ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –
அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—
அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல் குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன் உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-
என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-
கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-
————————-
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா
————————
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-
மண்டலம் -மண்டலாகாரமான கோலத்தை
மாசி முன்னாள் -மாசி மாதத்தில்
ஐய -அழகிய -நுண் -நுண்ணிய முதல் பஷத்தில்
அழகுக்கு -கேவலம் அழகுக்காகவே
விதிக்கிற்றியே -அந்தரங்கம் கைங்கர்யம் பண்ணும் படி விதிக்க வேணும் –
தையொரு திங்களும் –
மார்கழி மாசம் ஒரு மாசமும் நோன்பு நோற்றார்களாய் நின்றது இறே –
இனி தை ஒரு மாசமும் அவன் வரும் ஸ்தலத்தை அலங்கரித்து –
தையொரு திங்களும் —
செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று
அறிவது ஒரு நாள் உண்டாகில் கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே
இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே
இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –
தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது
தண் மண்டலமிட்டு –
குளிர்ந்து தர்ச நீயமான மண்டலத்தை இட்டு
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை -திருவாய் -9-3-9–யான விஷயத்தைப் பற்றி வைத்து
இங்கே மண்டல பூஜை பண்ணுகிறாள் இறே ஆற்றாமை –
மண்டலமிட்டு –
வ்ருத்த ஹானியை அனுஷ்டியா நிற்கச் செய்தே இவள் செய்கையாலே அது சத் வ்ருத்தமாய் இருக்கிறபடி –
ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்கையாலே –
தண் மண்டலமிட்டு -மாசி முன்னாள்-
ஒரு பிரயோகம் பண்ணும் போது ஒரு மண்டலம் சேவிக்க வேணும் றே -அதுக்கு பல வ்யாப்தி உண்டாம் போது –
அதுக்காக மண்டல சேவை பண்ணுகிறாள்
தண் மண்டலமிட்டு –
இம் மண்டலத்திலே செய்து அறியாதது ஓன்று இ றே இவள் செய்கிறது –
மாசி முன்னாள் –
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு பஷத்திலே நின்று அனுஷ்டிக்க வேணும்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து-அழகினுக்கு அலங்கரித்த –
ஐய தாய் -அவன் சௌகுமார்யத்துக்கு சேரும் படி நுண்ணியதான மணலைக் கொண்டு
அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே இது தானே பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து
இப்படி சாதாரமாக ஆஸ்ரயிக்கிறது நீ என் பக்கலில் என் கொண்டு என்ன –
அனங்க தேவா-
உன்னை அழிய மாறியும் பிரிந்தாரை நீ சேர்க்கும் ஸ்வ பாவத்தைக் கண்டு –
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
பேறு தப்பாது என்று அத்யவசித்து இருக்கலாவது ஒரு விஷயம் அன்றே பற்றிற்று –
விநாசத்தை விளைப்பதான செயலை இறே செய்தது
உஜ்ஜீவிக்கலாம் -என்று பார்க்கிறது –ஆம் கொலோ -சங்கை –
பலத்துக்கு வ்யபிசாரம் இல்லாத சாதனத்தை பரிஹரித்து வைத்து இறே பலம் –
பாஷிகமான விஷயத்தில் விழுகிறது –
என்று ஆசையாலே சொல்லி -உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
ததீயரோடு கூட அவனை உபாசித்துப் போந்த வாசனையாலே
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசாதி யசா ராகவஞ்ச மகாவ்ரதம் -அயோத்யா -31-2-என்னுமா போலே
தம்பி முன்னாகப் பற்றுகிறாள்–காமன் -தம்பி சாமான் -சாமானையும் உன்னையும் தொழுதேன் என்கிறாள்
நமோஸ் அஸ்து ராமாயா ச லஷ்மணாயா –தேவ்யை ச தசை ஜனகாத்மஜாயை சுந்தர -13-60-என்னுமா போலே
தொழுதேன் –
தோள் அவனை அல்லால் தொழா-முதல் திரு -60- என்னும் குடியிலே பிறந்து இருக்கச் செய்தே இறே இப்படி இவள் கை இழந்தது-
க்ருதாபராதச்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் -அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்றான் இறே திருவடி
க்ருதாபராதர்க்கும் கூட கார்யகரம் ஆவது ஓன்று இறே அஞ்சலி
ஏதுக்குத் தான் இப்படி தொழுகிறதோ என்ன –
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவன்-
சம்சாரிகளும் இப் பேற்றை பெற்று வாழ வேணும் -என்று அங்கு நின்றும் போந்து முதல் பயணம் எடுத்து விட்டு-
ஆஸரீத விரோதி நிரசன சீலனான திரு வாழி யாழ்வானைக் கையிலே உடையனாய்க் கொண்டு திருமலையிலே வந்து நிற்கிறவனுக்கு-
அக் கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை அவனுடனே சேர்த்து விடச் வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-
இப்போது –வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை -என்றதற்கு கருத்து
உகவாதவரை அழியச் செய்கைக்கும்-
உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் இது தானே பரிகரமாய் இருக்கை –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1–என்று இறே இருப்பது –
ஏந்தி –
திரு ஆபரணம் –இதுவே உத்தேச்யம் என்று காட்டுகிறாள் –
——————————————-
கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்றும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது -பெரிய திரு -7-3-4-என்றும்
இது எல்லாம் இவனுடைய வில்லையும் அம்பையும் சொல்லி இவன் காலிலே விழும்படியாய் வந்து விழுந்தது-
இவளுடைய பிராப்ய த்வரை படுத்தும் பாடு இது –
அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று-
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை-
மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளாருடைய-
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக -வானவர்க்காவர் நற் கோவையே -4-2-11–திருவாய் மொழி –
அனுபவிக்கப் பெறுவார்கள் –
———————————————————————
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-
கடை பாரித்தோம் -அவன் வரும் வழியை கோடித்தோம்-
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை-
ஸ்தனனன்ய பிரஜை நோவு கொண்டால் அதுக்காக தான் குடி நீர் குடிக்கும் தாயைப் போலே
நர நாராயண ரூபத்தாலே வந்து இச் சேதனருககாக தான் தபஸ் ஸூ பண்ணின இத்தை அனுசந்தித்த தேவ ஜாதி-
தேவரீர் என்ன கார்யம் செய்து தலைக் கட்டுகைக்காக இப்படி தபஸ் ஸூ பண்ணி அருளுகிறது -என்று ஸ்தோத்ரம்
பண்ணும் படியாக நின்ற நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அன்றிக்கே –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா –என்று பிரித்து
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய-திவீவ சஷூராரததம் –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -என்கிறபடியே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ண உபய விபூதி உக்தனாய்க் கொண்டு
நித்ய விபூதியிலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று ஆகவுமாம் –
நரனே –
ஏதத் இச்சாம் யஹம் ஸ்ரோதும் பரம் குதூஹலம் ஹி மே-மஹர்ஷே தவம் ஸ்மர்த்தோஸ் அஸி ஜ்ஞாது-
மேவம் விதம் நரம் -பால -1-5-என்கிறபடியே –அங்கு நின்றும் போந்து சக்கரவர்த்தி திரு மகனாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –
உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே-
அளவுடையரான நித்ய ஸூரிகள் தன்னை உள்ளபடி எல்லாம் அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி பரம பதத்திலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று –
அங்கு நின்றும் போந்து -அறிவுடையார் அறிவில்லாதார் -என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கத்
தன்னுடைய சீலாதி குணங்களுக்குத் தோற்று நெஞ்சு உளுக்கி
ராமோ ராமோ ராம பிரஜா நாம பவன்கதா -ராமபூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம்பிரசாசதி –யுத்த -131-102-என்றும்
பால அபி க்ரீடா மாநா க்ருஹத் வாரேஷூ சங்கச -ராமாபிஷ்டவ சம்யுக்தா சக்ருரேவ மித கதா -அயோத் -6-16-என்றும்
சொல்லுகிறபடியே ஏத்தும் படியாக வந்து திரு வவதரித்து நிற்கும் படியைச் சொல்லிற்று –
அவை போலே அன்றிக்கே –
அவற்றின் கார்யமான தீம்பாலே பெண்களை ஓடி எறிந்து-தான் செய்தது விலக்காத படியாகப் பண்ணி
செய்தது அடையப் பொறுக்கும் படியான பிராப்தியையும் முன்னிட்டுக் கொண்டு வர்த்திக்கிற படியை சொல்லுகிறது –
முன்பே தீம்பனாய் இருக்கிற நீ -அதுக்கு மேலே ஒரு மைத்துனமை ஏறிட்டுக் கொண்டு
நலியப் புக்கால் எங்களால் நலிவு படாது இருக்கப் போமோ –நாங்கள் இங்கனே நலிவு பட்டு போம் இத்தனை யன்றோ முடிய –
எமக்கு –
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே வன் நெஞ்சைரையும் கூட அழிக்குமது
பிறப்பே அபலைகளாய் இருக்கிற வர்களால் பொறுக்கப் போமோ -என்று
அவன் தீம்புகளுக்கு பொறுக்க ஒண்ணாமை தோற்ற சொன்னார்கள் இவர்கள் –
நானோ நீங்கள் அன்றோ முன் தீம்பு செய்திகொள்-நான் நினைவு அற்று இருக்க என் வரவைக் கடாஷித்து
சிற்றில் இளைத்து வைத்தி கோள்-என்றான்
அதுவோ -அது வாகில் உன்னுடைய வரவை உத்தேசித்துச் செய்தோம் அல்லோம் காண்-
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே––
காமன் வரும் காலம் என்று –அவன் வரும் மாசத்திலே எங்கள் வாசல்களை அலங்கரித்தோம்
நாங்கள் உன் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் அல்லோம் –
உன்னைச் சேர்ப்பார் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் காண் நாங்கள்
ஆன பின்பு அது அன்யார்த்தம் -என்றார்கள் –
ஆகிலும் என்னதும் அன்யார்த்தம் என்னா- சிற்றிலை அழிக்கப் புக்கான் –
எங்களை ஆராக நினைத்து இருந்தாய் –பிராட்டி பரிகரமான எங்கள் பக்கல் அவை செய்யப் போமோ -என்றார்கள்
அவள் புருஷகாரம் ஆனால் தங்களை நலிய ஒண்ணாது என்னுமத்தை பற்றச் சொன்னார்கள் –
அத்தனையோ –அவளோடு ஒரு சம்பந்தம் நீங்களே சொன்னி கோளே-நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-
நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ -என்று அது தன்னையே- வழியாகக் கொண்டு அழிக்கப் புக்கான் –
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
பிராட்டியோட்டை சம்பந்தம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று நினைத்து இருந்தோம் நாங்கள் –
அது அங்கன் அன்றிக்கே எங்கள் இழவுக்கு உடலாம்படி சிஷித்து விட்டாள் ஆகில்
எங்கள் சிற்றிலை அழியாதே –அவள் தன்னுடைய சிற்றிலைப் போய் அழி-என்கிறார்கள்
————————————————————————————-
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே–2-10-
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை-
எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து -ஸ்வைரமாக விளையாடுகிற பருவம்
நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –என்னுதல் –
அன்றிக்கே -காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே -அணைத்த அநந்தரம் -அருகு நிற்பாரும் எல்லாம்
பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6- நித்ய சித்தராயாம் படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவார்கள் –
———————————————————————
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
நாங்கள் ஒன்றை நினைத்து வர –அது ஒன்றாய் பலித்த படி கண்டாயே
கிருஷ்ணன் தான் ராத்ரி முற் கூற்று எல்லாம் பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது
உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று -அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –
இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –
அழைப்பதன் முன்னம்-
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-
இப்படி நம்மை மறைத்து நாம் உணருவதற்கு முன்னே நீங்கள் போந்தது என்ன காரியத்துக்குத் தான் -என்றான் –
குடைந்து நீராடுவான் போந்தோம்-
சரயூம் அவகாஹதே –ஆரண்ய -16-30-என்னுமா போலே உன்னோட்டை விரஹ தாபம் எல்லாம் ஆறும்படி குளிக்கப் போந்தோம் –
உன் வரவை நினைந்து போந்தோம் அல்லோம் -நீ வருவதற்கு முன்னே குளித்து மீள வேணும் என்னும் மநோ ரதத்தோடு போந்தோம்-
ஆனால் அதுக்கு வந்தது என் -செய்யலாகாதோ என்று அவனும் ஒன்றை நினைத்தான்
அதாவது தமிழர் கலவியை –சுனை நீராடல் -என்று ஒரு பேரை இட்டுப் போருவார்கள் –
அத்தைப் பற்ற தன் அபிமத சித்திக்கு உடலாக சொன்னான் அவன்
உனக்கு அது செய்ய ஒண்ணாது காண்-
உன் நினைவை எண்ணி வந்து தோற்றினான் காண் ஸ்ரீ மான் ஆதித்யன் -என்கிறார்கள்
ஆழியம் செல்வன் எழுந்தான் –
கடலிலே முழுகி எழுவாரைப் போலே தோற்றினான் -என்னுதல் –ஆழி -கடல் என்று கொண்டு
அன்றிக்கே -மண்டலத்தைச் சொல்லுதல் -வட்டம் -ஆதித்ய ரதத்தைச் சொல்லுதல் -தேர் சக்கரம் ஆழி –தனி ஆழித் தேர் -சிறிய திருமடல்
செல்வன் -ஸ்ரீ யபதியான நாராயணன் தன் பக்கலிலே பிராட்டியோடே சந்நிதி பண்ணும் படியான சம்பத்தை உடையவன்
அது பின்னே ஆர்க்கு அழகு -உங்களுடைய அங்க பிரத்யங்கங்களை அழகிதாகக் கண்டு அனுபவிக்கைக்கு உடலாகிறது –
நீங்கள் தான் ஒரு கார்யத்திலே உபக்ரமிக்கும் போது அது செய்து தலைக் கட்டுகைக்கு வேண்டும்
போது அறிந்து அன்றோ புறப்படுவது
நீங்கள் ஆரை நினைத்துப் போனது கோள்-என்ன-
அரவணை மேல் பள்ளி கொண்டாய்-
உன் உறக்கத்தை மெய் என்று போந்தோம்
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -14-3–என்கிறபடியே
இவ் வவதாரம் தான் இருபுரியூட்டி இருக்கையாலே -மனுஷ்யத்வமும் பரத்வமும் சேர்ந்து –
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின படியையும் தங்களுக்கு விசதமாகச் சொல்லிற்று ஆகவுமாம்
அங்கன் அன்றிக்கே
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை நினைத்து சொல்லிற்று ஆகவுமாம் –
பாற் கடலில் பையத் துயின்ற பரமன் என்றபடி
அங்கு கண் வளர்ந்து அருளின படியாகில் உன்னுடைய ரஷணத்தை விச்வசித்துப் போந்தோம் -என்றார்கள் ஆகிறது –
இங்கே பள்ளி கொண்டு அருளின படியால் -படுக்கை வாய்ப்பாலே நீ உணராதே உறங்குவுதி -என்னுமத்தை பற்றப் போந்தோம் என்கிறது —
அவன் உறங்கினானாகில் -அவ்வுறக்கத்தை அனுசந்திப்பார்கள் -உணர்ந்தானாகில் அத்தை அனுசந்திப்பார்கள் -வேறு ஓன்று அறியார்கள் இறே
நம் உறக்கத்தை விஸ்வசித்துப் போந்த உங்களுக்கு இப்போது வந்தது என் என்ன –
அழகிதாக இளிம்பு பட்டோம் -ஆகில் இனி இதுக்கு மேல் வருவது என் –
ஆற்றவும் பட்டோம் -மிகவும் பட்டோம் –
நீ நெடுநாள் எங்கள் கையில்-பிரணய ரோஷத்தாலே – பட்டது எல்லாம் ஒரு ஷணத்திலே நாங்கள் உன் கையில் பட்டோம் -என்கிறார்கள் –
ஆகில் இனி இதுக்கு பரிஹாரம் உண்டோ -அவசியம் அனுபோக்தவ்யம் அன்றோ -அத்தைத் தப்பப் போமோ இனி –
நீங்கள் தான் இதுக்கு போக்கடியாக நினைத்து இருந்தது என் -என்றான் –
இதுக்கு போக்கடி அற்றுப் போக வேணுமோ –
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-
ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –
பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –
வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –
அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –
என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –
இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –
இவர்கள் வாரோம் இனி -என்றவாறே –தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –
நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –
இரண்டு தலையையும் சேர விடுகைக்கு பரிகரம் கை கண்டு வைத்தோம் –
இனி நம்மையும் இவர்களையும் சேர விடுகைக்கு அஞ்சலி அல்லது இல்லை என்று அறியுமே –
அது பார்த்துக் கொள்ளுகிறோம் -நீங்கள் என்னை அறியாமல் போந்ததுக்கு பரிகாரமாக கும்பிடுங்கோள் என்றான் –
என்றவாறே ஒரு கையாலே கும்பிட்டார்கள் –
அது ஒண்ணாது இரண்டு கையாலும் கும்பிடுங்கோள் என்றான் -ஆனால் –
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே-–
அது போராது-நாலு கைகளாலும் தொழ வேணும் -என்றான்
தோழியும் நானும் தொழுதோம் —
இவர்கள் தொழச் செய்தேயும் கொடாதே -ஆன்ரு சம்சயம் கொண்டாடி இருப்பார் பக்கல் அன்றோ இது பலிப்பது –
பிரணயிநீ விஷயத்தில் வந்தால் நம் அபிமதம் பெற்று அன்றோ கொடுப்பது –என்று பின்னையும் ஒரு நிலை நிற்கிறான்
அந்த பிரணயித்வத்தை விடாய்-அஞ்சலிக்கு பல சித்தி உண்டு காண்-எங்கள் துகிலைத் தந்து அருள் –
உன் நினைவு ஒழியவும் பலிப்பது ஓன்று அன்றோ அது –திரு நாமத்துக்கு புடவை சுரந்து அருளியதே –
அஞ்சலி பரமா முத்ரா -என்னக் கடவது இறே –
——————————————————————
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-
இத்தால் சொல்லிற்று யாய்த்து –
இவன் செய்யுமவற்றை அறியாதே சொன்னவற்றை மெய் என்று இருக்கைக்கும்
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் புதுமை மாறாதே இருக்கைக்கும் –
இவன் பண்ணும் தீம்புக்கு பாடாற்ற மாட்டாதே இருக்கைக்கும்
கன்னியர் என்கிறது
எங்கள் நம்பி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களை நலிகைக்கு ஈடான தீம்பாலே பூர்ணன் –
கரிய பிரான் விளையாட்டை-
அக வாயில்-தீம்பில்லை யாகிலும் -மேல் விழ வேண்டும்படி யாய்த்து வடிவு அழகு இருப்பது –
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை-
இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹாநத்துக்கு அடி ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-
பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-
———————————
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-
காதாசித்க சம்ச்லேஷத்துக்கு தான் இன்று இருந்து கூடல் இழைக்கப் புக்கவாறே
நித்ய அனுபவம் பண்ணுகிறவர்களை நினைத்தாள்
தெள்ளியார் –
அவர்களும் சிலரே –
அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –
பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து –
பலர் –
த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே
இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்
இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை -அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –
பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே-
கைந்தொழும்-
நித்ய அஞ்சலிபுடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்
தேவனார்-
இவர்கள் தொழுது உளரானார் போலே இவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜ்வலனாகா நிற்குமவன்
வள்ளல் -மாலிரும் சோலை-
லுப்தனாய் இருக்குமவன் –கையிலே குவாலாக உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓன்று கழியிலும் அத்தைக் குறைவாக நினைத்து இருக்குமா போலே
நித்ய விபூதியும் -நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும் அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே
சம்சாரிகள் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து அவ்விருப்பை இங்கு உள்ளாறும் பெற வேணும் என்னும் கிருபையாலே திருமலை அளவும் வந்து –
தன்னை அனுபவிப்பைக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்கும் நிலையைச் சொல்கிறது
நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே இவை அழிந்தது கொண்டு ச ஏகாகி ந ரமேத – -என்கிறது
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது –
மணாளனார்-
தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து –
மணாளனார் –
ஸ்ரீ கோபீமாரைப் போலே யமுனா தீரங்களிலே பிருந்தா வனத்திலே இரவும் இருட்டும் தேடி ஒளி களவிலே யாக ஒண்ணாதே
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளையை –வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுச்சித்தர் –பெரியாழ்வார் -2-8-10-ஆகையாலே
ஒரு கோத்ர ஸூத்ரப்பட செய்ய வேணும் என்று வந்து நிற்கிறான் திருமலையிலே –கோத்ரம் -சாடு பர்வதம் –
மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து –
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே -அதாகிறது –கோயிலாய்த்து –
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று
பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –
அடி கொட்டிட
உணர்ந்து இருக்கும் போது அடிமை செய்து போகை அன்றிக்கே
பள்ளி கொள்ளும் போதும் அதுக்கு வர்த்தகமான அடிமை செய்து வர்த்திக்க வாய்த்து சொல்லுகிறது
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வாய்த்து கணிசிக்கிறது
இது வாய்த்து பிராப்தி பலம் –நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-
கொள்ளுமாகில் –
அதில் உபாய அம்சம் இருக்கும் படி-
அவன் நினைவாலே பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி
நீ கூடிடு கூடிலே–
அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே பிராப்ய த்வரை-
—————————————————————————
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
ஊடலொடு கூடுகை -ஊடல் கூடல் –ஊடி இருப்பார்கள் இறே பெண்கள் –
இவன் தன குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும் –எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி –
அவன் பின்பு ஷாமணம் பண்ணி புணரும் படியும் –
உங்கள் ஆசை அன்பு காதல் வேட்கை அவா வளர்க்கத் தான் பிரிந்தேன் -என்றன போல்வன சொல்லி -புணர்வான் இறே
முன் -நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்-கூடலைக்-
இவனோடு ஊடுவதும் கூடுவதும் -இதுவே யாத்ரையாய் புகழை உடைய திருவாய்ப்பாடியில் பெண்கள்
இத்தனையவருடையவும் பாசுரத்தையும்
நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –
குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –
பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா
———————————————–
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்–5-1-
எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யாவிடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்-
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத் தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ
மன்னு –
தர்மி உண்டாய் -குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –
பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் -அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –
புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ -ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ
உயர்வற உயர் நலம் உடையவன்–நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ஸ்லாக்யதை மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –
மாதவன் –
இப்போது இக் குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ
ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ
இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-
மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –
தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -துரோண பர்வம் -29-18-
வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை
ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-
என்னுடைய சோகத்து அடியான அக்குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும்
நான் தரைக் கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே
எனக்கு மென் மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
இத்தை விட்டு உனக்கு செய்ய வேண்டுமத்தை சொல்லலாகாதோ என்ன –
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்–
ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்
——————————————–
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-
நிகமத்தில்
இத் திருமொழியை அப்யசித்தவர்கள் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை பெறுவார் –என்கிறாள்-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை –
ஒருவர் பக்கலிலே ஒன்றைக் கொள்ள நினைத்தால் அவர்களுக்கு பின்னை ஒன்றும் சேஷியாதபடி கொள்ளுகிறவனை-
வேல் கண் மடந்தை விரும்பி-
அவனை இப்பாடு படுத்தும் இப் பரிகரம் உடையவள் தான் ஆதரித்து –
வேல்கள் ஒரு முகம் -ஓன்று கூடி -ஒரு முகத்திலே அமைந்து –செய்து நிற்கச் செய்தே கிடீர் தான் ஈடுபட்டது அவனுக்கு –
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்-
கண்ணுற –
அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் வரும்படி –
கூவு கரும் குயிலே என்ற மாற்றம்–
உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேணும் –
என்று சொன்ன பாசுரமாய்த்து –
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன-
ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் –
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே
விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்
நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை
இக் குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-
நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார் நமோ நாராயணா வென்று -பல்லாண்டும் ஏத்துவர் இ றே
தத் க்ரது நியாயத்தாலே பேறாகையாலே-க்ரது -சங்கல்பம் -இங்கே சங்கல்ப்பித்த பேற்றை அங்கே பெற்று அனுபவிக்கப் பெறுவர்
யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-1-14-உபாசனம் போலே பேறு
காதாசித்கமாகை தவிருகையே உள்ளது
பிராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம் சொல்லி அனுபவிக்கப் பெறுவர் –
————————————————-
வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-
வந்து புகுந்தால் அனுபவிக்கை அன்றிக்கே -வாரா நின்றான் -என்று ஊரிலே வார்த்தை யானவாறே தொடங்கி
அனுபவிக்க வேணும் என்றால் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
அவனுடைய கதி சிந்தனை பண்ணுகிறாள் யாய்த்து –
வாரண மாயிரம் சூழ வலம் செய்து
உந்து மத களிற்றன் பிள்ளை இறே
ஸ்ரீ நந்தகோபரும் ஆனை ஏறி இறே திரிவது
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்தகோபரும் தங்களில் மித்ரராய் –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18-என்று இருக்கிறபடியால்-
இங்குத்தை கோ சம்ருத்தி அவரதாய்-அங்குத்தை யானை குதிரை இவரதாய் -ஒன்றாய் பரிமாறி இறே போருவது-
இனி தத்த புத்ரர்களுக்கு இரண்டிடத்திலும் அம்சம் உண்டாய் இறே இருப்பது
ஆகையால் யானைக்கு குறை இல்லை இறே
ஆயிரம் –என்ற நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில்
தன்னேராயிரம் பிள்ளைகளும் –தளர் நடை இட்டு வருவான் –பெரியாழ்வார் திருமொழி -3-1-1-தானுமாக வரும் போது
அவர்களைத் தன்னில் தாழ்வாக ஒட்டானே –ஆகையாலே ஆயிரம் -என்கிறது
தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்கு தம்மையே ஒக்க அருள் செய்து இறே வைப்பது –
நாரண நம்பி –
நாரண –
உபய விபூதி யுக்தன் வருமா போலே இருக்கும் போலே காணும்
ஸ்ரீ மதுரைக்கும் திருவாய்ப்பாடிக்கும் கடவராய் வரும் போது –
நம்பி –
உபய விபூதி யோகத்தால் வந்த குணங்கள் சொல்லக் கேட்டு போம் அத்தனை இறே
அக்குணங்கள் பூரணமாக அனுபவிக்கலாவது அவதாரங்களிலே இறே
குறைவாளருக்கு முகம் கொடுத்த இடத்தில் இறே சௌலப்யம் அனுபவிக்கலாவது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த இடத்திலே இறே இக்குணங்கள் ஸ்புடமாவது
செவ்வைக் கேடர் பக்கலிலே இறே அவனுடைய ஆர்ஜ்வாதி குணங்கள் காணலாம்
நடக்கின்றான் என்று –
குசஸ்தலே நிவசதி ச ச ப்ராதரி ஹேஷ்யதி-இன்ன இடத்திலே வந்து விட்டான் -அணித்தாக வந்துவிட்டான் என்னும்
அது தானும் தரிப்புக்கு உடலாக இருக்கும் இறே –
சாபாத் அபி சராத் அபி -என்னும் விச்வாமித்ராதிகளை கொடு வரவும் வேண்டா விறே இங்கு –
இரண்டாலும் சம்ஹரிக்கிறேன் என்று ஸ்ரீ பரசுராம ஆழ்வான் வார்த்தை
கடகரும் வேண்டாவோ என்ன -சாபம் -விஸ்வாமித்ரர் -சரம் –பெருமாள்
அஸ்த்ர சிஷை பண்ணுவிப்பவர் என்பதால் இரண்டும் விச்வாமித்ரருக்கு என்னவுமாம் –
எதிர் பூரண பொற் குடம் வைத்து –
எதிரே பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் –திருவாய்மொழி -10-9-2-என்னக் கடவது இறே-
இங்குள்ளார் அங்குப் போம் போது-
அதுக்கும் அடியானவர்கள் வரவுக்கு உடலாக அலங்கரிக்கும் படி சொல்லுகிறது இங்கு –
புரம் –
பட்டணம் –புறம்-ஊர்ப் புறம் -புறச் சோலைகள் என்றுமாம் –
கனாக் கண்டேன் தோழீ நான்–
கதிரில்லி போலே -ஜன்னல்கள் போலே –இல்லயில் கதிர் -ஜால கரந்தரத்தில் கதிர் -ஸூ சம த்வாரம் – இருக்கிற
பாஹ்ய இந்த்ரியங்களாலே அனுபவிக்கிற ஜ்ஞானம் கொண்டு அனுபவிக்கை அன்றிக்கே
நேரே ஹிருதயத்தாலே ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பெற்றேன் காண்-
ஆனுகூல்யம் உடையார் சொல்லுதல் -தாய்மார் போல்வார் -சொல்லுதல் -நீ சொல்லுதல் செய்யக் கேட்கை -அன்றிக்கே
நான் உனக்குச் சொல்லலாம்படி அனுபவித்தேன் காண்
–—————————————————————
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
அவனுக்கு அனந்யார்ஹையாக தான் கண்ட கனாவினை -என்னுதல்-
அவன் பேற்றுக்கு -உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்ற பேற்றுக்கு உறுப்பாக தான் கண்ட கனா என்னுதல்
ந ஜீவேயம் -என்பாரது இறே பேறு-ஒரு ஷணமும் உயிர் வாழாத எம்பெருமான்
திங்கள் புக்கு இருப்பாரதன்றே —மாசாதூர்த்த்வம் -ஒரு மாசம் ஜீவிப்பேன் என்ற பிராட்டி யுடையது அல்லவே-
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தியான
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –
இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில்
ஸ்ரீ கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்
புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் ஸ்ரீ பெரியாழ்வாரைப் போலே
பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –
ஆண்டாளுக்கும் உப லஷணம் -பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-என்றார் இறே
தாம் கை கண்டவர் ஆகையாலே –
———————————————–
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-
அத்தை நித்ய அனுபவம் பண்ணுகையாலே உனக்குத் தெரியும் இறே –
அவனுடைய வாக் அம்ருதம் இருக்கும் படி என் -நீ சொல்ல வல்லையே -என்று அவனைக் கேட்கிறாள் ஆய்த்து –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
எறிச்சு வெட்டியதாய் இருக்கும் கற்பூர நாற்றம் -பிரகாசிக்கையும் உறைப்பும் உண்டே
ஆறிக் குளிர்ந்து நிலை நின்று இருக்கும் கமலப் பூவினுடைய நாற்றம்
இரண்டுமேயாய் இராது இறே
சர்வ கந்த -என்கிற வஸ்து வாகையாலே -எல்லாம் அனுபவ விஷயமாய் இருக்கச் செய்தே-
ஒன்றை இரண்டை- கேட்கிறாள் அத்தனை -யாய்த்து
எல்லாம் -நீச்சு நீரும் நிலை நீரும் போலே அனைத்தும் உண்டே
இதில் உனக்குத் தான் ஏதேனும் தெரிந்து இருக்குமாகில் நீ தான் சொல்ல வல்லையே -என்கிறாள்-
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-
அத்தைத் தப்பி உள்ளே இழிந்தால் அனுபவிக்கும் படி கேட்கிறாள் –
சர்வ கந்த -என்கிற இது போலே –சர்வ ரச -என்கிற இது விகல்ப விஷயமாய் இருக்கிறது இல்லை போலே காணும்-
தேன் போலே கன்னல் போலே போலே இருக்குமோ என்று விகல்ப்பித்து கேட்க மாட்டுகிறிலள்-ஆய்த்து –
வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே –
வாய்ச்சுவையாய் திகைக்க வைக்கையாலே இரண்டாவதை கேட்க மாட்டாதவள் ஆனாள்
வாயிலே புகுகிற ரசம் -சாடு
திருப் பவளச் செவ்வாய் –
கண்ணுக்கு இலக்கான போதே பிடித்து அவ்வருகு ஒன்றில் இழிய ஒட்டுகிறது இல்லை யாய்த்து –
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உண்டாய் இருக்கிறபடி –
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்-
அளவுடையார் இழிந்து ஆழம் கால் படும் துறை யாய்த்து
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே -எல்லா இந்த்ரியங்களுக்கும் இரை போடுவது அன்றோ இது –
பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய –30-40-என்கிறபடியே குவலயா பீடத்தை தள்ளின அநந்தரம் அணைத்து அனுபவிக்கும் யாய்த்து
வாய்ச் சுவையும் நாற்றமும் –
அனுபவ சமயத்திலே நாற்றம் முற்பட்டதே யாகிலும் அநு பாஷிக்கிற இடத்தில் ரசம் முற்பட்டு கந்தம் பிற்பட்டு இருக்கிறது காணும் –
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே —
அநஸூயவே–ஸ்ரீ கீதை -9-1-என்னும் விளம்பமும் இல்லை
ந ச மாம் யோ அப்ய ஸூ யதி -ஸ்ரீ கீதை -18-67-என்ன வேண்டா விறே இவளுக்கு
அடியானாகையாலே நியமித்து கேட்கலாமே
அவனுக்கு சேஷ பூதனாகையாலே இவளுக்கும் அடியானாய் இருக்கும் இறே –
பர்த்ரு பார்யைகள் இருவருக்கும் பொதுவாய் இறே தாச தாசிகள் இருப்பது
ஆழி –
உன் அளவுடமை போலே இருக்க வேண்டாவோ பரிமாற்றம் –
கடல் போன்ற விசாலமான மனப்பரப்பைச் சொல்லுதல்
அன்றிக்கே பிறப்பைச் சொல்லுதல் -கடலிலே பிறந்தவன் என்றுமாம்
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே என்னையும் நீ பதில் சொல்லி தரிக்கப் பண்ண வேணும்
வெண் சங்கே –
உன் நிறத்தில் வெண்மை நெஞ்சிலே பட்டால் போலே உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி சொல்ல வேணும்
வெண் சங்கே
கைவிடாதே அனுபவியா நிற்கச் செய்தே உடம்பு வெளுக்கும் படி இறே இவனுடைய ஆற்றாமை
நீ எனது ஆற்றாமையையும் அறிவாயே அதனால் பதில் சொல்ல வேணும் –
———————————————————
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–7-10-
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
தன்னோடு உண்டான உறவு அறுத்து அவனோடு சேர்த்து விடுகிறாள்
அநந்ய கதிகளான எங்கள் ஜீவனத்தை கைக் கொண்டாயாகில்
மற்றும் இத்துறையில் இழிந்தவர்களுடைய ஜீவனத்தையும் நீயே கொள்-
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் –
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் –
கிட்டின பேருறவு
ஆய்கை –
சோதிக்கை மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-
—————————————————–
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆகாச அவகாசம் அடங்கலும் வெளியடையும்படி நீலமாய்
இருப்பதொரு மேற்கட்டி கட்டினால் போலே யாய்த்து இருக்கிறது –
மேகங்கள் வந்து பறம்பின போது நாயகனும் தானுமாக வெளி ஓலக்கம் இருக்கைக்கு வெளியிலே ஒரு ஈத்தொற்றி
கட்டிற்றாக வாய்த்து நினைத்து இருக்கிறாள் –
உபய விபூதியும் இருவருக்கும் சேஷமாய் இறே இருப்பது
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் இது வென்று இருந்தாள் யாய்த்து
மேகங்காள் –
திருவடி ஒருவனுக்கே வார்த்தை சொன்னால் போலே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே இவளுக்கு
சேயமாசாதி தா மயா-சுந்தர -30-3–என்று குறைப்பட்டு இருக்குமவையும் அன்றே இவை
மயா -எல்லாரும் காண வேணும் என்று தேடுகிற விஷயம் நான் ஒருவனுமே காண்பதே -என்றான் இறே
யாம் கபீ நாம் சகஸ்ராணி இ றே
ராஜாக்கள் வரும் இடத்துக்கு ஜலக்ரீடைக்கு பரிகரமான -மேகம் -என்கிற ஜாதி முன்னே வரக் கடவதாய் இருக்கும் இறே –
அவனோடு ஜலக்ரீடை பண்ணி அவன் நனைக்க நனைந்த உடம்போடு வந்தன -என்று இருந்தாள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து –
தெளிந்த அருவிகள் ஒழுக்கு அறாதே பாய்கிற திருமலையிலே –
அவன் இருக்கிற தேசத்தில் உள்ளவை எல்லாம் தெளிந்து இருக்கும் இறே
உபதத்தோதகா நத்ய பலவலாநி சராம்சி ச -அயோத்யா -59-5-என்று இறே இவ்விடம் கிடக்கிறது-
என் திரு மாலும் போந்தானே-
அக்ர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-6-என்று அவள் முன் நடக்க காணும் வந்தது
என் திருமால் -என்று தன்னோடு சேர்த்து சொல்லுகிறாள் இறே
போந்தானே -என்றால் -ஓம் போந்தான் என்ன வல்லார்க்கு இறே வாய் உள்ளது
அவை பேசாதே இருந்தன
அசேதனம் ஆகையாலே வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே
அவன் வாராமையால் இறே இவை இவை பேசாது இருக்கின்றன என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
கண்ணா நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -சுத்தர -33-4-என்று வேறு சிலர் சொல்ல வேண்டாதே தானே சொல்லு கிறாள்
கிமர்த்தம்
ஆர் குடி வேர் பறியத் தான் இக்கண்கள் சோக ஸ்ரு பிரவகிக்கிறது -அன்றிக்கே
பிராட்டியைக் கண்ட பின்பு இங்கு படை யற்று ஆரைச் சேதனராகக் கொண்டு தான் என்னுதல்
முலைக் குவட்டில் துளி சோர
மேகங்கள் நித்ய வாஸம் பண்ணுகையாலே இறே அவன் திருமலையை விடாது ஒழிகிறது
திருமலையை தன் உடம்பில் படைத்துக் காட்டுகிறாள்
மேகங்கள் வர்ஷித்தவாறே அருவிகள் சிதறி வந்து சிகரங்களிலே விழுந்தால் போலே யாய்த்து
கண்ண நீர்கள் முலைக் குவட்டிலே விழுகிறபடி-
துளியும் சோர- நானும் சோருகிறேன்-என்கிறாள் அல்லள்-
அக்னி கணங்கள் பட்டால் போலே துளி சோர தானும் சோருகிறாள் அத்தனை
அதுவே ஹேதுவாக சோருகிற என்னை-
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே —
எல்லா அவஸ்தையிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
அத்தலையாலே பேறாக நினைத்து இருக்கும் அதுவே ஸ்த்ரீத்வம் ஆவது
அத்தை அழியா நின்றான் ஆய்த்து –
நானயோர்வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-85-என்னக் கடவது இறே
அன்றியே ஸ்த்ரீத்வ பும்ச்வத்வங்கள் இரண்டும் தங்கள் பக்கலிலே பர்யவசிதம் என்று போலே காணும் இருப்பது
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்று இறே இவள் படி
வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகரத்த -ஸ்ரீ வரதராஜ சத்வம் -63-என்று இறே அவன் படி
இப்படி இருக்கை இறே ஸ்த்ரீத்வ பும்ச்த்வங்களுக்கு எல்லை யாவது-
பெண்ணீர்மை ஈடழிக்கை யாவது என் என்றால் –போந்தானே -என்று இவள் வார்த்தை கேட்க இருக்கை-
தன் பேற்றுக்கு தான் பிரவர்த்திக்க வேண்டும் படி இருக்கை
தமக்கோர் பெருமையே –
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர்-என்றால் அத்தால் வரும் அவத்யம் தம்மது அன்றோ
அவள் அவயவ கோடியில் உள்ளார் நோவு பட விட்டு இருந்தான் என்றால் அத்தால் வரும் ஸ்வரூப ஹானி தம்மதன்றோ
தமக்கு வரும் ஸ்வரூப ஹானி வேறு சிலரோ பரிஹரிப்பார்
தமக்கே பரிஹரிக்கை பரம் அன்றோ
அன்றிக்கே –
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிறபடியே
தனக்கு ஏற்றமாம் படி இருக்கிற ஸ்ரீ பெரியாழ்வார் திரு மகள் தம்மை ஆசைப் பட்டு பேராதே நோவு படா நின்றாள் என்றால்
இது தமக்கு போருமோ -நோவு படாத படி பரிஹரிக்க வேண்டாவோ -என்னுதல் –
—————————————-
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-
நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத்தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே
நன்னுதலாள்
அப்படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்
நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ்வதாரத்தில் பிற் பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார்
பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த
ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடக்கி போகத்தில் அன்வயித்தவர் இறே ஸ்ரீ பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே
இது அப்யசிக்கைக்கு எவ்வளவு அதிகாரம் வேணும் எனில்
ஆகத்து வைத்து உரைப்பாரவர்-
ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –
அவர் அடியார் ஆகுவரே–
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்
சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இறே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இறே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இறே
இதர விஷயங்களில் சேஷத்வம் இறே கழிகிறது -வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது
அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –
——————————————————-
சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-
திருமலையைக் கண்ணாலே கண்டாகிலும் தரிப்போம் என்றால் அதுவும் கூட அரிதாம்படி யாவதே –
நம் தசை இருந்த படி -என் என்கிறாள் –
அவன் நாட்டில் குன்றும் கொடியவோ ஒன்றும் தோன்றா -என்பார்கள் இறே
அவன் தன்னைக் காணப் பெறாவிடில் நாட்டில் மலைகளும் தோன்றாது ஒழிய வேணுமோ -என்னா நிற்பார்கள் ஆயத்து –
அவன் வடிவுக்கு போலியான திருமலையைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்த்தால் அதுவும் அரிதாம் படி யாவதே
இந்திர கோபங்கள் மறைக்கையாலே –
சிந்துரச் செம்பொடிப் போல்-
சிந்துரம் -சாதி லிங்கம் —செம்மை
ஒரு மத்த கஜம் போலே யாய்த்து திருமலை –
அது சிந்துரிதமானாப் போலே இரா நின்றதாய்த்து இவை வந்து பரம்பின போது –
மத்த கஜத்துக்கு துவரூட்டினால் போல் இரா நின்றதாய்த்து –சிந்துரம் -சிவப்பு நிறம் -செம் -அழகு
சிந்துரம் இலங்கத் தன் திரு நெற்றி மேல் -பெரியாழ்வார் -3-4-6-
திரு மால் இருஞ்சோலை எங்கும்
ஜகத் எல்லாம் -என்றபடி
ஜகத்தாவது -கண்ணுக்கு விஷயமாய் இருப்பது ஓன்று இறே
இவள் கண்ணுக்கு விஷயம் திருமலையை ஒழிய இல்லை யாய்த்து –
இந்திர கோபங்களே –
பிரகாரம் வானரீக்ருதம்-யுத்த -41-99–என்னப் பெற்றது இல்லை –
இலங்கை அடங்க ராஷசரேயாய் இருக்குமா போலே யாய்த்து –
எழுந்தும் பரந்திட்டனவால்-
ஏஷை வாசம் –சதே லங்காம் -யுத்த 26–20/22-என்னுமா போலே
பூமியிலே தோன்றுவன சிலவும் –
ஆகாசத்திலே எழும்புவன சிலவும் –
நாலடி யிட்டு மேலே விழுந்தால் போலே இருப்பன சிலவுமாய் இரா நின்றன வாய்த்து –
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் சிந்தும் புறவில் –பெரியாழ்வார் -4-2-9-என்கிறபடியே
திரு வதரத்தில் பழுப்புக்கு ஸ்மாரகமாய் நின்றது யாய்த்து –
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
ஒருவர் பக்கலிலே ஓன்று கொள்ளப் புக்கால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் தொங்காத படி கொள்வான் ஒருவன் யாய்த்து
மந்திர பர்வத்தைக் கொடு வந்து -கடலின் நடு நெஞ்சிலே நட்டு நெருக்கி –
தானே அகவாயில் உள்ளது காட்டிக் கொடுக்கும் படி கடைந்தாய்த்து வாங்கிற்று –
மந்திர மூட வாத -இத்யாதி
ஒருவரால் கலக்க ஒண்ணாத பெரிய தத்வங்களையும் கலக்கி அவர்கள் பக்கல் உள்ளது கொள்வான் ஒருவன்
ஸ்த்ரீத்வ அபிமானத்தாலே -நம்மை வந்து மேலிட்டு அழிக்கை யாவது என் -என்று இருந்தாள் போலே காணும் இவள் தானும் –
மதுரக் கொழுஞ்சாறு கொண்ட-
தான் கொண்ட பிரயோஜனத்தைக் குறித்து –
அல்லாதார் கொண்ட பிரயோஜனமாக நினைத்த உப்புச் சாறு கடலில் ஜலத்தோபாதி இறே –
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவனாய்த்து –பெரிய திருமொழி -6-1-2–
சுந்தரத் தோளுடையான் –
நெருக்கினானே யாகிலும் கை விட ஒண்ணாதாய் யாய்த்து தோள் அழகு இருப்பது
சுழலையில் நின்றுய்தும் கொலோ–
அவன் நம்மைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளப் பார்த்த சுழலை யாய்த்து இம் மேக சிருஷ்டி –
அத்தைத் தப்பி உஜ்ஜீவிக்க வல்லோம் ஆவோமோ –
மேகோதா யஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்னக் கடவது இறே -எல்லாம் அவனது விசித்ரமான மாயைகள் தானே –
ஒரு மஹா பாஹூ நம்மை அகப்படுத்துக்கைக்கு பார்த்து வைத்த வலையைத் தப்பி நாம் உஜ்ஜ்ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ
இனி முடிந்தே போம் அத்தனையே அன்றோ –
சுழலை -சூழ் வலை –
————————————————–
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்கு போம் ஸ்திரீகள் தனம் கொண்டு போம் போலே யாய்த்து
தடங்கள் பொருது –
ஒரு மத்த கஜம் கரை பொருது வருமா போலே
சிலம்பாறுடை –
பரமபததுக்கு விரஜை போலே யாய்த்து திருமலைக்கு -திருச் சிலம்பாறு
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –
சுந்தரனை -சர்வாங்க ஸூ ந்தரனை யாய்த்து கவி பாடிற்று
சுரும்பார் குழல் கோதை-
தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
தொகுத்து உரைத்த –
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன
செந்தமிழ்
செவ்விய தமிழ் -பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –
திருமாலடி சேர்வர்களே –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து இவள் ஆசைப் பட்டது –
அப் பேறு பெறுவார்கள்
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் -ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச -பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால் அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –
ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த் தலைகளாலும்-கை வாய்க் கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இறே -அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —
——————————————————
கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-
கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்தில் கோடல் பூக்காள் பூத்த பூக்களே -என்னுதல்
கார் -பெருமை -பெருத்த கோடல் பூக்காள் – என்னுதல்
அன்றிக்கே –
அவை தான் நாநா வர்ணமாய் இருக்கும் இறே -அத்தாலே கறுத்த நிறத்தை உடைத்தன என்னுதல் –
கால பரமான போது -அவன் குறித்துப் போன காலத்துக்கு ஸ்மாரகமாகா நின்றன -என்றாகிறது –
மற்றைப் போது -அவன் வடிவுக்கு ஸ்மாரகமாக நலிகிற படியாகிறது-
கார்க்கோடல் பூக்காள் –போர விடுத்து
முதலிலே தன்னோடு கலந்து பிரியக் கடவனாக நினைத்த அளவிலே தன்னை நலியக் கடவதாக-
இப் பதார்த்தங்களை அவன் அடியிலே சிருஷ்டித்து விட்டான் என்று இருக்கிறாள்
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் -என்று இருக்கை தவிர்ந்து –
தன்னை நலிகைக்கு உடலாக உண்டாக்கினான் என்று இருக்கிறாள்
ஒரு விஷயத்தை பிரிந்து நோவு படுவார்க்கு இத்தனை பதார்த்தங்கள் பகையாவதே –
பிராட்டியை பிரிந்த அநந்தரம்-ராஷச ஜாதியாக பகையானால் போலே
மூல பலத்தின் அன்று ராஷச ஜாதியாக சூழப் போந்தால் போலே பார்த்த பார்த்த இடம் எங்கும்
இவையேயாய்க் கிடவா நின்றன
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்ற இடத்தில்
வாயு ப்ரேரிதமாக கொண்டாகிலும் சஞ்சரிக்கைக்கு யோக்யதை யுண்டு இறே மேகங்களுக்கு –
அங்கன் கால் வாங்க மாட்டாதே நிற்கிறவற்றுக்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே கலங்கின படியாலே
பூக்காள்
உங்களுடைய ஸ்வாபாவிகமான மென்மையைப் பொகட்டு
ஓர் அபலையை நலிகைக்கு இவ்வன்மையை எரித்துக் கொண்டு வருவதே –
கார்க் கடல் வண்ணன் –
கறுத்த நிறத்தை யுதைத்தான கடல் போன்ற நிறத்தை யுடையவன்
இதர பதார்த்தங்களினுடைய சத்பாவம் ஸ்வ இச்சாதீனமாய் இருக்குமா போலே இவ் விக்ரஹ பரிக்ரஹமும்
ஸ்வ இச்சாதீனமாய் இருக்கும் இறே
இவ் விக்ரஹத்தை ஏறிட்டுக் கொண்டதும் தன்னை நலிகைக்கு என்று இருக்கிறாள்
எம் மேல் –
கலக்கையும் கூட மிகையாம்படி -ஆஸ்ரயமும் கூட இன்றிக்கே இருக்கிற என் மேல்
உம்மைப்-
நலிகைக்கு ஏகாந்தமான நிறத்தை ஏறிட்டுக் கொண்டு வந்து நிற்கிற உங்களை
விரஹத்தால் முன்பு தொட்டார் மேல் தோஷமாம் படி சென்று அற்று இருக்கிற என் மேல் –
உம்மை
மென்மை இன்றிக்கே வன்மை உடையாரையும் முடிக்க வல்ல உங்களை
நிர்ஜீவ சரீரத்திலேயும் உயிரைக் கொடுத்து நலிய வல்லவை என்று இருக்கிறாள் –
அவன் நிறத்தைக் காட்டி உயிரை உண்டு பண்ணி நலியவற்றவை -என்றபடி –
போர்க் கோலம் செய்து –
இந்த்ரஜித் வதத்துக்கு இளைய பெருமாளை பெருமாள் அலங்கரித்து புறப்பட விட்டால் போலே
தன்னை முடிக்கைக்கு இவற்றை ஒப்பித்துப் போர விட்டான் என்று இறே இருக்கிறாள்
அங்கு பிரணயிநியைப் பிரித்தாரை முடிக்கைக்காக புறப்பட விட்டான் -சக்கரவர்த்தி திரு மகன்
இங்கு பிரணயிநியை முடிக்கைக்கு கிருஷ்ணன் தனது தீம்பாலே இவற்றை வர விட்டான் என்றாய்த்து நினைத்து இருக்கிறது
செய்து –
இவற்றுக்கு நிறம் கொடுத்தான் அவன் இறே
கிருஷ்ண ஏவ ஹிலோகா நாம் உத்பத்திரபி சாப்யய -பார -சபா -38-23-
போர விடுத்து அவன்
இவற்றுக்கு த்வரை போராது என்று பார்த்து -நீங்கள் போங்கோள் -என்று அவன் தானே பின்னே நின்று
த்வரிப்பிக்கிறான் என்று இறே இருக்கிறாள்
ராஜாக்கள் எதிரிகள் அரண் அழியா விட்டால் தாங்கள் முகம் தோற்றாமே நின்று
தங்களுக்கு அசாதாரண சிஹ்னமான சத்ர சாமராதிகளை போக விடுமா போலே
இவற்றுக்குத் தன் நிறத்தைக் கொடுத்து போக விட்டான் அவன் என்று இறே இருக்கிறாள்
நம்மை நலிகைக்கு உடலாக இவற்றை உண்டாக்கினான் அன்றாகில் நம் கண் வட்டம் ஒழிய நிறுத்தவுமாமே-
எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜ ருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே
அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்
தன்னை முடிக்க நிற்கிற இவற்றை -எங்குற்றான் -என்கிறது என் என்னில்
இவை முடிக்கை தவிராதாகில் அவ்வடிவை ஒரு கால் கண்டு முடியலாம் என்னும் அத்தாலே
நம் அபிமதமும் பெற்றோமாகில் பெறுகிறோம்
அவன் நினைவும் தலைக் கட்டிற்று ஆகிறது
இவளுக்கு அபிமதம் அவன் வடிவைக் காண்கை-அவனுக்கு அபிமதம் இவளை முடிக்கை
எங்குற்றான் என்றாள் இங்குற்றான் என்று அவற்றுக்கு மறுமாற்றம் சொல்ல வேண்டும்படி இறே தன் அவஸ்தை தான்
ஷிப்ரம் ராமாய சம்சத்வம் –ஆரண்ய -49-32-
அவற்றுக்கு –கோதாவரிக்கு -அபிமானியான தேவதா முகத்தாலே யாகிலும் வார்த்தை சொல்லுகைக்கு யோக்யதை உண்டு இறே அங்கு
அதுவும் இல்லை இறே இவற்றுக்கு
இவை ஒரு வார்த்தை சொல்லக் கேட்டிலள்
இவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டா என்று அறியாதே
அவன் வாராமையாலே இறே இவை பேசாதே நிற்கிறது -என்று பார்த்து –
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –என்கிறாள் –
அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து
இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்
அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –
அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–
அவனும் அவன் விபூதியும் ஒரு மிடறானால்-நானும் என் விபூதியும் ஒரு மிடறாகப் பெற்றேனோ
அதுவும் -அவன் திருமேனியில் சாத்தின திருத் துழாய் மாலை என்றவாறே உடை குலைப் படா நின்றது
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்னக் கடவது இறே
அதுவும் இப்போது பந்தகமாய்விட்டது அத்தனை –
நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் –
நெஞ்சு எனக்கு இல்லாவிட்டால் நானோ தான் எனக்கு உளனாய் இருக்கிறேன்
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தேக பரிக்ரஹத்துக்கு அடியான கர்மம் பண்ணினேன் நானே அன்றோ –
அந்தோ –
அவன் இல்லை யாய்த்து
அவன் விபூதி இல்லை யாய்த்து
தான் இல்லை யாய்த்து -ஸ்த்ரீத்வ ஸ்வரூபம் இல்லையே
தன் விபூதி இல்லை யாய்த்து
இத் தசை கண்டு இரங்கி கிருபை பண்ணுகைக்கு புறம்பு ஒருவரும் இல்லை யாய்த்து
தன் தசைக்கு தானே இரங்கி ஐயோ என்கிறாள் –
—————————————————-
நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-
தோழியானவள் இவள் தன்னிலும் காட்டிலும் இழவு பட்டு –
இவள் தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது இரண்டை
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பையும்
அவன் -அனுகூல்யம் உடையாரை விடேன் -என்ற வார்த்தையும் யாய்த்து –
அது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இவள் ஜீவித்தாளாய்த் தலைக் கட்டுகைக்கு ஒரு வழியும் கண்டிலோம் –
எவ்வழியாலே இவளை தரிப்பிப்போம் -என்று இருந்தாள்
அவளைப் பார்த்து -நீ அஞ்ச வேண்டா காண் -நமக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் -என்கிறாள் –
நல்ல வென் தோழீ –
என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை
அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர்
அதுக்கு உறுப்பாக –அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி
கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –
நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
நாகணை மிசை-
அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இ றே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு
நம் பரர் –
அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர்
ஆத்மா நாராயண பர –இத்யாதிகளில் -படியே
செல்வர் –
ஸ்ரீ யபதிகள்
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1-
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே
பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்
சிறு மானிடவர் –
தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும் அன்றிக்கே
ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே
அதி ஷூத்ரரான மனுஷ்யர்
நாம் செய்வது என்
முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-
ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண்
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-
என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்
நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–
சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து
ஸ்ரீ பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
ஸ்ரீ பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –
வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்கவுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டு பதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆ நிரை மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே
அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம்
நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று
அக்குறை தீர ஸ்ரீ நாத முனிகளை முன்னிட்டால் போலே ஸ்ரீ பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –
——————————————————————-
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-
இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று
சொல்ல நினைத்து இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று
நினைத்து இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று
நினைத்து இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்
உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் –
நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இறே-
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இறே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –
ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம்
பிரித்தான் என்று இருந்தார் இறே பெருமாள் –
அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இறே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இறே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
இவர்களை விடீர்
நம் தசையை அறிவான் ஒருவனாய் வைத்து அவனுக்கு உடம்பு கொடுக்கிறவனைச் சொல்லீர் -ஆதி சேஷனை –
விச்லேஷத்தால் வரும் வ்யசனம் அறியான் இத்தனை போக்கி சம்ச்லேஷ ரசம் அறியான் இல்லையே –
சம்ச்லேஷம் தான் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் பிரிந்தார் படுமது படுமவன் யாய்த்து
இப்படிப் பட்டவன் தான் அவனுக்கு முகம் கொடுக்கக் கடவனோ
என்னை ஒழிய அவன் போகத்தில் அனுபவிக்கப் புக்கால் –போகம் -சர்ப்ப சரீரம் -அனுபவம் –
போகியான தான் உடம்பு கொடுக்கக் கடவனோ
ஸ்ரீ பெரியாழ்வாரோ பாதியாக விறே நினைத்து இருப்பது
தான் வெறுத்து இருக்க பிறந்தகத்து உற்றார் புக்ககத்து உற்றாரோடு கை வைத்தால்
சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே
தங்கள் தேவரை என்றாள் இறே
பிதுர் நிதேசம் நியமேன க்ருத்வா -சுந்தர -28-84–இவ்விடத்தில் வார்த்தையை சொல்லிக் கொள்வது –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
நொந்தாரை ஐயோ என்று தண்ணளி பண்ண வேண்டி இருக்க
எதிர் விழிக்க ஒண்ணாத படி நெருப்பை உமிழ்ந்தால் போலே இரா நின்றதாய்த்து
அவர் தமக்கும் இவனோடு ஒரு குருகுல வாசம் பண்ண வேண்டி இருந்தது வெட்டிமைக்கு
அன்றிக்கே
தான் படுக்கையிலே சாயப் புக்கால் விரோதி போக்குகைக்கு வேறு ஒரு ஆயுதம் தேட வேண்டாத படி இருப்பான் ஒருவன் ஆய்த்து
உகவாதார்க்கு வந்து கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கை
கிட்டினார் உண்டாகில் –வாய்த்த மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் –மூன்றாம் திரு -66-என்று
முடிந்து போம் படி இருக்குமவன் -என்னுதல்
சேரும்
அவர் படி விசஜாதீயமாய் இரா நின்றது
இருவருக்கு படுத்த படுக்கையில் தனியே சாய வல்லவராவதே
திருவரங்கர்
ஆர்த்த ரஷணம் பண்ணப் போந்தவர்
அத்தை மறந்து
படுக்கை வாய்ப்புக் கொண்டாடி -சாய்ந்து கிடந்தது -உறங்கா நின்றார்
இவ்வளவில் பரம பதத்தில் இருந்தார் என்று தான் ஆறி இருக்கிறேனோ –
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–
ஆ -கெட்டேன்
முகத்து நோக்காரால்
பிரிந்தால் கழற்ற வேண்டுவது பிரணயித்வம் அன்றோ
கண் நோக்கமும் தவிர வேணுமோ -கண்ணால் நோக்குவதையும் கருணையையும் விட வேணுமோ
அம்மனே அம்மனே
பிரிந்து ஆற்றாத சமயத்திலே -அனுசந்தித்தால் நா நீர் வரும்படி இருக்குமவர்
புலி சர்ப்பம் என்றால் போலே நினைக்கவும் பயாவஹமாம் படி யாவதே
இவர் படி இருந்தபடி என்
இவர் ஸ்வ பாவம் போய் வேறுபட்ட படி என்
ப்ராப்த பலோ ஹி பீஷ்ம -சாந்தி -46-139-என்று முடியும் அளவில்
முகத்திலே விழிக்கலாவதும் ஆண்களுக்காய்க் கொள்ளீர் –
——————————————-
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-
நிகமத்தில் –
செம்மை யுடைய திருவரங்கர் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு –
தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே -சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்
குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –
தாம் பணித்த-
நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –
மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் -மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து –
அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –
விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ்வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்-நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு
இவை இரண்டும்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –
————————————————-
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-
அத்தலையாலே பேறு என்று அறுதியிட்டால் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-
நீ இங்கனே பதறலாகாது காண் -என்ன
என் தசையை அறியாதே சில சொல்லுகிற உங்களுக்கும் எனக்கு வார்த்தை சொல்ல பிராப்தி இல்லை —
உங்கள் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்கைக்கும் எனக்கு பிராப்தி இல்லை என்கிறாள் –
மற்று –
வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –
மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-
இருந்தீர்கட்கு அறியலாகா –
ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு-நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -உத்த -68-5- சஞ்சயன் வார்த்தை -என்னக் கடவது இறே
மாயம் ந சேவே -இத்யாதி –
சாஸ்த்ரத்தில் வாசனை உனக்கும் எனக்கும் ஒக்கும் -புத்தி யோகத்திலும் எனக்கு குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே உனக்கு அர்த்தம் உள்ளபடி பிரகாசியா நின்றது –
எனக்கு நீ சொல்ல கேட்க வேண்டி இரா நின்றது -இதுக்கடி என் -என்ன
நான் வஞ்சன பரன் அல்லேன் –சல தர்மங்கள் அனுஷ்டித்து அறியேன் -ஸூத்த ஸ்வ பாவனாய் இருப்பவன்
நீ கற்ற வரியடைவு கொண்டு அறிய விரும்புதி -நான் அங்கன் இன்றிக்கே பக்தி சஹக்ருத சாஸ்திரம் கொண்டு அறிய இருப்பவன் –
சித்தாஞ்சனம் இட்டு பதார்த்த தர்சனம் பண்ணுவாரைப் போலே காண் என் படி –என்றான் இறே –
மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –
ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ-
மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்
அன்பு -என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது
தேந தே தமநுவ்ரதா-அயோத்யா -17-16- என்கிறபடியே தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –
பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே –
சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான விஷயத்தை இறே இவள் தான் ஆசைப் பட்டது –
அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது ஸ்ரீ யபதிக்கு இறே -அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –
அன்பு தன்னை உற்று –
அவனைக் கிட்டி -என்னுதல்
அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்
நிறந்தானூடு புக்கு -எனதாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –திருவாய் -5-10-1-என்னுமா போலே
இருந்தேனுக்கு –
இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இறே அடுப்பது –
அதுக்கு கால்நடை தாராத படி இருக்கிற எனக்கு –
உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
உரைப்பது எல்லாம் –
அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு -நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்
மற்று –உரைப்பது எல்லாம் –
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை-
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை
எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை
செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
உனக்கு ஓடுகிற தசை ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்று சொல்லுவான் என் –
உனக்கு இத் தசையை விளைத்தவன் தனக்குத் தெரியாதோ -என்ன –
தாய் செல்லாமை அறியாதவனோ கலந்தார் செல்லாமை அறியப் புகுகிறான்
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
அநந்த வ்ரதம் -அனந்தனை குறித்து -வ்ரதம் அளவற்ற வ்ரதம் -அனுஷ்டித்து பின்னைப் பிள்ளை முகத்தில் விழிக்க வேண்டும்
என்று கிலேசப் பட்டு பெற்று பின்னை -போக விட்டு இழந்து இருந்தாள் ஆய்த்து–
போய்ப்பேர்த்து –
இவள் இரக்கத்தாலே இழவு பொறுக்க மாட்டாமே கண்ணும் கண்ண நீருமாய் இருந்தாள்
அவன் முலைச் சுவடி அறியாமையாலே கால் தாழவும் மாட்டாதே போனான் –
பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
வேறு ஒரு தாய் க்ரஹத்திலே வளர்ந்தான் ஆய்த்து
பெற்றவள் இழவுடன் இருக்க -அவளுக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி தாயானமையில் ஒரு வாசி தோற்றாத படி யாய்த்து வளர்ந்தது
அவள் தானும்-திருவிலேன் ஒ ன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5-என்றாள்-இறே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8 என்னக் கடவது இ றே –
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாரை நலிகையே அவனுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
தாய் முலை –பெருமாள் திரு-6-4-இத்யாதி -இது இறே -ஊடினார் வார்த்தை
முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆய்த்து-
தனக்கு ஜீவன ஹேதுவாய் தான் வந்து முலை உண்ணாமையாலே-முலைக் கண் நெறித்து அவள் இருக்க
தன் மௌக்த்யம் தோற்ற தனக்கு விநாசத்தைப் பலிக்குமதான விஷத்தை உண்டு -அத்தாலே
பாவ பந்தம் உடையாருக்கும் பாவ தோஷம் உடையாருக்கும் வாசி அறியாதான் ஒருவன் காண் இவன் -என்று
கண்டார் இகழும்படி நின்றான்
நம்பி
சாலப் பூர்ணன் ஆய்த்து –
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–
தன் உடம்போடு அனைய வேணும் என்னும் ஆசை உடைய நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு முரட்டு மல்லரோடே அணைகைக்கு போகா நிற்கும்
மல்லரானவர்கள் மல் பொருகைக்கு யுத்த பூமியிலே சென்று கிட்டும் காட்டில் தான் யுத்த பூமியில் சென்று கிட்டுமாய்த்து
அவன் மல்லர் உடம்போடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று கிட்டிக் கொள்ளும் படி
என்னை மதுரையின் பரிசரத்திலே கொடு போய் பொகடுங்கோள்
மல் பொருந்தா மல் களம் –அவர்கள் கிட்டுவதற்கு முன்னே என்னுதல்
என்னிடத்தில் பொருந்தாமல் மல்லர் யுத்த பூமியை அடைந்தவன் என்னுதல் –
——————————————————-
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-
மன்னு மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இறே
தன்னை உறவு முறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்
புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்
—————————————————————–
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி –
இப்போது அது தவிர்ந்து –மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் -தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்-
பிரணயித்வம் போயிற்றே –
நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் -முகம் தோற்றாமே நின்று-
வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்
கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் –
முன்புத்தை நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது
ஸ்வரூபம் மாறாடினால் -ஆஸ்ரித பார தந்தர்யம் -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ
இந்நிறம் எப்போதும் ஒக்க படுகுலை அடிக்குமது தவிருகிறது இல்லை
ஸ்ரீ கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது -புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்
இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-
உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –
இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –
காட்சிப் பழகிக் கிடப்பேனை-
முன்பு கண்ட காட்சியை ஸ்மரித்து-அது கைம் முதலாக ஜீவித்துக் கிடப்போம் என்றால்
அதுவும் ஒண்ணாத படி அவ் வழி புல் எழுந்து போய்த்து-
கிடப்பேனை-
கிடந்த கிடையிலே பாடோடிக் கிடந்தாள் ஆகாதே –புரள முடியாத படி -ஒரு பக்கமாகவே படுத்துக் கிடக்கும் என்னை –
என்று அகளங்க நாட்டாழ்வான் வார்த்தை -என்று அருளிச் செய்வர்
இப்போது அவனை அணைக்க வல்ல இவளுக்குத் தேட்டம் -இடம் வலம் கொள்ளுகை யாய்த்து –
யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச-சோக பாரேண சாக்ராந்தா சயனம் ந ஜஹூஸ்ததா-அயோத்யா -41-20-என்று
சக்கரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் –ஸ்ரீ கௌசல்யார் மங்களா சாசனம் பண்ணி விட்டார் -அவ்வளவு இன்றிக்கே
பத்தொன்பதாம் பாஷையாய்த்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ்-அந்தரங்கர் -நல்ல நெஞ்சுடையார் –
தாய் தமப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள் இறே-தோழன்மார் ஆகிறான்
தங்களைப் பேணாதே அவனுக்கு நன்மை எண்ணிப் போந்தவர்கள்
சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதச –
ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில் –
அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என் –
சயனம் ந ஜஹூஸ்ததா-
படுக்கையை விட்டு எழுந்தார்கள் ஆகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ
தாம் தாமே படுக்கையில் கிடந்தது போந்தவர்கள் அன்றே
இவர்கள் வார்த்தையை ராமன் தட்ட மாட்டான் -திரும்பிக் கொண்டு வந்தது போலே ஆகுமே –
அதனால் எழுந்து இருக்க வில்லை -என்றபடி
சோக வசத்தால் ஸ்வ ஸ்வ வசம் இல்லாதபடி கிடந்தார்கள் -என்றபடி –
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே
புறம் நின்று -வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்
என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய
மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே
என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே
எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே
அழகு சொல்லாதே –
இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே-
அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி
இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் -மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று
அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மை பேசாதே
இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று -காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி –
நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானே இருந்தான் -என்றபடி –
பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-
அவனுக்கு நம்மை ஒழியச் செல்வதானாலும் நமக்கு அவனை ஒழியச் செல்லாதே –
நம் சத்தை அவன் அதீநம்
நம் சத்தை நோக்க வேணுமே –போகத்துக்காகில் இறே அவர் வேண்டுவது
சத்தை நோக்குகைக்கு அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஓன்று அமையுமே
அத்தைக் கொண்டு வந்து என்னை ஆஸ்வசிப்பியுங்கோள்
அவன் தான் இத்தனை போது பசுக்களையும் விட்டுக் கொண்டு போகா நிற்குமே
பிறரை நலிகைக்காக தான் காட்டுக்குப் போகைக்கு உடைத்தோல் உடுத்து இறே போவது
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச் சறையினார் -திருவாய் -4-8-4-என்கிறபடியே
திருப் பீதாம்பரத்தை இட்டு வைத்துப் போம்
அந்த திருப் பீதாம்பரத்தைக் கொண்டு என் வாட்டம் தணிய வீசுங்கள் -என்கிறாள்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு –
மேலிட்ட உத்தரியமானால் ஆகாதோ -என்று நஞ்சீயர் கேட்க –
ஸ்வேத கந்த லுப்தை -போலே காண்-என்று அருளிச் செய்தாராம் –
என்னை வாட்டம் தணிய வீசீரே-
என்னையும் அவனையும் சேர்த்து போகத்தில் நிறுத்துங்கோள் என்றால் -அது இப்போது உங்களால் செய்யப் போகாது இறே
ஆனாலும் வாட்டத்தை அகஞ்சுரிப்படுத்தலாமே -அத்தைச் செய்யப் பாருங்கோள் –
அவனுடைய திருப் பீதாம்பரத்தைக் கொடு வந்து என் மேலே பொகட்டு என் சத்தையை நோக்கப் பாருங்கோள் –
——————————————————–
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-
அல்லல் விளைத்த பெருமானை –
பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே–அயோத்யா -2-26-என்று
திரு அயோத்யை ஸ்ரீ ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு –
மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து
திரு வாய்ப்பாடியில் உள்ளார் ஸ்ரீ கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி
ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்
பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று சொல்லும் படி
பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –
ஆயர் பாடிக்கு அணி விளக்கை
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ஸ்ரீ ராம குணங்கள் வேம்பாய்
இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை
இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை ஸ்ரீ பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்
வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி
அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடையவாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தை
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல் -என்று தோற்றும் படி இருக்கை –
துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–
இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்
சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –
——————————————————-
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-
விண்ணாட்டவர் மூதுவர் -திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி
போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரைசஞ்சாரம் பண்ணி-அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதி யாய் -கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து
வானிளவரசு என்கிறபடியே திரு வநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் –
ஸ்ரீ பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத்தத்வம் வளருவது என்றாய்த்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வது – –
ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி
ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது-
பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி -திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி
பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வ நே த்ரய –பால -1-31–என்கிறபடியே இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி
அந்வயித்து அவர்களுடைய சம்ச்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே
ஸ்ரீ கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆச்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –
இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் -ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இ றே-
இவன் தான் ஓரடி பிற்பட விறே பாம்பின் வாயிலே விழுந்தது –
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து
இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு -என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி
அவாக்ய அநாதர-தத்வம் இட்டீறிட்டு-என்னும் படி இருப்பதே என்று ஸ்ரீ சிறியாத்தான் போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்
விளையாடி –
அச் செருக்குக்கு போக்குவிட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது -இது தானே இறே பிரயோஜனம்
இங்கே போத –
அங்கே போனாலும் பெறவரிய பரிமாற்றத்தை அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –
கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாககளானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது
ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால் பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-
இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே –திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ் விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும் கனாக் காண்பதுவும் இப் பசுக்களை வாய்த்து –
இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-எதிர்த்தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால்
அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும் எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-
நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து பின்னே கையைக் கட்டிக் குனிந்து
நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து –இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்
தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே -திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இறே லீலையில் அந்வயம் உள்ளது -இந்த லீலை தானே இறே பிரயோஜனம் –
விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இறே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து அபிமத விஷயங்களும்
தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –
———————————————
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-
நிகமத்தில்
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப்
பருத்து பெரிய காலை உடைத்தாய்
சரீரம் பெருத்ததனையும் பாடாற்ற அரிதாய் இருக்கும் இறே
அப்படிப்பட்ட ஆனையானது-தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
முதலையின் வாயில் அகப்பட்டு இடர்ப் பட -அதனுடைய ஆர்த்த த்வனி செவிப்பட்ட அநந்தரம்
ஆயுத ஆபரணங்களை அக்ரமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து
அது பட்ட புண் ஆறும் படி முகம் கொடுத்து ரஷகத்வத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாதபடி இருக்கிறவனை-
(ஆனையின் நெஞ்சு இடம் தீர்த்த –தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –
ஆ –கத்தினால் அகார ரக்ஷகன் ஆதி மூலமே -நாராயணா மணி வண்ணா நாகணையாய் –ஆ ஆ என்று கத்திற்று –
ஆர்த்த த்வனி ஒன்றுமே போதுமே – முதலை முதலை -சொன்னாலும் முதலே ஆதி மூலமே -என்று கூப்பிட்டால் போலவே –
த்வாராய நம–ஆரோகதா -வாகனம் ஓடும் பொழுதே ஓடி -இறக்கையை தொங்கி போனானே –
பாதம் பாராமசு -வேது கூட கொடுத்தானே –பரமன் –ஆர்த்த ரக்ஷணத்தில் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் -)
பரமபத ஆபன்நோ மநஸா அசிந்தயத் ஹரிம் ச து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–என்னுமா போலே-
(இவனுக்கு வந்த ஆபத்து -எம்பார் -பிரகலாதன் திரௌபதி கஜேந்திரன் மூன்றும் -எம்பார் -அதனாலே பரமா பாதம் ஆபன்ன)-
இதினுடைய விடாயடைய தனக்கு பூர்வ ஷணத்தில் உண்டான படியும்
அதின் இடரைப் பரிஹரித்தால் போலே தன்னிடரைப் பரிஹரித்த படியும் சொல்லுகிறது –
(கைம்மா துன்பம் கடிந்த பிரானே -அம்மா அடியேன் வேண்டுவது இதே -ஐந்து முதலைகள் / சம்சார சாகரம் -/ அநாதி -)
பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று
பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்
தாள் -என்கையாலே பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .