ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்
இச் சப்தங்களுக்கு அர்த்த பேதம் இல்லையோ என்னில் -ப்ரவர்த்தி நிமித்த பேதத்தால் வரும்
விசேஷம் உண்டானாலும் -விழுக்காட்டில் ஆத்ம ஸ்பர்சியாய் தலைக் கட்டுகையாலே பர்யாயம் ஆகிறது –
ஜிதம் -என்று அவனாலே தன் அபிமானம் போனபடியை இசைந்து அத்தலையில் வெற்றிக்கு மேல்
எழுத்து இடுபவன் வ்யவஹாரம் -இத்தால் ஸ்வரூப பிரகாசதத்தால் அல்லாது அபிமானம்
போகாமையாலே இச் சப்தமும் விழுக்காட்டால் ஸ்வரூப வாசி யாகிறது
நம -என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்
இதுவும் ஸ்வரூப பிரகாசத்தால் அல்லது கூடாமையாலே ஸ்வரூப ஸ்பர்சியாகிறது
தோற்றோம் -என்கிறது அத் தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்
அதுவும் அஹங்கார நிவ்ருத்தியிலே அல்லது சம்பவியாமையாலே ஸ்வரூப ஸ்பர்சி யாகிறது
போற்றி -என்று தன்னை பேணாதே அத் தலையில் சம்ர்த்தியே பேணுமவன் வ்யவஹாரம்
இது ஸ்வரூப அனுரூபம் இறே
பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே அத தலையில் ச்ம்ரத்தியே நித்யமாக செல்ல வேணும்
என்று இருக்குமவன் வ்யவஹாரம்
ஆக இச் சப்தங்கள் ஸ்வரூபத்தையும் -ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியையும்
பிரகாசிப்பிக்கையாலே ஸ்வரூப அனுபந்தி யாகிறது
------------
ஸ்ரீ அருளிச் செயல்களில் பல்லாண்டு பத பிரயோகங்கள்
பல்லாண்டு (22)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு - நாலாயி:1/1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு - நாலாயி:1/1
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு - நாலாயி:2/1,2
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு - நாலாயி:2/2,3
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே - நாலாயி:2/3,4
பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:3/4
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே - நாலாயி:4/4
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே - நாலாயி:5/4
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே - நாலாயி:6/4
பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:7/4
பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே - நாலாயி:8/4
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:9/4
பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே - நாலாயி:10/4
பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே - நாலாயி:11/4
பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் - நாலாயி:12/1
பல்லாண்டும் (1) பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4
பல்லாண்டே (2) படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/4
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4
————
வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல செய்த கரும் தழைக் காவின் கீழ்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமணன் என்னைப் புறம் புல்குவான் – 1-9-5- –
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப–சங்கைஸ் ஸூராணாம்-என்றும் திசை வாழி எழ -என்றும் சொல்லுகிறபடியே – திக்குகள் தோறும் அனுகூலரானவர்கள் பண்கள் பலவற்றாலும் பாடி மங்களா சாசனம் பண்ண – இசைப்ப என்ற -சொல்ல என்றபடி
– ————
திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -3 -3-9 –
பண்ணோடு கூடின அழகிய மொழியை உடையவர்களை -அழைத்து -திரு முளை சாத்தி -மங்களா சாசனம்
பண்ணுவித்தேன் –
———-
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 -2-2 –
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – –அநந்ய பிரயோஜனரோடு –
பிரயோஜனாந்தர பரரோடு-
அநந்ய சாதனரோடு –
சாதனாந்த பரரோடு -வாசி அற-எல்லாருடைய இடங்களிலும் – திரு மலையில் உள்ள பரப்பு எங்கும் -வ்யாப்தமாய் கொண்டு –
மங்களா சாசன த்வனி நடந்து செல்லா நிற்கும்
———-
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்–
பல்லாண்டு இசைப்பாரே ––
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –
உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும் –
———
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-5-
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப – ஆனை குதிரை தேர் காலாள் கூட்டி
அவை கொண்டு பிரதி பஷத்தை அழியச் செய்து
அவ் வழியாலே ஐஸ்வர் யத்தையும் தன்னதாக்கிக் கொள்ள வேண்டும் அது அன்றிக்கே
சித்தமான ஐஸ்வர் யத்துக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை-
இன்றாக ஒரு ஐஸ்வர்யம் சம்பாதிக்க வேண்டாதே
முன்பே உண்டானதுக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை –
பாட்டையும் தேனையும் உடைத்தான வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு
த்வனியா நின்றுள்ள குழலை உடைய ஸ்திரீகள் ஆனவர்கள் மங்களா சாசனம் பண்ண –
———-
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –
பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் –
சர்வ ரஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே –
பிரேம தசை தலை எடுத்து -அவனுக்கு என் வருகிறதோ என்னும் அதி சங்கையாலே-
திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட
ஸ்ரீ பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –
லோகத்திலே பரிமித கால வர்த்தியான-சாதாரண ஜனங்களுக்கு ஆயுர் அர்த்தமாக –ஆயுராசாச்தே -என்கிறபடியே –
தீர்க்கா யுஷ்மான் பவேத் – என்று மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே -அந்த ஸ்ரீயபதியைக் குறித்து –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு -பல் கோடி நூறாயிரமும் –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு – என்றும் –
நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு -சுடர் ஆழியும் பல்லாண்டு -அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –-என்று
அபரிமிதமான காலத்தை உண்டாக்கி -அது தன்னையே பெருக்கி -இப்படிப் பட்ட கால தத்வம் உள்ளது அனையும் செவ்வி மாறாதே –
நித்ய ஸ்ரீ யாக வாழ வேணும் என்று -இப்படி மங்களா சாசனம் பண்ணுகையே
தமக்கு ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை –
பான்மை -ஸ்வபாவம் -தாள்-திருவடிகள் –
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் –
தொல்லை மால் என்பதில் ஒன்றையும் பாராமையாலே –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் -என்று காலத்தை பெருக்கி
நீடூழி தீர்க்காயுசாய் வாழ வேண்டும் என்று -அளவு பட்ட ஆயுள் உள்ளவர்களையும் -தன்னைக் காக்கும் திறன் அன்றி
காக்கப் படவேண்டியவராய் இருப்பவர்களையும் ஆயுள் விருத்தி யடைய வேண்டும் என்று மங்களா சாசனம்பண்ணுவாரைப் போலே
பல்லாண்டு பாடுகிறார் ஸ்ரீ பெரியாழ்வார் -என்க –
இங்கனம் பல்லாண்டு பாடி -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று காப்பிடுவது ஸ்ரீ பெரியாழ்வாருடைய இயல்பு –
அது தோன்ற அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -என்கிறார் –
தான் அழிவற்று -மற்ற அனைவரையும் அளிக்கும் பரம் பொருளை -அங்கனம் பாராமை அறியாமை அன்றோ –
மயர்வற மதி நலம் வாய்ந்த ஸ்ரீ பெரியாழ்வாருக்கு அது குறை யாகாதோ எனின் -ஆகாது என்க –
இவ்வறியாமை கன்மத்தால் வந்ததாயின் குறையாம்-
அன்பின் மிகுதியால் வந்தமையின் குறை ஆகாததோடு பெருமையுமாம் -என்க
இதனை சோராத காதல் பெரும் சுழிப்பால் பாராது –என்பதனால் உய்த்து உணர வைத்தார் ஸ்ரீ அமுதனார் –
காதல் பெரும் சுழிப்பில் அகப்பட்டது –பாராது பல்லாண்டு பாடும் -பெருமையை இவர்க்கு அளிப்பது ஆயிற்று என்க –
ஆதல் பற்றியே இவர்க்கு ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் ஏற்ப்பட்டது என்கின்றனர் ஆன்றோர் –
இங்கு ஸ்ரீ மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் –
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றிப் பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான்
ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் -என்று அருளிச் செய்த பாசுரத்தை நினைவு கூர்க-
இனி காதல் பெரும் சுழிப்பால் பாரா விடினும் இறைவன் தன் ஆற்றலை தானே காட்டி யாயினும் இவரைப் பெரும் சுழி யினின்றும்
தப்புவிக்கல் ஆகாதோ எனின் –இறைவனுக்கும் அது ஆகாததாய் ஆயிற்று என்க –
கண் உள்ளவர்கர்க்கு அன்றோ காட்ட இயலும் –அன்பினால் குருடரான ஸ்ரீ ஆழ்வாருக்கு –ப்ரேமாந்தருக்கு -எங்கனம் காட்டுவது –
தன் ஆற்றலைப் பார்த்து அன்பினால் ஆன அச்சப் பெரும் சுழி யினின்றும்
வெளியேறட்டும் என்று இறைவன் வலிமை மிக்க தன் தோளைக் காட்டினான் –
அது மேலும் இவரை அப் பெரும் சுழி யில் ஆழ்த்தி சுழல செய்து விட்டது -வலிமை அச்சத்தை கெடுக்க வில்லை –
அதனை மேலும் வலு வுறச் செய்து விட்டது –வலிமையை உள்ளடக்கி அழகே விஞ்சித் தோற்றுகிறது இவருக்கு –
இவ்வலிமை கொண்டு எதிரிகளோடு பொருது என்ன தீங்கை விளைவித்துக் கொள்வானோ
என்று மீண்டும் அச்சமே தலை தூக்கி நிற்கிறது ஆழ்வாருக்கு -இதனை
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்னும் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியில் காண்கிறோம் –
காணவே இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு எனபது போதரும் –
துச்த்யஜா பிரக்குதிர் நாம -இயல்பு தவிர்க்க ஒண்ணாத தன்றோ-இக் கருத்துப் புலப்பட பான்மையன் -என்றார் அமுதனார் –
—————–
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே -கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.
———
ஸ்ரீ அருளிச் செயல்களில் போற்றி பத பிரயோகங்கள்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் –
வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-
ருசியாலே-
புண்ணியன் –
இவர்கள் உபாயம் அவன் தானே இறே –
சிநேக உக்தியாகவுமாம் –
நம்மால்
வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )
நம்மால்
அவனுக்கு ஆகாதார் உண்டாய் முடிந்தான் அல்ல கிடீர்-
ஜென்ம விருத்தாதிகள் ஏதேனும் அமையும் கிடீர்
போற்ற
இவர்கள் குடிப் பிறப்பு இருக்கும் படி –
பல்லாண்டு என்று இருக்குமவர்கள் இறே –
இவர்கள் ஆஸ்ரயணம் உபாயம் அன்று
போற்றி (19)
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் –
போற்றி
போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை
பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –
யாம் வந்தோம் –
அவர் தன்னைப் பேணாதே
உன்னைப் பேணினாப் போலே
நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல்
ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே – வந்தோம்
நசை முடிய ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –
யாம் வந்தோம் –
சத்ருக்கள் துரபிமானத்தாலே ந நமேயம் என்று இருக்குமா போலே
ஸ்வரூப ஞானத்தாலே –தத் சத்ருசம் -என்று இருக்கும் நாங்கள்
ஆற்றாமை இருக்க ஒட்டாமையாலே வந்தோம் –
புகழ்ந்து –
எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –
போற்றி
தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே –
போற்றுகை யாவது –
செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று திருப் பல்லாண்டு பாடுகை-
அல்லாதார் பாடுவது தம் தாம் பிரயோஜனத்துக்காக இறே –
நாங்கள் உன் சம்ருத்தியை ஆசாசிக்கும் படி அன்றோ வந்தது –
புகழ்ந்து
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்
இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –
எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது
போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –
அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –
நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்
நீ பெறிலும் பெறு
இழக்கிலும் இழ –
(அறிவித்தோம்
போற்றினோம்
புகழ்ந்தோம்
இதுவே சேதனனானதுக்கு பிரயோஜனம்
ப்ராப்தாவும்
பிராபகமும்
ப்ராப்திக்கு உகப்பானும் நீயே )
போற்றி யாம் வந்தோம்
தோற்றார் அவனைப் புகழும் அத்தனை –
அபலைகளை வெல்லுகையும் ஒரு பணியோ
போற்றி யாம் வந்தோம்
பெரியாழ்வாரைப் போலே யன்றோ நாங்கள் வந்தது என்கை
தம்மைப் பேணாதே அத் தலையைப் பேணுமவர்
நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு வந்த கார்யத்தை மறந்து அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
அவன்-திருப் பள்ளி அறையில் நின்றும் திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்து அருள
அந்நடை அழகிலே ஈடுபட்டு-வந்த கார்யத்தை மறந்து மங்களாசாசனம் பண்ணுகிறார்கள் –
காணும் அளவு இறே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-
தங்கள் மநோ ரதங்களை மறந்து தண்ட காரண்ய வாசிகள் போலே-
அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்-
ஸ்ரீ கௌசல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்–
வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட-மங்களா சாசனம்
அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து
மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
அப்படியே செய்கிறோம் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணின படியைக் கண்டு -தாங்கள் வந்த காரியத்தை மறந்து –
தத் காலீநமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்–பண்ணுகிறார்கள்
திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது —
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று–
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்–
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர–திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –
திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே–மிடுக்குக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்–அவர்கள் ஆகையாலே–குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-
இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவிபவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –
புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே-அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மிகவும் அதிகமாக மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு பிதா -சம்பராந்தகன் -ஊர் -திரு அயோத்யை-புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –குணவான்களும் பிள்ளைகள் –
இங்கு மாதாபிதாக்கள் -சாது இடையர்–ஊர் இடைச்சேரி–கம்சாதிகள்
எதிரிகள் ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்–
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை-
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –
காம குரோதங்களை–ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே —
உன்னுடைய யசஸ்ஸுக்கு பல்லாண்டு –
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும்–
அகவாயில் சிகப்பையும் கண்டு காப் பிடுகிறார்கள்
அடி போற்றி கழல் போற்றி–நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்–
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-
குணம் போற்றி –
பசி க்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க–மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து நோக்கின குணம் -உண்பது கொண்டால்
உகிர் கொண்டு தலையை அறுக்கவோ -என்று மலையை எடுத்த ஆந்ரு சமசய குணம்-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது–பர்வதத்தை குடையாக கொண்டு–
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக
வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க–அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் —
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்—
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –என்று சீயர் அருளிச் செய்வர் –
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
அஹங்காரத்தை ஜெயித்து–தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்–
நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –
அடி போற்றி -திறல் போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று –
இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் —
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று-அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –
இப்படி பல்லாண்டு பாடுகையே – யாத்ரையாய் உன் உடைய–வீர சரிதத்தையே ஏத்தி–புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று–உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்–வந்தோம்
இப்பாசுரத்தில் பரமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம் (போற்றி) செய்யப்படுகிறது.
அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.
“என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்” என்பது, அடியார்களான கோபியர், பரமபதத்தில்
பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டுவதை மட்டுமே விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !
“வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்பது மோட்ச சித்தியை அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றை
பரந்தாமனின் கூரிய சங்கல்பம் உடைத்தெறியும் என்பதை உட்கருத்தாக வலியுறுத்துகிறது !
“குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி” என்று கோபியர் பாடும்போது, பரமபதத்தில் ஸ்ரீவைகுந்தனாக,
அனைத்துலகங்களையும் ரட்சிக்கும் சர்வேஸ்வரனாக, வெண்கொற்றக் குடையின் கீழ் எழுந்தருளியிருக்கும்,
பரந்தாமனின் கல்யாண குணங்கள் போற்றப்பட்டுள்ளன.
“கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி” என்பது, பாவ-புண்ய பலன்களிலிருந்து அடியார்களை மீட்க வல்ல,
பரந்தாமனின் வலிமை வாய்ந்த தண்டத்தைப் போற்றும் உட்குறிப்பாகும் !
“பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி” என்பது, புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் மனத்தை,
பரந்தாமனைப் பற்றுவதன் மூலம் அமைதிபடுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உபாயத்தை உட்கருத்தாக வலியுறுத்துகிறது.
‘சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்பது, எங்கும் நீக்கமற நிறைந்த அந்தர்யாமியாகவும்,
ஆச்சார்யனாகவும் இருக்கும் அம்மாயப்பிரானை, அவன் திருவடிப் பதம் அடைவதற்கு தடைக்கற்களாக இருக்கும் கர்வம், பற்று
போன்றவற்றை விட்டொழிக்கத் தேவையான வலிமையான விவேகத்தை தந்தருளுமாறு கோபியர் வேண்டுவதைக் குறிக்கின்றது !
“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” — உலகங்களைப் படைத்து ரட்சிப்பதால் பரந்தாமனே
பரந்த இவ்வண்டத்தின் நாயகன், அவன் திருவடிகளே காப்பு !
————
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-
அத்தாலே புகர் பெற்ற வடிவை உடையவனாய் நின்றவனை –
அத்தாலே குளிர்ந்த நிறத்தை உடையவனாய் நின்றபடி –
இப்படிப் பட்ட இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது
மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –
நித்ய ஸூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் –
———–
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-
ஷூத்ர விஷயங்களை லபிக்கைக்கும் கிட்டவரிய விஷயங்களை லபிக்கைக்குமாக
க்ருத்ரிம ரூபத்தாலே -நான் -என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும் படி என் சரீரத்துக்குள் வந்து குடி புகுந்தன வாய்த்து –
அவற்றை –போற்றி வாழ்வதற்கு-ஆராதித்திப் பின் சென்று வர்த்திக்குமதற்கு அஞ்சி –நிருபாதிக சேஷியான யுன்னைக் கிட்டினேன் –
——–
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து—இரண்டாம் திருவந்தாதி -32–
திருமாலே சிந்தை சூழ்ந்து துணிந்து நின் பாதமே போற்றி -மகிழ்ந்தது
என்னுடைய மனஸ் தத்வம் மநோ ரதித்து-அத்யவசித்து
ஸ்ரீயபதி யானவனுடைய திருவடிகளைப் போற்றி மகிழ்ந்தது
(சிந்தை சூழ்ந்து ஆசைப்பட்டு -துணிந்து உறுதியாக -மனமார போற்றி வாக்கின் வியாபாரம் செய்து மகிழ்ந்தது)
மற்றும்
என்றது வாக்கும் என்றபடி
மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடி
மிகவும் பிரதி பஷத்திலே அக்நி உமிழா நின்றுள்ள-திரு ஆழியையும்-ஸ்ரீ பாஞ்ச ஜன்யதையும் பாடி மகிழ்ந்தது
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து
ஆகம் ஆடுகை யாகிற தொழிலிலே மகிழ்ந்தது
மகிழ்கையே தொழிலாயிற்று-(எனவே மூன்று தடவை –
உபாயம் அவனே -அறிந்து கைங்கர்யமாக செய்தாலே மகிழ்ச்சி தானே கிட்டும் )
(முடியானே -3-8- திருவாய் மொழியிலே ஆழ்வாரின் கரணங்கள் பட்ட பாட்டைப் படுகின்றன இதில் இவ்வாழ்வாரின் கரணங்கள்
மநோ பூர்வக வாக் உத்தர -உன் பாதமே போற்றி -சிந்தைக்கும் சேரும் -ஞான ப்ரஸுர த்வாரமாய் இருக்கையாலே
மகிழ்ச்சியின் காரணமான மயிர்க்கூச்சு எறிவதால் உடலுக்கும் அது பொருந்தும் –
ஆகம் பாடி யாடும் -சரீரம் ஆடுவதும் பாடுவதும் தொழிலாகக் கொண்டு உள்ளது)
—————
கவியினார் கவி புனைந்து கண்ணார் கழல் போய்
செவியினர் கேள்வியாய்ச் சேர்ந்தார் -புவியினார்
போற்றி உரைக்கப் பொலியுமே பின்னைக்காய்
ஏறு உயிரை அட்டான் எழில் –-மூன்றாம் திருவந்தாதி 85-
வாயால் பலபல தோத்திரங்களைக் சொல்லிக் கொண்டும் கைகளைக் கூப்பிக்கொண்டும் கண்களை வேறொரு விஷயத்திலும்
செலுத்தாது அவனது திருவடித்தாமரைகளிலேயே செலுத்திக் கொண்டும். அப்பிரானது புண்யகீர்த்திகளையே செவிமடுத்துக் கொண்டும்
இப்பூமியிலுள்ளாடங்கலும் வந்து பணிந்து எல்லாருமொன்று சேர்ந்து போற்றி யுரைத்தாலும்,
கண்ணபிரான் நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களை முடித்திட்டு மணக்கோலமும் பெரு மிடுக்குமாக நின்ற அழகு
பேச்சுவாக்கு நிலமாகுமோ? என்றவாறு.
————-
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——பெரிய திருமடல் –20
பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –
அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –
————-
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –
கவி போற்றி செய்யேன் -என்ற இது-கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் கேவலம் புகழுகை –நயவேன் -என்றது -விரும்பேன் -என்றபடி
——————
புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92– –
அடி போற்றி செய்யும் நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் –
தேவரீர் உடைய திருவடிகளை ஆஸ்ரயியைக்கு உறுப்பாய் -சூஷ்மம் என்றும் -சர்வம் குஹ்ய தமம் பூரா-ப்ரவஷ்யாமி என்றும்
நசா ஸூ ஸ்ருஷவே வாச்யம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸூ சூஷ்மமாய்-பரம ரகஸ்யமாய் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்க அரிதான மந்த்ரத்தை ஸ்மரிக்கை அன்றிக்கே –
ஸ்மரிக்கை வேணும் என்று பிரசங்கிப்பதும் செய்திலேன் என்னுதல் –
அடி போற்றி செய்தல்-
ஆசார்யன் திருவடிகளை ஸ்வயம் பிரயோஜனமாக அடைந்து –பொங்கும் பரிவாலே -அவற்றுக்கு மங்களா சாசனம் செய்தல் –
ஆசார்யன் திருவடிகளை அணுகிப் பேணி-மங்களா சாசனம் செய்தல் –
சகல சாஸ்த்ரங்களின் தாத்பர்ய பொருளாதலின் அது-நுண்ணியதாக அருமைப் பட்டதாய் -கேள்வி அறிவின் முதிர்ச்சியினால்
வருவது என்பது தோன்ற –நுண்ணரும் கேள்வி -என்றார் –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து வாழ்த்துப் பாடுகைக்கு-உறுப்பாக கேள்வி அறிவும் எனக்கு இல்லையே -என்கிறார் .
கேள்வி அறிவு இல்லாதது -கேளாமையினால் மாத்ரம் அன்று –
கேட்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமையினால் அதனைப் பற்றிய பேச்சே இல்லாமையினாலே-
என்னும் கருத்துப் பட –நுவன்றுமிலேன் -என்றார் –
————
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
போற்றி –
சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும்
சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.
என்றே – ‘நம’ என்று வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும்
தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது போன்று,
அன்று இவ்வுலகம் அளந்தான் போற்றி -ஆறு தடவை ஆண்டாள் போலே –
ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை
கைகள் ஆரத் தொழுது –
‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின்
விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.
சொல் மாலைகள் –
வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –
‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.
நோற்றேற்கு –
இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –
இனி என்ன குறை –
பரம பதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;
அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ‘
அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?
அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’ ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமையுமே –
முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதன்றோ?
‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?
‘பூவளரும் திரு மாது புணர்ந்த நம் புண்ணியனார் தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’- என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.
————-
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
போற்றி –
நான் பகவத் விஷயத்தில் செய்வன முழுதும் நீங்கள் இதர தேவர்கள் பக்கலிலே செய்து போருகின்றீர்கோள்;
உங்கள் பக்கல் ஒரு குறை இல்லை; அடையத்தகாதனவாய் இருத்தல் ஒன்றே குறை.
மற்றோர் தெய்வம் –
அருச்சுனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தியுடையவர்களாய்க்கொண்டு சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ,
அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,’ என்னுமாறு போலே.
பேண –
அவை தமக்கு என்ன ஒன்று இல்லாமையாலே, அவற்றிற்கு ஓர் உயர்வினைச் சாதித்தல் அவர்களை
அடைகின்ற உங்களுக்கே பாரம்’ என்பார், ‘பேண’ என்கிறார்.
புறத்திட்டு –
ஈசுவரனாகிய தனக்குப் புறம்பு ஆம்படி செய்து.
———
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-
போற்றி –
சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்
(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- )
அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.
முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.
இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.
யான் இரந்தேன் –
அவன் தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய நான் இரந்தேன்;
ஆள் விடுவானும் இரப்பானும் எல்லாம் தானே அன்றோ.
அன்றிக்கே,
“இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு
பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்” என்கிறபடியே
ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.
புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும் யான் இரந்தேன் என்னுதல்.
வாலப்யத்தால் அவனைக் கட்டுப் படுத்தி ஈஸ்வரி -நம் அனைவருக்கும் ஈஸ்வரி அன்றோ –
இரந்தேன் –
நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன்.
இரப்பார் காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள்.
இரந்தேன் என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள்.
—————
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-
போற்றி என்று –
பிறருடைய நலத்தை விரும்புகின்றவர்களை போன்று வார்த்தை சொல்லுவர் -என்றது –
உனக்கு இன்னமும் கிழிச்சீரை பெருக வேண்டும் -என்பார்கள் என்றபடி –
நம்முடைய நலத்தையே தனக்கு பிரயோஜனமாக கொண்டு இருப்பான் ஒருவன் உண்டாவதே –என்று குளிர நோக்குவானே-
இனி இவன் நமக்கு கண்ணற மாட்டான் -என்று அறிந்தவாறே -கண் -அருள் -கிருபை –
—————-
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9–
போற்றி –
இவ் இருப்பு -இங்கனே நித்யமாக செல்ல வேண்டும் என்று-மங்களா சாசனம் செய்து –
யோவாதே –
உச்சி வீடு விடாதே –
கண்ணினை குளிரப் –
காணப் பெறாமையாலே கமர் பிளந்து கிடந்த கண்கள்-விடாய் எல்லாம் தீர்ந்து குளிரும்படியாக –
புது மலர் ஆகத்தைப் பருக –
செவ்விப் பூ போலே இருக்கிற-திரு மேனியை அனுபவிக்கும்படியாக -என்றது –
மலர்ந்த மலர் போன்ற மிருதுவான வடிவினை-திருக் கண்களால் பருகுவார் போலக் குளிரக் கடாஷித்து
வார்த்தை அருளிச் செய்தார் -என்கிறபடியே –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்தயித்வா ஏனம் லோசநாப்யாம் பிபன்னவ-யுத்தம் -21-6-
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுகையை தெரிவித்தபடி –
——–
எற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே-அதிகார ஸங்க்ரஹம் –38
————–
கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –
ஸ்ரீ கண்ணனது பரத்வம் பாணாசுர யுத்தத்தில் தெளிவாக வெளிப்படுதலின் வாணனது பிழையை
பொருத்து அருளிய தூய்மையை ஸ்ரீ எம்பெருமானார் எத்துவதாக சொல்லுகிறது இந்த பாசுரம் –
அவனுக்கும் தங்களுக்கும் உண்டான பித்ரு புத்ர சம்பந்தாதிகளை ஸூசுப்பித்து நின்று தங்களை ஆஸ்ரயித்த
வாணனுடைய ரஷண அர்த்தமாக -ஜகத் காரண பூதன் ஆனவன் -என்று போற்றிட –ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக பாணாசுரனுடைய அபராதத்தை ஷமித்த குண சுத்தியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
அந்த குண வித்தராய் கொண்டு -ஏத்துகிற ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு ஆபத்துத் துணையாக சேமித்து வைத்த -தனம் ..
போற்றுதல்-புகழ்தல்
வைப்பு -நிஷேபம்–
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –என்றும் –
கிருஷ்னேதி மங்களானாம் யச்யவாசி பிர வர்த்ததே பச்மீபவந்தி ராஜேந்திர மகாபாதக கோடாயா-என்றும்
கிருஷ்ணா-என்றும் தான் தீர கழியச் செய்த அபராதத்துக்கு பிராயச்சித்தார்தமாக -திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறான் காணும் –
ப்ராயச்சித்தான்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை -யாநி தேஷா மசெஷாணாம் கிருஷ்ண அனுஸ்மரணம் பரம் -என்னக் கடவது இறே –
கிருஷ்ண -என்றும்
கிருஷி ப்ர்பூ வாசகஸ் சப்தோனஸ் ச நிர்வர்த்தி வாசக -தயோரைக்யம் பரப்ரம்ம கிருஷ்ணா இத்யபிதீயதே -என்னும்படி –
உபய விபூத் யாத்மகனாய் – என்றும் –
ஜகச்சச -என்று தத்ரூப மகா ப்ர்திவி யானவனே – என்றும் –
மகா பாஹோ -பூர்வ காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் -அசுத்தாஸ்தே சமஸ்தாச்து தேவாத்யாம் கர்ம யோக -என்றும் –
அவித்யாந்தர்க்க தாஸ் சர்வே -என்றும் –
நமேவிதுஸ் சூரகணா பிரபவன்ன மகர்ஷய – என்றும் சொல்லப்பட்ட பிரக்ரதர் யாகையாலே –
ஹரி ஹரர்கள் இருவருடையவும் -பலாபலங்களை அறிவதற்காக விஸ்வ கர்மாவை அழைத்து -இரண்டு தனுச்சுக்களைப் பண்ணச் சொல்ல –
அவனும் அப்படியே பண்ணிக் கொடுக்க -அவர்கள் அந்த தனுச்சுக்களை எடுத்து இருவர்
கையிலும் கொடுத்து -யுத்தம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்க -அப்படியே இருவரும் யுத்தம் பண்ணுகிற போது –
விஷ்ணுவுடைய சர வேகத்தை -ருத்ரன் சஹிக்க மாட்டாதே மிகவும் அவசன்னனாய் -ரஜஸ் தமச்சுக்கள் அபி பூதமாய் –
சத்வம் தலை எடுத்தவாறே -அப்போது அவரை -சர்வ ஸ்மாத்பரன் -என்று அறிந்து -ஸ்தோத்ரம் பண்ணினான் -என்று பிரசித்தம் இறே –
அப்படியே இப்போதும் தமோத்ரேகத்தாலே யுத்தம் பண்ணி -அவனாலே அடி பட்டு -பின்பு சத்வம்தலை எடுக்க –
பூர்வ காலத்திலே அபதானத்தை ஸ்மரித்து -அவனுடைய பாஹூ பலத்தை அறிந்தவன் ஆகையாலே –
மகா பாஹோ என்று சம்போதிக்கிறான் –
ஜானே -இவ்வளவும் தேவரீர் கொடுத்த அதிகாரத்தாலே யுத்தம் பண்ணி -அடி பட்ட பின்பு –சத்வம் தலை எடுத்து தெளிந்தேன் –
சத்வாத் சஞ்சாய தேஜ்ஞ்ஞானம் -என்றது இறே -தெளிந்த படி
எங்கனே என்னில் –
த்வாம் புருஷோத்தமம் -என்றும் –
வாசுதேவ குமாரராய் -ஆஸ்ரித சுலபனான தேவரீரை – என்றும் –
புருஷோத்தமம் –என்றும் -அதோச்மிலோகேவேதேச பிரதித புருஷோத்தம -யோ மா மேவ மசமூடே ஜாநாதி புருஷோத்தமம் -என்று
தேவரீர் அருளிச் செய்த படி -பரம புருஷன் என்று -இப்போது தெளிந்தேன் என்று –போற்றிட –
இப்படி குணி நிஷ்ட குணாபிதானம் பண்ணி ஸ்துதிக்க –
———-
போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 –
இதிலே –தம்முடைய பூர்வ வ்ர்த்ததை அனுசந்தித்துக் கொண்டுபுகழ்ந்து தலைகட்ட வரிதான சீல குணத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து -மகா பிரபாவம் உடைய தேவரீரை –
அத்யந்த அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே
ஸ்துதியாது ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே –
ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என் மனசு ஆறி இராது –
இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில் என்ன வோடுகிறதோ என்று
நான் அத்தை நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –
நாளும் என் புகழ்கோ வுன சீலம் -ஸ்ரீ திருவாய் மொழி -9- 3-10 – -என்னுமா போலே –
புகழ்ந்து தலைக் கட்ட-வரிதான சீலகுணத்தை உடையவரே –
தேவரீருடைய கல்யாண குணங்களை விவேகித்து லோக பிரசித்தமாம்படி பேசுவேன் ஆகில் –
வசிஷ்ட குணங்களை சண்டாளன் வர்ணித்து பேசுகை -அவற்றுக்கு அவத்யமாய்த் தலைக் கட்டுமா போலே –
அது இழிவாக நிற்கும் ..
அப்படி பேசுகிறதைத் தவறில் -தேவரீர் குணங்கள் தனக்கு உத்கர்ஷமாய் இருக்கும் என்று கொண்டே-இரா நிற்கச் செய்தேயும் –
என்னுடைய மனச்சானது -தேவரீர் குணங்களை ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 1-1 – –
என்னுமா போலே யிரா நின்றது -என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறது என்று -பீதனாகி நின்றேன் –
போற்றரும் சீலத்து இராமானுச –
எத்தனையேலும் தரம் உடையார்க்கும் ஸ்துத்துதித்து தலைக் கட்ட அரிதான –சீல குணத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இவருடைய சௌசீல்யம் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் – ஊமை -முதலானவர்கள் இடத்தில் காணப்பட்டது இறே –
நாளும் என் புகழ் கோ வுன சீலமே -என்றும் சீல ஏஷா -என்றும் சொல்லப்படுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக் கட்டிலும் –
இவருடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக்கட்ட அரிதாய் இருக்கும் என்று காணும் என்பதே -இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –
போற்றரும் –இராமானுச –
சீலம் எல்லை இல்லாதவர் ஆதலின் -அக்குணம் புகழ்ந்து தலைக் கட்ட அரிதாய் ஆயிற்று –
ஸ்ரீ ஆழ்வானும் ஆசைப் படும் வகையில் -ஊமை ஒருவனோடு பழகி -தம் தாளை அவன் மத்தகத்திலே வைத்து –
உய்வித்த வரலாற்றினால் -ஸ்ரீ எம்பெருமானார் சீலம் -எல்லை கடந்தமை அறியலாம் –
ஸ்ரீ பகவானுடைய சீல குணத்தை -நாளுமென் புகழ் கோ உன சீலமே – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் போற்ற அரிதாக கூறினார் –
ஸ்ரீ பகவான் மனிசர் பிறவி யிற்றொன்றி கண் காண வந்ததை –
சீல க ஏஷ-இது என்ன சீலமோ -என்று போற்ற அரிதாக கூறினார் ஸ்ரீ ஆழ்வான்
அவர் சரண் கூடிய ஸ்ரீ அமுதனாரோ ஸ்ரீ எம்பெருமானார் சீலத்தை போற்ற அரிதாக அருளிச் செய்கிறார் .
போற்றரும் சீலத்து ராமானுச-
நேராக முகத்தை பார்த்து அருளும் படி உள்ள சீல குணம்
————–
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-
ஒன்றும் பொய் இல்லை –
மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே,
பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.
அவ்வத் தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே மெய் ஒன்றும் இல்லை;
பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை.
போற்றுமினே –
நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல் உண்டான
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ?
அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே. ‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல்,
சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.
பரத்வ பிரகாசம் -சௌசீல்யம் சௌசீல்யாதி
குணங்களும் பொலிந்து -தோற்றுமே-
பரி பூர்ணனாக நிற்கும் பிரகாரம் -அர்ச்சாவதாரம் -பரத்வம் என்று சங்கிக்க வேண்டாம் — இவனையே ஸ்துதியுமின்
————-
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-
புணர்த்த கையினராய் –
அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கை ஒத்துச் செல்லுங்கோள் கண்டீர். என்றது,
வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;
“துன்பமொரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்-என்பது, கம்பராமாயணம்.
இல்லையாகில், “பரவசப்பட்டவர்களாய் நமஸ்காரம் முதலான காரியங்களைச் செய்தார்கள்” என்கிற கண்ணழிவிலே
செலவு எழுதுவர் கண்டீர் என்றபடி.
அடியேனுக்கும் போற்றுமினே –
நீங்களும் அவனைப் போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்க வேண்டும்.
அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே,
இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; “முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படி யன்றோ இருப்பது.
“நோ பஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.
அடியேனுக்கும் போற்றுமின் –
அடியேன் இடையாட்டத்தையும் அத் தலைக்கு அறிவிக்க வேண்டும்.
————
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-
பூ மகன்
இந்த விபூதி
புகழ் வானவர்
லஷ்மி சம்பன்ன -பால -18-28–போலே அங்குள்ளார்
போற்றுதற்கு ஆமகன் –
நாவேவ யாந்தம் உபயே ஹவந்தே –
இரண்டு கரையில் உள்ளாறும் நடுவே போகிற ஓடத்தை அழைக்குமா போலே
அணி வாணுதல் தேவகி-
அழகிய ஒளியை உடைத்தாய்
வேறு ஒரு ஆபரணம் மிகையான நுதலை யுடைய தேவகிக்கு
மாமகன்
அவள் வளர்த்த செருக்காலே மகன் அல்ல -உடன் பிறந்தான் என்னலாம் படி –
மிக்க மகன்
தாய் வழியால் வந்த ஏற்றம் ஒன்றுமேயோ உள்ளது -என்ன –
மிகு சீர் வசுதேவர் தம்- கோமகன்-
கோவான மகன் –
சக்கரவர்த்திக்கு போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்
அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக் கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை
வரில் –
இரண்டு பிறப்பாலும் உள்ள -இருவர் சாயையும் தோற்ற -நடையிலே நடந்து வருமாகில்
கூடிடு கூடலே-
நீ கூடி என்னையும் அவனையும் கூட்டு –
————-
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-
நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
ஸ்ரீ இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-100 –என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .
இப்பாட்டிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே
அலங்கரித்து ஸ்தாவர பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹ அதிசயத்தை கொண்டு
திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ –ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று
பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான
தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –
தமக்கு நிரூபகமாக உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய திரு மார்விலே –
இறையும் அகலகில்லேன் -ஸ்ரீ திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம் பண்ணா நிற்பாளாய்–
ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் —
போற்றுதல் -வணங்குதல் –புகழ்தலுமாம்-
இத்தால்
1-ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-ஸ்வ கடாஷ விசேஷங்களாலே
உண்டாக்கி யருளும் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும் –
2-ப்ராப்யம் தான் ஸ்ரீ ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
3-அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
4-இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –
பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே –
ஸ்ரீ தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
ஸ்ரீ பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை –
ஸ்ரீ பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் –போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .
முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே பொருந்தினவள் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று –
நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு –மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது
இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்
————-
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்–போக்யமுமாய்–பிராப்தமுமாய்–இருந்த திருவடிகளிலே –
அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
உன் பொன்னடி–உலகம் அளந்த பொன்னடி இல்லை–காடுறைந்த பொன்னடி வேண்டாம்
உலகம் அனைவருக்கும்–வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே
மண் சட்டி தொடக் கூடாது -துத்தம் ஆன காலம்–பித்தளை செப்பு -தொட்டாரே தொடலாம் சுத்தி பண்ணலாம்
வேறு யாரும் தொடக் கூடாது–வெள்ளி யார் தொட்டாலும் சுத்தி–தங்கம் சுத்தி இல்லா விடிலும் யாரும் தொடலாம்
உபயோக படுத்தின வெள்ளி நெருப்பில் காட்டி–தங்கம் தோஷம் இல்லை -சாஸ்திரம்
பொது நின்ற பொன்னம் கழல்–விட்டால் பிழைக்க ஒண்ணாது–பொன் தாமரை அடி
வெறும் பொன் இல்லை–சாதனம் சாத்தியம் இரண்டும் பூர்ணம்–தாமரை பொன் அடி பிராப்ய பிராபக
த்வம் மதியம் தனம் பாத பங்கஜம்–பொன்னும் பூவும் புறம்பே தேட வேண்டாம்–உன் பொன் தாமரை அடி
போற்றும்-
போற்றுகை யாவது ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –
பிராப்தமாய்–ஸ்ப்ருஹணீயமாய்–சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே–
பரம போக்யமான-உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு-பிரயோஜனத்தைக் கேளாய் –
பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் —
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே-அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –
அவனும் இவர்கள் பேச்சு அன்றோ -என்று கேட்டான் –
கீதை தான் ஆசார்யன் அர்ஜுனன் சிஷ்யன்–திருப்பாவை -ஆண்டாள் ஆசார்ய ஸ்தானம் அவன் கேட்க –
போற்றும் பொருள்
சொல்லத் தொடங்கினவாறே–சிவந்த போதரிக் கண் அழகை–கோவை கனிவாய் பழுப்பும்
இவர்கள் பொற்றாமரை அடியில் கண்ணை வைத்து–அந்ய பரனாய் இருந்தான்
மையல் மிக்கு வெறித்து பார்த்து இருக்க –
கேளாய் –
முதுகில் தட்டி பராக்கு பார்க்காதே–வார்த்தை சொல்லா நிற்கும் பொழுது கேளாய் சொல்வதால் அந்ய
மாஸூச -சோக ஜனகம் போலே–கேளாய் என்பதால் கேளாமல் பராக்கு பார்த்து இருக்க ஸ்தம்பித்து இருக்க
எங்கள் பிராப்யம் அழித்து உன் பிராப்யம் பெறப் பார்ப்பது–
அடியை விட்டு தொடையை தட்டுகிறார்கள்
அத்யாபயந்தி ஓதுவிக்க இழிந்தவள்-
ஸ்ருனு அர்ஜுனன்–தூங்கி இருப்பவனை எழுப்பி –
எப்பொழுது தூங்கினான் தெரியாமல் அர்ஜுனன்–கேளீரோ பெண்களுக்கு கிருத்யாம்சம் சொல்லி
கேளாய்–
பாகவதர்கள்–இவனுக்கு கர்தவாம்சம் சொல்ல கேளாய்–எனக்கு உங்கள் பேச்சே அழகு–பொருள் கேள்வியாக
உசித மாடு மேய்க்கை தவிர்ந்து–இற்றைக்கு இதுவே–நீ கேளாய்
சீரிய சிங்காசனம்–நீ போற்றும் பொருள் கேளாய்-
கிரமத்தில் செய்வோம் ஆகட்டும் பார்க்கலாம் -ஆறி இருக்க ஒண்ணாது
த்வரிக்க–பேறு உங்கள் நீங்கள் த்வரிக்கை–இவ்வளவாகில் துடித்தது நீ தான் -யோசனை செய்து பார்
கேளாய்
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –
———-
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10–
ஸ்ரீ பேய் ஆழ்வாருடைய ஸ்ப்ர்ஹநீயமான திருவடிகளை ஸ்துதிக்கிற ஸ்ரீ எம்பெருமானார்-விஷயமான ப்ரீதியாலே பரிஷ்கரிக்க பட்டவர்களுடைய
ஸ்ரீ பாதங்களை தம்தாமுடைய தலை மேல் தரிக்கும்-சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் ஸ்ரீ மான்கள்
பொன்னடி போற்றும் –
பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம் ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை
மங்களா சாசனம் பண்ணுகிற -சேஷத்வ அநு ரூபமாக -அடிமை தொழில் செய்கை தவிர்ந்து –
ச்ப்ர்ஹநீயம் ஆகையாலே பிரேம பரவசராய் கொண்டு மங்களா சாசனம் பண்ணத் தொடங்கினார் காணும் –
போற்றுதல்-புகழ்தல் –
பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில்
மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –
யோ நித்ய -அச்சுதன் திருவடி தவிர மற்ற எல்லாம் புல்-அப்புறம் காட்டி கொடுத்த பின்பு .
தமிழ் தலைவன் பொன் அடி-அச்சுதன் திருவடி தவிர புல்-முதல் நிலை -இவர் காட்டவே கண்டதால்
சரம பர்வ நிலைக்கு வந்தார் ஸ்வாமி –என்றவாறு
ஸ்ரீ வைஷ்ணவ லாபமே பேய் ஆழ்வார் மூலம் தானே.
விஷ்ணுவால் வைஷ்ணவன் ஆக முடியாது
ஸ்ரீ தேவியால் ஸ்ரீ வைஷ்ணவன் ஆக முடியாதே
பூமா தேவி நீளா தேவி நித்யர் ஆழ்வார் ஆசார்யர் நம் போல்வார் தானே மிதுனத்தில் கைங்கர்யம்
செய்து ஸ்ரீ வைஷ்ணவர் என்று பட்டம் பூண்டு மகிழலாம்
இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –
பொன்னடி-பத பிரயோகம் -அருளிச் செயல்களில் –
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-பெரிய திருமொழி -6-9-5-
ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்-திருப்பொலிந்த பொன்னடி
——–
மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –
பொய்த்தவம் -சாஸ்திர விஹிதமான தபசு –
ராவண சந்யாசனம்-காலநேமி ஜபம் போலே –
போற்றும் –
அசாஸ்த்ரா விஹிதம் கோரம் தப்யந்தே தபோ ஜனா -யஜந்தே நாம யஜ்ஞைச
தம்பே நாவிதிபூர் வகம் -கர்சயச்சசசரீராணி-பூதக்ராமமசெதனம் – மாஞ்சை வாந்தஸ் சரீரச்த
தான்வித்யா சூரநிச்சயான் -என்கிறபடி –
அசா ஸ்த்ரீயங்களாய் -அயதா பூதங்களான -விஷய விரக்தி – பரஹிம்சா நிவர்த்தி -குரு சேவாதிகளான-
தபச்சுக்களை ஆசரித்துக் கொண்டு போரும் —
இவர்கள் தான் வெளிக்கு செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -போலே காணும் இருப்பது –
புலச் சமயங்கள் –
நீச சமயங்கள் -சைவ -மாயாவாத -சாக்தேய -காணாபத்ய – சார்வாக -பௌததாதி சமயங்கள் –
நிலத்தவிய –
பூ லோகத்தில் பஸ்மாம் படி -சமிதோதய சங்கராதி கர்வ -காதாதர தாகாதா நாம் -இத்யாதிகளிலே -சொல்லுகிறபடியே –
அவை எல்லாம் இந்த பூ லோகத்தில் அவியும்படி
யஜ்ஜ மூர்த்தி யாதவ பிரகாசன் -முதலானோரை சிஷித்து -அநு கூலராகப் பண்ணியும் –
ஸ்ரீ திரு நாராயண புரத்தில் பௌத்தரை நிரசித்தும் -அவற்றை பஸ்மாசாத்தாம் படி
பண்ணி அருளினார் என்று -சர்வ லோக பிரசித்தம் இறே –
கைத்த –
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கீதா பாஷ்ய வேதார்த்த சங்க்ரஹாதிகளை அருளிச் செய்து -வியாக்யானம் பண்ணி அருளின –
அன்றிக்கே –
கைத்தல் –
அவற்றை விளக்கு பிணம் போலே நசிக்கும்படியாக நிரசித்த -என்னவுமாம்-
பொய்த்தவம் –கார் தன்னையே —
வேதம் அபௌருஷேயம் ஆதலின் அது உண்மை அல்லது கூறாது –
அதனை பிரமாணமாய் ஏற்காத நூல்கள் கூறுவன உண்மைக்கு புறம்பானவை- பொய்யானவை
அத்தகைய பௌத்த ஜைனாதி நூல்கள் உண்மையானவைகளை கூறாத பொய் நூல்களாம் –
அங்கனமே வேதப்பொருளை உள்ளவாறு காண்கிலாத குத்ருஷ்டி நூல்களும் பொய் நூல்களே யாம் –
அவற்றில் கூறப்படும் தவங்கள் மெய்யானவை என்று மயங்கி -அதன்படி ஒழுகுவோர் பயன் அடையாது பாழாகி விடுகின்றனர் –
பொய் நூலை மெய் நூல் என்றோதி மாண்டு -பெரிய திரு மொழி – 2-5 5-என்றார் ஸ்ரீ திருமங்கை மன்னனும்-
தவமாவது சாஸ்திர நெறிப்படி தன்னை வருத்தப்படுத்தி கொள்ளுகை –
வைராக்கியம் அகிம்சை சத்குருசேவை முதலியன தவங்கள் ஆம் -ஆயின் அவை வேத நெறியில் வகுக்கப் படாது
பொய் நூல்களால் புகட்டப்பட்டவை ஆதலின் பொய்த் தவங்கள் ஆம் –
கண்ணன் மீதான காதல் அடியாக விளையாத தலானும் –
கண்ணன் உகப்புக்கு என்று கருதாத ததலானும் –
கண்ணனைக் காட்டித் தருபவனான குரு விஷயமாக ஆகாத தாதலானும் –முறையே
வைராக்யமும் -அஹிம்சையும் -சத்குருசேவையும்–உண்மை தவங்கள் ஆகா –
அத்தகைய தவங்களை போற்றும் சமயங்கள் புலை சமயங்கள் என்று இகழுகிறார் ஸ்ரீ அமுதனார் –
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –
புலை அறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் -திரு மாலை-7 – என்னும் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தி நினைவுறத் தகும் –
அதனை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
இவை நீச தர்சனம் ஆன படி எங்கனே என்னில் –
ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை –
ஈஸ்வரனையும் –ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
என்று வ்யாக்யானத்தில் விளக்கி இருப்பது இங்கு அறியத் தக்கது –
அஹிம்சையை விரதமாக கூறும் சமயங்கள்
வீணாக கீழ் கூறியபடி -பொய் விரதத்தை கைக் கொண்டு ஒழுகும் படி செய்து -பல ஏமாந்த மாந்தரை
ஹிம்சிப்பதனால் -புலை சமயங்கள் ஆயின –
எந்த ஜீவனுக்கும் ஹிம்சை செய்யக் கூடாது என்று கூறும் ஜைனர்கள் –
தங்கள் கூற்றுக்கு முரண்பாடாக கேசத்தை பிடுங்கிக் கொண்டு தங்களுக்கே ஹிம்சை செய்து கொள்வதனால்
அவர்கள் சமயம் புலை சமயம் ஆகிறது என்க –
வேதனை செய்கை வெறும் மறமென்று
விளம்பி வைத்தே மாதவம் என்று மயிர் பறிப்பார் -ஸ்ரீ பரம பத பங்கம்-
வேதனை செய்கை-ஹிம்சிக்கை
வெறும் மறம் -வீணான செயல்-என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் இங்கனமே பரிஹசிப்பதையும் காண்க –
ஜைனர்கள் – -தலை மயிரை பிடுங்கி விடுதல்-என்னும் விரத்தைக் கைக் கொண்டு
முக்தி பெறலாம் என்று சொல்லுகின்றனர் –
இங்கனம் பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்களை இந்நிலத்தில் நிற்பதற்கு இடம் இன்றி அழிந்து போம் படி
தம் மெய் ஞானத்தால் கடிந்து மக்களை மறை நெறியிலே உய்த்து வாழ்வித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் என்க –
மெய் ஞ்ஞானம் ஆவது தத்துவத்தை உள்ளபடியே அறிதல் –
புலைச் சமயங்களை பற்றி பொய்த் தவங்களை ஏற்று நிற்பாரையே அச் சமயங்களை யவித்து மெய் ஞான நெறியாகிய
தமது நெறியிலே உய்த்து உபகரிப்பவர் –
அங்கன் அல்லாது
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய் ஞானத்தராக ஸ்ரீ அமுதனார் அவரைக் கூறினார் என்க
மெய் ஞானத்து –
யதா வஸ்த்தித தத்வ விஷயிக ஜ்ஞான யுக்தரான –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
என்னும் கார் தன்னையே –
இவராகிற மேகத்தை -வேத மார்க்க பிரதிஷ்டாபனம் பண்ணி சர்வ லோகத்தையும் ரஷித்தது ஒரு ஔதார்யமாக நினைத்திலர் –
ஆர்த்த அபராதியான காகாசுரனை சக்கரவர்த்தி திருமகன் ரஷித்தால் போலே –
அப்படிப் பட்ட தம்மையும் ரஷித்து அருளின படியால் -ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும்
வர்ஷூகவலாகம் போலே இருந்தார் என்று ஸ்லாக்கிக்கிறார் –
கார் தன்னையே -என்றது முற்று உவமை –
————
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-
விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை -அந்த குணஜிதராய்க் கொண்டு ஏத்தா நிற்ப்பராய்-
ஸ்வ சம்பந்த்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல-பரம பாவன பூதராய்-
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் -என்பான் என் என்னில் –
அதுக்கு குறை இல்லை -விரோதி நிரசனம் பண்ணின உபகாரத்துக்குத் தோற்று – ஸ்துதிக்கிற மாத்ரம் ஒழிய –
தத் உபாசனம் அல்லாமையாலே .
போற்றும் –
ஆஸ்ரயித்து இருக்கிற மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –
போற்றுதல் -புகழ்தல் -விநாசாய ச துஷ்க்ர்தாம் –என்கிறபடி ஆஸ்ரித விரோதி நிரசன சீலமாகிற குணத்திலே
தோற்று ஏத்தா நின்றார்கள் காணும் –
மகா பாராத பாஞ்சராத்ராதிகளாலும் -நம்முடைய பூர்வாச்சார்யர்களாலும் –
பிரம ருத்ர அர்ஜுன வியாச ககுஸ்த ஜாமதக்னியாதிகள் அனுபாச்யர் என்று பஹூ முகமாக சொல்லி இருக்க
எம்பெருமானார் -பரசுராம ஆழ்வானை ஏத்துகிற இது -சேருமோ என்னில் –
அந்த அவதாரம் எம்பெருமானுடைய அஹங்கார யுக்த ஜீவ ஆவேசம் ஆகையாலே -அவனாலே செய்யும் அம்சத்துக்கு
எம்பெருமானார் ஈடுபட்டு ஸ்துதித்தார் என்று சொன்னேன் இத்தனை ஒழிய
தத் உபாசனம் பண்ணுகிறார் என்று சொல்லாமையாலே விரோதம் இல்லை –
மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி -என்றும் –
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அருளிச் செய்ததும் விரோதி நிரசன ஸ்வ பாவத்துக்கு தோற்று –
புனிதன் –
பகவத் மங்களா சாசனத்தாலே பரிசுத்த ஸ்வ பாவராய் -தம்மை ஆஸ்ரயித்தவர்களையும் –
ஆத்மசாம்யா வஹத்வாத் -என்று சொல்லப் பட்ட -ஸ்வ சாம்யத்தை உடையராம்படி பண்ண வல்ல பாவனர் –
புனிதன் -சுத்தன் –
போற்றும் புனிதன் –
இங்குப் போற்றுதல் வழி படுதல் அன்று
உலகினுக்கு உதவி புரிந்தமைக்கு தோற்றி நன்றி உடன் புகழுதல்-என்று உணர்க –
ஸ்ரீ பரசுராமனை தெய்வமாக கொண்டு வழி படலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கு ஏற்ப
அங்கனம் உணர்தல் வேண்டும் –
அனர்ச்ச்யா நபி வஷ்யாமி ப்ராதுர் பாவான் யதாக்ரமம் -என்று தொடங்கி
பூஜிக்கத் தகாத அவதாரங்களையும் முறைப்படி சொல்வேன் -என்று தொடங்கி
அர்ஜுனோ தன்வினாம் ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகான் ருஷி –
வில்லாளிகளுள் சிறந்த ஸ்ரீ கார்த்த வீரியர்ஜுணனும் –
பெரிய ருஷியான ஸ்ரீ பரசு ராமனும் -என்று பரசு ராமனையும் எடுத்துள்ளமை காண்க –
பூஜிக்காமைக்கு ஹேது –
ஆவிஷ்ட மாத்ராச்தே சர்வே கார்யார்த்தம் அமிதத்யுதே -பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து உள்ளமை மட்டுமே
இவர்களிடம் உள்ளது -என்று பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து அவர்கள் இடம் இருப்பினும்
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாக்களாக அவர்கள் இருப்பதே என்று ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதையில் கூறப்பட்டு உள்ளது
இதனால் ஸ்ரீ பரசு ராம அவதாரம் பத்து அவதாரங்களில் ஓர் அவதாரமாக கருதப் படினும் –
ஸ்ரீ இராமன் போலவும் ஸ்ரீ கண்ணன் போலவும் சாஷாத் அவதாரம் அன்று –
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாவின் இடம் பகவான் ஆவேசித்த அவதாரமே என்பது -தெளிவு
ஆவேச அவதாரம் இரண்டு வகைப்படும் .
ஸ்வரூப ஆவேசம் -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபமே ஒரு கார்யத்துக்காக ஒரு ஜீவான்மாவிடம் விசேடித்து புக்கு நின்றால் –
சக்தி ஆவேசம் -ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்வரூபத்தால் அன்றி சக்தியைக் கொண்டே உட்புக்கு நடாத்துதல் –
என்பன இவ்விரு வகைகள்
சக்தி ஆவேச அவதாரமாக -ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனன் கருதப்படுகிறான் .
ஆக சாஷாத் அவதாரம்-என்றும் ,ஸ்வரூப ஆவேச அவதாரம் என்றும் -சக்தி ஆவேச அவதாரம் என்றும்
அவதாரங்கள் மூன்று திறத்தனவாம் .
ஆயினும் சாஷாத் அவதாரம் ஸ்வரூப ஆவேச அவதாரத்தை விடப் பலம் வாய்ந்தது .
ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரத்தை விட பலம் வாய்ந்தது .
ஆதல் பற்றியே ஸ்ரீ இராமன் இடம் ஸ்ரீ பரசுராமனும்
ஸ்ரீ பரசு ராமனிடம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுணனும் தோல்வி கண்டனர் .
அவதாரங்கள் அனைத்தும் ஒரே தரத்ததனவாயின் வெற்றி தோல்விக்கு இடம் இல்லை அன்றோ .
இவ்விஷயங்கள் -விதிசிவ வியாச ஜாமதக்ன்யார்ஜுன -என்று தொடங்கும் ஸ்ரீ தத்வ த்ரைய சூர்ணிகை வ்யாக்யானத்திலும் –
என் வில் வலி கண்டு -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- – வ்யாக்யானத்திலும் ஸ்ரீ மணவாள மா முநிகளால் விளக்கப் பாட்டு உள்ளன ..
ஆக .முக்தியை கோருமவர்களுக்கு வழிபாட்டிற்கு உரிய தேவன் ஆகாமையின்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பரசுராமனை துதித்தனரே யன்றி வழி பட்டிலர் என்று தெளிக-
இங்கனமே ஸ்ரீ பெரியாழ்வார் -மன்னடங்க மழு வலம் கைக் கொண்ட இராமன் –5 4-6 – – – என்றும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் – வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -5 6-1 – –
என்றும் அருளிச் செய்தவை விரோதிகளைக் களைந்தமைக்கு தோற்றுத் துதித்தவைகளே என்று கொள்க –
புனிதன் –
தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் –
————
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- –
சர்வ தபஸ்ஸூக்களிலும் வைத்துக் கொண்டு -விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் –
தம்முடைய வைபவத்தைச் சொல்லி புகழும்படியான ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது
என் இடத்தில் சேரக் கண்டிலேன் –
நற்றவர் போற்றும் –
தவம் –தபசு
நல தவம் -வி லஷணமான தபசு –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ-என்றும் –
சத் கர்ம நிரதாஸ் சூத்த -சாங்க்ய யோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடிதமீமபி -என்னும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே -பிரசம்சிக்கப் பட்டதாய் –
அர்ஜுனனுக்கு மோஷ உபாயங்களை உபதேசிக்கும் இடத்தில்
முந்துற முன்னம் -கர்ம யோக ஞான யோக பக்தி யோக அவதார ரகஸ்ய புருஷோத்தம வித்யா நாம
சங்கீர்த்தன ரூப இதர உபாயங்களை உபதேசித்தவாறே –
அவற்றைக் கேட்டு சோக விசிஷ்டனானவனைக் குறித்து அவனுடைய சோகாபநோத நார்த்தமாக உபதேசிக்கப்பட்ட அர்த்தமாய் –
அத ஏவ சுகமாய் -அவிளம்ப்ய பல ப்ரதமாய் –ஸ்வரூப அநு ரூபமாய் -அத்யந்த விலஷணமான –சரணாகதி தர்மத்திலே –
அத்யபிநிவிஷ்டரான –ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் முதலான முதலிகளும் –
லோகத்தாரை உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த வருடைய வைபவத்தை அறிந்து –
ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரஷரி காமவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாதரசா -என்றும்
புண்யம் போக விகாசாய பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதயா-ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிந -என்றும்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு -ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந அத்ர சம்சய -என்றும்
குதர்ஷ்டி குஹ நாமுகே நிபதித பரப்ரஹ்மண கரக்ரஹ விசஷணே ஜயதி லஷ்மணோ யம் முனி -என்றும் –
ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப ப்ரத்யஷ தாமுபக தஸ்த்வி ஹ ரங்கராஜ வச்யஸ் சதாபவதி தே
யதிராஜ தஸ்மாத் சக்தஸ்ஸ்வ கீய ஜன பாப விமோச நேத்வம் -என்றும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்றும் சொல்லிப் புகழும்படி எழுந்து அருளி இருக்கிற –
நல் தவர் போற்றும் இராமானுசனை –
த்வயார்த்த நிஷ்டர் ஆதலின் அத்தகையோர் அவரைப் போற்றுகின்றனர் .
தவம்-சரணாகதி –
தவங்களுக்குள் தனக்கு மேற்பட்டது ஓன்று இல்லாத தவம் ந்யாசம் எனப்படும் சரணா கதி – என்று வேதம் ஓதுகிறது .
ஏனைய தவங்களில் நின்றும் மேம்பாடு தோற்ற –நல் தவம் –என்று விசேஷித்தார் –
நன்மையாவது –
எளிதில் கை யாளலாம்படி இருத்தலும் –
காலம் தாழ்த்தாது பயன் அளித்தாலும் –
ஜீவான்ம ஸ்வரூபத்தின் பார தந்த்ரியத்திற்கு இயைந்து இருத்தலும் .
ஏனைய தவங்கள்-சாதனாந்தரங்கள் -அரும் பாடு பாட்டு கைக் கொள்ள தக்கனவாய் உள்ளன .
காலம் தாழ்த்து -அதாவது -பிராரப்த கர்மம் தீர்ந்த பின்னர் பயன் அளிப்பன –
அஹங்காரம் கலந்தவை யாதலின் ஆன்மாவின் பாரதந்த்ரியம் நிலைக்கு இசையாதன -என்றுணர்க –
அத்தகைய நல் தவம் உடையவர்கள் -சரணா கதி நிஷ்டர்கள் –
எம்பெருமானார்
தான் சரணா கதியைக் கைக் கொண்டும் –
உபதேசத்தாலும் -நூல்களாலும் உலகினரை சரணா கதி நெறியில் ஒழுகச் செய்தும் –
தாம் செய்த சரணா கதியில் செருகி உலகினர் உய்யுமாறு வரம் பெற்றும் –
சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின பெருதவிக்குத் தோற்று
நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர்-
———
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் –
பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக
இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி –லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்
தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்
நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்
போற்றுவனே –
ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் –
குரும் பிரகாச எத்தீ மான் – என்கிறபடியே
அவர் தம்முடைய குண–கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –சேஷ்டிதங்களை புகழக் கடவேன்
என்று அருளிச் செய்தார் ஆய்த்து –
மறை வாதியராம் புலி –போற்றுவன் –
இயல்பினில் மிகவும் கொடியவைகளான புலிகள் மிகுந்து சாதுவான ஏனைய மிருகங்கள் நலிந்து திரியா நிற்க –
வலி மிக்க சீயம் வந்து வனத்தை காக்க முற்படுவது போலே –
மிகவும் கொடியவர்களான மறைவாதியர் என்னும் புலிகள் மிகுந்து -சாதுக்களான உலகினரை நலிந்து திரியா நிற்க
அப் புலிகளை தொலைக்க வல்ல – வலி மிக்க சீயமாய் வந்து புவனத்தை காக்க முற்படுகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
மறையைப் பிரமாணமாக மதிக்காத புறச் சமயிகள் போல் அல்லாமல் – அதனை பிரமாணமாக ஏற்று இருந்தும் –
அம்மறை கூறும் நேரிய பொருளை ஏற்காமல் – அவப் பொருள் சொல்லி வாதம் புரிந்து -சாதுக்களான உலகினரை கலங்கச் செய்து –
மறை நெறிக்கண் நடந்து உய்ய விடாது நலிகின்றமையின் மறை வாதியார் கொடியவர்கள் ஆயினர் -என்க –
மறை வழி ஒழுகும் மாந்தர் புறச் சமயிகளின் நின்றும் எளிதில் தப்பலாம் –
மறை வாதியரின் மாற்றம் ஏமாற்றம் விளைவிப்பதாய் இருத்தலின் பசுத்தோல் போர்த்த புலி போன்ற அவர்கள் இடம் இருந்து
தப்ப வழி இன்றிப் படு நாசத்திற்கு உள்ளாக நேரிடுகின்றது .
இங்கனம் தப்ப வழி இன்றி மறை முகமாக பாய்ந்து மாய்ந்து போகும்படி செய்தலினால் -மறைவாதியர் -புலி யாயினர் -என்க .
இங்கு ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் –2 36- –
அந்யைராம் நாயா சர்ச்சா கவசத்ருதி கனத் கோமுகைர் த்வீபிபிச்ச -என்று
வேதத்தை பற்றிய ஆராய்ச்சி என்னும் கவசம் அணிந்தமையினால் விளங்குகின்ற பசுவின் முகம் கொண்ட மற்றவர்கள் ஆகிற –
மறை வாதியர்களாகிற – புலிகளினாலும் -என்று வேதாந்த தேசிகன் வருணித்து இருப்பது நினைத்தற்கு உரியது
பசு முகமாய் இருப்பதில் ஏனைய பசுக்கள் தம்மில் ஒன்றாக கருதி -அவற்றைக் கிட்டுகின்றன –
அவை அவற்றை உண்மையில் புலி யாதலின் நலிகின்றன –
இங்கனமே மறையும் ஆராயும் மாண்புடையோர் என்று மயங்கி தம்மிடம் வந்த உலகினரை கலங்க வடித்து -நலிகின்ற்றனர்
மறை வாதப் புலிகள் -என்க –
மறை வாதியர் -சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் -மதத்தை சார்ந்தவர்கள் –
புலிகள் மிக்கு இருப்பினும் –வலி மிக்க ஒரு சீயம் அவற்றை தொலைத்து விடுவது போலே –
எம்பெருமானார் என்றும் ஒரு சீயம் -மறை வாதியராம் புலிகள் மிக்கு இருப்பினும் அவற்றைத் தொலைப்பதாயிற்று
மறை வாதியர்கள் மீண்டும் தலை எடுக்க ஒண்ணாதபடி –
அவர்கள் மதங்களைக் கண்டித்து -ஒழித்து அருளுவாராய் -இவ் உலகத்தில் அவதரித்தமையை அனுசந்தித்தபடி –
இவ்வாறு மறை வாதியரை வெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
ஸ்ரீ எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று–
இப்பாடல்களினால் மறைப் பொருள் இது தான் என்னும் முடிவுக்கு வந்து மறை வாதியரையும்-அம்முடிவுக்கு வரச் செய்து –
அவர்களை வென்று அருளினார் -என்பது கருத்து .
ஸ்ரீ மாறன் பசும் தமிழ் ஸ்ரீ எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே ஸ்ரீ கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
தமிழ் மறையும் ஆறு அங்கங்களும் -வட மொழி மறையின் பொருளை தெளிவுற உணர்த்துவனவாய் அமைந்துள்ளன –
இங்கனம் மறை வாதியரை மறைந்து ஒழிய செய்து மறைப் பொருளை நிலை நிறுத்துமாறு –
எம்பெருமானார் அவதரித்த விதத்தை போற்றுவேன் -என்கிறார் —
மின் உருவாய் முன் உரு பொன் உரு -வேதம் நான்காய் -தத்வ த்ரயங்களையும் காட்டினார் இத்தால்-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -மெய் மதிக் கடல் –
மூன்று முக்ய உத்சவங்கள்-
தாம் உகந்த உத்சவம் -மங்களாசாசன -கருட சேவை-உத்சவம்
தமர் உகந்த உத்சவம் -வேடு பரி உத்சவம்
தானான உத்சவம் -திருக் கார்த்திகை உத்சவம்
———
ஆழி எழ -திசை வாழி எழ-மங்களா சாசனம் உண்டே
மகா க்ரம -கிரமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –
திக்குக்கள் தோறும் நின்ற நின்ற நிலையிலே தேவ மனுஷ்யாதிகளுடைய மங்களா சாசன கோஷம் கிளம்பும்படி
திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம் ஸ்ரீகோதண்டம்
ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன
நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால், என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!
பய சங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?
திசை வாழி எழ –
‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன!
‘அவை தமக்கு என் வருகிறதோ?’ என்று
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னா நிற்பார்கள் அன்றோ?
‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரிய வேண்டி இருக்குமன்றோ?
அன்றிக்கே,
திக்குகள் தோறும் அநுகூலருடைய’ வாழி வாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல்.
திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார்,
திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.
‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி;
ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலே காணும் இவர்கள் படுகிற பாடு.
பிள்ளை யுறங்கா வில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,
பிள்ளை தாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக் கொண்டு சேவிப்பாராம்.
நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?
———-
1-திருப்பல்லாண்டு -வீற்று இருந்து போற்றி -திருவாய் மொழி 4-5-1-
அங்கும் இங்கும்–8-3-இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –
மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத் ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய் நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை
சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை
சைதன்ய க்ர்த்யம் -அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும் ஸ்வாமிக்கு ச்ம்ர்த்தியை ஆசாசிக்கை இறே
வீற்று இருந்து போற்றி -திருவாய் மொழி 4-5-1—நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –
இத் திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )
நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?-இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியை யுடையவர் ஆகிறார்.
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக் கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறை மார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக் கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக் கொடுத்தான்;
‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்த மயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக் கொடுத்தான்;
பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.
அங்கும் இங்கும்–8-3-இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –
அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக
நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –
அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி
சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர்
என்னும் அளவும் செல்ல அறிக்கை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —
———–
2-பொலிக பொலிக பொலிக -திருவாய் மொழி -5-2-1-பாகவத மங்களாசாசனம்
அடியோமோடும் -திருமங்கை -திரு ஆழி -திருப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-
ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்திய ஸூரிகள் இங்கே வர,
அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-இத் திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய் மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து,
அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய் மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச் செய்வர்.
தம்மாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,
திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும்,
திருந்தாதாரை உபேக்ஷித்தும்,
இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு
மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –
அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;
பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு
மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்
அத்தலைக்கு பரிகைக்கு தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத்தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இறே
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்
இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட –ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்
அப் பாஞ்ச சன்னியமும் –முன்னிலையாய் இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் –தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-
———
3-போக்ய அதிசயத்தாலே -தம் நா எச்சில் கூடாது என்றும் -முகத்தை மாற வைத்து அருளியவை
அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு –
அப் பெரியவாய கண்கள் -அமலனாதி பிரான் -8-
அது காலனே -திருவாய் மொழி -9-5-7-பாதக அதிசயத்தை பற்ற -காட்டேன் மின் உம் உரு
கண மயில் அவை கலந்து -திருவாய் மொழி 10-3-1-
அப் பாஞ்ச சன்னியமும் –முன்னிலையாய் இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் –தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –
அப் பெரியவாய கண்கள் -அமலனாதி பிரான் -8-
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் –இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –
போக்யதா அதிசயத்தாலே –அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார்
ஸ்வபாவ சித்தங்களானஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –
அப்பெரிய -என்றதுக்கு-இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய் அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும்
மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்
————
4-பல்லாண்டு -நான்கு தடை சொல்லி -மனுஷ்ய -தேவ பிரம -பல பிரம்மாக்கள் -மங்களா சாசன
காலத்தைப் பெருக்கின படி அருளி
இது போலே அமலன் –என்னைத் தனக்காக்கின சுத்தி
விமலன் -என்னை தன் அடியார்க்கு ஆக்கின உத்தி
நிமலன் -பச்சை இடாதே இருக்க -என்னை திருத்திய சுத்தி
நின்மலன் -இவ்வளவும் தன் பேறாகவே செய்த சுத்தி –
பல்லாண்டு –மறித்து -பல்லாண்டு என்கிறது என் என்னில் -அகவாய் அறியாதவனுக்கு தெரியாமையாலே
பல கால் சொல்ல வேண்டி இருக்கும் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் -எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு
இரு கால் சொல்ல வேண்டா -இப் புநர் உக்திக்கு பொருள் என் என்னில் -அவனுடைய
சர்வஞ்ஞத்வத்தில் குறையால் அல்ல –ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய
பயம் ஷமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இ றே
பல்லாயிரத்தாண்டு
கீழில் பஹூ வசனத்தாலே வர்ஷங்களினுடைய அசங்க்யாத்வம் சொல்லி இருக்க இதுக்கு உதயம் இல்லையே என்னில் –
அவச் சேதகங்களுக்கு சங்க்யை இல்லாமையாலே காலாவச் சேதத்துக்கு தொகை இல்லை
ஆகையாலே அருளிச் செய்கிறார் -அவச் சேதகங்கள் ஆவன -சூர்யா பரிஸ் பந்தாதிகள்
அவச் சேத்யங்கள் ஆவன -ஷண லவாதிகள் -வர்ஷத்துக்கு அவச் சேதகர் –தேவர்கள்
அத்தைப் பற்றிச் சொன்னார் கீழ் -பல வர்ஷத்துக்கு அவச்சேதகன் –ப்ரஹ்மா -அத்தை பற்ற-அருளிச் செய்கிறார் பல்லாயிரத்தாண்டு என்று
பல கோடி நூறாயிரம் என்று –ப்ரஹ்மாக்களுக்கு தொகை இல்லாமையாலே அருளிச் செய்கிறார் –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளாருக்கும் ஸ்வ சத்தை உள்ளளவும்
விஷய வைஷண்யத்தை பற்ற -அதி சங்கையும் மங்களா சாசனமும் நித்யமாக செல்லா நின்றது –
கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
அமலன் –
ஸூத்தன் -என்றபடி
இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே-பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-
அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல்
தோஷம் தட்டாதே –அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி
பரமாத்மா அக்னியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே–
அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –
அமலன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்த கதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்த கதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்ய நீகனாய் இருக்கும்
அமலன் -என்கிறது மலப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது
விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-
விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் –என்றது ஆயிற்று –
நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் –பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச –ஆபிமுக்யம்
அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாதரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்
நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன பேறாக இருக்கை
நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ஸ்லேஷம் பண்ணலாம்படி
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
நிமலன் –
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –-க்ருதக்ருத்யஸ் ததா ராம -என்கிறபடியே
அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை
நின் மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை –உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி –ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –
நின்மலன் –
சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்-அவிஜ்ஞாதா -என்றும் –என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –
————
5- வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் -திருவாய் மொழி -5-2-5-
ஒன்றும் தேவும் -கேட்டு சம்சாரம் திருந்தின படி –
வாழ் ஆள் -என்று-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இ றே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக் குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –
பட்டு -என்பது-
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-
நின்றீர்-
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –
உள்ளீரேல்-
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இறே இருப்பது
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார் தேட்டமாய் இறே இருப்பது –
இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து
அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-
‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய் மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்”
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை –
ராக்ஷஸ தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத் தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக் கொண்டு,
ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில்
உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது,
“ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தின படி.
“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேட வேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு,
‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேட வேண்டும் படியாயிற்று என்றபடி.
————-
6-பல்லாண்டு கூறுவனே -ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனமாக கூறி –
மங்கையைர் –தையல் -திருவாய் மொழி -10-3-11-ஒருத்தி பசு மேய்க்கைக்கு
போகாமே மீட்க்கைக்காக அருளியது -அடிச்சியோம் -தொழுததையோம் -என் ஆர் உயிர் -என் சொல் கொள் –
என்று சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் இறே
பல்லாண்டு கூறுவனே -ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனமாக கூறி –அநந்ய பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற இடத்தில் சமூஹமாக பேசினார் –பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் –கூறுவன் –என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை –
அவனுடைய பிரிவு பொறுக்க மாட்டாமையாலே-ஒரு பருவத்தில் ஆயர் பெண்கள் கூறிய தொடையாய் –
தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –
அவை போன்று எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது -என்று பார்த்து-அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி
நப்பின்னை பிராட்டியின் தரமுடையவள் ஒருத்தி-பசு மேய்க்க போகாமை மீட்கைக்காக சொன்னவை ஆயிற்று –
இப்படியானால்-
அடிச்சியோம் -என்றும்-தொழுத்தையோம் -என்றும்
ஆழும் என் ஆர் உயிர் என்றும் –என் சொற்கொள் -என்றும்-
சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் அன்றோ –
————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .