Archive for the ‘ஸ்ரீ பாஷ்யம்’ Category

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – முதல் பாதம்-வைராக்₃ய பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

June 13, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

3-1-1-தத₃ந்தரப்ரதிபத்த்யதி₄கரணம் –மூன்றாம் அத்யாயத்தின் அறிமுகம் -ஸங்கதி –
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலில் 4 அத்யாயங்கள் உள்ளன –ஸமந்வய, அவிரோத, ஸாதந, பல அத்யாயங்கள் என்று. அதில் முதல் இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸித்₃த₄ த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன, ஸித்தமான (தயாரான) பொருளான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையும், அவர் தான் ஜகத் காரணம் என்பதையும், மோக்ஷம் அடைவதற்கு அவரைத் தான் உபாஸிக்க வேண்டும் என்பதையும் சொல்வதால். இனி மேலுள்ள இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸாத்₄ய த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன–ஸாதிக்கப் பட வேண்டிய(செய்யப் பட வேண்டிய) பொருள்களைப் பற்றிப் பேசுகிற படியால். அதில் மூன்றாம் அத்யாயத்தில் மோக்ஷம் அடைவதற்கான உபாயமான (வழியான) உபாஸநம் என்பதைப் பற்றிஆராய்கிறார் வ்யாஸர். நான்காம் அத்யாயத்தில் அடையப்படுகிற மோக்ஷத்தின் தன்மைகளை ஆராய்கிறார்–
இந்த மூன்றாம் அத்யாயத்தில் 4 பாதங்கள் உள்ளன–வைராக்₃ய பாதம், உப₄யலிங்க₃ பாதம், குண உப ஸம்ஹார பாதம் மற்றும் அங்க₃பாதம். இந்த நான்கு பாதங்களின் பொருளையும் சுருக்கமாக ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகார ஸாரா வலீ என்னும் நூலில் காட்டுகிறார்

பாதா₃ப்₄யாம் அத்ர பூர்வம் ஜநயதி ப₄விநாம் ப்₃ரஹ்ம வித்₃யாதி₄காரம்
பஶ்சாத் தேஷாம் உபா₄ப்₄யாம் வத₃தி ப₃ஹுவித₄தாம் தாம் அசேஷ꞉ ஸஹாங்கை ₃꞉ ।
ஐஶ்வர்யாதௌ விரக்திம் நிரவதி₄விப₄வே புருஷே சாபி₄லாஷம்
வித்₃யா பே₄தா₃வலம்ப₃ம் தது₃பகரண மப்யாஹ பாதை ₃꞉ க்ரமேண ॥

உபாஸநம் செய்வதற்கு அடிப்படைத் தகுதி–உலக விஷயங்களில் வைராக்யம் (பற்றின்மை ) மற்றும் பரமாத்மாவிடம் மிகுந்த ஆசை (பக்தி). இவை இரண்டையும் ஏற்படுத்துவதற்காகத் தான் முதல் பாதத்தில் ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மா வெவ்வேறு நிலைகளில் படக் கூடிய துன்பங்களையும், இரண்டாவது பாதத்தில் பகவானுடைய பெருமைகளையும் வ்யாஸர் கூறுகிறார். அதற்கு மேல் மூன்றாவது பாதத்தில் உபாஸநம் செய்வதில் உள்ள வெவ்வேறு முறைகளையும் நான்காவது பாதத்தில் உபாஸநத்துக்குத் தேவையான அங்கங்களையும் விவரிக்கிறார்.

3-1-1-தத₃ந்தர ப்ரதிபத்த் யதி₄கரணம் -அதிகரணத்தின் பின்புலம் ––இந்த அதிகரணத்தில் ஓர் ஆத்மா ஓர் உடலை விட்டு, வேறொரு உடலுக்குச் செல்லும் நிலம் ஆராயப் படுகிறது.
ஸந்தேஹம்– உடல் என்பது ஐம் பூதங்களால் ஆக்கப் பட்டது. பூத ஸூக்ஷ்மங்கள் அதாவது ஐம் பூதங்களில் நுண்ணிய பகுதிகளால் தான் அது உண்டாக்கப் பட வேண்டும். எனவே , ஜீவாத்மா ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கிறாரா? அல்லவா? என்பது தான் இந்த அதிகரணத்தில் உள்ள ஸந்தேஹம்-

பூர்வ பக்ஷம்– பூத ஸூக்ஷ்மங்கள் இல்லாமல் தனியாகத் தான் செல்கிறார் ஜீவாத்மா. ஏனெனில், அவர் எந்த இடத்தில் போய் சேருகிறாரோ , அங்கேயே பூத ஸூக்ஷ்மங்கள் இருக்கப் போகின்றன, அவற்றைக் கொண்டே புது உடலை உண்டாக்கி விடலாம்.அதனால் முன் உடலிலிருந்து பூத ஸூக்ஷ்மங்களைச் சுமந்து செல்லத் தேவை யில்லை

ஸித்தாந்தம்– ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் செல்கிறார் என்று இந்த அதிகரணத்தில்உள்ள 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார்.
1–தத₃ந்தர ப்ரதி பத்தௌ ரம்ஹதி ஸம் பரிஷ்வக்த: ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம்(நிரூபணாப்யாம் )
தத₃ந்தர ப்ரதி பத்ததௌ
–வெவ்வேறு உடலை அடையும் பொழுது–தத் என்றால்’அது’ என்று பொருள்.
முன் அதிகரணத்தில் ’ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி’ (நாம ரூப வியாக்ரணம் -பெயர் உருவம் கொடுத்தல் )என்ற ஸூத்ரத்தில் மூர்த்தி என்ற சொல்லால் ’உடல்’ குறிக்கப்பட்டது. அதைத் தான் இவ் விடத்தில் அது என்று நினைவு கூறுகிறார். ஆகவே , தத்= உடல்; ததந்தரம்= வெவ்வேறு உடல்; பிரதிபத்தி= அடைதல். அப்பொழுது–
ஸம் பரிஷ்வக்த:
– பூத ஸூக்ஷ்மங்களை (அணைத்துக் கொண்டு )அழைத்துக் கொண்டு (எடுத்துக் கொண்டு) ரம்ஹதி–(ஜீவாத்மா) செல்கிறார்
ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம் – கேள்வி பதில்களால் (நிரூபணாப்யாம் )-

பஞ்ச அக்நி வித்யை – சாந்தோக்ய உபநிஷத்தின் 5 ஆவது அத்யாயத்தில் பஞ்சோக்₃நி வித்₃யா என்பது வருணிக்கப் பட்டுள்ளது. அதிலிருக்கும் கேள்வி பதில்களைத் தான் இங்கு வ்யாஸர் குறிப்பிடுகிறார்
ச்வேத கேது என்பவன் (ஆருணி என்றும் இவர் பெயர் ) பாஞ்சால தேசத்து அரசனான ப்ரவாஹணனுக்குச் சில வைதிக கர்மங்களைச் செய்து வைப்பதற்காகச் சென்ற போது அவர் இவனிடம் 5 கேள்விகள் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியாததால் தன் தந்தையிடம் (கௌதமர் இவர் தகப்பனார் )வந்து அவன் கேட்க, அவரும் பதில் தெரியாமல் ப்ரவாஹணரிடமே சென்று விடை கேட்டார். அப்போது பஞ்சோக்₃நி வித்₃யா என்பதை ப்ரவாஹணர் உபதேசித்தார். அந்த ஐந்து கேள்விகள்-
1-வைதிக கர்மங்களைச் செய்பவர்கள் எந்தப் பாதையால் ஸ்வர்கத்தை அடைகிறார்கள்?
2-அவர்கள் எந்தப் பாதையால் திரும்பவும் பூ லோகத்தில் வந்து பிறக்கிறார்கள்?
3–தேவ யானம் பித்ரு யானம் என்ற இரண்டு பாதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
4-யாரெல்லாம் ஸ்வர்க லோகத்தை அடைவதில்லை ?
5–ஜலமானது ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி ’மனிதன்’ என்றழைக்கப்படும் உடலாக மாறுகிறது?
இதில் ஐந்தாவது கேள்வியும் அதற்கான பதிலும் தான் நமக்கு இப்போது தேவையானவை

அக்நி என்ற உருவகப் படுத்தப்பட்ட ஐந்து பொருள்களில் ஜலத்தை ஆஹுதியாகக் கொடுக்கக் கொடுக்க அது பல மாறுபாடுகளை அடைந்து இறுதியில் மனித உடலான கர்பமாக மாறுகிறது என்று ப்ரவாஹணர் பதில் கூறினார். இது தான் பஞ்சோக்₃நி வித்₃யா என்று அழைக்கப் படுகிறது. இறுதியில் மனித உடல் உண்டாகிற படியால், அதற்குத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் ஜீவாத்மா இந்த ஐந்து நிலைகளையும் கடக்கிறார் என்று கேள்வி-பதில்களைக் கொண்டு நாம் அறிய முடிகிறது.

ஹோமப் பொருள் ஸ்ரத்தா-(பூத சூஷ்மங்களுடன் கூடிய ஜீவாத்மா)-அக்னி -ஸ்வர்க்கம் -மாற்றம் -ஸோமராஜா -அழகிய உடல்
ஹோமப் பொருள் -சோமராஜா -அக்னி -மேகம் -மாற்றம் -மழை –
ஹோமப் பொருள் -மழை -அக்னி -பூமி – -மாற்றம் -அன்னம் -சோறு
ஹோமப் பொருள் –அன்னம் -அக்னி -ஆண் -மாற்றம் -ரேதஸ் விந்து –
ஹோமப் பொருள் -ரேதஸ் -அக்னி -பெண் -மாற்றம் -கர்ப்பம் -மனித உடல் –

ஜீவாத்மா அடுத்த உடலுக்குப் பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறாா்–புலன்களும் பூத ஸூக்ஷ்மங்களும் செல்கின்றன -ஒரு ஜீவாத்மா ஓரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு செல்கிறாரா? இல்லையா ? என்கிற ஆராய்ச்சி செய்யப் படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள பஞ்ச அக்நி வித்யையில் ப்ரவாஹணர் ஸ்வேத கேதுவுக்கும் அவருடைய தந்தைக்கும் உபதேசிக்கும் போது, இந்த உடலிலிருந்து பிரிந்த ஜீவாத்மா ஸ்வர்கம்,மேகம், பூமி, ஆண், பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டதும் மனித உடலை அடைகிறார் என்று கூறுவதால், கண்டிப்பாக அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் அவர் சென்றிருக்க வேண்டும் என்று முதல் ஸூத்ரத்தில் வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்களைப் பார்ப்போம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரவாஹணரின் கேள்வியில் “ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனிதனாக மாறுகிறது என்று தெரியுமா?” என்று தானே உள்ளது. ஜலத்தை மட்டும் தானே குறிப்பிட்டு்கிறார். பிறகு எப்படி எல்லாப் பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துச் செல்வதாகக் கொள்ள முடியும்?
வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரத்தில்–2-திரியாத் மகத் வாத் து பூ₄யஸ்த்வாத்
–“மூன்றின் வடிவமானதால்; அதிகமானதால்”
முன் அதிகரணத்தில் சொன்ன படிக்கு, ஐம்பூதங்களையும் படைத்த பிறகு பகவான் அவற்றைக் கலந்து பஞ்சீகரணம் என்ற செயலைச் செய்கிறார். அதனால் ஒவ்வொரு பூதமுமே ஐம் பூதங்களின் வடிவமாகத் தான் உள்ளது. எனவே இங்கு ஜலம் என்று குறிப்பிடப் பட்டதும் ஐம் பூதங்களின் பூத ஸூக்ஷ்மங்களும் தான்.(பஞ்சீகரணத்துக்கு உப லக்ஷணம் -பஞ்சாத்மகத்வாத் என்றே கொள்ள வேண்டும்)
-பிறகு ஏன் அதை மற்ற பெயர்களால் குறிப்பிடாமல் ’ஜலம்’ என்று குறிப்பிடுகிறார்? அதிகமான பகுதி ஜலமான படியால். உண்டாக்கப்படும் மனித உடலிலும் ஜலம் தானே பெரும்பாலும் உள்ளது

3– ப்ராண க₃தே : ச – “ப்ராணன்கள் (புலன்கள்) செல்வதாலும்”;
இதில் வேறொரு காரணம் காட்டுகிறார். -ஜீவன் உடலிலிருந்து புறப்படும் பொழுது மூச்சுக் காற்றையும் புலன்களையும் எடுத்துச் செல்கிறார் எனப்படுகிறது. புலன்களை மட்டும் எடுத்துச் செல்ல இயலாதாகையால், அவற்றுக்கு இருப்பிடமான பூத ஸூக்ஷ்மங்களையும் சேர்த்துத் தான் எடுத்துச் செல்ல வேண்டும், காற்று புஷ்பத்தின் துகள் களோடு மணத்தை எடுத்துச் செல்வது போல்.(கீதையிலும் இதே போல் அருளிச் செய்துள்ளார்)

ஸ்ரீ கீதை 15-7/8–மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்-இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –

புலன்கள் அழிகின்றனவா? செல்கின்றனவா?
கேள்வி
–வேதத்தில், ஒருவன் மரணமடையும் பொழுது புலன்கள் அழிந்து போகின்றன என்று தான் சொல்லப் படுகிறது. (யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்ய அக்₃நிம் வாக்அப்யேதி, வாதம் ப்ராண :, சஷுஸ் : ஆதி₃த்யம்) அதாவது“ஒரு மனிதன் மரணம் அடையும் பொழுது அவனுடைய வாக்(பேச்சுப் புலன்) நெருப்பில் லயம் அடைகிறது (அழிந்து போகிறது), மூச்சு காற்றில் சேர்கிறது, கண் ஸூர்யனிடம் லயம் அடைகிறது” என்றுள்ளது. எனவே , ஜீவாத்மா வேறொரு உடலுக்குச் செல்லும் பொழுது புலன்களையும் எடுத்துச் செல்கிறார் என்பது தவறு.

வ்யாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்
4–அக்₃ந்யாதி₃ க₃தி ச்ருதே : இதி சேத் ந பா₄க்தத்வாத்
அக்₃ந்யாதி₃க₃திச்ருதே
: – புலன்கள் அக்நி முதலானவற்றில் லயம் அடைவதாக வேதம் சொல்வதால்
இதி சேத் ந–என்று நீங்கள் கூ₂றினால், அது தவறானது
பா₄க்தத்வாத்– இந்த வாக்யம் நேரடிப் பொருளைக் குறிக்காமல் வேறொரு அர்த்தத்தில் சொல்லப் பட்டு்ள்ளபடியால்.

இதே இடத்தில் (ஓஷதீ₄: லோமாநி, வநஸ்பதீந் கேசா 🙂 அதாவது “உடலிலிருக்கும் முடிகள் செடி கொடிகளைச் சென்றடைகிறது, தலையிலிருக்கும் முடிகள் மரங்களில் லயம் அடைகின்றன” என்றும் கூறப்பட்டு்ள்ளது. அது கண்டிப்பாக நேரடியான பொருளில் கூறப் பட்டிருக்க முடியாது, அப்படி எதுவும் நடக்காததால். எனவே , இந்தப் பகுதி முழுவதுமே அதி₄ஷ்டா₂த்ரு தே₃வதா அபக்ரமணம் என்ற பொருளில் தான் உள்ளது. -அதாவது, உடலிலிருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வலுவூட்டக் கூடிய தெய்வங்கள் உள்ளார்கள் . நெருப்புக்கான கடவுள் பேச்சுப் புலனையும், காற்றுத் தேவதை மூச்சுக் காற்றையும் , ஸூர்யனுக்கான தேவதை கண்ணையும், செடி கொடிகளின் தேவதை உடல் முடிகளையும், மரங்களுக்கான அபிமாநிநீ தேவதை தலை முடியையும் பாதுகாக்கிறார்கள் ஒருவன் மரணமணடயும் போது, பேச்சுப் புலனை இதுவரை காத்து வந்த தெய்வம், இனி அதற்குத் தேவை இல்லாதலால், அக்நிக்கு மட்டும் தெய்வமாக இருக்கும். அதைத் தான்“பேச்சுப் புலன் அக்நியில் சேர்கிறது” என்று வேதம் கூறுகிறது. அதே போல் தான் மற்ற இடங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே , புலன்கள் அழிவதில்லை , ஜீவாத்மாவால் தான் அடுத்த உடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

ஸ்ரத்தா என்றால் என்ன?
கேள்வி
–ப்ரவாஹணரின் கேள்வியில்-’ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனித உடலாக ஆகிறது?’ என்று ஜலத்தை (பூத ஸூக்ஷ்மங்களை ) பற்றின பேச்சு இருந்தாலும், ஆஹுதிகணை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது, முதல் ஆஹுதியில் ’ஸ்ரத்₃தா₄’ என்ற பொருள் தான் ஸ்வர்கம் என்ற அக்நியில் ஆஹுதியாகக் கொடுக்கப் படுவதாகச் சொல்லப் பட்டு்ள்ளது. ஸ்ரத்தா என்றால் ஈடுபாடு-நம்பிக்கை என்கிற எண்ணம் தான் -ஆகவே , ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்வதாக எப்படிச் சொல்ல முடியும்? வியாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்

5– ப்ரத₂மே அஶ்ரவணத் இதி சேத் நதா: ஏவ ஹி உபபத்தே :
ப்ரத₂மே அஶ்ரவணத்
-முதல் ஆஹுதியில், ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் )வேதத்தில் சொல்லப்படாதபடியால்
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால், அது தவறு
தா: ஏவ ஹி–அந்த பூத ஸூஷமங்கள் தானன்றோ (ஸ்ரத்₃தா₄ என்ற சொல்லால் குறிக்கப் படுகின்றன)
உபபத்தே :– (அப்போது தான் கேள்வியும் பதிலும்) பொருந்துகிற படியால்
முதலில் ப்ரவாஹணரின் கேள்வியில் ’ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. பதிலின் முடிவிலும் ’இவ்வாறு ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. எனவே நடுவில்’ ஸ்ரத்தா என்ற பொருள் ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி மனித உடலாக மாறுகிறது’ என்று சொல்லப்பட்டாலும், அந்த ஸ்ரத்தா என்பது ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் ) என்று தான் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், கேள்விக்கும் பதிலுக்கும் பொருத்தமே இல்லாமல் போய் விடும்.
மேலும் வேதத்தில் வேறொரு இடத்தில்“ஸ்ரத்₃தா₄ வை ஆப:” அதாவது ’ஜலம் அன்றோ ஸ்ரத்தா என்று சொல்லப் படுகிறது’ என்று தெளிவாகவே சொல்லப்பட்டு்ள்ளது. எனவே இங்கும் அதுவே பொருள் –

ஜீவாத்மா எங்கே சொல்லப் பட்டு்ள்ளார்? கேள்வி–ஸ்ரத்தா-ஜலம் என்று பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட்டு்ள்ளன. அவை ஐந்து ஆஹுதிகளைக் கடந்து மனித உடல் ஆகின்றன. ஆனால் இங்கு ஜீவாத்மாவைப் பற்றின பேச்சே இல்லையே ? பிறகு இதைக் கொண்டு எப்படி ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறார் என்று கூற முடியும்? வ்யாஸரின் பதில்-
6-அஸ்ருத்த்வாத் இதி சேத் ந இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே : ச-•
அஸ்ருத்த்வாத்
–ஜீவாத்மா இங்கு சொல்லப் படாதபடியால் இதைக் கொண்டு முடிவு செய்ய இயலாது
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால் அது தவறானது
இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே ச:-யாகம் முதலானவற்றைச் செய்பவர்கள் என்றும் சொல்லப் படுகிற படியால்-அறிந்து கொள்ளலாம்-

இதே பஞ்சாக்நி வித்யையில்(அத₂ ய இமே க்₃ராமே இஷ்டா பூர்தே த₃த்தம் இத் யுபாஸதே தே தூ₄ம மேவ அபி₄ஸம்ப₄வந்தி… ஆகாசாத் சந்த்₃ரமஸம், ஏஷ ஸோமோ ராஜா) அதாவது “யாரெல்லாம் உலகத்தில் இஷ்டம்(தேவர்களுக்குச் செய்யும் யாகம் ஹோமம் முதலானவை ), பூர்தம் (மனிதர்களுக்காகச் செய்யும் மரம் நடுதல், குளம் வெட்டுதல் முதலானவை ), த₃த்தம் (தானம் செய்தல்) முதலானவற்றைத் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்கள் இந்த உடலை விட்டு புகை மண்டலம் இரவுக்காக தேவதை மூலமாகஆகாசம், சந்த்ரன் மூலமாக ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக (அழகான உடலை உடையவராக) ஆகிறார்” என்றுள்ளது.

ஒரு இடத்தில் “ ஸ்ரத்தா என்பது ஸ்வர்கத்தில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு ஸோமராஜாவாக ஆகிறது” என்றும், மற்றொரு இடத்தில் “யாகம் முதலானவற்றைச் செய்த ஜீவாத்மா ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக ஆகிறார்” என்றும் சொல்லப் பட்டு்ள்ளபடியால், இங்கு ஸ்ரத்தா எனப்படுவதும் வெறும் பூத ஸூக்ஷ்மங்களை அல்ல, அவற்றோடு கூடின ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தா, ஸோமராஜா, மழை , அந்நம், ரேதஸ், கர்பம் என்று ஒவ்வொரு நிலையிலும் வெறும் பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட வில்லை , அந்தந்த நிலையில் உள்ள பூத ஸூக்ஷ்மங்களை உடலாகக் கொண்ட ஜீவாத்மா தான் சொல்லப் படுகிறார்.

(சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்து மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –-இதை முடிக்கும் பொழுது -5-10-4/5- பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே
யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று-பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்)

ஸ்வர்கம் செல்லும் ஜீவாத்மாவின் நிலை கேள்வி–இங்கு ஸோம ராஜா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாக இருக்க முடியாது. ஏனெனில் (ஏஷ ஸோமோ ராஜா, தத் தே₃வாநாம் அந்நம், தம் தே₃வா: ப₄க்ஷயந்தி) அதாவது “ஸோம ராஜா என்பது தேவர்களின் அந்நம் (உணவு), அதை தேவர்கள் உண்ணுகிறார்கள் ” என்று ப்ரவாஹணர் உபதேசிக்கிறார். ஜீவாத்மாவை உண்ண முடியாதே ?வ்யாஸரின் பதில்–அடுத்த(கடைசி) ஸூத்ரத்தில்

7–பா₄க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா₂ ஹி த₃ர்ஸயதி
பா₄க்தம் வா
–“உருவகம் தான்”. உணவு- உண்கிறார்கள் என்றது நேரடியான பொருளிலல்ல, உருவகமாக. உணவு எப்படி ஒருவனுக்குத் திருப்தியை அளிக்குமோ அது போல் ஸ்வர்கத்தை அடைந்த இந்த ஜீவாத்மா தேவர்களுக்குத் திருப்தி அளிக்கிறான் என்று தான் பொருள்
(ந வை தே ₃வா: அச்நந்திம் ந பிப₃ந்தி, ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி) அதாவது “தேவர்கள் உண்பதில்லை , பருகுவதில்லை , இதைப் பார்த்தே த்ருப்தி அடைகிறார்கள் ” என்று வேதமே காட்டுகிறது. அதனால், இங்கு நேரடியாக உண்பது சொல்லப் படாதபடியால் ஸோம ராஜா என்பது பூத ஸூக்ஷ்மங்களோடு கூடின ஜீவாத்மா தான்

அநாத்ம வித்த்வாத்–“ஆத்ம ஜ்ஞாநி அல்லாத படியால்”. ஸ்வர்கத்தை அடையும் இந்த ஜீவாத்மா சிறந்த ஆத்ம ஜ்ஞாநியோ ,பரமாத்மாவை உபாஸிப்பவனோ அல்ல. உலகத்தில் இஷ்டம் பூர்தம் த₃த்தம் முதலானவற்றைச் செய்தவன் தான். அதனால் அவன் ஸ்வர்கத்தை அடைந்து, அங்கு தேவர்களுக்கு ஒரு கருவி போல் -உதவியாளனாக இருந்து தொண்டு செய்து த்ருப்தியை ஏற்படுத்துகிறான் என்று சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை-
ததா₂ ஹி த₃ர்ஸயதி–“அவ்வாறு அன்றோ வேதம் காட்டுிறாது”.
(யதா₂பசு: ஏவம் ஸ: தேவாநாம்₃) அதாவது “எப்படி ஒரு விலங்கோ அது போல் தான் அவன் தேவர்களுக்கு” என்று இவன் தேவர்களுக்கு ஒரு கருவியாக இருப்பதை வேதமே காட்டுகிறது. அதனால் இந்தப் பொருள் பொருத்த முடையதே .-

(ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்-ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் –
மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்-இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –-ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து-இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி-தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்)

ஆக, பஞ்சாக்நி வித்யையில் உள்ள கேள்வி பதில்களின் மூலம், ஒ்ரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் ஜீவாத்மா, பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் செல்கிறாா் என்பது நிரூபிக்கப் பட்டது.

இந்த பஞ்ச அக்னி வித்யையில் ப்ரக்ருதியை விட வேறுபட்ட பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை
ப்ரஹ்மாத்மகமாகவே உபாஸிக்க வேண்டும் என்று கருத்துஇவ் வித்யைக்குப் பலம் ஸ்வ ஆத்ம அனுபவத்துடன் கூடிய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம்-மதுவித்யா நிஷ்டனுக்கு வஸூவாதி பத பிராப்தி இடைப்பட்ட பலன் போல் இவனுக்கு ஸ்வ ஆத்ம அனுபவம்-இங்கு ஸ்வாமி தேசிகன் –
தேவ லோகம் -மேகம் -ப்ருத்வீ புருஷன் ஸ்த்ரீ என்று ஐந்து அக்னிகளைக் கல்பித்து
அவற்றில் ஸ்ரத்தை என்னும் பூத ஸூஷ்மம் க்ரமமாக பரிணாமம் அடைந்து
சோமன் மழை அன்னம் ரேதஸ் என்ற ஹவிஸ்ஸை ஜீவனுடன் தேகத்தில் உள்ள ப்ராணன்கள்
ஹோமம் செய்கின்றன -என்பது பஞ்ச அக்னி வித்யை என்று
த்யவ் பர்ஜன்யோ அத ப்ருத்வீ ஜூஹ்வதீதி ப்ரவீதி -என்ற ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

3-1-2-க்ருதாத்ய்யாதி₄கரணம் ஜீவாத்மா ஸ்வர்கத்திலிருந்து புண்ய பாபங்களோடு திரும்புகிறாரா? –ஸங்க ₃தி–முன் அதிகரணத்தில் ஸ்வர்கத்துக்குச் சென்ற ஜீவாத்மா எப்படி பல படிகளைத் தாண்டி மறுபடியும் மனிதப் பிறவியை அடைகிறார் என்று கூறப்பட்டது. அதில் ஒரு ஸந்தேஹம் எழுகிறது–ஸ்வர்கத்திலிருந்து திரும்பி வரும் ஜீவாத்மா, தன்னுடைய எல்லா கர்மங்களையும்(பாப புண்யங்களையும்) ஸ்வர்கத்தில் அநுபவித்துக் கழித்து விட்டு எந்தக் கர்மங்களும் இல்லாமல் திரும்ப வருகிறாரா? அல்லது ஸ்வர்கத்தில் அநுபவித்து முடித்த கர்மங்களைத் தவிற மற்ற கர்மங்கவளோடு கூடத் திரும்பி வருகிறாரா? என்று. இதற்கான விடையைத் தான் இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்-

பூர்வபக்ஷம்எந்தக் கர்மமும் இல்லாமல் தான் வருகிறார், அனைத்துக் கர்மங்களையும் ஸ்வர்கத்தில் அநுபவித்துக் கழித்து விட்டதாக வேதம் சொல்கிறபடியால்.
தஸ்மிந் யாவத் ஸம்பாதம் உஷித்வா அத₂ ஏதமேவ அத்₄வாநம் புந: நிவர்தந்தே -ஸம்பாதம்
என்றால் கர்மங்கள், அவற்றால் தான் ஸ்வர்கத்தை அடைகிறார். “யாவத் ஸம்பாதம்” என்றால் கர்மங்கள் இருக்கும் வரை என்று பொருள். எனவே , “அந்த ஸ்வர்க லோகத்தில் கர்மங்கள் இருக்கும் வரை வாழ்ந்து விட்டு, அதற்குப் பின் இந்த பூலோகத்துக்குத் திரும்பி வருகிறான்” என்று இந்த வாக்கியம் சொல்கிறது.
பிராப்ய அந்தம் கர்மண: தஸ்ய யத் கிஞ்ச இஹ கரோதிஅயம்| தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே || “இவ் வுலகில் எந்த எந்த கர்மங்களைச் செய்கிறானோ , ஸ்வர்கத்தில் அவற்றின் முடிவை அடைந்த பிறகு (அவற்றின் பயனை அநுபவித்து முடித்த பிறகு), அந்த ஸ்வர்கத்திலிருந்து திரும்பவும் இந்த உலகத்துக்கு வருகிறான், மேலும் கர்மங்களை ஸம்பாதிப்பதற்காக”
ஆகவே ஸ்வர்கத்திலிருந்து வரும் ஜீவாத்மாவிடம் எந்தக் கர்மங்களும் கிடையாது.

ஸ்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் காட்டும் பதில் ஸித்தாந்தம்–இந்த அதிகரணத்தில் மொத்தம்-4 ஸூத்ரங்கள்-
முதல் ஸூத்ரம் ஸித்தாந்தத்தைச் சொல்கிறது.
1 க்ருதாத்யயே அநுசயவான் த்₃ருஷ்ட ஸ்ம்ருதிப்₄யாம் யதே₂தம் அநேவம் ச
க்ருதாத்யயே
–ஸ்வர்கத்தில் அநுபவிக்க வேண்டிய கர்மங்களின் பயனை அநுபவித்து முடித்த பிறகு
அநுசயவான்–மீதமுள்ள கர்மங்களை உடையவராகத் தான் (ஜீவாத்மா திரும்ப வருகிறார்)
த் ₃ருஷ்ட ஸ்ம்ருதிப்₄யாம்–வேதமும் ஸ்ம்ருதிகளும் அவ்வாறு சொல்கிறபடியால்.
யதே₂தம் அநேவம் ச–ஸ்வர்கத்துக்குச் சென்ற வரிசையிலும், வேறு முறையிலும் திரும்ப வருகிறார்.

த் ₃ருஷ்டம்–நேரடியாகக் காணப்படும் வேத வாக்கியம். அதிலும் இந்தக் கருத்து சொல்லப்படுகிறது.
தத்ய இஹ ரமணீய சரணா அப்₄யாஶ꞉ ஹ யத் தே ரமணீயாம் யோநிம் ஆபத்₃யேரந்| அத₂ ய இஹ கபூயசரணா꞉ அப்₄யாஶ꞉ ஹ யத் தே கபூயாம் யோநிமாபத்₃யேரந் ॥ இங்கு
சரணம் என்றால் கர்மங்கள்.
ரமணீயம் என்றால் சிறந்த என்று பொருள்.
கபூயம் என்றால் தீய என்று பொருள்.
ஆக“ஸ்வர்கத்திலிருந்து வரும் ஜீவாத்மா நல்ல கர்மங்களை உணடயவராக இருந்தால் நல்ல பிறவியான மனிதப் பிறவியை அடைகிறார்; தீய கர்மங்களை உடையவராக இருந்தால் தாழ்ந்த நாய், பன்றி முதலான பிறவிகளை அடைகிறார்.”

ஸ்ம்ருதி–வேதத்தின் பொருளை ஒட்டி ரிஷிகளால் இயற்றப்பட்ட நூல்கள். அவற்றிலும் இது சொல்லப்படுகிறது
கௌதமர்- (ஸ்வ கர்ம நிஷ்டா₂꞉ ப்ரேத்ய கர்ம ப₂ல மநுபூ₄ய தத꞉ஸேஷேண விஶிஷ்ட தே₃ச ஜாதி குல ரூபாயு꞉ஸ்ருத வித்த வ்ருத்த ஸுக₂ மேத₄ஸ꞉ ஜந்ம ப்ரதிபத்₃யந்தே ) அதாவது “இவ் வுலகில் தங்களுக்கு விதிக்கப் பட்ட கர்மங்களை செய்பவர்கள் மரணமடைந்து, தங்கள் செயல்களின் பயனை ஸ்வர்கத்தில் அநுபவித்து விட்டு, மீதமிருக்கும் கர்மங்களால் குறிப்பிட்ட இடம், குலம், உடல், ஆயுஸ், கல்வி, செல்வம்,நடத்தை , திறமை ஆகியவற்றோடு பிறக்கிறார்கள்.”
இதே போல் தான் ஆபஸ்தம்பர் என்ற ரிஷியும் கூறுகிறார். எனவே , மீதமுள்ள கர்மங்களால் தான் அடுத்த பிறவி.

ஸ்வர்கத்திலிருந்து திரும்ப வரும் பாதை
கேள்வி–“யாவத் ஸம்பாதம் உஷித்வா” அதாவது“கர்மம் உள்ள வரை ஸ்வர்கத்தில் வாழ்ந்து விட்டு” என்ற வேத வாக்கியத்துக்கு எப்படிப் பொருள் கொள்வது?
பதில்–இங்கு ஸம்பாதம் என்ற சொல் ஜீவாத்மாவிடம் இருக்கும் எல்லாக் கர்மங்களையும் குறிக்க வில்லை . அவன் ஸ்வர்கத்தை அடைவதற்குக் காரணமான புண்யத்தை மட்டும் குறிக்கிறது. எனவே “ஸ்வர்கத்துக்குக் காரணமாக புண்யம் எது வரை உள்ளதோ அதுவரை ஸ்வர்கத்தில் வாழ்ந்து விட்டு” என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேணும்

ஜீவாத்மாவிடம் எண்ணிறந்த பாபங்களும் புண்யங்களும் உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து ஒருவனுக்கு ஸ்வர்கத்தையோ , நரகத்தையோ , மனிதப் பிறவியையோ , விலங்குப் பிறவியையோ கொடுக்காது. ஒவ்வொரு கால கட்டத்தில், ஒரு சில பாப-புண்யங்கள் தான் கனிந்து பயன் கொடுக்கத் தயாரான நிலையில் இருக்கும். அவை தான் பிறவிகளைக் கொடுக்கின்றன. அதைத் தவிற பயன் கொடுக்கத் தொடங்காத ஆயிரக் கணக்கான கர்மங்கள் அந்த ஜீவனிடம் இருக்கலாம். எனவே , ஸ்வர்கத்திலிருந்து திரும்பும் போதும் அவற்றோடு தான் வருகிறார் ஜீவாத்மா–

ஸூத்ரத்தின் கடைசிப் பகுதி, ஜீவாத்மா எந்தப் பாதையில் திரும்ப வருகிறார் என்று கூறுகிறது.
யதே₂தம்
–பூலோகத்திலிருந்து ஸ்வர்கத்துக்கு எந்தப் பாதையில் சென்றாரோ , அதே பாதையிலும் திரும்ப வருகிறார்;
அநேவம் ச–வேறு விதமாகவும் திரும்ப வருகிறார்-
ஸ்வர்கத்துக்குப் போகும் பாதை –புகை , இரவு, தேய்பிறை , தக்ஷிணாயனம், பித்ருலோகம், ஆகாசம், சந்த்ரலோகம் என்ற உலகங்கள் வழியாக ஸ்வர்கம் அடைகிறான்-
ஸ்வர்கத்திலிருந்து திரும்பும் பாதை –ஆகாசம், வாயு, மேகம், பூமி என்ற உலகங்கள் வழியாகத் திரும்ப வருகிறான்.

எனவே போகும் போது இருந்த ஆகாசம் என்ற உலகத்துக்குத் திரும்ப வரும் போதும் செல்கிறபடியால் யதே₂தம் (போன பாதையிலேயே ) என்று கூறப்படுகிறது. போகும் போது செல்லாத வாயு லோகத்துக்குத் திரும்பும் போது செல்கிறபடியாலும், பித்ரு லோகத்துக்குச் செல்லாத படியாலும் அநேவம்(வேறு விதமாக) என்று கூறப்படுகிறது.-

கார்ஷ்ணாஜிநி ரிஷியின் பதில்
பூர்வ பக்ஷியின் கேள்வி
–முன் உதாகரிக்கப் பட்ட வேத வாக்யத்தில் ’ரமணீய சரணா :’, ’கபூய சரணா :’ என்ற இடங்களில் சரணம் என்ற சொல்லுக்கு’கர்மங்கள்’ என்று பொருள் கொண்டது தவறானது. உலகத்தில் சரணம், ஆசாரம், சீலம், விருத்தம் என்ற சொற்கள் எல்லாம் நடத்தையை (ஆசாரத்தை ) தான் காட்டுகின்றன. வேதத்திலும் கர்மங்கள் தனியாகவும் சரிதம்(ஆசாரம்) தனியாகவும் தான் சொல்லப் பட்டுள்ளது. எனவே சரணம் என்றால் ஆசாரம் தான்-எனவே , “முன் பிறவியில் நாம் செய்யும் தர்மச் செயல்கள் ஸ்வர்கத்தைத் தருகின்றன, அதர்மச் செயல்கள் நரகத்தைத் தருகின்றன. அதற்குப் பின், முன் பிறவியில் நாம் கடைப்பிடித்த ஆசாரம் பூலோகத்தில் மனிதனாகவோ விலங்காகவோ அடுத்த பிறவியைத் தருகிறது” என்று தான் இந்த வேத வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்

இதற்கு கார்ஷ்ணாஜிநி என்னும் ரிஷி கூறும் பதிலை அடுத்த ஸூத்ரத்தில் வ்யாஸர் காட்டுகிறார்
2- சரணாத் இதி சேத் ந தது₃ப க்ஷணார்தா₂ இதி கார்ஷ்ணாஜிநி:
சரணாத்
–ஆசாரத்திலிருந்து தான் அடுத்த பிறவு ஏற்படுகிறது, எனவே மீதம் எந்தக் கர்மங்களும் கிடையாது
இதி சேத் ந–என்று நீங்கள் கூறினால், அது தவறானது
தது₃பலக்ஷணார்தா₂-இங்கு சரணம் என்ற சொல் கர்மங்களைக் குறிப்பதாகத் தான் கொள்ள வேண்டும்.
இதி கார்ஷ்ணாஜிநி:-என்று கார்ஷ்ணாஜிநி என்னும் ரிஷியின் அபிப்ராயம்

ஒரு சொல், தனது முக்கியமான பொருளைவிட்டு, வேறொரு பொருளைக் குறிப்பதற்கு உபலக்ஷணம் என்று பெயர். ’அந்த அறை (room)அதிகமாகச் சத்தமிடுகிறது’ என்று சொன்னால், அறை என்ற சொல் அறையிலிருக்கும் மக்களைத் தான் குறிக்கிறது. அறையால் சத்தமிட முடியாத படியால்- அதுபோல் இங்கும் சரணம் என்ற சொல் பொதுவாக ஆசாரத்தையே குறிப்பதாக இருந்தாலும், இவ் விடத்தில் கர்மங்களைத் தான் குறிக்க வேண்டும், ஆசாரத்திலிருந்து பிறவி ஏற்பட முடியாதபடியால் என்று கார்ஷ்ணாஜிநிரிஷியின் அபிப்ராயம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி–அப்படி யென்றால் ஆசாரத்துக்கு எந்தப் பயனும் இல்லாதலால் அவை வீணானவையா? – கார்ஷ்ணாஜிநியின் பதில்-அடுத்த ஸூத்ரம்- 3-ஆநர்த₂க்யம் இதி சேத் ந தத₃ பேக்ஷத்வாத்
ஆநர்த₂க்யம்–
கர்மங்களால் தான் ஸ்வர்கம், நரகம், அடுத்த பிறவவி முதலான அனைத்துமே என்றால் ஆசாரமே வீண்
இதி சேத் ந–என்று நீங்கள் கூறினால் அது தவறானது,
தத₃பேக்ஷத்வாத்–ஆசாரம் புண்ய காரியங்களுக்கு அங்கம்; எனவே ஆசாரம் இருந்தால் தான் தர்ம கார்யம் பயனளிக்கும்.
(ஸந்த்₄யாஹீந: அசுசி: நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு) ஸந்த்யா வந்தனம் செய்யாதவன் அசுத்தமானவன், அவனுக்குத் தர்மச் செயல்களில் தகுதியே இல்லை
(ஆசார ஹீநம் ந புநந்தி வேதா₃: யத்₃யப்யதீ₄தா: ஸஹ ஷட்பி₄ரங்கை 🙂 ஆசாரம் இல்லாதவன் ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்களைக் கற்றாலும், அவை அவனைப் புனிதமாக்க மாட்டா –சரணம் என்ற சொல் ஆசாரத்தைத் தானே குறிக்கும், கர்மங்களை அல்லவே என்று முன்னால் எழுப்பப்பட்ட கேள்விக்குக் கார்ஷ்ணாஜிநியின் பதிலை முன் இரண்டு ஸூத்ரங்களால் காட்டினார் வ்யாஸர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

இரண்டாம் அத்யாயம் -மூன்றாம் பாதம்-ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-

June 8, 2026

ஜீவாத்மாவுக்கு -ஜானாமி அறிவு நிலை -ஆசைப்படும் நிலை -முயற்சி செய்யும் நிலை -மூன்றும் உண்டு –

தூண்டுபவன் ப்ரஹ்மம் -நாம் பரதந்த்ரன் எல்லா அவஸ்தையிலும் -தூண்டுவது –
ஸாமான்ய காரணம் -விசேஷ காரணம் -விதை வயல்
முதல் பிரவிருத்திக்கு விசேஷ காரணத்தை ப்ரஹ்மம் கொஞ்சம் தானாகவே நிறுத்தி கர்மம் அடியாக செய்விக்கிறான் –

அந்த செயலுக்கு விசேஷ காரணமாக இருப்பதை விட்டுக் கொடுக்கிறான்–அதுவும் அவனது இன்னருளே-நாமும் ஆடுகள் அல்லவே -அவன் ஆட்டு இடையன் அல்லனே -ததாமி புத்தி யோகம் ஷிபாமி -அடக்குவார் இல்லாத ஸ்வா தந்திரம் உண்டே –

ஸ்ருஷ்டியாதி முகங்களாலே க்ருஷீ பண்ணினவன் அவனே –
அவன் அருளிய ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்யர் உபதேச கடாக்ஷம் மூலமாகவும் -ஆத்ம ஞானம் பெற்று ஆத்ம குணங்களை வளர்த்து
இவ்வாறு இருவரும் சேர்ந்தே வியாபாரிக்கிறோம்

நானும் கர்த்தா அவனும் கர்த்தா -என்னை எதிர்பார்த்து இருக்கும் கர்த்தா -நான் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு -சேர்ந்து செய்வதையே பஞ்ச ஹேது –
இத்தையே வேதங்கள் விதிப்பது வீணாகாமல் போக ‘
மங்க ஒட்டு உன் மா மாயை -அவனுக்கும் உபதேசிக்கிறார்

ஸ்ருதி ப்ரகாசகர் நிர்வாகம் இப்படி இருந்தாலும்
வாதி கேசரி ஜீயர் -பாபம் கர்மம் செய்பவரை அனுமதிப்பதும் தூண்டுவதும் அவனுக்கு கொத்தை ஆகும் என்பதால் ‘பாப கர்ம விஷயத்தில் உதாசீனனாகவே உள்ளார் என்று நிர்வஹிப்பர்

நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் ஸ்லோகம் அடிப்படையில் வாதி கேசரி ஜீயர் தீப பிரகாசம் கிரந்தத்தில்
ஆதவ் ஈஸ்வர தத்தவ் புருஷ ஸ்வா தந்தர்ய சக்தியால் ஸ்வயம் அந்த அந்த ஞானம் -விருப்பம் பிரயத்தனம் மூன்றையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறான்
தத்ர உபேஷ்ய -ததோ அநு மஸ்ய -பெருமான் இருக்க-

தடுக்க சாமர்த்தியம் இருக்க செய்யாமல் இருந்தால் வைஷம்யம் நைர் க்ருண்யம் வருமே என்னில்

பாபம் வழியில் செல்பவனுக்கு நிக்ரஹம் புண்ய வழியில் செல்பவனுக்கு அனுக்ரஹம் அளிக்கிறான்
குற்றம் தட்டாது –
பகவான் தூண்டுவது அவனவன் கர்மம் அடிப்படையிலே தான் –
யோஜனா பேதங்கள் உண்டு இதில் -விசேஷ காரணத்வம் -மூன்றிலும் ப்ரஹ்மமே -இல்லை முதலில் ஸாமான்ய காரணத்தவம் என்பது பற்றியே யோஜனா பேதம்

பல நீ காட்டிப் படுக்காதே நெறி காட்டி நீக்காதே என்டர் சொல்லாமே

கிடாம்பி அப்புள்ளார் -புருஷார்த்தம் அளிப்பவன் -இவன் தாழ்ந்த ஒன்றை அர்த்திக்க- அத்தையே தானே அவன் அளிக்க வேண்டும் -ஆகவே குறை வராதே

அதிகரண சாராவளியில் தேசிகன் -இது ரீதி பங்கம் -முதல் முயற்சியிலும் தூண்டுகிறான் -கர்மாதீனம் என்பதால் குறை இல்லை

——–

தத் இதம் ஆஹ —

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்–
விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்–৷৷18.14৷৷

அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,-கர்ம இந்திரியங்கள்
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).

ஸரீர வாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர–
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ—৷৷18.15৷৷

நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.

சாஸ்திரத்தில் சித்திப்பதாகவோ -சாஸ்திரத்தில் தடுக்கப்பட்டதாகவோ உலா யாதொரு கர்மத்தை
உடலாலும் வாக்காலும் மனதாலும் மனிதன் தொடங்குகிறானோ அந்தக் கர்மத்துக்கு இந்த ஐந்தும் காரணங்கள் ஆகின்றன –
அவை யாவன – சரீரம் -அடுத்தபடியாக ஜீவாத்மா -அது போலவே பலவிதமான செயல்களை யுடைய
மனத்தோடு கூடிய ஐந்து கர்ம இந்திரியங்கள் -அவ்வண்ணமே ஐந்து வகைப்பட்ட செயல்களை யுடைய ப்ராணன்கள் –
இக்கர்மங்களுக்கு காரணமானவற்றில் ஐந்தாவதாயும் முக்கியமான காரணமாயும் இருக்கும் பரமாத்மாவுமேயாகும்
சரீரம் ஜீவாத்மா பற்றுக் கொம்பாக – ஜீவாத்மா – கருவிகள் இந்திரியங்கள் –ஐந்து வகை உண்டே -சேஷ்டை செய்யும் ஐவர்
பஞ்ச பிராணங்கள்-வேறே வேறே வேலை இவற்றுக்கு பிராணன் அபானன் சாமான வாயு இவற்றுக்கு வேலை வேறே வேறே
தெய்வம் பரமாத்மா -ஐந்து பெரும் சேர்ந்தே கார்யம்
தெய்வம் முக்கியம் மற்றை நாலையும் தூண்டுவித்து கார்யம் -கட்டை விரலை போலே –

சாஸ்திரம் சம்மதித்த கர்மம் -தொடங்கும் பொழுது -சரீர வாக் மனஸ் மூவகை பட்ட கர்மாக்கள் –
சம்மதிக்காதவையும் உண்டே – இந்த ஐந்தும் இருந்தால் தான் –
முக்கிய அர்த்தம் -கர்த்தா சாஸ்த்ரார்த்தவாத் –ஜீவாத்மா தான் கர்த்தா -விதிக்கிற படியால் -பரமாத்மாவை விதிக்காதே
சாஸ்திரம் அர்த்தம் ஆக வேண்டுமே
ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை –
அடுத்து -பரார்த்த் து -ஈஸ்வராதீனம் —
ஈஸ்வர ஆணைக்கு உட்பட செய்தால் கர்ம பலன் ஜீவாத்மாவுக்கு சேரலாமோ -சங்கை வருமே
க்ருத ப்ரத்யநா அபேஷாத் -பிரயத்தனம் எதிர்பார்த்து –
உதாசீனம் அனுமந்தா -தூண்டி விடும் மூன்று நிலைகள்
முதல் நிலை உதாசீனம் -சாஸ்திரம் கொடுத்து ஞானம் கொடுத்து -முதல் முடிவு ஜீவாத்மா –
அனுமதி அளிக்கும் இரண்டாம் நிலை -நல்ல செயலோ தீய நிலையோ -அதிலேயே தூண்டி விடுகிறான் -குற்றம் வருமோ என்னில் –
தாய் குழந்தை விழும் பொழுது தடுக்காமல் -குற்றம் வருமோ -என்னில் –
ஸ்வாதந்திரம் கொடுத்ததால் -இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானமும் கொடுத்தானே-
ஆழ்வார் நீ தான் சம்சாரத்தில் -தூராக் குழி தூர்த்து வைத்தாய் -என்றது -பரதந்த்ர நிலையில் இருந்தே -சொன்னார்கள் –
எல்லா பொறுப்பும் அவன் இடமே
சர்வாத்மனா ஸ்வாதந்தர்யம் விட வேண்டுமே -அந்த நிஷ்டை வந்தால் நாமும் இப்படி சொல்லலாம் –

உமிழ்தல் கண் சிமிட்டல் கொட்டாவி விடுதல் -பஞ்ச வ்ருத்தி பிராணன் செயல்கள்
காமம் சங்கம் நினைத்தல் உறுதி சங்கல்பம் சிந்தனை -மனசின் செயல்கள்

தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி-

ஆத்ய ப்ரவ்ருத்தி முதல் செயலில் உதாசீனம் -ஜீவன் செய்வதில் அனுமதி–தனது நியமனம் இதுக்கு வேண்டாம் என்று தானே தவிர்ந்து –
நீயே வியாபாரிக்கலாம் என்று ஏற்படுத்தி -கர்த்ருத்வம் வந்தால் தானே சாஸ்திரம் விதிகள் வீணாகாது -பரமாத்மாவின் ஆயத்தமே இதுக்கும் காரணம்
பின்பு அனுமந்தா -பின்பு தூண்டி -இப்படி மூன்று நிலைகள் -அவன் சாமான்ய காரணம் நாம்-நமது கர்மாக்கள் – விசேஷ காரணம் -வயலில் விதைக்குத் தக்க பயிர் போல்-இவற்றுக்கு மூன்று ஸூ த்ரங்கள்-உதங்க ப்ரஸ்னத்துக்கு உத்தரம் இல்லையே-

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில் ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது-அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்ம பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

———–

தத் இதம் ஆஹ —

৷৷18.14৷৷ந்யாய்யே ஷாஸ்த்ர ஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி- ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. -அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹா பூத ஸஂகாத ரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ர அர்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ர உபபாதிதம். கரணஂ ச பரிதக் விதம் வாக் பாணி பாதாதி பஞ்சகஂ ஸ மநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக் விதஂ கர்ம நிஷ்பத்தௌ பரிதக் வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டா ஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத் வரித்தி வாசிநா? ஷரீர இந்த்ரிய தாரகஸ்ய ப்ராணா பாநாதி பேத பிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேது கலாபே தைவஂ பஞ்சமம் -பரமாத்மா அந்தர்யாமீ கர்ம நிஷ்பத்தௌ ப்ரதாந ஹேதுஃ இதி அர்தஃ- உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் விஜ்ஞாநம் அபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.(தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி )

பரமாத்ம ஆயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச் ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்ம ஆயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதி நிஷேத ஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.

இதம் அபி சோத்யஂ ஸூத்ர காரேண ஏவ பரிஹரிதம்.’கரித ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42)

இதி.ஏதத் உக்தஂ பவதி — இத்தால் சொல்லிற்று ஆயிற்று -பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரண கலேவராதிபிஃ ததாஹித ஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததா ஹித ஷக்திஃ ஸந் கர்ம நிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத் யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதி தாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வபுத்த்யா ஏவ ப்ரவரித்தி ஹேதுத்வம் அஸ்தி. யதா குருதர ஷிலா மஹீருஹாதி சலநாதி-(பெரிய பாறை தள்ள பலரும் செய்வது போல்) பல ப்ரவரித்திஷு பஹுபுருஷஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதி நிஷேத பாக்த்வஂ ச இதி.

৷৷18.14৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த,இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.

‘அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.

விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.

கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.

ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.

———————-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-ஆரம்பணாதி அதிகரணம் : 2-1-6 –ஸூத்ரங்கள் -(2-1-15–2-1-20)

June 8, 2026

ப்ரஹ்மமும் சித்துக்கள் அசித்துக்கள் சேர்ந்த பிரபஞ்சம் –
காரண கார்ய பாவத்தால் ஒன்றே என்று முன்பு –2-1-7- பார்த்தோம்
இதில் உள்ள பிரதிபக்ஷ வாதங்களைக் காட்டி சித்தாந்தம் இதில் காட்டுகிறார் –

பேத -அபேத =பேதமும் அபேதமும் இல்லாமல் ச விசேஷ ப்ரஹ்மம் நம் சம்ப்ரதாயம்

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரண பிரவேசம்

சங்கதி – விலக்ஷணத்வாதிகரணத்தோடே. –
அஸ்ய (ஜகத்) விலக்ஷணத்வாத் (பிரஹ்ம காரிய பாவம்)
ந -அங்கு சொல்லப் பட்டது பிரஹ்மமும் ஜகத்தும் விலக்ஷணத்தையோடே கூடினது.
ஆகிலும் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பது வேதாந்த பக்ஷம்.

சூத்ரம் 2-1-15 : ததனனயத்வம் ஆரம்பண ஸப்தாதிப்ய :

ததனன யத்வம்–பரமார்த்த தயா வஸ்து ந அஸ்தி

கடத்துக்கும் படத்துக்கும் வேறுபாடு -மண்ணுக்கும் குடத்துக்கும் வேறுபாடு இருந்தாலும் –
அனைத்துக்கும் விலக்ஷணமான ப்ரஹ்மமே காரணம் –
கேவல பேத வாதம்–நிர்விசேஷ பேத வாதம்-பேத அபேத வாதம் -இவற்றை நிரஸித்து
விசிஷ்டாத்வைத சரீர சரீரீ பாவம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -காட்டி அருளினார்
ச விசேஷமமே விசிஷ்டம்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஏகம் -அத்விதீயம்
ச விசேஷ ஐக்ய வாதம்
அந்நிய சப்தம் வேறே பின்ன சப்தம் வேறே அன்றோ

முயல் உண்டு- கொம்பு உண்டு- முயல் கொம்பு இல்லை என்றால் -சம்பந்தம் இல்லை என்றே அர்த்தம்
வைசேஷிக வாதம் –
1-நாம பேதாத் -மண் -குடம்
2-கார்ய பேதாத் -வேறே வேறே பயனுக்காக
3-வேறே வேறே காலத்தில் இருப்பதால்
4-ஆகார பேதம் -ரூப பேதம்
5-ஒரே உருண்டை -பல குடங்கள் -சங்க்யா
6-ஒன்றாக இருந்தால் உருவாக்குபவர் எதற்க்காக
நான்யத்வம் நாம சங்க்யா ஆகார இத்யாதி -தத்வ முக்த கலாபம் அடக்கி தேசிகன்
அத்யந்த பேதம்

சாங்க்யர் -பூர்வ பக்ஷம்
அஸத் கார்ய வாதம்
உபாதான காரணத்தில் கார்யம் ஸூஷ்ம ரூபத்தில் பூர்வமேவ இருக்கும்
எள்ளில் தானே எண்ணெய் -மணலில் இல்லையே
வியக்தமாக வெளிப்படையாக தெரிய வைப்பதே கர்த்தாவின் கர்தவ்யம்

அத்வைதிகள் -சாங்க்யர் சொல்வதும் தப்பு -வைசேஷிகர் சொல்வதும் தப்பு -ஒன்றே உள்ளது –
மாயை பிரமம் -கார்யம் மித்யை -காரணம் ஒன்றே பரமார்த்தம் உண்மை
காரண வியதிரிக்த வஸ்துவே இல்லையே -என்பர்
அனுவார்த்தமானம் நித்யம்
எப்போது தோன்றி மறையுமது மாயை
கயிறு பாம்பு -பாம்பு ஞானம் தொடராதே
உண்டாவது எல்லாம் அழிந்து காரண வஸ்துவாகுமே

உண்டாகும் சேதனர்களும் அசேதனர்களும் அழிந்து ப்ரஹ்மைவ-ஒன்றாக பவதி-என்பர்
நாமோ ப்ரஹ்ம இவ -போல் ஆவோம் –
ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற வாதம் ஒழித்தார் பாஷ்யகாரர்
சாஸ்திரம் வேறே சம்ப்ரதாயம் வேறே
புநரா வ்ருத்தி மோக்ஷம் என்பதே சாஸ்திரம்
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் சம்ப்ரதாயம்

அநிர் வசநீயம் -கயிற்றைப் பார்த்து பாம்பு என்று தான் பிரமை
யானை என்று பிரமிக்க வில்லையே
ஸர்வதா அசத்தாக இருந்தால் தோன்றாதே
பாம்பு இருக்குமோ என்றும் இல்லையே என்றும் சொல்வதால் -அநிர் வசநீயம்-
உபமானம் உபமேயம் -இரண்டு இல்லையே அவர்களுக்கு
ப்ரஹ்மமே சத்தியமும் ஞானமும் -சஜாதீய விஜாதீய ஸ்வதீய விபாக ரஹிதம்
ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யா -விருத்தமானவை சேராதே -ஆகவே அநிர்வசனீயம்
ப்ரஹ்மம் அநந்யம் பேதம் அற்றது -என்று
அபேத ஸ்ருதிகளை பிரமாணமாக அத்வைதிகள் காட்டுகிறார்கள்
நேராக அத்வைத நிரஸனம் பண்ணாமல் வைசேஷிகர் வாதத்தால் இவற்றை நிரஸித்து
மேல் சித்தாந்தம் இந்த அதிகரணத்தில் அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மமே ஜீவன் -என்றால் பல ஜீவர்கள் -ஒருவர் துக்கம் பட ஒருவர் சுகம் பட
உடம்பில் காலில் வலி கண்ணுக்கு நல்ல காட்சி போல் இதுவும் கூடுமே என்பர் அத்வைதி
அநேக ஜீவன அநு பிரவேசாத்
ஏகோ தேவ போன்ற சுருதிகள் உண்டே

ப்ரத்யக்ஷம் -கயிற்றை பாம்பு போல் பார்த்து
ஒருவர் அது பாம்பு இல்லை -சப்த பிரமாணம் கொண்டு உணராமல்
நேராக சென்று தானே பிடித்துப் பார்த்து -பிரயத்தனம் பண்ணி -உணர்ந்து
பிரபஞ்சம் மித்யா என்றால் பிரத்யக்ஷ விருத்தம்
என்னைத் தவிர வேறே ஜீவர்கள் உண்டு அநுமேயம் -infer -பண்ணி
ஸாஸ்த்ர பிரமாணம் பிரசித்தம்

இங்கு வாசாரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல் ஆரம் சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டமையால்
வாசாரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்பது காட்டப்பட்டது

அநந்யத்வம் -மண் பானை போல்-ப்ரஹ்மமும் ஜகத்தும் வேறே ஓன்று அல்ல
அத்யந்த பேதம் வைசேஷிகர் -நிரசித்து அநந்யத்வம் சாதித்து –
மாத்வ மதத்தில் விஷ்ணு பாரதம்யம் ஒத்துக் கொண்டாலும் பரமாத்மா நிமித்த காரணம் மட்டும் -ப்ரக்ருதி உபாதான காரணம்
ப்ரஹ்ம ஜகத் இரண்டுக்கும் அத்யந்த பேதம் -என்பர்
கார்யங்கள் எல்லாமே மித்யையே என்றால் முயற்சியே செய்ய மாட்டோமே
ஸத் -இருக்கும் வஸ்து என்றால் நித்தியமாக இருக்க வேண்டும்
அஸத் -நேற்றும் இன்றும் நாளையும் இல்லாதது முயல் கொம்பு போல்
குடம் என்றோ ஒரு நாள் உடையும் ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாது
ஆகையால் -அநிர்வசனீயம் -ஆகவே மித்யை
நாமோ இது அநித்தியம் பொய்யான வாஸ்து இல்லை என்கிறோம் -வஸ்துவே பொய் இல்லையே

ச குண ப்ரஹ்மம் நிர்குண ப்ரஹ்மம் இரண்டு சொல்லி
பார்ப்பது அனுக்ரஹம் போன்றவை ச குண ப்ரஹ்ம கார்யம் என்றும்
அதுக்கும் மேல் நிர்குண ப்ரஹ்மம் –
நிர்விசேஷ பர ப்ரஹ்மம் சாஷாத்காரிக்க முடியாதவர் மந்தர்கள் -தே அனுகம்பா ச விசேஷ ப்ரஹ்மம்

இரண்டே இல்லை என்றால் உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒன்றே ஆகுமே -வைசேஷிகர் வாதம்

தேசாந்தர காலாந்தர வஸ்தாந்தர பேதங்கள் இருந்தே ஆகவேண்டும்
காரண கார்ய பேதங்கள் இருந்தே ஆக வேண்டும்
நான் நாளை அங்கு வரப் போகிறேன் -இறந்த காலம் வேறே இடம் போன்ற பேதங்கள் உண்டே

காரணமும் காரியமும் ஸத்யமே
போஜநம் காரணம் – பசி அடங்குவது கார்யம்
சித்தாந்தம்
தத் அநந்யத்வம்-ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் –
ஸதேவ சோம்ய ஏகம் -போன்ற ஸ்ருதி வாக்கியங்கள் அந்யத்வம் சொல்ல வந்தவையே

பிரஸ்தான த்ரயம் நம் சம்ரதாயத்தில் இல்லை -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் கீதை -மூன்றும் ஏக கண்டம்

ஞான ஜனக சப்த பிரயோகம் தானே விவகாரம் –
தேவதத்தன் பால்ய யுவா முக்த அவஸ்தைகள் மாறினாலும் தேவதத்தன் வ்யக்தி மாறாதே –
ப்ரஹ்மத்திடம் இருந்து சேதன அசேதனங்கள் தோன்றி ப்ரஹ்மத்திடம் லயம்
நாநா ரூபம்-நாம ரூப விபாகம் – ஜகத்
ஸத் என்றே பெயர் ஸூஷ்ம அவஸ்தையில் ப்ரஹ்மம் என்ற பெயரும் இல்லையே
தத் ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜாயேய
சர்வ ஸப்த வாச்யன் ப்ரஹ்மமே -பர்யவசானம் ஆகுமே -அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே –

ஸர்வதா இல்லை என்பதே இல்லையே
ஸத் மட்டுமே இருந்தது என்றால் சேதன அசேதன ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மம் இருந்தது என்றே கொள்ள வேண்டும்
அதுவே பின்பு சேதன அசேதன ப்ரஹ்மம்-போக்யம் போக்தா ப்ரேரிதா -மூன்றாக பரிணாமம்

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் கங்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும்
வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக்கூடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந்ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத்ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டுகிறார் இரண்டு சூத்ரங்களால்

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –ஐந்தாம் அதிகரணம்— காரணத்வாதிகரணம் -1-4-5-

June 8, 2026

விஷயம்
கௌஷீதகீ உபநிஷத்தில் அறியத்தக்கவனாக உபதேசிக்கப்படுபவன் பரமாத்மாவே ஆவான் -என்கிறது

1-4-16-ஜகத் வாசித்வாத்

உலகத்தைக் கூறுவதால் இங்கு கூறப்படுவது பரமாத்மாவே

பூர்வ பக்ஷம்
சாங்க்யர்கள் மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் சேதனனே ஜகத் காரணம் என்று கூறப்பட்டாலும் கபில தந்திரத்தின் மூலம் வெளிப்படுவதாக
பிரதானம் மற்றும் புருஷன் இவற்றை விட வேறே வஸ்து ஜகத்காரணமாக உள்ளது என்றால்
அதை நம்மால் அறிய முடியவில்லை
கௌஷீதகீ உபநிஷத்தில் -பாலாகி -அஜாத சத்ரு -சம்வாதம் -அனுபவிக்கும் புருஷனே -ஜீவாத்மாவே -ஜகத் காரணம் என்று அறியப்பட வேண்டும் என்கிறது –
அதில் தொடக்கத்தில் பாலாகியால்-அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் குறித்து கேட்ட போது அதற்கு விடையாக-ப்ரஹ்மதே பிரவாணி -4-1-ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் என்று தொடங்கி- 4-18-யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-என்று யார் இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாக உள்ளானோ -யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மா உள்ளதோ-அவனே அறியாத தக்கவன் என்று நிகமிக்கப்படுகிறது

பாலாகி என்ற அந்தணன் அஜாத சத்ரு அரசன் இடம் தன்னுடைய ப்ரஹ்ம ஞானம் வெளிப்படுத்த ஸூர்ய மண்டலம் சந்த்ர மண்டலம் மின்னல் ஆகாசம் என்று ஒவ் ஒன்றாக உரைத்து அங்கே உள்ள ஆத்மாவை – ஜீவாத்மாவே ப்ரஹ்மம் -என்று உரைக்க –
அரசன் ஏற்க மறுக்க –
பாலாகி பணிந்து அரசன் இடம் ப்ரஹ்மத்தை பற்றி உபதேசிக்க பிரார்த்திக்க –
இதுவே இந்த பகுதியின் அறிமுகம்

பாலாகியால் தொடக்கத்தில் எந்த ஒரு ப்ரஹ்மம் அறியப்பட வேண்டியதாகக் கூறப்பட்டதோ-அந்த ப்ரஹ்மமே – அஜாத சத்ருவால் –ச வேதி தவ்ய -அவனே அறியப்பட வேண்டியவன் -என்று உபதேசிக்கப்பட்டதில் உள்ள ப்ரஹ்மம் ஆகும்
அந்த வரியில் உள்ள –யஸ்ய ச ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ -என்ற பகுதி அறியப்பட வேண்டிய வஸ்துவை கர்மத்துடன் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது-ஆகவே இங்கே கூறப்படும் ப்ரஹ்மம் என்பது ப்ரக்ருதியை நியமிக்க வல்லவனும் அனுபவிப்பவனும் ஆகிய புருஷன் – ஜீவாத்மா -என்று நிச்சயிக்கப் படுகிறது அல்லாமல் வேறே ஏதும் இல்லை -ஏன் என்றால் வேறு ஏதும் கர்மத்துடன் சம்பந்தம் கொள்வது இல்லை – கர்மங்கள் ஷேத்திரஞ்ஞனுக்கே-ஜீவாத்மாவுக்கே -சம்பவிக்கும்

இதுக்கு சித்தாந்தி –
எது செய்யப்படுகிறதோ அதுவே கர்மம் என்ற சொல்லுக்கான பொருளாகும்
இங்குள்ள ஏதத் கர்ம -என்பதன் மூலம் ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகத்தே கூறப்படுகிறது-ஆகவே ஷேத்ரஞ்ஞனைக் காட்டிலும் வேறாக உள்ளவனும் யாருடைய கர்மம் -செயல் -என்பதே இந்த ஜகத்தாக உள்ளதோ –
என்று கூறப்படும் ஒருவனே அறியப்பட வேண்டியவன் -என்று கூறக் கூடும்

இத்தை பூர்வ பக்ஷி மறுப்பான்
நீங்கள் கூறுவது போன்று வைத்துக் கொண்டால்
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய -கௌஷீகீ -4-18-என்று தனித்தனியாக இரண்டையும் உரைப்பது அவசியம் இல்லையே
கர்மம் பொதுவாக லோகத்திலும் வேதத்திலும் புண்ய பாப ரூபமாகவே உள்ள செயல்களைக் குறிக்கும்
ஆக புருஷணாம் கர்த்தா -என்பது கர்மங்களை அனுபவிப்பவர்களுக்கே பொருந்தும்
மேலும் கௌஷீதகீ –4-18–தவ் ஹ ஸூப்தம் புருஷமீயது ஜூ தம் யஷ்டயா சிஷேபா -என்று
உறங்கும் அவன் இடம் செல்லுதல் -அவனைத் தடியால் அடித்தல் -அவனை எழுப்புதல் -இவை புருஷனை வெளிப்படுத்தும் அடையாளங்களே

இதைத் தொடர்ந்து –கௌஷீதகீ -4-20-தத் யதா ஸ்ரேஷ்டீ ஸ்வைர் புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்ட்டிநம் புஞ்ஜந்தி ஏவம் ஏவ ஏஷ பிரஞ்ஜாத்மா ஏதைராத்மபிர் புங்க்தே ஏவம் ஏத ஏவ ஆத்மாந ஏநம் புஞ்ஜந்தி –என்று எவ்விதம் இந்த செல்வந்த வைசியன் தனது வேலையாட்களுடன் இன்பமாக உள்ளானோ -எவ்விதம் அந்த வேலையாட்கள் இவனுடன் சேர்ந்து இன்பமாக உள்ளார்களா-அதே போன்று புருஷன் -மற்ற புருஷர்களை -இந்த பிராணன் -முதலானவற்றை அனுபவிக்கிறான் –அவர்களும் இந்த புருஷனை அனுபவிக்கிறார்கள் என்பதுவும் அனுபவிப்பவனையே -ஜீவாத்மாவையே கூறுவதாக உள்ளது –

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய – யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று

இது போன்றே கௌஷீ –4-18-க்வா ஏஷ பாலாகே புருஷோ சயிஷ்ட -க்வா ஏதத் அபூத் -குத ஏதத் ஆகாத்–என்ற கேள்விகளை அஜாத சத்ரு கேட்க பாலாகி மௌனமாக இருக்க தானே பதில் கூறத் தொடங்கினான்
கௌஷீ -4-19-ஹிதா நாம ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸூ ததா பவதி யதா ஸூப்த–ஸ்வப்னம் ந கதஞ்சன பச்யதி
அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி ததைநம் வாக் சர்வைர்நாமபி சஹாப்யேதி மந சர்வைர்த்யாநை சஹாப்யேதி
ச யதா பிரதிபத்யதே யதா அக்நோஜ் வலந்த சர்வாதிசோ விஸ்பு லிங்கா வி பிரதிஷ்டேரந் ஏவம் ஏவ ஏதஸ்மாத் ஆத்மந
பிராணா யதாயதநம் வி ப்ரதிஷ்டந்தே ப்ராணேப்யோ தேவா தேவேப்யோ லோகா -என்று
இதயத்தில் ஹிதா என்னும் நாடியில் இருந்தான் -ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பதில்லை –
மனம் இந்திரியங்கள் ப்ராணனுடன் கலந்து ஒன்றாக உள்ளன -விழித்துக் கொள்ளும் போது
அக்னியில் இருந்து தீ பொறிகள் சிதறுவது போலே ஆத்மாவில் இருந்து இந்திரியங்கள் புறப்பட்டு
தங்கள் இருப்பிடங்களை அடைந்து இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களை அடைகின்றன
உபநிஷத்தில் தேவ பதம் இந்திரியங்களும் லோக பதம் இந்திரிய விஷயங்களையும் குறிக்கும் –

அஸ்மின் -ஜீவாத்மாவை சொல்லி -அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி -பிராண என்று பிராணனைத் தாங்கும் ஜீவாத்மா –
இப்படியாக இந்த பகுதியின் தொடக்கத்தில் கூறப்பட்ட ப்ரஹ்மம் ஜீவாத்மாவே –
ஈஷம் -பார்த்தல் போன்றவை ஜீவாத்மாவுக்கே பொருந்தும்
எனவே ஜீவாத்மாவால் நியமிக்கப்படும் பிரதானமே ஜகத் காரணம் ஆகும் என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம்
புருஷோத்தமனே கூறப்படுகிறான் -யஸ்ய ச ஏதத் கர்ம -என்பதில் ஏதத் -இந்த என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ள
கர்ம -பரம புருஷனின் கார்யமான ஜகத்தைக் கூறுவதாகும் –
ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் அறியப்படுவதும் சித் அசித் வஸ்துக்கள் கலந்த ஜகத் என்பதே கூறப்படுகிறது –
அல்லது புண்ய பாப செயல்களைக் கூற வில்லை
கௌஷீ -4-1-ப்ரஹ்ம தே பிரவாணி –என்று சொல்லத் னத்தொடங்கிய பாலாகி ஆதித்ய மண்டலத்தில் வசிக்கும்
புருஷர்கள் போன்ற ப்ரஹ்மம் அல்லாதவர்கள் குறித்து பேசிய பாலாகி இடம்
கௌஷீ -4-18- ம்ருஷா வை கலு மா ஸம்வ திஷ்டா —என்று தவறாக வாதாடாதே என்று அஜாதசத்ரு உரைத்தான் —
யோ வை பாலாகி –என்று கூறத் தொடங்கினான்

இங்கே கர்ம -என்னும் சொல் அவன் அறியாத ப்ரஹ்மத்தை உணர்த்த குறிக்க வந்ததால் இங்கு ஜகத்தையே குறிக்கும்
யஸ்ய கர்ம ச வேதி தவ்ய–யாருக்கு கர்மம் உள்ளதோ அவனே அறியப்பட வேண்டியவன் என்று இல்லாமல்
யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று இருப்பதால் -ஏதத் இது என்ற சொல்லுக்கு பயன் வேண்டுமே
அந்த உபநிஷத் வரியில் -யா ஏத்த ஏஷாம் கர்த்தா -யார் இவர்களுக்கு கர்த்தாவோ —
மற்றும் யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று தனித்தனியாக உபதேசிக்கப்பட்டதின்
அபிப்ராயம் ஏது என்றால் -நீ எந்த புருஷர்களை ப்ரஹ்மம் என்று உபதேசித்தாயோ
உண்மையில் அந்த ப்ரஹ்மமே அவர்களுடைய கர்த்தாவாகும்-அவர்கள் அந்த ப்ரஹ்மத்தின் கார்ய பூதங்கள்
ஆகவே புருஷர்களை -ஆதித்யன் போன்றவர்களைப் படைக்கும் சக்தி ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது –
எனவே இங்குள்ள உபநிஷத் வரியில் -அனைத்து வேதாந்தங்களிலும் அனைத்துக்கும் காரணம் என்று
வெளிப்படுத்தப்படுகின்ற பர ப்ரஹ்மமே அறியப்பட வேண்டியதாகும் என்பதே உபதேசிக்கப் படுகிறது –

——————

1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –

இங்கு ஜீவன் மற்றும் முக்கிய பிராணன் ஆகிய அடையாளங்கள் காணப்படுவதால் பரமாத்மா அல்லன்-என்றால்
முன்பு சொன்னபடியே அது பொருந்தாது

பிரதர்சன வித்யை -1-1-31–முன்பே இதன் விளக்கம் பார்த்தோம்
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
உனக்கு நான் ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் -என்று ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளது

நடுவில் உள்ள பகுதியில் -யஸ்ய வா ஏதத் கர்ம –இது யாருடைய கர்மமோ என்பதிலும் ஜீவாத்மா கூறப்படவில்லை
அனைத்து ஜகத்துக்கும் ஒரே காரணமான ப்ரஹ்மமே கூறப்பட்டது என்றும் பார்த்தோம்

இறுதியிலும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
இதனை அறிபவன் தனது அனைத்து பாபங்களையும் நீக்கிக் கொண்டவனாக -அனைத்து ஜீவ ராசிகளில் உயர்ந்தவனாக –
அவற்றின் தலைவனாக -கர்ம வசப்படாதவனாக உள்ளான் என்பதன் மூலம்
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –
ப்ரஹ்ம உபாசனம் பலன் உடன் கூடியதாக உள்ள அனைத்துப் பாபங்களில் நின்றும் நீங்கப் பெற்ற மோக்ஷ சாம்ராஜ்யம்
பெறுவதை சொல்வதால் ப்ரஹ்ம விஷயமாகவே அனைத்தும் உள்ளன

பிரதர்சன வித்யையில் கூறப்படும் மூன்று வகை ப்ரஹ்ம உபாசனையில் உள்ள
ஜீவாத்மா முக்கிய பிராணன் போன்ற அடையாளங்கள் ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளன
அஸ்மிந் பிராணன் -என்றும்
அதாஸ்மிந் பிராண ஏவ ஏகதா பவதி –கௌஷீகீ -4-19-உறங்கும் போது பிராணன் உடன் சேர்ந்து ஒன்றாகிறான் –
என்பதில் உள்ள அஸ்மிந் பிராண சொற்கள் சாமா நாதி கரண்யத்தில்
பிராணனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாசனம் என்று சொல்லவே பிராண சப்தம்
ஜீவாத்மாவைக் குறித்து சொல்லும் அடையாளங்கள் எவ்வாறு ப்ரஹ்மத்தைக் குறிக்கும் என்பது அடுத்த ஸூத்ரம்

——————–307

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –நான்காம் பாதம் – பிராண பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

May 16, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

2-4-1-ப்ராண உத்பத்த்யதி₄கரணம் –புலன்களும் படைக்கப்படுபடுபவையே

பூர்வ பக்ஷிகளின் வாதம்- 2ஆவது அத்யாயத்தின்-3ஆவது பாதத்தில் ஐம்பூதங்களும் ஆத்மாக்களும் கூட ப்ர்ஹமத்தின் கார்யங்கள் தான், அதாவது படைக்கப் பட்டவை தான் என்று நிரூபித்தார் வ்யாஸர். அதைத் தொடர்ந்து –4ஆம் பாதத்தில் ஜீவாத்மாவுக்கு உதவும் கருவிகளான இந்திரியங்களும் ப்ராண வாயுவையும் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது -அவற்றுக்கு ஆகாஸம் முதலான அசேதனப் பொருள்களைப் போல் உருவ மாறுபாடு ஏற்படுகிறதா? அல்லது ஜீவாத்மாவைப் போல் நித்யமான படியால் பண்புகளில் மட்டும் மாறுபாடு ஏற்படுகிறதா? என்று.
இந்தப் பாதத்தில் மொத்தம் 8 அதிகரணங்கள்உள்ளன. அதில் முதல் மற்றும் கடைசி அதிகரணங்களில் தான் நேரடியாக புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் உண்டாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. நடுவில் உள்ள 6 அதிகரணங்கள் ப்ரஸங்காத்(நினைவு வந்தபடியால்) புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் தன்மைகளைச் சொல்பவையாக உள்ளன

(பிராணாதிகரணம் -முதல் அத்யாயம் முதல் பாதத்தில் பார்த்தோம் -இங்கு பிராண உத்பத்தி அதிகரணம் -இதில் மூன்று ஸூத்ரங்கள் உள்ளன -முதல் ஸூத்ரம் பூர்வபக்ஷம் ஸ்பஷ்டமாக சொல்லி ஸித்தாந்தம் மறைந்த உள்ளுரைப்பொருளாக -உத் ஸூத்ரமாக உள்ளது –இறுதியான எட்டாவது அதிகரணத்தில் புலன்கள் நேரடியாக ஸ்ருஷ்டிக்கப் படுவதை காட்டி அருளுகிறார்)

2-4-1-ப்ராண உத்பத்த்தி₄கரணம்–இந்த அதிகரணத்தில் ப்ராணன் என்று அழைக்கப் படும் புலன்கள்(இந்த்ரியங்கள்) உண்டாகின்றனவா இல்லையா என்று ஆராயப்படுகிறது. இதில் மொத்தம் 3 ஸூத்ரங்கள் உள்ளன. முதல் ஸூத்ரம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது. அதிலேயே உத் ஸூத்ரமாக(ஸூத்ரத்திலியே நேரடியாக சொல்லப்படாமல் மறை முகமாக)ஸித்தாந்தமும் சொல்லப்படுகிறது. அதற்குப் பின்-2 ஸூத்ரங்கள் ஸித்தாந்தி கூறும் வேறு சில யுக்திகளைச் சொல்கின்றன

பூர்வ பக்ஷம்–1-ததா ₂ ப்ராணா :-“அவ்வாறே ப்ராணங்கள்”
அவ்வாறு-2-3-3-ஆத்மாதிகரணத்தில் ஆத்மா எப்படிப் பட்டவராகச் சொல்லப்பட்டாவரோ அப்படிப் பட்டவை தான் ப்ராணங்களும் என்று பொருள். அதாவது, 2.3.3 ஆத்மாதிகரணத்தின் முதல் ஸூத்ரம் “ந ஆத்மா ச்ருதே .” என்பது. அதன் பொருள் – “ஆத்மா உண்டாவதில்லை ; வேதம் சொல்கிற படியால்” என்பதாகும். “ப்ராணங்கள் அவ்வாறே ” என்றால் “ப்ராணங்கள் உண்டா வதில்லை ; வேதம் சொல்கிற படியால்”என்று பொருள். எனவே ப்ராணங்கள் எனப்படும் புலன்கள் நித்யமானவை என்பதே இவர்கள் வாதம்

அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத் … ரிஷயோ வாவ தே அக்₃ரே ஸதா₃ஸீத் । ததா₃ஹு: கே தே ரிஷய இதி । ப்ராணா வாவ ரிஷய: ஸ்ருஷ்டிக்கு முன்னால் இவ் வுலகம் அனைத்தும் அஸத்தாக(இல்லாததாக) இருந்தது. அப்போது ரிஷிகள் மட்டும் தான் இருந்தன. ரிஷிகள் எனப்படுபவை ப்ராணங்கள்(புலன்கள்-இந்த்ரியங்கள்) தான்–ப்ரளயத்தின் போதும் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்கிறபடியால் அவற்றுக்கு உண்டாக்கமில்லை என்று அவர்கள் வாதம்.

வேத வ்யாஸரின் மறுப்பு– ஸித்தாந்தம் –ஸூத்ரத்தில் வெளிப்படையாகச் சொற்களால் சொல்லப் படாமல், உள்ளுரைப் பொருளாக ஸித்தாந்தம் கூறப்படுகிறது.-ஆகமம் முதலானவை எப்படி உண்டாக்கப் படுகின்றனவோ அது போல் புலன்களும் உண்டாக்கப் படுகின்றன,ஏனெனில்
1–“ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அதி₃விதீயம்”,
“ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்₃ர ஆஸீத்
” முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளய காலத்தில், ஒரே ஒரு பொருள் தான் இருந்தது எனப்படுகிறது. எனவே புலன்கள் அப்போது இல்லை
2- ஏதஸ்மாத் ஜாயதே ப்ராணா : மந: ஸர்வேந்த்₃ரியாணி ச -அதாவது “இந்த ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயுவும் மனதும் எல்லாப் புலன்களும் உண்டாகின்றன-என்று ஸ்பஷ்டமாக உள்ளது. ஆக, ப்ரளயத்தில் அவை இல்லை

கேள்வி –ஆத்மவுக்குச் சில வாக்கியங்களில் பிறப்புண்டு என்று சொல்லப்பட்டிருந்தாலும் அது உண்டாக்கமல்ல, நித்யமான ஆத்மா ஓர் உடலை எடுத்துக் கொள்வது தான் சொல்லப் படுகிறது என்று கூறினீர்கள். அது போல் இங்கும் புலன்கள் உண்டாகின்றன என்று கொள்ளாமல். நித்யமான புலன்கள் வெளிப்படுகின்றன என்று கொள்ளலாமே ?
பதில்–
(ந ஜாயதே ம்ரியதே இத்யாதி )ஆத்மாக்கள் உண்டாகுவதில்லை என்றும், ஆத்மாக்கள் நித்யமானவை என்றும் கூறும் வேத வாக்கியங்கள் பல உள்ள படியால், “ஆத்மா பிறக்கிறார்” என்று கூறும் ஒரு வாக்கியத்துக்கு வேறு மாதிரி பொருள் கொண்டோம். ஆனால் புலன்கள் நித்யமானவை என்று கூறும் எந்த வேத வாக்கியமும் இல்லை – எனவே இந்த வாக்கியத்துக்கு நேரடியான பொருளைத் தான் ஏற்க வேண்டும்.

அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்” என்று முன்னால் காட்டப்பட்ட வாக்கியத்திலும்,ப்ரளய காலத்தில் புலன்கள் இருந்தன என்று கூறப்பட வில்லை –அந்த வாக்கியத்தில் ரிஷி என்றும் ப்ராணன் என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மா தான். ஏனெனில்
1-ப்ராணன் என்கிற சொல் வேதத்தில் பல இடங்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பரமாத்மா நம்மை வாழ வைப்பதால், அவரைப் ப்ராணன் என்று கூறுவது பொருத்தமானதே —
2- ரிஷி என்ற சொல்லுக்கு“சிறந்த ஜ்ஞாந முடையவர்” என்று பொருள். அறிவற்ற புலன்களை ரிஷிகள் என்று அழைப்பது பொருந்தாது. ஸர்வஜ்ஞனான பரமாத்மாவையே ரிஷி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஆக,புலன்களும் கூட ப்ரஹ்மத்தால் படைக்கத் தான் படுகின்றன என்று வேத வ்யாஸர் தன் ஸித்தாந்தத்தைக் கூறுகிறார்.

ஸித்தாந்தியின் வாதங்கள் -கேள்வி–ரிஷி ப்ராணன் என்ற சொற்கள் ஒருமையில் பயன் படுத்தப் பட்டிருந்தால் பரமாத்மா என்று பொருள் கூறலாம். ஆனால் வேதத்தில்“ரிஷிகள்”, “ப்ராணங்கள்” என்று ப₃ஹு வசனம்(பன்மை விகுதி) உள்ள படியால் பரமாத்மாவாக இருக்க முடியாதே ?
பதில்-2-கௌ₃ணீ அஸம்ப₄வாத் தத் ப்ராக் ச்ருதே : ச

கௌ₃ணீ–இவ் விடத்தில் உள்ள பன்மை விகுதி கௌ₃ணமானது– அதாவது பன்மை என்ற பொருள் இல்லாமல் வேறொரு இரண்டாம் பக்ஷமான பொருளை உடையது
அஸம்ப₄வத்–இயலாதபடியால்-ஸ்ருஷ்டிக்கு முன் பல பொருள்கள் இருக்க முடியாத படியால்”. இதற்குக் காரணம்
தத் ப்ராக் ச்ருதே : ச – பரமாத்மா மட்டுமே ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தார் என்று வேதம் சொல்கிறபடியால்.

(நாங்கள் போய் வருகிறோம் கௌசல்யை இடம் பெருமாள் சொன்னதை காட்டி லஷ்மணன் பன்மை பிரயோகத்தால் -ஒருமை இருமை பிரயோகம் இல்லாமல் -பன்மையாகவே அருளிச் செய்ததால் -தன்னையும் பிராட்டியாரையும் சேர்த்தே சொன்னதாக காட்டி கூடச் சென்றானே)

கேள்வி–ஸ்ருஷ்டிக்கு முன் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்லா விட்டாலும் நாமே யுக்திகளைக் கொண்டு அவ்வாறு கல்பிக்கலாமே ? ப்ரளயத்தில் ஜீவாத்மா இருந்தார் என்று ஏற்பது போல் புலன்களும் இருந்தன என்றால் என்ன தவறு?

பதில்-3–தத் பூர்வ கத்வாத் வாச :– சொற்கள் பொருள்களை முன்னிட்டுக் கொண்டவை யான படியால்”
ப்ரளயத்திலும் ஆத்மாக்கள் இருந்தார்கள் என்று ஏற்பதற்குக் காரணம் உள்ளது -ப்ரளயத்துக்குப் பின் அந்தந்த ஜீவாத்மா அடையும் பிறவியானது, ப்ரளயத்துக்கு முன் அந்தந்த ஜீவாத்மா செய்த பாப புண்யங்களின் விளைவாகத் தான் இருக்க வேண்டும். எனவே இடைப்பட்ட ப்ரளய காலத்திலும் ஜீவாத்மாவும் அவரிடம் பாப புண்யங்களும் தொடர்ந்து இருந்தன என்று ஏற்க வேண்டும்.–அது போல் புலன்களும் ப்ரளயத்தின் போது இருந்தன என்று ஏற்க வேண்டுமென்றால், ப்ரளயத்திலும் புலன்களுக்குச் செயல்பாடு இருந்தது என்று காட்ட வேண்டும். ஆனால் அது பொருந்தாது. எடுத்துக் காட்டுக்கு–பேச்சுக்கான இந்த்ரியம் -சொற்களைப் பேச வேண்டும் என்றால் அதற்குச் சொற்கள் இருக்க வேண்டும். ஆனால், உலகச் சொற்கள் அனைத்துமே உலகம் படைக்கப் பட்ட பிறகு தான் உண்டாயின என்று வேதம் கூறுகிறது
தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் । தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே என்று. ஆகையால், ப்ரளய காலத்தில் பொருள்கள் இல்லாத போது சொற்களும் இருந்திருக்க முடியாது. எனவே பேச்சுக்கான இந்த்ரியம் செயல் பட்டிருக்க முடியாது. எனவே அப் புலன் ப்ரளத்தின் போது இருந்தது என்று கல்பிப்பதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை

ஆகவே ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுபவை தான் என்று நிரூபிக்கப்பட்டது.

2-4-2-ஸப்த க₃த்யதி₄கரணம்-புலன்கள் பதினொன்று -பூர்வ பக்ஷியின் வாதம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் உண்டாக்கப்படுபவையே என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பற்றின பேச்சு எழுந்தமையால் ப்ரஸங்காத் (நினைவுக்கு வந்தபடியால்) புலன்களின் எண்ணிக்கை , அளவு, தன்மைகள் முதலானவற்றை அடுத்த சில
அதிகரணங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார். அதில் இவ் வதிகரணத்தில் புலன்களின் எண்ணிக்கை ஆராயப் படுகிறது.

ஸம்சயம் – வேதத்தில் முரண் பட்டவை போல் தோன்றும் சில வாக்கியங்கள் உள்ள படியால் புலன்கள் ஏழு உள்ளனவா? அல்லது பதினொன்றா ? என்று ஸந்தேஹம் எழுகிறது.
பூர்வ பக்ஷம் – ஏழு புலன்கள் தான் என்ற பூர்வ பக்ஷம் இவ் வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் சொல்லப்படுகிறது.
1-ஸப்த க₃தே : விசேஷி தத்வாச்ச – “(புலன்கள்) ஏழு, சொல்வதாலும் சிறப்பிக்கப்பட்ட தாலும்”
க₃தி (செல்வது) – ஜீவாத்மா ஓருடலை விட்டு மற்றோர் உடலுக்குச் செல்லும் போது அவரோடு கூடச் செல்வது தான்
இங்கு க₃தி’ (செல்வது) என்று குறிப்பிடப் படுகிறது. அந்த க₃தி ஏழு புலன்களுக்கு தான் உண்டு என்கிறது வேதம் –
(ஸப்த இமே லோகா : யேஷு சரந்தி ப்ரணா : கு₃ஹா ஶயா : நிஹிதா 🙂
லோகங்கள் எனப்படும் புலன்கள் ஏழு உள்ளன -அவை உறக்கத்தின் போது இதயத்தில் சுற்றி வருகின்றன.
விசேஷிதத்வம் (சிறப்பிக்கப்படுதல்) – ப்ராணங்களை சிறப்பித்துச் சொல்லும் போது ஏழு தான் சொல்லப்படுகின்றன –
யதா ₃ பஞ்சா வதிஷ்ட₂ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ । பு₃த்₃தி₄ஶ்ச ந விசேஷ்டேத தாமாஹு꞉ பரமாம் க₃திம் ॥
“கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து ஜ்ஞாந இந்த்ரியங்களும் மனதும் புத்தியும் எப்போது செயல்படாமல் அடங்கி இருக்கின்றனவோ , அப்போது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும் யோகம் கை கூடுகிறது”
ஆகவே , ஜ்ஞாந இந்த்ரியங்கள் 5, மனது, புத்தி – இந்த ஏழும் தான் இந்த்ரியங்கள் என்கிறார்கள் பூர்வ பக்ஷிகள்.
சில இடங்களில் பேச்சுப்புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் கழிக்கும் புலன்கள், அஹங்காரம், சித்தம் என்று மேலும் 7 சொல்லப் பட்டிருந்தாலும், அவை ப்ராணன் என்று அழைக்கப்படும் புலன்கள் அல்ல , ஆத்மாவுக்கு உதவாத படியால்.

ஸித்தாந்தியின் வாதம்-ஸித்தாந்தம் –2-ஹஸ்தாத₃ய: து ஸ்தி₂தே அத: ந ஏவம்
ஹஸ்தாத₃ய: து
– கை முதலானவையும் (இந்த்ரியங்கள் தான்) அன்றோ
ஸ்தி₂தே அத: – (உடலில் ஜீவாத்மா ) இருக்கும் பொழுது (இன்ப துன்பங்களை அநுபவிக்கக்) கருவிகளான படியால்
(அத:) ந ஏவம்– ஆகையால் அவ்வாறு (கை கால்கள் முதலானவை புலன்கள் அல்ல என்பது அல்ல

கண் மூக்கு காது முதலானவை உடலிலிருக்கும் ஜீவாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கருவிகளாக இருப்பதால் தான் அவற்றைப் புலன்கள் என்கிறோம். அதே போல் பேச்சுப் புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்று இந்த ஐந்து கர்ம -இந்த்ரியங்களும் கூட ஜீவாத்மாவுக்குக் கருவிகளான படியால் அவையும் புலன்கள் (இந்த்ரியங்கள்) தான். ஆகவே 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 5 கர்ம இந்த்ரியங்கள், 1 மனது – ஆக மொத்தம் 11 இந்த்ரியங்கள் (ப்ராணங்கள் -புலன்கள்) உள்ளன என்று தெளிவாகிறது.

சில இடங்களில் இந்த 11 இந்த்ரியங்களோடு கூட புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற மூன்றையும் சேர்த்து,மொத்தம் 14 இந்த்ரியங்கள் என்கிறார்கள். ஆனால் உண்மையில் புத்தி, அஹங்காரம், சித்தம் என்பவை யெல்லாம் மனதினுணடய வெவ்வேறு பெயர்கள் தான். ஒரே மனது மனனம் (ஆராய்ச்சி) செய்யும் போது மனது என்றும் , கர்வம் கொள்ளும் போது அஹங்காரம் என்றும், உறுதியோடு இருக்கும் பொழுது புத்தி என்றும்,கவலை கொண்ட போது சித்தம் என்றும் கூறப்படுகிறது. எனவே அம் மூன்றும் தனித்தனி புலன்கள் அல்ல. -மொத்தம் 11 புலன்கள் தான் உள்ளன.
வேதம் முதலானவற்றிலும் (த₃ ச இமே புருஷே பரணா : ஆத்மா ஏகாதா₃ ஸ )
அதாவது இந்த ஆத்மாவுக்குப் பத்து ப்ராணங்கள் (வெளிப் புலன்களும்) ஒரு மனதும் உள்ளன” என்று கூறப் பட்டுள்ளது.
ஆக இவ்வாறு புலன்கள் மொத்தம் 11 தான் என்று வ்யாஸர் நிரூபித்தார்.

(அந்தகரணம் -மனஸ்ஸூ –சித்தம் -சிந்தனை பண்ண -புத்தி -உறுதி கொள்ள -அபிமானம் -அஹங்காரம் கர்வம் -ஒன்றுக்கே பல நிலைகள்-வைகாரிக -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து பிறந்த இந்த்ரியங்கள் 11- ‘)

2-4-3- ப்ராணாணுத்வாதி₄கரணம்-புலன்கள் அணுவானவை -புலன்களின் அளவு – ஸங்கதி –
புலன்களின் எண்ணிக்கையை முடிவு செய்த பின்பு புலன்களின் அளவு என்ன என்று இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்.
பூர்வ பக்ஷம் – புலன்கள் எல்லாம் விபு₄வானவை , அதாவது உலகெங்கம் நீக்கமற நிறைந்திருப்பவை என்பது பூர்வ பக்ஷம்

வேதத்தில் -(தே ஏதே ஸர்வே ஏவ ஸமா: ஸர்வே அநந்தா🙂 அதாவது-அந்த ப்ராணங்கள் (புலன்கள்)
அனைத்துமே ஸமமானவை , அனைத்துமே அநந்தமானவை ” என்று கூறப் படுகிறது. அந்தம் என்றால் முடிவு. அநந்தம் என்றால் முடிவற்றது, எல்லை யற்றது என்று பொருள். ஆக, புலன்கள் எல்லை யற்றவை என்று சொல்லப் படுவதால் அவை ஆகாசம் போல் விபு₄க்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

(மூல ப்ரக்ருதி லீலா விபூதியில் தான் உள்ளது -அதில் இருந்து உண்டான ஆகாயம் நித்ய விபூதியில் இருக்காதே –நம் ஸித்தாந்தத்தில் ஆகாசம் விபு இல்லை -இங்கும் -அதைச் சுத்தி அஹங்காரம் மஹான் மூல பிரகிருதி உண்டே -)

(இதில் இரண்டு ஸூத்ரங்கள் உள்ளன –முதல் ஸூத்ரம் இதை விவரித்து அடுத்த ஸூத்ரம் மூச்சிக்காற்றின் அறிமுகம் -மேல் அதைப் பற்றி ஆராய்ச்சி உள்ளதால்)

ஸித்தாந்தம் – 1- அணவ: ச – “(ப்ராணங்கள் எனப்படும் புலன்கள்) அணுவானவையும் கூட
வேதத்தில் –(ப்ராணம் அநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா : அநூத்க்ராமந்தி) அதாவது–ஓர் உடலிலிருந்து ஜீவாத்மா புறப்படும் பொழுது அவரைத் தொடர்ந்து ப்ராண வாயு (மூச்சுக் காற்று) புறப்படுகிறது, மூச்சுக் காற்று புறப்படும் பொழுது எல்லாப் புலன்களும் பின் தொடர்ந்து புறப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. புலன்கள் ஓரிடத்திலிருந்து புறப்பட வேண்டும் அவை விபு₄வாக (எங்கும் நீக்க மற நிறைந்து) இருக்க முடியாது.அளவு பட்டவையாகத் தான் இருக்க வேண்டும்.

(இதே போல் உத் க்ராந்தி என்பதால் ஆத்மாவும் அணுவே என்று முன்னமே பார்த்தோம்)

புலன்கள் உடலிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது யார் கண்ணுக்கும் தெரியாதபடியால், அவை அணுக்களாக (மிக நுண்ணியவையாக) தான் இருக்க வேண்டும், குடம் கட்டை போல் நடுத்தர அளவோடு இருக்க முடியாது.-“புலன்கள் அநந்தங்கள் (அளவற்றவை )” என்று வேதம் சொன்னது அளவின் அடிப்படையில் அல்ல. எண்ணிறந்த செயல்களை இந்தப் புலன்கள் செய்கிற படியால், செயலின் அடிப்படையில் எல்லை யற்றவை என்று தான் பொருள்.
ஆகவே , ப்ராணங்கள் (புலன்கள்) எல்லாம் அணுவானவை தான் என்று நாம் முடிவு செய்யலாம்.

இந்த அதிகரணத்தில் புலன்களைப் பற்றிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை முதல் ஸூத்ரத்திலேயே வ்யாஸர் முடித்து விட்டார். இரண்டாவது ஸூத்ரத்தால் ப்ராண வாயு எனப்படும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார்.

ப்ராண வாயுவும் உண்டாக்கப் படுவதே
இதற்கு எந்த புதிய யுக்திகளையும் அவர் காட்ட வில்லை , முன்னால் புலன்கள் உண்டாக்கப் படுபவை என்று நிரூபிக்க என்ன வாதங்களை முன் வைத்தாரோ , அதே வாதங்களால் தான் மூச்சுக் காற்று உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார். அதனால் தான் இதை ஒரு தனி அதிகரணமாக ஆக்காமல் இவ் வதிகரணத்திலேயே சேர்த்துள்ளார்.
இதை ஏன் இப்போது கூறுகிறார்?அடுத்த அதிகரணத்திலிருந்து மூச்சுக் காற்றைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய இருப்பதால், அதற்கு அறிமுகமாக மூச்சுக் காற்றும் உண்டாக்கப்படுவதே என்று இவ் வதிகரணத்தில் கூறுகிறார்.
2-:ஸ்ரேஷ்ட ச – “
ஸ்ரேஷ்டமானதும் – சிறந்ததும் (உண்டாக்கப் படுவதே )”
உபநிஷத்தில் ப்ராண ஸம்வாதம் (ப்ராணங்களின் உரை யாடல்) என்றொரு கதை . ஒரு முறை புலன்களும் மூச்சுக் காற்றும் தங்களுக்குள் யார் சிறந்தவர் (ஸ்ரேஷ்டமானவர்) என்ற விவாதத்தில் ஈடுபட்டன. ப்ரஹ்மா கூறினார் – “
எது உடலை விட்டுப் புறப்படும் பொழுது மற்றவர்கள் எல்லாம் செயலிழந்து போகிறார்களோ அதுவே சிறந்தது” என்று. கண், காது,மூக்கு முதலானவை புறப்பட்ட போதும் மற்ற புலன்களுக்கோ உடலுக்கோ பாதிப்பு இருக்க வில்லை . ஆனால் மூச்சுக் காற்று புறப்படத் தொடங்கும் பொழுதே புலன்களனைத்தும் வலுவிழந்து போயின. அதனால் ப்ராண வாயு தான் தங்களுக்குள் சிறந்தது (ஸ்ரேஷ்டமானது) என்று முடிவு செய்தார்கள். அதனால் ’ஸ்ரேஷ்டம்’ (சிறந்தது) என்று வ்யாஸர் இங்கு குறிப்பிடுவது ப்ராண வாயுவைத் தான். ப்ராணன் என்ற சொல் புலன்களையும் மூச்சுக் காற்றையும் குறிக்கும் பொதுவான சொல். ஸ்ரேஷ்ட ப்ராணன் (சிறந்த ப்ராணன்) என்ற சொல் மூச்சுக் காற்றுக்கு மட்டும் தனிப்பட்ட பெயர்.

(கீழ் பிராண -புலன்களை சொல்லி இங்கு மூச்சுக்காற்று -என்பதே பொருள் -ஆத்மா -உள்ளே புகுந்து இயக்கம் ஒன்றைக்குறிக்கும் –பரமாத்மா -மிகவும் உயர்ந்த ஸ்ரேஷ்டரான ஆத்மா –
அதே போல் ஸ்ரேஷ்ட பிராணன் என்று மூச்சுக் காற்றைக் காட்டும் -முக்கிய பிராணன்
-பிராண ஸம்வாதம் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் பிருகதாரண்யக உபநிடதம் ஆகிய நூல்களில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆற்றல்களுக்கும் (இந்திரியங்கள்) மேலானது உயிர் சக்தி (பிராணன்) என்பதை இது உணர்த்துகிறது.-)

பூர்வபக்ஷம் – வேதத்தில் (ஆநீத் அவாதம் ஸ்வத₄யா ததே₃கம்) என்று ப்ரளயத்திலும்
மூச்சுக் காற்று ஜீவ ராசிகளை ரக்ஷிப்பது சொல்லப் படுவதால் மூச்சுக் காற்று நித்யமானது, உண்டாக்கப்படுவதல்ல.
ஸித்தாந்தம் – ஸ்ருஷ்டிக்கு முன் ஒரே பொருள் (பரமாத்மா) தான் இருந்தது என்று வேதம் சொல்வதாலும்,-(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது” என்று தெளிவாகச் சொல்கிற படியாலும் ப்ராண வாயு உண்டாக்கப் படுவது தான். “ஆநீத் அவாதம்” என்ற வாக்கியம் ’ஸ்வதா₄-என்றழைக்கப் படும் மஹா லக்ஷ்மி யோடு கூட பரமாத்மா உலகை ரக்ஷிக்கிறார் என்று தான் கூறுகிறது.

(ஸ்வதயா லோக பாலிநீ -ஸ்ருதி -ஸ்ரீ யபதியையே குறிக்கும்)

2-4-4-வாயுக்ரியாதி₄கரணம்-ப்ராண வாயு என்பது யாது? ப்ராணன் என்றால் என்ன? – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வாயுவும் உண்டாக்கத் தான் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. ப்ராண வாயு என்றால் என்ன என்று இவ் வதிகரணத்தில் ஆராய்கிறார்.
பூர்வ பக்ஷம் -1- – ப்ராண வாயு என்பது வாயு அதாவது காற்று மட்டுமே , வேறொன்றும் இல்லை –

வேதத்திலேயே (ய: ப்ராண: ஸ: வாயு:)-அதாவது-“ப்ராணன் என்பது வாயுவே தான்” என்று கூறப்பட்டு்ள்ளது.
பூர்வ பக்ஷம் -2- – வெறும் வாயுவே தான் ப்ராணன் என்றால், உலகத்தில் எங்கு காற்றைப் பற்றிச் சொல்வதற்கும் ப்ராணன் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படிக் காணப்பட வில்லை . எனவே ப்ராணன் என்பது வெறும் காற்று அல்ல -காற்றினுடைய ஒரு செயல் (க்ரியை ) தான் ப்ராணன் எனப்படுகிறது. உலகத்தில் உச்வாஸம் (மூச்சை இழுப்பது) மற்றும் நிச்வாஸம் (மூச்சை வெளியே விடுவது) என்ற செயல்கள் இருக்கும் போது தான் ப்ராணன் உ்ள்ளது என்று சொல்லப் படுகிறது. எனவே ப்ராண வாயு என்பது காற்றினுடைய ஒரு செயல் தான்.

ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களால் இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் நிரஸித்து தன் பக்ஷத்தைக் காட்டுகிறார் வ்யாஸர்.
1– ந् வாயு க்ரியே ப்ருத₂க் உபதே ₃ஸாத் –
“வாயுவும் செயலும் அல்ல, தனித்த உபதேஸத்தால்”
வாயு மட்டுமே ப்ராணன் என்று சொல்வது பொருந்தாது, ஏனெனில் -(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண : மந: ஸர்வேந்த்ரியாணி ச கம் வாயு –தேஜோ அதிகரணத்திலேயே பார்த்தோம்-த்ரவ்யங்களைப் பற்றியே சொல்லும் சுருதி -கிரியை செயல்பாடு சொல்லவே இல்லையே- ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள் ,ஆகாசம், வாயு முதலானவை உண்டாகின்றன” என்று வேதம் சொல்கிறது. இதில், வாயு என்று சொல்வதைத் தவிற ப்ராணன் என்று தனித்து ஒரு முறை கூறப் பட்டு்ள்ளது. வாயுவே தான் ப்ராணன் என்றால் இது தேவை யில்லை –

வாயுவின் செயல் (க்ரியை ) தான் ப்ராணன் என்பதும் பொருந்தாது, ஏனெனில் இந்த வாக்கியத்தில் நிலம் நீர் தீ ஆகாயம் என்ற த்ரவ்யங்கள் (பொருள்கள் ) தான் பட்டியலிடப் பட்டு்ள்ளனவே தவிற, அப்பொருள்களின் செயல்கள் எதுவும் சொல்லப் படவில்லை எனவே , தனித்து சொல்லப் பட்ட ப்ராணனும் ஒரு த்ரவ்யமாகத் தான் இருக்க வேண்டுமே தவிற செயலாக இருக்க முடியாது.
ஆகவே , ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு.

(பஞ்ச பிராணன் –அவஸ்தா விசேஷமே பிராணன் -ஹ்ருதி பிராணன் -புதி அபான– சபான- நாபி உதாந – கழுத்து -விதாந – உடல் முழுவதும்)

ப்ராணன் என்பது ஆறாவது பூதமா?
கேள்வி
– ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து ஜலம் என்று அடுத்தடுத்த பூதங்கள் உண்டாகின்றன. அதுபோல் ப்ராணன் என்பதும் வாயுவிலிருந்து பிறந்த ஒரு
மாறுபாடு என்றால் அது வேறு பூதமா?

பதில் – 2- ச க்ஷுராதி₃வத் து தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய:
சக்ஷு ராதி₃வத் து –
சக்ஷுஸ் முதலான புலன்களைப் போல் (ஆத்மாவுக்கு ஒரு கருவி) தான், (வேறு
பூதம் அல்ல )
தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய: – அவற்றோடு கூட உபதேசிக்கப் படுதல் -முதலான வற்றால்
ப்ராண வாயு என்பது ஒரு தனி ஆறாவது பூதம் அல்ல – கண் காது மூக்கு முதலான புலன்கள் எல்லாம் எப்படி ஜீவாத்மாவுக்குக் கருவிகளாக இருக்கின்றனவோ , அதுபோல் ப்ராண வாயுவும் ஒரு கருவி
மட்டுமே –

(ஆதி –முதலானவற்றால் -புலன்களுக்கும் மூச்சுக் காற்றுக்கும் ஒரே சொல் -பிராணன் -புலன்களைப் போலவே மூச்சுக் காற்று என்றவாறு)

ஏனெனில் –
1–ப்ராண வாயுவைப் பற்றின உபதேசங்களில் அது புலன்களோடு கூடத் தான் பேசப் படுகிறது-உதாஹரணத்துக்கு ப்ராண ஸம்வாதம் என்று புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்குமான உரையாடலைக் கடந்த அதிகரணத்தில் பார்த்தோம். அவற்றோடு கூட ஒற்றுமை இருப்பதால் தானே அவற்றோடு சேர்ந்து பேசப் பட்டிருக்க வேண்டும்.

2-ப்ராணங்கள் என்ற சொல் புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்கும் பொதுவாக உள்ளது.
ப்ராண வாயுவை ’ஸ்ரேஷ்ட ப்ராணன்’-அதாவது-’சிறந்த ப்ராணன்’ என்று வேதம் கூறுகிறது.-எனவே , அவற்றோடு ஒற்றுமை இருக்க வேண்டும்.

ப்ராணன் ஒன்றா? ஐந்தா?
கேள்வி
– கண் காது முதலானவை தங்கள் செயல்களின் மூலம் ஜீவாத்மாவுக்கு உதவுகிறபடியால் கருவிகள் ஆகின்றன.-அப்படி எந்த ஒரு உதவியும் ப்ராண வாயுவால் செய்யப் படாத போது அது எப்படி கருவியாக இருக்க முடியும்?

3-அகரணத்வாத் ச ந தோ₃ஷ: ததா₂ ஹி த₃ர்சயதி
அகரணத்வாத் –
“ஆத்மாவுக்கு உதவக் கூடிய செயல் இல்லாத படியால் [கரணம் என்றால் க்ரியை (செயல்)]
தோ₃ஷ: ந ச – கருவியாக இருக்க முடியாது” என்ற தோஷம் இல்லை .
ததா₂ ஹி த₃ர்சயதி – ப்ராணன் ஜீவாத்மாவுக்குச் செய்யக் கூடிய உதவிச் செயலை வேதமே காட்டுகிற படியால்.
(யஸ்மிந் உத்க்ராந்தே இத₃ம் சரீரம் பாபிஷ்ட தரம் இவ த்₃ருச்யதே ஸ: வ: ச்ரேஷ்ட₂:) அதாவது-“எந்த ஒரு ப்ராண வாயு புறப்படும் பொழுது உடலை மிகத் தாழ்ந்ததாக ஆகிறதோ , அது தான் நமக்குள் சிறந்தவன்” என்று புலன்கள் கூறுவதாக வேதம் காட்டுகிறது. எனவே , சரீரம் மற்றும் புலன்களைத் தாங்குதல் என்கிற முக்கியமான உதவியை ஜீவாத்மாவுக்கு ப்ராண வாயு தான் செய்கிறது. எனவே அது கருவியாகத் தட்டில்லை

கேள்வி – ப்ராணம் அபானன் வ்யானன் உதா₃னன் ஸமானன் என்று தனித் தனி பெயர்கள் இருப்பதாலும், அவற்றுக்குத் உடலில் தனித் தனி இடங்களும் செயல்களும் இருக்கிற படியாலும் 5 ப்ராண வாயுக்களும் வெவ்வேறானவையா?

பதில் – 4-பஞ்ச வ்ருத்தி: மநோ வத் வ்யபதி₃ச்யதே
பஞ்ச வ்ருத்தி:
– ஒரே ப்ராண வாயு தான் ஐந்து விதமான செயல்பாடுகளை உடைய படியால்
வ்யபதி₃ச்யதே – ஐந்தாகக் கூறப்படுகிறது
மநோவத் – (காம: ஸங்கல்போ விசிகித்ஸா
ஶ்ரத்₃தா₄ அஶ்ரத்₃தா₄ த்₄ருதி: அத்₄ருதி: ஹ்ரீ: தீ₄: பீ₄: இத்யே தத் ஸர்வம் மந ஏவ- என்கிற வேத வாக்கியத்தின் படி மனதுக்கு ஆசை , எண்ணம், ஆராய்ச்சி, ஈடுபாடு, ஈடுபாடின்மை , தைர்யம், தைர்யமின்மை, வெட்கம், பயம் என்று பல செயல்பாடுகள் இருந்தாலும் மனது ஒன்று தானே . அதே போல் ப்ராண வாயுவும் ஒன்று தான்.

(பிராணன் – மார்புப் பகுதியில் செயல்படும் இது, சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் ஒட்டு மொத்த உயிர் ஆற்றலையும் நிர்வகிக்கிறது.
அபானன் -தொப்புளுக்குக் கீழே அடி வயிற்றில் இயங்கும் இது, கழிவு நீக்கம் மற்றும் இனப் பெருக்க மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது.
வியானன் – உடல் முழுவதும் பரவி யிருந்து, ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது.
உதானன் – தொண்டை மற்றும் தலைப் பகுதியில் இயங்குகிறது. பேச்சு, சிந்தனை, மற்றும் நரம்பு மண்டலத்தின் மேல் நோக்கிய இயக்கங்களைச் செயல் படுத்துகிறது.
சமானன் – தொப்புள் மற்றும் வயிற்றுப் பகுதியில் இயங்கும் இது, உணவு செரிமானம் மற்றும் சத்துக்களைப் பிரித்தளிக்கும் பணியைச் செய்கிறது.)

(பஞ்ச பிராண வாயு அல்லது ஐந்து சக்தி ஓட்டங்கள், உடலையும் அதன் உறுப்புகளையும் செயல்பட வைக்கின்றன. அடிப்படையில்,  மனித உடலின் ஒட்டுமொத்த உடலியலுக்கும்  பஞ்ச பிராண வாயுக்களே பொறுப்பாகும்.-நாம் நமது உடல் ஆற்றலை உணவிலிருந்து உருவாக்குகிறோம். அந்த உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு, அது செல்களில் சிதைக்கப்பட்டு ஆற்றலை உற்பத்தி செய்கிறது.  இந்த ஆற்றலை உள்வாங்குவதிலும், விநியோகிப்பதிலும், மற்றும் உடல் இயங்குவதற்குத் தேவையானவற்றை நிர்வகிப்பதிலும் ஐந்து  பிராண வாயுக்கள் ஈடுபட்டுள்ளன. )

ஆக ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு –

2-4-5-ஸ்ரேஷ்டாணுத்வாதி₄கரணம்-ப்ராண வாயு அணுவானது -ப்ராண வாயுவின் அளவு-ஸங்கதி – ப்ராண வாயு என்றால் என்ன என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து இவ் வதிகரணத்தில் ப்ராண வாயுவின் அளவு ஆராயப்படுகிறது.
ஸித்தாந்தம் – 1-:அணு ச –“
அணுவானதும் கூட”
புலன்கள் அணுவானவை என்று சொல்வதற்கு எந்த எந்த யுக்திகள் சொல்லப்பட்டனவோ , அதே யுக்திகளால் ப்ராண வாயுவும் அணுவானது என்று நிரூபிக்கலாம். அதாவது – “ஜீவாத்மா உடலிலிருந்து புறப்படும் பொழுது ப்ராண வாயு கூடப் புறப்படுகிறது” என்று வேதம் சொல்கிற படியால், ப்ராண வாயு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்கிறது என்று தெரிகிறது. எனவே கண்டிப்பாக ப்ராண வாயு விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்த்தாக) இருக்க முடியாது, அளவுபட்டதாகத்தான் இருக்க வேண்டும். அது புறப்படும் பொழுது கண்ணுக்கும் தெரிவதில்லை ,-எனவே அணுவாகத் தான் இருக்க வேண்டும்.

கேள்வி – புது யுக்திகள் இல்லாத போது ஏன் இதற்குத் தனி அதிகரணம்? ப்ராணணுத்வ-அதிகரணத்திலேயே இதையும் சேர்த்துச் சொல்லி யிருக்கலாமே ?
பதில் – இங்கு அதிகப்படியான ஒரு கேள்வி உள்ளது. வேதத்தில் (ஸம: ஏபி₄: த்ரிபி₄:
லோகை : ஸம: அநேந ஸர்வேண )
-அதாவது-“ப்ராண வாயு மூன்று உலகங்களுக்கும் ஸமமானது, அனைத்துப் பொருள்களுக்கும் ஸமமானது” என்றும்,
(ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டி₂தம்) அதாவது “ப்ராண வாயுவில் அனைத்தும் நிலை பெற்றுள்ளது” என்றும்,
(ஸர்வம் ஹி இத₃ம் ப்ராணேண ஆவ்ருதம்) அதாவது-“இந்த உலகனைத்தும் ப்ராண வாயுவால் சூழப் பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால், ப்ராண வாயு விபுவானதாக இருக்குமோ ? என்கிற ஸந்தேஹம் ஏற்படுகிறது. அதைத் தீர்ப்பதற்காகத் தான் இவ்வதிகரணம் தனியாக ஊள்ளது.
ஸமாதானம் ப்ராண வாயு புறப்படுவது சொல்லப் படுவதால், அது அணுவானது தான். அனைத்துப் பொருள்களும் தங்கள் தங்கள் ப்ராண வாயுவை அண்டியே வாழ்கிறபடியால் ப்ராண வாயுவில் நிலை பெற்றுள்ளன என்றும் ப்ராணன் அனைத்தையும் சூழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைக் கொண்டு ப்ராண வாயு விபு என்று கூற முடியாது

2-4-6-ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நாதி₄கரணம்-ஜீவாத்மா புலன்களை இயக்குவது
பரமாத்மாவின் ஆணையாலேயே –
புலன்களின் அதிஷ்டாநம் -ஸங்கதி
– கண் காது முதலான 11 புலன்களும் ப்ராண வாயு என்னும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பயன்படுத்துவதற்காக ஜீவாத்மா அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார் (தன் ஜ்ஞாநத்தால் ஏற்று இயக்குகிறார்) என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அதே போல், அந்தப் புலன்களுக்கு சக்தி யளிப்பதற்காக அக்நி ஸூர்யன் முதலான தேவர்களும் அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது. (2-1-3-2-கீழ் விலக்ஷண அதிகரணத்தில் இந்திரியங்களை தேவர்கள் அதிஷ்டானம் -இயக்குவது -தேவதைகள் என்று பார்த்தோம் )இப்போது, ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்வது தாங்களாகவா? அல்லது பரமாத்மாவின் இயக்கத்தாலா? என்று ஆராய்கிறார்.

பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்யும் போது யாரையும் எதிர்பார்க்கத் தேவை யில்லை , அவர்கள் தாங்களாகவே இயங்கும் வல்லமை படைத்தவர்கள் என்பது பூர்வ பக்ஷம்

ஸித்தாந்தம் – இவ் வதிகரணத்தில் இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் தன் பக்ஷத்தைக் கூறுகிறார்.
1–ஜ்யோதிராத் ₃யதி₄ஷ்டா₂நம் து தத் ஆ₃மநநாத் ப்ராண வதா சப்₃தா₃த்
ப்ராண வதா
– ப்ராணன் எனும் மூச்சுக் காற்றை உடையவரான ஜீவாத்மாவோடு கூட(சஹ யோகி த்ரியதாய் -மூன்றாம் வேற்றுமை உருபுடன் கூடி)
ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நம் து – ஜ்யோதிஸ் (அக்நி) முதலான தேவர்கள் புலன்களை அதிஷ்டாநம் செய்வது
ததா₃மநநாத் தத் ஆ₃மநநாத்– அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் (ஆமநநம் – -ஆபி முக்யேனான மனனம்–ஒன்றை நோக்கி சிந்தித்தல் – ஸங்கல்பம்)
சப்₃தா₃த் – அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்கள் என்று வேதம் கூறுகிறபடியால்

அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் கண் காது முதலான புலன்களுக்கும், ஜீவாத்மாக்களுக்கும், அக்நி வாயு ஸூர்யன் முதலான தேவர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்து இயக்குபவர் பரமாத்மா தான் என்று கூறப்பட்டுள்ளது.
தைத்திரீய உபநிஷத்தில் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே பீ₄ஷா உதே₃தி ஸூர்ய:…)
அதாவது-“அந்த பரமாத்மாவுக்கு பயந்து தான் காற்று வீசுகிறது, ஸூர்யன் உதிக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே , ஜீவாத்மாக்களும் தேவர்களும் புலன்களை அதிஷ்டாநம் செய்வதும் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்.

இருப்பே பரமாத்மாவால் தான்-கேள்வி – தேவர்களும், நம்மைப் போன்ற ஸாதாரண ஜீவாத்மாக்களும் செய்யும் செயல்பாடுகள் எல்லாம் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் இருக்கட்டும், ஆனால் அந்த தேவர்களும் ஜீவாத்மாக்களும் இருப்பது (அவர்களின் ஸத்தை – இருப்பு) பரமாத்மாவால் அல்ல, சுயமானதே .
பதில் – (2- தஸ்ய ச நித்யத்வாத் –
“அந்த அதி₄ஷ்டா₂நம் நித்யமானதால்”
பரமாத்மா தேவர்களையும் ஜீவாத்மாக்களையும் செய்யும் அதிஷ்டாநம் (உள்ளே புகுந்து இயக்குதல்)
அவர்களுடைய செயல்பாட்டுக்காக மட்டுமல்ல, செயல்படும் காலத்தில் மட்டும் அல்ல. என்றுமே இயற்கையாகவே அதிஷ்டானம் செய்து தான் இருக்கிறார். எனவே அந்த தேவர்கள் மற்றும்
ஜீவாத்மாக்களின் ஸத்தை அதாவது இருப்பு (existence) கூட, பரமாத்மாவால் தான்.
பொருள்களின் இருப்பே அவரால் என்றால், செயல்பாடுகளும் அவரால் தான் என்று சொல்லத் தேவையே இல்லை . தானாகவே தேறுகிறது.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

தைத்திரீய உபநிஷத்தில் -(ததே₃வாநுப்ராவிசத் தத₃நுப்ரவிச்ய ஸத் ச த்யத் ச அப₄வத்) அதாவது-“அந்த பரமாத்மா உலகப் பொருள்களைப் படைத்துவிட்டு, அவற்றுக்குள் புகுந்தார், அவர் புகுந்ததால் தான் சேதனர்களான ஜீவாத்மாக்களும் அசேதனப் பொருள்களும் உள்ளவை ஆயின” என்று தெளிவாக கூறப்படுகிறது.
ஆக, அனைத்துப் பொருள்களின் இருப்பும் செயல் பாடுகளும் பரமாத்மாவால் தான் என்று நிரூபிக்கப் பட்ட படியால், தேவர்களும் ஜீவாத்மாக்களும் புலன்களை அதிஷ்டானம் செய்வதும்
பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்று தெளிவாகிறது.

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

2-4-7-இந்த்₃ரியாதி₄கரணம்-இந்திரியங்கள் எவை?–புலன்கள் 11 மட்டுமே –ஸங்கதி – இது வரை இந்தப் பாதத்தில் ப்ராணன்கள் எனப்படும் 12 தத்துவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பட்டது. அவையாவன – சக்ஷுஸ் (கண்ணிலிருப்பது), ஸ்ரோ த்ரம் (காதிலிருப்பது), க்₄ராண ம் (மூக்கில்), ரஸநம் (நாக்கில்), த்வக் (தோல்), வாக் (நாக்கில்), பாணி (கைகள்), பாதம் (கால்கள்), பாயு (மலம் கழிக்க), உபஸ்தம் (ஜலம் கழிக்க), மநஸ் (மனது), ஸ்ரேஷ்டப்ராணன் -ப்ராண வாயு (மூச்சுக் காற்று). இப்போது, இந்த 12 தத்துவங்களில் எவை இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று இந்த அதிகரணத்தில் ஆராயப்படுகிறது.

பூர்வ பக்ஷம் – இவை பன்னிரண்டுமே இந்த்ரியங்கள் தான். ப்ராணன்கள் என்கிற பெயர் இவை அனைத்துக்கும் பொதுவாக இருக்கிறது, அவற்றில் வேறுபாடுகளும் ஒன்றும் தெரியவில்லை . எனவே அனைத்துமே புலன்கள் தான். மேலும், இவை அனைத்துமே ஜீவாத்மாவுக்கு ஏதோ ஒரு விதத்தில் கருவிகளாகத் தான் இயங்குகின்றன. எனவே அனைத்துமே இந்த்ரியங்கள் தான்.

ஸித்தாந்தம் – 1–தே இந்த்₃ரியாணி தத்₃வ்யபதே ₃சாத் அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த்
தே இந்த்₃ரியாணி
– அவை – 11 தான் இந்த்ரியங்கள்
அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த் – ஸ்ரேஷ்ட₂ ப்ராணன் என்றழைக்கப்படும் மூச்சுக் காற்றைத் தவிற மற்றவற்றில்
தத்₃வ்யபதே ₃சாத் – இந்த்ரியம் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதால்
இந்த ஸூத்ரத்தில் ’-அவை ’ என்று பொதுவாகச் சொல்லப் பட்டிருந்தாலும், அச் சொல் முன் பேசப்பட்ட 12 தத்துவங்களையும் குறிக்க வில்லை . ’-அவை ’ என்று பன்மை ப்ரயோகம் உள்ள படியால், இதற்கு முன் பன்மையில் பேசப்பட்டதைத் தான் நினைவு கூற வேண்டும். இதற்கு முன் ப்ராணணுத்வாதிகரணத்தில் ’ அணவ: ச ’ என்ற-ஸூத்ரத்தில் தான் கண் முதலான 11 தத்துவங்களும் அணுவானவை என்று சொல்லும் போது பன்மை ப்ரயோகம் உள்ளது. மூச்சுக் காற்றை ஒருமை யில் தான் அழைத்துள்ளார். எனவே இங்கு ’ அவை ’ என்ற சொல் மூச்சுக் காற்றைத் தவிர்ந்த மற்ற ப்ராணன்களைத் தான் குறிக்கிறது.

(இந்த்₃ரியாணி த₃ச ஏகம் ச ) அதாவது “இந்த்ரியங்கள் பத்தும் ஒன்றும்” என்று தெளிவாக உபநிஷத்துக்களில் கூறப்படுகிறது. எனவே , ப்ராண வாயுவைத் தவிர்ந்த மற்ற 11 ப்ராணன்களும் தான் இந்த்ரியங்கள்

புலன்களை ஏன் ப்ராணன் என்றழைக்கிறோம்?
பூர்வபக்ஷி 12 ப்ராணன்களுக்கும் எதுவும் வேறுபாடுகளே இல்லை என்று கூறியிருந்தார். அதை அடுத்த ஸூத்ரத்தால் தகர்க்கிறர் –
2–பே₄த₃ஸ்ருதே : வைலக்ஷண்யாத் ச –
“தனித்துக் கூறும் வேதத்தாலும் வேறுபாட்டாலும்”

பே₄த₃ஸ்ருதி: (தனித்துக் கூறும் வேத வாக்கியம்) –
(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :, மந:, ஸர்வேந்த்ரியாணி ச )
அதாவது
“ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது, மனது உண்டாகிறது, எல்லாப் புலன்களும் உண்டாகின்றன” என்று வேதம் கூறுகிறது. இங்கு இந்த்ரியங்களைக் காட்டிலும் ப்ராண வாயு தனித்துச் சொல்லப் பட்டுள்ளதால், அது இந்த்ரியங்களுக்குள் ஒன்று அல்ல என்று தெரிகிறது. மனதும் இவ்விடத்தில் தனித்துச் சொல்லப் பட்டிருந்தாலும், மற்ற பல ப்ரமாணங்களில் மனதும் புலன் தான் என்று கூறப்பட்டுள்ளது.
எடுத்துக் காட்டுக்கு பகவத்கீதையில் கண்ணன் (மந:ஷ்ஷ்டாநி இந்த்₃ரியாணி) அதாவது (மனது உள்பட ஆறு இந்த்ரியங்களையும்) என்று ஓரிடத்தில் கூறுகிறார். எனவே மனது ஓர் இந்த்ரியம் தான் என்று ஏற்கப் படுகிறது.-ஆனால் ப்ராண வாயு புலன் அல்ல

வைலக்ஷண்யம் (வேறுபாடு) – ப்ராண வாயுவுக்கும் கண் முதலானவற்றுக்கும் பல விதமான வேறுபாடுகள் உள்ளன –
1-நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது நம் புலன்கள் இயங்குவதில்லை . ஆனால் ப்ராண வாயு இயங்குகிறது
2-கண் முதலானவை ஜீவாத்மாவுக்குச் செய்யும் உதவி – மற்ற பொருள்களையும் அறியவும் பயன்படுத்தவும் உதவுதல்.
ப்ராண வாயு செய்யும் உதவி – சரீரம் புலன்கள் முதலானவற்றைத் தாங்குதல்.
(தே ஏதஸ்யைவ ஸர்வே ரூபம் அப₄வன், தஸ்மாத் ஏதே ஏதேந ஆக்₂யாயதே )
அதாவது–பிராண அதீன தாரணத்வாத்--“புலன்கள் ப்ராண வாயுவை நம்பியே இயங்குவதால் ப்ராணன் என்றே அழைக்கப் படுகின்றன” என்று வேதம் கூறுகிறது. ஆகவே , இந்த 12 தத்துவங்களுமே ப்ராணன் என்று அழைக்கப் பட்டாலும் அவற்றில் ப்ராண வாயுவைத் தவிற மற்ற 11 மட்டும் தான் இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று நிரூபிக்கப் படுகிறது.

2-4-8-ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லிப்த் யதி₄கரணம் –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது யார்?–ஸங்கதி– இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலிருந்து இது வரை ஸமஷ்டி ஸ்ருஷ்டி ப்ரஹ்மத்தால் தான் செய்யப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் கடைசி அதிகரணத்தில் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் ப்ரஹ்மத்தால் தான் செய்யப் பட்டுகிறது என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
ப்ரஹ்மம் உலகை ஸ்ருஷ்டிப்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன –
1-ஸமஷ்டி ஸ்ருஷ்டி
2-வ்யஷ்டி ஸ்ருஷ்டி

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லாஅன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே”– பஹுஸ்யாம் ப்ரஜாயேய–ஊழி முதல்வன்-ஸமஷ்டி ஸ்ருஷ்டி-
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவனே –நாராயணன் நான்முகனைப் படைத்தான் –வ்யஷ்டி ஸ்ருஷ்டி
)

(ஸமஷ்டி ஜீவன் ஹிரண்ய கர்ப்பன் -நான்முகனுக்கு பெயர்கள்)

ஸமஷ்டி ஸ்ருஷ்டி
பிரளயத்தில் உலகங்களனைத்தும் அழிந்து, மூலப் பொருளான ப்ரதானம் என்பதோடு ஒன்றாகிறது.– இப் பூதங்களோ , அவற்றிலிருந்து உண்டான பொருள்களோ எதுவும் கிடையாது. ஜீவாத்மாக்கள் அனைவரும் உடலில்லாமல் ப்ரக்ருதியோடு சேர்ந்து இருப்பார்கள். இவை அனைத்துக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, ஸ்ருஷ்டிக்கான காலம் வந்தவுடன்,தனக்கு உடலான மூல ப்ரக்ருதி என்கிற அசேதனப் பொருளிலிருந்து வரிசையாக மஹாந், அஹம்காரம், 11 புலன்கள், 5 தன் மாத்ரங்கள், 5 பூதங்கள்(நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) ஆகியவற்றை உண்டாக்கி, அதற்குப் பின் ஐம் பூதங்களைக் கொண்டு14 உலகங்களைக் கொண்ட எண்ணிலடங்காத அண்டங்களைப் படைக்கிறார். அதற்குப் பின், அந்த அண்டத்துக்குள் அடியிலிருக்கும் தண்ணீரில் ஆதிசேஷன் படுக்கையில் சயனித்து, தன் உந்தித் தாமரை யிலிருந்து ப்ரஹ்மா என்னும் நான்முகனைப் படைக்கிறார். இதுவரை நடக்கும் ஸ்ருஷ்டிக்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி (பொதுவான ஸ்ருஷ்டி) என்று பெயர், ஏனென்றால் இதுவரை நடப்பது ஜீவாத்மாக்களின் தனிப்பட்ட புண்ய-பாபங்களுக்குப் பொருத்து அல்ல. இதை ப்ரஹ்மமே நேரடியாகச் தெய்கிறார்

வ்யஷ்டி ஸ்ருஷ்டி–
வ்யஷ்டி என்றால் தனித் தனியான என்று பொருள். நான்முகன்உண்டாக்கப் பட்ட பிறகு நடக்கும் ஸ்ருஷ்டிக்கு வ்யஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர், ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் பாப-புண்யங்களின் கணக்கைப் பார்த்து அதற்குத் தகுந்த படி ஓர் உடலை ஸ்ருஷ்டித்து, அதற்குள் அந்த ஜீவாத்மாவைப் புகுத்தி பிறப்பை ஏற்படுத்துவது தான் இந்த ஸ்ருஷ்டி. இதைத் தான் நான்முகன் செய்கிறார்–

கேள்வி –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது நான்முகனேவா? அல்லது அவருக்கு அந்தர்யாமியான பரமாத்மாவா? –

பூர்வ பக்ஷமும் ஸித்தாந்தமும்–
பூர்வ பக்ஷம்
–நான்முகன் தானாகவே தான் செய்கிறார். வேதத்தில் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது, பரமாத்மா ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்யும் முறையைக் கூறி விட்டு, அதற்குப் பின் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொலும் போது
(அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி)-அதாவது “நான் இந்த ஜீவன் மூலமாக உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களின் பெயர்களையும் உருவங்களையும் பிரிக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் நாம-ரூப வ்யாகரணம்–அதாவது–பெயர் மற்றும் உருவங்களைப் பிரிப்பது என்பது தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டி ஆகும். அதைப் பரமாத்மா தானாகச் செய்யாமல், ஜீவாத்மா மூலம் தான் செய்கிறார் என்று இந்த வாக்கியம் கூறுகிறபடியால், வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது ஒரு ஜீவாத்மாவான நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்.
மேலும், ஸ்ம்ருதிகளிலும் நான்முகன் செய்யும் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது தான் நாம-ரூப-வ்யாகரணம்–அதாவது பெயர்-உருவ பிரிவினை என்பது சொல்லப்படுகிறது. அதனால் அவரே செய்கிறார்.(நாம ரூப பூதானாம் க்ருத்யானாம் பிரபஞ்சனம்)

ஸித்தாந்தம்-1– ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து த்ரிவித் குர்வத: உபதே ₃சாத் ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து–பெயர்-உருவ-ஸ்ருஷ்டி(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
த்ரிவித் குர்வத: -த்ரிவித் கரணம் என்ற செயலைச் செய்பவரான பரமாத்மாவினுடையதே
உபதே ₃சாத்–த்ரிவித்கரணம் செய்பவர் தான் பெயர்-உருவ-பிரிவினையைச் செய்கிறார் என்கிற உபதேசத்தால்

பூர்வபக்ஷி காட்டின வாக்கியத்தில் பிற்பகுதி உள்ளது–(அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகர வாணி,தாஸாம் த்ரிவ்ரிதம் த்ரிவ்ரிதம் ஏகைகாம் கரவாணி)-அதாவது“இந்த ஜீவனாகிற நான் உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களுக்குப் பெயர்-உருவ-பிரிவைச் செய்யப் போகிறேன், அதற்காக அவை ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுத்துக் கொள்கிறார். முற் பாதியில் சொல்லப்பட்ட வ்யஷ்டி ஸ்ருஷ்டி யையும் பிற் பாதியில் சொல்லப்பட்ட த்ரிவித் கரணம்(ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்குதல்) என்னும் செயலையும் ஒருவரே செய்கிறார் என்று இதிலிருந்து தெரிகிற படியால் அதைச் செய்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

த்ரிவித்கரணம் அல்லது பஞ்சீகரணம் –உபநிஷத்தில் த்ரிவித் கரணம் என்று ஒரு செயல் குறிப்பிடப் பட்டுள்ளது. அக்நி, ஜலம், நிலம் என்ற மூன்று பூதங்களைப் படைத்த பிறகு த்ரிவித் கரணம் அதாவது -ஒவ்வொன்றையும் மூன்றாக ஆக்கும் செயல் நடக்கிறது. உண்மையில் ஐந்து பூதங்களைப் படைத்து, பஞ்சீகரணம் அதாவது ஒவ்வொன்றையும் ஐந்தாக ஆக்கும் செயல் செய்யப் படுகிறது என்று புராணங்களிலிருந்து நாம் அறியலாம். சாந்தோக்ய உபநிஷத்தில் அதன் ஒரு பகுதியாக த்ரிவித் கரணம் கூறப்பட்டுள்ளது — முதலில் பூதங்கள் படைக்கப்படும் பொழுது, தூய்மையான ஆகாசம், காற்று,நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் என்று இருக்கும். ஆனால் இப்படித் தனித் தனியான பூதங்களைக் கொண்டு அண்டங்களை ஸ்ருஷ்டி செய்ய இயலாது என்பதால் இவற்றை ஒன்றோடு ஒன்றாகக் கலக்க வேண்டும். ஒவ்வொரு பூதத்தின்12.5% எடுத்து மற்ற நான்கு பூதங்களோடு கலக்குவது தான் பஞ்சீகரணம். இதன் இறுதியில் ஆகாசம் என்ற பூதத்தில் 50% ஆகாசமும், தலா 12.5% காற்று, நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் இருக்கும். இதே போல் மற்ற பூதங்களிலும். இவற்றைக் கொண்டு தான் அண்டங்கள் படைக்கப் படுகின்றன

நான்முகன் படைக்கப் படுவது அண்டம் உண்டான பிறகு அதற்குள் சயனித்திருக்கும் நாராயணனின் உந்தித் தாமரையில் தான். எனவே அண்டம் உண்டாவதற்கு முன் நடக்க வேண்டிய பஞ்சீகரணத்தை அவர் செய்திருக்க முடியாது, அவரே அப்போது உண்டாகாதபடியால். அதனால் பரமாத்மா தான் பஞ்சீகரணத்தைச் செய்திருக்க வேண்டும். பஞ்சீகரணம் செய்பவர் தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்கிறார் என்கிறது உபநிஷத். எனவே பரமாத்மா தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியையும் செய்பவராக இருக்க வேண்டும்.

அநேந ஜீவேந ஆத்மநா’ என்ற இடத்தில் ஜீவன் மூலமாக என்று பொருள் அல்ல, ஜீவனை உடலாகக் கொண்ட நானாகிய பரமாத்மா உள்ளே புகுந்து பெயர்-உருவ-பாகுபாட்டைச் செய்யப் போகிறேன் என்று தான் பொருள்.

(தத் தேஜஸ் ஐஷத–தேஜஸ்ஸை உடலாகக்கொண்ட ப்ரஹ்மமே ஸங்கல்பித்தது போல் இங்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட– —சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8–)

வேறொரு த்ரிவித்கரணம் உள்ளதா? கேள்வி-இங்கு த்ரிவித்கரணம் என்பது நீங்கள் சொல்லும்படி அண்டம் உண்டாவதற்கு முன் நடக்கும் செயல் அல்ல. சாந்தோக்ய உபநிஷத்தில் இதே ப்ரகரணத்தில் வேறொரு த்ரிவித்கரணம் (ஒவ்வொன்றும் மும்மூன்றாக ஆவது) சொல்லப்பட்டுள்ளது. அதாவது

இமா: திஸ்ரோ தே ₃வதா: புருஷம் ப்ராப்ய த்ரிவ்ரித் த்ரிவ்ரித் ஏகைகா ப₄வந்தி —
அக்நி, ஜலம், நிலம் ஆகிய மூன்றும் மனிதனால் உண்ணப் பட்டதும் மும் மூன்றாகஆகின்றன
பூதம் –நிலம் நீர் தீ
கெட்டிப் பகுதி –மலம் மூத்திரம் அஸ்தி-எலும்பு
நடுத்தரப் பகுதி –மாம்சம் ரத்தம் மஜ்ஜை
நுண்ணிய பகுதி –மனது -பிராணன் -வாக்

(நிலம் -மலம் -மாம்சம் -மனது
நீர் -மூத்திரம் -ரத்தம் -பிராணன்
தீ-அஸ்தி-எலும்பு-மஜ்ஜை-வாக்)

இவ்வாறு ஒவ்வொரு பூதமும் மும்மூன்று பூதங்களாக மாறுவது தான் த்ரிவ்ரித்கரணம் எனப்படுகிறது. இதெல்லாம் நான்முகனால் தான் நம் உடலில் நடப்படுகிறது. எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் அவர் தான்.

ஸித்தாந்தியின் பதில்
2–மாம்ஸாதி பௌமம் யதா சப்தம் இதரயோ ச
மாம்ஸாதி₃
ப்ருதி₂வியிலிருந்து உண்டாகும் மாம்ஸம், மனது ஆகியவையும்
ச பௌ₄மம்–ப்ருதி₂வி தான், மற்ற பூதங்கள் அல்ல.
இதரயோ : ச – நீர் -நெருப்பிலிருந்தும் உண்டாகும் மூத்ரம் ப்ராணன் எலும்பு மஜ்ஜை ஆகியவையும்
யதா₂சப்₃த₃ம்– அந்தந்த தொற்களின் படி நீரும் நெருப்பும் தான், மற்ற பூதங்கள் அல்ல.

அது த்ரிவ்ரித் கரணமே அல்ல
ஒரு பூதம் மூன்றாக ஆகும் த்ரிவ்ரித் கரணம் இது தான் என்றால், உண்ணப் பட்ட நிலம்,மலம், மாம்ஸம், மனது என்று மூன்றாக மாறும் பொழுது, அதில் ஒன்று நிலம், ஒன்று நீர், ஒன்று நெருப்பு என்று கூற வேண்டும். பொதுவாக கெட்டியாக இருப்பது நிலம், நடுத் தரமானது நீர், மிக நுண்ணியது நெருப்பு. எனவே , கீழுள்ள அட்டவணையின்படி தான் ஒவ்வொரு பூதமும் மும் மூன்றாக ஆகிறது, இது தான் த்ரிவ்ரித்கரணம் என்கிறார் பூர்வபக்ஷீ. ஆனால், இப்படிக் கூறுவது தவறானது–நிலத்திலிருந்து வரும் மலம், மாம்ஸம், மனது என்ற மூன்றுமே நிலம் தான். அதே போல், நீரிலிருந்து வரும் மூத்ரம், ரத்தம், ப்ராணன் மூன்றுமே நீர் தான். அதே போல் எலும்பு, மஜ்ணஜ, வாக் மூன்றுமே நெருப்பு தான் என்கிறார் வேத வ்யாஸர்

பூதம் –நிலம் நீர் தீ
கெட்டிப் பகுதி –மலம் -நிலம் –மூத்திரம் -நிலம் -எலும்பு -நிலம்
நடுத்தரப் பகுதி –மாம்சம் -நீர் –ரத்தம் -நீர் -மஜ்ஜை -நீர்
நுண்ணிய பகுதி –மனது -நெருப்பு –பிராணன் -நெருப்பு –வாக் -நெருப்பு –

இதற்குக் காரணம்–இதே பகுதியில்(அந்ந மயம் ஹி ஸோம்ய மந:, ஆபோ மய: ப்ராண தேஜோ மயீ வாக்) அதாவது மனது நிலத்தாலானது, ப்ராணன் நீராலானது, வாக் நெருப்பாலானது –என்று வேதம் கூறுகிறது. இது பூர்வ பக்ஷியின் வாதத்தோடு முரண்படுகிறது, ஏனென்றால் அவர் கூறிய படி மனது நெருப்பாலானது, நிலமல்ல;ப்ராணன் நெருப்பாலானது, நீரல்ல; ஆகவே பூர்வ பக்ஷீ கூறியது தவறானது.
ஆக, இங்கு ஒவ்வொரு பூதமும் மூன்று மூன்று பூதங்களாக மாறுவது சொல்லப்பட வில்லை , அதே விதமான மூன்று பொருள்களாக மாறுவது தான் சொல்லப் படுகிறது. எனவே இது த்ரிவ்ரித்கரணமே அல்ல. அண்டம் உண்டவதற்கு முன் நடப்பது தான் த்ரிவ்ரித்கரணம்; அதைச் செய்பவர் பரமாத்மா; எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் பரமாத்மாவே

கேள்வி– நிலம் நீர் தீ ஆகியவை யெல்லாம் ஒவ்வொன்றும் மும் மூன்று பூதங்களாகக் கலந்து தான் உள்ளன என்றால், அவற்றை ஏன் நிலம் நீர் தீ என்றும்குறிக்கிறோம்? மாற்றி, எந்தச் சொல்லைக் கொண்டும் குறிக்கலாமே
பதில்– 3-வைசேஷ்யாத் து தத்₃வாத₃: தத்₃வாத₃: – “சிறப்பாக (அதிகமாக) இருப்பதால் –அப்படிக் குறிக்கப் படுகிறது”. எந்த பூதத்தின் பகுதி எதில்அதிகமாக(50%) உள்ளதோ ,அச் சொல்லால் அதைக் குறிப்பிடுகிறோம்
ஸூத்ரத்தில்’தத்₃வாத₃:’ என்ற சொல்லின் இரட்டிப்பு, இதோடு இந்த அத்யாயம் முடிகிறது என்பதைக் காட்டவே —

(இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை-ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்-அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும் மற்றவன் வியாகரணம் செய்வதாயும் கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும்
–)

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –மூன்றாம் பாதம் – வியத் பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

April 16, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-3-1-வியத₃தி₄கரணம்-ப்ரஹ்மம் தவிர அனைத்தும் படைக்கப் படுவதே

பாதத்தின் ஸங்கதி
முதல் அத்யாயத்தில் “-அகில ஜகத் ஏக காரணம்-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவு எட்டப்பட்டது. இரண்டாவது அத்யாயத்தில் அந்த முடிவை எதிர்த்து எழக் கூடிய ஆஷேபங்களுக்கெல்லாம் வேத வ்யாசர் பதில் கூறுகிறார்.-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. “ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பது ஒரு பகுதி, “உலகம் அனைத்துக்கும் காரணம்” என்பது இரண்டாவது பகுதி.-அதில் முதல் பகுதியைத் தாக்குவதற்காக ப்ரஹ்மம் காரணமாக இருக்க முடியாது என்று பலரும் செய்த ஆஷேபங்கள் அனைத்துக்கும் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் வேத வியாசர் பதிலுரைத்தார். அதற்கு மேல் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் உலகத்துக்கு காரணமாக மற்ற பொருள்கள் சொல்லப் படுகின்றனவே , அவை எதுவும் ஜகத் காரணமாக இருக்க முடியாது. அந்த மதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை வேத வியாசர் நிரூபித்தார். ஆக இரண்டு பாதங்களால் “ப்ரஹ்மம் ஒரே காரணம்” என்பது நிலை நாட்டப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாதங்களில் நாம் எடுத்த முடிவின் இரண்டாவது பகுதியான “உலக அனைத்துக்கும் காரணம்” என்கிற பகுதியைத் தாக்குவதற்காக பல விதமான ஆஷேபங்களை மற்றவர்கள் எழுப்புகிறார்கள். ப்ரஹ்மம் ஒரு சில பொருட்களுக்குக் காரணமாக இருக்கட்டும், உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டதல்ல, என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லி “உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவை மறுபடியும் நிலை நாட்டுகிறார் வேத வியாசர் அடுத்த இரண்டு பாதங்களால்.

இந்த அத்யாயத்தின் முதல் பாதத்துக்கு ஸ்ம்ருதி பாதம் என்று பெயர்,ஸ்ம்ருதிகளைக் கொண்டு பூர்வ பக்ஷிகள் ஆஷேபங்களை எழுப்பிய படியால். இரண்டாவது பதத்துக்கு தர்க்க பாதம் என்று பேயர், தர்க்கத்தின் அடிப்படையில், அதாவது யுக்திகளைக் கொண்டு மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை என்று வியாசர் நிரூபித்த படியால். இந்த மூன்றாவது பதத்துக்கு வியத் பாதம் என்று பெயர். வியத் என்றால் ஆகாசம். ஆகாசம் முதலான பொருள்களும் கூட ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகின்றன என்று இதில் நிரூபிக்கிற படியால். அடுத்தது நான்காவது பதத்துக்கு ப்ராண பாதம் என்று பெயர், ப்ராணன், இந்திரியங்கள் முதலானவையும் பகவானால் தான் படைக்கப் படுகின்றன என்று அந்த பாதத்தில் நிரூபிக்கப் போகிறார். இது தான் இந்த பாதத்திற்கும் முன் பின் பாதங்களுடன் இருக்கும் ஸங்கதியாகும்.

ஆகாசம் உண்டாக முடியுமா?
2-3-1-வியத₃தி₄கரணம் – பூர்வ பக்ஷம் – ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை , அது நித்யமானது என்கிறார் பூர்வ பக்ஷீ
1-ந வியத் அஸ்ருதத:
– “ஆகாசம் உண்டாவதில்லை , அப்படிச் சொல்லும் ஸ்ருதி இல்லாதபடியால்”
பூர்வ பக்ஷி சொல்வது – உலகத்தில் நாம் புலன்களால் அறிந்ததோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது. வேதமே கூட “நெருப்பு குளிர்ந்தது” என்று சொன்னால், அதை அப்படியே ஏற்க முடியாது, புலன்களால் ’நெருப்பு சூடானது’ என்று நாம் அறிந்திருக்கிற படியால். எனவே , அச் சொல் தொடருக்கு வேறு மாதிரி தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதே போல், ஆகாசம் உண்டாவது என்பது நடக்க முடியாத ஒன்று. எனவே , வேதத்தால் கூட “ஆகாசம் உண்டாக்கப் படுகிறது” என்று போதிக்க முடியாது.

ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள்
(1) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளோடு கூடியவை தான். ஆனால் ஆகாசத்துக்குப் பகுதிகள் இல்லை . எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாதது
(2) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே நடுத்தர அளவோடு (பரிமாணத்தோடு) தான் இருக்கும்.-ஆனால் ஆகாசமோ எல்லா இடத்திலும் பரந்துள்ளது. எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது.

மேலும், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கும் முறையை வருணிக்கும் போது “(ததை ₃ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி, தத்வதஜ: அஸ்ருஜத) அதாவது ’அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்தது – “நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன்” என்று. (ஈஷத் அதிகரணம் -1-1-5 முன்பே பார்த்துள்ளோம்-நெருப்பு ஜலம் பிருத்வி மூன்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது -ஆகாசம் வாயு இவை பற்றி சொல்லப் பட வில்லை இங்கு -)அந்த ப்ரஹ்மம் தேஜஸ் என்ற நெருப்பைப் படைத்தது’ எனப்படுகிறது. எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது முதன் முதலில் ஐம்பூதங்களுக்குள் தேஜஸ் தான் உண்டாக்கப் படுகிறது என்று கூறி, அதற்குப் பிறகும் ஜலம் பூமி ஆகியவற்றின் ஸ்ருஷ்டி மட்டும் தான் சொல்லப்படுகிற படியால் ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆக இவ்வாறு ஆகாசம் ப்ரஹ்மத்தால் படைக்கப் படாதபடியால் “உலகமனைத்தும் ப்ரஹ்மம் காரணம்” என்று நீங்கள் சொல்வது தவறானது என்று வாதிடுகிறார் பூர்வ பஷி

ஆகாசமும் உண்டாக்கப்படுவதே
ஸித்தாந்தம் – 2-அஸ்தி து
– “ (ஆகாசம் உண்டாவதைச் சொல்லும் வேத வாக்யம்) இருக்கிறது அ்ன்றோ ”
தைத்திரீய உபநிஷத்தில் (ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த: ) அதாவது “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று ஸ்பஷ்டமாக ஆகாசத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுவதால் ஆகாசமும் படைக்கப்படுவதே .(ஆனந்தாதி அதிகரணம் -முன்பே இது பற்றி பார்த்துள்ளோம்)
புலன்களால் அறியப்பட்ட விஷயங்களோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறோம். ஆனால் வேதத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது, புலன்களோடு முரண் படாமல் ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வேதத்தால் போதிக்க முடியும். இவ் விடத்திலும் ஆகாசத்தின் உத்பத்தி என்பது நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி உண்டு என்று வேதம் சொல்லும் போது அது புலன்களுக்கு முரண் பட்டதே அல்ல. “ஆகாசம் உண்டாவதில்லை ” என்று நாம் புலன்களால் அறிந்தது கிடையாது. “ஆகாசம் உண்டாகிறது” என்று தெரிந்து கொண்டதில்லை , அவ்வளவே . ஆகையால் புலன்களுக்கு முரண் படாமல், ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆகாசத்தின் உத்பத்தியை வேதம் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை

மேலும் பகுதிகள் இல்லாத்படியால் ஆகாசம் உண்டாக்கப் படவே முடியாது என்று சொல்லியிருந்தீர்கள். அதுவும் தவறானது. ஏன் என்றால் ஆகாசத்துக்கு பகுதிகள் கண்டிப்பாக உள்ளன. வேதத்திலும் புராணங்களிலும் த்ரிவித் கரணம் என்றும்
பஞ்சீகரணம் எ
ன்ற ஒரு செயல் சொல்லப்படுகிறது. ஐம் பூதங்களையும் படைத்த பிறகு பரமாத்மா இந்த ஐந்து பூதங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறாராம். கலந்த பிறகு பார்த்தோ மென்றால் ஆகாசம் என்பதில் 50% ஆகாசமும் தலா 12.5% நிலம், நீர், தீ, காற்று ஆகிய மற்ற நான்கு பூதங்களும் உள்ளன என்று சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகாசத்திற்கு பகுதிகளே இல்லை என்றால் எப்படி இப்படி பிரித்து கலக்க முடியும்? அதனால் பகுதிகளில்லை என்று நீங்கள் சொல்வதும் தவறானது.
ஆகவே , இந்த வேத வாக்கியம் ஆகாசத்தின் உண்டாக்கத்தைச் சொல்லுகிறபடியால் ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி
3-கௌ₃ணீ அஸம்ப₄வாத் சப்₃தா₃த் ச –
“இரண்டாம் பக்ஷம், முடியாத படியாலும் சொல்லாலும்”
இங்கு பூர்வபக்ஷீ ஆஷேபம் செய்கிறார் –கௌ₃ணீ- “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” என்ற வாக்கியத்தில் உள்ள ’ஸம்பூ₄த:’(உண்டானது) என்ற சொல்லுக்கு நேரடியாக உண்டாக்கம் என்ற பொருள் கொள்ள முடியாது. இரண்டாம் பஷமாக-கௌணமாக) தோற்றம் -வெளிப்பாடு என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீரனை ’இவன் சிங்கம்’ என்று சொல்வது எப்படி Figurative (உருவகம்) என்று சொல்லப்படுகிறதோ அது போல் இங்கும் முதன்மையான பொருளல்ல.
அஸம்ப₄வாத் – முடியாத படியால் – தேஜஸ்ஸே முதலில் தோன்றுகிறது என்று வேதம் சொல்வதால் ஆகாசம் உண்டாக்கப்பட முடியாதபடியால்
சப்₃தா₃த் ச – சொல்லாலும் – வேதத்திலேயே (्வாயு: ச அந்தரிஷம் ச ஏதத் அம்ருதம்) அதாவது
’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று சொல்கிற படியாலும் ஆகாசத்துக்கு உண்டாக்கம் கிடையாது.

4-ஸ்யாத் ् ச ஏகஸ்ய ப்₃ரஹ்ம சப்₃த₃வத் – “ஒ்ன்றுக்கு இருக்கலாம், ப்ரஹ்மம் என்ற சொல் போல்”
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த ஸூத்ரத்தில் பூர்வ பஷி கூறுகிறார்.
கேள்வி – “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று சொன்ன பிறகு “வாயுவிலிருந்து நெருப்பு”,“நெருப்பிலிருந்து ஜலம்” முதலான வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்யத்தில் இருக்கும் ’உண்டானது’ (ஸம்பூ₄த: ) என்ற சொல்லை பின் வாக்கியங்களிலும் சேர்க்க வேண்டும்.இதை அனு க்ஷங்கம் என்பர் – அப்போது, முதல் வாக்கியத்தில் ஆகாசம் உண்டாக முடியாததால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’வெளிப்படுகிறது’ என்று பொருள் கொண்டு விட்டு, பின்னால் உள்ள வாக்கியங்களில் தேஜஸ் முதலானவை உண்மை யாகவே உண்டாகிற படியால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’உண்டாக்கம்’ என்ற பொருளை எப்படிக் கொள்ள முடியும்?-பதில் – ஒரே சொல்லுக்கு வேறு இடங்களில் வேறு பொருள்கள் இருக்கலாம். உபநிஷத்தில் ஒரே இடத்தில் ஒரு முறை ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு மூல ப்ரக்ருதி என்றும் இரண்டாம் முறை பரமாத்மா என்று பொருள் கொள்வது போல்.

வ்யாஸரின் பதில்
5-ப்ரதிஜ்ஞ அஹாநி அவ்யதிரேகாத் –
“ப்ரதிஜ்ஜைக்கு பாதிப்பில்லாமை வேறல்லாத படியால்”
பூர்வ பக்ஷியின் வாதத்துக்கு இந்த ஸூத்ரத்தில் வேத வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில் முதலில் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப்படுவதைக் கொண்டு ’ஸம்பூ₄த:’ என்ற சொல்லுக்கு இரண்டாம் பஷமாகப் பொருள் கொள்ள இயலாது-சாந்தோக்யத்திலேயே ஆகாசத்தின் உத்பத்தி சொல்லப் பட்டுள்ள படியால் என்கிறார் வேத வ்யாஸர்.

சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத்₃வித்யையில் தான் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த ப்ரகரணத்தின் தோடக்கத்திலேயே உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேத கேது என்ற மகனைப் பார்த்து “எந்த ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டாயா?” என்று வினவுகிறார். இதில் ஒரு ப்ரதிஜ்ஜை (அறிவிப்பு) உள்ளது – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று. அந்த ப்ரதிஜ்ஜை உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு அஹாநி(பாதிப்பில்லாமை ) இருக்க வேண்டும் என்றால், ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்று ஏற்கத் தான் வேண்டும்.

இவ் விடத்தில் உத்தாலகர் சொல்வது – ’உலகத்தில் ஒரு காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்கள் அனைத்தையும் அறிந்ததாகும். எடுத்துக் காட்டுக்கு, ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகும் குடம், தட்டு, சுவர் முதலான அனைத்தையுமே நாம் ஒரு விதத்தில் ’மண்’ என்ற அளவிற்கு அறிந்ததாகத் தான் ஆகும். ஏனெனில் குடம் என்பது மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல. அது போல் தான் இங்கும் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். அதாவது, உலகில் அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதால், ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு பொருளல்ல. ஆகையால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். இது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஆகாசமும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யிருக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால், ப்ரஹ்மத்தை அறிந்தாலும் ஆகாசத்தை அறிந்ததாக ஆகாதபடியால் உத்தாலகர் ’அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று சொன்னது பொய்யாகி விடும். எனவே சாந்தோக்யமே ஆகாசத்தின் உத்பத்தியைக் கூறுகிறது.

மேலும் சில யுக்திகள்
6–சப்₃தே₃ப்₄ய: –
“(ஆகாசம் உண்டாவதை மற்ற சில வாக்கியங்களிலிருந்து அறியலாம்”
ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்” –-ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகனைத்தும் ஸத் என்ற ஒரே பொருளாக இருந்தது, வேறு எதுவுமில்லை –இவ்வாறு வேதம் சொல்வதால், ப்ரளயத்தின் போது ஸத் என்ற பரமாத்மா மட்டுமே இருந்தார் என்று தெரிகிற படியால், அப்போது ஆகாசமும் இல்லை , பிற்பாடு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாயிற்று என்று தெரிகிறது.

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
–4-10-1-)

“ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்” – இது அனைத்தும் ப்ரஹ்மமே -குடம் தட்டு சுவர் முதலான பொருள்கள் எல்லாம் மண்ணிலிருந்து உண்டான படியால் ’இவை அனைத்தும் மண் தான்’ என்று சொல்வது போல் இங்கு வேதம் ’இவ் வுலகில் அனைத்துமே ப்ரஹ்மம் தான்’ என்று கூறுவதால், உலகில் ஒரு பகுதியான ஆகாசமும் ப்ரஹ்மத்திட மிருந்து தோன்றியது தான் என்று தெளிவாகிறது.

7– யாவத் ₃விகாரம் து விபா₄க₃: ஸ்யாத் லோகவத்
விகாரம்
என்றால் காரியப் பொருள். விபா₄க₃ம் என்றால் உண்டாக்கம். ஆகாசம் முதலானவை காரியப் பொருள்கள் தான் என்று சொல்வதாலேயே அவை ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்பது சொன்னதாகிறது
லோகவத் – உலகத்தில் போல் – உலகத்தில் ’இவர்கள் அனைவரும் தேவ தத்தனின் புதல்வர்கள்’ என்று சொல்லி விட்டு, ஒரு சிலர் அவனிடமிருந்து பிறந்தது விளக்கப் பட்டால், அனைவரும் அவனிடமிருந்து பிறந்தது சொல்லப்பட்டதாகும். -அது போல், ’உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தின் காரியங்கள்’ என்று சொல்லி விட்டு, தேஜஸ் ஜலம் பூமி என்பவை உண்டாகும் முறையை வேதம் காட்டினால், அது மற்றவை உண்டாக வில்லை என்ற பொருளைத் தராது, அவை அனைத்தும் அதே போல் தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யுள்ளன என்பதையே குறிக்கும்-’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று வேதம் சொல்வது, முற்றிலுமாக உண்டாக்கமும் அழிவும் இல்லாததால் அல்ல, மற்ற பொருள்களை விட நீண்ட காலத்துக்கு இவை இரண்டும் அழியாமல் இருப்பதால் மட்டுமே –

அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது
8–ஏதேந மாதரிச்வா வ்யாக்₂யத:
– “இத்தால் வாயு (உண்டாகக் கூடியதாக) விளக்கப் பட்டது”
இப்படி ஆகாசம் உண்டாகக் கூடியது தான் என்பதற்குச் சொன்ன யுக்திகளாலேயே வாயுவும் உண்டாகக் கூடியது தான் என்பது நிரூபமாகிறது.-இதை முன் ஸூத்ரத்திலேயே சேர்க்காமல், தனி ஸூத்ரமாக வ்யாஸர் வைத்தது, அடுத்த அதிகரணத்தில் வாயுவை மட்டும் நினைவு கூறுவதற்காக. இது அடுத்த அதிகரணத்தில் தெளிவாகும்

9-அஸம்ப₄வஸ்து ஸத: அநுபபத்தே :
(உண்டாக) முடியாமை ஸத் என்கிற பரமாத்மாவுக்கே , (மற்ற பொருள்களுக்கு உண்டாகாமை ) பொருந்தாத படியால்-இவ் வதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாகக் கூடியவை என்று சொன்னதோடு நிற்காமல், உலகில் அனைத்துமே உண்டாகக் கூடியது தான் என்று நிரூபிக்கிறார் இந்த ஸூத்ரத்தால். உலகில் உண்டாகாமை என்ற பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏன் என்றால், முன்னமே சொன்னபடி, சா₂ந்தோக்₃ய உபநிஷத்தின் 6ஆம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத் வித்யை என்ற பகுதியில் உத்தாலகர் என்ற தகப்பனார் ஸ்வேதகேது என்ற மகனிடம் ’ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்கிறார். இது உண்மையாக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது –உலகப் பொருள்களும் ப்ரஹ்மமும் ஒரே போருளாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது – உலகப் பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்டமிருந்து உண்டாகி யிருக்க வேண்டும். ஆகையால், எந்தப் பொருளுமே உண்டாகாததாக
இருக்கவே முடியாது.

ஆக, இவ்வதிகரணத்தால், தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் பரமாத்மாவான ப்ரஹ்மம் காரணமாக உள்ளது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே , முதல் அத்யாயத்தில் நாம் எட்டிய முடிவு சரியானதே என்று நிலை நாட்டப்படுகிறது.


2-3-2-தேஜோதி₄கரணம்-அனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்தே உண்டாகிறதுபூர்வ பக்ஷியின் வாதம்-ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாக்கப் படுகின்றன எனப்பட்டது.-அதற்கடுத்து உண்டாகக் கூடிய தேஜஸ், ஜலம், ப்ருதிவீ ஆகியவற்றைப் பற்றின ஆராய்ச்சி இங்கு செய்யப்படுகிறது
முன் அதிகரணத்தில் உலகப் பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் பட்டது. மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம், மஹான், அஹங்காரம், புலன்கள், தன்மாத்ரங்கள், ஐம் பூதங்கள் என்பவை அனைத்தும் உண்டாகின்றன என்று வேதம் கூறுகிறது. அதில் ஒரு கேள்வி எழுகிறது – இவை ஒவ்வொன்றுமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றனவா? அல்லது ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம் என்பதை மட்டும் உண்டாக்கும், அதற்குப் பின் அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த அசேதனப் பொருள்களை உண்டாக்குகின்றனவா? என்று.

பூர்வ பக்ஷம் – அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
1-தேஜ : அத: ததா ₂ஹிஆஹ
அத:
– அதிலிருந்து -முன் அதிகரணத்தின் 8ஆம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட மாதரிச்வா எனும் வாயுவிடமிருந்து
தேஜ : – தேஜஸ் என்ற நெருப்பு உண்டாகிறது
ததா₂ஹிஆஹ– அவ்வாறு அன்றோ (வேதம்) சொல்கிறது
தைத்திரீய உபநிஷத்தில் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று, ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று என்று சொன்ன பிறகு, (வாயோர் : அக்₃நி: ) அதாவது வாயுவிலிருந்து நெருப்பு உண்டாகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே அசேதனப் பொருளே அடுத்த அசேதனப் பொருளை உண்டாக்குகிறது, ப்ரஹ்மம் அல்ல.

2-ஆப: – “(அதிலிருந்து அதாவது தேஜஸ்ஸிலிருந்து) ஜலம் (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அக்₃நே : ஆப: ) அதாவது “அக்₃நியிலிருந்து ஜலம் உண்டானது” என்றும், சாந்தோக்யத்தில்(தத் அப: அஸ்ருஜத) அதாவது “அந்த தேஜஸ் ஜலத்தைப் படைத்தது” என்றும் தான் சொல்லப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் தொடர்கிறது
3-ப்ருதி₂வீ –
(அதிலிருந்து அதாவது ஜலத்திலிருந்து) ப்ருதி₂வீ (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ ) அதாவது “ ஜலத்திலிருந்து ப்ருதிவீ உண்டானது” என்றும்,
சாந்தோக்யத்தில் (தா: அந்நம் அஸ்ருஜந்த) அதாவது “அந்த ஜலம் அந்நத்தைப் படைத்தது” என்று தான் சொல்லப்படுகிறது. எனவே அந்தந்த அசேதனப் பொருளே அடுத்த காரியத்தை உண்டாக்கி விடுகிறது.

4–அதி₄கார-ரூப- சப்₃தா₃ந்தரேப்₄ய: – அந்நம் எனப்படுவது ப்ருதி₂வீ தான் என்று நிரூபிக்கிறார்
அதி₄காரம் – இந்த ப்ரகரணத்தில் (வேதப் பகுதியில்) ஆகாசம் வாயு முதலான பூதங்களின் உண்டாக்கமே பேசப்படுகிற படியால் இங்கும் அந்நம் என்பது உணவல்ல, உணவுக்கெல்லாம் காரணமாக இருக்கும் ப்ருதிவீ தான்
ரூபம் – இதே வேதப் பகுதியில் “நெருப்பில் இருக்கும் சிவப்பு, வெண்மை மற்றும் கருமை ஆகிய வண்ணங்கள் தேஜஸ், ஜலம் மற்றும் அந்நத்திலிருந்து வந்தவை ” என்று கூறப் படுகிறது. இப்படி தேஜஸ்ஸுக்கும் ஜலத்துக்கும் ஸமமாகச் சொல்லப்படுவதால், அந்நம் என்பதும் ஐம் பூதங்களில் ஒன்றான ப்ருதிவியாகத் தான் இருக்க வேண்டும்.
சப்₃தா₃ந்தரம் – சாந்தோக்ய உபநிஷத்தில் அந்நம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டாலும் இதே போன்ற இடத்தில் தைத்திரீயத்தில் ப்ருதிவீ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நம் என்பது ப்ருதிவீ தான்.எனவே அந்நம் என்பது ப்ருதி₂வியே . ஆக, தேஜஸ் முதலான அசேதனங்களே அடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன

கேள்வி – வேதத்தில் ஓரிடத்தில் எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறதே ?-ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: மந: ஸர்வேந்த்₃ரியாணி | க₂ம் வாயு: ஜ்யோதி: ஆப: ப்ருதி₂வீ விச்வவஸ்ய தா₄ரிணீ || ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதி₂வீ ஆகியவை உண்டாகின்றன –

பதில் – இவை யெல்லாம் நேரடியாக ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்று வேதம் சொல்லவில்லை , அடுத் தடுத்து வரிசையாக இவை உண்டாகிற படியால், பரம்பரையாக எல்லாம் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானது என்றே சொல்கிறது

ஸித்தாந்தியின் பதில்-ஸித்தாந்தம் –5–த₃பி₄த்₄யாநாத் ஏவ து தல்லிங்காத் ஸ:
ஸ: து
– (மஹான் முதலானவைக்கு காரணம்) அவரே = அவ்யக்தம் முதலானவற்றை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே –
த₃பி₄த்₄யாநாத் ஏவ தல் லிங்காத் – அபி₄த்₄யாநம் (ஸங்கல்பம்) என்கிற தனிப்பட்ட லிங்கத்தால் (அடையாளத்தால்) தேஜஸ், ஜலம் முதலானவை அடுத்தடுத்த பொருளைப் படைப்பதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) செய்கின்றன என்று வேதம் சொல்கிறது – தத் தேஜ ஐக்ஷத” தா ஆப ஐக்ஷந்த” என்று. அசேதனப் பொருள்களுக்கு இது பொருந்தாது, எனவே அந்தந்த அசேதநப் பொருளே சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் அடுத்தடுத்த பொருளை உண்டாக்குகிறார் என்பதே பொருத்தமானது. பரமாத்மா அனைத்துக்கும் அந்தர்யாமியே –

(ஏ தஸ்மாத் ஜாயதே பிராணன் மனஸ் ஸர்வேந்த்ரியாணி கம் வாயு ஜ்யோதி ஆபோ பிருத்வீ -அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது -என்றும் வேத வாக்கியம் உள்ளது)

6–விபர்யயேண து க்ரம: அத: உபபத்₃யதே ச –”மாறுபட்ட வரிசை இத்தால் பொருந்துகிறது”
விபர்யயேண து – (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் என்கிற ஸ்ருஷ்டி வரிசையிலிருந்து) மாறுபட்ட
க்ரம: – (எல்லாமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது என்று சொல்லப்பட்ட) க்ரமம் அதாவது வரிசை
அத: – இதனால் (அதாவது அனைத்துமே பரமாத்மா விடமிருந்தே உண்டாகிற படியால்)
உபபத்₃யதே ச – பொருந்துகிறது-

“ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வேத வாக்கியத்தில் பரமாத் மாவிடமிருந்து அவ்யக்தம், அதிலிருந்து மஹான்,-அதிலிருந்து அஹங்காரம், அதிலிருந்து ஐம் பூதங்கள் உண்டாகின்றன என்கிற வரிசையைச் சொல்லாமல் “எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது.
அதற்கு பூர்வ பஷி – எல்லாமே நேரடியாக பரமாத்மாவிமிருந்து உண்டாகா விட்டாலும், பரம்பரையாக உண்டாவதை இந்த வாக்கியம் சொல்கிறது என்றார்.
இப்போது ஸித்தாந்தத்தில் அந்தந்த அசேதனப் பொருள்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவிடமிருந்தே அனைத்தும் உண்டாகிற படியால், அனைத்துமே நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்வது கூடப் பொருத்தமானதே – அதனால் “ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வாக்கியம் எங்கள் பக்ஷத்துக்கு ஸாதகமானது-

7-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேத் ந அவிசேஷாத்
பூர்வ பஷி கேள்வி கேட்கிறார்
– இந்த வேத வாக்கியம் அனைத்தும் நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்லவில்லை , ஒரு வரிசையில் தான் அடுத்தடுத்த பொருள்கள் உண்டாவதைச் சொல்கிறது என்று.
தல் லிங்காத் – (’ஆகாசம் வாயு தேஜஸ்’ என்ற வரிசையோடு சேர்த்துப் படிக்கப் படுதல் என்ற) அடையாளத்தால்
அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண – ப்ராணனுக்கும் பூதங்களுக்கும் நடுவில் புலன்களும் மனதும் உண்டாகின்றன
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
அவிசேஷாத் – வேறுபாடில்லாத படியால்

’ஏதஸ்மாத் ஜாயதே ’ அதாவது ’பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறாது’ என்ற சொற்றொடர் ப்ராணனோடு மற்றும் சேரவில்லை , இங்கு சொல்லப்பட்ட அனைத்துப் பொருள்களோடும் சேர்கிறது. எனவே எல்லாமே பரமாத்மாவிடமிருந்து நேரடியாக உண்டகிறது என்று தான் கொள்ள வேண்டும்.
மேலும், இங்கு ஒரு குறிப்பிட்ட வரிசை சொல்லபடுகிறது என்று கூறுவது உங்கள் வேதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் முதலில் ப்ராணன் உண்டாகிறது என்று கூறி, அதற்குப் பிறகு தான் ஆகாசத்திலிருந்து வாயு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இது பொருந்தாது. ப்ராணன் (மூச்சுக் காற்று) என்பது வாயுவின் குறிப்பிட்ட வகையானபடியால் அது வாயுவுக்கு முன் உண்டாக முடியாது. எனவே இங்கு க்ரமம் (வரிசை ) சொல்லப்படவில்லை , எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று தான் சொல்லப் படுகிறது.

ஆக இந்த அதிகரணத்தில் ’தேஜஸ்’’ஜலம்’ முதலான சொற்கெல்லாம் அந்தந்த அசேதனப் பொருளை மட்டும் குறிப்பிடவில்லை , அந்தந்த அசேதனப் பொருளை சரீரமாகக் கொண்ட பரமாமைவையே குறிக்கின்றன என்று கூறப்பட்டது. இதில் ஓர் ஆஷேபத்தை பூர்வபஷி எழுப்புகிறார் – எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்றால், உலகில் அனைவரும் தினமும் குடம் துணி மேஜை ஆடு மாடு முதலான பொருள்களைக் குறிக்க அந்தந்த சொற்களைப் பயன்படுத்துவது தவறாகி விடுமே ? பிறகு உலகப் பேச்சு வழக்கு என்பதே நின்று போய் விடுமே? என்று.-இதற்கு வேத வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் விடை அளிக்கிறார்.

8-சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்த தத் பாவ பாவாத்
சராசர வ்யபாஸ்ர யஸ்து-
-அசையும் மற்றும் அசையாத உலகப் பொருள்களைப் பற்றி
தத்₃வ்யபதே₃ ச : – அந்தந்த சொற்களின் ப்ரயோகமானது (பயன்பாடானது)
பா₄க்த: ஸ்யாத் – உடைக்கப்பட்டதாக – இரண்டாம் பக்ஷமாக இருக்கும்
தத்₃பா₄வ பா₄வித்வாத் – அனைத்துச் சொற்களும் பரமாத்வையே சொல்கின்றன என்று தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே எல்லாச் சொற்களும் பரமாத்வையே போதிக்கிறபடியால்.

அதாவது, உலகத்தில் பொதுவாகக் காணப்படும் சொற்களின் பயன்பாடு தவறானது அல்ல, ஆனால் முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பரமாத்மா வரை போதிக்கும் சக்தி இருந்தாலும், அது தெரியாமல் மக்கள் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துவதால், அக் காலத்தில் குடம் துணி முதலான பொருள்களை மட்டும் அந்தந்தச் சொற்கள் குறிக்கின்றன. எப்போது வேதாந்தம் கற்று, ’எல்லாச் சொற்களும் பரமாத்வையே கூறுகின்றன’ என்று உணர்கிறார்களோ அப்போது அந்தந்தச் சொற்களின் முழுமையான சக்தியை உணர்ந்த படியால் அதற்குப் பின் அவர்களுக்கு அந்தந்தச் சொற்கள் பரமாத்மா வரை போதிக்கின்றன.

(அனைத்து சொற்களும் அவனைக் குறிக்கும் என்றும் அறிந்த பின்பு –புகழும் நல் ஒருவன் என்கோ –இத்யாதிகண்ணனைக் கூவுமாறு அறியேன்–குன்றங்கள் அனைத்தும் என்கோ -ஆழ்வார் –)

ஆக, இந்த அதிகரணத்தில், அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று நிரூபித்தார்.

2-3-3-ஆத்மாதி₄கரணம்–ஜீவாத்மாவும் உண்டாக்கப்படுகிறாரா?—-ஸங்கதி – இந்த பாதத்தின் முதல் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர்ந்த மஹான், அஹங்காரம், ஆகாசம், வாயு முதலான அனைத்துப் பொருள்களுமே உண்டாக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் பட்டது. அதற்கு மேல் இரண்டாவது அதிகரணத்தில் அவை அனைத்துமே பரமாத்மாவிடம் இருந்து தான் உண்டாகின்றன என்றும் சொல்லப்பட்டது. இப்படி அசேதன பொருள்களின் உண்டாக்கத்தைச் சொன்ன பிறகு சேதனனான ஜீவாத்மாவைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ஜீவாத்மாவும் ஆகாசம் முதலானவற்றைப் போல் உண்டாக்கப் படுகிறாரா? இல்லையா? என்பது இந்த அதிகரணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி.

(இதில் ஸித்தாந்தம் ஸூத்ரம் ஒன்றே உள்ளது)

பூர்வ பக்ஷியின் வாதம்–ப்ரஹ்மத்தைத் தவிர அனைத்தும் உண்டாக்கப்படுகிறது என்று முன் அதிகரணங்களில் நிரூபித்ததால், ஜீவாத்மாவும் உண்டாக்கப் படுகிறார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார். இதற்கு இரண்டு யுக்திகளைக் கூறுகிறார் –
1-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந பிரதிஜ்ஞா உபபத்தி –
அதாவது சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்கிற பிரகரணத்தில் உத்தாலகர் என்கிற தந்தை ஸ்வேதகேது என்கிற மகனைப் பார்த்து, “எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகுமோ , அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார். அங்கு இருக்கும் பிரதிஜ்ஜை – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்பது. இது எப்படிப் பொருந்துமென்றால் – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு முதலானவற்றை அறிந்ததாகுமோ , அதே போல் உலகமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறபடியால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறுகிறார். இந்த ப்ரதிஜ்ஜை பொருந்த வேண்டும் என்றால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகி யிருக்க வேண்டும். இல்லா விட்டால் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் முதலான அசேதனப் பொருள்களை மட்டுமே அறிந்ததாகுமே தவிர ஜீவாத்மாக்களை அறிந்ததாக ஆகாது. எனவே ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று சொல்வது பொய்யாகி விடும். அதனால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

(2) ப்ராக் ஸ்ருஷ்டே : ஏகத்வ அவதாரணம் – “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ஒரே பொருளாகத் தான் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்கியம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ப்ரளய காலத்தில் ஆகாசம், வாயு முதலானவை எப்படி இல்லையோ , அதே போல் ஜீவாத்மாக்களும் தனித்து இல்லை . பரமாத்மா ஒருவரே இருந்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் இருக்க வில்லை . அதற்குப் பிறகு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானார்கள் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார். இதற்கு வேதத்திலும் சில வாக்கியங்கள் வலுவூட்டுகின்றன –
தோயேந ्ஜீவான் வ்யஸ்ஸர்ஜ பூ₄ம்யாம் –
தண்ணீரோடு ஜீவன்களைப் படைத்தார்
ப்ரஜாபதி: ப்ரஜா: அஸ்ருஜத – ப்ரஜாபதி உடலோடு கூடிய ஆத்மாக்களைப் படைத்தார்
யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே – இந்த ஜீவ ராசிகள் எதிலிருந்து உண்டாயினவோ
இந்த வாக்கியங்களில் எல்லாம் ஜீவனோடு கூடின உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் படுகிறபடியால் ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார்.

கேள்வி – ப்ரஹ்மம் நித்தியமானது என்று வேதம் சொல்கிறது. “தத் த்வம் அஸி”. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான வாக்கியங்கள் ஜீவாத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று சொல்லுகின்றன. ஆகையால் ஜீவாத்மாவும் நித்தியமானவராக தானே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்.
பூர்வ பக்ஷியின் பதில் – அப்படிப் பார்த்தால் “ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம”, ”ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்”-முதலான வாக்கியங்களில் அசேதனப் பொருட்கள் கூட ப்ரஹ்மமே தான். ஜகத்தே ப்ரஹ்மம் தான் என்று சொல்லப் படுகிறபடியால், ப்ரஹ்மம் நித்தியமான படியால் அசேதனப் பொருள்களும் நித்யமானவை என்று ஏற்க வேண்டி வரும். அது எப்படிப் பொருந்தாதோ , அதுவே போல் உங்கள் வாதமும் பொருந்தாது.
எனவே ஆகாசம் முதலானவற்றைப் போல் ஜீவாத்மாக்களுக்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வ பக்ஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின் பதில்
ஸித்தாந்தம் – 1- ந ஆத்மா ச்ருதே : நித்யத்வாத் ச தாப்₄ய:
ஆத்மா ந –
ஜீவாத்மாக்கள் (உண்டாக்கப் படுவது) இல்லை
ச்ருதே : – வேதத்திலிருந்து (அவர்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று தெரிகிறபடியால்)
தாப்₄ய: – அந்த வேத வாக்கியங்களிலிருந்தே
நித்யத்வாத் ச – ஆத்மாக்கள் நித்யமானவை என்று அறிகிற படியாலும்
வேதத்தில் தெளிவாகவே ஆத்மாக்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று சில வாக்கியங்களில் சொல்லபடுகிறது.
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்-அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஜீவாத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ-முழுமையான ஜ்ஞாநம் கொண்ட பரமாத்மா, குறைந்த ஜ்ஞாநம் கொண்ட ஜீவாத்மா ஆகிய இருவருமே அஜர்கள்-அதாவது உண்டாக்கம் இல்லாதவர்கள்
அதே போல் சில வேத வாக்கியங்கள் ஜீவாத்மாக்கள் நித்யமானவர்கள், அதாவது அழிவற்றவர்கள் -எப்போதும் இருக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன –நித்யோ ् நித்யாைநாம் யோ வித₃தா₄தி காமாந்--நித்யமானவரான ஒரு பரமாத்மா நித்யமான எண்ணிறந்த ஜீவாத்மாக்களுக்கு ஆசைப்பட்டதைக் கொடுக்கிறார்-
அஜ: நித்ய: சாச்வத: அயம் புராண:-ஜீவாத்மா பிறப்பில்லாதவர், நித்யமானவர், மாறுபாடுகள் அற்றவர், மிகப் பழமையானவராய் இருந்தாலும் புதுப் பொருள் போல் ஆச்சர்யமூட்டுபவர்
ஆகவே , ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படுவதில்லை என்று வேதத்திலிருந்து தெரிகிறது என்கிறார் வேத வ்யாஸர்.

ஸித்தாந்தியின் பதில் -இதற்கு மேல் பூர்வ பக்ஷி சொன்ன யுக்திகளுக்கு பதில் கூற வேண்டும்.
கேள்வி
– ஜீவாத்மாக்கள் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை என்றால் “ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று உத்தாலகர் கூறியது எப்படிப் பொருந்தும்?
பதில் – ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படாவிட்டாலும் ப்ரஹ்மத்தினுடைய கார்யங்கள் தான் என்று ஏற்கப்படுகிறது. மண்ணை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாவது போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் கார்யம் தான், ஆனால் உண்டாவதில்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதில் – ’கார்யம்’ என்றால் ’வேறொரு நிலையை -மாறுபாட்டை அடைந்திருக்கும் பொருள்’அவஸ்தாந்தர ஆபபத்தி-. அந்த வேறொரு நிலை மாறுபாடு (Transformation) என்பது இரண்டு வகைப்படும்
1-ஸ்வரூப விகாரம் உருவ மாறுபாடு – இது தான் ஒரு பொருளின் உண்டாக்கம் என்று சொல்லப்படுகிறது.
2-ஸ்வபா₄ப விகாரம் – தன்மையில் மாறுபாடு – இது ஏற்படும் போது உண்டாக்கம் என்று சொல்வதில்லை .-அசேதனப் பொருள்களுக்கு மட்டும் தான் ஸ்வரூப விகாரம் (உருவ மாறுபாடு) என்பது உண்டு. ஒரே தங்கம் காசாகவும், மோதிரமாகவும், தோடாகவும், சங்கிலியாகவும் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. அப்போது மோதிரம் உண்டாகிறது, சங்கிலி உண்டாகிறது என்று சொல்கிறோம்.
சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ஸ்ருஷ்டியின் போது உருவ மாறுபாடுகள் கிடையாது, ஆனால் தன்மைகளில் மாறுபாடுகள் உண்டு -– ஒரு ஸமயம் அறிவு குறைந்திருக்கும், ஒரு ஸமயம் மலர்ந்திருக்கும். இதற்கு ஸ்வபாவ விகாரம் என்று பெயர். இது ஏற்படும் போது அந்தப் பொருள் உண்டாகிறது என்று சொல்வது கிடையாது.
ஆக, அசேதனங்கள் சேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்தால் மாறுபாடுகளை அடைகிறபடியால் ப்ரஹ்மத்தின் கார்யங்கள் தான், ஆனால் ஜீவாத்மா உண்டாகிறார் என்று கூற முடியாது என்று வ்யாஸர் கூறுகிறார்.-ஜீவாத்மாவைப் பற்றி பிறப்பு மரணம் முதலான சொல்லாலெல்லாம் ஓர் உடலை எடுத்துக் கொள்வதையும் அதை விடுவதையும் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஜீவாத்மா உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்பதே உண்மை .

(சம பரதேவ ஏகி பவதி-நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே ப்ரஹ்மம் இருந்தது என்று சொல்லிற்று தவிர சேதன அசேதன பொருள்கள் இல்லை என்றதல்ல –தத்வ த்ரயங்களும் நித்யமானவையே தான்)

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மாவைப் பற்றின ஆராய்ச்சி-
முதல் பூர்வ பக்ஷம் -ஜ்ஞாதி₄கரணம் –ஸங்கதி
– இந்தப் பாதத்தின் முதல் மூன்று அதிகரணங்களால் உலகிலுள்ள அனைத்துமே ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகிறது என்று நிரூபித்தார் வ்யாஸர். அதில் மூன்றாவது அதிகரணத்தில் ஜீவாத்மாவைப் பற்றிய பேச்சு வந்தபடியால், இனி அடுத்த நான்கு அதிகரணங்களால் ஜீவாத்மாவினுணடய ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆராய்கிறார்.
இந்த விவாதத்தில் மூன்று பக்ஷங்கள் இருக்கின்றன–2 பூர்வ பக்ஷங்கள், 1 வேதாந்தம் சொல்லும் ஸித்தாந்தம்.
1-பௌத்தர்கள், ஸாங்க்யர்கள் முதலானவர்களின் பக்ஷம்
– ஜீவாத்மா ஜ்ஞாநம் மட்டுமே
இந்த மதங்களில் ஆத்மாவை ’சிந் மாத்ரம்’ -’ஜ்ஞாந மயம்’ என்று கூறுவார்கள். இதற்கு “ஜ்ஞாநம் மட்டுமே ஆத்மா ”என்று பொருள். அதாவது, ஒரு குடம் மண்ணால் ஆனது, ஒரு மோதிரம் தங்கத்தால் ஆனது, அது போல் ஜீவாத்மா ஜ்ஞாநத்தாலேயே ஆனவர் என்று பொருள். “மாத்ரம்” சொல்லால் “ஜ்ஞாநம் மட்டுமே ” என்று சொல்வதால் ஆத்மா ஜ்ஞாநமுடையவர் (ஜ்ஞாதா) அல்ல, அதாவது அறிவாளி அல்ல, அறிவே தான் ஜீவாத்மா.

இதற்கு இவர்கள் சில வேத வாக்யங்களைச் சான்றாகக் காட்டுகிறார்கள் –
1–சுக்ல யஜுர் வேதத்தில் இரண்டு சாகைகள் (கிளைகள்) உள்ளன. ஒன்று மாத்யந்தின சாகை , மற்றொன்று காண்வ சாகை -இரண்டிலுமே அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பகுதி உள்ளது. இப் பகுதியில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் புலன்கள் ஆத்மாக்கள் முதலான உலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே என்று கூறப்படுகிறது. அச் சமயத்தில், மாத்யந்தின சாகையில் (ய: ஆத்மநி திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஆத்மாவில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. அதே இடத்தில் காண்வ சாகையில் (யோ விஜ்ஞாநே திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. ஆகவே ,ஆத்மா என்பவரைத் தான் ஜ்ஞாநம் என்று வேதம் கூறுவதை நாம் உணரலாம். எனவே ஜ்ஞாநமே ஆத்மா .

2-தைத்திரூய உபநிஷத்தில் ஓரிடத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ) அதாவது “அறிவு யாகம் செய்கிறது” என்றுள்ளது. ஆத்மா தானே யாகம் செய்ய முடியும். அதனால் ஆத்மா தான் இங்கு அறிவு எனப்படுகிறார்

இரண்டாவது பூர்வபக்ஷம்–வைஸேஷிகம்- ந்யாய மதம் முதலானவற்றின் பக்ஷம் – ஜடமான ஆத்மாவுக்கு அறிவு செயற்கையான பண்பு-இவர்கள் முன் சொன்ன பக்ஷத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்கள். ஆத்மா ஜ்ஞாநமே வடிவானவர் என்று முன் பக்ஷத்தில் சொல்லப்பட்டதை இவர்கள் ஏற்கவில்லை-ஆத்மா குடம் மேஜை புத்தகம் போன்ற ஒரு பொருள் தான்,அதாவது ஜடமான பொருள் தான், ஜ்ஞாந வடிவானவர் அல்ல என்கிறார்கள்.

இந்த ஸந்தர்பத்தில் ஜ்ஞாநம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜ்ஞாநம் என்ற பொருளுக்கு இலக்கணமே-’ஸ்வயம் ப்ரகாஸத்வம்’ அதாவது ’தானாகத் தோற்றுவது – அறியப்படுவது’ என்ற பண்பு தான். உலகத்தில் குடம் மேஜை முதலான பொருள்கள் அறியப் படுவதற்கு அவை மட்டும் இருந்தால் போதாது, வெளிச்சம் வேண்டும், கண் வேண்டும், நமக்கு அறிவு வேண்டும்; இப்படி மற்ற பொருள்களின் உதவியால் அறியப்படும் பொருள்களை ஜடம் என்பார்கள். இவை அஸ்வயம் ப்ரகாஸம் -அதாவது தானாகத் தோற்றாத பொருள்கள்-ஆனால் ஜ்ஞாநம் என்பது அப்படி யல்ல, தான் இருந்தாலே தானாகத் தோற்றிவிடும், ஜ்ஞாநத்தை அறிவதற்கு வேறொரு ஜ்ஞாநம் கூடத் தேவை யில்லை – தானே அறியப் படுகிறது. எனவே அதை அஜடம் என்றும்ஸ்வயம் ப்ரகாஸம் என்று கூறுவார்கள். ந்யாய மதத்தவர்கள் சொல்வது ஆத்மா குடம் முதலானவற்றைப் போல் ஜடமான பொருள் தான் என்று.

அதே போல், முதல் பக்ஷத்தில் ஏற்கப்படாத ஒன்றை இவர்கள் ஏற்கிறார்கள் – ஆத்மா அறிவாளி (ஜ்ஞாதா) தான், அவருக்கு அறிவு (ஜ்ஞாநம்) என்ற பண்பு உள்ளது, ஆனால் அது இயற்கை யானதோ நிரந்தரமானதோ அல்ல, அவ்வப்போது செயற்கையாக வரக் கூடியது என்கிறார்கள். மோக்ஷம் அடையும் பொழுது ஜ்ஞாநம் முழுமையாக இல்லாமல் போய்விடும், எனவே ஆத்மா முழுமையாக ஒரு கல்லைப் போல் ஆவதே மோக்ஷம் என்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் யுக்திகணளப் பார்ப்போம் –முதலில், ஜீவாத்மா உலகெங்கும் வ்யாபித்து அதாவது நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று ஏற்க வேண்டும். ஏனென்றால்,ஒரு ஜீவாத்மா பயன்படுத்தப் போகும் பொருள்கள் உலகில் வெவ்வேறு இடங்களில் உண்டாகின்றன. அவற்றின்
உண்டாக்கத்துக்கு அந்த ஜீவாத்மாவின் பாபமும் புண்யமும் காரணம் என்று கண்டிப்பாக ஏற்க வேண்டும். (ஸர்வத்ர கார்ய உத்பத்யதே -பொருள்கள் உண்டாவதற்கு ஆத்மாவின் கர்மங்கள் காரணம் –
)ஆனால் பாப புண்யங்களை உடைய ஆத்மா ஓரிடத்தில் இருந்தால், வேறிடத்தில் உண்டாகும் பொருளுக்கு எப்படி காரணமாக முடியும்? எனவே ஆத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறார் என்று ஏற்க வேண்டும்.

இப்படி வ்யாபித்திருக்கும் ஆத்மாவை ’ஜ்ஞாநமே வடிவானவர்’ என்று சொன்னாலோ ’இயற்கை யாகவே ஜ்ஞாநம் என்ற நிரந்தரமான பண்பை உடையவர்’ என்று சொன்னாலே கீழ்க் கண்ட குற்றங்கள் ஏற்படும் –
1-(ஸர்வத்ர உபலப்த பிரஸங்க)உலகெங்கும் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் எப்போதும் அறிய முடிய வேண்டும். அப்படி ஏற்பட வில்லை
2-பொருள்களை அறிவதற்கு புலன்களின் தேவையே இல்லாமல் போய் விடும்.
3-ஆழ்ந்த உறக்கத்திலும் கூட ஆத்மாவுக்கு அறிவு ஏற்பட வேண்டும், ஆனால் அப்படி நாம் கண்டதில்லை

தங்கள் பக்ஷத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டும் வேத வாக்யங்கள் –
1-நாஹ க₂ல்வயம் ஸம்ப்ரதி ஆத்மானம் ஜானாதி-அயம் அஹம் அஸ்மி இதி, நோ ஏவ இமாநி பூதாநி–என்ற வாக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது இந்த ஜீவாத்மா தன்னையும் அறிவதில்லை , மற்றப் பொருள்களையும் அறிவதில்லை என்று கூறப் படுகிற படியால் உறக்கத்தில் ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி) என்ற வாக்கியத்தில் ’முக்திக்குப் பின் ஜ்ஞாநம் இல்லை ’ என்று சொல்லப்படுவதால், முக்தியில் ஆத்மா கல்லைப் போல் தான் இருக்கிறார். எனவே ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையான நிரந்தரமான பண்பல்ல, செயற்கையாக அவ்வப்போது வரக்கூடியது மட்டுமே என்கிறார்கள்.

வேதாந்தம் கூறும் ஸித்தாந்தம்
இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தகர்த்து, வேதாந்தம் கூறும் ஆத்மாவின் உண்மையான தன்மையை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் காட்டுகிறார். முதலில் ஸித்தாந்தம் என்ன என்று பார்ப்போம், பிறகு ஸூத்ரங்களின் பொருளைப் பார்க்கலாம்.(இதில் 14 ஸூத்ரங்கள் உள்ளன )

உபநிஷத்துக்கள் கூறும் பக்ஷம் – ஜ்ஞாநமே வடிவான ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் என்ற இயற்கையான பண்பும் உள்ளது-உபநிஷத்துக்களை ஆராய்ந்தால், முன் சொன்ன இரண்டு பக்ஷங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பக்ஷம் சொல்லப்படுகிறது.-முதல் பக்ஷத்தில் சொன்னது போல் ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர் என்பதை நாமும் ஏற்கிறோம். எனவே ந்யாய மதத்தவர்கள் சொல்வது போல் ஆத்மா குடம் போல் ஜடமானவர் அல்ல, ஸ்வயம் ப்ரகாஸமான ஒரு பொருள் தான் என்றுnஆகிறது. ஆனால் முதல் பக்ஷத்தில் ஆத்மா அறிவாளி அல்ல, ஆத்மாவுக்கு அறிவு என்ற பண்பு கிடையாது என்றார்கள்,
அதை நாம் ஏற்க வில்லை . ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர், அதோடு கூட அவருக்கு ஜ்ஞாநம் என்ற பண்பும் உள்ளது என்று கூறுகிறோம். ஜ்ஞாந வடிவான ஆத்மாவுக்கு த₄ர்மி ஜ்ஞாநம் அதாவது பண்பாளனான ஜ்ஞாநம் என்று பெயர். ஆத்மாவிடம் இருக்கும் ஜ்ஞாநத்துக்கு த₄ர்ம ஜ்ஞாநம் – த₄ர்மபூ₄த ஜ்ஞாநம் – பண்பான ஜ்ஞாநம் என்று பெயர்.

ஒரு விளக்கு எரியும் பொழுது அதில் ஜ்வாலை என்ற ஒரு பொருள் உள்ளது. அது நெருப்பே வடிவானது. ஆனால் அது ஓரிடத்தில் மட்டும் தான் இருக்கும். அதற்கு மேல், அந்த ஜ்வாலையில் பண்பாக, அந்த ஜ்வாலையையே அண்டி இருக்கும் ’ஒளி’ – ’ப்ரபா₄’ என்ற ஒரு பொருள் உள்ளது. அது பல இடங்களுக்குப் பரவுகிறது. அதுவும் நெருப்பால் ஆனது தான். எப்படி தேஜஸ்ஸால் (நெருப்பால் ) ஆக்கப்பட்ட ஜ்வாலைக்கு நெருப்பால் ஆக்கப்பட்ட ஒளி என்பது பண்பாக இருக்கிறதோ , அதே போல் ஜ்ஞாநமே வடிவான ஜீவாத்மாவுக்கும் பண்பாக வேறொரு ஜ்ஞாநம் இருக்கிறது.

ஜீவாத்மா ’நான்’, ’நான்’ என்று தோற்றுவதெல்லாம் த₄ர்மி ஜ்ஞாநத்தின் தோற்றம். தன்னைத் தவிர்ந்த மற்ற பொருள்களை யெல்லாம் அறிவது தன்னுடைய த₄ர்ம ஜ்ஞாநத்தைக் கொண்டு தான். இந்த ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையானது, என்று ஆத்மாவோடு நிரந்தரமாக இருப்பது, உறக்கத்திலும் சரி மோக்ஷத்திலும் சரி இது ஒரு நாளும் ஆத்மாவை விட்டுச் செல்லாது, மோக்ஷத்தில் ஜ்ஞாநம் முழுமையாக மலர்கிறது என்பதே வேதாந்தத்தின் ஸித்தாந்தம்

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மா அறிவுடையவரே -ஜீவாத்மா இயற்க்கையாக அறிவுடையவரே – ஸித்தாந்தம் – முன் சொல்லப்பட்ட இரண்டு பூர்வ பக்ஷங்களையும் கண்டித்து வேதாந்தம் கூறும் ஸித்தாந்தத்தை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் 14 ஸூத்ரங்களால் காட்டுகிறார்.

1– ஜ்ஞ: அத எவ – “(ஜீவாத்மா) அறிவுடையவர் தான், அதனாலேயே ”
ஜ்ஞ:என்றால் அறிபவர் -அறிவாளி-ஜ்ஞாதா என்று பொருள். (ஸர்வஞ்ஞன் -அனைத்துக்கும் அறிபவர் போல் )ஜீவாத்மா அறிவாளி தான் என்கிறார் வ்யாஸர். இத்தால், ஜீவாத்மா அறிவு மட்டுமே , அறிவாளி அல்ல என்ற ஸாங்க்யர்களின் மதத்தை மறுக்கிறார்.
அத ஏவ’ என்றால் அதனாலாயே -அந்தக் காரணத்தாலேயே என்று பொருள். முன் அதிகரணத்தில் ஆத்மா நித்யமானவர் என்று நிரூபிக்க ஸ்ருதி என்ற வேதத்தையே காரணமாகக் கூறி யிருந்தார் வ்யாஸர் – “நாத்மா ஸ்ருதே :” என்று. ஆகவே , ஸ்ருதி (வேதம்) என்ற அதே காரணத்தாலேயே ஜீவாத்மா அறிவுடையவர் என்றும் தெரிகிறது என்று ஸூத்ரத்தின் பொருள்.

வேதத்தில் பல இடங்களில் ஆத்மா அறிவுடையவர் என்று கூறப்படுகிறது –
அத₂ யோ வேத₃ ஜிக்₄ராணீதி ஸ ஆத்மா – “எவனொருவன் ’நான் முகர்கிறேன்’ என்று அறிகிறானோ அவன் தான் ஆத்மா
ஸத்ய ஸங்கல்ப: – “முக்தனான ஜீவாத்மா நினைப்பதெல்லாம் நடக்கிறது”
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர் ஜ்யோதி: புருஷ: -“ஹ்ருதயத்தில் மூச்சுக் காற்றோடு இருக்கும் ஜீவாத்மா தான் ஜ்ஞாநமே வடிவானவர், ஜ்ஞாநத்தை உடையவரும் கூட”

ஞானாத்யேவ அயம் புருஷ போன்ற ஸ்ருதி வாக்கியங்களும் உண்டு

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு) ஆத்மா விபு₄வாக எங்கும் வ்யாபித்திருப்பதால், அவருக்கு ஜ்ஞாநம் இயற்கையான பண்பாக இருந்தால் அவர் எப்போதும் அனைத்தையும் அறிய வேண்டுமே ? அப்படி உலகில் காண்பதில்லை -.எனவே ஆத்மாவுக்கு இயற்கையாக ஜ்ஞாநம் கிடையாது – என்று பூர்வ பஷி கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்கிறார் வ்யாஸர் –
2–உத் க்ராந்தி ् க₃தி ஆக₃தீநாம் –
“புறப்படுதல், செல்லுதல் மற்றும் வருதல் (சொல்லப் படுவதால்)”
ஆத்மா எப்போதும் அனைத்தையும் அறியாததற்குக் காரணம் அவருக்கு இயற்கையாக ஜ்ஞாநம் இல்லாமை அல்ல.-அவர் விபு₄வாக இல்லாத படியால் தால். வேதத்தில் உத்க்ராந்தி (ஆத்மா உடலில் இருந்து புறப்படுதல்) க₃தி (ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குச் செல்லுதல்) மற்றும் ஆக₃தி (திரும்பவும் இவ் வுலகுக்கு வருதல்) சொல்லப்படுவதால் ஆத்மா சிறிய அளவுடையவர் தான் என்று நாம் அறியலாம். எங்கும் நிறைந்திருக்கும் பொருள் எப்படி ஓரிடத்திலிருந்து புறப்படவோ வேறிடம் செல்லவோ முடியும்?
உத்க்ராந்தி ஏஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோ வா மூர்த்₄நோ வா. –“இந்த ஆத்மா கண் மூலமோ தலை மூலமோ வேறொன்றாலோ உடலிலிருந்து புறப்படுகிறார்”
க₃தியே அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மஸமேவ ரத க₃ச்ச₂ந்தி -“யாரெல்லாம் இவ் வுலகத்திலிருந்து புறப்படுகிறார்களோ அவர்கள் சந்த்ரனையே அடைகிறார்கள்”
ஆக₃தி – தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே – “அவ் வுலகத்திலிருந்து திரும்பவும் இவ் வுலகத்துக்கு வருகிறார்கள், வினைப் பயன்கணை அநுபவிக்க”

3-ஸ்வாத்மநா ச உத்தரயோ : – “கடைசி இரண்டையும் தானாகவே தான் (செய்கிறார்)”
ஆஷேபம் – ஆத்மா உடலை விடுவது என்பது செல்வதல்ல, இருக்கும் இடத்திலேயே தொடர்பு அறுவது தான்
பதில் – அவ்வாறு இருந்தாலும் க₃தி (செல்லுதல்) ஆக₃தி (வருதல்) என்ற அடுத்த இரண்டையும் ஆத்மா தானாகவே தான் செய்ய வேண்டும், எனவே ஆத்மா சிறியவர் தான். நீக்கமற நிறைந்தவராக இருக்க முடியாது.

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு)
4- ந् அணு: அதச்ச்₂ருதே : இதி சேத் ந இதராதி₄காராத்
ந அணு:
– ஜீவாத்மா அணுவானவர் அல்ல
அதச்ச்₂ருதே : – அதற்கு நேர் எதிரான மஹத்த்வம் (பெரிய அளவு) அவருக்குச் சொல்லப்படுகிறபடியால்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
இதராதி₄காராத் – வேறொருத்தரைப் பற்றின பேச்சுக்கு நடுவில் இருப்பதால்.

பூர்வ பக்ஷியின் கேள்வி – உபநிஷத்தில் “
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர்ஜ்யோதி: புருஷ:
” என்று ஹ்ருதயத்தில் இருக்கும் ஜீவாத்மாவைப் பற்றிப் பேசத் துவங்கி விட்டு, (ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா) அதாவது “இந்த ஆத்மா பிறப்பில்லாதவரும் பெரியவரும் ஆவார்” என்று கூறப்படுகிறது. மஹாந் என்ற சொல்லுக்கு பெரிய அளவுடையவர் என்று பொருள். எனவே ஜீவாத்மா அணுவாக இருக்க முடியாது.
பதில் – ஜீவாத்மாவைப் பற்றிப் பேசி வரும் போது இந்த வாக்கியம் இடம் பெற வில்லை , இடையிலேயே பரமாத்மாவைப் பற்றி உபநிஷத் பேசத் துவங்கி விட்டு – “ (யஸ்ய அநுவித்த: ப்ரதிபு₃த்₃த₄: ஆத்மா) அதாவது “இந்த ஜீவாத்மாவால் உபாஸிக்கப்படுபவர் சிறந்த ஜ்ஞாநமுடைய பரமாத்மா” என்று. அதற்குப் பின்னால் தான் நீங்கள் காட்டிய வாக்கியம் உள்ளது. எனவே , அதில் மஹாந் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல.

5–ஸ்வ சப்₃த₃ உந்மாநாப்₄யாம் ச – “தன் சொல்லாலும், எடுத்து அளப்பதாலும் (ஆத்மா அணு தான்)”
ஸ்வ சப்₃த₃
: – நேரடியாகவே நுண்ணிய அளவைக் கூறும் ’
அணு’ என்ற சொல் ஜீவாத்மாணவப் பற்றிப் பயன் படுத்தப் படுகிறது உபநிஷத்தில் – (ஏஷ: அணு: ஆத்மா சேதஸா வேதி₃தவ்ய: )-அதாவது “இந்த அணுவான (நுண்ணிய) ஆத்மா மனதால் அறியப் பட வேண்டும்” என்று.
உந்மாநம் – ஒரு பொருளை அளவு கோலாக எடுத்து, அதைக் கொண்டு வேறொன்றை அளப்பது. வேதத்திலும்-(வாலாக்₃ர சத பா₄க₃ஸ்ய ததா₄ கல்பிதஸ்ய ச பா₄க₃: ஜீவஸ்ய விஞ்ஞஸ்ய:) அதாவது’ஒரு நெல் மணியின் நுனியில் நூற்றில் ஒரு பங்கில் நூற்றில் ஒரு பங்கு அளவு ஆத்மா இருப்பார்” எனப்படுகிறது –

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மா நுண்ணியவராக இருந்தால் உடல் முழுவதும் எப்படி உணர்ச்சி ஏற்படுகிறது? இதற்கு வேதவ்யாஸர் முதலில் வேறொருவரின் கண்ணோட்டத்தில் பதில் கூறுகிறார் அடுத்த 2 ஸூத்ரங்களால் –

6–அவிரோத சந்த₃நவத் – “முரண்பாடு இல்லை , சந்தநத்தைப் போல்”
சந்தனம் எப்படி உடலின் ஒரு பகுதியில் பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி (ஆஹ்லாதம்) ஊட்டுகிறதோ , அதே போல் ஜீவாத்மாவும் உடலில் ஓரிடத்தில் மட்டும் இருந்தாலும் உடலெங்கும் ஏற்படும் வேதனையை அறிவதில் முரணில்லை –

7–அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் இதி சேத் ந அப்₄யுபக₃மாத், ஹ்ருதி₃ ஹி
மேற் சொன்ன பதிலில் பூர்வ பஷி கேட்கும் கேள்வியும் அதற்கு வ்யாஸரின் பதிலும் இந்த ஸூத்ரத்தில் உள்ளன.
அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் – “குறிப்பிட்ட (சிறப்பான) இடத்தில் இருப்பதால்” என்று பொருள். சந்தனம் உடலில் எங்கு பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி ஏற்படுத்தாது. அதற்கென்று சில மர்மமான இடங்கள் உள்ளன –-நெஞ்சு, மூக்கு, கண், காது, என்பது போல். அங்கு பூசப் பட்டால் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சி தரும். அதுபோல் ஆத்மாவுக்கு சிறப்பான ஸ்தா₂னம் (இருப்பிடம்) இல்லாத படியால் அவருக்கு உடல் முழுவதிலும் உணர்ச்சி வராது.
இதி சேத் ந – இவ்வாறு நீங்கள் கூறினால் அது தவறானது
அப்₄யுபக₃மாத் – ஆத்மாவுக்கும் உடலில் அதுபோல் குறிப்பிட்ட சிறப்பான இருப்பிடத்தை ஏற்கிறபடியால்
ஹ்ருதி₃ ஹி – ஹ்ருதயத்திலன்றோ (ஜீவாத்மா உணர்கிறார்)
(ஹ்ருதி₃ ஜி அயம் ஆத்மா தத்ர ஏக சதம் நாடீ₃நாம்) அதாவது உடலிலிருக்கும் 101 நாடிகளும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயத்திலன்றோ ஜீவாத்மா இருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. எனவே நாடிகள் அனைத்தும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயம் என்கிற சிறப்பான இடத்தில் ஜீவாத்மா உள்ள படியால் அவரும் உடலெங்கும் ஏற்படும் இன்ப துன்பங்களை உணர்வதில் எந்த முரண்பாடும் இல்லை-

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
-இவ்வாறு பூர்வபஷி எழுப்பிய கேள்விக்கு இரண்டு ஸூத்ரங்கைளால் வேறொருவர் கண்ணோட்டத்தில் பதிலளித்து விட்ட அநந்தரம் இனி தன்னுடைய பதிலைக் கூறுகிறார் வ்யாஸர் –

8– கு₃ணாத் வா ஆலோகவத் – “அல்லது (தன்னுடைய) குணத்தின் மூலம், ஒளியைப் போல்”
ஜீவாத்மா உடலில் ஓரிடத்தில் இருந்தாலும், உடலெங்கும் உணர்ச்சி ஏற்படுவதில் எந்த முரண்பாடும் இல்லை -ஏனென்றால், அந்த ஜீவாத்மா தன்னுடைய தனித் தன்மையான ஜ்ஞாநம் (அறிவு) என்ற குணத்தின் மூலம் இந்த உடல் முழுவதிலும் வ்யாபித்து (நிறைந்து) இருக்கிறார்.
ஒளியைப்போல் – தீபம் (சுடர் -ஜ்வாலை ) என்பது ஓரிடத்தில் இருந்தாலும், அதனுணடய ஒளி (ப்ரபா₄) என்பது அறை முழுவதும் நிறைந்திருப்பது போல், ஜீவாத்மாவும் தன் ஜ்ஞாநத்தால் உடலை வ்யாபித்து இருக்கிறார்-(ஸுவ்பரி ஆபாத விருத்திக்கு -50 சரீரங்களை எடுத்துக் கொண்டு ஞானத்தைக் கொண்டு இயக்கிய வ்ருத்தாந்தம் உண்டே-).
பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பு என்று எப்படி அறிகிறீரர்கள்? ஜ்ஞாநமே தானே ஆத்மா?
வ்யாஸரின் பதில் – அடுத்த இரண்டு ஸூத்ரங்களால்

9– வ்யதிரேக: க₃ந்த₄வத் ததா₂ ச த₃ர்ஸயதி –“(ஜ்ஞாநத்துக்கு ஆத்மாவிடமிருந்து) வேறுபாடு மணத்தைப் போல், (வேதம்) அவ்வாறு காட்டுகிறது”
உலகில் “மணமுடைய புஷ்பம்” என்று அறிவதால், புஷ்பம் என்கிற பொருளுக்கு மணம் என்பது குணம் (பண்பு) ஆகிறது. அதனால் மணம் என்பது புஷ்பத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று தெரிகிறது. அதே போல் வேதமும்- (ஜாநாத் யேவாயம் புருஷ:) அதாவது இந்த ஆத்மா அறிவுடையவரே ” என்று கூறுவதால், ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பாகிறது, எனவே ஆத்மாவைக் காட்டிலும் ஜ்ஞாநம் வேறு என்று தெரிகிறது.

10-ப்ருத₂க் உபதே₃சாத் – “தனியானது என்கிற உபதேசத்தால் ”
வேதத்தில் (ந விஜ்ஞாது: விஜ்ஞாதே : விபரிலோபோ வித்₃யதே ) அதாவது “ஆத்மாவினுடைய ஜ்ஞாநத்துக்கு அழிவு இல்லை ” என்று தெளிவாக ஆத்மா வேறு ஜ்ஞாநம் வேறு என்று உள்ளது –

ஆத்மாவை எப்படி ஜ்ஞாநம் என்று அழைக்கலாம்?–பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் ஆத்மாவின் பண்பு தான் என்றால், அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும் தைத்திரீயத்திலும் ஏன் ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்று குறிப்பிடப்படுகிறார்? ஜ்ஞாநமுடையவர் என்று தானே சொல்ல வேண்டும்?
பதில் –
11-தத் ₃கு₃ண ஸாரத்வாத் து தத்₃வ்யபதே ₃ச : ப்ராஜ்ஞவத்
தத்₃கு₃ண ஸாரத்வாத் து –
ஜ்ஞாநம் என்ற குணத்தையே ஸாரமாகக் (முக்கியமான அடையாளமாகக்) கொண்டபடியால்
தத்₃வ்யபதே ₃ச : – ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்றே அழைக்கப்படுகிறார்
ப்ராஜ்ஞவத் – பரமாத்மாவைப் போல
ஒரு பொருளினுடைய ஸாரமான (ப்ரதானமான) பண்பு எதுவோ , அப் பண்பைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு அந்தப் பொருளையும் குறிக்கலாம் என்று உலகில் ஒரு வழக்கமுண்டு. நம்மாழ்வாரை ’க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வம்’அதாவது ’க்ருஷ்ண பக்தி’ என்றே அழைக்கிறோம், அவருக்கு க்ருஷ்ண பக்தியை முக்கியமான பண்பான படியால்.

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் தன்னைத் தாழ்ந்தவன் என்று கொள்ளாமல் -புன்மையாகக் கருத்துவர் -தாழ்ச்சி யாகவே-கருதுவர் என்கிறார்)

அதுபோல் ஜீவாத்மாவின் ப்ரதானமான குணம் ஜ்ஞாநம். அதனால் ஆத்மாவையே ஜ்ஞாநம் என்று சொல்லலாம். இதுபோல் பரமாத்மாவுக்கும் உள்ளது. பரமாத்மாவின் ஸாரமான குணம் எல்லை யற்ற ஆநந்தம்-(ஸ ஏகோ ப்₃ரஹ்மண ஆநந்த₃: ) முதலான இடங்களில் ஆநந்தம் பரமாத்மாவின் பண்பு எனபட்டிருந்தாலும், (ஆநந்தோ ₃ ப்₃ரஹ்மேதி வ்யஜாநாத்) முதலான இடங்களின் பரமாத்மாவை ஆநந்தம் என்றே குறிப்பிடப்படுகிறது வேதம். இதுவும் இதே வழக்கத்தை அடி யொற்றித்தான்.
12-யாவதா ₃த்ம பா₄வித்வாத் ச ந தோ₃ஷ: தத்₃த₃ர்ஸநாத்
ஜ்ஞாநத்தைக் குறிக்கும் சொல் ஆத்மாவைக் குறிப்பதில் எந்த தோஷமும் இல்லை , ஏனென்றால் ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் இயற்கையான நிரந்தரமான பண்பு, ஆத்மா உள்ள வரை அதுவும் இருக்கும்.
இங்கு ’ ச ’ என்ற சொல்லால் ஆத்மாவை ஜ்ஞாநம் என்று அழைப்பதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது – நம் மதத்தில் அறிவாளியான ஆத்மா தானும் ஜ்ஞாநமே வடிவமானவர் என்பதால் எந்த தோஷமும் இல்லை – என்று.

(ஸ்வரூப நிரூபக தர்மம் என்பதால் ஞானம் என்றே சொல்லலாம் –ச -அதனாலும் தோஷம் இல்லை என்றது மறைமுகமாக வேதாந்தப்படி ஞானமயமாயும் ஞானத்துடனும் இருப்பதால் -)

உறங்கும் போது ஏன் ஜ்ஞாநம் தோன்றவில்லை ?
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் இயற்கையாக என்றுமே இருக்கும் பண்பு என்றால் ஆழ்ந்த உறக்கத்தில் அது வெளிப்பட வேண்டுமே ? அப்படி காணப்படவில்லை . ஆக அப்போது ஆத்மாவுக்கு ஜ்ஞாநமே இல்லை – பதில் –
13–பும்ஸ்த்வாதி ₃வத் து அஸ்ய ஸத: அபி₄வ்யக்தி யோகா₃த்
அஸ்ய-
– இந்த ஜ்ஞாநத்துக்கு
ஸத: எப்போதும் இருப்பினும்
அபி₄வ்யக்தி யோகா₃த் –ஒரு காலத்தில் வெளிப்பாடு என்று ஏற்பட முடியுமான படியால்
பும்ஸ்த்வாதி₃வத் து – ஆண்மை முதலானவற்றைப் போல
ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆண் தன்மை அல்லது பெண் தன்மை யோடும், அதற்கான உருப்புகளோடும் தான் பிறக்கிறது.(சரீரம் ஏழு தாதுக்களுடன் பிறக்கிறது – ) ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை அப் பண்புகள் வெளிப்படுவதில்லை -, உருப்புகள் இயங்குவதில்லை -. அதற்காக அது வரை அந்தக் குழந்தைக்கு ஆண் தன்மையோ பெண்தன்மையோ இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. அதே போல் தான் ஜ்ஞாநம் எப்போதுமே ஆத்வாவிடம் இருந்தாலும், விழித்திருக்கும் போது மட்டும் வெளிப்படுகிறது -தோற்றமளிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது. ஜ்ஞாநமே இல்லை என்னக் கூடாது.
(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி) என்னும் வாக்யமும், முக்திக்குப் பின் ஜ்ஞாநமே இல்லை என்று சொல்லவில்லை – உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக நினைக்கும் மயக்கமில்லை என்று தான் கூறுகிறது.

14-நித்யோ பலப்₃தி₄ப்ரஸங்க₃: அந்ய தர நியமோ வா அந்யதா₂-
இப்படி வேதாந்தம் சொன்ன பக்ஷத்தை ஏற்காமல் எங்கும் நிறைந்த ஆத்மா ஜ்ஞாநம் மட்டுமே என்று கொண்டால் எப்போதுமே அறிவும் அறிவின்மையும் சேர்ந்தே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே அறிவு மட்டும் தான் இருக்க முடியும், அல்லது எப்போதுமே அறிவின்மை தான் இருக்க முடியும். எனவே அது பொருந்தாது.

இவ்வாறு இவ்வதிகரணத்தில் ஜ்ஞாநமே வடிவான ஆத்மா ஜ்ஞாநத்தை உடையவரும் கூட என்று நிரூபிக்கப்பட்டது

2-3-5-கர்த்ரதி₄கரணம் –ஜீவாத்மா தான் செயல் படுபவர் -கர்த்ரதி₄கரணம்–ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆத்மா ஜ்ஞாந முடையவர் தான் என்று நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அந்த ஆத்மா ’கர்த்தா’ அதாவது செயல்படுபவரா? அல்லவா? என்கிற ஆராய்ச்சி செய்யப்படுகிறது.-
பூர்வ பக்ஷியின் வாதம்-– ஆத்மா ’கர்த்தா’ அல்ல, அதாவது அவர் எந்தச் செயல்களையும் செய்வதில்லை . ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி- ப்ரதானம் என்ற அசேதனப் பொருள் தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது. ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பல ஸாஸ்த்ரங்கள் இவ்வாறே கூறுகின்றன-

கடோபநிஷத்தில் -ஹந்தா சேத் மன்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம்| உபௌ₄தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே || “ஒருஜீவாத்மா தன்னைக் கொல்பவனாக நினைத்தால் அவன் தன்னை உணர வில்லை என்று பொருள். ஜீவாத்மா கொல்வதே இல்லை ”

பகவத்கீதையில்- ப்ரக்ருதே : க்ரியமாணாநி கு₃ணை : கர்மாணி ஸர்வச : | அஹங்கார விமூடா₄த்மா கர்த்தா அஹம் இதி மந்யதே || “ப்ரக்ருதியின் குணங்களான ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவை தான் அனைத்துச் செயல்களையும் செய்கின்றன. உடலும் தானும் ஒன்று என்னும் மயக்கத்தில் இருப்பவன் தான் தன்னையே கர்த்தா என்று தவறாக நினைத்துக் கொள்கிறான்.
ஆக இப்படி பல இடங்களில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை என்று சொல்லப்பட்டுள்ளதால் ஆத்மா கர்த்தா அல்ல, ப்ரக்ருதி தான் செயல் படுகிறது என்று பூர்வ பஷி கூறுகிறார்.

வேதம் வீணாகக் கூடாது (இந்த பூர்வ பக்ஷத்தை 7 ஸூத்ரங்களால் கண்டித்து உபநிஷத் சொல்வதை நிரூபிக்கிறார் வ்யாஸர்)1–கர்த்தா ஸாஸ்த்ரார்த்த₂ வத்த்வாத்–“(ஜீவாத்மா தான்) செய்பவர்; ஸாஸ்த்ரம் பயனுள்ளதானபடியால்” • வேதங்களில் உள்ள கட்டளைகள் எல்லாம்-

(ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க₃காம: யஜேத) அதாவது “ஸ்வர்கத்தை ஆசைப் படுபவன்(அதை அடைவதற்காக) ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தைச் செய்யக் கடவன்” என்பது போல் தான் உள்ளன. எனவே , யார் பயனை அடையப் போகிறாரோ (போ₄க்தா) அவர் தான் செயல்களைச் செய்பவர் (கர்த்தா) என்று தெரிகிறது. எனவே , இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கூடியஜீவாத்மா தான் கர்த்தாவாக(செயல் படுபவராக) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல.
மேலும், இந்த ஸூத்ரத்தில் வேதத்தை ’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வ்யாஸர்.’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லுக்கே ’ஸாஸநம் செய்வது – ஆணை யிடக் கூடியது-செயல் பட வைப்பது’ என்று பொருள். அதாவது, செயல் படாமல் இருப்பவனை செயல் பட வைக்கும் நூல் தான் ஸாஸ்த்ரம். ஒரு நூலானது அறிவை ஏற்படுத்துவதன் மூலம் தான் ஒருவனை செயல் பட வைக்க முடியும். எனவே , அறிவுடையவனான(ஜ்ஞாதா) ஜீவாத்மா தான் செயல்படுபவனாக(கர்த்தா) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல. –இதை ஏற்காமல், அறிவும் இல்லாத இன்ப துன்பங்களையும் அநுபவிக்காத ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அப்போது ஸாஸ்த்ரத்தால் அந்த செயல்பாடு ஏற்பட முடியாத படியால் ஸாஸ்த்ரம் அனைத்தும் வீணாகி விடும்

(ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் -அறிவு செயல்பாடு அனுபவம் -மூன்றும் யாருக்கு யாரால் என்பதை சரியான அறிய வேண்டும்-ஆத்மா நித்யம் என்பதைக் காட்டவே கீழ்ச் சொன்ன வேத வாக்கியங்களும் கீதா ஸ்ம்ருதியும் – கொல்லவும் இல்லை கொலை பண்ணவும் இல்லை என்கிறது -கொல்லப்படுபவன் கொல்கிறேன் என்றும் நினைப்பவன் முட்டாள் என்கிறது -பிரக்ருதியுடன் தொடர்பால் வந்தவை செயற்கை -இயற்கையில் சுக வடிவம் -இங்கு குணங்களால் செய்விக்கப்படுகிறாய் என்பதைக் காட்டவே கீதா வசனம் –உடல் ஜீவாத்மா இந்திரியங்கள் மூச்சுக் காற்று பரமாத்மா ஐவரும் சேர்ந்து தான் செயல்களைச் செய்கிறார்கள் என்றும் கீதையில் உண்டே)

2–உபாதா₃நாத் விஹாரோ தே₃ஸாத் ச – “கைக் கொள்வதும் திரிவதும் சொல்லப்படுவதாலும்”
வேதத்தில்(ஏவமே வைஷ ஏதாந் ப்ராணாந் க்₃ருஹீத்வா ஸ்வே ஸரீரே யதா₂காமம் பரிவர்ததே )அதாவது “இந்த ஜீவாத்மா ஐந்து வகையான ப்ராண வாயுக்களையும் எடுத்துக் கொண்டு தன் ஆணைப்படி உடலுக்குள் திரிகிறார்” என்று சொல்லப் படுகிறது. இதில் தெளிவாக ப்ராணங்களை எடுத்தல்- கைக் கொள்ளுதல் என்ற செயலையும் திரிதல் என்ற செயலையும் செய்பவர் ஆத்மாவே என்று கூறப்படுள்ள படியாலும் எல்லாச் செயல்களிலுமே ஜீவாத்மா தான் கர்த்தாவாக இருக்க வேண்டும், ப்ரக்ருதி அல்ல.

ஸித்தாந்தியின் வாதங்கள் -தொடர்கிறது –
3) வ்யபதே ₃சாத் ச க்ரியாயாம், ந சேத் நிர்தே₃ச விபர்ய்ய:
க்ரியாயாம்
– எல்லாச் செயல்களிலும் வ்யபதே ₃சாத் (ஜீவாத்மாவையே செய்பவராக வேதம்) குறிப்பிடுகிற படியாலும்(அவரே கர்த்தா)
தைத்திரீய உபநிஷத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச ) அதாவது “விஜ்ஞாநம் எனப்படும் ஜீவாத்மா யாகம் முதலான வைதிகச் செயல்களையும் ஸாதாரண உலகச் செயல்களையும் செய்கிறார்” என்று தெளிவாக ஜீவாத்மாவே கர்த்தா என்று சொல்லப்பட்டுள்ளது என்று காட்டுகிறார் வ்யாஸர்.
ந சேத்–(இவ்வாறு) இல்லை யென்றால்-(அதாவது இந்த வேத வாக்யத்தில் விஜ்ஞாநம் என்று சொல்லப்படுவது ஜீவாத்மாஅல்ல, புத்₃தி₄ எனப்படும் மனது தான்,-அது தான் செயல்களை யெல்லாம் செய்கிறது என்றால்)
நிர்தே ₃ச விபர்ய்ய:-குறிப்பிடுவதில் மாற்றம் இருந்திருக்க வேண்டும்–அதாவது, மனது என்பது கருவியான படியால் “விஜ்ஞாநத்தால் யாகம் செய்யப் படுகிறது” என்று சொல்லி யிருக்க வேண்டும், ஆனால் “விஜ்ஞாநம் யாகம் செய்கிறது” என்றே சொல்லப் பட்டுள்ளது. எனவே இங்கு விஜ்ஞாநம் என்பது மனது அல்ல, ஜீவாத்மாவே ; அவரே கர்த்தா.

4–உபலப்₃தி₄வத் அநியம:- “அறிவைப் போல் வரை யறை இல்லாமை ஏற்பட்டு விடும்”
முன் அதிகரணத்தில் “நித்யோபலப்₃த்₄யநுபலப்₃தி₄ப்ரஸங்க₃:…” என்ற கடைசி ஸூத்ரத்தில் இவ்வாறு கூறப்பட்டது– ஜீவாத்மா எங்கும் உள்ளார், அவர் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று பூர்வபக்ஷிகள் சொல்வது உண்மை யானால் ஒன்று எப்போதுமே நமக்கு அறிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே ஏற்படாமலேயே இருக்க வேண்டும். ஒரு ஸமயத்தில் அறிவு, ஒரு ஸமயத்தில் அறிவின்மை என்கிற வரை யறை பொருந்தாது”.
அதே போல் ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பொதுவானபடியால், ப்ரக்ருதி ஒரு செயலைச் செய்ததும் ஒரே ஸமயத்தில் எல்லா ஜீவாத்மாக்களும் அதே பயனை அடைந்து விட வேண்டும், ப்ரக்ருதி செய்யா விட்டால் எல்லாருமே பயனை அடையாமல் இருக்க வேண்டும். சிலர் அடைந்து சிலர் அடையாமலிருப்பது என்கிற நியமம்(வரை யறை ) ஏற்பட முடியாமல் போய் விடும். அதனால் ஜீவாத்மா தான் கர்த்தா.-

( ஸித்தாந்தியின் வாதங்கள் தொடர்கின்றன )
5-சக்தி விபர்யயாத்
– “(இன்ப துன்பங்களை அநுபவிக்கும்) சக்தி மாறி யிருக்க வேண்டும்”
புத்தி எனப்படும் மனது தான் செயல்படுகிறது என்றால், அப்போது அச் செயல்களின் பயனாய் ஏற்படும் இன்ப துன்பங்களையும் அந்த மனது தான் அநுபவிக்க வேண்டும். அப்படியானால் போ₄க்த்ருத்வம் (இன்ப துன்பங்களை அநுபவிக்கும் சக்தி) என்பதும் ஜீவாத்மாவிட மில்லை -மனதில் தான் உள்ளது என்று மாற்றி ஏற்க வேண்டும்.
ஆனால் உங்கள் மதத்தில்“(புருஷ: அஸ்தி போ₄க்த்ரு பா₄வாத்) அதாவது“இன்ப துன்பங்களை அனுபவிக்கும் தன்மை யிருப்பதால் தான் ஜீவாத்மா என்ற பொருளை ஏற்கிறோம்”என்று கூறுகிறீர்கள். அந்த போ₄க்த்ருத்வமும் மனதுக்குத் தான் உள்ளது என்றால், ஜீவாத்மா என்ற ஒரு பொருளே இல்லை என்றாகி விடும்.

6–ஸமாத்₄ யபா₄வாச் ச – “ஸமாதி₄ என்பதும் ஏற்ப முடியாமல் போய்விடும்”
உங்களுடைய(ஸாங்க்ய) மதத்தில் “அசேதனமான ப்ரக்ருதி வேறு, அறிவுடையவனான நான் வேறு” என்கிற த்யானம் தான் மோக்ஷத்தை அடையும் வழி ஆகும். இதற்கு ஸமாதி₄ என்று பெயர் (நிரீஸ்வர சாங்க்ய மதத்தில் ஈஸ்வரனே இல்லை -நாம் த்யானம் என்பதை பரமாத்மாவைப் பற்றியே-இது வாசி ). ப்ரக்ருதி தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது என்றால், அப்போது ஸமாதி எனும் த்யானத்தையும் ப்ரக்ருதி தான் செய்ய வேண்டும். ஆனால், ப்ரக்ருதி எப்படி “நான் ப்ரக்ருதி அல்ல” என்று த்யானிக்க முடியும்? எனவே உங்கள் மதத்தில் ஸமாதி என்பதே பொருந்தாது

பூர்வ பக்ஷியின் கேள்வி–ஜீவாத்மா தான் கர்த்தா என்றால், ஏன் எப்போதுமே செயல்பாடுகள் இருப்பதில்லை?
பதில் –7– யதா₂ ச தக்ஷா உப₄யதா₂-
“தச்சனைப் போல் இரண்டு விதமாகவும் (பொருந்தும்)”
ஒரு தச்சன், தன்னிடம் எல்லாக் கருவிகளும் இருந்தாலும், தான் சில ஸமயங்களில் வேலை செய்கிறான், சில ஸமயங்களில் ஓய்வெடுக்கிறான். அதே போல் புலன்கள் என்ற கருவிகளை உடைய ஜீவாத்மாவும் தன்னுடைய ஆணைப்படி சில ஸமயங்களில் மட்டும் செயல்படுகிறார் என்பது பொருத்தமானதே . உங்கள் மதத்தின் படி ப்ரக்ருதி செயல்படுகிறது என்றால் தான் அதற்கு அறிவு- ஆணை இல்லாத படியால் எபபோதுமே செயல்பாடு ஓயாது.

ஆக, இவ்வாறு அறிவுடையவரான ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று நிரூபித்தார் வ்யாஸர்.

ஆத்மாவுக்கும் உத்பத்தி உண்டா-மூன்றாம் அதிகரணத்தில் சொல்லி -மேல் நான்கு அதிகரணங்கள் ஆத்மாவைப் பற்றிய ஆராய்ச்சி செய்கிறார் அன்றோ -கீழே-ஞாத்ருத்வம் -சொல்லி -மேல் கர்த்ருத்வம் சொல்லி -இனி போக்த்ருத்வம் பற்றிச் சொல்ல வேண்டுமே -தானாக செய்கிறாரா பிறர் வசத்தால் செய்கிறாரா -என்கிற விசாரம் வேண்டுமே –

2-3-6-பராயத்தாதி₄கரணம்-பரமாத்மா எப்படி ஜீவாத்மாக்களை இயக்குகிறார்?
ஜீவாத்மா பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்–2-3-6-பராயத்தாதி₄கரணம் – ஸங்கதி
– ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது. அதில் ஒரு ஸந்தேகம் எழுகிறது – ஜீவாத்மா தன்னிச்சையாக ஸ்வ தந்த்ரனாகச் செயல் படுகிறாரா?அல்லது பரமாத்மாவை எதிர்பார்த்து, அவரால் இயக்கப்பட்டு செயல் படுகிறாரா? என்று. அந்த ஆராய்ச்சியைத் தான் இந்த அதிகரணத்தில் வ்யாஸர் செய்கிறார்.
பூர்வபக்ஷம் – ஜீவாத்மா ஸ்வ தந்த்ரமாகத் தான் செயல் படுகிறார், பரமாத்மாவை எவ் விதத்திலும் எதிர்பார்ப்பதில்லை , அவருக்கு வஸப்பட்டும் இல்லை . ஏனென்றால், இப்படி ஏற்கா விட்டால், வேதத்தில் உள்ள கட்டளைகள் எல்லாம் வீணாகப் போய்விடும்.

வேதத்தில் “இதைச் செய்” என்ற கட்டளைகளுக்கு ’விதிகள்’ என்று பெயர். “இதைச் செய்யாதே ” என்ற
கட்டளைகளுக்கு ’நிஷேதங்கள்’ என்று பெயர். இந்தக் கட்டளைகள் அனைத்துமே ஜீவாத்மாவை நோக்கித் தான் உள்ளன. ஒருவருக்குக் கட்டளையிட வேண்டுமென்றால் அவர் தன் புத்தியாலே சிந்தித்து, முடிவெடுத்து ஒரு செயலைச் செய்யவோ செய்யாமலிருக்கவோ சக்தி உடையவராக இருக்க வேண்டும். ஆகவே , ஜீவாத்மா ஸ்வதந்த்ரமாகச் செயல் படுபவராகத் தான் இருக்க வேண்டும். பரமாத்மாவால் இயக்கப்படுபவராக இருந்தால், அவரைக் குறித்து வேதம் கட்டளை யிடுவதே வீணானதாகும்.

ஸித்தாந்தம் – 1–பராத் து தத் ச்ருதே : – “அந்த கர்த்ருத்வம் பரமாத்மாவிடமிருந்து; வேதம் சொல்வதால்”
ஜீவாத்மா செயல் படுவதெல்லாம் பரமாத்மாவை எதிர் பார்த்து தான், ஸ்வ தந்த்ரமாக அல்ல என்று வேதம் கூறுகிறது –
(அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா) –“எல்லா ஆத்மாக்களுக்கும் உள்ளே புகுந்து இயக்குபவர் பரமாத்மாவே ”
(யஸ்ய ஆத்மா ஸரீரம், ய ஆத்மாநம் அந்தரோ யமயதி) –“யாருக்கு இந்த ஜீவாத்மா உடலாக உள்ளாரோ , யார் இந்த ஜீவாத்மாவை இயக்குகிறாரோ ”-

பர ஆயத்தம் -அவனால் நியமிக்கப்பட்டே செய்கிறான் –பராத் து -து –அன்றோ -தத் -அது -கீழ் சொல்லப்பட்ட கர்த்ருத்வம் -செயல்படும் தன்மை -பரமாத்மாவால் –பர -மிக உயர்ந்த -அவனிடம் இருந்து அன்றோ –ஆகாஸம் போல் எங்கும் பரவி ராஜா போல் நியமித்த ஸ்தாபனம் செய்கிறார் -ஆத்மா என்றாலே உள்ளே இருந்து இயக்குபவர் -ஆத்மா தனது சரீரத்தை இயக்க -பரமாத்மா அனைத்துக்குள்ளும் -ஆத்மாக்கள் உள்ளும் இருந்து –ஈஸ்வரன் -ஈஸன ஸாமர்த்யம் -கீதையிலும் தானே –யந்த்ர ஆரூடனான -மாயையால் ஸங்கல்பத்தால் இயக்குகிறேன் -என்றானே –

ஜீவனுக்குப் பரமாத்மா கொடுக்கும் ஸ்வாதந்த்ரம்
இங்கு ஒரு கேள்வி எழும்
– ஜீவாத்மா பரமாத்மாவால் தான் இயக்கப்படுகிறார் என்றால் வேதத்தில் அவரைக் குறித்த கட்டளைகள் எல்லாம் வீணாக ஆகி விடாதா? என்று. அதற்கான விடையை அடுத்த ஸூத்ரத்தில் அளிக்கிறார் வ்யாஸர்
2-ः க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்₃த₄ அவையர்த்₂யாதி₃ப்₄ய:
விஹித ப்ரதிஷித்₃த₄ அவையர்த்₂யாதி₃ப்₄ய:
– வேதத்திலுள்ள விதிகளும் நிஷேதங்களும், அவற்றின் படி நடப்பவர்களுக்குக் கிடைக்கும் பகவானின் அநுக்ரஹமும் நிக்ரஹமும், அதன் விளைவான இன்ப துன்பங்கணளயும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காக
க்ருத ப்ரயத்ந அபேக்ஷ: து – ஜீவாத்மாவால் செய்யப்பட்ட முயற்சியை எதிர்பார்த்து அன்றோ (பரமாத்மா இயக்குகிறார்)
பரமாத்மா ஜீவாத்மாவை இயக்குவது என்பது, செயல் படாமலிருக்கும் ஜீவாத்மாவை ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வைப்பதல்ல. ஒரு ஜீவாத்மா தானாகச் சிந்தித்து, முடிவெடுத்து, ஒரு செயலில் முதல் முயற்சியை எடுக்கும் வரை பரமாத்மா உதா₃ஸீனனாக (தலை யிடாமல்) இருக்கிறார். நாம் செய்வதைப் பார்த்துக் கொண்டு அத்₄யக்ஷராக மட்டும் உள்ளார்.(உதாசீனனாகவும் –அத்யக்ஷ —அனுமந்தா ச –நடப்பதைப் பார்த்துக் கொண்டும் -அனுமதி வழங்கியும் அருளுகிறவன் ) அதற்குப் பின், இரண்டாவது வினாடியில், அச் செயலுக்குத் தன் அநுமதியை வழங்குகிறார். அந்த அநுமதி இல்லாமல் போனால் ஜீவனால் அந்தச் செயலைத் தொடர்ந்து செய்ய இயலாது. எனவே அவருக்கு வஸப்பட்டவனே .
1-விதி நிஷேங்களும் வீணல்ல – வேதத்தில் ஜீவனைக் குறித்து உள்ள விதிகளும் நிஷேதங்களும் வீணாக மாட்டா; ஜீவாத்மா முதல் முயற்சியில் முழுவதுமாக ஸ்வ தந்த்ரனாக (தன்னிச்சையாகச்) செயல் படுகிற படியால்.
2-பகவான் முழு முதற் காரணமே – இவ்வாறு கொள்வதால் பரமாத்மா உலகத்தில் அனைத்துக்கும் காரணம் என்பதும் காக்கப்படுகிறது. ஜீவாத்மாவுக்கு உடல், புலன்கள், ஜ்ஞாநம், இயங்கும் சக்தி என்னும் அனைத்தையும் பரமாத்மாவே அளிக்கிற படியால், ஜீவாத்மாவின் எல்லா முயற்சிகளுக்குமே பகவான் கண்டிப்பாகப் பொதுவான காரணமாக ஆவார்,
வெவ்வேறு செடிகள் அதனதன் விதையிலிருந்து உண்டாவதற்கு நிலம்-மண் பொதுவான காரணமாக இருப்பது போல்-அந்தந்தச் செயலுக்கு இரண்டாவது வினாடி தொடங்கி தன்னுடைய அநுமதியையும் கொடுக்கிறபடியால், சிறப்புக் காரணமும் ஆவார். ஆக மொத்தம், உலகில் அனைத்து அஸைவுகளுக்கும் கூடப் பரமாத்மா காரணம் தான்

சிலரை மட்டும் சிறப்பாக இயக்குகிறார்
3-பயனில் வரை யறை
– இப்படி பரமாத்மாவை எதிர்பார்த்தே ஜீவாத்மா இயங்கினாலும், அந்தச் செயல்பாடுகளின் பயனாக வரும் இன்ப துன்பங்களை ஜீவாத்மா மட்டுமே அநுபவிக்கிறார். பரமாத்மா அதற்குக் காரணமாக இருந்திருந்தாலும், அநுமதி கொடுத்திருந்தாலும், அவருக்கு அந்தச் செயல்களின் பயன் சேராது. இதை உலகத்திலேயே காணலாம் – ஒரு தந்தை தன் இரண்டு குழந்தை களுக்குத் தன்னுடைய செல்வத்தைப் பிரித்துக் கொடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவன் நற் செயல்களையும் மற்றொருவன் தீய செயல்களையும் செய்கிறார். அதன் விளைவாக வரும் புண்ய பாபங்களையும் இன்ப துன்பங்களையும் அவரவர் தான் அநுபவிக்க வேண்டும், அந்த தந்தைக்கு அதில் பங்கு கிடையாது. அதுபோல் பரமாத்மா நம்மை இயக்கினாலும் அவருக்கு கர்ம வினைகளில் தொடர்பு கிடையாது.

4-தயை உடைமை – சக்தி இருந்த போதும் தீய செயலில் ஈடுபடும் ஜீவாத்மாவைத் தடுக்காமல் இருந்ததால் பகவானை தயை அற்றவர் என்று கூறி விட முடியாது. அவர் கொடுக்கும் அநுமதி தான் அவர் நம் முயற்சிக்குக் கொடுக்கும் பரிசும் தண்டனையும். -ஒருவன் தவறு செய்வதை நிறுத்தின வினாடியிலேயே அவனுடைய அனைத்துப் பாபங்களை பகவான் மன்னிப்பதால் அவர் கண்டிப்பாக தயை உடையவரே (தத் அபிஸந்தி விராம மாத்ராத் -தவறு செய்யும் எண்ணம் நிறுத்திய உடனே -அல்ப அனுகூல்யமானவாறே -தயையைக் காட்டி அருளுகிறவன் ).

கேள்வி – பரமாத்மா நேரடியாகவே செயல் பட வைக்கிறார் என்றன்றோ வேதம் சொல்கிறது? –
(ஏஷ ஹி ஏவ ஸாது₄ கர்ம காரயதி தம் யம் ஏப்₄ய: லோகேப்₄ய: உந்நிநீஷதி)-அதாவது“பரமாத்மா யாரை உயர்த்த நினைக்கிறாரோ அவரை நற் செயல்களைச் செய்ய வைக்கிறார்” என்றும் (ஏஷ ஏவ அஸாது₄ கர்ம காரயதி தம் யம் அதோ ₄ நிநீஷதி) அதாவது “பரமாத்மா யாரைக் கீழே தள்ள ஆசைப் படுகிறாரோ அவர்களைத் தீய செயல்களைச் செய்யும்படி இயக்குகிறார்” என்றும் வேதம் சொல்கிறதே ?
பதில் – இது அனைவருக்குமல்ல. பகவானிடம் மிகவும் நெருக்கமான பக்தர்களுக்குத் தானே சில நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி, சில நற் செயல்களைச் செய்ய வைக்கிறார். மிகவும் பகைமை பாராட்டும் தீயவர்களுக்குச் சில தீய எண்ணங்களை ஏற்படுத்தி, சில தீய செயல்களைச் செய்ய வைக்கிறார். இது ஒரு சிலருக்கு மட்டுமே-(அதிமாத்ர அனுகூல்யர் -அதிமாத்ர பிரதிகூல்யர் -போல்வாருக்கு பிரதம பிரவிருத்தியிலேயே பகவான் செய்யும் செயல்கள் இவை-ததாமி புத்தி யோகம் –ஷிபாமி ஆஸூரா யோனி -இரண்டும் செய்வதாக தானே அருளிச் செய்துள்ளான் அன்றோ ) .
ஆக, ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் பரமாத்மாவின் வசத்துக்கு உட்பட்டது தான், ஸ்வதந்த்ரமானது அல்ல.

2-3-7-அம்சாதி₄கரணம்-ஜீவாத்மா பரமாத்மாவின் உடல்-
பூர்வபக்ஷிகளின் வாதங்கள்
2-3-7-அம்சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணத்தில் ஜீவாத்மா பரமாத்மாவின் வசத்தில் இயங்குகிறார் என்று கூறப்பட்டது. அப்படியானால் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களா? அல்லது ஒருவரே தானா? என்று ஸந்தேஹம்.
வேதத்திலேயே பரமாத்மா படைப்பவர், இயக்குபவர், ஸர்வஜ்ஞர், தூய்மையானவர், ஸ்வதந்த்ரர் என்றும், ஜீவாத்மா படைக்கப் படுபவர், இயக்கப்படுபவர், அல்பஜ்ஞர், கர்மங்களால் மாசு பட்டவர், பரதந்த்ரர் என்றும் அவர்களுக்குள் வேறு பாட்டைச் சொல்லும் பே₄த₃ ஸ்ருதிகள் உள்ளன. அதே போல் ’தத் த்வம் அஸி’, ’அஹம் ப்ரஹ்மாஸ்மி’ ’அயம் ஆத்மா ப்ரஹ்ம’ போன்ற அபே₄த₃ ஸ்ருதிகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்று கூறுகின்றன. அதனால் தான் இந்த ஸந்தேஹம் எழுகிறது. இதை இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார்.

பூர்வ பக்ஷம் 1 – ந்யாய மதம் முதலானவை – பரமாத்மாவும் ஜீவாத்மாவும் முற்றிலும் வேறு பட்டவர்கள், தொடர்பற்றவர்கள்-வேதத்தில் உள்ள பே₄த₃ ஸ்ருதிகள் அப்படியே உண்மை யானவை . எனவே இருவரும் வெவ்வேறு தான். அபே₄த₃ ஸ்ருதிகள் ஒரு புகழ்ச்சிக்காக ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கின்றன – கோயிலை சிறப்பாக நிர்வாஹம் சேய்யும் தர்ம கர்த்தாவைப் புகழ “இந்தக் கோயிலே இவர் தான்” என்று சொல்வது போல்.

பூர்வ பக்ஷம் 2 – அத்வைதம் முதலானவை – பரமாத்மாவே தான் அவித்யையால் மயங்கி ஜீவாத்மாவாக ப்ரமிக்கிறார்-இவர்கள் வேதத்தில் உள்ள அபே₄த₃ ஸ்ருதிகளை அப்படியே உண்மை என்று ஏற்கிறார்கள் – அதனால் ஜீவனும் பரனும் ஒன்று தான் என்கிறார்கள். பே₄த₃ ஸ்ருதிகள் நாம் உலகத்தில் பார்க்கும் பொய்யான வேறுபாடுகளைத் தான் மறுபடியும் ஒரு முறை கூறுகின்றன, உலகமனைத்தும் பொய் என்ற உண்மையைப் பிறகு உபதேசிப்பதற்காக என்கிறார்கள்.

பூர்வ பக்ஷம் 3 – பா₄ஸ்கர மதம் முதலானவை – பரமாத்மாவே ஓர் உபாதியின் சேர்க்கையால் ஜீவனாக ஆகிறார்-இரண்டாவது பூர்வ பக்ஷத்தில் ஒரே பரமாத்மா தன்னை பல ஜீவர்களாக நினைத்தால், ஒரு ஜீவன் முக்தி அடைந்தால் அனைவரும் முக்தி அடைய வேண்டி வரும். அதனால் அப்படிச் சொல்லாமல், பரமாத்மாவின் ஒவ்வொரு பகுதியிலும் உபாதிகள் என்று சில பொருள்கள் போய் சேர்கின்றன; ஒவ்வொரு உபாதியோடு கூடின பரமாத்மாவின் பகுதி தான் ஒவ்வொரு ஜிவாத்மா. எனவே ஓர் உபாதி பிரிந்தால் அந்த ஜீவாத்மா முக்தி அடைந்து விட்டார், மற்றவர்கள் இன்னும் அடைய வில்லை எனக் கொள்ளலாம்.-ஆக, பரமாத்மாவே உபாதிகளின் சேர்க்கையால் ஜீவர்களாகிறார் என்கிறார்கள்.

பரமாத்மாவின் பகுதி ஜீவாத்மா-ஸித்தாந்தம் – இந்த அதிகரணத்தில் 11 ஸூத்ரங்களால் இந்த பக்ஷங்களை யெல்லாம் தவறென்று நிரூபிக்கிறார் வ்யாஸர். பே₄த₃ ஸ்ருதிகளும் உண்மை யானவை , அதனால் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு பொருள்கள் தான். அபே₄த₃ ஸ்ருதிகளும் உண்மை யானவை , எனவே பரமாத்மாவை விட்டுப் பிரியாத அம்சமாக (பகுதியாக) ஜீவாத்மா இருக்கிறார்.

1–அம்ச: நாநா வ்யபதே₃சாத் அந்யதா₂ ச அபி தா₃ச கிதவாதி₃த்வம் அதீ₄யத ஏகே
அம்ச:
– ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம் (பகுதி) தான், முற்றிலும் தனிப்பட்டவரோ பரமாத்மாவேயோ அல்ல
நாநா வ்யபதே ₃சாத் – (பே₄த₃ ஸ்ருதிகளில்) வேறு பட்டவராகக் குறிப்பிடப் படுகிற படியால்
அந்யதா₂ ச – வேறு மாதிரியும் (அதாவது அபே₄த₃ ஸ்ருதிகளில் பரமாத்மாவோடு ஒன்றாகவும்) குறிப்பிடப் படுவதால்
அபி தா₃ச கித வாதி₃த்வம் அதீ₄யத ஏகே – மேலும் ஒரு சிலர் பரமாத்மாவே தாசன் கிதவன் முதலானவர் என்பதால்-(கிதவன்-ஏமாற்றுக்காரன்-வஞ்சகன்- பகைவன் கைதவம் கைடவன் கிதவன் தவன் கைவந்தவன் தகாதவன் -பர்யாய சொற்கள் )

முதல் பூர்வ பக்ஷத்தில், அபே₄த₃ ஸ்ருதிகள் எல்லாம் வெறும் புகழ்ச்சிக்காக, உண்மை யானவை அல்ல எனப்பட்டது-தவறு. அதர்வண வேதத்தில் (ப்₃ரஹ்ம தா₃சா: ப்₃ரஹ்ம தா₃ஸா: ப்₃ரஹ்ம இமே
கிதவா:)
அதாவது“ப்ரஹ்மமே தான் அடிமைகள், ப்ரஹ்மமே தான் ஏமாற்றுக்காரர்கள்” என்று பரமாத்மாவைத் தாழ்ந்தவர்களோடு ஒன்றாகச் சொல்வது எப்படி புகழ்ச்சிக்காக இருக்க முடியும்? எனவே அது உண்மையைத் தான் சொல்கிறது. பரமாத்மா அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறபடியால் அவர்களாகவே சொல்லப்படுகிறார்.

இரண்டாம் பூர்வ பக்ஷத்தில் பே₄த₃ ஸ்ருதிகள் உலகத்திலுள்ள பொய்யான வேறுபாடுகளையே நினைவு கூறுகின்றன என்றதும் தவறு. அப்படியானால் நமக்குத் தெரியாத பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் இந்த வேதப் பகுதி நமக்குள்ள மயக்கத்தை வளர்க்கிறது என்றாகி விடும். வேதம் மயக்கத்தைப் போக்க வந்தது– வளர்க்க வந்ததல்ல.

மூன்றாவது பூர்வ பக்ஷத்தில் சொன்னது போல் ஒரே ப்ரஹ்மமே வெவ்வேறு உபாதிகளின் சேர்க்கையால் வெவ்வேறு தன்மை களை உடைய ஜீவர்கள் ஆகிறது என்று கூறியதும் தவறு. ஒருவரே வெவ்வேறு உபாதிகளால் வெவ்வேறு இடங்களில் தானே இயக்குபவராகவும் இயக்கப்படுபவராகவும் முரண்பட்ட பண்புகளோடு இருக்க முடியாது.

வெவ்வேறு; ஆனால் ஒன்று
2-மந்த்ர வர்ணாத் ् –
“மந்த்ரத்திலும் சொல்லப்படுவதால்”
வேதத்தில் (பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி) அதாவது-இந்த உலகிலுள்ளவை அனைத்தும் பரமாத்மாவின் ஒரு பாதம்’ எனப்படுகிறது. பாதம் என்பதற்கு பகுதி – அம்சம் என்று தான் நேரடியான பொருள்.

(ஜீவாத்மாக்கள் பலர் –ஸர்வ -எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில-அனைவரும் அவனின் அம்சமே)

3-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியிலும் கூறப்படுகிறது (ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம் என்று)”
பகவத் கீதையில் –(மமைவ அம்ச: ஜீவலோகே ஜீவ பூ₄த: ஸநாதன: )அதாவது“இந்த ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைவரும் என்னுடைய அம்சங்கள் தான்” என்று கண்ணனும் ஸ்பஷ்டமாக அம்சம் என்ற சொல்லால் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு பகுதி தான் என்கிறார்.

ஜீவாத்மா பரமாத்மவின் அம்சம் (பகுதி) என்றால் ஜீவாத்மாவுக்கு இருக்கும் அறிவின்மை , துன்பங்கள், களைப்பு முதலான தோஷங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கும் உண்டு என்றாகி விடாதா? அடுத்த ஸூத்ரத்தில் பதிலளிக்கிறார் –
4–ப்ரகாசாதி₃வத் து; ந ஏவம் பர: – ப்ரகாசம் முதலானவை போல் அன்றோ ; பரமாத்மா அப்படி யல்ல
தீபத்தில் உள்ள ஜ்வாலை (சுடர்) என்பது ஒரு பொருள். ஒளி (ப்ராகாசம்) என்பது மற்றொரு பொருள் தான், ஆனால் அது ஜ்வாலையை விட்டுப் பிரியாமல் அதனுடைய அம்சமாக (பகுதியாக) உள்ளது. ப்ரகாசத்தோடு கூடிய ஜ்வாலை என்பது ஒரே பொருள் தானே . அதுபோல் ஜீவாத்மாவும் சரீரமும் வெவ்வேறு தான், ஆனால் பிரிக்க முடியாதபடியால் சரீரத்தோடு கூடிய ஆத்மா ஒன்றாகவே பேசப் படுகிறார். அது போல் ஜீவாத்மாவோடு கூடிய பரமாத்மாவே ஒரு பொருள் ஆகிறார்.
ஜீவாத்மா தனிப் பொருளாக இருந்தாலும் பரமாத்மாவிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறார்.
ந ஏவம் பர:
– “ஜீவாத்மா எப்படியோ அப்படி பரமாத்மா இல்லை ” என்கிறார் வ்யாஸர். அதாவது, இப்படி பகுதியாக இருக்கும் பொழுது, ப்ரகாசத்துக்கு உள்ள ’பரவுகிற’ தன்மை ஜ்வாலைக்கு இல்லை , உடலுக்கு உள்ள வளரும் -அழியும் தன்மை ஆத்மாவுக்கு இல்லை . அதுபோல் தான் ஜீவாத்மா என்கிற பகுதிக்கு (அம்சத்துக்கு) இருக்கும் அறிவின்மை , துக்கம் முதலானவை பரமாத்மாவுக்கு வராது.
ஆக இவ்வாறு பே₄த₃ ஸ்ருதிகள் அபே₄த₃ ஸ்ருதிகள் இரண்டுமே உண்மை யாகின்றன. இதுவே சரியான பொருளாகும் –

(ஆதி -கோத்வம்-கோ –உடல் ஆத்மா வேறாக இருந்தாலும் நாய் என்றதும் இரண்டையும் குறிக்கும் அன்றோ -அம்சமாக விட்டுப் பிரியாமல் இருப்பவை இவையும் – அப்ருதக் ஸித்த விசேஷணம் -உடலை விட்டுப் பிரிந்தால் சரீரம் இருக்காதது போல் பரமாத்மாவை விட்டு பிரிந்தால் ஜீவாத்மாவுக்கு ஸத்தையே இருக்காது —ந ஏவம் பர:உடலில் உள்ள குறைபாடுகள் ஆத்மாவுக்குத் தட்டாதவை போல் ஆத்மாவுடைய தோஷங்கள் பரமாத்மாவுக்கும் தட்டாதே -அபஹத பாப்மா இத்யாதி-)

தகுதிகளும் இன்ப துன்பங்களும் வெவ்வேறு
5- ஸ்மரந்தி ச
– “ஸ்ம்ருதியிலும் சொல்லப்படுகிறது (ஜீவாத்மா பரமாத்மவின் சரீரமானதால் அம்சம் என்று)”பராசர மஹரிஷி தன் விஷ்ணு புராணத்தில் இந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கு சரீரமாக உள்ளதால் அம்சம் என்கிறார்.
ஏகதே ₃சஸ் தி₂தஸ்ய அக்₃நே : ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா₂ | பரஸ்ய ப்₃ரஹ்மண: சக்தி: ததே₂த₃ம் அகி₂லம் ஜக₃த் ||
சுற்றும் விரிந்திருக்கும் ஒளியானது எப்படி ஓரிடத்தில் இருக்கும் நெருப்புக்கு (அம்சமாக) இருக்கிறதோ ,அது போல் தான் இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு (அம்சமாக) இருக்கிறது.
(தத் ஸர்வம் வை ஹரே : தநு: ) – “அந்த உலகனைத்தும் ஹரியின் தநு (உடல்) ஆகிறது

கேள்வி – ஜீவாத்மாக்கள் அனைவருமே பரத்மாவுக்கு உடல் என்றால் அவர்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை -பிறகு ஏன் வேதங்களில் சிலருக்கு மட்டும் சில செயல்களில் தகுதி உண்டு, சிலருக்கு இல்லை என்று கூறப் படுகிறது?
6-அநுஜ்ஞா பரிஹாதரௌ ् தே₃ஹ ஸம்ப₃ந்தா₄த் ஜ்யோதிராதி₃வத்
அநுஜ்ஞா பரிஹாதரௌ
– அநுஜ்ஞா அநுமதி. பரிஹாரம் அநுமதி யின்மை . வேதத்தில் சிலருக்கு மட்டும் சில செயல்களைச் செய்ய அநுமதியும், சிலருக்கு அது தவிர்க்கப் படுவதும்
தே₃ஹ ஸம்ப₃ந்தா₄த் – (அவனவன் முன் வினைகளின்படி வெவ்வேறு விதமான) உடலோடு உள்ள தொடர்பால்
ஜ்யோதிராதி₃வத் – நெருப்பு முதலானவற்றைப் போல.
நெருப்பு ஒன்றாக இருந்தாலும், ஒருவர் வீட்டிலிருந்து நெருப்பு வாங்கிக் கொள்வோம், மயானத்திலிருந்து வாங்கிக் கொள்ள மாட்டோம் – தாழ்ந்த பொருளோடு தொடர்பு பட்டதால்.

(ஆதி -அன்னம்-பெருமாள் அமுது செய்து அருளிய ஒன்றே கொள்ளுகிறோம் – –உச்சிஷ்டம் -சிலர் இடம் தான் கொள்ளுகிறோம் -சிலர் இடம் கொள்ள மாட்டோம் -)

கேள்வி – பல ஜீவாத்மாக்கள் உள்ளார்கள் என்றால் ஒருவர் இன்ப துன்பங்களை மற்றொருவர் ஏன் அநுபவிப்பதில்லை ?
பதில் – 7-அஸந்ததே : ச அவ்யதிகர: – “அணுவான படியாலும் வேறான படியாலும் கலப்பு இல்லை ”
பரமாத்மாவே தான் அனைத்து ஜீவாத்மாக்கள் என்றாலோ ஜீவாத்மாக்கள் அநைவரும் விபுக்கள் என்றாலோ தான் எல்லாரும் எல்லா உடல்களோடும் தொடர்புள்ளபடியால் இன்ப துன்பங்கள் அனைவருக்கும் வரும், எங்கள் மதத்தில் ஜீவாத்மாக்கள் தனித் தனியான படியாலும் அணுவானவரான படியாலும் இந்த தோஷம் வராது –

மற்ற மதங்களில் குற்றங்கள்
பூர்வபக்ஷீ 2 –
எங்கள் மதத்திலும் ப்ரஹ்மம் அவித்₃யை என்ற தோஷத்தால் ஏற்பட்ட மயக்கத்தால் தான் ஜீவாத்மா ஆகிறார் என்கிறபடியால், அந்தந்த ஜீவனுக்கு இன்ப துன்பங்கள் தனித் தனியாக இருக்கலாமே ?
பதில் – 8- ஆபா₄ஸ ஏவ ச – “அந்தக் காரணங்கள் எல்லாம் தவறானவை”
ப்ரகாசமே வடிவமான விளக்கை இருட்டு மூடுவது என்பது விளக்கின் அழிவு தான், வேறல்ல, அதுபோல் ஜ்நாநமே வடிவமான ப்ரஹ்மத்தை அவித்₃யை (அறிவின்மை ) மூடுகிறது என்று நீங்கள் சொல்வது ப்ரஹ்மமே அழிகிறது என்று சொல்வதாகும். அது தவறானது.(ச -ஸ்ருதி ஸ்ம்ருதிகளுக்கும் பொருந்தாது)

பூர்வபக்ஷீ -3 – எங்கள் மதத்தில் உண்மையான உபாதிகளால் பிரிக்கப்பட்ட பரமாத்மாவின் பகுதிகள் தான் ஜீவாத்மா. அதனால் அவர்களுக்கு தனித் தனியாக இன்ப துன்பங்கள் இருப்பது பொருந்துமே ?
பதில் – 9- அத் ₃ருஷ்ட அநியமாத் – “அத்₃ருஷ்டத்துக்கு வரை யறை இல்லாத படியால் (பொருந்தாது)”
வெவ்வேறு உபாதிகள் வந்து பிரிக்கைக்குக் காரணமாக அத்ருஷ்டம் ஒரே பரமாத்மாவிடம் தான் இருக்கிற படியால், அதன் விளைவாக வரும் இன்ப துன்பங்கள் அனைத்துமே ஒரே பரமாத்மவுக்குத் தான் வந்து சேரும் உங்கள் மதத்திலும்.

10-அபி् ₄ஸந்த்₄யாதி₃ஷு அபி ச ஏவம் – “ஸங்கல்பம் முதலானவற்றிலும் அப்படியே ”
உபாதிகள் வந்து ப்ரஹ்மத்தோடு சேர்வதற்குக் காரணமானது அத்ருஷ்டம் என்கிறீர்கள். அதற்கும் காரணமானது செயல், அதற்கு முயற்சி வேண்டும், அதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) வேண்டும். இவை அனைத்தும் ப்ரஹ்மத்திடம் தான் இருக்க வேண்டும், ஏனென்றால் இன்னும் ஜீவன் என்று ஒருவர் ஏற்படவே இல்லை . ஆக ஸங்கல்பம் முதலானவை பொதுவாக ப்ரஹ்மத்திடம் இருந்தால் எல்லா இன்ப துன்பங்களும் அவருக்கே வரும்.

11-ப்ரதே ₃ச பே₄தா₃த் இதி சேத் ந அந்தர் பா₄வாத்
ப்ரதே ₃ச பே₄தா₃த் –
அந்தந்த உபாதி₄ ப்₃ரஹ்மத்தின் வெவ்வேறு இடத்தில் சேர்கிறபடியால் இன்ப துன்பங்கள் தனி
இதி சேத் ந அந்தர்பா₄வாத் – என்று சொல்வது தவறானது, எல்லாம் ப்ரஹ்மத்தின் ப்ரதேசமான படியால் இறுதியில் அந்தந்த ப்ரதேசத்தில் அநுபவிக்கும் இன்ப துன்பங்களும் எல்லாம் ப்ரஹ்மத்தினுடைய தாகத் தான் ஆகும்.

ஆம்னாய அன்யோன்ய பாதம் -வேத முரண்பட்ட ஸ்ருதிகளை சமன்வயப்படுத்தி -இந்த பாதத்தால் வேத வ்யாஸரும் பாஷ்யகாரரும் விளக்கி அருளுகிறார்கள் -தேசிகன்

அடுத்து நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் – இரண்டாம் பாதம் -தர்க்க பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

December 14, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-2-1-ரசநாநுப்பத்த்யதி₄கரணம் தர்க்க பாதத்தின் தொடக்கம்

ஏன் மற்ற மதங்களைக் கண்டிக்க வேண்டும்?
முதல் அத்யாயத்தில் ப்ரஹ்மம் தான் உலகம் அனைத்துக்கும் ஒரே காரணம்-நிகில ஜகத் ஏக காரணம்-. என்று வேத வ்யாஸர் நிரூபித்தார்-அந்த முடிவில் தவறுகள் உள்ளன என்று மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிருதிகளின் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்ப, அவற்றுக் கெல்லாம் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தாலே விடை அளித்து, முதல் அத்யாயத்தில் நாம் எடுத்த முடிவு சரி தான் என்று நிரூபித்தார். அதற்கு மேல் தற்போது இரண்டாவது அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் எல்லாம் என்னென்ன தோஷங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்.
ஒருவர் தன்னுடைய பக்ஷத்தை முன் வைத்து, அதில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அல்லது தோஷங்களுக்கு விடையளித்தாலே தன்னுடைய பக்ஷத்தை நன்றாக நிலை நாட்டி விட முடியும். பிறகு ஏன் மற்றவர்களின் மதங்களை தவறென்று சொல்ல வேண்டும்? அதில் இருக்கும் குற்றங்களை ஏன் எடுத்துக் காட்ட வேண்டும்?என்கிற சந்தேகம் நமக்கு எழும்.
அதன் ப்ரயோஜனத்ணத ஸ்வாமி ராமானுஜர் காட்டுகிறார்
-நம்முடைய மதம் சரியானது என்பதை மட்டும் காட்டி நிறுத்தி விட்டால், சிறந்த பண்டிதர்கள் எல்லா மதங்களையும் சீர் தூக்கிப் பார்த்து செயல்படும் பொழுது,அவர்களும் வேதாந்தத்தின் கருத்து தான் சரியானது- மற்ற மதங்கள் தவறானவை என்று புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் சாதாரணமான பாமர மக்கள், மற்ற மதங்களைப் பார்க்கும் போது, அவற்றில் சரியான யுக்திகள் இல்லை என்று புரிந்து கொள்ளாமல், ஒரு வேளை இந்த மதங்களும் சரியாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்ததென்றால், வைதிகமான வேதாந்தத்தில் சொல்லப்பட்ட சித்தாந்தத்தை அறியாமல் பின்பற்றாமல் போய் விடுவார்கள். அதனால் வாழ்க்கையில் அவர்களுக்கு பேரிழவு ஏற்படும். அதனால் மக்களின் நன்மைக்காக தன்னுடைய பக்ஷத்தை சரி என்று சொல்வவதாடு நிறுத்தாமல்,
வேதத்துக்கு புறம்பான மற்ற மதங்களிலும் யுக்திகளின் அடிப்படையில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை வேதவ்யாஸர் இந்த பாதத்தில் காட்டுகிறார்
.
இந்த பாதத்துக்கு தர்க்க பாதம் என்று பெயர். தர்க்கம் என்றாலே யுக்திகளின் அடிப்படையில் செய்யப்படும் வாதம். அப்படி யுக்திகளால் மற்ற மதங்களை இந்த பாதத்தில் தகர்க்கிறார்.

ஸாங்க்ய மதத்தின் சுருக்கம்
2-2-1-ரசநாநுப்பத்த்யதிகரணம் – இ
ந்த பாதத்தின் முதல் அதிகரணம், ரசனானுபத்தி அதிகரணம். இந்த அதிகரணத்தில் ஸாங்க்யர்களின் மதத்தில் இருக்கும் தோஷங்களை எல்லாம் வேத வ்யாஸர் எடுத்துக் காட்டுகிறார்.
ஸங்கதி –
ஏன் முதலில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்க வேண்டும்? பௌத்தம், ஜைனம், முதலான மற்ற மதங்கள் எல்லாம் இருக்கின்றனவே ? என்றால் – ஸாங்க்ய மதத்தில் தான் வேதாந்தம் மதத்தோடு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 24 அசேதன தத்துவங்களை ஏற்கிறார்கள். ஸத் கார்ய வாதத்தை ஏற்கிறார்கள். அதனால் இதுவும் சரியான மதம் தான் என்கிற ஒரு மயக்கம் மக்களுக்கு ஏற்படுவது சுலபம். அதனால் முதல் முதலில் அந்த
மதத்தைத் தான் தவறு என்று நிரூபிக்கிறார்.

முன்னமே முதல் பாதத்திலேயே ஸாங்க்ய மதத்தைத் தவறு என்று சொல்லி இருந்தாலும், அதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது.ஸ்மிருதி பாதத்தில் வேத வாக்கியங்களே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்லுகின்றன என்று அவர்கள் கேள்விகளை எழுப்ப, அந்த வேத வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை என்பது வரை மட்டும் தான் நிரூபித்திருந்தார். இப்போதுதான் ஸாங்க்ய மதத்திலேயே என்ன தோஷங்கள் இருக்கின்றன என்பதை வேதவ்யாஸர் காட்டுகிறார். ஸாங்க்யர்களின் மதத்தைச் சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்.
இந்த உலகத்தில்இரண்டே பொருட்கள் தான் இருக்கின்றன: பிரதானம் அல்லது மூலப் ப்ரக்ருதி என்று அழைக்கப் படுகிற அறிவற்ற அசேதனப் பொருள் ஒன்று. புருஷன் என்று அழைக்கப் படுகிற ஞானமே வடிவமான ஆத்மாக்கள் இரண்டாவது வகை
இதில் உலகத்தைப் படைப்பது ப்ரக்ருதி. ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று பொருட்களும் சமமான அளவில் சேர்ந்து இருக்கும் போது, அதற்குப் ப்ரக்ருதி -பிரதானம் என்கிற பெயர் வழங்கப்படுகிறது.(நாம் இவற்றை குணங்கள் பண்புகள் -சாங்க்யர் பொருள்கள் என்கிறார்கள் ) சிருஷ்டியின் போது இந்த சத்துவம், ரஜஸ், தமஸ் என்பவை சம நிலையை இழந்து, ஏற்றத் தாழ்வுகளோடு இருக்கின்றன. அதனால் தான் ப்ரக்ருதியிலிருந்து மகான், அதிலிருந்து அஹங்காரம், அந்த அஹங்காரத்தில் ஸாத்விகமான அஹங்காரத்திலிருந்து 11 இந்திரியங்கள். தாமஸமான அஹங்காரத்திலிருந்து ஐந்து தன்மாத்திரங்களும், ஐந்து பூதங்களும் உண்டாக்கப் படுகின்றன. ஆக, மொத்தம் அசேதனப் பொருட்கள் 24 வகைகளை உடையவை .

ஸாங்க்ய மதத்தின் கண்டனம்
புருஷன் என்பவர் ஜ்ஞானமே வடிவமானவர். எந்த மாறுபாடுகளும் இல்லாதவர். எந்த செயல்களையும் செய்யாதவர்.எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். ஒவ்வொரு சரீரத்தை இயக்குவதற்கும் ஒவ்வொரு ஆத்மா, அதாவது புருஷன் இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.
சம்சாரம் –ப்ரக்ருதியும் புருஷனும் மிகவும் நெருக்கமாக சேர்ந்து இருக்கிறபடியாலே , புருஷனிடம் இருக்கக் கூடிய அறிவு ப்ரக்ருதியில் ஏறிடப்படுகிறது. ப்ரக்ருதியில் இருக்கும் செயல்படும் தன்மை புருஷனிடம் ஏறிடப்படுகிறது. எப்படி ஒரு சிவப்பான புஷ்பத்தை வெள்ளை பளிங்கு கல்லுக்கு அருகிலே கொண்டு வந்தால், அந்த சிவப்பு நிறம் பளிங்குக் கல்லில் இருப்பது போல் தோற்றம் அளிக்குமோ , அதே போல் தான். இதற்கு அத்தியாசம் என்று பெயர். இதன் காரணமாகத் தான் நான் பார்க்கிறேன். நான் ஓடுகிறேன். நான் நிற்கிறேன். நான் அறிவாளி. முதலான எல்லா அறிவுகளுமே ஏற்படுகின்றன.இது தான் சம்சாரம் என்று சொல்லப்படுகிறது.
மோக்ஷம் –
எப்போது ஒரு ஆத்மா நான் வேறு ப்ரக்ருதி வேறு, எனக்கு இந்த தன்மைகள் எதுவுமே கிடையாது, நான் தனித்து இருக்கக் கூடியவன். என்று புரிந்து கொள்ளுகிறானோ , அப்போது முக்தியை அடைகிறான் என்று கூறுகிறார்கள்.

(பரம அணு ஜகத் காரணம் -நியாய வைசேஷிகர் மதம்-bottom up -இதில் –அந வஸ்தா தோஷம் வரும் – சம்யோகம் சேர்க்கைக்கு ஆறு கோணங்கள் அம்சங்கள் பார்ஸ்வம் இருக்க வேண்டுமே -பரம அணுவுக்கு இவை இல்லையே —சுகம் துக்கம் மோகம் இவை கொண்ட உலகப்பொருள்களைக் காண்கிறோம் -இது போல் தானே காரணப் பொருளும் இருக்க வேண்டும்ப்ரக்ருதி தான் காரணம் -பிரிந்து பொருள்கள் உண்டாகின்றன -top down–நாமும் இதுவே -ஆனால் ப்ரஹ்மாத்மக பிரகிருதி என்கிறோம்)

இந்த மதத்தை 9 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் வ்யாஸர் கண்டிக்கிறார்.
1–ரசநா அனுபபத்மே: ச ந அநுமானம் ப்ரவ்ருத்மே: ச
ந அநுமானம் –
அநுமானத்தால் அறிப்படும் ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல
ரசநா அனுபபத்மே: ச- ஒரு சேதனனால் இயக்கப் படாத அசேதனப் பொருள் எதையும் உண்டாக்க இயலாதபடியாலும்
ப்ரவ்ருத்மே: ச – சேதனனால் இயக்கப்படும் போது மட்டுமே அசேதனம் கார்யம் செய்வதைக் காண்கிற படியாலும்
ஒரு கல் தானாக வீடாக மாறுவதில்லை , கட்டை தானாக நாற்காலியாக மாறுவதில்லை . ஜ்ஞாநமுடைய ஒரு சேதனன் அதை இயக்கினால் தான் எதையும் அசேதனத்தால் உண்டாக்க முடியும் என்று உலகத்தில் நாம் காண்கிறோம். அதனால் யாராலும் இயக்கப்படாத ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி இவ்வுலகைப் படைத்திருக்க இயலாது.
மேலும், பல பொருட்கள் ஜகத் காரணமாக இருந்தால் தோஷம் ஏற்படும், அதனால் ப்ரக்ருதி என்ற ஒரே பொருள் தான் ஜகத் காரணமாக இருக்க வேண்டும் என்று ந்யாய மதத்தைக் கண்டிக்கும் நீங்களே , ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று பொருட்களை ஜகத் காரணம் என்கிறீர்கள். இது உங்கள் கூற்றுக்கே முரண்பட்டது.

(இரண்டு இடத்திலும் தர்சனம் -அந்வயம் வ்யதிரேகம்–சேதனனால் இயக்கப்படும் மூலப் பிரக்ருதியில் இருந்து ஸ்ருஷ்டிக்கப் படுவதையும் செயல்படுவதையும் காண்கிற படியாலும்-சேதனனால் இயக்கப்படாத மூலப் பிரக்ருதியில் இருந்து ஸ்ருஷ்டிக்கப் படுவதையும் செயல்படுவதையும் காண்கிறது அல்லாத படியாலும்)

கேள்வியும் பதிலும்
2-பயோம்பு₃வத் சேத் தத்ராபி –
“பால் மற்றும் தண்ணீரைப் போல என்றாால், அங்கும் கூட”
இங்கு பூர்வ பக்ஷி ஒரு கேள்வி எழுப்புகிறார் – உலகத்தில் பால் தயிராக மாறுவது தானாகத் தான் நடக்கிறது. எந்த சேதனனும் அதில் முயல்வதில்லை – அதே போல், மழை நீர் ஒரே ரசத்தோடு வானத்திலிருந்து கீழே விழுந்தாலும், அது தேங்காய், எலுமிச்சை , புளி, முதலான வெவ்வேறு பொருள்களுக்குள் செல்லும் போது, வெவ்வேறு ரசங்களை அடைகிறது. இதுவும் தானாக நடக்கக் கூடிய மாறுபாடு தான். அதனால், சேதனனால் இயக்கப் படாத போதும், பாலும் தண்ணீரும் மாறுபாடுகளை அடைவது போல், மூலப்ப்ரக்ருதியும் எந்த ஒரு சேதனனாலும் இயக்கப்படாமலேயே உலகத்தைப் படைக்கலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

பயோம்புவத்பயஸ் என்றால் பால், அம்பு என்றால் தண்ணீர், பயோம்புவது – பாலையும் தண்ணீரையும் போல்.
இதுவரை பூர்வ பக்ஷியின் கேள்வி.
சேத் – “என்று நீ சொன்னாய் என்றால்” என்று வேத வ்யாஸர் இதை அனுவாதம் செய்கிறார்.
தத்ராபி –இது வ்யாஸரின் பதில். “அங்கும் கூட” என்று பொருள். அதாவது, பால், தண்ணீர் முதலானவற்றுக்கும் சேர்த்து தான் இப்போது விவாதம் நடத்தப்படுகிறது. எந்த ஒரு அசேதனப் பொருளும் சேதனனின் ஈடுபாடு இல்லாமல் முயற்சி இல்லாமல் ஒரு மாறுபாட்டை அடைய முடியாது என்று தான் சொல்லுகிறோம். அதனால், இதுவரை பாலோ ,தயிரோ , தானாக மாறுகிறதா? ஒரு சேதனனால் இயக்கப் படுகிறதா? என்பது முடிவு ஆகாத படியால், அதை எடுத்துக் காட்டாகச் சொல்லி தற்போது ப்ரக்ருதி தானாக படைக்கலாமே என்று சொல்வது பொருந்தாது.
ஸந்தேகம் – முன்னால் உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் இதே பால் முதலானவை வேறு துணையை எதிர் பார்க்காமல் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்வது போல் பரமாத்மாவும் ஸஹ காரி காரணங்கள் (துணைகளும்) இல்லாமலேயே உலகத்தைப் படைக்கக் கூடும் என்றார். இப்போது பால் தானாக படைக்க முடியாது என்கிறாரே ?
பதில் – மண் குடமாக மாற வேண்டும் என்றால், ஒரு சக்கரத்தின் தேவை உண்டு. நூலைத் துணியாக மாற்ற வேண்டும் என்றால், தரி என்கிற எந்திரத்தின் தேவை உண்டு. அதைப்போல், பாலுக்கு தயிராக மாறுவதற்கு வேறு எந்த அசேதனப் பொருளின் தேவையும் இல்லை என்று அங்கு சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் சேதனனான பரமாத்மாவால் இயக்கப் பட்டு தான் பால் மாறுகிறது என்று வேத வ்யாஸர் கூறுகிறார். அதனால், இதில் எந்த முரண்பாடும் இல்லை

2.2.1 ரசநாநுப்பத்த்யதி₄கரணம்-ஸாங்க்ய மதத்தை நிராகரித்தல்-பரமாத்மாவால் இயக்கப்படாமல் ப்ரக்ருதி படைக்க இயலாது-ரசநாநுபபத்த்யதிகரணத்தில் ஸாங்க்ய மதத்தை நிராகரித்து வருகிறார் வேத வ்யாஸர்.

3-வ்யதிரேக அநவஸ்தி₂தே : ச அநபேக்ஷத்வாத்
அநபேக்ஷத்வாத்
– உலகைப் படைப்பதற்கு ப்ரக்ருதி பரமாத்மாவை எதிர்பார்க்காது (தானே படைக்கும்) என்றால்
வ்யதிரேக – ஸ்ருஷ்டி நிலைக்கு எதிரான ப்ரளய நிலையே இருக்க வேண்டிய படியால்
அநவஸ்தி₂தே : ச – இப்போது நாம் பார்க்கும்படி உலகம் இருக்காமல் போக வேண்டும்
ப்ரதானம் அறிவற்றதானபடியால் ஒரு காலத்தில் ப்ரளயம் பிறகு ஒரு காலத்தில் ஸ்ருஷ்டி என்பது பொருந்தாது.-பரமாத்மாவால் இயக்கப்படும் போது தான் இந்த வேறுபாடுகளும் பலவிதமான ஸ்ருஷ்டிகளும் பொருந்தும்

4-அந்யத்ர அபா₄வாத் ச ந த்ருணாதி₃வத்
அந்யத்ர
–வேறு இடங்களில்
அபா₄வாத் இல்லாததால்
ந த்ருணாதி₃வத் ச புல் -முதலான வற்றைப் போலும் அல்ல
பூர்வபக்ஷீ – ஒரு பசு மாட்டால் உண்ணப்பட்ட புல்லானது தானாகவே தான் பாலாக மாறுகிறது. அங்கு எந்த ஜீவனாலும் அந்த புல் இயக்கப்படுகிறது (அதிஷ்டானம் செய்யப்பட்டுள்ளது) என்று சொல்ல முடியாது. அந்த பசுவின் உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவுடன் தொடர்பு மட்டும் தான் புல்லுக்கு இருக்கிறது, ஆனால்
இயக்கப்படுவதில்லை . அதே போல் ஜீவாத்மாவால் இயக்கப்படாத போதும் ஜீவாத்மாவின் தொடர்பால் மட்டுமே ப்ரக்ருதி உலகத்தை படைக்கிறது என்று கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்-அதிஷ்டானம் வேண்டாம் ஸந்நிதானம் தொடர்பே போதுமே என்பர்
ஸித்தாந்தி – இந்த எடுத்துக் காட்டே தவறானது. புல்லை பசு மாடு உண்டால் தான் அது பாலாக மாறுகிறதே தவிர காளை உண்டாலோ அல்லது பூமியில் போடப்பட்டிருந்தாலோ அது பாலாக மாறுவதில்லை . எனவே இதைப் போன்ற இடங்களிலும் ஈஸ்வரனால் அதிஷ்டானம் செய்யப்பட்டு இயக்கப்படுகிற புல் தான் பாலாக மாறுகிறது,-அவர் தான் அப்படி மாற வைக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும். அதனால் இதே போல் ப்ரக்ருதி உலகத்தைப் படைக்கலாமே என்ற கேள்வியும் பொருந்தாது. ஒரு ஜீவனால் இயக்கப்படாக மூல ப்ரக்ருதி உலகத்தை உண்டாக்கவே முடியாது.

நெருக்கம் மட்டும் போதாது, இயக்கம் வேண்டும்
5–புருஷ அச்மவத் இதி சேத் ததா₂பி –
“புருஷன் மற்றும் கல் போல் என்றால், அப்போதும்கூட”
சைதந்யம் இல்லாத மூல ப்ரக்ருதியும் சைதந்யமே வடிவான ஜீவாத்மாவுடன் உள்ள தொடர்பால் மட்டுமே இயங்கலாம் என்று நிரூபிக்க பூர்வபக்ஷீ இரண்டு எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார்.
புருஷ அச்மவத் – கண் தெரியாத ஒரு மனிதன் தானாக இயங்க முடியாது.-ஆனால், கண் தெரியக் கூடிய காலில்லாத வேறொரு மனிதரின் உதவி யிருந்தால் அவருடைய ஜ்ஞானத்தைப் -பார்வையைப் பயன்படுத்தி கண் தெரியாதவரும் இயங்க முடியும். அதே போல் ஒரு இரும்புத் துண்டு தானாக நகர முடியா விட்டாலும் ஒரு காந்தம் அருகில்
வந்ததென்றால் அதனுடைய ஈர்ப்பால் அதன் உதவியோடு நகர்வதைப் பார்க்கிறோம். அதே போல் சைதன்யமே வடிவமான ஜீவாத்மாவின் உதவியால் ப்ரக்ருதி இயங்கலாமே என்று பூர்வ பக்ஷீ கேட்க்கிறார்.
ததா₂பி – இது வ்யாஸரின் விடை
. “அப்போதும் கூட ப்ரக்ருதி இயங்க முடியாது என்று முன்னால் சொன்ன தோஷம் அப்படியே தான் இருக்கும்” என்று பொருள்
கண் தெரியாதவன் காலில்லாதவனுடைய உதவியை எடுத்துக் கொள்ளும் பொழுது காலில்லாதவன் வழியைப் பார்த்து அதை உபதேசிக்க வேண்டும்; அதைக் கண் தெரியாதவன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்; பிறகு இருவரும் சேர்ந்து நடந்து செல்லலாம். அதே போல் இரும்புத் துண்டை இழுக்கும் பொழுது அந்த காந்தம் ஓரளவுக்கு அருகிலே எடுத்து வரப்பட வேண்டும்; பிறகு தான் ஈர்க்கும். அதே போல ஜீவாத்மாவின் உதவியால் ப்ரக்ருதி இயங்குகிறது என்றால், ஜீவாத்மா அதற்காகச் சில செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் மதத்திலோ ஜீவாத்மா எந்தச் செயலும் செய்யாதவர் என்று சொல்கிறீர்கள். அதனால் அவருடைய உதவியால் ப்ரக்ருதி இயங்குவது என்பது பொருந்தாது.
ஜீவன் எந்த உதவியும் செய்ய வேண்டாம், அவர் இருப்பதே போதும் ப்ரக்ருதியை இயங்க வைக்க என்று சொன்னால், ஜீவனுக்கும் ப்ரக்ருதிக்கும் இருக்கும் தொடர்பு நித்யமானதானபடியால் எப்போதுமே ஸம்ஸாரம் தான் இருக்க வேண்டும், என்றைக்குமே மோக்ஷம் என்பதை இந்த ஜீவன் அடையவே முடியாது. அல்லது இந்த ஜீவன் எப்போதுமே முக்தனாகத் தான் இருக்கிறார், இவருக்கு ஸம்ஸாரக் கட்டுப்பாடு என்பதே ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது இரண்டுமே உங்கள் ஸித்தாந்தத்திற்கு முரண்பட்டது. அதனால் நீங்கள் சொன்ன எடுத்துக் காட்டுகளின் படி ஜீவனின் உதவியால் ப்ரக்ருதி இயங்குகிறது என்று சொல்வதும் பொருந்தாது

மேலும் சில தோஷங்கள்
6-அங்கி₃த்வ அநுப்பத்தே : ச
– அங்கி₃த்வம் பொருந்தாத படியாலும்
இந்த ஸூத்ரத்தில் வ்யாஸர் ஸாங்க்ய மதத்தில் இருக்கும் மற்றொரு ஒவ்வாமையைக் காட்டுகிறார்.
உங்கள் மதத்தில் – ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணக்களுக்குள்ளே ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், அதில் எந்த குணம் உயர்ந்திருக்கிறவதோ அது அங்கி, மற்ற இரண்டும் அதற்கு அங்கங்களாக இருக்கின்றன. இப்படி அங்கம்-அங்கி என்ற தன்மையோடு கூடிய முக்குணங்கள் தான் உலகத்தில் எல்லா செயல்பாடுகளுக்கும் காரணம் -என்று சொல்கிறீர்கள். ஆனால் ப்ரளய காலத்தில் மூலப் ப்ரக்ருதியில் ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் சமமான நிலையிலேயே இருக்கின்றன என்று நீங்கள் சொல்கிற படியால், அப்போது ஒரு குணத்தை அங்கி என்றும் மற்றவற்றை அங்கம் என்றும் சொல்லவே முடியாது, ஏற்றத் தாழ்வுகளே இல்லாததால். அதனால் அங்கம் -அங்கி என்ற தன்மை இல்லாதபோது மூலப் ப்ரக்ருதி இயங்கியிருக்கவே கூடாது, அதிலிருந்து
இந்த உலகம் உண்டாகியிருக்கவே முடியாது.
பிரளய காலத்திலும் முக்குணங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்று சொன்னால், அப்போது அந்த காலத்திலும் ஸ்ருஷ்டி தான் நடந்திருக்க வேண்டும், எப்போதுமே ஸ்ருஷ்டி தான் நடந்து கொண்டிருக்க வேண்டும், ப்ரளயம் என்ற ஒரு நிலையே ஏற்படாமல் போய்விடும்.

7-அந்யதா அநுமிபதௌ ச ஜ்ஞநா சக்தி வியோகா₃த்
அந்யதா₂ அநுமிபதௌ ச –
இதுவரை சொல்லப்பட்டதை விட வேறு விதமாக, வேறு தன்மைகளை உடையதாக நீங்கள் மூல ப்ரக்ருதியை அநுமானம் செய்தாலும் கூட
ஜ்ஞநா சக்தி வியோகா₃த் – அப்போதும் அதற்கு ’அறிவுடைமை ’ என்ற சக்தி இல்லாதபடியால் இதுவரை சொன்ன தோஷங்கள் அனைத்துமே அந்த ப்ரக்ருதிக்கும் பொருந்தும். அதாவது, அறிவற்ற ப்ரக்ருதியால் எப்போது ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இயலாது, பல விதமான பொருள்களைக் கொண்ட உலகைப் படைக்க இயலாது, ஒரு காலத்தில் மறுபடியும் ப்ரளயம் ஏற்படும் என்றும் சொல்ல இயலாது அதற்குக் காரணம் காட்ட முடியாதபடியால். இந்த தோஷங்கள் அனைத்தும் அந்த மதங்களிலும் இருக்கவே செய்யும் என்று பொருள்

முரண்பாடுகளின் மூட்டை
8-அப்யு ₄பக₃மே அபி அர்தா₂பா₄வாத்
– “ஏற்றுக் கொண்டாலும் பயனில்லாத படியால்”அநுமானத்தால் நீங்கள் சொன்னபடி ப்ரதானம் – மூல ப்ரக்ருதி என்ற ஒரு பொருளை நிரூபிக்க முடியும் என்று ஒப்புக் கொண்டாலும்கூட, அப்படி ஒரு ப்ரக்ருதியை நிரூபிப்பதால் எந்தப் ப்ரயோஜனமும் (பயனும்) இல்லாதபடியால் அதை ஏற்கத் தேவையில்லை என்று வ்யாஸர் கூறுகிறார்.
ஸாங்க்ய மதத்தின்படி மூல ப்ரக்ருதியின் பயன் என்பது “ஜீவாத்மாவை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்துவதும், அவன் மோக்ஷம் அடைவதற்கு உதவுவதும்” என்று கூறுகிறார்கள். ஆனால் இது பொருந்தாது. ஜ்ஞாநமே வடிவெடுத்தவராய், எந்த செயல்பாடுகளும் அற்றவராய், மாறுபாடுகள் இல்லாதவராய், தூய்மையாக இருக்கும் ஜீவாத்மாவுக்கு
ஸம்ஸாரத்தில் கட்டுப்படுதல் என்பதும் பொருந்தாது, அதிலிருந்து விடுபட்டு முக்தி அடைவது என்பதும் பொருந்தாது. அவர் எப்போதுமே முக்தராக (விடுபட்டவராக) தான் இருக்க வேண்டும். பிறகு ப்ரக்ருதியின் பயன் என்ன உள்ளது?
9-விப்ரதிஷேதா₄த் ச அஸமஞ்ஜஸம் – “முரண்பாடுகள் உள்ள படியாலும் பொருத்தமற்றது”
ஸாங்க்ய மதத்தில் பல இடங்களில் முரண்பட்ட கருத்துகளைக் கூறுகிறார்கள்.
1-புருஷன் எனப்படுகிற ஜீவாத்மா முக்தியடைவதற்கு மூலப் ப்ரக்ருதி கருவியாக இருக்கிறது என்று ஓரிடத்தில் சொல்கிறார்கள். ஆனால் மற்றொரிடத்தில், புருஷன் எந்த விதமான மாறுபாடுகளும் அற்றவரான படியால் அவர் எந்தச் செயல்களையும் செய்வது கிடையாது. அவருக்கு முக்தி என்பதே இயற்கையான தன்மை . மாறாக ப்ரக்ருதி தான் இந்த
ஸம்சாரத்தில் கட்டுப்படுகிறது, அதிலிருந்து விடுதலை அணடவதற்கான முயற்சிகளையும் ப்ரக்ருதி தான் செய்ய முடியும், இறுதியில் மோக்ஷமும் ப்ரக்ருதிக்குத் தான் என்றும் சொல்கிறார்கள். இவை இரண்டும் முரண்பட்டவை –
2-எப்போதும் செயல்படாத, மாறுபடாத ஜீவாத்மா ப்ரக்ருதிக்கு ஸாக்ஷியாகவும், அதைப் பார்ப்பவராகவும், அதை அனுபவிப்பவராகவும் தன்னைத்தானே ப்ரமிக்கிறார் (நினைத்துக் கொள்கிறார்) என்று சொல்லுவதும் பொருந்தாது. எந்தச் செயலையும் செய்யாதவர் ’ப்ரமம்’ என்று சொல்லப்படுகிற ஒரு வித ஜ்ஞானத்தையும் அடைய முடியாது.
3-இந்த ப்ரமம் ப்ரக்ருதிக்குத் தான் ஏற்படுகிறது என்றும் சொல்ல முடியாது, ஜ்ஞானமுடையவரான ஒருவருக்குத் தான் ப்ரமம் ஏற்பட முடியும், அறிவற்ற ப்ரக்ருதிக்கு இது பொருந்தாது.
இதைப் போல் எத்தனையோ இடங்களில் முரண்பாடுகள் இருக்கிறபடியாலும் ஸாங்க்ய மதம் பொருத்தம் அற்றது.

—-

2.2.2 மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம்-பரமாணுக்களால் உலகைப் படைக்க முடியாது

(கணாதர் – -வைசேஷிக மதம்-கௌதமர்- நியாய மதம் -இரண்டும் சேர்ந்து இப்பொழுது நியாய மதமாகிறது)

பரமாணுக்களே ஜகத் காரணம் என்னும் வாதம்
2-2-2-மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணத்தில் அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதி என்னும் பொருள் தான் உலகத்தைப் படைக்கிறது என்று சொன்ன ஸாங்க்யர்களின் மதம்
தவறென்று நிரூபிக்கப்பட்டது. அதை அடுத்து, அநுமானத்தால் அறியப்படும் பரமாணுக்கள் தான் உலகத்துக்குக் காரணம் என்று சொல்லும் வைஸேஷிகர்களின் மதம் நிராகரிக்கப் படுகிறது.
பரமாணுக்களை அநுமானத்தால் நிரூபிக்கிறார்கள் வைஸேஷிக மதத்தைச் சேர்ந்தவர்கள் –

1-குடம், மேஜை , புத்தகம், துணி முதலான கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளை உடையவையாகத் தான் உள்ளன. அதனால் “எதெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ
அதெல்லாம் பகுதிகளை உடையது” என்று வ்யாப்தியைத் தெரிந்து கொள்கிறோம்.

2-உலகத்தில் கண்ணுக்குத் தெரியும் பொருள்களுக்குள் மிக நுண்ணியது எதுவோ அதை எடுத்துக் கொள்வோம். அதுக்குத் த்ர்யணுகம் என்று பெயர். அதுவும் கண்ணுக்குத் தெரிகிறதால்
பகுதிகளால் ஆக்கப் பட்டிருக்க வேண்டும். அந்த கண்ணுக்குத் தெரியாத பகுதிகளுக்கு த்₃வ்யணுகங்கள் என்று பெயர்.

3-அந்த த்₃வ்யணுகங்களுக்கும் பகுதிகள் இருக்க வேண்டும். அவை தான் பரமாணுக்கள். அவை தான்
மிக நுண்ணியவை .பரமாணுக்கள் நித்யமானணவ -அதாவது உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை . ப்ரளயம் ஏற்பட்டால் கூட அழியாதவை . அவற்றை விட சிறிய பொருளே கிடையாது,
அவற்றுக்குப் பகுதிகளும் கிடையாது.

4–இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுகம் உண்டகும்.மூன்று த்₃வ்யணுகங்கள் சேர்ந்தால் த்ர்யணுகம் உண்டாகும். இப்படித் தான் உலகத்தில் நாம் காணும் எல்லாப் பொருள்களும் உண்டாக்கப் படுகின்றன என்பது வைஸேஷிகர்களின் மதமாகும்.-(அணு – தீர்க்கம் -க்ரஸ்வம்- மஹத் -நான்கு நிலைகள் என்பர்)

பரமாணுக்கள் சேரவே முடியாது
ஸித்தாந்தம் – இந்த மதத்தை இவ் வதிகரணத்தில் 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் கண்டிக்கிறார்.
1– மஹத் ₃தீ₃ர்க₄வத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்₄யாம்
ஹ்ரஸ்வ பரிமண்டலாப்₄யாம் – ’பரி மண்டலம்’
எனப்படும் பரமாணுவிடமிருந்தும் ’ஹ்ரஸ்வம்’ எனும்
த்₃வ்யணுகத்திலிருந்தும்
மஹத்₃தீ₃ர்க₄வத் – ’மஹத்₃தீ₃ர்க₄ம்’ எனப்படும் த்ர்யணுகம் உண்டாகிறது என்பது
(அஸமஞ்ஜஸம்) – பொருந்தாது (இந்தச் சொல் முன் ஸூத்ரத்திலிருந்து இங்கு சேர்க்கப்படுகிறது-அனுஷங்கம்)
வா – (etc)இது போல் இவர்கள் சொல்லும் மற்ற பல வாதங்களும் பொருந்தாதவை-

வ்யாஸரின் கருத்து – இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுகம் உண்டாகிறது என்று சொல்கிறீர்கள்.-இரண்டு பொருள்கள் தொட்டுக் கொள்ள வேண்டும்-சன்யோகம்– -சேர வேண்டும் என்றால் ஒரு பொருள் தனக்கு இருக்கும் 6 பக்கங்களில் (முன், பின், இடது, வலது, மேல், கீழ்) ஏதோ ஒரு பக்கத்தால் மற்றொரு பொருளைத் தொட வேண்டும். அப்போது தான் பகுதிகளை விட பெரிய அளவுடைய ஒரு பொருள் உண்டாக முடியும்.

ஆனால் பரமாணுக்களுக்கோ பகுதிகளே கிடையாது என்று நீங்கள் சொல்வதால் அதற்கு இந்த 6 பக்கங்களும் இருக்க முடியாது. எனவே பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுக்கத்தை உண்டாக்குவதே
பொருந்தாத ஒன்று. பகுதிகள் இல்லாமல் சேர்ந்தால், எல்லா பரமாணுக்களும் ஒரே இடத்தில் தான் இருக்க முடியும், அப்படியானால் தன்னை விடப் பெரிதான ஒரு பொருளை உண்டாக்க முடியாது.
எனவே வைஸேஷிகர்கள் சொல்லும் இந்த வாதம் பொருந்தாது.

பரமாணுக்களில் செயலே ஏற்படாது
2- உப₄யதா₂பி ந கர்ம அத: தத₃பா₄வ:
உப₄யதா₂பி –
இரண்டு வழிகளிலும்
ந கர்ம – உலகத்தை உண்டாக்கும் பரமாணுக்களுக்கு இடையில் சேர்க்கையை உண்டாக்கும்
செயல் ஏற்பட முடியாது
அத: தத₃பா₄வ: – ஆகையால் பரமாணுக்கள் சேர்ந்து உலகத்தை உண்டாக்குவது என்பது இல்லை

எந்த இரண்டு பொருள்கள் சேர வேண்டும் என்றாலும் அவற்றில் ஒரு அசைவு – நகர்பு-செயல் உண்டாக வேண்டும். (இங்கு கர்மம் செயல்பாடு)அதைப் போல் பரமாணுக்கள் சேர வேண்டும் என்றால், அவற்றில் ஒரு செயல் உண்டாக வேண்டும். அது எந்தக் காரணத்தால் உண்டாகிறது என்பதற்கு வைஸேஷிகர்கள் கூறுவது –’அத்ருஷ்டத்தால் ஏற்படுகிறது’ என்று.(அக்னி மேல் நோக்கியே எரிகிறது -வாயு சஞ்சரிக்கும் காரணம் தெரியாது -அதே போல் முதல் செயல்பாட்டுக்கும் காரணம் தெரியாது -அத்ருஷ்டம் என்பர் ) அந்த அத்ருஷ்டம் யாரிடம் இருக்கிறது என்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம், ஆனால் இரண்டிலும் ஒவ்வாமை உள்ளது.

1-அத்ருஷ்டம் பரமாணுவிலேயே இருக்கிறது, அது செயலை உண்டாக்குகிறது – இது பொருந்தாது.
ஜீவாத்மா செய்யும் செயல்கள் அவரிடம் தான் பாபம் -புண்யம் என்ற அத்ருஷ்டத்தை உண்டாக்க முடியும். பரமாணுவில் உண்டாக்க முடியாது

2-அத்ருஷ்டம் ஜீவாத்மாவிடமே இருக்கிறது, அது பரமாணுக்களில் செயலை உண்டாக்குகிறது – இதுவும் பொருந்தாது, ஜீவாத்மாவிடம் இருக்கும் அத்ருஷ்டம் அவரிடம் தான் ஒரு விளைவை ஏற்படுத்த முடியுமே தவிற பரமாணுவில் ஏற்படுத்த முடியாது.

ஆகையால், இரண்டு வழிகளும் பரமாணுக்களைச் சேர வைக்கும் செயல் உண்டாக வாய்ப்பில்லை .
எனவே பரமாணுக்கள் ஒன்று சேர்ந்து தான் உலகத்தை உண்டாக்குகின்றன என்ற தத்துவமே பொருத்த மற்றது.

2.2.2 மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம்-வைசேஷிக மதத்தில் உள்ள தவறுகள்

ஸம்வாயம் என்றால் என்ன?
2-2-2-மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம் – முதல் இரண்டு ஸூத்ரங்களாவே பரமாணுக்கள் உலகத்தை உண்டாக்குகின்றன என்று வைஸேஷிகர்கள் கூறும் கருத்தைத் தவறென்று நிரூபித்தார் வ்யாஸர். இனி வேறு சில தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
3ஆவது மற்றும் 4ஆவது ஸூத்ரங்களால் வைஸேஷிகர்கள் ஏற்கக் கூடிய ’ஸமவாயம்’ என்ற ஒன்றைக் கண்டிக்கிறார். ஸமவாயம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

வைஸேஷிகர்கள் ஸமவாயம் என்று ஒரு ஸம்பந்தத்தை ஏற்கிறார்கள். ஸம்பந்தம் என்றால் இரண்டு
பொருட்களுக்கிடையே இருக்கும் தொடர்பு என்று பொருள். இரண்டு த்ரவ்யங்கள் ஒன்றொடு ஒன்று தொட்டுக் கொண்டிருந்தால் அந்த ஸம்பந்தத்துக்கு ஸம்யோகம் என்று பெயர். எடுத்துக் காட்டுக்கு, நாம் கை கூப்பும் பொழுது இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று தொடுகின்றன. அப்போது அவற்றுக்கிடையே ஸம்யோகம் என்ற தொடர்பு உள்ளது. அதற்குப் பிறகு கைகளைப் பிரித்து விடுகிறோம்.
ஒரு த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால், அதில் சில பண்புகள் (குணங்கள்), சில செயல்கள், ஜாதி முதலானவை இருப்பதைக் காண்கிவறோம். ஒரு புஷ்பத்தில் நிறம் இருக்கும், மணம் இருக்கும். ஒரு பந்து கீழே விழும் பொழுது ’விழுதல்’ என்கின்ற செயல் அந்தப் பந்திலிருக்கும். மாட்டிடம் மாட்டுத் தன்மை , மனித உடலில் மனிதத் தன்மை. குடங்களில் குடத் தன்மை என்கிற ஜாதிகள் உள்ளன. இப்படி பண்புகள், செயல்கள், ஜாதிகள் அந்தந்த பொருட்களில் இருப்பதைக் காண்கிறோம்.

அவற்றுக்கும் அந்த த்ரவ்யத்துக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதமான தொடர்பு இருக்க வேண்டும். இந்த மணம் இந்த புஷ்பத்தில் தான் உள்ளது, வேறு இடத்திலில்லை என்று தோன்றுகிறபடியால் கண்டிப்பாக அவற்றுக்கிடையே ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அந்தத் தொடர்பு ஸம்யோகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஸம்யோகம் பிரியக் கூடிய இரண்டு த்ரவ்யங்கள் ஒன்றை ஒன்று தொடும் போது மட்டும் தான் ஏற்படும். ஒரு த்ரவ்யத்துக்கும் அதிலிருக்கும் குணம் -செயல் -ஜாதிக்கும் இடையே ஸம்யோகம் என்கிற தொடர்பு இருக்காது, அதனால் புதியதாக வேறொரு விதமான தொடர்பை வைஸேஷிகர்கள் கல்பிக்கிறார்கள். அதற்குத் தான் ஸமவாயம் என்று பெயர்.
இரண்டு பொருட்கள் பிரிக்க முடியாதபடி சேர்ந்து இருந்தால் அவற்றுக்கு இடையில் ஸமவாயம் என்கிற தொடர்பு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு புஷ்பத்திலிருந்து அதன் மணத்தைப் பிரிக்க முடியாது. ஒரு வேஷ்டியிலிருந்து அதன் நிறத்தைப் பிரிக்க முடியாது. ஒரு குடத்திலிருந்து குடத் தன்மை என்கிற அதன் ஜாதியைப் பிரிக்க முடியாது. அப்படி பிரிக்க முடியாமல் சேர்ந்திருக்கும் பொருட்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு ஸமவாயம் என்று சொல்கிறார்கள்

(இப்படிப் பிரிக்க முடியாத இவற்றில் ஸம்பந்தமே ஸமவாயம் -அனுமானம் பண்ணியே அறியலாம் -பிரத்யக்ஷமாக பார்க்க முடியாத ஓன்று இது -ஆகவே ஸம்யோகம் வேறு ஸமவாயம் வேறு-)

ஸமவாயத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள குறைகள்
இனி இந்த ஸமவாயம் என்பதை வ்யாஸர் கண்டிப்பதைப் பார்ப்போம்.
3-ஸமவாய அப்₄யுபக₃மாத் ச ஸாம்யாத் அநவஸ்தி₂தே :
ஸமவாய அப்₄யுபக₃மாத் ச (அஸமஞ்ஜஸம்)
– ஸமவாயத்தை ஏற்கிற படியாலும் (இந்த மதம் பொருத்த மற்றது)
ஸாம்யாத் – ஸமமான படியாலும்அநவஸ்தி₂தே : : – முடிவில்லாத படியாலும்

குணம் செயல் ஜாதி முதலானவை ஒரு பொருளில் இருப்பதாகத் தோற்றமளிப்பது ஸமவாயம் என்ற ஸம்பந்தத்தால் என்று சொன்னீர்கள். அது பொருந்தாது. அந்த ஸமவாயமும் குணம்-செயல்-ஜாதியோடு ஸமமானபடியால். அதாவது, குணம் செயல்-ஜாதிக்கு எப்படி அந்த த்ரவ்யத்தோடு ஒரு தொடர்பு தேவைப்பட்டதோ , அதே போல் ஸமவாயத்துக்கும் கூட அந்த த்ரவ்யத்வதாடு ஒரு தொடர்பு
கண்டிப்பாக தேவைப்படும். இது தான் ’ஸாம்யம்’ (ஸமத்தன்மை – ஒற்றுமை ) என்று சொல்லப்படுகிறது.
சரி, ஸமவாயத்துக்கும் அந்தத் தேவை இருந்தால் என்ன? என்று கேட்டால் – அநவஸ்தி₂தே : என்று பதில். மணத்துக்கும் புஷ்பத்துக்கும் இடையில் ஸமவாயம் என்கிற தொடர்பு உள்ளது; அந்த ஸமவாயத்துக்கும் அந்தப் புஷ்பத்துக்கும் இடையில் வேறொரு இரண்டாவது ஸமவாயத்தை (தொடர்பை ) ஏற்க வேண்டும். அந்த இரண்டாவது ஸமவாயத்துக்கும் அந்த புஷ்பத்துக்கும்
இடையில் மூன்றாவதாக ஒரு ஸம்வாயத்தை ஏற்க வேண்டும், இப்படி முடிவில்லாமல் கல்பித்துக் கொண்டே போக வேண்டும். இந்த தோஷத்துக்கு அநவஸ்தா₂ என்று பெயர். ஆகையால் ஸமவாயம் என்பதை ஏற்க இயலாது என்கிறார் வ்யாஸர்.

சரி, மணம் புஷ்பத்தோடு ஒரு தொடர்பை எதிர்பார்ப்பது போல் ஸமவாயம் அப் புஷ்பத்தோடு எந்தத் தொடர்பையும் எதிர்பார்க்காது, தானாகவே இயற்கையாக அதிலிருக்கும் என்று கொள்ளலாமே ? என்று பூர்வ பக்ஷி கேட்கலாம். அதற்கு வ்யாஸர் கூறுகிறார் – இப்படிச் சொல்வதற்கு பதிலாக ’மணம் முதலானவையே இயற்கையாக புஷ்பத்தில் உள்ளன’ என்று முதலிலேயே ஏற்றிருந்தால் ஸம்வாயம்
என்கிற ஒரு புது பொருளை ஏற்றிருக்கவே வேண்டாமே (
அப்ருதக் ஸித்தம் என்றும் நம் ஸம்ப்ரதாயப்படியே சொல்லலாம் அன்றோ). அதனால் எவ் விதத்திலும் ஸமவாயத்தை ஏற்பது பொருத்தமற்றது.

4- நித்யமேவ ச பா₄வாத் – “(இவ் வுலகம்) நிரந்தரமாகவே இருக்க வேண்டிய படியாலும்”
வைஸேஷிகர்கள் ஸமவாயம் என்ற தொடர்பு நித்யமானது,உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்கிறார்கள்.-புஷ்பத்துக்கும் மணத்துக்கும் இடையே உள்ள ஸமவாயம் நிரந்தரமானது என்றால், புஷ்பமும் மணமும் கண்டிப்பாக நிரந்தரமாக இருக்க வேண்டும். இதே போல் உலகில் அனைத்துப் பொருட்களும் நித்யமானவை என்று ஆகி விடும்.
அப்படியானால் இந்த உலகமும் அதிலிருக்கும் பொருள்கள் அனைத்தும் நித்யமானவையாக (நிரந்தரமானவையாக) இருக்க வேண்டும். ஆனால் உலகத்தில் அனைத்தும் அழிவதைக் காண்கிறோம். ஆகவே ஸமவாயம் ஏற்கப்பட முடியாது.

வேறு சில தவறுகள்
அடுத்த இரண்டு ஸூத்ரங்களால் வேறொரு கருத்தைக் கண்டிக்கிறார்.
வைஸேஷிகர்கள் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு விதமான பரமாணுக்கள் உள்ளன, அவற்றில் நிறம், சுவை , மணம், ஸ்பர்ஸம் என்ற குணங்கள் உள்ளன என்கிறார்கள். அதைக் கண்டிக்கிறார் வ்யாஸர் –
5–ரூபாதி ₃மத்த்வாத் ச விபர்ய்ய: த₃ர்ஸநாத்
ரூபாதி₃மத்த்வாத் ச –
(பரமாணுக்கள்) நிறம் முதலான பண்புகளை உடையபடியால்
விபர்ய்ய: – நீங்கள் சொல்வதற்கு நேர் மாறாகத் தான் பரமாணுக்கள் இருக்க வேண்டும்
த₃ர்ஸநாத் – அப்படியே உலகத்தில் காண்கிற படியால்
நீங்கள் பரமாணுக்கள் நித்யமானவை , மிக நுண்ணியவை , பகுதிகள் அற்றவை என்று சொல்கிறீர்கள். உலகத்தில் எந்த ஒரு பொருள் நிறம், சுவை முதலான குணங்கவளாடு இருந்தாலும், அது-அநித்யத்வம் -ஸ்தூலத்வம் -ச அவயவத்வம்- அழியக் கூடியதாக, பெரியதாக, பகுதிகளை உடையதாகத் தான் காணப்படுகிறது. எனவே , பரமாணுக்களை அநுமானம் செய்யும் போது, அவற்றுக்கும் நிறம் முதலானவை உண்டு என்றால், அவையும் அழியக் கூடியவை , பெரிதானவை , பகுதிகளோடு கூடியவை என்று தான் ஆகும். இது நீங்கள் சொல்வதற்கு நேர் முரணானது. எனவே நீங்கள் சொல்வது பொருந்தாது.

6–உப ₄யதா₂ ச தோ₃ஷாத் – “இரண்டு விதத்திலும் தோஷம் உள்ளபடியால்”
முன் ஸூத்ரத்தில் சொன்ன தோஷத்திலிருந்து தப்பிக்க பரமாணுக்களில் நிறம், சுவை முதலானவை இல்லை என்று சொன்னால், அப்போது பரமாணுக்களிலிருந்து உண்டான புஷ்பம், வேஷ்டி முதலான பொருட்களில் நிறம், சுவை முதலானவை இருக்கவே முடியாது. நூலில் இருக்கும் தன்மை தான் வேஷ்டியில் வர முடியும். அதனால் தோஷம்.

இதிலிருந்து தப்பிக்க நிறம் முதலானவற்றை ஒப்புக் கொண்டால், முன் ஸூத்ரத்தில் உள்ள தாேஷம் வந்து சேரும். எனவே , இரண்டு பக்கமும் தாேஷம் உள்ளபடியால், பரமாணு என்பதே ஏற்கப்பட முடியாதது.

7–அபரிக்₃ரஹாத் ச அத்யந்தம் அநபேக்ஷா
அபரிக்₃ரஹாத் ச
– பெரியோர்கள் யாரும் வைஸேஷிக மதத்தை சிறிதளவும் எடுத்துக் கையாளாதபடியால்
அத்யந்தம் முழுவதுமாக
அநபேக்ஷா முக்தி விரும்புபவர்களால் இந்த மதம் புறக்கணிக்கப் பட வேண்டும்

(சாங்க்ய யோக மதங்களில் சிலவற்றை சித்தாந்தித்தில் கொள்கிறோம் -அப்படி வைசேஷிக மதத்தில் ஒன்றுமே கொள்ள வில்லையே —முமுஷுக்கள் புறக்கணிக்க வேண்டும் -என்றபடி -)

இவ்வாறு வைஸேஷிக மதம் தவறென்று இந்த அதிகரணத்தில் நிரூபிக்கப் பட்டது.


2.2.3 ஸமுதா₃யாதி₄கரணம்-பௌத்₃த₄ மதத்தின் உட்பிரிவுகள்2-2-3-ஸமுதா₃யாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் பரமாணுவே ஜகத்காரணம் என்று சொல்லக் கூடிய வைஸேஷிகர்களின் மதம் கண்டிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணம் தொடங்கி பௌத்தர்களின் மதம் கண்டிக்கப் படுகிறது. இவர்களும் பரமாணுக்களே ஜகத்துக்கு காரணம் என்று சொல்கின்றபடியால் வைஸேஷிகர்களுக்கு அடுத்து இவர்களை வேத வியாஸர் கண்டிக்கிறார்.

பௌத்த மதம் நான்கு உட்பிரிவுகளை உடையது – வைபாஷிகர்கள், ஸௌத்ராந்திகர்கள், யோகாசாரர்கள், மாத்யமிகர்கள் என்று அந்த நான்கு வகைகளுக்கும் பெயர்.
வைபாஷிகர்கள் மதம் –
(1) ஆத்மா உண்மையானவர், ஜ்ஞானமே வடிவமானவர். ஆத்மா ஜ்ஞானம் உடையவர் அதாவது அறிவாளி அல்ல;அறிவே தான் ஆத்மா.
(2) உலகத்தில் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு விதமான பூதங்கள் தான் உள்ளன. ஆகாஸம் என்று தனியாக ஒரு பொருள் கிடையாது. நிலம் முதலானவை இல்லாமை தான் ஆகாஸம் என்று
சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பூதங்களின் பரமாணுக்களின் சேர்ந்து குடம், மேஜை , புஷ்பம் முதலான உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன.
(3) அந்தப் பொருட்களும் உண்மை யானவை . ஆத்மா உலகப் பொருட்களைப் புலன்களின் மூலம் அதாவது ப்ரத்யக்ஷத்தாலே அறிகிறது.

(காற்றில் ஸ்பர்சம் மட்டுமே -நெருப்பு -கண்ணாலும் பார்க்கலாம் -தண்ணீருக்கு ஸ்பர்சம் கண்டு ருசி மூன்று குணங்கள் உண்டு – -பிருத்விக்கு-மணத்துடன் சேர்த்து நான்கு குணங்கள் -என்பர் -)

ஸௌத்ராந்திகர்கள் மதம் –
வைபாஷிகர்கள் சொல்லும் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும், ஆனால் உலகப் பொருள்களை புலன்களால் அறிய முடியாது, அனுமானத்தால் தான் அறியலாம் என்கிறார்கள்.

யோகாசாரர்கள் மதம் –
இவர்கள் ஆத்மாவை மட்டும் தான் உண்மை என்று ஏற்கிறார்கள். உலகப் பொருள்கள் அனைத்துமே பொய்யானவை , கனவில் நாம் காணும் பொருள்கள் போல் என்கிறார்கள்.

மாத்யமிகர்கள் மதம் –
இவர்கள் ஆத்மா உள்பட உலகில் அனைத்துமே பொய்யானது என்கிறார்கள்.(ஸர்வம் சூன்யம்-ஆகாசத் தாமரை -முயல் கொம்பு – மத்யமம் -நடுத்தரம் -என்றவாறு -)

நால்வருக்கும் பொதுவான கருத்துகள் –
(1) பொருள்கள் எல்லாமே க்ஷணிகங்கள், அதாவது ஒரு க்ஷணம் மட்டுமே இருக்கக் கூடியவை . ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு பொருளும் அழிகிறது, அதே போல் மற்றொரு பொருள்
உண்டாகிறது என்கிறார்கள்.(திரி எரிந்து முன் ஜ்வாலை அழிந்து புதியதாக ஜ்வாலை பிறந்து நித்தியமான ஜ்வாலை போல் தோற்றுவது போல்)
(2) அறிவே தான் ஆத்மா. ஆனால் அது தன்னைத் தவறாக ’அறிவுடையவன்’ – ’அறிவாளி’ என்று நினைத்துக் கொள்கிறது

இதில்,உலகப் பொருள்களை ஏற்கும் ஸௌத்ராந்திகர்களையும் வைஸேஷிகர்களையும் இவ்வதிகரணத்தில் கண்டிக்கிறார்-மேல் இரண்டு அதிகரணங்களாலும் மற்ற புத்த மதங்களையும் நிரஸிக்கிறார்-

ஸமுதாயங்கள் உண்டாகவே முடியாது
1–ஸமுதா₃யே உப₄ய ஹேதுகே அபி தத₃ப்ராப்தி:
உப₄ய ஹேதுகே
– இரண்டு காரணங்களிலிருந்து உண்டாகும் ஸமுதா₃யே அபி – ஸமுதாயங்களிலும்
தத₃ப்ராப்தி: – அதுவே ஏற்படாது, அதாவது அந்த ஸமுதாயங்களே ஏற்பட முடியாது

உலகில் இரண்டு விதமான ஸமுதாயங்கள் (கூட்டங்கள் – திரள்கள்) உண்டாகின்றன.
(1) பரமாணுக்கள் ஒன்று கூடி நிலம் நீர் முதலான பூதங்கள் உண்டாகின்றன
(2) பூதங்கள் ஒன்று கூடி குடம், வேஷ்டி முதலான பௌதிகங்கள் (உலகப் பொருள்கள்) உண்டாகின்றன.
இந்த இரண்டு விதமான ஸமுதாயங்களும் உண்டாகவே முடியாது என்கிறார் வ்யாஸர்.
பரமாணுக்கள் சேர்ந்து ஸமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் அதற்குச் சில நிலைகள் உள்ளன –
(1) பரமாணுக்கள் சேர்வதற்காக நகர்ந்து வர வேண்டும்
(2) பரமாணுக்கள் தொடர்படைந்து சேர வேண்டும்
(3) உண்டாக்கப்பட்ட ஸமுதாயம் அறியப் பட வேண்டும்
(4) அப் பொருள் பயன்படுத்தப் பட வேண்டும்

பரமாணுக்களே க்ஷணிகங்கள் என்று சொல்வதால், நகர்ந்து வரும் பரமாணுக்கள் சேர்வதற்குள் அவையே அழிந்து விடுகின்றன, பிறகு எப்படி ஸமுதாயம் உண்டாக முடியும்? ஸமுதாயம் உண்டாக்கப் பட்டாலும் அது அறியப் படுவதற்குள் அழிந்து விடும், அறியப் பட்டாலும் பயன் படுத்துவதற்குள் அழிந்து விடும். ஆகவே பரமாணுக்குள் சேர்ந்து தான் உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் உண்டாகுகின்றன, அவையே அறியப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது.
மேலும், ஆத்மா ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால்
(1) அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட வேண்டும்
(2) ஆத்மா அப் பொருளை அறிய வேண்டும்
(3) ஆத்மா அப் பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

அதுவரை அந்தப் பொருளே இருக்காது, ஒரு க்ஷணத்தில் அழிந்து விடும் என்றால், ஆத்மா எந்தப் பொருளையும் அறியவே இயலாது.

அறிவால் பொருளா? பொருளால் அறிவா?
2–இதரேதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்கா₄த பா₄வ அநிமித்தத்வாத்
இதரேதர ப்ரத்யயத்வாத்
ஒன்றுக்கொன்று காரணமான படியால்
உபபந்நம் ஸமுதாயமுண்டாவது பொருந்தும்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
ஸங்கா₄தபா₄வ அநிமித்தத்வாத் –ஸமுதாயம் உண்டாவதற்கு அது காரணமல்லாதபடியால்

பவ்த்தர்களின் கேள்வி – அவித்₃யை எனப்படும் விபரீத ஜ்ஞாநம் (தவறான புரிதல்), அதிலிருந்து -ஸம்ஸ்காரம்-விருப்பு வெறுப்புகள், அதிலிருந்து -விஞ்ஞானம் சித்த உணர்வு-ஆத்மாவின் செயல்பாடு, அத்தால் வெவ்வேறு விதமான எண்ணங்கள், அதிலிருந்து நிலம் நீர் தீ முதலானவை , அதிலிருந்து புலன்கள், அதிலிருந்து உடல், அதிலிருந்து பிறவி,அதிலிருந்து இன்ப துன்பங்கள், அதிலிருந்து மீண்டும் அவித்யை என்பது தான் ஸம்ஸாரத்தில் வழக்கம்.-(ப்ரத்யயத்வாத்-ஹேதுத்வாத் என்றபடி)
எனவே அவித்யையால் ஜந்மம், ஜந்மத்தால் அவித்யை என்று இவை இரண்டும் ஒன்றுக்கொன்று காரணமாக உள்ளன. பரமாணுக்கள் சேர்ந்து ஸமுதாயங்கள் உண்டாகா விட்டால் இந்த சங்கிலித் தொடரே பொருந்தாமல் போகும். எனவே கண்டிப்பாக ஸமுதாயம் உண்டாக முடியும் என்று ஏற்க வேண்டும்.

வ்யாஸரின் பதில் – ஜ்ஞாநத்தால் உலகப் பொருள்கள் உண்டாகின்றன என்று சொன்னது சற்றும் பொருந்தாது. -அப்படி உண்டாகுமானால், ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறியும் பொழுது அங்கு பாம்பு உண்டாக வேண்டும்! அப்படி உலகத்தில் கண்டதில்லை – எனவே ஜ்ஞாநத்திலிருந்து நிலம் நீ முதலானவை ஏற்படுகின்றன என்று நீங்கள் சொல்வது பொருந்தாது. எனவே ஸமுதாயங்கள் உண்டாகவே இயலாது.
மேலும், ஆத்மாவே ஸ்திரமானவர் அல்ல என்பதால், அவருக்கு எப்படி அவித்யையால் விருப்பு வெறுப்புகள் உண்டாக முடியும்? அதற்குள் அவரே அழிந்து விடுவார்.
மேலும் 8 ஸூத்ரங்களால் வ்யாஸர் பௌத்த மதத்தில் பல தாேஷங்களைக் கூறுகிறார்.

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந- பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –சார்வாக சைலாச நி –சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்- பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –ஜைநே பகண்டீரவ – ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்- மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி – ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர் சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்குகின்றார் –ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார் பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

க்ஷணிகத்வம் பொருந்தாது
2-2-3-ஸமுதாயாதிகரணத்தின் முதல் இரண்டு ஸூத்ரங்களால் பரமாணுக்கள் க்ஷணிகமானணவ என்று பௌத்தர்கள் சொல்வதால் அவர்கள் மதத்தில் ஸமுதாயங்களே உண்டாக முடியாது, எனவே உலகமே உண்டாக முடியாது எனப்பட்டது. இனி மேலுள்ள ஸூத்ரங்களால் மேலும் பற தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

3-உத்தரரோத் பாதே ₃ ச பூர்வ நிரோதா₄த் – “அடுத்தது உண்டாகும் போது முந்தையது அழிவதால்”
பௌத்த மதத்தில் குடம் முதலான எல்லாப் பொருட்களுமே ஒவ்வொரு வினாடியும் அழிகின்றன, அடுத்த வினாடியில் அதைப் போலவே வேறொரு குடம் உண்டாகிறது என்று கூறுகிறார்கள். இதைக் கண்டிக்கிறார் வ்யாஸர்.

உலகத்தில் எந்த ஒரு பொருள் உண்டாகும் போதும், அது உண்டாகும் வினாடியில் அதன் காரணங்கள் இருக்க வேண்டும்.-ஆனால் நீங்கள் சொல்லும்படி முதல் வினாடியில் இருந்த குடம் இரண்டாவது வினாடியில் உள்ள குடம் உண்டாகும் போது அழிந்து விடுகிற படியால் அந்த இரண்டாவது குடத்துக்கு முதல் குடம் காரணமாக இருக்க முடியாது. முன் வினாடியில் காரணம் இருந்தாலே போதும் என்று நீங்கள் வாதிட்டாலும், முதல் வினாடியில் உள்ள குடம் அடுத்த வினாடியில் உலகிலிருக்கும் எல்லாக் குடங்களுக்கும் காரணமாகலாமே என்கிற கேள்வி எழும். அதைப் போக்க
ஓர் இடத்தில் முதல் வினாடியில் இருந்த குடம் அதே இடத்தில் அடுத்த வினாடியில் உண்டாகும் குடத்துக்குத் தான் காரணம்” என்று நீங்கள் சொன்னால், அப்போது ஒரு கேள்வி – “இடம்” அதாவது “தேசம்” என்பது ஸ்திரமானது என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? அதுவும் க்ஷணிகம் தான் என்றால் “அதே இடத்தில்” என்று நீங்கள் சொன்னதே பொருந்தாது, குடம் ஒவ்வொரு வினாடியும் மாறுவது போல் இடமும் ஒவ்வொரு வினாடியும் மாறுகிற படியால்.

(குடத்தில் இருந்து அனைத்தும் பொருள்களும் உண்டாகலாமே என்னில் அதே ஜாதீயமாக இருக்க வேணும் என்பர்- பின்பு ஸ்தானம் மாறுபட்டு அங்குள்ள குடம் அழிந்த பின்பும் எங்கும் உள்ள குடங்களுக்குக் காரணமாகலாமே என்னில் -அந்த ஸ்தானம் இடமும் மாறாமல் இருக்க வேண்டுமே -ஆகவே ஒவ்வாதே -)

4-அஸதி ப்ரதிஜ்ஜோபரோத₄: யௌக₃பத்₃யம் அந்யதா₂
அஸதி –
முதல் குடம் இல்லாமலேயே இரண்டாவது குடம் உண்டாகலாம் என்றால்
ப்ரதிஜ்ஜோபரோத₄: – முதல் குடம் இரண்டாவது குடத்துக்குக் காரணம் என்று நீங்கள் சொல்வது பொருந்தாது
அந்யதா ₂ – இரண்டாவது குடம் உண்டாகும் வினாடியில் முதல் குடமும் அழியாமல் உள்ளது என்று சொன்னால்
யௌக₃ பத்₃யம் – அந்த இரண்டாவது வினாடியில் இரண்டு குடங்கள் கண்ணுக்குத் தெரிய வேண்டும், எல்லாப் பொருள்களும் க்ஷணிகம் என்று நீங்கள் சொன்னதும் தவறாக ஆகி விடும்.
ஆகவே , நீங்கள் சொன்ன க்ஷணிகத்வம் எந்த விதத்திலும் பொருத்தமற்றது

(ஒரு பொருள் உண்டாகும் நான்கு காரணங்கள்- 1-அதிபதி புலன்கள் 2-சஹஹாரி வெளிச்சம்–3- ஆலம்பனம் -4-சமநாந்தர ஞானம் முன் ஞானம் அடுத்த ஞானத்துக்கு காரணம் -என்பர் புத்த மதஸ்தர் -அனைத்துமே ஒவ்வாது)

நீங்கள் சொல்லும் அழிவு பொருந்தாது
5–ப்ரதிஸங்க்₂யா -அப்ரதிஸங்க்₂யா-நிரோத₄-அப்ராப்தி: அவிச்சே₂தா₃த்
ப்ரதிஸங்க்₂யா -அப்ரதிஸங்க்₂யா -நிரோத₄ –
ப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் அப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் என்னும் இரண்டுமே
அப்ராப்தி: – ஏற்பட முடியாது
அவிச்சே₂தா₃த் – ஒரு பொருளே இடைவிடாமல் தொடர்கிறபடியால்

நிரோத₄ம் என்றால் அழிவு. பௌத்த மதத்தில் இரண்டு விதமான அழிவுகள் சொல்லப்படுகின்றன –
1-ப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் – இதை ’அறியப்படும் அழிவு’ என்று கொள்ளலாம். ஒரு குடத்தைக் கட்டையால் அடித்து உடைத்தால் அது அழிந்து போகிறது, அடுத்த வினாடியிலிருந்து குடம் இருக்காது, அதன் துகள்கள் தான் இருக்கும்.-இவ் விடத்தில் குடத்தின் அழிவு தெளிவாகக் காணப்படுகிறது.
2-அப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் – இதை ’அறியப்படாத அழிவு’ என்று கொள்ளலாம். எல்லாப் பொருள்களும் க்ஷணிகமான படியால் ஒவ்வொரு வினாடியுமே நம் கண்முன் இருக்கும் குடம் முதலானவை அழிந்து, அதே போல் வேறொரு குடம் தான் உண்டாகிறது. இந்த அழிவு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை .

இந்த இரண்டு விதமான அழிவுமே பொருந்தாது. ஆரம்பணாதிகரணத்திலேயே ’ஒரே பொருள் தான் வேவ்வேறு நிலைகளை அடைகிறதே தவிற, எந்தப் பொருளும் புதிதாக உண்டாக்கப் படுவதுமில்லை அழிக்கப் படுவதுமில்லை என்று நிரூபித்து விட்டோம். ஆகவே , ஒரு பொருள் அழிந்து விட்டது, வேறொரு பொருள் (மற்றொரு குடமோ , குடத்தின் துகள்களோ ) தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது பொருத்தமற்றது.

6- உ ப₄யதா ₂ ச தோ₃ஷாத் – “இரண்டு காரணங்களாலும் தோஷம் உள்ள படியால்”
துச்சம் என்றால் ’இல்லாத பொருள்’ என்று பொருள். பௌத்த மதத்தில் ’துச்சத்திலிருந்து (இல்லாததிலிருந்து) குடம் உண்டாகிறது’ என்றும், ’குடம் அழிந்து துச்சமாக (இல்லாததாக) ஆகிறது’ என்றும் கூறுகிறார்கள்.
உலகில் மண்ணிலிருந்து உண்டான பொருள் மண்ணாகவே இருப்பதைக் காண்கிறோம். எந்தப் பொருள் அழிந்தால் மண்ணாக ஆகுமோ அப் பொருளும் மண்ணாகவே இருப்பதைக் காண்கிறோம்.
அந்த முறைப்படி பார்த்தால் துச்சத்திலிருந்து உண்டாகி, அழிந்து துச்சமாகப் போகும் உலகப் பொருள்கள் எல்லாமே இடைப்பட்ட காலத்திலும் துச்சமாகத் தான் இருக்க வேண்டும், உண்மைப் பொருளாக இருக்க இயலாது.

மேலும் சில தவறுகள்
7-ஆகாசே ச அவிஸேஷாத் –“
ஆகாசத்திலும்கூட; வேறுபாடு இல்லாத படியால்”
பௌத்தர்கள் நிலம், நீர், தீ, காற்று என்ற ஆகாஸம் தவிர்ந்த 4 பூதங்களைத் தான் ஏற்கிறார்கள், அதைக் கண்டிக்கிறார் –“ஆகாஸத்திலும் துச்சத்வம் (இல்லாமை ) சொல்வது பொருந்தாது, மற்றவற்றைப் போலவே உள்ளபடியால்” என்று.

நிலம் முதலானவற்றை ஏற்கக் காரணம் என்ன?(அபாத ப்ரதீதாத் )
(1) அவை தோற்றமளிக்கின்றன-2-அவை பொய்யானவை என்று எந்தப் ப்ரமாணமும் சொல்லவில்லை . அதே அளவுகோலின்படி பார்த்தால் ஆகாஸமும் தோற்றமளிக்கிறது – ’இங்கு கழுகு பறக்கிறது’ என்று கண்ணால் காணும் போது ’இங்கு’ என்று ஆகாஸத்தையே நாம் பார்க்கிற படியால். ஆகாஸம் பொய்யானது என்று காட்டும் எந்தப் ப்ரமாணமும் இல்லை . எனவே மற்ற பூதங்களோடு எந்த வேறுபாடும் ஆகாஸத்துக்கு இல்லாதபடியால் அதையும் ஏற்க வேண்டும்.-பஞ்சீகரணம் என்ற செயலால் பகவான் ஐந்து பூதங்களையும் ஒன்றோடொன்று கலந்து விடுகிற படியால் ஆகாஸத்திலும் நிறம் உள்ளது, எனவே நாம் அதைக் கண்ணால் காண முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

8-அநு ஸ்ம்ருதே : ச – “முன்னால் பார்த்த விஷயத்தைப் பற்றின ஜ்ஞாநத்தாலும்”
இந்த ஸூத்ரத்தால் பௌத்தர்கள் கூறும் க்ஷணிகத்வம் என்பது தவறு, உலகப் பொருட்கள் ஸ்திரமானவையே என்கிறார்.

“இது குடம்” என்ற அறிவு ப்ரத்யக்ஷம், கண்ணால் ஏற்படுகிறது. “நேற்று குடம் வாங்கினேன்” என்கிற அறிவு ஸ்மரணம் அதாவது நினைவு மட்டுமே . “நேற்று நான் வாங்கின குடம் தான் இது” என்று ஒரு சிறப்பான ஜ்ஞாநம் உண்டாகிறது.
இதில் முன் நாம் அறிந்த ஒரு பொருளையே மறுபடியும் அறிகிறோம். இதற்கு ப்ரத்யபி₄ஜ்ஞா என்று பெயர். இப்படிப்பட்ட ப்ரத்யபி₄ஜ்ஞா என்கிற ஜ்ஞாநம் தான் நமக்கு உணர்த்துகிறது – நேற்று வாங்கப்பட்ட குடமும் இன்று காணப்படுகிற குடமும் ஒன்று தான் என்று. எனவே , அந்தக் குடம் நேற்றும் இன்றும் உள்ளபடியால் அது ஸ்திரமானது தான், ஒவ்வொரு வினாடியும் அழியக் கூடியதல்ல என்று நாம் அறிகிறோம்.
அதே போல் “நேற்று வாங்கின நான் இன்று பயன்படுத்துகிறேன்” என்று சொல்லும் போது நான் என்கிற ஆத்மாவும் நேற்றும் இன்றும் ஒருவரே என்று தெரிகிறது. அதனால் ஆத்மாக்களும் ஸ்திரமானவர்கள் தான், க்ஷணிகர்கள் அல்ல.

(வியவாசயம் -இது குடம் என்று அறிவது -ப்ரத்யக்ஷம் -மற்ற ஓன்று –ஸ்மரணம் -நினைவு -மூன்றாவது –ப்ரத்யபிஞ்ஞா -இரண்டுக்கும் தொடர்பு படுத்தி -அன்று பார்த்த இவரே –அநு ஸ்ம்ருதி இதுவே)

மேலும் சில தவறுகள்
9-ந அஸத: அத்₃ருஷ்டத்வாத்
– “இல்லாத பொருளினுடையது அல்ல, காணப் படாத படியால்”
முன் ஸூத்ரங்களில் – பொருள்கள் க்ஷணிகங்கள் என்று கொண்டால், அவற்றை அறிவதே என்பதே பொருந்தாது. மேலும், ஒரு ஜ்ஞாநம் ஏற்பட வேண்டுமானால், புலன்களுக்கும் அந்தப் பொருளுக்கும் தொடர்பு ஏற்பட்டு, பிறகு அடுத்த வினாடியில் தான் அறிவு உண்டாகும். அதற்குள் முதல் வினாடியில் இருந்த பொருள் அழிந்து விட்டது. எனவே “புலன்களால் ஏற்படும் ஜ்ஞாநம் கூட அந்த வினாடியில் இல்லாத பொருளைப் பற்றியது” என்று ஆகி விடும். இது பொருந்தாது என்று கூறி யிருந்தார்.

ஸௌத்ராந்திகர்கள் கூறுகிறார்கள் – குடம் என்ற பொருள் தன் வடிவத்தை ஜ்ஞாநத்திடம் ஸமர்ப்பித்து விட்டுத் தான் அழிந்து விட்டது என்று. இது தவறு. ஒரு பொருளின் தன்மை அதனிடம் தான் இருக்க முடியுமே தவிற, அதன் அழிவுக்குப் பின் வேறொரு பொருளிடம் பெயர்ந்து செல்வதென்பது பொருந்தாது. அப்படி உலகத்தில் காணப்பட்டதே இல்லை . எனவே உங்கள் மதத்தில் நமக்கு தினசரி ஏற்படும் அறிவுகளே பொருந்தாமல் போய் விடும்.

10-உதா₃ஸீநாநா ம் அபி ச ஏவம் ஸித்₃தி₄: –-“முயலாதவர்களுக்கும் கூட இப்படி பயன் கிட்டும்”
எல்லாமே க்ஷணிகம், காரணமே இல்லாமல் ஒவ்வொரு வினாடியும் அழிகிறது, துச்சத்திலிருந்து உண்டாகிறது என்று கொண்டால் உலகில் எந்த முயற்சியும் எடுக்காதவர்களுக்குக் கூட முயற்சியின் பயன்கள் கிடைத்து விடும் என்ற அநீதி ஏற்படும்.(வைபாஷிகனுக்கும் ஸுந்த்ராதிகனுக்கும் பொதுவான தோஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது)

பொதுவாக ஸ்வர்கம் -மோக்ஷம் வேண்டும் என்று ஆசைப்படுபவன் யாகம் -த்யானம் என்ற வழிகளைப் பின்பற்றினால் அதனால் பிற் காலத்தில் அப் பயனை அடையலாம். ஆனால் உங்கள் மதத்தில் எல்லாம் க்ஷணிகம், எந்தச் செயல் செய்தாலும் அது எவ் விதத்திலும் அடுத்த வினாடியில் கூட இருக்காது. பிறகு யாகம் -த்யானம் என்ற உபாயத்தைச் செய்தவர் அடுத்த வினாடியே அழிந்து விட்டார், பல ஆண்டுகள் கழித்து பயனை அடைபவர் வேறு ஒரு ஜீவன் ஆவார்.-எனவே , எந்த முயற்சியும் செய்யத் தேவை இல்லாமலேயே இவ் வுலக இன்பங்கள் மற்றும் மோக்ஷம் கிடைக்கும் என்றாகி விடும்.

இப்படி பல விதமான குற்றங்கள் உள்ள படியால், பௌத்த மதத்தின் உட் பிரிவுகளுக்குள் உலகம் உண்மையானது என்று ஏற்கும் ஸௌத்ராந்திகர்கள் மற்றும் வைஸேஷிகர்களில் மதங்கள் தவறானவை என்பது இவ் வதிகரணத்தின் கருத்து –

2-2-4-உபலப்₃த்₄யதி₄கரணம்-யோகாசார்களைக் கண்டித்தல்

யோகாசார மதத்தின் சுருக்கம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், பௌத்தர்களுக்குள் உலகம் உண்மையானது என்று ஏற்கக்கூடிய சவ்த்ராந்திகர்களையும் வைபாஷிகர்களையும் கண்டனம் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அடுத்த பிரிவான யோகாசாரர்கணைக் கண்டிக்கிறார். இவர்களின் மதம் என்ன என்று பார்ப்போம்.

பொதுவாக உலகில் பலவிதமான ஜ்ஞாநங்கள், (அறிவுகள்) உண்டாவதை நாம் அனுபவிக்கிறோம். “இது குடம்”,“இது மேஜை ”, “இது புத்தகம்”, “இது புஷ்பம்” என்று வெவ்வேறு விதமான அறிவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இந்த அறிவுகள் இருக்கும் வேறுபாடு தான் வைசித்ர்யம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று ஆராயும் போது – உலகத்தில் பலவிதமான பொருட்கள் இருக்கின்றன.-அவற்றை இந்த ஒவ்வொரு அறிவும் காட்டிக் கொடுக்கிறது. அதனால் அறிவிலிருக்கும் வேறுபாட்டிற்குக் காரணம் அறியப்படும் பொருட்களில் இருக்கும் வேறுபாடு தான் என்று பொதுவாக நாம் கூறுகிறோம்.

ஆனால் யோகாசாரர்கள் இதை ஏற்க வில்லை – ஞான வைச்சித்தரியமே ந அர்த்த வைசித்ரியம்அறிவு மட்டுமே உண்மை, அதைத் தவிர உலகத்தில் எந்தப் பொருளுமே கிடையாது என்று சொல்கிறார்கள். அப்போது நாம் பார்க்கக் கூடிய பண்புகள், நிறம், மணம், சுவை , அளவு, வடிவம் இவை யெல்லாம் எங்கு இருக்கின்றன? என்று கேட்டால், இந்த ஆகாரங்கள் (பண்புகள்) ஜ்ஞாநத்திலேயே இருக்கின்றன என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் யுக்தி – உலகத்திலிருக்கும் பொருள்களிலும் நிறம், சுவை , மணம் முதலான பண்புகள் இருக்கின்றன. அதை அறிவு நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அந்த அறிவிலும் கருப்பு, வெள்ளை , மணம், சுவை முதலான பண்புகள் தோன்றுகின்றன. எனவே பொருள்களிலும் பண்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஜ்ஞாநத்திலும் பண்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. அறிவு, அறியப்படும் பொருள் என்று இரண்டு இருந்து இரண்டிலும் இந்த பண்புகள் இருந்தால் இரண்டு முறை பண்புகள் தோற்றமளிக்க வேண்டும். ஆனால் ஒரு முறை தான் தோற்றுகின்றன. அதனால் உலகப் பொருட்களே கிடையாது, அதில் ஆகாரங்களும் கிடையாது,-ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அந்த ஜ்ஞாநத்துக்கே ஆகாரங்கள் இருக்கின்றன. அந்த ஆகாரங்கள் மாறும் பொழுது தான் வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்-

அறியப்படும் பொருள் கிடையாது என்பது போலவே அறிபவர் -அறிவாளி -ஜ்ஞாதா என்று ஒருவரும் கிடையாது என்று தெரிவிக்கிறார்கள். ஆத்மா என்பது ஜ்ஞாநமே தான். ஜ்ஞாநம் உடையவர் அல்லர்
ஆனால் நமக்கு உலகத்தில் எப்படி தோன்றுகிறது? “நான் குடத்தை அறிகிறேன்”, “நான் புஷ்பத்தைக்
காண்கிறேன்” என்று அறிவு ஏற்படும் பொழுது நான் என்பவன் அறிவை உடையவன் என்று தோன்றுகிறது. ஆனால் இது தவறு. நான் என்பவன் ஜ்ஞாநமே . ஜ்ஞாநத்தை உடையவன் அல்லன் என்று கூறுகிறார்கள். பிறகு ஏனிப்படி தோற்றம் அளிக்கிறது என்றால், அதுதான் ப்ரமம் (மயக்கம்). அது தான் ஸம்சாரத்தின் விளைவு என்று தெளிவிக்கிறார்கள்.-எனவே ஜ்ஞாநம் ஓன்றே உண்மை . ஜ்ஞாநத்தால் அறியப்படும் பொருள்களும் பொய்யானவை . ஜ்ஞாநத்தை உடையவர் என்ற ஒருவரும் பொய்யானவர்.

(1-பொருள் 2-அதைப் பற்றிய ஞானம் 3-ஞானமுடையவன் – 1-ஜ்ஜேயம்-2-ஞானம்-3-ஜ்ஞாதா – மூன்றும் நாம் கொள்கிறோம் -இவர்களோ ஞானம் மட்டுமே உண்மை என்கிறார்கள்)

சரி, ஜ்ஞாநத்திலேயே ஆகாரங்கள் (பண்புகள்) இருக்கட்டும், அந்தப் பண்புகள் மாறுபடுவதற்கு காரணம் என்ன? ஏன் “இது புஷ்பம்” என்கிற ஜ்ஞாநம் மாறி “இது புத்தகம்” என்று வேறொரு ஆகாரத்தைக் கொண்ட ஜ்ஞாநம் உண்டாகிறது? அதற்கு வாசனா (பதிவுகள்) என்று ஒன்றை ஏற்கிறார்கள். இந்த வினாடியிலிருக்கும் ஜ்ஞாநம் அடுத்த வினாடியில் வேறொரு ஜ்ஞாநத்தை உண்டாக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பதிவோடு கூடிய ஜ்ஞாநத்தை உண்டாக்குமாம். அந்த ஜ்ஞாநம் அதற்கடுத்த ஜ்ஞாநத்தில் ஒரு பதிவை உண்டாக்கும். அந்த ஜ்ஞாநம் அதற்கடுத்த ஜ்ஞாநத்தில் மற்றுமொரு பதிவை உண்டாக்கும். இப்படியே வாசனை என்பது தொடர்ந்து வருவதால் தான் ஒரு கால கட்டத்தில் புஷ்பத்தைப் பற்றின ஜ்ஞாநம் மாறி புத்தகத்தைப் பற்றின ஜ்ஞாநம் ஏற்படுகிறது. இதற்குக் காரணமான குறிப்பிட்ட பதிவு இதற்கு முன்னால் வரை இல்லாதபடியால் இந்த மாற்றம் ஏற்படவில்லை . எனவே இதற்கெல்லாம் வாசனை என்கிற பதிவுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

உலகப் பொருட்கள் உண்மை யானவையே -அவர்கள் பக்ஷத்தை வ்யாஸர் 3 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் கண்டிக்கிறார்.

1–ந அபா₄வ : உபலப்₃தே ₄: – “இல்லை என்பதல்ல; தோற்றுவதால்”
அபா₄வ : – ஜ்ஞாநத்தைத் தவிற மற்ற உலகப் பொருள்கள் எதுவுமே இல்லை – கிடையாது
– என்பது தவறு
உபலப்₃தே ₄: – ஒரு பொருளை ஒரு ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுப்பதாகவே ஜ்ஞாநம் தோற்றுவதால்

உலகத்தில் அறிவு என்கிற பொருள் நமக்கு எப்படி தோற்றமளிக்கிறது என்று பார்க்க வேண்டும். “நான் குடத்தை அறிகிறேன்” என்று ஏதோ ஒரு பொருளை நான் என்ற ஆத்மாவுக்கு காட்டிக் கொடுக்கக் கூடியதாக அறிவு என்ற பொருள் அறியப் படுகிறது. இதன் அடிப்படையில், கண்டிப்பாக அறிவுக்கு விஷயமாக அறியப்படும் பொருள் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும். அதே போல் அறிவை உடையவர் என்கிற ஆத்மா அதாவது நாமும் உண்மை யாகவே இருக்க வேண்டும். “நான் குடத்தை அறிகிறேன்” என்ற ஜ்ஞாநத்தை எடுத்துக் கொண்டு இதில் குடம் என்பதும் பொய்-,அறிவாளி என்பதும் பொய், -அறிவு என்பது மட்டுமே உண்மை யானது என்று சொல்லுவது பொருந்தாத ஒரு வாதமாகும்

(ஞானமே விஷயமாகாதே -விஷயம் பற்றிய அறிவே ஞானமாகும் -விஷயம் -ஞானம் -ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா மூன்றும் இருக்க வேண்டும் -)

மேலும் வாசனை என்று ஒன்று முன் ஜ்ஞாநத்தாலே அடுத்தடுத்த ஜ்ஞாநத்தில் உண்டாக்கப் படுகிறது என்று கூறினீர்கள், அதுவும் பொருந்தாது. ஒரு பொருள் மற்றொரு பொருளில் ஒரு பதிவை உண்டாக்க வேண்டுமென்றால் அந்த இரண்டு பொருட்களும் ஏதோ ஒரு விநாடியிலாவது சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் மதத்திலோ முதல் விநாடியிலிருந்த ஜ்ஞாநம் இரண்டாவது விநாடியில் அழிந்து போய் விடுகிறது. அப்போது தான் இரண்டாவது ஜ்ஞாநம் உண்டாகிறது.

ஆகையால் ஜ்ஞாநத்திலிருக்கும் வேறுபாடுகளுக்குக் காரணம் உலகப் பொருட்களிலிருக்கும் வேறுபாடு என்று தான் ஏற்க வேண்டும். அந்த ஜ்ஞாநத்துக்கும் அந்தந்தப் பொருளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கிற படியால் தான் அந்தப் பொருளிலிருக்கும் பண்புகள் இந்த ஜ்ஞாநத்தின் மூலம் ஆத்மாவுக்கு காட்டப் படுகின்றன. ஜ்ஞாநத்துக்கும் பொருளுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு ஸம்யோகம் என்பதே . நாம் கை கூப்பும் பொழுது நம்மது இரண்டு கைகளுக்கும் யோகம் எப்படி உண்டாகிறதோ , அதே போல் நம்முடைய ஜ்ஞாநம் என்கின்ற ஒரு த்ரவ்யம் புத்தகம் என்கின்ற த்ரவியத்தைத் தொடும் பொழுது யோகம் என்கிற தொடர்பு ஏற்படுகிறது. அதனால் தான் இந்த அறிவு
புத்தகத்தைப் பற்றின அறிவு என்று ஆகிறது – என்று வ்யாஸர் கூறுகிறார்.

(ஆத்மாவும் ஞானமும் த்ரவ்யங்கள் -ஸம்யோகம் -பொருள்களை பற்றிய அறிவும் பொருள்களில் உள்ள பண்புகளையும் சேர்ந்து தானே அறிகிறோம்)

கனவும் விழிப்பும்
2- வைத₄ர்ம் யாத் ச ந ஸ்வப்நாதி₃வத் –
“வேறுபாட்டால் ஸ்வப்நத்தைப் போல அல்ல”
யோகாசாரர்கள் ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அறியப்படும் பொருட்கள் எல்லாம் பொய்யானவை என்று
நிரூபிப்பதற்கு கனவில் ஏற்படும் ஜ்ஞாநத்தை எடுத்துக் காட்டாகக் கூறுகிறார்கள். கனவு காணும் போது செல்வம், தேர், யானை , புலி, பாம்பு முதலான எத்தனையோ பொருட்களை அறிகிறோம். ஆனால் அந்த அறிவு மட்டும் தான் உண்மை — பொருட்கள் எல்லாம் பொய்யானவை . அதே போல் விழித்த பிறகு ஏற்படும் ஜ்ஞாநத்திலும் அறிவு மட்டுமே உண்மை -பொருட்கள் பொய்யானவை என்று வாதிடுகிறார்கள். அந்த வாதத்தை இந்த ஸூத்திரத்தில் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.

“விழித்திருக்கும் போது ஏற்படும் ஜ்ஞாநம் ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநத்தைப் போல் அல்ல. வேறுபட்டபடியால்” என்று ஸூத்ரத்தின் பொருள். கனவு காணும் பொழுது ஏற்படும் ஜ்ஞாநம் நித்ரா
(தூக்கம்), தமோ குணம் என்கிற தோஷங்களோடு கூடிய மனதால் உண்டாக்கப் படுகிறது
. எனவே அந்த
ஜ்ஞாநம் பொய்யான பொருட்களைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால் விழித்திருக்கும் போது ஏற்படும் ஜ்ஞாநம் தோஷமற்ற மனதால் உண்டாக்கப் படுகிறபடியால் அதில் அறியப்படும் பொருட்களும் உண்மை யாகத்தான் இருக்க வேண்டுமே தவிர பொய்யாக இருக்க முடியாது.

மேலும் விழித்த உடன் “நாம் கனவில் கண்ட பொருட்கள் எல்லாம் பொய்யானவை ” என்று நாமே அறிந்து கொள்கிறோம். இதைத் தான் ’பா₃த₄ம்’ என்பார்கள். ஆனால் அது போல் உலகப் பொருட்களில் நமக்கு எந்த அறிவும் ஏற்படுவதில்லை . “இதுவரை நான் பார்த்த புத்தகம், குடம், விளக்கு முதலானவை அனைத்தும் பொய்யானவை ” என்று எங்காவது எப்போதாவது யாருக்காவது ஜ்ஞாநம் ஏற்படுகிறதா? அப்படி காணப்படுவதில்லை . அதனால் அறியப்படும் உலகப் பொருட்கள் பிற்பாடு பொய்யென்று அறியப் படாத படியால் அவை உண்மை யானவையாகத் தான் இருக்க வேண்டும் என்பது வ்யாஸருடைய கூற்று –

(கெட்டுப்போன பாலால் செய்த இனிப்பு நன்றாக இல்லை -நல்ல பாலால் செய்த இனிப்பும் நன்றாக இருக்காதே என்றும் சொல்லலாமோ -வேறு பாடு இருப்பது போல் -தோஷம் உள்ள மனசில் பதிந்த ஸ்வப்ன ஞானம் போல் அல்லவே தோஷம் அற்ற மனசில் பதிந்த ஞானம் -பொய்யான விஷயம் கனவில் கண்டதை அறிகிறோம் -அது போல் கண்ணாலே பார்த்துக்கொண்டு இருக்கும் பொருள் பின்பும் பார்க்கும் படியாகவே இருப்பதால் வேறு பாடு உண்டே–)

கனவைப் பற்றின உண்மை
3-ந பா₄வ : அநுபலப்₃தே ₄:
– “பொருளே இல்லாத ஜ்ஞாநம் கிடையாது, காணாதபடியால்”
யோகாசாரர்கள் ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அதால் அறியப்படும் பொருள்களும் பொய்யானவை , அறிவை உடையவர் என்பவரும் பொய்யானவர் என்று கூறுகிறார்கள். அதை இந்த ஸூத்ரத்தில் கண்டிக்கிறார்.-“எந்தப் பொருளையும் காட்டிக் கொடுக்காத-பொருளே இல்லாத அறிவு என்பது இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஒரு அறிவு உலகத்தில் எங்கும், காணப் படாதபடி யால்” என்று ஸூத்ரத்திற்குப் பொருள்.

அதாவது, உலகத்தில் எந்த ஒரு அறிவை எடுத்துக் கொண்டாலும், “நான் புத்தகத்தைப் பார்க்கிறேன்”, “நான் குடத்தை அறிகிறேன்” என்று ஒரு பொருளை ஒரு ஆத்மாவுக்கு காட்டிக் கொடுப்பதாகத் தான் ஜ்ஞாநம் அறியப் படுகிறது. அறிவாளியும் இல்லாமல், அறியப்படும் பொருளும் இல்லாமல் எந்த ஒரு ஜ்ஞாநத்தையுமே நாம் உலகத்தில் கண்டதில்லை. அதனால், அப்படியொரு அறிவு இருக்கிறது என்று சொல்வது பொருந்தாது என்று வ்யாஸர் கூறுகிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும் – முன் ஸூத்ரத்தில் ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநம் உண்மை யானது, ஆனால் அதில் அறியப்படும் பொருள்கள் பொய்யானவை என்று யோகாசாரர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, ஆனால் விழித்திருக்கும் போது வரும் ஜ்ஞாநம் அப்படிப்பட்டதல்ல என்று கூறினார் வ்யாஸர். அப்படியானால், ஸ்வப்னத்தில் வரும் ஜ்ஞாநம் பொருள் அற்றது தானே ? பிறகு இந்த ஸூத்ரத்தில் “எந்த ஜ்ஞாநமுமே பொருள் அற்றதாக இருக்க முடியாது” என்று எப்படி கூறலாம்

இதற்குப் பதில் – முன் ஸூத்ரத்தில் அவர்கள் ஸ்வப்ன ஜ்ஞாநத்தைப் பற்றிச் சொன்னதை ஏற்றுக் கொண்டு வாதம் செய்தார். ஆனால் உண்மையில் ஸ்வப்ந ஜ்ஞாநத்தைப் பற்றி நம் ஸித்தாந்தம் என்ன என்பதை இந்த ஸூத்ரத்தில் வ்யாஸர் வெளியிடுகிறார். ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநம் கூட பொருள் உடையது தான். கனவில் செல்வம், தேர், குதிரை , பாம்பு, மாளிகை என்று எதை யெல்லாம் காண்கிறோமோ , அவை யெல்லாம் கற்பனை யானவை அல்ல,-அவையும் உண்மையான பொருட்கள் தான். அந்தந்த ஆத்மாவாலே அந்தந்த சமயத்தில் மட்டும் அறியப் படக் கூடியதாக பகவான் அந்தந்தப் பொருட்களைப் படைக்கிறார் என்று உபநிஷத் தெளிவாகக் காட்டுகிறது. இதை மேலே வரப் போகிற ஒரு அதிகரணத்தில் தெளிவாக வ்யாஸரும் நிரூபிக்கப் போகிறார்.

ஆகவே பொருளே இல்லாத ஜ்ஞாநம் என்று ஒன்று உலகத்திலேயே கிடையாது என்று யோகாசாரிகளுடைய மதத்தை முழுவதுமாக கண்டிக்கிறார் வ்யாஸர்-

2-2-5-ஸர்வதா₂நுபபத்த்யதி₄கரணம் அனைத்தும் பொய்யாக இருக்க முடியாதுமாத்யமிக மதத்தின் சுருக்கம்–ஸங்கதி – பௌத்த மதத்தின் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. அதில்
ஸௌத்ராந்திகர்களும் வைபாஷிகர்களும் உலகம் உண்மையானது என்று ஏற்றுக் கொள்கிறார்கள். யோகாசாரர்களோ ஜ்ஞானம் மட்டுமே உண்மை , உலகம் பொய்யானது என்று கூறுபவர்கள். அந்த மூன்று மதங்களையும் முன் இரண்டு அதிகரணங்களாலே வேதவ்யாஸர் கண்டித்தார். அதைத் தோடர்ந்து இந்த அதிகரணத்தில் மீதமிருக்கும் நான்காவது மதமான மாத்யமிகர்களின் மதத்தை வேதவ்யாஸர் கண்டிக்கிறார்.

மாத்யமிகர்களின் மதம் – இந்த உலகத்தில் அனைத்துமே பொய்யானது. உலகப் பொருள்களும் சரி, ஜ்ஞானம் என்று சொல்லப்படும் ஆத்மாவும் சரி, அனைத்துமே சூன்யம் அதாவது பொய்யானது. அது தெரியாமல் இவை உண்மை யானவை என்று நினைப்பது தான் ஸம்ஸாரம், மயக்கம். எனவே அனைத்தும் பொய்யானது என்று புரிந்து கொண்டு இல்லாமல் போவது தான் மோக்ஷம். இது தான் புத்தருடைய உண்மையான அபிப்ராயம் என்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் வாதத்தைப் பார்க்கலாம். ஒரு பொருள் உண்மையானது என்றால் அது எதிலிருந்து உண்டாயிற்று என்று ஆராய வேண்டும். ஒரு உண்மைப் பொருளை ஏற்றுக் கொண்டால், அது (1) மற்றொரு இருக்கும் பொருளிலிருந்து உண்டாயிற்றா அல்லது (2) இல்லாத பொருளிலிருந்து உண்டாயிற்றா? என்ற கேள்வி எழும்.

இருக்கும் பொருளிலிருந்து இந்தப் பொருள் உண்டாகி யுள்ளது என்று கூற முடியாது, ஏனெனில் அப்படி நாம் உலகத்தில் காண்பதே இல்லை . மண் கட்டி இருக்கும் போதே குடம் உண்டாவதை நாம் காண்பதில்லை . மண் கட்டி அழிந்தால் தான் குடம் உண்டாகிறது. குடம் அழிந்தால் தான் துண்டுகள் ஏற்படுகின்றன. தங்கக் காசு அழிந்தால் தான் மோதிரம் உண்டாகிறது. எனவே ஒரு பொருள் அழியும் போது தான் மற்றொரு பொருள் உண்டாகிறது என்று நாம் காண்கிற படியால் இருக்கும் பொருளிலிருந்து மற்றொரு பொருள் உண்டாகிறது என்று சொல்வது அநுபவத்துக்கு முரண்பட்டது.

இல்லாத பொருளிலிருந்து இந்தப் பொருள் உண்டாகலாமே என்றால், இல்லாத பொருளிலிருந்து உண்டானது உண்மையாக இருக்க முடியாது, தானும் இல்லாததாகத் தான் இருக்க முடியும். அதனால், இரண்டு விதத்தில் பார்த்தாலும் உலகத்தில் உண்மையான பொருள் என்று ஒன்றும் இருக்க முடியாது. உண்மையாக இருப்பதற்கு காரணம் எதுவும் இல்லா விட்டால், பிறகு அந்தப் பொருள் பொய்யானது தான் என்று தானாகவே கிடைக்கும், அதற்குத் தனியாக யுக்திகளைச் சொல்லத் தேவை இல்லை .

அதே போல், ஒரு பொருள் உண்டாகும் பொழுது தன்னிடத்திலிருந்தே உண்டாகிறதா, வேறொரு
பொருளிடத்திலிருந்து உண்டாகிறதா என்றும் கேள்வி எழும். தன்னிடத்திலிருந்து தான் உண்டாவதற்கு பயன் எதுவும் இல்லை . தான் முன்னமே இருந்த படியால் எதற்காக உண்டாக வேண்டும் மறுபடியும்?
மற்றொன்றிலிருந்து மற்றொரு பொருள் உண்டாகிறதென்றால், அனைத்திலிருந்தும் அனைத்தும்
உண்டாகலாமே ?
நூலிலிருந்தும் குடம் உண்டாகலாம், மண்ணிலிருந்தும் துணி வரலாம் என்று கேள்வி
எழும், அதனால் எந்த ஒரு பொருளும் உண்மை யானதல்ல. எல்லாமே பொய்யான பொருட்கள் தான்.இது உண்மை , இது பொய், இது இருக்கிறது, இது இல்லை என்று சொல்வதெல்லாமே ப்ரமம் அதாவது மயக்கம். அது தான் ஸம்ஸாரத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறதுசூன்யத்தை சூன்யம் என்று அறிந்து சூன்யமாவதே மோக்ஷம் என்கிறார்கள்

கேள்வி – எப்போதும் ஒரு ப்ரமம் (தவறான புரிதல்) ஏற்பட வேண்டும் என்றால், அதற்கு அடிப்படையில் ஒரு உண்மைப் பொருள் தேவைப் படுகிறது. ஒரு கயிற்றைப் பார்த்து “இது பாம்பு” என்று பிரமிக்கிறோம். அந்த பாம்பு பொய்யானது, ஆனால் அந்த ப்ரமத்துக்கு அடிப்படை விஷயமாக இருக்கும் கயிறு உண்மை யானதுதானே ? கயிறும் பொய்யாக இருந்தால் இப்படி ஒரு ப்ரமம், இது பாம்பு என்ற ப்ரமம் ஏற்படவே முடியாது. அதனால் அதிஷ்டானம் என்று சொல்லப்படுகிற ஏதோ ஒரு உண்மைப் பொருளை யாவது ஏற்க வேண்டும்.

மாத்யமிகர்களின் பதில் – ப்ரமம் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு குற்றம் (தோஷம்) நம்மிடத்தில் இருக்க வேண்டும். அந்த தோஷம் பொய்யானது என்றும், அந்த தோஷத்தாலே பாதிக்கப்பட்ட அறிவாளியும் பொய்யானவர் என்றும் நீங்களும் ஏற்கிறீர்கள். பிறகு அதிஷ்டானம் மட்டும் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம்? தோஷமும் தோஷத்தை உடையவரும் பொய்யாக இருந்தாலும் ப்ரமம் ஏற்படி ஏற்படலாமோ அதே போல் அதிஷ்டானம் பொய்யாக இருந்தாலும் ப்ரமம் ஏற்படலாம். அதில் எந்த தவறும் இல்லை ஆகையால் உலகத்தில் அனைத்துமே சூன்யம், இல்லாதது, பொய்யானது என்று வாதிடுகிறார்கள்.

(அத்வைதிகள் பரமாத்மா மட்டுமே உண்மை -ஞானம் மட்டுமே -ஞாதாவும் இல்லை -மற்ற எல்லாமே மித்யை -ப்ரஸன்ன பவுத்தர்கள் இவர்கள்)

இல்லை என்றாலும் இருப்பதே
இந்த மதத்தை வேதவ்யாஸர் இந்த அதிகரணத்தில் ஒரே ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்.
1– ஸர்வதா ₂ அநுபபத்தே : ச –
“எல்லா விதத்திலும் பொருந்தாத படியால்”

“நீங்கள் கூறும் ஸர்வ சூன்யத்வம் அதாவது எல்லாமே பொய்யானது என்ற தத்துவம் தவறானது, முற்றிலுமாகப் பொருந்தாத படியால்” என்று ஸூத்ரத்திற்குப் பொருள். -எல்லா விதத்திலும் பொருந்தாது என்று சொன்னால்
(1) பொருள்களை ஆராய்ந்து பார்த்தாலும் பொருந்தாது
(2) ப்ரமாணங்கணள ஆராய்ந்து பொருந்தாது என்று பொருள்.

மாத்யமிகர்களைப் பார்த்து வேத வ்யாஸர் கேட்கிறார் – நீங்கள் உங்கள் மதத்தைச் சொல்லும் பொழுது “உலகத்தில் அனைத்துமே உண்மை யானது” என்று சொல்வீர்களா? அல்லது “பொய்யானது இல்லாதது” என்று சொல்வீர்களா?-

இருப்பது, இல்லாதது என்று எந்தச் சொல்லைப் பயன் படுத்தினாலும் அது ஒரு பொருள் இருப்பதைத் தான் குறிக்கும் என்று வ்யாஸர் கூறுகிறார். அது எப்படிப் பொருந்தும்? “குடம் இருக்கிறது” என்று சொன்னால் குடம் உள்ளது என்று பொருள். “குடம் இல்லை ” என்று சொன்னால் அது குடத்தின் இல்லாமையைத் தானே காட்டும்? எப்படி ஒரு பொருளின் இருப்பைப் காட்டும்? என்று ஸந்தேகம் ஏற்படும். இதற்கு விடையை முன்னமே ஆரம்பணாதிகரணத்தின் நான்காவது ஸூத்ரத்தில் “அஸத்₃வ்யபதே ₃சாத் ந இதி சேத் ந த₄ர்மாந்தரேண வாக்ய ஸேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராத் ச” (2.1.6.4) என்ற ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் விடை யளித்திருக்கிறார்.

(அஸத்₃வ்யபதே₃சாத் ந – இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்ய சேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே : 
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது)

ஒரு பொருள் இல்லை என்று சொன்னால் அது “முற்றிலுமாக இருந்ததே கிடையாது” – “அது பொய்யானது” என்று பொருளல்ல. இப்போது இல்லை , இங்கில்லை , இந்த உருவத்திலில்லை என்று தான் ஆகுமே தவிர, என்றைக்கும் இருந்ததில்லை என்று பொருள் படாது. ஒரு மனிதருடைய சிறு வயது நண்பர் ஒருவர் வயதான பிறகு அவரை ஸந்திப்பதற்காக வீட்டுக்கு வருகிறார். “அவர் இருக்கிறாரா” என்று கேட்டதற்கு வீட்டில் இருந்தவர்கள் “அவர் இல்லை ” என்று கூறினார்கள். உடனடியாக “ஓ! இப்படி ஒரு மனிதனே இருந்தது கிடையாது! அவர் பொய்யானவர்! நானாக கற்பனை செய்து கொண்டேன்!” என்றா அந்த நண்பன் நினைக்கிறார்? இப்போது வீட்டிலில்லை என்று தானே பொருள்படும் –

சூன்யத்வம் எங்குள்ளது?
அதே போல் குடம் இல்லை என்று சொன்னால் இப்போது குடம் இல்லை , இந்த இடத்தில் குடம் இல்லை அல்லது இப்போது குடம் என்ற உருவத்தோடு இல்லை , அது உடைந்து மண் துண்டுகளாக ஆகி விட்டது
என்பது போல் தான் பொருள்படுமே தவிர முன்னாலும் குடம் என்ற பொருள் இருந்ததே கிடையாது, குடமே பொய்யானது என்று இந்தச் சொற்றடருக்கு ஒரு நாளும் பொருளாகாது

அதனால் ஒரு பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் அது இருப்பைத் தான் குறிக்கும். இல்லை என்று சொன்னாலும் அதுவும் வேறு ஒரு விதத்தில் அந்தப் பொருள் இருக்கிறது என்பதைத் தான் குறிக்கும். அதனால் நீங்கள் என்ன வாதம் செய்தாலும் உலகப் பொருட்களைப் பொய்யானவை என்று நிரூபபிக்கவே முடியாது.

அதே போல் ப்ரமாணங்களை ஆராய்ந்தாலும், அனைத்தும் பொய்யென்று சொல்ல முடியாது. ஏனென்றால் உலகத்தில் அனைத்தும் சூன்யம் – இல்லாதது என்று சொல்ல வேண்டும் என்றால் அந்த சூன்யத் தன்மையை ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பார்த்து விட்டு அதை உலகத்தில் அனைத்துப் பொருளிலும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த சூன்யத்துவம் என்பதை எங்கு பார்த்தீர்கள்? எந்த ஜ்ஞானத்தாலே பார்த்தீர்கள்? அந்த ஜ்ஞானம் பொய்யானதென்றால் அப்போது சூன்யத்துவம் என்ற விஷயமே பொய்யானது. அப்படிப் பட்ட ஓரு விஷயமே கிடையாது. அந்த ஜ்ஞானம் உண்மையானதென்றால் அப்போது அனைத்தும் பொய் என்ற உங்கள் மதம் பட்டுப் போய் விட்டது. ஒரு ஜ்ஞாநம் உண்மை யானது என்றாலும் அனைத்தும் பொய் என்று நீங்கள் கூறுவது தவறு தான்

அதனால் எல்லாமே பொய்யானது என்று உங்கள் மதம் எந்த விதத்திலும் நிரூபிக்கப் பட முடியாதது. அதனால் உலகப் பொருட்கள் உண்மையானவை தான். அதைக் காட்டிக் கொடுக்கும் அறிவும் உண்மை யானது தான். அறிவை உடையவரான ஆத்மாவும் உண்மையானவர் தான். இதைத் தான் வேதாந்தம் காட்டுகிறது. அதனால் பௌத்த மதம் ஏற்கத் தகுந்ததுல்ல என்ற கூறி இந்த அதிகரணத்தை நிறைவு செய்கிறார்.

(உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-


2.2.6 ஏகஸ்மிந் ந ஸம்ப₄வாதி₄கரணம்-ஜைந மதத்தின் கண்டனம்

ஜைந மதத்தின் சுருக்கம்-ஏகஸ்மிந் ந ஸம்ப₄வாதி₄கரணம் – ஸங்கதி -பரமாணுவை உலகுக்குக் காரணமாகச் சொல்லும் பௌத்தர்கள் கண்டித்த பிறகு, அவ்வாறே வாதிடும் ஜைநர்களைக் கண்டிக்கிறார் வ்யாஸர்.
ஜைனர்களின் மதத்தைச் சுருக்கமாக முதலில் பார்க்கலாம். அவர்கள் சொல்வது – ஜீவன், அஜீவன் என்று இரண்டு விதமான பொருட்கள் உலகத்திலே உள்ளன. ஜீவர்கள் என்பவர்கள் நம்மைப் போன்ற ஆத்மாக்கள். அஜீவம் என்பது ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவையான அறிவற்ற உலகப் பொருட்கள். இந்த இரண்டையும் தவிர ஈஸ்வரன் என்று ஒருவர் கிடையாது என்பது அவர்களின் கருத்து.
அடுத்ததாக உலகத்தில் இருக்கும் பொருட்களை ஆறு த்ரவ்யங்களாகப் பிரிக்கிறார்கள்.
(1) ஜீவன் – அவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுபட்டவராகவோ, யோகத்தாலே ஸித்திகளை அடைந்தவராகவோ அல்லது முக்தியடைந்தவராகவோ இருக்கலாம்.
(2) தர்மம் – இது உலகில் எங்கும் பரந்து விரிந்து இருக்கும். ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு இது தான் உதவி செய்யும்.
(3) அதர்மம் – இதுவும் உலகிலெங்கும் வ்யாபித்திருக்கும். அது நம்முடைய நகர்வைத் தடுக்கக் கூடியது, தடை செய்யக் கூடியது.
(4) புத்கலம் – நிறம், சுவை , மணம் முதலான பண்புகளை உடைய உலகப் பொருட்கள் அனைத்தும் இந்த வகைக்குள் வருகின்றன.
(5) காலம் – இது அணுவானது. எனவே உலகத்தில் பல காலப் பொருள்கள் உள்ளன என்கிறார்கள்.
(6) ஆகாசம் -இதுவும் எங்கும் பரந்து விரிந்த ஓன்று மேலும்,

மோக்ஷம் அடையும் கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்த்தோம் என்றால் அப் போது ஏழாக இதைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
(1) ஜீவன்
– இவர் ஜ்ஞானம், ஸுகம், திறல் முதலானவற்றைப் பண்புகளாக உடையவர்.
(2) அஜீவம் – இது உலகத்தில் நாம் அனுபவிக்கக் கூடிய எல்லாப் பொருள்களையும் குறிக்கும
(3) ஆஸ்ரவம் – உலகப் பொருட்களை அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் புலன்கள் அதாவது இந்திரியங்கள்,
(4) பந்தம் – ஸம்ஸாரத்தில் நம்மைக் கட்டி வைக்கக் கூடிய நாம் செய்த கர்மங்கள்
(5) நிர்ஜரம் – ஜைனர்களின் மதத்தின் படி மோக்ஷம் அடைவதற்கு வழியான தவம்
(6) ஸம்வரம் – இந்திரியங்களை முழுமையாக அடக்கி ஸமாதி நிலையில் தியானம் செய்வது
(7) மோக்ஷம் விருப்பு, வெறுப்பு முதலானவற்றைக் கழித்த தூய்மையான ஆத்மாவின் நிலை . இப்படியும் ஒரு பாகுபாட்டைச் சொல்லுகிறார்கள்–உலகில் ஒரே விதமான பரமாணுக்களே உள்ளன. அவை தான் வெவ்வேறு பண்புகளை அடையும் போது நிலம், நீர், தீ, காற்று என்றெல்லாம் சொல்லப்படுகின்றன – என்கிறார்கள்.

அடுத்ததாக, அவர்களின் மதத்தில் முக்கியமான பகுதி ஸப்த பங்கீ வாதம் என்று சொல்லப்படுகிறது.
எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அதை ஏழு விதமாகச் சொல்லலாம் என்று கூறுகிறார்கள் –
(1) ஸ்யாதஸ்தி – இருக்கலாம்,
(2) ஸ்யாத் நாஸ்தி – இல்லாமல் இருக்கலாம்
(3) ஸ்யாத அஸ்தி ச நாஸ்தி ச – இருந்து கொண்டே இல்லாமல் இருக்கலாம்
(4) ஸ்யாத அவக்தவ்யம் – சொல்ல முடியாமல் இருக்கலாம்
(5) ஸ்யாத் அஸ்தி ச அவக்தவ்யம் ச – இருந்து கொண்டு சொல்ல முடியாததாக இருக்கலாம்
(6) ஸ்யாத் நாஸ்தி ச அவக்தவ்யம் ச – இல்லாமல் சொல்ல முடியாததாக இருக்கலாம
(7) ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச அவக்தவ்யம் ச – இருப்பதாக இல்லாததாக சொல்ல முடியாததாக இருக்கலாம்.

எனவே எந்தப் பொருளைப் பற்றியுமே முடிவாக சொல்லவே முடியாது.
எல்லாப் பொருள்களுமே வெவ்வேறு நிலைகளை அடைகின்றன. பொருள் என்று பார்த்தால் ஒன்று தான், ஆனால் நிலைகளாகப் பார்த்தால் வெவ்வேறு தான். எனவே இரண்டு பொருட்களை
வெவ்வேறு (பி₄ன்னம்) என்றும் சொல்லலாம், ஒன்றே (அபி₄ன்னம்) என்றும் சொல்லலாம். அதே போல்
பொருள்களை நித்யமானவை என்றும் சொல்லலாம், அவற்றில் நிலைகள் மாறுகிற படியால் அவற்றை
அநித்யமானவை என்றும் சொல்லலாம். எனவே முரண்பட்டவை என்று நாம் உலகில் சொல்லும் பண்புகள் கூட ஒரே பொருளில் ஒரே காலத்தில் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸப்த பங்கீ வாதம் பொருந்தாது-ஸித்தாந்தம் –
1- ् ந ஏகஸ்மிந் அஸம்ப₄வாத் –
“பொருந்தாது; ஒன்றில் முடியாததால் ”
ஜைந மதம் பொருந்தாது; ஒரு பொருளில் இருத்தல் இல்லாமை முதலான முரண்பட்ட பண்புகள் ஒரே காலத்தில் இருக்க முடியாததால்” என்று ஸூத்ரத்தின் பொருள்.
இத்தால் ஜைநர்கள் சொல்லும் ஸப்த ப₄ங்கீ வாதத்தைக் கண்டிக்கிறார் வ்யாஸர். அஸ்தித்வம் என்றால் இருத்தல். நாஸ்தித்வம் என்றால் இல்லாமை . இவை முரண் பட்டவை . நித்யத்வம் என்றால் அழியாமை , அநித்யத்வம் என்றால் அழியும் தன்மை . இவையும் ஒரே பொருளில் சேர்ந்து இருக்க இயலாது. வேறுபட்ட பொருள்கள் ஒன்றாக இருக்க முடியாது. இப்படி முற்றிலும் முரண்பட்ட பண்புகள் எல்லாம் ஒரே பொருளில் ஒரே காலத்தில் இருக்கவே முடியாது. எனவே இரண்டும் உள்ளன என்று கூறும் உங்கள் மதம் பொருத்தமற்றது.

மேலும், காலம் அணுவானது என்று சொன்னீர்கள். அப்படி யென்றால் பல காலப் பொருள்கள் உலகில் இருக்க வேண்டும். ஆனால் அநுபவத்தில் காலம் என்ற ஒரே பொருளில் உலகப் பொருள்கள் பல இருப்பது போலத் தான் ஏற்படுகிறது. இதற்கு முரண்பட்டதாக நீங்கள் வாதிடுகிறீர்கள்.-6 த்ரவ்யங்கள் என்று பிரித்துச் சொன்னதால், ஜீவன் தர்மம் அதர்மம் ஆகியவை வேறுபட்டு தான் இருக்க வேண்டும், ஒன்றாக இருக்க முடியாது. எனவே உலகத்தில் எல்லாமே ஒன்றென்றும் சொல்லப்படலாம் வேறென்றும் சொல்லப்படலாம் என்று நீங்கள் கூறியது தவறு. அசேதனப் பொருட்களான பரமாணுக்கள் பரமாத்மாவால் இயக்கப் படாமலேயே உலகைப் படைக்கின்றன என்று சொல்வதில் உள்ள குற்றங்கள் எல்லாம் முன் அதிகரணங்களிலேயே விவரிக்கப் பட்டு விட்டன. அவையும் உங்கள் மதத்தில் வந்து சேர்கின்றன.

ஆத்மா உடலின் அளவுடையவரல்ல
2-ஏவம் ् ச ஆத்ம அகார்த்ஸ்ந்யம் –
“இவ்வாறென்றால் , ஆத்மாவின் முழுமையின்மை ஏற்படும்”
ஜைந மதத்தில் ஆத்மாவின் அளவை ஆராயும் பொழுது இவ்வாறு கூறுகிறார்கள் – ஆத்மா விபூ, அதாவது எங்கும் பரந்திருப்பவர் என்று கொள்ள முடியாது; ஏன் எனில் உடலுக்கு வெளியே ஆத்மாவை நாம் எங்கும் உணர்வதில்லை-அதே போல் ஆத்மா அணுவானவர், அதாவது மிகவும் நுண்ணியவர் என்றும் கொள்ள முடியாது. அப்படி ஆனால் உடலில் எல்லா இடங்களிலும் நமக்கு ஏற்படும் உணர்ச்சி பொருந்தாமல் போய் விடும். ஆகையால் இந்த ஆத்மா -தேஹ பரிமாணம் போல் ஆத்மாவும் என்கிறார்கள் -உடலின் அளவை உடையவர் என்று ஜைநனர்கள் வாதிடுகிறார்கள்.

அந்த வாதத்தை இந்த ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்.
இவ்வாறு ஆத்மா உடலின் அளவை உடையவர் என்று நீங்கள் சொன்னால், அப்போது எந்த தோஷங்களைத் தவிர்க்கப் பார்த்தீர்களோ , அந்த தோஷங்களே உங்கள் மதத்தில் வந்து விடும். அதாவது ஆத்மாவின் முழுமை யின்மை ஏற்பட்டு விடும் என்று கூறுகிறார்.
ஒரு யானையின் உடலில் இருக்கும் ஜீவாத்மா, அதை விட்டு எறும்பின் உடலை எடுத்துக் கொள்ளும் பொழுது யானை அளவுக்கு பெரியதானதாக இருக்கும் அந்த ஆத்மா எறும்பின் உடலுக்குள் முழுமையாக பிடிக்க முடியாது. அதனால் உடலுக்கு வெளியே இருப்பதாக ஆகும். இதுவே ஆத்மாவின் முழுமை இன்மை என்கிற தோஷமாகும். அதே போல் எறும்பின் உடலுக்குள் இருந்த ஜீவாத்மா ஒரு யானையின் உடலை எடுத்துக் கொள்ளும் பொழுது, சிறிய ஜீவாத்மா பெரிய உடலுக்குள் நுழைகிறபடியால் யானை உடலின் பல பகுதிகளில் ஜீவாத்மா இல்லை என்பதால் உடலெங்கும் ஏற்படும் உணர்ச்சிகள் போருந்தாமல் போய் விடும்.-ஆக, ஆத்மா உடலின் அளவை உடையவர் என்பதே பொருந்தாது

ஆத்மா வளரவோ சுருங்கவோ முடியாது
3- ந ச பர்யாயாத் அபி அவிரோத₄: விகாராதி₃ப்₄ய:

“நிலை மாறு பாட்டாலும் முரண்பாடின்மை ஏற்படாது, மாறுபாடு முதலானவை ஏற்படுகிற படியால்”
முன் ஸூத்ரத்தில் சொன்ன தோஷத்துக்கு பதிலளிப்பதற்காக ஜைநர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் – ஆத்மாவால் வளரவும் சுருங்கவும் முடியும். யானையின் உடலிலிருந்து எறும்பின் உடலுக்குள் புகும் பொழுது ஆத்மா சுருங்கி விடுகிற படியால் முழுமையாக எறும்பின் உடலுக்குள்ளேயே இருந்து விடுவார். எறும்பின் உடலை விட்டு யானையின் உடலை அடையும் பொழுது ஆத்மாவே விரிவடைகிற படியால் யானை யுடைய உடலுக்குள்ளும் முழுமையாகப் வ்யாபித்து விடுவார். அதனால் முன் சொன்ன தோஷங்கள் எதுவுமே இல்லை என்று அவர்களின் வாதம்.

இதற்கு வ்யாஸர் பதில் கூறுகிறார் – இப்படிக் கொண்டால் ஆத்மாவுக்கு விகாரம் அதாவது மாறுபாடு என்கிற தோஷமும் –விகாரம் இருந்தாலே கூட இருக்கக் கூடிய அழிவு முதலான தோஷங்களும் ஏற்பட்டு விடும்- அதனால் ஆத்மா வளரவோ சுருங்கவோ முடியாது.

4–அந்த்ய அவஸ்தி₂தே : ச உப₄ய நித்யத்வாத் அவிசேஷ:
“இறுதியானது இருப்பதாலும் இரண்டும் நிரந்தரமானதாலும் (முன்னும்) வேறுபாடில்லை ”

ஒரு ஆத்மா முக்தி அடையும் பொழுது கடைசியாக எந்த உடலை எடுத்துக் கொண்டிருந்தாரோ அந்த அளவு மாறாமல் தான் முக்தி அடைந்த நிலையிலும் இருப்பார் என்று கொள்ள வேண்டும். ஆனால் முக்தி நிலையில் இருக்கும் பண்புகள் தான் ஆத்மாவுக்கு இயற்கை யானவையாக இருக்க வேண்டும். அதற்கு முன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது ஏற்பட்ட பண்புகள் செயற்கை யானவையாக இருக்க வேண்டும். எனவே இந்த ஆத்மா இறுதியாக இருந்த உடலில் எந்த அளவோடு இருந்தாரோ அந்த
அளவோடு தான் முக்தியிலும் இருப்பார் என்றால் அதுவே அவருக்கு இயற்கையான அளவாக இருக்க வேண்டும். அப்படிக் கொண்டால் அந்த ஆத்மா அதற்கு முன்பு எத்தனை பிறவிகளை எடுத்துக் கொண்டிருந்தாலும் அவற்றிலும் அந்த இயற்கையான அளவு மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆகவே என்றுமே ஜீவாத்மா தான் எடுத்துக் கொள்ளும் அந்தந்த உடலின் அளவுக்கு இருப்பார் என்றும் வாதம் பொருந்தாதது.

இப்படி ஜைந மதத்தில் பல விதமான குற்றங்கள் இருக்கிற படியால் இதுவும் தள்ளத் தகுந்தது என்று வேத வ்யாஸர் முடிக்கிறார்.


2.2.7 பசுபத்யதி₄கரணம் –பாசுபத மதத்தின் கண்டனம்-பாசுபத மதத்தின் சுருக்கம் – ஸங்கதி – இதுவரை ஸாம்க்ய மதம், வைஸேஷிக மதம், பௌத்த மதம், ஜைன மதம் என்பவற்றை வேத வ்யாஸர் கண்டித்தார். அவற்றில் முரண்பாடுகள் உள்ளன, அவை வேதத்தோடும் முரண்படுகின்றன, அதனால் மோக்ஷத்தை விரும்பும் அதிகாரிகள் அவற்றை ஆதரிக்க வேண்டாம் என்று கூறினார். அதே போல் பசுபதியால் பறப்பட்ட மதமும் வேதத்துக்கு முரண் பட்டதாக இருக்கிறபடியால் அதையும் ஆதரிக்க வேண்டாம் என்று இந்த அதிகரணத்தில் கூறுகிறார்.

பசுபதியால் பறப்பப்பட்ட மதம் நான்கு உட்பிரிவுகளோடு காணப்படுகிறது –
(1) காபாலர்கள், (2) காலாமுகர்கள்,
(3) பாசுபதர்கள், (4)ஸைவர்கள்

இந்த மதங்களில் சொல்லக் கூடிய தத்துவங்களின் முறையும், இவ்வுலகத்திலும் மற்ற உலகங்களிலும் மோக்ஷத்திலும் ஆனந்தம் அடைவதற்கு இவர்கள் சொல்லும் முறைகளும் வேதத்துக்கு முரண்பட்டவையாக இருக்கின்றன. அதனால் இந்த மதங்களை ஏற்கக் கூடாது என்று வேத வ்யாஸருடைய அபிப்ராயம்.-தத்துவங்களைச் சொல்லும் பொழுது – உலகத்துக்கு உபாதான காரணம் (மூலப்பொருள்) ப்ரதானம் என்ற அறிவற்ற அசேதனப் பொருள்; நிமித்த காரணம் அதாவது உண்டாக்குபவர் பரம சிவன் என்று கூறுகிறார்கள். மோக்ஷம் அடைவதற்கான வழியைச் சொல்லும் பொழுது ஒவ்வொரு உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு விதமாக வர்ணிக்கிறார்கள்.

பாசுபத மதத்தின் சுருக்கம்
காபாலர்கள் கூறுவது –கண்டி₂கா ருசகம் சைவ குண்ட₃லம் ச சிகா₂மணி: । ப₄ஸ்ம யஜ்ஜோபவீதம் ச முத்₃ராஷட்கம் ப்ரசக்ஷதே ॥ ஆபி₄: முத்₃ரிததே ₃ஹஸ்து ந பூ₄ய இஹ ஜாயதே ।ப₄கா₃ஸநஸ்தம் ஆத்மாநம் த்₄யாத்வா நிர்வாணம் ருச்ச₂தி-
-அதாவது, ஆறு முத்திரைகளை தரித்துக் கொண்டு ப₄கா₃ஸநத்தில் அமர்ந்து ஆத்மாவை த்யானிப்பவன் மோக்ஷம் அடைகிறான். ஆறு முத்திரைகள் ஆவன – கண்டிகை என்ற கழுத்தின் ஆபரணம், ருசகம் என்ற மோதிரம், காதில் குண்டலம், சிகாமணி என்று தலையில் ஓராபரணம், பஸ்ம என்ற சாம்பல், யஜ்ஜோபவீதம் என்ற பூணூல்.

காலாமுகர்கள் சொல்வது – கபாலம் அதாவது மண்டை ஓட்டை பாத்திரமாகக் கொண்டு உணவு உண்ணுதல், பிணத்தை எரித்து அந்த சாம்பலில் நீராடுவது, சாம்பலை உண்ணுவது, லகுடம் என்கிற தடியை கையில் பிடித்துக் கொள்வது, ஸுராகும்பம் என்கிற கள்ளுக் குடத்தை வைத்து அதற்குள் இருக்கும் தெய்வத்தைப் பூஜை செய்வது, இவை அனைத்தும் தான் மோக்ஷம் அடைவதற்கான வழிகள் என்று கூறுகிறார்கள்.
சைவ ஆகமத்திலோ – கையில் கங்கணமாக ருத்ராக்ஷத்தை அணிவது, தலையில் சடை முடி, கபாலம்,
சாம்பலில் குளிப்பது இவை யெல்லாம் தான் மோக்ஷத்திற்கான வழிகள் என்று சொல்லப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு உட்பிரிவிலும் வெவ்வேறு வழிகள் மோக்ஷம் அடைவதற்கு வர்ணிக்கப் பட்டுள்ளன.

பாசுபத மதத்தில் முரண்பாடுகள்
ஸித்தாந்தம் – இந்தப் பசுபதியின் மதத்தை 4 ஸூத்ரங்களால் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
1- பஸ்யு அஸாமஞ்ஜஸ்யாத் –
“பசுபதியும் மதமும் தள்ளத் தகுந்த்து,-(பஸ்யு-பசு பாசம் பந்தம் ) பொருந்தாதபடியால்”
முன் அதிகரணத்தில் முதல் ஸூத்ரத்திலிருந்து ’ந’ என்ற போல் இங்கும் சேர்க்கப்பட வேண்டும். அத்தால் ’தள்ளத் தகுந்தது’ என்கிற பொருள் கிடைக்கிறது.
அஸாமஞ்ஜஸ்யம் –-அதாவது பொருந்தாமையாவது – அதிலிருக்கும் உட்பிரிவுகளுக்கும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறபடியாலும், இவர்கள் சொல்லும் அனைத்துமே வேதத்தோடு முரண்படுகிறபடியாலும்.

வேதத்தில் உலகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஒன்று தான், அதுவும் நாராயணன் தான் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது –
(ஸதே₃வ ஸோம்யேத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்), (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்), (நாராயண பரம் ப்₃ரஹ்ம) முதலான வாக்கியங்களால். எனவே ப்ரதானமே உபாதானம் என்றும் சிவன் நிமித்த காரணம் என்றும் அவர்கள் சொல்வது பொருந்தாது.

மோக்ஷத்திற்கான வழி பக்தியோகம் என்கிற த்யானம் தான் என்று வேதம் ஸந்தேஹமின்றிக் கூறுகிறது –(தமேவம் வித்₃வான் அம்ருத இஹ ப₄வதி நாந்ய: பந்தா₂: அயநாய வித்₃யதே ),
(நிதி₃த்₄யாஸிதவ்ய:)
முதலான வாக்கியங்களால்.–ஆக பசுபதியின் சொல்லப்படும் வழிகள் தவறானவை .அந்த த்யானத்துக்கு உதவக் கூடிய கர்மங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தின் படி விதிக்கப் பட்டவையே என்றும் வேதம் சொல்கிறது. ஆக வேதத்துக்கு முரணாக இவர்களால் சொல்லப்படும் ஆசாரங்களும் கர்மங்களும் ஏற்கத் தகுந்தவை யல்ல

2-அதி₄ஷ்டா₂ந அநுபபத்தே : – “அதி₄ஷ்டா₂நம் (இயக்குவது) பொருந்தாத படியாலும்”
அநுமானத்தைக் கொண்டு உலகைப் படைக்கும் நிமித்த காரணமான ஈஸ்வரனை நிரூபிக்கிறார்கள் பசுபதியின் மதத்தைச் சேர்ந்தவர்கள். உலகத்தில் குயவன் முதலானவர்கள் சக்கரம் முதலானவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்து (இயக்கி) குடம் முதலானவற்றை உண்டாக்குவதைக் காண்கிறோம்.இதனடிப் படையில் தான் இந்த உலகத்தைப் படைப்பதற்காக ப்ரதானம் என்கிற மூல ப்ரக்ருதியை அதி₄ஷ்டா₂நம் செய்ய (இயக்க) ஓர் ஈஸ்வரன் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்கிறார்கள். ஆனால் அப்படிக் கொண்டால் குற்றம் உள்ளது.

பாசுபத மதத்தில் முரண்பாடுகள்
உலகத்தில் சக்கரம் முதலானவற்றை இயக்கும் குயவன் முதலானவர்கள் அனைவருமே உடலோடு கூடியவர்களாகத் தான் காணப்படுகிறார்கள். எனவே இதனடிப் படையில் ஈஸ்வரனை அநுமானம் செய்தால், அவரும் ப்ரக்ருதியை இயக்கும் பொழுது ஒரு சரீரத்தை உடையவராக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் மதத்தில் பசுபதிக்கு சரீரம் உண்டு என்பதை ஏற்க வில்லை . மேலும், அப்படியே சரீரம் இருப்பதை ஏற்றாலும், அது நித்யமானது என்று கூறினால், பல பகுதிகளைக் கொண்ட ஒரு பொருள் நித்யமானதாகவும் இருக்கலாம் என்று ஆகி விடும். அவ்வாறாயின், இந்த உலகமும் அதே போல் நித்யமானது என்றே கூறி விடலாம், எதற்காக இது படைக்கப் பட்டது என்று ஏற்க வேண்டும்? என்கிற கேள்வி எழும். அந்த சரீரம் அநித்யமானது என்று கொண்டால், அதைப் படைக்க ஈஸ்வரனுக்கு மற்றொரு சரீரம் வேண்டும், அதைப் படைக்க மற்றொரு சரீரம் வேண்டும் என்று முடிவில்லாமல் சொல்ல வேண்டியபடியால் அநவஸ்தா₂ என்கிற தோஷம் ஏற்படும்.

(ஆத்ம யோனித்வ அதிகரணம் -1-1-3- கீழேயே பார்த்தோம் – உடம்பு நித்தியமாக இருக்க முடியாதே -படைக்கப் பட்டது என்றாலே அநித்யமாகவே இருக்க வேண்டும் -)

3–கரணவத் சேத் ந போ₄கா₃தி₃ப்₄: – “கருவியைப் போல் என்றால், அது பொருந்தாது; போகம்
முதலானவை ஏற்படுகிற படியால்”

அவர்கள் கேட்கிறார்கள் – உடல் இல்லாமலேயே ஜீவாத்மா தன் உடலையும் புலன்களையும் இயக்குவது போல் பசுபதி ப்ரதானத்தை இயக்கலாமே ? என்று. இதற்கு வ்யாஸரின் பதில் – ஜீவாத்மா உடலை இயக்குவது பாப-புண்யம் என்கிற கர்மத்தின் காரணமாக. எனவே அதுபோல் பசுபதிக்கு உடல் உள்ளது என்று சொன்னால் அவருக்கும் பாப புண்யங்கள் வந்து விடும். அதன் விளைவாக, உலகத்தில் இன்ப துன்பங்களையும் அவர் அநுபவிக்க வேண்டி வரும்.

4- அந்தவத்வம் அஸர்வஜ்ஞதா ச – “முடிவுடைமையும் அஸர்வஜ்ஞதையும் ஏற்படும்”
பசுபதிக்கு புண்ய-பாபங்கள் என்கிற கர்மங்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொண்டால், அப்போது அவருக்கும் ஜீவாத்மாவைப் போல் பிறப்பிறப்புக்கள், ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் முதலான குறைபாடுகள் ஏற்பட்டு விடும். மேலும் அவர் ஸர்வஜ்ஞன் (அனைத்தையும் அறிபவர்) என்று சொல்வதும் பொருந்தாது, ஜீவாத்மாவைப் போல் ஆனபடியால்.
ஆக, பல விதமான முரண்பாடுகள் இந்த மதங்களில் உள்ளபடியால் இவை தள்ளத் தகுந்தவை என்கிறார் வ்யாஸர்.


2.2.8 உத்பத்த்யஸம்ப₄வாதி₄கரணம்-பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மை -அதிகரண த்தின் ஸங்கதி-இதுவரை இந்தப் பாதத்தில் ஸாங்க்யர்கள், வைசேஷிகர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பாசுபதர்கள் என்பவர்களின் மதங்களை எடுத்து அவற்றில் இருக்கும் குற்றங்களையும் பொருந்தாமைகளையும் வேத வ்யாஸர் காட்டினார். இந்த பாதத்தின் இறுதியான இவ்வதிகரணத்தில் பாஞ்ஜராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை வேத வ்யாஸர் நிரூபிக்கிறார்.

ஸந்தேகம் – இந்த பாதத்திலேயே ஒவ்வொரு அதிகரணத்திலும் வேதத்துக்கு முரண்பட்ட மற்ற மதங்களை கண்டனம் செய்து கொண்டு வருகிறார் வேத வ்யாஸர். அந்த வரிசையில் பார்த்தால், இந்த அதிகரணத்திலும் பாஞ்சராத்ர ஆகமத்தைக் கண்டிக்கத்தானே வேண்டும்? எப்படி அதன் உண்மைத் தன்மையை நிரூபிப்பது இந்த பாதத்தில் செய்யப்படமுடியும்?

பதில் – இந்தப் பாதத்தின் குறிக்கோள் வேதத்துக்கு முரண்பட்ட மதங்களை கண்டிப்பது என்பதே அல்ல –
முதல் அத்தியாயத்தில் உபநிஷத் வாக்கியங்களை ஆராய்ந்து வேத வ்யாஸர் ஒரு முடிவுக்கு வந்தார் –
“உலகமனைத்துக்கும் முழு முதற்காரணம் பரமாத்மாவே ” என்று. அந்த முடிவை வலுப் படுத்துவது தான் இந்தப் பாதத்தினுடைய குறிக்கோள். அதில் முதல் ஏழு அதிகரணங்களாலே இந்த முடிவுக்கு முரண்பட்ட மதங்களை எடுத்து அவற்றை தவறு என்று நிரூபிப்பதன் மூலம் நாம் எடுத்த முடிவு சரியானது தான் என்று வலுப்படுத்தினார். இந்தக் கடைசி அதிகரணத்திலும், பாஞ்ச ராத்திர ஆகமம் உண்மையானது என்று நிரூபிப்பதன் மூலம் அந்த பாஞ்சராத்ர ஆகமத்திலும் பரமாத்மாவே உலகத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகிறபடியால் நாம் வேதாந்தத்திலிருந்து அடைந்த முடிவு மேலும் வலுவடைகிறது. ஆகையால் இந்த அதிகரணமும் இந்தப் பாதத்தில் இடம் பெறுவதில் எந்த முரண்பாடும் இல்லை . மற்ற மதங்களைக் கண்டிப்பதும் சரி, பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை நிலை நாட்டுவதும் சரி, இரண்டுமே பரமாத்மாவே ஜகத்துக்குக் காரணம் என்ற முடிவை வலுப்படுத்து வதற்காகத்தான்.

(ஆகம பிராமாண்யம் -ஆளவந்தார் -இத்தையே கை விளக்காகக் கொண்டு நிரூபணம்-இரண்டு பூர்வபக்ஷ ஸூத்ரங்கள் -இரண்டு ஸித்தாந்த ஸூத்ரங்கள்)

பூர்வ பக்ஷியின் வாதம்
பூர்வ பக்ஷம் – இவ்வதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷத்தைக் கூறுகின்றன.
1-உத்த்பத் யஸம்பவாத் –

“ (ஜீவாத்மாவுக்கு) உண்டாக்கம் இருக்க முடியாதபடியால் (பாஞ்சராத்ரம் உண்மையானதல்ல)”
பாஞ்சராத்ர ஆகமத்தில் இவ்வாறு ஒரு வாக்கியம் உள்ளது –
பரம காரணாத் பர ப்₃ரஹ்ம பூ₄தாத் வாஸுதே₃வாத் ஸங்கர்ஷண : நாம ஜீவ: ஜாயதே | ஸங்கர்ஷணாத்
ப்ரத்₃யும்ந ஸம்ஜ்ஞம் மந: ஜாயதே | தஸ்மாத் அநிருத்₃த₄ ஸம்ஜ்ஞ: அஹங்கார: ஜாயதே |

இதன் பொருள் – “முழு முதற் காரணமான பர ப்ரஹ்மமான வாஸுதேவனிடமிருந்து ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார். அவரிடமிருந்து ப்ரத்யும்னன் என்ற மனது உண்டாகிறது. அதிலிருந்து அநிருத்தன் என்ற அஹங்காரம் உண்டாகிறது”
இதில் “வாஸுதேவனிடமிருந்து ஜீவாத்மா உண்டாகிறார்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேதாந்தத்திலோ (्ந ஜாயதே | ம்ரியதே வா விபஶ்சித்) அதாவது ஜீவாத்மா உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை -அவர் நித்யமானவர் என்று கூறப்படுகிறது. எனவே இக் கருத்துக்கு முரண்படும் பாஞ்சராத்ரம் உண்மையானதல்ல,

2- ந ச கர்து: கரணம் – “கர்த்தாவிடமிருந்து கரணம் உண்டாகாத படியாலும்”
கர்த்தா என்றால் செயல்களைச் செய்பவரான ஜீவாத்மா. கரணம் என்றால் அதற்குப் பயன்படும் கருவியான மனது. இந்த வாக்யத்தின் அடுத்த பகுதியில் “ஜீவனிடமிருந்து மனது உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது. இதுவும் வேதத்துக்கு முரணானது. வேதத்தில் ஸாத்த்விக அஹங்காரம் என்ற அசேதனப் பொருளிலிருந்து தான் மனது உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது, ஜீவாத்மாவிடமிருந்தல்ல. எனவே பாஞ்சராத்ரத்தில் உள்ள இக் கருத்தும் தவறானது தான்.

ஆக இப்படி பல இடங்களில் வேதத்தோடு முரண்படுகிறபடியால் பாஞ்சராத்ரமும் ஸாங்க்யம், பாசுபதம் முதலான மற்ற தந்த்ரங்கள் போல் தள்ளத் தகுந்ததே , இது ப்ரமாணமாக இருக்க முடியாது என்பது பூர்வ பக்ஷம்.

வேதத்தோடு முரண்பாடு இல்லை
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வ பக்ஷத்தை அடுத்த இரண்டு ஸூத்ரங்களால் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
3-விஜ்ஞாநாதி₃ பா₄வே வா தத₃ப்ரதிஷேத₄:

“பரமாத்மாவாகவே இருக்கிற படியால் பாஞ்சராத்ர ஆகமத்தின் ப்ராமாண்யம் (உண்மைத்தன்மை ) கண்டிக்கத் தகுந்ததல்ல”
தத் – பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை
அப்ரதிஷேத₄: – கண்டிக்க முடியாது
விஜ்ஞாநாதி₃ பா₄வே – (ஸங்கர்ஷணன் முதலான வடிவங்கள்) பரமாத்மாவாகவே இருக்கிறபடியால்.

விஜ்ஞாநம் என்றால் அறிவே வடிவமானது. ஆதி₃ என்றால் உலகத்தையே உண்டு ஸம்ஹாரம் செய்யக் கூடியவர்.-எனவே ’விஜ்ஞாநாதி₃’ என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது. பா₄வம் என்றால் அவரது தன்மை , அவராக இருத்தல். விஜ்ஞாநாதி₃பா₄வம் என்றால் பரமாத்மாவாகவே இருத்தல்.-ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன் முதலானவர்கள் பரமாத்மாவாகவே இருக்கிறபடியால் இதில் வேதத்துக்கு முரணாக ஜீவாத்மாவுக்கோ மனதுக்கோ உண்டாக்கம் சொல்லப்படவே இல்லை . எனவே பாஞ்சராத்ர ஆகமம் ப்ரமாணம் அல்ல என்று கூற முடியாது என்கிறார் வ்யாஸர்.

பூர்வபஷி காட்டிய வாக்கியங்களின் பொருளை உண்மையாகப் புரிந்து கொள்வதற்கு முதலில் பாஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். ஆகமம் என்று சொன்னாலே அதில் சாதுராத்ம்யம் என்பதைப் பற்றின உபாஸனம் சொல்லப்பட்டிருக்கும். சாதுராத்ம்யம் என்றால் பகவான் தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு இருக்கும் நிலை –வாஸுதேவன் என்ற பரமாத்மா வைகுந்தத்தில் பரரூபம் என்ற வடிவத்தோடு எப்போதும் இருக்கிறார். அதற்கடுத்ததாக, உலகத்தைப் படைத்து, காத்து அழிப்பதன் பொருட்டு தானே வ்யூஹ மூர்த்திகள் என்ற நான்கு வடிவங்களை எடுத்துக் கொள்கிறார். அவையாவன வ்யூஹ வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்பவை –

(கண்ணனின் திருக் குமாரர் திருப் பேரானார் இதே பெயரான ப்ரத்யும்னன் அநிருத்தன் -அவர்கள் வேறு -இவர்கள் வ்யூஹ மூர்த்திகள் -)

ராமன், கண்ணன் என்றெல்லாம் எப்படி பகவான் அவதரிக்கிறாரோ , அதே போல் நான்கு வ்யூஹ மூர்த்திகளாகவும் அவரே தான் அவதாரங்களை எடுக்கிறார், அதாவது வடிவங்களை எடுத்துக் கொள்கிறார். அப்படி இருக்கும் நாலு வடிவங்களை உபாஸிப்பது என்பது பாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு முக்கியமான கோட்பாடு.

(விபவங்களை பூஜிக்க பூஜிக்க -வ்யூஹ மூர்த்திகளை பூஜிக்கத் தொடங்கி -மேல் பர வாஸூதேவனைப் பூஜிக்கத் தொடங்குவோம் -இதுவே படிக்கட்டு–உபாஸனத்துக்கு எளிதாக ஆகவே வ்யூஹ அவதாரங்கள் –

ஆகையால் இந்த வாக்யத்திலும் முழு முதற் காரணமான வாஸுதேவனிடமிருந்து ஸங்கர்ஷணன் உண்டானார் என்று சொல்வது ஜீவனுடைய உண்டாக்கத்தைப் பற்றிப் பேசவே இல்லை – பகவான் ஸங்கர்ஷணன் என்று அவதாரம் எடுப்பதைச் சொல்கிறது. அவரிடமிருந்து ப்ரத்யும்னன் உண்டானார் என்று சொல்வது மனதின் உண்டாக்கத்தைப் பற்றிப் பேசவே இல்லை –அடுத்த அவதாரமான ப்ரத்யும்னன் என்கிற வடிவத்தைப் பற்றிச் சொல்கிறது. ஆகவே இந்த வாக்கியங்களில் எங்கும் ஜீவாத்மாவோ மனதோ உண்டாக்கப்படுவதைப் பற்றின பேச்சே இல்லை – ஆகையால் வேதத்தோடு இந்த வாக்கியங்கள் முரண்படுகின்றன என்று சொல்லுவது தவறானது.

கேள்வி – அப்படி இருப்பின் “ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார்”, “ப்ரத்யும்னன் என்கிற மனது
உண்டாகிறது” என்று ’ஜீவன்’, ’மனது’ முதலான சொற்கள் எப்படிப் பொருந்துகின்றன? பரமாத்மாவின்
வடிவங்களான ஸங்கர்ஷணனும் ப்ரத்யும்னனும் ஜீவனாகவோ மனதாகவோ இருக்க முடியாதே ?

பதில் – இந்த ஆகமத்திலேயே இதற்கு விடை உள்ளது. ஸங்கர்ஷணன் என்ற அவதாரம் தான் ஜீவாத்மாக்களை எல்லாம் அதிஷ்டானம் செய்து இயக்கக் கூடியவர். அதனால் “ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார்” என்ற வாக்யத்துக்கு “ஜீவர்களை இயக்கக் கூடியவரான ஸங்கர்ஷணன் உண்டாகிறார்” என்று பொருள். “ப்ரத்யும்னன் என்கிற மனது உண்டாகிறது” என்ற வாக்யத்துக்கு “மனதை இயக்கக் கூடியவரான ப்ரத்யும்னன் உண்டாகிறார்” என்று பொருள். “அனிருத்தன் என்கிற அஹங்காரம் உண்டாகிறது” என்ற வாக்கியத்துக்கு “அஹங்காரத்தை இயக்கக் கூடியவரான அனிருத்தன் உண்டாகிறார்” என்று பொருள். ஆகையால் நீங்கள் சொன்னபடி வேதத்துக்கு
முரண்பட்ட கருத்து இந்த இடத்தில் எதுவும் சொல்லப்படவில்லை . அதனால் பாஞ்சராத்ர ஆகமத்தின்
உண்மைத் தன்மையை கண்டிப்பது தகாதது.

வேதத்தோடு ஒற்றுமை
4–விப்ரதிஷேதா₄த் ச –
“(ஜீவாத்மாவின் உண்டாக்கத்தை பாஞ்சராத்ர ஆகமம்) கண்டிக்கிற படியாலும்”
பாஞ்சராத்ர ஆகமத்திலேயே இவ்வாறு மூல ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மாக்களின் தன்மைகள் சொல்லப் படுகின்றன –
அசேதநா பரார்தா₂ ச நித்யா ஸதத விக்ரியா । த்ரிகு₃ணா கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே ॥
அறிவற்றது, பிறருக்காக இருப்பது, நித்யமானது, எப்போதும் மாற்றம் அடைவது, ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொ ண்டது, ஜீவாத்மாவுக்கு ஷேத்ரமாக (விளை நிலமாக) இருப்பது – இதுவே ப்ரக்ருதியின் ஸ்வரூபம்.

வ்யாப்தி ரூபேண ஸம்ப₃ந்த₄: தஸ்யாஶ்ச புருஷஸ்ய ச । ஸ ஹி அநாதி₃: அநந்தஶ்ச பரமார்தே₂ந நிஶ்சித: ॥ அந்தப் ப்ரக்ருதிக்கும் புருஷனுக்கும் உடைய தொடர்பு வ்யாப்தி வடிவமானது, அதாவது ஜீவாத்மா ஒவ்வொரு அசேதனப் பொருளுக்குள்ளும் வ்யாபித்து (புகுந்து) இருக்கிறார். அந்த ஜீவாத்மா ஆதி (தொடக்கம் / உண்டாக்கம்) இல்லாதவர், அந்தம் (முடிவு / அழிவு) இல்லாதவர் – இவ்வாறு உண்மையாக நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆக இவ்வாறு ஜீவாத்மா நித்யமானவர் என்று வேதம் சொல்லும் கருத்தையே பாஞ்சராத்ர ஆகமமும் சொல்கிறபடியால், இதில் ஜீவாத்மா உண்டாவதாகச் சொல்லப்படுகிறது என்று பூர்வபஷி எழுப்பிய கேள்வியே தவறானது. ஆகவே , வேதத்தோடு எந்த முரண்பாடும் இல்லாதபடியாலும், இதை நாராயணனே நேரடியாக ஐந்து இரவுகளில் ரிஷிகளுக்கு உபதேசித்தபடியாலும் ஶ்ரீபாஞ்சராத்ர ஆகமம் முழுமையாக ப்ரமாணமே – அந்த பாஞ்சராத்ர ஆகமத்தில் பரமாத்மாவே உலகமனைத்துக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறபடியால், நாம் முதல் அத்யாயத்தில் உபநிஷத் வாக்யங்களை ஆராய்ந்து எடுத்த முடிவு சரியானது என்று மேலும் உறுதி செய்யப்படுகிறது. அதற்காகத் தான் வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தை இந்தப் பாதத்தில் அமைத்தார்.

இதோடு தர்க்க பாதம் முடிவடைகிறது.

சாண்டில்யர் வேதங்களைப் படித்து புரிந்து கொள்ள இயலாமல் -பாஞ்சராத்ரம் அருளிய வேத சாரத்தைப் படித்து புரிந்து கொண்டார்-தெளிவடைந்தார் -மஹா பாரதத்திலும் பல வாக்யங்களைக் காட்டி வேதத்துடன் ஒத்து உள்ளமை பற்றி அருளுகிறார் –

பாதே அஸ்மின் -காபில –கணபுக் –(வைசேஷிக ) யோகாசாரர் -சூன்ய வாத நிரஸனம் -அர்ஹ சித்தாந்த -உபரோதம் சித்வா -தடைகளைத் தள்ளி —ஸ்ருதி மார்க்கம் வலுவூட்டப்படுகிறது -பாரதம் பஞ்சமோ வேதம் -வ்யாஸர் நிலைநாட்டுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம் – முதல் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

September 1, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதித்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

முதல் பாதமும் முதல் அதிகரணமும் ஸ்ம்ருதி என்றே பெயர் -முதல் ஸூத்திரமும் ஸ்ம்ருதி என்றே தொடங்கும் –

——-

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்

இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்
ப்ரஹ்ம ஸூத்ரங்களில் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயத்தில், உபநிஷத்துக்களில் ஜகத்காரணத்ணதப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் அனைத்துமே சேதனம் மற்றும் அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டாவராய், தோஷங்கள் அற்றவராய், எண்ணிறந்த கல்யாண குணங்கணை உடையவரான பரமாத்மாவிடம் தான் பொருந்துகின்றன என்று நிரூபித்தார் வேத வ்யாஸர். இனி, அந்த முடிவில் ஏற்படக் கூடிய அனைத்து விதமான ஆஷேபங்களுக்கும் ஸமாதானம் கூறி, இம் முடிவு அசைக்கப்பட முடியாதது என்று நிரூபிக்கிறார் இரண்டாம் அத்யாயத்தில்.
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த இரண்டாம் அதிகரணத்தில் அநேகமாக யுக்திகளில் அடிப்படையிவேயே ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் அத்யாயத்தில் நான்கு பாதங்கள் உள்ளன –

1-ஸ்ம்ருதி பாதம் – இம் முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண் பட்டதான படியால் தவறா என்று ஆராய்தல்
2–தர்க பாதம் – பல மதத்தவர்கள் செய்யும் தர்கங்களுக்கு பதில் அளித்தல்
3-வியத் பாதம் – ஆகாசம் முதோனவை கூடப் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபித்தல்
4-ப்ராண பாதம் – ப்ராணன் எனப்படும் இந்த்ரியங்களும் பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என நிரூபித்தல்
.

ஸ்ம்ருதி பாதத்தின் அறிமுகம்
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்கணை ஆராய்ந்து ’பரமாத்மா ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யப்பட்டது.-இம்முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண்பட்டதாக உள்ளபடியால் இதி தவறானது என்று பூர்வ பக்ஷிகள்(சாங்க்ய தந்த்ரம் ) இந்தப் பாதத்தில் ஆஷேபம் சேய்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறார் வேத வ்யாஸர்.
இங்கு ஒரு ஸந்தேஹம் எழும் – வேதம் என்பது தான் தானே ப்ரமாணம் ஆகும். ஸ்ம்ருதிகள் என்பவை வேதத்தைத் தழுவி இயற்றப் பட்டவை யானபடியால், அவை நேரடியான ப்ரமாணங்கள் அல்ல . ஒரு ஸ்ம்ருதி வாக்யத்தைப் பார்த்தும், இதற்கு மூலமாக ஒரு வேத வாக்யம் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்து, அதற்குப் பின் தான் அந்தச் செயலைச் செய்யமுடியும். எனவே , வேதம் என்பதை விட ஒருபடி குறைந்தது தான் ஸ்ம்ருதி.
எனவே வேதத்துக்கும் ஸ்ம்ருதிக்கும் முரண்பாடு இருந்தால், வேதம் சொன்னபடியே செய்ய வேண்டும்- ஸ்ம்ருதி வாக்யத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று மஹர்ஷி ஜைமிநி தன்னுடைய கர்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் நிரூபித்துள்ளார். (ஓவதும்பரி -யூப ஸ்தம்பத்தை மரத்தைத் தொட்டுக் கொண்டு பாட ஸ்ருதி சொல்ல –மரத்தை முழுவதும் துணியால் மூட -ஸ்ம்ருதி சொல்ல -இவ்வாறு முரண்பட்டு இருந்தால் இந்த ஸ்ம்ருதியை ப்ரமாணமாகக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஜைமினி -)அப்படி இருக்கும் போது, வேதத்தை ஆராய்ந்து எடுக்கபட்ட இம்முடிவை எப்படி ஸ்ம்ருதியோடு முரண்படுகிறது என்ற அடிப்படையில் தவறென்று கூற முடியும்?இதற்கு பதில் கூறுகிறார் பூர்வ பக்ஷீ – வேத வாக்யத்தின் பொருள் தெளிவாக இருந்தால், அதற்கு முரண்பட்ட ஸ்ம்ருதி வாக்கியங்களைப் புறக்கணிக்கலாம் . ஆனால் வேதாந்தத்தில் ஜகத் காரணம் யார் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்படவில்லை -குழப்பமே ஏற்படுகிறது. அப்படி குழப்பம் இருக்கும் போது, கற்றுணர்ந்த ஜ்ஞாநிகளான ருஷிகள் இயற்றின ஸ்ம்ருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளையே முடிவு செய்ய முடியும். எனவே ,இங்கு ஸ்ம்ருதியில் என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு முரண் படாமல் தான் வேதத்தில் பொருள் கொள்ள வேண்டும். எனவே ஸ்ம்ருதிகளைக் கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமானதே .

இதுவரை சர்வ வேதாந்தங்களும் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன் என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது-அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன-பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி-முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால் இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான் -அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்த அத்யாயத்தைப் பற்றிச் சொல்கிறார் –
பாத₃ த்₃வந்த்₃வம் த்₃விதீயே பரிஹரதி பரே காரணே பா₃ஹ்ய பீடா₃ம்
கார்ய த்₃வாரேண பாதா₃ந்தர யுக₃லம் உதே₃தி ஆந்தர ஷோப₄ சாந்த்யை

“பரமாத்மாவே உலகனைத்துக்கும் காரணம்” என்பது முதல் அத்யாயத்தின் பொருள். அதில் முதல் பகுதியைத் தாக்கி, ”பரமாத்மா ஜகத் காரணம் அல்ல ” என்பவர்களை முதல் இரண்டு பாதங்களாலே இங்கு நிரஸிக்கிறார். அதில் இரண்டாவது பகுதியைத் தாக்கி,
“உலகில் அனைத்துக்கும் அவர் காரணம் அல்ல ” என்பவர்களின் வாதங்களை கடைசி இரண்டு பாதங்களாலே கண்டிக்கிறார்.

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-எந்த ஸ்ம்ருதியைத் தேர்ந்தெடுப்பபது?

ஸாங்க்ய ஸ்ம்ருதியில் பெருமைகள்
2-1-1-ஸ்ம்ருத்யதிகரணம் – ஸங்கதி – முதல் அத்யாயத்தில் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து’பரமாத்மாவே ஜகத் காரணம்’ என்று முடிவு செய்யப்பபட்டது. அந்த முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரணாக இருக்கிற படியால் தவறானது, ஸாங்க்ய ஸ்ம்ருதி முதலானவற்றில் சொன்னபடி தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும் என்று பூர்வ பக்ஷீ ஆஷேபம் செய்கிறார்.
பூர்வ பக்ஷம் – பூர்வபக்ஷீ தன் வாதத்தை இவ்வாறு முன் வைக்கிறார் –
1-வேதத்தில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப்பபட்டிருந்தால், அதற்கு முரணாக இருக்கும் ஸ்ம்ருதி தான் தவறு என்று சொல்லி விடலாம்- ஸ்ம்ருதியை விட ஸ்ருதி என்ற வேதம் உயர்ந்ததான படியால். ஆனால் ஜகத் காரணம் யார் என்பது வேதாந்தத்திலேயே தெளிவாக இல்லை . அதனால், சிறந்த ஜ்ஞாநிகளால் இயற்றப்பபட்ட ஸ்ம்ருதிகளைக் கொண்டு, அதில் சொல்லப்பபட்ட படிக்கு தான் வேதாந்தத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

2-கபிலர் என்கிற ரிஷி மிகச் சிறந்த ஜ்ஞாநி, வேதத்திலேயே (्ருஷிம் ப்ரஸூதம்
கபிலம்)
என்று ரிஷியாகக் (தீர்க்க தரிசனம் உடையவராக) கொண்டாடப்பபட்டுள்ளார்.
3-அவர் எழுதிய ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதத்தில் சொல்லப்பபட்ட பல விதமான கர்மங்களை ஏற்கிறபடியால் இது பௌத்தர்கள் முதலாவனாரின் நூல் போல் முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது அல்ல, நெருக்கமானது தான்.
4-இந்த ஸ்ம்ருதி வேறு எதையோ பற்றிப் பேச வந்தது அல்ல, ஜீவாத்மாவின் பெருமை ஸம்ஸாரத்தின் கொடுமை ஸம்ஸாரத்தின் காரணம், முக்திக்கான வழி என்கிற ஆன்மிக தத்துவங்களைச் தொல்வதே இதன் குறிக்கோள்.

ஸ்ம்ருதிகளுக்குள் முரண்பாடு
5-அந்த ஸாங்க்ய ஸ்ம்ருதியில் ப்ரதானம் (மூல ப்ரக்ருதி) என்கிற அசேதனப் பொருள் தான் ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளது. எனவே நீங்கள் சொன்னது போல் ’பரமாத்மா தான் ஜகத் காரணம்’ என்று வேதம் சொல்லி யிருந்தால், ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதுமே தவறானது மற்றும் வீணானது என்று ஆகி விடும். இதற்கு அநவகாச தோஷம் என்று பெயர். ஒரு ரிஷியின் நூலுக்கு அந்த தோஷத்தை ஏற்க முடியாது. எனவே ஸாங்க்ய ஸ்ம்ருதியில் சொன்னபடிக்கு ப்ரதானம் ஜகத் காரணம் என்று தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். (அவகாசம் -இடம் / ஸ அவகாசம்-ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் –அநவகாசம் -இடமில்லாமை வீண் -)
6-கேள்வி மநு, பராஸரர், பகவான் கண்ணன், வ்யாஸர், ஆபஸ்தம்பர் முதலானவர்கள் எழுதிய மற்ற ஸ்ம்ருதிகளில் எல்லாம் பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளதே ? ஸாங்க்ய ஸ்ம்ருதியைப் பின்பற்றி ப்ரதானம் ஜகத் காரணம் என்று கொண்டால், மேற் சொன்ன இந்த ஸ்ம்ருதிகள் எல்லாம் தவறாக ஆகி விடாதா?
பதில் – உண்மை தான், ஆனால் அப்போதும் அந்த ஸ்ம்ருதிகளுக்கு அநவகாஸ தோஷம் ஏற்படாது,-அதாவது முழுவதுமாகத் தவறாகவவோ வீணாகவோ ஆகாது. ஏன் என்னில், அந்த ஸ்ம்ருதிகளில் சொல்லப்பபட்ட தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான் இருக்கும், ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் பகுதி மட்டும் தான் தவறாக ஆகும். அது பெரிய குற்றம் அல்ல, ஏற்றுக் கொள்ளலாம்.
ஆகவே , ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு அநவகாஸ தோஷம் (முழுவதும் வீணாகப் போதல்) தவிர்க்கப்பபட வேண்டும் என்பதற்காக, அதில் சொல்லப்பபட்ட ஜகத் காரணத்தைத் தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். எனவே நீங்கள் முதல் அத்யாயத்தில் அடைந்த முடிவு தவறானது.

வ்யாஸரின் ஸித்தாந்தம்
இந்த பூர்வபஷத்திற்கு இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
முதல் ஸூத்ரத்தால் இதுவரை பூர்வபக்ஷி தொன்ன வாதத்தைக் கூறி, அது தவறு என்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
1-ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த் இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த்
ஸ்ம்ருதி –
கபிலாசார்யர் இயற்றிய ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு
அநவகாஸ தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலுமாக தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடம் என்கிறபடியால் (பரமாத்மா ஜகத் காரணம் என்று தொன்னது தவறு)
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
அந்ய ஸ்ம்ருதி – மநு, பராஸரர், பகவான் கண்ணன் முதலானவர்கள் இயற்றிய மற்ற ஸ்ம்ருதிகளுக்கு
அநவகாச தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலும் தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடும் என்கிறபடியால்.
மற்ற பல ஸ்ம்ருதிகள் பரமாத்மா ஒருவரே ஜகத் காரணம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்கின்றன –

மநு ஸ்ம்ருதி – (ஆஸீதி₃த₃ம் தமோ பூ₄தம் ஸோ அபி₄த்₄யாய ஸரீராத் ஸ்வாத் ஸிஸ்ருஷு : விவிதா₄: ப்ரஜா:) – இந்த உலகனைத்தும் இல்லாத போது (ப்ரளயத்தில்) பரமாத்மா ஸங்கல்பம் செய்து கொண்டு தன் உடலிலிருந்து உந்த உலகத்தைப் படைத்தார்)
பகவத் கீதை – (அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக₃த: ப்ரப₄வ: ப்ரலய: ததா₂) – நான் தான் இந்த உலகத்திற்குக் காரணமாகவும், இவ் வுலகம் லயம் (அழிவு) அடையும் இடமாகவும் உள்வைன்
விஷ்ணு புராணம் – (விஷ்ணோ : ஸகாஸாத் உத்₃பூ₄தம் ஜகத் தத்ரைவ ச ஸ்தி₂தம்| ஸ்தி₂தி ஸம்யம கர்தா அஸௌ ஜக₃த: அஸ்ய ஜக₃த் ச ஸ:) – இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து உண்டாயிற்று, அவரிடமே தான் நிலை பெற்று நிற்கிறது, அவரே இதை ஸம்ஹாரமும் செய்பவர்,அவரே தான் இவ் வுலகில் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்குகிறார்.

கபிலரும் மற்ற ஸ்ம்ருதி ஆசிரியர்களும்
பூர்வ பக்ஷி கூறின யுக்திகளுக்கு எல்லாம் வேத வ்யாஸர் இவ்வாறு பதில் கூறுகிறார் –
1-கபிலர் வேதத்திலேயே ரிஷி கொண்டாடப் பட்டிருந்தாலும், அவர் தவறே செய்யாதவர் என்று வேதம் கூறவில்லை .-ஆனால் மநு, வ்யாஸர், பராஸரர் முதலான ஸ்ம்ருதி ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் அது நமக்கு மருந்து, அவர்கள் பேசியதெல்லாம் உண்மை என்று வேதம் சொல்கிறது – “யத்₃வை கிஞ்ச மநு: அவத₃த் தத் பே₄ஷஜம்”
2-பரமாத்மாவே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸ்ம்ருதிகள் பல இருக்கின்றன, ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதி ஒன்று தான். எனவே பல ஸ்ம்ருதிகள் சேர்ந்து ஒன்றை பாதிப்பதே பொருத்தமானது.
3-வேதத்தை யுக்திகள் (Logic) கொண்டு ஆராய்ந்தால் எந்தப் பொருள் தெரிகிறதோ (பரமாத்மாவே ஜகத் காரணம் என்று), அதைப் பின் தொடர்ந்து உள்ளன மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள். ஆனால் ஸாங்க்ய ஸ்ம்ருதி அந்த யுக்திகளுக் கெல்லாம் முரணாக உள்ளது. யுக்திகளுக்கு முரணாக இல்லாத நூல் தான் உயர்ந்ததாகும்.
4- கேள்வி – ’பரமாத்மா ஜகத் காரணம்’ என்று கொண்டால் ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதும் வீணாகி விடும் (அநவகாஸ தோஷம்). ஆனால் ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகாது, ஏன் எனில் அவற்றில் சொல்லப்பபட்ட ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான்
இருக்கும். எனவே , எந்த நூலும் முழுவதும் வீணாகாமல் இருக்க ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்றே ஏற்க வேண்டும்.
பதில் – ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகப் போய்விடும். ஏன் எனில் அவர்கள் அனைவருமே பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லி, அவரை வழி பட்டு, ஆராதனம் செய்து, மகிழ்விப்பபதற்கான வழிகள் தான் இந்த தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் எல்லாம் என்று
கூறியுள்ளனர். பரமாத்மா என்றே ஒருவர் கிடையாது என்றால், அந்தக் கார்யங்களும் வீணாகத்தானே போகும்? அவை அத்தனை ஸ்ம்ருதிகளுக்கும் அநவகாஸ தோஷம் வந்து விடும். அதை ஒரு நாளும் ஏற்க முடியாது. எனவே , பல ஸ்ம்ருதிகளைக் காப்பதற்காக, ஒரே ஒரு ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் தவறு என்று ஏற்பதே சரியான முடிவு ஆகும்.
5-ஸாங்க்ய ஸ்ம்ருதியும் முழுவதுமாகத் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை . அதில் சொல்லப்பபட்ட ஸ்ருஷ்டி முறை , அசேதனப் பொருள்களின் பண்புகள், ஜீவாத்மாவின் பெருமைகள் அணனத்தும் சரியே . ஜகத் காரணம் யார் என்பது மட்டும் தான் அந்த ஸ்ம்ருதியில் தவறாகச் சொல்லப்பபட்டுள்ளது.

ப்ரஹ்மமும் கர்மமும்
பல ஸ்ம்ருதிகள் நாம் தெய்யும் கர்மங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கு ஆராதனம் (வழிபாடு) என்கின்றன –
பகவத் கீதை -யத: ப்ரவ்ருத்தி: பூ₄தாநாம் யேந ஸர்வமித₃ம் ததம் | ஸ்வ கர்மணா தம் அப்₄யர்ச்ய ஸித்₃தி₄ம் விந்த₃தி மாநவ: ||-“யாரால் இந்த உலகம் அனைத்தும் இயங்குகிறதோ யார் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் வ்யாபித்து உள்ளாரோ , அந்த பரமாத்மாவைத் தன்னுடைய கர்மங்களால் வழிபட்டு மனிதன் நற்கதி அடைகிறான்”
விஷ்ணு புராணம் –யை : ஸ்வ கர்மபரை : நாத₂ நரை : ஆராதி₄தோ ப₄வாந் | தே தரந்தி அகி₂லாம் ஏதாம் மாயாம் ஆத்ம விமுக்ததய ||“தங்கள் கர்மங்களை விடாமல் செய்வதன் மூலம் யாரெல்லாம் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த விசித்ரமான ஸம்ஸாரம் முழுவதையும் கடந்து மோக்ஷம் அடைகிறார்கள்”-எனவே பரமாத்மா இல்லை என்று கூறினால், இந்தக் கர்மங்களும் வீணாகப் போய்விடும். எனவே பரமாத்மா
ஜகத்காரணம் என்று நாம் முதல் அத்யாயத்தில் எடுத்த முடிவு சரியானது தான். அதற்கு முரணாக இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் அந்த விஷயத்தில் தவறு
என்று தான் கொள்ள வேண்டும்.
2-இதரேஷாம் ச அநுபலப்₃தே ₄: – “மற்றவர்களுக்கு அப்படித் தோற்றாத படியாலும்”
கேள்வி – கபிலர் த்யானம் தெய்து தன்னுடைய யோக சக்தியால் இந்தக் கருத்தைக் கண்டிருப்பபார். எனவே இது உண்மையாகத் தானே இருக்க வேண்டும்?
பதில் – அப்பபடி இது உண்மையாக இருப்பின், மநு ஆபஸ்தம்பர், பராஸரர் முதலான மற்ற யோகிகளும் இதே தத்துவத்தைக் கண்டு உபதேஸம் செய்திருக்க வேண்டும். அப்பபடி அவர்கள் செய்யவில்லை -நேர் முரணான தத்துவத்தைக் காட்டுகிறார்கள். எனவே , வேதத்துக்கும் ஜ்ஞாநிகளின் உபதேஸங்களுக்கும் முரணாக உள்ள தத்துவங்களை கபிலர் மயக்கத்தால் தவறாகக் கூறி விட்டார் என்றே கொள்ள வேண்டும்.
ஆகவே , முதல் அத்யாயத்தில் நாம் அடைந்த முடிவுக்கு எந்த முரண்பாடும் இல்லை . பரமாத்மாவே ஜகத் காரணம் என்ற முடிவு வலிமையாகவே நிற்கிறது.

——–

2-1-2-யோக₃ப்ரத்யுக்த்யதி₄கரணம்-ஹிரண்ய கர்பர் தவறு செய்ய முடியுமா?

ஏன் தனி அதிகரணம்?
(
கீழ் அதிகரணத்தில் சொன்னவற்றில் அதிக சங்கை -தோன்ற -கீழ் பரமாத்மாவையே ஒப்புக் கொள்ளாமல் -இங்கு யோக மதத்தில் ஒத்துக் கொண்டு த்யான இத்யாதிகள் இருப்பதால் அதிக்கப்படி ஸந்தேஹம் வரும் -கீழ் கபிலர் ரிஷி -இங்கு நான்முகன் -சர்வ வேதாந்தம் பிரதிவர்த்தகத்துக்கு அதிகாரியான ஹிரண்ய கர்ப்பர் -)

2-1-2-யோக₃ப்ரத்யுக்த் திகரணம்
– ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதாந்தத்தோடும் மற்ற ஸ்ம்ருதிகளோடும் மிகவும் முரண்படுகிறபடியால் அதைப் பின்பற்றி வேதாந்தத்தின் பொருளை முடிவு செய்ய இயலாது என்று நிரூபித்தார் வ்யாஸர்.
அதற்கு மேல் கேள்வி எழுகிறது – சரி, ஸாங்க்ய ஸ்ம்ருதி மிகுந்த முரண்பாடுகளை உடையது. ஆனால் ஹிரண்ய கர்பர் எனப்படும் நான்முகக்கடவுளால் பரப்பப்பட்ட யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு நெருக்கமான கருத்துகளையே போதிக்கிறது. அதைக் கொண்டு வேதாந்தத்தின் பொருளை புரிந்து கொள்ளலாமே ?
பூர்வ பக்ஷம் – – வேதாந்தத்தில் சொல்வது போல் யோக ஸ்ம்ருதியும் பரமாத்மா இருக்கிறார் என்று ஏற்கிறது.-த்யானம் (யோகம்) தான் முக்திக்கான வழி என்று ஏற்கிறது. மேலும் நான்முகன் தான் உலகில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாய், அந்த ஜ்ஞாநத்தைப் பரப்பும் பொருப்பிலும் இருக்கிறார். எனவே அவர் சொன்ன யோக ஸ்ம்ருதி சரியாகத் தான் இருக்கும். அதைப் பின்பற்றி தான் வேதாந்தத்துக்குப் பொருள் கூற வேண்டும்.
ஸித்தாந்தம் – இதற்கு ஒரே ஸூத்ரத்தால் பதில் அளிக்கிறார் வ்யாஸர் இந்த அதிகரணத்தில்.
1-ஏதேந யோக₃: ப்ரத்யுக்த: – “இத்தால் யோக ஸ்ம்ருதியும் மறுக்கப்பட்டது”
பல கருத்துகளில் யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு ஒத்துப் போனாலும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன – பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத ப்ரதானம் தான் ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறார்கள் பரமாத்மா உலகத்துக்கு நிமித்த காரணம் மட்டும் தான் (குடத்துக்குக் குயவன் போல்), உபாதான காரணம் (குடத்துக்கு மண் போல்) அல்ல என்கிறார்கள். த்யானத்தை ஏற்றாலும் த்யானிக்கப்பட வேண்டிய ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் தவறாக வருணிக்கிறார்கள் – ஜீவாத்மாவுக்கும் அந்தர்யாமி பரமாத்மா என்று ஏற்க வில்லை , பரமாத்மா உலகின் உபாதான காரணம் என்று ஏற்க வில்லை . எனவே இந்த த்யானமும் வேதாந்தத்தில் சொல்லப்பட்ட த்யானம் அல்ல-

நான்முகனும் ஸம்ஸாரி தான்
நான்முகன் உலகத்தில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாக இருந்தாலும் கூட, அவரும் நம்மைப்போல் பாப புண்யங்களுக்குக் கட்டுப்பட்டு, ஸத்த்வம்-ரஜஸ்-தமஸ் என்ற முக் குணங்களால் பாதிக்கப்படும் ஒரு ஸம்ஸாரி தான். எனவே அவரும் ரஜோ குணமோ தமோ குணமோ அதிகமாக இருக்கும்போது அறிவின்மையால் வேதாந்த்ததுக்கு முரண்பட்ட தவறான கருத்துகளை யோக ஸ்ம்ருதியில் கூறினார்.
நான்முகக் கடவுள் தான் புராணங்களை யெல்லாம் உபதேசித்தார் என்று நாம் அறிவோம்-அதைப் பற்றி மத்ஸ்ய புராணத்தில் கூறும் போது இவ்வாறு சொல்லப் படுகிறது –
அக்₃நே : சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு தி₃வாகரே | ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதி₄கம் ப்₃ரஹ்மண : ஸ்ம்ருதம்| ஸாத்த்விகேஷு அதி₄கம் தத் விஷ்ணோ : மாஹாத்ம்யம் உத்தமம் ||
“தமோ குணம் அதிகமாக இருக்கும் போது நான்முகன் கூறிய புராணங்களில் அக்நி முதலான தேவதைகளின் பெருமை சொல்லப் பட்டிருக்கும், ரஜோ குணம் அதிகமான போது சொன்ன புராணங்களில் தன்னுடைய பெருமையைப் பாடுவார், ஸத்த்வ குணம் அதிகமான போது உயர்ந்ததான விஷ்ணுவின் மஹிமயைப் பாடுவார்”
எனவே நான்முகனுக்கும் ரஜோ மற்றும் தமோ குணங்களால் கலக்கமும் அறிவின்மையும் வரக் கூடும். எனவே அவர் சொன்ன ஸ்ம்ருதியாகவே இருந்தாலும் அது வேதத்தோடு
முரண்பட்டால் அந்த விஷயங்களில் தவறானது தான்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளி என்ற நூலில் இந்த அதிகரணத்தின் பொருளைச் சுருக்கமாகக் கூறுகிறார் –
வேதாந் பூர்வம் விதாதா அலபத பகவத: ஸர்வ வித்த்யா நியுக்த:
வாகீஶஶ் ஸேஷ தஸ்மாத் தடுதித விஹதே : கம்பநம் வேத மூர்த்ந: |
மைவம் தஸ்யாபி வேதாபஹ்ருதி முக விபத்த் தர்ஶநாத் ஷேத்ரி பாவாத்
ப்ராந்த்யாதிஃ ஸம்பவேதிதி அகதிக விஷயே பூர்வவந் நிர்வஹாம: ॥

நான்முகக் கடவுள் ஆதியில் பகவானிடமிருந்து வேதங்களையும் எல்லா வித்யைகளையும் பெற்றார். அவரே தான் அந்த வித்யைகளைப் பரப்பும் பொருப்பையும் உடையவர். ஸரஸ்வதீ தேவிக்குக் கணவனானபடியால் வாகீசன் என்று அழைக்கப் படுகிறார். இப்படி எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், அவரும் அஸுரர்களிடத்தில் வேதங்களைப் பரிகொடுத்துத் தவித்தார் என்பது போன்ற பல கதைகளை நாம் புராணங்களில் காண்கிறபடியால் அவரும் ஒரு ஷேத்ரஜ்ஞன் (ஜீவாத்மா) என்பதால், பிழை , மயக்கம், குழப்பம் ஆகியவை அவரிடம் நிகழக் கூடும் என்பதே தெளிவாகிறது.-ஆகவே , வேறு வழி இல்லாத சூழலில் இந்த யோக ஸ்ம்ருதியும் ஸாங்க்ய ஸ்ம்ருதி போல் சில இடங்களில் தவறானது என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

————

2-1-3-விலக்ஷணத்வாதிகரணம் – எந்த ஸ்ம்ருதி தர்க்கத்தின் படி உள்ளது?

(இதுவும் மேல் வரும்-ஆரம்பணாதி கரணம் —2-1-6- நம் சித்தாந்தத்தின் முக்கிய கருத்துக்கள் கொண்டவை ஆகும்-ஒன்பது ஸூத்ரங்கள் கொண்ட அதிகரணம்-முதல் மூன்றும் பூர்வபக்ஷ ஸூத்ரங்கள் )

காரண -காரியங்களின் ஒற்றுமை –விலக்ஷணத்வாதிகரணம் – ஸங்கதி – வேதத்தின் பொருளை முடிவு செய்யும் போது மநு ஸ்ம்ருதி முதலானவற்றைத் தான் பின்பற்ற வேண்டும், ஸாங்க்ய ஸ்ம்ருதியை அல்ல என்று கூறப்பட்டது. அதற்கு மேல்
ஆஷேபம் எழுகிறது – மனு முதலானவர்களின் ஸ்ம்ருதி தர்க்கத்துக்குப் புறம்பாக உள்ள படியால், அவற்றைப் பின்பற்றக் கூடாது, தர்க்கத்தை அநுஸரித்து இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதியைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். எனவே ப்ரதானம் தான் ஜகத் காரணம், பரமாத்மா அல்ல.
பூர்வ பக்ஷம் – முதல் இரண்டு ஸூத்ரங்களால் பூர்வ பக்ஷம் சொல்லப்படுகிறது. அவர்கள் கூறுவதாவது –
1–ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததா₂த்வம் ச சப்₃தா₃த்
– (முதல் அத்யாயத்தில் ’இவ்வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகிறது’ என்று கூறியது) ஒவ்வாது – தவறானது
அஸ்ய – புலன்களால் அியயப்படும் (சேதனர்கள் மற்றும் அசேதனங்கள் அடங்கிய) இந்த உலகத்தின்
விலக்ஷணத்வாத் – வேறுபாட்டால்
ததா₂த்வம் – அந்த வேறுபாடு
சப்₃தா₃த் ச – சப்தம் எனப்படும் வேதத்தாலும் அறியப் படுகிறது
பரமாத்மா – ப்ரஹ்மம் என்ற ஓரு பொருளை ஏற்பவர்கள் அவர் ஜ்ஞாநமுடையவர் (சேதனன்), குற்றங்களற்றவர், அனைவரையும் இயக்கக் கூடியவர், ஆநந்தம் மட்டுமே உடையவர். ஆனால் புலன்களால் நாம் அறியக்கூடிய இந்த உலகம் அறிவற்றது (அசேதனம்), தூய்மை யற்றது, மற்ற ஓருவரால் இயக்கப்படுவது மற்றும் துக்கத்தை உடையது.-எனவே அவற்றின் வேறுபாடு ஸ்பஷ்டமாக உள்ளது. வேதத்திலும் உலகுக்கு இந்தத் தன்மைகள் சொல்லப் பட்டுள்ளபடியால் வேதத்திலிருந்தும் இந்த வேறுபாட்டை அறியலாம்.
எந்தப் பொருள் எந்தப் பொருளிலிருந்து உண்டாகிறதோ , அது அதைப் போல் தான் இருக்கும், வேறுபட்டு இருக்காது, என்று உலகத்தில் மோதிரம், குடம் முதலான பொருள்களில் நாம் பார்க்கிறோம். இந்த உலகமோ ப்ரஹத்தை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இது ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை .
அசேதனமாய், முக்குணம் உடையதான ப்ரக்ருதியிலிருந்து தோன்றியது என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதியே சரி –

(மனிதனுக்கு பல் முளைக்கிறது முடி வளருகிறது -உண்டாகும் பொருள் போல் அல்லவே இவை -வேறுபாடுகள் காண்கிறோம் என்றால் -இவை உடம்பில் இருந்து தானே ஆத்மாவில் இருந்து அல்லவே -உடலும் அறிவற்றது -இவையும் அறிவற்றவை -இதே போல் என்பர் –
ஆத்மா ஆழ்ந்து உறக்கத்தில் ஞானம் இல்லையே -அதே போல் கல்லுக்கும் கொள்ளலாம் என்றால் எப்போதுமே இதுக்கு வெளிப்படாதே -)

கல்லுக்கும் மண்ணுக்கும் சைதன்யம் உண்டா?
இதற்கு மேல் ஒரு ஆஷேபம் அவர்களைக் குறித்து எழுப்பப்படுகிறது. அதற்கான விடை பூர்வ பக்ஷிகளால் இரண்டாவது ஸூத்ரத்தில் கூறப்படுகிறது.
ஆஷேபம் – பரமாத்மா சேதனன் (ஜ்ஞாநம் உடையவர்), உலகமோ அசேதனம், அதனால் வேறுபாடு உள்ளது ,-எனவே உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக வில்லை என்று கூறுகிறீர்களே . உலகப் பொருள்கள் அனைத்துக்கும் கூட ஜ்ஞாநம் உள்ளது என்று ஒப்புக் கொண்டால் என்ன? அப்போது பரமாத்மா வுக்கும் உலகுக்கும் ஒற்றுமை வந்து விடுகிற படியால் அவரிடமிருந்து உலகம் உண்டாயிற்று என்று சொல்லலாமே-

வேதத்திலேயே “ப்ருதி₂வீ அவத₃த்” (பூமி கூறியது), “ஆப: வா அகாமயத” (ஜலம் ஆசைப்பட்டது) என்றெல்லாம் கூறப்படுகிற படியால் பூமி, ஜலம் முதலானவற்றுக்கும் ஜ்ஞாநம் உள்ளதாகத் தெரிகிறது. புராணங்களிலும்கூட மலைகள், நதிகள், கடல் முதலானணவ அறிவுடைய பொருள்களாக வருணிக்கப்படுகின்றன. எனவே உலகத்தில் அனைத்துப் பொருள்களுக்குமே ஜ்ஞாநம் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளலாமே ?

ஸமாதானம் –2-அபி₄மாநி வ்யபேத₃சஸ் து விஸேஷ-அநுக₃திப்₄யாம்
அபி₄மாநி வ்யபதேத₃சஸ் து
– பூமி முதலானவற்றுக்கு உரிய அபி₄மாநி தெய்வங்களன்றோ சொல்லப் படுகிறார்கள்
விஸேஷ-அநுக₃திப்₄யாம் – விஸேஷத்தாலும் அநுக₃தியாலும்
விஸேஷம் – அடை மொழி இடுவது. இவ் விடங்களிலெல்லாம் பூமி, ஜலம், புலன்கள் முதலானவற்றைக் குறிப்பிடும் போது ’தே₃வ:’ என்ற அடை மொழி பயன்படுத்தப் படுவதால், இச் சொற்கள் பூமி ஜலம் முதலான அசேதனங்களைக் குறிக்கவில்லை , அவற்றுக்குள் இருக்கும் அபி₄மானியான ஜீவாத்மாவைக் குறிக்கின்றன.
அநு க₃தி – அநு ப்ரவேஸம் (உள்ளே புகுவது). வேதமே அக்₃நி, வருணன் முதலான ஒவ்வொரு தெய்வமும் கண், வாக்கு முதலான புலன்களுக்குள் நுழைவதைப் பற்றிச் சொல்கிற படியாலும் இங்கு சொல்லப்படுபவர்கள் சேதனர்கள்தான் என்று நாம் அறியலாம்.-எனவே உலகம் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டு தான் உள்ளது. எனவே இவ் வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகி யிருக்க முடியாது என்பதே பூர்வபக்ஷத்தின் சுருக்கம்

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
ஸித்தாந்த ஸூத்ரம் – (3) த்₃ருஸ்யதே து –
“காணப்படுகிறது அன்றோ ”
உலகத்தில் ஒரு காரணப் பொருளிலிருந்து அதைக்காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் உண்டாவதையும் காண்கிறோம். கோமயத்திலிருந்து சில கிருமிகளும், தேனடையிலிருந்து சில புழுக்களும் உண்டானாலும், அவை கோமயம் மற்றும் தேனடையை விட வேறுபட்டு தான் காணப்படுகின்றன. எனவே பூர்வபக்ஷீ சொன்ன தர்க்கம் தவறானது. எனவே வேறுபட்டிருந்தாலும் உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக முடியும்.

இங்கு ஒரு ஆஷேபம் எழுகிறது – காரணமும் காரியமும் வேறுபட்டும் இருக்கலாம் என்று வ்யாஸர் சொன்னதை , காரணமும் காரியமும் வெவ்வேறு பொருள்கள் என்று சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டு ஒருவர் கேட்கிறார் – காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்கலாம் என்றால், காரணப் பொருள் வேறு காரியப் பொருள் வேறு என்று ஆகிறது. எனவே முன்பு இல்லாத குடம் என்ற பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்ல வேண்டும். அப்போது அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாகிவிடுமே – என்று. இதற்கு விடை –

4-அஸதி₃தி சேத் ந ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத்
அஸத்
– அஸத்திலிருந்து (இன்மையிலிருந்து) உலகம் உண்டாகிறது என்று ஆகிவிடுமே
தி சேத் ந – என்று நீங்கள் கூறினால். அது தவறு.
ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத் – முன் ஸூத்ரத்தில் ’காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்க முடியாது’ என்று பூர்வபக்ஷீ சொன்னணத மட்டும் எதிர்த்துச் சொன்னோமே தவிற , காரணம் வேறு பொருள் காரியம் வேறு பொருள் என்று கூற வில்லை. ஸத் கார்ய வாதம் அதாவது, இருக்கும் பொருளிலிருந்து தான் மற்றொரு பொருள் தோன்றுகிறது, அதாவது காரணப் பொருளே தான் காரியப் பொருளாக மாறுகிறது என்று தான் கூறுகிறோம். எனவே
இந்த தோஷம் எங்கள் மதத்தில் கிடையாது.
-இவ்வாறு பூர்வ பக்ஷத்திற்கு பதில் உரைத்து, மேலும் பல யுக்திகளை வ்யாஸர் காட்டுகிறார்-

(நையாயிகர் அஸத் கார்ய வாதிகள் -அவஸ்தா வேறுபாடு தானே -மண் குடம் மடங்கு தூள்கள் போல் -முழுவதுமாக இருக்க வேண்டாமே -வேறுபாடு மாத்திரமே வேற்றுப் பொருள் அல்லவே -ப்ரதிஷேதம் மட்டுமே சொன்னேன் -என்றவாறு -)

தர்க்கம் மட்டும் போதாது-ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வந்துவிடாதா?
விலக்ஷணத்வாதி கரணத்தின் முதல் இரண்டு ஸூத்திரங்களாலே பூர்வ பக்ஷம் சொல்லப்பட்டது. அதற்கு தன்னுடைய பதிலை வேதவியாஸர் அடுத்த இரண்டு ஸூத்திரங்களாலே காட்டினார். தற்போது ஐந்தாவது ஸூத்திரத்தில் பூர்வ பக்ஷிகள்
ஒரு ஆஷேபத்தை எழுப்புகிறார்கள்.

5- அபீதவ் தத்₃வத் ப்ரஸங்கா₃த் அஸமஞ்ஜஸம்
அபீதவ்
– சிருஷ்டி, பிரளயம், முதலானவற்றில் (பிரஹ்மமே தான் உலகமாக மாறுகிறது என்றால்)
தத்₃வத் ப்ரஸங்கா₃த் – அந்த பிரஹ்மத்துக்கு குற்றங்கள் வந்து விடும் என்கிறபடியால்
அஸமஞ்ஜஸம் – வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாது–ஒரு தங்கக் கட்டியைக் கொண்டு மோதிரம் செய்யும் பொழுது, அதில் செப்பு கலந்து விடுகிற படியால், அந்த ஸ்வரணத்துக்கு குறை ஏற்படுகிறது. அதே போல், பிரஹ்மமே உலகமாக மாறுகிறது என்றால், உலகத்தில் எந்த எந்த குற்றங்கள் இருக்கின்றனவோ , அவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு விடும். அதனால், ப்ரஹ்மம் ஞானமுடையது,தூய்மையானது, என்று சொன்ன தெல்லாம் மாறிப் போய், ப்ரஹ்மமும் அசேதனமாக, ப்ரஹ்மமே குற்றமுடையவராக,ப்ரஹ்மமே துக்கப் படுபவராக ஆகி விடுவார். அப்படிக் கொண்டால், வேதாந்த வாக்கியங்கள் எல்லாம் முரண்பட்ட அர்த்தங்களைச் சொல்லுகிறபடியாலே , பொருந்தாவையாக ஆகி விடுகின்றன.
அதனால் பிரதானம் என்கிற மூலப் ப்ரக்ருதியைத் தான் ஜகத் காரணமாகக் கொள்ள வேண்டும் என்பது பூர்வ பக்ஷியின் அபிப்பிராயம்.

(தத்₃வத் ப்ரஸங்கா₃த் -அதைப் போல் என்றும் அதை யுடைய என்றும் இரண்டும் பொருந்தும்-ஸ்வர்ணம் போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-ஜகத்து போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-குற்றமுடையதாகும் என்றபடி-நான் பாலகனாக ஆனேன் -நான் ஆத்மா அணு -மாறாமல் இருக்கும் -உடலுடன் சேர்ந்ததால் -வரும் மாறுபாடுகள் -குழந்தையின் வடிவாக இருந்த நான் இப்பொழுது -உருவ வேறுபாடு சரீரத்துக்குத்தானே -ஆனால் நான் ஆனேன் சொல்கிறோம் – )

இந்த இடத்தில் நாம் ஒரு சமாதானம் சொல்ல முடியும். ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொல்லும் பொழுது, நேரடியாக பரமாத்மா என்பவர் மாறுகிறார் என்று நாங்கள் சொல்லவில்லை , ப்ரஹ்மம் என்பது உலகத்திலிருக்கும் சேதனர்கள் அசேதனங்கள் அனைத்தையுமே தனக்கு சரீரமாக, அதாவது உடலாகக் கொண்டது. அப்படி சேதனங்கள்,அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம், உலகாக மாறுகிறது என்று சொன்னால், மாற்றம் என்பது அந்த சேதனர்களுக்கும் அசேதனங்களுக்கும் ஏற்படுமே தவிர, உள்ளே இருக்கும் அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு ஏற்படாதே என்று நாம் சொல்ல முடியும். ஆனால், இதற்கும் பூர்வ பக்ஷிகள் விடை கொடுக்கிறார்கள் – ப்ரஹ்மத்துக்கு -உடல், சரீரம், என்றே ஒன்று இருக்க முடியாது என்று –

சரீர ஆத்ம பாவம்
சரீரம் என்றால் என்ன என்று பூர்வ பக்ஷிகள் இந்த இடத்தில் தெரிவிக்கிறார்கள், கர்மத்தின் பயனான சுக துக்கங்களை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதாய், இந்திரியங்களை உடையதாய், ஐந்து விதமான பிராண வாயுக்களாலே தாங்கப் படுவதாய்,ஐம் பூதங்களின் சேர்க்கையால் உண்டாக்கப்பட்டதாய் இருக்கும் பொருள் சரீரம் என்று கூறுகிறார்கள்.
இதன் படி பார்த்தோ மென்றால், பரமாத்மாவுக்கு கர்மங்களின் விளைவான சுக துக்கங்களும் கிடையாது. அவருக்கு இந்திரியங்களும் கிடையாது. அவருடைய சரீரம் பிராணனாலும் தரிக்கப்படுவதில்லை . அவருடைய திருமேனி ஐம் பூதங்களால் ஆக்கப்பட்டதல்ல.அப்ராக்ருதமானது என்றும் ஸித்தாந்திகள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கு சரீரமே இருக்க முடியாது என்று தேறுகிறது.-அதனால், நேரடியாக ப்ரஹ்மமே உலகமாக மாறுகிறார் என்று தான் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொன்னால், உலகத்துப் பொருட்களுக்கு இருக்கும் குற்றங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கும் வந்து விடும் – என்று பூர்வ பக்ஷிகள் ஆஷேபம் செய்கிறார்கள்.

(சரீரம் கர்மம் அனுபவிக்க காரணம் -இந்திரியங்கள் உடையது-ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டு -ப்ராணனால் தாங்கப்பட்டு இருக்கும்-அவருக்கு இந்த்ரியங்களே கிடையாது -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -அபிராணன் ஸ்ருதி சொல்லும் அன்றோ -இந்த நான்குமே பரமாத்மாவுக்குப் பொருந்தாது -உலகம் அனைத்துமே சரீரம் என்று சொல்வது தவறு -என்பர் பூர்வ பஷி)

இதற்கு வேத வியாஸர் அடுத்த ஸூத்திரத்திலே விடை அளிக்கிறார்.
6- ந து த்₃ருஷ்டாந் பா₄வாத்
– பொருந்தாமை என்று சொன்னது தவறு, எடுத்துக் காட்டு இருக்கிறபடியால்-ஒரே பொருள் இரண்டு நிலைகளை அடைந்தாலும், அதில் ஒரு பகுதியின் குணங்களோ தோஷங்களோ மற்றொரு பகுதியை அடையாது என்பதற்கு உலகத்திலே எடுத்துக் காட்டு இருக்கிறது. ஒரு ஜீவாத்மா ஒரு காலத்தில் குழந்தையின் உடலோடு இருக்கிறார். அவரே வயதாகும் போது இளைஞனின் உடலை உடையவராக ஆகிறார். இவ்விடத்தில் மாற்றம் என்பது உடலுக்குத் தான் இருக்கிறது, ஆத்மாவுக்கு உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை . உடலின் தன்மைகள் ஆத்மாவுக்கு வராது, ஆத்மாவின்
தன்மைகள் உடலுக்கு வராது.
ஆனால் நாம் “நான் இளைஞனாக ஆனேன்” என்று தானே கூறுகிறோம்.

அதே போல், “சேதனங்கள் அசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட பரமாத்மா உலகமாக மாறுகிறார்” என்று சொல்லும் போதும், மாற்றம் என்பது உடலாக இருக்கும் சேதன அசேதனங்களுக்கு மட்டும் தான். பரமாத்மாவுக்கு அல்ல. தோஷங்கள்
எல்லாம் அந்த சேதன அசேதனங்களில் தான் இருக்கும். பரமாத்மாவிடம் ஏற்படாது. பரமாத்மாவுக்கு இருக்கும் ஏற்றங்கள், அவரிடம் தான் இருக்கும். உடலான சேதன அசேதனங்களிடம் வந்து விடாது
.-ப்ரஹ்மத்துக்கு சேதன அசேதனங்கள் அனைத்தும் உடலாக உள்ளன என்பது வேதத்தில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. எனவே
அதற்கும் பொருந்தும் ஒரு இலக்கணத்தைத் தான் நாம் சரீரத்திற்குக் கொடுக்க வேண்டும். அதாவது – “யஸ்ய சேதநஸ்ய யத் த்₃ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்வத₂ நியந்தும் தா₄ரயிதும் சக்யம் தச் சே₂ஷதைக ஸ்வரூபம் தத் தஸ்ய சரீரம்”, அதாவது, “எந்த ஒரு சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம் எல்லா காலத்திலும் தனக்காக இயக்கப் படுவதற்கும் தாங்கப் படுவதற்கும் தகுதி உடையதாய் இருக்கிறதோ , அவன் நன்மைக்காகவே இருக்கிறதோ , அந்த த்ரவ்யம் அந்த சேதனனுக்கு உடல் ஆகும்

(சக்யம் -தகுதி உடையது என்கிற விசேஷணம் சேர்த்து லக்ஷணம் -சில சமயம் கைகளைத் தூக்க முடியாமல் போகலாமே -பூர்வ பஷி சொல்லிய லக்ஷணத்தில் பல தவறுகள் -முக்தனுக்கு சரீரம் கர்மம் அடியாக இல்லை -இந்த்ரியங்கள் பிராணன் செடி கோடிகளுக்கு இல்லை-பூத சங்காதமும் அல்லவே -ஆகவே நம் ஸித்தாந்த சரீர லக்ஷணமே மிகவும் பொருந்தும் –)

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

ஸாங்க்ய மதத்தில் உள்ள தோஷம்
7- ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“ தன்னுடைய பக்ஷத்தில் உள்ள தோஷங்களாலும்”
இது வரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கின்ற நம்முடைய பக்ஷத்தில் தோஷம் இல்லை என்று காட்டப்பட்டது. இனி, பூர்வ பக்ஷத்தில் தோஷங்கள் உள்ளபடியாலும், பிரதானம் ஜகத்காரணம் என்று ஏற்க முடியாது என்று வேத வியாஸர் காட்டுகிறார்.
ஸாங்க்ய மதத்தில் ப்ரக்ருதி, ஜீவாத்மா என்று இரண்டு பொருட்கள் உண்டு. அந்த ஜீவாத்மா ஞானமுடையவர்,-ஆனால் எந்த கர்மங்களிலும் ஈடுபட மாட்டார். ப்ரக்ருதி தான் உலகத்தை படைக்கிறது, ஆனால் தானாக படைப்பதில்லை . ஜீவாத்மாவின் தொடர்பாலே ப்ரக்ருதி படைக்கிறது, என்று சொல்லுகிறார்கள்.
இவ்விடத்தில் வேத வியாஸர் ஒரு கேள்வியைக் கேட்கிறார் – ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பாலே ஸ்ருஷ்டி ஏற்படுகிறது, என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தொடர்பு எத்தகையது ?என்று. அந்த இரண்டு பொருட்களும் இருப்பதனாலேயே அவற்றுக்குத் தொடர்பு இருக்கிறது, என்று சொன்னால், அந்தத் தொடர்பு என்றைக்குமே அழியப் போவதில்லை . அதனால், ஜீவாத்மாவுக்கு என்றுமே மோக்ஷம் என்பது கிடைக்காமலேயே போய் விடும்.
அந்தத் தொடர்பு என்பது உண்டாக்கப்பட்ட ஒரு பொருள் என்று சொன்னோமே என்றால், அதுவும் ப்ரக்ருதி யிலிருந்து படைக்கப்பட்ட ஒன்று என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்யோன்ய ஆஸ்ரயம் என்கிற ஒரு குற்றம் ஏற்படும். ஜீவாத்மாவின் தொடர்பு ஏற்பட்டால், ப்ரக்ருதி படைக்கும். படைப்பு நடந்தால் தான் அவர்களுக்குள் தொடர்பே ஏற்படும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர்பார்த்துஇருக்கிறபடி யாலே , இந்த பக்ஷமும் பொருந்தாது.
அதனால், பிரதானம் ஜகத்காரணம் என்று சொல்லும் பக்ஷத்தில் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று தான் ஏற்க வேண்டும் என்று இந்த ஸூத்திரத்தின் பொருள்.

தர்க்கமா வேதமா?
8-தர்க்க அப்ரதிஷ்டா₂நாத் அபி
– “ தர்க்கம் நிலை பெறாத படியாலும்”
மேலும், ஒரு தோஷம். ஸாங்க்யர்களின் பக்ஷத்தில் சொல்லப் படுகிறது – அவர்களுடைய பக்ஷம் தர்க்கம், அதாவது-யுக்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தர்க்கம் என்பது என்றைக்குமே நிலை பெறாது – ஒரு முடிவுக்கு வரவே முடியாது. பௌத்தர்கள், ஜைனர்கள், நியாய மதத்தைச் சேர்ந்தவர்கள், யோக மதத்தைச் சேர்ந்தவர்கள்,ஸாங்க்யர்கள் என்று இவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பல தோஷங்களைச் சொல்லிக் கொள்ளுகிற படியால், அவை அனைத்துமே யுக்திகளின் அடிப்படையில் இருக்கிறபடியால், எது சரியான பக்ஷம் என்று முடிவு செய்யவே முடியாது.

ஆனால், ஸித்தாந்தத்தில் ஸ்ருதி என்கிற வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்லுகிறபடியால், நிலை பெறாமை என்கிற தோஷம் ஸித்தாந்தத்தில் ஏற்படாது.
9- அந்யதா ₂ அநுமேயம் இதி சேத் ஏவமபி அநிர்மோக்ஷப்ரஸங்க₃:
அந்யதா ₂ அநுமேயம்
– எதிரிகளின் யுக்திகளை உடைத்து, பிரதானமே ஜகத்காரணம் என்று ஊகிக்கலாமே
இதி சேத் – என்று சொன்னால்
ஏவமபி அநிர்மோக்ஷ ப்ரஸங்க₃: – அப்போதும் நிலை பெறாமை என்கிற தோஷத்திலிருந்து விடுபட முடியாது
பிற்காலத்தில் நம்மை விட புத்தி சாலியாக ஒருவர் வந்து நாம் சொன்ன யுக்திகளையும் முறியடிக்கக் கூடும் என்கிறபடியால், அப்போதும் தர்க்கம் என்பது நிலை பெற்று விட்டது என்று கூறவே முடியாது. அதனால், புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் வேதம் என்கிற ஸாஸ்திரத்தைத் தான் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்வதற்கு, தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, தர்க்கம் பயன்படலாமே தவிர, தர்க்கத்தை
மட்டும் கொண்டு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதென்பது முடிவுக்கே வராத ஒரு முயற்சி ஆகும்(வேத ஸாஸ்த்ர அவிரோத தர்க்கங்கள் மட்டுமே உபாதேயம் -மநு ஸ்ம்ருதி ).
ஆகையால், ஸாங்க்ய ஸ்மிருதி, வேதத்துக்கு முரண்பட்டதாக இருக்கிறபடியால், அதில் சொன்னபடி வேதத்தின் பொருளை முடிவு செய்வது தவறாகும். மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். அவையும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று தான் சொல்லுகின்றனர். அதனால்,
முதலத்தியாயத்தில் நாம் எடுத்த முடிவில் எந்த முரண்பாடும் இல்லை என்பது இந்த அதிகரணத்தின் பொருள்.

———–

2-1-4-சிஷ்டாபரிக்₃ரஹாதி₄கரணம்-ஒற்றுமையிலும் வேற்றுமை

மீதமுள்ள மதங்களுக்கும் விடை
விலக்ஷணத்வாதிகரணத்தில் ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லக்கூடிய ஸாங்க்யர்களின் பக்ஷம் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த அதிகரணத்தில் அதே நியாயத்தாலே , அதே யுக்திகளாலே வேதத்துக்கு புறம்பான மற்ற ஸ்மிருதிகள் மற்றும் மதங்களையும் மறுக்கிறார் வேத வ்யாஸர்.
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்ரம் தான் உள்ளது
1-ஏதேந சிஷ்டாபரிக்₃ரஹா: அபி வ்யாக்₂யாதா :
ஏதேந –
இத்தாலே என்று பொருள். அதாவது, வேதத்தால் ஏற்கப்படாத கருத்துகளைச் சொல்லக் கூடிய ஸாங்க்ய ஸ்மிருதியை மறுத்ததனாலேயே
சிஷ்ட அபரிக்ரஹா: – சிஷ்டம் என்றால் மீதமிருப்பவை என்று பொருள். அபரிக்ரஹா: என்றால் வேதத்தாலே பரிக்ரஹம் செய்யப்படாதவை , வேதத்தாலே ஏற்கப்படாதவை என்று பொருள். ஆகையால், சிஷ்டாபரிக்ரஹா: என்றால் வேதத்தால் ஏற்கப்படாத மீதமுள்ள ஸ்மிருதிகள், அதாவது அவற்றில் சொல்லப்பட்ட பக்ஷங்கள் என்று பொருள்.
அபி – அந்த பக்ஷங்களும் கூட
வ்யாக்யாதா : – அவையும் விவரிக்கப்பட்டன, அவையும் பதிலளிக்கப்பட்டன, அதாவது, அவையும் மறுக்கப்பட்டன. தர்க்கத்தை ஆலோசித்துப் பார்த்தாலும், ஸாங்க்யர்கள் சொல்லும் தர்க்கம் வேதத்துக்குப் புறம்பாக உள்ளது. மனு முதலானவர்கள் சொல்லும் தர்க்கம் தான் வேதத்தை அனுசரித்து இருக்கிறது. அதனால், வேதத்தை அனுசரித்த தர்க்கத்ணத அனுசரித்து இருக்கும் மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த அதிகரணத்தில் எந்த யுக்திகளை யெல்லாம் கொண்டு சொன்னோமோ , அதே யுக்திகளாலே வேதத்துக்குப் புறம்பான மற்ற ஸ்மிருதிகளையும் மறுக்கப்பட்டன என்று இந்த ஸூத்ரத்தின் பொருள்.

ஏன் தனி அதிகரணம்?
இங்கு ஒரு கேள்வி –
அதே யுக்திகளைக் கொண்டு தான் மற்ற ஸ்ம்ருதிகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு ஏன் தனி அதிகரணம் அமைக்க வேண்டும்?
பதில் – கடந்த அதிகரணத்தில் இல்லாத ஒரு அதிகமான கேள்விக்கான பதில் இந்த அதிகரணத்திலே சொல்லப்படுகிறது. ஸாங்க்யர்கள் தர்க்கத்தின் அடிப்படையில் தங்கள் பக்ஷத்தை முன் வைக்கிறார்கள். தர்க்கம் என்பது நிலை பெறாதது. அதில் பலவிதமான வாதங்கள், பல யுக்திகள் முன்னும் பின்னும் சொல்லப்படலாமே தவிர, முடிவை அடைய முடியாது. அதனால், தர்க்கத்தை மட்டும் கொண்டு ஒரு பக்ஷத்தை முடிவு செய்ய இயலாது என்று தெரிவித்தார் வ்யாஸர்.
மேல் கேள்வி – பரமாணுக்கள் தான் ஜகத்துக்குக் காரணம் என்று கணாதருடைய வைசேஷிக மதம், கௌதமருடைய நியாய மதம், ஜைனர்களுடைய மதம், பௌத்தர்களுடைய மதம் என்று பல மதங்களிலே ஏற்கிறார்கள், ஆகையால்,
தர்கம் நிலை பெறாதது என்று சொல்ல முடியாது. அதனால் பரமாத்மா ஜகத்காரணம் அல்ல – என்று.
விடை
(1) தர்க்கம் எப்போது வேண்டுமானாலும் பிற்காலத்தில் மற்று ஓருவராலே தகர்க்கப் படலாம். அதனால், தர்க்கம் நிலை பெற்றுவிட்டது என்று எப்போதுமே சொல்ல முடியாது. இது ஒரு பதில்.
2-பரமாணு தான் ஜகத் காரணம் என்று இவர்கள் அனைவரும் ஏற்றாலும், அந்த பரமாணு எத்தகையது என்பதிலேயே இவர்களுக்கு ஒத்த கருத்து கிடையாது.வைசேஷிக மதத்தில் நியாய மதத்தில் பரமாணுக்கள் உண்மையான பொருட்கள் என்று சொல்லுவார்கள்.
பௌத்தர்களோ பரமாணுக்களே பொய் என்று சொல்லுவார்கள். பௌத்தர்களுக்குள்ளேயே சிலர் ஞானமே வடிவானது பரமாணு என்று தெரிவிக்கிறார்கள். சிலர் ஞான வடிவானது அல்ல என்று பௌத்தர்கள் பரமாணுக்கள் ஒரு வினாடி தான் இருக்கும் என்கிறார்கள், மற்ற மதத்தவர்களோ பரமாணுக்கள் அழியாதவை என்கிறார்கள். இப்படி பரமாணுவின் இயற்கையைப் பற்றியே பலவிதமான முரண்பாடுகள் இந்த மதங்களுக்குள்ளே இருக்கின்றன–ஆகையால் முதலத்தியாயத்தில் என்ன முடிவுக்கு வந்தோமோ – பரமாத்மாவே ஜகத் காரணம் என்று -அதற்கு அவிரோதம் அதாவது எந்த முரண்பாடும் இல்லை , ஸாங்க்ய ஸ்மிருதியைக் கொண்டு எப்படி முரண்பாடு இல்ளையோ , அதைப் போலவே மற்ற ஸ்மிருதிகளைக் கொண்டும் முரண்பாடு இல்லை என்று இந்த அதிகரணத்தாலே வேத வ்யாஸர் நிரூபித்தார்.

——————-

2-1-5-போ₄க்த்ராபத்த்யதி₄கரணம்-உடல் இருந்தாலே துன்பமா?

அதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ”ந து திருஷ்டாந்த பாவாத்” என்கிற ஸூத்திரத்தில், உடலில் குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதலான மாற்றங்கள் இருந்தாலும், அந்த தன்மைகள் எதுவும் உள்ளுக்குள் இருக்கும் ஜீவாத்மாவைப் பாதிக்காதது போல், சேதனாசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே உலகத்தை படைக்கிறபடியால், மாற்றங்கள் குற்றங்கள் இவை யெல்லாம் உடலாக இருக்கும் சேதனங்களுக்கும் அசேதனர்களுக்கும்
உண்டே தவிர, அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு வராது; அதனால், ஸ்வபாவ விபாகம் உண்டு, அதாவது அவரவர்களுடைய தன்மைகள் வகுக்கப்பட்டுத் தான் இருக்கும். பரமாத்மாவுக்கு அசேதனத்தின் தன்மைகள் வராது. ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவின் தன்மைகள் வராது. எந்த இடத்திலும் தன்மைகள் கலந்து விடாது என்று வேத வ்யாஸர்
நிரூபித்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – சேதனங்கள் அசேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றுசொன்னால், சரீரம் இருப்பதாலேயே அந்த பரமாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருமே ? ஜீவாத்மாவுக்கு உடல் இருந்தால், இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால், பரமாத்மாவுக்கும் சரீரம் இருப்பதாலேயே இன்பம் துன்பம் இவை யெல்லாம் வந்துவிடுமே . அப்படி வந்தால், பரமாத்மாவின் தன்மை இன்பம்
மட்டுமே . துன்பம் என்பது ஜீவாத்மாவுக்கு மட்டும் தான் என்று வரை யறுத்துச் சொல்ல இயலாது. ஸ்வபாவங்கள் எல்லாம் வகுத்து இருக்காது, கலந்துவிடும். அதனால், உலகை உடலாகக் கொண்ட பரமாத்மா ஜகத் காரணமாகவே இருக்க முடியாது – என்று. அதற்கு இந்த அதிகரணத்தில் வேத வ்யாஸர் பதில் கூறுகிறார்.

“ஸம்போ₄க ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” (1.2.8) என்ற ஸூத்ரத்தில், பரமாத்மா உபாஸகர்களுடைய ஹ்ருதயத்துக்குள் இருப்பதாலேயே இன்ப துன்பங்கணள அநுபவிக்கத் தேவையில்லை , கர்மத்தால் வராமல் க்ருபையால் வந்திருக்கிற படியால் என்று சொல்லப்பட்டது. அடுத்து “ந து த்₃ருஷ்டாந்த பா₄வாத்” (2.1.9) என்ற ஸூத்ரத்தில், உடலுக்கு ஏற்படும் இளமை , முதுமை முதலான தோஷங்கள் ஆத்மாவுக்கு ஏற்படாதது போல், உலகமே பரமாத்மாவுக்கு உடலாக இருந்தாலும் சேதனாசேதனங்களுக்கு உள்ள குற்றங்கள் பரமாத்மாவுக்கு எற்படாது என்று சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் உடல் இருப்பதாலேயே பரமாத்மாவுக்கு துன்பம் ஏற்பட்டு விடாது என்று நிரூபிக்கப் படுகிறது-

பூர்வ பக்ஷியின் வாதம்
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்திரம் தான் உள்ளது.
1-போ ₄க்த்ரா பத்தே : அவிபா₄க₃: சேத் ஸ்யாத் லோகவத்
போ₄க்த்ரா பத்தே : அவி பா₄க₃:
– இது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.
சேத் – இவ்வாறு நீ சொன்னாய் என்றால் .
ஸ்யாத் லோகவத் -இது வேத வியாஸருடைய பதில். இப்படி மூன்று பகுதிகளாக இந்த ஸூத்திரத்தை பிரித்துக் கொள்வோம்.
பூர்வ பக்ஷம் -சேதனங்கள் அசேதனங்கள் அனைத்துமே பரமாத்மாவின் சரீரம் தான் என்று சொன்னால், பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்களை அனுபவித்தல் என்கிற தன்மை வந்து விடும்.-உலகத்தில் ஒரு ஜீவனுக்கு உடல் இருந்தால், உடலில் உள்ள குழந்தைத் தன்மை , இளமைத் தன்மை முதலானவை அந்த ஜீவாத்மாவுக்கு ஏற்படா விட்டாலும், அந்த சரீரத்தில் இருக்கக் கூடிய வாதம், பித்தம், கபம் முதலான தாதுக்களின் ஏற்றத் தாழ்வுகளாவே அந்த ஜீவாத்மாவுக்கு இன்பங்களும், துன்பங்களும் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க முடியாது என்று பார்க்கிறோம். அதே போல், பரமாத்மாவுக்கும் உடல் இருக்கிறது என்றால், அவருக்கும் துன்பம் வந்து விடும்.

வேதத்திலும் –ந ஹ வை ஸ சரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோ : அபஹதிரஸ்தி-
அதாவது “சரீரத்தோடு கூடியிருக்கும் ஒரு ஜீவனை இன்ப துன்பங்கள் ஒரு நாளும் விட்டுப் போகாது. சரீரத்தையே ஒழித்து அசரீரியாக ஒருவன் இருந்தால் தான் இன்ப துன்பங்களைத் தாண்டி இருக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே , உலகத்திலும் சரி, வேதத்திலும் சரி, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று நாம் காண்கிற படியால், இந்த உலகமே பரமாத்மாவுக்கு உடல் என்று நீங்கள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கும் துன்பம் வந்து விடும்.
போகம் என்றால், இன்ப துன்பங்களின் அனுபவம். போக்தா என்றால், அந்த இன்ப துன்பங்களை அனுபவிப்பவர் என்று பொருள்.
போ₄க்த்ரா பத்தி: – பரமாத்மாவுக்கும் சரீரம் உண்டு என்றால், அவரும் இன்ப துன்பங்கணள அனுபவிக்க வேண்டி வரும் என்று பொருள்.
அவி பா₄க₃: – ஆகவே , பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்கள் உண்டு என்றால், அவருக்கு ஜீவனின் தன்மை வந்து விட்டது. ஜீவனின் தன்மை இது, பரமாத்மாவின் தன்மை இது என்று பிரித்து வைக்க இயலாது.
அதனால், பரமாத்மாவுக்கு உடல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடல் இல்லாமலேயே பரமாத்மா உலகமாக மாறுகிறார் என்று சொன்னால், பரமாத்மாவுக்கே பல குற்றங்கள், அபுருஷார்த்தங்கள் ஏற்பட்டு விடும். அதனால், இரண்டு பக்கங்களிலும் சிரமம் இருக்கிறபடியால், பரமாத்மா ஜகத் காரணம் அல்ல , பிரதானம் தான்.

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
சேத் –
“இவ்வாறு கூறினால்” என்று பூர்வ பக்ஷியின் வாதத்தை வ்யாஸர் நினைவூட்டிக் கொள்கிறார்
ஸ்யாத் – “இருக்கட்டும்” – “ஸ்வபா₄வ விபா₄க₃ம் -அதாவது தன்மைகளின் பாகுபாடு இருக்கட்டும்”
பரமாத்மாவுக்கு உலகமனைத்தும் உடலாக உள்ளது என்று கொண்டாலும் சித், அசித், ஈஸ்வரன் ஆகியோரின் தன்மைகளில் கலப்பு (அவிபா₄க₃ம் – வரை யறை இல்லாமை ) ஏற்படாது, பாகுபாடு இருக்கும் என்று கூறுகிறார்.-சரீரம் இருந்தாலே துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்று பூர்வ பக்ஷி கூறி யிருந்தார். அதில், வேத வியாஸர்
வேறுபடுகிறார். பொதுவாக, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று கூற முடியாது; பாவம் புண்ணியம் என்கிற கர்மத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும் என்பது வியாஸருடைய கருத்து.
ஏனென்றால், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அடைந்த பிறகும் கூட, வைகுந்தத்தில் உடல் இருக்கிறது என்று உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன. “ஸ ஏகதா பவதி, த்ருதா பவதி” என்று பல உடல்களை ஜீவாத்மா முக்தி நிலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்தி அடைந்த ஜீவாத்மாவுக்கு துன்பங்கள் கண்டிப்பாக வர முடியாது. -அதனால், கர்மத்தால் ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பம் ஏற்படும் என்று தான் கொள்ள வேண்டும்.
ஆகையால், இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்தாலும், அவர் அபஹத பாப்மா என்று சொல்லப் படுகிறபடியால், கர்மங்களை அற்றவர். அதனால் அவருக்கு சரீரம் இருந்தாலும் துன்பம் ஏற்படாது என்பது வேத வியாஸருடைய சமாதானம்.

லோகவத் – “உலகத்தில் இருப்பது போல்”. அரசனும் பொது மக்களும் கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் இருந்தாலும், அரசன் தன் தொண்டர்களால் சாமரத்தால் விசிரப் படுவதால்,கொசுக்களால் கடிக்கப் படாமல் இருக்கிறார், ஆனால் பொதுமக்கள் கடிக்கப் படுகிறார்கள். உடல் இருப்பதாலேயே இருவரும் கடிக்கப்பட வேண்டும் என்பதல்ல -அதே போல். பரமாத்மாவுக்கும் சரீரம் இருந்தாலும் அவருக்கு ’அபஹத பாப்மத்வம்’ (கர்மங்களற்றிருத்தல்) என்கிற சிறந்த சக்தி உள்ளபடியால் அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படாது.
ஆக சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கும் உடலாகக் கொண்டிருந்தாலும், அவருக்கு எந்த தோஷங்களும் வராது என்கிறபடியால் சேதனாசேதநங்களை சரீரமாகக் கோண்ட ப்ரஹ்மமே ஜகத்காரணம் ஆவார்.

(இதே போல் பரமாத்மாவுக்கு -ஸர்வ லோகேஸ்வரன் -அபஹதபாப்மாத்வம் -ஸர்வசக்தி இவையே விசிறி -எத்தனை சரீரங்களும் இருந்தாலும் துன்பம் படமாட்டார்)

(கீழேயும் இதே போல் பார்த்தோம் -அது அந்தர்யாமி விஷயம் –(1-2-8) ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” – இதில் பூர்வ பக்ஷியின் கேள்வியும் வ்யாஸரின் பதிலும் உள்ளன.
ஸம்போ₄க₃ப்ராப்தி: – இது பூர்வ பக்ஷியின் கேள்வி. ஸம்போகம் என்றால் உலகத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவம். ப்ராப்தி என்றால் அடைவது. பூர்வ பக்ஷீ கேட்கிறார் – ஒரு ஜீவாத்மா உடலுக்குள் இருக்கிறபடியால் உலகத்தில் ஸுகம் மற்றும் துக்கங்களை அநுபவிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல் பரமாத்மாவும் இந்த உடலுக்குள் இருக்கிறார் என்றால், அவரும் ஸம்ஸாரத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவத்தாய் அடைய நேரிடுமே ?
இதி ந சேத் – “இவ்வோறு கூறினால் அது தவறு” – வ்யாஸர் இதற்கு பதில் கூறுகிறார்.
வைசேஷ்யாத் – “(காரணத்தில் இருக்கும்) சிறப்பால்” – அதாவது – “ஒரு ஜீவாத்மா உடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் பரமாத்மா இவ்வுடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் சிறப்பு (வேறுபாடு) இருக்கிறபடியால்”.
உடலுக்குள் இருப்பது மட்டுமே ஸுகம் மற்றும் துக்கத்துக்குக் காரணம் ஆகாது. எந்த காரணத்தால் ஒருவர் அந்த உடலுக்குள் இருக்கிறார் என்று ஆராய வேண்டும்.
ஜீவாத்மோ ஓர் உடலை அடாய்வதற்குக் காரணம், தான் முன் ஜன்மங்களில் செய்த பாபம் மற்றும் புண்ணியம் என்னும் கர்மம் தான். அதனால் அந்த உடல் அவருக்கு ஸுகம் மற்றும் துக்கத்தைத் தருகிறது.
பரமாத்மாவோ தன்னுணடய கருணையால் இந்த உடலுக்குள் இருக்கிறாரே தவிற, கர்மத்தால் அல்ல. எனவே அவருக்கு எந்த ஒரு ஸுகமோ துக்கமோ இதனால் ஏற்படாது.
இதை உபநிஷத்தே அழகான ஒரு உவமையைக் கொண்டு சொல்கிறது –
த்₃வோ ஸுபர்ணோ ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிசஸ்வ ஜாத |
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி||

இந்த உடல் என்ற ஒரு மரத்தில் ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இரண்டு பறைவகள் உள்ளன. அந்த மரத்தில் பழங்கள் உள்ளன. அவைதான் கர்மத்தின் காரணமாக ஏற்படும் ஸுக துக்கங்கள். ஜீவாத்மா அந்த பழத்தை உண்கிறது. பரமாத்மா என்ற மற்ற ஓரு பறவை அதை உண்ணாமல் ஒளியோடு திகழ்கிறது.

————-

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-மண்ணும் குடமும் வெவ்வேறு பொருள்களா?

காரணமும் காரியமும் வெவ்வேறு என்ற பூர்வ பக்ஷம்-2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – ஸங்கதி முன்பு -2-1-4- விலக்ஷணத்வாதிகரணத்தில் “அஸத் இதி சேத் ந பிரதிஷேத்
மாத்ரத்வாத்”
என்ற நான்காவது ஸூத்திரத்தில் “காரணமும் காரியமும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்கலாம்;-ஆனால் காரணமும் காரியமும் வெவ்வேறு பொருட்கள் அல்ல. அதனால் இல்லாத ஒரு பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்லும் அஸத் கார்ய வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை . ஸத் கார்ய வாதம் தான் வேதாந்தம் ஒப்புக் கொள்வது” என்று வேத வியாஸர் கூறி யிருந்தார். இந்தப் பின் புலத்தில்,

பூர்வ பக்ஷம் – இங்கு பூர்வ பக்ஷிகள் ந்யாய மதத்தைச் சேர்ந்தவர்கள், காரணப் பொருளைக் காட்டிலும் உண்டாக்கப்படும் காரியப் பொருள் வேறுபட்டது தான், ஒரே பொருள் காரணமாகவும் காரியமாகவும் இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் யுக்திகள் –
1–விலக்ஷண புத்தி போதகத்வாத் -அறிவு வேறுபாடு – குடமும், மண்ணும் வெவ்வேறு ஜ்ஞானங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன.
2- சப்த பேதக -சொல் வேறுபாடு – குடம், துணி என்பது போல் மண் குடம் என்ற இரு சொற்களால் குறிக்கப்படுபவையும் வேறு தான்.
3-காரிய பேதக -பயன் வேறுபாடு – குடத்தைக் கொண்டு தண்ணீரை சுமந்து வர முடியும், மண்ணைக் கொண்டு செய்ய முடியாது.
4-கால வேறுபாடு – குடம் இல்லாத காலத்திலும் மண் இருப்பதைப் பார்க்கிறோம். அதனால் அவை வெவ்வேறு தான்.
5-வடிவ வேறுபாடு – மண் என்பது பொடியாகவோ , கட்டியாகவோ இருக்கும். குடத்துக்கு வாயும் வயிறுமான வடிவம்.
6-பரிமாண வேறுபாடு -அளவில் வேறுபாடு. தனித்தனி நூல்களின் அளவை விட துணியினுடைய அளவு அதிகமானது.
7-பாவ அபாவ முரண்பாடு – மண் இருக்கும் போதே குடம் அழிந்து விட்டது என்று சொல்லுகிறோம். அதனால் ஒரே பொருள் இருக்கிறது என்றும் அழிந்து விட்டது என்றும் சொல்லப்பட முடியாத படியால் அவை வெவ்வேறு தான்.
8-எண்ணிக்கையில் வேறுபாடு – நூல்கள் பல, ஆனால் காரியமான துணி ஒன்று தான்.
9-காரக வியாபாரங்கள் பயனில்லாமல் போகும் – குடம் புதிதாக உண்டாக்கப்பட வில்லை என்றால் குடத்தை உண்டாக்குவதற்கான செயல்கள் வீணாகத்தான் போய் விடும்.
10-நித்ய அநித்ய பாகுபாடு இல்லாமை – இது நித்தியமான பொருள், இது அநித்தியமான உண்டாகி அழியக் கூடிய பொருள் என்கிற வேறுபாடே சொல்ல முடியாது, எல்லாப் பொருள்களுமே எப்போதும் இருப்பதால்.

ஸாங்க்ய மதத்தில் உள்ள தவறுகள்
ஸாங்க்யர்களின் பதில் – இந்த வாதத்துக்கு ஸாங்க்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு விதமாக ஸத் கார்ய வாதத்தை பின் பற்றி பதில் அளிக்கிறார்கள். அவர்கள் சொல்வது அபி₄வ்யக்தி வாதம் என்று அழைக்கப்படுகிறது,
(உண்டாகுவது -வேறு -வெளிப்படுவது வேறு தானே -சூர்யன் கிழக்கு உதிக்கிறார் பிறக்கிறார் என்றும் சொல்ல மாட்டோம் -தோற்றம் -எள்ளுக்குள் எண்ணெய் போல்-) குடம் என்கிற காரியம் புதிதாக உண்டாக்கப் படுவதில்லை , ஆனால் அதற்கு அபிவியக்தி (தோற்றம்) என்று ஒன்று உண்டு. அந்த தோற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அதற்கு அந்தக் குயவன் சில செயல்களைச் செய்ய வேண்டும். -அதனால் நாம் செயல்கள் செய்வது வீணாகிவிடுமே என்று முன் சொன்ன கேள்வி வராது. எந்தப் பொருட்கள்
எப்போதும் தோற்றுகின்றனவோ , அவை நித்யமான பொருட்கள், அவ்வப்போது வெளிப்படுபவை அநித்யமான பொருட்கள் என்று பாகுபாடையும் சொல்லி விடலாம்.

இதற்கு நியாய மதத்தைச் சேர்ந்த பூர்வ பக்ஷிகளின் கண்டனம் – ஒரு குடம் அபி வியக்தி (தோற்றம்) அடைகிறது என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தோற்றத்துக்கு தோற்றம் உண்டா? தோற்றம் கிடையாதா? அல்லது புதிதாக உண்டாகிறதா?
1-தோற்றத்திற்குத் தோற்றம் உண்டு என்று சொன்னால், அந்தத் தோற்றத்திற்கு இன்னுமொரு தோற்றம், அதற்கு மற்ற ஓரு தோற்றம் என்று இது முடிவே இல்லாமல் ஏற்க வேண்டி வரும். இது ’அநவஸ்தா₂’ என்ற தோஷமாகும்.
2-குடத்தினுடைய தோற்றமானது தோற்றமே இல்லாதது என்று சொன்னால், அப்போது குடம் என்பது எப்போதுமே தோற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
3-குடத்தினுடைய தோற்றம் என்பது புதிதாக உண்டாக்கப் படுகிறது என்று சொன்னால், அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகி விடும், அதற்கு பதிலாக குடமே புதிதாக உண்டாகிறது என்றே ஏற்றுக் கொண்டு விடலாம்.
மேலும், அபிவியக்தி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு பொருளைத் தான் தோற்றமடைய வைக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியாது. ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், தனக்கு அருகில் இருக்கும் குடம், துணி, மரம் முதலான எல்லாப் பொருள்களையுமே தோற்றமளிக்க வைக்கும். அதே போல், மண்ணில் குடம், தட்டு, சுவர் என்று பல பொருட்கள் உள்ளபடியால், குயவன் செய்யும் செயல்களாலே ஏன் குடம் தான்
உண்டாகிறது? சுவரோ , தட்டோ உண்டாகவில்லை ? இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை .
அதனால் காரணமும் காரியமும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். நீங்கள் விலக்ஷணத்வாதிகரணத்தில் காரணமும் காரியமும் ஒன்று தான், ஆனால் வெவ்வேறு தன்மைகளோடு இருக்கின்றன என்று சொன்னது பொருந்தாது

உபநிஷத் தெளிவாகக் கூறும் ஸத் கார்ய வாதம்-ஸித்தாந்தம் – பூர்வ பக்ஷிகளின் இந்த வாதத்ணத 6 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் முறியடிக்கிறார்.
1- தத₃நந்யத்வம் ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய:
தத₃நந்யத்வம் –
(இந்த ஜகத்) அந்த ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல
ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய: – ’ஆரம்ப₄ணம்’ என்ற சொல்லைத் தொடக்கமாகக் கொண்ட வாக்கியங்களால்.(பஞ்சமி பஹு வசனம் )-

சாந்தோக்ய உபநிஷத்தில் 6ஆம் அத்யாயத்தில் ’ஸத்₃வித்₃யா
’ உபதேஸத்தில் ’ ஆரம்ப₄ணம்’ என்ற சொல் தொடங்கி பல வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன.
அவற்றை ஆராய்ந்தால் காரணமும் காரியமும் ஒன்றென்று தெரிகிறது.
உத்தாலகர் என்ற தந்தை , தன் மகனான ஸ்வேத கேதுவைப் பார்த்துக் கேட்கிறார் – “
உததம் ஆதே₃ சம் அப்ராக்ஷ்ய: யேந அச்ருதம் ச்ருதம் ப₄வதி” அதாவது – “எந்த ஒரு பொருளை அறிந்தால், உலகத்தில் அனைத்துப் பொருள்களையும் அறிந்ததாக ஆகுமோ , அந்த ப்ரஹ்மத்தைப் பற்றி உன் ஆசாரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாயா? என்று.
எப்படி ஓரு பொருளை அறிந்தால், அனைத்தையும் அறிந்ததாகும் என்று புரியாமல், மகன் கேட்க, அதற்கு தந்தை ஒரு எடுத்துக் காட்டைக் கூறுகிறார் – “
யதா₂ ஸோம்ய ஏகேந மிருத் பிண்டே ₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்” என்று. “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்து கொண்டால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு, சுவர், முதலான எல்லாப் பொருட்களையும் ஒரு விதத்தில் அறிந்ததாக ஆகுமோ , அதே போல் இந்த ப்ரஹ்மத்தை அறிந்தால், உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று தந்தை கூறினார்.

நிலைகள் வேறு, பொருள்கள் வேறல்ல
அப்போது மண்ணும் குடமும் வெவ்வேறு பொருட்கள் கிடையாதா? மண்ணை அறிந்தால் எப்படி குடம் முதலானவற்றை அறிந்ததாக ஆகும்? என்கிற சந்தேகம் மகனுக்கு எழ , அதற்கு பதில் கூறுகிறார்,
“வாசா ஆரம்ப₄ணம் விகார: நாமதே₄யம் ம்ருத்திகா இத்யேவ ஸத்யம்” என்று. “மண்
என்ற ஒரே பொருள் தான், வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்காக வெவ்வேறு பெயர்களையும் வெவ்வேறு வடிவங்களையும் அடைகிறது. குடம், தட்டு, முதலான காரியப் பொருள்களும் கூட மண் என்று தான் பிற்பாடும் அறியப் படுகின்றன. அதனால் அவை அனைத்துமே மண் தான். தனி பொருள் அல்ல” என்று இதற்குப் பொருள்.

அடுத்து, மற்றுமொரு வாக்யம் – “ஸதே₃வ ஸோம்ய இதம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”.
இத₃ம்-
நீ கண் முன்னால் பார்க்கக் கூடிய ஜகத்து அனைத்துமே
அக்₃ரே – ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளய காலத்தில்
ஸதே₃வ ஆஸீத் ஸத்தாகவே இருந்தது அதாவது ப்ரஹ்மமாகவே இருந்தது.
இதனாலும் உலகமும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று தெரிகிறது.
அதற்குப் பின் ப்ரஹ்மம் இந்த உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது எடுக்கக் கூடிய ஸங்கல்பம் காட்டப் படுகிறது – “
ப₃ஹு ஸ்யாம், ப்ரஜாயேய” என்று. அதாவது, -“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ப்ரஹ்மம் எண்ணுகிறது. இதனாலும் ஒன்றான ப்ரஹ்மமும் பலவான உலகப் பொருட்களும் ஒன்று தான் என்று தெரிந்து கொள்கிறோம்.
இந்த வாக்கியங்கள் எல்லாம் தெளிவாக ஸத் கார்ய வாதத்தை போதித்து, பெயர் வடிவம் பயன் அளவு முதலான வேறுபாடுகள் அப்பொருளின் நிலை மாறுகிற படியால் தான் என்று கூறுகின்றன

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-ஒரே பொருளுக்குத்தான் வெவ்வேறு நிலைகள்-அவஸ்தா பேதங்கள்

பூர்வபக்ஷியின் கேள்வி-பூர்வபக்ஷி, மண் முதலான காரணப் பொருள்களும் குடம் முதலான
கார்யப் பொருள்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று பத்து காரணங்களைச் சொல்லி வாதிட்டார். -அதற்கு வேத வியாஸர், முதல் ஸூத்ரத்தாலே உபநிஷத்துக்களே எப்படி ஸத் கார்ய வாதத்தைக் காட்டுகின்றன என்று சொல்லி, அதன் மூலம் ப்ரஹ்மமும் இந்த ஜகத்தும் வேறல்ல , ஒரே பொருள் தான் என்று நிரூபித்தார். தற்போது அதற்கு மேல் சில சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார்.
இங்கு பூர்வபக்ஷீ ஒரு கேள்வியை எழுப்புகிறார் – சொல் மாறுபடுதல், வடிவம் மாறுபடுதல், அளவு மாறுபடுதல், ஜ்ஞானம் மாறுபடுதல் முதலானவை சில இடங்களில் ஒரே பொருளுக்கு பல நிலைகள் ஏற்படும் போதும் காணப்படுகின்றன, வெவ்வேறு பொருள்களுக்கு இடையிலும் காணப்படுகின்றன. -அதாவது, ஒரே உடல், சிறிதாக இருக்கும் போது இது குழந்தை -பாலகன் என்று அழைக்கப்படுகிறது-வயதான பிறகு இளைஞன் – வயோதிகன் என்று அழைக்கப்படுகிறது. உடல் ஒன்று தான், நிலைகள் தான் மாறுகின்றன. அதனாலேயே சொல், வடிவம், ஜ்ஞானம், அளவு முதலானவை மாறி விடுகின்றன.-அதே போல், துணி, குடம் என்று இரண்டு வெவ்வேறு பொருள்களை எடுத்துக் கொண்டாலும், சொல், ஜ்ஞானம், வடிவம், அளவு, இவை முதலானவை மாறி விடுகின்றன. -ஒரு காரணத்திலிருந்து கார்யப் பொருள் உண்டாகும் பொழுது, இந்த இரண்டு விதத்தில் எதை நாம் ஏற்க வேண்டும் என்று கேள்வி. அதற்கு வேத வியாஸர், இரண்டாவது ஸூத்ரத்தில் பதில் கூறுகிறார்.

வ்யாஸரின் பதில்
2-பா₄வே ச உபலப்₃தே ₄:
– “இருக்கும் போதே கூட அறியப்படுகிறபடியால்”
எது இருக்கும் போது எது அறியப்படுகிறது? குடம், மோதிரம், துணி, முதலான கார்யப் பொருள்கள் இருக்கும் போதே , அந்தப் பொருள்களைப் பார்த்து, இது மண், இது தங்கம், இது பஞ்சு, என்று அதனதன் காரணப் பொருளும் அறியப் படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர் சொல்வார்கள்.-முதலில், மண்ணைப் பார்த்து விட்டு, பிறகு குடத்தைப் பார்க்கும் போது, இந்தக் குடம் அந்த மண் தான் என்கிற ஜ்ஞானம் ஏற்படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர். அப்படிப்பட்ட பிரத்யபிஜ்ஞா என்பது, குடத்தையும் துணியையும் பார்க்கும்போது ஏற்படுவது கிடையாது. அதனால் அங்கு பொருளே வேறுபடுகிறது என்று ஏற்றுக் கொள்வோம் -மண் & குடம், தங்கம் & மோதிரம், பஞ்சு & துணி – இவற்றுக்கு இடையில் இந்தப் பிரத்யபிஜ்ஞா என்பது இருக்கிற படியால், மண்ணைக் காட்டிலும் குடம் வேறல்ல – பஞ்சைக் காட்டிலும் துணி வேறல்ல-தங்கத்தைக் காட்டிலும் மோதிரம் வேறல்ல என்று தான் ஏற்க வேண்டும் – என்பது இந்த ஸூத்ரத்தின் பொருள்.

(ப்ரத்யபிஞ்ஞா-recognition)

மூன்றாவது ஸூத்ரத்தால், மற்றும் ஒரு காரணத்தைக் காட்டுகிறார் –
3–ஸத்வாச்ச அபரஸ்ய
–”(காரணமாக) மற்ற ஓன்றினுடைய (கார்யத்தினுடைய) இருப்பாலும்”
உலகத்தில் கார்யப் பொருள்களைப் பற்றிப் பேசும் போது, அவற்றை காரணப் பொருள்களாகவே பேசுகிறோம்.-காலையில் குயவன் வீட்டில் மண் குவியலைப் பார்த்து விட்டுச் சென்றவன், திரும்பவும் மதியம் வந்து பார்க்கும் போது, பல குடங்களைக் காண்கிறான். உடனடியாக, “இந்தக் குடங்கள் அனைத்தும் காலையில் மண்
கட்டியாகவே இருந்தன” என்று கூறுகிறான். ஆகவே , குடங்கள் தான் முன் காலத்தில் மண் கட்டியாக இருந்தன என்று தெரிகிறது. அதனால் கார்யம், காரணமாக முன்னால் இருந்தது என்று தான் உலகத்தில் நாம் சொல்கிறோம்.
வேதமும் இதே போலே , “ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத்” – இந்த உலகமனைத்தும் முன்னால் ப்ரஹ்மமாகவே இருந்தது என்று சொல்கிறது. ஆகையால், குடம் மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்லாதது போல், இந்த உலகமும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல என்று நாம் அறியலாம்.

ஸத் அஸத் என்பதன் பொருள்
4-அஸத்₃வ்யபதே₃சாத் நேதி சேத் ந த₄ர்மாந்தரேண, வாக்ய சேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராச்ச
அஸத்₃வ்யபதே₃சாத் ந
– இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்யசேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே :
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது

(பஹுஸ்யாம் ப்ரஜாயேய – ஸூஷ்ம அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸங்கல்பித்தது -பலவாகி நாம ரூபங்களைக் கொண்ட அனைத்துமாகி ஸ்தூல அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மமானது –
பாவாந்தர அபாவ பாவம் -இல்லாமையே இல்லை -துணி அழிந்து கந்தலாகும் -இல்லை என்றாலே வேறான வடிவில் உள்ளது -வாயும் வயிறுமான வடிவமான குடம் உடைந்து குடம் இல்லையாகி மண் துகளாகியது —அஸத் -பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொண்டாயே -)

(இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னில் வைத்தான் -பொருளல்லாத என்னை பொருளாக்கி அடிமையும் கொண்டான் -சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூப ஞானம் -மதிநலம் அருளி கைங்கர்யமும் கொண்டு அருளினான் -என்றபடி)

உலக எடுத்துக் காட்டுகள்
காரணப் பொருள் கார்யப் பொருளைக் காட்டிலும் வேறல்ல என்பதற்கு இரண்டு
எடுத்துக் காட்டுகளை வ்யாஸர் கூறுகிறார், அடுத்த இரண்டு ஸூத்ரங்களாலே –
5-பட வத் ச – “துணியைப் போலவும்”
உலகில் எப்படி நூல்களே ஒரு விதமான சேர்க்கையை அடையும் போது ’துணி’ என்ற வேறொரு பெயரையும் , உடுத்தப் படுதல் என்ற புதிதான பயன்பாட்டை யும் அடைகின்றனவோ , அதைப் போல் தான் ப்ரஹ்மமே இந்த உலகமாக மாறுகிறது.
6- யதா ₂ ச ப்ராணாதி₃: – “எப்படி ப்ராணன் முதலானவையோ ”
எப்படி உலகில் ஒரே ஒரு வாயுவானது சரீரத்துக்குள் நுழைந்து செயல்படும் போது, ப்ராண அபான வ்யான உதா₃ன ஸமான என்ற வெவ்வேறு பெயர்களையும், அதற்குரிய வெவ்வேறு செயல்பாடுகளையும் அடைகிறதோ , அதைப் போல் ப்ரஹ்மமும் இந்த உலகமாக மாறி வெவ்வேறு பெயர்கள் உருவங்களையும் செயல்பாடுகளையும் அடைகிறார்.
ஆகையால், ஸத் கார்ய வாதம் தான் வேதத்தில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று தான். அவற்றுக்குத் தன்மைகளில் தான் வேறுபாடுகள் இருக்க முடியும்.-அப்படித் தான் ப்ரஹ்மம் இந்த உலகுக்குக் காரணமாக இருக்கிறார்

—————

2.1.7 இதர வ்யபதேசாதி₄கரணம்-ப்ரஹ்மம் தனக்கே துக்கம் தேடிக்கொள்வாரா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-7-இதர வ்யபதே₃சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணங்களில் ஜகத்து ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல; அந்த ப்ரஹ்மமே தான் இந்த உலகமாக மாறி இருக்கிறது; அதனால் உலகத்துக்கு ப்ரஹ்மமே காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. உலகம் என்று சொன்னால், அதில் அசேதனப் பொருள்களும், சேதனர்களான ஜீவாத்மாக்களும் அடங்குவர்கள். அந்த இரண்டுக்குள், ஜீவாத்மாவை எடுத்துக் கொண்டு, ஜீவாத்மா என்பவர் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால், அந்த ப்ரஹ்மத்துக்கே பல தோஷங்கள் வந்து விடுகின்றன.அதனால், அந்த ப்ரஹ்மம் உலகத்தை படைத்த ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று ஆஷேபம் எழுகிறது. அதற்கான விடையை வேதவியாசர் இந்த அதிகரணத்தில் வழங்குகிறார்.

பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபக்ஷிகளின் வாதத்தைக் காட்டுகிறது.
1-இதர வ்யபதே₃சாத் ஹிதா கரணாதி₃ தோ₃ஷ ப்ரஸக்தி:
இதரன்
என்றால் மற்ற ஓருவன். அதாவது இந்த இடத்தில் ஜீவாத்மா.
வ்யபதேசம்-என்றால் சொல்லுவது-குறிப்பிடுவது.
“இதர வியபதேசாத்” என்றால் “ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிப்பிடப் படுகிற படியால்” என்று பொருள். “தத் த்வம் அஸி ”, “அயம் ஆத்மா ப்ரஹ்ம”, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான பல வாக்கியங்களில், உபநிஷத்துக்களில் ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிக்கப்படுகிறார்.
ஹிதம் என்றால் நன்மை , கரணம் என்றால் செய்வது, அகரணம் என்றால் செய்யாதது. ஹித அகரணம் என்றால் தனக்கான நன்மையைச் செய்யாமல் இருத்தல். இது ஒரு
தோஷம்.
அதே போல் தனக்குத்தானே தீமையைத் தேடிக் கொள்ளுதல் என்பது மற்ற ஓரு தோஷம்.-இவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கு ஏற்பட்டு விடும் என்கிறார் பூர்வபஷி

(ஹித கரணமும் செய்யாமல் அஹித கரணங்களையே செய்து கொண்டு -நன்மைகளைச் செய்யாமல் தீமைகளையே செய்து கொள்ளும் தோஷங்கள் வரும் என்றவாறு)

பூர்வ பக்ஷியின் கேள்வி
ஜீவனும் ப்ரஹ்மமும் வேறல்ல என்று கொண்டால், எப்போதும் பாபங்கள் அற்றவராய், துக்கமே இல்லாதவராய், முழுமையான ஜ்ஞானம் சக்தி முதலானவற்றை உடையவரான ப்ரஹ்மம் தானே உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது, பாபங்களை உடையவராய், குறைந்த ஜ்ஞானத்தையும் சக்தியையும் கொண்டவராய், பல துக்கங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாவாக ஆகிறார் என்று சொல்ல வேண்டும். ஆகையால் தனக்கு தீமையைக் கொடுக்கும் செயலைத் தானே செய்கிறார் என்று ஆகி விடும்.
தனக்கு எது நன்மையோ , அப்படிப்பட்ட உலகத்தைப் படைத்துக் கொள்ளாமல், தனக்கே தீமை கொடுக்கும்படிக்கு படைத்துக் கொள்ளுகிறார் என்பதாலே ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வரும்.
அந்த ப்ரஹ்மம் அறியாமல் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர் அனைத்தையும் அறியக்கூடிய ஸர்வஜ்ஞன் ஆனபடியால். அவருக்கு சக்தி இல்லாத படியால், இன்ப மயமான உலகத்தைப் படைக்க முடியாமல் இப்படி உலகத்தை படைத்து விட்டார் என்று சொல்ல முடியாது, தன்னுடைய சங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரான படியால்,
யாருடைய வற்புறுத்தலாலோ , இப்படிச் செய்து விட்டார் என்று சொல்ல முடியாது, யாருக்கும் அடி பணியத் தெவை யில்லாத ஸ்வதந்த்ரமானவர் ஆனபடியால்.
அதனால் ப்ரஹ்மம் தானாக ஆசைப்பட்டு, யோசித்து, தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, ஒரு உலகத்தைப் படைக்கும் போது, தனக்கே தீமையைக் கொடுக்கும்படி அந்த உலகத்தைப் படைப்பது என்பது பொருந்தாது. அதனால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்பது ஆஷேபம்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு தான்
ஸித்தாந்தம் – 2—₄அதிகம் து பே₄த₃நிர்தே₃சாத்
– “வேறு அன்றோ , வேறாகச் சொல்கிறபடியால்”-உலகத்தில் இன்ப துன்பங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறாகவே கூறப்படுகிறது –

யஸ்ய ஆத்மா சரீரம் ய: ஆத்மாநம் அந்தர: யமயதி – “இந்த ஜீவாத்மாவே
ப்ரஹ்மத்துக்கு உடல், இந்த ஜீவாத்மாவை ப்ரஹ்மம் தான் உள்ளிருந்து இயக்குகிறார்.
ப்ருத₂கா₃த்மாநம் ப்ரேரிதாரம் ச மத்த்வா ஜுஷ்ட: தத: தேந அம்ருதத்வம்
ஏதி –
ஆத்மாவையும் அவரை இயக்கும் பரமாத்மாவையும் வேறாகத் தெரிந்து கொள்பவன் அந்த பரமாத்மாவின் அருளுக்கு இலக்காகி முக்தியை அடைகிறான்
ஸ காரணம் கரணாதி₄பாதி₄ப: (கரண அதிபதிக்கு அதிபதி )- ப்ரஹ்மமே காரணம், புலன்களை இயக்கும் ஜீவாத்மாவை இயக்குபவர் அவரே
த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி ||

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இந்த உடல் என்னும் ஒரே மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகள். அதில் ஜீவாத்மா கர்மங்களின் பயனான இன்ப துன்பங்கள் என்னும் பழத்தை உண்டு, துவண்டு போகிறான், பரமாத்மா அப்பழத்தை உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறார்.
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீஸை – “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஜ்ஞாநமுடையவர்கள், நித்யமானவர்கள், அவர்களில் ஒருவர் இயக்குபவராக உள்ளார், மற்ற ஓருத்தர் இயக்கப்படுகிறார்”
ப்ரதா₄ந ஷேத்ரஜ்ஞபதி: கு₃ணேச: – ப்ரதாநம் என்ற அசேதனப் பொருளுக்கும், ஜ்ஷேத்ரஜ்ஞர்கள் எனப்படும் ஜீவாத்மாக்களுக்கும்
நித்யோ நித்யானாம் சேதந: சேதநாநாம் ஏகோ ப₃ஹூனாம் யோ வித₃தா₄தி காமாந் – நித்யமாய் ஜ்ஞாநமுடையவரான ஒரே பரமாத்மா நித்யர்களாய் ஜ்ஞாநமுடையவர்களான
கணக்கில்லாத ஜீவாத்மாக்களுக்கு அவர்கள் ஆசைப்படும் பயன்களை யெல்லாம் வழங்குகிறார்.

உலகம் என்றாலே ப்ரஹ்மம் தான்
அடுத்த ஸூத்ரத்தால் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு
3-அச்மாதி₃வச்ச தத₃நுபபத்தி: –
“கல் முதலானவற்றைப் போலவும் அது (ஐக்யம்) பொருந்தாது”
எப்படி ஜ்ஞாநமற்றதாய், எப்போ தும் உருவத்தால் மாறிக்கொண்டே இருக்கும் அசேதநப் பொருளுக்கு ஜ்ஞாநம் உடையவராய், என்றும் மாறாத பரமாத்மாவோடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) பொருந்தாதோ , அதே போல் கர்மத்துக்கு வசப்பட்டு, பல விதமான துக்கங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவுக்கும் கர்மத்துக்கு அப்பாற் பட்டவராய், துக்கமே இல்லாதவரான பரமாத்மாவவாடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) என்பது பொருந்தாது,
கேள்வி – பிறகு “தத் த்வம் அஸி” (அந்த பரமாத்மா தான் நீயாக இருக்கிறாய்), “அஹம் ப்₃ரஹ்மாஸ்மி” (நானே ப்ரஹ்மமாய் இருக்கிறேன்) என்று வேதாந்தம் எப்படிக் கூறுகிறது?
பதில் – அது அனைத்துமே சரீர-ஆத்ம-பா₄வத்தால் (உடல் ஆத்மா என்ற தொடர்பால்) பொருந்தும்.-உலகில் நாய், மனிதன் என்று உடலைக் குறிக்கும் சொற்கள் அதற்குள் இருக்கும் ஆத்மா வரை குறிப்பதைக் காண்கிறோம். அதே போல் ப்ரஹ்மத்துக்கு சேதனாசேதனங்கள் அனைத்துமே உடலாக இருக்கிற படியால் “தத் த்வம் அஸி” என்பதற்கு “ஜகத்தை ஸ்ருஷ்டித்த அந்த பரமாத்மா தான் உனக்குள் அந்தர்யாமியாக இருப்பவர்” என்று தான் பொருள், ஜீவனும் பரனும் ஒன்று என்றல்ல.
ஆக இவ்வாறு ஸூக்ஷ்மமான (பெயர் உருவ வேறுபாடுகள் அற்ற) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஸ்தூ₂லமான (பெயர் உருவ வேறுபாடுகளைக் கொண்ட) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தை (அதாவது ஜகத்தை ) படைக்கிறது.

——————-

2-1-8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம்–கருவிகளே இல்லாமல் ப்ரஹ்மம் படைக்க முடியுமா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-8-உபஸம்ஹாரத₃ர்சநாதி₄கரணம் –ஸங்கதி –
முன் அதிகரணங்களில், சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கு சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் இந்த உலகத்துக்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. என்று நிரூபிக்கப்பட்டது. அதற்கு மேல், சஹகாரி காரணம் என்று வேறு ஒன்றை எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் இந்த ஜகத்தைப் படைக்கிறது என்று இந்த அதிகரணத்தில் வேதவியாசர் நிரூபிக்கிறார்.

பூர்வ பக்ஷம் – உபநிஷத்துக்களில் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் வாக்கியங்களைப் பார்ப்போம்.
(ததை ₃க்ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம்
செய்தது, நான் பலவாக ஆகக் கடவேன் என்று”.
(ஸோ காமயத) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஆசைப்பட்டது”.
(ஸ தபோ தப்யத ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருஜத)-அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பித்துக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டித்தார்.
இப்படி ஸங்கல்பத்தின் மூலம் மட்டுமே ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறார் என்று
சொல்லப்பட்டுள்ளது. இது பொருந்தாது. ஏன் என்றால், உலகத்தில் எந்த ஒரு படைப்பாளியும் ஒரு பொருளை உண்டாக்குவதற்குச் சில கருவிகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்று காண்கிறோம். ஸங்கல்பத்தால் மட்டும் உலகத்தில் யாரும் எந்தக் கார்யத்தையும் ஏற்படுத்துவதில்லை -அதனால், ப்ரஹ்மத்துக்கும் இது பொருந்தாது என்கிறார் பூர்வ பக்ஷீ

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேகம்
– உலகத்தில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாம் அளவுபட்ட சக்தியை உடையவர்கள். அதனால், ஒரு குடத்தையோ , துணியையோ , ஆபரணத்தையோ உண்டாக்குவதற்கு சக்கரம், தரி, கருவிகள் முதலானவை தேவைப்படுகின்றன. ஆனால், ப்ரஹ்மமோ சர்வ சக்தி, அதாவது, எல்லை யில்லாத உயர்ந்த சக்தியை உடையது என்று
உபநிஷத்துக்கள் சொல்லுகிறபடியால், அவர் கருவிகளை எதிர்பார்க்காமலேயே படைக்கிறார் என்று ஒப்புக்கொண்டால் என்ன? சக்தி இல்லாதவர்கள் கருவிகளை எதிர்பார்க்கிறார்கள். சக்தி இருக்கும் ப்ரஹ்மம் கருவியை எதிர்பார்ப்பதில்லை
என்று கொள்வோமே ?
பூர்வ பக்ஷியின் பதில் – கருவிகளின் தேவை என்பதும், கருவிகள் தேவைப்படாமை என்பதும் சக்தி இல்லாததையும், சக்தி இருப்பதையும் பொறுத்து வருபவை அல்ல. யாருக்கு ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இல்லையோ , அவர்களிடத்தில் அதற்கான கருவிகளைக் கொடுத்தாலும், அவர்களால் அப் பொருளை உண்டாக்க இயலாது. யாருக்கு
ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி உள்ளதோ , அவரும் கருவிகள் இல்லாமல் அந்தப் பொருளை உண்டாக்க விட முடியாது. கருவிகளைக் கொடுத்தால், அவற்றைப் பயன்படுத்தித் தான் அப் பொருளை உண்டாக்க வேண்டும். அதனால், சக்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், உபகரணங்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல் என்பது இன்றியமையாதது.-சரி, ப்ரஹ்மத்துக்கு எந்தக் கருவிகளும் இல்லை என்று எப்படித் தெரிந்து கொள்ளுகிறோம் என்றால், அதையும் வேதாந்தமே சொல்லுகிறது
(्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ப்ரஹ்மமாகவே இருந்தது. அந்த ஒரே ஒரு
பொருள் தான் இருந்தது. வேறு எதுவும் இல்ணல.
(ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்₃ரம்ஹா ந ஈசான: நேமே த்₃யாவா ப்ரிதிவீ ந நக்ஷத்ராணி) அதாவது “ப்ரளய காலத்தில் நாராயணன் ஒருவர் தான் இருந்தார். மற்ற தெய்வங்களும் கிடையாது. உலகங்களும் கிடையாது. எந்தப் பொருள்களும் கிடையாது” என்றும் உபநிஷத் கூறுகிறது. அதனால், ஸ்ருஷ்டிக்கு முன்னால் கருவிகள் எதுவுமே உலகத்தில் இல்லாத படியால், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ப்ரஹ்மம் இந்த உலகத்தைப் படைத்திருக்க முடியாது. அதனால், ப்ரஹ்மம் கருவிகள் இல்லாதபடியால், ஜகத்காரணமாக ஆக முடியாது என்பது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.

கருவிகள் இல்லாமலேயே உண்டக்கலாம்
ஸித்தாந்தம் –
இதற்கு இரண்டு ஸூத்ரங்களால் வேதவியாசர் பதில் அளிக்கிறார்.
1-உப ஸம்ஹார த₃ர்சநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்ஹி
முதல் பகுதியாலே பூர்வ பக்ஷத்தைச் சொல்லி, மேல் பகுதியால் அதற்கு வேத வியாசர் விடை அளிக்கிறார்.
உப ஸம்ஹார த₃ர்சநாத் – இது பூர்வ பக்ஷியின் வாதம். உப ஸம்ஹாரம் என்றால் சேகரித்தல். தர்சனம் என்றால் காண்பது. உப ஸம்ஹார தர்சனம் என்றால் “உலகத்தில் ஒரு படைப்பாளி ஒரு பொருளை உண்டாக்குவதற்குக் கருவிகளைச் சேகரிப்பதை நாம் பார்க்கிற படியால்” என்று பொருள்.
ந – ஆகையால், நீங்கள் ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று சொன்னது பொருந்தாது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
இதி சேத் ந – இது வேத வியாசரின் பதிலின் துவக்கம். “இவ்வாறு நீங்கள் கூறினால், அது தவறு” என்கிறார்.
க்ஷீரவத் ஹி– “பாலைப் போல் அன்றோ ”. ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இருந்தாலும், வேறு சில கருவிகளைப் பயன் படுத்தினால் தான் ஒரு காரியத்தை ஒருவரால் உண்டாக்க முடியும் என்கிற நியமம் தவறானது என்கிறார் வ்யாஸர்.
பாலானது தானாகவே எந்த கருவியையும் பயன்படுத்தாமல் தயிரை உண்டாக்குகிறது. தண்ணீரானது எந்தக் கருவியையும் பயன்படுத்தாமல் கெட்டிப்பட்டு பனிக் கட்டியாக ஆகிறது. அதனால், பாலுக்கும் ஜலத்துக்கும் தயிரையோ , பனிக்கட்டியையோ உண்டாக்க எப்படி எந்தக் கருவிகளும் தேவையில்லையோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல் உலகத்தைப் படைப்பது பொருந்தும் என்கிறார் வேதவியாசர்.
“ஹி” என்கிற சொல் “இந்த அர்த்தம் மிகவும் ப்ரஸித்தமானது” என்று காட்டுகிறது. அதனால், பூர்வ பக்ஷியின் கேள்வி மிகவும் வலுவற்றது என்று வேத வியாசர் காட்டுகிறார்.
ஸந்தேகம் – பாலைத் தயிராக மாற்றுவதற்கு நாம் அதில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோமே ? பிறகு கருவிகள் தேவையில்லை என்று எப்படி கூற முடியும் என்று.
பதில் – தயிரைச் சேர்க்கா விட்டாலும், காலப் போக்கில் பால் திரிந்து போய் மாறத் தான் போகிறது. அந்த மாற்றத்தை வேகமாக்க மற்றும் ஒரு குறிப்பிட்ட சுவையை உண்டாக்குவதற்காகத் தான் பாலில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோம்.
தண்ணீரும் இயற்கையாகவே பனிக் கட்டியாக மாறிவிடும், சூரிய கிரணங்கள் அல்லது வெப்பம் இருந்தால், அது தடுக்கப்படுகிறது, அவ்வளவு தான்.

வேதத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு
ப்ரஹ்மம் என்ற பொருள் நாம் உலகத்தில் காணக்கூடியது அல்ல. வேதத்தைக் கொண்டு மட்டுமே அறியக் கூடியது. அதனால் அந்த ப்ரஹ்மத்தைப் புரிய வைக்க உலக எடுத்துக் காட்டை விட, வேதத்திலிருந்து எடுத்துக்காட்டு இருந்தால் மேலும் எளிமையாக இருக்கும் என்பதால் அடித்த ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் அதைக் காட்டுகிறார்.
2–தே₃வாதி₃வத₃பி லோகே – “(தங்கள்) உலகத்தில் தே₃வர்கள்
முதலானவர்களைப் போலவும்”
தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களில் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே ஸங்கல்பத்தால் படைத்துக் கொள்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அதை எப்படி ஏற்கிறோமோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளும் இல்லாமல், தன்னுடைய ஜ்ஞாநம் சக்தி முதலானவற்றை மட்டுமே கொண்டு உலகைப் படைக்கிறார் என்றும் வேதம் சொல்கிறபடியால், அதையும் அதே போல் ஏற்க வேண்டும்.
இவ்வாறு, ப்ரஹ்மம் எந்த ஸஹகாரி (உதவி) காரணத்தையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்று
நிரூபித்து, இந்த உலகத்துக்கு ப்ரஹ்மமே தான் உபாதாந காரணம் (மூலப் பொருள்), நிமித்த காரணம் (படைப்பாளி) மற்றும் ஸஹகாரி காரணம் (உதவிக் காரணம்) என்று வேதவ்யாஸர் நிரூபித்துள்ளார்.

எனவே , முதல் அத்யாயத்தில் அடையப்பட்ட “ப்ரஹ்மமே உலகமனைத்துக்கும் காரணம்” என்ற முடிவு சரியானதே , அதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று காட்டப்பட்டுள்ளது-

————

(ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்-நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.-உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லைஎன்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.)

2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம்-வேதத்தால் மட்டுமே அறியப் படும் பொருளுக்கு யுக்திகள் பொருந்தாது

அதிகரணத்தின் பின்புலம-2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், கருவிகளை எதிர்பார்க்காமல் உலகத்தை ப்ரஹ்மம் படைக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக பால் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ரஹ்மம் பாலைப் போன்றவர் என்றால்,பாலுக்கு அவயவங்கள் (பகுதிகள்) இருப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் பகுதிகள் உண்டா என்று. அதற்கு இவ்வதிகரணத்தில் பதில் கூறப்படுகிறது.
பூர்வ பக்ஷம்
– முதல் ஸூத்திரத்தாலே பூர்வ பக்ஷிகளின் வாதம் காட்டப்படுகிறது.
1-க்ருத்ஸ்ந ப்ரஸக்தி: நிரவயவத்வ சப்த₃கோபோ வோ
வேதத்தில் “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரஹ்மம் என்ற ஒரே ஒரு பொருள் தான் இருந்தது; அதுதான் உலகத்துக்கு காரணம். -அப்போது எந்த பாகுபாடுகளும் பகுதிகளும் இருக்கவில்லை என்று சொல்கிறது.
பிறகு அந்த ப்ரஹ்மமே “நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு உலகமாக மாறுகிறது, அதாவது சேதனர்கள், அசேதனங்கள் என்கிற அனைத்தையும் படைக்கிறது என்றும் கூறுகிறது.
ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் இல்லை , அந்த ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் முழுவதுமாகவே உலகமாக மாறி விட்டது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி என்றால், -இப்போது உலகம் இருக்கும் போது ப்ரஹ்மமே இல்லை என்று ஆகி விடும்.
க்ருத்ஸ்ந -முழுவதுமாக
ப்ரஸக்தி: மாறிவிடும் நிலை ஏற்படும்
அப்படி அல்ல; ஸ்ருஷ்டிக்கு முன்னாலும் காரணப் பொருளில் பகுதிகள் இருந்தன என்று சொன்னோம் என்றால், அப்போது வேதத்தில் எந்தெந்த வாக்கியங்கள் எல்லாம் “காரணப் பொருளான ப்ரஹ்மம் அவயவங்கள் அற்றது” என்று சொல்லுகின்றனவோ , அந்த வாக்கியங்கள் எல்லாம் கோபித்துக் கொள்ளும். -அதாவது அவை யெல்லாம் தவறாக ஆகி விடும்.-நிரவயவத்வ ப்ரஹ்மத்துக்குப் பகுதிகள் இல்லை என்று சொல்லும்
சப்த₃ வேதத்துக்கு
கோப: கோபமேற்படும்

பூர்வ பக்ஷியின் வாதங்கள்
அதனால் ப்ரஹ்மத்துக்கு அவயவங்கள் உண்டு என்றும் சொல்ல முடியாது; அவயவங்கள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்கிறது என்றால், முழுவதுமாக உலகமாக மாறி விட்டது என்று ஆகி விடும். அதனால் இப்படி இரண்டு வழிகளிலும் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் உலகத்துக்கு காரணமாகவே இருக்க முடியாது என்பது பூர்வ பஷம்.
இங்கு நாம் சொல்லலாம் – ப்ரஹ்மம் என்கிற பால் தனியான பரமாத்மாவை மட்டும் குறிக்க வில்லை ;-ஸூக்ஷ்மமாக, அதாவது, பெயர் வேறுபாடுகள் உருவ வேறுபாடுகள் இல்லாத, சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் இந்த இடத்தில் காரணப் பொருளாக சொல்லப்படுகிறது. அதனால் அந்தர் யாமியான பரமாத்மாவுக்கு அவயவங்கள் கிடையாது; ஆனால் உடலாக இருக்கும் சேதனாசேதனங்களுக்கு அவயவங்கள் உண்டு. அவை தான் உலகமாக மாறுகின்றன; பிறகு இந்தக் கேள்வி எப்படி பொருந்தும்? என்று
அதற்கும் பூர்வ பக்ஷி பதில் கூறுகிறார் –
அப்படிச் சொன்னாலும், இந்த தோஷம் வரும். ஒரு உடலுக்குள் இருக்கும் ஆத்மா, அந்த உடல் வேறு ஒரு நிலையை அடையும் போது, அந்த ஆத்மாவும் ஒரு நிலையை அடைகிறார். ஒரு குழந்தை இளைஞனாக மாறுகிறார் என்றால், அந்த ஆத்மா முழுவதுமாகவுமே இளைஞன் என்று தான் சொல்லப்பட வேண்டும். அதே போல், ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் கிடையாது; அவருடைய உடலான சேதனாசேதனங்கள் தான் உலகமாக மாறுகின்றன, அதனால் ப்ரஹ்மமே உலகமாக ஆகிறார் என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் ஒன்று மாடாக மாறி இருக்க வேண்டும். அல்லது சிங்கமாக மாறி இருக்க வேண்டும். அல்லது மனிதனாக மாறி இருக்க வேண்டும். இவை அனைத்துமாகவும் ஒரே காலத்தில் ப்ரஹ்மம் மாற முடியாது. ஒரு சரீரத்தை உடையவராக ப்ரஹ்மம் கொள்ளப்பட்டால், மற்ற சரீரங்களுக்குள் ப்ரஹ்மம் இல்லை என்று ஆகி விடும். அதனால் எப்படிப் பார்த்தாலும், ப்ரஹ்மம் உலகத்தை படைத்திருக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம்.

வேதத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்
ஸித்தாந்தம் – (2) ச்ருதே : து சப்த₃ மூலத்வாத்
து
– அப்படியல்ல, அவயவங்கள் அற்ற ப்ரஹ்மம் உலகைப் படைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை
ச்ருதே : – அவயவங்கள் இல்லை , உலகத்துக்குக் காரணம் என்று இரண்டையும் வேதம் சொல்கிற படியால்
கேள்வி – உலகத்தில் நாம் பார்க்கும் நியதிகளை மீறி, வேதம் ஒரு விஷயத்தை உபதேசிக்க முடியுமா?-உலகத்தில் ஒருவர் “நெருப்பால் துணியை நனைக்க வேண்டும்” என்று சொன்னால், உடனடியாக “இது தவறான வாக்கியம்” என்று கூறி விடுகிறோம். ஏனென்றால், நெருப்பைக் கொண்டு எதையும் நனைக்க முடியாது-கொளுத்தத்தான் முடியும் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல், அவயவங்கள் இல்லாத பொருள், பலவாக மாற முடியாது என்று உலகத்தில் நாம் காண்கிற படியால், அதற்கு முரண்பட்டு, அவயவங்கள் இல்லாமலேயே ப்ரஹ்மம் பலவாக மாறுகிறார் என்று வேதம் எப்படி உபதேசிக்க முடியும்?
அதற்கான பதில் – சப்த₃ மூலத்வாத் – இந்த ப்ரஹ்மம் என்கிற ஜகத் காரணப் பொருள், வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருளாகும். உலகத்தில் நாம் பார்த்த பொருளைப் பற்றி ஒருவர் சொல்லும் போது, உலக நியதிகளுக்கு முரண்பட்டு கூற முடியாது. ஆனால், ப்ரஹ்மம் என்பவரோ , உலகத்தில் எந்த ப்ரமாணத்தாலும் அறியப் படாதவர். வேதத்தால் மட்டுமே அறியப் படுபவர்.-அதனால், உலகத்தின் நியதிகளை அவரிடம் பொருத்திப் பார்க்க முடியாது. வேதம் எப்படி எல்லாம் அவருடைய தன்மை களை கூறுகிறதோ , அப்படி எல்லாம் ஏற்கத் தான் வேண்டும் என்பது வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்.
3-ஆத்மநி ச ஏவம் விசித்ரா : ச ஹி– “ஆத்மாவிலும் இப்படி; பல விதம் அன்றோ ”
ஒரு பொருளில் காணப்படும் தன்மை தான் மற்றவற்றிலும் இருக்க வேண்டும் என்று கூறினால், உலகத்தில் அசேதனப் பொருட்கள் அறிவற்றதாகவும், அழியக் கூடியதாகவும் இருக்கிறபடியால், ஜீவாத்மாவும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆகி விடும். அதனால், உலகத்தில் அந்தந்தப் பொருள் ப்ரமாணங்களால் எப்படி அறியப் படுகிறதோ , அந்தந்த தனித் தன்மைகளோடு உள்ளது என்று ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

(சாங்க்யர்களும் ஆத்மாவுக்கு ஞானம் உண்டு என்கிறார்கள் அன்றோ -காண்கிற அசேதனப் பொருள்களின் தன்மையைப் பார்த்து காணமுடியாத சேதனத்துக்குக் கொள்ள முடியாது அன்றோ -மேலும் விசித்திரமான அசேதனப் பொருள்களையும் காண்கிறோம் –பாவ ஸ்வபாவ வைஷம்யம் காண்கிறோம் அன்றோ -அதே போல் ப்ரஹ்மத்துக்கும் கொள்ள வேண்டும் -வேதம் சொல்லுமடியே ஏற்றுக் கொள்ள வேண்டும் -)

பூர்வ பஷத்தில் உள்ள குறைபாடுகள்
4–ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“தன் பக்ஷத்தில் இருக்கும் தோ₃ஷத்தாலும்”
இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று சொல்லும் நம்முடைய பஷத்தில் எந்த தோஷமும் இல்லை என்று காட்டினார் வியாஸர். இப்போது ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் பூர்வ பக்ஷிகளின் மதத்தில் தான் தோஷம் உள்ளது என்று காட்டுகிறார்.
பூர்வ பக்ஷி சொல்வது – ப்ரதானமே ஜகத் காரணம் என்று. ப்ரதானம் என்பது வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருள் அல்ல. அனுமானத்தால் அறியப்படும் பொருள். அதனால், உலகத்தில் நாம் காணும் நியதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்ல முடியாது. அந்த நியதிகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும்.
ஜகத்தை உண்டாக்கக் கூடிய மூல ப்ரகிருதிக்கு அவயவங்கள் உண்டா கிடையாதா ? என்று கேள்வி.
அவயவங்கள் கிடையாது என்று சொன்னால், அந்த மூல ப்ரகிருதி யிலிருந்து எப்படி பலவிதமான பொருட்கள் உண்டாக முடியும்? என்கிற கேள்வி வந்து விடும்.
பகுதிகள் உண்டு, ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று பொருட்களும் சேர்ந்து தான் மூல ப்ரகிருதியை உண்டாக்குகின்றன என்று சொன்னால், பல தோஷங்கள் வரும்-
(1) ப்ரதானம் ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வதே தவறு. அந்த ப்ரதானமே மூன்று பொருட்களில் இருந்து உண்டானதான படியால்.
(2) மொத்தம் 24 அசேதனப் பொருட்கள் உலகத்தில் உள்ளன என்று நீங்கள் சொல்லுவது தவறு; ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று அதிகமான பொருட்கணை ஏற்க வேண்டிய படியால்,
(3) அந்த ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றுக்கும் அவயவங்கள் உண்டா கிடையாதா என்று இதே போல் கேள்வி எழுந்து விடும். ஸத்த்வம், ரஜஸ், தமஸ் சேர்ந்து ப்ரகிருதியை உண்டாக்க வில்லை .—அவற்றின் சேர்க்கையே ப்ரகிருதி என்றால் -அவயவங்கள் இல்லாத பொருட்கள் எப்படி சேர முடியும்? இரண்டு பொருட்கள் சேரும் போது, சேர்ந்த பகுதி சேராத பகுதி என்று இருக்கும். பகுதிகளே இல்லாத இம் மூன்றும் சேர்ந்து ப்ரகிருதியாக ஆக முடியாது.
அதனால், எந்த விதத்திலும் ப்ரதானம் ஜகத் காரணம் என்று சொல்லுவது பொருந்தாது.

(நம் சித்தாந்தத்தில் ஸத்வம் ரஜஸ் தமஸ் இவை பண்புகள் குணங்கள் -சாங்க்யரில் ஒருவர் இவற்றை த்ரவ்யம் என்பர் -)

கற்பனை செய்யமுடியாத சக்தி உடையவர்
மூன்றாவது ஸூத்ரத்தில், வேதம் சொல்கிறபடியால் அவயவங்கள் அற்றவராக இருந்தாலும் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறது என்று ஏற்க வேண்டும் என்று கூறினார் வ்யாஸர். இப்போது அதற்கான பொருத்தத்தைக் காட்டுகிறார் –
5– ஸர்வோபேதா ச தத்₃த₃ர்சநாத் – “எல்லா சக்திகளோடும் கூடியவர்; அவ்வாறு காணப்படுவதால்”
பரமாத்மாவைப் பற்றிச் சொல்லும் வேதங்கள் (பரா அஸ்ய சக்தி: விவிதை ₄வ ச்ரூயதே -ஸ்வ பாவிக ஞான பல க்ரியதா ச )-அதாவது -“இந்த பரம் பொருளான பரமாத்மாவின் சக்தி மிக வுயர்ந்தது, பலவிதமானது” என்று கூறுகிறது.
“ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப:” அதாவது தன் எண்ணத்தால் மட்டுமே அனைத்துக் காரியங்களையும் நடத்தும் வல்லமை படைத்தவர் பரமாத்மா என்றும் வேதம் கூறுகிறது.-அதனால், அவயவங்கள் அற்றவராய் இருந்தாலும் பலவிதமான பொருள்களை அவரால் உண்டாக்க முடியும்.
(சேராச் சேர்க்கை -அகடிகடநா ஸாமர்த்யம் -நரஸிம்ஹ மூர்த்தி ) 6-விகரணத்வாத் ् ந இதி சேத் தது₃க்தம்
ந – ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்வது தவறு, பொருந்தாது
விகரணத்வாத் – உடல், கை கால் முதலான கருவிகள் ப்ரஹ்மத்துக்கு இல்லாதபடியால்
இதி சேத் – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
தது₃க்தம் – அதற்கு பதில் முன்னமே சொல்லப்பட்டது (வேதத்தில் சொல்வதால் ஏற்க வேண்டும் என்று)
உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் சக்கரம், தரி முதலான கருவிகளைக் கொண்டே குயவன் நெசவாளி முதலானவர்கள் பொருள்களை உண்டாக்குகிற படியால், ப்ரஹ்மத்துக்கும் அதைப்போல் வெளிக் கருவிகள் வேண்டுமே என்ற கேள்விக்கு பதிலளித்தார்- இப்போது, உடல் கை கால்கள் முதலான கருவிகளாவது வேண்டாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார்.
வேதத்தில் (அபாணி பாத₃: ஜவந: க்₃ரஹீதா| பச்யதி அசஷுஸ் : ஸ ச்ர்ணோதி அகர்ண–ஸ்வேதாஸ்வர 🙂 அதாவது
“பரமாத்மாவுக்குக் கால் இல்லா விட்டாலும் வேகமாகச் செல்வார், கை இல்லாமலும்
எடுப்பார், கண் இல்லாமலும் பார்ப்பார், காது இல்லாமலும் கேட்பார்” என்று சொல்கிறபடியால், பரமாத்மா உடல் கை கால் முதலான கருவிகள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்க இயலும் என்று தெரிகிறது.
அதனால், ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொன்னதில் எந்த முரண்பாடும் இல்லை —

————

2-1-10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம்-ஸ்ருஷ்டியின் குறிக்கோள்

பயனில்லாத செயலைச் செய்யலாமா?
2-1-10-ப்ரயோஜநவத்த்வோதி₄கரணம் – ஸங்கதி –
இந்த பாதத்தில் இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது -என்று பலவிதமான ஆஷேபங்களுக்கு ஸமாதானத்தை வேத வியாஸர் அளித்தார். தற்போது மற்றும் ஒரு முனையில் பூர்வ பக்ஷி ஆஷேபிக்கிறார் – ப்ரஹ்மம் ஜகத்காரணம் அல்ல, ஏனென்றால் இப்படிப்பட்ட உலகத்தை படைப்பதால் ப்ரஹ்மத்துக்கு எந்த பிரயோஜனமும் அதாவது பயனும் கிடையாது என்று.
பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபஷத்தை காட்டுகிறது.
1- ந ப்ர யோஜநவத்த்வாத்
– “கிடையாது, ப்ரயோஜனமுடையதானபடியால்”
– கிடையாது. அதாவது ப்ரஹ்மம் ஜகத்துக்கு காரணம் என்று சொன்னது தவறு – பொருந்தாது
ப்ரயோஜனவத்த்வாத் – இப்படி விசித்திரமான பல வகைப் பட்ட பொருள்களை உடைய ஜகத்தைப் படைக்கும் செயல் கண்டிப்பாக பயனுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஈஸ்வரனுக்கு இப்படிப்பட்ட ஸ்ருஷ்டியால் எந்த ப்ரயோஜனமும் இல்லை . அதனால் அந்த பரமாத்மா ஜகத் காரணமாக இருக்க முடியாது. -சிந்தித்து செயல்படக் கூடிய ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுகிறார் என்றால் அதற்கு இரண்டு விதமான பயன்கள் தான் இருக்க முடியும் – (1) தன்னலம் (ஸ்வார்த்த₂தை ) அல்லது (2) பிறர் நலம் ( பரார்த்த₂தை ).
1-(ஜகத்தைப் படைத்தல் தன்னலத்துக்காக என்று சொல்ல முடியாது, ஏனென்றால் ப்ரஹ்மம் உபநிஷத்துக்களில் “அவாப்த ஸமஸ்த காமன்” அதாவது “எல்லா ஆசைகளும் நிரம்பியவர், எல்லாப் பொருள்களையுமே உடையவர், அவர் இனி அடைய வேண்டிய ஒரு பயனே கிடையாது” என்று சொல்லுகின்றன.
2-ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் உடல் இல்லாமல் செயல்பாடு இல்லாமல் கிடக்கிறார்களோ என்று பார்த்து அவர்களிடத்தில் கருணையால் பிறர் நலத்துக்காக ப்ரஹ்மம் உலகத்தை படைக்கிறது என்றும் சொல்ல முடியாது. இந்த உலகில் கர்ப்பவாஸம் பிறப்பு மூப்பு மரணம் நரகம் முதலான பல நிலைகளில் பலவிதமான முடிவில்லாத துன்பங்களை ஒவ்வொரு ஜீவாத்மாவும் அனுபவிக்கிறார். கருணையால் படைக்கும் ப்ரஹ்மம், இப்படிப்பட்ட ஜகத்தைப் படைத்திருக்கக் கூடாது. -्கருணையால் படைக்கும் கடவுள் இன்பத்தை மட்டுமே கொடுக்கும் வகையில் தான் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும். ஆகையால் தன் நலனோ பிறர் நலனோ இல்லாதபடியால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க இயலாது.

பகவானின் ஒப்பற்ற லீலை
ஸித்தோந்தம் – 2-(லோகவத் ्து லீலா கைவல்யம்
– “உலகில் போல்; விளையாட்டு மட்டுமே
பரமாத்மா அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும், அவர் செய்யும் ஸ்ருஷ்டி யானது லீலையான படியால், பிரயோஜனம் உடையது தான் என்று கூறுகிறார் வேதவியாஸர்.
லீலா என்றால் விளையாட்டு. அதாவது, ஒரு செயலைச் செய்யும் போது, அந்த க்ஷணத்தில் உண்டாகும் ஒரு அனுபவம்-ஆனந்தம் எதுவோ , அதற்காக மட்டும் செய்யப்படும் செயல் விளையாட்டு – லீலா ஆகும்.
லீலா கைவல்யம் என்றால் லீலை மட்டுமே என்று பொருள். மட்டுமே என்று சொல்வதற்கு ஒரு கருத்து உள்ளது – உலகத்தில் வேட்டை யாடுதல், பணம் வைத்து சூதாடுதல், பந்து முதலான பொருள்களை வைத்து விளையாடுதல்,-இவை அனைத்துமே விளையாட்டுகள். ஆனால், வேட்டையிலோ , சூதாட்டத்திலோ , அந்தக் காலத்திலும் ஒரு இன்பம்
ஏற்படுகிறது, பிற்காலத்திலும் சில பயன்கள் கிடைக்கின்றன- பந்துகளை வைத்து விளையாடுவது என்பது அக் காலத்தில் ஏற்படும் இன்பத்துக்காக மட்டுமே செய்யப்படும் விளையாட்டு. பகவான் செய்யும் ஸ்ருஷ்டியானது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இதைக் குறிப்பிடத் தான் கைவல்யம் என்கிற சொல்லை வேத வியாஸர் இடுகிறார்.
லோகவத் – உலகத்தில் அனைத்தும் பெற்ற ஒரு பேரரசரும் கூட பந்து முதலானவற்றை வைத்து விளையாடுவது போல்.
பராசர மஹரிஷி – “கிரீட₃தோ பா₃லகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய” – விளையாடும் குழந்தையில் செயல் போன்ற பகவானின் பணடப்புச் செயலைப் பார்” என்று பராசரர் கூறுகிறார்.
வ்யாஸர் – “மோத₃தே ப₄க₃வான் பூ₄தை : பா₃ல: கிரீட₃னகைரிவ” – ஒரு குழந்தை விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு இன்பம் அடைவது போல், பிரஹ்மம் இந்த உலகப் பொருள்களைக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்
ஆண்டாள் – “வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்”.
நம்மாழ்வார் – “மன்பல் உயிர்களும் ஆகும் பல மாய மயக்குக்களால் இன்புறும் இவ் விளையாட் டுடையான்”
கம்பர் – “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்… அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர்”
கேள்வி 1-
எளிமையாகச் செய்யப்படும் செயல் தானே விளையாட்டாக ஆகும்? மிகவும் கஷ்டப்பட்டு இப்பேர்ப்பட்ட உலகத்தை பகவான் படைக்கிறார் என்றால், அது எப்படி லீலை யாகும் என்று?
பதில் 1: பகவான் ஸங்கல்பத்தால் மட்டுமே படைக்கிறார், ஸ்ரமப்பட்டு அல்ல. அதனால் இது லீலையாக ஆகலாம்

ஸ்ருஷ்டியின் உண்மை யான ப்ரயோஜனம்
கேள்வி 2 –
அவருடைய விளையாட்டு இன்பத்துக்காக நம்மைப் போன்ற கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் பல விதமான துன்பங்களை அனுபவிப்பது சரியா?
பதில் 2: பகவான் செய்யும் ஸ்ருஷ்டியின் உண்மையான பயனை வேதங்களும் ஆழ்வார்களும் வெளியிட்டுள்ளார்கள்.
நம்மாழ்வார் பாடுகிறார் – “சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்”, அதாவது, “இப்போது இல்லா விட்டாலும், பிற்காலத்தில் ஏதோ ஒரு சமயத்திலாவது இந்த ஸம்ஸாரத்தின் கொடிய தன்மையைப் புரிந்து கொண்டு ஜன்ம-மரணச் சுழலில் இருந்து விடுபட்டு ஒரு ஜீவாத்மா தன்னை வந்து வைகுந்தத்தில் அடைவான் என்கிற ஆசையால் தான் பகவான் இவ் வுலகத்தை மறுபடியும் மறுபடியும் உற்சாகம் குறையாமல் படைக்கிறார்” என்று. அதனால் பகவான் படைப்பதன் பிரயோஜனம் ஜீவாத்மாக்கள் முக்தி அடைவது தான்.
கேள்வி 3 – பிறகு இவ் விடத்தில் லீலா கைவல்யம் லீலை மட்டுமே பிரயோஜனம் என்று வேதவியாஸர் ஏன் கூறினார்?
பதில் 3 – உலகத்தில் வாழும் ஜீவாத்மாக்களால் பகவானுக்கு இரண்டு விதமான இன்பங்கள் (ரஸங்கள்) ஏற்படுகின்றன. -ஒரு பொருள் எப்படி பயன்பட வேண்டுமோ , அப்படி பயன்பட்டு நமக்கு இன்பத்தை அளித்தால், அதற்கு போக ரஸம் என்று பெயர். ஒரு பொருள், அதன் உண்மைத் தன்மை புரிந்து கொள்ளப் படாமல், தவறாக பயன்படுத்தப் பட்டு, அப்போதும் நமக்கு ஒரு இன்பத்தை அளித்தால், அதற்கு லீலா ரஸம் என்று பெயர்.
ஒரு குழந்தை ஒரு கைபேசியை எடுத்து, சரியாக ஒருவரை அழைத்துப் பேசினால், வியந்து போகிறோம்- போக ரஸத்தை அனுபவிக்கிறோம். அதே குழந்தை கைபேசியை என்னதென்று புரிந்து கொள்ளாமல், வாயில் வைத்து கடித்ததென்றால், அப்போதும் லீலா ரஸத்தைப் பெற்று இன்பப்படுகிறோம். இதே போல் தான் பகவானுக்கும்.
ப்ரஹ்லாதன், த்ருவன், ஆழ்வார்கள் முதலான உயர்ந்த ஜீவாத்மாக்கள், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை சரியாக புரிந்து கொண்டு, பகவானுக்குத் தொண்டு செய்கிறார்கள். அதனால் பகவான் போக ரஸத்தை அனுபவிக்கிறார். -நம்மைப் போன்ற அறிவிலிகளான பலரும் ஆத்மாவின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், உலக இன்பங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதைப் பார்த்தும் பகவான் லீலா ரஸத்தை அடைந்து, மகிழ்கிறார்.-இப்படி இரண்டு ரஸங்களும் அவருக்கு கிடைத்தாலும், அநேகமாக 99% அவருக்கு கிடைப்பது லீலா ரஸம் தானே . -அதனால் தான் ’பிராசுர்யம்’ அதாவது ’மிகுதியைக் ’ கருதி, வியாஸர் “ஸ்ருஷ்டி லீலா ரஸத்துக்காகவே ” என்று கூறுகிறார்.

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை -தத்வ த்ரயம்–ஸூர்ணிகை -162-

சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும் உய்ய வுலகு படைத்து -என்றும் விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும் சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –-உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய் இருக்கச் செய்தேயும் ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே
இறே-லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்-ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
ஸூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று
––ஸூர்ணிகை -162)-

குற்றமற்ற படைப்பாளி பகவான்
3- வைஷம்ய -நைர்க்₄ருண்யே ந ஸா பேக்ஷத்வாத் ததா ₂ஹி த₃ர்சயதி
வைஷம்ய நைர்க்₄ருண்ய ந –
பகவானுக்கு வைஷம்யம் நைர்க்₄ருண்யம் என்ற தோஷங்கள் கிடையாது
வைஷம்யம் – பஷ பாதம் – ஒரு தலைப் பஷமாக இருத்தல். பகவான் உலகத்தில் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் என்று பல விதமான பொருள்களை ஏற்றத் தாழ்வுகளோடு படைப்பதால் அவர் தன்னிச்சையாக சிலரை உயர்ந்தவராகவும் சிலரைத் தாழ்ந்தவராகவும் படாய்க்கிறார் என்கிற தோஷம்.
நைர்க்₄ருண்யம் – பல விதமான துக்கங்களை இவ் வுலகத்தில் படைப்பதால் கருணை யற்றவர் என்ற தோஷம்.-இவை இரண்டும் பரமாத்மாவுக்குக் கிடையாது என்கிரார் வ்யாஸர்.
ஸா பேக்ஷத்வாத் – படைக்கப்படும் ஜீவாத்மாக்களின் பாப-புண்யங்களை எதிர்பார்த்தே படைக்கிற படியால். படைப்புக்குப் பொதுவாக பகவான் காரணமாக இருந்தாலும், அந்தந்த ஜீவாத்மாவின் முன் வினைகளுக்கு ஏற்பத்தான் அந்தந்த ஜீவாத்மாவுக்குப் பிறவிகளைக் கொடுக்கிற படியால் அவருக்கு எந்த தோஷமும் வராது.
ததா ₂ஹி த₃ர்சயதி – அவ்வாறன்றோ வேதம் காட்டுகிறது
வேதம் – “ (ஸாது₄காரீ ஸாது₄: ப₄வதி, பாபகாரீ பாப: ப₄வதி) அதாவது’நல்லது செய்தவன் நல்ல பிறவியைப் பெறுகிறான், பாபம் செய்தவன் தீய பிறவியைப் பெறுகிறான்’.
பராசர மஹரிஷி – (நிமித்த மாத்ரம் ஏவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க₃கர்மணி | ப்ரதா₄ந காரணீ பூ₄தா: யதோ வை ஸ்ருஜ்ய சக்தய: ||) அதாவது-“உலகத்தில் ஜீவராசிகளைப் படைப்பதில் பகவான் இரண்டாம் பஷக் காரணமாக (பொதுக் காரணமாக) இருக்கிறார்; ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் கர்மங்கள் (பாப புண்யங்கள்) தன் முதன்மையாக காரணமாக (சிறப்புக் காரணமாக) உள்ளன.”
ஒரு நிலத்தில் பல விதமான பயிர்களையோ மரங்களையோ வளர்க்கும் போது, பூமி நீர் முதலானவை பொதுக் காரணங்கள். அந்தந்த விதை தான் அந்தந்த மரத்திற்குச் சிறப்புக் காரணம் ஆகும். ஏன் மாமரம் வந்தது, பனை மரம் வரவில்லை என்று பூமியையோ நீரையோ கேட்டுப் ப்ரயோஜனமில்லை , விதை தான் அதற்குக் காரணம். -அது போல் ஸ்ரிஷ்டிக்குப் பொதுவாக பகவான் காரணமானாலும், ஏற்றத் தாழ்வுகளுக்கு அவர் காரணமல்ல, நம் கர்மங்களே காரணம். அதனால் அவருக்கு வைஷம்யமோ நைர்க்₄ருண்யமோ கிடையாது.

கர்மங்கள் எப்போதுமே இருக்கின்றனவா?
கீழ்ச் சொன்ன அர்த்தத்தில் பூர்வ பஷி ஓர் ஆஷேபத்தை எழுப்புகிறார். அதற்கான பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
4-ந கர்ம அவி பா₄கா₃த் இதி சேத் ந அநாதி₃த்வாத் உபபத்₃ யதே ச அபி உபலப்₄ யதே ச
ந கர்ம
– “கர்மம் அல்ல”அதாவது ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஜீவாத்மாக்களின் கர்மங்கள் காரணமல்ல
அவி பா₄கா₃த் – “தனித்து இல்லாத படியால்”, அதாவது ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளயத்தின் போது “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத்” அதாவது“ப்ரஹ்மம் மட்டுமே அப்போது இருந்தது, வேறெதுவும் இல்லை ” என்று வேதம் சொல்வதால் ஜீவாத்மாக்களே இருக்க வில்லை . அப்படி யென்றால், அவர்களின் கர்மங்கள் மட்டும் எப்படி இருக்கும்?
இதி சேத் ந – “இவ்வாறு கூறினால் அது தவறு” என்று வ்யாஸர் மறுக்கிறார்.
அநாதி₃த்வாத் – “ஜீவாத்மாக்கள் அநாதியான படியால்” – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருக்கிற படியால்
அபி ச உபபத்₃ தே – “அநாதியான போதும் தனித்து இல்லாமை பொருந்துகிறது” – ஜீவாத்மாக்கள் அநாதி யானவர்கள் என்று கொண்டாலும் “ப்ரஹ்மம் மட்டுமே ப்ரளய காலத்தில் இருந்தது” என்று வேதம் சொல்வது பொருந்தும், -ஏனெனில் ப்ரலயத்தின் போது ஜீவாத்மாக்கள் அனைவருமே ப்ரஹ்மத்திடமிருந்து பிரித்து அறிய முடியாதபடி ஒன்றாக
ஒட்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்ருஷ்டியின் போது தான் தனித் தனி உடல்களாய்ப் பெற்று தனித்து அறியப் படுகிறார்கள்.
உபலப்₄ யதே ச – “காணப்படுகிறதும் கூட” – வேதமே ஜீவாத்மாக்கள் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.
“ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்”– “ஜ்ஞாந முடையவரான ஆத்மா உண்டாவதும் கிடையாது, அழிவதும் கிடையாது”
கேள்வி – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருந்திருந்தாலும், அவர்களுக்கு எப்போதுமே கர்மங்கள் இருந்தனவா?
பதில் – “ஸூர்ய சந்த்₃ர மஸௌ தா₄தா யதா₂பூர்வம் அகல்பயத்” அதாவது “ஒவ்வொரு முறையும் முன்னிருந்தது போலவே உலகத்தை பகவான் படைக்கிைறார்” என்று வேதம் சொல்வதால், ஸ்ருஷ்டி என்பது எப்போதுமே நடந்து கொண்டே இருக்கிறது என்று தெரிகிறது. அப்படி யென்றால், ஜீவாத்மாக்கள் எப்போதுமே பிறந்து கொண்டு தான் இருக்க வேண்டும், அப்படி யென்றால் அவர்களுக்குக் கண்டிப்பாகக் கர்மங்களும் எப்போதுமே இருக்கத் தான் வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவுக்கோ அவரது கர்மங்களுக்கோ தொடக்கம் என்பதே கிடையாது. நாம் மோக்ஷம் அடையும் போது கர்மங்களுக்கு முடிவு மட்டும் உண்டு . கர்மங்களை அடி யொற்றியே பகவான் ஏற்றத் தாழ்வுகளை உலகில் படைக்கிறார்.

பாதத்தின் சுருக்கம்
5-ஸர்வத₄ர்மோப்பத்தே : ச
– “எல்லா பண்புகளும் பொருந்துகிறபடி யாலும்”
உபநிஷத்துக்களில் ஜகத் காரணப் பொருளுக்குச் சில பண்புகள் சொல்லப் பட்டுள்ளன. ப்ரதானம் அல்லது பரமாணு தான் ஜகத்காரணம் என்று கொண்டால், அந்தப் பண்புகள் எதுவுமே அவற்றுக்கு போருந்துவதில்லை . ஆனால் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று கொண்டால், அப் பண்புகள் அனைத்துமே அவரிடம் பொருந்துகின்றன.
எனவே , சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்தப் பாதத்தைச் சுருக்கமாகக் காட்டுகிறார் –
(1) ஸாங்க்₂ய ஸ்ம்ருத்யா விரோதா₄த்
(2) விதி₄மதவிஹதே :
(3) கார்ய வைரூப்யத: அஸ்மிந்
(4) ஏகார்த₂ அநேக தந்த்ரோதி₃த விஹததயா
(5) தே₃ஹபோ₄க₃ வியுக்த்யா |
(6) கார்யோ பாதா₃ந பே₄தா₃த்
(7) ஸ்வஹிதவிஹதித:
(8) காரகஸ் தோமஹாநே :
(9) க்ருத்ஸ்நாம்சாத்₃யூஹபா₃தா₄த்
(10) க்ருதிவிப₂லதயாபி உத்தி₂தம் ப்ரத்ய வித்₄யத் ||

1-ஸ்ம்ருத் யதி₄கரணம் – ஸாங்க்₂ய ஸ்ம்ருதியோடு முரண் பட்டாலும் ஸ்ம்ருதி தான் தவறானது, வேதம் அல்ல.
2-யோக₃ப்ரத்யுக்த் தி₄கரணம் – நான்முகனே கூறி யிருந்தாலும் வேதத்தோடு முரண்பட்டால் தவறானதே .
3-விலக்ஷணத்வாதி₄கரணம் – காரணமும் காரியமும் ஒரே தன்மை களோடு இருக்க வேண்டும் என்கிற தேவை யில்லை .
4-சிஷ்டா பரிக்₃ரஹாதி₄கரணம் – பல மதங்கள் பரமாணுவே ஜகத் காரண மென்று கூறினாலும் வேதம் சொல்வதே சரி

5-போ₄க்த்ரா பத்த் யதி₄கரணம் – சேதனா சேதனங்களை உடலாகக் கொண்டாலும் ப்ரஹ்மத்துக்கு இன்ப துன்பமில்லை

6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்றென்பதால் ப்ரஹ்மமே இந்த உலகமாகும்

7-இதர வ்யபதே ₃சாதி₄கரணம் – ப்ரஹ்மத்தை விட ஜீவாத்மா வேறானபடியால் ப்ரஹ்மம் தனக்குத் தீமை தேடவில்லை .

8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம் – கருவிகள் எதையும் எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் உலகைப் படைக்க முடியும்.

9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த் யதி₄கரணம் – அவயங்களே இல்லா விட்டாலும் ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம், வேதம் சொல்வதால்.

10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம் – ப்ரஹ்மம் உலகைப் படைப்பது விளையாட்டாக,லீலா ரஸத்துக்காகவே

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் – நான்காவது பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

    July 3, 2025

    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

    பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
    ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
    பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
    ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
     ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
    வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

    ——-

    ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

    இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
    ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
    ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
    வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

    முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

    இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    ——–

    1-4-1-ஆநுமாநிகாதி₄கரணம்-ஸாங்க்ய மதம் சொல்வது போன்ற வாக்கியங்கள்

    அதி₄கரணத்தின் பின்புலம்
    முதல் அத்யாயத்தின் நான்காவது பாதத்தை அணடந்துள்ளோம். கீழ் பாதங்களுக்கும் இப்பாதத்துக்கும் ஸங்கதிகள் -முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப்பட்டது அயோக₃ வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது. மேலுள் மூன்று பாதங்களால் செய்யப்படுவது (ii) அந்ய யோக₃
    வ்யவச்சே₂த₃ம்
    – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது.
    பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களின் வலிமையைப் பொருத்து பாதங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் – (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள் (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள் (iv) நான்காம் பாதத்தில் சாயா அநுஸாரி வாக்யங்கள் என்று.
    சா₂யா என்றால் நிழல். அநுஸாரி என்றால் பின் தொடர்வது. உபநிஷத்துக்களில் சில வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தின் உபதேசங்களை நிழல் போல் பின் தொடர்பவை போல் காணப்படுகின்றன. ஸாங்க்ய மதத்தில் சொல்லும் கருத்துகள் இவ்விடங்களில் சொல்லப்படுகிறபடியால், ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்டபடி ப்ரதா₄நம் / மூல ப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் தான் ஜகத்காரணம் என்று உபநிஷத்துக்களே ஏற்கின்றன என்று பூர்வபக்ஷீ வாதிடுகிறார். –அவ் வாதத்தை நிரஸிப்பதன் மூலம் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்னும் ஸித்தாந்தத்தை வலுப்படுத்துகிறார் வ்யாஸர்.

    (ப்ரஹ்மாத்மகமான பிரதானம் பிரகிருதி என்று சொல்லாமல் -நிரீஸ்வர சாங்க்ய மதம் போல் உள்ள ஸ்ருதி வாக்கியங்கள் -எண்ணிக்கையில் சாம்யம் -24 அசேதனங்கள் -25 ஜீவாத்மா -மட்டுமே சாங்க்ய மதம் -காபில மத ஸித்த அப்ரஹ்மாத்மக அசேதனங்கள் -போல் உள்ள சில ஸ்ருதி வாக்கியங்கள் -இவற்றை சொல்லி நேராக பிரதானம் காரணம் சொல்லாமல் -இருப்பதால் பிரதானமும் ஜகத்காரணம் என்கிற வாதங்களை நிரஸித்து –ப்ரஹ்ம ஏக காரணம் என்னும் கருத்தை நன்றாக நிலைநாட்ட இப்பாதம் என்றவாறு)

    ஆநுமாநிகதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா என்று கூறப்பட்டது. அதற்குமேல் ஆஷேபம் எழுகிறது – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மா என்று ஒருவர் கிடையாது என்று ஸாங்க்ய மதம் சொல்வது போல் வேதமே சொல்லி யுள்ளதே என்று. அதற்கு பதிலளிக்க தான்
    இந்த அதிகரணம் பிறக்கிறது.

    (ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
    ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
    அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –)

    விஷய வாக்யம் – கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தின் மூன்றாம் வல்லீ
    இந்த்₃ரியேப்₄ ꞉ பராஹ் வர்தா ₂ அர்தே₂ப்₄யஶ் ச பரம் மந꞉ । மநஸஸ்து பரா பு₃த்₃தி₄ர் பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ ॥-இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப்பொருள்கள் உயர்ந்தவை . பொருள்களை விட மனது உயர்ந்தது. மனதை விட புத்தி உயர்ந்தது. புத்தியை விட மஹாந் என்ற பொருள் உயர்ந்தது-மஹத꞉ பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ । புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டோ₂ ஸா பரா க₃தி꞉ ॥-மஹாந் என்பதை விட அவ்யக்தம் உயர்ந்த்து. அவ்யக்தம் என்பதை விட புருஷன் உயர்ந்தவன். புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை , அதுவே எல்லை , அதுவே இறுதியான இலக்கு.

    ஸந்தேஹம் – இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் (ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொள்ளாத) ப்ரதாநம் என்ற அசேதனப் பொருள் சொல்லப்படுகிறதா? அல்லவா?
    பூர்வ பக்ஷம் – இங்கு மூல ப்ரக்ருதி எனப்படும் ப்ரதாநம் தான் சொல்லப்படுகிறது.
    1-ஸாங்க்ய மதத்தில் தத்துவங்களின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது – 5 கர்ம இந்த்ரியங்கள், 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 1 மனது, 5 பூதங்கள், 5 தந்மாத்ரங்கள், அஹங்காரம், மஹாந், மூல ப்ரக்ருதி என்று 24 அசேதனப் பொருள்கள் மற்றும் அறிவுடையவனான ஜீவாத்மா 25ஆவது தத்துவம் என்று. இங்கு உபநிஷத்திலும்
    இந்த்ரியங்கள், உலகப் பொருள்கள், மனது, புத்தி (அஹங்காரம் என்ற தத்துவம்), மஹாந், அவ்யக்தம், புருஷன் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது ஸாங்க்ய மதத்தின் தத்துவ வரிசை நினைவுக்கு வருகிறது. எனவே இவ் விடத்தில் வேதமே ஸாங்க்ய மதத்தை உபதேசிக்கிற படியால் இங்கு அவ்யக்தம் என்ற பொருள் மூல ப்ரக்ருதியாகத் தான்
    இருக்க வேண்டும். இப்படி தத்துவக் கணக்கில் ஸாங்க்ய மதத்தை வேதம் ஏற்பதால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி ப்ரதாநம் தான் ஜகத் காரணம் என்றும் வேதம் ஏற்கிறது என்று தான் ஆகும். அவர்கள் மதத்தின் படி அந்த ப்ரதாநம் என்ற பொருள் ஸ்வதந்த்ரமானது, அதற்கு உள்ளே ஆத்மாவாக பரமாத்மா கிடையாது

    2-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்று 25ஆவது தத்துவமான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை என்று சொல்கிறபடியால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி பரமாத்மா என்று ஒருவரே கிடையாது என்றும் தெரிகிறது.

    (தந்த்ர சித்த தத்வ ப்ரக்ரியை நினைவூட்டப் படுகிறதே -முதல் வாதம் -புருஷன் -ஜீவாத்மாவை விட -மேல் உள்ள தத்துவமே இல்லை நிரசிப்பது போல் உள்ளது -இரண்டாம் வாதம்)

    இவ்விடத்தில் பூர்வபக்ஷீ ’ப்ரதாநம் மட்டுமே ஜகத்காரணம் என்று உபநிஷத் கூறுகிறது’ என்று சொல்லவில்லை , -ஏனெனில் கீழ் பல அதிகரணங்களில் பரமாத்மா ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ள து. எனவே , “உபநிஷத்தில் சில இடங்களில் ப்ரதாநமும் ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்று தான் வாதிடுகிறார்.

    வேதம் காட்டும் உருவகம்
    ஸித்தாந்தம் – இங்கு 7 ஸூத்ரங்களாலே வ்யாஸர் ஸித்தாந்தத்தைக் காட்டுகிறார்.
    1-ஆநுமாநிகம் அபி ஏகேஷோம், இதி சேத் ந, சரீர ரூபக விந்யஸ்த க்₃ருஹீதே :, த₃ர்சயதி ச
    ஏகேஷோம் –
    ஒரு சிலரால் படிக்கப்படும் வேதத்தில்
    ஆநுமாநிகம் அபி – அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியும் [ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது]
    இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
    சரீர ரூபக விந்யஸ்த – ரூபகமாக (உவமையான தேராக) சொல்லப்பட்ட சரீரமே
    க்₃ருஹீயத: – இங்கு எடுக்கப் படுகிறபடியால்
    த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது-

    இவ்விடத்தில் உபநிஷத்தில் ஓர் உருவகம் காட்டப்படுகிறது. அது யாதெனில் –
    ஆத்மாநம் ரதி₂நம் வித்₃தி₄ ஶரீரம் ரத₂மேவ து । பு₃த்₃தி₄ம் து ஸாரதி₂ம் வித்₃தி₄ மந꞉ ப்ரக்₃ரஹமேவ ச ॥இந்த்₃ரியாணி ஹயாநாஹு: விஷயாந் தேஷு கோ₃சரான்-இந்த சரீரம் ஒரு தேர் (ரத₂ம்), ஜீவாத்மா தான் அதற்கு ஸ்வாமீ (ரதீ), புத்தி (உறுதி) தான் தேரோட்டி (ஸாரதீ), மனது தான் கடிவாளம் (ப்ரக்₃ரஹம்), இந்த்₃ரியங்கள் தான் குதிரைகள், உலக விஷயங்கள் தான் குதிரைக்கு புல் போன்றவை-

    விஜ்ஞாந ஸாரதி₂ர் யஸ்து மந꞉ ப்ரக்₃ரஹ வாந் நர꞉ । ஸ: அத்₄வந꞉ பார மாப்நோதி தத்₃விஷ்ணோ꞉ பரமம் பத₃ம் ||-புத்தி என்ற ஸாரதியையும் மனது என்ற கடிவாளத்தையும் எவன் கட்டுப் படுத்துகிறானோ , அவன் தான் பாதையின் இறுதியில் இருக்கும் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான். -இப்படி தேர், ஸாரதீ, குதிரைகள் முதலானவற்றை அடக்க வேண்டும் என்று உபதேசித்த பிறகு தான், நாம் கீழே பார்த்த விஷய வாக்யம் உள்ளது. எனவே அந்த வாக்கியத்தில் புத்தி, மனது, இந்த்ரியங்கள், பொருள்கள் முதலானவற்றைக் கட்டுப் படுத்தும் போது, எதை விட எது முக்கியமானது என்று தான் சொல்லப்படுகிறது.

    புலன்களை அடக்கும் முறை
    இந்த்₃ரியேப்₄ யா ꞉ பரா ஹ்யர்தா ₂
    – இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப் பொருள்களை அடக்குவது முக்கியமானது – ஏனெனில் புலன்களை அடக்கி வைத்தாலும் உலகப் பொருள்கள் அறுகில் இருந்தால் அவை புலன்களை இழுத்து விடும்.
    அர்தே₂ப்₄ யஶ்ச பரம் மந꞉ – பொருள்களை விட மனதை அடக்குவது முக்கியம் –-ஏனெனில் பொருள்களை விலக்கி வைத்திருந்தாலும் மனது அப்பொருள்களை நினைத்துக் கொண்டே இருந்தால் புலனடக்கம் ஸித்திக்காது.
    மநஸஸ்து பரா பு₃த்₃தி₄: – மனதை விட புத்தி என்ற உறுதியை வசப்படுத்துவது முக்கியம் – ஏனெனில் ஓர் உறுதி இருந்தால் தான் மனது வழி தவறிப் போகும் போது அதைத் தடுத்து சரியான பாதைக்கு இழுத்து வர முடியும்.
    பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ – புத்தியை விட உயர்ந்தவரான ஆத்மாவை வசப்படுத்துவது முக்கியம் –ஏனெனில் ஆத்மாவுக்கு அதீனமாகத் தான் கீழ் சொல்லபட்ட புலன்கள், மனது, உறுதி எல்லாம் உள்ளன.
    மஹத꞉ பரம் அவ்யக்தம் – ஆத்மாவை விட அவ்யக்தம் என்ற பொருளை வசப்படுத்துவது முக்கியம் –-அவ்யக்தம் எனப்படுவது நம்முடைய சரீரம். சரீரம் ஆரோக்யமாக நம் வசத்தில் இருந்தால் தான் ஆத்மா எந்தச் செயலையும் செய்ய முடியும் என்பதால் அதை வசப்படுத்துவது முக்கியம்.
    அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ – சரீரத்தை விட புருஷன் என்ற பரமாத்மாவை வசப்படுத்துவது முக்கியமானது –ஏனெனில் இவ்வுலகில் அனைத்துமே அவருக்கு அதீனமாகத் தான் இயங்குகிறது.
    புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ₂ ஸா பரா க₃தி꞉ – அந்த பரமாத்மாவை விட முக்கியமாக வசப்படுத்தப்பட வேண்டிய பொருள் வேறொன்று கிடையாது. அவரே எல்லை .
    இது தான் விஷய வாக்கியத்தின் சரியான பொருள் ஆகும்.

    ஸித்தாந்த யுக்திகள்
    உருவகத்தில் தேர், ஸாரதீ, கடிவாளம் என்று சொல்லப்பட்ட அதே பொருள்கள் அதே சொற்களால் விஷய வாக்கியத்திலும் சொல்லப்படுகின்றன, ஒன்றைத் தவிற – சரீரம் என்ற சொல்லுக்கு பதிலாக அவ்யக்தம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே , ஸந்தர்பத்தை வைத்துப் பார்த்தால், இங்கு அவ்யக்தம் எனப்படுவது தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் தான், மூல ப்ரக்ருதி அல்ல.-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்ற வாக்கியமும் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லவில்லை , வசப்படுத்தப் பட வேண்டிய பொருள்களுள் பரமாத்மாவை விட முக்கியமானது எதுவுமில்லை என்று தான் கூறப்படுகிறது.-பரமாத்மாவை வசப்படுத்துவதாவது, அவரிடம் சரணாகதி செய்து அவர் அநுக்ரஹத்தைப்
    பெறுவது தான்.
    த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது – வேதமே இந்தப் பொருளைக் காட்டுகிறது –
    ஏஷ ஸர்வேஷு பூ₄தேஷு கூ₃ட₄: ஆத்மா ந ப்ரகாஸதே । த்₃ருஶ் யதே த்வக்₃ர்யயா பு₃த்₃த்₄ யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம த₃ர்ஶிபி₄꞉ ||-இந்த புருஷன் எனப்படுபவர் எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார். அவர் வெளிப்படையாகப் ப்ரகாசிப்பதில்லை . புலன்களை அடக்கி நுட்பாக ஆராயும் புத்தியால் மட்டுமே அவர் காணப்படுகிறார்.
    இப்படி உபநிஷத்தே பரமாத்மாவைப் பற்றியும், புலன்களை வசப்படுத்துவதைப் பற்றியும் சொல்கிறபடியால் இதுவே சரியான பொருள். எனவே இங்கு மூல ப்ரக்ருதி சொல்லப்படவே இல்லை .-ஆகவே , இவ் விடத்தில் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களின் வர்ணனையோ , ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவரே இல்லை என்றோ சொல்லப்படவே இல்லை -எனவே வேதம் ஸாங்க்ய மதத்தைத் தழுவி உபதேசிக்கிறது என்று கூற இயலாது. எனவே பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம் என்று உபநிஷத்துக்கள் எங்குமே ஏற்க வில்லை .-மேலும் பல யுக்திகளைக் கொண்டும் வ்யாஸர் இதை நிரூபிக்கிறார் மற்ற ஸூத்ரங்களால் -அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

    1.4.1-ஆநுமாநிகாதி₄கரணம்–ப்ரக்ருதியையும் இயக்குபவர் பரமாத்மாவே

    சரீரமே முக்திக்கான கருவி
    1-4-1-ஆநுமாநிகதி₄கரணத்தின் முதல் ஸூத்ரத்தால் இங்கு ’அவ்யக்தம்’ என்று சொல்லப்படுபடுவது மூலப்ரக்ருதி அல்ல, -இதற்கு முன் உருவகத்தில் தேராகச் சொல்லப்பட்ட சரீரம் தான் என்று காட்டினார் வேத வ்யாஸர். இனி அதைத் தொடர்ந்து மேலும் பல யுக்திகளைக் கூறுகிறார்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது – அவ்யக்தம் என்றால் ’வ்யக்தமாக வெளிப்படையாக இல்லாதது’ என்று பொருள்-எனவே இச் சொல் பொதுவாக மூல பிரக்ருதியைத் தான் குறிக்கும். சரீரமோ வ்யக்தமானது அதாவது வெளிப்படையானது.பிறகு அவ்யக்தம் என்ற சொல் எப்படி சரீரத்தைச் சொல்லமுடியும்? என்று. இதற்கு பதில் தான் அடுத்த ஸூத்ரம் -2-ஸூக்ஷ்மம் து தத₃ர்ஹத்வாத் –ஸூக்ஷ்மமான மூல ப்ரக்ருதி அன்றோ ; அதுக்கே தகுதி உள்ளபடியால் ஸூக்ஷ்மம் து – ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும் மூல ப்ரக்ருதி தான் ஸ்ருஷ்டி நடக்கும் போது இந்த சரீரமாக மாறுகிறது. எனவே , பஞ்சின் விகாரம் (மாறுபாடான) துணியைப் பஞ்சு என்று சொல்வது போல், அவ்யக்தம் என்கிற மூல ப்ரக்ருதியின் விகாரம் (மாறுபாடான) சரீரத்தை அவ்யக்தம் என்ற சொல்லைக் கொண்டு சொல்லலாம், தவறில்லை-

    விஷய வாக்கியத்தில் இருக்கும் அவ்யக்தம் என்ற சொல் சரீரத்தைச் சொல்கிறது என்று கொள்ளாமல், முதலில் உருவகத்தில் இருக்கும் சரீரம் என்ற மூல ப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று கொண்டால் என்ன? என்று பூர்வபக்ஷீ கேட்க, அதற்கு விடை தான் ஸூத்ரத்தின் அடுத்த பகுதி —தத₃ர்ஹத்வாத் – உருவகத்தின் இறுதியில் தேர், ஸாரதீ, கடிவாளம் முதலானவற்றை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று சொல்கிறபடியால், இங்கு முக்தி அடைவதற்குக் கருவிகளானவை தான் தேராகவும், -ஸாரதியாகவும், கடிவாளமாகவும் உருவகப் படுத்தப்பட வேண்டும். மூல ப்ரக்ருதியோ புருஷார்த்தம் அடைவதற்குக் கருவியாக ஆகாது. அதைக்கொண்டு எந்தச் செயலையும் செய்ய இயலாது. எனவே அதைத் தேராக உருவகம் செய்வதுஇங்கு பொருத்தமாக இருக்காது. சரீரம் தான் ’அர்ஹம்’-அதாவது“தகுதி உடையது” அதாவது புருஷார்த்தம்
    அடைவதற்குக் கருவியாக இருக்கும் தகுதி உடையது. எனவே அது தான் இங்கு உருவகத்தில் பொருத்தமானது.-எனவே , பின்னால் வரும் விஷய வாக்கியத்தில் உள்ள அவ்யக்தம் என்ற சொல் தான் சரீரத்தைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிற, சரீரம் என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று மாற்றிக் கொள்ள இயலாது.

    ஸாங்க்ய மதத்தை ஏற்காததன் காரணம்
    ஸாங்க்ய மதத்தவரின் கேள்வி
    – நீங்களும் மூல ப்ரக்ருதி என்ற பொருளை ஏற்கிறீர்கள், அதிலிருந்து தான் சரீரம் உண்டாகிறது என்றும் ஏற்கிறீர்கள் என்றால் ஏன் எங்கள் ஸாங்க்ய மதத்தைக் குறை சொல்கிறீர்கள்? அதற்கு பதில் –
    3-தத₃தீ₄நத்வாத் அர்த₂வத் – “அதற்குக் கீழ் படிந்தே பயனுள்ளது”
    மூல ப்ரக்ருதியான ஸ்வதந்த்ரமான ஒரு பொருள், தானாக இயங்குகிறது என்று ஸாங்க்ய மதம் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை , அதைத்தான் குறை சொல்கிறோம். தத₃தீ₄நத்வாத் பரமாத்மாவுக்கு அதீனமாக, அவருக்குக் கட்டுப்பட்டு,அவரை அந்தராத்மாவாகக் கொண்டு, அவராலே இயக்கப்பட்டு தான் மூல ப்ரக்ருதி அர்த₂வத் பயனுடையது, அதாவது-தன்னிடமிருந்து பஞ்ச பூதங்கள் முதலானவற்றை உண்டாக்குகிறது. மூல ப்ரக்ருதி இருப்பதும், நிலைப்பதும், செயல்படுவதும் கூட அந்த பரமாத்மாவால் தான். இதை ஸாங்க்ய மதம் ஏற்காதபடியால் அதைத் தவறு என்கிறோம்

    (ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்-பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை-ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து-ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை-பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது என்று விடை கூறப்படுகிறது –)

    4-ஜ்ஜேயத்வ அவசநாத் ச – “அறியப்பட வேண்டியது என்று சொல்லப்படாத படியாலும்”-ஸாங்க்ய மதத்தின்படி ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா என்ற இரண்டு பொருள்களைப் பற்றின உண்மையான அறிவு தான் முக்திக்கு வழி ஆகும். எனவே , இங்கு அவ்யக்தம் என்ற சொல் மூல ப்ரக்ருதியைக் குறிப்பதாகக் கொண்டு,-உபநிஷத்தே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்கிறது என்று கொண்டால், அந்த அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை’அறிய வேண்டும்’ என்று வேதம் கண்டிப்பாக சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எந்த உபதேசமும் காணப்படவில்லை . எனவே இங்கு சொல்லப்படுவது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

    (த்ருஷ்ட்வத் -கண்ணுக்குத்தெரிந்த புருஷார்த்தங்கள் போல் ஆனு ஸ்ரவணாத் -ஸ்வர்க்கம் போன்றவை கேட்டு அறிந்தவையும் –அவி ஸூத்தி -தூய்மை இல்லாமல் திரும்ப வேண்டிய குறை -துக்கம் கலந்து –ஷயம் -முடியும் –அதிசயம் -உலக இன்பங்களை விட சுவர்க்கம் மேலானது போல் இதற்கு மேலானவை உண்டே-தத் விபரீதமானவே ஸ்ரேயஸ் -அழியாத துக்கம் கலசாத முக்தி -சாங்க்யர் காரிகை ஸ்லோகம் –வ்யக்தம்-கண்ணால் காண்பவை – அவ்யக்தம் பிரகிருதி –அறிவாளி -மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு அடையலாம்
    இங்கு அறியப்பட வேண்டியது என்ற வேத வாக்கியம் இல்லையே -)

    5-வத₃தி இதி சேத் ந ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத்
    வத₃தி
    – ’சொல்கிறது’ –அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் பூர்வபக்ஷீ.
    அஶப்₃த₃ம் அஸ்பர்ஶம் அரூபம் அவ்யயம் ததா₂ அரஸம் நித்யம் அக₃ந்த₄வச்ச யத் ।
    அநாத்₃யநந்தம் மஹத꞉ பரம் த்₄ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா₂த் ப்ரமுச்யதே ||

    ஒலி தொடுவுணர்ச்சி வண்ணம் சுவை மணம் இல்லாததாய், நித்யமானதாய், மஹான் என்பதைவிட உயர்ந்ததான பொருளை அறிபவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடிகிறான்.-இவ்வாறு மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று வேதமே சொல்கிறபடியால் அவ்யக்தம் என்பது ப்ரக்ருதி தான்.

    மூல ப்ரக்ருதியைப் பற்றின உபதேசமே இல்லை —இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு–ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத் – ப்ராஜ்ஞன் (மிகுந்த அறிவாளி) என்ற பரமாத்மாவின் ப்ரகரணம் அன்றோ இது-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே பரமாத்மா தான் பேசப்பட்டு வருகிறார். முதலில் புலன்களை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைய முடியும் என்று சொல்லி, பிறகு கூர்மையாகச் சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் தான் அந்த விஷ்ணுவை காண முடியும் என்று சொல்லி, தற்போது இந்த வாக்கியத்தில் ’ஒரு பொருளை’ அறிந்தால் முக்தி கிடைக்கும் என்று சொன்னால் அந்தப் ’பொருள்’ விஷ்ணுவாகத் தான் இருக்க முடியும், திடீரென்று தொடர்பே இல்லாத மூல ப்ரக்ருதியை இங்குச் சொல்வதாகக் கொள்ள முடியாது. எனவே , அவ்யக்தம் என்ற பொருள்’அறியப்பட வேண்டும்’ என்று இங்கு சொல்லாதபடியால் அது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

    (இந்த வரிகளுக்கு முன்னால்-விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
    சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
    -என்றும்-அதற்கு கீழே –
    ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்-சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு-பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –புத்தரோத்மா மஹான் பர -என்றும்-மேலானவன் என்று உணர முடியலாம்-)

    இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று-பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே)

    பூர்வபக்ஷீ கேட்கிறார் – இந்தப் ப்ரகரணத்தில் விஷ்ணுவும் சொல்லப்படுகிறார், ப்ரக்ருதியும் சொல்லப்படுகிறது என்று கொண்டால் என்ன? என்று. அதற்கு பதில் கூறுகிறார் வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் -6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபந்யாஸ: ப்ரஸ்ந: ச–த்ரயாணாம் ஏவ ச – உபேயம் உபாயம் உபேதா என்ற மூன்று பொருள்களுக்கு மட்டும் தான்–ஏவம் உபந்யாஸ: – இவ்வாறு அதாவது அறியப்பட வேண்டியவை என்று இங்கு உபந்யாஸம் உள்ளது-ப்ரஸ்ந: ச – கேள்வியும் கூட (அந்த மூன்றைப் பற்றித் தான் உள்ளது) நசிகேதஸ் தன் மூன்றாவது வரத்தால் முக்தி எப்படிப்பட்டது என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் உபேயம் (அடையப்படும் இலக்கு), உபாயம் (முக்தி அடையும் வழி) மற்றும் உபேதா (அடைபவர்) என்ற மூவர் தான் அடங்கியுள்ளார்கள். (ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-)யம தர்மனும் உபேயம் பரமாத்மாவே , உபாயம் பக்தி தான், உபேதா ஜீவாத்மா என்று அதனதன் தன்மைகளையே உபதேசிக்கிறார். எனவே இங்கு மூல ப்ரக்ருதியைப் பற்றிப் பேச்சே இல்லை .

    (தம் துர்தர்சம்– கூடம் மறைக்கப்பட்டு அனுப்பிரவிஷ்டம் குஹாயம் புராணம் தேவம் -அவ்யாத்மயோகம் -ஆத்ம சாஷாத்காரம் வந்து த்யானம் செய்து ஹர்ஷ சோகம் தாண்டி இன்பமயமான விஷ்ணு பதம் அடைகிறான்-பிரிய தமனாக உள்ளவர்களையே தேர்ந்து எடுத்துக் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான்அன்பு பக்தியே அடையும் வழி)

    7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” – (7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” –(புத்தேராத்மா மகான் பர –) புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ’மஹான்’ என்ற இடத்தில்-மஹான் என்பது அசேதனப் பொருள் அல்ல, அதை ’ஆத்மா’ என்று சொல்கிறபடியால். அதே போல், ’மஹான் என்ற ஆத்மாவை விட அவ்யக்தம் உயர்ந்தது” என்று சொல்கிறபடியால், அந்த அவ்யக்தம் ப்ரக்ருதியாக இருக்க முடியாது,-ஜீவாத்மாவை விட மூல ப்ரக்ருதி உயர்ந்தது என்று ஸாங்க்ய மதத்தில் ஏற்காதபடியால்.)

    1-4-2–சமஸாதி₄கரணம்-ப்ரக்ருதியும் படைக்கப்படுவதே

    ஸாங்க்ய மதத்தின் விமர்சனம்
    இந்தப் பாதத்தில், கபிலாசார்யரின் ஸாங்க்ய மதத்தைச் சொல்வது போல் இருக்கும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து, அவையும் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை , பரமாத்மா ஜகத்காரணம் என்று தான் காட்டுகின்றன என்கிறார் வ்யாஸர். அதனால், முதலில் ஸாங்க்ய மதத்தை நன்கு புரிந்து கொள்வோம்-(தந்த்ர ப்ரக்ரியை -சாங்க்ய மதத்தை இப்படியும் சொல்வர்).மூல ப்ரக்ருதி’ என்பது தான் இந்த உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள். அதில் ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்கள் உள்ளன. ப்ரளய நிலையில் இம்மூன்று குணங்களும் ஸம நிலையில் இருக்கும்.-ஸ்ருஷ்டி ஏற்படும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ப்ரக்ருதி என்பது நித்யமானது, என்றும் இருக்கும்.ஸ்ருஷ்டி நடக்கும் போது, ப்ரக்ருதியிலிருந்து ’மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து அஹங்காரம் என்ற தத்துவமும் உண்டாகின்றன. பிறகு, தாமஸ அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரம், ஸ்பர்ச தந்மாத்ரம், ரூப தந்மாத்ரம், ரஸ தந்மாத்ரம் மற்றும் கந்த தந்மாத்ரம் என்ற 5 தந்மாத்ரங்களும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற 5 பூதங்களும் தோன்றுகின்றன. ஸாத்த்விக அஹங்காரத்தலிருந்து கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற 5 ஜ்ஞாந இந்த்ரியங்களும். பேச்சுப்புலன் கைகள் கால்கள் மற்றும் மலம் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்ற 5 கர்ம இந்த்ரியங்களும், மனது என்ற உட்புலனும் தோன்றுகின்றன. ஆக மொத்தம் 24 விதமான அசேதனப் பொருள்கள் உள்ளன–இவற்றை யெல்லாம் விட உயர்ந்தவர், ஜ்ஞாநம் உடையவர் ஜீவாத்மா. அவர் 25ஆவது தத்துவம்.-இவற்றுக்கு மேல் பரமாத்மா, ஈச்வரன், ப்ரஹ்மம் என்று ஒரு தத்துவம் கிடையாது. இதுதான் ஸாங்க்ய மதம்-இதில் தத்துவங்களின் வரிசை , தன்மைகள் இவற்றை யெல்லாம் ஸித்தாந்தத்திலும் ஏற்றாலும், பரமாத்மா என்று 26ஆவது ஒரு தத்துவம் உள்ளது என்றும், அவர்தான் மற்ற சேதனங்கள் மற்றும் அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவற்றை இயக்குகிறார் என்றும் சொல்கிறோம். இதுவே வேறுபாடு-இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸாங்க்ய மதம் தவறென்று காட்டப்படுகிறது.

    (மந்த்ரிக உபநிஷத் -விகார ஜனணீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் -கீதையிலும் இதே போல் பஞ்ச பூதங்கள் -மனஸ் -அஹங்காரம் மஹா -அஜாம் த்ருவாம் -அவரால் இயக்கப்பட்டு -மக்களுக்கு வேண்டிய பலன்களை அவன் இயக்கத்தால் உண்டாகிறது –
    முக்குண -வெள்ளை கறுப்பு சிகப்பு -சத்வ ரஜஸ் தமஸ் -மயம் -ஸர்வகாம -நினைத்தபடி உண்டாக்கி-அஞ்ஞர்கள் இப்பிரக்ருதியைக் குடிக்கிறார்கள் -அனுபவிக்கிறார்கள் -உழன்று கொண்டு குமாரர் -சிறுபிள்ளைத்தனம் -தேவதேவன் வசத்தில் பிரகிருதி வசப்பட்டு -ஆசைப்பட்டபடி இத்தை உருவாக்குகிறார் -அந்த ஈஸ்வரன் -26/27 தத்வம் என்றும் சொல்கிறார்கள் -காலத்தையும் சேர்த்தது 27—ஸ்வேதாஸ்வரம் -அறிவுடையவர் அறிவில்லாதவர் -ஈசன் -அனீசன் -போக்த்ரு -போக்யம் -பத்யதே கட்டி வைக்கப்படுகிறான் -ஈஸ்வரனை அறிந்து விடுபடலாம் -ஷரம் பிரதானம் -மூலப்பிரக்ருதியை உருவம் மாறி -அம்ருதம் அக்ஷரம் -ஜீவாத்மா -இருவருக்கும் ஈசன் ஏக -அவனையே தியானித்து பூஜை செய்து மனஸால் சாஷாத்காரித்து -அனுக்ரஹத்தால் மோக்ஷம்-விஸ்வ மாயை -இல்லாத பொருள் அர்த்தம் இல்லை -ஆச்சர்யம் -மாயா அஸ்திரம் -பிரயோகம் -ஆச்சர்யமானது -)

    வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
    நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே .-அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
    விகாரஜனனீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்₄ருவாம் | த்₄யாயதே அத்₄யாஸிதா தேந தந்யதே ப்ரேர்யதே புந:-பல விதமான காரியப் பொருள்களை உண்டாக்குவதாய், அறிவற்றதாய், எட்டு வடிவங்கள் உடையதாய், உண்டாக்கப் படாததாய், அழியாததான இந்த ப்ரக்ருதி பரமாத்மாவாலே அதி₄ஷ்டா₂நம் செய்யப்பட்டு(இயக்கப்பட்டு) விரிவடைகிறது செயல்படுகிறது.

    ஸிதா அஸிதா ச ரக்தா ச ஸர்வகாமது₃கா₄ விபோ ₄:| பிப₃ந்தி ஏநாம் அவிஷமாம் அவிஜ்ஞாதா : குமாரகா: || வெளுப்பு, கருப்பு, சிவப்பு என்ற மூன்று வண்ணங்கணை (ஸத்த்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்கணை) உடைய இந்த ப்ரக்ருதி ஈஸ்வரனின் ஆணைப்படி இயக்கப்படுகிறது. இதன் உண்மையை அறியாத குழந்தை போன்ற
    ஜீவாத்மாக்கள் இதையே குடித்து (அநுபவித்து) அதில் ஈடுபடுகிறார்கள்.

    ஏகஸ்து பிப₃தே தே₃வ: ஸ்வச்ச₂ந்த₃: வசாநுகா₃ம்| தம் ஷட்₃விம்சகம் ஆஹு: ஸப்த விம்சம் அத₂ அபதர ||-ஒரு தேவன் மட்டும் தான் இந்தப் ப்ரக்ருதியைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு தான் ஆசைப்பட்டபடி இதை அநுபவிக்கிறார். அந்த பரமாத்மாவை 26ஆவது தத்துவம் என்றோ , (காலத்தையும் கணக்கிட்டால்) 27ஆவது தத்துவம் என்றோ கூறுகிறார்கள்.

    வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
    நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே . அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
    ஜ்ஞாஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ அஜா ஹ்யேகா போ₄க்த்ரு போ₄கா₃ர்த₂ரூபா|
    அநீசஶ்ச ஆத்மா ப₃த்₄யதே போ₄க்த்ருபா₄வாத் ஜ்ஞாத்வா தே₃வம் முச்யதே ஸர்வபாசை : ||-
    ஜ்ஞாநீ மற்றும் அறிவிலியாக, இயக்குபவர் மற்றும் இயக்கப்படுவராக இரண்டு விதமான (பரமாத்மா மற்றும் ஜீவாத்மா) நித்யமான ஆத்மாக்கள் உள்ளார்கள். அவர்கள் அநுபவத்துக்காக ப்ரக்ருதி என்ற ஒரு அழியாத தத்துவம் உள்ளது. இயக்கப்படும் ஆத்மா தானே போ₄க்தா (ப்ரக்ருதியால் வரும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவன்) என்று
    எண்ணி அந்தப் ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு விடுகிறார். எப்போது இயக்கும் பரமாத்மாவை உணர்கிறானோ அப்போது எல்லா கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறார்.

    க்ஷரம் ப்ரதா₄நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மநௌ ஈசதே தே₃வ ஏக: |
    தஸ்ய அபி₄த்₄யாநாத் யோஜநாத் தத்த்வபா₄வாத் பூ₄யஶ்சாந்தே விஸ்வமாயா நிவ்ருத்தி: ||-
    மாறிக்கொண்டே இருக்கும் ப்ரதானம், மாறாத ஜீவாத்மா எனும் இருவரையும் இயக்கும் தேவன் ஒருவனே . அவனை த்யானித்து, பூஜை செய்து, ஸாக்ஷாத்காரம் செய்தால் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.

    மாயாம் து ப்ரக்ருதிம் வித்₃யாத் மாயிநம் து மஹேஸ்வரம்| அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-மாயை (ஆச்சரியமானது) என்று ப்ரக்ருதியை அறிவாய். அதை இயக்கும் மாயாவியாக ஈஸ்வரனான பரமாத்மாவை அறிவாய். இந்த மாயை எனப்படும் ப்ரக்ருதியிலிருந்து தான் பகவான் உலகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.-இப்படி ஸ்பஷ்டமாக வேதாந்தம் கூறுவதால், இதோடு முரண்பட்ட இடங்களில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறோம்

    அதிகரணத்தின் பின்புலம்
    1-4-2-சமஸாதி₄கரணம் – ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் அவ்யக்தம் என்ற சொல் பொதுவாக ப்ரக்ருதியைக் குறித்தாலும்,-இங்கு சரீரம் என்ற சொல் உள்ள படியால் சரீரத்தைத் தான் குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படியானால், சரீரம்
    என்ற சொல் இல்லாத இடத்தில் மூல ப்ரக்ருதியைத் தானே பொருளாகக் கொள்ள வேண்டும் என்று ஸந்தேஹம்.
    விஷய வாக்யம் – ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள பின்வரும் வாக்கியம் –அஜாம் ஏகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா: |
    அஜோ ஹ்யேகோ ஜுஷமாந: அநுசேதே ஜஹாதி ஏநாம் பு₄க்த போ₄காம் அஜ: அந்ய: ||-
    உண்டாக்கப்படாததாய், ஒன்றாய், சிவப்பு வெள்ணை கருப்பு என்ற வண்ணங்களை உடையதாய், தன்னைப் போன்றபல பொருள்களாய் உண்டாக்கக் கூடியதாய் இருக்கும் ப்ரக்ருதியை (அஜாம் -ப்ரக்ருதி பெண் பால் சொல்) உண்டாக்கப்படாத ஒருவன் (பத்₃த₄ ஜீவாத்மா) விரும்பி அநுபவிக்கிறான், மற்றொருவன் (முக்த ஜீவாத்மா) இதை அநுபவித்து முடித்து விட்டு விடுகிறான்.

    ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதத்தின்படி ஸ்வதந்த்ரமாக உலகைப்படைக்கும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? அல்லது பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டு அவரால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா?
    பூர்வ பக்ஷம் – ஸாங்க்ய மதத்தில் சொன்னபடி ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் இங்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் –
    1- “அஜாம்” அதாவது’உண்டாக்கப்படாதது’ என்று இங்கு ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. ஸித்தாந்தத்தில் ப்ரக்ருதியும் ப்ரஹ்மத்தின் கார்யம் தான், அதாவது உண்டாக்கப்படுவது தான். ஸாங்க்யர்கள் தான் ப்ரக்ருதி உண்டாக்கப்படாதது என்று சொல்கிறார்கள். எனவே இங்கு ஸாங்க்ய மதம் தான் பேசப்படுகிறது.
    2- “ஸ்ருஜமாநாம்”-அதாவது“படைப்பவள் ” என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. “
    படைப்பைச் செய்பவள் ”-“படைப்பின் கர்த்தா” என்று பொருள். கர்த்தா (செய்பவள்) என்று ஸ்வதந்த்ரமாகச் செயல்படுபவனைத் தான் சொல்ல முடியும் என்று பாணிநி மஹரிஷி தன் இலக்கண நூலில் கூறுகிறார். எனவே ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகத் தான் உலகைப் படைக்கிறது என்று வேதமே ஏற்றுக் கொண்டுள்ளது.-எனவே

    அஜா என்ற சொல்லின் பொருள்
    ஸித்தாந்தம் –
    இந்த வாதத்தை மூன்று ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
    1-சமஸவத் அவிசேஷாத் – “சமஸத்தைப் போல்; குறிப்பிட்டுத் தோன்றாதபடியால்”
    ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (அர்வாக்₃பி₃ல: சமஸ: ஊர்த்₄வபு₃த்₄ந: ) என்று ஒரு வாக்கியம் உள்ளது. “கீழே ஓட்டை உடையதாய், மேலே பெரிதாக இருக்கும் சமஸம்” என்ற அதற்குப் பொருள்.-சமஸம் என்ற சொல் பொதுவாக யாகத்தில் உபயோகிக்கப்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.(சோமயாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரங்களுக்கு சமசம்-என்றும் க்ரஹம் சொல்வர் ) பாத்திரம் மேல்பக்கம் ஓட்டை யோடும் கீழே பெரிதாகவும் இருக்கும். ஆனால் இங்கு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. –சமஸம் என்ற சொல்லுக்கு “உண்ணும் கருவி” என்று தான் பொருள். (சமசம் –சமு பஷணே -உண்பதற்கான கருவி -பங்கஜம் -சேற்றிலே பிறந்தது உண்மையான பொருள் போல் )எனவே அச் சொல்லைக் கேட்டதும் உடனடியாக பாத்திரம் தான் குறிப்பிட்டு மனதில் தோன்றாது. உண்பதற்குப் பயன்படும் ஏதோ ஒரு கருவி சொல்லப்படுகிறது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எனவே , எந்த ஒரு பொருளும் சமஸம் என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டுத் தோன்றாதபடியால், சுற்றியுள்ள வாக்கியங்களை வைத்துத் தான் இச்சொல் எதைக் குறிக்கிறது என்று அறிய முடியும்.-அருகிலேயே ’இத₃ம் தச்சி₂ர:’ (இதுதான் தலை ) என்கிற வாக்கியம் உள்ள படியால் இங்கு சமஸம் என்ற சொல் தலையைத் தான் குறிக்கிறது என்று முடிவு செய்யலாம். தலையும் உண்பதற்குப் பயன்படுகிறது, கீழே வாய் என்ற ஓட்டையை உடையது, மேலே பெரிதாய் இருக்கக் கூடியது. எனவே இவ் வர்த்தம் பொருத்தமானதே .-அதே போல் இங்கு “அஜா” என்ற சொல்லுக்கு “உண்டாக்கப்படாதது” என்று தான் பொருள். குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி மனதில் தோன்றாது. எனவே , மற்ற வாக்கியங்களைக் கொண்டுதான் இங்கு எந்தப் பொருள் கூறப்படுகிறது என்று முடிவு செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களில் முக்குணங்களை உடையதாய், உலகப் பொருள்களை உண்டாக்குவதாய், பரமாத்மாவால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. எனவே அதுவே அஜா.-“படைப்பவன் ” என்று சொன்னாலும் ஸ்வதந்த்ரமானது என்று பொருள் கிடைக்காது-(இதுவும் பொதுவான சொல் தானே ). “தேர் ஓடுகிறது” என்று சொல்கிறோம். அங்கு தேருக்கு ஸ்வதந்த்ரமாக இயங்கும் தன்மை இல்லா விட்டாலும் “ஓடுதலைச் செய்கிறது” என்று கூறுகிறோம். அதே போல் இங்கும், பரமாத்மாவால் இயக்கப்பட்டு ப்ரக்ருதி இத்தனைப் பொருள்களை உண்டாக்கினாலும், அதை “படைப்பவள் ” என்று சொல்வது தவறில்லை –

    (உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
    ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

    பிருஹு –4-2-3–இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது-தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
    அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-)

    உண்டக்கப்படாதது, ஆனால்-படைக்கப்பட்டது
    2-ஜ்யோதி ருபக்ரமா து ததா ₂ ஹி அதீ₄யதே ஏகே
    ஜ்யோதி ருபக்ரமா து
    – ஜ்யோதிஸ் என்ற பரமாத்மாவிடமிருந்து பிறந்தது தான்
    ஹி ஏனெனில்
    ததா ₂ அவ்வாறு
    ஏகே வேதாத்யயனம் செய்யும் ஒரு சிலர் அதீ₄யதே – ஓதுகிறார்கள்.
    தைத்திரீய சாகையில் “அணோரணீயாந்” என்று பரமாத்மாவின் பெருமைகளை உபதேசித்து,“ஸப்த ப்ராணா: ப்ரப₄வந்தி தஸ்மாத்” என்று தொடங்கி ப்ராணன், மலை , கடல் முதலானாவை பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என்று சொல்லி, அதற்கு இடையில் நாம் பார்த்த விஷய வாக்கியத்தைப் போலவே ஒரு வாக்யம் உள்ளது
    “அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸரூபாம்” என்று.(தைத்ரிய சாகையிலும் -ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் போல் வாக்கியம் உண்டே) எனவே , பரமாத்மாவால் படைக்கப்படும் பொருள்களின் வரிசையில் ப்ரக்ருதியும் படிக்கப்பட்டபடியால், ப்ரக்ருதியும் பகவானால் படைக்கப்படுவது தான் என்று தெரிகிறது. எனவே ஸாங்க்யர்கள் சொல்லும் ப்ரக்ருதியை வேதம் ஏற்கவில்லை .-மேலும், “தே அபச்யந் தே₃வாத்ம சக்திம்” என்று பகவானுடைய சக்தி (விட்டுப் பிரியாத பண்பு) என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறபடியால், அது ஸ்வதந்த்ரமானது அல்ல என்று தெரிகிறது.
    கேள்வி – ப்ரக்ருதி அஜா (உண்டாக்கப்படாதது) என்றும் ஜ்யோதிருபக்ரமா (பரமாத்மாவிடமிருந்து உண்டானது) என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்? இவ் விரண்டு பண்புகளும் முரண்பட்டவை அன்றோ ? பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
    3-கல்பதநாபதே₃சாத் ச மத்₄வாதி₃வத் அவிராேத₄:கல்பநோபதே₃சாத் ச – கல்பனம் (ஸ்ருஷ்டி) என்பதைப்பற்றின உபதேத்தால்
    அவிராேத₄:— முரண்பாடு இல்லை
    மத்₄வாதி₃வத் –-மது₄வித்₃யை முதலானவற்றில் போலே
    மது₄ வித்₃யையில் உதயம் அஸ்தமனம் முதலானவற்றை உடைய ஸூர்யனுக்கும் அதில்லாத ஸூர்யனுக்கும் அந்தர்யாமியாக பரமாத்மா சொல்லப்பட்டார். இதில் முரண்பாடு இல்லை ஏனெனில் ஒன்று காரண நிலை (ஸ்ருஷ்டிக்கு முன்), மற்றொன்று கார்ய நிலை . அதே போல் இங்கும் முரண்பாடு இல்லை , இரண்டு நிலைகள் உள்ளன.-மூல ப்ரக்ருதி ப்ரளய காலத்தில் முக்குணங்களை ஸமமான நிலையில் கொண்டிருக்கும். அது படைக்கப்படாத்து, –அஜா. -அதற்குப் பின் அதுவே முக்குணங்களில் ஏற்றத் தாழ்வுகளோடு ஆகிறது. இது காரிய நிலை , உண்டாக்கப் படுகிறது. எனவே ப்ரக்ருதியை ஜ்யோதி ருபக்ரமா என்ற சொல்வதும் தவறல்ல.

    (அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேக்சிகையாலே
    பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
    அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது-ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே)

    —————

    (இப்பாதத்தால் —நிரதிவதிக மஹிமை -ஸ்தாபிக்கப்படுகிறது -கீழ் மூன்று பாதங்களிலும் ஸ்ரஷ்டா -தேஹீ- ஸ்வ நிஷ்டா -பார்த்தோம்) 1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம்-தத்துவங்களின் எண்ணிக்கை

    1.4.3 அதிகரத்தின் பின்புலம்
    1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம் – ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் ’
    அஜா’ என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றாதபடியால், மற்ற வாக்கியங்களைக் கொண்டு அது பரமாத்மாவால் இயக்கப்படுவது தான் என்று முடிவு செய்தோம். இந்த அதிகரணத்தில், பரமாத்மா என்றொருவரை ஒப்புக் கொண்டால்
    எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறபடியால் குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றுகிறபடியால் அப்படியே ஏற்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

    விஷய வாக்யம் – சுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு வாக்கியம்- யஸ்மின் பஞ்ச பஞ்சஜநோ: ஆகாசஶ்ச ப்ரதிஷ்டி₂த: தமேவ மந்ய ஆத்மாநம்–எதில் ஐந்து ’பஞ் ஜந’ங்களும் ஆகாஸமும் நிலை பெற்றிருக்கின்றனவோ , அதுவே ஆத்மா
    ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதம் சொல்லும் ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? இல்லையா?
    பூர்வபக்ஷம் – இங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் சொல்லப்படுகிறது.
    பஞ்ச ஜந: என்ற சொல்லுக்கு ’ஐந்து பொருள்களின் ஸமுதாயம்/கூட்டம்’ என்று பொருள். ’பஞ்ச ’ என்றால் ஐந்து.-எனவே , ஐந்து பொருள்களைக் கொண்ட ஸமுதாயங்கள் ஐந்து உள்ளன என்று தெரிகிறது. அந்த 25 பொருள்களும் ஆகாஸமும் ஜீவாத்மாவால் தாங்கப்படுகின்றன என்று தான் இந்த வாக்கியம் கூறுகிறது.
    ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 25 பொருள்கள் தானே ? இங்கு 27 உள்ளனவே ? என்னில் – ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவற்றை ப்ரக்ருதி என்ற த்ரவ்யத்தின் குணங்களாகக் கொள்ளாமல் தனித் தனி த்ரவ்யங்களாகக் கொண்டால்-அசேதன தத்துவங்களே 26, அதற்கு மேல் ஜீவாத்மா 27ஆவது. எனவே அந்த எண்ணிக்கையும் பொருந்தும்.
    பரமாத்மா என்று ஒரு பொருளை ஏற்றுக் கொண்டால், 28 தத்துவங்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்த வாக்கியத்தில் வேதம் 25 + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27 தத்துவங்களையே சொல்கிறது. எனவே பரமாத்மா என்றொருவர் கிடையாது. எனவே ப்ரக்ருதி அவரால் இயக்கப்படுவதல்ல, ஸ்வதந்த்ரமானது தான். எனவே அதுவே தான் ஜகத்காரணம், பரமாத்மா அல்ல – என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

    உண்மையான தத்துவ எண்ணிக்கை
    ஸித்தாந்தம் – 1-ந ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி நாநா பா₄வாத் அதிரேகாத் ச
    ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி
    – 25 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட
    – (ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட ஸ்வதந்த்ரமான தத்துவங்கள் இங்கு சொல்லப்படுகின்றன என்பது) தவறு
    நாநா பா₄வாத் – அவற்றைக் காட்டிலும் வேறுபட்ட படியால் (பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டபடியால்)
    அதிரேகாத் ச – எண்ணிக்கை அதிகமாக உள்ள படியாலும்

    இங்கு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், அவை ஸாங்க்யர்கள் சொல்லும் பொருள்கள் என்று கொள்ள முடியாது, ஏனெனில் ’-நாநா பா₄வாத்’ – ஸாங்க்ய மதத்தில்-பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத தத்துவங்களே ஏற்கப் படுகின்றன ஆனால் இந்த வாக்கியத்தில் 25 பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் ஆதாரமாகவும் பரமாத்மாவே சொல்லப்படுகிறார். எனவே இவை வேறு.

    இங்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மா என்று கொள்ளலாமே ? எனில் – “அதிரேகாத் ச”- இங்குள்ள-தத்துவங்களின் எண்ணிக்கை ஸாங்க்யர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 24 அசித் + 1 ஜீவாத்மா = 25 தான். ஆனால் இங்கு 25 பொருள்கள் + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27
    பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று த்ரவ்யங்கள் என்று சொன்னதும் தவறு, பல ப்ரமாணங்களில் அவை குணங்கள் என்றே சொல்லப்படுகிற படியால். எனவே காலம் என்பதையும் சேர்த்து, 26 தத்துவங்களுக்கு ஆதாரமானவர் 27ஆவது தத்துவமான பரமாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.

    உண்மையில், ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத் அபி அதாவது-“25 என்ற எண்ணிக்கையை ஏற்றாலு ம்கூட” என்று ஸூத்ரம் உள்ள படியால், வேதவ்யாஸர் இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் – ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று’ஐவரின் கூட்டங்கள் ஐந்து’ சொல்லப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பொதுவான தன்மை
    வேண்டும். அது இங்கு இல்லை . 5 கர்மேந்த்ரியங்கள், 5 ஜ்ஞாநேந்த்ரியங்கள், 5 தந்மாத்ரங்கள் என்று சொன்னாலும் 5 பூதங்கள் என்றொரு கூட்டத்தை அமைக்க முடியாது, ’ஆகாஸம்’ தனியாக எடுக்கப்பட்டபடியால். மேலும், ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் ஆத்மா மனஸ் என்னும் ஐந்தையும் ஒரு கூட்டமாகத் திரட்ட எந்தப் பொதுவான தன்மையும்
    இல்லை . எனவே இங்கு 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொன்னதே தவறு.

    (ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது)

    வேத வ்யாஸரின் கருத்து
    பிறகு ’பஞ்ச பஞ்ச ஜநா:
    ’ என்பதன் பொருள் என்ன? பஞ்ச ஜநங்கள் என்று சிலருக்குப் பெயர் வழங்கப்படுகிறது.-அவர்கள் ஐவர் எனப்படுகிறது,-’ஏழு ஸப்தரிஷிகள்’ என்பது போல். அவர்கள் யார் என்கிறது அடுத்த ஸூத்ரம் –
    2- ப்ராணாதய ₃ : வாக்ய சேஷாத் – “ப்ராணன் முதலானவை , மீதமிருக்கும் வாக்கியத்தால்”
    விஷய வாக்கியத்துக்கு அடுத்து வரும் வாக்கியத்தில் -(ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷுஷஸ் சஷுஸ்: ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், அந்நஸ்ய அந்நம், மனஸோ யே மநோ விது₃:) அதாவது
    “ப்ராணனுக்குப் ப்ராணனாக, கண்ணுக்குக் கண்ணாக, காதுக்குக் காதாக, அந்நத்துக்கு அந்நமாக, மனதுக்குமனதாக அவர் இருக்கிறார்” என்று உள்ளது. அங்கும் ஐவர் சொல்லப்படுகிறபடியால், அந்த ப்ராணன் கண் காது அந்நம் மனஸ் என்று ஐவர் தான் பஞ்ச ஜநங்கள் என்று தெரிகிறது.
    கேள்வி – காண்வ சாகையில் இதே விஷய வாக்கியம் உள்ளது, ஆனால் அதற்கு மேல் வரும் ’ப்ராணஸ்ய ப்ராணம்’ என்ற வாக்கியத்தில் ’அந்நம்’ என்பது இடம் பெற வில்லை . எனவே 4 தான் அங்கு உள்ள படியால் ஐந்து பஞ்ச ஜனங்கள் வேறாகத்தானே இருக்க வேண்டும்? பதில் – அடுத்த ஸூத்ரத்தில் -3-ஜ்யோதிஷா ஏகேஷோம் அஸதி அந்நே
    ஏகேஷோம்
    ஒரு சிலர் ஓதும் காண்வ சாகையில்
    அஸதி அந்நே – அந்நம் சொல்லப்படாவிட்டாலும்
    ஜ்யோதிஷோ ஜ்யோதிஸ்-என்ற சொல்லைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம்
    காண்வ சாகையில் விஷய வாக்கியத்துக்கு முன்னால் (தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம்.: )என்று பரமாத்மாவை ஜ்யோதிஸ்ஸுக்களுக்கு (ப்ரகாஸம் கொடுக்கும் பொருள்களுக்கு) ஜ்யோதிஸ்ஸாக சொல்லப்படுகிறார். அவை எத்தனை என்றால்,
    ’பஞ்ச பஞ்ச ஜனா:’ என்று ஐவர் எனப்படுகிறது. ப்ரகாஸம் கொடுக்கும்
    ஐவர் என்றால் எது ஜ்ஞாநத்தை ஏற்படுத்தும் இந்த்ரியங்களையே நினைவு படுத்துகிறது. -எனவே பஞ்ச ஜனர்கள் என்பவை இந்த்ரியங்களே -சஷுஸ் கண். ஸ்ரோத்ரம் காது. ப்ராணன் என்றால் வாயுவை அறியும் தோல் என்ற இந்த்ரியம். மனஸ் மனது-அந்நம் என்ற சொல் மூக்கு நாக்கு என்ற இரண்டையும் சொல்கிறது.
    எனவே , இங்கு 25 என்ற எண்ணிக்கை சொல்லப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஸாங்க்ய மதம் சொல்லப்படவில்லை , பரமாத்மாவே சொல்லப்படுகிறார் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

    —————–

    1-4-4-காரணத்வாதி₄கரணம் ஸத் அஸத் இரண்டுமே ப்ரஹ்மம் தான்

    1-4-4-அதிகரணத்தின் பின்புலம்-1-4-4-காரணத்வாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’பொருள்கள் எல்லாம் ஒன்றால் தாங்கப்படுகின்றன’ என்று
    ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட்டபடியால் ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல என்று நிரூபித்தார் வ்யாஸர். அப்போது வேதாந்தத்தில் எங்கு ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட வில்லையோ அங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறது என்று கொள்ளலாமே என்று பூர்வபக்ஷீ கேட்கிறார்.

    (விஷய வாக்கியம் சொல்லி சந்தேகம் முன்பு எல்லாமே -இங்கு சந்தேகம் -பல ஜகத்காரண வாக்யங்களைக் பற்றிய சந்தேகம் -வேதாந்தமே குழப்புகிறது -என்பதே பூர்வ பக்ஷம்)

    ஸந்தேஹம் – வேதாந்தத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதியா? அல்லது பரமாத்மாவா ?
    பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் பல முரண்பட்ட வாக்கியங்கள் இருக்கிறபடியால் ’இதுதான் ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யவே முடியாது. எனவே ’ப்ரஹ்மமே ஜகத்காரணம்’ என்று நீங்கள் சொல்வது தவறு.

    சாந்தோக்ய உபநிஷத்தில் (्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது-’இந்த உலகு அனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்ததே ,-வேறு எந்தப் பொருளும் இல்லை ’ என்று சொல்லப்படுகிறது. ’இந்தக் குடங்கள் எல்லாம் முன்னால் மண் கட்டியாகவே இருந்தன’ என்று சொன்னால் குடங்களுக்கு மண் கட்டி தான் காரணம் என்று நாம் அறிவதுபோல் இந்த வாக்கியத்தால் ’இந்த உலகத்துக்கு ஸத் தான் காரணம்’ என்று அறியலாம். ஸத் என்றால் ’இருக்கும் பொருள்’ / ’உள்ள பொருள்’.

    தைத்திரீய உபநிஷத்தில் (्அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது அஸத்தாக அன்றோ இவ்வுலகம்-முன்னால் இருந்தது’ என்றுள்ள தால் அஸத் தான் ஜகத் காரணம் என்று தெரிகிறது. அஸத் என்றால் ’இல்லாதது’.

    ‘இருப்பது’,’இல்லாதது’ என்று மாற்றி மாற்றி ஜகத் காரணப் பொருள் சொல்லப்படுகிறபடியால் இதுதான் ஜகத்காரணப் பொருள் என்று வேதாந்தத்தைக் கொண்டு முடிவு செய்யவே முடியாது.-அப்படியே முடிவு செய்தாலும்,
    (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந்நாமரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ’ என்று இவ்வுலகம் ’அவ்யாக்ருதம்’ அதாவது பெயர் மற்றும் உருவத்தால் பிரித்து அறியப்பட முடியாதபடி இருந்தது, இப்போது பெயர் மற்றும் உருவத்தால் பிரிக்கப்படுகிறது’ என்றுள்ள தால் ஜகத்காரணம் =அவ்யாக்ருதம் = அவ்யக்தம் = மூலப்ரக்ருதி என்றுதான் முடிவு செய்யலாம்.-இந்த மூல ப்ரக்ருதியே நித்யமானபடியால் (எப்போதும் இருப்பதால்) ஸத் என்றும், வடிவங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் அஸத் என்றும் சொல்லப்படுகிறது. பரமாத்மாவை இப்படி ஸத் மற்றும் அஸத் என்று கூற முடியாது.

    (ஈஷதே -முளை தயார் நிலையில் உள்ள விதை போல் பிரகிருதி -ப்ரஹ்மம் -பெரியது -ஆத்மா -எங்கும் வியாபித்து இருப்பதால் -என்று அர்த்தங்கள் கொண்டு ப்ரக்ருதியையே சொல்வதாகக் கொள்ளலாம் -பூர்வ பக்ஷம்)

    வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்-(1) காரணத்வேந ச ஆகாசாதி₃ஷு யதா ₂வ்யபதி₃ஷ்டோக்தே:
    ஜகத்காரணம் பரமாத்மாவே தான் என்று முடிவு செய்யலாம்,
    யதா ₂வ்யபதி₃ஷ்டே — இது வரை ஸுத்ரங்களில் சொல்லப்பட்ட ஸர்வஜ்ஞனான பாபமற்றவரான (சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸர்வேஸ்வரேஸ்வரன் சர்வ நியந்தா இத்யாதியாக இதுவரை சொல்லப்பட்ட )பரமாத்மாவை
    ஆகாசாதி₃ஷு ச –-ஆகாசம் முதலானவற்றுக்கும் கூட
    காரணத்வேந –காரணமாக
    உக்தே: சொல்கிறபடியால்
    ’ஜகத்காரணம் இது தான்’ என்று சொல்வதற்கு முன்னவே அப் பொருளைப் பற்றி வேதம் பலவிதமான உபதேசங்களைச் செய்கிறது. அந்தப் பண்புகள் எல்லாம் ஒரு ஜ்ஞாநமுடைய பொருளுக்கே பொருந்தும்,-ப்ரக்ருதிக்குப் பொருந்தாது.

    தைத்திரீய உபநிஷத்தில் – (ப்₃ரஹ்ம வித் ஆப்நோதி பரம்) அதாவது
    ’ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் முக்தி அடைகிறான்’ என்று சொல்லி, (ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா) -அதாவது’முக்தியில் அந்த எல்லை யற்ற ஜ்ஞாநமுடைய ப்ரஹ்மத்தையே அடைகிறான்’ என்று சொல்லி, (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம ) அதாவது
    ’எப்போதும் மாறாமல் இருப்பதும்,-எல்லை யற்ற ஜ்ஞாநமுடையதும், அளக்க முடியாததுமாக இருப்பதே ப்ரஹ்மம்’ என்று மறுபடியும் அதற்கு-ஜ்ஞாநமிருப்பதையே அடையாளமாகக் கூறி, (தஸ்மாத்₃வா எதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது’அப்படிப்பட்ட இந்த ஆத்மாவிடமிருந்து தான் ஆகாஸம் தோன்றியது’ என்று ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது ஜ்ஞாநமுடைய பொருளை மட்டுமே குறிக்கக்கூடிய ’ஆத்மா ’ என்ற சொல்லாலே இப் பொருளைக் குறிக்கிறது.
    இதே போல் சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள ஸத்₃வித்₃யையிலும் (த தை ₃க்ஷத ப₃ஹு
    ஸ்யாம் ப்ரஜாயேயேதி)
    என்று ’அந்த ஸத் என்ற பொருள் பார்த்தது (எண்ணியது) –-நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன் என்று’ என்று ஜ்ஞாநமிருப்பதைச் சொல்கிறது.-எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் பகுதிகள் எல்லாம் ஜ்ஞாநமுடைய பரோத்மாவையே சொல்கின்றன.

    அஸத்’ என்று ஜகத்காரணம் சொல்லப்பட்டதே ? எனில், அதுவும் பரமாத்மாவே என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் -(2) ஸமாகர்ஷாத் – “ (ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மமே அந்த வாக்கியத்திலும்) இழுக்கப் படுகிறபடியால்”’அஸத்₃வா’ எனும் வாக்கியம் உள்ள ஸந்தர்பத்தைப் பார்த்தால் அதுவும் ப்ரஹ்மத்தைத் தான் சொல்லும். முதலில் (தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆநந்த₃மய:) அதாவது-’இந்த ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எல்லையற்ற ஆநந்தம் உடையவர்’
    என்றுள்ளதால் ஆத்மா என்ற சொல்லைக் கொண்டும் ஆநந்தம் இருப்பதைக் கொண்டும் இந்தப்பொருள் ஒரு சேதநன்(ஜ்ஞாநமுடையது) என்று அறியலாம்.

    பிறகு (ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருகஜத) அதாவது
    ’அந்தப் பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைத்தது’ என்று அந்தப் பொருளே ஜகத்காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் (தத₃ப்யேஷ ஸ்லோகோ ப₄வதி) அதாவது’அந்தப் பொருளைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் உள்ளது’ என்று கூறிவிட்டு (्அஸத் ₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது’இந்த உலகம் எல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன் அஸத்தாகவே இருந்தது, அதாவது அஸத் தான் ஜகத்காரணம்’ என்று சொல்லப்படுகிறது. எனவே , இதற்கு முன் சொல்லப்பட்ட ஜ்ஞாநமுடைய, ஆநந்தமுடைய, ஜகத்காரணமான
    பரமாத்மா தான் இந்த வாக்கியத்திலும் கண்டிப்பாக இழுக்கப்பட வேண்டும் (குறிக்கப்பட வேண்டும்), ப்ரக்ருதி அல்ல.-இதற்குப் பின்னாலும் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே ) அதாவது
    ’இந்தப் பொருளின் கட்டளைக்கு பயந்து காற்று, ஸூர்யன், அக்நி, இந்த்ரன், ம்ருத்யு முதலானவர்கள் இயங்குகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.-

    (ப்ருஹத் ஆரண்யாகாவில் –தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்-அதே உபநிஷத் –ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்றுஉள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-)-எனவே , அங்கும் இதே பரமாத்மா தான் இழுக்கப்பட வேண்டும், ப்ரக்ருதியால் யாரையும் ஆள முடியாதபடியால்.ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம். அது எல்லா சேதனங்கள் மற்றும் அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டது.-அப்படிப்பட்ட ப்ரஹ்மம் நித்யமாக இருக்கிறபடியால் அதுவே ஸத் எனப்படுகிறது. இப்போது சிங்கம், மனிதன், மலை , புத்தகம் என்று பல பெயர்களோடும் உருவங்களோடும் இருந்தாலும், ப்ரளய காலத்தில் இந்தப் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளோடு இல்லாதபடியால் ’அஸத்’ (இல்லாதது) என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவ்யாக்ருதம் என்ற ப்ரக்ருதி தான் ஜகத்காரணம் என்று சொன்னாலும், ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மா என்றே பொருள்.-எனவே வேதாந்தத்தைக் கொண்டு ப்ரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்று நிச்சயிக்க முடியும் என்கிறார் வ்யாஸர்–

    —————

    1-4-5—ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-ஜீவனே ப்ரக்ருதியை இயக்க முடியாதா?

    1-4-5-அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – இதுவரை 4 அதிகரணங்களில் ப்ரதானமே ஸ்வதந்த்ரமான ஜகத்காரணம் என்று பூர்வபக்ஷீ சொன்னதை வ்யாஸர் கண்டித்தார் – ஒரு அறிவுடைய ஆத்மாவால் இயக்கப்பட்டால் மட்டுமே அறிவற்ற அசேதனப் பொருளான ப்ரக்ருதி இயங்க முடியும் என்று கூறி. இப்போது அதே ஸாங்க்யர்கள் மறுபடியும்
    கேள்வி எழுப்புகிறார்கள் – சரி, ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கவில்லை , ஜிவாத்மாவால் இயக்கப்பட்டு தான் படைக்கிறது என்று கொள்ளலாம், அப்போதும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வது தவறு தான் என்று.
    விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆம் அத்யாயத்தில் முதல் ப்ராஹ்மணம் – பா₃லாகி ப்₃ராஹ்மணம்-த்₃ருப்த பா₃லாகி: ஹ அநூசாநோ கா₃ர்க்₃ய ஆஸ । ஸ ஹோவாச அஜாத ஶத்ரும் காஶ்யம் – ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணீதி । ஸ ஹோவாச அஜாத ஶத்ரு꞉ ஸஹஸ்ர மேதஸ்யாம் வாசி த₃த்₃ம: இதி--கர்க கோத்ரத்தைச் சேர்ந்த பாலாகி என்பவன் வேதத்தின் அங்கங்களைக் கற்று- ஆனால் வேதத்தின் உண்மைப் பொருளை
    ஆராய்ந்து அறியாமல், (ஸ்ரோத்ரியன் -வேதம் முழுவதும் அறிந்தவன் –அநூசாநன் -அங்கங்களை மட்டுமே அறிந்தவன்)ஆனால் மிகவும் கர்வம் உடையவனாய் இருந்தான். அவன் சிறந்த ஆத்ம ஜ்ஞாநியான காசீ தேசத்து அரசன் அஜாத சத்ருவிடம் சென்று கூறினான் – “உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று. அரசன் ப்ரஹ்மத்தை உணர்ந்திருந்தாலும் பாலாகியை ஊக்குவிப்பதற்காக உனக்கு ஆயிரம் மாடுகள் பரிசளிப்பேன் என்றான்.

    ய ஏவ அஸஸௌ ஆதி₃த்யே புருஷ ஏதமே வ அஹம் ப்₃ரஹ்ம உபாஸ இதி । மா ஏதஸ்மிந் ஸம்வதி₃ஷ்டா₂ । அதிஷ்டா₂꞉ ஸர்வேஷாம் பூ₄தாநாம் மூர்தா₄ ராஜேதி வா அஹமேதமுபாஸ இதி-’ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் ’ என்று பாலாகி கூற,
    ’அந்தப் புருஷனைப் பற்றி என்னிடம் பேசாதே , நான் அவனை ஜீவ ராசிகளுக்கும் சிறந்தவன் என்று அறிவேன், அவன் ப்ரஹ்மம் அல்ல’ என்றார் அரசன்.
    இதே போல் சந்த்ரன் மின்னல் ஆகாஸம் வாயு அக்₃நி ஜலம் கண்ணாடி பிரதி த்வனி திசைகள் நிழல் உடல் முதலானவற்றுக்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல, அது அனைத்தையுமே தவறு என்றார் அஜாத சத்ரு.

    அஜாத சத்ருவின் உபதேசம்
    ஸ ஹ தூஷ்ணீமாஸ கா₃ர்க்₃ய꞉| ஸ ஹோவாசா ஜாதஶத்ரு: – ஏதாவந்நூ இதி | ஏதாவத்₃தீ₄தி । நைதாவதா விதி₃தம் ப₄வதீதி । ஸ ஹோவாச கா₃ர்க்₃ய – உப த்வா யாநீதி
    -இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் பாலாகி மவ்னமாக நின்றான். ’அவ்வளவு தானா?’ என்று அஜாத சத்ரு கேட்க,-’ஆம் நான் அவ்வளவு தான் அறிவேன்’ என்று பாலாகி சொல்ல,
    ’இத்தால் நீ ப்ரஹ்மத்தை அறிய முடியாது’ என்று அரசன் கூறினான். பாலாகி உடனே ’உம்மிடமே நான் ப்ரஹ்மத்தைப் பற்றி கற்கிறேன்’ என்றான்

    யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய:-நீ சொன்ன புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர் (இதுவே விஷய வாக்கியம் -நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் )
    ஸந்தேகம் – ஜகத்காரணத்தைப் பற்றிச் சொல்லும் வேதாந்த வாக்கியங்களில் ப்ரக்ருதியை இயக்குபவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?அதை முடிவு செய்வதற்கான விசாரம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவனா? பரனா?-அறியப்பட வேண்டியவர் ஜீவன் என்றால், பரமாத்மா என்ற ஓருவரே இல்லை என்றாகும், எனவே ஜீவன் தான் ப்ரக்ருதியை இயக்க வேண்டும். அறியப்பட வேண்டியவர் பரமாத்மா என்றால் அவரே ப்ரக்ருதியை இயக்குபவர்.
    பூர்வபக்ஷம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான். ஏனெனில் –1- (’யஸ்ய வா ஏதத் கர்ம’) அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்றுள்ளது. கர்ம என்ற சொல்லுக்குப் பொதுவாக பாபம் மற்றும் புண்ணியம் என்று தான் பொருள். எனவே , இங்கு அறியப்படுபவராகச் சொல்லப்படுபவருக்கு பாப புண்யங்கள் உள்ளன என்று அஜாத சத்ரு கூறுகிறபடியால் அவர் உலகில் இன்ப துன்பங்கணள அநுபவிக்கும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க முடியும். பரமாத்மாவை ஒப்புக் கொள்பவர்கள் அவருக்கு பாப புண்யங்கள் உண்டு என்று ஏற்பதில்லையே

    (செயப்படும் பொருள் -கர்மம் -கர்த்தா -செய்பவன் -என்ற பொருள்களும் உண்டே-குடம் குயவன் போல்–ஸித்தாந்தி சொல்வர்-இந்தப் புருஷர்களை உண்டாக்கியவர் எவனோ -முதலில் சொல்லி -இப்பொருள்கள் கொண்டால் புனர் யுக்தி தோஷம் வருமே-ப்ரஸித்தி பாபபுண்யங்களையே சொல்லும் -பூர்வ பக்ஷம் )

    பூர்வபக்ஷியின் யுக்திகள்
    2-தௌ ஹ புருஷம் ஸுப்தம் ஆஜக்₃மது: | தம் ஏதை தாமபி₄: ஆமந்த்ரயாம்சக்ரே | ஸ உத்தஸ்தௌ₂ | தம் பாணினா ஆபேஷம் போ₃த₄யாம்சகார | ஸ ஹ உத்தஸ்தௌ₂–
    அவர்களிருவரும் ஒரு தூங்கும் மனிதனிடம் சென்றார்கள். அவனை அஜாத சத்ரு பெயரால் அழைத்தும் அவன் எழ வில்லை . பிறகு கையால் அசைத்து எழுப்ப, அவன் எழுந்தான்.-இப்படி உபதேசம் உள்ளபடியால், தூக்கம் விழிப்பு முதலானவற்றை யுடைய ஜீவனே இங்கு சொல்லப்படுகிறார்.
    3-தத்₃யதா₂ ச்ரேஷ்டீ₂ ஸ்வை : பு₄ங்க்தே யதா₂ ஸ்வா: ச்ரேஷ்டி₂னம் பு₄ங்ஜந்தி ஏவமேவ ஏஷ ப்ரஜ்ஞாத்மா ஏதை : ஆத்மபி₄: பு₄ங்க்தே ஏவமேவ ஏதே ஆத்மா : ஏநம் பு₄ஞ்ஜந்தி-எப்படி ஒரு சான்றோனை அவன் சுற்றத்தா ரெல்லாம் மகிழ்விப்பார்களோ அதுபோல் இந்த ஆத்மாவை நீ சொன்ன புருஷர்கள் எல்லாம் மகிழ்விக்கிறார்கள் -இப்படி உலகிலுள்ள ஜீவ ராசிகளால் மகிழ்பவராகச் சொல்லப்படும் ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்கமுடியும்.

    4-க்வ ஏஷ ஏதத்₃பா₃லாகே புருஷ: அசயிஷ்ட? அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி | ஸ யதா₃ ப்ரதிபு₃த்₄யதே ஆத்ம : ப்ராணா: யதா₂யததம் விப்ரதிஷ்ட₂ந்தே , ப்ராணேப்₄ய: தே₃வா:, தே₃வேப்₄ய: லோ கா:-இவன் தூங்கும் போது எங்கு சென்றான்? எங்கிருந்து வந்தான்? ப்ராணனோடு தொடர்புபட்ட ஆத்மாவிடம் அனைத்தும் ஒன்றாகிறது. விழிக்கும் போது அங்கிருந்து மூச்சுக் காற்று, புலன்கள் எல்லாம் பிரிந்து வருகின்றன.(ஹிதம் என்னும் நாடிகளில் இருக்கிறான் -இந்திரியங்கள் மனம் அனைத்தும் அடங்கி விடும் -இவரிடம் லயம் அடைகின்றன –இவர் விழிக்கும் பொழுது தங்கள் தங்கள் இடம் செல்கின்றன )-இங்கும் ப்ராணனோடு கூடிய ஆத்மா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.-எனவே ’ப்ரஹ்மத்தைக் கூறுகிறேன்’ என்று பாலாகி தொடங்கி, சொல்ல முடியாமல் திகைத்து, பதிலுக்கு அஜாத சத்ரு’ஜீவாத்மா தான் அறியப்பட வேண்டியவர்’ என்று உபதேசிக்கிறபடியால், ஜீவாத்மா தான் ப்ரஹ்மம், ஜகத்காரணம்.

    1.4.5 ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-பரமாத்மா படைத்த உலகில் ஜீவாத்மா வாழ்கிறார்

    கர்ம எனப்படுவது பாப-புண்யங்கள் அல்ல
    ஜகத்வாசித்வாதிகரணம் – பூர்வபக்ஷம் (யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய: ) அதாவது“ஸூர்யன் சந்த்ரன் மின்னல் வானம் முதலான புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர்” என்று அஜாத சத்ரு பாலாகிக்கு உபதேசித்தார். கர்ம என்றால் பாபமும் புண்ணியமும்.அவற்றைக் கொண்டவர் ஜிவாத்மாவே . எனவே ஜீவாத்மாவே ப்ரஹ்மம்-இங்கு ’அவர் அறியப்பட வேண்டியவர்’ என்றதுக்கு ’பாப புண்யங்களோடு கூடின ஸம்ஸாரத்திலிருக்கும் ஜிவாத்மா அறியப்பட வேண்டியவர்’ என்று பொருள் அல்ல. ’முக்தி அடைந்த நிலையில் இருக்கும் தூய்மையான ப்ரக்ருதி வியுக்த (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட) ஆத்ம ஸ்வரூபம் அறியப்பட வேண்டும்’ என்று தான் பொருள். அதை அறிந்தால் தான் முக்தி கிடைக்கும்.

    ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
    1- ஜக ₃த்₃வாசித்வாத் –(கர்ம என்ற சொல்) உலகத்தைச் சொல்வதான படியால்”-விஷய வாக்யத்தில் உள்ள கர்ம என்ற சொல் இந்த உலகத்தைத் தான் குறிக்கிறது. ’கர்ம’ என்றால் ’செயப்படு பொருள்’. -பரமாத்மா செய்யும் படைத்தல் என்ற செயலில் செயப்படு பொருளாக உலகம் உள்ளது, அதாவது இவ்வுலகம் அவரால் படைக்கப்படுகிறது. எனவே அதுவே கர்ம. இச் சொல் பாப-புண்யங்கண பின்வரும் காரணங்களால் குறிக்க இயலாது

    (ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்-ஏன் எனில்-கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் – க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
    இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால் -ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து )

    1- ’ஏதத் கர்ம யஸ்ய’ அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்கிற இடத்தில் ’இந்த’ என்ற சொல் உள்ளது. அது கண் வட்டத்தில் அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும். புலன்கள் முதலான ப்ரமாணங்களால் அறியப்படும் அருகிலுள்ள பொருள் இந்த ஜகத் (உலகம்) தான், பாப-புண்யங்கள் அல்ல.
    2-இதற்கு முன் பாலாகி சொன்ன ஸூர்யன், சந்திரன், வானம், அக்நி முதலானவற்றில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் கர்மத்துக்கு வசப்பட்டவர்கள். அவர்களை யெல்லாம் ப்ரஹ்மமல்ல என்று நிராகரித்து விட்டு, அவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒருவரை உபதேசிக்கத் தொடங்கிய அஜாத சத்ரு மறுபடியும் பாப-புண்யங்களை உடைய ஒரு ஆத்மாவை ப்ரஹ்மம் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது. எனவே இங்கு கர்ம என்ற சொல் பாப-புண்யங்களைக் குறிக்க இயலாது, உண்டாக்கப்படும் இந்த உலகத்தையே குறிக்க வேண்டும்.

    பூர்வபக்ஷத்தைத் தகர்த்தல்
    3-பூர்வபக்ஷத்தில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படுகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருள் பொருந்தாதபடியால் அதோடு தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர்.-எடுத்துக்காட்டு – ’வகுப்பறை சத்தமிடுகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள ’வகுப்பறை ’ என்ற சொல்லுக்கு
    முக்கியமான பொருள் ஓர் அறை . ஆனால் அறை சப்தமிட முடியாது. எனவே அப் பொருளை விட்டு, ’வகுப்பறையில் இருப்பவர்கள்’ என்று தொடர்புடைய மற்றொரு பொருளைக் கொள்கிறோம். அப்போது பொருள் பொருந்தும்.
    அதே போல் இங்கும் ’கர்மம் யாருக்கு உள்ளதோ அவரை அறிய வேண்டும்’ என்று சொற்றொடர் உள்ளது. ஆனால் ’அவரை ’ என்ற சொல்லுக்கு ’கர்மங்களை உடையவரை ’ என்று பொருள் கொள்வது பொருந்தாது, ஏனெனில் ஸாங்க்ய மதத்தின்படி ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவின் நிலையை அறிவதால் முக்தி கிடைக்காது. எனவே அந்தச்
    சொல்லுக்கு ’முக்திக்குப் பின் தூய்மையான நிலையில் இருக்கும் ஆத்மா’ என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. எனவே ’அவர்’ என்ற சொல்லில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படும்.
    4- மேலும், பூர்வ பக்ஷத்தில் ’இந்தக் கர்மம் யாருடையதோ ’ என்றவிடத்தில் உள்ள ’இந்த’ என்ற சொல் வீணானது.
    5-ஸித்தாந்தத்தில் ’ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , இந்த உலகத்தைப் படைத்தவர் யாரோ ’ என்று ஒரே பொருள் இரண்டு முறை கூறப்படுகிறபடியால் ’புநருக்தி’ (திரும்பச் சொல்லுதல்) என்ற குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் அது வராது, இரண்டாவது வாக்கியம் பொதுப்படையாகச் சொல்கிறபடியால். ’இந்த
    ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , அவ்வளவு ஏன், இந்த உலகமே யாருடைய படைப்போ , அவரை அறிய வேண்டும்’ என்று அஜாதசத்ரு சொல்கிறபடியால் புநருக்தி இல்லை . ப்ரஹ்மத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
    6-பூர்வ பக்ஷத்தில் ’இந்த ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ ’ என்றுள்ள வாக்கியம் ஜீவாத்மாவைப் பற்றினது என்று கூறுகிறார்கள். அது பொருந்தாது. ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் எல்லாம் படைக்கப் பட்டாலும், ஜீவாத்மா இந்தப் பிறவிகளை அடைந்தாலும், அவர் இந்தப் பொருள்களை படைப்பதே இல்லை . ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப பரமாத்மாவால் படைக்கப்பட்ட பொருள்களைத் தான் ஜீவாத்மா உபயோகிக்கிறார். எனவே அஸம்பவம் (பொருந்தாமை ) என்ற தோஷமும் வரும்.
    இப்படி பல தோஷங்கள் பூர்வ பக்ஷத்தில் உள்ள படியால், ஸித்தாந்தத்தில் தோஷமில்லாதபடியால் இதுவே சரியானது.

    மற்றவர்களைப் பற்றின பேச்சு எதற்கு?
    கேள்வி –
    அஜாதசத்ரு பரமாத்மாவைப் பற்றி தான் உபதேசிக்கிறார் என்றால் ஏன் இங்கு தூக்கம், விழிப்பு, உறவினர்களால் மகிழ்தல் முதலான ஜீவாத்மாவைப் பற்றின அடையாளங்களும், தூங்கும் போது புலன்கள் எல்லாம் ப்ராணனில் ஒன்றி விடுகின்றன என்று ப்ராண வாயுவைப் பற்றின பேச்சும் உள்ளது?
    பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
    2-–्ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந தத்₃வ்யாக்₂யாதம்

    ஜீவ முக்₂யப்ராண லிங்கா₃த் ந – ஜீவனின் அடையாளங்களும் மூச்சுக் காற்றைப் பற்றின பேச்சு என்கிற அடையாளமும்-இங்கு உள்ள படியால் இங்கு சொல்லப் படுபவர் பரமாத்மா அல்ல
    இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
    தத்₃வ்யாக்₂யாதம் – அது முன்னமே விவரிக்கப்பட்டது
    1-1-11-இந்த்ரப்ராணாதிகரணத்தில் இதே போல் ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் செய்த உபதேசத்தில் இந்த்ரன் என்ற ஜீவாத்மாவைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் உபதேசமிருந்தது. ஆனால் அங்கு இவ்வாறு முடிவு செய்தோம் –உப க்ரமம் (தொடக்கம்) மற்றும் உப ஸம்ஹாரம் (முடிவு) என்ற இரண்டிலும் பரமாத்மாவே பேசப்படுகிறபடியால்
    இந்தப் பகுதி அவரையே சொல்கிறது. எனவே இந்த்ரன் மற்றும் மூச்சுக் காற்று சொல்லப்படும் இடங்களிலும் அவற்றுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா தான் கொள்ளப் பட வேண்டும்.
    அதே போல் இங்கும் தொடக்கத்தில் ’ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணி’ (உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசிக்கிறேன்) என்று உள்ளது, நடுவில் ’யஸ்ய வா ஏதத் கர்ம’ (இந்த உலகமே யாரால் படைக்கப்பட்டதோ ) என்றுள்ளது, முடிவில் ’ஸர்வாந் பாப்மந: அபஹத்ய ஸர்வேஷாம் பூ₄தாநாம் ச்ரைஷ்ட்₂யம் ஸ்வாராஜ்யம் ஆதி₄பத்யம் பர்யேதி’ (இந்த ப்ரஹ்மத்தை
    அறிபவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்) என்றுள்ளது. எனவே , இந்த உபதேசமே பரமாத்மாவைப் பற்றினது.
    இந்த்ரன் மற்றும் ப்ராணனுக்கு அந்தர்யாமியாகப் பரமாத்மாவைச் சொல்வதன் பயன் என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லபட்டது – பரமாத்மாவை தானாகவும், ஜீவனுக்கு அந்தர்யாமியாகவும், அசேதனத்துக்கு அந்தர்யாமியாகவும்-மூன்று விதத்தில் உபாஸநம் செய்ய வேண்டும் என்று இங்கு காட்டப்படுகிறது என்று. இங்கும் அதே போல் ப்ராண வாயுவைப் பற்றின பேச்சு, ப்ராணனை அந்தர்யாமியாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று சொல்வதற்காக வந்துள்ளது. எனவே , பூர்வ பக்ஷியின் கேள்விக்கு முன்னமே பதில் அளிக்கப்பட்டு விட்டது.

    பரமாத்மாவின் அரவணைப்பு
    கேள்வி
    – ஜீவனைப் பற்றின பேச்சு இங்கு எதற்காக வருகிறது?
    பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
    3-அந்யார்த₂ம் து ஜைமிநி: ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் அபி சைவமேக
    அந்யார்த₂ம் து
    – (இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்வது) வேறொரு ப்ரயோஜநத்துக்காக, அதாவது பரமாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக, (ஜீவாத்மாவே அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் என்று சொல்வதற்காக அல்ல)
    ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
    ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் – கேள்வியையும் பதிலையும் கொண்டு இதை அறியலாம்
    அபி ஏவம் ஏகே – மேலும் ஒரு சிலர் இவ்வாறே ஓதுகிறார்கள்
    இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை எழுப்புவதைப் பற்றின பேச்சு ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக அல்ல என்று அதற்குப் பின் வரும் கேள்வியையும் பதிலையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
    அஜாத சத்ருவின் ப்ரஸ்நம் (கேள்வி) இவ்வாறு உள்ளது – ’இதுவரை தூங்கும் போது இந்த ஜீவாத்மா எங்கு இருந்தான்?’
    ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதாக இருந்தால் ’இவன் யார்’ என்று தான் கேட்க வேண்டும். இங்கு அவர் இருந்த இடத்தைப் பற்றித் தான் கேள்வி உள்ளது. எனவே ஜீவாத்மாவைப் பற்றின பேச்சு அவரைப் பற்றி உபதேசிக்க அல்ல.
    அஜாத சத்ருதுவின் வ்யாக்யானம் (பதில்)
    (யதா₃ ஸுப்த: ஸ்வப்நம் ந கத₂ஞ்சந பஸ்யதி அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி,
    ஏதஸ்மாத் ஆத்மந: ப்ராணா : யதா₂யதநம் விப்ரதிஷ்ட்₂ந்தே )
    அதாவது
    ’ஜீவாத்மா தூங்கும் போது ப்ராணனில் ஒன்றி விட்டு, பிறகு அந்த ஆத்மாவிடமிருந்து எழுந்து வருகிறார்’ என்றுள்ளது. இங்கு ப்ராணன் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மாவே , ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களிலும் ஜீவன் தூங்கும் போது பரமாத்மாவோடு ஒன்றி, தன் களைப்பை எல்லாம் போக்கிக் கொள்கிறான் என்று தான் சொல்லப்படுகிறது.
    கடைசியாக, சுக்ல யஜுர் வேதத்தில் நேரடியாகவே (ஏஷ புருஷ: த்தா₃
    ய ஏஷ அந்தர் ஹ்ருத₃ய ஆகாச: தஸ்மிந் சேதே )
    அதாவது
    ’ஜீவாத்மா தூங்கும் போது இதயத்தில் இருக்கும் ஆகாசத்தில்-(பரமாத்மாவிடம்) சயனிக்கிறார்’ என்று ஓதப்படுகிறபடியாலும் இவ்வர்த்தத்ணத அறியலாம்.
    எனவே இங்கு அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் பரமாத்மாவே . அவரே ப்ரக்ருதியை இயக்கி உலகைப் படைக்கிறார்.

    (பிராணன் பரமாத்மாவைச் சொல்லி அடுத்த பிராணன் ஜீவாத்மாவைச் சொல்லும் -உபநிஷத் இவ்வாறு குழப்பம் அடையும்படி இருப்பதாலேயே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ பாஷ்யமும் வேண்டி இருக்கின்றன)

    —————-

    1.4.6-வாக்யாந்வயாதி₄கரணம்-நம் உறவினர்களைப் ப்ரியமாக ஆக்குபவர் பரமாத்மாவே

    அதிகரணத்தின் பின்புலம்
    1-4-6-வாக்யாந்வயாதி₄கரணம் – ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் ’கர்மம் யாருடையதோ அவர் அறியப்படவேண்டும்’ என்று சொற்றொடர் இருந்தாலும், ’கர்மம் யாருடையதோ அந்த ஆத்மாவின் தூய்மையான முக்தி அடைந்த நிலையை அறிய வேண்டும்’ என்று கஷ்டப்பட்டு பொருளை உரைத்தார் பூர்வபக்ஷீ. இவ்வதிகரணத்தில் அப்படி எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிமையாக ஜீவாத்மா தான் ப்ரக்ருதியை இயக்கிப் படைக்க வைக்கிறார் என்கிறார் பூர்வபக்ஷீ

    விஷய வாக்யம் – மைத்ரேயீ ப்₃ராஹ்மணம் – ப்₃ருஹதா₃ரண்யக உபநிஷத் 2ஆம் அத்யாயம் 4ஆம் ப்ராஹ்மணம்-உத்₃யாஸ்யந்வா அரே அஹம் அஸ்மாத் ஸ்தா₂நாத் அஸ்மி । ஹந்த தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி-யாஜ்ஞவல்க்யர் இல்லற வாழ்க்கையைத் துறக்க விரும்பி, மைத்ரேயீ காத்யாயநீ என்ற தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே மைத்ரேயியைப் பார்த்து இவ்வாறு கூறினார் – “மைத்ரேயீ! நான் இந்த க்ருஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து விலகப் போகிறேன், எனவே உனக்கும் காத்யாயனிக்கும் செல்வத்தைப் பிரித்து முடிவு செய்கிறேன்” என்று.
    யந்நு ம இயம் ப₄கோ ₃꞉ ஸர்வா ப்ருதி₂வீ வித்தேந பூர்ணா ஸ்யாத் கத₂ம் தேநாம்ருதா ஸ்யாமிதி । நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்யோ , அம்ருதத்வஸ்ய து ந ஆஶா அஸ்தி வித்தேந
    மைத்ரேயீ கேட்டாள் – “பெரியவரே ! இந்த உலகத்தை யெல்லாம் செல்வத்தால் நிரப்பிக் கொடுத்தாலும் அதைக் கொண்டு நான் மரணமில்லாத நிலையை அடைய முடியுமா?” என்று. யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “முடியாது,செல்வத்தால் முக்தியை ஒருநாளும் அடைய முடியாது” என்று யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் । யதே₃வ ப₄க₃வாந் வேத₃ ததே ₃வ மே ப்₃ரூஹீதி-மைத்ரேயீ கூறினாள் – “எதைக் கொண்டு என்னால் முக்தி அடைய இயலாதோ அது எனக்கு வேண்டாம். முக்தி அடைவதற்கு நீர் எந்த வழியை அறிந்திருக்கிறீரோ அதையே எனக்கும் சொல்ல வேண்டும்” என்று-ப்ரியா ந: ப்ரியம் பா₄ஷஸ ஏஹ்யாஸ்ஸ்வ வ்யாக்₂யாஸ்யாமி தே--யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “இவ்வாறு நீ கூறியதால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. வா! அமர்வாய்! உபதேசிக்கிறேன்!”

    பூர்வ பக்ஷியின் யுக்திகள்
    ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப₄வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப₄வதி-
    கணவன் தன்னுடைய எண்ணத்தால் தன் மனைவிக்குப் ப்ரியமானவனாக ஆவதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான்-இதே போல் ஜாயா (மனைவி), புத்ரன் (மகன்), வித்தம் (செல்வம்), லோகங்கள், தேவர்கள், பூதங்கள், அனைத்துமே அதனதன் எண்ணத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான் என்று உபதேசித்தார்.
    ஆத்மா வா அரே த்₃ரஷ்டவ்ய꞉ ஶ்ரரோதவ்யோ மந்தவ்யோ நிதி₃த்₄யாஸிதவ்யோ । ஆத்மநோ வா அரே விஜ்ஞாநேந இத₃ம் ஸர்வம் விதி₃தம்-அந்த ஆத்மா தான் கேட்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும், த்யானிக்கப்பட வேண்டும், காணப்பட வேண்டும்.-அந்த ஆத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்.

    ஸந்தேஹம் – இந்த அத்யாயத்திலேயே ஜகத்காரணம் யார் என்ற ஆராய்ச்சியே செய்யப் படுகிறபடியால், இங்கு முக்கியமான கேள்வி – “ஜீவாத்மாவால் இயக்கப் படும் ப்ரக்ருதி ஜகத் காரணமா? அல்லது பரமாத்மா ஜகத்காரணமா? என்று. அதற்காக இங்கு ஆராயப்படுவது – இந்த விஷய வாக்கியத்தில் கேட்டு, ஆராய்ந்து, த்யானித்து காணப்பட
    வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா பரமாத்மாத்வா என்று.
    பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவே , ஏனெனில் இங்கு தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவரே சொல்லப்படுகிறார்.
    தொடக்கத்தில் – கணவன் மனைவி குழந்தை செல்வம் முதலானவற்றோடு தொடர்புடைய ஆத்மா ஜீவாத்மாவே
    நடுவில் -(விஜ்ஞாநக₄ந ஏவ ஏதேப்₄யோ பூ₄தேப்₄ய꞉ ஸமுத்தா₂ய தாந்யேவ அநுவிநஶ்யதி) அதாவது இந்த ஜ்ஞாந வடிவமான ஆத்மா உடலோடு தோன்றுகிறார், உடல் அழியும் போது
    அழிகிறார் என்று சொல்லப் படுகிறபடியால் இங்கும் ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்.
    முடிவில் – (्விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்று அறிவுள்ள ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்-முக்திக்கான வழியை அன்றோ மைத்ரேயீ கேட்டாள்? ஆம், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை அறிந்தாலே முக்தி -ஜீவாத்மாவை அறிந்தால் அனைத்தையும் எப்படி அறிந்ததாகும்? எல்லா ஜீவாத்மாக்களும் ஸமமாகவே உள்ள படியால்

    வ்யாஸரின் பதில்
    ஸித்தாந்தம் – 1-(வாக்யாந்வயாத் ्
    – “இங்குள்ள வாக்கியங்களின் பகுதிகள் (நன்கு) அன்வயிப்பதற்காக”-யாஜ்ஞவல்க்யர் கூறும் வாக்கியப் பகுதிகளின் பொருள் ஒன்றொடொன்று பொருந்த வேண்டும், மேலும் அது மற்ற உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பொருளோடும் பொருந்த வேண்டும். எனவே பரமாத்மாவே இங்கு கூறப்படுகிறார்.
    (1)-முக்தி அடையும் வழியைக் கேட்ட மைத்ரேயிக்கு யாஜ்ஞவல்க்யர் இந்த ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கிறபடியால், இந்த ஆத்மா பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களில் எல்லாம் பரமாத்மாவை அறிந்து த்யானித்தால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    (2)-(அஸ்ய மஹத: பூ₄தஸ்ய நி:ச்வஸிதம் ஏதத் யத் ருக்₃வேத₃: ) அதாவது இந்த ஆத்மாவிடமிருந்து தான் உலகமெல்லாம் உண்டாயிற்று என்று சொல்கிறபடியால், அது பரமாத்மாவே .
    (3)-ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்த்தாகும் என்று சொன்னதும் பரமாத்மாவுக்கே பொருந்தும், அவரே அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கிறார். ஜீவாத்மாக்கள்அனைவரும் ஸமமாக இருப்பதால், ஒருவரை அறிந்தால் அனைவரையும் அறிந்ததாகும் என்றாலும், ஜீவாத்மாவை
    அறிந்தால் அறிவற்ற அசேனப் பொருளை அறிந்ததாக ஆக முடியாது. அது பரமாத்மாவுக்கே பொருந்தும்.

    (4)(्மஹத்₃பூ₄தம் அநந்தம் அபாரம்) அதாவது பெரியது, எல்லை யற்றது, கடக்க முடியாதது என்று சொல்லப்படும் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக்கூடியவை .-ந வா அரே பத்யு: காமாய’ என்ற வாக்கியத்தின் பொருள் – “கணவன் மனைவி மகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தால் நமக்குப் ப்ரியமானவர்களாக ஆவதில்லை , பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் ஆகிறார்கள்” என்று.
    அதாவது, தன்னை உபாஸிக்கும் ஒரு பக்தனுக்கு பகவானே தன்னுடைய அருளால் கணவன் மனைவி குழந்தைகள் செல்வம் முதலானவற்ணற ப்ரியமாக ஆக்கி, அவற்றை வழங்குகிறார் என்று பொருள். எனவே கணவன் மனைவி செல்வம் முதலான சிறிய இன்பங்களைக் கை விட்டு, இவற்றுக்கெல்லாம் ஊற்றாக, எல்லை யற்ற ஆநந்தமே
    வடிவானவரான பரமாத்மாவைத் தான் கேட்க வேண்டும், ஆராயவும், த்யானிகவும் வேண்டும் என்று கருத்து. இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இயற்கையாக நமக்குப் பிடித்ததாகவோ பிடிக்காத்தாகவோ இருப்பதில்லை , இடம் காலம் சூழ்நிலை பொருத்து தான். ஆனால் பரமாத்மா மட்டுமே மாறாமல் எப்போதும் ப்ரியமாகவே இருப்பவர்.

    (தனது பக்தனுக்கு பிரியமாக இருக்க பகவானே ஸங்கல்பிக்கிறான் -என்கிறார் ராமானுஜர்)

    ஜீவாத்மாவே பரமாத்மாவா?
    இவ்வாறு இந்த உபதேசம் முழுவதுமே பரமாத்மாவைப் பற்றினது என்று நிரூபிக்கப் பட்டபடியால், இடையில் ஜீவாத்மாவைச் சொல்லும் சொற்களும் கூடப் பரமாத்மாவையே குறிக்கின்றது. அது எப்படி எனில் –
    2-ப்ரதிஜ்ஞாஸித்₃தே ₄: லிங்க₃ம் ஆஸ்மாத்₂ய: – “இங்கு சொல்லப்பட்ட ப்ரதிஜ்ஜை ( சபதம்) நிறைவேறியதற்கு இது அடையாளம் என்கிறார் ஆச்மாத்யர் என்ற ரிஷி”-இந்த ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று இங்கு ஒரு ப்ரதிஜ்ஜை ( சபதம்) உள்ளது. அது நிறைவேறியதற்கான அடையாளம் தான் இங்கு ஜீவாத்மாவைச் சொல்லும் சொல் பரமாத்மாவைக் குறிப்பது என்பது. -உலகில் காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று என்று அறிவோம். குடம் என்ற பொருளை அதற்குக் காரணமான பொருளைக் குறிக்கும் மண் என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். அதே போல், ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து உண்டாகி, அவரிடமே லயம் அடைகிறார்; அவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல;ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கும், பரமாத்மாவை அறிந்தால் அனைத்தும் அறியப்பட்டதே .

    3-(உத்க்ரமிஷ்யத: ஏவம் பா₄வாத் இதி ஔடு₃லோமி:) – “புறப்படுபவர் இதுவே போல் ஆகிறபடியால் என்று ஔடுலோமி என்ற ரிஷி கூறுகிறார்”(உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு-ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்-இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்) -ஜீவாத்மா உண்டாவதே இல்லை என்று வேதம் சொல்கிறபடியால் முன் பக்ஷம் தவறானது. எனவே ஔடுலோமி என்ற ரிஷி இவ்வாறு கூறுகிறார் – “இந்த உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடையும் ஜீவாத்மா பரமாத்மாவைப் போல் ஆகிறபடியால் இங்கு ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது” என்று-ஆனால் இதிலும் குறை உள்ளது – ஜீவாத்மா புதிதாக பரமாத்மாவைப் போல் ஆவதில்லை , இயற்கையான அத் தன்மையைத் திரும்பப் பெருகிறார். எனவே இந்தப் பக்ஷமும் தகுந்ததல்ல.

    4-அவஸ்தி₂தே : இதி காச க்ருத்ஸ்ந: – “ஜீவாத்மாவுக்குள் அந்தர்யாமியாகப் பரமாத்மா உள்ள படியால் என்று காச க்ருத்ஸ்நர் என்ற ரிஷி கூறுகிறார்”-உலகத்தில் உடலைக் குறிக்கும் சொல் உள்ளிருக்கும் ஆத்மாவையும் குறிப்பதைப் பார்க்கிறோம். அதே போல் தான்
    உடலான ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. இதுவே வேத வ்யாஸரும் ஏற்கும் மதம்.ஆகவே , இங்கு பரமாத்மா தான் சொல்லப்படுகிறார், ஜீவன் அல்ல. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்

    (ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே – இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால் –விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான் -தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –)

    —————–

    1.4.7 ப்ரக்ருத்யதி₄கரணம்-உலகின் உபாதாந காரணமும் பரமாத்மாவே

    (வேர் முதல் வித்து -முதல் தனி வித்தேயோ -தானோர் விதிதாய் -அபின்ன நிமித்த உபாதானம் -நம் சித்தாந்தத்தில் அசாதாரணம்-ஸர்வம் கலு ப்ரஹ்மம் -நீராய் நிலனாய் -அயனாய் சிவனாய் – -இத்தை இதில் நிரூபிக்கிறார் -)

    அதிகரணத்தின் பின்புலம்
    1-4-7-ப்ரக்ருத்யதி₄கரணம் – ஸங்கதி
    – இதுவரை ஈஸ்வரனே கிடையாது என்று சொல்லும் ஸாங்க்யர்களின் மதம் கண்டிக்கப்பட்டு. இப்போது ஈஸ்வரனை ஒப்புக் கொண்டு, ஆனால் அவர் உலகின் நிமித்த காரணம் (படைப்பாளி) மட்டும் தான், உபாதாந காரணம் அல்ல என்று சொல்லும் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
    பூர்வ பக்ஷம் – பரமாத்மா உலகின் படைப்பில் நிமித்த காரணம் மட்டும் தான், உபாதான காரணம் அல்ல-உலகில் எந்த ஒரு பொருள் உண்டாவதற்கும் மூன்று விதமான காரணங்கள் தேவை –
    (1) உபாதான காரணம் – மூலப்பொருள் – குடத்துக்கு மண், துணிக்கு பஞ்சு முதலானவை போல்
    (2) நிமித்த காரம் – அறிவுடைய ஆத்மா (படைப்பாளி) – குடத்துக்குக் குயவன், துணிக்கு நெசவாளி போல்
    (3) ஸஹகாரி காரம் – துணை புரியும் கருவிகள் – குடத்துக்கு சக்கரம், துணிக்குத் தரி போல் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது உண்மை -ஆனால், அவர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு நிமித்த காரணமாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனெனில்,“நிஷ்கலம் நிஷ்க்ரியம்” (பகுதிகள் இல்லாதவர், செயல்கள் இல்லாதவர்) முதலான வாக்யங்களால் பரமாத்மா எந்த விதமான விகாரங்கள் (மாறுபாடுகள்) இல்லாதவர் என்று தெரிகிறது. எனவே அவர் உபாதானமாக ஆக முடியாது; உபாதானம் உருமாறியே ஆக வேண்டும்.-உபநிஷத்துக்களிலேயே ’ஜநித்ரீ பூ₄தபா₄விநீ’ (ஜீவ ராசிகளைப் படைப்பது), ’அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்(இதிலிருந்து பரமாத்மா உலகத்தைப் படைக்கிறார்) என்று பல வாக்யங்களில் மூல ப்ரக்ருதி தான் உபாதான காரணமாகச் சொல்லப்படுகிறது-உலகில் இரண்டு நியமங்களைப் பார்க்கிறோம் – (1) உபாதான காரணமும் நிமித்த காரணமும் வெவ்வேறாகத் தான் இருக்கும் (2) பல காரணங்களின் சேர்க்கையால் தான் ஒரு பொருள் உண்டாகும். எனவே , சில இடங்களில் உபநிஷத் பரமாத்மாவே உபாதான காரணம் என்று சொல்வது போல் தோன்றினாலும், உலகில் பார்த்த்துக்கு முரணாக இப்படி ஒரு தத்துவத்தை வேதத்தால் போதிக்க இயலாது. ’நெருப்பால் நனைத்தார்’ என்று சொல்வது போல் தவறாகும்.-எனவே , பரமாத்மா நிமித்த காரணமாக இருந்து, மூல ப்ரக்ருதி என்ற பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைக்கிறார். அவர் உபாதான காரணம் அல்ல.

    பரமாத்மாவிடமிருந்தே உலகம் உண்டாகிறது
    ஸித்தாந்தம் – 1– ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்₃ருஷ்டாந்த அநுபரோதா₄த்

    (உலகுக்கு) உபாதான காரணமும் (பரமாத்மாவே , அப்போது தான்) ப்ரதிஜ்ஜையும் எடுத்துக் காட்டும் -(அநுபரோதா₄த்-)தடை படாதபடியால்
    சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் அத்யாயத்தில் உள்ள ஸத்₃வித்₃யா என்பது இங்கு கூறப்படுகிறது. வேதம் கற்று வந்து கர்வத்வதாடு நிற்கும் ஸவேதகேது என்ற தன் மகனைப் பார்த்து உத்தாலகர் என்ற தந்தை கேட்கிறார்.
    ப்ரதிஜ்ஞா – (्உத தம ஆதே₃சம் அப்ராக்ஷ்ய:யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்) அதாவது“எதை அறிந்தால் அனைத்தையும்அறிந்த தாகுமோ அந்த (ஆதேசம் -நியமனம் ஈசன் )ஸர்வேஸ்வரனைப் பற்றிக் கேட்டாயா”என்று. பரமாத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்பதே இங்கு ப்ரதிஜ்ஜை .
    த்₃ருஷ்டாந்தம் –(्யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டே₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்) அதாவது “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் மண்ணாலான எல்லாப்
    பொருள்களையும் அறிந்ததாகுமோ அதுபோல்” என்று எடுத்துக் காட்டையும் அவரே உரைக்கிறார்.
    இவை இரண்டாலும் நாம் அறிவது – (1) மண் மரம் முதலான உபாதான காரணமும் குடம் மேஜை முதலான காரியமும் வெவ்வேறு அல்ல, காரணப் பொருளே தான் வேறொரு வடிவத்தையும் பெயரையும் அடையும் போது காரியப் பொருள் என்று வழங்கப்படுகிறது (2) எனவே உபாதான காரணத்தை நாம் அறிந்து விட்டால் அதிலிருந்து உண்டாகும் எல்லாப் பொருள்களையும் ஒரு முறையில் அறிந்ததாக ஆகும்
    (3) அதுபோல் பரமாத்மாவை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.
    எனவே இந்த ப்ரதிஜ்ஜை மற்றும் த்₃ருஷ்டாந்தத்தைக் கொண்டு பார்த்தால், பரமாத்மா உபாதான காரணமாகத் தான் சொல்லப்படுகிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவரே ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைக்கிறார் என்று மேலே சொல்லப் படுகிறபடியால் நிமித்த காரணமும் அவரே ஆவார்.
    ப்ரக்ருதி படைக்கிறது என்று சொல்லும் வாக்கியங்களில்’ ’ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியான பரமாத்மா’ என்றே பொருள்.-உலகில் மண்ணுக்கு ஜ்ஞான மில்லாமையாலும், குயவனுக்கு தன் உடலைக் குடமாக மாற்றும் சக்தி இல்லாததாலும் உபாதானமும் நிமித்தமும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. பரமாத்மாவிடமோ இரண்டுமே பொருந்துகிறது.

    (இதே போல் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதம் இந்த பார்க்கிற லோகம் சத்தாகவே ஒன்றாகவே இருந்தது -இரண்டாவதே இல்லை-ப்ரக்ருதி படைக்கிறது என்னும் இடங்களிலே ப்ரஹ்மம் அந்தர் யாத்மாவாகக் கொண்ட பிரகிருதி என்றே பொருள் -மண்ணை உடலாக கொண்ட பரமாத்மா -குடத்தை உடலாக கொண்ட பரமாத்மாவாக மாறினார் -நான் குழந்தை -நான் யுவா -இந்த உடலுக்குள் இருந்த ஆத்மா ஓன்று தானே -அதே போல் கொள்ள வேண்டும் – -)

    மூன்று விதமான காரணங்களும் பரமாத்மாவே
    2–அபி₄த்₄யோபதே₃சாத் ச –
    “ஸங்கல்பத்தின் உபதேசத்தாலும்” – ஸ்ருஷ்டிக்கும் போது பரமாத்மா எடுக்கும் ஸங்கல்பம் உபநிஷத்தில் (ப₃ஹு ஸ்யாம்) அதாவது
    “நான் பலவாக ஆகக் கடவேன்” என்று காட்டப் பட்டுள்ளது.(ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும் ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-) உபாதான காரணம் தானே பல காரியப் பொருள்களாக ஆகும். எனவே இத்தால் பரமாத்மா நிமித்த காரணம் மட்டுமல்ல, உபாதானமும் அவரே என்று தெரிகிறது.

    (
    யானும் தானாய் ஒழிந்தானையாதும் எவர்க்கும் முன்னோனை
    தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
    தேனும் பாலும் கன்னலும்அமுதும் ஆகித் தித்துத்து என்
    ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே)

    3-ஸாக்ஷாத் ச உப₄யாம்நாநாத்
    – “நேரடியாகவும் இரண்டும் ஓதப் படுகிறபடியால்”-உபநிஷத்தில் (्ப்₃ரஹ்ம வநம், ப்₃ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்₃யாவா ப்ருதி₂வீ நிஷ்ட₂தக்ஷு:, ப்₃ரஹ்ம அத்₄ய திஷ்ட₂த் பு₄வநாநி தா₄ரயன்) அதாவது
    “உலகத்தை ப்ரஹ்மம் படைக்கும் போது, காடு போல் ஆதாரமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், மரம் போல் உபாதானமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், இயக்கப்படும் கருவிகளும் ப்ரஹ்மம் தான்” என்று ஸ்பஷ்டமாகவே ப்ரஹ்மம் உலகுக்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    4–ஆத்ம க்ருதே : – “தன்னையே செய்கிறபடியால்”. உபநிஷத்தில் உலகத்தின் படைப்பைச் சொல்லும் போது(தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத) அதாவது அந்த ப்ரஹ்மம் தன்னைத் தானே செய்து கொண்டது” என்று கூறப்படுகிறது. தன்னைத் தானே பலவாக ஆக்குதலால் பரமாத்மா உபதானமும் தான்.

    5–பரிணாமாத் ् – “மாறுபாட்டால்”. இப்படி பரமாத்மாவே உலகமாக மாறினால் அவருக்கு துன்பம், மாறுபாடு முதலான தோஷங்கள் ஏற்படுமே என்று ஸந்தேகம் எழும். அதற்கு பதிலளிக்கிறார் வ்யாஸர் – இங்கு பரமாத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மாறுபாடு சொல்லப்படுகிறபடியால் எந்தக் குற்றமும் வராது,(ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது தோஷங்கள் தட்டாது-) -சொல்லப் போனால் தன் உடலையே உலகமாக மாற்றும் பெருமை தான் இதிலிருந்து தெரியும்.

    6-யோநிஶ்ச ஹி கீ₃யதே – “யோநியாகவும் பாடப்படுகிறார் அன்றோ ”(யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்-எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால் அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –)-வேதத்தில் பல இடங்களில்“கர்தாரம் ஈஸம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம்”(படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம்-கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்-யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-)“யத்₃பூ₄த யோநிம் பரிபஸ்யந்தி தீ₄ரா:(-ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ )” என்றெல்லாம் பரமாத்மாவை யோநி என்று அழைக்கிறது வேதம். யோநி என்றால் உபாதான காரணமே . எனவே பரமாத்மாவே உபாதானம்.

    இவ்வாறு பல காரணங்களால் உலகத்தைப் படைப்பதற்கு நிமித்தமாகவும் உபாதானமாகவும் ஸஹகாரியாகவும் பரமாத்மா ஒருவரே இருக்கிறார் என்னும் தத்துவத்தை வேதவ்யாஸர் நிரூபிக்கிறார் இவ்வதிகரணத்தில்.

    (இவன் தானே ஐகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும்-தத்வ த்ரயம்-சூர்ணிகை -165-)

    ஏகமேவ அத்விதீயம் -என்றும்
    ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
    ஸ்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-67-அந்த நாராயணன் நான்முகனாக படைத்து தானாகவே காத்து சிவனாக இருந்து சம்ஹரிக்கவும் செய்கிறானோ -என்றும்
    ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-70-அவனே அனைத்தையுமே ஸ்ருஷ்டிப்பவனாகவும் அனைத்தும் வரங்களையும் அளிப்பவனாகவும் -அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான் -படைப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே -காப்பவனும் அழிப்பவனும் அவனே-இத்யாதிகளால்
    இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

    தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
    தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
    நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
    நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

    —————

    1.4.8 ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம்-பர ப்ரஹ்மம் நாராயணனே

    வேதாந்தம் முழுவதுமே ப்ரஹ்மத்தைத் தான் சொல்கிறது-1-4-8-ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்கியங்களுள் ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் ஸந்தர்பத்தை ஆராய்ந்து, அவ் விடத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், இதுவரை எடுத்து ஆராயப்படாத எல்லா உபநிஷத் வாக்யங்களும் கூட பரமாத்மாவையே சொல்கின்றன என்று நிரூபிக்கிறார்.
    விஷய வாக்யம் – உபநிஷத்துக்களில் ஸித்தமான (முன்னமே தயாராக உள்ள) ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் எல்லாம் 1.1.1-ஜிஜ்ஞாஸாதிகரணத்தாலும் 1.1.4-ஸமந்வயாதிகரணத்தாலும் பரமாத்மாவைப் பற்றியவை என்று நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பின் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் சில குறிப்பிட்ட வாக்கியங்கள் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஆராயப் பட்டன. இந்த அதிகரணத்திற்கு விஷயம் –இது வரை எடுத்து ஆராயப்படாத வாக்யங்கள்.

    (அதிதேச சங்கதி -கீழ் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏறிட்டுக் கொண்டு அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும்-இதுவரை எடுத்துக்கொள்ளாத ஜகத் காரணமாக போதிக்கும் அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும் பொருள் கொள்ள வேண்டும் -என்பதே இதற்கு சங்கதி)

    ஸந்தேஹம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் முன் கூறப்பட்ட பர ப்ரஹ்மத்தையே குறிக்கின்றனவா? அல்லவா?
    பூர்வ பக்ஷம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லவில்லை முரண்பாடு உள்ள படியால்.
    ஸித்தாந்தம் – 1-ஏதேந ஸர்வே வ்யாக்₂யாதா : வ்யாக்₂யாதா :
    ஸர்வே
    – இதுவரை தனித் தனியாக எடுத்து ஆராயப்படாத ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்யங்கள் அனைத்தும்
    ஏதேந – இத்தால் -முதல் அத்யாயத்தில் 4 பாதங்களிலும் இதுவரை சொல்லப்பட்ட ந்யாயங்களால் (யுக்திகளால்)
    வ்யாக்₂யாதா : – (பரமாத்மாவையே குறிப்பவையாக) விவரிக்கப்பட்டன -சொல்லப்பட்டன
    “வ்யாக்₂யாதா:” என்று மறுபடியும் ஒரு முறை படிக்கப்படுவது, இந்தச் சொல்லோடு இந்த அத்யாயம் முடிகிறது என்று காட்டுவதற்காக.

    (இதே போல-2அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல்- இரண்டு தடவையும்-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–என்றும் 3-அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல் இரண்டு தடவையும்ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-என்றும் -4 அத்தியாயத்தில் முழு ஸூத்திரமே –545 -ஸூத்ரமே இரண்டு தடவை படிக்கப்படும் (அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் ) ப்ரஹ்ம ஸூத்ரம் முடிவடைவதால்)

    இந்த அதிகரணத்தின் கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளியில் கூறுகிறார்

    குறிப்பட்ட ஸந்தேஹமும் அதன் தீர்வும்
    அக்₃ரே ஸம்வர்தநம் பா₄தி அவித்த₂வசஸி க்வாபி ஹிரண்ய க₃ர்ப₄ம்
    க்₃ரஸ்தா ஸேஷ ஸ்வ கார்யே தமஸி சிவ ஏவேதி கேசித் பட₂ந்தி |
    ஏதாத்₃ருக்₃வாக்ய வர்க₃ ஸ்பு₂ட₂ ப₄வத் அதி₄கா சங்கந ஸ்தம்ப₄நார்த₂ம்
    ப்ராகு₃க்தாந் நீதி பே₄தா₃ந் அதிதி₃ சதி பரம் சிஷ்ய சிஷைக சித்த: ||

    பூர்வ பக்ஷம் –
    வேதாந்தத்தில் ஓரிடத்தில்
    (ஹிரண்ய க₃ர்ப₄: ஸம வர்தத அக்₃ரே பூ₄தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்) என்று “ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஹிரண்ய கர்பன் என்ற நான்முகக் கடவுள் மட்டுமே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. மற்ற ஓரிடத்தில்
    (யதா₃ தம: தந்ந தி₃வா ந ராத்ரி: ந ஸத் ந அஸத் சிவ ஏக கேவல:) அதாவது “ப்ரளயத்தில் பகலோ இரவோ அசித்தோ சித்தோ எதுவும் இல்லாத போது சிவன் மட்டுமே தனியே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. எனவே பர ப்ரஹ்மம் யார் என்று முடிவெடுக்க இயலாது. இவர்களுள் ஒருவரா? மூவருமா? மூவரைத் தவிற வேறு ஓருவரா? தெரியாது.
    ஸித்தாந்தம் –முன் சொல்லப்பட்ட ந்யாயங்களைக் கொண்டே இந்த விஷயத்திலும் நாம் முடிவை எட்டலாம்.
    1.1.5 ஈஷத்யதி₄கரணத்தில் – “க₃தி ஸாமாந்யாத்”
    என்ற ஸூத்ரத்தில் ஸத், ப்ரஹ்ம, ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஜகத் காரணப் பொருள் நாராயணன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
    1.1.6 ஆநந்த₃மயாதி₄கரணத்தில் – நான்முகனின் ஆநந்ததைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு உயர்ந்தது ப்ரஹ்மத்தின் ஆநந்தம் என்று சொன்னபடியால் நான்முகன் ப்ரஹ்மம் அல்ல என்று தெரிகிறது.
    1.1.7 அந்தரதிகரணத்தில் – தாமரை போன்ற கண்ணுடையவன் ப்ரஹ்மம் என்று சொன்னபடியால் சிவன் ப்ரஹ்மமல்ல
    1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் – விண்ணுலகில் இருப்பவர் ப்ரஹ்மம் என்றுள்ள படியால், அங்குள்ள வாக்யங்கள் புருஷ ஸூக்தத்தை நினைவூட்டுகிற படியால், புருஷ ஸூக்தத்தில் ஶ்ரீதேவீ மற்றும் பூதேவியின் நாயகனே சொல்லப்படுகிறபடியால் ஶ்ரீமந் நாராயணனே பரமாத்மா, பர ப்ரஹ்மம், ஸர்வேஸ்வரன், எல்லாம் ஆவார்.
    ஆக இப்படி ஸமந்வய அத்யாயத்தில் 11 + 6 + 10 + 8 = 35 அதிகரணங்களால் நாராயணனே ஜகத் காரணம் எனப்பட்டது

    மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
    ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
    வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள
    -ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
    ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்-விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
    ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான் அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்-இதம் பூர்ணம் –இத்யாதி-

    இப்பாத அதிகரண அர்த்தங்களை

    1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
    2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
    3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
    4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
    5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
    6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
    7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
    8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

    ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே-ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி-அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி-ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

    முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

    May 12, 2025

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

    10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

    (வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
    ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
    க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
    ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
    -ஶ்லோகம் 18 –)

    நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
    1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
    2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
    3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
    4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
    5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
    6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
    7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
    8) இனிமையானவன்
    9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
    10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
    11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
    12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

    உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
    ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
    கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
    ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
    ||-ஶ்லோகம் 19 –

    வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

    1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
    ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
    உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

    விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

    (ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

    ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

    பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

    பரமாத்மாவே தஹராகாஸம்
    ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
    :-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

    (கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

    தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

    (மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

    கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
    பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

    கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
    பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

    நாம் அறியாத செல்வம்
    தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

    (உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறா)

    றி2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
    க₃தி சப்₃தா₃ப்₄யாம்
    – “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
    ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
    க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
    (தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
    “எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
    இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
    2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
    சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
    லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

    உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
    3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
    அஸ்ய-
    இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
    த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
    அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

    இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
    ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
    அதாவது
    “இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

    4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
    தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
    சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
    ஸமுத்பத்₃யந்தே )
    அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

    ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
    இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
    5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
    இதர பராமர்சாத் ஸ:
    -பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
    இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
    அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

    பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
    ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
    ) அதாவது
    “இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
    தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
    இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
    அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

    ————–

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

    (அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
    I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

    ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
    1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
    6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
    உத்தராத் சேத்
    – “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
    ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
    ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

    முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
    ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
    ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
    உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
    அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
    7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
    இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
    8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

    அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
    இதி சேத் – என்று கேட்டால்
    தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
    9-அநுக்ருதே : தஸ்ய ச –
    தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
    அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
    என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
    10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
    ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

    ॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
    அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
    த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
    தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

    தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
    ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
    அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
    தகர -சிறிய இடைவெளி –

    தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
    த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
    யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

    உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

    யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
    உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
    உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
    வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
    தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

    தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
    ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
    ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

    ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
    ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
    ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
    ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
    ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
    ॥ 8.1.5॥

    அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
    பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
    தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

    தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
    லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
    ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
    ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
    ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
    ॥ 8.1.6॥

    ॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

    —————————————

    காண்டம்1

    இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

    ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

    அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

    அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

    அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

    அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

    முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
    சங்கல்பத்தாலே அனைத்தும்
    ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

    அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
    க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
    மஹீயதே ॥ 8.2.6॥

    அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
    ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

    அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
    கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
    மஹீயதே ॥ 8.2.8॥

    அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

    யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
    ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

    ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

    ॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்2

    இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

    ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாத்து. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

    உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

    உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    அவைகள் 1.       பாவமற்றது, 2.       வயதற்றது, 3.      மரணமற்றது, 4.       துயரமற்றது, 5.      பசியற்றது, 6.       தாகமற்றது, 7.       நிறைவேறுகின்ற ஆசை,8.       நிறைவேறுகின்ற சங்கல்பம்

    ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

    இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

    யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

    சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

    த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
    ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
    த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

    அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
    லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
    காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
    உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
    அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
    ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

    ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
    தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

    அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
    ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
    ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

    தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
    தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
    யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
    ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

    ॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

    ———

    காண்டம்-3

    ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:

    நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

    இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை.அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை, மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

    ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)

    ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

    ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)

    ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

    ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்

    அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு

    பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக

    உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து

    ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே

    அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)

    அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

    சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்

    சத்யம் – உண்மை பேசுதல்

    சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்

    சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

    இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

    சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

    இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

    அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
    நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
    ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
    நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

    தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
    வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
    தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
    ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

    தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
    தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
    ப⁴வதி ॥ 8.4.3॥

    சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
    ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
    இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
    ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
    அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

    ॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

    ————

    காண்டம்4

    அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

    ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

    இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

    இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர். 

    சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

    இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

    அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
    ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
    ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
    ॥ 8.5.1॥

    அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
    ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
    ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

    அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
    ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
    யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
    ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
    மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
    பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

    தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
    ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
    ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

    ॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்5

    பிரம்மசர்ய சாதனையின் பெருமை

    •        குருவுக்கு சேவை செய்தல்
    •          வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
    •          குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
    •          எளிமையான வாழ்க்கை வாழ்தல்
    •          சிற்றின்பத்தை துறத்தல்

    இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

    யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்

    இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்

    ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.

    மௌனம்       – இதனால் அடையும் பலன்

    அநாஸகாயனம் – உபவாசம்

    அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

    இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

    பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

    அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
    ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
    பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
    ॥ 8.6.1॥

    அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
    சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

    தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
    சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
    சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
    ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
    ॥ 8.6.2॥

    தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
    ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
    தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

    அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
    ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
    யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
    ॥ 8.6.4॥

    அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
    ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
    ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
    லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

    ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
    மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
    விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

    ॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்6

    சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

    நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  sUriyaninசூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

    இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

    நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

    ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
    ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
    ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
    ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

    பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
    ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
    விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

    தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
    தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
    லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
    தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
    ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
    ॥ 8.7.2॥

    தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
    ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
    ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
    ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
    காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
    வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

    தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
    ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
    ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
    இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
    ॥ 8.7.4॥

    -32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
    கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
    அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

    ॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)

             ஞானி என்பவர் யார்?

             எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?

             ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?

             எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?

             ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

    ஸ்லோகம்-1

    மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

           ஆத்ம ஸ்வரூபம்

           ஞானத்தை அடையும் வழி

           ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

    ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

    அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது

    விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது

    விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது

    விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது

    விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது

    அபிபாக – தாகமுமில்லை.

    எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

    இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்

    1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

    2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

    ஸ்லோகம்-2

    வித்யாkk க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

    இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

    இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

    பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

    கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

    கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

    குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

    சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார். கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?

    பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

    உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
    ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
    ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
    ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
    நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

    பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

    தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
    பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
    ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
    தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

    அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

    தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
    பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
    பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
    தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

    தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
    வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
    பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
    விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
    ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
    மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
    ॥ 8.8.4॥

    தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
    ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
    வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
    ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

    ॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

    ———————

    காண்டம்-‍8

    தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

    குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

    இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

    அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்

    ப்ரோவாசா – உபதேசம் செய்தல்

    பரிசர்ய – காக்கப்படவேண்டும்- to take care of

    இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

    விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

    இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

    அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
    க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
    ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
    ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
    பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
    நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
    கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
    ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
    ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
    ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
    பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
    நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

    இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
    மீண்டும் -32-வருஷம்
    ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
    கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

    ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
    ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
    ॥ 8.9.3॥

    ॥ இதி நவம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்-‍9

    ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

    குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்

    தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்

    தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்

    நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

    ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

    மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

    குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

    ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

    இந்திரனின் விசாரங்கள்:

    இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

    தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.

    தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)

    தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

    நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

    இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

    குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

    ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
    ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
    ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
    தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
    ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

    ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
    விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
    இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
    ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
    ॥ 8.10.3॥

    ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
    விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
    ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
    ॥ 8.10.4॥

    அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
    ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
    நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
    ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

    ॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்-‍10

    எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது. 

    குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.  

    தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் – ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.

    தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

    இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

    ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.

    ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

    குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

    தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
    ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
    ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
    க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
    நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
    ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
    ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
    விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
    ॥ 8.11.2॥

    ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
    பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
    தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
    மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

    ॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்-‍11

    எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

    காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

    இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

    அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

    இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

    உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

    மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
    தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
    ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
    ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
    ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

    அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
    தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
    ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

    ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
    ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
    ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
    ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
    ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

    அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
    புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
    க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
    ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
    ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

    பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

    அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
    ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
    ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

    தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
    லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
    ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
    ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

    தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
    செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

    ॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

    ————

    காண்டம்-‍12

    சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

    இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

    சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொருக்ஷணமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

    ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

    ஆத்ம-சரீர சம்பந்தம்:

    இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

    1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.

    2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

    3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

    சரீர அபிமான பலன்:

    சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

    தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

    நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

    இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?

    சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

    கேள்வி-1

    ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?

    பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம். சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

    கேள்வி-2

    ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?

    குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

    வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

    அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

    ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

    விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்

    ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

    அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

    ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    [ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

    இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா. இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

    கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

    ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்

    மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

    யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

    பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

    ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
    இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
    தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
    ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

    ॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
    ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
    தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
    யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
    யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
    ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
    மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

    கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

    ॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

    ———————

    காண்டம்-‍13 (பிரார்த்தனை)

    ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

    காண்டம்-‍14

    ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
    தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
    யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
    யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
    ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
    மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

    கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

    ॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

    ————————

    இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

    ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

    ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
    ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
    கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
    ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
    ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
    ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
    ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

    ॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
    ॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

    ——————————————-

    காண்டம்-‍15

    பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

    1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்

    2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்

    3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.

    4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.

    5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

    6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

    ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

    ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
    ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
    ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
    நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
    ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
    மயி ஸந்து தே மயி ஸந்து ॥

    ॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

    ॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

    ஓம் தத் ஸத்

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-