Archive for the ‘திரு பல்லாண்டு’ Category

ஸ்ரீ அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளுடன் -ஸ்ரீ திருப் பல்லாண்டு —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

September 5, 2023
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்
இச் சப்தங்களுக்கு அர்த்த பேதம் இல்லையோ என்னில் -ப்ரவர்த்தி நிமித்த பேதத்தால் வரும்
விசேஷம் உண்டானாலும் -விழுக்காட்டில் ஆத்ம ஸ்பர்சியாய் தலைக் கட்டுகையாலே பர்யாயம் ஆகிறது –

ஜிதம் -என்று அவனாலே  தன் அபிமானம் போனபடியை இசைந்து அத்தலையில்  வெற்றிக்கு மேல்
எழுத்து இடுபவன் வ்யவஹாரம் -இத்தால் ஸ்வரூப பிரகாசதத்தால் அல்லாது அபிமானம்
போகாமையாலே இச் சப்தமும் விழுக்காட்டால் ஸ்வரூப வாசி யாகிறது

நம -என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்
இதுவும் ஸ்வரூப பிரகாசத்தால் அல்லது கூடாமையாலே ஸ்வரூப ஸ்பர்சியாகிறது

தோற்றோம் -என்கிறது அத் தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்
அதுவும் அஹங்கார நிவ்ருத்தியிலே அல்லது சம்பவியாமையாலே ஸ்வரூப ஸ்பர்சி  யாகிறது

போற்றி -என்று தன்னை பேணாதே அத்  தலையில் சம்ர்த்தியே பேணுமவன்  வ்யவஹாரம்
இது ஸ்வரூப அனுரூபம் இறே

பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே அத தலையில் ச்ம்ரத்தியே நித்யமாக செல்ல வேணும்
என்று இருக்குமவன் வ்யவஹாரம்

ஆக இச் சப்தங்கள் ஸ்வரூபத்தையும் -ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியையும்
பிரகாசிப்பிக்கையாலே ஸ்வரூப அனுபந்தி யாகிறது
------------
ஸ்ரீ அருளிச் செயல்களில் பல்லாண்டு பத பிரயோகங்கள் 
பல்லாண்டு (22)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு - நாலாயி:1/1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு - நாலாயி:1/1
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
  வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு - நாலாயி:2/1,2
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
  வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு - நாலாயி:2/2,3
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
  படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே - நாலாயி:2/3,4
பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:3/4
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே - நாலாயி:4/4
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே - நாலாயி:5/4
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே - நாலாயி:6/4
பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:7/4
பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே - நாலாயி:8/4
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:9/4
பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:10/4
பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே - நாலாயி:11/4
பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் - நாலாயி:12/1

பல்லாண்டும் (1) பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4

பல்லாண்டே (2) படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/4

பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4

————

வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல செய்த கரும் தழைக் காவின் கீழ்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமணன் என்னைப் புறம் புல்குவான் – 1-9-5- –

பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப–சங்கைஸ் ஸூராணாம்-என்றும் திசை வாழி எழ -என்றும் சொல்லுகிறபடியே – திக்குகள் தோறும் அனுகூலரானவர்கள் பண்கள் பலவற்றாலும் பாடி மங்களா சாசனம் பண்ண – இசைப்ப என்ற -சொல்ல என்றபடி

– ————

திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -3 -3-9 –

பண்ணோடு கூடின அழகிய மொழியை உடையவர்களை -அழைத்து -திரு முளை சாத்தி -மங்களா சாசனம்
பண்ணுவித்தேன் –

———-

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 -2-2 –

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – –அநந்ய பிரயோஜனரோடு  –
பிரயோஜனாந்தர பரரோடு-
அநந்ய சாதனரோடு –
சாதனாந்த பரரோடு -வாசி அற-எல்லாருடைய இடங்களிலும் – திரு மலையில் உள்ள பரப்பு எங்கும் -வ்யாப்தமாய் கொண்டு –
மங்களா சாசன த்வனி நடந்து செல்லா நிற்கும்

———-

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

பல்லாண்டு இசைப்பாரே –
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –

கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –

உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும்

———

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-5-

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப – ஆனை குதிரை தேர் காலாள் கூட்டி
அவை கொண்டு பிரதி பஷத்தை அழியச் செய்து
அவ் வழியாலே ஐஸ்வர் யத்தையும் தன்னதாக்கிக் கொள்ள வேண்டும் அது அன்றிக்கே
சித்தமான ஐஸ்வர் யத்துக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை-
இன்றாக ஒரு ஐஸ்வர்யம் சம்பாதிக்க வேண்டாதே
முன்பே உண்டானதுக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை –
பாட்டையும் தேனையும் உடைத்தான வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு
த்வனியா நின்றுள்ள குழலை உடைய ஸ்திரீகள் ஆனவர்கள் மங்களா சாசனம் பண்ண

———-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் – 

சர்வ ரஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே –
பிரேம தசை தலை எடுத்து -அவனுக்கு என் வருகிறதோ என்னும் அதி சங்கையாலே-
திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட
ஸ்ரீ பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –

லோகத்திலே பரிமித கால வர்த்தியான-சாதாரண ஜனங்களுக்கு ஆயுர் அர்த்தமாக –ஆயுராசாச்தே -என்கிறபடியே –
தீர்க்கா யுஷ்மான் பவேத் – என்று மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே -அந்த ஸ்ரீயபதியைக் குறித்து –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு -பல் கோடி நூறாயிரமும் –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு – என்றும் –
நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு -சுடர் ஆழியும் பல்லாண்டு -அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –-என்று
அபரிமிதமான காலத்தை உண்டாக்கி -அது தன்னையே பெருக்கி -இப்படிப் பட்ட கால தத்வம் உள்ளது அனையும் செவ்வி மாறாதே –
நித்ய ஸ்ரீ யாக வாழ வேணும் என்று -இப்படி மங்களா சாசனம் பண்ணுகையே
தமக்கு ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை –
பான்மை -ஸ்வபாவம் -தாள்-திருவடிகள் –

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்
தொல்லை மால் என்பதில் ஒன்றையும் பாராமையாலே –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் -என்று காலத்தை பெருக்கி
நீடூழி தீர்க்காயுசாய் வாழ வேண்டும் என்று -அளவு பட்ட ஆயுள் உள்ளவர்களையும் -தன்னைக் காக்கும் திறன் அன்றி
காக்கப் படவேண்டியவராய் இருப்பவர்களையும் ஆயுள் விருத்தி யடைய வேண்டும் என்று மங்களா சாசனம்பண்ணுவாரைப் போலே
பல்லாண்டு பாடுகிறார் ஸ்ரீ பெரியாழ்வார் -என்க –

இங்கனம் பல்லாண்டு பாடி -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று காப்பிடுவது ஸ்ரீ பெரியாழ்வாருடைய இயல்பு –
அது தோன்ற அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -என்கிறார் –
தான் அழிவற்று -மற்ற அனைவரையும் அளிக்கும் பரம் பொருளை -அங்கனம் பாராமை அறியாமை அன்றோ –
மயர்வற மதி நலம் வாய்ந்த ஸ்ரீ பெரியாழ்வாருக்கு அது குறை யாகாதோ எனின் -ஆகாது என்க –
இவ்வறியாமை கன்மத்தால் வந்ததாயின் குறையாம்-
அன்பின் மிகுதியால் வந்தமையின் குறை ஆகாததோடு பெருமையுமாம் -என்க
இதனை சோராத காதல் பெரும் சுழிப்பால் பாராது –என்பதனால் உய்த்து உணர வைத்தார் ஸ்ரீ அமுதனார் –
காதல் பெரும் சுழிப்பில் அகப்பட்டது –பாராது பல்லாண்டு பாடும் -பெருமையை இவர்க்கு அளிப்பது ஆயிற்று என்க –
ஆதல் பற்றியே இவர்க்கு ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் ஏற்ப்பட்டது என்கின்றனர் ஆன்றோர் –

இங்கு ஸ்ரீ மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் –
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றிப் பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான்
ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் -என்று அருளிச் செய்த பாசுரத்தை நினைவு கூர்க-

இனி காதல் பெரும் சுழிப்பால் பாரா விடினும் இறைவன் தன் ஆற்றலை தானே காட்டி யாயினும் இவரைப் பெரும் சுழி யினின்றும்
தப்புவிக்கல் ஆகாதோ எனின் –இறைவனுக்கும் அது ஆகாததாய் ஆயிற்று என்க –
கண் உள்ளவர்கர்க்கு அன்றோ காட்ட இயலும் –அன்பினால் குருடரான ஸ்ரீ ஆழ்வாருக்கு –ப்ரேமாந்தருக்கு -எங்கனம் காட்டுவது –
தன் ஆற்றலைப் பார்த்து அன்பினால் ஆன அச்சப் பெரும் சுழி யினின்றும்
வெளியேறட்டும் என்று இறைவன் வலிமை மிக்க தன் தோளைக் காட்டினான் –

அது மேலும் இவரை அப் பெரும் சுழி யில் ஆழ்த்தி சுழல செய்து விட்டது -வலிமை அச்சத்தை கெடுக்க வில்லை –
அதனை மேலும் வலு வுறச் செய்து விட்டது –வலிமையை உள்ளடக்கி அழகே விஞ்சித் தோற்றுகிறது இவருக்கு
இவ்வலிமை கொண்டு எதிரிகளோடு பொருது என்ன தீங்கை விளைவித்துக் கொள்வானோ
என்று மீண்டும் அச்சமே தலை தூக்கி நிற்கிறது ஆழ்வாருக்கு -இதனை
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்னும் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியில் காண்கிறோம் –
காணவே இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு எனபது போதரும் –
துச்த்யஜா பிரக்குதிர் நாம -இயல்பு தவிர்க்க ஒண்ணாத தன்றோ-இக் கருத்துப் புலப்பட பான்மையன் -என்றார் அமுதனார் –

—————–

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே -கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.

———

ஸ்ரீ அருளிச் செயல்களில் போற்றி பத பிரயோகங்கள்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் –
வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-
ருசியாலே-

புண்ணியன் –
இவர்கள் உபாயம் அவன் தானே இறே –
சிநேக உக்தியாகவுமாம் –

நம்மால்
வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )

நம்மால்
அவனுக்கு ஆகாதார் உண்டாய் முடிந்தான் அல்ல கிடீர்-
ஜென்ம விருத்தாதிகள் ஏதேனும் அமையும் கிடீர்

போற்ற
இவர்கள் குடிப் பிறப்பு இருக்கும் படி –
பல்லாண்டு என்று இருக்குமவர்கள் இறே –
இவர்கள் ஆஸ்ரயணம் உபாயம் அன்று

போற்ற
செய்ய வேண்டுவது பெரிதாய் முடிந்தான் அல்லன் (கும்ப கர்ணன் )கிடீர்

பறை தரும்
உக்கமும் தட்டொளியும் உன் மாணாளனையும் தந்து

புண்ணியனால்
தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியில் தலை கீழாக விழுந்து சாவாரைப் போலே

புண்ணியனால்
1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்
2-ருசி ஜனகனும்
3-உபாயமும்
4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ
லாவண்யம் பூர்ணம் —ஆச்சார்ய ஹிருதயம்–162
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம்
வானமா மலையிலே கொழுந்து விடும் —ஆச்சார்ய ஹிருதயம்-163
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம்
குடமூக்கிலே பிரவஹிக்கும்–ஆச்சார்ய ஹிருதயம்-164)

ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்றது புறம்பாம் படி
யதிவா ராவண ஸ்வயம் -என்கிறபடி
ரீபூணாம் அபி வத்சலரானவராலே கிடீர் முடிந்தது

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்

———

போற்றி (19)

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்

போற்றி
போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை
பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –

யாம் வந்தோம் –
அவர் தன்னைப் பேணாதே
உன்னைப் பேணினாப் போலே
நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல்
ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே – வந்தோம்
நசை முடிய ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –

யாம் வந்தோம் –
சத்ருக்கள் துரபிமானத்தாலே ந நமேயம் என்று இருக்குமா போலே
ஸ்வரூப ஞானத்தாலே –தத் சத்ருசம் -என்று இருக்கும் நாங்கள்
ஆற்றாமை இருக்க ஒட்டாமையாலே வந்தோம் –

புகழ்ந்து –
எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –

போற்றி
தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே –

போற்றுகை யாவது
செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று திருப் பல்லாண்டு பாடுகை-

அல்லாதார் பாடுவது தம் தாம் பிரயோஜனத்துக்காக இறே –
நாங்கள் உன் சம்ருத்தியை ஆசாசிக்கும் படி அன்றோ வந்தது –

புகழ்ந்து
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்
இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –

எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது

போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –
அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –

நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்
நீ பெறிலும் பெறு
இழக்கிலும் இழ –

(அறிவித்தோம்
போற்றினோம்
புகழ்ந்தோம்
இதுவே சேதனனானதுக்கு பிரயோஜனம்

ப்ராப்தாவும்
பிராபகமும்
ப்ராப்திக்கு உகப்பானும் நீயே )

போற்றி யாம் வந்தோம்
தோற்றார் அவனைப் புகழும் அத்தனை –
அபலைகளை வெல்லுகையும் ஒரு பணியோ

போற்றி  யாம் வந்தோம்
பெரியாழ்வாரைப் போலே யன்றோ நாங்கள் வந்தது என்கை
தம்மைப் பேணாதே அத் தலையைப் பேணுமவர்
நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை

————

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்

தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு வந்த கார்யத்தை மறந்து அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
அவன்-திருப் பள்ளி அறையில் நின்றும் திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்து அருள
அந்நடை அழகிலே ஈடுபட்டு-வந்த கார்யத்தை மறந்து மங்களாசாசனம் பண்ணுகிறார்கள் –
காணும் அளவு இறே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-

தங்கள் மநோ ரதங்களை மறந்து தண்ட காரண்ய வாசிகள் போலே-
அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்-
ஸ்ரீ கௌசல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்–
வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட-மங்களா சாசனம்

அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து
மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
அப்படியே செய்கிறோம் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணின படியைக் கண்டு -தாங்கள் வந்த காரியத்தை மறந்து –
தத் காலீநமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்–பண்ணுகிறார்கள்
திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது —
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று–
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்–
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர–திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்

அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே–மிடுக்குக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்–அவர்கள் ஆகையாலே–குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-

இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவிபவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே-அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மிகவும் அதிகமாக மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு பிதா -சம்பராந்தகன் -ஊர் -திரு அயோத்யை-புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –குணவான்களும் பிள்ளைகள் –
இங்கு மாதாபிதாக்கள் -சாது இடையர்–ஊர் இடைச்சேரி–கம்சாதிகள்
எதிரிகள் ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்–
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை-
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –

காம குரோதங்களை–ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே —
உன்னுடைய யசஸ்ஸுக்கு பல்லாண்டு –

குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும்–
அகவாயில் சிகப்பையும் கண்டு காப் பிடுகிறார்கள்
அடி போற்றி கழல் போற்றி–நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்–
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-

குணம் போற்றி –
பசி க்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க–மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து நோக்கின குணம் -உண்பது கொண்டால்
உகிர் கொண்டு தலையை அறுக்கவோ -என்று மலையை எடுத்த ஆந்ரு சமசய குணம்-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது–பர்வதத்தை குடையாக கொண்டு–
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக
வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –

நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க–அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் —
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்—
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –என்று சீயர் அருளிச் செய்வர் –
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
அஹங்காரத்தை ஜெயித்து–தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்–
நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

அடி போற்றி -திறல் போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-

என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று –
இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் —
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று-அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –
இப்படி பல்லாண்டு பாடுகையே – யாத்ரையாய் உன் உடைய–வீர சரிதத்தையே ஏத்தி–புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று–உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்–வந்தோம்

இப்பாசுரத்தில் பரமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம் (போற்றி) செய்யப்படுகிறது.
அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.

“என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்” என்பது, அடியார்களான கோபியர், பரமபதத்தில்
பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டுவதை மட்டுமே விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !

“வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்பது மோட்ச சித்தியை அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றை
பரந்தாமனின் கூரிய சங்கல்பம் உடைத்தெறியும் என்பதை உட்கருத்தாக வலியுறுத்துகிறது !

“குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி” என்று கோபியர் பாடும்போது, பரமபதத்தில் ஸ்ரீவைகுந்தனாக,
அனைத்துலகங்களையும் ரட்சிக்கும் சர்வேஸ்வரனாக, வெண்கொற்றக் குடையின் கீழ் எழுந்தருளியிருக்கும்,
பரந்தாமனின் கல்யாண குணங்கள் போற்றப்பட்டுள்ளன.

“கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி” என்பது, பாவ-புண்ய பலன்களிலிருந்து அடியார்களை மீட்க வல்ல,
பரந்தாமனின் வலிமை வாய்ந்த தண்டத்தைப் போற்றும் உட்குறிப்பாகும் !

“பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி” என்பது, புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் மனத்தை,
பரந்தாமனைப் பற்றுவதன் மூலம் அமைதிபடுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உபாயத்தை உட்கருத்தாக வலியுறுத்துகிறது.

‘சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்பது, எங்கும் நீக்கமற நிறைந்த அந்தர்யாமியாகவும்,
ஆச்சார்யனாகவும் இருக்கும் அம்மாயப்பிரானை, அவன் திருவடிப் பதம் அடைவதற்கு தடைக்கற்களாக இருக்கும் கர்வம், பற்று
போன்றவற்றை விட்டொழிக்கத் தேவையான வலிமையான விவேகத்தை தந்தருளுமாறு கோபியர் வேண்டுவதைக் குறிக்கின்றது !

“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” — உலகங்களைப் படைத்து ரட்சிப்பதால் பரந்தாமனே
பரந்த இவ்வண்டத்தின் நாயகன், அவன் திருவடிகளே காப்பு !

————

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை   யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

அத்தாலே புகர் பெற்ற வடிவை உடையவனாய் நின்றவனை –
அத்தாலே குளிர்ந்த நிறத்தை உடையவனாய் நின்றபடி –
இப்படிப் பட்ட இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது
மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –

நித்ய ஸூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் –
———–

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-

ஷூத்ர விஷயங்களை லபிக்கைக்கும் கிட்டவரிய விஷயங்களை லபிக்கைக்குமாக
க்ருத்ரிம ரூபத்தாலே -நான் -என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும் படி என் சரீரத்துக்குள் வந்து குடி புகுந்தன  வாய்த்து –

அவற்றை –போற்றி வாழ்வதற்கு-ஆராதித்திப் பின் சென்று வர்த்திக்குமதற்கு  அஞ்சி –நிருபாதிக சேஷியான யுன்னைக் கிட்டினேன் –

——–

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து—இரண்டாம் திருவந்தாதி -32–

திருமாலே சிந்தை சூழ்ந்து துணிந்து நின் பாதமே போற்றி -மகிழ்ந்தது
என்னுடைய மனஸ் தத்வம் மநோ ரதித்து-அத்யவசித்து
ஸ்ரீயபதி யானவனுடைய திருவடிகளைப் போற்றி மகிழ்ந்தது

(சிந்தை சூழ்ந்து ஆசைப்பட்டு -துணிந்து உறுதியாக -மனமார போற்றி வாக்கின் வியாபாரம் செய்து மகிழ்ந்தது)

மற்றும்
என்றது வாக்கும் என்றபடி

மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடி
மிகவும் பிரதி பஷத்திலே அக்நி உமிழா நின்றுள்ள-திரு ஆழியையும்-ஸ்ரீ பாஞ்ச ஜன்யதையும் பாடி மகிழ்ந்தது

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து
ஆகம் ஆடுகை யாகிற தொழிலிலே மகிழ்ந்தது

மகிழ்கையே தொழிலாயிற்று-(எனவே மூன்று தடவை –
உபாயம் அவனே -அறிந்து கைங்கர்யமாக செய்தாலே மகிழ்ச்சி தானே கிட்டும் )

(முடியானே -3-8- திருவாய் மொழியிலே ஆழ்வாரின் கரணங்கள் பட்ட பாட்டைப் படுகின்றன இதில் இவ்வாழ்வாரின் கரணங்கள்
மநோ பூர்வக வாக் உத்தர -உன் பாதமே போற்றி -சிந்தைக்கும் சேரும் -ஞான ப்ரஸுர த்வாரமாய் இருக்கையாலே
மகிழ்ச்சியின் காரணமான மயிர்க்கூச்சு எறிவதால் உடலுக்கும் அது பொருந்தும் –
ஆகம் பாடி யாடும் -சரீரம் ஆடுவதும் பாடுவதும் தொழிலாகக் கொண்டு உள்ளது)

—————

கவியினார் கவி புனைந்து கண்ணார் கழல் போய்
செவியினர் கேள்வியாய்ச் சேர்ந்தார் -புவியினார்
போற்றி உரைக்கப் பொலியுமே பின்னைக்காய்
ஏறு உயிரை அட்டான் எழில் –-மூன்றாம் திருவந்தாதி 85-

வாயால் பலபல தோத்திரங்களைக் சொல்லிக் கொண்டும் கைகளைக் கூப்பிக்கொண்டும் கண்களை வேறொரு விஷயத்திலும்
செலுத்தாது அவனது திருவடித்தாமரைகளிலேயே செலுத்திக் கொண்டும். அப்பிரானது புண்யகீர்த்திகளையே செவிமடுத்துக் கொண்டும்
இப்பூமியிலுள்ளாடங்கலும் வந்து பணிந்து எல்லாருமொன்று சேர்ந்து போற்றி யுரைத்தாலும்,
கண்ணபிரான் நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களை முடித்திட்டு மணக்கோலமும் பெரு மிடுக்குமாக நின்ற அழகு
பேச்சுவாக்கு நிலமாகுமோ? என்றவாறு.

————-

பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——பெரிய திருமடல் –20

பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –

————-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

கவி போற்றி செய்யேன் -என்ற இது-கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் கேவலம் புகழுகை –நயவேன் -என்றது -விரும்பேன் -என்றபடி

——————

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–  –

அடி போற்றி செய்யும் நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் –
தேவரீர் உடைய திருவடிகளை ஆஸ்ரயியைக்கு உறுப்பாய் -சூஷ்மம் என்றும் -சர்வம் குஹ்ய தமம் பூரா-ப்ரவஷ்யாமி என்றும்
நசா ஸூ ஸ்ருஷவே வாச்யம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸூ சூஷ்மமாய்-பரம ரகஸ்யமாய் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்க அரிதான மந்த்ரத்தை ஸ்மரிக்கை அன்றிக்கே –
ஸ்மரிக்கை வேணும் என்று பிரசங்கிப்பதும் செய்திலேன் என்னுதல் –

அடி போற்றி செய்தல்-
ஆசார்யன் திருவடிகளை ஸ்வயம் பிரயோஜனமாக அடைந்து –பொங்கும் பரிவாலே -அவற்றுக்கு மங்களா சாசனம் செய்தல்
ஆசார்யன் திருவடிகளை அணுகிப் பேணி-மங்களா சாசனம் செய்தல் –
சகல சாஸ்த்ரங்களின் தாத்பர்ய பொருளாதலின் அது-நுண்ணியதாக அருமைப் பட்டதாய் -கேள்வி அறிவின் முதிர்ச்சியினால்
வருவது என்பது தோன்ற –நுண்ணரும் கேள்வி -என்றார் –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து வாழ்த்துப் பாடுகைக்கு-உறுப்பாக கேள்வி அறிவும் எனக்கு இல்லையே -என்கிறார் .
கேள்வி அறிவு இல்லாதது -கேளாமையினால் மாத்ரம் அன்று –
கேட்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமையினால் அதனைப் பற்றிய பேச்சே இல்லாமையினாலே-
என்னும் கருத்துப் பட –நுவன்றுமிலேன் -என்றார் –

————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

போற்றி
சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும்
சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.
என்றே – ‘நம’ என்று வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும்
தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது போன்று,
அன்று இவ்வுலகம் அளந்தான் போற்றி -ஆறு தடவை ஆண்டாள் போலே –
ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை

கைகள் ஆரத் தொழுது –
‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின்
விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.

சொல் மாலைகள் –
வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –
‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.

நோற்றேற்கு –
இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –

இனி என்ன குறை –
பரம பதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;
அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ‘
அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?
அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’ ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,

எழுமையுமே –
முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதன்றோ?
‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?

‘பூவளரும் திரு மாது புணர்ந்த நம் புண்ணியனார் தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’- என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.

————-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

போற்றி
நான் பகவத் விஷயத்தில் செய்வன முழுதும் நீங்கள் இதர தேவர்கள் பக்கலிலே செய்து போருகின்றீர்கோள்;
உங்கள் பக்கல் ஒரு குறை இல்லை; அடையத்தகாதனவாய் இருத்தல் ஒன்றே குறை.

மற்றோர் தெய்வம் –
அருச்சுனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தியுடையவர்களாய்க்கொண்டு சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ,
அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,’ என்னுமாறு போலே.

பேண –
அவை தமக்கு என்ன ஒன்று இல்லாமையாலே, அவற்றிற்கு ஓர் உயர்வினைச் சாதித்தல் அவர்களை
அடைகின்ற உங்களுக்கே பாரம்’ என்பார், ‘பேண’ என்கிறார்.

புறத்திட்டு –
ஈசுவரனாகிய தனக்குப் புறம்பு ஆம்படி செய்து.

———

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

போற்றி
சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்
(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- )
அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.
முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.
இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

யான் இரந்தேன் –
அவன் தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய நான் இரந்தேன்;
ஆள் விடுவானும் இரப்பானும் எல்லாம் தானே அன்றோ.
அன்றிக்கே,
“இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு
பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்” என்கிறபடியே
ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.
புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும் யான் இரந்தேன் என்னுதல்.
வாலப்யத்தால் அவனைக் கட்டுப் படுத்தி ஈஸ்வரி -நம் அனைவருக்கும் ஈஸ்வரி அன்றோ –

இரந்தேன் –
நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன்.
இரப்பார் காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள்.
இரந்தேன் என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள்.

—————

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

போற்றி என்று
பிறருடைய நலத்தை விரும்புகின்றவர்களை போன்று வார்த்தை சொல்லுவர் -என்றது –
உனக்கு இன்னமும் கிழிச்சீரை பெருக வேண்டும் -என்பார்கள் என்றபடி –
நம்முடைய நலத்தையே தனக்கு பிரயோஜனமாக கொண்டு இருப்பான் ஒருவன் உண்டாவதே –என்று குளிர நோக்குவானே-
இனி இவன் நமக்கு கண்ணற மாட்டான் -என்று அறிந்தவாறே -கண் -அருள் -கிருபை –

—————-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9–

போற்றி –
இவ் இருப்பு -இங்கனே நித்யமாக செல்ல வேண்டும் என்று-மங்களா சாசனம் செய்து –

யோவாதே –
உச்சி வீடு விடாதே –

கண்ணினை குளிரப்
காணப் பெறாமையாலே கமர் பிளந்து கிடந்த கண்கள்-விடாய் எல்லாம் தீர்ந்து குளிரும்படியாக –

புது மலர் ஆகத்தைப் பருக
செவ்விப் பூ போலே இருக்கிற-திரு மேனியை அனுபவிக்கும்படியாக -என்றது –
மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை-திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து
வார்த்தை அருளிச் செய்தார் -என்கிறபடியே –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுகையை தெரிவித்தபடி –

——–

எற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே-அதிகார ஸங்க்ரஹம் –38

————–

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ஸ்ரீ கண்ணனது பரத்வம் பாணாசுர யுத்தத்தில் தெளிவாக வெளிப்படுதலின் வாணனது பிழையை
பொருத்து அருளிய தூய்மையை ஸ்ரீ எம்பெருமானார் எத்துவதாக சொல்லுகிறது இந்த பாசுரம் –

அவனுக்கும் தங்களுக்கும் உண்டான பித்ரு புத்ர சம்பந்தாதிகளை ஸூசுப்பித்து நின்று தங்களை ஆஸ்ரயித்த
வாணனுடைய ரஷண அர்த்தமாக -ஜகத் காரண பூதன் ஆனவன் -என்று போற்றிட –ஸ்தோத்ரம் பண்ண
அவர்களுக்காக பாணாசுரனுடைய அபராதத்தை ஷமித்த குண சுத்தியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
அந்த குண வித்தராய் கொண்டு -ஏத்துகிற ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு ஆபத்துத் துணையாக சேமித்து வைத்த -தனம் ..
போற்றுதல்-புகழ்தல்
வைப்பு -நிஷேபம்–

கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –என்றும் –
கிருஷ்னேதி மங்களானாம் யச்யவாசி பிர வர்த்ததே பச்மீபவந்தி ராஜேந்திர மகாபாதக கோடாயா-என்றும்
கிருஷ்ணா-என்றும் தான் தீர கழியச் செய்த அபராதத்துக்கு பிராயச்சித்தார்தமாக -திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறான் காணும் –
ப்ராயச்சித்தான்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை -யாநி தேஷா மசெஷாணாம் கிருஷ்ண அனுஸ்மரணம் பரம் -என்னக் கடவது இறே –

கிருஷ்ண -என்றும்
கிருஷி ப்ர்பூ வாசகஸ் சப்தோனஸ் ச நிர்வர்த்தி வாசக -தயோரைக்யம் பரப்ரம்ம கிருஷ்ணா இத்யபிதீயதே -என்னும்படி –
உபய விபூத் யாத்மகனாய் – என்றும் –
ஜகச்சச -என்று தத்ரூப மகா ப்ர்திவி யானவனே – என்றும் –
மகா பாஹோ -பூர்வ காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் -அசுத்தாஸ்தே சமஸ்தாச்து தேவாத்யாம் கர்ம யோக -என்றும் –
அவித்யாந்தர்க்க தாஸ் சர்வே -என்றும் –
நமேவிதுஸ் சூரகணா பிரபவன்ன மகர்ஷய – என்றும் சொல்லப்பட்ட பிரக்ரதர் யாகையாலே –
ஹரி ஹரர்கள் இருவருடையவும் -பலாபலங்களை அறிவதற்காக விஸ்வ கர்மாவை அழைத்து -இரண்டு தனுச்சுக்களைப் பண்ணச் சொல்ல –
அவனும் அப்படியே பண்ணிக் கொடுக்க -அவர்கள் அந்த தனுச்சுக்களை எடுத்து இருவர்
கையிலும் கொடுத்து -யுத்தம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்க -அப்படியே இருவரும் யுத்தம் பண்ணுகிற போது –
விஷ்ணுவுடைய சர வேகத்தை -ருத்ரன் சஹிக்க மாட்டாதே மிகவும் அவசன்னனாய் -ரஜஸ் தமச்சுக்கள் அபி பூதமாய் –
சத்வம் தலை எடுத்தவாறே -அப்போது அவரை -சர்வ ஸ்மாத்பரன் -என்று அறிந்து -ஸ்தோத்ரம் பண்ணினான் -என்று பிரசித்தம் இறே –
அப்படியே இப்போதும் தமோத்ரேகத்தாலே யுத்தம் பண்ணி -அவனாலே அடி பட்டு -பின்பு சத்வம்தலை எடுக்க –
பூர்வ காலத்திலே அபதானத்தை ஸ்மரித்து -அவனுடைய பாஹூ பலத்தை அறிந்தவன் ஆகையாலே –
மகா பாஹோ என்று சம்போதிக்கிறான் –
ஜானே -இவ்வளவும் தேவரீர் கொடுத்த அதிகாரத்தாலே யுத்தம் பண்ணி -அடி பட்ட பின்பு –சத்வம் தலை எடுத்து தெளிந்தேன் –
சத்வாத் சஞ்சாய தேஜ்ஞ்ஞானம் -என்றது இறே -தெளிந்த படி
எங்கனே என்னில் –
த்வாம் புருஷோத்தமம் -என்றும் –
வாசுதேவ குமாரராய் -ஆஸ்ரித சுலபனான தேவரீரை – என்றும் –
புருஷோத்தமம் –என்றும் -அதோச்மிலோகேவேதேச பிரதித புருஷோத்தம -யோ மா மேவ மசமூடே ஜாநாதி புருஷோத்தமம் -என்று
தேவரீர் அருளிச் செய்த படி -பரம புருஷன் என்று -இப்போது தெளிந்தேன் என்று –போற்றிட –
இப்படி குணி நிஷ்ட குணாபிதானம் பண்ணி ஸ்துதிக்க –

———-

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 –

இதிலே –தம்முடைய பூர்வ வ்ர்த்ததை அனுசந்தித்துக் கொண்டுபுகழ்ந்து தலைகட்ட வரிதான சீல குணத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து -மகா பிரபாவம் உடைய தேவரீரை –
அத்யந்த அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே
ஸ்துதியாது ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே –
ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என் மனசு ஆறி இராது –
இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில் என்ன வோடுகிறதோ என்று
நான் அத்தை நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –

நாளும் என் புகழ்கோ வுன சீலம் -ஸ்ரீ திருவாய் மொழி -9- 3-10 – -என்னுமா போலே –
புகழ்ந்து தலைக் கட்ட-வரிதான சீலகுணத்தை உடையவரே –
தேவரீருடைய கல்யாண குணங்களை விவேகித்து லோக பிரசித்தமாம்படி பேசுவேன் ஆகில் –
வசிஷ்ட குணங்களை சண்டாளன் வர்ணித்து பேசுகை -அவற்றுக்கு அவத்யமாய்த் தலைக் கட்டுமா போலே –
அது இழிவாக நிற்கும் ..
அப்படி பேசுகிறதைத் தவறில் -தேவரீர் குணங்கள் தனக்கு உத்கர்ஷமாய் இருக்கும் என்று கொண்டே-இரா நிற்கச் செய்தேயும் –
என்னுடைய மனச்சானது -தேவரீர் குணங்களை ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 1-1 – –
என்னுமா போலே யிரா நின்றது -என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறது என்று -பீதனாகி நின்றேன் –

போற்றரும் சீலத்து இராமானுச
எத்தனையேலும் தரம் உடையார்க்கும் ஸ்துத்துதித்து தலைக் கட்ட அரிதான –சீல குணத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இவருடைய சௌசீல்யம் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் – ஊமை -முதலானவர்கள் இடத்தில் காணப்பட்டது இறே –
நாளும் என் புகழ் கோ வுன சீலமே -என்றும் சீல ஏஷா -என்றும் சொல்லப்படுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக் கட்டிலும் –
இவருடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக்கட்ட அரிதாய் இருக்கும் என்று காணும் என்பதே -இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

போற்றரும் –இராமானுச –
சீலம் எல்லை இல்லாதவர் ஆதலின் -அக்குணம் புகழ்ந்து தலைக் கட்ட அரிதாய் ஆயிற்று –
ஸ்ரீ ஆழ்வானும் ஆசைப் படும் வகையில் -ஊமை ஒருவனோடு பழகி -தம் தாளை அவன் மத்தகத்திலே வைத்து –
உய்வித்த வரலாற்றினால் -ஸ்ரீ எம்பெருமானார் சீலம் -எல்லை கடந்தமை அறியலாம் –
ஸ்ரீ பகவானுடைய சீல குணத்தை -நாளுமென் புகழ் கோ உன சீலமே – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் போற்ற அரிதாக கூறினார் –
ஸ்ரீ பகவான் மனிசர் பிறவி யிற்றொன்றி கண் காண வந்ததை –
சீல க ஏஷ-இது என்ன சீலமோ -என்று போற்ற அரிதாக கூறினார் ஸ்ரீ ஆழ்வான்
அவர் சரண் கூடிய ஸ்ரீ அமுதனாரோ ஸ்ரீ எம்பெருமானார் சீலத்தை போற்ற அரிதாக அருளிச் செய்கிறார் .

போற்றரும் சீலத்து ராமானுச-
நேராக முகத்தை பார்த்து அருளும் படி உள்ள சீல குணம்

————–

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

ஒன்றும் பொய் இல்லை –
மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,
பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.
அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை;
பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.

போற்றுமினே –
நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல் உண்டான
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ?
அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே. ‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல்,
சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.

பரத்வ பிரகாசம் -சௌசீல்யம் சௌசீல்யாதி
குணங்களும் பொலிந்து -தோற்றுமே-
பரி பூர்ணனாக நிற்கும் பிரகாரம் -அர்ச்சாவதாரம் -பரத்வம் என்று சங்கிக்க வேண்டாம் — இவனையே ஸ்துதியுமின்

————-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

புணர்த்த கையினராய் –
அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கை ஒத்துச் செல்லுங்கோள் கண்டீர். என்றது,
வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;
“துன்பமொரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்-என்பது, கம்பராமாயணம்.
இல்லையாகில், “பரவசப்பட்டவர்களாய் நமஸ்காரம் முதலான காரியங்களைச் செய்தார்கள்” என்கிற கண்ணழிவிலே
செலவு எழுதுவர் கண்டீர் என்றபடி.

அடியேனுக்கும் போற்றுமினே
நீங்களும் அவனைப் போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்க வேண்டும்.
அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே,
இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; “முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படி யன்றோ இருப்பது.
நோ பஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.

அடியேனுக்கும் போற்றுமின்
அடியேன் இடையாட்டத்தையும் அத் தலைக்கு அறிவிக்க வேண்டும்.

————

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு  சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-

பூ மகன்
இந்த விபூதி

புகழ் வானவர்
லஷ்மி சம்பன்ன -பால -18-28–போலே அங்குள்ளார்

போற்றுதற்கு ஆமகன் –
நாவேவ யாந்தம் உபயே ஹவந்தே –
இரண்டு கரையில் உள்ளாறும் நடுவே போகிற ஓடத்தை அழைக்குமா போலே

அணி வாணுதல் தேவகி-
அழகிய ஒளியை உடைத்தாய்
வேறு ஒரு ஆபரணம் மிகையான நுதலை யுடைய தேவகிக்கு

மாமகன்
அவள் வளர்த்த செருக்காலே மகன் அல்ல -உடன் பிறந்தான் என்னலாம் படி –
மிக்க மகன்
தாய் வழியால் வந்த ஏற்றம் ஒன்றுமேயோ உள்ளது -என்ன –

மிகு  சீர் வசுதேவர் தம்- கோமகன்-
கோவான மகன் –
சக்கரவர்த்திக்கு போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்

அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக்   கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை

வரில் –
இரண்டு பிறப்பாலும் உள்ள -இருவர் சாயையும் தோற்ற -நடையிலே நடந்து வருமாகில்

கூடிடு கூடலே-
நீ கூடி என்னையும் அவனையும் கூட்டு –

————-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
ஸ்ரீ இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-100 –என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

இப்பாட்டிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே
அலங்கரித்து ஸ்தாவர பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹ அதிசயத்தை கொண்டு
திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ –ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று
பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான
தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

தமக்கு நிரூபகமாக உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய திரு மார்விலே –
இறையும் அகலகில்லேன் -ஸ்ரீ திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம் பண்ணா நிற்பாளாய்–
ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் —

போற்றுதல் -வணங்குதல் –புகழ்தலுமாம்-

இத்தால்
1-ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-ஸ்வ கடாஷ விசேஷங்களாலே
உண்டாக்கி யருளும் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும் –
2-ப்ராப்யம் தான் ஸ்ரீ ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
3-அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
4-இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே

ஸ்ரீ தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
ஸ்ரீ பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை –
ஸ்ரீ பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் –போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே பொருந்தினவள் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று –
நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு –மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது
இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்

————-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

உன் பொற்றாமரை அடியே
மகார்க்கமுமாய்–போக்யமுமாய்–பிராப்தமுமாய்–இருந்த திருவடிகளிலே –
அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
உன் பொன்னடி–உலகம் அளந்த பொன்னடி இல்லை–காடுறைந்த பொன்னடி வேண்டாம்
உலகம் அனைவருக்கும்–வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே
மண் சட்டி தொடக் கூடாது -துத்தம் ஆன காலம்–பித்தளை செப்பு -தொட்டாரே தொடலாம் சுத்தி பண்ணலாம்
வேறு யாரும் தொடக் கூடாது–வெள்ளி யார் தொட்டாலும் சுத்தி–தங்கம் சுத்தி இல்லா விடிலும் யாரும் தொடலாம்
உபயோக படுத்தின வெள்ளி நெருப்பில் காட்டி–தங்கம் தோஷம் இல்லை -சாஸ்திரம்
பொது நின்ற பொன்னம் கழல்–விட்டால் பிழைக்க ஒண்ணாது–பொன் தாமரை அடி
வெறும் பொன் இல்லை–சாதனம் சாத்தியம் இரண்டும் பூர்ணம்–தாமரை பொன் அடி பிராப்ய பிராபக
த்வம் மதியம் தனம் பாத பங்கஜம்–பொன்னும் பூவும் புறம்பே தேட வேண்டாம்–உன் பொன் தாமரை அடி

போற்றும்-
போற்றுகை யாவது ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –
பிராப்தமாய்–ஸ்ப்ருஹணீயமாய்–சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே–
பரம போக்யமான-உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு-பிரயோஜனத்தைக் கேளாய் –

பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் —
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே-அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –
அவனும் இவர்கள் பேச்சு அன்றோ -என்று கேட்டான் –
கீதை தான் ஆசார்யன் அர்ஜுனன் சிஷ்யன்–திருப்பாவை -ஆண்டாள் ஆசார்ய ஸ்தானம் அவன் கேட்க –

போற்றும் பொருள்
சொல்லத் தொடங்கினவாறே–சிவந்த போதரிக் கண் அழகை–கோவை கனிவாய் பழுப்பும்
இவர்கள் பொற்றாமரை அடியில் கண்ணை வைத்து–அந்ய பரனாய் இருந்தான்
மையல் மிக்கு வெறித்து பார்த்து இருக்க –

கேளாய் –
முதுகில் தட்டி பராக்கு பார்க்காதே–வார்த்தை சொல்லா நிற்கும் பொழுது கேளாய் சொல்வதால் அந்ய
மாஸூச -சோக ஜனகம் போலே–கேளாய் என்பதால் கேளாமல் பராக்கு பார்த்து இருக்க ஸ்தம்பித்து இருக்க
எங்கள் பிராப்யம் அழித்து உன் பிராப்யம் பெறப் பார்ப்பது–
அடியை விட்டு தொடையை தட்டுகிறார்கள்
அத்யாபயந்தி ஓதுவிக்க இழிந்தவள்-
ஸ்ருனு அர்ஜுனன்–தூங்கி இருப்பவனை எழுப்பி –
எப்பொழுது தூங்கினான் தெரியாமல் அர்ஜுனன்–கேளீரோ பெண்களுக்கு கிருத்யாம்சம் சொல்லி

கேளாய்–
பாகவதர்கள்–இவனுக்கு கர்தவாம்சம் சொல்ல கேளாய்–எனக்கு உங்கள் பேச்சே அழகு–பொருள் கேள்வியாக
உசித மாடு மேய்க்கை தவிர்ந்து–இற்றைக்கு இதுவே–நீ கேளாய்
சீரிய சிங்காசனம்–நீ போற்றும் பொருள் கேளாய்-
கிரமத்தில் செய்வோம் ஆகட்டும் பார்க்கலாம் -ஆறி இருக்க ஒண்ணாது
த்வரிக்க–பேறு உங்கள் நீங்கள் த்வரிக்கை–இவ்வளவாகில் துடித்தது நீ தான் -யோசனை செய்து பார்

கேளாய்
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –

———-

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10–

ஸ்ரீ பேய் ஆழ்வாருடைய ஸ்ப்ர்ஹநீயமான திருவடிகளை ஸ்துதிக்கிற ஸ்ரீ எம்பெருமானார்-விஷயமான ப்ரீதியாலே பரிஷ்கரிக்க பட்டவர்களுடைய
ஸ்ரீ பாதங்களை தம்தாமுடைய தலை மேல் தரிக்கும்-சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் ஸ்ரீ மான்கள்

பொன்னடி போற்றும் –
பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம் ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை
மங்களா சாசனம் பண்ணுகிற -சேஷத்வ அநு ரூபமாக -அடிமை தொழில் செய்கை தவிர்ந்து –
ச்ப்ர்ஹநீயம் ஆகையாலே பிரேம பரவசராய் கொண்டு மங்களா சாசனம் பண்ணத் தொடங்கினார் காணும் –
போற்றுதல்-புகழ்தல்

பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில்
மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –

யோ நித்ய -அச்சுதன் திருவடி தவிர மற்ற எல்லாம் புல்-அப்புறம் காட்டி கொடுத்த பின்பு .
தமிழ் தலைவன் பொன் அடி-அச்சுதன் திருவடி தவிர புல்-முதல் நிலை -இவர் காட்டவே கண்டதால்
சரம பர்வ நிலைக்கு வந்தார் ஸ்வாமி –என்றவாறு
ஸ்ரீ வைஷ்ணவ லாபமே பேய் ஆழ்வார் மூலம் தானே.
விஷ்ணுவால் வைஷ்ணவன் ஆக முடியாது
ஸ்ரீ தேவியால் ஸ்ரீ வைஷ்ணவன் ஆக முடியாதே
பூமா தேவி நீளா தேவி நித்யர் ஆழ்வார் ஆசார்யர் நம் போல்வார் தானே மிதுனத்தில் கைங்கர்யம்
செய்து ஸ்ரீ வைஷ்ணவர் என்று பட்டம் பூண்டு மகிழலாம்

இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –

பொன்னடி-பத பிரயோகம் -அருளிச் செயல்களில் –
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-பெரிய திருமொழி -6-9-5-

ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்-திருப்பொலிந்த பொன்னடி

——–

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

பொய்த்தவம் -சாஸ்திர விஹிதமான தபசு –
ராவண சந்யாசனம்-காலநேமி ஜபம் போலே –

போற்றும் –
அசாஸ்த்ரா விஹிதம் கோரம் தப்யந்தே தபோ ஜனா -யஜந்தே நாம யஜ்ஞைச
தம்பே நாவிதிபூர் வகம் -கர்சயச்சசசரீராணி-பூதக்ராமமசெதனம் – மாஞ்சை வாந்தஸ் சரீரச்த
தான்வித்யா சூரநிச்சயான் -என்கிறபடி –
அசா ஸ்த்ரீயங்களாய் -அயதா பூதங்களான -விஷய விரக்தி – பரஹிம்சா நிவர்த்தி -குரு சேவாதிகளான-
தபச்சுக்களை ஆசரித்துக் கொண்டு போரும் —
இவர்கள் தான் வெளிக்கு செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -போலே காணும் இருப்பது –

புலச் சமயங்கள் –
நீச சமயங்கள் -சைவ -மாயாவாத -சாக்தேய -காணாபத்ய – சார்வாக -பௌததாதி சமயங்கள் –

நிலத்தவிய –
பூ லோகத்தில் பஸ்மாம் படி -சமிதோதய சங்கராதி கர்வ -காதாதர தாகாதா நாம் -இத்யாதிகளிலே -சொல்லுகிறபடியே –
அவை எல்லாம் இந்த பூ லோகத்தில் அவியும்படி
யஜ்ஜ மூர்த்தி யாதவ பிரகாசன் -முதலானோரை சிஷித்து -அநு கூலராகப் பண்ணியும் –
ஸ்ரீ திரு நாராயண புரத்தில் பௌத்தரை நிரசித்தும் -அவற்றை பஸ்மாசாத்தாம் படி
பண்ணி அருளினார் என்று -சர்வ லோக பிரசித்தம் இறே –

கைத்த –
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கீதா பாஷ்ய வேதார்த்த சங்க்ரஹாதிகளை அருளிச் செய்து -வியாக்யானம் பண்ணி அருளின –
அன்றிக்கே –
கைத்தல் –
அவற்றை விளக்கு பிணம் போலே நசிக்கும்படியாக நிரசித்த -என்னவுமாம்-

பொய்த்தவம் –கார் தன்னையே —
வேதம் அபௌருஷேயம் ஆதலின் அது உண்மை அல்லது கூறாது –
அதனை பிரமாணமாய் ஏற்காத நூல்கள் கூறுவன உண்மைக்கு புறம்பானவை- பொய்யானவை
அத்தகைய பௌத்த ஜைனாதி நூல்கள் உண்மையானவைகளை கூறாத பொய் நூல்களாம் –
அங்கனமே வேதப்பொருளை உள்ளவாறு காண்கிலாத குத்ருஷ்டி நூல்களும் பொய் நூல்களே யாம் –
அவற்றில் கூறப்படும் தவங்கள் மெய்யானவை என்று மயங்கி -அதன்படி ஒழுகுவோர் பயன் அடையாது பாழாகி விடுகின்றனர் –
பொய் நூலை மெய் நூல் என்றோதி மாண்டு -பெரிய திரு மொழி – 2-5 5-என்றார் ஸ்ரீ திருமங்கை மன்னனும்-

தவமாவது சாஸ்திர நெறிப்படி தன்னை வருத்தப்படுத்தி கொள்ளுகை –
வைராக்கியம் அகிம்சை சத்குருசேவை முதலியன தவங்கள் ஆம் -ஆயின் அவை வேத நெறியில் வகுக்கப் படாது
பொய் நூல்களால் புகட்டப்பட்டவை ஆதலின் பொய்த் தவங்கள் ஆம் –
கண்ணன் மீதான காதல் அடியாக விளையாத தலானும் –
கண்ணன் உகப்புக்கு என்று கருதாத ததலானும் –
கண்ணனைக் காட்டித் தருபவனான குரு விஷயமாக ஆகாத தாதலானும் –முறையே
வைராக்யமும் -அஹிம்சையும் -சத்குருசேவையும்–உண்மை தவங்கள் ஆகா –
அத்தகைய தவங்களை போற்றும் சமயங்கள் புலை சமயங்கள் என்று இகழுகிறார் ஸ்ரீ அமுதனார் –

புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –
புலை அறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் -திரு மாலை-7 – என்னும் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தி நினைவுறத் தகும் –
அதனை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
இவை நீச தர்சனம் ஆன படி எங்கனே என்னில் –
ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை –
ஈஸ்வரனையும் –ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
என்று வ்யாக்யானத்தில் விளக்கி இருப்பது இங்கு அறியத் தக்கது –

அஹிம்சையை விரதமாக கூறும் சமயங்கள்
வீணாக கீழ் கூறியபடி -பொய் விரதத்தை கைக் கொண்டு ஒழுகும் படி செய்து -பல ஏமாந்த மாந்தரை
ஹிம்சிப்பதனால் -புலை சமயங்கள் ஆயின –
எந்த ஜீவனுக்கும் ஹிம்சை செய்யக் கூடாது என்று கூறும் ஜைனர்கள் –
தங்கள் கூற்றுக்கு முரண்பாடாக கேசத்தை பிடுங்கிக் கொண்டு தங்களுக்கே ஹிம்சை செய்து கொள்வதனால்
அவர்கள் சமயம் புலை சமயம் ஆகிறது என்க –
வேதனை செய்கை வெறும் மறமென்று
விளம்பி வைத்தே மாதவம் என்று மயிர் பறிப்பார் -ஸ்ரீ பரம பத பங்கம்-
வேதனை செய்கை-ஹிம்சிக்கை
வெறும் மறம் -வீணான செயல்-என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் இங்கனமே பரிஹசிப்பதையும் காண்க –
ஜைனர்கள் – -தலை மயிரை பிடுங்கி விடுதல்-என்னும் விரத்தைக் கைக் கொண்டு
முக்தி பெறலாம் என்று சொல்லுகின்றனர் –
இங்கனம் பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்களை இந்நிலத்தில் நிற்பதற்கு இடம் இன்றி அழிந்து போம் படி
தம் மெய் ஞானத்தால் கடிந்து மக்களை மறை நெறியிலே உய்த்து வாழ்வித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் என்க

மெய் ஞ்ஞானம் ஆவது தத்துவத்தை உள்ளபடியே அறிதல் –
புலைச் சமயங்களை பற்றி பொய்த் தவங்களை ஏற்று நிற்பாரையே அச் சமயங்களை யவித்து மெய் ஞான நெறியாகிய
தமது நெறியிலே உய்த்து உபகரிப்பவர் –
அங்கன் அல்லாது
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய் ஞானத்தராக ஸ்ரீ அமுதனார் அவரைக் கூறினார் என்க

மெய் ஞானத்து –
யதா வஸ்த்தித தத்வ விஷயிக ஜ்ஞான யுக்தரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

என்னும் கார் தன்னையே
இவராகிற மேகத்தை -வேத மார்க்க பிரதிஷ்டாபனம் பண்ணி சர்வ லோகத்தையும் ரஷித்தது ஒரு ஔதார்யமாக நினைத்திலர் –
ஆர்த்த அபராதியான காகாசுரனை சக்கரவர்த்தி திருமகன் ரஷித்தால் போலே –
அப்படிப் பட்ட தம்மையும் ரஷித்து அருளின படியால் -ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும்
வர்ஷூகவலாகம் போலே இருந்தார் என்று ஸ்லாக்கிக்கிறார் –
கார் தன்னையே -என்றது முற்று உவமை –

————

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை -அந்த குணஜிதராய்க் கொண்டு ஏத்தா நிற்ப்பராய்-
ஸ்வ சம்பந்த்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல-பரம பாவன பூதராய்-

போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் -என்பான் என் என்னில் –
அதுக்கு குறை இல்லை -விரோதி நிரசனம் பண்ணின உபகாரத்துக்குத் தோற்று – ஸ்துதிக்கிற மாத்ரம் ஒழிய –
தத் உபாசனம் அல்லாமையாலே .

போற்றும் –
ஆஸ்ரயித்து இருக்கிற மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கிற
போற்றுதல் -புகழ்தல் -விநாசாய ச துஷ்க்ர்தாம் –என்கிறபடி ஆஸ்ரித விரோதி நிரசன சீலமாகிற குணத்திலே
தோற்று ஏத்தா நின்றார்கள் காணும் –
மகா பாராத பாஞ்சராத்ராதிகளாலும் -நம்முடைய பூர்வாச்சார்யர்களாலும் –
பிரம ருத்ர அர்ஜுன வியாச ககுஸ்த ஜாமதக்னியாதிகள் அனுபாச்யர் என்று பஹூ முகமாக சொல்லி இருக்க
எம்பெருமானார் -பரசுராம ஆழ்வானை ஏத்துகிற இது -சேருமோ என்னில் –
அந்த அவதாரம் எம்பெருமானுடைய அஹங்கார யுக்த ஜீவ ஆவேசம் ஆகையாலே -அவனாலே செய்யும் அம்சத்துக்கு
எம்பெருமானார் ஈடுபட்டு ஸ்துதித்தார் என்று சொன்னேன் இத்தனை ஒழிய
தத் உபாசனம் பண்ணுகிறார் என்று சொல்லாமையாலே விரோதம் இல்லை –
மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி -என்றும் –
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அருளிச் செய்ததும் விரோதி நிரசன ஸ்வ பாவத்துக்கு தோற்று –

புனிதன் –
பகவத் மங்களா சாசனத்தாலே பரிசுத்த ஸ்வ பாவராய் -தம்மை ஆஸ்ரயித்தவர்களையும் –
ஆத்மசாம்யா வஹத்வாத் -என்று சொல்லப் பட்ட -ஸ்வ சாம்யத்தை உடையராம்படி பண்ண வல்ல பாவனர் –
புனிதன் -சுத்தன் –

போற்றும் புனிதன்
இங்குப் போற்றுதல் வழி படுதல் அன்று
உலகினுக்கு உதவி புரிந்தமைக்கு தோற்றி நன்றி உடன் புகழுதல்-என்று உணர்க –
ஸ்ரீ பரசுராமனை தெய்வமாக கொண்டு வழி படலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கு ஏற்ப
அங்கனம் உணர்தல் வேண்டும் –

அனர்ச்ச்யா நபி வஷ்யாமி ப்ராதுர் பாவான் யதாக்ரமம் -என்று தொடங்கி
பூஜிக்கத் தகாத அவதாரங்களையும் முறைப்படி சொல்வேன் -என்று தொடங்கி
அர்ஜுனோ தன்வினாம் ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகான் ருஷி –
வில்லாளிகளுள் சிறந்த ஸ்ரீ கார்த்த வீரியர்ஜுணனும் –
பெரிய ருஷியான ஸ்ரீ பரசு ராமனும் -என்று பரசு ராமனையும் எடுத்துள்ளமை காண்க –

பூஜிக்காமைக்கு ஹேது –
ஆவிஷ்ட மாத்ராச்தே சர்வே கார்யார்த்தம் அமிதத்யுதே -பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து உள்ளமை மட்டுமே
இவர்களிடம் உள்ளது -என்று பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து அவர்கள் இடம் இருப்பினும்
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாக்களாக அவர்கள் இருப்பதே என்று ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதையில் கூறப்பட்டு உள்ளது
இதனால் ஸ்ரீ பரசு ராம அவதாரம் பத்து அவதாரங்களில் ஓர் அவதாரமாக கருதப் படினும் –
ஸ்ரீ இராமன் போலவும் ஸ்ரீ கண்ணன் போலவும் சாஷாத் அவதாரம் அன்று –
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாவின் இடம் பகவான் ஆவேசித்த அவதாரமே என்பது -தெளிவு

ஆவேச அவதாரம் இரண்டு வகைப்படும் .
ஸ்வரூப ஆவேசம் -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபமே ஒரு கார்யத்துக்காக ஒரு ஜீவான்மாவிடம் விசேடித்து புக்கு நின்றால் –
சக்தி ஆவேசம் -ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்வரூபத்தால் அன்றி சக்தியைக் கொண்டே உட்புக்கு நடாத்துதல் –
என்பன இவ்விரு வகைகள்
சக்தி ஆவேச அவதாரமாக -ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனன் கருதப்படுகிறான் .

ஆக சாஷாத் அவதாரம்-என்றும் ,ஸ்வரூப ஆவேச அவதாரம் என்றும் -சக்தி ஆவேச அவதாரம் என்றும்
அவதாரங்கள் மூன்று திறத்தனவாம் .
ஆயினும் சாஷாத் அவதாரம் ஸ்வரூப ஆவேச அவதாரத்தை விடப் பலம் வாய்ந்தது .
ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரத்தை விட பலம் வாய்ந்தது .
ஆதல் பற்றியே ஸ்ரீ இராமன் இடம் ஸ்ரீ பரசுராமனும்
ஸ்ரீ பரசு ராமனிடம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுணனும் தோல்வி கண்டனர் .
அவதாரங்கள் அனைத்தும் ஒரே தரத்ததனவாயின் வெற்றி தோல்விக்கு இடம் இல்லை அன்றோ .
இவ்விஷயங்கள் -விதிசிவ வியாச ஜாமதக்ன்யார்ஜுன -என்று தொடங்கும் ஸ்ரீ தத்வ த்ரைய சூர்ணிகை வ்யாக்யானத்திலும் –
என் வில் வலி கண்டு -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- – வ்யாக்யானத்திலும் ஸ்ரீ மணவாள மா முநிகளால் விளக்கப் பாட்டு உள்ளன ..

ஆக .முக்தியை கோருமவர்களுக்கு வழிபாட்டிற்கு உரிய தேவன் ஆகாமையின்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பரசுராமனை துதித்தனரே யன்றி வழி பட்டிலர் என்று தெளிக-
இங்கனமே ஸ்ரீ பெரியாழ்வார் -மன்னடங்க மழு வலம் கைக் கொண்ட இராமன் –5 4-6 – – – என்றும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் – வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -5 6-1 – –
என்றும் அருளிச் செய்தவை விரோதிகளைக் களைந்தமைக்கு தோற்றுத் துதித்தவைகளே என்று கொள்க –
புனிதன் –
தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் –

————

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- –

சர்வ தபஸ்ஸூக்களிலும் வைத்துக் கொண்டு -விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் –
தம்முடைய வைபவத்தைச் சொல்லி புகழும்படியான ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது
என் இடத்தில் சேரக் கண்டிலேன் –

நற்றவர் போற்றும்
தவம் –தபசு
நல தவம் -வி லஷணமான தபசு –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ-என்றும் –
சத் கர்ம நிரதாஸ் சூத்த -சாங்க்ய யோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடிதமீமபி -என்னும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே -பிரசம்சிக்கப் பட்டதாய் –
அர்ஜுனனுக்கு மோஷ உபாயங்களை உபதேசிக்கும் இடத்தில்
முந்துற முன்னம் -கர்ம யோக ஞான யோக பக்தி யோக அவதார ரகஸ்ய புருஷோத்தம வித்யா நாம
சங்கீர்த்தன ரூப இதர உபாயங்களை உபதேசித்தவாறே –
அவற்றைக் கேட்டு சோக விசிஷ்டனானவனைக் குறித்து அவனுடைய சோகாபநோத நார்த்தமாக உபதேசிக்கப்பட்ட அர்த்தமாய் –
அத ஏவ சுகமாய் -அவிளம்ப்ய பல ப்ரதமாய் –ஸ்வரூப அநு ரூபமாய் -அத்யந்த விலஷணமான –சரணாகதி தர்மத்திலே –
அத்யபிநிவிஷ்டரான –ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் முதலான முதலிகளும் –
லோகத்தாரை உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த வருடைய வைபவத்தை அறிந்து –

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரஷரி காமவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாதரசா -என்றும்
புண்யம் போக விகாசாய பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதயா-ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிந -என்றும்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு -ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந அத்ர சம்சய -என்றும்
குதர்ஷ்டி குஹ நாமுகே நிபதித பரப்ரஹ்மண கரக்ரஹ விசஷணே ஜயதி லஷ்மணோ யம் முனி -என்றும் –
ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப ப்ரத்யஷ தாமுபக தஸ்த்வி ஹ ரங்கராஜ வச்யஸ் சதாபவதி தே
யதிராஜ தஸ்மாத் சக்தஸ்ஸ்வ கீய ஜன பாப விமோச நேத்வம் -என்றும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்றும் சொல்லிப் புகழும்படி எழுந்து அருளி இருக்கிற –

நல் தவர் போற்றும் இராமானுசனை
த்வயார்த்த நிஷ்டர் ஆதலின் அத்தகையோர் அவரைப் போற்றுகின்றனர் .
தவம்-சரணாகதி –
தவங்களுக்குள் தனக்கு மேற்பட்டது ஓன்று இல்லாத தவம் ந்யாசம் எனப்படும் சரணா கதி – என்று வேதம் ஓதுகிறது .
ஏனைய தவங்களில் நின்றும் மேம்பாடு தோற்ற –நல் தவம் –என்று விசேஷித்தார் –

நன்மையாவது –
எளிதில் கை யாளலாம்படி இருத்தலும் –
காலம் தாழ்த்தாது பயன் அளித்தாலும் –
ஜீவான்ம ஸ்வரூபத்தின் பார தந்த்ரியத்திற்கு இயைந்து இருத்தலும் .

ஏனைய தவங்கள்-சாதனாந்தரங்கள் -அரும் பாடு பாட்டு கைக் கொள்ள தக்கனவாய் உள்ளன .
காலம் தாழ்த்து -அதாவது -பிராரப்த கர்மம் தீர்ந்த பின்னர் பயன் அளிப்பன –
அஹங்காரம் கலந்தவை யாதலின் ஆன்மாவின் பாரதந்த்ரியம் நிலைக்கு இசையாதன -என்றுணர்க –
அத்தகைய நல் தவம் உடையவர்கள் -சரணா கதி நிஷ்டர்கள் –
எம்பெருமானார்
தான் சரணா கதியைக் கைக் கொண்டும் –
உபதேசத்தாலும் -நூல்களாலும் உலகினரை சரணா கதி நெறியில் ஒழுகச் செய்தும் –
தாம் செய்த சரணா கதியில் செருகி உலகினர் உய்யுமாறு வரம் பெற்றும் –
சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின பெருதவிக்குத் தோற்று
நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர்-

———

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் –

பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக
இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி –லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்
தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்
நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்

போற்றுவனே –
ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் –
குரும் பிரகாச எத்தீ மான் – என்கிறபடியே
அவர் தம்முடைய குண–கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –சேஷ்டிதங்களை புகழக் கடவேன்
என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

மறை வாதியராம் புலி –போற்றுவன்
இயல்பினில் மிகவும் கொடியவைகளான புலிகள் மிகுந்து சாதுவான ஏனைய மிருகங்கள் நலிந்து திரியா நிற்க –
வலி மிக்க சீயம் வந்து வனத்தை காக்க முற்படுவது போலே –
மிகவும் கொடியவர்களான மறைவாதியர் என்னும் புலிகள் மிகுந்து -சாதுக்களான உலகினரை நலிந்து திரியா நிற்க
அப் புலிகளை தொலைக்க வல்ல – வலி மிக்க சீயமாய் வந்து புவனத்தை காக்க முற்படுகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

மறையைப் பிரமாணமாக மதிக்காத புறச் சமயிகள் போல் அல்லாமல் – அதனை பிரமாணமாக ஏற்று இருந்தும் –
அம்மறை கூறும் நேரிய பொருளை ஏற்காமல் – அவப் பொருள் சொல்லி வாதம் புரிந்து -சாதுக்களான உலகினரை கலங்கச் செய்து –
மறை நெறிக்கண் நடந்து உய்ய விடாது நலிகின்றமையின் மறை வாதியார் கொடியவர்கள் ஆயினர் -என்க –
மறை வழி ஒழுகும் மாந்தர் புறச் சமயிகளின் நின்றும் எளிதில் தப்பலாம் –
மறை வாதியரின் மாற்றம் ஏமாற்றம் விளைவிப்பதாய் இருத்தலின் பசுத்தோல் போர்த்த புலி போன்ற அவர்கள் இடம் இருந்து
தப்ப வழி இன்றிப் படு நாசத்திற்கு உள்ளாக நேரிடுகின்றது .
இங்கனம் தப்ப வழி இன்றி மறை முகமாக பாய்ந்து மாய்ந்து போகும்படி செய்தலினால் -மறைவாதியர் -புலி யாயினர் -என்க .

இங்கு ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் –2 36- –
அந்யைராம் நாயா சர்ச்சா கவசத்ருதி கனத் கோமுகைர் த்வீபிபிச்ச -என்று
வேதத்தை பற்றிய ஆராய்ச்சி என்னும் கவசம் அணிந்தமையினால் விளங்குகின்ற பசுவின் முகம் கொண்ட மற்றவர்கள் ஆகிற –
மறை வாதியர்களாகிற – புலிகளினாலும் -என்று வேதாந்த தேசிகன் வருணித்து இருப்பது நினைத்தற்கு உரியது
பசு முகமாய் இருப்பதில் ஏனைய பசுக்கள் தம்மில் ஒன்றாக கருதி -அவற்றைக் கிட்டுகின்றன –
அவை அவற்றை உண்மையில் புலி யாதலின் நலிகின்றன –
இங்கனமே மறையும் ஆராயும் மாண்புடையோர் என்று மயங்கி தம்மிடம் வந்த உலகினரை கலங்க வடித்து -நலிகின்ற்றனர்
மறை வாதப் புலிகள் -என்க –

மறை வாதியர் -சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் -மதத்தை சார்ந்தவர்கள் –
புலிகள் மிக்கு இருப்பினும் –வலி மிக்க ஒரு சீயம் அவற்றை தொலைத்து விடுவது போலே –
எம்பெருமானார் என்றும் ஒரு சீயம் -மறை வாதியராம் புலிகள் மிக்கு இருப்பினும் அவற்றைத் தொலைப்பதாயிற்று
மறை வாதியர்கள் மீண்டும் தலை எடுக்க ஒண்ணாதபடி –
அவர்கள் மதங்களைக் கண்டித்து -ஒழித்து அருளுவாராய் -இவ் உலகத்தில் அவதரித்தமையை அனுசந்தித்தபடி –

இவ்வாறு மறை வாதியரை வெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
ஸ்ரீ எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று–
இப்பாடல்களினால் மறைப் பொருள் இது தான் என்னும் முடிவுக்கு வந்து மறை வாதியரையும்-அம்முடிவுக்கு வரச் செய்து –
அவர்களை வென்று அருளினார் -என்பது கருத்து .

ஸ்ரீ மாறன் பசும் தமிழ் ஸ்ரீ எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே ஸ்ரீ கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
தமிழ் மறையும் ஆறு அங்கங்களும் -வட மொழி மறையின் பொருளை தெளிவுற உணர்த்துவனவாய் அமைந்துள்ளன –
இங்கனம் மறை வாதியரை மறைந்து ஒழிய செய்து மறைப் பொருளை நிலை நிறுத்துமாறு –
எம்பெருமானார் அவதரித்த விதத்தை போற்றுவேன் -என்கிறார் —

மின் உருவாய் முன் உரு பொன் உரு -வேதம் நான்காய் -தத்வ த்ரயங்களையும் காட்டினார் இத்தால்-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -மெய் மதிக் கடல் –

மூன்று முக்ய உத்சவங்கள்-

தாம் உகந்த உத்சவம் -மங்களாசாசன -கருட சேவை-உத்சவம்

தமர் உகந்த உத்சவம் -வேடு பரி உத்சவம்

தானான உத்சவம் -திருக் கார்த்திகை உத்சவம்

———

ஆழி எழ -திசை வாழி எழ-மங்களா சாசனம் உண்டே

மகா க்ரம -கிரமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –

திக்குக்கள் தோறும் நின்ற நின்ற நிலையிலே தேவ மனுஷ்யாதிகளுடைய மங்களா சாசன கோஷம் கிளம்பும்படி

திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம் ஸ்ரீகோதண்டம்
ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன
நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால், என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!

பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?

திசை வாழி எழ –
‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன!
‘அவை தமக்கு என் வருகிறதோ?’ என்று
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னா நிற்பார்கள் அன்றோ?
‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரிய வேண்டி இருக்குமன்றோ?
அன்றிக்கே,
திக்குகள் தோறும் அநுகூலருடைய’ வாழி வாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல்.
திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார்,
திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.

‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி;
ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலே காணும் இவர்கள் படுகிற பாடு.

பிள்ளை யுறங்கா வில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,
பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

———-

1-திருப்பல்லாண்டு -வீற்று இருந்து போற்றி -திருவாய் மொழி 4-5-1-

அங்கும் இங்கும்–8-3-இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு

மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத்  ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய்  நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –

சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை
சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை
சைதன்ய க்ர்த்யம் -அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும் ஸ்வாமிக்கு ச்ம்ர்த்தியை ஆசாசிக்கை இறே

வீற்று இருந்து போற்றி -திருவாய் மொழி 4-5-1—நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –

இத் திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )

நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?-இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியை யுடையவர் ஆகிறார்.

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக் கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறை மார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக் கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக் கொடுத்தான்;
விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்த மயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக் கொடுத்தான்;
பிறர் வாயால்என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.

அங்கும் இங்கும்–8-3-இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு

அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக

நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –

அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி

சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர்
என்னும் அளவும் செல்ல அறிக்கை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —

———–

2-பொலிக பொலிக பொலிக -திருவாய் மொழி -5-2-1-பாகவத மங்களாசாசனம்
அடியோமோடும் -திருமங்கை -திரு ஆழி -திருப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்திய ஸூரிகள் இங்கே வர,
அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-இத் திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய் மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து,
அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய் மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச் செய்வர்.

தம்மாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,
திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும்,
திருந்தாதாரை உபேக்ஷித்தும்,
இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-

‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு
மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –
அப்படியே யன்றோ செய்தது,
வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;
பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு

மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்
அத்தலைக்கு பரிகைக்கு  தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத்தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இறே

தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்

இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –

ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட –ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்

அப் பாஞ்ச சன்னியமும் –முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் –தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

———

3-போக்ய அதிசயத்தாலே -தம் நா எச்சில் கூடாது என்றும் -முகத்தை மாற வைத்து அருளியவை
அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு –
அப் பெரியவாய கண்கள் -அமலனாதி பிரான் -8-
அது காலனே -திருவாய் மொழி -9-5-7-பாதக அதிசயத்தை பற்ற -காட்டேன் மின் உம் உரு
கண மயில் அவை கலந்து -திருவாய் மொழி 10-3-1-

அப் பாஞ்ச சன்னியமும் –முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் –தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –

அப் பெரியவாய கண்கள் -அமலனாதி பிரான் -8-
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் –இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –

போக்யதா அதிசயத்தாலே –அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார்

ஸ்வபாவ சித்தங்களானஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –

அப்பெரிய -என்றதுக்கு-இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய் அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும்
மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்

————

4-பல்லாண்டு -நான்கு தடை சொல்லி -மனுஷ்ய -தேவ பிரம -பல பிரம்மாக்கள் -மங்களா சாசன
காலத்தைப் பெருக்கின படி அருளி

இது போலே அமலன் –என்னைத் தனக்காக்கின சுத்தி
விமலன் -என்னை தன் அடியார்க்கு ஆக்கின உத்தி
நிமலன் -பச்சை இடாதே இருக்க -என்னை திருத்திய சுத்தி
நின்மலன் -இவ்வளவும் தன் பேறாகவே செய்த சுத்தி

பல்லாண்டு –மறித்து -பல்லாண்டு என்கிறது என் என்னில் -அகவாய்  அறியாதவனுக்கு தெரியாமையாலே
பல கால் சொல்ல வேண்டி இருக்கும் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் -எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு
இரு கால் சொல்ல வேண்டா -இப் புநர் உக்திக்கு பொருள் என் என்னில் -அவனுடைய
சர்வஞ்ஞத்வத்தில் குறையால் அல்ல –ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய
பயம் ஷமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இ றே
பல்லாயிரத்தாண்டு
கீழில் பஹூ வசனத்தாலே வர்ஷங்களினுடைய அசங்க்யாத்வம் சொல்லி இருக்க இதுக்கு உதயம் இல்லையே என்னில் –
அவச் சேதகங்களுக்கு சங்க்யை இல்லாமையாலே காலாவச் சேதத்துக்கு தொகை இல்லை
ஆகையாலே அருளிச் செய்கிறார் -அவச் சேதகங்கள் ஆவன -சூர்யா பரிஸ் பந்தாதிகள்
அவச் சேத்யங்கள் ஆவன -ஷண  லவாதிகள் -வர்ஷத்துக்கு அவச் சேதகர் –தேவர்கள்
அத்தைப் பற்றிச் சொன்னார் கீழ் -பல வர்ஷத்துக்கு அவச்சேதகன் –ப்ரஹ்மா -அத்தை பற்ற-அருளிச் செய்கிறார் பல்லாயிரத்தாண்டு என்று
பல கோடி நூறாயிரம் என்று –ப்ரஹ்மாக்களுக்கு தொகை இல்லாமையாலே அருளிச் செய்கிறார் –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளாருக்கும் ஸ்வ சத்தை உள்ளளவும்
விஷய வைஷண்யத்தை பற்ற -அதி சங்கையும் மங்களா சாசனமும் நித்யமாக செல்லா நின்றது –
கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –

அமலன் –
ஸூத்தன் -என்றபடி
இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே-பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-

அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல்
தோஷம் தட்டாதே –அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி
பரமாத்மா அக்னியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்

அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –

அமலன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்த கதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்த கதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்ய நீகனாய் இருக்கும்

அமலன் -என்கிறது மலப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் –என்றது ஆயிற்று –

நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம்  இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் –பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச –ஆபிமுக்யம்
அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாதரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்

நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன பேறாக இருக்கை

நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ஸ்லேஷம் பண்ணலாம்படி
தன்  ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்

நிமலன்
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –-க்ருதக்ருத்யஸ் ததா ராம -என்கிறபடியே

அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை

நின் மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை –உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி –ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –

நின்மலன் –
சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்-அவிஜ்ஞாதா -என்றும் –என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –

————

5- வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் -திருவாய் மொழி -5-2-5-
ஒன்றும் தேவும் -கேட்டு சம்சாரம் திருந்தின படி –

வாழ் ஆள் -என்று-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இ றே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக் குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –

பட்டு -என்பது-
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-

நின்றீர்-
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –

உள்ளீரேல்-
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இறே இருப்பது
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார் தேட்டமாய் இறே இருப்பது –

இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து

அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய் மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்”

அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை –
ராக்ஷஸ தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத் தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக் கொண்டு,
ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில்
உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது,
“ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தின படி.
“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேட வேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு,
‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேட வேண்டும் படியாயிற்று என்றபடி.

————-

6-பல்லாண்டு கூறுவனே -ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனமாக கூறி –

மங்கையைர்  –தையல் -திருவாய் மொழி -10-3-11-ஒருத்தி பசு மேய்க்கைக்கு
போகாமே மீட்க்கைக்காக அருளியது -அடிச்சியோம் -தொழுததையோம் -என் ஆர் உயிர் -என் சொல் கொள் –
என்று சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் இறே

பல்லாண்டு கூறுவனே -ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனமாக கூறி –அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் –பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் –கூறுவன் –என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை –
அவனுடைய பிரிவு பொறுக்க மாட்டாமையாலே-ஒரு பருவத்தில் ஆயர் பெண்கள் கூறிய தொடையாய் –

தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –
அவை போன்று எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது -என்று பார்த்து-அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி
நப்பின்னை பிராட்டியின் தரமுடையவள் ஒருத்தி-பசு மேய்க்க போகாமை மீட்கைக்காக சொன்னவை ஆயிற்று –
இப்படியானால்-
அடிச்சியோம் -என்றும்-தொழுத்தையோம் -என்றும்
ஆழும் என் ஆர் உயிர் என்றும் –என் சொற்கொள் -என்றும்-
சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் அன்றோ –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பல்லாண்டு-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

April 22, 2021

திருப்பல்லாண்டு

தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தது

கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம:​ |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று

———-

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

பதவுரை

மல் ஆண்ட–மல்லர்களை நிரஸித்த
திண் தோள்–திண்ணிய தோள்களையுடையனாய்
மணி வண்ணா–நீலமணிபோன்ற திருநிறைத்தை யுடையனானவனே!
பல் ஆண்டு பல் ஆண்டு–பலபல வருஷங்களிலும்
பல் ஆயிரம் ஆண்டு–அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும்
பல கோடி நூறு ஆயிரமும்–இப்படி உண்டான காலமெல்லாம்
உன் சே அடி–உன்னுடைய திருவடிகளினுடைய சிவந்த
செவ்வி–அழகுக்கு
திருக்காப்பு–குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக.

பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிலேவந்து பரதத்வநிர்ணயம் பண்ணின பெரியாழ்வார்க்கு
அவ்வரசன் யானையின் மேலே மஹோத்ஸவம் செய்வித்தபோது அந்த உத்ஸவத்தைக்கண்டு ஆநந்திப்பதற்காக
ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க,
ஆழ்வார் ஸேவித்து வந்த அருமருந்தன்ன எம்பெருமானுக்கு எழும்பூண்டெல்லாம் அஸுரக்ஷ ஸமயமாயிருக்கிற இந்நிலத்திலே
யாராலே என்ன தீங்கு விளைகிறதோ என்று அதிசங்கைப்பட்டு
‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு பாடுகிறார். அதாவது – ஜய விஜயீபவ என்கிறார்.

ஆழ்வார் இப்படி அதிசங்கையாலே மங்களாசாஸகம் பண்ணுகிறாரென்று தெரிந்துகொண்ட எம்பெருமான்
‘ஐயோ! ஏன் இவர் இப்படி பயப்படுகிறார், எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல
தேஹ வலிவு நமக்கு உண்டென்பது இவர்க்குத் தெரியவில்லை போலும், அந்த வலிவைக் காட்டினோமாகில் இவருடைய அச்சம் அடங்கிவிடும்’
என்று நினைத்து, முன்னோ க்ருஷணவதார காலத்தில் தன்னைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்டுவந்த சாணூரன் முஷ்டிகன்
முதலிய மல்லர்களை நொறுக்கித் தள்ளின தன்னுடைய புஜபலத்தைக் காட்டினான்;
ஆழ்வாருடைய அச்சம் தணிவதற்காகக் காட்டின அந்த வலிவு ஆழ்வாருடைய பயம் அதிகரிப்பதற்கே காரணமாயிற்று.
புத்திரன் சூரனாயிருந்தால் அவனுடைய தாயானவுள் ‘இவன் ஒருவரையும் லக்ஷியம் பண்ணாமல் யுத்தம் செய்யப் போய்விடுவனே!
யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ’ என்று பயப்படுவதுபோல்
இவரும் அந்த மல்லாண்ட திண்டோள் வலிமைக்குப் பயப்பட்டு மீண்டும் மங்களாசாஸநம் பண்ணுகிறார்.

பல்லாண்டு என்று ஒரு தடவை சொன்னால் போராதா? ‘‘பல்லாயிரத்தாண்டு’’ என்றும் ‘‘பல்கோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என்றும்
அதிகமாகச் சொல்லுவானேன்? என்னில் ;
தாஹித்தவன் தாஹம் தீருகிறவரையில் ‘தண்ணீர், தண்ணீர்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பதுபோல்
இவரும் தம்முடைய அச்சம் அடங்குமளவும் மங்களாசாஸகம் ஓயமாட்டார்.

மல்லாண்ட என்றவிடத்தில் மல் என்ற சொல் மல்லர்களைச் சொல்லும். ஆயுதத் துணையின்றி தேஹ வலிவையேகொண்டு சண்டை செய்பவர் மல்லர்.
இனி, மல்லாண்ட என்பதற்கு ‘பலசாலியான’ என்றும் பொருளுண்டு. மல் – வலிவு.
‘‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’’ என்று திருவடிக்கு மாத்திரம் மங்களாசாஸநமிருந்தாலும்
இது திருமேனி முழுமைக்கும் மங்களாசஸநம் பண்ணினதாகும். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே
சேவடி செவ்வி திருக்காப்பு என்றார். செவ்வடி என்றாலும் சேவடி என்றாலும் ஒன்றே.

இந்தப் பாசுரம் பல்லவிபோல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது.
இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

————

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

பதவுரை
அடியோ மோடும்–தாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும்
நின்னோடும்–ஸ்வாமியான தேவரோடும்
பிரிவு இன்றி–பிரிவில்லாமல்
ஆயிரம் பல்லாண்டு–(இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும்
வடிவு ஆய்–உனக்கு நிரூபகபூதையாய்
நின்–உன்னுடைய
வல மார்பினில்–திருமார்பின் வலது பக்கத்தில்
வாழ்கின்ற–பொருந்தியிராநின்றுள்ள
மங்கையும்–நித்யயௌவநசாலிநியான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்
பல்லாண்டு;
வடிவு ஆர்-(உன்) திருமேனியை வ்யாபித்திருக்கிற
சோதி–ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
வலத்து–வலத்திருக்கையிலே
உறையும்–நித்யவாஸம் பண்ணுமவனாய்
சுடர்–பகைவரை எரிக்குமவனான
ஆழியும்–திருவாழியாழ்வானும்
பல்லாண்டு-;
படை–ஸேனைகளையுடைய
போர்–யுத்தங்களில்
புக்கு–புகுந்து
முழங்கும்–கோஷிக்கின்ற
அ–அளவற்ற பெருமையுடைய
பாஞ்ச சன்னியமும்–ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்
பல்லாண்டு – ; (ஏ ஈற்றசை. )

விளக்க உரை

சேஷபூதர்களான அடியோங்களூம் ஸர்வசேஷியான தேவரீரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெடுநாளளவும் மங்களமாக வாழ வேணும்;
பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்தியவாழ்ச்சியாகச் செல்லவேணும்;
திருவாழி யாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேணும் – என்று இப்பாட்டால்
உபய விபூதிகளோடுங் கூடின நிலைமைக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார்.
‘‘அடியோமோடும்‘‘ என்று இந்த லீலா விபூதியிலிருக்கிற தங்களையும்,
மற்ற மூன்றாலே, பரமபதமாகிய நித்யவிபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர்களையும் இப்பாட்டில் கூறியிருப்பதனால்
உபயவிபூதியுக்தனான எம்பெருமானுக்கு இப்பாசுரத்தால் பல்லாண்டு பாடினாராயிற்று.

எம்பெருமானுடைய மங்களத்தை மாத்திரமே அபேக்ஷிப்பவரான இவ்வாழ்வார் அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும்
ஏன் விரும்புகிறாரென்னில், மங்களாசாஸநம் பண்ணுவதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு
என்ன தீங்கு விளைந்திடுமோவென்கிற பயசங்கையினால் மங்களாசாஸநத்தில் ஊக்கமுடைய தம்முடைய மங்களத்தையும் விரும்புகிறார்.
ஆகவே, எம்பெருமானுடைய மங்களாசாஸநத்தின் அபிவிருத்திக்காகவே தம்முடைய ஸ்தைர்யத்தை வேண்டுகின்றாரென்க.

(வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை.) பெரிய பிராட்டியாராலே எம்பெருமானுக்கு மேன்மை உண்டாகின்றதென்பது
‘வடிவாய்’ என்ற விசேஷணத்தினால் விளங்கும்.
புஷ்பத்திற்குப் பரிமளத்தினாலும், ரத்தினத்திற்கு ஒளியினாலும் மேன்மையுண்டாகக் காண்கிறோமிறே.
மங்கை – எப்போதும் மங்கைப் பருவமுடையவள்; அந்தப் பருவத்துக்கு வயதின் எல்லை – பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும்.

ஆழ்வார்க்குக் கண்ணெதிரிலே விளங்குகிற சங்கை ‘‘அப்பாஞ்சசன்னியமும்’’ என்று (பரோக்ஷமான வஸ்துவைக் கூறுமாபோலே)
கூறலாமோவென்னில்; தம்முடைய கண்ணெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்லுகிறார் என்று கொள்க.
அல்லது, அன்று பாரதப் போரிலே அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்சஜந்யம் என்றும்,
அழகிய பாஞ்சஜந்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.

————–

வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

பதவுரை
வாழ் ஆள் பட்டு–உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான (எம்பெருமானுடைய) அடிமைத் தொழிலில் ஈடுபட்டு
நின்றீர்–நிலைத்து நின்றவர்கள்
உள்ளீரேல்–இருப்பீர்களாகில்
வந்து–(நீங்கள் எங்களோடே) வந்து சேர்ந்து
மண்கொள்மின்–(எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமவுங்கள்;
மணமும் கொள்மின்–(அந்த உத்ஸவத்துக்கு) அபிமாகிகளாகவும் இருங்கள்;
கூழ் ஆள்பட்டு நின்றீர்களை–சோற்றுக்காக (ப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை
எங்கள் குழுவினில்–எங்களுடைய கோஷ்டியிலே
புகுதலொட்டோம்–அங்கீகரிக்க மாட்டோம்; (எங்களுக்குள்ள சிறப்பு என்ன வென்கிறீர்களோ,)
நாங்கள்–நாங்களோவென்றால்
ஏழ் ஆள் காலும்–ஏழு தலைமுறையாக
பழிப்பு இலோம்–ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்கள்
(எங்களுடைய தொழிலோவென்னில்)
இராக்கதர் வாழ் இலங்கை–ராக்ஷஸர் வஹிக்கிற லங்கையிலிருந்த
ஆள்–ஆண் புலிகள் யாவரும்
பாழ் ஆக–வேரோடே அழிந்து போம்படி
படை–(வாநர) சேனையைக் கொண்டு
பொருதானுக்கு–போர் செய்த பெருமாளுக்கு
பல்லாண்டு கூறுதும்–பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்

விளக்க உரை

இவ்வாழ்வார் தனியராயிருந்து மங்களாசாஸநம் பண்ணுவதில் த்ருப்திபெறாமலும்,
‘போக்யமான வஸ்துவைத் தனியே அநுபவிப்பது தகாது’ என்கிற நியாயத்தைக் கொண்டும்
இன்னும் பல பேர்களையும் மங்களாசாஸநத்திற்குத் துணைகூட்டிக் கொள்ளவேணுமென்று நினைத்தார்.
உலகத்தில் எத்தனை வகையான அதிகாரிகள் இருக்கிறார்களென்று ஆராய்ந்து பார்த்தார்.
செல்வத்தை விரும்புமவர்கள், ஆத்மாநுபவக்கிற கைவல்யத்தை விரும்புமவர்கள், எம்பெருமானுடைய அநுபவத்தை அபேக்ஷிப்பவர்கள்
என்றிப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதைக் கண்டார்;
இம்மூவகை யதிகாரிகளில் செல்வத்தை விரும்புமவர்களும் கைவல்யத்தை விரும்புமவர்களும் ப்ரோஜநாந்தரபரர்களாயிருந்தாலும்,
அந்த அற்ப பலனுக்காகவாவது எம்பெருமானைப் பணிந்து பிரார்த்திக்கின்றார்கள் ஆகையால் அவர்களையும் திருத்திப் பணிகொள்ளலாம்
என்று ஆழ்வார் நிச்சயித்து மேற்சொன்ன மூவகை அதிகாரிகளையும் மங்களாசாஸநத்துக்கு அழைக்கவிரும்பி,
முதல்முதலாக, எம்பெருமானுடைய அநுபவத்தையே விரும்புமவர்களான ஜ்ஞாநிகளை அழைக்கிறார்.
‘‘அப்யர்ஹிதம் பூர்வம்’’ (எது சிறந்ததோ, அது முற்படும்) என்கிற நியாயத்தாலே
ச்ரேஷ்டர்களான ஞானிகளுக்கு முதல் தாம்பூலம் கொடுக்கிறார்போலும்.

பகவத் விஷயம் தவிர மற்ற விஷயங்களில் செய்கிற கைங்கரியம் எல்லாம் செய்வதற்குக் கஷ்டமாயும்,
கஷ்டப்பட்டுச் செய்தாலும் அந்த தேவதைக்கு த்ருப்திகரமல்லாமலும்,
ஒருவாறு த்ருப்திகரமானாலும் அற்பபலனைக் கொடுப்பனவாயும் இருப்பதால் அவை துயரத்தையே விளைக்கும்;
பகவத் விஷயத்தில் செய்யும் கைங்கரியமோ, எளிதாகச் செய்யக் கூரியதாயும், விரைவில் எம்பெருமானை உவப்பிக்க வல்லதாயும்,
சாச்வதமான பலனையளிப்பதாயும் இருப்பதால் அப்படிப்பட்ட பகவத் கைங்கரியத்தில் ஊன்றி யிருப்பவர்களை ‘‘வாழாட்பட்டு நின்றீர்’’ என்றழைக்கிறார்.
அப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும் அருமைப்படுவர்கள் என்பதைக் காட்டுகிறார் ‘‘உள்ளீரேல்’’ என்று.

(மண்ணும் மணமும் கொண்மின். ) மண் கொள்ளுகையாவது -மஹோத்ஸவத்தில் அங்குரார்ப்பணத்திற்குப் புழுதி மண்சுமப்பது.
மணங் கொள்ளுகையாவது – அந்த மஹோத்ஸவத்தினிடத்தில் அபிமாநங்கொண்டிருப்பது.
முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ‘‘மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம்.

முதலடியில் ‘‘உள்ளீரேல்’’ என்று ஆழ்வார் உரக்கக் கூவினபடியைக் கேட்ட பலபேர்கள் அவரழைத்த வாசியறியாமல் ஓடிவந்தார்கள்.
அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்காக நீச ஸேவைபண்ணி ஜீவிப்பவர்களும் சேர்ந்திருந்தபடியால் அவர்களை விலக்கித் தள்ளுகிறார் இரண்டாமடியால்.
பகவத் ஸமபந்தத்தால் தமக்கு உண்டாயிருக்கிற பெருமையும், தம்முடைய காலக்ஷேப க்ரமத்தையும் அருளிச் செய்கிறார் பின்னடிகளில்.

(ஏழாட்காலும்) முன்னே மூன்று, பின்னே மூன்று, நடுவில் ஒன்று; ஆக ஏழு தலைமுறையிலும் என்றபடி
அன்றி, முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்று கொண்டு (அதாவது முன்னே பத்து, பின்னே பத்து, நடுவில் தான் ஒன்று என்று கொண்டு)
இருபத்தொரு தலைமுறையைச் சொன்னதாகவுமாம். நாங்கள் அநாதிகாலமாக எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவுங் கொண்டு,
அப்பெருமான் என்றைக்கோ செய்தருளின ராவணஸம்ஹாரத்திற்கு இன்றிருந்து மங்களாசஸநம் பண்ணுகிறோம் ஆகையாலே
பரமவிலக்ஷணர்களாயுள்ள எங்களுடைய கோஷ்டியில் நீங்கள் பிரவேசிக்கலாகாதென்று வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று.

————-

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.

பதவுரை
வந்து–(கைவல்யத்தில் ஆசையை விட்டு) வந்து
எங்கள் குழாம் புகுந்து–(அநந்யப்ரயோஜநரான) எங்களுடைய கோஷ்டியிலே அந்வயித்து–
கூடும் மனம் உடையீர்கள்–ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பமுடையவர்களாயிருந்தால்
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்–பொல்லாத ஸ்தானமாகிய கைவல்யத்திலே உங்களைக கொண்டு தள்ளுவதற்குமுன்னே
வரம்புஒழி வந்து–(ஆதமாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற)
வரம்பை ஒழித்துக் கொண்டு (இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று) வந்து
ஒல்லை–சீக்கிரமாக
கூடுமின்–எங்களோடு சேர்ந்து விடுங்கள்
(அப்படியே சேர்ந்தபின்பு)
நாடும் நகரமும் நன்கு அறிய-நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும் (உங்களுடைய) நன்மையை அறிந்து கொள்ளும்படி
நமோ நாராயணாய என்று–திருமந்திரத்தைச் சொல்லி
பாடும் மனம் உடைபத்தர்–பாடுகின்ற எண்ணத்தையுடைய பக்தர்களுக்குள்
உள்ளீர் வந்து–சேர்ந்தவர்களாயிருந்து
பல்லாண்டு கூறுமின்–(எம்பெருமானுக்கு) மங்களா சாஸநம் பண்ணுங்கள்

விளக்க உரை

இப்பாட்டில், ஆத்மாநுபவத்தையே விரும்பியிருக்கும் கைவல்யார்த்திகளைக் மங்களாசாஸநத்துக்கு அழைக்கிறார்.
கீழ்ப்பாட்டில் கூழாட்பட்டவர்களை விலக்கினாப்போலே இவர்களையும் விலக்க வேண்டியிருந்தாலும்,
இவர்கள் கைவல்யமாகிற ஸ்வப்ரயோஜநம் பெறுவதற்காகவாகிம் எம் பெருமானைச் சரணமடைந்தார்களேயென்கிற மகிழ்ச்சியினால்
அவர்களையும் அழைத்து, கிரமமாக உபதேசங்களாலே ஐச்வர்யார்த்திகளும் ப்ரயோஜநாந்தரபரர்களாயிருக்க,
அந்த ஐச்வர்யார்த்திகளை முதலில் அழைப்பதைவிட்டுக் கைவல்யார்த்திகளைக் கூப்பிட்டது ஏனென்னில்; கேண்மின்; –
ஐச்வர்யார்த்திகளை ஸாவகாசமாகவும் திருத்திக் கொள்ளலாம்; கைவல்யார்த்திகளை அப்படி ஸாவகாசமாகத் திருத்திக்கொள்ள முடியாது.
ஏனென்றால், கைவல்யார்த்திகளின் உபாயாநுஷ்டாநம் முடிந்துவிட்டால், ஆத்மாநுபவத்துக்காக ஏற்பட்ட மோக்ஷலோகத்தில் போய்ச்சேர்ந்து விடுவார்கள்;
மறுபடியும் அங்கிருந்து ஒருநாளும் திரும்பி வருதல் இல்லாமையாலே இப்போதே அவர்களைத் திருத்திக்கொள்ளாமல்
சிறிது விளம்பித்தாம் அந்த அதிகாரிகள் பாழாய்ப்போவர்களே! என்கிற அநுதாபத்தினால்
ஆலஸ்யம் ஸஹியாமல் ஐச்வர்யார்த்திகளுக்குமுன்னே கைவல்யார்த்திகளை யழைக்கிறார்.

ஏடுநிலம் என்று கைவல்யஸ்தாநத்தை எங்ஙனமே சொல்லுமென்னில்; பிரகாணபலத்தினால் சொல்லும்;
பொல்லாத ஸ்தானமென்று பதப்பொருள்
அன்றியே, ஏடு – ஸூக்ஷ்மசரீரமானது, நிலத்தில் – தனக்குக் காரணமான மூலப்ரக்ருதியிலே,
இடுவதன்முன்னம் -லயிப்பதற்குமுன்னே, என்றும் பொருள் கொள்ளலாம்.
ஸ்தூலசரீரமென்றும் ஸூக்ஷ்மசரீரமென்றும் சரீரம் இருவகைப்படும்;
பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும்
மநஸ்ஸு ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம சரீரமெனப்படும்;
தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் – ஆகிய
இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.
ஆத்மா தனது ஸூக்ஷ்மசரீரம் விரஜாநதீஸ்நாநத்தால் நீங்கியபின்புதான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும்.
இவ்விரண்டில் எதையடைந்தபின்பும் திரும்பி வருவதல் இல்லை.
(இவ்விருவகையான சரீரங்களுள் ஸூக்ஷ்மசரீரமானது ஸ்தூல சரீரத்திற்காட்டிலும் பிரதானமாய் அதனுடைய ஸாரமுமாயிருப்பதால்,
பாலின் ஏடு போலுமென்ற காரணம் பற்றி ‘ஏடு’ என்பது ஸூக்ஷ்மசரீரத்தைக் காட்டும்.
‘‘வரம்பொழிய’’ என்பது வரம்பொழி என்று கடைக்குறையாயிருக்கிறது. வரம்பொழியவந்து என்றபடி.
இவ்விடத்தில், வரம்பாவது – அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எல்லை; ‘ஆத்மாநுபவத்தோடு நாம் நின்றுவிட வேண்டியது;
பகவானை யநுபவிக்கப்போகக்கூடாது’ என்று நீங்கள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்துவிட்டு உடனே வந்து சேருங்கள் என்றழைக்கிறார்.

கைவல்ய நிஷ்டர்கள் ‘‘ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்’’என்கிற சாஸ்திரப்படி தங்கள் கோரிக்கை
நிறைவேறுவதற்காகப் பிரணவத்தை மாத்திரம் உச்சரிப்பார்கள்;
இனி அப்படியல்லாமல் திருவஷ்டாக்ஷரத்தையும் பூர்த்தியாகக் கோஷித்துக்கொண்டு வரவேணுமென்று பின்னடிகளால் அழைக்கிறார்.
பத்தர் – பக்தர்.

———–

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.

பதவுரை
அண்டம் குலத்துக்கு அதிபதி ஆகி–அண்ட ஸமூஹங்களுக்கெல்லாம் நியாமகனாய்
அசுரர் இராக்கதரை–அஸூர ராக்ஷஸர்களுடைய
இண்டை குலத்தை–நெருக்கமான கூட்டத்தை
எடுத்து களைந்த–நிர்மூலமாக்கின
இருடீகேசன் தனக்கு–ஹ்ருஷீகேசனான * பகவானுக்கு
தொண்டர் குலத்தில் உள்ளீர்–அடியவராயிருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே!
(ஐச்வர்யார்த்திகளே!) நீங்கள்
பண்டை குலத்தை தவிர்ந்து–(பிரயோஜநாந்தரத்தை விரும்பிக்கிடந்தமையாகிற) பழைய தன்மையை நீக்கிக் கொண்டு
வந்து–எங்களோடு சேர்ந்து
அடிதொழுது–பகவானுடைய திருவருடிகளை ஸேவித்து
ஆயிரம் நாமம் சொல்லி–எல்லாத் திருநாமங்களையும் அநுஸ்ந்தித்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மின்–எப்போதும் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்

விளக்க உரை

இப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை அழைக்கிறார். அவர்கள் இரு வகைப்படுவர்;
நெடுநாளாக இருந்து கைதப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய விரும்புகிறவர்கள் ஒரு வகுப்பு;
நெடுநாள் தரித்ரராகவேயிருந்து புதிதாகச் செல்வமுடைய விரும்புகிறவர்கள் மற்றொரு வகுப்பு.
(முதல் வகுப்பினர் – ப்ரஷ்டைச்வர்யகாமர்களென்றும் இரண்டாம் வகுப்பினர் அபூர்வை ச்வர்யகாமர்களென்றும் சொல்லப்படுவர்.)
இவ்விரு வகுப்பினரையும் இப்பாட்டில் அழைக்கிறார். இவ்வர்த்தம் இப்பாட்டில் எங்ஙனே தெரிகின்றது என்றால்; கேண்மின்; -‘
‘அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலதிலுள்ளீர்!’’ என்றும்,
‘‘அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தை யெடுத்துக் களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்!’’ என்றும்
விளியை இரண்டாகப் பகுத்துக்கொள்க.
அண்டங்களுக்கு அதிபதியாயிருக்கை ஐச்வரியத்துக்கு முடிவெல்லையாய் இருப்பதால், புதிதான ஐச்வரியத்தைப் பெற விரும்புகின்ற
அதிகாரிகள் அப்படிப்பட்ட அண்டாதிபதித்வத்தைப் பெற விரும்பி அந்த விருப்பம் வெளிப்படும்படி
‘‘அண்டாதிபதயே நம; அண்டாதி பதயே நம:’’ என்று எப்போதும் உருப்போடுவர்கள்!
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது முதல்விளியால் விளங்கும்
ஏற்கனவேயிருந்த செல்வத்தை அஸுரராக்ஷஸாதிகள்
போன்ற சத்துருக்கள் அபஹரித்துக் கொண்டதனால் அச்செல்வத்தை மறுபடியும் ஸம்பாதித்துக்கொள்ள விரும்பும் அவர்கள்
அந்த விருப்பம் வெளிப்படும்படி ‘‘அஸுரசத்ரவே நம:, அஸுரசத்ரவே நம: என்று உருப்போடுவார்கள்.
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது இரண்டாம் விளியால் விளங்கும்.

ஆகவிப்படி இருவகை அதிகாரிகளையும் அழைத்து ‘‘அந்தோ! நீங்கள் ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸஹஸ்ரநாமங்களையும்
(வாயாரச் சொல்லி ஆநந்திக்கலாமாயிருக்க, அதைவிட்டு, ‘அண்டாதிபதி, அஸுரசத்ரு:’என்ற இரண்டு நாமங்களை மாத்திரம் அற்பபலனுக்கான உருப்போட்டுக்கொண்டிருக்கிறீர்களோ, இது தகாது; இனி ஆயிரநாமங்களையும் அநந்ய்ப்ரயோஜநமாக அநுஸந்தித்து
எங்களுடைய கோஷ்டியிலே சேர்ந்து மங்களாசாஸநம்பண்ண வாருங்கள் – என்றழைத்தாராயிற்று.

அண்டமாவது – உலகவுருண்டை; அது அளவற்றதாகையாலே அண்டக்குலமென்கிறது அதுக்கு அதிபதியென்று
எம்பெருமானைச் சொல்வது கருத்துடன் கூடியதாகும். உன்னைப் போலே நாங்களும் அண்டாதிபதியாக வேணுமென்று தெரிவித்துக் கொண்டபடி.

இண்டைக்குலம் – நெருக்கமான கூட்டம் என்றபடி. ‘இண்டக்குலம்’ என்று பாடமாகில், ‘‘இண்டர் – குலம்’’ என்று பிரியும்.
அஸுரராக்ஷஸர்களாகிற சண்டாளருடைய கூட்டத்தை என்றபடி. இருடீகேசன் – ஸ்ருஷீகேசன்; இந்திரியங்களை அடக்கியாள்பவன் என்கை.
தொண்டர் + குலம் : தொண்டர்க்குலம்.

————–

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே.

பதவுரை
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி–என் பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும்
அவருடைய பிதாவும் அவருடையபாட்டனுமாகிய ஏழு தலைமுறையாக
வந்து–(உரிய காலங்களில்) வந்து
வழி வழி–முறைதப்பாமல்
ஆள் செய்கின்றோம்–கைங்கரியம் பண்ணுகிறோம்
திரு ஓணம் திருவிழவில்–ச்ரவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே
அந்தி அம்போதில்–அழகிய ஸரயம் ஸந்தியாகாலத்தில்
அரி உரு ஆகி–நரஸிம்ஹமூர்த்தியாய்த் தோன்றி
அரியை–(ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப்) பகைவனான இரணியனை
அழித்தவனை–கொன்றொழித்த பெருமானுக்கு
பந்தனை தீர–(அன்றைய) அனுக்கம் தீரும்படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுவதும்–மங்களாசாஸநம் செய்வோம்.

விளக்க உரை
‘‘வாழாட்பட்டு’’ என்கிற பாசுரத்தில் அநந்யப்ரயோஜநர்களான முமுக்ஷூக்களை யழைத்தாரென்றோ;
அழைக்கும்போது ‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று தம்முடைய பெருமையைச் சொல்லியழைத்தார்.
அப்படி அழைக்கப்பட்ட அநந்யப்ரயோஜகர்கள் ‘நாங்களும் உம்மைப் போலவே ஏழுதலைமுறையாக அடிமை செய்கிறவர்கள்’
என்று தங்களுடைய பெருமையையும், எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறவர்களென்கிற தங்களுடைய
தினசரியையும் சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்ததாக இப்பாசுரம் அருளிச் செய்யப்படுகிறது.

‘என் தந்தை’ என்பது எந்தையென மருவிற்று. ஏழ்படிகால் – ‘படி’யென்பதற்கு உடம்பு என்று பொருள்;
அச்சொல் தலைமுறையைக் காட்டுகிறது.
எங்களுடைய ஸந்ததியில் ஒருவர் தப்பாமல் எல்லாரும் ஆட்செய்பவர்கள் என்பதற்காக வழிவழியென்கிறார்.

(திருவோணத் திருவிழாவில் இத்யாதி) எம்பெருமான் எந்த நக்ஷத்திரத்தில் அவதரித்தாலும் அவையெல்லாம் வேதத்தில் சொன்னபடி
விஷ்ணு நக்ஷத்ரமாகிய திருவோண நக்ஷத்திரத்தின் அம்சமாயிருக்கத்தக்கவை யாகையாலும்,
விசேஷித்துத் திருநக்ஷத்திரம் சொல்லாத அவதாரங்களுக்கெல்லாம் இதையே நக்ஷத்திரமாகக் கொள்வது உசிதமாகையாலும்
‘‘திருவோணத் திருவிழாவில் ; அரியுருவாகி’’ என்றார். ச்ரவண என்னும் வடசொல் ஓணமெனத் திரிந்தது.
அரியுரு ஹிம்ஹமென்னும் பொருளதான ஹரியென்னும் வடசொல் அரியென்று விகாரப்பட்டிருக்கின்றது.
‘‘நரஹரியாகி’’ என்னாமல் ‘அரியுருவாகி’ என்றது பிரதானமான சிரஸ்ஸு ஸிம்ஹமாயிருப்பதனாலாம்.
தூணிலே நரசிங்கமாகத் தோன்றி இரணியனைக் கொன்று ப்ரஹ்லாதனைக் காத்தருளின இதிஹாஸம் ப்ரஸித்தம்.

பந்தநா என்னும் வடசொல் பந்தனையெனத் திரிந்தது; அனுக்கம் என்று பொருள்.

——————

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பதவுரை

தீயின்-(சந்திரன்: ஸூர்யன் அக்நி முதலிய) சுடர்ப்பொருள்கள் எல்லாவற்றையும்விட
பொலிகின்ற–பிரபலமாகப் பிரகாசிப்பதும்
செம் சுடர் திகழ்–சிவந்த ஒளியோடுகூடி விளங்குவதுமான
திருசக்கரத்தின்–திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற
கோயில்–ஸ்தானமாகிய
ஆழி–வட்டவடிவமான
பொறியாலே–அடையாளத்தினால்
ஒற்றுண்டு நின்று–அடையாளம் செய்யப்பட்டவர்களாயிருந்து
குடிகுடி–அநாதிஸந்தாநமாக
ஆள் செய்கின்றோம்–(எம்பெருமானுக்குக்) கைங்கரியம் செய்து வருகின்றோம்: (அதுவும் தவிர)
மாயம் பொருபடை வாணனை–க்ருத்ரிம யுத்தம் செய்பவனும் சேனைகளை உடையவனுமான பாணாசுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களினின்றும்
பொழி–வெளிக்கிளம்புகிற
குருதி–ரக்தமானது
பாய–வெள்ளமாகப் பாய்ந்தோடும்படி
சுழற்றிய ஆழி–திருக்கையிலே சுழலச் செய்த சக்கராயுதத்தை
வல்லானுக்கு–ஆளவல்ல எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்

விளக்க உரை

‘‘ஏடுநிலத்தில்’’ என்னும் பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்தாரன்றோ; அழைக்கும்போது ‘‘நாடுநகரமும் நன்கறிய’’ என்று
உங்களுடைய நன்மையை எல்லாரும் தெரிந்துகொள்ளும்படி நீங்கள் வரவேணுமென்று ஒரு வார்த்தை சொன்னார்.
அவர்களும் அப்படியே வரவேணுமென்று நிச்சயித்து சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்துகொள்வது நல்ல உபாயம்’ என்று
அதைச் செய்துகொண்டு அடிமை செய்பவர்களாய் பாணஸுரயுத்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அடிமை செய்த திருவாழியாழ்வானுக்கும்
அவனை அடிமைகொண்ட ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அக்காலத்தில் மங்களாசாஸநம் செய்யப் பெறாத குறைதீர
மங்களாசாஸநம் செய்பவர்களாக ஆய்விட்டோம் என்று தாங்கள் குடும்பமாகத் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு
வந்தார்களாக அருளிச்செய்யும் பாசுரம் இது.

‘‘ஸுதர்சநம் பாஸ்கரகோடிதுல்யம்’’ என்கிறபடியே திருவாழியாழ்வான் கோடிஸுர்ய ப்ரகாசனாகையால் ‘‘தீயிற்பொலிகின்ற’’ எனப்பட்டது.
தேஜ: பதார்த்தங்கள் எல்லாவற்றையும்விட அதிகமாக ஜ்வலிக்கிற என்றபடி.
பொலிகின்ற என்பதும், திகழ் என்பதும் திருச்சக்கரத்திற்கு அடைமொழிகள்.
இனி, ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்பதை சக்கரத்தின் பொறிக்கு அடைமொழியாக்கி, அக்நியால் விளங்குகிற சக்கரத்தின் பொறி என்றும் உரைக்கலாம்.
மந்த்ர பூர்வமாக ஹோமஞ்செய்த அக்நியில் காய்ச்சப்பட்ட சங்கு சக்கரங்களின் பொறிகளை (அடையாளங்களை)
புஜங்களில் அணிந்து கொள்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.

பாண : என்ற வடசொல் வாணனெனத் திரிந்தது.

———–

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

பதவுரை
நெய் எடை–நெய்யோடு ஸமமான நிறையை யுடையதாய்
நல்லது–போக்யமாய்
ஓர்–விலக்ஷணமான
சோறும்–ப்ரஸாதத்தையும்
நியதமும் அத்தாணி சேவகமும்–எப்போதும் பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற ஸேவக வ்ருத்தியையும்
கை அடைக்காயும்–திருக்கையால் ப்ரஸாதிக்கும் தாம்பூலத்தையும்
கழுத்துக்கு பூணோடு–கழுத்தில் தரித்துக் கொள்ளவேண்டிய ஆபரணத்தையும்
காதுக்கு குண்டலமும்–காதில் இட்டுக் கொள்ளவேண்டிய குண்டலத்தையும்
மெய் இட–உடம்பில் பூசிக்கொள்ளும்படி
நல்லது ஓர் சாந்தமும்–சிறந்த சந்தனத்தையும்
தந்து–(ரஜஸ்தமோ குணங்களால் ஐச்வரியத்தை விரும்பின என்னுடைய விருப்பத்தின்படியே) கொடுத்து
என்னை–இப்படி ஸம்ஸாரியாயக் கிடந்த என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல–சுத்த ஸரத்விகனாகச் செய்தருளினவனாய்
பை உடை நாகம் பகை கொடியானுக்கு–படத்தையுடைய பாம்புக்கு விரோதியான கருடனைக் கொடியாக வுடையனான எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுவன்–மங்களாசாஸநம் பண்ணுவேன்.

விளக்க உரை

“அண்டக்குலத்துக்திபதியாகி’’ என்னும் பாசுரத்தில் ஐச்வர்யார்த்திகளை அழைத்தாரே;
அவர்கள்தாம் எம்பெருமானிடத்தில் சில ஐச்வர்யங்களைப் பெற்றுக்கொண்டு திருந்தி மங்களாசாஸநத்துக்கு ஸித்தராக
வந்தபடியைச் சொல்லிக் கொள்ளுகிறார்களாக அருளிச் செய்வது இந்தப் பாசுரம்.

கீழ்ப்பாசுரங்களிற் போல் இதில் பன்மையின்றியே ‘‘பல்லாண்டு கூறுவன்’’ என்று ஒருமையாகப் பிரயோகமிருப்பதற்குக் காரணம் கேண்மின்; –
உலகத்தில் அநந்ய ப்ரயோஜநர்களுடைய கூட்டமும் கைவல்யார்த்திகளுடைய கூட்டமும் மிகவும் ஸ்வல்பமா யிருக்குமாகையாலே
அந்தக் கூட்டங்களிலுள்ள நாலைந்து பேர்கள் பேசினதாகக் கொண்டு அவர்களது பாசுரங்களில்
‘‘பல்லாண்டு பாடுதுமே’’ என்றும் ‘‘பல்லாண்டு கூறுதுமே’’என்றும் பஹுவசந ப்ரயோகம் பண்ணப்பட்டது.
ஐச்வர்யார்த்திகளான இவர்களுடைய கூட்டம் அப்படி ஸவல்பமாயிராமல் அளவற்றிக்குமாகையால்,
ஒரு பெரிய கூட்டத்துக்கெல்லாம் ஒருவன் பிரதாநனாய் நின்று பேசுவது வழக்கமாகையால் அப்படியே இருக்கும் ஒருவன் பேசுவதாகவைக்கப்பட்டது.
மேல் ‘‘அல்வழக்கொன்றுமில்லா’’ என்கிற பாட்டிலுள்ள ஏகவசநத்துக்கும் இதுவே ஸமாதாநம்.

உலகத்தார்க்கு வேண்டிய பதார்த்தங்கள் மூன்றுவிதம் – தாரகம், போஷகம், போக்யம் என
அன்னம் தாரகம், நெய் பால் தயிர் முதலானவை போஷகம், சந்தனம் புஷ்பம் தாம்பூலம் முதலியவை போக்யம்.
ஆக இந்தப் பதார்த்தங்கள் ஒருவனுக்குப் போதுமானவை கிடைத்தால் அவ்வளவில் த்ருப்திபெற ப்ராப்தம் ஊர்ப்பட்ட
அண்டாதிபத்யமெல்லாம் வேணுமென்று விரும்புவது பகவத்மாகும். ஆகையால் ஸ்வரூபஜ்ஞாநமில்லாமல் அண்டாதிபத்யம் அளிக்கவேணுமென்று
நாங்கள் எம்பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் பரமக்ருபாளுவாய் எங்களை உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி
எங்களுக்கு உசிதமாய் வேண்டியவளவு தாரக – போஷக – போக்ய வஸ்துக்களைக்கொடுத்து இனிமேலாவது
எங்களுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி குளிரக்கடாஷித்து ‘‘ஐச்வரியம் த்யாஜ்யம், பகவத்கைங்கர்யமே புருஷார்த்தம்’’ என்னும்
அத்யவஸாயத்தைப் பிறப்பித்து எங்களை சுத்தஸ்வரூபராக ஆக்கினான்.
அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுவோம் நாங்கள் – என்று ஐச்வர்யத்திகள் சொல்லுவதாக இந்தப் பாசுரம் உள்ளது.

‘‘நெய் எடை’’ என்றும் ‘‘நெய் இடை’’ என்றும் பாடபேதமுண்டு.
முந்தினபாடத்தில், நெய்பாதி சோறுபதியாய் இரண்டும் அளவொத்திருக்குமென்கை.
ஒருவீசைச்சோற்றுக்கு ஒருவீசை நெய் சேர்ப்பதென்றால், இதனில் விஞ்சிய நல்ல சோறு இல்லையன்றோ.
‘‘நெய்யிடை’’ என்ற பாடத்தில், நெய்யின் நடுவே உள்ள சோறு என்று பொருளாய்,
நெய்யின் அளவு அதிகமாயும் ப்ரஸாதத்தினளவு அல்பமாயுமிருக்கு மென்கை.
நல்லது ஓர் சோறு இட்டவன் ‘நாம் இட்டோம்’ என்று அஹங்காரங் கொண்டாலும், உண்டவன்,
‘இதற்கு நாம் என்ன கைம்மாறு செய்வோம்’ என்றிருந்தாலும் நல்ல சோறாகமாட்டாது;
பெற்ற தாய் இட, புத்திரன் உண்ணுஞ் சோறுபோலே அன்புடன் இடப்பட்டு ருசியில் குறையில்லாத சோறு என்றபடி.

அத்தாணிச் சேவகமாவது – ஆஸ்தாநஸேவகம்; எம்பெருமானிருக்கும் இடத்தில் கூடவேயிருந்துகொண்டு பிரியாமல் நின்று
செய்கிற கைங்கரியம் ஐச்வர்யார்த்தியானவன் சொல்லுகிற இந்தப் பாசுரத்தில் ‘அத்தாணிச் சேவகமும் தந்து’’ என்று எங்ஙனே சொல்லலாம்?
அநந்யப்ரயோஜநனுக்கன்றோ அத்தாணிச் சேவகமுள்ளது; சோறு அடைக்காய் பூண் குண்டலம் ஆகிய இவற்றைத் தந்து என்பது சேருமேயொழிய
அத்தாணிச் சேவகமும் தந்ததாகச் சொல்லுகிறது சேராதேயென்னில்;
ஐச்வர்யார்த்தியாயிருந்தாலும் பகவத் க்ருபையாலே திருந்தி அநந்ய்ப்ரயோஜநனாய் வந்தமை தோற்றும்படியாகச் சொல்லுகிற
பாசுரமாகையாலே சேருமென்க. நான் அபேக்ஷித்த ஜீவநத்தைமாத்திரம் கொடுத்துவிடாமல் உஜ்ஜீவநத்தையு முண்டாக்கி
என்னைப் பரிசுத்தாத்மாவாகச் செய்தானே! என்று ஸந்தோஷித்துச் சொல்லுகிற பேச்சு.

வெள்ளுயிர் – சுத்தமான ஆத்மா. ஸத்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்களுண்டு.
அவற்றுள் ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும் ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும்
தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிஸமயமாதலால் இங்கே ஸாத்விகளை வெள்ளுயிரென்றார்.

பையுடைநாகப் பகைக்கொடியானுக்கு என்கிறவிடத்தில், ‘‘பையுடை நாகத்தானுக்கு’’ என்றும்
‘‘(நாகப்) பகைக்கொடியானுக்கு’’ என்றும் பிரித்துக் கொள்வது நன்று.
‘‘அநந்தசாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறேனென்கை’’ என்று வியாக்கியானமருளிச்செய்த
பெரிய வாச்சான்பிள்ளையின் திருவுள்ளம் இதுவேயாம்.
நாகத்துக்கு ‘பையுடை’ என்று விசேஷணமிட்டபடியால் அது வீணாகாமைக்காக இப்படி அர்த்தம் செய்யவேண்டிய தாயிற்றென்ப.
ஸந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சயனிப்பவனாயும், அந்த நாகஜாதிக்கு சத்ருவான
கருடனை த்வஜமாகவுடையனாயும் இருக்கிற எம்பெருமானுக்கு என்றபடி.

நித்யம், குண்டலம், நாகம் – வடசொற்கள்.

——————–

உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பதவுரை
உடுத்து–தேவரீர் அரையில் சாத்திக்கொண்டு
களைந்த–கழித்துவிட்ட
நின் பீதகவாடை–தேவரீருடைய பீதாம்பரத்தை
உடுத்து–உடுத்துக்கொண்டும்
கலத்தது–தேவர் அமுதுசெய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை
உண்டு–புஜித்தும்
சூடி களைந்தன–தேவர் சாத்திக்கொண்டு களைந்தவைகளான
தொடுத்த–தொடுக்கப்பட்டுள்ள
துழாய் மலர்–திருத்துழாய் மலர் -மாலைகளை
சூடும்–சூட்டிக் கொள்ளுகிறவர்களான
இத்தொண்டர்களோம்–இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள்
விடுத்த திசை கருமம் திருத்தி–தேவரீர் ஏவியனுப்பிய திக்கிலே ஆகவேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து,
படுத்த–கீழே பரப்பிய
பை நாகம் அணை–படத்தையுடைய பாம்பாகிற படுக்கையில்
பள்ளி கொண்டானுக்கு–சயனித்திருக்கிற தேவரீருக்கு
திருஓணம் திருவிழவில்–ச்ரவணத் திருநாளிலே
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்

விளக்க உரை

‘‘வாழாட்பட்டு’’ என்னும் பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘எந்தை தந்தை தந்தை’’ என்னும் பாசுரத்தால் தங்கள் வ்ருத்தியைச்
சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்த அநந்யப்ரயோஜநர்கள் தாம் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடும்படியை அருளிச்செய்வது இப்பாட்டு.
‘‘நின் பீதகவாடை’’ என்று முன்னிலையாகச் சொல்லியிருப்பதால் இந்தப் பாசுரம் எம்பெருமானையே நோக்கி
அவர்கள் சொல்லுவதாக நன்கு விளங்கும். கீழே ஆழ்வாரால் அழைக்கப்பட்ட மூவகை அதிகாரிகளும் வரிசையாக
‘எந்தை தந்தை’ ‘தீயிற்பொலிகின்ற’ ‘நெய்யெடை நல்லது’ என்னும் பாசுரங்கள் சொன்னது ஆழ்வாரை நோக்கிச் சொன்னதாம்.
இனி, ‘உடுத்துக்களைந்த’ ‘எந்நாளெம்பெருமாள்’ ‘ அல்வழக்கொன்று மில்லா’ என்கிற மூன்று பாசுரங்களும் –
அவர்கள் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக நோக்கிச் சொல்வதாம்.
மேலிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய விளி வ்யக்தமாகவுள்ளது;
இப்பாசுரத்தில் அப்படி வ்யக்தமாக இல்லாவிடிலும் ‘‘நின் பீதகவாடை’’ என்கிற சொல்லாற்றலால் வ்யந்தமாகிறது.

எம்பெருமானே! நாங்கள் எங்களுக்கென்று அன்னம் வஸ்திரம் புஷ்பம் முதலானவற்றை விலைக்கு வாங்கி உபயோகிப்பதில்லை.
தேவரீர் அனுபவித்துக் கழித்தவற்றை மஹாப்ரஸாதமாகக் கொண்டு அவற்றையே உடுப்பதும் உண்பதும் சூடுவதும், செய்வோம் நாங்கள்;
அவ்வளவோடும் நில்லாமல், தேவரீருக்கு எந்த திக்கிலே எந்த காரியம் ஆக வேண்டியிருந்தாலும் அவற்றை ஒழுங்குபடச்செய்து முடிப்பதும் செய்வோம்.
அவ்வளவிலும் த்ருப்தி பெறாமல், ஒரு வெள்ளிமலையில் காளமேகம் சாய்ந்து கிடப்பதுபோல் ஆதிசேஷ சயனத்திலே
தேவரீர் பள்ளிகொண்டிருக்கிற கிடையழகுக்குப் பல்லாண்டு பாடுவதும் செய்வோமென்கிறார்கள்.

பீதகவாடை – ‘பீதம்’ என்னும் வடசொல் சுப்ரத்யயம் பெற்றுப்பீதகமென்றாயிற்று. பொன்வர்ணமான ஆடை என்கை.
எம்பெருமானுடைய திவ்ய பீதாம்பரத்தைப் பிறர் உடுத்துக் கொள்ளலாமோ? அஃது அப்பெருமானுக்கே அஸாதாரணமன்றோ? என்னில்;
அவனுக்கு அஸாதாரணமான பீதாம்பரத்தை இங்கே விவக்ஷிக்கவில்லை.
சில ஆஸனங்களில் ஸாதாரணத் திருப்பரிவட்டங்களும் சாத்திக் கொள்வதுண்டாகையால் அவற்றைச் சொல்லுகிறது.
அவை பீதகவாடையாகுமோ வென்னில்; எம்பெருமான் திருவரையில் சாத்திக்கொள்ளும் வஸ்த்ரங்களெல்லாம்
திவ்யபீதாம்பரத்தின் அம்சமேயாமென்பது சாஸ்த்ரம்.

பள்ளிகொண்டானுக்கு – பள்ளி கொண்டவுனக்கு என்கை. முன்னிலையில் படர்க்கைவந்த இடவழுமைதி ‘
‘ஒருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும், ஓரிடம் பிறரிடம் தழுவலுமுளவே’’ என்பது நன்னூல்.

—————–

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பதவுரை

எம்பெருமான்–ஸ்வாமிந்!
உன்தனக்கு–தேவரீர்க்கு
அடியோம் என்றெழுத்துப்–நாங்கள் அடிமைப்பட்டவர்கள் என்று சொல்லானது
பட்ட நாள்–எங்களுடைய வாயில் உண்டாகப்பெற்றநாள்
எந்நாள்–எந்த தினமோ,
அந்நாளே–அந்த தினம் முதலாகவே
அடியோங்கள்–அடியோங்களுடைய
அடிகுடில்–அடிமைப்பட்ட ஸந்தானமெல்லாம்
வீடுபெற்று உயந்ததுகாண்–நல்ல கதியையடைந்து உஜ்ஜீவித்துவிட்டது
செம் நாள் தோற்றி–நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து
திரு மதுரையுள்–அழகிய வடமதுரையிலே
(கம்ஸனுடைய ஆயுதசாலையில் புகுந்து)
சிலை குனித்து–வில்லை வளைத்து முறித்து
ஐந்தலைய–ஐந்து தலைகளையுடய
பை–படத்தோடு கூடின
நரகம்–காளிய நாகத்தினுடைய
தலை–தலைமேலே
பாய்ந்தவனே–குதித்தவனே!
உன்னை பல்லாண்டு கூறுதும்–தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்

விளக்க உரை

‘‘ஏடு நிலத்தில்’’ என்கிற பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்னும் பாசுரத்தால்
தாம் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு வந்துசேர்ந்த கைவல்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி
மங்களா சாஸநம் பண்ணுகிறபடியைச் சொல்வது இந்தப்பாசுரம்.

எம்பெருமானே நாங்கள் கைவல்ல புருஷார்த்த ப்ராப்திக்கு ஸாதகமாக ‘‘ஓம், நம:’’ முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டு
தேவரீரை பஜநம் பண்ணினோம்; தேவரீர் எங்களைக் கடாக்ஷித்து நாங்கள் மீட்சியற்ற கைவல்யத்தை யடைந்து
கெட்டுப் போகாதபடி அருள்புரிந்து நல்லபுத்தியை யுண்டாக்கினபடியால் அடியோங்கள் இப்போது திருந்தி
தேவரீருக்குப் பல்லாண்டு பாடுகிறவர்களாக ஆய்விட்டோ மென்கிறார்கள்.

எம்பெருமானே! தேவரீருக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட நாள் எந்நாளோ, அந்நாளிலேயே அடியோங்களுடைய குடில்
உஜ்ஜீவித்துப் போயிற்று என்றது – நாங்கள் கைவல்யப்ராப்திக்கு ஸாதகாமாக ஓம், நம: என்பதை அநுஸந்தித்து
அதனால் யாத்ருச்சிகமாக நல்லபுத்தி பிறந்து குடிகுடியாக உஜ்ஜீவித்தோமென்றபடி. குடில் – க்ருஹம்; கைச்யாநுஸந்தாநப் பேச்சு.

வில்விழவென்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்ட கண்ணபிரான் அவனுடைய ஆயுதசாலையிலே புகுந்து
வில்லையெடுத்து முறித்ததும்
தன்னுடைய விஷத்தாலே யமுநாநதியின் ஒரு மடுவைக் கெடுத்துக்கொண்டு
எல்லார்க்கும் பயங்கரமாயிருந்த காளியநாகத்தைத் தண்டித்ததும் ப்ரஹித்தம்.

———————

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.

பதவுரை
திருமாலே–ச்ரியபதியே!
அல் வழக்கு ஒன்றுமில்லா–அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற
அணிகோட்டியர் கோன்–அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்
அபிமாநம்துங்கன்–ஸ்ரீவைஷ்ணவாபிமாநத்தாற் சிறந்தவருமான
செல்வனைபோல–செல்வநம்பியைப் போலவே
நானும்–நானும்
உனக்கு–தேவரீருக்கு
பழ அடியேன்–பழமையான தாஸனாய்விட்டேன்
பல் வகையாலும் பவித்திரனே–எல்லாவிதங்களாலும் பரிசுத்தனான பெருமானே
நல் வகையால்–அடியேனுக்கு நன்மையுண்டாகும்படி
நமோ நாராயணா என்று–திருமந்திரத்தை அநுஸந்தித்து
பல நாமம் பரவி–(தேவரீருடைய) அனேக திருநாமங்களைச் சொல்லியேத்தி
உன்னை பல்லாண்டு கூறுவன்–தேவரீருக்கு மங்களாசாஸநம் பண்ணுவேன்.

விளக்க உரை

‘‘அண்டக்குலத்துக்கு’’ என்னும் பாசுரத்தாலே அழைக்கப்பட்டு ‘‘நெய்யெடை’’ என்னும் பாசுரத்தால் தாங்கள்
திருந்தினபடியைச் சொல்லிக் கொண்டுவந்து ஐச்வர்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களாசாஸநம் பண்ணுகிறார்கள் இதில்
ஐச்வர்யத்திகள் எண்ணிறந்தவர்கள் ஆகையாலே அவர்களுள் ஒருவன் சொல்லுகின்றனென்று
‘‘நெய்யெடை’’ என்கிற பாசுரத்தில் ‘‘கூறுவனே’’ என்று ஏகவசநப்ரயோகம் பண்ணினதுபோலவே இதிலும் கொள்வது.

அல்வழக்கு ஒன்றுமில்லா- தேஹமே ஆத்மாவென்று நினைப்பது, பகவானுக்கு சேஷமாய்ப் பரதந்த்ரமான
ஆத்மாவை ஸ்வத்ந்த்ரமென்று நினைப்பது, தேவதாந்தரங்களைப் பரதெய்வமாக நினைப்பது,
எம்பெருமானிடத்தில் க்ஷுத்ர பலன்களை அபேக்ஷிப்பது, மோக்ஷத்துக்காகவும் கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களை
அநுஷ்டிப்பது இவை முதலானவை அல்வழக்குகள் – அநியாயங்கள்;
அவையில்லாதவரான செல்வநம்பி தேவரீர்க்கு எப்படி நித்யதாஸரோ அப்படி நாங்களும் நித்யதாஸராய்விட்டோம் என்கிறார்கள்.
‘அணிகோட்டியர்கோன்’ என்கையாலே செல்வநம்பி திருக்கோட்டியூரில் அவதரித்தவர் என்று விளங்குகிறது.

இத்தனைநாள் வரையில் ஐச்வர்யத்தியாயிருந்து இன்று வந்து சேர்ந்தவன், ‘செல்வநம்பிக்கைப்போலே நானும் பழவடியேன்’
என்னாலாமோவென்னில், பாபத்தாலே வந்த அஹங்காரம் கழிந்துவிட்டால் எல்லா ஆத்மாக்களுக்கும்
அடிமையே நிலைநிற்பதாகையால் அப்படிசொல்லக் குறை ஏன்? இப்போது நல்வகையால் என்றபடியால் இதுவரையில்
இந்த ஐச்வர்யார்த்திகள் பகவந் நாமங்களைக் கெட்டவழியில் உபயோக்ப்படுத்தினார்களென்று ஏற்படுகின்றது.
கெட்டவழியாவது – பிரயோஜநாந்தரப்ரார்த்தகை. இதுவரையில் தங்களுக்கிருந்த அசுத்திகளையெல்லாம் போக்கி
சுத்தப்படுத்திச் சேர்த்துக்கொண்டபடியால் பல்வகையாலும் பவித்திரனே! என்கிறார்கள். அபிமானதுங்கன் – வடசொல் தொட.

———–

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.

பதவுரை
பவித்திரனை–பரிசுத்தனும்
பர மேட்டியை–பரமபத நிலயனும்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை–ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன்–ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார்
விரும்பிய சொல்–ஆதரத்தோடு சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை,
நல் ஆண்டு என்று–நமக்கு நல்ல காலம் வாய்த்ததென்று (மகிழ்ந்து)
நவின்று உரைப்பார்–ஸர்வதா அநுஸந்திப்பவர்கள்
பரமாத்மனை–ஸ்ரீமந்நாராயணனை
சூழ்ந்து இருந்து–சுற்றும் சூழ்ந்துகொண்டு
(நமோ நாராயணாய என்று. . . )
பல்லாண்டும்–எப்போதும்
பல்லாண்டு ஏத்துவர்–மங்களாசாஸநம் பண்ணப்பெறுவார்கள்.

விளக்க உரை

பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை,
நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள்
மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து
அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம்
பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.

பவித்திரன் – தான் பரிசுத்தனாயிருப்பதோடு அபரிசுத்தர்களையும் பரிசுத்த ராக்கவல்லவன் பரமேஷ்டீ என்னும் பரமேட்டியெனத் தெரிந்தது.
மிகச்சிறந்த ஸ்தானத்தில் வாழ்பவன் என்று பொருள். சார்ங்கம் என்பது (வடமொழியில்) வில்லுக்குப் பொதுப் பெயராயிருந்தாலும்,
பெருமானுடைய திருவில்லுக்குச் சிறப்புப் பெயருமாம் ‘‘வில் ஆண்டான்’’ என்ற சொல்லாற்றலால் -‘சத்துரிக்களைக் காட்டு, காட்டு’
என்று விம்மிக் கிளம்புகின்ற வில்லை அடக்கியாள்பவன் எம்பெருமான் என்பது விளங்கும்.

வில்லிகண்டார் என்பவர்களில் மூத்தவனான வில்லி என்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதிய நகரமாகையால் வில்லிபுத்தூரென்று திருநாமம்;
வில்லி யென்பவன் புற்றில்நின்றும் வடபத்ரசாயிப் பெருமாளைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த திவ்யதேசமென்று
இதனை வில்லி புற்றூர் என்றுங் கூறுகின்ற்னர்.
வடமொழியில் ஸ்ரீதந்விநவ்யபுரம் எனப் பெரும்பான்மையாகவும் ஸ்ரீத்ந்லிவல்மீகபுரம் எனச் சிறுபான்மையாகவும் வழங்கப்பெறும்.

விட்டுசித்தன் – விஷ்ணுவை சித்தத்திலே உடையவர் என்று பொருள்.
மற்ற ஆழ்வார்களுடைய சித்தத்திலும் எம்பெருமான் எழுந்தருளியிருந்தாலும்
‘‘அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும், அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து,
பரவைத் திரைபலமோதப் பள்ளி கொள்கின்ற பிரானை’’ என்றும்
‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்றும்
இவ்வாழ்வார்தாமே பேசிக்கொள்ளும்படியாக எம்பெருமான் குடும்பத்தோடே வந்து நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஏற்றம்
இவ்வாழ்வார் திருவுள்ளத்திற்கே அஸாதாரணமென்றுணர்க.

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பல்லாண்டு -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை —

March 4, 2021

ஸ்ரீ திருப்பல்லாண்டு

ஸ்ரீ தனியன்கள்

ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்தது

கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம:​ |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று

————

பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிலே வந்து பரதத்வ நிர்ணயம் பண்ணின பெரியாழ்வார்க்கு
அவ் வரசன் யானையின் மேலே மஹோத்ஸவம் செய்வித்த போது அந்த உத்ஸவத்தைக் கண்டு ஆநந்திப்பதற்காக
ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் எழுந்தருளி எதிரே ஸேவை ஸாதிக்க,
ஆழ்வார் ஸேவித்து வந்த அருமருந்தன்ன எம்பெருமானுக்கு எழும்பூண்டெல்லாம் அஸுரக்ஷ ஸமயமாயிருக்கிற
இந் நிலத்திலே யாராலே என்ன தீங்கு விளைகிறதோ என்று அதிசங்கைப்பட்டு
‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு பாடுகிறார்.
அதாவது – ஜய விஜயீபவ என்கிறார்–

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

பதவுரை

மல் ஆண்ட–மல்லர்களை நிரசித்த
திண் தோள்–திண்ணிய தோள்களையுடையனாய்
மணி வண்ணா–நீலமணிபோன்ற திருநிறைத்தை யுடையனானவனே!
பல் ஆண்டு பல் ஆண்டு–பலபல வருஷங்களிலும்
பல் ஆயிரம் ஆண்டு–அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும்
பல கோடி நூறு ஆயிரமும்–இப்படி உண்டான காலமெல்லாம்
உன்–உன்னுடைய திருவடிகளினுடைய
சே அடி–சிவந்த
செவ்வி–அழகுக்கு
திருக்காப்பு–குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக.

ஆழ்வார் இப்படி அதிசங்கையாலே மங்களாசாஸகம் பண்ணுகிறாரென்று தெரிந்து கொண்ட எம்பெருமான்
‘ஐயோ! ஏன் இவர் இப்படி பயப்படுகிறார், எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே
வென்றொழிக்க வல்ல தேஹவலிவு நமக்கு உண்டென்பது இவர்க்குத் தெரியவில்லை போலும்,
அந்த வலிவைக் காட்டினோமாகில் இவருடைய அச்சம் அடங்கிவிடும்’ என்று நினைத்து,
முன்னம் க்ருஷணவதார காலத்தில் தன்னைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்டு வந்த
சாணூரன் முஷ்டிகன் முதலிய மல்லர்களை நொறுக்கித் தள்ளின தன்னுடைய புஜபலத்தைக் காட்டினான்;
ஆழ்வாருடைய அச்சம் தணிவதற்காகக் காட்டின அந்த வலிவு ஆழ்வாருடைய பயம் அதிகரிப்பதற்கே காரணமாயிற்று.
புத்திரன் சூரனாயிருந்தால் அவனுடைய தாயானவுள்
‘இவன் ஒருவரையும் லக்ஷியம் பண்ணாமல் யுத்தம் செய்யப் போய்விடுவனே!
யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ’ என்று பயப்படுவதுபோல் இவரும்
அந்த மல்லாண்ட திண்டோள் வலிமைக்குப் பயப்பட்டு மீண்டும் மங்களாசாஸநம் பண்ணுகிறார்.

பல்லாண்டு என்று ஒரு தடவை சொன்னால் போராதா?
‘‘பல்லாயிரத்தாண்டு’’ என்றும்
‘‘பல்கோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என்றும் அதிகமாகச் சொல்லுவானேன்? என்னில் ;
தாஹித்தவன் தாஹம் தீருகிறவரையில்
‘தண்ணீர், தண்ணீர்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பது போல் இவரும்
தம்முடைய அச்சம் அடங்குமளவும் மங்களாசாஸகம் ஓயமாட்டார்.

மல்லாண்ட என்றவிடத்தில் மல் என்ற சொல் மல்லர்களைச் சொல்லும்.
ஆயுதத் துணையின்றி தேஹ வலிவையே கொண்டு சண்டை செய்பவர் மல்லர்.

இனி, மல்லாண்ட என்பதற்கு ‘பலசாலியான’ என்றும் பொருளுண்டு.
மல் – வலிவு.

‘‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’’ என்று திருவடிக்கு மாத்திரம் மங்களாசாஸநமிருந்தாலும்
இது திருமேனி முழுமைக்கும் மங்களாசஸநம் பண்ணினதாகும்.

சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.
செவ்வடி என்றாலும் சேவடி என்றாலும் ஒன்றே.

இந்தப் பாசுரம் பல்லவி போல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது.
இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

————

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

பதவுரை
அடியோ மோடும்–தாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும்
நின்னோடும்–ஸ்வாமியான தேவரோடும்
பிரிவு இன்றி–பிரிவில்லாமல்
ஆயிரம் பல்லாண்டு–(இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும்
வடிவு ஆய்–உனக்கு நிரூபகபூதையாய்
நின்-உன்னுடைய
வல மார்பினில்–திருமார்பின் வலது பக்கத்தில்
வாழ்கின்ற–பொருந்தியிராநின்றுள்ள
மங்கையும்-நித்ய யௌவநசாலிநியான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும் பல்லாண்டு;
வடிவு ஆர்–(உன்) திருமேனியை வ்யாபித்திருக்கிற
சோதி–ஜ்யோதிஸ்ஸை யுடையனாய்
வலத்து–வலத்திருக்கையிலே
உறையும்–நித்யவாஸம் பண்ணுமவனாய்
சுடர்–பகைவரை எரிக்குமவனான
ஆழியும்–திருவாழியாழ்வானும்
பல்லாண்டு-;
படை–ஸேனைகளையுடைய
போர்–யுத்தங்களில்
புக்கு–புகுந்து
முழங்கும்–கோஷிக்கின்ற
அ–அளவற்ற பெருமையுடைய
பாஞ்ச சன்னியமும்–ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்
பல்லாண்டு – ; (ஏ ஈற்றசை. )

சேஷபூதர்களான அடியோங்களூம் ஸர்வசேஷியான தேவரீரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல்
நெடுநாளளவும் மங்கலாக வாழ வேணும்;
பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்தியவாழ்ச்சியாகச் செல்லவேணும்;
திருவாழி யாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேணும் – என்று
இப்பாட்டால் உபய விபூதிகளோடுங் கூடின நிலைமைக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார்.

‘‘அடியோமோடும்‘‘ என்று இந்த லீலா விபூதியிலிருக்கிற தங்களையும்,
மற்ற மூன்றாலே, பரமபதமாகிய நித்யவிபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர்களையும்
இப்பாட்டில் கூறியிருப்பதனால் உபய விபூதியுக்தனான எம்பெருமானுக்கு இப்பாசுரத்தால் பல்லாண்டு பாடினாராயிற்று.

எம்பெருமானுடைய மங்களத்தை மாத்திரமே அபேக்ஷிப்பவரான இவ்வாழ்வார்
அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும் ஏன் விரும்புகிறாரென்னில்,
மங்களாசாஸநம் பண்ணுவதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு
என்ன தீங்கு விளைந்திடுமோவென்கிற பயசங்கையினால் மங்களாசாஸநத்தில் ஊக்கமுடைய
தம்முடைய மங்களத்தையும் விரும்புகிறார்.
ஆகவே, எம்பெருமானுடைய மங்களாசாஸநத்தின் அபிவிருத்திக்காகவே தம்முடைய ஸ்தைர்யத்தை வேண்டுகின்றாரென்க.

(வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை.)
பெரிய பிராட்டியாராலே எம்பெருமானுக்கு மேன்மை உண்டாகின்றதென்பது
‘வடிவாய்’ என்ற விசேஷணத்தினால் விளங்கும்.
புஷ்பத்திற்குப் பரிமளத்தினாலும்,
ரத்தினத்திற்கு ஒளியினாலும் மேன்மையுண்டாகக் காண்கிறோமிறே.
மங்கை – எப்போதும் மங்கைப் பருவமுடையவள்;
அந்தப் பருவத்துக்கு வயதின் எல்லை – பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும்.

ஆழ்வார்க்குக் கண்ணெதிரிலே விளங்குகிற சங்கை ‘‘அப்பாஞ்சசன்னியமும்’’ என்று
(பரோக்ஷமான வஸ்துவைக் கூறுமாபோலே) கூறலாமோவென்னில்;
தம்முடைய கண்ணெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்லுகிறார் என்று கொள்க.
அல்லது,
அன்று பாரதப் போரிலே அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்சஜந்யம் என்றும்,
அழகிய பாஞ்சஜந்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.

—————-

வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

பதவுரை
வாழ் ஆள் பட்டு–உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான (எம்பெருமானுடைய) அடிமைத் தொழிலில் ஈடுபட்டு
நின்றீர்–நிலைத்து நின்றவர்கள்
உள்ளீர் எல்–இருப்பீர்களாகில்
வந்து–(நீங்கள் எங்களோடே) வந்து சேர்ந்து
மண்கொள்மின்–(எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமவுங்கள்;
மணமும் கொள்மின்–(அந்த உத்ஸவத்துக்கு) அபிமாகிகளாகவும் இருங்கள்;
கூழ் ஆள்பட்டு நின்றீர்களை–சோற்றுக்காக (ப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை
எங்கள் குழுவினில்–எங்களுடைய கோஷ்டியிலே
புகுதலொட்டோம்–அங்கீகரிக்க மாட்டோம்; (எங்களுக்குள்ள சிறப்பு என்ன வென்கிறீர்களோ,)
நாங்கள்–நாங்களோவென்றால்
ஏழ் ஆள் காலும்–ஏழு தலைமுறையாக
பழிப்பு இலோம்–ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்கள்
(எங்களுடைய தொழிலோவென்னில்)
இராக்கதர் வாழ் இலங்கை–ராக்ஷஸர் வஹிக்கிற லங்கையிலிருந்த
ஆள்–ஆண் புலிகள் யாவரும்
பாழ் ஆக–வேரோடே அழிந்து போம்படி
படை–(வாநர) சேனையைக் கொண்டு
பொருதானுக்கு–போர் செய்த பெருமாளுக்கு
பல்லாண்டு கூறுதும்–பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்

இவ்வாழ்வார் தனியராயிருந்து மங்களாசாஸநம் பண்ணுவதில் த்ருப்தி பெறாமலும்,
‘போக்யமான வஸ்துவைத் தனியே அநுபவிப்பது தகாது’ என்கிற நியாயத்தைக் கொண்டும்
இன்னும் பல பேர்களையும் மங்களாசாஸநத்திற்குத் துணைகூட்டிக் கொள்ளவேணுமென்று நினைத்தார்.
உலகத்தில் எத்தனை வகையான அதிகாரிகள் இருக்கிறார்களென்று ஆராய்ந்து பார்த்தார்.
செல்வத்தை விரும்புமவர்கள்,
ஆத்மாநுபவக்கிற கைவல்யத்தை விரும்புமவர்கள்,
எம்பெருமானுடைய அநுபவத்தை அபேக்ஷிப்பவர்கள் என்றிப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதைக் கண்டார்;
இம்மூவகை யதிகாரிகளில் செல்வத்தை விரும்புமவர்களும்
கைவல்யத்தை விரும்புமவர்களும்
ப்ரோஜநாந்தரபரர்களாயிருந்தாலும்,
அந்த அற்ப பலனுக்காகவாவது எம்பெருமானைப் பணிந்து பிரார்த்திக்கின்றார்கள் ஆகையால்
அவர்களையும் திருத்திப் பணிகொள்ளலாம் என்று ஆழ்வார் நிச்சயித்து
மேற்சொன்ன மூவகை அதிகாரிகளையும் மங்களாசாஸநத்துக்கு அழைக்க விரும்பி,
முதல் முதலாக, எம்பெருமானுடைய அநுபவத்தையே விரும்புமவர்களான ஜ்ஞாநிகளை அழைக்கிறார்.
‘‘அப்யர்ஹிதம் பூர்வம்’’ (எது சிறந்ததோ, அது முற்படும்) என்கிற நியாயத்தாலே
ச்ரேஷ்டர்களான ஞானிகளுக்கு முதல் தாம்பூலம் கொடுக்கிறார் போலும்.

பகவத் விஷயம் தவிர மற்ற விஷயங்களில் செய்கிற கைங்கரியம் எல்லாம் செய்வதற்குக் கஷ்டமாயும்,
கஷ்டப்பட்டுச் செய்தாலும் அந்த தேவதைக்கு த்ருப்திகரமல்லாமலும்,
ஒருவாறு த்ருப்திகரமானாலும் அற்பபலனைக் கொடுப்பனவாயும் இருப்பதால் அவை துயரத்தையே விளைக்கும்;
பகவத் விஷயத்தில் செய்யும் கைங்கரியமோ, எளிதாகச் செய்யக் கூரியதாயும்,
விரைவில் எம்பெருமானை உவப்பிக்க வல்லதாயும், சாச்வதமான பலனையளிப்பதாயும் இருப்பதால்
அப்படிப்பட்ட பகவத் கைங்கரியத்தில் ஊன்றி யிருப்பவர்களை ‘‘வாழாட்பட்டு நின்றீர்’’ என்றழைக்கிறார்.
அப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும் அருமைப்படுவர்கள் என்பதைக் காட்டுகிறார் ‘‘உள்ளீரேல்’’ என்று.

(மண்ணும் மணமும் கொண்மின். )
மண் கொள்ளுகையாவது -மஹோத்ஸவத்தில் அங்குரார்ப்பணத்திற்குப் புழுதி மண் சுமப்பது.
மணங் கொள்ளுகையாவது – அந்த மஹோத்ஸவத்தினிடத்தில் அபிமாநங்கொண்டிருப்பது.

முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது
‘‘மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம்.

முதலடியில் ‘‘உள்ளீரேல்’’ என்று ஆழ்வார் உரக்கக் கூவினபடியைக் கேட்ட பலபேர்கள்
அவரழைத்த வாசியறியாமல் ஓடிவந்தார்கள்.
அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்காக நீச ஸேவை பண்ணி ஜீவிப்பவர்களும் சேர்ந்திருந்தபடியால்
அவர்களை விலக்கித் தள்ளுகிறார் இரண்டாமடியால்.

பகவத் ஸமபந்தத்தால் தமக்கு உண்டாயிருக்கிற பெருமையும்,
தம்முடைய காலக்ஷேப க்ரமத்தையும் அருளிச் செய்கிறார் பின்னடிகளில்.

(ஏழாட்காலும்)
முன்னே மூன்று, பின்னே மூன்று, நடுவில் ஒன்று; ஆக ஏழு தலைமுறையிலும் என்றபடி அன்றி,
முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்று கொண்டு
(அதாவது முன்னே பத்து, பின்னே பத்து, நடுவில் தான் ஒன்று என்று கொண்டு)
இருபத்தொரு தலைமுறையைச் சொன்னதாகவுமாம்.

நாங்கள் அநாதிகாலமாக எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவுங் கொண்டு,
அப்பெருமான் என்றைக்கோ செய்தருளின ராவண ஸம்ஹாரத்திற்கு இன்றிருந்து மங்களாசஸநம் பண்ணுகிறோம்
ஆகையாலே பரம விலக்ஷணர்களாயுள்ள எங்களுடைய கோஷ்டியில் நீங்கள்
பிரவேசிக்கலாகாதென்று வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று.

———————

இப்பாட்டில், ஆத்மாநுபவத்தையே விரும்பியிருக்கும் கைவல்யார்த்திகளைக் மங்களாசாஸநத்துக்கு அழைக்கிறார்.
கீழ்ப் பாட்டில் கூழாட் பட்டவர்களை விலக்கினாப்போலே
இவர்களையும் விலக்க வேண்டியிருந்தாலும்,
இவர்கள் கைவல்யமாகிற ஸ்வ ப்ரயோஜநம் பெறுவதற்காகவாகிலும்
எம் பெருமானைச் சரணமடைந்தார்களே யென்கிற மகிழ்ச்சியினால் அவர்களையும் அழைத்து,

கிரமமாக உபதேசங்களாலே ஐச்வர்யார்த்திகளும் ப்ரயோஜநாந்தரபரர்களாயிருக்க,
அந்த ஐச்வர்யார்த்திகளை முதலில் அழைப்பதை விட்டுக் கைவல்யார்த்திகளைக் கூப்பிட்டது ஏனென்னில்;
கேண்மின்; –
ஐச்வர்யார்த்திகளை ஸாவகாசமாகவும் திருத்திக் கொள்ளலாம்;
கைவல்யார்த்திகளை அப்படி ஸாவகாசமாகத் திருத்திக் கொள்ள முடியாது.
ஏனென்றால்,
கைவல்யார்த்திகளின் உபாயாநுஷ்டாநம் முடிந்து விட்டால், ஆத்மாநுபவத்துக்காக ஏற்பட்ட
மோலோகத்தில் போய்ச்சேர்ந்து விடுவார்கள்;
மறுபடியும் அங்கிருந்து ஒருநாளும் திரும்பி வருதல் இல்லாமையாலே
இப்போதே அவர்களைத் திருத்திக்கொள்ளாமல் சிறிது விளம்பித்தாம் அந்த அதிகாரிகள் பாழாய்ப் போவர்களே!
என்கிற அநுதாபத்தினால் ஆலஸ்யம் ஸஹியாமல் ஐச்வர்யார்த்திகளுக்கு முன்னே கைவல்யார்த்திகளை யழைக்கிறார்–

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.

பதவுரை
வந்து–(கைவல்யத்தில் ஆசையை விட்டு) வந்து
எங்கள் குழாம் புகுந்து–(அநந்யப்ரயோஜநரான) எங்களுடைய கோஷ்டியிலே அந்வயித்து
கூடும் மனம் உடையீர்கள்–ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பமுடையவர்களாயிருந்தால்
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்–பொல்லாத ஸ்தானமாகிய கைவல்யத்திலே உங்களைக கொண்டு தள்ளுவதற்குமுன்னே
வரம்புஒழி வந்து–(ஆதமாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற)
வரம்பை ஒழித்துக் கொண்டு (இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று) வந்து
ஒல்லை–சீக்கிரமாக
கூடுமின்–எங்களோடு சேர்ந்து விடுங்கள்
(அப்படியே சேர்ந்தபின்பு)
நாடும் நகரமும் நன்கு அறிய–நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும் (உங்களுடைய) நன்மையை அறிந்து கொள்ளும்படி
நமோ நாராயணாய என்று–திருமந்திரத்தைச் சொல்லி
பாடும் மனம் உடைபத்தர்–பாடுகின்ற எண்ணத்தையுடைய பக்தர்களுக்குள்
உள்ளீர் வந்து–சேர்ந்தவர்களாயிருந்து
பல்லாண்டு கூறுமின்-(எம்பெருமானுக்கு) மங்களா சாஸநம் பண்ணுங்கள்

ஏடுநிலம் என்று
கைவல்ய ஸ்தாநத்தை எங்ஙனமே சொல்லுமென்னில்; பிரகாணபலத்தினால் சொல்லும்;
பொல்லாத ஸ்தானமென்று பதப்பொருள்
அன்றியே,
ஏடு – ஸூக்ஷ்ம சரீரமானது,

நிலத்தில் – தனக்குக் காரணமான மூலப்ரக்ருதியிலே,

இடுவதன்முன்னம் -லயிப்பதற்குமுன்னே, என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸ்தூலசரீரமென்றும் ஸூக்ஷ்மசரீரமென்றும் சரீரம் இருவகைப்படும்;
பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும்
கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மநஸ்ஸு ஒன்றும் ஆகிய
பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம சரீரமெனப்படும்;

தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்ச விஷயங்களும்,
ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் – ஆகிய இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.

ஆத்மா தனது ஸூக்ஷ்மசரீரம் விரஜாநதீ ஸ்நாநத்தால் நீங்கிய பின்பு தான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும்.
இவ்விரண்டில் எதையடைந்தபின்பும் திரும்பி வருவதல் இல்லை.

இவ்விருவகையான சரீரங்களுள் ஸூக்ஷ்மசரீரமானது ஸ்தூல சரீரத்திற்காட்டிலும் பிரதானமாய்
அதனுடைய ஸாரமுமாயிருப்பதால், பாலின் ஏடு போலுமென்ற காரணம் பற்றி
‘ஏடு’ என்பது ஸூக்ஷ்மசரீரத்தைக் காட்டும்.

‘‘வரம்பொழிய’’ என்பது வரம்பொழி என்று கடைக்குறையாயிருக்கிறது.
வரம்பொழியவந்து என்றபடி.
இவ்விடத்தில், வரம்பாவது – அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எல்லை;
‘ஆத்மாநுபவத்தோடு நாம் நின்றுவிட வேண்டியது; பகவானை யநுபவிக்கப்போகக்கூடாது’ என்று
நீங்கள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்துவிட்டு உடனே வந்து சேருங்கள் என்றழைக்கிறார்.

கைவல்ய நிஷ்டர்கள் ‘‘ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்’’என்கிற சாஸ்திரப்படி
தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்காகப் பிரணவத்தை மாத்திரம் உச்சரிப்பார்கள்;
இனி அப்படியல்லாமல் திருவஷ்டாக்ஷரத்தையும் பூர்த்தியாகக் கோஷித்துக் கொண்டு வரவேணுமென்று
பின்னடிகளால் அழைக்கிறார்.
பத்தர் – பக்தர்.

——————

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.

பதவுரை

அண்டம் குலத்துக்கு அதிபதி ஆகி–அண்ட ஸமூஹங்களுக்கெல்லாம் நியாமகனாய்
அசுரர் இராக்கதரை–அஸூர ராக்ஷஸர்களுடைய
இண்டை குலத்தை–நெருக்கமான கூட்டத்தை
எடுத்து களைந்த–நிர்மூலமாக்கின
இருடீகேசன் தனக்கு–ஹ்ருஷீகேசனான * பகவானுக்கு
தொண்டர் குலத்தில் உள்ளீர்–அடியவராயிருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே!
(ஐச்வர்யார்த்திகளே!) நீங்கள்
பண்டை குலத்தை தவிர்ந்து–(பிரயோஜநாந்தரத்தை விரும்பிக்கிடந்தமையாகிற) பழைய தன்மையை நீக்கிக் கொண்டு
வந்து-எங்களோடு சேர்ந்து
அடிதொழுது–பகவானுடைய திருவருடிகளை ஸேவித்து
ஆயிரம் நாமம் சொல்லி–எல்லாத் திருநாமங்களையும் அநுஸ்ந்தித்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மின்–எப்போதும் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்

இப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை அழைக்கிறார். அவர்கள் இரு வகைப்படுவர்;
நெடுநாளாக இருந்து கைதப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய விரும்புகிறவர்கள் ஒரு வகுப்பு;
நெடுநாள் தரித்ரராகவேயிருந்து புதிதாகச் செல்வமுடைய விரும்புகிறவர்கள் மற்றொரு வகுப்பு.
(முதல் வகுப்பினர் – ப்ரஷ்டைச்வர்யகாமர்களென்றும்
இரண்டாம் வகுப்பினர் அபூர்வை ச்வர்யகாமர்களென்றும் சொல்லப்படுவர்.)
இவ்விரு வகுப்பினரையும் இப்பாட்டில் அழைக்கிறார்.

இவ்வர்த்தம் இப்பாட்டில் எங்ஙனே தெரிகின்றது என்றால்; கேண்மின்; –
‘‘அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலதிலுள்ளீர்!’’ என்றும்,
‘‘அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தை யெடுத்துக் களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்!’’ என்றும்
விளியை இரண்டாகப் பகுத்துக் கொள்க.

அண்டங்களுக்கு அதிபதியாயிருக்கை ஐச்வரியத்துக்கு முடிவெல்லையாய் இருப்பதால்,
புதிதான ஐச்வரியத்தைப் பெற விரும்புகின்ற அதிகாரிகள் அப்படிப்பட்ட அண்டாதிபதித்வத்தைப் பெற விரும்பி
அந்த விருப்பம் வெளிப்படும்படி
‘‘அண்டாதிபதயே நம; அண்டாதி பதயே நம:’’ என்று எப்போதும் உருப்போடுவர்கள்!
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது முதல்விளியால் விளங்கும்

ஏற்கனவேயிருந்த செல்வத்தை அஸுரராக்ஷஸாதிகள் போன்ற சத்துருக்கள் அபஹரித்துக் கொண்டதனால்
அச்செல்வத்தை மறுபடியும் ஸம்பாதித்துக்கொள்ள விரும்பும் அவர்கள் அந்த விருப்பம் வெளிப்படும்படி
‘‘அஸுரசத்ரவே நம:, அஸுரசத்ரவே நம: என்று உருப்போடுவார்கள்.
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது இரண்டாம் விளியால் விளங்கும்.

ஆகவிப்படி இருவகை அதிகாரிகளையும் அழைத்து
‘‘அந்தோ! நீங்கள் ஸ்வயம் ப்ரயோஜநமாக ஸஹஸ்ரநாமங்களையும்
(வாயாரச் சொல்லி ஆநந்திக்கலாமாயிருக்க, அதைவிட்டு, ‘அண்டாதிபதி, அஸுரசத்ரு:’என்ற
இரண்டு நாமங்களை மாத்திரம் அற்பபலனுக்கான உருப்போட்டுக்கொண்டிருக்கிறீர்களோ, இது தகாது;
இனி ஆயிரநாமங்களையும் அநந்ய்ப்ரயோஜநமாக அநுஸந்தித்து எங்களுடைய கோஷ்டியிலே சேர்ந்து
மங்களாசாஸநம்பண்ண வாருங்கள் – என்றழைத்தாராயிற்று.

அண்டமாவது – உலகவுருண்டை;
அது அளவற்றதாகையாலே அண்டக்குலமென்கிறது
அதுக்கு அதிபதியென்று எம்பெருமானைச் சொல்வது கருத்துடன் கூடியதாகும்.
உன்னைப் போலே நாங்களும் அண்டாதிபதியாக வேணுமென்று தெரிவித்துக் கொண்டபடி.

இண்டைக்குலம் – நெருக்கமான கூட்டம் என்றபடி.
‘இண்டக்குலம்’ என்று பாடமாகில், ‘‘இண்டர் – குலம்’’ என்று பிரியும்.
அஸுரராக்ஷஸர்களாகிற சண்டாளருடைய கூட்டத்தை என்றபடி.
இருடீகேசன் – ஸ்ருஷீகேசன்; இந்திரியங்களை அடக்கியாள்பவன் என்கை.
தொண்டர் + குலம் : தொண்டர்க்குலம்.

——————-

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே.

பதவுரை

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி-என் பிதாவும் அவருடைய பிதாவும்
அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும் அவருடையபாட்டனுமாகிய ஏழு தலைமுறையாக
வந்து-(உரிய காலங்களில்) வந்து
வழி வழி–முறை தப்பாமல்
ஆள் செய்கின்றோம்–கைங்கரியம் பண்ணுகிறோம்
திரு ஓணம் திருவிழவில்–ச்ரவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே
அந்தி அம்போதில்–அழகிய ஸாயம் ஸந்தியாகாலத்தில்
அரி உரு ஆகி–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி
அரியை–(ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப்) பகைவனான இரணியனை
அழித்தவனை–கொன்றொழித்த பெருமானுக்கு
பந்தனை தீர–(அன்றைய) அனுக்கம் தீரும்படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுவதும்–மங்களாசாஸநம் செய்வோம்.

‘‘வாழாட்பட்டு’’ என்கிற பாசுரத்தில்
அநந்யப்ரயோஜநர்களான முமுக்ஷூக்களை யழைத்தாரென்றோ;
அழைக்கும்போது
‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று தம்முடைய பெருமையைச் சொல்லியழைத்தார்.
அப்படி அழைக்கப்பட்ட அநந்ய ப்ரயோஜகர்கள் ‘நாங்களும் உம்மைப் போலவே ஏழுதலைமுறையாக அடிமை செய்கிறவர்கள்’
என்று தங்களுடைய பெருமையையும், எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறவர்களென்கிற
தங்களுடைய தினசரியையும் சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்ததாக இப்பாசுரம் அருளிச் செய்யப்படுகிறது.

‘என் தந்தை’ என்பது எந்தையென மருவிற்று.
ஏழ்படிகால் – ‘படி’யென்பதற்கு உடம்பு என்று பொருள்; அச்சொல் தலைமுறையைக் காட்டுகிறது.
எங்களுடைய ஸந்ததியில் ஒருவர் தப்பாமல் எல்லாரும் ஆட்செய்பவர்கள் என்பதற்காக வழிவழியென்கிறார்.

(திருவோணத் திருவிழாவில் இத்யாதி)
எம்பெருமான் எந்த நக்ஷத்திரத்தில் அவதரித்தாலும் அவையெல்லாம் வேதத்தில் சொன்னபடி
விஷ்ணு நக்ஷத்ரமாகிய திருவோண நக்ஷத்திரத்தின் அம்சமாயிருக்கத் தக்கவை யாகையாலும்,
விசேஷித்துத் திருநக்ஷத்திரம் சொல்லாத அவதாரங்களுக்கெல்லாம் இதையே நக்ஷத்திரமாகக் கொள்வது உசிதமாகையாலும்
‘‘திருவோணத் திருவிழாவில் ; அரியுருவாகி’’ என்றார்.

ச்ரோணா என்னும் வடசொல் ஓணமெனத் திரிந்தது.

அரியுரு ஹிம்ஹமென்னும் பொருளதான ஹரியென்னும் வடசொல் அரியென்று விகாரப்பட்டிருக்கின்றது.

‘‘நரஹரியாகி’’ என்னாமல் ‘அரியுருவாகி’ என்றது பிரதானமான சிரஸ்ஸு ஸிம்ஹமாயிருப்பதனாலாம்.
தூணிலே நரசிங்கமாகத் தோன்றி இரணியனைக் கொன்று ப்ரஹ்லாதனைக் காத்தருளின இதிஹாஸம் ப்ரஸித்தம்.

பந்தநா என்னும் வடசொல் பந்தனை யெனத் திரிந்தது; அனுக்கம் என்று பொருள்.

——————

‘‘ஏடுநிலத்தில்’’ என்னும் பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்தாரன்றோ;
அழைக்கும்போது ‘‘நாடுநகரமும் நன்கறிய’’ என்று
உங்களுடைய நன்மையை எல்லாரும் தெரிந்து கொள்ளும்படி நீங்கள் வரவேணுமென்று ஒரு வார்த்தை சொன்னார்.
அவர்களும் அப்படியே வரவேணுமென்று நிச்சயித்து
சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்துகொள்வது நல்ல உபாயம்’ என்று
அதைச் செய்துகொண்டு அடிமை செய்பவர்களாய் பாணஸுரயுத்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அடிமை செய்த
திருவாழியாழ்வானுக்கும் அவனை அடிமைகொண்ட ஸ்ரீக்ருஷ்ணனுக்கும்
அக்காலத்தில் மங்களாசாஸநம் செய்யப் பெறாத குறைதீர மங்களாசாஸநம் செய்பவர்களாக ஆய்விட்டோம்
என்று தாங்கள் குடும்பமாகத் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு வந்தார்களாக அருளிச் செய்யும் பாசுரம் இது–

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே–

பதவுரை

தீயின்–(சந்திரன்: ஸூர்யன் அக்நி முதலிய) சுடர்ப்பொருள்கள் எல்லாவற்றையும்விட
பொலிகின்ற–பிரபலமாகப் பிரகாசிப்பதும்
செம் சுடர் திகழ்–சிவந்த ஒளியோடுகூடி விளங்குவதுமான
திருசக்கரத்தின்–திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற
கோயில்–ஸ்தானமாகிய
ஆழி–வட்ட வடிவமான
பொறியாலே–அடையாளத்தினால்
ஒற்றுண்டு நின்று–அடையாளம் செய்யப் பட்டவர்களாயிருந்து
குடிகுடி–அநாதி ஸந்தாநமாக
ஆள் செய்கின்றோம்–(எம்பெருமானுக்குக்) கைங்கரியம் செய்து வருகின்றோம்: (அதுவும் தவிர)
மாயம் பொருபடை வாணனை–க்ருத்ரிம யுத்தம் செய்பவனும் சேனைகளை உடையவனுமான பாணாசுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களினின்றும்
பொழி–வெளிக் கிளம்புகிற
குருதி–ரக்தமானது
பாய–வெள்ளமாகப் பாய்ந்தோடும்படி
சுழற்றிய ஆழி–திருக்கையிலே சுழலச் செய்த சக்கராயுதத்தை
வல்லானுக்கு–ஆள வல்ல எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்

‘‘ஸுதர்சநம் பாஸ்கரகோடிதுல்யம்’’ என்கிறபடியே
திருவாழியாழ்வான் கோடிஸுர்ய ப்ரகாசனாகையால் ‘‘தீயிற்பொலிகின்ற’’ எனப்பட்டது.
தேஜ: பதார்த்தங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாக ஜ்வலிக்கிற என்றபடி.

பொலிகின்ற என்பதும், திகழ் என்பதும் திருச்சக்கரத்திற்கு அடைமொழிகள்.

இனி, ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்பதை சக்கரத்தின் பொறிக்கு அடைமொழியாக்கி,
அக்நியால் விளங்குகிற சக்கரத்தின் பொறி என்றும் உரைக்கலாம்.

மந்த்ர பூர்வமாக ஹோமஞ்செய்த அக்நியில் காய்ச்சப்பட்ட சங்கு சக்கரங்களின் பொறிகளை (அடையாளங்களை)
புஜங்களில் அணிந்து கொள்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.

பாண : என்ற வட சொல் வாணனெனத் திரிந்தது.

——————

“அண்டக்குலத்துக்திபதியாகி’’ என்னும் பாசுரத்தில் ஐச்வர்யார்த்திகளை அழைத்தாரே;
அவர்கள்தாம் எம்பெருமானிடத்தில் சில ஐச்வர்யங்களைப் பெற்றுக் கொண்டு திருந்தி
மங்களாசாஸநத்துக்கு ஸித்தராக வந்தபடியைச் சொல்லிக் கொள்ளுகிறார்களாக
அருளிச் செய்வது இந்தப் பாசுரம்–

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

பதவுரை

நெய் எடை–நெய்யோடு ஸமமான நிறையை யுடையதாய்
நல்லது–போக்யமாய்-ஓர் விலக்ஷணமான
சோறும்–ப்ரஸாதத்தையும்
நியதமும் அத்தாணி சேவகமும்–எப்போதும் பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற ஸேவக வ்ருத்தியையும்
கை அடைக்காயும்–திருக்கையால் ப்ரஸாதிக்கும் தாம்பூலத்தையும்
கழுத்துக்கு பூணோடு–கழுத்தில் தரித்துக் கொள்ள வேண்டிய ஆபரணத்தையும்
காதுக்கு குண்டலமும்–காதில் இட்டுக் கொள்ள வேண்டிய குண்டலத்தையும்
மெய் இட–உடம்பில் பூசிக் கொள்ளும்படி
நல்லது ஓர் சாந்தமும்–சிறந்த சந்தனத்தையும்
தந்து–(ரஜஸ் தமோ குணங்களால் ஐச்வரியத்தை விரும்பின என்னுடைய விருப்பத்தின்படியே) கொடுத்து
என்னை–இப்படி ஸம்ஸாரியாயக் கிடந்த என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல–சுத்த ஸாத்விகனாகச் செய்தருளினவனாய்
பை உடை நாகம் பகை கொடியானுக்கு–படத்தையுடைய பாம்புக்கு விரோதியான கருடனைக் கொடியாக வுடையனான எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுவன்–மங்களாசாஸநம் பண்ணுவேன்.

கீழ்ப்பாசுரங்களிற் போல் இதில் பன்மையின்றியே ‘‘பல்லாண்டு கூறுவன்’’ என்று
ஒருமையாகப் பிரயோகமிருப்பதற்குக் காரணம் கேண்மின்; –
உலகத்தில் அநந்ய ப்ரயோஜநர்களுடைய கூட்டமும்
கைவல்யார்த்திகளுடைய கூட்டமும் மிகவும் ஸ்வல்பமா யிருக்குமாகையாலே
அந்தக் கூட்டங்களிலுள்ள நாலைந்து பேர்கள் பேசினதாகக் கொண்டு அவர்களது பாசுரங்களில்
‘‘பல்லாண்டு பாடுதுமே’’ என்றும்
‘‘பல்லாண்டு கூறுதுமே’’என்றும் பஹுவசந ப்ரயோகம் பண்ணப்பட்டது.

ஐச்வர்யார்த்திகளான இவர்களுடைய கூட்டம் அப்படி ஸவல்பமாயிராமல் அளவற்றிக்குமாகையால்,
ஒரு பெரிய கூட்டத்துக்கெல்லாம் ஒருவன் பிரதாநனாய் நின்று பேசுவது வழக்கமாகையால்
அப்படியே இருக்கும் ஒருவன் பேசுவதாக வைக்கப்பட்டது.
மேல் ‘‘அல்வழக்கொன்றுமில்லா’’ என்கிற பாட்டிலுள்ள ஏகவசநத்துக்கும் இதுவே ஸமாதாநம்.

உலகத்தார்க்கு வேண்டிய பதார்த்தங்கள் மூன்றுவிதம் –
தாரகம், போஷகம், போக்யம் என
அன்னம் தாரகம், நெய் பால் தயிர் முதலானவை போஷகம், சந்தனம் புஷ்பம் தாம்பூலம் முதலியவை போக்யம்.
ஆக இந்தப் பதார்த்தங்கள் ஒருவனுக்குப் போதுமானவை கிடைத்தால் அவ்வளவில் த்ருப்தி பெற ப்ராப்தம் –
ஊர்ப்பட்ட அண்டாதிபத்யமெல்லாம் வேணுமென்று விரும்புவது ப்ராப்தமாகும்.
ஆகையால் ஸ்வரூப ஜ்ஞாநமில்லாமல் அண்டாதிபத்யம் அளிக்க வேணுமென்று
நாங்கள் எம்பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் பரம க்ருபாளுவாய் எங்களை உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம் பற்றி
எங்களுக்கு உசிதமாய் வேண்டியவளவு தாரக – போஷக – போக்ய வஸ்துக்களைக் கொடுத்து
இனி மேலாவது எங்களுக்கு நல்ல புத்தி யுண்டாகும்படி குளிரக் கடாஷித்து
‘‘ஐச்வரியம் த்யாஜ்யம், பகவத்கைங்கர்யமே புருஷார்த்தம்’’ என்னும் அத்யவஸாயத்தைப் பிறப்பித்து
எங்களை சுத்த ஸ்வரூபராக ஆக்கினான்.
அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுவோம் நாங்கள் –
என்று ஐச்வர்யத்திகள் சொல்லுவதாக இந்தப் பாசுரம் உள்ளது.

‘‘நெய் எடை’’ என்றும் ‘‘நெய் இடை’’ என்றும் பாடபேதமுண்டு.
முந்தின பாடத்தில், நெய் பாதி சோறு பாதியாய் இரண்டும் அளவொத்திருக்குமென்கை.
ஒருவீசைச் சோற்றுக்கு ஒருவீசை நெய் சேர்ப்பதென்றால், இதனில் விஞ்சிய நல்ல சோறு இல்லையன்றோ.

‘‘நெய்யிடை’’ என்ற பாடத்தில், நெய்யின் நடுவே உள்ள சோறு என்று பொருளாய்,
நெய்யின் அளவு அதிகமாயும் ப்ரஸாதத்தினளவு அல்பமாயுமிருக்கு மென்கை.
நல்லது ஓர் சோறு இட்டவன் ‘நாம் இட்டோம்’ என்று அஹங்காரங் கொண்டாலும்,
உண்டவன், ‘இதற்கு நாம் என்ன கைம்மாறு செய்வோம்’ என்றிருந்தாலும் நல்ல சோறாகமாட்டாது;
பெற்ற தாய் இட, புத்திரன் உண்ணுஞ் சோறு போலே அன்புடன் இடப்பட்டு ருசியில் குறையில்லாத சோறு என்றபடி.

அத்தாணிச் சேவகமாவது – ஆஸ்தாந ஸேவகம்;
எம்பெருமானிருக்கும் இடத்தில் கூடவேயிருந்து கொண்டு பிரியாமல் நின்று செய்கிற கைங்கரியம்
ஐச்வர்யார்த்தியானவன் சொல்லுகிற இந்தப் பாசுரத்தில் ‘அத்தாணிச் சேவகமும் தந்து’’ என்று எங்ஙனே சொல்லலாம்?
அநந்ய ப்ரயோஜநனுக்கன்றோ அத்தாணிச் சேவகமுள்ளது;
சோறு அடைக்காய் பூண் குண்டலம் ஆகிய இவற்றைத் தந்து என்பது சேருமே யொழிய
அத்தாணிச் சேவகமும் தந்ததாகச் சொல்லுகிறது சேராதே யென்னில்;
ஐச்வர்யார்த்தியா யிருந்தாலும் பகவத் க்ருபையாலே திருந்தி அநந்ய ப்ரயோஜநனாய் வந்தமை
தோற்றும் படியாகச் சொல்லுகிற பாசுரமாகையாலே சேருமென்க.
நான் அபேக்ஷித்த ஜீவநத்தை மாத்திரம் கொடுத்து விடாமல் உஜ்ஜீவநத்தையுமுண்டாக்கி
என்னைப் பரிசுத்தாத்மாவாகச் செய்தானே! என்று ஸந்தோஷித்துச் சொல்லுகிற பேச்சு.

வெள்ளுயிர் – சுத்தமான ஆத்மா.
ஸத்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்களுண்டு.
அவற்றுள் ஸத்வ குணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும் ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும்
தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிஸமயமாதலால்
இங்கே ஸாத்விகளை வெள்ளுயிரென்றார்.

பையுடை நாகப் பகைக் கொடியானுக்கு என்கிறவிடத்தில்,
‘‘பையுடை நாகத்தானுக்கு’’ என்றும் ‘‘
(நாகப்) பகைக் கொடியானுக்கு’’ என்றும் பிரித்துக் கொள்வது நன்று.

‘‘அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாஸநம் பண்ணுகிறேனென்கை’’ என்று
வியாக்கியானமருளிச்செய்த பெரிய வாச்சான்பிள்ளையின் திருவுள்ளம் இதுவேயாம்.

நாகத்துக்கு ‘பையுடை’ என்று விசேஷணமிட்டபடியால் அது வீணாகாமைக்காக
இப்படி அர்த்தம் செய்யவேண்டிய தாயிற்றென்ப.
ஸந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சயனிப்பவனாயும்,
அந்த நாகஜாதிக்கு சத்ருவான கருடனை த்வஜமாகவுடையனாயும் இருக்கிற எம்பெருமானுக்கு என்றபடி.

நித்யம், குண்டலம், நாகம் – வடசொற்கள்.

——————–

‘‘வாழாட்பட்டு’’ என்னும் பாசுரத்தில் அழைக்கப்பட்டு
‘‘எந்தை தந்தை தந்தை’’ என்னும் பாசுரத்தால் தங்கள் வ்ருத்தியைச் சொல்லிக் கொண்டு
வந்து சேர்ந்த அநந்ய ப்ரயோஜநர்கள் தாம் எம்பெருமானை நோக்கிப்
பல்லாண்டு பாடும் படியை அருளிச் செய்வது இப்பாட்டு–

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பதவுரை

உடுத்து-தேவரீர் அரையில் சாத்திக் கொண்டு
களைந்த–கழித்து விட்ட
நின் பீதக வாடை–தேவரீருடைய பீதாம்பரத்தை
உடுத்து–உடுத்துக் கொண்டும்
கலத்தது–தேவர் அமுது செய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை
உண்டு–புஜித்தும்
சூடி களைந்தன–தேவர் சாத்திக் கொண்டு களைந்தவைகளான
தொடுத்த–தொடுக்கப் பட்டுள்ள
துழாய் மலர்–திருத் துழாய் மலர் மாலைகளை
சூடும்–சூட்டிக் கொள்ளுகிறவர்களான
இத் தொண்டர்களோம்–இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள்
விடுத்த திசை கருமம் திருத்தி–தேவரீர் ஏவி யனுப்பிய திக்கிலே ஆக வேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து,
படுத்த–கீழே பரப்பிய
பை நாகம் அணை–படத்தை யுடைய பாம்பாகிற படுக்கையில்
பள்ளி கொண்டானுக்கு–சயனித்திருக்கிற தேவரீருக்கு
திருஓணம் திருவிழவில்–ச்ரவணத் திரு நாளிலே
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்

‘‘நின் பீதகவாடை’’ என்று முன்னிலையாகச் சொல்லியிருப்பதால்
இந்தப் பாசுரம் எம்பெருமானையே நோக்கி அவர்கள் சொல்லுவதாக நன்கு விளங்கும்.
கீழே ஆழ்வாரால் அழைக்கப்பட்ட மூவகை அதிகாரிகளும் வரிசையாக
‘எந்தை தந்தை’
‘தீயிற்பொலிகின்ற’
‘நெய்யெடை நல்லது’ என்னும் பாசுரங்கள் சொன்னது ஆழ்வாரை நோக்கிச் சொன்னதாம்.

இனி, ‘உடுத்துக்களைந்த’
‘எந்நாளெம்பெருமாள்’
‘ அல்வழக்கொன்று மில்லா’ என்கிற மூன்று பாசுரங்களும் –
அவர்கள் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக நோக்கிச் சொல்வதாம்.

மேலிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய விளி வ்யக்தமாகவுள்ளது;
இப்பாசுரத்தில் அப்படி வ்யக்தமாக இல்லாவிடிலும்
‘‘நின் பீதகவாடை’’ என்கிற சொல்லாற்றலால் வ்யந்தமாகிறது.

எம்பெருமானே! நாங்கள் எங்களுக்கென்று அன்னம் வஸ்திரம் புஷ்பம் முதலானவற்றை
விலைக்கு வாங்கி உபயோகிப்பதில்லை.
தேவரீர் அனுபவித்துக் கழித்தவற்றை மஹாப்ரஸாதமாகக் கொண்டு
அவற்றையே உடுப்பதும் உண்பதும் சூடுவதும், செய்வோம் நாங்கள்;

அவ்வளவோடும் நில்லாமல்,
தேவரீருக்கு எந்த திக்கிலே எந்த காரியம் ஆக வேண்டியிருந்தாலும்
அவற்றை ஒழுங்கு படச் செய்து முடிப்பதும் செய்வோம்.
அவ்வளவிலும் த்ருப்தி பெறாமல், ஒரு வெள்ளி மலையில் காளமேகம் சாய்ந்து கிடப்பது போல்
ஆதிசேஷ சயனத்திலே தேவரீர் பள்ளி கொண்டிருக்கிற கிடையழகுக்குப்
பல்லாண்டு பாடுவதும் செய்வோமென்கிறார்கள்.

பீதகவாடை –
‘பீதம்’ என்னும் வடசொல் சுப்ரத்யயம் பெற்றுப் பீதகமென்றாயிற்று.
பொன்வர்ணமான ஆடை என்கை.
எம்பெருமானுடைய திவ்ய பீதாம்பரத்தைப் பிறர் உடுத்துக் கொள்ளலாமோ?
அஃது அப்பெருமானுக்கே அஸாதாரணமன்றோ? என்னில்;
அவனுக்கு அஸாதாரணமான பீதாம்பரத்தை இங்கே விவக்ஷிக்கவில்லை.
சில ஆஸனங்களில் ஸாதாரணத் திருப் பரிவட்டங்களும் சாத்திக் கொள்வதுண்டாகையால் அவற்றைச் சொல்லுகிறது.
அவை பீதகவாடையாகுமோ வென்னில்;
எம்பெருமான் திருவரையில் சாத்திக் கொள்ளும் வஸ்த்ரங்களெல்லாம் திவ்ய பீதாம்பரத்தின் அம்சமேயாமென்பது சாஸ்த்ரம்.

பள்ளிகொண்டானுக்கு –
பள்ளி கொண்டவுனக்கு என்கை. முன்னிலையில் படர்க்கை வந்த இடவழுமைதி
‘‘ஒருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும், ஓரிடம் பிறரிடம் தழுவலுமுளவே’’ என்பது நன்னூல்.

———————-

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பதவுரை

எம்பெருமான்–ஸ்வாமிந்!
உன் தனக்கு–தேவரீர்க்கு
அடியோம் என்று–நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று
எழுத்து–சொல்லானது
பட்ட நாள்–எங்களுடைய வாயில் உண்டாகப் பெற்ற நாள்
எந் நாள்–எந்த தினமோ,
அந் நாளே–அந்த தினம் முதலாகவே
அடியோங்கள்–அடியோங்களுடைய
அடி குடில்–அடிமைப் பட்ட ஸந்தானமெல்லாம்
வீடு பெற்று உயந்தது காண்–நல்ல கதியை யடைந்து உஜ்ஜீவித்து விட்டது
செம் நாள் தோற்றி–நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து
திரு மதுரையுள்–அழகிய வட மதுரையிலே
(கம்ஸனுடைய ஆயுத சாலையில் புகுந்து)
சிலை குனித்து–வில்லை வளைத்து முறித்து
ஐந்தலைய–ஐந்து தலைகளை யுடைய
பை–படத்தோடு கூடின
நரகம்–காளிய நாகத்தினுடைய
தலை–தலை மேலே
பாய்ந்தவனே–குதித்தவனே!
உன்னை பல்லாண்டு கூறுதும்–தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்

‘‘ஏடு நிலத்தில்’’ என்கிற பாசுரத்தில் அழைக்கப்பட்டு
‘‘தீயிற்பொலிகின்ற’’ என்னும் பாசுரத்தால்
தாம் திருந்தினபடியைச் சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்த கைவல்யார்த்திகள்
எம்பெருமானை நோக்கி மங்களா சாஸநம் பண்ணுகிறபடியைச் சொல்வது இந்தப் பாசுரம்.

எம்பெருமானே நாங்கள் கைவல்ல புருஷார்த்த ப்ராப்திக்கு ஸாதகமாக
‘‘ஓம், நம:’’ முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டு தேவரீரை பஜநம் பண்ணினோம்;
தேவரீர் எங்களைக் கடாக்ஷித்து நாங்கள் மீட்சியற்ற கைவல்யத்தை யடைந்து கெட்டுப் போகாதபடி
அருள் புரிந்து நல்ல புத்தியை யுண்டாக்கின படியால் அடியோங்கள் இப்போது திருந்தி
தேவரீருக்குப் பல்லாண்டு பாடுகிறவர்களாக ஆய் விட்டோ மென்கிறார்கள்.

எம்பெருமானே! தேவரீருக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட நாள் எந்நாளோ,
அந்நாளிலேயே அடியோங்களுடைய குடில் உஜ்ஜீவித்துப் போயிற்று என்றது –
நாங்கள் கைவல்ய ப்ராப்திக்கு ஸாதகமாக ஓம், நம: என்பதை அநுஸந்தித்து
அதனால் யாத்ருச்சிகமாக நல்ல புத்தி பிறந்து குடி குடியாக உஜ்ஜீவித்தோமென்றபடி.
குடில் – க்ருஹம்; நைச்யாநுஸந்தாநப் பேச்சு.

வில்விழவென்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்ட கண்ணபிரான்
அவனுடைய ஆயுத சாலையிலே புகுந்து வில்லை யெடுத்து முறித்ததும்
தன்னுடைய விஷத்தாலே யமுநா நதியின் ஒரு மடுவைக் கெடுத்துக் கொண்டு
எல்லார்க்கும் பயங்கரமாயிருந்த காளிய நாகத்தைத் தண்டித்ததும் ப்ரஹித்தம்.

—————

‘‘அண்டக்குலத்துக்கு’’ என்னும் பாசுரத்தாலே அழைக்கப்பட்டு
‘‘நெய்யெடை’’ என்னும் பாசுரத்தால் தாங்கள் திருந்தின படியைச் சொல்லிக் கொண்டு வந்து
ஐச்வர்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களாசாஸநம் பண்ணுகிறார்கள் இதில்

ஐச்வர்யார்த்திகள் எண்ணிறந்தவர்கள் ஆகையாலே அவர்களுள் ஒருவன் சொல்லுகின்றனென்று
‘‘நெய்யெடை’’ என்கிற பாசுரத்தில்
‘‘கூறுவனே’’ என்று ஏகவசந ப்ரயோகம் பண்ணினது போலவே இதிலும் கொள்வது–

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.

பதவுரை

திருமாலே–ச்ரியபதியே!
அல் வழக்கு ஒன்றுமில்லா–அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற
அணிகோட்டியர் கோன்–அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்
அபிமாந துங்கன்–ஸ்ரீவைஷ்ணவாபிமாநத்தாற் சிறந்தவருமான
செல்வனைபோல–செல்வநம்பியைப் போலவே
நானும்–நானும்
உனக்கு–தேவரீருக்கு
பழ அடியேன்–பழமையான தாஸனாய்விட்டேன்
பல் வகையாலும் பவித்திரனே–எல்லா விதங்களாலும் பரிசுத்தனான பெருமானே
நல் வகையால்–அடியேனுக்கு நன்மை யுண்டாகும்படி
நமோ நாராயணா என்று–திருமந்திரத்தை அநுஸந்தித்து
பல நாமம் பரவி–(தேவரீருடைய) அனேக திருநாமங்களைச் சொல்லி யேத்தி
உன்னை பல்லாண்டு கூறுவன்–தேவரீருக்கு மங்களாசாஸநம் பண்ணுவேன்.

அல்வழக்கு ஒன்றுமில்லா-
தேஹமே ஆத்மாவென்று நினைப்பது,
பகவானுக்கு சேஷமாய்ப் பரதந்த்ரமான ஆத்மாவை ஸ்வத்ந்த்ரமென்று நினைப்பது,
தேவதாந்தரங்களைப் பரதெய்வமாக நினைப்பது,
எம்பெருமானிடத்தில் க்ஷுத்ர பலன்களை அபேக்ஷிப்பது,
மோக்ஷத்துக்காகவும் கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பது
இவை முதலானவை அல்வழக்குகள் – அநியாயங்கள்;

அவையில்லாதவரான செல்வநம்பி தேவரீர்க்கு எப்படி நித்ய தாஸரோ
அப்படி நாங்களும் நித்யதாஸராய்விட்டோம் என்கிறார்கள்.

‘அணிகோட்டியர் கோன்’ என்கையாலே
செல்வநம்பி திருக்கோட்டியூரில் அவதரித்தவர் என்று விளங்குகிறது.

இத்தனைநாள் வரையில் ஐச்வர்யத்தியாயிருந்து இன்று வந்து சேர்ந்தவன்,
‘செல்வநம்பியைப் போலே நானும் பழவடியேன்’ என்னாலாமோ வென்னில்,
பாபத்தாலே வந்த அஹங்காரம் கழிந்து விட்டால் எல்லா ஆத்மாக்களுக்கும் அடிமையே நிலை நிற்பதாகையால்
அப்படிசொல்லக் குறை என்?

இப்போது நல்வகையால் என்றபடியால்
இதுவரையில் இந்த ஐச்வர்யார்த்திகள் பகவந் நாமங்களைக் கெட்ட வழியில்
உபயோக்ப்படுத்தினார்களென்று ஏற்படுகின்றது.
கெட்டவழியாவது – பிரயோஜநாந்தரப்ரார்த்தகை.
இதுவரையில் தங்களுக்கிருந்த அசுத்திகளை யெல்லாம் போக்கி சுத்தப் படுத்திச் சேர்த்துக் கொண்டபடியால்
பல்வகையாலும் பவித்திரனே! என்கிறார்கள்.

அபிமானதுங்கன் – வடசொல் தொட.

—————-

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.

பதவுரை

பவித்திரனை–பரிசுத்தனும்
பர மேட்டியை–பரமபத நிலயனும்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை–ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன்–ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார்
விரும்பிய சொல்–ஆதரத்தோடு சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை,
நல் ஆண்டு என்று–நமக்கு நல்ல காலம் வாய்த்ததென்று (மகிழ்ந்து)
நவின்று உரைப்பார்–ஸர்வதா அநுஸந்திப்பவர்கள்
பரமாத்மனை–ஸ்ரீமந்நாராயணனை
சூழ்ந்து இருந்து–சுற்றும் சூழ்ந்து கொண்டு
(நமோ நாராயணாய என்று ) பல்லாண்டும் எப்போதும்
பல்லாண்டு ஏத்துவர்-மங்களாசாஸநம் பண்ணப்பெறுவார்கள்.

பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப்
பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன் விஷயத்தில்
பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத் திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை,
நமக்கு நல்ல காலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள்
மறுமையில் மோக் ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து
அனேக தேஹங்களை எடுத்துக் கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்து கொண்டு
மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைக் கட்டிற்றாயிற்று.

பவித்திரன் –
தான் பரிசுத்தனாயிருப்பதோடு அபரிசுத்தர்களையும் பரிசுத்தராக்க வல்லவன்
பரமேஷ்டீ என்னும் பரமேட்டியெனத் திரிந்தது. மிகச் சிறந்த ஸ்தானத்தில் வாழ்பவன் என்று பொருள்.

சார்ங்கம் என்பது (வடமொழியில்) வில்லுக்குப் பொதுப் பெயராயிருந்தாலும்,
பெருமானுடைய திருவில்லுக்குச் சிறப்புப் பெயருமாம்

‘‘வில் ஆண்டான்’’ என்ற சொல்லாற்றலால் -‘சத்ருக்களைக் காட்டு, காட்டு’ என்று
விம்மிக் கிளம்புகின்ற வில்லை அடக்கியாள்பவன் எம்பெருமான் என்பது விளங்கும்.

வில்லிகண்டார் என்பவர்களில் மூத்தவனான வில்லி என்பவனால் ஏற்படுத்தப்பட்ட
புதிய நகரமாகையால் வில்லிபுத்தூரென்று திருநாமம்;
வில்லி யென்பவன் புற்றில் நின்றும் வடபத்ரசாயிப் பெருமாளைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த
திவ்யதேசமென்று இதனை வில்லி புற்றூர் என்றுங் கூறுகின்ற்னர்.
வடமொழியில் ஸ்ரீதந்விநவ்யபுரம் எனப் பெரும் பான்மையாகவும்
ஸ்ரீத்ந்லிவல்மீகபுரம் எனச் சிறுபான்மையாகவும் வழங்கப் பெறும்.

விட்டுசித்தன் –
விஷ்ணுவை சித்தத்திலே உடையவர் என்று பொருள்.
மற்ற ஆழ்வார்களுடைய சித்தத்திலும் எம்பெருமான் எழுந்தருளியிருந்தாலும்
‘‘அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும், அரவிந்தப்பாவையுந்தானும்
அகம்படி வந்து புகுந்து, பரவைத் திரைபலமோதப் பள்ளி கொள்கின்ற பிரானை’’ என்றும்
‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்றும்
இவ்வாழ்வார் தாமே பேசிக்கொள்ளும்படியாக
எம்பெருமான் குடும்பத்தோடே வந்து நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஏற்றம்
இவ்வாழ்வார் திருவுள்ளத்திற்கே அஸாதாரணமென்றுணர்க.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகன் –

June 27, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்

திருப்பல்லாண்டு
1- இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –

பெரியாழ்வார் திருமொழி-
2- பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –

3- குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீணீ ரிலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –

4- கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-

5- வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –

6- சிலை ஓன்று இறுத்தான் -2 -3 -7 –

7- நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –

8- பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட
வக்கற்றைக் குழலன் —2 -6 -7 –

9- மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன் –2 -6 -8 –

10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –

11 – கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5-

12- என் வில்வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து
முது பெண் உயிர் உண்டான் – 3- 9- 2-

13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாத சீதை மணாளன் – -3 -9 -4

14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –

15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி
நுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான் — -3- 9- 8-

16- காரார் கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு
ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –

17-செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து சீதையை கொணர்ந்தது
அறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க
செறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான் -3 -10 -1 – –

18 – எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-

19- கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்
மன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று
விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான் -3- 10- 3- –

20 – கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த
தோழமை கொண்டான் – – -3 -10 -4 –

21- கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க
பரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –

22- சித்ரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா ஒ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –

23- பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து
எம்பிரான் ஏக பின்னே யங்கு இலக்குமணன் பிரிய நின்றான் – – —3 -10 -7 –

24- அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –

25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே
வில்லிறுத்தான் — 3- 1- 9-

26- கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில்
பெருமை இராமன் — 4- 1- 1-

27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்
கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்
தன் வேள்வியில் காண நின்றன் -4 -1 -2

28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் –4 -1 -3 –

29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்
படுத்து குல விளக்காய் நின்ற கோன் — -4 -2 -1

30- வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத
மூக்கும் போக்குவித்தான் -4 -2 -2 –

31- கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் – -4 -3 -7 –

32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-

33 – தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-

34- கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –

35 – பெரும் வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தான் — 4- 8- 5-

36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய
கருவழித்த அழிப்பன் — 4- 8- 6-

37- கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7

38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை
செருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10

39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-

40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி
மலர் கண் வைத்தான் –4-9 -2-

——————————–

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் உபக்ரமும் உப சம்ஹாரமும் –

March 9, 2019

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் உபக்ரமும் உப சம்ஹாரமும் –
உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —

திருப்பல்லாண்டு-

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா! உன் சேவடி செவ்வி திரு காப்பு –1-

பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்
ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காக சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்
ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய
பயம் ஷமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இறே
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக-செல்லப் புக்கார்

புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ –
மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்-
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட-
அவர் பயம் சமிக்கக் காண்கையாலே –
இவ்வார்த்தை ஸ்ரீ ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்தது
இம்மிடுக்கு இவர்க்கு பய ஹேது வாவான் என் என்னில் –
சூரனான புத்ரனைக் கண்டால் பெற்ற தாய் -இவன் மதியாதே யுத்தத்தில் புகும் –
என் வருகிறதோ என்று பயப்படுமா போலே பயப்படுவது யுக்தம்
மல்லரை அழியச் செய்த தோள் -என்று இவர் அறிந்தபடி என் என்னில் –
காதில் தோடு வாங்கினாலும் -தோடிட்ட காது -என்று அறியுமா போலே

மணி வண்ணா-சௌகுமார்யம் பய ஹேதுவாகிறது –

உன் செவ்வடி –
அது என்னால் வருகிறது அன்று -உன் வடிவின் வை லஷ்ண்யத்தாலே வருகிறது
நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞனான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு –
வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இறே
செவ்வி
அரும்பினை அலரை -என்னுமா போலே நித்ய யௌவனமாய் இருக்கை

திருக்காப்பு
குறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் பண்ணின ரஷை என்கை
ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில் –
இன்னமும் இவ் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணினோம் என்று கை வாங்க ஒண்ணாத
அபர்யாப்திக்கு ஸூசகமாய் இருக்கிறது
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
எல்லாப் பாட்டுக்கும் இது தான் முக உரை போல் இருக்கிறது

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று அந்வயம்

ஸ்ரீ மதே ராமானுஜாய நம
போன்று மங்களாரத்தமாக அருளிய பாசுரம் -கிரியை இன்றி –
பாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் பிரகாசமாய் நாயக பாசுரம் போலே இது என்னவுமாம்-

———————————–

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே
மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே
யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப்பிரபந்தத்தின் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

இத்தால் -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்கிற இடத்தில் பவித்ரதையை நினைத்து-
பரமேட்டியை இத்யாதியாலே இரண்டாம் பாட்டில் சொன்ன நித்ய விபூதி யோகத்தை சொல்லுகிறது

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இறே

நல்லாண்டு என்று
இப்பாசுரம் சொல்லுகைக்கு ஏகாந்தமான காலத்தை கொண்டாடி –
அத்யமே சபலம் ஜன்ம -என்னக் கடவது இறே
கண்டதடைய மமேதம் என்று போந்த அநாதி காலம் போல் அன்றிக்கே
பகவத் ஸம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணக் கடதாம் படி வந்ததொரு காலம் சேதனனுக்கு ஸூ துர்லபம் இறே
நவின்று உரைப்பார்
நவிலுகை -பயிலுகை -இடைவிடாதே உரைக்கை
நமோ நாராயணா என்று –
அநாதி காலம் மமேதம் என்றதை தவிருகையும்
ததேவம் -யென்கையும்
இத்தால் மங்களா சாசனத்துக்கு யோக்யதை சொல்லுகிறது
பல்லாண்டும் –
காலம் எல்லாம்
யாவதாத்மபாவி -என்கிறது –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்திலே ஆண்டை இட்டுச் சொல்லுகிறது –
அந்த பரிணாமம் உள்ள தேசத்திலே வர்த்திகிறவர் ஆகையாலே
பரமாத்மனை –
தனக்கு மேல் இன்றிக்கே –
தன்னை ஒழிந்தார் அடங்க ஸ்வ அதீநமாம் படி இருக்கிறவனை
இத்தால்-அமங்களங்களுக்கு -அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே ஒருவனுடைய மங்களா சாசனத்தால்-
ஓர் ஏற்றம் உண்டாக வேண்டாதே இருக்குமவனை –
சூழ்ந்து இருந்து ஏத்துவர்-
நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே
முன்பே நில்லா-முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்-
பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் -பிறகு வாளி யுமான அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் –
இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே கால் வாங்க ஒண்ணாத வடிவு அழகு –
அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை-

பவித்ரனை -பரமேட்டியை -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை -வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
பல்லாண்டு என்று விரும்பிய சொல் -நல்லாண்டு என்று
நவின்று உரைப்பார் -நமோ நாராயணா என்று பரமாத்மனைச் சூழ்ந்து
இருந்து பல்லாண்டும் பல்லாண்டு -ஏத்துவர் –என்று அந்வயம்

————————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி

ஸ்ரீ திருப் பல்லாண்டிலே
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதும் -என்றும் –
இராக்கதர் வாழ் இலங்கை பாழளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும் –
ஸ்ரீ நரசிம்க ப்ராதுர்பாவதுக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களாசாசனம் பண்ணின அளவு அன்றிகே –
மல்லாண்ட திண் தோள்-என்றும்
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய
சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும்-
திரு மதுரையில் சிலை குனித்து ஐம் தலைய பைந்நாக தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதும் -என்றும் –
இவர் ப்ராசுர்யேன மங்களாசாசனம் பண்ணிற்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு இறே–

ஆக -இப்படி கிருஷ்ண அவதார அனுபவாதிகளிலே ப்ரவர்தரான இவர் –
இவ் வதாரத்துக்கடி சொல்லுகிற இடத்தில் திரு கோட்டியூர்யின் நின்றும் வந்து பிறந்தான் என்பான் என்-
ஷீராப்தி நாதன் தேவர்கள் கோஷ்டியில் எழுந்து அருளி இவர்களுடைய ரஷண சிந்தனை பண்ணினமை தோற்றும் படி –
உரகல் மெல்லணையனாய்-பள்ளி கொண்டு அருளின ஸ்தலம் ஆகையாலே அந்த ஐக்யத்தை பற்றவும் –
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் -என்றும் தமக்கு மங்களா சாசனத்துக்கு
சஹகாரியான செல்வ நம்பியோடே திரு கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலே
அவ்வுகப்பை பற்றவும் -திரு கோட்டியூரை திரு அவதார கந்தமாக அருளிச் செய்த இதில் விரோதம் இல்லை-

இப்படி கிருஷ்ண அவதார ரசத்தை அனுபவிக்கிற அளவில் -ருஷிகளை போலே கரையில் நின்று -அவதார குண சேஷ்டிதங்களை
சொல்லிப் போகை அன்றிக்கே –பாவன பிரகர்ஷத்தாலே -கோப ஜென்மத்தை -ஆஸ்தானம் பண்ணி –
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை -தாம் அவர்களாக பேசி அனுபவித்து சொல்லுகிறார் –

திருவவதரித்து அருளின அளவில் திரு வாய்ப்பாடியில் உள்ளோர் பண்ணின உபலாளநாதிகளை
அனுசந்தித்து இனியராகிறார் இத் திரு மொழியில் –

பெரியாழ்வார் திருமொழி -105-பாசுரங்கள் பதிகம் தோறும் -கடைசிபதிகம்- 41-ஆக -461-

முதல் பதிகம் -10-/-21-/-10-/–10-/11-/11-/11-/11-10-ஆக மொத்தம் -105-
இரண்டாம் பதிகம் -10-/11-/13-/10-/10-/10-/10-/10-/11-/10–ஆக மொத்தம் -105-
மூன்றாம் பதிகம் -11-/10-/10-/10-/-11-/-11-/11-/10-/11 -/-10–ஆக மொத்தம் -105-
நான்காம் பதிகம் -10-/11-/11-/11 /-10-/-10-/-11-/10-/-11-/10–ஆக மொத்தம் -105-
ஐந்தாம் பதிகம் -10-/-10-/-10-/11-ஆக இதில் 41–இவ்வாறு -461-திவ்ய பாசுரங்கள் –

———————————–

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற இனிய இல்லிலே பிறந்து –
கண்ணன் முற்றம் -என்றது -கிருஷ்ணன் அவதரித்த போதே க்ர்ஹ நிர்வாககன்
பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைத்து இருக்கையாலே கண்ணனுடைய முற்றம் என்னுதல் –
கண் நல் முற்றம் -இடமுடைத்தாய் -தர்ச நீயமான முற்றம் என்னுதல் –

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

செந்நெல் இத்யாதி
செந் நெலால் நிறைந்து இருக்கிற வயல்களாலே சூழப் பட்ட திரு கோட்டியூரிலே –
அசாதாரண விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பூர்ணனானவன் திருவவதரித்த பிரகாரத்தை –
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த –
பட்டர் பிரான் ஆகையாலே விளங்கா நின்றுள்ள திரு யஜ்ஜோபவீதத்தை உடையராய் –
சர்வ வ்யாபகனான சர்வேஸ்வரனை தம் திரு உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கையாலே –
விஷ்ணு சித்தர் என்னும் திரு நாமத்தை உடையரான பெரிய ஆழ்வார் –
திருவவதரித்த காலத்தில் உபலாள நாதிகளோடே கூட விஸ்த்ரனே அருளிச் செய்த –
இப்பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே –
ரச்யதையால் விசேஷஜ்ஞானர் ஆனவர்கள் எப்போதும் சொல்லும்படியான
இப் படாலை சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு –
பகவத் அனுபவ விரோதியான பாபம் இல்லை

———

அவதாரிகை –
கீழில் திருமொழியில்-1-8- -யசோதை பிராட்டி -இவனுடைய சைசவ அனுகுணமாக –
முன்னே ஓடி வந்து மேல் விழுந்து -அணைத்து கொள்ளும் ரசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு –
அச்சோ என்கிற தன்னுடைய யுக்தியாலும் –
அதுக்கு அனுகுனமான தன்னுடைய ஹஸ்த முத்ரையாலும் வந்து அணைத்து கொள்ள வேணும் என்று அவனை அபேஷித்து-
அந்த ரசத்தை அனுபவித்தபடியை -தம்முடைய பிரேம அனுகுணமாக தாமும் அப்படியே அபேஷித்து அனுபவித்தாராய் நின்றார் –
அவ்வளவு அன்றிக்கே –
அவன் தன் உகப்பாலே ஓடி வந்து முதுகிலே ஓடி வந்து அணைத்து கொள்ளும் –
சேஷ்டித ரசத்தையும் -அனுபவிக்க ஆசைப்பட்டு -புறம் புல்குவான் -என்று –
அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து -அவனும் அப்படி செய்ய –
அவள் அனுபவித்த பிரகாரத்தை –
அவ்வளவும் அல்லாத பிரேமத்தை உடைய தாம் அந்த சேஷ்டிதத்தை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே –
அவனுடைய மேன்மையையும் நீர்மையையும் சொல்லிப் புகழ்ந்து கொண்டு –
புறம் புல்குவான் புறம் புல்குவான் -என்று பலகாலும் அபேஷித்து –
தத் காலம் போலே தர்சித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் இத் திருமொழியில்-

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையின் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

இரண்டு நீல ரத்ன வட்டின் நடுவே வளரா நிற்ப்பதொரு நீல ரத்னத்தால் உண்டான
மொட்டினுடைய அக்ரத்திலே அரும்பியா நிற்கிற முத்துக்கள் போலே –
நீல ரத்ன மொட்டு என்றது -நிறத்தையும் ஆகாரத்தையும் பற்ற –
சொட்டு இத்யாதி -உள்ளினின்றும் புறப்படுகிற ஜல பிந்துக்கள் இற்று முறிந்து சொட்டு சொட்டு
என்னப் பலகாலும் துளியா நிற்க -சொட்டு சொட்டு என்கிற இது அநுகாரம் –
என் குட்டன் இத்யாதி -என் பிள்ளை வந்து என்னைப் புறம் புல்குவான்
கோவிந்தன் -சுலபனானவன் -என்னைப் புறம் புல்குவான் –
புறம் என்று முதுகு –
புல்குதலாவது -தழுவுகை –
புல்குவான் என்று அபேஷிக்கை-
அன்றிக்கே –
புல்குவான் என்றது புல்குகிறவன் என்றபடி -அப்போது இத்தலை அபேஷிக்கை அன்றிக்கே –
அவன் தானே வந்து புல்குகிறபடியை சொல்லுகிறதாம் –
இது ஆழிப் பிரான் புறம் புல்கிய -என்கிற நிகமத்துக்கு மிகவும் சேரும்

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே -1 9-11 – –

அன்று இத்யாதி -அக்காலத்தில் கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன்
அவதாரத்தின் மெய்ப்பாட்டால் வந்த சைசவ அனுகுணமாக தன்னைப் புறம் புல்கின பிரகாரங்களை சொன்ன சொல்லை –
விட்டு சித்தன் இத்யாதி -பெரியாழ்வார் தத் காலம் போலே அனுபவித்து ப்ரீதராய் -அது தன்னை எல்லாரும் அறியும்படி உபகரித்ததாய் –
சர்வாதிகாரமான திராவிடமாய் -இருக்கிற இவை பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக வல்லவர்கள்
வாய்த்த இத்யாதி -சர்வேஸ்வரனுக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடாக வாய்த்த
விலஷணரான சிஷ்ய புத்ரர்களை -லபித்தது -அத்தாலே -வந்த ஆனந்தத்தை உடையராவர் –

——————————

கீழ் இரண்டு திரு மொழியிலும் ( 1-8/1-9) -அச்சோ என்றும் -புறம் புல்குவான் -என்றும் -அவன்
சைசவ அனுகுணமாக ஓடி வந்து -மேல் விழுந்து முன்னும் பின்னும் அணைக்கும் ரசத்தை –
தான் அனுபவிக்க ஆசைப் பட்டு -அவனைக் குறித்து பிரார்த்தித்து -அவன் அப்படி செய்ய –
யசோதை பிராட்டி அனுபவித்தால் போலே -இந்த சேஷ்டிதங்களினுடைய ரசத்தை அனுபவிக்க ஆசைப் பட்டு –
தாமும் அப்படியே பிரார்த்தித்து -தத் காலம் போலே அனுபவித்து -இனியரானார் –

சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடும் அத்தையும் -அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற
அவன் ஆஸ்ரிதத்தை தத்காலத்தில் உள்ளார் அனுபவித்து ஹ்ர்ஷ்டராய் பேசினால் போலே –
பிற்காலமாய் இருக்கச் செய்தேயும் – தத்காலம் போலே -தாமும் அனுபவித்து பேசி –ஹ்ருஷ்டராகிறார் இத்திருமொழியில்-

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1 1- –

மெச்ச ஊதுகிற என்கிறபடி -மெச்சுதல்-கொண்டாட்டம் –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி தான் பிரதிகூலர் மண் உண்ணும் படியாகவும் –அனுகூலர் வாழும்படியாகவும் இறே இருப்பது
நல்வேயூதி -இதுவே அவதாரத்துக்கு அனு குணமான நிரூபகம் –அனுகூலர் வாழும்படி நல்ல குழலை ஊதுமவன் –
குழலுக்கு நன்மையாவது -நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -இத்யாதிப் படியே –
தன்னுடைய த்வநியாலே -சேதன அசேதன விபாகமற ஈடுபடுத்த வற்றாகை –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருக் குழலும் இவ்வதாரத்தில் கை தொடானாய் இறே இருப்பது –
பசு மேய்த்து திரியும் காலத்திலும் -ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம் -என்றும் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் -என்றும் சொல்லக் கடவது இறே –
அப்பூச்சி என்கிறது -இரண்டு திருக் கையில் ஆழ்வார்களையும்-அம்மனே என்கிறது -கண்டு பயப்பட்டு சொல்லுகிற வார்த்தை –

வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2 1-10 – –

வல் ஆள் இலங்கை -வலிய ஆள்களை உடைத்தாகையாலே -ஒருவரால் அடக்க ஒண்ணாத
பரிகார கட்டு உடைத்தான இலங்கை யானது -ராவணன் மதிக்கும்படியான ஆண் பிள்ளைகள் வர்த்திக்கிற ஊர் இறே
மலங்க -செருப்பும் தேவாரமும் ஒக்க கட்டி போக்கிடம் தேடி மலங்கும்படியாக –
சரம் துரந்த வில் ஆளானை -திருச் சரங்களை மென் மேலும் நடத்தின வில்லை உடையவனை –
இத்தால் ஈச்வரத்வப்பிடாரால் அன்றிக்கே அவதாரத்துக்கு அனுகுணமாக நின்ற அம்பாலே
அவ்வூரை அடர்த்த ஆண் பிள்ளை தனைத்தை சொல்கிறது –
இத் திருமொழி கிருஷ்ண அவதார விஷயமாக இருக்க -நிகமத்தில் இப்படி அருளிச் செய்தது –
அவ் வதாரத்துக்கும் இவ் வவதாரத்துக்கும் உண்டான ஐக்யத்தை பற்றி இறே –
வான் கானடை அம் கண்ணன் -என்று இந்த ஐக்கியம் கீழே சொல்லப்பட்டது இறே –
விட்டு சித்தன் விரித்த -பெரியாழ்வார் விஸ்தரேண அருளிச் செய்தவையான –
சொல் ஆர்ந்த இத்யாதி -சொல் நிரப்பத்தை உடைத்ததாய் அப்பூச்சி விஷயமான
பாட்டுகளாய் இருக்கிற இப் பத்தையும் -ஏதேனும் ஒருபடி வல்லவர்கள் –
சொல் ஆர்ந்த என்ற இது -அதிகரிப்பார்க்கு இதன் அர்த்தத்தில் போக வேண்டா –
சப்த ரசம் தானே அமையும் என்னும்படி இருக்கும் என்னவுமாம் –
வல்லார் என்றது சாபிப்ரயாமாக வல்லார் என்னவுமாம் –
போய் இத்யாதி -இதனுடைய வ்யவசாயமே ஹேதுவாக -அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே அவனை அனுபவித்து -மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு -யாவத் காலமும் இருக்கப் பெறுவர்

—————————–

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் -( 2-9-)-ஊரிலே ஸ்திரீகள் ஆனவர்கள் தந்தாம் அகங்களில் இவன் செய்த தீம்புகளை சொல்லி –
தாயாரான யசோதை பிராட்டிக்கு வந்து முறைபட்டு -உன் மகனை இங்கே அழைத்து கொள்ள வேணும் -என்றபடியையும் –
அதுக்கு ஈடாக அவள் அவனை அழைத்த பிரகாரங்களையும் சொல்லுகையாலே -அவன் ஊரில் இல்லங்கள் தோறும் செய்த
நவநீத ஸௌர்யாதி க்ரீடா விசேஷங்களை அனுபவித்தாராய் நின்றார் –

ப்ராப்த யௌவநைகளான பெண்களோடே அவன் இட்டீடு கொண்டு -ஓன்று கொடுத்து ஓன்று வாங்குகை-
இது தானும் வார்த்த விஷயத்தில் -என கொள்க –
விளையாடுகையாலே அவனால் ஈடுபட்ட பெண்கள் -மாதாவான யசோதை பிராட்டி பக்கலிலே வந்து –
தங்கள் திறத்திலே அவன் செய்த தீம்புகள் சிலவற்றை சொல்லி –
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித ரஷகனாய் –
ஆஸ்ரிதர் கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
ஆஸ்ரிதர்க்கு நல் சீவனான தன்னை –
பூதனை கையில் அகப்படாமல் நோக்கி கொடுத்தவனாய்–
ஆஸ்ரிதர்க்கு தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவனாய்-
ஆஸ்ரிதர் ஆர்த்தி அறிந்து சென்று உதவுமவனாய் –
நித்ய ஆஸ்ரிதையான பூமிப்பிராட்டிகாக நிமக்னையான பூமியை உத்தரித்தவனாய் –
இப்படி சர்வ விஷயமாக உபகாரங்களை பண்ணினவன் -எங்கள் திறத்தில் அபகாரங்களை செய்யா நின்றான் –
ஆன பின்பு இவன் கீழ் ஜீவிக்க போகாது -இவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் என்று பல காலும் சொல்லி
முறைப்பட்ட பிரகாரத்தை தாமும் அப்படியே பேசி -அவனுடைய அந்த லீலா வியாபார ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் -2 10-1 – –

இன்று முற்றும் -இது வயிறு எரிந்து சொல்லும் வார்த்தை-இரு கால் சொல்கிறது –ஆற்றாமையின் மிகுதி
ஆற்றிலிருந்து –
சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ -சர்வ சாதாரணமான
ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –
இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான
ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் அந்ய பரைகள் அன்றோ –
தன் இடையாட்டம் பட்டமோ –
நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-
தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ –
தன்னை இங்கு இட்டு எண்ணினார் இல்லை கிடீர் –
சேற்றால் எறிந்து-
சேற்றை இட்டு எறிந்து -பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ
இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –
வளை துகில் கை கொண்டு –
நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும் வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரி வட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது

காற்றில் கடியனாய் ஓடி –
துடா அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி –
தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் –
எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –
இவர்களுக்கு ஜீவனம் அவன் தன்னுடைய வடிவு இறே
அகம் புக்கு –
பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு
வழி பறித்து அசாதாரண ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் –
நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும்
ஏதேனும் வளையும் துகிலுமோ-ஒரு வார்த்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ –
இப்படி ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் –
ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் –
தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்
முற்றதும் -என்ற இது -முற்றும் -என்று குறைந்து கிடக்கிறது
முற்றுதல் முற்றலாய் -அதாவது -முடிவாய் -முற்றும் என்றது -முடிவோம் என்றபடி –

அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –

மங்கை நல்லார்கள் தாம் –
பருவத்தால் இளையாய் -கிருஷ்ணன் அளவிலே ஸ்நேகிநிகளாய் இருக்கிற பெண்களானவர்கள் தாங்கள்
அங்கு வந்து முறைப்பட்ட –
அவன் அகத்திலே வந்து தங்கள் ஈடுபாடு தோற்ற முறைப்பட்டு
அவர் சொல்லை –
அவர்கள் சொல்லை
மங்கை நல்லார் ஆனவர்கள் தாம் -அங்கமல கண்ணன் தன்னைப் பற்ற
அங்கு வந்த அசோதைக்கு -முறைப்பட்ட சொல்லை -என்று அந்வயம்

—————-

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –

முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை உனக்கு தாரகாதிகளாகவும் நினைத்து இருந்தேன் –
உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்
நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1 11- –

காரார் இத்யாதி –
மேகத்தோடு சேர்ந்த திருமேனியின் நிறத்தை உடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி-
நறு நாற்றம் கமழா நின்று உள்ள அழகிய குழலை உடைய ளான யசோதை பிராட்டி
ஆரா இத்யாதி –
ஒருகாலும் தெகுட்டாததாய்-இனிதாய் இருந்துள்ள -என் இளம் கொங்கை அமுது
உண்ண முன்பும் தந்து மேலும் தருவாளாய் இருந்த நான் உன்னை அறிந்து கொண்ட பின்பு
உனக்கு அம்மம் தாரேன் அஞ்சுவன் -என்று சொன்ன சொலவை
பாரார் இத்யாதி –
விசேஷஞ்சரோடு அவிசேஷஞ்சரோடு வாசி அற-இருந்தார் இருந்த இடம் எங்கும் –
கொண்டாடுகையாலே பூமி எங்கும் நிறைந்து இருப்பதாய் -ஸ்வாபாவிகமான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான
ஏரார் இத்யாதி –
இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து -உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்
இருடீகேசன் அடியாரே –
இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு நித்ய கிங்கராய் பெறுவர்-

—————-

கீழில் திரு மொழியில் -ஸ்ரீ ராமாவதார குண சேஷ்டிதங்களை அனுபவித்த இவர் –
ராகவத்வே பவத் ஸீதா-என்கிறபடியே
அவ் வவதார அநு குணமாக ஓக்க வந்து அவதரித்த பிராட்டி தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான –
கிருபா -பாரதந்தர்ய -அநந்யார்ஹத்வங்களை சேதனர் எல்லாரும் அறிந்து விஸ்வஸித்துத் தன்னைப் பற்றுகைக்கு உடலாக
நம்முடைய அனுஷ்டானத்தாலே வெளியிடக் கடவோம்-என்று திரு உள்ளம் பற்றி
அதில் பிரதமத்தில் தன்னுடைய கிருபையை வெளியிடுகைக்காக -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ராவணன் பிரித்தான் என்ற ஒரு வ்யாஜத்தாலே லங்கையில் எழுந்து அருள –
ஆத்மாநம் மானுஷம் மந்யே-என்கிற அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே
பெருமாள் இவள் போன இடம் அறியாமல் திருத் தம்பியாரும் தாமுமாய்க் கொண்டு தேடித் திரியா நிற்கச் செய்தே
பம்பா தீரத்திலே எழுந்து அருளின அளவிலே மஹா ராஜருடைய நியோகத்தாலே ஸ்வ வேஷத்தை மறைத்து
பரிவ்ராஜக வேஷ பரிக்ரஹம் பண்ணி வந்து முகம் காட்டின திருவடியோடே முந்துற உறவு செய்து -பின்பு அவர் கொடு போய்ச் சேர்க்க
ராஜ்ய தாரங்களை இழந்து சுரம் அடைந்து கிடக்கிற மஹாராஜரைக் கண்டு அவரோடே சக்யம் பண்ணி –
அனந்தரம் அவருக்கு விரோதியான வாலியை நிரசித்து -அவரை ராஜ்ய தாரங்களோடே சேர்த்து வானர அதிபதி ஆக்கி கிஷ்கிந்தை ஏறப் போக விட்டு
திருத் தம்பியாரும் தாமுமாகப் பெருமாள் வர்ஷா காலம் அத்தனையும் மால்யா வானிலே எழுந்து அருளி இருக்க –
படை வீட்டிலே போன இவர் பெருமாள் செய்த உபகாரத்தையும் அவருடைய தனிமையையும் மறந்து
விஷய ப்ரவணராய் தார போக சக்தராய் இருந்து விட வர்ஷா காலத்துக்கு பின்பு அவர் வரக் காணாமையாலே
காம வர்த்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம் புத்வா காலம் அதீ தஞ்ச முமோஹபர மாதுர -என்கிறபடியே கனக்க கிலேசித்து அருளி
இளைய பெருமாளைப் பார்த்து -நீர் போய் வெதுப்பி ஆகிலும் மஹா ராஜரை அழைத்துக் கொண்டு வாரும் -என்று விட
அவர் கிஷ்கிந்தா த்வாரத்திலே எழுந்து அருளி ஜ்யா கோஷத்தைப் பண்ணி -அத்தைக் கேட்டு -மஹா ராஜர் நடுங்கி
கழுத்தில் மாலையையும் அறுத்துப் பொகட்டு காபேயமாகச் சில வியாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து
இவ்வளவில் நமக்கு செய்ய அடுத்து என் என்ன
க்ருத்த அபராதஸ்ய ஹிதே நாந்யத் பஸ்யாம் யஹம் ஷமம்-அந்தரேணாஞ்ச லிம்ப்த்வா லஷ்மணஸ்ய பிரசாதநாத் -என்று
அபராத காலத்தில் அநு தாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம் –
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன -அவ்வளவிலும் தாம் முந்துறப் புறப்பட பயப்பட்டு
இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கை -தாரையை விட்டு ஆற்ற வேணும் -என்று தாரையைப் புறப்பட விட
அவள் சா ப்ரஸ்கலந்தீ -இத்யாதிப்படியே இளைய பெருமாள் சந்நிதியில் இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கு ஆறும் படி
வார்த்தைகள் விண்ணப்பம் செய்த பின்பு மஹா ராஜர் தாமும் புறப்பட்டு வந்து இளைய பெருமாளைப் பொறை கொண்டு-
அவர் தம்மையே முன்னிட்டுக் கொண்டு பெருமாளை சேவித்த அநந்தரம்-தம்முடைய சர்வ பரிகரத்தையும் திரட்டி
யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹூந்யயுதா நிச-தி ஷூ சர்வா ஸூ மார்கந்தே-என்கிறபடியே
திக்குகள் தோறும் திரள் திரளாகப் பிராட்டியைத் தேடிப் போக விடுகிற அளவிலே –
தக்ஷிண திக்கில் போகிற முதலிகளுக்கு எல்லாம் பிரதானராகப் போருகிற அங்கதப் பெருமாள் -ஜாம்பவான் -மஹா ராஜர் -திருவடி
இவர்களில் வைத்துக் கொண்டு திருவடி கையில் ஒழிய இக்காரியம் அறாது என்று திரு உள்ளம் பற்றி பிராட்டியைக் கண்டால்
விசுவாச ஜனகமாக விண்ணப்பம் செய்யத் தக்க அடையாளங்களையும் அருளிச் செய்து திருவாழி மோதிரத்தையும் கொடுத்து விட
எல்லாரும் கூடப் போய் தக்ஷிண திக்கில் ஓர் இடத்திலும் காணாமல் கிலேசப்பட்டு -அநசநத்தில் தீஷிதராய் முடிய நினைக்கிற அளவிலே
சம்பாதி வார்த்தையால் -ராவணன் இருப்பு சமுத்ரத்துக்கு உள்ளே லங்கை என்பொதொரு படை வீடு -என்று கேட்டு எல்லாரும் ப்ரீதராய்
இக்கரையில் இருந்து திருவடியைப் போக விட -அவரும் சமுத்திர தரணம் பண்ணி அக்கரை ஏறி
ப்ர்ஷதம்சக மாத்ரமாக வடிவைச் சுருக்கிக் கொண்டு
ராத்திரியில் ராவண அந்தப்புர பர்யந்தமாக சர்வ பிரதேசத்திலும் பிராட்டியைத் தேடிக் காணாமையாலே
கிலேசப்பட்டுக் கொண்டு இரா நிற்கச் செய்தே
அசோகவநிகா பிரதேசத்தில் சில ஆள் இயக்கத்தைக் கண்டு அங்கே சென்று
ப்ரியஞ்ஜ நம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸீ கணம் -ஸ்வ கணே நம்ர்கீம் ஹீ நாம்ஸ்வ கணை ராவ்ர்தா மிவ -என்கிறபடியே
விகர்த்த வேஷைகளான எழு நூறு ராக்ஷஸிகளின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டு நோவு பட்டு இருக்கிற
ஸூஷ்ம ரூபேண சிம்சுபா வ்ருஷத்துக்கு உள்ளே மறைந்து இருக்க – அவ்வளவில் ராவணன் காம மோஹிதனாய் வந்து
பிராட்டி சந்நிதியில் சிலவற்றை ஜல்பிக்க -அவள் இவனை முகம் பாராமல் இருந்து திஸ்கரித்து வார்த்தை சொல்லி விடுகையாலே
மீண்டு போகிறவன் ராக்ஷஸிகளைப் பார்த்து -இவள் பயப்பட்டு நம் வசம் ஆகும்படி குரூரமாக நலியுங்கோள் -என்று சொல்லிப் போகையாலே
அவர்கள் இதுக்கு முன்பு ஒரு காலமும் இப்படி நலிந்திலர்கள் -என்னும்படி தர்ஜன பர்த்ச நாதிகளைப் பண்ணி நலிய –
இனி நமக்கு இருந்து ஜீவிக்கப் போகாது -முடிந்து விடும் அத்தனை -என்று வ்யவசிதையாய்
அந்த ராக்ஷஸிகள் நித்ரா பரவசைகளான அளவிலே அங்கு நின்றும் போந்து
வேண்யுத்க்ரதந உத்யுக்தையாய் வ்ருக்ஷத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிற அளவிலே இனி நாம் பார்த்து இருக்க ஒண்ணாது
இவ்வளவிலே இவளை நாம் நோக்க வேணும் -என்று
ஏவம் பஹூ விதாஞ் சிந்தஞ் சிந்தயித்வா மஹா கபி ஸம்ஸரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யாஜஹாரஹ-என்கிறபடியே
செவிப்பட்ட போதே ரசிக்கும் படி ஸ்ரீ ராம குண சேஷ்டித விஷயமான வாக்கியங்களைச் சொல்லி –
இத்தனை காலமும் இல்லாத ஓன்று இப்போது
யுண்டாகைக்கு அடி என் -என்று சொல் வந்த வழியே சிம்சுபா வர்ஷத்தை எங்கும் ஓக்கப் பார்த்து அதின் மேலே இருக்கிற
வானர ரூபியான இவனைக் கண்டு
இது ஏதோ என்று ஏங்கி மோஹித்து விழுந்து நெடும் போதொடு உணர்த்தி யுண்டாய் பின்னையும் இது ஏதோ என்று –
கிந்நுஸ் யாச் சித்த மோஹோயம் -இத்யாதிப்படியே -விசாரிக்கிற அளவிலே இவள் முன்னே வந்து
கையும் அஞ்சலியுமாய் நின்று அநு வர்த்தக பூர்வகமாகச் சில வார்த்தைகளைச் சொல்ல
அவள் பீதையாய் இவனை ராவணன் என்று அதி சங்கை பண்ணி -இப்படி நலியல் ஆகாது காண் -என்று
தைன்யமாகப் பல வார்த்தைகளையும் சொல்ல –
இவளுடைய அதி சங்கையைத் தீர்க்கைக்காக பெருமாள் அருளிச் செய்து விட்ட அடையாளங்களை எல்லாம்
ஸூ ஸ்பஷ்டமாக இவள் திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்து தான் ஸ்ரீ ராம தூதன் என்னும் இடத்தை அறிவித்து பின்பு
திருவாழி மோதிரத்தையும் கொடுத்து அவள் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்த பிரகாரத்தை அநு சந்தித்து -அதில் தமக்கு யுண்டான
ஆதார அதிசயத்தாலே அவன் அப்போது விண்ணப்பம் செய்த அடையாளங்களையும் -திருவாழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு அவள் ப்ரீதியான படியையும் எல்லாம் அடைவே பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியிலே

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

நெறிந்த குழல் மடவாய்
நெறித்துக் கருகின குழலையும் -மடப்பத்தையும் -யுடையவளே
கோரை மயிராய் இராதே -சுருண்டு கடை அளவும் -செல்ல இருண்டு இருக்கை இ றே குழலுக்கு ஏற்றம் –
இது தான் பூர்வத்தில் படியை இட்டுச் சொல்லுகிற படி –
நீல நாகா பயா வேண்யா ஜகனம் கதயை கயா -என்னும் படி இறே இப்போது கிடக்கிறது –
நாயகரான பெருமாளோடே கூடிச் செவ்வை தோற்றச் செருக்கி இருக்க ப்ராப்த்தையாய் இருக்க –
அவரைப் பிரிந்த கிலேசத்தாலே துவண்டு ஒடுங்கி இருக்கிற படியைப் பற்றி -மடவாய் -என்கிறான்
அதவா– மடப்பமாவது -பற்றிற்று விடாமையாய் -இங்கே இருக்கச் செய்தேயும் -அஸ்யா தேவ்யா மநஸ் தஸ்மிந்–என்கிறபடியே
பெருமாளையே நினைத்துக் கொண்டு மற்று ஓன்று அறியாமல் இருக்கிறபடியைச் சொல்லுகிறான் ஆகவுமாம்-
நின்னடியேன் விண்ணப்பம்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பெருமாளுக்கு அடியனான போதே இவளுக்கும் அடியனாகையாலே உனக்கு அடியனான
என்னுடைய விண்ணப்பம் என்கிறான் –
இத்தால் உனக்கு அடியேனான நான் விண்ணப்பம் செய்கிற வார்த்தையைக் கேட்டு அருள வேணும் என்கை –
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து –
நெருங்கின ரத்னங்களோடே கூடின அபிஷேகத்தை யுடைய ஜனகராஜன் -தேவரீருக்கு சுல்கமாக விட்டு வில்லை முறித்து
இந்த வில்லை வளைத்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று வீர்ய சுல்கமாக அவன் கல்பித்து வைத்த வில் இறே அது –
அப்படி இருக்கிற வில்லை வளைக்கத் தானும் லோகத்தில் ஆள் இன்றிக்கே இருக்க திருக் கையில் பலத்துக்கு
இலக்குப் போராமையாலே-அத்தை முறித்து நினைக் கொணர்ந்த தறிந்து
இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே -பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா -என்கிறபடியே
இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க
தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து
அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் –
ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்
திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய
விலங்க-என்றது -விலக்க-என்றபடி –
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –
அவன் கையினின்றும் வாங்கினதாய் இருக்கச் செய்தேயும் வைஷ்ணவமான தநுஸ்ஸூ ஆகையால் இத்தலைக்கு அநு ரூபமாய் இருக்கிற
வில்லைக் கொண்டு அவனுடைய தபோ பங்கத்தைப் பண்ணி விட்டதும் ஓர் அடையாளம்
தவத்தை சிதைத்தது அடையாளம் -என்னாதே சிதைத்தும் ஓர் அடையாளம் -என்கையாலே
இன்னும் பல அடையாளங்களும் சொல்லுவதாக நினைத்துச் சொல்கிறான் என்னும் இடம் தோற்றுகிறது-
சங்கா நிவ்ருத்தி பிறக்கும் அளவும் சொல்ல வேணும் இ றே

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

சீராரும் திறல் அனுமன்
முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க -இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று பெருமாள் திரு உள்ளம் பற்றி –
அடையாளங்களும் சொல்லி -திருவாழி மதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற திருவடி –
தெரிந்து உரைத்த அடையாளம்
பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –

———————–

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களோடு-அவதாராந்தரங்களோடு – அபதானந்தரங்களோடு வாசி அற -தர்ம ஐக்யத்தாலே
எல்லாம் ஏக ஆஸ்ரயம் ஆகையாலே இப்படி இருக்கிற விஷயத்தை கண்ணாலே கண்டு அனுபவிக்க வேண்டும் -என்று
தேடுகையாகிற இது -தமக்கு ஒரு புடை செல்லுகிறபடியும்
மானச அனுபவத்தின் உடைய கரை புரட்சியாலே அவ்விஷயம் தன்னை
ஸூ ஸ்பஷ்டமாக கண்டதாலே ஒரு புடை தோற்று இருக்கும் படியையும் அனுசந்தித்து –
அவை இரண்டையும்
அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும் சித்தித்தது என்று தோற்றும்படியான
ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளர் தரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1 1-

உள்ளவா கண்டார் உளர் –
சம்சய விபர்யய ரஹிதமாக உள்ளபடி கண்டார் உளர் –
உள்ளவா காண்கை யாவது -அவதார பிரயுக்தையான ஆகாரங்களை இட்டு வேறுபடக் காணாதே –
ஸ்ரீ ராமாவதாரமாய் ராவண வதம் பண்ணினவனும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரமாய் ஹிரண்ய வதம் பண்ணினவனும் ஒருவனே -என்று வஸ்துவினுடைய படி அறிந்து காண்கை
முன்பு ஹிரண்யன் ஆனவன் தான் இறே பின்பு ராவணனே பிறந்தவன் –
ப்ரஹ்மாதிகள் பக்கல்-ஹிரண்ய ராவணர்கள் இருவரும் கொண்ட வரங்களுக்கு விரோதம் வாராதபடி
நிரசிக்க வேண்டுகையிலே இறே -ரூப பேதம் கொள்ள வேண்டிற்று இறே
ஆகையால் கார்ய அனுகுணமாக கொண்டு -ரூப பேத மாத்ரமாய் -பிரகாரி ஓன்று ஆகையாலே
இந்த ஐக்யம் அறிந்து காண்கை ஆயிற்று -உள்ளபடி காண்கை யாவது –

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4 1-10 –

கரிய முகல் புரை மேனி மாயனை-
காள மேகம் போன்ற வடிவை உடையவனாய் -ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடைய அவனை –
கண்ட சுவடு உரைத்து –
காண வேணும் -என்று தேடுகிறவர்களுக்கு-கண்ட அடையாளங்களை சொல்லி
தேடுகிறவர்களுடைய அவஸ்தையும் -கண்டவர்களுடைய அவஸ்தையும் அடைந்து பேசினார் தாமே இறே –
புரவி -இத்யாதி –
செந்நெல்களானவை உயர வளர்ந்து கதிர் கனத்தாலே குதிரை முகம் போலே
தலை வணங்கி விளையா நின்றுள்ள கழனிகளை உடைய ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹராய் –
பரமனைப் பயிலும் திரு உடையார் -என்கிறபடியே –பகவத் தாசத்தி ரூபையான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யால் மிக்கு இருப்பாராய்
வேதப் பயன் கொள்ள வல்லவர் ஆகையாலே -வேதத்துக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் அருளி செய்த மாலையான இப்பத்தையும்
பரவும் -இத்யாதி
ப்ரீதி பரவசராய் கொண்டு அடைவு கெடப் பேசும் மனசை உடைய பக்தராய் உள்ளவர்கள்
பரமனடி சேர்வார்களே
காண்கைக்கு தேட வேண்டாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் படி
சர்வ ஸ்மாத் பரனான அவனுடைய திருவடிகளை சேரப் பெறுவர்கள்.

—————————-

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10- 1-

ஆழ்வார்கள் தாங்கள் -மயர்வற மதிநலம் அருளப் பெற்று -அவனை உள்ள படி அறிந்து – அனுபவியா நிற்கச் செய்தே –
ஒரோ தசைகளில் வந்தவாறே -அநாதிகாலம் சமசரண ஹேதுவாய் கொண்டு – போந்த கர்ம பலத்தையும் –
அந்த கர்ம அனுகுணமாகவே நிர்வகித்துக் கொண்டு போந்தவனாய்-பந்த மோஷ பய நிர்வாகனாய் இருக்கிற ஈஸ்வரனுடைய
ஸ்வா தந்த்ர்ய பலத்தையும் அனுசந்தித்து –நிரந்குச ஸ்வ தந்த்ரனானவன் இன்னம் நம்மை சம்ஸ்ரிப்பிக்கில் செய்வது என்-என்று
மக்கள் தோற்ற குழி தோற்றுவிப்பாய் கொல் -என்றும்-
இன்னம் ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்றும் –
வைத்த சிந்தை வாங்குவித்து -நீங்குவிக்க நீ இன்னம் மெய்த்தனன் வல்லை –
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே -என்றும்
அவனை குறித்து விண்ணப்பம் செய்யும் பிரகாரத்திலே –
இவரும்
ஈஸ்வர ஸ்வா தந்த்ரத்தையும் –
அநாதி காலம் அவன் திருவடிகளை கிட்டாதபடி அகலடித்த கர்ம பலத்தையும் அனுசந்தித்து –
ஸ்வ தந்த்ரனான நம்முடைய கர்ம அனுகுணமாக விட்டு உபேஷித்து இருக்குமாகில்
முன்பு போலே யமபடரால் நலிவு நமக்கு வரில் செய்வது என் -என்று அஞ்சி
அவன் திருவடிகளில் சரணம் புகுந்து
அத்தசையில் என்னை ரஷித்து அருள வேணும் -என்று அர்த்திக்கிறார் –
ஆகையால் -இந்த பயமும் பிரார்த்தனையும் இவருடைய அதிசங்கா மூலமான
கலக்கம் அடியாக வந்தது ஆகையாலே -கீழ் சொன்ன வசனங்களோடு விரோதம் இல்லை –

அவ்வானையோபாதி -நீரும் உமக்கு தளர்த்தி வந்த போது நினையும் –அப்போது வந்து ரஷிக்கிறோம் என்ன –
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் –
வாத பித்த ச்லேஷ்ம தோஷ த்ரயமும் -ஒக்க உள் பணித்து நெருக்குகையால் உண்டான இளைப்பானது என்னை வந்து நலியும் காலத்தில் –
அவ்வவஸ்தையில் ஏக தேசமும் நான் உன்னை நினைக்க மாட்டேன் –
ஆனால் செய்ய அடுப்பது என் –அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்-
அக்காலத்துக்கு உடலாக -கரண களேபரங்கள் இளைப்பற்று தெளிந்து இருக்கிற இப்போதே சொல்லி வைத்தேன் –
இப்படி நீர் சொல்லி வைத்தால் இத்தை நினைத்து இருந்து உம்மை ரஷிக்க வேண்டும் நிர்பந்தம் எது நமக்கு என்ன –
அரங்கத்து அரவணைப் பள்ளியானே-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை –
அபௌருஷேயமாய் -நித்ய நிர் தோஷமாய் -பகவத் வைபவ யாதாத்ம்ய பிரதி பாதகமாய் இருந்துள்ள
வேதத்தின் உடைய தாத்பர்யத்தை அறிந்து இருக்குமவர்கள் –
பரத்வத்திலும் கட்டில் நீர்மையிலே ஈடுபட்டு அநவரதம் ஸ்துதிக்கும்படி ஸ்ரீ நந்தகோபர் திரு மகனாய்
கொண்டு கோபர்க்கு எல்லாம் தலைவன் ஆகையால் -வந்த மேணானிப்பை உடையவன்
மேன்மைக்கு -அமரர் ஏறு -என்னுமா போலே இறே நீர்மைக்கு -ஆயர்கள் ஏறு -என்கிற இது –
பெரிய பெருமாளை ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரமாக இறே நம் பூர்வாசார்யர்கள் அனுசந்திப்பது
கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை -என்றார் இறே திருப்பாண் ஆழ்வார் –
அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
திருப் பவளத்தை மோந்து பார்த்தல் இப்போதும் வெண்ணெய் மணக்கும் ஆய்த்து –
இவ்விடத்தில் மறையோர்கள் என்கிறது-திருப் பாண் ஆழ்வார் பட்டர் போல்வானவர்களை

தூய மனத்தனராகி வல்லார் –
ப்ரப்யந்தரத்திலிம் -ப்ராபகாந்தரத்திலும் அந்வயம் இல்லாமையாலே -நிர் தோஷ அந்தர்கரனராய் –
இவர் அபிமானத்திலே ஒதுங்கி அப்யசிக்க வல்லவர்கள்
தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே –
பழிப்பு அற்ற நீல மணி போலே இருக்கிற வடிவு அழகை உடையவனுக்கு –
மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று சர்வ காலமும் மங்களா சாசனம் பண்ணுபவர்கள் தாங்கள் ஆவார்
இங்கு இருந்த நாளும் பெரிய பெருமாள் திருவடிகளிலே மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருந்து –
சரீர அவசானத்தில் -பரம பதத்தில் போய் -நித்ய சூரிகள் திரளிலே புகுந்து –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்கிறபடியே அங்கே எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுபவித்து —
கால தத்வம் உள்ளதனையும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கப் பெறுவர் -என்கை –

——————————-

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் -என்று திரு நாமத்தின் போக்யதையை அனுபவித்து
இத்தை அநாதி காலம் இழைக்கைக்கு அடி என் -என்று நிரூபித்தவாறே -அதுக்கு ஹேது
இதர விஷயங்களிலே -ஆவியே அமுதே -என்று திரிகையாலே இழந்தது -என்று வெறுத்து –
இப்போது
ஆவியை அரங்க மாலை -என்றும் –
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் -என்றும்
தப்பைப் பொறுத்து அருள வேணும் என்று
பெரிய பெருமாள் போக்யதையில் -தம்முடைய கரண த்ரயமும் மேல் விழுகிற படியைச் சொல்லுகிறது –

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1 1-

நாக்கின் தோஷம் அனுசந்தித்து அஞ்சா நின்றேன் -அது ரசஜஞம் ஆகையாலே மேலே விழா நின்றது –
கரணியான உம்முடைய வசம் ஆக்கினால் என்ன –அது -என் வசம் அன்று –உன் வசம் –
நாக்கு நின்னை அல்லால் அறியாது -என்பது -நான் அது அஞ்சுவன் -என்பது ஆகா நின்றீர் –
இது மூர்க்கர் சொல்லும் பாசுரமாய் நின்றதீ -என்ன –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும்-
என் பாசுரத்தை பார்த்தால் மூர்க்கர் சொல்லும் பாசுரம் போலே தோற்றி –முநிகைக்கு யோக்யதை உண்டு -ஆகிலும் –
என் நாவி னுக்காற்றேன்-
உன் முனிவுக்கு ஆற்றலாம் -என் நாவுக்கு ஆற்றப் போகாது -ஆனால் அது நமக்கு அவத்யம் ஆகாதோ -என்ன
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
அறிவுடையார் -குற்றம் ஆகாத அளவு அன்றிக்கே -குணமாகவும் கொள்ளுவார்கள் –
அது ஓர் இடத்தே இருந்து தனக்கு வேண்டினது பிதற்றிப் போகவும் -அத்தை அறிவுடையார் –
நமக்கு நன்மை சொல்லுகிறது -என்று கொள்ளுவார்கள் இறே -கட்டுரை -நல் சொல்லு
அப்படியே நான் வேண்டிற்று சொன்னதையும் -குணமாக்கி கொள்ள வேணும் -என்ன –
நான் கைக் கொள்ள வேண்டுகிறது -என் -என்ன -நீ ஸாபேஷன் ஆகையாலே -என்கிறார் மேல் –
காரணா கருளக் கொடியானே –
ஜகத்தை உண்டாகிற்று -அவர்கள் பக்கலிலே கார்யம் கொள்ளுகைக்கு இறே
விசித்ரா தேக சம்பந்தி -வாழ்த்துவார் பலராக -இத்யாதி
ரஷகத்துவதுக்கு கொடி கட்டி அன்றோ கிடக்கிறது என்கிறார் -காரணா கருளக் கொடியானே —
உடையவன் ஆகையாலே எல்லாம் பொறுக்க வேணும்-

நிகமத்தில் இப்பத்தை அப்யசித்தவர்கள் -இவரைப் போலே சரம காலத்திலே
திரு நாமம் சொல்ல வேணும் என்று -கரைய வேண்டா -இப்பாசுரம் மாத்ரமே அமையும் என்கிறார் –
இத் திரு மொழி தான்-மாதவா -நாரணா -இத்யாதியாலே திரு நாமம் இறே சொல்லிற்று –

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1 10-

காமர் தாதை-
இவர் அகப்பட்ட துறை இருக்கிற படி –
தெரிவை மாருருவமே மருவிப் போந்த இவரை மீட்டது -காமனார் தாதை -என்கிற வடிவு -இறே –
கருதலர் சிங்கம் –
இவ்வடிவு காண வேண்டாதவர் சத்ருக்கள் -இறே -அலைவலைமை தவிர்த்த அழகன் -என்று
பிரதி கூலனையும் அனுகூலனாக்கி சேர்த்து கொண்ட அழகு இறே –
காண இனிய கரும் குழல் குட்டன் –
காண இனிய-ராவணாதி களுக்கும் அகப்பட -ரஞ்ச நீயச்ய விக்கிரம -என்று கண்ட போதே ரசிக்கை –
கண்ணுக்கு இனியான் –
மனத்துக்கு இனியான் -என்றும் –
உள் கண்ணுக்கும் புறக் கண்ணுக்கும் இனிய விஷயம் -இறே
கரும் குழல் குட்டன் –
அழகுக்கு முற்பட எடுப்பது -குழல் அழகர் -என்று இறே –
குட்டன் –
அவ்வடிவை அமைத்து கொடுத்து -அனுபவிக்கும்படி -இருக்கை –
காண இனிய கரும் குழல் -என்று குழலுக்கே விசேஷணம் ஆகவுமாம் –
வாமனன் –
கரிய குழல் செய்ய வாய் முகத்து -வாமன நம்பீ வருக –என்னக் கடவது -இறே
என் மரகத வண்ணன் –
குளிர்ந்த திரு மேனியை உடையவன்
உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே -என்னக் கடவது இறே
மாதவன்-
இவ்வடிவை தலை நீர்ப்பாட்டிலே அனுபவிப்பாள் பிராட்டி இறே
வடிக் கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி படிக் கோலம் கண்டு அகலாள் – என்னக் கடவது இறே
மது சூதன் தன்னை –
அனுபவ விரோதியைப் போக்கின படி –
வானோர் சோதி மணி வண்ணா மது சூதா நீ அருளாய் -என்னக் கடவது இறே
சேம நன்கமரும் புதுவையோர் கோன் –
ரஷை பொருந்தின ஸ்ரீ வில்லிபுத்தூரார்க்கு நிர்வாஹரான ஆழ்வார் அருளிச் செய்த பத்தும்
விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று –
திரு நாமம் -என்று –
நாமம் ஆயிரம் -என்றால் போலே
நவின்று உரைப்பார்கள் –
சிநேகத்தோடு ஸ்தோத்ரம் பண்ண வல்லவர்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே –
பரம பதத்தை சடக்கென கிட்டப் பெறுவார்கள்-அதாவது
ஈஸ்வரனுக்கு பரிவராய் போருகை
சேம நன்கமரும் –என்று சொல்லிற்றும் இவ்வர்த்தத்தை இறே –
சேமத்துக்கு நன்மை யாவது -அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணுகை இறே
இவ்வர்த்தம் இவ்வூரிலே நடக்கை -பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை -என்று
பொன் உலகத்தோடு ஒக்க திருப் பல்லாண்டு பாடுகை இறே –
ஒல்லை -என்றது
ஓவாதே நமோ நாராயணா –என்று சொல்லுகையாலே ஒரு கால் சொல்லி
அநந்தரம் சொல்லுகைக்கு உதவ அங்கே ஆம்படி வைக்கை –
நாரணர் உலகே –
இங்கு இருந்த நாள் –
நாரணா என்னும் இத்தனை அல்லால் -வழிப் போக்கிலும் –பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தநாம்ர்தம் –
வழியில் உள்ளார் கண்டு உகப்பதும் -நாரணன் தமர் -என்று இறே –
அங்கு புக்காலும் -நமோ நாராயணா என்று சூழ்ந்து இருந்து இறே ஏத்துவது –
இங்கு இருந்த நாளோடு –
வழிப்போக்கோடு –
திவ்ய தேச ப்ராப்தியோடு –
வாசி அற-இதுவே இறே -பலம் –
வியம் தமிழ் -விஸ்மய நீயமான தமிழ்
வியந்தமிழ்-என்ற போது -அமரர்க்கும் அறிவியந்து -என்னுமா போலே வியந்தமிழ் -என்னவுமாம்

—————————————–

பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்கள் ஆன இடங்களிலே எழுந்து அருளி நின்றது –
சேதனரை திருத்துகைக்கும் -திருந்தினாரை அடிமை கொள்ளுகைக்கும் இறே –
அது பூரணமாக காணலாவது -திருமலையில் இழிந்து அருளி நிற்கிற நிலை யிலே இறே –
பிரதம ஸூஹ்ருதமும் இவர்க்குத் தானே இறே
ஈஸ்வரன்-ஸௌஹார்த்தம் முதலான ஆத்ம குணங்களை பிறப்பித்து
ஆசார்யனோடே சேர்த்து –
விரோதியில் அருசியையும்
ப்ராப்யத்தில் ருசியையும் -பிறப்பித்து -கார்யம் செய்யும் –
ஆழ்வார்களுக்கு பிரதம காலத்திலேயே இவை அத்தனையும் பிறப்பித்து கார்யம் செய்யும் –
இவர்கள் பின்பு இருக்கிறது பகவத் இச்சையாலே இறே –
நமக்கு சரீர அவசாநத்திலே இவை இத்தனையும் பிறப்பித்து- கார்யம் செய்யும் –
எல்லார்க்கும் பிறக்கும் க்ரமம் ஒழிய பிறப்பியான்
ஊரவர்-இத்யாதி
ஊரவர் -நித்ய சூரிகள்
கவ்வை எரு இட்டு -அவர்கள் கவ்வி மேல் விழுந்து அனுபவிக்கிற அனுபவம் ஆகிற எருவை இட்டு
ஆசார்ய உபதேசம் ஆகிற நீரைத் தேக்கி –
சங்கமாகிற நெல்லை வித்தி இறே பிறப்பிப்பது
இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க
அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகபுக்கு மேல் இனி வேறு ஒரு பேறும் இல்லை என்று இவர் இருக்க –
இவர் கார்யத்திலே நாம் முதலடி இட்டிலோம் -என்று அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு –
விரோதிகள் அடைய போச்சுதாகில் –
அபேஷிதங்கள் பெற வேண்டும் அம்சங்கள் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று அவன் பதற்றத்தை அமைக்கிறார் –

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 4-1 – –

உதய கிரியிலே ஆதித்யன் கிளம்பினால் எல்லார்க்கும் பிரகாசிக்குமா போலே
திருமலையில் நிற்கிற நிலை உபய விபூதியும் கண்டு வாழ்கைக்கு இறே –
அங்குள்ளார் திரு மலையிலே கொடு முடியிலே வந்து இளைப்பாறுவார்கள்
இங்குள்ளார் -மொய்த்த சோலையிலும் -மொய்ம் பூம் தடம் தாழ் வரையிலும் இளைப்பாறுவார்கள்
இருவர் விடாயையும் தீர்க்கும் -ரஷகனுக்கு ரஷ்யத்தை பெறாத விடாயும் –
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று சீலாதி குணங்களை
அனுபவிக்கப் பெறாத நித்ய சூரிகள் விடாயையும் தீர்க்கும் –
நிதி உடையாய் -ஸ்ரீ கௌஸ்துபம் உடையாய் என்னுமா போலே
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் –
கானமும் வாநரமும் வேடுமுடை வேம்கடம் -என்கிறபடியே-சர்வரையும் வாழ்விக்கும் படி
நம்பீ
குண பூர்த்தி
நிகரில் புகழாய் -என்று வாத்சல்யம்
உலகு மூன்று உடையாய் -என்று ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே -என்று சௌசீல்யம்
திருவேம்கடத்தானே -என்று சௌலப்யம்
இது இங்கு உள்ளார்க்கு முகம் கொடுத்த படி –
தாமோதரா
நம்பீ என்று பூர்த்தி கீழ்
அக் குணங்களும் க்ரயம் சென்ற படி இந்த பூர்த்தி
வெண்ணெய் களவு காண்கையாலே அபூர்த்தி
கட்டு உண்கையாலே அசக்தி
தப்ப விரகு அறியாமையாலே அஜ்ஞதை
சதிரா
ஆஸ்ரிதர் தோஷம் காணாத சதிர்
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரன் ஆனார் இறே
நின் அருளே –
இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது
அவன் அடியாக வரில் -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –
புரிந்து
எத்தனையும் வான் மறந்த காலத்தும் -இத்யாதி
இருந்தேன் –
உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை
அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –
விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –
அபேஷிதமும் பெற்றதாகில் -இனி பதறுகிறது என் –
இனி என் திருக் குறிப்பே –
என் கொல் அம்மான் திரு அருள்கள்
திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-

வேயர் தங்கள் குலத்து உதித்த -அவதாரிகை –
நிகமத்தில் இத் திரு மொழியை அதிகரித்தார்க்கு பலம் -தம்மைப் போலே
அனந்யார்ஹ சேஷ பூதராகப் பெறுவர்கள் -என்கிறார்-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

வேயர் தங்கள் -குலத்து உதித்த –
உதய கிரியிலே ஆதித்யன் உதித்தால் போலே ஆய்த்து இக்குடியிலே இவர் வந்து அவதரித்த படி –
அவன் கேவலம் அந்தகாரத்தை இறே போக்குவது –
தனிச் சுடரே -என்று அவ் ஆதித்யனும் இங்கே ஆகையாலே -அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி –
ஹ்ருதய கமலத்தை அலர்த்தும் ஆதித்யன் ஆய்த்து இவர்
விட்டு சித்தன் –
விஷ்ணு சித்தர் என்று திரு நாமம்
மனத்தே —
ஹ்ருதயத்திலே
விஷ்ணு சித்தர் என்று நிரூபகமாய் -அவனை விடாமை அனுஷ்டான பர்யந்தம் ஆன படி
கோயில் கொண்ட கோவலனைக் –
திருப் பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் இவர் திரு உள்ளத்திலே இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் –
தான் பிறந்த படியையும்
வளர்ந்த படியையும்
இவரைக் கொண்டு கேட்ட படி –
வால்மீகி பகவான் பாட -குசலவர்களைக் கொண்டு கேட்ட சக்கரவர்த்தி திரு மகனைப் போல் அன்றி –
ஸ்ரீ நந்தகோபர் திரு மகன் கேட்ட படி –
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்தன் -என்னுமா போலே அன்று இவர் திரு உள்ளத்தில் கோயில் கொண்ட படி –
திரு மால் இரும் சோலை மலையே திரு பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேம்கடமே எனது உடலே -என்றும்
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -என்கிறபடியே உகந்து அருளின
நிலங்களோடு ஒக்க இறே ஆழ்வார் திரு உள்ளத்தை ஆதரித்தது –
நன்கு என் உடலம் கை விடான் –
நங்கள் குன்றம் கை விடான் -எதுக்காகா –
நண்ணா அசுரர் நலிகைக்காக
உடலம் கை விடாதது எதுக்காகா –
திரு வாய் மொழி பாடுகைக்காக –
அப்படி அன்றிக்கே
இடவகைகள் இகழ்ந்திட்டு -என்கிறபடியே அவற்றை உபேஷித்து இறே இவர் திரு உள்ளத்தை இடவகையாக கொண்டது –
ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் ஸ்ரீ பெரியாழ்வார் திரு உள்ளம் ஆய்த்து
ஆகையால் இறே -மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர்-என்றது –
உள்ளிருப்பார் சொல்லும் வார்த்தை உடன் இருப்பார்க்கு தெரியும் இறே –
கோவலனை –
தாழ்ந்த குலத்திலே வந்து அவதரித்து -அவர்களுக்கு சுலபன் ஆனால் போலே ஆய்த்து இவருக்கு சுலபன் ஆன படி –
கொழும் குளிர் முகில் வண்ணனை –
இவர் திரு உள்ளத்தில் புகுந்த பின் ஆய்த்து -குளிர்ந்து செவ்வி உண்டாய் – தன் நிறம் பெற்றது -திருமேனி
ஆயர் ஏற்றை –
இடையரோடு கலந்து பரிமாறப் பெற்றோம் -என்ற திரு உள்ளத்தில் ப்ரீதியாலே
வந்த செருக்கோடே இருக்குமா போலே ஆய்த்து -இவர் திரு உள்ளத்திலே புகுரப் பெற்ற ப்ரீதியாலே வந்த செருக்கும் –
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே
அமரர் கோவை –
அனுபவம் மாறில் முடியும்படியான -நித்ய சூரிகளுக்கு ஸ்வாமி ஆனவனை —
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அந்தணர் தம் அமுதத்தினை –
தெளி விசும்பிலே நடக்கிற அனுபவம் இவ் விபூதியிலே நடக்கும் படி இருக்கிற சனகாதிகளுக்கு -நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவர் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே –
வேதியர் முழு வேதத்து அமுதத்தை –
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே-
எம்பாரை சிலர் -இப்பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –
நான் உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் -ஆகிலும் நீங்கள் கேட்ட இவ்
அர்த்தம் போராது என்ன ஒண்ணாது -இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல
ஒண்ணாதபடி உடையவரும் திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –
ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று உடையவர்
திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
இப்பொழுது உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
தாமும் -என்கைக்கு அடி -அவர்கள் ஏற்றதை நினைத்து
அதாவது –
பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து -மங்களா சாசனம் பண்ணுகை
அன்றிக்கே -தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே -கழிந்த காலத்துக்கும்
மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
இப்படிக்கொத்த தன்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை
ஏழாட் காலம் பழிப்பிலோம் -என்று அருளிச் செய்தார் இறே –
பாடுகை யாவது -உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை
சாயை போலே என்றது -புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு –
புறப்பட்ட இடத்தே புறப்பட்டு -நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –
இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –
செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார் நிழலும் அடிதாறுமாகப் பெறுவார்கள்
அடிதாறு -திருவடிகளில் ரேகைகள்
சாயை போலே பாட வல்லார் -நிழல் உண்டாக பாட வல்லார்
நிழல் ஆவது -குளிர்த்தி-குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப் பல்லாண்டிலும் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் அருளிச் செய்து அருளிய திவ்ய நாமங்கள்–

March 9, 2019

ஆரா அமுதன்
ஆயர்கள் நாயகன்
ஆயர்கள் போரேறே
ஆயர் புத்ரன்
ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயிரம் பெயர் தேவன்
ஆழியான்
ஆழி யம் கையன்

அச்யுதன்
அனந்த சயனன்
அஞ்சன வண்ணன்
அந்தணர் தம் அமுது
ஏனமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவன்
ஆலிலையில் துயில் கொண்டாய்
அமரர் கோ
அமரர் பெருமான்
அமரர் முதல் தனி வித்து
அரும் தெய்வம்
அன்பா
அப்பன்
அறம்பா
அத்தன்
முத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய அச்யுதன்
அயோத்திக்கு அரசன்
ஆழி வலவன்
அழகன்

சக்கரக்கையன்
தாமோதரன்
தேவகி சிங்கம்
தேவ பிரான்
தேவர்கள் சிங்கம்
தைவத்தலைவன்
இரணியன் மார்பை முன் கீண்டவன்
ஈசன்
இளம் சிங்கம்
எம்பிரான்
எம்மனா
ஏன் குல தெய்வம்
என்னுடை நாயகன்
எண்ணற்க்கு அறிய பிரான்
இருடீகேசன்
என் மணி
ஏழு உலகு யுடையாய்

கோவிந்தன்
ஜோதி நம்பி
காயா மலர் வண்ணன்
கடல் நிற வண்ணன்
கடலைக் கடைந்தான்
காகுத்த நம்பி

காவலனே
கேசவன்
கார் முகில் வண்ணன்
கண்ணன்
கண்ணபுரத்து அமுது
காவேரி தென்னரங்கன்
கோதுகலமுடைய குட்டன்
கோலபி பிரான்
கொண்டல் வண்ணன்
கோ நிரை மேய்த்தவன்
கோவலக் குட்டன்
குடந்தைக் கிடந்தான்
குடமாடு கூத்தா
குலகே குமரன்
குலத்துக்கு அதிபதி
குன்று எடுத்தாய்
குன்று எடுத்து ஆ நிரை காத்தவன்
குழகன்

மாதவன்
மாயன்
மாயபி பிள்ளை
மாய மணாள நம்பி
மதில் சூழ் சோலை மலைக்கு அரசு
மது ஸூதனன்
மதுரை மன்னன்
மன்னு குறுங்குடியாய்
மா மலை தாங்கிய மைந்தன்
மண்ணாளன்
மன்னவன்
மரகத வண்ணன்
மருப்பு ஓசித்தாய்
மல் அடர்த்தாய்
மாணிகே குறளன்
மணி வண்ணன்
முகில் வண்ணன்

நாதன்
நெடுமால்
நாகணைபி பள்ளி கொண்டாய்
நாக பகைகே கொடியான்
நம்பி
நமோ நாராயணன்
நம்முடை நாயகன்
நான்மறையின் பொருள்
நம் பரமன்
நாந்தகம் ஏந்திய நம்பி
நந்தன் காளாய்
நந்தகோபன் அணி சிறுவன்
நந்தகோன் இள அரசு
நெஞ்சில் உறைவாய்

பாலகன்
பார் அளந்தான்
பார் கடல் வண்ணன்
பத்ம நாபன்
பஞ்சவர் தூதன்
பட்டி கன்று
பேய் முலை உண்டான்
பண்புடை பாலகன்
பரமன்
பரமேட்டி
பவித்ரன்
பெயர் ஆயிரத்தான் பாலகன்
பிள்ளை அரசு
பிரமன்
பொரு கரியின் கொம்பு ஓசித்தாய்
பூவை பூ வண்ணன்
புருஷோத்தமன்
புள்ளின் தலைவன்
புள் ஆளன்டான்
புள்ளின் வாய் பிளந்தாய்
புள்ளின் வாய் கீண்டான்
புள்ளின் வாய் பிளந்தாய்

சதிரா
சது முகன் தன்னைப் படைத்தான்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்
சீதை மணாளன்
செம் கண் மால்
செல்வன்
சிங்க பிரான்
ஸ்ரீதரன்
சோதி சுடர் முடியாய்
சோத்தம்பிரான்
ஸூந்தரத் தோளன்

தாமரைக் கண்ணன்
தரணி அளந்தான்
தேனில் இனிய பிரான்
திருமால்
திரு மார்பன்
திரு நாரண
திரு விக்ரமன்
திண்ணார் வெண் சங்குடையாய்
திருவோணத்தான்
தூ மணி வண்ணன்
கண்ணன்
தரணி ஆளன்
தேனில் இனிய உலகம் அளந்தான்
உம்பர் கோமான் .
உய்த்தவன்
உத்தமன்
உருவும் அழகிய நம்பி
வைகுண்ட குட்டன்
வையம் அளந்தான்
வாமனன்
வான் இள அரசு
வாமன நம்பி
வாஸூ தேவன்
வேதப் பொருள்
வெள்ளறையாய்
வேங்கட வண்ணன்
வித்தகன்
ஏழ் உலகும் விழுங்கிய கண்டன்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 27, 2018

திவ்ய பிரபந்தம் –மூலம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஷயம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் -மூல கர்த்தாக்கள்
பழைய செழிய தெய்வத் தமிழ் -பாஷை
ஞானம் கனிந்து நலம் கொண்டு நாடொறும் நையும் ஞானம் அனுட்டானம் இவை நன்றாக உடைய நம் நல் குரவர்-ஆதரித்தவர்கள்-

ஸ்ரீ வத்ஸ ஸ்ரீ கௌஸ்துப வைஜயந்தி வனமாலைகளையும் ஸ்ரீ பூமி நீளை களையும் ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களும்
ஸ்ரீ அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகளையும் பார்த்து -நீங்கள் போய் லீலா விபூதியிலே நாநா வர்ணங்களிலும் திருவவதரித்து
அகிலாத்ம உத்தாரணம் பண்ணுங்கோள் என்று நியமித்து அருள —த்ரமிட பூ பூக்கத்திலே நிமக்நரை உயர்த்த நாநா வர்ணங்களில் வந்து திருவவதரிக்க –
சர்வேஸ்வரனும் அவர்களுக்கு மயர்வற மதி நலம் அருளி அவர்கள் முகேந ஸர்வாதிகாரமான திராவிட வேத ரூப திவ்ய பிரபந்தங்களை
பிரகாசிப்பித்து அருளினான் – ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் -ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் பிரவேசித்து இறுதி ஸ்ரீ ஸூக்திகள்
ஸ்ரீ கருட வாகன பண்டிதரும் இதே போலே அருளிச் செய்துள்ளார் –
ஆழ்வார்கள் சம்சாரிகளில் ஒருவரால் இத்தனை -ஈட்டு ஸ்ரீ ஸூக்தி –

சாற்றிய காப்புத் தால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானை போற்றரிய அம்புலியே யாய்நத சிறு பறையே
சிற்றிலே பாம்பு சிறு தேரோடும் பத்து -பிள்ளைக் கவிகள் பாடும் வகை முறைகளைப் பற்றி வச்சணந்தி மாலை சொல்லும்

——————————————————————————

அஞ்ச உரப்பாள் யசோதை -ஆணாட விட்டிட்டு இருக்கும் —
இதல் -சீற மாட்டாள் என்கிற அர்த்தத்தில் உரப்பாள் -என்பதே சரியான பாடம் –
உரைப்பாள் தப்பான பாடம்
——————————————————————————

இராமானுச நூற்றந்தாதி -95
மண்ணின் தலத்து உதித்து மறை நாலும் வளர்த்தனனே -தப்பான பாடம்
மண்ணின் தலத் துதித் துய மறை நாளும் வளர்த்தனனே -சரியான பாடம்
மா முனிகள் வியாக்யானம்
ஸ்ரீ வைகுண்டத்தில் -இருந்து பூ தலத்திலே திருவவதரித்து சர்வ உஜ்ஜீவன சாஸ்திரமான ருகாதி சதுர் வேதத்தையும்
அசங்குசிதமாக நடத்தி அருளினார் –
உய் மறை நாலும்-சர்வ உஜ்ஜீவன சாஸ்திரமான ருகாதி சதுர் வேதத்தையும்-

———————————————————————————

பல கோடி நூறாயிரம் -விட
பல் கோடி நூறாயிரமே சிறந்த பாடம்

————————————————————————-

சேவடி செவ்வி திருக் காப்பு விட –
செவ்வடி செவ்வி திருக் காப்பு -சிறந்த பாடம்

—————————————————————————

பெரியாழ்வார் மங்களா சாசனம் செய்து அருளிய 19 திவ்ய தேசங்கள்
திருவரங்கம் /திருவெள்ளறை /திருப்பேர் நகர் /திருக் குடந்தை திருக் கண்ணபுரம் /திருமால் இரும் சோலை –
திருக் கோட்டியூர் /ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருக் குறுங்குடி /திருக் கோட்டியூர் /
திருவேங்கடம் /திரு அயோதியை /திரு சாளக்ராமம்
திரு வதரியாச்ரமம் /திருக் கண்டங்குடி நகர்
திரு த்வாரகை /திரு வடமதுரை -திரு கோவர்த்தனம் –
திருவாய்ப்பாடி -திரு கோகுலம்
திருப்பாற் கடல் /திரு பரம பதம் –
திரு தில்லைச் சித்ர கூடம் -சேர்த்தும் சிலர் 20 -என்பர் -இவர் அருளிய திரு சித்ர கூட பாசுரங்கள் கொண்டு –

இவர் மட்டுமே மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசம்
திரு கண்டங்குடி நகர்

—————————————————————————–
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி பத்தொன்பதையும் -நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாதம் என் தலை மேல் பூ
———————————————————————————

திருவரங்கம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கருவுடை மேகங்கள் –2-7-2-
சீமாலிகனவ னோடு -2-7-8-
வண்டு களித்து இறைக்கும் -2-9-11-
கன்னி நன் மா மதிள் சூழ் தரு -3-3-2-
மாதவத்தோன் -4-8-பதிகம் முழுவதும்
மரவடியைத் தம்பிக்கு -4-9-பதிகம் முழுவதும்
துப்புடையாரை அடைவது -4-10-முழுவதும்

திரு வெள்ளறை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
இந்திரனோடு பிரமன் -2-8-பதிகம் முழுவதும்

திருப் பேர் நகர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கொங்கும் குடந்தையும் -2-9-2-
கொண்டல் வண்ணா இங்கே -2-9-4-

திருக் குடந்தை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கொங்கும் குடந்தையும் -2-9-2-
குடங்கள் எடுத்து ஏற விட்டு –2-7-7-

திருக் கண்ணபுரம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-

திரு மாலிருஞ்சோலை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
சுற்றி நின்று ஆயர் –1-4-5-
அலம்பா வெருட்டா -4-2-பதிகம் முழுவதும்
உருப்பணி நான்கை தன்னை -4-3-பதிகம் முழுவதும்

திருக் கோட்டியூர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வண்ண மாடங்கள் சூழ் -1-1-1-
கொங்கும் குடந்தையும் -2-3-2-
நாவ காரியம் -4-4-பதிகம் முழுவதும்

ஸ்ரீ வில்லி புத்தூர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
மின்னனைய நுண்ணிடையார் -2-2-3-

திருக் குறுங்குடி -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-

திரு வேங்கடம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
சுற்றும் ஒளி வட்டம் -1-4-3-
என்னிது மாயம் -1-8-8-
தென்னிலங்கை மன்னன் -2-3-3-
மச்சோடு மாளிகை ஏறி -2-7-3-
போதர் கண்டாய் இங்கே -2-7-7-
கடியார் பொழில் அணி -3-3-4-
சென்னி யோங்கு –5-4-1-

திரு அயோத்தி -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வாரணிந்த முலை மடவாய் -3-10-4-
மைத்தகு மா மலர் -3-10-8-
வடதிசை மதுரை -4-7-3-

திரு சாளக்கிராமம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-

திரு வதரியாஸ்ரமம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-

திருக் கண்டம் கடி நகர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
தங்கையை மூக்கும் 4-7–பதிகம் முழுவதும்

திருத் துவாரகா -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-

திருக் கோவர்த்தனம்-திரு வட மதுரை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வானிள வரசு -3-4-3-
வடதிசை மதுரை -4-7-3-

திரு ஆய்ப்பாடி -திருக் கோகுலம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
தீய புந்திக் கஞ்சன் – -2-2-5-
முலை ஏதும் வேண்டேன் -2-3-7-
விண்ணின் மீது அமரர்கள் -3-4-10-
புவியுள் நான் கண்டது –3-9-7-

திருப் பாற் கடல் –மங்களா சாசனம் -பாசுரங்கள் –
ஆலத்து இலையான் -2-9-9-
பை யரவின் இணைப் பாற் கடலுள் -4-10-5-

திருப் பரம பதம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வான் இள வரசு வைகுந்தக் குட்டன் –3-4-9-
வட திசை மதுரை -4-7-9-
தட வரை வாய் -5-4-10-

தில்லைத் திரு சித்ர கூடம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
மானமரும் மென்னோக்கி -3 -10 -5-
சித்தர கூடத்து இருப்ப -3-10-9-

——————————————

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -முதலிலும்
பருப்பதத்து கயல் பொறித்த-என்ற பாட்டிலும் மல்லடர்த்தாய் -இறுதியிலும் அருளி –

———————————————————————-

நம் ஆழ்வாருக்கு
பூதத் ஆழ்வார் -திருமுடி
பொய்கை ஆழ்வார் பேய்ஆழ்வார் -திருக் கண்கள் –
பெரியாழ்வார் -திரு முகம்
திரு மழிசை ஆழ்வார் -திருக் கழுத்து
குலசேகர ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் -திருக்கைகள்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மார்பு
திருமங்கை ஆழ்வார் -திருக் கொப்பூழ்
மதுரகவி ஆழ்வார் -திருவடி

————————————————————————————-

இரண்டடி வெண்பா -குறள் வெண்பா
மூன்றடி -சிந்தியல் வெண்பா
5-12 -அடி -பற்றொடை வெண்பா
12 அடிக்கு மேல் கலி வெண்பா
கலி வெண்பா -திரு மடல்கள் இரண்டும்
பன்னிரு பாட்டியல் இலக்கண நூல்
பாட்டுடைத் தலைமகன் இயற் பெயர்க்கு எதிகை
நாட்டிய வெண் கலிப்பாவதாகி–காமம் கவற்றக்
கரும் பனை மட மா இருவர் ஆடவர் என்றனர் புலவர் –
——————————————————————————————-

முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்-நன்னூல்

தனியன் இயற்றும் அதிகாரி நன்னூல்
தன்னாசிரியன் தன்னோடு கற்றான் தன மாணாக்கன் தகும் உரைகாரர்
என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே –

————————————————————————————-

கீழ்மை இனிச் சேரும்
கீழ்மையினில் சேரும்
கீழ் மேனி சேரும்

சங்கம் எடுத்தூத -எடுத்து ஓத
சங்கம் அடுத்தூத
சங்கம் மடுத்தூத
பாட பேதங்கள்
எடுத்தூத பாடமே மோனைக்கு சேரும்-

——————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் பிரவணராய் -கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -திருவவதாரம் முதலாக
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்-என்று அதி மானுஷ சேஷ்டிதமான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை
ஸ்ரீ கோப ஜென்மம் ஆஸ்தானம் பண்ணி -அநுகரித்து -அனுபவித்து -அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தையராய்க் கொண்டு பெரியாழ்வார் திருமொழி திவ்ய பிரபந்தத்தை
சாயை போலே பாட வல்ல சஜ் ஜனங்களுக்கு உபகரித்து அருளி உலகத்தை வாழ்வித்து அருளுகிறார்

——————————————————————————-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தமா என்னில்
ஜ்ஞான தசையில் ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்கும்
அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் அவனை கடகாக்கிக் கொண்டு தன்னை நோக்கும்
சௌகுமார்யத்தை அனுசந்தித்தால் தன்னைக் கடகாக்கிக் கொண்டு அவனை நோக்கும் –
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது
ஆழ்வார்கள் எல்லாரையும் போல் அல்லல் பெரியாழ்வார்
அவர்களுக்கு இது காதா சித்கம்
இவருக்கு இது நிச்சயம்

——————————————————————————-

திருப் பல்லாண்டு
முதல் பாட்டில் திருவடிக்கு மங்களாசாசனம்
மேலில் பாட்டு ஒரு பாட்டாக அனுசந்திப்பது சம்ப்ரதாயம் –
இரண்டாம் பாட்டில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களாசாசனம்

படை போர் புக்கு முழங்கும் பாஞ்ச சைன்யம் -சேனைகளை யுடைய யுத்தங்களில் புகுந்து கோஷிக்கும் என்றும்
போர் படை புக்கு முழங்கும் பாஞ்ச சைன்யம் -யுத்தங்களில் ஆயுதமாக போய் முழங்கும் என்றுமாம்

மூன்றாம் பாட்டில் பகவத் ப்ராப்தி காமர்களை கூட்டு சேர அழைக்கிறார்
மண்ணும் மனமும் கொண்மின் –
திரு முளை திரு நாளுக்கு புழுதி மண் சுமக்கையும்
இக் கல்யாணத்துக்கு அபிமாநிகளாய் இருக்கையும்
இரண்டும் கைங்கர்யங்கள் அனைத்துக்கும் உப லஷணம்
ஏழ் காலம் -முன் -நடு -பின் ஏழ் காலம் -ஆக 21 தலைமுறை
நான்காம் பாட்டில் கைவல்ய காமுகர்களை அழைக்கிறார்
ஏடு -சூஷ்ம சரீரம்
ஐந்தாம் பாட்டில் ஐஸ்வர் யாதிகளை அழைக்கிறார்
ஆறாம் பாட்டில் அநந்ய பிரயோஜனர்கள் தங்கள் ஸ்வரூபாதிகளை சொல்லிக் கொண்டு வந்து புகுகிறார்கள்
ஏழாம் பாட்டில் கைவல்ய நிஷ்டர்கள் தங்கள் ஸ்வ பாவம் சொல்லிக் கொண்டு புகுகிறார்கள்
சுழற்றிய –திரு ஆழி ஸ்வ ஆஸ்ரயத்தில் இருந்தே கார்யம் நிர்வஹிக்க வல்லவன் என்கிறது
பெருமான் -பெருமை உள்ளவன் -பெரு மஹான் -விகாரம் என்றுமாம் /குடில் -புத்ராதி சந்தானம் எல்லாம்
அடுத்து ஐஸ்வர் யாதிகள் இசைந்து வந்து கூடுகிறார்கள்
நெய் யெடை நெய்யிடை-இரண்டு பாட பேதம்-
நெய்யோடு ஒத்த எடையை யுடைத்தாய் / நெய்யின் நடுவே சில சோறும் என்றவாறு
அடைக்காய் -அடை இலை வெற்றிலை காய் பாக்கு
கை அடைக்காய் -கை நிறைந்த அடைக்காய்
அடுத்து கூடிய அநந்ய பிரயோஜனர்கள் இவர் உடன் கூடி பல்லாண்டு பாடுகிறார்கள்
அடுத்து கைவல்யர்கள் சேர்ந்து பாடுகிறார்கள்
அடுத்து ஐஸ்வர் யாதிகள் சேர்ந்து பாட
நிகமத்தில் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

———————————————————————————–

பெரியாழ்வார் திருமொழி-

ஸ்ரீ கிருஷ்ணன் உடைய விரோதி பாஹூள்யத்தால் ஆழ்வார்கள் மிகவும் பரிவார்கள்
பெரியாழ்வார் விசேஷத ப்ரவணராய் இருப்பார்
விட்டு சித்தன் மனத்திலே கோயில் கொண்ட கோவலன் –
ரிஷிகளை போலே கரையிலே நின்று திரு வவதார குண செஷ்டிதன்களை சொல்லிப் போகாமல்
பாவன பிரகர்ஷத்தாலே கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை அவர்களாக பேசி அனுபவித்து தலைக்கட்டுகிறார்-

இப்பிரபந்தத்திலே
முதல் திருமொழியில்
கிருஷ்ண அவதார உத்தர ஷணத்தில் திருவாய்ப் பாடியில் உள்ளார் பண்ணின
உபலாள நாதிகளை திருக் கோட்டியூரிலே நடந்ததாக அனுசந்தித்து இனியர் ஆகிறார்-

வண்ண மாடங்கள்
திருவவதரித்த உடனே கண்ணன் முற்றம் ஆனதே-ஸ்ரீ நந்த கோபர் அபிப்ராயத்தாலே
எள் + நெய் =எண்ணெய்/சுண்ணம் -மஞ்சள் பொடி

ஓடுவார்
ஆய்ப்பாடியில் விகாரம் அடையாதவர்கள் இல்லையே
ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்றே
பிரான் -பிரபு -விராட் –
எங்குத்தான் – -எங்குற்றான் -பாட பேதம்

பேணிச் சீருடை -கம்சாதிகள் கண் படாத படி காத்து வந்து -ஸ்ரீ மானான ஸ்ரீ கிருஷ்ணன்
வடமதுரையில் பிறந்த பிள்ளையை திருவாய்ப்பாடியில் பிறந்ததாக கம்சன் பிரமிப்பிக்க
புகுவார்களும் புக்குப் போவார்களும்
உறியை முற்றத்து
கொண்ட தாள்
அண்டர் இடையர்
மிண்டி நெருக்கி கூட்டத்தின் மிகுதி
கையும் காலும்
பைய நீராட்டி திரு மேனிக்கு பாங்காக
ஐய நா -மெல்லிதான நா
வையம் வைக்கப்படும் இடம் வசூந்தர வசூமதி
ஏழும் -உப லஷணம் எல்லாம் என்றபடி

வாயுள் வையம் கண்ட
கீழே யசோதை கண்டதை மற்ற ஆய்சிகளுக்கும் சொல்ல
அனைவருக்கும்
திவ்ய சஷூஸ் கொடுத்து காட்டி அருளினான்
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
நாம கரண தினம்
மத்த மா மலை தாங்கிய மைந்தனை -மத்தம் -யானைகள் -நிறைந்த கோவர்த்தனம் -என்றும்
மைத்த -சோலைகள் நிறைந்து அவற்றின் நிழலீட்டாலே கருத்த மா மலை என்றுமாம்
உத்தானம் செய்து உகந்தனர் ஆயர் -கைத் தலத்தில் வைத்துக் கொண்டு -உத்தானம் -நிமிர்ந்து கிடத்தல் என்றபடி
கிடக்கில் தொட்டில்
மிடுக்கு இலாமையினால் நான் மெலிந்தேன் -மிகவும் இளைத்தேன்
செம் நெலார்-இப்பாடல் வல்லார்க்கு பாவம் இல்லையே

——————————————————————————

1-2-
திருவடி தொடங்கி திரு முடி ஈறாக யசோதை பிராட்டி பாவ உக்தராய் கொண்டு அனுபவிக்கிறார்
சீதக் கடலுள் அமுது -அமுதினில் வரும் பெண்ணமுது
முத்தும் மணியும் வயிரமும் –
தத்திப் பதித்து மாறி மாறி பதித்து
பணைத்தோள்
வெள்ளித் தளை நின்று இலங்கும் கணைக்கால்
உழந்தாள்-உழவு ஆயாசம்
ஒரு தடா உண்ண பிள்ளைக்கு சாத்மியாது என்று வருந்தி -இழந்தாள்
தாம்பை ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
பிறங்கிய பேய்ச்சி
மறம் கொள் த்வேஷம் கொண்ட
மத்தக் களிற்று
அதத்த்தின் பத்தா நாள் -ஹஸ்த நஷத்ரம் பத்தாவது திரு நாள் தோன்றிய அச்சுதன்
கீழ் முறை ரோகிணியும் மேல் முறை திருவோணமும்
இருகை மத களிறு-பெரிய துதிக்கை உடைய
செய்த் தலை நீல நிறத்து சிறு பிள்ளை -தலை செய் -உயர்ந்த ஷேத்ரத்திலே அலர்ந்த கரு நெய்தல் பூவின் நிறம் போன்ற பால கிருஷ்ணன்
பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய -சக்ரவர்த்தி திருமகனில் வ்யாவ்ருத்தி

—————————————————–

1-3-
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி – செந்நிறமுடைய மாணிக்கத்தை இரண்டு அருகிலும் கட்டி –
நடுவில் வயிரத்தைக் கட்டி – கருமாணிக்கம் என்பது -இல் பொருள் உவமை
வயிச்சிரவணன்–சரியான பாடம் –குபேரன் என்றவாறு -வயிச்சிராவணன்-நீட்டுதல் பிழை
வாசிகை-திரு நெற்றி மாலை
வெய்ய காலை பாகி -வெவ்விய ஆண் மானை வாகனமாக யுடைய துர்க்கை
————————————-

1-4-
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி-கண்ணபிரான் சந்திரனைக் கையில் கொள்ள வேண்டும் என்று ஆடுகிற கூத்து
ஆடலாட யுறுதியேல்-முன்னிலை ஒருமை வினை முற்று -கருத்துறுயாகில்-என்றவாறு
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -நோவாமே -எதிர்மறை வினை எச்சம் -கை நோவு வீணாகப் போகாதபடி என்று
சக்கரக் கையன் –நீ இவன் அருகே வராவிடில் உன்னை சிஷித்து அல்லது விடான் -ஆழி கொண்டு உன்னை எறியும் -என்பார் மேலும்
பேழை வயிறு -பேழை என்று பெட்டிக்கும் பேர் -வெண்ணெய்க்கு பேட்டி போன்ற திரு வயிறு
தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே-எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே

————————————-

1-5-
செங்கீரை -தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்து ஆடுவிப்பதொரு நர்த்தன விசேஷம்-பெரிய ஜீயர்
பிள்ளைகள் இரு கையும் முழந்தாள்களும் உஊன்றித் தலை நிமிர்த்தி ஆடுதல் -என்பான் தமிழன்
கீர் -என்று ஒரு பாட்டாய் -அதுக்கு நிறம் சிவப்பாகி -அதுக்குத் தகுதியாக ஆடு என்று நியமிக்கிறார்கள் என்று-திருவாய் மொழிப் பிள்ளை
போர் ஏறு -முற்று உவமை
தப்பின பிள்ளைகளை- தாயொடு கூட்டிய என் அப்ப -என்று இயைந்து பொருள்
தனி மிகு சோதி புகத்-என்ற அத்யாபக பாடம் பிழை
தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும்–தழுவி முழுசிஉச்சி மோந்து முத்தம் இடுகை முதலியன செய்வதே தங்கள் கருத்தாயின செய்தல்

——————————————

1-6-
சப்பாணி –ஸஹ பாணி -ஒரு கையுடன் கூட மற்றொரு கையைச் சேர்த்துக் கொட்டுதல்
சப்பாணி கொட்டி அருள வேணும் -வினை தருவித்துக் கொள்ள வேண்டும் –
தன் மடியில் இருந்தும் சப்பாணி கொட்டுவதைக் காட்டிலும் தமப்பனார் மடியில் இருந்து கொட்டுவதை பார்த்தால் தானே
அவனது சர்வாங்க ஸுந்தர்யங்களையும் கண்ணாரக் கண்டு யூகிக்கலாம்
உங்கள் ஆயர் தம் மன் -ஒருமையில் பன்மை -மன் -பெருமையுடையவனுக்கு ஆகு பெயர்
அம்மை தன் அம்மணி மேல் -தன்மையில் படர்க்கையாக கொண்டு யசோதைக்கு தன் மடியில்-அம்மணி -இடை – இருந்து
சப்பாணி கொட்டுவது அபிமதம் என்றும்
ஆழ்வாருக்கு யசோதை மடியில் இருந்து அவன் சப்பாணி கொட்டுகை அபிமதம் என்றும் கொள்ளலாம்
தூ நிலா முற்றம் -பெயர்ச் சொல் /
வானிலா அம்புலி வினைத் தொகை /
நீ நிலா -இறந்த கால வினை எச்சம் -நிலாவுதல் -விளங்குதல் /
கோ நிலாவா -தலைவராகிய நந்தகோபர் மனம் மகிழும் படி –
பட்டிக் கன்றே -பட்டி மேய்த்து தின்று திரியும் கன்று போலே நெய் பால் தயிர்களைக் களவினால்
தின்று திரிகையே பொழுது போக்காக யுடையவன் -இதுவே அன்றோ கால ஷேபம்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையால் சொல்லுவார் வினை போமே–வேட்கையினால் -என்பதே தளை தட்டாமல் பொருந்தும்

——————————–

1-7-
படு மும்மதப் புனல் சோர -நின்று –உண்டான மூன்று வகையான மத நீர் பெருக்கவும் இருந்து கொண்டு –
கன்னம் இரண்டிலும் -குறி ஒன்றிலும் -மூன்று மத ஸ்தானம்
சிறு பிறை முளை -மூன்றாம் பிறை -என்பர் –
சூழ் பரி வேடமுமாய்ப்-அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டு இருக்கும் பரி வேஷத்தைப் போலே
சந்திரனைச் சுற்றி சில காலங்களில் காணப் படும் ரேகைக்கு பரி வேஷம் -இத்தை ஊர் கோள்-என்றும் சொல்வர்
காம தேவனுக்கு பிதாவுமான இப்பிள்ளை -மன்மதன் அம்சமான ப்ரத்யுமனுக்கு ஜனகன் –காமர் தாதை ஆயினான் -காமன் தாதை என்றும் பாடம்
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை-தாய்மார்கள் மனம் உகக்கவும் சத்ருக்கள்
வருத்தம் அடையவும் தளர் நடை நடந்து அருளியதை
பாராட்டுத்தாய் -ஊட்டுத் தாய் -முலைத் தாய் -கைத்தாய் -செவிலித்தாய் –சிறு தாய் -போன்றவர்கள் உண்டே
ஒன்னார் -ஒன்றார் -திரு உள்ளபடி நடக்காத சத்ருக்கள் –

———————————————
1-8-
கிண் கிணி-சேவடிக் கிண் கிணி -அரை கிண் கிணி -இரண்டையும் காட்டும்
அச்சோ -அதிசயத்தைக் குறிப்பதோர் இடைச் சொல் -அணைத்துக் கொண்டதை நினைதொறும்
பரம ஆனந்தத்தில் மூழ்கி நெஞ்சு உருகிச் சொல் இடிந்து வாய் விட்டு சொல்ல முடியாமல்
அவ் வாச்யர்த்தை ஒரு தரத்துக்கு இரு தரம் அச்சோ அச்சோ என்கிறாள்
ஓட்டந்து -ஓடி வந்து
எழல உற்று மீண்டே இருந்து-திருப் பாடகம் –பாடு -இடம் பெருமை ஓசை நிகண்டு-பெருமை தோற்ற எழுந்து அருளி சேவை
அரவு நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டம்
ஊடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –
கழல் -வீர ஆபரணம் -கழல் கழங்கோடு செருப்புக் காலணி காலின் நாற்பேர் -நிகண்டு
சுழலை-சூழலை-என்பதன் குறுக்கல் -ஆலோசனை
செழுந்தார் விசயன் -பகைவர்களோடு போர் புரியும் போது தும்பைப் பூ மாலையையும் -வெற்றி கொண்ட போது வாகைப் பூ மாலையையும்
சூடும் தமிழர் வழக்கம் படி அர்ஜுனன் சூடுவதால் -விசயன் -விஜயன் -வட சொல்
துரும்பால் கிளறிய சக்கரம் -கருதும் இடம் பொருது–கை நின்ற சக்கரத்தன்-திருமால் விரும்பிய இடங்களிலே
விரும்பிய வடிவம் கொண்டு செல்லும் தன்மையால் திருச் சக்கரமே திருப் பவித்ரத்தின் வடிவுடன் கிளறினமை சொல்லிற்று
நான்மறை முற்றும் மறைந்திடப் பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே-
ஹம்ஸாவதாரம் -சோமுகன் என்னும் அசுரன் கல்ப அந்தத்திலே நான்முகன் உறங்கும் பொழுது கவர்ந்து பிரளய நீருக்குள் செல்ல
ஸ்ரீ மத்ஸ்யாவதாரமாய் திருவவதரித்து மீட்டுக் கொண்டு வந்து சார அசார விவேகம் அறியும் திரு ஹம்ஸாவதாரமாய்
திருவவதரித்து நான்முகனுக்கு உபதேசித்து அருளினான் –
இங்கு நான் மறை என்றது -முன்பு இருந்த தைத்ரியம் -பவ்டியம்-தளவாகராம்-சாமம் -ஆகிய நான்கும்
வேத வியாசரால் பிரிக்கப் பட்ட பின்பே ருக்கு யஜுஸ் அதர்வணம் சாமம் ஆயின

————————————————-

1-9-
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு-என்றது கண்ணபிரானுடைய குறியை சொன்னவாறு
சிறு நீர் துளிகள் இற்று இற்று மீண்டும் வருவதால் சொட்டு சொட்டு என்னத் துளிக்க துளிக்க -என்கிறார்-
ஆயர்கள் ஏறு -ஆகு பெயரால் -செருக்கு நடை காம்பீர்யம் முதலிய குணங்களால் காலை போன்ற வீரன் என்றவாறு –
தனஞ்சயன் -தர்மபுத்ரன் ராஜ ஸூயா யாகம் செய்யக் கோலின போது பல ராஜாக்களை கொன்று மிக்க பொருள்களைக் கொண்டு
வந்தமையாலும்-வெற்றியையே செல்வமாக யுடையவன் என்பதாலும் அர்ஜுனனுக்கு வந்த பெயர்
வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்–பாத்திரம் -இலை-வெண்கல இலை வடிவில் குழந்தை இடுப்பில் கட்டுவது முற்கால வழக்கம் போலும்
அப்படியே ஸ்ரீ வாமணனுக்கும் கட்டினார்கள் என்றவாறு
உத்தரவேதியில் நின்ற -ஆஹவநீய அக்னிக்கு உத்தர திக்கிலே யாக பசுவைக் கட்டுகிற
யூப ஸ்தம்பத்தை நாட்டிய வேதிகை -இங்கு மகா பாலி யாக பூமியைக் காட்டும்
இந்திரன் காவு -நந்தவனத்தில் -மந்தாரம் -பாரி ஜாதம் -சந்தானம் -கல்ப வருஷம் -ஹரி சந்தானம் -என்ற ஐந்து வகை தேவ வ்ருக்ஷங்கள்
இங்கு பாரி ஜாதத்தையே கற்பகக் காவு என்கிறார் -ஒவ் ஒன்றுமே பெரும் சோலையாக இருக்குமே
நிற்பன செய்து பன்மை -ஐந்தையும் கொணர்ந்தான் என்பாரும் உண்டு -நிற்பது செய்து -ஒருமை பாட பேதம் –

———————————————-

2-1-
இதுவும் கோபிமார் பாசுரங்கள் என்பதை மேலே -புரட்டி அந்நாள் எங்கள் பூம் படு கொண்ட அரட்டன் – 2-1 4-என்பதில் இருந்து அறியலாம்
தூதனாய் ஸுலப்யத்தை வெளியிட்டு நம்மில் ஒருவன் என்று உலகோர் கொள்ளும் படி இருப்பவன்
அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் சர்வேஸ்வரத்துவ சிஹ்னங்களைக் காட்டி அருளுகிறார் -அப்பூச்சி காட்டுகிறான் –
அதிரதர் -மஹா ரதர் -சம ரதர் -அர்த்த ரதர் -நான்கு வகை ரதர்கள்
அலவலை-அர்த்தத்தின் உத்கர்ஷத்தையும் ஸ்ரோத்தாவின் நிகர்ஷத்தையும் பாராமல் ரஹஸ்யார்த்தம் அருளுபவர் –
வரம்பு கடந்து பேசுபவன் -அனைத்துக்கும் திரௌபதியினுடைய விரித்த குழல் பார்க்க சஹியாமை ஒன்றே ஹேது –
காளியன் தீய பணம் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி –விஷம் இருப்பதற்கு உரிய இடம் -கோபம் தெரிவிப்பதால் உண்டான தீமை –
திருவடியில் அணிந்த சிலம்பு ஸப்திக்கும்படி குதித்து -இத்தை கண்டு என்ன தீங்கு வருமோ என்று கலங்கினவர் மகிழும் படி நர்த்தன பண்ணி அருளி
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் -ஹதசன்-ஆஸ்ரித விரோதியை ஹதம் பண்ணுபவன்

————————————-

2-2-
வனமுலைகள் சோர்ந்து பாயத்-எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் தெறித்து பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
வனமே-நீரும் வனப்பும் -ஈமமும்-துழாயும் -மிகுதியும் -காடும் -சோலையும் -புற்றும் -எனவே புகழும் என்பர் -நிகண்டு -இங்கு அழகைக் குறிக்கும்
வாசுதேவா-பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து -திரு வாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே -பொருந்தி வந்து
உனக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்தால் இத் திரு வாய்ப்பாடி அடங்கலும் இருள் மூடி விடும் காண்
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7-
முதல் இரண்டு அடியாலே பதி விரதைகளான ஸ்த்ரீகள் மநோ விருத்தி –
பின் ஒன்றரை அடிகளால் செல்வச் சிறுமியர்களான கோபிகளின் மநோ விருத்தி –
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா –வாயிலே முலை இருக்க -பெருமாள் திரு மொழி
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்-ஆடிக் கொண்டு வருகின்ற உன்னை வேறொரு ஆபரணம் வேண்டாத படி
பத்மத்தை திரு நாபியில் யுடையவன் என்று எண்ணினேன்-2-2-10- -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -அன்றோ –
இவன் அழிந்து கிடந்த உலகத்தை திரு நாபி கமலத்தில் யுண்டாக்கி அருளினவன் அன்றோ
ஆகையால் நம்முடைய சத்தையும் தருகைக்காக வருகிறான் என்று இருந்தேன் -என்றுமாம்

————————————

2-3-
எம்பெருமானுடைய துவாதச திரு நாமங்களை அருளிச் செய்த -ரத்நா வலி அலங்காரம் -பால் அமைந்த பதிகம் –
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான்-போய் -மிகுதிக்கு வாசகம் -கூர் வேல் கொடும் தொழிலன் –
புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் மிகவும் நோக்கு யுடையவன் என்றவாறு –
ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -ஸஉ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
சுரி குழலார் -அராள குந்தள-வடமொழி /
குரவைக் கூத்து -ஒவ் ஒரு ஆய்ச்சியர் பக்கத்திலும் ஒவ் ஒரு கண்ணனாக தோன்றி ஆடும் ராஸ க்ரீடை
குரவை என்பது கூறுங்காலைச் செய்வதோர் செய்த காமமும் விறலும் எய்த உரைக்கும் இயல்பிற்று என்ப –
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை –
குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கை கோத்து அந்நிலைக்கு ஒட்ப நின்றாடாலாகும்-
குரவை -கை கோத்து ஆடல் -சாமான்யமாக தமிழன்
குற்றமே அன்றே -2-3-7–பாட பேதம் அந்தாதித் தொடைக்குப் பொருந்தாது -குற்றமே என்னே -சரியான பாடம்
கண்ணைக் குளிரக் கலந்து 2-3-11-சஷூஸ் ப்ரீதி-வகை -கடி கமழ் பூங்குழலார்கள் கண் குளிர்ச்சி யடைய
உன் திருமேனி முழுதும் பொருத்தப் பார்த்து -என்றபடி -அவர்களுக்கு முற்றூட்டாக்க போக்யமானவனே
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய்-2-3-12–இவை ஆணாய்-அத்யாபக பாடம் –
பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –
செய்யுள் அந்தாதி சொல் தொடர் நிலை -இந்த பதிகம் –

——————————-

2-4-
விளையாடு புழுதி -வினைத் தொகை -விளையாடின புழுதி -என்று விரிக்க -உண்ட இளைப்பு போலே
புளிப் பழம்-எண்ணெயைப் போக்குவதாக புளிப்புச் சுவையுடையதாய் இருக்கும் ஒரு வகைப் பழம் -சீயக்காயைக் காட்டும் என்றும் சொல்வர்
எண்ணெய் -எள் + நெய்
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்-என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடையாது என்பதைக் காட்டும் எதிர் மறை இலக்கணை
கஞ்சன் புணர்ப்பினில் வந்த -புணர்ப்பு -இணைப்பு -உடல் -கூடல் தந்திரம் -மாயம் -நிகண்டு
அப்பம் -அபூவம்-என்ற வடமொழி சிதைவு –
பூணித் தொழுவினில் –பூணி -பசு -பூணி பேணும் ஆயனாகி -என்பரே-

———————————–

2-5-
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட-பொதுக்கோ-2-5-4- -விரைவாக சடக்கென -பிதுக்கென்று புறப்பட்டான் சொல் வழக்கு போலே
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன்-முள்ளை முள்ளால் களைவது போலே
ஒரு அசுரனை அசுரனைக் கொண்டே களைந்தான் -கன்று குணிலாக கனி உதிர்த்த மாயவன் -என்பரே மேலும் –

——————————-

2-6-
வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி–வேலிக் கால்களில் கோலை வெட்டி வில்லாகச் செய்து நாண் ஏற்றி என்றவாறு –
வில் ஏந்தி அத்யாபகர் பாடம் -அத்தை விளையாட்டு வில்லாக கையிலே என்திக் கொண்டு என்று கொள்ளலாம்
வேலை அடைத்தார்க்கு கோல் கொண்டு வா -வேலா -என்கிற வடசொல் -வேலை -கடல் கரை -லக்ஷணையால் இங்கு கடலை சொல்லும்
வையம் -பொருள்கள் வைக்கப்படும் இடம் -என்று காரணப் பெயர்

———————————–
2-7-
உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்-உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே –பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி –
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி கச்சு -கஞ்சுகம் வடசொல்லின் சிதைவு
காம்பு துகில்-கரை கட்டின பட்டு சேலை –
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே–மேக கன்று -இல் பொருள் உவமை
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்-2-7-5-எப்பொழுது குழந்தை பிறந்து
வெண்ணெய் விழுங்கப் போகிறது என்று இருந்த அடியேன் –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸுந்தர்யத்தில் ஈடுபட்டு அடியேன் —
அடித்த பின்பு அனுதாபம் கொண்டு அடியேன் என்கிறாள் ஆகவுமாம்
குடக்கூத்து-11-ஆடல் வகைகளில் ஓன்று என்றும் -6 -ஆடல் வகைகளில் ஓன்று என்றும் சொல்வர் –
குடத்தாடல் குன்று எடுத்ததோனாடல் அதனுக் கடைகுப வைந்துறப் பாய்ந்து -அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்-உம்மைத் தொகை -எதிர்த்து தழுவியதாய் தலை கொள்ளவும் வல்லாய் என்றபடி –
அண்டத்து அமரர்கள் சூழ-2-7-9–அண்டம் -பரம பதம் -இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொள்மின் -என்பரே –
கரு முகை -சிறு செண்பகப்பூ
உரை செய்த இம்மாலை-2-7-10–பாலாவின் பால் இறந்த கால வினையால் அணையும் பெயர்-
இரண்டாம் வேற்றுமைத் தொகை -உரை செய்தவற்றை -பட்டர் பிரான் அருளிச் செய்த இம்மாலை –

————————————————
2-8-
முப்போதும் வானவர் ஏத்தும்-2-8-3-இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப் போதும் –
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்-நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே-2-8-5-
திவ்யாத்மா ஸ்வரூபம் ஸ்வயம் பிரகாசமாய் ஞான மாயமாய் இருப்பதால் -ஞானச் சுடரே -என்கிறார்
எல்லாம் போகாது -ஒருமை பன்மை மயக்கம்
கஞ்சன் கறுக்கொண்டு-2-8-6-கறுப்புக் கொண்டு -கருப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள் -கோபம் கொண்டு -என்றபடி
பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்-2-8-7-பேய்ச்சி முலை யுண்ட பின்னை
இப்பிள்ளையை பேசுவது அஞ்சுவனே போலே
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 8- துர்க்கை -ருத்ரன் -சாம்பல் பூசி
எலுமிச்சை மாலை அணிந்து -கபாலம் கொண்டு இராப்பிச்சைக்காரர் என்றுமாம்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9-இன்றும் குழந்தைகளுக்கு
விளக்கு ஏற்று த்ருஷ்ட்டி சுத்திப் போடும் வழக்கம் உண்டே
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2 8-10 –ஓர் அடிக்கே இத்துணை மஹிமை -என்றால்
இப்பதிகம் முழுவதுக்கும் உள்ள பலன் வாசா மகோசரமாகுமே
ஒவ் ஒரு பாட்டிலும் கடை பாதத்தில் உள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ –
பக்தர்களுடைய பாபங்கள் எல்லாம் தீரும் என்றுமாம் –

———————————–
2-9-
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 -தன் நம்பி நம்பியும்
இங்கு வளர்ந்தது அவன் இவை செய்வது அறியான் போலே
வருக வருக வருக -2-9-2–விரைவுப் பொருளில் மும்முறை வந்த அடுக்கு
காகுத்தன் -காகுஸ்தன் -ககுத்-முசுப்பு – -இந்திரனுடைய முசுப்பு மேல் ஏறி யுத்தம் -ஸ்தன்-அதில் இருப்பவன்
ஒரு பொருள் மேல் பல பேர் வரில் இறுதி ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி-நன்னூலின் படியே
இப்பாட்டில்-2-9-4- -கொண்டல் வண்ணன் -கோயில் பிள்ளை -திரு நாரணன் -கண்ணன் ஒரு பொருளே
என்று தெளிய நின்றதனால் பெயர் தோறும் போதராய் என்ற வினை சேரும் –
போதரு -போதர்-2-9-6–என்று குறைந்து உள்ளது -போ -என்னும் வினைப் பகுதி -தா -என்னும் துணை வினையைக்
கொள்ளும் போது வருதல் என்ற பொருளைக் காட்டும் என்பர் –
போதந்து -என்கிற இது- போந்து -என்று மருவி -வந்து என்னும் பொருளைத் தரும் –
கோது குலம் -கௌ தூஹலம் -வடசொல்லின் விகாரம் -எல்லாருடைய கௌதூஹலத்தையும் தன் மேல் உடைய –
எல்லாராலும் விரும்பத் தக்க கல்யாண குணங்களை யுடையவன் -என்ற படி
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்-2-9-7- -ஒவ் ஒரு திருவோணத்துக்கும் செய்ய சக்தி இல்லாமையால்
ஒரு திரு வோனத்துக்கு ஸம்வத்ஸத்ரம் முழுவதுக்கும் சேர்த்து -நோன்புக்கு உறுப்பாக /அக்காரம்-கருப்புக்கட்டி -திரட்டுப் பால் என்னவுமாம்
இதுவும் ஒன்றே என்று சொல்லாமல் இவையும் சிலவே பன்மை -நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் -அவன் தீமை செய்யும் திறமும் –
நான் வந்து முறைப்படும் முறைமையும் எல்லாம் சால அழகியவாய் இருக்கின்றன -என்ற கருத்தைக் காட்டுமே –
தொழுத்தைமார்-2-9-8- -அடிமைப் பெண்கள் -இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாய் இருக்கும்
ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையும் உயிரையும் எழுதிக் கொடுத்து விட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளை பொறுக்க ஒண்ணாது என்று கருத்து
இணை அடி என் தலை மேலனவே-2-9-11–மேலவே-பாட பேதம் சிறக்காது –
விஷ்ணு சித்தர் -பனிக் கடலைப் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ -என்றும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்றும் அருளிச் செய்வார் மேலும்
குனிக்க வல்லார் -மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை-படியே கூத்தாட வல்லவர்கள் –

———————————

2-10-
இன்று முற்றும்-2-10-1- -முற்றுதும் -என்பதன் குறைச் சொல் -தன்மைப் பன்மை வினை முற்று –
உயிரை இழந்து கொண்டே இருக்கிறோம் -என்றவாறு
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த-2-10-2–உய்ய உலகு படைத்துண்ட மணி வயிற்றானாய் -பராத்பரனாய் இருந்து வைத்தே
கர்ம வஸ்யரைப் போலே பிறந்தது மட்டும் அல்லாமல் இப்படி இடைப்பெண்களுடன் இட்டீடு கொண்டு
விளையாடவும் பெறுவதே -இது என்ன ஸுசீல்யம் என்று பலரும் புகழா நிற்பதைக் காட்டும்
பைந்தலை மேல் எழப் பாய்ந்திட -2-10-3- -பைம்பொன் -பசுமை +பொன் போலே பிரிக்கக் கூடாது –
பய் -மெத்தெனவு -அழகு -பாம்பின் படம் -பல பொருள்களைக் குறிக்கும் தனிச் சொல்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7—தனது திருவடியின் மென்மையைப் பாராமல் காடு மோடுகளை அளந்து அருளின
ஆயாசம் தீர நாங்கள் அவற்றை பிடிக்கிறோம் என்றால் அதற்கு இசைந்து திருவடிகளைத் தந்து அருளுதல் ஆகாதோ
தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை -2-10-8—சாப விமோசனம் பெற்று -நற்கதியை
எதிர்பார்த்து இருப்பதால் வாழும் -சிறப்பித்து அருளிச் செய்கிறார்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீ வராஹ திரு வவதாரம் எடுத்து அருளியமை பற்றியே இந்த கல்பத்துக்கு இந்த பெயர் ஆயிற்று –
மங்கை நல்லார்கள்-2-10-10-நல் மங்கைமார்கள் -கண்ணன் மேல் உள்ள ப்ரேமத்தால்

—————————————–
3-1-
வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே–3-1-1-துஞ்ச-தூங்க -பொருளில் இருந்தாலும்
இங்கே -மாண்டு போம் படி -தீர்க்க நித்திரை அன்றோ
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம்
செய்து வைத்த-3-1-2-ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த ஏழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே –பாசுரத்தோடு ஒப்புமை
வேற்று உருவம் செய்து வைப்பதாவது -கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய்
வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்ற வா நான்காய் என் செய்கேன் என் செய்கேனோ -என்றபடி பண்ணுகை –
பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்-3-1-3-இவன் என் பிள்ளை அன்று என்று நான் ஆணை இட்டுச் சொன்னாலும்
மத்தியஸ்தர் கேளார் -என்று கருத்துத் தோன்றும் -மகனே -ஏவகாரம்-பிரிநிலை
கொய்யார் பூந்துகில்-3-1-4- -கொய்தல் நிறைந்த அழகிய புடவைகள் -கொய்சகம் – கொசுவம் உலக வழக்கு
பற்பல பேசுவ -3-1-4—பலவின்பால் படர்க்கை வினை முற்று -பெயர் எச்சப் பொருள் தந்து நிற்றல் -பிறர் பேசுகின்ற என்ற பொருள் –
வினை முற்றே வினை எச்சம் ஆகிலும் குறிப்பும் உற்றீர் எச்சம் ஆகலும் உளவே -என்ற சூத்திரத்தின் படியே –
ஆகலும் -எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச உம்மையே நோக்குக –
கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்-3-1-6-கண் என்று உபமேயத்தை சொல்லாமல் உபமானச் சொல்லால்
லக்ஷணையால்-உருவக உயர்வு நவிற்சி அணி-வடமொழி -ரூபக அதிசய யுக்தி அலங்காரம் –
ஒருத்திக்கு -உருபு மயக்கும் -ஒருத்தியின் மேல் என்றபடி –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3 1-8 -நந்தனுக்கு காளாய் என்றும் ஆளாய் என்றும்-
விபரீத லக்ஷணை –அவரால் நியமிக்கப் படாமல் அன்றோ நீ இத்தீமைகளை செய்து என்னை பழிக்கும் படி-என்றவாறு
கேளார் ஆயர் குலத்தவர் -3-1-8—மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -பெரிய திருமொழி -10-7-1-அலர் தூற்றுதலை கேட்டால்
சஹியார்கள் -அவர்கள் கண் வட்டத்தில் வாழ்ந்து இருப்பது அரிது காண் என்கிறாள்
உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்-2-1-10-உரப்ப-சிஷிக்க -ஊனமுடையன செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்ப கில்லேன் -என்பர் திருமங்கை ஆழ்வாரும்
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்-3-1-11-இதுவரை தந்த நான் இனி அஞ்சுவேன் –
தருவ-எதிர் கால வினை முற்று -வழுவு அமைதி இலக்கணப்படி தந்தேன் என்ற இறந்த காலப் பொருளில் வந்தது
மட்டும் இல்லாமல் -தந்த நாம் அம்மம் தாரேன் -என்று பெயர் எச்சப் பொருளையும் காட்டும் –
ஆகவே இவ் வினை முற்று -முற்று எச்சம் என்றற்பாற்று-

———————————

3-2-
கன் மணி நின்றதிர் கானத ரிடைக் கன்றின் பின்னே-3-2-3-கல் -லக்ஷணையால் மலையை குறிக்கும் –
பிரதி த்வனி -அதிர்தலை சொன்னவாறு-
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 – எத்தனை தீம்புகள் செய்து பழி வர விட்டான் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்குமே போலே –
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -என்றவள் தானே இப்பொழுது பிரிவாற்றாமையால்
இவ்வாறு அருளிச் செய்கிறாள் பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்-3-2-8-உன்னை என் மகனே என்பர் நின்றோர் –
என்பதையே கொண்டு இவ்வாறு அருளிச் செய்கிறாள்
குடையும் செருப்பும் கொடாதே-3-2-9-மேல் திரு மொழியில் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே
போனாய் மாலே -3-3-4—என்பதாலே -இங்கு கொடாதே-என்பதற்கு -அவன் வேண்டா என்று வெறுக்கச் செய்தேயும்
பலாத்காரமாக கட்டாயப்படுத்தி கொடாமல் என்று விரித்து பொருள் கொள்ள வேண்டும்
என்றும் எனக்கு இனியானை-3-2-10–ஆணாட விட்டிட்டு இருக்குமே –

————————————-

3-3-
சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ-3-3-1-திரியை ஏரியாமே காதுக்கு இடுவன்-என்றபடி
இரண்டு காதுகளிலும் அவள் அத்திரியை இட்டு அனுப்ப அவன் காட்டிலே ஒரு காதில் திரியை களைந்து
செங்காந்தள் பூவை அணிந்து கொண்டு வந்தமை அறிகை –
கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்-3-3-2-கன்னி ஸ்திரம் என்றபடி
கன்னி -பெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே-என்றான் மண்டல புருஷன்
வாழ்வு உகந்து உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்-3-3-2-ஸ்வ ப்ரயோஜனத்தை கணிசித்தேனே ஒழிய
உன் பிரயோஜனத்தை விரும்பிற்றிலேனே-என்று உள் வெதும்பி அருளிச் செய்கிறாள் –
உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 -சிவக்கப் பெற்றாய் என்றபடி –
சினை வினை சினை யொடும் முதலொடும் செறியும் -சூத்ரம்
சிறுப் பத்திரமும்-3-3-5-சிறிய கத்தி -பத்திரம் இலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம் -நிகண்டு –
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த அசுரர் தம்மை-3-3-7-ஒருவனை -பால் வழுவமைதி -அசுரன் தன்னை -பாட பேதம் சிறந்ததே –
உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூலார்
ஐயர் இவர் அல்லால் நீராம் இது செய்தார் -ஐயர் நீராம் ஒருமைப்பால் பன்மைப் பாலாக –
தீரா வெகுளியளாய்-இதற்க்கு ஆதி கோபம் -என்றும் உண்டே
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்-3-3-9-முளையட்டுதல் -திருக் கல்யாண
அங்கமாக நவ தானியங்களைக் கொண்டு பாலிகையை சொன்னவாறு –

——————————

3-4
முதல் பாட்டு தாமான தன்மையில் ஆழ்வார் அருளிச் செய்கிறார் -கலாபம் தழையே தொங்கல் என்று இவை
கலாபப் பீலியில் கட்டிய கவிகை -நிகண்டு -இங்கு அவாந்தர பேதம் -தட்டும் தாம்பாளமும் போலே
பீலி -விசிறிக்கும் திருச் சின்னத்துக்கு பேர்
அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 4-3 -கொண்டு -என்றும் பாட பேதம் –
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி -திருவாய் மொழி போலே
இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 -என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் என்றபடி –
அடி உடைமை சொல்லும் போது –ஒரு கோத்ர சம்பந்தம் சொல்ல வேணும் இறே-மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்-3-4-5-
கோத்ர சம்பந்தம் பர்வத சம்பந்தம் சிலேடை
வளை கோல் வீசா -3-4-6- வீச -பாட பேதம் பொருந்தாது
சாலப் பல் நிரைப் பின்னே-3-4-7-சால உறு தவ நனி கூர் கழி மிகல்-நன்னூல் -மிகுதியைச் சொல்லும்
உரிச் சொல்லுடன் அணைந்த பல் -பசுக்கூட்டங்களின் எண்ணிறந்தமை காட்டும் –
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்-3-4-8-இல் -என்று உள்ளாய் -அயம் என்ப நீர் தடாகம் -நிகண்டுவின் படி ஜலமாய் –
திருப் பவளத்துக்கு உட்பட்ட ரசம் -சிந்தூரப்பொடியை அம்ருத ரசத்தினால் நனைத்து குழைத்து திரு நாமம் சாத்தி -என்றபடி
அன்றிக்கே இலயம் தன்னால் வரு மாயப்பிள்ளை -என்று கொண்டு –
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இரு பேர் என்ப -நிகண்டு -கூத்தாடிக் கொண்டு வரும் என்றபொருளில் –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை-3-4-9-வனம் -அழகு -என்றும் வன மல்லிகை -காட்டு மல்லிகை –
மௌவல் -மல்லிகைக்கும் முல்லைக்கும் மாலதிக்கும் பெயர் –

——————————–

3-5-
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை -என்பதால் சோற்றுப் பருப்பதம் -3-5-1-சோறாகிய பர்வதம்
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 – ஸ்வாபதேசம் –வட்டம் -தனது வர்ணாஸ்ரம
விருத்தியில் விசாலமான ஞானத்தையும் -அதனை உபதேசித்து அருளின ஆச்சார்யர் பக்கல் க்ருதஞ்ஞதையும்
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையான் ஒருவனை ஆச்சார்யரானவர் வாசுதேவன் வலையுளே-என்றபடி
எம்பெருமான் வலையுள்ளே அகப்படுத்தி அவனுக்கு சகல வேத ஸாஸ்த்ர தாத்பர்யமான பாலோடு அமுதன்ன
திருவாயமொழியை உரைத்து வளர்க்கும் தன்மையைச் சொல்லிற்று –
இப்படிப்பட்ட மஹானுபவர்கள் உறையும் இடம் அம்மலையின் சிறப்பு என்றவாறு
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன்-3-5-2-விபரீத லக்ஷணை -அவன் நினைவாலே யாகவுமாம்
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து  பொரும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே -3 -5 2- ஸ்வாபதேசம் -தன்னைப் பற்றிக் கிடக்கும்
சிஷ்யனுடைய விரஹத்தைப் பொறுக்க மாட்டாத ஆச்சார்யனானவன் -அச் சிஷ்யனை தொடர்ந்து முடிப்பதாக வருகின்ற
வாசனா ரூப கர்மங்களுக்கு அஞ்சி அவனைத் தன் திருவடிகளுக்கு அந்தரங்கன் ஆக்கிக் கொண்டு
அக்கர்ம வாசனையை நீக்கி முடிக்கும் தன்மையைச் சொல்லிற்று ஆகிறது
தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே – 3-5 3- ஸ்வாபதேசம் -பெரும் கொடையாளனாய் இருக்கும் ஒரு ஆச்சார்யர்
தன்னை சரணமாகப் பற்றி இருக்கும் சிஷ்யர்கள் விஷயாந்தர பரர்களாக அதிசங்கித்து
அத்தை விலக்க அவர்களுக்கு பிரணவத்தின் பொருளை பறக்க உபதேசித்து அருளுகிற படியைச் சொல்லுகிறது
பிரணவத்தை சிலையாக உருவகம் -சேஷ பூத ஞானம் பிறக்கவே விஷயாந்தர பிரவணம் ஒழியுமே
கானக்களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-5 – ஸ்வாபதேசம்-சம்சாரம் ஆகிற மருகாந்த்ரத்திலே களித்துத் திரிகிற ஆத்மா –
தனது மமகாராம் அழியப் பெற்று -மத மாத்சர்யங்களும் மழுங்கப் பெற்று -சத்வம் தலை எடுத்து அஞ்சலி பண்ணிக் கொண்டு ப்ரக்ருதி ஆத்ம
விவேகம் முதலிய ஞானங்களை எல்லாம் பெற விரும்பி அஞ்சலி ஹஸ்தனாய் இருக்கும் படியை குறிக்கும் -இது மகாரார்த்தம்
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6- -குப்பாயம் -சட்டை –
மெய்ப்பை-சஞ்சளி -கஞ்சுகம் -வாரணம் -குப்பாயம் அங்கி சட்டை யாகும் -நிகண்டு -இங்கு சந்தர்ப்பம் நோக்கி முத்துச் சட்டை
அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும்
கொற்றக் குடையே -3 5-7 – குழந்தைகளை ஓக்கலையில் வைத்து கதை சொல்லி தூங்கப் பண்ணும் மாதாவை போலே -இங்கு ஸ்வாப தேசம் –
கபடச் செயல்களுக்கு ஆகரமான இந்திரியங்களின் திறலை வென்ற பாகவதர்கள் ஞான அனுஷ்டானங்களை தமது கைக்கு அடங்கின
சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு ஞானம் வளரச் செய்யும் மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாகும்
தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலை வாய்ச்சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே -3 5-8 – ஸ்வாப தேசம்-காம க்ரோதம் மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்
சம்சாரிகள் நாத முனிகள் போல்வாருடைய திரு ஓலக்கத்திலே புகுந்து வருத்தம் தோற்ற நிற்க -அவர்கள் பரம காருண்யத்தால் உஜ்ஜீவன
உபாயம் தெளிவாக உபதேசித்து அருள அதனால் திருந்து உலக உணர்வுகளில் உறக்கமுற்று பேரின்பம் நுகருமாற்றை பெறுவித்தவாறாகும்
தம்முடைக் குட்டங்களைக் கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- -ஸ்வாப தேசம்-
சதாச்சார்யர்கள் தங்கள் அபிமானித்த சிஷ்யர்களை அன்புடன் அணைத்துக் கொண்டு நல் வழி காட்டுகைக்காக வேத சாகைகளை
ஓதுவித்து அவற்றிலே புத்தி சஞ்சாரம் பண்ணிக் கொண்டு இருக்கும் படி ஞான உபதேசம் பண்ணும் படியை சொல்லிற்றாம்
முசு -குரங்குகளின் ஒரு வகைச்சாத்தி -காருகம் யூகம் கருங்குரங்காகும்–ஓரியும் கலையும் கடுவனும் முசுவே -நிகண்டு
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல-3-5-10-ஸ்வாப தேசம்-வேதாந்த நிஷ்டர்களான
ஆச்சார்யர்கள் தம் அடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரசமான அர்த்தங்களை உபதேசித்து தங்கள் சுத்த ஸ்வரூபர்களாய் இருக்கும் படி சொல்லிற்று

———————————————

3-6-
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள்-3-6-1-
உப்புக் கடல் -கருப்புக் கடல் -கள்ளுக் கடல் -நெய்க் கடல் -தயிர்க் கடல் -பாற் கடல் -நீர் கடல் –
ஜம்பூ த்வீபம் -ப்லஷ த்வீபம் – சால்மல த்வீபம் -குச த்வீபம் -கிரௌஞ்ச த்வீபம் -சாக த்வீபம் -புஷ்கர த்வீபம்
ஜம்பூ த்வீபம் நடுவில் உள்ளது -அதன் நடுவில் மேரு பொன் மலை உள்ளது -அதை சுற்றி உள்ள இளாவ்ருத வருஷத்தில்
ஸ்ருஷ்டிக்கப்பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு மரங்கள் –
அவற்றில் ஓன்று நாவல் மரம் -ஜம்பூ – நாவல் – அதனாலே இதற்க்கு பெயர் -இத்தீவில் நவம கண்டம் பாரத வர்ஷத்தில் தான்
தான் கர்ம அனுஷ்டானம் -மற்ற தீவுகள் பலம் அனுபவிக்க தான் -அதனால் சிறப்பு
இட அணரை இடத்தோளோடு சாய்த்து-3-6-2-அணர் -தாடி -ஆகு பெயரால் மோவாயைக் குறிக்கும்
சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3 6-3-இங்கு சென்னி -நெற்றியை சொன்னவாறு –
மத்தகம் இலாடம் -முண்டகம் -நுதல் -குலம் -நெற்றி -பாலம் -நிகண்டு
கானகம் படி-3-6-4- -காட்டுக்குள்ளே இயற்கையாக-பிருந்தாவனத்தில் –காடு நிலத்திலே என்றுமாம்
வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து -3-6-7-குழலூதுவது ப்ருந்தாவனமாய் இருக்க திருவாய்ப்பாடியில் புகுந்தது –
கீழ்க் கச்சியில் பேர் அருளாளன் கருட சேவை திருநாள் கூட்டத்து திரளால் மேல் கச்சி அளவும் நிற்குமா போலே –
பஞ்ச லக்ஷம் கோபிமார்கள் அணுக்கர்கள் சூழ்ந்த இடம் அன்றோ
கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே -3 6-8 -கவிழ்ந்து இறங்கி-ஒரு பொருள் பன் மொழி -நன்றாகத் தொங்க விட்டுக் கொண்டு என்றபடி
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி  கோவிந்தனுடைய-3-6-1-மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ போலே

————————————–

3-7-
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கம்பர்
வராஹ வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக வாதரம் செய்வன் -திருவரங்கத்து மாலை
பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுரு முலையினாள்-சீவக சிந்தாமணி
கண்ணனுக்கே ஆமது காமம் -அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் ராமானுஜன் இந்த மண் மிசையே -அமுதனார்
சம்பந்த ஞான பிரஞ்ஞா அவஸ்தை -தோழி-பிராணவார்த்தம் / உபாய அத்யாவசிய பிரஞ்ஞா அவஸ்தை தாயார் -நமஸார்த்தம் /
பேற்றுக்கு த்வரை உந்த தாய் -நாராயணார்த்தம்
சம்பந்த உபாய பலன்களில்-உணர்த்து துணிவு பதற்றம் -ஆகிற பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் -என்று பெயர் -நாயனார்
ஸ்வாபதேசம் -சரீரம் பிரகிருதி சம்பந்தத்தால் சுத்த சத்வமாக பெறவில்லை -அவனுடைய ஸ்வரூபாதிகளை அடைவு படச் சொல்ல வல்லமை இல்லை –
மடிதற்றுத் தான் முந்துறும் -என்ற திருக்குறள் படி ஆடையை அரையில் இறுக உடுத்துக் கொண்டு முந்துற்றுக் கிளம்பும் முயற்சி இல்லை
ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானுக்கு அல்லாது செல்லாமை இப்பாட்டில் வெளியாம் –
3-7-2-
எம்பெருமானை வசப்படுத்த ஸ்தோத்ரங்களையும் பிரணாமாதிகளும் பூர்ணமாக பெறாது இருக்கும் இளைமையாய் இருக்கச் செய்தேயும்
எம்பெருமானை ஸம்ஸ்லேஷிக்கப் பெற்றுக் கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் -என்றால் போலே ஸ்ரீ ஸூக் திகளால்
பகவத் விஷயத்தில் உள்ள அபி நிவேசத்தை வெளிப்படுத்திய ஆழ்வார்படியை அன்பர் கூறுதல் –
3-7-3-
சிற்றில் -ஹேயமான தேகத்தையும் வாஸஸ் ஸ்தானமான வீடு முதலியவற்றையும் சொல்லும்
ஆழ்வார் ப்ராக்ருதத்தில் இருந்தும் விஷயாந்தரங்களில் நெஞ்சை செலுத்தாமல் எம்பெருமான் திவ்யாயுத அம்சமான பாகவதர்களையே
தியானித்து இருப்பர் என்கிறது
முலை -பக்தி -முற்றும் போந்தில -பரம பக்தி யாக பரிணமித்தது இல்லை என்றாலும் பகவத் விஷயத்தில்
இவ்வளவு அவகாஹம் வாய்ந்தது எங்கனே என்ற அதி சங்கையை சொன்னவாறு
பாலிகை -3-7-4–என்னாமல் பாலகன் என்றது -உகப்பினாலான பால் வழுவமைதி –
உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல்
3-7-5-
ஸ்வா பதேசம் -பகவத் விஷயத்தில் பேரவாக் கொண்ட இவ்வாழ்வாரை பகவத் சந்நிதியில் சேர்த்தமையை அன்பார் கூறுவது இதன் ஸ்வா பதேசம்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து -இருந்தாலும் த்வரை மிக்கு பதறி நேராக எம்பெருமானைப் பற்ற
ஆழ்வார் பிரவ்ருத்தி சைலிகளைக் கண்ட அன்பார் இது பிரபன்ன சந்தானத்துக்கு ஸ்வரூப விருத்தம் என்று அறுதியிட்டு
பாகவத புருஷகார புரஸ் ஸரமாக இவரை அங்கு சேர்க்கலுற்ற படியை சொல்லிற்று
மங்கைமீர் –இப்படி தாய் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெறாத பூர்த்தி உள்ளவர்களே
பாடகம் பட்டம் -3-7-5-ஸ்வா பதேசம்-சேஷத்வ ஞானாதிகளாகிய ஆத்ம பாஷாணங்கள் -ஆச்சார்ய நிஷ்டை மாத்திரத்திலே
பர்யாப்தி பிறவாமல் உகந்து அருளின தேசங்களுக்கு சென்று ஆழ்ந்தமை சொல்லிற்று
3-7-7-ஸ்வாபதேசம் க்ரம பிராப்தி பற்றி பதறி பகவத் சந்நிதி போய்ப் புகுந்து அவன் திரு நாமங்களை அனுசந்தித்து பிச்சேறின படியை அன்பார் கூறுதல்
3-7-8-காறை பூணும் -பகவத் பிரணாமம் ஆகிற ஆத்ம அலங்காரம் / கண்ணாடி காணும் -ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பண்ணும் படி
வளை குலுக்கும் -கலை வளை அஹம் மமக்ருதிகள் -சாத்விக அஹங்காரம் உடைமை /கூறை யுடுக்கும் -பகவத் விஷயத்தில் பிரவ்ருத்தி
அயர்க்கும் -இவை சாதனா அனுஷ்டானமாக தலைக் கட்டிவிடுமோ என்ற கலக்கம் /கொவ்வைச் செவ்வாய் திருத்தும் -வாசிக கைங்கர்யங்கள் திருந்தின படி
ஓவாதே நமோ நாரணா என்பவள்
3-7-9-அந்தணர் மாடு -வேதம் ஓதுவித்து ஆழ்வாரை நம் பக்கல் இருத்துவோம் என்றால் இவர் பர்யாப்தர் ஆகாமல் பகவத் விஷயம்
அளவும் போய் அந்வயிக்க வேணும் என்று பதறுவதனால் இவரை அங்கெ சேர்த்து விட வேணும் என்று அறுதியிட்ட அன்பர்கள் பாசுரம்

—————————————

3-8-
காவியங் கண்ணி என்னில் கடி மலர்ப் பாவை ஒப்பாள் -புகழால் வளர்த்தேன்-3-8-4- -புகழ் உண்டாம்படி வளர்த்தேன் என்றவாறு
மாமியார் சீராட்டுதலை நான்காம் பாட்டில் சங்கித்து -மாமனார் சீராட்டுதலை ஐந்தாம் பாட்டில் சங்கிக்கிறார் –
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம் அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய மறையார் மன்றல்
எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப் புலமையோர் புணர்ப்புப் பொருண்மை என்மனார் புலமையோரே -விவாஹம் எட்டு வகை
யாழோர் கூட்டம் -காந்தர்வ விவாஹம் -தனி இடத்தில் இருவரும் கூடுகை -ஸாஸ்த்ர மரியாதை இல்லாமல் தனக்கு வேண்டியபடி செய்தல்-3-8-6-
பண்டப் பழிப்புகள் சொல்லி-3-8-7–பண்டம் பதார்த்தங்களில் குறை சொல்லி -உபமேய அர்த்தம் தொக்கி நிற்கிறது –
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ-3-8-8-அந்தோ -மகிழ்ச்சி -இரக்கம் -துன்பம்-நிகண்டு – -இங்கு இரக்கத்தால்

————————————

3-9-
பாடிப் பற-பாசுரங்கள் தோறும் /-உந்தி பற இறுதிப் பாட்டில் / உந்தி பேதையார் விரும்பியாடல் -உந்தியே மகளிர் கூடி விளையாடல் -நிகண்டு
உந்தி பற என்பது பல்வரிக் கூத்துள் ஓன்று -சினத்துப் பிழூக்கை -வெண்பா சிலப்பதிகாரத்தில் உண்டு
கொங்கை குலுங்க நின்று உந்தி பற -மாணிக்கவாசகர் -திருவாசகம் –
சோபனம் அடித்தல் கும்மி அடித்தல் போன்ற லீலா ரஸ விளையாட்டு -பறவைகளைப் போலே ஆகாயத்தில் குதித்து பறந்து விளையாடுவது –
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட-என் நாதன் வன்மையை பாடிப் பற-3-9-1-வேத மயன்-பெயர் யஜுர் சாமமுமாம் பறந்தே தமது
அடியார்களுக்குள்ள பாவங்கள் பாற்றி யருள் சுரந்தே அளிக்கும் அரங்கன் தம் ஊர்திச் சுவணனுக்கே -திருவரங்கத்து மாலை -88-
தாடகை -ஸூ கேது யக்ஷன் மகள் -ஸூந்தன் என்பவன் மனைவி -அகஸ்திய முனி சாபத்தால் இராக்கதத் தன்மை அடைந்தாள்
முது பெண்-3-9-2- -தீமை செய்வதில் பழையவள்
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு-3-9-3- விதர்ப்ப தேசம் -குண்டின பட்டணம் -பீஷ்மகன் அரசனுக்கு-ருக்மன் முதலிய -ஐந்து பிள்ளைகள் –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி – உருப்பணி நங்கை தன்னை மீட்ப்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உறுப்பினை –மேலே -4- 3-திருமொழியில் அருளிச் செய்கிறார்
நாலூர் பிள்ளை நிர்வாகம் -மாற்றுத் தாய் ஸூ மித்ரா தேவி-மற்றைத்தாய்-மாறு ஒப்பாய் பெற்ற தாயும் போலி/
கூற்றுத் தாய் கைகேயி-கொடுமையில் எமனை ஒப்பாள்
திருவாய்மொழிப் பிள்ளை நிர்வாகம் -மாற்றுத் தாய் கைகேயி–பெருமாள் கௌசல்யார் தேவி நினைவாலே –
பரதன் நினைவுக்கு மேல் பொருந்தாமையாலும் மாற்றாம் தாய் —
கூற்றுத் தாய் ஸூ மித்ரா தேவி -கூறு பட்ட ஹவிஸ் ஸ்வீ கரித்ததால் –
ஒரு தாய் இருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில் ஒரு தாய் சொலச் சென்ற தென்னரங்கா -திருவரங்கத்து மாலை
காளியன் ஸ்தாவர ஜங்கமங்களையும் அழிக்கப் புகுந்தவனாகையாலே மீண்டும் மீண்டும்-6/7-பாசுரங்களில் அந்த விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்
பிரம்மா புத்திரர் -புலஸ்திய முனிவர் குமாரர் விச்வரஸ் -இரண்டாம் மனைவி கேகேசி வயிற்றில் ராவண கும்ப கர்ணன் சூர்ப்பனகை விபீஷணன்
இவளை காலகை என்பவள் மக்கள் காலகேயர் -ஒருவன் வித்யுஜ்ஜிஹ்வன் என்பவனுக்கு கல்யாணம்
அவனை ராவணனே கொல்ல-சூர்பனகைக்கு ஜன ஸ்தானம் இடத்தில் தன் சித்தி பிள்ளை கரனையும் வைத்தான் –
தபோ வலிமையால் வேண்டிய வடிவு எடுக்கும் சக்தி கொண்டவள் –

——————————–

4-1-
தொல்லை வடிவு கொண்ட  மாயக் குழவி-4-1-4-சுருக்கிக் கொண்ட -என்றபடி -மேல் குழவி என்பதால் –
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1 8- படைக்கு கள்ளத் துணையாகி –
உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம்–என்று இருந்த அர்ஜுனனை போரில் மூட்டி –
குரக்கு வெல் கொடி -4-1-7—பெருமாளுக்கு பெரிய திருவடி த்வஜமானது போலே அர்ஜுனனுக்கு சிறிய திருவடி த்வஜமாயினான்-  
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை -4-1-8-மாயிரு ஞாயிறு பாரதப் போரில் மறைய
அங்கண் பாயிருள் நீ தந்தது என்ன கண் மாயம் -திருவரங்கத்து மலை-
ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –
இந்த சம்ச்லேஷத்தால் நரகாசுரன் பிறந்தான் —
அசமயத்தில் புணர்ந்து பிறந்த படியால் அஸூரத தன்மை பூண்டவன் ஆயினான் என்பர் –
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை-4-1-10-நுனியில் கதிர் வாங்கித் தழைத்து இருக்கும் படிக்கு குதிரை முகம் ஒப்புமை –
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணங்கும்

—————————————–

4-2-
தத் விஷயத்தைக் காட்டிலும் ததீய விஷயமே ப்ராப்யத்துக்கு எல்லை நிலம் என்று திருமலையை பஹு விதமாக அனுபவிக்கிறார் -இதில் –
கிளர் ஒளி இளமையில் நம்மாழ்வார் -முந்துற உரைக்கேன் -திருமொழியில் திருமங்கள் ஆழ்வார்களைப் போலே –
சிலம்பாறு -திரிவிக்ரமன் திருவடி சிலம்பில் இருந்து தோன்றியது -மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஓ என்று கேட்டு
குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையாலும் சிலம்பாறு -சிலம்பு -குன்றுக்கும் பெயர் –
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 2-2 –
புனத்தினை கிள்ளி புதுவவி காட்டுகிற குறவரும்-உன் பொன்னடி வாழ்க -துக்கச் சுழலை திருமொழி -என்று
மங்களா சாசனம் பண்ணும் படி இறே நிலத்தின் மிதி தான் இருப்பது
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் அஞ்ச அன்று ஒரு வாரணம் உயிர் உண்டவன்-4-2-5-ஆனை காத்து ஓர் ஆனை கொன்றவன் –
ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றவன் -அர்ஜுனன் -சிஸூ பாலன் /
ஒரு ராக்ஷஸனைக் காத்து ஒரு ராக்ஷஸனைக் கொன்றவன் -விபீஷணன் -ராவணன் /
ஒரு குரங்கைக் காத்து ஒரு குரங்கைக் கொன்றவன் -சுக்ரீவன் -வாலி /
ஒரு பெண்ணைக் காத்து ஒரு பெண்ணைக் கொன்றவன் -அஹல்யை தாடகை /
ஒரு அம்மானைக் காத்து ஒரு அம்மானைக் கொன்றவன் -கும்பர் கம்சன் /
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்ல சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8- திருப்பாண் ஆழ்வார் தம்பிரான்
போல்வாரை வண்டு -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை – பகவத் விஷயம் தவிர வேறே ஒன்றை விரும்பாத
ஷட் பத த்வய நிஷ்டர்கள் சிற்றம் சிறு காலையில் திரு நாமங்களை அனுசந்தித்திக் கொண்டு திருவடி பணிவதைச் சொல்லிற்று –
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 9-
சிந்தூரச் செம்பொடி போல் திரு மால் இரும் சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டன -என்றார் இறே இவர் திரு மகளாரும்
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-
திருப்பல்லாண்டு -மங்களா சாசனம் இவர் விரதம் -நாமும் அனுசந்திந்ததா கண்ணன் கழல் இணை பெறுவது திண்ணம் அன்றோ –

—————————–
4-3
தனிக் காளை -4-3-4– காளையே எருது பாலைக்கு அதிபன் நல் விளையோன் பெறலாம் -நிகண்டு
பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை-4-3-5-
நாழ்-குற்றம் -நான் என்று அகங்கரிக்கையும்-பொல்லாங்குக்கும் -நறு வட்டாணித் தனத்துக்கும் -பேர்
நாமா மிகவுடையோம் நாழ் -என்றும் -நாழால் அமர முயன்ற வல்லரக்கன் -என்றும் -அஃதே கொண்டு அன்னை நாழ் இவளோ என்னும் -என்றும் உண்டே –
தொல்லை மால் இரும் சோலை அதுவே -4-3-6-திரு அனந்த் ஆழ்வான்  திருமலை ஆழ்வாராய் வந்து நிற்கையாலே -அநாதியாய் கொண்டு -பழையதாய்
வாய்க் கோட்டம் -4-3-8—வாய்க் கோணல் -ந நமேயம் -என்றத்தைச் சொல்லுகிறது
அடி இறை என்று ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே -4 3-9 –
ஸ்ரீ பாத காணிக்கை -அடி யிறை -பாட பேதம் / ஓட்டரும் ஓட்டம் தரும் விகாரம்
நாலிரு மூர்த்தி தன்னை -4-3-10–அஷ்டாக்ஷர ஸ்வரூபி – நால் வேதக் கடல் அமுது -திரு மந்த்ரத்தை சொல்லி அவனைச் சொல்லும்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

—————————

4-4-
திருமங்கை ஆழ்வாரும் முந்துற உரைக்கேன் -மூவரில் முன் முதல்வன் -இரண்டு திருமொழிகளால் திருமாலிரும் சோலையை அனுபவித்து
எங்கள் எம்மிறை திருமொழியால் திருக் கோஷ்டியூரை அனுபவித்தால் போலே இவரும் இங்கு இதில் திருக் கோஷ்டியூரை அனுபவிக்கிறார் –
வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும் திண்ணை சூழ் திருக் கோட்டியூர்-4-4-3-மகர விரித்தல் செய்யுள் ஓசை நோக்கியது –
இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9- இரட்டிப்பு -பாகவதர்களைத் தனித் தனியே அனுசந்திக்கை –
காண்பது கிட்டே இருப்பது கூட போத யந்த பரஸ்பம் -ஆசைகள் பலவும் உண்டே –

———————–

4-5-
துணையும் சார்வுமாகுவார் போலே சுற்றத்தவர் பிறரும் அணையவந்த ஆக்கம் யுண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
அரவ தண்டத்தில்-4-5-3- -ஐந்தாம் வேற்றுமை உருபு -ஏழாம் வேற்றுமை உறுப்பு அல்ல -எம படர்களால் வரும் துன்பத்தின் நின்றும் என்றவாறு
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளே வாங்கி  வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆம் – 4-5-4-
பிரணவத்தை -முறை வழுவாமல் இறைஞ்சினால் களிப்பும் கவர்வும் அற்று பிறப்பி பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியாய் அடியார் குழாங்கள் உடன்  கூட பெறலாமே -ஓன்று இரண்டு மாத்திரை உச்சாரண பலம் அல்பம் அஸ்திரம் –
மூன்று மாத்திரை உச்சாரணமே மோக்ஷ பலம் -ஈஷதி கர்ம அதிகரணம் மேவுதீர்-சர்வாதிகாரம் -ஸ்த்ரீ ஸூத்ரர்களுக்கும் அதிகாரம் உண்டு
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி-4-5-6-அகன்று வினை எச்சம் பிரயோகிக்காமல் -அகற்றி -என்றது -தன் வினையில் வந்த பிறவினை –
சேவதக்குவார் போலப் புகுந்து-4-5-7-சே -அதக்குவார் போலே /
வானகத்து மன்றாடிகள் தாமே -4-5-7–வானகம் மன்றத்து ஆடிகள் -நித்ய ஸூரி சபையில் சஞ்சரிக்கப் பெறுவார்கள்
குறிப்பிடம்  கடந்து உய்யலுமாமே-4 4-8 -பாப பலன்களை அனுபவிப்பதற்கு என்று குறிக்கப் பட்ட -யமலோகம் -கடத்தல் -அங்குச் செல்லாது ஒழிகை –

——————————–

4-6-
நீங்கள் தேனித் திருமினோ -4-6-1-தேறித் திரிமினோ-அத்யாபக பாட பேதம் -மகிழ்ந்து இருங்கோள்-என்றவாறு –
நானுடை நாரணன்-4-6-4-என்னுடை என்ன வேண்டும் இடத்து -ஊனுடைச் சுவர் வைத்து —-நானுடைத் தவத்தால் -திருமங்கை ஆழ்வாரும் –
குழியில் வீழ்ந்து வழுக்காதே-4-6-7-குழி -நரகக் குழி –
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்-4-6-8-உப்பும் இல்லை பப்பும் இல்லை என்பாரைப் போலே-
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ-4-6-9-ஆனந்தம் தலை மண்டி தலைகீழாக ஆடுவது -மொய்ம் மா பூம் பொழில் பொய்கையில் போலே

——————————

4-7-
திருக் கண்டங்கடி நகர் -திருக் கண்டம் -திவ்ய தேசப் பெயர் -மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுதம் அளித்த அத்தா
எனக்கு உன் அடிப் போதில் புத்தமுதைக் கங்கை நரை சேரும் கண்டத்தாய் புண்டரீக மங்கைக்கு அரசே வழங்கு -ஐயங்கார் –
கமை உடை பெருமை கங்கையின் கரைமேல் -4-7-4-கமை -க்ஷமை-வடமொழி மருவி -கமை
பெருமை யுடை என்று கொண்டு ஷமிக்கையாகிற பெருமை
படைக்கலமுடைய-4-7-5- -படை கலம் யுடைய -திரு ஆபரணங்களையும் திரு ஆயுதங்களையும் யுடைய –

—————————–

4-8-
மைத்துனன் மார்  உரு மகத்து வீழாமே-4-8-3-மகம் யாகம் -நரமேத யாகம் -மநுஷ்யர்களை பலி-
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவன் -அன்றோ —
குருமுகமாய் காத்தான் -ஸ்ரீ கீதா உபநிஷத் உபதேச முகமாக –
பொரு முகமாய்-குவளையும் கமலமும் எம்பெருமான் திரு நிறத்தோடும் திரு முகத்தோடும் போர் செய்யப் புகுவது போலே அலரா நிற்கும்
கண்டகரைக் களைந்தானூர்–4-8-4–ரிஷிகளுக்கு முன்பு குடி இருந்த முள் போன்ற ஜனஸ்தான வாசிகள் -ராக்ஷஸர்கள்
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6- யாழ் இன் இசை என்றும் யாழின் இசை என்றும் –
ஆளம் வைக்கும் -ஆளத்தி வைக்கும் -அநஷர ரசம் -ஆலாபனை –
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு -4-8-7-
தழுவ முடியாத ஸ்தூல சந்தன மரங்கள்-சாத்துப் பிடி சமர்ப்பிக்கிறாள் திருக் காவேரி தாயார்-
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு  இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 8-10 –
தீதிலா ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்தில் இப் பத்தும் ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே -நம்மாழ்வார்

—————————

4-9-
திருமங்கை மலர் கண்ணும் -4-9-1-மலர்க் கண் பாடம் மறுக்கப்படும் -மலர் போன்ற கண் இல்லை -மலர்ந்த கண் என்றபடி
மலர் கண் வைத்த என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே   – 4-9 2-
இங்கும் பெரிய பெருமாளாது விகசிதமான திருக் கண்கள்
கருளுடைய பொழில் மருது-4-9-3- -கருள் -கருப்பு -கறுப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள் –
நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புந்த்ரர் சாபத்தால் மருத மரங்கள்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி-தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல் /
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்றாரை -பெரிய திரு மடல் /
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து-4-9-6-
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிட்ரும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -ஸ்ரீ வசன பூஷணம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் -கலியன்
தருமம் தவிர்ந்து பொறை கெட்டுச் சத்தியம் சாய்ந்து தயை தெருமந்து தன் பூசனை முழுதும் சிதையக் கலியே
பொருமந்த காலக் கடையினில் எம் பொன்னரங்கன் அல்லால் அருமந்த கல்கி என்றாரே அவை நிலையாக்குவரே -திருவரங்கத்து மாலை-
மெய்ந்நாவன்-4-9-11-பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்மையாளன் -கலியன்

————————

4-10
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10- 1- ஸ்ரீ வைகுண்டத்தையும் திருப் பாற் கடலையும்
விட்டு கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளினது இதற்காக அன்றோ

———————

5-1-
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1 1- அது கத்தினாலும் உறவானவர்கள் வருவதை ஸூசிப்பிக்குமே –
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் –5-1-2-புள்ளி மான் ஸ்தானத்தில் எம்பெருமான் -ஆழ்வாரையும் கொள்ளலாம் –
நெடுமையால் அளந்தாய் -சமத்கார அருளிச் செயல் /
அக்கோயின்மை -5-1-4—கைங்கர்யத்துக்கு உள்ளே கூறை உடுக்கையும் சோறு உண்கையும் -உண்ணும் சோறு இத்யாதி –
தாரக பதார்த்தம் -இதில் -போஷாக்கை பாக்ய பதார்த்தங்களும் அதுவும் மேலே பாசுரத்தில் –
தத்துறுதல் -5-1-7—தட்டுப்படுத்தல் -கிட்டுதல் -மாறுபாட்டைச் சொல்லிற்றாய் கிட்டுதல் தாத்பர்யம் என்றுமாம்
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இந்த மாறுபாடுகள் இருந்தாலே கிட்டுவோமே

———————–

5-2-
உலகமுண்ட பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் எப்பொழுதும் என்னை நீங்காது இடர் செய்யும் தீ வினைகாள் இனி நின்று நின்று தேங்காது
நீரும் அக்கானிடத்தே சென்று சேர்மின்களே -திருவரங்கத்து மாலை -102-இப்பதிகம் ஒட்டியே –
பட்டணம் -ராஜ தானி -பத்தனம் -வைத்த மா நிதி
தரணியின் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான் கருணை எனும் கடலாடித் திரு வினைக் கண்டதன் பின் திறணகர் எண்ணிய
சித்ரகுப்தன் தெரித்து வைத்த சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -தேசிக பிரபந்தமும் இத்தை ஒட்டியே
வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2 1- நித்ய வாசம் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -என்றும்
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயர்க்கு ஆள் பட்டார் பேர் -என்பதும் போலே –
காலிடைப் பாசம் கழற்றி -5-2-3—நான்கு வித பொருள்கள் -யமதூதர் பாசக்கயிறு காலிலே இழுக்க ஒண்ணாதபடி பண்ணி
கால் -காற்று -பிராண வாயும் -பாசம் ஆத்மாவை கட்டிக் கொண்டுள்ள ஸூஷ்ம சரீரத்தில் -நசை அறுத்த படி –
கீழே கயிறும் அக்காணி கழித்து-என்றது ஸூதூல சரீரத்தை கழித்தத்தை சொல்லி
கால்கட்டான புத்ர தாராதிகள் பற்றைப் போக்கினை படி
இரண்டு காலிடை உள்ள ஹேய ஸ்நாநத்தின் ஆசையை அறுத்த படி -காம -மோகத்தால் கட்டுண்ட பாசம் ஒழித்து
குறும்பர்கள்-5-2-5-உண்ணிலாய ஐவரால் -கோவாய் ஐவர் என் மெய் குடி இருந்து -உயர்திணை பிரயோகங்கள் போலே –
உற்ற நோய்காள் உறு பிணிகாள்-5-2-6-கொடுமையின் மிகுதியைப் பற்ற கள்ளப் பயலே திருட்டுப் பயலே போலே -ஆழ் வினைகாள் -இவற்றுக்கு காரணம்
என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5 2-8 – தோளுக்கு திரு ஆழி இலச்சினை -தலைக்கு திருவடி இலச்சினை
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-5-2-9-
பைக் கொண்ட பாம்பணையோடும் -மெய்க் கொண்டு வந்து புகுந்து கிடந்தார் உபக்ரமம் படியே நிகழித்து அருளுகிறார் –

————————————

5-3-
வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 2-வலம் செய்தல் -மற்றுள்ள வழிபாடுகளுக்கும் உப லக்ஷணம் –
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மறுவுதல் வழக்கே –
உன் பொன்னடி வாழ்க வென்று -இனக் குறவர்  -5-3-3-கீழே -எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்
சீர் திரு மாலிருஞ்சோலை -4-2-2-என்றத்தை விவரித்து அருளிச் செய்கிறார் இங்கு
அங்கோர்  நிழலில்லை நீரும் இல்லை உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்-5-3-4-
இலங்கதி மற்று ஓன்று –நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே -திருவாய்மொழி
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா-5-3-6-/ மருந்தும் பொருளும் அமுதமும் தானே-/அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -/
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் /அரு மருந்து ஆவது அறியாய்
கோயில் கடைப் புகப் பெய்-5-3-6–திருக் கண்ண மங்கை ஆண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனைத் தானும்
குத்திக் கொண்ட படியைக் கண்டு ஒரு தேஹாத்ம அபிமானியானவன் அளவு இது ஆனால் -பரம சேதனனான ஈஸ்வரன்
நம்மை யமாதிகளில் கையிலே காட்டிக் கோடான என்று விஸ்வஸித்து திரு வாசலைப் பற்றிக் கிடந்தார் இறே
அநர்த்தக் கடல்-5-3-7- -அனத்தம்-பாட பேதம் -அபாயம் பொருளில் / அஞ்சேல் என்று கை கவியாய் -அபய ஹஸ்த முத்திரை காட்டி அருள்வாய் –
கிறிப் பட்டேன்–5-3-8-கிறி -விரகு-அதாவது யந்த்ரம் -சர்வ பூதங்களும் பிரமிக்கும்படி ரூடமாய் இருப்பதொரு யந்த்ரம்
அஞ்ஞானா வர்த்தமாய் இருப்பது ஓன்று – / மாயம் என்றுமாம் -சம்சார மாயையில் அகப்பட்டேன் –

————————————-

5-4-
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5 4-2 – அறிவை என்று பரம பக்தியைச் சொன்னபடி –
தலைப் பற்றி வாய்க் கொண்டதே-மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்
தூறுகள் பாய்ந்தனவே –5-4-3-தூறு -என்று செடியாய் -கிளை விட்டுக் கிடக்கிற சம்சாரம் –
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய்த் தூற்றில் புக்கு -திருவாய்மொழி
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்-5-4-5- -பொன் அழியும் படி -நைச்ய அனுசந்தானம் -அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே -போலே
அன்றிக்கே ஒன்றும் தப்பாத படி சொன்னேன் -உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் என்றபடி
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 5- –
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை -போலே
ஐது நொய்தாக வைத்து-5-4-8- -ஐது நொய்து அல்பம் -மிக அல்பம் என்றபடி
அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –
அந்தணர் -அந்தத்தை அணவுபவர் –வேதாந்தத்தை சார்பவர் –
அம் தண் அர்-என்று பிரித்தும் பொருள் சொல்வர்
அந்தணர் என்போர் அறவோர் மற்று எப்பொருட்க்கும் செத்தண்மை பூண்டு ஒழுகலால்-திருக்குறள்
நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்கால் அந்தணர்க்கு உரிய -தொல்காப்பியம் -யதிகளைக் குறிக்கும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பகவத் விஷயம் காலஷேபம் -8-திருப்பல்லாண்டு -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை/எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம்/அல் வழக்கு ஒன்றும் இல்லா/பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை/—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 18, 2016

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

அவதாரிகை

வாழாளிலே அழைத்து –எந்தை தந்தை யிலே -கூடின -அநந்ய பிரயோஜனர்
பாசுரத்தாலே -அவர்களோடே கூடி -திருப்பல்லாண்டு பாடுகிறார் -இதில் –

கைங்கர்யம் என்றாலே ஆதி சேஷன் நினைவு வருமே அதனால் மீண்டும் மீண்டும் பைந்நாகப் பணையான் என்று அருளிச் செய்கிறார்

வியாக்யானம் –

உடுத்து
திருவரையில் ஸூ சங்கதமாக சாத்துகையாலும் -திருவரையிலே முசுகையாலும் –
தத் சம்பந்தம் தோற்றும்படி ஒற்று மஞ்சளாலும் மாளிகை சாந்தாலும் சிஹ்நிததாம்படி உடுத்து –
இவை இத்தனையும் ப்ரார்த்தநீயமாம்படி இருப்பார் சிலர் நாங்கள் –
சேஷிக்கு மங்களாவஹம ஆகையும் -தத் சம்பந்தங்கள் தோற்றின சிஹ்னங்களை
உடைத்தாகையும் -சேஷ பூதனுக்கு ஸ்ம்ர்தி விஷயமாக கொண்டு சர்வ காலமும்
ப்ரிய கரமாய் இ றே இருப்பது
களைந்த
ஆசன பேதத்திலே கழித்தால் பொகடும் ஸ்தலம் தங்கள் தலையாம்படி இருக்கை –
இதுவும் சேஷ பூதனுக்கு ப்ரார்தநீயம் இ றே-

உடுத்த நின் பீதக வாடை
களைந்த நின் பீதகவாடை
எண்ணாமல் உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –
மஞ்சளும் செங்கழுநீரும் கலந்த –

இங்கன் ப்ரார்த்த நீயமாக வேண்டுகிறதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்
நின் பீதக வாடை –
வகுத்த சேஷியது யாகையாலே -சாத்தும் திருப் பரிவட்டம் அடைய திரு பீதாம்பரத்தின் உடைய
ஆவேச அவதாரம் ஆகை -நின் பீதக வாடை –
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -துரும்பு திருச் சக்கர ஆவேசம் போலே –
ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அநுரூபைரநூபமை -என்று சேதன கோடியிலே இ றே
திருப் பீதாம்பரத்தை சொல்லுகிறது-பீதாம்பரம் சந்தனம் வஸ்த்ரம் எல்லாம் சேதன கோடி –
பார்த்தாலே அஜ்ஞ்ஞானம் தொலைந்து ஞானம் பிறக்குமே -அப்ராக்ருதம் திவ்யம் இவை –
உடுத்து
இது இ றே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்
அங்கன் அன்றியே -பக்தாநாம்-என்று இருக்குமவன் ஆகையாலே இது தான் சேஷி
அளவிலே வந்தவாறே பிரதிபத்தி வேறு பட்டு இருக்கும் -ராஜாக்களுக்கு இரட்டை பிடித்து-த்விபட்டி -மடித்து கொடுப்பது துப்பட்டி –
கொடுக்குமவர்கள் -வாக்காக பிடித்து -தங்கள் அரையிலே உடுத்திருந்து யோக்யமாம்படி
பண்ணிக் கொடுப்பார்கள் -அதுவாய்த்து இவனுக்கு நினைவு-
அநந்ய பிரயோஜனர் அவன் நினைவால் தனக்கு ராஜா என்றவாறு

கலத்ததுண்டு –
அமுது செய்து கை வாங்கின தளிகை மாற்றினால் பிரசாதம் போஜ்யம்-
கை வாங்கின -காலத்தால் பேதம்
தளிகை மாற்றினால் -தேச பேதம் –
ஆச்சார்யா புருஷர்களுக்கு தளிகை மாற்றுவார்கள்
கலைத்தது உண்டு
களைந்த சப்தம் போலே இல்லை -கலத்தது உண்டு -இங்கே -சப்தம் தருவித்து உண்ட கலத்ததில் உண்டு –
த்வதீய –சேஷ போஷன -சேஷாசனர் -அசனார் உண்பவர் -மிச்சம் உண்டு ஆனந்தம் கொள்பவர் விஷ்வக் சேனர்
த்வதீயபுக் தோஜ்ஜித சேஷ போஜிநா -என்னக் கடவது இ றே -ப்ரசாதமே தாரகமாய் இருப்பார் சிலர் நாங்கள் –
குரோர் உச்சிஷ்டம் புஞ்ஜீத -என்று விதி ப்ரேரிரதராய் கொண்டு பிரதிபத்தி பண்ணுவர்கள்–ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவர் –
மோர் முன்னர் ஐயன் போலே -விதி படி என்றால் ஒரு தடவை தான் -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் –
ஸ்வரூப ஜ்ஞானம் உடையார் தத்  ஸித்தி யர்தமாக பிரதிபத்தி பண்ணுவர்கள் -பகவத் ப்ரேம யுகதர் ஸ்வயம் பிரயோஜனம் என்று இருப்பர்கள் –
இச் சேஷத்வ காஷ்டையான ததீயர் உடைய பிரசாதம் -தருவரேல் புனிதம் அன்றே -என்கிறபடியே
அதி க்ர்தாதிகாரமாய் இருக்கும் -சர்வ சாதாரணனது ஆகையாலே பிரயோஜனாந்த பரனுக்கும்
போக்யமாய் இ றே பகவத் பிரசாதம் இருப்பது-
உச்சிஷ்டம் -தாமசம் -விதி விலைக்கு-தேசிகன் சாதித்து அருளுகிறார் –

தொடுத்த இத்யாதி –
திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
கேசவப்ரியே-நான்கு தளங்கள் -கொண்ட திருத் துழாய் பரித்து-ஆதரவே சம்ஸ்காரம் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே -புனுகு தைலம் –தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய்
இருக்கும் என்கை -அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்
ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இ றே-சூடிக் கொடுத்த தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் –

இத் தொண்டர்களோம்
இப்படிப்பட்ட அடியார்கள் இ றே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இ றே  நாங்கள் -அநந்ய பிரயோஜனர் பாசுரம் தானே இது –

ஸ்வரூப சித்யர்த்தமாக அத்தலையில் உச்சிஷ்டங்களை ஆகாங்ஷித்து புகையில்
உண்பன் என்று இருக்கும் அத்தனையோ -என்னில் -கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
கைங்கர்யம் செய்து சம்பாவானை இல்லை -பர்த்ரு போகத்துக்கு விலை பேசக் கூடாதே அதனால் தான்
உடுத்து இத்யாதி-சம்பாவானை சொல்லி பின்பு கைங்கர்யம் பற்றி அருளிச் செய்கிறார் –

விடுத்த இத்யாதி –
ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இ றே நாங்கள்-செய்தி ஏந்தி தூது போன திருவடி போலே –
விடுத்த திசைக் கருமம் திருத்தி –
வேறு ஒருவரை ஏவ வேண்டாத படி செய்து தலைக் கட்ட வேண்டும் –
குண அனுபவமும் கைங்கர்யமும் பொழுது போக்க கொள்ள வேண்டும் -புத்தி வேற திசையில் மேயாமல் இருக்க -இது வேண்டுமே
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும்-மாருதியால் சுடுவித்தான் -பிராட்டி உடைய சோக அக்னியால் — தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இ றே

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்

படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக நின்றுள்ள -விகசித்துக் கொண்டு இருக்கும் -பணைத்தை உடையனாய்
-மென்மை -குளிர்த்தி -நாற்றம் -விசாலம் -வெண்மை -என்கிறவற்றை பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே
கண் வளர்ந்து அருளுகிறஅழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்
-ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை
பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்-

———————————————————————————————–

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த்  தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-

எம்பெருமான் -சம்போதம்
அடியோங்கள் அடிக்குடில் -வீடு பெற்று -தாஸ பூதரான நாங்களும் –
எங்கள் க்ரஹங்களில் உள்ள புத்ர பௌத்ராதிகளும் -அஹங்காரமான ஐஸ்வர்ய
கைவல்யங்களையும் -விடப் பெற்று-
குடில் —மஞ்சா குரோசி போலே குடிலில் உள்ளோர்
அடி –அடிமை பெற்று -வீடு பெற்று -விடுதலை பெற்று -கைவல்ய மோஷத்தில் இருந்து உஜ்ஜீவித்தது
திருமதுரையுள் சிலை குனித்து-கம்சன் அரண்மனையில் வில்லை முறித்து –
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே -காளியன்- முன்னாள் நடந்த விருத்தாந்தம்
தோற்றி -பாய்ந்து -சிலை குனித்து -க்ரம படி -ஆழ்வாருக்கு காட்டி அருளிய படி அருளிச் செய்கிறார்
விற் பெரு விழவும்–அங்கும் அப்படியே – கண் சிமிட்டும் நேரத்தில் நடந்தவை அனைத்தும் —
இங்கு மங்களா சாசன பாசுரம் -சின்ன வயசிலா இப்படி பண்ணினான் -கண் எச்சில் படுமே -அதனால் –
பத்து வயசில் கம்சனை முடித்ததை சொல்லி
ஆச்வாசப்படுத்தி அப்புறம் இவற்றை அருளிச் செய்கிறார்

———————————————————————————————–
அவதாரிகை –

கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே-உம்மை -ஆத்மயாத்ரையில் பாரதந்த்ரம் உண்டே –
ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் –
இதில் -பிரயோஜநாந்த பரர் -கைவல்யர் -புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன்
இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால்
தங்களுக்கு பிறந்த -தாற்காலிக -அப்போது சடக்கு என்று -ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் –
ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர்
ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது –
அவன்-ஐஸ்வர்யார்த்தி- தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த
ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் –
தீயில் பொலிகின்ற -அதில் பகவத் பிரபாவத்தை சொல்லாமல் இங்கு சொல்லிக் கொள்கிறார்கள்
இரண்டாம் படிக் கட்டில் ஐஸ்வர் யார்த்திகள் சொல்லிக் கொள்கிறார்கள் வெள்ளுயிர் ஆக்கி -என்றார்கள்
கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம்
ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் –
உபாசனம் பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது -வெளுத்த ஸ்வ பாவம் ஐஸ்வர்யார்த்தி-
இவன் பெரியாழ்வார் கொண்டு திருத்தப் படுகிறான் –
உபாஸனா தசையில் தர்சனம் ஐஸ்வர்யார்த்தி -அதனாலே முன்பே வெள்ளுயிர் ஆக்க வல்ல என்றார்கள்
கைவல்யார்த்திக்கு மூன்றாம் நிலை -ஆஸ்ரயண வேளையில் தான் –

————————————————————————————————-

வியாக்யானம் –

எந்நாள்
அந்நாள் -என்ன அமைந்து இருக்க -எந்நாள் -என்கிறது வகுத்த சேஷி பக்கலிலே ஷூத்ர
புருஷார்த்தத்தை அபேஷித்த காலமாய் இருக்கச் செய்தேயும் -ஸூப்ரபாதாச மேநிஸா -ஜன்ம சாபல்யமே இன்று தான் -அக்ரூரர் –
என்கிறபடி மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமாம் படி புகுற நிறுத்தின
திவசம் -என்று அந்நாளைக் கொண்டாடுகிறார்கள் –
பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இ றே
அவதாரத்தில் ஏற்றம் சொல்லுகிற அளவில் தஜ் ஜன்ம திவசம் என்று அந்நாளும்
கொண்டாடப் பட்டது இ றே-
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து வந்தவன் -அது ஒழிந்து -அநந்ய பிரயோஜனன்
ஆகைக்கு அடி என் என்னில்-

எம்பெருமான் –
ஷூத்ர பிரயோஜநத்தை அபேஷித்து நிருபாதிக சேஷியான உன் பக்கலிலே
வருகையாலே ஸ்வரூப பராப்தமாய் வந்த சேஷத்வமே பலித்து விட்டது –
எத்தையும் கேட்டு வந்தாலும் எம்பெருமான்
நீ எம் பெருமான் நிருபாதிக சேஷி -ஸ்வரூப பிராப்தம் -கைவல்யம் கேட்க உன்னிடம் வந்து -நீ சேஷி என்று அறிந்து –
வகுத்த சேஷி யானாலும் -அபேஷிதங்களை ஒழிய புருஷார்த்தார்த்தங்களைக்
கொடுக்கும் போது -அர்த்தி பக்கலிலே ஒரு கைம்முதல் வேண்டாவோ என்னில் –
அநந்ய பிரயோஜனாந்தர் ஒன்றும் கொடுக்க வேண்டாம் –
பிரயோஜநாந்த பரர்கள் ஏதாவது கொடுக்க வேண்டுமே

உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட –
அடியோம் என்கிற அர்த்தத்துக்கு வாசகமான சப்தத்தில் எங்களுக்கு அந்வயம் உண்டு
நெஞ்சில் இன்றிக்கே இருக்கிலும் வாயில் உண்டான மாத்ரம் கொண்டு தர வல்ல சக்தி
உண்டு இ றே உனக்கு
ஸ்வ தந்த்ரன் அடியோம் என்று சொல்லிக் கொள்ண்டு வர மாட்டான்
அடியோம் என்று பொருள் கொண்ட பிரணவம் சொல்லிக் கொண்டு வந்தான்
அடியோம் என்று எழுத்துப் பட்ட -அந்நாள் -அடியோம் சொல்லாமல் அடியோம் பொருள் படும் ஓம் நம -சொல்லி
அடியோம் பொருள் நெஞ்சில் படாமல் எழுத்துப் பட்ட -இருந்தாலும் இதுவே வியாஜ்யமாக ஏமாந்து கொடுத்தான் -என்றவாறு
புத்தியில் பட்டு அடிமை ஆகவில்லை -வாயில் இருந்ததையே கொண்டு
திருமால் இரும் சோலை என்றேன் என்ன –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
சரணாகத சப்தம் -வந்ததுமே ஏற்றுக் கொண்டானே கூரத் தாழ்வான்
ஒமித்யே காஷரம் ப்ரஹ்ம வ்ராஹரன் மாம் அநுஸ்மரன் -என்னக் கடவது இ றே
அதவா
யாரேனும் பக்கலிலே ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டி செல்லிலும் -நமஸ்
சப்த ப்ரயோகம் பண்ணக் கடவதாய் இ றே இருப்பது -அதுவும் ஆத்ம யாதாம்ய வாசகம் இ றே -அதுவே எங்கள் பக்கல் கைம்முதல் என்கிறார்கள் –
ஆழ் நிலை உண்மை -ஆய்ந்து தெரிந்து கொண்ட பொருள் -பாகவத சேஷத்வமே-யாதாத்மா ஞானம்
ஓம் நம என்பதே கைம்முதல் என்றவாறு -வாய் வார்த்தையால் சொன்னதால் மாத்ரமே பலித்ததே –

எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்
பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது -முத்துப்பட்ட -என்கிறாப் போலே-வாழாட் பட்ட போலே -கூழாட் பட்டது போலே இல்லை –
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் -பொருள் -அனுஷ்டானம் –உடைய துர்லப்த்வம் சொல்லிற்று—
வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு-ஓம் நம அடியோம் சொல்வது துர்லபம் தானே-
அஹங்கார க்ரச்தமான சம்சாரத்துக்கு உள்ளே தாஸ்ய பிரகாசம் அலாப்யலாபம் ஆனால் போலே
பஹூ ஜல்பம் பண்ணிப் போகிற வாயிலே நமஸ் சப்தம் உண்டாக அல்பய லாபம் இ றே-

வாக்ய த்வயம் சப்தம் மறைத்துப் போவார்கள் -ரகஸ்ய த்வயத்திலும் -திருமந்தரம் -சரம ஸ்லோகம் -அர்த்தம் மறைத்து போவார்கள் –

அந்நாள் –
எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட நாள் -எந்நாள் -அந்நாள் என்று அந்வயம்
-அந்நாளே -என்கிற அவதாரணத்தாலே -அது ஒழிய எங்கள் பக்கல் ஆநுகூல்ய லேசமும் இல்லை என்று கருத்து-
இருந்ததே இந்த வாய் வார்த்தை தான் -அடியோம் என்னும் எழுத்து நல் கன்று இல்லை தோல் கன்றுக்கும் இரங்கும் போலே
யசோதை பாவனை இல்லாமல் -தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்து சொல்ல –மெய்யே பட்டு ஒழிந்தேன் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் போலே
அடியோம் ஓம் நம பர்யாயம்
பிரணவம் –
அடியோம் சொல் பிரதியோகி சாபேஷம் ஆகையால் -யாருக்கு அடியான் -ஆண்டான் இருந்தால் தான் அடியான் -அகாரம் சொல்லுமே
சர்வம் வாக்கியம் சாவதாரணம் -அவதாரணம் உடன் கூடி இருக்கும் -வேறு ஒருவருக்கு அடியேன் இல்லை -சொல்ல வில்லை
அகார வாச்யனுக்கே அடியேன் என்பதால் உகாரம் கிடைத்தது
இதுக்கு பிரவ்ருத்தி அடிமைத்தனம் -ஆய சதுர்த்தி கிட்டுமே -தாஸ்யம்
அஸ்மத் சப்த பர்யாயதயா-அஹம் -அடியேன் -மகாரம் -பிரத்யகர்த்தமான -போதகம் ஆனபடியால் தனக்கே தோற்றும் -ஆத்மாவைக் குறிக்கும்-
சைதன்யம் வாங்கி மகாரம் –
இதில் பஹூ வசனம் -அடியோம் -ஜாதி அபிப்ராயம் -மகாரம் ஜீவர்கள் பலர் -ஜாதி ஏக வசனம் -அனைவரும் அடிமை –
அத்தால் பெற்றது என் என்ன – தாங்கள் பெற்ற பிரயோஜன பரம்பரைகளை சொல்லுகிறார்கள் –

அடியோங்கள் இத்யாதி –
1-அடியோங்களாக பெற்றோம் –
2-குடிலும் அடிக்குடிலாக பெற்றது –
3-வீட்டை லபிக்கப் பெற்றோம் –
4-உஜ்ஜீவிகப் பெற்றோம் –
அடியோங்கள் -என்கிறார்கள்
அஹங்கார க்ரச்தராய் -தத் அநுகூலமான ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷித்து உன்
திருவடிகளில் வந்து ஒதுங்கின நாங்கள் -அது போய் -தாஸ்ய ஏக ரசராகப் பெற்றோம் –
நேற்று வரை நாங்கள் இன்று தாசர்கள்
ராம தூதன் தாசோஹம் -சீதை பார்க்கப் பட்டால் பார்த்ததுக்கு அடையாளம்
அடிக்குடில் –
குடில் -என்று க்ரஹம் -அத்தாலே க்ரஹச்தரான புத்ர பௌத்ராதிகளும் அடியாராகப் பெற்றோம்-குடில் அடி பெற்றது என்றவாறு
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்னக் கடவது இ றே
கொடுத்துக் கொண்ட பெண்டிர் -இருந்தோம் -முன்பு -நல்ல பதத்தால் மனை வாழ்வார் ஆனோம் –

எழுத்துப் பட்டது தங்கள் அளவில் ஆகில் புத்ர பௌத்ராதிகள் அளவில் ஸ்வரூப ஞானம் பிறந்தபடி
என் என்னில் -முத்துப்பட்ட துறையை காவலிடுமவன் -அசல் துறையையும் காவல் இடுமா போலே
சம்பந்தி சம்பந்திகள் அளவும் அஹங்கார மமகாரங்கள் புகுராத படி விஷயீ கரித்தான் -என்கை
இவர்கள் சங்கதர் ஆகிற பாட்டிலும் -குடி குடி ஆட் செய்கின்றோம் -என்றார்கள் இ றே
சேஷி சந்நிதியிலே சேஷ பூதர் க்ரஹத்தை -குடில் வளைக்க -என்று சொல்லக் கடவது இ றே

வீடு பெற்று –
வீட்டை லபித்து -அதாகிறது
அஹங்கார மமகார கார்யமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற த்யாஜ்யங்களை
விடப் பெற்று -ஐஸ்வர்யம் த்யாஜ்யம் என்று அறிந்தால் தானே அங்கே அவன் இடம் போவான் –
-ப்ராப்ய சித்தியோபாதி த்யாக சித்தியும் ப்ராப்ய அந்தர்கதம் இ றே

உய்ந்தது காண்
தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்
உய்ந்தது காண் -என்று அறியாதரை அறிவிப்பாரைப்  போலே சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
உபகரித்து விஸ்மரித்து போவது நீ -அவனுக்கும் அறிவிக்கிறார்கள் -உன்னாலே ஏற்பட்டுது –
நீ பண்ணின உபகாரம் நாங்கள் உபதேசிக்க கேளாய் என்கிறார்கள்-

செந்நாள் -இத்யாதி
பிரயோஜனாந்தரங்களைக் கை விட்டு அநந்ய பிரயோஜனர் ஆனிகோள் ஆகில் இனி க்ர்த்த்யம் என் என்னில் –
உனக்கு மங்களா சாசனம் பண்ணுகையே க்ர்த்த்யம் என்கிறார்கள் -விஷயம் ஏது -என்ன –
செம் நாள் –
அவதாரத்துக்கு ஏகாந்தமான நாள் ஆகையாலே அழகிய நாள் என்கிறார்கள்
தம் அத்புதம் பாலகம் -வேண்டித் தேவர் இரக்க -ஆவணி திருவோணம்
தோற்றி –
அதீந்த்ரியமான விக்ரஹத்தை சகல மனுஜ நயன விஷய தாங்கத-என்கிறபடியே
உகவாதார் கண்ணுக்கும் விஷயமாம் படி தோற்றுவித்து-துரியோதனமும் துச்சாதனனும் கூட பார்க்கும்படி
திரு மதுரையுள் –
அது தானும் நிர்ப்பயமான அயோத்யையில் இன்றிக்கே சத்ருவான கம்சன் வர்த்திக்கிற ஊரிலே –
ராமோ ராமோ -அங்கு -எழும் புல் பூண்டு எல்லாம் அசுரர் இங்கே
சிலை குனித்து
அவ் ஊரில் தங்க ஒண்ணாமையாலே திருவாய்ப்பாடியிலே போய் மறைய வளருகிற நீ
மறித்தும் அவ் ஊரிலே புகுந்து கம்சனுடைய ஆயுத சாலையிலே புக்கு -வில்லை முறித்து
பூசலை விளைத்தாய் -அநுகூலர் அடைய -என் வருகிறதோ -என்று வயிறு பிடிக்கவேண்டும் படியான
தசையிலே கம்சனுக்கு மறம் பிறக்கும்படி சிலுகு படுத்துவதே

ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு
எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இ றே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –
உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்-

—————————————————————————————————–

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

——————————————————————————————————————

அவதாரிகை –

அண்டக்குலத்தில் ஆஹூதராய் -நெய்யிடை -என்கிற பாட்டில் சங்கதரான
ஐஸ்வர்யார்த்திகள் பாசுரத்தாலே -திருப்பல்லாண்டு பாடுகிறார் –

கூறுவனே -இதிலும் ஏக வசனம்-
அணி புதுவை -போலே அணி கோட்டியூர் –
திவ்ய தேசம் -வாழும் மக்கள் இருவருக்கும் குற்றம் இல்லை -என்றுமாம்
துங்க -உயர்ந்த –
பெரியாழ்வார் மதிக்கும் செல்வ நம்பி வம்சம் தான் திருக் கோஷ்டியூர் நம்பி திருவவதாரம் என்பர் –
நானும் -அடைமொழி இல்லாமல் தம்மைச் சொல்லிக் கொள்கிறார் -ஏதும் இருப்பதாக நினைப்பவர் அல்லர் –
பாசுரம் ஐஸ்வர் யார்த்திகள் -என்பதால் –
ஜீவனும் நித்யம் பரனும் நித்யம் -தாஸ்யம் சேஷத்வம் மிக பழமை என்கிறார் –
பலவகையால் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி எல்லா வற்றாலும் பவித்ரன் -தூய்மையான அனைத்துக்கும் தூய்மை தருபவன் அவன் –
பரவி -க்ரமம் இல்லாமல் பல நாமங்களை சொல்லி மந்த்ரம் -சாதனம் என்றால் தான் க்ரமம் வேண்டும்
பல அடியேன் -அநந்ய பிரயோஜனர் பாசுரம் போலே -இன்று திருந்தின ஐஸ்வர் யார்த்தி –

——————————————————————————————————————————

வியாக்யானம்-

அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இ றே
1–தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை வழக்கு அல்ல–மகாரம் நினைவு வந்து -ஞானம் உடையவன் -தேகம் அஜடம்
2–ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல -ஓகோ எனக்கு ஞானம்– இருக்கு ஸ்வ தந்த்ரன்
-புத்தி வரும் -வைத்த இடத்தில் இருக்கும் பாரதந்த்ர்யம் பொருள் களுக்கு தானே -அகாரம் ஆய மகாரம் -அவனுக்கு என்ற நினைவு வேண்டும் –
3–தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல -உகாரம் -அனன்யார்ஹம் -சம்பந்தம் நியமதித்து கொடுக்கும்
4–பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல -நாராயணாய-பகவத் பிரயோஜனம்
5–அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல –
6–பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்ககை வழக்கு அல்ல -ஆய பிரார்த்தனாய சதுர்த்தி -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –

இனி -வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இ றே இவர் இருப்பது
அணி கோட்டியூர் கோன்
இவை -ஒன்றும் இன்றிக்கே -அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு -என்று ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது –
இதுக்கடி இவர் என்று தங்களுக்கு நிர்வாஹராக வாய்த்து நினைத்து இருப்பது
அணி -என்று ஆபரணமாய் -சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் என்கை

அபிமான துங்கன் –
அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –
கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே -கர்மாதீனம் இல்லை பகவத் பாகவத் ஆச்சார்யா சம்பந்தாதீனம் –
ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது -அதாவது
உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும்
தம்மதமாய இருக்கை-ஆத்மயாத்ரையில் இல்லை -சீர் வடிவை நோக்குபவன் –
குணானுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காக கொள்ளுகை-என்னக் கடவது இ றே-
ஏகாந்த திவ்ய தேசங்களில் சென்று கைங்கர்யம் செய்து – பொழுது போக்காக கொள்ளுகை-
திருக் கோஷ்ட்டியூர் நம்பி செல்வ நம்பி வம்சத்தவர் என்பர் –

செல்வன் -என்று
ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறைவற்றவர் யென்கையும்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கையும்-சுற்றம் எல்லாம் பின் தொடர -தொல் கானம் அடைந்தவனே –
உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்-பிரகலாதன் -அனைத்து சாதுக்களுக்கும் உபமானம் —
போலே -அவர் எங்கே நாம் எங்கே என்ற நினைவால் –
இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய்
இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில்
கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்
அதவா –
நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே
விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்-

திருமாலே –
இவ்வாதம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்
இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
மாத்ரு தேவோ பவ -ஸ்ரீ ரெங்க நாச்சியாரை மாதாவாகக் கொள்ள வேண்டும் -பிரபன்னர் —
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்-
மாலே திரு தேவரீருக்கு அடையாளம் -தாஸ்யம் எங்களுக்கு அடையாளம்

நானும் –
பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் –
உம்மைத் தொகை -அப்படி இருந்த நான் கூட -அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும்
சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே
வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இ றே-

உனக்குப் பழ வடியேன் –
உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை-இதிலும் சாத்விக அஹங்காரம்
உனக்கு –
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-எதையோ பிரார்த்தி வந்த என்னை இப்படி மாற்றி அருளிய உனக்கு –
ஸ்வரூப பிரத்யுக்த தாஸ்யம் -குணக்ருத தாஸ்யம் -இரண்டு வகைகள் உண்டே —
இங்கே ஸ்வரூப பிரத்யுக்த தாஸ்யம் -தன்னை மாற்றிய குணத்துக்கு தோற்று சொல்ல வில்லை
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட –மாயத்தான் -ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –

இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்
முன்பு அர்த்த விதுரமாக -பொருள் தெரியாமல் –ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்–தீ வகை என்று இருக்கிறார்கள்
-இது தான் சர்வார்த்த சாதகம் இ றே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இ றே-

நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இ றே –
அத்தை இ றே இவர்களும் சொல்லுகிறது
பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இ றே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது -இச்சை நாம் தானே வளர்த்துக் கொள்ள வேண்டும் –
சர்வ முக்தி பிரசங்கம் -வருமே -இசைவித்து என்னை தன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –

பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
பல அழுக்குகளை போக்கி –
ஸ்வரூபம் ரூப குணம் விபூதிகளைக் கொண்டு பாபங்களை போக்கி
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –

உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்
ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –

————————————————————————————————-
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

நம் கோஷ்டி -ஐஸ்வர் யார்த்தி அதுக்காக அவன் இடம் போவார்கள் -நாமோ எங்கேயோ போவோமே –
மூன்று கோஷ்டியில் சேராதவர்களுக்கும் திருப்பல்லாண்டு பாடுகையே மாற்றி அருளும் –
அந்திம கால தஞ்சம் -ஆம் ஆகில் சொல்லிப் பார்க்கிறேன் -சொல்லி திருமந்தரம் சொல்லாமல் இழந்த ஐதிகம் –

பரமேட்டியை -பரம பதத்தை கலவி இருக்கையாக உடையனாய்
நல்லாண்டு -சொல்லுகைக்கு ஏகாந்த காலம் என்று நினைத்து
பரமத்மானை -சேதன அசேதனங்களை சரீரமாக உடையவனை

——————————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்பதால் ஆழ்வார் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் -ஏத்தக் கடவர் –
நித்ய யுக்த உபாசக -எப்போதும் கூடி இருப்பவர் -கூடி இருக்க விருப்பம் கொண்டவர் தாத்பர்ய சந்த்ரிகை
அது போலே ஏத்துவர் -ஏத்த வேண்டும் என்று விருப்பம் கொள்வார்
ஏத்தக் கடவார்கள் -சொல்வதே மங்களா சாசனம் பண்ணுவதே –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் -நாலாவது கோஷ்டி –தம்முடைய பாசுரத்தில் இழியவே-யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள்
என்று இப்பிரபந்தத்தின் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

——————————————————————————————————————————————

வியாக்யானம்

பவித்ரனை –
ஒரு உபாதியால் அன்றிக்கே -ஸ்வ ஸூத்தனானவனை –
சாஸ்வதம் ஸிவம் -என்னக் கடவது இ றே -இத்தால் அசுத்தி பதார்த்த சம்யோகத்தாலே தத்கத தோஷ ரசம் ஸ்பர்ஷ்டனாகையும் –
வ்யாப்தகத தோஷ ரஹிதன் –ஸ்வ சம்பந்தத்தாலே அசுத்தன் சுத்தன் ஆகையும் ஆகிற -பரம பாவநத்வம் சொல்லுகிறது
அதாகிறது
சேதன அசேதனங்களில் வ்யாபித்தாலும் தத்கத தோஷம் ஸ்பர்சியாது ஒழிகையும்-
ஸ்வ பாவ விகாரம் -சேதன -ஸ்வரூப விகாரம் அசேதன –
நிர்ஹேதுகமாக நித்ய சம்சாரியை நித்ய சூரிகளோடே ஒரு கோவை ஆக்குகையும்-

பரமேட்டியை –
பரமே ஸ்தானேஸ்தனன் ஆனவனை –
தேகாத்ம அபிமானி -ஸ்வ தந்திர -தேவதாந்திர -மூவரும் நிர்க்ரஹத்துக்கு இலக்கு
உபாயாந்தர சம்பந்திகள் -ஸூ பிரயோஜன கைங்கர்ய பரர்கள் அனுக்ரஹத்துக்கு இலக்கு –

சார்ங்கம் என்னும் இத்யாதி –
இது மகிஷீ பூஷண ஆயுத பரி ஜனங்களுக்கும் உப லஷணம் –
அங்குள்ளாரை இட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படி இ றே அவர்களுக்கு தன்னோடு உண்டான ப்ரத்யாசக்தி
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
சார்ங்கம் என்னும் வில் ஒன்றே ஆய்த்து அதுக்கு ப்ரசித்தி –
மத்த கஜத்தை யாளுமவன் என்னுமா போலே அத்தை ஆளுமவன் என்றது ஆய்த்து –
ஆலிகந்தமிவா காண மவஷ்டப்ய மஹத்தநு -என்னக் கடவது இ றே
இத்தால் -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்கிற இடத்தில் பவித்ரதையை நினைத்து
பரமேட்டியை இத்யாதியாலே இரண்டாம் பாட்டில் சொன்ன நித்ய விபூதி யோகத்தை சொல்லுகிறது
பவித்ரதையை மணி வண்ணா -ஸ்வ பாவம் வர்ணம் -நீரோட்டம் -தூய்மை ஆரம்பித்து
அத்தை சொல்லி முடிக்கிறார் பவித்ரனே
பரமேட்டி -நித்ய விபூதி —அடியோமோடும் -அங்கே உபய விபூதி -சதே பஞ்சாசன் நியாயத்தால் -100க்குல் ஐம்பது உண்டே

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் – பல்லாண்டு -என்று விரும்பிய சொல் –
இப்போது -யானை மேல் உள்ள பொழுது -பகவத் ப்ராப்தி காமர் -பிரயோஜனாந்த பரர் -என்று அடைவடைவே வந்து
நின்றார் இல்லை இ றே -அவ்வவருடைய பாசுரங்களாலே தாமே அருளிச் செய்தார் என்னும் இடம் தோற்றுகிறது இ றே
தம்முடைய வார்த்தையாக தாமே தலைக் கட்டுகையாலே –
ஆண்டாள் 29 பாசுரம் இடைச்சி பாசுரம் அருளிச் செய்தது போலே -இறுதியில் தமது வார்த்தையாக அருளி தலைக் கட்டினது போலே
அவர்கள் பாசுரமாக அங்குச் சொல்லிற்று –
பிரயோஜனாந்த பரர்க்கும் பகவத் ப்ரசாதத்தாலே மங்களா சாசனம் பண்ணுகைக்கு
யோக்யதை உண்டு என்னும் இவ் வர்த்தத்தின் உடைய ஸ்தைர்யத்துக்காகவும்
மங்களா சாசனத்தில் தமக்கு உண்டான ஆதர அதிசயம் தோற்றுகைகாகவும்-

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே  ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இ றே

நல்லாண்டு என்று
இப்பாசுரம் சொல்லுகைக்கு ஏகாந்தமான காலத்தை கொண்டாடி –
அத்யமே சபலம் ஜன்ம -என்னக் கடவது இ றே
மாரகழி திங்கள் மதி நிறைந்த நல் நாளால் முதலிலே கொண்டாடுகிறாள்
கண்டதடைய மமேதம் என்று போந்த அநாதி காலம் போல் அன்றிக்கே
பகவத் ச்ம்ர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணக் கடதாம் படி வந்ததொரு காலம்
சேதனனுக்கு ஸூ துர்லபம் இ றே-

நவின்று உரைப்பார்
நவிலுகை -பயிலுகை -இடைவிடாதே உரைக்கை
நமோ நாராயணா என்று –
அநாதி காலம் மமேதம் என்றதை தவிருகையும்
ததேவம் -யென்கையும்
இத்தால் மங்களா சாசனத்துக்கு யோக்யதை சொல்லுகிறது

பல்லாண்டும் –
காலம் எல்லாம்
யாவதாத்மபாவி -என்கிறது –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்திலே ஆண்டை இட்டுச் சொல்லுகிறது –
அந்த பரிணாமம் உள்ள தேசத்திலே வர்த்திகிறவர் ஆகையாலே-

பரமாத்மனை –
தனக்கு மேல் இன்றிக்கே –
தன்னை ஒழிந்தார் அடங்க ஸ்வ ஆதீநமாம் படி இருக்கிறவனை
இத்தால்
அமங்களங்களுக்கு -அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே ஒருவனுடைய மங்களா சாசனத்தால்
ஓர் ஏற்றம் உண்டாக வேண்டாதே இருக்குமவனை –

சூழ்ந்து இருந்து ஏத்துவர்
நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே முன்பே நில்லா
முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்
பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் –
பிறகு வாளி யுமான அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் -இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே
கால்வாங்க ஒண்ணாத வடிவு அழகு -அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை

பவித்ரனை -பரமேட்டியை -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் -பல்லாண்டு என்று விரும்பிய சொல் -நல்லாண்டு என்று
நவின்று உரைப்பார் -நமோ நாராயணா என்று பரமாத்மனைச் சூழ்ந்து
இருந்து பல்லாண்டும் பல்லாண்டு -ஏத்துவர் –என்று அந்வயம்

——————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -7-திருப்பல்லாண்டு -எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் -/தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி/நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும்—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 18, 2016

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-

————————————————————————————————–

எந்தை -நானும் என் அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தம் மூத்தப்பன் -அவனுக்கு அப்பனும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி -ஏழு தலைமுறை முதல் கொண்டு
வந்து -மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான சமயங்களிலே வந்து
வழி வழி -முறை முறையாக
யாட் செய்கின்றோம் -தப்பாமே அடிமை செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில் -திருவோணம் என்கிற திரு நாளிலே
யந்தியம்போதில் -அசுரருக்கு பலம் வர்த்திக்கிற அந்திப் பொழுதில்
யரி வுருவாகி -ந்ர்சிம்ஹ ரூபியாய் கொண்டு
யரியை -ஆஸ்ரிதனனான ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான ஹிரண்யனை
யழித்தவனை-உரு அழித்து பொகட்டவனுக்கு உண்டான
பந்தனை தீர-அணுக்கம் தீரும் படி-பிறந்த உடனே நிரசித்ததால் வந்த அணுக்கம்-ஆயாசம் – தீரும் படி –
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று-காலதத்வம் உள்ளதனைத்தும் –
பாடுதும்  -பாடுவோம்-

—————————————————————————————————-

அவதாரிகை

அநந்ய பிரயோஜனருக்கும் பிரயோஜநாந்த பரருக்கும் உண்டான நெடு வாசி அறிந்து
இருக்கச் செய்தேயும் அநந்ய பிரயோஜனரை அழைத்த சமனந்தரம் -இவர்களை
அழைக்கைக்கு அடி -உதாராஸ் சர்வ ஏவைத -என்னுமவன் சீலத்தாலும் –
அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜநீய சம்பந்தத்தாலும் –
இவர்களுக்கும் அவற்றையே  நினைத்து தேங்காதே புகலாம் படியாய் இ றே இருப்பது –
ஆகையாலே -அநந்ய பிரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய்
நின்றார் கீழ் –
மங்களா சாசனத்தில் தமக்கு உண்டான அபரியாப்தை –
இவர்கள் இழந்து -கிருபையாலும்
திருத்தி ஆகிலும் மங்களா சாசனம் இவர்கள் உடன் பாட -தமக்குத் தாரகம் ஆகையாலும்
இவர்களும் அவன் கை எதிர் பார்த்து இருக்கும் யோக்யதா மாத்ரத்தாலும் –
சாந்தீபன் -காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் -கோதில் வாய்மையினான் -குற்றம் இல்லாதவர் -இவன் இடம் கை ஏந்தினார்-

இதில் வாழாளில் அழைத்த அநந்ய பிரயோஜனர் -தங்கள் ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக் கொண்டு வந்து புகுர -அவர்களைக்
கூட்டிக் கொள்ளுகிறார் –
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த
தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டானதாக
சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து
புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் -ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்
கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்
யதார்த்தம் -உள்ளதை தான் சொல்லிக் கொள்கிறார்கள் -சாத்விக அஹங்காரம் கொள்ளலாமே –
பன்னகாச நமாகாசே பதந்தம் பஷி சேவிதே
வைநதேய மஹம் சக்த பரிகந்தும் சஹச்ரச -என்று திருவடி ஸ்வ சக்தியை சொன்னான் இ றே
முதலிகள் உடைய பயம் சமிக்கைகாக -விநய ஆஞ்சநேயரும் சொல்லிக் கொண்டாரே –

——————————————————————————————————–

வியாக்யானம் –

எந்தை -தானும் தகப்பனுமாக இருவர்
தந்தை தந்தை தந்தை -என்று ஒரு மூவர்
தம் -என்று முடிந்தவனை அனுபாஷிக்கிறது
மூத்தப்பன்
அப்பன் -என்று தமப்பனார் -மூத்தப்பன் -என்று பாட்டனார்
ஆகையாலே அங்கே இருவர் –
ஆக எழுவரையும் சொல்லுகிறது
ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்

பிரித்து சொல்லுகிற இதுக்கு பலம் என் என்னில் -ஸ்வ சந்தானத்தில் மங்களா சாசனம்
பண்ணிப் போந்தவர்கள் பக்கல் உண்டான ப்ரீதி அதிசயத்தாலே சொல்லுகிறார்கள்-
எல்லே –எல்லாரும் போந்தாரோ -போந்தார் போந்து எண்ணிக் கொள் மெய்க்காட்டுக் கொள் —
பாகவதர்களை தொட்டு சேவித்து தனித் தனியே எண்ணிக் கொள்வது உத்தேச்யம் –
சஹி வித்யா தஸ்தம் ஜனய திதச் ஸ்ரேஷ்டம் ஜன்ம கரியான் ப்ரம்ஹத பிதா -என்று
வித்யா சந்தானத்தை கொண்டாடுமா போலே -பிதரம் மாதரந்தாரான் -என்று த்யாஜ்யமான
யோநி சந்தானத்தை கொண்டாடுகை யுக்தமோ என்னில் யுக்தம் -கொண்டாடுகைக்கு
பிரயோஜனம் பகவத் சம்பந்தம் ஆகையாலே –
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்பரோ -புத்ரர்கள் சிஷ்யர்கள் ஆகவுமாம் பகவத் சம்பந்தம் இருந்தால் உத்தேச்யர்
வித்யா சந்தானத்திலும் பகவத் விமுகன் த்யாஜ்யன் அல்லனோ –
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும் அசம்பந்தமும் -பிராமணியம் விலை செல்லுகிறது -உயர்வாக சொல்லிக் கொள்வது -வேத அத்யயனாதி முகத்தாலே –
அது தானும் இழவுக்கு உருப்பாகில் த்யாஜ்யமாம் இ றே-ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஸூ க்திகள்-

ஏழ் படி கால் தொடங்கி –
அர்த்த க்ரமத்தாலே ஏழையும் சொல்லச் செய்தேயும் திரளச் சொல்லுகிறது -ஸ்வ சந்தானத்தில்
உண்டான ஆதர அதிசயத்தாலே
ஸ்ரீ சைல-இத்யாதி பிரணமாமி நித்யம் -சுருங்க சொல்வது -பூர்வாச்சார்யர்கள் ஒவ்வாருவரையும் சோம்பாது சொல்லிக் கொள்ள வேண்டுமே

வந்து
மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான தசைகளிலே வந்து

வழி வழி யாட் செய்கின்றோம் –
முறை முறையாக தப்பாமே அடிமை செய்கின்றோம்-நீதி வானவர் -சேஷி சேஷ பாவம் அறிந்தவர் –
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை
யாஜ்ஞக  சந்தானத்துக்கு த்ரி புருஷ விச்சித்தியாலே அப்ராஹ்மண்யம் சொல்லுமா போலே
மங்களா சாசன விச்சித்தியால் வைஷ்ணத்வ ஹாநி சொல்லும் குறை எங்கள் சந்தானத்தில்
இல்லை என்கிறார்கள் -யஸ்ய வேதஸ் சவேதீச விச்சித்யே தேத்ரி பூருஷம்
சவை துர்ப்ராஹ்ம ணோஜெயஸ் சர்வகர்ம பஹிஷ்க்ர்த -என்னக் கடவது இ றே

வழி வழி -என்று
சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்-மேலையார் செய்வனகள் -நம் சம்ப்ரதாயம் முக்கியம் –
சாந்திஸ் சாந்திஸ் சாந்தி -என்றும் -பச்யேம சரதஸ் சதம் -என்றும்
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்றும் -மங்களா நிப்ர யுஞ்ஜானா -என்றும் சொல்லக் கடவது இ றே

ஆட் செய்கின்றோம் -ஆட் செய்கை யாவது திருப் பல்லாண்டு பாடுகை இ றே
மேலே பந்தனை தீரப் பல்லாண்டு -என்றதை வர்த்தியாக சொல்லுகையாலே
இதுக்கு கீழே தங்களுடைய சந்தானத்தில் ஏற்றம் சொன்னார்களாய் -மேலே –
தங்களுடைய வ்ர்த்தி விசேஷம் சொல்லுகிறார்கள்

திருவோணத் திருவிழவில் –
ஸ்வாதி-தானே ஸ்ரீ நரசிம்ஹன் -திரு வோணத்தான் உலகு அளந்தான் என்பார்களே –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
குப்ஜா —குள்ளமான அவதாரம் -ஆம்ரா மாமரம் -இவை நஷத்ரம் சொல்ல வில்லையே
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்-
வாமனன் -திருவோணம் அறிந்து அவன் இடம் போனால் -வாமனன் -தன்னை காக்க அறிவான் –
திரு வோண திரு விழாவில் உத்சவம் நடக்கும் பல நாள்கள் -என்றைக்கு -என்று தெரியாதே -அத்தத்தின் பத்தா நாள் வந்து தோன்றினவன் போல்

அந்தியம் போதில் –
தேவர்களுக்கு பலம் ஷீணமாய் -அசுரருக்கு பலம் வர்த்திக்கும் சமயத்திலே
அரி உருவாகி –
அரியாகி -சொல்லாமல் -உரு சப்தம் -சொன்னது -ஒரு கால விசேஷம் வேண்டாதே சர்வ காலமும் மங்களா சாசனம்
பண்ண வேண்டும் படியான வடிவை உடையவனாய்
அரியாகி -பிரமன் வரம் முக்கியம்
உருவாகி பாலும் சக்கரையும் கலந்தது போலே அன்றோ -மிருகத்வம் நரத்வம் கலந்த உருவம் மனசில் பட -நாரசிம்ஹ் வபுஸ் ஸ்ரீமான் -என்றும்
அழகியான் தானே அரி உருவம் தானே -என்றும்-அழகிய சிங்கன் —
நரம் கலந்த சிங்கமாய் -என்றும் சொலக் கடவது இ றே-
முரண்பட்டு ஜுரம் இது சர்வம் சமஞ்சயம்-ஸ்ரீ பாஷ்யகாரர் -செராதவற்றை சேர்த்து அருளி -திருவாராதன பெருமாள் அனுக்ரகம்
பக்த பயம் போக்கும் அபேஷ அனுகுணம் பிரதிபன்ன யதா காமா பக்தர் வேண்டு கோளுக்கு இணங்க எடுத்துக் கொண்ட திருமேனி
ஒரு கல்லிலே ஐந்து மாங்காய் அடியான் வார்த்தை மெய்யாக்க பிரமன் வார்த்தை மெய்யாக்க ஆழ்வார் கூப்பிட்ட உடன் வருவான் வார்த்தை
சாஸ்திரம் சர்வ வியாபகன் மெய்யாக்க
திவ்ய பெரிய -விக்ருத ரூபா -கொண்டாலும் ஸ்ரீ மத்யம் லாவண்யம் சௌந்தர்யம் அதி மநோ ஹர திவ்ய ரூபம்
அரியை அழித்தவனை
அரி -என்று சத்ரு –
சஹஜ சத்ருவான ஹிரண்யனை குற்றுயிர் ஆக்கி விடாதே உரு அழித்தவனை
சுகிர்த்து எங்கும் சிந்தப் பிளந்த -என்னக் கடவது இ றே
அவனை அழியச் செய்தது பய ஸ்தானம் ஆகிறது பின்புள்ளார் பகை கொண்டாடுவார் என்னும் அத்தாலே

பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இ றே-
பிறந்த குழந்தை உடனே செய்த வியாபாரம் அன்றோ –

பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண -அவ் வஸ்துவினுடைய
அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இ றே இவர்கள் நினைவு-எங்கும் பரிவர் உளர் என பயம் தீர்ந்த மாறன் -மா முனிகள்
இவர்கள் -வந்து சேர்ந்த அநந்ய பிரயோஜன பகவத் லாபார்த்திகள் -ஆழ்வார்கள் கோஷ்டி என்றுமாம் –

பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –
ஒருக்கால் பல்லாண்டு என்றத்தால் பர்யாப்தி பிறவாமையாலே கால தத்வம்
உள்ளதனையும் நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகையே
எங்களுக்கு வ்ருத்தி என்கிறார்கள்-
சம்சார பயம் -போக பற்றுகிறேன் நிகழ் காலம் -போக்யம் பிராப்யம் கைங்கர்யமாக நித்யமாக செல்லுமே –

—————————————————————————————————
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-

—————————————————————————————————–
தீயில் -அக்னி -சந்திர ஆதித்தியர்களில் காட்டிலும்
பொலிகின்ற -மிக விளங்கா நின்ற
செஞ்சுடர் -சிவந்த தேஜஸை உடைத்தாய்
ஆழி -மண்டல ஆகாரமான-வட்ட வடிவமான –
திகழ் -ப்ரகாசியா நின்றுள்ள
திருச் சக்கரத்தின் கோயில் -திரு ஆழி ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற கோயிலாய்-ஹேதி ராஜன் -ஜ்வாலா கேசம் -த்ரி நேத்ரம்
பொறியாலே -சிஹ்னத்தாலே
ஒற்று உண்டு நின்று -சிஹ்நிதராய் நின்று
குடி குடி -எங்கள் சந்தானம் எல்லாம்
ஆட் செய்கின்றோம் -அடிமை செய்வதாய் வந்தோம்
மாயப் -க்ரித்ரிமாக
பொரு -போர் செய்யா நின்றுள்ள
படை -சேனையை உடையவனாய்
வாணனை -பாணாசுரனுடைய
யாயிரம் தோளும் -ஆயிரம் தோள்களின் நின்றும்
பொழி குருதி பாயச் -ரக்தமானது மதகு திறந்தால்  போலே புறப்பட்டு ஓடும்படி
சுழற்றிய -சுழற்றின
வாழி -திரு ஆழி ஆழ்வானை நியமிப்பதில்
வல்லானுக்குப் -சமர்த்தன் ஆனவனுக்கு-தொட்ட படை எட்டும் தோலாத படையன் –
பல்லாண்டு கூறுதுமே-திருப்பல்லாண்டு பாடுவோம்

——————————————————————————————————

அவதாரிகை-

ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை
சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் –
இவர்களை அழைத்தபோது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு
வாரும் கோள் என்றும் –
நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் –
நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும்
-அவிசேஷஜ்ஞர் உபேஷிக்கும் படியாகவும் வாரும் கோள் என்று இ றே அவர்களை அழைத்தது –
நம-ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி
நாராயணாய-ஸூ சு பிரயோஜன நிவ்ருத்தி பிறக்குமே
அதில் -ஷூத்ர புருஷார்த்தத்தை விடுகையும் -அநந்ய பிரயோஜனர் ஆகையும் -நம்முடைய க்ர்த்யம்
அனுகூலர் பரிகிரஹிக்கையும் ப்ரதிகூலர் கை விடுகையும் செய்ய வடுப்பது என் என்று பார்த்து
வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே -த்யாஜ்ய உபாதேயங்கள்
இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து -அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –
திரு இலச்சினை தரித்து அடிமை செய்ய வாரீர் என்று அழைத்தாரோ -மறைத்து சொல்லி இருக்கிறார்
நாடும் நரகமும் நன்கு அறிய என்றதால்

——————————————————————————————————–

வியாக்யானம் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி என்று –
வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார ச்ம்ர்த்தியாலே ஆழ்வானைக்
கொண்டாடுகிறார்கள் –
வல்லானை மட்டுமே கண்ணனைப் பற்றி முழு பாசுரமும் திரு ஆழி ஆழ்வானை புகழ்ந்து அருளுகிறார்கள் –
தீயில் பொலிகின்ற -தீ என்கிற சப்தம் சந்திர ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் உப லஷணம் -அதில் காட்டில் தேஜஸு வர்த்திகை யாகிறது –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்கிற பரமபதத்தில் தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதில் காட்டில் அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதுக்கு பிரகாசாமாய் இ றே திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸு இருப்பது –
வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இ றே–வடிவையும் ஆர்ந்து மூடும் சோதி என்றவாறு –
தஸ்ய பாஸா சர்வ மிதம் விபாதி -என்கிற படியே அவனுடைய தேஜசாலே சர்வமும்
விளங்கா நின்றது என்னா நிற்க
ரசம் மனம் தேஜஸ் அனைத்தும் இவன் திருமேனியில் வாங்கியவை -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு இவன் பிரகாசகனாம்படி என் என்னில் –

செஞ்சுடர் –
காளமேக நிபாச்யாமமான வடிவுக்கு இருட்டு அறையிலே விளக்கு ஏற்றினால் போலே
பரபாக ரூபத்தால் வந்த ப்ரகாசத்வத்தை சொல்லுகிறது-செய்யாள் -தானே -காள மேக சியாமளன் -அவனுக்கும் ஒளி கூட்டுவாள் –

ஆழி திகழ் திருச் சக்கரம் –
இட்டளத்தில் -நெருங்கிய இடத்தில் -பெரு வெள்ளம் போலே புறம்பு போக்கற்று -தன்னிலே -மண்டல ஆகாரமாய்
கொண்டு விளங்கா நின்றுள்ள திருவாழி ஆழ்வான் -என்கை
ஸ்ரீ தேவ பெருமாள் உடைய சௌந்தர்ய அருவி நாபி வந்ததும் சுழலும் -ஸ்ரீ கூரத் ஆழ்வான் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்

சக்கரத்தின் கோயில் –
ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற மண்டல ஆகாரமான வாஸஸ்தானம்
பொறியாலே ஒற்று உண்டு நின்று -அதாகிறது
சிஹ்னத்தால் சிஹ்நிதராய் நின்று -பஞ்ச சம்ஸ்காரத்துக்கும் உப லஷணம் –
திரு இலச்சினை தரித்த பின் இ றே -இவன் ஜன்மாந்தரத்தில் போகாதே -மோஷாந்தரத்தில் போகாதே -ஸூஸ் திரனாகப் பெற்றது –
பக்தி யோக நிஷ்டன் -ஸ்வா தந்திர அபிமானம் கொண்டதால் பஞ்ச சம்ஸ்காரம் செய்யாமல் –
பெருமாளே சாஸ்திரமும் கையுமாக ஆச்சார்யர் ஆக திருவவதரித்து உள்ளார் என்று அறியாமல்
ஜன்மாந்தரங்களில் உழலுவார்கள் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ராமானுஜர் -குரு பரம்பரை-ராமர் கோஷ்டி வேற ராமானுஜர் கோஷ்டி வேற –
அபய பிரதான சாரம் விளக்கம் பொழுது கலங்கி மீண்டார்-
ராமானுஜர் கண்டு பிடித்து புகுத்தியது இல்லை இந்த பஞ்ச சம்ஸ்காரம் -பெரியாழ்வார் -அருளிச் செய்து உள்ளார் –
பூ பிரதஷிணம் பண்ணி பிராயச்சித்தம் வேண்டாம் ராமானுஜர் பிரதஷிணம் பண்ணி போக்கலாம் -யாதவ பிரகாசர் திருத் தாயார் விளக்கம் –
ஆகம விளக்கம் ஸ்ரீ கூரத் ஆழ்வான் விளக்கி அருளினார் –
மோஷாந்தரம்-கைவல்யம் -என்றவாறு –
பகவத் அங்கீகாரமும் இது-பஞ்ச சம்ஸ்காரம்- உண்டானால் இ றே அதிசயிப்பது –
அநர்ஹமான வஸ்துவை அர்ஹமாக்குவது பஞ்ச சம்ஸ்காரம் -இதுவே திருப்பு முனை -நல்ல வாழ்வுக்கு
பிடித்தேன் -பிறவி கெடுத்தேன் -பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்கும் மாயையை –அனுசந்தேய ஐதிகம் –
நடுவே வந்து உய்யக் கொள்ளும் மாயன்
போதரே என்று சொல்லி தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் அன்றோ –
ஸ்ரீ மத் த்வாரகையில் நின்றும் ஆஸ்ரித விரோதி நிரசனமாக எழுந்து அருளுகிற போது
திருவாசல் காக்கின்ற முதலிகள் -மீள எழுந்து அருளும் அளவும் இங்குப் புகுரக் கடவார் யார்
அல்லாதார் யார் -என்று விண்ணப்பம் செய்ய
சக்ரா கிங்தாஸ் பிரவேஷ்டவ்யா யாவதா கமநம் மம
நா முத்ரிதாஸ் வேஷ்டவ்யா யாவதா கமநம் மம-என்று இந்த லஷணம் உடையார் யாவர் சிலர்
அவர்கள் நிச்சங்கமாக புகுரக் கடவர்கள் –
பிரசாத பலத்தாலே பெருமாள் கைக் கொண்ட பின்பு பாவ சுத்தியும் பிறக்குமே
அஜாமலன் -பாகவத சமாகம் -நல்ல எண்ணம் பிறந்து -வருந்தி பச்சா தாபம் பட்டன் –
நாராயண திரு நாமம் சங்கீர்த்தனம் இவை கூட்டி பேறு பெற்றான்
அல்லாதாரை -பாவ பரிஷை பண்ணி புகுர விடக் கடவது என்றான் இ றே கிருஷ்ணன் -இது தான் ஈஸ்வரன் அங்கீகாரத்துக்கும் உடலாய் –
தானும் -நாம் அவன் உடைமை -என்று நிர்ப்பரனாய் இருக்கைக்கும் உடலாய் –
தான் பண்ணின பாபத்தை அனுசந்தித்து க்ரூரமாக பார்க்கக் கடவ யமாதிகளும்
அஞ்சும்படியாய் இருப்பது ஓன்று இ றே –
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம்
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்று பகவத் சம்பந்தத்துக்கு ஜ்ஞாபகமாய் இ றே இருப்பது

குடி குடி ஆட் செய்கின்றோம் –
ஸ புத்ர பௌத்ரஸ் ஸ கண -என்கிறபடியே சந்தானமாக அடிமை செய்யக் கடவோமாய் வந்தோம்

இப்படி அநன்யார்ஹராய் இருப்பார் செய்யும் அடிமை யாவது -திருப்பல்லாண்டு பாடுகை இ றே
எந்த அபதாநத்துக்கு நீங்கள் மங்களா சாசனம் பண்ணுகிறது என்னில்
மாயப் பொரு படை இத்யாதி –
எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு
பாடக் கடவோம் என்கிறார்கள்
மாயப் பொரு படை வாணனை –
ஆச்சர்யமாக பொரும் சேனையை உடைய வாணன் என்னுதல்
ஆச்சர்யமாக பொரும் ஆயுதத்தை உடைய வாணன் என்னுதல்
மாயம் -என்று க்ர்த்ரிமமாய் க்ர்த்ரிமமான யுத்தத்தை உடையவன் என்னவுமாம்

ஆயிரம் தோளும் பொழி குருதி பாய –
ஆயிரம் தோள்களாலும் மதகு திறந்தால்  போலே ரக்த வெள்ளம் குதி கொண்டு பூமிப்
பரப்படைய பரம்பும்படி -பொழிதல் -சொரிதல்
இதுக்கு இவன் பண்ணின வியாபாரத்து அளவு எது என்னில்

சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடுமுடிகள் போலே முறிந்து விழுந்தன –
வஜ்ராயுத்தத்தால் சிறகுகளை மலைகளை வெட்ட -மைனாக பர்வதம் -தெற்குக் கரையில் வைக்க -வாயு புத்திரன் -வர உதவிற்றே –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் -மச்சம் -சிலை வெட்டு -அடையாளம் -என்றவாறு –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இ றே பலமாய் விட்டது –

ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
ஆழியான் சொல்லாமல் ஆழி வல்லான் -சீமாலிகன் -பௌண்டரீக வாசு தேவன் -விருத்தாந்தம் —
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல்-கொற்றப் புள் — -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்-

பல்லாண்டு கூறுதுமே –
அத்தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்-

——————————————————————————————-

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

——————————————————————————————

அவதாரிகை –

அண்டக் குலத்தில் அழைத்த ஐஸ்வர்யார்த்திகள் இசைந்து வர -அவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறார் –
வாழாளில் அழைத்த -அநந்ய பிரயோஜனர் தங்கள் ஏற்றத்தை சொல்லிக் கொண்டு புகுந்தார்கள் -எந்தை தந்தை தந்தை-யிலே
ஏடு நிலத்தில் -அழைத்த கைவல்யார்த்திகள் -தாங்கள் திருந்திப் புகுந்தமை சொன்னார்கள் -தீயில் பொலிகின்ற -விலே
இவர்கள் தாங்கள் ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷிக்க -அநந்ய பிரயோஜனருக்கு முகம் கொடுத்தால் போலே
முகம் தந்து -அந்த ஐஸ்வர்யத்தை தந்த ஔதார்யத்துக்கு தோற்று -ஐஸ்வர்யத்தை விட்டு
சுத்த ஸ்வபவாராய் -இவ்வுதாரனை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று புகுருகிறார்கள்-
அண்டக் குலத்திலே அண்டாத்யஷத்வம் ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையாய் பேசிற்று –
அவ் ஐஸ்வர்யார்த்திகள் பேச்சான இந்த பாட்டிலே -சரீரத்துக்கு தாரக போஷக போக்யங்களை
இரந்தார்களாய் -அத்தை அவன் தந்தானாகப் பேசிற்று -இதுக்கு நிபந்தனம் இன்று
ஸ்வரூப ஞானம் பிறந்து புகுருகிறவர்கள் ஆகையாலே அதினுடைய ஷூத்ரதை
தோற்றப் பேசுகிறார்கள் –
அண்டாத்யஷனான ப்ரஹ்மாவுக்கும் -தாரக போஷக போக்யங்களே  இ றே பிரயோஜனம்
அதற்க்கு மேற்பட்ட பகவத்விபூதியை எனக்கு என்கிற அபிமானத்தால் வந்த ஸ்வரூப ஹாநியே இ றே பலம்
வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் -தாரகம் -போஷகம் -போக்யம் –

————————————————————————————————

வியாக்யானம் –

நெய்யிடை
இடை என்று நிறையாய் -நெய்யோடு ஒத்த சோறு என்னுதல்
இடை -என்று நடுவாய் -நெய்யின் இடையிலே சில சோறும் உண்டு என்னுதல்
இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
நல்லதோர் சோறும் –
சோற்றுக்கு நன்மையாவது –மடி தடவாத சோறு என்றவாறு –
இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது
தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இ றே
ஓர் சோறு –
இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை
அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை -கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி மணம் கமழும் ஸ்ரீ ஸூக்திகள்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்த யுபஹ்ருத்யம் -உள்ளன்புடன் –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இ றே இடுவது -சகலமும் சம்ஸ்ரித்தார்த்தாம் ஜகர்த்த —
ந தே ரூபம் -உனக்காக இல்லை எல்லாம் உன் அடியார்களுக்காக –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை -சுசீநி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது
துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –
பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்
த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்
இவை ஒன்றும் இன்றிக்கே -பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை-ஸ்ரீ விதுர ஆழ்வான் /ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் /ஸ்ரீ விபீஷண ஆழ்வான் —
விதுரன் இட்ட சோறு தானே ருசியாகவும் சுசியாகவும் பாவனமாகவும் இருந்ததே –

நியதமும் –
அதாகிறது –
ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுக்கிலும் அஸ்திரமாய் இருக்கக் கடவது –
அது அழிந்தவன்றும் அந்த ஐஸ்வர்யத்தை சமாதானம் பண்ணிக் கொடுக்குமவன் ஆகையாலே
நியதமும் -என்கிறது -போனத்தை ஒக்க பண்ணிக் கொடுக்கும் எங்கை –இத்தாலே இ றே -அர்த்தார்த்தி -என்றும் -ஆர்த்தன் -என்றும்
ஐஸ்வர்யத்துக்கு இரண்டு வகை சொல்லிற்று -இழந்த ஐஸ்வர்யம் மீட்டுக் கொடுக்கும் என்கை –
-அங்கன் அன்றிக்கேதேவதாந்தரங்களைப் பற்றி ஈஸ்வரனை இல்லை செய்யுமன்றும் தந் முகேன
சோறிடுமவன் என்கை -சர்வேஸ்வரன் இட்ட சோற்றை தின்று அவனை இல்லை செய்யும்
க்ர்தக்நர் இ றே சம்சாரிகள் -தன்னை இல்லை செய்யுமன்றும் ரஷிக்கும் உதாரன் இ றே சர்வேஸ்வரன்-
அவன் அபிப்ராயம் படி அனைவரும் அவன் சொத்து -தானே -மற்ற தெய்வம் அது செய்யாது -அவை பர -ப்ரஹ்மம் இல்லையே –

அத்தாணிச் சேவகமும் –
அத்தாணி -என்று பிரியாமை -சேவகம் -என்று சேவை
ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோர்-பாதி
கர்த்தவ்யம் இ றே
ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் -தந்து -என்று பிரயோஜனத்தோடு ஒக்க சொல்வான்
என் என்னில்
வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள்
நமக்கு கைங்கர்யம் புருஷார்த்தம்
ஐஸ்வர் யபரர் கைங்கர்யர் சாதனம் ஆக்கி -நெய்யிடை சோறு இத்யாதி பெற்று போவார்களே –
இவற்றுடன் அத்தாணிச் சேவகம் சேர்த்து படித்தது -மற்ற புருஷார்த்தங்கள் உடன் –
ஒரே சாதனம் மற்ற புருஷார்த்தங்கள் உடன் சேர்த்து படித்தது -வெள்ளுயிர் ஆனபின்பு சொல்லுகிறார்கள்
ஆகையாலே அந்த சாதனமும்-அத்தாணிச் சேவகமும் – ஸ்வயம்பிரயோஜனமாய் இ றே இருப்பது
-அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

கையடைக்காயும்
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போகய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இ றே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
பெருமாள் திருக்கையிலே காட்டி அருளிய அடைக்காய் -தின்னும் வெற்றிலை -போகய பதார்த்தங்கள் –
அவன் கொடுத்து அனுபவிக்கும் போக்யம்

கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இ றே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
பராவர குருக்கள் பூட்டும் ஆபரண பூஷணங்கள் ஞான பக்தி வைராக்யங்கள் –
கழுத்துக்கு பூணோடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இ றே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை-முத்தா ஹாரம் —
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்-
ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநீ -என்கிறபடியே இந்த்ரன்
வரக் காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி -பிராட்டிக்கு கொடுக்கிற போது
அத்தை வாங்குகிறவள் -பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக் கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷி தஜ்ஞா ஸ் து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் ஆகையாலே
அவனுக்கு கொடுக்கலாகாதோ -என்று அருளினார்
-ஸூ ப கே -அடியார் ஏற்றம் அறிந்து
கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உள்ளது உனக்கே யன்றோ என்ன –
சௌபாக்யம் உடையவரே -முத்து மாலை -நாடு புகழும் பரிசு என்று ஆக்கின சௌபாக்யம் –
உம்முடைய திரு உள்ளத்தால் அன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி விண்ணப்பம்
செய்ய -நான் முற்பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கல் ஆகாதோ
என்றார் -இப்படி அநந்ய பிரயோஜனனுக்கு ஆதரித்து பூட்டினால் போலே ஆய்த்து
ஷூத்ரனான என்னை ஆதரித்து பூட்டிற்றும்-
அங்கே அநந்ய பிரயோஜனருக்கு அருளினது -ஐஸ்வர் யார்த்தியாக இருந்து வந்தவர்களையும் அப்படியே பரிந்து பூட்டும் பர ப்ரஹ்மம் அன்றோ –
பெருமாளுக்கு திரு ஆபரணங்கள் எங்கும் சாத்தலாமே – -அழகன் அலங்காரன் –
அந்த நினைவாலே கழுத்துக்கு பூணும் காதுக்குக் குண்டலமும் என்று அருளிச் செய்து அருளுகிறார்

மெய்யிட
திருவடிகளில் ருசி பிறந்த பின்பு ஆகையாலே -உடம்பு த்யாஜ்யம் என்கிற நினைவு
தோன்ற குத்சித்து சொல்லுகிறபடி-
இந்த சரீரத்துக்கு போய் சந்தானம் வேற அருளுகிறானே -ஆனந்தமாக இல்லை
இது வேறயா –உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆள் இல்லையே

நல்லதோர் சாந்தமும் –
சசாதான் இதுக்கு தரமாகப் பெற்றதோ -சர்வ கந்த -என்கிற வடிவுக்கு ஸ தர்சமாக குப்ஜை
ஆதரித்து சாத்தின சாந்து போலே இருக்கும் சாந்தை அன்றோ எனக்கு இட்டது –
ஸூ கந்த மேதத் -குப்ஜை கம்சனுக்கு பரணியோடே சாந்து கொண்டு போகா நிற்க –
வாரீர் பெண் பிள்ளாய் நமக்கும் நம் அண்ணர்க்கும் சாந்திட வல்லீரோ -என்ன
அவ்வடிவையும் இருப்பையும் கண்டு ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான சாபல்யத்தாலே மறுக்க மாட்டிற்று இலள் –
இவர்கள் இடைப்பிள்ளைகள் -சாந்தின் வாசி அறிய மாட்டார்கள் -என்று ஆக்கனாய் இருப்பதொன்றை இட்டாள்-செயற்கையில் வாசனை ஏற்றப் பட்ட –
அத்தை பார்த்து -நாற்றம் கொளுத்தின படி அழகியது தளம் அழகிதன்று -என்ன
அதுக்கு மேலே யொரு சாந்தை இட
-ராஜார்ஹம் -இது கம்சனுக்கு செருக்கிலே
பூசலாம் இத்தனை வாசி அறிந்து பூசுவருக்கு ஸ்தர்சம் அல்ல -அன்றியே
வழக்கனான சாந்து-செலவுச் சாந்து – என்னவுமாம்
சுகந்தம் -செயற்கை வாசனை உள்ள சந்தனம்
சுகந்தி -இயற்கை வாசனை உள்ள சந்தனம் –
ருசிரம் -சௌகந்த்யம் கிடக்க நிறம் அழகியதாய் இருந்தது என்ன
இவர்கள் இடைப் பிள்ளைகள் என்று இருந்தோம் -சாந்தின் வாசி அறிந்தபடி என்
என்று ஆதரித்து பார்க்க
-ருசிராந நே -உன் முகத்தில் ஆதரத்துக்கு சதர்சமாய் இருக்க
வேண்டாவோ நீ இடும் சாந்து -என்ன -அவளும் தலையான சாந்தை இட –
ஆவ யோர்க்காத்ர சத்ருசம் -எங்கள் உடம்புக்கு ஸதர்சமான மேதக வஸ்துவை இட்டு-கஸ்தூரி போன்றவற்றை கலந்து-
மர்த்தித்து தா என்றான் -அதாவது -பூசும் சாந்து -என்கிற படியே உன்னுடைய ஆதரத்தாலே
ச்மச்க்ர்த்தமாக்கி தா என்றபடி
-இப்படி இவள் ஆதரித்து சாத்தின மாளிகைச் சாந்தை கிடீர் தம் திருக் கையால் என் உடம்பில் பூசிற்று

தந்து
தந்த போதை திருமுகத்தில் கௌரவத்திலும் ஔதார்யத்திலும் தோற்று ஐஸ்வர்யத்தை
விட்டு அவன் தானே யமையும் யென்னும்படியாய் தந்தது
தந்த திரு முகம் கண்டு தோற்றோம் -திருவடிகளே ஐஸ்வர்யம் என்று அறிந்தோம் –

என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –
கள்வா-பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
வெள்ளுயிர் ஆக்க வல்ல –
முன்பு ஷூத்ரனாய் போந்தான் ஒருவன் சுத்த ஸ்வபாவன் ஆனான் என்று தெரியாதபடி
அச்ப்ருஷ்ட -தீண்டாத — சம்சார கந்தரிலே ஒருவன் -என்னலாம் படி யாய்த்து விஷயீ கரித்தது
வல்ல
தன்னதொரு ஸ்வபாவ விசேஷத்தாலே வஸ்துவை வஸ்வந்தரம் ஆக்க வல்ல சக்தன் என்கை-

பையுடை இத்யாதி
மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
பொதுவாக பகைமை உள்ளவர்கள் கைங்கர்யம் செய்வதை கண்டு பொறாமை படுவார்களே -அதற்குப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார்கள் –
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் -பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் -கூறுவன் -என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்

——————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -6-திருப்பல்லாண்டு —வாழாட் பட்டு உள்ளீரேல்/ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்/-அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி/–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 17, 2016

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-

வாழ் ஆள்-கைங்கர்ய ரூபமான போகத்துக்கு-வாழ்ச்சி -என்பதே ப்ரீதி காரித கைங்கர்யம் செய்வதே
பட்டு -பொருந்தி
உள்ளீரேல்  -இருப்பீர்கள் ஆனால்–வாசுதேவாஸ் சர்வமிதி ச மகாத்மா துர்லப –
வந்து -விரைவாக வந்து
மண்ணும் -திரு முளைத் திரு நாளுக்குப் புழுதி மண் சுமக்கையும்
மணமும்  -அந்தக் கல்யாணத்துக்கு அபிமாநியாய் -மண்ணை எடுத்து வரப் பெற்றோமே என்று அபிமானித்து மகிழ்ந்து -இருக்கையும்
கொண்மின் -நீங்கள் ச்வீகரியும் கோள்
கூழ் -சோற்றுக்காக
ஆள் பட்டு -அடிமை ஓலை எழுதிக் கொடுத்து
நின்றீர்களை -கண்ட இடம் எங்கும் நிற்கிற உங்களை-எங்கும் பரந்து இருக்கிறீர்களே –
எங்கள் குழுவினில் -அநந்ய ப்ரயோஜனரான எங்கள் திரளிலே
புகுதல் ஓட்டோம் -சேர ஓட்டோம்
உங்கள் திரளுக்கு வாசி என் என்ன –
ஏழாட் காலும்-முன் ஏழ் பின் ஏழ் நடு ஏழ் ஆகிய இருப்பதொரு தலைமுறையிலும்
பழிப்பிலோம் -ப்ரயோஜன பரர் என்றும் -சாதனாந்த பரர் என்றும் -பழிக்கப் படாதவர்கள் என்ன
நாங்கள்
அது உங்கள் தொழில் கண்டு அறிய வேணும் என்ன
இராக்கதர் வாழ் -இராட்ஷசர் வர்த்திக்கிற
இலங்கை -இலங்கையானது
பாழாளாகப் -ஆள் பாழாம் படியாக-பாழடைந்த ஆள் உள்ளவாக –
படை -யுத்தத்திலே
பொருதானுக்கு-அன்று எதிரிகள் அம்பு மார்விலே தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே -இன்று இருந்து மங்களா சாசனம் பண்ணிப் போருவோம்
சிலர் நாங்கள் என்கிறார் –

————————————————————————————————
அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார்
இனிமேல் தம்முடைய மங்களா சாசனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள்
மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து –
சதுர்விதா -என்றது ஐஸ்வர் யாதிகள் இரண்டு வகை -என்பதால் -ஆர்த்த -அர்த்தார்த்த -ப்ரஷ்ட ஐஸ்வர்யகாமன் /அபூர்வ ஐஸ்வர்யகாமன்
மூடர் –தாழ்ந்தவர் –மாயப் பேச்சால் புத்தி கலந்கினவர் -அசுரர் நால்வர் -வர மாட்டார்கள் -ஸ்ரீ கீதை
அசித் பிரதான்யம் -ஐஸ்வர் யார்த்தி / சித் பிரதான்யம் -கைவல்யார்த்தி /ஈஸ்வரன் பிரதான்யம் -பகவத் லாபார்த்தி
மூவரில் முதல்வரான பகவத் லாபார்த்திகளை அழைக்கிறார்
-அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர் ப்ரத்யாசன்னர் -அருகில் –ஆகையாலே அவர்களை அழைக்கிறார்
-ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே அழைக்கிறார் என்றுமாம்
இனியது தனி அருந்தேல்-எல்லோரும் -சரியான வார்த்தை இல்லை எல்லாரும் -என்பதே சரி –
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இ றே இருப்பது
இத்தால்
அவன் வைலஷ்ண்யம் உந்த -அபரியாப்தல் ஆதல்
இவர்கள் இழவு-இனியது அருந்தாமல்
தன் செல்லாமை
மூன்றாலும் அழைக்கிறார்

————————————————————————————————
வியாக்யானம்-

வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி -நாய் தொழில் –என்னக் கடவது இ றே
சேஷத்வம் துக்க ரூபம் உலகில் -அபிமத விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே —
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -உபாசக நிஷ்டர் –அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்
துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –

பட்டு -எனபது
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்

நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு-ஓடினேன் ஓடி –
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –
கிருபாவசப் பட்டு -கர்மவசம் தவிர்ந்து -வாழாள் பட்டால் நின்றீர் கூழாள் பட்டு திரிந்து என்றவாறு

உள்ளீரேல்
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-
வாசுதேவாஸ் சர்வம் இதி மகாத்மா -ஸ்ரீ கிருஷ்ண சித்தாந்தம் -ஸூ துர்லப –
பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -நம்மாழ்வார் -திருவவதாரம் -திருக் குருகைப் பிள்ளான் சாதிப்பாராம்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்
தேட்டமாய் இ றே இருப்பது –
இந்த யதி–ஆல் -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-

அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது-குன்றம் எடுத்த பிரான் அடியார் உடன் ஒன்றி நிற்க ஆசைப் படுவாரே ஆழ்வார்-
மண்ணும் மணமும் கொண்மின் -என்கிறார் –
மண்ணுக்கும் மணத்துக்கும் உரியார் அந்தரங்கரான அடியார் இ றே
அடிமை விலையோலை எழுதும் பொழுதும் -மண்ணுக்கும் மணத்துக்கும் உரியனாக வேணும்
என்று இ றே எழுதுவது –
மண்ணாவது -ஸ்வாமிக்கு ஒரு மங்களம் உண்டானால் அங்குரார்ப் பணத்துக்கு புழுதி மண் சுமக்கை
அந்த ந்யாயத்தாலே இ றே நம் ஆழ்வார்களுக்கு –சேனை முதலியார் -திரு ஆழி ஆழ்வான் –அது க்ர்த்யம் ஆகிறது
அனந்தாழ்வான் மண் சுமந்த ஐதிகம் -திருவேங்கடமுடையான் -கைங்கர்ய ஆசை கொண்டு –பேக் சவாரி உத்சவம் –
மணமாவது -அந்த கல்யாணத்துக்கு தான் அபிமாநியாய் இருக்கை
இவ்விரண்டும் சர்வ கைங்கர்யத்துக்கும் உப லஷணம்
கொண்மின் -என்ற இடத்தால் -வாங்குமின் என்னாது கொள்மின் என்றது –
அடிமை செய்யுமிடத்தில் கிடந்தானை கண்டேறுகை-ஸ்வ தந்த்ரனாகை -யன்றிக்கே  சிலர் தரக் கொள்ள
வேணும் யென்கையும் -தருமவர்களும் -உங்களதான அடிமையை நீங்கள் ச்வீகரியும் கோள்
என்று சீரிதாகக் கொடுக்கக் கடவர்கள் யென்கையும் ஆகிற சாஸ்த்ரார்த்தையும் வெளியிடுகிறது-
குருஷ்மமாம் -கிரியதாம் மாம் வாத -முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -பொறு சிறைப் புள் உவந்து ஏறும் -இருவருக்கும் ஆனந்தம் –
தாத்ருத்வம் பிரதிக்ருஹீத்வம் -தானம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் மமகாரம் கூடாது –

கூழ் ஆள் இத்யாதி
இவர் அழைத்த வாசி அறியாதே பிரயோஜனாந்தபரர் அடையப் புகுர தொடங்கிற்று –
அவர்களை நிஷேதிக்கிறார் -கூழ் ஆள் -என்று சோற்றுக்காக யாரேனுக்கும் தன்னை
எழுதிக் கொடுக்கை -இது பிரயோஜனாந்த பரருக்கும் உப லஷணம் -தன்னை பகவத் தாஸ்ய
ஏக போகன் -என்னுமிடம் அறியாதே பிரயோஜனாந்தரங்களைக் குறித்து அவன் தன்னையே
ஆஸ்ரயிக்கிறார்கள் இ றே –
கூழ் ஆள் -என்று அநந்ய பிரயோஜனராய் இழிந்து பிரயோஜநாந்தரங்களை வேண்டிக் கொள்ளும்
இரு கரையரைச் சொல்லுகிறது -என்றுமாம் –

பட்டு -என்றது
அகப்பட்டேன்  -என்றபடி –
அதாவது பந்தகம் ஆகையாலே -ஸ்வரூப விரோதியாய் அனர்த்தததை பண்ணும் என்னுமத்தாலே சொல்லுகிறது –

நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே பார்த்த பார்த்த
இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை

எங்கள் குழு -என்று
இத் திரளுக்கு உண்டான வ்யாவ்ர்த்தி தோற்ற அருளிச் செய்கிறார் –
தேகாத்ம அபிமாநிகள் -தேவதாந்திர ப்ரவணர் -இவ்விஷயம் தன்னிலே புகுந்து
பிரயோஜநாந்தரங்களை அபேஷிப்பார் -அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தரங்களிலே
அநந்ய பரராய் இருப்பார் ஆகிற திரள்கள் எல்லாவற்றிலும் வ்யாவர்த்தமாய் அன்றோ
எங்கள் திரள் இருப்பது என்கிறார் –

புகுதல் ஓட்டோம் –
ஆரே புகுவார் -என்று ப்ரார்த்திக்கிற இவர் -நிர்த்தயரைப் போலே புகுதல் ஒட்டோம்
என்பான் என் என்னில் -வசிஷ்டன் பரம தயாளன் ஆனாலும் சண்டாளனை அக்நி
கார்யத்திலே கூட்டிக் கொள்ளான் இ றே
இத்தால் அநந்ய பிரயோஜனருக்கு பிரயோஜன பரரோட்டை சஹ வாஸம் அசஹ்யமாய்
இருக்கும் என்றது ஆய்த்து-
அதிகாரி பேதம் ஏற்படும் என்று ஆளவந்தார் பெருமாள் சேவிக்க போகாத ஐதிகம் -அவள் சென்ற பின்னே உள்ளே புகுந்தார் –

எங்கள் திரளில் காட்டிலும் உங்கள் திரளுக்கு வாசி என் என்னில் –
ஏழ் ஆள் காலும் பழிப்பிலோம் -என்கிறார்
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது-
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படி காலைச் சொல்லுகிறது
தசபூர்வாந் தசாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ்வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது-

பழிப்பிலோம் –
விஷயாந்தர ப்ராவண்யம் என்ன -தேவதாந்தர பஜனம் என்ன -இவை தூரதோ நிரச்தம்
ஆகையாலே பதர் கூட்டித் தூற்ற வேண்டா
இனி அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருப்பாருக்கு பழிப்பு ஆவது
பிரயோஜனாந்தர பரதையும் சாதநாந்தர பரதையும் இ றே
அவற்றை உடையோம் அல்லோம் என்கிறார்-
நாமே பற்றினோம் நம் ஆனந்தத்துக்கு என்ற குறைகள் இல்லை என்றவாறு –

நாங்கள்
எங்கள் குழுவு -என்ற போதை செருக்குப் போலே பகவத் விஷயீ காரத்தால் வந்த செருக்கு
தோற்ற சொல்லுகிறார் –
உங்கள் ஸ்வரூபம் நீங்கள் சொன்ன அளவில் விஸ்வசித்து இருக்குமத்தனை யளவு
யடியோம் அல்லோம் -உங்கள் வ்ர்த்தி விசேஷத்தைக் கொண்டு உங்களை அறிய வேணும் என்ன –
அது நீங்கள் அறியும் புடை யல்ல -எங்கனே என்னில் -ஒரு கார்யப்பாடாக உள்ள அமங்களங்கள்
போக மங்களா சாசனம் பண்ணும்படி யாதல் -இல்லாத மங்களங்கள் உண்டாக வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணுதல் செய்யும் அளவு இ றே நீங்கள் அறிவது -முன்பு வ்ய்ர்த்தமாய்
கழிந்த செயலுக்கு இன்று இருந்து வயிறு பிடிக்கும் திரள் காண் எங்களது-

இராக்கதர் வாழ் இலங்கை –
துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்-இவர்கள் அபிப்ராயத்தால் வாழும் –
புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும்
மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை
இலங்கை தான் விபீஷண விதேயம்  இ றே -இலங்கை பாழ் ஆக என்னாதே -இலங்கை ஆள் பாழ் ஆக என்றது –
இனி ந நமேயம் என்ற ராவணனையும் அவனுடைய அதிக்ரமத்துக்கு துணையான ராஷசரையும்
அழியச் செய்து -ஸ்மஸாந சத்ரு ஸீ பவேத் -என்று பிராட்டி அருளிச் செய்த படியே
அவ் ஊரை மூலையடியே போம் படி பண்ணினான்-

படை பொருதானுக்கு –
இப்படி செய்தது ஈஸ்வரத் பெடாரான சங்கல்ப்பத்தால் அன்றிக்கே எதிரிகள் அம்பு மார்விலே
தைக்கும்படி பொருதவனுக்கு-

பல்லாண்டு கூறுதுமே
அப்போதை கையும் வில்லுமாய் சீறிச் சிவந்து எதிரிகள் மேலே வியாபாரிக்கும் போதை-கோபச்ய வசம்-
உருக்கெட வாளி பொருந்தவன் –திருக்கடித்தானம் -தாயப்பதியே –கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -ஏற்றுக் கொண்ட கோபம் –
ஆகர்ஷகமான வடவு அழகுக்கு மங்களா சாசனம் பண்ணிப் போருவோம் சிலர் காண் நாங்கள் -என்கிறார்
ராகவார்த்தே பராக்ராந்தாந ப்ரானே குருதே தயாம் -என்கிறபடியே அக்காலத்தில்
முதலிகளுக்கு அம்புக்கு இறாய்க்கப் பணி போருகையாலே அக்காலத்திலே
மங்களா சாசனம் பண்ணுவாரைப் பெற்றது இல்லை அவகாசம் இல்லாமையாலே வானர முதலிகள் பல்லாண்டு பாட வில்லை
-பிராட்டி பிரிந்த போதே நம்குடி இருப்பு பெற்றோம் என்ற ப்ரீதியாலே பிரமாதிகள் அந்ய பரர் ஆனார்கள் –
அக்காலத்தில் –15 லஷம் வருடங்கள் முன்பே -மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –

—————————————————————————–

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

ஏடு -பொல்லாங்கான-பாலில் ஏடு போலே தாழ்ந்த தோஷம் உடைய மசானத்தில் –
நிலத்தில் -மூல பிரக்ருதியிலே
இடுவதன் முன்னம் -சேர்ப்பதருக்கு முன்னே
வந்து
எங்கள் குழாம் -அநந்ய பிரயோஜனரான எங்கள் திரளிலே
புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் -கூட வேண்டும் என்ற நினைவு உடையவர்களாய் இருப்பீர் ஆயின்
வரம்பு ஒழி -வரம்பு ஒழிய
வந்து ஒல்லைக் கூடுமினோ -விரைவாக வந்து சேரும் கோள்
நாடு -நாட்டில் உள்ள அவிசேஷஜ்ஞரும்
நரகமும் -நகரத்தில் உள்ள விசேஷஜ்ஞரும்
நன்கு அறிய -நன்றாக அறியும் படி
நமோ நாராயணா என்று
பாடும் -பாடத்தக்க
மனமுடை-மனஸ் உண்டாம்படியான
பத்தர் உள்ளீர் -பிரேமத்தை உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூறுமினே -வந்து பல்லாண்டு பாடும் கோள் என்கிறார்

———————————————————————————————————
அவதாரிகை –

ஏடு இத்யாதி –
கீழே அநந்ய பிரயோஜனரை அழைத்தார் -அவர்கள் மங்களா சாசனத்துக்கு பிரத்யாசன்னர்
ஆகையாலே நீரிலே நீர் சேர்ந்தால் போலே சேர்ந்து இருக்கும் இ றே -அவ்வளவிலும்
பர்யாப்தி பிறவாமையாலே -ஈஸ்வரன் கை பார்த்து இருக்குமவர்கள் -என்னும் இவ்வளவைக்
கொண்டு ஆப்த ப்ராப்தி காமரையும் ஐஸ்வர்ய காமரையும் அழைக்க கோலி -அதில்
முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார் -ஐஸ்வர்யத்தில் காட்டில் ஆத்ம ப்ராப்தி
உத்க்ர்ஷ்டம் என்றும் நினைவாலே அழைக்கிறார் அல்லர் -அந்த மோஷத்தை இவர் அநர்த்தம்
என்று இருக்கையாலே -இனி எத்தாலே முற்பட அழைகிறது என்னில் –
பகவத் சம்பந்தத்துக்கு உபகரணமான சரீர மோஷம் அணித்தாகையாலும் -அம் மோஷத்தை
ப்ராபித்தால் மீள ஒண்ணாமை யாலும் -ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்
அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணோ பேதரை இ றே இவர் அழைக்கிறது -மனம் உடையீர் என்பதால் –

—————————————————————————————————
வியாக்யானம் –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்
ஏடு– பொல்லாங்கு –சூஷ்ம சரீரம் –சரீரம் மூன்று அர்த்தங்கள்
நிலம் -சமாசனம் பிரகிருதி -இரண்டு அர்த்தங்கள் –
ஏடு எனபது பொல்லாங்கு -உங்களைப் பொல்லாங்கு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்று பிள்ளை அமுதனார் –
ஏடு -என்கிற சூஷ்ம சரீரத்தை –
ஸ்தூல சரீரத்தை காட்டில் பிரதானமாய் -அதனுடைய பிரயோஜனமாய் நிற்கையாலே -பாலில் ஏடு -என்னுமா போலே -சொல்லுகிறது
நிலத்தில் இடுவதன் முன்னம் –
ஸ்வ காரணமான மூல பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னே –
பலரூபமாய் –பூர்வ பூர்வ சரீரம் –கர்ம த்வாரா ஹேதுவாக உத்தர உத்தர சூஷ்ம சரீரம் –ஆத்மா கர்ம வாசனை இந்த்ரிய சூஷ்மம் கூட போகுமே –
பிரளயம் பொழுது -சூஷ்மம் போகும் –
சிருஷ்டி பொழுது ஸ்தூலம் கிட்டி -மீண்டும் சூஷ்மம் ஆத்மா கர்மா வாசனை அழியாது –
மோஷம் பொழுது தான் கர்மா வாசனை போகும் -ஆத்மா மட்டுமே இருக்கும் –
நிலத்தில் இடுவது பிரக்ருதியில் சேருவது –
இது நிர்வஹித்து போரும்படி
ஏடு -என்று உடம்புக்கு பேராய் -ஸ்தூல சூஷ்ம ரூபமான சரீரம் ஸ்வ காரணமான
மூல பிரக்ருதியிலே லயிப்பதருக்கு முன் என்னவுமாம் –
இவ்வாக்யத்தால் அவர்கள் அநர்த்தத்தை கண்டு அழைக்கிறார் என்னும் இடம் தோற்ற இருக்கிறது இ றே

வந்து
ஸ்வதந்த்ரராய் இருப்பாருக்கு தம்மளவிலே வரும் இடத்தில் உண்டான தூரத்தை சொல்லுகிறது
மனஸ் உடையீர் என்றாலும் -உயர்ந்த கதி வேண்டும் -என்ற நினைவு இருந்தாலும் -ஸ்வ தந்த்ரனாய் இருப்பவன்
ஆழ்வார் அளவும் வர வேண்டிய தூரம்
வந்து -நீண்ட தூரம் -பிரபல விரோதி கழியும் அளவும் உண்டே

எங்கள் குழாம் புகுந்து –
கேவலரும் ஒரு சமஷ்டியாய் இறே இருப்பது -அது ஸ்வதந்த்ரம் ஆகையாலே அந்யோன்யம்
சேர்த்தி அற்று இருக்கும் -ஒருத்தருடைய ச்ம்ர்த்தி ஒருத்தரதாய்  இ றே இத் திரள் இருப்பது –
பரஸ்பர நீஸ பாவை -என்னக் கடவது இ றே

இத்திரளில் புகுவாருக்கு எவ்வதிகாரம் வேணும் என்னில்
கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
அவி லஷணமான புருஷார்தங்களுக்கு புரச் சரணங்கள்-உபாசன அங்கமான தீர்த்த யாத்ரைகள் போல்வன -கனக்க வேண்டி இருக்க
அதில் விலஷணமான இத் திரளிலே புகுருகைக்கு புரச் சரணம் வேண்டாது இருப்பது என்
என்னில் -அவை அப்ராப்த புருஷார்த்தங்கள் ஆகையாலே புரச் சரணங்கள் அபேஷிதங்களாய் இருக்கிறன
இது ஸ்வரூப ப்ராப்தம் ஆகையாலே வேண்டா –
மாதா பிதாக்களை அனுவர்த்திக்கைக்கு இச்சை ஒன்றே வேண்டும் –
மற்று ஒன்றும் வேண்டா மனமே
ஆசை உடையார்க்கு –வரம்பு அறுத்தார் -இச்சை ஒன்றே தேவை -பாவனை அதனில் கூடல் அவனையும் கூடலாமே –
உடையீர்கள்
இந்த இச்சையால் வந்த பிரயோஜன அதிசயத்தாலே -வைஸ்ரவணன் -என்னுமா போலே
அருளிச் செய்கிறார் –
உடையீர்கள் என்னும் மதுப்பில் பூமாவில் ஆக்கி -இதை விட பெரியது இல்லை என்றவாறு -மதுப் ப்ரத்யயம் –
கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்

வரம்பு ஒழி வந்து
வரம்பு ஒழிய என்கிற இது வரம்பு ஒழி -என்று கிடக்கிறது-கடைக் குறைச்சல்
சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனாய் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
அனுபவிக்க இட்டுப் பிறந்தவன் -ஜரா மரண மோஷாயா -என்று ஸ்வ அனுபவத்தளவிலே
ஒரு வரம்பை இட்டுக் கொண்டான் இ றே -அத்தை ஒழிந்து வாரும் கோள் -என்கிறார் –

ஒல்லைக் கூடுமினோ –
பற்றுகிற புருஷார்தத்தின் உடைய –பல்லாண்டு பாடும் சீர்மையை –வை லஷண்யத்தை அனுசந்தித்தால் பதறிக் கொண்டு
வந்து விழ வேண்டாவோ –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்றது சரீரத்தில் அஸ்தைர்யத்தை பற்ற –
இங்கு ஒல்லை -என்கிறது -பற்றுகிற விஷயத்தினுடைய வை லஷண்யத்தைப் பற்ற –
கூடும் மனம் உடையீர்கள்  -என்றும் -கூடுமினோ -என்றும் -அருளிச் செய்கிறார் இ றே
யோக்யதையைப் பற்ற –
வாருங்கோள் என்னால் கூடுமின் -என்றது கூடி இருந்து பிரிந்து போனவர்களை சொல்லுமாறு அருளிச் செய்கிறார்
சேஷ பூதர்கள் தானே –
பகவத் சேஷ பூதர் -மறந்து ஞான ஆனந்த மயம் என்று உணர்ந்து தேக விலஷணம் ஆத்மா என்று உணர்ந்தவர்கள் –
அத்திரளில் நின்றும் -பிறிகதிர் பட்டார் சிலர் இவர்கள் என்றும் தோற்றும் இ றே
ஸ்வரூபம் வெளிச் செறித்தக்கால் -விளங்க நிற்றல் –

நாடு நகரமும் நன்கறிய –
இத்திரளிலே புகுருகைக்கு வேண்டுவன அருளிச் செய்தார் –
மனம் உடையீர் என்கிற இதற்கு ஸ்ரத்தையே அமையும் –
மர்ம ஸ்பர்சி -இது அன்றோ -நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
இதுக்கு மேல் மங்களா சாசனத்துக்குவேண்டுவன அருளிச் செய்கிறார் –
நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது -நாட்டுப்புரன் பகவத் விஷயம் அறியாதவர் –
நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்-

நன்கறிய –
நன்றாக அறிய –
பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக
விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாக கருதுவர் -அதுவே ஹேதுவாக -ஆதலால் -ஆழ்வார் கைக்கொண்டார் -போலே
நாட்டார் கை விட நகரத்தார் கை கொண்டார்
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்

நாமோ நாராயணா என்று –
இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
எனக்கு உரியன் என்ற நிலை விட்டு அவனுக்காக கைங்கர்யம் பிரார்த்தித்து பெற வேண்டுமே-
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இ றே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இ றே புருஷார்த்தம் ஆவது –

பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது-அடுத்த படி ஏத்துக்கிறார்-கூடும் மனம் மட்டும் போராதே
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்

வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத்திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப்பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்–கூடுதல் பாடுதல் இரண்டு வினைச் சொல் என்றபடி –

———————————————————————————————————-

அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-

அண்டக் குலத்துக்கு -அண்ட சமூஹத்துக்கு-50 கோடி யோஜனை தூரம் -14 லோகங்கள் -ஒரு அண்டம் –
அதிபதி யாகி -தலைவனாய்
அசுரர் ராக்கதரை -அஸூர ராஷசர்கள் உடைய-ரஜஸ் தமஸ் குணங்கள் கொண்டவர்கள் –
யிண்டைக் குலத்தை -நெருங்கின திரளை
யெடுத்து-சேரத் திரட்டி
களைந்த -நிர்மூலமாகப் போக்கின
விருடிகேசன் தனக்கு-இந்திரியங்களை தன் வசமாக நடத்துமவனுக்கு
தொண்டைக் குலத்தில் -அடிமை செய்யும் குலத்தில்
உள்ளீர் -உளரான நீங்கள்
வந்து
அடி -சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுது
ஆயிரம் நாமம் -அவன் திருநாமங்கள் எல்லாம்
சொல்லி-வாயாரச் சொல்லி
பண்டைக் குலத்தை -பகவத் விமுகராய் இருந்த பழைய ஜாதியை
தவிர்ந்து-நான் எனது என்ற நினைவோடு விட்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -அநேகம் ஆயிரம்  சம்வஸ்தரங்கள்
நித்தியமாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்

———————————————————————————————–

அவதாரிகை –

முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார்
கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும்
கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை
அழைக்கிறார்-

————————————————————————————————

வியாக்யானம் –

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி –
தேவதைகள் உடைய ஐஸ்வர்யத்துக்கு எல்லாம் மேலான அண்டாதிபத்யம் இ றே
ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லை
அந்த ப்ரஹ்மா ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் ப்ரகாரம் சொல்லுகிறது
அண்டாதி பதயே நம -என்று இ றே இப்பத ப்ராப்திக்கு சாதன மந்த்ரம் -அந்த அண்ட
ஐஸ்வர்ய விசிஷ்டனாய் இ றே சர்வேஸ்வரனை அனுசந்திப்பது -வ்யாஹ்ர நமநுஸ்மரன் –
என்கிறபடியே இம் மந்த்ரத்தை சொல்லவும் -நெஞ்சாலே ஐஸ்வர்ய விசிஷ்டனாக
அனுசந்திகவும் மாய் இ றே ஆஸ்ரயண பிரகாரம் இருப்பது
அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே

அண்டக் குலத்துக்கு அதிபதியான ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது -ஆஸ்ரயண பிரகாரம் தோற்ற இருந்தது
இல்லையே என்னில் -உதாரனாய் இருப்பான் ஒருவன் கையிலே எலுமிச்சம் பழம்
இருந்தால் -இது இருந்த அழகு என் -என்று சொன்ன அளவிலே –
பாவஜ்ஞ்ஞனாய் இருக்குமவன் -கொள்ளலாகாதோ -என்று கருத்து அறிந்து கொடுக்கும் இ றே -அப்படியே
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
வாசகம் இல்லாவிடிலும் சூ சகம் உண்டே –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து -உதாரா -என்னுமவனுடைய ஔதார்யம் பிரகாசிக்கிறது-
சதுர்வித மக்களையும் –உதாரா என்கிறான் ஸ்ரீ கீதையில் –

அண்டக் குலத்துக்கு –
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் -என்று தொடங்கி -கோடி கோடி சதா நிஸ -என்று
அசங்க்யாதமான அண்டங்களுக்கு நிர்வாஹன் ஆகையாலே அபேஷிக்தார் அபேஷித்த
அண்டங்களை கொடுக்கைக்கு உடைமையை சொல்லுகிறது
அதிபதியாகி –
உபய விபூதிக்கும் நிர்வாஹன் ஆகை
ஆகி –
ஆஸ்ரிதர் தன்னை அனுசந்தத்தித்த அளவிலே யாயிருக்கை –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்தித்தால் அவ்வளவாய்–அவ்வளவே யாய் – இருக்கும்
கைவல்யார்த்தி அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்

அசுரர் இராக்கதரை
இப்பதத்துக்கு அசுரர்களாலே வேத அபஹார ஆபத்துக்களில் களை யறுத்துக் கொடுக்கையும்
ரஷகனுக்கு பரம் இ றே -ஆர்த்தன் -என்றும் அர்த்தார்த்தி -என்றும் -ஐஸ்வர்ய புருஷார்த்தம்
இரண்டு முகமாய் இ றே இருப்பது -அதில் அர்த்தார்தியை கீழே சொல்லி -இவ் வம்சத்தினாலே
ஆர்த்தனை -இழந்த ஐஸ்வர்யகாமர் -சொல்லுகிறது -ஜன்ம ப்ரப்ர்த்தி பரா நர்த்தமே பண்ணிப் போருவது இரண்டு வர்க்கம் இ றே –
சம்பந்தம் ஒத்து இருக்க நிரசநத்திலே இழிகிறது ஆஸ்ரித விரோதிகள் என்று இ றே

இன்டைக் குலத்தை
மிகவும் நெருங்கின திரளை -இண்டர் -என்று சண்டாளர் –
இவர்களை சண்டாளர் என்று சொல்லுகிறது -நிஹீனர் என்னும் நினைவாலே
உத்க்ர்ஷத்துக்கு எல்லை -பர ச்ம்ர்த்தி ஏக பிரயோஜனாய் இருக்கை
நிகர்ஷத்துக்கு எல்லை -பர அனர்த்தமே யாத்ரையாய் இருக்கை
இவ் வாபத்துக்களிலே அஸூர சத்ரவே நம -என்று இ றே இவர்களுடைய
ஆசஸ்ரயண பிரகாரம் இருப்பது

எடுத்துக் களைந்த
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்னுமா போலே ஆஸ்ரிதர் பக்கல் அழல்
தட்டாதபடி நிரசிக்கை -களைந்த என்றால் போதாதோ எடுத்துக் களைந்த என்றது பொல்லா அரக்கன் போலே –
இலங்கை பாழாளாக -என்றதும் -விபீஷண பரிக்ரஹத்துக்கு ஒரு நோவு வராதபடி இ றே
விபீஷண க்ரஹத்துக்கு அழல் தட்டாதபடி இ றே லங்கா தஹனம் பண்ணிற்று திருவடியும்

இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் –
தன் பக்கலிலே ந்யச்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்-எங்கள் மேல் சாபம் இழிந்து -என்போம் –
ஆதாரம் பெருக வைக்கும் அழகன் அன்றோ –

தனக்குத் தொண்டைக் குலத்தில் உள்ளீர் –
தனக்கு -என்று இவ்வளவு நாளும் தனக்கு என்று இருந்தவன் இப்பொழுது இருடீகேசன் தனக்கு என்று ஆனான் –
இப்படி ஐஸ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் பிரேம யுக்தர் உடைய திரளிலே உளரான நீங்கள்
தொண்டக்குலம் என்று தனியே ஒரு சந்தானம் போலே காணும்
தேஹமே ஸ்வரூபம் என்று இருப்பாருக்கும் -சேஷத்வமே ஸ்வரூபம் -என்று இருப்பாருக்கும்
இத்தனை வாசி உண்டு இ றே –

இனி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு க்ர்த்த்யம் இன்னது என்கிறார் மேல்
வந்தடி தொழுது –
திருவடிகளே பிரயோஜனமாக வந்து -அநுகூல வ்ர்த்திகளைப் பண்ணி -ஐஸ்வர்யமே பிரயோஜனமாய்
விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படி பாரும் கோள்
ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இ றே-அண்டாதிபதையே நம அசுர சத்வே நம –
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள்
எல்லாம் போக்யமாய் இ றே இருப்பது -அவற்றை வாயாராச் சொல்லி –

பண்டைக் குலத்தை தவிர்ந்து
தொண்டைக் குலத்தை வந்து அன்வயித்தவாறே -மமேதம் -என்று இருந்த காலம் ஜன்மாந்தரமாய்
தோற்றும் இ றே -ஒரு ஜன்மத்தில் த்விஜன்மன் ஆகிறான் இ றே ராஜர்ஷியான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மர்ஷியானான் இ றே
அங்கு தபஸாலே வர்ண பேதம் பிறந்தது–இங்கு பகவத் ப்ரசாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது
உனக்கு நான் -என்ற அநந்தரம் -நான் எனக்கு -என்ற விது வ்யதிரேகமாய் தோன்றும் இ றே

பல்லாண்டு –
இப்படி அநந்ய  பிரயோஜனரான நீங்கள் மங்களா சாசனம் பண்ணும் கோள்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு சம்ருத்தியை ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே
என்று அவன் குளிர நோக்கும் -கடாஷத்தால் பண்டைக் குலம் தவிர்ந்து தொண்டைக் குலம் ஆக்குவான்

பல்லாயிரத்தாண்டு என்மினே
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே –உக்தி மாத்ரத்தாலே —ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு ச்ம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-