுமவன்‌; 

“அயர வாங்கும்‌ நமன்‌ தமர்க்கு அருநஞ்சினை அச்சுதன்‌ தன்னை '' 
என்றார்‌ ஆழ்வார்‌. ( அச்யுதன்‌ ) சேதனர்களைத்‌ தங்கள்‌ 
கையில்‌ காட்டிக்கொடாமல்‌ ரக்ிப்பதற்காக அவர்‌ 
களோ டொருவனாகத்‌ தோன்‌ றுமவன்‌. “தேவகி தன்‌ வயிற்றில்‌ 
அத்தத்தின்‌ பத்தாம்‌ நாள்‌ தோன்றிய அச்சுதன்‌'' என்று 
பெரியாழ்வாரும்‌, 

“'அச்யுதப,£நுநா தே,வகீபூர்வஸர்த்‌,யாயாமாவிர்ப்பூ தம்‌ 
[அச்சுதனாகிற ஸூர்யன்‌ தேவகியாகிற ப்ராத:ஸந்த்‌,யா 
காலத்தில்‌ தோன்றினான்‌. ] “ என்று ८4 7५० (6227 @$ ५१८8 
அருளிச்செய்தனர்‌. ( அச்யுதன்‌ ) தன்னிடம்‌ அன்புள்ள 
வரைக்‌ கைநழுவவிடா தவன்‌. “'அரிமுகன்‌ அச்சுதன்‌ கைமேல்‌ 
என்‌ கைவைத்து” என்று ஆண்டாள்‌ அருளிச்செய்தாள்‌. 
( ௮ச்யுதன்‌ ) 

“மரங்க,சக்ரக,தாபாணே! த்‌,வாரகாநிலயாச்யுத!'” 
[சங்கசக்ர கதைகளைக்‌ கையில்‌ கொண்டவனே! த்வாரகா 
வாஸியே! அடியாரை ந முவவீடாத அச்சுதனே!] 
என்றழைத்த த்ரெளபதிக்குத்துகிலளித்த தும்‌ இக்திரு 
நரமமேயன்றோ. (அச்யுதன்‌) 

“மித்ரபாவேந ஸம்ப்ராப்தம்‌ ௩ த்யஜேயம்‌ கத;ஞ்சந'' 
[ஈண்டனென்‌ ற வேஷத்துடன்‌ என்னை ,அடைந்தவனையும்‌ 
நான்‌ ஒருபோதும்‌ விடமாட்டேன்‌.] என்றும்‌, 

“ஆநயைநம்‌ ஹரிங்ரேஷ்ட, த,த்தமஸ்யாப,யம்‌ மயா | 
விபீ,ஷணோ வட ஸாக்ஸரீவ யதி, வா ராவண: ஸ்வயம்‌ |'' 

[ வாஈரத்தலைவனான ஸாக்ரீவனே! இவன்‌ வீபீஷணனாயிருந்‌ 
தாலும்‌, ராவணன்‌ தானேயாயிருந்தாலும்‌ இவனுக்கு நான்‌ 
அபயமளித்துவீட்டேன்‌. நீ இவனை அழைத்துவா | என்றும்‌, 


“ஸக்ருதே,வ ப்ரபந்காய தவாஸ்மீதி ௪ யாசதே | 
அபயம்‌ ஸர்வபூ,தேப்‌யோ த,தரம்யேதத்‌, வ்ரதம்‌ மம।॥'' 


[ஓரு கடவை சரணமடைந்தவனுக்கும்‌ 'உன்னடியேன்‌ நான்‌' 
என்று யாசிப்பவனுக்கும்‌ எல்லா பூதங்களினின்‌ றும்‌ அபய 
மளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய விரதம்‌.] என்றும்‌ 
அடைந்தவர்களை அளிப்பதையே விரதமாகக்கொண்ட 
சக்கரவர்த்தித்திருமகனாய்‌ அவதரித்தவன்‌,  '' அச்சுதன்‌ 
தன்னைத்‌ தயரதற்கு மகன்‌ தன்னையன்றி மற்றிலேன்‌ கஞ்ச 
மாகவே '' என்‌ று சடகோபன்‌ அருளினாரல்லவா. (அச்யுதன ) 
१9 ८1.3८ 147 நுநா அவீர்ப்பூதம்‌'' "தேவகி தன்‌ வயிற்றில்‌ 
தோன்‌ றிய அச்சுதன்‌” என்‌ கிறபடியே சேதனர்களை நழுவ 
விடவொண்ணாமையாலே கருஷ்ணனாய்‌ அவதரித்து, 


“ஸர்வதன்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ மரணம்‌ வ்ரஜ । 
அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி மாமருச:।?' 


[எல்லா மோக்ஷஸாதனங்களையும்‌ வாஸனையுடன்‌ விட்டு 
என்னையே சரணமடை. நான்‌ உன்னை எல்லாப்‌ பாடங்‌ 
களினின் றும்‌ விடுவிக்கறேன்‌; வருந்தாகதே.] என்று 
அருளிச்செய்தவன்‌. (அச்யுதன்‌ ) ஸ்வாங்ரிதர்களை அஜ்ஞாஈ 
அந்யதராஜ்ஞா௩ வீபரித ஜ்ஞாரங்களின்‌ கையில்‌ காட்டிக்‌ 
கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌. 
“நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌,த,ா த்வத்ப்ரஸாதராந்‌ 

மயா ९5 |@ ° 
[ அச்சுதனே! (வீபரிதஜ்ஞானமா யெ) மோஹம்‌ நசித்தது; 
உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்பட்ட து] 
என்பதல்லவோ அர்ஜுனன்‌ வார்த்தை. (அச்யுதன்‌) இவ்‌ 
வுலகிலிரு்து மோக்ஷ்மடைகந்கத முக்தரையும்‌. நித்யஸு௫ூரி 
களையும்‌ -'புணேக்கொடுக்கிலும்‌ போகவொட்டார்‌?' என்கிற 
படியே அங்கிருந்து நழுவவிடா தவன்‌. =“ ௮ச்சுதனை........ 
அந்தன்‌ தன்மேல்‌ நண்ணிநன்குறைகன்றானை '' என்று 
நம்மாழ்வாரும்‌, “அச்சம்‌ நோயோடல்லல்‌ பல்‌ பிறப்பவாய 
மூப்பிவை வைத்த சிந்தை வைத்தவாக்கைமாற்றி வானி 
லேற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்தகீர்த்தி ஆதியந்தமில்லவன்‌ 
நச்சராவணைக்‌ கிடர்த நாதன்‌'' என்று திருமழிசையாழ்வா 
ரும்‌ ““ அச்சுகா அமரரேறே ' ' என்று தொண்டரடிப்பொடி 
களும்‌ இவ்வர்‌ த்தத்தை அறுஸந்தித்‌ கருளினார்கள்‌. (அச்யுதன்‌) 
இத்தால்‌ அடைந்தவர்களுக்கு அல்லல்‌ வந்தபோது அவர்‌ 
களை விட்டகலும்‌ ருத்ராதிகளைக்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி 
( வேறுபாடு ) சொல்லப்படுகிறது. இகனாலேயேயன்றோே 
“ிவம்‌ '' என்று சொன்ன நாராயணானுவாகமும்‌. இது 
ருத்ரனைக்‌ குறிக்கும்‌ பதமல்ல என்று தெளிவிப்பதற்காக 
“அச்யுதம்‌ என்று படித்தது. 


“பரிவின்றி வாணனைக்‌ காத்துமென்றன்று படையொடும்‌ 


வந்தெதிர்ந்த திரிபுரம்‌ செற்றவனும்‌ மகனும்‌ பின்னும்‌ அங்கியும்‌ 

போர்தொலைய பொருசிறைப்‌ புள்ளைக்கடாவிய மாயனை ஆயனைப்‌ 

பொற்சக்கரத்‌ தரியினை அச்சுதனைப்‌ பற்றி யான்‌ இறையேனும்‌ இடரிலனே,”' 
என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ இவ்விஷயத்தை 
உணர்த்தினார்‌. (அச்யுதன்‌ ) அடியவர்களை ஈழுவவிடாத 
வன்‌” என்னுமிந்த மஹாகுணத்தைத்‌ தெரிவிக்கும்‌ திருநாம 
மாகையாலே, இதை வேதமும்‌. வைதிகர்கனும்‌, டக்தர்களும்‌ 
மிகவும்‌ ஆதரிப்பர்கள்‌. ஆழ்வார்கள்‌ இத்திருநாமத்தை 
அதரித்த ப்ரகாரத்தை மேலே விவரித்zதோம்‌. 


“யந்நாயம்‌ ப,க,வாம்‌ ப்ரஹ்மா ஜாநாதி பரமம்‌ (550 | 
தந்ததா: ஸ்ம १ 53598470 தவ ஸர்வகதாச்யுத ॥" 
[௮ச்சுகனே! ஸர்வவ்யாபியே! மேலான ப்ராப்யமான எதை 
பகவானான பிரமனும்‌ அறியானோ. உலகிற்கெல்லாம்‌ இருப்‌ 
பிீடமானஅந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌. ] 
என்று ப்ரயோஜனாந்தரபரரான தேவர்களும்‌, 


“ ஸர்வேம௦ ஸர்வபூ,தாத்மந்‌ ஸர்வ ஸர்வாய்ரயாச்யுத ”' 
என்று அவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌, 


“அவலோகநததாநேக பூ,யோ மாம்‌ பாலயாச்யுத'' என்று 
அநந்யப்ரயோ ஜனனான ப்ரஹ்லாதாழ்வானும்‌. `" த்வாரகா 
நிலயாச்யுத” என்‌ று க்ருஷ்ணையும்‌. -த்வத்ப்ரஸாத,ந்மயாச்‌ 
யுத” என்று நஈரனாகிய அர்ஜுனனும்‌. 


“்‌ ஹதவீர்யோ ஹதவிஷோ छ 56657 5ஹம்‌ த்வயாச்யுத "" 
என்று காளியனும்‌ இத்திருநராமத்தை அறநுஸந்தித்தார்‌ 
களன்‌ றே. 


இதுவரையில்‌ அச்யுகசப்தத்துக்கு அடியவர்களை நழுவ 
விடாதவன்‌' என்னும்‌ பொருள்‌ வீவரிக்கப்பட்டது. இணி 
நழுவாத ஸ்வரூடரூபகுணவிபூதிகளையுடையவன்‌ என்னும்‌ 
அர்த்தம்‌ விளக்கப்படுகிறது, (அச்யுதன்‌) "ए ச்யவதே இத்‌ 
யச்யுத:' என்றெபடியே, ப்ரஹ்மருத்ரா திகளைப்‌ போலின்‌ 
றியே ஒருபடியாலும்‌ அழிவில்லா தவனாயிருப்பவன்‌ . 

“ச்யவநோத்பத்தியுக்தேஷு ப்‌,ரஹ்மேந்த்‌,ரவருணாதி,ஷ | 
யஸ்மாந்ந ச்யவஸே ஸ்தரநாத்‌ தஸ்மாத்‌ 
ஸங்£ர்த்யஸே 5ச்யுத; ॥” 
[ஈழுவுதலென்னும்‌ மரணம்‌, பிறப்பு ஆகிய இவற்றுடன்‌ 
கூடிய பிரமன்‌ . இந்திரன்‌, வருணன்‌ முதலிய தேவர்களுள்‌, 
தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நழுவாதவனாகையால்‌ நீ 
அச்யுதனெனப்படுகிறாய்‌.] என்று மாஸ்த்ரம்‌ சொல்லிற்று. 
“ஜாயதே$ஸ்தி வர்த்‌,த,தே பரிணமதே அபக்ஷீயதே விநங்யதி 
இதி ஷட்‌,ப,வவிகாரரஹிதத்வாத,ச்யுத: ''  [பிறக்கிறான்‌. 
உயிர்வாழ்கறோன்‌, வளருகிறான்‌. பரிணாமமடைகறோன்‌, 
குறைவடைகிறான்‌ , நாசமடைகறோன்‌ என்னும்‌ ஆறு விீகாரங்‌ 
களுமற்ரவனாகையாலே அச்யுதனெனப்படுகிறான்‌,] என்று 
சங்கரர்‌ பாஷ்யம்‌ செய்தபடியே இங்கு விநாசத்தைச்‌ 
சொன்னது ஷட்‌பவவிகாரங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌. ஆம்‌ 
வார்களும்‌ இவ்வர்த்தத்தைப்‌ பலவிடங்களில்‌ அ.,நுஸந்தித்‌ 
தருளினார்கள்‌. “பச்சை மாமலைபோல்‌ மேனி பவளவாய்‌ 
கமலச்செங்கண்‌ அச்சுதா'' என்று தொண்டரடிட்பொடியாழ்‌ 
வார்‌ அழியாத திவ்யமங்கள விக்ரஹத்தை உடையவனென்‌ 
பதை உணர்த்தினார்‌. "` அச்சுதன்‌ அரந்தரீர்த்தி'' என்று 
திருமழிசையாழ்வாரும்‌. “ ஆர்ந்த புகழச்சுதன்‌ ” என்று 
நம்மாழ்வாரும்‌ அழியாத புகழுடையவன்‌ என்று அச்யுத 
சப்தத்துக்கு வியாக்கயானம் செய்தார்கள்‌. மாங்க,சக்ரக,த,ா 
பாணே த்்‌,வாரகாநிலயாச்யுத” என்ற துரெளடதியும்‌ 
ஸர்வேங்வரன்‌ நித்யவிபூ,தியோடும்‌ லீலாவீபூ,தியோடும்‌ 
எழுந்தருளியிருக்கும்‌ இருப்புக்கு என்‌ றும்‌ அழிவில்லை என்று 
உணர்த்தினாள்‌. (௮ச்யுதன்‌ ) ஸகலசேதநாசேதனங்களையும்‌ 
வீடாமல்‌ வியாபித்தும்‌ தரித்தும்‌ நிற்பவன்‌ என்றும்‌ 
பொருள்கொள்ளலாம்‌. இத்தால்‌ ஸர்வவ்யாபகத்வமும்‌, 
ஸர்வதராரகத்வமும்‌ சொலள்லப்பட்டதாகிறது. ' அடியவர்‌ 
களை நழுவவிடா தவன்‌ ” என்னும்‌ பொருளைத்‌: தெரிவிக்கை 
யாலும்‌, மற்றும்‌ பலஅரும்பொருள்களையும்‌ உடைத்தாயிருக்‌ 
கையாலும்‌, வேதத்தாலும்‌, இதிஹாஸபுராணாதிகளா லும்‌, 
ஆம்வார்களாலும்‌ மிகவும்‌ ஆதரிக்கப்படுகையா லும்‌ இக்திரு 
நாமம்‌ ஆசமனத்தின்‌ ஆரம்பத்தில்‌ அநுஸந்திக்கப்படுகறது. 

நிற்க; ஆழ்வார்களுடைய ஸ்ரீஸம௰க்திகளுக்குப்‌ பெரிய 
வாச்சான்பிள்ளை முதலிய மஹாசார்யர்களால்‌ விவரிக்கப்‌ 
படாத சில அர்த்தங்கள்‌ இங்கு கொள்ளப்பட்டிருக்கன்‌ 
மனவே; அவை எப்படிப்‌ பொருந்தும்‌ ஏன்று சிலர்‌ சங்கிக்கக்‌ 
கூடும்‌. அவர்களுக்குச்‌ சொல்லுகிறோம்‌: ஆழ்வார்களின்‌ 
ஆழ்கடல்டோன்‌ ற அருளிச்செயல்களின்‌ பரவங்களாகிய 
ரத்னங்களையெல்லாம்‌ 530 0 5990 கமாக்குவது முடியா தகாரிய 
மாகையாலே, நம்மாசார்யர்கள்‌ அவைகளின்‌ ஸாரமான 
பொருளை ஏடுபடுத்தியருளினார்கள்‌. ஆகையால்‌ அவ்வாழ்வா 
ராசாரியர்களுடைய ஸ்ரீஸடூக்திசளுக்கு அவிருத்தமாயும்‌, 
ப்ரகரணந்திற்குப்‌ பொருந்தியவையாயுமுள்ள பொருள்களை 
யும்‌ கொள்வதில்‌ தவறில்லை. ஆழ்வார்களின்‌ அமுதினுமினிய 
அருளிச்செயல்களின்‌ ஆழ்பொருன்களையெல்லாம்‌ ஆரே அள விட்டு அறியவல்லார்‌? 

இனி அந்தன்‌” என்னும்‌ நாமத்தின்‌ அரும்பொருள்‌ 
அறிவிக்கப்படுகிறது. இத்திருநாமமும்‌ அச்யுதநாமத்தைப்‌ 
போல்‌ அருமறையால்‌ ஆதரிக்கப்பட்டது. அச்சுதன்‌ 
அரநந்தகீர்த்தி” என்று அச்யுகநாமத்திற்கு அர்த்தமருளிய 
இருமழிசையாமழ்வார்‌ * ஆதியந்தமில்லவன்‌ ” என்று அநந்த 
நாமத்தை அடுதீதபடியாக விவரித்தருளினார்‌. ஈம்மாழ்வரும்‌ 
“அண்ணலை அச்சுதனை அநந்தனை" என்று இத்திருநாமங்‌ 
கனைச்‌ சேர்த்துப்‌ படித்தார்‌. 'அச்யுதன்‌” என்னும்‌ திருநாமம்‌ 
" அடியவர்களை ஈழுவவிடாதவன்‌ ' என்று உரைக்கிறது, 
தமர்களைக்‌ கைவீடாமைக்காக அநேக அவதாரங்களை எடுத்‌ 
அம்‌, அளவற்ற குணங்களை வெளிப்படுத்தியும்‌ எல்லாவற்றை 
யும்‌ வியாபித்‌தும்‌ விளங்குமவன்‌ என்பதை அநந்தநாமம்‌ 
அறிவிக்கின்‌ றது. 

“கந்தள்வாப்ஸரஸஸ்‌ ஸித்‌,த,ா: கிங்கரோரக,சாரணா: | 
நரந்தம்‌ குணாநாம்‌ க,ச்ச;ந்தி தோநந்தோ 5யமவ்யய: |!” 
(2-6-24) 

[கந்தர்வர்கள்‌, அப்ஸரஸ்ஸாுகள்‌, ஸித்தர்கள்‌. கின்னரர்கள்‌, 
நாகர்கள்‌, சாரணர்கள்‌ ஆக எல்லாரும்‌ இவனுடைய 
குணங்களை முடிவு காண்பதில்லை. ஆகையால்‌ இவன்‌ 
அநந்தனெனப்படுகிழான்‌.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்தில்‌ 
அநந்த பப்,தரர்த்தழம்‌ சொல்லப்பட்டது. இத்தால்‌ குணங்‌ 
களாலும்‌. சரீரங்களா லும்‌, ஐங்வர்யத்தா லும்‌ ஊளவற்றவன்‌ 
அந்தன்‌ எனப்பட்டதாறெது. 


“கமோ$ஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே 
ஸஹஸ்ரபாத;ாக்ஷி மிரோருப,ாஹவே | 

ஸஹஸ்ரநாம்கே புருஷாய மராங்வதே 
ஸஹஸ்ர கோமீயுக,த,ாரிணே ௩ம: |!" 


[கணக்கற்ற சரீரங்களை உடையவனும்‌. அளவற்ற பாதங்‌ 
களையும்‌. கண்களையும்‌. தலைகளையும்‌. தொடைகளையும்‌.கைகளை 
யும்‌ உடையவனும்‌, கணக்கற்றதிருநா மங்களை உடையவனும்‌ 
நித்ய புருஷனும்‌. அளவுகடந்த யுகங்களை தரிப்பவனுமான 
அரந்தனுக்கு நமஸ்காரம்‌. ] என்று பிரமனால்‌ அநந்தனென்‌ 
னும்‌ திருநாமத்தின்‌ அர்த்கம்‌ அதுஸந்திக்கப்பட்ட து, 
( அநந்தன்‌ ) காலத்தாலும்‌. தேசத்தாலும்‌, வஸ்துவாலும்‌ 
அளவுபட்டிறராத ஸ்வரூபத்தை உடையவன்‌. ஸத்யம்‌ 
ஜ்ஞா௩ம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம "` [ப்ரஹ்மம்‌ விகாரமற்றதாகவும்‌, 
ஞானஸ்வரூபமாகவும்‌. கூன்றீ விதமான அளவுமற்றதாக 
வும்‌ உள்ளது]  ' அதைதஸ்யைவாந்தோ நாஸ்தி யத்‌, 
ப்‌,ரஹ்ம'' [ப்ரஹ்மமென்று யா தொன்றுள்ளகோ அதற்கு 
முடிவில்லை]  ' அரந்கும்‌....ஸமுத்‌,ரேந்தம்‌ '' [பாற்கடலில்‌ 
தயிலும்‌ அந்தன்‌ |. என்று வேதங்களிலும்‌. “ நாஸ்த்‌- 
யந்தேச விஸ்தரஸ்ய மே'' [என்னுடைய ஐங்வர்யத்துக்கு 
அளவில்லை.] என்று கீதையிலும்‌, “ஆதியந்த மில்லவன்‌'' 
“அச்சுதனை அநந்தனை'' என்று ஆழ்வாள்களாலும்‌ சொல்லப்‌ 
பட்டவை இவ்விஷயத்தில்‌ ப்ரமாணங்கள்‌. 

அடுத்தபடியாக கோவிந்தசப்தார்த்தம்‌ விவரிக்கப்படு 
கிறது. “அநந்தன்‌' என்று புருஷோ த்தமனுடைய பரத்வம்‌ 
பேசப்பட்டது. “அப்படிப்பட்ட பெருமையை உடையவனை 
அதிநிஹீனரான ஈம்மரல்‌ அணுகமுடியுமோ என்று 
அடியவர்‌ அஞ்சாமைக்காக. *இடக்கையும்‌ வலக்கையு 
மறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ 
ஒரு நீராகக்கலந்து பரிமாறுமவன்‌' என்னும்‌ பொருளை 
யுடைய கோவிந்தநாமம்‌ கோவிக்கப்படுகிறது. “அச்சுதா! 
அமரரேறே!' என்று அச்யுக அநந்த பாப்தார்த்தங்களை 
அநுஸந்தித்த தொண்டரடிப்பொடியாழ்வாரும்‌. “ஆயர்தம்‌ 
கொழுந்கதே!'' என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ 
தத்தை அருளிச்செய்தாரன்றோ. (கோவிந்தன்‌ ) “ காவ: 
விந்த,தி '' [ பசுக்களை அடைகிறான்‌ ] என்றெ வ்யுத்_த்தி 
யின்படியே, நித்யஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ 
பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை அடைவதற்‌ 
காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌., 

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:। 
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||." 
[ஈரான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌. நீ 
பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ கானாகவே 
அடைந்தாய்‌. ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவீந்தன்‌ என்று 
எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌.] என்று 
ஹரிவம்‌சத்தில்‌ கோவர்த்தனதாரியான @ 7८ 7 न) ठा ऊ 
குறித்து தேவேந்திரன்‌ ததித்தானன்றோ. “ऊ ०५; ०9085 , 
6५100" என்றபடியே பசக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌. 

“சட்டித்தயிரும்‌ தடாவினி ல்‌ வெண்ணெயுமுண்‌ 
பட்டிக்கன்றே!” என்றும்‌ “பட்டிமேய்ந்தோர்‌ காரேறு பல. 
தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ " என்றும்‌ அறாளிச்செய்யும்படி. 
யன்‌ றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக்கலக்கும்படி. இந்த 
மஹாகுணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய்வெரு 
வுவர்கள்‌. “கோவிந்தன்‌ குணம்பாடி ஆவிகாத்திருப்பேனே” 
என்று ஆண்டாள்‌ இக்குண த்தையே தனக்கு ப்ராணதபாரக 
மாகக்‌ கொண்டிருந்தாள்‌. 


“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்பெற்றான்‌ 
காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌ 
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ 
பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ''-என்றறும்‌, 


“மிகொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ 
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்‌ போய்ச்செய்யும்‌ 
தவந்தரனென்‌'' என்‌ றும்‌, 

“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ 
கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா'' என்றும்‌. 
சொல்லும்படியன்‌்றோே கோன்தக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌. 

“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! 
என்றழைக்கும்‌ '' என்று இவளுடைய கிளியும்‌ இத்திரு 
நாமத்தையன்றோ வாய்புஜத்துவ து. நம்மாழ்வாரும்‌ 
“கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” 
என்று தமக்கு இத்திருநாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ 
படுத்தினார்‌. 

“கேளவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிரம்‌ | 
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥'* 
[வெகுதூரத்திலிருந்த என்னை“கோவிந்தா/”என்‌ று த்ரெளடதி 
கூப்பிட்டதானது விருத்தியடைந்த “கடன்பேரல்‌ என்‌ 
ம௩ஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.] என்று. அச்யுதாதிஈாமங்‌ 
களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்தபோதிலும்‌ பகவானுடைய 
திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத்திருநாமமேயன்றே. 
இத்திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ 
பாரதமாம்‌. (கோவிந்தன்‌ ) கேோரயப்‌,தும்‌ பூமியையும்‌ குறிக்கு 
மாகையால்‌ *கரம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ 
நின்றும்‌ குத்தியெடுத்த வராஹஹூர்த்தியைச்‌ சொல்லுவ 
தாகவும்‌ கொள்ளலாம்‌. 'மஹாவராஹோ கேவிந்த,: "என்று 
ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆகரிக்கப்பட்ட த. 

“ஈஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ | 

கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ' 
[பாதாளத்தில்‌ ஓளித்துவைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ 
னொரு காலத்தில்‌ ஈரான்‌ தேடியடைந்கதேனாகையால்‌. கேவர்‌ 
களால்‌ கோவிீர்தனென்‌ று ஸ்தோத்ரம்‌ செய்யட்பெற்ழேன்‌. ] 
என்று பாரதத்தில்‌ மோசக்ூதர்மத்தில்‌ பகவானாலேயே 
சொல்லப்பட்டது. இத்தால்‌ ஆபத்துக்கரலத்தில்‌. ரக்ஷ்ய 
வஸ்தவின்‌ அபேகைையை எதிர்பாராமலே மேல்விழுந்து. 
தன்‌ பெருமைக்குப்பொருந்தரத உருவத்தையும்‌ கொண்டு 
ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுநெது. 

“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `" 
[பூமிப்பிராட்டியே! நூறுகைகளை உடையவனும்‌, அநந்த 
ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌ எடுக்கப்பட்டவளாய்‌ 
இருக்கிறாய்‌. ] என்று பண்டை மறையிலும்‌, 

“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌ 
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌ 
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ 
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை छा का கண்ட ஈல்லதுவே'  

“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்க்ததொப்பக்‌ 
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!'' —என்‌ றும்‌, 

° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌ 
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌ 
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ 
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌ றும்‌ 
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ 
பட்டனவன்‌ றோ. 

“'கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ | 
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌ |” 

[ீசப்தமான து :'கெள:' என்று சொல்லப்படுகிற து. வார்த்தை 
களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று 
முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.] என்கிற நிர்வசன த்தின்‌ 
படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத்திருநாமத் துக்குப்‌ 
பொருள்கொள்ளலாம்‌. “சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ 
படும்‌ பொருளும்‌ நீ'' என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌ 
தத்கை அறுஸந்தித்தார்‌. (கோவிந்தன்‌ ) கேோசப்தம்‌ வேத 
வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக்கொண்டு வேதத்தினால்‌ சொல்‌ 
லப்படுமவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. அச்சம்‌... 
ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அ௩ந்தகீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌ 
ஈச்சராவணைக்‌ கிடந்த ஈாதன்‌ '' என்று அச்சுதன்‌. அந்தன்‌ 
என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை 
யாழ்வார்‌ -' வேதகதனே ”' என்று கோவிந்தசப்தார்த்தத்தை 
அருளிச்செய்தார்‌. (கோவிந்தன்‌ ) எந்த கேவதையைக்‌ 
குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே 
அடைவதால்‌ கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 

“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌ 
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ 
ஈம்மாழ்வார்‌. (கோவிந்தன்‌) கோசப்தம்‌ ஒளியைக்குறிப்ப 
தால்‌ பரஞ்சோ தயாயிராப்பவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ள 
லாம்‌. நம்மாழ்வாரும்‌ 
“பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின்மற்றோர்‌ 
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற 
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌ 
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே '' 
என்று இப்பொருளை அதுஸந்தித் தருளினார்‌. “ஈாராயணபரோ 
ஜ்யோதி:'' என்றும்‌. ** பரம்‌ ஜ்யோதிருபஸம்பத்‌,ய '' என்றும்‌. 
ˆ" ஆதி,த்யவர்ணம்‌ '' என்றும்‌, 

“௩ தத்ர ஸூர்யோ பாதி ௩ சந்த்ஜதாரகம்‌ 
நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: | 
தமேவ பாந்தமநுப,ாதி ஸர்வம்‌ 
தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ 61147 छी ॥” 
[அப்பரமபுருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பீரகாசிப்பதில்லை; 
சந்திரனும்‌, ஈக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌ னல்களும்‌ பிரகாசிக்‌ 
திறதில்லை. அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ? 
ஒளிவீடும்‌ அவனை அநுஸரித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன. 
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகா சிக்கன்‌ 
றன.] என்றும்‌ வேதங்களிலும்‌ 


“ 8969 ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா | 

யதி, 047; ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥” 
[ ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்ஜில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய 
ஒளி கதோன்றிற்றாகில்‌. அவ்வொளிஅந்த மஹாபுருஜனுடைய 
ஒளிக்கு ஒட்பாகலாம்‌.] என்று கீதையிலும்‌ ஒர்த்திக்கப்‌ பட்ட தன்றோ. 

இனி கேசவன்‌ முதலிய பன்‌ னிருநாமங்களின்‌ பரமார்த்‌ 
கங்களைப்‌ பன்‌ னியுரைப்போம்‌. இப்பன்னிரு நாமங்களையும்‌ 
ஆழ்வார்கள்‌ மிகவுகந்து அநுஸந்தித்துக்கொண்டு போருவர்‌ 
கள்‌. “ பாரார்தொல்‌ புகழான்‌ புதுவை மன்னன்‌ பன்னிரு 
நாமத்தால்‌ சொன்ன ஆராத அந்தாதி "' என்றும்‌. “பண்ணிற்‌ 
பன்னிரு ஈரமப்பாட்டு அண்ணல்‌ தாள்‌ அணைவிக்குமே ” 

என்‌ அம்‌ பெரியாழ்வாரும்‌ நம்மாழ்வாரும்‌ இப்டன்னிருநா மங்‌ 
களையும்‌ தொடர்ந்து அநுஸந்திக்கும்‌ பாட்டுக்களைப்‌ பாடி 
யுள்ளார்கள்‌. த்வாதமேோோ ர்தவபுண்ட்பங்களுக்கும்‌ இப்பன்‌ 
னிரண்டு & क 5 07 ५) ए ऊक @ ना அ௮நுஸந்திக்கப்படுகின்‌ றன, 
புருஷோத்தமனுடைய அம்ாாத்தைப்‌ பெற்ற த்வாதச 
ஆதித்யர்களுக்கும்‌ இப்பன்னிரு நாமங்களே கூட்டப்‌ 
பெற்றிருக்கன்‌ றன. எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, 
கிபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ 
உள்ளனவென்ப து ஸகலங்ரு தீதிஹாஸ்‌ புராண பாஞ்சராத்ர 
ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகன்றது. இவ்வைந்து 
அவஸ்தைகளும்‌ இப்டன்னிருநாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ 
படுகின்‌ றன. மாலரி கேசவன்‌ காரணன்‌ சமோதவன்‌ 
கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ 
செய்கையாலே “ கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌ 
தன்‌ '' என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌ ஸ்ரீவைகுண்ட 
ஈாதனாயெழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்கதையைக்‌ குறிக்கின்‌ 
றனவென்‌ பது வீளங்குகிற து, “விஸ்ணு” எனும்‌ அடுத்த 
திருநாமம்‌ அரிருத்தநாரரயணனாகிய வியூஹத்தைக்குறிப்ப 
தன்‌ மூலம்‌ மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகறது. 
மது ஸ9தணன்‌' என்பதும்‌ அந்த வியூஹமூர்த் தியின்‌ 
சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது. “இரிவிக்கரமன்‌. வாமனன்‌. 
தாமோதரன்‌ என்னும்‌ திருநாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ 
சொல்லுகன்‌ றன. ஸ்ரீத,ரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ்விப 
வாவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே அவதரிக்‌ 
கிறானென்று காட்டுகிறது. “ஹ்ருஷீகேசன்‌' என்னும்‌ திரு 
காமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ 
இருப்பை உரைக்கிறது. 'ஸ்ரீத,ரன்‌” @० = ०4५, எல்லாத்‌ திரு 
நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்யகேத்ரங்களில்‌ எழுக்‌ 
தருளியிருக்கும்‌ ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சாமூர்த்திகளையும்‌ 
உணர்த்துகின்‌ றன. "பத்மாபன்‌' என்று இவ்வவகாரங்‌ 


களுக்கெல்லாம்‌ மூலராவதாரமான க்ஷீராப்திநாதனைப்‌ பேசு கிறது. ,
ஆக, இப்படி ஐம்து அவஸ்தைகளும்‌ இந்காமங்களில்‌ 
அநுபவிக்கப்படுகின்‌ றன. இனி இத்திருநாமங்களின்‌ அர்த்‌ 
தங்களைச்‌ சிந்திப்போம்‌. (கேசவன்‌ ) ககாரத்தினால்‌ சொல்லப்‌ 
படும்‌ பிரமனையும்‌, “ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனை யும்‌ உண்டாக்கினவன்‌, 

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | 
. ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” 

['க:' என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான 
முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய 
நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ 
தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை 
உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற 
சிவனாலும்‌ பேசப்பட்டது. -'நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। 
நாராயணாத்‌, 05368007 ஜாயதே|'' [ஈாராயணனிடமிருந்து 
பிரமன்‌ பிறக்கிறான்‌: ௩ாராயணனிடமிருந்து உருத்திரன்‌ 
உண்டாகிறான்‌.] என்பது முதலான வேதவாக்கியங்களை 
யும்‌. மற்றப்ரமாணங்களையும்‌, “தெய்வநான்முகக்கொழுமுளை 
ஈன்று முக்கணீசனொடு தேவு பல (15 ०9" முதலிய ஆழ்வார்‌ 
அருளிச்செயல்களையும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது. 
(கேசவன்‌ ) பிரமனையும்‌ சிவனையும்‌ தன்வசத்தில்‌ வைத்திருப்‌ 
பவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 'நாராயணாத்‌ ப்ரஜா 
யந்தே।| ஈாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।'்‌ 
[பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து 
உண்டாகதறார்கள்‌: நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌: 
நாராயணனிடமே லயமடை றார்கள்‌. ] என்று சொல்லிற்று 
சுடர்மிகு சுருதியும்‌, 


“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ 
உள்ளே தோற்றிய இறைவ! என்று 
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ 
புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”' _என்‌ மும்‌, 

“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப்பாதங்கள்‌ சூடி 
கற்றைத்‌தழாய்‌ முடிக்கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌ 
ஒற்றைப்பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” 
என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌. “விண்ணோர்தலைவா 
கேசவா'' என்று நம்மாழ்வார்‌ இத்திருநாமத்தக்குப்‌ பொரு 
ளூுரைத்தார்‌, “கேசவா புருடோத்தமா'' எவ்றார்‌ பெரியாழ்‌ 
வாரும்‌. உத்க்ருஷ்டபுருஷர்களான ப்ரஹ்மருத்ரர்களைக்‌ 
காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி. (கேசவன்‌ ) சோதி 
மயமான ஸூர்யன்‌ முசலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச 
ப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன, அவைகளைத்‌ தன்‌ 
வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாக வும்‌ கொள்ளலாம்‌. 

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: | 
ஸர்வஜ்ஞா: கேமவம்‌ தஸ்மாந்‌ மாமா ஹார்த்‌,விஜஸத்தமா:।'” 

[ உலகில்‌ பிரகா சிக்கும்‌ என்‌ னுடைய ரணங்கள்‌ கேசமெனப்‌ 
படுகின்‌ றன. ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மணங்ரேஷ்‌ 
டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌ று சொல்லுகிறார்கள்‌. ] என்று 
மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்ட த. கோவிந்கநாம வியாக்கி 
யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான "५ தத்ர ஸூர்யோ பாதி” 
முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸரந்திப்பது. 
“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ' என்று 
ஆழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினர்‌. (கேசவன்‌ ) 
“கேயாாத்‌, வோ5ந்யதரஸ்யாம்‌'' பூ மநிந்த; (त एए णा न... 
ப,வந்தி மதுபளத,ய: ' என்கிற வியாகரண விதிகளின்படி 
கேயாப்தத்தன்மேல்‌ வ:' என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து 
“ப்ரராஸ்தகேமான்‌' ( புகழ்ப்பெற்ற கேசங்களை உடையவல்‌ ) 
என்னும்‌ பொருளைத்தருகிறது. அதாவது: “ய ஏஷோ&ந்த 
ராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்யங்மம்ருர்‌ 
ஹிரண்யகேரு;”[ஸ எர்யனுக்கு நடுவில்‌ யா வனொரு ஸுவர்ண 
மயனான புருஷன்‌ விளங்குகறொனோ, அவன்‌ ஸாுவர்ணம்‌ 
போன்று அழகானமீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌. | 
என்று வேதத்தாலும்‌ புகழ்ப்பெற்ற மய்ர்முடிகளை உடைய 
வன்‌ என்று பொருள்‌. 4 

“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்க்திட்ட கொழுஞ்சுருளின்‌ 
உள்கொண்ட நீல ஈன்னூல்‌ தழைகொல்‌? அன்று மாயன்குழல்‌ 
விள்கின்‌ ற பூ்தண்துழாய்‌ விரைகாற வந்தென்னுயிரைக்‌ 
கள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறாநிற்றிரே.'' என்றும்‌. 

“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ' என்றும்‌, “சுருண்‌ 
டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ - மைவண்ண 
ஈறுங்குஞ்சி குழல்பின்தாழ”' என்றும்‌, “குழலழகர்‌'' என்றும்‌ 
ஆழ்வார்கள்‌ இக்கேசலெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌. 
(கேசவன்‌ ) இத்தால்‌ சிக்குத்தலையரான இதரதகெய்வங்களிற்‌ 
காட்டிலும்‌ வ்யாவ்ருத்திசொல்லப்டடுகிற து.” “பிங்கள ஜடோ 
தே,வ:' என்றும்‌, “ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று ०55" 
என்றும்‌ சொல்லுகிற ப்ரஹ்மருத்ரர்கள்‌ மயிர்போலே 
குராலாயமேறி ஒடியிருக்கையன்‌ றிக்கே, * நீலகுஞ்சதெ மூர்த்‌ 
த,ஜம்‌ *, * குழலிருண்டு சுருண்டு ' என்கிறபடியே கண்டவர்‌ 
கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ச்யாமளமா 
யிருக்கை''என்‌ று மைவண்ணாறுங்குஞ்ச வீயாக்க்யானத்தில்‌ 
கலித்‌,வம்ஸநாசார்யர்‌ அருளிச்செய்தது இங்கு அநுஸந்திக்கத்‌ 
தக்கது. 


“நரகே பச்யமாநஸ்து யமேந பரிப,ாவஷித: | 
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேமுவ: க்லேரரநா ரர௩: ||" 

[ஈரகத்தில்‌ வேதனையை அனுடவிக்கும்‌ ஒரு மனிதன்‌ “அடே! 
உன்னால்‌ கிலேசங்களையெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ 
அர்ச்சிக்கப்படவில்லை?'' என்‌ று யமனால்‌ கேட்கப்படட்டான்‌. | 
என்று புராணம்‌ சொல்லிற்று. கேவ: க்லேமநாமரந: ' 
என்றதின்‌ தாத்பர்யத்தை. “தாபத்ரயாதுரரோடு விரஹதா 
பாதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படிகாண்‌ 
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி; *கேமரவ: க்லேமமநா சமா:”? 
என்னக்கடவதிறே ;. த்ருஷ்டிப்ரியம! யிருக்கையன்‌ நிக்கே 
நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படிகாண்‌ திருக்குழலின்‌ 
பரிமளம்‌ மிகுந்கபடுட'' என்று பரமகாருணிகரான பெரிய 
வாச்சான்பிள்ளை மைவண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ 
அருளிச்செய்தார்‌. (கேசவன்‌ ) கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ 
கொன்‌ ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 


“யஸ்மாத்‌ த்வயைவ து,ஷ்டாத்மா ஹத; கேம ஐநார்த்த;௩ | 
தஸ்மாத்‌ கேரரவநாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ க,மிஷ்யஸி।”' 

[ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்லவேணுமென்னும்‌ ) 
கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி உன்னாலேயே கொல்லப்‌ 
பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌ । 
தால்‌ ஒீர்த்திபெறுவாய்‌.] என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு 
புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது. =" கேமாவம்‌ 
கேயிஹந்தாரம்‌'' என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ 
சொல்லப்பட்ட து. - கேரரவ: கேமிஹா”' என்று இப்பொருள்‌ 
ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்ட ௮. 
“கண்ணன்‌ கேசவன்‌'' என்றும்‌, `" நாராயணன்‌ மூர்த்தி 
கேசவன்‌'' என்றும்‌ ஆழ்வார்களாலும்‌ இவ்வர்த்தம்‌ அறு 
ஸந்திக்கப்பட்டது. இப்படிப்‌ பொருள்கொள்ளும்போ து 
எம்பெருமானுடைய வீரோ , நிரஸன ஸீலத்வம்‌ தோற்று 
கிறது. கண்ணன்‌ கேசவன்‌ நம்பி' : கேசவ௩ம்பீ உன்னைக்‌ 
காதுகுத்த'' “கேசவநம்பியைக்‌ கால்பீடிப்பாள்‌ என்னுமிப்‌ 
பேபறனக்கு அருள்கண்டாய்‌'' என்று இத்திருநாமத்தின்‌ 
குணபூர்த்தியை அறுஸந்தித்தார்கள்‌. 


“கரவ; க்லேமஹா லோகே த்‌,;வைரூப்யேண க்திதெள 
ஸ்தி,த: | 
மதுராக்‌,யே மஹாகேேத்ரே வாராணஸ்யாமபி த்‌,விஜ ॥”' 

[வீப்ரரே! கிலேசங்களைப்போக்கடிக்கும்‌ குழலழகையுடைய 
பெருமான்‌. மதுரை என்னும்‌ மஹாகேத்திரத்திலும்‌ 
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌ பூமியீல்‌ கோயில்கொண்‌ 
டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக்காட்டி. | 

பட்டர்‌ இத்திருநாமத்தை அர்ச்சாவதாரபரமாக வியாக்கி 
யானம்‌ செய்தருளினார்‌. இப்படிப்‌ பரவீபவார்ச்சாவதாரங்‌ 
களைக்குறிக்கக்‌ கூடியதேயாகிலும்‌ கேசவன்‌ நாரணன்‌ 
சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?' என்று நம்மாழ்வார்‌ 
அருளிச்செய்கையால்‌. இத்திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை 
யைக்குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது. 

கேசவன்‌ என்னும்‌ தஇிருநாமத்தினால்‌ பிரமருத்திரர்‌ 
களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து. இப்படிப்‌ 
பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ. 'நாராயணன்‌' என்று 
வேதராந்குஸித்தமான அஸாதளரணமான தஇருநாமத்தைப்‌ 
படிக்கிறது. இத்திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ 
புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப்போந்‌ 
தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌. இதிலுள்ள ணகாரமான து 
வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத்திருநமம்‌ பொருந்தா 
தென்பதைக்‌ காட்டுறது. இத்திருநாமத்தின்‌ அர்த்தங்‌ 
களோ அயிரம்‌ ஈநாவுடடைத்த ஆதிசேவனாலும்‌ அளவிட்டுச்‌ 
சொல்லமுடியா தவை. நாராயணனுடைய பெருமையை 
அறிந்தாலும்‌ அறியலாம்‌; நாராயண நாமத்தினுடைய 
அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது. பரம 
காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞஸார்வபெனமர்களுமான ஈம்‌ 
ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌ இத்திருநாமத்தின்‌ பொருளைப்‌ 
பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌. அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ 
தணையாகக்கொண்டு நாமும்‌ இத்திருநாமத்தின்‌ பொருட்‌ 
பெருமையை இயன்‌ யவரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌. 

“ ரிங்‌-க்ஷயே ”' என்று தாதுவாகையாலே. 'ர' என்னாம்‌ 
எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. 
௩' என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: 
என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. 
*“ஈராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே कः" என்‌ னும்‌ 
பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ 
குறிக்கிறது. 'நாரா:' என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட 
நித்யவஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ 
படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்யவஸ்‌ துக்களின்‌ 
ஸமூஹங்கள்‌ எவை என்‌ பதைப்‌ பரமகாருணிகரான பெரிய 
வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, 
யாத்மகுணங்களும்‌, குணப்ரகாப0கமான திவ்யமங்கள 
விகரஹங்களும்‌. விக்ரஹ்குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. 
அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூக்தாப்போலே சாத்தின 
கிரீடமகுடா தி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு 
விகல்பிக்கலாம்படியான பயங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, 
இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகா தபடி அருகேயிருர்து 
அந்பவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்,ரு தி மஹிஷீவர்க்கங்களும்‌, 
அச்சேர்‌ த்தியிலே அடிமை செய்க ற அநந்‌ தகருடவிஷ்வக்ஸே 
ப்ரமுகரான ஸரிஸங்க,மும்‌, அவர்களோபா தபோய்‌ அடிமை 
செய்கிற (05 50 9, அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ 
பரிகரமான ச,டதீரசாமரா தி,பரிச்‌ச, 5 8/5 @ ८2, அவ்வடிமைக்கு 
வர்த்த,கமாய்‌ பஞ்சோடனிஷந்மயமான ८0 ८०" 1,58.049, 
குணத்ரயாத்மிகையான மூலப்‌) க்ரு தியும்‌, புருஷ்மஷடியும்‌, 
அஹோராத்ரா திவிபாகயுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ 
ரூபேண நித்யமான மஹதா திகளும்‌. தத்கார்யம! ன அண்டங்‌ 
களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதஅர்விக,பூகீங்‌ 
களும்‌. பஞ்சோபனிஷஹந்மயமாகையாலே பரமபதமும்‌ 
மஹா த்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே 
மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹு த்மிகையாயிருக்கும்‌்‌ அஹோராத்‌ 
ராதி,விபாகங்கள்‌ = 5 = ८0 क क, ८7 @ @ காலமும்‌ 
ஸமூஹாத்மகமாயிருக்கும்‌'' என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ 
பரகக அருளிச்செய்தார்‌. 

அடுத்தபடியாகவுள்ள அயநா்ப்தம்‌ பல பொருள்களை 
உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ' என்பதும்‌ ஒன்று. 
^" छाप; அயரும்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:'' [நித்யபதரர்த்தட 
ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. 
அவன்‌ ஈரராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு 
பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌ 
களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ '. 
என்று சொல்லப்பட்டதாகிறது. 

“சேதகாசேத௩ம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே | 
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயண்ஸ்து ஸ: ॥'' 
[விஷ்ணுவைக்காட்டிலும்வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா 
சேதனங்களும்‌ நாரசப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌ றன. அது 
எவனுக்கு இருப்பிடமாயுள்ளடதோ அப்பரமாத்மா நாராயண 
னெனப்படுகறான்‌.] என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ 
சொல்லிற்று. இந்த பஹுவ்ரீஹறிஸமாஸப்‌ பொருளில்‌ 
அரந்தர்வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌ 
தச்புருஷஸமாஸப்‌ பொருளில்‌ பரஹிர்வ்யாப்தியும்‌ உணர்த்‌ 
தீப்படுகின்றன எல்‌ று ஆசார்யர்கள்‌ அருளிச்செய்வர்‌. 


“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா | 
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய காராயண: ஸ்தி,த: |” 
[ இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்டனவுமான எல்லா வஸ்துக்‌ 
களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து 
நிற்கறோன்‌.] என்று பண்டை மழையிலும்‌, 


“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ 

நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ' என்று தமிழ்‌ வேதத்திலும்‌ 
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட. து. இப்பொருளில்‌ எம்பெரு 
மானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது. 
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:'' [நித்யபதளர்த்த, ஸமூஹங்க 
ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌ 
கிறானோ அவன்‌ நாராயணன்‌ ] என்ற தத்புருஜஸமாஸத்தின்‌ 
படியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. இத்தால்‌ எல்லா வஸ்துக்‌ 
களையும்‌ நாராயணன்‌ தரிக்கிறான்‌ என்று சொல்லப்படுகிறது, 
^" நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: '' [63-62] 
[ஈாரசப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ நித்யவஸ்‌ துஸகூஹங்‌ 
களுக்கு இருப்பிடமாயிருப்பதால்‌  நரராபணனெனப்படு 
கிறான்‌.] என்று இவ்வர் த்தம்‌ பாரதம்‌ உத்யோகடர்வத்தில்‌ 
உரைக்கப்பட்ட து. நாரசப்சத்துக்கு மற்றொரு வகையாகவும்‌ 
பொருளுரைப்பதுண்டு. ஈர:' என்று ஸ்வரூபத்திலும்‌ 
ஸ்வபாவத்திலும்‌ சிறிதும்‌ விநா ற்றவனான பரமபுருஷன்‌ 
சொல்லப்படுகிறான்‌.  *நராத்‌ ஜாதாநி ' என்கிறப்டியே 
0 @@&.2 புருஷோத்தமனீடமிருந்‌ து உண்டானவை நாரங்க 
ளெனப்படுகின்‌ றன. அவைகளை இருப்பிடமாக உடைத்தா 
யிருக்கையா லும்‌, அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை 
யாலும்‌ நாராயணனெனப்படுகறான்‌ என்று முன்போலவே 
இருவகையாகவும்‌ பொருள்‌. 


““நராஜ்ஜாதாறி தத்த்வாடி நாராணீதி ததோ விது, | 

தாந்யேவ சாயநம்‌ தஸ்ய தேந ௩ாராயண: ஸ்ம்ருத: |!” 
[£ரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை 
நாரங்களென்‌ று அறிகின்றார்கள்‌. அவைகளையே இருட்பிடமா 
யுடையவனாயிருப்பதரல்‌ அவன்நாராயணனெனப்படுகிறான்‌.] 
என்று இவ்வர்த்கம்‌ ஹரிவம்சத்திலும்‌ சொல்லப்பட்டது, 
இவ்வர்‌த்தத்தை “யரவையும்‌ யாவரும்‌ கானாம்‌ அமைவுடை 
ஈகாரணன்‌'' என்று நம்மாழ்வார்‌ அருளிச்செய்தார்‌. ° एक 
ப்தத்தில்‌ சொல்லப்பட்ட அஈந்தமான வஸ்த்துக்களில்‌ 
சிலவற்றைச்‌ சிற்சிலவிடங்களிலலயெடுத்து ஆழ்வார்கள்‌ 
நாராயணசப்தத்துக்கு வியாக்கயொனம்‌ செய்தருளயிருக்‌ 
கிறார்கள்‌. ஈாரசப்கத்‌துக்கு அநந்தகல்யராணகுணங்களையும்‌ 
பொருளாகக்கொண்டு “: ஈறில வண்‌ புகழ்‌ நாரணன்‌ '' என்‌ 
அம்‌ =` வாழ்புகழ்‌ நாரணன்‌'' என்றும்‌ நம்மாழ்வாரும்‌. :௩ல 
முடை நாரணன்‌ என்று பெரியாழ்வாரும்‌, நலந்திகழ்‌ 
நாரணன்‌'' என்று குலசேகராழ்வாரும்‌ செய்கருளினார்கள்‌. 
நாரசப்தத்‌.துக்கு இவ்யமங்களவிக்ரஹத்‌ 
தையும்‌ அதன்‌ குணங்களையும்‌ பொருளாகக்‌ கொண்டு. 
“ காராயின காளநன்‌ மேனியினன்‌ ஈஷராயணன்‌ '' என்று . 
நம்மாழ்வாரும்‌. "' கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்மதியம்போல்‌ 
முகத்தான்‌ நாராயணனே '' என்றும்‌, ` நாற்றத்துழாய்‌ முடி 
நாராயணன்‌'' என்றும்‌ ஆண்டாளும்‌ அருளிச்செய்தனர்‌. 
திவ்யா பரணங்களை நாரசப்கதத்‌தக்குப்‌ பொருள! கக்கொண்டு 

“உடையார்ந்தவாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌ 
புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌ பல்கலன்‌ 
நடையாவுடைத்‌ திருநாரணன்‌'' என்று நம்மாழ்வார்‌ 
அருளினார்‌. “லக்ஷ்மீப்ரப்‌ ரதி மஹிவீவர்க்கங்களும்‌'' என்று 
ஆச்சான்பிள்ளையால்‌ அருளிச்செய்யப்பட்ட பிராட்டிமார்‌ 
களை நாரசப்தத்‌துக்குப்‌ பொருளாகக்கொண்டு “ செலவ 
நாரணன்‌ என்‌ று ஈம்மாழ்வார்‌ அருளிச்செய்தார்‌. விண்ணோர்‌ 
நாயகன்‌ நாராயணன்‌ '' என்று வேதம்‌ தமிழ்ச்செய்த மாறன்‌ 
நாரசப்தத்துக்கு நித்யமுக்தர்களைப்‌ பொருளாக அருளிச்‌ 
செய்தார்‌. நாரசப்தத்துக்குச்‌ சேதனர்களைப்‌ பொருளாகக்‌ 
கொண்டு "` எண்பெருக்கந்நல்லத்தொண்பொருள்‌ ஈறில 
வண்புகழ்‌ நாரணன்‌ '' என்றும்‌, “' எம்பிரான்‌ எம்மான்‌ காரா 
யணன்‌ '' என்றும்‌ சடகோபனும்‌, = `" நம்மையுடையவன்‌ 
நாராயணன்‌ '' என்றும்‌. “' என்னை நலங்கொண்ட நாரணற்கு?” 
என்றும்‌ ஆண்டாளும்‌ /' நாராயணன்‌ என்னையாளி '' என்று 
திருமமிசைப்பிரானும்‌ அருளிச்செய்கனர்‌. நாரசப்தத்துக்கு 
உபயவிபூ,தியையும்‌ பொருளாகக்கொண்டு “்‌ நாரணன்‌ 
முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ "என்று ஈம்மா ழ்வாரும்‌. " நாயகன்‌ 

நாரணன்‌'' என்று பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தனர்‌. . 

( ஈாராயணன்‌ ) நரனாகிற பெருமானால்‌ படைக்கப்பட்ட 
ஜலத்தை நாரசப்தத்திற்குப்‌ பொருளாகக்‌ கொண்டு அதை 
இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌, 

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: | 
தா யத,ஸ்யாயந௩ம்‌ பூர்வம்‌ தேந நாராயண: ஸ்ம்ருத: |" 
[ஈ£ரனாகற ஸர்வேமீவரனால்‌ படைக்கப்பட்ட ஜலம்‌ “நாரம்‌ ' 
எனப்டடுகிறது. அது ஆதிகாலத்தில்‌ இவனுக்கு இருப்பிட 
மாயிருக்கையால்‌ இவன்நா ராயணனெனப்படுகதறான்‌. ] என்று 
மநுஸ்ம்ருதியிலும்‌, விஷ்ணுபுராணத்திலம்‌ உரைக்கப்‌ 
பட்டது. இவ்வர்த்தம்‌ 
"" छा 5600 நடுக்கடலுள்‌ துயின்‌ ற நரராயணனே!”' என்று 
ஆழ்வராரலும்‌. 
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந; '" 
[ இவனே பாற்கடலில்‌ பள்ளிகொண்ட ஸ்ரீமந்நாராயணன்‌ ] 
என்று புராணத்திலும்‌ பேசப்பட்டது. 

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த:ஸ்தி,தோ5ஹம்‌ =, 
யேரு ஸ்யாந்மே நாம ஈாராயணேதி”' 
[ஈாரசப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ ஜலத்தை ஸ்ருஷ்டி 
செய்து அகனுன்‌ நான்‌ வசித்தபடியால்‌ எனக்கு ஈரராயண 
னென்னும்‌ நாமம்‌ ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹபுரா ணத்‌ 
தில்‌ பகவானாலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது. (நாரா 
யணன்‌) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள 
சேதனாசேதனங்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு. ப்ரளய 
காலத்தில்‌ அவைகளுக்குச்‌ சேருமிடமாயுள்ளவன்‌ என்றும்‌ 
பொருள்கொள்ளலாம்‌. = "" ஞாலமுற்றுமுண்டாலிலைத்‌ துயில்‌ 
நாராயணனுக்கு '' என்று பெரியாழ்வாரும்‌, ** ஞாலமுற்றும்‌ 
உண்டுமிழ்ந்த நாராயணனே! '' என்றும்‌. “ஞாலமுண்டாய்‌! 
ஞானமூர்த்தி! ஈாராயணா!'' என்றும்‌ ௩ம்மாழ்வாரும்‌ இவ்‌ 
வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள்‌. இத்தால்‌ ஸர்வ 
ஸம்ஹர்த்ருத்வமும்‌ சொல்லப்பட்ட தாயிற்று. (நாராயணன்‌) 
* நர' சப்தத்தினால்‌ அழிவற்ற ஸ்வரூடத்தையுடைய ஆத்மா 
சொல்லப்படுகிறது ; நாரசப்தம்‌ ஆத்மஸமூஹுத்தைச்‌ 
சொல்லுகிறது. அய௩சப்தம்‌ : இண்‌ க,தெள ' : அய-க,தெள ' 
என்னும்‌ தாதுக்கள்‌ ஒன்‌ றிலிருந்து உண்டானதா கையாலே 
போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும்‌, போய்ச்சேரும்‌ 
வழியான உபாயத்தையும்‌ குறிக்கும்‌ச்‌ ஆக “ஈாராயணன்‌ '. 
என்று Cசதனவர்க்கத்‌ திற்கு மோக்ஷப்ராப்யமாகவும்‌, 
மோகேோபாயமாகவும்‌ இருப்பவன்‌ என்று பொருள்‌ படு 
கிறது. இவ்வர்த்தம்‌ 
“்‌ நாரஸ்த்விதி ஸர்வபும்ஸாம்‌ ஸமூஹ: பரிகீர்த்தித: | 

க,திராலம்ப;ம்‌ தஸ்ய தேக ஈாராயண: ஸ்ம்ருத: || '' 
[ஈாரமென்‌ று न ® न्या ऊ = தனர்களுடைய ஸமூஹும்‌ சொல்லப்‌ 
படுகிற து. அச்சே தனஸமூஹத் திற்கு உபாயமா கவும்‌, உபேய 
மாகவுமிருப்பதால்‌ நாராயணனென் று சொல்லப்படுகிறான்‌. ] 
என்றும்‌. 


“நரரோ நராணாம்‌ ஸங்க,ாதஸ்‌ தஸ்யாஹமயநம்‌ க,தி:। 
தேநாஸ்மி முநிபிர்‌ நித்யம்‌ ஈநாராயண இத்ரித: || '' 
[ஈரர்களின்‌ கூட்டம்‌ ஈநாரமெனப்படுகிறது. அதற்கு நான்‌ 
ப்ராப்யமாகவும்‌. ப்ராபகமாகவும்‌ இருக்கிறேனாகையால்‌ 
முனிவர்களால்‌ எப்போதும்‌ நான்‌ நாராயணன்‌ என்று 
சொல்லப்படுகமறேன்‌.] என்றும்‌ । 


“ ए ००८९ अह ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! | 
தேஷாமயநபூ,தத்வாந்‌ நாராயண இஹோச்யதே | 
தஸ்மாந்நாராயணம்‌ பந்தும்‌ மாதரம்‌ பிதரம்‌ குரும்‌ | 
நிவாஸம்‌ மரணம்‌ சாஹார்‌ வேத,வேதராந்தபாரகற: | 
[காரசப்தத்தனால்‌ ஜீவஸமூணும்‌ பெரியோர்களால்‌ சொல்லப்‌ 
படுகிறது. அவர்களுக்கு ப்ராப்யப்ராபகங்களாகிற அயன 
மாயிருப்பதால்‌ நாராயணன்‌ என இங்கு சொல்லப்படுகிறான்‌ . 
ஆகையால்‌ நாராயணனை பந்து வாகவும்‌. தாயாகவும்‌. தந்தை 
யாஃவும்‌. ஆசாரியனாகவும்‌. இருப்பிடமாகவும்‌. உபாயமாக 
வும்‌. வேதவேதார்தங்களைக்‌ கரைகண்டவர்கள்‌ சொல்லு 
கிறார்கள்‌.] என்றும்‌ சாஸ்திரங்களில்‌ இவ்வர்த்தம்‌ வெகு 
விரிவாக உபதேசிக்கப்பட்டது. “ நாராயணனே நமக்கே 
பறை தருவான்‌ '' ஷன்‌ று ஆண்டாளும்‌, 'வீடாக்கும்‌ மெய்ப்‌ 
பொருள்தான்‌......௩ஈரராயணன்‌ '' என்றும்‌, நாராயணன்‌ 
என்னையாளி நரகத்தில்‌ சேராமல்‌ காக்கும்‌ திருமால்‌ தன்‌ ”' 
என்‌ றும்‌ திருமழிசைப்‌ பிரானும்‌ இவ்வர்‌ த்தத்கை நரராயண்‌ 
சப்கதத்திம்குப்‌ பொருளாக அநுஸந்தித்தார்கள்‌. “மாரணம்‌ 
திர்‌ காராயண:”' [ஈரராயணனே மோகத்தில்‌ அடையப்‌ 
படுமவனும்‌, அடைவதற்கு வழியுமாவான்‌.] என்று வேத 
மும்‌ இவ்வர்ததத்தை உத்கேோவஷித்தது. 

(நாராயணன்‌) ° நர: என்று அழிவற்றவனான எம்பெரு 
மானையும்‌ குறிக்கும்‌ என்று முன்னரே சொல்லப்பட்ட து. 
“ ஜந்ஹார்‌ நாராயணோ நர: '' என்று அவனுடைய நாமமாக 
வும்‌ படிக்கப்பட்ட து. `" நரஸ்யே இமே- நாரா: '' (ए णस 
சேர்ந்தவர்கள்‌ நாரங்கள்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படி 
57 ¢ 1०115८2 “ஜ்ஞா௩ீ த்வாத்மைவ மே மதம்‌ [ஞானி எனக்கும்‌ 
ஆத்மாவாயிருப்பவனென்று என்‌ ஸித்தாந்தம்‌] என்று 
எ ம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச்‌ 
சொல்லுகிறது. “நாரா அயநம்‌ யஸ்ய ஸ; '' என்று 
தன்னடியார்களையே தனக்குப்‌ பரமப்ராப்யமாகக்‌ கொண்‌ 
ட. ருக்குமவன்‌ என்‌ று பொருள்‌ படுகிறது. -' நச்சுவார்‌ முன்‌ 
நிற்கும்‌ நாராயணன்‌ "என்றும்‌. ண்ணித்தொழுமவர்‌ சிந்தை 
பிரியாத நாராயணா!" என்றும்‌ பெரியாழ்வாரும்‌; * அற்புதன்‌ 
நாராயணன்‌ ...ஙிற்பது மேவி இருப்பதென்‌ நெஞ்சகம்‌ '' என்று 
நம்மாழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்‌. “நானுன்னை 
யன்‌ றியிலேன்‌ கண்டாய்‌ நாரணனே! '' £ என்று: மோகேோ 
பாயத்வம்‌. ஸர்வவ்யாபகத்வம்‌, ஸர்வதரரகத்வம்‌ முதலிய 
குணங்களை நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்கருளிய 
திருமழிசையாழ்வார்‌. நீ என்னைய&றி இலை'” என்று 
பக்கைகதாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌, 
“நண்ணித்‌ தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா'' என்னு 
மிடத்துக்கு வியாக்கயானம்‌ செய்தருளிய பரமரஸிகரான 
திருவாய்மொழிப்பிள்ளை “* இவருடைய நாராயண மரப்தார்த்‌ 
தம்‌ இப்படிப்போலே காணும்‌ இருப்பது '' என்று அருளிச்‌ 
செய்தார்‌. 

( ஈரராயணன்‌ ) ஈரர்கள்‌ என்று ஒருவிதமான குறைவு 
மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச்‌ சொல்லுகிறது. நாரம்‌ 
என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஓணவர்களுடைய வாஸ 
ஸ்தானத்தைச்‌ சொல்லுகிறது. ஸ்ரீவைஷ்ணவர்களுடைய 
வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு 
எழுந்தருளியிருக்கையாலே * நாராயணன்‌ ' எனப்படுவதாக 
வும்‌ கொள்ளலாம்‌. “திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ " 
என்றும்‌, “ தென்திரை சூம்‌ திருப்பேர்க்‌ கிடந்த திருகாரணா!'' 
என்றும்‌ பெரியாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. 


“ நரஸம்ப;ற்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: | 
ஈயத்யலெவிஜ்ஞா௩ம்‌ ஈாமாயத்யகிலம்‌ தம: ॥ 

௩ ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்‌ कणा कराः | 
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா 5சேதநாத்மகா: || 
ஈபிதவ்யதயா ௩ாரா தரார்யபோஷ்யதயா ததர | 
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ்‌ ததா ॥ 
அயதே நிதிலாக்‌ நாராந்‌ வ்யாப்நோதி க்ரியயா ததா | 
நாராம்சாப்யாயநம்‌ தஸ்ய தைஸ்தத்‌,ப,ாவநிரூபணாத்‌ ॥ 
ஈாராணாமயநம்‌ வாஸஸ்‌ தே ச தஸ்யாயநம்‌ ஸதா | 

பரமா ௪ க,திஸ்தேஷாம்‌ நாராணாமாத்மநாம்‌ ஸதா | 
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ௪। 
அதோ நாராயணோ நாம ஹேதுபிர்‌ தர்மமித: பர: ॥ ”' 
[ஈரனுடன்‌ ஸம்பந்தம்பெற்றவைகள்‌ நாரங்கள்‌. புருஷோத்‌ 
தமனே நரனெனப்படுரறோன்‌. தன்னைப்பற்றிய எல்லா 
அறிவையும்‌ அடைவிகீசறோனாகையா லும்‌, எல்லா இருளையும்‌ 
டோக்கடிக்கறானாகையா லும்‌. எங்கும்‌ வீகாரமற்றவனாயிருப்ப 
தாலும்‌, ஸா தனனான அப்பரமபுருஷன்‌ ஈரனெனட்படுதறோன்‌. 

ஈரனாகிய அப்பெருமானுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்றிருக்கும்‌ 
எல்லாச்‌ சேதநாசே கநங்களும்‌,அவனால்‌ ஆளப்படுகையா லும்‌, 
தீரிக்கப்படுகையாலும்‌. போவஷிக்கப்படுகையா லும்‌, நியயீக்‌ 
கப்படுகையா லும்‌, ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்‌. வியாபிக்கப்‌ 
படுவதாலும்‌. தாங்கப்படுகையா லும்‌ நாரங்களாகின்‌ றன. 
எல்லா நாரங்களையும்‌ (ஸ்வரூபத்தால்‌) அடைவதாலும்‌, 
முற்கூறிய செய்கைகளால்‌ வியாபிப்பதாலும்‌. அவைகளை 
யிட்டே அவனை நிரூபிக்கவேண்டியிருக்கையா லும்‌ நாரங்கள்‌ 
அப்புருஷோத்தமனுக்கு அயாமாகின்‌ றன. இவன்‌ நாரங்‌ 
களுக்கு இருட்பிடமாயிருக்கிறான்‌: அவைகளும்‌ எப்போதும்‌ 
இவனுக்கு இருப்பிடமாயுள்ளன. ஈரஸமூஹங்களான 
ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவும்‌, 
இவன்‌ விளங்குகிறான்‌. ஜலமும்‌ நாரசப்தத்தால்‌ சொல்லப்‌ 
படுகிறது. அதுவும்‌ இவனுக்கு இருட்‌ பிடமாயிருக்கிறது, 
ஆகையால்‌, இக்காரணங்களால்‌ நாராயணன்‌ என்னும்‌ 
திருநாமம்‌ மேலானகென்று காட்டப்படட்டது.] என்று 
அஹிர்புத்க்யஸம்ஹிதையில்‌,  ( 52-50,...65 )  ஈரன்‌, 
நாரம்‌, நாராயணன்‌ என்னும்‌ பதங்கள்‌ வெகு விரிவாக 
விவரிக்கப்பட்ட தும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திக்கத்தக்கது. 

“நாராயணன்‌ ' என்று ஸர்வேங்வரன்‌ உடயவிபூ,தி 
நிர்வாகஹனாய்‌ ஸ்ரீவைகுண்ட்த்தில்‌ எழுந்கருளியிருக்கும்‌ 
இருப்பைச்‌ சொல்லிற்று. அப்படியிருக்குமவன்‌ ப்ரஹ்மசாரி 
கநாராயணனல்ல, ஸ்ரீமக்காராயணனே என்னுமத்தைச்‌ 
சொல்லுகிறது மாதவன்‌ ' என்னும்‌ திருநாமம்‌. சிவ புராணத்திலும்‌. 

“வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம்‌ शु 5550198; | 
ஆஸ்தே விஷ்ணுரசூந்த்யாத்மா ப,க்தைர்‌ பாக,வதை: ஸஹ” 
[வைகுண்டமென்னும்‌ மேலான உலகத்தில்‌, உலகிற்கெல்‌ 
லாம்‌ ஸ்வாமியும்‌, எண்ணமுடியாத ஸ்வரூபத்தையுடைய 
வனுமான பகவான்‌ விஷ்ணு, ஸ்ரீதேவியுடன்‌ கூடியவன்‌, 

குணநிஷ்டர்களான பக்தர்சளூடனும்‌, கைங்கர்யநிஷ்டர்‌ 
களான பாகவதர்‌சளுடனும்‌ எழுந்தருளியிருக்கிறான்‌.] என்று 
சொல்லப்பட்ட தன்றோ. (மாதவன்‌) (மா' என்னும்‌ பதம்‌ 
ஸ்ரீதே,வியைச்‌ சொல்லுறெது. தவ:'என்னும்சொல்‌ “காதன்‌” 
என்னும்‌ "பொருளையுடையது. “மாயா: தவ: மாதவ: ' 
என்கிறபடியே. மாதவன்‌ என்னும்‌ திருநாமம்‌ லக்ஷ்மீ நாதன்‌' 
என்னும்‌ அர்த்தத்தை உடையது. “மானேய்‌ நோக்கி 
ம்டவாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா! ''என்‌ று நம்மாழ்வார்‌ 
இப்பொருளை மாதவம்ப்தரர்த்தஹாக அருளிச்செய்தார்‌. 
இத்திருநாமம்‌ பகவான்‌ பரமபதத்தில்‌ பெரியபிராட்டியா 
ருடன்‌ எழுந்தருளியிருப்பதைக்‌ குறிக்கிறதென்பகை. 
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும்‌, - மாமாயன்‌ 
மாதவன்‌ வைகுந்தன்‌ ” என்றும்‌, மன்னிய மாதவனோடு 
வைகுந்தம்‌ புக்கிருப்பாரே ” என்றும்‌ ஆண்டாளும்‌, : கேசவன்‌ 
நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்றும்‌, 
“ வடிவுடை மாதவன்‌ வைகுந்தம்‌ ” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ 
அருளிச்செய்தனர்‌.பெரியபிராட்டியார்‌ எல்லா தசைகளிலும்‌ 
எம்பெருமானை விட்டுப்பிரியாமலிருப்பவராகையாலே. எம்‌ 
பெருமானையும்‌ இப்பிராட்டியையிட்டு நிரூபீக்க வேண்டு 
மென்று இத்திருநாமம்‌ உணர்த்துறெது. “ ஹ்ரீஸ்ச தே' 
லக்ஷ்மீங்ச பத்ம்யெள ” என்று வேதமும்‌ பரமபுருஷனைப்‌ 
பீராட்டியையிட்டு நிரூபித்தது. 

“ஹர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ: | 
க,ச்ச,த்‌,வமே௩ம்‌ மாரணம்‌ மாரண்யம்‌ புருஷர்ஷப,ா: |” 

[பருஷங்ரேஷ்டர்களே! எல்லாவுலகுக்கும்‌ லக்ஷ்மீநாதனே 
தாயாகவும்‌. தந்தையாகவும்‌ வீளங்குகிறான்‌; (ஆகையால்‌) 
இந்த மாதவனை சரணமடையுங்கள்‌.] என்று புருஷகார 
பூதகையான பிராட்டிபுடன்‌ கூடிய நாராயணனே நம்க்கு 
உபராயமாகவும்‌, ஸ்வாபியாகவும்‌ ஆகிறான்‌ என்று பாரதத்தில்‌ 
பேசப்பட்டது. 

“ கடிவார்‌ தீய வினைகள்‌ 

கொடியாருமள வைக்கண்‌ 

கொடியா அடுபுள்‌ உயர்த்த 

வடிவார்‌ மாதவீனாரே '' என்று 
ஆழ்வாரும்‌ மாதவனே உபாயமாகிறானென்‌ ற உணர்த்தினார்‌. 
“ மாதவன்‌ பூதங்கள்‌ " என்றும்‌. `" மரதவனோடு வைகுந்தம்‌ 
புக்கருப்பாரே '' என்றும்‌ மரதவனே ஸர்வபோேஷியாகவும்‌. 
மோக்ஷ ப்ராப்யனாகவும்‌ ஆகிறானென்று அருளிச்செய்தார்‌ 
கள்‌. ஸர்வேங்வரன்‌ ஜகத்காரணமாம்போ தும்‌. பிராட்டிக்கு 
ப்ரேரகத்வருபமான அந்வயம்‌ உண்டென்பதை ஆளவகங்தார்‌, 
ஆழ்வான்‌. பட்டர்‌ முதலானோர்‌ தம்‌ ஸ்தோத்ரங்களில்‌ அருளிச்‌ 
செய்தனர்‌. பெரியவாச்சான்பிள் ளையும்‌, அவருடைய திருக்‌ 
குமாரரான நாயனாராச்சான்பிள்ளையும்‌ அருளிச்செய்த சது: 
ச்லோ& வியாக்கியானங்களிலும்‌ இவ்விஷயம்‌ விவரிக்கப்‌ 
பட்ட துஎம்பெருமான்‌ சேதனர்களுடையஹ்ருதயகமலத்தில்‌ 
பீராட்டியுடன்‌ கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்‌ 
பது “ஸர்வபூ,தஹ்ருத,ப்ஜஸ்த; "என்று ப்ராஹ்ம புராணச்‌ 
திலும்‌, “மார்வ மென்பதோர்‌ கோயிலமைத்து மாதவனென்‌ 
னும்‌ தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்‌ பேசப்‌ 
பட்ட ச, வ்யூஹவிபவார்ச்சாவதாரங்களிலும்‌ இவளுடன்‌ 
கூடியவனாகவே எம்டெருமான்‌ விளங்குகிறானென்பது ஸகல 
ப்ரமாணஸித்தம்‌. (மாதவன்‌) 01" என்று புருஷஹோத்தமனை 
அடைவதற்கு ஸாகுனமான பரவித்யை சொல்லப்படுவதாக 
வும்‌ அந்து வீத்யைக்கு ப்ரவர்த்தகனாகையால்‌ இவன்‌ மாதவ 
னெனப்‌ படுகரொனென்‌ றும்‌ கொள்ளலாம்‌. 

“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ 
பவாந | 
தஸ்மாந்மாத,வநாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்‌,தி,த: | "` 
"* 197 ' ' என்று ஹரியை ப்ரதிபா திக்கும்‌ வித்யை சொல்லப்‌ 
படுகிறது. அதற்கு ஸ்வாமீயாயிருப்பதால்‌ நீர்‌ மாதவ 
னென்று சொல்லப்படுகதிறீர்‌. * தவன்‌ ' என்றும்‌ ८४15552 
ஸ்வாமியென்‌ னும்‌ பொருளையுடைய து. ] என்று இவ்வர்த்தம்‌ 
ஹரிவம்ம த்தில்‌ ஆதரிக்கப்பட்டது. 

“மள நாத்‌ த்‌,யாஈாச்ச யோகாச்ச வித்‌,தி, பாரத மாதவம்‌ ”' 

[பரதகுலத்‌துதித்தவனே! மெளநத்தினாலும்‌. தியானத்தி 
னலும்‌. யோகத்தினாலும்‌ மாதவனென்று அறிவாயாக. | 
என்று வியாஸ்ர்‌ சொல்லியபடியும்‌ மாதவநாமத்திற்குப்‌ 
பொருள்‌, கொள்ளலாம்‌. “மது,வித்வா 5வபே த்‌,யத்வாத்‌,வா'' 
[மதுவித்யையினால்‌ அறியப்படுமவனகையாலே மாதவ 
னெனப்படுகிறான்‌ .] என்றும்‌ சங்கரர்‌ பொருளுரைத்தார்‌. 
“ மது,குலே ஜாதத்வாந்‌ மாத,வ: '' [மதுகுலத்தில்‌ பிறந்தவ 
னாகையாலே மாதவனாகிறான்‌ ] என்றும்‌ பொருள்கொண்ட 
னர்‌. “மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:'' / "00" 
என்று லக்ஷ்மியும்‌. “தீ; ' என்று ஸரஸ்வதியும்‌ சொல்லப்‌ 
படுகின்‌ றனர்‌. அவர்களை ரக்ஷிக்கறானாகையால்‌ மாதவனா 
கிறான்‌.] என்றும்‌ சங்கரர்‌ பொருள்‌ கொண்டார்‌. இப்படிப்‌ 
பல பொருள்களை உடையதாயிருந்தபோதிலும்‌, எல்லா 
ஆழ்வார்களாலும்‌ .ஆகரிக்கப்பட்டதான லக்ஷ்மீநாதன்‌ என்‌ 
னும்‌ பொருளே இவ்வீடத்திற்குப்‌ பொருளாகக்கடவ து. 

இப்படி அச்யுதனாகவும்‌, கோவிந்தனாகவும்‌, கேசவனாக 
வும்‌, ஈராராயணனென்‌ னும்‌ அஸாதரீரணமான திருநாமத்தை 
உடையவனாகவும்‌, பிராட்டியுடன்‌ கூடியவனாகவும்‌ எழுந்‌ 
கருளியிருக்கறொன்‌ ஸர்வேங்வரன்‌ என்று இதுவரையில்‌ 
கூறப்பட்டது. இப்படிப்பட்ட பெருமைகளையுடையவனாக 
இவன்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்‌ னுமிடத்துக்கு ப்ரமாண 
மென்ன? என்ற ப்ரங்னம்‌ பிறக்க, வேதவாக்கியங்களே 
இவ்விஷயத்தில்‌ ப்ரமாணம்‌ என்று சொல்லுறது கோவிர்‌ 
தன்‌ என்னும்‌ திருநாமம்‌, கேறாப்ப்‌,த, கத்தினால்‌ வேதவாக்கியங்‌ 
களைச்‌ சொல்லுறெதாகையால்‌ வேதத்தால்‌ ப்ரதிபா திக்கப்‌ படுமவன்‌ என்று 
கோவிந்தநாமத்திற்குப்‌ டொருளே ற்படு கிறது. 
இவன்‌ அடியவர்களை ஈழுவவிடாத அச்யுத 
என்னுமதுக்கு ப்ரமாணம்‌ * மமாங்வதம்‌ மபிவமச்யுதம்‌ நாரா 
யணம்‌ '' என்னும்‌ நாராயணா நுவாகம்‌. த்ரிவித,பரிச்சே,க, 
மற்றவனாகவும்‌, அளவற்ற ரூபகுணவிபங்களையுடைய 
வனாகவுமுள்ள அந்தன்‌ என்பதற்கு ˆ" ஸத்யம்‌ ஜ்ஞா௩ம ந்‌ 
தம்‌ ப்‌,ரஹ்ம'' -“யதே,கமவ்யக்தமநந்தரூபம்‌'' -அ௩ந்தமவ்யயம்‌ 
கவிம்‌ ஸமுத்‌,ரேந்தம்‌'' முதலான தைத்திர்யோடநிஷத்‌ 
வாக்யங்களும்‌. '*அநந்தணங்சாத்மா விங்வரூபோ ஹ்யகர்த்தா'' 
என்னும்‌ ங்வேதாமவதரவாக்கியமும்‌ ப்ரமாணமாகின்‌ றன. 
இப்பரமபுருஷனே பல அவதாரங்களெடுதக்து. காழ்ந்தோ 
ருடன்‌ ஒரு நீராகக்‌ கலந்து பரிமாறும்‌ கோவிந்தனாகிறான்‌ 
என்பதற்கு ப்ரமாணம்‌ --அஜாயமாநோ பஹுத,ா விஜா- 
யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌'” [பிறப்பில்லாத 
புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கறொன்‌. புத்திமான்‌ 
களில்‌ சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின்‌ ரஹஸ்யத்தை 
அறிதிறார்கள்‌.] “யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத்‌ | 
ஸ உ ங்ரேயோாந்‌ பவதி ஜாயமா௩:! தம்‌ தீ,ரரஸ: கவய 
உந்நயந்தி |” [ யெளவனத்தை உடையவனாகவும்‌, அழகிய 
பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌. (நித்யஸமரிகளால்‌) கூழப்‌ 
பட்டவனாகவும்‌ அப்பரமபுருஷன்‌ தோன்‌ றினான்‌. அவன்‌ 
பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான்‌. அவனை 
ஞானிகளான கவிகள்‌ அறிதறார்கள்‌.]. “பிதா புத்ரேண 
பித்ருமாக்‌ யோநியோநெள ஈந$வேத,விந்மநுதே தம்‌ ப்‌;ரு- 
ஹந்தம்‌ ' [ஸர்வலோக ` பீதாவான புருஷோத்தமன்‌, 
ஒவ்வொரு அவதாரத்திலும்‌ தன்னால்‌ பிறப்பிக்கப்பட்ட 
ஒருவனைப்‌ பிதாவாகக்கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை 
அறியா தவன்‌ அவனுடைய பெருமையை அறியமாட்டான்‌. ] 
முதலியவை. ப்ரஹ்மருத்ராதிகளூக்மும்‌ உத்பாதகனாய்‌, 
புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன்‌ இவனே 
என்பதை "ण நூராயணாத்‌ (137 000 ஜாயதே | நாராயணாத்‌ 
ருத்‌;ரோ ஜாயதே? [ஈாராயணனடயிருந்து பிரமன்‌ பிறக்‌ 
கீறான்‌. நாராயணனிடமிரும் து உருத்திரன்‌ உண்ட றான்‌. ] 
'ஹிரண்யகேரு:'' [ ஸுவர்ணம்‌' பான்‌ று அழயெ தஇருக்குழல்‌ 
கற்றைகளை உடையவன்‌] முகலிய வேறவாக்கியங்கள்‌ 
உத்கோவஷித்தன. இவன்‌ நாராயணமுயெயெழுந்தறாளியிருக்கும்‌ 
இருப்பும்‌, = `" விஸ்வம்‌ நாராயணம்‌ '' என்று தொடங்கி 
“ நரராயணபரமி ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | ஈாராயண 
பரோ ஜ்யோதிரர்த்மா நாராயண: பர:। யச்ச கிஞ்சிஜ்ஜக,த்‌ 
யஸ்மிந்‌ த்‌;ருங்ய்தே ங்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிங்ச தத்‌ 
ர்வம்‌ வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ '' என்று நாராயணானு 
வாகத்திலும்‌, “ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌ '' முதலிய 
வாக்கியங்களால்‌ மஹோபநிஷத்திலும்‌. “ சகக்ஷாங்ச த்ரரஷ்ட. 
வ்யஞ்ச நாராயண:। ங்ரோத்ரஞ்ச மரோதவ்யஞ்ச நாராயண:'' 
என்று தொடங்கி, --இருங்ச ப்ரதி,மமங்ச ஸர்வம்‌ ஈாராயண:"' 
என்று ஸுபாலோபனிஷத்திலும்‌. “ஏஷ ஸர்வபூதாந்த- 
ராத்மா........ ஏகோ நாராயண: '' என்று அந்தர்யாமி (1301 60 
மணத்திலும்‌. மற்றுமுள்ள நா ராயணோடனிஷத்‌ முதலியவை 
களிலும்‌ கோஷிக்கப்பட்டன. 

இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான்‌ | 
பிராட்டியுடன்‌ கூடவே எழுந்தருளியிருக்கறான்‌ என்பது, 
^° ஹ்ரீங்ச தே லக்ஷ்மீங்ச பத்ந்யெள '' [உனக்கு ஸ்ரீ பூமிதேவி 
கள்‌ பத்னிகள்‌.] “' அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்&ீ '' 
[இப்பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும்‌, விஷ்ணு 
வுக்குப்‌ பத்தினியா கவும்‌ இருக்கிறாள்‌. ]. “ஸ்ரத்‌,த,யா தேவோ 
தேவத்வமங் நுதே'” [ங்ரத்‌,;க,ா ரப்கத்தினால்‌ சொல்லப்படும்‌ 
பிரோட்டியினா லேயே ஈச்வரன்‌ ஈச்வரத்தன்மையை அடை 
கிறான்‌.] “ஆநீதவாதம்‌ ஸ்வத,யா ததே,கம்‌?' [ஒன்றுமில்‌ 
லாத ப்ரளயகாலத்தில்‌ ஸ்வத,ா சப்த த்தனால்‌ சொல்லப்படும்‌ 
பிராட்டியுடன்‌ கூடிய பகவான்‌ ஒருவனே இருர்கால்‌ | 
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில்‌ ஸமுத்கோவிச்கப்டட்டது. 

ஆக, இப்படி எச்யுதா £, நாமங்களையும்‌ அலைகளில்‌ 
சொல்லப்பட்ட பெருமைகளையுமுடையவன்‌ ஸர்வேங்வரன்‌ 
என்பதற்கு ப்ரமாணம்‌ வேதம்‌ என்று கோவிந்த நாமத்‌ 
தால்‌ கோ ஷிக்கப்படுறெது. இந்த கோவிந்த நாமத்திற்குள்ள 
மற்ற பொருள்கள்‌ அநந்த நாமத்திற்கடுத்த கோவிந்த 
நாமத்திம்த அர்த்‌ கமெழுதுகையில்‌ காட்டப்பட்டன. 
அந்த கோவிந்தநாமதீதால்‌ ஸெளலப்யகு,ணப்ரகாபகமான 
கிருஷ்ணாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, 
ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம்‌ பேசப்படுகிறது. ஆகையால்‌ 
புநருக்தியில்லை, 


ஆக, கேசவன்‌ முதலான நான்கு திருநாமங்களால்‌ 
பரத்வம்‌ பேசப்பட்டது. இனி விஷ்ணு என்னும்‌ திறா 
நாமத்தினால்‌ நான்காவது வியூஹமான அரிருத்தமூர்த்தி 
சொல்லப்படுகிறார்‌. இவ்விடத்தில்‌ “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி 
ஸ்தி,திஸம்ஹ!ரார்த்தஹமாகவும்‌. ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, 
மாகவும்‌, உபாஸகாறுக்மஹார்த்தமாகவும்‌. ஸங்கர்ஷண 
ப்ரத்யும்நாநிருத்‌கருபேண நிற்கும்‌ நிலை. பரத்வத்தில்‌ 
ஜ்ஞாநாதிகளாறும்‌ பூர்ணமாயிருக்கும்‌. வ்யூஹத்தில்‌ 
இவ்விரண்டு குணம்‌ ப்ரகடமாயிருக்கும்‌, அதில்‌ 
ஸங்கர்ஷணர்‌ ஜ்ஞாஈபலங்கள்‌ இரண்டோடும்‌ கூடி ஜீவ 
தத்வத்கை அதிஷ்டி,த்து, அத்தை ப்ரக்ருதியில்‌ நின்றும்‌ 
வி ०, & ऊ ॐ, ப்ரத்யும்ரவஸ்கையையும்‌ ப.ஜித்து, 
ஸரஸ்த்ரப்ரவர்த்தன 5 5८/८2 @ 58 ॐ ® (7 & 7 ¢ ॐ = 5 ५, 2 
பண்ணக்கடவராயிருப்பர்‌. பீரத்யும்ர்‌ ஐமண்வர்யவீர்யங்க 
ளோடும்கூடி மாஸ்தத்வத்தை அதி ஷ்டி,த்து. தர்மோபகே, 
பத்தையும்‌. மநுச துஷ்டயம்‌ தொடக்கமான புத்‌, க,வர்க்க, 
ஸ்ருஷ்டியையும்‌ டண்ணக்கடவராயிருப்பர்‌. அரறிருத்தர்‌; 
பக்‌ திச தஜஸ்ஸுக்கள்‌ இரண்டோடும்க்டி ரக்ண த்துக்கும்‌, 
தக்வஜ்ஞா௩ப்ரதரான த்துக்கும்‌ காலஸ்ருஷ்டிக்கும்‌, (40४0 
ஸ்ருஷ்டிக்கும்‌ கடவராயிருப்பர்‌. '' என்று பிள்ளைZலோகா 
சார்யர்‌ தத்வத்ரய த்தில்‌ அருளிச்செய்ஃ ஸ்ரீஸூக்திகள்‌ அநு 
ஸந்திக்கத்தக்கவை, விஷ்ணுசப்குத்தால்‌ சொல்லப்படுகிறவர்‌ 
அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்‌: 

“த்ரிபாதூர்த்‌,வ உதைதத்‌ புருஷ: பாதேர 5ஸ்யேஹாப,வாத்‌ புந;! 

ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸா முகா ९८८७ அபி, |” 
[பரமபதத்திலுள்ள பரமபுருஷன்‌ மூன்‌ று உருவங்களை 
உடையவரா ஸங்கல்பித்தார்‌. பரம்பதரநாதனுடைய ஒரு 
அவதாரமான அநிருத்தர்‌ மறுபடியும்‌ இங்கு அவதரித்தார்‌. 
அதன்பிறகு ஸர்வவீத,மான சே கனர்களையும்‌ ர௯்ஷிப்பத ற்காக 
இவ்வுலகையெல்லாம்‌ (அவதாரம்‌ செய்தவன்‌ மூலம்‌) வியா 
பித்தார்‌.] என்று புருஷஸ மக்தத்தில்‌ அநிருத்தரைக்குறித்து 
விஷ்ணுசப்தார்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டது. மேலும்‌, 
அநிருத்தரே ப்ரஹ்மருத்ரர்களுக்கு . இடையில்‌ பத்மநாப 
ராகிய விஷ்ணுவாக அவதரித்தார்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ 
சொல்லுகையாலும்‌. கார்யவாசிப்தம்‌ காரண 5 5 स 
சொல்லுமாகையா லும்‌, “பத்மநாபர்‌' என்று ப்ரதமாவதார 
மான விஷஸ்ணுவைத்‌ தனியே இங்கு எடுக்கையா லும்‌ இங்கு 
விஷ்ணுசப்தம்‌ அநிருத்த நாராயணனைச்‌ சொல்லக்கடவது. 
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிறாத்தரை எடுத்த துக்குக்‌ கருத்தென்னெனில்‌: 

“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ்‌ ததைவ ச | 
ஷட்த்ரிம்மமத்ஸங்க்‌,யாஸங்க்‌,யா தா: ப்ராத,ந்யே 
கணேங்வர |! 
ஷட்த்ரிம்ப்த்‌,பே,த,பி,ந்காஸ்தே பத்‌மநாபாதி,கா: ஸுரா: | 
29 93878 ஸமுத்பந்நா தீ,பாத்‌, 8,பா இவேங்வரா: |” 
[ விஷ்வக்ஸேரே! பத்மநாபன்‌ முதலிய முக்கியமான விபவா 
வதாரங்கள்‌ முப்பத்தாறாகும்‌. இப்படி பத்மநாபன்‌ முதலிய 
முப்பத்தாறு விபவமூர்த்திகளும்‌. விளக்கிலிருந்து உண்டான 
வீளக்குகள்போல்‌ அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித்‌ 
தார்கள்‌. ] என்று விஷ்வக்ஸேோஸம்‌ ஹிதையில்‌ சொல்லிய 
படியே, பீன்‌ சொல்லப்போகும்‌ பத்மநாபன்‌ , திரிவிக்கிரமன்‌ , 
வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ மூர்த்திகளுக்கு மூல 
மூர்த்தி அநிருத்தரேயாகையால்‌ அவரை இங்கு எடுக்கிறது. 
நிற்க; வீஷ்ணுபப்தத்தின்‌ பொருளை இனி விவரிட்மோம்‌. 

“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ '' என்று அவதாரத்தினால்‌ 
வீயாபித்திருப்பத, விஷ்ணுபப்தார்த்தமாகப்‌ புருஷஸமக்தத்‌ தில்‌ பேசப்பட்டது, 

“வ்யாப்ய ஸர்வாநிமாக்‌ லோகாந்‌ ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ: 
ததமச விஷ்ணுநாமாஸி விமோர்‌ தளாதோ: ப்ரவேமுநாத்‌ |!” 
[கேசவனாகிற தேவரீர்‌ இந்த எல்லா உலகங்களையும்‌ எங்கும்‌ 
வியாபித்து நிற்கிறீர்‌; ஆகையால்‌ வீஷ்ணுவென்னும்‌ இரு 
நாமத்தையுடையவராய்‌ விளங்குகிறீர்‌ 'விம' என்னும்‌ தாது 
ப்ரவேசித்தல்‌ என்னும்‌ பொருளையுடைத்தாயிருப்பதால்‌. ] 
என்று ஸ்ரீவராஹபுராணத்தில்‌ சொல்லப்பட்டபடியே எங்‌ 
கும்‌ தன்‌ ஸ்வரூபத்தால்‌ வியாபிக்து நிற்பவன்‌ விஷ்ணு வென்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 

“யஸ்மாத்‌, விஷ்டமித,ம்‌ விஸ்வம்‌ தஸ்ய முக்த்யா மஹாத்மர: | 
தஸ்மாத்‌ ஸ ப்ரோச்யதே விஷ்ணுர்‌ விமேர்‌ த,௱தோ: 

ப்ரவேமாநாத்‌ ||” 
[மஹாத்மாவான அப்பரமபுருஜனுடைய சக்தியினால்‌ இவ்‌ 
வுலகமெல்லாம்‌ வியாபிக்கப்பட்டிருப்பதால்‌ அவன்‌ விஷ்ணு 
வெனப்படுகீறான்‌; விம ' என்னும்‌ தாது வியாபித்தலைச்‌ 
சொல்லுவதால்‌.] என்று வீஷ்ணுபுராணந்திலும்‌, ஆதித்ய 
புராணத்திலும்‌ சொல்லியப்டியே சக்தியினால்‌ எல்லா 
வஸ்துக்களையும்‌ வியாபித்திருப்பவன்‌ என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. 
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா | 
ஸம்ஸாரவேமுநாத்‌ பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥ 

[பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியான து 
ஆகாயம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்கிறது. இப்படி இவ்‌ 
வுலகம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்பதால்‌ நான்‌ வீஸ்ணு 
வென்று சொல்லப்படுகிறேன்‌.] என்று மஹாபாரதத்தில்‌ 
சொல்லியபடியே ஸர்வவ்யாபினியான விக்‌,ரஹகாந்தியை 
உடையவன்‌ என்றும்‌ விண்ணுசப்தத்துக்குப்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. * யதள ஸர்வக,தோ விஷ்ணு: '' [விஷ்ணு 
வானவர்‌ எப்படி ஸர்வ வியாபியாயிருக்இறோரோ....] என்று 
ஸ்ரீவிஸ்ணுபுராணத்தில்‌ சொல்லியபடியே வீக்ரஹத்தாலே 
எங்கும்‌ வியாபித்து நிற்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ள 
லாம்‌. இவ்வர்‌,த்தங்களெல்ல/ம்‌ ==" ' விஷ்ணுர்‌ விக்ரமணாத்‌ 
தேவ: "' என்று பாரதம்‌ உத்யோகபர்வத்தில்‌ உணர்த்தப்‌ 
பட்டது. இப்படி இவன்‌ எல்லாவற்றையும்‌ வியாபித்து 
விளங்குவதால்‌ எல்லாம்‌ இவனே என்று சொல்லலாம்படி 
யிருக்கறானென்‌ பதை 


“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்‌ பு,வகாநி விஷ்ணுர்‌ 
வநாநி விஷ்ணுர்‌ கி,ரயோ தி,மமமச | 
ஈத்‌,ய: ஸமுத்‌,ராமங்ச ஸ ஏவ ஸர்வம்‌ 
யத,ஸ்தி யந்காஸ்தி ऊ விப்ரவர்ய ॥”' 
[விப்ரங்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும்‌ விஸ்ணுவே; 
புவனங்களும்‌ விஷ்ணுவே; வனங்களும்‌ விஷ்ணுவே: மலை 
களும்‌. திக்குகளும்‌, நதிகளும்‌. ஸழுத்ரங்களும்‌, “ இருக்கிறது 
என்றேள்ப்போதும்‌ சொல்லப்படும்‌ ஜீவததீவமும்‌. இல்லை 
என்னும்‌ வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும்‌ 
ஆகிய எல்லாம்‌ அந்த பகவான்‌ விஷ்ணுவே.] என்று 
விஷ்ணுபுராணம்‌ உத்கோவித்தது. 


“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்‌,விவக்தந மஹஸ்தே 
விஷ்ணோ ஸுமதிம்‌ பஜாமறஹே '' [விஷ்ணுவே! உன்னுடைய 
திருநாமத்தை அறியும்‌ நாங்கள்‌. உன்னுடையது போன்‌ ற 
தேஜஸ்ஸையும்‌ தெளிவான ஞானத்தையும்‌ அடைகிறோம்‌. | 
என்று ருக்வேதத்திலும்‌, தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பத, 
என்றும்‌. `" விஷ்ணோர்‌ யத்‌'பரமம்‌ பத,ம்‌'' என்றும்‌, “ மமம்‌ 
நேோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்‌,  “விஷ்ணுக்ராந்தே 
வஸுந்த,ரே” என்றும்‌ “விஷ்ணோ: பதே, பரமே மத்‌,வஉத்ஸ.:”' 
[வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ரறாத 
தரைகள்‌ பொழிகின்‌ றன. ] என்றும்‌, மற்றும்‌ பல பலவேத 
வாக்கியங்களிலும்‌இத்திருநாமம்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்ட த. 


“தஸ்மாத்‌, விராடீ,ஜாயத''[ அந்த அநிருத்‌ தநா ராயணனிட 
யிருந்து பிரமன்‌ உண்டானான்‌. ] என்று (10 ०७०४९55 9.5 2248, 


"" 56017 5५10 ஐகந்காதேர ப்‌,ரஹ்மாணமஸ்ருஜத்‌ புக: ।”' 

[நான்காவது மூர்த்தியான = (@) ० ० क क 5 5 7 பிரமனை 
ஸ்ருஷ்டித்தார்‌.] ` नन्त ¢ விஷ்வக்ஸேஸம்‌ ஹிதையிலும்‌ 
சொல்லப்பட்டடடியே பிரமனைப்‌ பிறப்பித்தவரான 
அநிருத்தமூர்த்தி விஷ்ணுசப்தத்தால்‌ சொல்லப்பட்டார்‌, 
அடுத்தபடியாக, அப்பிரமனைப்‌ பிறப்பிக்குமளவே 
யன்று. அவனாக்குத்‌ துன்பம்‌ வந்தபோது அதைப்போக்‌ 
கடிப்பவனும்‌இவனே என்று உணர்த்தகறெது மதுஸதென்‌” 
என்னும்‌ திருநாமம்‌. கேசவன்‌ என்று தொடங்கி கோவீர்கன்‌ 
என்பது வரை பரத்வம்‌ பேசப்பட்டது. விஷ்ணுவென் று 
வியூஹம்‌ உணர்த்தப்பட்டது. மதுஸூதனன்‌ என்னும்‌ 
இக்திருநாமம்‌ தொடங்கி விபவாவதாரம்‌ விவரிக்கப்படு 
கிறது. .*' யோ (जा छा कता வித,த,தி பூர்வம்‌ யோ வை 
வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ" ( எவனொருவன்‌ பிரமனை 
முதலில்‌ பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்‌ 
கிறானோ] என்று வேதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வே 
வரன்‌ வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உடபகதேசித்தருளினான்‌. 
நான்கு சிசுரூடமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும்‌, 
மது. கைடடன்‌ என்னும்‌ இரு அஸாரர்கள்‌ பிரமனிட 
மிருந்து பறித்துக்கெொண்டுபோய்‌, ரஸ்‌்ாதலத்தில்‌ ஒளித்து 
வைத்தனர்‌. வேதங்களை இழந்த அட்பிரமனும்‌, “ கண்ணிழந்‌ 
தேன்‌. தனமிழந்தேன்‌ ' என்‌ று கேசவனை நோக்கிக்‌ கதறினான்‌. 
இக்கூக்குரலைக்கேட்ட கருணே வள்ளலூன அப்பெருமானும்‌ 
ஹயக்ரீவாவதாரம்‌ செய்து மது கைடபர்களை ஸம்ஹரித்துப்‌ 
பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்‌ இப்படி 
ப்ரத, மஜனான (முதலில்‌ பிறந்தவனான ) பிரமனுக்குச்‌ செய்த 
உபகாரமாகையாலே இது அவதாரங்களுள்‌ முதலில்‌ அநு 
ஸந்திக்கப்படுகிறது. ( மதுஸூதனன்‌ ) மதுவென்னும்‌ 
அஸாரனைக்‌ கொன்‌ றவன்‌. इ 


“கர்ணமிங்ரோத்‌,ப,வம்‌ சாபி 0 क, மஹாஸுரம்‌ | 
ப்‌ரஹ்மணோபசிதிம்‌ குர்வங்‌ ஜக, புருஷோத்தம: | 

தஸ்ய தாத ०4५१65५०) 8655915 57594015 641; 

081५०४७5 இத்யாஹு: ௬ுஷயங்ச षा 7 55800 |” 
[பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும்‌ 
பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப்‌ 
புருஷோத்தமன்‌ கொன்றான்‌. குழந்தாய்‌! அவனைக்‌ கொன்ற 
தாலேயே., தேவர்கள்‌. அஸாுரர்கள்‌, மனிதர்கள்‌. ரிஷிகள்‌ 
ஆகிய யாவரும்‌ ஐஈார்‌தனனை மதுஸதனனென்று சொல்லு 
கிறார்கள்‌.] என்று மஹாபாரதத்தில்‌ இந்த நாமத்தின்‌ 
பொருள்‌ உரைக்கப்பட்ட த. 


“த,த்‌ருமாதேரவிந்த,ஸ்தழம்‌ ப்‌,ரஹ்மாணமமிதப்ரப,ம்‌ | 
ஸ்ருஐஜந்தம்‌ ப்ரத,மம்‌ வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள | 
ததோ விக்‌,ரஹிணஸ்தாம்ஸ்‌ த த்ருஷ்ட்வா 

தாவஸுரோத்தமெள | 
வேதஞ்ஜக்‌,ருஹதூ ராஜம்‌ ப்‌,ரஹ்மண: பங்யதஸ்‌ ததா ॥ 


அத, தெள தளநவங்ரேஷ்டெள க்‌,ருஹீத்வா தாந்‌ 
ஸ௩ராதநார்‌ | 


ரஸாம்‌ விவிமதுஸ்‌ தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள || 
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்‌,ரஹ்மா கங்மலமாவியத்‌ | 
ததோ வச௩மீமா௩ம்‌ ப்ராஹ வேதைர்‌ விநாக்ருத: ॥ 

ப்‌,ரஹ்மா:-வேத;ா மே பரமம்‌ சக்ஷார்‌ வேதா மே பரமம்‌ தம்‌। 
வேதா மே பரமம்‌ @ 4710 வேத; மே ப்‌,ரஹ்ம சோத்தமம்‌ | 
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்‌,யாம்‌ ப,லாதி,த: | 
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள்‌ விவர்ஜிதா: || 
வேதே, ஹ்ருதே5ஹம்‌ கம்‌ குர்யாம்‌ லோகாந்‌ வை 

ஸ்ரஷ்டுமுத்‌,யத: | 

அஹோ பத மஹத்‌, து, க்சும்‌ வேத;ாமமாஜம்‌ மம | 

ப்ராப்தம்‌ துநோதி ஹ்ருதயம்‌ தீவ்ரரேர காமயஸ்த்வயம்‌ | 
கோ ஹி மோகார்ணவே மக்‌,நம்‌ மாமிஹாத்‌,ய ஸமுத்‌.த,ரேத்‌। 
இத்யேவம்‌ ப,௱ாவுமாணஸ்ய ப்‌,ரஹ்மணோ ந்ருபஸத்தம | 
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்‌;,பூ,தா புத்‌,திர்‌ புத்திமதாம்‌ வர॥ 
ததோ ஐகெள பரம்‌ ஜப்யம்‌ ப்ராஞ்ஜலி: ப்ரக்‌,ரஹம்‌ ப்ரபு,:॥| 
ஏதஸ்மிந்நந்தரே ராஜ்‌ தேவேர ஹயமபிரோத,ர:। 
ஐக்‌,ராஹ வேதளநகலொந்‌ ரஸாதலக,தாந்‌ ஹரி: ॥ 
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர்‌ தத: ஸ்வாம்‌ ப்ரக்ருதிம்‌ 
யயெள ॥ 
ததஸ்தயோர்‌ வதே,நா மரு வேதாபஹரணேந ச | 
போ காப௩ய௩ம்‌ சக்ரே ப்‌, ஹ்மண: புருஷோத்தம: || ”” 

[மது கைடடன்‌ என்னும்‌ அஸுரர்கள்‌ அளவற்ற ஒளியை 
யுடையவனும்‌. தாமரைமலரில்‌ வீற்றிருப்பவனும்‌, அழகிய 
உருவையுடைய நான்கு வேதங்களையும்‌ முதன்முதலில்‌ 
ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப்‌ பார்த்தனர்‌. சரீரத்துடன்‌ 
கூடிய அ௮வ்வேதங்களைக்கண்ட அந்த அஸாரர்கள்‌ பிரமன்‌ 
கண்டுகொண்டிருக்கும்போதே அவைகளை எடுத்துக்‌ 
கொண்டனர்‌. பிழகு அவ்வஸாுரங்ரேஷ்டர்கள்‌ பழமை 
யான அவ்வேதங்களை எடுத்துக்கொண்டு. நீர்கிறைந்த 
கடலினுள்ளிருக்கும்‌ ரஸாதலத்தினுள்‌ விரைவில்‌ நுழைந்‌ 
தனர்‌. இப்படி வேதங்கள்‌ கவரப்பட்டபின்‌ பிரமனைத்‌ 
துக்கம்‌ பீடித்தது. அதன்பின்‌ வேதங்களை இழந்த நான்முகன்‌ 
ஈச்வரனைக்‌ குறித்துப்‌ பின்வருமாறு உரைத்தனன்‌ -— 
“வேதங்களே எனக்கு மேலான கண்‌; வேதங்களே எனக்கு 
மேலான தனம்‌. வேதங்களே எனக்கு மேலான ஓளி. 
எனக்குப்‌ பெருமையைக்‌ கெரடுப்பவைகளில்‌ வேதங்களே 
சிறந்தவை. அஸாரர்களுடைய பலத்தினால்‌ என்னுடைய 
வேதங்களெல்லாம்‌ இங்கிருந்து பறிக்கப்பட்டன. வேத 
மற்றவையான இவ்வுலகங்கள்‌ இருள்‌ சூழ்ந்தவையாயின. 
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான்‌ வேதமில்லாமல்‌ 
என்ன செய்வேன்‌ ? வேதங்கள்‌ நசித்ததினால்‌ எனக்குப்‌ 
பெருந்துன்பம்‌ ` வந்தடைந்துவிட்டது.. திவ்ரசோகமான 
இந்த வியா த: என்‌ மனத்தைத்‌ அன்புறுத்துகிறது. இத்‌ 
அன்‌ பக்கடலில்‌ முழுகும்‌ என்னை யார்தான்‌ | கரையேற்ற 
முடியும்‌ ?'' என்று இம்மா திரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி 
ருக்கும்போது ' ஹரியை ஸ்தோத்ரம்‌ செய்யவேண்டுமென்‌ 
னும்‌ புத்தி அவருக்கு உண்டாயிற்று. அதன்பிறகு படைக்‌ 
கும்‌ கடவுளான அவர்‌ கைகூப்பி நின்று, மிகச்‌றெந்த 
இந்த ஸ்தோத்ரத்தைப்‌ பாடினார்‌.........இத,ற்கடையில்‌ 
பகவான்‌ ஹரி குதிரைபோன்ற முகத்தையுடைய ஹயக்ரீவ 
ராய்‌ அவதரித்து, . ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை 
யும்‌ எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம்‌ கொடுத்தருளினார்‌. 
அதன்பின்‌ பிரமன்‌ தன்‌ இயற்கை நிலையை அடைந்கனன்‌. 
இப்படி அந்த அஸாரர்களைக்‌ கொன்றும்‌. வேதங்களை 
மீட்டுக்கொணர்ந்தும்‌ ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப்‌ 
புருஷோத்தமன்‌ போக்கடித்தான்‌.] என்று மஹாபாரதத்‌ 
தில்‌ இந்த விருத்தாந்தம்‌ விவரிக்கப்பட்ட து. 

“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரம்ப,ா- 

.கரப, क 59 क 79, ரூப்யதரர்ப்பம்‌ | 

ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: 

இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || '' 

[மது ` கைட்பர்களுடைய கொழுப்பைக்‌ குலைத்ததுபோல்‌, 
வாழைத்தண்டு, தையின்‌ வெளிப்புறமான கரப,ப்ரதேசம்‌; 
யானைத்‌ துதிக்கை ஆகிய இவைகளின்‌ அழகுச்செருக்கையும்‌ 
அடக்கி, -அந்த கர்வத்தினால்‌ பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க 
நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை உபமான 
மாகச்‌ சொல்லுவோம்‌] என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்த 
வத்திலும்‌. ' “யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள '' [மது 
கைட்பர்களா கிய துஷ்டப்புழுக்களைப்‌ பிசைந்து கொன்றவை 
களான இதிருத்துடைகள்‌] என்று ஆழ்வான்‌ ஸாந்தர 
பாஹுஸ்தவத்திலும்‌ அருளிச்செய்தபடியே மது கைடபர்‌ 
கள்‌ பகவானால்‌ தடையினால்‌ இறுக்கிக்‌ கொல்லப்பட்டனர்‌ என்பது பிரஸித்தம்‌. 

+" காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌ 
ஏய்ந்த பணக்குதிர்மேல்‌ வெவ்வுயிர்ப்ப-— வாய்ந்த 
மதுகைடபரும்‌ வயிறுருகி மாண்டார்‌ 
அதுகேடவர்க்திறுதியாங்கு '' [மூன்‌ திருவ 68] என்று 
எம்பெருமானுடைய . ங்வாஸத்தாலேயே மதுகைடபர்கள்‌ 
மாண்டனர்‌ என்று பேயாழ்வார்‌ அருளிச்செய்தார்‌, 
கீல்பரந்தரத்தில்‌ இப்படியுள்ளதாகவும்‌ கொள்ளலாம்‌. 
அன்‌ றிக்கே. எம்பெருமான்‌. அயாலஸம்‌ சிறிதுமின்‌ றி அவர்‌ 
களை முடித்தபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
இந்த மது கைடபர்கள்‌ பிரமனுடைய கர்மாநுபவத்தின்‌ 
பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்‌. 
ரஜஸ்‌தமோகுணங்களே வடிவெடுத்தவர்கள்‌ இவர்களென்‌ று 
பாஞ்சராத்ர சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட து. பிறக்கும்‌ 
போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக்‌ 
குறித்துத்‌ தாங்கள்‌ சொல்லுகறோர்களேோ அவர்களாலேயே 
சாவு நேரவேண்டுமென்ற வரத்தைப்‌ பெற்றனர்‌. வேதங்‌ 
களுடன்‌ கூடிய ப்ரஹ்மாவைக்கண்டு வேதங்களைக்‌ கவர்ந்து 
ரஸாதலத்தில்‌ ஜளித்தனர்‌. . பிரமனால்‌ ஸ்தோத்ரம்‌: செய்யப்‌ 
பட்ட பகவான்‌ ஹயக்ரீிவாவதாரம்‌ செய்து ஓர்‌ இனிய 
இசையைப்‌ பாட. அவ்வொலியைக்கேட்ட அவ்வஸுரர்கள்‌ 
வேதத்தை வைத்துவிட்டு ஒலி வரும்‌ வழியில்‌ சென்றனர்‌. 
பகவான்‌ மற்றொரு வழியாகச்சென்‌ று வேதங்களை மீட்டுப்‌ 
பிரமனிடம்‌ கொடுத்தருளினான்‌. வேதங்களைக்‌ காணாத அவ்‌ 
வஸுரர்கள்‌ பாற்கடலில்‌ பையத்துயின்ற பரமனைக்கண்டு 
அவனுடன்‌ நெடுங்காலம்‌ போர்செய்தனர்‌. பல பலகாலம்‌ 
போர்செய்தும்‌ சோர்வடையாத திருமாலைக்கண்டு மன 
முவந்து. “ நீ வேண்டும்‌ வரத்தைக்‌ கேள்‌” என்றார்கள்‌ அவ்‌ 
வஸுரர்கள்‌. * உங்களை நான்‌ கொல்லவேணும்‌ '' என்னும்‌ 
வரத்தை மாயாவியான அம்மாதவன்‌ தன்னால்‌ டடைக்கப்‌ 
பட்‌.டவர்களான அவர்களிடம்‌ வேண்டினான்‌. அவர்களும்‌ 
௮ தற்கு இசைந்தவளவில்‌, =“ உங்களுக்கு வேண்டிய ஒரு 
வரத்தைக்‌ கொள்ளுங்கள்‌” என்‌ று பரமபுருஷன்‌ உரைத்தான்‌, 
* ஒருவரும்‌ சாகாத இடத்தில்‌ நாங்கள்‌ சாகவேண்டும்‌” என்று 
அவர்கள்‌ வரம்‌ வேண்டினார்கள்‌. புருஷோத்தமனும்‌ திருத்‌ 
தடைகளால்‌ அவர்களை இறுக்கிக்கொன்றான்‌ என்று இம்‌ 
மாதிரியா க சாஸ்‌ தரங்கள்‌ இவ்வீருத்தாந்தை விவரிக்இன்‌ றன. 
*மது,ஸூத,னன்‌' என்னுமித்திருநாமத்தில்‌ மதுவைச்‌ சொன்‌ 
னது ,கைடபனுக்கும்‌ உபலக்ஷணம்‌. * கைடபாரி ' என்றும்‌ 
எம்பெருமானுக்கு ஒரு திருநாமம்‌ வழங்கிவருகிறது. இனி, 
மதுஸமதனன்‌ என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும்‌ சில 
பொருள்களை வீவரிப்போம்‌. (மதுஸுதனன்‌) மது,” என்று 
“ பிப்பலம்‌ ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப்‌ 
பொருள்களான அ௮சேதனதத்வத்தையும்‌. ஆரந்த,ஸ்வரூபி 
யும்‌, பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல்‌ இனியவனுமான 
சேதன தத்வத்கையும்‌ சொல்லுகிறது. 'ஸ9த,னன்‌” என்னும்‌ 
பதம்‌ தன்‌ வசத்திற்கு அழைத்துச்‌ செல்பவன்‌ என்னும்‌ 
பொருளை உடையது. ஆக, ஸர்வதத்வங்களையும்‌ அழைத்துச்‌ 
செல்பவன்‌ மதுஸ௫தனன்‌ என்றதாயிற்று. 

“ ஸர்வதத்வநயநாச்சைவ மதுஹா மதுஸ9த,ந: '' 
[எல்லாத்‌ தத்துவங்களையும்‌ அழைத்துச்‌ செல்வதாலும்‌ 
பகவான்‌ மதுஸூதனனாகறோன்‌.] என்று சாஸ்திரம்‌ 
இப்பொருளை ஆதரித்தது, * மது, ஸூத,னன்‌ ' என்பது 
ஸகலதத்வங்களாறெ குதிரைகளைத்‌ தூண்டுபவன்‌ என்றும்‌ 
பொருள்படும்‌. 

“ மதுரிந்த்‌,ரியநாமா ஸ ததோ மதுநிஷூ9த ர: ”' 

['மது,' என்று இனியவைகளான இந்திரியங்கள்‌ சொல்லப்‌ 
படுகின்‌ றன. அவைகளை அடக்குமவனாகையாலே இப்பெரு 
மான்‌ மதுஸ9தனனாகிறான்‌.] என்றும்‌ மதுஸதஈசப்தார்த்‌ 
தம்‌ விவரிக்கப்பட்ட து. ஆக, இப்பொருள்களால்‌ விரோதி 
நிரஸன மீீலன்‌ மதுஸ9தனன்‌ என்றதாயிற்று. “ கொடு 
யேனிடர்‌ முற்றவும்‌ மாய்த்தவம்மான்‌ மதுசூதவம்மான்‌''என்று 
இவ்வர்‌ ததத்தை ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌. இந்த விரோதி, 
நிரஸனலத்வமாகிற பெருங்குண த்தக்குத்தோற்று “ மது 
சூதனென்னம்மான்‌ தானும்‌ யானுமெல்லாம்‌ தன்னுள்ளே 
கலந்தொழிந்தோம்‌ தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ 
அமுதுமொத்தே '* என்றும்‌, வள்ளலே ! மதுசூதனா ! "" 
என்றும்‌. =“ மதுசூதனையன்றி மற்றிலேன்‌ " என்றும்‌. 
° வைத்தமாநிதியாம்‌ மதுசூதனையே அலற்றி'' என்றும்‌, 
நம்மாழ்வார்‌ தம்மை எழுதிக்கொடுத்கார்‌. 

மதுஸஒதனன்‌ என்று. பிரமனுக்குச்‌ செய்த உபகாரத்‌ 
தைப்‌ பேசிற்று, அடுத்தபடியாக, திரிவிக்கிரமன்‌ என்று 
இவ்வுலகுக்கெல்லாம்‌ அபேக்தா நிரபேக்ஷமாகத்‌ தன்னைக்‌ 
கொடுத்தபடியைப்‌ பேசுகிறது. மஹாபலி என்பானோர்‌ 
அஸுரன்‌ தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனையுள்‌ 
ளிட்ட கமூவுலகையும்‌ ஜயித்துத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்‌ 
டான்‌. இந்திரன்‌ முதலிய தேவர்கள்‌ எம்பெருமானிடம்‌ 
சென்று முறையிட. அப்பெருமானும்‌ கங்யபருக்கும்‌ அதிதிக்‌ 
கும்‌ புக்தினான வாமனனாய்ப்‌ பிறந்து மஹாபலி யாகம்‌ 
செய்சையில்‌ அவனிடம்‌ மூவடி மண்ணை யாசித்துப்பெற்று, 
இரிவிக்ரெமனாக வளர்ந்து, ஈரடியால்‌ உலகங்களையெல்லாம்‌ 
அளந்து, மூன்றாவதடியை மாவலியின்‌ தலையில்‌ வைத்து, 
பாதாளலோகத்தில்‌ அவனுக்கும்‌ ५०८ 0००५७८०7 का பெருமையை 
உண்டாக்கிவைத்தான்‌ என்னும்‌ விருத்தாந்தம்‌ ஸர்வலோக 
ப்ரஸித்தமானது. இப்படி, ப்ரயோஜநாந்தரபரனான।ன 
இர்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு 
வாசியற ஸர்வரையும்‌ ரக்ஷித்‌ த அவதாரமாகையாலும்‌, 

, உறங்குகற ப்ரஜையைத்‌ தடவிக்கொண்டு கிடக்கும்‌ 
தாயைப்போலே, உலகங்களையெல்லா।ம்‌ தன்‌ திருவடிகளாலே 
அபேக்ஷாநிரடேக்மாகத்‌ தடவிக்கொடுத்த பெருமையை 
உடையதாகையா லும்‌. பரத்வமும்‌, ஸெளலப்‌ யமும்‌ ஒருங்கே 
ஒளிவீடுகன்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்‌, 

அடியார்க்காகத்‌ தன்னை அழியமாறியும்‌ அளிக்கும்‌ அருங்‌ 
குணத்தை அறிவிப்பதாகையாலும்‌. வேகங்களோடு. இதி 
ஹாஸபுராணங்களோடு. ஆழ்வார்களோடு வாக்யைற எல்லா 
ரும்‌ இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள்‌. . “ இதம்‌ 
விஷ்ணுர்‌ விசக்ரமே '' “ த்ரீணி பத; விசக்ரமே '' -“ விசக்ரமே 
ப்ருதி,வீமேஷ ஏதாம்‌ க்ேத்ராய விஷ்ணு: '' . [( மூவடி.) 
மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம்‌ அள்‌ 
தான்‌ விஷ்ணு]: “த்ரிர்‌ தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”' 
“ம்‌ நோ விஷ்ணுருருக்ரம: £ [பெரிய அடிவைப்புகளை 
யுடைய விஷ ணுவானவன்றமக்கு மங்கள த்தை த்தருவானாக,[ 
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே '' [விஷ்ணுவினால்‌ அளக்கப்‌ 
பட்ட பூதேவீயே] என்று பல பல விடங்களில்‌ பண்டை 
மறை வாய்‌ வெருவிற்று. 

“கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்றோர்‌ 
எண்தானுமின்‌றியே வந்தியலுமாறு 
உண்டான்‌ உலகேழும்‌ ஓர்‌ மூவடி 
கொண்டானைக்‌ கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்‌. 

“அடியைமூன்‌ றையிரந்தவாறும்‌ அங்கே நின்றாழ்கடலும்‌ 
மண்ணும்விண்ணும்‌ 
முடிய ஈரடியால்‌ முடித்துக்கொண்ட முக்கியமும்‌ 
நொடியுமாறவை கேட்குந்தோறுமென்‌ நெஞ்சம்‌ 
நின்றனக்கே கரைந்துகும்‌ 
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல்‌ கூடுவதே ?"" 
என்றும்‌. 
“பாயோரடி வைத்ததன்‌ கீழ்ப்‌ பரவை நிலமெல்லாம்‌ 
தாயோரடியால்‌ எல்லாவுலகும்‌ தடவந்த 
மாயோன்‌ உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனைநாளும்‌ . 
தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ ?'' என்றும்‌, 
“ உலகமெல்லாம்‌ தாவியவம்மானை எங்கினித்‌ தலைப்பெய்‌ 
வனே ? '' என்றும்‌, `" தாவிவையம்‌ கொண்ட எந்தாய்‌! '' 
என்றும்‌, “பாமருமூுவுலகுமளந்த பற்ப பாதாவோ !'”' என்றும்‌ 
நம்மாழ்வார்‌ பிராட.டிமார்‌ தொட்டாலும்‌ சிவக்கும்‌ திருவடி 
களைக்கொண்டு காடுமோடெல்லாமளந்த இந்நீர்மையிலே 
உருகாநிற்பர்‌, “ எனனிது மாயம்‌ என்னப்பனறிந்திலன்‌ 
முன்னைய வண்ணமே கொண்டளவாய்‌ என்ற மன்னுநமுசியை 
வானிற்சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்‌, ^" ஒருப்படுத்‌ 
திடுமின்‌ இவளை உலகளந்தானிடைக்கே ”' என்‌ றும்‌, பெரியாழ்‌ 
வாரும்‌, “ ஓங்கி உலகளந்த உத்தமன்‌ '' என்றும்‌. “ தேச 
முன்னளந்தவன்‌ திரிவிக்கரமன்‌ திருக்கைகளால்‌ என்னைத்‌ 
தண்டும்‌ வண்ணம்‌ ” என்றும்‌ பொல்லாக்‌ குறளுருவாய்ப்‌ 
பொற்கையில்‌ நீரேற்று எல்லாவுலகும்‌ அளந்‌ தகொண்ட எம்‌ 
பெருமான்‌ '* என்றும்‌, “ மரணியுருவாயுலகளந்த மாயனைக்‌ 
காணில்‌ தலைமறியும்‌ '” என்றும்‌ ஆழ்வார்‌ திருமகளாரும்‌ 
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்‌. 


“ஏக: ப்ராஸீஸரத்‌ பாதமேக: ப்ராச்க்ஷளந்முத | 
அபரோப்யதரந்மூர்த்‌ கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம்‌ ॥ ”” 


[ஒருவன்‌ திருவடியை நீட்டினான்‌; (பிரமனாகிய) மற்றொரு 
வன்‌ மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்‌. (சிவனாகிய) 
வேடறருவனும்‌ களிப்புடன்‌ அந்நீரைத்‌ தலையிலே கரித்தரன்‌. 
இவர்களில்‌ எவன்‌ டெரியவன்‌ என்பதை நினைத்‌ தப்பாருங்‌ 
கள்‌. ] என்றபடியே பரம்பொருள்‌ யாரென்பதை நிலை 
நாட்டித்தருவதன்றோ இவ்வவதாரம்‌.  ( க்ரிவிக்ரமன்‌ ) 

த்ரயோ விக்ரமாஸ்‌ த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”' 
[மூவுலகங்களையும்‌ அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய 
வன்‌ | என்றும்‌. - த்ரயோ லோகா: க்ராந்தா யே ?' [மூன்று 
உலகங்களும்‌ எவனால்‌ கடக்கப்பட்டனவோ ௮வன்‌ ] என்றும்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌. - த்ரீணி பத; விசக்ரமே '* என்றது 
வேதம்‌. 


“ த்ரிரித்யேவம்‌ த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: | 
க்ரமஸே தாம்ஸ்த்ரித,£ ஸர்வாந்‌ த்ரிக்ரமோ$ஸி ஜ௩ார்த்தந।'' 

(* ॐ" என்று கமூவுலகங்களும்‌ முனிவர்களால்‌ சொல்லப்‌ 
படுகின்‌ றன. ஓநார்த்தனனே! அவையெல்லாவற்றையும்‌ 
மூன்‌ றடிகளால்‌ தாரவியபடியால்‌ நீ இரிவிக்கரமனாரறாய்‌. ] 
என்று ஹரிவம்‌ மத்தில்‌ சொல்லப்பட்ட து. 

“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம்‌ பூர்‌ நரேங்வர। 
அந்தரிக்ஷம்‌ த்‌,விதீயேக த்‌,யெளஸ்‌ த்ருத்யேந ஸத்தம | ”' 
[ இவ்வுலகம்‌ ஒரு அடிவைப்பினால்‌ அளக்கப்பட்டது. இரண்‌ 
டாவது அடிவைப்பீனால்‌ அந்தரிஷமும்‌ மூன்றாவதடியால்‌ 
தேவலோகங்களும்‌ அளக்கப்பட்டன.] என்று நாரஸிம்ஹ 
புராணத்திலும்‌ சொல்லப்பட்ட து. முதலடியினால்‌ ழுலகங்க 
ளெல்லாவற்றையும்‌. இரண்டாவதடியினால்‌ மேலுலகங்க 
ளெல்லாவற்றையும்‌, மூன்றாவதடியினால்‌ மஹாபலியின்‌ 
ஸபிரஸ்ஸையும்‌ அளந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 

“த்ரிரித்யேவம்‌ த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: | 
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந்‌ த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”' 
[:த்ரி' என்னும்‌ பதத்தினால்‌ மூன்‌ று வேதங்களும்‌ முனிவர்‌ 
களால்‌ சொல்லப்படுகின்‌ றன.  அவையெல்லாவற்றையும்‌ 
வியாபித்திருப்பதால்‌ திரிவிக்கரமனெனப்படுநறய்‌. | என்று 
சொல்லப்பட்டபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 

வேதங்களால்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டதாகையாலும்‌, 
பரக்வத்தையும்‌. ஸெளலப்யத்தையும்‌ ஒருங்கே காட்டுவ 
தாகையாலும்‌. எல்லார்‌ தலையிலும்‌ ஓக்கத்‌ திருவடியை 
வைத்த பெருங்குணத்தைப்‌ பேசுவதாகையாலும்‌ 
தரிவிக்சரமாவதாரம்‌ முதலில்‌ அதுபவிக்கப்பட்டது. 
அடுத்தபடியாக இத்திரிவிக்ெம மூர்த்திக்கும்‌ காரணபூகு 
மான வாமனஜூர்த்தியின்‌ பெருமை பேசப்படுகிறது, 
“த்ரஷ்ட்ரூக்‌ ஸ்வகாந்த்யா வரமரநி ஸுகளரி நயதி' [காண்ப 
வர்களைத்‌ தன்‌ ஓளியால்‌ ஸுகமுள்ளவர்களாகச்‌ செய்கிறான்‌ ] 
என்று வாமனசப்தத்துக்குப்‌ பொருள்‌. “ ஸர்வாணி வாமாநி 
நயதி "ˆ [எல்லாரையும்‌ ஸுகமுடையவர்களாகச்‌ செய்றோன்‌.] 
என்‌ று சாந்தேோரக்யோடனிஷத்‌ இவ்வர்த்தத்தை அதரித்த து, 
“ கொள்ளமாளா இன்பவெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ 
வள்ளலேயோ! ல்வயங்கெண்ட வாமனாவோ!'' என்று 
வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ வாமன சப்தார்த்தத்தை 
அருளிச்செய்தார்‌. “ வாமஸ்‌ ஸுந்தரமூட,$யோ:'' என்கிற 
படியே மிகுந்த வடிவழகையுடையவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. இவ்விரண்டு பொருள்களாலும்‌ அவன்‌ 
அலெலோகாகர்ஜஹகமான வடிவழகையுடையவன்‌ என்ற 
தாயிற்று. கடலைக்‌ குளப்படியிலே அடக்கினாப்போலே, 
உலகளந்த திரிவிக்ரெமகூர்‌ த்தியின்‌ லஸெளரந்தர்யமெல்லாம்‌ 
இச்சிறிய உருவில்‌ வெள்ளபிடுமாகையாலே இப்பெருமானின்‌ 
அழகு பேசவொண்ணாததாயிருக்கும்‌. அவாங்மநஸகேோோ சர 
மான இவ்வழகிலே வேதமும்‌. புராணங்களும்‌. ஆழ்வார்‌ 
களும்‌ ஆழங்காற்படுவர்கள்‌. =“ ஸர்வாணி வாமாமி நயதி ”' 
என்றது வேதம்‌, ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத்‌ ருக்‌ '' 
[திவ்யமான சரீரத்தையுடையவன்‌ வாமனன்‌.] என்று 
புராணம்‌ பேசிற்று. 

“மரயக்கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கைகால்‌ 
தூயசெய்ய மலர்களா சோதிச்செவ்வாய்‌ முகிழதா 

சாயல்‌ சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்‌ 
வாசத்தடம்போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே?' 
என்றும்‌, “ஒருமாணிக்குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்‌ 
கம்‌'' என்றும்‌, °" வாமனன்‌ என்‌ மரதகவண்ணன்‌ தரமரைக்‌ 
கண்ணினன்‌ காமனைப்பயந்தாய்‌ !'' என்றும்‌ “ மாண்குறள்‌ 
கோல வடிவுகாட்டி '' என்றும்‌. “ குரைகழல்கள்‌ நீட்டி 
மண்கொண்ட கோல வாமனா'' என்றும்‌ நம்மாழ்வாரும்‌, 
“சத்திரமேந்தித்‌ தனியொரு மாணியாய்‌ 
உத்தரவேதியில்‌ நின்ற ஒருவனை 
கத்திரியர்காணக்‌ காணி முற்றும்‌ கொண்ட பத்திராகாரன்‌ ”' 

என்றும்‌, “காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காணவினிய 
கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌ என்‌ மாதகவண்ணன்‌ ” 
என்றும்‌ பெரியாழ்வாரும்‌, “ கொண்ட கோலக்‌ குறளுரு ” 
என்று: ஆண்டாளும்‌ வேதம்‌ புகழ்ந்த இவ்வடிவழகிலே 
மயங்கினார்கள்‌.' (வாமனன்‌ ) இப்படி வடிவழகாலே பிறரை 
உகப்பிப்பதோடன்‌ றியில்‌ குணங்களாலும்‌ பிறரை ஆடம்‌ 
திப்பிப்பவன்‌ என்றும்‌ பொருள்‌. கொள்ளலாம்‌. 


“ழிக்க பெரும்புகழ்‌ மாவலி வேள்வியில்‌ 

தக்கதிதன்றென்று தானம்‌ விலக்கிய 

சுக்கிரன்‌ கண்ணைத்‌ துரும்பால்‌ செறிய 
சக்கரக்கையனே!'' _என்றும்‌, 
“ மதியினால்‌ குறுள்மாணாய்‌ உலர்‌ த கள்வற்கு” என்றும்‌, 
“வாட்டமில்‌ புகழ்‌ வாமனனை'' என்‌ அம்‌, ** வன்மாவைய 
மளந்க எம்‌ வாமனா!'' என்றும்‌, “ஞாலங்கொள்வான்‌ 
குறளரகிய்‌ வஞ்சனே!'' என்றும்‌. “கொள்வன்‌ நான்‌ 
மாவஷ மூவடி தா என்ற கள்வனே!” 'என்றும்‌ அந்ய 
ப்ரயோஜனர்களுக்காகவும்‌ தன்னை அழியமாறி அளிக்கும்‌ 
அருங்குணத்தில்‌ ஆழ்வார்கள்‌ ஆஅழங்காற்ப்ட்டார்கள்‌ 
(வாமனன்‌) “ வடிவழகைச்சொல்லுகிறதென்‌ னுதல்‌; ஈன்மை 
களைத்‌ தருமவனென்னுதல்‌ '' என்று நம்பிள்ளை ஈட்டில்‌ 
(2-27-6) அருளிச்செய்தபடியே, வாமசப்தத்தாலே ஸுக,ப்ரத, 
மான்‌: வஸ்துக்களைச்சொல்லி வாமனன்‌ ' என்று அவை 
களைத்‌ தருமவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “மருவித்‌ 
தொழும்‌ 'மனமேோ”தந்தாய்‌ வல்லைகாண்‌ என்‌ வாமனனே!' 
என்று ஆழ்வார்‌ இவ்வர்‌ சத்தத்தை அருளிச்செய்தார்‌. 
(வாமனன்‌) ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை 
அளித்தும்‌. மஹாபலிக்குப்‌ பாதரளத்திலே நிலையான ஸாம்‌ 
ராஜ்யத்தைக்‌ கெர்டுத்தும்‌, உலகிலுள்ள: எல்லாச்சே தனர்‌ 
கள்‌ தலையிலும்‌ தன்‌ திருவடிகளை வைத்தும்‌, -இப்படி 
எல்லாருக்கும்‌ ஸுகத்தைத்‌ தந்தவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
* வாமனன்‌ ' என்னும்‌ திருநாமத்துக்குச்‌ 
சிறிய உருவை உடையவன்‌ என்றும்‌ பொருளுண்டு என்பது 
பிரஸித்தம்‌. இதையே எல்லா ஆழ்வார்களும்‌ குறளுரு 
என்று அருளிச்செய்தனர்‌. (வாமனன்‌) . ' மத்யே வாமந 
மாஸீநம்‌ விங்வேதே,வா உபாஸதே ' [ஸர்வ சேதனர்களின்‌ 
ஹ்ருதயத்திலும்‌ வீற்றிருக்கும்‌ வாமனனை ( எல்லா தேவர்‌ 
களும்‌ உபாஸிக்கிறார்கள்‌.] என்று வேதத்தில்‌ சொல்லிய 
படியே ஹ்ருதயகமலத்தில்‌ அங்குஷ்ட மா தரனாயெழுந்தருளி 
யிருக்கும்‌ பெருமான்‌ வாமனசப்தத்தால்‌ சொல்லப்படுவ 
தாகவும்‌ கொள்ளலாம்‌. “வாமனன்‌ நிற்பது மேவியிருப்ப 
என்று ஆழ்வார்‌ இவ்வர்த்தத்தை கென்‌ நெஞ்சகம்‌ உணர்த்தினார்‌. 

ஆக: இப்படி வாமனாவதாரத்தைச்‌ சொன்னபின்‌ 
இப்படி ப்ரஹ்மசாரியாய்‌ அவதரித்த அவதாரத்திலும்‌ 
பிராட்டியைவிட்டுப்‌ பிரியாமல்‌ மார்பிலே தரித்திருப்பவன்‌ 
என்று உரைக்கிறது * क्ल". என்னும்‌ திருநாமம்‌. 
“ வாமனனே மாதவா ˆ" என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை 
அருளிச்செய்கார்‌. “க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம்‌ வதூ,ம்‌ 
வக்ஷ:ஸ்த,லாலயாம்‌'' | திருமார்பிலே கோயில்கொண்டெமும்‌ 
தருளியிருக்கும்‌ பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால்‌ மழைத்‌ 
அக்‌ கொண்டுவந்தான்‌.] எரற்றெபடியே. மஹாபலியின்‌ 
யாகசாலைக்கு எழுந்தருளியபோ தம்‌. திருமார்பிலிருந்த 
பிராட்டியை மான்‌ தோலினால்‌ மறைத்துக்கொண்டு வந்தான்‌ 
வாமனன்‌ என்று ப்ரஸித்தமிறே. 

“ஏவம்‌ ५155 ஜக,த்ஸ்வாம்‌ தேவதே,வோ ஜரார்தந: | 
அவதாரம்‌ கரோத்யேஷா ததர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! . 
ராக,வத்வே$ப,வத்‌ ஸீதா ர௬ுக்மிணீ க்ருஷ்ணஜர்மி | 
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.5௩பாயிநீ ॥ 
தே,வத்வே தே,வதே,ஹயம்‌ மறுஷ்யத்வே ச மாநுஷீ | 
விஷ்ணோர்‌ தே,ஹா நுரூபாம்‌ வை கரோத்யேஷாத்ம௩ஸ்த நும்‌।।” 

[தேவதேவனாயெ பகவான்‌ அவதாரம்‌ செய்யும்போது, 
இந்த ஸ்ரீதேவியும்‌ அவனுக்குத்‌ துணையாகத்‌ கோன்று 
கிறாள்‌. எம்பெருமான்‌ ராகவனாய்‌ அவதரீத்தபோது இவள்‌ 
ஸீகையானாள்‌. அவன்‌ கிருஷ்ணனாய்ப்‌. பிறந்தபோது இவள்‌ 
ருத்யிணியானாள்‌. மற்ற அவதாரங்களி லும்‌ இவள்‌ விஷ்ணுவை 
விட்டுப்‌ பிரியா மவளாயிருக்கிறாள்‌. அவன்‌ தேவனாகும்போ து 
தேவதேஹத்கைக்‌ கொண்டவளாரயும்‌, மனிதனாகப்பிறக்கும்‌ 
போது மனிதவுருவம்‌ கொண்டவளாயும்‌, இப்படி வீஷ்ணு 
வினுடைய தகேஹேத்திற்குப்‌ பொருந்தியதாகத்‌ தன்னுடைய 
திவ்யமங்களவிக்ரஹத்தைச்‌ செய்துகொள்ளுகிறாள்பிராட்டி.] 
என்று விஸ்ணுபுராணத்தில்‌ உரைக்கப்பட்டது இங்கு 
உணரத்தக்கது. “தாம்‌ ரத்நமிவ அர்ச்சிஷம்‌ புஷ்பமிவ 
ஸாுரபிம்‌ இந்துரிவ சந்த்‌ ரிகாம்‌ அம்ருதமிவ ஸ்வாதுதாம்‌ 
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதா:। “ஹி ஹாது 
மியம்‌ மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”' [ரத்னம்‌ 
ஒளியை தரிப்பதபோலவும்‌,பூ மணத்தை தரிப்பதபோலவும்‌ 
சந்திரன்‌ தன்‌ ஒளியை தரிப்பதுபோலவும்‌, அம்ருதம்‌ 
இனிமையை தரிப்பதுபோலவும்‌, அந்த ஸ்ரீதேவியை 
இயற்கையான ஸம்டந்தத்தினால்‌ தரிக்கறொனாகையால்‌ ஸ்ரீதரனா 
கிறான்‌. “மனத்தை ஜயித்தவர்களைக்‌ கீர்த்தி வீட்டுப்‌ 
பிரியவொண்ணாமல்‌ விளங்குவதுபோல்‌ இப்பிராட்டியும்‌ 
` இப்பெருமானை விட்டுப்‌ பிரியவல்லளல்லள்‌ '' என்று 
சொல்லப்பட்ட து.] என்‌ று ஆசார்யாக்‌,ரேஸரரான பராசர 
பட்டர்‌. வியாக்க்யானம்‌ செய்தருளினார்‌. (ஸ்ரீதரன்‌) ' ஸ்ரீ்‌ 
என்று பெரியபிராட்டியார்‌ சொல்லப்படுகறோர்‌. அவரை 
தரிப்பவனாகையால்‌ புருஷோத்தமனும்‌ ஸ்ரீதரன்‌ எனப்டடு 
கிறான்‌. பகவானுக்கு நாராயண நரமம்‌ அஸாதாரணமாய்‌ 
விளங்குவதுபோல்‌ பிராட்டிக்கும்‌ ' ஸ்ரீ: ' என்னும்‌ இத்திரு 
நாமம்‌ அஸாதராரணமாயிருக்கிறது. “ ஸ்ரீரித்யேவ ச நாமதே 
பகதி ப்ரூம: கதம்‌ த்வாம்‌ வயம்‌ '” [பெரியபிராட்டியே! 
உமக்கு *ஸ்ரீ:' என்பது திருநாமம்‌. உம்‌ டெருமையை 
ஈாங்கள்‌ எப்படிச்‌ சொல்லுவோம்‌] என்றாரன்றோே ஆள வந்தார்‌. 
நாராயண நாமத்தைப்போல்‌ இத்திருநாமமும்‌ 
பல பொருள்‌ களை உடையது. அவைகளை இனி விவரிப்போம்‌. 


” மிங்‌-ஸேவாயாம்‌ '' என்கிற தாதுவிலிருந்து இர்க 
ஸ்ரீப்தம்‌ உண்டான்‌ தாகக்கொண்டால்‌. * (அகில சேதனர்‌ 
களாலும்‌ ) ஆங்ரயிக்கப்படுகிறாள்‌ ”' என்றும்‌ “ (எம்பெருமானை) 
ஆங்ரயித்திருக்கிறாள்‌ ” என்‌ றும்‌ இரு பொருள்கள்‌ ஏற்படும்‌. 
°" ய்ரூ-விஸ்தாரே '' என்னும்‌ தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம்‌ 
தோன்‌ றியதாகக்‌ கொண்டால்‌, “(அடியார்களுடைய குணங்‌ 
களை) வீருத்‌ தியடையச்செய்கறாள்‌ ” என்றும்‌, “(தன்‌ குணங்க 
ளாலும்‌ விக்‌,ரஹங்களா லும்‌ உலகையெல்லாம்‌)வியா பி த்திருக்‌ 
கிறாள்‌'' என்றும்‌ பொருள்படும்‌; “'ங்ரு-ஹிம்ஸாயாம்‌'' என்கிற 
தாதவிலே ஸ்ரீாப்தம்‌ நிஷ்பந்கமாகிறதென்‌ றுகொண்டால்‌, 
"" (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்‌) போக்கடிப்ப 
வள்‌ '' என்று ஸ்ரீசப்தத்துக்குப்‌ பொருளாகும்‌. “ஸ்ரு- 
ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம்‌ உண்டாகிற 
தென்‌ று கொண்டால்‌ ^ (அடியார்களுடைய முறையீடுகளைக்‌) 


கேட்டவள்‌ ^ என்றும்‌, ^" அவைகளை எம்பெருமானைக்‌ 
கேட்பிப்பவள்‌ '' என்றும்‌ பொருள்படும்‌. இப்‌ 
பொருள்களெல்லாம்‌ 


“" மருணாதி நிகிலாந்‌ தேஷாம்‌ ங்ரூணாதி = குணைர்‌ ஜகத்‌ | 
ஸ்ரீயதே சாகிலேர்‌ நித்யம்‌ ஸ்ரயதே ச பரம்‌ (1550 ॥ 
५०१५7 & 0 ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம்‌ ங்ருணதீமபி ||” 

[சேதனர்களுடடய எல்லாப்‌ பாவங்களையும்‌ டோக்கடிக்கிறாள்‌ ; 

உலகம்‌ முழுவதையும்‌ குணங்களால்‌ வியா பிக்கிறாள்‌; எல்லாச்‌ 

சேதனர்களாலும்‌ எப்போதும்‌ அங்ரயிக்கப்படுகிறாோள்‌: 
பரமப்ராப்யமான பரமபுருஜனை ஸர்வகாலமும்‌ ஆங்ர 
யித்திருக்றொள்‌;(௭ம்பெருமானை) அங்ரயித்திருப்பவளா கவும்‌, 

(மற்றவர்களால்‌) ஆங்ரயிக்கப்படுபவளாகவும்‌. (சேதனர்‌ 

களின்‌ குறைகளைக்‌) கேட்பவளாகவும்‌,- எம்பெருமானை 

அக்குறைகளைக்‌ கேட்பிப்பவளாகவும்‌ ( இவளை அறிகிறார்கள்‌ .)] 
என்று பாஞ்சராத்ரசாஸ்த்ரத்தில்‌ பேசப்பட்டன, “ அதில 
ச தனர்க்கும்‌ ஆங்ரயணீயையாய்‌. தான்‌ அவனை அஆங்ரயித்து 
லப்‌,த.ஸ்வரூடையாய்‌, ஆங்ரிகதேரஷங்களை ஹிம்ஸித்து, 
அத்‌வேஷாதி,குணங்களை விஸ்தரிப்பித்து, ஆங்ரிததை,ம்‌ 
யோக்திகளை ங்ரவித்து, இவர்களை அங்கீகரிக்கைக்கனு 
குணமான வானங்களை அவனை ங்ரவிப்பிக்கை முகலான 
ஆகாரங்கள்‌ புருஷகாரபூதையான பீராட்டிக்கு அவங்யா 
பேக்ஜிதங்களாகையாலே, . இர்நிருக்திகளெல்லா த்தையும்‌. 
ஸ்ரீயப்தத்துக்கு அர்‌ த்தூமாகஆசார்யர்கள்‌ அ 1500 திப்பர்சள்‌” 
என்று (அழகியமணவாளப்பெருமாள்‌) நாயனாராச்சான்‌ பிள்ளை 
சது:மலோஃவியாக்கியரான த்திலே அருளிச்செய்தார்‌. இவ 
ருடைய திருத்தமப்பனாரான பெரியவாச்சான்‌ பிள்ளை. 
பீராட்டி இச்சேதனனுடைய குறைகளைக்‌ கேட்கும்‌ ப்ரகாரத்‌ 
தையும்‌, எம்பெருமானைக்‌ கேட்பிக்கும்‌ ப்ரகாரத்தையும்‌, 
பரந்தரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச்‌ செய்தார்‌. 
ஸ்ரீஸடக்திகள்‌ பின்வருமாறு: -- 

“ ம்ருணாதி' என்‌ று கேட்குமென்கையாலே 
ச தநரோடுண்டான பர்சகார்யத்தைச்‌ சொல்லுகிறது. 
*ஸ்ராவயதி ' என்‌ று கேட்பீயாநிற்கும்‌ என்‌ கையாலே ஈச்வர 
னோடுண்டான பந்தகார்யத்தைச்‌ சொல்லுறது. அதாவது:- 
வக “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈச்வரனுக்கு ஆளா 
காதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு நிருபாதிக 
ஐஜனனியான தேவரீர்‌ தருவடிகளொழுியப்‌ புகவில்லை; இணி 
நான்‌ ஈச்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய்‌ ரக்ஷித்த 
தைல்‌, அவனுக்கு , ஸ்வாதந்தர்யபாத்ரமாய்‌ நாசத்தோடே 
தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி 
அநர்யக,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து 
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பயம்‌' என்று இவன்‌ சொன்ன 
வார்த்தையைக்‌ கேட்கையும்‌; அதுக்கு மேலே வெர்நீருக்குக்‌ 
குளிர்நீர்போலே, நிரங்கும்‌ ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: 
பாவகோபமம்‌'' என்‌ கறபடியே அஈபி,ப,வநீயனான ஈச்வரனைச்‌ 
தன்னுடையபேோக்யகா தியயத்தாலே பதமாக்கி: நாயன்தே! 
இச்சேதனனை அங்கீகரித்தருளீர்‌ ' என்னும்‌; : ஆவதென்‌? 

^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா ' என்‌ று நம்முடைய ஆஜ்ஞா 
ரூபமான பாரஸ்த்ரமர்யாதையை அதிலங்கி,த்து நம்‌ நெஞ்சு 
புண்படும்படி திரக்கழிய அபராதம்‌ பண்ணிப்போந்தவனல்‌ 
லனோ ? இவனையங்கீகரிக்கையாவதென்‌ ? ' எள்னும்‌ ஈச்வரன்‌ 
* அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு 
இல்க்காக்‌கி ரக்ஷித்கருளீர்‌ ' என்னும்‌ பிராட்டி; ' பொறையை 
நோக்குகைக்காக பாஸ்‌ த்ரமர்யாதையைக்‌ குட நீர்வழியவோ?” 
என்னும்‌ ஈச்வரன்‌; " சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக 
உம்முடைய ஸ்வாபளவிகமான க்ஷமாதத்வத்தைக்‌ குடநீர்‌ 
வழியவோ?' என்னும்‌ பிராட்டி; : சுமையை நோக்கில்‌, 
சாஸ்த்ரமர்யாதை குலையும்‌; சாஸ்த்ரமர்யாகையை, நோக்கி 
னால்‌ க்ஷமாதுத்வம்‌ குலையும்‌; இரண்டும்‌ குலேயாதொழிய 
வேண்டும்‌; செய்யவடுப்பதென்‌?' என்னும்‌ ஈச்வரன்‌; 
“ கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால்‌ அத்தனையே; அவை 
இரண்டும்‌ குலையாதபடி வழி சொல்லுக றன்‌ : அப்படியே 
செய்கருளீர்‌ ' என்னும்‌ பிராட்டி; : இரண்டும்‌ குலையாமல்‌ 
இச்சே கனனை நோக்க வழியுண்டாமாஇல்‌ நமக்குப்‌ பொல்‌ 
லாதோ? சொல்லிக்காண்‌! ' என்னும்‌ ஈச்வரன்‌; : ஆனால்‌. 
சாஸ்தரமர்யாதையை விழுகரர்‌ விஷயமாக்குவ து: உம்முடைய 
கஷமையை அபிமுகனிஷயமாக்குவது; இரண்டும்‌ ஜீவித்த 
தாயறும்‌ ` என்னும்‌ விஷயவிபாக;ம்‌ பண்ணிக்கொடுக்கும்‌ 
பிராட்டி; அத்தைக்‌ கேட்டு : அழயெ விப,ாக;ம்‌!' என்று 
இச்சேதனனை அங்கீகரித்தருளும்‌ ஈச்வரன்‌; ஆக, இப்படி 
ஸாபராத,ஜந்துவை ஈச்வரன்‌ அங்கீகரித்தருளும்படியான 
வார்த்தைகளைக்‌ கேட்பித்கருளுகையும்‌. '' 


இப்படிப்‌ பிராட்டியால்‌ புருஜகாரம்‌ செய்யப்பெற்ற 
சேதனனையே ' ஸர்வேச்வரன்‌ அங்கிகரிக்கறான்‌ என்பதை 
“என்னைத்‌ தீமனம்‌ கெடுத்தாய்‌ உனக்கென்‌ செய்கேன்‌? என்‌ 
சிரீதரனே!'' ` என்று ஆழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌. 

“மாதவன்‌ ' என்று எம்பெருமான்‌ வைகுண்டத்தில்‌ 
பிராட்டியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்‌ 
லிம்று. 'ஸ்ீத;ரன்‌' என்று அவதாரம்‌ செய்யும்போதும்‌ அவளை 
தரித்திருக்ொனென்கிறது. ஆகையால்‌ பு£ருக்‌ யில்லை. 

இப்படிப்‌ பராவஸ்தையையும்‌, வியூஹவிப,வாவதாரங்‌ 
களையும்‌ அநுபவித்தபிறகு, * ஹ்ருஷீகேமான்‌ ' என்று 
ஸர்வேச்வரன்‌ மனுஷீயர்களுடைய ஹ்ருதயத்தில்‌ அந்தர்‌ 
யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமித்துக்கொண்டு 
வீற்றிருக்கும்‌ இருப்பு அநுபவிக்கப்படுகறெது. ஸ்ரீதரன்‌ 
என்ற திருநாமத்திற்குப்பின்‌ படிக்கையாலே இந்த அந்தர்‌ 
யாம்யவஸ்தையிலும்‌ எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடிய 
வனாகவே எழுந்‌ தருளியிருக்கறுானென்டது தோற்றுகிறது. 

“ஹ்ருவீகாணீந்த்‌ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீமேோ யதோ 
பூவாந்‌ | 

ஹ்ருஷீகேமுஸ்‌ ததோ விஷ்ணு: க்‌ யாதோ தேவேஷு 

கேமுவ: ॥' 
[ ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச்‌ சொல்‌ லுநறோர்கள்‌; 
அவ்விந் திரியங்கன’ை நியமிப்பவராயிருப்பதால்‌. விஸ்ணு 
கேசவன்‌ என்னும்‌ திருநாமங்களையுடைய நீர்‌ தேவர்களுள்‌ 
* ஹ்ருவீகேசன்‌ எனப்படுதிறீர்‌.] என்று ஹரிவம்‌சத்தில்‌ 
ஹ்ருஷீகேசா்ப்தார்‌்த்தம்‌ சொல்லப்பட்ட து. ( ஹ்ருஷீ கசன்‌ ) 
ஹ்ருஷீகசப்தத்தனால்‌ பத்து இந்திரியங்களா கிய தலைகளைக்‌ 
கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்‌: சொல்லப்படுறெது, 
அந்த ராவணனை தன்னைப்பற்றின அறிவாகிய அம்பை 
ஏவிக்‌ கொல்லுமவனாகையாலே இப்பெருமான்‌ ஹ்ருஷீகேச னெனப்படுகிறான்‌. 

“த,ஙோந்த்‌,ரியாஙகம்‌ கேரம்‌ யோ மநோரஜநீசரம்‌ | 
விவேகமாரஜாலே௩ மமம்‌ ஈநயதி யோகிநாம்‌ | ”' 

[ யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய 

மனஸ்ஸாறெ பயங்கரராகஷ்ஸனை. தன்னைப்பற்றிய 
அறிவாகிய அம்புக்கூட்டங்களால்‌ அடக்குகிறான்‌.] என்று 
சொல்லப்பட்ட தன்றோ. 

“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கையரக்கர்குலம்‌ 
முருடுதீர்த்த பிரான்‌ எம்மான்‌" _என்‌ று 
நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. 

“ அண்டக்குலத்துக்கதிபதியா க அகரரிராக்கதரை இண்‌ 
டக்குலத்தை எடுத்துக்‌ களைந்த இருடீகேசன்தனக்கு ' என்று 
பெரியாழ்வாரும்‌ இதைப்‌ பாசுரமிட்டருளினார்‌. *இருடீகேசன்‌ 
என்னும்‌ இபக்திருநாமத்தினாலும்‌ விரோ திநிரஸாஸீலத்வம்‌ 
சொல்லப்படுகிறது. “ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட 
இருடீகேசா''என்‌ று பெரியாழ்வார்‌ இக்குணத்தைப்‌ பேசினார்‌. 
(ஹ்ருஷீ3கசன்‌) தன்னைக்‌ கண்டவர்களுடைய இர்திரியங்‌ 
களை வசப்படுத்துமவன்‌.  ரூபெளதரார்யகுணை: பும்ஸாம்‌ 
த்‌,ருஷ்டிசித்தா5பஹாரிணம்‌ "” ( தன்னுடைய ரூபம்‌, வண்மை, 
குணங்கள்‌ முதலியவற்றால்‌ ஆண்பிள்ளைகளுடைய கண்ணை 
யும்‌. மனத்தையும்‌ அபஹரிக்குமவன்‌.] என்று சொல்லப்‌ 
பட்டதன்றோ. ' முடியானே '' என்னும்‌ திருவாய்மொ ழியில்‌ 
நம்மாழ்வார்‌ :-: நெடியானே! என்று கிடக்கும்‌ என்‌ நெஞ்சமே" 
என்றும்‌, '* வஞ்சனே! என்னுமெப்போதுமென்‌ வாசகமே '” 
என்‌ றும்‌. “ தரயவனே! என்று தடவும்‌ என்‌ கைகளே " 
என்றும்‌. “உன்னை மெய்கொள்ளக்‌ கரண விரும்புமென்‌ 
கண்களே ” என்றும்‌. :'பண்கொண்டபுள்ளின்‌ சிறகொலி 
பாவித்துத்‌ திண்கொள்ள ஒர்க்கும்‌ கடந்தென்‌ செவிகளே ” 
என்றும்‌ தம்முடைய இர்திரியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ எல்லா 
இந்திரியங்களின்‌ அ.நுபவத்தையும்‌ ஆசைப்பட்டு எம்டெரு 
மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த 
ரன்றோ.  " நாக்கு நின்னையல்லாலறியாது ” , “கண்டு 
நானுன்னை உகக்க '' “ வேறொருவரோடென்‌ மனம்‌ பற்றாத ^" 
“என்னப்பா என்னிருடீகேசா '' என்று தம்முடைய இந்திரி 
யங்களெல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ ஈடுபட்டபடியைப்‌ 
பெரியாழ்வாரும்‌ பேசியருளினார்‌. தன்னுடைய அவயவ 
சோடையாலும்‌. ஆபயணபோரபையா லும்‌ பீறருடைய இர்‌ 
திரியங்களை வசப்படுத்துகறானென்‌ பதப்‌ பெரியாழ்வாரும்‌ 

“மின்னுக்கொடியும்‌ ஓர்வெண் திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌ 
பின்னல்‌ துலங்குமரசிலையும்‌ பீதகச்சிற்றுடையொடும்‌ 
மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்போலக்‌ கழுத்தினில்‌ 
காறையொடும்‌ 
தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்ஈடை' நடவானோ ”” 
என்று அருளிச்செய்தார்‌, “இருடீகேசன்‌ வலிசெய்ய 
முத்தன்ன வெண்முறுவல்‌ செய்ய வாயும்‌ முலையும்‌ அழகழிக்‌ 
தேன்‌ யான்‌'' என்று ஆண்டாளும்‌ தன்னுடைய இர்திரியங்‌ 
களெல்லாம்‌ இருட்கேசனிட்ட வழக்கரயிருக்கின்‌ றன என்று 
அருளிச்செய்தாள்‌. 
இப்படி எம்பெருமான்‌ ஹ்ருதயகமலத்திலே திவ்ய 
மங்கள விக்ரஹத்‌:துடன்‌ அந்தர்யாமியாய்‌ எழுந்கருளியிருக்‌ 
கிறான்‌ என்னுமிடத்தை 
“ வெள்ளைச்‌ சுரிசங்கொடாழியேந்தித்‌ 
தாமரைக்கண்ணனென்‌ நெஞ்சினூடே 
புள்ளைக்கடாகின்‌்றவாற்றைக்‌ காணீர்‌ 
என்சொல்லிச்சொல்லுகேன்‌ அன்னைமீர்காள்‌? "न न्न றும்‌ 
“கல்லும்‌ கனைகட்லும்‌ வைகுந்தவானாடும்‌ 
புல்லென்றொழிந்தனகொல்‌ ஏ பாவம்‌!-—வெல்ல 
நெடியான்‌ நிறம்‌. கரியான்‌ உள்புகுந்துநீங்கான்‌ 
அடியேனதுள்ளத்தகம்‌ ?' _— என்றும்‌ ஈம்மாழ்வாரும்‌. 
“நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்‌(து) இருப்பும்விண்‌ டெப்பதும்‌ 
நற்பெரும்‌ திரைக்கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌ 
அற்புதன்‌ அஈந்தசயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌ 
80115 இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ ज उना ”' 
என்ற திருமழிசைப்பிரானும்‌, 

“வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ 
இடவசைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே'' என்றும்‌, 
“அநந்தன்பாலும்‌ கருடன்பாலும்‌ ஐதுநொய்தாக வைத்தென்‌ 
மனந்தன்னுள்ளே வந்து வைகி வாழச்செய்தாய்‌ எம்பிரான்‌!" 
என்றும்‌ பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தலீர்‌. வேதமும்‌ 
“நீலதோயதமத்‌ யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா'' முத 
லான விடங்களில்‌ இவ்விஷயத்தைச்‌ சொல்லிற்று. 

“ லாபஸ்தேஷாம்‌ ஜயஸ்தேஷாம்‌ குதஸ்தேஷாம்‌ பராபவ: | 
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ”” 
[எவர்சளுடைய ஹ்ருதயத்தில்‌ காயாம்பூவண்ணனான பெரு 
மான்‌ நன்கு டொருர்‌ தியிருக்கறானோ, அவர்களுக்கே லாபமும்‌ 
ஜயமும்‌ உண்டாம்‌; அவர்களை அவமானம்‌ அணுகு மாச] 
என்று ருவிகளும்‌ இவ்விஷயத் தச்‌ சொன்னார்கள்‌ 
“நஞ்சீயர்‌ கோயிலுக்கு எழுந்கருளாநிற்க வழியிலே 
பிள்ளானைக்கண்டு. 'ஈச்வரனுக்கு ஸ்வரூபவ்யாட்‌ தியேயோ, 
விக்ரஹ வ்யாப்தியும்‌ உண்டோ?' என்று. பிள்ளானைக்‌ 
கேட்க. பாஷ்யகாரர்‌ தோற்ற அருளிச்செய்துகொண்டு 
போந்தது ஸ்வரூடவ்யாப்திய।யிருக்கும்‌; ஆகிலும்‌, எம்பார்‌ 
ஒருநாள்‌. உபாஸகாநுக்ஸஹார்த்தமாக ஆம்ரிதருடைய 
நெஞ்சிலே விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்‌? என்று 
அருளிச்செய்யக்கேட்டேன்‌? என்று பணித்தான்‌ '' என்று 
ஈட்டில்‌ எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும்‌. இவ்விடத்தில்‌. அறு 
ஸந்திக்கத்தக்க து. பிள்ளைலோகாசார்யரும்‌ “அந்தர்யாமித்வ 
மாவ து: அந்த:ப்ரவிங்ய நியந்‌ தா வாயிருக்கை. ஸ்வர்க்களுரக 
ப்ரவேோதி, ஸர்வாவஸ்தைகீளிலும்‌, ஸகலசேதரர்க்கும்‌ 
துணையாய்‌. அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே 
புபரங்ரயமான திருமேனியோடே 'கூடிக்கொண்டு அவர்‌ 
களுக்கு த்‌,யேயனாகைக்காகவும்‌, அவர்களை ரக்ஷிக்கைக்காகவும்‌ 
(19 54 பூகனாய்கொண்டு ஹ்ருதயகமலத்‌ திலே எழுந்தருளி 
யிருக்கும்‌ இருப்பு." என்று தத்வத்ரயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌. 

(ஹ்ருஷீகேசன்‌) ` ஹ்ருஷ்‌ " என்னும்‌ தாது அனந்துத்‌ 
தைக்குறிக்கும்‌. ௧” என்னும்‌ பதம்‌ 'ஸுகம்‌' என்னும்‌ 
பொருளையுடையது. கம்‌ ப்ரஹ்ம ' என்ற வேதவாக்யம்‌ 
காண்க, ஈம்‌ என்னும்‌ பதம்‌ ஐச்வர்யத்தை உடையவன்‌ 
என்று பொருள்படுகிறது. ஆக,  ஹ்ருஷீகேசன்‌ ' என்னும்‌ 
திருநாமத்தால்‌, ஹர்ஷத்தையும்‌, ஸெளக்யத்தையும்‌, ஐச்வர்‌ 
யத்தையும்‌ உடையவன்‌ என்று சொல்லப்பட்டதரகிறது, 

“ ஹர்ஷாத்‌ ஸெளக்‌,யாத்‌ ஸுகைஹ்வர்யாத்‌ 

ஹ்ருஷீகேமத்வமங்நுதே '்‌ 
[ ஹர்ஷத்தையும்‌. ஸெளக்யத்தையும்‌, ஸுகமான ஓச்வர்யத்‌ 
தையும்‌ உடைத்தாயிருக்கையால்‌ ஹ்ருஷீகேசனாயிருக்கும்‌ 
தன்மையை அடைகறாோய்‌.] என்று இவ்வர்த்தம்‌ புராணங்‌ 
களில்‌ பேசப்பட்டது. 

“ஸூர்யாசந்த்‌,ரமஸோ: ७०८००७50 மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:। 
பேளதயந்‌ ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்‌॥ 
பேதநாத்‌ ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம்‌ பவேத்‌ । 
அக்‌நீஷோமக்ருதைரேவம்‌ கர்மபி,: பாண்டு,நந்த,௩ ॥ 
ஹ்ருஷ்கேமேோோ 5ஹமீமமா நேர வரதே, லோக்ப,ாவந: || ?? 

[ கேசங்கள்‌ எனப்படும்‌ ஸூர்யசந்திரரரணங்களால்‌ நான்‌ 

உலகிலுள்ளவர்களையெல்வாம்‌ எழுப்பிக்கொண்டும்‌ தூங்கச்‌ 

செய்துகொண்டும்‌ வீளங்குகிறேன்‌. இப்படி எழுப்புவதி 
னாலும்‌, தூங்கச்செய்வதா லும்‌ உலகிற்கு ஹர்ஷம்‌ உண்டாகும்‌. 
பராண்டவ ! ஸாமிர்யசந்திரர்களைக்கொண்டு செய்யப்படும்‌ 

-இக்கருமங்களால்‌, ஈச்வரனும்‌. வரமளிப்பவனும்‌, லோக 

பப வனனுமான நான்‌ ஹ்ருஷஜீகேசன்‌ எனப்படுகிறேன்‌. ] 

என்று மோக்ஷதர்மத்தில்‌ ஹ்ருஷீகேசமரப்தத்தின்‌ மற்றொரு 
பொருள்‌ விவரிக்கப்பட்டது. :* ஸூர்யரங்மிர்‌ ஹரிகேு: 
புரஸ்தாத்‌ '' [ஸுூர்யகிரணமானது பகவான்‌ ஹரியீன்‌ கேச 
மெனப்படுகிற. து] என்று வேதமும்‌ இவ்வர்த்தத்தை 
உணர்த்திற்று. " கேம ' பப்தத்தினால்‌ எம்பெருமானுடைய 
திருக்குழல்க ற்‌ை ® @ ५, சொல்லப்படுவதாகக்கொண்டு. 
° 900 न्म १06 एतः ' न कः கிறபடியே கண்டவர்களுக்கு ஹர்ஷத்‌ 
தைக்கொடுக்கும்‌ மயிர்முடியை உடையவன்‌ என்றும்‌ ஹ்ருஷீ 
கேசாப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலரீம்‌. கேசவன்‌ 
என்னும்‌ திருநாமத்திற்கும்‌, இப்படி ஒரு பொருள்‌ உரைக்கப்‌ 
பட்டது. அங்கு அநுஸந்‌ திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும்‌ 
படிப்பது. இப்படிப்‌ பலபொருள்களை உடையகதேயானாலும்‌. 
* அந்தர்யாயியாய்‌ இந்திரியங்களை நியமித்தக்கொண்டு எழுந்‌ 
கீருளியிருக்குமவன்‌ ' என்னும்‌ பொருளே இங்கு முக்ய மாகக்கடவது. 

இம்மாதிரியாக விபவசூர்த்திகளையும்‌. அந்தர்யாம்யவ 
தாரத்தையும்‌ அதுபவித்தபிறகு. இம்மூர்‌ த்திகளுக்கெல்லாம்‌ 
மூலாவதாரமாய்‌ விளங்குபவனும்‌, பத்மநாபன்‌ என்னும்‌ 
திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்திராதனை அனு 
ஸந்திக்கிறது பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமம்‌. இங்கு 
சில விஷயங்களை அறியவேண்டும்‌. அநிருத்க நாராயணனே 
பிரமனைப்‌ பிறப்பித்கவனென்றும்‌. எல்லா அவதாரங்‌ 
களுக்கும்‌ மூலமூர்த்தியென் றும்‌ சொல்லும்‌ ப்ரமாணங்கள்‌ 
முன்பே காட்டப்பட்டன. ८ பத்மநாடன்‌ என்‌ னும்‌ 
பெயரிலிருந்து ப்ரஹ்மரு த்ரர்களுக்கு ஈடுவில்‌ படிக்கப்படும்‌ 
இவ்விஷ்ணுகமூர்த்தியே பிரமனைப்‌ படைத்தவரென்று 
தோற்றுகிறது. “ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷ£ரார்ணவநிகேத௩:| 
நாகவர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாக;தோ = மதுராம்‌ புரீம்‌॥' 
என்‌ று தறாப்பா ற்கடலில்‌ தயிலும்‌ பெருமானே கிருஷ்ணன்‌ 
முதலிய அவதாரமூர்த்திகளுக்கு மூலபூகர்‌ என்றும்‌ 
சொல்லப்படுகிறது. இவை எப்படிப்‌ பொருந்தும்‌ எனில்‌: 
அநிருத்தனிடமிருந்து . க்கீராப்திராதன்‌ சோன்‌ கிறா 
ரன்‌ றும்‌ அவரிடமிருந்து மீற்ற அவதாரங்கள்‌ 
எற்படுகின்‌ றன என்றும்‌ கொண்டால்‌ அவதாரமூர்த்தி 
களுக்கு அநிருத்தரையும்‌. திருப்பாற்கடல்‌ ஈரதனையும்‌ 
மூலமூர்த்‌தியாகச்‌ சொல்லலாம்‌. “ பத்மகநாபாதிகா: 
ஸர்வே....அரிருத்‌,த,ாத்‌ ஸமுத்பந்கா 8,பாத்‌, 8947 இவேஸ்வரா:” 
என்று முன்‌ எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும்‌ இது 
பொருந்தும்‌. மஹாப்ரளயத்தில்‌ .அரிருத்தரும்‌. நைமித்திக 
ப்ரளயத்தில்‌ க்ஷீராட்‌திநாதனும்‌ பிரமனைப்‌ பிறப்பிட்பதாகக்‌ 
கொள்ளலாம்‌. அன்‌ றிக்கே தூர்ம்யைக்யத்தாலே இருவரையும்‌ 
ப்ரஹ்மோத்பா தகர்களாகக்‌ கூறுவதாகவும்‌ கூறலாம்‌, 
புருஜஸூக்தத்திலும்‌, *பாதேள5ஸ்ய” என்று அரிருத்தரை 
எடுத்து. : இஹாபவாத்புக:" [இங்கு மறுபடியும்‌ 
அவதரித்தார்‌] என்று அவருடைய அவகாரபூ,கரான 
க்ீராப்‌திராதனைச்‌ சொல்லுவதாகவும்‌, “ததோ விஷ்வங்‌ 
வ்யக்ராமத்‌' என்று அவருடைய அவதாரவ்யாப்தியைச்‌ 
சொல்லுவதாகவும்‌, * தஸ்மாத்‌ விராட,ஜாயத' என்று 
அந்த க்ீராப்திரா தனிடமிருந்தே பிரமன்‌ பிறந்தான்‌ என்று 
சொல்லுவதாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸ்ரீவிஷ்ணு 
ஸஹஸ்ரநாமத்திலும்‌ பத்மநாபேன 5மரப்‌ாபு,:' என்று 
வ்யூஹத்தில்‌ நான்காவதான அநீருத்தரைக்குறித்தும்‌, 
பத்மநாப; ப்ரஜாபதி: ' என்று முதல்‌ அவகாரமான 
வீஷ்ணுவைக்குறித்தும்‌ பத்மநாபசப்கம்‌ ப்ரயோகிக்கப்‌ 
பட்டிருப்பதையும்‌, * பத்மநாப: ப்ரஜாபதி: ' , என்‌ றவிடத் த 
பாஷ்யத்தில்‌ நைமித்திகஸ்ருஷ்டிப்ரளயவிஷயம்‌ சைதத்‌ 
த்‌ஸஏஷ்டவ்யம்‌ ” [இரந்த ப்ரஹ்மஸ்ருஷ்டி ரைமித்திக 
ஸ்ருஷ்டிப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும்‌ | 
என்‌ று பட்டர்‌ அருளிச்செய்ததையும்‌ இங்கு அதுஸந்திப்பது. 
இனி இப்பத்மநாபசப்தார்த்தை விவரிப்டோம்‌. । 

(பத்மநாபன்‌) = “" ஸர்வஜக,த்காரணம்‌ 1195000 हा मिना 
யஸ்ய ஸ:”” 

[எல்லா ஜகத்துக்கும்‌ காரணமான “பத்மத்தை . நாபியில்‌ 

உடையவன்‌ எவனோ அவன்‌.] என்று சங்கரபாஷ்யத்தில்‌. 
பொருளுரைக்கப்பட்ட ௫. ” பாமருமூவுலகும்‌ படைத்த 
பற்பகாபாவோ!'' என்று ஆழ்வாரும்‌. -* ஊழிமுதல்வன்‌........ 
பாழியந்தோளுடைய பற்பகாபன்‌ ” என்று ஆண்டாளும்‌ 
பத்மநாபசப்தத்திற்கு அர்த்தம்‌ பண்ணினார்கள்‌. “ தாதோத்‌ 
தார: ஸம்விமரதி பஞ்சவர்‌ ஷமாதாநி து ” [(பத்மஸம்பவனான ) 
பிரமன்‌ (தாமரைக்கொடியில்‌ ) மேல்‌ நேோக்கியவனாய்‌ ஐநூறு 
வருஷங்கள்‌ நுழைந்கான்‌.] என்றும்‌ “ தர்த்துர்‌ நாப்‌,யாம்‌ 
புஷ்கரம்‌ ப்ராதுர்பவதி” [ஸர்வலோகத்தை தரிப்பவனான 
ஈாராயணனுடைய நாபியில்‌ தாமரை உண்டாயிற்று.] 
என்றும்‌, ^ அஜஸ்ய நாபாவத்‌,யேகமர்ப்பிதம்‌ ” [பிறட்பிலி 
யான பெருமானின்‌ நாபியில்‌ ஒரு ( தாமரை ) தோற்று 
விக்கப்பட்டது.] என்‌ றும்‌,'யந்காபிபத்லாதப,வந்மஹாத்மா 
ப்ரஜாதிபர்‌ விங்வஸ்ருட்‌, விங்வரூப:” [உலகை உருவ 
மாகச்‌ கொண்டவனும்‌, உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான 
பிரமன்‌ எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்‌ நினரோ....] 
என்று மஹேோோடஙிஷத்திலும்‌, “ ப்ரஹ்ம வை ப்‌,ரஹ்மாணம்‌ 
புஷ்கரே$ஸ்ருஜத்‌”[ ப்ரஹ்மம்‌ பிரமனைத்‌ தாமரையில்‌ தோற்று 
வித்தது] என்று அதர்வண வேதத்திலும்‌, “ ஸ ப்ரஜாபதி 
ரேக: புஷ்கரபர்ணே ஸமப,வத்‌”” [அந்தப்‌ பிரமன்‌ ஒருவனே 
(எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில்‌ தோன்‌ நினான்‌. / 
என்றும்‌ பல வாக்கியங்களால்‌ வேதத்திலும்‌ 


“யத்‌ தத்‌ பத்மமபூ;த்‌ பூர்வம்‌ தத்ர ப்‌,ஹ்மா வ்யஜாயத | 
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: णीन இத்யவதரர்யதாம்‌ | 
ஸரிவாத்‌ ஸ்கந்தஸ்‌ ஸ்ம்பபபூவ ஏதத்‌ ஸ்ருஷ்டிசதுஷ்டயம்‌ (| 


[(பகவானுடைய' உந்தியிலிருந்‌ து) யாதொரு தாமரை முன்‌ 
உண்டாயிற்றோே அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌, பிரமனிட 
மிருந்தே-கவென்‌ பிறந்தானென்று அறியத்தக்கது. சிவனிட 
மிருந்து ஸ்கந்தன்‌ உண்டானான்‌. இது (முதலில்‌ ஏற்பட்ட) 
நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்‌ 

“கதரசித்‌ தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்‌,யாம்‌ காமாத,ஜாயத | 

தி,வ்யமஷ்டதனம்‌ பூரி பங்கஜம்‌ பார்த்தி,வம்‌ மஹத்‌ ॥ 

யஸ்ய ஹேமம௰ீ தி,வ்யா கர்ணிகா மேருருச்யதே |” 
[ அப்பெருமான்‌ ஒரு ஸமயம்‌ யோகநித்திரை செய்துகொண்டி 
ருக்கும்போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்‌ அவனுடைய 
திருநாபியில்‌, எட்டு தளத்தையுடையதும்‌, ப்ருதிவிஸம்பந்த 
முள்ளதும்‌, மிகட்டெரியதும்‌ அழகியதுமான தாமரை 
உண்டாயிற்று. அதனுடைய ஸுவர்ணமயமான அழகிய 
கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்‌_டுகிற து. ] 
என்று பாத்மபுராணத்திலும்‌ சொல்லட்பட்ட து. “'நாவியுள்‌ 
நற்கமல ௩ான்முகனுக்‌ கொருகால்‌ தம்மனையானவனே!” என்று 
பெரியாழ்வாரும்‌. நரட்டைப்படையென்றயன்‌ முதலாத்‌ 
தந்த நளிர்‌ மாமலருந்தி வீட்டைப்‌ பண்ணி விளையாடும்‌ 
விமலன்‌ தன்னைக்கண்டீரே ” என்று ஆண்டாளும்‌ :: தாமரை 
மேல்‌ அயனவனைப்‌ படைத்தவனே!” என்று 
குலசேகராழ்வாரும்‌, 


“போது தங்கு ஈான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌ 
மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று வேதநூல்‌ 

ஓதுகின்‌ றதுண்மை அல்லதில்லை மற்றுரைக்கிலே ” -—என்று 
திருமழிசைப்பிரானும்‌. ** அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி ” 
என்று திருப்பாணாழ்வாரும்‌. ' அங்கமலத்தயன்‌ ” என்றும்‌. 
“்‌ ஒருவனை உந்திபூமேல்‌ ஓங்குவித்து” என்றும்‌, 
திருமங்கைமன்னனும்‌. “செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌'' 
என்‌ றும்‌, “நான்முகற்குப்‌ பூமேல்‌ பகரமறை பயந்த பண்பன்‌ ` 
என்றும்‌ பொய்கைப்பிரானும்‌. --இருர்தண்‌ கமலத்‌ திரு 
மலரினுள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌'' என்று பூதத்‌ 
தாழ்வாரும்‌. “அலரெடுத்த உந்தியான்‌''என்‌ று பேயாழ்வாரும்‌, 
“' ஒரு தானாகித்‌ தெய்வ நான்முகக்‌ கொழுமுளை ஈன்று முக்‌ 
கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம்‌ விளைத்த உந்தி 
மாயக்கடவுள்‌ மாமுதலடியே”' என்று நம்மாழ்வாரும்‌ எம்‌ 
பெருமான்‌ ஸர்வஜகத்காரணமான பத்மத்தை ஈநரபியிலே 
கொண்டு விளங்குவதை அ_நுபவித்தார்கள்‌. “'அஜநிஷ்ட ச 
கஸ்ய நாபே,:'' [எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம்‌ 
உண்டாயிற்று] என்றார்‌ ஆளவந்தாரும்‌. 

“த்ரயோ தேவாஸ்‌ துல்யாஸ்‌ த்ரிதயமிதமத்‌,வைதமதி,கம்‌ 
த்ரிகாத,ஸ்மாத்‌ தத்த்வம்‌ பரமிதி விதர்க்காந்‌ விகடயர்‌ | । 
6460107 நாபீபத்‌,மோ ०9/41 आध (1453919; 
७898५159 ப்‌ ரூபங்கீ,பரவதி,தி ஸித்‌,த,ாந்தயதி ந: |” 

[ மும்மூர்த்திகளும்‌ ஸமர்‌' மூவரும்‌ ஒன்றே “மூன்றைக்‌ 

காட்டிலும்‌ வேறுபட்டது பரதத்வம்‌ ' என்னும்‌ வீகண்டா 
வாதங்களைப்‌ போக்கடிப்பதாய்‌, பிரமருத்திரர்களுக்கு 
முத ற்கிழங்கரயிருப்பகான பெரியபெருமாளுடைய 
திருநாபிக்கமலமான து அவனையொழிந்த மற்றவையெல்லாம்‌ 
அவனுடைய புருவநெரிப்புக்கு வசப்பட்டவை என்று 
நமக்கு முடிவுகட்டித்‌ தருகின்‌ றது.] என்று பட்டர்‌ அருளிச்‌ 
செய்தபடியே பரகத்வநிர்த்தாரணம்‌ செய்துதரும்‌ 
திருநாமமன்றோ இது. (பத்மஈரபன்‌) =" பத்மமிவ நாபி: 
யஸ்ய ஸ:””  [தாமரைபோன்‌ ற உந்தியை உடையவன்‌ | 
என்‌ றும்‌ பொருள்கொள்ளலாம்‌. =“ ஹ்ருத்பத்மஸ்ய ஈாபெள 
மத்‌,யே ப்ரகாமாமாஈத்வாத்‌ வா பத்மகாப;””' [ஹ்ருதய 
கமலத்தின்‌ ஈடுவில்‌ பிரகாசிப்பதால்‌ பத்மநாடனாகிறான்‌.. ] 
என்றும்‌ சங்கரர்‌ பொருள்கெண்டார்‌. 

இப்படி ஸகலாவதாரமூலமூர்த்தியான பத்மநாபாவதா 
ரம்‌ அறுபவிக்கப்பட்டது. அடுத்தபடியாக அப்‌ 
பெருமானுடைய முக்கயாவதாரமாகிய க்ருஷணாவதாரம்‌ 
தாமோதயூநாமத்தில்‌ அநுபவிக்கப்படுகிறது. “பத்மநாபன்‌ 
என்னும்‌ திருநாமத்தினால்‌ அவதாரத்திலும்‌ பரத்வம்‌ பொலிய 
நிற்பவனென்று காட்டப்பட்டது. தாமோதரன்‌' என்று 
ஓரிடைச்சிக்குக்‌ கட்டவும்‌ அடிக்கவுமா ம்படி நீன்ற ஸெளலப்‌, 
யத்தின்‌ எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது. * தனம” என்று 
விந்‌-16 

கயிற்றுக்குப்‌ பெயராகையால்‌ கயிற்றை வயிற்றிலுடையவன்‌ 
என்று தாமோதர நாமத்திற்குப்‌ பொருளாக&றகது. 


“ தயோர்‌ மத்‌,யக,தம்‌ பத்த,ம்‌ த௱ம்நா கடம்‌ தயோத;ரே | 
ததங்ச தளமோத,ரதாம்‌ ஸ யயெள தராமப,ந்த நாத்‌ |!” 
[அந்த யசோதையால்‌ வயிற்றில்‌ கயிற்றினாலே கட்டப்‌ 
பட்டவனாய்‌ அம்மரங்களினிடையில்‌ சென்றான்‌. கயிற்றால்‌ 
கட்டப்பட்டதால்‌ தாமோதரனாயிருக்கும்‌ தன்மையை 
அடைந்தான்‌] என்று சாஸ்த்ரம்‌ சொல்லிற்று, 
“தாம்கா சைவோத;ரே பத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌,நாதுலூகலே” 
[கயிற்றால்‌ வயிற்றில்‌ கட்டி உரலில்‌ பிடித்துக்‌ கட்டினாள்‌.] 
என்று விஷ்ணு புராணத்திலும்‌ இத்திருநாமம்‌ விவரிக்கப்‌ 
பட்டது. ஸர்வஸ்மாத்பரன்‌ ஓரிடைச்சியின்‌ கையிலே 
கட்டுண்டு கிடந்ததைக்கண்டு "'எத்திறம்‌! உரலினொடு 
இணைந்திருந்து ஏங்கிய எளிவே'' என்று ௩ம்மாழ்வீரர்‌ ஆறு 
மாதம்‌ மோஹித்துக்‌ இடர்தார்‌. “கண்ணிநுண்‌ சிறுத்தாம்பி 
னால்‌ கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‌'” என்று மதுரகவி 
களும்‌. “கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌ காணேடீ '' 
என்று திருமங்கையாழ்வாரும்‌ இந்நீர்மையிலே ஈடுபட்டனர்‌. 


“தாமாநி 607 का 078 பந்தி யஸ்யோத,ராந்தரே | 

தேர தளமோத,ரோ 65591; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித: ॥ 

[தாமசப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ லோகத்திலுள்ள நாம 
ரூபங்களெல்லாம்‌ ( பிரளயகாலத்தில்‌ ) அவனுடைய 
வயிற்றினுள்‌ விளங்குகிறபடியால்‌ ஸ்ரீதரன்‌ தாமே தரனா 
கிறான்‌.] என்று புராணத்தில்‌ சொல்லியபடியும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. "' தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞால 
முண்டவனை ” என்று நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்‌ 
தினார்‌. “தமாதி, ஸாத,நே௩ உத;ாரா உத்க்ருஷ்டா மதிர்யா 
தயா 55005 இதி தளாமோத;,:' [தமம்‌ முதலிய ஸாதனங்‌ 
களால்‌ உதாரமாய்‌ ( உயர்ந்ததாய்‌ ) விளங்கும்‌ புக்தி 
 தமமாதராரா ' எனப்படும்‌. அந்த புத்தியால்‌ அறியப்படு 
மவன்‌ தாமோதரன்‌ . என்றும்‌ சங்கரர்‌ பொருளரூரைத்தார்‌. 
“தமாத்‌, தளமோதரம்‌ விது; [காமோதரனை தமத்தினால்‌ 
அறிகிறார்கள்‌] என்ற பகவத்வசனம்‌ இவ்வர்த்தத்துக்கு 
ப்ரமாணம்‌. ~ “ தேலாநாம்‌ ஸாுகமும்ஸித்வாத்‌ த;மாத்‌, 
தளமோதரம்‌ விது; "` [தேவர்களுக்கு ஸுகமானவற்றை 
உபதேசிப்பதாலும்‌. கயிற்றினால்‌ கட்டப்பட்டகாலும்‌ 
தாமோதரனென்று அறிகிறார்கள்‌. ] என்ற ப்ரமாண த்தின்‌ 
படியும்‌ பொருள்‌ சொள்ளலாம்‌. 

ஆக. இப்பன்னிரு நாமங்களின்‌ பொருளும்‌ விவரிக்கப்‌ 
பட்டதாயிற்று. வாஸுதேவன்‌ முதலான நான்கு வியூஹ 
மூர்த்திகளினின்றும்‌ மூன்று மூன்று மூர்த்திகளாகத்‌ 
தோன்‌ றிய கேசவா தி மூர்த்யந்தரங்களுள்ள தாகவும்‌, இவர்‌ 
கள்‌ நெற்றி முகலிய அவயவங்களில்‌ நின்‌ மகொண்டு 
சரிரத்கை ரக்ஷிக்கறார்களென்றும்‌. தியானிப்பவர்களுடைய 
தாடங்களைப்‌ போக்கடிக்கிறார்களென்றும்‌ பாஞ்சராத்ர 
சாஸ்த்ரத்‌ தில்‌ ப்ரதிபா திக்கப்பட்டது. இக்கேசவா திநாமங்‌ 
கள்‌ அவர்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 

ப்ராணாயாமம்‌ 

ஆசமரத்திற்கு அடுத்தபடியாக. ஸந்தியாவந்தனத்தில்‌ 
அடிக்கடி விதிக்கப்படும்‌ ப்ராணாயாமம்‌ விவரிக்கப்படுகிறது. 
ப்ராணாயாமத்தின்போது உச்சரிக்கவேண்டிய மந்திரம்‌ பின்‌ 
வருமாறு: 
ओं भूः! ओं ुवः। ओं खचः। ओं महः। ओं जनः। ओं तपः। आं सत्यं। 

ओं तत्सवितुवरेण्यम्‌ । भरो देवस्य धीमहि। धियो यो नः प्रचोदयात्‌। 
ओं आपः ज्योती रसः अस्तं ब्रह्म YH 
ஓம்‌ பூட்‌! ஓம்‌ புவ:। ஓம்‌ ஸுவ: | ஓம்‌ மஹ: | 
ஓம்‌ ஜந:|। ஓம்‌ தப:| ஓம்‌ ஸத்யம்‌ | 
ஓம்‌ தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ | பர்க்கே தே,வஸ்ய தீமஹி | 
தியோ யோ ந: ப்ரசோதயாத்‌ | 
ஓம்‌ ஆப: ஜ்யோதீ ரஸ: அம்ருதம்‌ ப்‌,ரஹ்ம 
பூர்பு,வஸ்ஸுவரோம்‌. 


இம்மந்திரங்களை. வலது கைப்‌ பெருவிரலா லும்‌, மோ திர 
விரலாலும்‌ மூக்கைப்‌ பிடித்துக்கொண்டு உச்சரிக்க 
வேண்டும்‌. உச்சரிக்கும்போதே காற்றை இடது நாசியால்‌ 
உள்ளே இழுத்து. சிறிதுநேரம்‌ நிறுத்தி, வலது நாசியால்‌ 
வெளிவிடவேண்டும்‌. இம்மாதிரி மூன்று தடவை இம்‌ 
மந்திரங்களை உச்சரிப்பது ஒரு ப்ராணாயாமமாகிறது. பூப்‌ 
பவ:......லத்யம்‌ என்னும்‌ ஏழும்‌. எழு வ்யாஹ்ருதிகள்‌ 
எனப்படுகின்‌ றன. அதற்குமேல்‌ “ப்ரசோதயாத்‌' என்பது 
வரை காயத்ரீ என்று பிரஸித்திபெற்ற மந்த்ரமாகும்‌. அதற்கு 
மேல்‌ ஒம்‌ ஆப:' என்று தொடங்கி “பூர்புவஸ்ஸுஃவரோம்‌” 
என்றுள்ள பாகம்‌ 'காயத்ரீசிரஸ்‌' எனப்படுறெது. 

“ஸவ்யாஹ்ருதிம்‌ ஸப்ரணவாம்‌ க;ாயத்ரீம்‌ ஸிரஸா ஸஹ। 
த்ரி: படே,த,யதப்ராண: ப்ராணாயாமஸ்‌ ஸ உச்யதே ॥”' 
( ஸப்தவ்யா ஹ்ரு திகளோடும்‌, ப்ரணவத்தோடும்‌. சிரஸ்‌ 
ஸுடனும்‌ கூடிய காயத்ரியை மூச்சை அடக்கிக்கொண்டு 
மூன்று தடவை படிப்பது ப்ராணாயாமம்‌ எனப்படுகிறது. ] 
என்று ப்ராணாயாமலக்ஷணம்‌ சொல்லப்பட்டது. இந்த 
ப்ராணாயாமத்தின்‌ பெருமை 
“ய ஏதா வ்யாஹ்ருதீஸ்‌ ஸப்த ஸம்ஸ்மரேத்‌ ப்ராணஸம்யம: | 
உபாஸிதம்‌ ப,வேத்‌ தே விஸ்வம்‌ பு,வ௩ஸப்தகம்‌ || 
ஸர்வேஷு சைவ லோகேஷு க்ரமாசாரங்ச ஜாயதே ॥ 
ஷோட,மாச்ஷரகம்‌ ப்‌,ரஹ்ம களயத்ர்யாஸ்து மிர: ஸ்ம்ருதம்‌ | 
ஸக்ருத,ாவர்த்தயந்‌ மர்த்ய: ஸம்ஸாரா த;,பி முச்யதே ॥'” 
[ப்ராணனை அடக்கி இந்த ஏழு வ்யாஹ்ருதிகளையும்‌ எவர்கள்‌ 
நினைக்கிறார்களோ. அவர்களால்‌ ஏழு உலகங்களும்‌ உபாஸிக்‌ 
கப்பட்டதாகிறது; எல்லா உலகிலும்‌ ஸஞ்சரிக்கக்கூடிய 
சக்தியும்‌ உண்டாகிறது. ப இனா று அக்ஷரங்கொண்ட 
காயத்ரியின்‌ சிரஸ்ஸான து வேதத்கதையே தன்னுட்கொண்ட 
தாகச்‌ சொல்லட்படுகறது, அதை ஒரு தடவை சொன்ன 
போதிலும்‌ ப்ராஹ்மணன்‌ ஸம்ஸாரத்தினின்‌ றும்‌ விடுபடு 
கிறான்‌.] என்று யாஜ்ஞவல்க்யரா லும்‌, 

“விதி,௩ா ஸமாஸ்த்ரத்‌,ர௬ுஷ்டேக ப்ராணாயாமாம்‌ ஸமாசரேத்‌ |! 
யதுபஸ்த,க்ருதம்‌ பாபம்‌ பத்‌,ப்‌யாம்‌ வா யத்‌ க்ருதம்‌ பவேத்‌ 
பாஹுப்‌யாம்‌ மக்ஸா வாசா ங்ரோத்ர த்வக்‌, केका 

५ ॐक रकण | 

[சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட விதிப்படி ப்ராணாயாமங்‌ 

களைச்‌ செய்யவேண்டிய து; உபஸ்தத்தினாலும்‌, கால்களாலு 
கைகளாலும்‌. மநீஸ்‌, வாக்கு, காது, தோல்‌. மூக்கு. கண்‌ 
இவற்றாலும்‌ செய்யப்பட்ட பாபம்‌ (ப்ராணாயாமத்தினால்‌, 
அழிகிறது.)] என்று போதாயனராலும்‌, 

*'த,மரப்ரணவஸம்யுக்தை: ப்ராணாயாமைம்‌ சதுர்த,பை: | 
முச்யதே ப்ரஹ்ம்ஹத்யாயா: மாஸாச்சைவோபபாதகை: || 
ஸவ்யாஹ்ருதிம்‌ ஸப்ரணவாம்‌ க,ாயத்ரீம்‌ ஸபிரஸா ஸஹ। 
யே ஐபந்தி ஸத்‌ தேஷாம்‌ ந பயம்‌ வித்யதே க்வசித்‌ ॥” 

[பத்து ப்ரணவங்களுடன்‌ கூடியதான ப்ராணாயாமங்கள்‌ 
பதினான்கை ஒரு மாதம்‌ அநுஷ்டித்தானாகில்‌ ப்ரஹ்மஹத்தி 
கோஷ த்தினின்‌ றும்‌.உபடாதகங்களிலிருந்‌ தும்‌ விடுபடுரறான்‌. 
வ்யாஹ்ருதிகள்‌, ப்ரணவம்‌, சிரஸ்‌. ஆகிய இவற்றுடன்‌ 
கூடிய காயத்ரியை எவர்கள்‌ எப்போதும்‌ ஜபிக்கறோர்களோ 
அவர்களுக்கு எங்கும்‌ பயமில்லை. ] என்‌ று யமஸ்ம்ருதியிலும்‌, 

*“ப்ராணாயாமார்‌ த;ாரயேத்‌ த்ரீந் யத;விதி, ஸமாஹித: | 
அஹோராத்ரக்ருதம்‌ பாபம்‌ தத்கூஷணாதே,வ நங்யதி ॥” 
[மனச்சாந்தியுடன்‌ கூடியவனாய்‌. மூன்று ப்ராணாயாமங்களைச்‌ 
செய்யக்கடவன்‌; (அப்படிச்‌ செய்வதால்‌) இரவிலும்‌ 
பகலிலும்‌ செய்த பாபங்கள்‌ அந்த க்ஷணமே நிக்கிறது. ] 
என்று செளனகராலும்‌, 
“ப்ராணாயாமா ப்ராஹ்மணஸ்ய ॐ 7 ५17 50५0 விதி,வத்‌ க்ருதா:। 
வ்யாஹ்ருதீப்ரணவைர்‌ யுக்தா விஜ்ஞோயம்‌ பரமம்‌ தப: 
த;ஹ்யந்தே த்‌,மாயமாநாநாம்‌ த;௱தூநாம்‌ ஹி யதர்‌ மலா: | 
ததேர்த்ரியாணாம்‌ த;ஹ்யந்தே தேஷா: ப்ராணஸ்ய நிக்‌,ரஹாத்‌ ॥ [6] 

- ஸவ்யாஹ்ருதிப்ரணவகா: ப்ராணாயாமாஸ்து ஷோட,0ர | 
அபி ப்‌, ரூணஹநம்‌ மாஸாத்‌ புநந்த்யஹரஹ: க்ருதா: | ( 12 | 
[வ்யாஹ்ருதிப்ரணவங்களுடன்‌ கூடிய மூன்று ப்ராணாயாமங்‌ 
களும்‌, விதிப்படி அநுஷ்டிக்கப்பட்டனவாகில்‌ அவையே 
ப்ராஹ்மணர்களுக்கு மேலான தடஸ்‌ என்று அறியப்பட 
வேண்டும்‌. நெருப்பிலிட்டூதிச்‌ சுடப்பட்டவளவில்‌, தங்கம்‌, 
வெள்ளி முதலிய தாதுக்களின்‌ அழுக்குகள்‌ எப்படி எரிக்கப்‌ 
படுகின்‌ றனவோ, அப்படியே ப்ராணாயாமம்‌ செய்வதால்‌ 
இந்திரியங்களுடைய = 08.5/ களெல்லா ம்‌ எரிக்கப்படு 
கன்றன. வ்யாஹ்ருதிப்ரணவங்களுடன்‌ கூடியவையும்‌, 
தினந்தோறும்‌ செய்யப்படுமவையுமான டதினாறு ப்ராணா 
யாமங்கள்‌. கர்ப்பத்தைச்‌ சிதைத்தவனையும்‌ ஒரு மா தத்தில்‌ 
பரிசுத்கப்படுத்துின்‌ றன.] என்று மனுவீனாலும்‌, 

“ப்ராணாயாமத்ரயம்‌ க்ருத்வா ஸூர்யஸ்யோத,யந௩ம்‌ ப்ரதி | 

` நிர்மலா: ஸ்வர்க்கமாயாந்தி ஸந்த: ஸாக்ருதிநோ யதா |!" 
[ஸூர்யனுதிக்கும்போது மூன்று ப்ராணாயாமங்களைச்‌ 
செய்வதினால்‌. நற்காரியங்கள்‌ பல செய்த டெரிலியார்களைப்‌ 
போலே தோலஹமற்றவர்களாய்‌ ஸ்வர்க்கத்கை அடைகின்‌ ற 
னர்‌.] என்று யோகயாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியிலும்‌ விரிவாக உபதேசிக்கப்பட்ட து. 

“நாஸிகோத்க்ருஷ்ட உச்ச்‌,வாஸோ த்மாத: பூரக உச்யதே | 
கும்பூகேோ நிங்சலங்வாஸோ முச்யமாஈஸ்து ரேசக: |” 
[மூக்கன்‌ மேல்‌ காற்றை உள்ளிழுப்பது பூரகமெனப்படு 
கிறது. கரற்றை “அசையாமல்‌ அடக்கிவைப்பது கும்ப,க 
மாகும்‌; வெளிவிடுவது ரேசகமென்று சொல்லப்படும்‌. / 
என்று யோகயாஜ்ஞாவல்க்யத்தில்‌ சொல்லப்பட்ட து. இப்படி 
விதிப்படி ப்ராணாயா யும்செய்வ தினால்‌ சரீராரோக்யம்‌ முதலிய 
த்ருஷ்டப்ரயோ ஜனங்கள்‌ ஸித்‌ தக்கன்‌ றன என்பது அதுஷ்‌ 
டிப்பவர்கள்‌ அநுபவச்தில்‌ கண்ட உண்மையாகும்‌. இனி 
ப்ராணாயாம மந்திரத்தின்‌ பொருள்‌ வீவரிக்கப்படுகறது, 

[ஓம்‌ (44 ஓம்‌ பும்‌ ஸத்யம்‌] ஓவ்வொரு 
அண்டத்திலுமுள்ள பதினான்கு லோகங்களில்‌, பூலோகம்‌, 
புூவர்லோகம்‌, ஸுவர்லோகம்‌., மஹர்லோகம்‌, @ 57 ॐ 275८2, 
த போலோகம்‌ ஸத்யலோகம்‌ என்பவை மேலுள்ள छ 
லோகங்களாகச்‌ சொல்லப்படுகின்‌ றன. ஓங்காரமானது 
பகவத்வாசக மென்பது ४०८ 5०४८9 திகளில்‌ ப்ரஸித்தம்‌. 

“யூ: புநரேதம்‌ த்ரிமாத்ரேணேவ ஓஒமித்யேதேநைவ 
அக்ஷரேண பரம்‌ புருஷமபி,த்‌,யாயீத'' 

[மூன்று மாத்திரைகளுடைய ஓம்‌ என்னும்‌ இந்த அரத்‌ 
தினால்‌ பரமபுருஷனை எவன்‌ தியானிக்கிறானோ,........ ] என்று 
முண்டகோடனிஷத்திலும்‌, 'சதுர்த்யர்த்தமாத்ரா புருஷ 
தகைவத்யா'' என்று அதர்வசிகையிலும்‌. 

“யத்‌்வேதளாதென ஸ்வர: ப்ரோக்தோ 61557 55 ௪ ப்ரதிஷ்டிு: | 
தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய ய: பரஸ்‌ ஸ மஹேங்வர: |!" 
[வேதத்தின்‌ அதியிலும்‌. முடிவிலும்‌ யாதொரு ஸ்வரமான து 
உச்சரிக்கப்படுகற தோ, தனக்குக்‌ காரணமான காரத்தில்‌ 

ஒடுங்கின அவ்வோங்கார த்திற்கு எவனொருவன்‌ பொருளோ 
அவனே மஹேய்வரன்‌.] என்று நாராயணவல்லியிலும்‌, 

“ஓமித்யேகாக்ஷரம்‌ ப்ரஹ்ம வ்யாஹரந்‌ மாமநுஸ்மரர்‌ | 

ய: ப்ரயாதி த்யஜந்‌ தேஹம்‌ ஸ யாதி பரமாம்‌ க,திம்‌ ॥!'' 
[ீப்ரஹ்மவாசகமான ஓங்காரத்கைச்‌ சொல்லிக்கொண்டு, 
என்னை நினைத்துக்கொண்டு தேஹத்தை எவன்‌ விட்டுச்‌ 
செல்லுகறொனாோ, அவன்‌ மேலான கதியை அடைகிறான்‌ . | 
என்று கலையிலும்‌, 

“ஓமித்யேவம்‌ ஸத;ா விப்ரா: பட,த்‌,வம்‌ த்‌,யாத கேராவம்‌ ” 
[ப்ராஹ்ணர்களே! “ஓம்‌ ' என்று எப்போதும்‌ படியுங்கள்‌; 
(அதற்குப்பொருளான) கேசவனையே தியானம்‌ செய்யுங்கள்‌ ,] 
என்று ஹரிவம்‌சத்தில்‌ ருத்ரனாலும்‌, 

“க்லேரகர்மவிபாகாமயை: அபராம்ருஷ்ட 
புருஷவிமேஷ ஈஸ்வர: | தஸ்ய: வாசக: ப்ரணவ: |" 

[அக்கம்‌, கர்மபலன்‌, வாஸனை ஆகியவைகளால்‌ தொடப்‌ 
படாத புருஷன ஈச்வரன்‌; அவனுக்கு வாசகம்‌ ப்ரணவம்‌. ] 
என்று பாதஞ்ஜல. யோகஸத்ரத்திலும்‌ சொல்லப்பட்ட 
தன்றோ. ஒங்காரத்தையும்‌ லோகங்களில்‌ ஒவ்வொன்றையும்‌ 
சேர்த்துப்‌ படிப்பதற்குக்‌ கருத்தென்னென்னில்‌: ஓங்கார 
வாச்யனா।ன பகவானே பூலோகம்‌ முதலிய ஸப்த லோகங்‌ 
களுக்கும்‌ அந்தர்யாமியாயிருக்கறான்‌ என்பதே. =." அநுப்ர 
© ०४/८० 5८2 ஸாமாநா இ,கரண்யம்‌ ” [ஒர வேற்றுமையில்‌ 
படிப்பது வீயாபிக்திருக்கையைக்‌ காரணமாகக்‌ கொண்ட 
தாகும்‌.] என்பதல்ல வோ வேதாந்திகள்‌ கண்ட உண்மை. 
"^ ஸர்வம்‌ ஸமாப்கோஷி. ததோ5$ஸி ஸர்வ: [எல்லாவற்றை 
யும்‌ வியாபித்திருப்பதால்‌ ना ०२००१ ८07 8 (५. ] என்றானன்றோே. 
அர்ஜுனனும்‌. 

தத்ஸ்த,த்வாத,நுபங்யந்தி ஹ்யேக ஏவேதி: ஸாத,வ: '* 
[ஜீவனுக்குள்‌ பரமாத்மா நிறைந்திரப்பதால்‌ மஹான்கள்‌ 
இருவரையும்‌ ஒருவனென்றே. பார்க்கீறார்கள்‌.] என்றார்‌ 
வியாஸரும்‌. 

அன்‌ றிக்கே, (०.00 வகையாகவும்‌ பொருள்‌ கொள்ள: 
லாம்‌, ஓங்காரத்திற்கு, `" அகரரவாச்யனான விஷ்ணுவுக்கே. 
அடிமைப்பட்டிருப்பவன்‌ மகாரவாச்யனான ஜீவன்‌ `" என்று 
ரஹஸ்யக்ரந்தங்களில்‌ பொருளுரைக்கப்பட்டிருப்பது பிற 
ஸித்தம்‌, இதில்‌. அசேதனதத்வம்‌ சாப்தமாகக்‌ காட்டப்‌ 
படவில்லை. அதையும்‌ காட்டுவதற்காக, ஒம்‌ பூ... ஒம்‌ 
ஸத்யம்‌ என்று படிக்கப்படுவதாகவும்‌, கொள்ளலாம்‌; 
சேதநாசே தரங்தளெல்லாம்‌ பவவானுக்கு சேஷப்‌ யொருள்‌ 
என்று உணர்த்துகிறபடி. இத்தால்‌ லீலாவிபூ,தியோக,ம்‌, 
சொல்லப்பட்ட து. 

சுருதப்ரகாசிகாசாரியர்‌. பூ, புவ ஸுவ: முதலிய 
வற்றை லோொகபரமாகக்கொள்ளாமல்‌ பகவத்பரமாகவே 
பின்வருமாறு விவரித்திருக்கறோர்‌. (பூட்‌) 'பட சப்தமானது 
* பூவத்யஸ்மாத்‌' [இதகனிடமிருந்து உண்டாகின்றது. ] 
என்கிற வ்யுத்பத்தியின்படி காரணத்தைச்‌ சொல்லும்‌.இன்ன 
வஸ்துவுக்குக்‌ காரணம்‌ என்று விசேஷிக்காமையால்‌ பூ 
சப்தம்‌ ஸர்வகாரணமான ப்ரஹ்மத்தைச்‌ சொல்லுகிறது. 
(புவ:) “யூட்‌ என்னும்‌ தாது வஸிப்பதையும்‌ சொல்லும்‌. 
பவந்தி அஸ்மிந்‌'/ இவனிடத்தில்‌ (எல்லாம்‌) வஸிக்கின்‌ றன, ] 
என்றும்‌, == ` பவதி அயம்‌ ' [இவன்‌ (எல்லாவற்றிலும்‌. 
வஸிக்கிறான்‌.] என்றும்‌ ८०/00 பப்தத்திற்குப்‌ பொருளா 
கிறது. முதல்‌ அர்த்தத்தினால்‌ ஸர்வதரரகத்வமும்‌, பஹிர்‌ 
வ்யாப்தியும்‌ தெரிவிக்கப்படுகின்றன. இரண்டாவது 
பொருளிலிருந்து, ஸர்வ வ்யாபகத்வமும்‌, அந்தர்வ்யாட்தியும்‌ 
சொல்லப்படுகின்‌ றன. இப்படிப்பட்ட பெருமையையுடைய 
வன்‌ பரவாஸுதேவனே எனடதை, 

“யச்ச இஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌, ருங்யதே ஸ்ரூயதே$பி வா | 
அந்தர்‌ ப,ஹிங்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: ஸ்த,த:॥” 
[ இவ்வுலகில்‌, காண்பனவும்‌, கேட்பனவுமாகிய எல்லாவற்‌ 
றின்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து நிற்கிறான்‌, ] 
என்று வேதமும்‌. 
பஹ்ர்வத்ராஸெள ஸமஸ்தஞ்ச வஸத்யத்ரேதி வை யத: | 
தத: ஸ வாஸுதே,வேதி வித்‌,வத்‌;பி,: பரிபட்பயதே ॥ 
[எல்லாவற்றிலும்‌ இவன்‌ வஸிக்கைபாலும்‌, எல்லாம்‌ 
இவனிடம்‌ வஸிக்கையா லும்‌இவன்‌ பெரியோர்களால்‌ வாஸு 
தேவன்‌ எனப்படுகிறான்‌.] என்றும்‌, 

“வஸந்தி தத்ர பூ,தாஙி பூதாத்மந்யகிலாத்மஙி | 

ஸ = பூதேஷ்வமேஷேஷ வகாரார்த்தஸ்‌ ததோ 5வ்யய: ||" 

[பூதங்களை சரீரமாகக்‌ கொண்டவனும்‌. எல்லாவற்றுக்கும்‌ 

அத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில்‌ பூதங்கள்‌ வஸிக்‌ 
இன்‌ றன. அவனும்‌ எல்லா பூதங்களிலும்‌ வஸிக்கிறான்‌ , 

ஆகையால்‌ அழிவற்றவனான பகவான்‌ வகாரத்துக்கு அர்த்த 
மரகிறான்‌.] என்றும்‌ விஷ்னுபுராணமும்‌ உத்கோஷித்தன. 
{ 
(ஸுவ: ) ^" रेन ப்ரரணிப்ரஸவே'' ( क-ख என்னும்‌ 
தாது ப்ராணீகளை உண்டாக்குவதைச்‌ சொல்லுறெகது.] 
என்று தாது பாடம்‌. ஆகையால்‌ 'ஸ௫:' என்னும்‌ பதம்‌ 
(பகவானாகிய தன்னாலே) உண்டாக்கப்பட்ட வஸ்துக்களைச்‌ 
சொல்லுகிறது. அவைகளை அடைகிறானாகையால்‌ ஸுவ" 
எனப்படுகிறான்‌ ஸர்வேண்வரன்‌. 

“தத்‌ ஸ்ருஷ்ட்வா ததே,வாநுப்ராவியாத்‌ '' 

[அதை ஸ்ருஷ்டித்து, அதையே வியாபித்தது.] என்ற 
வேதவாக்யம்‌ இவ்விஷயத்தில்‌ ஆதாரம்‌. “ தரனோர்‌ பெரு 
நீர்‌ தன்னுள்ளே தோற்றி அதனுள்‌ கண்வளரும்‌ வானோர்‌ 
பெருமான்‌ '' என்றார்‌ ஆழ்வாரும்‌. “ஸ ஏவ ஸ்ராஜ்ய: ' 
என்ற விஷணுபுராண ஸ்லோகத்திலும்‌, பகவான்‌ தன்னால்‌ 
ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்களைவியா பித்‌ தருக்கறோனென்னும்‌ 
இவ்வர்த்தம்‌ அறிவிக்கப்பட்ட து. ஸுவ: என்னுமிடத்தில்‌ 
ஐகத்தை ஸ்ருஷ்டிப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்பட்ட 
தாறெது. இது ஸ்‌த,தி ஸம்ஹாரங்களுக்கும்‌ உபலக்ஷ்ணம்‌. 
* (4: என்றவிடத்தில்‌ பகவான்‌ உபாதளன்‌ காரணமெனப்‌ 
பட்டது. இங்கு அவனே நிமித்தகாரணமெனப்படுகிற த. 
 ஐகடத்‌,வ்யாபாரவர்ஜம்‌ ' என்னும்‌ ஸத்ரத்திலே இந்க ஜகத்‌ 
ஸ்ருஷ்டி முதலியவை இகரசேதனர்களுக்குக்‌ கிடையாத 
என்று வியாஸர்‌ நிர்ணயித்தார்‌. பிரமன்‌ முதலியோர்‌ 
ஸ்ருஷ்டி முதலானவற்றை நடத்திப்போருவதாகக்‌ கேளா 
நின்றோமே என்னில்‌. 

“ ஸ்ருஷ்டிஸ்தி,த்யந்தகரணீம்‌ ப்‌ஏரஹ்மவிஷ்ணுமிவாத்மிகாம்‌ । 
ஸ ஸம்ஜ்ஞாம்‌ யாதி ப,க,வாந்‌ ஏக ஏவ छां @5@55; ||" 

[ஜகார்த்தனனான பகவான்‌ ஒருவனே. ஸ்ருஷ்டி ஸ்திதி 
ஸம்ஹர/ரங்களை நடத்தும்‌ பிரமன்‌. விஷ்ணு. வென்‌ என்னும்‌ 
ஸம்ஜ்கஞைகளை அடைகிறான்‌.] என்றெபடியே ப்ரஹ்மருத்‌ 
ரர்களை சரீரமாகக்கொண்டும்‌. விஷ்ணுவாக அவதரித்தும்‌ 
ஸ்ருஷ்ட்யா திகளைச்‌ “செய்கி @ @ = = ८ 7 > இவனே 
ஜக,ந்நியிந்தகாரணமாவா ன்‌. 

( மஹ: ) * மஹீயதே இதி மஹ: '* [எல்லாராலும்‌ 
பூஜிக்கப்படுகையால்‌ * மஹ: ' எனப்படுகினான்‌.] என்பது 
மஹங்ப்தார்த்தம்‌. : மஹுபூஜாயாம்‌ ' என்று தாது, 
அன்றிக்கே. மஹ: ` என்று தேஜஸ்ஸைச்‌ சொல்லுகையால்‌ 
கேஜோ மயனாயிருப்பவன்‌ என்று சொல்லுவதாகவும்‌ 
கொள்ளலாம்‌. எவ்விதமான கேஜஸ்‌ என்று குறிப்பிட்டுச்‌ 
சொல்லாமையால்‌, எதிரிகளுக்கு ஆதித்யன்‌, அக்னி முதலிய 
வற்றைப்போல்‌ அணுகவொண்ணாதகவனாகவும்‌. அடியார்‌ 
களுக்குச்‌ சந்திரன்‌. ஸுவர்ணம்‌, மீன்னல்‌ முதலியவற்றைப்‌ 
போல்‌ குளிர்ச்‌சிபொருந்தியவனாகவும்‌ காட்சியளிப்பவன்‌ 
என்று கோற்றுகெது. ஒளியிலே ஸூர்யன்‌ முதலிய 
வற்றைப்போலவேயும்‌. குளிர்ச்சிிலே ௪ந்திரன்‌ முதலியவை 
களைப்போலேயும்‌ இருப்பவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 
வேதங்களும்‌ “ ஆதி,த்யவர்ணம்‌ புருஷம்‌ '' என்றும்‌, 
^" ஹிரண்மய்‌: புரு: '* என்றும்‌, “ வித்‌,யுத: புருஹாத்‌ '' 
என்றும்‌. -வித்,யுல்லேகேவ பரஸ்வரா'' என்றும்‌. *“ ந்த்‌ 
ராணி ரூபம்‌” என்றும்‌ உத்சோவித்தன. ரிஷிகளும்‌, 
+" ப்ரஸந்காதி,த்ய வர்ச்சஸம்‌'' [குளிீர்ர்க ஆதித்மனைப்‌ 
டோன்‌ ற ஜளியுள்ளவன்‌.] என்றும்‌. “சம்த்ரபாஸ்‌கரவர்ச்‌ 
சஸம்‌” என்றும்‌. - 56050550 65८0 ராமம்‌” என்றும்‌. 
“மீஹமஸம்‌ாா நவர்ணம்‌ ° என்றும்‌ வர்ணித்தார்கள்‌; “ முளைக்‌ 
கதிரை ” என்றும்‌ “புனலுருவாய்‌ அனலுருவில்‌” என்‌ றும்‌ 
 கதிர்மதியம்போல்‌ முகத்தான்‌ ” என்றும்‌, “ மலர்க திரின்‌ 
சுடருடம்பாய்‌?' என்றும்‌ இந்தத்தேறஸ்ஸிலே ஆழ்வார்‌ 
களும்‌ ஆழங்கா ற்பட்டார்கள்‌. 

(@&5:) “ஜாதாந்‌ நஈயதீதி ஜு: என்கிற வ்யுக்பத்தியின்‌ 
படியே ஸகல ஜீவராசிகளையும்‌ அவரவர்கள்‌ கர்மத்திற்குத்‌ 
தகுந்தவாறு ௩டத்திச்செல்கறான்‌ என்று பொருள்‌. அந்தர்‌ 
யாமியாயிருந்து நியமிக்கறோன்‌ என்று அர்த்தமாகவுமாம்‌; 
"" அந்த: ப்ரவிஷ்ட: மாஸ்தா ஜநாநாம்‌ ” என்றது சுடர்மிகு 
சுருதி. “ உடல்பிசை உயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்தளன்‌”: 
என்றது தமிழ்‌ மறை, லோகத்தை வீடுகறோன்‌ என்று அர்த்தமாகவுமாம்‌. ॥ 

(தப:) ஸூர்யன்‌. அக்னி முதலிய தேஜஸ்ஸுகளா 

யிருக்‌துகொண்டு தபிக்கரோனாகையால்‌ :தப:' எனப்படுகிறான்‌. 
“ தஸ்ய பளஸா ஸர்வமித,ம்‌ விபூதி | '' 
[ அவனுடைய ஒளியினலேயே இவையெல்லாம்‌ ஒளிவிடுகின்‌ 
றன.] என்றும்‌, “யே ஸூர்யஸ்‌ தபதி தேஜஸேத்‌,த,!'' 
[எந்தப்‌ பரம்பொருளின்‌ ஒளியினாலே பிரகாசப்படுத்தப்‌ 
பட்டவனாய்‌ ஸூர்யன்‌ ஒளிவீடா நிற்கறொனோ] என்றும்‌, 
“யஸ்யாதி,த்யோ பாமுபயுஜ்ய பளதி'' என்றும்‌ மறை அழையாநின் றது. 

"५1 कज 93801555 தேஜ: ஜகத்‌, பாஸயதே5இலலம்‌ | 
யச்சந்த்‌,ரமஸி யச்சாக்‌,நெள தத்தேஜோ வித்‌,தி, மாமகம்‌ ||” 
[ உலகையெல்லாம்‌ பிரகாசிக்கச்செய்யும்‌ ஸூர்ய தேஜஸ்‌ 
ஸூம்‌, சந்தராக்னிகளுடைய தேஜஸ்ஸும்‌ என்‌ னுடைய 
ஓளியே என்று அறிவாயாக] என்றான்‌ கீதையில்‌ கண்ணனும்‌, 

(ஸத்யம்‌) ஸ்வரூபத்காலும்‌, ஸ்வபபவத்தரலும்‌ விகார 
மற்றவன்‌ என்றபடி, “ஸத்யம்‌ ஜ்ஞாஈமநந்தம்‌ ப்‌,ரஹ்ம '* 
என்றும்‌, * ஸத்யஸ்ய ஸத்யம்‌ '' என்றும்‌ வேதாந்தங்கள்‌ 
உத்கோஷித்தனவன்றே. 

“பூட்‌ புவ முதலிய ஒவ்வொன்றோடும்‌ ப்ரணவக்கைப்‌ 
படித்திருப்பதால்‌ இவை ஒவ்வொன்‌ மும்‌ தனித்தனி மந்திரங்‌ 
களென்‌ ற்‌ உணர்த்தப்படுகிறது, இப்படிப்பட்ட ஸ்வரூப 
ஸ்வபராவங்ககே்‌ உடைய அகார வாச்யனுக்கே அடிமைப்‌ 
பட்டது ஆ த்மவஸ்து என்று தெரிவிப்பதற்காகவும்‌ ஓங்காரம்‌ 
ஆவ்ருத்‌தி செய்யப்படுகிறது என்று கொள்ளலாம்‌, இப்படிப்‌ 
பட்ட ப்ரஹ்மம்‌ எதுவோ அது என்று மேல்‌ மந்திரங்க 
ளோடு சேர்த்துக்கொண்டும்‌ பொருள்‌ கூழலாம்‌. 

ஓங்காரமாகிய ப்ரணவத் திற்கு ருஷி ப்ஸஹ்மா. 
௪டந்‌ கஸ்ஸாு-களயத்ரீ, தேவதை-பரமாத்மா என்று படிக்கப்‌ 
பட்டிருக்கிறது, “பூ முதலிய எழு வ்யாஹ்ரு திகளுக்கும்‌ 
ருஷி-வா தேவர்‌, = ठक नलर காயத்ரி. ப்ரஹ்மா தேவதை 
என்று சருதப்ரகாசிகாசா ரியர்‌ அருளிச்செய்கார்‌; இவை 
களுக்குத்‌ தனித்தனியே ரிஷிசந்தோடகேவதைகளுண்டென்‌ 
அம்‌ சிலர்‌ நிரூபிக்கறார்கள்‌ என்‌ றும்‌ காட்டினார்‌. அதாவது:- 
அத்ரி. ப்ருகு, குத்ஸர்‌. வஸிஷ்டடர்‌. கெளதமர்‌. காச்யபர்‌; 
ஆங்கியஸர்‌ ஆகியோர்‌ முறையே இவற்றுக்கு ரிஷிகளாவர்‌. 
காயத்ரி, உஷ்ணிக்‌. அநுஷ்டுப்‌. ப்‌ ருஹத. பங்க்தி, த்ருஷ்டுப்‌. 
ஐகதி என்பவை முறையே இவற்றுக்குச்‌ சர்தஸ்ஸாகள்‌. 
அக்நி. வாயு. ஸார்யன்‌ (அர்க்கன்‌ ), வாசேர்‌ (ப்ருஹஸ்பதி), 
வருணன்‌, இந்திரன்‌ , விற வேதேவர்கள்‌ ஆகியோர்‌ தேவதை 
கள்‌. அதாவுது, இந்த தேவதைகளை சரீரம கக்கொண்ட 
பகவான்‌ கேவதை என்று ' தாத்பர்யம்‌. இம்மா 5१५, 
மற்ற மந்திரங்களிலும்‌ பல பல தேவர்கள்‌ தேவகைகளாகச்‌ 
சொல்லப்பட்டிருந்தபோதிலும்‌. அவர்களுக்கு அந்தர்யாமி 
யான பகவானே மந்த்ரப்ரதிபாத்யமான தேவதை என்பகே 
வேதாந்திகளின்‌ கொள்கையாகும்‌, 

ஓங்காரம்‌, வ்யாஹ்ருதிசள்‌ முசலியவற்றின்‌ உற்பத்தி 
யைப்பற்றி வேதத்தில்‌ சில விருத்தாந்தங்கள்‌ டடிக்கப்‌ 
படுகின்‌ றன. அவை பின்வருமாறு: பஹ்வ்ருச 
ப்ரராஹுமணத்தில்‌ 
"` ப்ரஜாபதிரகாமயத ப்ரஜாயேயேதி| ஸ தபோ 5தப்யத | 
ஸ தபஸ்தப்த்வா। இமாந்‌ லோகாஈஸ்ராஜத்‌ । ப்ருதி,வீமந்தரி- 
க்ஷம்‌ தி,வம்‌! தாந்‌ லோகாநகப்யதபத்‌। தேப்‌,யோ 5பி,தப்தேப்‌,யஸ்‌ 
த்ரீணி ஜ்யோதீம்ஷ்யஜாயந்த| ` அக்நிரேவ ப்ருதகிவ்யா 
வாயுரர்தரிக்ஷாத்‌ ஆதி,த்யோ தி,வ:। தேப்‌,யோ 5பி,தப்தேப்‌_யஸ்‌ 
த்ரீணி முக்ராண்யஜாயந்த | பூ,ரித்யேவ ரிக்‌,வேத,த,ஜாயத 
புவ இதி யஜார்வேதராத்‌ ஸுவரிதி ஸாமவேதரத்‌| தாநி 
ஸருக்ராண்யப்‌,யதபத்‌|: தேப்‌,யோ5பி,தப்தேப்‌,யஸ்‌ த்ரயோ 
வர்ணா அஜாயந்த। அகார உகார மகார இதி| தாரேகத,ா 
ஸமபரத்‌ ததே,ததேரமிதி। தஸ்மாதி,த,மாவ்ருணோத்த மிதி 
வை ஸ்வர்க்க,லோக ஓமித்யாதி,த்யோ யோ5ஸெள தபதி |” 
[பரமபுருஷன்‌ தான்‌ பலவாக ஆக்‌வண்டுமென்று வீரும்பி 
னான்‌. அவன்‌ (அதற்கனுகுணமாக) ஸங்கல்பத்வைச்‌ செய்‌ 
தான்‌. அப்படி ஸங்கல்பத்சைச்‌ செய்து பூமி. அந்தரிக்ஷம்‌. 
தேவலோகம்‌ ஆகிய இவ்வுலகங்களைப்படைத்தான்‌. அப்படி. 
ஸ்ருஷ்டி செய்யப்பட்ட லோகங்களைக்‌ குறித்து மறுபடியும்‌ 
ஸங்கல்பிச்தான்‌. அப்படி ஸங்கல்பவிஜயமான அந்த 
லோகங்களிலிருநக்து மூன்று சோதிகள்‌ உண்டாயின, 
ப்ரு இவியிலிருந்‌து அக்னியும்‌, அந்தரிகூஷக்திலிருந்து வாயுவும்‌, 
ஸ்வர்க்கலோகச்திலிருந்து ஸூர்யனும்‌ உண்டானார்கள்‌. 
(அந்த ஜ்யோ திஸ்ஸுக்களைக்‌ குறித்தும்‌ ஸங்கல்பம்‌ செய்த து) 
அவைகளிலிருந்து பரிசுத்தமான மூன்று வ்யாஹ்ருதிகள்‌ 
உண்டாயின. ருக்வேதத்திலிரும்து ' பூ ' என்றும்‌, யஜூர்‌ 
வேதத்திலிருந்து ' புவ: என்றும்‌. ஸரமவேக 5 5 ०१065 
ஹுஃவ:' என்றும்‌ உண்டாயின. அவைகளைக்‌ குறித்தும்‌ 
ஸங்கல்பம்‌ செய்தான்‌ (பகவான்‌ ). அவைகளிலிறாந்து ௮, 
உ, ம. என்னும்‌ மூன்று எழுத்துக்கள்‌ தோன்றின. 
அவைகளை (பரமபுருஷன்‌ ) ஒன்று சேர்த்தான்‌. அதுவே 
ஓங்காரமாயிற்று. ஆகையால்‌ இவ்வோங்காரம்‌ எல்லாவம்‌ 
றையும்‌ வியாபித்திருக்கறது. இதுவே , ஸுவர்க்கலோக 
மாகும்‌; ஓங்காரமே பிரகாசிக்கும்படியான ஸூர்யனாகவு 
மாகிறது.] என்று ஓதப்பட்டாது. 

ய்ரஜாபதிர்‌ லோகாநப்‌,யதபத்‌| தேப்‌,யோ5பி,தப்தேப்‌,யஸ்‌ 
த்ரயோ வித்யாஸ்‌ ஸம்ப்ராஸ்ரவர்‌| தஸ்யா அபி,தப்தாயா 
ஏதாந்யக்ராணி ப்ராஸ்ரவந்த | பூர்‌ பு,வஸ்‌ ஸுவரிதி! தாந்யப்‌, 
தபத்‌। தேப்‌,யோ5பி,தப்தேப்‌,ய: ஓங்காரஸ்‌ ஸம்ப்ராஸ்ரவத்‌| 
யதள்‌ மாுக்ரகாநாம்‌ மாகுகாநாம்‌ ஸர்வாணி பர்ணாரி ஸந்த்‌ 
ருண்ணாரி ஏவமோங்காரேண ஸர்வா வாசஸ்‌'ஸ ஓங்கார ஏவ 
6615569 ஸ ப்ரஹ்ம `" 

( ப்ரஜாபதியானவர்‌ லோகங்களைக்குறித்‌.து ஸங்கல்பித்தார்‌. 
அவைகளிலிருந்து மூன்று வித்தைகள்‌ ( வேதங்கள்‌ ) 
உண்டாயின. அவைகளைக்‌ குறித்தும்‌ ஸங்கல்பித்த வுடன்‌ 
“பூர்‌ புவஸ்‌ ஸுவ: ' என்னும்‌ இம்மூன்று அக்ஷ்ரங்களும்‌ 
உண்டாயின. அவைகளைக்‌ குறிந்தும்‌ ஸங்கல்பம்‌ செய்த 
வுடன்‌ ஒங்காரம்‌ கோன்றிற்று. எப்படி வெளுக்க நிற மள்ள 
பக்ஷிகளின்‌ எல்லா இறகுகளும்‌ ஒன்றாகச்‌ சேர்க்கப்பட்டிருக்‌ 
கின்றகதோ. அப்படியே எல்லா வார்‌ த்கைகளும்‌ ப்ரணவத்‌ 
தனால்‌ ஒன்றாகக்‌ கோர்க்கப்பட்டிருக்கின்‌ றன. ஆகவே ப்ரண 
வமே வேதமாகும்‌. அதுவே ப்ரஹ்மம்‌.] என்று மற்றொரு 
உடனிஷத்திலும்‌ உரைக்கப்பட்ட து. இவைகளிலிருந்து 
ஒங்காரத்தினுடையவும்‌. பூராதி, வ்யாஹ்ருதிகளினுடைய 
வும்‌ பெருமைகள்‌ விளங்குகின்றன. 

அடுத்தபடியாக ப்ராணாயாமத்தில்‌ உச்சரிக்கப்படுவது 
காயத்ரிமந்த்ரம்‌. இதன்‌ பெருமையும்‌ பொருளும்‌ வாசாம கோசரம்‌. வைஷணவர்களோடும்‌. சைவர்களோடும்‌, 
அத்வைதிகளோடும்‌, த்வைதஇிகளோடும்‌ “விசிஷ்டாத்வைதிக 
ளோடும்‌ வாசியற ஸர்வத்‌,விஜர்களா லும்‌ ஆதரித்து அநுஸந்‌ 
தஇிக்கப்படும்‌ மந்திரம்‌ இத ஒன்”றேயாகும்‌, ஓ வ்வொருமகஸ்குர்‌ 
களும்‌ தம்‌ சம்‌ மதத்திற்கேற்றவா று பலவகையாக இம்மந்‌ 
திரத்திற்குப்‌ பொருள்கொள்ளுகறார்கள்‌. ஸ்ருதி ஸ்ம்ருதி 
இதிஹாஸ புராணங்களால்‌ ஆதரிக்கப்பட்ட பொருள்களை. 
காயத்ரீவிசாரப்ரகரணத்தில்‌ வெகு விரிவாகப்‌ பின்னால்‌ 
விவரிப்போம்‌. இப்போது காயத்ரிக்குப்‌ பதவுரை மட்டும்‌ 
இரண்டு விதமாக எழுதப்படுறெது:— 


1. ஸவிது:-உலகங்களை ஸ்ருஷ்‌டி.ச்தவனா&ய. தே,வஸ்ய- 
நாராயணனுடையதும்‌. வரேண்யம்‌ எல்லாராலும்‌ 
வரிக்கத்தகுக்ததமான, தத்‌ பர்க்க; அந்தக்‌ கல்யாண 
குணங்களின்‌ ஸமூஹத்தை, தீமஹி தியானம்‌ செய்வோம்‌; 
ய:எந்த தேவன்‌. நம்முடைய, திய: புத்திகளை, 
ப்ரசோதயாத்‌-—(தன்‌ விமான உபாஸனகைங்கர்யங்களில்‌) அூண்டுகிற।ாரோ; 

2. தேவஸ்யஃப்ரகாசம்‌ முதலிய குணங்களையுடைய, 
ஸவிது:-— ஸமர்யனுக்குள்ளே எழுந்கருளியிருப்டவனும்‌, 
வரேண்யம்‌-—எல்ல! ராலும்‌ வரிக்கப்படுபவனும்‌, பர்க்க; 
ஒளிமயமான திவ்ய மங்கள விக்ரஹவிசிஷ்டனுமான 
பகவானை இமஹி- தியானம்‌ செய்கிறோம்‌. (மற்றவை 
முன்போல்‌) 


இனி “ ஒமாட: '' என்று கொடங்கியுள்ள மந்திரம்‌ 
காயத்ரீிரஸ்‌ எனப்படும்‌. இக ற்கு ருஷி ப்ரஹ்ம ; அநுஷ்டுப்‌ 
சந்தஸ்ஸு; பரமாத்மா தேவதை. இகற்குப்‌ பொருள்‌ பின்‌ 
வருமா று:— 
(ஒமாப:) ஒங்காரவாச்யனான பகவானே ஆப: 
எனப்படுபவன்‌. “ ஆபோ வா இத்‌ ஸர்வம்‌” முகலான 
மந்திரங்களில்‌ சொல்லப்படும்‌ அட்பப்‌,த,வாச்யன்‌ அச்‌ சுதனே 
என்று உணர்த்தப்படுறறெது.  ஆப்லு வ்யாப்தெள ” 
என்‌ கிற தாதுவில்‌ “£ ஆப்நோதி இதி ஆப: ” [எல்லாவற்றை 
யும்‌ வியாபிக்கறானகையால்‌ * ஆட:! ` எனப்படுகிறான்‌. ] 
என்பது வ்யுத்பத்தி, “ ஸர்வம்‌ ஸமாப்நோஷி '' [எல்லா 
வற்றையும்‌ நன்கு வியாபித்திருக்கறாோய்‌] என்றான்‌ கீதையில்‌ 
அர்ஜுனனும்‌, “ யச்ச கஞ்சித்‌ ஜக,த்யஸ்மிந்‌ த்‌ ருங்யதே 
ம்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிமச தத்‌ ஸர்வம்‌ வ்யாட்ய 

நாராயண: ஸ்தி,த:।॥ முதலான பரம்‌ தமான ங்ருதிவாக்யங்‌ 
களும்‌ இவ்விஷயத்தில்‌ ப்ரமாணம்‌. இப்படிப்பொருள்‌ 
கொள்ளும்போது ' ஆப்‌ 2 என்று சொல்லாமல்‌ ` `" ஆப: "" 
என்று பன்மையாகப்‌ படிக்திருப்பது சளந்தஸமென்று 
கொள்ளவேண்டும்‌. அன்றிக்கே ஆப:' என்று ஜலத்கைச்‌ 
செல்லுவதாகக்கொண்டு ஓங்காரவாச்யனே ஜலத்திற்கும்‌ 
அந்தர்யர்மி என்று சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
இப்படி அந்கர்யாமிபர்யந்தமாகவேோ. யெளகிகமரக 
பகவானைக்‌ குறிப்பதாகவோ பொருள்‌ கொள்ளாவிடில்‌, 
“ஆபோ வா இதம்‌ ஸர்வம்‌ ˆ" என்று யஜார்வேதத்திலும்‌, 
“ஸர்வம்‌ வா இகமம்மயம்‌ '' என்று அதர்வவேத,ச்திலும்‌ 
சொல்லப்பட்டவை பொருந்கமாட்டா. 

(ஜ்யோ தி: ) ஜ்‌யோ திஸ்வரூபனும்‌ அவனே. “நாராயண 
பரோ ஜ்யோதி;' என்றும்‌, “தம்‌ தேவா ஜ்யோதிஞூம்‌ 
ஜ்யோ தி; என்றும்‌, “ஏஷ ஸம்ப்ரஸாதேர அஸ்மாச்சஸிராத்‌ 
60.58 597५ பரஞ்ஜ்‌ யா தி நபஸம்பத்‌,ய ०० ०५५ ரூடேணாபீ, 
நிஷ்பத்யதே'' [இந்க ஜீவன்‌ இச்சரீரத்தினின்றும்‌ கிளம்பி. 
பரஞ்சோதியை அடைந்து ஸ்வரூபப்ராப்தியைப்‌ பெறு 
கிறான்‌.] என்றும்‌. “தச்சுப்ஸம்‌ ஜ்யோதிஷாம்‌ ஜ்யோதி: 
என்றும்‌ சருதிகளிலும்‌, “த்வம்‌ ஹி ப்ரஹ்ம பரம்‌ ஜயோ தி 
என்று பாகவத புராணத்திலும்‌. “சுடரடி தொழுதெழு” 
“என்கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்‌ சோதி" 
“பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின்‌ மற்றோர்‌ 
பரஞ்சோதியின்‌ மையில்‌ படியோவிரிகழ்கின்‌ ற 

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்தவெம்‌ 
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே `" 

“மாயன்‌ மலரடிக்கீழ்‌ சுழிபட்டோடும்‌ சுடர்ச்சோதி 
வெள்ளம்‌ '' - சூழ்ந்ததனில்‌ பெரிய பர௩ன்மலர்ச்சோ இயோ '' 
என்று முதலிலும்‌, நடுவிலும்‌. முடிவிலும்‌ ஆழ்வாராலும்‌ 
பரமபுருஜென்‌ சோதிமயனாயிருக்கறொனென்று சொல்லப்‌ 
பட்டது. அன்றிக்கே, "ஆப: என்று ஜலத்திற்கு அந்தர்‌ 
யாமியாயுள்ளவன்‌ என்று சொன்னாப்போலே, ஜ்யோதி:' 
என்று ஸூர்யன்‌ அக்னி முதலான கேஜஸ்தத்வத்திற்கும்‌ 
அந்தர்யாமி அவனே என்று சொல்லுவதாகவும்‌ கொள்ள 
லாம்‌. இப்படி அப்பு. தேஜஸ்‌ என்னும்‌ இரண்டு தத்துவங்‌ 
களையும்‌ சொன்னது பஞ்சபூதங்களுக்கு (1०४ स कण ८2, 

“ய: ப்ருதிவ்யாம்‌ छीन ५४. ப்ருதி,வீமந்தரோ யமயதி 
யம்‌ ப்ருதி,வீ ® 66153. 
யஸ்ய ப்ருதி,வீ மாரீரம்‌...யஸ்யாப: மமரீரம்‌... ... ப 
[எவனொருவன்‌ ப்ருதிவியின்‌ உள்ளும்‌ புறமுமிருந்து 
கொண்டு நியமிக்கறினோ, எவனை ப்ருதிவி அறியாகோ, 
எவனுக்கு ப்ருதிவி சரீரமோ....எவனுக்கு ஐலம்‌ சரீரமோ.... ] 
என்று வேதம்‌ உத்கோவித்தது. 

“ஐக;த்ஸர்வம்‌ மாரீரம்‌ தே' [ இவ்வுலகெல்லாம்‌ உனக்கு 
சரீரம்‌.] என்று ஸ்ரீராமாயணத்திலும்‌, , “தாநி ஸர்வாணி 
தத்‌,வபு:'' [அவையெல்லாம்‌ அவனுடைய சரீரம்‌.] “தத்‌ 
ஸர்வம்‌ வை ஹரேஸ்‌ தந: '' / அவையெல்லாம்‌ ஹரியினுடைய 
தேஹும்‌] என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும்‌, “பூ: ப்ராணி 
ஈஸ்‌ ஸர்வ ஏவ கு,ஹாமுயஸ்ய''[ எல்லா ப்ராணிகளும்‌ ஹ்ருதய 
குஹையிலுள்ள பரமாத்மாவுக்கு இருப்பிடம்‌.] என்று 
ஆபஸ்தம்ப 51.00.850 5.8.9८2 இப்படி ஜக,கராகாரலாய்‌ 
நிற்கும்‌ நிலை நிர்ணயிக்கப்பட்ட து. 

“திடவிசும்பெரி வளி நீர்‌ நிலமிவைமிசை 

படர்பொருள்‌ முழுவ துமாயவையவைதொறும்‌ 
உடல்மிசையுயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ 

சுடர்மிகு சுருதியு ளிவையுண்டசுரனே '' 

என்றும்‌ “ நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ "' 
என்றும்‌ ஆழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌. 

(ரலே:) ரஸஸ்வரூபனாயிருப்பவனும்‌ ஓங்காரவாச்யனன।ன 
பரமபுருஜனே -ரஸோ வை ஸ:। ரஸம்‌ ஹ்யேவாயம்‌ 
லப்‌,த்‌,வாநந்தீ, ப,வதி'' [அந்தப்‌ பரம புருஷன்‌ ரஸஸ்வ 
ரூபனாயிருப்பவனன் றோ. ரஸஸ்வரூபியான அவனை அடைந்து 
ஜீவன்‌ ஆநந்‌ தத்தையுடை.யவனாறோன்‌. ] என்றும்‌, “ஸர்வ 
க;ந்த,: ஸர்வரஸ:'' [எல்லா கந்தங்களையுரை_யவன்‌: எல்லா 
ரஸங்களையுமழுடையவன்‌ .] என்றும்‌, “யோ வ: மிவதமோ 
ரஸ;:'' என்றும்‌ வேகம்‌ விளம்பிற்று. 

“கனியைக்‌ கரும்பினின்‌ சரற்றைக்‌ கட்டியைத்‌ தேனையமுதை” என்றும்‌, 
“கட்டியைத்தேனை அமுதைகன்பாலைக்கனியைக்கரும்புதன்னை ” என்றும்‌. 

“ அச்சுதன்‌ அமலனென்கோ? அடியவர்‌ வினைகெடுக்கும்‌ 
ஈச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ? 
அச்சுவைக்கட்டியென்கோ? அறுசு வையடிசிலென்கோ? 
நெய்ச்சுவைத்தேறலென்கோ?கனியென்கோ?பாலென்கேனோ? என்றும்‌, 

“ எனக்குத்தேனே பரலே கன்னலே அமுதே "' என்றும்‌, 
+° எனக்கென்றும்‌ தேனும்‌ பாவம்‌ அமுதுமாகிய திருமால ?' 

என்றும்‌, “ ஸர்வரஸ: '' என்று வேதம்‌ உத்கோவித்த இவ்‌ 
விஜயத்தில்‌ ஆழ்வார்களும்‌ ஆழங்காற்பட்டார்கள்‌. (ரஸ:) 
“ ஓமாபோ ஜ்யோதி: "* என்றவிடத்தில்‌ ஞ்சபூதங்களுக்கும்‌ 
அந்கர்யாயியாயிருப்பவன்‌ பகவரன்‌ என்று ஒரு பொருள்‌ 
விளக்கப்பட்டது: அதற்குச்சேர. * ரஸ: '' என்பதற்கு 
ரஸம்‌ முதலிய பூதகுணங்களுக்கும்‌ நிர்வ 1 ஹகனாயிருப்பவன்‌ 
என்றும்‌ ஒரு பொருள்‌ கொள்ளலாம்‌. இங்கு ரஸ: ' 
என்றது ५०८1858 ஸ்பர்மா தி, குணங்கள்‌ எல்லாவற்றுக்கும்‌ உபலக்ஷணம்‌. 

“ பூநிலாய ஐந்துமாய்ப்‌ புனற்கண்‌ நின்ற நான்குமாய்‌ 
தீநிலாய மூன்‌ றுமாய்ச்‌ சிறந்த கால்‌ இரண்டுமாய்‌ 
மீனிலாய தொன்றுமராகி வேறு வேறு தன்மையாய்‌ 

நீரிலாய வண்ணம்‌ நின்னை யார்‌ நினைக்க வல்லரே '' 
என்று தஇருமழிசைப்பிரானும்‌. [பூநிலாய ஐந்து-பூமியிலிருக்‌ 
கும்‌ பப்தம்‌, ஸ்ப்ர்‌ப0ம்‌, ரூபம்‌, ரஸம்‌. கந்தம்‌ என்னும்‌ ஐந்து 
குணங்கள்‌; புன ற்கண்‌....நான்கு-ஜலத்திலுள்ள பாப்தஸ்‌ +7८ए 
ரூபரஸகுணங்கள்‌; கால்‌-காம்று; மீன்‌ —௮அகாசம்‌. / 

“நரற்றச்‌ சுவையூறொலியாகிய நம்பீ ` 
[நாற்றம்‌ கந்தம்‌; சுவை-ரஸம்‌; ஊறு-ஸ்பர்சம்‌; ஓலி சப்தம்‌] என்று திருமங்கையாழ்வாரும்‌, 

“நாற்றத்‌ தோற்றச்சுவை ஒலி உறலாக நின்ற எம்‌ வானவர்‌ 
ஏற்றையேயன்றி மற்றொருவரை யானிலேன்‌ எழுமைக்குமே"” என்று நம்மாழ்வாரும்‌ 
இவ்வர்த்தத்தை அநுஸந்தித்தருளி னார்கள்‌. 

இப்படிப்‌ பஞ்சபூசுங்களும்‌. அவற்றின்‌ குணங்‌ 
களும்‌ பகவத,தீனங்களென்‌ று இங்கு அநுஸந்திப்பதற்குக்‌ 
கருத்து * பஞ்சயூகாத்மகமான சரீரத்திலும்‌, சப்தாதி 
விஷயங்களிலும்‌ உழன்று திரியும்‌ எனனை அவற்றுக்கு 
நிர்வாஹகனான நீமீய ரக்ஷித தருளவேணும்‌ ` என்பத. இத்‌ 
தால்‌ விரோ திகளைப்‌ போக்கித்த்ருபவன்‌ என்னுமர்த்தத்தை 
இவ்வா று அநுஸந்தித்தபிறகு ப்ராப்யமா கிய கைங்கர்யத்தை 
ஸாதித்துத்தருமவனென்னும்‌ விஷயம்‌ அறிவிக்கப்படுகிறது 
°" அம்ருதும்‌ '* என்னும்‌ பதத்தால்‌. 
(அம்ருதம்‌) மோசக்ூத்திற்குக்‌ காரணமாயிருப்பவன்‌. 
கார்யமாயெ மோக்ஷத்தைக்‌ குறிக்கும்‌ அம்ராகபதம்‌ காரண 
மாகிய பகவானைக்குறித்து ஒளபசாரிகமாகப்‌ பிரயோகிக்கப்‌ 
படுகிறது. உபாஸகர்களுக்கு ஜராமரணாதிகள்‌ நீங்கியிருக்கை 
யாகிற மோக்ஷ ஸாகத்தைத்‌ தருபவன்‌ என்றபடி. இவ்‌ 
விஷயத்தை =!" உதாம்ருதத்வஸ்யேமா ந: '' [மோக்ூஷஸாகத்‌ 
திற்கு நிர்வாஹகன்‌ பரமபுருஷஜன்‌] “ய ஏம்‌ விது.ரம்ரு 
தாஸ்தே ப,வந்தி'' [எவர்கள்‌ இவனை அறிகீறார்களோ. 
அவர்கள்‌ முக்தர்களாக ஆகின்‌ றனர்‌. ] ததேவ ஸுுக்ரம 
ம்ருதம்‌ தத்‌, (150 0010 ' தத,பஸ்‌ ஸ ப்ரஜாபதி: '? [அதுவே 
பரிசுத்தமான தும்‌. மோக்ஷப்ரதமானதும்‌. ஸர்வவ்யாபியாம்‌ 
ஸர்வஸ்வாமியுமான ப்ரஹ்மம்‌.] *'ப்ரதத்‌; வோசே அம்ருதம்‌ 
நு வித்‌;வாந்‌ க;ந்தர்வோ நாம நிஹிதம்‌ கு.ஹாஸ (கைக-நா) 
[கந்தர்வன்‌ ( கம்‌ தாரயதி ) எனப்படும்‌ ப்ரஹ்மஜ்ஞானி 
ஹ்ருதய குஹையிலள்ள அந்த அம்ருதத்தை உபதேகித்‌ 
தான்‌.] “யத்ர தேவா அம்ருதமாகமராகா: '' (தைஃ-நா ) 
[எவ்விடத்தில்‌ நித்யஸரிகள்‌ அவ்வம்ருகத்தை அநுபவித்‌ 
அக்கொண்டிருக்கின்றார்களோ] “ பராம்ருதாத்‌ பரிமுச்யந்தி 
ஸர்வே ?' [உயர்ந்த அம்ருதமாகிற பகவானால்‌ எல்லாரும்‌ 
முக்‌தியடைகரறார்கள்‌. ] * அம்ருதம்‌ ப்ரபத்யே அம்ருதகோமமம்‌ 
ப்ரபத்யே” [அம்ருகத்தை ஸரணமடைகிழேன்‌. அம்ருதத்‌ 
திற்கு உறைவிடமாயிருப்பகை சரணமடைகியேன்‌.] 
“ அஸ்மாகம்‌ அம்ருதம்‌ லோகம்‌ த,சளது “ அம்ருதம்‌ 
து,ஹா௩நா ஸா நோ லோகமம்ருதம்‌ த,த;ாது '' [ அம்ருதத்கைக்‌ 
கொடுக்கும்‌ அது நமக்கு அம்ருதலோகத்கைத்‌ தரட்டும்‌. ] 
“ அம்ருதஸ்ய தேவ தாரணோ பூயாஸம்‌ ” [தேவனே! 
மோக்ஷ ஸுகத்தை தரிப்பவனாக ஆகக்கடவேன்‌ , ] 
^“ அம்ருதஸ்யைஷ ஸேது: ” [இவனே மோகத்திற்கு 
வழியாவான்‌.] (முண்டகம்‌ 2-2-4) முதலான நூற்றுக்‌ 
கணக்கான வேதவா க்கியங்களும்‌,  அம்ருதத்வஞ்ச க,ச்ச,தி'' 

(கெளதமஸ்ம்ருதி) முதலான பல ஸ்ம்ருதி வாக்கியங்களும்‌, 

“ வீடாக்கும்‌ மெய்ப்பொருள்தான்‌ வேதமுதற்பொருள்தான 
விண்ணவர்க்கு  நற்பொருள்தான்‌ நாராயணன்‌ ” '  [ஈான்‌-திருவ 18] 
முதலான ஆழ்வார்களின்‌ ஸ்ரீஸூக்திகளும்‌ இவ்விஷயத்‌ 
தில்‌ ப்ரமாணம்‌, (அம்ருதம்‌) மிகவும்‌ இனியவன்‌ என்றும்‌ 
பொருள்கொள்ளலாம்‌. இவனுடன்‌ ஒப்பிடும்போது கேவ 
லோகத்து அம்ருதமானது உப்புச்சாறு என்று சொல்லத்‌ 
555 57 @ 7.5. முன்‌ எடுத்த வேத வரக்யங்கள்‌ பலவற்றில்‌ 
அம்ருத சப்தம்‌ இப்பொருளையும்‌ உடையதாய்‌ வீளங்குகிறது 

॥ அமுதினுமாற்றவினியன்‌ நிமிர்திரை நீள்கடலானே "என்றும்‌. 
+" கனிவார்‌ வீட்டின்பமே என்‌ கடற்படாவமுதே '' என்றும்‌, 
"^ அமுதென்றும்‌ தேனென்றும்‌ ஆழியானென்றும்‌ 

அமுதன்று கொண்டுகந்தானென்றும்‌- அமுதன்ன 
சொல்மாலை ஏத்தித்‌ தொழுதேன்‌ சொலப்பட்ட । 
நன்மாலை ஏத்தி நவின்று '' என்றும்‌ 

ஆழ்வார்களும்‌ இவ னு பைய இனிமையிலே ஈடுப ட்டார்‌ 
கள்‌ (ப்ரஹ்ம) கடைசியாக இவனே ப்ஸஹ்ம சப்த ந்தால்‌ 
வேதாந்தங்களில்‌ படிக்கப்படுபவன்‌ என்று உணர்த்தப்‌ படுகிறது. 

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; 
ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே 
[பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ 
செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ 
படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ 
சொல்லப்பட்டது. இந்த ப்ரஹ்ம சப்தம்‌ அஈந்தனென்றும்‌ 
நாராயணனென்றும்‌ வேதங்களில்‌ சொல்லப்படுமவனையே 
குறிக்கிறது என்பது =^“ ஸத்யம்‌ ஜ்ஞாஈமர௩ந்தம்‌ ப்ரஹ்ம ”' 
என்றும்‌, “ நாராயணபரம்‌ ப்ரஹ்ம ”' என்றும்‌ வேதாந்தங்‌ 
களில்‌ நிர்ணயிக்கப்பட்ட து. அம்ருதம்‌ ப்‌,ரஹ்ம-முச்தாத்மா”” 
என்று ரங்கராமா நுஜமுனி தைத்திரியோபனிஷத்‌ பாஷ்யத்‌ 
தில்‌ உரைத்தார்‌. 
“ ஓமாப: ஜ்யோ தீரல: '' என்று பஞ்ச பூதாத்மகமான 
லீலாவிபூ,தி பகவத,தின மென்‌ று சொல்லப்படுவதாகவும்‌, 
“ அம்ருதம்‌ ப்ரஹ்ம ' என்று நித்ய விபூதியும்‌ பகவததனம்‌ 
என்‌ று சொல்லப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌. “ பூர்புவஸ்‌ 
ஸுவரோம்‌ ”என்று லோ கத்ரயமும்‌ ப்‌,ரஹ்மா த்மகமே என்று 
உணர்த்கப்படுிறது, இப்படிப்பட்ட பகவானை தியானம்‌ 
செய்கேன்‌ என்று காயத்ரி மந்திரத்துடன்‌ சேர்த்து ஒரே 
வாக்கயெமாகப்‌ பொருள்கொள்ளவேண்டும்‌. இந்தப்‌ பிராணா 
யாம மந்திரங்கள்‌ முழுவதும்‌ தைத்திரீம்யோாபநிஷக்‌ நாரா 
யணவல்லியில்‌ இருபத்தேழு, இருபத்கெட்டாவது அது 
வாகங்களில்‌ படிக்கப்பட்டிருப்ப தினால்‌ இவை பரமபுருஷனான 
நாராயணனையே தெரிவிக்கின்றன என்று தெளிவாகிறது. 


நிற்க, ஸந்த்யாவந்தனத்தின்‌ ஆரம்பத்தில்‌ முற்கூறிய 
முறைப்படி ஆசமனத்தையும்‌, ஒரு பிராணாயாமத்தையும்‌ 
செய்து, பிறகு பின்வருமாறு ஸங்கல்பித்துக்கொள்ள 
வேண்டும்‌, 

“ரீ பூகவதளஜ்ஞயா 0453915 கைங்கர்யரூபம்‌ ப்ராதஸ்‌ 
ஸந்த்யாவந்த:ம்‌ கரிஷ்யே?” என்று காலையிலும்‌. “ஸ்ரீ 
ப,கஃவத.ஜ்ஞயா ப,கவத்‌,கைங்கர்யரூபம்‌ மாத்யாந்ஹிகம்‌ 
கரிஷ்யே ° ` என்று மத்யாஹ்நத்திலும்‌ ^" ஸ்ரீ ப,க.வத,ாஜ்ஞயா 
ப,கஃவத்‌ கைங்கர்யரூபம்‌ ஸாயம்‌ ஸந்த்‌,யாவந்த;நம்‌ கரிஷ்யே 
ஸாயங்காலத்திலும்‌ ஸ்ங்கல்பபரகாரமி பகவ 
தஃாஜ்ஞயா ப,க.வத்‌ கைங்கர்யரூபம்‌ '' என்பதற்கு பதிலாக 
“ ப,கவித்ப்ரித்யர்த்தம்‌ '' என்றும்‌, “ஸ்ரீ மஹாவிஷ்ணு 
ப்ரீத்யர்த்தம்‌ ?' என்றும்‌ சிலர்‌ அனுஸந்திப்பார்கள்‌. 
“ஸந்த்யாவந்தரும்‌ கரிஷ்யே '' என்பதற்கு பதில்‌ “ஸர்த்‌, 
யாமுபாஸிஷ்யே ” என்றும்‌ சொல்லுவ அண்டு. 


அடுத்தபடியாக ஜலத்தை அபி,மந்த்ரணம்‌ செய்வதில்‌ 
வீநியுக்கமான * ஆபோ வா இத,ம்‌ ஸர்வம்‌ `” என்னும்‌ 
மந்திரத்தை அநுஸந்‌ திக்கவேண்டும்‌. , இது நாரராயணவல்லி 
யில்‌ இருபத்திரண்டாவது அதுவாகமாகப்‌ படிக்கப்படு 
கிறது.  @ ८2 ८० ® ॐ 0 ८2 ஸந்தியாவந்தனத்தின்‌ ஆதியில்‌ 
^ ஆபோஹிஷ்டள ” முதலான மந்திரங்களுக்கு முன்‌ 

போதாயந ஸுூத்ரத்கைச்‌ சேர்ந்தவர்களால்‌ அநுஸந்திக்கப்‌ 
பட்டுவருகிறது. ஆபஸ்தம்ப ஸ௫த்ரத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ 
இதை அநுஸந்திப்பதில்லே. இனி இம்மந்திரத்தையும்‌. 
அகன்‌ பொருளையும்‌ விளக்குகிறோம்‌. * 

आपो वा हर्द 4 विश्वामूतान्यापः। प्राणा वा आपः। परव आपः। 
aaa: | अन्नमामः। संराडापः। विराडापः। खराडपः। Brean: 
उयोतीप्यापः। सत्यमापः। सवां देवता आपः। भूथु्स्सुषराप ओं । 

ஆபோ வா இதம்‌ ஸர்வம்‌ | விரிவா பூ,தாந்யாப: 
ப்ராணா வா ஆப: | (८०61 ஆப: அம்ருதமாப:| அந்நமாப: 
नए आ: | விராடாப:! ஸ்வராடபப: । சந்தராம்ஸ்யாப: 
ஜ்‌யா தீம்ஷ்யாப: । ஸத்யமாப:। ஸர்வா தேவதா ஆப: 
புர்பு,வஸ்ஸுவராப ஓம்‌ |! 

(ஆபோ வா இதம்‌ ஸர்வம்‌) இங்கு அட்சப்கத் தினால்‌ 
சொல்லப்படுபவன்‌ ஸர்வவ்யாபியான பரபபுருஷனேயாவன்‌. 
“ஆப்லு வ்யாப்தெள ' என்று தாதுவாகையாலே. “ஸர்வம்‌ 
ஸமாப்நோஷி'' என்று பகவத்‌ விஷயத்தில்‌ படிக்கப்பட்டு 
மிருக்கிறது. அன்‌ றிக்கே, அப்சப்தம்‌ ஜலத்கைக்‌ குறிக்‌ 
கின்றதென்று கொண்டாலும்‌. அபர்யவஸாரவ்ருத்தியாலே 
ஜலாந்தர்யாமியான பரமாத்மபர்யந்தம்‌ சொல்லுவதாகக்‌ 
கொள்ளவேண்டும்‌. அல்லாவிடில்‌. ' இதம்‌ ஸர்வம்‌ ' 
“சூற்தளம்ஸ்யாப:! “ஜ்யோதிம்ஷயாட:? இத்யாதிகளாலே 
எல்லாப்‌ பொருள்களுடனும்‌ ஒரே வேற்றுமையில்‌ படித்‌ 
திருப்பதை ஒருவிஜிமாகவும்‌ நிர்வஹிக்கமுடியாது. (ஆபோ 
வா இதம்‌ ஸர்வம்‌) இவை எல்லாம்‌ அப்சப்தவாச்யனா।ன 
பகவானே. இத்‌ ஸர்வம்‌ என்று 'இந்திரியங்களுக்கு 
விஷயமான ஸர்வ பதீர்த்தங்களும்‌ காட்டப்படுகின்‌ றன. 
“புருஷ भर 91550 ஸர்வம்‌ ” என்றும்‌. “விங்வம்‌ நாராயணம்‌” 
என்றும்‌. “ புருஷ ஏவேத,ம்‌ விங்வம்‌ ” என்றும்‌, “* விங்வமே 
வேத,ம்‌ புருஷ: ”', என்றும்‌ வேதாந்தங்களில்‌ பலவிடங்களில்‌ 
ஸகலவஸ்‌ துக்களும்‌ புருஷ மட்‌, க, வாச்யனே என்று படிக்கப்‌ 
பட்டது. இப்படிச்‌ சொல்லுவது புருஷனுக்கும்‌, மற்றவை 
களுக்கும்‌ ஓக்யத்திலைல்ல; பரம புருஷன்‌ மற்றெல்லா 
வற்றுக்கும்‌ ஆத்மாவாயிருப்பதாலேயே இந்த வ்யவஹாரம்‌ 
என்பதை “ விங்வாத்மா௩ம்‌ நாராயணம்‌ ” என்றும்‌, 

“யச்ச கிஞ்சித்‌ ஐக,த்யஸ்மிக்‌ த்‌,ருங்பதே ம்ரூயதே5பி வா। 
அந்தர்‌ (130000०5 தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: ॥ '' 
என்றும்‌. “ தேநேத,ம்‌ பூர்ணம்‌ புருஷேண ஸர்வம்‌ '' என்றும்‌, 
“` சமாாவாஸ்யம்‌ இதம்‌ ஸர்வம்‌ › என்றும்‌ :' ய: ப்ருதிவ்யாம்‌ 
திஷ்ட,ந்‌....யஸ்ய ப்ரூதிலீ மாரீரம்‌” என்றும்‌. அந்த: ப்ர 
விஷ்ட: மராஸ்தா ஜநகா௩காம்‌ ஸர்வாத்மா ”  [ஸர்வாந்கர்யாமி 
யான பகவான்‌ ஜனங்களை உள்நுழைந்து நியமிக்கிறான்‌.] 
என்றும்‌ கணக்கற்ற வேக வாக்யங்கள்‌ உதக்கோவித்தன. 
“ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோக$ஸி ஸர்வ:?' '' தத்ஸ்த,த்‌- 
வாத,நுபமய்யந்தி” -அவஸ்தி,தேரி தி காமாக்ருத்ஸ்௩: ” 
[ஜீவனுள்‌ பரமாத்மா வியாபித்து நிற்பதால்‌ அவர்களுக்குள்‌ 
அபே,கவ்யவஹாரம்‌ காணப்டடுகிறது என்று 57५० (ए 2 कन्ठ 
ரென்னும்‌ ஆசார்யர்‌ நினைக்கிறார்‌. ] என்றும்‌ ஞானிகளான 
பெரியோர்களும்‌ பிரகடனப்படுத்தினார்கள்‌. இவை எல்லா 
வற்றையும்‌ கண்டு வைத்தும்‌ ஓக்யம்‌ ஐக்யமென்‌ று க றிவரும்‌ 
கர்ப்ப, நிர்பளுக்யர்களைக்‌ ( கருவிலேதிருவீலா தவர்களைக்‌ ) 
கண்டு நாம்‌ வருந்துவதல்லால்‌ 'செய்யலா வகொன்‌ றில்லை. இவ்வர்த்தத்கை. 

“ நாம்‌ அவன்‌ இவன்‌ உவன்‌ அவள்‌ இவள்‌ உவள்‌ எவள்‌ 
தாம்‌, அவர்‌ இவர்‌ உவர்‌.அது இது உது எது 

வீம்‌ அவை இவை உவை அவை ஈலம்‌ தீங்‌(கு) அவை 
ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே '” என்றும்‌, 

“ யாவையும்‌ யாவரும்‌ தானாம்‌ அமைவுடை' நர்ரணன்‌ १ என்‌ றும்‌, 

“ தீதறு நிலத்தொடெரிகாலினொடு நீர்கெழு விசும்புமவையாய்‌ ”' என்றும்‌. 
ஆழ்வார்களும்‌ அத்யாதரீத்துடன்‌ அருளிச்செய்து போந்தார்‌ 
கள்‌. இப்படி. எல்லா வஸ்துக்களும்‌ பவத 5८050८6 என்று 
பொதுவாகச்‌ சொன்னதோடு திருப்தியுறாமல்‌. சில முக்கிய 
மான பதார்த்தங்களை எடுக்‌. து அவைகளும்‌ பக வத தீிருமே 
என்று அடுத்தபடியாகப்‌ படிக்கப்படுகறது, (விஸ்வா 
பூ,தாந்யாப:) என்று தொடங்க, 

“ எங்கு வந்துறுகோ என்னையாள் வானே ஏழுலகங்களும்‌ நீயே 
அங்கவர்க்கமைத்த தெய்வமும்‌ நீயே அவற்றவை கருமமும்‌ நீயே 

பொங்கிய புறம்பால்‌ பொருளுளவேனும்‌ அவையுமோ நீயின்னேயானால்‌ 
மங்கிய அருவாம்‌ நேர்ப்பமும்‌ நீயே வான்புலனிறந்ததும்‌ நீயே” 

இறந்ததும்‌ நீயே எதிர்ந்ததும்‌ நீயே நிகழ்வதோ நீயின்னேயானால்‌ ”” 

“ திங்களும்‌ ஞாயிறுமாய்ச்‌ செழும்‌ பல்‌ சுடராயிருளாய்‌ '' 

“ தீயாய்‌ நீராய்‌ நிலனாய்‌ விசும்பாய்க்‌ காலாய்‌ 

தாயாய்த்‌ தந்தையாய்‌ மக்களாய்‌ மற்றுமாய்‌ முற்றுமாய்‌ '* 

“தீதறு நிலத்தொடெரி காலிஜெொடு நீர்கெழு விசும்புமவையாய்‌” 

“்‌ சந்தமாய்ச்‌ சமயமாகிச்‌ சமய வைம்பூ தமாகி 

அந்தமாய்‌ ஆதியாக அருமறை அவையுமானாய்‌ '' என்று ஆம்வார்களும்‌ இப்படி அதுபவித்தார்கள்‌. 

(விஸ்வா பூதாற்யாப:) **ஆடே வா இதம்‌ ஸர்வம்‌ ” 
என்று எல்லா அசேதனங்களையும்‌ சொல்லுவதாசவும்‌, 
“விங்வா பூ,தாநி”, என்று ஸர்வசேதனதத்வத்தையும்‌ 
செொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌, அன்றிக்கே, 
“ இதம்‌ ஸர்வம்‌ '' என்று எல்லாவற்றையும்‌ சொன்ன 
போதிலும்‌ ஜீவர்களே அவ்யவஹித மரீர பூ,கர்களாயிருப்ப தாலும்‌. 
அவர்களே மோக்ஷ யோக்யர்களாயிருப்பதா லும்‌ 

கெளஸ்துபம்போலே பகவானுக்கு உகந்கவர்களாகை 
யாலும்‌ ஆதா திலயத்‌ காலே தனியே படிக்கிறது, ஸர்வேஸ்‌ 
வரன்‌ ஜீவர்களை ஹாக்ஷ£த்தாகவே வியாபித்து கரித்து 
நிற்கிறான்‌; அசேதன தத்வத்கையோவெனில்‌ ஜீவத்வாரா 
வியாபித்து தரித்து நிற்றொோன்‌ என்பதே ४०५. ஸ்ம்ருதி 
களுடைய ஸித்தரந்தமாகத்‌ தேறி நிற்கிறது. அசேதன 
தத்வத்தையும்‌. ஜீவ தத்வத்தைப்போல்‌ ஸாக்ஷாத்தாக 
ஸர்வேங்வரன்‌ வியாபித்து நிற்தாக ஓர்‌ பக்ஷமுண்டென்று 
நியாய ஹித்தாஞ்ஐநர திகளில்‌ ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ எடுத்‌ 
திருந்தபோதிலும்‌, அப்பஷ்ஷம்‌ ஈம்‌ ஆசாரியர்களிற்‌ டலரால்‌ ஆதகரிக்கட்பட்டதன்று 

“ அநேக ஜீவேர ஆத்மநா அநுப்ரவிங்ய நாமரூபே வ்யாகரவாணி ” 

[என்னுடைய மரீர. 'பூ,தனான இந்த ஜீவனால்‌, அசேதன 
தத்வத்தை வீயாபித்து, (அதற்கு) நாம ரூபங்களைக்‌ 
கொடுக்கக்கடவேன்‌. ] 

தத்வத; ரதஸ்ய அரேஷாு கேமிரர்ப்பிதா நாப,ாவரா அர்ப்பிதா: | 
ஏவமேவ ஏதா பூ,தமாத்ரா: ப்ரஜ்ஞாமாத்ராஸ்வர்ப்பிதா: | 
ப்ரஜ்ஞாமாத்ரா: ப்ராணே அர்£பிதா: || ” 


(0.59 சக்ரத்தின்‌ வளையமானது ஆரங்களிலும்‌, ஆரங்கள்‌ 
(௪க்ரமத்‌தியிலிறாக்கும்‌) நாபியிலும்‌ எப்படிச்‌ சேர்க்கப்பட்‌ 
டிருக்கின்‌ றழனவோ அம்மாதிரியே அகேகனதத்வம்‌ சேகன 
தத்வத்தினிடமும்‌, சேதனகத்வம்‌ பரமாத்மாவினிடமும்‌ 
சேர்க்கப்பட்டிருக்கின்‌ றன.] முதலான ங்ருதி வாக்யங்கள்‌ 
இவ்விஷயத்தில்‌ ப்ரமாணம்‌. (விஸ்வா பூதாந்யாப:) டஞ்ச 
பூதங்களும்‌ (4582550 505८0 என்று சொல்லுறெதாகவும்‌ 
கொள்ளலாம்‌. (ப்ராணா வா ஆப:) ஸகல ஸம்ஸாரி சேதனர்க்‌ 
கும்‌ ஜீவிகஹேதுவான ப்ராணன்‌ என்‌ னும்‌ வாயு விமோஷமும்‌ 

பகவானே. “ ப்ராணஸ்‌ ததர்நுகமாத்‌ ”' என்று தொடங்கும்‌ 
இந்த்‌,ர்‌ ப்ராணாதி,கரணத்தில்‌ ப்ராணனுக்கும்‌ ஆந்மாவா 
மிருப்பவ்ன்‌. பகவானே என்னும்‌ “விஜயம்‌. விவரிக்கப்‌ 
பட்டது. < ஜீவர்கள்‌ ` உயிருடனிருட்பதற்கு ''ப்ராணனே 
முக்கிய காரணமாகையால்‌ இங்கு ` அது தனியாகப்‌ படிக்கப்‌ 
படுகிறது. இவ்விடத்தில்‌ சாந்தோக்ய ॐ ८15 62 5 ஜிர்தாவது 
ப்ரபாடகத்தில்‌ சொல்லப்பட்ட பீன்‌ வரும்‌ விருத்தாந்தம்‌ 
அநுஸந்திக்கத்தக்கது!-— ப்ராணன்‌, வாக்கு, கண்‌, காது! 
மனஸ்‌ என்னும்‌ ஐந்தும்‌ தங்களுக்குள்‌ யார்‌ மேலானவர்‌ 
என்று அறிவதற்காக, பிகாவான ப்ரஹ்‌ மாவிடம்‌ சென்‌ றன. 
உங்களில்‌ “யார்‌ வெளிப்பட்டால்‌ இந்க சரீரம்‌ மிகவும்‌ 
ஹேயமானதாகக்‌ காணப்படுகிறதோ, அவனே உங்களில்‌ 
१ என்று அவர்‌ பதிலுரைத்தார்‌. அதைக்‌ 
கேட்ட வாக்கு முதலில்‌ சரிரத்தைவிட்டுச்‌ சிறிது காலம்‌ 
வெளிசசென்‌ று திரும்பிவந்த து. அந்த சரீரமானது அக்காலத்‌ 
தில்‌ பேசமுடியாமலிருந்தததயொழிய Cவேழவிதமான 
கலேசமொன்றையுமடையவில்லை. இம்மா திரியே கண்‌,காது, 
மனம்‌ ஆகியவைகள்‌ வெளிப்பட்டடேர்‌ தும்‌' சரீரம்‌ ௨யிருட 
னேயே இருந்த.து.- கடைசியாக முக்யப்ராணன்‌ வெளிச்‌ 
செல்லவேண்டுமென்‌ று நினைத்த மாத்திரத்திலேயே கண்‌ உயர்ந்தவன்‌ 

உடனே அந்நாலும்‌. -ப்ராணனை வெளிச்செல்லாமலிருக்க 
வேண்டுமென்று வேண்டிக்கொண்டு நீயே எங்களில்‌ 
உயர்ந்தவன்‌ ' என்று ஓட்புக்கொண்டன என்டதே: அவ்‌ விருத்தாந்தம்‌. 

“ப்ராணோ ஹி வா$ங்களநாம்‌ ரஸ:| தஸ்மாத்‌. யஸ்மாத்‌ 
கஸ்மாச்ச 
அங்காத்‌ ப்ராண... உத்க்ராமதி ததேவ தச்சு,ஷ்யதி ” 
[ப்ராணனே அங்கங்களுக்கு ஸாரமாயிருப்பது. ஆகையால்‌ 
எந்த அங்க,த்திலிருந்து ப்ராண்ன்‌ வெளிக்கிளம்ப்கறதோ 
அந்த அங்கம்‌ அப்போதே உலர்ந்து போகிறது. ]“ என்று 
சாந்தாக்யத்திலும்‌ படிக்கப்பட்டது. (ப்ராணா வா ஆப:) 
கண்‌ காது முதலிய எல்லா இந்திரியங்களும்‌ ப்ராண பப்தத்‌ 
தால்‌ வேகாக்சங்களில்‌ ட்டிக்கப்படுவதுண்டாசகையால்‌ 
அவைகளெல்லாம்‌ பகுவ்க,தினங்களே என்று சொல்லப்‌ 
படுவதாகவும்‌ கொள்ளலாம்‌, 

அடுத்தபடியாக, முற்கூறிய ப்ராணன்களுக்கு ஆகார 
(1504 च्छ ஸம்ஸரி சேதனரும்‌ பஅவித,தீனரே எனப்டடு 
இறது.  (பங்வ ஆப:) ஸம்ஸாரத்தில்‌ கட்டுண்டு கிடப்டவ 
ராகையாலும்‌, *ந்ருபமா:' என்று சொல்லும்டடி ஜ்ஞான 
ஹீனராயிருசக்கையாலும்‌ “மாவ” என்று ஸம்ஸாரிசேசனர்‌ 
அனைவரையும்‌ எடுக்கிறது. “தத்‌ த்வமஸி”' அஹம்‌ ப்‌,ரஹ்‌- 
மாஸ்மி'' --அயமாத்மா ப்ரஹ்ம" யோ 5ஸாவஸெள புருஷஸ்‌ 
ஸோ.5ஹமஸ்மி ' என்று வேதங்களிலும்‌. “க்ஷேத்ரஜ்ஞம்‌ 
சாபி மாம்‌ வித்தி, என்று தஇிகையிலும்‌, “மன்‌ பல்லுயிர்‌ 
களுமாகி''. १ காயமும்‌ கீவனுமாய்‌”” என்று ஆழ்வாராலும்‌ 
இவ்விஷயம்‌ ீர்த்திக்கப்பட்டது. இவ்விடங்களில்‌ ஒரே 
வேற்றுமையில்‌ படி க்கிருப்பது ५४१ 516 பளவத்தைக்‌ 
காரணமாகக்கொண்ட து என்பதை வேத,வித்துக்கள்‌ நிீர்ண 
யித்திருக்கிறார்கள்‌. பமப்ராயனான சேதனனாுக்கும்‌. ஸர்வ 
வயாடபியான ஸர்வேர்வரனுக்கும்‌ ஐக்யம்‌ சொல்லுவது 
ஸ்கல்‌ ப்ரமாண விருத்தமென்‌ பதை நிஷ்பக்ஷபா திகள்‌ 
ஈன்குணர்வர்‌. 

` அடுத்தபடியர்க இச்சேசனர்க்கு மோக்ஜஷஸாுகத்திற்கும்‌, 
இவ்வுலகஸுுகத்திற்கும்‌ (9/7 ०/५ ஹகனாயிருப்பவன்‌ பகவானே 
என்று உணர்த்துகிறது, (அம்ருதமாப.) (அந்நமாட:) 
என்னும்‌ வாக்‌ இியங்களால்‌, 
ஊனமில்‌ செல்வமென்கோ? ஊனமில்‌ சுவர்க்கமென்கோ? 
ஊனமில்‌ மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே”” என்றும்‌ 

“கோலங்கொள்‌ சுவர்க்கமும்‌ யானேயென்னும்‌ 
கோலமில்‌ நரகமும்‌ யானே என்னும்‌ 
கோலந்திகழ்‌ மோக்கமும்‌ யானேபென்னும்‌ 
கோலங்கொளுயிர்களும்‌ யானேயென்னும்‌” 
என்றும்‌ ஆழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌. 

(क? ப). மோக்ஷத்திற்கும்‌ நிர்வாஹகனெனப்படு 
கிறது. இவ்விடத்தில்‌ ப்ராணாயாமத்தில்‌ :அம்ருகம்‌ ப்ரஹ்ம 
என்றவிடத்தில்‌ படித்த ப்ரமாணங்களை அநுடெந்திப்பது. 
( 55८07८4; )  அத்யதே-—அநுபூயகதே- இதி அந்றம்‌ ” 
என்‌றெபடியே, ஸர்வேட்திரியங்களா லும்‌ அனுபவிக்கப்படும்‌ 
ப்ராக்ருதமான இன்‌ பங்களெல்லாவற்றுக்கும்‌ நிர்வாஹகன்‌ என்று தாத்பர்யம்‌. 

“பாவமும்‌ அறமும்‌ வீடும்‌ இன்‌ பமும்‌ துன்பம்‌ தானும்‌ 
கோவமும்‌ அருளும்‌ அல்லாக்‌ குணங்களுமாய எந்தை'' 
என்றார்‌ திருமங்கையாழ்வாரும்‌, 'வீடும்‌” என்று அம்ருத 
८०८३530 75 5 9०८0. இன்பமும்‌” என்று அந்ஈசப்தார்த்தமும்‌ 
விவரிக்கப்பட்ட து. இப்படி மோக்ஷஸுகத்தையும்‌. இவ்‌ 
வுலக இன்‌ பத்தையும்‌ சொன்னபிறகு. மோக்ஸ்தானமாகிற 
பரமபதீமும்‌. ப்ராக்ருத ஸுகத்தை அனுபவிக்குமிடமாகிய 
இவ்வண்டமும்‌ “ஸம்ராடளப:? “விராடப்‌? என்னும்‌ 
பதங்களால்‌ படிக்கப்படுகின்‌ றன. (ஸம்ராடளப:) “(ஸம்யக்‌ 
ராஜதி இதி ஸம்ராட்‌” [மிகவும்‌ பிரகாசிக்கறதாகையால்‌ 
ஸம்ராட்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படியே அதிகமான 
ஒளியை உடைத்தான பரமபதம்‌ ஸம்ராட்‌' சப்தத்திலல்‌ 
சொல்லப்டடுகிற து. 

“அத்யர்க்காநலத,ப்தம்‌ தத்‌ 05050 விஷ்ணோர்‌ மஹாத்மந: | 
ஸ்வயைவ ப்ரப,யா ராஜர்‌ து,ஷ்ப்ரேக்ஷம்‌ தேவதளகவை: |” 
[மஹாபுருஜனை வீஷ்ணுவினுடைய அந்த ஸ்கானம்‌, 
ஸூர்யாக்னிகளுடைய ஒளிகளை விஞ்சிய ஓளியையுடைய து. 

அரசனே! தன்னுடைய ஓஒஓளியாலேயே அது தேவதானவர்‌ 
களரல்‌ கணவொண்ணாகதாய்‌ வீளங்குகிறது.] என்று மஹா 
பாரதத்தில்‌ சொல்லப்பட்ட தன்றோ, ”ஆதியஞ்சோதியென்‌ 
கோ?” என்று ஆழ்வகர்‌ இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌. 

(விராடப:) “தஸ்மாத்‌; விராட,ஜாயத'! என்று புருஷ 
ஸூக்தத்தில்‌ விராட்‌” சப்கத்தில்‌ சொல்லப்பட்ட அண்டத்‌ 
திற்கும்‌ ஆத்மாவாயிருப்பவன்‌ . “விராட்‌ என்பதில்‌ ஏவவசாம்‌ 
(ஒருமை) ஜாத்யேக வசநமென்று கொள்ளத்தக்கது. 

“ அண்டபாநரந்து ஸஹஸ்ராணாம்‌ கோடிகோடிமதாநி ச” 
என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ சொல்லிய ஸகலாண்டங் களுக்கும்‌ நிர்வாஹகன்‌ என்றபடி. 

“ அண்டக்குலத்துக்கதிபதியாகி ” என்றார்‌ பெரியாழ்‌ 
வாரும்‌. “பரஞ்சுடருடம்பாய்‌” என்‌ றவுடன்‌ நம்மாழ்வார்‌ 
“அழுக்குப்பதித்த உடம்பாய்‌” என்றாப்போலே “லம்‌- ராடாப? என்றவுடன்‌ “விராடன்‌ எனப்படுறெது. 

“அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ 
ஸ்ம்ருதம்‌” 
{ இவ்வுலகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌ அந்தரிக்ம்‌ வீராட்‌ என்‌ 
மம்‌ சொல்லப்படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ சொல்லி 
யிருக்கிறபடியே. பூலோகத்திற்கும்‌, அந்தரிக்ஷத்திற்கும்‌ 
நிர்வாஹகன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுவதாகவும்‌ 
கொள்ளலாம்‌, நிகரில்‌ கூழ்சுடராய்‌ இருளாய்‌ நிலனாய்‌ 
விசும்பாய்‌” என்றார்‌ ஆழ்வாரும்‌. 
(ஸ்வராடாப்‌:) பாவ ஆஃ: என்றவிடத்தில்‌ சொல்‌ 
லப்பட்ட ஸம்ஸாரி சேகனரைப்போலே. முக்தசேதனரும்‌ 
பகவததீனர்களே என்று உணர்த்தப்படுகிறது. '* 6 
ப்‌,ரஹ்மா ஸ ஸிவ: ஸேர்த்‌,ர: ஸோசக்ஷர: பரம: ஸ்வராட்‌ ? 
என்று நாராயணவல்லியில்‌ இவ்வர் த்தம்‌ சொல்லப்பட்ட து. 

அங்கு £ஸ:* என்று, தச்ச,ப்‌,கத்தனால்‌ சொல்லப்பட்ட 
நாராயணனே இங்கு “ஆப: எனப்படுகிறான்‌ என்று தெளி 
வாகிறது. “ஸு ஸ்வராட்‌ ப,வதி” [அவன்‌ ஸ்வதரந்திரனா 
கிறான்‌.] என்ற வேத வாக்யத்திலும்‌. முக்தரத்மாவைக்‌ 
குறித்து *ஸ்வராட்‌' «५०.519 பிரயோகிக்கப்படுகறதாகை 
யால்‌ அதுவே இங்கும்‌ அர்த்த,மாகக்கடவது. இங்கு 
சொல்லப்படும்‌ ஸ்வா தந்த்ரியம்‌ கர்ம_ார தந்த்த்ரியமில்லாபை 
யைக்‌ காட்டுமேயொழிய,  பகவத்பா ரதந்த்ரியத்தை நிஷே 
திக்மாட்டாது. அப்படிக்கொண்டால்‌ பகவச்சேஷத்வ 
பாரதந்த்ரியங்களை ஜீவஸ்வரூபமாகச்‌ சொல்லும்‌ பல - ப்ரமாணங்களுக்கு விரோதிக்கும்‌. 

“பாரதந்த்ர்யம்‌ பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்க,த, ந்த: | 
.ஸ்வாதந்த்ர்யமதுலம்‌ ப்ராப்ய தேநைவ ஸஹ மோத,தே ॥” 
[ஸம்ஸாரக்கட்டிலிருந்து விடுபட்ட முக்காத்மா பரம 
புருஷனிடத்தில்‌ பாரதந்திரியத்தை ஆடைந்து, (கர்மத்இற்கு 
வசப்பட்டிராமையா கிற) ஒப்பற்ற ஸ்வாதர்திரியத்தையும்‌ 
பெற்று. அப்பரமபுருஷனுடன்‌ ஆறந்திக்கிறான்‌.]என்‌ றல்லவோ 
ஸ்ரீ விஷ்ணுதத்வத்தில்‌ உரைக்கப்பட்டது, > 

(சூந்தளம்ஸ்யாட: ) வேதங்களும்‌ பகவானே. பகவானை 
ப்ரதிபா தப்பவையே என்று தாத்பர்யம்‌. அன றிக்கே, 
காயத்ரீ. அனுஷ்டுப்‌ முதலிய சந்தஸ்ஸுக்களை “சுந்த ம்ஸி” 
என்று குறிப்பதாகக்கொண்டு. அவைகளுக்கும்‌ நிர்வா ஹகன்‌ 
என்று உரைப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. இவ்விரண்டு 
பொருள்களும்‌ வி௱ங்கும்படி 
“சந்தமாயச்‌ சமயமரகிச்‌ சமயவைம்பூ தமி 
அந்தமாயாதியாகி அருமறையவையும்‌ ஆனாய்‌!” 
என்று திருமங்கையாழ்வார்‌ அருளிச்செய்திருக்கும்‌ அழகு 
அறியத்தக்கது. (ஜ்யோதிம்ஷ்யாட:) எல்லாச்‌ சோதிகளும்‌ பகவா த்மகமே. 

“ஜ்யோதம்ஷி விஷ்ணு? பு,வநாரி விஷ்ணு: 

०५१ 8 விஷ்ணு: கிரியோ தி,மும்ச '' 

[எல்லாச்‌ சோதிகளும்‌ விஷ்ணுவே; எல்லா உலகங்களும்‌ 
விஷ்ணுவே; வனங்களும்‌ விஷ்ணுவே; மலைகளும்‌, திக்குகளும்‌ 
அவனே ] என்று ஸ்ரீடராசரபகவான்‌ வீஷ்ணுபுராணத்தில்‌ 
இதை உபப்ரும்ஹணம்‌ செய்தார்‌. 


“ குன்‌ றமும்வானும்‌ மண்ணும்‌ குளிர்புனல்‌ தங்களோடு 
நின்ற வெஞ்சுடரும்‌ அல்லா நிலைகளுமாய எந்தை '' என்று 
தருமங்கை மன்னனும்‌, "நீள்‌ சுடரிரண்டுமென்‌் கோ ”' 
என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ அருளிச்செய்கனர்‌. 


(ஸக்யமாப:) *' ஸத்யமேவ ஜயதி நாந்ருதம்‌ "2 / உண்‌- 
மையே வெல்லும்‌; பொய்‌ வெற்றி பெறணொது.] என்றும்‌. 
“ ஹத்யம பரம பரம ஸத்யம்‌'' என்றும்‌. " "0४७९५१९ வாயுரா 
வாதி| ஸத்யேக ஆதி,த்போ ரோசதே த,வி| ஸத்யம்‌ வாச: 
ப்ரதிஷ்ட, | ஸத்யே ஸர்வம்‌ ப்ரதிஷ்டி,தம்‌ | தஸ்மாத்‌ ஸத்யம்‌ 
பரமம்‌ வத,ந்தி॥'' [ஸத்யத்தனலேயே வாயுவானது வீசு 
திறது; ஸத்யக்தனலேயே ஆகாயத்தில்‌ ஸூர்யன்‌ பிரகா சிக்‌ 
கிறான்‌. ஸத்யம்‌ வாக்கை நிலைநிறுத்துகிறது. ஸத்யத்தி 
னாலேயே எல்லாம்‌ நிலைநிற்கின்‌ றன. ] என்றும்‌ வேதங்களில்‌ 
புகழப்பட்ட ஸத்யத்திற்கு நிர்வராஹகன்‌ பகவானே. 


=" சங்கையும்‌ துணிவும்‌ பொய்யும்‌ மெய்யும்‌ இத்தரணியோம்பும்‌ 
பொங்கிய முகிலும்‌ அல்லாப்‌ பொருள்களும்‌ ஆய எந்தை '' 
"° மெய்ஈலத்தைத்‌ தவத்தைத்‌ திவத்தைத்தரும்‌ மெய்யை '' 
என்று திருமங்கையாழ்வாரும்‌. “'பொய்யினோடு மெய்யு 
மாய்‌'' என்று திருமழிசையாழ்வாரும்‌, 

“மெய்‌ பொய்‌ இளமை முதுமை புதுமை பழமையுமாய்‌ ' 
என்று நம்மாழ்வரரும்‌ ஸர்வேண்வரனையும்‌ ஸத்ய சப்தத்தை 
யும்‌ ஓரே வேற்றுமையில்‌ டடிதீதனர்‌. 

(ஸர்வா தேவதா: ஆப!) ஆரா திக்கப்படுபவரான ஸர்வ 
தேவதைகளுக்கும்‌ அந்தர்யாமியாயிருப்பவன்‌ அவனை. 

“ஹ்ர்வே வேதராஸ்‌, ஸர்வவேத்‌,யாஸ்‌ ஸமமாஸ்த்ரா 
ஸர்வே யஜ்ஞாஸ்‌ ஸர்வ. இஜ்யாங்ச க்ருஷ்ண 

[எல்லர வேதங்களும்‌. அறியத்தகுந்க எல்லாப்‌ பொருள்‌ 
களும்‌, எல்லா சாஸ்திரங்களும்‌. எல்லா யஜீஞங்களும்‌, 
(அந்த யஜ்ஞங்களில்‌ ஆரஈதிக்கப்படும்‌) எல்லா தேவதை 
களும்‌ கிருஷ்ணனே. ] என்‌ று இந்த ஸ்ருதி உபப்ரும்ஹணம்‌ செய்யப்பட்ட து. 

“தேவராய்‌ நிற்குமத்தேவும்‌, அத்தேவரில்‌ 
மூவராய்‌ நிற்கும்‌ முதுபுணர்ப்பும்‌—யா வராய்‌ 
நிற்கின்றதெல்லாம்‌ நெடுமாலென்றோராதார்‌ 
கற்கின்‌ றதெல்லாம்‌ கடை" 
என்‌'று திருமழிீைப்பிரானும்‌, “ அமைவுடையமரரும்‌ யாவை 
யும்‌ - யாவரும்தானாம்‌ அமைவுடை நாரணன்‌ '' என்றும்‌ 
“ அங்கவர்க்கமைத்த தெய்வமும்‌ நீயே '' என்றும்‌ ஈம்மாழ்‌ 
வாரும்‌ இவ்விஷயத்தை வெளியிட்டருளினார்கள்‌. கடைசி 
யாக (ஓம்‌ பூர்புவஸ்ஸுவராப ஓம்‌) என்‌ று மூவுலகங்களும்‌ 
ஓங்காரவர்ச்யப கவகளத்மகமே என்று உணர்த்தப்படு 
இறது. “ மூவுலகங்களுமாய்‌ அல்லனாய்‌ ` என்றார்‌ ஆழ்வாரும்‌ 
அன்‌ றிக்கே இம்மூவுலகங்களும்‌ எழு லோகங்களுக்கும்‌ 
உபலக்ஷணம்‌. '' ஏழுலகங்களும்‌ நீயெ" என்றார்‌. ஆழ்வார்‌. 
இம்மாஇிரியாதஇந்தஸால்‌ ரகா இ,கரண்யங்களை சரீராத்ம 
பவம்‌, நிர்வா ஹக நிர்வாஹ்ய ஸம்பந்தம்‌ முதலானவற்றை 
८9८. நிர்வஹியாமல்‌ “ ப்ராணா வா ஆப:'' : அம்ருதமாப!" 
முதலானவற்றை ஸாக்ஷ।த்தாக பகவத்‌ வாசகமாக நிர்வஹிப்‌ 
பதமுண்டு. அது பின்‌ வருமாறு: 


(ப்ராணா வா ஆட:) “கோ ஹ்யேவாந்யாத்‌ க: ப்ராண்‌ 
யாத்‌ யதேஷ ஆகாமோ ஆரந்தேோ ந ஸ்யாத்‌” [ஆறந்த 
ஸ்வரூபியம்‌, (9050 ८/7 = 9.2 न को) 67 कः இப்பரம்பொரு 
ளில்லாவிடில்‌ யார்‌ இவ்வுலக இன்பங்களையும்‌, மோக்ஷ 
ஸுக த்தையும்‌ அடைய முடியும்‌ '] என்றெபடியே மோக்ஷ 
ஸகைதீதிற்குக்‌ காரணம்ாயிருப்பதால்‌ பராணசப்தத்தால்‌ 
சொல்லப்படுமவன்‌ பகவான்‌ என்‌ 0. 

(அம்மாதமாட:)' அமுதிலுமா ற்ற' இனியனாயிருப்பவவன்‌ 
அப்ப்‌கதவாச்யன்‌ என்ற்டக்ட, * அம்ரு கம்‌ ப்ரஹ்ம என்ற 
விடத்திலுள்ள ப்ரமாணங்களை அநுஸந்திப்ப.து 

” (அந்நமாப்‌:) `" அஹமந்காதத' [கான்‌ அர்மமாயெ 
பகவானை அறுடவிக்கிறேன்‌.] என்று சொல்லியபடியே 
நித்ய: முக்தர்களுக்கு யோக்யமாமிருப்பவன்‌ பரமாத்மா 
என்றபடி 

“` வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ? ” 
என்றார்‌ ஆழ்வார்‌. 

( ஸம்ராடராப ஸ்வராடரள்ப: ) “ஸம்யக்‌ ராஜழ்தீதி 
ஸம்ராட்‌ |: வியிஷைய ஏாஜதீதி விராட்‌ |. ஸ்வ்யமேவ ராஜ்த இதி. 
ஸ்வராட்‌ '' .. [ஈண்கு ९. டிரகா சக்கிறானாகையால்‌ம்‌ : ஸம்ராட்‌; 

(மற்றவைகளைவீட) விசேஷமாகப்‌ பிரகா சிக்கறானாகையால்‌. 
விராட்‌; தானாகவே பிரகாசிக்கறொனாகையால்‌ ஸ்வராட்‌.] 
என்று ரங்கராமா தஜமுனி பொருளுரைத்தார்‌. “ஓம்‌ மஹ” 
ஓமாபோ ஜ்யோதி:”  என்றவிடத்திலுள்ள ப்ரமாணிங்‌களைப்‌ படிப்பது, 

('ஸத்யமாப!') -ஸ்வரூ.திதா லும்‌, ஸ்வப,ாவகீதா லும்‌ 
வீகாரமற்றவன்‌ மீகவராரன்‌ என்றபடி, °" ஓம்‌ ஸத்யம்‌ * 
என்றவிடத்திலுள்ள _ப்ரமாணங்களைப்‌ படிப்பது. . நிற்ற; 
இம்மந்திரத்தைப்‌ படித்து. ஜல = # த  அபிமந்திரித்து 
“ ஓம்‌ ப்ரீ கேமுவரய  நம:” என்று அந்து. ஜலத்தை நெற்றி 
யில்‌ _இட்டுக்கொள்வது வழக்கம்‌, 

ப்ரோக்ஷண மந்த்ரம்‌ 
அடுத்தபடியாக அந்த ஜலத்தைத்‌ தலை முதலிய அங்கங்‌ 
களில்‌ பின்வரும்‌ மந்திரத்தைச்‌ சொல்லி ப்ரோக்ஷித்துக்‌ 
கொள்ளவேண்டும்‌: 

अपोरिष्ा मयोपुवः। तान उजं दधातन। महै रणाय चक्षसे। 
यो वः शिवतमो रसः। तस्य भाजयतेह नः। START मातरः। 
तसा अरं गमाम व| अस्य क्ुयाय जिन्वथ आपो जनयथा च नः। 

ஆபோ ஹி कु ऋआ மயோபூவ: | தா ௩ ஊர்ஜே ததாதர | 
மஹே ரணாய சகூஷ்ஸே । யோ வ: பவெதமோ ரஸ: | தஸ்ய 
பாஜயதேஹ ந: | உர௱தீரிவ மாதர:। தஸ்மா அரங்கமாம 
வ:| யஸ்ய க்ஷயாய ஜிந்வத,। ஆபோ ஐநயத;ா = क: || 

आपो हि एति मन्त्रस्य सिन्धुद्धीप ऋषिः देवी गायत्री छन्दः | 
आपो देवता। प्रोक्षणे विनियोगः 

( 28. 7 नयु 90 என்று தொடங்கும்‌ மந்திரத்திற்கு 
ஸிந்து,த்;வீடர்‌ ரிஷி; காயத்ரீ சந்கஸ்ஸு, ஜலாந்தர்யாமி 
யான பகவான்‌ தேவதை; ஜலத்தை ட்ரோக்ஷித்துக்‌ 
கொள்வதில்‌ விநியோகம்‌. | i 

“யஸ்ய க்ஷயாய ஜிந்வச,' என்று உச்சரிக்கும்போது 
மட்டும்‌ கால்களிலும்‌. மற்ற மந்திரங்களைச்‌ சொல்லும்‌ 
போது தலையிலும்‌ ப்ரோக்ஷித்துக்கொள்ளவேண்டும்‌. இம்‌ 
மந்திரத்தில்‌ பகவானுக்கு உறைவீடமாகவுள்ள தண்ணீரைப்‌ 
புருஜகாரமாகப்பறுறி அவனிடம்‌ ஆத்மாவானது ஸமர்ப்‌ பிக்கப்படுகிறது. 

“கடலே! கடலே! உன்னைக்‌ கடைந்து கலக்குறுத்து 
உடலுள்‌ புகுந்து நின்று ஊறலறுத்தவற்(கு) என்னையும்‌ 
உடலுள்‌ புகுந்து நின்று ஊறலறுக்கன்ற மாயற்(கு) என்‌ 
நடலைகளெல்லாம்‌ ஈாகணைக்கே சென்‌(று) உரைத்தியே'' என்ற நாச்சியார்‌ இருமொழீப்‌ பாசரம்‌ 
இம்மந்திரத்திற்குத் தாத்பர்யார்த்தமாக அநுஸந்திக்கத்தக்கது. இனி இம்‌ 
மந்திரத்தின்‌ பப்தார்த்தத்தை வீவரிக்கி>ோம்‌. 

“ஆபோ ஹிஷ்டே,திமந்த்ராணாம்‌ ஸரீபாஞ்சராத்ரதி, ஸச்சராஸ்‌- 
த்ரேஷு பரமாத்மா தே,வதேத்யபி,த,ாகாத்‌. அத்ரத்யா 
தே.வதாருப்‌,த,ா: பரமாத்ம நாராயணவாசகா:" 

[ஸ்ரீ பாஞ்சராத்ரம்‌ முதலிய ஸாத்விக சாஸ்திரங்களில்‌. 
* ஆபோ ஹிஷ்டடா' முதலிய மந்திரங்களுக்குப்‌ பதமாத்மா 
"தேவதையயென் று சொல்லியிருப்பதால்‌. இங்குள்ள தேவதா 
நாமங்களெல்லாம்‌ பரமாத்மாவான நாராயணனையே குறிக்‌ 
கும்‌] என்று நாராயணயதந்த்‌ரர்‌ உணர்த்தினார்‌. 


(ஆபோ ஹி ஷட்‌ மயோபுவ:) 'ஜலமே! (நீ) ஸுகத்‌ 
திற்கு ஸாதனமா கீறாயல்லவா' என்று பொருள்‌. "யத்;வை 
एणी தந்மய:'' என்றும்‌. -தத,ாத்மநீகமாரந்த,ம்‌ மர்ம 
தோஷம்‌ ஸாக,ம்‌ மய: ' என்றும்‌ சொல்லப்பட்டபடியே, 
மய: என்னும்‌ பப்தம்‌ ஸுகம்‌ என்னும்‌ பொருளையுடையது, 
“மாதயதிதி-மய:'' [மதங்கொள்ளச்செய்கிறதாகையாலே 
மய: “எனப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி. “மாத்யதே: 
அந்தர்ணிதணிஜர்த்தூஸ்ய அஸாந்ப்ரத்யயாந்கஸ்ய தகா- 
ரஸ்ய யகாரவ்யாபத்யா ௪ ஏதத்‌ ரூபம்‌'' என்று © कक्षे 
என்னும்‌ நிருக்ககாரர்‌ இந்த எப்கம்‌ நிஷ்பந்கமரகிறபடியை 
விளக்கனார்‌. -மயஸ:- ஸுகஸ்ய ப வயித்ர்ய: மயோபு வ!" 
என்று ஸுகத்தை உண்டாக்குடவை “மயோபுவ:' எனப்‌ 
படுகின்றன. யாருக்கு ஸுகத்தை உண்டாக்குகின்றன? 
என்ற கேள்வி எழுந்தவளவில்‌. ( ०७५10८५०; ஆட! ) 
என்பதையே பதிலாகக்‌ கொள்ளவேண்டும்‌. பகல 
சேதனர்க்கும்‌ ஸுகத்தை உண்டாக்குபவனும்‌.ஸர்வவ்யா பியு 
மான நாராயணனாக்கு என்றபடி. ''"அம்ருதத்வஸ்ய ஈமமா௩:'' 


[மோக்ஷ்ஸுகத்திற்குக்‌ காரணமானவன்‌ ] “கோ ஹ்யே- 
வாந்யாத்‌ க: ப்ராண்யாத்‌ யதேத ஆகாமேரோா ஆரந்தேன ந 
ஸ்யாத்‌ ' [ பிரகாசியாநிற்பவனும்‌, ஆநந்தஸ்வரூபியுமான 
பரமாத்மா இல்லாவிடில்‌ எவன்‌ தான்‌ இவ்வுலக ஸுஃகத்தை 
யும்‌ பரலோகவின்பத்தையும்‌ அடைவான்‌] முதலான 
மீவத வாக்கியங்களில்‌ பரமபுருஷன்‌ ஸஃல ஸாக,ஸாகதன 
பூதனென்றும்‌. =" அந்தர்‌ 15990०5 தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய 
நாராயண: ஸ்தி,த:' முதலானவிடங்களில்‌ 'ஸீர்வவ்யாபி 
யென்றும்‌ உதீகோவிக்கப்பட்ட தன்றோ. 

(ஹே ஆப: மயே்புவ: ஆப: மயோபுவ: ஹி ஸ்த,) 
ஏ! ஜலங்களே ! எல்லாருக்கும்‌ ஸுகத்கையளிக்கும்‌ 
ஸர்வேண்வரனுக்கும்‌ ஸுகத்தையளிப்டவர்களன்றோநீங்கள்‌. 
உங்கள்‌ மேலே திருக்கண்வளர்ந்தருளும்படியான அந்த 
க்ஷராப்திநாதனுடைய திருமேனியை உங்களுடைய 
குளிர்ந்த அலைகளால்‌ ஸ்பர்‌சத்து அவனுக்கு ஸுகத்தை 
யுண்டாக்குகிறீர்களல்லவா. 

“மாலும்‌ கருங்கடலே! என்‌ நேரற்றாய்‌. வையகமுண்‌(டு) . 
ஆலினிலைத்‌ துயின்ற ஆழியான்‌—கோலக்‌ 

கருமேனிச்‌ செங்கண்மால்‌ கண்படையுள்‌ என்றும்‌ 
திருமேனி ரீ தீண்டப்பெற்று.”' 

என்ற பொய்கையாழ்வாரைட்போலே வேக புருஷன்‌ 
வித்‌,க,(க)னாகிறான்‌. நம்மாழ்வாரும்‌ “குறைவில்‌ தடங்கடல்‌” 
என்று இதில்‌ ஈடுபட்டார்‌. 

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | 
தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ' 
[ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. 
யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ 
னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ 
படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதியிலும்‌, 

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த: ஸ்தி,தோ5ஹம்‌ 
யேக ஸ்யாந்மே நாம நாராயணேதி'' 

[காரசப்தவாச்யமான ஜலத்தை ள்ருஷ்டித்து அகனுள்ளி 
௫ந்தபடியால்‌ எனக்கு நாராயணனென்று டெயர்‌.] என்று வராஹபுராணத்திலும்‌. 

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்£ீரார்ணவநிகேதா:"" 
[ பாற்கடலில்‌ பையத்துயின்‌்றவன்‌ ஸ்ரீமந்‌ நாராயணன்‌. ] என்று வீஷ்ணு தர்மத்திலும்‌. 

“விஷ்ணோராயத௩ம்‌ ஹ்யாப: ஸ ஹ்யபாம்‌ பதிருச்யதே | 
தஸ்யைவ ஸ9நவஸ்த்வேதாஸ்‌ தஸ்மாத்‌ தம்‌ ஹ்யப்ஸு 

ஸம்ஸ்மரேத்‌ |” 
[ஜலம்‌ விஷ்ணுவுக்கு இருப்பிடம்‌; அவன்‌ ஜலத்திற்குப்‌ 
பதியெனப்படுகிறான்‌; 9 ॐ அவனிடமிருந்து பிறந்தது. 
ஆகையால்‌ அவனை ஜலத்தில்‌ தியானிக்கவேண்டியது. ] என்று 
யாஜ்ஞவல்க்யரா லும்‌. 

९ தரனோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி அதனுள்‌ 
கண்வளரும்‌ `" 
முதலான ஆழ்வார்‌ ஸ்ரீஸூக்திகளிலும்‌ ஜலம்‌ பகவானுக்கு 
இருப்பிடமென்னும்‌ விஷயம்‌ ூீர்த்திக்கப்பட்ட து.  யமந்த; 
ஸமுத்‌,;ரே கவயோவயந்தி '' “ ஸமுத்‌,ரேந்தம்‌ நாராயணம்‌ "' 
என்று வேதத்திலும்‌ உத்கோஷிக்கப்பட்ட து. அவற்றை 
மனத்தில்கொண்டு “ஆபோஹீஷ்டளமயோபு,வ:' என்கிறான்‌ 
வேதபுருஷன்‌ , “ஆட” என்று பகவானுக்காகும்போது, 
 ஆஅப்றோதி இத ஆப்‌ ' என்று ஆகி, அதனுடைய ஆறாவது 
வேற்றுமையா யிருக்கிறது; ஸர்வவ்யாபியான வீஷ்ணுவுக்கு 
என்‌ றபடி. *மயோபுவ: ' என்‌ றதும்‌ பகவானுக்காகும்போ து 
ஆறுவது வேற்றுமை.(ஆபோ ஹிஷ்டா மயோபுவ:)ஜலமே! 
(எல்லாப்‌ பிராணிகளுக்கும்‌) ஸுகத்தைக்‌ கொடுட்பசாயிருக்‌ 
கீறாயன்றோ என்னும்‌ பொருள்‌ கூறுவதண்டு. 

(தா:) இப்படி பகவானுடைய திருமேனியைத்‌ தீண்டு 
வதினால்‌' பரிச்தீதமடைகந்த நீங்கள்‌. ஈதிஜலம்‌, ணெற்று 
ஜலம்‌. ஸமுத்ர ஜலம்‌ என்று பலபடிப்பட்டிருப்பதால்‌ 
பன்மையாகப்‌ படிச்கப்படுகிறது, 

(௩:) பகவானை அடையவேணுமென்னும்‌ ஆசையுடைய௰ 
எங்களை; உங்களைட்புருஷகாரமாகப்ப ற்றியிருக்கும்‌ எங்களை 
என்‌ றுமாம்‌. (ஊர்ஜே த,கு தர) உயர்ந்த குணங்களையுடைய 
பகவானுக்கு ஸமர்ப்பியுங்கள்‌., 

“யத்யத்‌விபூதிமத்‌ ஸத்வம்‌ ஸ்ரீமதூள்ஜிதமேவ வா | 
தத்ததே,வாவக;,ச்ச, த்வம்‌ மம தேஜோம்மாஸம்ப,வம்‌ ॥ ”' 
[விபூதிகள்‌ பலவற்றையுடையதும்‌, செல்வம்‌ நிரம்பியதும்‌, 
மேலானதுமான எதகெது இருச்கன்றதுவோ. அது எல்லாம்‌ 
என்னுடைய தேஐஸ்ஸில்‌ ஒரு பாகத்தனால்‌ உண்டானது 
என்று அறி.] என்று இவனுடைய கேஜஸ்ஸினலேயே 
மற்ற வஸ்துக்களும்‌ ஊர்ஜிதமா கன்‌ றன வென்று சொல்லப்‌ 
பட்டதன்றோ. “ தேஜஸாம்‌ ராமரிமூர்ஜிதம்‌ '' என்று 
ஸ்ரீராமாயணத்திலும்‌ சொல்லப்பட்டது. மறுபடியும்‌ 
எப்படிப்பட்டதெனில்‌;- 

(மஹே) பெரியோனாயிருக்கும்‌ பகவானின்‌ பொருட்டு. 

“்‌ அணோரணீயாந்‌ மஹதோ மஹீயார்‌ ”' 
[அணுவைக்காட்டிலும்‌ அணுவாகவும்‌, மஹதழைக்காட்டி 
லும்‌ டெரியதாகவும்‌ உள்ளவன்‌ .] என்றும்‌, 

“ந தத்ஸமஙம்சாப்‌,யதி,கம்ச த்‌,ருங்யதே ” 


[ அவனுக்கு ஒப்பாரும்‌ மிக்காரும்‌ காணப்படவீல்லை. /என்றும்‌ 


“' தமீங்வராணாம்‌ பரமம்‌ மஹேங்வரம்‌ ”' 

[ஈச்வரர்களேக்கா ட்டிலும்‌ மேலான ஈச்வரனும்‌, தேவனத 
களைக்காட்டி ஓம்‌ மேலான ஜதேவதையுமான அவனை. என்றும்‌ 
“பரமம்‌ ப்ரபுபம்‌ நாராயணம்‌ ° என்‌ றும்‌ வேதங்களிலும்‌. 

“பூமா ஸம்ப்ரஸாதளத,த்‌ யுபதே,மாாத்‌ ?' 
[பூமா (பெரியோன்‌ ) எனப்படுபவன்‌ பரமாத்‌ ॐ 7 © @८; 
ஜீவனைக்காட்டி இம்‌ மேலானவனாகச்‌ சொல்லியிருப்பதால்‌. ] 
என்று ப்ரஹ்ம ஸுூத்ரத்திலும்‌ 
“ சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர்ஞானவின்பமேயோ '' என்றும்‌, 
“ஓத்தார்‌ மிக்காரை இலையாய மாமாயா ”” என்றும்‌, 
“ஒத்தாரும்‌ மிக்கார்களும்‌ தன்தனக்கின்‌ றி நின்றனை '' என்‌ றும்‌ 
ஆழ்வாராலும்‌ இவனுடைய பெருமை பேசப்பட்ட தன்றே. 


(ரணாய) பூஜிக்கத்தக்கவரான. *ர' என்று ஸுகத்தைச்‌ 
சொல்லி ஸுகமாகிய மோகத்திற்கு அழைத்துச்‌ செல்லு 
மவனாகையாலே : ரணாய ' எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌, 


' சன்மசன்மாந்தரம்‌ காத்தடியார்களைக்‌ கொண்டுபோய்த்‌ 
தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக்‌ கீழ்க்கொள்ளுமப்பனை ' 
என்றார்‌ ஆழ்வார்‌.  ரமணாய' என்பது ங்ரெளதப்ரயோக 
மாகையால்‌ ரணாய' என்‌ மஇடைக்குறையாக இருப்பதாகவும்‌ 
கொள்ளலாம்‌. 


“ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷ:” என்றும்‌, 
“ ஆதித்‌,ய வர்ணம்‌” என்றும்‌ பல பல வரக்யங்களில்‌ 
சொல்லப்பட்ட திவ்யமங்களவிக்ரஹத்தாலும்‌. விக்ரஹ 
குணங்களா லும்‌. ஸ்வரூப குணங்களான தயை. வாத்ஸல்யம்‌ 
முதலானவற்றாலும்‌ அழகியவனாயிருந்து கொண்டு உலகம்‌ 
முழுவதையும்‌ ஆரநந்திக்கச்செய்பவன்‌ என்று தாத்பர்யம்‌, 
“ராமோ ராமோ ராம இதி '' என்றும்‌ = ராமம்‌ மே5நுக,தா 
த்ருஷ்டி: '' [ரயிக்கச்‌ செய்யும்‌ ராமனை என்‌ னுடைய கண்‌ 
பின்‌ தொடர்ந்தது. ] என்றும்‌. “ ஆரமாயா யதி, வா ராம: '' 
என்றும்‌, =" ஸர்வே ராமமநுவ்ரதா: '' என்றும்‌ தன்னுடைய 
வடிவழகாலும்‌, பேச்சாலும்‌ குணங்களாலும்‌ எல்லாரையும்‌ 
 அநந்திப்பிப்பவனல்ல்வோ இவன்‌. “ அழகனே!'' என்று 
ஆழ்வார்சளும்‌ ஆழங்காற்படுவார்கள்‌. (சக்லஸே) “` ஸத்யம்‌ 
ஜ்ஞாநமநந்தம்‌ ப்‌,ரஹ்ம என்‌ றும்‌,-'யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌”' 
என்றம்‌ ஸர்வஜ்ஞனாகச்‌ சொல்லப்படும்‌ பரமபுருஷனின்‌ 
பொருட்டு. * எல்லையில்‌ ஞானத்தன்‌ ஞானமஃனதே கொண் 
டெல்லாக்‌ கருங்களும்‌ செய்‌ எல்லையில்‌ மாயன்‌ '' என்றார்‌ 
ஆழ்வாரும்‌. (சக்ஷ்ஸே) எல்ல'ச்‌ சேகனர்க்கும்‌ கண்போன்றி 
ருப்பவனென் றும்‌ பொருள்கொள்ளலாம்‌. “ க்ஷார்‌ தேவா 
நாமுத மர்த்யாநாம்‌ '' [தேவர்களுக்கும்‌ மனிகர்களுக்கும்‌, 
கண்ணாயிருப்பவன்‌ ] என்றும்‌,  கண்ணாவான்‌ என்றும்‌ 

மண்ணோர்‌ விண்ணோர்க்கு ` न करा றும்‌ வேகங்கள்‌ உரைத்தன. 
(சக்ஷ்ஸே த,கபாதந)என்‌ று கூட்டி“ ஞானகுணம்‌ எங்களுக்கு 
பிரகாசிக்கும்‌ பொருட்டு எங்களை அடைவியுங்கள்‌ ”' என்றும்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌ (55507515) சரணமாக அடைவீயுங்‌ 
கள்‌. 'इदाङ-दानि' (டு,தளங்‌-தனநே) என்னும்‌ தாதவின்மேல்‌ 
குப்த நப்தநதநாங்சேதி"' என்று தாப்ரத்யம்‌ வந்ததென்பர்‌. 
இத்தால்‌ பரமபுருஓனுக்கு வாஸஸ்தானமாதிய ஜலம்‌ 
¦ புருஜகாரமாகப்‌ பற்றப்படுகற து. 'ஊர்ஜே தக தந மஹே 
ராயை சகஷஸே” என்னும்‌ தொடருக்கு வேறுவிதமாகவும்‌ 
பொருள்‌ உரைப்பதண்டு. ஊர்க்‌” என்னும்‌ சட்தும்‌ 
அந்நத்கைச்‌ சொல்லுவதாக நிகண்டுவில்‌ படிக்கப்டட்டிருக்‌ 
கிறது. ' சகூஷஸே' என்று இந்திரியங்களைச்‌ சொல்லுறது. 
தா:—அப்படிப்பட்ட நீங்கள்‌. ௩:-எங்களுக்கு, மஹே-— 
பெரியதும்‌, ரணாய- அழகியதமான சக்ஷ்ஸே- இர்‌ இரியங்களை 
அடையும்‌ பொருட்டு, ஊர்ஜே ததத ந-அந்நத்தைக்‌ கொடுங்‌ 
கள்‌ என்று பொருள்‌ கொள்வது. எங்களுடைய இர்சரியங்‌ 
கள்‌ பகவத்கைங்கர்யத்தில்‌ தீவ்ரமாயீடுபடும்‌ பொருட்டு. 
அவைகளுக்கு பலத்சைத்தரும்‌ அந்நத்கைக்‌ கொடுங்கள்‌ 
என்‌ றபடி, = ** அந்றமயம்‌ ஹி ஸோம்ய (05; " என்று அந்ந 
மானது மனம்‌ 0.5 ०4८) இந்திரியங்களைப்‌ போவிப்பதென்று 
சொல்லப்பட்ட தன்‌ றோ. `" யயர கயா ௪ வித,யா ப,ஹ்வர்கம்‌ 
ப்ராப்நுயாத்‌ '' [ எவ்விதத்திலாவது அதிகமான அன்னத்தை 

அடையவேண்டியத.] என்று வேதத்திலும்‌, அந்நத்தை 
அடையவண்‌ டியதின்‌ அவசியம்‌ சொல்லப்பட்ட து. சந்தஸ்‌ 
மாகையாலே -ஊர்மீவ என்‌ மிருப்பதா கக்‌ கொள்ளவேண்டும்‌. 

முமுக்ஷஃவான | 87711, அன்னத்தை ப்ரார்த்திக்க 
லாமோ? எனில்‌: இவ்வுலகிலிருக்கும்‌ வரையில்‌ தேஹத,ார 
ணத்திற்கு அவசியமர்ன அர்கந்தை ப்ரார்த்திக்கக்‌ 
குறையில்லை. 

“ இந்த்ளிய போஷகத்வேந அந்ரப்ரார்த்தரும்‌ ௪ ந 
முமுக்ஷு£த்வ விரோதி, | 
முமுக்ஷோரபி யாவத்ஸாத;௩ நிஷ்பத்தி தே,ஹேந்த்‌,ரிய 
। தாரணஸ்ய 
தத்‌,த்‌,வாரா ஜ்ஞாநவிகாஸஸ்ய ௪ அபேக்ஷிதத்வாத்‌ ” 
( இந்திரியங்களைப்‌ போஷிப்பகற்காக அந்கத்தை ப்ராரர்த்திப்‌ 
பது முமுக்ஷுக்வத்திற்கு ०४ 907 தியல்ல: முமுக்ஷாவுக்கும்‌ 
ஸா தந! நுஷ்டாடம்‌ முடியும்‌ வரையில்‌ ज 206 திரியங்கள்‌ 
தீரித்திருக்கவேண்டியதும்‌. அதன்‌ மூலம்‌ ஞானம்‌ விருத்தி 
யடைவதும்‌ அவசியமா கையால்‌ ]என்று நாராயணயதரந்த்ரர்‌ 
வியாக்கியானமிட்டரர்‌. 

ஆக. இதுவரையில்‌ பகவானை அடைவதற்காக ஜலம்‌ 
புருஜகாரமாகப்‌ பற்றப்பட்டது. 
“ தைவே புருஷகாரே ௪ கர்மஸித்,தி,ர்‌ வ்யவஸ்தி,தா ?' 
[கைவத்தினாலும்‌. புருஷகாரத்தினாலும்‌ காரியஸித்தி ஏற்‌ 
படுகிறது. ] என்று சொல்லப்பட்ட தன்‌ றே. இப்புருஷகாரம்‌ 
இருந்தபோதிலும்‌ பலத்தைக்‌ கொடுப்பன அந்த பகவா 
இடைய முகோல்லாஸமில்லாவிடில்‌ 4५००८ = ஸித்தியடை 
யாது. இவ்விஷயம்‌ 
^" நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ 
ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | 
யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ 
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” 

[இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ 
அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ 
கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு 
இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு 
கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது. 


இனி. இப்பரமபுருஷன்‌ எவனை வரிப்பான்‌ என்ற 
கேள்வி பிறக்கிறது; எவன்‌ இப்பரமபுருஷனுக்கு மிகவும்‌ 
ப்ரியனனவனோ அவனே இவனுக்கு வரிக்கத்தக்கவன்‌. 
எந்தச்‌ சேதனன்‌ இப்பரம சேதனனிடம்‌ பரமப்ரிதியை 
வைக்துள்ளானோ அவனே இவனுக்கு மிகவும்‌ ப்ரியனாறாோன்‌. 
ஆக, எந்த ஜீவன்‌ புருஷோத்தமனீடம்‌ பெருங்காதலுற்ற 
வனாயிருக்கறுெனோ அவனையே இவன்‌ வரிப்பான்‌ என்று 
தேறிநிற்கிறது, 
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிகோ5த்யர்த்த,ம்‌ அஹம்‌ ஸ ச மம ப்ரிய:'" 
[பக்திமானான ஞானிக்கு நான்‌ மிகவும்‌ ப்ரியன்‌; அவனும்‌ 
எனக்கு (மிகவும்‌) ப்ரியன்‌.] என்றும்‌, 


“ தேஷாம்‌ ஸததயுக்தா௩ாம்‌ ப.ஜதாம்‌ ப்ரீதிபூர்வகம்‌ | 

5353919 பு,த்‌,தி,யோகழம்‌ தம்‌ யே மாமுபயாந்தி தே |!” 
[என்னுடன்‌ எப்போதும்‌ சேர்ந்தருக்கையை விரும்புமவர்‌ 
களும்‌. என்னை ப,ஜனம்‌ செப்பவர்களுமான அவர்களுக்கு. 
என்னை அடைவதற்கு ஸாதனமான புத்தியோகத்தை மிக 
அன்புடன்‌ (கான்‌) அளிக்கிறேன்‌.] என்றும்‌, 


“ நரஹம்‌ வேதைள்‌ ௩ தபஸா ந த;ாநேந ந சேஜ்யயா | 
५४०७५) ஏவம்விதே,ா த்ரஷ்டும்‌ த்‌,ருஷ்டவாநஸி மாம்‌ யத, ॥ 
பக்த்யா த்வகந்யயா மாக்ய அஹமேவம்விதே,ா 5ர்ஜுந | 
ஜஞாதும்‌ தரஷ்டும்‌ = தத்வேந ப்ரவேஷ்டும்‌ ச பரந்தப || ” 
[வேதங்களா லும்‌. தபஸ்ஸினாலும்‌. தானத்தினாலும்‌. யாகத்‌ 
தினாலும்‌, நீ என்னைக்‌ கண்ட தபோல்‌ நான்‌ (ஒருவரால்‌) 
கரணத்தக்கவனல்லன்‌; அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே] 
மற்றொன்‌ றிலும்‌ ஈடுபடாத பக்தியினலேயே நான்‌ இம்மாதிரி 
உண்மையாக அறிவதற்கும்‌. காண்பதற்கும்‌, நுழைவதற்கும்‌ 
தகுந்தவன்‌.] என்றும்‌ 

“ உதாராஸ்‌ ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்‌ ” 
[இந்த நான்கு வகைப்பட்ட டக்கர்களும்‌ உதாரர்களே; 
ஞானி3யாவெனில்‌ எனக்கே தாரகன்‌ என்பது என்‌ 
ஸித்தாந்தம்‌.] என்‌ றும்‌ பக்தியினுடையவும்‌. பக்கர்களுடய 
வும்‌ பெருமைகள்‌ பகவானாலேயே பரக்கப்பேசப்பட்டன 
வன்றோ. வேகங்களிலும்‌, “ தமேவ விதி,த்வா அதிம்ருஜ்யு 
மேதி” “தடமேவம்‌ வித்வா£ம்ருக இஹ பவத நார்ய: 
८5.590 அயநாய வித்‌,யகதே '' “கஜ்ஜலாநிதி மாந்த உபாஸீத?' 
“நிதி,த்‌,யாஸிதவ்ய:” “ய: பூர்வ்யாய வேத.லே ०6८ ०१... 
ஸுமதிம்‌ ப,ஜாமஹே ” [எவனொருவன்‌ ஆதிகாரணனாகவும்‌ 
(அதுபவிக்கப்புகும்‌ ஒவ்வொரு கணத்திலும்‌) புதியனாகவு 
மிருக்கிறானோ அந்த பகவானிடத் தில்‌ பக்தியைஅடைகிறோம்‌.] 
முதலான பலவிடங்களில்‌ பக்தியானது மோகஷஸா தனமாக 
விதிக்கப்பட்டுள்ளது. அந்த பக்தியையும்‌ தனக்கு அளிக்கும்‌ 
பழி ஜலத்தை ட்ரார்த்திக்றொன்‌-— “யோ வ: மிவதமோ 
ரஸ; என்று தொடங்கி, பக்தி நிஷ்டர்களுக்கே யன்‌ றிக்கே 
ப்ரபந்நர்களுக்கும்‌ பகவத்பக்தியானது மிகவும்‌ விரும்பத்‌ 
தக்கதாகிற து. பக்திநிஸ்டன்‌ பக்தியை ஸரதனமாக விரும்பு 
கிறான்‌. ப்ரபத்திரி்டனோவெனில்‌ அதைப்‌ பலமாக 
( ஸ்வயம்‌ ப்ரயோலஜுமாக ) விரும்புறொன்‌. பக்தியை 
ஸாதித்துத்தருவதால்‌ ப்ரபத்தியும்‌ ஸாத்ய்பக்தி என்று 
பெயர்‌ பெற்றிருக்கிறது. 


^" பத்துடையடியவர்க்கெளியவன்‌ பிறர்களுக்கரிய வித்தகன்‌?! 
"" பேரமர்‌ காதல்‌ கடல்புரைய விளைவித்த காரமர்‌ மேனி நம்‌ கண்ணன்‌ ” 
^“ சூழ்ந்ததனிற்பெரிய என்‌ அவாவறச்‌ சூழ்ந்தாயே ” என்று நம்மாழ்வாரும்‌, 

५ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே ”' 
* எட்டினோடிரண்டெனும்‌ கயிற்றினால்‌ மனந்தனைக்‌ 

கட்டி வீடிலரதுவைத்த காதலின்பமாகுமே "` 
“அன்பிலன்‌ நியாழியானை யாவர்‌ காண வல்லரே” 
“கின்பாலராய பத்தர்‌ சித்தம்‌ முத்தி செய்யும்‌ மூர்த்தியே ” 
“பெறற்‌ கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌ 
பெறற்கரிய மாயனே! எனக்கு நல்கவேண்டுமே ” என்று பக்திஸாரரும்‌ 
தரங்சள்‌ பக்தி பரிபூர்ணராயிருந்‌ ததை யும்‌, பக்தியின்‌ பெருமையையும்‌ பன்னியுரைத்தார்கள்‌. 
இப்‌படி பக்திநிஸ்டர்களோடு,ப்ரபந்நர்களோடு வாசியற ஸர்வர்க்‌ 
கும்‌ உபாதேயதகுமமான பக்தியான து இம்மந்திரத்தின்‌ பிற்‌ 
பகுதியால்‌ பிரார்த்திக்கப்படுகிறது. 


பகவத்பக்தியை ஜலங்களை நோக்கி ப்ரார்த்திப்பானென்‌ 
னென்னில்‌: பகவானுக்கு எப்டோ தும்‌ டள்ளிகொள்ளுமிடமா 
யிருக்கும்படி தம்மை அமைத்து வைத்திருக்கும்படியான 
பரமபக்‌தி அவைகளுக்கே உள்ளதாகையால்‌ அவ்விதமான 
பக்தியை எங்களுக்கும்‌ அடைவியுங்கள்‌ என்று அவைகளை 
நோக்கி ப்ரார்த்தனை செய்யப்படுகிறது. (யோ வ: ிவகமோ 
ரஸ...) உங்களிடமிருக்கும்‌படியான மிகப்பரிசுத்தமான 
யாதொரு ரஸம்‌ உண்டோ அலை எங்களை அடைவியுங்சள்‌. 
(ரஸ:) என்று இங்கு சொல்லப்படுவது அமுதிலும்‌ இனி 
தான பகவத்‌ பக்தியேயாகும்‌. இத்திட்பு, புளிப்பு முதலான 
ஹட்ரஸங்களல்ல; ` யவெதம” என்னும்‌ விசேஷணம்‌ அவை 
களுக்குப்‌ பொருந்தாது: மேலும்‌ இந்த ப்ரகரணத்திற்கு 
அப்பொருள்‌ சேராது. (ிவதமேோ ரஸ:) மிகப்பரிசத்தமான . 
அன்பு. பக்திக்குப்‌ பரிசத்தியாவ து: தனக்கு ப்ரயோ ஜனமாக 
ஒன்றை விரும்பா திருக்கை. பகவானுடைய திருவடிகளை 
எப்போதும்‌ வருடுவதையே ஸ்வயம்‌ ப்ரயோஜனமாகக்‌ 
கொண்டிருப்பவையன்றோே இவை, (மிவதமோ ரஸ:) 

"உலகு படைத்துண்ட வெந்தை அறைகழல்‌ 
சடர்ப்பூந்தாமரை குடுதற்கு அவா 

ஆருயிர்‌ உருகி 2.க்க. நேரிய காதல்‌ 

அன்பில்‌ இன்‌(பு) ஈன்‌ தேறல்‌ அமுதவெள்ளத்தானாம்‌ சிறப்பு” 
என்று வேசம்‌ தமிழ்செய்த மாறழனால்‌ சொல்லப்பட்ட பரம 
பக்தி ரஸம்‌. (ிவதமோ ரஸ:) பரமமங்களமான பகவதனு 
பவம்‌ இங்கு பிரார்த்திக்கப்படுவதாகவும்‌ பொருள்கொள்ள 
லாம்‌. “மாரங்வதம்‌ மிவம்‌'' எனப்பட்ட பகவானைப்பற்றிய 
அனுபவமாகையால்‌, “ சிவதமமான ரஸம்‌” என்பது 
பொருந்தும்‌. ' பவித்ராணாும்‌ ஹி கேளவிந்த; பவித்ரம்‌ 
பரழுச்யதே” [பரிசகுத்தமானவற்றினுள்‌ கோவிந்தன்‌, மிகப்‌ 
பரிசுத்தனெனப்படுகிறான்‌.) “மங்களா நாஞ்ச மங்களம்‌ ”' 
[ மங்களங்களுக்குள்‌ மங்களமானவன்‌ , ]  பாவகஸ்ஸர்வ 
லோகாநாம்‌ த்வமேவ ரகுருந்தக '' [ராகவ! எல்லாவுலகை 
யும்‌ நீர பரிசுத்தப்படுத்துபவர்‌ ] என்று பகவான்‌ பரம 
பவித்ரமானவரென்றும்‌, -ஆவிரிஞ்சாதலங்கனம்‌” [பிரமன்‌ 
முதலிய யாவரும்‌ அமங்களமானவர்கள்‌.] முதலான ப்ர 
மாணங்களால்‌ பிறர்‌ அடரிசுத்தரென்றும்‌ அறியப்படுகிற 
தீன்‌ ऊ (९. "५४6 5 10: என்னும்‌ சொல்லால்‌ அடரிசுத்தமும்‌ 
அல்பமும்‌ அஸ்திரமுமான ப்ரஹ்மாதிகளை அனுபவித்தல்‌ 
தள்ளப்படுகிறது. 

“அப்பஹ்மப,வநால்லோகா: புகராவர்த்திநோ 5ர்ஜு௩ | 
மாமுபேத்ய ॐ கெளற்தேய புஈர்ஜந்ம ௩ வித்வதே |” 

[ அர்ஜுன! ப்ரஹ்மலோகம்‌ முதலான எல்ல! உலகங்களும்‌ 
மறு பிறப்பைத்‌ தரக்கூடியவை. குந்பபுத்ரனே! என்னை 
அடைந்தபிறகோவெனில்‌ மறுபிறப்பு; இடையாது] என்று 
கீகையிலும்‌. 

ப்ராஹ்மோ$பி லோகோ௫$ல்பஃ?' [ப்ரஹ்மலே கமும்‌ 
(முமு்ஷஃவுக்கு) அல்பமான து] "ஸ்வர்க்கே பி யச்சிந்த ரே 
விக்ஈ:”  ஸ்வர்க்களப்திஸல்‌ தஸ்ய விக்‌,நேோ 5 நுமியகே? 

[ஸ்வர்க்கப்ராப்தியும்‌ அவனுக்கு இடையூறு] “தஸ்யாந்கு 
ராயோ மைத்ரேய 0 5५००6 530 த்வா இகம்‌ பலம்‌'' [மைத்ரே 
யரே! தேவேர்‌திரனாயிருக்கை முதலிய பவன்‌ கள்‌ அவனுக்கு 
இடையூறு. / என்று விஷ்ணுபுராணத்திலும்‌ உத்கோஷிக்‌ 
கப்பட்டது. 'சிவதமமான ரஸம்‌' என்கையால்‌, நித்யமா 
யிருந்கபோதிலும்‌ பகவதனுபவத்தைக்‌ காட்டிலும்‌ மிகத்‌ 
தாழ்வான கான ஆத்மா நுபவரூபமான கைவல்யமோ க்ஷ மம்‌ 
தவிர்க்கப்பட்ட து. 
“குறுகா நீளா இறுதி கூடா எனையூழி 
சிறுகா பெருகா அளவில்‌ இன்பம்‌ சேர்ந்தாலும்‌ 
மறுகாலின்‌ றி மாயோன்‌ உனக்கே ஆளாகும்‌ 
சிறுகாலத்தை உறுமோ? அந்தோ! தெரியிலே'' 

என்று உள்ளமுருகி ஓலமிட்டாரன்றோ ஆழ்வார்‌. ( மிவ 
தமோ ரஸ: ) நரகாதி அநுபவம்‌ அசிவமானது; ப்ரஹ்ம 
லோகம்‌ முதவியவற்றில்‌ அனுபவம்‌ வெமான து. கைவல்யா நு 
பவம்‌ சிவதரமான து; பகவத.நுபவமே சிவசுமமானது. 


“போகு இமே விதிமிவாதிபதஞ்ச கிஞ்சித்‌ 

ஸ்வாத்மா நுபூ,திரிதி யா கில முக்திருக்தா | 
ஸர்வம்‌ ததூ;ஷஜலஜோஷமஹம்‌ ஜஈஷேய 

ஹஸ்த்யத்ளிகாத! தவ தாஸ்யமஹாரஸஜ்கு: '' 
[அத்திகரியருள! எனே! உன்‌ கைங்கர்யமாறெ மஹா 
ரஸத்தை அறிந்தவனான நரன்‌. இந்த ஸ்வர்க்கா இிபோகங்‌ 
களையும்‌. பிரமன்‌, சிவன்‌ முதலியோரின்‌ லோகங்களையும்‌, 
ஆக்மாநுபூதி எனப்படும்‌ கைவல்ய மோக்ஷத்தையும்‌ உப்புத்‌ 
தண்ணீரைட்போல்‌ உதறித்தள்ளுகிறேன்‌.] என்று கூரத்‌ 
காழ்வான்‌ அருளியது இவ்வீடத்தில்‌ அ௮அதுஸந்திக்கவுரியது. 
(ிவதமோ ரஸ:) “பரங்வதம்‌ மரிவம்‌” என்றும்‌ “ரஸோ 
வை ஸ:। ரஸம்‌ ஹ்யேவாயம்‌ ००1 19, ०/7 06.85 பவதி” [அப்‌ 
பரமாத்மா ரஸஸ்வரூபியன்றோ; ரஸஸ்வூபியான அவனை 
அடைந்தே இந்த ஜீவன்‌ ஆரந்தத்தை உடையவனாகிறான்‌ . ] 
என்றும்‌ கருதி வாக்கியங்களில்‌ சொல்லப்பட்ட 
பரமாத்மாவே இங்கு 'சிவதமமான ரஸம்‌” என்று கூறப்‌ 
படுவகாகவும்‌ சொள்ளலாம்‌. “ கனியைக்‌ கரும்பினின்‌ 
சாற்றைக்‌ கட்டியைத்‌, தேனை அமுதை என்று ஆழ்வரரால்‌ 
பாடப்பட்ட புருஷோத்கமனை ரஸமெனக்‌ குறையில்லை 
யன்றோ. (யோ வ: ஸிவதமோ ரஸ: 0 ^ `" வர்த்ததே ध 
( இருக்கறதோ ) என்று சேர்த்துப்‌ பொருள்கொள்ள 
வேண்டும்‌. (தஸ்ய) ' தஸ்ய दा 5855८०2 ' என்று கூட்டி: 
அந்தபக்தியின்‌ & 7 சிறு பாகத்தையாவது எங்களை அடையச்‌ 
செய்யுங்கள்‌ என்கை. (இஹ) இவ்வுலகத்தில்‌. அவ்வுலகத்‌ 
திற்குப்போய்‌ பகவத்பக்தியைப்‌ பெறக்கடவோம்‌ என்றுஆறி 
யிருக்கக்கூடிய ஸ்வபாவத்தகை உடையேோமல்லோம்‌ காண்‌! 

“ கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கோர்‌ குற்றேவல்‌ 
இம்மைப்பிறவி செய்யாமே இனிப்போய்ச்செய்யும்‌ 
தவந்தானென்‌ ?' 
“ ஏரார்‌ முயல்‌ விட்டுக்‌ காக்கைப்‌ பின்‌ போவதே '' 
“ இச்சுவை தவிர யான்‌ போய்‌ இந்திரலோகமாளும்‌ 
அச்சுவைபெறினும்‌ வேண்டேன்‌ "' 

“ நநரியகாதல்‌ அன்பில்‌ இன்பு ஈன்‌ தேறல்‌ அழுகு 
வெள்ளத்கானாம்‌ சிறப்பு வீட்டு........ நல்வீடு பெறினும்‌ 
கொள்வகெண்ணனுமோ தெள்ளியோர்‌ குறிப்பே?” என்னு 
மவர்களன்றோ நாங்கள்‌ என்கிறான்‌. (௩: எங்களுக்கு, 
அவனைப்‌ பெறாவீடில்‌ 5१507८2 என்றிருக்கும்‌ எங்களை 
(அடைவியுங்கள்‌). உங்களுடைய ஸம்பந்தத்தால்‌ பரிசுத்த 
மடைந்த எங்களுக்கு என்றுமாம்‌, (௩:) “எங்களுக்கு ' 
என்று கன்னுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்ற எல்லா ரையும்‌ 
கூட்டிக்கொள்கிறான்‌ . தனியனுபவிக்கும்‌ விஜயமன்றே இத்‌; 
“ஏக: ஸ்வாது, = புஞுஜீச ” [இனிய போருளைத்‌ தனியருந்த 
லாகாது] என்பதன்றோ பபஸ்த்ரார்த்தழம்‌, 

 (உ௰திரிவ: மாதர:) ஸ்நேறுத்துடன்‌ கூடிய தாய்மார்‌ 
களைப்போல்‌ எங்களுக்கு அந்த ரஸவிசேஷத்தை ஊட்டுங்‌ 
கள்‌. ப்ராக்ருகரான தாய்மார்கள்‌ தேஹத்துக்கு தபீரகமான 
பாலை ஊட்டுவது போல்‌ நீங்கள்‌ ஆத்மாவுக்கு தாரகமான 
ரஸத்தைப்‌ பருகச்‌ செய்யுங்கள்‌. ( உ௰திரிவமா தற:) * அன்பு 
நிரம்பிய தாய்மார்களைப்‌ போலே' என்றாவது “தாய்மார்‌ 
களைப்போலே அன்பு நிரம்பியவர்கள்‌ ' என்றாவது 
பொருள்‌ கொள்ளலாம்‌. (உ௱தி:) “ஜஸி வா எரந்குஸி * 
என்கிற ஸூத்ரத்தினால்‌ “ உ௰தீ:? என்றாகிறது. ०४०5 9 
முடையவர்கள்‌ என்று பொருள்‌. "` ४/5 ०095५ ஆப!" 
[பசை (அன்பு) உடையது ஜலம்‌. ] என்றல்லவோ உங்க 
ருக்கு லக்ஷணம்‌ சொல்லப்பட்ட து ' ' என்று ச்ருதப்ரகா சிகா 
சார்யர்‌ ரஸோக்தியாக அருளிச்செய்வர்‌. ஸ்நரேஹப்த 
மானது. பசை அன்பு என்னும்‌ இரு பொருள்களை உடையது. 

யஸ்ய—எந்க நாராயணனுடைய, க்ஷயாய ~ வாஸஸ்தானமா 
யிருந்துகொண்டு, ஜிந்வத-பீரீதியை அடைகூறீர்களோ. 
தஸ்மை-௮ந்த பகவான்‌ அடையும்‌ பொருட்டு, வ: 
உங்களை. அரம்‌ கமாம-—அதிகமாக உபா ஸிக்கிறோம்‌. ஆப 
ஐலங்களே! ந:-௭எங்களை. ஜஐநயத, (பகவத்‌ பக்தியைக்‌ 
கொடுப்பதன்‌ மூலம்‌) ஸத்தைபெற்றவர்களாகச்‌ செய்யுங்‌ 
கள்‌. இது மந்த்ரசேஷத்தின்‌ பதவுரை. விசேஷார்த்தங்களை 
இனிச்சிந்திப்போம்‌. 

(யஸ்ய க்ஷயாய) எவன்‌ வஸிப்பதற்காக; எவனை அடை 
வதற்காக என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ( ஜிந்வத, ) 
ப்ரியங்களாக ஆூறீர்களோ; ஜிவி என்கிற தாது ப்ரிதி 
விஷயம்‌ என்னும்‌ பொருளையுடையது. (யஸ்ய க்ஷயாய 
ஜிந்வத, ) எவன்‌ உங்களை வாஸஸ்தானமாக உகந்தருளி 
யிருக்றானோ என்றபடி. எவனுடைய வாஸஸ்தானமா 
யிருக்கையால்‌ ( எங்களுக்கு ) ப்ரியங்களாயிருக்கிறீர்களோ 
என்னவுமாம்‌. எவனை அடைதற்கு நீங்கள்‌ ௨கக்கின்‌ நீர்‌ 
களோ என்றுமாம்‌. “குறைவில்‌ தடங்கடல்‌'' என்கிறபடியே 
எம்பெருமானுடைய வாஸஸ்தானமாயிருந்துகொண்டு குறை 
வற்றிருப்பவையன்றோே இவை. “ஆபோ ஹிஷ்டர மயோ 
(1५९८; ˆ என்றவிடத்திலெடுத்த ப்ரமாணங்களை இங்கும்‌ 
படிப்பது. (தஸ்மா' அரம்‌ கமாம வ:) அவனை அடையும்‌ 
பொருட்டு உங்களை மிகவும்‌ உபாஸிக்கிறோம்‌. ( தஸ்மா') 
அவனுடைய கைங்கரியத்தைப்‌ பெறும்‌ பொருட்டு என்‌ 
அம்‌ கொள்ளலாம்‌. (வ: அரம்‌ கமாம ) உங்களை மிகவும்‌ 
அடைகிறோம்‌; உங்களை மிகவும்‌ உபாஸிக்கிறோம்‌ என்‌ றபடி. 
"" ७95 ८0.5.5907 = (1953 ॐ4८7 5 क97: "“ [கதியைச்‌ சொல்லும்‌ 
பதங்கள்‌ ( மாநஸகதியாகிற ) புத்தியையும்‌ பொருளாக 
வுடையவை. /என்னும்‌ நியரயத்தால்‌ -கமாம'( அடைகிறோம்‌) 
என்னும்‌ பகம்‌ 'உபாஸிக்கின்‌ றோம்‌” என்றாவது ரணமாக 
அத்யவஸிக்கிமீறோம்‌' என்றாவது பொருள்படுகிறது. (அரம்‌ 
கமாம) உங்களை மிகவும்‌ உபாஸிக்கிறோம்‌. -' முயன்று உன்னை 
நோற்கின்றேன்‌ காமதேவா!” என்ற ஆண்டானளைப்போலே 
செல்லுகறான்‌. பகவானுக்கே அடிமைப்பட்டிருக்கும்‌ டரமை 
காந்தயோான இவன்‌ அப்புக்கு ( ஜலத்துக்கு ) அபிமானி 
தேவதையை இப்படி உபாஸிக்கை பொருந்துமோ ? 
என்னில்‌: பகவத்விஷயப்ரா வண்யம்‌ படுத்துகிற பாடு இது 
பெருமாளையல்லது அறியாத திருவயோத்யையிலுள்ளார்‌, 
அவர்க்கு நன்மையையெண்ணி “ஸர்வாந்‌ தே,வாந்‌ ஈமஸ்‌- 
யர்தி ராமஸ்யார்த்தே, யரமஸ்வி௩: ' [யஸ்விகளான 
அயோத்யாவாஸிகள்‌ ராமனுக்காக எல்லா தேவதைகளையும்‌ 
நமஸ்கரிக்கறொர்கள்‌ ] என்றபடியே எல்லா தேவதைகளின்‌ 
காலிலும்‌ விழுந்தனர்‌. பரமபுருஷஜனைய்‌ பரமபதத்திலும்‌ 
வேண்டேனென்ற திருவடி, ராமனுக்கூக ஸமுக்ஸதரணம்‌ 
பண்ணும்போது  “ நமோ$ஸ்து வாசஸ்பதயே ”' என்றான + 
நித்யானபாயினியான பிராட்டியும்‌ அவதாரதசையில்‌ 
“பூர்வாம்‌ தி,ரமம்‌ வஜ்ரத,ரோ த,க்ஷிணாம்‌ பாது தே யம: | 
வருண: பங்சிமாமாமாம்‌ த,நேமாஸ்தூத்தராம்‌ தி,மமம்‌ |” 

[ழ்‌ திசையில்‌ இந்திரனும்‌, தென்திசையில்‌ யமனும்‌. 
மேற்குத்திக்கில்‌ வருணனும்‌. வடதிசையில்‌ குபேரனும்‌ 
(உம்மை) ரக்ஷிக்கட்டும்‌.] என்று ஸர்வலோகபாவனுக்கு 
திக்பாலகர்களைக்‌ காவலிட்டாள்‌. ஸாத்விகாக்‌ரேஸரரான 
பெரியாழ்வார்‌ திருமகளார்‌ உன்னையும்‌ உம்பியையும்‌ 
தொழுதேன்‌ '' ஸன்‌ று ரஜோகுணப்ரசுரனா।ன காமன காலிலே 
விழுந்தாள்‌. ,ப்ரபர்கஜனகூடஸ்‌ தரான நம்மாழ்வாரும்‌ 
“ தெய்வங்காள்‌! '” என்று தேவதைகளை முன்னிட்டார்‌. 
பகவானைப்‌ பெறவேண்டுமென்னும்‌ ப்ராப்யத்வரை மிக்க 
ருட்பவர்கள்‌ கலக்கமிருக்கும்படி இது. “யயெள ௪ காசித்‌ 
ப்ரேமாந்த,ா'' ஏஸி கிற டியே பகவ த்விஷய த்தில்‌ ப்ரேமத்‌ 
தாலே வரும்‌ கலக்கமும்‌. அத்தாலே வரும்‌ அதிப்ரவ்ருத்தி 
களும்‌ அத்யந்தம்‌ உபாதேயங்களளே என்று ஈம்‌ ஆசாரியர்கள்‌ 
அறுதியிட்டிருக்கின்‌ மார்கள்‌. அந்து சாஸ்த்ரார்த்தத்தை 
வேதபுருஷன்‌ இங்கு வெளியிடுகிறான்‌. (அரம்‌ கமாம ) 
“முயன்று நோற்கின்றேன்‌'' “கத்‌ தஸ்ய 60530०८9 பவேத்‌" 
[என்‌ னைக்‌ கொள்ளுகை அவனுக்கே தகுதி] என்னும்படியே 
அவனேயுபாயம்‌. என்று அறுதியிட்டிருக்கவேண்டிய நன்‌ 
இப்போது அவனைப்‌ பெறுகைக்கு உன்‌ காலிலே விழுந்து 
படுகறயத்ஈமெல்லாம்‌ கண்டாயே என்கிறான்‌. (வ:) உங்களை, 
நான்‌ பற்றியிருக்கும்‌ வியந்தான்‌ , இன்னதென்னு 
மிடமறியீரோ? . அவனைப்பற்றியிருக்கக்‌ கடவ நானன்றோே 
உங்கள்‌ காலில விழுந்து தவளுகிமிறன்‌. (தஸ்மை) இவை 
யெல்லாம்‌ அவனுடைய இனிமைபடுத்துகிற பாடுகிமீர்‌! 
(ஆபோ ஜநய ல = ந:) ஜலங்களே! அவனையும்‌ அவன்‌ 
விஷயத்தில்‌ பக்தியையும்‌ கொடுப்பதன்‌ மூலம்‌ எங்களை 
ஸத்கை பெற்றவர்களாகச்‌ செய்யுங்கள்‌: 
“அஸந்நேவ ஸ பவதி அஸத்‌, ப்‌ஏஹ்மேதி வேத, சேத்‌। , ` 
அஸ்தி ப்‌,ரஹ்மேதி சேத்‌, வேத, ஸந்தமே௩ம்‌ ததோ விது,॥'' 
[்ரஹ்மம்‌ ஸத்‌ ( உள்ளது ) என்று அறியவில்லையா கில்‌ 
அவன்‌ அ௮ஸத்தாகவே ஆகிறான்‌. ப்ரஹ்மம்‌ உள்ள 
தென்‌ ரறிந்தானாகில்‌ அதனாலேயே இவனை நல்லோனென 
அறிகின்‌ றனர்‌.] என்று வேதத்திலும்‌, 

( “மரரீரமேவ மாதாபிதரெள ஜநயத:| 

ஸ ஹி வித்வாதஸ்‌ தம்‌ ஐநயதி தச்ச்‌,ரேஷ்ட,ம்‌ ஜந்ம ॥'” 

[ தாய்‌ தந்தையர்கள்‌ சரிரந்கையே உண்டுடண்ணுகிறோர்கள்‌. 
ஆஅசாரியனே ப்ரஹ்பவித்யையை . அளிப்பதனால்‌. அவனை 
ஸத்கை பெறச்செய்கறொோன்‌. அதுவே மேலான பிறப்பு] 
என்று ஆபஸ்தம்ப ஸூத்ரத்திலும்‌, 

॥ ஸ்வோஜ்ஜீவநேச்ச,ா யதி, தே ஸ்வஸத்தாயாம்‌ ஸ்ப்ருஹா யதி,| 
ஆத்மத்எஸ்யம்‌ ஹரே: ஸ்வாம்யம்‌ ஸ்வப,ா வஞ்ச ஸ்த;ா ஸ்மரா॥” 
[உன்னுடைய உஜ்ஜீவனத்தில்‌ உனக்கு விருப்பபிருகச்கு 
மாகில்‌. உன்‌ ஸத்தையில்‌ ஆசையிருக்குமாகில்‌. ஆத்மாவின்‌ 
தழஸ்யத்தையும்‌, ஹரியின்‌ ஸ்வாம்யத்கதயும்‌. இவைகளின்‌ 
தன்மையையும்‌ எப்போதும்‌ எண்ணு] என்று விஷ்ணு 
தத்வத்திலும்‌. “்‌ அன்று நான்‌ பிறந்திலேன்‌ பிறந்தபின்‌ 
மறந்திலேன்‌ ” என்றும்‌, -: அடியேனும்‌ உளனாவன்‌ ” என்றும்‌ 
ஆழ்வார்களா லும்‌ பகவத்வீஷயத்தில்‌ ௬௪ பிறந்தவன்றே 
சேதனனுக்கு ஸத்தையுள்ளது என்னும்‌ சீரிய பொருள்‌ 
பலவிடங்களிலும்‌ பேசப்பட்டதன்றோ. (ஆபோ ஜாயதய 
௪ ந:) ஆப: ஜலங்களே!, ந:-ஏங்களுக்கு, ०४1५, -- (பகவத்‌ 
ப்ராப்தியாகிற ப்ரயோஜனத்தையும்‌) நீங்களே உண்டு 
பண்ணுங்கள்‌ என்று பிரார்த்திப்பதாகவும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. (9०/59) நிகழ்காலத்துக்கு ஸமீபமான 
காலத்தையும்‌ நிகழ்காலமாகச்‌ சொல்லல மாகையால்‌. இங்கு 
*உண்டுபண்ணுங்கள்‌' என்னும்‌ பொருச்ரில்‌ :ஜஈய ச, என்று 
நிகழ்காலமாகபபடிக்கப்படுகிறது. நாராயணயதிந்த்ரர்‌ இம்‌ 
மந்திரக்திலுள்ள “அப்‌ ' சப்தங்கள்‌ பரமாத்மாவையே 
குறிக்கன்றனவெனறார்‌. ம்ருதப்ரகாசிகாசாரியர்‌ பகவானை 
அடைவதற்கு ஜலதீதைப்‌ புருஜகாரமாகப்‌ பற்றுகிறான்‌ 
என்று கொண்ட பொருள்‌ மிகவும்‌ சுவையையுடையது.

அடுத்தபடியாக. சிறிது ஜலத்கதைக்‌ கையில்‌ கொண்டு 
பின்வரும்‌ மந்திரங்களை முறையே காலையிலும்‌, மத்யாஹ்‌ 
ஈத்திலும்‌. மாலையிலும்‌ அநுஸந்திகச்து அந்த ஜலத்தைப்‌ 
பருகவேண்டும்‌. 

^ அப்ரா யத்யமித்யந்யந்மஹாபாதகேப்‌,ய: ”” 
[மஹாபாதகங்களைத்தவிர மற்றவை அப்ராயத்யம்‌ எனப்படு 
கன்றன] என்று தொடங்‌ “ஆபோ வா ஆசாமேத்‌ '' 
[ஜலத்தை ஆசமனம்‌ செய்யவேண்டிய .]என்‌ றுபாடபங்களைப்‌ 
போக்கடிப்பத ற்கு ஸாதனமாக இம்மந்திரங்கள்‌ வேதத்தில்‌ 
சொல்லப்பட்டன அவற்றுள்‌ ஸாயம்‌ ஸந்த்யாவந்தன 
மந்திரங்களை முற்படச்‌ சொல்லியிருப்பதா லும்‌ 


"° ஜபந்காஸீத ஸாவித்ரீம்‌ ப்ரத்யகளதாரகோத,யாத்‌ " 
[ஸாயம்ஸந்த்யையில்‌. ஈக்ஷத்திரங்கள்‌ உதிக்கும்‌ வரையில்‌ 
காயத்ரியை ஜபித்துக்கொண்டு இருக்கக்கடவன்‌ ] என்று 
சொன்னபின்பு. 


“ப்ராதஸ்ஸந்த்‌,யாம்‌ ஸக்க்ஷத்ராம்‌ திஷ்டந்காஸ 9ர்யதரர்மமநாத்‌” 
[ஈக்ஷ்த்திரங்களுடன்‌ கூடியிருக்கும்போது தொடங்கி 
ப்ராதஸ்‌ ஸந்த்யையை ஸமர்பனைக்‌ காணும்‌ வரையில்‌ உடா 
ஸிப்பது.] என்று யோஃஸ்வரரால்‌ படிக்கப்பட்டிருப்ப 
தாலும்‌ சராதப்ரகாசிகாசார்யர்‌ முதன்முதலில்‌ ஸரயம்‌ 
ஸந்த்யா மந்திரங்களைத்‌ தொடங்கி வியாக்கியானம்‌ செய்‌ 
தார்‌. உப௩யனம்‌ செய்யப்பட்ட ப்ரஹ்மசாரிக்கு முதன்‌ 
முதலில்‌ மாத்யா ஹ்நிகமந்த்ரங்களே உபதேசிக்கப்படுவதால்‌ 
நாரரயணவல்லியில்‌ மாத்யா ஹ்நிக மந்த்ரம்‌ முதலிலும்‌, பிறகு 
ஸாயம்‌ ஸந்த்யாமந்த்ரமும்‌. பிறகு ப்ராதஸ்ஸந்த்யாமந்த்ரமும்‌ 
படிக்கப்பட்டன. தினத்துக்குக்‌ காலேைவேளையே முதலாகை 
யாலும்‌. நாம்‌ தினந்தோறும்‌ முதலில்‌ செய்யவேண்டிய 
நித்யகர்மம்‌ ப்ராதஸ்ஸந்த்யையாகையா ஓலும்‌,ப்ரா தஸ்ஸந்த்யா 

மந்த்ரத்தைத்‌ தொடங்கி வியாக்கியானம்‌ செய்வோம்‌. 
°" (7 ஹிலஷ்ட; '' என்னும்‌ மந்திரத்தில்‌ ஜலம்‌ புருஷ 
காரமாகப்‌ பற்றப்பட்ட து. இங்கு அநிஷ்டநிவ்ருத்தியான 
ப்ராப்யப்ரார்த்தனேயை முன்னிட்டுப்‌ பரமபுருஷனிடம்‌ 
ஆத்மா ஸமர்ப்பிக்கப்படுகிறது. 


सश्च मा मन्युश्च मन्युपतयश्च मन्युकृतेभ्यः। 

grea रक्षन्तं । यद्राज्या पापमकाषम्‌। मनसा वाचा हस्ताभ्यां | 
agg शिश्ना । रात्रिस्तदवलुम्पतु | afer दुरित मयि। 
इद महै मामथ्रतयोनो घय ज्योतिषि जुद्येमि स्वाहा ॥ 


ஸூர்யங்ச மா மந்யுங்ச மந்யுபதயங்ச மரந்யுக்ருதேப்‌,ய: | 
பாபேப்‌,யோ ரசக்ஷந்தாம்‌ | யத்‌ராத்ர்யர பாபமகார்ஷம்‌ | 
மநஸா வாசா ஹஸ்தாப்யாம்‌ | 
பத்‌,ப்‌,யாமுத,;ரேண மபிங்நர। ராத்ரிஸ்தத,வலும்பது | 
யத்கிஞ்ச துரிதம்‌ மயி 
இதமஹம்‌ மாமம்ருதயோகெள ஸூ9ர்யே ஜ்யோதிவி 
ஜுஃஹோமி ஸ்வாஹா ॥ 


இம்மந்திரத்திற்கு ருஷி வாமகேவர்‌; அக்னி என்றும்‌ 
சொல்லுவர்‌, காயத்ரீ சந்தஸ்ஸு; ஸூர்யன்‌ தேவதை: 
ஸூர்யனும்‌ மந்யுபதிக்களும்‌ தேவதை என்றும்‌ சொல்லுவர்‌. 
இங்கு காயத்ரீ சந்தஸ்‌ என்று படித்திருந்தபோதிலும்‌ இந்த 
மந்திரத்திற்கச்‌ சந்தஸ்ஸு இல்லை, சந்த: ॥1 @515555,: ' 
{பாதங்களால்‌ பிணைக்கப்பட்ட து சந்தஸ்‌] என்று செளனக 
ராலும்‌ `" தேஷாம்‌ ருக்‌ யத்ரார்த்தவமோந பாத,வ்யவஸ்தர '' 
{அவைகளுள்‌ எதில்‌ அர்த்தவசத்தினில்‌ யாதப்பிரிவு ஏற்‌ 
பட்டிருக்கறேதோ அதுவே ருக்‌] என்று பூர்வமீமாம்ஸை 
யிலும்‌ சொல்லப்பட்ட லக்ஷணம்‌ இங்கு இல்லையன்றோ. 
காயத்ரிசந்தஸ்ஸு௫உடைய சில லக்ஷணங்கள்‌ இங்கு காணப்‌ 
படுவதால்‌ இங்கு “தேவீ காயத்ரீ சந்த: ” என்று சொல்லப்‌ 
பட்டிருக்கிறது. 

(०४7 ८.0०) இந்த ஸுூர்யாதிசப்தங்கள்‌ அப்டெயர்‌ 
களால்‌ ப்ரஸித்தரான தேவதைகளைச்‌ சொல்லி, அவர்‌ களுக்கு 
அந்தர்யாமியான பகவானையும்‌ உணர்த்துகன்‌ றன. பாப 
நிவர்த்தனமாகிற பலனைப்‌ பரமாத்மாவையொழிந்த அந்த 
தேவதைகளால்‌ அ௮ளிக்கமுடியா தன்றோ, - மயைவ விஹிதாரந்‌ 
ஹி தாந்‌ * என்‌ றன்றோ கீகாசாரியனும்‌ அருளினான்‌. 
(® 80 ५४०० (०५५०७ ) ஸூர்யனும்‌ மந்யுவும்‌. இங்கு மந்யு 
பப்தத்தினால்‌ சொல்லப்படுமவன்‌ இந்திரனே. இந்த = (“5.5 
திற்கு (எல்லா "“தேவதைகளாலும்‌) பஹாுமானம்‌ செய்யத்‌ 
தகுந்தவன்‌ என்‌ (7० ' மனத்தினால்‌ தியானம்‌ செய்யத்‌ 
தக்கவன்‌ என்றாவது பொருள்‌ கொள்ளலாம்‌, இட்பொருளை 
யுடைய தேவடைத இந்திரனேயாயிருக்கவேண்டுமாகை 
யாலும்‌, வேதத்திலும்‌, மந்யுரிந்த்‌,ரோ மந்யுரேவோஸ தேவ: ”' 
[மந்யுவாவது இந்திரன்‌; அந்த தேவன்‌ மந்யுவாகவே 
(பஹுமானம்‌ செய்யப்படுபவனாகவே) இருந்தானன்றோ ] 
என்று இந்த சப்தமும்‌. 

“ யரர ஒரோ பவ்யோ யமச பீருபிர்‌ 
யோதரவத்‌ பிரபிபூயதே 
010०5 ஜிக்‌யுபி,: இந்த்‌,ரம்‌ யம்‌ விஸ்வா பு,வநாநி ஸந்த,துர்‌ 
மருத்‌,வந்தம்‌ ஸக்‌,யாய ஹவாமஹே யதி,ந்த்‌,ர 
ப்ராக,வாது,த;ந்யசா- 
ஹூயஸே ந்ருபி, ஆயாஹி தூவயமா மமாபி,: ?' 
[எவன்‌ சூரனோ. எவன்‌ டயந்தோடும்‌ எதிரிகளை ஜயிக்க 
றுனோ, எவன்‌ ஜயசாலிகளால்‌ தோல்வியடைகிறானோ. இந்த 
எல்லா ஜனங்களும்‌ எந்த இந்திரனுடன்‌ சேருகறாோர்களோ, 
அப்படிப்பட்ட இந்திரனுடன்‌ நட்புகொள்ள நானும்‌ யாகம்‌ 
செய்‌ றன்‌.இந்திரனே! கிழக்கிலும்‌, மேற்கிலும்‌, வடக்கலு 
முள்ள மனிதர்களால்‌ கூட்பிடப்படுகிறாய்‌. ஆயினும்‌, சீக்ரெ 
மாக இவ்விடம்‌ வரவேண்டும்‌.] என்று இந்த சப்தத்தின்‌ 
அர்த்தமும்‌ இந்திரன்‌ விஷயமாகப்‌ படிக்கப்பட்டன. 
தமர்யு:!' என்பது இந்திரனுடையதோர்‌ நாமம்‌. அதின்‌ 
ஏகதேலுமாகையாலே மந்யுப்ப்சம்‌ இந்திரனைக்‌ குறிப்பதாக 
வும்‌ கொள்ளலாம்‌, (மந்யுபதயம்௪ ) மந்யுவாற இந்திரனைப்‌ 
பதியாகவுடைய மற்ற தேவதைகளும்‌, (ஸூர்யமச........ 
மந்யுபதயங்ச) ஸர்யனுக்கும்‌. இந்திரனாக்கும்‌, மற்ற 
தேவதைகளுக்கும்‌ அந்தராத்மாவான பரமாத்மா என்‌ றபடி. 
(மா) என்னை; வர்ணாய்ரமாசாரத்கை உடை பவனான எனனை. 
८ மந்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரச்ஷந்தாம்‌ ) மந்யுவினால்‌ 
ஏற்பட்ட பாடங்களிலிருந்து காப்பாற்றட்டும்‌. மந்யுவாவது 
கோபம்‌. இங்கு க்ரோத,த்கைச்‌ சொன்னது காமம்‌, லோபம்‌ 
மதம்‌, மாத்ஸர்யம்‌ என்னுமவற்றுக்கெல்லாம்‌ உபலக்ஷணம்‌, 
'வ்யத்யயோ பூஹுளம்‌' என்னும்‌ ப்ரமாண த்தினால்‌ பரஸ்மை 
பதத்திற்கு பதிலாக 'ரக்ஷந்தாம்‌” என்று ஆத்மபதும்‌ 
வந்துள்ளது. “மந்யுர்‌ தைந்யே க்ரதெள க்ருதி ? என்று 
நிகண்டுவில்‌ படிக்கப்படுவதால்‌ ` மந்யுக்ருதேப்ய:' என்ற 
வீடத்தில்‌ மந்யுப்தம்‌ தைஹ்யத்தைச்‌ சொல்லுவதாகவும்‌ 
கொள்ளலாம்‌. தைஹ்யமாவது, தினனாயிருக்கை: அதாவது: 
மன உறுதியற்றவனாயிருக்ககை, அத்தா இண்டான அப ஆய 
பக்ஷணம்‌ முதலியபா பங்களிலிருந்து ரக்ஷிக்கட்டும்‌ என்றபடி. 
“ நாயமாத்மா ப,லஹீநேர லப்ம: "ˆ [மநேோரடலமற்றவனால்‌ 
இப்பரமா தமா அடையப்படமாட்டான்‌ ] என்று வேகத்‌ 
திலும்‌ தை்யம்‌ பரமாத்மட்ராட்தி விரோத, என்று 
சொல்லப்பட்ட தன்றோ. 


“காம ஏஷ க்ரோத, ஏஷ ரஜோகு,ணஸமுத்‌,ப,வ: | 
மஹாமுநேோ மஹாபாப்மா வித்‌,த்‌,யேநமிஹ வைரிணம்‌ |” 
[ரஜோகுணத்தினலுண்டான இந்தக்காமம்‌ பெருந்‌ தீனிதின்‌ 
பது; இதுவே கோபமாய்ப்‌ பரிணமித்து. மஹாபாபீயய்‌ 
வீளங்குகிறது. இதை உனக்கு விரோ தியென்றறி.] என்று 
காமக்ரோதா திகளும்‌ முமுக்ஷ வுக்கு விரோதிகள்‌ என்பது 
இதையில்‌ கதீர்த்திக்கப்பட்டது. 

“அவங்யமநுபேக்தவ்யம்‌ க்ருதம்‌ கர்ம மராப,ாமமாபம்‌ | 
நாபு,க்தம்‌ க்ூஷ்யதே கர்ம கல்பகோடி ००००७7५ ॥'' 

[ மனிதனால்‌ செய்யப்படும்‌ புண்யாபுண்ய கர்மங்களீன்‌ பலன்‌ 
அவசியம்‌ அனுடவிக்கப்படவேண்டிய தே; கல்படகோடி௪தங்‌ 
களானாலும்‌. கர்மம்‌ அதுபவிக்காமல்‌ ஈசியாது ] என்று 
சொல்லியிருக்மையில்‌. பாடங்களிலிருந்து இவனை தேவதை 
கள்‌ ரக்திக்கையாவதென்‌ ? என்னில்‌: யத்‌ த்வத்‌ ப்ரியம்‌ 
ததி,ஹ புண்யமபுண்‌ யமந்யத்‌ '' [எது உனக்குப்‌ பீரியமோ 
அதுவே இங்கு புண்யமெனப்படுகிறது. மற்றவை பாடங்‌ 
கள்‌.] என்று ஆழ்வான்‌ அருளியபடியே. அந்தந்த தேவதை 
களை சரீரமாகக்கொண்ட எம்பெருமானுடைய ப்ரீதிகோடங்‌ 
களே புண்யபாடங்களாகின்‌ றன. இனி, சிற்சில பாபகர்மங்‌ 
களுக்கு ப்ரராயமசித்தமாக மாரஸ்த்ரங்களில்‌ விதிக்கப்பட்டி 
ருக்கும்‌ சிற்சில கர்மவிபேோஷங்களை அநுஷ்டித்தால்‌ அப்‌ 
பாபங்கள்‌ போய்விடும்‌ என்று எம்பெருமான்‌ ஸங்கஃ்பித்‌ 
கால்‌ அவனை விலக்குவாரார்‌? இப்படிக்‌ கொள்ளாவிடில்‌, 
ப்ராயங்‌சித்தங்களை விதிக்கும்‌ சாஸ்திரங்களும்‌, - மோக்ஷ 
யிஷ்யாமி”” என்றாப்போலே ஸர்வபாடவிமோசனத்தகைச்‌ 
சொல்லும்‌ ப்ரமாணங்களும்‌ அர்த்தபமின்‌ றியிலேயொ ழியும்‌. 
“ நாபுக்தம்‌ க்ஷ்யதே கர்ம”' என்றது ப்ராயங்‌்சித்தாதி,கள்‌ 
செய்யப்படாத பாபவிஜயமானதாகையால்‌. இங்கு 
“ பாபேப்‌யோ ரசக்ஷந்தாம்‌'  “ராத்ரிஸ்கதவலும்பது யத்‌ 
கஞ்ச தஸிதம்‌ மயி'' என்று பாபவிமோசனத்தைச்‌ சொல்லக்‌ 
குமையில்லை. 


( பாபேப்‌,யோ ரச்ஷந்தாம்‌ ) “பாடங்களிலிருந்து காப்‌ 
பாற்றட்டும்‌' என்‌ றதால்‌, இங்கு. இனிவரவிநக்கும்‌ பாடமே 
சொல்லப்படுகிறதென்‌ று கெளிவாகிறது. பாபம்‌ பலவகைப்‌ 
பட்டது. “போயபிழையும்‌ புகுதருவான்‌ நின்‌ றனவும்‌ தீயினில்‌ 
தூசாகும்‌'' என்றபடியே அதைப்‌ பூர்வாகம்‌ (முன்‌ செய்‌ 
யப்பட்ட பாபம்‌) உத்தராக,ம்‌ (பின்‌ வரவிருக்கும்‌ பாபம்‌) 
என்று இரு பிரிவாகப்பிரிக்கலாம்‌. பூர்வாகமும்‌ ஸஞ்சிதம்‌ 
என்றும்‌ ப்ராரப்‌,க,ம்‌ என்றும்‌ இருவகைப்பட்ட து. இன்‌ 
னும்‌ பலன்சொடுக்க ஆரம்பிக்காது பாபமலைகள்‌ ஸஞ்சித 
மெனப்படுகின்‌ றலா. பகவத்ஸங்கல்பத்தாலே பலன்கொடுக்க 
ஆரம்பித்தவையான , சில பாபக்குன்றுகள்‌ (074८9510 
( பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கியது ) எனப்படுகின்‌ றன. 
இவற்றில்‌ பூர்வாகமான து பெரும்பா லும்‌ இவன்‌ ஸம்ஸாரியா 
யீருக்கையில்‌ ஏற்பட்டது; ' அன்று நான்‌ பிறந்திலேன்‌ ' 
என்றெபடியே இவன்‌ அஸத்ஸமமாகக்கிடந்தபோது 
உண்டானது. உத்தராக[மோவெனில்‌. இவனுக்கு ஞானம்‌ 
பிறந்கபின்பு உண்டாவதாகையால்‌ மிகவும்‌ க்ரூரமானது; 
முமுக்ஷுவாகிற இவன்‌ ஸ்வரூபத்திற்குச்‌ சிறிதும்‌ பொருந்‌ 
தாதது. அகையால்‌, 'எனக்கு இனி வரக்கூடிய பாபங்களி. 
லிருந்து என்னைக்‌ .காப்பாற்றட்டும்‌' என்று முதன்‌ முதலில்‌ 
2 ऊ 5 75410 வராமலிருக்கவேண்டுமென்று வேண்டுகிறான்‌. 
१०.25 (7 ०/7 = (८/7 7 0०७ ००० 957 ०।णना ' || ( (० क्क வுக்கு), 
உத்தராகழம்‌ ஒட்டா து; (47 ०475418 நிக்கும்‌] என்று வியாஸ 
ரும்‌ உத்தராகத்தின்‌ ஓட்டாமையை'ய முதலில்‌ சொன்னா 
ரன்றோ. ஞனனம்‌ பிறந்த இவனுக்குப்‌ பாபம்‌ பிறக்குமோ 
எனில்‌: ५५ விண்ணுளார்‌ பெருமாற்கடிமை செய்வாரையும்‌ 
செறும்‌ ஐம்புலன்‌ இவை ' என்கிறபடியே மிகவும்‌ கண்ணிய 
தான ஸம்ஸாரக்தில்‌ இருக்கும்‌ வரையில்‌ பாபம்‌ செய்யாம 
லிருக்கவே முடியாகன்றோ. ^ ஆக. “பாபேப்யோ ரக்ஷம்‌ 
தாம்‌” என்னுமத்தால்‌ “யத புஷ்கரபலாமட ஆபோ ந 
७०००१ ०५565, ஏவம்விதி, பாபம்‌ கர்ம ए ங்லிஷயதே ” [எப்‌ 
படித்‌ தரமரையிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டாதேோ, அப்படியே 
இப்பரவஸ்தவை அறிந்தவனிடம்‌ பாப்கர்மம்‌ ஒட்டாது] 
என்று சருதியில்‌ சொல்லப்பட்ட உத்தராகாங்லேலம்‌ 
பிரார்த்திக்கப்பட்டதாயிற்று. இனி, "யத்‌, ராத்ர்யா ” 
என்று தொடங்க “ராத்ரிஸ்ததவலும்பது” என்பது வரை 
யில்‌  பூர்வாக,த்தில்‌ பெரும்பாகமான ஸஞ்சிதகர்ம 
விீநரம த்தை வேண்டுகிறது. 

“தத்‌, ५1897 இஷீகதூலமக்‌,கெள ப்ரோதம்‌ ப்ரதூ;யேத | 
ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூஃயந்தே |” 

[ அக்னியில்‌ இடப்பட்ட இஷீகட்பஞ்சு எப்படிக்‌ கொளுத்‌ 
தப்படுகிறதோ. அப்படியே இவனுட்டய எல்லாப்‌ பாடங்‌ 
களும்‌ கொளுத்தப்படுகின் றன ] என்று சளந்தோக்யத்தில்‌ 
போயபிழைகளிீன்‌ நாசம்‌ சொல்லப்பட்டதன்றோ. (யத்‌ 
ராத்ர்யா பாபமகார்ஷம்‌) ராத்ரியில்‌ என்னால்‌ என்ன டாபம்‌ 
செய்யப்பட்டதோ. இங்கு மந்த்ரபடண்‌ காலத்திற்கு முன்‌ 
சென்ற காலமான ராத்ரியைச்‌ சொன்னது அநாதிகாலத்‌ 
திற்கும்‌ உபலக்ஷணம்‌. 


(ராத்ர்யா) “ அபவர்க்கே, த்ருதீயா ” என்னும்‌ விதிப்படி. 
ஏழாம்‌ வேற்றுமை அர்த்தத்தில்‌ மூன்றாம்‌ வேற்றுமை வந்‌ 
அள்ளது. 'ராதீரியில்‌'என்‌ றபடி. (மஈஸா) “நின்‌ றவா நில்லா 
நெஞ்சு''என்‌ றும்‌,“சஞ்சலம்‌ ஹி மந.” [மனம்‌ சஞ்சலமான த. | 
என்‌ றும்‌ சொல்லியபடியே ஸத்விஷயத் தில்‌ நிலைநில்லாததாய்‌, 
மற்ற விஷயங்களிமலமயே மண்டிடெக்குமதான மனத்தாலே, 
^“ மனத்திலோர்‌ தூய்மையில்லை '' எனப்பட்ட மனத்தாலே. 
(வாசா) “வாயில்‌ ஒர்‌ இன்சொலில்லை சனத்தினால்‌ செற்றம்‌ 
நோக்கித்‌ தீவிளி விளிவன்‌ வாளா” என்‌ று தொண்டரடிப்‌ 
பொடிகளருளியபடியே பரநிந்தா திகளிலேனன்‌ றிக்‌டெக்கும்‌ 
வாயால்‌. ' வாயவனையல்லது வாழ்த்தாது ” என்றும்‌, 
“ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி '” என்றும்‌. “८ ஸங்கீர்த்த 
९५1९ 530 590 வேதம்‌ வாபி ஸமீரயேத்‌ '' [ஜகந்காதனை 
ஸங்கீர்த்தனம்‌ செய்யக்கடவன்‌; வேதத்தையாவது ஓதக்‌ 
கடவன்‌. ] என்றும்‌ 
” ஸத்யம்‌ ப்ரூயாத்‌ ப்ரியம்‌ ப்ரூயாத்‌ ௩ ப்ரூயாத்‌ 

ஸத்யமப்ரியம்‌ | 
ப்ரியஞச நாந்ருதம்‌ பரூயாத்‌ ஏஷ தர்ம: ஸநாதந: || 
[ உண்மை உரைக்கவேண்டும்‌; இன்சொல்லே பேசவேண்டும்‌; 
உண்மையாயினும்‌ இனிமையம்மழதைப்‌ பேசலாகா து. இனி 
தாயினும்‌ பொய்‌ பேசக்கூடாது; இதுவே பழமையான 
தர்மம்‌.] என்றும்‌ இருக்கவேண்டிய வாய்‌ இவ்வுலகில்‌ 
பெரும்பாலும்‌. அஸத்விஷயங்களைக்‌ தீர்த்தனம்‌ செய்வதாக 
வும்‌. பொய்‌ வார்த்னதாளும்‌ கடுஞ்சொற்களும்‌ நிறைந்த 
தாகவுமே காணப்படுகிற கன்றோ. “ மநஸா வாசா? என்று 
மநோவாக்காயங்களாகிற த்ரிகரணங்களில்‌ ்‌ முதலீரண்டா 
லும்‌ செய்யப்பட்ட பாபங்கள்‌ படிக்கப்பட்டன. “ஹஸ்தாப்‌, 
யாம்‌” என்று தொடங்கிக்காயத்தினால்‌ (சரிரத்தினால்‌) 
செய்யப்படும்‌ பாடங்கள்‌ சொல்லப்படுகன்‌ றன. (ஹஸ்தாப்‌ 
யாம்‌) “யெள தத்பூஜாகரெள கரெள” [எவை ஹரிபூஜை 
செய்கன்‌ றனவேர. அவையே கைகள்‌.] என்றும்‌, “கை 
உலகம்‌ தாயவனையல்லது தாம்‌ தொழா `° என்றும்‌, “கைகளா 
லாரத்தொழுது தொழுதுன்னை '' என்றும்‌.  கடைத்தலை 
சீய்க்கப்பெற்றுல கடுவினை களையலாமே '' என்றும்‌ இருக்கக்‌ 
கண்ட கைகளைக்கொண்டு கண்டகண்டவிடங்களிலே கை 
கூப்புவதும்‌ அஸக்காரியங்கனில்‌ ஈடுபடுவதுமாயன்றோ 
இச்சேதனனிருப்பது. (பத்‌்ப்யாம்‌) அவனுடைய ஆலயங்‌ 
களுக்குச்‌ செல்ல யோக்யமான கால்களைக்கொண்டு இவன்‌ 
புகத்தகாத இடங்களிலன்றோே புகுவது. டோய்‌ வரும்‌ 
காலங்களில்‌ புழு முதலானவற்றை ஹிம்ஸீிப்பதாலேற்படும்‌ 
பாபங்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. (உதரே) 
வயிற்றால்‌. 

* யஜ்ஞமபிஷ்டாயபிநஸ்‌ ஸந்தோ முச்பந்தே ஸர்வகில்பிலஷை: ” 
[பஜ்ஞத்தில்‌ மிகுந்தகை உண்ணும்‌ பெரியோர்கள்‌ எல்லாப்‌ 
பாடங்களினின்றும்‌ விடுபடுகிறார்கள்‌.] 'என்றும்‌, 

“ யஜ்ஞமிஷ்டாம்ருதபு,ஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்‌ "' 
[யஜ்ஞத்தில்‌ மிகுந்த அமுதைப்‌ புசிப்பவர்கள்‌ பழமையான 
தான ப்ரஹ்மத்கை அடைகிறார்கள்‌ ] என்றும்‌. “ உடுத்துக்‌ 
கலத்ததுண்டு ' என்றும்‌, “த்வதிய புக்தோஜ்ஜி,தமோஷ 
பே௱ஜிநா'' [நீ உண்டு கைவிட்டதைப்‌ புசிக்கும்‌ விஷ்வக்‌ 
ஸேரரால்‌] என்றும்‌ சொல்லப்பட்ட லக்ஷணங்ஃகளற்ற 
 
வயிறால்‌. சாஸ்திரங்களில்‌ தடுக்கப்பட்ட உள்ளிப்பூண்டு 
எச்சில்‌ முதலியவற்றை உண்ணும்‌ வயிறால்‌ என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. (चणा) ஆண்குறியீனால்‌. : ஸிங்நே? 
என்‌ பது ச,ந்தஸமாகையால்‌ : மிஸ்நா ” என்‌ று டெக்கிறது. 
வைஷ்ணவஸரந்ததி வ்ருத்‌,திஹேதுவானது என்றிருக்கை 
யன்‌ றிக்கே, தனக்கு ஆ௩ந்தஹேது என்றிருக்கை இதனால்‌ 
ஏற்‌-டும்‌ பாபம்‌. அன்றிக்கே, * புணரத்தகாத ஸ்த்ரீயைப்‌ 
புணருவதில்‌ ஆசையை உடையதாயும்‌, தன்‌ பத்னியிடத்தில்‌ 
ருதுகாலத்தில்‌ புணர்வது (0.5 ०१८, ०००५7 ததுமா இய பிஙெநத்‌ 
தினால்‌” என்‌ றும்‌ பொருள்‌ கொள்வர்‌. இங்கு சல இந்திரியங்‌ 
, களைப்‌ படித்கது கண்‌, காது முதலான ஸகலேர்‌ திறியங்களுக்‌ 
கும்‌ உபலக்ஷணம்‌. 

யதுவஸ்த்ருதம்‌ பாபம்‌ (53440110 வா யத்‌ க்ருதம்‌ ப,வேத்‌| 
ப;ஹுப்‌,யாம்‌ ம௩ஸா வாசா ஸ்ரோத்ரத்வக்‌, 

க்‌,ராணசக்க்ஷாஷா ||” 
[உபஸ்தத்தினாலும்‌, கால்களாலும்‌, கைகளாலும்‌, காது, 
தோல்‌, மூக்கு, கண்‌ ஆயெவற்றாலும்‌ எந்தப்‌ பாடங்கள்‌ 
செய்யப்பட்டனவோ.ஃஃஃ] என்று பேரதரயனராலும்‌, 
்‌ ஸர்‌ வாப,க்ஷ்யப கூஷணமபேயபாநமயாஜ்யயா ஜகமஸத்ப்ரதிக்‌,ர 
ஹணம்‌ பரதஏராபிமர்மா௩ம்‌ பாத்‌,ரவ்யாபஹரணம்‌ ப்ராணி 
ஹிம்ஸ௩ம்‌ சேதி ஸாரீராணி। வாக்பாருஷ்யமம்‌ அந்ருதம்‌ 
விவாத: ஸ்ருதிவிக்ரயங்சேதி வாசிகாபி| பரோபதாப௩ம்‌ 
பராபி,த்‌,ரேோ ஹ:க்ரோத,லோப,மோஹாஹங்காராங்சேதி 
மா௩ஸாகஙி ”” 1 


[புசிக்கத்தகாத ஸகலவஸ்துக்களையும்‌ புசித்தல்‌. குடிக்‌ 
கத்தகாதவற்றையெல்லாம்‌ குடித்தல்‌. 'யாகம்‌ செய்விக்கத்‌ 
தகாதவலுக்கு யாகம்‌ செய்வித்தல்‌, அஸத்துக்களிடமிருந்து 
தானம்‌ வாங்குதல்‌, பரஸ்த்ரிசளைப்‌ புணர்தல்‌. பிறர்‌ 
பொருளை அபஹரித்தல்‌, ஜீவராசிகளை ஹிம்ஸித்தல்‌ ஆகிய 
இவை சரீரத்தினால்‌ ஏற்படும்‌ பாபங்கள்‌; கொடுஞ்சொற்களைப்‌ 
பேசுதல்‌, பொய்யுரைத்தல்‌. விவாதம்‌ செய்தல்‌. வேதத்தை 
விலைக்கு விற்பது ஆகிய இவை வாக்கினால்‌ ஏற்படும்‌ பாடங்‌ 
கள்‌; பிறருக்குத்‌ தங்கு நினைத்தல்‌. பிறராக்கு 55007 902 
செய்தல்‌, கோபம்‌, பேராசை, மோஹம்‌, அஹங்காரம்‌ ஆகிய 
இவைகள்‌ மனஸ்ஸினால்‌ ஏற்படும்‌ பாடங்கள்‌,] என்று 
ஹாரீதராலும்‌, 


“ கோவாய்‌ ஐவர்‌ என்‌ மெய்‌ குடியேறிக்‌ 

கூறை சோறிவை தாவென்று குமைத்துப்‌ 
போகார்‌ நான்‌ அவரைப்‌ பொறுக்ககிலேன்‌ 

புனிதா! புட்கொடியாய்‌! நெடுமாலே! 
தீவாய்‌ நாகணையில்‌ துயில்வானே! 

திருமாலே! இனிச்‌ செய்வதொன்றறியேன்‌ "° என்றும்‌. 
<" பொறுத்துக்‌ கொண்டிருந்தால்‌ பொறுக்கொண்ணாப்‌ 

போகமே நுகர்வான்புகுந்து ஐவர்‌ 
அறுத்துத்‌ தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்‌ '' என்றும்‌. 
* ஆவி திகைக்க ஐவர்‌ குமைக்கும்‌ சிற்றின்பம்‌ 
பாவியேனைப்‌ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ? ”” என்‌ றும்‌ 
அழ்வரர்களும்‌ இவ்விர்‌ இரியங்களால்‌ ஏற்படும்‌ ப்ரபல்பாடங்‌ 
களையும்‌ பொறுக்கவொண்ணாத்‌ தன்பத்தையும்‌ டே சனஞார்கள்‌. 


( யத்‌ ராத்ர்யா பாபமகார்ஷம்‌........ ராத்ரிஸ்தகவலும்பது ) 
ராத்ரியில்‌ நான்‌ செய்த பாடங்களை ராத்திரிக்கு நிர்வாஹக 
னன பகவான்‌ பொக்கடிக்கட்டும்‌. = "* கங்குலைப்‌ பகலைச்‌ 
சென்று நாடிக்‌ குண்ணமங்கையுள்‌ கண்டுகொண்டேனே ' 
என்று திருமங்கையாழ்வாரும்‌ எம்பெரும னை இரவென்‌ மும்‌ 
பகவென்றும்‌ நிர்தேசித்தாரன்றோ. “ நாயந்தே. த்ராயந்தே 
அநேந (வஸ்த்வந்தராணி) இத ராத்ரி: '' [இவனால்‌ (மற்ற 
வஸ்துக்கள்‌) புருஷார்த்தங்களை அளிக்கப்படுவதா லும்‌ 
காப்பற்றப்படுவதா லும்‌, இவன்‌ ராத்ரியெனப்படுகிறான்‌. ] 
என்பது வ்யுத்பத்தி, “ரா-தளநே ? “த்ரைங்‌-ரக்ஷ்ணே '' 
என்னும்‌ இருதாதுக்களிலீருக்து உண்டான இந்த ராத்ரி 
சப்தம்‌ ஸகலபுராஷார்த்தங்களையும்‌, அளிப்பபவனும்‌, ஸர்வ 
வஸ்‌ துக்களுக்கும்‌ நிருபாதிகமான ரக்ஷ்கனுமான இவனையே 
குறிக்கின்றது “தர்மார்த்த, காம மோக்ஷா$,யா: புருஷார்த்த; 
உத;ாஹ்ருதா:। இதம்‌ சதுஷ்டயம்‌ யஸ்மாத்‌"' (5471000 क क9 
காமமோக்ஷங்சளா கிய இந்நான்‌ கும்‌ புருஷனால்‌ வீரும்பத்தக்க 
புருஷொர்க்கங்களெனப்படுகின்‌ றன: இந்நான்கும்‌ எவனிட 
மிருந்து கடைக்கன்‌ றனவோ.......- ] ^" ஸகலபலப்ரதேள 
ஹி விஷ்ணு: ” [விஷ்ணுவானவன்‌ எல்லாப்‌ பலன்‌ களையும்‌ 
அளிப்பவன்‌. ] 


“நாடும்‌ ஈ௩கரமும்‌ நன்குடன்‌ காண நலனிடையூர்‌தி பண்ணி 
வீடும்‌ 00170585 தன்‌ மூவுலகுக்கும்‌ தரும்‌ ஒரு ஈரயகமே ” 

“ய ஆத்மதஎ பலதா: ” [எவன்‌ (தன்னடியார்க்கு) 
தன்னையே அளித்துத்‌ தன்னை அனுபவிக்கத்தகுந்த பலத்தை 
யும்‌ கொடுக்கறானோ] என்‌ று இவனுடைய ஸகல டல 
ப்ரதுற்வமும்‌, `" காக்கும்‌ இயல்வினன்‌ கண்ணமபருமான்‌ ° 
“நஹி பாலக ஸாமர்த்வம்‌ ர௬ுதே ஸாவேங்வரம்‌ ஹரிம்‌, 
ஸ்த,தெள ஸ்திதம்‌” [ரக்ஷணத்தில்‌ நிலை நின்‌ ற ஸர்வே 
வரனனை ஹரியைத்‌ தவீர வேறொருவனிடம்‌ ரக்ஷணஸாமர்த்த 
யம்‌ கிடையாது] என்று இவனுடைய ஸர்வரக்ஷகத்வ மும்‌ 
ஒீர்த்திக்கப்பட்டனவன்>றோ. ஆக, இவ்வளவால்‌ உத்தராக,ம்‌ 
ஓட்டாமலிருக்கவேண்டுமென்‌ றும்‌, பூர்வாக,த்தில்‌ பெரும்‌ 
பாகமான ஸஞ்சிதகர்மம்‌ போக்கடிக்கப்படவேண்டும்‌ 
என்றும்‌ பிரார்த்திக்கப்பட்ட தாயிற்று. 


இனி, "யத்‌ எஞ்ச துளிதம்‌ மயி” என்று (407 0 (13545005 
தையும்‌ போக்கடிக்கவேண்டும்‌ என்று பிரார்த்திக்கப்படு 
கிறது. இவ்விடத்தில்‌ சில சாஸ்த்ரர்ர்த்தங்களை அறிய 
வேண்டும்‌. பகவானை அண்டியிருப்பவர்கள்‌ பக்கர்‌ என்றும்‌ 
ப்ரபன்னர்‌ என்‌ றும்‌ இருவகைப்படுவர்‌. பக்தர்கள்‌ பகவானும்‌ 
உபாயம்‌. அதற்கு ஸாதனமாகத்‌ தாங்கள்‌ பற்றியிருக்கும்‌ 
பக்தியும்‌ ( அவனைப்‌ டெற ) உபாயம்‌ என்றிருப்பார்கள்‌. 
தங்களுடைய முயற்சியால்‌ பகவானை ஸாதிக்க நினைத்திருப்‌ 
பது இவர்களுக்குள்ள குறையாகும்‌. இந்த தோஷம்‌ இவர்‌ 
களிடம்‌ இருப்பதாலேயே பகவான்‌ இவர்களுக்கு ஒரு 
தண்டனையை விதித்துள்ளான்‌. அதாவது: -- இவர்கள்‌ 
விஷயத்தில்‌ ஸர்வேங்வரன்‌ உத்தராக,த்தையும்‌. பூர்வாகடஞ்‌ 
தில்‌ ஸஞ்சிதகர்மங்களையும்‌ மட்டுமே விலக்ருகிறான்‌. பலன்‌ 
கொடுக்க ஆரம்பித்த ப்ராரப்தகர்மத்தை இவர்கள்‌ எத்தனை 
ஜன்மமெடுத்தாகிலும்‌ அனுபவித்த இரவேண்டும்‌. 
தன்னையே உபாயமாக எண்ணி, மார்பிலே கைவைத்து 
உறங்கும்படியான ப்ரடந்நர்களுக்கோவெனில்‌. அவர்களு 
டைய பிரார்த்தனைக்குத்‌ தக்கபடி ப்ராரப்‌,குகர்மக்தில்‌ 
அநுபவித்ததுபோக யிகுந்தது முழுவதையுமாவது. அல்லது. 
அதில்‌ பெரும்பாகத்தையாவது கழித்துவிடுகிறான்‌. 
ப்ரபந்நர்களிலும்‌ ஒஆர்த்தரென்றும்‌. த்ருப்தரென் றும்‌, 
இருவகையுண்டு. இவ்வுலகத்தின்‌ கதாழ்மையையும்‌, 
எம்பெருமானுடைய மேன்மையையும்‌ அநுஸந்தித்து. 
“ கூவிக்கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ '' என்று 


இக்கணத்திலேயே மோக்ஷம்‌ வேண்டும்‌ என்று தவிப்ப 
வர்கள்‌ அஆர்த்தப்ரபன்னர்களாவர்‌. இப்படிப்பட்ட 
துவரையை உடைய இவர்களுக்கு எம்பெருமான்‌ ப்ராரப்‌,கம்‌ 
முழுவதையும்‌ கழித்து. உடனே தன்‌ பொன்னடிச்‌. 
சேர்த்துக்கொள்ளுகிறான்‌. த்ராப்தப்ரபந்நர்களோவெனில்‌, 
இந்த ஜன்மக்கடைசியில்‌ மோக்ஷம்‌ கொடுத்தால்‌ போது 
மானது என்று ஆறியிருப்பவர்கள்‌. இவர்களுக்கு ஏதச்‌ 
சரீராரப்‌,க,த்தைத்‌(இந்க ஜன்மத்தில்‌ அனுபவிக்கவேண்டிய 
ப்ராரப்தகர்மத்தைத்‌) தவிர மற்ற ப்ராரப்த கர்மங்களைப்‌ 
போக்குகிறான்‌. ஆக, இங்கு “ யத்‌ 'கிஞ்ச துரிதம்‌ மயி” 
என்னுமத்தால்‌,ஆர்த்தப்ரபன்னர்கள்‌ விஷயத்தில்‌ ப்ராரப்‌,௫, 
கர்மம்‌ முழுவதும்‌ சொல்லப்படுகிறது, த்ருப்தப்ரபன்னர்‌ 
கள்‌ விஜயத்தில்‌ எதச்சரீராரப்‌,க,த்தைத்‌ தவிர மற்ற 
பராகத்தைச்‌ சொல்லுறது. இதமஹும்‌ மாம்‌....ஜுஹோமி 
ஸ்வாஹா” என்று கடைசியில்‌ படிப்பதிலீருந்து இம்‌ 
மந்திரம்‌ ப்ரபத்தியை அநுஷ்டிப்பவனால்‌ படிக்கப்பட 
வேண்டியது என்று தோற்றுகிறதன்மே. 


“ தமேவம்‌ வித்‌,வாஈம்ருத இஹ பவதி "' 

[அவனை இம்மாதிரி அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே 
மோ க்ஷமடை றோன்‌. ] என்று புருஷஸ௰க்தத்தில்‌ பக்தி 
நிஜ்டனுக்கும்‌ இந்த ஜன்மத்தில்யே மோக்ஷமுண்டு 
என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்ற ஸந்தகேஹம்‌ இங்கு 
எழக்கூடும்‌. இவ்விடத்தில்‌ ஒரு ரஹஸ்யார்த்தும்‌ அறியக்‌ 
கிடக்கிறது. அதாவது: 

“ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி தத்த்வத: | 
த்யக்த்வர தே,ஹம்‌ पृष्ठां ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜஈந॥' 
[என்‌ னுடைய திவ்யமான ஜன்மத்தையும்‌. சேஷ்டிதங்களை 
யும்‌ எவனொருவன்‌ இம்மாதிரி உண்மையாக அறிகிறோனே. 
அவன்‌ தன்‌ தகேஹத்கை விட்டவுடன்‌ மறு பிறப்பை 
அடையமாட்டான்‌. என்னை அடைகிறான்‌ .] என்று தை 
யில்‌ சொல்லியபடியே பக்திநிஷஸ்டனும்‌. அவதாரரஹஸ்ய 
ஜீ்ஞானத்கை உடையவனாயிருந்தால்‌ அவனுக்கு மறு 
ஜன்மம்‌ கிடையாது. அவன்‌ விஷயத்தில்‌, பகவான்‌, த்ராப்த 
ப்ரபந்கவிஷயத்தில்‌ போலவே, ப்ராரப்‌,த,த்தின்‌ பெரும்‌ 
பகுதியையும்‌ போக்கடி த்‌ தவிடுகிறான்‌. இப்புருஷஸூக்தத்தி 
ஓம்‌. “ ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ कणा छण ०७०९९ அபி, '' 
[அதற்குப்பின்‌ எல்லாப்‌ பக்கத்திலும்‌ ஜீவன்‌ ஜடம்‌ 
இவர்களைக்‌ குறித்து ( அவதாரம்‌ செய்வதன்மூலம்‌ ) 
வியாபித்தார்‌.] என்று முன்னாலும்‌.  “ அஜாயமாநோ 

ஹுதா விஜாயதே! தஸ்ய தீ,ரா: பரிஜாநந்தி யோநிம்‌ `" 
[பிறப்பற்றவனாயிருந்தும்‌ பலபடியாகப்‌ பிறக்கறோன்‌ (பரம 
புருஷன்‌). அவனுடைய அவதாரரஹஸ்யத்தை தீரர்களே 
ஈன்கு அறிகிறார்கள்‌. ] என்று பின்பும்‌ அவதார ரஹஸ்ய 
ஓஞாமம்‌ அறிவிக்கப்பட்டது. “வேதாஹமேதம்‌'' என்னும்‌ 

இந்த மந்திரத்தை உடபப்‌ரும்ஹணம்‌ செய்த ஸ்ரீராமாயணமும்‌ 
“்‌ அஹம்‌ வேத்‌,மி மஹாத்மா௩ம்‌ ராமம்‌ '' என்று “ஏதம்‌ 
என்னும்‌ பதத்தை ராமம்‌ ' என்று விவரிப்பதன்‌ மூலம்‌ 
எகச்ச,ப்‌,க4ம்‌ அவ.சாரவிஷயமானகென்று காட்டிற்று. 
ஆகவே. இங்கு "` அம்ருத இஹ பவதி '' [இந்த ஜன்மத்‌ 
திலேயே மோக்ஷமடைகிறான்‌ ] என்று படித்தது அவதார 
ரஹஸ்யஜ்ஞாநபூர்வகமாக பக்தியோகத்தை அனுஷ்டிப்பவர்‌ 
வீஷயமென்‌ றகதாயிற்று. இந்த பக்திநிஷ்டர்‌ விஷயத்திலும்‌ 
இங்கு “யத்‌ கிஞ்ச துரிதம்‌ மயி” என்னும்‌ வாக்கியம்‌ 
ப்ராரப்‌,த,க தில்‌ ஒரு பாகத்தைக்‌ குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌, 
இனி. மற்ற பக்திநிஷ்டர்‌ விஜயத்தில்‌ இவ்வாக்கியத்திற்கு 
என்ன பொருளெனில்‌: அவர்கள்‌ விஷயத்தில்‌ பாபேப்‌யோ 
ரக்ஷந்தாம்‌' என்றது உத்தராக,த்கையும்‌. “யல்‌, ராத்ர்யா 
பாபம்கார்ஷம்‌ '' என்றது 0/7 57५८9०४ மட்டும்‌ செய்த 
பாபத்தையும்‌, “யத்‌ கிஞ்ச தளிதம்‌ மயி” என்பது ஸஞ்சித 
கர்மத்தில்‌ மற்ற பாகங்களையும்‌ சொல்லுவதாகக்‌ கொள்ள 
வேண்டும்‌. அவர்களுக்கு ப்ராரப்‌,க.கர்மம்‌ அநுப,வீத்தே 
திரவேண்டியகொன்‌்றன்றோ. ஆக, இவ்வளவால்‌ - ஸர்வ 
பாபேப்‌,யோ மோ க்ஷயிஷ்யாமி "(| எல்லாப்‌ பாடங்களினின்‌ றும்‌ 
வீடுவிக்கிறேன்‌.] என்று கீதையில்‌ கண்ணனால்‌ அருளிச்‌ 
செய்யப்பட்ட  பாபவிமோசனம்‌ பிரார்த்திக்கப்பட்ட 
தாயிற்று. இங்கு இஷ்டப்ராப்‌ கியா கிற ப்ரஹ்மா நுபவமும்‌, 
கைங்கர்யமும்‌ பிரார்த்திக்கப்படாதொழிவானென்‌? எனில்‌: 


“யூதா ர க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ூதாளநாந்‌ மணே: | 
559 ஹேயகுணத்வம்ஸாதவபேோதாட,யோ குணா: ॥ 
ப்ரகாங்யந்தே ந ஐந்யக்தே நித்யா ஏவரத்மநோ ஹி தே॥”' 

[மணியிலுள்ள அழுக்கைப்‌ போக்கிஞல்‌ எப்படி ஜளியான,து 

தானாகவே பிரகா சிக்கன்‌ 08.50, அப்படியே (பாபபல்மான) 

ஹேயேகுணங்கள்‌ நீங்கினால்‌ ஜ்ஞானாதிகுணங்கள்‌ தன்னடையே 
டிரகாசிக்கின்‌ றன. உண்டாக்கப்படுவதில்லை; ஆத்மாவுக்கு 
அவை நித்யமன்றோ.] என்று விஷ்ணுதர்மத்தில்‌ சொல்லிய 
படியே பாபம்‌ நீங்கினால்‌ ப்‌,ரஹ்மாநுப,வம்‌ முதலியவை 
தானாகவே ஏற்படுமாகையால்‌ அவை தனியாகப்‌ பிரார்த்திக்‌ 
கப்படவில்லை. சரமங்லோகத்திலும்‌ இப்படியேயன்றோ 
இருப்பத. 

அடுத்தபடியாக, “ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ 
ரணம்‌ வ்ரஜ [எல்லா தர்மங்களையும்‌ வாஸனையுடன்‌ வீட்டு 
என்னையே சரணமடை ] என்று பகவானால்‌ உபதேசிக்கப்‌ 
பட்ட ஆக்மஸமர்ப்பணம்‌ செய்யப்படுறெது, (இத,ம்‌ மாம்‌) 
* இமம்‌ மாம்‌” என்றபடி; இந்த என்னை; பகவத்‌ ००१८1555 
தாலே ஒரு வஸ்‌. துவென்‌ று எண்ணலா ம்படியிருக்கிற என்னை. 
நான்‌ எப்படிப்பட்ட ஸ்வரூபஸ்வபராவங்களுடன்‌ இருக்‌ 
கிறேனோ அப்படியிரும்தகொண்டே என்னை ஸமர்ப்பிக்‌ 
கிறேன்‌ என்‌ றும்‌ பொருள்கொள்ளலாம்‌. அதாவது; ஆக்மா 
வின்‌ ஸ்வரூப த்தைப்பற்றி விசாரிக்கையில்‌, தேஹமே ஆத்மா 
என்றும்‌, இந்த்ரியமே ஆத்மா என்றும்‌, மனஸ்ஸே ஆத்மா 
என்றும்‌. ப்ராணனேஒத்மா என்‌ றும்‌, புத்தியே ஆத்மா என்‌ 
அம்‌,பலர்‌ பலவிதமாகச்‌ சொல்லுவர்‌, வேதாந்திகளோவெனில்‌ 
இவைஎல்லாவற்றைக்கா ட்டி ஓம்மேலான 5 7 ८, छु 7 50 50.59 
லக்ஷணமாய்‌ ८५०३०, ज 9०5 ८07 व्ण தானதொரு வஸ்து ஆத்மா 
என்பர்‌; ஆத்மாவின்‌ ஸ்வப;வத்தைப்பற்றி விசாரம்‌ செய்யும்‌ 
போ.து,அணுவென்றும்‌. வீபு,வென்றும்‌. சரீரபரிமாணனென்‌ 
அம்‌.நித்யனென்‌ றும்‌. அநித்யனென்‌ றும்‌. ஜ்ஞாதாவென்றும்‌, 
ஜ்ஞானமாத்திரமே என்றும்‌. பலவிதமான அபிப்ராயங்க 
ளுண்டு. இவற்றைப்‌ பற்றி நான்‌ இப்போது ஆலோசிக்கப்‌ 
போவதில்லை. நான்‌ யா தொருபடியாயிருக்கறேனோ. அப்படி. 
யிருந்தகொண்டே இந்த ஆத்மாவை ஸமர்ப்பீக்கிறேன்‌ 
என்றபடி. *யோ5$ஹமஸ்மி ஸ कण யஜே”.[௩ான்‌ எவ்விதமா 
யீருக்கிறேனோ அப்படியிரும்தகொண்டே சரணமடை 
கிறேன்‌.] எனறு சுருதியிலும்‌, 


“வபுராதிஷு யோஃ$பி கோக5பி வா 
குணதோ$ஸாநி யதன ததரவித,: | 

தத,யம்‌ தவ பாதவத்லயோ: 
அஹமத்‌்,;யைவ மயா ஸமர்ப்பித: |] 

[சரீரம்‌ முதலியவைகளுள்‌ ஏகதேனுமொன்றாகவும்‌.ஸ்வபளவத்‌ 
தனால்‌ ஏதேனும்‌ ஒருபடிப்பட்ட வனாகவும்‌ இருக்கக்கடவேன்‌. 
( அவைகளை நான்‌ இப்போது ஆராயவேண்டிய தில்லை. ) 
ஆகையால்‌, இந்த நரன்‌ உன்னுடைய இரு திருவடித்‌ 
தாமரைகளிலும்‌ இரந்த க்ஷணத்திலேயே என்னால்‌ ஸமர்ப்‌ 
பிக்கப்பட்டேன்‌.] என்று ஆளவந்தாராலும்‌ ஆத்மஸமர்ப்ப 
ணம்‌ செய்யும்போது இப்படி அநுஸந்திக்கப்பட்டது, 
வேதத்தில்‌ “ஸ: ஸந்‌ அஹம்‌ '' என்றும்‌, அளவர்தாரால்‌ 
^ அயம்‌ அஹம்‌ "என்றும்‌ சொல்லட்பட்டாப்போலே இங்கும்‌ 
இதம்‌ மாம்‌' எனப்படுவகைக்‌ காண்க. (அஹம்‌) வெளிப்‌ 
பொருள்களைக்‌ (பராக்‌ த்தங்களைக்‌ காட்டி லும்‌ வேறுபட்ட 
வனாய்‌. உள்ளிருந்து ப்ரத்யக்ஷமாக ப்ரகாசிக்கற நான்‌. 
அன்‌ றிக்கே, 

“ஆ நுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜ௩ம்‌ | 
ரக்ிஷ்யதீதி விங்வாஸோ கேப்த்ருத்வவரணம்‌ ததா ॥ 
ஆத்மநிக்ேபே கார்ப்பண்யே ஷட்‌,வித,ா ७०१७ 555. ॥'' 

[(பகவத்பாகவதர்களுக்கு) அநுகூலராயிருப்பதாக ஸங்கல்‌ 
பித்துக்கொள்வது. ப்ரதிகூலங்களை விடுவது, (உடையவ 
னாகிய அவன்‌ உடைமையாகிற நம்மை)ரக்ஷிப்பான்‌ என்னும்‌ 
விங்வாஸத்தடனிீருப்பது, நீ எனக்கு ரக்ஷகனாகவேண்டும்‌' 
என்று அவனை வரிப்பது. தன்‌ ஆக்மாவை அவனீடம்‌ 
வைப்பது, தன்னிடம்‌ ஒரு கைம்முகலும்‌ இல்லாமையை 
அநுஸந்திப்பது என்று சரணாகதி ஆறுவசைப்பட்ட த. / 

என்‌ று அஹிர்பு,த்ந்யஸம்ஹிதையில்‌ செல்லப்பட்ட 902८147 

விகஸ்வபாவங்களையுடையவனான நான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 

“ நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌ ஆ௫லுமினி 
உன்னைவிட்டொன்றும்‌ 
ஆற்றகிற்கன்‌ றிலேன்‌ அரவினணையம்மானே '”' என்றும்‌. 

"" எனதாவியுள்‌ கலந்த பெருநல்லுதவிக்கைம்மாறு ” 
எனதாவி தந்தொழிந்தேன்‌ இனிமீள்‌வதென்பதுண்டே ” 
4 என்றும்‌, 
“ குளித்து மூன்‌ றனலையோம்பும்‌ குறிகொளந்தணமை தன்னை 
^ ஒளித்திட்டேன்‌ என்கணில்லை நின்கணும்‌ பத்தனல்லேன்‌ 
களிப்பதென்கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறுகின்றேன்‌ 
அளித்தெனக்கருள்‌ செய்கண்டாம்‌ அரங்கமாநகருளானே '' 
என்றும்‌, 
“ந தர்மகிஷ்டே $ஸ்மி ௩ சரத்மவேத, 
௩ ப.க்திமாம்ஸ்த்வச்‌ சரணாரவிந்தே, | 
அகிஞ்சநோ 5௩ந்யக,தி: மாரண்ய 
த்வத்பாத,மூலம்‌ மரணம்‌ ப்ரபத்‌,யே॥ 

[சரணமடையத்தகுந்த எம்பிரானே! ( அடியேன்‌ ) கர்ம 
யோகத்தில்‌ நிலைநின்‌ றவன்‌ அல்லேன்‌; ஆத்மஜ்ஞானமும்‌ 
உடையேனல்வேன்‌; உன்‌ திருவடிச்தாமரைகளில்‌ பக்தியை 
உடையவனல்லேன்‌; ஓரு உபாயமுமற்றவனும்‌. வேறு 
புகலறழ்றவனுமான அடியேன்‌ உன்‌ திருவடித்‌ தாமரைகளை 
சரணமடைக&மேன்‌.] என்று ஈம்‌ ஆழ்வார்களும்‌ ஆசாரியர்‌ 
களும்‌ சரணம்பற்றும்‌ ஸ்தலங்களில்‌ இந்த ஆறு ஸ்வ 
பாவங்களையும்‌ தங்களிடம்‌ உள்ளனவாக அதுஸந்தித்‌ 
தருளினார்களன்றே. ५ 


(அம்ருதயோரெள ) மோக்த்திற்குக்‌ காரணபூ,கனாகற 
பகவானிடத்தில்‌; மோகத்திற்கு நிரபேக்தோபாய பூகனானை 
பகவானிருக்கும்டேர. து என்னுடைய குறைவைக்கண்டு 
நரன்‌ கலங்கவேண்டியதில்லை என்‌ கிறான்‌. “அறிவொன்று 
மில்லாத ஆய்க்குலத்து'' என்று தங்கள்‌ குறவைச்‌ சொன்ன 
வுடன்‌, '*குறைவொன்றுமில்லாத கோவிந்தா '' என்று 
அவனுடைய நிறைவைச்சொன்னாப்போலே, “ இதமஹம்‌ 
மாம்‌” என்று தன்‌ தாழ்மையை அதுஸந்தித்தவுடன்‌ 
“அம்ருதயோகெள"” என்‌ று தொடங்கி அவன்‌ மேன்மையை 
அந்ஸந்திக்கிறான்‌ .(அம்ரு தயோநெள)மோக்ஷத்கைத்‌ கருபவ 
னிடம்‌; “ அம்ருதம்‌ ப்ஜஹ்ம'' என்றவிடத்தில்‌ எடுத்த 
* உதாம்ருதத்வஸ்யேமமாந: '' முதலரன ப்ரமாணங்களை 
இங்கும்‌ படிப்பது. , ( அம்ருதயோகெள ) பிறப்பிறப்பு 
முதலியன அற்றவர்களான நித்யமுக்தர்களுக்கும்‌ முதல்வ 
னன பகவானிடத்தில்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
१" வானவராதியென்கோ? ”' என்றார்‌ நம்மாழ்வாரும்‌. 


(ஸுூர்யே) ^" (ப்ராணிந:) ஸாுஷ்டு, (கர்மஸு) ஈரயதி 
இதி ஸூர்ய: ” [(ப்ராணிகளை) நன்றாகத்‌ (தங்கள்‌ தங்கள்‌ 
காரியங்களைச்‌ செய்யும்டடி ) தூண்டுகிறொனாகையால்‌ ஸூர்யன்‌ 
எனப்படுறொன்‌.] என்கிறபடியே ஸூர்யசப்தம்‌ இவ்‌ 
வீடத்தில்‌ பரமாத்மாவைக்குறிக்கிறது. “அந்த: ப்ரவிஷ்ட: 
ஸாஸ்தா ஜ௩ாகாம்‌ ஸர்வாத்மா'' [ஸர்வாந்தர்யாமியான 
பகவான்‌ எல்லாச்‌ சேதனரையும்‌ உள்‌ நுழைந்து நியமிக்க 
छन्न, என்றும்‌, “ஏஷ ஏவ ஸாது, கர்ம காரயதி| தம்‌ 
யமேப்யோ லோகேப்‌,யோ உந்நிநீஷதி | ஏஷ ஏவாஸாது, கர்ம 
காரயதி | தம்‌ யமேப்‌யோ லோகேப்‌,யோ அதேரா நிநீஷதி ॥ ”்‌ 
[ எவனொருவனை இப்பரமபுருஷன்‌ இவ்வுலகங்களிலிருந்‌ து 
மேலுலகத்திற்குக்‌ கொண்டு செல்ல வீரும்புஜறொனோ, அவனை 
இவனே ஈற்காரியங்களைச்‌ செய்விக்கறோன்‌. எவனொருவனை 
இப்பரமன்‌ கீழே தள்ள விரும்புறொனோ, அவனை இவனே 
கெட்ட காரியங்களைச்‌ செய்விக்கறான்‌.] என்று வேதத்தி 
லும்‌ பரமாத்மாவினுடைய இப்பெருமை படிக்கப்பட்ட து. 
அன்றிக்கே “ஸூ9திஹேதுத்வாத்‌ ஸூர்ய: '' என்கிற 
படியே ஸர்வஸ்ரஷ்டாவாகையால்‌ ஸூூர்யனாகறாோன்‌. அன்‌ 
றிக்கே, யஜ்ளும்‌, தானம்‌, தபஸ்‌ முதலான கர்மங்களால்‌ 
நன்றாக ஆராதிக்கப்படுபவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ள லாம்‌. 

"° அஹம்‌ ஹி ஸர்வயஜ்ஞாநாம்‌ பேக்தா ச.ப்ரபுரேவ ௪ '' 
[ஈானே எல்லா யஜ்ஞங்களுக்கும்‌ போக்தா; அவைகளுக்‌ 
குப்‌ பலத்தையளிப்பவனும்‌ நானே.] என்று தையிலும்‌, 

“ ஸர்வே யஜ்ஞாங்ச க்ருஷ்ண: ” என்று பாரதத்திலும்‌ 
இவ்வர்த்தம்‌ அச்சுதனிடத்தில்‌ அறிவிக்கப்பட்டது. இங்கு 
அம்ருதயோறியாகப்‌ படிக்கப்படும்‌ ஸூர்யன்‌ ஸம்ஸாரியான 
ஆதித்யனல்வன்‌; அச்யுதபளனுவே இங்கு ஸூர்யாப்தவாச்ய 
னாகிறான்‌. அன்றிக்கே ஸூர்யனுக்கு அந்தர்யாமியான 
பரமபுருஷனைக்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. 


(ஜியோ திஷி) சோதியுருவனான பரமாத்மாவீடத்தில்‌, 
^“ ஒமாபோஜ்யோ தி: "` என்றவிடத்திலும்‌. “ ஜ்யோதிம்ஷ்‌ 
யாப: ' என்றவிடத்திலும்‌ எடுக்கப்பட்ட, -௩ாராயண 
பரோ ஜ்யோதி: முதலான ப்ரமாணங்களை இங்கும்‌ படிப்‌ 
பது. ( அம்ருதயோரறெள...ஜ்யாதிஷி ஜுஹோமி ) இப்‌ 
படிப்பட்ட பெருமைகளையுடைய பரமபுருஷனாகிற அக்னி 
யில்‌ என்னையே நான்‌ ஹோமம்‌ செய்துகொள்ளுகிறேன்‌. 
இம்மந்திரத்தின்‌ பொருள்‌ -“அஹுமேவாஹம்‌ மாம்‌ ஜு௩ஹோமி 
ஸ்வாஹா'' என்று வேறோரு வேதமந்திரத்திலும்‌. 

“எனதாவியுள்‌ கலந்த பெருஈல்லுதவிக்‌ கைம்மாறு 

எனதாவி தந்தொழிந்தேன்‌ இனி மீள்வதென்பதுண்டே” 
என்று தமிழ்மறையிலுல்‌ தெரிவிக்கப்பட்ட து. இப்படித்‌ 
தன்னையே கான்‌ ஹோமம்‌ செய்து பெரும்பலன்களைப்‌ 
பெற்றார்களென்பது, 

“மஹாதேவ: ஸர்வமேதே, மஹாத்மா 
ஹுத்வாத்மாகம்‌ தேவதே,வோ பபூவ” 
[மஹாத்மாவான (८0 @ 7 © 5 @ का ஸர்வமேதயாகத்தில்‌ 
தன்னையே ஹோமம்‌ செய்து தேவதேவனானார்‌.] என்று 
பாரதத்திலும்‌ படிக்கப்பட்டது. நிற்க; பகவானுடையதே 
யான இவ்வாத்மஸ்‌ தவை இவன்‌ தன்னுடைய பொருளைப்‌ 
பாலே பகவானிடம்‌ ஸமர்ப்பிப்பதென்பது எப்படிப்‌ 
பொருந்தும்‌? எனில்‌: ராஜாவினுடைய பொருளை ரக்ஷித்து 
வைத்திருக்கும்‌ ஓருவன்‌ உரீய காலத்தில்‌ அதை ராஜாவிடம்‌ 

ஸமர்ப்பிப்பதுபோல்‌ இவ்விடத்திலும்‌ பொருந்தும்‌. மேலும்‌, 
அவனுடையதான வஸ்துவை அவனுக்குக்‌ கொடுப்பதில்‌ 
சிறிது அநுபபத்தியுள்ள து என்று அறிந்தே முற்கூறியவா று 
ஆத்மஸமர்ப்டணம்‌ செய்த ஆழ்வாரும்‌, ஆளவந்தாரும்‌; 

“எனதாவியாவியும்‌ ह பொழிலேழுமுண்ட எர்தாய்‌! 
எனதாவியார்‌? யானார்‌? தந்த நீ கொண்டாக்கனையே'' 
என்றும்‌, 
“மம காத, யத,ஸ்தி யோ5$ஸ்ம்யஹம்‌ 
ஸகலம்‌ தத்‌,தி, தவைவ மாத,வ। 
நிகி,லஸ்வமிதி (10119595 ,84: 
அதவ கிந்நு ஸமர்ப்பயாமி தே |” 
[ எம்பிரானே! யானும்‌. என்னுடையமையும்‌ ஆகிய எல்லாம்‌ 
உன்னுடையதேயன்றோ. எல்லாம்‌ உன்னுடையது என்று 
அறிந்த நான்‌ உனக்கு எகை ஸைமர்ப்பிப்பேன்‌?] என்றும்‌ 
அவ்வாத்ம ஸமர்ப்பணத்தினலலேற்பட்ட தோஷத்தையும்‌ 
க்ஷ்மிக்கும்படி வேண்டினார்கள்‌. ஸம்ஸாரத்திற்கு பயந்து 
ஆத்மஸமர்ப்டணம்‌ செய்கையும்‌. அதிலுள்ள அறுபபத்தி 
யைக்‌ கண்டு அதற்கு அநுர்யிக்கையும்‌ யாவதாத்மபாவி 
முமுக்ஷு*வுக்கு அவச்யாபேக்ஷிதம்‌ என்‌ று ஆசார்யச்ரேஷ்டர்‌ 
கள்‌ அறுதியிட்டிருக்கிறார்கள்‌. (ஸ்வாஹா ) (என்னை) 
ஸ்வம்மாக-(அதாவது உடைமையாக )வஹித்துக்கொள்‌ 
ளும்‌ என்‌ படி. பஹ்வ்ருசஸம்‌ ஹிதையில்‌ “காமழூர்ச்சிதா?' 
என்‌ றிருக்கவேண்டிய பதம்‌, “காமமூதா'' என்று இடைக்‌ 
குறையாயிருப்பது போலவும்‌, தமிழ்மறையிலும்‌ = '° ஒண்‌ 
சங்குகதைவாள்‌'' என்பதை 'ஜண்‌்சங்ககைவாள்‌'' என்று 
படித்தூப்போலவும்‌ இங்கும்‌ ஈடுவில்‌ வகாரத்திற்கு லோபம்‌ 
வந்துள்ளது. (ஸ்வாஹா ) ஸு 567 (75, வா-ரீர்பந்தித்து. 
ஆஹூ&ூதி:-—கூப்பிடுதல்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌, 
“ யதளஹுதிர்‌ தேவாந்‌ யஜமாநாயாஹ்வயதி ததளஹாதீ 
நாமாஹாதித்வம்‌ ” /[ஆஹுதியானது தேவர்களை யஜமான 
னுக்காக்க்‌  கூப்பிடுகறதாகையால்‌  ஆஹுதஇயெனப்படு 
கிறத.] என்று பஹ்வ்ருசப்ரரஹ்மணத்திலும்‌ சொல்லப்‌ 
பட்டது. இத்தால்‌ 


“கூராராழி வெண்சங்கேந்திக்கொடியேன்‌ பால்‌ 
வாராய்‌ ஒரு நாள்‌ மண்ணும்‌ விண்ணும்‌ மகிழவே” 

என்‌ ற ஈம்மாழ்வாரைப்போ லே எம்பெருமானைக்காணவேணு 
மென்று கூப்பிடுதலே ஸ்வாஹாம்ப்தார்த்தம்‌ என்‌ றதா 
கிறது. அன்றிக்கே 'ஸ்வாஹா” என்பது தானத்தகைக்‌ காட்டுவ 
தாகவும்‌ கொள்ளலாம்‌. அப்போது *ஜுஹோமி' என்பதை 
அனுஷ்டானபர்யந்தமாக்கிக்‌ காட்டுகிறது. இது காலை 
வேளையில்‌ அநுஸந்‌ திக்கவேண்டிய மந்திரம்‌. இம்மந்திரத்‌ 
இதைப்‌ படித்துச்‌ சுளகிதமாயுள்‌ ள கையிலிருக்கும்‌ ஜலத்தைப்‌ 
பருகவேண்டும்‌. இனி மத்யாஹ்ன வேளையில்‌ படிக்க 
வேண்டிய ஜ்லப்ரான மந்திரத்தை விவரிப்போம்‌., 


आपः पुनन्तु ஏன்‌! परथिवी पूता पुनातु मां। पुनन्तु ब्रह्मणस्पतिः। 
ब्रह्मपूता पुनातु मां। यदुच्छिष्ममोज्य। यद्वा दुश्यरित मम। 
सर्वे पुनन्तु माप्रापः। अखतां च प्रतिग्रह खादा॥ 


ஆப: புஈந்து ப்ருதி,வீம்‌ | ப்ருதி,வீ பூதா பு௩ாது மாம்‌ | 
புநந்து ப்‌,ரஹ்மணஸ்பதி:|। ப்ளஹ்மபூதா புநாது மாம்‌| 
யது,ச்சிஷ்டமபேோஜ்யம்‌ | யத்‌,வா துண்சரிதம்‌ (010 | 

ஸர்வம்‌ புகந்து மாமாப: | அஸதாம்‌ ௪ ப்ரதிக்‌,ரஹம்‌ ஸ்வாஹா || 


* ஆட: புநந்து' என்ற இம்மந்திரத்திற்கு ஜலங்கள்‌ 
ரிஷிகள்‌; அனுஸ்டுப்‌ சந்தஸ்ஸ-ு; ப்ரஹ்மணுஸ்பதி தேவதை, 
ஜீலத்தை அருந்துவதில்‌ வீநியோகம்‌. 


(ஆப:) எம்பெருமானுக்கு இருப்பிடமாய்‌ இப்போது 
என்‌ கையில்‌ இருப்பவையான ஜலங்கள்‌. ( ப்ருதிவீம்‌ 
பு௩ந்து) ப்ருதிவீ முதலான பஞ்சபூதங்களாலான இந்த 
என்‌ தேஹத்தைப்‌ பரிசுத்தப்படுத்தட்டும்‌. இங்கு ப்ருதிவீ 
என்ற பதம்‌ பஞ்சபூதங்களுக்கும்‌ உபலக்ஷணமாய்‌, அவற்றா 
லான கேஹத்தைக்காட்டுறெது. தேஹத்தில்‌ ப்ருதிவீ 
பாகமே ப்ரதானமாயிராப்பதால்‌ ப்ருதிவீ என்று தேஹம்‌ 
சொல்லப்படுகிறது ( ப்ருதிவீ ) என்னுடைய இந்த சரீர 
மானது (பூதா) ஜலத்தாலே பரிசுத்தப்படுத்பப்‌ பட்ட தாய்க்‌ 
கொண்டு. (மாம்‌ புநாது) என்னைப்‌ பரிசுத்தப்படுத்தட்டும்‌. 
“ அபாம்‌ பரமாத்மநேோ விமோஷாயத௩த்வாத்‌. ப்ருதி,வ்யரம்ச 
அபிமதவல்லபராத்வாத்‌ உப,யோ: பாவரத்வமுச்யதே '” [ஜலம்‌ 
பரம! த்மாவுக்கு விமேோஷம ன இருப்பிடமான தாகையா லும்‌. 
பூமியான து (அவனுக்கு) இஷ்டபத்னியாகையாலும்‌ 
இரண்டுக்கும்‌ பரிசுத்தப்படுத்தும்‌ தன்மை சொல்லப்படு 
கிறது.] என்றார்‌ நாராயணமுனிவர்‌. (புஈந்து) ' ஆப: 
என்று சேர்த்துக்கொள்வது; = "1000" என்பது திடகேஹளீ 
ந்யாயத்தாலே இரண்டு பக்கமும்‌ அந்வயிக்கும்‌, முன்‌ 
ஆப: புநந்து ப்ருதிவீம்‌' எனகையாலே. ஜலம்‌ தேஹத்‌ 
தைப்‌ பரிசுத்தப்படுத்தட்டுமென்று வேண்டிக்கொள்ளப்‌ 
பட்டது. இங்கு ` (=^) மாம்‌ புநந்து' என்று ஜலம்‌ 
என்னையும்‌ நேராகப்‌ பரிசுத்தப்படுத்தட்டும்‌ என்று பிரார்த்‌ 
இக்கப்படுகிறது, இங்கு * ஆப; ' * ப்ருதிவீ ' முதலான சப்தங்‌ 
கள்‌ அவற்றுக்கு அந்தர்யாமியான அநந்தனைக்‌ குறிக்கின்‌ றன, 
அவனுடைய ஸம்டந்தத்தாலேயன்றோ கங்காஜலம்‌ முத 
லானவையும்‌ பரவனங்கீளாகப்‌ படிக்கப்படுகின் றன. இப்‌ 
படி சரிரத்தையிட்டு அவனைச்‌ சொன்னதில்‌ திருப்தியுறாமல்‌, 
அடுத்தபடியாக அவனை ஸாக்ஷ்ாத்தாகமீங்‌ பீரார்ததிக்கிறது 
“ப்ரஹ்மணஸ்பதி:ப்ரஹ்மபூதா புநாது; மாம்‌” , என்னுமத்‌ 
தாலே (ப்‌,ரஹ்மணஸ்பத;) ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்‌ 
பட்ட வேதத்திற்கு ஸ்வாமியாயிருப்பவன்‌. அதை ஆதியில்‌ 
ஸ்ருஷ்டிக்கையா லும்‌, அதன்‌ தலையிலே விளங்கும்‌ திருவடி 
களை உடையவனாயிருக்கையா லும்‌ நிலமகள்‌ நாயகனே 
வேதத்திற்குப்‌ பதியெனத்தகுந்தவன்‌. 

“யோ ப்‌,ரஹ்மாணம்‌ வித,த,ாதி பூர்வம்‌ 
யோ வை 69/67 005 ப்ரஹிணோதி தஸ்மை'' 
[எவனொருவன்‌ பிரமனை முதலில்‌ படைத்து, அவனுக்கு 
வேதங்களை உபதேசித்தனனோ....] என்று வேதத்திலும்‌ 

வேதைஹஸ்ச ஸர்வைரஹமேவ வேத்‌,ய: '' “ நரராயணபரா 
வேத;ா: '' “ ஸர்வே வேத;ா: க்ருஷ்ண: '' என்று இதிஹாஸ 
புரரணங்களிலும்‌. 'யந்மூர்த்நி மே ங்ருதியிரஸ்ஸாச 
பாதிஃ.தத்‌ பாத,ரவிந்தமரவிர்த,விலோச௩ஸ்ய '" [என்‌ 
னுடைய தலைகளிலும்‌. வேகங்களின்‌ தலைகளிலும்‌ வீளங்‌ 
கும்‌ தாமரைக்கண்ணனின்‌ திருவடித்தாமரைகளைத்‌ துதிக்‌ 
கஇமறன்‌.] என்று ஆளவம்காராலும்‌ இவ்விஷயம்‌ ஒர்த்‌ 
'இக்கப்பட்டதன்றோ.  அன்றிக்கே  ப்‌,ஹ்மணஸ்பத: ' 
என்பகையாலே சதுர்முகப்ரஹ்மாவுக்குப்‌ பதியான 
நாராயணன்‌ என்று சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
யோ ப்‌,ரஹ்மாணம்‌ வித,தர௱தி பூர்வம்‌” நாராயணாத்‌ 
ப்ரஹ்மா ஐஜரயதே '' -ஈரன்முகனை நாராயணன்‌ படைத்தான்‌” 
முதலானவிடங்கள்‌ இங்கு அனுஸந்திக்கத்தக்கன. (८/9 80८8 
பூதா) வேதங்களுக்கு ஏற்படும்‌ தோஷங்களை நீக்கி 
அவற்றைப்‌ பரிசுத்தப்படுத்‌ துமவன்‌. “பாவீதா” என்றிருக்க 
வேண்டியது வேதமாகையாலே “பூதா” என்றிருக்றெது. 
அநாதியான வேதங்களுக்கு தேரஷமுண்டோவெனில்‌: 
“கபாலஸ்தம்‌ யத தோயம்‌ ங்வத்‌,ருதெள ௪ யதள பய:| 
த;ஷ்டம்‌ ஸ்யாத்‌ ஸ்தளதேர ஷேண வருத்தஹீரே தத,ா 
ச்ருதம்‌ ॥'* 
[மண்டையோட்டிலிருக்கற. ஐலத்தைப்போலவும்‌, நாய்த்‌ 
தோலிலுள்ள பாலைப்போலவும்‌, ஈல்லொழுக்கமற்றவனிட 
முள்ள வேதமும்‌ ஸ்தான தோஷத்தினால்‌ தோஷமுடைய 
தாகிறது.] என்கிறபடியே அத்யயனம்‌ செய்பவனுடைய 
தோஷத்தினால்‌ வேதத்துக்கு வருவதொரு தோ வஷமுண்டு. 
ப்ரளயகாலத்தில்‌ தன்‌ திருவயிற்றிலே வைத்து அந்த தோஷத்‌ 
தைப்‌ போக்குகிறபடியால்‌ : ப்ரஹ்மபூகா " எனப்படுகிறான்‌ 
பத்மஈாபன்‌. (ப்ரஹ்மணஸ்பதி; ப்ரஹ்மபூதா புந து மாம்‌) 

வேதத்துக்கு ஸ்வாமியாகவும்‌. அதைப்பரிசுத்தப்படுத்து 
மவனாகவுழுள்ள பகவான்‌ என்னைப்பவித்திரனாக்கட்டும்‌. 
அன்‌ றிக்ககே, ப்ரஹ்மசப்கத்காலே சேதனர்களைச்‌ சொல்லு 
வதும்‌ உண்டாகையாலே “சேகனர்க்கு ஸ்வாமியும்‌, 
அவர்களைப்‌ பரிசுத்தப்படுத்துமவனுமான ஸர்வேச்வரன்‌ 
(அவர்களிலே ஒருவனான) என்னையும்‌ பரிசத்தனாக்கட்டும்‌' 
என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. =" ஸர்வபாபேப்‌யோ 
மோக்ஷயிஷ்யாமி முதலானவிடங்களில்‌ ஸர்வேங்வரனே 
ஜீவனுடைய ஸர்வபாடங்களையும்‌ போக்கி அவனைப்‌ பரி 
சுத்தப்படுத்துகிறான்‌ என்னுமர்த்தம்‌ சொல்லப்பட்ட 
தன்றோ. அன்றிக்கே, மற்றொருவகையாகவும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌: (८156 ॐ ப்ர ஹ்மணஸ்பதி:) ப்ரஹ்மசப்தத்தி 
னால்‌ சொல்லப்படும்‌ வேதத்திற்கு ஸாரமான ப்ரணவத்‌ 
தால்‌ சொல்லப்படுமவனான பகவான்‌ என்தேஹத்தைப்‌ 
பரிசுத்தப்படுத்தட்டும்‌; “புநந்து' என்பது சூந்தஸம்‌. 
'ப்ருதி,வீம்‌' என்பதைக்‌ கூட்டிக்கொள்ளவேண்டும்‌ (ப்ரஹ்ம 
பூதா புநாது மாம்‌) ப்ரஹ்மசப்தவாச்யனா।ன ௩ாராயணனால்‌ 
பரிசுத்தியடைந்த என்‌ கேஹும்‌ என்னைப்‌ பரிசுத்தனாக்‌ 
கட்டும்‌. அன்‌ திக்கே ப்லுஹ்மத்தினால்‌ பரிசுத்தமான 
ஐலங்கள்‌ என்னை சுத்தியடையச்செய்யட்டும்‌ என்றும்‌ 
கொள்ளலாம்‌. அப்போது 'புநாது ' என்றது சஏந்தஸம்‌. 
இவ்விரண்டு வாக்யெங்களுக்கும்‌ வேறொரு வகையாகவும்‌ 
பொருள்‌ கூறலாம்‌: (புரந்து ப்ரஹ்மணஸ்பதி:) (என்னால்‌ 
அத்யயனம்‌ செய்யப்பட்ட) வேதத்திற்கு ஸ்வாமியான 
என்‌ ஆசாரியனை (ஜஐலங்கள்‌ ) எத்தராக்கட்டும்‌. -ஸுஃபாம்‌ 
ஸுலுக்‌' என்னும்‌ ஸ௫த்ரத்தினால்‌ பதிம்‌்‌ என்பது “பதி;' 
என்‌ றிருக்கிறக. (ப்ரஹ்ம பூதா புநாத்‌ மாம்‌) டரிசுத்தரும்‌, 
ப்;ராஹ்மணோத்சமருமான அவ்வாசாரியர்‌ என்னை சுச்தனாக்‌ 
கட்டும்‌. ப்ரஹ்மத்தையும்‌, வேதத்தையும்‌ அறிந்தவராகை 
யால்‌ ஆசாரியன்‌ “ப்ரஹ்ம” எனப்படுகிறார்‌. -ஆசார்யோ 
வை ப்ரஹ்ம” என்றார்‌ போதாயனரும்‌. “ குருவே பரம்‌ 
ப்ரஹ்ம '' என்றும்‌ சொல்லப்பட்டது. 

(யதுச்சிஷ்டமபேோஜ்யம்‌) புசிக்கத்தகாத யாதொரு 
உச்சிஷ்டத்தை ( நான்புசித்தேனோ +. “ஸர்வம்‌ புரந்து? 
(அத எல்லாவற்றையும்‌ பரிசத்தப்படுதுதட்டும்‌,) என்ப 
தோடே அந்வயம்‌. இங்கு புசிக்கத்தகாத உச்சிஷ்டம்‌ 
என்‌ றதினால்‌, புசிக்கத்தக்க உச்சிஷ்டங்களும்‌ ( சேஷங்‌ 
களும்‌) உண்டேன்று தோற்றுகிறது. அவையாவன: 
உடுத்துக்‌ கலத்ததுண்டு ' என்‌ றும்‌." த்வதீ,யபு,க்தோஜ்ஜி,த 
பமோேஷபேறஜிகா '' என்றும்‌ சொல்லப்பட்ட பகவானுடைய 
உச்சிஷ்டமும்‌. “ ததுச்சிஷ்டம்‌ ஸுபாவநம்‌ ” [பகவத்‌ 
பக்தன்‌ உண்டு மிகுந்தது மிகபரிசுத்தமானது.] என்றும்‌ 
“ போனகம்‌ செய்தசேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே ' என்றும்‌. 
சொல்லப்பட்ட பரகவதமேஷமும்‌. இங்கு = 15556, ०1 0 
பேஜ்யம்‌ ` என்ற கால்‌ பகவக்பாகவகர்களைத்‌ தவிர மற்றை 
யோருடைய உச்சிஷ்டம்‌ சொல்லப்படுகிறது. “யது 
சூஷ்டமபேோஜ்யம்‌ ' என்றதற்குப்பிறகு “மயா புக்தம்‌* 
[என்னால்‌ சாப்பிடப்பட்டதேோ | என்று சேர்‌ சதுக்கொள்ள 
வேண்டும்‌. “யதுச்சிஷ்டம்‌ யதபேோஜ்யம்‌ ' என்றும்‌ 
பாடமுண்டு. அப்போது, உச்சிஷ்டம்‌ என்னும்‌ ஸாமாந்ய 
சப்தம்‌ புசிக்கத்தகாக உச்சிஷ்டத்தைக்‌ காட்டுகிற த. 
்‌யதபோஜ்யம்‌” என்றது மயிர்ச்சோறு, புழுச்சோறு 
முதலானவைகளைச்‌ சொல்லுகிரது. இவ்விடத்தில்‌ 
ஸ்ரீ வேதாந்ததேசிகர்‌ அருளிச்செய்த ஆஹாரநியமம்‌ என்னும்‌ 
தமிழ்ப்‌ பிரபந்தத்தை அவசியம்‌ அனுஸந்திக்கவேண்டும்‌, 
ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ விலக்கவேண்டிய ஆஹாரங்கள்‌ எவை 
யென்பகை அப்பிரடபந்தத்தில்‌ மிகத்தெளிவாகக்காட்டியிருக்‌ 
கறார்‌ தூப்புல்பிள்ளை, (யதபேோஜ்யம்‌) ஜாதியினாலும்‌, 
ஆச்ரயத்தினாலும்‌, காலத்தினாலும்‌,க்ரியையினாலும்‌. ஸம்ஸர்க்‌ 
கத்தினாலும்‌ தோலமுடையனவராகவுள்ள எல்லா ஆஹாரங்‌ 
களும்‌ இங்கு சொல்லப்படுகின்‌ றன. (யத்‌, வா தஹ்சரிதம்‌ மம) 
(என்னுடைய இந்திரியங்களைக்கொண்டு) என்னால்‌ யாவை 
சிலகெட்ட காரியங்கள்‌ செய்யப்பட்டனவோ அவற்றையும்‌. 
" என்பது “<” [உம்‌] என்ற டொருளையுடையது. (௮ 

57/05 ப்ரதிக்‌,தரஹம்‌ ) கெட்டவஸ்துக்களுடைய தானம்‌ 
என்றும்‌. கெட்டவர்களிடமிருந்‌ து வாங்யெே தானம்‌ என்றும்‌ 
இரண்டு . விதமாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. இந்த 
அஸத்ப்ரதிக்ரஹம்‌ கொடுக்கிறவனுக்கும்‌. வாங்குகிறவனுக்‌ 
கும்‌ அரர்த்தத்தைக்‌ கொடுக்கிறதென்பது 


“ அதவ த்வநதீ,யாஈ: ப்ரதிக்‌ரஹ பரோ த்விஜ: | 

அம்ப, ஸ்யங்மப்லவேநேவ ஸஹ தேநைவ மஜ்ஜதி ||” 

[ வேதாத்யயனம்‌ செய்யாமல்‌ தானம்‌ வாங்குவதையே 
தொழிலாக உடையவனான ப்ராஹ்மணன்‌. கல்லை இடமாக 
கொண்டு ஜலத்திலே விழுந்கவனைப்போல்‌. கொடுத்த 
அவனுடன்‌ கூடவே முழுகுகறாோன்‌.] என்றும்‌, 


^" த்ரிஷ்வப்யேதேஷு யத்‌,த,த்தம்‌ விதி, நாப்யார்ஜிதம்‌ தரம்‌ | 
த,ாதுர்ப,வத்யநர்த்தளய பரத்ராத;ாதுரேவ ச॥ 
யதா ப்லவேநோபலேரு நிமஜ்ஜத்யுத;கே நர: | 
58597 நிரஜ்ஜதோ 5த,ஸ்தாத்‌ அஜ்ஞெள 
தாத்ருப்ரதீச்சூகெள | '' 
[ இம்மூன்று தஷ்டர்களிடமும்‌ கொடுக்கப்பட்ட தனம்‌. 
முறைப்படி ஸம்பாதிக்கப்பட்ட தாயிருப்பினும்‌. கொடுப்ப 
வனுக்கும்‌,வாங்குமவனுக்கும்‌ மேலுலகிலும்‌ அர்த்தத்தைத்‌ 
தருகிறது. எப்படிக்கல்லோட,ந்தடன்‌ கூடிய மனிதன்‌ நீரில்‌ 
முழுகுகறானோ,அப்படியே௮றிவிலிகளான கொடுக்கறவனும்‌. 
வாங்குகிறவனும்‌ கீழே விழுரறோர்கள்‌.] என்றும்‌ மனுவி னால்‌ சொல்லப்பட்ட து. 


८" வித்‌,யாதபோலிஹிீநேந ए து க்‌ராஹ்ய: ப்ரதிக்ரஹ:। 

க்‌ ருஹ்ணன்‌ ப்ரதளதாரமதே, நயத்யாத்மாநமேவ = || 
[ஞானமும்‌. அனுஷ்டானமுமழ்றவன்‌ தானம்‌ வாங்கக்‌ 
கூடாது. வாங்கினால்‌ கொடுப்பவனையும்‌ தன்னையும்‌ கீழ்‌ 
லோகங்களில்‌ தள்ளுகிறான்‌.] என்று வேறோரு ஸ்ம்ருதி 
யிலும்‌ சொல்லப்பட்டது. (ஸர்வம்‌ புடந்து மாமாட:) இவை 
யெல்லாவற்றினலும்‌ ஏற்பட்ட பாபத்தைட்போக்‌கி, 
ஜலாந்தர்யாமியான பகவான்‌ என்னை பரிசுத்தப்படுத்தட்டும்‌. 
“ஸ்வாஹா ' என்பதின்‌ பொருள்‌ முன்போல்‌. 


இனி ஸாயங்காலம்‌ படிக்கவேண்டிய ஜலப்ரா ७०102. ரத்தை வீளக்குவோம்‌, 


अग्निश्च मा मन्युश्च मन्युपतयश्च Ne: | 

पपिभ्यो Terai! यदह्ना पापपरकाषम्‌ । मनसा वाचा हस्ताभ्यां | 
, पद्धयानुदरेण शिश्ना । अहस्तदवद्धुम्पतु यत्किञ्च दुरित मयि । 
इदमद MATA सत्ये ज्योतिषि जुदोमि खाहा ॥ 

அக்‌,நிங்ச மா மந்யுங்ச மந்யுபதயங்ச மந்யுக்ருதேப்‌,ய: | 
பாபேப்‌,யோ ரசக்ஷந்தாம்‌ | யத,ஹ்கா பாபமகார்ஷம்‌ | 
மநஸா வாசா ஹஸ்தாப்யாம்‌| பத்‌ப்‌,யாமுத,ரேண மிங்நா | 
அஹஸ்ததலும்பது| யத்‌ கஞ்ச துளிதம்‌ மயி। 

இத,மஹம்‌ மாம்‌ 
அம்ருதயோநெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ॥ 


இம்மந்திரத்திற்கு ஸூர்யன்‌ ருஷி; காயத்ரீ ச,ந்தஸ்ஸு 
அக்நி தேவதை, 'னக்பி' *அஹஸ்‌ ' * ஸத்யம்‌ ' என்னும்‌ 
மூன்‌ று பதங்களைத்தவிர மற்றவையெல்லாம்‌ - ஸுூர்யங்ச௪ ” 
என்னும்‌ மந்திரத்தைப்போலவே अ ८, ¶ क ना கொள்ள 
வேண்டும்‌. இம்மந்திரம்‌ அகநியை தெய்வமாக உடையது. 
ஸூர்யனால்‌ ஸாகஷ்ஷாத்கரிக்கப்பட்ட து. ஆகையால்‌ இதை 
ஸஒர்யன்‌ மறையும்‌ தறுவாயில்‌, அக்நிக்கு ப்ராதாந்யம்‌ 
உள்ள இரவு வராவதற்கு முன்‌ அனுஸர்திப்பது பொருத்த 
முடையதாகிறது. அக்நியை ருஷியாகவும்‌. ஸூர்யனை தெய்வ 
மாகவும்கொண்ட 'ஸூர்யங்ச '' என்னும்‌ முன்‌ மந்திரத்‌ 
தையும்‌, அக்நிக்கு ஒளி குறைந்து, ஸூர்யன்‌ உதிக்கப்‌ 
போகும்‌ கரலைவேளையில்‌ அதுஸந்திப்பது பொருந்தியுள்ள த. 

(அக்;நிஸ்ச) '௮க' என்னும்‌ தாது நடப்பது என்னும்‌ 
பொருளை உடையதாகையால்‌, “அக்ஸஙி' என்னும்‌ பதம்‌ 
*நடப்பவன்‌' என்னும்‌ அர்த்தத்தையுடையது. யாகம்‌ 
செய்பவனால்‌ கொடுக்கப்படும்‌ ஹவிர்ப,ாகத்னத தேவதை 
யிடமும்‌, அந்த நதேவதையுடைய அறநுக்ரஹத்தை யாகம்‌ 
செய்பவனிடமும்‌ சென்‌ று கொடுப்பவனாகையால்‌ அக்நி 
எனப்படுகிறான்‌. ஹவ்யவாஹம்‌ அரதிம்‌ மாநுஷாணாம்‌ ^" 
[மனிதர்களுடைய ஹவிஸ்ஸை வஹிச்துச்செல்பவனும்‌, 
ஓய்வில்லாமலிருப்பவனுமான அக்னியை. ] என்று ஓர்‌ வேத 
மந்திரத்திலும்‌ உரைக்கப்பட்டது. “ மந்யுங்ச மந்யுபத 
யங்ச ' என்பதற்கு. முன்சொல்லப்பட்ட பொருளைத்தவீர 
மற்றுமோர்‌ அர்த்சமும்‌ சொல்வதண்டு. அதாவது:_— மந்யு' 
என்று கோபமும்‌. மந்யுபதய:' என்று கோபத்தைத்‌ 
குலைவனாகக்‌ கொண்ட காமம்‌, மதம்‌, மாத்ஸர்யம்‌ முகலான 
அர்க்குணங்களும்‌ சொல்லப்படுகின்‌ றன. இவைகள்‌ பாடங்‌ 
களிலிருந்து இச்சேதனனை ரக்ஷிக்கையாவதென்‌? என்னில்‌; 
காமக்ரோகபாதிகளானநீங்கள்‌என்னிடம்‌ஆவீர்ப்பவிக்காமல்‌ 
இருப்பதன்‌ மூலம்‌ என்னைப்‌ பாடங்களிலிருந்து காப்பாற்‌ 
மங்கள்‌ என்று பிரார்த்திப்பதாகக்‌ கொள்ளவேண்டும்‌. 
இவ்வர்த்த த்தைக்‌ காட்டிலும்‌, முன்‌ காட்டப்பட்டதும்‌, 
சுராகப்ரகாசிகாசாரியரால்‌ ஆதரிக்கப்பட்ட துமானஅர்த்தமே 
சிறந்தது. (யத்‌ அஹ்நா டாபமகார்வும்‌........ அஹஸ்தத்‌ 
அவலும்பது) பகலில்‌ செய்க பாபத்தை. பகலுக்கு நிர்வரஹ 
கனான பகவான்‌ ரசக்ஷிக்கட்டும்‌. * கங்குலைப்‌ பகலை ' என்றார்‌ 
திருமங்கையாழ்வார்‌. இங்கு பகலைச்‌ சொன்ன தினால்‌ இது 
பகலின்முடிவில்‌ அனுஸந்திக்கவேண்டிய மந்திரமென்‌ றும்‌, 
*ஸுூர்யஸ்ச ' என்னும்‌ மந்திரத்தில்‌ இரவைச்‌ சொன்ன 
படியால்‌. அது இரவின்‌ முடிவில்‌ படிக்ட வேண்டிய மந்தீர 
மென்றும்‌ தொற்றுகிறது. (ஸத்யே ஜ்யோதிஷி) ஸத்ய 
பப்தத்தனாுல்‌ சொல்லப்படும்‌ சோதியிடம்‌. தைத்திரீய 
உபநிஷத்தில்‌, '' ஸத்யம்‌ ஜ்ஞா௩ம்‌ அநந்தம்‌ (17 @710 '' என்று 
ஸத்யாப்தத்தினால்‌ சொல்லப்படுமவன்‌ அநந்தனே, என்று 
காட்டி, +“ நாரராயணபரோ ஜ்யோதி: '' என்று ஜ்யோதீங்‌ 
பப்தவாச்யனும்‌ நாராயணனே என்று நிலைநாட்டிபிருப்பது 
இங்கு அதுஸந்திக்கத்தக்கது. (ஸத்யே) ஸ்ூபத்திலும்‌. 
ஸ்வபளவத்திலும்‌ விகாரமற்றவனான பகவானிடத்தில்‌, 
^" ஹத்யஸ்ய ஸத்யம்‌ ” என்று புகழப்படும்‌ பரமனிடத்தில்‌. 
மற்ற வீசேஷார்த்தங்களை -' ஸூர்யங்ச '' என்னும்‌ மந்திரத்‌ 
தின்படியே கண்டுகொள்வது. । 


அடுத்தபடியாக பின்‌ வரும்‌ மந்திரத்தை மூன்று வேளை 
களிலும்‌ ஜபித்து, ஜலத்தைத்‌ தலை முதலான இடங்களில்‌ 
ப்ரோக்ஷித்துக்‌ கொள்ளவேண்டும்‌. 


दधिक्रारण्णो srs जिष्णोरश्वस्य वाजिनः। खरमि नो ATTA 
प्रण எங तारिषत्‌। आपो हि छा....आपो जनयथा च नः॥ 


த,தி,க்ராவ்ண்ணோ அகார்ஷம்‌ ஜிஷ்ணோரங்வஸ்ய வாஜிந:।| 
ஸுரபி, நோ முகளகரத்‌ ப்ரண ஆயூம்வி தாரிஷத்‌ ॥ 
ஆபோஹிஷ்ட,ா.... ஆபோ ஜர்யத;ா ௪ ந: || 
'த;திக்ராவ்ண்ண:' என்று தொடங்கும்‌ இந்த மந்தி 
த்திற்கு வாமதேவர்‌ ருஷி; அநுஷ்டுப்‌ சந்தஸ்ஸாு; ஜலங்‌ 
கள்‌ தேவகை என்று சில ஆசாரியர்களும்‌. ௧,திக்ராவா 
தேவதை என்‌ று சில ஆசாரியர்களும்‌ சொல்லுவர்‌. ஜலத்தை 
ட்ரோக்ஷித்துக்‌ கொள்வதில்‌ வீநியோகம்‌. * ஆயூம்ஷி 
தாரிஷத்‌ ' என்று இந்த மந்திரத்தை முடித்தவுடன்‌. 
“ஆபோ 20 ०८ 97" என்னும்‌ மந்திர்ம்‌ முழுவதையும்‌ 
படித்து ப்ரோக்ஷீத்துக்கொள்ளவேண்டும்‌, இவ்விடத்தில்‌ 
ஓர்‌ ஆகேபம்‌ எழுகிறது: இம்மந்திரத்திற்குச்‌ சந்தஸ்ஸு 
அநுஷ்டுப்‌ என்று சொல்லப்பட்ட து. “ழ்வொத்ரிம்மத,க்ஷரா 
அநுஷ்டுப்‌”  [ முப்பத்திரண்டு அக்ஷ்ரங்களையுடையது 
அநுஷ்டுப்‌ ] என்ற ல்ஷணப்படி முப்பத்திரண்டு அக்ஷரங்‌ 
கள்‌ இருக்கவேண்டியிருக்க. முப்பத்தொரு அக்ஷரங்களே 
இம்மந்திரத்தில்‌ இருக்கின்றனவே; இக எப்படிப்‌ பொருந்‌ 
தம்‌ என்பது அந்த ஆகேபம்‌. இதற்கு சருதப்ரகாசிகொ 
சாரியருடைய ஸமாதான்‌ம்‌ பின்வருமாறு! ௩ ஹ்யே 
காக்ஷ்ரேண ச,ந்த,ம்ஸி வியந்தி ௩ த்‌,வாப்யாம்‌ '' [ஒரு 
எழுத்தினாலாவது, இரண்டு எழுத்துக்களினலாவது 
சந்தஸ்ஸுகள்‌ மாற. றெதில்லை.] என்று பஹ்வ்ருச மந்திரத்‌ 
தில்‌ சொல்லப்பட்டிருப்பதனாலும்‌. - न ७65३८००१ क 80 
அரநந்யவத்‌, பவதி '' [ஒருபாகம்‌ மாறியிருந்தாலும்‌ அது 
வேறுபடுவதில்லை,] என்று நியாயம்‌ இருப்பதனாலும்‌ ஓர்‌ 
அக்ஷரம்‌ குறைந்காலும்‌ அநுஷ்டுப்‌ சந்தஸ்ஸு என்னக்‌ 
குறையில்லை, ' ஊநாதி,கேக5 ஏகேந ிச்ருத்‌,பூரிஜெள ”' 
[ஒர்‌ அக்ஷரம்‌ குறைந்தால்‌ நிச்ருத்‌ என்றும்‌. ஓர்‌ அக்ஷரம்‌ 
அதிகமானால்‌ பூரிஜம்‌ என்றும்‌ சொல்லப்படுகின்‌ றன. ]என்று 
ருக்வேத பரிபராலையில்‌ சொல்லப்பட்டபடியே இது 
“நிச்ருத்‌' என்னும்‌ வகையில்‌ சேர்ந்ததாகிறது. மற்றும்‌ 
சிலர்‌ : அகாரிஹஜம்‌' என்று பாடம்‌ கொள்ளுகிறார்கள்‌. 
அப்பாடத்கலைக்கொள்ளும்போது முப்பத்திரண்டு அக்ஷரங்‌ 
களுள்ளகால்‌ இந்து வீசாரத்திற்கு இடமிலலை. இண்‌, 
இம்மந்திரத்தின்‌ சப்தார்த்தங்களைச்சிந்திட்போம்‌. 


(க;திக்ராவ்ண்ண:) சரு கப்ரகாசிகாசாரியர்‌. இப்பதங்க 
ளெல்லாம்‌ ஜலத்தைக்‌ குறிக்கிறதென்று ஒரு பொருளுரைப்‌ 
பர்‌; * ஆஇபோஹிஷ்டா ” என்னும்‌ மந்திரம்‌ ஜலங்சளைக்‌ 
குறித்துச்‌ சொல்லுகிறதாகையால்‌, அத்தடன்‌ சேர்த்துப்‌ 
படிக்கப்படும்‌ இம்மந்திரமும்‌ லத்தை நோக்கிச்‌ சொல்லப்‌ 
படுகிறது என்று செல்வதில்‌ ஒளசித்யமுண்டு. (ததிக்‌ 
ராவ்ண்ண:) இவ்வீடத்தில்‌ “ண்‌ ' என்னும்‌ ஒரு எழுத்து 
அதிகம்‌. * த;திக்ராவ்ண:” என்‌ படி. இப்படி அதிகமான 
எழுத்தைப்‌ படிப்பது முதலானவை வேகத்திற்கே அஸா 
தாரணமாயுள்ளதொரு ஸ்வாதந்தீர்யம்‌. சில இடங்களில்‌ 
உள்ள எழுத்தை விட்டும்‌ ஓதும்‌, லெ இடங்களில்‌ ஓர்‌ 
எழுத்தைக்‌ கொண்டு ஒரு பதத்தைக்‌ சாட்டும்‌. உதாரணம்‌: 
பஹ்வ்ருசஸம்ஹிதையில்‌. * மமுரமமார; ' என்னும்‌ ஒரு பதம்‌ 
ராஜாவுக்கு விமேஷணமாக ஓஒதப்பட்ட து. இதற்கு பாஷ்யம்‌ 
செய்கவர்கள்‌ °" (0४०7 57098 மத்ருர்‌ ங்ருணாதி” [கொசுக்‌ 
களைப்போலே சத்ருக்களைக்‌ கொல்லுசிறான்‌.] என்று 
பொருளுரைத்கார்கள்‌. ம' என்னும்‌ எழுத்தால்‌ மகத்‌ 
தைச்‌ சொல்லுறெது. *மம' என்னும்‌ எழுத்தால்‌ பத்ருவைச்‌ 
சொல்லுறெது. “ர' என்னும்‌ எழுத்து அதிகம்‌. “ ங்ரு- 
ஹிம்ஸாயாம்‌ '' என்கிற தாதவிலிருந்து உண்டான மார" 
என்னும்‌ பதம்‌ ஹிம்ஸிப்பவன்‌ என்று பொருள்‌ படுகிறது. 
ஆக சத்ருக்களைக்‌ கொசுவைப்போல்‌ கொல்லும்‌ அரசன்‌ ' 
என்றதாகிறது. இப்படிப்‌ பல இடங்களுண்டு. ௮து 
போலவே இங்கும்‌ ண்‌ ` அதிகம்‌, (௧;திஃராவ்ண;) என்டது 
"८ ,55.5,50 7 6/0 ' என்பதின்‌ ஆறாவது வேற்றமை, ` 53845 
ராவா' என்னும்‌ சப்தம்‌ எப்பட ஜலத்தைக்‌ குறிக்கும்‌ 
என்னில்‌: 'த, தி, க்ரணாதி இதி 5,திக்ராவா'[ தயிரை விற்பதற்‌ 
கும்‌ வாங்குவதற்கும்‌ காரணமாயீருப்பத.] என்பத வ்யுத்‌ 
படத்தி. ` டு,க்ரீங்‌ த்‌,ரவ்யவிநிமயே ' என்‌ று தர துவாகையாலே 
 க்ரிணாதி' என்று கொடுக்கல்‌ வரங்கலைச்‌ சொல்லுகிறது. 
००७८० பசுக்களுக்கு ஆஹாரமான புல்‌ முமனியவற்றை 
விருத்தியடையச்செய்வதன்‌ மூலமும்‌. ८. क ऊ = ना 0 @ 
குடிக்கப்படுவதாலும்‌, டால்‌, தயிர்‌ முதலியவற்றுக்குக்‌ 
காரணமாயிருந்து கொண்டு அவைகளின்‌  விநிமயத்‌ 
துக்கும்‌ (கொடுக்கல்‌ வாங்கலுக்கும்‌) காரணமாகிற 
தாகையால்‌. இங்கு ' த;திக்ராவா ' எனப்டடுகிறது. 
“ த,திக்ராவா ' என்னும்‌ பதம்‌ தயிரை விற்டவனாகய கர்த்தா 
வைக்‌ குறித்தே பெரும்பாலும்‌ பிரயோகிக்கப்பட்டபோதி 
லும்‌. தயிரைக்‌ கொடுக்கவும்‌ வாங்கவுமாம்படி ஆக்கிவைக்‌ 
கும்‌ உபகசணமான நீரைக்‌ குறித்தும்‌ பிரயோகிக்க வியா 
கரணசாஸ்திரப்படி இடமுண்டு. இங்கு ` ததி,” என்று 
தயிரைச்சொன்னகது பாலுக்கும்‌. அதனாலண்டாகும்‌ மோர்‌. 
வெண்ணெய்‌ முதலான எல்லாவற்றுக்கும்‌ உடலக்ணம்‌, 


(ஜிஷ்ணோ:) ஜயிப்பதை ஸ்வபளீவமாக உடைய. அதாவது; ` 
தன்னைத்‌ தவிர்ந்த மற்ற நாலு பூதங்களையும்‌ தன்‌ குணங்க 
ளாலும்‌ ப்ராதார்யத்தாலும்‌ ஐயித்திருக்சற ஜலம்‌. ஜல 
மில்லாவிடில்‌ ஐகத்து ஜீவிக்கமுடியா தாகையா லும்‌. பகவா 
னுக்கு ஜலமே விபஸோஷம௱ன இருப்பிடமாகையாலும்‌ 
* ஜஷ்ணோ: ' எனப்படுகிறது. ( அலவஸ்ய) எல்லாவற்றையும்‌ 
வியாபித்திருக்கிற. “அற மவ்யா ட் கெள ` என்று தாது. ஜலம்‌ 
ஸகலதத்வங்களையும்‌ வியாபித்து நிற்கிறகென்பது ப்ரக்யக்ஷ 
ஸித்தம்‌. (வாஜிந:) வாஓமாவது. அந்நம்‌. அந்நத்கைத்‌ 
தன்னுள்‌ கொண்ட ஜலம்‌ “வாஜீ” எனப்படுகிறது. 
அரந்நத்தைத்‌ தன்னுள்‌ கொண்டிருப்பதாலே உயிர்களுக்கு 
உணவூட்டி உய்விப்டது இந்த ஜல மேயன்றோ என்று 
பாவம்‌. இங்கு த, திக்ராவ்ண்ண:! என்று தொடங்கி வாஜி! 
என்பது வரை படித்த விரோஷணபதங்களால்‌ தழுவப்பட்டு 
நிற்கும்‌ விலேோஷ்யபதம்‌ சொல்லப்படவில்லையாகையால்‌ 
“'அம்ப,ஸ:' [ தண்ணீரினுடைய [என்ற பதத்தைச்‌ சேர்த்துக்‌ 
கொள்ளவேண்டும்‌. 


இவ்வீடத்தில்‌ ப்ராஸங்கிகமாக, அம்ப, என்னும்‌ 
சப்தத்திப்‌ வ்யுத்பத்தி நிரூபிக்கப்டடுகிறது. அயம்‌ பவதி 
இதி அம்ப, [(காராயணனுக்கு) அயநமாகிறதாகையால்‌ 
* அம்ப,” எனப்படுகிற து.] என்பது இதன்‌ சப்தார்த்தம்‌. 
“அஹோராத்ரம்‌' என்னும்‌ பதத்தில்‌ முகலெழுத்தும்‌. கடை 
யெழுத்தும்‌ விடப்பட்டு `" ஹோரா "` என்று வழங்குகிறாப்‌ 
பேலே :யந” என்னும்‌ எழுச்துகள்‌ விடப்பட்டு * அம்ப," 
என்று வழங்குகிறது. அன்‌ 00454, £ அகாரோ வை விஷ்ணு! : 
°" அக்ஷராணாம்‌ அகாரோ$ஸ்மி” என்கிறபடியே அகாரம்‌ 
விஷ்ணுவைச்‌ சொல்லுறெது; “அம்‌ பிபார்த்தி'' [அகார 
வாச்யனான வீஷ்ணுவைத்‌ தாங்குகிறது.] என்கறடடியே 
* 910८ +4- * என்னும்‌ சப்தம்‌ பேஷாுயனனான எம்பெருமானைத்‌ 
தாங்கி நிற்கும்‌ ஜலத்தைச்சொ ல்லுறெது என்றும்‌ கொள்ள 
லாம்‌. ஆபோ நாரா இதி ப்ரோக்தா........!'” முதலான 
ப்ரமாண வாக்யங்கள்‌ இவ்விடத்திலும்‌ அநுஸந்திக்கத்தக்கன. 


( த;திக்ராவ்ண்ண: ஜிஷஹ்ணோ: அங்வஸ்ய வாஜி: 
(அம்பல; ப்ரோக்ஷணம்‌) ௮க௱ார்ஷம்‌) (ப்ராணிகளுக்கு 
அவங்யாபேக்சிதமான ) தயிர்‌ முதலியவற்றுக்குக்‌ காரண 
மாய்‌. (ஸர்வப்ராணிகளுக்கும்‌ உபகரிக்கும்‌ விஷயத்தில்‌) 
மற்றபூகங்களையும்‌ வெல்லுமதாய்‌. (ஸர்வப்ராணிகலையும்‌) 
வியாபித்து நிற்பதாய்‌. (ப்ராணிகளுக்கு ) அந்நத்தை அளிப்ப 
தான ஜலத்தினுடைய ப்ரோக்ஷ்ணத்லதச்‌ செய்துகொள்ளு 
கழேன்‌. `" 59053909 லுங்‌ லங்‌ லிட்‌'' என்‌ று சொல்லியிருப்ப 
தனால்‌ நிகழ்காலட்பொருளில்‌. * அகார்ஷம்‌' [செய்தகொண் 
டேன்‌] என று இறந்தகாலமாகப்படிக்கப்பட்டுள்ள து. (एः) 
என்னுடைய. “வ்யத்யயோ பஹுளம்‌ ° என்றெ நியாயத்‌ 
தினால்‌ ஒருமைக்கு பதிலாகப்‌ பன்மை பீரயோஃிக்கப்பட்‌ 
டிருக்கிறது. அன்‌ றிக்கே, தன்னுடன்‌ ஸம்டந்தம்‌ பெற்றவர்‌ 
களையும்‌ ீசேர்த்தக்கொள்வதாகவும்‌ சொள்ளலாம்‌. 
அன்‌ றிக்கே, பகவத்ஸம்டந்தத்தால்‌ வந்த பெருமைதோ ற்றச்‌ 
சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌, (முக) முகங்களை. 
“போச்ச,ந்த,ஸி'' என்னும்‌ ஸூத்ரத்தினால்‌ முகா என்‌ நிருக்‌ 
கிறது. ' முகங்களை” என்று பன்மையாகப்‌ படித்தது 
முகத்துடன்‌ கூடிய மற்று அங்கங்களையும்‌ கூட்டிக்கொள்‌ 
வதற்காக. (ஸாரபி,) நல்ல ' வாஸனையுடையா ,வகளாக. 
பரிசுத்தங்களாக என்றபடி, “ஸாுபாம்ஸாலுக்‌? என்னும்‌ 
ஸூத்ரத்தினுல்‌ பஹுவசனம்‌ லோபிக்துக்‌ கிடக்கிறது. 
(கரத) குர்யாத்‌ ' [செய்யட்டும்‌] என்றபடி, மேலும்‌, (௩:) 
எங்களுடைய. (ஆயூம்ஷி) :பதாயுர்வை புறுஷ:'' “வேத 
நாற்‌ பிராயம்‌ நூறு'' எனப்படும்‌ அயுஸ்ஸுகளை. 
( ப்ரதாரிஷத்‌ ) விருத்திசெய்யட்டும்‌. “வ்யவஹிதாச்ச ”' 
என்ற நியாயத்தாலே -ப்ரண' என்பதிலுள்ள 
“£ப்ர' என்னும்‌ உபஸர்க்கம்‌, “தாரிஷத்‌' என்னும்‌ 
வினைச்கொல்லோடே சேருகிறது. ஆக, இத்கால்‌, பகவா 
னுடைய தஇதிருமேனிஸம்பந்தத்தால்‌ பெருமையை உடைய 
ஜலம்‌ என்‌ தேஹுக்தில்‌ பட்டமாத்திரத்தில்‌ எனக்கு பகவானை 
அடையக்கூடிய யேோமக்யதையையும்‌. இவ்வுலகிலும்‌ அவ்வூல 
கிலும்‌ ஸகலஸம்பத்துக்களையும்‌ கொடுக்கட்டும்‌ என்றதாகிறது. 

“ த்வயோபபு,க்த ஸ்ரக்‌,க;ந்த, மாலாலங்காரசர்ச்சிதா: | 
தரேமஹி... .... 0060 

[ உம்மால்‌அனுபவிக்க[ப்ட்ட புஷ்பம்‌, சந்தனம்‌. மாலை முதலிய 
அலங்காரங்களினால்‌ அலங்கரிக்கப்பெற்றவர்களாய்‌. (ஸம்‌ 
ஸாரத்தைத்‌) தாண்டக்கடவோம்‌.] என்றும்‌, 


“' உடுத்துக்‌ களைந்த நின்‌ பீதகவாடை உடுத்துக்கலத்த துண்டு 
தொடுத்த துழாய்மலர்‌ சூடிக்களைந்தன 
சூடுமித்தொண்டர்களோம்‌ ” என்றும்‌, 
“ அகாலம்ருத்யுறரணம்‌ ஸர்வவ்யாதி,விகாம நம்‌ | 
விஷ்ணுபாதே௱த,கம்‌ தி,வ்யம்‌ ஸிரஸா த,ரயாம்யஹம்‌ | ” 
[அகாலத்தில்‌ வரும்‌ மரணத்கைப்‌ போக்கடிப்பதாயும்‌, 
எல்லா வியா திகளையும்‌ போக்கடிப்‌ .. காயும்‌, திவ்யமாயுமுள்ள 
விஷ்ணுவினுடைய ஸ்ரீபாததிர்த்தத்தை நான்‌ தலையிலே 
தரிக்கிறேன்‌.] என்றும்‌, பகவத்ஸம்பந்தம்‌ பெற்ற தீர்த்தம்‌ 
முதலான வ ஸகலபலங்களையும்‌ அளிக்கவல்லவை என்‌ றும்‌, 
ஸ்வயம்‌ ப்ரயேோ ஜனமாயிருப்பவையென்றும்‌ பெரியோர்க 
ளால்‌ பேசப்பட்டதன்றே. 


கீழே. ஸுதரர்சநபட்டர்‌ என்னும்‌ சருதப்ரகாசிகாசாரிய 
ருடைய பாவ்யரீதியில்‌ பொருள்‌ விளக்கப்பட்டது. நாரா 
யணயதிந்த்ரர்‌. ்‌ தஇிக்ராவ்ண்ண: ” முகலான பதங்கள்‌ 
நரராயணனையே குறிப்பகாகக்கொண்டு பின்வருமாறு 
பொருளுரைப்பர்‌:-—( 5;,க்ராவ்ண்ண:) “(ஓக,ந்‌தி) ததாதி 
க்ராமதீதி த,திக்ராவா ” [(உலகங்களை) தரிப்பதும்‌. அளப்‌ 
பதும்‌ செய்ரறொாகையால்‌ த;தி,க்ரபவா என்று சொல்லப்‌ 
படுகிறான்‌] என்று பொருள்‌.  * தளதா_நாராயண:” 
[காராயணனே ( உலகங்களை ) தரிப்டவன்‌] என்றும்‌, 
“ ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸமாஸநே கார்க்கி, ஸூர்யா 
 சந்த்‌,றமஸெள வித்‌,ருதெள திஷ்ட,த:”' [இந்த அக்ஷரபூராஷனுடைய ஆஅஜஞையாலேயே ஸ£ர்யசந்திரர்கள்‌ தரித்து 
நிற்கப்படுகிறார்கள்‌.] என்றும்‌, -“ஸ தனதரார ப்ருதிவீம்‌ த்‌,யாமுதேமாம்‌ ' [அந்த பகவான்‌ கிழுலகங்களையும்‌ 
மேலுலங்களையும்‌ தரித்து நிற்கறோன்‌.] என்றும்‌, * @ 830 
விஷ்ணுர்‌ விசக்ரமே '' = ` த்ரீணி பத; விசக்ரமே” -“விசக்‌ 
ரமே ப்ருதி,வீமேஷ ग @ ¶ 0 சக்ேத்ராய விஷ்ணு: £ த்ரிர்‌ 
தேவ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ?' “ மமம்‌ நோ விஷ்ணுருருக்‌ 
ரம: '' “விஷ்ணுக்ராந்தே வஸுந்த,ரே'' என்றும்‌ உலகங்களை 
தரிப்பவனும்‌ அளப்பவனும்‌ நாராயணனே என்பதை 
வேதங்கள்‌ வீளங்கவைத்‌ கன. இவ்வர்த்தத்தையே ரிஷிகளும்‌, 
ஆம்வார்களும்‌ அநேகமான இடங்களில்‌ அருளிச்செய்தனர்‌. 
( ஜிஷ்ணோ:) உலகங்களை அளந்து பலி நமுசி முதலியவர்களை 
ஜயித்தவனாடைய. * விஷ்ணும்‌ ஜிஷ்ணும்‌ மஹாவிஷ்ணும்‌ ” 
என்‌ று ஸஹஸ்ரநாமத்தில்‌ இது பகவானுடைய நாமங்களில்‌ 
ஒன்றாகப்படிக்கப்பட்ட து. “ ஈாவிஜித்ய நிவர்த்ததே” /[ ஜயிக்‌ 
காமல்‌ திரும்பமாட்டான்‌ ]. “தம்‌ மந்யே ராக,வம்‌ வீரம்‌ ^" 
“ சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே'' --அங்குள்‌ 
யக்‌,ரேண தாந்‌ ஹங்யாம்‌ ' [என்‌ விரல்‌ நுனியாலே எ திரிகள்‌ 
அனைவரயும்‌ ஒழித்துவிடுவேன்‌.] முதலான வசனங்கள்‌ 
இங்கு அநுஸந்திக்கத்தக்கன. (அமவஸ்ய) ஸர்லவ்யாபி 
யானவனுடைய. ==" அந்தர்‌ ப,ஹிங்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய 
ஈாராயண: ஸ்தி,த: * முதலான ப்ரமாணங்களைப்‌ படிப்பது. 
(வாஜி௩:) வேகத்தையுடையவனுடைய ““ அபாணிபாதேரா 
०९. ' [கரல்‌ கைசளற்றவனாயினும்‌, வெகு வேகமாகச்‌ 
செல்பவல்‌ .] `` அநேஜதே,கம்‌ மந்ஸோ ஜவீய: [அசையாத 
தொன்றாயினும்‌, மஈஸ்ஸைக்‌ காட்டிலும்‌ வேகமாகச்‌ 
செல்வது. | என்‌ று உபநிஷத்துக்கள்‌ உரைத்தன. அன்றிக்கே, 
பக்தர்களுடைய கூக்குரல்‌ செவிப்பட்டவுடன்‌ அவர்களைக்‌ 
காக்கமிகுந்த வேகத்துடன்‌ வருபவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 


“அதந்த்ரித சமூபதிப்ரஹித ஹஸ்தமஸ்வீக்ருத 
ப்ரணீதம.ணிபாது,கம்‌ கிமிதி சாகுலாந்த:புரம்‌ | 

அவா ஹறபரிஷ்க்ரியம்‌ பதகளாஜமாரோஹத: 
கரிப்ரவரப்‌,ரும்ஹிதே ப,க,வதஸ்‌ த்வராயை நம;॥” 

[கஜேந்திராழ்வான்‌ கூக்குரலிட்டவுடன்‌, விஷ்வக்ஸே 
ருடைய கைலாகைக்‌ கவனியா தவராய்‌. கொண்டுவரப்பட்ட 
மணிபாதுகையை' ஏற்றுக்‌ கொள்ளா தவராய்‌. அந்த:புரம்‌ 
முழுவதையும்‌ “என்‌ வந்தது?” என்று கலங்கச்‌ செய்பவராய்‌. 
வாஹனாலங்காரங்களற்ற கருடாழ்வானைச்‌ சடக்கென எறி 
யருளாநிற்பவரான பகவானுடைய வேகத்தும்கு ஈமஸ்காரம்‌] 
என்றார்‌ பட்டர்‌. ( வாஜிந: ௮கார்ஷஹம்‌ ) இப்படிப்பட்ட 
பகவானுடைய ஸ்தோத்ரத்தைச்‌ செய்றேன்‌. மற்றவை 
களுக்கு முன்போலவே பொருள்‌ கொள்வது. 
ஆசார்யங்ரேஷ்டரான ஸாதர்றைபட்டர்‌ “ த,திக்‌ 
ராவ்ண்ண:” என்னும்‌ இம்மந்திரத்திற்கு மழ்ரறொரு விதமாக 
வும்‌ பொருளுரைப்பர்‌. அதற்குப்‌ பின்வருமாறு அழகாக 
ஓர்‌ அவதாரிகையும்‌ இட்டருளுவர்‌: 

“ஸர்வத்ராஸெள ஸமஸ்தஞ்ச வஸத்யத்ரேதி வை யத: । 
ததஸ்‌ ஸ வாஸுதே,வேதி வித்‌,வத்‌,பி,; பரிபட்வதே |?” 
[இவன்‌ எல்லாவற்றிலும்‌ வஸிக்கையாலும்‌. எல்லாமும்‌ 
இவனிடம்‌ வஸிக்கைய லும்‌, இவன்‌ வித்வான்‌௧ளால்‌ வாஸு 
தேவனென்று சொல்லப்டடுகிறான்‌. ] 

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | 

ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग 
[மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, 
ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து 
லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான 
தொன்றுமில்லை.] என்று பராசரர்‌ முதலானோர்‌ அருளிய 
மரு 5५1 நுளாரிகளான புராணங்களில்‌. பகவானே எல்லா 
வற்றிற்கும்‌ ஆத்மா என்பதும்‌. எல்லாப்‌ பதங்களாலும்‌ 
சொல்லப்படுமவன்‌ என்பதும்‌ ஸித்தாந்தம்‌ செய்யப்பட்ட து. 
அப்படியிருந்தபோதிலும்‌ லோகவ்யுத்பத்தியினால்‌ அப்படிப்‌ 
பட்ட ஸாவகாசத்தைப்‌ பொறுக்காதவர்களும்‌. பகவானைத்‌ 
தவிர மற்றலர்களிடத்திலிருர்து எல்லா விதத்திலும்‌ ரிவ்‌ 
ருத்தியையடைந்த வாக்கையும்‌ மன த்தைபுமுடையவர்களும்‌, 
அபர்யவஸா௩ வ்ருத்தியினால்‌ பகவானையே சொல்லுகின்றன 
வானாலும்‌. சப்தங்கள்‌ பெரிய புருஷார்த்தத்தை உண்டாக்‌ 
காது என்று ' நினைத்துக்கொண்‌ டிருப்பவர்களும்‌, ஸ்கந்த 
முகுந்தாப்தங்களைச்‌ சொன்னாலும்‌ ஒரேபொருளே தோற்று 
கிறது என்று ஒப்புக்கொள்ளுமவர்களுமாகிய சிலர்‌ தங்க 
ளுடைய மநஸ்ஸந்துஷ்டிக்காகப்‌ பின்வருமாறு பொருள்‌ 
கொள்ளுகிறார்கள்‌; அப்படியே 

'“யந்காம கீர்த்தகம்‌ ப,க்த்யா விலாயநம நுத்தமம்‌ | 
மைத்ரேயாகி,லபாபாஈாம்‌ த௱தூநாமிவ பாவக: ॥” 

[ மைத்ரேயரே! எவனுடைய நாமத்தை பக்தியுடன்‌ சீர்த்‌ 
கனம்‌ செய்வது, எல்லாப்பரபங்களையும்‌. தாதுக்களைக்‌ 
கொளுத்தும்‌ நெருப்புபோலே ஈசிக்கச்செய்கறதோ.....] 
என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும்‌. ५ । 

“ஸஹாங்கேத்யம்‌ பாரிஹாஸ்யஞ்ச ஸ்தோப,ம்‌ ஹேளநகமேவ வா | 
வைகுண்ட ாமக்‌,ரஹணம்‌ அமோஷாக,ஹரம்‌ விது;: ॥ '" 

[ ஸங்கேதத்திற்காகவாவது. பரிஹாஸத்திற்காகவாவ து, 

அர்த்தமில்லாமலாவ து. சிரிப்பு மூட்டுவதற்காகவாவது 

பகவா னுடைய திருநா மத்தைச்‌ சொல்லுவது எல்லாப்‌ பாடங்‌ 

களையும்‌ போக்கடிக்குமென்று அறிகிறாோர்கள்‌.] என்றும்‌, 
{ ^ 
“அயம்‌ ஹி க்ருதநிர்வேமே ஐஜந்மகோட்யம்‌ ஹஸாமபி | 
யத்‌,வ்யாஜஹார விவரமே நாம ஸ்வஸ்த்யயகம்‌ ஹரே: |” 
ई 
[ ஹரியினுடைய மங்களகரமான நாமத்தை இவன்‌ பரவச 
கைச்‌ சொன்ன காரணத்தினால்‌ கோடிக்கணக்கான பிறப்பு 
களில்‌ செய்த பாபங்களுக்கும்‌ ` இவன்‌ ப்ராயச்‌சித்தம்‌ 
செய்தவனானான்‌.] என்றும்‌ ஸ்ரீபாகவதத்திலும்‌, 

“நாமஸங்கீர்த்தநாத்‌, யஸ்ய பாபமந்யைருபத்‌,ருதை: | 

ஸமம்‌ விநாமுமாயாந்தி தேவ: கேோப்‌,யதி,கஸ்‌ தத: ॥ 
[எவனுடைய திருநாமத்தைச்‌ சொல்லுவ தினலேயே எல்லா 
உபத்ரவங்களும்‌ பாய்ங்களும்‌ ஓரே காலத்தில்‌ விநாசத்தை 
அடைகின்‌றனவோ, அவனைக்காட்டி லும்‌ மலான 
கேவன்‌ யார்‌?] + 

“நர௩ம்‌ தத்‌ கண்டமமாலூகம்‌ அத,வாப்யுபஜிஹ்விகா | 
ரோகே;ா வரந்யோ ந ஸா ஜிஹ்வா யா ௩ வக்தி 
ஹரேர்கு,ணார்‌ ॥” 
[எந்த நாக்கு ஹரியினுடைய குணங்களைச்‌ சொல்லுவ 
தில்ல்யோ, அது கழுத்தில்‌ முளைத்ததோர்‌ மாம்ஸபீண்ட்‌ 
மாகவோ, உள்நாக்கைப்போன்றகொரு (பயனற்ற) வஸ்து 
வாகவோ. வியா தியாகவே கொள்ளத்தக்கது. ] 

“ஸக்ருது,ச்சரிதம்‌ யே ஹரிரித்யக்ஷரத்‌;வயம்‌ 1 

(15558,; டரிகரஸ்தேக மோக்ஷாய க,ம௩ம்‌ ப்ரதி॥” 
[எவனால்‌ 'ஹரி' என்னும்‌ இவ்வீரண்டெழுக்துக்களும்‌ ஒரு 
தடவை உச்சரிக்கப்பட்டதோ. அவன்‌ மோக்ஷத்தை அடை 
வதற்கு ஸாதனங்களைச்‌ செய்துவிட்டான்‌. 


“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி 

நித்யமா: | 
ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |" 
[க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை 
எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து 
கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி 
லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி 
லும்‌ சொல்லப்படுகின்‌ றது. ஆகையால்‌, இம்மந்திரத்தின்‌ 
அக்ஷரங்கள்‌ பகவானையே முக்யமாகச்‌ சொல்லுகன்‌ றன 
என்று கொண்டு மந்த்ராகூரங்களை வியாக்கயானம்‌ 
செய்கிறோம்‌. 

(த;திக்ராவ்ண்ண:) தயிர்‌ வெண்ணை முதலியவைகளுக்‌ 
காதத்‌ தன்னைக்கொடுப்பவனுக்கு என்று பொருள்‌. 

“சூட்டு ஈன்மாலைகள்‌ தூயனவேந்திவிண்ணோர்கள்‌ ஈன்னீர்‌ 
ஆட்டி அந்தூபம்‌ தராநிற்கவே. அங்கோர்‌ மாயையினால்‌ 

ஈட்டிய வெண்ணெய்‌ தொடுவுண்ணப்‌ போர்து”' 
என்‌கிறப்டியே நித்யஸூரிகளுடன்‌ என்றும்‌ அனுபவித்துக்‌ 
கொண்டிருக்கும்‌ அநுபவத்தையும்‌ ஒரு பொருட்டாக மதி 
யாமல்‌. ஆய்ச்சிகள்‌ வைத்திருக்கும்‌ வெண்ணையை விழுங்கு 
வதற்கன்றோே அவன்‌ இங்கு அவதரித்தது. =" இமையோர்‌ 
தமக்கும்‌—நெஞ்சால்‌ நினைப்பரிதால்‌ வெண்ணையூண்‌ என்னும்‌ 
ஈனச்சொல்லே '' என்று நிக்யஸுூரிகளும்‌ மயங்கும்‌ இச்‌ 
செயலிலே வேதபுருஷன்‌ ஈடுபடுகிறான்‌. (ததிக்ராவ்ண்ண;) 
“ டு,க்ரீங்‌-_த்‌,ரவ்யவிகிமயே '' என்கிற தாதுவிலே நிஷ்பன்ன 
மான "5554500 47" என்னும்‌ சப்தம்‌ தன்னை ஆய்ச்சியருக்கு 
அறுபவிக்கக்‌ கொடுத்து. அவர்களுடைய தயிரை வாங்கு 
பவன்‌ என்று பொருள்படுகறெது. இங்கு தயிரைச்‌ சொன்‌ 
னது வெண்ணெய்‌. முதலான எல்லாவற்றுக்கும்‌ உபலக்ஷணம்‌. 


(வாஜிந: அ ங்வஸ்‌் ய ஜிஷ்ணோ:) வேகத்தையுடைய 
குதிரை உருவாக வந்த அஸுரனை ஓயிக்தவனுக்கு (० @ 5: 
மிகுந்த வேகத்தையுடையவன்‌.  கம்ஸனால்‌ ஏவப்பட்டுக்‌ 
கண்ணனைக்‌ கொல்வதற்காகக்‌ குதிரையுருவங்கொண்டு 
மநோவேகத்துடன்‌ வந்தானன்றோே இவன்‌. 


“ கேயீ து கம்ஸப்ரஹித: கு,ரைர்‌ மஹீம்‌ 
மநோஜவோ நிர்ஜரயந்‌ மஹாஹய:.! 

ஸடாவதூ,தாப்‌,ர விமாநஸங்குலம்‌ 
குர்வந்நபேர ஹஷிதபீ,ஷிதாகில: ॥'' 


[ கம்ஸனால்‌ அனுப்பப்பட்ட கேசி என்னும்‌ அஸுுரன்‌ டெரிய 


குதிரை வடிவங்கொண்டவனாய்‌, மநேோவேகத்தையுடைய 
வனாய்‌. குளம்புகளால்‌ பூமியைப்‌ பிளப்பவனாய்‌. பிடரி 
மயீரை ஆகாசத்திலுள்ள மேகங்களும்‌. தேவவிமானங்களும்‌ 
நிலைகுலையும்படி உ'கறுமவனாய்‌, யாவரும்‌ பயமடையும்படிக்‌ 
கனைப்பவனாய்த்‌ தோன்‌ நினான்‌. ] என்றும்‌. 


“ஹ்‌ தம்‌ நிரும்யாபிமுகேர முகே,ந கம்‌ 
பிபந்நிவாப்‌ யத்‌,ரவத,த்யமர்ஜண: | 

2547 பத்‌;ப்யாம்‌ அரவிந்தலோசநம்‌ 
துராஸதலு சண்ட,ஜவோ துரத்யய: | ” 


[அப்படிக்‌ கண்ணன்‌ கர்ஜித்ககைக்‌ கேட்ட அவ்வஸாரன்‌. 
ஆகாயத்தை  விழுங்கிவிடுபவன்போல்‌ வாயைப்பீளந்து 
கொண்டு, மிகக்கோபத்துடன்‌ எதிர்த்து ஓடினான்‌. மிகுந்த 
வேகத்தை உடையவனாய்‌, ஒருவராலும்‌ ஜயிக்கமுடியா த 
வனான அவ்வஸாுரன்தாமரைக்‌ கண்ணனைக்‌ கால்களாலே 
உதைத்தான்‌.] என்றும்‌ ஸ்ரீபாகவதத்திலும்‌. 


“ஸ்‌ குளக்தபூப்ருஷ்டூஸ்‌ ஸடாக்பேது, தாம்பு | 
த்‌,ருதவிக்ராந்த சந்த்‌,ரார்க்கமார்க்கேர கே௱பாநுபாத்ரவத்‌ ||?” 


[ ௮வ்வஸுரன்‌ தன்‌ குளம்புகளால்‌ பூமிப்பரப்பைப்‌ பீளந்து 
கொண்டும்‌. பிடரிமயிரை உயர்த்துவதால்‌ மேகங்களைக்‌ 
கலைத்‌. துக்கொண்டும்‌. தன்‌ வேகத்தால்‌ சந்த்ரஸ9ர்யர்களு 
டைய மார்க்கத்தை அளந்து கொண்டும்‌. இடையர்களை 
நோக்கி ஓடிவந்தான்‌.] என்று ஸ்ரீவிஷ்ணுபுராணச்திலும்‌ 
இவனுடைய வேகம்‌ சொல்லப்பட்டத்‌. திருமங்கயைமழ்‌ 
வாரும்‌ “பதமிகுபரி'' என்றும்‌. * ஆடல்‌ நன்மாவுடைக்கு ' 
என்றும்‌ அருளிச்செய்தார்‌, ( அங்வஸ்ய ஜிஷ்ணோ:) குதிரை 


யுருவங்கொண்டு வாயைப்‌ பிளந்து வந்த அவன்‌ வாயிலே 
தன்‌ கையை நுழைத்து, அவனுடைய வாயைக்‌ கிழியச்‌ செய்து. அவனை அழித்தவனுக்கு. 

“ஸமேதமாநேந ஸ்‌ க்ருஷ்ணப,ஹாநா 

நிருத்‌,த,வாயுங்‌ சரணாம்ங்ச விக்ஷிபந்‌ | 
ப்ரஸ்விந்நக,த்ர: பரிவருத்தலோச௩: ' 

பபாத லம்பம்‌ விஸ்ருஜந்‌ க்கிதெள வ்யஸ-: || ” 
[கிருஷ்ணனுடைய வளர்ந்துகொண்டுவரும்‌ கையினால்‌ 
மூச்சடங்கப்பெற்றவனாய்‌. கால்களை உதைத்துக்கொண்டு: 
உடல்‌ வியர்த்துக்‌ கண்கள்‌ பிதுங்கப்பெற்றவனாய்‌. மலங்‌ 
கழித்துக்கொண்டு பூமியில்‌ உயிர்நீங்கி விழுந்தான்‌ ] என்று 
ஸ்ரீபாகவதத்தில்‌ இவனை அழித்த வழி சொல்லப்பட்டது. 
(ஜிஷ்ணோ;) ஐயசலனானவனுக்கு.  * விஷ்ணும்‌ ஜிஷ்ணும்‌ ” 
என்று இந்நாமம்‌ விஷ்ணுவையே குறிக்கறதென்பதை 
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்‌ வியாஸர்‌ விளக்யெருளினார்‌. 
கேசியை ஜயித்து. அச்செயலாலே கேகே டகேோபிகளை 
எழுதிக்கொண்டிருப்பவனன்றோே இவன்‌. 


“யஸ்மாத்‌ த்வயைவ துஷ்டாத்மா ஹத: கேம ஜநார்த்த,௩ | 

தஸ்மாத்‌ கேரமவநாம்௩ா த்வம்‌ லோகே க்‌,யாதோ ட,விஷ்யஸி॥!” 
[ஜார்த்தனனை! தஷ்டனான கேசி உன்னாலேயே கொல்‌ 
லப்பட்டானாகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ பெயரால்‌, 
உலகில்‌ கியா தியடையட்போகேறாோய்‌.] என்று நாரதர்‌ 
சொன்னடடியே கேசவநாமத்திற்கு இதுவும்‌ ஒரு பொரு 
ளன்றோ. "" த;திஃ்ராவ்ண்ண: '' என்கையால்‌, ஆங்ரிதர்‌ 
களுடைய தீரவ்யத்கையே தாரகமாகக்‌ கொண்டிருக்கும்‌ 
தன்மையும்‌, “' ஜிஜ்னோரங்வஸ்ய '' என்கையால்‌ அவர்‌ 
களுடைய விரோ.இிகளை நிரஸிக்கும்‌ தன்மையும்‌ சொல்லப்‌ 
படுகின்றன. (அகார்ஷம்‌) அவனிடம்‌ ஆத்மஸமர்ப்பணம்‌ 
செய்கேன்‌. யற்றவை முன்போல்‌. 


அர்க்ய ப்ரத,ரநம்‌ 


அடுத்தபடியாக, இரண்டு கைகளிலும்‌ ஜலத்தை 
எடுத்துக்கொண்டு. “ஓம்‌ பூர்‌ பு,வஸ்‌ ஸுஃவ:....தியோ யோ 
ந: ப்ரசேதயாத்‌ ” என்னும்‌ காயத்ரீமந்த்ரத்தை உச்சரித்‌ அக்கொண்டு. ஸூர்யனை நோக்கி ஜலத்கை உயர எறிய 
வேண்டும்‌. இந்த அர்க்யப்ரதானத்தைட்பற்றி ஸ்ருதி 
ஸ்ம்ருதிகளில்‌ ஓர்‌ இதிஹாஸமுண்டு. மந்தேஹர்‌ என்னும்‌ 
பெயர்‌ கொண்ட ராக்ஷஸர்‌ சிலர்‌ ஸந்த்யாகாலத்திலே 
ஸூர்யனுடைய ரதத்தைச்‌ சுற்றிக்கொண்டு. அவனோடே 
பெருத்த யுத்தம்‌ பண்ணி அவனைக்‌ கொல்ல முயற்சிப்‌ 
பார்கள்‌. அப்போது காயதீரியினால்‌ அபிமர்ச்ரிக்கப்பட்ட 
ஐலத்தை ப்ராஹ்மணர்கள்‌ அர்க்யரூபமாக உயர எறிவார்‌ 
கள்‌. அந்த அர்க்ய சக்தியாலே ஆதித்ய மண்டலத்திலே 
ஓர்‌ அக்னியானது ஜ்வலித்துக்கொண்டு தோன்றும்‌. மந்‌ 
மதஹர்கள்‌ அவ்வக்கனியிலே விழுந்து அழிந்துபோவர்கள்‌. 
இந்த அர்க்யஜலமே வஜ்ரமாய்‌ நின்று அந்க ராக்ஷஸர்களை 
அழியச்செய்யும்‌ என்றும்‌ சொல்லுவர்கள்‌. இவ்விருத்தாந்தம்‌, 


“ ததுஹ வா ஏதே ப்ஏரஹ்மவாதி,ந: பூர்வாபி முகா: 

ஸந்த்‌,யாயாம்‌ கயத்ர்யபிமந்த்ரிதா ஆப ஊர்த்‌,வம்‌ விக்ஷிபந்தி | தா 
ஏதா ஆபோ வஜ்ரீபூ,த்வா தா௩ி ரக்ஷாம்ஸி மத்தே,ஹாருணே த்வீபே 
ப்ரக்ஷிபந்தி || ” 
[இந்த ப்ரஹ்மவாதிகள்‌ ழக்கு திக்கை நோக்கி நின்று, 
ஸந்த்யாகாலத்தில்‌ காயத்ரியினால்‌ அபிமந்த்ரிக்கப்பட்ட 
ஐலத்தை உயர எறிகிறார்கள்‌. அந்த ஜலம்‌ வஜ்ரமாக ஆகி 
அந்த ராக்ஷஸர்களை மந்தகேஹோாருணம்‌ என்னும்‌ திவில்‌ 
எறிந்து விடும்‌. ] என்று வேதத்தில்‌ உத்கோவிக்கப்பட்ட த. 


^" ஸந்த்‌,யாகாலே து ஸம்ப்ராப்தே ரெளத்‌,ரே பரமதளருணே | 

மந்தே;ஹா ராக்ணஸா கேளராஸ்‌ ஸ£9ர்வ்மிச்ச,ந்தி க, தி, தும்‌।| 

ப்ரஜாபதிக்ருத: कणा) தேஷாம்‌ மைத்ரேய ரக்ஷஸாம்‌ | 

அக்ஷயத்வம்‌ ஸுரீராணாம்‌ மரணஞ்ச ®, தி,நே ॥ 

ததஸ்‌ ஸ9ர்யஸ்ய தேஷாம்‌ வை யுத்‌,த,மாஸீத்‌ 
ஸாுதளருணம்‌ | 

ததோ த்‌,விஜோத்தமாஸ்‌ தோயமுத்க்ஷிபந்தி மஹாமுகே ॥ 

ஓங்கார ப்‌,ரஹ்மஸம்யுக்தம்‌ काप ध சாபிமந்த்ரிதம்‌ | 
தேந தஹ்யந்தி தே பாபா வஜ்ரபூ,தேக வாரிணா | 
ஒங்காரோ பகவாந்‌ விஷ்ணுஸ்‌ த்ரித,ம்ர வசஸாம்‌ பதி: ) 
தது,ச்சாரணதஸ்‌ தேது விநாமமம்‌ யாந்தி ராக்ஷஸா: || 
பவைஷ்ணவோ5ம்மு: பரஸ்‌ ஸூர்யோ யோ5ந்தர்ஜ்யோதி ரஸம்ப்லவம்‌ ! 
அபி,த,ாயக ஓங்காரஸ்‌ தஸ்ய தத்ப்ரேரக: பர: | 
தேக ஸம்ப்ரேரிதம்‌ ஜ்யோதிரோங்காரேணாத, தீ,ப்திமத்‌ ॥ 
த,ஹத்யமோஷரக்ஷாம்ஸி மந்தேஹாக்‌,யாந்யக,ாஙி வை | 
தஸ்மாந்நோல்லங்க,நம்‌ கார்யம்‌ ஸந்த்‌,யோபாஸநகர்மண: । 
ஸ ஹந்தி ஸூர்யம்‌ ஸந்த்‌,யாயா கோபாஸ்திம்‌ குருதே து ய:॥ 
தத: ப்ரயாதி ப,க,வாந்‌ ப்‌,ராஹ்மணைரபி,ரக்ஷித: । 
வாலகில்யாதிபிமசைவ ஐக;த: பாலநோத்யத: ||” 


[மிகவும்‌ பயங்கரமான ஸந்த்யாகாலம்‌ வந்தவுடன்‌. கோர 
ரூபர்களான மந்தேஹரென்னும்‌ ராக்ஷஸர்கள்‌ ஸூர்யனை 
வீழுங்க விரும்புகின்‌ றனர்‌. மைத்ரேயரே! அர்க ராக்ஷஸர்‌ 
களுடைய சரீரங்கள்‌ அழியா தவையென்றும்‌. திலந்தோறும்‌ 
அவர்களுக்கு மரணமுண்டாகுமென்‌ றும்‌ ப்ரஹ்மாவால்‌ ஒரு 
சாபம்‌ கொடுக்கப்டட்டிருக்கற.து. ஆகையால்‌ ஸூர்யனுக்கும்‌ 
அவர்களுக்கும்‌ மிகவும்‌ டயங்கரமான யுத்தம்‌ உண்டாகிறது. 
மஹாமுனிவரே! அவ்வேளையில்‌ த்‌,விஐங்ரேஷ்டர்கள்‌ ஓங்‌ 
காரத்தடனும்‌.வ்யா ஹ்ருதி ப்ரஹ்மத்தடனும்கூடிய காயத்ரி 
யினால்‌ அபிமந்த்ரணம்‌ செய்யப்பட்டதான ஜலத்தை உயர 
வெறிகிறார்கள்‌. வஜ்ரமாக மாறின அந்த ஜலத்தால்‌ அந்தப்‌ 
பாபிகள்‌ தஹிக்கப்படுகிறார்கள்‌. 'பூர்பு,வஸ்ஸுவ:” என்னும்‌ 
மூன்‌ று வ்யாஹ்ருதிகளையும்‌ இருப்பிடமாகக்‌ கொண்டவரும்‌, 
வேதத்துக்கு ப்ரதிபா 58५1 ८2 ஒங்கா ரஸ்வருபியுமாயிருப்பவர்‌ 
பகவான்‌ விஷ்ணு. அதை உச்சரிப்பதால்‌ அந்த ராக்ஷ்ஸர்‌ 
கள்‌ 60575550 5 அடை றோர்கள்‌. ஸுூர்யனுக்குள்ளிருக்கும்‌ 
நிர்விகாரமான சோதியைச்‌ சொல்லுவது ஓங்காரம்‌. அது 
அந்த ஸுூர்யனை (பலிஷ்டனாகும்படி ) தூண்டுகிறது. அந்த 
ஓங்காரத்தினால்‌ தூண்டப்பட்ட ஸூர்யனாிற சோதி 
மிகவும்‌ பிரகாசத்கையுடையதாய்‌, மந்தேஹரென்னும்‌ 
பெயர்கொண்ட பாாபிகளான அரக்கர்‌ அனைவரையும்‌ எரித்து 
விடுகிறது. ஆகையால்‌ ஸந்த்‌யோபாஸனகர்மத்தை விடக்‌ 
கூடாது. எ வனொருவன்‌ ஸரந்த்‌யோபாஸனம்‌ செய்யவில்லையோ, 
அவன்‌ ஸூர்யனைக்‌ கொன்றவனாகிறான்‌. ( இம்மா திரியாக 
ப்ராஹ்மணர்களா லும்‌. வாலகில்யர்கள்‌ முதலான மஹர்ஷி 
களாலும்‌ ரக்ஷிக்கப்பட்ட ஸூர்யன்‌. உலகத்தைக்காப்பா ற்று . 
வதில்‌ முயற்சியுடையவனாய்ச்‌ செல்ன்றான்‌.] என்று 
வீஷ்ணுபுராணத்திலும்‌ (2-68) இவ்வீருத்தாந்கம்‌ விரிவாக 
வர்ணிககடபட்டது. “ ப்ரஜாபதிக்ருத: ஸாப:'' என்று 
இங்கு சொல்லப்பட்ட சரபம்‌, 


“ரக்ஷாம்ஸி வா புரோ5நுவாகே தபோக்ரமதிஷ்ட;ந்த| தாந்‌ 
ப்ரஜாபதிர்‌ வரேமணாோபாமந்த்ரயத | தரநி வரமவ்ருணீதா- 
தி,த்யோ நோ யோத்‌,தா இதி| தாந்‌ ப்ரஜாபதிரப்பவீத்‌, 
'யோதயத்‌ வம்‌ ॥ "` ॥ 
[ராக்ஷஸர்கள்‌ சிலர்‌ உக்ரமான தபஸ்ஸைச்செய்கனர்‌. அவர்‌ 
களைப்‌ பிரமம்‌ வரம்‌: வேண்டும்படி கேட்டார்‌. அவர்கள்‌ 
"` ஆதித்யன்‌ எங்களுடன்‌ சண்டை செய்யவேண்டும்‌ '' 
எனனும்‌ வரநகை வரித்தனர்‌. ப்ரஜாபதியும்‌ “ அப்படியே 
ஆதித்யனுடன்‌ சண்டை செய்யுங்கள்‌ ” என்று கூறினர்‌. ] 
என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. வரமாகக்கொடுக்கப்‌ 
பட்டடோதிலும்‌ துக்கரூபமாயிருப்பதரல்‌ பராசரர்‌ இகை 
சாபமென்றார்‌. 

“எரிகொள்‌ செந்நாயிறிரண்டுடனே உதயம்‌ மலைவாய்‌ 
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான்‌ கண்கள்‌ மீண்டவற்றுள்‌ 
எரிகொள்‌ செந்த வீழ்‌ அசுரரைப்‌ போல”? என்னும்‌ 
திருவிருத்தப்‌ பாட்டிலே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ 


` மர்தேஹவ்ருத்தாந்தத்தை உணர்த்‌ இயருளீனார்‌. , ங்ருதி 
ஸ்ம்ருதிகளில்‌ மந்தேஹர்களை ராக்ஷஸர்கள்‌ என்‌ று சொல்லி 
யிருக்க, ஆழ்வார்‌. செந்தீ வீழசுரர்‌ "“ என்று அவர்களை 
அசுரர்களாகச்‌ சொல்லலாமோவெனில்‌; - ஆஸாரீம்‌ யோரி 
மாபந்நா:'' என்று பகவத்‌விமுகஷர்கள்‌ அனைவரையும்‌ 
வஅஸாரர்கள்‌ என்று சொல்லும்‌ கணக்கிலே இங்கு ஆழ்வார்‌ 
அருளியதாகக்‌ கொள்ளலாம்‌. 


“தானவனாகம்‌ தரணியில்‌ புரளத்‌ 
தடஞ்சிலை குனித்த எம்‌ தலைவன்‌ › என்றும்‌, 
“தையலாள்‌ மேல்‌ காகல்‌ செய்த தானவன்‌ வாளரக்கன்‌” 
அன்றும்‌ திருமங்கையாழ்வாரும்‌ ராகஷஸனான ராவணனைக்‌ 
குறித்து அஸரபதடர்யாயமான ऽ 7 5 ०/ = ८ क ॐ @ 5 ८५ 
பிரயோகத்தாரன்றோ. நிற்க; காலையிலும்‌, மாலையிலும்‌ 
மூன்று தடவையும்‌, மத்யாஹ்நத்தில்‌ இரண்டு தடவையம்‌ 
அர்க்யப்ரதரனம்‌ செய்வது வழக்கம்‌. கரலங்கடகந்து 
ஸந்த்யாவந்தடம்‌ செய்சகால்‌. அதற்கு ப்ராயங்சித்தமாக 
ப்ராணாயாம பூர்வகமாக ஒரு அர்க்யப்ரதாநப்‌ செய்ய வேண்டும்‌. 


அதற்குப்‌ பிறகு “ஓம்‌ பூர்புவஸ்‌ ஸுவ:'' என்று 
ஜலத்தைக்கைக்கொண்டு தன்‌ கலையை ப்ரதக்ஷிணமாகச்‌ 
சுற்றி, “அஸாவாதி,த்யோ ப்ரஹ்ம'' [ஆதித்யாந்தர்யாமியா 
யிருக்கும்‌ இவனே ப்ரஹ்மம்‌] என்று தன்‌ ஹ்ருதயப்ர 
தேசத்தில்‌ இரண்டு கைகளையும்‌ வைத்துக்கொண்டு கூறி, 
"ॐ ८०6५0 தர்ப்பயாமி, ஈரராயணம்‌ தர்ப்பயாமி.மாத,வம்‌ தர்ப்ப 
யாமி,கேளவிந்த,ம்‌ தர்ப்பயாமி,விஷ்ணும்‌ தர்ப்பயாமி, து,ஸ9த, 
ஈம்‌ தர்ப்பயாமி. த்ரிவிக்ரமம்‌ தர்ப்யயாமி. வாமநம்‌ தர்ப்பயாமி, 
ஸ்மீத,ரம்‌ தர்ப்பயாமி, ஹ்ருவீகேமமம்‌ தர்ப்பயாமி. பத்‌,மநாப,ம்‌ 
தர்ப்பயாமி. தளாமோதரம்‌ தர்ப்பயாமி”'என்‌ று த்வா தசா தித்யர்‌ 
களுக்கும்‌ அர்தர்யாமியான அச்யுதனுக்குத்‌ தண்ணீரால்‌ 
தர்ப்பணம்‌ செய்யவேண்டும்‌. இந்த த்வாதசநாமங்களின்‌ 
பொருட்டெருமைகளை முன்னமே மிக விஸ்தரரமாக விவரித்‌ இருக்கிறோம்‌. இப்படித்‌ தர்ப்பணம்‌ செய்து, ஆசமனம்‌ 
பண்ணி, ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து”' என்‌ று பகவதர்ப்பணம்‌ 
செய்யவேண்டும்‌. இதவரையில்‌ செய்தது ஜலபாகமாகும்‌, 
இனி ஜபபாகத்தை விவரிப்போம்‌. 


ஐபம்‌ செய்யும்‌ முறை 

“பூர்வாம்‌ ஸந்த்யாம்‌ ஐபம்ஸ்திஷ்ட்டே,த்‌ 

ஸாவித்ரீமார்க்கத;ர்ஸ௩ாத்‌ | 
41008401 ¢ து ஸமாஸீக: ஸம்யக்ருக்ஷ்விப,ாவநாத்‌ || `" [மது 2-101] 

[ஸூயனைக்‌ காணும வரையில்‌ காலை ஸந்க்யையில்‌ நின்று 
கொண்டே ஜபம்‌ செய்யவேண்டும்‌: மாலை ஸந்த்யையில்‌ 
நக்ஷத்திரங்களைக்‌ காணும்‌ வரையில்‌ உட்கார்ந்துகொண்டே 
ஜபம்‌ செய்யவேண்டியது.] என்கற மநுவசனத்தின்படி 
ஜனநெருக்கமற்ற ஏகாந்தமான இடத்திலே காலையில்‌ நின்று 
கொண்டும்‌, மாலையில்‌ உட்கார்ந்து கொண்டும்‌ ஜபம்‌ 
செய்யவேண்டும்‌. மாத்ய/ஹ்நிகத்தில்‌ வெட்டவெளியில்‌ 
ஜபம்செய்தால்‌ நின்று கொண்டும்‌. இல்லாவீடில்‌ உட்கார்ந்து 
கொண்டும்‌ ஜபம்‌ செய்யவேண்டும்‌. பகவத்‌ ஸந்நிதியில்‌ ஜபம்‌ 
செய்வது விசேஷமானது. இப்படி இருந்து கொண்டு 
மூன்‌ று ப்ராணாயாமங்கள்‌ செய்யவேண்டும்‌, அதாவ க: ஓம்‌ 
ஸூ ஓம்‌ (1460: .. அம்ருதம்‌ ப்முஹ்ம பூர்புவஸ்‌ ஸுவரோம்‌'' 
என்னும்‌ மந்திரத்தை ரேசகம்‌. பூரசும்‌ கும்பகம்‌ [காற்றை 
வெளிவிடுவது. உள்ளிழுப்பது. உள்ளே நிறுத்துவது] 
ஆகிய விதிகளுடன்‌ செய்யவேண்டும்‌. இந்க ப்ராணாயாம 
மந்திரத்தின்‌ அர்த்சகத்தை முன்னமே விவரித்திருக்கிறோம்‌. 
இம்மந்திரத்தின்‌ ருஷி. சந்தஸ்‌. கேவகதைகளைப்‌ பீன்‌ 
வருமாறு அதநுஸந்தித்துக்கொண்டு பிறகு ப்ராணாயாமம்‌ 
செய்யவேண்டும்‌. 


ப்ரணவஸ்ய ரிஷிர்‌ ப்‌,ரஹ்மா. தேவீ ऊना ச,ந்த, 
பரமாத்மா தேவதா பூ,ராதி, ஸப்த வ்யாஹ்ருதீநாம்‌ 
அத்ரி ப்‌ ருகு, குத்ஸ வஸிஷ்ட, கெளதம காங்யபாங்கிரஸ 
ரிஷய: காயத்ரீ உஷ்ணிக்‌ அ நுஷ்டுப்‌ ப்‌, ரஹ பங்க்‌தத்ரிஷ்டுப்‌ 
ஐக,த்ய: ச,ந்தளம்ஸி. अक्षी வாயவர்க்க வர்சீலமு 
வருணேந்த்‌,ர விங்வேதே,வா தேவதா: | களயத்ர்யா: விஸ்‌ 
வாமித்ர ரிஷி: தேவீ களயத்ரீ சந்த, ஸவிதா தேவதா | 
களயத்ரீஙிரஸ: ப்ரஹ்மா ரிஷி:, அறநுஷ்டுப்‌ ச,ந்த,: பரமாத்மா 
தே,வதா ॥ 

[ப்ரணவத்திற்கு ரிஷி ப்ரஹ்மா; காயத்ரீ சந்தஸ்‌; பரமாத்மா 
தேவலை. ` பூ: புவ: முதலிய ஏழு வியாஹ்ரு திகளுக்கும்‌ 
முறையே அத்ரி, ப்ருகு, குத்ஸர்‌, வஸிஷ்டர்‌, கெளதமர்‌: 
காம்யபர்‌, ஆங்ரெஸ்‌ ஆகிய இவர்கள்‌ ரிஷிகள்‌; காயத்ரி: 
உஷ்ணிக்‌. அறுஷ்டுப்‌. ப. ருஹதீ. பங்க்தி. த்ரிஷ்டுப்‌, ஜக,8ீ 
ஆகிய இவைகள்‌ சநத்ஸ்ஸாுகள்‌; அக்நி. வாயு, ஸூர்யன்‌. 
ப்ருஹஸ்பதி, வருணன்‌. இந்திரன்‌, விங்வேதேவாகள்‌ 
தேவதைகள்‌. காயத்ரிக்கு வீஸ்வாமித்ரர்‌ ரிஷி; காயச்ரி 
சந்தஸ்ஸாுு; 6769 50 தவ 2 த. காயத்ரீரெஸ்ஸுக்கு 
ப்ரஹ்மா ரிஷி; அதநுஷ்டுப்சந்தஸ்‌; பரமாத்மா சவதை.] 


ங்ருதப்ரகாமிகாசார்யர்‌. பூரா தி,ஸ்ப்தவ்யா ஹ்ருதி 
களுக்கும்‌ வாம்தேவர்‌ ரிஷி, காயத்ரீ சந்தஸ்ஸுஃ ட்ரஹ்மா 
தேவதை என்றும்‌ சிலருடைய அபிப்ராயமாக அருளிச்‌ 
செய்வர்‌. ரிஷியைத்‌ தலையிலும்‌. சந்தஸ்லை முகத்திலும்‌, 
தேவதையைணஹ்ருதயத்திலும்‌ தொட்டு தியானிக்கவேண்டும்‌, 
பிறகு முற்கூறியவாறு மூன்று ப்ராணாயாமம்‌ செய்து 
மறுபடியும்‌, ஒம்‌ பூ: “என்று தொடங்கி ப்ராணாயாம 
மந்திரத்தைப்படித்து. * பகவதரஜ்ஞயா ப,கவத்கைங்கர்ய 
ரூபம்‌ கரயத்ரீமஹாமந்த்ரஜபம்‌ கரிஷ்யே ' [பகவானுடைய 
ஆஜ்ஞையால்‌, =` பகவானுக்குக்‌  கைங்கர்யரூடமாயிருக்கும்‌ 
காயத்ரீமஹாமந்த்ர , ஜபத்தைச்‌ செய்கிறேன்‌.] என்று 
ஸங்கல்பித்துக்கொண்டு பின்வரும்‌ மந்திரங்களால்‌ ஸ்ரீம்‌ 
நாராயணனை அழைப்பதற்காக காயத்ரீ தேவீயை அழைக்க 
வேண்டும்‌; । । 


आयातु वरदा देऽ्यश्चरं ब्रह्मसंमितम्‌। गायत्रीं छन्दसां मातेदं ब्रह्म 
जुष्ख नः॥ ओजोऽसि सदे ऽसि aOR श्राजोऽसि देवानां घाम नामासि। 
विश्वमसि विश्वायुः qd सर्वायुः अभिभूरेम्‌ गायलीमावाहयामि ॥ 


ஆயாது வரதா தேவீ அக்ஷரம்‌ ப்‌,ரஹ்மஸம்மிதம்‌ | 
காயத்ரீம்‌ ச,ந்த,ஸாம்‌ மாதேதம்‌ ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந: ॥ 
ஓஜோஸி ஸஹோஸி ப;,லமஸி ப்‌,ராஜோஸி தே,வாநாம்‌ தம 
நாமாஸி। விங்வமஸி விங்வாயு: ஸர்வமஸி ஸர்வரயுரபி, 
பூரோம்‌ களயத்ரீமாவாஹயாமி ॥ 


“* யாது” என்று தெடங்கி --ஜுஷஸ்வ 5: என்று 
முடியும்‌ மந்திரத்திற்கு வரமதேவர்‌ ரிஷி; அறுஷ்டுப்‌. 
௪ந்தஸ்ஸு;லக்ஷ்மீநரராயணனாவது காயத்ரியாவ து தேவதை, 
“ ஓஜோ$ஸி?' என்கிற மந்திரக்திற்கு ப்ரஜாபதி ரிஷி; 
பங்கதி சூர்தஸ்ஸ; பரப்ஸுஹ்மம்‌ தேவதை. இவ்விரண்டு 
மந்திரங்களுக்கும்‌ காயத்ரியையும்‌, ஸ்ரீமந்நாராயணனையும்‌ அழைப்பதில்‌ விநியோகம்‌. 


முதல்‌ மந்திரத்தினால்‌ - காயத்ரி!” என்று காயத்ரி தேவியைக்‌ கூப்பிட்டு லக்மியுடன்‌ கூடிய பரப்ரஹ்மமாயெ 
நாராயணனை இங்கு என்னை ரக்ஷிக்கும்பொருட்டு வரவழைப்‌ பாயாக என்று வேண்டுகிறான்‌. 

களயத்ரி-காயச்ரீிகேவியே! வரதன- வரத்தை அளிப்ப 
வளும்‌, தே,வீ-—3 தவனாகற நாராயணனுக்குப்பத்னியுமான 
ஸ்ரீதேவி, ஆயாது--(இங்கு) வரட்டும்‌; அக்ஷரம்‌ விகார 
மற்றவனும்‌. ஸம்மிதம்‌-—(சாஸ்‌திரங்களால்‌) நன்கு அறியப்‌ 
பட்டவனும்‌. ப்ரஹ்ம ப்ரஹ்ம சப்ததீதால்‌ சொல்லப்படுப 
வனுமான நாராயணனும்‌. ஆயாது-(இங்கு) வரட்டும்‌! 
சூந்த,ஸாம்‌ மாதா- சந்தஸ்ஸுக்களுக்குத்தாயாயிருக்கும்‌ நீ 


, ஈம்‌-லக்ஷ்மீதேவியையும்‌, இதம்‌ ப்‌,ரஹ்ம-ப்‌,ரஹ்மாப்‌,க,வாச்‌ யனான இவனையும்‌, ௩:-எங்களுக்காக, ஜுஷஸ்வ- (இங்கு) 
அடைவிப்பாயாக, 
முதல்‌ மந்இிரத்திற்குப்‌ பதவுரை மேலே காட்டப்‌ பட்டது. 

இனி விரிவுரை எழுதப்படுகிறது. (ஆயாது) 
இங்கு வரட்டும்‌; யாரெனில்‌: (வரதா தேவீ) வரமனிப்பவ 
ளான தேவி. எம்பெருமானை வசீகரித்து இச்சேதனனுக்கு, 
வேண்டியதையெல்லாம்‌ அளிக்கச்‌ செய்யும்‌ ஸ்ரீதேவியே 
இங்கு “வரக தேவீ ' எனப்படுகிறாள்‌. (வாத) “ வரம்‌ 
55591 ® இதி வரக்‌” நீனரத்தைக்‌ கொடுப்பவளா கையால்‌ 
வரதா] என்று வ்யுத்பத்தி. * காமவத்ஸா அம்ருதம்‌ 
துஹாநா 7 [ீதன்னடியார்‌ காமத்தையே கன்றாகக்கொண்டு 
மோக்ஷத்தையும்‌ கறக்கும்‌ பசுவாயிருப்பவள்‌.] “' யஸ்யாம்‌ 
ப்ரபூதம்‌ கவே தளஸ்யோ $ங்வார்‌ விந்தேயம்‌ புகுஷா 
ஈஹம்‌ ` ' [எந்த லக்ஷ்மியிடயிரும்‌து மிகுந்த பொன்‌, பசுக்கள்‌, 
தாஸிகள்‌, குதிரைகள்‌. தாஸர்கள்‌ ஆகிய இவர்களை நான்‌ 
9८ ०9 @). +." ॥ என்று வேதத்திலும்‌, 


“शी कप முஷ்மிகாம்‌ ஸித்‌,தி,ம்‌ ००185, ஸ்ரீப்ரஸைத,த: ஈ 
5071059 आ ५१४ நஸ்யதே தஸ்ய ஸர்வபாபாத்‌ ப்ரமுர்யதே ॥# ` 

( (उ 5 ०१८9. = அருளால்‌ (नन) 8 >), மறுவலகிலுமுன்ள 
ஸித்திக’ளை அடைகிறான்‌ . அவனுடைய ஏழ்மை அழிந்து 
விடுறெது. எல்லாப்‌ பாடங்களினின்‌ றும்‌ அவன்‌ வீடுடடு 
கிறான்‌.] என்று பாத்மபுராணத்திலும்‌. 


“பத்‌மயேோரிரித;ம்‌ ப்ராப்ய பட,ந்‌ ஸூக்தம்‌ தத: काणक) 
தி.ங்யம்‌ சா ஷடகு,ணையங்வர்யம்‌ தத்ப்சஸா தச்ச லப்‌,த,வாந்॥?” 
[பரமன்‌ இந்த. 655 5 56०5. (உபதேசமூலமாக) அடைந்து 
அநுடந்தித்து, கிரமமாக அஷ்டவிதமான இவ்யைங்வர்யங்‌ 
களையும்‌ கைைமீப்ரஸாதத்தால்‌ அடைக்தான்‌. | என்னு ஸத்தமார ஸம்ஹிதையிலும்‌. 


ர்வகாமப்ரதபம்‌ ரம்யாம்‌ ஸம்ஸா ரார்ணலதாரிணீம்‌ # 
க்ஷிப்ரப்ரஸா தி,நீம்‌ லக்ஷ்மீம்‌ மரண்யாமநுஇந்தயேத்‌ |!'" 

{எல்லா விருப்பங்களையும்‌ அளிப்பவளும்‌, அழகியவளும்‌. 
ஸம்ஸாரமாகிற கடலைத்‌ தாண்டுவிப்பவளும்‌. வெகு விரைவில்‌ 
அருள்‌ செய்பவளும்‌ சரணமடையத்‌ 5 @ ® தவளூமான லஷ்யி 
யை தியானிக்க வேண்டும்‌. என்று ஸ்வாயம்புவத்திலும்‌ 


“தனரா: புத்ராஸ்‌ छा का ஸு ஹ்ருத்‌, தராழ்யத நாதி, கம்‌ | 
ப,வத்யேதர்‌ மஹாபாகே, நித்யம்‌ த்வத்‌, வீக்ஷணார்‌ ந்ருணாம்‌ ॥ 
மரீராரோக்‌யமையங்வர்யமரிபக்க்யஸ்‌ ஸுகம்‌ | 
தே.ித்வத்த்‌ருஷ்டித்‌,ரு்டாகாம்‌ புகுஷாணாம்‌ ஈ துர்லபம்‌ 1” 

ग மனைவி, மக்கள்‌, மனை, தாந்யம்‌, தனம்‌ முதலியவை உன்னு 
டைய கடாக்ஷத்தாலேயே மனிதர்களுக்கு என்‌ றும்‌ உண்டர 
கின்றன. சரீராரோக்யம்‌, செல்வம்‌, எதிரிகளின்‌ நாசம்‌. 
ஸுகம்‌ ஆகியவை உன்‌ திறாக்கண்ணால்‌ பார்க்கப்பட்ட 
மனிதர்களுக்கு தர்லபமல்ல.] என்னு விஸ்ணு புராணத்திலும்‌, 


“தரும்‌ அர்மவரும்பயனாய திருமகளார்‌ ” என்றும்‌, 

** வேரிமாறாத பூமேலிருப்பாள்‌ வினை தீர்க்குமே” என்றும்‌ ஆழ்வாராலும்‌. 

“ம்ரேயோ ए ஹ்யரவிந்த,லோச௩மந:காந்தாப்ஸாதரத்‌,ருதே 

ஸ்ம்ஸ்ருத்யகர வைஷ்ணவாத்‌_வஸு ந்ருணாம்‌ ஸம்ப,வ்யதே கர்ஹிசித்‌ ॥ 

[ தாமரைக்கண்ணனின்‌ மனத்திற்ினியவளான தேவியின்‌ 

அருளில்லாவிடில்‌. ஸம்ஹாரம்‌. கைவல்யம்‌, பரமபதம்‌ அகிய 

இவற்றினுள்‌ ஒரு பெருமையும்‌ ஒருடோதும்‌ மனிதர்களுக்கு 
உண்டாகாத.] என்று ஆளவர்காராலும்‌: ` 


“ ஐம்வர்யமக்ஷரக,திம்‌ பரமம்‌ பதம்‌ வா 
கஸ்மைசித,ஞ்ஜலிப,ரம்‌ வஹதே விதீர்ய | 

அஸ்மை ௩ 568) 55850 க்ருதமித்யதபம்ப, 
த்வம்‌ லஜ்ஜஸே கதய கோயமுதளரபாவ: |! 


[ இவ்வுலகச்‌ செல்வத்தையாவது, கைவல்யமோக்ஷத்தை 
யாவது, பரமபதத்கதையாவது ஒரு அஞ்சலிச்சுமையைச்‌ 
சுமப்பவனுக்கு அருளியும்‌, -* இவனுக்குப்‌ தகுதியானதொன்‌ 
றையும்‌ நாம்‌ செய்யவில்லையே” என்‌ ற நீ வெட்கப்படுதறாய்‌. 
அம்மா ! இது என்ன ஓளதார்யம்‌ ! நீமீ்ய சொல்லு. ] என்று 
பட்டரா லும்‌ ்ரீபீதுவி எல்லா வரங்களையும்‌ அளிப்பவள்‌ 
என்னும்‌ அர்த்தம்‌ அறிவிக்சப்பட்ட கன்றே. (வரதா தேவி) 
“வரத; மதி, மே தேவி” என்று விஷழ்ணுபுராணத்தில்‌ 
இந்திரஸ்‌ தா த்ரத்தில்‌ ^" வரக தேவீ ” என்னும்‌ பதங்கள்‌ 
ஸ்ரீ கிவி விஜயமாகப்‌ படிக்கப்பட்டனவன் றோ. (தேவீ) 
“தி,வ்யோ தேவ ஏகோ நாராயண;'' “தம: பரே தேவ 
| ஏகீப,வதி' ` वच्छ (षी தேவ: முகலான வேதவாக்யங்களில்‌ 
கேவனென்‌ று படிக்கப்பட்டவனுடைய பத்னி. “ பும்யோகள 
தளக்ஙாயாம' என்கிற ஸூத்ரப்படி * தேவ” சப்தத்தின்‌ 
மேல்‌ “ஙீஷ்‌' என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து “தேவீ” என்றாகிறது. 
ேவபத்னியென்றபடடி. அன்‌ றிக்கே. ^" இவுக்ரீடள்‌ 
०५ @ & ५०१7 --- ... " என்னும்‌. 2,7.80 .559 उना எம்‌ 
பெருமா னுக்குப்‌ போலே இவளுக்கும்‌ பொருந்‌ தியிருக்கை 
யால்‌ செவி எனப்படுவதாகவும்‌ - கொள்ளலாம்‌. 
ஜகத்ஸ்ருஷ்ட்யா திகளை இவளுடைய முகோல்லா 
ஸத்திற்காகவே எம்பெருமான்‌  செய்ன்றானாகையால்‌, 
ஜக த்ஸ்ருஷ்ட்யா இிகளை லீரலயாக உடையவள்‌ ” என்னும்‌ 
பொருளும்‌. = “" ஹிரண்யவாணாம்‌ ` எனப்படும்‌ அழகிய 
திவ்யமங்கள விக்ரஹத்தை உடைத்தாயிருக்கையாலே 
“ீ தாந்தியை உடையவள்‌ ' என்னும பொருளும்‌ இவளிடம்‌ 
பொருக்தியிருக்கன்றன. மற்றுமுள்ள பொருள்களையும்‌ 
கண்டுகொள்ள... 


இப்படிப்‌ புருஷகாரபூதையான பிராட்டியின்‌ வரவைப்‌ 
பிரார்கதிந்தபிறகு, பல்ப்ரதனான பகவானின்‌ஆகமனத்தைப்‌ 
பிரார்த்திக்ிறது. (அக்ஷரம்‌) ௩ க்ஷரதீதி அக்ஷரம்‌ ” 
[ அழிவற்றவனாயிருக்கையால்‌ அக்ஷரம்‌] ஸ்வரூபஸ்வப,ாவங்‌ 
களில்‌ மாறுபாடற்றவனாயிருப்பவன்‌ , ஆங்ரிதஸம்ரகூஷண 
மாகிற ஸ்வபாவத்‌ தில்‌ மாறுபாடற்றவனாயிருக்கும்‌ தன்மை 
இங்கு அக்ஷரசப்துத்தால்‌ விசேவஷித்துச்‌ சொல்லப்படுகிற த. 
“அயாது வரதன்‌ தேவீ என்று பிராட்டியை முன்னிட்‌ 
டிருக்கையாலே. இவன்‌ அதுக்ரஹத்தையல்லது நிக்ரஹத்தை 
அறியான்‌ என்று தாத்பர்யம்‌. (ப்ரஹ்ம). அடியார்களைத்‌ 
தனக்கு ஸமானமாக ஆகும்படி ப்‌,ரும்ஹணம்‌ செய்பவன்‌. 
^" பருஹத்வாத்‌ ப்‌,ரும்ஹணத்வாச்ச தத்‌ ப்ஏஹ்மேத்யபி,8, 
யதே '' [பெரிதாயிருக்கையா லும்‌. ( பிறவஸ்துக்கனைப்‌ ) 
பெரிதாகச்‌ செய்கையாலும்‌ அது ட்ரஹ்மமெனப்படுிற து. ] 
என்பதல்லவேோ ப்ரஹ்மசப்தார்த்தம்‌. * பரமம்‌ ஸாம்யமு 
பைதி '' [ப்ரஹ்மத்துடன்‌ மேலான ஒற்றுமையை அடை 
கிறான்‌.] என்று சுருதியிலும்‌. “மம ஸாத,ர்ம்யமாக,தா:”” 
[என்னுடன்‌ ஸமானகுணகத்கை உடையவர்களாக] என்று 
கீதையிலும்‌. “' தம்மையே ஓக்க அருள்‌ செய்வர்‌ ” என்று 
ஆழ்வாரா லும்‌ இவன்‌ ஆங்ரிதர்களை ப்ரும்ஹணம்‌ செய்யும்‌ 
ப்ரகாரம்‌ பேசப்பட்டதன்றோ.  (ப்ஸஹ்ம) நாராயண 
பரம்‌ ப்ரஹ்ம” முதலான வேதவாக்யங்களில்‌ சொல்லப்பட்ட 
ஈாராயணனே இங்கு அழைக்கப்படுபவன்‌ என்று கெளி 
வாகிறது. இப்படி ஆங்ரிதஸம்ரகூஷணஸ்வபா;ாவத்தையும்‌, 
த்ஸபூகர்களுக்குத்‌ தன்னையே ஓக்க அருள்செய்யவல்ல 
சக்தியையும்‌ உடையவலாயிருந்கா லும்‌ ஒருவராலும்‌ அறிய 
வொண்ணாதவலாயிருந்தால்‌ இந்த குணங்கள்‌ காட்டிலெரித்த 
நிலவு போலே ப்ரயோஜனமற்றதாகுமன்றோ என்னாம்‌ 
ஸந்தேஹம்‌ எழ. (ஸம்மிதம்‌) என்கிறது. வேதாந்தங்களிலே 
நன்‌ கு அறியப்படுமவன்‌-— “ஸத்யம்‌ ஜ்ஞா நமநந்தம்‌ ப்‌,ரஹ்ம”' 
“ விஜ்ஞாரமாநந்த;ம்‌ ப்ரஹ்ம” = +, நாரர்யண பரம்‌ ப்‌,ரஹ்ம '' 
முதலானவாக்யங்களால்‌ இவனுடைய ஸ்வரூபமும்‌, “ஆ தி,த்ப 
வர்ணம்‌” “வித்யுத: புருஷாத்‌” “நீலதோயதமத்வஸ்த,ா?' 
“ ஹிரண்மய: புருஷ: '' என்று இவனுடைய ரூபமும்‌, 
“ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா அபஹதபாப்மா 35916017 தேவ 
ஏகோ நாராயண:”' முதலான வாக்யங்களால்‌ இவனுடைய 
குணங்களும்‌, “தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பதும்‌ '' “ பரமே 
வ்யோமந்‌ `°  அம்ப,ஸ்யபாரே பு,வாப்்ய மத்‌,யே நாகஸ்ய 
ய்ருஷ்டே,'' முதலான , வாக்யங்களால்‌ இவனுடைய 
விபூ,திகளும்‌ வேதத்தில்‌ தெளிவாக த்‌ தெரிவிக்கப்படுகன்‌ றன 
வன்றோ. (கரயத்ரி) * களயந்தம்‌ தராயதே '' [தன்னைப்‌ 
பாடுமவனைக்‌ காப்பாற்றுறெது] என்னும்‌ பெயர்‌ பெற்றுள்ள 
நீ எங்களைக்‌ காப்பாற்றீவண்டாவோ ? “ கரயத்ரிம்‌' 
என்பதை காயத்ரி ஈம்‌ என்று பிரித்துக்கொள்ளவேண்டும்‌. 
(௪,ந்கஸாம்‌ மாதா) வேதங்களுக்கு மாதாவாயிருக்கும்‌ ` நீ, 
த்வம்‌ (நீ) என்னும்‌ பதத்தைச்‌ சேர்ந்துக்‌ கொள்ள 
வேண்டும்‌. ( ர்தஸாம்‌ மாதர ) “மாதாபித்ரு ஸஹஸ்ரே 
ப்‌,யோ5பி வத்ஸலதரம்‌” [ஆயிரம்‌ தாய்‌ சுந்தையரைக்காட்டி 
லும்‌ வாத்ஸல்யம்‌ மிகுந்தது வேசும.] எனப்படும்‌ வேசத்‌ 
திற்கும்‌ தாயாயிருக்கும்‌ நீ எங்களை நோக்க வேண்டாவோ? 
வேதத்திற்கு ஸாரபூதமாயிருப்பதால்‌ வேகத்த ற்குத்‌ தாய்‌ 
எனப்படுகிறது காயத்ரி மந்திரம்‌. அன்‌ 95.65, அநுஷ்டுப்‌ 
முதலிய மற்ற சந்தஸ்ஸுஃக்களுக்குத்‌ தாய்‌ போல்‌ தலைவியா 
மயிருப்பவள்‌ காயத்ரீ என்றும்‌ பொருள்‌ கெொள்ளலாம்‌, 
“்‌ களயத்ரீ  சந்த;ஸாமஹம்‌ '' [சம்தஸ்ஸுக்களுள்‌ நரன்‌ காயத்ரியா கிறேன்‌ ] என்றால்‌ கீதாசார்யன்‌. 


(ஈம்‌) “* அகாரேணோச்யதே விஷ்ணு:”' [அகாரத்தினால்‌ 
சொல்லப்டடுமவன்‌ விஷ்ணு. ] ''அக்ஷராணாம்‌ அகாரோ $ஸ்மி” 
[எழுத்துக்களுள்‌ நான்‌ அகாரமாகிறேன்‌ .] என்கிறபடியே 
அகார த்தினால்‌ (சொல்லப்படுபவன்‌ விஷ்ணு. அவ்வகாரத்தின்‌ 
மேல்‌ “பும்யோகளதாக்ஙாயாம்‌ ” என்றெ ஸூத்ரப்படி 
நீஷ்‌' என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து நிஷ்பன்னமான "क" 
என்னும்‌ எழுத்து அகாரவாச்யனான விஷ்ணுவின்‌ பத்தினி 
யாற லக்ஷ்மீ தேவியைக்‌ குறிக்கறது. ஈம்‌' என்பது 
இரண்டாவது வேற்றுமை ஒருமையாகையால்‌ “லக்ஷ்மீ தேவியை” என்று பொருள்படுகெது. “தேவ: என்பது 
விஷ்ணுவையும்‌. *தே,வீ ' என்பது லக்ஷ்மியையும்‌ குறித்‌ 
தாப்போல்‌. அகாரம்‌ வீஷ்ணுவையும்‌. ஈகாரம்‌ லஷ்மியை 
யும்‌ குறிக்கத்தட்டில்லையன்றோ. (இதம்‌ ப்ஸஹ்ம) அக்ஷரம்‌ 
ப்ரஹ்ம என்று என்னால்‌ சொல்லப்பட்ட இந்த நாரா 
யணனையும்‌. “தேவ ஸோம்ய இதம்‌ `" என்றாப்போலே 
இவ்வுலகை இதும்‌ [இது] என்று காட்டி அதற்கு 
அந்தர்யா மியான நாரரயணனைக்‌ குறிப்பதாகவும்‌ கொள்ள 
லாம்‌. அன்றிக்கே, தன்‌ ஹ்ருசயத்திலிருக்கும்‌ பகவானை 
* இதும்‌ ' என்பதாகவும்‌ கொள்ளலாம்‌. (௩:) எங்களுக்காக; 
எங்களுடைய உஜ்ஜீவனத்திற்காக. (ஜுஷஸ்வ) ஸ்ரீதேவி 
யையும்‌ நாராயணனையும்‌ அ௮டைவீப்பாயா க. ணிச்‌ என்னாம்‌ 
ப்ரக்யயத்தை உள்ளடக்கியிருக்கையால்‌, “அடைவாயாக ' 
என்‌ று பொருள்படும்‌ இப்பதம்‌ இங்கு “ அடைவிப்டாயாக ' 
என்று பொருள்படுகிறது. 'ஜாஃவி' என நிற தாது ப்ரீதியை 
யும்‌ சொல்லுமாகையால்‌, ==“ ப்ரீதியடையச்செய்வாயாக ' 
என்றும்‌ இப்பதத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌, ஆக, 
இம்மந்திரத்தால்‌ ஸ்ரீமங்காராயணனை அடைவிக்கும்படி 
காயத்ரியை நோக்கிப்‌ பிரார்த்திச்கப்பட்ட தாயிற்று. 


இப்படி காயத்ரியைப்‌ பிரார்தீதித்தவுடன்காயத்ரியினால்‌ 
ப்ரீதியடையச்செய்யப்பட்ட ஸ்ரீமந்நாராயணன்‌ ப்ரஸந்நனாக, 
அவனை த்‌ ததிக்கறான்‌ அடுத்த மந்திரத்தாலே; (ஓஜோ $ஸி) 
இங்கு குணத்தைக்‌ குறிக்கும்‌ ஒஜ:, ஸஹ. பலம்‌, (1400 इः 
முதலான பதங்கள்‌ அந்தந்த குண த்தையுடைய வஸ்துவை 
உணர்த்துகின்றன. குணங்கள்‌ குணியைவிட்டுத்‌ தனித்து 
நில்லாவன்றோ. (ஓஜோட$ஸி) “யஸ்யாயுதாயுதாம்மமாம்மே 
விஸ்வரரக்திரியம்‌ ஸ்தி,தா” [எவனுடைய பலகோடியில்‌ 
ஒருபாகமான அம்சத்தில்‌இந்த உலகசக்தி நிலைநிற்கிறதோ.....] 
“ மேரோரிவாணுர்‌ யஸ்யைதத்‌ ” [இவவண்டமெல்லரம்‌ 
எவனுக்கு மேருமலைக்கு அணுபோலா கின்‌ றதோ.... ] என்கற 
படியே எல்லாவுலகையும்‌ தன்‌ ஏகாம்சத்தினலே தரித்து நிற்கும்‌ சக்தி * ஓஜஸ்‌ ' எனப்படுகிறது. அப்படிப்பட்ட 
சக்தியை உடையவனாகிறாய்‌ என்‌ று பொருள்‌. (०० @77 ९०9.) 
அயலாரை அடக்கக்கூடிய சக்தியை உடையவனாரறோய்‌. 
வேகத்தை உடையவனாகீறாய்‌ என்றுமாம்‌.  மநஸோ ஜவீய:”' 
[மனஸ்ஸைக்‌ காட்டிலும்‌ வேகமாகச்‌ செல்லும்‌ வஸ்து] 
எனப்பட்டவன்ன்றோ. (பலமஸி) பலத்பைதையுடைய 
வஸ்துக்களுக்கும்‌ பலத்கைக்கொடுப்பவனாயிருக்கிறாய்‌. 
“பலம்‌ ப,லவதாம்‌ சாஹம்‌'' [பலத்தையுடையவர்களுடைய்‌ 
பலம்‌ நானே ] என்றானன்றோ கீதாசார்யன்‌ . (ப்ராஜோஸி) 
கதேஜஸ்ஸை உடையவனாயிருக்கறோய்‌; தேஜஸ்‌ என்று 
கிருமேனியின்‌ காந்தி சொல்லப்படுகிறது. -தமேவ பரந்த 
மநுபாதி ஸர்வம்‌” என்று வேதத்திலும்‌ இவனுடைய 
கேஜஸ்ஸாலேயே ஸூர்யாதிகளும்‌ பிரகாசிக்கின்‌ றனர்‌ 
என்பது சொல்லப்பட்ட து. -' தேஜஸ்‌ தேஜஸ்விநாமஹம்‌ "` 
என்றும்‌, “ப்ரப,ா$ஸ்மி மிஸ-ஒர்யயோ:” [ஸுூர்யசந்திரர்‌ 
களின்‌ ஒளி நானே] என்றும்‌ கீதாசார்யனாலும்‌ ர்த்திக்கப்‌ 
பட்டது. (தே,வாநாம்‌ 547८0 அஸி) தேவர்களுக்கு இருப்பிட 
மாயிருக்கிறாய்‌. அதாவது: அவர்களுக்கு ஆத்மாவாயிருக்‌ 
கிறாய்‌ என்று பாவம்‌. அன்‌ றிக்கே அந்த தேவர்களுடைய 
போகஹ்தளனமான ஸ்வர்க்கமாயிருப்பவனும்‌ நீயே என்று 
மாம்‌. “இனிய ஈல்‌ வான்சுவர்க்கங்களுமாய்‌” என்றும்‌, 
“ஊனமில்‌ சுவர்க்கமென்கோ? ` ' என்றும்‌ அருளிச்செய்தா 
ரன்றோ ஆழ்வார்‌. (தே,வாநாம்‌ நாம அஸி) தேவர்களுடைய 
பெயராகவும்‌ ஆகிறாய்‌. அதாவது அவர்களுடைய பெயரும்‌ 
உன்னைக்‌ குறிக்கும்பட்‌ அவர்களுக்கு அந்தர்யாமியாயிருக்‌ 
கிறாய்‌. (தேவாநாம்‌ தாம நாமாஸி) சே தநர்களுடைய 
ரூபமாகவும்‌ நரமமாகவும்‌ இருக்கிறாய்‌ 'என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌, அவர்களுக்கு நாமரூடங்களைக்‌ கொடுத்தவனா 
கிறாய்‌ என்று தாத்பர்யம்‌. “ ஸர்வாணி ரூபாணி விசித்யு 
தீர: ஈாமாடி க்ருத்வாபி, வத்‌ ५153 9065 '' [எவனொருவன்‌ 
எல்லாச்‌ சேதனர்க்கும்‌ நாமரூபங்களைக்‌ கொடுத்து அவற்றை 
உச்சரிக்கறுனோ ] என்றும்‌, “அநேந ஜீவே ஆத்மநா 
நுப்ரவிங்ய ஈரமரூபே வ்யாகரவாணி [எனக்குச்‌ சரீரபூதனா।ன 
இந்த ஜீவனைக்கொண்டு அசித்தை வியாபித்து நாமரூடங்‌ 
களைக்‌ கொடுக்கிறேன்‌,] என்றும்‌ வேதத்தில்‌ சொல்லப்‌ 
பட்டது. 


“நாமரூபஞ்ச பூ,தாநாம்‌ க்ருத்யாகாஞ்ச ப்ரபஞ்சம்‌ | 
0०0००0३६ 5501५01 ஏவாதெள தேவாதீநாம்‌ சகார षः | 
[தேவர்‌. மனுஷ்யர்‌. இர்யக்‌. ஸ்தரவரம்‌ என்னும்‌ நால்‌ 
வகைப்‌ பிராணிகளுக்கு நாமரூபங்களையும்‌, செய்தொழில்‌ 
களின்‌ விவரத்தையும்‌, கல்பாதியில்‌ அவர்‌ வேதத்திலுள்ள. 
சப்தங்களிலிருந்தே செய்தார்‌ ] என்று வீஷ்ணு புராணத்தி 
இம்‌ விளக்கப்பட்டது. (கேலோநாம்‌ தாம அஸி நாம) 
என்று கூட்டி -தேவர்களின இருப்பிடமாக இருக்கிறாயல்லவா” என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. நாம' என்‌ 
னும்‌ பதம்‌ ப்ரஸித்தியைக்‌ குறிக்கிறது. தாமசப்தம்‌ 
கேஜஸ்ஸையும்‌ சொல்லுமாகையால்‌ =. @ தவர்களின 
கேஜஸ்ஸாயிருப்பவனும்‌ நீயேயன்றோ'' என்‌ றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 


“தஸ்ப பாஸா कणां >, 9550 விபாதி'' 

“யதாதி,த்யக,தம்‌ தேஜோ ஜஐசு,த்பளஸயதே 5இிலம்‌ | 
யச்சந்த்‌,மஸி யச்சாக்‌,நெள தத்தேஜோ 60535, மாமகம்‌ ॥” 
[உலகையெல்லாம்‌ ஒளிவீடச்செய்யும்‌ ஆதித்யனின்‌ தேஜஸ்‌ 
ஸும்‌, சந்திரனின்‌ ஒளியும்‌. அக்னியில்‌ பிரகாசமும்‌ என்‌ 
னுடையவையே என்றறிவாயாக.] என்று வேதகீதோாதி 
களில்‌ சொல்லப்பட்ட கன்றோ. 


(விங்வமஸி) '“விஈீதீதி விஸ்வம்‌” என்கிறபடியே ஸர்வ 
வயாபியாயீருக்கையால்‌ வீங்வமெனப்படுகிறாய்‌. “விஸ்வம்‌ 
நாராயணம்‌ '' என்று வேதத்திலும்‌, ^ விஸ்வம்‌ விஷ்ணு: `" 
என்று ஸஹஸ்ரநாமத்திலும்‌ இது விஷ்ணுவின்‌ (57 ८01075८ 
படிக்கப்பட்டது. இங்கு ““விங்வம்‌'' என்று முதல்‌ நாமத்‌ 
தைப்படித்தது பகவானுக்குள்ள ஆயிரம்‌ நரமங்களுக்கும்‌ 
உபலக்ஷணம்‌. "` தெவோ நாமஸஹஸ்ர்வாந்‌ '' [ஆயிரம்‌ 
பெயரையுடைய தேவன்‌ ॥ “ ஸஹுஸ்ரநாம்நே புருஷாய ?' என்று ஸ்ம்ருதிகளிலும்‌, 


^ ஒராயிரமாயுல கேழளிக்கும்‌ பேராயிரம்‌ கொண்டதோர்‌ பீடுடையன்‌ ” 
“ பேருமோராயிரம்‌ பிறபல உடையவெம்பெருமான்‌ ”' என்று ஆழ்வாராலும்‌ புகழப்பட்டவனன்றோ இவன்‌. 


(வீங்வாயு:) “` விங்யதே ” என்னும்‌ வ்யுத்பத்தியால்‌ 
எம்பெருமானால்‌ வீயாபிக்கப்பட்டு வீளங்கும்‌ உலகத்தைச்‌ 
சொல்லுறது விங்வபதம்‌. அதற்கு அயனமாயிருப்பவன்‌ 
விமவாயு: எனப்படுகிறான்‌. (விங்வஸி விங்வாயு: ) “விங்வம்‌ 
நாராயணம்‌ ” என்‌ றதை அடியொற்றுகிறது. (விங்வாயு:) 
நாரங்களாகிற விஸ்வத்திற்கு இருப்பிடமாகவும்‌, ப்ராப்ய 
ப்ராபகங்களாகவுமாகீறாய்‌. ஈாராயணபத வியாக்க்யானத்‌ 
தின்போது எழுதப்பட்ட விஷயங்களை இங்கும்‌ படிப்பது. 


(ஸர்வமஸி) ஸர்வம்‌ ஸமாப்ரகோஷி ததோ$ஸி ஸர்வ:'' 
[எல்லாவற்றையும்‌ வியாரபித்திருக்கையால்‌ எல்லாமுமா 
கிறாய்‌.] என்று சொன்ன கணக்கிலே எல்லா வஸ்துகளு 
மாகிறாய்‌. “புருஷ ஏவேத,ம்‌ ஸர்வம்‌” முதலான வேதவாக்கி 
யங்கள்‌ இவ்வர்த்தத்தைப்‌ புருஷோத்தமன்‌ விஷயமாகப்‌ 
படித்தன. (ஸர்வாயு: அஸி) ஸர்வ வஸ்துக்கட்கும்‌ ஜீவனமா 
யிருக்கிறாய்‌. , ஆயு: ஜீவனம்‌. "` தத்‌, விங்வமுபஜீவதி ”' 
[உலகெல்லாம்‌ இவனாலேயே ஜீவிக்க த. ] என்‌ ற ஈரராயண 
ஸஓக்சவாக்யத்தின்‌, பொருளை அனுஸந்திக்கிறது. பகவான்‌ 
ஸர்வ ஜீவர்க்கும்‌ ஜீவனமாயிருக்சையாவது: அவர்க்கு 
ஜீவன ஸா சனமானவற்றை அளிக்கையேயாகும்‌. (ஸர்வமஸி) 

வாஸுதேவஸ்‌ ஸர்வம்‌ '' என்கிறபடியே அடியார்க்கு, 
தாரகபோஷக போச்யங்களாரறோய்‌. (ஸர்வாயு:) அவர்க 
ரூடைய ஆயூளை ०97 ॐ & செய்றொய்‌ என்‌ றும்‌ கொள்ளலாம்‌. 
(அபி, அஸி) கனக்கும்‌ உன்னடியார்க்கும்‌ விரோதியா 
யீருப்பவர்களை ஈலிந்து கோல்வியடையச்செய்தறாய்‌. 
“அபியாதா ப்ரஹர்த்தா ௪” [ராமபிரான்‌ எதிரிகளைத்‌ தானே 
படையெடுத்தச்சென்‌ று சண்டையிீடுவார்‌.] “சென்று 
கொன்று வென்றிகொண்ட வீரன்‌” “செற்றார்க்கு வெப்பம்‌ 
கொடுக்கும்‌ விமலா ” --அசரர்க்குத்‌ திமைகள்‌ செய்குந்தா ' 
முதலான்‌ ப்ரமாணங்களை அணாஸைந்திப்பது. நின்ற நிலையைக்‌ 
கண்டே எதிரிகள்‌ மண்ணுண்ணும்டடியிருப்பவனன்‌ றோ 
இவன்‌,  ஹுகஹஈப்த: பரந்தப: ' என்று இவன்‌ தூங்கும்‌ 
போது கண்டாலும்‌ எதிரிகள்‌ நெஞ்சிடிக்தபோவார்கள்‌ 
என்றாளன்றோ பிராட்டி. 


“முத்ரோ: ப்ரக்‌,யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை: ”' 
“தம்‌ மந்யே ராக,வம்‌ வீரம்‌ நரராயணமகாமயம்‌ ' 

ரீவீரரான; ராகவனை அழிவற்ற நாராயணனென்றே 
அறிகறேன்‌.] என்று எதிரிகளும்‌ கொண்டாடும்படியான 
கன்றே இவனுடைய பராபிப வன ஸாமர்த்யம்‌. (அபிபு) 
இபக்திற்குத்‌ தடை செய்யும்‌ பாபம்‌ முதலியவற்றைப்‌ 
போக்கடிக்கறோய்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌, 


(ஓம்‌) இப்படிப்பட்ட அகாரவாச்யனான அனந்தனுக்கே 
அடிமையான நான்‌. (களயத்ரீம்‌) உம்மை உகப்பிப்பதற்குக்‌ 
காரணமான களீயத்ரியை. (ஆவாஹயாயி) என்னருகில்‌ 
வரவழைக்கிறேன்‌. ஸ்ரீமந்‌ நாராயணனான நீர்‌ அதை 
அனுமதிப்பீராக. இதன்‌ பிறகு “ ஸாவித்ரிமராவாஹயாமி '' 
“ ஸஹரஸ்வதிமாவாஹுயாமி” என்றும்‌ சொல்லுவார்கள்‌, 


“அயாது” “ஓஒஜோக$ஸி'"? என்‌ னும்‌ மந்திரங்கள்‌ 
முழுவதையும்‌ காயத்ரீபரமாகக்‌ கொண்டு வியாக்கியானம்‌ 
செய்வாருமுண்டு. அதாவது:-—(ஆயாது வரதர்‌ தேவி) 
தன்னை அடைந்தவர்களுக்கு இஷ்டட்பட்டதையெல்லாம்‌ 
அளிப்பவளான கரயத்ரீ தேவீ இங்கு வரட்டும்‌. அவள்‌ 
எப்படிப்பட்டலளெனில்‌: (அக்ஷரம்‌) அழிவற்றவள்‌; நித்ய 
மானவள்‌ என்றபடி, லிங்க மாறுபாடு சளம்சஹம்‌. அழி 
வற்றவளென்பதற்குக்‌ காரணமென்னென்னில்‌:  (ப்ஸஹ்ம 
ஸ்ம்மிதம்‌) வேகத்திற்குள்‌ மேலானதாகச்‌ சொல்லப்‌ 
பட்டவள்‌, வேதமே அழிவற்றதாயிருக்கும்போது வேசஸார 
பூதமான இதைப்பற்றிச்‌ சொல்லவேண்டுமோ என்று 
பாவம்‌. (ப்ஸஹ்ம ஸம்மிசும்‌) வேதத்திற்கு ஒப்பானது 
என்றும்பொருள்‌ கொள்ளலாம்‌. ப்ரஹ்மசப்தம்‌ வேதத்தைச்‌ 
சொல்லும்‌. காயத்ரியானது ஸகலவேத துல்யமானது, 
ஸகல வேதத்தினாள்ளும்‌ உயர்ந்தது என்னுமர்ததம்‌ ஸ்ருதி 
ஸ்ம்ருதிகளில்‌ ப்ரஸித்தம்‌. (ப்ஸஹ்மஸம்மிதம்‌) ப்ரஹ்மத்தை 
ஓத்த௨ள்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. ஸர்வ வஸ்‌ துக்களுக்கும்‌ 
காரணமான ப்ரஹ்மத்கைப்போல்‌, ஸர்வ வாக்குக்களுக்கும்‌ 
மூலமான வேதத்துக்குக்‌ காரணமாயிருப்பவள்‌ என்‌ கிறபமி. 
(ப்ரஹ்ம ஸம்மிதம்‌) ` ' ஓமித்யேகாக்ஷரம்‌ ப்ரஹ்ம?” என்று 
கீதையில்‌ சொல்லியடடியே ப்ரஹ்ம சபதம்‌ ஓங்காரத்தையும்‌ 
சொல்லும்‌. “ப்ரஹ்ம ஸம்மிதம்‌' என்கையால்‌ ஓங்கார 
துல்யையாயிருப்பவள்‌ எனப்படுகிறது. ஒங்கரரம்போல்‌ 
ஸர்வார்த்தங்களுக்கும்‌ ஸங்க்ஸஹமாயிருட்டது க, ¶ ८, ॐ 7 
என்‌ றபடி, (७80 ८1510.) காயத்ரி தேவதை. முதல்‌ வேற்று 
மையாகக்‌ கொள்ள வண்டும்‌. (சர்தஸாம்‌ மாதா) வேதங்‌ 
களுக்குத்‌ தாயாயிருப்பவள்‌. அதரவது: வேத மந்‌ திரங்களுள்‌ 
ப்ரதளனமாயிருப்பது என்றபடி. தீரிஷ்டுப்‌ முதலிய 
சம்தஸ்ஸுக்களுள்‌ முக்கயமானவள்‌ என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. , (௩:) எங்களுடைய. (இதும்‌ ப்ரஹ்ம) 
இந்த ஸ்‌ தோத்திரரூபமான. வாக்கை, (த ஷஸ்வ) அங்கீகரிப்பாயாக. 


அடுத்தபடியாக, பரமாத்மாவை காயத்ரீ மந்திரத்தால்‌ 
ஸ்தோத்ரம்‌ செய்வதற்குத்‌ தகுந்தசக்தி முதலானவறழ்றையும்‌, 
ப்ரதிபந்தூகமான பாப நிவ்ருத்தியையும்‌ செய்பவள்‌ நீயே 
என்று  காயத்ரியைத்‌ துதிக்கறோன்‌: (ஓஜோூ$ஸி) பரம்‌ 
புருஜனைத்‌ ததிச்கைக்கு உறுப்பான எங்களுடைய 
இந்திரியங்களுடைய சக்தியாயிருப்பவளும்‌ நீயே. அதாவது: 
நீ2ய இந்திரியங்களுக்கு சக்தியைத்‌ தருபவள்‌ என்று ப,ாவம்‌. 
(००९ 827 ९०9) ஸ்தோத்திரம்‌ செய்யும்‌ வாக்கிற்கு வேகத்‌ 
தைத்‌ தருபவளும்‌ நீயே, (பலமஸி) அவற்றுக்கு பலத்தைத்‌ 
கதருபவும்‌ நீயே ஸ்தோத்திரம்‌ செய்ய  அவயெ 
மான சரீர பலத்தைத்‌ தருபவளும்‌ நீயே என்றும்‌ கொள்ள 
லாம்‌. (ப்ஸாஜோ$ஸி) ஸ்கோத்ரம்‌ செய்வதனால்‌ வரும்‌ 
சரீர காந்தியும்‌ நீயே. (சே,வாநரம்‌ தம நாமாஸி) தேவர்‌ 
களின்‌ தேஜுஸ்ஸும்‌ உன்னால்‌ ஏற்பட்டதேயன்றோ. நாம்‌ 
என்பது பிரஸித்தியைக்‌ குறிக்றெது. 


 (விஸ்வமஸி) ஸர்வவேதத்திலும்‌ வியாபித்‌ திருக்கிறாய்‌. 
அன்‌ றிக்கே “விங்வம்‌' என்று விஷஸ்ணுவைச்‌ சொல்லுவதாய்‌, 
விஷ்ணுவைப்போல எல்லோரையும்‌ ஆக்ரமிக்கிறாய்‌ என்றும்‌ 
கொள்ளலாம்‌. : (விங்வாயு:) உன்னை அனு.ஸந் திக்கும்‌ 
அனைவர்க்கும்‌ ஆயுளை வளரச்‌ செய்றாய்‌. ( ஸர்வமஸி ) 
உன்னை அடைந்தவர்களுக்கு தா்ரகபோஷகபேோரக்யங்கள்‌ 
எல்லாமுமாறோய்‌. உன்னை அடைந்தவர்‌ அனைவர்க்கும்‌ 
நிர்வாஹிகையாயிருக்கிறாய்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. (ஸர்‌ 
வாய: ) எல்லாருக்கும்‌ ப்ராப்யப்ராபகங்களா கறாய்‌. (அபி,பூபி 
பரமாத்ம ப்ராப்தி விரோதி, பாபங்களைப்‌ போக்கடிப்பவள்‌ 
நீயே. (ஒம்‌ களயத்ரிம்‌ ஆவாஹயாமி) . இப்படிப்பட்ட 
காயத்ரீ தேவியான உன்னை - ஓம்‌” என்னும்‌ மந்திரத்தினால்‌ 
அழைக்கிறேன்‌. ஓங்கார ரூபிணியான உன்னை அழைக்கிறேன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌, 


ஆக இப்படி இரு வகையாக. “ஆயாது” “ஓஜோ ஸி" 
'என்னும்‌ மந்திரங்களுக்குப்‌ பொருள்‌ காட்டப்பட்டபோதிலும்‌. ஸ்ரீமந்காராயணனை, அழைப்பதாக விவரித்‌தருக்கும்‌ 
முதல்‌ வழியே சிறந்தது. அதுவே ஸாுதர்சன பட்டரால்‌ 
ஆகரிக்கப்பட்ட து. பல பதங்களை “சாந்தஸம்‌' என்று 
சொல்லவேண்டிய கிலேசங்கள ற்ற து.' இந்த மந்திரங்களைப்‌ 
ப்டித்தபின்பு. “ களயத்ர்யா: விஸ்வாமித்ர ருவி: தேவீ 
காயத்ரீ ச,ந்த; ஸவிதா தே,வதா ” என்று காயத்ரியின்‌ 
ரிஷி சந்தஸ்‌ @ ऊ @ @ = ऊ छा அறுஸந்‌்இித்துக்கொண்டு 
தூற்றெட்டு தடவை (அசக்தர்களானால்‌ இருபத்தெட்டு 
தடவைக்குக்‌ குறையாமல்‌) காயத்ரீ மந்திரத்தை ஜபம்‌  செய்யவேண்டும்‌. 


“ ஓம்‌। பூர்‌ புவஸ்‌ ஸுவ:। தத்‌ ஸவிதுர்‌ வரேண்‌்(ணி)யம்‌ | 
பர்க்கேோ தேவஸ்ய தீமஹி! இயோ யோ ந: ப்ரசோத,யாத்‌ ॥”' 
என்பதே காயத்ரீ மந்த்ரம்‌. இதன்‌ பொருளை இனிச்‌ 
சிந்திப்போம்‌. 


காயத்ரியிண்‌ அர்த்தவிசரரம்‌ 


(ஓம்‌ பூர்பு வஸ்‌ ஸுவ:) இதன்‌ பொருளை ப்ராணாயாமத்‌ 
தன்‌ அர்த்தத்தை எழுதும்போது விளக்கியிருக்கிறோம்‌. அங்கு கண்டுகொள்வது. 


(ஸவிது: தேவஸ்ய வரேண்யம்‌ தத்‌ பர்க்கழ தமஹி) 
தேவனாகிற ஸூர்யனுக்குள்ளிருப்பதாய்‌. ஸர்வராலும்‌ 
விரும்பப்படுவதாயிருக்கும்‌ அந்தத்‌ தேறஜஸ்ஸை தியானிக்‌ 
கிறோம்‌. (தேவஸ்ய) பிரகாசியாநிற்கும்படியான; ஸ்தோத்ரம்‌ 
செய்யத்‌ தகுந்தவனாகய என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
'அயிரம்‌ கிரணங்களையுடையவனாயை என்‌ றும்‌ கொள்ளலாம்‌. 
(ஸவிது:) ஸூர்யனுடைய. ஸூர்ய மண்டலத்திலுள்ள 
என்‌ றபடி. (வரேண்யம்‌ தத்‌ பர்க்க) உபாஸிக்கத்தகுந்க 
அந்தத்‌ தேஜஸ்‌. (தத்‌) பல ங்ருதிகளில்‌ படிக்கப்பட்டிராக்‌ 
கும்‌ ப்ரஸித்தியை நினைக்கிறது. 

“ய ஏஷ: அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ 

590००085 | ஹிரண்ய ம்மங்ருர்‌ ஹிரண்யகேம ஆப்ர 
ணகளத்‌ ஸர்வ புவ ஸாவர்ண:।| தஸ்ய யத கப்யாஸம்‌ 
புண்டளீகமேவம கிண 2 

[ஸூர்யனுக்கு நடுவில்‌ பொன்மயனாய்‌. பொன்போன்‌.ற 
மீசையை உடையவனாய்‌, பொன்போன்ற தஇிருக்குழற் 
கற்றையை உடையவனாய்‌. ஈகம்‌ வரையில்‌ எல்லாமே 
பொன்னாயிருக்குமவனான யாவனொரு புருஷன்‌ காணப்படு 
கிறானோ அவனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரைபோன்‌ ற 
இரு கண்கள்‌ உள.] என்று சாந்தோக்யத்தில்‌ படிக்கப்‌ 
பட்ட புண்டரீகாஒனாகய கேஜஸ்லஸே இங்கு சொல்லப்‌ 
படுமவன்‌ என்று வீளங்குகறது. இப்படி ஆத, & ५। 
மண்டலத்தின்‌ நடுவில்‌ எழுந்‌ தருளியிருப்பவன்பரமபுருஷனே 
என்பதை விவரிக்கும்‌ ஸ்ம்ருதிகளைக்‌ காட்டுவோம்‌ இனி. 


“ஈரமவரம்‌ புருஷாக்யம்‌ து ஸத்யத,ர்மாணமச்யுதம்‌ | 
பர்க்களக்‌,யம்‌ விஷ்ணுஸம்ஜ்ஞம்‌ து த்யாத்வா$ம்ருத 
முபாமநுதே ॥ 
ஹ்ருத்‌;வ்யோம்கி தபதி ஹ்யேஷ ப;௱ஹ்யே ஸூர்யஸ்ய 
சாந்தரே | 
அக்‌ காவதூமகே5ப்யேஷ ஜ்யோதிங்‌ சித்ரதரோ ஹ்யயம்‌ |) 
ஸவிதுஸ்‌ தத்‌, வரேண்யந்து ஸத்யத,ர்மாணமீங்வரம்‌ | 
ஹிரண்யவர்ணம்‌ புருஷம்‌ ०1001110 தத்‌, விஷ்ணுஸம்ஜ்ஞிதம்‌ ॥ 
ஸூர்யமத்‌,யே ஸ்தி,தஸ்‌ ஸோமஸ்‌ தஸ்ய மத்‌,யே ஹாுதாமர௩:। 
தேஜோமத்‌,யே ஸ்தி,தம்‌ ஸத்வம்‌ ஸத்வமத்‌,யே 
ஸ்தி,தோ 55५18; |!” 
[ ஈஸ்வரனாய்‌, புருஷனென்‌ று பெயரை உடையவனாய்‌. (८० ठ 
கத ரக்ஷ்ணமாகிற) ஸத்யமான தர்மத்தை உடையவனாய்‌. 
ஆச்ரிதர்களை ஈழுவவிடாத அச்சுதனாய்‌. = ८147 5530 (ஒளி) 
எனப்படுமவனாய்‌. விஷ்ணுவென்னும்‌ திருநாமத்தையுடைய 
வனான புருஷனை தியானித்து மோக்ஷத்தை அடைகிறான்‌. 
( ஜீவனுக்குள்ளிருக்கும்‌ ) ஹ்ருதயாகாசத்திலும்‌. வெளியி 
அள்ள ஸூர்யமண்டலத்தின்‌ ஈடுவிலும்‌, புகையற்ற 
அக்னியிலும்‌ இந்த ஒளியானது மிக வீசித்திரமாகப்‌ 
பிரகாசிக்கிறது. அதுவே ஸமர்யனுக்குள்ளிருக்கும்‌ விரும்பத்‌ 
தக்க வஸ்து. அதுவே ஸத்யமான : தர்மத்தையுடைய 
நிய்க்தா. - அதுவே ஹிரண்யவர்ணனான புருஷன்‌; விஷ்ணு 
வென்னும்‌ யெயரையுடைய அதுவே அகாசம்‌. ஸூர்ய 
முத்தியில்‌ ஸோமன்‌ இருக்கிறான்‌; . அவனுக்கு நடுவில்‌ அக்னி 
இருக்கிறான்‌. ` அக்னிக்கு ஈடுவில்‌ சத்த ஸத்வமிருக்கிறது. 
சுத்தஸத்வத்தின்‌ நடுவில அச்யுதனிருக்கிறான்‌.] என்று 
யோகயாஜ்ஞவல்க்யரரல்‌ சொல்லப்படுகிறது. 


“ரவிமத்‌,யே ஸ்தி,தஸ்‌ ஸோமஸ்‌ தஸ்ய மத்யே ஹுதரரமரர்‌!| 
'தேஜோமத்‌,யே ஸ்தி,தம்‌ ஸத்வம ஸத்வமத்‌,யே ஸ்தி,தோச்யுத்‌:॥ 
ஏஷ வை புருஷோ விஷ்ணுர்‌ வ்யக்தரவ்யக்தஸ்‌ ஸநாத௩ || 
[ஸூர்யன்‌ நடுவில்‌ ஸோமனிருக்கிறான்‌; அவனுக்கு நடுவில்‌ 
அக்னியிருக்கிறான்‌. அக்னியின்‌ நடுவில்‌ சுத்தஸத்வமயமான 
தருமேனியுள்ள. ॐ; ` அத்திருமேனியினுள்‌ அச்சுதன்‌ எழும்‌ 
தருளியிருக்கிறான்‌. இவனே ஸ்தூலஸஉக்ஷ்மப்ரபஞ்சமாயும்‌, 
பழமையானவனாகவும்‌, புருஷன்‌ என்னும்‌ டெயரை 
யுடையவனாகவுமுள்ள விஷ்ணு. ] என்று யமஸ்ம்ருதியிலும்‌, 
பங்குஸ்ம்ருதியிலும்‌ உணர்த்தப்பட்ட து. 
“யா5ஸெள விஷ்ண்வாக்ய  % 855९601 புருஷோ 5ந்தர்‌ 
ஹ்ருதி,ஸ்தி,த: | 
ஸோ.5ஹம்‌ நாராயணோ தேவ: புருஷோ லோகப,ாவர:॥ 
[ஹ்ருதயத்தின்‌ ஈடுவிலிருப்பவனாய்‌. ஆதித்யனுக்கு நடுவி 
இுள்ளவனாய்‌. விஷ்ணுவென்னும்‌ திருநாமத்தை உடைய 
வனன யாதொரு ப்ருஷனிருக்றொோனோ. அவன்‌ தேவனாய்‌. 
யுருஷனாய்‌. ` லோகஸ்ரஷடாவாயிருக்கும்‌ நாராயணனான 
நானே.] என்று தத்தாத்ரேய - ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது 


வித்‌யாஸஹாயவந்தம்‌ மாமாதி,த்யஸ்த,ம்‌ ஸராதரம்‌ | 


கபிலம்‌ ப்ராஹுராசார்யாஸ்‌ ஸாங்க்‌,யா நிஸ்சிதநிங்சயா: |” 

[த்ருட,மான அத்யவஸாயத்தையுடைய ஸாங்க்‌,யாசார்யர்‌ 
கள்‌. பழ்மையானஒனான।ன என்னை, ஸூர்யமண்டலத்தின்‌ நடு 
வில்‌, வித்யையுடன்‌ கூடின கபிலனாகச்‌ சொல்லுரறோர்கள்‌. ] 
என்று மஹாபாரதம்‌ மோக்ஷ தீர்மத்திலும்‌ சொல்லப்‌ 
பட்டது. ஆக்நேய நாரஸிம்ஹ புராணங்களில்‌ | 


"8 ,6५१५169 ஸத;ா ஸவித்ருமண்ட,லமத்‌,யவர்த்தீ 
நாராயணஸ்‌ ஸரஸிஜாஸ௩ ஸந்நிவிஷ்ட: | 
கேயூரவார்‌ மகரகுண்ட,லவாரம்‌ கிரீடீ 
ஹாரீ ஹிரண்மயவபுர்‌ த்‌,ருதமாங்க,சக்ர: |" 


[ ஸூர்யமண்டலத்தின்‌ நடுவிலிருப்பவனாய்‌. கமலானனத்‌ 
தில்‌ எழுந்‌ கருளியிருப்பவனாய்‌, தோள்வளை. மகரகுண்டலம்‌. 
கிரீடம்‌, ஹாரம்‌ ஆகியவற்றை உடையவனாய்‌, ஸுவர்ண 
மயமான திருமேனியை உடையவனாய்‌, பங்கசக்கரங்களை 
கீரித்திருப்பவனான நாராயணன்‌ எப்போதும்‌ தியானிக்கத்‌ 
தக்கவன்‌.] என்று படிக்கப்படும்‌ வசனம்‌ பண்டிதர்களுக்‌ 
கும்‌. பாமரர்களுக்கும்‌ ப்ரஸித்தமானது. 


“ஸைஷா முக்தி: பரா விஷ்ணோ: ர௬ுக்‌,யவஜஃஸ்ஸாமஸம்ஜ்ஞிதா। 
ஸைஷா த்ரயீ தபத்யம்ஹோ 253५०८० ஹிநஸ்தி யா || 

ஏஷ விஷ்ணு: ஸ்தி,த: ००598011 0 © 558: பாலரோத்யத: | 
ருக்‌,யஜுஸ்ஸாமபூ,தோ $ந்தஸ்‌ ஸவிதுர்‌ த்‌,விஜ திஷ்ட,தி ॥ 
மாஸி மாஸி ரவிர்‌ யோ யஸ்‌ தத்ர தத்ர ஹி ஸா பரா | 
த்ரயீமயீ விஷ்ணுமக்திரவஸ்த,ா௩ம்‌ கரோதி வை॥ 
விஷ்ணுமக்திரவஸ்த;ா௩ம்‌ ஸத,ாதி,த்யே கரோதி வை| 
ஏவம்‌ ஸா ஸாத்வி& மாக்திர்‌ வைஷ்ணவ்யேஷா த்ரயீமயீ || 
ஆத்மஸப்தக,ணஸ்த;ம்‌ தம்‌ ப௱ஸ்வந்தமதி,திஷ்ட,தி | 

தயா சாதி,ஷ்டிதஸ்‌ ஸோயம்‌ ஜாஜ்வலீதி ஸ்வரங்மிபி,: ॥ 
தமஸ்‌ ஸம்ஸ்தம்‌ ஐக,தாம்‌ நாமம்‌ ஈயதி சாகிதலம்‌ | 

'ஏவம்‌ ஸா வைஷ்ணவி ரரக்திர்‌ நைவாபைதி ததோ த்விஜ | 
மாஸாநுமாஸம்‌ ப,ஸ்வந்தம்‌ அத்‌,யாஸ்தே தத்ர ஸம்ஸ்திதா” 

(05. யஜுஸ்‌. ஸாமம்‌ என்னும்‌ இந்த த்ரயீ ( மூன்று 
வேதங்கள்‌ ) விஷஸ்ணுவினுடைய மேலான சக்தியாகும்‌. 
இது பிரகாசியாநின்‌றுகொண்டு, உலகிலுள்ள பரடங்‌ 
களைப்‌ போக்கடிக்கறது. இவ்வுலகின்‌ ரக்ஷண த்திலேயே 
நிலைநிற்பவனாய்‌, அதிலேயே முயற்சியுடையவனாய்‌, 5 
யஜுஸ்ஸாம ரூபியாயிருக்கும்‌ இந்த விஷ்ணு ஸூர்யனுக்‌ 
குள்‌ நிற்கிறான்‌. மாதந்தோறும்‌ தோன்றும்‌ ஸ£ர்யர்‌ 
களுக்குள்‌ த்ரயீமயமான அந்த மேலான விஷ்ணுசக்தியான து 
நிலைநிற்கறது. தீரயீமயமான இந்த விஷ்ணுசக்தியான து 
சுத்சகுஸத்வரூபமானது. தன்னுடைய சரீரமான எழு 
வஸ்துக்களுள்‌ ஒன்றான ஸுூர்யனை வியாபித்து நிற்றெது. 
அந்த விஷ்ணுசக்‌தியினால்‌ வியாபிக்கப்பட்ட இந்த ஸூர்யன்‌ 
தன்‌ ரெணங்களாலே ஜிவலிக்கிறான்‌. உலகிலுள்ள இருள்‌ 
முழுவதையும்‌ நாசமடையச்‌ செய்கிறான்‌. இம்மா இிமியாக, 
இந்த விஷ்ணுசக்தியானது ஒருபோதும்‌ நா சமடைவதில்லை, 
மா தந்‌ காறும்‌. ஸூர்யமண்டலத்திலிருந்‌ தகொண்டு. அவனை 
வியாபித்து நிற்றெது.] என்று பராசரபகவான்‌ ஸ்ரீவீஷ்ணு 
புராணத்தில்‌ (2-11) விரிவாக வீளக்கியருளீனார்‌. ஆகை 
யரல்‌ ஸூர்யமண்டலத்தின்‌ நடுவிலிருப்பவன்‌ பகவான்‌ 
நாராயணனே என்பதே ங்ருதிஸ்ம்ருதிகளின்‌ ஒருமிடறான 
முடிவு என்று நிர்ணயிக்கப்பட்ட து. 


(தத்‌, (40555: ) ஸுூர்யமண்டலகத்தினுள்ளிருக்கும்‌ 
அந்தத்‌ கேஜஸ்ஸை. ஈபும்ஸகலிங்கங்களான '" தத்‌, 
வரேண்யம்‌ ”என்னும்‌ இருசொற்களாலே தழுவப்பட்டு நிற்‌ 
கும்‌ பர்க்க'பப்தமும்‌ ஈபும்ஸக லிங்கமரகவே இருக்க 
வேண்டுமாசையால்‌. இது “ஒளி” என்‌ னும்‌ பொருளையுடய 
ஸகாராந்த நபும்ஸகலீங்க பதம்‌ என்று நிர்ணயிக்கப்படு 
கிறது. க்‌ காரணத்தாலேயே சிவனைப்‌ பொருளாகக்‌ 
கொண்ட அகாராந்த பும்லிங்க பதமன்று என்பதும்‌ 
தெளிவாகிறது. ஆகையால்‌ காயத்ரியை வெபரமாக்குவதற்‌ 
காக சைவர்கள்‌ செய்யும்‌ முயற்ச்சி வியாகரணமறிந்தவர்‌ கள்‌ கோஷ்டியில்‌ விலை செல்லா து என்றதாயிற்று. மேலும்‌. 
மேலே எடுத்த ` 147 क कजा 5००10 விஷ்ணுஸம்ஜ்ஞம்‌....ஸவிதுஸ்‌ 
தத்‌, வரேண்யந்து'' முதலான ஸ்ம்ருதிகளும்‌ இங்கு சொல்‌ 
லப்படுபவன்‌ விஷ்னுவே என்பதை விவரித்தன. 
இருபத்துநாலாயிரப்படியான ஸ்ரீ ராமாயணம்‌ முழுவ தும்‌ 
இருபத்துநாலு அக்ஷரங்கொண்ட காயத்ரியை ளிவரிக்கிற 
தென்று ஸர்வலோகப்ரஸித்தம்‌. இகனாலும்‌ ஸ்ரீராமாயணச்‌ 
தில்‌ ப்ரதிபாதிக்கப்படும்‌ பரம்பொருளான நாராயணனே. 
இங்கும்‌ சோல்லப்படுபவனென்று விளங்குகிறது. அகை 
யால்‌ இங்கு “பரர்க்க,'என்று ஒளியாகச்‌ சொல்லப்படுமவன்‌ 
“நாராயணபரோ ஜ்யோதி: -“ஆதி,த்ய வர்ணம்‌” “வித்யயுத:, 
புருஷாத;தி,' முதலான பல வேத வாக்யங்களில்‌ ஒளிமய 
மான  திநீமனியை உடையவனாகச்‌ சொல்லப்பட்ட 
கரராயணனையாவான்‌. இவை எல்லாவற்றையும்திருவுள்ள த்‌ 
இற்கொண்டு ஸ்ரீபராசரபட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்‌ தவத்தில்‌. 


“தேஜ: பரம்‌ தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ 
தாம்நா பரேணாப்ரணக௱ளத்‌ ஸுவர்ணம்‌ | 
த்வாம்‌ புண்டரீ கே்கூஷணமாமரநந்தி 
ஸ்ரீ ரங்களாத,ம்‌ தமுபாஸிஷீய ||” 
[ ஸ-ஒர்யமண்டலத்திலள்ளவனாய்‌. விரும்பத்தக்கவனாய்‌, 
மேலான அப்ராக்ருத மரீரத்தாலே நகத்திலிருந்து கலை 
வரை ஸுவர்ணமயமானவனாய்‌. மேலான தேஜஸ்ஸாய்‌. 
புண்டரீகா கூனாயிருப்பவனாக உன்னை வேகங்கள்‌ விளம்பு 
கின்‌ றன. அப்படிப்பட்ட ஸ்ரீரங்க தனன உன்னை 
உபாஸிக்கக்‌ கடவேன்‌.] என்று காயத்ரியின்‌ பொருளைக்‌ காட்டியருளினார்‌. 1 । 


( வரேண்யம்‌ பர்க்க ) விரும்பத்தக்கதான தேஜஸ்‌. 
“ வரணீயம்‌ '' என்பது * வரேண்யம்‌ ' என்றாயிருக்கிற து. 
(பூர்க்கட) எல்லாராலும்‌ பஜனம்‌ செய்யத்தக்கவன்‌ என்றும்‌, 
ஸர்வரையும்‌ பரிப்பவன்‌ (தாங்குபவன்‌ ) என்றும்‌, ஸர்வபாபங்களையும்‌ பாகம்‌ செய்கிறவன்‌ (அழிப்பவன்‌ ) என்றும்‌ 
பல விதமாக பர்க்கங்மப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
( திமஹி ) அந்தத்‌ தேஜஸ்ஸை தியானிக்கக்கடவோம்‌. 
“்‌ நாராயணாய வித்மஹே வாஸுதேவாய மஹி” 
“௩ாராயணம்‌ மஹா ஜ்ஞோயம்‌'" முதலான வேதரந்த வரக்யங்‌களை அநுஸர்திப்பது. 


( வரேண்யம்‌ ) ங்ரேஷ்டமானது என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. (ஸவிது: வரேண்யம்‌) 'ஸூர்யனைக்காட்டி 
லும்‌ ய்ரேஷ்டமானது' =` ஸூர்யனாலும்‌ விரும்பத்தக்கது * 
என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸூர்யனுக்கும்‌ 
,தேஜஸ்ஸைக்‌ கொடுப்பவன்‌ தானே என்பதை “0157 @ी55 0) 
கதம்‌ தேஜ: ஐக,த்வாஸயதேர3கிழலம்‌! ....தத்‌ தேஜோ வித்‌,தி, 
மாமகம்‌ '/ ஆதித்யனுக்குள்ளீருந்து உலகத்தையெல்லாம்‌ ஒளி 
விடச்‌ செய்யும்‌ தேஜஸ்‌ என்னுடையதே என்றறி.] என்று 
கதையில்‌ அவனே அருளிச்செய்கானன்றே. 


(ய:) யத்‌ பர்க்கழ என்கிறபடி, முன்‌ சொல்லப்பட்ட 
தகேஜஸ்ஸாகிய எந்த பகவான்‌; (௩: இய: (10 ७०7 55075 ) 
நம்முடைய புத்திகளைத்‌ தன்‌ விஷயத்தில்‌ ஈடுபடும்படி 
தூண்டுகறானோ; (5 55 (40555: இமஹி) அந்தத்‌ தேஜஸ்ஸை 
தியானிப்போம்‌ என்று அந்வயம்‌. (ய: ®: இய: ப்ரசோத, 
யாத்‌) நம்முடைய (தூங்கும்படியான ) ஞானேந்திரியங்களை 
எவன்‌ தூண்டுகிறானோ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 


“யோக5ந்த: ப்ரவிங்ய மம வாசமிமாம்‌ ப்ரஸாப்தாம்‌ | 
ஸஞ்ஜீவயத்யகி மாக்தித,ரஸ்‌ .ஸ்வத,ாம்நா | 

அந்யாம்ங்ச ஹஸ்தசரணமங்ரவணத்வக,ாதீ,ந்‌ 
ப்ராணாங்கமோ பகவதே புருஷாய தஸ்மை | ' 

[ஸகல சக்திகையும்‌ தரிக்கும்‌ எவனொருவன்‌ உள்‌ 
நுழைந்து நின்று என்னுடைய அூங்கும்படியரான 
வாகிந்திரியத்தையும்‌, மற்றுமுள்ள கை. கால்‌, காது. தோல்‌ 
முதலிய இந்திரியங்களையும்‌. ப்ராணனையும்‌ தன்‌ தேஜஸ்ஸால்‌ 
தூண்டுகறோனோ. அப்படிப்பட்ட அந்தப்‌ புருஷனுக்கு 
ஈமஸ்காரம்‌.] என்று இவ்வாக்யம்‌ பகவத்பரமாக பாகவதத்‌ 
தில்‌ உபட்ரும்ஹீணம்‌ செய்யப்பட்ட க. 

இவ்விடத்தில்‌ சிவதத்வ விவேககாரரான அப்பய்ய 
தீக்ஷிகர்‌ மற்றும்‌ சிலை பூர்வபக்ஷங்களைச்‌ செய்றோர்‌. 
அதாவது: * தத்‌? என்ற நபும்ஸகலிங்க பதத்தினால்‌ - தழு 
வப்படும்‌ “பர்க்க, ५०८52 ஸகாராந்த நபும்ஸகலிங்கமா 
யிருக்கவேண்டுமாகையாலே சிவ வாசகமன்று என்று 
சொல்லுவது பொருந்தாது; * தத்‌ ' என்பதைச்‌ சாந்தஸ 
மாகக்‌ கொள்ளலாமாகையாலே; உங்கள்‌ பக்ஷத்திலும்‌ 
ய என்பலனைச்‌ சாந்தஸமாகக்‌ கொள்ளவேண்டியிருக்கை 
யாலே இருவருக்கும்‌ துல்யமான கோஷமே என்கிறார்‌. 
இது சரியன்று. உபக்ரமத்திற்கு அனுகுணமாகவே உப 
ஸம்ஹாரத்திற்குப்‌ பொருள்‌ கொள்ள வேண்டுமென்று 
மீமரம்ஸாநியாயமிருப்பதரல்‌ உபக்ரமத்தில்‌ (ஆரம்பத்தில்‌) 
படிக்கப்பட்ட தச்சப்தத்திற்கு அனுகுணமாக (முடிவில்‌) 
உபஸம்ஹாரத்தில்‌ படிக்கப்படும்‌ -ய:' என்னும்‌ சப்தத்‌ 
அக்குப்‌ பொருள்‌ கொள்வதே பொருந்தியதாகையால்‌ ஈம்‌ முடைய பக்ஷ்மே பலம்‌ பொருந்தியதாகும்‌. 

இதற்குமேல்‌ மற்றொரு வாதம்‌: 'தத்‌' என்னும்‌ பதம்‌ 
ப்ரஹ்ம வாசகமாக கீதாதிகளில்‌ ப்ரஸித்தமாகையால்‌ 
“ஸவிது: வரேண்யம்‌. தத்‌, தீமஹி| ய: பர்க்க: ந: திய 
ப்ரசோதயாத்‌" என்று கூட்டிப்பொருள்கொண்டால்‌' ஒரு 
பதத்தையும்‌ சாந்தஸமென்‌ று சொல்லாமல்‌ நிர்வஹிக்கலாம்‌; 
ய: பர்க்க! என்று அகாராந்த புல்லிங்கமே தேறுவதால்‌ 
சிவவாசகமாகிறது என்று. இப்படிப்‌ பொருள்கொள்வ 
இலும்‌ பல கோஷங்களுண்டு. இரண்டாவது அடியிலிருக்‌ 
கும்‌ பர்க்காப்தத்தை மூன்றாவது , அடியிலிருக்கும்‌ யச்‌ சப்தத்தோடு சேர்ப்பதால்‌ தூராந்வயம்‌ என்னும்‌ தோஷம்‌ வரும்‌. 
மேலும்‌. "யத்ததேரர்‌ நித்யஸ்ம்ப;ந்த,:'' என்றெ நியாயப்படி யச்சப்தமும்‌ தச்சப்தமும்‌ சேர்ந்தே வரும்‌. 
மேலே சொன்னபடி தச்சப்தத்தை விசேஷ்யபதமாக்கிப்‌ 
பொருள்‌ கொண்டால்‌ யச்சப்தம்‌ சனியாகவே நிற்கும்‌. 
அதற்காக ஒரு தச்சப்தத்தை அத்யா ஹாரம்‌ செய்துகொள்ள 
வேண்டும்‌. ஆகையால்‌. இப்படி பஹுதோஷ தலஷீடமான இந்த அர்வயப்‌ அநாதரிக்கத்தக்க து. 

மேலும்‌, ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான புருஷன்‌ 
புண்டரீகாக்ஷனே என்பதைச்‌ சாந்தோக்யங்ருதிஅதிஸ்பஷ்ட 
மாக அறிவித்திருப்படதை மேல காட்டினோம்‌. 
மைத்ராணீப்யோபனிஷக்திலும்‌ இவ்விஜயமே உத்கோவஷிக்‌ கப்பட்டிருப்பதை இனி விளக்குவோம்‌. 

“அத்ர ஹி ஸெளம்யாக்‌,நேய ஸாத்விகமண்ட,லாநி: பி,த்வா 
தத: மாத்‌,த,ஸத்வாந்தராவஸ்தி,தம்‌ அசலம்‌ அமரம்‌ அச்‌- 
யுதம்‌ த்‌,ருவம்‌ விஷ்ணுஸம்ஜ்ஞம்‌ ஸர்வாத,ாரம்‌ த,௱ம ஸத்ய 
காமஸர்வஜ்ஞத்வ ஸம்யுக்தம்‌ ஸ்வதந்த்ரசைதந்யம்‌ ஸ்வே மஹிம்நி திஷ்ட,மா நம்‌ பங்யதி?” 
[இர்த ஸுர்யமண்டலத்தினாள்ளிருக்கும்‌ ஸோமனுடைய 
வும்‌. ௮அக்னியினுடையவும்‌. ஸாத்விகமான துமான மண்டலங்‌ 
களை பேதித்து. அதனாள்ளிருக்கும்‌ சுத்தஸத்வத்தினுள்‌ 
எழுந்தருளியிருப்பதாய்‌. அசையாத்தாய்‌, மரணமற்றதாய்‌. 
(அடியார்களை) ஈழுவவிட! ததாய்‌, நிலையானதாய்‌. விஷ்ணு 
வென்னும்‌ பெயரையுடையதாய்‌, ஸர்வர்க்கும்‌ ஆதாரமா 
யுள்ளதாய்‌. ஸத்யகாமத்வம்‌. ஸர்வஜ்ஞத்வம்‌ முதலான 
குணங்களுடன்‌ கூடியதாய்‌. ஸ்வதந்த்ரமானதாய்‌, ஞான 
ஸ்வரூபமானதாய்‌, தன்‌ மஹிமையிலேயே நிலைநிற்பதான 
ீதஐஜஸ்ஸைப்‌ । பார்க்கறான்‌.] என்று மைத்ராயணீய 
'அபனிஷத்தின்‌ ஆறாவது ப்ரபாடகத்தில்‌ காயத்ர்யர்த்த 
வீசாரப்ரகரணத்தில்‌, படிக்கப்பட்டது. ` அச்யுதம்‌ ' என்‌ 
அம்‌, “ விஷ்ணுஸம்ஜ்ஞம்‌ ` என்றும்‌ படித்திருப்பதனால்‌ 
இது பரமபுருஷபரமே என்பது கையிலங்கு நெல்லிக்கனியாய்‌ விளங்குகிறது. 

ஸ 9ர்யமத்‌,யே ஸ்தி,தஸ்‌ ஸோமஸ்‌ தஸ்ய மத்‌,யே ® -चछा ரம௩:| 
தேஜோமத்‌,யே ஸதி,தம்‌ ஸத்வம்‌ ஸத்வமத்‌,யே ஸ்தி,தோ 5ச்யுத: ॥| 
ஏஷ வை புருஷோ விஷ்ணுர்‌ வ்யக்தாவ்யக்தஸ்‌ ஸநாத௩: |!” 
[ஸூர்யனுக்கு நடுவிலே ஸோமனிருக்கிறான்‌ ; அவனுக்கு 
நடுவில்‌ அக்னியிருக்கறான்‌; அக்னியின்‌ நடுவில்‌ சுத்தஸத்வ 
யிருக்கிறது; அதன்‌ மத்தியில்‌ அச்சுதனிருக்கிறான்‌ ; இவனே 
ஸ்தூலஸூஷ்ம ப்ரடஞ்சமாயும்‌. பழமையானவனாகவும்‌, 
புருஷன்‌ என்னும்‌ பெயரையுடையவனாகவுமுள்ள விஷ்ணு] 
என்று யோக யாஜ்ஞவல்க்ய யம ங்கஸ்‌ மருதிகளிலும்‌. 


“ஸந்த்‌,யே த்‌,வே ஸம்ஸ்திதஸ்‌ ஸூர்யஸ்‌ தஸ்ய மத்யே 
ஸ்தி,த: மர | 

சந்த்‌ 90105 46४1 ஹுதாமஸ்து ஸர்வதேஜோமயோ ஹரி: ॥ 

அங்கு;ஷ்டஹாத்ர: புருஷஸ்‌ தஸ்ய மத்‌,யே மயோதி;த: 

ஸாங்கரேண ததள5த்‌,ருங்யஸ்‌ ஸத்ப்ரகாரோ 5திதேஜஸா ॥ 
ஸ விஷ்ணுர்‌ பு,வநாதாாரோ யஸ்யேத;ம்‌ ஸகலம்‌ ஜக,த்‌ ॥'" 
[ஸூர்யன்‌ இரண்டு ஸந்த்யா காலங்களையும்‌ அடைந்‌ தருக்‌ 
கும்போது சந்திரன்‌ அவனுக்கு நஈடுவிலிருக்றொன்‌. 
சந்திரன்‌ நடுவில்‌ அக்னி. அவனுக்கு நடுவில்‌ அ௮ங்குஷ்ட 
மாத்ரனாய்‌. புருஷப்தவாச்யனாய்‌, ஸர்வதேஜோமயனான 
ஹரி எழுந்கருளியிருப்பதரக என்னால்‌ சொல்லப்‌ 
பட்டான்‌, அவன்‌ சங்கரனாவஆம்‌ கரணப்படாதவன்‌; எத்‌ 
எனப்படும்‌ சித்வஸ்தவை ப்ரகாரமாகக்‌ கொண்டவன்‌ ; 
மிகுந்த தேஜஸ்ஸுடன்‌ கூடியவன்‌; அந்த வீஷ்ணுவே 

ஸகல புவனங்களுக்கும்‌ ஆத,ாரன்‌; அவனுக்கு ०८० ++ 
மானது ஸகலஜகத்தும்‌.] என்று அக்நேய புராணத்திலும்‌ 

இந்த ங்ருதிவாக்யம்‌ விஷ்ணுபரமாக விவரிக்கப்பட்ட து. 


நிற்க. மேலே எடுக்கப்பட்ட வாக்யத்தில்‌ ஆதித்ய 
மண்டலத்திலுள்ளவன்‌ விஷ்‌ ணுஸம்ஜ்ஞனான அச்யுதனே 
என்று நிர்ணயிதது மேலே “தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ '' 
என்‌ று இவனே காயத்ரியில்‌ உபரஸிக்கப்படுபவன்‌ என்பது சொல்லப்பட்டது. இங்கு “விஷ்ணு ஸம்ஜ்ஞம்‌'' என்றும்‌ 
“ அச்யுதம்‌ ”' என்றும்‌ இரண்டு நாமங்கள்‌ படிக்கப்பட்டிருக்‌ 
தின்றன. அப்படியிருக்க “பர்க்கேர 'பள்ஜயதீதி வைஷ 
பர்க்க, இதிருத்‌,ர: ” என்னும்‌ வாக்யக்‌ தில்‌ ( 7 55८०८15 5.50 6) 
சொல்லப்படுபவன்‌ ருத்ரன்‌ என்‌ று இவ்வுபநிஷத்தில்‌ 
படிக்கப்படுகையால்‌ காயத்ரீ ௬. த்ரபரமே என்‌ று வா இக்கிறார்‌ 
அப்பய்யதக்ஷிகர்‌ மேலே கண்ட வாக்யத்தில்‌ இரண்டு இத 
சப்தங்கள்‌ படிக்கப்பட்டிருப்பதை நேரக்கவேண்டும்‌. இதன்‌ 
உண்மைப்‌ பொருளாவது: பர்க்க: “(பாபங்களை )அழிக்கிறா 
னாகையால்‌ இவன்‌ டர்க்கனாகிறான்‌ என்‌ ற ருத்ரன்‌ சொன்னார்‌" 
என்பதே.ஆகையால்‌ இதைக்கொண்டுருக்ரபரத்வம்‌ ஸா திச்க 
முடியாது. அன்‌ றிக்கே பர்க்சசப்த த்தால்‌ சொல்லப்படுடவன்‌ 
ருத்ரன்‌ எனப்படுபவன்‌ என்றே இவ்வாக்கியத்திற்குப்‌ 
பொருள்‌ கொண்டாலும்‌, மேலே எடுக்கப்பட்ட விஷணு, 
அச்யுதன்‌என்னும்‌ இரண்டுநாமங்களுக்கு அனுகுணமாகருத்ர 
பதமும்‌ விஸ்ணுவையே குறிக்கிறதென்று கொள்ளவேண்‌ 
டும்‌. “ருத்‌,ரோ ப,ஹுபரிரா ப;ப்‌,௬ு:'' முதலான இடங்களில்‌ 
இக விஷ்ணு நாமமாகப்‌ படிக்கப்பட்டதன்றோ. “விஷ்ணு 
ஸம்ஜ்ஞம்‌ ” என்று விஷ்ணு நாமத்தை ஸம்ஜ்ஞையரகச்‌ 
சொல்லியிருக்க. அதற்கு விரோதமாக ருத்ரநாமத்திற்குப்‌ 
பொருள்கொள்வது நியாயவீராத்தமாகும்‌. ஆகவே இவ்‌ 
வாக்கியங்கள்‌ விஷ்னுபரமே என்பது வஜ்ரலேபாயித 
மாயிற்று. நிற்க, “ விஷ்ணு ஸம்ஜ்ஞம்‌ ” என்று மேலே 
எடுக்கப்பட்ட மைத்ராயணீம ங்ருதி அப்பய்யதீக்ஷிதரா லும்‌ 
சிவதத்துவ விவேகத்தில்‌ எடுக்கப்பட்டிராக்கறது. அவ 
ருடைய நூலுக்குக்‌ கண்டனமாக எழுதட்பட்ட வேதாந்த 
கெளஸ்‌துபத்திலும்‌ பூர்ணமாக உதாறுரிக்கப்பட்டிருக்‌ 
கிறது. அப்படியிருக்க *ஸ்மார்த்தர்களால்‌ அச்சிடப்பட்டிருக்‌ 

* ௫, பி. 1870ல்‌ லண்டனின்‌ ந. B. Cowell M. A. என்‌ 
னும்‌ ஆங்கிலயரின்‌ ஆங்கில மொழிடெயர்ட்புடன்‌, அத்வைத 
யொருவரின்‌ வடமொழியுரையுடன்‌ கூடியதாக பெங்கால்‌ 
ஏஷியாடிக்‌ ஸொஸைடியாரால்‌ கெளியீடப்பட்டுள்ள 
மைத்ராயணீய உபநிஷத்‌ புஸ்தகத்தில்‌  இவ்வாக்யம்‌ 
உள்ளதைப்‌ பிற்காலத்தில்‌ கண்டு விஷ்ணுசித்தவிஓயத்‌ தில்‌ 
வெளியிட்டுள்ளோம்‌. 

மைத்ீராயண்யுடனிஷத்தில்‌ இது காணப்படவில்லை. 
இது உபநிஷத்துக்களைக்‌ காப்பாற்றுவதில்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌ 
களின்‌ அநாதரவைக்‌ காட்டுகிறது. தலவகாரங்ரு இயில்‌ 
^ தஸ்யா ஏஷ த்ருதீய! பாத; தியோ யோ ந: ப்ரசோதவயா 
தி,தி யஜ்ஞோ வை ப்ரசோதயாத்‌ ?” [அந்த காயத்ரிக்கு 
மூன்றாவதபாசம்‌ ‘தியோ யோ ந: ப்ரசோதயாத்‌" என்பது. 
யஜீஞ புருஷன்றோே (௩ம்‌ புத்திகளைத்‌) தூண்டுபவன்‌ .] 
என்றொரு வாக்யம்‌ உள்ளது. *-யஜ்ஞோ யஜ்ஞபதிர்‌ யஜ்வா'' 
என்று ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ ஸ்ரீ பாகவதாதி 
புராணங்களில்‌ பல்லாயிரக்கணக்கானவிடங்களிலும்‌ யஜ்ஞ 
५०८५७८5 விஷ்ணு ஈாமங்களில்‌ ஒன்‌ முகப்‌ படிக்கப்பட்ட 
தாகையால்‌ இதனாலும்‌ காயத்ரி பகவத்பரமே என்று 
நிர்ணயிக்கப்டடுகிறது, பகவத்பரமாக வீவரித்திருக்கும்‌ பல 
உபப்ரும்ஹண வாக்யங்களையும்‌ மேலே காட்டியிருக்கிறோம்‌. 
மற்றும்‌ சில உபப்ரும்‌் ஹண வாக்யங்களையும்‌ இங்கு 
காட்டுவோம்‌, 
“ஸந்த்‌யமோருப,யோ: காலே த்,யாத்வா விஷ்ணும்‌ 

| ஸநாத நம்‌ | 
நிர்மலாத்மார்க்கஸந்தள்ஸீ க;யத்ரீமாரபேதத்‌ புத, ॥ ” 
[இரண்டு ஸந்த்யா காலங்களிலும்‌ ஸ௩ாதனனான 
விஷ்ணுவை தியானம்‌ செய்து அழுக்கற்ற மனத்தையுடைய 
வனாய்‌, ஸூர்யனையே பா ர்த்துக்கொண்டு புத்திமானாயிருப்ப 
வன்‌ காயத்ரியை ஆரம்பிக்க வேண்டும்‌,] என்று யோக 
யாஜீஞவல்க்யரால்‌ மற்றோரிடத்தில்‌ சொல்லப்பட்டது. 
ஜூபாலிஸ்ம்ரு தியிலும்‌ இவ்வசனம்‌ டடிககப்படுகிறது. 


^" ரங்மிஜ்வாலாஸஹஸ்ராட்‌,யம்‌ அமலம்‌ விபுலம்‌ ரவே: | 
55565: एण छना பம்‌ து ஸெளம்யம்‌ ஸோமஸ்ய மண்டலம்‌! 
ஸபுரத்ஸ்பு,லிங்கமநலஜ்வாலாமாலா ஸமாகுலம்‌ | 

தஸ்ய மத்யே ஸுகளஸீநம்‌ தப்தஹாடகஸந்நிபும்‌ ॥ 
சதுரங்குலமாத்ரந்து மாகபத்ரநிபாம்பரரம்‌ | 

1 ரக்தநேத்ரம்‌ ஹரிம்‌ ரக்தபாணிபாதரகளம்மமாகம்‌ || 

ராங்கசக்ரக,தளபாணிம்‌ ஸ்ரீ வத்ஸாங்கதவக்ஷஸம்‌ | 

ஏவம்‌ த்வாத்வா ஜபேந்‌ மந்த்ரம்‌ ஸாவித்ரம்‌ நியதங்மரஈசி: ॥ 
[ஆயிரக்கணக்கான கிரணஜ்வாலைகள்‌ பொருந்தியதாய்‌, 
அழுக்கற்றதாய்‌. மிகட்பெரிதாய்‌ விளங்குகிறது ஸூர்ய. 
மண்டலம்‌; அதனுள்‌ குளிர்ந்த ஒளியை உடையலதாய்‌, 
இனிதாய்‌ வீளங்குகிறத சந்திரனுடைய மண்டலம்‌; அதன்‌ 
நடுவில்‌ நெருப்புப்பொறிகள்‌ வீசுவதாய்‌, நெருப்பு ஜ்வாலா 
மாலைகள்‌ கசூழப்பெற்றதாய்‌. உருக்கன்‌ பொன்பீபோன்ற தாய்‌. நான்கு அங்குலம்‌ பரிமாணமுள்ள தாய்‌, கிளி 
யின்‌ இறக்கையைட்போன்ற பீதாமபரத்கை உடுத்தின 
தாய்‌. சிவந்த இிருக்கண்களை உடையதாய்‌ சிவந்த 
இருக்கை. கால்கள்‌. நகங்கள்‌ முதலானவற்றையுடையகாய்‌. 
சங்கசக்ர கதைகளைக்‌ கையில்‌ தரிந்ததாய்‌. ஸ்ரீவத்ஸமாகிற 
மறுவால்‌ அடையாளம்‌ செய்யப்பெற்ற திருமார்பையுடைய 
தான திருமேனியுடன்‌ கூடியவனான ஹரியை இம்மாதிரி 
தியானம்‌ செய்து. நியமத்துடன்‌ கூடியவனாய்‌. பரிசுத்தனாய்‌ 
காயத்ரீ மந்திரத்தை தியானிக்கக்‌ கடவன்‌.] என்று ஸனக 
ஸ்ம்ருதியிலும்‌ அதிஸ்பஷடமாக அறிவிக்கப்பட்ட து. 
-அர்ச்சந்தி முந்யோ நித்யம்‌ ஐலேந ரவிமண்ட,லே | 
ஆதி,த்யமண்ட;லே நித்யம்‌ தே வதே,வமநரமயம்‌ ॥ 
ஸங்க,சக்ரக,தளபாணிம்‌ த்‌,யாத்வர விஷ்ணுமுபாஸதே |' 
[முனிவர்கள்‌ தினந்தோ றும ஸடூர்யமண்டலத்தில்‌ பகவானை 
(அர்க்ய) ஜலத்தினால்‌ ஆராதிக்கிறார்கள்‌. ஆதித்யமண்டலத்‌ 
தில்‌ தேவகேவனாய்‌, வியாதியற்றவனாய்‌. சங்கசக்ரகதை 
களைக்‌ கையிலே கரித்தவனான வீஷ்ணுவை தினந்தோறும்‌ 
தியானித்து உபாஸிக்கறார்கள்‌. ] என்‌ று தொடங்கித்‌ யேயஸ்‌ 
ஸதா” முதலான சுலோகங்களையும்‌ ஈாரஸிம்ஹ புராணம்‌ 
௩வின்‌ றது. மஹாபாரதம்‌ ஆங்வமேதிக பர்வத்தில்‌, 
அர்த்‌, வபள ஹாஸ்‌ ததோ பூத்வா ஸர்யமீக்ஷேத்‌ ஸமாஹித | 
தங்மண்ட,லஸ்தழம்‌ மாம்‌ த்‌,யாயேத்‌ தேஜோ மூர்த்திம்‌ 
சதுர்பு,ஓம்‌ ॥ 
 
०. 559४1७5 ஐபேந்மந்த்ரம்‌ சித்ரம்‌ தச்சக்ஷாரித்யபி | 
ஸாவித்ரீஞ்ச யத;மக்தி ஜப்த்வா ஸ9க்தஞ்ச மாமகம்‌ || 
[கையை உயரத்தூல்னெவனாய்‌, சாந்கனாய்‌, நின்று 
ஸுூர்யனைக்‌ காணக்கடவன்‌ ; அந்த ஸடிர்யமண்டலத்தி 
லிருப்பவனாய்‌. கேஜோமூர்த்தியாய்‌. நான்கு கைகளை 
யுடையவனான என்னை தியானிக்கக்கடவன்‌; : உதுக்யம்‌” 
“சித்ரம்‌” “தச்சக்ஷா:'' என்று தொடங்கும்‌ மந்திரங்களை 
யும்‌ ஜபிக்கக்கடவன்‌. இயன்றவரையில்‌ காயத்ரியையும்‌ 
என்னுடையதான புருஷஸூக்தத்தையும்‌ ஜபித்து... ] 
என்று தர்மபுத்ரனைக்‌ குறித்துச்சொல்லப்படும்‌ க்ருஷ்ண 
வசனமும்‌. காயத்ரீ கசேசவ்பரமே என்பதைக்‌ காட்டித்‌ 
தருகிறது. ஸாத்விக சரஸ்திரங்களில்‌ இவ்வளவு 
உபப்ரும்ஹணங்களிருக்கும்போ து இலிங்கத்திட்ட 
புராணம்‌ முதலிய தாமஸ நூல்களிலிருந்து ஒன றிரண்டு 
வசனங்களைக்‌ காட்டி இக்‌ காயத்ரியை சிவபரமாக்க முயல்‌ 
வது வீணானதே என்பது செல்லாமலே விளங்கும்‌. 


நிற்க; மேலே சொன்ன யோஜனையிலிருந்து “யாதொரு 
கேஜுஸ்ஸானது நம்முடைய புதீதியைத்‌ (தன்‌ வியமாகத்‌) 
அண்டுகிறதா, ஸூர்யனுக்குள்ளிருக்கும்‌ விரும்பத்தக்க 
அந்தத்‌ கேஜஸ்ஸை தியானிடபோமாக” என்னும்‌ பொருள்‌ 
தேறிநிற்கறது. இந்தப்‌ பொருளே சாந்தோக்யாதிணருதி 
வாக்யங்களுக்கும்‌ மேலே எடுத்த புராணவசனங்களுக்கும்‌ 
“மீத: பரம்‌ ' என்ற பட்டர்‌ ஸ்ரீ ஸூக்திக்கும்‌ பொருந்தி 
யது. ஆனால்‌ இந்த யோஜனையில்‌ “ தியோ யோ ௩: ” 
என்றவீடத்திலள்ள ய: ' என்னும்‌ பதழ்சைச்‌ சாந்தஸ 
மாகக்‌ கொள்ள வண்டியதொரு குறையுண்டு. மேலும்‌. 
காயச்ரிக்கு ஸவிதாதகேவகை என்று டடிக்கப்படுகிறத. 
சாயத்ரீப்ரதிபாத்யன பரமாத்மாவே. என்பது பல ப்ர 
மாணங்களில்‌ படிக்கப்படுவதால்‌ இந்த = ०० ०७5 0 = (15८2 
பரமாத்ம @¶ ऊ = ८001 9 ० क्छ, ८2. அப்படியிருக்க காயத்ரீ 
சரீரத்தினுள்ளிருக்கும்‌ ஸவித்ருறப்தத்தைப்‌ பரமாத்மபரமாகக்‌ கொள்ளாமல்‌ ஸுூர்ய பரமரகக்‌ கொள்ளவேண்டிய 
கொரு குறையுமுண்டு முந்‌ இன யோஜனையில்‌. இவ்விரண்டு 
குறைகளுமில்லா தபடி புராணங்களிலும்‌. ஆசா ரியர்களா லும்‌ 
மற்றுமொரு யோஜனை கடட்டப்டட்டிருக்கிறது. 


அதாவது:-.ய:-எந்த தேவன்‌, ந: திய: ப்ரசோதவயாத்‌- 
௩ம்‌ புக்தியைத்‌ தூண்டுறொனோ. ( தஸ்ய ) 05१००७०५ 
नण 9 ॐ--- அந்த தேவனான ஸவிதா எனப்படும்‌ கிலி 
வினுடைய வரேண்யம்‌ தத்‌ பர்க்க; விரும்பத்தக்க அந்த 
ஒளிமயமான ஸ்வரூபத்தை (அல்லது குணங்களை.) மஹி 
தியானம்‌ செய்யக்கடவோம்‌ என்‌ றபடி. அந்த யோஜனை 
யில்‌ -ய:' என்பதைச்‌ சாந்தஸமாகக்‌ கொள்ளவேண்டாம்‌; 
ஸவித்ருர்ப்தமும்‌ பரமாத்மபரமாகும்‌, 


“யோ தேவஸ்‌ ஸவிதா 5ஸ்மாகம்‌ தியோ தர்மாதி,கே௱சரா:। 
ப்ரேரயேத்‌ தஸ்ய யத்‌, பர்க்கஹஸ்‌ தத்‌, 

भ பத, வரேண்யமுபா ஸ்மஹே | ` 
[(ஸ்ருஷ்டிகர்த்த/வாகையால்‌) : ஸவிதா என்று பெயர்‌ 
கொண்ட யாவனொரு © = ® व्ल ஈம்முடைய புத்திளை 
தர்மார்த்தகாம: மோக்ஷங்களில்‌ செல்லும்படி தூண்டு 
2173 @. அவனுடையவையான விரும்பத்தக்க குணங்களை 
உபாஸிக்கக்கடவோம்‌.] என்று அகஸ்திய ஸ்ம்ருதியிலும்‌. 


தேவஸ்ய ஸவிதுஸ்தஸ்ய தி,யோ யோ ந: ப்ரசோதயாத்‌ ॥ 
பர்க்கேஎ வரேண்யம்‌ தத்‌, (न छ தீமஹீத்யர்த்த, र 
உச்யதே || 
[ எவனொருவன்‌ 'ஈம்‌ புத்திகள’ைத்‌ आ च्छ ® द, அந்த 
தவனாகிய ஸவிதாவினுடையதாய்‌. ஞானஜளியாயிருப்ப 
தாய்‌. விரும்பத்தக்கதாய்‌. ப்ரஹ்மசப்தவாச்யமான அந்த 
ஸ்வரூபத்தை தியானிக்கக்கடவோம்‌.] என்று கயமை 
ஸாக்ஷாத்கரித்த விங்வாமித்ரருடைய ஸ்ம்ருதியிலும்‌ 
ஸவீதரு பாப்தத்தைப்‌ பரமா த்மபரமரகக்கொண்டு மேலே 
கண்டவாறு பொருளுரைக்கப்பட்டிருக்கறது. ங்ருதட்ர காசிகாசாரியரும்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்‌ திருக்கிறார்‌. மேற்‌ 
கண்ட இரண்டு ஸ்ம்ருதி வசனங்களை யும்‌ காயத்ரீ ஜபத்திற்கு 
முன்‌ பலர்‌ அனுஸந் தித்‌ து வருகிறார்கள்‌. இனி இப்பொருனளை வீளக்குவோம்‌. 


(ஸவித:) ஸவிகாவினுடைய, : 'ஷூஞ-ப்ராணிப்ரஸவே”” 
என்று த,ராதுவாகையாலே ஸர்வலோகஸ்ரஷ்டாவான 
பகவான்‌ ஸவிதா எனப்படுகறான்‌ . இங்கு ஸ்ருஷ்டியைச்‌ 
சொன்னத ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌. 
ஸர்வஐகத்தையும்‌ படைத்து. அழிப்பது இவனுக்கு மிகவும்‌ 
ஆயாஸ ஸாத்யமாயிருக்குமோ? என்றும்‌. இதைச்‌ செய்வ 
தனால்‌ இவனுக்கு என்ன ப்ரயோஜனம்‌? என்‌ றும்‌ ०४585 @ 
0.०6. அதை நிவர்த்திக்கிறெது அடுத்தபடியாக: (தேவஸ்ய) 
ஸ்ருஷ்ட்யாதிக’ளை விளையாட்டாகச்‌ செய்பவனுடைய: 
“ 8०/57 57 ” என்றல்லவோ தீபீத. இவ்வர்த்தத்தை, 
^" ऽ ஹரேரித,ம்‌ ஸர்வம்‌ க்ஷரமித்யவத,ார்யதாம்‌ `" 

[ அமின்‌ றவையான இவையெல்லாம்‌ ஹரியி னுடைய 
விளையாட்டு என்று அறியப்படட்டும்‌. ] என்றும்‌. 


“க்ரீட,தோ பளலக்ஸ்யேவ சேஷ்டாம்‌ தஸ்ய நிமமாமய "” 
“மோத,தே பகவாந்‌ பூதைர்‌ (1769. க்ரீட,ககைரிவ”” 
[சிறுவன்‌ வீனையாட்டுப்‌ பொருள்களைக்கொண்டு ஆநந்திப்‌ 
பதுபோல்‌, பகவான்‌ பூகங்களைக்கொண்டு ஆரந்திக்கீறான்‌, ] 
என்றும்‌ ரிஷிகளும்‌. “லேகவத்து லீலாகைவல்யம்‌ ”” 
[ உலகத்தில்‌ (அரசன்‌ முதலானார்க்குப்‌) போலவே பகவானாுக்‌ 
கும்‌ ஜகத்ஸ்ருஷ்ட்யா இகள்‌ கேவலலீலையைப்‌ பலனாகவுடை 
யவை.] என்று பாதராயணரும்‌. .அகிஸ்பு,வ5 ஜம்மஸ்தேம 
பூங்களதிலீலே'' [எல்ல” உலகையும்‌ படைத்து அளித்த 
அழிப்பதையே லீலையாக உடையவணி_த்தில்‌] என்‌ 1/1 
பாஷ்யகாரரும்‌, "நாட்டைப்படையென்‌ றயன்‌ முதலா த்தந்த 


நளிர்மாமலருந்தி வீட்டைப்பண்ணி விளையாடும்‌ விமலன்‌” என்று ஆண்டாளும்‌, 
“இன்புறு மிவ்‌ விளையாட்டுடையான்‌'” 
என்‌ று ஆழ்வாரும்‌. ' உலகம்‌ யாவையும்‌ தாமுளவாக்கலும்‌ 
நிலைபெறுத்தலும்‌ நீக்கலும்‌ நீங்கலா ஆலகிலா விளையாட்‌ 
டுடையார்‌ '' என்று கம்பரும்‌ அதநுஸந்தித்தார்கள்‌. 
(தேவஸ்ய) ` திவுக்ரீட;ா விஜிகீ,ஷா வ்யவஹார 53015 9058 
மோத, மத, ஸ்வப்ந காந்தி க,திஷு '' என்‌ இறபடியே திவு 
தாது பல பொருள்களைக்கொண்டது. அவையெல்லாம்‌ 
இவனிடமே பொருந்தியுள்ளனவாகையால்‌ இவனே நீரு 
பாதி,க தேவனாவான்‌.. “தி,வ்யோ தே,வ ஏகோ நாராயண” 
என்று வேதமும்‌. ˆ பூவாந்‌ நாராயணோ தேவ: என்றும்‌, 
“ஸாக்ஷாத்‌ தேவ: புராணோஸெள”” என்றும்‌ ரிஷிகளும்‌, 
“இலையினால்‌ இலங்கை செற்ற தேவனே தேவனாவான்‌” என்று 
ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அறுதியிட்டார்கள்‌. இனி 
தேவசப்தார்‌ த்தங்கள்‌ இவனிடமே பொருந்தியிருக்கிறப்டி யைக்‌ காட்டுவோம்‌. 
“தி.வுக்ரீட,ா? என்னும்‌ பொருள்‌ மேலே விவரிக்கப்‌ 
பட்டது. * திவு-விஜிக.ஷஹா' ஓஜயிப்பதில்‌ ' இச்சையை 
உடையவன்‌ தேவன்‌; அதாவது. சேதனரை “ஜிதந்தே 
புண்டரீகாக்ஷ?' “தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ 
நாரணற்கு '' என்னப்பண்‌ ணுவதைப்‌ பெறாோப்பேறாக நினைத்‌ 
திருக்குமவன்‌ என்‌ றபடி, *“ஸத்யேந லோகார்‌ ஜயதி” 
[ராகவன்‌ ஸத்யத்தன லே லோகங்களை ஜயிக்றோர்‌.] 
“ஜிதம்‌ ப,க,வதா ஜகத்‌ '' [பகவானாலே உலகெல்லாம்‌ 
[ஐயிக்கப்பட்ட து] “௩ாவிஜித்ய நிவர்த்ததே' [ஜயிக்காமல்‌ 
திரும்பமாட்டான்‌ ராமபிரான்‌. ] ‘சென்று கொன்று வென்றி 
கொண்ட வீரன்‌” முதலான வீடங்சளீல்‌ இவ்வர்த்தம்‌ 
அறிவிக்கப்பட்ட து. . 

( தேவஸ்ய ) : இவு-வ்யவஹார:' வேகம்‌ முதலான 
வாக்குகளை வ்யவஹரிப்பவன்‌ தேவன்‌ என்றபம்‌. 

“யோ ப்‌,ரஹ்மாணம்‌ வித,த;தி பூர்வம்‌ யோ வை 
வேதரம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை” 

[எவனொருவன்‌ முன்னொருநாள்‌ பிரமனைப்‌ படைத்து, 
அவனுக்கு வேதங்களை உடதேசித்தானோ....] என்றும்‌. 
“பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்கஸ்ய வக்தா ஈாராயண: ஸ்வயம்‌” 
[பாஞ்சராத்ரம்‌ முழுவதையும்‌ உரைத்தவன்‌ ஸாஷாத்‌ 
நரராயணனாவான்‌.] என்றும்‌. -பீதகவாடைப்‌ பிரானார்‌ 
பிரமகுருவாகி "=" இன்கவி பாடிய ஈசன்‌ '' '' திருவரங்கர்‌ 
தாம்‌ பணித்த மெய்ம்மைப்‌ பெருவார்த்தை ” -- மறையுரைத்த 
திருமால்‌ ” `“ அன்னமாய்‌ அன்றங்கு அருமறை பயந்தான்‌ `" 
என்றும்‌ சொல்லுகிறப்டியே வேதம்‌ முதலான உத்க்ருஷ்ட 
வாக்குகளை உரைத்தவனன்றோே இவன்‌. அன்றிக்கே வ்யவ 
ஹாரம்‌' என்னும்‌ சொல்‌ வழக்குப்‌ பேசுவதையும்‌ குறிக்கு 
மாகையால்‌, கெவசப்துத்துக்கு வழக்குடடேசுமவன்‌ என்‌ 
மும்‌ ஓர்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. அதாவது: சேஃனன்‌ 
“நான்‌ எனக்கு என்றால்‌ நீ எனக்கு ' என்று வழக்குப்‌ 
பேசி அவனை ஆட்கொள்ள முயலுமவன்‌ என்றபடி. 
இவன்‌ வழக்குரைக்கும்‌ வழியை 


“த்வம்‌ மே5ஹம்‌ மே குதஸ்‌ தத்‌ ததி குத இத;ம்‌ 
வேத,மூல ப்ரமாணாத்‌ 
ஏதச்சா நாதி,ஸித்‌,த, த,நுப,வவிப,வாத்‌ नण 5/9 
ஸாக்ரோமு ஏவ | 
க்வாக்ரோம: கஸ்ய கீ,தாதி,து மம விதி,த: கோபி 
ஸாக்ஷ£ ஸுஈதீ,: ஸ்யாத்‌ 
ஹந்த! த்வத்பக்ஷபாத ஸ இதி ந்ருகலஹே ம்ருக்‌,ய 
மத்யஸ்தவத்‌ த்வம்‌ ॥” 
[பகவான்‌:-—ஜீவனே! நீ என்‌ னைச்சேர்ந்தவன்‌; ஜீவன்‌: 
அன்று; நான்‌ எனக்கே உரிமையர்னவன்‌; பகவான்‌: 
அதெப்படி? ஜீவன்‌:-நீர்‌ சொல்லுவதுதான்‌ எப்பட 


பகவான்‌: நான்‌ சொல்லுவது வேதம்‌ என்னும்‌ மூலப்ரமா ணத்தை ஆதாரமாகக்‌ கொண்டது; ஜீவன்‌:-—நான்‌ சொல்லு 
வது அநாதியமாயீருக்கும்‌ அநுபோக பாத்தியத்தை அடிப்‌ 
படையாகக்கொண்ட த. பகவான்‌:-நீ சொல்லும்‌ அறுபோக 
உரிமை ஆகேபம்‌ செய்யப்பட்டிருக்கிறது; ஜீவன்‌:_—எங்கு 
90 =$ ८, செய்யப்பட்டிருக்கறெ தயார்‌ ஆகேபம்‌ செய்திருக்‌ 
கிறார்கள்‌ ? பகவான்‌:-கீகை முதலான நூல்களில்‌ என்னால்‌ 
ஆக்ேபம்‌ செய்யப்பட்டிருப்பது பிரஸித்தம்‌. ஜீவன்‌:-இத,ற்கு 
யார்‌ ஸாக்ஷி; பகவான்‌: - ஞானியே कणन कः ஜீவன்‌:-_—ஜயோ! 
அவன்‌ உன்னைச்‌ சேர்ந்தவனன்றோ என்று இப்படி ஜீவ 
னுடன்‌ ஏற்பட்ட விவாதத்தில்‌ (வேறு வழியில்லாமல்‌) 
ப்ரமாணம்‌ செய்து கன்‌ கட்சியை ஸாதித்துக்கொள்ளும்‌ 
நிலையிலே இருக்கிறீர்‌. ] என்‌ று பட்டர்‌. துளசிமாலையணிந்து 
இருமஞ்சனம்‌ செய்துகொண்டிருக்கும்‌ தசையிலுள்ள 
டெருமானைப்‌ பார்த்து அருளிச்செய்த த இங்கு ௮ நுஸந்திக்கத்‌ 
தக்கது, [ தளசிமாலையணிந்து நீராடிப்ரமாணம்‌ செய்து தம்‌ 
கட்சியை ஸா தித்துக்கொள்ளும்‌ பழங்கால வழக்கத்தை உட்‌ 
கொண்டு கடைசி அடியை அருளிச்செய்தள்ளார்‌ பட்டர்‌.] 
(8 த,வஸ்ய) 'தி,வு-த்‌,யுதி:' பிரகா சியா நிற்பவன்‌ தேவன்‌. 
“தமேவ ப௱ாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ விப,தி ” 
[ரகா சியா நிற்கும்‌ அவனை அனுஸரித்தே எல்லா வஸ்கக்‌ 
களும்‌ பிரகா சிக்கன்‌ றன; அவனுடைய ஒளியாலே இவை 
யனைத்தும்‌ ஒளிவிடுகன்றன.] என்றும்‌. 


“அத, யத,த: பரோதி,வோ ஜ்யோதிர்‌ தீ,ப்யதே”' 
[பரமபதத்தின்மேல்‌ யாதொரு சோ தி பீரகாசிக்கறதோ....] 
என்றும்‌. “ஈாராயணபரோ ஜ்யோதி: என்‌ றும்‌, “பரஞ்சோதி 
நீ பரமாய்‌'” **நிறைந்தசோதி வெள்ளஞ்சூழ்ந்த'' “சோதி 
வெள்ளத்தனுள்ளே எழுவதோருரு”' என்றும்‌ சொல்லுகிற 
படியே எல்லையற்ற தேஜஸ்ஸை உடையவன்‌ என்கை. 


(தே,வஸ்ய) தி.வு-ஸ்துதி:' ததிக்கப்படுமவன்‌ தேவ 
னாகிறான்‌. “ததோ தேவார ஊர்த்‌ வபாளஹவ: ஸ்துவந்தி ए 
[அதன்‌ பிறகு தேவர்கள்‌ கையை உயரத்தூக்கிக்கொண்டு 


அதிக்கிறார்கள்‌..] என்றும்‌. “ தஸ்ய (एक = ஸாம ச கேஷ்‌ ணெள”' [ருக்வேதமும்‌ ஸாமவே தரமும்‌ அவனைத்‌ ததிப்பவை] 
என்றும்‌. - ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:?' [த திக்கத்தக்கவன்‌; 
அதியில்‌ பிரியமுள்ளவன்‌.] என்றும்‌, ^ ஸ்மபி,ஷ்டேயே कणिक 


ष्कः ” [௩ன்கு ததித்துத்‌ கலை வணங்கினார்கள்‌ ] என்றும்‌: 
*" ஸங்கை,ஸ்‌ ஸாராணாம்‌....ஸ்துத: ”  / திரிவிக்கமொவதார 
காலத்தில்‌) தேவர்களின்‌ கூட்டங்களா லும... துதிக்கப்பட்‌ 
டான்‌] என்றும்‌, “ஏத்த ஏழுலகும்‌ '' -“ யரனுமேத்தி 
ஏழுலகும்‌ முற்றுமேத்திப்‌ பினனையும்‌ தானும்‌ ஏத்திலும்‌ 
தன்னை ஏத்கவேத்த எங்கெய்தும்‌” என்‌ றும்‌ சொல்லுகிற 
படியே ஸர்வசாஸ்திரங்களாலும்‌, ஸர்வ சேதனராலும்‌ அதிக்கப்படுமவன்‌ என்றதாயிற்று. 


(தேவஸ்ய) *தி,வு-மோத;:'' ஆனந்த த்தையுடையவன்‌ 
தேவனாகிறான்‌. “ விஜ்ஞாநமாரந்தழம்‌ ப்‌,சஹ்ம”' “யதேஆ 
ஆகாமேோோ ஆநந்தே” ௩ ஸ்யாத்‌ '' -ஆநந்தழம்‌ ப்ஏஹ்மேதி 
வ்யஜாநாத்‌ '' “இன்பம்‌ பயக்க இனிதுடன்‌ வீற்றிருந்தடள்‌ 
கின்ற எங்கள்‌ பிரான்‌ '' என்கிற டியே அநந்தத்தையே 
ஸ்வரூபமாக உடையவனாயிருப்பவன்‌ என்‌ றதாகிற 5. 
(தேவஸ்ய) 'திவு-மத,்‌ அவாப்தஸமஸ்தகாமனாகையாலே 
ஒருவரையும்‌ கணரீசியா திருக்கையா கிற மதத்கையுடையவன்‌ 
தேவன்‌. °" அவாக்யகாதற: ?' [ஓருவருடனும்‌ வார்த்கை 
சொல்லாமலிருப்பவன்‌ ; விருட்பற்றவன்‌. ] என்னும்‌ நீலை 
யைச்‌ சொல்லுகிறது. (0.5 ३००४८, ) 'இவுகார்தி:' கண்ணுக்‌ 
கினிய காந்தியை உடையவன்‌ தேவன்‌ -வித்‌,யுத: புருஷாத்‌” 
^" நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ' 
^" ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌'' -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” 
[குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. 
போன்றதான காந்தியை உடையவல்‌ ] “முளைக்‌ கதிரை 
^“ கதிர்‌ மதியம்‌ போல்‌ முகத்தான்‌ '' எல்‌ ற தேஹ காந்தியை 
உடையவன்‌ தேவன்‌என்‌ றதாயிற்று. (தேவஸ்ய) 'தி,வு-க,தி.” 
ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவுமிருப்பவன்‌ தேவனாவான்‌ , 


"புருஷாந்‌ ந பரம்‌ கிஞ்சித்‌ ஸா साहू आ ஸா பரா க,தி: ” 
^ ஸரணம்‌ ௧,திர்‌ நாராயண: "का पध) छा பராயணம்‌ ”' 
“* கதிர்‌ கம்ய்சாஸெள ஹரி: ”* [ப்ராப்யப்ராபகமாகவிருப்‌ 
பவன ஹரி] *நெறிமையால்‌ நினையவல்லார்‌ கதியினை '* 
“ பதியே பரவித்தொழும்‌ தொண்டர்‌ தமக்குக்கதியே "' என்கிற 
படியே மேலான உபரயம।! கவும்‌. உபேயமாகவுமிருப்பவன்‌ 
தேவன்‌ என்றதாயிற்று. ஆக இவற்றால்‌ தேவசப்தக்திற்‌ 
குள்ள அர்த்தங்களெல்லாம்‌ நாராயணனுக்கே பொருந்தும்‌ 
என்று நிர்ணயிக்கப்பட்ட து. 


(தத்‌ வரேண்யம்‌ பர்க்க, வீரும்பத்தக்கதாய்‌, வேதாந்‌ 
'தங்களில்‌ ப்ரஸித்தமானதான குணங்களை. (தத்‌) - தஸ்‌ 
196५1859 969 ததங்வேஷ்டவ்யம்‌ தத்‌, வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்‌”" 
[பரமாத்மாவினிடத்திலுள்ள அந்த குண ஸமூஹம்‌ தேடத்‌ 
தக்கது; அது அறியத்தக்க து. ] என்னும்‌ ஸ்ருதி ப்ரஸித்தியை 
நினைப்பது. (வரேண்யம்‌) ஸர்வராலும்‌ ஆகரிக்கத்தக்கது. 
புஷ்பத்திற்கு மணம்‌ போலவும்‌ தேனுக்குச்‌ சவைபோலவும்‌, 
ஸூர்யனுக்கு ஒளிபோலவுபிருந்‌தகொண்டு பசவானுக்கும்‌ 
பெருமையைத்‌ தருபவையன்‌ (ए இவை. “ஸோஃ5ங்நுதே 
ஸர்வாந்‌ காமாம்‌ '” என்று மோக்ஷப்ராப்யமாகவும்‌ சொல்லப்‌ 
பட்டன அவனுடைய குணங்கள்‌, ட உனது பாலேபோல்‌ 
சீரில்‌ பழுத்தொழிந்தேன்‌ ” : செங்கண்மால்‌ சீர்க்கும்‌ சிறிதுள்‌ 
भाण" -ஈர்கன்‌ற குணங்களையுடையாய்‌'' “நின்றெனதாவியை 
ஈர்கின்ற சீலமே” கோவிந்தன்‌ குணம்‌ பாடி ஆவிகாத்திருப்‌ 
பேனே” என்று ஆழ்வார்கள்‌ ஆழங்காற்பட்டதும்‌ இக்‌ 
குணங்களிலேயேயன்றே. 


(பர்க்க) குணஸமூஹத்தை; - ர்‌; என்னும்‌ எழுத்து 
இங்கு அதிகமாகப்‌ படிக்கப்பட்டிருக்கிறது, பகு என்‌ றபடி, 
இப்படியே யஜுர்வேதத்தில்‌ ^ அபஸ்ஸிஷாஸந்‌ ஸுவரப்ர 
தத்த: ” என்றவிடத்தில்‌ “அப்ரதீத:' [அறியப்படா தவல்‌ ] 
என்பதற்கு ட திலாக. “ அப்ரதீத்த:”' என்றகன்றோ. (५550४ 
८०.5८2 குணங்களுக்கு வாசகமானபடியென்‌ என்னில்‌: 

“ஐங்வர்யஸ்ய ஸமக்‌,ரஸ்ய வீர்யஸ்ய யமாஸ: மசிய: | 
ஜ்ஞா£வைராக்‌,யவயோங்சைவ ஷண்ணாம்‌ ப,க இதீரணா ॥ '* 


{ பூர்ணமான ஐங்வர்யம்‌. வீர்யம்‌. சீர்த்தி, செல்வம்‌. ஞானம்‌. 
வைராக்யம்‌ என்னும்‌ ஆறு குணங்களுக்கும்‌ வாசகம்‌ 
८५580०५०. ८9. 0 என்‌ று விஷ்ணுபுராணத்தில்‌ ८५5 80०५८०८ .5 ८9 
குணங்களைச்‌ சொல்லுவதென்று காட்டப்பட்டது. 5.5" 
என்பதற்குச்‌ சேர இந்க (१५१८००८5 ऊ @@ ® ஸகாராந்த 
ஈபும்ஸகலிங்கபதமாகக்‌ கொள்ளவேண்டும்‌. அகாராந்த 
மாகவே கொண்டால்‌ இரண்டாவ து வேற்றுமையின்‌ 
அர்த்தத்தில்‌ முதல்‌ வேற்றுமை படிக்கப்பட்டிருப்பதாகக்‌ 
கொள்ளவேண்டும்‌. இங்கு ஆறு குணங்களை (,4550०+०८/5 ॐ 
அக்குப்‌ பொருளரகச்‌ சொன்னது. வம வதரந்ய: ”' 
முதலானவிடங்களில்‌ சொன்ன ஸமஸ்‌ககல்யாண குணங்‌ 
களுக்கும்‌ உபலக்ஷணம்‌, ப,ஜ்யதே இதி பகத” [ப.ஜனம்‌ 
செய்யப்படுகிறதாகையால்‌ குணஸமூஹம்‌ பகமெனப்டடு 
கிறது. என்‌ னும்‌ வ்யுத்பத்தியா லும்‌ ப கலீப்ப்தம்‌ குணவ சக 
மாகிறப்டியைக்‌ காணலாம்‌. (திமஹி) மேலே சொன்ன 
குண ஸமூஹத்தை தியானம்‌ செய்யக்கடவோம்‌. “த்யை 
சிந்தாயாம்‌” என்று காது. 


(வரேண்யம்‌ தத்‌, பூர்க்கஓூ) ` எல்லாராலும்‌ ஆதரிக்கத்‌ 
தக்கதாய்‌, வேகாந்த ப்ரஸிதகமான பகவஜ்ஸ்வரு த்தை › 
என்றும்‌ பொருள்‌ கொள்ளல। ம்‌. (வரேண்யம்‌) ஜ்ஞாநகா 
ஈந்தமயமா கையினாலே ஸர்வசேஃனராலும்‌ வீரும்பத்தக்கது. 
“ந = ஸீதா தவயா ஹீகா' [உன்னைப்‌ பிரிந்த ஸீதை 
ஸத்தையை இழப்பாள்‌.] என்றும்‌.  நின்னலால்‌ இலேன்‌ 
காண்‌” -௩ானன்னையன்‌ றி இலேன்‌ கண்டாய்‌ நாரணனே ° 
என்றும்‌ சொல்லுகெபடியே பீரியில்‌ தரியாதபடியன்றோ 
இவனுடைய ஸ்வரூபமிருப்பது. (தத்‌) “ஸத்யம்‌ ஜ்ஞா௩ 
மந்தம்‌ ப்‌,ரஹ்ம”' = ^ விஜ்ஞா௩மாநந்தமம்‌ ப்ரஹ்ம” ^" தத்‌ 
விஜிஜ்ஞாஸஸ்வ தத்‌, ப்‌,ரஹ்மேதி'' முதலான வேதாந்த வாக்யங்களில்‌ ப்ரஸித்திபேற்றசன்றோே இவனுடைய 
இ,வ்யாத்மஸ்வரூபம்‌, 


(பர்க்க பெகவக்ஸ்வரூடத்கை, பர்க்கஸ்ாப்தும்‌ ஸ்வரூப 
வாசகமானபடியென்‌ என்னில்‌: 


“பாபி: க;,திரஸ்ய ஹீதி பர்க்க பர்ஜயதீதி வைஷ 


பூதாநி, 5955595 இதி க,ச்சத்யஸ்மிக்‌ ஆக,ச்ச,த்யஸ்மா 
இமா: ப்ரஜாஸ்‌ தஸ்மாத்‌ ப,ாரக,த்வாத்‌, பர்க்க: 
[தன்னுடைய தர்மபயூசஜ்ஞான ஒளிகளாலேயே இந்த 
ஸ்வரூபக்திற்கு கமனமிருப்பதனால்‌ இது டர்க்கம்‌ எனப்‌ 
படுறெது. (பாடங்களைப்‌) பொசுக்குவதா லும்‌ இகத பர்க்க, 
மாகிறது. இரந்த லோகங்களை பராஸிக்கச்‌ (பிரகாசிக்கச்‌ ) 
செய்வதனால்‌ ப,காரத்திற்குப்‌ டெொருளாகவும்‌, இந்த ஜீவ 
ராசிகளை ரஞ்ஜிக்கச்செய்வ தினால்‌ ரகாரவாச்யமாகவும்‌, 
இவன்‌ செல்லும்போது இவை செல்வதாலும்‌, இவனைக்‌ 
குறித்து இந்த ப்ரஜைகள்‌ செல்வதாலும்‌ ககாரவாச்யமாக 
வும்‌ ஆகிறபடியால்‌ பரர்க்குமெனப்படுகிறது. ] என்று மைத்‌ ராயணீய உபனிஷத்திலும்‌, 


“ஸம்பர்த்தேதி தத; பர்த்தா ப,காரோர்த்த,த்‌,வயாந்வித: | 
நேதா கமயிதா ஸ்ரஷ்டா க,காரார்த்த,ஸ்தத,ா முகே ॥ 

[ முனிவரே! ^ (ப்ரக்ருதியைக்‌) கார்யதசையை அடையக்‌ 
செய்பவன்‌'. 'ஸ்வாமி' என்னும்‌ இரண்டு அர்த்தங்களுடன்‌ 
கூடியது பசாரம்‌; அப்படியே ரக்ஷிப்பவன்‌. எம்ஹரிப்ப 
வன்‌, ஸ்ருஷ்டிப்பவன்‌, என்பது க;காரத்தின்‌ அர்த்தம்‌. | 
என்று ஸ்ரீ வீஷணுபுராணத்திலும்‌ ८40 ऊ = 80०८०८७८ பகவத்‌ 
ஸ்வரூப ககைச்‌ சொல்லும்‌ வழிகள்‌ விரிவாக உரைக்கப்‌ 
பட்டன, (ஸவிது: பர்க்கழ்‌) பரமா த்மாவீனுடைய ஸ்வரூபம்‌; 
ராஹுவே ஸிர:( தலை)ஸ்வரூபமாயிருக்க, ராஹுவினுடைய 
சிரஸ்ஸு எனறு பீரயோகிப்பதைப்‌ போன்‌ றது இந்தப்‌ டீரயோகமும்‌. 

இந்த யோஜனையிலும்‌ “பர்க்க; தீமஹி' என்பதற்கு 
பகவானுடைய ஒளிமயமான திவ்யமங்கள விக்ரஹத்தை 
தியானிக்கக்கடவோம்‌ எண்று பொருள்கொள்ளலாம்‌. 
ஸ்வரூபர திகளை தியானிப்பது சிரமஸாத்தியம்‌, திவ்யமங்கள 
விக்ரஹத்தை தியானிப்பது ஸுலபம்‌. இகனாலேயே இந்த 
திவ்யமங்கள விக்ரஹம்‌ ८०-० ८, 7 0 ¢ ८, © 6 न्न (2 சேர்த்தி பெற்றிருக்கிறது. 


ஆக. இவ்வளவால்‌, “தேவனாகிய ஸூர்யனுக்குள்‌ இருக்‌ 
கும்விரும்பத்‌ கக்கஅந்தத்‌ தேஜஸ்ஸை தியானிக்கக்கடவோம்‌” 
என்றும்‌. “ஸர்வலோகஸ்ரஷ்டாவான தேவனுடைய விரும்‌ 
பத்தக்க அந்த ஸ்வரூபத்தை (அல்லது குணங்களை) (அல்லது 
திருமேனியை) தியானிக்கக்டவோம்‌' என்றும்‌ இரு 
பொருள்கள்‌ விளக்கப்பட்டன. “இ,யோ யோ ந: ப்ரசோத, 
யாத்‌'' என்னும்‌ பகுதிக்கு முதலர்த்கத்தில்‌ “யாதொரு 
தேஜஸ்‌ நம்‌ புத்திகளைத்‌ தூண்டுகறதோ'' என்று ம்‌, 
இரண்டாமச்த்தத்தில்‌ : யாவனொரு தேவன்‌ நம்‌ புத்திகளைத்‌ 
தூண்டுகறொனோ என்‌ னும்‌ பொருளாகிறது. இவ்விரண்டு 
அர்த்தங்களே ங்ருதிஸ்ம்ருதிகளாலும்‌. ஆசார்யர்களா லும்‌ 
ஆஃரிக்கப்பட்டிருக்கன் றன. இவைகளுக்கு விருத்தமாகப்‌ 
பலர்‌ பலவிதமாக காயத்ரி மந்திரத்திற்குப்‌ பொருளுரைக்‌ 
கின்‌ றனர்‌. அவைகள்‌ வைதிகர்களரல்‌ அந தரிக்கத்தக்கவை. 
பர்க்கசப்தத்திற்குச்‌ சிவனைப்‌ பொருளாகக்கொள்வதும்‌ 
தவறு. பட்டடாஸ்கரர்‌, வித்யாரண்யர்‌, ஸாரதிபகாரர்‌, 
நிர்ணயகல்பவல்லீகாரர்‌. வரதராஜர்‌, , கருஷ்ணபட்டர்‌ 
முதலான பல பாஷயகாரர்கள்‌ அப்டொருளை அநாதரிக்‌ 
திருக்கிறார்கள்‌ *. 
* காயத்ரிக்குப்‌ டொருளாயிருப்பவன்‌ நாராயணனே 
என்பது எமது விஷனுசித்தவிஜயத்திலும்‌ விரிவாக न्ना क 
கப்பட்டுள்ளது. வீரிவு வேண்டுவார்‌ அங்கு காணலாம்‌. 


காயத்ரியின்‌ பெருமையும்‌ ஐபம்‌ செய்யும்‌ முறையும்‌ 


“களயந்தம்‌ த்ராயதே-இதி காயத்ரீ? [தன்னைப்‌ பாடு 
மவனை (ஸம்ஸாரபயத்தினின்‌ றும்‌) ^ காப்பாற்று கிறதாகை 
யால்‌ காயத்ரியெனப்படுகிறது ] என்னும்‌, காயத்ரீசப்தத்தின்‌ 
பொருளே இதினு டைய பெருமையைக்‌ காட்டுகிறது. 
மஹாபாரதம்‌, ஆங்வமேதி,கடர்வம்‌, தொண்ணாுூற்றொன்ப தாவது அத்தியாயத்தில்‌, 


“ஹாயம்‌ ப்ராதஸ்து யே ஸந்த்‌,யாம்‌ ஸம்யங்நித்யமுபாஸதே | 
நாவம்‌ வேதயயீம்‌ க்ருத்வா தரந்தே தாரயந்தி = | 
யோ ஜஐபேத்‌ பாவநீம்‌ தேவீம்‌ சுராயத்ரீம்‌ வேதஹமாதரம்‌ | . 
௩ ஸீதே,த்‌ ப்ரதிக்‌,ருஹ்ணா௩: ப்ருதிலீம்‌ ச ஸஸாகராம்‌ || 
யே சாஸ்ய துஃஸ்திதா: கேசித்‌ க்‌,ரஹா: 
ஸூர்யாத,யோ தி,வி। 
தே சாஸ்ய ஸெளம்யா ஜரயந்தே एणी त: மரஃப,கராஸ்‌ ததா ॥ 
யத்ர யத்ர ஸ்தி,தாங்சைவ தரளருணா: பிமபிதாரமநா: | 
கேரரரூபா மஹாகாயா தர்ஷயந்தி ௩ தம்‌ த்‌,விஜம்‌ ॥ 
'புகந்தீஹ ப்ருதி,வ்யாம்‌ ச சீர்ணவேத,வ்ரதா ஈரா: | 
சதுர்ணாமபி வேதளாராம்‌ ஸா ஹி ராஜந்‌ கரீயஸீ॥ 
அசீர்ணவ்ரதவேத; யே விகர்மப,லமாங்ரிதா: | 
ப்‌;ரரஹ்மணா நாமமாத்ரேனா 65519 பூஜ்யா யுதி,ஷ்டிர | 
கிம்‌ புநர்‌ யஸ்து ஸந்த்‌,யே 55689 நித்யமேவோபதிஷ்ட,தே | 
பூர்ப,வஸ்வரிதி ப்ரஹ்ம யோ வேத;நிரதோ த்‌,விஜ:। 
न ०५53 ए 87 687, 5८७०४ ஸ வித்‌,வாத்‌ ஸ ௪ பூஸார: || 
ஸந்த்‌,யாமுபாஸதே யே வை நித்யமேவ த்‌,விஜோத்தமா: | 
தே யாந்தி நரமாார்த்தூ,ல ப்‌,ஏஹ்மலோகம்‌ ௩ ஸம்மாய: ॥ 
ஸாவித்ரீமாத்ரஸாரோ5பி வரோ விப்ரஸ்‌ ஸுயந்த்ரித: | 
நாயந்த்ரிதங்‌ சதுர்‌வேதீ, कणी © छ ஸர்வவிக்ரயீ || 
ஸாவித்ரீம்‌ சைவ வேதபம்ங்ச துலயா5தோலயர்‌ புரா | 
ஸதே,வர்விக,.ணாங்சைவ ஸர்வே ப்ஏஹ்மபுரஸ்ஸரா: || 
சதுர்ணாமபி வேத;நாம்‌ ஸா ஹி ராஜந்‌ கரீயஸி ॥ 
யதள விகஸிதே புஷ்பே மது, க்‌,ருஹ்ணந்தி ஷட்பத,": | 
ஏவம்‌ க்‌,ருஹீதா ஸாவித்ரீ ஸர்வவேதே, ऊ பாண்டவ || 
தஸ்மாத்து ஸர்வவேத;ாநாம்‌ ஸாவித்ரீ ப்ராண உச்யதே | 
நிர்ஜீவா ஹீதரே வேச, விநா ஸாவித்ரியா ங்ருப। 
ஸஹஸ்ரபரமாம்‌ தேவீம்‌ முதமத்‌,யாம்‌ த,மாவராம்‌ ॥ 
ஸாவித்ரீம்‌ ஜப கெளந்தேய ஸர்வபாபப்ரணா_பிநீம்‌ || 
[எவர்கள்‌ தினந்தோறும்‌ காலையிலும்‌ மாலையிலும்‌, நன்றாக 
ஸந்த்யாவந்தனத்கை அநுஷ்டிக்கறார்களோ, அவர்கள்‌ 
வேதமயமான படகைச்செய்து (ஸம்ஸாரக்‌ கடலைத்‌) 
தாண்டுகிறார்கள்‌; ( பிறரையும்‌ ) தாண்டுவிக்கிறார்கள்‌, 
பரிசுத்தப்படு க்துபவளும்‌, வேகதச்திற்குத்‌ தாமாயிருப்பவரூ 
மான காயத்ரீ தவியை எவனொருவன்‌ ஜபிக்கறுனோ, அவன்‌ 
கடல்குழ்ந்த மண்ணுவகம்‌ முழுவதையும்‌ தானம்‌ வாங்கி 
னாலும்‌ அன்புறமாட்டான்‌. ஸூர்யன்‌ முகலான கிரஹங்‌ 
களில்‌ எவை இவனுக்குக்‌ கெட்ட இடத்‌ திலிருச்கின்‌ றனவோ, 
அவையும்‌ இவனுக்கு மங்களகரமாயும்‌, நன்மைபயப்பவை 
யாகவும்‌ ஆகின்றன. பயங்கரமானவையாய்‌, மரம்ஸத்தை 
உண்பவையாய்‌. கோரமான உருவுடையவையான ராக்ஷ்‌ 
ஸா திகளும்‌, அந்த இருபிறப்பாளனைப்‌ பயமுறுத்தமாட்டா. 
வேத விரதப்படி நடக்கும்‌ மனிதர்கள்‌ இவ்வுலகில்‌ 
வஸ்துக்களைப்‌ பரிசு த்தப்படுத்துகிறார்கள்‌. நான்கு வேதங்‌ 
களூள்ளும்‌ காயத்ரியே @ ८० ®` ¶ क्म து, வேதவிரதப்பட 
நடக்கா தவர்களாய்‌, வீருத்தமான கர்மபலத்தை அஆங்ரயித்‌ 
திருப்பவர்களாய்‌. பெயருக்குமட்டும்‌ ப்ராஹ்மணர்களா 
யிருப்பவர்களும்‌ பூஜிக்கத்தக்கவர்களே. எந்க ப்ராஹ்மணர்‌ 
கள்‌ இரண்டு ஸந்த்யைகளையும்‌ உபரஸிக்கிறார்களோ, அவர்‌ 
கள்‌ பூதிக்கத்தக்கவர்களென்பதைச்‌ சொல்லவும்‌ வேண்‌ 
டுமோ? பூர்பு,வஸ்ஸாவ;:” என்பதே வேதமாகும்‌; இந்த 
வேதத்தில்‌ ஈடுபட்டிருப்பவனும்‌. சன்‌ மனைவியிடமே 
ஈடுபட்டிருப்டவனும்‌. இந்திரியங்களை அடக்கியவனு 
மான தீவிஐனே வித்வானாகவும்‌, பூஸுரனாசவும்‌ 
ஆகிறான்‌. எந்த த்‌,விஜஸ்ரேஷ்டர்கள்‌ இனம்‌ தோறும்‌ 
ஸந்த்‌யையை உடாஸிக்கிறார்களோ அவர்கள்‌ ப்ரஹ்மத்தின்‌ 
உலகை அடைகிறார்கள்‌ என்‌ பதில்‌ ஸர்தேஹயில்லை, நியமங்‌ 
களுடன்‌ கூடி காயத்ரியையமட்டும்‌ அநுஸ்ந் திக்கும்‌ வீப்ரன்‌, 
நியமமற்றவனாய்‌, எதையும்‌ உண்பவனாய்‌. எதையும்‌ விற்ப 
வனான சதுர்வேதியைக்காட்டி லும்‌ மேலானவன்‌. ப்ரஹ்‌ 
மாவை முன்னிட்ட தேவரிஷிகணங்கள்‌ யரவரும்‌ 
ஸாவித்ரியையும்‌ மற்ற வேதடாகங்களையும்‌ தராசிலிட்டு 
நிறுத்தனர்‌ முன்னொருநாள்‌. (நிறுத்தவுடன்‌) நான்கு 
வேதங்களைக்காட்டிலம்‌ காயத்ரியே மேலானகென்று 
அறிந்தனர்‌. மலர்ந்த புஷ்பத்திலே வண்டுகள்‌ மதுவை 
அருந்துகின்றதபோல்‌, न ०7 வெதங்களி லும்‌ 
ஸாவித்ரியானது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகை 
யால்‌ எல்லா வேதங்களுக்கும்‌ ப்ராணனாகச்‌ சொல்லப்படு 
கிறது காயத்ரி.காயத்ரியற்ற மற்றவேதங்கள்‌ உயிர மற்ற 
உடல்போன்றவை. ஆகையால்‌ ஆயிரம்தடவை ஜபிப்பதை 
உத்தமமாகவும்‌, நூறு முறை ஜபிப்பதை மத்திமமாகவும்‌. 
பதீதுதடவை ஜபிப்பதை அதம்மாகவும்‌ கொண்டதாய்‌, 
ஸ்ர்வ பாபங்களையும்‌ போக்கடிப்பதான இந்த காயத்ரி 
மந்திரத்தை ஜபீப்பாயாக.] எண்று பகவான்‌ கிருஷ்ண 
னாலேயே காயத்ரியின்‌ பெருமைகள்‌ விரிவாக விளக்கப்‌ 
பட்டன. மதுஸ்ம்ருதி இரண்டாவது அத்தியாயத்தில்‌. 


““அகராஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி: | 

வேத;,த்ரயாந்‌ நிரப்‌;,ருஹத்‌ பூர்புவஸ்‌ ஸ்வரிதீதி = ॥ 
த்ரிப்‌ய ஏவ து வேதேபப்‌,ய: பாதம்‌ பாதமுதூ, தணஹத்‌ | 
ததி,த்ய்ருசோ 5ஸ்யாஸ்‌ ஸாவித்ர்யா: பரமேஷ்டீ, ப்ரஜாபதி:।॥। 
ஏததகஷரமேதாஞ்ச ஜபந்‌ வ்யாஹ்ருதிபூ,ர்விகாம்‌ | 
ஸந்த்‌,யயோர்‌ வேத,வித்‌, விப்ரோ வேத;புண்யேந யுஜ்யதே॥ 
ஸஹஸ்ரக்ருத்வஸ்‌ த்வப்‌,யஸ்ய பஹிரேதத்‌ த்ரிகம்‌ த்‌,விஜ: | 
ம்ஹதோப்யேகஸோ மாஸாத்‌ த்வசேவாஹிர்‌ விமுச்யதே ॥ 
ஏதயர்ச்சா விஸம்யுக்த: காலே ௪ க்ரியயா ஸ்வயா | 
ப்‌,ரஹ்மக்ஷத்ரியவிட்‌,யோகிர்‌ க.:ர்ஹணம்‌ யாதி ஸாது,ஷு || 
ஓங்கார பூர்விகாஸ்‌ திஸ்ரோ மஹாவ்யா ஹ்ருதயோவ்யயா:। 
த்ரிபதள சைவ ஸாவித்ரீ விஜ்னோயம்‌ ப்‌,ரஹ்மணோ முகம்‌ ॥ 
யோக5த,தே5ஹந்ய்ஹந்யேதாம்‌ த்ரீணி வர்ஷாண்யதந்த்ரித :1 
न ப்ஏஹ்ம பரமப்‌,யேதி வாயுபூ,த : கமூர்த்திமார்‌ ॥ 
ஏகா்க்ஷ்ரம்‌ பரம்‌ ப்‌,ரஹ்ம ப்ராணாயாம: பரம்‌ தப: | 
ஸாவித்ர்யாஸ்து பரம்‌ நாஸ்தி மெளநாத்‌ ஸத்யம்‌ 
வியிஷ்யதே ॥ ` 
[ப்ரஜாபதியானவர்‌, அகாரத்தையும்‌. உகர ரத்தையும்‌, 
மகாரத்தையும்‌. பூர்‌, புவஸ்‌, ஸுவ: என்னும்‌ மூன்று 
வ்யாஹ்ருதிகளையும்‌ (முறையே) तङ, யஜுஸ்‌, ஸாமம்‌ 
என்னும்‌ மூன்று வேதங்களிலிருந் து எடுத்தார்‌. பரமேஷ்டி 
யான பராஜாபதி இந்த மூன்று வேதங்களிலிருந்தே' 
“ தத்‌ ஸவிதர்வரேண்யம்‌ '' என்று தொடங்கும்‌ காயத்ரீ 
யின்‌ மூன்று பாதங்களையும்‌ முறையே உத்‌, தரித்தார்‌. 
ஓங்காரமாயிருக்கிற இந்த அக்ஷரத்தையும்‌ வ்யாஹ்ரு திகளை 
முன்னிட்ட இந்த காயத்ரியையும்‌ இரண்டு ஸந்த்யைகளி 
அம்‌ ஜபிக்கும்‌ வேதவித்தான விப்ரன்‌ மூன்று வேதங்களை 
யும்‌ அத்யயனம்‌ செய்க புண்ணியத்தைப்‌ பெறுகிறான்‌. 
இம்மூன்றையும்‌ ( ஈதிக்கரை முதலான ) வெளி ப்ரதேசங்‌ 
களில்‌ ஆயிரம்தடவை அப்யஸிக்கும்‌ தவிஜன்‌. தோலைவிடும்‌ 
பாம்புபோல்‌ ஒருமாத காலத்தில்‌ பெரும்‌ பாபத்திலிருந்து 
விடுபடுகிறான்‌. இந்க காயத்ரியை அதற்குரிய காலங்களில்‌ 
அநுஸந்தியாத ப்ராஹ்மண க்ஷத்ரியவைங்யர்கள்‌ ஸாதுக்‌ 
களால்‌ நீந்திக்கப்படுகின்‌ றனர்‌. ஓங்காரத்தை முன்னிட்ட 
மூன்று வியாஹ்ருதிகளும்‌. கூன்று பாதமுள்ள காயத்ரியும்‌ 
ப்ரஹ்மத்தின்‌ முகம்‌ என்று அறியத்கக்கவை. எவன்‌ 
இதை மூன்று வருஷ காலங்கள்‌ சேோரம்பலில்லாமல்‌ தினம்‌ 
தோறும்‌ அநுஸந்திக்கறானோ. அவன்‌ பரப்ரஹ்மத்கை 
அடைகிறான்‌. வாயுவைப்போல்‌ இஷ்டப்படி ஸஞ்சரிப்ப 
வனாகிறான்‌ . ஆகாசம்போல்‌ கதோஷமற்றவனாகிறான்‌ , ஒரக்ஷர 
மான ஓங்காரமே பரப்ரஹ்மம்‌. ப்ராணாயாமமே மேலான 
தவம்‌. ஸாவித்ரியைக்காட்டி லும்‌ மேலான தில்லை. மெளன மாகப்‌ பரமாத்மாவை தியானிப்பதைக்காட்டிலும்‌. ஸத்ய 
பாப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ ஜபத்தினால்‌ தியானிப்பது 
மேலானது. ] என்று காயத்ரிப்ரபாவம்‌ விளக்கப்பட்டது. 


“களயத்ர்யர ௩ பரம்‌ ஜப்யம்‌ க;ளயத்ர்யா ந பரம்‌ தப: | 
களயத்ர்யா ௩ பரம்‌ த்‌,யேயம்‌ க;யத்ர்யா ந பரம்‌ ஹூதம்‌ || 
[காயத்ரியைக்காட்டி லும்‌ ஓபிக்கத்தக்கது வேறொன்‌ றில்லை; 
காயத்ரியைக்காட்டிலும்‌ மேலான தவமொன்றுயில்லை. 
தியானிக்கத்தக்க வஸ்துக்களில்‌ காயத்ரியைக்காட்டிலும்‌ 
மேலானதில்லை. காயத்ரியைக்காட்டி லும்‌ மேன ஹோமமு 
மில்லை] என்று மங்க,ஸ்ம்ருதியிலும்‌. 


“த,மக்ருத்வ: ப்ரஜப்தா ஸா த்ரியஹாத்‌ யத்‌ க்ருதம்‌ லகு, ! 
தத்‌ பாபம்‌ ப்ரணுத,த்யாமரு நாத்ர கார்யா விசாரணா ॥ 
மதம்‌ ஜப்தா து ஸா தே,வீ பாபெளகமாமநா ஸ்ம்ருதா | 
ஸஹஸ்ரஜப்தா ஸா தே,வீ உபபாதகநாமரிநீ ॥ 

கோடீஜபேக களயத்ர்யா யதி,ச்ச,தி தத;ப்நுயாக்‌ । 
யக்ஷவித்‌,யாதறத்வம்‌ வா கந்தர்வத்வமத,ாபி வா] 
தேவத்வமதவா ராஜ்யம்‌ பூலோகம்‌ வாப்யகண்டகம்‌ |". 
[பத்துதடவை ஜபிக்கப்பட்ட காயத்ரி மூன்‌ றுாளில்‌ 
செய்யப்பட்ட பாபத்தைப்‌ போக்கடிக்கறது. இதில்‌ 
ஸந்தேஹம்‌ வேண்டாம்‌. நூறு தடவை ஜபித்தால்‌ பாப 
ஸமூஹத்தகையே சமிக்கச்செய்கிறது. ஆயிரம்தடவ ஜபித்‌ 
தால்‌ உப்பா தகம்‌ முழுவதையும்‌ அழிக்கிறது. கோடிமுறை 
ஜபித்தால்‌. யக்ஷர்‌, வித்யாதரர்‌. கந்தர்வர்‌. தேவர்‌ ஆகிய 
இவர்களுடைய தன்மையென்ன. ராஜ்யமென்ன, எதிரிக 
ளற்ற பூமி முழுவதுமென்ன ஆகய இவற்றில்‌ எதை 
லீிரும்புறானோ அதை அடைவான்‌] என்று வியாஸ ஸ்ம்ருதியிலும்‌, 

“ஐஹிகாமுஷ்மிகம்‌ பாபம்‌ ஸர்வம்‌ நிரவமோஷத: | 
பஞ்சராத்ரேண காயத்ரீ ஜப்யமாநா வ்யபோஹதி || 

காயத்ர்யாஸ்து பரம்‌ நாஸ்தி மோதும்‌ பாபகர்மணாம்‌ | 
ப்‌,ரஹ்மசாரீ மிதாஹாரஸ்‌ ஸர்வபூ,தாநுகம்பா: ॥ 
காயத்ர்யா லக்ஷஜாபே௩ ஸர்வபாபை: ப்ரமுச்யதே ॥ 
அயாஜ்யயாஜ௩ம்‌ க்ருத்வா பு,க்த்வா சாந்கம்‌ விகள்ஹிதம்‌ | 
களயத்ர்யஷ்டஸஹஸ்ரந்து ஜபம்‌ க்ருத்வா விமாத்‌,த்வதி ॥”” 
[ஜந்து தனங்கள்‌ காயத்ரீஜபம்‌ செய்தால்‌. இவ்வுலகிலும்‌ 
எவ்வுலகிலும்‌ செய்க எல்லாப்‌ பாபங்களும்‌ அழிந்துவிடும்‌. 
பாபகர்மங்களைப்‌ போக்கடிப்பதில்‌ காயத்ரியைக்காட்டி லும்‌ 
மேலானதொரு மந்திரமில்லை. ப்ரஹ்மசாரியாய்‌, அளவுடன்‌ 
ஆகாரமுண்‌்டவனாய்‌. ஸர்வட்ராணிகளிடமும்‌ தயையுள்ள 
வனான ஒருவன்‌. காயத்ரியை லஷஷம்தடவை ஓபித்தானாகில்‌ 
ஸர்வபாபங்களையும்‌ போக்கிவிடுவான்‌. யாகம்‌ செய்விக்கத்‌ 
தகாதவனுக்கு யாகம்‌ செய்வித்தும்‌. நிந்திக்கப்படும்‌ 
அன்னத்தை உண்டும்‌ எண்ணாயிரம்தடவை காயத்ரியை 
ஜபித்தானாகில்‌ பரிசுத்தியடைகிறான்‌.] என்று ஸம்வர்த்த 
ஸ்ம்ருதியிலும்‌, 


“ப்ரணவே ரித்யயுக்தஸ்ய வ்யாஹ்ருதீஷு ச ஸப்தஸாு | 
த்ரிபதாயாஞ்ச கயத்ர்யாம்‌ ஈ பயம்‌ வித்வதே க்வசித்‌ ॥ 
களயத்ர்யாஸ்து ஸமோ நாஸ்தி மந்த்ரோ வேதச துஷ்டயே | 
ஸர்வே (661570०5 யஜ்ஞாம்ச த;நாநி ச தபாம்ஸி ௪ (| 
ஸமாநி கலயா ப்ராஹுர்‌ முநயோ ௩ ததி,த்ய்ருச: ॥ 
பரிஹாப்யாபி வேதாம்ஸ்த்ரீந்‌ கர்மாணி விவித,ாநி = | 
ஸாவித்ரீமாத்ரமாங்ரித்ய த்‌,விஜோ ப,வதி நிர்ப்ப,ய: || ”' 
[ீப்ரணவச்திலும்‌. ஏழு வ்யாஹ்ரு திகளிலும்‌, மூன்று பாதங்‌ கொண்ட காயத்ரியிலும்‌ 
மண்டியிருப்பவனுக்கு எங்கும்‌ பயமில்லை; நான்கு வேதங்களிலும்‌ காயக்ரிக்கு ஸமமான 
மந்திரம்‌ கடையாது. எல்லா வேதங்களும்‌, யஜ்ஞங்சளும்‌. 
தானங்களும்‌. தடஸ்ஸுகளும்‌, 'தத்ஸவிது:' என்று தொடங் 
கும்‌ மந்திரத்தின்‌ ஒரு பகுதிக்கும்‌ ஈடாகமாட்டா என்று 
முனிவர்கள்‌ உரைக்கின்றனர்‌. மூன்று வேதங்களையும்‌ 
பலவிதமான கர்மங்களையும்‌ வீட்டவனாகிலும்‌, கரயதரியை 
மட்டுமாவது பறிறியிருந்தானாகில்‌, அந்த த்விஜன்‌ நீர்ப்‌ 
பயனாகிறான்‌ .] என்று விங்வாயித்ரஸ்ம்ருதியிலும்‌, 
“வாயுபக்ஜோ இம்‌ ஸ்தி,த்வா ராத்ரிம்‌ நீத்வா து 
ஸூர்யத்‌, ருக்‌; 
ஐப்த்வா ஸஹஸ்ரம்‌ களயத்ர்யா: ஏராசிர்‌ 
ப்‌,ரஹ்மவதராத்‌ருதே ॥ 
ஸாயம்‌ ப்ராதஸ்து யஸ்ஸர்த்‌,யாமஸ்கந்நாமுபதிஷ்ட,தே | 
ஜபந்‌ வை பாவநீம்‌ தேவீம்‌ பவித்ராம்‌ வேதஹமாதரம்‌ ॥ 
ஸ தயா பாவிதோ தே,வ்யஃ ப்‌,ராஹ்மணோ தூ,தகல்மஷ; 
௩ ஸீதேதத்‌ ப்ரதிக்‌,ர௬ுஹ்ணா௩: ப்ருதிவீஞ்ச ஸஸாகஜாம்‌ ॥ 
சதுர்ணாமபி 66570 க,ாயத்ரீ ஜநநீ ப,வேத்‌ | 
தாமுபாஸ்தே து யோ நிதயம்‌ ஸ விப்ர: பங்க்தீபாவந: ||" 
[காற்றை மட்டும்‌ ஆகாரமாகக்கொண்டு ஒரு பகல்‌ இருந்து. 
இரவைக்‌ கழித்து. (டொழுது விடிந்ததும்‌) ஸுூர்யனைப்‌ 
பார்த்துக்கொண்டு. ஆயிரம்‌ முறை காயத்ரியை ஜபித்‌ 
தால்‌ ப்ரஹ்மஹத்தியைத்‌ தவிர மற்ற பாடங்களிலிருந்து 
சுத்தியடைகிறொன்‌. காலையிலும்‌ மாலையிலும்‌ சரியான 
காலத்தில்‌ எந்த ப்ராஹ்மணன்‌ ஸந்த்யையை உபாஸில்‌ 
கிறானோ, அவன்‌ பரிசுத்தையாய்‌. பரிசுத்தம்‌ செய்பவளாய்‌, 
வேதமாதாவான தேவீ காயத்ரியை ஐபிப்பதினால்‌ பாபம்‌ 
நீங்கப்பெற்று. கடல்‌ குழ்ந்த மண்ணுலகம்‌ முழுவதையும்‌ 
தானம்‌ வாங்கினபோ திலும்‌ தன்புறமாட்டான்‌. காயத்ரியை 
லக்ஷம்முறை ஜபித்தால்‌ பல பாபங்களிலிருந்து விடுபடு 
கிறான்‌. நான்கு வேதங்களுக்கும்‌ காயத்ரி தாயாகிறாள்‌. 
அந்த காயத்ரியை எவனொருவன்‌ உடாஸிக்கறுனோ அவனே 
ப்ராஹ்மணனாகவும்‌. பங்க்திபாவனனாகவுமா கிறான்‌. ] என்று 
யோக ய ஜ்ஞவல்க்யத்திலும்‌ காயத்ரியின்‌ பெருமைகள்‌ 
பலபடியாகப்‌ பேசப்பட்டன. மற்றும்‌ பலபல ஸ்ம்ருதி 
கள்லும்‌ இம்மா திரியான பல வசனங்களுள்ளன. அவற்றை 
விரிவிற்கஞ்‌சி விடுத்தோம்‌.  

இனி. ஜபம்‌ செய்யும்‌ முறையைச்‌ சிறிது விளக்கு வோம்‌. விீசுத்தமான இடத்தில்‌ ஜபம்‌ செய்யவேண்டும்‌; 
`" -9| १९७० விஷ்ணு ந்கிதெ,ள” என்கிறபடியே பகவத்ஸந்நிதி 
யில்‌ ஜபிப்பது அடந்தபலத்தைத்‌ தரவல்லது. 
“க்ரியாயஜ்ஞாத்‌ த, கு,ணோ ஜபய்ஞு: ப்ரகீர்த்தித: | 
உச்சாத்‌ தைகு,ணோ ஜ்ஞோய உபாம்‌ ரராங்சேத்‌ ஸ்ம்ருதஸ்‌ தத,ா। 
உபாம்‌ மேமார்‌ மாஈஸ: ப்ரோக்தஸ்‌ ஸஹஸ்ரகு,ணதோ 5தி, க: ॥” 
( கிரியையினால்‌ பகவானை ஆராதிப்பதைக்காட்டி லும்‌, 
தஇபத்தினால்‌ ஆராதிப்பது சிரஷ்டமானது. உரக்க ஜபிப்‌ 
பதைக்காட்டிலும்‌. வாயினால்‌ மெதுவாக ஜபிப்பது நூறு 
மடங்கு உயர்ந்தது: அதைக்‌ காட்டிலும்‌. மனத்திலேயே 
கபிப்பது ஆயிரம்மடங்கு சிறந்தது] என்று போதரயா 
ருடைய அஷ்டா க்ரவிதியில்‌ செொல்லப்பட்டபடியே மனத்தி 
ஓள்ளே அர்தீதசிந்தனத்தடன்‌ ஜபிப்பது மேலானது. 
“கிஷ்டளமூலமாரப்‌,ய ப்ராத,க்ூதிண்யக்ரமேண து। 
அநாமிகாந்தம்‌ 6556940० ஜபேத்‌.... ॥'” 

[சறுவிரலின்‌ அடியிலுள்ள ரேசையிலிருந்து தொடங்க, 
(சிறு விரலீன்‌ மேலிரண்டு ரேகைகள்‌. மோதிர விரலின்‌ 
மேல்‌ ரேகை. ஈடுவிரலின்‌ மேல்‌ ரேகை. ஆள்காட்டி விர 
லின்‌ மேலிருந்து ிழ்வரையிலள்ள மூன்று ரேகைகள்‌, 
நடுவிரலில்‌ கீழ்ரேகை, மோதிர விரலின்‌ ழ்ரேகை என்‌ 
னும்‌ கிரமத்தில்‌) ப்ரதக்திணமாக. மோதிர விரலின்‌ அடி 
ரேகைவரையில்‌ எண்ணிக்கொண்டு ஐபிக்கவேண்டும்‌ ]என்று 
எண்ணும்‌ முறையும்‌ அறிவிக்கப்பட்டது. தளஸிமால. 
தாமரைமணீிமாலை இவற்றைக்கொண்டு எண்ணலாம்‌ என்‌ 
அம்‌ சாஸ்திரங்களில்‌ விதிக்கப்பட்டது... 
“மத்வ,க்தா யே நரங்ரேஷ்ட, மத்‌;க,தா மத்பராயணா:| 
மத்‌,யாஜிநோ மந்நியமாஸ்‌ தாந்‌ ப்ரயத்நேக பூஜயேத்‌ ॥ 
தேஷாம்‌ து பாவநாயாஹம்‌ நித்யமேவ யுதி,ஷ்டி,ர | 

உபே, ஸந்த்‌,யே5தி,திஷ்டளமி ஹ்யஸ்கர்ரம்‌ தத்‌, வ்ரதம்‌ 1010 | 
தஸ்மாத,ஷ்டாக்ஷரம்‌ மந்த்ரம்‌ மத்‌,ப,க்தைர்‌ வீதகல்மஷை: | 
ஸந்த்‌,யாகாலேஷு ஜப்தவ்யம்‌ ஸததம்‌ சாத்மமராத்‌,த,யே ॥” 

[ஈரோத்தமனே! என்னுடைய பக்தர்களாய்‌, என்னையே அடைந்தவர்களாய்‌. 
என்னையே பராயணமாகக்‌ கொண்டவர்‌ களாய்‌. என்னையே ஆராதிப்பவர்களாய்‌ என்னையும்‌ நியமிக்க 
வல்லவர்களான டெரியோர்களை முயற்சிசெய்து பூஜிக்க 
வேண்டும்‌. அவர்களைப்‌ பரிசுத்தப்படுத்துவத ற்காக நான்‌ எப்‌ 
போதும்‌ இரண்டு எந்த்யைகளை யும்‌ அதிஷ்டி த்து நிற்கிறேன்‌. 
இப்டடி நிற்கை எனக்கு (என்றும்‌) மாறாத விரதமாகும்‌. 
ஆகையால்‌(என்னுடையதான ) அஷ்டாக்ஷரமந்திரம்‌, கோஷ 
மறழ்றவர்களான என்னுடைய டக்தர்கசளால்‌. தங்களுடைய 
ஆத்மசுத்தியின்‌ பொருட்டுஸந்தியாகாலங்களில்‌ எப்போ தும்‌ 
ஜபிக்கப்படவேண்டும்‌.] என்று ஸ்ரீவைஷ்ணவ தர்மமாஸ்‌ 
'திரத்தில்‌ பகவானாலேயே விதிக்கப்பட்ட அ௮ஷ்டாக்ஷர 
ஜபமும்‌ காயத்ரீஜபத்திற்குப்‌ பிறகு ८5५7 ५४७ @ செய்யப்பட வேண்டும்‌. 


“அஷ்டாக்ஷராந்தபாத;ா ऊ களயத்ரீ ப்ரணவோஜ்ஜ்வலா | 
ப்ரயோக்தவ்யேதி ப,கவா௩காஹ ஈரராயணோ முநி: ॥” 


[ப்ரணவத்தோடு விளங்குவ தாய்‌, அஷ்டாக்ஷரத்தைக்‌ 
கடைசிப்‌ பாதமாக உடையதாக காயத்ரியான து பிரயோகிக்‌ 
கப்படவேண்டும்‌ என்று பகவான்‌ நரராயணமுனி அருளிச்‌ 
செய்தார்‌] என்று ஸநாதநதர்மதீபிகா என்னும்‌ மதாந்தர 
இரந்தத்திலும்‌ எடுக்கப்பட்ட த. வேதாந்ததேசிகரும்‌ பாஞ்ச 
ராத்ர ரனைழயில்‌, ஸந்தியாவரந்தனத்தின்போ து ௮ஷ்டா க்ஷர 
மந்திரஜபம்‌ செய்ய வேண்டுமென்டதை ஸ்தாபித்திருக்கிறார்‌. 
“ இத்தை ஓஜபஹோம்‌ாதிமுகத்தாலே காரியங்கொண்டு 
போருவர்‌ புறம்புள்ளார்‌; ஈம்‌ முகலிகள்‌ இசகுனுடைய 
அர்த்தானுஸந்தானத்திலே ஊன்‌ றியிருப்பர்கள்‌ › என்னும்‌ 
பூர்வாசார்ய ஸ்ரீஸூக்தியை அனுஸரித்து, அர்த்தாநுஸந்‌ 
தானத்துடன்‌ ஸ்வயம்ப்ரயோஜனமாக அஸ்டாக்ஷர ஜபம்‌ செய்வது மிகச்‌ சிறந்ததே 

“ஆதி,த்யமண்ட,லே த்யாயேத்‌ பரமாத்மாநமவ்யயம்‌ | 
விஷ்ணும்‌ சதுர்ப்‌ ஜம்‌ ரக்தபங்சுஜாஸநமத்‌,யக,ம்‌ ॥| 
கிரீட ஹார கேயூர கடகாதி, விபூ,விதம்‌ | 
ஸ்ரீவத்ஸ வ௩மாலா ஸ்ரீதுளஸீ கெளஸ்‌ துபேோஜ்ஜ்வலம்‌ || 
ஹரிம்‌ பீதாம்ப;,த,ரம்‌ மரங்க,சக்ரக, தளத்‌ | 
ப்ரஸந்நவத,நம்‌ ரத்நகுண்ட,லைர்‌ மண்டி,தாநநம்‌ ॥| 
ஸர்வரத்ந ஸமாயுக்த ஸர்வாபரண பூ,விதம்‌ ॥ 
அர்க்கமண்ட,ல மத்யஸ்த,ம்‌ ஸ9ர்யகோடீஸமப்ரப,ம்‌ | 
ப,ரஹ்மாதி, ஸேவ்யபாத;ாப்ஜம்‌ நெளமி ப்‌,ரஹ்ம 
ரமாஸகழம்‌ ॥ ›* 
( ஆதித்யமண்டலத்தில்‌, பரமாத்மராவாய்‌, அழிவற்றவராய்‌, 
நான்கு கைகளையுடையவராய்‌, செந்தாமரை மடுவில்‌ 
வீற்றிருப்பவராய்‌, கிரீடம்‌. @7 ¢ ¢ ८8. கேயூரம்‌, கடகம்‌, 
ஸ்ரீவத்ஸம்‌, வரமாலை. தளவமாலை, கெளஸ்துபம்‌, பீதாம்‌ 
பரம்‌. சங்கசக்ரகதைகள்‌. ரத்ஈகுண்டலங்கள்‌. ஸர்வரத்க 
மயமான பல அபரணங்கள்‌ ஆக இவற்றுடன்‌ கூடிய 
வராய்‌. அழகிய திருமுகமண்டலத்தை உடையவராய்‌. கோடி 
ஸூர்ய பிரகாசமுள்ளவராய்‌, பிரமன்‌ முதலானார்‌ வணங்கும்‌ 
திருவடித்‌ காமரையை உடையவராய்‌. ஸர்வவ்யாபகராய்‌, 
ஸர்வஸம்ஹுரகராய்‌ ஸூர்யமண்டலத்தின்‌ நடுவிலிருப்பவ 
ரான பசிய: பதியை தியானிக்கிறேன்‌ ] என்றெபடியே பகவா 
னைத்‌ தியானித்துக்கொண்டு காயத்ரீ ஜபம்‌ செய்யவேண்டும்‌. 
“ கஸ்மாத்‌, {1577 ஹமணஸ்‌ ஸாயமாஸீகஸ்‌ ஸந்த்‌,யாழுபாஸ்தே 
ப்ராதஸ்‌ திஷ்டஸ்‌ யத்‌ ஸாயமாஸீநஸ்‌ ஸந்த்‌யாமுபாஸ்தே 
தயா नी 6959750 ஜயதி) யத்‌ ப்ராதஸ்‌ திஷ்ட,ந்‌ தயா 
ஸ்வர்க்கம்‌ லோகம்‌ ஜயதி ” . 
[ப்ராஹ்மணன்‌ மாலைவேளையில்‌ உட்கரர்க்துகொண்டும்‌. 
காலை வேளையில்‌ நின்‌ றுகொண்டும்‌ ஏன்‌ ஸந்த்யையை உபா 
ஸிக்கிறான்‌?சாயங்காலம்‌ உட்கார்‌ ந்துகொண்டு ஸந்த்யோபாஸ 
னம்‌ செய்வதால்‌ வீரர்கள்‌ செல்லும்‌ லோகத்தை ஜஐயிக்‌ 
கிறான்‌. காலையில்‌ நின்றுகொண்டு உபாஸிப்பதால்‌ ஸ்வர்க்க 
லோகத்தை ஐயிக்கிறான்‌. ] என்‌ று சாந்தொோக்யண்ருதியிலும்‌, 
“பூர்வாம்‌ ஸந்த்‌,யாம்‌ ஜபம்ஸ்திஷ்டே,த்‌ கராயத்ரீமார்க்கதரர்மநாத்‌ | 
பங்சிமாந்து ஸமாஸீநஸ்‌ ஸம்யகரர்க்ஷவிப;ாவஙாத்‌ ॥' ' 
[ ஸூர்யனைக்‌ காணும்வரையில்‌. காயத்ரீமந்திரத்தை ஜபித்‌ 
'துக்கொண்டு நின்றுகொண்டு காலையில்‌ ஸந்த்யா வந்தனம்‌ 
செய்யவேண்டும்‌; நக்ஷ்க்திரங்களை நன்றாகக்‌ காணும்வரை 
யில்‌ உட்கார்ந்துகெொண்டு மாலையில்‌ ஸந்த்யாவந்தநம்‌ செய்ய 
வேண்டும்‌.] என்று மறுஸ்ம்ருதியிலும்‌ (2-101), மற்றும்‌ 
பற்பல ஸ்ம்ருதிவாக்யங்களிலும்‌ காயத்ரியை ஜபிக்கவேண்‌ 
டிய முறையும்‌, காலமும்‌ கூறப்பட்டன. மாத்யாஹ்ஙிகத்தில்‌ 
வெட்டவெளியில்‌ நின்றுகொண்டும்‌, அல்லாதகவிடங்களில்‌ 
உட்கார்ந்துகொண்டும்‌ ஜபீக்க வேண்டும்‌ எனறும்‌ 
விதிக்கப்பட்டுள்ளது. ஜபிக்கும்போது மெளனமா யிருக்க 
வேண்டும்‌. மெளனத்திற்கு பங்கம்‌ ஏற்பட்டால்‌. “தத்‌, 
விஷ்ணோ: பரமம்‌ (1550| = नए 557 பங்யந்தி ஸூரய: | இவீவ 
சக்ஷாராததம்‌| தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ 
ஸமிந்தததே।  விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” । [விஷ்ணு 
வினுடைய அந்தப்‌ பரமபதத்தை நித்யல ரிகள்‌ எப்போ 
தும்‌ பார்க்கிறார்கள்‌. ஆகாயத்திலிருக்கும்‌ லோகசக்ஷாஸ்‌ 
ஸான ஸூூர்யனைப்போல்‌ விளங்குவது அப்பரமபதம்‌. 
அப்பரமபதத்தில்‌ ஸர்வஜ்ஞர்களும்‌. ததிப்பதையே தொழி 
லாகக்‌ கொண்டவர்களுமான நித்யஸுூரிகள்‌ விழிப்புடன்‌ 
வீளங்குகிறார்கள்‌.]என்னும்‌ மந்திரத்தை ௨ச்சரிக்கவேண்டும்‌. 


“யதி, வாக்‌,யவமலோபஸ்‌ ஸ்யாத்‌ ஜபாதிதோ 5 ® 5 | 
வ்யாஹரேத்‌,; வைஷ்ணவம்‌ மந்த்ரம்‌ ஸ்மரேத்‌,வா 

+ । விஷ்ணுமீவ்யயம்‌ || 
தத்‌,விஷ்ணோரிதி மந்த்ரோ 5யம்‌ ஸ்மர்த்தவ்யஸ்‌ ஸர்வகர்மஸ | 
கரூயத்ரீ வைஷ்ணலீ ஹ்யேஷா ப்ரோக்தேத,ம்‌ 
விஷ்ணுரித்யபி ||” 
[ஜபம்‌ முதலியவைகளில்‌ எப்போதாவது மெளனபங்கம்‌ 
'நேரிட்டதாகில்‌ விஷ்ணுவினுடையதான “தத்‌வீஷ்ணோ :"' 

என்று சொடங்கும்‌ மந்திரக்கையாவது சொல்லவேண்டி 
யது; அழிவற்றவரான விஷ்ணுவையாவது நினைக்கவேண்‌ 
முயது. “கத்‌, விஷ்ணோ:” என்னும்‌ இந்த மந்திரம்‌ எல்லாக்‌ 
கருமங்களிலும்‌ நினைக்கத்தக்கது. இந்த காயத்ரியும்‌ 
* @ £ 9 வீஷ்ணுர்‌ விசஃகரமே” என்‌ ற தொடங்கும்‌ மந்திரமும்‌ 
விஸ்ணுவினுடையனவன்றோ ] என்‌ று யோகயாஜ்ளுவல்க்யர்‌ 
இவ்வர்த்தத்தை விதித்தார்‌. 
“ப்ரமாதரத்‌ குர்வதாம்‌ கர்ம ப்ரச்யவத்யத்‌,வரேஷு யத்‌ | 
ஸ்மரணாதே,வ தத்‌, விஷ்ணோ: ஸம்பூர்ணம்‌ ஸ்யாதி,தி 
ஸ்ருதி :॥)” 
[ஜபம்‌ முதலான யல்ஞங்களில்‌, மறதியால்‌ ஏற்படும்‌ குற்றம்‌ 
குறைகள்‌ வீஷ்ணுவினுடைய ஸ்மரணத்தாலேயே நீங்கப்‌ 
பெற்றுக்‌ கர்மம்‌ பூர்ணமாகெது என்பது வேச முடிவ] 
என்று ப்ரஜாடதியும்‌ விதித்தார்‌. ஜபகாலத்தில்‌ சிகையை 
முடிந்திருக்கவேண்டும்‌. கச்சம்‌ தரித்திருக்கவேண்டும்‌. 
படுத்துக்கொண்டும்‌, ஈடந்துகொண்டும்‌, பா தரகையணிரந்து 
கொண்டும்‌. காலை நீட்டிக்கொண்டும்‌. தொங்கவிட்டுக்கொண்‌ 
டும்‌ ஜபம்‌ செய்யக்கூடாது. ஜபகாலத்தில்‌ நாபிக்குக்‌ க்ழோன 
அவயவங்களை த்‌ கொடலாகா து. சிரித்துக்கொண்டும்‌. பேசிக்‌ 
கொண்டும்‌ செய்யப்படும்‌ ஜபம்‌ வீணாகும்‌, காயத்ரியின்‌ 
மூன்று பாதங்களையும்‌ தனித்தனியாகப்‌ பிரித்து உச்சரிக்க 
வேண்டும்‌. அசுத்கனாகவும்‌, லைகளை மூடிக்கொள்ளாமலும்‌, 
தலையை மூடிக்கொண்டும்‌ ஜபம்‌ செய்யல கா து. மற்றுமுள்ள 
நியமங்களை சிஷஸ்டாசாரத்திலிருந்‌ தும்‌. ஸ்ம்ருதிகளிலிருந்தும்‌, 
கண்டுகொள்வது. இவற்றுக்கு பங்கம்‌ மேரிட்டால்‌ பகவான்‌ 
ஈாராயணனை ஸ்மரிப்பதே மேலான ப்ரரயச்‌சித்தம்‌ என்பது 
ஸ்ம்ருதிகளின்‌ ஒருயிடறான முடிவு தேவகீ புத்ராய 
க்ருஷ்ணாயோக்த்வா” என்று வேதத்திலும்‌, “க்ருஷ்ஞற. 
நுஸ்மரணம்பரம்‌”' என்‌ று விஷ்ணுபுராணத்திலும்‌. “ஸ்மரேத்‌, 
வார விஷ்ணுமவ்யயம்‌''என்‌ று யோகயா ஜ்ஞவல்க்ய ஸ்ம்ரு தியி 
லும்‌ இவ்வர்த்தம்‌ அறிவிக்கப்பட்டது. ஆக. இதுவரையில்‌, 
காயத்ரீ ஜபத்தின்‌ பெருமையும்‌. ஜபம்‌ செய்யும்‌ முறையும்‌ 
விவரிக்கப்பட்டன. இப்படி காயத்ரீ ஜபத்தைச்‌ செய்த 
முடித்தபிறகு. ப்ராணாயாமம்‌ செய்து. “ப.க வதளஜ்ஞயா 
ப,க,வத்‌ கைங்கர்யரூபம்‌ உபஸ்தள௩ம்‌ கபி என்று 
ஸங்கல்‌ பித்துக்கொண்டு எழுந்து பின்வரும்‌ மந்திரத்தால்‌ 
காயத்ரியை வழியனுப்பவேண்டும்‌. 


उत्तमे शिखरे देवि} भूम्यां Thana । 

बराह्यणेभ्यो erga गच्छ देवि! यथासुखम्‌ Il 
உத்தமே ஸிக,ரே தே,வி பூம்யாம்‌ பர்வதமூர்த்த,நி। 
i ற்மணேப்‌,யோ ஹ்யநுஜ்ஞாரம்‌ 53559 05559 
ப்‌,ராஹ்மணேப்‌, ஹ்யநுஜ்‌ க ப 
பஉத்தமே மரிகரே' என்னும்‌ இந்த மந்திரத்திற்கு, 
வாமதேவர்‌ ரிஷி, அநுஷ்டுப்‌ சந்தஸ்ஸுு, கரயத்ரி தேவதை, 
காயத்ரியை உத்‌,வாஸனம்‌ செய்வதில்‌ (வழியனுப்புவதில்‌) 
வீனியோகம்‌; காயத்ரியும்‌ லக்ஷ்மியும்‌ தேவதைகள்‌ என்று 
ஸுதர்பனபட்டர்‌ உரைப்பர்‌. 


(தேவி ) பிரகாசம்‌. தானம்‌ முகலான ध குணங்களை 
யுடைய காயத்ரீகேவியே! “வரத தேவி என்று அழைக்‌ 
கப்பட்ட ஸ்ரீதேவியே! (ப்ரா ஹ்மணேப்‌ ய:) ப்ரஹ்மத்தை 
அத்யயனம்‌ செய்யும்‌ ப்ராஹ்மணர்களுக்கு. ப்ரஹ்ம 
५८८ 5 8.2 மந்திரத்தைச்‌ சொல்‌இமாகையால்‌. , ப்ராஹ்மண 
८०.5८2 “காயத்ரீ மந்திரத்தை ஜபம்‌ 0 என்று 
பொருள்படுகிறது. ப்ரஹ்மப்ப்தத்துக்கு வேதம்‌, பரமாத்மா, 
யஜ்ஞம்‌. அக்நி, தவம்‌ முதலிய பல பொருள்களும்‌ 
உண்டாகையால்‌, அவற்றுக்குச்‌ சேர, பரமாத்மஜ்ஞானிகள்‌. 
யஜ்ளஞம்‌ செய்பவர்கள்‌. आती क 
தபஸ்விகள்‌ முதலான பல அர்த்தங்களும்‌ ப்ராஹ்மண சப்கத்துக்கு உண்டு. 

“மந்த்ரஸ்‌ ஸ்வாத்‌,யாய யஜ்ஞாக்‌,ஙி முநி மோக்ஷ பிதாமஹா:!| 
தபோ விஷ்ண்வர்க்கருத்‌,ராங்ச 508 भा ८०७ , च 
ப்‌,ரஹ்மஸம்ஜ்ஞிதா: || 

(மந்திரம்‌. வேகம்‌. யஜ்ஞம்‌, அக்கி, முனி. மோசம்‌. 
பிதாமஹன்‌, தவம்‌, விஷ்ணு. ஸூர்யன்‌ , ருத்ரன்‌. சந்திரன்‌ 
ஆயெ இவை ப்ரஹ்ம சப்தத்தால்‌ சொல்லப்படும்‌, ] என்னும்‌ 
நிகண்டுவை அநுஸந்திப்பது. [ப்;ராஹ்மணேப்ய : 
அநுஜ்ஞாரம்‌ ( 53537 ०0) @0 ]८ 171 (10८0 कण 0 कन्या 7 கிய எங்களுக்கு 
உன்னுடைய அநுக்ரஹத்‌ தினால்‌ வரும்‌ , ஞானத்தைக்‌ 
கருகிறாயன்றோ நீ, “த, கஎஸி' [சருகிறாய்‌] என்னும்‌ 
பதத்தைச்‌ சேர்த்துக்கொள்ளவேண்டும்‌. (०. 5 5 ® ८0 ) 
மிகவும்‌ உயர்ந்த (பர்வதமூர்த்த,நி மிக ரே) மேரு பர்வதம்‌, 
சித்ரகூடம்‌, வேங்கடாசலம்‌, ரைவககம்‌, © 97 ०7 5.55 2 
முதலிய பெயர்களைக்‌ கொண்டவையாய்‌, பகவா ன்லே 
அந்தந்த அவதாரங்களிலே ஆகரிக்கப்பட்டவையான 
மலைகளின்‌ சிகரங்களிலே, (யதளஸாுகும்‌) இஷ்டப்படி 
விளையாடுவதற்காக, (தேவி) ஹே தேவீ கரயத்ரியே! 
ஸ்ரீதேவியே! (கன்ச,) செல்வாயாக. 'கன்சூதேலிம்‌' என்று 
பாடமானபோது தே,வி - காயத்ரீிதேவியே ! ஈம்‌ ஸ்ரீதேவி 
யிடம்‌ விடைபெற்றுக்கொண்டு. ७9558 -- செல்வாயாக. 
என்றாவ த. ஸ்ரீதேவியையும்‌ வழியனுப்பிவிட்டுச்செல்வாயாக 
என்றாவது பொருள்கொள்ளலாம்‌. இது ஸுகர்சனபட்டர்‌ வீயாக்கயானகச்ரமம்‌. 


ஹே தே,வி-கராயத்ரீதேவியே!, ப்‌,ராஹ்மணேப்‌,ய:- 
ப்ராஹ்மணர்களை. அநுஜ்ஞா௩ம்‌-அறுக்ரஹித்து. பூம்யாம்‌— 
பூமியிலே, பர்வதமூர்த்த நி- பர்வத ஸரிகரத்திலோ, உத்தமே 
ஸபிகரேமேலான சிகரத்‌ தலோ, (இவற்றில்‌ முன்‌ 
எங்கிருந்த யோ அங்கு ) யத; ஸுஈக,ம்‌-வந்தபடியே ஸெளக்ய 
மாக, க,ச்ச-—போகக்கடவாயாக, இது நாரரயணமுனிவர்‌ 
பாஷ்யக்ரமம்‌, 


தே,வி-காயத்ரிதேவியே! பர்வ தமூர்த்த, நி-மேரு 
முகலியவைகளுக்கும்‌ மேலே, உத்தமே மரிக,ரே- உயர்ந்த 
சிகரத்திலேயுள்ள , பூம்யாம்‌-— (தகுந்த) ஸ்தலங்களிலே, 
கச்ச-போகக்கடவாய்‌; ப்‌்ஏாஹ்மணேப்‌,ய: (உன்னை உபா 
ஸித்‌த)ப்ராஹ்மணர்களானஎங்களால்‌,அநுஜ்ஞா ஈம்ஹி-அநுமதி 
கொடுக்கப்பட்ட தன்றோ. இது ரங்கராமா துஜ பாஷ்யல்ரமம்‌. 

தே,வி- காயத்ரிதேவிமே! பூம்யடம்‌- பூமிக்கு வந்த நீ, 
ப்்ராஹ்மணேப்‌,ய:-ப்ராஹ்மணர்களா கிய எங்களுக்கு, அநுஜ்‌ 
ஞா௩ம்‌ (க்ருத்வா)-—(எங்களுடைய  கேஹயாத்ரையை 
நடத்திக்கொள்ளும்படி) அதுமதிசெய்து. உத்த்மே 
பெருமைடபெற்றதும்‌. ஸிக,ரே- உயர்ந்கதமான. பர்வத 
மூர்த்தஙி-ஸ 8 மருவின்‌ சிகர ॐ தில்‌ (உன்னுடைய ஸ்தானமா 
திய ப்ரஹ்மலோகத்தில்‌) யதளஸுகஹ்‌-— வந்தபடியே ஸாக 
மாக,க,ச்ச-போகக்கடவாய்‌. இது வைத்யநா = தீக்திகருடைய 
வீயாக்யொன க்ரமம்‌. இவற்றில்‌ ஸு தர்சனஸ௰ரியின்‌ 
பாஷ்யக்ரமம்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உபா தேயம்‌, 
மற்றுள்ளார்‌ இவைகளுக்குள்‌ ஏதாவதொரு க்ரமத்தைக்‌ 
கொள்வது. 


இனி, ஸூர்யனை நோக்கி நின்‌ றுகொண்டு பரமபுரு ஜெனைக்‌ குறித்துச்‌ செய்யப்படும்‌ ஸ்தோத்ரரூபபான உபஸ்‌ 
தன மந்திரங்களின்‌ பொருளை விவரிப்போம்‌, அவற்றில்‌ 
காலையில்‌ அதுஸந்திக்கப்படும்‌ மந்திரம்‌ பின்வரும்‌! று; 


என चधेणीधरृतः। श्वो देवस्य सानसि। सत्यं RTI 
मित्रो जनान्‌ यातयति प्रजानन्‌ मित्रो दाधार प्रथिवीमुत द्याम्‌ । 
मिवः कष्टीरनिमिषा ऽभिचष्टे सत्याय esi घृतवदूविधेम ॥ 

प स Wa मतों अस्तु प्रयखान्‌ यस्त आदित्य शिक्षति तेन । 

न हन्यते न जीयते त्वोतो नैनमंहो अश्नोत्यन्तितो न दूरात्‌ ॥ 
மித்ரஸ்ய சர்ஷணித்‌,௬ு த: | ५०06०५7 தேவஸ்ய णा एनम) 
ஸத்யம்‌ சிதரங்ரவஸ்தமம்‌ |) 

மித்ரோ ® कहि யாதயதி ப்ரஜாநந்‌ 

மித்ரோ தளதரர ப்ருதி,வீமுத த்‌,யாம்‌ | 

மித்ர: க்ருஷ்டீரரிமிஷா 5பி, சஷ்டே 

ஸத்யாய ஹவ்யம்‌ க்‌,ருதவத்‌, விதேம ॥ 

ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வாந்‌ 

யஸ்‌ த ஆதித்ய மரிக்ஷதி வ்ரதேந | 

ந ஹந்யதே ௩ ஜீயதே த்வோதேர 

ைநமம்ஹோ அப்ரோத்யந்திதோ ௩ आ 78 ॥ 
"" ८9.50 ०४८, `” “மித்ரோ ஜ௩ாம்‌'' “ப்ரஸ மித்ர” என்று 
தொடங்கும்‌ இந்த மூன்றுக்கும்‌-ரிஷி விச்வாபயித்ரர்‌; முதல்‌ 
மந்திரத்திற்கு காயத்ரீ சந்தஸ்ஸுு; மற்றையிரண்டுக்கும்‌ 
தீரிஷ்டுப்‌ சந்தஸ்ஸு, ஸூர்யனுக்கு அந்தர்யாமியாகவும்‌ஃ 
நேரே மித்ராப்தவாச்யனாகவுமிருப்பதால்‌ - “மித்ரன்‌” 
எனப்படும்‌ பரமாத்மா தேவதை. ப்ராதருபஸ்தானத்தில்‌ விநியோகம்‌. 


“மித்ரஸ்யேதி த்ருசஸ்யேஹ விங்வாமித்ரோ ரிஷிஸ்‌ ஸ்ம்ருத:। 
ஹிருக்‌ (பீ,ருட்‌?) களயத்ரமாதிஸ்து த்ரிஷ்டுபா வத, பங்சிமெள | 
தே,வதா சைவ மித்ர: ஸ்யாத்‌ இத்யுவாச ப்ருஹஸ்பதி: ॥ 
श 74; ப்ராஞ்ஜலிஸ்‌ ஸம்யக்‌ உபதிஷ்டேத மண்டலம்‌. 
ஸஹஸ்ராமமம்‌ ப,கவக்தம்‌ உபஇிஷ்டே,த பளஸ்கரம்‌ |.” 
[“ 'மித்ரஸ்ய முதலான மூன்று ரிக்குகளுக்கும்‌ விங்வாமித்ரர்‌ 
நிஷியாகச்‌ சொல்லப்படுகிறோர்‌. ஹிருக்‌ (பீருட்‌?) காயத்ரி 
முதல்‌ மந்திரத்திற்குச்‌ சந்தஸ்‌; மற்ற இரண்‌ டுக்கும்‌ 
த்ரிஷ்டுப்‌ சந்தஸ்‌. மூன்‌ றுக்கும்‌ தேவதை மித்ரன்‌” என்று 
ப்ருஹஸ்பதி சொன்னார்‌. கைகூப்பியவனாய்‌ ஸூர்யமண்ட 
லத்தின்‌ முன்‌ நின்று, ஸஹஸ்ரகிரணனான ஸர்யனை உடஸ்‌ 
தானம்‌ செய்யக்கடவன்‌.] என்னும்‌ “பிதாமஹ வசனம்‌ 
இங்கு அனுஸந்திக்கத்தக்கது. 

(மித்ரஸ்ய) _மித்ரசப்த த்தினால்‌. சொல்லட்படும்‌ ஸூர்‌ 
யனுக்கு அந்தர்யாமியாயிருப்பவனுக்கு, (மித்ரஸ்ய) மித்ர 
பப்தத்தால்‌ ஸாக்ஷாத்தாகவே = சொல்லப்படுமவனுக்கு. 
என்றும்‌ கொள்ளலாம்‌. . *த்ர' என்னும்‌ 'பதம்‌ த்ரிலோதகங்‌களைக்‌ குறிக்கும்‌. * மி' என்பது அவற்றை அளந்தவன்‌ 
என்னும்‌ பொருளைக்‌.காட்டுகிறது, ஆக, ८05 ष्ठा ' என்னும்‌ 
பதம்‌ கூவுலகங்களையும்‌. தன்‌ .தஇருவடிகளால்‌ அளந்த 
திரிவிக்ரமனைச்‌ சொல்லுகிறது (மிழ்ரஸ்ய) ` மகாரவாச்ய 
ரான ஸர்வஜீவர்களையும்‌ காப்பா ற்‌ றுமவனாகையாலே யித்ரன்‌ 
எனப்படுவதாகஃவும்‌ கொள்ளலாம்‌ மாதா பிதா ப்ராதா 
நிவாஸ: பரணம்‌ , ஸுஹ்ருத்‌, ௧;திர்‌ நாராயண: [நாரா 
யணனே தாய்‌, தந்தை, ஸஹோதரன்‌, இருப்பிடம்‌, 
உபாயம்‌, ஈண்பன்‌. உடேடம்‌ ஆகிய எல்லாமாயிறாப்பவன்‌ ] 
என்று ஸுபாலோபநிலத்திலும்‌ “யஸ்ய மந்த்ரி ௪ கோப்‌ 
தாச ஸுஹ்ருச்சைவ ஐநார்த்தரு: '" [எவனுக்கு, மந்திரி 
யாகவும்‌, ரக்ஷகனாகவும்‌, ஈண்டனாகவும்‌ ஜனார்த்தனன்‌ 
விளங்குகறானோ] என்று மஹாபாரதத்திலும்‌ படிக்கப்‌ 
பட்டதை நினைப்பது. 

( சர்ஷணீத்‌, ரத: ) உலகங்களை தரித்து நிற்பவனாகிற 
தேவனுமைய. சர்ஷணி' , என்னும்‌ பதும்‌ ஸஞ்சரிப்பதை 
ஸ்வபராவமாகவுடைய ஐங்கமங்களைக்‌ குறிக்கும்‌, இது 
ஸ்தளவரங்களுக்கும்‌ உபலக்ணம்‌. “சத்ரிணோ 5555508 
[குடையை உடையவர்கள்‌ பேகின்றனர்‌.] என்னும்‌ 
பிரயோகத்தில்‌ * குடையையுடையவர்கள்‌ என்னும்‌ 
பொருளையுடைய ச£த்ரிபத.த்தால்‌ குடையற்றவர்களாய்‌ 
குடையுடையவனோடு கூடியிருப்பவர்களும்‌ கிரஹிக்கப்‌ 
படுவதைப்போன்றது இந்தப்‌ பிரயோகமும்‌. ஆக. ஸ்தாவர 
ஜங்கமாத்மகமான ஜகத்தை தரித்து நிற்பவன்‌சர்ஷணித் ருத்‌ 
என்‌ றுரைக்கப்படுகறோன்‌. இப்‌ பெரும பரம்பொருளான 
ஈாராயணனுக்கே பொருந்‌ துமேயொழிய. அல்பமக்தியை 
௨.டையவர்களான ஸூர்யன்‌ முதலானார்க்குப்‌ பொருந்தா 
தாகையால்‌- இங்கு, சொல்லப்படும்‌ மித்ரன்‌. ஆதித்யன்‌ 
முதலான சப்தங்கள்‌ ஸுூர்யனைமட்டும்‌ ' குறிக்கமாட்டா; 
அவனுக்கு அரந்தர்யாமியாயுள்ள நாராயணனையும்‌ சொல்‌ 
லும்‌. "தத்‌ ஸ்ருஷ்ட்வா ததேவாறுப்ராவிமத்‌ '' [இவ்‌ வுலகங்களை ஸ்ருஷ்டித்து அவற்றை வியாபித்தது பரம்‌ 
பொருள்‌] = “° ஈமமா வாஸ்யமிதும்‌ ஸர்வம்‌ யத்‌ கிஞச ஜக,த்‌- 
யாம்‌ ஜக,த்‌ '' [உலகிலுள்ள (ஸ்தாவர) ஜங்கமப்‌ பொருள்‌ 
களெல்லாம்‌ ஸர்வநியந்தாவான பகவானாலே வியாபிக்கப்‌ 
பட்டுள்ளது] “அந்தர்‌ பஹிங்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய 
நாராயண: ஸ்தி,த: ” [ அவையெல்லாவற்சையும்‌. உள்ளும்‌ 
புறமும்‌ வியாபித்து விளங்குகிறான்‌ ஈாராயணன்‌.] “ தாதா 
நாராயண:'' [எல்லாவற்றையும்‌ தரித்து நிற்பவன்‌ 
நாராயணன்‌.] முகலான வேதவாக்யங்களையும்‌. * யஸ்யா 
யுதாயுதாம்மமாம்மே விங்வமாக்திரியம்‌ ஸ்தி,தா'' [எவ 
னுடைய பல்லாயிரத்தில்‌ ஒ௫ூடகுதி அம்சத்தில்‌ இந்த 
விச்வசக்தியானது தரிக்கப்பட்டு விளங்குறெதோ... ] 
“ மேரோரிவாணுர்‌ யஸ்யைதத்‌ ” [இவ்வுலகமெல்லாம்‌ எவனிடத்தில்‌ மேருமலையிலுள்ள அணு போல்‌ வீளங்கு கிறதோ....] முதலான 
வீஷ்ணுபுராணாதி ஸாத்வீகமாஸ்த்ர 
வசனங்களையும்‌ இங்கு அநுஸந்திப்பது. 
(தே. ०४५.) தானம செய்ட வன்‌ தேவனாகிறான்‌. அதாவது 
ஆன்னைஆர்ரயி த. தவர்களுக்கு, அவர்களுடைய வீருப்பத்திற்கு 
அனுகுணமாக, இவ்வுலக இன்பங்கள்‌. கைவ்ல்யமோக்ஷம்‌, 
பரமபதம்‌ முதலான பொருள்களைத்‌ தருபவன்‌; சன்னையே 
விரும்புமவர்களுத்குத்‌ தன்னை தூளிதானம்‌' செய்டவன்‌ 
தேவனாகிறான்‌, “ய छ 5105857 பலதா: ' [எவன்‌ தன்னையும்‌ 
அளித்துத்‌ (தன்னை அனுபவீக்கலாம்படியான) பலத்தையும்‌ 
அளிக்கறானோ....] எனக்கே தன்னைத்தந்த கற்பகம்‌” 
"नण 6011560 ப்ரதே, ஹி விஷ்ணு:'' [எல்லாப்‌ பலன்‌ களையும்‌ 
அளிப்பவன்‌ விஷ்ணுவேயஸ்றோ.] 4555575, த்யாயிநாம்‌ 
நித்யம்‌ அபவர்க்க, ப்ரதேன ஹரி: '[மோக்ஷத்தையே என்றும்‌ 
அளிக்கும்‌ ஹரிதன்னை (வேறு பலன்களுக்காக) தியானிப்பவர்‌ 
களுக்கு அவற்றையும்‌ அளிக்கிறான்‌.]  “உதாம்ருதத்வ 
ஸ்யேமாாந:'' [/[மோக்த்திற்கும்‌ ப்ரபுவர்யிருப்பவன்‌ 
நாராயணனே] முதலான ப்ரமாணங்களைப்‌ படிப்பது, 
(தேவஸ்ய) “தி.வு-க்ரீட... என்னும்‌ தாது பாடத்தை 
அனுூஸஙித்து காயத்ரி விவரணத்தின்போ து தேவ 
சப்தத்திற்குச்‌ , = சொல்லப்பட்ட பொருள்களையெல்லாம்‌ 
இங்கும்‌ - அநுஸந்திப்பது, 


அடுத்தபடியாக, (ங்ரவ:, ஸாஈஸிம்‌. ஸத்யம்‌. சித்ரங்ர 
வஸ்தமம்‌) . என்று இப்படிப்பட்ட பகவானுடைய 
ரக்ஷணத்தை நான்‌, விரும்புகிறேன்‌ , என்று சொல்லப்படு 
கிறது. அந்த ரக்ஷணம்‌ எப்படிப்பட்டது என்பதை மேலே 
எடுத்த நான்கு பதங்களும்‌ விவரிக்கின்‌ றன. . (ங்ரவ: ) 
° ஸ்ருஃஹிம்ஸாயாம்‌ ” என்கற தாது பாடத்தின்‌ படியே 
“மரு ' என்னும்‌ பதம்‌ பரம ஹிம்ஸகமான ஸம்ஸாரதுக்‌ 
கத்தைச்‌ சொல்லுகிறது. *'அவ-ரக்ஷ்ணே” என்னும்‌ தாது 
பாடத்தின்‌ படியே * அவ' என்னும்‌ பதம்‌ ரக்ஷணத்தகைச்‌ 
சொல்லுறது. ஆக, மாரவபதத்தால்‌ ஸம்ஸாரரக்ஷணம்‌ 
சொல்லப்பட்டதாகிறது. அந்த ஸம்ஸாரரக்ஷணம்‌ எப்படிப்‌ 
பட்டது என்பதை மற்ற மூன்‌ று பதங்களும்‌ விளக்குக்‌ றன, 
(नण 5०5८0) *வணஷண்‌: ஸம்ப,க்தெ' न न றபடியே 
£ஸ௩' என்னும்‌. பதம்‌ பக்தியைக்‌ குறிக்கறதாசையால்‌, 
பக்திசெய்யத்‌ தகுந்தது என்று பொருள்படுகிறது. அதாவது: 
பரமபுருஷனுடைய ரக்ஷணம்‌ ஸர்வசேதனரா லும்‌ விரும்பத்‌ 
தக்கது என்‌ றதாகிறது..: (ஸத்யம்‌) உண்மையான த... அதா 
வது: மற்றவர்கள்டைய ரக்ஷ்ண த்தைப்போல்‌ நிலையற்றதா 
யிராமல்‌. நிலைநின்‌ ற .ரக்ஷ்ணமாயிருக்கை. ( சித்ர-ங்ரவ 
ஸ்தமம்‌) :-ங்ரூயதே. இதி ங்ரவ:” [(ஜனங்களால்‌) கேட்கப்‌ 
படுகிறதாகையால்‌' ஸ்ரவம்‌] “என்றெ வ்யுத்பத்தியின்‌ படி 
“மரவ: ' என்னும்‌ பதம்‌: ர்த்தியைச்‌ சொல்லுகிறது. 
" சித்ரங்ரவ: ° என்பது விசித்ரசீர்‌த்தி என்னும்‌ பொருளை 
யுடையது.  சித்ரங்ரவஸ்தமம்‌.' என்க்கயால்‌ .. விசித்ர 
£ர்த்திலைய லடையவைகளுக்குள்‌ மேலான அஎன்றதாகிறது. 
“சாயூ பூஜாயாம்‌''. என்கிற தாது பாடத்தை அநுஸரித்து. 
சித்ர' பப்தத்தித்குப்‌ பூஜிக்கப்படுவது என்றும்‌ பொருள்‌ கொள்வர்‌. 

ஆக. இவ்வளவால்‌. *“விரும்பத்தக்கதாய்‌, நிலை 
ஙின்றகாய்‌. வீசித்ரமானதாய்‌ (பூஜிக்கத்தக்கதாய்‌). யிக 
வுயர்ந்த ஒீர்த்தியேை உடையதான பகவானுடைய ஸம்‌ 
ஸாரரஷஷ்ணத்தை விரும்புறேன்‌ என்றதாயிற்று. இவ்‌ 
வீடத்தில்‌ “ ந ஹி பாலநஸாமர்த்வம்‌ ௬ுதே ஸர்வேங்வரம்‌ 
ஹரிம்‌” [ரக்ஷணஸாமர்‌ த்யம்‌ ஸர்வேங்வரனான ஹரியைத்‌ 
தவிர வேறொருவனிடம்‌ கிடையா த]. “யத்ர யோகேஹ்வர; 
க்ருஷ்ண::...தத்ர ஸ்ரீர்‌ விஜயோ பூ,தி:'' [எங்கு யோகேஸ்வர 
னன கிருஷ்ணனிருக்கரெனோ அங்கேயே செல்வமும்‌. 
விஜயமும்‌. பெருமையும்‌ உள்ளத.] முதலான ப்ரமாணங்்‌ 
களை அதுஸந்திப்பது. 


*' மித்ரஸ்ய” என்று தொடங்கும்‌ மந்திரத்திற்கு வேறு. 
வகையாகவும்‌ பின்வருமாறு பொருள்‌ கொள்ளலாம்‌: 
(மித்ரஸ்ய) மிதிரஹிதனுடைய; அதாவது, உத்க்ருஷ்ட 
ஜ்ஞானவான்களான ப்ரஹ்மருத்ர ஸஈகரதிகளா லும்‌, இவர்‌ 
களுக்கும்‌ ஒஞானமளிக்கும்‌ வேதபுருஷனாலும்‌, அவ்வேதத்தை 
யும்‌ ப்ரவர்‌த்திப்பித்த அவன்றன்னாலும்‌, அவனையும்‌ தன்‌ 
உள்ளத்தினுள்ளே அடக்கும்‌ ஆழ்வார்களாலும்‌ அளவிட 
வொண்ணாதவனாயிீருக்கை. “-விதி,மமிவ ஸ௩காத்‌,யைர்‌ த்‌ யாது 
மத்யந்த தூரம்‌” [ப்ரஹ்மருத்ர ஸககா திகளா லும்‌ தியானிக்க 
அரியனாயிருப்பவன்‌ ] “வானுளாரறியலாகா வானவா "` 
“யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்குப்‌ பரம்பொருள்‌ 
(அளவிட்டு) அறியப்பட்டதல்லவோ, அவனுக்கு (அது) 
'அறியப்பட்டதாகறது.] “யதோ வாசோ நிவர்த்தந்தே `" 
{எவனிடமிருந்து வாக்குகள்‌ திரும்புன்றனவோ....] 
“ ஸோ அங்க, வேத, யதி, வா ந வேத,” [அவனே அவன்‌ 
பெருமையை அறிவனோ அறியானோ2] தனக்கும்‌ தன்‌. 
தன்மை அறிவரியானை ” “யவர்க்கும்‌ சிந்தைக்கும்‌ கோசர 
மல்லன்‌ ”' “யானுமேத்தி ஏழுலகும்‌ முற்றுமேத்திப்‌ பீன்னை 
யும்‌ தானுமேத்திலும்‌ தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்‌? 
மூதலான நூமழ்றுக்கணக்கான ப்ரமாணங்களைப்‌ படிப்பது. 

( சர்ஜணித்ருத: ) சர்ஓஹணீபப்தம்‌ ஞானம்‌ என்னும்‌ 
பொருனளையுடையது. அது: இங்கு ஞானத்தையுடைய 
சேதனரைசக்‌ குறிக்கிறது. ஸகலசேதனரையும்‌ தரிப்பவன்‌ 
சர்ஷணித்ருத்‌ ஆகிறான்‌. இவற்றை எதற்காக தரிக்கிறா 
மனென்னில்‌; (தேவஸ்ய) தன்னுடைய வினையா ட்டுக்காகவே 
தரிக்கறோன்‌ என்‌ றபடி. (ங்ரவ:) “ங்ரூயதே இதி ம்ரவ: ' " 
[எல்லாராலும்‌ கேட்கப்படுகிறகாகையால்‌ (கீர்த்தியான த) 
0९०५२" எனப்படுகிறது. ] என்கற வ்யுத்பத்தியின்படியே 
ர்த்தி என்னும்‌ பொருளையுடையது “ஸ்ரவ: '' என்னும்‌ 
५८०८५0५ “கேட்பார்கள்‌ கேசவன்‌ ூீர்த்தியல்லால்‌ மற்றும்‌ 
கேட்டரோ?” என்று ஞானிகளால்‌ கொண்டாடப்படும்‌ 
£ீர்த்தியன்றோே இங்கு சொல்லப்படுகிறது. (மித்ரஸ்ய 
0०0०५: ) அளவிடவொண்ணாகவனுடைய 8ர்த்தியாகையாலே 
அநந்த£ீர்த்தியாயிருக்கும்‌. (சர்ஜணீத்‌,ருத: ங்ரவ:) சேத 
னரை தரித்துநிற்பவனின்‌ £ீர்த்தியாகையாலே சேதனருள்ள 
விடமெல்லாம்‌ பரவியிருக்கும்‌. (தேவஸ்ய ங்ரவ:) தேவ 
னுடைய ஒர்த்தியாகையாலேதிவ்யலோகங்களி ஓம்‌ வியாபித்‌ 
இருக்கும்‌. (ஸாநஸிம்‌) ஈன்றாக பக்தி செய்யத்தகுந்த & 5.5. 
செவிக்கனத ர்த்தியாருடைய கீர்த்தியன்றே இது. 
(ஸா ஸம்யக்‌ நஸிம்‌ ஈமஸ்கார்யம்‌) (ष्ठः क = வணங்கத்தக்க 
8ர்த்தியாயிருக்கை. (ஸத்யம்‌) எக்காலத்திலும்‌ அழியர்த 
ர்த்தி; அழிவில்‌ 8ர்த்திபென்றும்‌ அநந்த£ர்‌ த்தியென்றும்‌ 
கொண்டாடப்படுபவன்‌  கீர்த்தியன்றோ. யசஸ்ஸாுக்கு ஒர்‌ 
இருப்பிடமாயிருப்பவன்‌ ஜர்த்தியல்லவா. (சித்ரங்ரவஸ்தமம்‌) 
ஆச்சரியகரமாயும்‌ கேட்கத்தக்கவைகளுள்‌ உயர்ந்ததாயும்‌ 
இருக்கும்‌ கீர்த்தி. “ ஸம்ங்ரவே மதுரம்‌ [கேட்க இனிகா 
யிருப்பது] “ செவிக்கனிய செஞ்சொல்‌ ” என்றாப்போலே 
பிருக்கை, (சித்ர) கேட்பாரை எத்துறம்‌!”* என்று 
மோஹிக்கச்‌ செய்கை, (ங்ரவஸ்தமம்‌) “^ டேய்முலைஞ்கு 
ணாகவுண்டான்‌ பேரல்லால்‌ கேளா செவி” “யாம்‌ கேட்‌ே 
யும்‌ காலாமும்‌ நெஞ்சழியும்‌ கண்சுழலு செவிகளா 
லார நின்‌ கீர்த்திக்கனி என்னும்‌ கவிகளே காலப்பண்‌ 
தேனுறைப்பத்‌ துற்று” என்கிறபடியே செவிபடைத்த 
பலன்‌ இதைக்‌ கேட்டதே என்னும்படியிருக்கை. இப்டடிப்‌ 
யட்ட பகவத்ரேத்தியைத்‌ துதிக்கப்போகிறேன்‌— என்று 
கூட்டிக்கொண்டு பெொருள்கொள்ளவேண்டும்‌. 

ஆக. முதல்‌ மந்திரத்தினால்‌ மஹாமஸஹறிமமாலியான 
யரமபுருஷனைத்‌ துதிக்கப்போகறேன்‌ என்றதாயிற்று. 

இனி அடுத்த இரண்டு மந்திரங்களும்‌ பகவத்ஸ்தோத்ர 
ரூபமாயிருக்கின்‌ றன. அதில்‌ “ மித்ரோ @ 576 '' என்னும்‌ 
மந்திரத்தால்‌. தன்னை அடைந்தார்க்கு ஸர்வபலங்களையும்‌ 
கொடுக்கக்கூடிய ஜ்ஞான பாக்திகள்‌. அந்தப்‌ பரமாத்மா 
விடம்‌ இருப்பதை அநுஸந்தித்துக்கொண்டு அவனிடத்தில்‌ 
ஆத்மஸமர்ப்பண ஸங்கல்பம்‌ செய்யப்டடுறெது. 58०८107 5 
தா துஸக்தானரூபமாயிருக்கிறது இம்மந்திரம்‌. 


(ப்ரஜா௩ந்‌) ஸர்வஜஞன்‌; “இவன்‌ நம்மிடம்‌ இன்ன 
இன்ன காரியத்தை அபேககிக்கிறான்‌; அதை, இம்மா திரியாக, 
இன்ன கலத்தில்‌ முடித்‌ துக்கொடுக்கலாம்‌ '' என்று 
அறிவதற்கு. ஸர்வஜ்ஞனாகவேணுமாகையால்‌, அக்குணத்‌ 
கைச்‌ சொல்லுகிறது. (மித்ர;) ரக்ஷகன்‌; இத்தால்‌ 
இயற்கையாகவே இவர்களுக்கு ரக்ஷகனாயிருக்கும்படியான 
ஸ்வாமித்வம்‌ சொல்லப்படுகிற த. (ஜநாம்‌) தன்னிடமிருந்து 
பிறந்தவர்களான ப்ராணிகளை. இத்தால்‌ இவனுக்குத்‌ 
தாங்கள்‌ பிள்ளைபோல்‌ ஸம்டந்தமுள்ளவர்கள்‌ என்பது 
காட்டப்படுகிறது. (மித்ர:ஜராந்‌) அவன்‌ தகப்பனாகவும்‌, 
ஈாங்கள்‌ பிள்ளைகளா கவுபிருக்கும்போது எங்கள்‌ காரியத்தை 
அவன்‌ செய்யாமலிருக்கமுடியுமோ? என்கை. (ப்ரஜா௩ந்‌ 
மித்ர:) அவன்‌ எங்களுடைய நன மையை அறியாத 
அஜ்ஞனாயிருந்தாலன்‌ றோ நாங்கள்‌ இழுக்கலாவது, (ஜநாம்‌ 
யாதயதி) ஜனங்களைத்‌ தங்கள்‌ காரியங்களைச்‌ செய்யும்படி 
ஓவ்வொரு கணமும்‌ தூண்டுபவன்‌ அவனே. இதுவரையில்‌ 
எங்கள்‌ காரியங்களை நாங்களே ஸ்வதந்த்ரராகச்‌ செய்து 
வந்தோமோ, இனி எங்கள்‌ காரியத்தை நாங்கள்‌ நோக்கிக்‌ 
கொள்ளுகைக்கு என்கை, 


“ஏஷ ஹ்யேவைநம்‌ ஸாது, கர்ம காரயூதி 

தம்‌ யமேப்யோ லோகேப்ய உந்நிநீஷதி | 

ஏஷ ஹ்யேவாஸாது, கர்ம காரயதி யமதே,ா நிநீஷதி ॥' 
[எந்த ஜீவனை (அண்டத்தினாள்ளிருக்கும்‌) இந்த 
லோகங்களிலிருந்து மேலே (பரமபதத்திற்கு) அழைத்துச்‌ 
செல்ல வீரும்புறானோ. அவனை இந்தப்‌ பரமாத்மாவே 
நல்ல கர்மங்களைப்‌ பண்ணும்படி செய்கிறான்‌; எவனைக்‌ 
கிழே தள்ள விரும்புறொனோ. அவனை இப்பரமாத்மாவே 
கெட்ட கர்மங்களைப்‌ பண்ணும்படி செய்றொன்‌.] என்று 
கெளவஷீதக்யுபநிஷத்திலும்‌. “கர்த்தா காரயிதா ச कए 
[செய்பவனும்‌, செய்விப்பவனும்‌ அவனே] என்று 
ஸ்ரீ ராமாயணத்திலும்‌. * செங்கண்மால்‌ கண்டாய்‌ அறம்‌ 
பாவமென்‌ நிரண்டுமாவான்‌'' என்று பொய்கைப்‌ பிரானா 
லும்‌ சாட்டப்பட்ட காரயித்ருத்வத்தை அநுஸம்‌ திக்கிறது. 


இச்சேதனன்‌ செய்யும்‌ ஒவ்வொரு கரரியத்தையும்‌ 
அவன்‌ தானாகச்‌ செய்வதில்லை; பரமாத்மாவால்‌ தூண்டப்‌ 
பட்டே செய்கறோன்‌ என்பது வேதாந்திகளின்‌ கொள்கை. 
அப்படியாகில்‌, அவனால்‌ சாரண்டப்டட்டு இவன்‌- செய்யும்‌ 
கருமங்களுக்கு இவன்‌ பலன்‌ அறுபவிக்கை யொருந்தாதே 
என்னும்‌ கேள்வி ஏற்படுகறெது. அதாவது—லோகத்தில்‌ 
ஒருவன்‌ இருடுகிறான்‌; மற்றொருவன்‌ அவனைத்‌ திருடும்படி 
தூண்டுகிறான்‌. லோகத்தில்‌ இவர்கள்‌ இருவருமே குற்ற 
வாளிகளாகக்‌ £“ கருதப்பட்டு இருவரும்‌ தண்டிக்கப்ப்டு 
ஜறாோர்கள்‌. இங்கோவெனில்‌, கருமங்களைச்‌ செய்யும்‌ ஜீவன்‌. 
அப்படிச்‌ செய்யும்படு தூண்டும்‌ பரமாத்மாவினால்‌ தண்ட்க்‌ 
கப்படுகிறான்‌. இது நியாயத்திற்கு முரணானதாக இருக்‌ 
கிறது. பரமாத்மா மீகவும்‌ தயையற்றவன்‌ என்றும்‌ 
தோன்றுகிறது ; ஒருவனை நற்கருமங்களையும்‌. மற்றொரு வனை துஷ்கருமங்களையும்‌ செய்யும்படி தூண்டும்‌ பரம 
புருஷன்‌ மிகவும்‌ ப்ஷபாதமுள்ளவன்‌ என்றும்‌ வெளியா 
றது; ஆக: ' இப்படிக்‌ காரயித்ருத்வத்தை ஒப்புக்‌ 
கொண்டால்‌, வைவம்ய நைர்க்ருண்யங்கள்‌ [பக்ஷ்பாதும்‌. 
தயையின்மை ] ஆகிய டபெரிய3தோஷங்கள்‌ ஏ ற்படுகின்‌ च्छ ए. 
என்னும்‌ வலிதான ஆதடகேேபம்‌ எழுகிறது, 


இதற்கு வேதாந்திகள்‌ சொல்லும்‌ ஸமாதாநம்‌ பின்‌ 
வருமாறு: பூர்வகர்மங்களை அநுஸரித்தே பகவான்‌ இவனை 
உத்தர கர்மங்களில்‌ கூண்டுறொனாகையாலே வைஷம்ய 
றைர்க்‌ருண்யங்கள்‌ வாரா; பகவான இவனைக்‌ கர்மங்களில்‌ 
ப்ரேரணம்‌ செய்யும்போது முன்‌ செய்திருக்கும்‌ புண்ய 
பாபகர்மாநுகுணமாகவே - தூண்டுகிறானாகையால்‌ மேலே 
சொன்ன தோஷங்கள்‌ வருவதில்லை என்பது வேதாந்திகள்‌ 


சொல்லும்‌ ஸமாதானம்‌. '“ வைஷம்ய நைர்க்ருண்யே ந 


 ஸாபேக்ஷத்வாத்‌': [(பூர்வகர்மங்களை) எதிர்பார்த்திறாப்‌ பதீர்ல்‌ 


இவனுக்கு வைஷம்யரைர்கருண்யங்களிலலை,] என்று 
ஸூத்ரகாரரும்‌ அருளிஞர்‌. இதற்கு மல்‌, மற்றொரு கேள்வீ 
எழுெது: இவனுடைய பூர்வகர்மங்களும்‌ பகவானுடைய 
'கரண்டு கலினலே3ய செய்யப்பட்டனவாகையால்‌, பூர்வ 
கர்மஸாடே க்ஷனாய்‌ இவன்‌ ட்ரேரணம்‌ செய்தாலும்‌ ௮ வஷம்ய 
நைர்க்ருண்ய தோஷம்‌ வந்தே: திரும்‌. -ஆனைகையரல்‌- பஃவா 
னுக்குக்‌ கார்யித்ருதீவம்‌ உண்டு என்‌ பதையாவது கைவீட 
வேண்டும்‌. அல்லது,  வைஷம்யைர்க்‌,ருண்யங்கள்‌ 
அவனுக்கு உண்டி என்‌ பையா வது ஒடபுக்கொள்ள 
வேண்டும்‌-என்னும்‌ பூர்வடக்ஷம்‌ உண்டாகிறது: இதற்குச்‌ 
சொல்லும்‌ பதிலாவது:—ஒவ்வொரு காரியத்தையும்‌ இச்‌ 
சேதனன்‌ செய்ய ஆரம்பிக்கும்போது. ப்ரதுமப்ரவ்ரு த்‌ தியில்‌ 
பசுவான்‌ இவனைத்‌ தூண்டர்மல்‌ உதா ஸீனனாயிருக்கிறான்‌ 

ப்ரதமப்ரவ்ருத்தியில்‌ இவன்‌ ஒருவிதமாகக்‌ கர்மந்தைச்‌ செய்ய... முற்பட்டவுடன்‌, பூர்வகர்மத்தை அனுஸரித்து 
மீமன்மேலும்‌. இவனைத்‌ அண்டுகிறான்‌ . ஆடையால்‌ வைஷம்யறைர்க்‌ ருண்யங்களில்லை -என்‌ றபடி. 

அப்படியாகில்‌. ப்ரதம ப்ரவ்ருத்தி தசையில்‌ காரயித்‌ 
ருத்வம்‌ இல்‌்எையென்றாகிவீட்டகதே எனில்‌: ஆகாது; கார 
யிக்ருத்வமானது ஸாமாந்யகாரயித்ருத்வம்‌ என்றும்‌. 
விமேஷகாரயித்ருத்வம்‌ என்றும்‌ இருவகைப்படும்‌. கர்ண 
களேப4ராதினைக்‌ கொடுத்து. ` அவற்றுக்கு வேலைசெய்ய 
சக்தியையும்‌ கொடுத்து நிற்கும்‌ நிலை ஸாமாந்யகாரயித்‌ 
ருத்வம்‌, இந்க ஸாமாந்யகாரயித்ருத்வம்‌ ழதிமப்ரவ்குத்தி 
தசையையுள்ளிட்ட ஸர்வ தசைகளிலும்‌ உள்ளது. பூர்வ 
கர்மாநுகுணமாகச்‌ சிற்சில கர்மங்களிலே ப்ரேரணம்‌ 
செய்வதாகிற விசேஷகாரயித்ருத்வம்‌ ப்ரதம ப்ரவ்ருத்தி 
தசையையொழீிந்து மற்ற தசைகளில்‌ உள்ளது. ஆசையால்‌ 
காரயித்ருத்வத்திற்கும்‌ ஹரனியில்லை; வைஷமய௰ ர்க்‌ 
ருண்ய தோஷங்களும்‌ வரமாட்டா என்னும்‌ மரஸ்தீரார்த்தம்‌ 
நிரூபிக்கப்பட்ட தாயிற்று. 


“ப்ரஜா௩ந்‌” என்று ஸர்வஜ்ஞத்வம்‌ சொல்லல 
இப்படி ஸர்வஜ்ஞனாயிருந்தபோ திலும்‌ கொண்டியைப்போல்‌ 
அ௱க்தனாயிறாந்தானாகில்‌ ஆச்ரிதர்‌ காரியம்‌ செய்யமுடியா 
தாகையால்‌. இவனுடைய ஸர்வமக்தித்வம்‌ அடுத்தபடியாக 
அநுஸந்திக்கப்படுகிறது: (மித்ரோ தாதா ப்ருதி,வீமுத 
5301712.) மித்ரபப்தவாச்யனன இவனே க 
தேவலோகத்தையும்‌ தாங்குகிறான்‌. “த்த சாய? 
என்னும்‌ வேதார்த்தம்சொல்லுகறது. ஆகதாரமாயிருப்ப அ. 
ீஸ்ஷியாயிறாப்பது, ஸ்ருஷ்டிப்பது. இஷ்டபலங்களைக்‌ 
கொடுப்பது. ரக்ஷிப்‌து முதலான செயல்களால்‌ இவற்றை 
இவனே தரிக்கச்செய்றொன்‌ என்‌ றபடி. ப்ருதினிம்‌” क 
என்னும்‌ புப்தங்கள்‌ அவற்றிலுள்ள சேதனரைச்‌ சொல்‌ 
ஓவதாகவும்‌ கொள்ளலாம்‌. “ஸ தளதரார ப்ருதி,வீம்‌ த்‌,யா முதேமாம்‌'' என்று நாரரயணவல்லியில்‌ 
படிக்கப்படும் மந்த்ரகண்டத்தை இங்கு படிப்பதிலிருந்து நாராயணனே 
இங்கு யித்ரஸப்தத்தால்‌ சொல்லப்படுபவன்‌ என்று விளங்கு 
றது. (மித்ரோ தாதரார ப்ருதிழவிம்‌ ) “ உத்‌த்‌,ருதாஸி 
வராஹேண க்ருஷ்ணேந '' என்கிறபடியே வரராஹாவதார. 
காலத்தில்‌ இப்பூமியைக்‌ குத்தியெடுத்துத்‌ ஃரங்‌கி நின்ற - 
பழியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. பூமியை 
மட்டுமோ தாங்யெது எனில்‌; (உத தீயாம்‌ ) ஸ்வர்க்காதி 
லோகங்களையும்‌ ஸர்வகாலங்களிலும்‌ தரங்க நிற்பவன்‌ 
இவனே என்கிற து,இங்கு இரண்டு லோகங்களைச்‌ சொன்‌ னது 
ஸர்வலோகங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌, ப்ருதி,வீம்‌' என்று 
லீலாவிபூதியையும்‌, = ^ த்யாம்‌” என்று நித்யவியூதியையும்‌ 
தாங்கி நிற்கிறபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 


“ப்ரஜா௩ம்‌' என்று சொன்ன ஸர்வஜ்ஞத்வத்தை விவரிக்‌ 
நறெது அடுத்தபடியாக: (மித்ர:) மேலே சொல்லப்பட்ட 
பகவான்‌; (க்ருஷ்டீ:) க்ருஷியினாலல ஜிவிக்கும்‌ ப்ராணிகனை. 
(அநியிஷா5பி,சஷ்டே) கண்‌ கொட்டாமல்‌ கண்டு 
கொண்டிருக்கிறான்‌ . (அபி,சஷ்டே) உள்ளும்‌, புற்முமாகிய 
ஸர்வ தசங்களிலும்‌ பார்க்கிறான்‌. (அநிமிஷா:) ஸர்வ 
காலங்களிலும்‌ பார்க்கிறான்‌. ( அரீமிஷா 5பி,சஷ்டே) 
“அந்தர்‌ ப,ஹிங்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: ஸ்தி,த:”” 
[எல்லா வஸ்துக்களின்‌ உள்ளும்‌ புறமும்‌ வியாபித்து 
வீளங்குகறான்‌ ஈாராயணன்‌ J] என்று சொல்லப்‌ 
பட்டவனன்றோ இவன்‌. அநியிஷா:' என்றதால்‌ உதிப்ப தும்‌, 
அஸ்‌ தமிப்பதுமாய்ப்போரு கிற ஸூர்யனல்லன்‌ இவன்‌ 
என்று உணர்த்தப்படுகிறது. “ஜநாந்‌ யாதயதி ? 
என்னுமிடத்தில்‌ சொல்லப்பட்ட காரயித்ருத்வமும்‌. 
^ மித்ரோ தாதர்‌ ” என்ற வீடத்தில்‌ சொல்லப்படும்‌ 
ஸர்வாதராரத்வமும்‌, அடுத்த மந்திரத்தில்‌ சொல்லப்படும்‌ 
ஹேயப்ரத்யநீகத்வமும்‌ ப்ரஸித்கஸூர்யனுக்குப்‌ பொருந்தா 
வாகையால்‌, மித்ராதிபப்தங்கள்‌ பரமாத்மபரமேயா கும்‌, 

மித்ராப்கத்தினால்‌ ஸ்வாமித்வமும்‌. “ ப்ரஜாநம்‌ "” 
“ மித்ர;க்ருஷ்டீரநியிஷனா$பி.சஷ்டே ” என்று ஸர்வஜ்ஞத்வ 
மும்‌. “மித்ரோ தாதர்‌ "^` ' என்று ஸர்வாக்‌ இத்வமும்‌ 
அறிவிக்கப்பட்டன. இக்‌ குணங்ககரிருந்திரலுப்‌, ` இவன்‌: 
பூர்ணனாயில்லாவிடில்‌ கைம்மா அ கருதாமல்‌ ஆங்ரித காரியம்‌ - 
செய்யம்‌ ட்டானாகையால்‌ பூர்த்தியாகிற குணத்கையும்‌ ` 
ஆத்மஸமர்ப்டணஸ்தவத்திலே ௮ நுஸந்‌ திக்க வேண்டும்‌. 
இவையிவ்வளவுமிருந்தா லும்‌ தயையில்லாவீடில்‌ । இக்‌ 
குணங்கள்‌ கார்யகரமாக மாட்டா; ுஆகைய.!। ல்‌ தயையையும்‌ 
அநுஸந்திக்கவேணும்‌; ஆங்ரயண ஸெளகர்யாபாத,கமான 
ஸெளலப்‌,ய ஸெள ஸரீல்ய. வாத்ஸயங்களாகிற குணங்களையும்‌ 
'அநுஸந்‌திக்கவேண்‌ டும்‌. இக்‌ குணங்கள்‌ மாறுபடுமவை ' 
யானால்‌ அநர்த்தஹேதுவரகவும்‌ முடியும்‌. ஆகையால்‌ இக்‌ 
குணஸமஹங்கள்‌ மாறுடாடறழ்றவை என்பதையும்‌ அறு 
ஸந்திக்கவேணும்‌; - இப்படிப்பட்ட  இக்குணங்களையும்‌. 
இவைகளின்‌ மாணுபாட,ற்ற தன்மையையும்‌ அநுஸந்‌ திக்கிற து 
(ஸத்யாய) என்னும்‌ பசும்‌. த்வயத்தின்‌ `` பூர்வோத்தர 
கண்டங்களில்‌. நாராயணாப்தார்க்கத்தையும்‌, `" ஆய” 
५०८५5 ॐ च्छ பொருளையும்‌ இங்கே ஸ்மரிப்பது: (ஸத்யாய) 
“ ஸத்யம்‌ ஜஞா௩ மநந்தம்‌ ப்ரஹ்ம '' எனறு படிக்கப்பட்ட 
அநந்தனான ப்ரஹ்மத்துக்கு என்‌ றும்கொள்ளலாம்‌. (ஹவ்யம்‌) 
“ மாம்‌. ஜுஹோமி ஸ்வர்ஹர்‌்‌'' - ௭ ன்றெபடியே ப்ரஹ்‌ 
மாக்னியில்‌ ஹோமம்பண்ண கத்ககுந்‌ 4 தா இய ஆத்மவஸ்துவை, 
(க்‌ருதவ த்‌). நெய்யுடன்‌ கூடிய்கான ஹவ்யத்தை; இங்கு 
நெய்‌ என்கிறது அ௩ந்சனிடத்திலேயள்ள அன்டை, அன்பு 
நிறைந்த தான ஆசுமிவஸ்துவை என்றபடி. = ˆ" அன்‌ பிலன்றி 
ஆழியானை யாவர்‌ காணவல்லரே?' = `" பத்துடையடியவர்க்‌ 
(கெளியவன்‌ ?! , ' “ பத்திக்fதேோ ஜநார்த்த,ந: ”  முகலான 
ப்ரமாணங்களைப்‌ படிப்பது. 
“ஆ நுகூல்யஸ்ய்‌ “ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜரம்‌ | 

ரக்ஷிஷ்யதீதி விங்வாஸோர்‌ கேரப்த்ருத்வவரணம்‌ ` ததர || 
ஆத்மநிக்்ே கார்ப்பண்யே ஷட்‌,வித,ா ஸாரணாக,தி: |” 

ரீ பகவானுக்கு அதுகலனாயிருக்கி றன்‌ என்னும்‌ ஸங்கல்பம்‌, 
ப்ரதிகூிலபபாவத்கை வீடுகல்‌; “அவன்‌ நம்மைக்‌ காப்பாற்று 
வான்‌” என்னும்‌ விஸ்வாஸம்‌; காப்பா ற்றவேணும்‌' என்று 
வரிப்பது; ஆக்மாலை ௮வனிடம்‌ வைத்தல்‌; தன்னிடம்‌ 
& கைம்முதலற்றவனாயிருக்கை என்று ஆறுவிதமாயிருப்‌ 
பது பாரணாகதி.] என்று பமாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்ட 
ஸம்பளவிக ஸ்வப; வங்களை நெய்யாகச்‌ சொல்லுவதாகவும்‌ 
கொள்ளலாம்‌. (விகே,ம) இப்படிப்பட்ட ஆக்மஉஸ்‌ துவைப்‌ 
பரமாத்மாவின்‌ பொருட்டு ஹோமம்‌ செய்க ன்‌. 
(ஹவ்யம்‌ க்ருகவத்‌ வி சு,ம)நெய்யுடன்‌ சேர்ந்த ஹவ்யத்தை 
பரமாத்மாவின பொருட்டு (அக்னியில்‌) ஹோமம்‌ செய்யக்‌ 
கடவோம்‌ என்று யசுளங்ரு தமாஃவும்‌ அர்த்தம்‌ கொள்ள 
லாம்‌, முன்‌ விவரித்தது ०००४५८७ ~ 8०1 ¶ ॐ 502 (உள்ளுறை 
பொருள்‌) ˆ மித்ரஸ்யசர்ஷணி ... ' என று வாகிந்திரியமும்‌ 
“மித்ரறோ क्का..." என்று மநஸ்ஸாம்‌.  ஸத்யாய ஹவ்யம்‌ 
„90.510 என்று உடம்பும்‌ பகவகத்விஜயத்திலே ஈடு 
பட்டிருக்கும்படியைப்‌ பேசுகிறது எனறும்‌ கொள்வர்‌. 


இப்டடி ஆத்மஸமர்ட்டணம்‌ செய்க தனால்‌ பகவான்‌ 
ப்ரஸன்னனாய்‌, பக்தன்‌ முன்‌ தோன்ற, அவனை நோக்கிச்‌ 
சேதனன்‌ கைங்கர்யத்தை பரரர்த்திடதையும்‌. விரோதி 
யானது தன்னடையே கழியும்‌ என்று நிர்ப்பரனாயிருப்ப 
தையும்‌ விவரிக்கிறது அடுத்கமந்திரம்‌. (மிக்ர) ஸர்வரக்ஷ 
கனே! (ஆதித்ய) அதிதியீன்‌ பிள்ளையான உபேரந்திரனாய்ப்‌ 
பிறந்தவனே! இத்தால்‌, இவன்‌ அடியரர்க்குப்‌ பிள்ளையாக 
வும்‌, 'தம்பியாகவும்‌. அ கனாகவும்‌. நண்பனாகவும்‌ இட்படிப்‌ 
யலபடியாகவும்‌ பிறந்து ரக்ஷித்‌ கருள்வான என்று உணர்த்‌ 
தப்படுகிறது. (ஆதி,க்ய) -ஆதென த்ய:” [ஆதிகாலத்தில்‌ 
தனியாயிருந்தவன்‌] என்றம்‌ பெருள்‌ கொள்ளலாம்‌. 
“ஆநீத,வாதம்‌ ஸ்வதயா ததே,கம்‌ தஸ்மாத்‌,த,ார்யம்‌ ए பர: 
கிஞ்சகராஸ'' = [७४० 5474०८1 வாச்யையான பிராட்டியுடன்‌ 
கூடிய பகவான்‌ ஒருவனே இருந்தான்‌; அவனைத்தவிர வேறொருவருயில்லை. ] என்றும்‌ “ஏகோ ஹ வை நாராயண 
ஆஸீத்‌'' [நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌] என்றும்‌ 
வேதங்களிலும்‌, “யாவகையுலகமும்‌ யாருமில்லா மேல்‌ 


வரும்‌ டெரும்பாழ்காலத்து இரும்பொருட்கெல்லாம அரும்‌ ' 


பெறல்‌ தனிவித்து ஒருதானாகி” என்‌ 2 ஸஒஆழ்வாராலும்‌ 
சொல்லப்பட்ட அர்த்தத்தை அநுஸந்திக்கிறது. (ஆதித்ய) 
“ அத்தா சராசரக்ளஹணாத்‌ ण என்ற ஸ௫த்ரத்திலும்‌, 
' யஸ்ய ப்ரஹ்ம = க்ஷத்ரம்‌ ” என்ற ஸ்ருதியிலும்‌ சொல்லிய 
படியே ஸகலசராசரங்களையும்‌ ப்ரளயகாலத்தில்‌ உண்பவன்‌ 
என்றும்‌ பொருள்‌ கொள்வர்‌, 


५ (ய: மர்த்த:) மரணத்தையே இயற்கையாகக்‌ கொண்ட 
என்னைப்போன்ற யா வழொரு புருஷன்‌; (தே வ்ரதேந மபிக்ஷதி) 
உன்விஜயமான ஆத்மஸமர்ப்பணவ்ரதத்தினலே கன்னை 
இதரவிஷயங்களில்‌ செல்லாமல்‌ அடக்கிக்கொள்ளுகிறானலே. 
உன்னைக்‌ குறித்துச்‌ செய்யப்படும்‌ ஜபஹோமாதஇி 
வ்ரதங்களினால்‌ தன்னை ஸிக்ஷித்‌ துக்கொள்‌ கறானோ என்றும்‌ 
கொள்ளலாம்‌, ष 


“ஸக்ருதே,வ ப்ரபந்ரய தவாஸ்மீதி- ௪ யாசதே | । 

அபயம்‌ ஸர்வபூ,தேப்‌,யோ ததரம்யேதத்‌, வ்ரதம்‌ மம |” 
[ஒரு தடவை சரணமடைந்த வனுக்கும்‌, உனக்கு 
அடியேனாயிருக்கிறேன்‌' என்று யாசிப்பவனுக்கும்‌, எல்லா 
பூதங்களிடமிருந்‌ தும்‌ அபயமளிக்கிறேன்‌. இது என்‌ விரதம்‌] 
என்கிற உன்னுடைய விரதத்தை அனுஸந்தித்து எவன்‌ 
தன்னைத்‌ தேற்றிக்‌ கொண்‌ டிருக்க்றானோ என்றும்‌ கொள்ள 
லாம்‌. (ஸ:) அந்த மனிதன்‌. , (ப்ர) அதிகமாக; (ப்ரயஸ்வாந்‌ 
அஸ்து) அந்நத்தை உடையவனாக அகட்டும்‌. “ப்ரய? என்று 
அரந்க்த்திற்குப்‌ பெயர்‌. “அஹமந்நாத,: அந்கமதந்தமத்‌;மி”” 
[கான்‌ அந்கத்தைப்‌ ' புசிப்பவன்‌; அந்நமாகிற என்னை அநுபவிக்கும்‌ பரமாத்மாவை நான்‌ அ.துபவிக்கிறேன்‌ . ] 
“வாரிக்கொண்டுன்னை விழுங்குவன்‌” என்று சொல்லப்‌ - பட்ட பகவதநுபவம்‌ இங்கு அந்நமாகச்‌ சொல்லப்படுகிறது. 
(ப்ரயஸ்வாநஸ்து) உண்‌ இடைய ஆராதனமாயீருக்கும்‌ 
வையவதேவ பஞ்சமஹு யஜ்ஞா திகளுக்கு உபயுக்தமான 
அன்னத்தை உடையவனாகட்டும்‌ என்‌ பதாகவும்‌ கொள்வர்‌. 


(பஸ்‌ தே மஷ்தி வ்ரதே) எவன்‌ உமக்காக 
வ்ரதத்துடன்‌ கூடியவனாய்‌ யஜ்ஞம்‌ செய்றொனோ என்றும்‌ 
பொருள்கொள்ளலாம்‌. தே என்பது தாதர்த்‌,யே சதுர்த்‌8,. 
பஹ்வ்ருச ப்ஸாஹ்மணத்திலும்‌ * ஸிக்மாணஸ்ய தேவதி 
பபி்க்ஷதே வா ஏஷ யோ யஜதே '' என்‌ அ யாகம்‌ செய்பவன்‌ 
விஷயத்தில்‌ :பரிக்ஷிக்கி றவன்‌” என்னும்‌ பதம்‌ பிரயோகிக்கப்‌ 
பட்டதை நினைப்பது. 


(த்வோத:) “த்வயா ஊத: உன்னால்‌ ரக்ஷிக்கப்‌ 
பட்ட அந்தச்‌ சேகனன்‌ `. தீவதூ,க: ' என்று இருக்க 
வேண்டிய பதத்தில்‌ வேதமாகையாலே தகாரத்திற்கு 
லோபம்‌ வந்தள்ளது, யதே,ந்த்ரஸ்‌  த்வோத: 
ஸாஸஹ்யா ுப்ருதந்யத: ”' என்றே வேதவரக்யத்‌ 
திலும்‌ இப்படியே உள்ளதைக்‌ காண்க, (௩ ஹந்யதே 
ஈ ஜீயததே) இவ்வுலலிலும்‌ வியா தி முதலா னவற்றால்‌ பீடிக்கப்‌ 
படுவதில்லை இறந்தபின்பும்‌ யமபடர்களால்‌ ஜயிக்கப்‌ 
படுவதில்லை, ௩ கலு பாகவதா யமவிஷயம்‌ க,ச்ச,ந்தி ' 
[ பாகவதர்கள்‌ யமனுடைய கேசத்தை அடைவதில்லை 
யன்றோ] என்று வேதத்திலும்‌, 


“ஸ்வபுருஷமபி,வீக்ஷ்ய பாமமஹஸ்தம்‌ 

வத;தி யம: கில தஸ்ய கர்ணமூலே | 
பரிஹர மதுஸ9த,௩ ப்ரபந்கார்‌ 

ப்ரபு,சஹமந்யந்ருணாம்‌ ௩ வைஷணவாராம்‌ ||... 
ஹரி கு,ருவமமகேளஸ்மி ए ஸ்வகற்த்ர: 

ப்ரப,வதி ஸம்யமநே மமாபி விஷ்ணு: ॥.... 
ஹரிமமரவரார்ச்சிதாங்க்‌,ரிபத்‌,மம்‌ 

ப்ரணமதி ய: பரமார்த்ததோ ஹி மர்த்ய:। 
தமபக,தஸமஸ்தபாபபரந்த,ப்‌ 
வ்ரஜ பரிஹ்ருத்ய யதராக்‌,நிமாஜ்யஸிக்தம்‌ || 
யமநியம விதூ,தகல்மஷாணாம 
அநுதி,நமச்புத ஸக்தமாகஸாரநாம்‌ ॥ 
அபக,த மத, மாட மத்ஸஹராணாம்‌ 
த்யஜ பட தூ,தரேண மா௩கவாநாம்‌ || 
ஸகலமித,மஹஞ்ச வாஸுதேவ 
பரமபுமாந்‌ பரமேங்வரஸ்‌ ஸ ஏக: । 
இத மதிரசலா பவத்யநந்தே 
ஹ்ருத,யக;தே வ்ரஜ தாந்‌ விஹாய தூனாத்‌॥ 
கமலநயந வாஸுதேவ விஷ்ணோ 
தரணித,ராச்யுத மூங்க,சக்ரபாணே | 
பவ ஸரரரணமிதீரயந்தி யே வை 
த்யஜ பட தூ,ரதரேண தாஈபாபார்‌ || 
வஸதி மகஸி யஸ்ய ஸோ 5வ்யயாத்மா 
புருஷவரஸ்ய ௩ தஸ்ய த்‌,ருஷ்டிபாதே | 
தவ க;திரத,வா மமாஸ்தி சக்ர- 
ப்ரதிஹத வீர்ய (19०00५1 ஸேோ5ந்யலோக்ய: |!” 


[பாசத்தைக்‌ கையில்‌ கொண்ட தன்னுடைய படனை 
ஸம்ஜ்ஞைசெய்த (அருகிலழைத்து) யமனனவன்‌ அவ 
னுடைய காதினுள்‌ பின்வருமாறு சொல்லுகிறான்‌: 
“மதுஸதனை சரணமடைந்தவர்களை நீ கொடாகே, நான்‌ 
மற்ற மனிதர்களுக்கே ப்ரபுவேயொழிய வைஷ்ணவர்களுக்‌ 
கல்ல. நான்‌ மஹாபுருஜரான ஹரிக்கு வசப்பட்டவன்‌. 
ஸ்வதந்த்ரனல்லன்‌; (யமனாகிற) என்னையும்‌ நியமிக்கவல்ல 
வர்‌ விஷ்ணு தேவச்ரேஷ்டர்களா லும்‌. அர்ச்சிக்கப்‌ 
பட்ட இருவடித்தாமரைகளையுடையவரான ஹரியை எந்த 
மனிதன்‌ உண்பையான பக்தியுடன்‌. வணங்குகிறானே, 
எல்லாப்பாபபந்தங்களும்‌ நீங்கப்பெற்றவனான[ன அவை, 
நெய்விடப்பெற்ற ஹோமாக்நியை அணுகர்மல்‌ விலகிச்செல்‌ 
வதுபோல்‌ விலகிச்செல்வாயாக. யமம்‌, நியம்‌ முதலான 
ஸாதனங்களரல்‌ எல்லாப்‌ பாடங்களும்‌ போகப்பெற்றவர்‌ 
களாய. தினந்தோறும்‌ அச்யுதனிடத்தில்‌ ஈடுபட்டிருக்கும்‌ 
மன த்கையுடையவர்களாய்‌. மதமும்‌. அபிமானமும்‌. மாத்‌ 
ஸர்யமும்‌ அற்றவர்ளோன மனிதர்களைக்‌ ( கண்டால்‌ ) 
வெகுதூரத்தில்‌ விலகிச்செல்வாயாக. * நானும்‌. இவ்வுல்‌ 
கெல்லாமும்‌ வாஸுதேவனே; பரமபுருஷனும்‌, பரமேச்‌ 
வரனுமயுள்ளவன்‌ அவன்‌ ஒருவனை ' என்னும்‌ அசை 
யாத புத்தி உண்டாயிற்றாகில்‌,  அநந்தனா।னவன்‌ அவர்‌ 
களுடைய மனத்தில்‌ இருந்தானாதில்‌ அவர்களைவிட்டு. வெகு 
தூரக்திலே விலகிச்செல்வாயாக. தாமரைக்கண்ணனே ! 
வாசுமததவனே! விஷ்ணுவே! பூமியை தரிப்ட_ வனே! 
அச்யுகனே! சங்கசச்ரபாணிபிய! நீயே எனக்கு உடாய 
மாவாயாக என்று எவர்கள்‌ சொல்லுகறார்களேர., பாப 
மற்றவர்களான அவர்களைக்‌ கண்டால்‌ வெகுதூரத்தில்‌ 
விலகிச்செல்வாயாக. எவனுடைய மனத்தில்‌ அழிவற்ற 
உருவையுடைய அச்யுதன்‌ எழுந்தருளியிருக்கறானோ. அந்தப்‌ 
புருஷங்பேஷ்டனுடைய கண்வீச்சினுள்‌, வைஷ்ணவ ` 
ஸுதர்சனத்தின்‌ தேஜஸ்ஸாலே மழுங்கிய வீர்யபடலங்களை 
யுடைய எனக்கோ உனக்கோ செல்ல சச்தியில்லை. அவள்‌ 
அர்ய லோகத்தகைச்‌ சேர்ந்தவன்‌.] என்று ஸ்ரீ வீஷ்ணு 
புராணத்தில்‌ யமனாலும்‌, 


“அவன்தம ரெவ்வினையராகிலும்‌ எங்கோன்‌ 

அவன்‌ தமரே என்றொழிவதல்லால்‌-—௩மன்‌ தமரால்‌ 
ஆராயப்‌ பட்டறியார்‌ கண்டீர்‌ அரவணைமேல்‌ 

பேராயற்‌ காட்பட்டார்‌ பேர்‌'' 

“திறம்பேன்மின்‌ கண்டீர்‌ திருவடிதன்‌ நாமம்‌: 

மறந்தும்‌ புறந்தொழா மாந்கர்‌_—இறைஞ்சியும்‌ 
சாதுவராய்ப்‌ போதுமின்௧க ளென்றான்‌ ஈமனும்தன்‌ 
“தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு'' 

“கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌'' 
“நரவலிட்‌ டுழிதருகின்றோம்‌ ஈமன்தமர்‌ தலைகள்‌ மீதே” 
("0 का 5107 என்தமரை வினவப்பெறுவாரலரென்னும்‌' 
“வள்ளலே! உன்‌ தமர்க்கென்றும்‌ ஈமன்தமர்‌ கள்ளர்போல்‌'' 
என்று ஆஅழ்வார்களாலும்‌ இவ்வர்த்தம்‌ அறிவிக்கப்பட்ட 
தன்றோ. (த்வோதோ ® ஹந்யலீது ஈ ஜீயதே ) கரக்குமியல்‌ 
வினனன உன்னால்‌ ரக்ஜிக்கப்படுபவன்‌ ஒருவராலும்‌ 
ஹிம்ஸிக்கப்படுவ தமில்லை; ஜயிக்கப்படுவதமிலலை என்றும்‌ 
கொள்ளலாம்‌. ஆக. இவ்வளவால்‌ இவனுக்கு இவ்வுலக 
லும்‌, மறுவுலகிலுமுள்ள பீடைகளில்லையென்‌ று சொல்லப்‌ 
பட்டது. அடுத்தபடியாக. இப்பீடைகளுக்குக்‌ காரண 
மான பாபமும்‌ அவனையணுகாது என்று அறிவிக்கப்படு 
கிறது: ( 55८0 அம்மீஹா அங்நோதி ) இவனைப்‌ பாபம்‌ 
அணுகாது. (அந்திகோ ௩ தூனாத்‌) அருகலெள்ள இந்த 
ஐம்மத் திலும்‌ இவனைப பாபம்‌ அணுகாது; இவன்‌ 
ஜந்மாந்தரங்களெடுத்தாலும்‌ அந்த ஜந்மங்களிலும இவனைப்‌ 
பாபமடையாது என்கை. ` இவனுக்கு வெகுதூரததிலும்‌ 
பாபங்கள்‌ அணுகமாட்டா; அப்படியிருக்க அருக வர 
மாட்டா என்பதைச்‌ சொல்லவும்‌ வேணுமோ என்பூம்‌ 
கொள்ளலாம்‌.“ அமவ இவ ரோமாணி விதூ,ய பாபம்‌”[குதிரை 
மயிரை விடுவதுபோல்‌ முக்தன்‌ பாபங்களை விடுகிறான்‌ ] 


“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ] 
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌. 
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள '' 
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌. 

“ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ மாரணம்‌ வ்ரஜ | 
அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி மா மரஈச:।” 

[எல்லா தர்மங்களையும்‌ வாஸஹனையுடன்‌ வீட்டு. என்னை 
ஒருவனைமய பரணமாக அடை; நான்‌ உனனை எல்லாப்‌ 
பாபங்களினின் றும்‌ விடுவிக்கிறன்‌; வருந்தாதே] என்று 
பகவானாலும்‌, 
" 55554108 46957 5 क @ (१५.९४ பவதி கதம்‌ ஸதி 
சாந்த,காரமர்க்கே'' 
[ பாபங்களைப்‌ போக்கடிக்கும்‌ பகவானால்‌ பிளக்கப்பட்ட 
அப்‌ பாபங்கள்‌ எப்படி உயிர்வாழும்‌? ஸூர்யனிருக்கும்போ து 
எப்படி இருளிருக்கமுடியும்‌?|என்‌ று வீஷ்ணுபுராணத்திலும்‌, 

“மாடே வாப்பெறுவராமென்றே வல்வினையார்‌ 
காடானும்‌ ஆதானும்‌ கைக்கொள்ளார்‌'' 

“வானோ மறிகடலோ மரருதமோ தீயகமோ 

கானோ ஒருங்கிற்று கண்டிலமால்‌-ஆனீன்ற 
கன்றுயரத்‌ தாமெறிந்து காயதிர்த்தார்‌ தாள்பணிந்தோம்‌ 
வன்‌ துயரை ஆவா மருங்கு.” 

இங்கில்லை பண்டுபோல்‌ வீற்றிருத்தல்‌ என்னுடைய 
செங்கண்மால்‌ சீர்க்கும்‌ சிறிதுள்ளம்‌- அங்கே 
மடியடக்கி நிற்பதனில்‌ வல்வினையார்‌ தாம்‌ மீண்டு 
அடியெடுப்ப தன்றோ அழகு” 

“யானுமென்‌ நெஞ்சும்‌ இசைந்தொழிந்தோம்‌ வல்வினையைக்‌ 
கானும்‌ மலையும்‌ புகக்‌ கடிவான்‌— தானோர்‌ 

இருளன்ன மாமேனி எம்மிறையார்‌ தந்த 
அருளென்னும்‌ தண்டால்‌ அடித்து” 
“நம்மன்போலே வீழ்த்தமுக்கும்‌ ஈாட்டிலுள்ள பாவமெல்லாம்‌ 
சும்மெனாதே கைவிட்டோடித்‌ தூறுகள்‌ பாய்ந்தனவே'' 
“இறவு செய்யும்‌ பாவக்காடு தீக்கொளீ இ' வேகின்‌ றதால்‌” 
'போயபிழையும்‌ புகுதருவான்‌ நின்றனவும்‌ 
தீயினில்‌ தூசாகும்‌ செப்பேலோரெம்பாவாய்‌” 
என்று ஆழ்வார்கனாம்‌ இந்த @ 7 = ८, ॐ தில்‌ சொன்ன 
அர்த்தத்தை வீவரிததார்கள்‌. *' ஸத்யாய ஹவ்யம்‌ க்‌, ருதவத்‌ 
விதேமஎன்று த்வயத்‌ தில்‌ பூர்வகண்டரர்த்தழமும்‌,“அஸ்து 
ப்ரயஸ்வாந்‌”என்‌ று உத்தரகண்டரர்த்தமும்‌, ந ஹந்யகதே?” 
என்று சரமஸ்லோகார்த்த, மும்‌ இம்‌ மந்திரத்தல <9 (192 திக்‌ கப்பட்டன. 

இனி மத்யாஹ்கத்தில்‌ அநுஸந்திக்கவேண்டிய 
உபஸ்தனமரந்திரத்கைப்‌ பார்ப்போம்‌. 
आ सत्येन रजसा AAAI निवेरायन्नमुतं मत्थेश्च । 
हिरण्ययेन सविता रथेनादेवो याति भुवना विपदयन्‌ ॥ 
उद्यै तमसस्परि Gaara ज्यातिरूत्तरम्‌। 
देव देवता सूर्यमगन्म ज्योनिरुत्तमम्‌ ॥ 
उदुत्य जातवेदसं देवै वहन्ति केतवः | 
दशे विश्वाय सूम्‌ ॥ 
चिते देवानामुदगादनीकं TAHA वरुणस्याग्नैः। 
आप्रा चावापृथिवी अन्तरिश्चं सथ आत्मा जगतस्तस्थुषश्च ॥ 
तच्चक्चर्देवदित पुरस्ताच्छुक्रमुच्चरत्‌। पदयेम शरदरदातम्‌। जीवेम 
द्ारद्दरतम्‌। नन्दाम शरदद्ातम्‌। मोदाम रारददरातम्‌। भवाम 
दारददशतम्‌। ATH शारदर्रातम्‌। TNA ATTA 
अजीताःस्याम शरदद्रातम्‌। ज्योक्च सूयं इशे ॥ 
य उद्गान्मदतो ऽणैवाद्विथ्राजमानस्सरिरस्य मध्यात्‌। 
स मा इृषभो Oa विपश्चिन्मनसा पुनातु॥ 
ஆஸத்யேந ரஜஸா வர்த்தமாநேர நி$வமுயர்‌ 
அமருதம்‌ மர்த்யஞ்ச | 
ஹிரண்யயேந ஸவிதா ரதேகாதே,வோ யாதி 
(16487 விபங்யந்‌ 4 
உத்‌,வயம்‌ தமஸஸ்பரி பங்யந்தோ ஜ்யோதிருத்தரம்‌ | 
தே,வம்‌ தேவத்ரா ஸூர்யமக,ந்ம ஜயோ திருத்தமம்‌ ॥ 

உது;ஜ்யம்‌ ஜாதவேத.ஸம்‌ தேவம்‌ வஹந்தி கேதவ: | 

த்‌,ருமே விங்வாய ஸூர்யம்‌ || 

சித்ரம்‌ தேவா௩ாமுத,கள தகம்‌ 

ச்க்ஷார்‌ மித்ரஸ்ய வருணஸ்யாக்‌,நே: । 

ஆப்ரா த்,யாவா ப்ருதி,வீ அந்தரிக்ஷம்‌ 

ஸூர்ய ஆத்மா 555 69 தஸ்துஷம்ச ॥ 

தச்சக்ஷார்‌ தே,வஹிதம்‌ புரஸ்தாச்‌ சு,க்ரமுச்சரத்‌ | 

८५०९५110 மரத்‌ மாதம்‌. ஜீவேம ஸாத்‌ மாதம்‌, நந்தளம 

छण @ 90०००७0, 600 @8१॥० ७० @ ऽछ० மாதம்‌, பவ ம மாத்‌ 

४०७1 पष्क क्का 9१19, ८०55५०८० 50 ப்ரப்‌,ரவாம மாரதஹ்‌ 

பாதம்‌. அஜீதாஸ்‌ ஸ்யாம மரத்‌ முதம்‌, ஜ்யோக்‌ ௪. 

ஸூர்யம்‌ ॐ ७४० ॥ 

ய * 55589 6 (06067 ऽं क्क्ल ध ऊ விப்‌,ராஜமாநஸ்‌ 

ஸரிரஸ்ய (054५179 | 

ஸமா வ்ருஷபேோ ரோஹிதாக்ஷஸ்‌ ஸ9ர்யோ 

விபணசந்‌ மாஸா புகாது ॥ 


“ஆஸகத்யே'' என்று தொடங்கும்‌ மாத்யாஹ்நிக 
உபஸ்தா௩ மந்திரத்தின்‌ எட்டு ரிக்குகளுக்கும்‌ ஹிரண்ய 
கர்ப்பர்‌ ரிஷீ. தேவதை ஸூர்ய 0ப்தவாச்யனான பரமாத்மா, 
முதலாவது ரிக்குக்கு தீரிஸ்டுப்‌ சந்கஸ்‌; இரண்டாவது. 
ஐந்தாவது. ஆறாவது. எட்டாவது ரிக்குகளுக்கு உஷ்ணிக்‌ 
சந்தஸ்‌; மூன்றாவது ரிக்குக்கு க॥ யத்ர சந்தஸ்‌; நான்காவது 
ரிக்குக்கு ஜகதி சந்தஸ்‌; ஏழாவது ரிக்குக்கு ப்ருஹதி 
சந்தஸ்‌ என்று சொல்லுகிறோர்கள்‌. சிலர்‌ -தச்சக்ஷா:'' 
என்டது முகல்‌ ஒரே மந்திரமாகையால்‌' உஷ்ணிக்‌ சந்தஸ்‌ 
என்று செல்லுறோர்கள்‌. இவற்றை ஆறு மந்திரங்சளா கக்‌ 
கொள்வதும்‌. ஹிரண்யஸ்தூபர்‌. விச்வாயிஞ்ரர்‌, குதஸீர்‌. 


'வஸிஷ்டர்‌ ஆகியவர்களை ரிஷிகளாகக்கொள்வதுடமுண்டு. 


“ஆஸத்யேநோத்வயந்தமுது;த்யம்‌ சித்ரமித்யபி | 
தச்சக்ஷார்‌ தேவ இதி ஹம்ஸ: மராசிஷதி,த்யபி |! 
ஏதஜ்ஜபேதூர்த்‌ வபாஹாஸ்‌ ஸூர்யம்‌ பங்யந்‌ ஸமா ஹித:।॥ ” 
| ஆஸத்யே? *உத்வயம்‌” 'உது,த்யம்‌” -சத்ரம்‌' “தச்சக்ஷார்‌ 
தே,வ' ஹம்ஸ: முசிஷத்‌ என்னும்‌ மந்திரங்களைக்‌ கையை 
உயரச்‌ தூக்கிக்கொண்டும்‌, ஸூர்யனைப்‌ பார்‌ த்‌ தக்கொண்டும்‌ 
மாஸ்‌ ஸமாதானமுடையவனாய்‌ ஜபிக்கக்கடவன்‌ ] என்று 
நாராயணரும்‌. 


“மத்யாஹ்நே மண்டலம்‌ பங்யந்‌ உபதிஷ்டே,த ப;ஸ்கரம்‌ ॥ 
க்ருதாஞ்ஜலி: படேத்‌ ஸூக்தமுது,த்யம்‌ ஜாதவேதஹஸம்‌ ॥ 
ஏவமாதீ,நி ஸெளர்யாணி ஐபந்நீக்ஷே (14 9०5 ॥ ”' 

[மத்யா ஹ்௩ வேளையில்‌ ஸூர்யமண்டலத்தைப்‌ பார்த்துக்‌ 

கொண்டு ஸூர்யனை உபஸ்காநம்‌ செய்யவேண்டியது; கை 
கூப்பியவனாய்‌ நின்‌ றுகொண்டு “உது,த்யம்‌ ஜா தவேதுஹம்‌”? 

என்னும்‌ ஸடக்க க்தைப்‌ படிப்பது. இம்மாதிரியான ஸூர்ய 
மந்திரங்களை ஜபித்துக்கொண்டே பாஸ்கரனைப்‌ பார்க்க 
வேண்டியது] என்று செளனகரும்‌ விதித்தனர்‌. “பணங்யேம 
பர த, 0தம்‌”என்று தொடங்கி “ஜ்யோக்‌ ச ஸூர்யம்‌ த்ளுபோ' 
என்ப துவரையில்‌ வ்யோமமுத்ரையால்‌ ஸமூர்யனைப்‌ பார்த்‌ 
தக்கொண்டும்‌, மற்ற மந்திரங்களைக்‌ கைகூப்பிக்கொண்டும்‌ 
ஜபிப்பது. இனி.இம்‌ மந்திரங்களின்‌ பொருளை வீவரிப்போம்‌. 


(ஸத்யேக ரஜஸா)  பொய்யற்றதான லோகத்தில்‌; 
அழிவற்றதான பரமபதத்தில்‌ என்றபடி. “ரஜ: என்னும்‌ 
பப்தம்‌ (லோகம்‌ என்னும்‌ பொருளையுடையது. 'ரஜஸா?்‌ 
என்று ஏழாவது வேற்றுமைப்‌ பொருளில்‌ மூன்றாவது 
வேற்றுமை படிக்கப்படுகிறது. காலத்தினால்‌ மாறுபாட்டை 
யும்‌ இவ்வுலகத்தைப்போலல்லாமல்‌, கரல க்ருத பரிணாம 
மில்லாத தேசமாகையாலே ஹத்யாப்தத்தால்‌ சொல்லப்‌ 
படுகிறது பரமபதம்‌. 
காலம்‌ ஸ பசதே யத்ர ந.காலஸ்‌ தத்ர வை ப்ரபு,” 
[எந்தப்‌ பரமபதத்திலிரு்துகொண்டு காலத்தை அப்‌ பரம 
புருஷன்‌ பரிணாமமடையச்செய்கறானோ. அங்கு காலமானது 
(விகாரத்தையுண்டுடண்ண,) சக்தியள்ளதன்று.] என்று 
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில்‌ படிக்கப்பட்டதை அநுஸந்திப்ப து. 
( மர்த்யம்‌. ௪ ) மரண த்கையே இயற்கையாகக்‌ கொண்ட 
ஸம்ஸா ரியையும்‌. ( அம்ருசும்‌ நிவேயயந்‌ ) மோக்ஷத்தை 
அடைவிக்கவேண்டுமென்னும்‌ ஆசையையுடையவனாய்க்‌ 
கொண்டு. `" ரக்யாபேக்ஷாம்‌ ப்ரதீக்ஷதே '' [ரக்ஷிக்கப்‌ 
படுபவனின்‌ அடேஜையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்‌ 
பகவான்‌.] “ஆள்பார்த்துழிதருவாய்‌'' “அத்யர்த்தடப்ரியம்‌ 
ஜஞாநிநம்‌ லப்‌,த்‌,வா '' [தனக்கு மிகவினியனா।ன ஞானியை 
அடைந்து / என்கிறபடியே சேதனலாபத்தைத்‌ கன்‌ பேறோக 
நினைத்துத்‌ தன்னைக்‌ கொள்வாருமுண்டோ என்று ஆசைப்‌ 
பட்டுக்கடப்பவனன் றோ இவன்‌.  ( (1९/57 விபங்யம்‌ ) 
உலகம்‌ முழுவதையும்‌ நன்றாகப்‌ பார்த்துக்கொண்டு. இழந்த 
மாணிக்கத்தைத்‌ கேடுவாரைப்போலே, தனக்கு ஸ்ரீகெளஸ்‌ 
அபம்போலே இனியனான இச்சேதனனை உலகம்‌ முழுவதும்‌ 
தேடிக்கொண்டு திரிகிறான்‌ பரமசேதனன்‌. ८ ஆ வர்த்த 
மாந: ) மணலிலே தகவறவிட்டபொருளைச்‌ சல்லடையால்‌ 
சலித்துப்‌ பெறப்‌ பார்ப்பாரைப்போலே ஒவ்வொரு அணுவி 
லும்‌ சூழ்ந்திருந்து தேடுகிறான்‌. வ்யாப்தியும்‌ சேதன 
லாபத்திற்காகவே என்கை, (ஸவிதா) ஸர்வலோகங்களையும்‌ 
ஸ்ருஷ்டி த்தவன்‌. ஸ்ருஷ்டியும்‌ சேதனலாபத்திற்காகவே 
என்கை. 

"96 556960०0 5 ए ப்ரளயஸீமநி ஸம்ஸரத: 
கரணகளேபரைர்‌ கடயிதும்‌ த,யமா௩மநர: | 

[ அசித்கைக்காட்டிலும்‌ வாசியற்றவராம்‌ . ப்ரளயகாலத்‌ 
திலே உழலும்‌ ஸம்ஸாரிகளைக்‌ கண்டு இரங்கி கேறஙஹேந்திரி 
யங்களைக்‌ கொடுப்பதற்காக மூலப்ரக்ருதியைப்‌ படைத்த£ர்‌. 1 
என்று பட்டரும்‌, 
“அித,வியிஷ்டாந்‌ ப்ரளயே ஜந்தூகவலோக்ய ஜாதநிர்வேத;। 
கரணகளேபளயோக,ம்‌ விதரஸி வ்ருஷமைலநா த,கருணே 
த்வும்‌ ॥'' 
[வேங்கடாசலநா சனுடைய கருணையே! அசேதனஸமமாக 
ப்ரளயக்திலுழலும்‌ சேதனரைட்பார்த்துத்‌ அன்புற்று. 
நீயேயன்றோ அவர்களுக்கு கேறஹேர்திரியங்களை அளிக்‌ 
கிறாய்‌] என்று வேதாந்ததேசிகரும்‌ அருளிச்செய்தனரன்றே. 
இவர்கள்‌ இப்படி அருளிச்செய்த துக்கும்‌ மூலமாயுள்ளது 
*“்‌ ஆதுமில்காலத்தெந்தை அச்சுதன்‌ ' என்னும்‌ ஆழ்வார்‌ 
ஸ்ரீஸஒக்துயே. ( தேவ: ) இளிவிடாநிற்டவன்‌; உயர்ந்ச 
ஸ்தானத்திலலயுள்ளவன இவ்விருள் சூழ்ந்த மண்ணுலகுக்கு 
வந்தால்‌ அவன்‌ ஒளி குன்றுமேோ எனனில்‌: இங்கு வந்த 
பின்பே ஒண்‌ விஞ்சியிருக்கறான்‌ என்கெது. ““விஜாயதே” 
[விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌ ] என்று வேதபருாஷனும்‌, 
: *" பலபிறுப்பாய்‌ ஒளிவரும்‌ முழுஈலம்‌ '' என்று ஆழ்வாரும்‌, 
“தோன்று மணிவிளக்கை'' - தோற்றமாய்‌ நின்ற சுடரே" 
என்‌ று ஆண்டாளும்‌. ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌" என்று 
அவன்தானும்‌ அருளிச்செய்தன ரன்றோ. (ஆயா த) ஸம்ஸாரி 
யைத்‌ தேடி அப்‌ பரமபுருஷன்‌ இங்கு வருகறான்‌. ` எதீர்‌ 
சூழல்‌ புக்கு எனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கேயருள்கள்‌ 
செய்ய” ஆனான்‌ ஆனாயன்‌. மீனோடேனமும்தானானான்‌ 
என்னில்‌ தானாய சங்கே'' என்கெபடியே வருகறான்‌. 
(ஸத்யே ரஜஸா மர்த்யம்‌ அம்ருதம்‌ நிவேோயர்‌ ஆயா தி) 
அழிவற்ற பரமபதத்திலே இந்த ஸம்ஸாரிக்கு மோக்ஷ 
ஸுுகத்தை அளிக்கவேணுமென்‌ று ஆசைகொண்டு . இங்கு 
வருகிறான்‌ பகவான்‌. (ஸத்யேக ரஜஸா வர்த்தமாந: சேவ: 
மர்த்யம்‌ ஆயாதி) பரமபதத்திலே விளங்கும்‌ தேவன்‌ 
பாபத்திற்கோர்‌ ` உறைவிடமான இச்சேதனனை நோக்கி 
வருரறொன்‌. “அம்மான்‌ ஆழிப்பிரான்‌ அவன்‌ எவ்விடத்தான்‌ 
யானார்‌ எம்மபாவியர்க்கும்‌ விதிவாய்க்கின்று வாய்க்கும்‌ 
கண்டீர்‌'' என்கை, ஞானிகளாலும்‌ காண்பரிய அவன்‌ 
இங்கு வந்தாலும்‌ அவனை இந்த ஸம்ஸாரி எப்படிக்‌ 
காணமுடியும்‌? எனில்‌ (ஹிரண்யயே ரதேர ஆஅயாதி) 
“ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷ: '' என்று சொல்லப்‌ 
பட்ட இவ்யமங்கள விக்ரஹச்துடன்‌ இவனுக்குக்‌ காட்சி யளிக்க வருகிறான்‌. “பூக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகரபலஸே " 
[-க்தர்களுக்காக நீ புருஷாகாரனாய்‌ விளங்குகிறாய்‌] என்ற 
தன்றே. (ஹிரண்யயேற) ஹிதமாயும்‌ ரமணியமாயுபிருக்கை. 
ரதமப்தத்தினால்‌ ஸ்வரூபத்திற்கு உறைவீடமான விக்ரஹம்‌ 
சொல்லப்படுகிறது. அன்‌ 9565, “ புள்ளூர்ந்து கோன்றி 
னையே'' என்றாப்போலே கருடனை “ஹிரண்‌யயே ॥ 0505". 
என்பதாகவும்‌ கொள்ளலாம்‌. அருளாழிப்புட்கடவீர்‌ ” 
என்‌ றன்றோ இவனும்‌ ஆசைப்படுவது. “ஹிரண்மயேோ"' 
என்‌ றிருக்கவேண்டியது வேதமாசையாலே ' ஹிரண்யயேந ' 
என்று கெக்கறது. 

“ஆஸத்யோ?” என்னும்‌ மந்திரத்திற்கு மற்றொரு வீச 
மாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (ஸத்யேந) விகாரமற்ற 
காய்‌, சுத்தஸத்வமயமான ஸ்ரீ வைகுண்டத்துடனும்‌; 
(ரஜஸா) ப்ராக்ருத ஸத்வரஜஸ்தமோ குணங்கள்‌ நிறைந்த 
இந்த லீலாவிபூதியோடும்‌. இங்கு “ரஜ; என்னும்‌ பதம்‌. 
ஸத்வதமோ குணங்களுக்கும்‌ உபலக்ஷகமாய்‌. அக்குணங்கள்‌ 
நிறைந்த லீலாவிபூதியைக்‌ காட்டுகிறது. “ கூயந்தமஸ்ய 
ரஜஸ்‌: பராகே?? “ தமஸ்‌: பரஸ்தாத்‌ '' என்றவிடங்களிற்‌ 
போலே. (ஸத்யேக ரஜஸா வர்த்தமா௩: ) உபயவிபூதிச்‌ 
செல்வத்துடன்‌ கூடியவனாய்‌ வீற்றிருக்கும்‌ பரமாத்மா. 
“* அகல்விசும்பும்‌ நிலனும்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌ ' என்றார்‌ 
ஆழ்வார்‌. (ஸவிதா) ஸர்வலோகஸ்ரஷ்டா. (அம்ருதம்‌) 
மமோக்ஷஸுகதீதையும்‌. (மர்த்யம்‌) இவ்வுலக ஐங்வர்யங்களை 
யும்‌. (நிவேயயர்‌) நித்யமுக்கர்களுக்கும்‌ ஸம்ஸாரிகளுக்கும்‌ 
ஸம்பாதிக்துக்‌ கொடுத்துக்கொண்டு, ‹ ( ஹிரண்யயே௩ ) 
ஹிரண்மயமான; அழயெ. (ரகதேரூ) “ஸாுபர்ணோ$ஸி 
க;ருத்மார்‌” என்று வேதத்திலும்‌ ஸீப்ரஸிக்தமான 
வாகனத்தில்‌. (ஆயாதி) வருகிறான்‌. எங்கும்‌ ஸஞ்சரிக்கறொன்‌ 
என்னும்‌ கொள்ளலாம்‌. (ஹிரண்யபே 78.595 அயாதி) 
மிகச்சிறந்த ரதமா இய ப்ரணவத்தில்‌ ஏறி வருகிறான்‌ 
என்றும்‌ பொருள்கொள்வர்‌. “ஓங்காரரதமாஸ்த;ாய ஸ்தி,த: 

புருஷஸத்தம:" [ஓங்காரமாடற ரதத்தில்‌ ஏறி விளங்கு | 
கிறான்‌ புருஷோத்தமன்‌ ] என்‌ று பரமபுருஷனுக்கு ரதமாகச்‌ 
சொல்லப்பட்ட தன்றோலங்கா ரம்‌,“ ஓங்காரரதமாருஹ்ய”'என்‌ 
மும்‌ உண்டு. பார்த்தன்‌ தன்‌ தேரைப்போலே அகாரவாச்ய 
னான நாராயணனுக்கும்‌, மகாரவாச்யனான நரனுக்கும்‌ ஏகரத 
மாய்‌ விளங்குவதன்றோ ஓங்காரம்‌. என்னசெய்தகொண்டு 
இவன்‌ ரதத்திலே ஸஞ்சரிக்கறான்‌? எனில்‌: (பு,வநா @9८ 0०५5 ) 
தன்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளைத்‌ தங்கள்‌ தங்கள்‌ 
கர்மானுகுணமாக நியமிட்டதச ற்காக ரதத்திலேறி வருகிறான்‌. 
இவ்வீருபொருள்களுள்‌ ஸுதர்சனபட்டர்‌ அருளிய முந்திய 
பொருள்‌ ரஸவத்தரமான து. 

“அஸத்யே'' என்னும்‌ மந்திரத்தில்‌ ஸர்வஸ்மாத்‌ 
பரனான பரமபுருஷஜன்‌ சேதனலாபத்திற்காக இங்கு வந்தான்‌ 
என்றது. *' உத்‌,யம்‌”' என்னும்‌ அடுத்த மந்திரத்தில்‌ 
அப்‌ பரஞ்சோ தியை நாங்கள்‌ ப ரணமடைந்தோம்‌ என்கிறது. 
(உத்‌) மேலானதாய்‌; (தமஸ:) தமம0ப்தவாச்யையான 
மூலப்ரக்ருதிக்கு. (உத்தரம்‌) "மேலான பரமபதத்தில்‌ 
வீளங்கும்‌; (ஜ்யோ த; ) “காராயணபரோ ஜ்யோதி:'” முதலான 
விடங்களிலே சோ தியுருவனாகச்‌ சொல்லப்பட்டவன்‌. 
(தேவம்‌) தானம்‌ செய்வது, ப்ரகாபம்‌ முதலான குணங்களை 
யுடைய வாஸுதேவன்‌. அப்படியாகில்‌. இவன்‌ ப்ரஹ்ம 
ருத்ரேர்த்ராதி தேவர்களில்‌ ஒருவன்தானோ? என்னில்‌: 
(தே,வத்ரா) அந்த ப்ரஹ்மருத்ரா திகளையும்‌ காப்பா ற்றுபவ 
னன்றோ இவன்‌ என்கிறது. சில எழுத்துக்களுக்கு லோபம்‌ 
வந்துள்ள த. அன்‌ றிக்கே, “தே,வாந்‌ த்ராயத இதி தே,வத்ர:'' 
[தேவர்களைப்‌ பரித்ரராணம்‌ (ரக்ஷணம்‌) செய்கறொனாகையால்‌ 
தேவத்ரன்‌ ] என்றாகி, 'ஸாுபாம்ஸாலுக்‌' என்னும்‌ நியாயத்‌ 
தால்‌ -ஸ' என்னும்‌ ஆதேபரம்‌ வந்திருப்பதாகவும்‌ கொள்வர்‌. 
தேவர்களையும்‌ ரக்ஷிக்கும்‌ தேவா திதேவன்‌ இவன்‌ என்றபடி. 
“தம்‌ தே,வதாநாம்‌ பரமஞ்ச தைவதம்‌'' [தேவதைகளுக்கும்‌ 
மேலான கேவதையான அவனை] “மனிசர்க்குத்‌ தேவர்‌ 
போலத்‌ தேவர்க்கும்‌ தேவாவோ '* 

“வேதளபஹார குருபாதக தைத்வபீடளத்‌; 
யாபத்விமோசந மஹிஷ்ட,பல ப்ரதனநை: | 

கோந்ய: ப்ரஜாபமமாபதீ பரிபாதி கஸ்ய 
பாதேளத,கே௩ ஸ ஸிவ: ஸ்வமிரோத்‌,ருதே௩ |” 


[வேதங்களை அபஹரித்தது, தகப்பன்‌ தலையைக்கிள்ளின 
பாபம்‌. அஸாரர்களா லுண்டான தன்‌ பம்‌ முதலிய ஆபத்துக்‌ 
கனைப்‌ போக்கியதா லும்‌. மேலான பவன்‌ களை அளிப்பதா லும்‌, 
உன்னைத்தவிர வேறு யார்‌ ப்ரஜாபதியான பிரமனையும்‌. 
பசபதியான வெனையும்‌ ரக்ஷிக்கறோர்கள்‌? அந்த சிவன்‌ தன்‌ 
தலையிலே தரிக்கப்பட்ட யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தாலே 
பரிசுத்தனானான்‌ 2] முதலான ப்ரமாணங்களைப்‌ படிப்பது. 
(ஸூூர்யம்‌) எங்களைத்‌ தன்னைச்‌ சரணமடையும்படி தூண்டு 
பவன்‌. நாங்கள்‌ இப்போது அவனைச்‌ சரணமடைவதும்‌ 
அவனுடைய க்ருஷிடல்மேயொழிய எங்களால்‌ வந்த 
தொன்றன்று ` என்கை ^" அதுவுமவன தின்னருளே '' 
என்கிறார்கள்‌. (உத்தமம்‌ ஜ்யோதி:) பரஞ்சோ தியாயிருப்‌ 
பவன்‌. பரமபதத்திலே சோ தியாயிருந்தவன்‌ இச்சேதனனைப்‌ 
பெற்றவுடன்‌ உத்தமமான சோ தயா கறான்‌. “பரஞ்ஜ்யோ திருப்‌ 
ஸம்பத்‌,ய'' [பரஞ்சோதியை அடைந்தவுடன்‌ ] என்று வேத 
புருஷனும்‌. “என்கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே” 
என்று ஆழ்வாரும்‌ இவன சேதனலாபத்தாலே பரஞ்சோதி 
யாகிறான்‌ என்று அருளிச்செய்தனரன்றோ. அன்றிக்கே, 
“ஹுூர்யம்‌ '" என்றதரல்‌ இவன்‌ லோகத்திலே ப்ரஸித்த 
னான ஸூர்யன்‌ தானோ என்னும்‌ ஸந்தகேஹுமெழ, அதை 
நிவர்த்திக்கறது * உத்தமம்‌ ஜ்யோதி ' என்னும்‌ பதம்‌. 
+ நாராயணபரோ ஜ்யோதி: '' என்று, வேதத்தில்‌ ப்ரஸித்த 
னானவனே இவன்‌ என்கை. “யஸ்யாதி,த்யோ பாமுபயுஜ்ய பாதி'  [ எவனுடைய ஒளியினா மேல ஆதித்யன்‌ 
ஒளிவிடுகறானோ. ] “யே ஸூர்யஸ்‌ தபதி தேஜஸேத்‌,த,:” 


[எந்தத்‌ தேஜஐஸ்ஸீனால்‌ தூண்டப்ப ட்டு ஸுமிர்யன்‌, 
பிரகா சிக்றானோ] 
“௩ தத்ர ஸூர்யோ பாதி ௩ சந்த்‌,ரதாரகம்‌ 
நேமா வித்யுதோ ப,ாந்தி குதோ5யமக்‌,நி: | 
தமேவ பரந்தமநுபாதி ஸர்வம்‌ 
தஸ்ய பாஸா कणित 9195500 விப,ாதி॥'” 


[ அப்பரமபுருஷனிட த்தில்‌, ஸஉூர்யனும்‌ பிரகா சிக்கிறதில்லை; 
சந்திரனும்‌ ஈக்ஜத்திரங்களும்‌ பிரகாசிப்பதில்லை; இந்த 
மின்னல்களும்‌ ஒளி விடுவதில்லை இவ்வக்னி எப்படிப்‌ 
பிரகாசிக்கமுடியும்‌? ஒளிவீடும்படியான அவனை அநுஸரித்தே 
இவைய்னைத்தும்‌ பிரகாசிக்கின்றன. அவனுடைய ஒளி 
யாலேயே இவையெல்லாம்‌ ஒளிவிடுகின்றன.] என்றெ 
ப்டியே லோகப்ரஸித்த ஸமூர்யனுக்கும்‌ ஒளிகொடுக்கும்‌ 
பரஞ்சோதி இவனேயன்றோே. (பங்யந்த:) அப்‌ பரஞ்சோதி 
யைக்‌ கண்ணெதிரே காணும்‌ நாம்‌. “ந சக்ஷ£ஷா க்‌, ருஹ்யதே” 
“என்றேனும்‌ கட்கண்ணால்‌ காணாத அவ்வுரு” “கடிக்கமலத்‌ 
அள்ளிருந்தும்‌ காண்கிலான்‌ கண்ணன்‌ அடிக்கமலந்தன்னை 
” “௩ ஸ மாக்யஸ்‌ த்வயா ॐ ऽग कष மயா5ந்யைர்‌ வாபி 
ஸத்தம” [குழர்காய்‌! (ருத்ரனா।ன) உன்னாலும்‌, (ப்ரஹ்மா 
வான) என்னாலும்‌ மற்றவராலும்‌ அவன்‌ காண்பரியன்‌ | 
என்று சொல்லப்பட்ட அவனை ஸம்ஸாரிகளுூள்‌ கடையான 
நாம்‌ காணப்பெற்றோம்‌ என்று ஆச்சரியமடைகறான்‌ 
மந்திரத்தை அதுஸந்திக்கும்‌ சேகனன்‌.  “ யமேவைஷ 
வ்ருணுதே... தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநும்‌ ஸ்வாம்‌” 
[எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்கறானோ, அவனுக்கே 
இப்‌ பரமாத்மா தன்‌ உருவைக்‌ காட்டுகிறான்‌. ] “பநெஞ்சென்‌ 
னும்‌ உட்கண்‌ காணுமேல்‌ அன்றே ௩ம்‌ கண்‌ காணும்‌” என்‌ 
கிறபடியே ஸ்வுயத்னத்தால்‌ கரண்பரிய அவனை, அவன்‌ 
காட்டக்‌ காண்பதுண்டன்றோ. (அகற்ம) ரெணமடைர்‌ 
தோம்‌. ய 
தாலே, “உபாயமாக அத்யவஸித்தேரம்‌'' என்று பொருள்‌ 
படுகிறது. பின்வரும்‌ . யோஜநாபேதங்களும்‌ அறியத்‌ 
தக்கவை. - (தமஸஸ்‌ பரி) ப்ரக்ருதிககு மேலே. = (० ८.0" 
க,த்யர்த்தன புரத்‌,த்யர்த்தள:'' என்னும்‌ நியாயத்‌ ` 
என்பது “பரி' என்று கிடக்கிறது. (உத்தமம்‌ ஜ்யோத;:) 
உதீக்ருஷ்டதமமான சோ இ, ஜ்யோதி: >= ५5८0 திகள்‌; 
உத்‌ ஜியோ தி:ஸூர்யா திகள்‌; உத்தரம்‌ ஜ்யோதி 
பரமபதுநாதன்‌. ஜ்யோதிருத்தமம்‌ என்‌ றதாலே உத்தர 
ஜ்யோதிஸ்ஸான பரமபதநிலயன்‌ சேதனனைப்‌ பெற்ற 
போது ஒளிவிஞ்சி உத்தமஜ்யோ திஸ்ஸாக ஆகிறான்‌ என்று 
உணர்த்தப்படுகிறது. (உத்‌ பச்யந்த:) உந்முக;: பங்யந்த: 
அவன்‌ விஷயமான தியானத்கைச்‌ செய்யும்‌ நாம்‌ என்‌ ம்படி, 
( தேவத்ரா ) கேவர்களிடம்‌ அந்தர்யாமியாயிருப்பவன்‌ 
என்கை. இங்கு தேவர்களைச்‌ சொன்னது தேவமனுஷ்ய 
திர்யக்ஸ்தளவரமாகிய நரல்வகை யோனிகளுக்கும்‌ உப 
லக்ஷணம்‌. “மனிசர்‌ தெய்வம்‌ மற்றும்‌ மற்றும்‌ மற்றும்‌ 
முழ்றுமாய்‌” என்றாரன்றோ ஆழ்வாரும்‌. (தேவம்‌ 9970112 
அக,ந்ம) பரமாத்மாவான வாஸாு¥தேவனை அடையக்‌ 
கடவோம்‌. = (95328) *ப்ராப்நுவாம' [அடையக்கடவோம்‌ ] 
என்றபடி. முந்தின யோஜனை ஸுதர்சன பட்டருடையது; பிந்தியது நரராயணமுனிவருடையது. 


முதல்‌ மந்திரத்தால்‌ பரமபுருஷன்‌ பரமபதத்திலிறாம்‌ து 
அவகீரித்து, இச்‌ சேதனனை அடைவதற்காக எதிர்‌ சூழல்‌ 
புக்கு வந்தபடியைப்‌ பேசிற்று. இரண்டாவது மந்திரத்‌ 
தால்‌ அவனைச்‌ சரணம்‌ புகுர்தபடியைச்‌ சொல்லிற்று. 
இனி, உத்தரக்ருத்யமான கைங்கர்யத்தில்‌ அரந்வயிக்கு 
'மித்தனையன்றே. ஆகையால்‌. மேலுள்ள மந்திரங்களால்‌ 
ஸ்கோத்ரமங்களாமரஸனரூபமான வரசிககைங்கர்யம்‌ 
செய்யப்படுகிறது. 


“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே'' 
[ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட 
வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ 
அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.] என்று வேதபுருஷ 
னும்‌, “ நமோ நாராயணாயவென்று பல்லாண்டும்‌ பரமாத்ம னைச்‌ சூழ்ந்திருந்தேத்‌ துவர்‌ பல்லாண்டே ” என்று பெரியாழ்‌ 
வாரும்‌, நித்யமுக்தர்களாலும்‌ ஸ்துதிமங்களாமராஸ்னரூப 
மான கைங்கரியங்களே எப்போதும்‌ செய்யப்டடுகன்‌ றன 
என்பதை அறிவித்தனரன்றே.  உத்‌ உ த்யம்‌ என்று பிரித்துக்கொள்வது. 
"2.5" என்னும்‌ உபஸர்க்கம்‌ 'வஹந்தி' என்னும்‌ வினைச்‌ 
சொல்லுடன்‌ சேருகிறது. (2 ' என்பது ஏவகாரார்த்த த்தில்‌ 
படிக்கப்பட்டிருக்கிறது. (த்யம்‌ ௨) அந்த தேவனையே,. அவன்‌ 
எப்படிப்பட்டவனெனில்‌ (ஜாதவேதஹம்‌) “ஜாதா: வேதா: 
யஸ்மாத்‌ ஸ:'' என்றபடியே வேதங்களைட்‌ பிறப்பிக்தவன்‌. 
அடெளருஷேயமான வேதங்களுக்குப்‌ பிறப்புண்டோ? 
எனில்‌: முதன்‌ முதலில்‌ இவனே பிரமனுக்கு இதை 
உபகேசித்தானாகையால்‌ அதைக்கொண்டு வேதங்களைப்‌ 
பிறப்பித்தவன்‌ என்கிறது. “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி 
பூர்வம்‌ யோ வை வேதரம்ய்ச ப்ரஹிணோதி தஸ்மை'' [எவ 
னொருவன்‌ முதன்‌ முதலில்‌ பிரமனைப்‌ படைத்‌.து அவனுக்கு 
வேதங்களை உபகதேசிக்கறானோ....] என்று சொல்லப்பட்ட 
தன்றோ.  ஜாதாநி வேத்தீதி ஜாதவேத;ா: ”  [தன்னிட 
யிருந்து பிறந்தவற்றை அறிகிறானாகையால்‌ ஜாதவேதஸ்‌ 
எனப்படுகிறான்‌ பரமாத்மா] என்றும்‌ கொள்ளலாம்‌. 
வேத என்பது ஞானத்தைக்குறிப்பதாகையால்‌, உண்டான 
ஞான த்தையுடையவன்‌' என்றும்‌ பொருளுரைப்பர்‌, 
ஓரா சிதன்‌ தன்னைச்‌ சரணமடைந்தானாகில்‌, அந்த கணத்‌ 
திலேயே அவனுக்குச்‌ செய்யவேண்டியவற்றையெல்லாம்‌ 
அறிபவன்‌ என்றபடி. இத்தால்‌ இவனுடைய ஸர்வஜ்ஞத்‌ 
வம்‌ சொல்லப்படுகிறது. *லக்ஷமீம்‌ ஜாதவேதே,ா ம ஆவஹ”” 
[ஜாதவேதஸ்ஸான பகவானே! லக்ஷ்மியை எனக்கு அளிப்ப 
ராக.] என்று ஸ்ரீஸூக்தத்தில்‌ ல்ஷ்மீஈா தனாகச்‌ சொல்லப்‌ 
பட்ட வனே இங்கும்‌ 'ஜாதவே தஸ்‌' எனப்படுகிறான்‌ என்பது 
தெளிவு. '* ஜாதவேத;ஸே ஸுகவாம ஸோமம்‌ ” என்று 
பர(மாத்மஸக்தத்திலும்‌ ஜாதவேதங்ப்ப்தம்‌ பரமாத்ம பரமாகப்‌ படிக்கப்பட்டது. (தேவம்‌) வாஸுதேனை. 
(கேதவ:) கொடிபோல்‌ உயர்ந்தவர்களான மஹான்கள்‌. 
வஸீஷ்டர்‌, பராமரர்‌, வீயாஸர்‌, நாரதர்‌, பக்திஸார பராங்குமா 
பட்டநாத பரகாலாதிகளான ஆழ்வார்கள்‌, ப்ரஹ்லாதன்‌, 
அருவன்‌ முதலானார்‌. (உத்‌,வஹந்தி) தங்கள்‌ நெஞ்சிலே 
தரித்த நிற்கிறார்கள்‌. ( த்யம்தேவம்‌ ௨ உத்‌,வஹந்தி ) 
அந்த தேவனையே தரித்து நிற்றோர்கள்‌,. வேறொரு 
இருவில்லாத தேவனை நெஞ்சால்‌ நினைக்கவும்‌ மாட்டார்கள்‌. 
(தவம்‌ உத்‌, வஹந்தி) கர்ப்பிணிகள்‌, குழந்தைக்கு ஒரு 
நோவும்‌ வாராதபடி தரித்திருக்கறாப்போலே, இவர்களும்‌ 
பகவானுக்கு ஒரு நோவும்‌ வாராதபடி நெஞ்சிலே தரித்து 
கிற்கறாோர்கள்‌. (தேவம்‌ உத்‌அஹந்‌ தி) இவர்கள்‌ நெஞ்சால்‌ 
தரிக்கப்பட்டவுடனேயே அவன்‌ தேவனாகிறான்‌; பிரகாச த்தை 
உடையவனாகிறான்‌. இவ்விடத்தில்‌, “ நெஞ்சமே நீள்நகராக இருந்த ” 


“கல்லும்‌ கனோகடலும்‌ வைகுந்த வானாடும்‌ 

புல்லென்‌ ரொழிந்தனகொல்‌ ஏபாவம்‌!- வெல்ல 

நெடியான்‌ நிறம்‌ கரியான்‌ உள்புகுந்து நீங்கான்‌ 

அடியேன துள்ளத்‌ தகம்‌." 

“அரவத்‌ தமளியினோடும்‌ அழகிய பாற்கடலோடும்‌ 

அரவிந்தப்‌ பாவையும்‌ தானும்‌ அகம்படி வந்து புகுந்து” 

“'அநந்தன்பாலும்‌ கருடன்பாலும்‌ ஐதுநொய்தாக வைத்தென்‌ 

மனந்தன்னுள்ளே வந்து வைகி வாழச்செய்தாய்‌ எம்பிரான்‌” 

“பனிக்கடலில்‌ பள்‌ சிகோளைப்‌ பழகவிட்டோடி வந்தென்‌ 

மனக்கடலில்‌ வாழவல்ல மாயமணாள நம்பீ'' 

“சுடரொளியாய்‌ நெஞ்சினுள்ளே தோன்றுமென்‌ சோதிநம்பீ 

வடதடமும வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபுதியும்‌ 
இடவகைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே'? 
“விட்டுசித்தன்‌ மனத்தே கோயில்கொன்ட கோவலனை”! 

“நின்றதெந்தை ஊரகத்‌(து) இருந்ததெந்தை பாடகத்து 
அன்று வெஃகணைத்‌ கிடந்த(து) என்னிலாத முன்னெலாம்‌ 
அன்று நான்‌ பிறந்திலேன்‌ பிறந்தபின்‌ மறந்திலேன்‌ 
நின்றதும்‌ இருந்ததும்‌ கெந்ததும்‌ என்‌ நெஞ்சுளே. 
நிற்பதும்‌ ஓர்‌ வெற்பகத்‌(து) இருப்பும்‌ விண்‌ கிடப்பதும்‌ 
நற்பெருந்‌ திரைக்கடலுள்‌ ஈானிலாத முன்னெலாம்‌ 
அற்புதன்‌ அனந்தசயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌ 

நிற்பதும்‌ இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுளே”” என்னும்‌ 
ஸ்ரீஸூக்திகள்‌ அறுஸந்திக்கவுரியன. (கேதவ: தேவம்‌ 
உத்‌,வஹந்‌தி) 


“வெள்ளத்தரவில்‌ துயிலமர்க்த வித்தினை 
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்‌ யோகிகளும்‌ 
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்‌?” 
என்‌று ஆண்டாளும்‌ இந்த வேதவாக்யத்தின்‌ அர்த்தத்தை 
அனாஸந்தித்தாள்‌. (உத்‌வஹந்தி) நெஞ்சிலே வஹிக்கிறார்‌ 
கள்‌. தங்களுக்கு ஏதேனும்‌ ஆபத்து பெரிட்டாலும்‌ 
அவனுக்கு ஒன்‌ றும்‌ நேரக்கூடாது என்னும்‌ துணுக்குடன்‌ 
தரிக்கிறார்கள்‌. 
“ததஸ்‌ தம்‌ சிக்ஷிபுஸ்‌ ஸர்வே பளலம்‌ தை,தேய கங்கரா: | 
பபாத ஸோபூ$ப்பத,: க்ஷிப்தோ ஹ்ருத;யேநோத்‌,வஹந்‌ 
ஹரிம்‌ |!” 
[பிறகு, அஸாுரனாகய ஹிரண்யகசிபுவீன்‌ கிங்கரர்களனை 
வரும்‌ பாலனான அந்த ப்ரஹ்லாதனைக்‌ கீழே தள்ளினார்கள்‌; 
தள்ளப்பட்ட அவனும்‌. ஹரியை நெஞ்சினால்‌ தரித்துக்‌ 
கொண்டு கீழே விழுந்தான்‌.] என்று ஸ்ர வீஷ்ணுபுராணத்‌ 
இலும்‌ சொல்லப்பட்டதன்றோ. இ வர்கள்‌ எதற்காகத்‌ 
தங்கள்‌ ஹ்ருதயத்திலே இவனை கதரிக்கறார்களென்னில்‌: 
( த்,ருபே விங்வாய) உலகிலுள்ளாரனைவரும்‌ காண்பதற்காக 
இவனை தரிக்கிறார்கள்‌. (விங்வாய) ஆறாவது வேற்றுமைக்கு 
பதில்‌ நான்காம்‌ வேற்றுமை படிக்கப்பட்டுள்ளது. வேத மாகையாலே ஸர்வநாமா்ப்தமாக இல்லை (வீங்வாய ) 
உலகிலுள்ளார்‌ அனைவரும்‌ காண்பதற்காக தரிக்கறார்கள்‌. 
அகாவ.து: தங்கள்‌ நெஞ்சிலேயுள்ள பகவானை அனுபவித்து. 
அவ்வ நுபவ பரீவாஹ்ரூபமாகத்‌ தாங்கள்‌ சொல்லும்‌ 
பாசுரங்களாலே. அவனுடைய ஸ்வரூப ருடகுணவிபூதிகளை 
அறிந்து உலகினர்‌ உஜ்ஜீவிக்கவேண்டுமெல்‌ கைக்காக தரிக்‌ 
கிறார்கள்‌. (உத்‌,வஹந்தி) மிகவும்‌ பிரியத்துடன்‌ தரிக்கிறார்‌ 
கள்‌. இது வ்யாஸார்யருடைய வியாக்கியான க்ரமம்‌. 


இனி. “உதுத்யம்‌' என்னும்‌ மந்திரத்திற்கு நாராயண 
முனிவருடைய பாஷ்யரீதியிலே பொருள்‌ விவரிக்கப்படு 
கிறது. ( உத்‌ 2. தயம்‌ ) உத்க்ருஷ்டனாகவே பிறப்பவன்‌. 
பிறக்கப்பிறக்க ஒளி மழுங்கும்‌ பிறரைப்போலல்லாமல்‌, 
அஜஹக்ஸ்வபவனாய்ப்‌ பிறந்தபின்பே ஒளிபெறுமவன்‌ , 
“ஸஹ உ ங்ரேயாந்‌ ப,வதி ஜாயமா௩: ” [அவன்‌ பிறந்தபின்பே 
பெருமைபெறுகிறோன்‌.] என்று வேதத்திலும்‌, “பல பிறப்‌ 
பாய்‌ ஓளிவரு முழுநலம்‌'' என்று தமிழ்‌ மழையிலும்‌ 
சொல்லப்பட்ட அர்த்தத்தை அறிவிக்கிறது. (ஜாதவேத, 
ஸம்‌) ஜாதவேதஹஸ்‌ என்‌ று சுராதிகளில்‌ பிரஸித்தனானவன்‌. 
(தேவம்‌ ஸூர்யம்‌) பரமாத்மாவை. (வீிங்வாய) எல்லா 
ஜனங்களுக்கும்‌.  ( த்‌; ருபே ) எங்கும்‌ காண்பதற்காக. 
(கேதவ:) கொடியைப்போலே, அவனுடைய ப்ரபபளவத்தை 
ப்ரகாசிக்கச்‌ செய்யும்‌ @ ह ¶ 5 (0, முக்தி, வாத்ஸல்யம்‌, 
ஸெளமீல்யம்‌. ஸெளலப்யம்‌. காருண்யம்‌ முதலான 
குணங்கள்‌. (உத்‌,வஹந்தி) பரமபதத்தை வீட்டு அவதரிக்‌ 
கச்செய்கன்‌ றன. அவதாரங்கள்‌ குணக்ருதங்கள்‌ என்னும்‌ 
அர்த்தத்தை அறிவிக்கிறது. “வைகுண்டே, து பரே லோகே” 
என்‌ கிறபடியே பரமபதத்தில்‌ நித்யமுக்தர்களூடன்‌ அளவ ற்ம 
ஆநந்தத்கை அநுபவித்துக்கொண்டிருப்பவனை இவனுடைய 
காருண்ய ஸெளலப்‌,ய ஸெள பீல்யா தி குணங்கள்‌ ஸம்ஸாரத்‌ 
தில்‌ தரபத்ரயங்களாகிய பெருரெருப்பிலே அகப்பட்டுத்‌ 
தவிக்கும்‌ சேதனர்களை நோக்கி இழுத்துச்‌ செல்கின்றன. 
அதனாலேயே இவன்‌ ராமக்ருஷ்ணா த, ரூபமாக அவ தரிக்கறான்‌; 
அவனை அதுபவியுங்கள்‌ என்று கூட்டிட்‌ பொருள்கொள்வ து. 


“சித்ரம்‌” என்னும்‌ மந்திரத்தில்‌ அவனை மேலும்‌ 
அதிக்கறது. (சித்ரம்‌) விரத்ரமானது, “பரா$ஸ்ய மக்திர்‌ 
விவிதை,வ ங்ரூய த ஸ்வாபாவிகீ ஜ்ஞாஈப,லக்ரியா ௪ ”' 
[ இயற்கையானவையான இவனுடைய சக்தி, ஜ்ஞானம்‌, 
பலம்‌. க்ரியை முதலான குணங்கள்‌ பல விதமாகச்‌ சொல்லப்‌ 
படுகின்றன.] என்று சொல்லப்பட்டதன்றோ. (9த்ரம்‌) 
“சாய பூஜாயாம்‌” என்கிறபடியே பூஜிக்கத்தகுந்தது என்றும்‌ 
கொள்ளலாம்‌. ( தேவாறாம்‌ அரநீகம்‌ ) தேவர்களுக்குத்‌ 
தலைபோலிருப்பது; “ஸர்வஸ்ய க;த்ரஸ்ய மிர: ப்ரத,ா௩ம்‌”' 
[உடம்பிலுள்ள அவயவங்களுள்‌ தலையே முக்யமான து ] 
என்‌ கிறபடியே தேவர்களுள்‌ ப்ரதரனனாயிருக்கும்‌ பரம்‌ 
ப்ரஹ்மம்‌ என்றபடி. “அநீஃ' பதம்‌ அங்கங்களைச்‌ சொல்லுவ து; 
இங்கு தலையைச்‌ சொல்லுகிறது. மேலும்‌ எப்படிப்பட்ட து 
இப்‌ பரம்ப்ரஹ்மம்‌? எனில்‌: (மித்ரஸ்ய வருணஸ்ய அக்‌,நே: 
சக்ஷா:) ஸூிர்யனுக்கும்‌, வருணனுக்கும்‌, அக்னிக்கும்‌ கண்‌ 
போலிருப்பவன்‌. இங்கு மூன்‌ று தேவர்களைச்‌ சொன்னது 
ஸர்வதேவர்களுக்கும்‌ உபலக்ஷணம்‌. மித்ர்ப்தவாச்யனன 
ஸூர்யனுக்கும்‌ கண்‌ எவாகையால்‌, ஸூர்ய ஆத்மா " 
முதலான விடங்களிற்‌ சொல்லப்பட்டவன்‌ பரமாத்மாவே 
என்று தெளிவாக வீளங்குகிறது. தேவாநாம்‌ அநீகம்‌'என்று 
அவர்களுக்கு முக்கியகளத்ரமான தலைபோல்‌ ப்ரதானனா 
யிருப்பதோடன்‌ றியில்‌, == "` ஸர்வேந்த்ரியாணாம்‌ நயநம்‌  என்கிறபடியே அவர்களுக்கு மூக்யேர்‌ இரியமான. 
கீண்போலிருந்து உதவுமவன்‌ என்கிறது.  விங்வதங்‌ 
சக்ஷ£ருத விங்வதோமுக;:'' [எல்லாருக்கும்‌ கண்ணாயும்‌. 
முகமாயுமிருப்பவன்‌] -ச்க்ஷார்தே,வாநாமுத மர்த்யாநாம்‌'' 
[விண்ணோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ கண்ணாயிருப்பவன்‌ | 
“கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌ விண்றோர்க்கு' என்று 
வடமொழி தென்மொழி மறைகளில்‌ சொன்னதை நினைப்பது. 
(உதக த) இப்படிப்பட்ட ப்ரஹ்மம்‌ பிரகாசித்துக்கொண்டு 
நம்மை அடைசர் த த. நரெஞ்சினுள்ளே தோன்றிற்று 
என்றுமாம்‌. । 


( தே,வாநாம்‌ அநீகம்‌ > 55537 ॐ ) பிரகரசிப்பவையும்‌. 
வ்யவஹாரத்திற்குக்‌ காரணமானவையுமான கிரணங்கள்‌ 
கேவசப்கத்தால்‌ சொல்லப்படுவதாகக்‌ கொண்டு. இப்படிப்‌ 
பட்ட கிரணங்களுடைய கூட்டம்‌ ஈம்மை அடைந்தது 
என்றும்‌ கொள்ளலாம்‌. “சோதி வெள்ளத்தினுள்ளே எழுவ 
தோர்‌ ௨ரு என்‌ நெஞ்சுள்‌ எழும்‌" என்கை “தேவாநாம்‌ 
சித்ரம்‌ அநீநம்‌ மிதரஸ்ய....அக்‌,நே; சக்ஷா: உதகைத்‌” என்று 
அந்வயம்‌. 


(சித்ரம்‌ தேவாநாம்‌ 2 55550 த்‌ அநீகம்‌) எந்த பகவானிட 
மிநந்து தேவர்களுக்கு உதவிபுரிவதற்காக விசித்ரமான 
ஸேனை உண்டாயிற்றோே என்றும்‌ பொருள்‌ கொள்வர்‌. 
“" (யஸ்மாச்‌) தேவாநாம்‌ சித்ரம்‌ அநீகம்‌ உதகாத்‌, (ஸ:) 
மித்ரஸ்ய வருணஸ்யாக்‌நே: சக்ஷா:'' என்று அரந்வயம்‌. 
பகவான்‌ பல அவதாரங்களைச்‌ செய்தும்‌ ஸாக்யகி ८,००८.55 
(140 5 லக்ஷ்மண ५०७ 05450 இகளைக்‌ கொண்டும்‌ தேவர்களுக்கு 
உதவி புரிந்தது ஸாுப்ரஸித்தம்‌. இந்த பகவான்‌ மேலும்‌ 
எப்படிப்பட்டவன்‌ என்பதை விவரிக்கிறது; ( ஸூர்ய: ) 
மேலே சொன்ன பரமாத்மா (ॐ ॐ: தஸ்தஹஷம்ச ஆத்மா) 
ஐங்கமங்களாகிற அசையும்‌ பொருள்களுக்கும்‌, ஸ்சஎவ 
ரங்களாகிய அசையாப்‌ பொருள்களுக்கும்‌ ஆக்மாவாயீருப்‌ 
பவர்‌. ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஆத்மஸமூஹம்‌ முழு 
வதற்கும்‌ ஆத்மாவாயிரறாப்பவர்‌ என்றபீடி. சேதனர்களுக்கு 
ஆத்மாவாயிருக்குமள வேயோ எனில்‌: ( த்,யாவா ப்ருதிவீ 
அந்தரிக்ஷம்‌ ஆப்ரா: ) தேவலோகம்‌. பூமீ, இவற்றுக்கு ஈடுவி 
விருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ ஆகிய அசேகன (15570 5 59/14 का ८८2 
சூழ்ந்து வியாபித்திருப்பவர்‌. (ஆப்ரா:) ப்ரா' என்னும்‌ 
தாது நிழைந்திருப்பதைச்‌ சொல்லுறெதாகையாலே,'ஆப்ரா?' 
என்னும்‌ பதம்‌ ஈன்றாுக வியாபித்திருப்பவர்‌ என்று 
பொருள்படுகிறது. அதாவது ஜாதி வ்யக்திதோறும்‌ பரி 
ஸமாட்ய வியாபித்திருக்குமாபோலே. ஓவ்வொரு அணு 
பதார்த்தத்திலும்‌ தன்னுடைய அகழி தகடநாமக்தியாலே 
பரிஸமாப்ய வீயாபித்திருக்குமவர்‌ என்‌ றபடி. 

“யச்ச கிஞ்சித்‌ ஐக,த்யஸ்மிந்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வர | 
அந்தர்‌ ப;ஹிங்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய கஈரராயண: ஸ்தி,த: ॥” 
[ இவ்வுலகில்‌ காண்டனவும்‌. கேட்பனவுமாக யாவை லெ 
பதார்த்தங்கள்‌ உள்ளனவேோ அவையெல்லாவற்றையும்‌ 
உள்ளும்‌ புறமும்‌ வியாபித்து விளங்குகிறான்‌ நாராயணன்‌. ] 
“ஈமமா வாஸ்யமித;ம்‌ ஸர்வம்‌ யத்‌ கஞ்ச ஜக,த்யாம்‌ ஜக,த்‌”' 
[ இவ்வுலகில்‌ ஜங்கமமாகவும்‌ ( ஸ்தாவரமாகவும்‌ ) யாவை 
சில பதார்த்தங்களுண்டேர அவையெல்லாம்‌ ஸர்வேங்வர 
னாலே வியாபிக்கப்பட்டு வீளங்குகின்‌ றன. | 

“அந்த: ப்ரவிஷ்ட: மமாஸ்தா पिका ஸர்வாத்மா”" 
[ஸர்வாத்மாவான நரராயணன்‌ ஜனங்களை உள்‌ நுழைந்து 
நியபிக்கிறான்‌ . ] 

“வ்ருக்த இவ ஸ்தப்‌,தேர திவி திஷ்ட,த்யேகஸ்‌ 

தேநேத,ம்‌ பூர்ணம்‌ புருஷேண ஸர்வம்‌" 

[பரமபதத்தில்‌ வ்ருஷம்‌ போல்‌ வணங்கா தவனாயுள்ள 
அத்‌,விதீயனான புருஷனாலேயே இவையெல்லாம்‌ வீயாபிக்கப்‌ 
பட்டுள்ளது] | 

“ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா தி,வ்யோ தே,வ ஏகோ நாராயண:”' 
[பரமபதத்திலிருக்கும்‌ தேவனான இந்த நரராயணன்‌ 
ஒருவனே ஸர்வபூதங்களுக்கும்‌ அர்தராத்மாவாயிருப்பவன்‌. ] 
“யஸ்ய ப்ருதி,வீ மரீரம்‌ யஸ்யாக்ஷரம்‌ ஸுரீரம்‌”' 

[எவனுக்கு பூமி சரீரமோ, எவனுக்கு ஆத்மா மரீரமோ ] 
என்று வேதங்களிலும்‌. 
“ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோக$ஸி ஸர்வ: 
எல்லரவறழ்றையும்‌ வியாபித்திருக்கறொயாகையால்‌ நீ 
எல்லாமுமாகிறாய்‌ / 
“த்ரிபு,வ௩ வபுஷம்‌ விஷ்ணுமீமரம்‌ ஈமாமி'' 
[ மூவுலகங்களையும்‌. சரீரமாகக்கொண்டு நியமிக்கும்‌ விஷ்ணுவை வணங்குகிறேன்‌] 

“கத்‌ ஸர்வம்‌ र्णी 0५ தே 

“தாநி ஸர்வாணி தத்‌,வபு:'' 

“தத்‌ ஸர்வம்‌ வை ஹரேஸ்‌ தநு:” 
{ அவையெல்லாம்‌ ஹரியின்‌ தேஹமாகும்‌] என்று இதிஹாஸ, 
ப்ராணங்களிலும்‌, 


“திடவிசும்பெரி வளி நீர்‌ நிலம்‌ இவைமிசைப்‌ 
படர்‌ பொருள்‌ முழுவதும்‌ ஆய்‌ அவையவைதொறும்‌ 
உடல்‌ மிசை உயிரெனக்‌ கரட்தெங்கும்‌ பரந்துளன்‌ 
சுடர்‌ மிகு சுருதியுள்‌ இவையுண்ட சுரனே” 

“பரந்த தண்‌ பரவையுள்‌ நீர்தொறும்‌ பரந்துளன்‌ 
பரந்த அண்டம்‌ இ(து) என நில விசும்‌(பு) ஓழிவறக்‌ 
கரந்த சிலிடக்‌ தொறும்‌ இடந்திகழ்‌ பொருள்‌ தொறும்‌ 
கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ இவையுண்ட கரனே 

“ஒருயிரேயோ உலகங்கட்கெல்யாம்‌'' 

“சிறந்த கால்‌ தீ நீர்‌ வான்‌ மண்‌ பிறவுமாய பெருமானே! 
கறந்த பாலுள்‌ நெய்யே போல்‌ இவற்றுளெங்கும்‌ கண்டுகொள்‌ 
இறந்து நின்ற பெருமாயா!”' 

என்று ஆழ்வாராலும்‌ இவ்வர்த்தம்‌ பலவிடங்சளிலும்‌ படிக்கப்பட்ட தன்றோ. இந்தப்‌ பரமபுருஜனை உபாஸிக்கக்‌ 
கடவோம்‌ என்று கூட்டிட்பொருள்‌ கொள்வது. அன்‌ றிக்கே, 
இப்படிப்பட்ட பரமாத்மா என்‌ நெஞ்சிலே தோன்றினான்‌ 
नन्वा. “சித்ரம்‌ தே,வாநாம்‌ உசுகளீத்‌? என்னும்‌ முன்‌ 
வாக்யத்தோடே சேர்த்துப்‌ பொருள்‌ கொள்வது. தங்களுக்கும்‌ ஆத்மாவாயிருக்கை, விண்றணோர்க்குக்‌ கண்ணா 
யிருக்கை முதலான தர்மங்கள்‌ பகவானுக்கே அஸாதாரண 
மாகையாலே இம்மந்திரம்‌ பகவத்பரமேயென்‌ பதை, 


“ஆத்மாஸ்ய க,ந்து: பரிதஸ்துஆங்ச 
மித்ரஸ்ய சக்ஷார்‌ வருணஸ்ய சாக்‌, நே: | 
லக்ஷம்யா ஸஹெளத்பத்திக க;ாட,பந்த,ம்‌ 
பங்யேம ரங்கே, மாரத;: மாதம்‌ த்வாம்‌ ॥”' 
[ இவ்வுலகிலுள்ள ஸ்தாவர ஓங்கமங்களுக்கு ஆத்மாவாய்‌, 
ஸூர்யன்‌, வருணன்‌, அக்னி ஆகிய விண்றோர்க்கும்‌ 
கண்ணாயிருப்பவனாய்‌, பிராட்டியுடன்‌ இயற்கையாகவே 
நெருங்கிச்‌ சர்ந்திருப்பவனான உன்னைத்‌ இரு 
வரங்கத்தில்‌ நூறாண்டுகள்‌ காணக்கடவோம்‌.] என்று 
ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்‌. ஸ்ரீபராசரபட்டார்யர்‌ அருளிச்‌ 
செய்தார்‌. ( தச்சக்ஷா: ) முன்‌ மந்திரத்தில்‌ சொல்‌ 
லப்பட்ட ஜீஞானப்ரதனான பரமாத்மா. கண்ணினுள்‌ 
நிற்கும்‌ புருஜனாகையாலும்‌ எல்லாவிடத்திலும்‌ கண்ணை 
உடைத்தாயிருக்கையாலும்‌ “சக்ஷாு:' என்று சொல்லப்படுவ 
தாகவும்‌ கொள்ளலாம்‌. - அந்தரக்ஷிணி புருஷ: ” காவி 
நன்மேனிக்‌ கமலக்‌ கண்ணன்‌ என்‌ கண்ணினுள்ளானே '' 
“கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌” "नए (कन 
ராக்ஷ்‌:- “விங்வதங்சக்ஷா; * “கண்களாயிரத்தாய்‌” என்று 
சொல்லப்பட்ட தன்றோ. (கச்சக்ஷா:) ஒர்‌ ஆங்ரிதனை அடை 
யப்பெற்றோம்‌ என்னும்‌ ஆநந்தத்தனாலும்‌, ஆங்ரிதன்‌ செய்‌ 
யும்‌ துதியினால்‌ உண்டான பீரீதியினாலும்‌, பகவானுடைய 
கண்கள்‌ மிகப்‌ பெரிதாக விரிகையரலே, இவனுடைய 
உடம்பெல்லாம்‌ கண்ணாய்த்‌ தோன்‌ றுகையாலும்‌, கண்ணை 
யொழிய வேறொன்‌ றிலே கண்‌ செலுத்த அராட்டாமையா லும்‌ 
இவனைக்‌ :கண்‌' என்றே சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 


“பெருங்கேழலார்‌ தம்‌ பெருங்கண்மலர்ப்‌ புண்டரீகம்‌ ஈம்மேல்‌ 
ஒருங்கே பிறழவைத்தார்‌ இவ்வகாலம்‌”' 
*வன்காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த 
மென்கால்‌ கமலப்‌ தடம்பேரல்‌ பொலிந்தன........ 

தன்கால்‌ பணிந்த என்பால்‌ எம்பிரான தடங்கண்களே” 
“அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” 
“கரியவாகிப்‌ புடைபரரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்‌ 
பெரியவாய கண்கள்‌ என்னைப்‌ பேதமை செய்தனவே'' 
என்று ஆழ்வார்களும்‌, 

"9४ புண்டளீகா௯த இதி ஸ்புடோ5ப,வத்‌'' 

[ அவன்‌ தாமரைக்கண்ணன்‌ என்றே பிரஸித்தனானான்‌ ] 
என்று கவிகளும்‌ உரைத்தனரன்றோ. “ஜிதந்தே புண்ட 
காக்ஷ ” என்று அனுகூலரும்‌, “புண்டரீக விரமாலாக்ஷள”' 
என்று ப்ரதிகூலரும்‌ வாசியற ஈடுபடும்படியாயிருப்பதன்றோே 
இவன்‌ கண்‌. 
“கண்ணே! உன்னைக்‌ காணக்‌ கருதி என்‌ நெஞ்சம்‌ 
எண்ணே கொண்ட சிந்தையதாய்‌ நின்‌ றியம்பும்‌” 
என்று ஆழ்வாரும்‌ இவனைக்‌ “ கண்ணே!” என்றே கூப்‌ 
பிட்டாரன் றோ. அந்த பகவான்‌ மேலும்‌ எப்படிப்பட்டவன்‌? 
எனில்‌: (நதேவஹிதம்‌) ப்ஸஹ்மருத்ராதி, கேவர்களுக்கும்‌ 
ஈன்மையைச்‌ செய்வன்‌. (புரஸ்தாத்‌ உச்சரத்‌) இச்சேதனன்‌ 
அநுகூலனாவதற்கு முன்‌ ன ம இவனை அடைவதற்காக 
எதிர்கூழல்புக்குத்‌ திரிந்தான்‌ அப்‌ பரமபுருஷன்‌. சேதனன்‌ 
அத்வேஷ ஆபிமுக்,யங்களை உடையவனானான்‌ என்று 
அறிந்தவுடன்‌. அவன்‌ பக்தி செய்ய ஆரம்பிப்பதற்கு 
முன்னமே அவன்‌ ஹ்ருதயத்திலே எழுந்தருளினான்‌. 


“வாரரிக்கொண்டுன்‌ னை விழுங்குவன்‌ கரணிலென்று 
ஆர்வுற்ற என்னையொழிய என்னில்‌ முன்னம்‌ 

பாரித்துத்‌ தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌ ' 
என்கிறபடியே முற்பாடனாமவனன்‌ ரோ பரமபுருஷன்‌, 
(மஃக்ரம்‌ புரஸ்தாக்‌ உச்சரத்‌) இப்படி முற்டாடனானவுட 
னேயே அமலனானான்‌. ஸுஈக்ரம்‌-_அமலன்‌. தரன்‌ எம்பெருமானை அணுகினால்‌ அவனுக்கு அழுக்கேற்படுமோ என்று 
பயந்துகொண்டே உ௨ட்சென்ற முநிவாஹனராகிய திருப்பா 
மூழ்வார்‌. தன்னைக்‌ கண்டவுடனேயே அவன்‌ அழுக்கற்ற 
வனானான்‌ என்பதை “ அமலன்‌" என்று அருளிச்செய்தா. 
ரன்றோ. “புரஸ்தாத்‌ பங்யேம ' என்று கூட்டிப்‌ பொருள்‌ 
கொள்வாருமுண்டு. நமக்கு முன்னேயிருக்கும்‌ அவனைக்‌ 
காண்போமாக என்‌ றபடி. 

அடுத்தபடியாக. இப்படிப்பட்ட பரமபுருஷைப்‌ 
பல்லாண்டுகள்‌ காண்போமாக என்‌ று சொடங்கி மங்களங்‌ 
களை ஆமாஸிக்கறான்‌. முமுக்ஷாவரனவன்‌ ஆயுளை விரும்பு 
வது பொருந்துமோ? என்னில்‌: “நரம்‌ பரமபுருஜனைப்‌ 
பல்லாண்டுகள்‌ கரணக்கடவோம்‌'' என்கையால்‌ இங்கு 
சேதனனுடைய ஆயுள்‌ பிரார்த்திக்கப்படுவதாகக்‌ கொள்ள 
லாகாது. பல்லாண்டுகள்‌ நாம்‌ காணும்படியாகப்‌ பரம 
புருஷனுக்கு ஒரு திங்கும்‌ வா ராமலிருக்கவேண்டும்‌ என்று 
அவனுக்கு மங்களாமாளனம்‌ செய்வதிலே நோக்கு, 
அவனுக்கு மங்களாப0ரஸனம்‌ செய்யத்‌ தானும்‌ நெடுநாள்‌ 
வாழவேண்டுமாகையால்‌, தன்னுடைய வாழ்வும்‌ அதற்கு 
உறுப்பாகப்‌ பிரார்த்திக்கப்படுகிறது. “அடியோமோடும்‌ 
நின்னோடும்‌ பிரிவின்‌ றி ஆயிரம்‌ பல்லாண்டு नन्त. 
பெரியாழ்வாரும்‌ பிரார்த்தித்தாரன்றோ. பரமகாருணிகரான 
பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ : எந்தை தந்தை ' என்னும்‌ 
பாட்டு வியாக்க்யானத்தின்‌ கீழே -பங்யேம ८०/ 5 &०८०,5८2 
என்னும்‌ வரக்யத்தை மங்களாபாஸனத்திற்கு ப்ரமாண 
மாக எடுத்தருளினார்‌. ஆகையால்‌, “பங்யேம ५८०0 50०७०5८2 
முதலான வாக்யங்களால்‌ மாதவனுக்கு மங்களாசாஸனம்‌ 
செய்யப்படுவதாகக்‌ கொள்வதே சிறந்தது, விசிஷ்டா திகாரி 
कना இம்மந்திரங்களே மங்களாம0ரஸன புத்தியுடனேயே 
உச்சரிப்பர்‌. ஸாம, ந்யரதிகாரிகள்‌ ஆயுள்‌ முதலானவற்றைப்‌ 
பிரார்த்திப்பதாகவும்‌ கொள்வர்‌. மங்களாமாஸஹனத்ழைப்‌ 
பற்றிய பூர்வபக்ஷஷ ஸித்தாந்தங்களைத்‌ திருப்பல்லாண்டு 
வியப க்கயானத்திலே கண்டுகொள்வது. 

(பங்யமே மரதஹ்‌ மதம்‌) பரமபுருஷனை (அவனுடைய 
அறக்ரஹத்தினலே) நூறாண்டுகள்‌ காணக்கடவோம்‌. 
இங்கு "५७८2. (நூறு) என்பது கணக்கற்றது என்னும்‌ 
பொருளிலே பீரயே॥ கிக்கப்பட்டிருக்கிறது. * பல்லாயிரத்‌: 
தாண்டு' என்னுமாபோலே. = "८0.58" என்னுமிடத்திலே 
யுள்ள இரண்டாவது வேற்றுமை, `` காலாத்‌ வநோரத்யந்த 
ஸம்யோகே, த்‌,விதீயா '' என்னும்‌ ஸஉத்திரத்தினாவேற்‌ 
பட்ட து. (மதம்‌ ८०८5: ஜீவேம) உனக்கு மங்களாபபரஸனம்‌ 
செய்வதற்காகப்‌ பல்லாண்டுகள்‌ வரழக்கடவோம்‌. (தம்‌ 
५०059: நந்தனம்‌) பல்லாண்டுகள்‌ உன்னை ௮ னுபவித்து 
ஆநந்திக்கக்கடவோம்‌. (மதம்‌ ரது! மோதீம) பற்பல 
ஆண்டுகள்‌ பாகவதர்களை அனுபவித்துப்‌ பேரானந்தட்படக்‌ 
கடவோம்‌. “ஈந்தரம' என்று பகவச நுபவமும்‌. மோதம்‌ 
என்று பாகவகாநுபவமும்‌ சொல்லப்படுகின்‌ றன. (८०७८ 
५० 58: பவாம) இப்படி மங்களாமாஸனம்‌ செய்வதாலேயும்‌. 
பகவ த்பாகவதர்களை அநுபவிப்பதாலேயும்‌ பல்லாண்டுகள்‌ 
ஸத்தை பெற்றவர்களாகக்கடவோம்‌. (மதம்‌ ०.5 
ஸ்ருணவாம) பல்லாண்டுகள்‌ பகவத்‌ ககைகளையும்‌. கேசவன்‌ 
கீர்த்தியையும்‌ கேட்கக்டவோம்‌. (மதம்‌ ५०० 58; ८.0८ 
வாம) நூறாண்டுகள்‌ பகவத்ப்ரபாவச்கைச்‌ சொல்லும்‌ 
வேகம்‌ முதலான வாக்குகளையும்‌ பகவத்‌ குணங்களையும்‌ 
ப்ரவசனம்‌ செய்யக்கடவோம்‌, “ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ 
ஸ்தெளதி” [ஹரியைத்‌ ததிப்பதே நாவாகும்‌.] “ஈரவா 
யிலண்டே”' என்‌ கிறபடியே நாப்படைத்த டலனைட்‌ பெறக்‌ 
கடவோம்‌. பாஹ்யகுத்ருஷ்டிகளின்‌ காயை அடைக்கும்‌ 
படியான வாதங்களைப்‌ பண்ணமக்கடவோம்‌ என்பதாகவும்‌ 
கொள்ளலாம்‌. (அஜீதா: ஸ்யாம छण ம்ரது:) அந்த 
பராஹ்யகுத்ருஷ்டிஃளாலே என்றும்‌ ஐயிக்கப்படா மலிருக்கம்‌' 
கடவோம்‌, பாடங்கள்‌, இந்திரியங்கள்‌ முதலானவ ற்றால்‌ 
ஆயிக்கப்படாமலிருக்கக்கட வோம்‌. “ அஜிதா:'' என்றிருக்க. 
வேண்டியது "அஜீதா:' . என்று கடக்கிறது. (ஜ்யோக்‌) வெகு நீண்டகர்லம்‌; (ஸுூர்யம்‌) ப்ராணிகளைக்‌ கர்மங்களிலே 
ஏவு பரமாத்மாவை; (த்ருமே) அறியக்கடவோம்‌. 
“பயயேம' என்றவிடத்தில்‌ கண்ணீனாலுண்டாகும்‌ ஞானத்‌ 
தையும்‌, தருமே என்றவிடத்தில்‌ மஸ்ஸினலுண்டாகும்‌ 
அறிவையும்‌ சொல்லுறெகாகையாலே புநருக்தியன்‌ று. 


“ய உத கத்‌ என்னாம்‌ அடுத்த மந்திரத்தில்‌ பகவான்‌ 
க்ஷராப்திநா தனாய்‌ அவதரித்து, அங்கிருந்து ராமக்ருஷ்ணாதி 
ரூபேண அவதரித்தபடிகளைப்‌ பேசித்‌ ததிக்கறாோன்‌. (ய:) 
எந்தப்‌ பரமபுருஷன்‌; (மஹத: அர்ணவாத்‌) பெரிதான 
ஸமுத்திரத்திலிருர்து: ( உசனைத்‌ ) = அம்ப,ஸ்யபராரே ”” 
[கரைகாணவொண்ணாத ஜலத்தில்‌ (இருப்பவன்‌)] ”யமந்‌ 
தஸ்ஸமுத்‌,;ரே கவயோ 5வயந்தி'' [எவனை ஈடுக்கடலுள்‌ 
அயில்பவனாக ஞானீகள்‌ அறிகறார்களோ | -ஸமுத்‌;ரேந்தம்‌ 
நாராயணம்‌'' “ நாகமேறி நஈடுக்கடலுள்‌ துயின்ற நாரா 
யணனே ' என்றெபடியே மிகப்பெரிதகான பாற்கடலி 
லீருந்து இவ்வுலகில்‌ ராமருஷ்ணாதி ரூபங்களுடன 
அவதரித்தாரோ. ८ 

“த்ரிபாதுர்த்‌,வ உதைத,த்‌ புருஷ: பாதே 5ஸ்யேஹாப,வாத்‌ (ह| 
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாமு௩ர நமமரே அபி, ॥!”' 
[பரமபதத்திலிருக்கும்‌ பரமபுருஷன்‌ மூன்று அவதாரத்தை 
யுடையவராகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதார 
மான அநிருத்தன்‌ இவ்வுலகில்‌ அவதரித்தார்‌. அதற்குப்‌ 
பீன்‌ எல்லாப்பக்கத்திலும்‌ ஜீவன்‌, ஜடம்‌ ஆகிய இவர்களைக்‌ 
குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌) வியாபித்தார்‌.] 
என்று வேதத்திலும்‌, 

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | 

, நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | 


[பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ 
நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.] என்று ரிஷிகளாலும்‌ சொல்லப்பட்ட 
அர்த்தத்தை அதுஸந்திக்கிறது. (ய உதக தி) எந்த பகவான்‌ 
அவதரித்தாரோ. அவரை நெடுங்காலம்‌ காணக்கடபவோம்‌ 
என்று சென்ற மந்திரத்துடன்‌ கூட்டுவது. அன்‌ றிக்கே 
மநஸா புகாது என்றதுடனும்‌ கூட்டலாம்‌. இப்படிப்‌ 
பாற்கடலிலிருர்து பல அவதாரங்களைச்‌ செய்தானென்றால்‌ 
அக்காலங்களில்‌ பாற்கடலில்‌ பகவான்‌ இல்லையோ? எனில்‌: 
(ஸரிரஸ்ய மத்யாத்‌ விப்ஸாஜமா௩;) அப்படி அவதாரங்கள்‌ 
செய்தபோ தும்‌ பா ற்கடலின்‌ நடுவே பிரகாசித்தக்கொண்டே 
எழுந்தருளியிருந்தான்‌. :“ஆதியஞ்சோதியுருவை அங்கு 
வைத்து இங்கு பிறந்த? என்றாப்போலே. “நரகயர்யங்‌ 
கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக;தோ மதுராம்‌ புரீம்‌'' [பாற்கடலில்‌ 
சேஹாயனத்தை வீட்டு மதுரைக்கு எழுந்தருளினான்‌ ] 
என்றதும்‌ பாற்கடலைக்காட்டிலும்‌ வடமதுரையில்‌ அதிக 
மான பீரீதியைச்‌ சய்தான்‌ என்று அறிவிக்கைக்காக. 
°` பனிக்கடலில்‌ பள்ளிகோளைப்‌ பழகவிட்டோடி வந்து” 
“கல்லும்‌ கனைகடலும்‌ வைகுந்தவானாடும்‌ புல்லென்றொழிக்‌ 
தனகொல்‌'' என்றாப்போடபயே., (ஸரிரஸ்ய மத்யாத்‌ ) 
° 7 ००९५०९६0, @8: ' ['ர' “ல என்னும்‌ எழுத்துக்களுள்‌ பேத 
யில்லை.] என்னும்‌ நியாயத்தாலே “ஸலிலஸ்ய' என்றிருக்க 
வேண்டியது : ஸரிரஸ்ய” என்று டெக்கிறது. நீரின்‌ நடுவில்‌ 
என்றபடி. “ல்யப்லோபே பஞ்சமீ'' என்னும்‌ நியாயத்தனால்‌ 
பஞ்சமீ வந்திருக்கிறது. (ஸரிரஸ்ய மத்‌ யாத்‌ வீப்ராஜமா௩;) 
பாற்கடலின்‌ ஈடுவிலே பிரகாசிப்பவர்‌. (விப்ஸராஓமா௩: ) 
சேதனரைத்‌ திருத்தும்‌ வழியெது' என்று சிந்தித்துக்‌ 
கொண்டே யோகநித்திரை செய்வதரல்‌ உண்டான திரு 
மேனியொளியைச்‌ சொல்லுமெது. ५ 
“குறைவில்‌ தடங்கடல்‌ கோளரவேறித்‌ தன்‌ கோலச்‌ செந்தாமரைக்கண்‌ 
உறைபவன்‌ போல ஓர்‌ யோகுபுணர்ந்த ஒளி மணிவண்ணன்‌” 
என்று நம்மாழ்வாரும்‌ உடையவன்‌ உடைமையை வீட 
மாட்டாத நஈசையுடனே யோகநித்திரை செய்வதால்‌ ஒளி 
மணிவண்ணனாகிறான்‌ என்றாரன் றோ. முஹதோர்ணவாத்‌'' 
என்று பாற்கடலையும்‌. “ஸரிரஸ்ய மீத்யாத்‌” என்றவிடத்‌ 
இல்‌ ப்ரளயஸமுத்ரத்தையும்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ள 
லாம்‌. நாராய்ணசப்தத்தை விவரிக்கும்போது எடுத்த 
“ஆபோ ण्ण இதி ப்ரோக்தா:'' முதவான ப்ரமாணங்களை 
இங்கும்‌ படிப்பது. இவைகளிலிருந்து க்ஷரார்ணவ நிகே 
தனனான நாராயணனே இங்கு சொல்லப்படுமவன்‌ என்று 
தெளிவாகிறது. “மஹதோர்ணவாத்‌” என்றும்‌. -'ஸரிரஸ்ய 
மத்யாத்‌'' என்றும்‌ ஜலகத்வத்கைச்‌ சொன்னது பஞ்ச 
பூதங்களுக்கும்‌ உடலக்ஷணமென்றும்‌. இவற்றால்‌ ஸர்வ 
பூூதங்களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ வியாபித்‌ திருக்கறாோன்‌ என்று 
சொல்லுவதாகவும்‌ கொள்வாருமுண்டு. =` ` வீப்ராஜமாந;: ` 
என்‌ றதால்‌ "रण அந்ய: அபி,சாகமரீதி” [கர்மபழலத்தை 
புஜியாத பரமாத்மா பிரகாசிக்கறான்‌ ] என்றவிடத்திற்‌ 
போலே, பஞ்சபூதங்களில்‌ வியாபித்திருந்தீபோதிலும்‌ 
தோஷமற்று விளங்காநிற்கறபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ 
கொள்வர்‌. க்ஷீராப்திராதபரமாகச்‌ சொன்ன முத,ற்பொருளே சிறந்தது. 


(ஸ வ்ருஜஷப,) ங்ரேஸ்டரான அப்‌ பரமாத்மா. 
“புருஷர்ஷப,:' “ மமார்த்தூண வ்ருஷபே௱பமெள?' “ஆயர்டாடி 
கவர்ந்துண்ணும்‌ காரேறு” என்‌ று சொல்லப்டட்டானன் றே. 
“யம்சுந்தூஸாம்‌ क = । ^" என்று வேதத்தில்‌ சொல்லிய 
படியே . வேதம்‌ முதலான ப்ரமாணங்களில்‌ தலைவனாகச்‌ 
சொல்லப்படுகிரவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 


( வ்ருஷப,: ) ஸர்வலோகங்களையும்‌ ( மேகம்போலே ) 
வர்ஷிக்கிறவன்‌ ( உண்டாக்குகிறவன்‌ ) என்றும்‌ கொள்ள 
லாம்‌. பசுமாடுகள்போலேயுள்ள ஸர்வப்ராணிகளுக்கும்‌ 
புருஷனாயிருக்கும்‌ ரிஷபம்‌ இவனே என்றும்‌ கொள்ளலாம்‌. 
“ வ்ருஷம்‌ தர்மம்‌ பளஸயத்ீதி வ்ருஷப,: ” [வ்ருஷ பப்சத்தி 
னால்‌ சொல்லப்படும்‌ தர்மத்தைப்‌ பிரகா சிக்கச்செய்றொனாகை 
யால்‌ வ்ருஷபனாகிறான்‌ ] என்‌ றும்‌ கொள்ளலாம்‌. “வ்ருஷாஹீ, 
வ்ருஷப,!' என்று ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ இது 
பகவரந்நாமங்களில்‌ ஒன்றாகப்‌ படிக்கப்பட்டடதென்பது அறி' 
யத்தக்கது. இப்படி பகவந்நாமத்தைப்‌ படித்ததிலும்‌ 
திருப்தியடையாமல்‌ அவனுடைய அஸாதாரணமான அடை 
யாளமான புண்டரிகாஷ்ந்வத்கை அடுத்தபடியாக அறி 
விக்கிறது. (ரோஹிதாக்ஷ:) லோஹிதாக்ஷன்‌ ; சிவந்த. கண்‌ 
களையுடையவன்‌ ; செந்தாமரைக்கண்ணன்‌ என்று பவம்‌. 

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே.... 
தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”' 
[ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண 
மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய 
னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.] என்று 
வேதமும்‌ வீரய்வெருவும்படியிருப்பதன்‌ றோ இவனுடைய 
செந்தாமரைக்‌ கண்கள்‌. “ராமோ ராஜீவ லோ சந: '' “க்ருஷ்ண: 
கமலலோச௩: ` * “ மஹாவராஹ: ஸ்புட்பத்லலோ சா: ”” 
“° மத்ஸ்ய: கமலலோச௩; '' என கிறபடியே மனிகனாகவும்‌. 
வராஹுமாகவும்‌, மீனாகவும்‌ பிறவியெடுத்தபோதிலும இவ 
னுடைய கண்ணை மழைக்கமுடியா தபடியன்றோ இருப்பது. 
ஸர்வாங்கங்களும்‌ மறையக்கவசமிட்டாலும்‌, கண்ணை 
மறைத்துக்‌ கவசமிடுவதில்லையன்றோ. , £ லோஹிதாக்ஷ: 
ப்ரதர்த்த;ந:”” என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ இது 
பகவந்காமமாகப்‌ படிக்கப்பட்டது. இக்‌ &ரணங்களால்‌ 
இங்கு சொல்லப்படுமவன்‌ லோகப்ரஸித்தனான ஸூர்யனல்‌ 
லன்‌ என்று தெளிவாகிற து.(ஸுூர்ய: நன்‌ (ॐ ॐ கர்மங்களிலே 
ஆடண்டுபவன்‌; “'ஸரதி இதி ஸூர்ய” [( எங்கும்‌) செல்கிறானா 
கையால்‌ ஸூர்யன்‌. ] என்றும்‌ கொள்ளலாம்‌. * ஸு ஆர்ய: 
ஸ 7५५. ` [ மேலான ஸ்வாமியாயிருப்பவன்‌ ஸூர்யன்‌ ] 
என்றும்‌ கொள்வர்‌. = (०9८0०65 ஸ:) ஸர்வஜ்ஞனான அப்‌ 
பரமாத்மா. “ ஸத்யம்‌ ஜ்ஞா௩ம௩ந்தம்‌ ப்ரஹ்ம। யோ வேத, 
86050 கு,ஹாயாம்‌ | ஸோமநுதே ஸர்வார்‌ காமாக்‌ ஸஹு 
ப்‌.ரஹ்மணா விபம்சிதா ॥ ` [ஸத்யமாயும்‌. ஜ்ஞானமாயும்‌, 
அநந்தனாயும்‌ ஹ்ருதயகுஹையிலுள்ள தமான ப்ரஹ்மத்தை 
எவன்‌ அறிகறானோ அவன எல்லாக்‌ காமங்களையும்‌ 
(கல்யாணகுணங்களையும்‌) ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன்‌ 
கூட அநுபவிக்கிறான்‌.] என்னும்‌ வேதவாக்யெத்தில்‌ விடம்‌ 
சித்தாகச்‌ சொல்லப்பட்ட அரந்தனே இங்கும்‌ விபஸ்‌ 
சிந்தாகச்‌ சொல்லப்படுகறான்‌ என்று தெளிவாகிறது. 
( மஈஸா ) நம்மிடத்தில்‌ அருள்புரியும்‌ மனத்தினால்‌. இதி 
லிருந்து பரமபுருஷனுக்கும்‌ அப்ராக்ருதமான மனம்‌ முதலிய 
இந்திரியங்கள்‌ உன்ளனவென்று வீளங்குகிறது. “ரோஹி 
தாக்ஷ:' என்றவிடத்திலும்‌ இது தெளிவு, (மாம்‌ புகாது) 
என்னைப்‌ பரிசுத்தப்படுத்தட்டும்‌. (மாம்‌) தன்னையல்லது 
வேறு ப்ராப்யப்ராபகங்களை அறியாத என்னை, “டணங்யேம்‌ 
என்றவீடத்தில்‌ பஹுவசனமாகவும்‌. “மாம்‌ என்‌ ம இங்கு 
ஏகவசனமாகவும்‌ சொல்லியிருந்கபோதிலும்‌. வேறு வேறு 
மந்திரங்களாகையாலே தோஷபயில்லை. அன்‌ றிக்கே ஏதாவ 
தொன்றை மாற்றிக்கொள்வது. -அபி,ஐந வித்யாகுருஷு 
பஹுவசமம்‌'" என்னும்‌ நியாயத்தாலே 'டங்யேம' என்னும்‌ 
புஹுவசநம்‌ வந்திருப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. (புகாது) 
தன்னை அனுபவிக்கத்‌ தகுந்தவனாகும்படி என்னை அவனே 
திருத்திக்கெொள்ளவேண்டும்‌. ( விடங்சித்‌ புகாது ) ஸர்வ 
ஜ்ஞனாகிய அவன்‌ என்னைத்‌ திருத்‌தகையொழிய அஜ்ஞனான 
நான்‌ என்னைத்‌ திருத்திக்கொள்ள முடியுமோ? தன்னிடத்‌ 
திலே ந்யஸ்தபயனான என்னை அவனே பரிசுத்தனாக்க 
வேணும்‌ என்கை. 


ஆக. இம்‌ மந்திரங்களில்‌, பகவான்‌ அவதரித்து ஆள்‌ 
பார்த்துழிதருவானாய்‌, எதிர்குழல்புக்கு வந்தபடியையும்‌ 
அவனைத்‌ தான்‌ சரணமடைகந்தபடியையும்‌ சொல்லி, அவனைப்‌ பற்றிய ஸ்‌துதிமங்களாமாஸனங்களைச்செய்து முடிக்கிறது. 

இனி. ஸாயங்கால ஸந்த்யையின்போது அநுஸர்திக்க 
வேண்டிய உபஸ்த்தாந மந்திரத்கைக்‌ காண்போம்‌. 


इमे मे वरुण श्रुधी हवमा च सृडय। त्वामवस्युराचके ॥ तक्वा , 
यामि ब्रह्मणा वन्दमानस्तदाहस्ते यजमानो हविभिः। द्हेडमानो Te 
वोध्युरूदस मान आयुः प्रमोषीः॥ यच्चिद्धि ते विशो यथा प्रदेव वरूण 
जतम्‌। मिनीमसि चविद्यवि॥ यत्किल्चेदं वरुण दैव्ये जने ऽभिद्रोहे 
मवष्याश्चरामसि। अचिती यत्तव धर्मां युयोपिम भमानस्तस्मादेनसो देव 
रीरिषः॥ कितवासो यद्विरिपुने दीवि यद्वाघा सत्यमुत यन्न 'विद्य। 
स्वां ता विष्य शिथिरेव देवाथाते स्थाम वरूण प्रियासः ॥ 


இமம்‌ மே வருண ங்ருத, ஹவமத்‌யாச ம்ருடய।! த்வா 
மவஸ்யுராசகே॥| தத்‌ த்வா யாமி ப்‌,,ஹ்மணா வச்தமாஈஸ்‌ 
ததாமாஸ்தே யஜமாநோ ஹவிர்ப்பி:। அஹேடஹமாகோ 
வருணேஹபேதி, உருமம்ஸ மா ௩ ஆயு: ப்ரமோஷீ:॥ யச்‌ 
சித்‌,தி, தே வியோ யத; ப்ரதே,வ வருண வ்ரதம்‌ | மிரீமஸி 
த்‌யவித்வலீ। யத்‌ கிஞ்சேத,ம்‌ வருண தைவ்யே ஐநே$பி, 
த்‌,ரோஹம்‌ மநுஷ்யாங்‌ சராமஸி! அசித்தீ யத்‌ தவ தர்மா 
யுயோபிம மாநஸ்‌ தஸ்மாதேகஸோ தே,வ ரீரிஷ: | தெவாஸோ 
யத்‌, ரிரிபுர்‌ நதீ,வி யத்‌, வாக ஸத்யமுத யந்ஈ வித்ம। 
ஸர்வா தா விஷ்ய மிதி,ரேவ 65397 590 65 ஸ்யாம்‌ வருண 
ப்ரியாஸ: || | 

ஸாயம்‌ ஸந்த்யா ॐ ‹ 02.597 व्ल மந்திரங்கள்‌ இவ்வைந்து 
ரிக்குகளும்‌. முதல்‌ மூன்‌ று ரிக்குகளுக்கு ஸுநங்பெபூர்‌ ரிஷி. 
நான்‌ காவதற்கு வஸிஷ்டர்‌ ரிஷி. ஐந்தாவதற்கு அத்ரி ரிஷி. 
முதலாவது மூன்றாவது மந்திரங்களுக்குகாய த்ரீ: சந்தஸ்ஸு, 
இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது ரிக்குகளுக்கு , 
தீரிஷ்டுப்‌ சந்தஸ்ஸு. ஐந்துக்கும்‌ வருணனுக்கு அந்தர்யாமி 
யான பரமாத்மா தேவதை. “இமம்‌ மே வருண” என்று' 
தொடங்கும்‌ மந்திரங்களுக்கு தேவராகர்‌ ரிஷி என்று சிலர்‌ 
படிப்பர்‌. சஈச்சேபருக்கே கேவராதர்‌ என்‌ னும்‌ பெயருண்டு 
என்பது ஸ்ரீபாகவக த்தில்‌ । பீரஸித்தமாகையால்‌ இது பக்ஷாந்தரமன்று. இந்த மந்திரங்களைப்பற்றி ஹ்வ்ருச 
ப்ராஹ்மணத்திலும்‌ இதிஹாஸ புராணங்களிலும்‌ பின்வரும்‌ 
இதிஹாஸம்‌ செல்லப்படுகிறது 


இஷ்வாகு வம்த்தில்‌ பிறந்கஉனாஇய ஹரிங்சந்த்ரன்‌ 
என்னும்‌ அரசனுக்கு தூறு பத்னிகளிருந்தபடோதிலும்‌ 
பிள்ளையுண்டாகவில்லை. ஒரு நாள்‌ தற்செயலாகத்‌ தன்‌ 
வீட்டிற்கு வந்த நாரதர்‌ பர்வதர்‌ என்னும்‌ ரிஷீகளைப்‌ 
பூஜை செய்து, பிள்ளை பிறப்பதற்கு உபாயத்தைக்கேட்ட 
போது பகவான்‌ நாரதர்‌ அரசனே! 'வருணனாறெ நீ 
எனக்குப்‌ பிள்ளேயை அளிப்பாயாகில்‌ உன்னால்‌ அருளப்‌ 
பட்ட பிள்ளையையேயாக, பசுவாக வைத்து உன்னைக்குறித்து 
யஜ்ஞம்‌ செய்கேன்‌ என்று ப்ரதிஜ்ஞை செய்து வருண 
னைக்‌ குறித்துத்‌ ததிசெய்‌; வருணன்‌ உனக்குப்‌ புத்திரனை அளிப்பான்‌'' என்று கூறினார்‌. 
இவ்வரசனும்‌ அ௮ட்படியே ப்ரதிஜ்ஞனை செய்து வருணனைத்‌ துதிக்‌்‌ அவனும்‌ 
இவனுக்கு லோஹிதன்‌ என்னும்‌ பிள்ளை ' பிறக்குமாறு 
அருளினான்‌. பிள்ளை பிறந்த சில காலங்களுக்குப்‌ பிறகு 
“உன்‌ பிள்ளையைப்‌ பசுவாகக்‌ கட்டி யாகம்‌ செய்‌ என்று 
வருணன்‌ அரிச்சந்திரனைக்‌ கேட்க ஆரம்பித்தான்‌. அருந்தவம்‌ செய்து பீள்ளையைப்பெற்ற அரிச்சந்திரனுக்கு அருமை 
மகனை யாகத்திலே அறுத்துத்தர மனமில்லை. “என்‌ மகன்‌ 
உபநயனமாகிற ஸம்ஸ்காரமில்லா மலிருக்கிறான்‌. உபயனமானவுடன்‌ இவனைப்‌ டசுவாகக்கொண்டு யாகம்‌ செய்விக்‌ 


கிடறேன்‌' என்‌ று வருணன்டம்‌ சொல்லிவந்தான்‌. உபநயன காலம்‌ வந்தவுடன்‌ தன்பீள்ளேயை அழைத்து 
வருணனாக்‌ குத்‌ தான்‌ செய்த ப்ரதிஜ்ஞையைச்‌ சொன்னான்‌. அதைக்‌ 
கேட்டுக்‌ கோடகெொண்ட பிள்ளை வில்லை எடுத்துக்கொண்டு 
வனம்‌ சென்றான்‌. தன்‌ பிள்ளையை நியாயப்படி கொடுக்காம 
லிருக்கும்‌ ஹரிச்சந்திரனை வருணன்‌ பிடித்துக்கொண்டான்‌. 
வருணனால்‌ பீடிக்கப்பட்ட ஹரிச்சந்தரனை மஹோதர வீயாதி வருத்திற்று. காட்டில்‌ ஒரு வருஷம்‌ ஸஞ்சரித்துக்‌ 
கொண்டிருந்த லோஹிகன்‌ தன்‌ தகப்பனைப்‌ பார்க்க 
நாட்டிற்கு வந்தம்‌ தெய்வ விரோதத்தினால்‌ தகப்பனைக்‌ 
காணமுடியாமல்‌ இரும்பிக்‌ காட்டிற்குச்‌ சென்றுவிட்டான்‌. 
இப்படியே ஐந்த வருடங்கள்‌ கழிர்தன.ஒருநான்‌ லோ ஹிதன்‌, 
பணத்தாசை நிறைந்தவரும்‌, ஸம்ஸாரியும்‌, ஸுூயவஸர்‌ 
என்‌ பவருடைய பிள்லையுமான அஜீகரர்த்தர்‌ என்னும்‌ ரிஷி 
யைக்‌ கண்டான்‌. அவருடைய பீள்ளைகளுக்குள்‌ ஈடுப்பிள்ளை 
யாகிய சுஈச்சேபனைப்‌ பல பசுமாடுகளை விலையாகக்கொடுத்து 
வாங்கினான்‌. தனக்கு பதிலாக அவனைப்‌ பசுவாகக்கொடுப்ப து 
என்‌ று நிச்சயித்துக்கொண்டு ஹரிச்சந்‌இரண்டம்‌ வந்து சேர்ந்‌ 
தான்‌ ஹரிச்சந்திரனும்‌ வருணனிடம்‌ அநுமதி பெற்றுக்‌ 
கொண்டு வீயா தியிலிருந்‌து வீடுபட்டு, ராஜஸயம்‌ என்றெ 
யஜஞத்தை ஆரம்பித்து, சுஈச்சேபனையே பசுவாகச்செய்‌ 
தான்‌. அப்‌ பசுவைக்‌ கொல்லும்‌ ரித்விக்காக சாச்சேப 
னுடைய தகப்பனாரே வந்துசேர்ந்தார்‌. வியஸஷனம்‌ செய்‌ 
வதற்குக்‌ கூலியாக ஏற்படுத்தப்பட்ட நூறு பசுக்களையும்‌ 
வாங்கிக்கொண்டு, வெட்டுவதற்காகக்‌ கூர்மையான கத்தி 
யைத்‌ தூக்கிக்கொண்டு தன்‌ தகப்பனே தன்னைநோக்கி 
வருவதைக்‌ கண்ணுற்றான்‌ சுநச்சேபன்‌ . 

“மஹத்யாபதி, ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ ப,க,வாநற்‌ ஹரி:”' 
[பேராபத்து நேர்ந்ததாகில்‌ பகவான்‌ ஹரியை நினைக்க 
வேண்டும்‌] 

“பரமாபதமாபந்நேர மநஸா5சிந்தயத்‌ ஹரிம்‌'' 
[பேராபத்தையடைந்த கஜேந்திராழ்வான்‌ ஹரியை மனத்‌ 
தாலே நினைத்தான்‌] 


“ஆர்த்தா விஷண்ணா: ஸபிதி,லாங்ச பீ,தா: 
கே௱ரேஷு ௪ வ்யாதி,ஷு வர்த்தமாநா: | 
ஸங்கீர்த்ய ஈரராயணமப்‌,த,மாத்ரம்‌ 
விமுக்தது,க்களஸ்‌ ஸுஇ,நோ ப,வந்தி?? 

[தாபத்ரயங்களால்‌ பயந்தவர்களும்‌, கோரமான வியாதி 
களால்‌ பீடிக்கப்பட்ட வர்களும்‌ நாராயணாப்தத்தை மட்டும்‌ 
சொன்னாலும்‌ அக்கம்‌ நீங்கி ஸுகமுடையவர்களா கிறார்கள்‌. ] 
“ஆபந்நாநாம்‌ பரா க,தி:” 

[ஆபத்தடைந்சவர்க்கு மேலான கதியாயிருப்பவன்‌ நாரா 
யணனே] முதலானவிடங்களில்‌ பேராபத்தையடைந்தவர்‌ 
கள்‌ பகவான்‌ விஷ்ணுவை நினைக்கவேணும்‌ என்று பெரி 
யோர்கள்‌ பேசியிருப்பகை நினைத்து. பரமபுருஷனைத்‌ 
திக்க முற்பட்டு, அதில்‌ தானாகச்‌ சில வார்த்தைகளைச்‌ 
சொல்லித்‌ அதிப்பதைக்காட்டிலும்‌. அபெளருஷேயமான 
மீவதவாக்குகளைக்கொண்டு துதிப்பதே சிறந்ததாகையாலே, 
தன்‌ தபோ மஹிமையாலே இந்த மந்திரங்களை ஸாக்ஷாத்‌ 
கரித்து பகவானைத்‌ துதிசக்கறான்‌ என்று கூறுவர்‌. அந்த 
யாகத்திற்கு ஹோதாவாக வந்திருந்த வீங்வாமித்ரரை 
சரணமடைந்து அவரிடமிருந்து இந்த மந்திரங்களை உப 
கதேசம்பெற்றுத்‌ ததிக்கறோன்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது, 
இப்படித்‌ 58.55 பசுடந்தத்திலிறார்து தேவர்களால்‌ 
விடுவிக்கப்பட்டு, விங்வாமித்ரருக்குப்‌ புத்ரனாகவும்‌ ஆனான்‌ 
என்றும்‌ கூறப்படுகறெது. பஹ்வ்ருசப்ராஹ்மணத்திலும்‌, 
ஸ்ரீபாகவதம்‌ ஒன்பதாவது ஸ்கந்தம்‌ ஏழாவது. பதினாறாவது 
அத்தியாயங்களிலும்‌ இந்ச விருத்தாந்தம்‌ விரிவாக வர்ணிக்‌ 
கப்படுகிறது. ஸ்ரீரராமாயணம்‌ பாலகாண்டம்‌ அறுபத்‌ 
தொன்று. அறுபத்திரண்டு ஆகிய இரண்டு ஸர்க்கங்‌ 
களிலும்‌ இக்‌ கதை சொல்லப்படுகிற து; ஆனால்‌, அவ்‌ 
விடத்தில்‌ சொல்லப்படும்‌ கதைக்கும்‌ மேலே விவரிக்கப்‌ 
பட்ட வீருத்தாந்தத்திற்கும்‌ பல பேதங்களுள்ளன. 
அரசனின்‌ “பெயர்‌ அம்டரீஜன்‌ என்றும்‌, யாகத்தில்‌ பசு 
வானது இந்திரனால்‌ மறைக்கப்பட்ட தனாலேயே, ப்ராயஸ்‌ 
சித்தரூபமாக சுஈச்சேபனை நஈரபசுவாக அம்பரீஷனே விலைக்கு 
வாங்கனான்‌ என்றும்‌ சொல்லப்பட்டிருக்கறத. அங்கு 
வியாக்கொனம்‌ செய்த கோவிந்தராஜர்‌ அம்டரீஷனுக்கே 
ஹரிச்சந்திரன்‌ என்று பெயருள்ளதாகையால்‌ விரோத யில்லை என்று கூறிச்சென்றார்‌. மற்ற பேதங்களைப்பற்றி 
ப்ரஸ்தாவிக்கவேயில்லை அவர்‌. அவைகளைக்‌ கல்ப பேதத்தி 
னலேயோ அல்யது வேறு விதமாகவே பரிஹரித்துக்‌ 
கொள்வது. இணி. மந்திரங்களின்‌ பொருளை விவரிப்போம்‌. 


(வருண )வருணனுக்கு அந்தர்யாமியான பரமபுருஷனே: 
ஸகல தவதைகளுக்கும்‌ அந்தர்யாமியாயிருஃது பலன்‌ களைக்‌ 
கொடுப்பவன்‌ வாஸுதேவனேயாகையால்‌ இங்கு வருண 
சப்தம்‌ வாஸுதேவபர்யந்தம்‌ சொல்லுகிறது. அன்றிக்கே. 
நேரரகவே பகவத்‌ வாசசமாவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
^" @5 53055307 நுஜம்சைவ "= என்று ஸ்ரீ ராமாயணத்தில்‌ 
சச்சின்‌ இர்த்ராநுஜனன பகவானைத்‌ துதித்தான்‌ 
என்று சொல்லப்பட்ட தன்றோ. (வருண) எல்லாராலும்‌ 
வரிக்கத்தக்க கல்யராணகுணங்களையுடையவனே! என்றும்‌ 
கொள்ளலாம்‌. வரணன்‌ என்பது வருணன்‌ என்றாகி 
யிருப்பதாகக்‌ கொண்டு, சேதநாசேதநட்ரடஞ்சங்களுக்கு 
ஆவரணமாயிருப்பவன்‌ என்றும்‌ பொருள்கொள்வர்‌. 
ஸர்வத்ர வஸ்தி பாதகெளகராந்‌ ௬ுணத்‌;தி,. ஸம்பதேனகாாந்‌ 
(15547 &@ வருண: '' [வ எங்கும்‌ வஸிக்கிறான்‌; ௬ பாப 
ஸமூஹங்களை விலக்குகிறான்‌; ௩-செல்வங்களைச்‌ சேர்ப்பிக்‌ 
கிறான்‌; ஆகையால்‌ வருணனாகறான்‌.] என்றும்‌ பொருள்‌ 
கொள்வர்‌. = “" வருணோ வாருணோ வ்ருக்ஷ: '' என்று இது 
பகவம்‌ நாமங்களில்‌ ஒன்றாக ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்‌ 
படிக்கப்பட்டது. (மே) என்னுடைய. (இமம்‌) இந்த. 
( ஹவம்‌ ) ஆஹ்வாநத்தை; ஒஆர்த்திய்டன்‌ கூடியவனாய்‌ 
நான்செய்பும்‌ பப்‌,த,த்தை, -* கமலக! வாஸுதேவ! 
விஷ்ணோ! த,ரணிதராச்யுத ராங்‌க,சக்ரபாணே! " என்றாப்‌ 
போலே செய்யும்‌ ஆர்த்த த்‌,வனியை. (४०० 34) கேட்பாயாக, 
'ம்ருணு' என்றிருக்கவேண்டியது சளந்தஸமாகையாலே 
"७०.85 என்றிருக்கிறது. 

(அத்ய) இப்பொழுதே; இந்த கஷணத்திலேயே; இக்‌ 
கணம்‌ தவறினால்‌ மறு கணத்தில்‌ நான்‌ உயிருடனிருப்பது அரிது; (மாம்‌ ) என்னை: தகப்பனாலும்‌ விடப்பட்டு, 
தகப்பனே சத்ருவாக வெட்டும்படியிடக்கும்‌ என்னை, 
(ம்ருட;,ய) இந்த பந்தத்திலிருந்து விடுவித்து ஸுகப்படுத்து. 
(அத்ய ௪ ம்ருட,ய) சகாரத்தினால்‌ இப்போ க மட்டுயின்‌ றியே 
எக்காலத்திலும்‌ என்னை ஸாுகப்படுத்து என்றோன்‌. 

( த்வாம்‌ ) ஸர்வஜ்ஞனாய்‌. ஸர்வசக்தியாய்‌. ஆச்ரிதர்‌ 
களுடைய ஏர்த்தநா தம்‌ செவிப்பட்டவுடன்‌ அரைகுலையத்‌ 
தலைகுலைய ஓடிவரும்‌ ௮அச்சுதனான உன்னை. ( அவஸ்யு: ) 
உன்னுடைய ரக்ஷ்ணத்தை விரும்பினவனாய்க்‌ கொண்டு. 
பஅவ-ரஷேண' என்று தாது. (ஆசகே ) நேரில்‌ யாசிக்‌ 
கிறேன்‌. “சிகத ` தாதுவானது யாசிப்பதைச்‌ சொல்லு 
கிறது. அன்றிக்கே, (न्क தருப்தெள' என்று தாதுவாகை 
யாலே ஆத்மத்ருப்தியை வேண்டுகிழேன்‌ என்‌ றும்‌ பொருள்‌ 
கொள்வர்‌. யாகபசுவாகக்‌ கட்டப்பட்டிருக்கும்‌ என்னை 
வீடுவிப்பாயாக என்று பாவம்‌. இது கேப்ருத்ருத்வ 
வரணம்‌; இதுவரை முதல்‌ மந்திரம்‌. 

நீ உன்னை ரக்ஷித்துக்கொள்ள விரும்பினால்‌ மாட்டும்‌ 
போருமோ! அதற்காக நீ என்செய்தாய்‌? எனில்‌: (தத்‌ 
த்வா யாமி) என்னை ரக்வித்துக்கொள்வதற்காக நான்‌ 
உன்னை சரணமடைகிறேல்‌.. “நீயே எனக்கு உபாயமாவா 
யாக” என்று உன்‌ கையிலை என்னை ஒப்படைத்த பிறகு 
என்னால்‌ செய்யலாவதண்டோ? என்கை, அன்றிக்கே, 
“தத்‌? என்று இவன்‌ நெஞ்சிலே ஒடும்‌ ஆயுளை நினைக்கிறான்‌. 
(தத்‌ த்வா யாமி) ஆயுளுக்கரக உன்னை யரணமடைகிறேன்‌. 
இத ஆத்மநிக்ேபேம்‌. “தம்‌ த்வா யாபி" என்று கொண்டு 
அப்படிப்பட்ட பகவானாகிய உன்னை அடைகிறேன்‌ ' என்‌ 
றும்‌ பொருள்கொள்வர்‌. (ப்ஸஹ்மணா வந்தமாந:) வேத 
வாக்யங்களால்‌ துதித்துக்கொண்டே உன்னைச்‌ சரணமடை 
தறேன்‌. ( ப்லுஹ்மணா வந்தமாந: ) வேதவாக்யங்களால்‌ 
வணங்கிக்கொண்டு, இத்தால்‌ ஆதுகூல்ய ஸங்கல்பம்‌, ப்ராதிகூல்யவர்ஜரம்‌ ஆகிய இரண்டும்‌ சொல்லப்பட்டன. 
மஹா ०9५८७०४7 ०८९१८, , கார்ப்பண்யமும்‌ - ஆசகே? [யாசிக்‌ 
கிறேன்‌] என்னும்‌ , பதத்திலே அதுஸந்திக்கத்தக்கவை, 
இத்தால்‌ ஆநுவிதமான ஸ்வபாவங்களையுடைய சரண 
வரணம்‌ தன்னால்‌ அநுஷ்டிக்க்ப்பட்டதைக்‌ । காட்டுகறொோன . 
இங்கு. சு௩ச்‌8சபன்‌ ஆயுளையே முக்கிய பலனாகப்‌ பிரார்த்‌ 
திக்கறொனாக லும்‌, இகை அதுஸட்திக்கும்‌ முழுக்ஷுக்கள்‌ பகவக்‌ கைங்கர்யத்கையமேயே முக்கியபலனாகக்‌ கொள்ளக்கடவர்கள்‌. 

(தத்‌ ஆமாஸ்தே ५,8.21 804 ஹவிர்ப்பி, ) நான்‌ 
விரும்பும்‌ ஆயுளையே இந்த யாகத்திற்கு யஜமானனாஇறெ 
ஹரிச்சந்திரன்‌ என்‌ னை ஹவிஸ்ஸாகக்கொண்டு பெற வீரும்பு 
கிறான்‌. அகாரவது: தன்‌ பிள்ளையின்‌ ஆயுளைப்‌ பெறு விரும்பு 
கிறான்‌. ( ததளமமாஸ்தே ) இந்த யாகத்தை என்னை ஹவீஸ்‌ 
ஸாகக்கெொண்டு முடித்துப்‌ பலன்பெற வீரும்புகிறான்‌ என்‌ 
அம்‌ பொருள்‌ கொள்வர்‌. (வருண) ஆபத்துக்காலங்களில்‌ 
மரணமாக வரிக்கத்தகுந்த பகவானே! சரணமடைந்த 
காகாஸ-ரனையும்‌ ரக்தித்தவனாயிற்றே நீ. 


“ஸக்ருதே,வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே | 
அபயம்‌ ஸர்வபூ,தேப்‌,யோ த;தளம்யேதத்‌, வ்ரதம்‌ மம॥'' 


[ஓரு தடவை சரணமடைந்தபன்‌ பொருட்டும்‌, நான்‌ 
உன்னுடையவன்‌ ` என்று யா சிப்பவன்‌ பொருட்டும்‌. ஸர்வ 
பூகங்களிடமிருந்தும்‌ நான்‌ அபயமளிக்‌இ3றன்‌. இது என்‌ விரதம்‌.] என்பவனாயிற்றே நீ. (இஹ) நரன்‌ வெட்டப்‌ 
படவிருக்கும்‌ இவ்விடத்திலேயே (பேதி) என்னுடைய 
பிரார்‌த்தனேயை அங்கேரித்தருளவேணும்‌. ( இஹ) யஜமான 
னுக்கு விருத்தமாக நான்‌ பிரார்த்திக்கும்படியான இப்‌ 
விஷயத்தில்‌.  ( அஹேடஹாந;: ) கோடங்கொள்ளாமல்‌. ( பேதி, ) என்னுடைய பிரார்‌த்தனையே அறிர்துகொள்‌. 
" (1854 " என்னும்‌ காதுவீன்மேல்‌ சரந்தஸமான ரூபம்‌. 
(பேதி) நீ நினைக்கிலேோ கொடிய வினைபோம்‌ என்கிறான்‌. 

௮ந௩ா திகாலமாக நான்‌ செய்து வந்த பாபங்களை நினைத்துக்‌ 
கோபங்கொண்டு 'க்விபாமி' :ந க்ஷமாமி' என்னும்‌ ஸங்கல்‌ 
பங்களைச்‌ செய்யாமல்‌. பாரணாகதனான' என்‌ விஷயத்தில்‌ 
*ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி'என னும்‌ ஸங்கல்பத்தைச்‌ 
செய்‌ என்கிறான்‌. 
“நீ கேட்பது மிக அழகாயிருக்கிறது; உன்னைப்‌ பசு 
வாகக்கொண்டு பலனை அடைய விரும்பும்‌ யஜமானனை : 
நான்‌ தஇிருப்திசெய்வதா ? அல்லது உனக்கு அயுளைக்‌ 
கொடுத்து உன்னைமட்டும்‌ த்ருப்தி செய்வதா? '' என்று 
பகவத்பிப்ராயமாக. சொல்லுகிறான்‌; (உரும்ம்ஸ) பெரிய, 
ஒீர்த்தியை உடையவனே! ஃரிபூணாமபி வத்ஸஹல: '' [எதிரி 
களிடத்திலும்‌ வாத்ஸல்யத்தையுடையவன்‌ ] என்று புகழ்‌ 
பெற்ற அ௩ந்தகீர்த்தியான நீ, அதுகூலனாய்‌. சரணமடைக்க 
என்னை உபேக்ஷிக்லாமோ? ( உருமம்ஸ ) * பஹாுஸ்துத ` 
என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. பலராலும்‌ துதிக்கப்படு 
பவனே! 'விஷ்ணுருருக,ூயோ நஈமஸ்ய:'' என்‌ று வேதமும்‌ 
0०१० ०9.2.75 றோ. | 


“ஓதுவார்‌ ஒத்தெல்லாம்‌ எவ்வுலகத்‌ தெவ்வெவையும்‌ 
சாதுவாய்‌ நின்புகழின்‌ தகையல்லால்‌ பிறிதில்லை ` -என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அருளினார்‌. 

(௩: ஆயு: ) ஒரு அபராதமும்‌ செய்யாதவனாய்‌, இரந்த 
யூபஸ்தம்பத திலே கட்டப்பட்டிருப்பவஜய்‌. உன்னை சரண 
மடைந்தவனன।ன 'என்னுடைய ஆயுளையும்‌. என்னை விலை 
கொடுத்து வாங்கிய ராஜபுக்ரனுடைய ஆயுளையும்‌. யாகம்‌ 
செய்பவனா।ன ஹரிச்சந்திரனுடைய । ஆயளையும்‌. (மா 
ப்ரமோஷ்‌: ) நீ அபஹரிக்காது அருளவேனும்‌, =.“ அஹம்‌ 
ஹி ஸர்வயஜ்ஞாநாம்‌ பேக்தா ௪ ப்ரபு,ரேவச '' [நானே 
எல்லா யஜ்ஞங்களையும்‌ புஜிப்பவனாகவும்‌. அவற்றுக்கு 
ஸ்வாமியாகவுமாகிறழேன்‌ .] என்னும்‌ நீ மனம்‌ வைத்தால்‌ யாகத்தையும்‌ ஸடலமாக்கி எனக்கும்‌ ஆயுளை அருளமுடியும்‌ 
என்கை. (௩: ஆபு: மா ப்ரமோவீ;:) என்றவிடத்திலுள்ள 
"९5" என்னும்‌ பன்பையைச்‌ சாந்தஸமாகக்கொண்டு என்‌ 
னுடைய ஆயுளை நாசம்‌ செய்யா8த' என்றும்‌ பொருள்‌. 
கொள்வர்‌. இதுவரையில்‌ இரண்டாவது (05.600. 

ஆக. முதல்‌ இரண்டு மந்திரங்களால்‌ மேலான ஆர்த்தி 
யுடன்‌ பகவானை சரணம்‌ புகுந்கபடியைப்‌ பேசிற்று. இனி 
அடுத்துள்ள மந்திரங்களால்‌ நான்‌ செய்யும்‌ பகவதபசாரம்‌, 
பரகவதாபசாரம்‌, அஸஹ்யாபளாரம்‌ என்னும்‌ மூவகை 
அபசாரங்களையும்‌ க்ஷமித்தருளவேண்டும்‌' என்று பிரார்த்‌ 
திக்கறான்‌. சரணாகதிகத்யத்தில்‌ ஐந்தாவது குர்ணையில்‌ 
^" அநந்யரரரணஸ்‌ த்வத்‌ பாத;ரவிந்தயுகனம்‌ ராரணமஹம்‌ 
ப்ரபத்‌,யே '' என்று சரணம்புக்குப்‌ பத்தாவது சூர்ணையில்‌. 
“ மநோவாக்காயை: அநாதி,காலப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய 
கரண கருத்யாகரண பகவதயசார பளகவதாபசார 
அஸஹ்யாபசாரரூப' நாநாவித, அநந்தாபசாராக்‌ ஆரப்,த, 
கார்யாந்‌ அநாரப்‌,த, கார்யாந்‌ க்ருதாந்‌ க்ரியமாணாந்‌ கரிஷ்ய 
மாணாம்மங்ச ஸர்வாக்‌ அமோஷத: க்ூஷமஸ்வ” [மனம்‌, மொழி, 
०८०५५ என்னும்‌ மூன்‌ று உறுப்புக்களாலும்‌. அநாதிகாலமாக 
விளைந்த அளவிறந்த செய்யத்தகாத காநியங்களைச்‌ செய்‌ 
வதும்‌, செய்யவேண்டிய காரியங்களைச்‌ செய்யாதொழிவ 
தம்‌, எம்பெருமான விஷயத்திலே அபசாரப்படுவதும்‌, 
அவனடியார்கள திறத்தில்‌ அபசாரப்படுவதும்‌. பொறுக்க 
வொண்ணாதபடு அடசாரப்டடுவதும்‌. பலங்‌ கொடுக்க 
ஆரம்பித்தவையும்‌ பலங்கொடுக்க' ஆரம்பிக்காதவையும்‌, 
செய்கவையும்‌. செய்கன்றவையும்‌. ` செய்யப்போகின்ற 
வையுமாக இப்படிப்‌ பலவடைப்பட்டிருக்கும்‌' 
பாபகருமங்கள்‌ எல்லாவற்றையும்‌ முழுவதும்‌ க்ஷமித்தருள 
வேண்டும்‌.] என்று பிரார்த்திப்பதன மூலம்‌ பகவான்‌ 
பாஷ்யகாரர்‌ இவ்வேதார்த்கநத்கை அநுஷ்டித்தார்‌. அதில்‌ 
அடுத்த மந்திரத்தில்‌ அதிக்ரூரமான அஸஹ்யாபசார்த்தை 
க்ஷ்மிக்கவேண்டும்‌ என்கிமது. அஸஹ்யாபசாரமாவ து: 
பகவத்‌ பாகவசவீஷயகத் தில்‌ நிஷ்காரணமாக வைரம்‌ பூண்டு 
பகவத்பாகவத கைங்கர்யங்களை அழிக்க, 
(ஹே கேவ) வாஸாதேவனே! கேவசப்தார்த்தம்‌ 
முன்னமே விவரிக்கப்பட்டது. ( வருண ) அனைவராலும்‌ 
ஆதரிக்கத்தகுந்தவனே! (தே வ்ரதம்‌ ) உன்‌ விஜயமாக 
உன்னடியார்‌ செய்யும்‌ கைங்கர்யங்களாகிற கர்மா திகளை. 
“மத்கர்மக்ருத்‌ மத்பரம:'' - மத்‌,யாஜீ மாம்‌ நமஸ்குரு ” முத 
லானவீடங்களில்‌ சொல்லப்பட்ட உன்‌ கைங்கரியரூபமான 
கர்மங்களை. (சித்‌ ஹி) சேதனராயிருக்குமவர்களன்‌ றோ 
நாங்கள்‌. அறிவுடைமைக்கு அடையாளம்‌ உன்‌ கைங்கரியங்‌ 
களிலே அந்வயிப்பதேயாயிருக்க அறிவுகேடர்‌ செய்யும்‌ 
காரியத்தைச்‌ செய்தேனன்றோே எனறு தன்னை வெறுக்‌ 
கிறான்‌. சித்‌ ஹி' என்னும்‌ பதங்கள்‌ பாதபூரணத்திற்‌ 
காகவுள்ளன என்றும்‌ உரைப்பர்‌. (விர யத) நாய்‌. 
பன்றி முதலான ஜந்துக்களைப்போல்‌. அறிவற்றவர்களான 
ஸம்ஸாரி சேகனர்களைப்போல்‌ என்றும்‌ பொருள்கொள்ள 
லாம்‌. =" விமந்தீதி விம: '' [(ஸுக துக்கங்களை )-அ.நுபவிக்‌ 
கறார்களாகையால்‌ £வீட ' எனப்படுகிறார்கள்‌.] என்றெ 
வ்யுத்பத்தியின்‌ படி ஸம்ஸாரிகளும்‌ அறிவற்ற ஐந்துக்களும்‌ 
விட்சப்தவாச்யராகன்‌ றனர்‌. ( சித்‌ ஹி விலமேோ யத ) 
அறிவுடைய சேதனராயிருந்தும்‌ அறிவற்ற ஜந்துக்களைப்‌ 
போலே நடந்தகொண்டேோம்‌. “ஜ்ஞரநேரு ஹீந: பரமராபி,ஸ்‌ 
ஸமா: [ஞானமற்றவன்‌ பிராணிகளுக்கு ஸமானமான 
வன்‌] என்னும்‌ நிலையை அடைந்தோம்‌. ( த்‌,யவித்‌,யவி) 
தினந்தோறும்‌. (யத்தே வ்ரதம்‌ ப்ரமிநீமஸி) உன்‌ விஜய 
மான கைங்கரியங்களாகிற வ்ரதங்களே மிகவும்‌ நாசம்‌ 
செய்கிறோமோ. “மீஞ்‌ ஹிம்ஸாயாம்‌ ˆ என்னும்‌ தாதுவி 
லிருந்து உண்டானது. “ப்ர என்னும்‌ உபஸர்க்கம்‌ -மிநீமஸி” 
என்னும்‌ வினைச்சொல்லோடு சேருறெது. இங்கு நிகழ்‌ 
காலத்தில்‌ நாசம்செய்றெதைச்‌ சொன்னது “க்ருதாந்‌ க்ரிய மாணாந்‌ கரிஷ்யமாணாந்்‌'' என்று சொல்லப்பட்ட முக்காலங்‌ 
களிலும்‌ செய்க  அஸஹ்யாபசாரங்களைக்‌ குறித்து 
நிற்கிறது. (ப்ர பிநிமஸி) அதிகமரக நாசம்‌ செய்‌ 
கிறோம்‌. நாங்கள்‌ பகவத்‌ கைங்கரியங்களைச்‌ செய்யாம 
வீருப்பதோடன்றியில்‌ பிறரையும்‌ அவற்றைச்‌ செய்ய 
வொட்டாமல்‌ அழிக்கிறோம்‌. இதுவன்றோ அஸஹ்யாப 
சாரத்தின்‌ எல்லைநிலம்‌. ஹிரண்ய ரரவணாதிகளும்‌ இவ்‌ 
வபசாரத்தைச்‌ செய்ததாலேயன்றோ பகவானுடைய கோபத்‌ 
தற்கு இலக்கானார்கள்‌. (யத்‌ தே வ்ரதம்‌ பீர மிநீமஸி.... 
மா ஈஸ்‌ குஸ்மாதேோஸோ கேவ ரீரிஷ;] யாதொரு 
காரணத்தினால்‌ உன்‌ விஷயமான கைங்கர்யத்தை நாம்‌ 
மிகவும்‌ அழித்தோமேோ அந்தப்‌ பாபத்கைக்‌ கண்டு நீ 
எங்களைக்‌ கோபிக்கவேண்டாம்‌ என்று கூட்டிப்‌ பொருள்‌ 
கொள்வது. “மீநீமஸி த்‌,யவித்‌,யவி” என்றதுடன்‌ சு௩ச்சேப 
ருடைய மூன்றாவது மந்திரம்‌ முடிகிறது. 


வஸிட்டருடையதான அடுத்த மந்திரத்தில்‌ பாகவதாப 
சாரங்களை கஷயிக்கவேண்டுமென் று பிீரார்த்திக்கப்படுகிற து. 
பாகவதாபசாரம்‌ அதிக்ரூரமானது என்பது “ஒரோ அவ 
தாரங்களில்‌ செய்த ஆனைத்தொழில்களெல்லாம்‌ ஒரோ 
பாகவதாபசாரம்‌ பண்ணின பலம்‌ அநுபவிப்பிக்கைக்கரக?' 
என்னும்‌ ஈஞ்சீயர்‌ வார்த்சையிலிருந்து விளங்குகிறது. 
“நல்லடிக்காலத்தில்‌ ஈம்‌ ஆசார்யர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைத்‌ 
தங்களோபாதி ப்ரக்ருதிமான்‌ களாக நினைத்திருக்கும்‌ புல்‌ 
விமையின்‌ றிக்கேயாயிற்று இருப்பது. 'திருவுடைமன்னர்‌' 
*செழுமா மணிகள்‌” -நிலத்தேவர்‌' -தெள்ளியார்‌' பெருமக்கள்‌ ` 
பெருந்தவத்தர்‌' :உருவுடையாரிளையர்ர்‌' ` -ஒத்துவல்லார்‌' 
“தக்கார்‌' “மிக்கார்‌' 'வேதும்‌ வல்லார்‌ 'வேதவிமலர்‌ ழு 
மாமனிசர்‌' “எம்பிரானறன சின்னங்கள&்‌!' என்று நம்‌ குல 
நீரதரான ஒஅம்வார்கள்‌ ஸ்ரீ வைணவர்களுக்கு இப்படிக்‌ 
திருநாமம்‌ சாற்றுகையாலே, கேவலம்‌ தன்‌ னோடொக்க ஒரு 
மனுஷயர்‌ என்று ஸ்்ீவைஷ்ணவர்களை நினைத்‌தருக்கை பாக 
வகாபசாரம்‌'' என்று மாணிக்கமா லையிலே. பெரியவாச்சான்‌ 
பீள்ளை பாகவதாபசாரத்தின்‌ லக்ஷண த்தை அருளிச்செய்தது 
இங்கு அதுஸந்திக்கத்தக்கது. . இருள்‌ தரு மாஞாலம்‌” 
*கொடுவுலகம்‌' என்‌ று நிந்திக்கப்படும்‌ இவ்வுலகத்‌ திலிறாக்கும்‌ 
வரையில்‌ இம்முவகை அபசாரங்களும்‌ விடவொண்ணாமல்‌ 
நேரிடுமாகையால்‌ அவற்றை க்ஷமிக்கவேண்டும்‌ என்று 
பிரார்த்தனை செய்யப்படுகிற து. 


(வருண) வரிக்கத்தகுந்த வாஸுதேஉனே ! (கஞ்ச) 
மேலும்‌, மேலே சொல்லப்பட்ட பாபத்தைக்‌ காட்டிலும்‌ 
ீவறானது இது என்று உணர்த்தப்படுகிறது. . (யத்‌) 
யாதொரு காரணத்தினால்‌. ( யத்கஞ்ச ) சிறிகாகவோ 
பெரிதாகவே உள்ள ௮பசாரங்கள்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 
(தைவ்யே ஜே) தகேவனாற உன்னுடைய அடியார்கள்‌ 
விஷயத்தில்‌. -ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌” [ஞானியானவன்‌ 
எனக்கே ஆக்மா வாயிறாப்பவன்‌ என்பது என்‌ சித்தாந்தம்‌. ] 
“மம ப்ராணா ஹி பாண்ட,வா:” [பாண்டவர்கள்‌ எனக்கு 
உயிரன்றோ] என்று நீயே அருளிச்செய்தபடி ஏனக்கு உயிர்‌ 
நிலையாயிருக்கும்‌ பாகவதர்கள்‌ விஜயத்தில்‌. (கைவ்யே 
ஐநே) “மத்‌, ப,க்த ஜந வாத்ஸல்யம்‌ '' “ந மே பக்த: 
ப்ரணங்யதி” என்று. உன்னால்‌ . அபீமானிக்கப்பட்டவர்‌ 
களன்றோ இவர்கள்‌. (யத்‌ (2 55८2 அபி,த்‌ரோஹும்‌ சராமஸி) 
யாதொரு பாபத்தினால்‌ தூண்டப்பட்டு இந்த அபசாரங்‌ 
களைச்‌ செய்‌ தமனோ. (அபி,க்‌,ரோஹும்‌) எல்லா விகத்திலும்‌ 
த்ரோஹத்தை. அதாவது: மனோவாக்காயங்களாகிற முக்‌ 
கரணங்களாலும்‌ செய்யப்படும்‌ அபசாரங்களை. ( இச;ம்‌ 
அபி,ச;ரோஹம்‌) - க்ஷமயா ப்ருதி,வீ ஸம: '' என்று புகழப்‌ 
பட்ட உன்னாலும்‌ பொறுக்கவொண்ணாததான இந்த 
அபசாரத்தை, “கோபஸ்ய வமுமேயிவார்‌” என்கிறபடியே 
உன்னையும்‌ கோபவசப்படுத்தும்‌ அபசார்த்கை, 

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | 
பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |" 

[பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய  பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ, 
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.] என்‌ தல்லவேர பகவான்‌ அருளிச்செய்த பாசுரம்‌. 

“அமரவோர்‌ அங்கமாறும்‌ வேதமோர்‌ நான்கும்‌ ஓதி 
தமர்களில்‌ தலைவராய சாதி அந்தணர்களேலும்‌ 
நுமர்களைப்‌ பழிப்பராகில்‌ நொடிப்பதோரள வில்‌ ஆங்கே 
அவர்கள்‌ தாம்‌ புல்யர்போலும்‌ அரங்கமா ஈகருளானே” 
என்று இவ்வபசாரத்தின்‌ கொடுமையைத்‌ தொண்டரடிப்‌ 
பொடிகளும்‌ அருளிச்செய்தார்‌. இப்படிப்பட்ட அப 
சாரத்கை ஏன்‌ செய்தாய்‌?! என்று பகவான்‌ கேட்கச்‌ 
சொல்லுகிறான்‌: ( மதுஷ்யாங்‌ சராமஸி ) பொய்யையே 
இயற்கையாக உடைய மனிதர்களாகையாலே செய்தோம்‌. 
“ ஸத்யஸம்ஹிதா வை தேவா அந்ருதஸம்ஹிதா வை 
மநுஷ்யா:”' [ஸத்யத்தோடு கூடியவர்கள்‌ கேவர்கள்‌; 
பொய்யுடன்‌  பொரும்தியிருப்பவர்கள்‌ மனுஷ்யர்கள்‌. | 
என்று பஹ்வ்ருசப்‌,ரா ஹ்மணத்திலும்‌, 


“மெய்யெல்லாம்‌ போகவிட்டு விரிகுழலாரில்‌ பட்டுப்‌ 
பொய்யெல்லாம்‌ பொதிந்துகொண்ட போட்கனேன்‌ வந்துகின்றேன்‌ 
அய்யனே। அரங்கனே! உன்‌ அருளென்னும்‌ ஆசைதள்னால்‌ 
பொய்யனேன்‌ வந்து நின்றேன்‌ பொய்யனேன்‌  பொய்யனேனே '* 
என்‌ அதொண்டரடிப்பொடியாழ்வாரா லும்‌ சொல்லப்பட்ட 
தன்றோ. (மநுஷ்யாஙஸ்‌ சராமஸி) ஓஐம்புலன்களுக்கு வசப்‌ 
பட்ட வராகையாலே இவ்வபசாரங்களைச்‌: செய்தோம்‌. 

“விண்ணுளார்‌ பெருமாற்கடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலனிவை 
மண்ணுள்‌ என்னைப்பெற்றால்‌ என்செய்யா மற்று நீயும்‌ விட்டால்‌” 
என்றோன்‌. “மாஸ்‌ தஸ்மாத்‌'' என்றதடன்‌ கூட்டிப்‌ 
பொருள்‌ கொள்வது. ஆக, இத்தால்‌ பாகவதா பசாரங்களை 
க்ஷ்மிக்கவேண்டும்‌ என்றும்‌ பிரார்த்திக்கப்பட்டதாயிற்று. 
அடுத்தபடியாக, 
| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | 
ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || 
[ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. 
அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை 
மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ 
னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] 
“மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌'' 
[ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ] 


“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | 

® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌' 
[ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி 
நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான 
கதியையும்‌ அடைவதில்லை. ] 


“தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| 

க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” 

[என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, 
மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான 
அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ 
(ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.] என்று ஸ்ரீம்‌ நாராயண 
னாலேயே நிந்திக்கப்பட்டதான பகவதபசா ரங்களுக்கு கூமை 
கொள்ளுகிறான்‌. இந்த பகவதபசாரமும்‌. பாகவதாபசார மும்‌ ஒன்றையொன்று ஒழிந்திராது, “பகவதபசாரம்‌ 
பண்ணுகையாவது: எம்பெருமானுடைய நற்சிவனன 
ஸ்ரீவைஷ்ணவர்கள திறத்துப்பண்ணும்‌ அபசாரம்‌. 
பாகவாதாபசாரம்‌ பண்ணுகையாவது: ஸ்ரீவைஸ்ணவர்‌ 
களுடைய  உயிர்நபில்யான எம்பெருமான்‌ திறத்துப்‌, 
பண்ணுமபசாரம்‌. என்று மாணிக்கமாலையிலே டெரிய 
வாச்சான்பிள்ளை அருளியதை அநுஸந்திப்பது. 


“வரத்தால்‌ வலிரினைந்து மரதவ! நின்‌ பாதம்‌ 

சிரத்தால்‌ வணங்கானாம்‌ என்றே? -— உரத்தினால்‌ 

ஈரரியாய்‌ நேர்‌ வலியோன்‌ ஆய இரணியனை 

ஒரரியாய்‌ ரீயிடந்த தூன்‌'' 

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ 

த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | 

வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ 

விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1" 

[சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து 
செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ 
விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ 
புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ 
செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே. 


“உன்னைச்‌ சிந்தையினால்‌ இகழ்ந்த இரணியன்‌ 

அகல்மார்வம்‌ கண்டவென்‌ முன்னைக்‌ கோளரியே!'' 

என்று பகவதபசாரம்‌ செய்தவனாசவும்‌ சொஃல்லட்படுகன்றா 
னன்றோ. இப்படிப்பட்ட பகவதபசாரத்தை க்ஷூமிக்கவேண்‌ 
டும்‌ என்கிறது. (அசிந்தி) அறியாமையினால்‌, இவன்‌ 
அறிந்து செய்யும்‌ பகவதபசாரங்களுமில்ல்யோவெனில்‌: 
இவன்‌ அறிவுடையனாயிருந்‌ கானாகில்‌ டகவதபசாரம்‌ செய்ய 
ப்ரஸக்‌ தியேயில்லையே, பகவானுடைய நிருபாதி,க பேவித்‌ 
வத்தையும்‌ தனக்கு இயற்கையாய்‌, நித்யமாயுள்ள மேஷத்‌ 
வத்தையும்‌ அறியாமையாலேயன்றோ இவன்‌ அவனிடத்தில்‌ 
அபசாரப்படுறொன்‌. (சித்தி) - யச்சித்‌தி,'' என்கிற 
படியே ஸ்வரூபத்தில்‌ சித்தாயிருந்தபோதிலும்‌. ஈடத்தை 
யில்‌ அசித்கைப்போலிருந் சன்‌. (அசத்தி)  அசித்யா " 
என்றபடி. அஜ்ஞானத்தினலே என்று பொருள்‌. “இமத 
ஸுஃஷ்டுதீ இத்யாதி,வத்‌ த்ருத்யாயா: பூர்வஸவர்ண தீர்க்க,” 
| "8,0.28: 'ஸாஷ்டுத” என்‌ றவிடங்களிற்போல்‌ மூன்றாம்‌ 
வேற்றுமைக்கு பதிலாக முன்னுள்ள எழுத்து நீண்டிருக்‌ 
கிறது.] என்பர்‌ வரருசி. (அசித்தி) -தெரியேன்‌ பால 
கனாய்ப்‌ பல தீமைகள்‌ செய்துவீட்டேன்‌ " என்கிறான்‌. 
(தவ தர்மா) உன்‌ விஜயமான யஜ்ஞம்‌ முதலிய தர்மங்களை. 
யஜ்ஞோேந யஜ்ஞமயஜந்த தேவாஸ்‌ தாநி தர்மாணி ப்ரதஹாந்‌ 
யாஸந்‌”” என்று வேதத்திலும்‌ யஜ்ஞாதிகள்‌ தர்மங்களாகச்‌ 
சொல்லப்பட்டனவன்றோ. (தவ தர்மா) உன்னை உகப்பிக்‌ கும்‌ தர்மங்களை. 
“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | 
விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” 
'[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம 
புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ 
பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ 
தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ 
தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ 
த,நேக  தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:" 
, [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ 
மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று 
சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம 
௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌'' [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ 
| ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | 
என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) 
தர்மாணி' என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ 
பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ 
“ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: `` என்றவீடத்திற்போலே 
“யோபயதி' என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ 
பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! 
(தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந 
ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி' தாது 
ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி 
கர்த்தாரம்‌ இதி ஏஈ:'' [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற 
தாகையால்‌ "कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி, 


“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | 
தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” 

[ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி 
தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட 
கர்மமும்‌ செய்தவனை அடைறெது ] என்று சொல்லப்பட்ட 
தன்றோ. (மா ரீரிஷ:) ஹிம்ஸிக்கவேண்டாம்‌, “௩ க்ஷமாமி” 
“க்ஷிபாமி” “மம த்‌,ரோஹீ” என்று சறியருளவேண்டாம்‌. 
(மா ந; 0 0 உன்னிடம்‌ ந்யஸ்தபரர்களான எங்களை 
நீய © 669 தால்‌ எங்களுக்கு வேறுகதிம்யது? இத்துடன்‌ 
ஈரனகாவது மந்திரம்‌ முடிறெது, 


அத்ரியினுடையதான அடுத்த மந்திரத்தில்‌ பிறருடைய 
சேர்க்கையினால்‌ உண்டாக்கப்பட்டவைகளும்‌ புக்திபூர்வக 
மாகச்‌ செய்யப்பட்டவையுமான பாபங்களிலிருந்து விடு 
விக்கவேண்டுமென்று பிரார்த்திக்றோன்‌. (திவி) சொல்‌ 
கட்டான்‌ முகலிய வினையாட்டுக்களில்‌.. * இிவு-க்ரீடரா ” 
என்று தாத. (கிகவாஸ: ए) தஷ்டர்களைப்போல்‌. கதவ 
மென்னும்‌ சொல்‌ வஞ்சனையைக்‌ குறிக்குமானகயால்‌ வஞ்சகர்‌ 
கள்‌ என்றும்‌ பொருள்‌. “இம்‌ தவ அஸ்தீதி வர்த்தமாகா?” 
[எனக்குக்‌ தருவதற்கு உனனிடம்‌ என்ன உள்ள து2 என்றே 
இருக்குமவர்கள்‌ கிகவர்கள்‌ ] என்றும்‌ பொருள்கொள்வர்‌. 
ந என்னும்‌ பதம்‌ 'போல' என்னும்‌ பொருளையுடையது. 
“ விப்ரம்‌ ௩ ஜாதவேதஹஸம்‌ ” | அக்னியைப்‌ போலிருக்கும்‌ ப்ராஹ்மணனை.] என்று வேறொரு வாக்யத்திலும்‌ , 5" 
என்னும்‌ பதம்‌ “போல்‌” என்னும்‌ பொருளீல்‌ பிரயோ க்கப்‌ 
பட்டதையும்‌ “தத்ஸாத்‌ருங்யமபாவங்ச ததற்யத்வம்‌ 
ததூல்பதா| அப்ராமாஸ்த்யம்‌ விரோத ,மங்ச ஈஞர்த்தள: ஷட்‌ 
ப்ரூீர்த்திதா:॥'! என்று நிகண்டுவில்‌ ஈகாரத்திற்கு ஸாத்ரு 
ங்யார்த்கத்தைச்‌ சொல்லியிருப்பதையும்‌ நினைப்ப அ, 
(५15570८4: ) யாதொரு பாபத்தை எங்களுக்கு ஓட்டவைத்‌ ८ 
தார்களோ. (தி,வி கதவாஸ: ஈ யத்‌, ரிரிபு:) சொ க்கட்டான்‌ 
முதலிய விளையாட்டுக்களில்‌ ஈடுபட்டிருககும்‌ வஞ்சீனர்ன்‌., 
அவ்வினையாட்டில்‌ சேராமல்‌ அருகிலிருந்து அநுபவிப்பவர்‌ 
“களுடைய பணத்தையும்‌ பிடுங்கக்கொள்வதுபோல்‌, பாபி 
களான சிலர்‌ கங்கள்‌ ஸம்பந்தத்தினால்‌ யாதொரு பாபத்தை 
எங்கள்மேல்‌ ஒட்டவைத்தார்களேோ என்றபடி, (ரிரிபு:) 
"¢ ००५7 0७८५552" என்னும்‌ நியாயத்தாலே *லிலிபு:” 
என்‌ றிருக்கவேண்டியது ரிரிபு:” என்று கிடக்கிறது. : 
ஸம்பந்தப்படுத்தனார்களோ' என்று பொருள்‌, அன்‌ நறிக்கே 
ரிரிபு: என்று சத்துருவைச்‌ சொல்லுவதாகக்கொண்டு 
“சத்துருக்கைப்டோல்‌ வஞ்சகர்களான நாங்கள்‌ யானது 
நிஷித்தமான விளையாட்டுக்களை விளையாடினோமோ அதனால்‌ 
வரும்‌ பாடத்தைப்‌ போக்கடிக்கவேண்டும்‌' எனறு பிரார்த்‌ திப்பதாகவும்‌ கெள்வர்‌. 

(த,வி @ 5 ० 6४. யத்‌, ரிரிபு:) एनं பாபத்தைச்‌ 
சொல்லுவதாகக்‌ கவிகளாலும்‌ பிரயோகிச்கப்பட்டிருக்கை 
யால்‌, நிஷித்தமான விளையாட்டுகளில்‌ ஈடுபட்டிருக்கும்‌ 
வஞ்சகர்கள்‌ யாதொரு பாபத்தை क விஷயத்தில்‌ ie 
தார்களேோ' என்றும்‌ त க்ளக்‌, ४ Hg 
எனப்படும்‌ சச்‌துருவைப்போல்‌ அன்புறுதீதுவதர கையால்‌ 
பாபம்‌ ரேபம்‌ எனப்படுகிறது. “ரிரிபு:" ஸீவ்னும்‌ 
பதம்‌ *பாபத்தைச்‌ செய்தா ¢ & गः 7 க என்‌ a 
டொருள்டடுகிறது. இந்த யோஜஙையில்‌ :௩' என்னும்‌ பதம்‌ பொருளற்றது. 

பிறரால்‌ ஏற்பட்ட பாபத்தைச்‌ சொல்லிற்று கழே. 
தன்னாலேயே அறிந்தும்‌. அறியாமலும்‌ செய்யப்பட்ட 
பாபங்களையும்‌ போக்கடிக்கச்‌ சொல்லுகிறது அடுத்தபடி 
யாக: (யத்‌, வா) யாதொரு பாபத்தை, வா' என்னும்‌ 
பதம்‌ 'ச'காரத்தின்‌ பொருளையுடையதாய்‌. மேலே சொன்ன 
பாபத்துடன்‌ ஸமுச்சயிக்கிறது (கூட்டுகிற து). வாகா" 
என்றது பாதயூரணம்‌ என்றுமாம்‌. (ஸத்யம்‌) யாதொரு 
பாபம்‌ புத்தியூர்வகமாகச்‌ செய்யப்பட்டதோ. உத” 
என்னும்‌ பதம்‌ ப்ரஸித்தியைக்‌ காட்டுகிறது. (யத்‌ ௩ வித்‌,ம) 
५/7 ०.50 பாபத்தை நாங்கள அறியாமல்‌ செய்தோமோ. 
பால்யத்திலேயாவ து. வேறு ஜம்மங்களிலேயா வது செய்யப்‌ 
பட்டதாகையாலே யாவை சில பாபங்களை நாங்கள்‌ அறி 
யோமோ. முன்‌ சொல்லப்பட்டவை ௮திக்ரூரபாபங்களான 
அடசாரங்களிற்‌ சேர்ந்தவை. இங்கு சொல்லப்படுவன 
ஸுமாந்ய பாபங்கள்‌. ஆகையால்‌ புநருக்தியில்லை (ஸச்யம்‌ 
८५5 60.530 கதவாஸ: ௩ யத்‌, ரிரிபு:) ஸத்யபப்தவாச்யனான 
எந்த அ௩ர்தனை நாங்கள்‌ அறியவில்லையோ, அகனாலேயே 
சோரர்களைபட்‌பரல்‌ யாதொரு பாபத்தைச்‌ செய்தோமோ 
என்றும்‌ பொருள்கொள்வர்‌. யத்‌, வாக” என்பது இந்த 
யோஜனையில்‌ பாதபூரணம்‌. 


(ஸர்வா தா:) அந்த எல்லாப்‌ பாபங்களையும்‌. அவை 
எப்படி இருக்கின்‌ றனவெனில்‌: (திரா இவ) மிதிலாஙி 
இவ” என்றிருக்கவேண்டிய தன்‌ சாந்கஸரூபம்‌. உன்னை 
சரணமடைகந்த கணத்திலீருந்து அவை உடைகந்துகடக்‌ 
கின்றன; போவதற்குக்‌ காலத்தை எதிர்பார்த்துக்கொண் 
டி.ருக்கன்றன. “மயைவைதே நிஹதர, பூர்வமேவ ”” [என்‌ 
னால்‌ இவர்கள்‌ முன்பே கொல்லப்பட்டுவீட்டார்கள்‌. ] என்று, 
சொல்லப்பட்ட நிலையை அடைகம்குவீட்டன. “மாடே 
வாப்பெறுவரா மென்‌ றே? ' “வானோ மறிகடலோ மாருதமோ' 
தியகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால்‌ வன்‌ துயரை 
ஆ! ஆ! மருங்கு! “இங்கில்லைபண்டுபோல்‌ வீற்றிருத்தல்‌ 
வல்வினையார்‌ தாம்‌ மீண்டு அடியெடுப்ப தன்றோ அழகு 
என்று முன்‌ பாபங்களைக்‌ கண்டு நடுங்கக்கொண்டிருந்த 
என்னைக்‌ கண்டு அவை நஈடுங்கும்படியான நிலையாயிற்று. 
(விஷய) உடை._ந்துகிடக்கும்‌ அப்‌ பாபங்களை என்னைவீட்டுப்‌ 
பிரிந்து ஓடச்செய்யும்‌. நாட்டிலள்ள பாவமெல்லாம்‌ 
சும்மெனகதே கைவீட்டோடித்‌ தூறுகள்‌ பாய்ந்தனவே " 
“பாவக்காடு தக்‌ கொளீ இ வேகின்றதரல்‌ ' “ இயினில்‌ 
தூசாகும்‌” என்னும்‌ நிலையை அடைவியும்‌. 


“பாபங்களை நீக்கனால்மட்டும்‌ போதுமோ? என்று 
பகவான்‌ கேட்கச்‌ சொல்லுகறொோன்‌: (கேவ வருண அத 
கே ப்ரியாஸ: ஸ்யாம்‌) வரணீயனன வாஸாுதேவனே! 
பாபங்கள்‌ நீங்கனால்மட்டும்‌ போராது. 'இறுகல்‌ இறட்பு' 
-இறப்பதற்கே எண்ணாது' -பெருந்துன்‌ பம்‌' என்று இகழப்‌ 
படும்‌ கைவல்ய மோக்ஷத்தலே எங்களைத்‌ தள்ளாமல்‌, 
உனக்கு இனியவர்களாய்‌. உன்‌ கைங்கர்யமலே தாரக 
போஷகபேோக்யங்களரயிருப்டவர்களாசச்‌ செய்யவேணும்‌. 
(தே ப்ரியாஸ: ஸ்ய! ம) உனக்கு இனியவர்களாகக்கடவோம்‌. 
“உன்றன்‌ திருவுள்ளம்‌ இடர்கெடுந்தோறும்‌ நரங்கள்‌ 
வீயக்க இன்புறுதும்‌”' என்கிற டியே அவனுடைப ப்ரீதி 
யன்றோ இவனுக்குப்‌ புருலார்த்க.பாயிருப்டது. “ப்ரஹர்ஷ 
யிஷ்யாமி' என்று ஞானிகளும்‌ அவனை உகப்பிக்கவன்றோ 
ஆசைப்படுவது. (தே ப்ரியாஸ: ஸ்யாம) -ப்ரியோ ஹி 
ஜ்ஞாநிநோக5த்யர்த்த,ம்‌ அஹம்‌ ஸ ௪ மம ப்ரிய: ” [ஞானிக்கு 
நான்‌ மிகவும்‌ இனியன்‌ ; அவனும்‌ எனக்கு மிகவும்‌ பிரியன்‌. ] 
என்று தேவரே அருளிச்செய்திலீரோ? அதை நான்‌ 
பிரார்த்திப்பதும்‌ மிகையன றோ? என்கிறான்‌. (தே டரியாஸ: 
ஸ்யாம) - ப்ரீயதே ஸததம்‌ ராம: * [ராமன்‌ எப்போதும்‌ 
ப்ரீதியடைறொான்‌.] என்று ஸ்ர்ீராமாயணத்திலு ம, 
“எம்பிராற்கினியவாறே” என்று தொண்டரடிப்பொடிக 
ளாலும்‌ பலங்ருதியில்‌ சொல்லப்பட்ட பகவத்‌ ப்ரீதியைப்‌ பிரார்த்தித்துத்‌ தலைக்கட்டுகிறான்‌. 

ஆக, இம்மந்திரங்களால்‌ 
பகவானை ரக்ஷ்கனாக வரித்து, அவனை ८८ ¢ क्ण ८2 ८/ ऊ (क. 
கன்‌ னுடைய அப்சாரங்களுக்கு அவனிடம்‌ கஷமைகொண்டு. 
பாபஙிவ்ருத்திபூர்வகம்ாரக பகவத்ப்ரீதியான து பிரார்த்திக்கப்‌ பட்டதகாயிற்று. 


இப்டடி உபஸ்தளன ம்‌ செய்தபிறகு,  ஸந்த்யாயை 
நம: `"  ஸாவித்ர்யை நம: '' - களயத்ர்யை ஈம: “ஸரஸ்‌ 
வத்யை நம:' - ஸர்வாப்‌யோ தேவதாப்‌,யோ ஈமோ நம: '' 


(न ००४7 கேவதைகளுக்கும்‌ அந்தர்யாமியான பகவானுக்கு 
நமஸ்காரம்‌] `` காமோ$கார்ஷீத்‌ மரக்யுரகாரஷீத்‌ கமோ நம: 
[காமம்‌ செய்கது; கோபம்‌ செய்தது; (கான செய்யவில்லை; 
( காமக்ரே த, நிர்வா ஹகனான பகவானுக்கு ) நமஸ்காரம்‌. | 
“பூம்யை நம: '' [பூமிமீதுவிக்கு நமஸ்காரம்‌] “ விஷ்ணவே 
810; '' [ னிய: பதியான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்‌.] என்று 
கைகூப்பியவனாய்‌ நான்கு திக்குகளையும்‌ நோக்கி உச்சரித்துக்‌ 
கொண்டு. இரண்டுதடஸவ தன்னைத்‌ தானே ப்ரதக்ஷிணம்‌ 
செய்துகொள்வது. [ தப்பிரகக்ிண நமஸ்கார மந்திரங்கள்‌ 
இடத்திற்டெம்‌ மாறுபடுகிறது. அவரவர்கள்‌ அநுஷ்டானப்‌ 
பழ. செய்துகொள்வது. பின்வரும்‌ ஸ்மீகாத்ரங்களும்‌ அப்‌ 
படியே. ] இங்கு “ஸந்ச்யாயை (5८0; ' முதல னவை அந்தந்த 
தகேவலகைகளுக்கு அந்தர்யாமியான நாராமணனுக்கே வீய 
மாகின்றன. இகஃன்பிறகு. 


“அபிவாத,யே........ த்ரயார்‌ ஷேயப்ர வர ங்வித........ கேத்‌: 
ஸூத்ர: யஜு: एणा ककर 54५1706... एणा (0 நாமா ஹமஸ்மி பே:” 
என்று தங்கள்‌ ப்ரவரம்‌, கோத்ரம்‌. ஸறித்ரம்‌, சாகை, 
சர்மந்‌ (பேயர்‌) ஆயெவற்னைச்‌ சொல்லி ளால்டராங்கமாக, 
தண்டம்போல்‌ பூமியில்‌ விழுந்து ப்ரணாமம செய்யவேண்டி 
யது. இப்படி அபிவாதனம்‌ செய்கபிறகு, கீழேயுள்ள 
பகவத்‌ ஸ்தோத்ரங்களில்‌, அவரவர்கள்‌ ஆசாரத்திற்குத்‌ தக்கவாறு. யதாசக்‌தி அனுஸர்திப்பது. 

ஸங்க,சக்ரக,தளபாணே த்‌,வாரகாநிலயாச்யுத | 
கேரவிந்த, புண்ட ீகாக்ஷ ரக்ஷ மாம்‌ ஸரணுக;,தாம்‌ | 
[ சங்கசக்ரகதைகளைக்‌ கையிலுடையவனே! த்வாரகாவாஸி 
= र { யான அச்யுதனே! கோவிந்தனே! புண்டரீகாக்ஷனே! சரணா 
கதனான என்னை ரக்ஷிப்பாயாக. ] 
 
நமோ ப்‌,ரஹ்மண்ய தேவாய கேப்‌,ராஹ்மணஹிதாய =| 
ஐக,த்‌,தி,தாய க்ருஷ்ணாய கே”விந்த,ய நமோ நம:। 
[ட்ராஹ்மணர்களுக்கு தேவதையும்‌, பசுக்களுக்கும்‌ ப்ராஹ்‌ 
மணர்களுக்கும்‌ ஹிதத்தைச்‌ செய்பவனும்‌, உலகம்‌ முழு 
வதற்கும்‌ நன்மையைச்‌ சிர்திப்பவனுமான கோவிந்தனுக்கு 
“நமஸ்காரம்‌. J 


ப்ராயம்சித்தாந்யமேஷாணி தப:கர்மாத்மகாநி வை| 

யாநி தேஷாமமேஷாணாம்‌ க்ருஷ்ணா நுஸ்மரணம்‌ பரம்‌ |] 
[தபஸ்‌, கர்மம்‌ முதலிய எல்லாப்‌ பிராயச்‌சித்தங்களுள்ளும்‌ 
க்ருஷ்ணனை ஸ்மரிப்பதே மேலானது. ] 


த்‌,யேயஸ்‌ कण ஸவித்ருமண்ட,ல மத்‌,ய வர்த்தீ 
நாராயணஸ்‌ ஸரஸிஜாஸ௩ ஸந்நிவிஷ்ட: | 
கேயூரவார்‌ மகரகுண்ட,லவாம்‌ கிரீடீ 
ஹாரீ ஹிரண்மயவபுர்‌ த்‌,ருதமங்க,சக்ர: | 
[தோள்வளைகள்‌, மகரகுண்டலங்கள்‌, இிரீடம்‌. ஹாரம்‌ 
முதலிய ஆபரணங்களை 'அணிக்கவராய்‌, சங்கசக்ரங்களை 
தரித்தவராய்‌, பொன்போன்‌ ற மேனியராய்‌. பத்மாஸன த்தில்‌ 
எழுந்தருளியிருப்பவராய்‌, ஸுூர்யமண்டலத்தின்‌ நடுவில்‌ 
வீளங்கும்‌ நாராயணர்‌ எப்போதும்‌ தியானிக்க த்தக்கவர்‌. ] 


ஸ்ரீரங்க,மஙக,ளஙிதி,ம்‌ கருணாநிவாஸம்‌: 

ஸ்ரீவேங்கடாத்‌,ரி மிக,ராலயகாளமேக,ம்‌ | 

ஸ்ரீஹஸ்‌இிமைல ஸரிக,ரோஜ்ஜ்வல பாரிஜாதம்‌ 

ஸ்ரீரரம்‌ ஈமாமி மிரஸா யது,பைலதீ,பம்‌ ॥ 
[கருணைக்கோரிருப்பிடமான திருவரங்கத்தின்‌ மங்களச்‌ 
செல்வத்தையும்‌, இருவேங்கடமலையுச்சியில்‌ விளங்கும்‌ 
கார்மேகத்தையும்‌, அத்திரி (காஞ்சி) மேல்‌ விளங்கும்‌ 
பாரிஜாதத்கையும்‌, யதுகிரி (திருநாராயணபுரம்‌) மேல்‌ 
வீளங்கும்‌ விளக்கையும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌. ] 
கரயேந வாசா மநுஸேநத்ளியைர்‌ வா 
புத்‌;த்யாத்மநா வா ப்ரக்ருதேஸ்‌ ஸ்வப,வாத்‌ | 
கரோமி யத்‌, யத்‌ ஸகலம்‌ பரஸ்மை ' 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ॥ : 
வாக்கரயங்களாலும்‌, புத்தியினாலும்‌, ப்ரக்றாதியின்‌ 
கவபாவத்தினால்‌ न ॐ! எதைச்‌ செய்றேனோ அவையெல்லாம்‌ 
பரப்ரஹ்மமான ஸ்ரீமந்நராராயணனுக்கேயென்று ஸமா்ட்பிக்‌ ` ஒழேன்‌. ] 


இம்மாதிரியாக ஸ்தோத்ரங்கை அநுஸந்தித்‌ கு 
கிருஷ்ணார்ப்பணம்‌ செய்து ஸந்த்யாவந்கஈ த்தை முடிப்பது. 
இந்த ஸந்த்யாவந்தனத்தகை 

“நித்யம்‌ காம்யம்‌ பரமபி கதிசித்‌ 

த்வய்யத்‌,யாத்மஸ்வமதிபி,ரமமா: | 
ந்யஸ்யா$ஸங்க,ா வித,த,தி விஹிதம்‌ 
प १०५ ९55१७७97! வித ததி ௩ ௪ தே ॥'' 

[ஸ்ரீரங்கசந்த்ரரே! லெ வீசிஷ்டாதிகாரிகள்‌ ஆத்மஸ்வரூப 
ஜ்ஞானத்தினால்‌ மமகாரமற்றவர்களாய்‌. பஓலஸங்கழமற்‌ மறவர்‌ 
களாய்‌. தேவரீரிடத்தில்‌ கர்த்ருத்வத்தை அதுளந்தித து 
நித்யம்‌, காம்யம்‌, றைமித்திகம்‌ என்னும்‌ விஹிதகர்மங்களை 
அதுஷ்டிக்கிறார்கள்‌: (பலா இ,ச்‌பாகயூர்வகமாக அறுஷ்டிக்‌ 
'கிறார்களாகையாலே) அவர்கள்‌ அதஷ்டிக்கிறார்களுமல்லர்‌. ] 
என்று பட்டர்‌ அருளிய ரீதியிலே கர்மயோ சறிஸ்ட்டரர்களைப்‌ 
போலே பஹாதி,த்யாகச்தடனும்‌, .ப்ரபர்கர்க்கேயுரிய 
உபாயத்வபு,க்‌,தி, த்யாகத்தடனும்‌ (७०.537 ஜ்ஞாகைங்கர்‌ 
யம்‌ என்னும்‌ நினைவுடன்‌ ப்ரபர்ஈர்‌பள்‌  அவங்யம்‌ 
அறுஷ்டிக்கவேண்டும்‌. 

इत्थ कोण्डिन्यान्वयमणिना श्रीश्रीनिवासदारेन। 

सन्ध्यावन्दनभाष्यै लिखितं संयग्विगादयतां सद्धिः॥ 

ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்மன ஸ்தாபகரான 

ஹீரிவாஸய்யங்கார்ஸ்வாமி அருளிய ஸந்த்யாவந்தனபாஷ்யம்‌ முற்றிற்று. 

-----------------------------

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Exclusive blog for Indian history ebooks-

February 25, 2023

Click to access 99999990041605-south-indian-inscriptions-vol-24-srinivasan-p-r-654p-tribes-india-english-1982.pdf

 

https://indianhistorybooks4.wordpress.com/

http://indianhistorybooks.wordpress.com/

http://indianhistorybooks2.wordpress.com/

https://indianhistorybooks3.wordpress.com

https://indianhistorybooks4.wordpress.com

https://indianhistorybooks5.wordpress.com

https://indianhistorybooks7.wordpress.com

https://asiaticsocietybooks.wordpress.com/

https://asiaticsocietybooks2.wordpress.com/

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திருமங்கை ஆழ்வார் வடிவு அழகு சூர்ணிகை –ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

February 25, 2023

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனி மாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும், சதிரான வீரக் கழலும் தஞ்சமான தாளிணையும்,
குந்தி யிட்ட கனணக் காலும் குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய,
நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்,
உருக வைத்த மனமொழித் திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன் முனே
மடி யொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து, ஒன்னலார்
கறை குளித்த வேலணைத்து நின்ற விந்த நிலைமை, என்
கண்ணை விட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.

காதும் சொரி முத்தும் கையும் கதிர் வேலும்,
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீது புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல,
என்னாணை ஓப்பாரில்லையே.

வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க் கலியன் கொண்ட நன் முகமும்
கண்டு களிக்குமென் கண்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்.

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]
ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை
ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான்
வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்
எட்டெழுத்தும் பெற்ற இடம்.

பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது.
திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும்,
ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும்,
எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும்,
வலிய திருத் தோள்களும், வனப்பான மேல் முதுகும்,
குறுகிய இடையும், எழிலார் மாலைகளும்  மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும்,
மறம் செறிந்த கணைக் கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும்  மாமுனிகளின் வர்ணனை.

ஆழ்வார்க்கு
பர காலன்,
கலியன்,
நீலன்,
கலி த்வம்ஶன்,
கவி லோக திவாகரன்,
சதுஷ் கவி
ஶிகா மணி
ஷட் பிரபந்தக் கவி,
கலி வைரி,
நாலு கவிப் பெருமாள்,
திரு நா வீறுடைய பெருமான்,
மங்கையர் கோன்,
அருள் மாரி,
மங்கை வேந்தன்,
ஆலி நாடன்,
அரட்ட முக்கி,
அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
கொற்ற வேந்தன்,
கொற்ற வேல் மங்கை வேந்தன்
என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.

——————–

ஸ்ரீ சைல தயா பாத்திரம் தீ பக்த்யாதி குண ஆர்ணவம் -ஞானக்கடல் குரும் ப்ரகாஸம் செய்து அருளுகிறார்

இதுவோ திருவரசு-இதுவோ திரு மணம் கொல்லை இதுவோ திருவாலி –எட்டு எழுத்தும் பறித்த ஊர்

திருமேனியில் பொதிந்த கல்யாண குணங்களை -படி எடுத்துச் சொல்லும் படி அல்லவே
கண்கள் கருணை வடிவம்

கருணை பொறுமை அன்பு -மூன்று தேவிமார்களும் ஹ்ருதயத்தில்
மூச்சுக் காற்று வேதம்

அவனை அடங்கப் பிடித்தேனே -என்று சொல்லும் ஆழ்வார் திருமேனியும் தத்வ ப்ரகாஸம்

சார்ங்கத்தில் சாய்ந்து பெருமாள் -அவருக்கும் ஆதாரம் -திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு ஆதாரம்
திருமேனியில் பொதிந்த தத்வம் அனைத்தையும் அருளிச் செய்த அழகு

வாய்ந்த -திரு மணம் கொல்லை

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வலது செவி சாய்த்து
அணைத்த வேலும்
ஓம் என்னும் வாய் -வேதம்
நாசி -பிராணன் தானே திருவாய் மொழி -இரும் தமிழ் நூல் புலவன் –

அணைத்த வேலும் -விரோதி நிரஸனம்

அரசமர அடியில் பெருமாளாக அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு மந்த்ர அரசான திருமந்திர உபதேசம்
மகிழ மரம் அடியில் பெரிய நம்பி நாயக ரத்னமான யதி ராசருக்கு மந்த்ர ரத்னம் உபதேசம்

க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
மண்டினார் உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே -அர்ச்சா திருஷ்ணையாலே உஜ்ஜீவனம்

நால் வேதம் கண்டான் -மந்த்ர த்ருஷ்டா ஆழ்வார் -நான்கு வேதங்களால் காணப்படுபவனைக் கண்டார் -கர்த்தரை கர்த்ரு பிரயோகம் –
ஸ்வரூபமும் விபவமும் கண்டார் ஆழ்வார்
ஆறு அங்கம் கண்டார் -ஆறு உபாயம் அங்கமே என்று கண்டார் திருமங்கை ஆழ்வார்
பிடி தோறும் அர்ச்சை -விபவமும் அர்ச்சையும் இவருக்கு
இருக்கும் நாள் அர்ச்சாவதார ப்ராவண்யமும் அருளிச் செயல்களில் ஈடுபாடும் இருந்தாலே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்

துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -இணை ஆதி -ஒவ்வொன்றுக்கும் மற்ற ஒன்றே திருஷ்டாந்தம் -ஓன்று ஓன்று துணை மற்ற ஒன்றும் துணை யாகாதே-வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் இங்கு -வசனமும் உதாஹரிக்கிறார்
நல்லீர் அறிவீர்-உம அடியார் எல்லோரோடும் ஓக்க எண்ணி இருக்கீரோ –நும்மைத் தொழுதோம் -ஆண் ஊடல் காதில் கடிப்பிட்டு -நாயகி பாவத்திலும் உண்டே-அர்ச்சையை தொட்டு இருப்பார்கள் மற்றவர்கள் -இவர் தானே மண்டி இருந்து அனுஷ்டித்துக் காட்டினார்
வேம் உயிர் –துணை முலை பயந்து -ஆழ்வார்
இங்கு வியாக்யானம் -பகவானுக்குத் துணை ஆழ்வாரது மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -மலராள் தனத்துள்ளான் -அங்கு வியாக்யானம் –

வடவரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள் -திருத்தாயார் அர்ச்சாவதார அநு காரம் இவருக்கே

ஓ மண் அளந்த தாடாளா -தூது நான்கு பாசுரங்கள் மட்டுமே விட வல்லவர்
இரும் தமிழ் நூல்-திருவாய் மொழிப் புலவர் இவரே

———————————–

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8- பகருகின்றேன் உரைக்கின்றேன் என்று சொல்லாமல் -ஓதுகின்றேன்

காண் –கண்டவர்கள் -த்ரஷ்டா -ஞானக் கண்ணால் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

சார்ங்கம் -அம்சம் -கூடவே அவனை அனுபவிக்கிறோம் –
ஆலி நாடான் திருச்சுற்று கட்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாளிகை சுற்றியே கட்டி -அருள் மாரி -பட்டம் பெற்றவர்
உன் தாமரை சேவடி கை தொழுவாரைத் தொழுவார் –
களைக் கத்திக்கு அருள் மாரி பெயர் -நெஞ்சுக்கும் இருள் கெடுக்கும் தீபம் -கவிம் லோக திவாகரம்- கவிகளுக்குள் திவாகரன்

வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி நாடன் அருள் மாரி -4-2-10-

————————-

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -14 இடங்களில் –ராமானுஜன் பத பிரயோகங்கள்
அயோத்யா 1 இடம் கிஷ்கிந்தா 6 இடங்களில் சுந்தர 2 இடங்களில் யுத்த 2 இடங்களில் -இவை எல்லாம் லஷ்மணன் 11 இடங்களில்
பரதனுக்கு 2 இடங்களில் -அயோத்யா -உத்தர
சத்ருக்னன் 1 இடத்தில்-உத்தர காண்டத்தில்
பிரயோகங்கள்
அநுஜன் -சேஷன் -பெருமாளை பிரிந்து 3 நாள்கள் -இரண்டு நாள் கழித்து அவதாரம் -ஒரு நாள் முன்பே ஸ்ரீ வைகுண்டம்
கைங்கர்ய ஸாம்ராஜ்யம் இழக்காமல் -கைங்கர்ய ஸ்ரீ -லஷ்மணோ லஷ்மி ஸம்பன்னன் -நற் செல்வன்

ராமானுஜன் = (பல)ராமனின் தம்பியான கண்ணன்

இராமவாதாரத்தில் இரு சேஷாவதாரங்கள்!
* சேஷன் இலக்குவன் = பகவத் கைங்கர்யம்
* சேஷன் பாதுகை = பாகவத கைங்கர்யம்

இந்தப் பாதுகையின் அம்சமாகத் தோன்றிய சடாரி அல்லவோ நம்மாழ்வார்!
எனவே ஆழ்வார், “இராம+அனுஜர் = இராமானுஜர்” என்னும் சொல்லுக்குப் பரிபூர்ணமாகப் பாத்யதைப் பட்டுள்ளார்!

அதான் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அந்தப் பாதுகை பாடியது!
மாறன் எங்கள் சடகோபன் = இளையாழ்வான் என்னும் இராமானுசனே!

வேள்வியினால் பிறந்து –
யாகம் காத்து
சேர்த்தியில் ஸரணாகதி
தீர்த்த கைங்கர்யம் (அயோத்யா காண்டம் 103-5-கௌசல்யை சுமத்தரை இடம் சொல்லும் ஸ்லோகம் -இவர் சாலைக்கிணறு தீர்த்தம் )
ஓங்கார வடிவில் நடந்து
கண் அழகில் ஈடுபட்டு
தாசர்கள்-அடியேன் ராமானுஜ தாசன் -தாஸ்ய நாமம் பெறுகிறோம்
நமக்கா புருஷகாரம் செய்தவர்கள்-யாத்ர ராம ச லஷ்மணா -புருஷகாரமும் உண்டே
தொண்டிலே நோக்கம்
பரந்த விசால திரு உள்ளம்-துர்வாசர் -சாபம் -அவதாரம் முடிந்து திரும்பிய விருத்தாந்தம் –
இவ்வாறு பல ஒற்றுமைகள் இளைய பெருமாளுக்கும் நம் ராமானுஜருக்கு உண்டே

ஸோஹம் –ஸஹ அஹம்
தாஸோஹம் —
ஸதா ஸோஹம்
தாஸ தாஸோஹம் -இப்பொழுது தான் முழுமையான சாந்தி கிடைக்கும்

ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரனான இராமனைப் பெருமாள் என்று அழைப்பது ஸம்பிரதாயம். அவன் தம்பியான லக்ஷ்மணனை இளைய பெருமாள் என்பர். நம், ராமநுஜரான லக்ஷ்மணமுனியை இளையாழ்வான் என்று அழைப்பர். இவ்விருவருக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு. இங்கே சிலவற்றை மட்டும் கூறி, இவ்விருவரின் ஸாத்ருச்யத்தைக் காட்டுகிறோம். இருவருக்கும் ராமாநுஜன் என்ற பெயர் பொருத்தம் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இலக்குவன் ஆதிசேஷனுடைய அவதாரம் என்பது பல பிரமாணங்களினால் பிரசித்தமானது. ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்’ என்ற பாசுரப்படி, பாதுகை என்பது ஆதிசேஷனுடைய திருவவதாரம். ‘நிவாஸசய்யாஸநபாதுகா’ என்று ஆளவந்தார் கூறினார். லக்ஷ்மணனும் பாதுகையும் ஒருவரே என்பதும், பாதுகாஸஹஸ்ரத்திலுள்ள ‘பரதசிரஸி லக்நாம் பாதுகே … ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:’ என்ற ச்லோகத்தால் ஸுவ்யக்தமாகிறது: ‘சேஷபூத: லக்ஷ்மண: என்றதனாலும், ‘ஸ்வதநுமபி’ என்றதனாலும் ஆதிசேஷனே லக்ஷ்மணனாக, அவதரித்தான் என்றும், பாதுகையும் லக்ஷ்மணனும் ஒன்றே என்றும் தெளிவாக ஏற்படுகின்றன அல்லவா? எனவே, லக்ஷ்மணன் ஆதிசேஷ அவதாரம். இது போலவே இளையாழ்வானான ராமாநுஜரும் ஆதிசேஷனின் அவதாரம்.

ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிய திவ்யஸூரி ஸ்தோத்திரத்தில், ‘ராமாநுஜன் சேஷாவதாரம்’ என்று ஸ்பஷ்டமாகக் காட்டப்படுகிறது. அதில் உள்ள ச்லோகம் – மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம் | – துண்டீரமண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே || என்பது.

ஸ்ரீராமாநுஜருக்கு ஸாக்ஷாத் சிஷ்யரான வடுகநம்பி என்று சொல்லப்பெறும் ஆந்த்ரபூர்ணரும் இதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் – 

வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய, பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை |
சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம் தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத் || என்று
சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||

என்றும் இவரைப் புகழ்ந்திருக்கின்றனர். வேங்கடாத்ரி என்ற மகாகவி தமது விச்வகுணாதர்ச சம்பூவில் இவரைச் சேஷனுடைய அவதாரம் என்றே பணிக்கிறார். 

ராமாநுஜாய குரவே நரவேஷபாஜே, சேஷாய தூதகலயே கலயே ப்ரணாமாந் |
யோ மாத்ருசாநபி க்ருசாந் பரிபாதுகாம:, பூமாவவாதரத் உதஞ்சித போத பூமா || என்று,

இப்படி பல ஆசார்யர்கள் இந்த இளையாழ்வானை சேஷாவதாரம் என்றே ஒருமுகமாக சொல்லுகின்றனர். வேதாந்தாச்சார்யார் மாத்திரம் இவரை சேஷனுடைய அவதாரம் என்று கூறவில்லை.

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச ததாபர: |
பலபத்ரஸ் து கலெள கஸ்சித் பவிஷ்யதி ||–என்று பவிஷ்ய புராணத்தில் இவரைச் சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை அநுஸரித்ததுதான்.

ப்ரதமோ நந்தரூபஸ்ச த்விதீயோ லக்ஷ்மணஸ் ததா |

த்ருதீயோ பலராமஸ் ச கலெள ராமாநுஜோ முநி: ||–என்ற முன்னோர்களின் பாசுரமும்.

வைகுண்ட லோகத்தில் பரம ஆனந்தத்துடன் பர்யங்கத்தில் பக்தர்களும் பாகவதர்களும் சூழப் பரம த்ருப்தராய் இருக்கும் பகவான் தம் பர்யங்கபூதனான எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்து சேஷன் என்ற பெயர் பெற்ற ஆதிசேஷனைப் பார்த்து, 

ச்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா: |
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ: ||

“ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் அழிந்துவிட்டன. அந்தணர்கள் தங்களுடைய நித்ய கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டனர். வேதாங்கங்களும் சிதறிப் போயிந. கலியுகம் மேன்மேலும் விருத்தியடைகிறது. ஆகவே, நீ என் பஞ்சாயுதங்களின் சக்தியை ஏந்திக்கொண்டு உலகத்தில் ராமாநுஜ தரிசனம் என்ற பெயர் விளங்கும்படியாக ராமாநுஜராக அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி முதலியவற்றுக்குக் காப்பாக உரையிட்டு ஜனங்களை உஜ்ஜீவிக்கும்படி செய்” என்று உத்தரவிட்டார். அதன்படி இவர் அவதரித்தார்.

மந்நியோகாத் பூதபுர்யாம் அஹீநாமீச்வர : கலெள |
ஸ்ரீராமாநுஜரூபேன ஜநிஷ்யதி ஸதாம் முதே ||

இளையபெருமாள் தசரதனுடைய புத்ரகாமேஷ்டி மூலமாகப் பிறந்தவர். ராமாநுஜரும் புத்ரகாமேஷ்டி மூலமாகவே பிறந்தவர். இவரது பிதா ஆஸூரி கேசவாசார்யருக்கு ஸர்வக்ரது என்ற பிருதமும் உண்டு. இவர் காந்திமதி என்ற பெண்மணியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். வெகு காலமாகியும், சந்ததி இல்லாமலிருந்து, பிறகு பெரியோர்களின் நியமனத்தினால் ப்ருந்தாவன க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற திருவல்லிக்கேணியில் புத்ரகாமேஷ்டி செய்து முடித்தார். வேள்வி நிறைவேறியது. அன்றிரவு ஸ்ரீபார்த்தசாரதி, “நானோ என் படுக்கையான ஆதிசேஷனோ உனக்குப் பிள்ளையாகப் பிறந்து வேத வேதாந்தங்களை ரக்ஷிக்க வருகிறோம்” என்று ஸ்வப்னத்தில் சொன்னார் எனற வரலாற்றையும் கண்டுகொள்ள வேண்டும். ஆகவே இருவரும் புத்ரகாமேஷ்டியின் மூலமாகப் பிறந்தவர்கள்.

இளையபெருமாள் விசாலமான மனத்தைப் பெற்றவர் என்பது ராமாயணப் பிரசித்தம். ‘என் ஒருவனுக்கு மரணம் வந்தாலும் பாதகம் இல்லை; வம்சத்துக்கே விநாசம் ஏற்படக்கூடாது’ என்ற பரந்த மனத்துடன் துர்வாஸர் என்ற மகரிஷியிடம் அவர் நடந்துகொண்டார் என்பது தெளிவானது.

இளையாழ்வானும், “பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு-பாதகாத்| ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம் ||” என்று விசாலமான மனத்துடன் மந்திரார்த்தங்களை ஆசார்ய நியமனத்தை உல்லங்கனம் செய்து உபதேசித்தார் என்பது பிரசித்தமானது.

பகவானான ஸ்ரீராமனுடைய திருவடியை அடைவிப்பதற்கு லக்ஷ்மணன் எப்போதும் ராமனை விட்டுப் பிரியாமலே இருந்தார். ‘யத்ர ராம’ ஸலக்ஷ்மண:’ என்றார் வால்மீகி. விபீஷணன் இலங்கையைவிட்டு ராமனிடம் சரணாகதி செய்யச் சமுத்திரத்தின் தென்கரையை அடைந்தான். ‘இலக்குவனோடு கூடிய ராமன் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்’ என்றார் வால்மீகி. இதன் கருத்து – ராமனை அடைவதற்கு லக்ஷ்மணனுடைய உதவி வேண்டும் என்பது. ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய’ என்று மற்றோரிடத்தில் கூறினார்.

இளையாழ்வானும் பகவானுடைய திருவடியை நம்மை அடையும்படி செய்கிறார். ‘உலகோர்கள் எல்லாம் அண்ணல் ராமாநுசன் வந்த தோன்றிய அப்பொழுதே .. நாரணற்கு ஆயினரே’ என்பது நோக்கத் தக்கது. ‘இவை என்றனுக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து’ என்பதையும் நோக்கவேண்டும்,

த்வயமந்திரத்தின் அர்த்தமான சரணாகதியை இளையபெருமாள் இராமன் காட்டுக்குச் சென்றபோது, ‘ஸ ப்ராதுஸ் சரணெ காடம் நிபீட்ய ரகுநந்தந: | ஸீதாமுவாச அதியஸா: ராகவம் ச மஹாவ்ரதம் || பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரி ஸாநுஷு ரமஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே || என்ற பாசுரங்களை அநுஷ்டித்து விவரித்தார். இளையாழ்வானும் சரணாகதிகத்யம் என்று பெயரிட்டு த்வயார்த்தத்தை உலகுக்குத் தாமே அநுஷ்டித்துக் காட்டினார்.

இளைய பெருமாளை அனுமான் பார்த்து, “இவருக்கு நீர் என்ன ஆவீர்?” என்று கேட்க, “அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யம் உபாகத:. ராமர் என்னைத் தம் தம்பி என்று நினைத்திருப்பார். அவருடைய குணங்களுக்குத் தோற்று நான் தாஸன் என்று நினைத்திருப்பேன்” என்று பதிலளித்தார் இளைய பெருமாள். இதனால் பகவானுக்கும் தமக்கும் உள்ள ஸ்வஸ்வாமி பாவஸம்பந்தம் சேஷசேஷிபாவஸம்பந்தம் காட்டப்பட்டது. பாஷ்யகாரரும், ‘சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ:’ என்று இந்த ஸம்பந்தத்தை பல இடங்களில் வெளியிட்டார்.

ராமன் காட்டுக்குச் சென்றபோது, காட்டில் முதலில் ராமனும் பிறகு சீதையும் பிறகு லக்ஷ்மணனும் சென்றதாக ‘அக்ரத: ப்ரயயெள’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ராமாநுஜரும் காசியாத்திரையினின்று தெளிந்து மீண்டு திரும்பி வந்த போது காஞ்சிக்கருகில் முதலில் வேடனுடைய உருவம் தரித்த வரதனும் பிறகு பெருந்தேவியும் பிறகு ராமாநுஜரும் வந்தார்கள் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

லக்ஷ்மணன் ராமனுடைய திருவடிகளில் கைங்கர்யம் ஒன்றைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை.

ந தேவலோகாக்ரமணம் நாமரத்வம் அஹம் வ்ருணே |
ஐச்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா ||

என்றார். பகவானைப் பெற விரும்புகிறவன் மற்றப் பொருள்களில் வைராக்யமும், பகவானிடத்தில் ஆசையும் பெற்றிருக்கவேண்டும். ராமாநுஜரும் பகவானுடைய திருவடிகளில் உண்டான வியாமோகத்தினால் மற்றப் பொருள்களை த்ருணமாக நினைத்தார். ‘யோ நித்யம்’ என்ற இவருடைய தனியனை இங்கு அநுஸந்திப்பது,

லக்ஷ்மணன் தம் அண்ணனான ராமனுக்குத் தீர்த்தத்தை நதிகளிடமிருந்து எடுத்து வந்து உபசரித்தார். பரதாழ்வான் ராமனைச் சித்திரகூடத்திலிருந்து அழைத்துவர எண்ணி அந்த மலைக்குச் சென்றபோது வஸிஷ்ட முனிவர், கெளஸல்யை முதலிய தேவிகள் அனைவரும் சென்றனர். அங்கே கங்கை நதிக்கரையில் ஸுமித்ரை முதலியானவர்களைப் பார்த்துக் கெளஸல்யை சொல்லும் வார்த்தை –

இத: ஸுமித்ரே புத்ரஸ்தே ஸதா ஜலம் அதந்த்ரித: |
ஸ்வயம் ஹரதி ஸெளமித்ரிர் மம புத்ரஸ்ய காரணாத் ||
ஜகந்யமபி தே புத்ர க்ருதவாந் ந து கர்ஹித: |
ப்ராதுர் யதர்த்தஸஹிதம் ஸர்வம் தத் விஹிதம் குண: (அயோத்யா காண்டம் – 103)

என்பவை அங்குள்ள ச்லோகங்கள். “எப்பொழுதும் சோம்பலில்லாமல் இந்தக் கங்காநதியிலிருந்து என் குமாரனான ஸ்ரீராமனுக்கு உன் புதல்வன் தானாகவே தீர்த்தத்தைக் கொணர்ந்து உபசரிக்கிறான். இப்படித் தீர்த்தத்தைக் கொண்டுவரும் இந்தக் கைங்கர்யம் தோஷத்தை உண்டுபண்ணாது. இது பரிகாசத்திற்கு உரியதாகவும் ஆகாது. உலகத்தில் தண்ணீர் கிடைப்பது துர்லபமாக இருக்கும் காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கொணர்ந்தால் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டுப் பண ஆசையால் ஒருவன் அம்மாதிரி செய்தால் அது பரிகசிப்பதற்கு உரியதாகும். ஸர்வவித பந்துவாய் ஸர்வஸ்வாமியாக உள்ள எம்பெருமானான ராமனுக்காகக் கொண்டு வரும் கைங்கர்யமானபடியால் இது எல்லோராலும் போற்றக் கூடியதாகவே முடியும்.” என்கிறாள்.

ஆளவந்தார் பல சிஷ்யர்களுக்குப் பகவத்விஷய காலக்ஷேபம் ஸாதித்து வந்தாராம். அப்பொழுது, ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு’ என்ற திருவேங்கடமுடையான் விஷயமான பாசுரம் நடந்து வந்ததாம். ‘நீர் கொண்டு என்று தீர்த்த கைங்கர்யம் சொல்லப்பட்டிருக்கிறபடியால் திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்வதில் நமமாழ்வாருக்குப் பேரவா இருந்திருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்து அவரது மனோரதத்தை ஆளவந்தார் நிறைவேற்ற எண்ணினார். காலக்ஷேபம் முடிந்ததும், “திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யத்தை இந்தக் கோஷ்டியில் யார் செய்யப் போகிறார்கள்?” என்று வினவினார். பெரிய திருமலை நம்பி, “அடியேன் சித்தமாக இருக்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுத் திருமலைக்குச் சென்று அந்தக் கைங்கர்யத்தை அழகுடன் செய்து வந்தாராம்.

தினந்தோறும் பாபவிநாசம் என்ற நதியிலிருந்து ஒரு கலசத்தில் இவர் தீர்த்தத்தை எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் கலசத்தில் தீர்த்தத்தை எடுத்துச் சென்றார். அப்போது பகவான் வில்லி வேஷம் பூண்டு, அவருக்குத் தெரியாமல் கலசத்தில் துவாரத்தை உண்டுபண்ணி நீரைக் கீழே பெருகும்படி செய்துவிட்டார். கொஞ்ச தூரம் சென்றதும், “தாதா, எனக்கு ரொம்பவும் தாகமாய் உள்ளது. கொஞ்சம் நீர் கொடு” என்றார். அப்போது கலசத்தில் நீரே இல்லை. பெரிய திருமலை நம்பி திக்பிரமம் அடைந்தார். “வெகு தூரத்திலிருந்து தீர்த்தத்தை கொண்டுவந்தேன். திருமலைக்குச் சமீபத்தில் வந்து விட்டேன். கலசத்திலோ நீர் இல்லை. மறுபடி பாபவிநாசம் சென்று கொண்டு வரவும் சக்தி இல்லை. என்ன செய்வது?” என்று கலங்கினார். அப்போது வில்லிவேஷம் பூண்ட பகவான், “பெரியவரே! கவலைப்பட வேண்டாம், நான் பாணத்தைப் பிரயோகம் செய்து இங்கிருந்தே நீரை வரவழைக்கிறேன். இதிலிருந்து தீர்த்தத்தை எடுத்துச் செல்லும்” என்று சொல்லி, ஓர் அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தார். திரிவிக்ரமாவதார காலத்தில் கங்கை எப்படி வேகமாகக் கிளம்பிற்றோ அது போல ஆகாசத்திலிருந்து கங்கை விழ ஆரம்பித்தது. இதற்குத்தான் ‘ஆகாச கங்கை’ என்று பெயர்.

நம்பி மிகவும் விஸ்மயப்பட்டு, இதிலிருந்து நீரைக் கொண்டு சென்றார். அது முதல் உண்மையை உணர்ந்து, பகவானுக்கு இங்கிருந்து தீர்த்தத்தைக்கொண்டு கொடுப்பதுதான் மிகவும் பிரீதியை உண்டுபண்ணும் என்பதை உணர்ந்து, தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ‘தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித் வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந் யயாசே’ என்றார் வேங்கடாத்வரி கவி. ஆகையால், பகவானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யம் மிகவும் போற்றத்தக்கது.

இளையாழ்வானும் சாலைக்கிணற்றிலிருந்து, பகவானுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து, தினமும் தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் என்பது உலகப் பிரசித்தம்.
இப்படிப் பல வகைகளில் இரண்டு ராமாநுஜர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

இதை ஸ்ரீதேசிகன் “தத்தம் யேன தயாஸுதாம்பு நிதினர்” என்கிற ஸலோகத்தால் காட்டினார். அமிர்தமாகிற கடல் தயை என்னும் அமிர்தம் இதற்கு கடல் ஸ்ரீபாஷ்யகாரர். தேவப் பெருமாளும் கருணைக் கடல். இவர் ஸமர்ப்பித்த அம்ருத ஜலத்தை பருகினார். புஷ்டியை அடைந்தார். கருமுகில் கடல் நீரை பருகும் மலை மீது அமரும். அதிக மழையைக் கொடுக்கும். அது பகவானாகிற கருமுகிலும் அமுத நீரைப் பருகி புஷ்டியை அடைந்து நமது விருப்பத்துக்கும் அதிகமாக நமக்கு பல பலரை பொழிகிறான் என்றார்.

தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத–ஸ்ரீ யதிராஜ ஸப்ததி 9-

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

———————-

”ஸ்ரீ ராமானுஜர் யாமுனாச்சார்யாருக்கு கொடுத்த வாக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பித்தார்.
அதற்காக அவர் நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வடக்கே காஷ்மீரம் வரை நடந்தே சென்றார்
ஸ்ரீ ராமானுஜர் எண்ணற்ற தடங்கல்களை இன்னல்களை எல்லாம் சந்தித்து தான் நமக்காக எத்தனை எத்தனை
செல்வங்களை அளித்திருக்கிறார் என்று அறியும்போது நமது கண்களில் நன்றிக் கண்ணீர் ஆறாக வடிகிறது.”
”வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது. தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினார்க்கு அந்
நாழற்றது, நம்மிராமாநுசன் தந்த ஞானத்திலே.-(இராமானுசன் தந்த ஞானத்தின் பயன்)
‘மஹா ஞானியான யதிராஜர் வியாசரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ஆளவந்தார் விரும்பிய படி
விசிஷ்டாத்வைத பரமாக ஶ்ரீபாஷ்யம் இயற்றும் பணியில் முனைந்தார்.
‘ தரிசனத்திற்கு (கோட்பாடு, சித்தாந்தம் ) ப்ரதானமான ஆசார்யராக ஒருவரைக் கொள்ள வேண்டும் என்றால்
ப்ரஸ்தானத்ரயம் என்று சொல்லப் படுகிற மூன்று க்ரந்தங்களுக்கு அவர்கள் ஶ்ரீபாஷ்யம் ( விளக்கம்) அளிக்க வேண்டும் .
முதலில் வேதத்தின் ப்ரஹ்ம பாகமாகிய உபநிஷத்துக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக , அந்த உபநிஷத்துக்களுக்கு வ்யாக்யானங்கள் போல அமைந்ததான
ப்ரஹ்ம சூத்திரங்களுக்கு விளக்கங்கள் அருளிச் செய்ய வேணும்.
மூன்றாவதாக உபநிஷத்தின் சாரமாக அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் அருளிய பகவத்கீதைக்கு
ஒரு வ்யாக்யானம் (தெளிவான உரை) அருள வேண்டும் .
இவ்வாறு உபநிஷத்துக்கள் , ப்ரஹ்ம சூத்திரம், கீதை இவை மூன்றுக்கும் (பிரஸ்தான த்ரயம்) வ்யாக்யானம் (உரை) எழுதியதால்
தான் ஸ்ரீ ராமானுஜர் தர்சன ஸ்தாபகர் என்றும் ஶ்ரீபாஷ்யகாரர் என்றும் போற்றப்பட்டார்.
இப்படி ஶ்ரீபாஷ்யம் எழுதுவதற்காக யதிராஜர் முதலில் நம்மாழ்வாரின் பாசுரங்களின் ஆழமான கருத்துகளை வெகுவாக ஆராய்ந்தார்.
ஏற்கனவே பல பெரியோர்கள் விரிவுரைகளை எழுதியிருந்தார்கள்.
உதாரணமாக
1. போதாயந பாஷ்யம் என்ற ஒரு வ்யாக்யானத்தை வியாசபகவான் சீடர்களில் ஒருவரும் மகரிஷியுமான போதாயநர் எழுதி இருந்தார். .
2. திரமிட பாஷ்யம் என்று ஒரு உரையை திரமிடாசார்யர் எழுதிஇருந்தார்..
3. ப்ரமானந்தி என்கிற ஒரு ஞானி ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ‘வார்த்திகா’ என்ற உரை எழுதியிருக்கிறார்.
4. குஹா தேவாசாரியர் பாஷ்யம் என்றும் ஒன்று இருந்தது.
5. ஆசார்ய பாருசி பாஷ்யம் என்று மற்றொன்று.
6. பகவத் ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்பவரின் பாஷ்யம் ப்ரம்மசூத்ர பாஷ்யங்களில் மிகவும் பழமையானது.
7. நாதமுனிகள் ஒரு சில அருமையான நூல்களை இயற்றி இருந்தார். அவை விசிஷ்டாத்வைத தத்துவத்தின் யோகரஹஸ்யம், ந்யாயதத்வம் ஆகும். .
8. யாமுனாசார்யர் (ஆளவந்தார்) எழுதிய ஸம்வித் ஸித்தி, ஈசுவரஸித்தி, ஆத்மஸித்தி ஆகமப்ரமாண்யம் முதலிய நூல்களும் பிரசித்தமானவை.
ஞாநியான யதிராஜர் “போதாயநருடைய ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி க்ரந்தத்தின் கருத்துகளை ஆராயாமல்
உபநிஷத்துக்களுக்குப் பொருளுரைப்பது நிறைவு பெறாது” என்று நிச்சயித்து,
கூரத்தாழ்வானோடு, காஷ்மீரத்திலுள்ள சாரதா பீடத்துக்குச் சென்றார்.
அங்குள்ள வித்துவான்கள் அவரை ஆதரிப்பார்களா? எதிர்த்தார்கள். ஸ்ரீ ராமானுஜர்
சாரதா பீடத்தில் உள்ள வித்வான்கள் அனைவரையும் வாதத்தினால் ஜயித்தார்.
சாரதா பீடத்தில் அருள் புரியும் சரஸ்வதி தேவி ஶ்ரீராமாநுஜரின் வித்வத்தில் மகிழ்ந்து அவரை பரிக்ஷிக்க
‘கப்யாஸ ச்ருதியின் பொருளைச் சொல்ல முடியுமா ’ என்கிறாள்
யதிராஜர் தேவியை வணங்கி ‘கம்’ எனப்படும் ஜலத்தை பானம் பண்ணுவதால் ‘கபி’ என்று சூர்யனுக்கு பெயர்.
அவனாலே மலர்விக்கப்படும் தாமரை ‘கப்யாஸம்’ என்று பொருள் படுகிறது.
‘அந்தத் தாமரையை யொத்த கண்கள் விஷ்ணுவுக்கு உள்ளன’ என்பதைத் தான்
‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரிகம் ஏவ மஷினி (சாந் 1-6-6) என்னும் வேதவாக்கியம் உணர்த்துகிறது” என்று கூறினார்
சாரதாதேவியும் மிகவும் மகிழ்ந்து போதாயந வ்ருத்தியை ஶ்ரீராமாநுஜருக்கு அளிக்க அதை ப்ரீதியோடு பெற்றுக் கொண்டார்.
சில நாட்களில் திருவரங்கம் நோக்கிக் கிளம்பினார் .
இதற்கிடையில் சாரதா பீடத்தில் உள்ள, வித்வான்கள் அங்குள்ள ஸ்ரீ கோசங்களை ( ஒலைகள்) தேடும் போது ,
போதாயன வ்ருத்தி க்ரந்தம் அங்கு காணாமல் போனதைக் கண்டு, ராமானுஜர் அதை தேடிவந்ததால்
அவரே தான் அதை எடுத்துச் சென்றி ருக்க வேண்டும் என்று தீர்மானித்து ,
யதிராஜரிடமிருந்து அதை கைப்பற்றி மீண்டும் சாரதா பீடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவ்வளவு பிரயாசைப் பட்டு அடைந்த போதாயன பாஷ்யம் கைவிட்டு சென்றதே என்று மிகவும் வருந்திய
ஶ்ரீராமாநுஜரைக் கூரத் தாழ்வான் கவனித்து
“யதிராஜரே! குருதேவா, துளியும் நீங்கள் வருந்த வேண்டாம். கடந்த சில நாளில் இரவு நேரங்களில்
அடியேன் அந்த போதாயன பாஷ்ய க்ரந்தம் முழுவதையும் படித்து மனதில் முழுவதுமாக பதிவு செயது கொண்டு விட்டேன்.
தேவரீருடைய கடாக்ஷத்தால் இப்போதே வேண்டுமானாலும் அதில் உள்ளதனைத்தும் சொல்லமுடியும்” என்றார் கூரத்தாழ்வான்.
ஆழ்வானின் அற்புத ஆற்றலை நினைத்து மகிழ்ந்து பாராட்டிய ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் திரும்பியதும்
ஶ்ரீபாஷ்யம் எழுதும் பணி துவங்கினார்.
‘கூரேசரே! நான் ஶ்ரீபாஷ்ய வாக்யத்தைச் சொல்ல்லிக்கொண்டே வருகிறேன்,
உம்முடைய திருவுள்ளத்திற்கு அது சரி எனப்பட்டால் எழுதும். எங்கேனும் பொருத்தமில்லை என்று தோன்றினால்
சொல்வதை எழுதாமல் நிறுத்தி மௌனமாயிரும்’ என்கிறார்.
‘அப்படியே சுவாமி’ என்று கூரேசரும் ஒப்புக் கொண்டு ஸ்ரீ பாஷ்யத்தை எம்பெருமானார் சொல்லச் சொல்ல விரைவாக எழுதுகிறார்.
ஓரிடத்தில் உடையவர் சொல்லியும் ஆழ்வான் எழுதாமல் நின்று விட்டார்.
இதைக் கவனித்த ஶ்ரீராமாநுஜர் சினமடைந்து “கூரேசா! நான் சொல்வதை எழுத மனம் இல்லை என்றால்
மேற்கொண்டு நீரே ஸ்ரீபாஷ்யம் எழுதும்” என்று சொல்லி எழுந்து சென்றார்.
அங்கிருந்த சிஷ்யர்கள் பலருக்கும் வியப்பு. ஶ்ரீராமாநுஜர்கட்டளையிட்டபடி தானே கூரேசர் எழுதுவதை நிறுத்தினார்.
என்ன காரணம்? .ஆழ்வான் அமைதியாக இருந்தார் .
சிறிது நேரம் கழித்து வந்த ஶ்ரீராமாநுஜர் திரும்பி வந்தார்.
”கூரேசா என் வாக்கியத்தை திருத்திக் கூறுகிறேன் இப்போது எழுது” என்றார் .
ஆழ்வானும் மேற்கொண்டு தடையின்றி எழுதிச் சென்றார் .
‘ஜீவாத்ம ஸ்வரூபத்தைப் பற்றி விளக்கும்போது ” பகவத் சேஷ பூத: ” அதாவது ஜீவன் பகவானது அடியவன் என்ற
தாஸ்ய ஸ்வரூபமே ஜீவாத்மாவிற்கு உள்ள முக்கிய லக்ஷணம்.
ஆனால் ஶ்ரீராமாநுஜர் அவ்விதம் கூறாமல் அந்த அம்சம் குறைவு பட ஜீவன் ஞாத்ருத்வம் (அறிவுடைமை) மட்டும் கொண்டது
என்று சொன்னதால் ஆழ்வான் தயங்கி எழுதுவதை நிறுத்தினார் .
ஶ்ரீராமாநுஜர் ஆழ்வானை கோபித்த போது ஆழ்வான் வருத்தப்படவில்லை
” உடைமை , உடையவன் இட்ட வழக்காயிருக்கும் , இதில் அடியேனுக்கு அந்வயம் இல்லை ” என்றார்.
அதாவது தன் பாரதந்திரியத்தை பிறர் இட்ட வழக்காயிருக்கும் தன்மையை வெளியிட்டார்.
வேதார்த்த நிரூபணமாக ஶ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்து அதனை சாரதா பீடத்துக்கு அனுப்பி உலகோர் அறிய
அதை வெளிப்படுத்த வேண்டும் என்று யதிராஜர் திருவுள்ளங் கொண்டார்.
கிடாம்பியாச்சான், கிடாம்பிப் பெருமாள் முதலான சிஷ்யர்களிடம் காஷ்மீரத்துக்கு ஸ்ரீகோசத்தை கொடுத்தனுப்ப,
அவர்களும் அப்படியே கொண்டு சென்று சாரதா பீடத்தை அடைந்தனர் .
ஸரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அந்த ஸ்ரீ கோசத்தை பாராட்டி உடையவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ என்று திருநாமம் சாற்றி
ஹயக்ரீவப் பெருமாளையும் ஆராதிக்கக் கொடுத்து மகிழ்ந்தாள் என்று வரலாறு சொல்கிறது.
ஶ்ரீபாஷ்யகாரர் என்ற திருநாமமும் ஶ்ரீராமாநுஜரை அடைந்து சிறப்பித்தது.
”ராமானுஜர் ஸ்ரீயாமுநாசார்யரின் முதல் மனக்குறையைப் போக்கினார் என்று அறியும்போது
அவரது குருபக்தி சேவை புல்லரிக்க வைக்கிறது
பிறகு ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் முன்பே ஶ்ரீபாஷ்யத்தை உபந்யாசம் செய்தார் .
பெரிய பெருமாளும் மிக உகந்து, அனைத்து கொத்து பரிவாரங்களையும் அழைத்து எம்பெருமானார்க்கு சதகலசாபிஷேகம் செய்து
ப்ரஹ்ம ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச ்செல்ல ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் .
யதிராஜரின் சிஷ்யர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த வைபவத்தை சிறப்பாக செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
காவேரி கொள்ளிடத்திலுள்ள அனைத்து படித்துறைகளிலும் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ,
அழகிய திவ்ய சிம்மாசனத்திலே யதிராஜரை எழுந்தருளச் செய்து ,
” யதிராஜரே நீர் இந்நின்ற திருமஞ்சனம் செய்வதே” என்று திருமஞ்சன ஸ்லோகங்கள் , ஶ்ரீபுருஷஸுக்தம் சொல்லி
விசேஷமாக அலங்காரத் திருமஞ்சனம் பண்ணி விசேஷ அலங்காரங்கள் பண்ணி ப்ரஹ்ம ரதத்திலே எழுந்தருளச் செய்து
ஶ்ரீபாதம் தாங்கிகள் சுமந்து சென்றனர் .
ஆயிரக்கணக்கான சிஷ்யர்களோடு அனைத்து வாத்தியங்கள் ஒலிக்க திருவீதி வலம் வந்தார்.
மாவிலைத் தோரணங்கள் கட்டி , வீதிகள் தோறும் பெரிய கோலங்கள் இழைத்து விளக்குகள் ஏற்றி மஞ்சநீர் சுழற்றி
” வாய்த்த பெரும்பூதூரில் மன்னவன் வந்தான் ;ஏத்தும் இளையாழ்வார் என்னும் எம்பிரான் வந்தான் ;
எதிராச முனிவன் வந்தான் ; ஶ்ரீபாஷ்யகாரர் என்னும் ஶ்ரீமான் வந்தான்”
”.போற்றி போற்றி” ”வாழி வாழி” என்றும் மங்களாசாசனம் பண்ணி
யதிராஜரை மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்கள்.
கல்யாண வைபவம் போல எல்லோரும் கூடியிருந்து கிடாம்பி ஆச்சான் பரிமார அனைவரும்
இன்சுவையோடு கூடிய ப்ரசாதத்தை அமுது செய்து மகிழ்ந்திருந்தனர்.
—————
ஸபரி திருக்கச்சி நம்பியாக அவதாரம் என்பர்
கஜேந்த்ரனுக்கும் கஜேந்திர தாசருக்கும் பல ஒற்றுமைகள்
வரதன் இடம் ப்ராவண்யம்-லீலை -சக்கரைப் பொங்கல் ஊட்டி விட்டு -வீர ராகவன் தந்தையும் நம்பாமல்-கோயிலுக்கு உள்ளே வர விடாமல் -திருக்கச்சி நம்பியைக் கூட்டி வந்தால் தான் அமுது செய்வேன் -100 தடா உண்டு வியர்வை உடன் இருக்க -உலகு உண்ட பெரு வாயன் -காட்டி அருளி -இவரால் உண்ண முடியாது என்று காட்டி அருளி
வரதனே பேசி கைங்கர்யம் செய்ய அழைத்து -வீச சொல்லி -நிரந்தரமாக இன்றும் வீசிக் கொண்டே இருக்கிறார்
முதலை யானையின் காலைப் பிடித்து முதலில் மோக்ஷம்
திருக்கச்சி நம்பி தாசர் திருவடிகளை பற்றி முதலில் பேறு

அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்…….!!!

இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.

2. “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

6. “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.

கஜேந்திரனின் ஆறு வார்த்தைகள்
நமோ நமஸ்தே
அகில காரணாயா
நிஷ் காரணாயா
அத்புத காரணாயா
கேசவர் kes
ஸர்வ ஆகம மஹார்ணவம் ஸர்வ ஆகமங்கள் சென்று சேர்க்கும் கடல்
அபவர்க்கா -மோக்ஷம் அளிப்பவன்
பராயணாயா –

முனிவர் -மனன சீலர்
முனிதல் கோபித்தல்

முனியே நான்முகனே முக்கண் அப்பா -அவனும் முனிவன்
நம்மை உஜ்ஜீவிக்கும் நமது பிரதிபந்தங்களைப் போக்கவும் கோபிக்கவும் வேண்டுமே
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைகிறோம்

நம்மாழ்வார் நின் கண் வேட்க்கை எழுவிப்பன் –ஊரும் நாடும் உலகம் தன்னைப்போல் ஆக்க மனனம்
சட வாயுவை கோபித்து
நாதமுனி யமுனா முனி

ராமானுஜரும் முனிவர் -திவாகர முனி -அப்போது ஒரு சிந்தை செய்து

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

சவும்ய மணவாள மா முனி -கோபிக்காத முனி -நம்மை உஜ்ஜீவித்து கால ஷேபம் நன்றாக செய்யவே மனனம் ராமானுஜ பிரவணர் என்பதால் –

இரு பிறவிகள்-திருக்கோளூர் பெண் பிள்ளை போற்றும் இரண்டு கஜேந்திரன் திருவடிகளே சரணம்
கைங்கர்யம் ஸ்ரீ யால் திகழ்பவர்கள்-ஸ்ரீ வரதர் பாராட்டும் இரண்டு கஜேந்திரர் தார்கள் புகழ் வாழியே
——————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ வகுள மாலை–ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம்–

February 24, 2023

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்கள்

சடகோபன்,
மாறன்,
காரிமாறன்,
பராங்குசன்,
வகுளாபரணன்,
குருகைப்பிரான்,
குருகூர் நம்பி,
திருவாய்மொழி பெருமாள்,
பெருநல் துறைவன்,
குமரி துறைவன்,
பவரோக பண்டிதன்,
முனி வேந்து,
பரப்ரம்ம யோகி,
நாவலன் பெருமாள்,
ஞான தேசிகன்,
ஞான பிரான்,
தொண்டர் பிரான்,
நாவீரர்,
திருநாவீறு உடையபிரான்,
உதய பாஸ்கரர்,
வகுள பூஷண பாஸ்கரர்,
ஞானத் தமிழுக்கு அரசு,
ஞானத் தமிழ் கடல்,
மெய் ஞானக் கவி,
தெய்வ ஞானக் கவி,
தெய்வ ஞான செம்மல்,
நாவலர் பெருமாள்,
பாவலர் தம்பிரான்,
வினவாது உணர்ந்த விரகர்,
குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி,
பிரபன்ன ஜன கூடஸ்தர்,
மணிவல்லி,
பெரியன் –
இவையெல்லாம் நம்மாழ்வாரின் திருநாமங்களாக போற்றப்படுகிறது.

————–

ஸ்ரீ வகுள மாலை-may june -1937-

அகந்தை செத்த பின் அமலன் தோற்றுவான்
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
இந்திரையை மார்பில் வைத்தான் இருடீகேசன்
ஈசன் இடத்து உமையை அந்தி பகல் அமைத்தான்
உந்திக் கமலன் கமலையை நாவில் வைத்தான்
ஊமையராய் வாழ்தலை உத்தமன் உகவான்
எக்காலத்தும் எம்பெருமான் அடி சேர்
ஏய்ந்த புகழ் யுடையோன் எம் இராமானுசன்
ஐ ஐத் தத்துவம் நம் உயிர் என்க
ஒரு தனி முதல்வன் காண் எம் ஆதிப்பிரான்
ஓதல் ஓதுவித்தல் ஒப்பிலார் தொழில்கள்
ஒவ்வியம் அவித்தலே ஆக்கத்திற்கு அடியாம்

—————

ஸ்ரீ மாறன் அடி மெய்ம்மை

மாறன் அடி பணிந்து உயந்த உடையவர் ஒருவரே உத்தாரகர் -உலகு உய்ய ஒரே வழி

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவாமே

சந்திம் இச்சந்தி சாது -சாதுக்கள் ஸத்தின் மேல் அன்பு செய்பவர்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -பரமனின் திரு நாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி நிலமே சடகோப தத்வம்
பாதுகா ஸ்ரீ பெற்ற பரதாழ்வானை -பரனை ஒன்றினீரோ -பேறு பெற்றீரோ –என்று உஸாவினார் பரத்வாஜ முனிவர் –
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமாந் -என்று வால்மீகி பகவான் புகழ்கிறார்
இது அடியாகவே
நாம் ஆழ்வாரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆத்யஸ்யன குல பதே-
குல தனம்
குல தைவதம்
எம்பெருமான் திருப்பாதத்தையும் ஸ்ரீ சடாரி என்கிறோம் –

சத்ருக்ந ஆழ்வானை -பாதுகா ப்ருத்ய அநு ப்ருத்யன் என்பர்

சூழ் விசும்பு திருவாய் மொழியில்
நிதி -பத பிரயோகம் ஸ்ரீ சடகோபன் -திருவடி நிலை என்றே பிள்ளானும் நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்கள்
நிதி -நல்ல ஆதாரம் -நல்ல காப்பு -என்றவாறு
சாந்தியை சாதுவாக்குவாரே சாதுக்கள்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
கவி முனி ரிஷி இவரே
ஏஷ விக்ரஹவான் தர்ம
ஏஷ புத்யாதி கோ லோகே
தபஸ் ச பராயணம்
விச்வா மித்ரர் -உலகுக்கு எல்லாம் அன்பார் அன்றோ -மந்திரம் கொள் மறை முனிவன்
காயத்ரியே விஸ்வ ஜநநீ
இவரையே ஏஷ வீர்ய வாதம் வர -என்கிறார் வால்மீகி

அந்த விச்வா மித்ர முனிவரிலும் தூயராய்
அவ்வன்பர் தமக்கும் நல் அன்பராய்
தமிழ் மறை பருப்பதமுமாய்
அப்பன் பொற் பாதுகமுமாய்
அப்பனும் அடியாரும் ஒன்றித் திகழும் ஓர் தனிச் சாந்தி நிலமாய்
திரு நாரணன் ஒருவனே தனக்கு மாறு என்னலாம்படி மதி நலம் அருளும்
தெள் அருள் மாரியாய் -தெள்ளிய மாறப் பிரானாய்

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

பக்தா நாராயண பராயணா
கலவ் தேவ பராங்குச

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

மறைச் சிரம் மருவும் ஆன்றோர் அன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறன் அமிழ்தின் இணை அடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழும் மூதுவர் உலகு வாழ
நிறை யரித்து திருவாய் ஓதும் நிதி எனும் நிலை விரித்தோம் –

—————

ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம்

காரணந்து த்யேய
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸூ -அடுத்து ப்ரஹ்ம லக்ஷண வாக்யம்
ப்ரஹ்மம் ஆனந்த மயம் -ப்ரஹ்மமே ஆனந்தம் -உயர்வற உயர் -நலம்
உடையவன் அவன் -ஸர்வ ஸ்வாமி -அஸ்மத் ஸ்வாமி
அருளினன்
அதிபதி
அடி தொழுது -அடிகள் தோறும் ஸ்வாமித்வம் சொல்லி

ம்

து
என்று நான்கு அடிகளிலும் தொடங்கி -உமது என்று தானும் அவனதே என்று காட்டி அருளி
முடிவிலும் முனியே நான்முகனிலும்
என் என்பது என் யான் என்பது என் என்று
ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களை -விலக்கி
என் முதல் தனி வித்தேயோ
முழு மூ வுலகாதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை
முக்தி பெறும் தர்ணத்திலே அனுசந்தித்து
முனியே என்ற விளியால் காரணமே -மவ்நம் -சிந்தனை –தவம் செய்து
இனிப்போடே தொடங்கி
இனிதே பேசிப்பாடி
இனிப்போடே
இந்த திவ்ய ப்ரபந்தம்
இனிது முற்றிற்று
ஆனந்த வல்லி ப்ருகு வல்லி கூட்டிப் பொருள் அருளுகிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

வாதியர்-புற சமயிகள்
தேற்றம் -துணிபு
திரு எட்டு எழுத்தின் உரியார்–ப்ரதிபாத்யர் ஸ்ரீயப்பதி
உடு -நக்ஷத்ரம்
பேச்சு -உபதேசம் –

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

புத்தியம் -புத்தி
பத்தியம் -வேதம்

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

கை –கீழ் மகன்
அகம் -இடம்
மெய்யகம் -ஸத்யமான ஹ்ருதயம்
விரை -மணம்
பூ மகள் -ஸ்ரீ தேவி

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

————————-

ஶ்ரீவைணவ ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம் நாளை(17/02/2023) மாசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசியுடன் கூடிய திருநாள்

ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள் 16-2-1444
ருதிரோத்காரி ஆண்டு

இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
( இன்று 16-2-2023 ஆச்சாரியர் திருநட்சத்திரமான மூலம் என்னே பொருத்தம்)

மாமுனிகள் திருநாட்டுக்கு எழந்தருளிய பிரகாரத்தை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் என்னும் ஸ்ரீமணவாள மாமுனிகள் திவ்ய சரிதத்தில் கீழே உள்ளவாறு அருளிச் செய்துள்ளார்

ஆதித்ய அஸ்தமன மானவாறே தம்முடைய கர்ம அனுஷ்டானங்களை செய்தருளி திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்
வாழி உலகாசிரியன்
என்று அனுஸந்தித்துக் கொண்டு
பிள்ளையை தியானித்து கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள ஸ்ரீபாதத்து முதலிகள் எல்லாரும் கைகூப்பிக் கொண்டு

ப்ரஹ்மவல்லி ப்ருகுவல்லி சூழ்விசும்பணி முகில்
அர்ச்சிராதி இராமானுஜ நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடன் சொல்லுகிற அளவில்

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் (இரா.நூற்.108) பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஸந்திக்க கேட்டு தாமும் கிருதாஞ்சலி புடராய் (தம் திருக்கைகளைக் கூப்பி) எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அனுஸந்தித்துக் தத்கத சித்தராய் திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்க

கநககிரிமேலே கரியமுகில்போல விநதை சிறுவன் மேற்கொண்டு’
(ஆர்த்.பிர.52)என்றும் எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல் வந்து முகங்காட்டி வழி நடத்த (59) என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய பெருமாளும்

செழும்பறவை தானேறி திரிவராய்த் தம் தாளிணையை (திரு.மொழி10-6-5) இவர் திருமுடி மேலே வைத்து
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் போன்ற (பெரிய.திரு.9-2-8)
தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து அநுபவிக்க அநுபவித்து
உன் சரணம் தந்தென் சன்மங் களையாயே என்றும் ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய என்றும்

நோய்களால் என்னை நலுங்காமல் சதிராக உன் திருத்தாள் தா என்றும்

நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீகரிக்கப் பெற்று மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும்

அரங்கத்துறையுமின் துனைவனோடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே

ச்ரியபதியான பெரிய பெருமாள்

பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த ஷுஷும்நையாகிற (நாடி)
வாசலிலே புறப்பட்டு சிர கபாலத்தைப் பேதித்து பரஹ்மரந்த்ரத்தாலே
ஜீயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்கிறார்

ஆச்சாரியன் திருநாடு எழுந்தருளிய நாளை தீர்த்த தினம் என்பர் (ஆசார்யரின் நினைவைப் போற்றிஅவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்து கொள்வதால்)

திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம் (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

(சாதாரணமாக சிரார்த்தம் திதிவதிவசம் எனப்படுகிறது)

ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம் (திதி) அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப் படுகிறது

ஆழ்வார்கள் ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை

மணவாளமாமுனிகள் சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்னரே பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார் அவர் என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார்

அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும் திருவத்யயனம் செய்கிறார்

ஆம் மணவாள ஜீயரின் (மாமுனிகளின்),மகத்தான அழகிய மணவாள சீடர்
அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளே

ஶ்ரீரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து மாமுனிகளை தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்

திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் ஈடு வியாக்யனத்தை
மணவாள மாமுனிகள் திருவாயால் செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்) ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்

வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து வந்து மாமுனிகளை ஆசார்யராக ஏற்று கொண்டதற்கு ஆசார்ய சம்பாவணையாக ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார்

அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம் என்னும் தனியன்

(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின்
எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்)

அதோடு மட்டுமல்ல ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய
வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்

1) தனியன் சமர்ப்பித்தல்

2) ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்

எல்லா திவ்ய தேசங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும் சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரம் சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்

அதுபோக ஶ்ரீமடங்கள் ராமானுஜ கூடங்கள் ஆசார்யர்கள் பாகவதர்கள் திருமாளிகைகள் என நாளும் சேவிக்கபடுகிறது

3) ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும் எல்லாம் ஆசார்யருடையதே தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல் அவசியம்

இதை நடைமுறை செய்யவே அரங்கன் தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார்
அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்

ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார் நம்பெருமாள்

4) ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்

நம்பெருமாளின் திருநாமம்- அழகிய மணவாளன் என்பதே அது மாமுனிகளின் இயற்பெயர் அவர் சந்யாசம் ஏற்ற போது
சடகோப ஜீயர் என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார் ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார் (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும் பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்)

5) ஆசார்யர் திருநட்சித்திரத்தையும்
தீர்த்தத்தையும் சிறப்பாக அனுஷ்டித்தல்

அரங்கர் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்

இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள் உடுத்துக்களைந்த மாலைகள் பரிவட்டங்கள் சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்

தீர்த்த நாளன்று (நாளை) அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே மாமுனிகளுக்கும் ஆராதனம் செய்கிறார்

நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை

மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே இவருக்கு நைவேத்யம்.(நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்)

அன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை

ஆக நாளை ஶ்ரீமணவாள மாமுனிகளின் தீர்த்த நாளில் அவசியம் ஶ்ரீமடங்களுக்கு எழுந்தருளி தீர்தம் ஸ்வீகரியுங்கள்

அவசியம் அகத்தில் ஒரு இனிப்பு பட்சணம் செய்து ஆச்சாரியனுக்கு சமர்பித்து பகவானுக்கும் சமர்பித்து ஸ்வீகரியுங்கள்

கும்பம் பாஸ்வதி யாதி தத் ஸூ ததிநே பக்ஷே வள க்ஷேத்ரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷபாஷி ருதி ரோத் கார்யாக்ய ஸம் வத்சரே
தீ பக்த்யாதி குண ஆர்ணவோ யதி வராதீ நா நிலாத்ம ஸ்த்திதி
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவ மகாத் காந்தோ பயந்தா முனி–மணவாளமாமுனிகளின சரம ஸ்லோகம்

ஞான பக்த்யாதி குணங்களுக்கு மஹா சமுத்திரம் போன்றவரும்
எம்பெருமானாருக்கு ஸ்வா தினமான ஸமஸ்த நிலைகளையும் யுடையவரான
மணவாள மா முனிகள்
ருதிரோத்காரி சம்வத்சரத்தில்
ஸூ ர்யன் கும்ப ராசியை அடைந்த அளவில் -மாசி மாதத்தில்
சனிக்கிழமை
கிருஷ்ண பக்ஷம்
திருவோணம் நக்ஷத்திரத்தில்
துவாதசி தினத்து அன்று
எல்லையற்ற பெருமை கொண்ட ஸ்ரீ வைகுண்டத்தை அலங்கரித்து அருளினார்
என்று அங்குத்தை அந்தரங்கள் அருளிச் செய்தார்கள்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீமத்வ மத ஸித்தாந்த சாரம்–

February 24, 2023

3-ஜயத்யஜோ அகண்ட குணோருமண்டல ஸ்தோதித க்ஞான மரீசிமாலி

ஸ்வபக்த ஹார்தோஸ்ச தமோ நிஹந்தா  வ்ய்ஸாவதாரோ ஹரிராத்ம பாஸ்கர: II

குணபூர்ணர் (அகண்ட=அளவில்லா) ஞானம் தரவல்லவர்.,:,சூரியன் போன்றவர்.,எப்படிப்பட்ட சூரியன்? தமது பக்தர்களின் இதயத்தில் இருக்கும் தமோகுணம் என்னும் இருட்டைப் போக்கவல்ல  சூரியன் அப்படிப்பட்ட ஸ்ரீஹரியின் அவதாரமேயான ஸ்ரீவியாஸரைப் பூஜிக்கிறேன்.,

நாராயணம் ஸுரகுரும் ஜகதேக நாதம்
பக்தப்ரியம் ஸகலலோக நமஸ்க்ருதம் ச I

த்ரைகுண்ய வர்ஜிதம் அஜம் விபும் ஆத்யம் ஈசம்
வந்தே பவக்னம் அமராஸுர ஸித்த வந்த்யம் II

ஸ்ரீமத்வாச்சார்யார் இந்த கிரந்தத்தில் ஸ்ரீவேதவ்யாஸர்.,ஸ்ரீராமர்., ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை நமஸ்கரித்து மூன்று திவ்யமான ஸ்லோகங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்.,அவர்களை முறையே சூரியன்., சந்திரன்., ஸமுத்திரம் ஆகியவைகளுக்கு ஒப்பிட்டு புகழ்ந்து பாடியிருக்கிறார்.

1.ஸ்ரீவேதவ்யாஸர் துதி:-
ஜயத்யஜோ அகண்ட குணோருமண்டல :ஸதோதிதோ  ஞானமரீசிமாலி I

ஸ்வபக்த ஹார்தோஸ்ச தமோநிஹந்தா வ்யாஸாவதாரோ ஹரி: ஆத்ம பாஸ்கர: II

2.ஸ்ரீராமர் ஸ்துதி:-

ஜயத்யஜோ அக்ஷீண ஸுகாத்மபிம்ப:  ஸ்வைஸ்வர்ய காந்தி ப்ரதத: ஸதோதித:I

ஸ்வபக்த ஸந்தாப துரிஷ்டஹந்தா  ராமாவதாரோ ஹரிரீச சந்த்ரமா:II

3.ஸ்ரீகிருஷ்ணஸ்துதி:-

ஜயத்ய ஸங்க்யோருபலாம்புபூரோ குணோச்சரத்னாகர ஆத்மவைபவ:II

ஸதா ஸதாத்மக்ஞானதீபிராப்ய: க்ருஷ்ணாவதாரோ ஹரிரேகஸாகர: II

இந்த மூன்று ஸ்லோகங்களையும் ஒருசேரச் சொல்வதனால் நமக்கு ஒரே நேரத்தில்., ஸ்ரீடீகாச்சார்யர்.,ஸ்ரீமத்வாச்சார்யர்., ஸ்ரீராம.,கிருஷ்ண., வேதவ்யாஸதேவர்களின் ஸ்மரணையும்., கிருபையும் கிடைத்து விடுகிறது.,

ராமாயணத்தில் சூர்ப்பணகை ஸ்ரீராமரிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படிக் கேட்கிறாள்.,இதை ஒரு அழகான உவமையைக் கூறி விவரிக்கிறார் ஸ்ரீமத்வாச்சார்யார்.,
ஸ்லோகம்:-
ராமம் ஸமேத்ய பவ மே பதிரித்யவோசப்தானும் யதா தம உபேத்ய ஸுயோககாமும்.,
என்ன அர்த்தம்?.,
ராமனிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று அவள் கேட்டது.,இருட்டு(Darkness) சூரியனிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கேட்டது போல் இருக்கிறது என்கிறார் ஸ்ரீமதாச்சார்யர்.!.,

——–

சம்ஸ்கிருதத்தில் ஹார்த்(dh)  என்பது இதயம்., இங்கிலீஷ்காரன் இதையே ஹார்ட்(heart)  என்று காப்பி அடித்திருக்கிறான்

துவைத ஸித்தாந்தப்படி பிரம்ம சூத்திரங்கள் மொத்தம் 564.,அத்வைதசாஸ்திரம் இதை 555 என்றும்.,விசிஷ்டாத்வைதம் 545 என்றும் கூறுகிறது.

நான்கு அத்தியாயங்கள் முறையே.,1.ஸமன்வய அத்யாயம்.,2.அவிரோத அத்யாயம்.,3.ஸாதனா அத்யாயம்.,4.பலா(phalaa) அத்யாயம்.,

மூன்றாவது அத்தியாயமான  ஸாதனா அத்யாயத்தில் நான்கு பாதங்கள் முறையே 1.வைராக்கியம்.,2.பக்தி 3.உபாஸனை 4.க்ஞானம் என்பன.,அதேபோல நான்காவது அத்யாயமான பலாத்யாயத்தில் நான்கு பாதங்கள் முறையே 1.கர்மக்ஷயம் 2.உத்க்ராந்தி 3.மார்க்கம் 4.போகம் (bhogam) என்பனவாகும்.,

1.பாஷ்யம்.,என்பது மூல நூலுக்கு விளக்க உரை.,

2.டீகா அல்லது டீகை., இது பாஷ்யத்துக்கு விளக்க நூல் அல்லது commentary.,

3.டிப்பணி :  இது மேலே சொன்ன டீகை என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட விவரங்களுக்கு தரப்படும் விளக்கங்கள்.,ஆங்கிலத்தில் elucidation என்பார்கள்.,

4.சில சமயம் டிப்பணியில் இருக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ள டிப்பணிக்கு ஒரு டிப்பணி இருக்கும்.,இதற்கு further elucidation என்று சொல்லலாம்

சுமார் 2000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீமத்வரின் சூத்ர பாஷ்யம் ஸ்ரீவேதவ்யாஸதேவர்  அருளிய  பிரம்ம சூத்ரங்கள் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளிக்கிறது

ஸ்ரீமத்வாச்சார்யர் பத்ரி க்ஷேத்ரத்துக்குச் சென்று திரும்பியபின்   சூத்ரபாஷ்யம் எழுதினார்., இந்த கிரந்ததத்தை அவ்ர் சொல்லச்சொல்ல அவருடைய சிஷ்யரான ஸ்ரீசத்ய தீர்த்தர் அதைச் சுவடியில் வடித்தார்.,பின்னர் கோதாவரி நதி தீரத்தில் ஒரு வித்வத்ஸபை நடந்தது.,அங்கு இந்த புனிதமான கிரந்தம் அரங்கேறியது., அப்போது  ஸோபன பட்டர் என்னும் அத்வைத வித்வான் ஸ்ரீமத்வரிடம் வாதம் செய்து பின்னர் ஸ்ரீமத்வரின் தத்வங்களை ஒப்புக்கொண்டு ஆசார்யரின் சீடராக ஆனார்., அதுமட்டுமின்றி ஆசார்யரின் துவைத ஸித்தாந்தத்தை நாடெங்கும் பரப்பினார்., மேலும் இவர் ஆச்சார்யரின் சூத்ர பாஷ்யத்துக்கு தாமே ஒரு விளக்க உரை எழுதினார்.,இந்த நூலுக்கு ஸத் தர்க தீபாவளி என்று பெயர்.,,

முதல் அத்தியாயத்திற்கு ஸமன்வய அத்தியாயம் என்று பெயர்.,ஸமன்வயம் என்றால் Equating.,அல்லது equalizing என்று கூறலாம்., உலகில் உள்ள எல்லா சப்தங்களும்.,பெயர்களும் ஹரி.,ஸ்ரீமன்நாராயணனையே குறிக்கின்றன என்ற விஷயத்தை ஸ்ரீமத்வர் இதில் நிரூபணம் (prove) செய்திருக்கிறார்.,இதை ஸ்ரீஹரி.,ஸர்வசப்த  வாச்யன் அல்லது ஸர்வ சப்த ஸமன்வயன் என்று கூறுகிறார்கள்.,சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் எல்லா வேத கோஷங்களும் .,வேத வாக்யங்களும் ஸ்ரீஹரியையே குறிக்கின்றன  என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீமத்வர்.,

பரமாத்மா ஸ்ரீஹரி குணபரிபூர்ணன்.,அவனே இந்தப் பிரபஞ்சத்துக்கு ஸ்ருஷ்டி .,ஸ்திதி மற்றும் லயத்துக்கு (ஆக்கல்.,காத்தல்.,அழித்தல்) காரணகர்த்தா.,இது சரியல்ல என்று மறுப்பதற்கு நான்கு காரணங்கள் காட்டப்படுகின்றன.,அவை:-
1.அறிவு பூர்வமான மறுப்புகள்
2.(வேற்று) மதங்களின் நம்பிக்கைகள்.,ஸித்தாந்தங்கள்
3.வேத வாக்கியங்கள்
4.வேத வாக்கியங்களுடன் கூடிய அறிவு பூர்வமானமறுப்புகள்

இதற்கு சம்ஸ்கிருதத்தில்  யுக்தி விரோதம்., சமய விரோதம்.,ச்ருதி விரோதம்.,யுக்தி ஸஹித ச்ருதி விரோதம் என்று சொல்கிறார்கள். இவைகளின் காரணமாக பரமாத்மாவைப் பற்றித் தவறான விவரணைகளும் அத்துடன் அவனிடம் ஒரு சில தோஷங்களும் கற்பிக்கப் படுகின்றன.,இந்த நான்கு விரோதங்களும் இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் ஆச்சார்யரால் நீக்கப் படுகின்றன.,இந்த விரோதங்கள் நீங்கியதுமே பகவான் நிர்தோஷி (தோஷமற்றவன்)என்று நிரூபிக்கப் படுகிறது., இதுவே இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கம்.,இதையே தனது மங்கள ஸ்லோகத்தில் “தோஷவர்ஜிதம்’ என்று ஸ்ரீமத்வர் குறிப்பிட்டிருக்கிறார்.,

அடுத்த அத்தியாயம் ஸாதனா அத்யாயம்.,ஸ்ரீஹரி கடாக்ஷம் இருந்தால் மட்டுமே ஜீவனுக்கு முக்தி.,ஹரிகடாக்ஷம் பெறுவதற்கு  பக்தி தேவை., பக்தியை வளர்த்துக் கொள்ள விஷயசுக(புலன் நுகர்ச்சி) வைராக்கியம் தேவை.,இவ்வாறு பக்தியை வளர்த்துக் கொண்டு  பகவந்தனை உபாசனை செய்ய வேண்டும்.,இவ்வாறு செய்வதால் ஞானம் கிடைக்கும்.,இந்த நான்கு விஷயங்களே இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் முறையே வைராக்யம்.,பக்தி.,உபாஸனா.,மற்றும் ஞானம் என்று விளக்கப் பட்டுள்ளன., இவைகளையே ஸ்ரீஆச்சார்யர் தமது  ஆரம்ப ஸ்லோகத்தில்  ஞேயம் என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்.,

கடைசி மற்றும் நான்காவது அத்தியாயத்தில் (பphaலாத்யாயம்) மேலே சொன்ன ஸாதனைகளினால் கிடைக்கும் பலன்கள் விவரிக்கப் படுகின்றன.,இந்த அத்தியாயம் இதை இறைவனின் சாம்ராஜ்ஜியம் என்று கூறுகிறது.,அங்கே இருப்பது குறைவற்ற ஆனந்தம்.,அதுவும் துக்கத்தின் கலப்பு சற்றும் இல்லாத ஆனந்தம்.,கர்மாவின் (வினைப்) பயன் பூரா இல்லாமல் போகவேண்டும்.,அதன்பின்  ஜீவன் இந்த அவஸ்தை நிறைந்த உடலில் இருந்து  விடுதலை பெற வேண்டும்.,பின் மோக்ஷத்தின் பாதையில் செல்ல வேண்டும்.,பின்னர் அங்கேபோய் குறைவற்ற ஆனந்தத்தை அநுபவிக்கவேண்டும்.,(இதுவே மனிதப் பிறவி எடுப்பதன் முழுப்பயன்) ஆகவே இவைகளையே இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் முறையே.,கர்மக்ஷயம்.,உத்கிராந்தி.,மார்க்கம்.,மற்றும் போகம் (Bhogam) என்று இந்த அத்தியாயம் சொல்லிக் கொடுக்கிறது., இதையே சுருக்கமாக தமது மங்கள ஸ்லோகத்தில் “கம்யம்” என்னும் வார்த்தையில் சூசித்துக் கொடுத்திருக்கிறார் ஆசார்யஸ்ரீமத்வர்.,

உத்கிராந்தி என்பது உடலை விட்டு வெளியே செல்லும்போது என்னென்ன .,எப்படியெப்படி நடக்கும் என்பன தெரிந்து கொள்வது.,அர்ச்சிராதி மார்க்கங்களை விவரிப்பது மார்க்க பாதம்.,உதாரணத்துக்கு., ஜீவன் மோக்ஷத்துக்கு செல்லும் வழியில் துருவராஜாவின் (காட்டில் தவம் செய்து இறைதரிசனம் பெற்ற அவரேதான்) ராஜ்ஜியமான துருவ மண்டலத்தைத் தாண்டிச் செல்லும்போது தேவதைகள்  அதோ.,ஓஓ….பார்., அதுதான் துருவ மண்டலம் என்று காண்பித்துவிட்டு மேலே., மேலே போய்க்கொண்டே இருப்பார்கள்.,தூரத்திலிருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்., ஆனால் ஒரு ஸாதகன் மிகச் சிறப்பாக பரிபக்குவ பக்தியுடன் திடபக்தியுடன் ஞானபக்தி ஸாதனைகளைச் செய்து மிக உயர்ந்த பக்தனாக இருந்தால் அந்த ஜீவனை தேவதைகள்  துருவமண்டலத்துக்குள் அழைத்துச் சென்று அங்கே இருக்கும் சிம்சுமார மூர்த்தியை தரிசனம் செய்து வைப்பார்கள்.,இது ஒரு உயர்ந்த கொடுப்பினை., அதனால்தான் பெரியோர்கள்  அந்தணர்களுக்கு சாலக்கிராம தானம் கொடுக்கும்போது சின்னதாக வெள்ளியில் ஒரு சிம்சுமார பிரதிமை(விக்கிரகம்) தானமாகக் கொடுப்பார்கள்.,இந்த சிம்சுமார மூர்த்தியை (பிரதிமையை) தினசரி சாலக்கிராம பூஜையின்போது .இந்தப்பிரதிமைக்கும் பூஜை செய்து வந்தால் மனது மேலும் மேலும் ஸாதகம் புரியவேண்டும் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளும்.,

குறிப்பு:-  சிம்சுமார மூர்த்தி என்பது பாதி விஷ்ணு உடம்பு மீதி பகுதி தேள் (scorpian)போல இருக்கும்., சாதாரணமாக பூஜா சாமான்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.,வாங்கி தானம் செய்வதும் சரி., வீட்டில் வைத்துப் பூஜை செய்வதும் மிக நல்லது.,

ஓம் நாராயணம் கு3ணை:ஸர்வை: உதீர்ணம் தோ3ஷவர்ஜிதம் I

ஞேயம் க3ம்யம் கு3ரூம்ஸ்சாபி நத்வா ஸூத்ரார்த்த உச்யதே II

இந்த ஸ்லோகத்துடன் பிரம்மசூத்ர பாஷ்யம் ஆரம்பிக்கிறது., இந்த ஸ்லோகம் ஒவ்வொரு மாத்வருக்கும் மனப்பாடமாகத் தெரிய வேண்டிய ஒரு ச்லோகம்.,
இந்த ஒரு ஸ்லோகத்துக்கு தாம்ரபரணி ஸ்ரீராகவேந்திரன் (Coimbatore Sri TSR ) அவர்கள் சுமார் 40- 50 பக்கங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.,ஸ்ரீமத்வர் சாக்ஷாத் வாயுதேவரின் அவதாரம் என்பதால் அவருக்கு இந்த நாராயண சப்தம்(சொல்) மிகவும் பிடித்தமானது என்று தெரிகிறது.,ஏனெனில் பிரம்மசூத்திரத்துடன் சம்பந்தப்பட்ட(ஸ்ரீமத்வரின்) நூல்கள் மேலும் மூன்று உள்ளன. அவைகளிலும் கிரந்தம் நாராயண சப்தத்துடன் தான் ஆரம்பிக்கிறார்.,

———

1. ஸ்ரீவேதவ்யாஸர் இல்லாவிட்டால் தற்காலத்தில் வேதங்கள் இல்லாது மறைந்து போயிருக்கும்.,.,
2.வேதங்களை தவறாக வியாக்கியானம் செய்து மக்களைக் குழப்பியவர்கள்., இருந்தனர்.,
3.இதற்காக ஒரு மதாச்சார்யார் அவதாரம் தேவைப்பட்டது.,அவரே ஸ்ரீமத்வர்.,.,

ஸ்ரீமத்வருக்குப் பின்னர் வந்த குரு பரம்பரையில் ஸ்ரீ நரஹரி தீர்த்தர்.,ஸ்ரீபத்மனாப தீர்த்தர்., போன்ற மஹான்கள்., ஸ்ரீஜயதீர்த்தர் (எ) டீகாச்சார்யர்.,ஸ்ரீவாதிராஜர்.,ஸ்ரீவியாஸராஜர்.,ஸ்ரீவிஜயீந்திரர்.,ஸ்ரீரகோத்தமர்., ஸ்ரீராகவேந்திரர்.,ஆகியோரை அறியாத மாத்வர்கள் இல்லை எனலாம்.,இவர்கள் எல்லாம் மத்வமத.,.,துவைத ஸித்தாந்தத்தை மிகச் சிறந்த முறையில் பிரகடப் படுத்தினார்கள்.,
ஒரு ஸமயம்.,சில வித்வான்கள் சந்திரிகாச்சார்யர் என்றழைக்கப் படும்., ஸ்ரீவியாஸராஜரை அணுகி .,”உங்கள் மதத்தின் கொள்கைகளை எல்லாம் இரண்டே வரிகளில் கூற இயலுமா.,?” என்று கேட்டனர்.,ஸ்ரீவியாஸராஜரும் உடனடியாக கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி அருளினார்.,(ஸ்ரீவியாஸராஜரே அவரது அடுத்த பிறவியில் ஸ்ரீராகவேந்திரராக அவதரித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.,).,
இந்த ஸ்லோகத்தை ” பிரமேய நவரத்ன மாலிகா ” என்று வேதாந்த பண்டிதர்கள் மிகவும் கொண்டாடுகின்றனர்.,
இந்த ஸ்லோகம் பின்வருமாறு:-
ஸ்ரீமன் மத்வமதே ஹரி: பரதர:
ஸத்யம் ஜகத் தத்வதோ பேதோ.,.,
ஜீவ கணா: ஹரேர் அநுசரா:.,
நீசோச்ச பாவம் கதா:.,I
முக்திர் நைஜஸ் ஸுகானுபூதி;.,
அமலா பக்திஸ்ச தத்ஸாதனம்.,
ஹ்யாக்ஷ்யாதி த்ரிதயம் பிரமாணம்.,.,
அகிலாம் நியாயைக வேத்யோ ஹரி:.,.,II
இந்த ஸ்லோகம் மத்வமத தாத்பர்யத்தை அப்படியே தேன் மாதிரி.,.,ஜூஸ் மாதிரிப் பிழிந்து நமக்கு ஸுலபமாக ஜீரணிக்கும் வகையில் கொடுக்கிறது.,இந்தத் தேனை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் குடித்துப் பார்ப்போம்.,.,
இந்தப் பதிவுகளில் இனி நாம் பார்க்கப்போகும் ஸித்தாந்தங்கள் யாவும் இந்த ஸ்லோகங்களின் விரிவுரைதான்.,

5. நியாய விவரணை., (இதற்கு  ஸந்நியாய  விவ்ருத்தி  என்றும் பெயர் உள்ளது)

பிரம்ம சூத்ரங்களில் நாம் பார்த்த வரிசைக்கிரமம் முதலில் பிரம்மசூத்ரம்.,ஸ்ரீவியாஸதேவர் அருளியது.,
1.பிரம்ம சூத்ரங்கள்.,
2.அதற்கு ஸ்ரீமத்வாச்சார்யர் எழுதிய பாஷ்யமென்னும் விளக்க உரை.,(பிரம்ம சூத்ர பாஷ்யம்).,
3.இவை நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.,
4.ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.,

5.ஒவ்வொரு பாதமும் பல்வேறு அதிகரணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.,(the sub divisions of Paadhaas are called Adhikaranaas,)

6.ஒவ்வொரு  அதிகரணத்திலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ சூத்ரங்கள் இருக்கும்.,

உதாரணமாக முதலாம் அத்தியாயம்(ஸமன்வய அத்தியாயம்) .,முதலாம் பாதம் பெயர் அன்யத்ர ப்ரசித்தநாம பாதம்.,இந்த பாதத்தில் மொத்தம்  12 அதிகரணங்கள் உள்ளன., இந்தப்  பன்னிரெண்டு அதிகரணங்களுக்கும்  சேர்த்து மொத்தம் 31 சூத்ரங்கள் உள்ளன., (இவற்றில் நாம் சாம்பிளுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்தோம்)

சில அதிகரணங்களில் ஒரே ஒரு சூத்ரம் மட்டும் இருக்கும்., சிலவற்றில் 7 அல்லது 8 சூத்ரங்கள் இருக்கும்., மொத்தமுள்ள  564 பிரம்ம  சூத்ரங்கள் 220  அதிகரணங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.,
ஆகவே இந்த அதிகரணங்களுக்கே ஒரு லிஸ்ட் போடலாம்.,இவ்வாறு அதிகரணங்களைப் பற்றிய விவரங்கள் உள்ள கிரந்தம்தான் நியாய விவரணை., இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது.?., அதிகரணங்களுக்கு நியாயங்கள் என்று ஒரு பெயர் உண்டு., ஆகவே நியாயங்களின் விவரங்கள் (விளக்கங்கள்) உள்ள கிரந்தம் நியாய விவரணை ஆயிற்று.,

அதோடு மட்டுமல்ல.,இந்த கிரந்தத்தில் வசன நடை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.,சம்ஸ்கிருதத்தில் பத்யம் என்பது பாடல்(ஸ்லோகம்) வடிவம்.,கத்யம் என்பது வசன (prose) வடிவம் அல்லது நடை.,இதேபோல் வசன நடையில் ஸ்ரீராகவேந்திரஸ்வாமிகள் “ப்ராதஸ் சங்கல்ப கத்யம்” என்று  வசன நடையில் ஒருகிரந்தம் எழுதி அருளியிருக்கிறார்.,

இந்த நூலிலும் ஸ்ரீ மத்வர் பல்வேறு வேற்று மத ஸித்தாந்தங்கள் ., அவை என்ன கூறுகின்றன.,அது எவ்வாறு தவறு.,மத்வஸித்தாந்தம் என்ன ., அது எப்படி சரியானது போன்றவைகளை நிரூபணம் செய்திருக்கிறார்.,

இதற்குமுன் நாம் பார்த்த அனுவியாக்கியானம் கிரந்தத்தில் நியாயமாலா என்னும் பகுதிக்கு இது விளக்க நூலாகவும் அமைந்துள்ளது.,

அதுமட்டுமல்ல., இந்த கிரந்தத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு.,அது என்ன?.,
ஸ்ரீவேதவ்யாஸரின் ஒவ்வொரு பிரம்மசூத்ரத்துக்கும் வேதங்களில் உள்ள ஒரு ” ரிக்” எனப்படும் ஒரு வேத வாக்யத்துக்கும் சம்பந்தம் இருக்கும்., ஏனெனில் வேதங்களை ., அவைகளில் உள்ள அர்த்தங்களை நமக்கு தெளிவாக்குவதற்காக (ஸ்பஷ்டம் என்று வடமொழியில் சொல்வார்கள்) ஏற்பட்டதே ஸ்ரீவியாஸரின் பிரம்ம சூத்ரங்கள்., இவ்வாறு சம்பந்தப்பட்ட ரிக் அல்லது  வாக்கியத்துக்கு விஷய வாக்கியம் என்று பெயர்., அல்லது சுருக்கமாக விஷயம் என்பார்கள்.,

இப்பொழுது நாம் ஒரு சிறு பட்டியல் பார்க்கப் போகிறோம்.,அவை:-
1.விஷயம்.,
2.சந்தேஹம்.,அல்லது சந்தேகம்.,
3.பூர்வ பக்ஷம்.,
4.,ஸித்தாந்தம்.,
இவற்றில் விஷயம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டேன்.,
2.சந்தேஹம்:- அப்படியென்றால் ஒரு விஷயம் என்பது சரிதானா அல்லது தப்பா., அது இப்படியா.,அல்லது அப்படியா.,என்பது போன்ற ஐயங்கள்.,

உதாரணத்துக்கு முதலாம் அத்தியாயத்துக்கு பிரம்ம விசாரம் அல்லது பிரம்மன் என்பது விஷயம்.,இதைப்பற்றி ஏன் படிக்க வேண்டும்.?.,இந்த விசாரம்(விசாரணை) தேவையா., இல்லையா என்பது சந்தேஹம்.,,
3.பூர்வ பக்ஷம் என்பது பல்வேறு வேற்று மதஸ்தர்களின் கருத்துக்கள் அல்லது மாற்றுக்கருத்துக்கள்.,or objections.,

4.ஸித்தாந்தம்:- என்பது ஸ்ரீமதாச்சர்யர் நிரூபிக்கும் விஷயம்..பூர்வ பக்ஷத்துக்கு opposite  ஆக இருக்கும்., இதுவே மத்வமதத்துக்கும் ஸித்தாந்தம்.,ஸ்ரீவேதவ்யாஸர் கூறியதற்கும் உண்மையான அர்த்தம்.,இதை ஸ்ரீ மத்வாச்சார்யர் பல்வேறு யுக்திகள்.புராண இதிஹாஸ quotations  வேத .,உபநிஷத் வாக்யங்கள் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருப்பார்.,

இதுபோல ஒவ்வொரு நியாயத்துக்கும் (அதிகரணத்துக்கும்) நிரூபணம் செய்து இருக்கிறார்., இதன் மொத்தமே நியாயவிவரணை கிரந்தம்., இதற்கு ஸ்ரீஜயதீர்த்தரின் தத்வப்ரகாஷிகா.,ஸ்ரீவ்யாசராஜரின் தாத்பர்ய சந்த்ரிகா., ஸ்ரீரகூத்த ஸ்வாமிகளின் தத்வப்ரகாசிக-பாவபோதம் ஸ்ரீசத்யநாத தீர்த்தரின் அபினவ சந்த்ரிகா.,ஸ்ரீராகவேந்திரஸ்வாமிகளின்

தத்வப்ரகாசிகா பாவதீபம்.,என்று இன்னும் பல்வேறு மஹனீயர்களின் விளக்க கிரந்தங்கள் உள்ளன.,இவற்றையெல்லாம் நாம் முழுதுமாகப் படித்து தெரிந்து கொள்வதற்கு எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் போதாது.,

அத்வைத ஸித்தாந்தம்.,”ஸத்யம் பிரம்மம்., ஜகத் மித்யை” என்று கூறுகிறது

இந்த உலகம் ஸத்யம்., உலகம் மட்டுமல்ல .,இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஸத்யமானது.,இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.,
ஆகையால்தான் ஸ்ரீவியாஸராஜர் ” ஸத்யம் ஜகத்” என்று கூறி இருக்கிறார்.,

அத்வைதிகள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் பொதுவாக ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்.,.,இந்த உலகமும் .,அதில் உள்ள பொருட்கள் யாவும் பகவானால் உண்டாக்கப் பட்டவை என்பதாகும்.,இதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.,ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் தனது விபூதிகளைக் கூறும்போது ., தமது கலைகள்., சக்தியின் வெளிப்பாடு எங்கெங்கு விஷேஷமாகக் காணப் படுகிறது என்பதைக் கூறிவிட்டுக் கடைசியில் ( அத்தியாயம் 10 .,ஸ்லோகம் 42ல் ) கூறுகிறார்.,
“அஹமிதம் க்ருத்ஸ்னம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத்” என்கிறார்.,
இதன் அர்த்தம்:-
எனது ஒரு அம்சத்தால் ( ஒரு சிறு கலையால் ) இந்த உலகம் அனைத்தையும் தாங்கியிருக்கிறேன் என்று கூறுகிறார்.,
பகவான் ஸத்யமானவர் என்றால் ., பகவானால் செய்யப்பட்ட பொருள் எப்படி அஸத்யமாகும்.,?தன்னுடைய முழு அம்சத்தில் ஒரு மிகச்சிறு பகுதியை வைத்தே .,.,அதனாலேயே நான் இந்த உலகு அனைத்தையும் தாங்குகிறேன் என்று பகவானே கூறி இருக்கும்போது., அவர் உண்டாக்கிய இந்த உலகு ( ஜகத்- Universe ).,மற்றும் அதில் உள்ள பொருட்கள் எப்படி மாயையாகும்.,?
இதற்கு அத்வைதிகள் சொல்வது.,.,பகவான் தனது மாயையால் இவ்வுலகைப் படைத்தார் என்பதாகும்.,

பகவான் தனது மாயையால்தான் இவ்வுலகைப் படைத்தார்.,சந்தேகமில்லை.,
ஆனால்., பகவானின் மாயையால் உலகம் படைக்கப் பட்டது என்னும்போது ., மாயை என்னும் சொல்லுக்கு நீங்கள் ( அதவைதிகள் )எடுத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு .,இங்கு பகவானின் மாயை என்னும் சொல்லுக்கு .,.,பகவானின் இச்சை என்று அர்த்தம்., அவன் ” நான் இந்த உலகைப் படைக்கப் போகிறேன்.,” என்று இச்சைப்பட்டு அதன்படி படைத்தான்., என்பதாக ., சாஸ்திரப் பிரமாணங்களுடன் நிரூபித்திருக்கிறார்.,
ஆகையால் இந்த உலகம் மாயை இல்லை.,.,என்பதையும்., இது ஸத்தியம்.,” ஜகத் ஸத்யம்” என்பதையும் நமது மத்வ மதம் நன்றாகவே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது.,

அத்வைதிகளின் வாதமான பிரம்மம் ஸத்யம்., ஜகத் மித்யை என்பதைப் பற்றி சொல்லும்போது., கோயம்புத்தூர் பண்டிதர் ஸ்ரீமான் T.S. ராகவேந்திரன் அவர்கள் ஒரு விஷயம் கூறுகிறார்.,
ஸத்யமான பொருள் ஒன்று இன்னொரு பொருளை உண்டாக்கினால் அப்பொருளும் ஸத்யமாகத்தான் இருக்கும் .,இல்லாவிட்டால் .,அதனை ” அலங்க்ருத்ய சிரச்சேதன இதி” என்று வடமொழியில் கூறுவது போலாகிவிடும்.,

அப்படியென்றால்.,?
ஒருவனை மிக அழகாக அலங்காரம் செய்து ., புதுப்பட்டாடை கட்டி., கழுத்தில் மாலை முதலியன போட்டுப் பின்னர் அவன் கழுத்தை வெட்டுவது போலாகும்.,
இன்னும் ஒரு சில பிரமாணங்கள் பார்ப்பதற்குமுன் ., நாம் முன்னர் பார்த்த அத்வைத வாதிகளின் கிளிஞ்சல் சிப்பி – வெள்ளி உதாரணத்துக்கு ஸ்ரீமத்வரின் பதில் என்ன என்று பார்த்து விடுவோம்.,.,
கிளிஞ்சலில் அந்த மனிதன் பார்த்த வெள்ளி .,அவனுக்கு வெள்ளியை ஞாபகப் படுத்தியது.,இதற்கு., அவனுக்கு வெள்ளியைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும் ., அவன் வேறொரு இடத்தில் கடையிலோ., கோயிலிலோ., வீட்டிலோ வெள்ளியைப் பார்த்திருக்க வேண்டும்., அந்த வெள்ளி ஸத்யமானதுதானே.,?
அடுத்து., இங்கே பார்த்த வெள்ளி.,”ஆரோபிதம்- கல்பிதம்” எனப்படும்.,
அது என்ன.,?

ஆரோபிதம்., என்றால் ஏற்றி வைக்கப் பட்டது.,அதாவது கிளிஞ்சல் சிப்பியின்மீது வெள்ளி ஏற்றி வைக்கப் பட்டது., யாரால் ஏற்றி வைக்கப் பட்டது.,?.,
அதைப் பார்த்த மனிதனால் ஏற்றி வைக்கப் பட்டது.,.,!
கல்பிதம் என்றால் ., மனதால் கற்பனையாக ஒரு பொருளை ( வெள்ளியை ) கிளிஞ்சல் மீது ஏற்றி வைக்கப் பட்டுள்ளது.,,
அப்படியென்றால் அந்த மனிதனின் பார்வையில்தான் கோளாறே தவிர அங்கு அஸத்யமான ஒரு வஸ்து இல்லை., ( Silver is not in Existance there .,) ஆகையினால் அவனுக்கு ஏற்பட்டது “பாதக க்ஞானம்” ( தவறான அறிவு)தானே தவிர அது அக்ஞானம் அல்ல.,
மேலும் ., வெள்ளியை ஒரு பொருளின் மேல் ஏற்றி வைக்க வேண்டுமென்றால் ஏற்றி வைக்கப்பட வேறு ஒரு பொருள் இருந்தாக வேண்டும் இதற்கு அதிஷ்டானம் என்று பெயர்.,

ஆரோபிதமான வெள்ளி அஸத்யம் என்றால்.,
அதிஷ்டானமான கிளிஞ்சல் ஸத்யம் என்றாகிறது.,
அதுபோல ., ஜகத் மித்யை என்றால் அது ஆரோபிதமான வஸ்து என்று ஆகிறது., அப்படியென்றால் அந்த வஸ்து ஆரோபிதம் ஆவதற்கு .,அதிஷ்டானமாக இன்னொரு ஸத்யமான வஸ்து இருந்தாக வேண்டும்., அந்த வஸ்து., மீண்டும் இந்த ஜகத் என்னும் வஸ்துவாகத்தான் இருக்கும் .,

15-மஹாவாக்கியங்கள் என்று பெயர்,.,
ஸர்வம் கல்பிதம் பிரஹ்மம்..,: தத் த்வம் அஸி..,போன்றவைகள் மஹாவாக்கியங்கள்

——————-

17-கீதை ஸ்லோகம்., அத்தியாயம் 2.,ஸ்லோகம் எண் 47 (2 – 47):-

கர்மண்யேவாதிகாரஸ்தே  மா  ப(Pha)லேஷு  கதாசன I

மா  கர்மபலஹேதுர்ப்பூர்மா   தேஸங்கோsஸ்த்வ  கர்மணி II 2-47 II

அர்த்தம்:-

அர்ஜுனா! உன் கடமையைச் செய்வதற்கு  மட்டுமே உனக்கு அருஹதை உள்ளது.,கர்மத்தின்  பலனை  நிச்சயிப்பதற்கு அல்ல.,அதற்காக கடமையைச்  செய்யாமலே இருந்து விடுவேன் என்பதும்  சரியல்ல.,

இதற்கு பலபேர் பலவிதமாக அர்த்தம் சொல்கிறார்கள்.,பெரும்பாலானவர்கள் சொல்லும் அர்த்தம் என்னவென்றால் “நீ உன் கடமையை மட்டும் செய்., பலனை எதிர்பார்க்காதே” .,
இதனால்தான் நிறையப் பேர் கீதை என்றாலே வெகுதூரம் ஓடுகிறார்கள்.,
நானும் கேட்கிறேன் .,நீ கடமையை மட்டும் செய்து கொண்டே இரு., பலனை எதிர்பார்க்காதே என்றால் அது எப்பிடி சார்?.,ஒரு  மாசம் பூரா வேலை  செய்துகொண்டே இரு., ஆனால் ஒண்ணாந்தேதி சம்பளத்தை எதிர்பார்க்காதே என்றால்  நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?.,

அப்புறம்  இதற்கு  என்னதான்  அர்த்தம்?.,

இதற்கு சரியான விளக்கத்தை ஸ்ரீ மத்வாச்சார்யர் கொடுத்திருக்கிறார்.,நாம் அதைப் பார்க்கப் போவதற்குமுன் முக்கியமான இன்னொரு விளக்கத்தையும் ஆச்சார்யர் கொடுத்திருக்கிறார்.,அதை முதலில் பார்த்துவிட்டு பின்னர் என் கேள்விக்கு மத்வமதம் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்க்கலாம்.,
இந்த ஸ்லோகம் ஜீவ-ஈச்வர பேதத்தைக் காட்டுகிறது.எப்படி?

பிரம்ம சூத்ரம் எண் 362 சொல்கிறது:—IIஓம் பலமத உபபத்தே: ஓம்II

கர்மா  என்பது (actions) ஒரு ஜட வஸ்து.,(It is an inanimate entity) ஆகையால் அது தானாகப்  பலன் கொடுப்பதில்லை.,ஆகவே இறைவன் தான் பலன் கொடுக்கிறான்.,(உபபத்தே= It is logical that Ishwara only is the Phaladhaathaa.,) .,

அப்படியென்றால் Actions= கர்மங்களைச்  செய்வது  ஜீவன் (நாம்)., பலன்களைக் கொடுப்பது பரமாத்மா ஸ்ரீஹரி., ஆகவே கர்மம் செய்பவன் வேறு ஒருவன்., பலன் கொடுப்பவன் மற்றவன் ஒருவன்., ஆகையால்  ஜீவாத்மா வேறு., பரமாத்மா வேறு.,ஆகவே ஜீவ- ஈச்வர பேதம் நிரூபணமாகிறது., The difference between jiiva and Ishwara is established.,

இது ஒரு முக்கியமான மத்வ ஸித்தாந்தம்.,
கர்மத்தைச் செய் ; பலனை எதிர்பாராதே என்றால் பலன் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அக் கர்மத்தைச் செய்யும் ஜீவன் நிர்ணயிக்க முடியாது என்று பார்த்தோம்., ஸ்ரீமத்வர் ஓர் கர்மத்திற்கு இரண்டு விதமான பலன்கள் உண்டு என்கிறார்., அவையாவன:- 1.முக்ய பலன் .,2.அமுக்ய பலன்.

பலனை எதிர்பாராதே என்றால் அமுக்ய பலனை எதிர் பாராதே,.., அதனை நினைத்து முக்ய பலனை விட்டு விடாதே என்பது பொருள்., இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்கி இருக்கிறார்கள்.,

ஆன்மீகத்தில் முன்னேற்றத்துக்கு பல்வேறு படிக்கற்கள் (steps) உள்ளன. ஒரு சில படிகளைத் தாண்டியவுடன் பல்வேறு  சின்னச் சின்ன பலன்கள் கிடைக்க  ஆரம்பிக்கும்., அவைகள் பலன்கள் அல்ல., ஆன்மீகத்தில் மேலும் முன்னேற தடைக் கற்கள்., அவற்றையும்  தாண்டி  ஒரு சாதகன் முன்னேற வேண்டும்.,அதைத்தான் பலனை எதிர்பார்க்காதே என்று சுருக்கமாகக் கூறியுள்ளனர்.,

இதை இன்னொரு விதமாகவும் விளக்கலாம்., சில மனிதர்களுக்கு நம் போன்ற சாதாரண ஜனங்களை விட certain extra ordinary powers இருக்கும்.,இதனால் அவர்கள் தமது பக்தர்களுக்கு வரம் கொடுத்தால் அது பலிக்கும்.,அவர்களிடம்  மேலும் மேலும் பக்தர்கள் வர ஆரம்பிக்கின்றனர்.,இதனால் அப்படிப்பட்ட “ஸ்வாமிஜி” பிரபலமடைகிறார்.,பணம் .,சொத்துக்கள் .,ஆச்ரமம்.,உலகளாவிய  பக்தர்கள்.,கிளைகள் (overseas Branches)  மேலே மேலே வளர்ந்து கொண்டே போகும்போது அமுக்ய பலனைப் பிடித்துக் கொண்டு “ஸ்வாமிஜி” திசை மாறிப் போவதைப் பார்க்கிறோம்.,

ஆனால் ராகவேந்திர ஸ்வாமிகள் போன்றோர் தமது சக்திகளை வெளியில் காட்டாமல் யோக்யதை உள்ளவர்களுக்கு மட்டும் வழிகாட்டிக்கொண்டு தாமும் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறினர்.,
முடிவாக., மேலே கூறியது போல அபரோக்ஷக்ஞானம் .,மோக்ஷஸித்திக்கான கார்யங்கள் செய்யும்போது நடுவில்  வரும் ஐஸ்வர்யங்கள்.,ஸ்வர்க்கபோகம் இவற்றில்  மனதை விடக்கூடாது., இதற்கு முன்னம் ஒரு பதிவில்  மௌத்கல்ய முனிவர் பற்றிப் பார்த்தோம்., ஆகவே  அமுக்ய பலன் மீது ஆசை வைக்கக்கூடாது என்பது  தாத்பர்யம்.,

———–

25–ஆகமம் என்பது வேத.,சாஸ்திரங்கள்., சில பொருட்களை பிரத்யக்ஷத்தாலும் அறிய முடியாது.,அநுமானத்தாலும் அறிய முடியாது.,அதனை ஆகம (வேத) சாஸ்திரங்கள் மூலம் மட்டுமே அறிய முடியும்.,ஸ்ரீஹரியைப் பற்றியும்., அவனுடைய பிரபாவங்கள் ., குணங்கள்., முதலியவற்றை நாம் சரியாகத் தீர்மானம் செய்ய உதவுவது ஆகமம் என்னும் பிரமாணம்., இதையே ஸ்ருதி., ஸ்ம்ருதி.,(வேதங்கள்.,புராணங்கள்) என்று கூறுகிறோம்.,

ஸ்ருதி.,ஸ்ம்ருதிகள் மூலமாகத்தான் நாம் ஸ்ரீஹரியின் பெருமைகளை அறிகிறோம் என்பதை ஸ்ரீமதாச்சார்யர் தமது துவாதச ஸ்தோத்திரத்தில் ஒரு இடத்தில் சுலபமாக விளக்கி இருக்கிறார்.,
துவாதஸ ஸ்தோத்திரம்- 5.,4:-
கோவிந்த கோவிந்த புரந்தர வந்தே
ஸ்கந்த ஸுனந்தன வந்தித பாத I

விஷ்ணோ ஸ்ருஜிஷ்ணோ க்ரஸிஷ்ணோ விவந்தே
கிருஷ்ண ஸ்துஷ்ண வதிஷ்ணோ ஸுத்ருஷ்ணோ II

பொருள்:-
வேதங்களால் அறியப் படுபவரே! கோவிந்த!கோவிந்த! லிங்க தேஹத்தைப் பங்கப் படுத்துபவரே! ஸ்கந்தர்.,ஸுனந்தனர் இவர்களால் வணங்கப்பட்டவரே! விஷ்ணுவே! ஸ்ருஷ்டிப்பவரே! ஸம்ஹாரம் செய்பவரே! கிருஷ்ணா! சிஷ்டர்களை ஹிம்ஸிக்கும் துஷ்டர்களை வதம் செய்பவரே!

ஸ்ரீவியாஸராஜர் தமது “நியாயாம்ருத” என்ற கிரந்தத்தில் முதல் பரிச்சேதத்தில் (அத்தியாயத்தில்) முக்கியத்துவத்தை நன்கு விளக்கி உள்ளார்.,அது நமது அறிவுக்கு ஒரு சிறந்த திறவுகோல் (key) என்பதை நிரூபித்துள்ளார்.,நமது இந்திரியங்களால் அறியப்படும் வஸ்துக்களில் பிரத்யக்ஷம் என்பது .,அநுமான ஆகமங்களைவிடச் சிறந்தது என நிரூபித்து இருக்கிறார்.,(Please refer to Sri Vyasa Charithram (Tamil) by Sri .V.Seshagiri Rao-pp64).,

இறைவனை அநுமானத்தால் மட்டுமே நிரூபிக்க முடியும் என்று சில மதஸ்தர்கள் கூறியவற்றை மறுத்து., ஆகமங்களாலே மட்டுமே அவன் அறியப்படத்தக்கவன் என்று ஸ்ரீவியாஸராஜர் தமது “தர்க்கதாண்டவம்” என்னும் நூலில் நிலை நாட்டியுள்ளார்.,
மேற்கண்ட நூலில் மூன்றாம் அத்தியாயத்தில் அநுமானம் பற்றி விவரமாகக் குறிப்பிட்டு .,நையாயிகர்கள் (நியாய சாஸ்திரவாதிகள்).,மீமாம்ஸகர்கள் (மீமாம்ஸ சாஸ்திரம்-வேதத்தில் கர்மகாண்டம் பகுதியை மட்டுமே ஒப்புக் கொள்கிறவர்கள்)ஆகியோரின் கூற்றுக்களை ஆராய்ந்து அவர்கள் கூறுவது எவ்வாறு தவறானவை என்று கூறி., ஸ்ரீமத்வர்., ஸ்ரீடீகாராயர்.,போன்றோர் கூறுவன எவ்வாறு சரியாயும் பொருத்தமானதாயும் உள்ளன என்பதை நிரூபித்து இருக்கிறார்.,

28–ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-  

த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)

த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது “ஆரோபிதம்” என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,

அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?

த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,

————

ஒரு ஸித்தாந்தம் அல்லது சாஸ்திரம் என்றால் அதற்கு நான்கு விஷயங்கள் இருக்க வேண்டும்.,1.அதிகாரி.,2.விஷயம்.,3.பிரயோஜனம்., & 4.,ஸம்பந்தம்.,
ஸ்ரீமத்வர் தமது விளக்கத்தில் ஜீவ-பிரம்ம ஐக்ய வாதத்துக்கு இந்த நான்குமே இல்லை.,அதனால் அது முழுக்க .,முழுக்கத் தவறு என்று இந்தக் கிரந்தத்தில் நிரூபணம் செய்திருக்கிறார்.,ஸுமத்வ விஜய மஹாகாவ்யத்தில் ., ஸ்ரீநாராயண பண்டிதாச்சார்யர்., அத்வைத வாதிகள் சுமார் 1,25,000 ஸ்லோகங்களில் கூறியுள்ள மாயாவாத ஸித்தாந்தத்தை தமது மாயாவாதகண்டன கிரந்தத்தில் ஸ்ரீமத்வர்  ஒரே ஒரு வாக்கியத்தில் (அக்ஞானா ஸம்பவாதேவ தன்மதமகிலமபாக்ருதம்) என்று Disprove செய்து விட்டார்.,

ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-  

த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)

த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது “ஆரோபிதம்” என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,

அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?

த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,

உபாதிகண்டனம்., மாயாவாத கண்டனம்.,மற்றும்.,பிரபஞ்சமித்யாத்வநுமான கண்டனம் ஆகிய மூன்றும் சேர்ந்து கண்டனத்ரயம் என்று அழைக்கப் படுகின்றன.,

——————

இதற்கு முந்தைய பதிவில் அத்வைத ஸித்தாந்திகளின் இரண்டு பூர்வபக்ஷங்கள் (1.ஜீவ-பிரம்ம ஐக்யம்.,2.பிரம்மம் சத்யம்-ஜகத் மித்யை) பார்த்தோம்.,
இதற்கு முன் கண்டனத்ரயம் என்பதாக ஸ்ரீமத்வரின் மூன்று கண்டன நூல்களைப் பார்த்தோம்., அவை:- 1.உபாதி கண்டனம்.,2.மாயாவாத கண்டனம்.,3.பிரபஞ்ச மித்யாத்வனுமான கண்டனம் என்பதாக.,.,

இப்போது நாம் பார்க்கப்போகும் இந்த தத்வோத்யோதம் என்ற கிரந்தம் மேலே சொன்ன பூர்வபக்ஷங்களை மறுக்கும் நூல்., மற்றும் நாம் மேலே பார்த்த மூன்று கண்டனத்ரய நூல்களுக்குமொரு   இணைப்புப் புஸ்தகம் போன்றது

த்வைதிகள் அடிக்கடி உபயோகிக்கும் தத்வமஸி என்ற வேத(மஹா) வாக்கியம் ஜீவ-பிரம்ம பேதத்தைக் காட்டுகிறதே தவிர அவைகளின் ஐக்கியத்தைக்காட்டவில்லை என்பதை ஸ்ரீமத்வர் மிகச் சிறப்பாக நிரூபித்து இருக்கிறார்.,

ஆச்சார்யர் ஸ்ரீமத்வர் இவை இரண்டுமே சரியல்ல., மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு Salvation  க்கு கர்மமும் செய்யவேண்டும்.,ஹரிபக்தி., இறைவனைப்பற்றிய க்ஞானம் இரண்டுமே தேவை என்பதை இந்த கிரந்தத்தில் நிரூபித்து இருக்கிறார்.,

———

தந்த்ரஸாரம் என்னும் கிரந்தம் மூலகிரந்தம்.,இந்த கிரந்தம் ஸ்ரீமஹாவிஷ்ணுவால் சதுர்முகப் பிரம்ம தேவருக்கு உபதேசிக்கப்பட்ட கிரந்தம்.,இந்த கிரந்தத்தை அடிப்படையாக வைத்து 442 ஸ்லோகங்களுடன் ஸ்ரீமத்வரால் எழுதப்பட்ட கிரந்தம்தான் தந்த்ரஸார ஸங்க்ரஹம் .,இந்த கிரந்தத்தைப் பற்றி ஸ்ரீமத்வரே கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:-

க்ரந்தோயம் பாடமாத்ரேண ஸகலாபீ4ஷ்ட ஸித்தித: I
கிமு க்ஞானாத் அனுஷ்டானாத் உபயஸ்மாத்புன: கிமு: II

இதன் அர்த்தம்:-
இந்த கிரந்தத்தை வெறுமனே பாராயணம் செய்வதாலேயே ஸகல அபீஷ்டங்களும் ஸித்திக்கும்.,மேலும் இதன் அர்த்தத்தையும் உணர்ந்து உபாஸித்தால் மோக்ஷமும் ஸித்திக்கும் என்பதை திரும்பவும் கூறவேண்டுமோ.,?

த்வைத மதத்தின் ஸித்தாந்த ஸாரங்கள் அடங்கிய ஒரு கிரந்தமாகும் இது.,.,இதில் ஒரே ஒரு ஸ்லோகத்தைக் கொடுத்து இதை முடிக்கிறேன்:-

கோவிந்த கோவிந்த புரந்தர வந்தே
          ஸ்கந்த ஸுனந்தன வந்தித பாத

விஷ்ணோ ஸ்ருஜிஷ்ணோ க்ரஸிஷ்ணோ விவந்தே
            கிருஷ்ண ஸ்துஷ்ண வதிஷ்ணோ ஸுத்ருஷ்ணோ

இதன் அர்த்தம்:-
வேதங்களால் அறியப்படுபவரே! கோவிந்த! கோவிந்த! லிங்க தேஹத்தைப் பங்கப் படுத்துபவரே! ஸ்கந்தர்.,ஸுனந்தனர் இவர்களால் வணங்கப்படுபவரே! விஷ்ணுவே! ஸ்ருஷ்டிப்பவரே! ஸம்ஹாரம் செய்பவரே! கிருஷ்ணா! சிஷ்டர்களை ஹிம்ஸிக்கும் துஷ்டர்களை வதம் செய்பவரே!.,.,
இத்துடன் ஸ்ரீமத்வாச்சார்யாரின் ஸர்வமூலக் கிரந்தங்களின் விவரணை முடிவு பெறுகிறது.,

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவேங்கடேச மஹாத்ம்யம் –ஸ்ரீ மதி விஸாலாட்சி ரமணன் அம்மாள் தொகுத்து அருளியது —

February 24, 2023

ஸ்ரீ வேங்கடேச புராணம்

த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேண்டடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர்புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட இயரிய திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

தெய்வீக மலை

‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.

ஒலியும் ஒளியும்

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.

சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.

அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

வேங்கடேச சுப்பிரபாதம்

மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.

அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.

திருப்பதி மலையின் அடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்

——————————————————————————

ஸ்ரீநிவாச புராணம் என்று தனியாக எதுவும் இல்லை. பதினெட்டுப் புராணங்களில் வேங்கடேசரின் லீலைகள் பன்னிரண்டு புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து திருவேங்கட மஹாத்மியம் என்ற பெயரில் ஒன்று சேர்த்துள்ளார்கள். திருமலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி பி 1491 ஜூன் மாதம் 27ம் தேதி பாஸிந்தி வேங்கடதுறைவார் தாம் தொகுத்த திரு வேங்கட மஹாத்ம்யத்தை விண்ணப்பம் செய்ததாகக் காணப்படுகிறது. 1884 ல் இது தெலுங்கு புத்தகமாக தேவஸ்தானத்தரால் வெளியிடப்பட்டது 1896ல் இரண்டாவது பதிப்பும் 1928 ல் மூன்றாவது பதிப்பும் வெளி வந்தன.

க்ருதேது நரசிம்ஹோபூ4த்
த்ரேதாயாம் ரகு4 நந்தன:
த்3வாபரே வாஸு தே3வஸ்ச
கலௌ வேங்கட நாயக:–(ஆதித்ய புராணம்)

கிருத யுகத்தில் நரசிம்ஹராக இருந்தவரே, திரேதா யுகத்தில் ரகுநந்தனராக அவதரித்தார்.

அவரே துவாபரயுகத்தில் வாசுதேவர் ஆனார்.அவரே கலியுகத்தில் வேங்கடநாயகர் ஆனார்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணாய

சூத முனிவர்

நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்; –நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,

பகவத் தியானமும், பகவத் சர்ச்சைகளும், அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!

சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்,
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம், பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர!”

அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.

“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள், வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.

வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.

ஸ்வேத வராஹம்

ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்; ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.

பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்!

ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்; ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!

முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள் சென்று அடைக்கலம் புகுவர் ஞான வுலகில்

மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில். தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.

அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில். கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர; கெட்டிப்பட்டு பூமி பதிந்துவிடும் பாதாளத்தில்!

பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால் தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்! வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை

படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!

வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு; வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை. பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.

தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம் ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!

தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே! தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!

கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.

ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!

கிரீடாசலம்

ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த, மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.

தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார் வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே. ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.

சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன் சிருஷ்டித்தான் சூரிய, சந்திரர்களை முதலில்.

பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர் பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.

பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான் பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.

கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க! பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”

வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்; வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!

கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும் கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது. நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்!
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!

காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது; கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;

ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.

தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப் பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.

இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம், கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.

நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.

அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம் அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.

எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம் விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.

ஸ்துதி

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால் வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர், இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள், கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,

“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில். ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’ மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!

அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்; அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.

கருணை பொழியும் கமலக் கண்களுடனும்; கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்; கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.

வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

நாரதர்

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம் காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து. வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு. “அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.

“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.

“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்; சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து, பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.

“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத் திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை. சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன். சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!

நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்!

‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச் சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்!

முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக் கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை

ஈசனும், உமையும்

பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார். அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு;
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக!

தனிமையில் இனிமை கண்டிருந்தவரின் தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.

கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன் கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை.

பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு; கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.

விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த, முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.

தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று; தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு; நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!

தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.

கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர் சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,

“உலகில் இனிக் கிடையாது உனக்கு உருவ வழிபாடு என்ற ஒன்று!” என்றார்

நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு! இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.

சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.

நாரணன்

கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர் வைகுந்த நாதனைச் சோதிக்க விரைந்தார்.

ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன் ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.

தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.

‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’

இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர் இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”

உதைத்த காலைப் பற்றினார் நாரயணன், உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.

“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக் கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.

“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்! துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?”

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ? உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று

“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!” பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.

யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.

லக்ஷ்மியின் கோபம்

ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!

உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை. உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு. வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு

பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை. உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.

‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு! அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்

“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு! அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,

“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும். பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?

வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால் வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.” எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்

வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே. வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட. கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்

எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம் அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது. சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!

வைகுண்டம் விடுத்தான் நாரணனும்; வையகம் அடைந்தான் நாரணனும் ;

சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே; சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்.

எறும்புப் புற்று

நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்; ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்; சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள்;

பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்; உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;

தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்; விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;

அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட, ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.

தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம் தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;

“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத் தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.

“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும். தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே

இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.

நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.

பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன் திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.

வெட்ட வெளியில், கட்டாந்தரையில், படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.

அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை; அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.

அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை; அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.

அமைத்தான் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.

இடைப் பெண்

நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்; நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.

‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன் வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’. கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரம்மன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்;

நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர், பிரம்மனும், பிரானும் விரைந்தனர் வையகம்.

சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.

கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரம்மனை வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.

“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன் தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.

அனாதை போல அலைந்து திரிகின்றார் வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!

வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.

ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு. அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.

மாறிவிடுவோம் நாங்கள் இருவரும் உடனே மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!

தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்; இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.

சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும் சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”

சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி, விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.

பசுவின் மாயம்

கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும் விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.

கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.

கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும், அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை! அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.

பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.

அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை, பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.

இடையன் செல்வான் தினமும் மலைக்கு, விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.

அரண்மனை திரும்புவான் அன்றாடமும். ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.

மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும், மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.

இடையனின் தலை மறைந்த உடனே எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.

புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.

திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்! அறியவில்லை இடையன் இம் மாயத்தை!

பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக; பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.

அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும் அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!

பரந்தாமன்

அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!

கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.

“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!” எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.

இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.

நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும், ‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’ கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும், கன்றும். ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!

புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு. புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!

கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின் நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.

பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி; பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.

விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில் பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!

நனைந்தன பசுவும், கன்றும் ரத்தத்தில்! நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!

சோழராஜன்

ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்! சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!

‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா? கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!

யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ? யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.

வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.

வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில். வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.

“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்! சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்கு வந்து!”

ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்; அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.

இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்; கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!

கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்! வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?

விரைந்து சென்று கூறினார் அரசனிடம் விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்

‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று ! நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’

தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்; “தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!

பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”

நாரணன் சாபம்

கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!

தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன், “உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”

கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன், செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.

“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர் வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!

தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக; செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.

கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”

“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன், துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!

சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச் சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”

“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!

புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது. குற்றமே இடையன் கோடரியை வீசினது!”

அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன் எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!

“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று, குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!

யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப் பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”

சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச் சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.

சாப விமோசனம்

“பிரஜைகளின் தவறுகள் சேரும் அரசனையே! குறைப் படவில்லை கிடைத்த சாபத்துக்கு நான்.

கூறுவீர் சாப விமோசனம் என்ன என்பதை; கூறுவீர் சாபவிமோசனம் பெறும் வழியை!”

“திரிவாய் பிசாசாக மாறி மிகுந்த ஆயுளில்; பெறுவாய் பெருமை நீ அடுத்த பிறவியில்.

பிறப்பாய் சுதர்மன் மகன் ஆகாச ராஜனாக, பிறப்பாள் என் மனைவி உந்தன் மகளாக.

நற்கதி அடைவீர் நீயும், உன் வம்சத்தினரும்; கற்பகாலம் விளங்கும் புகழுடன் உன் பெயர்.”

“சாபமா இது? அரிய வரம் அல்லவோ இது? கோபத்தின் பரிசாகக் கிடைத்தவை இவை!

வைகுந்தவாசனை அடைவேன் மருமகனாக! வைபவ லக்ஷ்மியை அடைவேன் என் மகளாக!

மன்னித்து விடுங்கள் இடையனின் குற்றதை; புன்செயல் புரிந்தான் மதியற்ற மடையன்.”

மயங்கிய இடையன் விழித்துக் கொண்டான் தயங்கித் தயங்கி எழுவதற்கு முயன்றான்.

கண்கள் தெரியவில்லை; பார்வை போய்விட்டது! கண்ணீர் வழிய அழுதான் “ஆண்டவனே!” என்று.

“தண்டனை அனுபவிப்பான் சிறிது காலம் கண் மூடித்தனமான செயல் செய்ததற்கு.

நித்தியவாசனாக அமர்வேன் நான் இங்கு; எத்தினம் இவன் என்னிடம் வருவானோ,

கிடைக்கும் கண் பார்வை மீண்டும் அன்று. கிடைக்கும் வைகுந்தம் பாவத்தை வென்று!

விண்ணுலகு விட்டு பூமிக்கு வந்தபின் கண்டீர்கள் என்னை இந்தக் கோலத்தில்.

இதே கோலத்தில் தங்குவேன் இங்கே!” அதே நொடியில் அந்தர் தியானமானார்.

பைசாச உருவம் தாங்கினான் சோழ ராஜன்; வைகுந்தவாசன் மேல் செய்தான் தியானம்.

வகுள மாலிகை

விடை பெற்றுச் சென்று விட்டாள் லக்ஷ்மி! இடையன் பிளந்தான் நெற்றியைத் தாக்கி!

பிருஹஸ்பதி வந்தார் நாரணனைக் காண; வருந்தினார் நாரணன் படும் துயர் கண்டு.

“கசிகின்றதே நிற்காமல் இன்னமும் உதிரம்! கசியும் காண்போர்கள் கண்களிலும் உதிரம்!

சேஷாச்சலத்தில் இல்லாத மூலிகைகளா? ஈசா! தாங்கள் அறியாத வைத்தியமா?” என

மூலிகையைத் தேடிச் சென்ற நாரணனை – வகுள மாலிகை என்னும் மாது சிரோன்மணி கண்டார்.

ஆதி வராஹரிடம் அதீத பக்தி கொண்டிருந்த அகவை மிகுந்த ஒரு கண்ணியப் பெண்மணி.

பிளந்த நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் பிளந்தது அவள் நெஞ்சத்தைத் துயரால்.

கொய்து கொண்டிருந்த மலர்களை விடுத்துத் தொய்ந்து நடந்திருந்த நாரணனிடம் வந்தாள்.

“யாரப்பா நீ? அலைகிறாய் ரத்தக் காயத்துடன் ! யாரும் இல்லையா உன்னைக் கவனிப்பதற்கு?”

கிழித்துத் துடைத்தாள் சேலைத் தலைப்பால்; பிழிந்து கட்டினாள் மூலிகையின் சாற்றால்.

கள்வர்கள் வழிமறித்துத் தாக்கினார்களா கூறு? காயம் வந்த மாயம் என்ன சொல்லு!” என்றாள்.

“அம்மா! யாரும் இல்லாத அநாதை நான் அழைப்பர் என்னை ஸ்ரீனிவாசன் என்று.

பசுவைத் தாக்க முயன்றான் ஒரு பாதகன்; பசுவைக் காத்தேன்; விழுந்தது ஒரு வெட்டு!”

இதயத்தைத் தொட்டது “அம்மா!” என்னும் சொல்! இவளும் யாருமில்லாத ஓர் அநாதை அல்லவா?

ஆனந்தக் கண்ணீருடன் நாரணனை அவள் நோக்க, அகக்கண்கள் திறந்து கொண்டன அதே நொடியில்!

‘தன் எதிரே நிற்பது ஸ்ரீனிவாசன் அல்லவே! தன் எதிரே நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன் அல்லவா?’

கண் இமைக்கும் நேரத்தில் கண்ட ஒரு காட்சி கண் முன் கொண்டு வந்தது பூர்வ ஜென்மத்தை!

யசோதை

கலியுகம் பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. காலில் அம்பு தைத்திருந்தது கிருஷ்ணனுக்கு!

செயல் புரிந்தது ராமாவதாரத்தில் – ஆனால் செயல் பலன் தந்தது கிருஷ்ணாவதாரத்தில்!

வாலியோடு சுக்ரீவன் புரிந்த துவந்த யுத்தத்தில், வாலியைக் கொன்றான் மறைந்திருந்த ஸ்ரீ ராமன்.

கோபம் கொண்ட வாலி ராமச்சந்திரனுக்குச் சாபம் அளித்தான் தன் உயிர் பிரியும் முன்பு.

“மறைந்திருந்து வீழ்த்தினாய் ராமா நீ என்னை! மறைந்திருந்து வீழ்த்துவான் ஒருவன் உன்னை!”

தனிமையில் வனத்தில் அமர்ந்திருந்த கண்ணனின் இனிய பாதங்களை ஒரு பறவை என எண்ணினான்.

அம்பு எய்தான் வேடன் சாபத்தை நிறைவேற்ற. அன்பு கொண்டவர்கள் துடித்தனர் இதைக் கண்டு .

“வைகுந்தம் திரும்புகின்றேன் நான் – நீங்களும் மெய்யுருவம் அடையலாம் முன் போலவே!

சேஷாச்சலத்தில் உறைவேன் நான் கலியுகத்தில். சென்று காத்திருங்கள் என் வருகைக்கு!” என்றான்

விடுத்தனர் கோபியர் தங்கள் மாய உருவங்களை. எடுத்தனர் முன் போல் தம் பழைய உருவங்களை.

“எப்போதும் உன் அன்னையாகும் பாக்கியத்தைத் தப்பாமல் எனக்குத் தரவேண்டும் என் கண்ணா!”

யசோதை வேண்டினாள் கண்களில் அருவியுடன், யசோதைக்கு அருளினான் அவள் கேட்ட வரத்தை.

வகுள மாலிகையாகக் காத்திருப்பாய் அம்மா! வெகு விரைவில் வருவேன் சேஷாச்சலத்துக்கு.”

இருவரும் ஒருவரே!

கண நேரத்தில் உணர்ந்தாள் தான் யாரென! “கண்ணா! ” என அணைத்ததாள் அன்புடன்!

“அநாதைகள் அல்ல இனி நாம் என் மகனே! அநாதி காலமாக உள்ளது நமது உறவு!” என

அழைத்துச் சென்றாள் இனிக்கும் ஓடைக்கு; பழுத்த கனிகளைப் பறித்து உண்ணத் தந்தாள்.

“இனிமேல் இருந்துவிடு நீ என்னுடனேயே! தனியாக முன்போல் தவிக்க வேண்டாம்!”

“வந்து பார் நான் தாங்கும் இடத்தை!” என்று சிந்தை மகிழ்ந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்

புற்றுக்கு அழைத்துச் சென்றார் அவளை; புற்றினுள் காட்டினர் தம் இருப்பிடத்தை!

வராஹ பெருமானை வணங்கச் சென்றாள், வகுள மாலிகை தினமும் செய்வது போல.

“வழக்கதை விடத் தாமதமாக வந்துள்ளாய்! வழக்கத்தை விட நீ ஆனந்தமாக உள்ளாய்!”

வம்புக்கு இழுத்தார் அந்த வகுள மாலிகையை, அன்புடன் அவள் தொழும் வராஹ பெருமான்!

ஸ்ரீனிவாசன் கதையைக் கூறினாள் அவள்.
“ஸ்ரீனிவாசன் வேறு,  நான் வேறு அல்ல!

அங்கே அவனுக்கு நீ செய்யும் தொண்டு இங்கே எனக்கு இனி வந்து சேர்ந்து விடும்.

கவனிப்பாய் நீ ஸ்ரீனிவாசனின் தேவைகளை. கலியுக முடிவில் சேர்வாய் என் பாதங்களை!”

ஆகாச ராஜன்

திரிந்தான் பைசாச உருவில் சோழராஜன்; பிறந்தான் பூவுலக வாழ்வை நீத்த பிறகு, நாராயண புரத்தை ஆண்டு கொண்டிருந்த
நல்ல மன்னன் சுதர்மனின் முதல் மகனாக. ஆகாச ராஜன் என்ற பெயரை வைத்தனர். அன்புடன் அவனைப் பேணி வளர்த்தனர்.

பிறகு பிறந்தது இன்னொரு ஆண் மகவு; பெயர் விளங்கியது தொண்டைமான் என. ஒற்றுமையாக வளர்ந்தனர் இருவரும்;
போற்றினர் அனைவரும் இருவரையும்.

சுதர்மன் விரும்பினான் வனவாசம் செல்ல; சுபமாக மணிமுடி தரித்தான் ஆகாசராஜன்.

இளவரசுப் பட்டம் கிட்டியது இளையவனுக்கு;  இருவரும் ஏற்றனர் தந்தையின் விருப்பத்தை.

உயர்குலப் பெண்களை மணந்து கொண்டனர்; பெயர் விளங்கும்படி நிர்வகித்தனர் நாட்டினை.

உருண்டோடின வருடங்கள் ஒவ்வொன்றாக, பெருகின வளமும், நலமும் அந்த நாட்டில்.

ஆனந்தம் கொண்டிருந்தனர் அனைவருமே ஆகாச ராஜன் என்னும் மன்னனைத் தவிர!

குழந்தை ஒன்று இல்லை கொஞ்சுவதற்கு! குழந்தை ஒன்றில்லை முத்தாடுவதற்கு!

“இப்பிறவியில் செய்யவில்லை ஒரு பாதகம்; முற்பிறவியில் செய்ததை யாம் அறிகிலோம்.

குலகுரு சுகர் அறிவார் மூன்று காலத்தையும். குலகுரு கூறுவார் நல்வழி ஒன்றை நமக்கு!”

அரசி ஆலோனை கூறினாள் அரசனுக்கு; அரசன் அழைத்து வரச் சொன்னான் சுகரை.

பல்லக்குச் சென்றது சுகரை அழைத்துவர, சொல்லுக்கு வல்லவர் சுகர் அங்கு வந்தார்.

மரப் பேழை

பல்லக்கில் வந்த குலகுரு சுகரை ஆகாசராஜன் உள்ளன்போடு வரவேற்றான் அரசியுடன் சென்று.

‘அழைத்த காரணம் என்ன அரசே?” என வினவ, “விழைகின்றோம் மழலைச் செல்வத்தை யாம்!

பலன் தரவில்லை புரிந்த தான தருமங்கள்; பலன் தரும் வழியைக் கூறவேண்டும் தங்கள்!”

“புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் – உனக்கு உத்திரவாதமாகப் பிறக்கும் குழந்தை!” என

“பொய்க்காது பெரியோரின் ஆசி மொழிகள்; செய்வோம் யாகத்தைத் தங்கள் ஆசியுடன்!”

குறித்தனர் நல்ல நாள் ஒன்றை யாகத்துக்கு; குவித்தனர் யாகப் பொருட்களைக் கொணர்ந்து.

குழுமினர் வேத விற்பன்னர்கள் யாகம் புரிந்திட அழைப்புகள் சென்றன அருமை நண்பர்களுக்கு!

உழுதான் ஆகாச ராஜன் அந்த யாக பூமியை, தொழுத பின்பு இறையையும், குருவையும்.

வேத கோஷம் செய்தனர் வேத விற்பன்னர்கள். கீத நாதம் ஒலித்தனர் இசை விற்பன்னர்கள்.

நிலத்தை உழுத ஆகாச ராஜனின் கலப்பை நின்று விட்டது ஓரிடத்துக்கு வந்தவுடன்.

அழுத்தி உழுதவுடன் எழுந்தது ஒரு சப்தம்; ஆழத்தில் கலப்பையைத் தடுத்தது எதுவோ!

தோண்டினர் காவலர் நிலத்தை விரைந்து; கண்டனர் அழகிய ஒரு மரப் பேழையை!

பேழை வந்தது அரசனிடம் பத்திரமாக! பேழை வீசியது ஓர் அரிய நறுமணத்தை.

பத்மாவதி

தென்றல் தழுவிச் சென்றது குளிர்ச்சியாக! தெளித்தது வானம் நன்னீர்த் துளிகளை!

பூமியை உழுத ஜனகனுக்குச் சீதையைப் போல, பூமியை உழுத மன்னனுக்கு கிடைத்தது என்ன?

பேழையைச் சமர்பித்தான் மன்னன் குருவிடம்; பேழையைத் திறந்தார் ஆர்வத்துடன் குலகுரு.

ஆயிரக் கணக்கான தாமரை இதழ்களில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் குழந்தை!

பெருகியது கண்ணீர் பெருகிய உவகையால்! பரிவுடன் வணங்கினான் குருவின் பாதங்களை!

ஆகாசத்தில் இருந்து ஒலித்தது ஓர் அசரீரி.“ஆகாச ராஜன்! பூர்வ ஜன்ம புண்ணியம் இது.

பூர்த்தியடைந்தது உன் நித்திய கோரிக்கை. புத்திரி கிடைத்தாள் உன் மனக் குறை தீர!”

மார்புறத் தழுவினான் மலர்க் குழந்தையை! ஆர்வத்துடன் அடைந்தான் அரண்மனையை.

பெயர் இட்டான் குழந்தைக்கு பத்மாவதி என. பெயர்க் காரணம் தாமரையிதழ்களில் சயனம்.

நடத்தினான் தான தருமங்கள் நாடெங்கும்; நடத்தினான் பூஜைகள் ஆலயங்கள் எங்கும்.

தன் வீட்டிலேயே தேவி வந்து பிறந்ததுபோல தன்னிறைவு அடைந்தனர் ஒவ்வொருவரும்.

நாரதர்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்;
நற்குணங்கள் அனைத்தின் ஓர் இருப்பிடம்.

நந்த வனத்தில் தோழியாரோடு ஆனந்தமாகப்
பந்து விளையாடுகையில் வந்தார் ஒரு கிழவர்.

வயது முதிர்ந்த கிழவராக வந்த நாரதர்
“பயத்தை விட்டுவிட்டு வா இங்கே!” என,

தயங்கினாள் பத்மாவதி அவரை அறியாது!
“தயக்கம் வேண்டாம் நான் அந்நியனல்ல!

கைரேகை கண்டு சொல்லுவேன் பலன்
தையல் உந்தன் எதிர் காலத்தைப் பற்றி!”

நீட்டினாள் தன் இடக் கரத்தை பத்மாவதி
நீட்டிய கரத்தைப் பிடித்து நோக்கினார் அவர்.

“தெய்வாம்சம் பொருந்திய கை கூறுகிறது!
வைகுந்த வாசனை நீ மணக்கப் போகிறாய்!”

“அத்தனை பாக்கியமா எனக்கு?” வியந்தாள்!
அவள் கண்டாள் நாரத முனிவரை எதிரில்.

“அறிவிக்கவே வந்தேன் உனக்கு நான் இன்று !
அறிவாய் உன் கணவன் வைகுந்தவாசன் என்று!”

ஆட்டத்தில் செல்லவில்லை அவள் மனம்;
நாட்டம் கொண்டு விட்டது பரந்தாமனிடம்!

நிறைத்தாள் உள்ளம் முழுவதும் நாரணனை.
உரைத்தாள் உள்ளன்போடு “நாராயணா!” என்று!

“பருவ வயதில் உனக்கு இத்தனை பக்தியா?” என
அருமைத் தோழிகள் கேலி செய்தனர் அவளை!

கேட்டாள் நாராயணன் செய்த லீலைகளை.
கண்டாள் நாராயணனின் திவ்விய ரூபத்தை.

உரைத்தாள் நாராயணின் திவ்ய நாமங்களை.
பணிந்தாள் நாராயணின் திவ்ய விக்ரஹத்தை.

வைகுந்தவாசனை மணக்கும் சுபவேளைக்குத்
தையல் காத்திருந்தாள் மிக்க ஆர்வத்துடன்.

11a. சந்திப்பு

உலவின துஷ்ட மிருகங்கள் தம் இஷ்டம் போல!
நிலவியது ஆபத்து வனத்தில் வசிப்பவர்களுக்கு!

சுனை அருகே வசிப்பவர்களுக்கு பிராண அபாயம்,
சுனையில் நீர் பருகும் சாது பிராணிகளுக்கும் கூட.

“வேட்டைக்குப் போகின்றேன் அம்மா – விலங்குகளின்
கொட்டத்தை அடக்குவதற்கு!” என்றான் ஸ்ரீனிவாசன்.

காட்டை விட்டு வெளியே வந்து திரிபவைகளைக்
காட்டுக்குள் விரட்டினான் அவற்றை அச்சுறுத்தி.

துவம்சம் செய்து கொண்டிருந்தது ஒரு மத யானை!
துரத்தியவுடன் ஓடியது காட்டை விட்டு வெளியே.

வெளியறியது அது சேஷாச்சலத்தை விட்டு விட்டு!
வெறி கொண்ட யானையை விடலாகாது அன்றோ?

நாரயணபுரத்தை நோக்கி ஓடியது மத யானை.
நாராயணனும் துரத்திச் சென்றான் யானையை.

நுழைந்தது ஆகாசராஜனின் உத்தியான வனத்தில்!
‘இழைக்குமோ ஆபத்து அங்கிருந்த பெண்களுக்கு?’

அம்பினால் அடித்தான் அந்த மத யானையை.
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஓடியது.

யானை சென்றபின் அழைத்தனர் பத்மாவதியை,
“யானை வந்துள்ளது, திரும்புவோம் அரண்மனை!”

யானையை விரட்டிய நாரணன் வந்தான் அங்கே.
யானை சென்று விட்டது; இருந்தனர் அப் பெண்கள்.

மற்ற பெண்களிடையே இருந்தாள் பத்மாவதி
மணிகளிடையே ஜொலிக்கும் வைரம் போல.

முககாந்தி ஈர்த்தது இரும்பைக் காந்தம் போல.
முன்னேறினான் பெண்கள் கூட்டத்தை நோக்கி.

11b. “வாசுதேவன் நானே!”

அந்நிய ஆடவனைக் கண்டதும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.

“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”

நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!

“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்து விட்டேன் இங்கு!

கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!

காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !

கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.

பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”

“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”

“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”

“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!

உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?

பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.

ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.

11c. சினம் பெருகியது

“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”

“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.

பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.

உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”

“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”

கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.

“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”

“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.

பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?

வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?

சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.

“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!

தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.

கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.

சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!

தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”

விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!

1d. மோதலும், காதலும்!

“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”

“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”

“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”

“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.

சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.

காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!

மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!

அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.

நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.

உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!

பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.

“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?

உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.

ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.

11e. காதல் நோய்

அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்

வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!

“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!

மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!

வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.

நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்துவிட்டாள் இவள் தன் உற்சாகத்தை!

மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!

‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?

அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’

அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!

திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!

உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.

குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!

பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”

பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!

12. பத்மாவதி யார்?

விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.

வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.

விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.

என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.

“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!

“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”

“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!

மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.

மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.

நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.

மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!

விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .

எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.

“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”

“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”

13a. வேதவதி

திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.

இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.

வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.

மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.

நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!

“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பர புருஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.

“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரம சுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”

வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவனா இராவணன்?

தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.

“அடையாமல் ஓய மாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.

“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!”

திட மனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!

கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.

திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.

13b. வேதவதியின் சாபம்

அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்!

“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”

மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;

வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.

திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.

வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.

‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’

“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!

விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!

பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”

சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.

சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1

13c. இரண்டு சீதைகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்

தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.

தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.

காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.

காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!

அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.

“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்

வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!

“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.

எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”

நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.

சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.

ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.

வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!

வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!

13d. ஏக பத்தினி விரதம்

“இருவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பேன்.

“இவர் தங்கள் தேவி சீதா பிராட்டியார்;
இவர் வேதவதி என்னும் பிராட்டியார் .

வேதவதியே ராவணனின் சிறையிலிருந்தவர்;
தேவன் விஷ்ணுவை மணாளனாக வரித்தவர்.

இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் வேளை,
இராவணன் கண்டு மோஹித்தான் இவளை.

பலவந்தம் செய்ய நெருங்கினான் இவளை;
பயந்து தீயினில் குதித்துவிட்டாள் இவள்.

பத்திரமாக ஒப்படைத்தேன் என் மனைவியிடம்
தந்திரமாக மீட்டோம் சீதா தேவியைப் பின்னர்.

இருவருமே தங்களுக்கு உரியவர்கள் தாம்!
இருவரையும் ஏற்க வேண்டும் தங்கள்!” என;

சீதையும் கூறினாள் ராமனிடம் சென்று
“வேதவதி துன்புற்று என்னைக் காத்தாள்.

தாமதம் இன்றி ஏற்றுக் கொள்வீர் அவளை!”
ராமன் ஏற்கவில்லை இந்த வேண்டுகோளை.

“ஏக பத்தினி விரதம் பூண்டுள்ளதை அறிவாய்
ஏற்றுக் கொள்ள முடியாது இவளை இப்போது!

கலியுகத்தில் வசிப்பேன் சேஷாச்சலத்தில்,
கலியுகத்தில் மணப்பேன் நான் வேதவதியை.

ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஆவாள் – இவள்.
அரும் தவம் பலித்து என்னையும் மணப்பாள்!”

14a. சிவ ஆராதனை

“வேதவதியே இப்போது பத்மாவதி – அதனால்
வேண்டுமென்றே விலகிச் சென்றாள் லக்ஷ்மி.”

மன்னனைச் சந்திக்கச் சென்றாள் வகுளமாலிகை;
அன்னையுடன் சற்று வழி நடந்தான் சீனிவாசன்.

மாலை மங்கியது நகரை நெருங்குகையில்;
கோலாகல ஆராதனைகளின் ஒலி கேட்டது

அருகிலே இருந்த அகத்தியரின் ஆசிரமத்தில்;
விரும்பிக் கலந்து கொண்டாள் பூஜைகளில்!

விரைந்து சென்று நகரை அடைந்தாலும்
இரவில் மன்னனைக் காண முடியாதே!

வேதபாராயணம் தொடர்ந்து நடந்தது;
வேத வல்லுனர் செய்தனர் அபிஷேகம்.

விமரிசையாக நடந்தன பூஜைகள்.
வந்த காரியத்தில் வெற்றி நிச்சயம்!

“ஆராதனைக்குக் காரணம் என்ன?” என
“நாரயணபுரி இளவரசிக்காக நடக்கிறது.

உற்சாகம் இழந்து விட்டாளாம் திடீரென்று!
உறங்குவதும், உண்பதும் இல்லையாம்!”

‘காதல் வயப்பட்டுள்ளாள் பத்மாவதி தேவி!
காதலுக்கு வைத்தியம் கல்யாணம் அன்றோ?’

பூஜை முடிந்தது பொழுது புலருகையில்!
பூஜைப் பிரசாதமும், தீர்த்தமும் சென்றன.

வகுள மாலிகையும் சென்றாள் அவற்றுடன்
வெகு விரைவாக மன்னனைக் கண்டு பேசிட!

14b. குறத்தி வந்தாள்!

அன்னையுடன் வழி நடந்த ஸ்ரீனிவாசனுக்குப்
பின்னர் இருப்புக் கொள்ளவில்லை தனியே.

‘சென்ற காரியம் வெற்றி அடையுமா? அன்னை
வென்று திரும்புவாளா? அல்லது தோற்பாளா?’

தோற்று விடும் எண்ணமே தோற்றுவித்தது
தேற்ற இயலாத மனக்கவலையை நெஞ்சில்.

தன் பங்குக்கும் செய்ய வேண்டும் ஏதாவது,
தன் விருப்பம் தடையின்றி நிறைவேறிட.

மாறினான் நகரின் எல்லையை அடைந்ததும்,
குறி சொல்லும் அழகிய குறத்தியாக அவன்!

“சொல்வேன் உள்ளபடி மூன்று காலத்தையும்!
வெல்வேன் உங்கள் எல்லா தோஷங்களையும்!”

குறத்தியை அழைத்து வரச் சொன்னாள் அரசி.
குறத்தியை அழைத்து வந்தனர் தோழியர்கள்.

“குறி சொல்வதில் நீ திறமைசாலியாமே!
குறி சொல்கிறாயா அரசகுமாரிக்கு?” என,

“நான் சொல்வது ஒன்றும் இல்லை தாயே!
நாவில் அமர்பவன் செந்தில் ஆண்டவன்!

அழையுங்கள் உங்கள் அரசகுமாரியை!”
“குழந்தையின் கைபார்த்துக் குறி சொல்!”

நாணத்துடன் வந்து அமர்ந்தாள் பத்மாவதி;
காணத் தந்தாள் தன் இடக்கரத்தை நீட்டி.

வெள்ளிப் பூண் போட்ட குழலால் தடவிய
கள்ளக் குறத்தியும் குறி சொல்லலானாள்!

14c. குறத்தி சொன்ன குறி

“குல தெய்வம் யார் கூறுங்கள் அரசி” எனவும்,
“குல தெய்வம் சேஷாத்ரி வாசனே!” என்றாள்.

“சேஷாத்ரி வாசன் உள்ளான் உங்கள் முன்பு!
பேசுவது அவனே என் நாவிலிருந்து இப்போது!

மலர் வனத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு
மகள் சந்தித்தது அந்த சேஷாத்ரி வாசனையே!

மணக்கக் கேட்டான் இவளிடம் சம்மதம்;
பிணங்கிக் கொண்டு அடித்தாள் கல்லால்!

புறப்பட்டுப் போகுமுன் அவன் இவளுடைய
புறக் கண்களுக்கும் காட்சி அளித்துள்ளான்!

ஆகிவிட்டாள் அவன் நினைவால் இங்ஙனம்.
ஆகிவிடுவாள் சஹஜமாக, அவனை மணந்தால்.

விட்டு விட்டால் இவளை இப்படியே – இவள்
விட்டு விடுவாள் தன் உயிரையே ஏக்கத்தில்!”

யாரும் பேசவில்லை இதைக் கேட்ட பின்னர்.
யாரும் நம்பவில்லை குறத்தியின் குறியை!

“பகவானை மணப்பது நடக்கும் காரியமா?
பகவானிடம் மணம் பேசுவதும் சாத்தியமா?”

“மனதைப் பறி கொடுத்தவனே அனுப்புவான்;
மணம் பேசி முடிக்கத் தகுந்த நபரை!” என்றாள்.

பொற்காசுகளை அளித்தாள் அரசி குறத்திக்கு,
“நற்காரியம் நடப்பதே போதும் எனக்கு!” என்று

விடை பெற்றுச் சென்றவள் குறத்தி – ஆனால்
வீட்டைச் சென்று அடைந்தவன் ஸ்ரீனிவாசன்.

15a. அன்னையர் சந்திப்பு

விடியலுக்குக் காத்திருந்தாள் தரணி தேவி.
விடிந்தவுடன் விடியும் சில பிரச்சனைகள்.

வந்தனர் அந்தணர் சிவன் ஆலயத்திலிருந்து;
தந்தனர் அபிஷேகத் தீர்த்தப் பிரசாதங்கள்.

அழகிய கோலமிட்ட மணையில் அமர்த்தி,
அழகி பத்மாவதிக்குச் செய்தனர் அபிஷேகம்.

முழங்கின எங்கும் மங்கல வாத்தியங்கள்;
வழங்கினர் பரிசுகள் அங்கு வந்தவர்களுக்கு.

“சேஷாச்சலத்தில் இருந்து வந்துள்ள மாது
பேச விரும்புகிறார் அரசி தரணி தேவியிடம்”

வந்தவர், திருமணம் பேச வந்தவர் தான் என்று
அந்த மாதை அழைத்து வந்தனர் அரசியிடம்.

“சேஷாச்சலம் என் ஊர், வகுளமாலிகை என் பேர்;
பேச வேண்டும் அரசகுமாரியைப் பற்றி ” என்றார்.

“காத்திருக்கிறேன் உங்களிடம் பேசுவதற்கு – எதிர்
பார்த்திருந்தேன் உங்கள் இனிய வருகைக்கு!

குறத்தி வந்தாள் அரண்மனைக்கு நேற்று மாலை;
குறி சொன்னாள் சேஷாத்ரி வாசனைக் குறித்து.

உத்தியானவனத்தில் என் பெண்ணைக் கண்டானாம்;
பத்மாவதியிடம் மையல் கொண்டானாம்!” என்றாள்.

“குறத்தி சொல்லியது முற்றிலும் உண்மையே,
குமாரத்தியுடன் மணம் பேசவே வந்துள்ளேன்.

அனுப்பியவன் மகன் சேஷாச்சலம் ஸ்ரீனிவாசன்;
அனுமதி வேண்டும் இத் திருமணம் நடப்பதற்கு!”

பிள்ளையைப் பற்றிய விவரங்களைக் கேட்டு
கொள்ளை மகிழ்ச்சி கொண்டாள் தரணி தேவி.

அரண்மனையில் தங்க வைத்தாள் அந்த மாதை.
அரசனிடம் விரைந்தாள் செய்தி சொல்வதற்கு.

15b. திருமணப் பேச்சு

“உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!

மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.

சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”

தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.

“கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”

குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
“குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!

வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.

வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!

நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”

பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.

ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.

நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.

பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
“பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.

ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;

அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.

16. சுகரின் செய்தி

நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.

மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.

வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.

மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.

வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.

“விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.

விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.

அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;

அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
அரசனிடம்  பேசி அவன் அனுமதி பெற்றது;

பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;

குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;

நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;

வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.

17a. பணம் தேவை!

பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?

நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.

மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.

“பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.

பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.

மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.

“பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”

ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.

“சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.

முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.

துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”

“கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!

லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”

17b. குபேரன்

“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”

அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.

திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.

ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!

“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”

எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.

கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.

தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.

தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.

சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.

அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.

ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.

17c. முதல் உரிமை

மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!

வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;

“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”

“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.

உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”

கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.

“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.

உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”

கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;

நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!

“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!

வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”

“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!

சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”

ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.

18a. புறப்பாடு

நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.

அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.

சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.

பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.

வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.

அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.

கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!

பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!

முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.

சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.

சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.

பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.

பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.

நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.

ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .

கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.

18b. சுகரின் உபசரிப்பு

சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுகமுனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.

பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.

பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.

“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.

இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.

உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”

“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”

“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?

ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”

பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.

திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .

பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.

19a. மணவிழா

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.

‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”

பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.

தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.

ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.

இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.

மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;

ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!

பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.

ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.

வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.

வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.

“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ  ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.

19b. மாலை மாற்று

கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.

அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.

பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.

வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !

வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!

நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.

வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.

ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.

கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!

நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.

ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.

மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!

இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!

உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.

20a. திருமணம்

நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.

கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.

ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!

வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.

வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!

தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.

நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.

இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.

அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.

ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.

திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!

வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!

அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!

வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.

20b. பிரியாவிடை

நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.

விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.

வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.

“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”

கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.

ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.

“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.

தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .

அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்

வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.

“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”

“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”

சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.

21a. பிரியா விடை

ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.

ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”

தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”

சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.

சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.

இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!

கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.

ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில்  விளையாடினர் மணமக்கள்.

மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.

மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.

குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.

“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”

ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.

22. விண்ணுலக வாழ்வு

சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!

இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.

மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.

ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி

தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.

சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.

சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.

தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!

வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.

ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!

23a. சிங்காதனம்

வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!

திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.

தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின்  இளவரசன் நானே!” என்று.

“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.

பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.

பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.

உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி  என்ன பயன் விளையும்?

அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.

செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.

“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?

பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”

தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!

ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.

சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!

23b. சண்டை

அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!

நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!

சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.

சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.

செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.

“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”

நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!

சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்

யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.

தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு

மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!

ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி

முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.

23c. சமரசம்

“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.

கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”

“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”

அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.

“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”

அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!

“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”

“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”

“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”

“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என

“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”

“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’

இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.

தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!

நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.

24a. ஆலயம்

தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.

” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”

“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”

“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்

தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”

“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”

மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!

புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.

வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை

மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.

இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.

வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;

வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;

வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.

24b. ரங்கதாஸன்

தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”

வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.

வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.

தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!

தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!

கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,

“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”

கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.

உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”

“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.

சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”

முனிவருடன்  நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!

“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”

சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.

தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.

வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.

முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.

உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை

மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.

நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!

விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.

மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!

திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.

ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.

ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.

கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.

சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.

கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!

24d. தவறும் தண்டனையும்

வானில் பறந்து மறைந்தனர் கந்தருவர்;
வந்தது சுய நினைவு ரங்கதாஸனுக்கு.

‘மலர் கொய்ய வந்தவன் அதைச் செய்யாமல்
மனதை அலைய விட்டு விட்டேனே அந்தோ!

கெடுத்தேனே பூஜையை அநாவசியமாக;
காக்க வைத்தேனே முனிவரை இதுவரை!

உல்லாசமாக வேடிக்கை பார்த்து நின்று
உபாஸனையில் தடங்கல் செய்தேனே!’

பதறியது உடல் செய்த தவற்றை எண்ணி;
பறித்துக் கொண்டு ஓடினான் மலர்களை!

உக்கிர மூர்த்தியாக மாறி இருந்தார் முனிவர்;
சிக்கெனக் காலைப் பற்றிக் கொண்டான் ரங்கன்.

“பாதகம் செய்துவிட்டேன் மன்னியுங்கள்!”
“தாமதம் ஏன் எனச் சொல்லு நீ முதலில்!”

“மாயைக்கு அடிமை ஆகிவிட்டேன் நான்!
மனதைத் தறிகெட்டு அலைய விட்டேன்!”

ஸ்ரீநிவாசன் தோன்றினார் அவர்கள் முன்பு;
சேவித்தான் ரங்கதாசன் விழுந்து விழுந்து.

“தவறு செய்தவன் தண்டனை அடைவான்;
தவறு தான் என் பூஜையைத் தாமதம் செய்தது!

சுதன்மனின் இளைய மகனாகப் பிறந்து பல
சோதனைகளை அனுபவி அடுத்த பிறவியில்!”

“பாதங்களை அடைய விரும்பியவனுக்குச்
சோதனைகளை அனுபவிக்கும் சாபமா?”என

“செய்த தவம் வீண் போகாது ஒரு நாளும்;
செய்தாய் தாமதம் பகவத் பூஜையில் – அது

செய்யும் சற்றுத் தாமதம் விரத பூர்த்தியில்;
எய்துவாய் எண்ணிய பேற்றைத் தாமதமாக!

மன்னன் மகனாகப் பிறந்து ஆள்வாய்
தொண்டை நாட்டை உன் குடைக் கீழ்.

அழைத்து வருவேன் நானே உன்னை இங்கு;
ஆலயம் எழுப்பச் செய்வேன் இதே இடத்தில்!”

25a. ஆனந்த நிலயம்

“ரங்க தாஸனாக இருந்தவனும் நீயே!
இங்கு கிணறு வெட்டுவித்தவனும் நீயே!

சாபம் காரணமாக நின்றுவிட்ட பணியைத்
தாபம் தீரத் தொடருவாய் இந்தப் பிறவியில்!”

தொண்டைமான் தொடங்கினான் ஆலயப் பணியை;
கொண்டு வந்து குவித்தான் கற்களைப் பாறைகளை!

வண்டி வண்டியாக வந்தன மரங்கள்,
சுண்ணம்பு, பிற தேவையான பொருட்கள்.

பாறைகளைச் செதுக்கினார் சிற்பிகள் தொடர்ந்து;
யாரும் ஊர் திரும்பவில்லை பணி முடியும் வரை!

சிற்பிகள் உழைத்தனர் உற்சாகத்துடன்
புற்று இருந்த இடத்தில் கர்ப்ப கிரகம்!

வைகுந்த வாசல் அமைந்தது அதன் வாயிலில்
எழுந்தது முதல் பிராகாரத்தைச் சுற்றி மதில்!

பள்ளியறை, மடைப்பள்ளி, திரவிய சாலை;
கல்யாண மண்டபம், உக்கிராண அறைகள்.

பலிபீடம், துவஜஸ்தம்பம், கோரியாவாறு;
ஆஸ்தான மண்டபங்கள், கோரியாவாறு;

உயர்ந்த கோபுரம் விளங்கியது வாயிலில்;
உச்சி வரையில் உயர்ந்த வேலைப்பாடுகள்.

கண் கவர் தூண்கள்; பாறைகளால் தளம்;
கண் கவர் விமானம் கர்ப்பகிரகத்தின் மேல்.

சந்தித்துக் கூறினான் ஸ்ரீநிவாசனிடம் சென்று,
“சந்தோஷத்துடன் ஏற்று அருள வேண்டும்!”

25b. சிலாரூபம்

நெருங்கியது சுபதினம் ஆலயம் புகுவதற்கு;
ததும்பியது குதூகலம் அகத்தியர் ஆசிரமத்தில்.

வந்து குவிந்தனர் இந்திராதி தேவர்கள் அங்கே;
சொந்தமாக ஏற்பாடுகளைக் கவனித்தார் பிரமன்.

வந்து சேர்ந்தனர் வசுதானனும், தொண்டைமானும்;
வந்து சேர்ந்தனர் அனைவரும் ஆனந்த நிலயம்.

ரதத்தில் வந்தனர் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்;
ரதத்தை ஓட்டினார் சுயமாக பிரம்மதேவன்.

கண்ணைப் பறித்தன வண்ணக் கோலங்கள்
மண்ணைத் தெளித்திருந்தனர் பன்னீரால்.

தோரணங்கள் தொங்கின பார்த்த இடம் எல்லாம்!
பூரணத் திருப்தி ஸ்ரீநிவாசன் உள்ளத்தில் நிலவ;

ஆனந்தம் பொங்கியது பத்மாவதி மனதில்!
ஆனந்த நிலயம் ஆனது விமானத்தின் பெயர்.

ஹோமகுண்டத்தை வளர்த்தான் பிரமன்;
வேத காரியங்களை முடித்தான் பிரமன்.

விமானத்தின் கீழ் நின்றான் ஸ்ரீநிவாசன்-
விரும்பி அமர்த்தினான் தேவியை மார்பில்!

வலது கரம் காட்டியது ஒரு திருவடியை;
இடது கரம் மடங்கியது முழங்கால் அருகில்!

“ஆகும் பாதம் வைகுந்தமாக பக்தருக்கு.
ஆகும் சம்சாரம் முழங்கால் அளவு நீராக!”

பிரமன் பணிந்து வணங்கி வேண்டினான்,
“பிரபு தங்க வேண்டும் இங்கு கலியுகத்தில்!”

“பூலோக வைகுந்தம் ஆகவேண்டும் இது – நான்
சிலா ரூபத்தில் இருப்பேன் ஆனந்த நிலயத்தில்!”

தூண்டா விளக்குகளை ஏற்றினான் பிரமன்!
ஆண்டாண்டு காலமாகப் பிரகாசிக்கின்றன.

சுபதினம் ஆனது முதல் பிரம்மோத்சவமாக;
சிலா உருவெடுத்து நிற்கின்றான் ஸ்ரீநிவாசன்!

25c. பிரம்மோத்ஸவம்

பிரமன் தெரிவித்தான் தொண்டைமானுக்கு
பிரம்மோத்ஸவத்துக்கான பல விவரங்களை.

பொன்னும், மணியும் வாரித் தந்தான் – அவன்
முன் வந்தான் உற்சாகமாக உற்சவம் நடத்த.

செய்தி பரவியது நான்கு திசைகளிலும்;
எய்தினர் உவகை செய்தியைக் கேட்டவர்.

குவிந்தனர் ஜனங்கள்; உருவாகின வீதிகள்;
குழுமினர் தேவர்கள்; உருவாகின கூடாரங்கள்!

காணக் கிடைக்காத காட்சிகள் கிடைத்தன.
காணிக்கை அளித்தனர் தம் சக்திக்கு ஏற்ப.

திருவிழா நடந்தது வெகு கோலாகலமாக.
திரும்பினர் தம் இருப்பிடம் குதூகலமாக.

தொண்டைமானுக்குப் பிரிய மனம் இல்லை.
“தொண்டை நாட்டை மறந்து விடாதே நீ!

தொண்டு புரியவேண்டும் உன் மக்களுக்கு.
மீண்டும் வருவாய் மோக்ஷம் அடைவதற்கு.

தொண்டை நாட்டை ஆட்சிசெய் அதுவரையில்!”
தொண்டைநாடு திரும்பினான் தொண்டைமான்.

26a. கிருஷ்ண சர்மா

கூர்மன் விரும்பினான் கங்கையில் நீராட.
ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?

நிறைவேறவில்லை ஒருநாளும் கோரிக்கை;
நீத்து விட்டான் உலக வாழ்வையே ஒருநாள்.

கிருஷ்ண சர்மா கூர்மனின் மகன் ஆவான்;
விரும்பினான் தந்தையின் கனவை நனவாக்க.

‘இறந்தார் தந்தை ஆசை நிறைவேறாமல்!
கரைக்க வேண்டும் அஸ்தியை கங்கையில்.’

குடும்பத்தோடு புறப்பட்டான் காசி நகருக்கு.
தடங்கல் மேல் தடங்கல்கள் வந்து சேர்ந்தன.

அடைந்திருந்தான் அப்போது தொண்டை நாட்டை.
அதிசயித்தான் தொண்டைமான் புகழைக் கேட்டு.

தோன்றியது ஒரு எண்ணம் அவன் மனத்தில்.
மூன்று மாதக் குழந்தையை, மனைவியை,

மன்னன் பாதுகாப்பில் விட்டுச் சென்றால்
முன்னேற முடியும் தனியாளாக, வேகமாக.

தொண்டைமானைச் சந்தித்தான் கிருஷ்ண சர்மா.
ஒண்ட ஓரிடம் தந்து பாதுகாக்க வேண்டினான்.

“காசி செல்ல ஆசைப்பட்டார் என் தந்தையார்.
தாசில் பண்ண ஆசை இருந்தால் மட்டும் போதுமா?

கைக் குழந்தையை, மனைவியைப் பாதுகாத்து
கை கொடுத்து உதவிட யாருமில்லை அரசே!

இளம் குழந்தையை, இளைய மனைவியைத்
தளிர் போலப் பாதுகாப்பீரா நான் வரும் வரை?”

தொண்டைமான் அளித்தான் சம்மதம் – உடனே
தொண்டைமானிடம் விடுத்தான் குடும்பத்தை.

மனப் பளு அகன்றவனாக விரைந்தான்
மகனின் கடமையைச் செய்யக் காசிநகர்.

26b. பட்டினிச் சாவு!

தொண்டைமான் சுயமாக கவனித்தான்
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை.

ஏற்பாடு செய்தான் தனி வீடு ஒன்றை;
ஏற்படுத்தினான் சகல வசதிகளையும்.

பொருட்களைக் கொண்டு குவித்தான் – பிறர்
நெருங்க வண்ணம் பூட்டினான் கதவுகளை.

அடிக்கடி விசாரித்தான் முதலில் சில நாட்கள்;
அடியோடு மறந்து விட்டான் அதன் பின்னர்.

அரசனே கவனித்து வந்ததால் வேறு எவரும்
அக்கறை எடுக்கவில்லை மறந்தே விட்டனர்!

குந்தித் தின்றால் குன்றும் மாளும் அன்றோ?
முந்தி சேமித்த உணவுப் பொருட்கள் தீர்ந்தன!

பூட்டி இருந்ததால் செல்ல முடியவில்லை வெளியே!
மாட்டிக் கொண்டனர் பொறியில் இரு எலிகள் போல.

பட்டினி கிடந்தனர் தாயும் சேயும் பல நாட்கள்!
விட்டனர் தம் இன்னுயிரை ஒருவர் பின் ஒருவராக.

காசியிலிருந்து திரும்பினான் கிருஷ்ண சர்மா;
காசித் தீர்த்தம் அளித்தான் தொண்டைமானுக்கு.

“யாத்திரை இனிதே முடிந்தது உங்கள் தயவால்!
பத்திரமாக உள்ளனரா என் மனைவியும், மகனும் ?

திடுக்கிட்டான் தொண்டைமான் இது கேட்டு
நடுக்கம் எடுத்தது அவர்களை நினைத்ததும்!

“சிரம பரிஹாரம் செய்யுங்கள் – அவர்களைச்
சிறிது நேரத்தில் வரவழைக்கிறேன் இங்கு.”

மகனிடம் தந்தான் அந்த வீட்டுச் சாவியை.
ரகசியமாகப் பார்த்து விட்டு வரச் சொன்னான்.

26c. சரணாகதி

ஆடிப் போய்விட்டான் தொண்டைமான் மகன்
ஆவி பிரிந்த உடல்களை அங்கு கண்டவுடன்.

ஓடினான் தந்தையிடம் மிகுந்த துயருடன்,
“தேடி வந்தது நம்மை பிரம்மஹத்தி தோஷம்.

இறந்து விட்டனர் இருவரும் பட்டினியால்
மறந்தே போய் விட்டோம் நாம் அவர்களை.

களங்கம் ஏற்பட்டுவிட்டதே நல்ல பெயருக்கு!
விளங்குமா இதைச் சொன்னால் யாருக்காவது?”

மீண்டும் வந்தான் கிருஷ்ண சர்மா – “நான் காண
வேண்டும் என் மனைவியை, மகனை!”என்றான்.

“ஆலயம் சென்றுள்ளனர் இந்த அந்தப்புர மகளிர்.
அவர்களுடன் சென்றுள்ளனர் இவர்கள் இருவரும்!

இரண்டு நாட்களில் திரும்ப வந்துவிடுவார்கள்.
இருங்கள் நீங்கள் அரண்மனையில் அதுவரை.”

கிருஷ்ண சர்மா நிம்மதியாகச் சென்றுவிட்டான்;
கிருஷ்ண சர்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டால்?

‘ஸ்ரீனிவாசனே என்னைக் காக்க முடியும் இப்போது!’
ஸ்ரீனிவாசனை விரைந்து சென்று சரணடைந்தான்.

பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
” பாதி இரவில் வந்து கண்ணீர் விடுவது ஏன்?” என

“வாக்குத் தந்தால் விடுவேன் பாதங்களை அன்றிச்
சாக்குச் சொன்னால் விடுவேன் என் உயிரையே!”

“உனக்கு வந்த இடர் என்னுடையது அல்லவா?
என்னிடம் கூறுவாய் நடந்தது என்னவென்று!”

ஆதியோடு அந்தமாக உரைத்தான் அனைத்தையும்;
“பாதிப்பு அடைந்தவனுக்கு என்ன பதில் சொல்வேன்?”

26d. விஸ்வரூபம்

” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!

உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.

“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”

பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.

எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.

“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.

“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”

அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”

“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”

பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!

அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.

‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’

“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”

விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.

ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.

27a. மண் பூக்கள்

முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.

நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!

முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.

ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.

மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.

அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.

“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!

பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”

கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.

அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!

மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!

“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”

பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.

மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.

27b. பீமாவரம் பீமன்

“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!

வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்

“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்

மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!

குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?

ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!

பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”

கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!

இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.

ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!

மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”

தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.

ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.

எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

28a. வட்டி கட்ட வழி?

ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.

பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.

மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!

‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’

பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.

“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”

“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.

திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.

வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.

லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.

“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,

“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?

அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.

வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.

28b. பத்ம ஸரோவர்

பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!

கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!

எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.

கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.

கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.

திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!

அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.

கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”

அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.

பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.

ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.

29a. அப்சரஸ்

நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!

பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!

பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.

தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.

பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.

தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!

நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!

அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!

அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.

மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!

“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.

மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!

கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்

‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!

இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!

விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.

“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.

29b. பத்மாவதியின் கனவு

“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”

கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.

ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.

விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!

“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.

மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.

இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்

“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.

தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.

இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.

‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?

கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’

இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்

விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!

வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!

30a. தீப லக்ஷ்மி

மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.

‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’

எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.

கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.

“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”

“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?

கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?

பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?

தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;

தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?

மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”

தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.

தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.

நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.

30b. பிணக்குத் தீர்ந்தது!

தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.

பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!

தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.

பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?

தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.

சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.

வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.

கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.

அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.

“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”

அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி/

ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!

31a. ஆனந்தம் ஆனந்தம்!

ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.

சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.

பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!

தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.

“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.

பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?

உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!

உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.

என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”

புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!

தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.

பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.

“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”

பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்

பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!

31b. மீண்டும் தவம்

சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.

கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.

“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”

கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.

தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!

சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.

ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.

“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!

ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.

ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.

சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.

31c. சாயா சுகர்

சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.

தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.

“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?

அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!

கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;

பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”

“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;

நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.

அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.

அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.

பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”

“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!

விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.

தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”

31d. சூரியனும், சுகரும்.

சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.

சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”

“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”

வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.

கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,

தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,

உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;

உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.

வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.

பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல

தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!

அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.

அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.

சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.

அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”

அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!

சுக க்ஷேத்ரம்

போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்; போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;

போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்; போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.

பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம், “தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!

ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்; அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.

“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன் சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி” பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,

பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.

“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்; இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”

விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை! விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!

“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ! செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”

“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!

மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!” இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.

சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி; சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.

மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.

——————

ஸ்ரீ  வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.

சுபம், சுகம், சாந்தி நிலவட்டும் எங்கும்!

————-

தீர்த்த மஹிமை

தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என்று

உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.

கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!

புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் பதினேழு உள்ளன.

புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் – அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!

சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.

நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.

பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.

02. சேஷாச்சலம்

நாரதர் சென்றார் திருப்பாற் கடலுக்கு;
நாரணனைத் தேவியருடன் தரிசித்தார்.

ஒளிர்ந்தது கௌஸ்துபம் மார்பினில்;
மிளிர்ந்தன நாரணனின் பஞ்சாயுதங்கள்.

“பூலோகத்தில் நான் திருவிளையாடல்
புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறு!” என்று

நாரணன் கேட்டான் நாரத முனிவரிடம்,
நாரதர் விண்ணப்பித்தார் நாரணனிடம்.

‘கங்க தீரத்துக்குத் தெற்கே உள்ளது
தண்டகாரண்யம் என்னும் ஓர் இடம்.

விண்ணோரும் மண்ணோரும் வந்து
தெண்டனிடத் தகுந்த இடம் ஆகும்”.

தேவருஷி சென்றதும் நாரணன் – ஆதி
சேஷனுக்கு ஆணை இட்டார் இங்கனம்.

“மலை உருக் கொள்வாய் நீ அனந்தா!
சில காலம் தங்குவேன் பூவுலகினில் !”

“மலையாக மாறுகிறேன் ஆணைப்படி.
மலை மீது எழுந்தருளும் தேவியருடன்!

இருப்பிடம் ஆகவேண்டும் என் தலை;
திருவடிகள் பதித்து நின்றிட வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றையும்
என்னிடம் நீங்கள் உருவாக்க வேண்டும்!”

அருள் செய்தான் நாரணன் அவ்வாறே;
திருப் பாற்கடல் விடுத்தான் அனந்தன்.

மலையானான் தண்டகாரண்யத்தில்;
தலை ஆனது திரு வேங்கடாச்சலமாக.

உடல் ஆகிவிட்டது அகோபிலமாக;
முடிவில் வால் ஆனது ஸ்ரீ சைலமாக.

அனந்தன் பூமியில் மலை ஆனபோது;
அருந்தவம் தொடங்கியது அவன் மீது.

வேங்கடேசனாகக் காட்சி தந்தருளினார்
வேங்கடமலையில் குடிகொண்ட நாரணன்

03. நாராயணாத்ரி

நாராயண முனிவர் ஒரு நல்ல தபஸ்வி.
நாராயணனைத் தேடியலைந்தார் எங்கும்.

காட்சி தரவில்லை நாராயணன் அவருக்கு
மாட்சிமை பொருந்திய தவம் செய்வித்திட.

பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தார்.
பிரம்மன் கேட்டான்,” என்ன வரம் தேவை?”

“நாரணனைத் தரிசிக்கத் தவம் செய்தேன்.
காரணம் என்னவோ காண முடியவில்லை!

காணும் வழியினைக் கூறுங்கள் சுவாமி!
காணும் பாக்கியத்தை அருளுங்கள் சுவாமி!”

“கோனேரிக் கரையிலே சேஷாச்சலத்திலே
கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீமன் நாராயணன்.

தவம் செய்வீர் நீர் சேஷாச்சலம் சென்று!
தவமும் பலிக்கும்; தரிசனமும் கிடைக்கும்”

சேஷாச்சலம் அடைந்தார் முனிபுங்கவர்;
செய்தார் கடும் தவம் பன்னெடுங் காலம்!

தேவியுடன் காட்சி தந்தான் நாரயணன்;
“தேவை எதுவோ கூறுங்கள்!” என்றான்.

“தரிசனம் வேண்டித் திரிந்தேன் – எங்கும்
தரிசனம் கிடைக்காமல் தவித்தேன் நான்.

பிரம்மன் கூறினார் இங்கு தவம் புரியுமாறு,
அரிய தரிசனம் பெற்றேன் உமது அருளால்!

முனிவர்களுக்கே கடினமான இத் தவத்தை
மனிதர்கள் செய்வது எங்கனம் சாத்தியம் ?

புனிதத் தலத்திலேயே தங்கி வசிப்பீர்!
மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்குவீர்!

என் பெயரால் விளங்க வேண்டும் – நீர்
எனக்கு தரிசனம் தந்த இந்த இடம்” என,

“நிறைவேற்றுவேன் உம் கோரிக்கையை.
நித்தியவாசம் செய்வேன் இந்தத் தலத்தில்.

தீரும் வரும் அடியவர் குறைகள் எல்லாம்!
பேரும் விளங்கும் நாராயணாத்திரி என்று!”

04. ரிஷபாத்ரி

வேட்டைக்குச் செல்ல விழைந்தான் ஸ்ரீனிவாசன்;
காட்டுக்குச் செல்லத் தயாராயினர் படைவீரர்கள்.

சேனைத் தலைவன் தலைமையில் வந்தனர்,
சேஷாத்திரி வாசனைத் தொடர்ந்து வீரர்கள்.

வேட்டை ஆடினர் வெகுநேரம் மிருகங்களை;
வேட்கை மிகுந்தது நீர் பருகித் தாகம் தீர்ந்திட.

அழகிய சோலை ஒன்று தென்பட்டது அங்கு;
தழுவியது வீசிய குளிர்ந்த தென்றல் காற்று.

ரிஷபன் என்னும் அசுரனின் சோலை அது;
ரிஷபன் தடுத்தான் அதில் நுழைந்த வீரர்களை.

அரச குமாரன் என்று எண்ணினான் பகவானை;
பரந்தாமனையும் அச்சுறுத்தினான் அசுரன் ரிஷபன்!

“சம்பரா! இவனுக்குப் பதில் கூறு!” என்று சொல்ல
சம்பரன் தயாரானான் ரிஷபனுடன் போர் புரிய.

சிவ பக்தி மிகுந்தவன் அசுரன் ரிஷபன் – எனவே
தேக சக்தியும் மிகுந்தவன் அசுரன் ரிஷபன் !

நொடியில் அடித்து வீழ்த்தினான் சம்பரனை;
அடுத்து ஓடி வந்தான் ஸ்ரீனிவாசனை நோக்கி!

சரங்களைப் பொழிந்தான் சேனை நாயகன்;
சரங்கள் தடுத்தன அசுரனைச் சுவராக மாறி!

கரங்களாலே உடைத்தான் சுவற்றை அசுரன்,
பரபரவென்று முன்னேறினான் அசுரன் ரிஷபன்

அஸ்திரங்களை ஏவினான் அசுரன் ரிஷபன்;
அஸ்திரங்களை ஏவினான் சேனை நாயகன்!

06. அஞ்சனாத்ரி

திரேதா யுகத்தில் கடும் தவம் செய்தான்,
பரமசிவனைக் குறித்துக் கேசரி என்பவன்.

“வேண்டும் வரம் யாது?” என்று கேட்க
வேண்டினான் கேசரி இந்த வரத்தினை.

“எவராலும் வெல்ல முடியாத பலத்துடன்,
என்றும் வாழ்ந்திருக்கும் மகன் வேண்டும்!”

“புதல்வி தான் பிறப்பாள் உமக்கு – அந்தப்
புதல்விக்குப் பிறப்பான் நீர் கோரும் மகன்!”

அஞ்சனை அவதரித்தாள் அந்தக் கேசரிக்கு;
அருமை பெருமையாக அவளை வளர்த்தான்.

வானரத் தலைவன் விரும்பிக் கேட்டதால்,
வானரனுக்கு அவளை மணம் செய்வித்தான்.

குறை இருந்தது புத்திரன் இல்லையென்று!
குறத்தி போல் வந்தாள் தருமதேவதை அங்கே.

“வேங்கடம் சென்று தவம் செய்தால் – மனம்
வேண்டியபடிப் பிறப்பான் நல்ல மகன்!” என

அனுமதி பெற்றாள் தன் கணவனிடமிருந்து,
அடைந்தாள் வேங்கட மலையைச் சென்று.

ஆகாய கங்கையில் நீராடினாள் – பின்பு
அமர்ந்தாள் அஞ்சனைஅரும் தவம் புரிந்திட.

காற்றை மட்டுமே உட்கொண்டாள் – அவள்
மற்றவற்றைத் துறந்தாள் முற்றிலுமாக!

அஞ்சனை தவத்துக்கு இரங்கினான் வாயு;
கொஞ்சமேனும் தானும் உதவ நினைத்தான்.

கனிந்த பழத்தைக் கரத்தில் கொண்டு போட,
இனிய பிரசாதமாக அதைத் தினமும் புசிப்பாள்.

07. அஞ்சனாத்ரி

வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!

இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!

பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!

கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!

அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!

மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;

மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.

வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!

கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.

தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!

அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.

“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”

தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,

வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;

அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!

புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”

08. மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

09. வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

10. நாக கன்னிகை

சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.

பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!

தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!

மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!

மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.

“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?

நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.

“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”

“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”

“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!

தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”

“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!

கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”

காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!

ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.

11. யுவராஜன்

பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.

மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.

கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.

பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.

கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.

“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.

தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.

சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.

“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”

அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!

ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”

அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .

முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.

நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது

12. அபூர்வக் கனவு

இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.

“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.

வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!

தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”

விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”

கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.

கையில் வில்,  மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்

சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.

சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!

சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.

கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.

சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,

ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.

13. வேடுவன்

“இடையர்கள் குடம் உடைவதற்கும், கனவுக்கும்,
தொடர்பு உள்ளது இதில் ஐயம் இல்லை மன்னா!

புற்றிலே உள்ளாரா ஸ்ரீநிவாசன் என்று அறியப்
புற்றுக்குச் செய்வோம் பால்குடம் அபிஷேகம்.

இறைவன் வெளிப்பட்டால் பொருள் விளங்கும்
சிறந்த ஆலயம் கட்டுவிக்க விழைகின்றான் என.”

வேடன் வந்தான் வேந்தனிடம் சேதி சொல்ல.
வேடனின் சேதியைக் கேட்கும் ஆவல் மீறியது!

“புங்கம் விதையை உண்கின்றோம் மாவாக்கி;
எங்கிருந்தோ வருகிறது வெள்ளைஆண் பன்றி.

தின்றுவிட்டுப் போய் விடுகிறது புங்கம் மாவை!
இன்று காவல் வைத்துச் சென்றேன் என் மகனை.

உண்டான் அவன் புங்கம் மாவை வெண்ணையுடன்!
கண்டதும் என் கோபம் எல்லை மீறியது – அவனிடம்

‘பன்றி தின்கிறது என்று உன்னைக் காவல் வைத்தால்
பன்றிக்குப் பதிலாக நீயே தின்கின்றாயா?’ என்றேன்.

கொடுவாளை ஓங்கியபடிப் பாய்ந்த போது – என்னை
நடுங்க வைத்தது இடி போன்று முழங்கிய கர்ஜனை.

‘உண்டார் பரந்தாமன் உங்கள் புங்கம் மாவை,
வெண்ணை கலந்து உங்கள் மகன் உருவினில்!

நேராகச் சென்று கூறு இதை உன் மன்னனிடம்;
வேறு கனவு கண்டிருப்பான் உன் மன்னனும் கூட.’

விளங்கவில்லை என் அறிவுக்கு எதுவுமே மன்னா!
விளம்ப வந்தேன் விவரங்களை உமக்கு!” என்றான்.

“வேடன் கூறுவதற்கும், கண்ட கனவுக்கும், இடையர்
குடம் உடைவதற்கும் தொடர்பு உள்ளது உறுதியாக!”

ஆராய விரும்பினான் திருமலைக்குச் சென்று;
பிரதானி, மந்திரிகளுடன் சென்றான் புற்றுக்கு.

வேடன் ஓடி வந்தான்; சொன்னான் மன்னனிடம்,
“கூட வந்தால் காட்டுவேன் வெள்ளைப் பன்றியை!”

4. ஆலயங்கள்

வேடுவனைப் பின் தொடர்ந்தனர் அனைவரும்;
ஓடத் தொடங்கியது பன்றி இருந்த புதரை விட்டு.

வளைந்து, நெளிந்து, புகுந்தோடி வெள்ளைப் பன்றி
நுழைந்து, மறைந்தது ஒரு புற்றுக்குள் திடீரென்று!

“மன்னா! நாங்கள் சொன்ன புற்றும் இதுவே தான்!” என்று
சொன்னார்கள் இடையர்கள் சோழ மன்னனிடம் அப்போது.

“ஹிரண்யாக்ஷன் பூமியை ஒளித்து வைத்த போது,
தரணியைக் காக்க வந்த வெள்ளைப் பன்றி இதுவே!

புற்றின் அடியில் இருக்க வேண்டும் பகவான் – நாம்
புற்றைத் தோண்டினால் தெரியும் உண்மை!” என்ற

வேடனைக் கடிந்து கொண்டான் சோழ வேந்தன்;
“வேறு வழியில் வெளிப்படுத்துவோம் இறைவனை!”

பால் குடங்கள் வந்து குவிந்தன அங்கே உடனே!
பால் அபிஷேகம் செய்தான் சோழமன்னன் புற்றுக்கு.

கரைந்தது புற்று; கண்டனர் அதன் உள்ளே
இருந்தது ஆதி வராஹரின் அழகிய உருவம்!

பரவசம் அடைந்துக் கை தொழுது நின்றிருந்த
அரசனிடம் கூறினார் ஆதி வராஹப் பெருமான்.

“சுவாமி புஷ்கரிணியின் அருகே பகவான்
ஸ்ரீனிவாசன் உள்ளான் புளிய மரத்தின் கீழ்!

பூலோகம் வந்துள்ளான் பக்தருக்கு அருள;
புற்று மூடி விட்டது முழந்தாள் வரையில்!

ஆலயம் எழுப்பி ஆராதிப்பாய் ஸ்ரீனிவாசனை.
ஆலயம் எழுப்பு எனக்கும் மேற்குக் கரையில்.”

சென்றனர் அனைவரும் சுவாமி புஷ்கரிணி;
கண்டனர் ஸ்ரீனிவாசனைப் புளிய மரத்தடியில்.

புற்றுக் கரைந்து போனது பால் அபிஷேகத்தால்.
பூரணம் ஆனது பகவானின் திவ்விய தரிசனம்!

“திருமலையில் என்றும் இருந்திட வேண்டும்!”
திரும்பத் திரும்ப வேண்டினான் சோழ மன்னன்.

“திருக் கோவில்கள் அமைத்துத் திருப்பணி செய் !
தினமும் மூன்று காலமும் ஆராதனைகள் செய்!”

கண் கவர் ஆலயங்களை விரைந்து எழுப்பினான்.
விண்ணோரும், மண்ணோரும் வந்து தொழுதனர்

15. ஆதிசேஷன்

சேஷன்:

‘சயனிக்கின்றான் என் மேல் பகவான்;
தயங்காமல் தாங்குகிறேன் உலகினை.

பாக்கியசாலி என் போல் யார் உளர்?
பகவானிடம் நெருங்கிப் பழகுவதற்கு!’

கர்வம் தலை தூக்கியது மனத்தில்,
சர்வம் தனக்குத் தாழ்ந்தவை என்று.

வந்தான் வாயுதேவன் தரிசனத்துக்கு;
“இந்த நேரத்தில் இல்லை தரிசனம்.

ஏகாந்தத்தில் உள்ளார் இறைவன்;
போகவிட மாட்டேன் காண்பதற்கு!”

காற்று:

“என்னைத் தடுக்க முடியுமா உன்னால்?
எங்கும் நிறைந்திருக்கும் காற்று நான்!”

சேஷன்:

“விரிகிறேன் பாயாக இறைவனுக்கு;
விரிகிறேன் குடையாக இறைவனுக்கு!

ஈடு எவர் பக்தி செய்வதில் எனக்கு?
ஈடு எவர் சேவை செய்வதில் எனக்கு?”

காற்று:

“ஆதாரம் அனைத்துக்கும் காற்று!
அதிகம் என் ஞானம், பக்தி, சக்தி.

பணியாள் நீ; சுதந்திரன் நான்;
உணர்ந்து கொள் வேறுபாட்டை!”

சேஷன் வெகுண்டான் இது கேட்டு!
“சோதிப்போம் யார் பலசாலி என்று!”

உரைத்தனர் இருவரும் தமது கட்சியை;
உன்னினார் இறைவன் மமதையை நீக்க.

6. கர்வ பங்கம்

 

“தொண்டாற்றும் எனக்குச் சக்தி இல்லையாம்!
கொண்டாடுகின்றனர் அனைவருமே என்னை!”

“உனக்கு என்று சக்தி இல்லை அனந்தா – ஆனால்
தனக்கு என்று சக்தி உள்ளவன் வாயு தேவன்.

அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரம் வாயு;
அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளான்.

சக்தி அதிகம் உடையவன் வாயு தேவனே!
சந்தேகம் வேண்டாம் உண்மையும் இதுவே!”

“சோதித்துப் பார்க்கலாம் இந்த உண்மையை;
பாதிக்காது நம்மை பலப் பரீட்சை!” என்றான்.

“மேருவை நான் கட்டிக் கொள்கிறேன் – வாயு
வேருடன் பெயர்க்கட்டும் முடிந்தால் அதனை.”

அழுத்திக் கட்டிக் கொண்டான மேரு மலையை,
ஆதிசேஷன் தன் பலத்தை ஒன்றாகத் திரட்டி.

வாயு தேவன் முயன்றான் நகர்த்துவதற்கு;
வாயு தேவனின் முயற்சி வெற்றி பெற்றது.

வேருடன் பெயர்க்கப் பட்டது மேரு மலை!
வேறு இடத்தில் பறந்து சென்று விழுந்தது!

விழுந்த இடம் சுவர்ணமுகி தீர்த்தம் – அங்கு
விழுந்த சேஷன் மலையாகக் கிடக்கின்றான்!

சேஷகிரி ஆகிவிட்டது அந்த மலை – அதன் பின்
சேஷனின் கர்வம் சென்ற இடம் தெரியவில்லை.

நீராடினான் கோனேரித் தீர்த்தத்தில் ஆதிசேஷன்,
நாக தீர்த்தத்தை அடைந்தான் பிறகு சென்று.

தவம் செய்தான் தீவிரமாக நாராயணன் மீது;
தவம் பலித்து நாராயணன் தரிசனம் தந்தான்.

“மன்னித்து எழுந்தருள வேண்டும் என் மீது;
மக்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்;”

கோனேரியில் எழுந்தருளினான் ஸ்ரீநிவாசன்;
கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இன்றும்!

17. சரஸ்வதியின் தவம்

“புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும்
புனிதமானவள் ஆக வேண்டும் நான்”

நதி வடிவாகி தியானித்தாள் சரஸ்வதி;
விதி விளையாடியது அவள் தவத்தில்.

புலஸ்தியர் வந்தார் சரஸ்வதி தேவியிடம்;
புலஸ்தியர் தன்னுடைய மகன் என்பதால்

உபசரிக்கவில்லை சரஸ்வதி சரியாக,
அபசாரமாகக் கருதிவிட்டார் முனிவர்.

“எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்ததாகும்
பொல்லாத கனவு இல்லாது போகட்டும்.

அறிந்தவர்கள் அனைவரும் கூறுவர்,
திரிபதகைத்  தீர்த்தமே சிறந்தது என!”

தடையானான் மகனே தவத்துக்கு;
உடைந்து போனாள் சரஸ்வதி தேவி.

“பரந்தாமனுக்கு எதிரியாக அசுரனாகப்
பிறவி எடுப்பாய் நீ!” என்று சபித்தாள்.

“சாப விமோசனம் எப்போது?” என்று
சாந்தம் அடைந்த புலஸ்தியர் கேட்டார்.

“ராமனாக அவதரிப்பார் நாரணன் – நீ
ராவணன் தம்பி விபீஷணன் ஆவாய்!

இறைவனின் நட்புக் கிடைக்கும் – அதனால்
சிரஞ்சீவியாக இருப்பாய் உலகில் என்றும்!”

கருடாரூடராக வந்தார் நாராயணன்;
“சிறந்த தீர்த்தமாக அனுகிரஹியுங்கள்!”

“புலஸ்தியர் சாபத்தால் கிடைக்காது அது!
புஷ்கரிணியாக வேங்கடத்தில் இருந்து வா!

லக்ஷ்மியும் நானும் வாசம் செய்வோம் – ஒரு
லக்ஷியத்துடன் உன் தீர்த்தக் கரையினில்!

நீராடுவர் பக்தர்கள் தனுர் மாதத்தில்,
சூரியோதயத்தில், சுக்கில துவாதசியில்.

பாவங்கள் தீர்க்கும் புஷ்கரிணியாகிப்
பாரினில் நீ விரும்பும் புகழ் பெறுவாய்!”

வேங்கடத்தில் ஸ்வாமி புஷ்கரிணியாகி
வேண்டிய மகிமைகள் பெற்றாள் சரஸ்வதி.

18. தேக காந்தி

வாயுதேவன் விரும்பினான் மனதார
வாசுதேவன் போன்ற தேக காந்தியை.

ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.

காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.

“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”

வாயுதேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசுதேவனை ஆராதனை செய்தான்;

வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.

தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேக காந்தியை.

வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!

பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,

வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.

19. அகஸ்தியர்

அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.

பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”

வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.

“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!

மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!

தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”

ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;

வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.

சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!

20. சங்கன்

சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.

கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!

தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”

“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.

முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.

பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.

விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.

பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.

வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .

வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.

திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.

கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.

“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”

சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.

“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”

“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”

ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.

21. பசு நெய் விளக்கு

அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.

இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!

பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.

வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!

ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.

கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.

“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”

கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.

வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.

பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.

நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.

“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்

பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!

முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.

22. அவிர் பாகம்

வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.

சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.

திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?

அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.

பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!

“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.

“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!

தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!

எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”

‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.

மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.

அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!

சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?

23. குமார தாரிகை

அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.

வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!

கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!

துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?

தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!

முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!

“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!

வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”

மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”

“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!

சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.

“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”

நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!

நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!

காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.

“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.

முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!

24. சங்கனன்

சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.

கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.

புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.

விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.

வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.

அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!

ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.

உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!

பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.

சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.

கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.

அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!

வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.

அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?

நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”

25. சங்கனன்

அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!

விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!

“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.

தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”

வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.

மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.

சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!

ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.

குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.

புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!

“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”

சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!

தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.

வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.

குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!

சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.

நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.

வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.

26. ஆத்மா ராமன் (1)

விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.

தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.

வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.

மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!

பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.

குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.

தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.

“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!

பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?

ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.

“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.

நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.

ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.

கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.

27. ஆத்மா ராமன் (2)

பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.

கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.

தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.

சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.

வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.

“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,

“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.

நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!

தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”

“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.

இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”

28. ஆத்மா ராமன் (3)

“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!

திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!

பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,

வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.

முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!

தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”

லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.

பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.

சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.

அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.

அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.

மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.

சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.

கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!

குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.

29. சக்கர ராஜன்

துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.

அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.

துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!

“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”

அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.

“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.

பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.

பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!

கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.

தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!

தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை

உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.

சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!

நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!

30. அயி சிரசன்

ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!

ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.

சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!

போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.

கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!

அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.

“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!

வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.

ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?

அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!

“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,

யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!

தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;

மேற்கு திசை நோக்கிச் சென்றான்,
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!

31. வனகர்த்தன்

மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.

“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”

காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.

தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.

“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.

பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.

சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.

சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.

நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.

படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.

ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!

அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!

அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.

சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.

மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!

திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.

32. பேரண்டவன்

வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!

பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.

அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.

கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.

வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.

சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.

சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என

பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.

பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!

மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!

பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.

தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.

எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!

இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!

வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.

வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!

மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.

இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.

வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.

பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –ஸ்ரீ கீதா பாஷ்யம் —

February 24, 2023

சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ-৷৷11.43৷৷

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-

த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ

ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது

இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது

ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இறே

லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –

——–

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த் யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப் யப்ரதிம ப்ரபாவ—৷৷11.43৷৷

த்வம்-நீ,
அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு,
பிதா-தந்தை ஆவாய்,
ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன்,
கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,–சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை,
அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்?
லோக த்ரயே அப்ரதிம ப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் -மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்

৷৷11.43৷৷அப்ரிதம ப்ரபாவ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய பிதா அஸி அஸ்ய லோகஸ்ய குருஃ ச அஸி. (சிஷ்யன் கீழ் நீயே குரு இங்கு )

அதஃ த்வம் அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய கரீயாந் பூஜ்ய தமஃ. ந த்வத் ஸமஃ அஸ்தி அப்யதிகஃ குதஃ அந்யஃ லோக த்ரயே அபி த்வதந்யஃ (கிருதக -அக்ருதக க்ருதாக்ருத -மகர லோகம் -லோகம் வேதம் த்ரயீ என்றுமாம் )

காருண்யாதிநா கேந அபி குணேந ந த்வத் ஸமஃ அஸ்தி குதஃ அப் யதிகஃ.

யஸ்மாத் த்வஂ ஸர்வஸ்ய பிதா பூஜ்ய தமோ குருஃ ச காருண்யாதி குணைஃ ச ஸர்வாதிகஃ அஸி —

৷৷11.43৷৷த்வயா க்ஷாமணே கரிதேபி க்ஷமேஹமிதி கேந நிஷ்சிதம் மதந்யஃ கஷ்சிதாஷ்ரீயதாமிதி பகவதபிப்ராயமுந்நீய ததுத்தரத்வேந ஹேது பல பாவேந ப்ரவரித்தே ஷ்லோகத்வயே

ப்ரதம ஷ்லோகஸ்தவிஷேஷணாந்யப்ரதிமப்ரபாவத்வோபபாதகாநீத்யபிப்ராயேண’அப்ரதிமப்ரபாவேதி’ ப்ரதமமுக்தம். பிதரிகுருபூஜ்யஷப்தாநாஂ ஸம்பந்தி ஸாபேக்ஷத்வேந லோக ஷப்தஸ்ய ஸர்வத்ராந்வயமாஹ’அஸ்ய லோகஸ்ய பிதாஸீத்யாதிநா’. நிருபாதிகபிதரித்வகுருத்வே பூஜ்யதமத்வ ஹேதுரித்யபிப்ராயேண’அத’ இதி. பூஜ்யத்வே கரீயஸ்த்வமநவச்சிந்நமிதி ஜ்ஞாபநாய ப்ரவரித்தஂ’ந த்வத்ஸமோஸ்தி’ இதி வாக்யஂ வ்யாக்யாஸ்யந் ப்ரயோஜநாதிஷயஸத்த்வால்லோகத்ரயஷப்தஸ்யாத்ராந்வயமாஹ’லோகத்ரயேபி த்வதந்ய’ இதி.

அத்ர லோகத்ரயஷப்தேந கரிதகமகரிதகஂ கரிதகாகரிதகமித்யுக்தலோகத்ரயஂ வா? லோக்யதேநேந ப்ரமாணாந்தராப்ராப்தார்த இதி வ்யுத்பத்த்யா வேதத்ரயஂ வா விவக்ஷிதம்.

ஸாம்யஸ்ய பேதகடிதத்வாத்’ந த்வத்ஸமோஸ்தி’ இத்யநேநைவ அந்யஸ்மிந் பகவத்ஸாம்யநிஷேதலாபாதந்யபதாநர்தக்யஂ இத்யாஷங்காபரிஹாராய’அந்யஸ்த்வத்ஸமோ நாஸ்தி? த்வமேவ தவ ஸமஃ’ இத்யர்தலாபார்தஂ’த்வதந்யஃ’ இத்யுத்தேஷ்யஸமர்பகத்வேநாந்யஷப்தஸ்யாந்வய உக்தஃ. தேந கார்யத்வகர்மவஷ்யத்வாதிநா பகவதந்யத்வேந ப்ரஸித்தாநாஂ விதிஷிவாதீநாஂ “ஹிரண்யகர்பஃ ஸமவர்ததாக்ரே” [றக்ஸஂ.8.7.3.1வா.ஸஂ.20.10.10.14] “

அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதஂ” [யஜுஃ4.6.2]

“யதா தமஸ்தந்ந திவா ந ராத்ரிர்ந ஸந்ந சாஸச்சிவ ஏவ கேவலஃ” [ஷ்வே.உ.4.18] இத்யாதிஷு தத்தத்வாசிஷப்தஷ்ரவணேந? காரணத்வாதிநா பகவத் ஸாம்யாபாதப்ரதீதாவபி

’ஆகாஷஸ்தல்லிங்காத்’ [ப்ர.ஸூ.1.1.22]

’ப்ராணஸ்ததாநுகமாத்’ [ப்ர.ஸூ.1.1.28]

’ஷாஸ்த்ரதரிஷ்ட்யா தூபதேஷோ வாமதேவவத்’ [ப்ரூ.ஸூ.1.1.30]

’ஸாக்ஷாதப்யவிரோதஂ ஜைமிநிஃ’ [ப்ர.ஸூ.1.2.28] இத்யாதி ந்யாயாநுரோதேந

“ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணஃ” [ஸுபாலோ.7]

“ஏகோ ஹ வை நாராயண ஆஸீந்ந ப்ரஹ்மா நேஷாநஃ” [மஹோ.1.1] இத்யாதி ஷ்ருதி ஸித்த ஸர்வாந்தராத்மத்வாபஹதபாப்மத்வாதிவிஷிஷ்டபகவதஸாதாரணதர்மப்ரதிபாதகவாக்யஸ்த

ஹிரண்யகர்பாஜஷிவா-திஷப்தாநாஂ பகவத்பரதயா ந தேஷாஂ பகவத்ஸாம்யகந்தோபீதி லப்யதே.’கேநாபி குணேநேதி’ —

கிமுத ஸகல கல்யாண குணைர் ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வாதிநா சேதி பாவஃ. அநேந ஸாம்யைக்யோத்தீர்ணவ்யக்த்யந்தரத்வபக்ஷா நிரஸ்தா வேதிதவ்யாஃ.

——————-————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை

ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றாள்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இறே –

அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் யெல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இறே

ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரச்ய சகேவ சக்யு பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்

தஸ்மாத் –
த்வமேவ -இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பர்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை  அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –

ப்ரணம்ய –
மானசமான தண்டன் –

ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்

இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்

ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்

ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை

ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷபூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்

ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது -ஸ்துத்யன் -என்றபடி

நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –

பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரச்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்

சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்

பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ

சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே

தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்

————-

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷

தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி,
ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன்,
ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே!
பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும்,
ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும்,
ப்ரிய: ப்ரியாயா:-அன்பனை யன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்),
த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்

முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்

৷৷11.44৷৷தஸ்மாத் த்வாம் ஈஷம் ஈட்யம் ப்ரணம்ய ப்ரணிதாய ச காயஂ ப்ரஸாதயே.

யதா கரிதாபரா தஸ்ய அபி புத்ரஸ்ய யதா ச ஸக்யுஃ ப்ரணாம பூர்வகம் ப்ரார்திதஃ பிதா ஸகா வா ப்ரஸீததி?

ததா த்வஂ பரம காருணிகஃ ப்ரியஃ ப்ரியாய மே ஸர்வஂ ஸோடும் அர்ஹஸி.

ப்ரணாம பூர்வக ப்ரஸாதயே -(என்பதால் -மன்னிப்பு வேண்டி பிரபத்தி இது -பக்தி ஆரம்ப விரோதி போக்கவோ மோக்ஷ ப்ராப்திக்காகவோ இல்லையே)

৷৷11.44৷৷’தஸ்மாத்’ இதி பூர்வ ஷ்லோகோக்த நிருபாதிக பிதரித்வபூஜ்யதமத்வகுருத்வாதிகஂ ஹேதுத்வேந

பராமரிஷதீத்யபிப்ராயேணாஹ’யஸ்மாத்த்வஂ ஸர்வஸ்ய பிதேத்யாதிநா’.’ப்ரணம்ய’ இதி ப்ரபதநமுச்யதே;

பூர்வோக்தபிதரித்வாதிபராமர்ஷிநா’தஸ்மாத்’ இத்யநேந’அஹம்’ இத்யநேந சாநுகூல்யஸங்கல்பாத்யங்காநி ஸூசிதாநி.

’ப்ரணிதாய காயம்’ இத்யநேந “யத்தி மநஸா த்யாயதி” [யஜுஃ6.9.7]

இத்யுக்தரீத்யா கரண பூர்திஃ ஸூசிதா. ப்ரணம்ய ப்ரஸாதயே ப்ரஸாதார்தஂ ப்ரணமாமீத்யர்தஃ.’ப்ரஸாதயே?

ஸோடும்’ இத்யாப்யாமர்தஸித்தஂ வதந் தரிஷ்டாந்ததார்ஷ்டாந்திகயோஃ ஸாதர்ம்யமுபபாதயதி’யதா கரிதாபராதஸ்யாபீத்யாதிநா’.

——————————————————————————

சூரணை – -13- அவதாரிகை –

கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இறே –

அவ்வளவும் போறாதே இவருக்கு –
பரம புருஷார்த்த லஷண மோஷ ரூப கைங்கர்ய சித்தியும் வேணுமே

இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யததோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை –
அதினுடைய ஸித்தி அர்த்தமாக –
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபேஷிக்கிறார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய

தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு

ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்

அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –

அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இறே அவனுக்கு உள்ள ஏற்றம் –

நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –

ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் சிநேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –

ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யரத்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த

ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று
அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி

தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-

அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயா நாம பஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இறே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இறே அவன் ப்ரேமம் இருப்பது

————

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

தேஷாம் -அந்த நால்வருக்குள்
நித்ய யுக்த-என்னோடே எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -எப்போதும் இருக்க ஆசை கொண்டவனாய்
ஏக பக்திர்–என் ஒருவன் இடம் மட்டுமே ஈடுபாட்டை யுடையவனாய் இருப்பவனாய்
ஜ்ஞாநீ -ஞானியானவன்
விஸிஷ்யதே–சிறப்புறுகிறான்
அஹம் -நான்
ஜ்ஞாநிந-அந்த ஞானிக்கு
அத்யர்தம் ப்ரியோ -சொல்ல ஒண்ணாத அளவுக்கு பிரியனானவன்
ஸ ச -அவனும்
மம ப்ரிய৷—எனக்கு இனியவன்

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வ சக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
என் ஆசையும் உன்னுடைய அதீனம் – என் அவா அறச் சூழ்ந்தாயே –

மாசறு சோதி -மடலூறுதல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் –
பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் –
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -அமரும் காதல் -விலக்காதே –
பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –

நித்ய யுக்தன் சம்சாரத்தில் கிட்டாதே -ஆசைப்படுபவன் -இதுவே போதும் அந்த நிலைக்குப் போக
மிக இனிமை -எனக்கு அவர்கள் போல் இருக்க முடியவில்லையே என்னும் புருஷோத்தமன்
கத்ய த்ரயத்தில் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஓன்று –

ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

தன் பெருமையை-12-ஸ்லோகங்களில்
பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் – -13–14-ஸ்லோகங்களில்
இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -15-ஸ்லோகத்தில்
இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும் -16-ஸ்லோகத்தில்
அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று-17-ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்

பிரபுத்தனே ஸ்ரேஷ்டன் இது முதல் மேல் 14 ஸ்லோகங்களும் -இதுவே சொல்ல வந்தது -கீழ் எல்லாம் முன்னுரை

துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
என் நல் நெஞ்சம் தன்னை விலக்க இயலாதே –
சிந்தனையை -பரம ப்ராப்யம் -தவ நெறியை -பிராபகம் -திருமாலை -மிதுனம் உத்தேச்யம் -இதுவே நாலாயிரத்தில் ஸப்த த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக தர்சனாய் -அதிகாரி ஸ்வரூபத்துடன் ப்ராப்ய ப்ராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
தேஷாம் ஞானி -அவர்களுக்குள் இங்கு -கீழ் பஞ்சமி அர்த்தே சஷ்ட்டி இங்கு நிர்த்தாரணே சஷ்ட்டி

அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் –

அத்தனை ப்ரீதி சர்வசக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே -அதனில் பெரிய என் அவா அன்றோ

৷7.17৷৷தேஷாஂ ஜ்ஞாநீ விஷிஷ்யதே, குதஃ நித்ய யுக்த ஏக பக்திஃ இதி ச. (மற்று ஒன்றைக் காணாவே )

தஸ்ய ஹி மதேக ப்ராப்யஸ்ய மயா யோகோ நித்யஃ. இதரயோஸ்து யாவத் ஸ்வாபிலஷித ப்ராப்தி மயா யோகஃ.

ததா ஜ்ஞாநிநோ மயி ஏகஸ்மிந் ஏவ பக்திஃ, இதரயோஃ து ஸ்வாபிலஷிதே தத் ஸாதநத்வேந மயி ச. அதஃ ஸ ஏவ விஷிஷ்யதே.

கிஂ ச ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தம் அஹம் -அத்ர அத்யர்த ஷப்தோ அபிதேய வசநஃ; –ஜ்ஞாநிநஃ அஹஂ யதா ப்ரியஃ

ததா மயா ஸர்வஜ்ஞேந ஸர்வ ஷக்திநா அபி அபிதாதுஂ ந ஷக்யதே இத்யர்தஃ; (அத்தனை ப்ரீதி சர்வ சக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே )

ப்ரியத்வஸ்ய இயத்தா ரஹிதத்வாத். -(அதனில் பெரிய என் அவா அன்றோ )

யதா ஜ்ஞாநிநாம் அக்ரேஸரஸ்ய ப்ரஹ்லாதஸ்ய ‘ஸ த்வாஸக்த மதிஃ க்ருஷ்ணே தேஷ்யமாநோ மஹோரகைஃ. ந விவேதாத்மநோ காத்ரஂ தத் ஸ்மரித் யாஹ்லாதஸஂ ஸ்திதஃ’ (வி0 பு0 1.17.39) இதி ஸஃ அபி ததா ஏவ மம ப்ரியஃ.(அபி அப்ரதானம் )

(அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் -)

৷৷7.17৷৷ஏவஂ பக்தபேத உக்தஃ; தத்ர ப்ரபுத்தஸ்ய ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘தேஷாமிதி’. இமமேவார்தஂ பரஸ்தாதபி வக்ஷ்யதி

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

இதி. தேஷாமிதி நிர்தாரணே ஷஷ்டீ. விஷிஷ்யதே ஷ்ரேஷ்டதம இத்யர்தஃ. கிஂ ப்ரஷஂஸாமாத்ரார்தமிதஂ?

இதி ஷங்கதே’குத’ இதி. வைஷிஷ்ட்யஹேதுபரஂ விஷேஷணத்வயமித்யாஹ’நித்யயுக்தஃ

ஏகபக்திரிதி சேதி’.’ஜ்ஞாநிநோ ஹீத்யாதி’ ப்ராபகஸ்ய தஸ்யைவ ப்ராப்யத்வாத்பலதஷாயாமபி. யோகோநுவரித்த இத்யர்தஃ. ஆர்தஸ்யார்தார்திநஷ்சைகாதிகாரித்வநிர்ணயாதிதரயோரிதி த்விவசநம். ஏதேநாத்மார்திநஃ

பலதஷாயாஂ பரமாத்மநோ போக்யதயாநுஸந்தாநஂ நாஸ்தீதி ஸித்தம். ஏகஸ்மிந் பக்திர்யஸ்ய ஸ ஏகபக்திரிதி வ்யதிகரணபஹுவ்ரீஹிஃ. ஏகஷப்தாபிப்ரேதமுபாஸ்யபலயோரபேதஂ தர்ஷயிதுஂ’ஏகஸ்மிந்நேவேத்யவதாரணம்’.’ப்ரியோ ஹி’ இத்யாதிநா

ஹேத்வந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ ‘கிஞ்சேதி’.

அதிஷயிதகாஷ்டாஂ வக்துமாஹ ‘அர்தஷப்தோபிதேயவசந’ இதி.’அத்யர்தமத்யபிதேயம்’;

அபிதேயாதிக்ரமணஂ சாத்ராபிதேயாந்தராத்த்வைலக்ஷண்யம்; தச்சாபிதாதுமஷக்யதேத்யபிப்ராயேணாஹ’ஜ்ஞாநிநோஹமிதி’.

’அபிதாதுமஷக்யஂ’ இத்யஸ்யேஷ்வரவசநத்வாத்தேநாப்யஷக்யமிதி பலிதமித்யபிப்ராயேணோக்தஂ’மயேத்யாதிநா’.

நநு ஸர்வஜ்ஞேந யதஜ்ஞாதஂ ததஸதேவ ஸ்யாத், யத்ர சாஸாவஷக்தஃ, தத்ர சாஸ்யாநீஷ்வரத்வஂ ஸ்யாதித்யத்ராஹ ‘ப்ரியத்வஸ்யேதி’; ககநகுஸுமாதிவதஸத்த்வநிபந்தநமஜ்ஞாநஂ ந தோஷாய; அந்யதா ப்ராந்தத்வப்ரஸங்காத். இயத்தாயா அபாவாதேவ தத்வாசகஃ

ஷப்தோபி நாஸ்தீதி ததப்ரயோகோபி நாஷக்திஹேதுரிதி பாவஃ. ஹிஷப்தத்யோதிதாஂ ப்ரஸித்திமுதாஹரதி

‘யதேதி’.’ஜ்ஞாநிநாமக்ரேஸரஸ்யேத்யநேந’ ஜந்மஸித்தநிரதிஷயஜ்ஞாநவத்த்வஂ பாதகவசநாதிபிர்பிபீஷிகாஸஹஸ்ரைஷ்சாகம்பிதத்வஂ விவக்ஷிதம்.

’கரிஷிர்பூவாசகஃ ஷப்தோ ணஷ்ச நிர்வரிதிவாசகஃ’ [ம.பா.5.70.5] இதி கரிஷ்ணஷப்தேநாத்ர நிர்வரிதிஹேதுத்வாதிகஂ விவக்ஷிதம்.

ப்ரவாஹாநாதிகரிஷ்ணாவதாரகரிதகாலியமர்தநஸூசநஂ வா; பக்ததுஃகாநாஂ கர்ஷணாத்வா கரிஷ்ணஃ;

தீவ்ரதுஃகஹேதுஸத்பாவேபி துஃகாநுபவாபாவோ நிரதிஷயப்ரீத்யந்தரமத்ததயேதி பாவஃ. ஆத்மஜ்ஞாநமபி ததாநீஂ மரிக்யஂ,

கிஂ புநர்கரிஹாதிகல்பஷரீரஜ்ஞாநமித்யாத்மநோ காத்ரமித்யஸ்ய பாவஃ.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ராப்யத்யர்தஷப்தஃ ஸமுச்சயஸாமர்த்யாதர்தஸ்வபாவாச்சாநுஷக்த இத்யபிப்ராயேணாஹ ‘ததைவேதி’. யதாஹஂ த்ரிவிதபரிச்சேதரஹித நிரதிஷயாநந்தஸ்வரூபோநந்தகுணவிபூதி-ர்ஜ்ஞாநிநஃ ப்ரியஸ்ததாயமேக ஏவ ஜ்ஞாநீ மம நிரதிஷயப்ரீதிவிஷய இத்யுக்தஂ பவதி

.’ஸ ச மம ப்ரியஃ’ இத்யத்ர நிரதிஷயப்ரீதிஂ குர்வதோபி மஹோதாரஸ்யேஷ்வரஸ்யாபி தத்ப்ரீத்யுபாதிகப்ரீதிகரணாததரிப்திஃ ஸூசிதேதி கேசிதாசார்யாஃ.

————————————————————————–

உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்

உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –

அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்

ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈச்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ -என்ன –

மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –

ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுக்தம கதியான என்னை –
அனுக்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே

யுக்தாத்மா
கூடினவனாய்

ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இறே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்

৷৷7.18৷৷ஸர்வே ஏவ ஏதே மாம் ஏவ உபாஸதே இதி உதாராஃ வதாந்யாஃ யே மத்தோ யத் கிஞ்சித் அபி கரிஹ்ணந்தி, தே ஹி மம ஸர்வஸ்வதாயிநஃ. (என்னிடம் சிறிதளவு பெற்றுக் கொண்டவர்கள் எனக்கு எல்லாம் கொடுத்தவர்கள் -ஆகிறார்கள் -)

ஜ்ஞாநீ து ஆத்மா ஏவ மே மதஂ ததா யத்தாத்ம தாரணஃ அஹம் இதி மந்யே.–தஸ்மாத் ஏவஂ யஸ்மாத் அயஂ மயா விநா ஆத்ம தாரணாஸஂபாவநயா மாம் ஏவ அநுத்தமஂ ப்ராப்யம் ஆஸ்திதஃ, அதஃ தேந விநா மம அபி ஆத்ம தாரணஂ ந ஸஂபவதி, (அன்று எனக்கு பட்டினி நாளே )

ததோ மம அபி ஆத்மா ஹி ஸஃ.

ந அல்ப ஸஂக்யாஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து

ஸ்வரூப ஐக்யம் சொல்ல வந்தால் மற்ற மூவர் இடம் இல்லாததால் அத்வைதம் ஸித்திக்காதே

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -பற்று இல் -அகத்திலன் -உற்றவன் -நம்மை முற்றுமாகக் கொண்டவன் -நேர் எதிராக இரண்டு வியாக்கியானங்கள் இதுக்கு உண்டே

৷৷7.18৷৷’தேஷாம்’ [7.17] இதி ஷ்லோகஸ்யார்த ஏவ’உதாராஃ’ இத்யநேநாபி தரிடீக்ரியதே. ஜ்ஞாநிநோத்யர்தப்ரியத்வவசநாதந்யேஷாமபி கிஞ்சித்ப்ரியத்வஂ பலிதம்; ததேவ’உதாராஃ ஸர்வே’ இதி பாதேந விஷதீகரிதம். ததேகோபாயத்வஸ்ய ஸாதாரண்யஂ’மாமேவோபாஸத’ இத்யநேந தர்ஷிதம். உதாரஷப்தஸ்யாத்ர மந்தப்ரயோஜநோத்கர்ஷமாத்ரபரத்வவ்யுதாஸாய ப்ரஸித்த்யநுரோதேநாஹ ‘வதாந்யா’ இதி. அர்தித்வேநாவஸ்திதாநாஂ கதஂ வதாந்யத்வஂ? இத்யத்ராஹ ‘யே மத்த’ இதி. ஸகலபலப்ரதத்வலக்ஷணஂ பரமௌதார்யமேவ ஹி மம ஸர்வஸ்வம்; தச்ச ப்ரதிக்ரஹீதரிஸாபேக்ஷஂ ததபாவே கதஂ ஸ்யாதித்யுக்தஂ பவதி.’மதம்’ இதி நபுஂஸகத்வாந்ந ஜ்ஞாநீத்யநேநாந்வயஃ;’மதஃ’ இதி பரோக்தபாடஸ்த்வப்ரஸித்தஃ; தஸ்மாதிதிஷப்தோத்யாஹரிதஃ. அயமர்தஃ த்ரய்யந்தஸித்தாந்தோ பவது வா மா வா; கரிஷ்ணஸித்தாந்தஸ்த்வயமிதி பாவஃ. ஆத்மஷப்தஸ்யாத்ர பஹுப்ரமாணவிருத்தத்வாந்ந தாதாத்ம்யாதிவிஷயத்வம்; ததா ஸதி வ்யதிரேகநிர்தேஷபாதஷ்ச. அதஸ்ததபிப்ரேதமாஹ ‘ததாயத்தேதி’. ஷரீரஂ ப்ரதி தாரகோ ஹ்யாத்மா. ப்ரியத்வாதிஷயப்ரதிபாதநாய ஸாவதாரணோயமாத்மத்வாரோபஃ. அஸ்மிந்நபிமாநமாத்ரஸாரே பவத்ஸித்தாந்தே கிஂ ப்ரமாணமபிமதஂ? இத்யாகாங்க்ஷாயாம்’ஆஸ்திதஃ’ இத்யாதிகமுச்யத இத்யாஹ ‘கஸ்மாதேவமிதி’. ஹிர்ஹேதௌ.’யுக்தாத்மா’ இத்யாஷஂஸாயாஂ க்தஃ; பரமாத்மயோகாஷஂஸாவிஷிஷ்ட ஏவ ஆத்மா யஸ்ய ஸோத்ர யுக்தாத்மா; ததேததபிப்ரேத்யோக்தஂ ‘மயா விநாத்மதாரணாஸம்பாவநயேதி’. மதநுஸந்தாநாபாவே ஸதி அர்தாந்தராநுஸந்தாநப்ரவரித்தேரஸமர்தஸ்வபாவதயேத்யர்தஃ.’மாமேவேதி’ அயுக்ததஷாயாமஸத்த்வமேவ ஹி ஸ்யாதிதி பாவஃ.’மாமேவ’ உபாயபூதமேவ, ந து பலாந்தரலவமித்யர்தஃ.’ப்ராப்யமிதி’ கதிஷப்தோத்ர கந்தவ்யபரஃ. அஸ்த்வேவஂ ததாயத்ததாரணோ யதாப்ரமாணஂ ஜ்ஞாநீ, ததஃ கிமாயாதஂ பகவதஸ்ததாயத்ததாரணத்வஸ்ய? இத்யத்ராஹ’அதஸ்தேந விநேதி’. ஸஹரிதயாநாஂ மதபிப்ராயவிதாஂ சைதத்வ்யக்தமித்யபிப்ராயஃ. ததா ஹி’ந தஸ்யாந்யஃ ப்ரியதரஃ ப்ரதிபுத்தைர்மஹாத்மபிஃ. வித்யதே த்ரிஷு லோகேஷு ததோஸ்ம்யேகாந்திதாஂ கதஃ. நாரதைதத்தி தே ஸத்யஂ வசநஂ ஸமுதாஹரிதம். நாஸ்ய பக்தைஃ ப்ரியதரோ லோகே கஷ்சந வித்யதே’ இதி.’ததோ மமாத்மா ஹி ஸ’ இதி ஆதாரத்வாதிவிஷேஷோ ஹ்யாத்மலக்ஷணமிதி பாவஃ. ஐஷ்வர்யாதிகாமாஃ ஸர்வ ஏவ மத்ஸ்வரூபஸ்யாதிஷயஹேதவஃ. ஜ்ஞாநீ து மம ஸ்வரூபஸத்தாஹேதுரிதி ஸ்வபக்தஸ்துதிபரஃ ஷ்லோகஃ.

—————-————————————————————————————-

பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞான வான் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப

பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-

ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்

மாம் –
என்னை –

வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக

ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி

ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –
இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –

ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –
நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது கான் -என்கிறான்

————

ந அல்ப ஸஂக்யா ஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து(அந்தே -ஜென்மத்தின் அந்தம் மரணத்திலா -இல்லை -பிரதிபத்தி வைஷித்யம் -துடிப்பு ஏற்பட பிரதிபந்தகங்கள் ஒழிய வேண்டுமே -அறிவு முதிர முதிர இந்த நிலை வரும்-ஞானீ ஞானவான் ஆகும் முடிவில் என்றவாறு -அவன் இடம் ஓன்று பெற்றுப் போகாமல் அவனே வேண்டும் என்று இருப்பவன் -ப்ராரப்தம் முடிந்து தான் இவனுக்கு பேறு -விளம்ப பலம் -ப்ரபன்னனுக்கு அது இல்லையே )

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-

ப₄ஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல புண்ணியப் பிறப்புகள் கழிந்த பின்
ஞாநவாந் –அறிவு முதிரப் பெற்ற ஞானியானவன்
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-வாஸுதே₃வனே -எனக்குப் பரம பிராப்யமாகவும் பிராபகனாகவும்
தாரகம் போஷகம் போக்யம் முதலாக எல்லாமுமாகவும் இருக்கிறான் என்று எண்ணி
மாம் ப்ரபத்யந்தே |–என்னை சரண் அடைகிறான்
ஸ -அவன்
மஹாத்மா –விசாலமான நெஞ்சை யுடையவன் ஆவான்
ஸுது₃ர்லப₄ ||-இவ்வுலகில் எனக்கு மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

கீழ் சொல்லிய ஞானீ தான் ஞானவான் -அவனது பக்தி முற்றிய நிலை இது-மஹா மனம் படைத்தவன் –

ஸூலபன் -ஐஸ்வர்யார்த்திகள் நிறையே கிடைக்குமே
கைவல்யார்த்திகள் ஸூ ஸூலபன் –
வாழாட் பட்டு வல்லீரேல் -துர்லபன்
ஸூதுர்லப தமம் -அதுக்கும் மேல் அவனே எல்லாம் -அவன் ஆனந்தமே பிரதானம்-மாம் வேத்தி தத்வத கீழ் சொல்லிய நிலை –

திருக்கோளூருக்கு என் ஜீவனத்தையும் கொண்டு போக வேண்டுமோ -முகத்தை கழற்றி வைத்து விட்டுப் போகக் கூடாதோ

எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.
பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –
வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-
எல்லா வித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் –
பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்
“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –
கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–

பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே –

அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே
பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ-கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை

பரமமான ப்ராப்யம் பிராபகம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே

மஹாத்மா மஹா மநா -ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே -முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே-என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன் -விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா

கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான்-

৷৷7.19৷৷பஹூநாஂ ஜந்மநாஂ புண்ய ஜந்மநாம் அந்தே (வெறும் ஜென்மங்கள் அல்ல புண்ய ஜென்மங்கள் )

அவஸாநே வாஸுதேவ ஷேஷதைக ரஸஃ அஹஂ(தாரக போக்ய போஷக பல பிரத உபாயம் அவன் –பல கரணம் தானே பக்தி-பண்ணுவதும் அனுபவிப்பதும் தனது தலையில் கொண்டவன்  )

ததா யத்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவரித்திஃ ச, ஸ ச அஸஂக்யேயைஃ கல்யாண குணைஃ பரதரஃ இதி ஜ்ஞாநவாந் பூத்வா வாஸுதேவ ஏவ மம பரம ப்ராப்யஂ ப்ராபகஂ ச (பரமமான ப்ராப்யம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே )

அந்யதபி யந் மநோரத வர்தி ஸ ஏவ மம் தத் ஸர்வம் இதி மாஂ யோ ப்ரபத்யதே மாம் உபாஸ்தே (ப்ரபத்யே சொல்லி உபாஸ்தே-இவன் பக்தி நிஷ்டன்-ப்ராபகமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவனாகையால் ஸ்வ தந்த்ர ப்ரபன்னன் என்றுமாம் இவன் பக்தி ஸாத்ய பக்தியே )

ஸ மஹாத்மா மஹா மநாஃ (ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே-முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே -என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே -தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன்-விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா -)

ஸுதுர்லபஃ துர் லப தரஃ லோகே.

‘வாஸுதேவஃ ஸர்வம்’ இத்யஸ்ய அயம் ஏவ அர்தஃ.’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ (கீதா 7.17)’ஆஸ்திதஃ ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாஂ கதிம்’ (கீதா 7.18) இதி ப்ரகமாத்.ஜ்ஞாநவாந் ச அயம் உக்த லக்ஷண ஏவ, அஸ்ய ஏவ பூர்வோக்த ஜ்ஞாநித்வாத்.’பூமிராபஃ’ இதி ஆரப்ய அஹங்கார இதீயஂ மே பிந்நா ப்ரகரிதிரஷ்டதா. அபரேயமிதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்৷৷(கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான் )

(பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல
மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி
சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே -அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே-பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ -கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை -சர்வம் இதி -போக்யாதி -சர்வ உறவும் -ஸர்வ ப்ராப்யம் -)

৷৷7.19৷৷புநரப்யுக்தஜ்ஞாநவத்த்வஸ்யாநேகஜந்மஸாத்யபுண்யபலத்வேந துர்லபதரதயா ஜ்ஞாநிநஃ ஷ்ரைஷ்ட்யஂ தர்ஷயதி ‘பஹூநாம்’ இதி ஷ்லோகேந.’யே ஜந்மகோடிபிஃ ஸித்தாஸ்தேஷாமந்தேத்ர ஸஂஸ்திதிஃ’ இதி பகவச்சாஸ்த்ரஂ’ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு’ [பாஂ.கீ.4] இத்யாதிகாஂ ஸ்மரிதிஂ சாநுஸந்ததாந ஆஹ ‘நால்பேதி’.’பஹூநாஂ ஜந்மநாம்’ இத்யத்ர ந தாவத்பஹுஜந்மஸத்பாவமாத்ரஂ விவக்ஷிதம், தஸ்யாத்ராநுபயுக்தத்வாத். ந ச பஹுஜந்மமாத்ரஸ்ய ஜ்ஞாநஹேதுத்வமுச்யதே; ஸர்வேஷாமயத்நதோ ஜ்ஞாநித்வப்ரஸங்காத்; அதஃ’புண்யஜந்மநாஂ’ இதி விஷேஷிதம். ஈதரிஷஜ்ஞாநவத்த்வமேவம்பூதவிஷிஷ்டப்ரபத்தௌ ஹேதுரிதி தர்ஷயிதுஂ, ஜ்ஞாநவதோநேகஜந்மப்ரமவ்யுதாஸாய ச’ஜ்ஞாநவாந் பூத்வேத்யுக்தம்’.’வாஸுதேவஃ ஸர்வம்’ தி ஸாமாநாதிகரண்யஸ்ய பாதாத்யாஸதாதாத்ம்யாதிவிஷயத்வாயோகாச்சரீரஷரீரிபாவாதிநிர்வாஹாதபி ப்ரகரணவிஷேஷஸித்தஸ்யார்தஸ்ய க்ராஹ்யதரத்வாத்’பரமப்ராப்யமித்யாதிகமுக்தம்’. லௌகிகஂ தாரகாதிகமபிப்ரேத்யாஹ’அந்யதபீத்யாதி’.’த்வமேவ மாதா ச பிதா த்வமேவ’ [நா.ஹரி.10]’மாதா பிதா ப்ராதா நிவாஸஃ ஷரணஂ ஸுஹரித்கதிர்நாராயணஃ’ இத்யாதிகமபீஹாபிப்ரேதம். ப்ரபத்தேரத்ரோபாஸநாங்கத்வாதாஹ’மாமுபாஸ்த’ இதி. ஜ்ஞாநிநோபி ஸ்வரூபமஹத்த்வஂ ப்ரமாணவிருத்தம், பங்க்திபாவநத்வாதிமாஹாத்ம்யஂ ஸதபி ப்ரகரிதேநபேக்ஷிதம்; தஸ்மாஜ்ஜ்ஞாநவிஷேஷாதீநமாஹாத்ம்யமிஹ விவக்ஷிதமித்யாஹ’மஹாமநா’ இதி. பலாந்தரபரஸ்யாபி பகவதுபாஸகஸ்ய துர்லபத்வாத்தத்வ்யவச்சேதாய ஸுஷப்த இதி தர்ஷயிதுஂ’துர்லபதர’ இத்யுக்தம்.

‘வாஸுதேவஃ ஸர்வம்’ இதி ஸாமாநாதிகரண்யஸ்ய பராபிமதமர்தஂ ப்ரதிக்ஷிபந் ஸ்வோக்தஂ த்ரடயதி’வாஸுதேவ’ இதி. அத்ர ஹ்யுபக்ரமஃ ப்ராப்யபேதநிபந்தநாதிகாரிபேதபரஃ. ப்ரகரணவிருத்தப்ரகரணாநுபயுக்தோ வார்தஃ ப்ரகரணவிஷேஷஸித்தோபயுக்ததமார்தே ஜாகரூகேநாதரணீய இதி பாவஃ.’ஜ்ஞாநவாந்’ இத்யத்ராபி நிர்விஷேஷாதிஜ்ஞாநஜீவமாத்ரஜ்ஞாநாதிவ்யுதாஸாயாஹ’நிவாஂஷ்சாயமிதி’. உக்தலக்ஷணஃ வாஸுதேவஷேஷதைகரஸஸ்வாத்மவேதீத்யர்தஃ. உக்தலக்ஷணத்வே ஹேதுமாஹ ‘அஸ்யைவ பூர்வோக்தஜ்ஞாநித்வாதிதி”ஜ்ஞாநீ ச பரதர்ஷப!’ [7.16] இதி பூர்வோக்தே ஜ்ஞாநிநி கதமுக்தலக்ஷணத்வஂ? இத்யத்ராஹ’பூமிராப இத்யாரப்யேதி’. யத்வா பூர்வோக்தஜ்ஞாநித்வாதித்யேகபக்தித்வாதிகஂ விவக்ஷிதம்;’பூமிராபஃ’ இத்யாதிநா ஹேத்வந்தரோக்திஃ.’கார்யகாரணோபயாவஸ்தஸ்யேதி’ கார்யத்வகாரணத்வரூபோபயாவஸ்தாவிஷிஷ்டஸ்யேத்யர்தஃ. ஸ்வரூபஸ்தித்யாதிதாததீந்யஂ’மயி ஸர்வஂ’ [7.7]’ரஸோஹம்’ [7.8] இத்யாதிஷு வ்யக்தம். உக்தலக்ஷணத்வஂ நிகமயதி ‘அத’ இதி.’ஸ ஏவேதி’ ‘வாஸுதேவஷேஷதைகரஸோஹம் இத்யாதிநோக்தலக்ஷண ஏவேத்யர்தஃ.

——————————————————

இதி ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி

ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –

——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

ஜ்ஞாநிநஃ ப்ராப்யஂ து தஸ்மாத் அத்யந்த விபக்தம் இத்யாஹ –(கைவல்யம் ஐஸ்வர்யத்தை விட மேம்பட்டது -பகவத் லாபமோ கைவல்யத்தை விடவே மிக வேறுபட்டது-அணு அனுபவம் விட விபு அனுபவம் –எளிதாக -பரமாத்மா அனுபவம் மூன்றாலும் )

৷৷8.22৷৷’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய. மயி ஸர்வமிதஂ ப்ரோதஂ ஸூத்ரே மணி கணா இவ৷৷’ (கீதா 7.7)’மாமேப்யஃ பரமவ்யயம்’ (கீதா 7.13) இத்யாதிநா நிர்திஷ்டஸ்ய யஸ்ய அந்தஃஸ்தாநி ஸர்வாணி பூதாநி யேந ச பரேண புருஷேண ஸர்வம் இதஂ ததஂ ஸ பரபுருஷோ ‘அநந்ய சேதாஃ ஸததம்’ (கீதா 8.14) இதி அநந்யயா பக்த்யா லப்யஃ.

அத ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச ஸாதாரணீம் அர்சிராதிகாஂ கதிம் ஆஹ த்வயோஃ -(இருவகையோருக்கும் பொது–ப்ரபன்னனுக்கு விசாரம் இல்லை -ஆத்ம யாதாத்ம விது -கைவல்யார்த்தியா பஞ்சாக்னி வித்யை மூலம் உபாசகனுக்கா – )

அபி அர்சிராதிகா கதிஃ ஷ்ருதௌ ஷ்ருதா ஸா ச அபுநராவரித்தி லக்ஷணா.-(மீளுதுதாம் ஏதம் இல்லா -வேத ஸித்தம் சொல்லப் போகிறான் )

யதா பஞ்சாக்நி வித்யாயாஂ’தத்ய இத்தஂ விதுஃ (இப்படி அறிந்து உபாசகன் )

யே ச இமே அரண்யே ஷ்ரத்தாஂ தப இத் யுபாஸதே தே அர்சிஷமபி ஸஂபவந்த் யர்சிஷோஹஃ’ (சா0 உ0 5.10.1) இத்யாதௌ அர்சிராதிகயா கத்யா கதஸ்ய பர ப்ரஹ்ம ப்ராப்திஃ அபுநராவரித்திஃ ச உக்தா’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி”ஏதேந ப்ரதிபத்ய மாநா இமஂ மாநவ மாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி.

பஞ்சாக்கினி -ப்ரஹ்மம் ஸர்வ அந்தர்யாமி என்று அறிந்து தான் அவனுக்கு சரீரம் என்று அறிந்து உபாசிக்கிறான் -ஆத்ம உபாசகன் தான் இவன்
ஐந்து ஆஹுதி பார்த்தோம் -தேஹம் விட விலக்ஷணன் -ப்ரஹ்ம சரீரம் என்றும் அறிந்து உபாஸிக்கிறான்
ப்ரஹ்மத்தை அறிந்து -அர்ச்சிராதி கதி வழியாக -ப்ராப்யம் ப்ரஹ்மம்
கைவல்யார்த்திக்கு ப்ராப்யம் கைவல்ய பிராப்தி -கேவல ஸ்வ ஆத்ம உபாசகன் இவன் -ப்ரஹ்மம் ப்ராபகம் மட்டுமே இவனுக்கு –
உபாசனம் போதும் ப்ரஹ்மம் உபாஸிக்க வில்லை யாதோ உபாசனம் ததோ பலம்
பக்தி யோக நிஷ்டனுக்கு ப்ராப்யம் ப்ரஹ்மம்-பரமாத்ம உபாஸகன் -ஆத்ம தர்சனம் முன்னிட்டு -இத்தைப் -படியாகக் கொண்டு -ப்ரஹ்மம் உபாசிக்கிறான் –
அர்ச்சிராதிகதி உண்டு இவனுக்கும்
மூவருக்கும் மீளா கதி -அடையும் இடம் வேறே கைவல்யார்த்திக்கு
ஆளவந்தார் போல் -அக்ஷர யாதாத்ம்யம் விது சொல்லாமல் ஆத்ம யாதாத்ம்யம் விது -ஸ்வாமி அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்ம உபாசகன் ஆத்ம யாதாத்ம விதுவே என்பதில் சங்கையே இல்லையே
மீது இருவரிலும் -ஆத்ம யாதாத்ம்ய விது -தேஹ விலக்ஷணன் -அறிந்த மட்டும் இல்லாமல் அடியேன் உள்ளான் அறியாமல் கைவல்யார்த்தி இழந்தே போகிறான்-ஞாத்ருத்வத்தை விட சேஷத்வமே பிரதானம் என்று அறிவதே ஆத்ம யாதாத்ம விதுவாகிறான்

ஜிஞ்ஞாசூ -ஞானி போடாமல் தேசிகன் –
நியாய சிந்தாஞ்சனம் -விளக்கி
ப்ரகரணத்தில் பஞ்சாக்கினி வித்யா நிஷ்டனைப் பற்றி பிரஸ்தாபமே இல்லையே
ப்ரக்ருதி வியுக்த ஆத்மஸ்வரூபம் அனுபவிக்க இச்சிப்பவன்
பகவத் சேஷ தைக ரஸம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் என்பதால் இவன் இல்லையே
7-14-அவர்கள் ஆசைப்பட்டதையே கொடுக்கிறேன் -எழுவார் விடை கொள்வார் -விட பகவத் லாபார்த்தி விலக்ஷணன் தான்
ப்ரஹ்மம் கொடுப்பவன் என்றே இவன் பற்றுகிறான்
சேஷத்வ ஞானம் பிரயோஜனம் ஸூவ ப்ரயோஜன நிவ்ருத்தி
பஞ்சாக்கினி வித்யா நிஷ்டன் -ஸாதனம் வைத்தே இவனுக்கு பெயர்
கைவல்யார்த்தி ஸாத்யம் வைத்தே இவனுக்கு பெயர்

ஸ்ரீ பாஷ்யம் தெளிவாக உள்ளதே
விரோதம் இல்லை என்று நிரூபிக்கிறார் -நியாய சித்தாஞ்சனத்தில்
பிரஸ்த்துத மாத்திரம் காரணமாக் கொண்டு முடிவுக்கு வரக்கூடாது
பரமாத்மாக ஸூவ ஆத்ம நிஷ்டன் போல் அல்லாமல் -தனது ஆத்மா முக்கியம் -கொடுப்பவராக மட்டுமே கொள்ளுகிறான்
ஆத்ம யாதாத்ம வித் என்பதுக்கு அதுக்கு அனுகுணமாகவே கொள்ள வேண்டும்

யாமுனாச்சார்யர் க்ரந்ததுக்கும் விரோதம் இல்லையே -அக்ஷர யாதாத்ம்யம் -என்கிற வசனத்துக்கு சேர -அருளிச் செய்ய வேண்டும்

பிராட்டி விபுத்வம் அணுத்துவம் தொடங்கி -கைவல்ய விசாரம் -18 வித்யாசங்கள் -யோஜனா பேதங்கள் –பங்குரம் ப்ரோக்தம் அநித்திய மோக்ஷம் -பிள்ளை லோகாச்சார்யார் நித்யம்

அபாவாதிகரணம் –முக்தன் சரீரத்துடன் ப்ரஹ்ம அனுபவமா இல்லையா -இரண்டுமே உண்டு -பாதாரயணர்-கைங்கர்யம் செய்ய
வைகுந்தத்து அமரரும் முனிவரும்-முனிவரும் யோகிகளும் இரண்டு வகையும் உண்டே அங்கே –
குண நிஷ்டர் அசரீர் -கைங்கர்ய நிஷ்டர் சரீரத்வம் உண்டே –

கைவல்யார்த்தி -ஜரா மரண மோஷாயா -தத் க்ரது நியாயம் -சரீரம் இல்லா அனுபவம் -ஸ்தூல சரீரமும் ஸூஷ்ம சரீரமும் தொலைக்க வேண்டுமே -விரஜா நதி தாண்ட வேண்டும்
கைவல்யார்த்திக்கு அர்ச்சிராதி கதி செல்ல இச்சை இல்லையே இவனுக்கு -எந்த மார்க்கத்தில் செல்கிறான் ஸாஸ்த்ரம் சொல்ல வில்லை -எதோ இடத்தில் இருக்கப் போகிறான் -ஏந கே நாபி -எதோ ஒரு வழியில் போகிறான் -எல்லாம் விட்ட -கதி சிந்தனை -ஐஸ்வர்யம் ப்ரஹ்மம் -அர்ச்சிராதி கதி -அனைத்தையும் விட்டான் -அன்றோ -மது வித்யா நிஷ்டன் வசு லோகம் அடைந்து அனுபவித்து மோக்ஷம் அடைவது போல் -கைவல்யார்த்தி சாதனம் செய்து பின்பு ப்ரஹ்மம் அடையலாம் என்பர் தேசிகன் -ஆனால் சாதனம் செய்யும் இடத்தில் இல்லையே –
பாத்ம புராணம் -ஸ்வ ஆத்ம ஆனந்த சுகம்-கேவலம் பரமம் பதம் உத்தம பரமம் பதம் அல்ல -தத் ஸ்தானம் -விரஜைக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் இடையில்
முக்தானாம் கதி அர்வாஜீனம் தாழ்ந்த ஓன்று அன்றோ
சம்சாரத்துக்கும் பரமபதத்துக்கும் நடுவில் -பட்டர் -கீழ் எல்லை சம்சாரம் -விரஜை தாண்டி ஏதோ ஒரு மூலையில் இருக்கிறான் –

இனி மேல் வேறே விஷய விசாரம் –
பிரஜாபதி வாக்கியம் கட உபநிஷத் -இரண்டும் -ப்ரஹ்ம சரீரம் என்று அறிந்து உபாசகன் – என்று கொள்ளாமல் –
ஆத்ம யாதாத்மா வித் பஞ்சாக்கினி வித்யை உபாசகன் பரமாத்மா உபாசகனாகவே இருக்க வேண்டும்
அங்கமாக கொண்ட பரமாத்மா உபாசகனாகக் கொள்ளக் கூடாதே
ப்ராப்யம் இவனுக்கு இதுவே -என்பதைக்காட்ட

உயர்ந்த ஆத்மா உபாசனம் தான் பண்ணுகிறான் -ப்ரஹ்ம உபாசகன் அல்லன்

ஆதி வாஹிகரால் அழைத்துச் சொல்லப்படுவதால் -கேவல ஆத்மா உபாசகன் அல்லன் -இவன் பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்ம உபாசகன் தான் இவன் -கார்யாதிகரணம்-ஸ்ரீ பாஷ்யம் இதுவே விசாரம்

ந ச ப்ரஜாபதி வாக்யாதௌ ஷ்ருதி பரவித்யாங்க பூதாத்ம ப்ராப்தி விஷயா இயம்’தத்ய இத்தஂ விதுஃ’ இதி கதி ஷ்ருதிஃ’யே சேமேரண்யே ஷ்ரத்தாஂ தப இத்யுபாஸதே’ (சா0 உ0 5.10.1) இதி பர வித்யாயாஃ பரித க்ஷ்ருதி வையர்த்யாத்.

பஞ்சாக்நி வித்யாயாஂ ச’இதி து பஞ்சம்யா மாஹுதாவாபஃ புருஷ வசஸோ பவந்தி’ (சா0 உ0 5.9.1) இதி’ரமணீய சரணாஃ கபூய சரணாஃ’ (சா0 உ0 5.10.7) இதி புண்ய பாப ஹேதுகோ மநுஷ்யாதி பாவோ அபாம் ஏவ பூதாந்தர ஸஂஸரிஷ்டாநாம் ஆத்மநஸ்து யத் பரிஷ்வங்க மாத்ரம் இதி சிதசிதோர் விவேகம் அபிதாய’தத்ய இத்தஂ விதுஃ தேர்சிஷமபி ஸஂபவந்தி’ (சா0 உ0 5.10.1)’இமஂ மாநவமாவர்த்தஂ நாவர்தந்தே’ (சா0 உ0 4.15.5) இதி விவிக்தே சிதசித் வஸ்துநி த்யாஜ்யதயா ப்ராப்ய தயா ச’தத்ய இத்தஂ விதுஸ்தேர்சிராதிநா கச்சந்தி ந ச புநராவர்தந்தே’ இதி உக்தம் இதி கம்யதே.

ஆத்ம யாதாத்ம்ய விதஃ பரம புருஷ நிஷ்டஸ்ய ச’ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி’ (சா0 உ0 4.15.5) இதி ப்ரஹ்ம ப்ராப்தி வசநாத் அசித் வியுக்தம் ஆத்ம வஸ்து ப்ரஹ்மாத்மக தயா ப்ரஹ்ம ஷேஷதைகரஸம் இத்யநுஸஂதேயம்.

தத் க்ரது ந்யாயாச்ச பரஷேஷதைகரஸத்வஂ ச’ய ஆத்மநி திஷ்டந் யஸ்யாத்மா ஷரீரம்’ (ஷ0 ப்ரா0 14.6.5.5.30) இத்யாதி  ஷ்ருதி ஸித்தம்.

৷৷8.22৷৷’புருஷஃ ஸஃ’ இதி ஷ்லோகே துஷப்தேநார்தாந்தரத்யோதநாத்’அநந்யயா பக்த்யா’ இத்யஸ்ய ஸாமர்த்யாத்புருஷஷப்தஸ்ய பரமாத்மநி புரிஷயத்வபூர்ணத்வபூர்வஸத்பாவபுருதாநாதிபிர்நிமித்தைஃ “ஸஹஸ்ரஷீர்ஷா புருஷஃ” [றக்ஸஂ.8.4.17.8யஜுஸ்ஸஂ.31.1] இத்யாதிப்ரயோகப்ராசுர்யாத்பரஷப்தேந விஷேஷணாச்ச பூர்வோக்தாத்பலாததிகபலோபதேஷார்தோயஂ ஷ்லோக இத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநிந’ இதி.’விபக்தஂ’ விவேசகைரிதி ஷேஷஃ. விலக்ஷணமிதி வார்தஃ. ககநாத்யந்தஸ்திதாவபி ககநாதேஃ பரத்வாபாவாத்தத்ஸித்த்யர்தஂ’யஸ்ய’ இத்யாதிப்ரஸித்தவந்நிர்தேஷோத்ர பூர்வோக்தபரத்வபர இதி தர்ஷயதி — ‘மத்த’ இதி. அநுவாதபுரோவாதயோரைகார்த்யமிதி பாவஃ. “யஸ்மாத்பரஂ நாபரம்” இத்யாரப்ய “தேநேதஂ பூர்ணஂ புருஷேண ஸர்வம்” [ஷ்வே.உ.3.9] இதி ஷ்ருதிஸ்மாரணாய’யேந ச பரேண புருஷேணேத்யுக்தம்’. பக்தேரநந்யத்வஂ கீதரிஷஂ? இத்யத்ராஹ — ‘அநந்யசேதா’ இதி.

—————

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே-பக்தி ஒன்றாலே முடியும் –

৷৷11.54৷৷வேதைஃ அத்யாபநப்ரவசநாத்யயநஷ்ரவணஜபவிஷயைஃ யாகதாநஹோமதபோபிஃ ச மத்பக்திரஹிதைஃ கேவலைஃ யதாவத் அவஸ்திதஃ அஹஂ த்ரஷ்டுஂ ந ஷக்யஃ. அநந்யயா து பக்த்யா தத்த்வதஃ ஷாஸ்த்ரைஃ ஜ்ஞாதுஂ தத்த்வதஃ ஸாக்ஷாத்கர்துஂ தத்த்வதஃ ப்ரவேஷ்டுஂ ச ஷக்யஃ.

ததா ச ஷ்ருதிஃ’நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந. யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்.’ (கட0 2.23) இதி.

৷৷ 11.54৷৷உத்தரஷ்லோகஸ்யைததுபபாதகதயா ந பௌநருக்த்யமித்யாஷயேந தமவதாரதி — ‘குத இத்யத்ராஹேதி’. வேதாநாஂ ஸ்வரூபேண ஸாதநத்வாப்ரஸக்த்யா தந்நிஷேதோநுபபந்ந இத்யதஸ்ததபிப்ரேதமாஹ’வேதைரத்யாபநப்ரவசநேதி’. தாநேஜ்யாகதநஂ ஹோமஸ்யாப்யுபலக்ஷணமித்யபிப்ரயந்நாஹ’யாகதாநஹோமதபோபிஷ்சேதி’. பக்தித்வாரா ஸாதநத்வஸ்ய “தமேதஂ வேதாநுவசநேந” [பரி.உ.4.4.22] இத்யாதிஷ்ருத்யவகதத்வாத்’மத்பக்திவிரஹிதைரித்யுக்தம்’. ஏவஂவிதஷப்தோ மாநுஷத்வாதிப்ரமாநர்ஹத்வாப்ராகரிதத்வாதிபர இத்யாஹ’யதாவதவஸ்திதோஹமிதி’. ந கேவலஂ ஸாக்ஷாத்காரமாத்ரே ஸாதநத்வேந பக்திரபேக்ஷிதா; கிந்து’ஷுத்தபாவஂ கதோ பக்த்யா ஷாஸ்த்ராத்வேத்மி ஜநார்தநம்’ [ம.பா.5.69.5] இத்யாதிவச்சாஸ்த்ரதோர்தநிர்ணயே ஸாக்ஷாத்காராநந்தரபாவிந்யாஂ ப்ராப்தாவபீத்யபிப்ராயேண’ஜ்ஞாதுஂ”ப்ரவேஷ்டும்’ இத்யுபயஂ பூர்வஷ்லோகாப்ரஸக்தமிஹ ப்ரஸஞ்ஜிதம்.’தத்த்வதஃ’ இத்யேதத்ித்ரஷ்வப்யவிஷேஷாதபேக்ஷிதத்வாச்சாந்விதம். தத்த்வதஃ ப்ரவேஷஃ பரிபூர்ணப்ராப்திஃ? யதாவஸ்திதஸர்வாகாரேணாநுபவ இத்யர்தஃ. தேந வ்யூஹவிபவாதிமாத்ரப்ராப்திவ்யவச்சேதஃ. ஸ்மர்யந்தே ச ஸாக்ஷாந்முக்தைரர்வாஞ்சஃ ப்ராப்திபர்வபேதாஃ — ‘லோகேஷு விஷ்ணோர்நிவஸந்தி கேசித்ஸமீபமரிச்சந்தி ச கேசிதந்யே. அந்யே து ரூபஂ ஸதரிஷஂ பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்தஃ’ இதி.’ஏதத்தி துர்லபதரஂ லோகே ஜந்ம யதீதரிஷம்’ [6.42] இத்யஸ்ய வ்யாக்யாநே யாதவப்ரகாஷைஷ்சோக்தம் — “இதமல்பீயஸீஂ யோகஸித்திஂ கதஸ்ய மரிதஸ்ய பலஂ? யதி ப்ரதமாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? த்யஜதி வா யோகஂ? ஷ்வேதத்வீபே ஜாயதே; பகவத்ஸாலோக்யஂ வா யாதி; யதி ததோப்யதிகாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே; விஷ்ணுபார்ஷதோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பார்ஷதேஷ்வரோ பவதி; யதி ததோப்யதிகாஂ? த்வாரபாலோ பவதி; யதி ததோப்யதிகாஂ? பகவதோங்கஸஂவாஹகோ பவதி; யதி ததோப்யதிகாஂ? மந்த்ரிஸ்தாநீயஃ பரிதகைஷ்வர்யயுக்தோ பவதி; யதி பூர்ணாஂ யோகஸித்திஂ கதோ ம்ரியதே? பகவத்ஸாயுஜ்யஂ கதோ முக்தஃ பரமைஷ்வர்யயுக்தோ பவதி” இதி வைஷ்ணவேஷு யோகஷாஸ்த்ரேஷு மர்யாதா. ததேதத்ஸர்வமிஹ ஸூசிதஂ பகவதா “அதவா யோகிநாம்” [6.42] இத்யாதீநீதி. ஜ்ஞாநதர்ஷநப்ராப்திஹேதுத்வே பக்தேஃ பர்வபேதாந்நாந்யோந்யாஷ்ரயணாதிதோஷஃ. பூர்வஜந்மஸுகரிதமூலஸாத்த்விகஜநஸஂவாதாதிஜநிதஂ யதாவச்ச்ரவணாநுகுணஂ கிஞ்சிதாநுகூல்யரூபஂ பக்திமாத்ரஂ ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநோத்பத்தௌ ஸஹகாரி பவதி. உத்கடதிதரிக்ஷாகர்பா து பரபக்திஃ ஸாக்ஷாத்காரஹேதுஃ; ஸாக்ஷாத்கரிதே து பரிபூர்ணாநுபவாபிநிவேஷலக்ஷணா பரமபக்திஃ ப்ரவேஷஹேதுரிதி. அத்ர’அநந்யயா’ இதி பதஂ ப்ராகுக்தப்ரக்ரியயா அநந்யப்ரயோஜநயேதி பாவ்யம். அநந்யதேவதாகயேத்யேகே. ஐக்யாநுஸந்தாநவிவக்ஷா து ப்ராகேவ தூஷிதா; ப்ரத்யக்ஷாதிவிருத்தா ச. ததேததகிலமபிப்ரேத்ய ஸங்கரிஹீதம்’ஏகாதஷே ஸ்வமாஹாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம். தத்தமுக்தஂ விதிப்ராப்த்யோர்பக்த்யேகோபாயதா ததா’ [கீ.ஸஂ.15] இதி. பக்திப்ரஷஂஸாபரத்வஷங்காமபாகரோதி — ‘ததா சேதி’. “நாயமாத்மா” இத்யாதௌ “ந பரிதிவ்யாமக்நிஷ்சேதவ்யஃ” [யஜுஃ5.2.7.2] இத்யாதாவிவ கேவலாநாஂ நிஷேதஃ. யச்சப்தாநூதிதோ வரணீயதாஹேதுகுணவிஷேஷோ பக்திரேவேத்யர்தஸ்வபாவாதுபபரிஂஹணபலாச்ச ஸித்தம். அத்ர தநுஷப்தஸ்ய விக்ரஹபரத்வே ஸ்வரூபாதிகஂ தத்பரத்வே ச விக்ரஹாதிகமர்தலப்தம்.

——————–

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷–(பர பக்திக்கு ஆத்ம தர்சனம் தேவை -அதுக்கு த்யான நிஷ்டை )

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

18.54৷৷ப்ரஹ்ம பூதஃ (ஆத்ம தர்சனம் பெற்ற பின்பு )ஆவிர்பூத அபரிச்சிந்ந ஜ்ஞாநைகாகார மச் சேஷதைக ஸ்வபாவாத்ம ஸ்வரூபஃ.’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்.’ (கீதா 7.5) இதி ஹி ஸ்வ ஷேஷதா உக்தா.ப்ரஸந்நாத்மா க்லேஷ கர்மாதிபிஃ (கிலேச கர்மம் விபாகம் ஆசயம் இவற்றால் தீண்டாமல் ப்ரஸன்ன ஆத்மா-இந்த நான்குமே பர பக்திக்குத் தடை )அகலுஷ ஸ்வரூபோ மத் வ்யதிரிக்தஂ ந கஞ்சந பூத விஷேஷஂ ப்ரதி ஷோசதி ந கஞ்சந காங்க்ஷதி; அபி து மத் வ்யதிரிக்தேஷு ஸர்வேஷு பூதேஷு அநாதரணீயதாயாஂ ஸமோ நிகிலஂ வஸ்து ஜாதஂ தரிணவத் மந்யமாநோ மத்பக்திஂ லமதே பராம்.-

மயி -ஸர்வேஷ்வரே -நிகில ஜகதுத்பவ ஸ்திதி ப்ரலயலீலே- நிரஸ்த ஸமஸ்த ஹேய கந்தே- அநவதிக அதிஷய அஸஂக்யேய (குறையற்ற எண்ணிறந்த-ஒவ்வொன்றுமே எல்லை அற்ற -அதிசய )கல்யாண குண கணைகதாநே-(ஏக ஸ்தானம்) -லாவண்ய அமரித ஸாகரே (லாவண்யம்-ஸமுதாய சோபை )-ஷ்ரீமதி- புண்டரீக நயநே (ஸுந்தர்யம் -அவயவ சோபை )(தஸ்ய உதித நாம -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-)-ஸ்வ ஸ்வாமிநி அத்யர்த ப்ரிய அநுபவ ரூபாஂ பராஂ பக்திஂ லபதே.தத் பலம் ஆஹ —

(எட்டு விசேஷணங்கள்-முதல் ஏழும் குண க்ருத தாஸ்யம் -இறுதியில் ஸ்வாமித்வம் ஸ்வரூப க்ருத தாஸ்யம் பிரதானம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்-காரணத்வ பலம் அடியாக -உபகாரகன் இடம் தானே அன்பு செலுத்த வேண்டும் )

৷৷18.54৷৷ஏவஂ கர்மயோகாதிஸாத்யப்ரத்யகாத்மாநுபவஸ்ய பரபக்த்யதிகாராபாதகத்வமுச்யதே’ப்ரஹ்மபூதஃ’ இதி ஷ்லோகேந. ததபிப்ராயேண பரஷேஷதைகஸ்வபாவத்வஸ்யாப்யாவிர்பாவ உக்தஃ. யோகஸாத்யஂ ப்ரஹ்மாக்யமிஹ ப்ரஹ்மத்வமித்யபிப்ராயேணாபரிச்சிந்நஜ்ஞாநாவிர்பாவோக்திஃ. ஷேஷத்வஸ்ய ஸ்வரூபாநுபந்தித்வஂ ப்ராகேவோக்தமித்யாஹ’இதஸ்த்வந்யாமிதி’.’ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதீ மதுஸூதநஃ’ [வி.த.9.10] இத்யாத்யுக்தபரபக்த்யநர்ஹதாநிவரித்திஃ’ப்ரஸந்நாத்மா’ இத்யுச்யத இத்யாஹ — ‘க்லேஷகர்மாதிபிரகல்மஷஸ்வரூப’ இதி. ஆதிஷப்தேந விபாகாஷயயோர்க்ரஹணஂ? தயோரபி காலுஷ்யரூபத்வாத்;’க்லேஷகர்மவிபாகாஷயைஃ’ [பா.யோ.1.24] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாச்ச. அவித்யாஸ்மிதாதயஃ பஞ்ச க்லேஷாஃ? கர்ம புண்யபாபரூபஂ? ஜாத்யாயுர்போகாஃ விபாகாஃ? ஆஷயாஃ ஸஂஸ்காராஃ.’யஸ்மிந் ஸ்திதோ ந துஃகேந குருணாபி விசால்யதே’ [6.22] இதி ப்ராகுக்தஂ’ந ஷோசதி’ இதி பராமரிஷ்டம். ததா’யஂ லப்த்வா சாபரஂ லாபஂ மந்யதே நாதிகஂ ததஃ’ [6.22],இத்யுக்தஂ’ந காங்க்ஷதி’ இதி ஸ்மாரிதம். அத்ர’ந ப்ரஹரிஷ்யதி’ இதி பாடாந்தரமப்ரஸித்தத்வாதநங்கீகரிதம். தத்ராத்மாநுபவஸுகேந பாஹ்யவைதரிஷ்ண்யஂ தாவஜ்ஜாயதே? பரமாத்மநஸ்து ப்ரத்யகாத்மநோப்யதிகஸுகதயா ஷ்ருதத்வாத்ததநுபுபூஷாஸ்தாயிநீத்யபிப்ராயேண மத்வ்யதிரிக்தஷப்தஃ.,ஷோககாங்க்ஷாநுதயஹேதுஃ’ஸமஃ’ இத்யுச்யதே இத்யபிப்ராயேண — ‘அநாதரணீயதாயாஂ ஸம’ இத்யுக்தம். துல்யாநாதர இத்யர்தஃ. பராவரதத்த்வவிவேகபலமந்யாநாதரஸாம்யஂ வ்யநக்தி — ‘நிகிலமிதி’.’வஸ்துஜாதமித்யநேந’ ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தாநாமேவ மேர்வபேக்ஷயா மாஷஸர்ஷபாதீநாமிவாவாந்தரோத்கர்ஷஸ்யாநாதரயோக்யத்வஂ ஸூசிதம்.’தரிணவதிதி’ — நஹி ரத்நபர்வதமாருருக்ஷோஃ பலாலகூடே ஸங்கஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ர மச்சப்தேந பரபக்த்யுத்பத்திவிவரித்த்யர்ததயா பூர்வத்ர ஷாஸ்த்ராந்தரேஷு ச ப்ரபஞ்சிதாநாமுபாஸநதஷாயாமநுஸந்தேயாநாஂ சாகாராணாமபிப்ரேதத்வமாஹ’மயி ஸர்வேஷ்வர’ இத்யாதிபிஃ.’ஸர்வேஷ்வர’ — இதி ஈஷிதவ்யஸ்ய பத்தஸ்ய கிஂ ததாபூதைஃ ஈஷிதவ்யாந்தரைரிதி பாவஃ.’நிகிலஜகதுத்பவஸ்திதிப்ரலயலீல’ இதி — “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இதி ஹி ஷ்ருதிரிதி பாவஃ. யத்வா கரணகலேவரப்ரதாநாதிபிர்மஹோபகாரகே சதுர்விதஹேதுபூதே தஸ்மிந் திஷ்டதி ஸரிஷ்டிஸஂஹாரகர்மதயைவாவஸ்திதஃ கோந்யஃ ஸமாஷ்ரயணீய இதி பாவஃ.’நிரஸ்தஸமஸ்தஹேயகந்த’ இதி — நஹ்யஸ்மிந்யதாவத்ப்ரதீதே வஸ்த்வந்தரேஷ்விவாவஜ்ஞாவைமுக்யாதிகாரணமஸ்தீதி பாவஃ.’அநவதிகேத்யாதி’ ஏகைககுணப்ரகர்ஷோபி சித்தாகர்ஷகஃ; கிமுதைவஂ ஸம்பூத இதி பாவஃ. யத்தி பரஂ ஸுலபஂ ச ததேவ ஹ்யாஷ்ரயணீயமிதி ஸௌலப்யோபயுக்தகுணாநாமப்யத்ர ஸங்க்ரஹஃ.’லாவண்யாமரிதஸாகர’ இதி ஷுபாஷ்ரய விக்ரஹகுணோபலக்ஷணம்.

‘ஷ்ரீமதீதி’ — ஷ்ரீர்ஹி ஸர்வேஷாமாஷ்ரயணீயா? ஸாப்யேநஂ நித்யமாஷ்ரிதேதி ஹரிதயம். ஷ்ரீயதே ஷ்ரயதே சேதி ஷ்ரீஷப்தோ நிருக்தஃ. மதும்நித்யயோகே. ஷ்ருதிஷ்ச — “ஹ்ரீஷ்ச(ஷ்ரீஷ்ச)தே லக்ஷ்மீஷ்ச பத்ந்யௌ” [யஜுஸ்ஸஂ.31.22] இத்யாதிகா. ஸ்மர்யதே ச — ‘நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஃ ஷ்ரீரநபாயிநீ. யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததைவேயஂ ৷৷’ [வி.பு.1.8.17] இதி. ஏதேநோபாஸ்யத்வப்ராப்யத்வாதிகஂ ஸர்வஂ ஸபத்நீகஸ்யேதி ஜ்ஞாபிதம். ஆமநந்தி ச ரஹஸ்யாம்நாயவித இமமேவார்தஂ — ‘நித்யஸந்நிஹிதஷக்திஃ’ இதி.’புண்டரீகநயந’ இத்யவயவஸௌந்தர்யோபலக்ஷணம். “தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ தஸ்யோதிதி நாம (ஸஃ) ஏஷ ஸர்வேப்யஃ பாப்மப்யஃ உதித உதேதி ஹ வை ஸர்வேப்யஃ பாப்மப்யோ ய ஏவஂ வேத” [சா.உ.1.6.7] இதி ஸர்வபாபவிமோக்ஷகாமஸ்யோபாஸநார்ததயா புண்டரீகாக்ஷத்வமப்யுபதிஷ்டம்.’சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி’ [வா.ரா.3.34.13]’யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ இத்யாதிஷு ச தத்வீக்ஷணஸ்ய பாவநதமத்வமுச்யத இதி பாவஃ. பக்த்யுத்பத்த்யாதௌ ஸர்வமிதமேகதஃ? ஸ்வாமித்வஂ சைகதஃ? நசாஸாவேகோநஸர்வஸ்வாமீத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வஸ்வாமிநீதி’.

—————-———————————————————————————————

சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ

இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் –
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது
கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே
உபாய தயா அல்ல –

அத்தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பரபக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப்பாகம் அபூர்வ தர்சனத்திலெ உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபெஷிக்கிறார் –

————————————————————————————————

சூரணை -16-அவதாரிகை

பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –
இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபே ஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
கருத பரி பூர்ண
அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷை தைகரரூப
நித்ய கிங்கரோ பவாநி

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி கருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான

பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –

அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –

நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசததம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் அனுபவம் –

அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரச்யமாய் இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்

ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தை களிலும் அனுகூலமாய் இருக்கிற –

அசேஷ சேஷை தைகரரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு

நித்ய கிங்கரோ பவாநி –
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –
அன்றிக்கே
நித்ய சப்தம் புநரா வ்ருத்தி ரஹீதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்