Archive for the ‘ஸ்ரீ பாஷ்யம்’ Category

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் – இரண்டாம் பாதம் -தர்க்க பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

December 14, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-2-1-ரசநாநுப்பத்த்யதி₄கரணம் தர்க்க பாதத்தின் தொடக்கம்

ஏன் மற்ற மதங்களைக் கண்டிக்க வேண்டும்?
முதல் அத்யாயத்தில் ப்ரஹ்மம் தான் உலகம் அனைத்துக்கும் ஒரே காரணம்-நிகில ஜகத் ஏக காரணம்-. என்று வேத வ்யாஸர் நிரூபித்தார்-அந்த முடிவில் தவறுகள் உள்ளன என்று மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிருதிகளின் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்ப, அவற்றுக் கெல்லாம் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தாலே விடை அளித்து, முதல் அத்யாயத்தில் நாம் எடுத்த முடிவு சரி தான் என்று நிரூபித்தார். அதற்கு மேல் தற்போது இரண்டாவது அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் எல்லாம் என்னென்ன தோஷங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்.
ஒருவர் தன்னுடைய பக்ஷத்தை முன் வைத்து, அதில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அல்லது தோஷங்களுக்கு விடையளித்தாலே தன்னுடைய பக்ஷத்தை நன்றாக நிலை நாட்டி விட முடியும். பிறகு ஏன் மற்றவர்களின் மதங்களை தவறென்று சொல்ல வேண்டும்? அதில் இருக்கும் குற்றங்களை ஏன் எடுத்துக் காட்ட வேண்டும்?என்கிற சந்தேகம் நமக்கு எழும்.
அதன் ப்ரயோஜனத்ணத ஸ்வாமி ராமானுஜர் காட்டுகிறார்
-நம்முடைய மதம் சரியானது என்பதை மட்டும் காட்டி நிறுத்தி விட்டால், சிறந்த பண்டிதர்கள் எல்லா மதங்களையும் சீர் தூக்கிப் பார்த்து செயல்படும் பொழுது,அவர்களும் வேதாந்தத்தின் கருத்து தான் சரியானது- மற்ற மதங்கள் தவறானவை என்று புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் சாதாரணமான பாமர மக்கள், மற்ற மதங்களைப் பார்க்கும் போது, அவற்றில் சரியான யுக்திகள் இல்லை என்று புரிந்து கொள்ளாமல், ஒரு வேளை இந்த மதங்களும் சரியாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்ததென்றால், வைதிகமான வேதாந்தத்தில் சொல்லப்பட்ட சித்தாந்தத்தை அறியாமல் பின்பற்றாமல் போய் விடுவார்கள். அதனால் வாழ்க்கையில் அவர்களுக்கு பேரிழவு ஏற்படும். அதனால் மக்களின் நன்மைக்காக தன்னுடைய பக்ஷத்தை சரி என்று சொல்வவதாடு நிறுத்தாமல்,
வேதத்துக்கு புறம்பான மற்ற மதங்களிலும் யுக்திகளின் அடிப்படையில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை வேதவ்யாஸர் இந்த பாதத்தில் காட்டுகிறார்
.
இந்த பாதத்துக்கு தர்க்க பாதம் என்று பெயர். தர்க்கம் என்றாலே யுக்திகளின் அடிப்படையில் செய்யப்படும் வாதம். அப்படி யுக்திகளால் மற்ற மதங்களை இந்த பாதத்தில் தகர்க்கிறார்.

ஸாங்க்ய மதத்தின் சுருக்கம்
2-2-1-ரசநாநுப்பத்த்யதிகரணம் – இ
ந்த பாதத்தின் முதல் அதிகரணம், ரசனானுபத்தி அதிகரணம். இந்த அதிகரணத்தில் ஸாங்க்யர்களின் மதத்தில் இருக்கும் தோஷங்களை எல்லாம் வேத வ்யாஸர் எடுத்துக் காட்டுகிறார்.
ஸங்கதி –
ஏன் முதலில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்க வேண்டும்? பௌத்தம், ஜைனம், முதலான மற்ற மதங்கள் எல்லாம் இருக்கின்றனவே ? என்றால் – ஸாங்க்ய மதத்தில் தான் வேதாந்தம் மதத்தோடு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 24 அசேதன தத்துவங்களை ஏற்கிறார்கள். ஸத் கார்ய வாதத்தை ஏற்கிறார்கள். அதனால் இதுவும் சரியான மதம் தான் என்கிற ஒரு மயக்கம் மக்களுக்கு ஏற்படுவது சுலபம். அதனால் முதல் முதலில் அந்த
மதத்தைத் தான் தவறு என்று நிரூபிக்கிறார்.

முன்னமே முதல் பாதத்திலேயே ஸாங்க்ய மதத்தைத் தவறு என்று சொல்லி இருந்தாலும், அதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது.ஸ்மிருதி பாதத்தில் வேத வாக்கியங்களே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்லுகின்றன என்று அவர்கள் கேள்விகளை எழுப்ப, அந்த வேத வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை என்பது வரை மட்டும் தான் நிரூபித்திருந்தார். இப்போதுதான் ஸாங்க்ய மதத்திலேயே என்ன தோஷங்கள் இருக்கின்றன என்பதை வேதவ்யாஸர் காட்டுகிறார். ஸாங்க்யர்களின் மதத்தைச் சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்.
இந்த உலகத்தில்இரண்டே பொருட்கள் தான் இருக்கின்றன: பிரதானம் அல்லது மூலப் ப்ரக்ருதி என்று அழைக்கப் படுகிற அறிவற்ற அசேதனப் பொருள் ஒன்று. புருஷன் என்று அழைக்கப் படுகிற ஞானமே வடிவமான ஆத்மாக்கள் இரண்டாவது வகை
இதில் உலகத்தைப் படைப்பது ப்ரக்ருதி. ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று பொருட்களும் சமமான அளவில் சேர்ந்து இருக்கும் போது, அதற்குப் ப்ரக்ருதி -பிரதானம் என்கிற பெயர் வழங்கப்படுகிறது.(நாம் இவற்றை குணங்கள் பண்புகள் -சாங்க்யர் பொருள்கள் என்கிறார்கள் ) சிருஷ்டியின் போது இந்த சத்துவம், ரஜஸ், தமஸ் என்பவை சம நிலையை இழந்து, ஏற்றத் தாழ்வுகளோடு இருக்கின்றன. அதனால் தான் ப்ரக்ருதியிலிருந்து மகான், அதிலிருந்து அஹங்காரம், அந்த அஹங்காரத்தில் ஸாத்விகமான அஹங்காரத்திலிருந்து 11 இந்திரியங்கள். தாமஸமான அஹங்காரத்திலிருந்து ஐந்து தன்மாத்திரங்களும், ஐந்து பூதங்களும் உண்டாக்கப் படுகின்றன. ஆக, மொத்தம் அசேதனப் பொருட்கள் 24 வகைகளை உடையவை .

ஸாங்க்ய மதத்தின் கண்டனம்
புருஷன் என்பவர் ஜ்ஞானமே வடிவமானவர். எந்த மாறுபாடுகளும் இல்லாதவர். எந்த செயல்களையும் செய்யாதவர்.எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். ஒவ்வொரு சரீரத்தை இயக்குவதற்கும் ஒவ்வொரு ஆத்மா, அதாவது புருஷன் இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.
சம்சாரம் –ப்ரக்ருதியும் புருஷனும் மிகவும் நெருக்கமாக சேர்ந்து இருக்கிறபடியாலே , புருஷனிடம் இருக்கக் கூடிய அறிவு ப்ரக்ருதியில் ஏறிடப்படுகிறது. ப்ரக்ருதியில் இருக்கும் செயல்படும் தன்மை புருஷனிடம் ஏறிடப்படுகிறது. எப்படி ஒரு சிவப்பான புஷ்பத்தை வெள்ளை பளிங்கு கல்லுக்கு அருகிலே கொண்டு வந்தால், அந்த சிவப்பு நிறம் பளிங்குக் கல்லில் இருப்பது போல் தோற்றம் அளிக்குமோ , அதே போல் தான். இதற்கு அத்தியாசம் என்று பெயர். இதன் காரணமாகத் தான் நான் பார்க்கிறேன். நான் ஓடுகிறேன். நான் நிற்கிறேன். நான் அறிவாளி. முதலான எல்லா அறிவுகளுமே ஏற்படுகின்றன.இது தான் சம்சாரம் என்று சொல்லப்படுகிறது.
மோக்ஷம் –
எப்போது ஒரு ஆத்மா நான் வேறு ப்ரக்ருதி வேறு, எனக்கு இந்த தன்மைகள் எதுவுமே கிடையாது, நான் தனித்து இருக்கக் கூடியவன். என்று புரிந்து கொள்ளுகிறானோ , அப்போது முக்தியை அடைகிறான் என்று கூறுகிறார்கள்.

(பரம அணு ஜகத் காரணம் -நியாய வைசேஷிகர் மதம்-bottom up -இதில் –அந வஸ்தா தோஷம் வரும் – சம்யோகம் சேர்க்கைக்கு ஆறு கோணங்கள் அம்சங்கள் பார்ஸ்வம் இருக்க வேண்டுமே -பரம அணுவுக்கு இவை இல்லையே —சுகம் துக்கம் மோகம் இவை கொண்ட உலகப்பொருள்களைக் காண்கிறோம் -இது போல் தானே காரணப் பொருளும் இருக்க வேண்டும்ப்ரக்ருதி தான் காரணம் -பிரிந்து பொருள்கள் உண்டாகின்றன -top down–நாமும் இதுவே -ஆனால் ப்ரஹ்மாத்மக பிரகிருதி என்கிறோம்)

இந்த மதத்தை 9 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் வ்யாஸர் கண்டிக்கிறார்.
1–ரசநா அனுபபத்மே: ச ந அநுமானம் ப்ரவ்ருத்மே: ச
ந அநுமானம் –
அநுமானத்தால் அறிப்படும் ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல
ரசநா அனுபபத்மே: ச- ஒரு சேதனனால் இயக்கப் படாத அசேதனப் பொருள் எதையும் உண்டாக்க இயலாதபடியாலும்
ப்ரவ்ருத்மே: ச – சேதனனால் இயக்கப்படும் போது மட்டுமே அசேதனம் கார்யம் செய்வதைக் காண்கிற படியாலும்
ஒரு கல் தானாக வீடாக மாறுவதில்லை , கட்டை தானாக நாற்காலியாக மாறுவதில்லை . ஜ்ஞாநமுடைய ஒரு சேதனன் அதை இயக்கினால் தான் எதையும் அசேதனத்தால் உண்டாக்க முடியும் என்று உலகத்தில் நாம் காண்கிறோம். அதனால் யாராலும் இயக்கப்படாத ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி இவ்வுலகைப் படைத்திருக்க இயலாது.
மேலும், பல பொருட்கள் ஜகத் காரணமாக இருந்தால் தோஷம் ஏற்படும், அதனால் ப்ரக்ருதி என்ற ஒரே பொருள் தான் ஜகத் காரணமாக இருக்க வேண்டும் என்று ந்யாய மதத்தைக் கண்டிக்கும் நீங்களே , ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று பொருட்களை ஜகத் காரணம் என்கிறீர்கள். இது உங்கள் கூற்றுக்கே முரண்பட்டது.

(இரண்டு இடத்திலும் தர்சனம் -அந்வயம் வ்யதிரேகம்–சேதனனால் இயக்கப்படும் மூலப் பிரக்ருதியில் இருந்து ஸ்ருஷ்டிக்கப் படுவதையும் செயல்படுவதையும் காண்கிற படியாலும்-சேதனனால் இயக்கப்படாத மூலப் பிரக்ருதியில் இருந்து ஸ்ருஷ்டிக்கப் படுவதையும் செயல்படுவதையும் காண்கிறது அல்லாத படியாலும்)

கேள்வியும் பதிலும்
2-பயோம்பு₃வத் சேத் தத்ராபி –
“பால் மற்றும் தண்ணீரைப் போல என்றாால், அங்கும் கூட”
இங்கு பூர்வ பக்ஷி ஒரு கேள்வி எழுப்புகிறார் – உலகத்தில் பால் தயிராக மாறுவது தானாகத் தான் நடக்கிறது. எந்த சேதனனும் அதில் முயல்வதில்லை – அதே போல், மழை நீர் ஒரே ரசத்தோடு வானத்திலிருந்து கீழே விழுந்தாலும், அது தேங்காய், எலுமிச்சை , புளி, முதலான வெவ்வேறு பொருள்களுக்குள் செல்லும் போது, வெவ்வேறு ரசங்களை அடைகிறது. இதுவும் தானாக நடக்கக் கூடிய மாறுபாடு தான். அதனால், சேதனனால் இயக்கப் படாத போதும், பாலும் தண்ணீரும் மாறுபாடுகளை அடைவது போல், மூலப்ப்ரக்ருதியும் எந்த ஒரு சேதனனாலும் இயக்கப்படாமலேயே உலகத்தைப் படைக்கலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

பயோம்புவத்பயஸ் என்றால் பால், அம்பு என்றால் தண்ணீர், பயோம்புவது – பாலையும் தண்ணீரையும் போல்.
இதுவரை பூர்வ பக்ஷியின் கேள்வி.
சேத் – “என்று நீ சொன்னாய் என்றால்” என்று வேத வ்யாஸர் இதை அனுவாதம் செய்கிறார்.
தத்ராபி –இது வ்யாஸரின் பதில். “அங்கும் கூட” என்று பொருள். அதாவது, பால், தண்ணீர் முதலானவற்றுக்கும் சேர்த்து தான் இப்போது விவாதம் நடத்தப்படுகிறது. எந்த ஒரு அசேதனப் பொருளும் சேதனனின் ஈடுபாடு இல்லாமல் முயற்சி இல்லாமல் ஒரு மாறுபாட்டை அடைய முடியாது என்று தான் சொல்லுகிறோம். அதனால், இதுவரை பாலோ ,தயிரோ , தானாக மாறுகிறதா? ஒரு சேதனனால் இயக்கப் படுகிறதா? என்பது முடிவு ஆகாத படியால், அதை எடுத்துக் காட்டாகச் சொல்லி தற்போது ப்ரக்ருதி தானாக படைக்கலாமே என்று சொல்வது பொருந்தாது.
ஸந்தேகம் – முன்னால் உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் இதே பால் முதலானவை வேறு துணையை எதிர் பார்க்காமல் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்வது போல் பரமாத்மாவும் ஸஹ காரி காரணங்கள் (துணைகளும்) இல்லாமலேயே உலகத்தைப் படைக்கக் கூடும் என்றார். இப்போது பால் தானாக படைக்க முடியாது என்கிறாரே ?
பதில் – மண் குடமாக மாற வேண்டும் என்றால், ஒரு சக்கரத்தின் தேவை உண்டு. நூலைத் துணியாக மாற்ற வேண்டும் என்றால், தரி என்கிற எந்திரத்தின் தேவை உண்டு. அதைப்போல், பாலுக்கு தயிராக மாறுவதற்கு வேறு எந்த அசேதனப் பொருளின் தேவையும் இல்லை என்று அங்கு சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் சேதனனான பரமாத்மாவால் இயக்கப் பட்டு தான் பால் மாறுகிறது என்று வேத வ்யாஸர் கூறுகிறார். அதனால், இதில் எந்த முரண்பாடும் இல்லை

2.2.1 ரசநாநுப்பத்த்யதி₄கரணம்-ஸாங்க்ய மதத்தை நிராகரித்தல்-பரமாத்மாவால் இயக்கப்படாமல் ப்ரக்ருதி படைக்க இயலாது-ரசநாநுபபத்த்யதிகரணத்தில் ஸாங்க்ய மதத்தை நிராகரித்து வருகிறார் வேத வ்யாஸர்.

3-வ்யதிரேக அநவஸ்தி₂தே : ச அநபேக்ஷத்வாத்
அநபேக்ஷத்வாத்
– உலகைப் படைப்பதற்கு ப்ரக்ருதி பரமாத்மாவை எதிர்பார்க்காது (தானே படைக்கும்) என்றால்
வ்யதிரேக – ஸ்ருஷ்டி நிலைக்கு எதிரான ப்ரளய நிலையே இருக்க வேண்டிய படியால்
அநவஸ்தி₂தே : ச – இப்போது நாம் பார்க்கும்படி உலகம் இருக்காமல் போக வேண்டும்
ப்ரதானம் அறிவற்றதானபடியால் ஒரு காலத்தில் ப்ரளயம் பிறகு ஒரு காலத்தில் ஸ்ருஷ்டி என்பது பொருந்தாது.-பரமாத்மாவால் இயக்கப்படும் போது தான் இந்த வேறுபாடுகளும் பலவிதமான ஸ்ருஷ்டிகளும் பொருந்தும்

4-அந்யத்ர அபா₄வாத் ச ந த்ருணாதி₃வத்
அந்யத்ர
–வேறு இடங்களில்
அபா₄வாத் இல்லாததால்
ந த்ருணாதி₃வத் ச புல் -முதலான வற்றைப் போலும் அல்ல
பூர்வபக்ஷீ – ஒரு பசு மாட்டால் உண்ணப்பட்ட புல்லானது தானாகவே தான் பாலாக மாறுகிறது. அங்கு எந்த ஜீவனாலும் அந்த புல் இயக்கப்படுகிறது (அதிஷ்டானம் செய்யப்பட்டுள்ளது) என்று சொல்ல முடியாது. அந்த பசுவின் உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவுடன் தொடர்பு மட்டும் தான் புல்லுக்கு இருக்கிறது, ஆனால்
இயக்கப்படுவதில்லை . அதே போல் ஜீவாத்மாவால் இயக்கப்படாத போதும் ஜீவாத்மாவின் தொடர்பால் மட்டுமே ப்ரக்ருதி உலகத்தை படைக்கிறது என்று கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்-அதிஷ்டானம் வேண்டாம் ஸந்நிதானம் தொடர்பே போதுமே என்பர்
ஸித்தாந்தி – இந்த எடுத்துக் காட்டே தவறானது. புல்லை பசு மாடு உண்டால் தான் அது பாலாக மாறுகிறதே தவிர காளை உண்டாலோ அல்லது பூமியில் போடப்பட்டிருந்தாலோ அது பாலாக மாறுவதில்லை . எனவே இதைப் போன்ற இடங்களிலும் ஈஸ்வரனால் அதிஷ்டானம் செய்யப்பட்டு இயக்கப்படுகிற புல் தான் பாலாக மாறுகிறது,-அவர் தான் அப்படி மாற வைக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும். அதனால் இதே போல் ப்ரக்ருதி உலகத்தைப் படைக்கலாமே என்ற கேள்வியும் பொருந்தாது. ஒரு ஜீவனால் இயக்கப்படாக மூல ப்ரக்ருதி உலகத்தை உண்டாக்கவே முடியாது.

நெருக்கம் மட்டும் போதாது, இயக்கம் வேண்டும்
5–புருஷ அச்மவத் இதி சேத் ததா₂பி –
“புருஷன் மற்றும் கல் போல் என்றால், அப்போதும்கூட”
சைதந்யம் இல்லாத மூல ப்ரக்ருதியும் சைதந்யமே வடிவான ஜீவாத்மாவுடன் உள்ள தொடர்பால் மட்டுமே இயங்கலாம் என்று நிரூபிக்க பூர்வபக்ஷீ இரண்டு எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார்.
புருஷ அச்மவத் – கண் தெரியாத ஒரு மனிதன் தானாக இயங்க முடியாது.-ஆனால், கண் தெரியக் கூடிய காலில்லாத வேறொரு மனிதரின் உதவி யிருந்தால் அவருடைய ஜ்ஞானத்தைப் -பார்வையைப் பயன்படுத்தி கண் தெரியாதவரும் இயங்க முடியும். அதே போல் ஒரு இரும்புத் துண்டு தானாக நகர முடியா விட்டாலும் ஒரு காந்தம் அருகில்
வந்ததென்றால் அதனுடைய ஈர்ப்பால் அதன் உதவியோடு நகர்வதைப் பார்க்கிறோம். அதே போல் சைதன்யமே வடிவமான ஜீவாத்மாவின் உதவியால் ப்ரக்ருதி இயங்கலாமே என்று பூர்வ பக்ஷீ கேட்க்கிறார்.
ததா₂பி – இது வ்யாஸரின் விடை
. “அப்போதும் கூட ப்ரக்ருதி இயங்க முடியாது என்று முன்னால் சொன்ன தோஷம் அப்படியே தான் இருக்கும்” என்று பொருள்
கண் தெரியாதவன் காலில்லாதவனுடைய உதவியை எடுத்துக் கொள்ளும் பொழுது காலில்லாதவன் வழியைப் பார்த்து அதை உபதேசிக்க வேண்டும்; அதைக் கண் தெரியாதவன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்; பிறகு இருவரும் சேர்ந்து நடந்து செல்லலாம். அதே போல் இரும்புத் துண்டை இழுக்கும் பொழுது அந்த காந்தம் ஓரளவுக்கு அருகிலே எடுத்து வரப்பட வேண்டும்; பிறகு தான் ஈர்க்கும். அதே போல ஜீவாத்மாவின் உதவியால் ப்ரக்ருதி இயங்குகிறது என்றால், ஜீவாத்மா அதற்காகச் சில செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் மதத்திலோ ஜீவாத்மா எந்தச் செயலும் செய்யாதவர் என்று சொல்கிறீர்கள். அதனால் அவருடைய உதவியால் ப்ரக்ருதி இயங்குவது என்பது பொருந்தாது.
ஜீவன் எந்த உதவியும் செய்ய வேண்டாம், அவர் இருப்பதே போதும் ப்ரக்ருதியை இயங்க வைக்க என்று சொன்னால், ஜீவனுக்கும் ப்ரக்ருதிக்கும் இருக்கும் தொடர்பு நித்யமானதானபடியால் எப்போதுமே ஸம்ஸாரம் தான் இருக்க வேண்டும், என்றைக்குமே மோக்ஷம் என்பதை இந்த ஜீவன் அடையவே முடியாது. அல்லது இந்த ஜீவன் எப்போதுமே முக்தனாகத் தான் இருக்கிறார், இவருக்கு ஸம்ஸாரக் கட்டுப்பாடு என்பதே ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது இரண்டுமே உங்கள் ஸித்தாந்தத்திற்கு முரண்பட்டது. அதனால் நீங்கள் சொன்ன எடுத்துக் காட்டுகளின் படி ஜீவனின் உதவியால் ப்ரக்ருதி இயங்குகிறது என்று சொல்வதும் பொருந்தாது

மேலும் சில தோஷங்கள்
6-அங்கி₃த்வ அநுப்பத்தே : ச
– அங்கி₃த்வம் பொருந்தாத படியாலும்
இந்த ஸூத்ரத்தில் வ்யாஸர் ஸாங்க்ய மதத்தில் இருக்கும் மற்றொரு ஒவ்வாமையைக் காட்டுகிறார்.
உங்கள் மதத்தில் – ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணக்களுக்குள்ளே ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், அதில் எந்த குணம் உயர்ந்திருக்கிறவதோ அது அங்கி, மற்ற இரண்டும் அதற்கு அங்கங்களாக இருக்கின்றன. இப்படி அங்கம்-அங்கி என்ற தன்மையோடு கூடிய முக்குணங்கள் தான் உலகத்தில் எல்லா செயல்பாடுகளுக்கும் காரணம் -என்று சொல்கிறீர்கள். ஆனால் ப்ரளய காலத்தில் மூலப் ப்ரக்ருதியில் ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் சமமான நிலையிலேயே இருக்கின்றன என்று நீங்கள் சொல்கிற படியால், அப்போது ஒரு குணத்தை அங்கி என்றும் மற்றவற்றை அங்கம் என்றும் சொல்லவே முடியாது, ஏற்றத் தாழ்வுகளே இல்லாததால். அதனால் அங்கம் -அங்கி என்ற தன்மை இல்லாதபோது மூலப் ப்ரக்ருதி இயங்கியிருக்கவே கூடாது, அதிலிருந்து
இந்த உலகம் உண்டாகியிருக்கவே முடியாது.
பிரளய காலத்திலும் முக்குணங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்று சொன்னால், அப்போது அந்த காலத்திலும் ஸ்ருஷ்டி தான் நடந்திருக்க வேண்டும், எப்போதுமே ஸ்ருஷ்டி தான் நடந்து கொண்டிருக்க வேண்டும், ப்ரளயம் என்ற ஒரு நிலையே ஏற்படாமல் போய்விடும்.

7-அந்யதா அநுமிபதௌ ச ஜ்ஞநா சக்தி வியோகா₃த்
அந்யதா₂ அநுமிபதௌ ச –
இதுவரை சொல்லப்பட்டதை விட வேறு விதமாக, வேறு தன்மைகளை உடையதாக நீங்கள் மூல ப்ரக்ருதியை அநுமானம் செய்தாலும் கூட
ஜ்ஞநா சக்தி வியோகா₃த் – அப்போதும் அதற்கு ’அறிவுடைமை ’ என்ற சக்தி இல்லாதபடியால் இதுவரை சொன்ன தோஷங்கள் அனைத்துமே அந்த ப்ரக்ருதிக்கும் பொருந்தும். அதாவது, அறிவற்ற ப்ரக்ருதியால் எப்போது ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இயலாது, பல விதமான பொருள்களைக் கொண்ட உலகைப் படைக்க இயலாது, ஒரு காலத்தில் மறுபடியும் ப்ரளயம் ஏற்படும் என்றும் சொல்ல இயலாது அதற்குக் காரணம் காட்ட முடியாதபடியால். இந்த தோஷங்கள் அனைத்தும் அந்த மதங்களிலும் இருக்கவே செய்யும் என்று பொருள்

முரண்பாடுகளின் மூட்டை
8-அப்யு ₄பக₃மே அபி அர்தா₂பா₄வாத்
– “ஏற்றுக் கொண்டாலும் பயனில்லாத படியால்”அநுமானத்தால் நீங்கள் சொன்னபடி ப்ரதானம் – மூல ப்ரக்ருதி என்ற ஒரு பொருளை நிரூபிக்க முடியும் என்று ஒப்புக் கொண்டாலும்கூட, அப்படி ஒரு ப்ரக்ருதியை நிரூபிப்பதால் எந்தப் ப்ரயோஜனமும் (பயனும்) இல்லாதபடியால் அதை ஏற்கத் தேவையில்லை என்று வ்யாஸர் கூறுகிறார்.
ஸாங்க்ய மதத்தின்படி மூல ப்ரக்ருதியின் பயன் என்பது “ஜீவாத்மாவை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்துவதும், அவன் மோக்ஷம் அடைவதற்கு உதவுவதும்” என்று கூறுகிறார்கள். ஆனால் இது பொருந்தாது. ஜ்ஞாநமே வடிவெடுத்தவராய், எந்த செயல்பாடுகளும் அற்றவராய், மாறுபாடுகள் இல்லாதவராய், தூய்மையாக இருக்கும் ஜீவாத்மாவுக்கு
ஸம்ஸாரத்தில் கட்டுப்படுதல் என்பதும் பொருந்தாது, அதிலிருந்து விடுபட்டு முக்தி அடைவது என்பதும் பொருந்தாது. அவர் எப்போதுமே முக்தராக (விடுபட்டவராக) தான் இருக்க வேண்டும். பிறகு ப்ரக்ருதியின் பயன் என்ன உள்ளது?
9-விப்ரதிஷேதா₄த் ச அஸமஞ்ஜஸம் – “முரண்பாடுகள் உள்ள படியாலும் பொருத்தமற்றது”
ஸாங்க்ய மதத்தில் பல இடங்களில் முரண்பட்ட கருத்துகளைக் கூறுகிறார்கள்.
1-புருஷன் எனப்படுகிற ஜீவாத்மா முக்தியடைவதற்கு மூலப் ப்ரக்ருதி கருவியாக இருக்கிறது என்று ஓரிடத்தில் சொல்கிறார்கள். ஆனால் மற்றொரிடத்தில், புருஷன் எந்த விதமான மாறுபாடுகளும் அற்றவரான படியால் அவர் எந்தச் செயல்களையும் செய்வது கிடையாது. அவருக்கு முக்தி என்பதே இயற்கையான தன்மை . மாறாக ப்ரக்ருதி தான் இந்த
ஸம்சாரத்தில் கட்டுப்படுகிறது, அதிலிருந்து விடுதலை அணடவதற்கான முயற்சிகளையும் ப்ரக்ருதி தான் செய்ய முடியும், இறுதியில் மோக்ஷமும் ப்ரக்ருதிக்குத் தான் என்றும் சொல்கிறார்கள். இவை இரண்டும் முரண்பட்டவை –
2-எப்போதும் செயல்படாத, மாறுபடாத ஜீவாத்மா ப்ரக்ருதிக்கு ஸாக்ஷியாகவும், அதைப் பார்ப்பவராகவும், அதை அனுபவிப்பவராகவும் தன்னைத்தானே ப்ரமிக்கிறார் (நினைத்துக் கொள்கிறார்) என்று சொல்லுவதும் பொருந்தாது. எந்தச் செயலையும் செய்யாதவர் ’ப்ரமம்’ என்று சொல்லப்படுகிற ஒரு வித ஜ்ஞானத்தையும் அடைய முடியாது.
3-இந்த ப்ரமம் ப்ரக்ருதிக்குத் தான் ஏற்படுகிறது என்றும் சொல்ல முடியாது, ஜ்ஞானமுடையவரான ஒருவருக்குத் தான் ப்ரமம் ஏற்பட முடியும், அறிவற்ற ப்ரக்ருதிக்கு இது பொருந்தாது.
இதைப் போல் எத்தனையோ இடங்களில் முரண்பாடுகள் இருக்கிறபடியாலும் ஸாங்க்ய மதம் பொருத்தம் அற்றது.

—-

2.2.2 மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம்-பரமாணுக்களால் உலகைப் படைக்க முடியாது

(கணாதர் – -வைசேஷிக மதம்-கௌதமர்- நியாய மதம் -இரண்டும் சேர்ந்து இப்பொழுது நியாய மதமாகிறது)

பரமாணுக்களே ஜகத் காரணம் என்னும் வாதம்
2-2-2-மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணத்தில் அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதி என்னும் பொருள் தான் உலகத்தைப் படைக்கிறது என்று சொன்ன ஸாங்க்யர்களின் மதம்
தவறென்று நிரூபிக்கப்பட்டது. அதை அடுத்து, அநுமானத்தால் அறியப்படும் பரமாணுக்கள் தான் உலகத்துக்குக் காரணம் என்று சொல்லும் வைஸேஷிகர்களின் மதம் நிராகரிக்கப் படுகிறது.
பரமாணுக்களை அநுமானத்தால் நிரூபிக்கிறார்கள் வைஸேஷிக மதத்தைச் சேர்ந்தவர்கள் –

1-குடம், மேஜை , புத்தகம், துணி முதலான கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளை உடையவையாகத் தான் உள்ளன. அதனால் “எதெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ
அதெல்லாம் பகுதிகளை உடையது” என்று வ்யாப்தியைத் தெரிந்து கொள்கிறோம்.

2-உலகத்தில் கண்ணுக்குத் தெரியும் பொருள்களுக்குள் மிக நுண்ணியது எதுவோ அதை எடுத்துக் கொள்வோம். அதுக்குத் த்ர்யணுகம் என்று பெயர். அதுவும் கண்ணுக்குத் தெரிகிறதால்
பகுதிகளால் ஆக்கப் பட்டிருக்க வேண்டும். அந்த கண்ணுக்குத் தெரியாத பகுதிகளுக்கு த்₃வ்யணுகங்கள் என்று பெயர்.

3-அந்த த்₃வ்யணுகங்களுக்கும் பகுதிகள் இருக்க வேண்டும். அவை தான் பரமாணுக்கள். அவை தான்
மிக நுண்ணியவை .பரமாணுக்கள் நித்யமானணவ -அதாவது உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை . ப்ரளயம் ஏற்பட்டால் கூட அழியாதவை . அவற்றை விட சிறிய பொருளே கிடையாது,
அவற்றுக்குப் பகுதிகளும் கிடையாது.

4–இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுகம் உண்டகும்.மூன்று த்₃வ்யணுகங்கள் சேர்ந்தால் த்ர்யணுகம் உண்டாகும். இப்படித் தான் உலகத்தில் நாம் காணும் எல்லாப் பொருள்களும் உண்டாக்கப் படுகின்றன என்பது வைஸேஷிகர்களின் மதமாகும்.-(அணு – தீர்க்கம் -க்ரஸ்வம்- மஹத் -நான்கு நிலைகள் என்பர்)

பரமாணுக்கள் சேரவே முடியாது
ஸித்தாந்தம் – இந்த மதத்தை இவ் வதிகரணத்தில் 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் கண்டிக்கிறார்.
1– மஹத் ₃தீ₃ர்க₄வத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்₄யாம்
ஹ்ரஸ்வ பரிமண்டலாப்₄யாம் – ’பரி மண்டலம்’
எனப்படும் பரமாணுவிடமிருந்தும் ’ஹ்ரஸ்வம்’ எனும்
த்₃வ்யணுகத்திலிருந்தும்
மஹத்₃தீ₃ர்க₄வத் – ’மஹத்₃தீ₃ர்க₄ம்’ எனப்படும் த்ர்யணுகம் உண்டாகிறது என்பது
(அஸமஞ்ஜஸம்) – பொருந்தாது (இந்தச் சொல் முன் ஸூத்ரத்திலிருந்து இங்கு சேர்க்கப்படுகிறது-அனுஷங்கம்)
வா – (etc)இது போல் இவர்கள் சொல்லும் மற்ற பல வாதங்களும் பொருந்தாதவை-

வ்யாஸரின் கருத்து – இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுகம் உண்டாகிறது என்று சொல்கிறீர்கள்.-இரண்டு பொருள்கள் தொட்டுக் கொள்ள வேண்டும்-சன்யோகம்– -சேர வேண்டும் என்றால் ஒரு பொருள் தனக்கு இருக்கும் 6 பக்கங்களில் (முன், பின், இடது, வலது, மேல், கீழ்) ஏதோ ஒரு பக்கத்தால் மற்றொரு பொருளைத் தொட வேண்டும். அப்போது தான் பகுதிகளை விட பெரிய அளவுடைய ஒரு பொருள் உண்டாக முடியும்.

ஆனால் பரமாணுக்களுக்கோ பகுதிகளே கிடையாது என்று நீங்கள் சொல்வதால் அதற்கு இந்த 6 பக்கங்களும் இருக்க முடியாது. எனவே பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுக்கத்தை உண்டாக்குவதே
பொருந்தாத ஒன்று. பகுதிகள் இல்லாமல் சேர்ந்தால், எல்லா பரமாணுக்களும் ஒரே இடத்தில் தான் இருக்க முடியும், அப்படியானால் தன்னை விடப் பெரிதான ஒரு பொருளை உண்டாக்க முடியாது.
எனவே வைஸேஷிகர்கள் சொல்லும் இந்த வாதம் பொருந்தாது.

பரமாணுக்களில் செயலே ஏற்படாது
2- உப₄யதா₂பி ந கர்ம அத: தத₃பா₄வ:
உப₄யதா₂பி –
இரண்டு வழிகளிலும்
ந கர்ம – உலகத்தை உண்டாக்கும் பரமாணுக்களுக்கு இடையில் சேர்க்கையை உண்டாக்கும்
செயல் ஏற்பட முடியாது
அத: தத₃பா₄வ: – ஆகையால் பரமாணுக்கள் சேர்ந்து உலகத்தை உண்டாக்குவது என்பது இல்லை

எந்த இரண்டு பொருள்கள் சேர வேண்டும் என்றாலும் அவற்றில் ஒரு அசைவு – நகர்பு-செயல் உண்டாக வேண்டும். (இங்கு கர்மம் செயல்பாடு)அதைப் போல் பரமாணுக்கள் சேர வேண்டும் என்றால், அவற்றில் ஒரு செயல் உண்டாக வேண்டும். அது எந்தக் காரணத்தால் உண்டாகிறது என்பதற்கு வைஸேஷிகர்கள் கூறுவது –’அத்ருஷ்டத்தால் ஏற்படுகிறது’ என்று.(அக்னி மேல் நோக்கியே எரிகிறது -வாயு சஞ்சரிக்கும் காரணம் தெரியாது -அதே போல் முதல் செயல்பாட்டுக்கும் காரணம் தெரியாது -அத்ருஷ்டம் என்பர் ) அந்த அத்ருஷ்டம் யாரிடம் இருக்கிறது என்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம், ஆனால் இரண்டிலும் ஒவ்வாமை உள்ளது.

1-அத்ருஷ்டம் பரமாணுவிலேயே இருக்கிறது, அது செயலை உண்டாக்குகிறது – இது பொருந்தாது.
ஜீவாத்மா செய்யும் செயல்கள் அவரிடம் தான் பாபம் -புண்யம் என்ற அத்ருஷ்டத்தை உண்டாக்க முடியும். பரமாணுவில் உண்டாக்க முடியாது

2-அத்ருஷ்டம் ஜீவாத்மாவிடமே இருக்கிறது, அது பரமாணுக்களில் செயலை உண்டாக்குகிறது – இதுவும் பொருந்தாது, ஜீவாத்மாவிடம் இருக்கும் அத்ருஷ்டம் அவரிடம் தான் ஒரு விளைவை ஏற்படுத்த முடியுமே தவிற பரமாணுவில் ஏற்படுத்த முடியாது.

ஆகையால், இரண்டு வழிகளும் பரமாணுக்களைச் சேர வைக்கும் செயல் உண்டாக வாய்ப்பில்லை .
எனவே பரமாணுக்கள் ஒன்று சேர்ந்து தான் உலகத்தை உண்டாக்குகின்றன என்ற தத்துவமே பொருத்த மற்றது.

2.2.2 மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம்-வைசேஷிக மதத்தில் உள்ள தவறுகள்

ஸம்வாயம் என்றால் என்ன?
2-2-2-மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம் – முதல் இரண்டு ஸூத்ரங்களாவே பரமாணுக்கள் உலகத்தை உண்டாக்குகின்றன என்று வைஸேஷிகர்கள் கூறும் கருத்தைத் தவறென்று நிரூபித்தார் வ்யாஸர். இனி வேறு சில தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
3ஆவது மற்றும் 4ஆவது ஸூத்ரங்களால் வைஸேஷிகர்கள் ஏற்கக் கூடிய ’ஸமவாயம்’ என்ற ஒன்றைக் கண்டிக்கிறார். ஸமவாயம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

வைஸேஷிகர்கள் ஸமவாயம் என்று ஒரு ஸம்பந்தத்தை ஏற்கிறார்கள். ஸம்பந்தம் என்றால் இரண்டு
பொருட்களுக்கிடையே இருக்கும் தொடர்பு என்று பொருள். இரண்டு த்ரவ்யங்கள் ஒன்றொடு ஒன்று தொட்டுக் கொண்டிருந்தால் அந்த ஸம்பந்தத்துக்கு ஸம்யோகம் என்று பெயர். எடுத்துக் காட்டுக்கு, நாம் கை கூப்பும் பொழுது இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று தொடுகின்றன. அப்போது அவற்றுக்கிடையே ஸம்யோகம் என்ற தொடர்பு உள்ளது. அதற்குப் பிறகு கைகளைப் பிரித்து விடுகிறோம்.
ஒரு த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால், அதில் சில பண்புகள் (குணங்கள்), சில செயல்கள், ஜாதி முதலானவை இருப்பதைக் காண்கிவறோம். ஒரு புஷ்பத்தில் நிறம் இருக்கும், மணம் இருக்கும். ஒரு பந்து கீழே விழும் பொழுது ’விழுதல்’ என்கின்ற செயல் அந்தப் பந்திலிருக்கும். மாட்டிடம் மாட்டுத் தன்மை , மனித உடலில் மனிதத் தன்மை. குடங்களில் குடத் தன்மை என்கிற ஜாதிகள் உள்ளன. இப்படி பண்புகள், செயல்கள், ஜாதிகள் அந்தந்த பொருட்களில் இருப்பதைக் காண்கிறோம்.

அவற்றுக்கும் அந்த த்ரவ்யத்துக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதமான தொடர்பு இருக்க வேண்டும். இந்த மணம் இந்த புஷ்பத்தில் தான் உள்ளது, வேறு இடத்திலில்லை என்று தோன்றுகிறபடியால் கண்டிப்பாக அவற்றுக்கிடையே ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அந்தத் தொடர்பு ஸம்யோகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஸம்யோகம் பிரியக் கூடிய இரண்டு த்ரவ்யங்கள் ஒன்றை ஒன்று தொடும் போது மட்டும் தான் ஏற்படும். ஒரு த்ரவ்யத்துக்கும் அதிலிருக்கும் குணம் -செயல் -ஜாதிக்கும் இடையே ஸம்யோகம் என்கிற தொடர்பு இருக்காது, அதனால் புதியதாக வேறொரு விதமான தொடர்பை வைஸேஷிகர்கள் கல்பிக்கிறார்கள். அதற்குத் தான் ஸமவாயம் என்று பெயர்.
இரண்டு பொருட்கள் பிரிக்க முடியாதபடி சேர்ந்து இருந்தால் அவற்றுக்கு இடையில் ஸமவாயம் என்கிற தொடர்பு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு புஷ்பத்திலிருந்து அதன் மணத்தைப் பிரிக்க முடியாது. ஒரு வேஷ்டியிலிருந்து அதன் நிறத்தைப் பிரிக்க முடியாது. ஒரு குடத்திலிருந்து குடத் தன்மை என்கிற அதன் ஜாதியைப் பிரிக்க முடியாது. அப்படி பிரிக்க முடியாமல் சேர்ந்திருக்கும் பொருட்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு ஸமவாயம் என்று சொல்கிறார்கள்

(இப்படிப் பிரிக்க முடியாத இவற்றில் ஸம்பந்தமே ஸமவாயம் -அனுமானம் பண்ணியே அறியலாம் -பிரத்யக்ஷமாக பார்க்க முடியாத ஓன்று இது -ஆகவே ஸம்யோகம் வேறு ஸமவாயம் வேறு-)

ஸமவாயத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள குறைகள்
இனி இந்த ஸமவாயம் என்பதை வ்யாஸர் கண்டிப்பதைப் பார்ப்போம்.
3-ஸமவாய அப்₄யுபக₃மாத் ச ஸாம்யாத் அநவஸ்தி₂தே :
ஸமவாய அப்₄யுபக₃மாத் ச (அஸமஞ்ஜஸம்)
– ஸமவாயத்தை ஏற்கிற படியாலும் (இந்த மதம் பொருத்த மற்றது)
ஸாம்யாத் – ஸமமான படியாலும்அநவஸ்தி₂தே : : – முடிவில்லாத படியாலும்

குணம் செயல் ஜாதி முதலானவை ஒரு பொருளில் இருப்பதாகத் தோற்றமளிப்பது ஸமவாயம் என்ற ஸம்பந்தத்தால் என்று சொன்னீர்கள். அது பொருந்தாது. அந்த ஸமவாயமும் குணம்-செயல்-ஜாதியோடு ஸமமானபடியால். அதாவது, குணம் செயல்-ஜாதிக்கு எப்படி அந்த த்ரவ்யத்தோடு ஒரு தொடர்பு தேவைப்பட்டதோ , அதே போல் ஸமவாயத்துக்கும் கூட அந்த த்ரவ்யத்வதாடு ஒரு தொடர்பு
கண்டிப்பாக தேவைப்படும். இது தான் ’ஸாம்யம்’ (ஸமத்தன்மை – ஒற்றுமை ) என்று சொல்லப்படுகிறது.
சரி, ஸமவாயத்துக்கும் அந்தத் தேவை இருந்தால் என்ன? என்று கேட்டால் – அநவஸ்தி₂தே : என்று பதில். மணத்துக்கும் புஷ்பத்துக்கும் இடையில் ஸமவாயம் என்கிற தொடர்பு உள்ளது; அந்த ஸமவாயத்துக்கும் அந்தப் புஷ்பத்துக்கும் இடையில் வேறொரு இரண்டாவது ஸமவாயத்தை (தொடர்பை ) ஏற்க வேண்டும். அந்த இரண்டாவது ஸமவாயத்துக்கும் அந்த புஷ்பத்துக்கும்
இடையில் மூன்றாவதாக ஒரு ஸம்வாயத்தை ஏற்க வேண்டும், இப்படி முடிவில்லாமல் கல்பித்துக் கொண்டே போக வேண்டும். இந்த தோஷத்துக்கு அநவஸ்தா₂ என்று பெயர். ஆகையால் ஸமவாயம் என்பதை ஏற்க இயலாது என்கிறார் வ்யாஸர்.

சரி, மணம் புஷ்பத்தோடு ஒரு தொடர்பை எதிர்பார்ப்பது போல் ஸமவாயம் அப் புஷ்பத்தோடு எந்தத் தொடர்பையும் எதிர்பார்க்காது, தானாகவே இயற்கையாக அதிலிருக்கும் என்று கொள்ளலாமே ? என்று பூர்வ பக்ஷி கேட்கலாம். அதற்கு வ்யாஸர் கூறுகிறார் – இப்படிச் சொல்வதற்கு பதிலாக ’மணம் முதலானவையே இயற்கையாக புஷ்பத்தில் உள்ளன’ என்று முதலிலேயே ஏற்றிருந்தால் ஸம்வாயம்
என்கிற ஒரு புது பொருளை ஏற்றிருக்கவே வேண்டாமே (
அப்ருதக் ஸித்தம் என்றும் நம் ஸம்ப்ரதாயப்படியே சொல்லலாம் அன்றோ). அதனால் எவ் விதத்திலும் ஸமவாயத்தை ஏற்பது பொருத்தமற்றது.

4- நித்யமேவ ச பா₄வாத் – “(இவ் வுலகம்) நிரந்தரமாகவே இருக்க வேண்டிய படியாலும்”
வைஸேஷிகர்கள் ஸமவாயம் என்ற தொடர்பு நித்யமானது,உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்கிறார்கள்.-புஷ்பத்துக்கும் மணத்துக்கும் இடையே உள்ள ஸமவாயம் நிரந்தரமானது என்றால், புஷ்பமும் மணமும் கண்டிப்பாக நிரந்தரமாக இருக்க வேண்டும். இதே போல் உலகில் அனைத்துப் பொருட்களும் நித்யமானவை என்று ஆகி விடும்.
அப்படியானால் இந்த உலகமும் அதிலிருக்கும் பொருள்கள் அனைத்தும் நித்யமானவையாக (நிரந்தரமானவையாக) இருக்க வேண்டும். ஆனால் உலகத்தில் அனைத்தும் அழிவதைக் காண்கிறோம். ஆகவே ஸமவாயம் ஏற்கப்பட முடியாது.

வேறு சில தவறுகள்
அடுத்த இரண்டு ஸூத்ரங்களால் வேறொரு கருத்தைக் கண்டிக்கிறார்.
வைஸேஷிகர்கள் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு விதமான பரமாணுக்கள் உள்ளன, அவற்றில் நிறம், சுவை , மணம், ஸ்பர்ஸம் என்ற குணங்கள் உள்ளன என்கிறார்கள். அதைக் கண்டிக்கிறார் வ்யாஸர் –
5–ரூபாதி ₃மத்த்வாத் ச விபர்ய்ய: த₃ர்ஸநாத்
ரூபாதி₃மத்த்வாத் ச –
(பரமாணுக்கள்) நிறம் முதலான பண்புகளை உடையபடியால்
விபர்ய்ய: – நீங்கள் சொல்வதற்கு நேர் மாறாகத் தான் பரமாணுக்கள் இருக்க வேண்டும்
த₃ர்ஸநாத் – அப்படியே உலகத்தில் காண்கிற படியால்
நீங்கள் பரமாணுக்கள் நித்யமானவை , மிக நுண்ணியவை , பகுதிகள் அற்றவை என்று சொல்கிறீர்கள். உலகத்தில் எந்த ஒரு பொருள் நிறம், சுவை முதலான குணங்கவளாடு இருந்தாலும், அது-அநித்யத்வம் -ஸ்தூலத்வம் -ச அவயவத்வம்- அழியக் கூடியதாக, பெரியதாக, பகுதிகளை உடையதாகத் தான் காணப்படுகிறது. எனவே , பரமாணுக்களை அநுமானம் செய்யும் போது, அவற்றுக்கும் நிறம் முதலானவை உண்டு என்றால், அவையும் அழியக் கூடியவை , பெரிதானவை , பகுதிகளோடு கூடியவை என்று தான் ஆகும். இது நீங்கள் சொல்வதற்கு நேர் முரணானது. எனவே நீங்கள் சொல்வது பொருந்தாது.

6–உப ₄யதா₂ ச தோ₃ஷாத் – “இரண்டு விதத்திலும் தோஷம் உள்ளபடியால்”
முன் ஸூத்ரத்தில் சொன்ன தோஷத்திலிருந்து தப்பிக்க பரமாணுக்களில் நிறம், சுவை முதலானவை இல்லை என்று சொன்னால், அப்போது பரமாணுக்களிலிருந்து உண்டான புஷ்பம், வேஷ்டி முதலான பொருட்களில் நிறம், சுவை முதலானவை இருக்கவே முடியாது. நூலில் இருக்கும் தன்மை தான் வேஷ்டியில் வர முடியும். அதனால் தோஷம்.

இதிலிருந்து தப்பிக்க நிறம் முதலானவற்றை ஒப்புக் கொண்டால், முன் ஸூத்ரத்தில் உள்ள தாேஷம் வந்து சேரும். எனவே , இரண்டு பக்கமும் தாேஷம் உள்ளபடியால், பரமாணு என்பதே ஏற்கப்பட முடியாதது.

7–அபரிக்₃ரஹாத் ச அத்யந்தம் அநபேக்ஷா
அபரிக்₃ரஹாத் ச
– பெரியோர்கள் யாரும் வைஸேஷிக மதத்தை சிறிதளவும் எடுத்துக் கையாளாதபடியால்
அத்யந்தம் முழுவதுமாக
அநபேக்ஷா முக்தி விரும்புபவர்களால் இந்த மதம் புறக்கணிக்கப் பட வேண்டும்

(சாங்க்ய யோக மதங்களில் சிலவற்றை சித்தாந்தித்தில் கொள்கிறோம் -அப்படி வைசேஷிக மதத்தில் ஒன்றுமே கொள்ள வில்லையே —முமுஷுக்கள் புறக்கணிக்க வேண்டும் -என்றபடி -)

இவ்வாறு வைஸேஷிக மதம் தவறென்று இந்த அதிகரணத்தில் நிரூபிக்கப் பட்டது.


2.2.3 ஸமுதா₃யாதி₄கரணம்-பௌத்₃த₄ மதத்தின் உட்பிரிவுகள்2-2-3-ஸமுதா₃யாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் பரமாணுவே ஜகத்காரணம் என்று சொல்லக் கூடிய வைஸேஷிகர்களின் மதம் கண்டிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணம் தொடங்கி பௌத்தர்களின் மதம் கண்டிக்கப் படுகிறது. இவர்களும் பரமாணுக்களே ஜகத்துக்கு காரணம் என்று சொல்கின்றபடியால் வைஸேஷிகர்களுக்கு அடுத்து இவர்களை வேத வியாஸர் கண்டிக்கிறார்.

பௌத்த மதம் நான்கு உட்பிரிவுகளை உடையது – வைபாஷிகர்கள், ஸௌத்ராந்திகர்கள், யோகாசாரர்கள், மாத்யமிகர்கள் என்று அந்த நான்கு வகைகளுக்கும் பெயர்.
வைபாஷிகர்கள் மதம் –
(1) ஆத்மா உண்மையானவர், ஜ்ஞானமே வடிவமானவர். ஆத்மா ஜ்ஞானம் உடையவர் அதாவது அறிவாளி அல்ல;அறிவே தான் ஆத்மா.
(2) உலகத்தில் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு விதமான பூதங்கள் தான் உள்ளன. ஆகாஸம் என்று தனியாக ஒரு பொருள் கிடையாது. நிலம் முதலானவை இல்லாமை தான் ஆகாஸம் என்று
சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பூதங்களின் பரமாணுக்களின் சேர்ந்து குடம், மேஜை , புஷ்பம் முதலான உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன.
(3) அந்தப் பொருட்களும் உண்மை யானவை . ஆத்மா உலகப் பொருட்களைப் புலன்களின் மூலம் அதாவது ப்ரத்யக்ஷத்தாலே அறிகிறது.

(காற்றில் ஸ்பர்சம் மட்டுமே -நெருப்பு -கண்ணாலும் பார்க்கலாம் -தண்ணீருக்கு ஸ்பர்சம் கண்டு ருசி மூன்று குணங்கள் உண்டு – -பிருத்விக்கு-மணத்துடன் சேர்த்து நான்கு குணங்கள் -என்பர் -)

ஸௌத்ராந்திகர்கள் மதம் –
வைபாஷிகர்கள் சொல்லும் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும், ஆனால் உலகப் பொருள்களை புலன்களால் அறிய முடியாது, அனுமானத்தால் தான் அறியலாம் என்கிறார்கள்.

யோகாசாரர்கள் மதம் –
இவர்கள் ஆத்மாவை மட்டும் தான் உண்மை என்று ஏற்கிறார்கள். உலகப் பொருள்கள் அனைத்துமே பொய்யானவை , கனவில் நாம் காணும் பொருள்கள் போல் என்கிறார்கள்.

மாத்யமிகர்கள் மதம் –
இவர்கள் ஆத்மா உள்பட உலகில் அனைத்துமே பொய்யானது என்கிறார்கள்.(ஸர்வம் சூன்யம்-ஆகாசத் தாமரை -முயல் கொம்பு – மத்யமம் -நடுத்தரம் -என்றவாறு -)

நால்வருக்கும் பொதுவான கருத்துகள் –
(1) பொருள்கள் எல்லாமே க்ஷணிகங்கள், அதாவது ஒரு க்ஷணம் மட்டுமே இருக்கக் கூடியவை . ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு பொருளும் அழிகிறது, அதே போல் மற்றொரு பொருள்
உண்டாகிறது என்கிறார்கள்.(திரி எரிந்து முன் ஜ்வாலை அழிந்து புதியதாக ஜ்வாலை பிறந்து நித்தியமான ஜ்வாலை போல் தோற்றுவது போல்)
(2) அறிவே தான் ஆத்மா. ஆனால் அது தன்னைத் தவறாக ’அறிவுடையவன்’ – ’அறிவாளி’ என்று நினைத்துக் கொள்கிறது

இதில்,உலகப் பொருள்களை ஏற்கும் ஸௌத்ராந்திகர்களையும் வைஸேஷிகர்களையும் இவ்வதிகரணத்தில் கண்டிக்கிறார்-மேல் இரண்டு அதிகரணங்களாலும் மற்ற புத்த மதங்களையும் நிரஸிக்கிறார்-

ஸமுதாயங்கள் உண்டாகவே முடியாது
1–ஸமுதா₃யே உப₄ய ஹேதுகே அபி தத₃ப்ராப்தி:
உப₄ய ஹேதுகே
– இரண்டு காரணங்களிலிருந்து உண்டாகும் ஸமுதா₃யே அபி – ஸமுதாயங்களிலும்
தத₃ப்ராப்தி: – அதுவே ஏற்படாது, அதாவது அந்த ஸமுதாயங்களே ஏற்பட முடியாது

உலகில் இரண்டு விதமான ஸமுதாயங்கள் (கூட்டங்கள் – திரள்கள்) உண்டாகின்றன.
(1) பரமாணுக்கள் ஒன்று கூடி நிலம் நீர் முதலான பூதங்கள் உண்டாகின்றன
(2) பூதங்கள் ஒன்று கூடி குடம், வேஷ்டி முதலான பௌதிகங்கள் (உலகப் பொருள்கள்) உண்டாகின்றன.
இந்த இரண்டு விதமான ஸமுதாயங்களும் உண்டாகவே முடியாது என்கிறார் வ்யாஸர்.
பரமாணுக்கள் சேர்ந்து ஸமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் அதற்குச் சில நிலைகள் உள்ளன –
(1) பரமாணுக்கள் சேர்வதற்காக நகர்ந்து வர வேண்டும்
(2) பரமாணுக்கள் தொடர்படைந்து சேர வேண்டும்
(3) உண்டாக்கப்பட்ட ஸமுதாயம் அறியப் பட வேண்டும்
(4) அப் பொருள் பயன்படுத்தப் பட வேண்டும்

பரமாணுக்களே க்ஷணிகங்கள் என்று சொல்வதால், நகர்ந்து வரும் பரமாணுக்கள் சேர்வதற்குள் அவையே அழிந்து விடுகின்றன, பிறகு எப்படி ஸமுதாயம் உண்டாக முடியும்? ஸமுதாயம் உண்டாக்கப் பட்டாலும் அது அறியப் படுவதற்குள் அழிந்து விடும், அறியப் பட்டாலும் பயன் படுத்துவதற்குள் அழிந்து விடும். ஆகவே பரமாணுக்குள் சேர்ந்து தான் உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் உண்டாகுகின்றன, அவையே அறியப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது.
மேலும், ஆத்மா ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால்
(1) அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட வேண்டும்
(2) ஆத்மா அப் பொருளை அறிய வேண்டும்
(3) ஆத்மா அப் பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

அதுவரை அந்தப் பொருளே இருக்காது, ஒரு க்ஷணத்தில் அழிந்து விடும் என்றால், ஆத்மா எந்தப் பொருளையும் அறியவே இயலாது.

அறிவால் பொருளா? பொருளால் அறிவா?
2–இதரேதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்கா₄த பா₄வ அநிமித்தத்வாத்
இதரேதர ப்ரத்யயத்வாத்
ஒன்றுக்கொன்று காரணமான படியால்
உபபந்நம் ஸமுதாயமுண்டாவது பொருந்தும்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
ஸங்கா₄தபா₄வ அநிமித்தத்வாத் –ஸமுதாயம் உண்டாவதற்கு அது காரணமல்லாதபடியால்

பவ்த்தர்களின் கேள்வி – அவித்₃யை எனப்படும் விபரீத ஜ்ஞாநம் (தவறான புரிதல்), அதிலிருந்து -ஸம்ஸ்காரம்-விருப்பு வெறுப்புகள், அதிலிருந்து -விஞ்ஞானம் சித்த உணர்வு-ஆத்மாவின் செயல்பாடு, அத்தால் வெவ்வேறு விதமான எண்ணங்கள், அதிலிருந்து நிலம் நீர் தீ முதலானவை , அதிலிருந்து புலன்கள், அதிலிருந்து உடல், அதிலிருந்து பிறவி,அதிலிருந்து இன்ப துன்பங்கள், அதிலிருந்து மீண்டும் அவித்யை என்பது தான் ஸம்ஸாரத்தில் வழக்கம்.-(ப்ரத்யயத்வாத்-ஹேதுத்வாத் என்றபடி)
எனவே அவித்யையால் ஜந்மம், ஜந்மத்தால் அவித்யை என்று இவை இரண்டும் ஒன்றுக்கொன்று காரணமாக உள்ளன. பரமாணுக்கள் சேர்ந்து ஸமுதாயங்கள் உண்டாகா விட்டால் இந்த சங்கிலித் தொடரே பொருந்தாமல் போகும். எனவே கண்டிப்பாக ஸமுதாயம் உண்டாக முடியும் என்று ஏற்க வேண்டும்.

வ்யாஸரின் பதில் – ஜ்ஞாநத்தால் உலகப் பொருள்கள் உண்டாகின்றன என்று சொன்னது சற்றும் பொருந்தாது. -அப்படி உண்டாகுமானால், ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறியும் பொழுது அங்கு பாம்பு உண்டாக வேண்டும்! அப்படி உலகத்தில் கண்டதில்லை – எனவே ஜ்ஞாநத்திலிருந்து நிலம் நீ முதலானவை ஏற்படுகின்றன என்று நீங்கள் சொல்வது பொருந்தாது. எனவே ஸமுதாயங்கள் உண்டாகவே இயலாது.
மேலும், ஆத்மாவே ஸ்திரமானவர் அல்ல என்பதால், அவருக்கு எப்படி அவித்யையால் விருப்பு வெறுப்புகள் உண்டாக முடியும்? அதற்குள் அவரே அழிந்து விடுவார்.
மேலும் 8 ஸூத்ரங்களால் வ்யாஸர் பௌத்த மதத்தில் பல தாேஷங்களைக் கூறுகிறார்.

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந- பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –சார்வாக சைலாச நி –சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்- பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –ஜைநே பகண்டீரவ – ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்- மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி – ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர் சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்குகின்றார் –ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார் பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

க்ஷணிகத்வம் பொருந்தாது
2-2-3-ஸமுதாயாதிகரணத்தின் முதல் இரண்டு ஸூத்ரங்களால் பரமாணுக்கள் க்ஷணிகமானணவ என்று பௌத்தர்கள் சொல்வதால் அவர்கள் மதத்தில் ஸமுதாயங்களே உண்டாக முடியாது, எனவே உலகமே உண்டாக முடியாது எனப்பட்டது. இனி மேலுள்ள ஸூத்ரங்களால் மேலும் பற தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

3-உத்தரரோத் பாதே ₃ ச பூர்வ நிரோதா₄த் – “அடுத்தது உண்டாகும் போது முந்தையது அழிவதால்”
பௌத்த மதத்தில் குடம் முதலான எல்லாப் பொருட்களுமே ஒவ்வொரு வினாடியும் அழிகின்றன, அடுத்த வினாடியில் அதைப் போலவே வேறொரு குடம் உண்டாகிறது என்று கூறுகிறார்கள். இதைக் கண்டிக்கிறார் வ்யாஸர்.

உலகத்தில் எந்த ஒரு பொருள் உண்டாகும் போதும், அது உண்டாகும் வினாடியில் அதன் காரணங்கள் இருக்க வேண்டும்.-ஆனால் நீங்கள் சொல்லும்படி முதல் வினாடியில் இருந்த குடம் இரண்டாவது வினாடியில் உள்ள குடம் உண்டாகும் போது அழிந்து விடுகிற படியால் அந்த இரண்டாவது குடத்துக்கு முதல் குடம் காரணமாக இருக்க முடியாது. முன் வினாடியில் காரணம் இருந்தாலே போதும் என்று நீங்கள் வாதிட்டாலும், முதல் வினாடியில் உள்ள குடம் அடுத்த வினாடியில் உலகிலிருக்கும் எல்லாக் குடங்களுக்கும் காரணமாகலாமே என்கிற கேள்வி எழும். அதைப் போக்க
ஓர் இடத்தில் முதல் வினாடியில் இருந்த குடம் அதே இடத்தில் அடுத்த வினாடியில் உண்டாகும் குடத்துக்குத் தான் காரணம்” என்று நீங்கள் சொன்னால், அப்போது ஒரு கேள்வி – “இடம்” அதாவது “தேசம்” என்பது ஸ்திரமானது என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? அதுவும் க்ஷணிகம் தான் என்றால் “அதே இடத்தில்” என்று நீங்கள் சொன்னதே பொருந்தாது, குடம் ஒவ்வொரு வினாடியும் மாறுவது போல் இடமும் ஒவ்வொரு வினாடியும் மாறுகிற படியால்.

(குடத்தில் இருந்து அனைத்தும் பொருள்களும் உண்டாகலாமே என்னில் அதே ஜாதீயமாக இருக்க வேணும் என்பர்- பின்பு ஸ்தானம் மாறுபட்டு அங்குள்ள குடம் அழிந்த பின்பும் எங்கும் உள்ள குடங்களுக்குக் காரணமாகலாமே என்னில் -அந்த ஸ்தானம் இடமும் மாறாமல் இருக்க வேண்டுமே -ஆகவே ஒவ்வாதே -)

4-அஸதி ப்ரதிஜ்ஜோபரோத₄: யௌக₃பத்₃யம் அந்யதா₂
அஸதி –
முதல் குடம் இல்லாமலேயே இரண்டாவது குடம் உண்டாகலாம் என்றால்
ப்ரதிஜ்ஜோபரோத₄: – முதல் குடம் இரண்டாவது குடத்துக்குக் காரணம் என்று நீங்கள் சொல்வது பொருந்தாது
அந்யதா ₂ – இரண்டாவது குடம் உண்டாகும் வினாடியில் முதல் குடமும் அழியாமல் உள்ளது என்று சொன்னால்
யௌக₃ பத்₃யம் – அந்த இரண்டாவது வினாடியில் இரண்டு குடங்கள் கண்ணுக்குத் தெரிய வேண்டும், எல்லாப் பொருள்களும் க்ஷணிகம் என்று நீங்கள் சொன்னதும் தவறாக ஆகி விடும்.
ஆகவே , நீங்கள் சொன்ன க்ஷணிகத்வம் எந்த விதத்திலும் பொருத்தமற்றது

(ஒரு பொருள் உண்டாகும் நான்கு காரணங்கள்- 1-அதிபதி புலன்கள் 2-சஹஹாரி வெளிச்சம்–3- ஆலம்பனம் -4-சமநாந்தர ஞானம் முன் ஞானம் அடுத்த ஞானத்துக்கு காரணம் -என்பர் புத்த மதஸ்தர் -அனைத்துமே ஒவ்வாது)

நீங்கள் சொல்லும் அழிவு பொருந்தாது
5–ப்ரதிஸங்க்₂யா -அப்ரதிஸங்க்₂யா-நிரோத₄-அப்ராப்தி: அவிச்சே₂தா₃த்
ப்ரதிஸங்க்₂யா -அப்ரதிஸங்க்₂யா -நிரோத₄ –
ப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் அப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் என்னும் இரண்டுமே
அப்ராப்தி: – ஏற்பட முடியாது
அவிச்சே₂தா₃த் – ஒரு பொருளே இடைவிடாமல் தொடர்கிறபடியால்

நிரோத₄ம் என்றால் அழிவு. பௌத்த மதத்தில் இரண்டு விதமான அழிவுகள் சொல்லப்படுகின்றன –
1-ப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் – இதை ’அறியப்படும் அழிவு’ என்று கொள்ளலாம். ஒரு குடத்தைக் கட்டையால் அடித்து உடைத்தால் அது அழிந்து போகிறது, அடுத்த வினாடியிலிருந்து குடம் இருக்காது, அதன் துகள்கள் தான் இருக்கும்.-இவ் விடத்தில் குடத்தின் அழிவு தெளிவாகக் காணப்படுகிறது.
2-அப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் – இதை ’அறியப்படாத அழிவு’ என்று கொள்ளலாம். எல்லாப் பொருள்களும் க்ஷணிகமான படியால் ஒவ்வொரு வினாடியுமே நம் கண்முன் இருக்கும் குடம் முதலானவை அழிந்து, அதே போல் வேறொரு குடம் தான் உண்டாகிறது. இந்த அழிவு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை .

இந்த இரண்டு விதமான அழிவுமே பொருந்தாது. ஆரம்பணாதிகரணத்திலேயே ’ஒரே பொருள் தான் வேவ்வேறு நிலைகளை அடைகிறதே தவிற, எந்தப் பொருளும் புதிதாக உண்டாக்கப் படுவதுமில்லை அழிக்கப் படுவதுமில்லை என்று நிரூபித்து விட்டோம். ஆகவே , ஒரு பொருள் அழிந்து விட்டது, வேறொரு பொருள் (மற்றொரு குடமோ , குடத்தின் துகள்களோ ) தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது பொருத்தமற்றது.

6- உ ப₄யதா ₂ ச தோ₃ஷாத் – “இரண்டு காரணங்களாலும் தோஷம் உள்ள படியால்”
துச்சம் என்றால் ’இல்லாத பொருள்’ என்று பொருள். பௌத்த மதத்தில் ’துச்சத்திலிருந்து (இல்லாததிலிருந்து) குடம் உண்டாகிறது’ என்றும், ’குடம் அழிந்து துச்சமாக (இல்லாததாக) ஆகிறது’ என்றும் கூறுகிறார்கள்.
உலகில் மண்ணிலிருந்து உண்டான பொருள் மண்ணாகவே இருப்பதைக் காண்கிறோம். எந்தப் பொருள் அழிந்தால் மண்ணாக ஆகுமோ அப் பொருளும் மண்ணாகவே இருப்பதைக் காண்கிறோம்.
அந்த முறைப்படி பார்த்தால் துச்சத்திலிருந்து உண்டாகி, அழிந்து துச்சமாகப் போகும் உலகப் பொருள்கள் எல்லாமே இடைப்பட்ட காலத்திலும் துச்சமாகத் தான் இருக்க வேண்டும், உண்மைப் பொருளாக இருக்க இயலாது.

மேலும் சில தவறுகள்
7-ஆகாசே ச அவிஸேஷாத் –“
ஆகாசத்திலும்கூட; வேறுபாடு இல்லாத படியால்”
பௌத்தர்கள் நிலம், நீர், தீ, காற்று என்ற ஆகாஸம் தவிர்ந்த 4 பூதங்களைத் தான் ஏற்கிறார்கள், அதைக் கண்டிக்கிறார் –“ஆகாஸத்திலும் துச்சத்வம் (இல்லாமை ) சொல்வது பொருந்தாது, மற்றவற்றைப் போலவே உள்ளபடியால்” என்று.

நிலம் முதலானவற்றை ஏற்கக் காரணம் என்ன?(அபாத ப்ரதீதாத் )
(1) அவை தோற்றமளிக்கின்றன-2-அவை பொய்யானவை என்று எந்தப் ப்ரமாணமும் சொல்லவில்லை . அதே அளவுகோலின்படி பார்த்தால் ஆகாஸமும் தோற்றமளிக்கிறது – ’இங்கு கழுகு பறக்கிறது’ என்று கண்ணால் காணும் போது ’இங்கு’ என்று ஆகாஸத்தையே நாம் பார்க்கிற படியால். ஆகாஸம் பொய்யானது என்று காட்டும் எந்தப் ப்ரமாணமும் இல்லை . எனவே மற்ற பூதங்களோடு எந்த வேறுபாடும் ஆகாஸத்துக்கு இல்லாதபடியால் அதையும் ஏற்க வேண்டும்.-பஞ்சீகரணம் என்ற செயலால் பகவான் ஐந்து பூதங்களையும் ஒன்றோடொன்று கலந்து விடுகிற படியால் ஆகாஸத்திலும் நிறம் உள்ளது, எனவே நாம் அதைக் கண்ணால் காண முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

8-அநு ஸ்ம்ருதே : ச – “முன்னால் பார்த்த விஷயத்தைப் பற்றின ஜ்ஞாநத்தாலும்”
இந்த ஸூத்ரத்தால் பௌத்தர்கள் கூறும் க்ஷணிகத்வம் என்பது தவறு, உலகப் பொருட்கள் ஸ்திரமானவையே என்கிறார்.

“இது குடம்” என்ற அறிவு ப்ரத்யக்ஷம், கண்ணால் ஏற்படுகிறது. “நேற்று குடம் வாங்கினேன்” என்கிற அறிவு ஸ்மரணம் அதாவது நினைவு மட்டுமே . “நேற்று நான் வாங்கின குடம் தான் இது” என்று ஒரு சிறப்பான ஜ்ஞாநம் உண்டாகிறது.
இதில் முன் நாம் அறிந்த ஒரு பொருளையே மறுபடியும் அறிகிறோம். இதற்கு ப்ரத்யபி₄ஜ்ஞா என்று பெயர். இப்படிப்பட்ட ப்ரத்யபி₄ஜ்ஞா என்கிற ஜ்ஞாநம் தான் நமக்கு உணர்த்துகிறது – நேற்று வாங்கப்பட்ட குடமும் இன்று காணப்படுகிற குடமும் ஒன்று தான் என்று. எனவே , அந்தக் குடம் நேற்றும் இன்றும் உள்ளபடியால் அது ஸ்திரமானது தான், ஒவ்வொரு வினாடியும் அழியக் கூடியதல்ல என்று நாம் அறிகிறோம்.
அதே போல் “நேற்று வாங்கின நான் இன்று பயன்படுத்துகிறேன்” என்று சொல்லும் போது நான் என்கிற ஆத்மாவும் நேற்றும் இன்றும் ஒருவரே என்று தெரிகிறது. அதனால் ஆத்மாக்களும் ஸ்திரமானவர்கள் தான், க்ஷணிகர்கள் அல்ல.

(வியவாசயம் -இது குடம் என்று அறிவது -ப்ரத்யக்ஷம் -மற்ற ஓன்று –ஸ்மரணம் -நினைவு -மூன்றாவது –ப்ரத்யபிஞ்ஞா -இரண்டுக்கும் தொடர்பு படுத்தி -அன்று பார்த்த இவரே –அநு ஸ்ம்ருதி இதுவே)

மேலும் சில தவறுகள்
9-ந அஸத: அத்₃ருஷ்டத்வாத்
– “இல்லாத பொருளினுடையது அல்ல, காணப் படாத படியால்”
முன் ஸூத்ரங்களில் – பொருள்கள் க்ஷணிகங்கள் என்று கொண்டால், அவற்றை அறிவதே என்பதே பொருந்தாது. மேலும், ஒரு ஜ்ஞாநம் ஏற்பட வேண்டுமானால், புலன்களுக்கும் அந்தப் பொருளுக்கும் தொடர்பு ஏற்பட்டு, பிறகு அடுத்த வினாடியில் தான் அறிவு உண்டாகும். அதற்குள் முதல் வினாடியில் இருந்த பொருள் அழிந்து விட்டது. எனவே “புலன்களால் ஏற்படும் ஜ்ஞாநம் கூட அந்த வினாடியில் இல்லாத பொருளைப் பற்றியது” என்று ஆகி விடும். இது பொருந்தாது என்று கூறி யிருந்தார்.

ஸௌத்ராந்திகர்கள் கூறுகிறார்கள் – குடம் என்ற பொருள் தன் வடிவத்தை ஜ்ஞாநத்திடம் ஸமர்ப்பித்து விட்டுத் தான் அழிந்து விட்டது என்று. இது தவறு. ஒரு பொருளின் தன்மை அதனிடம் தான் இருக்க முடியுமே தவிற, அதன் அழிவுக்குப் பின் வேறொரு பொருளிடம் பெயர்ந்து செல்வதென்பது பொருந்தாது. அப்படி உலகத்தில் காணப்பட்டதே இல்லை . எனவே உங்கள் மதத்தில் நமக்கு தினசரி ஏற்படும் அறிவுகளே பொருந்தாமல் போய் விடும்.

10-உதா₃ஸீநாநா ம் அபி ச ஏவம் ஸித்₃தி₄: –-“முயலாதவர்களுக்கும் கூட இப்படி பயன் கிட்டும்”
எல்லாமே க்ஷணிகம், காரணமே இல்லாமல் ஒவ்வொரு வினாடியும் அழிகிறது, துச்சத்திலிருந்து உண்டாகிறது என்று கொண்டால் உலகில் எந்த முயற்சியும் எடுக்காதவர்களுக்குக் கூட முயற்சியின் பயன்கள் கிடைத்து விடும் என்ற அநீதி ஏற்படும்.(வைபாஷிகனுக்கும் ஸுந்த்ராதிகனுக்கும் பொதுவான தோஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது)

பொதுவாக ஸ்வர்கம் -மோக்ஷம் வேண்டும் என்று ஆசைப்படுபவன் யாகம் -த்யானம் என்ற வழிகளைப் பின்பற்றினால் அதனால் பிற் காலத்தில் அப் பயனை அடையலாம். ஆனால் உங்கள் மதத்தில் எல்லாம் க்ஷணிகம், எந்தச் செயல் செய்தாலும் அது எவ் விதத்திலும் அடுத்த வினாடியில் கூட இருக்காது. பிறகு யாகம் -த்யானம் என்ற உபாயத்தைச் செய்தவர் அடுத்த வினாடியே அழிந்து விட்டார், பல ஆண்டுகள் கழித்து பயனை அடைபவர் வேறு ஒரு ஜீவன் ஆவார்.-எனவே , எந்த முயற்சியும் செய்யத் தேவை இல்லாமலேயே இவ் வுலக இன்பங்கள் மற்றும் மோக்ஷம் கிடைக்கும் என்றாகி விடும்.

இப்படி பல விதமான குற்றங்கள் உள்ள படியால், பௌத்த மதத்தின் உட் பிரிவுகளுக்குள் உலகம் உண்மையானது என்று ஏற்கும் ஸௌத்ராந்திகர்கள் மற்றும் வைஸேஷிகர்களில் மதங்கள் தவறானவை என்பது இவ் வதிகரணத்தின் கருத்து –

2-2-4-உபலப்₃த்₄யதி₄கரணம்-யோகாசார்களைக் கண்டித்தல்

யோகாசார மதத்தின் சுருக்கம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், பௌத்தர்களுக்குள் உலகம் உண்மையானது என்று ஏற்கக்கூடிய சவ்த்ராந்திகர்களையும் வைபாஷிகர்களையும் கண்டனம் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அடுத்த பிரிவான யோகாசாரர்கணைக் கண்டிக்கிறார். இவர்களின் மதம் என்ன என்று பார்ப்போம்.

பொதுவாக உலகில் பலவிதமான ஜ்ஞாநங்கள், (அறிவுகள்) உண்டாவதை நாம் அனுபவிக்கிறோம். “இது குடம்”,“இது மேஜை ”, “இது புத்தகம்”, “இது புஷ்பம்” என்று வெவ்வேறு விதமான அறிவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இந்த அறிவுகள் இருக்கும் வேறுபாடு தான் வைசித்ர்யம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று ஆராயும் போது – உலகத்தில் பலவிதமான பொருட்கள் இருக்கின்றன.-அவற்றை இந்த ஒவ்வொரு அறிவும் காட்டிக் கொடுக்கிறது. அதனால் அறிவிலிருக்கும் வேறுபாட்டிற்குக் காரணம் அறியப்படும் பொருட்களில் இருக்கும் வேறுபாடு தான் என்று பொதுவாக நாம் கூறுகிறோம்.

ஆனால் யோகாசாரர்கள் இதை ஏற்க வில்லை – ஞான வைச்சித்தரியமே ந அர்த்த வைசித்ரியம்அறிவு மட்டுமே உண்மை, அதைத் தவிர உலகத்தில் எந்தப் பொருளுமே கிடையாது என்று சொல்கிறார்கள். அப்போது நாம் பார்க்கக் கூடிய பண்புகள், நிறம், மணம், சுவை , அளவு, வடிவம் இவை யெல்லாம் எங்கு இருக்கின்றன? என்று கேட்டால், இந்த ஆகாரங்கள் (பண்புகள்) ஜ்ஞாநத்திலேயே இருக்கின்றன என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் யுக்தி – உலகத்திலிருக்கும் பொருள்களிலும் நிறம், சுவை , மணம் முதலான பண்புகள் இருக்கின்றன. அதை அறிவு நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அந்த அறிவிலும் கருப்பு, வெள்ளை , மணம், சுவை முதலான பண்புகள் தோன்றுகின்றன. எனவே பொருள்களிலும் பண்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஜ்ஞாநத்திலும் பண்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. அறிவு, அறியப்படும் பொருள் என்று இரண்டு இருந்து இரண்டிலும் இந்த பண்புகள் இருந்தால் இரண்டு முறை பண்புகள் தோற்றமளிக்க வேண்டும். ஆனால் ஒரு முறை தான் தோற்றுகின்றன. அதனால் உலகப் பொருட்களே கிடையாது, அதில் ஆகாரங்களும் கிடையாது,-ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அந்த ஜ்ஞாநத்துக்கே ஆகாரங்கள் இருக்கின்றன. அந்த ஆகாரங்கள் மாறும் பொழுது தான் வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்-

அறியப்படும் பொருள் கிடையாது என்பது போலவே அறிபவர் -அறிவாளி -ஜ்ஞாதா என்று ஒருவரும் கிடையாது என்று தெரிவிக்கிறார்கள். ஆத்மா என்பது ஜ்ஞாநமே தான். ஜ்ஞாநம் உடையவர் அல்லர்
ஆனால் நமக்கு உலகத்தில் எப்படி தோன்றுகிறது? “நான் குடத்தை அறிகிறேன்”, “நான் புஷ்பத்தைக்
காண்கிறேன்” என்று அறிவு ஏற்படும் பொழுது நான் என்பவன் அறிவை உடையவன் என்று தோன்றுகிறது. ஆனால் இது தவறு. நான் என்பவன் ஜ்ஞாநமே . ஜ்ஞாநத்தை உடையவன் அல்லன் என்று கூறுகிறார்கள். பிறகு ஏனிப்படி தோற்றம் அளிக்கிறது என்றால், அதுதான் ப்ரமம் (மயக்கம்). அது தான் ஸம்சாரத்தின் விளைவு என்று தெளிவிக்கிறார்கள்.-எனவே ஜ்ஞாநம் ஓன்றே உண்மை . ஜ்ஞாநத்தால் அறியப்படும் பொருள்களும் பொய்யானவை . ஜ்ஞாநத்தை உடையவர் என்ற ஒருவரும் பொய்யானவர்.

(1-பொருள் 2-அதைப் பற்றிய ஞானம் 3-ஞானமுடையவன் – 1-ஜ்ஜேயம்-2-ஞானம்-3-ஜ்ஞாதா – மூன்றும் நாம் கொள்கிறோம் -இவர்களோ ஞானம் மட்டுமே உண்மை என்கிறார்கள்)

சரி, ஜ்ஞாநத்திலேயே ஆகாரங்கள் (பண்புகள்) இருக்கட்டும், அந்தப் பண்புகள் மாறுபடுவதற்கு காரணம் என்ன? ஏன் “இது புஷ்பம்” என்கிற ஜ்ஞாநம் மாறி “இது புத்தகம்” என்று வேறொரு ஆகாரத்தைக் கொண்ட ஜ்ஞாநம் உண்டாகிறது? அதற்கு வாசனா (பதிவுகள்) என்று ஒன்றை ஏற்கிறார்கள். இந்த வினாடியிலிருக்கும் ஜ்ஞாநம் அடுத்த வினாடியில் வேறொரு ஜ்ஞாநத்தை உண்டாக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பதிவோடு கூடிய ஜ்ஞாநத்தை உண்டாக்குமாம். அந்த ஜ்ஞாநம் அதற்கடுத்த ஜ்ஞாநத்தில் ஒரு பதிவை உண்டாக்கும். அந்த ஜ்ஞாநம் அதற்கடுத்த ஜ்ஞாநத்தில் மற்றுமொரு பதிவை உண்டாக்கும். இப்படியே வாசனை என்பது தொடர்ந்து வருவதால் தான் ஒரு கால கட்டத்தில் புஷ்பத்தைப் பற்றின ஜ்ஞாநம் மாறி புத்தகத்தைப் பற்றின ஜ்ஞாநம் ஏற்படுகிறது. இதற்குக் காரணமான குறிப்பிட்ட பதிவு இதற்கு முன்னால் வரை இல்லாதபடியால் இந்த மாற்றம் ஏற்படவில்லை . எனவே இதற்கெல்லாம் வாசனை என்கிற பதிவுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

உலகப் பொருட்கள் உண்மை யானவையே -அவர்கள் பக்ஷத்தை வ்யாஸர் 3 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் கண்டிக்கிறார்.

1–ந அபா₄வ : உபலப்₃தே ₄: – “இல்லை என்பதல்ல; தோற்றுவதால்”
அபா₄வ : – ஜ்ஞாநத்தைத் தவிற மற்ற உலகப் பொருள்கள் எதுவுமே இல்லை – கிடையாது
– என்பது தவறு
உபலப்₃தே ₄: – ஒரு பொருளை ஒரு ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுப்பதாகவே ஜ்ஞாநம் தோற்றுவதால்

உலகத்தில் அறிவு என்கிற பொருள் நமக்கு எப்படி தோற்றமளிக்கிறது என்று பார்க்க வேண்டும். “நான் குடத்தை அறிகிறேன்” என்று ஏதோ ஒரு பொருளை நான் என்ற ஆத்மாவுக்கு காட்டிக் கொடுக்கக் கூடியதாக அறிவு என்ற பொருள் அறியப் படுகிறது. இதன் அடிப்படையில், கண்டிப்பாக அறிவுக்கு விஷயமாக அறியப்படும் பொருள் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும். அதே போல் அறிவை உடையவர் என்கிற ஆத்மா அதாவது நாமும் உண்மை யாகவே இருக்க வேண்டும். “நான் குடத்தை அறிகிறேன்” என்ற ஜ்ஞாநத்தை எடுத்துக் கொண்டு இதில் குடம் என்பதும் பொய்-,அறிவாளி என்பதும் பொய், -அறிவு என்பது மட்டுமே உண்மை யானது என்று சொல்லுவது பொருந்தாத ஒரு வாதமாகும்

(ஞானமே விஷயமாகாதே -விஷயம் பற்றிய அறிவே ஞானமாகும் -விஷயம் -ஞானம் -ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா மூன்றும் இருக்க வேண்டும் -)

மேலும் வாசனை என்று ஒன்று முன் ஜ்ஞாநத்தாலே அடுத்தடுத்த ஜ்ஞாநத்தில் உண்டாக்கப் படுகிறது என்று கூறினீர்கள், அதுவும் பொருந்தாது. ஒரு பொருள் மற்றொரு பொருளில் ஒரு பதிவை உண்டாக்க வேண்டுமென்றால் அந்த இரண்டு பொருட்களும் ஏதோ ஒரு விநாடியிலாவது சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் மதத்திலோ முதல் விநாடியிலிருந்த ஜ்ஞாநம் இரண்டாவது விநாடியில் அழிந்து போய் விடுகிறது. அப்போது தான் இரண்டாவது ஜ்ஞாநம் உண்டாகிறது.

ஆகையால் ஜ்ஞாநத்திலிருக்கும் வேறுபாடுகளுக்குக் காரணம் உலகப் பொருட்களிலிருக்கும் வேறுபாடு என்று தான் ஏற்க வேண்டும். அந்த ஜ்ஞாநத்துக்கும் அந்தந்தப் பொருளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கிற படியால் தான் அந்தப் பொருளிலிருக்கும் பண்புகள் இந்த ஜ்ஞாநத்தின் மூலம் ஆத்மாவுக்கு காட்டப் படுகின்றன. ஜ்ஞாநத்துக்கும் பொருளுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு ஸம்யோகம் என்பதே . நாம் கை கூப்பும் பொழுது நம்மது இரண்டு கைகளுக்கும் யோகம் எப்படி உண்டாகிறதோ , அதே போல் நம்முடைய ஜ்ஞாநம் என்கின்ற ஒரு த்ரவ்யம் புத்தகம் என்கின்ற த்ரவியத்தைத் தொடும் பொழுது யோகம் என்கிற தொடர்பு ஏற்படுகிறது. அதனால் தான் இந்த அறிவு
புத்தகத்தைப் பற்றின அறிவு என்று ஆகிறது – என்று வ்யாஸர் கூறுகிறார்.

(ஆத்மாவும் ஞானமும் த்ரவ்யங்கள் -ஸம்யோகம் -பொருள்களை பற்றிய அறிவும் பொருள்களில் உள்ள பண்புகளையும் சேர்ந்து தானே அறிகிறோம்)

கனவும் விழிப்பும்
2- வைத₄ர்ம் யாத் ச ந ஸ்வப்நாதி₃வத் –
“வேறுபாட்டால் ஸ்வப்நத்தைப் போல அல்ல”
யோகாசாரர்கள் ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அறியப்படும் பொருட்கள் எல்லாம் பொய்யானவை என்று
நிரூபிப்பதற்கு கனவில் ஏற்படும் ஜ்ஞாநத்தை எடுத்துக் காட்டாகக் கூறுகிறார்கள். கனவு காணும் போது செல்வம், தேர், யானை , புலி, பாம்பு முதலான எத்தனையோ பொருட்களை அறிகிறோம். ஆனால் அந்த அறிவு மட்டும் தான் உண்மை — பொருட்கள் எல்லாம் பொய்யானவை . அதே போல் விழித்த பிறகு ஏற்படும் ஜ்ஞாநத்திலும் அறிவு மட்டுமே உண்மை -பொருட்கள் பொய்யானவை என்று வாதிடுகிறார்கள். அந்த வாதத்தை இந்த ஸூத்திரத்தில் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.

“விழித்திருக்கும் போது ஏற்படும் ஜ்ஞாநம் ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநத்தைப் போல் அல்ல. வேறுபட்டபடியால்” என்று ஸூத்ரத்தின் பொருள். கனவு காணும் பொழுது ஏற்படும் ஜ்ஞாநம் நித்ரா
(தூக்கம்), தமோ குணம் என்கிற தோஷங்களோடு கூடிய மனதால் உண்டாக்கப் படுகிறது
. எனவே அந்த
ஜ்ஞாநம் பொய்யான பொருட்களைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால் விழித்திருக்கும் போது ஏற்படும் ஜ்ஞாநம் தோஷமற்ற மனதால் உண்டாக்கப் படுகிறபடியால் அதில் அறியப்படும் பொருட்களும் உண்மை யாகத்தான் இருக்க வேண்டுமே தவிர பொய்யாக இருக்க முடியாது.

மேலும் விழித்த உடன் “நாம் கனவில் கண்ட பொருட்கள் எல்லாம் பொய்யானவை ” என்று நாமே அறிந்து கொள்கிறோம். இதைத் தான் ’பா₃த₄ம்’ என்பார்கள். ஆனால் அது போல் உலகப் பொருட்களில் நமக்கு எந்த அறிவும் ஏற்படுவதில்லை . “இதுவரை நான் பார்த்த புத்தகம், குடம், விளக்கு முதலானவை அனைத்தும் பொய்யானவை ” என்று எங்காவது எப்போதாவது யாருக்காவது ஜ்ஞாநம் ஏற்படுகிறதா? அப்படி காணப்படுவதில்லை . அதனால் அறியப்படும் உலகப் பொருட்கள் பிற்பாடு பொய்யென்று அறியப் படாத படியால் அவை உண்மை யானவையாகத் தான் இருக்க வேண்டும் என்பது வ்யாஸருடைய கூற்று –

(கெட்டுப்போன பாலால் செய்த இனிப்பு நன்றாக இல்லை -நல்ல பாலால் செய்த இனிப்பும் நன்றாக இருக்காதே என்றும் சொல்லலாமோ -வேறு பாடு இருப்பது போல் -தோஷம் உள்ள மனசில் பதிந்த ஸ்வப்ன ஞானம் போல் அல்லவே தோஷம் அற்ற மனசில் பதிந்த ஞானம் -பொய்யான விஷயம் கனவில் கண்டதை அறிகிறோம் -அது போல் கண்ணாலே பார்த்துக்கொண்டு இருக்கும் பொருள் பின்பும் பார்க்கும் படியாகவே இருப்பதால் வேறு பாடு உண்டே–)

கனவைப் பற்றின உண்மை
3-ந பா₄வ : அநுபலப்₃தே ₄:
– “பொருளே இல்லாத ஜ்ஞாநம் கிடையாது, காணாதபடியால்”
யோகாசாரர்கள் ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அதால் அறியப்படும் பொருள்களும் பொய்யானவை , அறிவை உடையவர் என்பவரும் பொய்யானவர் என்று கூறுகிறார்கள். அதை இந்த ஸூத்ரத்தில் கண்டிக்கிறார்.-“எந்தப் பொருளையும் காட்டிக் கொடுக்காத-பொருளே இல்லாத அறிவு என்பது இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஒரு அறிவு உலகத்தில் எங்கும், காணப் படாதபடி யால்” என்று ஸூத்ரத்திற்குப் பொருள்.

அதாவது, உலகத்தில் எந்த ஒரு அறிவை எடுத்துக் கொண்டாலும், “நான் புத்தகத்தைப் பார்க்கிறேன்”, “நான் குடத்தை அறிகிறேன்” என்று ஒரு பொருளை ஒரு ஆத்மாவுக்கு காட்டிக் கொடுப்பதாகத் தான் ஜ்ஞாநம் அறியப் படுகிறது. அறிவாளியும் இல்லாமல், அறியப்படும் பொருளும் இல்லாமல் எந்த ஒரு ஜ்ஞாநத்தையுமே நாம் உலகத்தில் கண்டதில்லை. அதனால், அப்படியொரு அறிவு இருக்கிறது என்று சொல்வது பொருந்தாது என்று வ்யாஸர் கூறுகிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும் – முன் ஸூத்ரத்தில் ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநம் உண்மை யானது, ஆனால் அதில் அறியப்படும் பொருள்கள் பொய்யானவை என்று யோகாசாரர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, ஆனால் விழித்திருக்கும் போது வரும் ஜ்ஞாநம் அப்படிப்பட்டதல்ல என்று கூறினார் வ்யாஸர். அப்படியானால், ஸ்வப்னத்தில் வரும் ஜ்ஞாநம் பொருள் அற்றது தானே ? பிறகு இந்த ஸூத்ரத்தில் “எந்த ஜ்ஞாநமுமே பொருள் அற்றதாக இருக்க முடியாது” என்று எப்படி கூறலாம்

இதற்குப் பதில் – முன் ஸூத்ரத்தில் அவர்கள் ஸ்வப்ன ஜ்ஞாநத்தைப் பற்றிச் சொன்னதை ஏற்றுக் கொண்டு வாதம் செய்தார். ஆனால் உண்மையில் ஸ்வப்ந ஜ்ஞாநத்தைப் பற்றி நம் ஸித்தாந்தம் என்ன என்பதை இந்த ஸூத்ரத்தில் வ்யாஸர் வெளியிடுகிறார். ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநம் கூட பொருள் உடையது தான். கனவில் செல்வம், தேர், குதிரை , பாம்பு, மாளிகை என்று எதை யெல்லாம் காண்கிறோமோ , அவை யெல்லாம் கற்பனை யானவை அல்ல,-அவையும் உண்மையான பொருட்கள் தான். அந்தந்த ஆத்மாவாலே அந்தந்த சமயத்தில் மட்டும் அறியப் படக் கூடியதாக பகவான் அந்தந்தப் பொருட்களைப் படைக்கிறார் என்று உபநிஷத் தெளிவாகக் காட்டுகிறது. இதை மேலே வரப் போகிற ஒரு அதிகரணத்தில் தெளிவாக வ்யாஸரும் நிரூபிக்கப் போகிறார்.

ஆகவே பொருளே இல்லாத ஜ்ஞாநம் என்று ஒன்று உலகத்திலேயே கிடையாது என்று யோகாசாரிகளுடைய மதத்தை முழுவதுமாக கண்டிக்கிறார் வ்யாஸர்-

2-2-5-ஸர்வதா₂நுபபத்த்யதி₄கரணம் அனைத்தும் பொய்யாக இருக்க முடியாதுமாத்யமிக மதத்தின் சுருக்கம்–ஸங்கதி – பௌத்த மதத்தின் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. அதில்
ஸௌத்ராந்திகர்களும் வைபாஷிகர்களும் உலகம் உண்மையானது என்று ஏற்றுக் கொள்கிறார்கள். யோகாசாரர்களோ ஜ்ஞானம் மட்டுமே உண்மை , உலகம் பொய்யானது என்று கூறுபவர்கள். அந்த மூன்று மதங்களையும் முன் இரண்டு அதிகரணங்களாலே வேதவ்யாஸர் கண்டித்தார். அதைத் தோடர்ந்து இந்த அதிகரணத்தில் மீதமிருக்கும் நான்காவது மதமான மாத்யமிகர்களின் மதத்தை வேதவ்யாஸர் கண்டிக்கிறார்.

மாத்யமிகர்களின் மதம் – இந்த உலகத்தில் அனைத்துமே பொய்யானது. உலகப் பொருள்களும் சரி, ஜ்ஞானம் என்று சொல்லப்படும் ஆத்மாவும் சரி, அனைத்துமே சூன்யம் அதாவது பொய்யானது. அது தெரியாமல் இவை உண்மை யானவை என்று நினைப்பது தான் ஸம்ஸாரம், மயக்கம். எனவே அனைத்தும் பொய்யானது என்று புரிந்து கொண்டு இல்லாமல் போவது தான் மோக்ஷம். இது தான் புத்தருடைய உண்மையான அபிப்ராயம் என்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் வாதத்தைப் பார்க்கலாம். ஒரு பொருள் உண்மையானது என்றால் அது எதிலிருந்து உண்டாயிற்று என்று ஆராய வேண்டும். ஒரு உண்மைப் பொருளை ஏற்றுக் கொண்டால், அது (1) மற்றொரு இருக்கும் பொருளிலிருந்து உண்டாயிற்றா அல்லது (2) இல்லாத பொருளிலிருந்து உண்டாயிற்றா? என்ற கேள்வி எழும்.

இருக்கும் பொருளிலிருந்து இந்தப் பொருள் உண்டாகி யுள்ளது என்று கூற முடியாது, ஏனெனில் அப்படி நாம் உலகத்தில் காண்பதே இல்லை . மண் கட்டி இருக்கும் போதே குடம் உண்டாவதை நாம் காண்பதில்லை . மண் கட்டி அழிந்தால் தான் குடம் உண்டாகிறது. குடம் அழிந்தால் தான் துண்டுகள் ஏற்படுகின்றன. தங்கக் காசு அழிந்தால் தான் மோதிரம் உண்டாகிறது. எனவே ஒரு பொருள் அழியும் போது தான் மற்றொரு பொருள் உண்டாகிறது என்று நாம் காண்கிற படியால் இருக்கும் பொருளிலிருந்து மற்றொரு பொருள் உண்டாகிறது என்று சொல்வது அநுபவத்துக்கு முரண்பட்டது.

இல்லாத பொருளிலிருந்து இந்தப் பொருள் உண்டாகலாமே என்றால், இல்லாத பொருளிலிருந்து உண்டானது உண்மையாக இருக்க முடியாது, தானும் இல்லாததாகத் தான் இருக்க முடியும். அதனால், இரண்டு விதத்தில் பார்த்தாலும் உலகத்தில் உண்மையான பொருள் என்று ஒன்றும் இருக்க முடியாது. உண்மையாக இருப்பதற்கு காரணம் எதுவும் இல்லா விட்டால், பிறகு அந்தப் பொருள் பொய்யானது தான் என்று தானாகவே கிடைக்கும், அதற்குத் தனியாக யுக்திகளைச் சொல்லத் தேவை இல்லை .

அதே போல், ஒரு பொருள் உண்டாகும் பொழுது தன்னிடத்திலிருந்தே உண்டாகிறதா, வேறொரு
பொருளிடத்திலிருந்து உண்டாகிறதா என்றும் கேள்வி எழும். தன்னிடத்திலிருந்து தான் உண்டாவதற்கு பயன் எதுவும் இல்லை . தான் முன்னமே இருந்த படியால் எதற்காக உண்டாக வேண்டும் மறுபடியும்?
மற்றொன்றிலிருந்து மற்றொரு பொருள் உண்டாகிறதென்றால், அனைத்திலிருந்தும் அனைத்தும்
உண்டாகலாமே ?
நூலிலிருந்தும் குடம் உண்டாகலாம், மண்ணிலிருந்தும் துணி வரலாம் என்று கேள்வி
எழும், அதனால் எந்த ஒரு பொருளும் உண்மை யானதல்ல. எல்லாமே பொய்யான பொருட்கள் தான்.இது உண்மை , இது பொய், இது இருக்கிறது, இது இல்லை என்று சொல்வதெல்லாமே ப்ரமம் அதாவது மயக்கம். அது தான் ஸம்ஸாரத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறதுசூன்யத்தை சூன்யம் என்று அறிந்து சூன்யமாவதே மோக்ஷம் என்கிறார்கள்

கேள்வி – எப்போதும் ஒரு ப்ரமம் (தவறான புரிதல்) ஏற்பட வேண்டும் என்றால், அதற்கு அடிப்படையில் ஒரு உண்மைப் பொருள் தேவைப் படுகிறது. ஒரு கயிற்றைப் பார்த்து “இது பாம்பு” என்று பிரமிக்கிறோம். அந்த பாம்பு பொய்யானது, ஆனால் அந்த ப்ரமத்துக்கு அடிப்படை விஷயமாக இருக்கும் கயிறு உண்மை யானதுதானே ? கயிறும் பொய்யாக இருந்தால் இப்படி ஒரு ப்ரமம், இது பாம்பு என்ற ப்ரமம் ஏற்படவே முடியாது. அதனால் அதிஷ்டானம் என்று சொல்லப்படுகிற ஏதோ ஒரு உண்மைப் பொருளை யாவது ஏற்க வேண்டும்.

மாத்யமிகர்களின் பதில் – ப்ரமம் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு குற்றம் (தோஷம்) நம்மிடத்தில் இருக்க வேண்டும். அந்த தோஷம் பொய்யானது என்றும், அந்த தோஷத்தாலே பாதிக்கப்பட்ட அறிவாளியும் பொய்யானவர் என்றும் நீங்களும் ஏற்கிறீர்கள். பிறகு அதிஷ்டானம் மட்டும் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம்? தோஷமும் தோஷத்தை உடையவரும் பொய்யாக இருந்தாலும் ப்ரமம் ஏற்படி ஏற்படலாமோ அதே போல் அதிஷ்டானம் பொய்யாக இருந்தாலும் ப்ரமம் ஏற்படலாம். அதில் எந்த தவறும் இல்லை ஆகையால் உலகத்தில் அனைத்துமே சூன்யம், இல்லாதது, பொய்யானது என்று வாதிடுகிறார்கள்.

(அத்வைதிகள் பரமாத்மா மட்டுமே உண்மை -ஞானம் மட்டுமே -ஞாதாவும் இல்லை -மற்ற எல்லாமே மித்யை -ப்ரஸன்ன பவுத்தர்கள் இவர்கள்)

இல்லை என்றாலும் இருப்பதே
இந்த மதத்தை வேதவ்யாஸர் இந்த அதிகரணத்தில் ஒரே ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்.
1– ஸர்வதா ₂ அநுபபத்தே : ச –
“எல்லா விதத்திலும் பொருந்தாத படியால்”

“நீங்கள் கூறும் ஸர்வ சூன்யத்வம் அதாவது எல்லாமே பொய்யானது என்ற தத்துவம் தவறானது, முற்றிலுமாகப் பொருந்தாத படியால்” என்று ஸூத்ரத்திற்குப் பொருள். -எல்லா விதத்திலும் பொருந்தாது என்று சொன்னால்
(1) பொருள்களை ஆராய்ந்து பார்த்தாலும் பொருந்தாது
(2) ப்ரமாணங்கணள ஆராய்ந்து பொருந்தாது என்று பொருள்.

மாத்யமிகர்களைப் பார்த்து வேத வ்யாஸர் கேட்கிறார் – நீங்கள் உங்கள் மதத்தைச் சொல்லும் பொழுது “உலகத்தில் அனைத்துமே உண்மை யானது” என்று சொல்வீர்களா? அல்லது “பொய்யானது இல்லாதது” என்று சொல்வீர்களா?-

இருப்பது, இல்லாதது என்று எந்தச் சொல்லைப் பயன் படுத்தினாலும் அது ஒரு பொருள் இருப்பதைத் தான் குறிக்கும் என்று வ்யாஸர் கூறுகிறார். அது எப்படிப் பொருந்தும்? “குடம் இருக்கிறது” என்று சொன்னால் குடம் உள்ளது என்று பொருள். “குடம் இல்லை ” என்று சொன்னால் அது குடத்தின் இல்லாமையைத் தானே காட்டும்? எப்படி ஒரு பொருளின் இருப்பைப் காட்டும்? என்று ஸந்தேகம் ஏற்படும். இதற்கு விடையை முன்னமே ஆரம்பணாதிகரணத்தின் நான்காவது ஸூத்ரத்தில் “அஸத்₃வ்யபதே ₃சாத் ந இதி சேத் ந த₄ர்மாந்தரேண வாக்ய ஸேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராத் ச” (2.1.6.4) என்ற ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் விடை யளித்திருக்கிறார்.

(அஸத்₃வ்யபதே₃சாத் ந – இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்ய சேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே : 
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது)

ஒரு பொருள் இல்லை என்று சொன்னால் அது “முற்றிலுமாக இருந்ததே கிடையாது” – “அது பொய்யானது” என்று பொருளல்ல. இப்போது இல்லை , இங்கில்லை , இந்த உருவத்திலில்லை என்று தான் ஆகுமே தவிர, என்றைக்கும் இருந்ததில்லை என்று பொருள் படாது. ஒரு மனிதருடைய சிறு வயது நண்பர் ஒருவர் வயதான பிறகு அவரை ஸந்திப்பதற்காக வீட்டுக்கு வருகிறார். “அவர் இருக்கிறாரா” என்று கேட்டதற்கு வீட்டில் இருந்தவர்கள் “அவர் இல்லை ” என்று கூறினார்கள். உடனடியாக “ஓ! இப்படி ஒரு மனிதனே இருந்தது கிடையாது! அவர் பொய்யானவர்! நானாக கற்பனை செய்து கொண்டேன்!” என்றா அந்த நண்பன் நினைக்கிறார்? இப்போது வீட்டிலில்லை என்று தானே பொருள்படும் –

சூன்யத்வம் எங்குள்ளது?
அதே போல் குடம் இல்லை என்று சொன்னால் இப்போது குடம் இல்லை , இந்த இடத்தில் குடம் இல்லை அல்லது இப்போது குடம் என்ற உருவத்தோடு இல்லை , அது உடைந்து மண் துண்டுகளாக ஆகி விட்டது
என்பது போல் தான் பொருள்படுமே தவிர முன்னாலும் குடம் என்ற பொருள் இருந்ததே கிடையாது, குடமே பொய்யானது என்று இந்தச் சொற்றடருக்கு ஒரு நாளும் பொருளாகாது

அதனால் ஒரு பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் அது இருப்பைத் தான் குறிக்கும். இல்லை என்று சொன்னாலும் அதுவும் வேறு ஒரு விதத்தில் அந்தப் பொருள் இருக்கிறது என்பதைத் தான் குறிக்கும். அதனால் நீங்கள் என்ன வாதம் செய்தாலும் உலகப் பொருட்களைப் பொய்யானவை என்று நிரூபபிக்கவே முடியாது.

அதே போல் ப்ரமாணங்களை ஆராய்ந்தாலும், அனைத்தும் பொய்யென்று சொல்ல முடியாது. ஏனென்றால் உலகத்தில் அனைத்தும் சூன்யம் – இல்லாதது என்று சொல்ல வேண்டும் என்றால் அந்த சூன்யத் தன்மையை ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பார்த்து விட்டு அதை உலகத்தில் அனைத்துப் பொருளிலும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த சூன்யத்துவம் என்பதை எங்கு பார்த்தீர்கள்? எந்த ஜ்ஞானத்தாலே பார்த்தீர்கள்? அந்த ஜ்ஞானம் பொய்யானதென்றால் அப்போது சூன்யத்துவம் என்ற விஷயமே பொய்யானது. அப்படிப் பட்ட ஓரு விஷயமே கிடையாது. அந்த ஜ்ஞானம் உண்மையானதென்றால் அப்போது அனைத்தும் பொய் என்ற உங்கள் மதம் பட்டுப் போய் விட்டது. ஒரு ஜ்ஞாநம் உண்மை யானது என்றாலும் அனைத்தும் பொய் என்று நீங்கள் கூறுவது தவறு தான்

அதனால் எல்லாமே பொய்யானது என்று உங்கள் மதம் எந்த விதத்திலும் நிரூபிக்கப் பட முடியாதது. அதனால் உலகப் பொருட்கள் உண்மையானவை தான். அதைக் காட்டிக் கொடுக்கும் அறிவும் உண்மை யானது தான். அறிவை உடையவரான ஆத்மாவும் உண்மையானவர் தான். இதைத் தான் வேதாந்தம் காட்டுகிறது. அதனால் பௌத்த மதம் ஏற்கத் தகுந்ததுல்ல என்ற கூறி இந்த அதிகரணத்தை நிறைவு செய்கிறார்.

(உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-


2.2.6 ஏகஸ்மிந் ந ஸம்ப₄வாதி₄கரணம்-ஜைந மதத்தின் கண்டனம்

ஜைந மதத்தின் சுருக்கம்-ஏகஸ்மிந் ந ஸம்ப₄வாதி₄கரணம் – ஸங்கதி -பரமாணுவை உலகுக்குக் காரணமாகச் சொல்லும் பௌத்தர்கள் கண்டித்த பிறகு, அவ்வாறே வாதிடும் ஜைநர்களைக் கண்டிக்கிறார் வ்யாஸர்.
ஜைனர்களின் மதத்தைச் சுருக்கமாக முதலில் பார்க்கலாம். அவர்கள் சொல்வது – ஜீவன், அஜீவன் என்று இரண்டு விதமான பொருட்கள் உலகத்திலே உள்ளன. ஜீவர்கள் என்பவர்கள் நம்மைப் போன்ற ஆத்மாக்கள். அஜீவம் என்பது ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவையான அறிவற்ற உலகப் பொருட்கள். இந்த இரண்டையும் தவிர ஈஸ்வரன் என்று ஒருவர் கிடையாது என்பது அவர்களின் கருத்து.
அடுத்ததாக உலகத்தில் இருக்கும் பொருட்களை ஆறு த்ரவ்யங்களாகப் பிரிக்கிறார்கள்.
(1) ஜீவன் – அவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுபட்டவராகவோ, யோகத்தாலே ஸித்திகளை அடைந்தவராகவோ அல்லது முக்தியடைந்தவராகவோ இருக்கலாம்.
(2) தர்மம் – இது உலகில் எங்கும் பரந்து விரிந்து இருக்கும். ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு இது தான் உதவி செய்யும்.
(3) அதர்மம் – இதுவும் உலகிலெங்கும் வ்யாபித்திருக்கும். அது நம்முடைய நகர்வைத் தடுக்கக் கூடியது, தடை செய்யக் கூடியது.
(4) புத்கலம் – நிறம், சுவை , மணம் முதலான பண்புகளை உடைய உலகப் பொருட்கள் அனைத்தும் இந்த வகைக்குள் வருகின்றன.
(5) காலம் – இது அணுவானது. எனவே உலகத்தில் பல காலப் பொருள்கள் உள்ளன என்கிறார்கள்.
(6) ஆகாசம் -இதுவும் எங்கும் பரந்து விரிந்த ஓன்று மேலும்,

மோக்ஷம் அடையும் கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்த்தோம் என்றால் அப் போது ஏழாக இதைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
(1) ஜீவன்
– இவர் ஜ்ஞானம், ஸுகம், திறல் முதலானவற்றைப் பண்புகளாக உடையவர்.
(2) அஜீவம் – இது உலகத்தில் நாம் அனுபவிக்கக் கூடிய எல்லாப் பொருள்களையும் குறிக்கும
(3) ஆஸ்ரவம் – உலகப் பொருட்களை அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் புலன்கள் அதாவது இந்திரியங்கள்,
(4) பந்தம் – ஸம்ஸாரத்தில் நம்மைக் கட்டி வைக்கக் கூடிய நாம் செய்த கர்மங்கள்
(5) நிர்ஜரம் – ஜைனர்களின் மதத்தின் படி மோக்ஷம் அடைவதற்கு வழியான தவம்
(6) ஸம்வரம் – இந்திரியங்களை முழுமையாக அடக்கி ஸமாதி நிலையில் தியானம் செய்வது
(7) மோக்ஷம் விருப்பு, வெறுப்பு முதலானவற்றைக் கழித்த தூய்மையான ஆத்மாவின் நிலை . இப்படியும் ஒரு பாகுபாட்டைச் சொல்லுகிறார்கள்–உலகில் ஒரே விதமான பரமாணுக்களே உள்ளன. அவை தான் வெவ்வேறு பண்புகளை அடையும் போது நிலம், நீர், தீ, காற்று என்றெல்லாம் சொல்லப்படுகின்றன – என்கிறார்கள்.

அடுத்ததாக, அவர்களின் மதத்தில் முக்கியமான பகுதி ஸப்த பங்கீ வாதம் என்று சொல்லப்படுகிறது.
எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அதை ஏழு விதமாகச் சொல்லலாம் என்று கூறுகிறார்கள் –
(1) ஸ்யாதஸ்தி – இருக்கலாம்,
(2) ஸ்யாத் நாஸ்தி – இல்லாமல் இருக்கலாம்
(3) ஸ்யாத அஸ்தி ச நாஸ்தி ச – இருந்து கொண்டே இல்லாமல் இருக்கலாம்
(4) ஸ்யாத அவக்தவ்யம் – சொல்ல முடியாமல் இருக்கலாம்
(5) ஸ்யாத் அஸ்தி ச அவக்தவ்யம் ச – இருந்து கொண்டு சொல்ல முடியாததாக இருக்கலாம்
(6) ஸ்யாத் நாஸ்தி ச அவக்தவ்யம் ச – இல்லாமல் சொல்ல முடியாததாக இருக்கலாம
(7) ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச அவக்தவ்யம் ச – இருப்பதாக இல்லாததாக சொல்ல முடியாததாக இருக்கலாம்.

எனவே எந்தப் பொருளைப் பற்றியுமே முடிவாக சொல்லவே முடியாது.
எல்லாப் பொருள்களுமே வெவ்வேறு நிலைகளை அடைகின்றன. பொருள் என்று பார்த்தால் ஒன்று தான், ஆனால் நிலைகளாகப் பார்த்தால் வெவ்வேறு தான். எனவே இரண்டு பொருட்களை
வெவ்வேறு (பி₄ன்னம்) என்றும் சொல்லலாம், ஒன்றே (அபி₄ன்னம்) என்றும் சொல்லலாம். அதே போல்
பொருள்களை நித்யமானவை என்றும் சொல்லலாம், அவற்றில் நிலைகள் மாறுகிற படியால் அவற்றை
அநித்யமானவை என்றும் சொல்லலாம். எனவே முரண்பட்டவை என்று நாம் உலகில் சொல்லும் பண்புகள் கூட ஒரே பொருளில் ஒரே காலத்தில் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸப்த பங்கீ வாதம் பொருந்தாது-ஸித்தாந்தம் –
1- ् ந ஏகஸ்மிந் அஸம்ப₄வாத் –
“பொருந்தாது; ஒன்றில் முடியாததால் ”
ஜைந மதம் பொருந்தாது; ஒரு பொருளில் இருத்தல் இல்லாமை முதலான முரண்பட்ட பண்புகள் ஒரே காலத்தில் இருக்க முடியாததால்” என்று ஸூத்ரத்தின் பொருள்.
இத்தால் ஜைநர்கள் சொல்லும் ஸப்த ப₄ங்கீ வாதத்தைக் கண்டிக்கிறார் வ்யாஸர். அஸ்தித்வம் என்றால் இருத்தல். நாஸ்தித்வம் என்றால் இல்லாமை . இவை முரண் பட்டவை . நித்யத்வம் என்றால் அழியாமை , அநித்யத்வம் என்றால் அழியும் தன்மை . இவையும் ஒரே பொருளில் சேர்ந்து இருக்க இயலாது. வேறுபட்ட பொருள்கள் ஒன்றாக இருக்க முடியாது. இப்படி முற்றிலும் முரண்பட்ட பண்புகள் எல்லாம் ஒரே பொருளில் ஒரே காலத்தில் இருக்கவே முடியாது. எனவே இரண்டும் உள்ளன என்று கூறும் உங்கள் மதம் பொருத்தமற்றது.

மேலும், காலம் அணுவானது என்று சொன்னீர்கள். அப்படி யென்றால் பல காலப் பொருள்கள் உலகில் இருக்க வேண்டும். ஆனால் அநுபவத்தில் காலம் என்ற ஒரே பொருளில் உலகப் பொருள்கள் பல இருப்பது போலத் தான் ஏற்படுகிறது. இதற்கு முரண்பட்டதாக நீங்கள் வாதிடுகிறீர்கள்.-6 த்ரவ்யங்கள் என்று பிரித்துச் சொன்னதால், ஜீவன் தர்மம் அதர்மம் ஆகியவை வேறுபட்டு தான் இருக்க வேண்டும், ஒன்றாக இருக்க முடியாது. எனவே உலகத்தில் எல்லாமே ஒன்றென்றும் சொல்லப்படலாம் வேறென்றும் சொல்லப்படலாம் என்று நீங்கள் கூறியது தவறு. அசேதனப் பொருட்களான பரமாணுக்கள் பரமாத்மாவால் இயக்கப் படாமலேயே உலகைப் படைக்கின்றன என்று சொல்வதில் உள்ள குற்றங்கள் எல்லாம் முன் அதிகரணங்களிலேயே விவரிக்கப் பட்டு விட்டன. அவையும் உங்கள் மதத்தில் வந்து சேர்கின்றன.

ஆத்மா உடலின் அளவுடையவரல்ல
2-ஏவம் ् ச ஆத்ம அகார்த்ஸ்ந்யம் –
“இவ்வாறென்றால் , ஆத்மாவின் முழுமையின்மை ஏற்படும்”
ஜைந மதத்தில் ஆத்மாவின் அளவை ஆராயும் பொழுது இவ்வாறு கூறுகிறார்கள் – ஆத்மா விபூ, அதாவது எங்கும் பரந்திருப்பவர் என்று கொள்ள முடியாது; ஏன் எனில் உடலுக்கு வெளியே ஆத்மாவை நாம் எங்கும் உணர்வதில்லை-அதே போல் ஆத்மா அணுவானவர், அதாவது மிகவும் நுண்ணியவர் என்றும் கொள்ள முடியாது. அப்படி ஆனால் உடலில் எல்லா இடங்களிலும் நமக்கு ஏற்படும் உணர்ச்சி பொருந்தாமல் போய் விடும். ஆகையால் இந்த ஆத்மா -தேஹ பரிமாணம் போல் ஆத்மாவும் என்கிறார்கள் -உடலின் அளவை உடையவர் என்று ஜைநனர்கள் வாதிடுகிறார்கள்.

அந்த வாதத்தை இந்த ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்.
இவ்வாறு ஆத்மா உடலின் அளவை உடையவர் என்று நீங்கள் சொன்னால், அப்போது எந்த தோஷங்களைத் தவிர்க்கப் பார்த்தீர்களோ , அந்த தோஷங்களே உங்கள் மதத்தில் வந்து விடும். அதாவது ஆத்மாவின் முழுமை யின்மை ஏற்பட்டு விடும் என்று கூறுகிறார்.
ஒரு யானையின் உடலில் இருக்கும் ஜீவாத்மா, அதை விட்டு எறும்பின் உடலை எடுத்துக் கொள்ளும் பொழுது யானை அளவுக்கு பெரியதானதாக இருக்கும் அந்த ஆத்மா எறும்பின் உடலுக்குள் முழுமையாக பிடிக்க முடியாது. அதனால் உடலுக்கு வெளியே இருப்பதாக ஆகும். இதுவே ஆத்மாவின் முழுமை இன்மை என்கிற தோஷமாகும். அதே போல் எறும்பின் உடலுக்குள் இருந்த ஜீவாத்மா ஒரு யானையின் உடலை எடுத்துக் கொள்ளும் பொழுது, சிறிய ஜீவாத்மா பெரிய உடலுக்குள் நுழைகிறபடியால் யானை உடலின் பல பகுதிகளில் ஜீவாத்மா இல்லை என்பதால் உடலெங்கும் ஏற்படும் உணர்ச்சிகள் போருந்தாமல் போய் விடும்.-ஆக, ஆத்மா உடலின் அளவை உடையவர் என்பதே பொருந்தாது

ஆத்மா வளரவோ சுருங்கவோ முடியாது
3- ந ச பர்யாயாத் அபி அவிரோத₄: விகாராதி₃ப்₄ய:

“நிலை மாறு பாட்டாலும் முரண்பாடின்மை ஏற்படாது, மாறுபாடு முதலானவை ஏற்படுகிற படியால்”
முன் ஸூத்ரத்தில் சொன்ன தோஷத்துக்கு பதிலளிப்பதற்காக ஜைநர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் – ஆத்மாவால் வளரவும் சுருங்கவும் முடியும். யானையின் உடலிலிருந்து எறும்பின் உடலுக்குள் புகும் பொழுது ஆத்மா சுருங்கி விடுகிற படியால் முழுமையாக எறும்பின் உடலுக்குள்ளேயே இருந்து விடுவார். எறும்பின் உடலை விட்டு யானையின் உடலை அடையும் பொழுது ஆத்மாவே விரிவடைகிற படியால் யானை யுடைய உடலுக்குள்ளும் முழுமையாகப் வ்யாபித்து விடுவார். அதனால் முன் சொன்ன தோஷங்கள் எதுவுமே இல்லை என்று அவர்களின் வாதம்.

இதற்கு வ்யாஸர் பதில் கூறுகிறார் – இப்படிக் கொண்டால் ஆத்மாவுக்கு விகாரம் அதாவது மாறுபாடு என்கிற தோஷமும் –விகாரம் இருந்தாலே கூட இருக்கக் கூடிய அழிவு முதலான தோஷங்களும் ஏற்பட்டு விடும்- அதனால் ஆத்மா வளரவோ சுருங்கவோ முடியாது.

4–அந்த்ய அவஸ்தி₂தே : ச உப₄ய நித்யத்வாத் அவிசேஷ:
“இறுதியானது இருப்பதாலும் இரண்டும் நிரந்தரமானதாலும் (முன்னும்) வேறுபாடில்லை ”

ஒரு ஆத்மா முக்தி அடையும் பொழுது கடைசியாக எந்த உடலை எடுத்துக் கொண்டிருந்தாரோ அந்த அளவு மாறாமல் தான் முக்தி அடைந்த நிலையிலும் இருப்பார் என்று கொள்ள வேண்டும். ஆனால் முக்தி நிலையில் இருக்கும் பண்புகள் தான் ஆத்மாவுக்கு இயற்கை யானவையாக இருக்க வேண்டும். அதற்கு முன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது ஏற்பட்ட பண்புகள் செயற்கை யானவையாக இருக்க வேண்டும். எனவே இந்த ஆத்மா இறுதியாக இருந்த உடலில் எந்த அளவோடு இருந்தாரோ அந்த
அளவோடு தான் முக்தியிலும் இருப்பார் என்றால் அதுவே அவருக்கு இயற்கையான அளவாக இருக்க வேண்டும். அப்படிக் கொண்டால் அந்த ஆத்மா அதற்கு முன்பு எத்தனை பிறவிகளை எடுத்துக் கொண்டிருந்தாலும் அவற்றிலும் அந்த இயற்கையான அளவு மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆகவே என்றுமே ஜீவாத்மா தான் எடுத்துக் கொள்ளும் அந்தந்த உடலின் அளவுக்கு இருப்பார் என்றும் வாதம் பொருந்தாதது.

இப்படி ஜைந மதத்தில் பல விதமான குற்றங்கள் இருக்கிற படியால் இதுவும் தள்ளத் தகுந்தது என்று வேத வ்யாஸர் முடிக்கிறார்.


2.2.7 பசுபத்யதி₄கரணம் –பாசுபத மதத்தின் கண்டனம்-பாசுபத மதத்தின் சுருக்கம் – ஸங்கதி – இதுவரை ஸாம்க்ய மதம், வைஸேஷிக மதம், பௌத்த மதம், ஜைன மதம் என்பவற்றை வேத வ்யாஸர் கண்டித்தார். அவற்றில் முரண்பாடுகள் உள்ளன, அவை வேதத்தோடும் முரண்படுகின்றன, அதனால் மோக்ஷத்தை விரும்பும் அதிகாரிகள் அவற்றை ஆதரிக்க வேண்டாம் என்று கூறினார். அதே போல் பசுபதியால் பறப்பட்ட மதமும் வேதத்துக்கு முரண் பட்டதாக இருக்கிறபடியால் அதையும் ஆதரிக்க வேண்டாம் என்று இந்த அதிகரணத்தில் கூறுகிறார்.

பசுபதியால் பறப்பப்பட்ட மதம் நான்கு உட்பிரிவுகளோடு காணப்படுகிறது –
(1) காபாலர்கள், (2) காலாமுகர்கள்,
(3) பாசுபதர்கள், (4)ஸைவர்கள்

இந்த மதங்களில் சொல்லக் கூடிய தத்துவங்களின் முறையும், இவ்வுலகத்திலும் மற்ற உலகங்களிலும் மோக்ஷத்திலும் ஆனந்தம் அடைவதற்கு இவர்கள் சொல்லும் முறைகளும் வேதத்துக்கு முரண்பட்டவையாக இருக்கின்றன. அதனால் இந்த மதங்களை ஏற்கக் கூடாது என்று வேத வ்யாஸருடைய அபிப்ராயம்.-தத்துவங்களைச் சொல்லும் பொழுது – உலகத்துக்கு உபாதான காரணம் (மூலப்பொருள்) ப்ரதானம் என்ற அறிவற்ற அசேதனப் பொருள்; நிமித்த காரணம் அதாவது உண்டாக்குபவர் பரம சிவன் என்று கூறுகிறார்கள். மோக்ஷம் அடைவதற்கான வழியைச் சொல்லும் பொழுது ஒவ்வொரு உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு விதமாக வர்ணிக்கிறார்கள்.

பாசுபத மதத்தின் சுருக்கம்
காபாலர்கள் கூறுவது –கண்டி₂கா ருசகம் சைவ குண்ட₃லம் ச சிகா₂மணி: । ப₄ஸ்ம யஜ்ஜோபவீதம் ச முத்₃ராஷட்கம் ப்ரசக்ஷதே ॥ ஆபி₄: முத்₃ரிததே ₃ஹஸ்து ந பூ₄ய இஹ ஜாயதே ।ப₄கா₃ஸநஸ்தம் ஆத்மாநம் த்₄யாத்வா நிர்வாணம் ருச்ச₂தி-
-அதாவது, ஆறு முத்திரைகளை தரித்துக் கொண்டு ப₄கா₃ஸநத்தில் அமர்ந்து ஆத்மாவை த்யானிப்பவன் மோக்ஷம் அடைகிறான். ஆறு முத்திரைகள் ஆவன – கண்டிகை என்ற கழுத்தின் ஆபரணம், ருசகம் என்ற மோதிரம், காதில் குண்டலம், சிகாமணி என்று தலையில் ஓராபரணம், பஸ்ம என்ற சாம்பல், யஜ்ஜோபவீதம் என்ற பூணூல்.

காலாமுகர்கள் சொல்வது – கபாலம் அதாவது மண்டை ஓட்டை பாத்திரமாகக் கொண்டு உணவு உண்ணுதல், பிணத்தை எரித்து அந்த சாம்பலில் நீராடுவது, சாம்பலை உண்ணுவது, லகுடம் என்கிற தடியை கையில் பிடித்துக் கொள்வது, ஸுராகும்பம் என்கிற கள்ளுக் குடத்தை வைத்து அதற்குள் இருக்கும் தெய்வத்தைப் பூஜை செய்வது, இவை அனைத்தும் தான் மோக்ஷம் அடைவதற்கான வழிகள் என்று கூறுகிறார்கள்.
சைவ ஆகமத்திலோ – கையில் கங்கணமாக ருத்ராக்ஷத்தை அணிவது, தலையில் சடை முடி, கபாலம்,
சாம்பலில் குளிப்பது இவை யெல்லாம் தான் மோக்ஷத்திற்கான வழிகள் என்று சொல்லப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு உட்பிரிவிலும் வெவ்வேறு வழிகள் மோக்ஷம் அடைவதற்கு வர்ணிக்கப் பட்டுள்ளன.

பாசுபத மதத்தில் முரண்பாடுகள்
ஸித்தாந்தம் – இந்தப் பசுபதியின் மதத்தை 4 ஸூத்ரங்களால் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
1- அஸாமஞ்ஜஸ்யாத் –
“பசுபதியும் மதமும் தள்ளத் தகுந்த்து, பொருந்தாதபடியால்”
முன் அதிகரணத்தில் முதல் ஸூத்ரத்திலிருந்து ’ந’ என்ற போல் இங்கும் சேர்க்கப்பட வேண்டும். அத்தால் ’தள்ளத் தகுந்தது’ என்கிற பொருள் கிடைக்கிறது.
அஸாமஞ்ஜஸ்யம் –-அதாவது பொருந்தாமையாவது – அதிலிருக்கும் உட்பிரிவுகளுக்கும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறபடியாலும், இவர்கள் சொல்லும் அனைத்துமே வேதத்தோடு முரண்படுகிறபடியாலும்.

வேதத்தில் உலகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஒன்று தான், அதுவும் நாராயைன் தான் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது –
(ஸதே₃வ ஸோம்யேத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்), (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்), (நாராயண பரம் ப்₃ரஹ்ம) முதலான வாக்கியங்களால். எனவே ப்ரதானமே உபாதானம் என்றும் சிவன் நிமித்த காரணம் என்றும் அவர்கள் சொல்வது பொருந்தாது.

மோக்ஷத்திற்கான வழி பக்தியோகம் என்கிற த்யானம் தான் என்று வேதம் ஸந்தேஹமின்றிக் கூறுகிறது –(தமேவம் வித்₃வான் அம்ருத இஹ ப₄வதி நாந்ய: பந்தா₂: அயநாய வித்₃யதே ),
(நிதி₃த்₄யாஸிதவ்ய:)
முதலான வாக்கியங்களால்.–ஆக பசுபதியின் சொல்லப்படும் வழிகள் தவறானவை .அந்த த்யானத்துக்கு உதவக் கூடிய கர்மங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தின் படி விதிக்கப் பட்டவையே என்றும் வேதம் சொல்கிறது. ஆக வேதத்துக்கு முரணாக இவர்களால் சொல்லப்படும் ஆசாரங்களும் கர்மங்களும் ஏற்கத் தகுந்தவை யல்ல

2-அதி₄ஷ்டா₂ந அநுபபத்தே : – “அதி₄ஷ்டா₂நம் (இயக்குவது) பொருந்தாத படியாலும்”
அநுமானத்தைக் கொண்டு உலகைப் படைக்கும் நிமித்த காரணமான ஈஸ்வரனை நிரூபிக்கிறார்கள் பசுபதியின் மதத்தைச் சேர்ந்தவர்கள். உலகத்தில் குயவன் முதலானவர்கள் சக்கரம் முதலானவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்து (இயக்கி) குடம் முதலானவற்றை உண்டாக்குவதைக் காண்கிறோம்.இதனடிப் படையில் தான் இந்த உலகத்தைப் படைப்பதற்காக ப்ரதானம் என்கிற மூல ப்ரக்ருதியை அதி₄ஷ்டா₂நம் செய்ய (இயக்க) ஓர் ஈஸ்வரன் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்கிறார்கள். ஆனால் அப்படிக் கொண்டால் குற்றம் உள்ளது.

பாசுபத மதத்தில் முரண்பாடுகள்
உலகத்தில் சக்கரம் முதலானவற்றை இயக்கும் குயவன் முதலானவர்கள் அனைவருமே உடலோடு கூடியவர்களாகத் தான் காணப்படுகிறார்கள். எனவே இதனடிப் படையில் ஈஸ்வரனை அநுமானம் செய்தால், அவரும் ப்ரக்ருதியை இயக்கும் பொழுது ஒரு சரீரத்தை உடையவராக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் மதத்தில் பசுபதிக்கு சரீரம் உண்டு என்பதை ஏற்க வில்லை . மேலும், அப்படியே சரீரம் இருப்பதை ஏற்றாலும், அது நித்யமானது என்று கூறினால், பல பகுதிகளைக் கொண்ட ஒரு பொருள் நித்யமானதாகவும் இருக்கலாம் என்று ஆகி விடும். அவ்வாறாயின், இந்த உலகமும் அதே போல் நித்யமானது என்றே கூறி விடலாம், எதற்காக இது படைக்கப் பட்டது என்று ஏற்க வேண்டும்? என்கிற கேள்வி எழும். அந்த சரீரம் அநித்யமானது என்று கொண்டால், அதைப் படைக்க ஈஸ்வரனுக்கு மற்றொரு சரீரம் வேண்டும், அதைப் படைக்க மற்றொரு சரீரம் வேண்டும் என்று முடிவில்லாமல் சொல்ல வேண்டியபடியால் அநவஸ்தா₂ என்கிற தோஷம் ஏற்படும்.

3–கரணவத் சேத் ந போ₄கா₃தி₃ப்₄: – “கருவியைப் போல் என்றால், அது பொருந்தாது; போகம்
முதலானவை ஏற்படுகிற படியால்”

அவர்கள் கேட்கிறார்கள் – உடல் இல்லாமலேயே ஜீவாத்மா தன் உடலையும் புலன்களையும் இயக்குவது போல் பசுபதி ப்ரதானத்தை இயக்கலாமே ? என்று. இதற்கு வ்யாஸரின் பதில் – ஜீவாத்மா உடலை இயக்குவது பாப-புண்யம் என்கிற கர்மத்தின் காரணமாக. எனவே அதுபோல் பசுபதிக்கு உடல் உள்ளது என்று சொன்னால் அவருக்கும் பாப புண்யங்கள் வந்து விடும். அதன் விளைவாக, உலகத்தில் இன்ப துன்பங்களையும் அவர் அநுபவிக்க வேண்டி வரும்.

4- அந்தவத்வம் அஸர்வஜ்ஞதா ச – “முடிவுடைமையும் அஸர்வஜ்ஞதையும் ஏற்படும்”
பசுபதிக்கு புண்ய-பாபங்கள் என்கிற கர்மங்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொண்டால், அப்போது அவருக்கும் ஜீவாத்மாவைப் போல் பிறப்பிறப்புக்கள், ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் முதலான குறைபாடுகள் ஏற்பட்டு விடும். மேலும் அவர் ஸர்வஜ்ஞன் (அனைத்தையும் அறிபவர்) என்று சொல்வதும் பொருந்தாது, ஜீவாத்மாவைப் போல் ஆனபடியால்.
ஆக, பல விதமான முரண்பாடுகள் இந்த மதங்களில் உள்ளபடியால் இவை தள்ளத் தகுந்தவை என்கிறார் வ்யாஸர்.


2.2.8 உத்பத்த்யஸம்ப₄வாதி₄கரணம்-பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மை -அதிகரண த்தின் ஸங்கதி-இதுவரை இந்தப் பாதத்தில் ஸாங்க்யர்கள், வைசேஷிகர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பாசுபதர்கள் என்பவர்களின் மதங்களை எடுத்து அவற்றில் இருக்கும் குற்றங்களையும் பொருந்தாமைகளையும் வேத வ்யாஸர் காட்டினார். இந்த பாதத்தின் இறுதியான இவ்வதிகரணத்தில் பாஞ்ஜராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை வேத வ்யாஸர் நிரூபிக்கிறார்.

ஸந்தேகம் – இந்த பாதத்திலேயே ஒவ்வொரு அதிகரணத்திலும் வேதத்துக்கு முரண்பட்ட மற்ற மதங்களை கண்டனம் செய்து கொண்டு வருகிறார் வேத வ்யாஸர். அந்த வரிசையில் பார்த்தால், இந்த அதிகரணத்திலும் பாஞ்சராத்ர ஆகமத்தைக் கண்டிக்கத்தானே வேண்டும்? எப்படி அதன் உண்மைத் தன்மையை நிரூபிப்பது இந்த பாதத்தில் செய்யப்படமுடியும்?

பதில் – இந்தப் பாதத்தின் குறிக்கோள் வேதத்துக்கு முரண்பட்ட மதங்களை கண்டிப்பது என்பதே அல்ல –
முதல் அத்தியாயத்தில் உபநிஷத் வாக்கியங்களை ஆராய்ந்து வேத வ்யாஸர் ஒரு முடிவுக்கு வந்தார் –
“உலகமனைத்துக்கும் முழு முதற்காரணம் பரமாத்மாவே ” என்று. அந்த முடிவை வலுப் படுத்துவது தான் இந்தப் பாதத்தினுடைய குறிக்கோள். அதில் முதல் ஏழு அதிகரணங்களாலே இந்த முடிவுக்கு முரண்பட்ட மதங்களை எடுத்து அவற்றை தவறு என்று நிரூபிப்பதன் மூலம் நாம் எடுத்த முடிவு சரியானது தான் என்று வலுப்படுத்தினார். இந்தக் கடைசி அதிகரணத்திலும், பாஞ்ச ராத்திர ஆகமம் உண்மையானது என்று நிரூபிப்பதன் மூலம் அந்த பாஞ்சராத்ர ஆகமத்திலும் பரமாத்மாவே உலகத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகிறபடியால் நாம் வேதாந்தத்திலிருந்து அடைந்த முடிவு மேலும் வலுவடைகிறது. ஆகையால் இந்த அதிகரணமும் இந்தப் பாதத்தில் இடம் பெறுவதில் எந்த முரண்பாடும் இல்லை . மற்ற மதங்களைக் கண்டிப்பதும் சரி, பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை நிலை நாட்டுவதும் சரி, இரண்டுமே பரமாத்மாவே ஜகத்துக்குக் காரணம் என்ற முடிவை வலுப்படுத்து வதற்காகத்தான்.

பூர்வ பக்ஷியின் வாதம்
பூர்வ பக்ஷம் – இவ்வதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷத்தைக் கூறுகின்றன.
1-உத்த்பத்ய ஸம்பவாத் –

“ (ஜீவாத்மாவுக்கு) உண்டாக்கம் இருக்க முடியாதபடியால் (பாஞ்சராத்ரம் உண்மையானதல்ல)”
பாஞ்சராத்ர ஆகமத்தில் இவ்வாறு ஒரு வாக்கியம் உள்ளது –
பரமகாரணாத் பர ப்₃ரஹ்ம பூ₄தாத் வாஸுதே₃வாத் ஸங்கர்ஷண : நாம ஜீவ: ஜாயதே | ஸங்கர்ஷணாத்
ப்ரத்₃யும்ந ஸம்ஜ்ஞம் மந: ஜாயதே | தஸ்மாத் அநிருத்₃த₄ஸம்ஜ்ஞ: அஹங்கார: ஜாயதே |

இதன் பொருள் – “முழு முதற் காரணமான பர ப்ரஹ்மமான வாஸுதேவனிடமிருந்து ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார். அவரிடமிருந்து ப்ரத்யும்னன் என்ற மனது உண்டாகிறது. அதிலிருந்து அநிருத்தன் என்ற அஹங்காரம் உண்டாகிறது”
இதில் “வாஸுதேவனிடமிருந்து ஜீவாத்மா உண்டாகிறார்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேதாந்தத்திலோ (्ந ஜாயதே | ம்ரியதே வா விபஶ்சித்) அதாவது ஜீவாத்மா உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை -அவர் நித்யமானவர் என்று கூறப்படுகிறது. எனவே இக் கருத்துக்கு முரண்படும் பாஞ்சராத்ரம் உண்மையானதல்ல,

2- ந ச கர்து: கரணம் – “கர்த்தாவிடமிருந்து கரணம் உண்டாகாத படியாலும்”
கர்த்தா என்றால் செயல்கணைச் செய்பவரான ஜீவாத்மா. கரணம் என்றால் அதற்குப் பயன்படும் கருவியான மனது. இந்த வாக்யத்தின் அடுத்த பகுதியில் “ஜீவனிடமிருந்து மனது உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது. இதுவும் வேதத்துக்கு முரணானது. வேதத்தில் ஸாத்த்விக அஹங்காரம் என்ற அசேதனப் பொருளிலிருந்து தான் மனது உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது, ஜீவாத்மாவிடமிருந்தல்ல. எனவே பாஞ்சராத்ரத்தில் உள்ள இக் கருத்தும் தவறானது தான்.

ஆக இப்படி பல இடங்களில் வேதத்தோடு முரண்படுகிறபடியால் பாஞ்சராத்ரமும் ஸாங்க்யம், பாசுபதம் முதலான மற்ற தந்த்ரங்கள் போல் தள்ளத் தகுந்ததே , இது ப்ரமாணமாக இருக்க முடியாது என்பது பூர்வ பக்ஷம்.

வேதத்தோடு முரண்பாடு இல்லை
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வ பக்ஷத்தை அடுத்த இரண்டு ஸூத்ரங்களால் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
3-விஜ்ஞாநாதி₃பா₄வே வாதத₃ப்ரதிஷேத₄:

“பரமாத்மாவாகவே இருக்கிற படியால் பாஞ்சராத்ர ஆகமத்தின் ப்ராமாண்யம் (உண்மைத்தன்மை ) கண்டிக்கத் தகுந்ததல்ல”
தத் – பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை
அப்ரதிஷேத₄: – கண்டிக்க முடியாது
விஜ்ஞாநாதி₃பா₄வே – (ஸங்கர்ஷணன் முதலான வடிவங்கள்) பரமாத்மாவாகவே இருக்கிறபடியால்.

விஜ்ஞாநம் என்றால் அறிவே வடிவமானது. ஆதி₃ என்றால் உலகத்தையே உண்டு ஸம்ஹாரம் செய்யக் கூடியவர்.-எனவே ’விஜ்ஞாநாதி₃’ என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது. பா₄வம் என்றால் அவரது தன்மை , அவராக இருத்தல். விஜ்ஞாநாதி₃பா₄வம் என்றால் பரமாத்மாவாகவே இருத்தல்.-ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன் முதலானவர்கள் பரமாத்மாவாகவே இருக்கிறபடியால் இதில் வேதத்துக்கு முரணாக ஜீவாத்மாவுக்கோ மனதுக்கோ உண்டாக்கம் சொல்லப்படவே இல்லை . எனவே பாஞ்சராத்ர ஆகமம் ப்ரமாணம் அல்ல என்று கூற முடியாது என்கிறார் வ்யாஸர்.

பூர்வபஷி காட்டிய வாக்கியங்களின் பொருளை உண்மையாகப் புரிந்து கொள்வதற்கு முதலில் பாஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். ஆகமம் என்று சொன்னாலே அதில் சாதுராத்ம்யம் என்பதைப் பற்றின உபாஸனம் சொல்லப்பட்டிருக்கும். சாதுராத்ம்யம் என்றால் பகவான் தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு இருக்கும் நிலை –வாஸுதேவன் என்ற பரமாத்மா வைகுந்தத்தில் பரரூபம் என்ற வடிவத்தோடு எப்போதும் இருக்கிறார். அதற்கடுத்ததாக, உலகத்தைப் படைத்து, காத்து அழிப்பதன் பொருட்டு தானே வ்யூஹ மூர்த்திகள் என்ற நான்கு வடிவங்களை எடுத்துக் கொள்கிறார். அவையாவன வ்யூஹ வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்பவை –

ராமன், கண்ணன் என்றெல்லாம் எப்படி பகவான் அவதரிக்கிறாரோ , அதே போல் நான்கு வ்யூஹ மூர்த்திகளாகவும் அவரே தான் அவதாரங்களை எடுக்கிறார், அதாவது வடிவங்களை எடுத்துக் கொள்கிறார். அப்படி இருக்கும் நாலு வடிவங்களை உபாஸிப்பது என்பது பாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு முக்கியமான கோட்பாடு.

ஆகையால் இந்த வாக்யத்திலும் முழு முதற் காரணமான வாஸுதேவனிடமிருந்து ஸங்கர்ஷணன் உண்டானார் என்று சொல்வது ஜீவனுடைய உண்டாக்கத்தைப் பற்றிப் பேசவே இல்லை – பகவான் ஸங்கர்ஷணன் என்று அவதாரம் எடுப்பதைச் சொல்கிறது. அவரிடமிருந்து ப்ரத்யும்னன் உண்டானார் என்று சொல்வது மனதின் உண்டாக்கத்தைப் பற்றிப் பேசவே இல்லை –அடுத்த அவதாரமான ப்ரத்யும்னன் என்கிற வடிவத்தைப் பற்றிச் சொல்கிறது. ஆகவே இந்த வாக்கியங்களில் எங்கும் ஜீவாத்மாவோ மனதோ உண்டாக்கப்படுவதைப் பற்றின பேச்சே இல்லை – ஆகையால் வேதத்தோடு இந்த வாக்கியங்கள் முரண்படுகின்றன என்று சொல்லுவது தவறானது.

கேள்வி – அப்படி இருப்பின் “ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார்”, “ப்ரத்யும்னன் என்கிற மனது
உண்டாகிறது” என்று ’ஜீவன்’, ’மனது’ முதலான சொற்கள் எப்படிப் பொருந்துகின்றன? பரமாத்மாவின்
வடிவங்களான ஸங்கர்ஷணனும் ப்ரத்யும்னனும் ஜீவனாகவோ மனதாகவோ இருக்க முடியாதே ?

பதில் – இந்த ஆகமத்திலேயே இதற்கு விடை உள்ளது. ஸங்கர்ஷணன் என்ற அவதாரம் தான் ஜீவாத்மாக்களை எல்லாம் அதிஷ்டானம் செய்து இயக்கக் கூடியவர். அதனால் “ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார்” என்ற வாக்யத்துக்கு “ஜீவர்களை இயக்கக் கூடியவரான ஸங்கர்ஷணன் உண்டாகிறார்” என்று பொருள். “ப்ரத்யும்னன் என்கிற மனது உண்டாகிறது” என்ற வாக்யத்துக்கு “மனதை இயக்கக் கூடியவரான ப்ரத்யும்னன் உண்டாகிறார்” என்று பொருள். “அனிருத்தன் என்கிற அஹங்காரம் உண்டாகிறது” என்ற வாக்கியத்துக்கு “அஹங்காரத்தை இயக்கக் கூடியவரான அனிருத்தன் உண்டாகிறார்” என்று பொருள். ஆகையால் நீங்கள் சொன்னபடி வேதத்துக்கு
முரண்பட்ட கருத்து இந்த இடத்தில் எதுவும் சொல்லப்படவில்லை . அதனால் பாஞ்சராத்ர ஆகமத்தின்
உண்மைத் தன்மையை கண்டிப்பது தகாதது.

வேதத்தோடு ஒற்றுமை
4–விப்ரதிஷேதா₄த் ச –
“(ஜீவாத்மாவின் உண்டாக்கத்தை பாஞ்சராத்ர ஆகமம்) கண்டிக்கிற படியாலும்”
பாஞ்சராத்ர ஆகமத்திலேயே இவ்வாறு மூல ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மாக்களின் தன்மைகள் சொல்லப் படுகின்றன –
அசேதநா பரார்தா₂ ச நித்யா ஸதத விக்ரியா । த்ரிகு₃ணா கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே ॥
அறிவற்றது, பிறருக்காக இருப்பது, நித்யமானது, எப்போதும் மாற்றம் அடைவது, ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொ ண்டது, ஜீவாத்மாவுக்கு ஷேத்ரமாக (விளை நிலமாக) இருப்பது – இதுவே ப்ரக்ருதியின் ஸ்வரூபம்.

வ்யாப்தி ரூபேண ஸம்ப₃ந்த₄: தஸ்யாஶ்ச புருஷஸ்ய ச । ஸ ஹி அநாதி₃: அநந்தஶ்ச பரமார்தே₂ந நிஶ்சித: ॥ அந்தப் ப்ரக்ருதிக்கும் புருஷனுக்கும் உடைய தொடர்பு வ்யாப்தி வடிவமானது, அதாவது ஜீவாத்மா ஒவ்வொரு அசேதனப் பொருளுக்குள்ளும் வ்யாபித்து (புகுந்து) இருக்கிறார். அந்த ஜீவாத்மா ஆதி (தொடக்கம் / உண்டாக்கம்) இல்லாதவர், அந்தம் (முடிவு / அழிவு) இல்லாதவர் – இவ்வாறு உண்மையாக நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆக இவ்வாறு ஜீவாத்மா நித்யமானவர் என்று வேதம் சொல்லும் கருத்தையே பாஞ்சராத்ர ஆகமமும் சொல்கிறபடியால், இதில் ஜீவாத்மா உண்டாவதாகச் சொல்லப்படுகிறது என்று பூர்வபஷி எழுப்பிய கேள்வியே தவறானது. ஆகவே , வேதத்தோடு எந்த முரண்பாடும் இல்லாதபடியாலும், இதை நாராயணனே நேரடியாக ஐந்து இரவுகளில் ரிஷிகளுக்கு உபதேசித்தபடியாலும் ஶ்ரீபாஞ்சராத்ர ஆகமம் முழுமையாக ப்ரமாணமே – அந்த பாஞ்சராத்ர ஆகமத்தில் பரமாத்மாவே உலகமனைத்துக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறபடியால், நாம் முதல் அத்யாயத்தில் உபநிஷத் வாக்யங்களை ஆராய்ந்து எடுத்த முடிவு சரியானது என்று மேலும் உறுதி செய்யப்படுகிறது. அதற்காகத் தான் வேத வ்யாஸர் இந்த அதிகரநத்தை இந்தப் பாதத்தில் அமைத்தார்.
இதோடு தர்க்க பாதம் முடிவடைகிறது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம் – முதல் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

September 1, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதித்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

முதல் பாதமும் முதல் அதிகரணமும் ஸ்ம்ருதி என்றே பெயர் -முதல் ஸூத்திரமும் ஸ்ம்ருதி என்றே தொடங்கும் –

——-

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்

இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்
ப்ரஹ்ம ஸூத்ரங்களில் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயத்தில், உபநிஷத்துக்களில் ஜகத்காரணத்ணதப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் அனைத்துமே சேதனம் மற்றும் அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டாவராய், தோஷங்கள் அற்றவராய், எண்ணிறந்த கல்யாண குணங்கணை உடையவரான பரமாத்மாவிடம் தான் பொருந்துகின்றன என்று நிரூபித்தார் வேத வ்யாஸர். இனி, அந்த முடிவில் ஏற்படக் கூடிய அனைத்து விதமான ஆஷேபங்களுக்கும் ஸமாதானம் கூறி, இம் முடிவு அசைக்கப்பட முடியாதது என்று நிரூபிக்கிறார் இரண்டாம் அத்யாயத்தில்.
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த இரண்டாம் அதிகரணத்தில் அநேகமாக யுக்திகளில் அடிப்படையிவேயே ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் அத்யாயத்தில் நான்கு பாதங்கள் உள்ளன –

1-ஸ்ம்ருதி பாதம் – இம் முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண் பட்டதான படியால் தவறா என்று ஆராய்தல்
2–தர்க பாதம் – பல மதத்தவர்கள் செய்யும் தர்கங்களுக்கு பதில் அளித்தல்
3-வியத் பாதம் – ஆகாசம் முதோனவை கூடப் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபித்தல்
4-ப்ராண பாதம் – ப்ராணன் எனப்படும் இந்த்ரியங்களும் பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என நிரூபித்தல்
.

ஸ்ம்ருதி பாதத்தின் அறிமுகம்
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்கணை ஆராய்ந்து ’பரமாத்மா ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யப்பட்டது.-இம்முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண்பட்டதாக உள்ளபடியால் இதி தவறானது என்று பூர்வ பக்ஷிகள்(சாங்க்ய தந்த்ரம் ) இந்தப் பாதத்தில் ஆஷேபம் சேய்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறார் வேத வ்யாஸர்.
இங்கு ஒரு ஸந்தேஹம் எழும் – வேதம் என்பது தான் தானே ப்ரமாணம் ஆகும். ஸ்ம்ருதிகள் என்பவை வேதத்தைத் தழுவி இயற்றப் பட்டவை யானபடியால், அவை நேரடியான ப்ரமாணங்கள் அல்ல . ஒரு ஸ்ம்ருதி வாக்யத்தைப் பார்த்தும், இதற்கு மூலமாக ஒரு வேத வாக்யம் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்து, அதற்குப் பின் தான் அந்தச் செயலைச் செய்யமுடியும். எனவே , வேதம் என்பதை விட ஒருபடி குறைந்தது தான் ஸ்ம்ருதி.
எனவே வேதத்துக்கும் ஸ்ம்ருதிக்கும் முரண்பாடு இருந்தால், வேதம் சொன்னபடியே செய்ய வேண்டும்- ஸ்ம்ருதி வாக்யத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று மஹர்ஷி ஜைமிநி தன்னுடைய கர்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் நிரூபித்துள்ளார். (ஓவதும்பரி -யூப ஸ்தம்பத்தை மரத்தைத் தொட்டுக் கொண்டு பாட ஸ்ருதி சொல்ல –மரத்தை முழுவதும் துணியால் மூட -ஸ்ம்ருதி சொல்ல -இவ்வாறு முரண்பட்டு இருந்தால் இந்த ஸ்ம்ருதியை ப்ரமாணமாகக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஜைமினி -)அப்படி இருக்கும் போது, வேதத்தை ஆராய்ந்து எடுக்கபட்ட இம்முடிவை எப்படி ஸ்ம்ருதியோடு முரண்படுகிறது என்ற அடிப்படையில் தவறென்று கூற முடியும்?இதற்கு பதில் கூறுகிறார் பூர்வ பக்ஷீ – வேத வாக்யத்தின் பொருள் தெளிவாக இருந்தால், அதற்கு முரண்பட்ட ஸ்ம்ருதி வாக்கியங்களைப் புறக்கணிக்கலாம் . ஆனால் வேதாந்தத்தில் ஜகத் காரணம் யார் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்படவில்லை -குழப்பமே ஏற்படுகிறது. அப்படி குழப்பம் இருக்கும் போது, கற்றுணர்ந்த ஜ்ஞாநிகளான ருஷிகள் இயற்றின ஸ்ம்ருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளையே முடிவு செய்ய முடியும். எனவே ,இங்கு ஸ்ம்ருதியில் என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு முரண் படாமல் தான் வேதத்தில் பொருள் கொள்ள வேண்டும். எனவே ஸ்ம்ருதிகளைக் கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமானதே .

இதுவரை சர்வ வேதாந்தங்களும் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன் என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது-அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன-பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி-முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால் இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான் -அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்த அத்யாயத்தைப் பற்றிச் சொல்கிறார் –
பாத₃ த்₃வந்த்₃வம் த்₃விதீயே பரிஹரதி பரே காரணே பா₃ஹ்ய பீடா₃ம்
கார்ய த்₃வாரேண பாதா₃ந்தர யுக₃லம் உதே₃தி ஆந்தர ஷோப₄ சாந்த்யை

“பரமாத்மாவே உலகனைத்துக்கும் காரணம்” என்பது முதல் அத்யாயத்தின் பொருள். அதில் முதல் பகுதியைத் தாக்கி, ”பரமாத்மா ஜகத் காரணம் அல்ல ” என்பவர்களை முதல் இரண்டு பாதங்களாலே இங்கு நிரஸிக்கிறார். அதில் இரண்டாவது பகுதியைத் தாக்கி,
“உலகில் அனைத்துக்கும் அவர் காரணம் அல்ல ” என்பவர்களின் வாதங்களை கடைசி இரண்டு பாதங்களாலே கண்டிக்கிறார்.

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-எந்த ஸ்ம்ருதியைத் தேர்ந்தெடுப்பபது?

ஸாங்க்ய ஸ்ம்ருதியில் பெருமைகள்
2-1-1-ஸ்ம்ருத்யதிகரணம் – ஸங்கதி – முதல் அத்யாயத்தில் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து’பரமாத்மாவே ஜகத் காரணம்’ என்று முடிவு செய்யப்பபட்டது. அந்த முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரணாக இருக்கிற படியால் தவறானது, ஸாங்க்ய ஸ்ம்ருதி முதலானவற்றில் சொன்னபடி தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும் என்று பூர்வ பக்ஷீ ஆஷேபம் செய்கிறார்.
பூர்வ பக்ஷம் – பூர்வபக்ஷீ தன் வாதத்தை இவ்வாறு முன் வைக்கிறார் –
1-வேதத்தில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப்பபட்டிருந்தால், அதற்கு முரணாக இருக்கும் ஸ்ம்ருதி தான் தவறு என்று சொல்லி விடலாம்- ஸ்ம்ருதியை விட ஸ்ருதி என்ற வேதம் உயர்ந்ததான படியால். ஆனால் ஜகத் காரணம் யார் என்பது வேதாந்தத்திலேயே தெளிவாக இல்லை . அதனால், சிறந்த ஜ்ஞாநிகளால் இயற்றப்பபட்ட ஸ்ம்ருதிகளைக் கொண்டு, அதில் சொல்லப்பபட்ட படிக்கு தான் வேதாந்தத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

2-கபிலர் என்கிற ரிஷி மிகச் சிறந்த ஜ்ஞாநி, வேதத்திலேயே (्ருஷிம் ப்ரஸூதம்
கபிலம்)
என்று ரிஷியாகக் (தீர்க்க தரிசனம் உடையவராக) கொண்டாடப்பபட்டுள்ளார்.
3-அவர் எழுதிய ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதத்தில் சொல்லப்பபட்ட பல விதமான கர்மங்களை ஏற்கிறபடியால் இது பௌத்தர்கள் முதலாவனாரின் நூல் போல் முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது அல்ல, நெருக்கமானது தான்.
4-இந்த ஸ்ம்ருதி வேறு எதையோ பற்றிப் பேச வந்தது அல்ல, ஜீவாத்மாவின் பெருமை ஸம்ஸாரத்தின் கொடுமை ஸம்ஸாரத்தின் காரணம், முக்திக்கான வழி என்கிற ஆன்மிக தத்துவங்களைச் தொல்வதே இதன் குறிக்கோள்.

ஸ்ம்ருதிகளுக்குள் முரண்பாடு
5-அந்த ஸாங்க்ய ஸ்ம்ருதியில் ப்ரதானம் (மூல ப்ரக்ருதி) என்கிற அசேதனப் பொருள் தான் ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளது. எனவே நீங்கள் சொன்னது போல் ’பரமாத்மா தான் ஜகத் காரணம்’ என்று வேதம் சொல்லி யிருந்தால், ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதுமே தவறானது மற்றும் வீணானது என்று ஆகி விடும். இதற்கு அநவகாச தோஷம் என்று பெயர். ஒரு ரிஷியின் நூலுக்கு அந்த தோஷத்தை ஏற்க முடியாது. எனவே ஸாங்க்ய ஸ்ம்ருதியில் சொன்னபடிக்கு ப்ரதானம் ஜகத் காரணம் என்று தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். (அவகாசம் -இடம் / ஸ அவகாசம்-ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் –அநவகாசம் -இடமில்லாமை வீண் -)
6-கேள்வி மநு, பராஸரர், பகவான் கண்ணன், வ்யாஸர், ஆபஸ்தம்பர் முதலானவர்கள் எழுதிய மற்ற ஸ்ம்ருதிகளில் எல்லாம் பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளதே ? ஸாங்க்ய ஸ்ம்ருதியைப் பின்பற்றி ப்ரதானம் ஜகத் காரணம் என்று கொண்டால், மேற் சொன்ன இந்த ஸ்ம்ருதிகள் எல்லாம் தவறாக ஆகி விடாதா?
பதில் – உண்மை தான், ஆனால் அப்போதும் அந்த ஸ்ம்ருதிகளுக்கு அநவகாஸ தோஷம் ஏற்படாது,-அதாவது முழுவதுமாகத் தவறாகவவோ வீணாகவோ ஆகாது. ஏன் என்னில், அந்த ஸ்ம்ருதிகளில் சொல்லப்பபட்ட தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான் இருக்கும், ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் பகுதி மட்டும் தான் தவறாக ஆகும். அது பெரிய குற்றம் அல்ல, ஏற்றுக் கொள்ளலாம்.
ஆகவே , ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு அநவகாஸ தோஷம் (முழுவதும் வீணாகப் போதல்) தவிர்க்கப்பபட வேண்டும் என்பதற்காக, அதில் சொல்லப்பபட்ட ஜகத் காரணத்தைத் தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். எனவே நீங்கள் முதல் அத்யாயத்தில் அடைந்த முடிவு தவறானது.

வ்யாஸரின் ஸித்தாந்தம்
இந்த பூர்வபஷத்திற்கு இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
முதல் ஸூத்ரத்தால் இதுவரை பூர்வபக்ஷி தொன்ன வாதத்தைக் கூறி, அது தவறு என்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
1-ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த் இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த்
ஸ்ம்ருதி –
கபிலாசார்யர் இயற்றிய ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு
அநவகாஸ தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலுமாக தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடம் என்கிறபடியால் (பரமாத்மா ஜகத் காரணம் என்று தொன்னது தவறு)
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
அந்ய ஸ்ம்ருதி – மநு, பராஸரர், பகவான் கண்ணன் முதலானவர்கள் இயற்றிய மற்ற ஸ்ம்ருதிகளுக்கு
அநவகாச தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலும் தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடும் என்கிறபடியால்.
மற்ற பல ஸ்ம்ருதிகள் பரமாத்மா ஒருவரே ஜகத் காரணம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்கின்றன –

மநு ஸ்ம்ருதி – (ஆஸீதி₃த₃ம் தமோ பூ₄தம் ஸோ அபி₄த்₄யாய ஸரீராத் ஸ்வாத் ஸிஸ்ருஷு : விவிதா₄: ப்ரஜா:) – இந்த உலகனைத்தும் இல்லாத போது (ப்ரளயத்தில்) பரமாத்மா ஸங்கல்பம் செய்து கொண்டு தன் உடலிலிருந்து உந்த உலகத்தைப் படைத்தார்)
பகவத் கீதை – (அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக₃த: ப்ரப₄வ: ப்ரலய: ததா₂) – நான் தான் இந்த உலகத்திற்குக் காரணமாகவும், இவ் வுலகம் லயம் (அழிவு) அடையும் இடமாகவும் உள்வைன்
விஷ்ணு புராணம் – (விஷ்ணோ : ஸகாஸாத் உத்₃பூ₄தம் ஜகத் தத்ரைவ ச ஸ்தி₂தம்| ஸ்தி₂தி ஸம்யம கர்தா அஸௌ ஜக₃த: அஸ்ய ஜக₃த் ச ஸ:) – இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து உண்டாயிற்று, அவரிடமே தான் நிலை பெற்று நிற்கிறது, அவரே இதை ஸம்ஹாரமும் செய்பவர்,அவரே தான் இவ் வுலகில் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்குகிறார்.

கபிலரும் மற்ற ஸ்ம்ருதி ஆசிரியர்களும்
பூர்வ பக்ஷி கூறின யுக்திகளுக்கு எல்லாம் வேத வ்யாஸர் இவ்வாறு பதில் கூறுகிறார் –
1-கபிலர் வேதத்திலேயே ரிஷி கொண்டாடப் பட்டிருந்தாலும், அவர் தவறே செய்யாதவர் என்று வேதம் கூறவில்லை .-ஆனால் மநு, வ்யாஸர், பராஸரர் முதலான ஸ்ம்ருதி ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் அது நமக்கு மருந்து, அவர்கள் பேசியதெல்லாம் உண்மை என்று வேதம் சொல்கிறது – “யத்₃வை கிஞ்ச மநு: அவத₃த் தத் பே₄ஷஜம்”
2-பரமாத்மாவே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸ்ம்ருதிகள் பல இருக்கின்றன, ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதி ஒன்று தான். எனவே பல ஸ்ம்ருதிகள் சேர்ந்து ஒன்றை பாதிப்பதே பொருத்தமானது.
3-வேதத்தை யுக்திகள் (Logic) கொண்டு ஆராய்ந்தால் எந்தப் பொருள் தெரிகிறதோ (பரமாத்மாவே ஜகத் காரணம் என்று), அதைப் பின் தொடர்ந்து உள்ளன மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள். ஆனால் ஸாங்க்ய ஸ்ம்ருதி அந்த யுக்திகளுக் கெல்லாம் முரணாக உள்ளது. யுக்திகளுக்கு முரணாக இல்லாத நூல் தான் உயர்ந்ததாகும்.
4- கேள்வி – ’பரமாத்மா ஜகத் காரணம்’ என்று கொண்டால் ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதும் வீணாகி விடும் (அநவகாஸ தோஷம்). ஆனால் ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகாது, ஏன் எனில் அவற்றில் சொல்லப்பபட்ட ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான்
இருக்கும். எனவே , எந்த நூலும் முழுவதும் வீணாகாமல் இருக்க ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்றே ஏற்க வேண்டும்.
பதில் – ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகப் போய்விடும். ஏன் எனில் அவர்கள் அனைவருமே பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லி, அவரை வழி பட்டு, ஆராதனம் செய்து, மகிழ்விப்பபதற்கான வழிகள் தான் இந்த தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் எல்லாம் என்று
கூறியுள்ளனர். பரமாத்மா என்றே ஒருவர் கிடையாது என்றால், அந்தக் கார்யங்களும் வீணாகத்தானே போகும்? அவை அத்தனை ஸ்ம்ருதிகளுக்கும் அநவகாஸ தோஷம் வந்து விடும். அதை ஒரு நாளும் ஏற்க முடியாது. எனவே , பல ஸ்ம்ருதிகளைக் காப்பதற்காக, ஒரே ஒரு ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் தவறு என்று ஏற்பதே சரியான முடிவு ஆகும்.
5-ஸாங்க்ய ஸ்ம்ருதியும் முழுவதுமாகத் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை . அதில் சொல்லப்பபட்ட ஸ்ருஷ்டி முறை , அசேதனப் பொருள்களின் பண்புகள், ஜீவாத்மாவின் பெருமைகள் அணனத்தும் சரியே . ஜகத் காரணம் யார் என்பது மட்டும் தான் அந்த ஸ்ம்ருதியில் தவறாகச் சொல்லப்பபட்டுள்ளது.

ப்ரஹ்மமும் கர்மமும்
பல ஸ்ம்ருதிகள் நாம் தெய்யும் கர்மங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கு ஆராதனம் (வழிபாடு) என்கின்றன –
பகவத் கீதை -யத: ப்ரவ்ருத்தி: பூ₄தாநாம் யேந ஸர்வமித₃ம் ததம் | ஸ்வ கர்மணா தம் அப்₄யர்ச்ய ஸித்₃தி₄ம் விந்த₃தி மாநவ: ||-“யாரால் இந்த உலகம் அனைத்தும் இயங்குகிறதோ யார் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் வ்யாபித்து உள்ளாரோ , அந்த பரமாத்மாவைத் தன்னுடைய கர்மங்களால் வழிபட்டு மனிதன் நற்கதி அடைகிறான்”
விஷ்ணு புராணம் –யை : ஸ்வ கர்மபரை : நாத₂ நரை : ஆராதி₄தோ ப₄வாந் | தே தரந்தி அகி₂லாம் ஏதாம் மாயாம் ஆத்ம விமுக்ததய ||“தங்கள் கர்மங்களை விடாமல் செய்வதன் மூலம் யாரெல்லாம் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த விசித்ரமான ஸம்ஸாரம் முழுவதையும் கடந்து மோக்ஷம் அடைகிறார்கள்”-எனவே பரமாத்மா இல்லை என்று கூறினால், இந்தக் கர்மங்களும் வீணாகப் போய்விடும். எனவே பரமாத்மா
ஜகத்காரணம் என்று நாம் முதல் அத்யாயத்தில் எடுத்த முடிவு சரியானது தான். அதற்கு முரணாக இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் அந்த விஷயத்தில் தவறு
என்று தான் கொள்ள வேண்டும்.
2-இதரேஷாம் ச அநுபலப்₃தே ₄: – “மற்றவர்களுக்கு அப்படித் தோற்றாத படியாலும்”
கேள்வி – கபிலர் த்யானம் தெய்து தன்னுடைய யோக சக்தியால் இந்தக் கருத்தைக் கண்டிருப்பபார். எனவே இது உண்மையாகத் தானே இருக்க வேண்டும்?
பதில் – அப்பபடி இது உண்மையாக இருப்பின், மநு ஆபஸ்தம்பர், பராஸரர் முதலான மற்ற யோகிகளும் இதே தத்துவத்தைக் கண்டு உபதேஸம் செய்திருக்க வேண்டும். அப்பபடி அவர்கள் செய்யவில்லை -நேர் முரணான தத்துவத்தைக் காட்டுகிறார்கள். எனவே , வேதத்துக்கும் ஜ்ஞாநிகளின் உபதேஸங்களுக்கும் முரணாக உள்ள தத்துவங்களை கபிலர் மயக்கத்தால் தவறாகக் கூறி விட்டார் என்றே கொள்ள வேண்டும்.
ஆகவே , முதல் அத்யாயத்தில் நாம் அடைந்த முடிவுக்கு எந்த முரண்பாடும் இல்லை . பரமாத்மாவே ஜகத் காரணம் என்ற முடிவு வலிமையாகவே நிற்கிறது.

——–

2-1-2-யோக₃ப்ரத்யுக்த்யதி₄கரணம்-ஹிரண்ய கர்பர் தவறு செய்ய முடியுமா?

ஏன் தனி அதிகரணம்?
(
கீழ் அதிகரணத்தில் சொன்னவற்றில் அதிக சங்கை -தோன்ற -கீழ் பரமாத்மாவையே ஒப்புக் கொள்ளாமல் -இங்கு யோக மதத்தில் ஒத்துக் கொண்டு த்யான இத்யாதிகள் இருப்பதால் அதிக்கப்படி ஸந்தேஹம் வரும் -கீழ் கபிலர் ரிஷி -இங்கு நான்முகன் -சர்வ வேதாந்தம் பிரதிவர்த்தகத்துக்கு அதிகாரியான ஹிரண்ய கர்ப்பர் -)

2-1-2-யோக₃ப்ரத்யுக்த் திகரணம்
– ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதாந்தத்தோடும் மற்ற ஸ்ம்ருதிகளோடும் மிகவும் முரண்படுகிறபடியால் அதைப் பின்பற்றி வேதாந்தத்தின் பொருளை முடிவு செய்ய இயலாது என்று நிரூபித்தார் வ்யாஸர்.
அதற்கு மேல் கேள்வி எழுகிறது – சரி, ஸாங்க்ய ஸ்ம்ருதி மிகுந்த முரண்பாடுகளை உடையது. ஆனால் ஹிரண்ய கர்பர் எனப்படும் நான்முகக்கடவுளால் பரப்பப்பட்ட யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு நெருக்கமான கருத்துகளையே போதிக்கிறது. அதைக் கொண்டு வேதாந்தத்தின் பொருளை புரிந்து கொள்ளலாமே ?
பூர்வ பக்ஷம் – – வேதாந்தத்தில் சொல்வது போல் யோக ஸ்ம்ருதியும் பரமாத்மா இருக்கிறார் என்று ஏற்கிறது.-த்யானம் (யோகம்) தான் முக்திக்கான வழி என்று ஏற்கிறது. மேலும் நான்முகன் தான் உலகில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாய், அந்த ஜ்ஞாநத்தைப் பரப்பும் பொருப்பிலும் இருக்கிறார். எனவே அவர் சொன்ன யோக ஸ்ம்ருதி சரியாகத் தான் இருக்கும். அதைப் பின்பற்றி தான் வேதாந்தத்துக்குப் பொருள் கூற வேண்டும்.
ஸித்தாந்தம் – இதற்கு ஒரே ஸூத்ரத்தால் பதில் அளிக்கிறார் வ்யாஸர் இந்த அதிகரணத்தில்.
1-ஏதேந யோக₃: ப்ரத்யுக்த: – “இத்தால் யோக ஸ்ம்ருதியும் மறுக்கப்பட்டது”
பல கருத்துகளில் யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு ஒத்துப் போனாலும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன – பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத ப்ரதானம் தான் ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறார்கள் பரமாத்மா உலகத்துக்கு நிமித்த காரணம் மட்டும் தான் (குடத்துக்குக் குயவன் போல்), உபாதான காரணம் (குடத்துக்கு மண் போல்) அல்ல என்கிறார்கள். த்யானத்தை ஏற்றாலும் த்யானிக்கப்பட வேண்டிய ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் தவறாக வருணிக்கிறார்கள் – ஜீவாத்மாவுக்கும் அந்தர்யாமி பரமாத்மா என்று ஏற்க வில்லை , பரமாத்மா உலகின் உபாதான காரணம் என்று ஏற்க வில்லை . எனவே இந்த த்யானமும் வேதாந்தத்தில் சொல்லப்பட்ட த்யானம் அல்ல-

நான்முகனும் ஸம்ஸாரி தான்
நான்முகன் உலகத்தில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாக இருந்தாலும் கூட, அவரும் நம்மைப்போல் பாப புண்யங்களுக்குக் கட்டுப்பட்டு, ஸத்த்வம்-ரஜஸ்-தமஸ் என்ற முக் குணங்களால் பாதிக்கப்படும் ஒரு ஸம்ஸாரி தான். எனவே அவரும் ரஜோ குணமோ தமோ குணமோ அதிகமாக இருக்கும்போது அறிவின்மையால் வேதாந்த்ததுக்கு முரண்பட்ட தவறான கருத்துகளை யோக ஸ்ம்ருதியில் கூறினார்.
நான்முகக் கடவுள் தான் புராணங்களை யெல்லாம் உபதேசித்தார் என்று நாம் அறிவோம்-அதைப் பற்றி மத்ஸ்ய புராணத்தில் கூறும் போது இவ்வாறு சொல்லப் படுகிறது –
அக்₃நே : சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு தி₃வாகரே | ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதி₄கம் ப்₃ரஹ்மண : ஸ்ம்ருதம்| ஸாத்த்விகேஷு அதி₄கம் தத் விஷ்ணோ : மாஹாத்ம்யம் உத்தமம் ||
“தமோ குணம் அதிகமாக இருக்கும் போது நான்முகன் கூறிய புராணங்களில் அக்நி முதலான தேவதைகளின் பெருமை சொல்லப் பட்டிருக்கும், ரஜோ குணம் அதிகமான போது சொன்ன புராணங்களில் தன்னுடைய பெருமையைப் பாடுவார், ஸத்த்வ குணம் அதிகமான போது உயர்ந்ததான விஷ்ணுவின் மஹிமயைப் பாடுவார்”
எனவே நான்முகனுக்கும் ரஜோ மற்றும் தமோ குணங்களால் கலக்கமும் அறிவின்மையும் வரக் கூடும். எனவே அவர் சொன்ன ஸ்ம்ருதியாகவே இருந்தாலும் அது வேதத்தோடு
முரண்பட்டால் அந்த விஷயங்களில் தவறானது தான்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளி என்ற நூலில் இந்த அதிகரணத்தின் பொருளைச் சுருக்கமாகக் கூறுகிறார் –
வேதாந் பூர்வம் விதாதா அலபத பகவத: ஸர்வ வித்த்யா நியுக்த:
வாகீஶஶ் ஸேஷ தஸ்மாத் தடுதித விஹதே : கம்பநம் வேத மூர்த்ந: |
மைவம் தஸ்யாபி வேதாபஹ்ருதி முக விபத்த் தர்ஶநாத் ஷேத்ரி பாவாத்
ப்ராந்த்யாதிஃ ஸம்பவேதிதி அகதிக விஷயே பூர்வவந் நிர்வஹாம: ॥

நான்முகக் கடவுள் ஆதியில் பகவானிடமிருந்து வேதங்களையும் எல்லா வித்யைகளையும் பெற்றார். அவரே தான் அந்த வித்யைகளைப் பரப்பும் பொருப்பையும் உடையவர். ஸரஸ்வதீ தேவிக்குக் கணவனானபடியால் வாகீசன் என்று அழைக்கப் படுகிறார். இப்படி எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், அவரும் அஸுரர்களிடத்தில் வேதங்களைப் பரிகொடுத்துத் தவித்தார் என்பது போன்ற பல கதைகளை நாம் புராணங்களில் காண்கிறபடியால் அவரும் ஒரு ஷேத்ரஜ்ஞன் (ஜீவாத்மா) என்பதால், பிழை , மயக்கம், குழப்பம் ஆகியவை அவரிடம் நிகழக் கூடும் என்பதே தெளிவாகிறது.-ஆகவே , வேறு வழி இல்லாத சூழலில் இந்த யோக ஸ்ம்ருதியும் ஸாங்க்ய ஸ்ம்ருதி போல் சில இடங்களில் தவறானது என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

————

2-1-3-விலக்ஷணத்வாதிகரணம் – எந்த ஸ்ம்ருதி தர்க்கத்தின் படி உள்ளது?

(இதுவும் மேல் வரும்-ஆரம்பணாதி கரணம் —2-1-6- நம் சித்தாந்தத்தின் முக்கிய கருத்துக்கள் கொண்டவை ஆகும்-ஒன்பது ஸூத்ரங்கள் கொண்ட அதிகரணம்-முதல் மூன்றும் பூர்வபக்ஷ ஸூத்ரங்கள் )

காரண -காரியங்களின் ஒற்றுமை –விலக்ஷணத்வாதிகரணம் – ஸங்கதி – வேதத்தின் பொருளை முடிவு செய்யும் போது மநு ஸ்ம்ருதி முதலானவற்றைத் தான் பின்பற்ற வேண்டும், ஸாங்க்ய ஸ்ம்ருதியை அல்ல என்று கூறப்பட்டது. அதற்கு மேல்
ஆஷேபம் எழுகிறது – மனு முதலானவர்களின் ஸ்ம்ருதி தர்க்கத்துக்குப் புறம்பாக உள்ள படியால், அவற்றைப் பின்பற்றக் கூடாது, தர்க்கத்தை அநுஸரித்து இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதியைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். எனவே ப்ரதானம் தான் ஜகத் காரணம், பரமாத்மா அல்ல.
பூர்வ பக்ஷம் – முதல் இரண்டு ஸூத்ரங்களால் பூர்வ பக்ஷம் சொல்லப்படுகிறது. அவர்கள் கூறுவதாவது –
1–ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததா₂த்வம் ச சப்₃தா₃த்
– (முதல் அத்யாயத்தில் ’இவ்வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகிறது’ என்று கூறியது) ஒவ்வாது – தவறானது
அஸ்ய – புலன்களால் அியயப்படும் (சேதனர்கள் மற்றும் அசேதனங்கள் அடங்கிய) இந்த உலகத்தின்
விலக்ஷணத்வாத் – வேறுபாட்டால்
ததா₂த்வம் – அந்த வேறுபாடு
சப்₃தா₃த் ச – சப்தம் எனப்படும் வேதத்தாலும் அறியப் படுகிறது
பரமாத்மா – ப்ரஹ்மம் என்ற ஓரு பொருளை ஏற்பவர்கள் அவர் ஜ்ஞாநமுடையவர் (சேதனன்), குற்றங்களற்றவர், அனைவரையும் இயக்கக் கூடியவர், ஆநந்தம் மட்டுமே உடையவர். ஆனால் புலன்களால் நாம் அறியக்கூடிய இந்த உலகம் அறிவற்றது (அசேதனம்), தூய்மை யற்றது, மற்ற ஓருவரால் இயக்கப்படுவது மற்றும் துக்கத்தை உடையது.-எனவே அவற்றின் வேறுபாடு ஸ்பஷ்டமாக உள்ளது. வேதத்திலும் உலகுக்கு இந்தத் தன்மைகள் சொல்லப் பட்டுள்ளபடியால் வேதத்திலிருந்தும் இந்த வேறுபாட்டை அறியலாம்.
எந்தப் பொருள் எந்தப் பொருளிலிருந்து உண்டாகிறதோ , அது அதைப் போல் தான் இருக்கும், வேறுபட்டு இருக்காது, என்று உலகத்தில் மோதிரம், குடம் முதலான பொருள்களில் நாம் பார்க்கிறோம். இந்த உலகமோ ப்ரஹத்தை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இது ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை .
அசேதனமாய், முக்குணம் உடையதான ப்ரக்ருதியிலிருந்து தோன்றியது என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதியே சரி –

(மனிதனுக்கு பல் முளைக்கிறது முடி வளருகிறது -உண்டாகும் பொருள் போல் அல்லவே இவை -வேறுபாடுகள் காண்கிறோம் என்றால் -இவை உடம்பில் இருந்து தானே ஆத்மாவில் இருந்து அல்லவே -உடலும் அறிவற்றது -இவையும் அறிவற்றவை -இதே போல் என்பர் –
ஆத்மா ஆழ்ந்து உறக்கத்தில் ஞானம் இல்லையே -அதே போல் கல்லுக்கும் கொள்ளலாம் என்றால் எப்போதுமே இதுக்கு வெளிப்படாதே -)

கல்லுக்கும் மண்ணுக்கும் சைதன்யம் உண்டா?
இதற்கு மேல் ஒரு ஆஷேபம் அவர்களைக் குறித்து எழுப்பப்படுகிறது. அதற்கான விடை பூர்வ பக்ஷிகளால் இரண்டாவது ஸூத்ரத்தில் கூறப்படுகிறது.
ஆஷேபம் – பரமாத்மா சேதனன் (ஜ்ஞாநம் உடையவர்), உலகமோ அசேதனம், அதனால் வேறுபாடு உள்ளது ,-எனவே உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக வில்லை என்று கூறுகிறீர்களே . உலகப் பொருள்கள் அனைத்துக்கும் கூட ஜ்ஞாநம் உள்ளது என்று ஒப்புக் கொண்டால் என்ன? அப்போது பரமாத்மா வுக்கும் உலகுக்கும் ஒற்றுமை வந்து விடுகிற படியால் அவரிடமிருந்து உலகம் உண்டாயிற்று என்று சொல்லலாமே-

வேதத்திலேயே “ப்ருதி₂வீ அவத₃த்” (பூமி கூறியது), “ஆப: வா அகாமயத” (ஜலம் ஆசைப்பட்டது) என்றெல்லாம் கூறப்படுகிற படியால் பூமி, ஜலம் முதலானவற்றுக்கும் ஜ்ஞாநம் உள்ளதாகத் தெரிகிறது. புராணங்களிலும்கூட மலைகள், நதிகள், கடல் முதலானணவ அறிவுடைய பொருள்களாக வருணிக்கப்படுகின்றன. எனவே உலகத்தில் அனைத்துப் பொருள்களுக்குமே ஜ்ஞாநம் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளலாமே ?

ஸமாதானம் –2-அபி₄மாநி வ்யபேத₃சஸ் து விஸேஷ-அநுக₃திப்₄யாம்
அபி₄மாநி வ்யபதேத₃சஸ் து
– பூமி முதலானவற்றுக்கு உரிய அபி₄மாநி தெய்வங்களன்றோ சொல்லப் படுகிறார்கள்
விஸேஷ-அநுக₃திப்₄யாம் – விஸேஷத்தாலும் அநுக₃தியாலும்
விஸேஷம் – அடை மொழி இடுவது. இவ் விடங்களிலெல்லாம் பூமி, ஜலம், புலன்கள் முதலானவற்றைக் குறிப்பிடும் போது ’தே₃வ:’ என்ற அடை மொழி பயன்படுத்தப் படுவதால், இச் சொற்கள் பூமி ஜலம் முதலான அசேதனங்களைக் குறிக்கவில்லை , அவற்றுக்குள் இருக்கும் அபி₄மானியான ஜீவாத்மாவைக் குறிக்கின்றன.
அநு க₃தி – அநு ப்ரவேஸம் (உள்ளே புகுவது). வேதமே அக்₃நி, வருணன் முதலான ஒவ்வொரு தெய்வமும் கண், வாக்கு முதலான புலன்களுக்குள் நுழைவதைப் பற்றிச் சொல்கிற படியாலும் இங்கு சொல்லப்படுபவர்கள் சேதனர்கள்தான் என்று நாம் அறியலாம்.-எனவே உலகம் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டு தான் உள்ளது. எனவே இவ் வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகி யிருக்க முடியாது என்பதே பூர்வபக்ஷத்தின் சுருக்கம்

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
ஸித்தாந்த ஸூத்ரம் – (3) த்₃ருஸ்யதே து –
“காணப்படுகிறது அன்றோ ”
உலகத்தில் ஒரு காரணப் பொருளிலிருந்து அதைக்காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் உண்டாவதையும் காண்கிறோம். கோமயத்திலிருந்து சில கிருமிகளும், தேனடையிலிருந்து சில புழுக்களும் உண்டானாலும், அவை கோமயம் மற்றும் தேனடையை விட வேறுபட்டு தான் காணப்படுகின்றன. எனவே பூர்வபக்ஷீ சொன்ன தர்க்கம் தவறானது. எனவே வேறுபட்டிருந்தாலும் உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக முடியும்.

இங்கு ஒரு ஆஷேபம் எழுகிறது – காரணமும் காரியமும் வேறுபட்டும் இருக்கலாம் என்று வ்யாஸர் சொன்னதை , காரணமும் காரியமும் வெவ்வேறு பொருள்கள் என்று சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டு ஒருவர் கேட்கிறார் – காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்கலாம் என்றால், காரணப் பொருள் வேறு காரியப் பொருள் வேறு என்று ஆகிறது. எனவே முன்பு இல்லாத குடம் என்ற பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்ல வேண்டும். அப்போது அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாகிவிடுமே – என்று. இதற்கு விடை –

4-அஸதி₃தி சேத் ந ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத்
அஸத்
– அஸத்திலிருந்து (இன்மையிலிருந்து) உலகம் உண்டாகிறது என்று ஆகிவிடுமே
தி சேத் ந – என்று நீங்கள் கூறினால். அது தவறு.
ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத் – முன் ஸூத்ரத்தில் ’காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்க முடியாது’ என்று பூர்வபக்ஷீ சொன்னணத மட்டும் எதிர்த்துச் சொன்னோமே தவிற , காரணம் வேறு பொருள் காரியம் வேறு பொருள் என்று கூற வில்லை. ஸத் கார்ய வாதம் அதாவது, இருக்கும் பொருளிலிருந்து தான் மற்றொரு பொருள் தோன்றுகிறது, அதாவது காரணப் பொருளே தான் காரியப் பொருளாக மாறுகிறது என்று தான் கூறுகிறோம். எனவே
இந்த தோஷம் எங்கள் மதத்தில் கிடையாது.
-இவ்வாறு பூர்வ பக்ஷத்திற்கு பதில் உரைத்து, மேலும் பல யுக்திகளை வ்யாஸர் காட்டுகிறார்-

(நையாயிகர் அஸத் கார்ய வாதிகள் -அவஸ்தா வேறுபாடு தானே -மண் குடம் மடங்கு தூள்கள் போல் -முழுவதுமாக இருக்க வேண்டாமே -வேறுபாடு மாத்திரமே வேற்றுப் பொருள் அல்லவே -ப்ரதிஷேதம் மட்டுமே சொன்னேன் -என்றவாறு -)

தர்க்கம் மட்டும் போதாது-ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வந்துவிடாதா?
விலக்ஷணத்வாதி கரணத்தின் முதல் இரண்டு ஸூத்திரங்களாலே பூர்வ பக்ஷம் சொல்லப்பட்டது. அதற்கு தன்னுடைய பதிலை வேதவியாஸர் அடுத்த இரண்டு ஸூத்திரங்களாலே காட்டினார். தற்போது ஐந்தாவது ஸூத்திரத்தில் பூர்வ பக்ஷிகள்
ஒரு ஆஷேபத்தை எழுப்புகிறார்கள்.

5- அபீதவ் தத்₃வத் ப்ரஸங்கா₃த் அஸமஞ்ஜஸம்
அபீதவ்
– சிருஷ்டி, பிரளயம், முதலானவற்றில் (பிரஹ்மமே தான் உலகமாக மாறுகிறது என்றால்)
தத்₃வத் ப்ரஸங்கா₃த் – அந்த பிரஹ்மத்துக்கு குற்றங்கள் வந்து விடும் என்கிறபடியால்
அஸமஞ்ஜஸம் – வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாது–ஒரு தங்கக் கட்டியைக் கொண்டு மோதிரம் செய்யும் பொழுது, அதில் செப்பு கலந்து விடுகிற படியால், அந்த ஸ்வரணத்துக்கு குறை ஏற்படுகிறது. அதே போல், பிரஹ்மமே உலகமாக மாறுகிறது என்றால், உலகத்தில் எந்த எந்த குற்றங்கள் இருக்கின்றனவோ , அவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு விடும். அதனால், ப்ரஹ்மம் ஞானமுடையது,தூய்மையானது, என்று சொன்ன தெல்லாம் மாறிப் போய், ப்ரஹ்மமும் அசேதனமாக, ப்ரஹ்மமே குற்றமுடையவராக,ப்ரஹ்மமே துக்கப் படுபவராக ஆகி விடுவார். அப்படிக் கொண்டால், வேதாந்த வாக்கியங்கள் எல்லாம் முரண்பட்ட அர்த்தங்களைச் சொல்லுகிறபடியாலே , பொருந்தாவையாக ஆகி விடுகின்றன.
அதனால் பிரதானம் என்கிற மூலப் ப்ரக்ருதியைத் தான் ஜகத் காரணமாகக் கொள்ள வேண்டும் என்பது பூர்வ பக்ஷியின் அபிப்பிராயம்.

(தத்₃வத் ப்ரஸங்கா₃த் -அதைப் போல் என்றும் அதை யுடைய என்றும் இரண்டும் பொருந்தும்-ஸ்வர்ணம் போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-ஜகத்து போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-குற்றமுடையதாகும் என்றபடி-நான் பாலகனாக ஆனேன் -நான் ஆத்மா அணு -மாறாமல் இருக்கும் -உடலுடன் சேர்ந்ததால் -வரும் மாறுபாடுகள் -குழந்தையின் வடிவாக இருந்த நான் இப்பொழுது -உருவ வேறுபாடு சரீரத்துக்குத்தானே -ஆனால் நான் ஆனேன் சொல்கிறோம் – )

இந்த இடத்தில் நாம் ஒரு சமாதானம் சொல்ல முடியும். ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொல்லும் பொழுது, நேரடியாக பரமாத்மா என்பவர் மாறுகிறார் என்று நாங்கள் சொல்லவில்லை , ப்ரஹ்மம் என்பது உலகத்திலிருக்கும் சேதனர்கள் அசேதனங்கள் அனைத்தையுமே தனக்கு சரீரமாக, அதாவது உடலாகக் கொண்டது. அப்படி சேதனங்கள்,அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம், உலகாக மாறுகிறது என்று சொன்னால், மாற்றம் என்பது அந்த சேதனர்களுக்கும் அசேதனங்களுக்கும் ஏற்படுமே தவிர, உள்ளே இருக்கும் அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு ஏற்படாதே என்று நாம் சொல்ல முடியும். ஆனால், இதற்கும் பூர்வ பக்ஷிகள் விடை கொடுக்கிறார்கள் – ப்ரஹ்மத்துக்கு -உடல், சரீரம், என்றே ஒன்று இருக்க முடியாது என்று –

சரீர ஆத்ம பாவம்
சரீரம் என்றால் என்ன என்று பூர்வ பக்ஷிகள் இந்த இடத்தில் தெரிவிக்கிறார்கள், கர்மத்தின் பயனான சுக துக்கங்களை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதாய், இந்திரியங்களை உடையதாய், ஐந்து விதமான பிராண வாயுக்களாலே தாங்கப் படுவதாய்,ஐம் பூதங்களின் சேர்க்கையால் உண்டாக்கப்பட்டதாய் இருக்கும் பொருள் சரீரம் என்று கூறுகிறார்கள்.
இதன் படி பார்த்தோ மென்றால், பரமாத்மாவுக்கு கர்மங்களின் விளைவான சுக துக்கங்களும் கிடையாது. அவருக்கு இந்திரியங்களும் கிடையாது. அவருடைய சரீரம் பிராணனாலும் தரிக்கப்படுவதில்லை . அவருடைய திருமேனி ஐம் பூதங்களால் ஆக்கப்பட்டதல்ல.அப்ராக்ருதமானது என்றும் ஸித்தாந்திகள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கு சரீரமே இருக்க முடியாது என்று தேறுகிறது.-அதனால், நேரடியாக ப்ரஹ்மமே உலகமாக மாறுகிறார் என்று தான் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொன்னால், உலகத்துப் பொருட்களுக்கு இருக்கும் குற்றங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கும் வந்து விடும் – என்று பூர்வ பக்ஷிகள் ஆஷேபம் செய்கிறார்கள்.

(சரீரம் கர்மம் அனுபவிக்க காரணம் -இந்திரியங்கள் உடையது-ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டு -ப்ராணனால் தாங்கப்பட்டு இருக்கும்-அவருக்கு இந்த்ரியங்களே கிடையாது -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -அபிராணன் ஸ்ருதி சொல்லும் அன்றோ -இந்த நான்குமே பரமாத்மாவுக்குப் பொருந்தாது -உலகம் அனைத்துமே சரீரம் என்று சொல்வது தவறு -என்பர் பூர்வ பஷி)

இதற்கு வேத வியாஸர் அடுத்த ஸூத்திரத்திலே விடை அளிக்கிறார்.
6- ந து த்₃ருஷ்டாந் பா₄வாத்
– பொருந்தாமை என்று சொன்னது தவறு, எடுத்துக் காட்டு இருக்கிறபடியால்-ஒரே பொருள் இரண்டு நிலைகளை அடைந்தாலும், அதில் ஒரு பகுதியின் குணங்களோ தோஷங்களோ மற்றொரு பகுதியை அடையாது என்பதற்கு உலகத்திலே எடுத்துக் காட்டு இருக்கிறது. ஒரு ஜீவாத்மா ஒரு காலத்தில் குழந்தையின் உடலோடு இருக்கிறார். அவரே வயதாகும் போது இளைஞனின் உடலை உடையவராக ஆகிறார். இவ்விடத்தில் மாற்றம் என்பது உடலுக்குத் தான் இருக்கிறது, ஆத்மாவுக்கு உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை . உடலின் தன்மைகள் ஆத்மாவுக்கு வராது, ஆத்மாவின்
தன்மைகள் உடலுக்கு வராது.
ஆனால் நாம் “நான் இளைஞனாக ஆனேன்” என்று தானே கூறுகிறோம்.

அதே போல், “சேதனங்கள் அசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட பரமாத்மா உலகமாக மாறுகிறார்” என்று சொல்லும் போதும், மாற்றம் என்பது உடலாக இருக்கும் சேதன அசேதனங்களுக்கு மட்டும் தான். பரமாத்மாவுக்கு அல்ல. தோஷங்கள்
எல்லாம் அந்த சேதன அசேதனங்களில் தான் இருக்கும். பரமாத்மாவிடம் ஏற்படாது. பரமாத்மாவுக்கு இருக்கும் ஏற்றங்கள், அவரிடம் தான் இருக்கும். உடலான சேதன அசேதனங்களிடம் வந்து விடாது
.-ப்ரஹ்மத்துக்கு சேதன அசேதனங்கள் அனைத்தும் உடலாக உள்ளன என்பது வேதத்தில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. எனவே
அதற்கும் பொருந்தும் ஒரு இலக்கணத்தைத் தான் நாம் சரீரத்திற்குக் கொடுக்க வேண்டும். அதாவது – “யஸ்ய சேதநஸ்ய யத் த்₃ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்வத₂ நியந்தும் தா₄ரயிதும் சக்யம் தச் சே₂ஷதைக ஸ்வரூபம் தத் தஸ்ய சரீரம்”, அதாவது, “எந்த ஒரு சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம் எல்லா காலத்திலும் தனக்காக இயக்கப் படுவதற்கும் தாங்கப் படுவதற்கும் தகுதி உடையதாய் இருக்கிறதோ , அவன் நன்மைக்காகவே இருக்கிறதோ , அந்த த்ரவ்யம் அந்த சேதனனுக்கு உடல் ஆகும்

(சக்யம் -தகுதி உடையது என்கிற விசேஷணம் சேர்த்து லக்ஷணம் -சில சமயம் கைகளைத் தூக்க முடியாமல் போகலாமே -பூர்வ பஷி சொல்லிய லக்ஷணத்தில் பல தவறுகள் -முக்தனுக்கு சரீரம் கர்மம் அடியாக இல்லை -இந்த்ரியங்கள் பிராணன் செடி கோடிகளுக்கு இல்லை-பூத சங்காதமும் அல்லவே -ஆகவே நம் ஸித்தாந்த சரீர லக்ஷணமே மிகவும் பொருந்தும் –)

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

ஸாங்க்ய மதத்தில் உள்ள தோஷம்
7- ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“ தன்னுடைய பக்ஷத்தில் உள்ள தோஷங்களாலும்”
இது வரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கின்ற நம்முடைய பக்ஷத்தில் தோஷம் இல்லை என்று காட்டப்பட்டது. இனி, பூர்வ பக்ஷத்தில் தோஷங்கள் உள்ளபடியாலும், பிரதானம் ஜகத்காரணம் என்று ஏற்க முடியாது என்று வேத வியாஸர் காட்டுகிறார்.
ஸாங்க்ய மதத்தில் ப்ரக்ருதி, ஜீவாத்மா என்று இரண்டு பொருட்கள் உண்டு. அந்த ஜீவாத்மா ஞானமுடையவர்,-ஆனால் எந்த கர்மங்களிலும் ஈடுபட மாட்டார். ப்ரக்ருதி தான் உலகத்தை படைக்கிறது, ஆனால் தானாக படைப்பதில்லை . ஜீவாத்மாவின் தொடர்பாலே ப்ரக்ருதி படைக்கிறது, என்று சொல்லுகிறார்கள்.
இவ்விடத்தில் வேத வியாஸர் ஒரு கேள்வியைக் கேட்கிறார் – ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பாலே ஸ்ருஷ்டி ஏற்படுகிறது, என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தொடர்பு எத்தகையது ?என்று. அந்த இரண்டு பொருட்களும் இருப்பதனாலேயே அவற்றுக்குத் தொடர்பு இருக்கிறது, என்று சொன்னால், அந்தத் தொடர்பு என்றைக்குமே அழியப் போவதில்லை . அதனால், ஜீவாத்மாவுக்கு என்றுமே மோக்ஷம் என்பது கிடைக்காமலேயே போய் விடும்.
அந்தத் தொடர்பு என்பது உண்டாக்கப்பட்ட ஒரு பொருள் என்று சொன்னோமே என்றால், அதுவும் ப்ரக்ருதி யிலிருந்து படைக்கப்பட்ட ஒன்று என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்யோன்ய ஆஸ்ரயம் என்கிற ஒரு குற்றம் ஏற்படும். ஜீவாத்மாவின் தொடர்பு ஏற்பட்டால், ப்ரக்ருதி படைக்கும். படைப்பு நடந்தால் தான் அவர்களுக்குள் தொடர்பே ஏற்படும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர்பார்த்துஇருக்கிறபடி யாலே , இந்த பக்ஷமும் பொருந்தாது.
அதனால், பிரதானம் ஜகத்காரணம் என்று சொல்லும் பக்ஷத்தில் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று தான் ஏற்க வேண்டும் என்று இந்த ஸூத்திரத்தின் பொருள்.

தர்க்கமா வேதமா?
8-தர்க்க அப்ரதிஷ்டா₂நாத் அபி
– “ தர்க்கம் நிலை பெறாத படியாலும்”
மேலும், ஒரு தோஷம். ஸாங்க்யர்களின் பக்ஷத்தில் சொல்லப் படுகிறது – அவர்களுடைய பக்ஷம் தர்க்கம், அதாவது-யுக்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தர்க்கம் என்பது என்றைக்குமே நிலை பெறாது – ஒரு முடிவுக்கு வரவே முடியாது. பௌத்தர்கள், ஜைனர்கள், நியாய மதத்தைச் சேர்ந்தவர்கள், யோக மதத்தைச் சேர்ந்தவர்கள்,ஸாங்க்யர்கள் என்று இவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பல தோஷங்களைச் சொல்லிக் கொள்ளுகிற படியால், அவை அனைத்துமே யுக்திகளின் அடிப்படையில் இருக்கிறபடியால், எது சரியான பக்ஷம் என்று முடிவு செய்யவே முடியாது.

ஆனால், ஸித்தாந்தத்தில் ஸ்ருதி என்கிற வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்லுகிறபடியால், நிலை பெறாமை என்கிற தோஷம் ஸித்தாந்தத்தில் ஏற்படாது.
9- அந்யதா ₂ அநுமேயம் இதி சேத் ஏவமபி அநிர்மோக்ஷப்ரஸங்க₃:
அந்யதா ₂ அநுமேயம்
– எதிரிகளின் யுக்திகளை உடைத்து, பிரதானமே ஜகத்காரணம் என்று ஊகிக்கலாமே
இதி சேத் – என்று சொன்னால்
ஏவமபி அநிர்மோக்ஷ ப்ரஸங்க₃: – அப்போதும் நிலை பெறாமை என்கிற தோஷத்திலிருந்து விடுபட முடியாது
பிற்காலத்தில் நம்மை விட புத்தி சாலியாக ஒருவர் வந்து நாம் சொன்ன யுக்திகளையும் முறியடிக்கக் கூடும் என்கிறபடியால், அப்போதும் தர்க்கம் என்பது நிலை பெற்று விட்டது என்று கூறவே முடியாது. அதனால், புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் வேதம் என்கிற ஸாஸ்திரத்தைத் தான் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்வதற்கு, தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, தர்க்கம் பயன்படலாமே தவிர, தர்க்கத்தை
மட்டும் கொண்டு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதென்பது முடிவுக்கே வராத ஒரு முயற்சி ஆகும்(வேத ஸாஸ்த்ர அவிரோத தர்க்கங்கள் மட்டுமே உபாதேயம் -மநு ஸ்ம்ருதி ).
ஆகையால், ஸாங்க்ய ஸ்மிருதி, வேதத்துக்கு முரண்பட்டதாக இருக்கிறபடியால், அதில் சொன்னபடி வேதத்தின் பொருளை முடிவு செய்வது தவறாகும். மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். அவையும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று தான் சொல்லுகின்றனர். அதனால்,
முதலத்தியாயத்தில் நாம் எடுத்த முடிவில் எந்த முரண்பாடும் இல்லை என்பது இந்த அதிகரணத்தின் பொருள்.

———–

2-1-4-சிஷ்டாபரிக்₃ரஹாதி₄கரணம்-ஒற்றுமையிலும் வேற்றுமை

மீதமுள்ள மதங்களுக்கும் விடை
விலக்ஷணத்வாதிகரணத்தில் ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லக்கூடிய ஸாங்க்யர்களின் பக்ஷம் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த அதிகரணத்தில் அதே நியாயத்தாலே , அதே யுக்திகளாலே வேதத்துக்கு புறம்பான மற்ற ஸ்மிருதிகள் மற்றும் மதங்களையும் மறுக்கிறார் வேத வ்யாஸர்.
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்ரம் தான் உள்ளது
1-ஏதேந சிஷ்டாபரிக்₃ரஹா: அபி வ்யாக்₂யாதா :
ஏதேந –
இத்தாலே என்று பொருள். அதாவது, வேதத்தால் ஏற்கப்படாத கருத்துகளைச் சொல்லக் கூடிய ஸாங்க்ய ஸ்மிருதியை மறுத்ததனாலேயே
சிஷ்ட அபரிக்ரஹா: – சிஷ்டம் என்றால் மீதமிருப்பவை என்று பொருள். அபரிக்ரஹா: என்றால் வேதத்தாலே பரிக்ரஹம் செய்யப்படாதவை , வேதத்தாலே ஏற்கப்படாதவை என்று பொருள். ஆகையால், சிஷ்டாபரிக்ரஹா: என்றால் வேதத்தால் ஏற்கப்படாத மீதமுள்ள ஸ்மிருதிகள், அதாவது அவற்றில் சொல்லப்பட்ட பக்ஷங்கள் என்று பொருள்.
அபி – அந்த பக்ஷங்களும் கூட
வ்யாக்யாதா : – அவையும் விவரிக்கப்பட்டன, அவையும் பதிலளிக்கப்பட்டன, அதாவது, அவையும் மறுக்கப்பட்டன. தர்க்கத்தை ஆலோசித்துப் பார்த்தாலும், ஸாங்க்யர்கள் சொல்லும் தர்க்கம் வேதத்துக்குப் புறம்பாக உள்ளது. மனு முதலானவர்கள் சொல்லும் தர்க்கம் தான் வேதத்தை அனுசரித்து இருக்கிறது. அதனால், வேதத்தை அனுசரித்த தர்க்கத்ணத அனுசரித்து இருக்கும் மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த அதிகரணத்தில் எந்த யுக்திகளை யெல்லாம் கொண்டு சொன்னோமோ , அதே யுக்திகளாலே வேதத்துக்குப் புறம்பான மற்ற ஸ்மிருதிகளையும் மறுக்கப்பட்டன என்று இந்த ஸூத்ரத்தின் பொருள்.

ஏன் தனி அதிகரணம்?
இங்கு ஒரு கேள்வி –
அதே யுக்திகளைக் கொண்டு தான் மற்ற ஸ்ம்ருதிகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு ஏன் தனி அதிகரணம் அமைக்க வேண்டும்?
பதில் – கடந்த அதிகரணத்தில் இல்லாத ஒரு அதிகமான கேள்விக்கான பதில் இந்த அதிகரணத்திலே சொல்லப்படுகிறது. ஸாங்க்யர்கள் தர்க்கத்தின் அடிப்படையில் தங்கள் பக்ஷத்தை முன் வைக்கிறார்கள். தர்க்கம் என்பது நிலை பெறாதது. அதில் பலவிதமான வாதங்கள், பல யுக்திகள் முன்னும் பின்னும் சொல்லப்படலாமே தவிர, முடிவை அடைய முடியாது. அதனால், தர்க்கத்தை மட்டும் கொண்டு ஒரு பக்ஷத்தை முடிவு செய்ய இயலாது என்று தெரிவித்தார் வ்யாஸர்.
மேல் கேள்வி – பரமாணுக்கள் தான் ஜகத்துக்குக் காரணம் என்று கணாதருடைய வைசேஷிக மதம், கௌதமருடைய நியாய மதம், ஜைனர்களுடைய மதம், பௌத்தர்களுடைய மதம் என்று பல மதங்களிலே ஏற்கிறார்கள், ஆகையால்,
தர்கம் நிலை பெறாதது என்று சொல்ல முடியாது. அதனால் பரமாத்மா ஜகத்காரணம் அல்ல – என்று.
விடை
(1) தர்க்கம் எப்போது வேண்டுமானாலும் பிற்காலத்தில் மற்று ஓருவராலே தகர்க்கப் படலாம். அதனால், தர்க்கம் நிலை பெற்றுவிட்டது என்று எப்போதுமே சொல்ல முடியாது. இது ஒரு பதில்.
2-பரமாணு தான் ஜகத் காரணம் என்று இவர்கள் அனைவரும் ஏற்றாலும், அந்த பரமாணு எத்தகையது என்பதிலேயே இவர்களுக்கு ஒத்த கருத்து கிடையாது.வைசேஷிக மதத்தில் நியாய மதத்தில் பரமாணுக்கள் உண்மையான பொருட்கள் என்று சொல்லுவார்கள்.
பௌத்தர்களோ பரமாணுக்களே பொய் என்று சொல்லுவார்கள். பௌத்தர்களுக்குள்ளேயே சிலர் ஞானமே வடிவானது பரமாணு என்று தெரிவிக்கிறார்கள். சிலர் ஞான வடிவானது அல்ல என்று பௌத்தர்கள் பரமாணுக்கள் ஒரு வினாடி தான் இருக்கும் என்கிறார்கள், மற்ற மதத்தவர்களோ பரமாணுக்கள் அழியாதவை என்கிறார்கள். இப்படி பரமாணுவின் இயற்கையைப் பற்றியே பலவிதமான முரண்பாடுகள் இந்த மதங்களுக்குள்ளே இருக்கின்றன–ஆகையால் முதலத்தியாயத்தில் என்ன முடிவுக்கு வந்தோமோ – பரமாத்மாவே ஜகத் காரணம் என்று -அதற்கு அவிரோதம் அதாவது எந்த முரண்பாடும் இல்லை , ஸாங்க்ய ஸ்மிருதியைக் கொண்டு எப்படி முரண்பாடு இல்ளையோ , அதைப் போலவே மற்ற ஸ்மிருதிகளைக் கொண்டும் முரண்பாடு இல்லை என்று இந்த அதிகரணத்தாலே வேத வ்யாஸர் நிரூபித்தார்.

——————-

2-1-5-போ₄க்த்ராபத்த்யதி₄கரணம்-உடல் இருந்தாலே துன்பமா?

அதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ”ந து திருஷ்டாந்த பாவாத்” என்கிற ஸூத்திரத்தில், உடலில் குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதலான மாற்றங்கள் இருந்தாலும், அந்த தன்மைகள் எதுவும் உள்ளுக்குள் இருக்கும் ஜீவாத்மாவைப் பாதிக்காதது போல், சேதனாசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே உலகத்தை படைக்கிறபடியால், மாற்றங்கள் குற்றங்கள் இவை யெல்லாம் உடலாக இருக்கும் சேதனங்களுக்கும் அசேதனர்களுக்கும்
உண்டே தவிர, அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு வராது; அதனால், ஸ்வபாவ விபாகம் உண்டு, அதாவது அவரவர்களுடைய தன்மைகள் வகுக்கப்பட்டுத் தான் இருக்கும். பரமாத்மாவுக்கு அசேதனத்தின் தன்மைகள் வராது. ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவின் தன்மைகள் வராது. எந்த இடத்திலும் தன்மைகள் கலந்து விடாது என்று வேத வ்யாஸர்
நிரூபித்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – சேதனங்கள் அசேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றுசொன்னால், சரீரம் இருப்பதாலேயே அந்த பரமாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருமே ? ஜீவாத்மாவுக்கு உடல் இருந்தால், இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால், பரமாத்மாவுக்கும் சரீரம் இருப்பதாலேயே இன்பம் துன்பம் இவை யெல்லாம் வந்துவிடுமே . அப்படி வந்தால், பரமாத்மாவின் தன்மை இன்பம்
மட்டுமே . துன்பம் என்பது ஜீவாத்மாவுக்கு மட்டும் தான் என்று வரை யறுத்துச் சொல்ல இயலாது. ஸ்வபாவங்கள் எல்லாம் வகுத்து இருக்காது, கலந்துவிடும். அதனால், உலகை உடலாகக் கொண்ட பரமாத்மா ஜகத் காரணமாகவே இருக்க முடியாது – என்று. அதற்கு இந்த அதிகரணத்தில் வேத வ்யாஸர் பதில் கூறுகிறார்.

“ஸம்போ₄க ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” (1.2.8) என்ற ஸூத்ரத்தில், பரமாத்மா உபாஸகர்களுடைய ஹ்ருதயத்துக்குள் இருப்பதாலேயே இன்ப துன்பங்கணள அநுபவிக்கத் தேவையில்லை , கர்மத்தால் வராமல் க்ருபையால் வந்திருக்கிற படியால் என்று சொல்லப்பட்டது. அடுத்து “ந து த்₃ருஷ்டாந்த பா₄வாத்” (2.1.9) என்ற ஸூத்ரத்தில், உடலுக்கு ஏற்படும் இளமை , முதுமை முதலான தோஷங்கள் ஆத்மாவுக்கு ஏற்படாதது போல், உலகமே பரமாத்மாவுக்கு உடலாக இருந்தாலும் சேதனாசேதனங்களுக்கு உள்ள குற்றங்கள் பரமாத்மாவுக்கு எற்படாது என்று சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் உடல் இருப்பதாலேயே பரமாத்மாவுக்கு துன்பம் ஏற்பட்டு விடாது என்று நிரூபிக்கப் படுகிறது-

பூர்வ பக்ஷியின் வாதம்
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்திரம் தான் உள்ளது.
1-போ ₄க்த்ரா பத்தே : அவிபா₄க₃: சேத் ஸ்யாத் லோகவத்
போ₄க்த்ரா பத்தே : அவி பா₄க₃:
– இது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.
சேத் – இவ்வாறு நீ சொன்னாய் என்றால் .
ஸ்யாத் லோகவத் -இது வேத வியாஸருடைய பதில். இப்படி மூன்று பகுதிகளாக இந்த ஸூத்திரத்தை பிரித்துக் கொள்வோம்.
பூர்வ பக்ஷம் -சேதனங்கள் அசேதனங்கள் அனைத்துமே பரமாத்மாவின் சரீரம் தான் என்று சொன்னால், பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்களை அனுபவித்தல் என்கிற தன்மை வந்து விடும்.-உலகத்தில் ஒரு ஜீவனுக்கு உடல் இருந்தால், உடலில் உள்ள குழந்தைத் தன்மை , இளமைத் தன்மை முதலானவை அந்த ஜீவாத்மாவுக்கு ஏற்படா விட்டாலும், அந்த சரீரத்தில் இருக்கக் கூடிய வாதம், பித்தம், கபம் முதலான தாதுக்களின் ஏற்றத் தாழ்வுகளாவே அந்த ஜீவாத்மாவுக்கு இன்பங்களும், துன்பங்களும் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க முடியாது என்று பார்க்கிறோம். அதே போல், பரமாத்மாவுக்கும் உடல் இருக்கிறது என்றால், அவருக்கும் துன்பம் வந்து விடும்.

வேதத்திலும் –ந ஹ வை ஸ சரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோ : அபஹதிரஸ்தி-
அதாவது “சரீரத்தோடு கூடியிருக்கும் ஒரு ஜீவனை இன்ப துன்பங்கள் ஒரு நாளும் விட்டுப் போகாது. சரீரத்தையே ஒழித்து அசரீரியாக ஒருவன் இருந்தால் தான் இன்ப துன்பங்களைத் தாண்டி இருக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே , உலகத்திலும் சரி, வேதத்திலும் சரி, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று நாம் காண்கிற படியால், இந்த உலகமே பரமாத்மாவுக்கு உடல் என்று நீங்கள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கும் துன்பம் வந்து விடும்.
போகம் என்றால், இன்ப துன்பங்களின் அனுபவம். போக்தா என்றால், அந்த இன்ப துன்பங்களை அனுபவிப்பவர் என்று பொருள்.
போ₄க்த்ரா பத்தி: – பரமாத்மாவுக்கும் சரீரம் உண்டு என்றால், அவரும் இன்ப துன்பங்கணள அனுபவிக்க வேண்டி வரும் என்று பொருள்.
அவி பா₄க₃: – ஆகவே , பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்கள் உண்டு என்றால், அவருக்கு ஜீவனின் தன்மை வந்து விட்டது. ஜீவனின் தன்மை இது, பரமாத்மாவின் தன்மை இது என்று பிரித்து வைக்க இயலாது.
அதனால், பரமாத்மாவுக்கு உடல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடல் இல்லாமலேயே பரமாத்மா உலகமாக மாறுகிறார் என்று சொன்னால், பரமாத்மாவுக்கே பல குற்றங்கள், அபுருஷார்த்தங்கள் ஏற்பட்டு விடும். அதனால், இரண்டு பக்கங்களிலும் சிரமம் இருக்கிறபடியால், பரமாத்மா ஜகத் காரணம் அல்ல , பிரதானம் தான்.

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
சேத் –
“இவ்வாறு கூறினால்” என்று பூர்வ பக்ஷியின் வாதத்தை வ்யாஸர் நினைவூட்டிக் கொள்கிறார்
ஸ்யாத் – “இருக்கட்டும்” – “ஸ்வபா₄வ விபா₄க₃ம் -அதாவது தன்மைகளின் பாகுபாடு இருக்கட்டும்”
பரமாத்மாவுக்கு உலகமனைத்தும் உடலாக உள்ளது என்று கொண்டாலும் சித், அசித், ஈஸ்வரன் ஆகியோரின் தன்மைகளில் கலப்பு (அவிபா₄க₃ம் – வரை யறை இல்லாமை ) ஏற்படாது, பாகுபாடு இருக்கும் என்று கூறுகிறார்.-சரீரம் இருந்தாலே துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்று பூர்வ பக்ஷி கூறி யிருந்தார். அதில், வேத வியாஸர்
வேறுபடுகிறார். பொதுவாக, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று கூற முடியாது; பாவம் புண்ணியம் என்கிற கர்மத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும் என்பது வியாஸருடைய கருத்து.
ஏனென்றால், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அடைந்த பிறகும் கூட, வைகுந்தத்தில் உடல் இருக்கிறது என்று உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன. “ஸ ஏகதா பவதி, த்ருதா பவதி” என்று பல உடல்களை ஜீவாத்மா முக்தி நிலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்தி அடைந்த ஜீவாத்மாவுக்கு துன்பங்கள் கண்டிப்பாக வர முடியாது. -அதனால், கர்மத்தால் ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பம் ஏற்படும் என்று தான் கொள்ள வேண்டும்.
ஆகையால், இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்தாலும், அவர் அபஹத பாப்மா என்று சொல்லப் படுகிறபடியால், கர்மங்களை அற்றவர். அதனால் அவருக்கு சரீரம் இருந்தாலும் துன்பம் ஏற்படாது என்பது வேத வியாஸருடைய சமாதானம்.

லோகவத் – “உலகத்தில் இருப்பது போல்”. அரசனும் பொது மக்களும் கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் இருந்தாலும், அரசன் தன் தொண்டர்களால் சாமரத்தால் விசிரப் படுவதால்,கொசுக்களால் கடிக்கப் படாமல் இருக்கிறார், ஆனால் பொதுமக்கள் கடிக்கப் படுகிறார்கள். உடல் இருப்பதாலேயே இருவரும் கடிக்கப்பட வேண்டும் என்பதல்ல -அதே போல். பரமாத்மாவுக்கும் சரீரம் இருந்தாலும் அவருக்கு ’அபஹத பாப்மத்வம்’ (கர்மங்களற்றிருத்தல்) என்கிற சிறந்த சக்தி உள்ளபடியால் அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படாது.
ஆக சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கும் உடலாகக் கொண்டிருந்தாலும், அவருக்கு எந்த தோஷங்களும் வராது என்கிறபடியால் சேதனாசேதநங்களை சரீரமாகக் கோண்ட ப்ரஹ்மமே ஜகத்காரணம் ஆவார்.

(இதே போல் பரமாத்மாவுக்கு -ஸர்வ லோகேஸ்வரன் -அபஹதபாப்மாத்வம் -ஸர்வசக்தி இவையே விசிறி -எத்தனை சரீரங்களும் இருந்தாலும் துன்பம் படமாட்டார்)

(கீழேயும் இதே போல் பார்த்தோம் -அது அந்தர்யாமி விஷயம் –(1-2-8) ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” – இதில் பூர்வ பக்ஷியின் கேள்வியும் வ்யாஸரின் பதிலும் உள்ளன.
ஸம்போ₄க₃ப்ராப்தி: – இது பூர்வ பக்ஷியின் கேள்வி. ஸம்போகம் என்றால் உலகத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவம். ப்ராப்தி என்றால் அடைவது. பூர்வ பக்ஷீ கேட்கிறார் – ஒரு ஜீவாத்மா உடலுக்குள் இருக்கிறபடியால் உலகத்தில் ஸுகம் மற்றும் துக்கங்களை அநுபவிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல் பரமாத்மாவும் இந்த உடலுக்குள் இருக்கிறார் என்றால், அவரும் ஸம்ஸாரத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவத்தாய் அடைய நேரிடுமே ?
இதி ந சேத் – “இவ்வோறு கூறினால் அது தவறு” – வ்யாஸர் இதற்கு பதில் கூறுகிறார்.
வைசேஷ்யாத் – “(காரணத்தில் இருக்கும்) சிறப்பால்” – அதாவது – “ஒரு ஜீவாத்மா உடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் பரமாத்மா இவ்வுடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் சிறப்பு (வேறுபாடு) இருக்கிறபடியால்”.
உடலுக்குள் இருப்பது மட்டுமே ஸுகம் மற்றும் துக்கத்துக்குக் காரணம் ஆகாது. எந்த காரணத்தால் ஒருவர் அந்த உடலுக்குள் இருக்கிறார் என்று ஆராய வேண்டும்.
ஜீவாத்மோ ஓர் உடலை அடாய்வதற்குக் காரணம், தான் முன் ஜன்மங்களில் செய்த பாபம் மற்றும் புண்ணியம் என்னும் கர்மம் தான். அதனால் அந்த உடல் அவருக்கு ஸுகம் மற்றும் துக்கத்தைத் தருகிறது.
பரமாத்மாவோ தன்னுணடய கருணையால் இந்த உடலுக்குள் இருக்கிறாரே தவிற, கர்மத்தால் அல்ல. எனவே அவருக்கு எந்த ஒரு ஸுகமோ துக்கமோ இதனால் ஏற்படாது.
இதை உபநிஷத்தே அழகான ஒரு உவமையைக் கொண்டு சொல்கிறது –
த்₃வோ ஸுபர்ணோ ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிசஸ்வ ஜாத |
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி||

இந்த உடல் என்ற ஒரு மரத்தில் ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இரண்டு பறைவகள் உள்ளன. அந்த மரத்தில் பழங்கள் உள்ளன. அவைதான் கர்மத்தின் காரணமாக ஏற்படும் ஸுக துக்கங்கள். ஜீவாத்மா அந்த பழத்தை உண்கிறது. பரமாத்மா என்ற மற்ற ஓரு பறவை அதை உண்ணாமல் ஒளியோடு திகழ்கிறது.

————-

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-மண்ணும் குடமும் வெவ்வேறு பொருள்களா?

காரணமும் காரியமும் வெவ்வேறு என்ற பூர்வ பக்ஷம்-2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – ஸங்கதி முன்பு -2-1-4- விலக்ஷணத்வாதிகரணத்தில் “அஸத் இதி சேத் ந பிரதிஷேத்
மாத்ரத்வாத்”
என்ற நான்காவது ஸூத்திரத்தில் “காரணமும் காரியமும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்கலாம்;-ஆனால் காரணமும் காரியமும் வெவ்வேறு பொருட்கள் அல்ல. அதனால் இல்லாத ஒரு பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்லும் அஸத் கார்ய வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை . ஸத் கார்ய வாதம் தான் வேதாந்தம் ஒப்புக் கொள்வது” என்று வேத வியாஸர் கூறி யிருந்தார். இந்தப் பின் புலத்தில்,

பூர்வ பக்ஷம் – இங்கு பூர்வ பக்ஷிகள் ந்யாய மதத்தைச் சேர்ந்தவர்கள், காரணப் பொருளைக் காட்டிலும் உண்டாக்கப்படும் காரியப் பொருள் வேறுபட்டது தான், ஒரே பொருள் காரணமாகவும் காரியமாகவும் இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் யுக்திகள் –
1–விலக்ஷண புத்தி போதகத்வாத் -அறிவு வேறுபாடு – குடமும், மண்ணும் வெவ்வேறு ஜ்ஞானங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன.
2- சப்த பேதக -சொல் வேறுபாடு – குடம், துணி என்பது போல் மண் குடம் என்ற இரு சொற்களால் குறிக்கப்படுபவையும் வேறு தான்.
3-காரிய பேதக -பயன் வேறுபாடு – குடத்தைக் கொண்டு தண்ணீரை சுமந்து வர முடியும், மண்ணைக் கொண்டு செய்ய முடியாது.
4-கால வேறுபாடு – குடம் இல்லாத காலத்திலும் மண் இருப்பதைப் பார்க்கிறோம். அதனால் அவை வெவ்வேறு தான்.
5-வடிவ வேறுபாடு – மண் என்பது பொடியாகவோ , கட்டியாகவோ இருக்கும். குடத்துக்கு வாயும் வயிறுமான வடிவம்.
6-பரிமாண வேறுபாடு -அளவில் வேறுபாடு. தனித்தனி நூல்களின் அளவை விட துணியினுடைய அளவு அதிகமானது.
7-பாவ அபாவ முரண்பாடு – மண் இருக்கும் போதே குடம் அழிந்து விட்டது என்று சொல்லுகிறோம். அதனால் ஒரே பொருள் இருக்கிறது என்றும் அழிந்து விட்டது என்றும் சொல்லப்பட முடியாத படியால் அவை வெவ்வேறு தான்.
8-எண்ணிக்கையில் வேறுபாடு – நூல்கள் பல, ஆனால் காரியமான துணி ஒன்று தான்.
9-காரக வியாபாரங்கள் பயனில்லாமல் போகும் – குடம் புதிதாக உண்டாக்கப்பட வில்லை என்றால் குடத்தை உண்டாக்குவதற்கான செயல்கள் வீணாகத்தான் போய் விடும்.
10-நித்ய அநித்ய பாகுபாடு இல்லாமை – இது நித்தியமான பொருள், இது அநித்தியமான உண்டாகி அழியக் கூடிய பொருள் என்கிற வேறுபாடே சொல்ல முடியாது, எல்லாப் பொருள்களுமே எப்போதும் இருப்பதால்.

ஸாங்க்ய மதத்தில் உள்ள தவறுகள்
ஸாங்க்யர்களின் பதில் – இந்த வாதத்துக்கு ஸாங்க்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு விதமாக ஸத் கார்ய வாதத்தை பின் பற்றி பதில் அளிக்கிறார்கள். அவர்கள் சொல்வது அபி₄வ்யக்தி வாதம் என்று அழைக்கப்படுகிறது,
(உண்டாகுவது -வேறு -வெளிப்படுவது வேறு தானே -சூர்யன் கிழக்கு உதிக்கிறார் பிறக்கிறார் என்றும் சொல்ல மாட்டோம் -தோற்றம் -எள்ளுக்குள் எண்ணெய் போல்-) குடம் என்கிற காரியம் புதிதாக உண்டாக்கப் படுவதில்லை , ஆனால் அதற்கு அபிவியக்தி (தோற்றம்) என்று ஒன்று உண்டு. அந்த தோற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அதற்கு அந்தக் குயவன் சில செயல்களைச் செய்ய வேண்டும். -அதனால் நாம் செயல்கள் செய்வது வீணாகிவிடுமே என்று முன் சொன்ன கேள்வி வராது. எந்தப் பொருட்கள்
எப்போதும் தோற்றுகின்றனவோ , அவை நித்யமான பொருட்கள், அவ்வப்போது வெளிப்படுபவை அநித்யமான பொருட்கள் என்று பாகுபாடையும் சொல்லி விடலாம்.

இதற்கு நியாய மதத்தைச் சேர்ந்த பூர்வ பக்ஷிகளின் கண்டனம் – ஒரு குடம் அபி வியக்தி (தோற்றம்) அடைகிறது என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தோற்றத்துக்கு தோற்றம் உண்டா? தோற்றம் கிடையாதா? அல்லது புதிதாக உண்டாகிறதா?
1-தோற்றத்திற்குத் தோற்றம் உண்டு என்று சொன்னால், அந்தத் தோற்றத்திற்கு இன்னுமொரு தோற்றம், அதற்கு மற்ற ஓரு தோற்றம் என்று இது முடிவே இல்லாமல் ஏற்க வேண்டி வரும். இது ’அநவஸ்தா₂’ என்ற தோஷமாகும்.
2-குடத்தினுடைய தோற்றமானது தோற்றமே இல்லாதது என்று சொன்னால், அப்போது குடம் என்பது எப்போதுமே தோற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
3-குடத்தினுடைய தோற்றம் என்பது புதிதாக உண்டாக்கப் படுகிறது என்று சொன்னால், அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகி விடும், அதற்கு பதிலாக குடமே புதிதாக உண்டாகிறது என்றே ஏற்றுக் கொண்டு விடலாம்.
மேலும், அபிவியக்தி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு பொருளைத் தான் தோற்றமடைய வைக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியாது. ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், தனக்கு அருகில் இருக்கும் குடம், துணி, மரம் முதலான எல்லாப் பொருள்களையுமே தோற்றமளிக்க வைக்கும். அதே போல், மண்ணில் குடம், தட்டு, சுவர் என்று பல பொருட்கள் உள்ளபடியால், குயவன் செய்யும் செயல்களாலே ஏன் குடம் தான்
உண்டாகிறது? சுவரோ , தட்டோ உண்டாகவில்லை ? இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை .
அதனால் காரணமும் காரியமும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். நீங்கள் விலக்ஷணத்வாதிகரணத்தில் காரணமும் காரியமும் ஒன்று தான், ஆனால் வெவ்வேறு தன்மைகளோடு இருக்கின்றன என்று சொன்னது பொருந்தாது

உபநிஷத் தெளிவாகக் கூறும் ஸத் கார்ய வாதம்-ஸித்தாந்தம் – பூர்வ பக்ஷிகளின் இந்த வாதத்ணத 6 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் முறியடிக்கிறார்.
1- தத₃நந்யத்வம் ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய:
தத₃நந்யத்வம் –
(இந்த ஜகத்) அந்த ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல
ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய: – ’ஆரம்ப₄ணம்’ என்ற சொல்லைத் தொடக்கமாகக் கொண்ட வாக்கியங்களால்.(பஞ்சமி பஹு வசனம் )-

சாந்தோக்ய உபநிஷத்தில் 6ஆம் அத்யாயத்தில் ’ஸத்₃வித்₃யா
’ உபதேஸத்தில் ’ ஆரம்ப₄ணம்’ என்ற சொல் தொடங்கி பல வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன.
அவற்றை ஆராய்ந்தால் காரணமும் காரியமும் ஒன்றென்று தெரிகிறது.
உத்தாலகர் என்ற தந்தை , தன் மகனான ஸ்வேத கேதுவைப் பார்த்துக் கேட்கிறார் – “
உததம் ஆதே₃ சம் அப்ராக்ஷ்ய: யேந அச்ருதம் ச்ருதம் ப₄வதி” அதாவது – “எந்த ஒரு பொருளை அறிந்தால், உலகத்தில் அனைத்துப் பொருள்களையும் அறிந்ததாக ஆகுமோ , அந்த ப்ரஹ்மத்தைப் பற்றி உன் ஆசாரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாயா? என்று.
எப்படி ஓரு பொருளை அறிந்தால், அனைத்தையும் அறிந்ததாகும் என்று புரியாமல், மகன் கேட்க, அதற்கு தந்தை ஒரு எடுத்துக் காட்டைக் கூறுகிறார் – “
யதா₂ ஸோம்ய ஏகேந மிருத் பிண்டே ₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்” என்று. “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்து கொண்டால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு, சுவர், முதலான எல்லாப் பொருட்களையும் ஒரு விதத்தில் அறிந்ததாக ஆகுமோ , அதே போல் இந்த ப்ரஹ்மத்தை அறிந்தால், உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று தந்தை கூறினார்.

நிலைகள் வேறு, பொருள்கள் வேறல்ல
அப்போது மண்ணும் குடமும் வெவ்வேறு பொருட்கள் கிடையாதா? மண்ணை அறிந்தால் எப்படி குடம் முதலானவற்றை அறிந்ததாக ஆகும்? என்கிற சந்தேகம் மகனுக்கு எழ , அதற்கு பதில் கூறுகிறார்,
“வாசா ஆரம்ப₄ணம் விகார: நாமதே₄யம் ம்ருத்திகா இத்யேவ ஸத்யம்” என்று. “மண்
என்ற ஒரே பொருள் தான், வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்காக வெவ்வேறு பெயர்களையும் வெவ்வேறு வடிவங்களையும் அடைகிறது. குடம், தட்டு, முதலான காரியப் பொருள்களும் கூட மண் என்று தான் பிற்பாடும் அறியப் படுகின்றன. அதனால் அவை அனைத்துமே மண் தான். தனி பொருள் அல்ல” என்று இதற்குப் பொருள்.

அடுத்து, மற்றுமொரு வாக்யம் – “ஸதே₃வ ஸோம்ய இதம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”.
இத₃ம்-
நீ கண் முன்னால் பார்க்கக் கூடிய ஜகத்து அனைத்துமே
அக்₃ரே – ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளய காலத்தில்
ஸதே₃வ ஆஸீத் ஸத்தாகவே இருந்தது அதாவது ப்ரஹ்மமாகவே இருந்தது.
இதனாலும் உலகமும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று தெரிகிறது.
அதற்குப் பின் ப்ரஹ்மம் இந்த உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது எடுக்கக் கூடிய ஸங்கல்பம் காட்டப் படுகிறது – “
ப₃ஹு ஸ்யாம், ப்ரஜாயேய” என்று. அதாவது, -“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ப்ரஹ்மம் எண்ணுகிறது. இதனாலும் ஒன்றான ப்ரஹ்மமும் பலவான உலகப் பொருட்களும் ஒன்று தான் என்று தெரிந்து கொள்கிறோம்.
இந்த வாக்கியங்கள் எல்லாம் தெளிவாக ஸத் கார்ய வாதத்தை போதித்து, பெயர் வடிவம் பயன் அளவு முதலான வேறுபாடுகள் அப்பொருளின் நிலை மாறுகிற படியால் தான் என்று கூறுகின்றன

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-ஒரே பொருளுக்குத்தான் வெவ்வேறு நிலைகள்-அவஸ்தா பேதங்கள்

பூர்வபக்ஷியின் கேள்வி-பூர்வபக்ஷி, மண் முதலான காரணப் பொருள்களும் குடம் முதலான
கார்யப் பொருள்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று பத்து காரணங்களைச் சொல்லி வாதிட்டார். -அதற்கு வேத வியாஸர், முதல் ஸூத்ரத்தாலே உபநிஷத்துக்களே எப்படி ஸத் கார்ய வாதத்தைக் காட்டுகின்றன என்று சொல்லி, அதன் மூலம் ப்ரஹ்மமும் இந்த ஜகத்தும் வேறல்ல , ஒரே பொருள் தான் என்று நிரூபித்தார். தற்போது அதற்கு மேல் சில சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார்.
இங்கு பூர்வபக்ஷீ ஒரு கேள்வியை எழுப்புகிறார் – சொல் மாறுபடுதல், வடிவம் மாறுபடுதல், அளவு மாறுபடுதல், ஜ்ஞானம் மாறுபடுதல் முதலானவை சில இடங்களில் ஒரே பொருளுக்கு பல நிலைகள் ஏற்படும் போதும் காணப்படுகின்றன, வெவ்வேறு பொருள்களுக்கு இடையிலும் காணப்படுகின்றன. -அதாவது, ஒரே உடல், சிறிதாக இருக்கும் போது இது குழந்தை -பாலகன் என்று அழைக்கப்படுகிறது-வயதான பிறகு இளைஞன் – வயோதிகன் என்று அழைக்கப்படுகிறது. உடல் ஒன்று தான், நிலைகள் தான் மாறுகின்றன. அதனாலேயே சொல், வடிவம், ஜ்ஞானம், அளவு முதலானவை மாறி விடுகின்றன.-அதே போல், துணி, குடம் என்று இரண்டு வெவ்வேறு பொருள்களை எடுத்துக் கொண்டாலும், சொல், ஜ்ஞானம், வடிவம், அளவு, இவை முதலானவை மாறி விடுகின்றன. -ஒரு காரணத்திலிருந்து கார்யப் பொருள் உண்டாகும் பொழுது, இந்த இரண்டு விதத்தில் எதை நாம் ஏற்க வேண்டும் என்று கேள்வி. அதற்கு வேத வியாஸர், இரண்டாவது ஸூத்ரத்தில் பதில் கூறுகிறார்.

வ்யாஸரின் பதில்
2-பா₄வே ச உபலப்₃தே ₄:
– “இருக்கும் போதே கூட அறியப்படுகிறபடியால்”
எது இருக்கும் போது எது அறியப்படுகிறது? குடம், மோதிரம், துணி, முதலான கார்யப் பொருள்கள் இருக்கும் போதே , அந்தப் பொருள்களைப் பார்த்து, இது மண், இது தங்கம், இது பஞ்சு, என்று அதனதன் காரணப் பொருளும் அறியப் படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர் சொல்வார்கள்.-முதலில், மண்ணைப் பார்த்து விட்டு, பிறகு குடத்தைப் பார்க்கும் போது, இந்தக் குடம் அந்த மண் தான் என்கிற ஜ்ஞானம் ஏற்படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர். அப்படிப்பட்ட பிரத்யபிஜ்ஞா என்பது, குடத்தையும் துணியையும் பார்க்கும்போது ஏற்படுவது கிடையாது. அதனால் அங்கு பொருளே வேறுபடுகிறது என்று ஏற்றுக் கொள்வோம் -மண் & குடம், தங்கம் & மோதிரம், பஞ்சு & துணி – இவற்றுக்கு இடையில் இந்தப் பிரத்யபிஜ்ஞா என்பது இருக்கிற படியால், மண்ணைக் காட்டிலும் குடம் வேறல்ல – பஞ்சைக் காட்டிலும் துணி வேறல்ல-தங்கத்தைக் காட்டிலும் மோதிரம் வேறல்ல என்று தான் ஏற்க வேண்டும் – என்பது இந்த ஸூத்ரத்தின் பொருள்.

(ப்ரத்யபிஞ்ஞா-recognition)

மூன்றாவது ஸூத்ரத்தால், மற்றும் ஒரு காரணத்தைக் காட்டுகிறார் –
3–ஸத்வாச்ச அபரஸ்ய
–”(காரணமாக) மற்ற ஓன்றினுடைய (கார்யத்தினுடைய) இருப்பாலும்”
உலகத்தில் கார்யப் பொருள்களைப் பற்றிப் பேசும் போது, அவற்றை காரணப் பொருள்களாகவே பேசுகிறோம்.-காலையில் குயவன் வீட்டில் மண் குவியலைப் பார்த்து விட்டுச் சென்றவன், திரும்பவும் மதியம் வந்து பார்க்கும் போது, பல குடங்களைக் காண்கிறான். உடனடியாக, “இந்தக் குடங்கள் அனைத்தும் காலையில் மண்
கட்டியாகவே இருந்தன” என்று கூறுகிறான். ஆகவே , குடங்கள் தான் முன் காலத்தில் மண் கட்டியாக இருந்தன என்று தெரிகிறது. அதனால் கார்யம், காரணமாக முன்னால் இருந்தது என்று தான் உலகத்தில் நாம் சொல்கிறோம்.
வேதமும் இதே போலே , “ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத்” – இந்த உலகமனைத்தும் முன்னால் ப்ரஹ்மமாகவே இருந்தது என்று சொல்கிறது. ஆகையால், குடம் மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்லாதது போல், இந்த உலகமும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல என்று நாம் அறியலாம்.

ஸத் அஸத் என்பதன் பொருள்
4-அஸத்₃வ்யபதே₃சாத் நேதி சேத் ந த₄ர்மாந்தரேண, வாக்ய சேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராச்ச
அஸத்₃வ்யபதே₃சாத் ந
– இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்யசேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே :
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது

(பஹுஸ்யாம் ப்ரஜாயேய – ஸூஷ்ம அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸங்கல்பித்தது -பலவாகி நாம ரூபங்களைக் கொண்ட அனைத்துமாகி ஸ்தூல அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மமானது –
பாவாந்தர அபாவ பாவம் -இல்லாமையே இல்லை -துணி அழிந்து கந்தலாகும் -இல்லை என்றாலே வேறான வடிவில் உள்ளது -வாயும் வயிறுமான வடிவமான குடம் உடைந்து குடம் இல்லையாகி மண் துகளாகியது —அஸத் -பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொண்டாயே -)

(இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னில் வைத்தான் -பொருளல்லாத என்னை பொருளாக்கி அடிமையும் கொண்டான் -சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூப ஞானம் -மதிநலம் அருளி கைங்கர்யமும் கொண்டு அருளினான் -என்றபடி)

உலக எடுத்துக் காட்டுகள்
காரணப் பொருள் கார்யப் பொருளைக் காட்டிலும் வேறல்ல என்பதற்கு இரண்டு
எடுத்துக் காட்டுகளை வ்யாஸர் கூறுகிறார், அடுத்த இரண்டு ஸூத்ரங்களாலே –
5-பட வத் ச – “துணியைப் போலவும்”
உலகில் எப்படி நூல்களே ஒரு விதமான சேர்க்கையை அடையும் போது ’துணி’ என்ற வேறொரு பெயரையும் , உடுத்தப் படுதல் என்ற புதிதான பயன்பாட்டை யும் அடைகின்றனவோ , அதைப் போல் தான் ப்ரஹ்மமே இந்த உலகமாக மாறுகிறது.
6- யதா ₂ ச ப்ராணாதி₃: – “எப்படி ப்ராணன் முதலானவையோ ”
எப்படி உலகில் ஒரே ஒரு வாயுவானது சரீரத்துக்குள் நுழைந்து செயல்படும் போது, ப்ராண அபான வ்யான உதா₃ன ஸமான என்ற வெவ்வேறு பெயர்களையும், அதற்குரிய வெவ்வேறு செயல்பாடுகளையும் அடைகிறதோ , அதைப் போல் ப்ரஹ்மமும் இந்த உலகமாக மாறி வெவ்வேறு பெயர்கள் உருவங்களையும் செயல்பாடுகளையும் அடைகிறார்.
ஆகையால், ஸத் கார்ய வாதம் தான் வேதத்தில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று தான். அவற்றுக்குத் தன்மைகளில் தான் வேறுபாடுகள் இருக்க முடியும்.-அப்படித் தான் ப்ரஹ்மம் இந்த உலகுக்குக் காரணமாக இருக்கிறார்

—————

2.1.7 இதர வ்யபதேசாதி₄கரணம்-ப்ரஹ்மம் தனக்கே துக்கம் தேடிக்கொள்வாரா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-7-இதர வ்யபதே₃சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணங்களில் ஜகத்து ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல; அந்த ப்ரஹ்மமே தான் இந்த உலகமாக மாறி இருக்கிறது; அதனால் உலகத்துக்கு ப்ரஹ்மமே காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. உலகம் என்று சொன்னால், அதில் அசேதனப் பொருள்களும், சேதனர்களான ஜீவாத்மாக்களும் அடங்குவர்கள். அந்த இரண்டுக்குள், ஜீவாத்மாவை எடுத்துக் கொண்டு, ஜீவாத்மா என்பவர் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால், அந்த ப்ரஹ்மத்துக்கே பல தோஷங்கள் வந்து விடுகின்றன.அதனால், அந்த ப்ரஹ்மம் உலகத்தை படைத்த ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று ஆஷேபம் எழுகிறது. அதற்கான விடையை வேதவியாசர் இந்த அதிகரணத்தில் வழங்குகிறார்.

பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபக்ஷிகளின் வாதத்தைக் காட்டுகிறது.
1-இதர வ்யபதே₃சாத் ஹிதா கரணாதி₃ தோ₃ஷ ப்ரஸக்தி:
இதரன்
என்றால் மற்ற ஓருவன். அதாவது இந்த இடத்தில் ஜீவாத்மா.
வ்யபதேசம்-என்றால் சொல்லுவது-குறிப்பிடுவது.
“இதர வியபதேசாத்” என்றால் “ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிப்பிடப் படுகிற படியால்” என்று பொருள். “தத் த்வம் அஸி ”, “அயம் ஆத்மா ப்ரஹ்ம”, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான பல வாக்கியங்களில், உபநிஷத்துக்களில் ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிக்கப்படுகிறார்.
ஹிதம் என்றால் நன்மை , கரணம் என்றால் செய்வது, அகரணம் என்றால் செய்யாதது. ஹித அகரணம் என்றால் தனக்கான நன்மையைச் செய்யாமல் இருத்தல். இது ஒரு
தோஷம்.
அதே போல் தனக்குத்தானே தீமையைத் தேடிக் கொள்ளுதல் என்பது மற்ற ஓரு தோஷம்.-இவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கு ஏற்பட்டு விடும் என்கிறார் பூர்வபஷி

(ஹித கரணமும் செய்யாமல் அஹித கரணங்களையே செய்து கொண்டு -நன்மைகளைச் செய்யாமல் தீமைகளையே செய்து கொள்ளும் தோஷங்கள் வரும் என்றவாறு)

பூர்வ பக்ஷியின் கேள்வி
ஜீவனும் ப்ரஹ்மமும் வேறல்ல என்று கொண்டால், எப்போதும் பாபங்கள் அற்றவராய், துக்கமே இல்லாதவராய், முழுமையான ஜ்ஞானம் சக்தி முதலானவற்றை உடையவரான ப்ரஹ்மம் தானே உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது, பாபங்களை உடையவராய், குறைந்த ஜ்ஞானத்தையும் சக்தியையும் கொண்டவராய், பல துக்கங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாவாக ஆகிறார் என்று சொல்ல வேண்டும். ஆகையால் தனக்கு தீமையைக் கொடுக்கும் செயலைத் தானே செய்கிறார் என்று ஆகி விடும்.
தனக்கு எது நன்மையோ , அப்படிப்பட்ட உலகத்தைப் படைத்துக் கொள்ளாமல், தனக்கே தீமை கொடுக்கும்படிக்கு படைத்துக் கொள்ளுகிறார் என்பதாலே ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வரும்.
அந்த ப்ரஹ்மம் அறியாமல் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர் அனைத்தையும் அறியக்கூடிய ஸர்வஜ்ஞன் ஆனபடியால். அவருக்கு சக்தி இல்லாத படியால், இன்ப மயமான உலகத்தைப் படைக்க முடியாமல் இப்படி உலகத்தை படைத்து விட்டார் என்று சொல்ல முடியாது, தன்னுடைய சங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரான படியால்,
யாருடைய வற்புறுத்தலாலோ , இப்படிச் செய்து விட்டார் என்று சொல்ல முடியாது, யாருக்கும் அடி பணியத் தெவை யில்லாத ஸ்வதந்த்ரமானவர் ஆனபடியால்.
அதனால் ப்ரஹ்மம் தானாக ஆசைப்பட்டு, யோசித்து, தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, ஒரு உலகத்தைப் படைக்கும் போது, தனக்கே தீமையைக் கொடுக்கும்படி அந்த உலகத்தைப் படைப்பது என்பது பொருந்தாது. அதனால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்பது ஆஷேபம்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு தான்
ஸித்தாந்தம் – 2—₄அதிகம் து பே₄த₃நிர்தே₃சாத்
– “வேறு அன்றோ , வேறாகச் சொல்கிறபடியால்”-உலகத்தில் இன்ப துன்பங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறாகவே கூறப்படுகிறது –

யஸ்ய ஆத்மா சரீரம் ய: ஆத்மாநம் அந்தர: யமயதி – “இந்த ஜீவாத்மாவே
ப்ரஹ்மத்துக்கு உடல், இந்த ஜீவாத்மாவை ப்ரஹ்மம் தான் உள்ளிருந்து இயக்குகிறார்.
ப்ருத₂கா₃த்மாநம் ப்ரேரிதாரம் ச மத்த்வா ஜுஷ்ட: தத: தேந அம்ருதத்வம்
ஏதி –
ஆத்மாவையும் அவரை இயக்கும் பரமாத்மாவையும் வேறாகத் தெரிந்து கொள்பவன் அந்த பரமாத்மாவின் அருளுக்கு இலக்காகி முக்தியை அடைகிறான்
ஸ காரணம் கரணாதி₄பாதி₄ப: (கரண அதிபதிக்கு அதிபதி )- ப்ரஹ்மமே காரணம், புலன்களை இயக்கும் ஜீவாத்மாவை இயக்குபவர் அவரே
த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி ||

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இந்த உடல் என்னும் ஒரே மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகள். அதில் ஜீவாத்மா கர்மங்களின் பயனான இன்ப துன்பங்கள் என்னும் பழத்தை உண்டு, துவண்டு போகிறான், பரமாத்மா அப்பழத்தை உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறார்.
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீஸை – “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஜ்ஞாநமுடையவர்கள், நித்யமானவர்கள், அவர்களில் ஒருவர் இயக்குபவராக உள்ளார், மற்ற ஓருத்தர் இயக்கப்படுகிறார்”
ப்ரதா₄ந ஷேத்ரஜ்ஞபதி: கு₃ணேச: – ப்ரதாநம் என்ற அசேதனப் பொருளுக்கும், ஜ்ஷேத்ரஜ்ஞர்கள் எனப்படும் ஜீவாத்மாக்களுக்கும்
நித்யோ நித்யானாம் சேதந: சேதநாநாம் ஏகோ ப₃ஹூனாம் யோ வித₃தா₄தி காமாந் – நித்யமாய் ஜ்ஞாநமுடையவரான ஒரே பரமாத்மா நித்யர்களாய் ஜ்ஞாநமுடையவர்களான
கணக்கில்லாத ஜீவாத்மாக்களுக்கு அவர்கள் ஆசைப்படும் பயன்களை யெல்லாம் வழங்குகிறார்.

உலகம் என்றாலே ப்ரஹ்மம் தான்
அடுத்த ஸூத்ரத்தால் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு
3-அச்மாதி₃வச்ச தத₃நுபபத்தி: –
“கல் முதலானவற்றைப் போலவும் அது (ஐக்யம்) பொருந்தாது”
எப்படி ஜ்ஞாநமற்றதாய், எப்போ தும் உருவத்தால் மாறிக்கொண்டே இருக்கும் அசேதநப் பொருளுக்கு ஜ்ஞாநம் உடையவராய், என்றும் மாறாத பரமாத்மாவோடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) பொருந்தாதோ , அதே போல் கர்மத்துக்கு வசப்பட்டு, பல விதமான துக்கங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவுக்கும் கர்மத்துக்கு அப்பாற் பட்டவராய், துக்கமே இல்லாதவரான பரமாத்மாவவாடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) என்பது பொருந்தாது,
கேள்வி – பிறகு “தத் த்வம் அஸி” (அந்த பரமாத்மா தான் நீயாக இருக்கிறாய்), “அஹம் ப்₃ரஹ்மாஸ்மி” (நானே ப்ரஹ்மமாய் இருக்கிறேன்) என்று வேதாந்தம் எப்படிக் கூறுகிறது?
பதில் – அது அனைத்துமே சரீர-ஆத்ம-பா₄வத்தால் (உடல் ஆத்மா என்ற தொடர்பால்) பொருந்தும்.-உலகில் நாய், மனிதன் என்று உடலைக் குறிக்கும் சொற்கள் அதற்குள் இருக்கும் ஆத்மா வரை குறிப்பதைக் காண்கிறோம். அதே போல் ப்ரஹ்மத்துக்கு சேதனாசேதனங்கள் அனைத்துமே உடலாக இருக்கிற படியால் “தத் த்வம் அஸி” என்பதற்கு “ஜகத்தை ஸ்ருஷ்டித்த அந்த பரமாத்மா தான் உனக்குள் அந்தர்யாமியாக இருப்பவர்” என்று தான் பொருள், ஜீவனும் பரனும் ஒன்று என்றல்ல.
ஆக இவ்வாறு ஸூக்ஷ்மமான (பெயர் உருவ வேறுபாடுகள் அற்ற) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஸ்தூ₂லமான (பெயர் உருவ வேறுபாடுகளைக் கொண்ட) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தை (அதாவது ஜகத்தை ) படைக்கிறது.

——————-

2-1-8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம்–கருவிகளே இல்லாமல் ப்ரஹ்மம் படைக்க முடியுமா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-8-உபஸம்ஹாரத₃ர்சநாதி₄கரணம் –ஸங்கதி –
முன் அதிகரணங்களில், சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கு சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் இந்த உலகத்துக்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. என்று நிரூபிக்கப்பட்டது. அதற்கு மேல், சஹகாரி காரணம் என்று வேறு ஒன்றை எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் இந்த ஜகத்தைப் படைக்கிறது என்று இந்த அதிகரணத்தில் வேதவியாசர் நிரூபிக்கிறார்.

பூர்வ பக்ஷம் – உபநிஷத்துக்களில் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் வாக்கியங்களைப் பார்ப்போம்.
(ததை ₃க்ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம்
செய்தது, நான் பலவாக ஆகக் கடவேன் என்று”.
(ஸோ காமயத) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஆசைப்பட்டது”.
(ஸ தபோ தப்யத ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருஜத)-அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பித்துக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டித்தார்.
இப்படி ஸங்கல்பத்தின் மூலம் மட்டுமே ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறார் என்று
சொல்லப்பட்டுள்ளது. இது பொருந்தாது. ஏன் என்றால், உலகத்தில் எந்த ஒரு படைப்பாளியும் ஒரு பொருளை உண்டாக்குவதற்குச் சில கருவிகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்று காண்கிறோம். ஸங்கல்பத்தால் மட்டும் உலகத்தில் யாரும் எந்தக் கார்யத்தையும் ஏற்படுத்துவதில்லை -அதனால், ப்ரஹ்மத்துக்கும் இது பொருந்தாது என்கிறார் பூர்வ பக்ஷீ

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேகம்
– உலகத்தில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாம் அளவுபட்ட சக்தியை உடையவர்கள். அதனால், ஒரு குடத்தையோ , துணியையோ , ஆபரணத்தையோ உண்டாக்குவதற்கு சக்கரம், தரி, கருவிகள் முதலானவை தேவைப்படுகின்றன. ஆனால், ப்ரஹ்மமோ சர்வ சக்தி, அதாவது, எல்லை யில்லாத உயர்ந்த சக்தியை உடையது என்று
உபநிஷத்துக்கள் சொல்லுகிறபடியால், அவர் கருவிகளை எதிர்பார்க்காமலேயே படைக்கிறார் என்று ஒப்புக்கொண்டால் என்ன? சக்தி இல்லாதவர்கள் கருவிகளை எதிர்பார்க்கிறார்கள். சக்தி இருக்கும் ப்ரஹ்மம் கருவியை எதிர்பார்ப்பதில்லை
என்று கொள்வோமே ?
பூர்வ பக்ஷியின் பதில் – கருவிகளின் தேவை என்பதும், கருவிகள் தேவைப்படாமை என்பதும் சக்தி இல்லாததையும், சக்தி இருப்பதையும் பொறுத்து வருபவை அல்ல. யாருக்கு ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இல்லையோ , அவர்களிடத்தில் அதற்கான கருவிகளைக் கொடுத்தாலும், அவர்களால் அப் பொருளை உண்டாக்க இயலாது. யாருக்கு
ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி உள்ளதோ , அவரும் கருவிகள் இல்லாமல் அந்தப் பொருளை உண்டாக்க விட முடியாது. கருவிகளைக் கொடுத்தால், அவற்றைப் பயன்படுத்தித் தான் அப் பொருளை உண்டாக்க வேண்டும். அதனால், சக்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், உபகரணங்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல் என்பது இன்றியமையாதது.-சரி, ப்ரஹ்மத்துக்கு எந்தக் கருவிகளும் இல்லை என்று எப்படித் தெரிந்து கொள்ளுகிறோம் என்றால், அதையும் வேதாந்தமே சொல்லுகிறது
(्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ப்ரஹ்மமாகவே இருந்தது. அந்த ஒரே ஒரு
பொருள் தான் இருந்தது. வேறு எதுவும் இல்ணல.
(ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்₃ரம்ஹா ந ஈசான: நேமே த்₃யாவா ப்ரிதிவீ ந நக்ஷத்ராணி) அதாவது “ப்ரளய காலத்தில் நாராயணன் ஒருவர் தான் இருந்தார். மற்ற தெய்வங்களும் கிடையாது. உலகங்களும் கிடையாது. எந்தப் பொருள்களும் கிடையாது” என்றும் உபநிஷத் கூறுகிறது. அதனால், ஸ்ருஷ்டிக்கு முன்னால் கருவிகள் எதுவுமே உலகத்தில் இல்லாத படியால், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ப்ரஹ்மம் இந்த உலகத்தைப் படைத்திருக்க முடியாது. அதனால், ப்ரஹ்மம் கருவிகள் இல்லாதபடியால், ஜகத்காரணமாக ஆக முடியாது என்பது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.

கருவிகள் இல்லாமலேயே உண்டக்கலாம்
ஸித்தாந்தம் –
இதற்கு இரண்டு ஸூத்ரங்களால் வேதவியாசர் பதில் அளிக்கிறார்.
1-உப ஸம்ஹார த₃ர்சநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்ஹி
முதல் பகுதியாலே பூர்வ பக்ஷத்தைச் சொல்லி, மேல் பகுதியால் அதற்கு வேத வியாசர் விடை அளிக்கிறார்.
உப ஸம்ஹார த₃ர்சநாத் – இது பூர்வ பக்ஷியின் வாதம். உப ஸம்ஹாரம் என்றால் சேகரித்தல். தர்சனம் என்றால் காண்பது. உப ஸம்ஹார தர்சனம் என்றால் “உலகத்தில் ஒரு படைப்பாளி ஒரு பொருளை உண்டாக்குவதற்குக் கருவிகளைச் சேகரிப்பதை நாம் பார்க்கிற படியால்” என்று பொருள்.
ந – ஆகையால், நீங்கள் ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று சொன்னது பொருந்தாது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
இதி சேத் ந – இது வேத வியாசரின் பதிலின் துவக்கம். “இவ்வாறு நீங்கள் கூறினால், அது தவறு” என்கிறார்.
க்ஷீரவத் ஹி– “பாலைப் போல் அன்றோ ”. ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இருந்தாலும், வேறு சில கருவிகளைப் பயன் படுத்தினால் தான் ஒரு காரியத்தை ஒருவரால் உண்டாக்க முடியும் என்கிற நியமம் தவறானது என்கிறார் வ்யாஸர்.
பாலானது தானாகவே எந்த கருவியையும் பயன்படுத்தாமல் தயிரை உண்டாக்குகிறது. தண்ணீரானது எந்தக் கருவியையும் பயன்படுத்தாமல் கெட்டிப்பட்டு பனிக் கட்டியாக ஆகிறது. அதனால், பாலுக்கும் ஜலத்துக்கும் தயிரையோ , பனிக்கட்டியையோ உண்டாக்க எப்படி எந்தக் கருவிகளும் தேவையில்லையோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல் உலகத்தைப் படைப்பது பொருந்தும் என்கிறார் வேதவியாசர்.
“ஹி” என்கிற சொல் “இந்த அர்த்தம் மிகவும் ப்ரஸித்தமானது” என்று காட்டுகிறது. அதனால், பூர்வ பக்ஷியின் கேள்வி மிகவும் வலுவற்றது என்று வேத வியாசர் காட்டுகிறார்.
ஸந்தேகம் – பாலைத் தயிராக மாற்றுவதற்கு நாம் அதில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோமே ? பிறகு கருவிகள் தேவையில்லை என்று எப்படி கூற முடியும் என்று.
பதில் – தயிரைச் சேர்க்கா விட்டாலும், காலப் போக்கில் பால் திரிந்து போய் மாறத் தான் போகிறது. அந்த மாற்றத்தை வேகமாக்க மற்றும் ஒரு குறிப்பிட்ட சுவையை உண்டாக்குவதற்காகத் தான் பாலில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோம்.
தண்ணீரும் இயற்கையாகவே பனிக் கட்டியாக மாறிவிடும், சூரிய கிரணங்கள் அல்லது வெப்பம் இருந்தால், அது தடுக்கப்படுகிறது, அவ்வளவு தான்.

வேதத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு
ப்ரஹ்மம் என்ற பொருள் நாம் உலகத்தில் காணக்கூடியது அல்ல. வேதத்தைக் கொண்டு மட்டுமே அறியக் கூடியது. அதனால் அந்த ப்ரஹ்மத்தைப் புரிய வைக்க உலக எடுத்துக் காட்டை விட, வேதத்திலிருந்து எடுத்துக்காட்டு இருந்தால் மேலும் எளிமையாக இருக்கும் என்பதால் அடித்த ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் அதைக் காட்டுகிறார்.
2–தே₃வாதி₃வத₃பி லோகே – “(தங்கள்) உலகத்தில் தே₃வர்கள்
முதலானவர்களைப் போலவும்”
தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களில் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே ஸங்கல்பத்தால் படைத்துக் கொள்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அதை எப்படி ஏற்கிறோமோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளும் இல்லாமல், தன்னுடைய ஜ்ஞாநம் சக்தி முதலானவற்றை மட்டுமே கொண்டு உலகைப் படைக்கிறார் என்றும் வேதம் சொல்கிறபடியால், அதையும் அதே போல் ஏற்க வேண்டும்.
இவ்வாறு, ப்ரஹ்மம் எந்த ஸஹகாரி (உதவி) காரணத்தையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்று
நிரூபித்து, இந்த உலகத்துக்கு ப்ரஹ்மமே தான் உபாதாந காரணம் (மூலப் பொருள்), நிமித்த காரணம் (படைப்பாளி) மற்றும் ஸஹகாரி காரணம் (உதவிக் காரணம்) என்று வேதவ்யாஸர் நிரூபித்துள்ளார்.

எனவே , முதல் அத்யாயத்தில் அடையப்பட்ட “ப்ரஹ்மமே உலகமனைத்துக்கும் காரணம்” என்ற முடிவு சரியானதே , அதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று காட்டப்பட்டுள்ளது-

————

(ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்-நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.-உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லைஎன்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.)

2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம்-வேதத்தால் மட்டுமே அறியப் படும் பொருளுக்கு யுக்திகள் பொருந்தாது

அதிகரணத்தின் பின்புலம-2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், கருவிகளை எதிர்பார்க்காமல் உலகத்தை ப்ரஹ்மம் படைக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக பால் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ரஹ்மம் பாலைப் போன்றவர் என்றால்,பாலுக்கு அவயவங்கள் (பகுதிகள்) இருப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் பகுதிகள் உண்டா என்று. அதற்கு இவ்வதிகரணத்தில் பதில் கூறப்படுகிறது.
பூர்வ பக்ஷம்
– முதல் ஸூத்திரத்தாலே பூர்வ பக்ஷிகளின் வாதம் காட்டப்படுகிறது.
1-க்ருத்ஸ்ந ப்ரஸக்தி: நிரவயவத்வ சப்த₃கோபோ வோ
வேதத்தில் “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரஹ்மம் என்ற ஒரே ஒரு பொருள் தான் இருந்தது; அதுதான் உலகத்துக்கு காரணம். -அப்போது எந்த பாகுபாடுகளும் பகுதிகளும் இருக்கவில்லை என்று சொல்கிறது.
பிறகு அந்த ப்ரஹ்மமே “நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு உலகமாக மாறுகிறது, அதாவது சேதனர்கள், அசேதனங்கள் என்கிற அனைத்தையும் படைக்கிறது என்றும் கூறுகிறது.
ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் இல்லை , அந்த ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் முழுவதுமாகவே உலகமாக மாறி விட்டது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி என்றால், -இப்போது உலகம் இருக்கும் போது ப்ரஹ்மமே இல்லை என்று ஆகி விடும்.
க்ருத்ஸ்ந -முழுவதுமாக
ப்ரஸக்தி: மாறிவிடும் நிலை ஏற்படும்
அப்படி அல்ல; ஸ்ருஷ்டிக்கு முன்னாலும் காரணப் பொருளில் பகுதிகள் இருந்தன என்று சொன்னோம் என்றால், அப்போது வேதத்தில் எந்தெந்த வாக்கியங்கள் எல்லாம் “காரணப் பொருளான ப்ரஹ்மம் அவயவங்கள் அற்றது” என்று சொல்லுகின்றனவோ , அந்த வாக்கியங்கள் எல்லாம் கோபித்துக் கொள்ளும். -அதாவது அவை யெல்லாம் தவறாக ஆகி விடும்.-நிரவயவத்வ ப்ரஹ்மத்துக்குப் பகுதிகள் இல்லை என்று சொல்லும்
சப்த₃ வேதத்துக்கு
கோப: கோபமேற்படும்

பூர்வ பக்ஷியின் வாதங்கள்
அதனால் ப்ரஹ்மத்துக்கு அவயவங்கள் உண்டு என்றும் சொல்ல முடியாது; அவயவங்கள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்கிறது என்றால், முழுவதுமாக உலகமாக மாறி விட்டது என்று ஆகி விடும். அதனால் இப்படி இரண்டு வழிகளிலும் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் உலகத்துக்கு காரணமாகவே இருக்க முடியாது என்பது பூர்வ பஷம்.
இங்கு நாம் சொல்லலாம் – ப்ரஹ்மம் என்கிற பால் தனியான பரமாத்மாவை மட்டும் குறிக்க வில்லை ;-ஸூக்ஷ்மமாக, அதாவது, பெயர் வேறுபாடுகள் உருவ வேறுபாடுகள் இல்லாத, சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் இந்த இடத்தில் காரணப் பொருளாக சொல்லப்படுகிறது. அதனால் அந்தர் யாமியான பரமாத்மாவுக்கு அவயவங்கள் கிடையாது; ஆனால் உடலாக இருக்கும் சேதனாசேதனங்களுக்கு அவயவங்கள் உண்டு. அவை தான் உலகமாக மாறுகின்றன; பிறகு இந்தக் கேள்வி எப்படி பொருந்தும்? என்று
அதற்கும் பூர்வ பக்ஷி பதில் கூறுகிறார் –
அப்படிச் சொன்னாலும், இந்த தோஷம் வரும். ஒரு உடலுக்குள் இருக்கும் ஆத்மா, அந்த உடல் வேறு ஒரு நிலையை அடையும் போது, அந்த ஆத்மாவும் ஒரு நிலையை அடைகிறார். ஒரு குழந்தை இளைஞனாக மாறுகிறார் என்றால், அந்த ஆத்மா முழுவதுமாகவுமே இளைஞன் என்று தான் சொல்லப்பட வேண்டும். அதே போல், ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் கிடையாது; அவருடைய உடலான சேதனாசேதனங்கள் தான் உலகமாக மாறுகின்றன, அதனால் ப்ரஹ்மமே உலகமாக ஆகிறார் என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் ஒன்று மாடாக மாறி இருக்க வேண்டும். அல்லது சிங்கமாக மாறி இருக்க வேண்டும். அல்லது மனிதனாக மாறி இருக்க வேண்டும். இவை அனைத்துமாகவும் ஒரே காலத்தில் ப்ரஹ்மம் மாற முடியாது. ஒரு சரீரத்தை உடையவராக ப்ரஹ்மம் கொள்ளப்பட்டால், மற்ற சரீரங்களுக்குள் ப்ரஹ்மம் இல்லை என்று ஆகி விடும். அதனால் எப்படிப் பார்த்தாலும், ப்ரஹ்மம் உலகத்தை படைத்திருக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம்.

வேதத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்
ஸித்தாந்தம் – (2) ச்ருதே : து சப்த₃ மூலத்வாத்
து
– அப்படியல்ல, அவயவங்கள் அற்ற ப்ரஹ்மம் உலகைப் படைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை
ச்ருதே : – அவயவங்கள் இல்லை , உலகத்துக்குக் காரணம் என்று இரண்டையும் வேதம் சொல்கிற படியால்
கேள்வி – உலகத்தில் நாம் பார்க்கும் நியதிகளை மீறி, வேதம் ஒரு விஷயத்தை உபதேசிக்க முடியுமா?-உலகத்தில் ஒருவர் “நெருப்பால் துணியை நனைக்க வேண்டும்” என்று சொன்னால், உடனடியாக “இது தவறான வாக்கியம்” என்று கூறி விடுகிறோம். ஏனென்றால், நெருப்பைக் கொண்டு எதையும் நனைக்க முடியாது-கொளுத்தத்தான் முடியும் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல், அவயவங்கள் இல்லாத பொருள், பலவாக மாற முடியாது என்று உலகத்தில் நாம் காண்கிற படியால், அதற்கு முரண்பட்டு, அவயவங்கள் இல்லாமலேயே ப்ரஹ்மம் பலவாக மாறுகிறார் என்று வேதம் எப்படி உபதேசிக்க முடியும்?
அதற்கான பதில் – சப்த₃ மூலத்வாத் – இந்த ப்ரஹ்மம் என்கிற ஜகத் காரணப் பொருள், வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருளாகும். உலகத்தில் நாம் பார்த்த பொருளைப் பற்றி ஒருவர் சொல்லும் போது, உலக நியதிகளுக்கு முரண்பட்டு கூற முடியாது. ஆனால், ப்ரஹ்மம் என்பவரோ , உலகத்தில் எந்த ப்ரமாணத்தாலும் அறியப் படாதவர். வேதத்தால் மட்டுமே அறியப் படுபவர்.-அதனால், உலகத்தின் நியதிகளை அவரிடம் பொருத்திப் பார்க்க முடியாது. வேதம் எப்படி எல்லாம் அவருடைய தன்மை களை கூறுகிறதோ , அப்படி எல்லாம் ஏற்கத் தான் வேண்டும் என்பது வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்.
3-ஆத்மநி ச ஏவம் விசித்ரா : ச ஹி– “ஆத்மாவிலும் இப்படி; பல விதம் அன்றோ ”
ஒரு பொருளில் காணப்படும் தன்மை தான் மற்றவற்றிலும் இருக்க வேண்டும் என்று கூறினால், உலகத்தில் அசேதனப் பொருட்கள் அறிவற்றதாகவும், அழியக் கூடியதாகவும் இருக்கிறபடியால், ஜீவாத்மாவும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆகி விடும். அதனால், உலகத்தில் அந்தந்தப் பொருள் ப்ரமாணங்களால் எப்படி அறியப் படுகிறதோ , அந்தந்த தனித் தன்மைகளோடு உள்ளது என்று ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

(சாங்க்யர்களும் ஆத்மாவுக்கு ஞானம் உண்டு என்கிறார்கள் அன்றோ -காண்கிற அசேதனப் பொருள்களின் தன்மையைப் பார்த்து காணமுடியாத சேதனத்துக்குக் கொள்ள முடியாது அன்றோ -மேலும் விசித்திரமான அசேதனப் பொருள்களையும் காண்கிறோம் –பாவ ஸ்வபாவ வைஷம்யம் காண்கிறோம் அன்றோ -அதே போல் ப்ரஹ்மத்துக்கும் கொள்ள வேண்டும் -வேதம் சொல்லுமடியே ஏற்றுக் கொள்ள வேண்டும் -)

பூர்வ பஷத்தில் உள்ள குறைபாடுகள்
4–ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“தன் பக்ஷத்தில் இருக்கும் தோ₃ஷத்தாலும்”
இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று சொல்லும் நம்முடைய பஷத்தில் எந்த தோஷமும் இல்லை என்று காட்டினார் வியாஸர். இப்போது ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் பூர்வ பக்ஷிகளின் மதத்தில் தான் தோஷம் உள்ளது என்று காட்டுகிறார்.
பூர்வ பக்ஷி சொல்வது – ப்ரதானமே ஜகத் காரணம் என்று. ப்ரதானம் என்பது வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருள் அல்ல. அனுமானத்தால் அறியப்படும் பொருள். அதனால், உலகத்தில் நாம் காணும் நியதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்ல முடியாது. அந்த நியதிகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும்.
ஜகத்தை உண்டாக்கக் கூடிய மூல ப்ரகிருதிக்கு அவயவங்கள் உண்டா கிடையாதா ? என்று கேள்வி.
அவயவங்கள் கிடையாது என்று சொன்னால், அந்த மூல ப்ரகிருதி யிலிருந்து எப்படி பலவிதமான பொருட்கள் உண்டாக முடியும்? என்கிற கேள்வி வந்து விடும்.
பகுதிகள் உண்டு, ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று பொருட்களும் சேர்ந்து தான் மூல ப்ரகிருதியை உண்டாக்குகின்றன என்று சொன்னால், பல தோஷங்கள் வரும்-
(1) ப்ரதானம் ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வதே தவறு. அந்த ப்ரதானமே மூன்று பொருட்களில் இருந்து உண்டானதான படியால்.
(2) மொத்தம் 24 அசேதனப் பொருட்கள் உலகத்தில் உள்ளன என்று நீங்கள் சொல்லுவது தவறு; ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று அதிகமான பொருட்கணை ஏற்க வேண்டிய படியால்,
(3) அந்த ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றுக்கும் அவயவங்கள் உண்டா கிடையாதா என்று இதே போல் கேள்வி எழுந்து விடும். ஸத்த்வம், ரஜஸ், தமஸ் சேர்ந்து ப்ரகிருதியை உண்டாக்க வில்லை .—அவற்றின் சேர்க்கையே ப்ரகிருதி என்றால் -அவயவங்கள் இல்லாத பொருட்கள் எப்படி சேர முடியும்? இரண்டு பொருட்கள் சேரும் போது, சேர்ந்த பகுதி சேராத பகுதி என்று இருக்கும். பகுதிகளே இல்லாத இம் மூன்றும் சேர்ந்து ப்ரகிருதியாக ஆக முடியாது.
அதனால், எந்த விதத்திலும் ப்ரதானம் ஜகத் காரணம் என்று சொல்லுவது பொருந்தாது.

(நம் சித்தாந்தத்தில் ஸத்வம் ரஜஸ் தமஸ் இவை பண்புகள் குணங்கள் -சாங்க்யரில் ஒருவர் இவற்றை த்ரவ்யம் என்பர் -)

கற்பனை செய்யமுடியாத சக்தி உடையவர்
மூன்றாவது ஸூத்ரத்தில், வேதம் சொல்கிறபடியால் அவயவங்கள் அற்றவராக இருந்தாலும் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறது என்று ஏற்க வேண்டும் என்று கூறினார் வ்யாஸர். இப்போது அதற்கான பொருத்தத்தைக் காட்டுகிறார் –
5– ஸர்வோபேதா ச தத்₃த₃ர்சநாத் – “எல்லா சக்திகளோடும் கூடியவர்; அவ்வாறு காணப்படுவதால்”
பரமாத்மாவைப் பற்றிச் சொல்லும் வேதங்கள் (பரா அஸ்ய சக்தி: விவிதை ₄வ ச்ரூயதே -ஸ்வ பாவிக ஞான பல க்ரியதா ச )-அதாவது -“இந்த பரம் பொருளான பரமாத்மாவின் சக்தி மிக வுயர்ந்தது, பலவிதமானது” என்று கூறுகிறது.
“ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப:” அதாவது தன் எண்ணத்தால் மட்டுமே அனைத்துக் காரியங்களையும் நடத்தும் வல்லமை படைத்தவர் பரமாத்மா என்றும் வேதம் கூறுகிறது.-அதனால், அவயவங்கள் அற்றவராய் இருந்தாலும் பலவிதமான பொருள்களை அவரால் உண்டாக்க முடியும்.
(சேராச் சேர்க்கை -அகடிகடநா ஸாமர்த்யம் -நரஸிம்ஹ மூர்த்தி ) 6-விகரணத்வாத் ् ந இதி சேத் தது₃க்தம்
ந – ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்வது தவறு, பொருந்தாது
விகரணத்வாத் – உடல், கை கால் முதலான கருவிகள் ப்ரஹ்மத்துக்கு இல்லாதபடியால்
இதி சேத் – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
தது₃க்தம் – அதற்கு பதில் முன்னமே சொல்லப்பட்டது (வேதத்தில் சொல்வதால் ஏற்க வேண்டும் என்று)
உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் சக்கரம், தரி முதலான கருவிகளைக் கொண்டே குயவன் நெசவாளி முதலானவர்கள் பொருள்களை உண்டாக்குகிற படியால், ப்ரஹ்மத்துக்கும் அதைப்போல் வெளிக் கருவிகள் வேண்டுமே என்ற கேள்விக்கு பதிலளித்தார்- இப்போது, உடல் கை கால்கள் முதலான கருவிகளாவது வேண்டாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார்.
வேதத்தில் (அபாணி பாத₃: ஜவந: க்₃ரஹீதா| பச்யதி அசஷுஸ் : ஸ ச்ர்ணோதி அகர்ண–ஸ்வேதாஸ்வர 🙂 அதாவது
“பரமாத்மாவுக்குக் கால் இல்லா விட்டாலும் வேகமாகச் செல்வார், கை இல்லாமலும்
எடுப்பார், கண் இல்லாமலும் பார்ப்பார், காது இல்லாமலும் கேட்பார்” என்று சொல்கிறபடியால், பரமாத்மா உடல் கை கால் முதலான கருவிகள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்க இயலும் என்று தெரிகிறது.
அதனால், ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொன்னதில் எந்த முரண்பாடும் இல்லை —

————

2-1-10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம்-ஸ்ருஷ்டியின் குறிக்கோள்

பயனில்லாத செயலைச் செய்யலாமா?
2-1-10-ப்ரயோஜநவத்த்வோதி₄கரணம் – ஸங்கதி –
இந்த பாதத்தில் இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது -என்று பலவிதமான ஆஷேபங்களுக்கு ஸமாதானத்தை வேத வியாஸர் அளித்தார். தற்போது மற்றும் ஒரு முனையில் பூர்வ பக்ஷி ஆஷேபிக்கிறார் – ப்ரஹ்மம் ஜகத்காரணம் அல்ல, ஏனென்றால் இப்படிப்பட்ட உலகத்தை படைப்பதால் ப்ரஹ்மத்துக்கு எந்த பிரயோஜனமும் அதாவது பயனும் கிடையாது என்று.
பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபஷத்தை காட்டுகிறது.
1- ந ப்ர யோஜநவத்த்வாத்
– “கிடையாது, ப்ரயோஜனமுடையதானபடியால்”
– கிடையாது. அதாவது ப்ரஹ்மம் ஜகத்துக்கு காரணம் என்று சொன்னது தவறு – பொருந்தாது
ப்ரயோஜனவத்த்வாத் – இப்படி விசித்திரமான பல வகைப் பட்ட பொருள்களை உடைய ஜகத்தைப் படைக்கும் செயல் கண்டிப்பாக பயனுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஈஸ்வரனுக்கு இப்படிப்பட்ட ஸ்ருஷ்டியால் எந்த ப்ரயோஜனமும் இல்லை . அதனால் அந்த பரமாத்மா ஜகத் காரணமாக இருக்க முடியாது. -சிந்தித்து செயல்படக் கூடிய ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுகிறார் என்றால் அதற்கு இரண்டு விதமான பயன்கள் தான் இருக்க முடியும் – (1) தன்னலம் (ஸ்வார்த்த₂தை ) அல்லது (2) பிறர் நலம் ( பரார்த்த₂தை ).
1-(ஜகத்தைப் படைத்தல் தன்னலத்துக்காக என்று சொல்ல முடியாது, ஏனென்றால் ப்ரஹ்மம் உபநிஷத்துக்களில் “அவாப்த ஸமஸ்த காமன்” அதாவது “எல்லா ஆசைகளும் நிரம்பியவர், எல்லாப் பொருள்களையுமே உடையவர், அவர் இனி அடைய வேண்டிய ஒரு பயனே கிடையாது” என்று சொல்லுகின்றன.
2-ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் உடல் இல்லாமல் செயல்பாடு இல்லாமல் கிடக்கிறார்களோ என்று பார்த்து அவர்களிடத்தில் கருணையால் பிறர் நலத்துக்காக ப்ரஹ்மம் உலகத்தை படைக்கிறது என்றும் சொல்ல முடியாது. இந்த உலகில் கர்ப்பவாஸம் பிறப்பு மூப்பு மரணம் நரகம் முதலான பல நிலைகளில் பலவிதமான முடிவில்லாத துன்பங்களை ஒவ்வொரு ஜீவாத்மாவும் அனுபவிக்கிறார். கருணையால் படைக்கும் ப்ரஹ்மம், இப்படிப்பட்ட ஜகத்தைப் படைத்திருக்கக் கூடாது. -्கருணையால் படைக்கும் கடவுள் இன்பத்தை மட்டுமே கொடுக்கும் வகையில் தான் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும். ஆகையால் தன் நலனோ பிறர் நலனோ இல்லாதபடியால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க இயலாது.

பகவானின் ஒப்பற்ற லீலை
ஸித்தோந்தம் – 2-(லோகவத் ्து லீலா கைவல்யம்
– “உலகில் போல்; விளையாட்டு மட்டுமே
பரமாத்மா அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும், அவர் செய்யும் ஸ்ருஷ்டி யானது லீலையான படியால், பிரயோஜனம் உடையது தான் என்று கூறுகிறார் வேதவியாஸர்.
லீலா என்றால் விளையாட்டு. அதாவது, ஒரு செயலைச் செய்யும் போது, அந்த க்ஷணத்தில் உண்டாகும் ஒரு அனுபவம்-ஆனந்தம் எதுவோ , அதற்காக மட்டும் செய்யப்படும் செயல் விளையாட்டு – லீலா ஆகும்.
லீலா கைவல்யம் என்றால் லீலை மட்டுமே என்று பொருள். மட்டுமே என்று சொல்வதற்கு ஒரு கருத்து உள்ளது – உலகத்தில் வேட்டை யாடுதல், பணம் வைத்து சூதாடுதல், பந்து முதலான பொருள்களை வைத்து விளையாடுதல்,-இவை அனைத்துமே விளையாட்டுகள். ஆனால், வேட்டையிலோ , சூதாட்டத்திலோ , அந்தக் காலத்திலும் ஒரு இன்பம்
ஏற்படுகிறது, பிற்காலத்திலும் சில பயன்கள் கிடைக்கின்றன- பந்துகளை வைத்து விளையாடுவது என்பது அக் காலத்தில் ஏற்படும் இன்பத்துக்காக மட்டுமே செய்யப்படும் விளையாட்டு. பகவான் செய்யும் ஸ்ருஷ்டியானது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இதைக் குறிப்பிடத் தான் கைவல்யம் என்கிற சொல்லை வேத வியாஸர் இடுகிறார்.
லோகவத் – உலகத்தில் அனைத்தும் பெற்ற ஒரு பேரரசரும் கூட பந்து முதலானவற்றை வைத்து விளையாடுவது போல்.
பராசர மஹரிஷி – “கிரீட₃தோ பா₃லகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய” – விளையாடும் குழந்தையில் செயல் போன்ற பகவானின் பணடப்புச் செயலைப் பார்” என்று பராசரர் கூறுகிறார்.
வ்யாஸர் – “மோத₃தே ப₄க₃வான் பூ₄தை : பா₃ல: கிரீட₃னகைரிவ” – ஒரு குழந்தை விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு இன்பம் அடைவது போல், பிரஹ்மம் இந்த உலகப் பொருள்களைக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்
ஆண்டாள் – “வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்”.
நம்மாழ்வார் – “மன்பல் உயிர்களும் ஆகும் பல மாய மயக்குக்களால் இன்புறும் இவ் விளையாட் டுடையான்”
கம்பர் – “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்… அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர்”
கேள்வி 1-
எளிமையாகச் செய்யப்படும் செயல் தானே விளையாட்டாக ஆகும்? மிகவும் கஷ்டப்பட்டு இப்பேர்ப்பட்ட உலகத்தை பகவான் படைக்கிறார் என்றால், அது எப்படி லீலை யாகும் என்று?
பதில் 1: பகவான் ஸங்கல்பத்தால் மட்டுமே படைக்கிறார், ஸ்ரமப்பட்டு அல்ல. அதனால் இது லீலையாக ஆகலாம்

ஸ்ருஷ்டியின் உண்மை யான ப்ரயோஜனம்
கேள்வி 2 –
அவருடைய விளையாட்டு இன்பத்துக்காக நம்மைப் போன்ற கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் பல விதமான துன்பங்களை அனுபவிப்பது சரியா?
பதில் 2: பகவான் செய்யும் ஸ்ருஷ்டியின் உண்மையான பயனை வேதங்களும் ஆழ்வார்களும் வெளியிட்டுள்ளார்கள்.
நம்மாழ்வார் பாடுகிறார் – “சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்”, அதாவது, “இப்போது இல்லா விட்டாலும், பிற்காலத்தில் ஏதோ ஒரு சமயத்திலாவது இந்த ஸம்ஸாரத்தின் கொடிய தன்மையைப் புரிந்து கொண்டு ஜன்ம-மரணச் சுழலில் இருந்து விடுபட்டு ஒரு ஜீவாத்மா தன்னை வந்து வைகுந்தத்தில் அடைவான் என்கிற ஆசையால் தான் பகவான் இவ் வுலகத்தை மறுபடியும் மறுபடியும் உற்சாகம் குறையாமல் படைக்கிறார்” என்று. அதனால் பகவான் படைப்பதன் பிரயோஜனம் ஜீவாத்மாக்கள் முக்தி அடைவது தான்.
கேள்வி 3 – பிறகு இவ் விடத்தில் லீலா கைவல்யம் லீலை மட்டுமே பிரயோஜனம் என்று வேதவியாஸர் ஏன் கூறினார்?
பதில் 3 – உலகத்தில் வாழும் ஜீவாத்மாக்களால் பகவானுக்கு இரண்டு விதமான இன்பங்கள் (ரஸங்கள்) ஏற்படுகின்றன. -ஒரு பொருள் எப்படி பயன்பட வேண்டுமோ , அப்படி பயன்பட்டு நமக்கு இன்பத்தை அளித்தால், அதற்கு போக ரஸம் என்று பெயர். ஒரு பொருள், அதன் உண்மைத் தன்மை புரிந்து கொள்ளப் படாமல், தவறாக பயன்படுத்தப் பட்டு, அப்போதும் நமக்கு ஒரு இன்பத்தை அளித்தால், அதற்கு லீலா ரஸம் என்று பெயர்.
ஒரு குழந்தை ஒரு கைபேசியை எடுத்து, சரியாக ஒருவரை அழைத்துப் பேசினால், வியந்து போகிறோம்- போக ரஸத்தை அனுபவிக்கிறோம். அதே குழந்தை கைபேசியை என்னதென்று புரிந்து கொள்ளாமல், வாயில் வைத்து கடித்ததென்றால், அப்போதும் லீலா ரஸத்தைப் பெற்று இன்பப்படுகிறோம். இதே போல் தான் பகவானுக்கும்.
ப்ரஹ்லாதன், த்ருவன், ஆழ்வார்கள் முதலான உயர்ந்த ஜீவாத்மாக்கள், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை சரியாக புரிந்து கொண்டு, பகவானுக்குத் தொண்டு செய்கிறார்கள். அதனால் பகவான் போக ரஸத்தை அனுபவிக்கிறார். -நம்மைப் போன்ற அறிவிலிகளான பலரும் ஆத்மாவின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், உலக இன்பங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதைப் பார்த்தும் பகவான் லீலா ரஸத்தை அடைந்து, மகிழ்கிறார்.-இப்படி இரண்டு ரஸங்களும் அவருக்கு கிடைத்தாலும், அநேகமாக 99% அவருக்கு கிடைப்பது லீலா ரஸம் தானே . -அதனால் தான் ’பிராசுர்யம்’ அதாவது ’மிகுதியைக் ’ கருதி, வியாஸர் “ஸ்ருஷ்டி லீலா ரஸத்துக்காகவே ” என்று கூறுகிறார்.

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை -தத்வ த்ரயம்–ஸூர்ணிகை -162-

சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும் உய்ய வுலகு படைத்து -என்றும் விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும் சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –-உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய் இருக்கச் செய்தேயும் ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே
இறே-லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்-ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
ஸூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று
––ஸூர்ணிகை -162)-

குற்றமற்ற படைப்பாளி பகவான்
3- வைஷம்ய -நைர்க்₄ருண்யே ந ஸா பேக்ஷத்வாத் ததா ₂ஹி த₃ர்சயதி
வைஷம்ய நைர்க்₄ருண்ய ந –
பகவானுக்கு வைஷம்யம் நைர்க்₄ருண்யம் என்ற தோஷங்கள் கிடையாது
வைஷம்யம் – பஷ பாதம் – ஒரு தலைப் பஷமாக இருத்தல். பகவான் உலகத்தில் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் என்று பல விதமான பொருள்களை ஏற்றத் தாழ்வுகளோடு படைப்பதால் அவர் தன்னிச்சையாக சிலரை உயர்ந்தவராகவும் சிலரைத் தாழ்ந்தவராகவும் படாய்க்கிறார் என்கிற தோஷம்.
நைர்க்₄ருண்யம் – பல விதமான துக்கங்களை இவ் வுலகத்தில் படைப்பதால் கருணை யற்றவர் என்ற தோஷம்.-இவை இரண்டும் பரமாத்மாவுக்குக் கிடையாது என்கிரார் வ்யாஸர்.
ஸா பேக்ஷத்வாத் – படைக்கப்படும் ஜீவாத்மாக்களின் பாப-புண்யங்களை எதிர்பார்த்தே படைக்கிற படியால். படைப்புக்குப் பொதுவாக பகவான் காரணமாக இருந்தாலும், அந்தந்த ஜீவாத்மாவின் முன் வினைகளுக்கு ஏற்பத்தான் அந்தந்த ஜீவாத்மாவுக்குப் பிறவிகளைக் கொடுக்கிற படியால் அவருக்கு எந்த தோஷமும் வராது.
ததா ₂ஹி த₃ர்சயதி – அவ்வாறன்றோ வேதம் காட்டுகிறது
வேதம் – “ (ஸாது₄காரீ ஸாது₄: ப₄வதி, பாபகாரீ பாப: ப₄வதி) அதாவது’நல்லது செய்தவன் நல்ல பிறவியைப் பெறுகிறான், பாபம் செய்தவன் தீய பிறவியைப் பெறுகிறான்’.
பராசர மஹரிஷி – (நிமித்த மாத்ரம் ஏவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க₃கர்மணி | ப்ரதா₄ந காரணீ பூ₄தா: யதோ வை ஸ்ருஜ்ய சக்தய: ||) அதாவது-“உலகத்தில் ஜீவராசிகளைப் படைப்பதில் பகவான் இரண்டாம் பஷக் காரணமாக (பொதுக் காரணமாக) இருக்கிறார்; ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் கர்மங்கள் (பாப புண்யங்கள்) தன் முதன்மையாக காரணமாக (சிறப்புக் காரணமாக) உள்ளன.”
ஒரு நிலத்தில் பல விதமான பயிர்களையோ மரங்களையோ வளர்க்கும் போது, பூமி நீர் முதலானவை பொதுக் காரணங்கள். அந்தந்த விதை தான் அந்தந்த மரத்திற்குச் சிறப்புக் காரணம் ஆகும். ஏன் மாமரம் வந்தது, பனை மரம் வரவில்லை என்று பூமியையோ நீரையோ கேட்டுப் ப்ரயோஜனமில்லை , விதை தான் அதற்குக் காரணம். -அது போல் ஸ்ரிஷ்டிக்குப் பொதுவாக பகவான் காரணமானாலும், ஏற்றத் தாழ்வுகளுக்கு அவர் காரணமல்ல, நம் கர்மங்களே காரணம். அதனால் அவருக்கு வைஷம்யமோ நைர்க்₄ருண்யமோ கிடையாது.

கர்மங்கள் எப்போதுமே இருக்கின்றனவா?
கீழ்ச் சொன்ன அர்த்தத்தில் பூர்வ பஷி ஓர் ஆஷேபத்தை எழுப்புகிறார். அதற்கான பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
4-ந கர்ம அவி பா₄கா₃த் இதி சேத் ந அநாதி₃த்வாத் உபபத்₃ யதே ச அபி உபலப்₄ யதே ச
ந கர்ம
– “கர்மம் அல்ல”அதாவது ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஜீவாத்மாக்களின் கர்மங்கள் காரணமல்ல
அவி பா₄கா₃த் – “தனித்து இல்லாத படியால்”, அதாவது ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளயத்தின் போது “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத்” அதாவது“ப்ரஹ்மம் மட்டுமே அப்போது இருந்தது, வேறெதுவும் இல்லை ” என்று வேதம் சொல்வதால் ஜீவாத்மாக்களே இருக்க வில்லை . அப்படி யென்றால், அவர்களின் கர்மங்கள் மட்டும் எப்படி இருக்கும்?
இதி சேத் ந – “இவ்வாறு கூறினால் அது தவறு” என்று வ்யாஸர் மறுக்கிறார்.
அநாதி₃த்வாத் – “ஜீவாத்மாக்கள் அநாதியான படியால்” – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருக்கிற படியால்
அபி ச உபபத்₃ தே – “அநாதியான போதும் தனித்து இல்லாமை பொருந்துகிறது” – ஜீவாத்மாக்கள் அநாதி யானவர்கள் என்று கொண்டாலும் “ப்ரஹ்மம் மட்டுமே ப்ரளய காலத்தில் இருந்தது” என்று வேதம் சொல்வது பொருந்தும், -ஏனெனில் ப்ரலயத்தின் போது ஜீவாத்மாக்கள் அனைவருமே ப்ரஹ்மத்திடமிருந்து பிரித்து அறிய முடியாதபடி ஒன்றாக
ஒட்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்ருஷ்டியின் போது தான் தனித் தனி உடல்களாய்ப் பெற்று தனித்து அறியப் படுகிறார்கள்.
உபலப்₄ யதே ச – “காணப்படுகிறதும் கூட” – வேதமே ஜீவாத்மாக்கள் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.
“ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்”– “ஜ்ஞாந முடையவரான ஆத்மா உண்டாவதும் கிடையாது, அழிவதும் கிடையாது”
கேள்வி – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருந்திருந்தாலும், அவர்களுக்கு எப்போதுமே கர்மங்கள் இருந்தனவா?
பதில் – “ஸூர்ய சந்த்₃ர மஸௌ தா₄தா யதா₂பூர்வம் அகல்பயத்” அதாவது “ஒவ்வொரு முறையும் முன்னிருந்தது போலவே உலகத்தை பகவான் படைக்கிைறார்” என்று வேதம் சொல்வதால், ஸ்ருஷ்டி என்பது எப்போதுமே நடந்து கொண்டே இருக்கிறது என்று தெரிகிறது. அப்படி யென்றால், ஜீவாத்மாக்கள் எப்போதுமே பிறந்து கொண்டு தான் இருக்க வேண்டும், அப்படி யென்றால் அவர்களுக்குக் கண்டிப்பாகக் கர்மங்களும் எப்போதுமே இருக்கத் தான் வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவுக்கோ அவரது கர்மங்களுக்கோ தொடக்கம் என்பதே கிடையாது. நாம் மோக்ஷம் அடையும் போது கர்மங்களுக்கு முடிவு மட்டும் உண்டு . கர்மங்களை அடி யொற்றியே பகவான் ஏற்றத் தாழ்வுகளை உலகில் படைக்கிறார்.

பாதத்தின் சுருக்கம்
5-ஸர்வத₄ர்மோப்பத்தே : ச
– “எல்லா பண்புகளும் பொருந்துகிறபடி யாலும்”
உபநிஷத்துக்களில் ஜகத் காரணப் பொருளுக்குச் சில பண்புகள் சொல்லப் பட்டுள்ளன. ப்ரதானம் அல்லது பரமாணு தான் ஜகத்காரணம் என்று கொண்டால், அந்தப் பண்புகள் எதுவுமே அவற்றுக்கு போருந்துவதில்லை . ஆனால் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று கொண்டால், அப் பண்புகள் அனைத்துமே அவரிடம் பொருந்துகின்றன.
எனவே , சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்தப் பாதத்தைச் சுருக்கமாகக் காட்டுகிறார் –
(1) ஸாங்க்₂ய ஸ்ம்ருத்யா விரோதா₄த்
(2) விதி₄மதவிஹதே :
(3) கார்ய வைரூப்யத: அஸ்மிந்
(4) ஏகார்த₂ அநேக தந்த்ரோதி₃த விஹததயா
(5) தே₃ஹபோ₄க₃ வியுக்த்யா |
(6) கார்யோ பாதா₃ந பே₄தா₃த்
(7) ஸ்வஹிதவிஹதித:
(8) காரகஸ் தோமஹாநே :
(9) க்ருத்ஸ்நாம்சாத்₃யூஹபா₃தா₄த்
(10) க்ருதிவிப₂லதயாபி உத்தி₂தம் ப்ரத்ய வித்₄யத் ||

1-ஸ்ம்ருத் யதி₄கரணம் – ஸாங்க்₂ய ஸ்ம்ருதியோடு முரண் பட்டாலும் ஸ்ம்ருதி தான் தவறானது, வேதம் அல்ல.
2-யோக₃ப்ரத்யுக்த் தி₄கரணம் – நான்முகனே கூறி யிருந்தாலும் வேதத்தோடு முரண்பட்டால் தவறானதே .
3-விலக்ஷணத்வாதி₄கரணம் – காரணமும் காரியமும் ஒரே தன்மை களோடு இருக்க வேண்டும் என்கிற தேவை யில்லை .
4-சிஷ்டா பரிக்₃ரஹாதி₄கரணம் – பல மதங்கள் பரமாணுவே ஜகத் காரண மென்று கூறினாலும் வேதம் சொல்வதே சரி

5-போ₄க்த்ரா பத்த் யதி₄கரணம் – சேதனா சேதனங்களை உடலாகக் கொண்டாலும் ப்ரஹ்மத்துக்கு இன்ப துன்பமில்லை

6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்றென்பதால் ப்ரஹ்மமே இந்த உலகமாகும்

7-இதர வ்யபதே ₃சாதி₄கரணம் – ப்ரஹ்மத்தை விட ஜீவாத்மா வேறானபடியால் ப்ரஹ்மம் தனக்குத் தீமை தேடவில்லை .

8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம் – கருவிகள் எதையும் எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் உலகைப் படைக்க முடியும்.

9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த் யதி₄கரணம் – அவயங்களே இல்லா விட்டாலும் ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம், வேதம் சொல்வதால்.

10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம் – ப்ரஹ்மம் உலகைப் படைப்பது விளையாட்டாக,லீலா ரஸத்துக்காகவே

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் – நான்காவது பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

    July 3, 2025

    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

    பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
    ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
    பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
    ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
     ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
    வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

    ——-

    ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

    இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
    ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
    ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
    வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

    முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

    இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    ——–

    1-4-1-ஆநுமாநிகாதி₄கரணம்-ஸாங்க்ய மதம் சொல்வது போன்ற வாக்கியங்கள்

    அதி₄கரணத்தின் பின்புலம்
    முதல் அத்யாயத்தின் நான்காவது பாதத்தை அணடந்துள்ளோம். கீழ் பாதங்களுக்கும் இப்பாதத்துக்கும் ஸங்கதிகள் -முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப்பட்டது அயோக₃ வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது. மேலுள் மூன்று பாதங்களால் செய்யப்படுவது (ii) அந்ய யோக₃
    வ்யவச்சே₂த₃ம்
    – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது.
    பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களின் வலிமையைப் பொருத்து பாதங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் – (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள் (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள் (iv) நான்காம் பாதத்தில் சாயா அநுஸாரி வாக்யங்கள் என்று.
    சா₂யா என்றால் நிழல். அநுஸாரி என்றால் பின் தொடர்வது. உபநிஷத்துக்களில் சில வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தின் உபதேசங்களை நிழல் போல் பின் தொடர்பவை போல் காணப்படுகின்றன. ஸாங்க்ய மதத்தில் சொல்லும் கருத்துகள் இவ்விடங்களில் சொல்லப்படுகிறபடியால், ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்டபடி ப்ரதா₄நம் / மூல ப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் தான் ஜகத்காரணம் என்று உபநிஷத்துக்களே ஏற்கின்றன என்று பூர்வபக்ஷீ வாதிடுகிறார். –அவ் வாதத்தை நிரஸிப்பதன் மூலம் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்னும் ஸித்தாந்தத்தை வலுப்படுத்துகிறார் வ்யாஸர்.

    (ப்ரஹ்மாத்மகமான பிரதானம் பிரகிருதி என்று சொல்லாமல் -நிரீஸ்வர சாங்க்ய மதம் போல் உள்ள ஸ்ருதி வாக்கியங்கள் -எண்ணிக்கையில் சாம்யம் -24 அசேதனங்கள் -25 ஜீவாத்மா -மட்டுமே சாங்க்ய மதம் -காபில மத ஸித்த அப்ரஹ்மாத்மக அசேதனங்கள் -போல் உள்ள சில ஸ்ருதி வாக்கியங்கள் -இவற்றை சொல்லி நேராக பிரதானம் காரணம் சொல்லாமல் -இருப்பதால் பிரதானமும் ஜகத்காரணம் என்கிற வாதங்களை நிரஸித்து –ப்ரஹ்ம ஏக காரணம் என்னும் கருத்தை நன்றாக நிலைநாட்ட இப்பாதம் என்றவாறு)

    ஆநுமாநிகதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா என்று கூறப்பட்டது. அதற்குமேல் ஆஷேபம் எழுகிறது – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மா என்று ஒருவர் கிடையாது என்று ஸாங்க்ய மதம் சொல்வது போல் வேதமே சொல்லி யுள்ளதே என்று. அதற்கு பதிலளிக்க தான்
    இந்த அதிகரணம் பிறக்கிறது.

    (ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
    ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
    அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –)

    விஷய வாக்யம் – கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தின் மூன்றாம் வல்லீ
    இந்த்₃ரியேப்₄ ꞉ பராஹ் வர்தா ₂ அர்தே₂ப்₄யஶ் ச பரம் மந꞉ । மநஸஸ்து பரா பு₃த்₃தி₄ர் பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ ॥-இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப்பொருள்கள் உயர்ந்தவை . பொருள்களை விட மனது உயர்ந்தது. மனதை விட புத்தி உயர்ந்தது. புத்தியை விட மஹாந் என்ற பொருள் உயர்ந்தது-மஹத꞉ பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ । புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டோ₂ ஸா பரா க₃தி꞉ ॥-மஹாந் என்பதை விட அவ்யக்தம் உயர்ந்த்து. அவ்யக்தம் என்பதை விட புருஷன் உயர்ந்தவன். புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை , அதுவே எல்லை , அதுவே இறுதியான இலக்கு.

    ஸந்தேஹம் – இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் (ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொள்ளாத) ப்ரதாநம் என்ற அசேதனப் பொருள் சொல்லப்படுகிறதா? அல்லவா?
    பூர்வ பக்ஷம் – இங்கு மூல ப்ரக்ருதி எனப்படும் ப்ரதாநம் தான் சொல்லப்படுகிறது.
    1-ஸாங்க்ய மதத்தில் தத்துவங்களின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது – 5 கர்ம இந்த்ரியங்கள், 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 1 மனது, 5 பூதங்கள், 5 தந்மாத்ரங்கள், அஹங்காரம், மஹாந், மூல ப்ரக்ருதி என்று 24 அசேதனப் பொருள்கள் மற்றும் அறிவுடையவனான ஜீவாத்மா 25ஆவது தத்துவம் என்று. இங்கு உபநிஷத்திலும்
    இந்த்ரியங்கள், உலகப் பொருள்கள், மனது, புத்தி (அஹங்காரம் என்ற தத்துவம்), மஹாந், அவ்யக்தம், புருஷன் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது ஸாங்க்ய மதத்தின் தத்துவ வரிசை நினைவுக்கு வருகிறது. எனவே இவ் விடத்தில் வேதமே ஸாங்க்ய மதத்தை உபதேசிக்கிற படியால் இங்கு அவ்யக்தம் என்ற பொருள் மூல ப்ரக்ருதியாகத் தான்
    இருக்க வேண்டும். இப்படி தத்துவக் கணக்கில் ஸாங்க்ய மதத்தை வேதம் ஏற்பதால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி ப்ரதாநம் தான் ஜகத் காரணம் என்றும் வேதம் ஏற்கிறது என்று தான் ஆகும். அவர்கள் மதத்தின் படி அந்த ப்ரதாநம் என்ற பொருள் ஸ்வதந்த்ரமானது, அதற்கு உள்ளே ஆத்மாவாக பரமாத்மா கிடையாது

    2-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்று 25ஆவது தத்துவமான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை என்று சொல்கிறபடியால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி பரமாத்மா என்று ஒருவரே கிடையாது என்றும் தெரிகிறது.

    (தந்த்ர சித்த தத்வ ப்ரக்ரியை நினைவூட்டப் படுகிறதே -முதல் வாதம் -புருஷன் -ஜீவாத்மாவை விட -மேல் உள்ள தத்துவமே இல்லை நிரசிப்பது போல் உள்ளது -இரண்டாம் வாதம்)

    இவ்விடத்தில் பூர்வபக்ஷீ ’ப்ரதாநம் மட்டுமே ஜகத்காரணம் என்று உபநிஷத் கூறுகிறது’ என்று சொல்லவில்லை , -ஏனெனில் கீழ் பல அதிகரணங்களில் பரமாத்மா ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ள து. எனவே , “உபநிஷத்தில் சில இடங்களில் ப்ரதாநமும் ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்று தான் வாதிடுகிறார்.

    வேதம் காட்டும் உருவகம்
    ஸித்தாந்தம் – இங்கு 7 ஸூத்ரங்களாலே வ்யாஸர் ஸித்தாந்தத்தைக் காட்டுகிறார்.
    1-ஆநுமாநிகம் அபி ஏகேஷோம், இதி சேத் ந, சரீர ரூபக விந்யஸ்த க்₃ருஹீதே :, த₃ர்சயதி ச
    ஏகேஷோம் –
    ஒரு சிலரால் படிக்கப்படும் வேதத்தில்
    ஆநுமாநிகம் அபி – அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியும் [ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது]
    இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
    சரீர ரூபக விந்யஸ்த – ரூபகமாக (உவமையான தேராக) சொல்லப்பட்ட சரீரமே
    க்₃ருஹீயத: – இங்கு எடுக்கப் படுகிறபடியால்
    த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது-

    இவ்விடத்தில் உபநிஷத்தில் ஓர் உருவகம் காட்டப்படுகிறது. அது யாதெனில் –
    ஆத்மாநம் ரதி₂நம் வித்₃தி₄ ஶரீரம் ரத₂மேவ து । பு₃த்₃தி₄ம் து ஸாரதி₂ம் வித்₃தி₄ மந꞉ ப்ரக்₃ரஹமேவ ச ॥இந்த்₃ரியாணி ஹயாநாஹு: விஷயாந் தேஷு கோ₃சரான்-இந்த சரீரம் ஒரு தேர் (ரத₂ம்), ஜீவாத்மா தான் அதற்கு ஸ்வாமீ (ரதீ), புத்தி (உறுதி) தான் தேரோட்டி (ஸாரதீ), மனது தான் கடிவாளம் (ப்ரக்₃ரஹம்), இந்த்₃ரியங்கள் தான் குதிரைகள், உலக விஷயங்கள் தான் குதிரைக்கு புல் போன்றவை-

    விஜ்ஞாந ஸாரதி₂ர் யஸ்து மந꞉ ப்ரக்₃ரஹ வாந் நர꞉ । ஸ: அத்₄வந꞉ பார மாப்நோதி தத்₃விஷ்ணோ꞉ பரமம் பத₃ம் ||-புத்தி என்ற ஸாரதியையும் மனது என்ற கடிவாளத்தையும் எவன் கட்டுப் படுத்துகிறானோ , அவன் தான் பாதையின் இறுதியில் இருக்கும் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான். -இப்படி தேர், ஸாரதீ, குதிரைகள் முதலானவற்றை அடக்க வேண்டும் என்று உபதேசித்த பிறகு தான், நாம் கீழே பார்த்த விஷய வாக்யம் உள்ளது. எனவே அந்த வாக்கியத்தில் புத்தி, மனது, இந்த்ரியங்கள், பொருள்கள் முதலானவற்றைக் கட்டுப் படுத்தும் போது, எதை விட எது முக்கியமானது என்று தான் சொல்லப்படுகிறது.

    புலன்களை அடக்கும் முறை
    இந்த்₃ரியேப்₄ யா ꞉ பரா ஹ்யர்தா ₂
    – இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப் பொருள்களை அடக்குவது முக்கியமானது – ஏனெனில் புலன்களை அடக்கி வைத்தாலும் உலகப் பொருள்கள் அறுகில் இருந்தால் அவை புலன்களை இழுத்து விடும்.
    அர்தே₂ப்₄ யஶ்ச பரம் மந꞉ – பொருள்களை விட மனதை அடக்குவது முக்கியம் –-ஏனெனில் பொருள்களை விலக்கி வைத்திருந்தாலும் மனது அப்பொருள்களை நினைத்துக் கொண்டே இருந்தால் புலனடக்கம் ஸித்திக்காது.
    மநஸஸ்து பரா பு₃த்₃தி₄: – மனதை விட புத்தி என்ற உறுதியை வசப்படுத்துவது முக்கியம் – ஏனெனில் ஓர் உறுதி இருந்தால் தான் மனது வழி தவறிப் போகும் போது அதைத் தடுத்து சரியான பாதைக்கு இழுத்து வர முடியும்.
    பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ – புத்தியை விட உயர்ந்தவரான ஆத்மாவை வசப்படுத்துவது முக்கியம் –ஏனெனில் ஆத்மாவுக்கு அதீனமாகத் தான் கீழ் சொல்லபட்ட புலன்கள், மனது, உறுதி எல்லாம் உள்ளன.
    மஹத꞉ பரம் அவ்யக்தம் – ஆத்மாவை விட அவ்யக்தம் என்ற பொருளை வசப்படுத்துவது முக்கியம் –-அவ்யக்தம் எனப்படுவது நம்முடைய சரீரம். சரீரம் ஆரோக்யமாக நம் வசத்தில் இருந்தால் தான் ஆத்மா எந்தச் செயலையும் செய்ய முடியும் என்பதால் அதை வசப்படுத்துவது முக்கியம்.
    அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ – சரீரத்தை விட புருஷன் என்ற பரமாத்மாவை வசப்படுத்துவது முக்கியமானது –ஏனெனில் இவ்வுலகில் அனைத்துமே அவருக்கு அதீனமாகத் தான் இயங்குகிறது.
    புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ₂ ஸா பரா க₃தி꞉ – அந்த பரமாத்மாவை விட முக்கியமாக வசப்படுத்தப்பட வேண்டிய பொருள் வேறொன்று கிடையாது. அவரே எல்லை .
    இது தான் விஷய வாக்கியத்தின் சரியான பொருள் ஆகும்.

    ஸித்தாந்த யுக்திகள்
    உருவகத்தில் தேர், ஸாரதீ, கடிவாளம் என்று சொல்லப்பட்ட அதே பொருள்கள் அதே சொற்களால் விஷய வாக்கியத்திலும் சொல்லப்படுகின்றன, ஒன்றைத் தவிற – சரீரம் என்ற சொல்லுக்கு பதிலாக அவ்யக்தம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே , ஸந்தர்பத்தை வைத்துப் பார்த்தால், இங்கு அவ்யக்தம் எனப்படுவது தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் தான், மூல ப்ரக்ருதி அல்ல.-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்ற வாக்கியமும் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லவில்லை , வசப்படுத்தப் பட வேண்டிய பொருள்களுள் பரமாத்மாவை விட முக்கியமானது எதுவுமில்லை என்று தான் கூறப்படுகிறது.-பரமாத்மாவை வசப்படுத்துவதாவது, அவரிடம் சரணாகதி செய்து அவர் அநுக்ரஹத்தைப்
    பெறுவது தான்.
    த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது – வேதமே இந்தப் பொருளைக் காட்டுகிறது –
    ஏஷ ஸர்வேஷு பூ₄தேஷு கூ₃ட₄: ஆத்மா ந ப்ரகாஸதே । த்₃ருஶ் யதே த்வக்₃ர்யயா பு₃த்₃த்₄ யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம த₃ர்ஶிபி₄꞉ ||-இந்த புருஷன் எனப்படுபவர் எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார். அவர் வெளிப்படையாகப் ப்ரகாசிப்பதில்லை . புலன்களை அடக்கி நுட்பாக ஆராயும் புத்தியால் மட்டுமே அவர் காணப்படுகிறார்.
    இப்படி உபநிஷத்தே பரமாத்மாவைப் பற்றியும், புலன்களை வசப்படுத்துவதைப் பற்றியும் சொல்கிறபடியால் இதுவே சரியான பொருள். எனவே இங்கு மூல ப்ரக்ருதி சொல்லப்படவே இல்லை .-ஆகவே , இவ் விடத்தில் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களின் வர்ணனையோ , ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவரே இல்லை என்றோ சொல்லப்படவே இல்லை -எனவே வேதம் ஸாங்க்ய மதத்தைத் தழுவி உபதேசிக்கிறது என்று கூற இயலாது. எனவே பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம் என்று உபநிஷத்துக்கள் எங்குமே ஏற்க வில்லை .-மேலும் பல யுக்திகளைக் கொண்டும் வ்யாஸர் இதை நிரூபிக்கிறார் மற்ற ஸூத்ரங்களால் -அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

    1.4.1-ஆநுமாநிகாதி₄கரணம்–ப்ரக்ருதியையும் இயக்குபவர் பரமாத்மாவே

    சரீரமே முக்திக்கான கருவி
    1-4-1-ஆநுமாநிகதி₄கரணத்தின் முதல் ஸூத்ரத்தால் இங்கு ’அவ்யக்தம்’ என்று சொல்லப்படுபடுவது மூலப்ரக்ருதி அல்ல, -இதற்கு முன் உருவகத்தில் தேராகச் சொல்லப்பட்ட சரீரம் தான் என்று காட்டினார் வேத வ்யாஸர். இனி அதைத் தொடர்ந்து மேலும் பல யுக்திகளைக் கூறுகிறார்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது – அவ்யக்தம் என்றால் ’வ்யக்தமாக வெளிப்படையாக இல்லாதது’ என்று பொருள்-எனவே இச் சொல் பொதுவாக மூல பிரக்ருதியைத் தான் குறிக்கும். சரீரமோ வ்யக்தமானது அதாவது வெளிப்படையானது.பிறகு அவ்யக்தம் என்ற சொல் எப்படி சரீரத்தைச் சொல்லமுடியும்? என்று. இதற்கு பதில் தான் அடுத்த ஸூத்ரம் -2-ஸூக்ஷ்மம் து தத₃ர்ஹத்வாத் –ஸூக்ஷ்மமான மூல ப்ரக்ருதி அன்றோ ; அதுக்கே தகுதி உள்ளபடியால் ஸூக்ஷ்மம் து – ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும் மூல ப்ரக்ருதி தான் ஸ்ருஷ்டி நடக்கும் போது இந்த சரீரமாக மாறுகிறது. எனவே , பஞ்சின் விகாரம் (மாறுபாடான) துணியைப் பஞ்சு என்று சொல்வது போல், அவ்யக்தம் என்கிற மூல ப்ரக்ருதியின் விகாரம் (மாறுபாடான) சரீரத்தை அவ்யக்தம் என்ற சொல்லைக் கொண்டு சொல்லலாம், தவறில்லை-

    விஷய வாக்கியத்தில் இருக்கும் அவ்யக்தம் என்ற சொல் சரீரத்தைச் சொல்கிறது என்று கொள்ளாமல், முதலில் உருவகத்தில் இருக்கும் சரீரம் என்ற மூல ப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று கொண்டால் என்ன? என்று பூர்வபக்ஷீ கேட்க, அதற்கு விடை தான் ஸூத்ரத்தின் அடுத்த பகுதி —தத₃ர்ஹத்வாத் – உருவகத்தின் இறுதியில் தேர், ஸாரதீ, கடிவாளம் முதலானவற்றை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று சொல்கிறபடியால், இங்கு முக்தி அடைவதற்குக் கருவிகளானவை தான் தேராகவும், -ஸாரதியாகவும், கடிவாளமாகவும் உருவகப் படுத்தப்பட வேண்டும். மூல ப்ரக்ருதியோ புருஷார்த்தம் அடைவதற்குக் கருவியாக ஆகாது. அதைக்கொண்டு எந்தச் செயலையும் செய்ய இயலாது. எனவே அதைத் தேராக உருவகம் செய்வதுஇங்கு பொருத்தமாக இருக்காது. சரீரம் தான் ’அர்ஹம்’-அதாவது“தகுதி உடையது” அதாவது புருஷார்த்தம்
    அடைவதற்குக் கருவியாக இருக்கும் தகுதி உடையது. எனவே அது தான் இங்கு உருவகத்தில் பொருத்தமானது.-எனவே , பின்னால் வரும் விஷய வாக்கியத்தில் உள்ள அவ்யக்தம் என்ற சொல் தான் சரீரத்தைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிற, சரீரம் என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று மாற்றிக் கொள்ள இயலாது.

    ஸாங்க்ய மதத்தை ஏற்காததன் காரணம்
    ஸாங்க்ய மதத்தவரின் கேள்வி
    – நீங்களும் மூல ப்ரக்ருதி என்ற பொருளை ஏற்கிறீர்கள், அதிலிருந்து தான் சரீரம் உண்டாகிறது என்றும் ஏற்கிறீர்கள் என்றால் ஏன் எங்கள் ஸாங்க்ய மதத்தைக் குறை சொல்கிறீர்கள்? அதற்கு பதில் –
    3-தத₃தீ₄நத்வாத் அர்த₂வத் – “அதற்குக் கீழ் படிந்தே பயனுள்ளது”
    மூல ப்ரக்ருதியான ஸ்வதந்த்ரமான ஒரு பொருள், தானாக இயங்குகிறது என்று ஸாங்க்ய மதம் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை , அதைத்தான் குறை சொல்கிறோம். தத₃தீ₄நத்வாத் பரமாத்மாவுக்கு அதீனமாக, அவருக்குக் கட்டுப்பட்டு,அவரை அந்தராத்மாவாகக் கொண்டு, அவராலே இயக்கப்பட்டு தான் மூல ப்ரக்ருதி அர்த₂வத் பயனுடையது, அதாவது-தன்னிடமிருந்து பஞ்ச பூதங்கள் முதலானவற்றை உண்டாக்குகிறது. மூல ப்ரக்ருதி இருப்பதும், நிலைப்பதும், செயல்படுவதும் கூட அந்த பரமாத்மாவால் தான். இதை ஸாங்க்ய மதம் ஏற்காதபடியால் அதைத் தவறு என்கிறோம்

    (ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்-பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை-ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து-ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை-பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது என்று விடை கூறப்படுகிறது –)

    4-ஜ்ஜேயத்வ அவசநாத் ச – “அறியப்பட வேண்டியது என்று சொல்லப்படாத படியாலும்”-ஸாங்க்ய மதத்தின்படி ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா என்ற இரண்டு பொருள்களைப் பற்றின உண்மையான அறிவு தான் முக்திக்கு வழி ஆகும். எனவே , இங்கு அவ்யக்தம் என்ற சொல் மூல ப்ரக்ருதியைக் குறிப்பதாகக் கொண்டு,-உபநிஷத்தே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்கிறது என்று கொண்டால், அந்த அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை’அறிய வேண்டும்’ என்று வேதம் கண்டிப்பாக சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எந்த உபதேசமும் காணப்படவில்லை . எனவே இங்கு சொல்லப்படுவது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

    (த்ருஷ்ட்வத் -கண்ணுக்குத்தெரிந்த புருஷார்த்தங்கள் போல் ஆனு ஸ்ரவணாத் -ஸ்வர்க்கம் போன்றவை கேட்டு அறிந்தவையும் –அவி ஸூத்தி -தூய்மை இல்லாமல் திரும்ப வேண்டிய குறை -துக்கம் கலந்து –ஷயம் -முடியும் –அதிசயம் -உலக இன்பங்களை விட சுவர்க்கம் மேலானது போல் இதற்கு மேலானவை உண்டே-தத் விபரீதமானவே ஸ்ரேயஸ் -அழியாத துக்கம் கலசாத முக்தி -சாங்க்யர் காரிகை ஸ்லோகம் –வ்யக்தம்-கண்ணால் காண்பவை – அவ்யக்தம் பிரகிருதி –அறிவாளி -மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு அடையலாம்
    இங்கு அறியப்பட வேண்டியது என்ற வேத வாக்கியம் இல்லையே -)

    5-வத₃தி இதி சேத் ந ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத்
    வத₃தி
    – ’சொல்கிறது’ –அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் பூர்வபக்ஷீ.
    அஶப்₃த₃ம் அஸ்பர்ஶம் அரூபம் அவ்யயம் ததா₂ அரஸம் நித்யம் அக₃ந்த₄வச்ச யத் ।
    அநாத்₃யநந்தம் மஹத꞉ பரம் த்₄ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா₂த் ப்ரமுச்யதே ||

    ஒலி தொடுவுணர்ச்சி வண்ணம் சுவை மணம் இல்லாததாய், நித்யமானதாய், மஹான் என்பதைவிட உயர்ந்ததான பொருளை அறிபவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடிகிறான்.-இவ்வாறு மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று வேதமே சொல்கிறபடியால் அவ்யக்தம் என்பது ப்ரக்ருதி தான்.

    மூல ப்ரக்ருதியைப் பற்றின உபதேசமே இல்லை —இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு–ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத் – ப்ராஜ்ஞன் (மிகுந்த அறிவாளி) என்ற பரமாத்மாவின் ப்ரகரணம் அன்றோ இது-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே பரமாத்மா தான் பேசப்பட்டு வருகிறார். முதலில் புலன்களை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைய முடியும் என்று சொல்லி, பிறகு கூர்மையாகச் சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் தான் அந்த விஷ்ணுவை காண முடியும் என்று சொல்லி, தற்போது இந்த வாக்கியத்தில் ’ஒரு பொருளை’ அறிந்தால் முக்தி கிடைக்கும் என்று சொன்னால் அந்தப் ’பொருள்’ விஷ்ணுவாகத் தான் இருக்க முடியும், திடீரென்று தொடர்பே இல்லாத மூல ப்ரக்ருதியை இங்குச் சொல்வதாகக் கொள்ள முடியாது. எனவே , அவ்யக்தம் என்ற பொருள்’அறியப்பட வேண்டும்’ என்று இங்கு சொல்லாதபடியால் அது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

    (இந்த வரிகளுக்கு முன்னால்-விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
    சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
    -என்றும்-அதற்கு கீழே –
    ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்-சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு-பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –புத்தரோத்மா மஹான் பர -என்றும்-மேலானவன் என்று உணர முடியலாம்-)

    இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று-பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே)

    பூர்வபக்ஷீ கேட்கிறார் – இந்தப் ப்ரகரணத்தில் விஷ்ணுவும் சொல்லப்படுகிறார், ப்ரக்ருதியும் சொல்லப்படுகிறது என்று கொண்டால் என்ன? என்று. அதற்கு பதில் கூறுகிறார் வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் -6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபந்யாஸ: ப்ரஸ்ந: ச–த்ரயாணாம் ஏவ ச – உபேயம் உபாயம் உபேதா என்ற மூன்று பொருள்களுக்கு மட்டும் தான்–ஏவம் உபந்யாஸ: – இவ்வாறு அதாவது அறியப்பட வேண்டியவை என்று இங்கு உபந்யாஸம் உள்ளது-ப்ரஸ்ந: ச – கேள்வியும் கூட (அந்த மூன்றைப் பற்றித் தான் உள்ளது) நசிகேதஸ் தன் மூன்றாவது வரத்தால் முக்தி எப்படிப்பட்டது என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் உபேயம் (அடையப்படும் இலக்கு), உபாயம் (முக்தி அடையும் வழி) மற்றும் உபேதா (அடைபவர்) என்ற மூவர் தான் அடங்கியுள்ளார்கள். (ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-)யம தர்மனும் உபேயம் பரமாத்மாவே , உபாயம் பக்தி தான், உபேதா ஜீவாத்மா என்று அதனதன் தன்மைகளையே உபதேசிக்கிறார். எனவே இங்கு மூல ப்ரக்ருதியைப் பற்றிப் பேச்சே இல்லை .

    (தம் துர்தர்சம்– கூடம் மறைக்கப்பட்டு அனுப்பிரவிஷ்டம் குஹாயம் புராணம் தேவம் -அவ்யாத்மயோகம் -ஆத்ம சாஷாத்காரம் வந்து த்யானம் செய்து ஹர்ஷ சோகம் தாண்டி இன்பமயமான விஷ்ணு பதம் அடைகிறான்-பிரிய தமனாக உள்ளவர்களையே தேர்ந்து எடுத்துக் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான்அன்பு பக்தியே அடையும் வழி)

    7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” – (7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” –(புத்தேராத்மா மகான் பர –) புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ’மஹான்’ என்ற இடத்தில்-மஹான் என்பது அசேதனப் பொருள் அல்ல, அதை ’ஆத்மா’ என்று சொல்கிறபடியால். அதே போல், ’மஹான் என்ற ஆத்மாவை விட அவ்யக்தம் உயர்ந்தது” என்று சொல்கிறபடியால், அந்த அவ்யக்தம் ப்ரக்ருதியாக இருக்க முடியாது,-ஜீவாத்மாவை விட மூல ப்ரக்ருதி உயர்ந்தது என்று ஸாங்க்ய மதத்தில் ஏற்காதபடியால்.)

    1-4-2–சமஸாதி₄கரணம்-ப்ரக்ருதியும் படைக்கப்படுவதே

    ஸாங்க்ய மதத்தின் விமர்சனம்
    இந்தப் பாதத்தில், கபிலாசார்யரின் ஸாங்க்ய மதத்தைச் சொல்வது போல் இருக்கும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து, அவையும் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை , பரமாத்மா ஜகத்காரணம் என்று தான் காட்டுகின்றன என்கிறார் வ்யாஸர். அதனால், முதலில் ஸாங்க்ய மதத்தை நன்கு புரிந்து கொள்வோம்-(தந்த்ர ப்ரக்ரியை -சாங்க்ய மதத்தை இப்படியும் சொல்வர்).மூல ப்ரக்ருதி’ என்பது தான் இந்த உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள். அதில் ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்கள் உள்ளன. ப்ரளய நிலையில் இம்மூன்று குணங்களும் ஸம நிலையில் இருக்கும்.-ஸ்ருஷ்டி ஏற்படும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ப்ரக்ருதி என்பது நித்யமானது, என்றும் இருக்கும்.ஸ்ருஷ்டி நடக்கும் போது, ப்ரக்ருதியிலிருந்து ’மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து அஹங்காரம் என்ற தத்துவமும் உண்டாகின்றன. பிறகு, தாமஸ அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரம், ஸ்பர்ச தந்மாத்ரம், ரூப தந்மாத்ரம், ரஸ தந்மாத்ரம் மற்றும் கந்த தந்மாத்ரம் என்ற 5 தந்மாத்ரங்களும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற 5 பூதங்களும் தோன்றுகின்றன. ஸாத்த்விக அஹங்காரத்தலிருந்து கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற 5 ஜ்ஞாந இந்த்ரியங்களும். பேச்சுப்புலன் கைகள் கால்கள் மற்றும் மலம் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்ற 5 கர்ம இந்த்ரியங்களும், மனது என்ற உட்புலனும் தோன்றுகின்றன. ஆக மொத்தம் 24 விதமான அசேதனப் பொருள்கள் உள்ளன–இவற்றை யெல்லாம் விட உயர்ந்தவர், ஜ்ஞாநம் உடையவர் ஜீவாத்மா. அவர் 25ஆவது தத்துவம்.-இவற்றுக்கு மேல் பரமாத்மா, ஈச்வரன், ப்ரஹ்மம் என்று ஒரு தத்துவம் கிடையாது. இதுதான் ஸாங்க்ய மதம்-இதில் தத்துவங்களின் வரிசை , தன்மைகள் இவற்றை யெல்லாம் ஸித்தாந்தத்திலும் ஏற்றாலும், பரமாத்மா என்று 26ஆவது ஒரு தத்துவம் உள்ளது என்றும், அவர்தான் மற்ற சேதனங்கள் மற்றும் அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவற்றை இயக்குகிறார் என்றும் சொல்கிறோம். இதுவே வேறுபாடு-இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸாங்க்ய மதம் தவறென்று காட்டப்படுகிறது.

    (மந்த்ரிக உபநிஷத் -விகார ஜனணீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் -கீதையிலும் இதே போல் பஞ்ச பூதங்கள் -மனஸ் -அஹங்காரம் மஹா -அஜாம் த்ருவாம் -அவரால் இயக்கப்பட்டு -மக்களுக்கு வேண்டிய பலன்களை அவன் இயக்கத்தால் உண்டாகிறது –
    முக்குண -வெள்ளை கறுப்பு சிகப்பு -சத்வ ரஜஸ் தமஸ் -மயம் -ஸர்வகாம -நினைத்தபடி உண்டாக்கி-அஞ்ஞர்கள் இப்பிரக்ருதியைக் குடிக்கிறார்கள் -அனுபவிக்கிறார்கள் -உழன்று கொண்டு குமாரர் -சிறுபிள்ளைத்தனம் -தேவதேவன் வசத்தில் பிரகிருதி வசப்பட்டு -ஆசைப்பட்டபடி இத்தை உருவாக்குகிறார் -அந்த ஈஸ்வரன் -26/27 தத்வம் என்றும் சொல்கிறார்கள் -காலத்தையும் சேர்த்தது 27—ஸ்வேதாஸ்வரம் -அறிவுடையவர் அறிவில்லாதவர் -ஈசன் -அனீசன் -போக்த்ரு -போக்யம் -பத்யதே கட்டி வைக்கப்படுகிறான் -ஈஸ்வரனை அறிந்து விடுபடலாம் -ஷரம் பிரதானம் -மூலப்பிரக்ருதியை உருவம் மாறி -அம்ருதம் அக்ஷரம் -ஜீவாத்மா -இருவருக்கும் ஈசன் ஏக -அவனையே தியானித்து பூஜை செய்து மனஸால் சாஷாத்காரித்து -அனுக்ரஹத்தால் மோக்ஷம்-விஸ்வ மாயை -இல்லாத பொருள் அர்த்தம் இல்லை -ஆச்சர்யம் -மாயா அஸ்திரம் -பிரயோகம் -ஆச்சர்யமானது -)

    வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
    நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே .-அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
    விகாரஜனனீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்₄ருவாம் | த்₄யாயதே அத்₄யாஸிதா தேந தந்யதே ப்ரேர்யதே புந:-பல விதமான காரியப் பொருள்களை உண்டாக்குவதாய், அறிவற்றதாய், எட்டு வடிவங்கள் உடையதாய், உண்டாக்கப் படாததாய், அழியாததான இந்த ப்ரக்ருதி பரமாத்மாவாலே அதி₄ஷ்டா₂நம் செய்யப்பட்டு(இயக்கப்பட்டு) விரிவடைகிறது செயல்படுகிறது.

    ஸிதா அஸிதா ச ரக்தா ச ஸர்வகாமது₃கா₄ விபோ ₄:| பிப₃ந்தி ஏநாம் அவிஷமாம் அவிஜ்ஞாதா : குமாரகா: || வெளுப்பு, கருப்பு, சிவப்பு என்ற மூன்று வண்ணங்கணை (ஸத்த்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்கணை) உடைய இந்த ப்ரக்ருதி ஈஸ்வரனின் ஆணைப்படி இயக்கப்படுகிறது. இதன் உண்மையை அறியாத குழந்தை போன்ற
    ஜீவாத்மாக்கள் இதையே குடித்து (அநுபவித்து) அதில் ஈடுபடுகிறார்கள்.

    ஏகஸ்து பிப₃தே தே₃வ: ஸ்வச்ச₂ந்த₃: வசாநுகா₃ம்| தம் ஷட்₃விம்சகம் ஆஹு: ஸப்த விம்சம் அத₂ அபதர ||-ஒரு தேவன் மட்டும் தான் இந்தப் ப்ரக்ருதியைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு தான் ஆசைப்பட்டபடி இதை அநுபவிக்கிறார். அந்த பரமாத்மாவை 26ஆவது தத்துவம் என்றோ , (காலத்தையும் கணக்கிட்டால்) 27ஆவது தத்துவம் என்றோ கூறுகிறார்கள்.

    வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
    நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே . அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
    ஜ்ஞாஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ அஜா ஹ்யேகா போ₄க்த்ரு போ₄கா₃ர்த₂ரூபா|
    அநீசஶ்ச ஆத்மா ப₃த்₄யதே போ₄க்த்ருபா₄வாத் ஜ்ஞாத்வா தே₃வம் முச்யதே ஸர்வபாசை : ||-
    ஜ்ஞாநீ மற்றும் அறிவிலியாக, இயக்குபவர் மற்றும் இயக்கப்படுவராக இரண்டு விதமான (பரமாத்மா மற்றும் ஜீவாத்மா) நித்யமான ஆத்மாக்கள் உள்ளார்கள். அவர்கள் அநுபவத்துக்காக ப்ரக்ருதி என்ற ஒரு அழியாத தத்துவம் உள்ளது. இயக்கப்படும் ஆத்மா தானே போ₄க்தா (ப்ரக்ருதியால் வரும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவன்) என்று
    எண்ணி அந்தப் ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு விடுகிறார். எப்போது இயக்கும் பரமாத்மாவை உணர்கிறானோ அப்போது எல்லா கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறார்.

    க்ஷரம் ப்ரதா₄நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மநௌ ஈசதே தே₃வ ஏக: |
    தஸ்ய அபி₄த்₄யாநாத் யோஜநாத் தத்த்வபா₄வாத் பூ₄யஶ்சாந்தே விஸ்வமாயா நிவ்ருத்தி: ||-
    மாறிக்கொண்டே இருக்கும் ப்ரதானம், மாறாத ஜீவாத்மா எனும் இருவரையும் இயக்கும் தேவன் ஒருவனே . அவனை த்யானித்து, பூஜை செய்து, ஸாக்ஷாத்காரம் செய்தால் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.

    மாயாம் து ப்ரக்ருதிம் வித்₃யாத் மாயிநம் து மஹேஸ்வரம்| அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-மாயை (ஆச்சரியமானது) என்று ப்ரக்ருதியை அறிவாய். அதை இயக்கும் மாயாவியாக ஈஸ்வரனான பரமாத்மாவை அறிவாய். இந்த மாயை எனப்படும் ப்ரக்ருதியிலிருந்து தான் பகவான் உலகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.-இப்படி ஸ்பஷ்டமாக வேதாந்தம் கூறுவதால், இதோடு முரண்பட்ட இடங்களில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறோம்

    அதிகரணத்தின் பின்புலம்
    1-4-2-சமஸாதி₄கரணம் – ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் அவ்யக்தம் என்ற சொல் பொதுவாக ப்ரக்ருதியைக் குறித்தாலும்,-இங்கு சரீரம் என்ற சொல் உள்ள படியால் சரீரத்தைத் தான் குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படியானால், சரீரம்
    என்ற சொல் இல்லாத இடத்தில் மூல ப்ரக்ருதியைத் தானே பொருளாகக் கொள்ள வேண்டும் என்று ஸந்தேஹம்.
    விஷய வாக்யம் – ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள பின்வரும் வாக்கியம் –அஜாம் ஏகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா: |
    அஜோ ஹ்யேகோ ஜுஷமாந: அநுசேதே ஜஹாதி ஏநாம் பு₄க்த போ₄காம் அஜ: அந்ய: ||-
    உண்டாக்கப்படாததாய், ஒன்றாய், சிவப்பு வெள்ணை கருப்பு என்ற வண்ணங்களை உடையதாய், தன்னைப் போன்றபல பொருள்களாய் உண்டாக்கக் கூடியதாய் இருக்கும் ப்ரக்ருதியை (அஜாம் -ப்ரக்ருதி பெண் பால் சொல்) உண்டாக்கப்படாத ஒருவன் (பத்₃த₄ ஜீவாத்மா) விரும்பி அநுபவிக்கிறான், மற்றொருவன் (முக்த ஜீவாத்மா) இதை அநுபவித்து முடித்து விட்டு விடுகிறான்.

    ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதத்தின்படி ஸ்வதந்த்ரமாக உலகைப்படைக்கும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? அல்லது பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டு அவரால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா?
    பூர்வ பக்ஷம் – ஸாங்க்ய மதத்தில் சொன்னபடி ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் இங்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் –
    1- “அஜாம்” அதாவது’உண்டாக்கப்படாதது’ என்று இங்கு ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. ஸித்தாந்தத்தில் ப்ரக்ருதியும் ப்ரஹ்மத்தின் கார்யம் தான், அதாவது உண்டாக்கப்படுவது தான். ஸாங்க்யர்கள் தான் ப்ரக்ருதி உண்டாக்கப்படாதது என்று சொல்கிறார்கள். எனவே இங்கு ஸாங்க்ய மதம் தான் பேசப்படுகிறது.
    2- “ஸ்ருஜமாநாம்”-அதாவது“படைப்பவள் ” என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. “
    படைப்பைச் செய்பவள் ”-“படைப்பின் கர்த்தா” என்று பொருள். கர்த்தா (செய்பவள்) என்று ஸ்வதந்த்ரமாகச் செயல்படுபவனைத் தான் சொல்ல முடியும் என்று பாணிநி மஹரிஷி தன் இலக்கண நூலில் கூறுகிறார். எனவே ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகத் தான் உலகைப் படைக்கிறது என்று வேதமே ஏற்றுக் கொண்டுள்ளது.-எனவே

    அஜா என்ற சொல்லின் பொருள்
    ஸித்தாந்தம் –
    இந்த வாதத்தை மூன்று ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
    1-சமஸவத் அவிசேஷாத் – “சமஸத்தைப் போல்; குறிப்பிட்டுத் தோன்றாதபடியால்”
    ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (அர்வாக்₃பி₃ல: சமஸ: ஊர்த்₄வபு₃த்₄ந: ) என்று ஒரு வாக்கியம் உள்ளது. “கீழே ஓட்டை உடையதாய், மேலே பெரிதாக இருக்கும் சமஸம்” என்ற அதற்குப் பொருள்.-சமஸம் என்ற சொல் பொதுவாக யாகத்தில் உபயோகிக்கப்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.(சோமயாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரங்களுக்கு சமசம்-என்றும் க்ரஹம் சொல்வர் ) பாத்திரம் மேல்பக்கம் ஓட்டை யோடும் கீழே பெரிதாகவும் இருக்கும். ஆனால் இங்கு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. –சமஸம் என்ற சொல்லுக்கு “உண்ணும் கருவி” என்று தான் பொருள். (சமசம் –சமு பஷணே -உண்பதற்கான கருவி -பங்கஜம் -சேற்றிலே பிறந்தது உண்மையான பொருள் போல் )எனவே அச் சொல்லைக் கேட்டதும் உடனடியாக பாத்திரம் தான் குறிப்பிட்டு மனதில் தோன்றாது. உண்பதற்குப் பயன்படும் ஏதோ ஒரு கருவி சொல்லப்படுகிறது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எனவே , எந்த ஒரு பொருளும் சமஸம் என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டுத் தோன்றாதபடியால், சுற்றியுள்ள வாக்கியங்களை வைத்துத் தான் இச்சொல் எதைக் குறிக்கிறது என்று அறிய முடியும்.-அருகிலேயே ’இத₃ம் தச்சி₂ர:’ (இதுதான் தலை ) என்கிற வாக்கியம் உள்ள படியால் இங்கு சமஸம் என்ற சொல் தலையைத் தான் குறிக்கிறது என்று முடிவு செய்யலாம். தலையும் உண்பதற்குப் பயன்படுகிறது, கீழே வாய் என்ற ஓட்டையை உடையது, மேலே பெரிதாய் இருக்கக் கூடியது. எனவே இவ் வர்த்தம் பொருத்தமானதே .-அதே போல் இங்கு “அஜா” என்ற சொல்லுக்கு “உண்டாக்கப்படாதது” என்று தான் பொருள். குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி மனதில் தோன்றாது. எனவே , மற்ற வாக்கியங்களைக் கொண்டுதான் இங்கு எந்தப் பொருள் கூறப்படுகிறது என்று முடிவு செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களில் முக்குணங்களை உடையதாய், உலகப் பொருள்களை உண்டாக்குவதாய், பரமாத்மாவால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. எனவே அதுவே அஜா.-“படைப்பவன் ” என்று சொன்னாலும் ஸ்வதந்த்ரமானது என்று பொருள் கிடைக்காது-(இதுவும் பொதுவான சொல் தானே ). “தேர் ஓடுகிறது” என்று சொல்கிறோம். அங்கு தேருக்கு ஸ்வதந்த்ரமாக இயங்கும் தன்மை இல்லா விட்டாலும் “ஓடுதலைச் செய்கிறது” என்று கூறுகிறோம். அதே போல் இங்கும், பரமாத்மாவால் இயக்கப்பட்டு ப்ரக்ருதி இத்தனைப் பொருள்களை உண்டாக்கினாலும், அதை “படைப்பவள் ” என்று சொல்வது தவறில்லை –

    (உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
    ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

    பிருஹு –4-2-3–இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது-தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
    அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-)

    உண்டக்கப்படாதது, ஆனால்-படைக்கப்பட்டது
    2-ஜ்யோதி ருபக்ரமா து ததா ₂ ஹி அதீ₄யதே ஏகே
    ஜ்யோதி ருபக்ரமா து
    – ஜ்யோதிஸ் என்ற பரமாத்மாவிடமிருந்து பிறந்தது தான்
    ஹி ஏனெனில்
    ததா ₂ அவ்வாறு
    ஏகே வேதாத்யயனம் செய்யும் ஒரு சிலர் அதீ₄யதே – ஓதுகிறார்கள்.
    தைத்திரீய சாகையில் “அணோரணீயாந்” என்று பரமாத்மாவின் பெருமைகளை உபதேசித்து,“ஸப்த ப்ராணா: ப்ரப₄வந்தி தஸ்மாத்” என்று தொடங்கி ப்ராணன், மலை , கடல் முதலானாவை பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என்று சொல்லி, அதற்கு இடையில் நாம் பார்த்த விஷய வாக்கியத்தைப் போலவே ஒரு வாக்யம் உள்ளது
    “அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸரூபாம்” என்று.(தைத்ரிய சாகையிலும் -ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் போல் வாக்கியம் உண்டே) எனவே , பரமாத்மாவால் படைக்கப்படும் பொருள்களின் வரிசையில் ப்ரக்ருதியும் படிக்கப்பட்டபடியால், ப்ரக்ருதியும் பகவானால் படைக்கப்படுவது தான் என்று தெரிகிறது. எனவே ஸாங்க்யர்கள் சொல்லும் ப்ரக்ருதியை வேதம் ஏற்கவில்லை .-மேலும், “தே அபச்யந் தே₃வாத்ம சக்திம்” என்று பகவானுடைய சக்தி (விட்டுப் பிரியாத பண்பு) என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறபடியால், அது ஸ்வதந்த்ரமானது அல்ல என்று தெரிகிறது.
    கேள்வி – ப்ரக்ருதி அஜா (உண்டாக்கப்படாதது) என்றும் ஜ்யோதிருபக்ரமா (பரமாத்மாவிடமிருந்து உண்டானது) என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்? இவ் விரண்டு பண்புகளும் முரண்பட்டவை அன்றோ ? பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
    3-கல்பதநாபதே₃சாத் ச மத்₄வாதி₃வத் அவிராேத₄:கல்பநோபதே₃சாத் ச – கல்பனம் (ஸ்ருஷ்டி) என்பதைப்பற்றின உபதேத்தால்
    அவிராேத₄:— முரண்பாடு இல்லை
    மத்₄வாதி₃வத் –-மது₄வித்₃யை முதலானவற்றில் போலே
    மது₄ வித்₃யையில் உதயம் அஸ்தமனம் முதலானவற்றை உடைய ஸூர்யனுக்கும் அதில்லாத ஸூர்யனுக்கும் அந்தர்யாமியாக பரமாத்மா சொல்லப்பட்டார். இதில் முரண்பாடு இல்லை ஏனெனில் ஒன்று காரண நிலை (ஸ்ருஷ்டிக்கு முன்), மற்றொன்று கார்ய நிலை . அதே போல் இங்கும் முரண்பாடு இல்லை , இரண்டு நிலைகள் உள்ளன.-மூல ப்ரக்ருதி ப்ரளய காலத்தில் முக்குணங்களை ஸமமான நிலையில் கொண்டிருக்கும். அது படைக்கப்படாத்து, –அஜா. -அதற்குப் பின் அதுவே முக்குணங்களில் ஏற்றத் தாழ்வுகளோடு ஆகிறது. இது காரிய நிலை , உண்டாக்கப் படுகிறது. எனவே ப்ரக்ருதியை ஜ்யோதி ருபக்ரமா என்ற சொல்வதும் தவறல்ல.

    (அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேக்சிகையாலே
    பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
    அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது-ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே)

    —————

    (இப்பாதத்தால் —நிரதிவதிக மஹிமை -ஸ்தாபிக்கப்படுகிறது -கீழ் மூன்று பாதங்களிலும் ஸ்ரஷ்டா -தேஹீ- ஸ்வ நிஷ்டா -பார்த்தோம்) 1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம்-தத்துவங்களின் எண்ணிக்கை

    1.4.3 அதிகரத்தின் பின்புலம்
    1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம் – ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் ’
    அஜா’ என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றாதபடியால், மற்ற வாக்கியங்களைக் கொண்டு அது பரமாத்மாவால் இயக்கப்படுவது தான் என்று முடிவு செய்தோம். இந்த அதிகரணத்தில், பரமாத்மா என்றொருவரை ஒப்புக் கொண்டால்
    எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறபடியால் குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றுகிறபடியால் அப்படியே ஏற்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

    விஷய வாக்யம் – சுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு வாக்கியம்- யஸ்மின் பஞ்ச பஞ்சஜநோ: ஆகாசஶ்ச ப்ரதிஷ்டி₂த: தமேவ மந்ய ஆத்மாநம்–எதில் ஐந்து ’பஞ் ஜந’ங்களும் ஆகாஸமும் நிலை பெற்றிருக்கின்றனவோ , அதுவே ஆத்மா
    ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதம் சொல்லும் ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? இல்லையா?
    பூர்வபக்ஷம் – இங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் சொல்லப்படுகிறது.
    பஞ்ச ஜந: என்ற சொல்லுக்கு ’ஐந்து பொருள்களின் ஸமுதாயம்/கூட்டம்’ என்று பொருள். ’பஞ்ச ’ என்றால் ஐந்து.-எனவே , ஐந்து பொருள்களைக் கொண்ட ஸமுதாயங்கள் ஐந்து உள்ளன என்று தெரிகிறது. அந்த 25 பொருள்களும் ஆகாஸமும் ஜீவாத்மாவால் தாங்கப்படுகின்றன என்று தான் இந்த வாக்கியம் கூறுகிறது.
    ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 25 பொருள்கள் தானே ? இங்கு 27 உள்ளனவே ? என்னில் – ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவற்றை ப்ரக்ருதி என்ற த்ரவ்யத்தின் குணங்களாகக் கொள்ளாமல் தனித் தனி த்ரவ்யங்களாகக் கொண்டால்-அசேதன தத்துவங்களே 26, அதற்கு மேல் ஜீவாத்மா 27ஆவது. எனவே அந்த எண்ணிக்கையும் பொருந்தும்.
    பரமாத்மா என்று ஒரு பொருளை ஏற்றுக் கொண்டால், 28 தத்துவங்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்த வாக்கியத்தில் வேதம் 25 + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27 தத்துவங்களையே சொல்கிறது. எனவே பரமாத்மா என்றொருவர் கிடையாது. எனவே ப்ரக்ருதி அவரால் இயக்கப்படுவதல்ல, ஸ்வதந்த்ரமானது தான். எனவே அதுவே தான் ஜகத்காரணம், பரமாத்மா அல்ல – என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

    உண்மையான தத்துவ எண்ணிக்கை
    ஸித்தாந்தம் – 1-ந ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி நாநா பா₄வாத் அதிரேகாத் ச
    ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி
    – 25 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட
    – (ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட ஸ்வதந்த்ரமான தத்துவங்கள் இங்கு சொல்லப்படுகின்றன என்பது) தவறு
    நாநா பா₄வாத் – அவற்றைக் காட்டிலும் வேறுபட்ட படியால் (பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டபடியால்)
    அதிரேகாத் ச – எண்ணிக்கை அதிகமாக உள்ள படியாலும்

    இங்கு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், அவை ஸாங்க்யர்கள் சொல்லும் பொருள்கள் என்று கொள்ள முடியாது, ஏனெனில் ’-நாநா பா₄வாத்’ – ஸாங்க்ய மதத்தில்-பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத தத்துவங்களே ஏற்கப் படுகின்றன ஆனால் இந்த வாக்கியத்தில் 25 பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் ஆதாரமாகவும் பரமாத்மாவே சொல்லப்படுகிறார். எனவே இவை வேறு.

    இங்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மா என்று கொள்ளலாமே ? எனில் – “அதிரேகாத் ச”- இங்குள்ள-தத்துவங்களின் எண்ணிக்கை ஸாங்க்யர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 24 அசித் + 1 ஜீவாத்மா = 25 தான். ஆனால் இங்கு 25 பொருள்கள் + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27
    பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று த்ரவ்யங்கள் என்று சொன்னதும் தவறு, பல ப்ரமாணங்களில் அவை குணங்கள் என்றே சொல்லப்படுகிற படியால். எனவே காலம் என்பதையும் சேர்த்து, 26 தத்துவங்களுக்கு ஆதாரமானவர் 27ஆவது தத்துவமான பரமாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.

    உண்மையில், ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத் அபி அதாவது-“25 என்ற எண்ணிக்கையை ஏற்றாலு ம்கூட” என்று ஸூத்ரம் உள்ள படியால், வேதவ்யாஸர் இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் – ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று’ஐவரின் கூட்டங்கள் ஐந்து’ சொல்லப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பொதுவான தன்மை
    வேண்டும். அது இங்கு இல்லை . 5 கர்மேந்த்ரியங்கள், 5 ஜ்ஞாநேந்த்ரியங்கள், 5 தந்மாத்ரங்கள் என்று சொன்னாலும் 5 பூதங்கள் என்றொரு கூட்டத்தை அமைக்க முடியாது, ’ஆகாஸம்’ தனியாக எடுக்கப்பட்டபடியால். மேலும், ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் ஆத்மா மனஸ் என்னும் ஐந்தையும் ஒரு கூட்டமாகத் திரட்ட எந்தப் பொதுவான தன்மையும்
    இல்லை . எனவே இங்கு 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொன்னதே தவறு.

    (ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது)

    வேத வ்யாஸரின் கருத்து
    பிறகு ’பஞ்ச பஞ்ச ஜநா:
    ’ என்பதன் பொருள் என்ன? பஞ்ச ஜநங்கள் என்று சிலருக்குப் பெயர் வழங்கப்படுகிறது.-அவர்கள் ஐவர் எனப்படுகிறது,-’ஏழு ஸப்தரிஷிகள்’ என்பது போல். அவர்கள் யார் என்கிறது அடுத்த ஸூத்ரம் –
    2- ப்ராணாதய ₃ : வாக்ய சேஷாத் – “ப்ராணன் முதலானவை , மீதமிருக்கும் வாக்கியத்தால்”
    விஷய வாக்கியத்துக்கு அடுத்து வரும் வாக்கியத்தில் -(ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷுஷஸ் சஷுஸ்: ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், அந்நஸ்ய அந்நம், மனஸோ யே மநோ விது₃:) அதாவது
    “ப்ராணனுக்குப் ப்ராணனாக, கண்ணுக்குக் கண்ணாக, காதுக்குக் காதாக, அந்நத்துக்கு அந்நமாக, மனதுக்குமனதாக அவர் இருக்கிறார்” என்று உள்ளது. அங்கும் ஐவர் சொல்லப்படுகிறபடியால், அந்த ப்ராணன் கண் காது அந்நம் மனஸ் என்று ஐவர் தான் பஞ்ச ஜநங்கள் என்று தெரிகிறது.
    கேள்வி – காண்வ சாகையில் இதே விஷய வாக்கியம் உள்ளது, ஆனால் அதற்கு மேல் வரும் ’ப்ராணஸ்ய ப்ராணம்’ என்ற வாக்கியத்தில் ’அந்நம்’ என்பது இடம் பெற வில்லை . எனவே 4 தான் அங்கு உள்ள படியால் ஐந்து பஞ்ச ஜனங்கள் வேறாகத்தானே இருக்க வேண்டும்? பதில் – அடுத்த ஸூத்ரத்தில் -3-ஜ்யோதிஷா ஏகேஷோம் அஸதி அந்நே
    ஏகேஷோம்
    ஒரு சிலர் ஓதும் காண்வ சாகையில்
    அஸதி அந்நே – அந்நம் சொல்லப்படாவிட்டாலும்
    ஜ்யோதிஷோ ஜ்யோதிஸ்-என்ற சொல்லைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம்
    காண்வ சாகையில் விஷய வாக்கியத்துக்கு முன்னால் (தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம்.: )என்று பரமாத்மாவை ஜ்யோதிஸ்ஸுக்களுக்கு (ப்ரகாஸம் கொடுக்கும் பொருள்களுக்கு) ஜ்யோதிஸ்ஸாக சொல்லப்படுகிறார். அவை எத்தனை என்றால்,
    ’பஞ்ச பஞ்ச ஜனா:’ என்று ஐவர் எனப்படுகிறது. ப்ரகாஸம் கொடுக்கும்
    ஐவர் என்றால் எது ஜ்ஞாநத்தை ஏற்படுத்தும் இந்த்ரியங்களையே நினைவு படுத்துகிறது. -எனவே பஞ்ச ஜனர்கள் என்பவை இந்த்ரியங்களே -சஷுஸ் கண். ஸ்ரோத்ரம் காது. ப்ராணன் என்றால் வாயுவை அறியும் தோல் என்ற இந்த்ரியம். மனஸ் மனது-அந்நம் என்ற சொல் மூக்கு நாக்கு என்ற இரண்டையும் சொல்கிறது.
    எனவே , இங்கு 25 என்ற எண்ணிக்கை சொல்லப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஸாங்க்ய மதம் சொல்லப்படவில்லை , பரமாத்மாவே சொல்லப்படுகிறார் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

    —————–

    1-4-4-காரணத்வாதி₄கரணம் ஸத் அஸத் இரண்டுமே ப்ரஹ்மம் தான்

    1-4-4-அதிகரணத்தின் பின்புலம்-1-4-4-காரணத்வாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’பொருள்கள் எல்லாம் ஒன்றால் தாங்கப்படுகின்றன’ என்று
    ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட்டபடியால் ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல என்று நிரூபித்தார் வ்யாஸர். அப்போது வேதாந்தத்தில் எங்கு ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட வில்லையோ அங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறது என்று கொள்ளலாமே என்று பூர்வபக்ஷீ கேட்கிறார்.

    (விஷய வாக்கியம் சொல்லி சந்தேகம் முன்பு எல்லாமே -இங்கு சந்தேகம் -பல ஜகத்காரண வாக்யங்களைக் பற்றிய சந்தேகம் -வேதாந்தமே குழப்புகிறது -என்பதே பூர்வ பக்ஷம்)

    ஸந்தேஹம் – வேதாந்தத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதியா? அல்லது பரமாத்மாவா ?
    பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் பல முரண்பட்ட வாக்கியங்கள் இருக்கிறபடியால் ’இதுதான் ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யவே முடியாது. எனவே ’ப்ரஹ்மமே ஜகத்காரணம்’ என்று நீங்கள் சொல்வது தவறு.

    சாந்தோக்ய உபநிஷத்தில் (्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது-’இந்த உலகு அனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்ததே ,-வேறு எந்தப் பொருளும் இல்லை ’ என்று சொல்லப்படுகிறது. ’இந்தக் குடங்கள் எல்லாம் முன்னால் மண் கட்டியாகவே இருந்தன’ என்று சொன்னால் குடங்களுக்கு மண் கட்டி தான் காரணம் என்று நாம் அறிவதுபோல் இந்த வாக்கியத்தால் ’இந்த உலகத்துக்கு ஸத் தான் காரணம்’ என்று அறியலாம். ஸத் என்றால் ’இருக்கும் பொருள்’ / ’உள்ள பொருள்’.

    தைத்திரீய உபநிஷத்தில் (्அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது அஸத்தாக அன்றோ இவ்வுலகம்-முன்னால் இருந்தது’ என்றுள்ள தால் அஸத் தான் ஜகத் காரணம் என்று தெரிகிறது. அஸத் என்றால் ’இல்லாதது’.

    ‘இருப்பது’,’இல்லாதது’ என்று மாற்றி மாற்றி ஜகத் காரணப் பொருள் சொல்லப்படுகிறபடியால் இதுதான் ஜகத்காரணப் பொருள் என்று வேதாந்தத்தைக் கொண்டு முடிவு செய்யவே முடியாது.-அப்படியே முடிவு செய்தாலும்,
    (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந்நாமரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ’ என்று இவ்வுலகம் ’அவ்யாக்ருதம்’ அதாவது பெயர் மற்றும் உருவத்தால் பிரித்து அறியப்பட முடியாதபடி இருந்தது, இப்போது பெயர் மற்றும் உருவத்தால் பிரிக்கப்படுகிறது’ என்றுள்ள தால் ஜகத்காரணம் =அவ்யாக்ருதம் = அவ்யக்தம் = மூலப்ரக்ருதி என்றுதான் முடிவு செய்யலாம்.-இந்த மூல ப்ரக்ருதியே நித்யமானபடியால் (எப்போதும் இருப்பதால்) ஸத் என்றும், வடிவங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் அஸத் என்றும் சொல்லப்படுகிறது. பரமாத்மாவை இப்படி ஸத் மற்றும் அஸத் என்று கூற முடியாது.

    (ஈஷதே -முளை தயார் நிலையில் உள்ள விதை போல் பிரகிருதி -ப்ரஹ்மம் -பெரியது -ஆத்மா -எங்கும் வியாபித்து இருப்பதால் -என்று அர்த்தங்கள் கொண்டு ப்ரக்ருதியையே சொல்வதாகக் கொள்ளலாம் -பூர்வ பக்ஷம்)

    வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்-(1) காரணத்வேந ச ஆகாசாதி₃ஷு யதா ₂வ்யபதி₃ஷ்டோக்தே:
    ஜகத்காரணம் பரமாத்மாவே தான் என்று முடிவு செய்யலாம்,
    யதா ₂வ்யபதி₃ஷ்டே — இது வரை ஸுத்ரங்களில் சொல்லப்பட்ட ஸர்வஜ்ஞனான பாபமற்றவரான (சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸர்வேஸ்வரேஸ்வரன் சர்வ நியந்தா இத்யாதியாக இதுவரை சொல்லப்பட்ட )பரமாத்மாவை
    ஆகாசாதி₃ஷு ச –-ஆகாசம் முதலானவற்றுக்கும் கூட
    காரணத்வேந –காரணமாக
    உக்தே: சொல்கிறபடியால்
    ’ஜகத்காரணம் இது தான்’ என்று சொல்வதற்கு முன்னவே அப் பொருளைப் பற்றி வேதம் பலவிதமான உபதேசங்களைச் செய்கிறது. அந்தப் பண்புகள் எல்லாம் ஒரு ஜ்ஞாநமுடைய பொருளுக்கே பொருந்தும்,-ப்ரக்ருதிக்குப் பொருந்தாது.

    தைத்திரீய உபநிஷத்தில் – (ப்₃ரஹ்ம வித் ஆப்நோதி பரம்) அதாவது
    ’ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் முக்தி அடைகிறான்’ என்று சொல்லி, (ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா) -அதாவது’முக்தியில் அந்த எல்லை யற்ற ஜ்ஞாநமுடைய ப்ரஹ்மத்தையே அடைகிறான்’ என்று சொல்லி, (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம ) அதாவது
    ’எப்போதும் மாறாமல் இருப்பதும்,-எல்லை யற்ற ஜ்ஞாநமுடையதும், அளக்க முடியாததுமாக இருப்பதே ப்ரஹ்மம்’ என்று மறுபடியும் அதற்கு-ஜ்ஞாநமிருப்பதையே அடையாளமாகக் கூறி, (தஸ்மாத்₃வா எதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது’அப்படிப்பட்ட இந்த ஆத்மாவிடமிருந்து தான் ஆகாஸம் தோன்றியது’ என்று ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது ஜ்ஞாநமுடைய பொருளை மட்டுமே குறிக்கக்கூடிய ’ஆத்மா ’ என்ற சொல்லாலே இப் பொருளைக் குறிக்கிறது.
    இதே போல் சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள ஸத்₃வித்₃யையிலும் (த தை ₃க்ஷத ப₃ஹு
    ஸ்யாம் ப்ரஜாயேயேதி)
    என்று ’அந்த ஸத் என்ற பொருள் பார்த்தது (எண்ணியது) –-நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன் என்று’ என்று ஜ்ஞாநமிருப்பதைச் சொல்கிறது.-எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் பகுதிகள் எல்லாம் ஜ்ஞாநமுடைய பரோத்மாவையே சொல்கின்றன.

    அஸத்’ என்று ஜகத்காரணம் சொல்லப்பட்டதே ? எனில், அதுவும் பரமாத்மாவே என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் -(2) ஸமாகர்ஷாத் – “ (ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மமே அந்த வாக்கியத்திலும்) இழுக்கப் படுகிறபடியால்”’அஸத்₃வா’ எனும் வாக்கியம் உள்ள ஸந்தர்பத்தைப் பார்த்தால் அதுவும் ப்ரஹ்மத்தைத் தான் சொல்லும். முதலில் (தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆநந்த₃மய:) அதாவது-’இந்த ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எல்லையற்ற ஆநந்தம் உடையவர்’
    என்றுள்ளதால் ஆத்மா என்ற சொல்லைக் கொண்டும் ஆநந்தம் இருப்பதைக் கொண்டும் இந்தப்பொருள் ஒரு சேதநன்(ஜ்ஞாநமுடையது) என்று அறியலாம்.

    பிறகு (ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருகஜத) அதாவது
    ’அந்தப் பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைத்தது’ என்று அந்தப் பொருளே ஜகத்காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் (தத₃ப்யேஷ ஸ்லோகோ ப₄வதி) அதாவது’அந்தப் பொருளைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் உள்ளது’ என்று கூறிவிட்டு (्அஸத் ₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது’இந்த உலகம் எல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன் அஸத்தாகவே இருந்தது, அதாவது அஸத் தான் ஜகத்காரணம்’ என்று சொல்லப்படுகிறது. எனவே , இதற்கு முன் சொல்லப்பட்ட ஜ்ஞாநமுடைய, ஆநந்தமுடைய, ஜகத்காரணமான
    பரமாத்மா தான் இந்த வாக்கியத்திலும் கண்டிப்பாக இழுக்கப்பட வேண்டும் (குறிக்கப்பட வேண்டும்), ப்ரக்ருதி அல்ல.-இதற்குப் பின்னாலும் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே ) அதாவது
    ’இந்தப் பொருளின் கட்டளைக்கு பயந்து காற்று, ஸூர்யன், அக்நி, இந்த்ரன், ம்ருத்யு முதலானவர்கள் இயங்குகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.-

    (ப்ருஹத் ஆரண்யாகாவில் –தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்-அதே உபநிஷத் –ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்றுஉள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-)-எனவே , அங்கும் இதே பரமாத்மா தான் இழுக்கப்பட வேண்டும், ப்ரக்ருதியால் யாரையும் ஆள முடியாதபடியால்.ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம். அது எல்லா சேதனங்கள் மற்றும் அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டது.-அப்படிப்பட்ட ப்ரஹ்மம் நித்யமாக இருக்கிறபடியால் அதுவே ஸத் எனப்படுகிறது. இப்போது சிங்கம், மனிதன், மலை , புத்தகம் என்று பல பெயர்களோடும் உருவங்களோடும் இருந்தாலும், ப்ரளய காலத்தில் இந்தப் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளோடு இல்லாதபடியால் ’அஸத்’ (இல்லாதது) என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவ்யாக்ருதம் என்ற ப்ரக்ருதி தான் ஜகத்காரணம் என்று சொன்னாலும், ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மா என்றே பொருள்.-எனவே வேதாந்தத்தைக் கொண்டு ப்ரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்று நிச்சயிக்க முடியும் என்கிறார் வ்யாஸர்–

    —————

    1-4-5—ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-ஜீவனே ப்ரக்ருதியை இயக்க முடியாதா?

    1-4-5-அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – இதுவரை 4 அதிகரணங்களில் ப்ரதானமே ஸ்வதந்த்ரமான ஜகத்காரணம் என்று பூர்வபக்ஷீ சொன்னதை வ்யாஸர் கண்டித்தார் – ஒரு அறிவுடைய ஆத்மாவால் இயக்கப்பட்டால் மட்டுமே அறிவற்ற அசேதனப் பொருளான ப்ரக்ருதி இயங்க முடியும் என்று கூறி. இப்போது அதே ஸாங்க்யர்கள் மறுபடியும்
    கேள்வி எழுப்புகிறார்கள் – சரி, ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கவில்லை , ஜிவாத்மாவால் இயக்கப்பட்டு தான் படைக்கிறது என்று கொள்ளலாம், அப்போதும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வது தவறு தான் என்று.
    விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆம் அத்யாயத்தில் முதல் ப்ராஹ்மணம் – பா₃லாகி ப்₃ராஹ்மணம்-த்₃ருப்த பா₃லாகி: ஹ அநூசாநோ கா₃ர்க்₃ய ஆஸ । ஸ ஹோவாச அஜாத ஶத்ரும் காஶ்யம் – ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணீதி । ஸ ஹோவாச அஜாத ஶத்ரு꞉ ஸஹஸ்ர மேதஸ்யாம் வாசி த₃த்₃ம: இதி--கர்க கோத்ரத்தைச் சேர்ந்த பாலாகி என்பவன் வேதத்தின் அங்கங்களைக் கற்று- ஆனால் வேதத்தின் உண்மைப் பொருளை
    ஆராய்ந்து அறியாமல், (ஸ்ரோத்ரியன் -வேதம் முழுவதும் அறிந்தவன் –அநூசாநன் -அங்கங்களை மட்டுமே அறிந்தவன்)ஆனால் மிகவும் கர்வம் உடையவனாய் இருந்தான். அவன் சிறந்த ஆத்ம ஜ்ஞாநியான காசீ தேசத்து அரசன் அஜாத சத்ருவிடம் சென்று கூறினான் – “உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று. அரசன் ப்ரஹ்மத்தை உணர்ந்திருந்தாலும் பாலாகியை ஊக்குவிப்பதற்காக உனக்கு ஆயிரம் மாடுகள் பரிசளிப்பேன் என்றான்.

    ய ஏவ அஸஸௌ ஆதி₃த்யே புருஷ ஏதமே வ அஹம் ப்₃ரஹ்ம உபாஸ இதி । மா ஏதஸ்மிந் ஸம்வதி₃ஷ்டா₂ । அதிஷ்டா₂꞉ ஸர்வேஷாம் பூ₄தாநாம் மூர்தா₄ ராஜேதி வா அஹமேதமுபாஸ இதி-’ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் ’ என்று பாலாகி கூற,
    ’அந்தப் புருஷனைப் பற்றி என்னிடம் பேசாதே , நான் அவனை ஜீவ ராசிகளுக்கும் சிறந்தவன் என்று அறிவேன், அவன் ப்ரஹ்மம் அல்ல’ என்றார் அரசன்.
    இதே போல் சந்த்ரன் மின்னல் ஆகாஸம் வாயு அக்₃நி ஜலம் கண்ணாடி பிரதி த்வனி திசைகள் நிழல் உடல் முதலானவற்றுக்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல, அது அனைத்தையுமே தவறு என்றார் அஜாத சத்ரு.

    அஜாத சத்ருவின் உபதேசம்
    ஸ ஹ தூஷ்ணீமாஸ கா₃ர்க்₃ய꞉| ஸ ஹோவாசா ஜாதஶத்ரு: – ஏதாவந்நூ இதி | ஏதாவத்₃தீ₄தி । நைதாவதா விதி₃தம் ப₄வதீதி । ஸ ஹோவாச கா₃ர்க்₃ய – உப த்வா யாநீதி
    -இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் பாலாகி மவ்னமாக நின்றான். ’அவ்வளவு தானா?’ என்று அஜாத சத்ரு கேட்க,-’ஆம் நான் அவ்வளவு தான் அறிவேன்’ என்று பாலாகி சொல்ல,
    ’இத்தால் நீ ப்ரஹ்மத்தை அறிய முடியாது’ என்று அரசன் கூறினான். பாலாகி உடனே ’உம்மிடமே நான் ப்ரஹ்மத்தைப் பற்றி கற்கிறேன்’ என்றான்

    யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய:-நீ சொன்ன புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர் (இதுவே விஷய வாக்கியம் -நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் )
    ஸந்தேகம் – ஜகத்காரணத்தைப் பற்றிச் சொல்லும் வேதாந்த வாக்கியங்களில் ப்ரக்ருதியை இயக்குபவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?அதை முடிவு செய்வதற்கான விசாரம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவனா? பரனா?-அறியப்பட வேண்டியவர் ஜீவன் என்றால், பரமாத்மா என்ற ஓருவரே இல்லை என்றாகும், எனவே ஜீவன் தான் ப்ரக்ருதியை இயக்க வேண்டும். அறியப்பட வேண்டியவர் பரமாத்மா என்றால் அவரே ப்ரக்ருதியை இயக்குபவர்.
    பூர்வபக்ஷம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான். ஏனெனில் –1- (’யஸ்ய வா ஏதத் கர்ம’) அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்றுள்ளது. கர்ம என்ற சொல்லுக்குப் பொதுவாக பாபம் மற்றும் புண்ணியம் என்று தான் பொருள். எனவே , இங்கு அறியப்படுபவராகச் சொல்லப்படுபவருக்கு பாப புண்யங்கள் உள்ளன என்று அஜாத சத்ரு கூறுகிறபடியால் அவர் உலகில் இன்ப துன்பங்கணள அநுபவிக்கும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க முடியும். பரமாத்மாவை ஒப்புக் கொள்பவர்கள் அவருக்கு பாப புண்யங்கள் உண்டு என்று ஏற்பதில்லையே

    (செயப்படும் பொருள் -கர்மம் -கர்த்தா -செய்பவன் -என்ற பொருள்களும் உண்டே-குடம் குயவன் போல்–ஸித்தாந்தி சொல்வர்-இந்தப் புருஷர்களை உண்டாக்கியவர் எவனோ -முதலில் சொல்லி -இப்பொருள்கள் கொண்டால் புனர் யுக்தி தோஷம் வருமே-ப்ரஸித்தி பாபபுண்யங்களையே சொல்லும் -பூர்வ பக்ஷம் )

    பூர்வபக்ஷியின் யுக்திகள்
    2-தௌ ஹ புருஷம் ஸுப்தம் ஆஜக்₃மது: | தம் ஏதை தாமபி₄: ஆமந்த்ரயாம்சக்ரே | ஸ உத்தஸ்தௌ₂ | தம் பாணினா ஆபேஷம் போ₃த₄யாம்சகார | ஸ ஹ உத்தஸ்தௌ₂–
    அவர்களிருவரும் ஒரு தூங்கும் மனிதனிடம் சென்றார்கள். அவனை அஜாத சத்ரு பெயரால் அழைத்தும் அவன் எழ வில்லை . பிறகு கையால் அசைத்து எழுப்ப, அவன் எழுந்தான்.-இப்படி உபதேசம் உள்ளபடியால், தூக்கம் விழிப்பு முதலானவற்றை யுடைய ஜீவனே இங்கு சொல்லப்படுகிறார்.
    3-தத்₃யதா₂ ச்ரேஷ்டீ₂ ஸ்வை : பு₄ங்க்தே யதா₂ ஸ்வா: ச்ரேஷ்டி₂னம் பு₄ங்ஜந்தி ஏவமேவ ஏஷ ப்ரஜ்ஞாத்மா ஏதை : ஆத்மபி₄: பு₄ங்க்தே ஏவமேவ ஏதே ஆத்மா : ஏநம் பு₄ஞ்ஜந்தி-எப்படி ஒரு சான்றோனை அவன் சுற்றத்தா ரெல்லாம் மகிழ்விப்பார்களோ அதுபோல் இந்த ஆத்மாவை நீ சொன்ன புருஷர்கள் எல்லாம் மகிழ்விக்கிறார்கள் -இப்படி உலகிலுள்ள ஜீவ ராசிகளால் மகிழ்பவராகச் சொல்லப்படும் ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்கமுடியும்.

    4-க்வ ஏஷ ஏதத்₃பா₃லாகே புருஷ: அசயிஷ்ட? அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி | ஸ யதா₃ ப்ரதிபு₃த்₄யதே ஆத்ம : ப்ராணா: யதா₂யததம் விப்ரதிஷ்ட₂ந்தே , ப்ராணேப்₄ய: தே₃வா:, தே₃வேப்₄ய: லோ கா:-இவன் தூங்கும் போது எங்கு சென்றான்? எங்கிருந்து வந்தான்? ப்ராணனோடு தொடர்புபட்ட ஆத்மாவிடம் அனைத்தும் ஒன்றாகிறது. விழிக்கும் போது அங்கிருந்து மூச்சுக் காற்று, புலன்கள் எல்லாம் பிரிந்து வருகின்றன.(ஹிதம் என்னும் நாடிகளில் இருக்கிறான் -இந்திரியங்கள் மனம் அனைத்தும் அடங்கி விடும் -இவரிடம் லயம் அடைகின்றன –இவர் விழிக்கும் பொழுது தங்கள் தங்கள் இடம் செல்கின்றன )-இங்கும் ப்ராணனோடு கூடிய ஆத்மா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.-எனவே ’ப்ரஹ்மத்தைக் கூறுகிறேன்’ என்று பாலாகி தொடங்கி, சொல்ல முடியாமல் திகைத்து, பதிலுக்கு அஜாத சத்ரு’ஜீவாத்மா தான் அறியப்பட வேண்டியவர்’ என்று உபதேசிக்கிறபடியால், ஜீவாத்மா தான் ப்ரஹ்மம், ஜகத்காரணம்.

    1.4.5 ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-பரமாத்மா படைத்த உலகில் ஜீவாத்மா வாழ்கிறார்

    கர்ம எனப்படுவது பாப-புண்யங்கள் அல்ல
    ஜகத்வாசித்வாதிகரணம் – பூர்வபக்ஷம் (யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய: ) அதாவது“ஸூர்யன் சந்த்ரன் மின்னல் வானம் முதலான புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர்” என்று அஜாத சத்ரு பாலாகிக்கு உபதேசித்தார். கர்ம என்றால் பாபமும் புண்ணியமும்.அவற்றைக் கொண்டவர் ஜிவாத்மாவே . எனவே ஜீவாத்மாவே ப்ரஹ்மம்-இங்கு ’அவர் அறியப்பட வேண்டியவர்’ என்றதுக்கு ’பாப புண்யங்களோடு கூடின ஸம்ஸாரத்திலிருக்கும் ஜிவாத்மா அறியப்பட வேண்டியவர்’ என்று பொருள் அல்ல. ’முக்தி அடைந்த நிலையில் இருக்கும் தூய்மையான ப்ரக்ருதி வியுக்த (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட) ஆத்ம ஸ்வரூபம் அறியப்பட வேண்டும்’ என்று தான் பொருள். அதை அறிந்தால் தான் முக்தி கிடைக்கும்.

    ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
    1- ஜக ₃த்₃வாசித்வாத் –(கர்ம என்ற சொல்) உலகத்தைச் சொல்வதான படியால்”-விஷய வாக்யத்தில் உள்ள கர்ம என்ற சொல் இந்த உலகத்தைத் தான் குறிக்கிறது. ’கர்ம’ என்றால் ’செயப்படு பொருள்’. -பரமாத்மா செய்யும் படைத்தல் என்ற செயலில் செயப்படு பொருளாக உலகம் உள்ளது, அதாவது இவ்வுலகம் அவரால் படைக்கப்படுகிறது. எனவே அதுவே கர்ம. இச் சொல் பாப-புண்யங்கண பின்வரும் காரணங்களால் குறிக்க இயலாது

    (ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்-ஏன் எனில்-கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் – க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
    இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால் -ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து )

    1- ’ஏதத் கர்ம யஸ்ய’ அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்கிற இடத்தில் ’இந்த’ என்ற சொல் உள்ளது. அது கண் வட்டத்தில் அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும். புலன்கள் முதலான ப்ரமாணங்களால் அறியப்படும் அருகிலுள்ள பொருள் இந்த ஜகத் (உலகம்) தான், பாப-புண்யங்கள் அல்ல.
    2-இதற்கு முன் பாலாகி சொன்ன ஸூர்யன், சந்திரன், வானம், அக்நி முதலானவற்றில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் கர்மத்துக்கு வசப்பட்டவர்கள். அவர்களை யெல்லாம் ப்ரஹ்மமல்ல என்று நிராகரித்து விட்டு, அவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒருவரை உபதேசிக்கத் தொடங்கிய அஜாத சத்ரு மறுபடியும் பாப-புண்யங்களை உடைய ஒரு ஆத்மாவை ப்ரஹ்மம் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது. எனவே இங்கு கர்ம என்ற சொல் பாப-புண்யங்களைக் குறிக்க இயலாது, உண்டாக்கப்படும் இந்த உலகத்தையே குறிக்க வேண்டும்.

    பூர்வபக்ஷத்தைத் தகர்த்தல்
    3-பூர்வபக்ஷத்தில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படுகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருள் பொருந்தாதபடியால் அதோடு தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர்.-எடுத்துக்காட்டு – ’வகுப்பறை சத்தமிடுகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள ’வகுப்பறை ’ என்ற சொல்லுக்கு
    முக்கியமான பொருள் ஓர் அறை . ஆனால் அறை சப்தமிட முடியாது. எனவே அப் பொருளை விட்டு, ’வகுப்பறையில் இருப்பவர்கள்’ என்று தொடர்புடைய மற்றொரு பொருளைக் கொள்கிறோம். அப்போது பொருள் பொருந்தும்.
    அதே போல் இங்கும் ’கர்மம் யாருக்கு உள்ளதோ அவரை அறிய வேண்டும்’ என்று சொற்றொடர் உள்ளது. ஆனால் ’அவரை ’ என்ற சொல்லுக்கு ’கர்மங்களை உடையவரை ’ என்று பொருள் கொள்வது பொருந்தாது, ஏனெனில் ஸாங்க்ய மதத்தின்படி ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவின் நிலையை அறிவதால் முக்தி கிடைக்காது. எனவே அந்தச்
    சொல்லுக்கு ’முக்திக்குப் பின் தூய்மையான நிலையில் இருக்கும் ஆத்மா’ என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. எனவே ’அவர்’ என்ற சொல்லில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படும்.
    4- மேலும், பூர்வ பக்ஷத்தில் ’இந்தக் கர்மம் யாருடையதோ ’ என்றவிடத்தில் உள்ள ’இந்த’ என்ற சொல் வீணானது.
    5-ஸித்தாந்தத்தில் ’ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , இந்த உலகத்தைப் படைத்தவர் யாரோ ’ என்று ஒரே பொருள் இரண்டு முறை கூறப்படுகிறபடியால் ’புநருக்தி’ (திரும்பச் சொல்லுதல்) என்ற குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் அது வராது, இரண்டாவது வாக்கியம் பொதுப்படையாகச் சொல்கிறபடியால். ’இந்த
    ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , அவ்வளவு ஏன், இந்த உலகமே யாருடைய படைப்போ , அவரை அறிய வேண்டும்’ என்று அஜாதசத்ரு சொல்கிறபடியால் புநருக்தி இல்லை . ப்ரஹ்மத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
    6-பூர்வ பக்ஷத்தில் ’இந்த ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ ’ என்றுள்ள வாக்கியம் ஜீவாத்மாவைப் பற்றினது என்று கூறுகிறார்கள். அது பொருந்தாது. ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் எல்லாம் படைக்கப் பட்டாலும், ஜீவாத்மா இந்தப் பிறவிகளை அடைந்தாலும், அவர் இந்தப் பொருள்களை படைப்பதே இல்லை . ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப பரமாத்மாவால் படைக்கப்பட்ட பொருள்களைத் தான் ஜீவாத்மா உபயோகிக்கிறார். எனவே அஸம்பவம் (பொருந்தாமை ) என்ற தோஷமும் வரும்.
    இப்படி பல தோஷங்கள் பூர்வ பக்ஷத்தில் உள்ள படியால், ஸித்தாந்தத்தில் தோஷமில்லாதபடியால் இதுவே சரியானது.

    மற்றவர்களைப் பற்றின பேச்சு எதற்கு?
    கேள்வி –
    அஜாதசத்ரு பரமாத்மாவைப் பற்றி தான் உபதேசிக்கிறார் என்றால் ஏன் இங்கு தூக்கம், விழிப்பு, உறவினர்களால் மகிழ்தல் முதலான ஜீவாத்மாவைப் பற்றின அடையாளங்களும், தூங்கும் போது புலன்கள் எல்லாம் ப்ராணனில் ஒன்றி விடுகின்றன என்று ப்ராண வாயுவைப் பற்றின பேச்சும் உள்ளது?
    பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
    2-–्ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந தத்₃வ்யாக்₂யாதம்

    ஜீவ முக்₂யப்ராண லிங்கா₃த் ந – ஜீவனின் அடையாளங்களும் மூச்சுக் காற்றைப் பற்றின பேச்சு என்கிற அடையாளமும்-இங்கு உள்ள படியால் இங்கு சொல்லப் படுபவர் பரமாத்மா அல்ல
    இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
    தத்₃வ்யாக்₂யாதம் – அது முன்னமே விவரிக்கப்பட்டது
    1-1-11-இந்த்ரப்ராணாதிகரணத்தில் இதே போல் ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் செய்த உபதேசத்தில் இந்த்ரன் என்ற ஜீவாத்மாவைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் உபதேசமிருந்தது. ஆனால் அங்கு இவ்வாறு முடிவு செய்தோம் –உப க்ரமம் (தொடக்கம்) மற்றும் உப ஸம்ஹாரம் (முடிவு) என்ற இரண்டிலும் பரமாத்மாவே பேசப்படுகிறபடியால்
    இந்தப் பகுதி அவரையே சொல்கிறது. எனவே இந்த்ரன் மற்றும் மூச்சுக் காற்று சொல்லப்படும் இடங்களிலும் அவற்றுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா தான் கொள்ளப் பட வேண்டும்.
    அதே போல் இங்கும் தொடக்கத்தில் ’ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணி’ (உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசிக்கிறேன்) என்று உள்ளது, நடுவில் ’யஸ்ய வா ஏதத் கர்ம’ (இந்த உலகமே யாரால் படைக்கப்பட்டதோ ) என்றுள்ளது, முடிவில் ’ஸர்வாந் பாப்மந: அபஹத்ய ஸர்வேஷாம் பூ₄தாநாம் ச்ரைஷ்ட்₂யம் ஸ்வாராஜ்யம் ஆதி₄பத்யம் பர்யேதி’ (இந்த ப்ரஹ்மத்தை
    அறிபவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்) என்றுள்ளது. எனவே , இந்த உபதேசமே பரமாத்மாவைப் பற்றினது.
    இந்த்ரன் மற்றும் ப்ராணனுக்கு அந்தர்யாமியாகப் பரமாத்மாவைச் சொல்வதன் பயன் என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லபட்டது – பரமாத்மாவை தானாகவும், ஜீவனுக்கு அந்தர்யாமியாகவும், அசேதனத்துக்கு அந்தர்யாமியாகவும்-மூன்று விதத்தில் உபாஸநம் செய்ய வேண்டும் என்று இங்கு காட்டப்படுகிறது என்று. இங்கும் அதே போல் ப்ராண வாயுவைப் பற்றின பேச்சு, ப்ராணனை அந்தர்யாமியாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று சொல்வதற்காக வந்துள்ளது. எனவே , பூர்வ பக்ஷியின் கேள்விக்கு முன்னமே பதில் அளிக்கப்பட்டு விட்டது.

    பரமாத்மாவின் அரவணைப்பு
    கேள்வி
    – ஜீவனைப் பற்றின பேச்சு இங்கு எதற்காக வருகிறது?
    பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
    3-அந்யார்த₂ம் து ஜைமிநி: ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் அபி சைவமேக
    அந்யார்த₂ம் து
    – (இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்வது) வேறொரு ப்ரயோஜநத்துக்காக, அதாவது பரமாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக, (ஜீவாத்மாவே அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் என்று சொல்வதற்காக அல்ல)
    ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
    ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் – கேள்வியையும் பதிலையும் கொண்டு இதை அறியலாம்
    அபி ஏவம் ஏகே – மேலும் ஒரு சிலர் இவ்வாறே ஓதுகிறார்கள்
    இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை எழுப்புவதைப் பற்றின பேச்சு ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக அல்ல என்று அதற்குப் பின் வரும் கேள்வியையும் பதிலையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
    அஜாத சத்ருவின் ப்ரஸ்நம் (கேள்வி) இவ்வாறு உள்ளது – ’இதுவரை தூங்கும் போது இந்த ஜீவாத்மா எங்கு இருந்தான்?’
    ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதாக இருந்தால் ’இவன் யார்’ என்று தான் கேட்க வேண்டும். இங்கு அவர் இருந்த இடத்தைப் பற்றித் தான் கேள்வி உள்ளது. எனவே ஜீவாத்மாவைப் பற்றின பேச்சு அவரைப் பற்றி உபதேசிக்க அல்ல.
    அஜாத சத்ருதுவின் வ்யாக்யானம் (பதில்)
    (யதா₃ ஸுப்த: ஸ்வப்நம் ந கத₂ஞ்சந பஸ்யதி அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி,
    ஏதஸ்மாத் ஆத்மந: ப்ராணா : யதா₂யதநம் விப்ரதிஷ்ட்₂ந்தே )
    அதாவது
    ’ஜீவாத்மா தூங்கும் போது ப்ராணனில் ஒன்றி விட்டு, பிறகு அந்த ஆத்மாவிடமிருந்து எழுந்து வருகிறார்’ என்றுள்ளது. இங்கு ப்ராணன் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மாவே , ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களிலும் ஜீவன் தூங்கும் போது பரமாத்மாவோடு ஒன்றி, தன் களைப்பை எல்லாம் போக்கிக் கொள்கிறான் என்று தான் சொல்லப்படுகிறது.
    கடைசியாக, சுக்ல யஜுர் வேதத்தில் நேரடியாகவே (ஏஷ புருஷ: த்தா₃
    ய ஏஷ அந்தர் ஹ்ருத₃ய ஆகாச: தஸ்மிந் சேதே )
    அதாவது
    ’ஜீவாத்மா தூங்கும் போது இதயத்தில் இருக்கும் ஆகாசத்தில்-(பரமாத்மாவிடம்) சயனிக்கிறார்’ என்று ஓதப்படுகிறபடியாலும் இவ்வர்த்தத்ணத அறியலாம்.
    எனவே இங்கு அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் பரமாத்மாவே . அவரே ப்ரக்ருதியை இயக்கி உலகைப் படைக்கிறார்.

    (பிராணன் பரமாத்மாவைச் சொல்லி அடுத்த பிராணன் ஜீவாத்மாவைச் சொல்லும் -உபநிஷத் இவ்வாறு குழப்பம் அடையும்படி இருப்பதாலேயே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ பாஷ்யமும் வேண்டி இருக்கின்றன)

    —————-

    1.4.6-வாக்யாந்வயாதி₄கரணம்-நம் உறவினர்களைப் ப்ரியமாக ஆக்குபவர் பரமாத்மாவே

    அதிகரணத்தின் பின்புலம்
    1-4-6-வாக்யாந்வயாதி₄கரணம் – ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் ’கர்மம் யாருடையதோ அவர் அறியப்படவேண்டும்’ என்று சொற்றொடர் இருந்தாலும், ’கர்மம் யாருடையதோ அந்த ஆத்மாவின் தூய்மையான முக்தி அடைந்த நிலையை அறிய வேண்டும்’ என்று கஷ்டப்பட்டு பொருளை உரைத்தார் பூர்வபக்ஷீ. இவ்வதிகரணத்தில் அப்படி எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிமையாக ஜீவாத்மா தான் ப்ரக்ருதியை இயக்கிப் படைக்க வைக்கிறார் என்கிறார் பூர்வபக்ஷீ

    விஷய வாக்யம் – மைத்ரேயீ ப்₃ராஹ்மணம் – ப்₃ருஹதா₃ரண்யக உபநிஷத் 2ஆம் அத்யாயம் 4ஆம் ப்ராஹ்மணம்-உத்₃யாஸ்யந்வா அரே அஹம் அஸ்மாத் ஸ்தா₂நாத் அஸ்மி । ஹந்த தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி-யாஜ்ஞவல்க்யர் இல்லற வாழ்க்கையைத் துறக்க விரும்பி, மைத்ரேயீ காத்யாயநீ என்ற தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே மைத்ரேயியைப் பார்த்து இவ்வாறு கூறினார் – “மைத்ரேயீ! நான் இந்த க்ருஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து விலகப் போகிறேன், எனவே உனக்கும் காத்யாயனிக்கும் செல்வத்தைப் பிரித்து முடிவு செய்கிறேன்” என்று.
    யந்நு ம இயம் ப₄கோ ₃꞉ ஸர்வா ப்ருதி₂வீ வித்தேந பூர்ணா ஸ்யாத் கத₂ம் தேநாம்ருதா ஸ்யாமிதி । நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்யோ , அம்ருதத்வஸ்ய து ந ஆஶா அஸ்தி வித்தேந
    மைத்ரேயீ கேட்டாள் – “பெரியவரே ! இந்த உலகத்தை யெல்லாம் செல்வத்தால் நிரப்பிக் கொடுத்தாலும் அதைக் கொண்டு நான் மரணமில்லாத நிலையை அடைய முடியுமா?” என்று. யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “முடியாது,செல்வத்தால் முக்தியை ஒருநாளும் அடைய முடியாது” என்று யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் । யதே₃வ ப₄க₃வாந் வேத₃ ததே ₃வ மே ப்₃ரூஹீதி-மைத்ரேயீ கூறினாள் – “எதைக் கொண்டு என்னால் முக்தி அடைய இயலாதோ அது எனக்கு வேண்டாம். முக்தி அடைவதற்கு நீர் எந்த வழியை அறிந்திருக்கிறீரோ அதையே எனக்கும் சொல்ல வேண்டும்” என்று-ப்ரியா ந: ப்ரியம் பா₄ஷஸ ஏஹ்யாஸ்ஸ்வ வ்யாக்₂யாஸ்யாமி தே--யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “இவ்வாறு நீ கூறியதால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. வா! அமர்வாய்! உபதேசிக்கிறேன்!”

    பூர்வ பக்ஷியின் யுக்திகள்
    ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப₄வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப₄வதி-
    கணவன் தன்னுடைய எண்ணத்தால் தன் மனைவிக்குப் ப்ரியமானவனாக ஆவதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான்-இதே போல் ஜாயா (மனைவி), புத்ரன் (மகன்), வித்தம் (செல்வம்), லோகங்கள், தேவர்கள், பூதங்கள், அனைத்துமே அதனதன் எண்ணத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான் என்று உபதேசித்தார்.
    ஆத்மா வா அரே த்₃ரஷ்டவ்ய꞉ ஶ்ரரோதவ்யோ மந்தவ்யோ நிதி₃த்₄யாஸிதவ்யோ । ஆத்மநோ வா அரே விஜ்ஞாநேந இத₃ம் ஸர்வம் விதி₃தம்-அந்த ஆத்மா தான் கேட்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும், த்யானிக்கப்பட வேண்டும், காணப்பட வேண்டும்.-அந்த ஆத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்.

    ஸந்தேஹம் – இந்த அத்யாயத்திலேயே ஜகத்காரணம் யார் என்ற ஆராய்ச்சியே செய்யப் படுகிறபடியால், இங்கு முக்கியமான கேள்வி – “ஜீவாத்மாவால் இயக்கப் படும் ப்ரக்ருதி ஜகத் காரணமா? அல்லது பரமாத்மா ஜகத்காரணமா? என்று. அதற்காக இங்கு ஆராயப்படுவது – இந்த விஷய வாக்கியத்தில் கேட்டு, ஆராய்ந்து, த்யானித்து காணப்பட
    வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா பரமாத்மாத்வா என்று.
    பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவே , ஏனெனில் இங்கு தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவரே சொல்லப்படுகிறார்.
    தொடக்கத்தில் – கணவன் மனைவி குழந்தை செல்வம் முதலானவற்றோடு தொடர்புடைய ஆத்மா ஜீவாத்மாவே
    நடுவில் -(விஜ்ஞாநக₄ந ஏவ ஏதேப்₄யோ பூ₄தேப்₄ய꞉ ஸமுத்தா₂ய தாந்யேவ அநுவிநஶ்யதி) அதாவது இந்த ஜ்ஞாந வடிவமான ஆத்மா உடலோடு தோன்றுகிறார், உடல் அழியும் போது
    அழிகிறார் என்று சொல்லப் படுகிறபடியால் இங்கும் ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்.
    முடிவில் – (्விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்று அறிவுள்ள ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்-முக்திக்கான வழியை அன்றோ மைத்ரேயீ கேட்டாள்? ஆம், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை அறிந்தாலே முக்தி -ஜீவாத்மாவை அறிந்தால் அனைத்தையும் எப்படி அறிந்ததாகும்? எல்லா ஜீவாத்மாக்களும் ஸமமாகவே உள்ள படியால்

    வ்யாஸரின் பதில்
    ஸித்தாந்தம் – 1-(வாக்யாந்வயாத் ्
    – “இங்குள்ள வாக்கியங்களின் பகுதிகள் (நன்கு) அன்வயிப்பதற்காக”-யாஜ்ஞவல்க்யர் கூறும் வாக்கியப் பகுதிகளின் பொருள் ஒன்றொடொன்று பொருந்த வேண்டும், மேலும் அது மற்ற உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பொருளோடும் பொருந்த வேண்டும். எனவே பரமாத்மாவே இங்கு கூறப்படுகிறார்.
    (1)-முக்தி அடையும் வழியைக் கேட்ட மைத்ரேயிக்கு யாஜ்ஞவல்க்யர் இந்த ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கிறபடியால், இந்த ஆத்மா பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களில் எல்லாம் பரமாத்மாவை அறிந்து த்யானித்தால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    (2)-(அஸ்ய மஹத: பூ₄தஸ்ய நி:ச்வஸிதம் ஏதத் யத் ருக்₃வேத₃: ) அதாவது இந்த ஆத்மாவிடமிருந்து தான் உலகமெல்லாம் உண்டாயிற்று என்று சொல்கிறபடியால், அது பரமாத்மாவே .
    (3)-ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்த்தாகும் என்று சொன்னதும் பரமாத்மாவுக்கே பொருந்தும், அவரே அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கிறார். ஜீவாத்மாக்கள்அனைவரும் ஸமமாக இருப்பதால், ஒருவரை அறிந்தால் அனைவரையும் அறிந்ததாகும் என்றாலும், ஜீவாத்மாவை
    அறிந்தால் அறிவற்ற அசேனப் பொருளை அறிந்ததாக ஆக முடியாது. அது பரமாத்மாவுக்கே பொருந்தும்.

    (4)(्மஹத்₃பூ₄தம் அநந்தம் அபாரம்) அதாவது பெரியது, எல்லை யற்றது, கடக்க முடியாதது என்று சொல்லப்படும் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக்கூடியவை .-ந வா அரே பத்யு: காமாய’ என்ற வாக்கியத்தின் பொருள் – “கணவன் மனைவி மகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தால் நமக்குப் ப்ரியமானவர்களாக ஆவதில்லை , பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் ஆகிறார்கள்” என்று.
    அதாவது, தன்னை உபாஸிக்கும் ஒரு பக்தனுக்கு பகவானே தன்னுடைய அருளால் கணவன் மனைவி குழந்தைகள் செல்வம் முதலானவற்ணற ப்ரியமாக ஆக்கி, அவற்றை வழங்குகிறார் என்று பொருள். எனவே கணவன் மனைவி செல்வம் முதலான சிறிய இன்பங்களைக் கை விட்டு, இவற்றுக்கெல்லாம் ஊற்றாக, எல்லை யற்ற ஆநந்தமே
    வடிவானவரான பரமாத்மாவைத் தான் கேட்க வேண்டும், ஆராயவும், த்யானிகவும் வேண்டும் என்று கருத்து. இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இயற்கையாக நமக்குப் பிடித்ததாகவோ பிடிக்காத்தாகவோ இருப்பதில்லை , இடம் காலம் சூழ்நிலை பொருத்து தான். ஆனால் பரமாத்மா மட்டுமே மாறாமல் எப்போதும் ப்ரியமாகவே இருப்பவர்.

    (தனது பக்தனுக்கு பிரியமாக இருக்க பகவானே ஸங்கல்பிக்கிறான் -என்கிறார் ராமானுஜர்)

    ஜீவாத்மாவே பரமாத்மாவா?
    இவ்வாறு இந்த உபதேசம் முழுவதுமே பரமாத்மாவைப் பற்றினது என்று நிரூபிக்கப் பட்டபடியால், இடையில் ஜீவாத்மாவைச் சொல்லும் சொற்களும் கூடப் பரமாத்மாவையே குறிக்கின்றது. அது எப்படி எனில் –
    2-ப்ரதிஜ்ஞாஸித்₃தே ₄: லிங்க₃ம் ஆஸ்மாத்₂ய: – “இங்கு சொல்லப்பட்ட ப்ரதிஜ்ஜை ( சபதம்) நிறைவேறியதற்கு இது அடையாளம் என்கிறார் ஆச்மாத்யர் என்ற ரிஷி”-இந்த ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று இங்கு ஒரு ப்ரதிஜ்ஜை ( சபதம்) உள்ளது. அது நிறைவேறியதற்கான அடையாளம் தான் இங்கு ஜீவாத்மாவைச் சொல்லும் சொல் பரமாத்மாவைக் குறிப்பது என்பது. -உலகில் காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று என்று அறிவோம். குடம் என்ற பொருளை அதற்குக் காரணமான பொருளைக் குறிக்கும் மண் என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். அதே போல், ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து உண்டாகி, அவரிடமே லயம் அடைகிறார்; அவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல;ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கும், பரமாத்மாவை அறிந்தால் அனைத்தும் அறியப்பட்டதே .

    3-(உத்க்ரமிஷ்யத: ஏவம் பா₄வாத் இதி ஔடு₃லோமி:) – “புறப்படுபவர் இதுவே போல் ஆகிறபடியால் என்று ஔடுலோமி என்ற ரிஷி கூறுகிறார்”(உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு-ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்-இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்) -ஜீவாத்மா உண்டாவதே இல்லை என்று வேதம் சொல்கிறபடியால் முன் பக்ஷம் தவறானது. எனவே ஔடுலோமி என்ற ரிஷி இவ்வாறு கூறுகிறார் – “இந்த உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடையும் ஜீவாத்மா பரமாத்மாவைப் போல் ஆகிறபடியால் இங்கு ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது” என்று-ஆனால் இதிலும் குறை உள்ளது – ஜீவாத்மா புதிதாக பரமாத்மாவைப் போல் ஆவதில்லை , இயற்கையான அத் தன்மையைத் திரும்பப் பெருகிறார். எனவே இந்தப் பக்ஷமும் தகுந்ததல்ல.

    4-அவஸ்தி₂தே : இதி காச க்ருத்ஸ்ந: – “ஜீவாத்மாவுக்குள் அந்தர்யாமியாகப் பரமாத்மா உள்ள படியால் என்று காச க்ருத்ஸ்நர் என்ற ரிஷி கூறுகிறார்”-உலகத்தில் உடலைக் குறிக்கும் சொல் உள்ளிருக்கும் ஆத்மாவையும் குறிப்பதைப் பார்க்கிறோம். அதே போல் தான்
    உடலான ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. இதுவே வேத வ்யாஸரும் ஏற்கும் மதம்.ஆகவே , இங்கு பரமாத்மா தான் சொல்லப்படுகிறார், ஜீவன் அல்ல. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்

    (ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே – இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால் –விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான் -தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –)

    —————–

    1.4.7 ப்ரக்ருத்யதி₄கரணம்-உலகின் உபாதாந காரணமும் பரமாத்மாவே

    (வேர் முதல் வித்து -முதல் தனி வித்தேயோ -தானோர் விதிதாய் -அபின்ன நிமித்த உபாதானம் -நம் சித்தாந்தத்தில் அசாதாரணம்-ஸர்வம் கலு ப்ரஹ்மம் -நீராய் நிலனாய் -அயனாய் சிவனாய் – -இத்தை இதில் நிரூபிக்கிறார் -)

    அதிகரணத்தின் பின்புலம்
    1-4-7-ப்ரக்ருத்யதி₄கரணம் – ஸங்கதி
    – இதுவரை ஈஸ்வரனே கிடையாது என்று சொல்லும் ஸாங்க்யர்களின் மதம் கண்டிக்கப்பட்டு. இப்போது ஈஸ்வரனை ஒப்புக் கொண்டு, ஆனால் அவர் உலகின் நிமித்த காரணம் (படைப்பாளி) மட்டும் தான், உபாதாந காரணம் அல்ல என்று சொல்லும் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
    பூர்வ பக்ஷம் – பரமாத்மா உலகின் படைப்பில் நிமித்த காரணம் மட்டும் தான், உபாதான காரணம் அல்ல-உலகில் எந்த ஒரு பொருள் உண்டாவதற்கும் மூன்று விதமான காரணங்கள் தேவை –
    (1) உபாதான காரணம் – மூலப்பொருள் – குடத்துக்கு மண், துணிக்கு பஞ்சு முதலானவை போல்
    (2) நிமித்த காரம் – அறிவுடைய ஆத்மா (படைப்பாளி) – குடத்துக்குக் குயவன், துணிக்கு நெசவாளி போல்
    (3) ஸஹகாரி காரம் – துணை புரியும் கருவிகள் – குடத்துக்கு சக்கரம், துணிக்குத் தரி போல் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது உண்மை -ஆனால், அவர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு நிமித்த காரணமாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனெனில்,“நிஷ்கலம் நிஷ்க்ரியம்” (பகுதிகள் இல்லாதவர், செயல்கள் இல்லாதவர்) முதலான வாக்யங்களால் பரமாத்மா எந்த விதமான விகாரங்கள் (மாறுபாடுகள்) இல்லாதவர் என்று தெரிகிறது. எனவே அவர் உபாதானமாக ஆக முடியாது; உபாதானம் உருமாறியே ஆக வேண்டும்.-உபநிஷத்துக்களிலேயே ’ஜநித்ரீ பூ₄தபா₄விநீ’ (ஜீவ ராசிகளைப் படைப்பது), ’அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்(இதிலிருந்து பரமாத்மா உலகத்தைப் படைக்கிறார்) என்று பல வாக்யங்களில் மூல ப்ரக்ருதி தான் உபாதான காரணமாகச் சொல்லப்படுகிறது-உலகில் இரண்டு நியமங்களைப் பார்க்கிறோம் – (1) உபாதான காரணமும் நிமித்த காரணமும் வெவ்வேறாகத் தான் இருக்கும் (2) பல காரணங்களின் சேர்க்கையால் தான் ஒரு பொருள் உண்டாகும். எனவே , சில இடங்களில் உபநிஷத் பரமாத்மாவே உபாதான காரணம் என்று சொல்வது போல் தோன்றினாலும், உலகில் பார்த்த்துக்கு முரணாக இப்படி ஒரு தத்துவத்தை வேதத்தால் போதிக்க இயலாது. ’நெருப்பால் நனைத்தார்’ என்று சொல்வது போல் தவறாகும்.-எனவே , பரமாத்மா நிமித்த காரணமாக இருந்து, மூல ப்ரக்ருதி என்ற பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைக்கிறார். அவர் உபாதான காரணம் அல்ல.

    பரமாத்மாவிடமிருந்தே உலகம் உண்டாகிறது
    ஸித்தாந்தம் – 1– ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்₃ருஷ்டாந்த அநுபரோதா₄த்

    (உலகுக்கு) உபாதான காரணமும் (பரமாத்மாவே , அப்போது தான்) ப்ரதிஜ்ஜையும் எடுத்துக் காட்டும் -(அநுபரோதா₄த்-)தடை படாதபடியால்
    சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் அத்யாயத்தில் உள்ள ஸத்₃வித்₃யா என்பது இங்கு கூறப்படுகிறது. வேதம் கற்று வந்து கர்வத்வதாடு நிற்கும் ஸவேதகேது என்ற தன் மகனைப் பார்த்து உத்தாலகர் என்ற தந்தை கேட்கிறார்.
    ப்ரதிஜ்ஞா – (्உத தம ஆதே₃சம் அப்ராக்ஷ்ய:யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்) அதாவது“எதை அறிந்தால் அனைத்தையும்அறிந்த தாகுமோ அந்த (ஆதேசம் -நியமனம் ஈசன் )ஸர்வேஸ்வரனைப் பற்றிக் கேட்டாயா”என்று. பரமாத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்பதே இங்கு ப்ரதிஜ்ஜை .
    த்₃ருஷ்டாந்தம் –(्யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டே₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்) அதாவது “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் மண்ணாலான எல்லாப்
    பொருள்களையும் அறிந்ததாகுமோ அதுபோல்” என்று எடுத்துக் காட்டையும் அவரே உரைக்கிறார்.
    இவை இரண்டாலும் நாம் அறிவது – (1) மண் மரம் முதலான உபாதான காரணமும் குடம் மேஜை முதலான காரியமும் வெவ்வேறு அல்ல, காரணப் பொருளே தான் வேறொரு வடிவத்தையும் பெயரையும் அடையும் போது காரியப் பொருள் என்று வழங்கப்படுகிறது (2) எனவே உபாதான காரணத்தை நாம் அறிந்து விட்டால் அதிலிருந்து உண்டாகும் எல்லாப் பொருள்களையும் ஒரு முறையில் அறிந்ததாக ஆகும்
    (3) அதுபோல் பரமாத்மாவை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.
    எனவே இந்த ப்ரதிஜ்ஜை மற்றும் த்₃ருஷ்டாந்தத்தைக் கொண்டு பார்த்தால், பரமாத்மா உபாதான காரணமாகத் தான் சொல்லப்படுகிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவரே ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைக்கிறார் என்று மேலே சொல்லப் படுகிறபடியால் நிமித்த காரணமும் அவரே ஆவார்.
    ப்ரக்ருதி படைக்கிறது என்று சொல்லும் வாக்கியங்களில்’ ’ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியான பரமாத்மா’ என்றே பொருள்.-உலகில் மண்ணுக்கு ஜ்ஞான மில்லாமையாலும், குயவனுக்கு தன் உடலைக் குடமாக மாற்றும் சக்தி இல்லாததாலும் உபாதானமும் நிமித்தமும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. பரமாத்மாவிடமோ இரண்டுமே பொருந்துகிறது.

    (இதே போல் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதம் இந்த பார்க்கிற லோகம் சத்தாகவே ஒன்றாகவே இருந்தது -இரண்டாவதே இல்லை-ப்ரக்ருதி படைக்கிறது என்னும் இடங்களிலே ப்ரஹ்மம் அந்தர் யாத்மாவாகக் கொண்ட பிரகிருதி என்றே பொருள் -மண்ணை உடலாக கொண்ட பரமாத்மா -குடத்தை உடலாக கொண்ட பரமாத்மாவாக மாறினார் -நான் குழந்தை -நான் யுவா -இந்த உடலுக்குள் இருந்த ஆத்மா ஓன்று தானே -அதே போல் கொள்ள வேண்டும் – -)

    மூன்று விதமான காரணங்களும் பரமாத்மாவே
    2–அபி₄த்₄யோபதே₃சாத் ச –
    “ஸங்கல்பத்தின் உபதேசத்தாலும்” – ஸ்ருஷ்டிக்கும் போது பரமாத்மா எடுக்கும் ஸங்கல்பம் உபநிஷத்தில் (ப₃ஹு ஸ்யாம்) அதாவது
    “நான் பலவாக ஆகக் கடவேன்” என்று காட்டப் பட்டுள்ளது.(ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும் ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-) உபாதான காரணம் தானே பல காரியப் பொருள்களாக ஆகும். எனவே இத்தால் பரமாத்மா நிமித்த காரணம் மட்டுமல்ல, உபாதானமும் அவரே என்று தெரிகிறது.

    (
    யானும் தானாய் ஒழிந்தானையாதும் எவர்க்கும் முன்னோனை
    தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
    தேனும் பாலும் கன்னலும்அமுதும் ஆகித் தித்துத்து என்
    ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே)

    3-ஸாக்ஷாத் ச உப₄யாம்நாநாத்
    – “நேரடியாகவும் இரண்டும் ஓதப் படுகிறபடியால்”-உபநிஷத்தில் (्ப்₃ரஹ்ம வநம், ப்₃ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்₃யாவா ப்ருதி₂வீ நிஷ்ட₂தக்ஷு:, ப்₃ரஹ்ம அத்₄ய திஷ்ட₂த் பு₄வநாநி தா₄ரயன்) அதாவது
    “உலகத்தை ப்ரஹ்மம் படைக்கும் போது, காடு போல் ஆதாரமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், மரம் போல் உபாதானமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், இயக்கப்படும் கருவிகளும் ப்ரஹ்மம் தான்” என்று ஸ்பஷ்டமாகவே ப்ரஹ்மம் உலகுக்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    4–ஆத்ம க்ருதே : – “தன்னையே செய்கிறபடியால்”. உபநிஷத்தில் உலகத்தின் படைப்பைச் சொல்லும் போது(தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத) அதாவது அந்த ப்ரஹ்மம் தன்னைத் தானே செய்து கொண்டது” என்று கூறப்படுகிறது. தன்னைத் தானே பலவாக ஆக்குதலால் பரமாத்மா உபதானமும் தான்.

    5–பரிணாமாத் ् – “மாறுபாட்டால்”. இப்படி பரமாத்மாவே உலகமாக மாறினால் அவருக்கு துன்பம், மாறுபாடு முதலான தோஷங்கள் ஏற்படுமே என்று ஸந்தேகம் எழும். அதற்கு பதிலளிக்கிறார் வ்யாஸர் – இங்கு பரமாத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மாறுபாடு சொல்லப்படுகிறபடியால் எந்தக் குற்றமும் வராது,(ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது தோஷங்கள் தட்டாது-) -சொல்லப் போனால் தன் உடலையே உலகமாக மாற்றும் பெருமை தான் இதிலிருந்து தெரியும்.

    6-யோநிஶ்ச ஹி கீ₃யதே – “யோநியாகவும் பாடப்படுகிறார் அன்றோ ”(யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்-எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால் அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –)-வேதத்தில் பல இடங்களில்“கர்தாரம் ஈஸம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம்”(படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம்-கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்-யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-)“யத்₃பூ₄த யோநிம் பரிபஸ்யந்தி தீ₄ரா:(-ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ )” என்றெல்லாம் பரமாத்மாவை யோநி என்று அழைக்கிறது வேதம். யோநி என்றால் உபாதான காரணமே . எனவே பரமாத்மாவே உபாதானம்.

    இவ்வாறு பல காரணங்களால் உலகத்தைப் படைப்பதற்கு நிமித்தமாகவும் உபாதானமாகவும் ஸஹகாரியாகவும் பரமாத்மா ஒருவரே இருக்கிறார் என்னும் தத்துவத்தை வேதவ்யாஸர் நிரூபிக்கிறார் இவ்வதிகரணத்தில்.

    (இவன் தானே ஐகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும்-தத்வ த்ரயம்-சூர்ணிகை -165-)

    ஏகமேவ அத்விதீயம் -என்றும்
    ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
    ஸ்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-67-அந்த நாராயணன் நான்முகனாக படைத்து தானாகவே காத்து சிவனாக இருந்து சம்ஹரிக்கவும் செய்கிறானோ -என்றும்
    ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-70-அவனே அனைத்தையுமே ஸ்ருஷ்டிப்பவனாகவும் அனைத்தும் வரங்களையும் அளிப்பவனாகவும் -அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான் -படைப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே -காப்பவனும் அழிப்பவனும் அவனே-இத்யாதிகளால்
    இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

    தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
    தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
    நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
    நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

    —————

    1.4.8 ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம்-பர ப்ரஹ்மம் நாராயணனே

    வேதாந்தம் முழுவதுமே ப்ரஹ்மத்தைத் தான் சொல்கிறது-1-4-8-ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்கியங்களுள் ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் ஸந்தர்பத்தை ஆராய்ந்து, அவ் விடத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், இதுவரை எடுத்து ஆராயப்படாத எல்லா உபநிஷத் வாக்யங்களும் கூட பரமாத்மாவையே சொல்கின்றன என்று நிரூபிக்கிறார்.
    விஷய வாக்யம் – உபநிஷத்துக்களில் ஸித்தமான (முன்னமே தயாராக உள்ள) ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் எல்லாம் 1.1.1-ஜிஜ்ஞாஸாதிகரணத்தாலும் 1.1.4-ஸமந்வயாதிகரணத்தாலும் பரமாத்மாவைப் பற்றியவை என்று நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பின் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் சில குறிப்பிட்ட வாக்கியங்கள் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஆராயப் பட்டன. இந்த அதிகரணத்திற்கு விஷயம் –இது வரை எடுத்து ஆராயப்படாத வாக்யங்கள்.

    (அதிதேச சங்கதி -கீழ் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏறிட்டுக் கொண்டு அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும்-இதுவரை எடுத்துக்கொள்ளாத ஜகத் காரணமாக போதிக்கும் அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும் பொருள் கொள்ள வேண்டும் -என்பதே இதற்கு சங்கதி)

    ஸந்தேஹம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் முன் கூறப்பட்ட பர ப்ரஹ்மத்தையே குறிக்கின்றனவா? அல்லவா?
    பூர்வ பக்ஷம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லவில்லை முரண்பாடு உள்ள படியால்.
    ஸித்தாந்தம் – 1-ஏதேந ஸர்வே வ்யாக்₂யாதா : வ்யாக்₂யாதா :
    ஸர்வே
    – இதுவரை தனித் தனியாக எடுத்து ஆராயப்படாத ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்யங்கள் அனைத்தும்
    ஏதேந – இத்தால் -முதல் அத்யாயத்தில் 4 பாதங்களிலும் இதுவரை சொல்லப்பட்ட ந்யாயங்களால் (யுக்திகளால்)
    வ்யாக்₂யாதா : – (பரமாத்மாவையே குறிப்பவையாக) விவரிக்கப்பட்டன -சொல்லப்பட்டன
    “வ்யாக்₂யாதா:” என்று மறுபடியும் ஒரு முறை படிக்கப்படுவது, இந்தச் சொல்லோடு இந்த அத்யாயம் முடிகிறது என்று காட்டுவதற்காக.

    (இதே போல-2அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல்- இரண்டு தடவையும்-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–என்றும் 3-அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல் இரண்டு தடவையும்ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-என்றும் -4 அத்தியாயத்தில் முழு ஸூத்திரமே –545 -ஸூத்ரமே இரண்டு தடவை படிக்கப்படும் (அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் ) ப்ரஹ்ம ஸூத்ரம் முடிவடைவதால்)

    இந்த அதிகரணத்தின் கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளியில் கூறுகிறார்

    குறிப்பட்ட ஸந்தேஹமும் அதன் தீர்வும்
    அக்₃ரே ஸம்வர்தநம் பா₄தி அவித்த₂வசஸி க்வாபி ஹிரண்ய க₃ர்ப₄ம்
    க்₃ரஸ்தா ஸேஷ ஸ்வ கார்யே தமஸி சிவ ஏவேதி கேசித் பட₂ந்தி |
    ஏதாத்₃ருக்₃வாக்ய வர்க₃ ஸ்பு₂ட₂ ப₄வத் அதி₄கா சங்கந ஸ்தம்ப₄நார்த₂ம்
    ப்ராகு₃க்தாந் நீதி பே₄தா₃ந் அதிதி₃ சதி பரம் சிஷ்ய சிஷைக சித்த: ||

    பூர்வ பக்ஷம் –
    வேதாந்தத்தில் ஓரிடத்தில்
    (ஹிரண்ய க₃ர்ப₄: ஸம வர்தத அக்₃ரே பூ₄தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்) என்று “ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஹிரண்ய கர்பன் என்ற நான்முகக் கடவுள் மட்டுமே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. மற்ற ஓரிடத்தில்
    (யதா₃ தம: தந்ந தி₃வா ந ராத்ரி: ந ஸத் ந அஸத் சிவ ஏக கேவல:) அதாவது “ப்ரளயத்தில் பகலோ இரவோ அசித்தோ சித்தோ எதுவும் இல்லாத போது சிவன் மட்டுமே தனியே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. எனவே பர ப்ரஹ்மம் யார் என்று முடிவெடுக்க இயலாது. இவர்களுள் ஒருவரா? மூவருமா? மூவரைத் தவிற வேறு ஓருவரா? தெரியாது.
    ஸித்தாந்தம் –முன் சொல்லப்பட்ட ந்யாயங்களைக் கொண்டே இந்த விஷயத்திலும் நாம் முடிவை எட்டலாம்.
    1.1.5 ஈஷத்யதி₄கரணத்தில் – “க₃தி ஸாமாந்யாத்”
    என்ற ஸூத்ரத்தில் ஸத், ப்ரஹ்ம, ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஜகத் காரணப் பொருள் நாராயணன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
    1.1.6 ஆநந்த₃மயாதி₄கரணத்தில் – நான்முகனின் ஆநந்ததைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு உயர்ந்தது ப்ரஹ்மத்தின் ஆநந்தம் என்று சொன்னபடியால் நான்முகன் ப்ரஹ்மம் அல்ல என்று தெரிகிறது.
    1.1.7 அந்தரதிகரணத்தில் – தாமரை போன்ற கண்ணுடையவன் ப்ரஹ்மம் என்று சொன்னபடியால் சிவன் ப்ரஹ்மமல்ல
    1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் – விண்ணுலகில் இருப்பவர் ப்ரஹ்மம் என்றுள்ள படியால், அங்குள்ள வாக்யங்கள் புருஷ ஸூக்தத்தை நினைவூட்டுகிற படியால், புருஷ ஸூக்தத்தில் ஶ்ரீதேவீ மற்றும் பூதேவியின் நாயகனே சொல்லப்படுகிறபடியால் ஶ்ரீமந் நாராயணனே பரமாத்மா, பர ப்ரஹ்மம், ஸர்வேஸ்வரன், எல்லாம் ஆவார்.
    ஆக இப்படி ஸமந்வய அத்யாயத்தில் 11 + 6 + 10 + 8 = 35 அதிகரணங்களால் நாராயணனே ஜகத் காரணம் எனப்பட்டது

    மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
    ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
    வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள
    -ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
    ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்-விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
    ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான் அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்-இதம் பூர்ணம் –இத்யாதி-

    இப்பாத அதிகரண அர்த்தங்களை

    1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
    2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
    3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
    4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
    5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
    6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
    7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
    8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

    ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே-ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி-அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி-ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

    முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

    May 12, 2025

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

    10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

    (வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
    ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
    க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
    ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
    -ஶ்லோகம் 18 –)

    நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
    1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
    2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
    3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
    4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
    5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
    6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
    7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
    8) இனிமையானவன்
    9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
    10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
    11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
    12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

    உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
    ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
    கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
    ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
    ||-ஶ்லோகம் 19 –

    வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

    1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
    ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
    உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

    விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

    (ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

    ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

    பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

    பரமாத்மாவே தஹராகாஸம்
    ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
    :-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

    (கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

    தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

    (மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

    கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
    பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

    கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
    பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

    நாம் அறியாத செல்வம்
    தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

    (உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறா)

    றி2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
    க₃தி சப்₃தா₃ப்₄யாம்
    – “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
    ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
    க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
    (தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
    “எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
    இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
    2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
    சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
    லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

    உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
    3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
    அஸ்ய-
    இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
    த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
    அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

    இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
    ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
    அதாவது
    “இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

    4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
    தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
    சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
    ஸமுத்பத்₃யந்தே )
    அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

    ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
    இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
    5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
    இதர பராமர்சாத் ஸ:
    -பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
    இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
    அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

    பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
    ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
    ) அதாவது
    “இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
    தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
    இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
    அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

    ————–

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

    (அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
    I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

    ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
    1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
    6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
    உத்தராத் சேத்
    – “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
    ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
    ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

    முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
    ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
    ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
    உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
    அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
    7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
    இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
    8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

    அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
    இதி சேத் – என்று கேட்டால்
    தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
    9-அநுக்ருதே : தஸ்ய ச –
    தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
    அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
    என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
    10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
    ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

    ॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
    அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
    த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
    தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

    தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
    ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
    அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
    தகர -சிறிய இடைவெளி –

    தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
    த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
    யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

    உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

    யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
    உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
    உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
    வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
    தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

    தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
    ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
    ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

    ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
    ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
    ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
    ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
    ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
    ॥ 8.1.5॥

    அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
    பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
    தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

    தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
    லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
    ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
    ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
    ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
    ॥ 8.1.6॥

    ॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

    —————————————

    காண்டம்1

    இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

    ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

    அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

    அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

    அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

    அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

    முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
    சங்கல்பத்தாலே அனைத்தும்
    ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

    அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
    க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
    மஹீயதே ॥ 8.2.6॥

    அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
    ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

    அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
    கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
    மஹீயதே ॥ 8.2.8॥

    அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

    யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
    ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

    ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

    ॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்2

    இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

    ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாத்து. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

    உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

    உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    அவைகள் 1.       பாவமற்றது, 2.       வயதற்றது, 3.      மரணமற்றது, 4.       துயரமற்றது, 5.      பசியற்றது, 6.       தாகமற்றது, 7.       நிறைவேறுகின்ற ஆசை,8.       நிறைவேறுகின்ற சங்கல்பம்

    ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

    இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

    யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

    சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

    த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
    ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
    த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

    அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
    லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
    காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
    உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
    அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
    ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

    ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
    தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

    அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
    ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
    ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

    தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
    தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
    யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
    ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

    ॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

    ———

    காண்டம்-3

    ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:

    நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

    இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை.அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை, மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

    ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)

    ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

    ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)

    ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

    ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்

    அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு

    பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக

    உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து

    ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே

    அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)

    அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

    சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்

    சத்யம் – உண்மை பேசுதல்

    சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்

    சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

    இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

    சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

    இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

    அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
    நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
    ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
    நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

    தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
    வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
    தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
    ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

    தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
    தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
    ப⁴வதி ॥ 8.4.3॥

    சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
    ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
    இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
    ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
    அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

    ॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

    ————

    காண்டம்4

    அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

    ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

    இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

    இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர். 

    சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

    இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

    அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
    ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
    ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
    ॥ 8.5.1॥

    அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
    ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
    ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

    அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
    ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
    யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
    ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
    மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
    பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

    தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
    ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
    ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

    ॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்5

    பிரம்மசர்ய சாதனையின் பெருமை

    •        குருவுக்கு சேவை செய்தல்
    •          வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
    •          குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
    •          எளிமையான வாழ்க்கை வாழ்தல்
    •          சிற்றின்பத்தை துறத்தல்

    இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

    யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்

    இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்

    ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.

    மௌனம்       – இதனால் அடையும் பலன்

    அநாஸகாயனம் – உபவாசம்

    அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

    இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

    பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

    அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
    ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
    பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
    ॥ 8.6.1॥

    அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
    சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

    தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
    சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
    சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
    ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
    ॥ 8.6.2॥

    தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
    ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
    தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

    அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
    ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
    யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
    ॥ 8.6.4॥

    அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
    ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
    ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
    லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

    ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
    மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
    விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

    ॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்6

    சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

    நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  sUriyaninசூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

    இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

    நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

    ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
    ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
    ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
    ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

    பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
    ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
    விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

    தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
    தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
    லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
    தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
    ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
    ॥ 8.7.2॥

    தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
    ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
    ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
    ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
    காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
    வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

    தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
    ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
    ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
    இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
    ॥ 8.7.4॥

    -32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
    கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
    அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

    ॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)

             ஞானி என்பவர் யார்?

             எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?

             ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?

             எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?

             ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

    ஸ்லோகம்-1

    மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

           ஆத்ம ஸ்வரூபம்

           ஞானத்தை அடையும் வழி

           ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

    ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

    அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது

    விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது

    விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது

    விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது

    விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது

    அபிபாக – தாகமுமில்லை.

    எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

    இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்

    1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

    2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

    ஸ்லோகம்-2

    வித்யாkk க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

    இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

    இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

    பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

    கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

    கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

    குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

    சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார். கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?

    பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

    உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
    ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
    ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
    ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
    நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

    பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

    தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
    பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
    ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
    தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

    அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

    தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
    பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
    பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
    தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

    தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
    வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
    பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
    விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
    ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
    மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
    ॥ 8.8.4॥

    தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
    ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
    வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
    ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

    ॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

    ———————

    காண்டம்-‍8

    தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

    குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

    இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

    அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்

    ப்ரோவாசா – உபதேசம் செய்தல்

    பரிசர்ய – காக்கப்படவேண்டும்- to take care of

    இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

    விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

    இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

    அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
    க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
    ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
    ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
    பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
    நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
    கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
    ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
    ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
    ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
    பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
    நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

    இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
    மீண்டும் -32-வருஷம்
    ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
    கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

    ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
    ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
    ॥ 8.9.3॥

    ॥ இதி நவம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்-‍9

    ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

    குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்

    தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்

    தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்

    நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

    ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

    மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

    குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

    ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

    இந்திரனின் விசாரங்கள்:

    இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

    தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.

    தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)

    தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

    நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

    இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

    குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

    ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
    ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
    ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
    தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
    ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

    ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
    விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
    இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
    ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
    ॥ 8.10.3॥

    ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
    விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
    ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
    ॥ 8.10.4॥

    அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
    ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
    நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
    ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

    ॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்-‍10

    எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது. 

    குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.  

    தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் – ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.

    தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

    இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

    ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.

    ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

    குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

    தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
    ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
    ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
    க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
    நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
    ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
    ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
    விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
    ॥ 8.11.2॥

    ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
    பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
    தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
    மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

    ॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்-‍11

    எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

    காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

    இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

    அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

    இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

    உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

    மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
    தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
    ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
    ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
    ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

    அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
    தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
    ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

    ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
    ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
    ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
    ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
    ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

    அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
    புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
    க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
    ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
    ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

    பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

    அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
    ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
    ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

    தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
    லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
    ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
    ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

    தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
    செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

    ॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

    ————

    காண்டம்-‍12

    சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

    இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

    சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொருக்ஷணமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

    ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

    ஆத்ம-சரீர சம்பந்தம்:

    இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

    1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.

    2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

    3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

    சரீர அபிமான பலன்:

    சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

    தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

    நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

    இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?

    சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

    கேள்வி-1

    ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?

    பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம். சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

    கேள்வி-2

    ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?

    குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

    வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

    அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

    ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

    விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்

    ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

    அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

    ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    [ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

    இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா. இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

    கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

    ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்

    மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

    யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

    பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

    ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
    இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
    தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
    ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

    ॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
    ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
    தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
    யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
    யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
    ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
    மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

    கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

    ॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

    ———————

    காண்டம்-‍13 (பிரார்த்தனை)

    ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

    காண்டம்-‍14

    ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
    தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
    யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
    யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
    ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
    மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

    கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

    ॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

    ————————

    இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

    ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

    ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
    ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
    கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
    ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
    ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
    ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
    ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

    ॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
    ॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

    ——————————————-

    காண்டம்-‍15

    பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

    1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்

    2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்

    3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.

    4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.

    5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

    6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

    ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

    ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
    ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
    ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
    நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
    ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
    மயி ஸந்து தே மயி ஸந்து ॥

    ॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

    ॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

    ஓம் தத் ஸத்

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்-

    April 24, 2025

    ஸ்ரீ பரம புருஷனுடைய ப்ரதி வஸ்து பூர்ணத்வத்தைப் பற்றி ஸ்ரீ தேசிகன் முதலான பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்

    தேசிக வந்தந மாலா த்விதீய புஸ்தக விமர்ச ருபமிதம்,ஸகல விபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதி

    ஸாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா என்று சாஸ்த்ரமே காட்டின கட்டளையிலே, தத்வ தர்சிகளான மஹா ப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டி யெடுத்துக் கொடுக்குமா போலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள்.

    எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலக மனைத்தும் உணரும். “கருதரிய உயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயக மென்றால் உன் பெருமைக்கு அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துளன் என்பது வேதாந்திகளின் கொள்கை.
    (1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக் காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துளன் என்று ஒப்புக் கொள்ளலாம்; அணு பதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக் கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ள இயலாது – என்பது ஒரு ஆக்ஷேபம்.
    (2) உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும்,பகவான் தன்னுடைய ஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துளன் என்று இசையத் தகாது ; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போகுமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணு மல்லவா?அதற்கு அவகாச மில்லாமற் போகுமே. ஒரு உதாரன் தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்து விட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்க வேணுமே;அது போல பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச் சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பவிக்கும் ? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளானென்கை பொருந்த மாட்டாது. ஒன்றில் நிச் சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்க ப்ரஸக்தி யேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளதன்று கொள்ளத் தகாது என்பது மற்றொரு ஆஷேபம்.

    பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்க கில்லாதவர்களே இந்தக் கக்ஷிகளைக் கிளப்ப வேண்டும். பகவான் அத்புத சக்தி யுக்தன் என்றும் அகடித கடநா ஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலி பந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கக்ஷிகளைக் கிளப்ப ஒரு போதும் நினையார்கள்.

    வஹஸி ணிமித் தத்தணம் வி அப்புய ஸத்தீ வஹஸி நிமித்தத்வமபி அத்புத சக்தி* என்றன்றோ அச்யுத சதக ஸ்லோகமுள்ளது-ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ப ப்ரஹ்மண -என்று ஸ்ரீ பாஷ்யகாராதிகள் அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற் குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.-பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே * என்பது முதலான சுடர் மிகு சுருதி வாக்கியங்கள் பலபல இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது.

    நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றை யெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார்.
    நரகும் சுவர்க்கமுமாய், வெல் பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் * கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் * நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் **புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசி யுள்ளார். இப் பதிகத்திற்கு நம் தேசிகன் அத்புதமான ஸ்லோக மிட்டருளுகிறார் : * ஸம்பத் தாரித்ர்ய பாவாத்… அகடித கடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்றருளி யுள்ளார்.

    இத் திருவாய் மொழியில்* வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய் என்பதும் (8) ஒரு பாசுரம். பகவான் தைவ ப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூர ப்ரருதிகளுக்கு மருத்யு வாயுமுளன் என்று இப் பாசுரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனாயும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங் காணா நின்றோம்.இப்படி யிருப்பதற்கு ஒரு அகடித கடநா சக்தி வேண்டிய அவசியமே யில்லை. இது போல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனா யிருக்கிறா னென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல் குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்;சிலர்க்கு நரக ப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்க பிராப்தியையும் பண்ணி வைக்கிறான் என்றால் இதில் அஸம்பாவிதத்வ சங்கைக்கு உதயமே யில்லை யன்றே இத்திருவாய்மொழியை இப் புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை . ஒன்றுமில்லை.எம்பெருமான் இப்படியாக வுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்தியம் விளங்குகைக்கு ப்ரஸக்தி யேது.சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும்- (1) * அகடிதகடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய் மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூற வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? வர்ஷ சதமானாலும் இவ் விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடை யிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப் பதிகத்தினால் ஸர்வ நியந்த்ருத்வம் அநுபவிக்கப் பட்டதென்று அருளிய ஆறாயிரப்படி யாசிரியரான பிள்ளான் வழியிலே நின்று ஸ்லோகமிடாமல் நம் பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே* அகடித கடநம் ப்ராஹ * என்றருளிச் செய்த தேசிகனுடைய திரு வாக்கு இவ் விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ரஸக்தி யுண்டோ? உண்டெனில் அருளலாமே ; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளி வந்து தீருமே . ப்ராஸங்கிகமான விது நிற்க.

    இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும் ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும் கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய கல்யாண குணங்களையும் பேசுகிறார் –ஆறாயிரப்படி —

    திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு –ஒன்பதினாயிரப்படி —

    இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துபன்னீராயிரப்படி —

    தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது –நாம் சேராத வற்றை எல்லாம்
    சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு
    இருபத்து நாலாயிரப்படி –

    இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.-‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.– பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.-ஈடு முப்பத்தாறாயிரப்படி

    ஸ்வாமி தேசிகன் அருளிய அற்புதமான ஸ்லோகமொன்று * பக்தஸ்ய தாகவசிசோ : பரிபாலநாய * இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் * எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப் புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகக்தினும் ஒவ்வொரு வஸ்துவிலும்-ஒவ்வோரிடத்திலும் நரஸிம்ஹ ரூபியாக ஆவேசித்து விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால்அந்த வொரு தூணில் நின்று மாத்திரம் ஒரு நர ஸிம்ஹம் மூர்த்தி மாத்திரமே வெளிவந்த படியால்
    மற்ற ஸகல இதர தேசங்களினும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹ மூர்த்திகள் இன்னமும் அப்படியே நித்ய வாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப் பட்டிருக்கிறது.இதை அதிவாத மென்று சொல்லி விட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாக வுள்ள ஏற்றம் போய் விடும். ‘ ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானாருங்கூட அதிவாதிகளே;நம் தேசிகனொருவரே அதிவாதி க ஏவ தேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சதா ஸர்வ கர்ப்ப வாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசி யுண்டோ?

    ”வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்று கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து வில்லையாகும் ” என்று தூஷணம் கொடுப்பதுண்டே. இது தான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தி யுடைத்தாயிருக்கை”என்று எழுதி வைத்தால் எவ்வளவு அழகாயிருந் திருக்கும்.

    த்ருஷ்டேபஹ் நுத்யபாவாதநுமிதி விஷயே லாகவஸ்யாநபாயாத்
    சாஸ்த்ரே ணைவாவஸேயே விமதி விரஹிதத நாஸ்திகத்வ ப்ரஹாணாத்|
    நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய ப்ரபந்தை : த்ராதம்
    ஸம்யக் யதீந்த்ரை ரித மகிலதம: கர்சநம் தர்சநம் ந:||

    நாதமுநிகள் காலத்திலேயே சிறந்து விளங்கியா ஸித்தாந்தம் ஆளவந்தாரின் அரிய க்ரந்தங்களால் அழகாக வளர்ந்தது.-அவருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு இணையாே ஸூக்திகளோ உலகில் இல்லை எனலாம். மதுர கம்பீரமான நடை மிக்க சாஸ்திர ஆராய்ச்சிகளைச் சொற்கள் தோறும் செவ்வனே காணலாம். சாஸ்த்ர வாக்யங்கள் எல்லாம் கத்ய பத்ய ரூபங்கள். அவர் கவிதார்க்கிக ஸார்வ பௌமபர் என்பதை அவருடைய ஒவ்வொரு க்ரந்தமும் உணர்த்தும். இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஆங்காங்கு ஸ்ரீபகவத் ராமானுஜமுநிகள் தமது க்ரந்தங்களிலே இடை யிடையே அழகாக இணைத்துத் தம் க்ரந்தத்திற்கு ஒரு பெருமையைக் கருதினார்.இவர் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் என்ற சிறிய க்ரந்தம் ஓன்றைக் கண்டால்கூட இவருக்குள்ள நிஷ்கர்ஷ சக்தி நன்கு விளங்கும். ஸ்ரீபாஷ்யகாரருக்கு முன்னரே இந்த மதம் மேன்மை பெற்றிருந்தது என்பதும் எளிதில் அறியப்பெறும். பாஞ்சராத்ரம் ப்ரமாணம் என்பதை இவருடைய ஆகம ப்ராமாண்யம் என்ற க்ரந்தம் ஸ்தாபிக்கிறது. இவர் பிதாமஹரான ஸ்ரீமந் நாதமுநிகள் வெளி யிட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இருந்து கூட பஞ்ச ஸம்ஸ்காரம், திருவஷ்டாஷர மேன்மை முதலிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் விசதமாக அறியப்படுகின்றன . அதற்கு முன்னமே அவை எல்லாம் அனுஷ்டானத்தில் இருந்தன என்பதும் அங்கே தெளியலாம்-. “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஓற்றுண்டு நின்று குடி குடி யாட்செய்கின்றோம்”

    ஆத்மநி திஷ்டன் -திண்ணையில் தீ இருக்கிறது என்றால் உழலும் வெளியும் இருப்பதைக் காட்டாதே -ஆகவே ஆத்மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்புமொக்க வாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும் வ்யாப் தி; வேதியில் அக்நி யிருப்பது போலவும் வ்யாப்தி;இப்படிப் பட்ட விலக்ஷண வ்யாப்தியை விளங்கக் காட்டுவதற்கே ஸ்ருதி * ஆத்மநி திஷ்டந் , ஆத்மா: அந்தர :* என்று இரண்டு படியாகவும் ஓதிற்று- என்று ஸ்ருத ப்ரகாசிகையில் விவரணமுள்ளது.-அணு வஸ்துவில் அந்தர் வ்யாப்தி விஷயம் நிஷ் கல்மஷமாய்முடிவு பெற்றது.

    ஜாதி வ்யக்தி தோறும் பரிமாப்ப வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறை வற வியாபித்து நிற்கும் என்றும், ஜாதி வ்யக்தி தோறும் பரி ஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசேதநத்துக்கு அது கூடுமென்றிருப்பர்கள் ; பரம சேதநனாய் ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறா னென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்”-ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்ய வர்த்தித்தால் மற்றொன்றில் அது காண முடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிந்ததென்று முடிய வில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சுஒரு புறமிருக்க, ப்ரஹ்ம வாதிகளில் தலைவரான ஸ்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீஸுக்தி யன்றே நமக்குத் தலை மேலது.-ஏகஸ்மிந்நேவ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா ” என்ற வாக்யமானதுபர ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸ்து தோறும் பூர்ண விருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான * அந்யத்ர வ்ருததி அயோக்யத்வ சங்கா வ்யுதாஸ என்றதானது பஹிர் வ்யாத்திக்கு விருத்தமா மென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டு போட்டு விட்டது.

    ஆர்ஷம் தர்மோபைதேசஞ் ச வேத சாஸ்த்ரா விரோதிநா, யஸ் தர்க்கேணாநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: * என்பது ப்ரஸித்தமாதலால் சாஸ்தரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப் பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. பிரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் பிரதி வஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்கலாமே யல்லது வேறு செய்யத் தகாது. பிறர் செய்வது என்ன வென்றால், பிரதிவஸ்து பூர்ணத்வத்தை அபலாபம் செய்வதற்கு யுக்தி வாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள் -அநி ஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்தரானவர்கள் மாத்திரமல்ல,ஸ்ரீ வசந பூஷணாதிகளால் நிரஸ்தரானவர்களும் கூட அந்த விருது சுமப்பவர்களே யென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈஸ்வரனை அங்கீகரியா நின்றார்களெனினும் அவர்கள் அனுமானத்தைக் கொண்டு ஈஸ்வரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமாநிகேஸ்வரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன்.-இங்கு சாஸ்த்ர பிரதர்சநம் தவிர யுக்தி ப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் திருப்தி யடையக் கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்கா பரிஹாரம் ஆகவில்லை யென்றால் அதோகதி தவிர வேறில்லை கிடீர்.-பரம புருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்த ப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம் புரிந்தனனென்பதும் -இப்படிப்பட்ட பிரியனை ஒருகாலும் ஸம்ஸார பந்தத்திற்குத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்தரங் கொண்டே யன்றோ பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்கப்பட்டன – * ய ஏவமாஹ * என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்ரத்தையே யன்றோ காட்டி யருளினர்.-முக்தைஸ்வர்ய மொன்று உண்டென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அது பரம புருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அந்த பரம புருஷன் ஸ்வதந்திரன் ஸத்ய ஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ர வேத்யம் இப்படியான போது அவன் முக்தனைத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்த்ரைக வேத்யமாகக் கூடியதே-

    ஸ்ரீபாஷ்யத்தில் நச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா என்ற ஸ்ரீ ஸூக்தி அவதரித்தது எதற்காக வென்னில்,பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்த மென்றும், இவன் தானே உபாயா நுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெற வேணு மென்றும், இவனே போக்தா வென்றும்… இப்படி யெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரருளிச் செயலைப் பேணுங் குடியிலே தலை காட்டத் தகா என்பது நம் மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்ளம்
    பகவானுடைய வ்யாப்தி யானது யறிக்கைக்காக – நியமநத்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தி யானது அதற்காக வல்ல.ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது.நியந்த்ருத்வா விசிஷ்ட வ்யாபகத்வம் பகவானுக்கு, தத் ரஹித வியாபகத்வம் ஆகாசாதிகளுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிற புடை இது.

    ஸ்வாமி ந்யாய ஸித்தாஞ்சனத்தில் ஈஸ்வர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈஸ்வர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வ ஜ்ஞாந ஸ்வேதர ஸகல த்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாக வுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகல த்ரயங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கை லக்ஷண மென்கிறார். நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அனுபவிக்குமிடத்து” விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநாதிகரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் “‘ என்று நிஸ் ஸந்தேஹமாக அருளி யுள்ளார்.

    ——————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ சாரீரிக மீமாம்ஸையைப் பற்றின அறுபத்திரண்டு வார்த்தா மாலை.-(ஸ்ரீகாஞ்சி-அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் )

    April 23, 2025

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    அர்வாஞ்சோ யத்பதஸர ஸிஜத்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
    மூர்த்நா யஸ்யான்வயமுபகதா தேசிகா முக்திமாபு :
    ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
    யத்ஸம்பந்தாத் அமநு தகதம் வர்ண்யதே கூரநாத : ||

    1-இவ் விருள் தரு மா ஞாலத்திற் பிறப்பது வெறுக்கத் தக்கதாயினும் * இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளு மச்சுவை பெறினும் வேண்டேன் * என்றும் * ஸம்ஸார ஏஷ பகவந் ! அபவர்க்க ஏவ * என்றும் * வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ –-என்றும் அநுஸந்திக்க நேரும் போது உள்ளத்திலுண்டாகின்ற உகப்பு நமக்கு எப்போதும் குன்றாது இருக்குமாகில் மீண்டுமீண்டும் இந் நிலத்தில் பிறக்க வேணுமென்கிற குதூஹலமே நமக்கு உற்றதாகும். ஆண்டாள்*ஏற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் * என்றருளிச் செய்கையாலே அவள் இந் நிலத்தில் பல பிறவிகளும் பிறந்து பேரின்ப மநுபவிக்கப் பாரித்தாளென்பது தெரிய வரும்.நாமும் அவ் வாண்டாளுடைய ஆசம்ஸையின் படியே ஏழேழ் பிறப்பும் பிறந்து பரஹ்மானந்த அநு பவம் பண்ணக் குதூஹலங் கொள்வோம்.
    இருள் தரு மா ஞாலத்துளினிப் பிறவி யான் வேண்டேன் * என்றும் பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பமாதலால் பிறவி வேண்டேன் * என்றும் வெறுத்துப் பேசின பேச்சு நமக்கு வேண்டா. இப்போது நாம் பிறந்து எவ்விதமான ஆனந்தத்தை யனுபவித்து வருகிறோமோ, இவ் விதமான ஆனந்தத்திற்குச் சிறிதும் லோப மில்லாமல் மேன் மேலும் எத்தனை பிறவிகளை எம்பெருமான் தந்தருளினாலும் பெரு மகிழ்ச்சியுடன்
    அவற்றை வரவேற்போமாக

    2-நன்மைகளுக்குதவாத த்வீபாந்தரங்களிலே நாம் பிறந்திலோம் ; ஸகல ஸ்ரேயஸ்ஸுக்களுக்கும் ஆஸ்பதமான ‘ஐம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே ‘ ஜனிக்கப் பெற்றோமே ; இது தன்னிலும் கிரிமி கீட பசு பக்ஷிகளாகப் பிறவாமலும் * துர்லபோ மாநுஷோ தேஹ * என்றும் மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் *-என்றும் புகழ்ப் படுகிற மானிடப் பிறவி பெற்றோம். இது தன்னிலும் வேத வேதாந்த வேதாங்கங்களை நிஸ் ஸங்கோசமாக அதிகரிப் பதற்குப் பாங்கான ஜாதியிலே ஜனிக்கப் பெற்றோம் ; அது தன்னிலும் *ஆழ்வார்களையுமருளிச் செயல்களையும் தாழ்வா நினைத்து நரகில் வீழ்வார்களது வகுப்பிலன்றிக்கே * தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித் திரிவனே என்னும் வகுப்பிலும், அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடனாம்படி மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை யுன்னிச் சிரத்தாலே தீண்டுங் குடியிலும் பிறக்கப் பெற்றோம்.-அவாங் மநஸ கோசரமென்று ஓதப்படுகிற எம்பெருமானுடைய ஆனந்தமும் நம்முடைய ஆனந்தத்திற்கு நிகராகுமோ?யெனக்கெதிரில்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே என்று வானம் பிளக்க உத்கோஷித்து ஸஸம்பரம ந்ருத்தம் செய்ய வன்றோ நாம் பிறந்திருக்கிறோம்.

    3- இத்தகைய மஹா பாக்யம் பெற்ற நமக்கு “புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே சயநம் ” என்னும் படியான ஸம்ஸாரம் மறுவலிடாதாயினும் நாம் புநஸ் புநஸ் ஜன்மத்தையே பகவத் ஸந்நிதியில் பிரார்த்திக்கக் குதுகலிக்கின்றோம்.-திருநாட்டிலே சென்று என்ன செய்யப் போகிறோம்.அங்கு ஸ்ரீ பாஷ்ய பகவத் விஷயாதிகள் ஸேவிக்க ப்ரஸக்தி யுண்டோ? ஸ்ரீவசந பூஷண ஆசார்ய ஹ்ருதயாதிகள் அநுஸந்திக்க அவகாசமுண்டோ? * ஏதத் ஸாம காயந் நாஸ்தே * என்று உபநிஷத்து ஓதின படி ஹாவு ஹாவு ஹாவு என்று கானம் பண்ணிக் கொண்டிருக்கலாமத்தனை. இந்த கானம் யாருக்கு வேணும்? இங்கு நாம் ஓதுகிற உபய வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் ரஹஸ்யங்களையும் நித்ய ஸூரிகளும் முக்தாத்மாக்களும் கேட்டு அவர்களும் எம்பெருமானுடைய நியமனம் பெற்று இங்கே வந்து பிறக்க ஆசைப்படா நிற்க, நாம் அங்கே போக நினைப்பது தகுதியோ?

    4-நமக்குண்டான ஸதாசார்ய ஸம்பந்த வைபவாதிகள் காரணமாக ஒரு கால் நம்மை எம்பெருமான் அங்கே கொண்டு போக நினைத்தாலும் கொண்டு போய் விட்டாலும் ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிற உபநிஷத்தையும், * அநாவ்ருத்திச் சப்தாதநாருத்திச் சப்தாத் என்கிற ப்ரஹ்ம ஸூத்ரத்தையும், * த்யக்த்வா தேஹம் புநர் ஐந்ம நைதி * என்ற கீதையையும் கிழித்தெறிந்து நாம் மீண்டுமிங்கே ஓடிவந்து விட வேணுமே யொழிய அங்கே தங்கி யிருக்கத் தகாதென்பது அடியேனுடைய திண்ணிய அத்யவஸாயம். நம்முடைய யஜூர் வேதத்தில் ஆறாவது காண்டத்தின் ஆரம்பத்தில்“ கோ ஹி தத் வேத யத்யமுஷ்மிந் லோகே அஸ்திவா ந வேதி” என்று ஓதப் பட்டுள்ளது. இதன் பொருள் தெரியுமோ? மேலுலகத்தில் சேமமுண்டென்று யார் கண்டார்? உண்டோ இல்லையோ என்று ஸந்தேஹிக்கும் படியாகவே யுள்ளது? என்பது இந்த வாக்யத்தின் தாற்பரியம். இதற்கு முன் வாக்யத்தில் – நாஸ்மால் லோகாத் ஸ்வேதவ்யமி வேத்யாஹு என்பதில் ) இந்த வுலகத்தை விட்டுப் போக விரும்பலாகா தென்றும் சொல்லிற்று. * ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே * என்றருளிச் செய்த திருமங்கை யாழ்வார் திருவுள்ளமுமிதுவே.

    5- இவ் விபூதியில் நாம் பலவகையான இவ்விபூதியில் நாம் பலவகையான ஆனந்தங்களை யநுபவிக்கிறோம். லௌகிகமான ஆனந்தங்களை நெஞ்சாலும் நினைக்க வேண்டா.ஸ்வரூப அநு ரூபமாக நாம் அநுபவிக்கும் ஆனந்தங்கள் அபரிமிதம். வாசா மகோசரம்.* சீரார் திருவேங்கடமே திருக் கோவலூரே மதிட் கச்சி யூரகமே பேரகமே வெள்ளறையே வெஃகாவே பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமஞ் சூழ்ந்த வரங்கமென்று-பதியே பரவித் தொழுந் தொண்டர்களாய்க் கொண்டு அனுபவிக்குமானந்தம் ஒருபுறமிருக்க நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அரு மருந்தாக அருளிச் செய்திருக்கின்ற திவ்ய ஸுக்திகளை அப்பொழுதைக் கப் பொழுதென்னாரா வமுதமே ‘ என்னும்படி நித்யாபூர்வமான அம்ருதமாகப்பருகி நாமநுபவிக்குமானந்தம் இணை யற்றது. இவ்வானந்தத்திற்கு எந்த ஆனந்தமும் ஈடாகாதென்பது அதிசயோக்தி யன்று. அதிலும், நம் பிள்ளை தொடங்கி மணவாள மா முனிகளீறாக வுள்ள ஆசார்ய ஸார்வ பௌமர்களின் அமுதிலுமாற்ற வினிய திவ்ய ஸ்ரீஸுக்திகளை யனுபவித்து எய்துமின்பம் * நெஞ்சால் நினைப்பரிதால் என்னத் தகுமத்தனை. இதற்கு நாம் இட்டுப் பிறந்திருப்பது விலக்ஷணமான தொரு பாக்ய விசேஷ மன்றோ. அநல்பமான தபஸ்ஸின் பலனன்றோ?

    6-அந்த திவ்ய ஸுக்திகளில் ஆழவிழிந்து அபூர்வார்த்தங்களை ஸதாசார்ய ஸன்னிதானத்தில் கேட்டு அவற்றை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொள்வது தான் நமக்கு ஜன்ம ஸாபல்யமாகும். ஆசார்ய சுச்ரூஷைகளுக்கு அவகாசம் பெறாதவர்களும் அவ் வர்த்தங்களை இழக்க வொண்ணாதென்று கருதியே அடியேனிப்போது சில வார்த்தா மாலைகளினால் அந்த அர்த்த விசேஷங்களை யெல்லாம் ஆஸ்திகர்களுக்கு அறிவிக்க விரும்பி யிருக்கின்றேன். உபய வேதாந்தங்களிலும் ஸ்ரீவசந பூஷணாதி ரஹஸ்யங்களிலும் மற்றும் ஸ்ரீராமாயண பகவத் கீதாதிகளிலும் முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னுமாக விளங்குகின்ற அர்த்த விசேஷங்களை எளிய வார்த்தைகள் மூலமாகவே வெளியிடக் குதூஹலங் கொண்டிரா நின்றேன்.-அறுபத்திரண்டு வார்த்தைகள் கொண்ட அனேக வார்த்தா மாலைகளுக்குள் இந்த வார்த்தா மாலையில் ஸம்ஸ்க்ருத வேதாந்தமாகிய (ப்ரஹ்ம ஸுத்ர மென்கிற) சாரீரக மீமாம்ஸையின் அரிய பெரிய பொருள்களைப் பற்றி யெழுதுகின்றேன். மிகக் கடினமான விஷயங்களையும் கூடுமான வரையில் எளிய நடையில் எழுதுவேன். ஆனாலும் விஷயத்தின் காடியம் நம்மால் தவிர்க்க முடியாமல் நிற்குமிடங்களுமுண்டு. அப்படிப்பட்ட விடங்களில் நாம் எவ்வளவு எளிதாக எழுதினாலுங்கூட சிலர்க்குப் பயன் படாமற் போகக் கூடும். அப்படிப்பட்ட சில விடங்களைப் பெரியார்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    7-வேதம் கர்ம காண்டமென்றும் ப்ரஹ்ம காண்டமென்றும் இரு வகுப்பாக வுள்ளது. பூர்வ பாகம் கர்ம காண்டமென்றும் உத்தர பாகம் ப்ரஹ்ம காண்டமென்றும் வழங்கப்படும். உபநிஷத்துக்களையே ப்ரஹ்ம காண்டமென்பது. பகவானுக்கு ஆராதந ரூபங்களான யஜ்ஞம் முதலிய கர்ம விசேஷங்களை விரிவாகக் கூரும் வேத பாகம் கர்ம காண்டமென்றும், அந்த கருமங்களினால் ஆராதிக்கப்படுகின்ற பகவானுடைய ஸ்வரூப ரூப குணங்களை விரிவாகக் கூறும் வேத பாகம் ப்ரஹ்ம காண்டம் (அதாவது உபநிஷத்து) என்றும் சொல்லிற்றாயிற்று.

    8-கர்ம காண்டத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக ஜைமிநி யென்னும் மஹர்ஷி யெழுந்து பதினாறு அத்யாயங்களோடு கூடிய ஒரு சாஸ்த்ரத்தை யியற்றினார். அதற்குப் பூர்வ மீமாம்ஸை யென்று பெயர். இதில் பன்னிரண்டு அத்யாயங்களே ஜைமினி மஹர்ஷியால் இயற்றப்பட்டவை யென்றும், மேல் நான்கு அத்தியாயங்கள் காசக்ருத்ஸ்நர் என்பவரால் இயற்றப் பட்டவை யென்றும் ஒரு பக்ஷமுண்டு. இதைப் பற்றி இங்கு விசாரம் அப்ரஸக்தம். “ஜைமிநீயம் ஷோடச லக்ஷணம் * என்பது பொதுவான வார்த்தை. விருத்தி க்ரந்தத்தில்,பதினாறு அத்யாயங்களும் ஜைமிநி ப்ரோக்தமென்று கூறப் பட்டுள்ளது. (லஷணமென்று அத்யாயத்திற்குப் பெயர்.)

    9-ப்ரஹ்ம காண்டமென்னும் உபநிஷத் பாகத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக வியாஸ மஹர்ஷி யெழுந்து நான்கு அத்யாயங்கள் கொண்ட வொரு சாஸ்த்ரத்தை இயற்றினார். அதற்கே சாரீரக மீமாம்ஸை யென்று பெயர்.உத்தர மீமாம்ஸை யென்றும் வழங்குவர். ப்ரஹ்ம ஸூத்ரம் என்பது இதனையே ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்களுள்ளன ஆகவே பதினாறு பாதங்கள் கொண்டது சாரீரக மீமாம்ஸை யென்றதாயிற்று.

    10-இதில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை செய்து நிர்ணயிக்கும் பகுதிக்கு அதிகரண மென்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகரணங்கள் இந்த மீமாம்ஸையில் நூற்றைம்பத்தாறு உள்ளன. சில அதிகரணங்களில் ஒரே ஸுத்ரமிருக்கும். பல அதிகரணங்களில் பல ஸூத்ரங்களிருக்கும். மொத்தம் ஸூரங்களின் இலக்கம் ஐந்நூற்றுற்பத்தைந்து என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது.
    ஆக, நான்கு அத்யாயங்களையும் பதினாறு பாதங்களையும் நூற்றைம்பத்தாறு அதி கரணங்களையும் ஐந்நூற்று நாற்பத்தைந்து ஸத்ரங்களையுங் கொண்டது ப்ரஹ்ம ஸூத்ர சாஸ்த்ர மென்றதாயிற்று

    11-தத்வ ஹித புருஷார்த்தங்களை நாம் தெரிந்து கொள்வதற்கு உபநிஷத்துக்களே ஸாதனமாகும். அவ் வுபநிஷத்துக்களின் பொருள்களை ஸம்சயய விபர்யமற நிஷ்கர்ஷித்து விளக்கக் கூடியது ப்ரஹ்ம ஸூத்ர சாஸ்த்ரமே யாதலால் வேதாந்திகளுக்கு இதுவே புகலாயிற்று. ப்ரஹ்ஸுத்ரமென்கிற சாரீரக மீமாம்ஸையின் பொருளை நிஷ் கர்ஷமாகவும் நிஷ் கல்மஷமாகவும் தெரிந்து கொண்டவர்களே வேதாந்திகளென்றும் ப்ரஹ்ம ஜ்ஞானிகளென்றும் சொல்லத் தகுதி யுடையார்.

    12-மஹர்ஷி ப்ரணீதங்களான ஸூத்ரங்களின் பொருளை நம் போல்வார் சிறிதும் அறிய கில்லார்களாதலால், நம் போன்ற அல்ப மதிகளிடத்தில் பரம கருணை கொண்ட பூருவர்கள் அந்த ஸுத்ரங்களின் அர்த்தத்தை விளக்கி பாஷ்யங்கள் இயற்றி யுள்ளார்கள். த்வைதம்,அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என மூன்று மதங்கள் உலக ப்ரஸித்தமாக வழங்குமவை. இம் மூன்று மதங்களிலும் பாஷயங்கள் அவதரித்துள்ளன.அத்வைத மதத்திற்காக சங்கராசாரிய ஸ்வாமிகள் பாஷ்யம் இயற்றினார். த்வைத மதத்திற்காக ஆனந்த தீர்த்த ஸ்வாமிகள் (மத்வாசார்யர்) பாஷ்யமியற்றினார். நமது விசிஷ்டாத்வைத மதத்திற்காக பகவத் ராமாநுஜாசாரய ரென்கிற ஸ்வாமி யெம் பெருமானார் ஸ்ரீ பாஷ்ய மருளிச் செய்தார். வட இந்தியாவில் அதிக ப்ரஸித்தி பெற்றுள்ள வல்லப மதம் நிம்பார்க்க மதம் முதலிய மதங்களுக்காகவும் பாஷ்யங்கள் தோன்றி யுள்ளன. சைவ மதத்திற்காக நீல கண்ட பாஷ்யம் தோன்றியுள்ளது. இப்படி மற்றும் பல பாஷ்யங்களிருந்தாலும் மத த்ரய பாஷ்யமென்று மூன்று பாஷ்யங்களே நமது நாட்டில் குலாவப் பட்டுலாவுவன.

    13-விசிஷ்டாத்வைதிகளென்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களென்றும் பகவத் ராமாநுஜ தர்சநஸ்தர்களென்றும் வழங்கப் படுகின்ற நமக்கு ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்யமே ஜீவாது வென்பது சொல்லாமலே விளங்கும்.உபநிஷத்துக்களின் உண்மைப் பொருளை விளக்கி ஸூத்ரகாரருடைய உள்ளத்திற்கு அநு குணமாக நிஷ் பஷ பாதமாய் நிருமிக்கப்பட்டது ஸ்ரீராமாநுஜ பாஷ்யமே யென மேனாட்டுப் புலவர்களும் மெச்சி யுள்ளார்கள். அந்த ஸ்ரீபாஷ்யத்தின் உண்மைப் பொருளானது ஸ்ருத ப்ரகாசிகை முதலிய வியாக்கியான நூல்களின் உதவியினால் உணரப்பட வேண்டும். அதற்கு ஸாமன்ய சாஸ்த்ரங்களின் உதவி இன்றி யமையாதது. அப்படிப்பட்ட சாஸ்த்ரஜ்ஞர்கள் நெடு நாள் குருகுல வாஸம் செய்து ஸ்ரீபாஷ்யத்தை யதிகரித்து பாஷ்யாதிகாரிகளென்று பேர் பெற்றுச் சிறந்த வேதாந்திகளாகித் தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிவாக உணர்ந்து நிரதிசய ஆனந்த சாலிகளாகின்றனர். அவ்வளவு அதிகாரம் வாய்க்கப் பெறாதவர்களையும் கைவிட மாட்டாத கருணை மிக்க நம் பூருவாசாரியர்கள் திவ்ய பிரபந்த தத் வியாக்யானங்களையும் ரஹஸ்ய தத் வியாக்யானங்களையும் மற்றும் பல திவ்ய கரந்தங்களையு மருளிச் செய்துள்ளார் களாதலால் ஸ்ரீ பாஷ்யத்தில் நேராக அவகாஹிக்க மாட்டாதவர்களும் இழவாமல் அதில் விவரிக்கப் பட்டுள்ள தத்வ ஹித புருஷார்த்தங்களை ஸதாசார்ய ஸகாசத்தில் உணரப் பெறுகின்றார்கள். அன்னவர்களது ஞானத்திலும் ஒரு குறை யில்லை குற்றமில்லை யென்பது மாத்திரமே யல்லாமல் ஸ்ரீ பாஷ்யாதிகாரிகளைக் காட்டிலும் மிக விசதமான ஞானத் தெளிவு பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள்

    14-ஆனாலும் ப்ரஹ்ம ஸத்திரத்தில் என்ன விஷயம் எந்த விதமாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் பலர்க்கு அபிலாஷை யுண்டு. விஸ்தாரமாகத் தெரிந்து கொள்ளா விடினும் ஸார ஸங்க்ரஹமாக வாவது தெரிந்து கொள்ள வேணுமென்கிற விருப்ப முண்டாகி,அப்படித் தெரிவிப்பதொரு நூல் தமிழிலுண்டா வென்று பலரும் விசாரிப்பதுண்டு. ஸ்ரீபாஷ்ய மொழி பெயர்ப்பு, ஸ்ருத ப்ரகாசிகை மொழி பெயர்ப்பு என்றிப்படி சில நூல்கள் வெளி வந்தாலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ப்ரமேயத்தை ஸாரமாகத் தெரிந்து கொள்வதற்கு உரிய நூல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமென்றே பல மஹான்கள் கருதுகின்றனர். அந்தக் கருத்தை நிறை வேற்றுவதற்காக மிகவும் ஊக்கங் கொண்டிருக்கிறேன்.தத் விஷாயகமான ஸுர்யோதயத்திற்கு இது அருணோதயமாக நினைக்கத் தகும்.

    15-ப்ரஹ்ம ஸூத்ரத்தில் முதல் அதிகரணம் ஜிஜ்ஞாஸாதிகரணமெனப்படும்.
    ” அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா ” என்பது ஸுத்ரம். அத = கர்ம விசாரம் செய்து முடிந்த பிறகு, அத := கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே, ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா= இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம் விசாரம் (செய்யத் தக்கது )என்று ஸுத்திரத்தின் மேல் பொருள் அறிக. கரம விசாரத்தைச் செய்து முடித்தவர்கள் அந்தக் கருமங்களினுடைய அற்பமும் அஸ்திரமுமான பலன்களில் நசை யொழிந்து மோக்ஷ புருஷார்த்தத்தை விரும்புவர்களாதலால் அப்படிப் பட்டவர்களுக்கு ப்ரஹ்ம விசாரம செய்யத் தக்கது என்றதாயிற்று. இதை இன்னமும் சிறிது விவரிப்போம். நன்றாக வேத மோதின் வொருவர் ஜைமினி மஹர்ஷியின் கர்ம மீமாம்ஸையில் சொல்லப் பட்ட நியாயங்களினால் ஜ்யோதிஷ்டோமம் முதலிய யஜ்ஞங்களின் (கருமங்களின்) தன்மை இன்னபடிப் பட்டது,அவற்றை யியற்ற வேண்டிய விதமின்னது, அவற்றின் பலனான ஸ்வர்க்கம் முதலியவற்றின் ஸ்வரூபம் இத்தகைத்து என்று இவ் வியைங்களை அறுதி யிடப் பெற்ற பின்பு ஸ்வர்க்கம் முதலிய அந்தப் பலன்கள் நஸ்வரங்கள் என்று தெரிந்து கொண்டதன் பலனாக அவற்றைப் பெற வேணு மென்கிற விருப்பம் தொலைந் தொழியப் பெறுகின்றார். பர ப்ரஹ்ம ப்ராப்தி யாகிற மோஷ புருஷார்த்தத்தில் மேலெழுந்த வொரு உணர்ச்சி யிருப்பதனால் இதனைப் பெற வேணு மென்கிற விருப்பமும் அவர்க்கு உண்டாகின்றது. இப்படி ப்ரஹ்ம் ப்ராப்தியில் விருப்ப முண்டானவாறே, அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது,அதனைப் பெறுதற்கு உபாய மின்னது,பெற்று அநுபவிக்கும் பலன் இன்னபடிப் பட்டது என்றித் தகைய விஷயங்களை நிர்ணயிக்க வேண்டுமாதலால் இந்த நிர்ணயம் ப்ரஹ்ம மீமாம்ஸையிற் சொல்லப் பட்டுள்ள நியாயங்களினாலேயே விளையக் கூடியது என்றதாகத் தேறி நின்றது.அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸ * என்கிற இந்த ஸுத்திரத்திற்கு இவ்வளவே விஷய மாயிருக்க, இங்கு ஸ்ரீ பாஷ்யம் மிக மிக வளர்ந்திருக்கின்றதே; அவ்வளவு விரிவுக்கு விஷயமென்ன? என்று பலர் அறிய விரும்பக் கூடும். கேண்மின், இந்த ஸூத்ரத்தில் மூன்றே பதங்கள் உள்ளன. (அத) என்கிற முதல் பதத்திற்கு அதற்குப் பிறகு’ என்று அர்த்தம். எதற்குப் பிறகு ? என்று கேள்வி உடனே உண்டாகின்றது. கர்ம விசாரம் செய்து முடிந்த பிறகு ‘ என்று நாம் அர்த்தம் சொன்னோம். பிறர் இங்ஙனே அர்த்தம் கொள்ளாமல் வேறு அர்த்தம் கொள்ளுகின்றனர். ஸாதந ஸம்பத்தியின் ஆநந்தாயமே அத சப்தார்த்த மென்று சங்கர பாஷ்யத்திலுள்ளது.அது பொருந்தா தென்று மறுக்க அவசியம் ஏற்பட்டது. ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைப் பற்றிப் பிறர் கூறுவதும் அவஸ்யம் மறுக்க வேண்டியதாயிற்று. இவ் விரண்டு விஷயங்களில் ப்ரஸக்தா நுப்ரஸக்தமாகப் பல பல விஷயங்கள் பெருகின படியால் இவ்விடத்து ஸ்ரீபாஷ்யம் மிக வளர்ந்தது. அவ்விரிவு இங்கு வேண்டாவென்று விடுக்கப்பட்டது. ஸூத்ரத்தின் மேல் இங்குத் தோன்றி யுள்ள பூர்வ பக்ஷத்தையும ஸித்தாந்தத்தையும் ஸாரமாக வுணர்த்துகிறோம், உணர்க.

    16- இவ் வதிகரணத்தின் பூர்வபக்ஷம் வருமாறு:-கர்ம மீமாம்ஸையில் அர்த்த வாதாதிகரணத்தில் “ஆம்நாயஸ்ய க்ரியார்த் தத்வாத் ஆநர்த்தக்யம் அததர்த்தநாம் தஸ்மாத நித்ய முச்யதே ” என்கிற வொரு ஸுத்திரத்தினால் ஒரு பூர்வ பக்ஷம் கிளப்பப் பட்டது; அதாவது- வேத ஸாமாந்யமும் ஏதேனுமொரு கார்யத்தைச் செய்ய வெண்டியதாக வுணர்த்தித் தீர வேண்டிய நிர்ப்பந்த முடையது; அதைச் செய் இதைச் செய் என்று கர்த்தவ் யார்த்தங்களை நியமே போதிப்பதே வேதங்களின் க்ருதயம். அர்த்தவாத ரூபங்களான வேறு வாக்யங்களானவை கர்த்தவ் யார்த்த மொன்றையும் போதிக்காமை யினாலே அப்படிப் பட்ட வாக்யங்களுக்கு பிராமாண்யம் ஸம்பவிக்க மாட்டாது. (இதைச் சிறிது விவரிப்போம்-) “வாயவ்யம் ச்வேத மால பேத பூதிகாம:” என்பது ஒரு வேத வாக்யம். இதில் ஒரு கருமம் கர்த்தவ்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த வாக்யம் (வாயுர்வை க்ஷேபிஷ்டா தேவதா’ என்பது. முன் சொன்ன கருமத்தில் ஆராத்யமான வாயு தேவதையின் ஒரு பெருமையைப் புகழ்ந்து கூறுவது இந்த வாக்யும். வாயு மிகவும் சீக்கிரமாகப் பலனளிக்க வல்ல தேவதை” என்பது இந்த வாக்யத்தின் அர்த்தம். இப்படிப்பட்ட வாக்யங்களுக்கு அர்த்தவாத வாக்ய மென்று பெயர். இவற்றில் கர்ம விதி ஒன்று மில்லாமையால் இவை விதி வாக்யங்களல்ல. விதி வாக்யமாயிருந்து கொண்டே பிராமாண்யம் பெற மாட்டா- என்கிற பூர்வ பக்ஷம் –ஆம்நாயஸ்யேதி -ஸ்த்ரத்தினால் கிளப்பப்பட்டது. பிறகு “விதிநாது ஏக வாக்யத்வாத் ஸதுத்யர்த்தே விதீநாம் ஸ்யு:” என்கிற ஸூத்ரத்தினால் இதற்குப் பரிஹாரம் சொல்லப் பட்டது. எங்கன் யென்னில், அர்த்தவாத வாக்யங்கள் ஒரு காரியத்தைச் செய்யும்படி விதிக்காமற் போனாலும் ஸமீபத்திலுள்ள விதி வாக்யத்தில் விதிக்கப்பட்டதொரு க்ரியையில் அந்வயிக்கின்ற புகழ்ச்சியைத் தெரிவிப்பதனால் அந்த விதி வாக்யத்தோடு கூட ஏக வாக்யமாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறத் தட்டில்லை யென்று ஸித்தாந்தம் செய்யப்பட் டது ஜைமினி மஹர்ஷியால். ஆக, விதி வாக்கியங்களுக்கோ அவற்றுக்கு சேஷ பூதங்களான வாக்யங்களுக்கோ ப்ராமாண்ய முண்டே யல்லது வேறு வகையான வாக்யங்களுக்கு ப்ராமாண்யம் கிடையாது. உலகத்திலும் முதன் முதலாகச் சிறுவர்களுக்கு வ்ருத்த வ்யவகாரத்தினாலேயே சக்தி க்ரஹண முண்டாகிறது. (சக்தி க்ரஹணமாவது -இன்ன பதத்திற்கு இன்னது அர்த்த மென்கிற வுணர்ச்சி.) வ்யுத்பந்நனான வொருவன் வேறொரு வ்யுத்பந்நனை நோக்கி ஆநய ‘ என்கிறான். அதைக் கேட்ட அவன் ஒரு கோவைக் கொண்டு போகிறான். மறுபடியும் அவன் “காம் நய, அச்வம் ஆநய ” என்கிறான். அதைக் கேட்ட அந்த வ்யுத்பந்நன் கோவைக் கொண்டு போய்க் கட்டி விட்டுக் குதிரையைக் கொண்டு வருகிறான். இவற்றைக் கண்டு கொண்டிருந்த வொரு சிறுவன் (காம்) என்றதற்கு இன்னது பொருள், (ஆநய ) என்றதற்கு இன்னது பொருள்,(நய ) என்றதற்கு இன்னது பொருள்; அச்வமென்றதற்கு இன்னது பொருளென்று அங்கு நடந்த காரியங்களினால் தெரிந்து கொள்ளுகிறான். ‘ கோ’ பதமானது கொண்டு வருதல் கொண்டு போதல் என்கிற இரண்டு க்ரியைகளில் அந்வயிக்கின்ற வஸ்துவை போதிப்பதனாலே பசுவைச் சொல்லுகின்றது, ஆநய என்கிற பதம் கொண்டு வருவதாகிற க்ரியையைச் சொல்லுமது என்றிப்படி அந்தந்த பதங்களுக்கு சக்தியை க்ரஹிக்கின்றான், எங்கும் இப்படிப்பட்ட வ்யவஹாரங்களினாலேயே அவ்வோ பதங்களுக்கு அவ்வோ அர்த்தங்களில் சக்தி க்ரஹண முண்டாகிறது. ஆகவே இப்படிப்பட்ட வ்யவஹாரங்களெல் லாம் ஏதேனுமொரு கார்யார்த்த பரங்களாகவே காணப் படுதலால் உலகில் எல்லாப் பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ் யார்த்த பரங்களே யென்று நிச்சயிக்கிறான். ஆக இப் படிப்பட்ட யுத்பத்திக்கு இணங்க எல்லாப் பதங்களும் கார்யார்த்த பரங்களே. இப்படி லௌகிக பதங்கள் கார்ய பரங்களென்று தேறினால் ய ஏவ லௌகிகா த ஏவ வைதிகா ? என்கிற ந்யாயத்தாலே வைதிக பதங்களும் கார்ய பரங்களேயாகும்.(கார்ய பரங்களான வாக்யங்களுக்கே ப்ராமாண்யமுண்டு என்றபடி.) ஏவஞ்ச,கார்ய ரூபமல்லாத பர ப்ரஹ்மத்தினிடத்தில் வேதாந்த வாக்யங்களுக்குத் தாத்பர்யமிருக்க முடியாமை யினாலே வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதன்று- என்று பூர்வ பக்ஷம் ப்ராப்த மாயிற்று.

    17-இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு : சிறுவர்களுக்கு முதல் வ்யுத்பத்தி வ்ருத்த வ்யாவகாரத்தினாலேயே உண்டாகிறது என்பது பிசகு; இது எல்லாருடையவும் அநுபவத்திற்கு விருத்தமானது. உலகில் அவரவர்களுக்கு முதல் வ்யுத்பத்தி உண்டாகிற விதம் வேறு வகையாகவே அநுபவ ஸித்தமாக வுள்ளது. எங்கனே யென்னில், தந்தை தாய் முதலியவர்கள் தம் தம் சிறுவர்களுக்கு வ்யுத்பத்தியை யுண்டு பண்ண வேண்டி கண்ணிற் காணும் பல பல பொருள்களை விரலால் சுட்டிக் காட்டி இதோ சந்திரன், இதோ கிளி, இதோ குதிரை, இதோ மாமா’ என்றிப்படி பிரயோகித்து வருகிறார்கள். சிசுக்களும் பூர்வ ஜன்ம வாஸநையினால் கால க்ரமேண அவ்வோ பதங்களுக்கும் அவ்வோ அர்த்தங்களுக்குமுள்ள ஸம்பந்தத்தைத் திடமாக வுணர்ந்து வ்யுத்பத்தி பெறுகின்றன. ஒரு கார்யத்தில் அந்வயித்த வஸ்துவிலேயே முதன் முதலாக சக்தி க்ரஹண முண்டாகிற தென்றதற்கு முரணாக ஒரு கார்யத்திலும் அந்வயியாத வஸ்துவிலேயே முதன் முதலாகப் பதங்களுக்கு சக்தி க்ரஹண முண்டாகின்றதென்று மூதலிக்கப்பட்டது.

    18–கார்ய பரமான வாக்கியத்திலிருந்தே சக்தி க்ரஹண முண்டாகிறதென்பதும் மிகவும் தவறு. தேவ தத்தா உனக்குப் பிள்ளை பிறந்தது. என்பதாக ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இது ஸித்தார்த்த பரமான வாக்கியமே யொழிய, காமாநய, காம் நய ‘ இத்யாதி வாக்யங்கள் போலே கார்ய பர வாக்கியமன்று. இந்த வாக்கியத்தினாலும் சிறுவர்களுக்கு வயுத்பத்தி விளையக் காணா நின்றோம். தேவ தத்தனுக்குப் பிள்ளை பிறந்தவுடனே வேறோரிடத்திலிருந்த அவனுக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஏவப்பட்ட வொருவன் தேவ த்த புத்ரஸ் தே ஜாத?’ என்கிறான்-அவ் யுத்தபந்நனான வொருவன், தேவ தத்தனுடைய க்ருஹத்தில் அவனுக்குப் பிள்ளை பிறந்ததையும் அதைத் தெரிவிப்பதற்காக வொருவன் ஏவப் பட்டதையும் அவன் கூறினதைக் கேட்டு தேவ தத்தனுக்கு முக விகாஸ முண்டானதையும் நோக்கி “புத்ரஸ்தே ஜாத ” என்ற வாக்கியத்திற்கு இன்னது பொருளென்று உணரப் பெறுகிறான். ஆகவே கார்ய பரமான வாக்கியத்திலிருந்தே சக்தி க்ரஹண மென்கிற நியதி இல்லை யென்றதாயிற்று. சில விடங்களில் ஸித்த பரமான வாக்யத்திலிருந்தும் கார்ய அநந்வித வஸ்துக்களில் சக்தி க்ரஹண முண்டாகிறது; சில விடங்களில் கார்ய பர வாக்கியத்திலிருந்தும் உண்டாகிறது என்று லோக அநு பவத்தினால் ஸித்திக்கிற படியால் ப்ராபாகரர்கள் ஸகல பதங்களும் கார்யார்த்த பரங்களென்று கூறுவது யுத்தி யற்ற தென்று தேறிற்று. ஆகவே வாக்கியங்களுக்கு ஸித்த ரூபமான ப்ரஹ்மத்தில் தாத்பர்யம் ஸம்பவிக்கலா மாகையாலே தத் விசார சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதே யென்று ஸித்தாந்தமானதாக முடிந்தது.

    19-இங்கு இப்படிப்பட்ட பூர்வ பக்ஷம் தோன்றி இதற்குப் பரிஹாரம் செய்வதாகிற விஷயம் அந்த ஸூத்ரத்தில் எங்ஙனம் கிடைக்கிறதென்று கேள்வி தோன்றும். கார்யத்தில் அந்வயியாத ப்ரஹ்மமாகிற ஸித்த வஸ்துவை ஜிஜ்ஞாஸ்யமாக இங்குக் கூறியிருப்பதனால் இதிலிருந்து இந்தப் பூர்வ பக்ஷ ஸித்தாந்தங்கள் நிர்ணயிக்கப் படக் குறை இல்லை – வேதாந்த வாக்கியங்களெல்லாம் கார்ய பரங்களாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறுமே யல்லது ஸித்த பரங்களாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெற மாட்டா தென்கிற வாதம் ஸமஞ்ஜஸமா யிருந்தாலன்றோ வேதாந்த வாக்யங்களினால் ஸித்த ரூபமான ப்ரஹ்மத்தை விசாரிப்பது கூடாதென்று சொல்ல நேரும்.

    20- முதலில் நாமெடுத்துக் காட்டிய பூர்வ மீமாம்ஸ ஸூத்ரங்களிரண்டினால் தேறின வர்த்தம் இப்போது விரோதிக்கிறதாக இனி நினைக்கக் கூடும். கார்ய பாரங்களல்லாத ஸித்த பர வாக்கியங்களுக்கு ஸ்வாதந்தர்யேண ப்ராமாண்யம் அஸம்பாவிதமென் றன்றோ அங்கு ஸித்தாந்தம் செய்யப் பட்டிருக்கிறது ; அதற்கு முரணாக இப்போது முடிந்ததே என்று சங்கிக்க நேரும்.இந்த சங்கை வேண்டா. எல்லா வேத வாக்கியங்களும் கார்ய பரங்களாய்க் கொண்டே பிராமாண்யம் பெறுமென்று பூர்வ பக்ஷி சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்டு அப்யுபகம்யவாத முறையில் பரிஹாரம் காட்டினார் ஜைமிநி மஹர்ஷி. அதுவே அவருடைய அபிப்ராயமென்பது கிடையாது. கார்ய பரமல்லாத அர்த்தவாத வாக்கியங்களும் விதி சேஷமாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறுகின்றன வென்று சொன்ன வளவால் ஸித்த பர வாக்யங்களுக்கு ப்ராமாண்யமே கிடையாதென்று சொன்ன படியாகாது. ஆகவே இந்த ஸூத்ரத்தில் செய்யப் படுகிற ஸித்தாந்தமானது பூர்வ மீமாம்ஸா அர்த்தவாதாதிகரண ஸித்தாந்தத்திற்கு விருத்தமன்று என்றதாயிற்று.

    21-இதில்-அத அத என்கிற இரண்டு பதங்களினால் கர்ம விசாரத்திற்குப் பிறகு கர்ம விசாரம் முடிந்த தென்கிற காரணத்தாலேயே, பர ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கதென்று கிடைப்பதனால் ப்ரஹ்ம விசாரத்தைக் குறித்துக் கர்ம விசாரம் நியமேந பூர்வ வ்ருத்தமென்று தேறுகின்றது. இதைப் பற்றியும் சிறிது விவரிக்கப்படுகிறது . வேத மோதின வொரு புருஷன் வேத வாக்யங்களில் கர்ம பலத்தைப் பற்றியும் பரஹ்ம ஞான பலத்தைப் பறறியும் ஸ்திரமென்று சில விடங்களிலும் அஸ்திரமென்று சிலவிடங் களிலும் மேலெழுந்த வாரியாக வுணர்ந்து இவற்றில் எது உண்மை யென்று நிர்ணயம் தெரிந்து கொள்ள விரும்புகிறான். அந்த விருப்பத்தினால் அதை நிர்ணயித்துத் தரக் கூடிய சாஸ்த்ரங்களில் ப்ரவர்த்திக்கிறான். கர்ம பலனைப் பற்றின வுண்மையை நிச்சயித்துத் தரவல்ல சாஸ்த்ரங்களில் முந்துற முன்னம் பிரவர்த்திக்கிறான். அநாதி வாஸநையினால் கருமங்களைச் செய்வது எளிதென்று பொதுவாகத் தோன்றி யிருக்கும். ப்ரஹ்ம ஜ்ஞானத்தில் அப்யாஸ மில்லாமையினாலே அது துஷ் கரமென்றும் தோன்றி யிருக்கும்.ஆகவே எளிதான உபாயத்தினால் அபி மதம் கை புகுவதா யிருக்க அரிதான உபாயத்தில் ப்ரவருத்தி ஸஸம்பவிக்க மாட்டா தாகையாலே ப்ரஹ்ம ஞானத்தின் பலனைப் பற்றி நிர்ணயிக்க வேணு மென்கிற விருப்பம் தடைபட்டு, கரும பலனைப் பற்றி நிர்ணயிக்க வேணு மென்கிற விருப்பமே தலை யெடுத்திருக்கும். இங்ஙனம் முன்னம் கரும விசாரம் செய்த வளவில் கரும பலன்கள் அஸ்திரம் என்கிற நிச்சய முண்டாகிறது. இப்படி நிச்சய முண்டான வளவில், கர்ம விசாரேச்சை தொலைந்ததாகிறது. இந்த கர்ம விசாரேச்சையே முன்பு ப்ரஹ்ம விசாரேச்சைக்கு இடையூறா யிருந்ததனால் இந்த ப்ரதிபந்தகம தொலையவே ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும் அதில் ப்ரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது. எனவே, ப்ரஹ்ம விசாரத்தைக் குறித்து கர்ம விசாரம் நியமேந அபேக்ஷித மென்றதாகிறது. இதுவே பூர்வ வ்ருத்தமாக இருக்கத் தக்கதாதலால் (அது அத)என்ற பதங்களுக்குப் பதவுரையில் நாம் கூறிய பொருளே பொருத்த முடைத்தென்ற தாயிற்று. இஜ் ஜிஜ்ஞாஸாதிகரண அர்த்த ஸாரம் இவ்வளவு போதும்.

    ——

    (இனி, இரண்டாவது-ஜந்மாத்யதிகரணம்.)
    22-உலகில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேணுமானால் லக்ஷணத்தை முன்னிட்டே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே பர ப்ரஹ்மத்தைத் தெரிந்து கொள்ள வேணுமானாலும் ஒரு லக்ஷணத்தை முன்னிட்டே தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் கண்ணால் காணக் கூடிய பொருள்களுக்கே லஷணம் கூற முடியுமே யல்லது கண்ணுக்குப் புலப்படாத பொருளுக்கு லக்ஷணம் கூற முடியாது. பர ப்ரஹ்மமோ கண்ணுக்குப் புலப்படாததே யன்றிப் புலப்படுமதன்று. ஆகவே அதற்கு ஒரு லக்ஷணம் கூற இயலாத போது அது தெரிந்து கொள்ள முடியாதென்று தேறி விட்டபடியால் அந்த பர ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் எப்படி செய்ய பிராப்தமாகும்? என்று ஆக்ஷேபம் தோன்ற,அவ் வாக்ஷேபத்தைப் பரிஹரிக்க இந்த அதிகரணம் எழுகின்றது. இவ் வதிகரணத்தின் ஸூத்ரம் * ஜந்மாத்யஸ்ய யத : * என்பது. ஐந்மாதி,அஸ்ய,யத: என்று மூன்று பதமாகவுள்ளது இந்த ஸூத்ரம். அஸ்ய – கண்ணால் காணப்படுகிற இந்த சேதந மிச்ரமானபிரபஞ்சத்திற்கு, ஜன்மாதி – உற்பத்தி ஸ்திதி ப்ரளயங்கள், யத :– எந்த வஸ்துவினிடத்தினின்று ஆகின்றனவோ, (அது தான் பர ப்ரஹ்மம் ] என்பதாக ஸுத்திரத்தின் பொருள்.-தைத்திரயோபநிஷத்தில் ப்ருகு வல்லி யென்னும் ப்ரகரணத்திலுள்ளதான” யதோவா இமாதி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி, தத் விஜிஜ்ஞாஸஸ்வ, தத் ப்ரஹ்மேதி “ என்னும் வாக்கியமானது பர ப்ரஹ்மத்திற்கு ஜகஜ் ஜந்மாதி காரணத்வ ரூபமான லக்ஷணத்தைச் சொல்லி யிருக்கின்றது. உலகில் நாம் ஆடு மாடுகளுக்கு ஒவ்வொரு லக்ஷணத்தைக் கொண்டு இதர பேதத்தை எப்படி நிச்சயிக்கிறோமோ அப்படியே ப்ரஹ்மம் கண்ணுக்குப் புலப்படாததா யிருந்தாலுங் கூட ஜக ஐந்மாதி காரணத்வ ரூபமான லக்ஷணத்தைக் கொண்டு சேதநா சேதநங்களிற் காட்டில் வேறுபட்டதென்று நிச்சயிக்க முடியுமாதலால் அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் கூடும் என்றதாயிற்று.

    23-இங்கே பூர்வ பக்ஷம்: -ப்ரஹ்மத்திற்கு ஐந்ம காரணத்வம் முதலானவை லஷணமாக ஸம்பவிக்க மாட்டாதென்று பூர்வ பக்ஷம் பிராப்தமாகிறது. “யத . இமாநி ஜாயந்தே” இத்தியாதியாக எடுத்துக் காட்டின உபநிஷத் வாக்யத்தில் அந்வய க்ரமம் எப்படி காண வேணும் என்றால் , “யத இமாநி பூதாநி ஜாயந்தே தத் ப்ரஹ்ம; யேந ஜாதாநி ஜீவந்தி தத் ப்ரஹ்ம; யத் ப்ரயந்தி அபிஸம்விசந்தி தத் ப்ரஹ்ம” என்று மூன்று வாக்யங்களாகப் பிரித்து அந்வயங் கொண்டு ஐந்ம காரணத்வம் ஒரு லக்ஷண மென்றும் ஸ்திதி காரணத்வம் மற்றொரு லஷண மென்றும் லய காரணத்வம் வேறொரு லக்ஷண மென்றும் ஆக வ்யாவர்த்தக லஷணங்கள் மூன்று அங்கீகரிக்க வேண்டியதாகின்றது. இப்படி யாகுமளவில், ஒரே ப்ரஹ்மம் என்றல்லாமல் பல ப்ரஹ்மங்கள் என்பதாகத் தேறும். வ்யாவர்த்தகங்கள் பலவானால் வயாவர்த்யமும் பலவாக வேண்டுகையாலே.

    24- இப்படி யொரு நிர்ப்பந்த முண்டோ? தேவதத்தன் கறுத்தவனாயும் பருத்தவனாயும் யுவாவாயும் செந்தாமரைக் கண்ணனாயு மிரா நின்றான் என்று ஒருவர் சொன்னால் கறுப்பு முதலிய வியாவர்த்தகங்கள் பலவாயிருப்பது கொண்டு வயாவர்தயனான தேவதத்தனும் பல வியத்திகளாகத் தேறி விடுவனோ? பரத்யக்ஷமாக ஒரு தேவதத் தனையே நாம் காண்கிறோம். அவ்வொரு வியக்தியினிடத்தில் கருமை, பருமை முதலான பலவும் கூடியிருக்கக் காண்கிறோம். இது போல ஒரு ப்ரஹ்மத்தினிடத்திலே ஐந்ம காரணத்வம் முதலானவை பலவும் கூடி யிருக்கக் குறை யில்லையே. இவற்றால் ப்ரஹ்ம வ்யக்தியில் பஹுத்வத்தை எப்படி ஆபத்தி பண்ண முடியும்? என்று மத்யே சங்கை தோன்றும். இதற்கு ஸமாதானம். கருமை பருமை முதலிய பலவற்றால் தேவ தத்த வ்யக்தியில் பன்மை வந்துவிட மாட்டாதென்பது வாஸ்தவமே, தேவதத்தன் கண்ணுக்குப் புலப்படுமவனாதலால் அவ் விஷயம் வேறு, ப்ரஹ்மம் அப்படி பிரத்யஷமன்றே- அதுவோ அப்ரத்யஷாமாயிரா நின்றது. ஐந்ம காரணத்வமும் லய காரணத்வமும் ஒன்றிலேயே கூடுமென்று க்ரஹிப்பிக்க வல்ல பிரமாண மெதுவும் புலப்படவில்லை. லக்ஷணங்கள் எல்லாம் இதர பேதத்தை ஸாதித்துக் கொடுக்குமவை என்பது உத்ஸர்க்கத: பராப்தமாயிரா நின்றது -ஐந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வ மென்னுமிந்த லஷணங்கள் இதர பேதத்தை வியாவ்ருத்தியை]ஸாதித்துக் கொடுக்குமளவில் இதற்குஅபவாதம் யாதொன்று மில்லாமையினாலே, ஐந்ம காரணத்வமாகிற லஷணமானது என்ன செய்யுமென்றால், தன்னைக் கொண்டு லக்ஷணீயமான ப்ரஹ்மத்திற்கு ஸ்திதி காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் லய காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். இப்படியே ஸ்திதி காரணத்வ ரூபமான லக்ஷணமும் ஸ்வ லக்ஷ்யமான ப்ரஹ்மத்திற்கு- ஐந்ம காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் லய காரண பூதமான பரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். இப்படியே லய காரணத்வ ரூபமான லக்ஷணமும் ஸ்வ லக்ஷ்யமான ப்ரஹ்மத்திற்கு ஜந்ம காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் ஸ்திதி காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். ஆக விப்படி லக்ஷண பேதங்களினால் ப்ரஹ்ம பஹுத்வம் தேறியே தீரும். இதற்காகப் பல லக்ஷணங்களைக் கொள்ளாமல் ( ஐந்ம காரணத்வே ஸதி ஸ்திதி காரணத்வே ஸதி லய காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் “என்று கொள்ளுகிறோ மென்னில்; இவற்றுள் ஒவ் வொன்றே லக்ஷணமாகப் போருமாதலால் மற்ற விசேஷணங்கள் வ்யர்த்தமாக வேண்டி வரும். மேலும் ஐந்ம காரணத்வமும் லய காரணத்வமும். விருதங்களாகையாலே ஓரிடத்தில் இவை கூடி யிருக்கவும் மாட்டா

    25-இதற்குமேல் ஒன்று சொல்லலாம். (அதோ பக்ஷி உட்கார்ந்து கொண் டிருக்கிறதே. இவ் விடந்தான் தேவ தத்தனுடைய கழனி] என்று ஒருவன் சொன்னால், தேவ தத்தனுடைய கழனிக்கு பக்ஷியின் ஸம்பந்தத்தை லக்ஷணமாகச் சொன்னதாக ஆகிறது. இப்படிப்பட்ட லக்ஷணத்தினால் பக்ஷி யுறையுமிடமான கழனியில் தேவதத்த ஸ்வாமிகத்வம் தெரிவிக்கப் படுகிறது.அது போலவே இங்கும் ஐந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வம் ஆகிற மூன்றையும் ஜ்ஞாபக லக்ஷணங்களாகக் கொண்டு இவற்றால் ஒரே வஸ்து ப்ரஹ்ம் பதார்த்தமாக ஏற்படுகிறது- என்னலாம்.

    26-இதுவும் பொருந்தாது -திருஷ்டாந்தத்தில், கழனி யென்கிற வொரு வஸ்து ஏற்கெனவே அறியப் பட்டிருந்தது. அப்படி அறியப் பட்டிருந்தவதில் பக்ஷி விசேஷத்தின் ஸம்பந்தத்தை யிட்டு தேவதத்த ஸ்வாமிகத்வம் தெரிவிக்கப் பட்டது. அது போலஇங்கு தெரிவிக்கப்பட வேண்டிய ப்ரஹ்மத்திற்கு ஏற்கெனவே அறிந்ததொரு தன்மை சொல்லித் தீர வேண்டும். அதுவோ ஓன்றும் சொல்ல முடியாததா யிருக்கின்றது.ஆகவே ஜந்ம காரணத்வம் முதலியவற்றுக்கு [பஷி விசேஷ ஸம்பந்தாதிவத்] ஜ்ஞாபகத்வமும் ஸம்பவிக்க மாட்டாது.ஏன்? ப்ரஹ்மத்திற்கு ஏற்கெனவே அறிந்ததொரு தன்மை சொல்லமுடியாதா என்ன ? நன்றாகச் சொல்லலாமே; ” ஸத்யம் ஜ்ஞாந மநந்தம் ப்ரஹ்ம -என்கிற வாக்யத்தில் சொல்லப்பட்ட ஸத்யத்வம் முதலானவையே முன்னமறிந்த தன்மைகள் என்னக் கூடாதோ வென்னில்; அங்கும் இத் தோஷம் ஸமானமே யாகும்.ஸத்யத்வாதிகள் ஜ்ஞபகமாகும் போது ஏற்கெனவே யறிந்த தன்மை யொன்று சொல்லியாக வேண்டும். ஐந்ம காரணத்வாதிகளைச் சொல்லுகிறோ மென்ன வேணும்; அதைத் தெரிந்து கொள்ளாமல் ப்ரஹ்ம பதார்த்தம் தெரிவிக்க முடியாதாதலால் அந்யோந்யாஸ்ரயம் அபரிஹார்யமாகும். ஆகவே ஜந்ம காரணத்வாதிகள் லக்ஷணமாகப் பொருந்த மாட்டா வென்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாகிறது.

    27- பர ப்ரஹ்மம் பரத்யக்ஷத்திற்கு விஷயமல்லாமையாலே அதற்கு ஒரு லக்ஷணமும் சொல்ல முடியாதாதலாலும், லக்ஷணத்தைக் கொண்டே எந்த வஸ்துவையும் அறிய வேண்டுமாதலாலும், லக்ஷணத்தின் அஸம்பவத்தினால் அறிய முடியாத்தான இந்தப் பர ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் செய்வதெப்படி? என்கிற ஆக்ஷேபத்தைப் பரிஹரித்துக் கொண்டு ஐந்மாத்யஸ்ய யத :” என்கிற இரண்டாவது ஸூத்ரம் தோன்றி யுள்ளதென்று கூறி பூர்வ பக்ஷத்தையும் விவரித்தோம். இனி ஸித்தாந்தம் வருமாறு

    28-ஒரு வஸ்துவுக்கு ஒரு லக்ஷணம் சொன்னோமானால் அந்த லக்ஷணமானது
    மற்ற வஸ்துக்களிற் காட்டிலும் இந்த வஸ்து வேறுபட்டது ” என்பதை நன்கு காட்டிக் கொடுக்குமென்று சொன்னோம். அப்படி வேறுபாட்டைக் காட்டுவதென்றால் என்ன? என்பதைச் சிறிது தெளிவாகத் தெரிந்து கொள்ள வேணும். விசேஷணங்களைக் கொண்டு நாம் வேறுபாட்டை யறிய வேணும். விசேஷ்யத்தில் ஏதோ வொரு தர்மம் இருப்பதாக விசேஷணம் காட்டும் ; அந்த தர்மத்திற் காட்டிலும் வேறுபட்டதான எந்த தர்மமும் அதில் இருக்க மாட்டாதென்று அதனால் தெரிந்து கொள்ளுகிறோமா?அல்லது அந்த தர்மத்திற்கு விருத்தமான வேறெந்த தர்மமும் அதில் இருக்க மாட்டாதென்று தெரிந்து கொள்ளுகிறோமா? என்று பரிசீலிக்க வேணும்-விசேஷணத்தினாலேற்பட்ட தர்மம் தவிர வேறு எந்த தர்மமும் அதில் விசேஷயத்தில் இருக்க மாட்டாதென்று தெரிந்து கொள்ளுகிறோமென்று தேறுமாகில் முற் கூறிய பூர்வபக்ஷம் ஊர்ஜிதமாகும். உண்மையோ வென்னில் அப்படியில்லை. ஒரு விசேஷணத்தினால் விசேஷ்யத்தில் ஒரு தர்மம் காட்டப்பட்டதே யானால் அதற்கு எதிரிடையான வேறு தர்மம் அதில் இருக்க மாட்டாதென்று நாம் தெரிந்து கொள்ளலாமே யன்றி அவிருத்தமான வேறெந்த தர்மமும் அதிலிருக்கமாட்டாதென்று நாம் தெரிந்து கொள்ள இயலாது(உதாரணம்.) “நீலோ வ்ருஷப: ‘ [கறுத்த எருது என்கிறவொரு வாக்யத்தை யெடுத்துக் கொள்வோம். இதில் கருமை விசேஷணம். எருது விசேஷ்யம். நீலம் என்கிற விசேஷணமானது இதர வ்யாவ்ருத்தியை [வேறுபாட்டை]க் காட்டுவதற்காகவே பிரயோகிக்கப் பட்டது. கறுப்பு நிறத்திற்கு விருத்தமான வெளுப்பு சிவப்பு முதலிய நிறங்கள் அந்த எருதினிடத்தில் இல்லை யென்று இதனால் நாம் தெரிந்து கொள்ளலாமே யல்லது இதற்கு அவிருத்தமான த்ரவ்யத்வம் முதலிய தாமங்களும் கூட அதில் இல்லை யென்று நாம் தெரிந்து கொள்ள முடியாது. லோகாநுபவம் அப்படி யில்லை. ஒரு விசேஷ்யத்தில் பல பல தர்மங்கள் இருக்கலாம். விசேஷணத்தினால் அல்லது விசேஷணங்களினால் எந்தெந்த தய்மங்களின் ஸத் பாவம் ஏற்படுமோ அந்த தர்மங்கள் தவிர வேறு எந்த தர்மமும் அந்த விசேஷ்யத்தில் கிடையாதென்கிற பிரதிபத்தி ஒரு நாளும் ஒருவற்கும் உண்டாக மாட்டாது. அந்த தர்மங்களோடு முரண்படும் படியான தர்மம் இருக்க மாட்டா தென்கிற ப்ரதிபத்தியே விளையும். “யுவா நீலோ வாமந : பங்குச்ச தேவ தத்த:” என்றால் யுவாவாயும் கறுத்தவனாயும் குள்ளனாயும் நொண்டியாயும் தேவ தத்தனி ருக்கிறான் என்று பொருள் படுகிறது. இதில் யுவா என்கிற விசேஷணமானது யௌவன முடையவ னென்று காட்டி, ளெவன மென்கிற அந்த தர்மத்திற்கு விருத்தமான இளமையும் முதுமையு மில்லாதவன் என்று காட்டுமே யல்லது அதற்கு அவிருத்தமான நீலத்வம் வாமநத்வம் முதலிய தர்மங்களு மில்லாதவன் என்று காட்ட மாட்டா தன்றோ? இப்படி ஒவ்வொரு விசேஷணத்தையு மெடுத்துக் கொண்டு விமர்சித்தறிக.

    29-விருத்தமான தர்மங்களும் ஏக காலத்தில் இருக்க முடியாதே யொழிய கால பேதத்தினால் அவையும் ஒரே வ்யக்தியினிடத்தில் இருக்கத் தடை யில்லை. “நீலவஸ்த்ர தாரீ தேவதத்த: ” என்றால் ஒரு காலத்தில் கறுப்புத் துணியை யணிந்தவனாயும் மற்றொரு காலத்தில் வெளுப்புத் துணியை யணிந்தவனாயு மிருப்பதில் விரோத மில்லாமையாலே நீல வஸ்த்ர தாரீ என்கிற இந்த விசேஷமானது காலாந்தரத்தில் (அடுத்த க்ஷணத்திலேயே] ஸம்பவிக்கக் கூடிய ஸ்வேத வஸ்த்ர தாரணத்தைத் தவிர்க்க மாட்டாதன்றே.–விசேஷணங்களைப் பற்றி இங்ஙனே தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் பலவுள-

    30-பிரகிருதத்தில், ஜந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வ மென் னுமிவை கால பேதத்தினால் ஒரு வியக்தியினிடத்திலேயே ஒன்று சேர்ந்திருக்கக் கூடியவை யாதலால் அவிருத்தங்களேயாகும். விலக்ஷண சக்தி யுக்தமான பர ப்ரஹ்மத்தினிடத்தில் ஏக காலத்திலேயும் இவை கூடும். ஆகவே ஜந்ம காரணத்வம் முதலிய லக்ஷணங்களினால் பர ப்ரஹ்மத்திற்கு பஹுத்வாபத்தி யென்பதில்லை. பர ப்ரஹமம் க்ஷேத்ரஜ்ஞர்களின் கருமங்களுக்குத் தக்கபடி ஸ்ருஷ்டிப்பதும் பிரளயம் செய்ய வேண்டிய காலத்தில் ஸம்ஹரிப்பதும் செய்கிறது. உலகில் உழவனானவன் விதை விதைக்க வேண்டிய காலத்தில் அதை விதைப்பதும் அறுக்க வேண்டிய காலத்தில் அறுப்பதும் செய்வது போல் இதனைக் கொள்க. அன்றியும், உத்தர நாராயணாதுவாகம் முதலானவற்றில் லக்ஷ்மீ பதித்வம் முதலிய அஸாதாரண சிஹ்னங்களினால் ப்ரதிபத்திக்கு விஷயமான வஸ்துவானது ஜன்ம காரணத்வம் முதலிய லக்ஷணங்களினால் ப்ரஹ்ம பதார்த்தமாக ஜ்ஞாபிக்கப் படுகிறதென்றும் கொள்ளக் குறை யில்லாமையாலே இரண்டாவது பக்ஷத்திலும் தோஷமில்லை. (முன்னே விவரிக்கப்பட்ட பூர்வ பக்ஷத்தை யீண்டு வாசிப்பது.)
    ஏவஞ்ச, ஜகஜ் ஜந்மாதி காரணத்வமானது விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் ப்ரஹ்ம லக்ஷணமாவதற்கு யாதொரு தடையுமில்லை யென்று தேறிற்று. இன்னமும் இங்கு விரிவாகத் தெரிவிக்க வேண்டுமவை பலவுண்டு. அவை சாஸ்த்ர ஜ்ஞானிகளுக்கே க்ரஹிக்கவும் ரஸிக்கவுங் கூடியவையாதலால் இங்கு இவ்வளவோடு நிறுத்தப்படுகிறது.

    31-இனி,மூன்றாவதான சாஸ்த்ர யோநித்வாதிகரணம் பற்றிப் பேசுவோம். ஐந்மாத்யதிகரண மென்கிற கீழதிகரணத்தில் பர ப்ரஹ்மத்திற்கு ஜகஜ் ஜன்மாதி காரணத்வம் லக்ஷணமென்று தேறிற்று. இப்படிப் பட்ட லக்ஷணத்தோடு கூடிய பர ப்ரஹ்மமா னது பரத்யக்ஷ பிரமாணத்தினால் தெரிந்து கொள்ளப் படாமற் போனாலும் அநுமாந பிரமாண ஸித்தமாகின்ற அந்த ப்ரஹ்மத்தை வேதாந்த வாக்யங்களினால் விசாரிக்க வேண்டிய அவஸ்யமில்லை என்றொரு ஆக்ஷேபந் தோன்ற, அதற்குப் பரிஹாரமாக இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இவ் வதிகரணத்திற்கு ஸூத்ரம் சாஸ்த்ர யோநித்வாத் என்பது-சாஸ்த்ரத்தை யோநியாகக் கொண்டபடியாலே – என்பது ஸுத்ரத்தின் பொருள். யோநியாவது காரணம் ; அறிவதற்குக் காரணம் என்கிற விவஷையினால் இங்கு யோநி சப்தம் ப்ரயோகிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது – ப்ரமாணம் என்றபடி-சாஸ்த்ரத்தை ப்ரமாணமாகக் கொண்டபடியாலே என்றதாயிற்று-அப்பக்ஷோ வாயுபக்ஷ :* என்னுமிடங்களில் ‘தீர்த்தத்தைக் குடிப்பவன், வாயுவை பக்ஷிப்பவன் என்று சப்தார்த்தமானாலும் “அஸதி பாதகே ஸர்வம் வாக்யம் ஸாவ தாரணம்” என்கிற நியாயத்தினால் ” தீர்த்த மொன்றையே குடிப்பவன், வாயுவை மாத்திரமே பக்ஷிப்பவன் ” என்று பொருள் தேறுவது போல்,இங்கும் ” சாஸ்த்ர மொன்றையே ப்ரமாணமாகக் கொண்ட படியாலே ‘ என்றதாகப் பொருள் தேறும். ஆகவே சாஸ்த்ரமேவ யோநி: ( ப்ரமாணம்) யஸ்ய தத்-சாஸ்தர யோநி; தஸ்ய பாவ:- சாஸ்த்ர யோநித்வம் ; தஸ்மாத்- சாஸ்த்ர யோநித்வாத்”என்று ஸமாஸம் கொள்ளப் பட்டதாயிற்று. பர ப்ரஹ்ம மானது அநுமாநத்தைப் பிரமாணமாகக் கொண்டதாகாமல் சாஸ்த்ர மொன்றையே ப்ரமாணமாகக் கொண்டதாகையினால் அப்படிப்பட்ட (வேதாந்த ) சாஸ்த்ரத்தினால் பர ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டியது அவஸ்யமே என்பதாக ஸுத்ரத்தின் பொருள் முடிந்து நின்றது.

    32- இங்குப் பூர்வ பக்ஷம்:-” அப்ராப்தே ஹி சாஸ்த்ரம் அர்த்தவத்” என்பர் சாஸ்த்ர வித்துக்கள். வேறு எந்த ப்ரமாணத்தினாலும் ஏற்படாத விஷயத்தில் தான் சாஸ்த்ரம் ப்ரவர்த்திக்குமென்றும், வேறு ஏதேனுமொரு ப்ரமாணத்தினால் ப்ரஹ்மம் ஸித்தித்து விட்டால் அதில் சாஸ்த்ரம் பிரவர்த்தியாது என்றும் தேறுகின்றது. பர ப்ரஹ்மமோ அநுமாந ப்ரமாணத்தினால் ஸித்திக்கக் கூடியதாக இருக்கின்றது .எங்ஙனே யென்னில்“ பூம் யங்குராதிகம் ஸ கர்த்ருகம்-கார்யத்வாத்; கடவத்” என்பது அநுமாந சரீரம். உலகத்தில் நாம் காண்கிற எல்லாப் பொருள்களும் ஒரு கர்த்தாவை யுடையன் : கர்த்தா வொருவனில்லாமல் எந்தப் பொருளும் உண்டாவதில்லை; வீடு பானை துணி முதலிய எல்லாப் பொருள்களும் ஒரு கர்த்தாவை முன்னிட்டே உண்டானவை யென்பதை அறிகிறோம்.இதனால், கர்த்தா வொருவனில்லாமல் எந்தப் பொருளு முண்டாகா தென்கிற உறுதி தோன்றுகின்றது. உடனே மற்றொன்றும் கவனிக்கிறோம் ; வீட்டைக் கட்டினவனாக ஒரு கர்த்தா நமக்குத் தெரிய வந்தாலும் அந்த வீடு எந்த நிலத்தில் கட்டப்பட்டதோ அந்த நிலத்திற்கு எவன் கர்த்தா என்பது நமக்குத் தெரியவில்லை. வீடு கட்டக் கருவியா யிருக்கின்ற மண் மணல் மரம் முதலிய பொருள்களுக்கும் கர்த்தா இன்னானென்று அறிகின்றிலோம். பானையைச் செய்பவன் குயவனென்று காண்கிறோமானாலும் அந்தப் பானைக்கு உபாதாந காரணமான மண்ணைப் படைத்தவன் இன்னானென்று அறிகின்றிலோம். துணிக்குக் கர்த்தா சேணியனென்று அறிகின்றோமானாலும் அதற்கு உபாதாந காரணமாகிய பஞ்சைப் படைத்தவன் இன்னானென்று அறிகின்றிலோம். ஆனால் கர்த்தா வொருவனில்லாமல் ஒரு காரியப் பொருளு முண்டாகாதாதலால் கீழ்ச் சொன்ன மண் மணல் மரம் முதலிய பொருள்களுக்கும் கர்த்தா வொருவன் இருந்தே தீர வேண்டும்.அவன் தான் ஈஸ்வரனென்பவன்- என்று இவ்விதமாக ஈஸ்வரனை யறிவதானது அநுமான ப்ரமாணத்தினா லறிவதாகும். ஆக, இப்படிப்பட்ட அதுமாந மென்னும் பிரமாணத்தினால் ஈஸ்வரன் ஹித்திக்கவே, இப்படி பிரமாணாந்தர பிராப்தமாய் விட்ட பர ப்ரஹ்மத்தின் விஷயத்தில் சாஸ்த்ர மென்னும் ப்ரமாணம் பரவர்த்திக்க மாட்டாதாதலால் அப்ராப்தேஹி சாஸ்த்ரம் அர்த்தவத்* என்றன்றோ நியமமுள்ளது- வேதாந்த சாஸ்த்ரமானது ஜகஜ் ஜந்மாதி காரண பூதமான ப்ரஹ்மத்தினிடத்திலே ப்ரமாணமாக முடியாதாதலால் அந்த வேதாந்த சாஸ்த்ர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கதன்று–என்பதாகப் பூர்வ பக்ஷம் பிராப்தமாயிற்று.

    33-இதற்கு மேல் ஸித்தாந்தம் வருமாறு ; அநுமானத்தினால் ஒன்றை ஸாதிப்பதானால் அது செவ்வனே ஸித்திக்கக் கூடிய விஷயமன்று.-அநுமானத்தினால் ஈஸ்வரனே ஜகத் கர்த்தாவாக ஸித்திக்க வேணுமென்கிற நியதி யில்லை ; ஏனென்னில்: விஸ்வாமித்ர முனிவர் தவ வலிமையினால் மிகுந்த பெருமை பெற்று நூதந ஜகத் ஸ்ருஷ்டி பண்ணினா ரென்பதை நாம் ஸ்ரீ ராமாயணாதிகளில் வாசிக்கின்றோம். * அத்யமிந்த்ரம் கரிஷ்யாமி * இத்யாதி ஸ்லோகங்கள் பலர் அறிந்தனவே.அம் முனிவர் ஒரு ஜீவ வ்யக்தியே யல்லது ஈஸ்வரனல்லர். இதனால் ஜீவ கோடியிலேயே அதிசயித்த சக்தி படைத்த சிலர்க்கு விசித்ர ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ண ஆற்றலுண்டு என்பது தேறுகிற படியால், கீழே காட்டிய அநுமானத்தினால் ஈஸ்வரனே ஜகஜ் ஜந்மாதி காரண பூதனாக ஸித்திக்க வேணுமென்கிற நிர்ப்பந்த மில்லை. விலக்ஷண சக்தி யுக்தனான சேதநனே ஸ்ருஷ்டி கர்த்தாவாகத் தேறலாமாதலால் அநுமாநம் ஈஸ்வர ஸாதனத்தில் சக்தி யுடையதன்று ; ஆகவே சாஸ்த்ரமே பர ப்ரஹ்ம ஸித்தியில் பிரபல ப்ரமாணமாகக் கடவது. அப்படிப் பட்ட சாஸ்த்ரம் வேதாந்த சாஸ்த்ரமே. அதைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாகப் பொருந்தும் என்றதாயிற்று.

    34-இனி நான்காவதான ஸமந்வயாதி கரணம் பற்றிப் பேசுவோம். பர ப்ரஹ்மமானது சாஸ்த்ரம் தவிர வேறொரு பிரமாணத்தினால் பிராப்தமாகக் கூடியதன்று என்றே கொண்டாலும் அந்த ப்ரஹ்மமானது ப்ரவருத்தி நிவ்ருத்திகளுக்கு விஷய மல்லாமையினால் அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தை ப்ரதிபாதனம் செய்வதில் பலனொன்று மில்லாமையினால் அந்த பரஹ்மத்தினிடத்தில் சாஸ்தரத்திற்கு ப்ராமாண்யம் ஸம்பவிக்க மாட்டாதாதலால் அந்த ப்ரஹ்மம் சாஸ்த்ர ப்ரதிபாதய மாவதற்கு வழி யில்லை என்றொரு ஆக்ஷேபம் தோன்ற,அதற்குப் பரிஹாரமாக இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இவ் வதிகரணத்திற்கு ஸூத்ரம் தத் து ஸமந்வயாத் என்பது. இந்த ஸுத்ரத்தில், பரஹ்மண; என்றொரு பதமும் சாஸ்த்ரேண’ என்றொரு பதமும் அத்யாஹாரம் செய்து கொள்ள வேண்டும். (அதாவது, வருவித்துக் கொள்ள வேண்டு மென்றபடி .) தத்- கீழ் ஸுத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்த்ர ப்ரமாணகத்வமானது என்றபடி.-ஸமந்வயாத்– நன்றாகப் புருஷார்த்தமாக அந்வயிக்கிறபடியினால் என்றபடி புருஷார்த் தத்வேந ஸம்பந்தமே ஸமந்வயமாவது. பர ப்ரஹ்மமானது சாஸ்தரத்தினால் புருஷார்த்தமாக பிரதி பாதிக்கப் படுகிறபடியினாலே அந்த ப்ரஹ்மத்திற்கு சாஸ்த்ர ப்ரமாணகத்வம் ஸம்பவிக்கக் குறை யில்லை என்றதாக ஸூத்ரத்தின் பொருள் தேறிற்று.

    35-இங்குப் பூர்வபக்ஷம் :- பர ப்ரஹ்மத்தை சாஸ்த்ரம் ப்ரதிபாதிக்க வேண்டுமானால் அது வேறொரு ப்ரமாணத்தினால் அறியப் படாமலிருக்க வேணு மென்பது தவிர மற்றொரு தன்மையும் அதில் இருக்க வேணும். அது என்னென்னில்; தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மையாம். தெரிந்து கொள்ள வேணு மென்கிற விருப்பம் எந்த வஸ்துவில் உண்டாகின்ற தில்லையோ அந்த வஸ்துவைப் பற்றி சாஸ்த்ரம் ப்ரதி பாதநம் செய்ய மாட்டாதன்றோ. பர ப்ரஹ்மம் இதர ப்ரமாணத்தினால் தெரிந்து கொள்ள முடியாத தென்பதை ஒப்புக் கொள்வோம். தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மை ப்ரஹ்மத்தினிடத்தில் இருக்க முடியாதே, ஏனென்னில் : தெரிந்து கொள்ள வேணுமென்கிற விருப்பமானது உலகில் ப்ரயோஜநவத்தான விஷயத்தில் தான் உண்டாகும். இஷ்ட ப்ராப்தி அநிஷ்ட பரிஹாரம் என்கிற இரண்டோ இரண்டத்தி லொன்றே உலகில் ப்ரயோஜன மென்னத் தகுந்தது. இஷ்ட ப்ராப்தியானது ப்ர வ்ருத்தியினாலே விளையக் கூடியது. யாக மென்கிற காரியத்தில் ப்ரவ்ருத்தி யுண்டானால் ஸ்வர்க்க மென்கிற இஷ்டம் பிராப்மாகிறது-ப்ரவ்ருத்தியினால் இஷ்ட ப்ராபதியாவது போல், நிவ்ருத்தியினால் அநிஷ்ட பரிஹார முண்டாகிறது. மாம்ஸ பக்ஷண மென்கிற காரி யத்தில் நிவருத்தி யுண்டானால் அநிஷ்ட பரிஹரமுண்டாகிறது-ப்ரக்ருதத்தில், ப்ரஹ்மமானது ப்ரவ்ருத்திக்கோ நிவ்ருத்திக்கோ இலக்கன்றே-வஸ்துவே கண்ணுக்குத் தெரியாமையினால்-ஆகவே ப்ரயோஜநவத்த்வம் சொல்ல முடியாது. ஆதலால், தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மை பர ப்ரஹ்மத்திற்கு ஸம்பவிக்க முடியாதாகையாலே அந்த ப்ரஹ்மத்தை சாஸ்த்ரம் ப்ரதிபாதிக்க வல்லதல்ல ஆகவே சாஸ்த்ரத்தைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்யப் புகுவது ஒவ்வாது – என்று பூர்வ பக்ஷம் பிராப்தமாக –

    36-இதன் மேல் சித்தாந்தம் வருமாறு: – பர ப்ரஹ்மத்திற்கு ப்ரயோஜநாந்தாவத்வம் ஸம்பவியாமற் போனாலும், பல பல வேதாந்த வாக்யங்களினால் அது தானே ஸ்வயம் ப்ரயோஜநம்- பரம புருஷார்த்தம் என்று அறிவிக்கப்படுகிறது. “ புத்ரஸ்தே.ஜாத: ( உனக்குப் பிள்ளை பிறந்தது) என்றும், “தவ க்ருஹே நிதிரஸ்தி” (உன் வீட்டில் நிதி யுள்ளது) என்றும் சொன்னால் இந்த வாக்யங்களானவை பரமானந்த ஹேதுவான புத்ர ஜன்மத்தையும் நிதி ஸத் பாவத்தையும் தெரிவிப்பதுபோல வேதாந்த வாக்யங்கள் பரமாநந்த ஹேது பூதமும் பரமாந்த ஸந்தோஹ ஸ்வரூபமுமான பர ப்ரஹ்மத்தை ப்ரதிபாதனம் பண்ணுவது ஸமஞ்ஜஸமே யாகும், அவை அபெளருஷேயங்களாகையாலே புருஷ புத்தி யடியாக வரக் கூடிய ப் ரமப்ரமாத விப்ர லிப்ஸைகள் அங்கு எண்ணத் தகாதவை. ஆகவே பொய் சொல்லி வஞ்சிக்கும் பேச்சுக்களல்ல வேதாந்த சாஸ்த்ரங்கள். அப்படிப் பட்டவற்றைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்வது பொருத்தமே யென்றதாயிற்று.இந்த அதிகரணத்தின் ப்ரமேயத்தை யுட்கொண்டு பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில்(21) * அத்ராஸ்தே நிதிரிதிவத்…ரங்கேச த்வயி ஸகலாஸ் ஸமந்வயந்தே: என்கிற ஸ்லோகத்தை யருளிச் செய்துள்ளார், அங்கு எம்முடைய வியாக்கியானம் நோக்கத் தக்கது.

    அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
    சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
    ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
    உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்–
    22-

    ஹே ரெங்கேச

    சகலா-சமஸ்தமான

    குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -திவ்ய சேஷ்டிதங்கள் ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்

    சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்

    புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்

    அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே

    சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன

    ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு

    உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்

    ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –

    பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர ஸ்ருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –

    இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –

    ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

    உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
    சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்

    இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
    சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு –
    நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
    ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
    இங்கே நிதி உண்டு என்கிறது போலே
    உபாசன தத் பல விதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
    அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

    ————–

    37-கீழ் விளக்கப்பட்ட நான்கு அதிகரணங்களும் நான்கு ஸூத்ரங்கள்.இவையே சதுஸ் ஸூத்ரி யென்று வழங்கப் பெறும்.இவை சாஸ்த்ராரம்பா ஸமர்த்தன பரங்களென்றும், இனி மேல் தான் சாஸ்த்ராரம்பமாகிற தென்றும் நம் ஆசாரியர்களின் கொள்கை. எம்பெருமானார் திருவடிகளிலேயே ஆஸ்ரயித்தவரான ஸோமாசி யாண்டானென்பவர் முதல் ஸுத்ரமொன்று மாத்திரமே சாஸ்த்ராரம்ப ஸமர்த்தந பரமென்றும்(ஐந்மாத்யஸ்ய யத என்கிற) இரண்டாவது ஸுத்ரம் முதற் கொண்டே சாஸ்த்ராரம்பமாய் விட்டதென்றும் அபிப்ராயப்படுகிறார். சதுஸ் ஸூத்ரியும் சாஸ்த்ராரம்ப ஸமர்த்தன பரமென்பதே ஸித்தாந்தமாகக் கொள்ளத் தக்கது. சாரீரக மீமாம்ஸை யென்கிற இந்த சாஸ்த்ரம் ஆரம்பிக்க அவசியமில்லை யென்று கிளர்ந்த சங்கைகள் கீழே நான்கு ஸூத்ரங்களினாலும் பரிஹரிக்கப்பட்டன வென்றதாயிற்று. இனி மேல் ஒவ்வோரதிகரணத்தின் ப்ரமேயத்தையும் நாம் விவரித்துக் கொண்டு போக இச் சிறு நூலில் அவகாசமில்லாமையால் முக்கியமான சில அதிகரணங்களின் ப்ரமேயத்தை மாத்திரம் மூதலித்துக் கொண்டு மண்டூகப் லுதியில் செல்லுவோம்.

    38-ஆனந்த மயாதிகரணத்தைப் பற்றிப் பேசுகிறோம்.இவ் வதிகரணமானது முதலத்யாயத்தின் முதற் பாதத்தில் ஆறாவது அதிகரணமாக வுள்ளது. இதற்குக் கீழே ஈக்ஷத் யதிகரணமுள்ளது. அதில் ஐகத் காரண வஸ்துவுக்கு ஸங்கல்ப விசேஷம் ஓதப் பட்டிருத்தலால் அந்த ஸங்கல்பம் கெளண மன்றிக்கே முக்கியமாகவே நிர்வஹிக்கப் பட வேண்டுதலால் அப்படிப் பட்ட ஸங்கல்பத்திற்கு ஆஸ்ரய பூதமான ஐகத் காரண வஸ்து அசேதனமான ப்ரதாநமா யிருக்க முடியாதென்று நிரூபிக்கப் பட்டது. இனி, அசேதந வஸ்து ஜகத் காரணமாக வேண்டா; ஜீவனே ஜகத் காரணமா யிருக்கட்டுமே ; அவனுக்கு ஸங்கல்பமாகிற ஈக்ஷணம் முக்யமானதே ஸம்பவிக்கு மன்றோ வென்று சங்கை யுண்டாக ; அதற்குப் பரிஹாரமாய் இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இதற்குத் தலையான ஸுத்ரம் – ஆநந்தமயோப்யாஸாத்” (1-1-13) என்பது.-ஆநந்த மய: அப்யாஸாத் என்று பத விபாகம். இதற்கு மேலுள்ளதான அந்தரதிகரணத்தின் இரண்டாவது ஸூத்ரமான * பேத வ்யபதேசாச் ச அந்யா என்கிற ஸூத்ரத்திலிருந்து அந்ய என்னும் பதமொன்று இங்கே வருவித்துக் கொள்ள வேண்டும். ஆகவே,ஆநந்த மய: அந்ய: அப்யாஸாத் என்றதாயிற்று.ஆநந்த மய :-ஆநந்த மய சப்தத்தினால் குறிக்கப்பட்ட புருஷன், (அந்ய )-ஜீவாதமாவிற் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே யாகக் கடவன் ; ஏனென்னில் ; அப்யாஸாத்- அளவு கடந்ததாக வோதப் பட்ட ஆனந்த முடைமை யானது துக்க மிஸ்ரனான ஜீவாத்மாவுக்கு இணங்க மாட்டாமல் பரமாத்மாவுக்கே இணங்குமதாகையாலே . என்பது ஸூத்ரத்தின் பொருள் தைத்திரீயோபநிஷத்தில் ஆநந்த வல்லி யென்பது ஒரு பகுதி; அதில் ஆநந்த மய வித்யா ப்ரகரணத்தில் தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத், அந்யோத்தர ஆத்மா ஆநந்த மயா* என்கிற வாக்யத்தினால் ஆநந்த மயனான ஆத்மாவை ப்ரஸ்தாவித்து, அதற்கு மேல் –ஸைஷா ஆநந்தஸ்ய மீமாம்ஸா பவதி என்று தொடங்கி தே யே சதம் ப்ரஜாபதேராநந்த , ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த, ஸ்ரோத்ரியஸ்ய சாகா மஹதஸ்ய * என்னுமளவாக ஆனந்த மயனான ஆத்மாவுக்குள்ள ஆனந்தத்திற்கு அளவு கூறுமடைவில் (நான்முகனுக்கு யாதொரு ஆனந்தமோ, அதிற் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்திற்கு ஓர் ஆனந்தம்’ என்று சொல்லி *ஸ்ரோத்ரியஸ்யச அகாமஹதஸ்ய * என்கிற வாக்யத்தினால் முக்தனுக்கும் அப்படிப்பட்ட ஆனந்த முடைமை சொல்லிற்று; அகா மஹத னென்றது விஷய விரக்த னென்றபடி. ஸ்ரோத்ரிய னென்றது வேதாந்த ஸ்ரவணம் பண்ணினவனென்றபடி, வேதாந்த ஸ்ரவணம் செய்து ப்ரஹ்ம உபாஸனத்தினால் முக்தி பெற்றவனென்று தேர்ந்த பொருள் நூறு மடங்காகப் பெருக்கப்பட்ட சதுர்முகாநந்தமானது முக்தனுக்கு ஒரு ஆனந்தம் என்று சொல்லிற்றாயிற்று. இங்கு முக்தனுக்குச் சொல்லப்பட்ட ஆனந்தமானது பர ப்ரஹ்மத்தின் உபாஸனத்தினால் விளைவது என்று ஸ்ரோத்ரிய பதத்தினால் சொல்லப் பட்டுள்ளது. ஆகவே முக்த ஆநந்தமானது உபாஸந ப்ரீதனான பகவானுடைய ஸங்கல்பத்தினால் உண்டு பண்ணப்பட்ட தென்னுமிடம் தேறுகின்றது . [முக்தாநந்தம் நிருபாதிகமன்று, ஸோபாதிகம் என்றதாகத் தேறுகிறது.] ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த என்கிற விடத்திலோ வென்னில், காரண மொன்றும் சொல்லப் பட்டிராமையினால் பர ப்ரஹ்மத்தினுடைய ஆனந்த மானது வேறொருவருடைய ஸங்கல்பாதீமன்றிக்கே இயற்கையான தென்னுமிடம் நன்கு தெரிய வருகிறது. நிருபாதிகமான ஆனந்த முடைமை பர ப்ரஹ்மத்திற்கே யொழிய வேறொருவற்கு மில்லை யென்று தேறுதலால் அப்படிப்பட்ட ஆனந்தமுடைய தாக ஆனந்த மய சப்தத்தினால் நிர்தேசிக்கப் பட்டவஸ்து ஜீவனிற் காட்டிலும் வேறான பர ப்ரஹமமே என்றபடி.

    39- தைத்திரீயோபநிஷத்திலுள்ள ஆனந்த வல்லியை (ஆநந்த மய வித்யா’ என்று
    வேதாந்திகள் வழங்குவர்.
    அந்த வித்யையில் (கோஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்,யதேஷ ஆகாச ஆநந்தோ ந ஸ்யாத். ஏஷஹ்யேவாநந்தயாதி என்று ஓதப் பட்டிருக்கின்றது. இதன் பொருளாவது- கீழே சொல்லப்பட்ட ஆகாச சப்த வாஸ்யமான வஸ்துவானது நிருபாதிகமாயும் அபரிச்சிநமா யுமிருக்கிற ஆநந்தத்தை உடைய தல்லாமல் இருக்குமானால்,பிரமன் முதற் கொண்டு எறும்பு வரையிலுள்ள ஐந்து ஸமூஹங்களில், கோ வா அந்யாத்= எந்த ஐந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை யடைய முடியும்? கோ வா ப்ராண்யாத்= எந்த ஐந்து தான் மோக்ஷானந்தத்தை யடைய முடியும்? ஏஷ ஏவ ஹி = இந்த ஆனந்த மயனான ஆத்மாவே யன்றோ, ஆநந்தயாதி- ப்ராக்ருதமாயும் அப்ராக்ருத
    மாயுமுள்ள எல்லா விதமான ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது. [ஆநந்த யதி என்கிற சொல் வடிவத்தில் யகாரம் நீண்டிருப்பது சாந்தஸமென்றுணர்க] இங்கே இப்படிச்
    சொல்லி யிருப்பதும் தவிர, உத்தர நாராயணாநுவாகத்திலும் —தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி, நாந்ய பந்தா வித்யதே அயநாய * என்பதனாலும் இவ் வர்த்தமே நிலைநாட்டப் பட்டிருக்கின்றது. ஏவம் தம் வித்வாந் – இவ் விதமாக அந்த மஹா புருஷனை உபாஸிப்பவன், அம்ருதோ பவதி- மோக்ஷாநந்தத்தைப் பெற்றவனாகிறான், அயநாய-அந்த மோக்ஷானந்த பராப்தியின் பொருட்டு, அந்யஜ் பந்தா வித்யதே– அந்த மஹா புருஷனைத் தவிர்த்து வேறு உபாய மில்லை. என்பது இந்த ஸ்ருதி வாக்யத்தின் பொருள். ஏஷஹ் யேவாநந்தயாநி என்ற ஸ்ருதி வாக்யத்தில் அந்வயமுகேந தெரிவிக்கப்பட்ட அர்த்தமே நாந்யாபந்தா வித்யதே அயநாய * என்கிற ஸ்ருதி வாக்யத்தில் வ்யதிரேக முகேந தெரிவிக்கப் பட்டிருக்கின்றது என்னுமித்தனையே வாசி-ஆக உபய ஸ்ருதிகளும் ஏகார்த்த மாயிருக்கையினாலே, உத்தர நாராயண அநுவாக வாக்யம் லக்ஷ்மீ பதியையே விஷயமாகக் கொண்டிருப்பது போலவே ஆநந்த மய வித்யையிலும் அப் பெருமானே விஷய பூதன் என்னுமிடம் அறிய வெளிது-இன்னமும், ஆநந்த மய வித்யையில் —ஸ யச்சாயம் புருஷே, யச்சாஸாவாதித்யே. ஸ ஏக ] என்கிற வாக்யத்தினால் ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தினுள்ளே யுள்ள புண்டரீகாக்ஷனையும் ஒன்றாகச் சொல்லி யிருப்பதனாலே அந்த புண்டரீகாக்ஷனே ஆநந்த மயன் என்று தேறி நிற்கிறது. ஆக இப்படிப் பட்ட அடையாளங்களினால் ஆநந்த மய வித்யா வேத்யனும் புண்டரீ காக்ஷனுமானவன் பரம புருஷனே யென்று தேறிற்றாகிறது.

    40-பூர்வ பக்ஷம்:- ஆனந்த வல்லியில் * [ப்ரஹ்ம விதாப்நோதி பரம்] என்று ப்ரஹ்மத்தை ப்ரஸ்தாவித்து * ஸத்யம் ஜ்ஞாந மநந்தம் ப்ரஹ்ம* என்று அந்த ப்ரஹ்மத்தின லக்ஷணங் கூறி (தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாசஸ் ஸம்பூத.] இத்யாதி வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா வென்னுமிடத்தையும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியையுஞ் சொல்லி, * (தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத். அத்யோந்தர ஆத்மா ஆநந்தமய?] என்ற வளவால் உபக்ராந்தமான ஆத்மோபதேச பரம்பரை யானது ஆனந்த மயனில் ஸமாப்தி செய்யப் பட்டிருக்கிறது. ஆகவே உபக்ரமிக்கப் பட்ட ப்ரஹ்மம் ஆநந்த மயனான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது. அந்த ஆனந்த மய ஆத்மாவுக்கு (தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா]என்ற உத்தர வாக்யத்தில் சரீர ஸம்பந்தித்வமாகிற சாரீரத்வம் சொல்லப் பட்டிருக்கின்றது . கர்ம பர வசனான ஜீவாத்மாவுக்கே கர்ம பலாநுபவார்த்தமாக சரீர ஸம்பந்தம் ஸம்பவிக்கும் : அகர்ம வச்யனான பரம புருஷனுக்கு அது ஸம்பவிக்க நியாயமில்லை.ஆகவே சரீர ஸம்பந்த முடையவனாக ஓதப்பட்ட இந்த ஆனந்த மயனான ஆத்மா ஜீவாத்மா வென்றே நிச்சயிக்கலாகிறது.

    41-என்கிற பூர்வ பக்ஷத்தின் மேல் ஸித்தாந்தம். நிருபாதிகமான ஆனந்த
    முடைமை முதலிய குணங்கள் ஜீவாத்மாவுக்கு ஸம்பவிக்க மாட்டாவாகையாலும், சகல சராசரங்களையும் சரீரமாகக் கொண்டவனாக வோதப்படுகின்ற பரமாத்மாவுக்கு அப்படிப்பட்ட ஸகல சரீரகத்வமாகிற சாரீரத்வம் நன்றாக ஸம்பவிக்கக் கூடியதாதலால் நிருபாதிக ஆனந்த சாலியாகக் கடவன். ஆதந்த மய: என்ற விடத்திலுள்ள மயட் ப்ரத்யயத்திற்கு விகாரம் அர்த்தமாகையாலே விகார மற்றவனான பரமாத்மாவுக்கு ஆநந்த விகாரத்வம் பொருந்த மாட்டாதென்கிற வாதமும் அநுபபநம் ; மயட்டுக்கு விகாரமே அர்த்தம் என்கிற நிர்ப்பந்தமில்லை : “அந்ந மயோ யஜ்ஞ ” என்று சொன்னால் அந்ந விகாரமென்று பொருளன்றே; இங்கு மயட்டுக்கு ப்ராசுர்யமன்றோ பொருள். (ப்ராசுயமாவது – மலிவு) அன்னம் மலிந்த வேள்வி என்பது தானே பொருளாகிறது. இப்படியே இங்கும் ஆனந்தம் மலிந்தவன் பரமாத்மா ‘ என்றே பொருள் படக் குறை யில்லாமையாலே விகார வாதம் அப்ரஸக்தம். அடுத்தபடியாக * யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸா ஸஹ, ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந், நபிபேதி குதச்சந*என்று வாக்குக்கும் நெஞ்சுக்கு மெட்டாதபடி அப்ரமேயமான ஆனந்த முடையனாக வோதப்பட்ட பரமாத்மாவினிடத்திலேயே யன்றோ மலிந்த ஆனந்தமுடைமை தேறக் கூடியது

    42-இதற்கு மேல் ஒரு வாதம் தோன்றக் கூடும்; ஆநந்த பிராசுர்யமாவது ஆனந்தத்தினுடைய ஆதிக்யமே யாகும். ஆனந்தம் அதிகமென்று சொன்னால் ஆநந்த ப்ரதி கோடியான துக்கம் சிறிது உண்டென்று தோன்றியே தீருமல்லவா? (ஆதிக்யமென்பது ப்ரதி யோகியை -அபேக்ஷித்திருக்குமகையாலே எதைக் காட்டிலும் அதிகமென்று சொல்லியாக வேண்டுமாகையாலே ஆனந்த மயன் என்றும் கொள்ளப்பட்ட பரம புருஷனிடத்தில் துக்க ஸம்பந்தம் இசையப் பட்டதாகவே யாயிற்று- என்றபடி)ஏவஞ்ச,அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாக மென்னப்படுகிற பர ப்ரஹ்மத்தினிடத்தில் சிறிதளவு கூட ஹே ஸம்பந்தம் ஸம்பவிக்க மாட்டாதாகையாலே, பிரசுராநந்த சாலித்வமென்று பரிஷ்கரிக்கப்பட்ட ஆநந்த மயத்வமும் அங்குச் சொல்லுவதற்கில்லை என்பதாக.- இதுவும் பிசகு. அந்த ஆனந்த ப்ராசுர்யத்தை விவரிக்கப் புகுந்த * ஸைஷா ஆநந்தஸ்ய மீமாம்ஸா பவதி * இத்யாதியான ஆநந்த மீமாம்ஸையில் *தே யே சதம் ப்ரஜாபதே ராநந்தா * என்கிற வளவாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட சதுர்முக பர்யந்த ஸகல ஜீவர்களின் ஆனந்தத்திற் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாயிருக்கையாகிற ப்ராசுர்யமே ஆநந்தமய சப்தத்தினால் விவக்ஷிதமாக விவரித்திருக்கையாலே ப்ரஸ்துதனான ஆநந்த மய ஆத்மாவில் ஆநந்த மயனென்கிற சொல்லிலிருந்து துக்க ஸம்பந்தம் ப்ரஸங்கிக்க விரகில்லை.

    43-இவ் விடத்தில் ப்ராஸங்கிகமாக வொரு விஷயம் எழுத வேண்டியதாகிறது. மேலே அநுவதிக்கப்பட்டதொரு ஆஷேபத்தைப் பரிஹரிக்கையில் பரம புருஷனுக்கு ஸ்வல்ப துக்க ஸம்பந்தமும் கிடையாதென்று இங்கே நிர்வஹித்து விட்டு, அந்தப் பரம் புருஷனுடைய தயை யென்னும் குணத்தை நிரூபணம் செய்யுமிடத்து எம்பெருமான் அடியார்களின் துக்கத்தை யநுஸந்தித்துத் தானும் துக்கிப்பது தான் தயாளுத்வமென்று ஸ்வாமி பாஷ்யகாரரே அருளிச் செய்ததாகக் காணப் படுகிறதே; இது எப்படி பொருந்தும்? எம்பெருமானிடத்தில் துக்கமுமுண்டு என்று இசைந்தால் ஆநந்த மயத்வம் கொள்வதற்கு இடமில்லாமலன்றோ இருக்கிறது – என்பதாக ஒரு சங்கை தோன்றக் கூடியதுண்டு. இதற்குப் பரிஹாரம் தெரிந்து கொள்ள வேண்டியது வேதாந்திகளுக்கு மிக அவசியமே. இப்படியொரு சங்கை தோன்று மென்று ஸ்வாமி பாஷ்யகாரர் தாம திருவுள்ளம் பற்றி இவ் வதிகரண ஸ்ரீபாஷ்யத்தில் சில பங்க்திகளை யருளிச் செய்திருக்கிறார்; அவற்றை அநுவதித்துக் காட்டிப் பொருளும் விவரித்துத் தெளிவு பிறப்பிக்கின்றோம். இவ் வதிகரணத்தில் இரண்டாவது ஸூத்ரம் விகார சப்தாந் நேதி சேந் ந ப்ராசுர்யாத்- என்பது. இந்த ஸுத்ரத்தின் ஸ்ரீ பாஷ்யத்தில் மேல் வரும் ஸ்ரீ ஸுக்திகளின் தாற்பரிய மென்ன வென்றால்; பர ப்ரஹ்மத்தினிடத்தில் ஆனந்தம் அதிகமாக இருக்கிறது என்று சொல்வதனால் சிறிது துக்க மிருப்பதாகச் சொன்னதாகிறது என்கிற வாதம் பிசகு. ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தம். அபரிமிதம் என்றால் இவனுடைய ஆனந்தம் பரிமிதம் என்று இவ்வளவு தான் ஏற்படுமே யொழிய ப்ரமத்தினிடத்தில் ஸ்வல்ப துக்க மிருக்கிறது என்றும் சொன்னதாகத் தேறுவதற்கு வழியே யில்லை. துக்கம் இருக்கிறதோ இல்லையோ அது வேறு பரமாணத்தினால் ஏற்பட வேண்டுமே யொழிய ஆநந்த ப்ராசுர்யத்தைத் தெரிவிக்கிற ஆநந்த மய பதத்தினால் அது ஏற்படாது. ஆனந்தத்திற்கு ப்ரதி கோடியான வஸ்து ப்ரஹ்மத்தினிடத்தில் இல்லை யென்பது * அபஹதபாப்மா * இத்யாதியான வேறு ஸ்ருதியினால் தெரிய வருகிறது. அதைப் பற்றி இங்கென்ன ? இங்குத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இவ்வளவே- பர ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவு கடந்ததென்றால் மற்றை யோருடைய ஆனந்தம் இப்படியல்லாமல் அற்பமானது என்பதே தேறி நிற்கும்; அது ஆனந்த வல்லியில் ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கப்படுகிறது.- என்பதாக-இங்கு ஸ்வாமி * அபஹதபாப்மா என்கிற ஸ்ருதி வாக்கியத்தை யெடுத்துக் காட்டி யுள்ளார். அதன் கருத்தை ஸ்ருத ப்ரசாசிகாசார்யர் நன்கு விவரித்துள்ளார். அதை உப நிஷத் பாஷ்யகாரரான ரங்கராமநுஜ ஸ்வாமி, சாந்தோக்ய உபநிஷத்தில் * அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக : * என்னுமிடத்துத் தம்முடைய பாஷயத்தில் விளக்கி யுள்ளார்.-இவரது ஸ்ரீ ஸூக்திகளின் தாத்பர்ய ஸாரமாவது – பரமாத்மாவை அபஹத பாப்மா வென்று சொல்லுவதன் கருத்து பாபம் செய்யாதவனென்பதல்ல; பாபம் செய்தாலுங் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சமுண்டாகப் பெறாதவனென்றபடி, பாபத்தைச் சொன்னது புண்யத்தையும் சொன்னபடியே. பகவான் புண்ய பாபங்களைச் செய்தாலுங்கூட அவற்றின் பலன்கள் தன் மீது ஸம்பந்திக்கப் பெறாதவன் என்பதே இங்கு விவக்ஷிதம். பாபம் செய்தால் அதன் பலன் ஸம்பந்திக்காமல் எப்படி யிருக்குமென்று கேட்கலாகாது: அது தான் பகவானுடைய விலக்ஷணமான வொரு தன்மை என்பதாம். நம் போல்வார் பாபம் செய்தால் ஹேய ஸம்பந்தமுண்டாகியே தீருகிறது. பகவானுக்கோ அப்படியில்லை. நாம் செய்கிற கருமங்கள் போன்ற கருமங்களைப் பகவானும் செய்வதுண்டு ; செய்தாலும் அதனால் அவனுக்கு ஹேய ஸம்பந்த முண்டாவதில்லை. காரணமான கர்மமிருந்தால் கார்யமான ஹேய ஸம்பந்தமில்லாமற் போகுமோவென்று சங்கிக்கக் கூடாது; இதுதான் பகவானுடைய விலக்ஷணமான வைபவம் – என்று இவ்வளவும் உபநிஷத் பாஷ்யகாரருடைய நிரூபணங்கள். இவ் விஷயத்திற்கு அந்தரதிகரண ஸ்ருத ப்ரகாசிகையையும் ஸம்வாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். அபஹதபாப்மா என்பது எந்த வாக்யத்திலிருக்கிறதோ அதே வாக்கியத்தில் தான் விசோக : என்பதுமிருக்கிறது. அங்கும் இதே நியாயமாகத் தான் அர்த்தமாகும். சோக முண்டானாலும் இதனால் ஹேய ஸம்பந்த முண்டாகப் பெறாதவன் என்றபடி. ஹேயமான சோகமன்றிக்கே கல்யாண குணங்களிற் சிறந்ததான சோகத்தை யுடையவன் என்றதாகத் தேறும். எப்படியானாலென்ன? சோகமுள்ளதாக ஒப்புக் கொண்டு விட்டால் அது ஆநந்த மயத்வத்திற்குக் கொத்தை தானே என்கிற விந்த வாதத்தையே சிலர் செய்து கொண்டிருக்கலாம். அவர்கள், மேலே யெடுத்துக் காட்டிய உபநிஷத் பாஷ்ய பங்க்திகளில் “ஈஸ்வரேண க்ருதாநி புண்ய பாப ஸஜாதீயாதி கர்மாணி” “க்ருதேபிபாபே” என்றுள்ள ஸ்ரீ ஸக்திகளின் மேலும் ஓயாது சோத்யங்களைச் செய்து கொண்டிருக்கலாமத்தனை. இதைப் பற்றின விரிவு இங்கு இவ்வளவு போதும்.

    44-இனி இரண்டாமத்யாயத்தின் தொடக்கத்திலுள்ள ஸ்ம்ருத் யதிகரணத்தின்-ஸ்ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்க இதி சேத் (2-1-1.) என்பது ஸூத்ரம். கீழ் முதலத்யாயத்தில் வேதாந்த பிரதி பாதிதமான ஜகத் காரண வஸ்து சேதநாசேதந விலக்ஷணமான பர ப்ரஹ்மமென்று அறுதியிடப் பட்டது. பர ப்ரஹ்மம் ஜகத் காரணமென்கிற பக்ஷத்தில் எத்தனை வகையான தோஷ சங்கைகள் தோன்றக் கூடுமோ அவற்றை யெல்லாம் எடுத்துக் கழிப்பதற்காக இரண்டாமத்யாயம் ஆரம்பிக்கப்படுகிறது. உலகில் ஓரிடத்தில் பெரிய கம்பமொன்றை நடுகிற வர்கள் நட்டு விட்டு அதை ஆட்டிப் பார்ப்பது வழ்க்கம். எதற்காக வென்னில், அது அவிசால்யமாக வேணு மென்பதற்காகவே. அது போலவே இங்கும் கொள்க. முன்னத்யாயத்தில் பர ப்ரஹ்மத்திற்குச் சொன்ன ஜகத் காரணத்வம் இவ் வத்யாயத்தில் நன்கு த்ருடீகரிக்கப்படுகிற தென்ற தாயிற்று. இதில் முதற் பாதத்தில் ஸாங்க்யர் முதலானவர்களால் கிளப்பப்படும் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன. முன்னத்யாயத்தில் நிரீஸ்வர ஸாங்க்யர்களும் ஸேஸ்வர ஸாங்யர்களும் நிரஸிக்கப்பட்டனர். அதில் நிரீஸ்வர ஸாங்க்யன் கபில ஸ்மருதி விரோதத்தைக் காட்டி ப்ரஹ்மம் ஐகத் காரணமன்றென்று வாதிப்ப தொன்றுண்டு; அந்த வாதத்தை நிராகரிக்க இவ்வதிகரணம் எழுகின்றது. ஸ்ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்க இதி சேத்-சேதநாசேதந விலண மான ப்ரஹ்மம் ஐகத் காரண மென்று கொண்டால், ப்ரதாநாம் காரணமென்று சொல்லுகிற கபில ஸ்ம்ருதி அப்ரமாணமாய் விடுமே யென்னில்; நீ – அப்படி சொல்லக் கூடாது: அந்ய ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தைச் சொல்லுகிற மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடுமாதலால்- என்பது ஸூத்ரத்தின் பொருள். தங்கள் யோக மஹிமையினால் பராவர தத்வங்களை உள்ளபடி ஸாக்ஷாத் கரித்தவர்களான மநு பராசராதி மஹர்ஷிகளின் ஸ்மருதிகளை யெல்லாம் அப்ரமாணமாக்குவதிற் காட்டிலும் கபில ஸ்மருதி யொன்றை அப்ரமாணமாக்குவது தான் யுக்தம் என்பது கருத்து.இங்கே பூர்வ பக்ஷம் வருமாறு *ஸதேவ ஸேம்ய இதமக்ர ஆஸீத் என்பது முதலான வேதாந்த வாக்யங்களுக்கு ஸ்வதந்தர ப்ரதாந் காரணத்வத்தில் தாத்பரியமா? அல்லது சேதநாசேதந விலக்ஷண் ப்ரஹ்ம் காரணத்வத்தில் தாத்பர்யமா? என்று ஸந்தேஹம் வந்தால், வேதாந்த வாக்ய தாத்பரியத்தை நிர்ணயிப்பதற் கென்றே தோன்றிய கபில ஸ்மிருதியை யநுஸரித்துத் தான் தாத்பர்ய நிர்ணயம் செய்ய வேண்டும் : இல்லையாகில் அந்த ஸ்ம்ருதிக்கு ஸர்வாத்மநா அப்ராமாண்யம் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொல்லு வதற்கில்லை; வேதாந்தங்களில் ஆப்தராகச் சொல்லப் பட்டிருக்கின்ற கபில மஹர்ஷி அயதார்த்த வக்தாவாக இருக்க முடியாதாகையாலே அவரியற்றிய ஸ்மருதிக்கு அப்ராமாண்யம் சொல்லவே முடியாது.ஆனால் ப்ரஹ்ம காரணத்வத்தைச் சொல்லுகின்ற மநு ஸ்ம்ருதி முதலானவற்றுக்கு மாத்திரம் அப்ராமாணயம் சொல்லி விடலாமோ வென்று கேட்கக் கூடும். கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட கருமங்களையும் மந்வாதி ஸ்ம்ருதிகள் விசதீகரிப்பன வாதலால் அந்த அம்சத்திலே அவற்றுக்கு ப்ராமாண்யம் கொள்ள இடமுள்ளது.ஆகவே அவற்றுக்கு ஸர்வாத்மநா அப்ராமாண்யமில்லை: கபில ஸ்மருதியோ வென்னில், கர்ம காண்டத்தில் அடியோடு ப்ரவேசியாமல் ஜ்ஞாந காண்டத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களை விசதீகரிப்பதற்கென்றே தோன்றின தாகையாலே அதற்கு விருத்தமான ப்ரஹ்ம காரணத்வத்தைக் கொள்ளுமளவில் ப்ரதாந காரணத்வத்தைக் கூறுகின்ற அந்த கபில ஸ்ம்ருதிக்கு வேறு விஷயமில்லாமையாலே ஸர்வாத்மநா அப்ராமாணயம் வந்து தீரும். ஆகையாலே அதற்கு ஒருவாறு ப்ராமாண்யம் கொள்ளுவதற்காகவும் நிரவகாசத்வ ஆபத்தியைப் பரிஹரிப்பதற்காகவும் அது சொன்ன பரதான காரணத்வத்தில் தான் வேதாந்தங்களுக்குத் தாத்பர்யம் கொள்ள வேணும்.

    45-என்கிற இந்த பூர்வ பக்ஷத்தின் மேல் ஸித்தாந்தம் வருமாறு : கபில ஸ்ம்ருதி யானது வேதாந்த வாக்யங்களின் தாத்பர்ய நிர்ணயத்திற் கென்றே தோன்றினதாகையாலே அதை யநு வரித்தே வேதாந்த தாத்பர்ய மறுதியிட வேணுமென்பது யுக்த மென்றாலும், தங்களுடைய யோக மஹிமையினால் பராவர தத்வங்களை உள்ள படி ஸாக்ஷாத் கரித்தவர்களான மநு மஹர்ஷி, பராசர மஹர்ஷி முதலான பல மஹர்ஷிகளி இயற்றிய ஸ்மருதிகளை உபேக்ஷிப்பது தகாது. ஒரு கபில மகர்ஷியின் உக்தியைக் கொண்டு பல மஹா யோகிகளின் உக்திகளை உபமர்திப்பது யுக்தமாகாது. கபில ஸ்ம்ருதிக்கும் மந்வாதிகளின் ஸ்மருதிகளுக்கும் பரஸ்பர விரோதம் நேர்ந்தால் மந்வாதி ஸ்மருதிகள் பலிஷ்டங்களாகையாலே அவற்றோடு முரண் படுகின்ற கபில ஸ்மருதிக்கு ப்ராந்தி மூலகத்வ நிர்ணயம் பண்ணுவதே பொருத்த மானது. மந்வாதி ஸ்மருதிகளில் பர பிரஹ்மத்திற்குத் தான் ஜகத் காரணத்வம் ஸ்பஷ்டமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே கபில ஸ்மிருதியைத் தள்ளி மநு பராசராதி ஸுக்திகளின் படியே ப்ரஹ்மமே ஜகத் காரணமென்று கொள்வது தான் யுக்தம். *ருஷிம் ப்ரஸூதம் கபிலம் என்று கபிலரை ஆப்தராகச் சொல்லி யிருக்கையாலே அவருடைய உக்தியைத் தழுவியேயாக வேணுமென்றதும் அஸங்கதம். ஸ்ருதி ஸ்மிருதிகளில் ப்ருஹஸ்பதியையும் கொண்டாடி யிருப்பதைக் காண்கிறோம். அவ்வளவால் அவரியற்றிய லோகாயதத்தைக் கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பாருண்டோ? இல்லையே.

    46-இனி, கருத்ஸ்ந ப்ரஸக்தி யதிகரணத்தின் ப்ரமேயம் விளக்கப் படுகிறது – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்* என்பது ஸித்தாந்த ஸூத்ரம். ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்னும் வாதத்தில் ப்ரஹ்மமே ஜகத்தாகப் பரிணமிப்பதாய்த் தேறுகிறது. ப்ரஹ்மமோ நிரவயவமானது ; அது ஜகத்தாகப் பரிணமிக்கும் போது ப்ரஹ்மம் முழுவதுமே காரியப் பொருளாகப் பரிணமிக்க வேண்டியதாகிறது. ஏக தேசேந பரிணமிக்கிற தென்னும் பக்ஷத்தில் ப்ரஹ்மம் நிரவயவமென்று சொல்லுகிற ஸ்ருதி விரோதிக்கும். ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணமாக வொண்ணாது- என்கிற பூர்வ பக்ஷமே முந்தின ஸுத்ரத்தின் பொருள். (இதைச் சிறிது விவரிப்போம்.) கீழே உப ஸம்ஹாராதிகரணத்தில் ஷீர த்ருஷ்டாந்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஷீர த்ருஷ்டாந்தம் பொருந்தாது. ஷீரம் ஸாவயவமாகையாலே அது போல ப்ரஹ் மமும் ஸாவயவமென்ன வேணும். அப்படி கொண்டால் நிரவயவத்வ ஸ்ருதி கோபிக்கும்; நிரவயவமாகில் ப்ரஹ்மம் க்ருத்ஸ்ந பாகத்தாலும் பரிணாம மடைந்ததாக வேணும். ஆகட்டுமே யென்னில், க்ருத்ஸ்சமமும் ஒரு காரயப் பொருளாகப் பரிணமித்த போது மற்றொரு காரியப் பொருளாகப் பரிணமிக்க ப்ரஸக்தி யில்லை. ஆகையாலே ப்ரஹ்ம காரணத்வ வாதம் ஒவ்வாது -என்பதாகப் பூர்வ பக்ஷம்.

    47-இதன் மேல் ஸித்தாந்த முணர்த்தும் ஸுத்ரம்-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்*என்பது. து சப்தம் பூர்வ பக்ஷத்தை வ்யாவர்த்திப்பிக்க வந்தது. ப்ரஹ்மம் நிரவயவமென்பதும், அது கார்யப் பொருளாகப் பரிணமிக்கிற தென்பதும் ஆகிய இரண்டும் ஸ்ருதி ஸித்தமான அர்த்தங்கள். ப்ரஹ்மமோ சப்த ப்ரமாண மொன்றினாலேயே அறியப் படுமது : ஆகையாலே கீழே தோன்றின பூர்வ பக்ஷம் யுக்தமன்று என்பதாக ஸுத்ரார்த்தம். இதைச் சிறிது விவரிப்போம். ஸா வயவமான வஸ்து தான் ஏக தேசத்தாலே பரிணமிக்க முடியு மென்றும்,நிரவயவமான வஸ்துவானது அப்படி ஏக தேசத்தாலே பரிணமிக்க மாட்டாமல் கருத்ஸ்நாம்சத்தாலும் பரிணமித்தாக வேணுமென்றும் ஒரு நியதி சொல்லுவதானது லௌகிக பதார்த்த திருஷ்டியினால் தானே. இப்படி யொரு வ்யாப்தி கல்பிக்க வேணுமானால் பர ப்ரஹ் ம்ம் தவிர மற்ற வஸ்துக்களில் மாத்திரமே கல்பிக்கலாம் . ப்ரஹ்மத்தினிடத்திலும் இந்த வ்யாபதி கொள்ள அவசிய மில்லை. ஏனென்னில், ப்ரஹ்மத்தை நாம் சாஸ்த்ரங் கொண்டே அறிகிறோம். அந்த சாஸ்த்ரமானது ப்ரஹ்மத்திற்கு நிரவயவத்வத்தையும் பஹு பவநத்தையும் (அதாவது, நாநா வஸ்துக்களாகப் பரிணமிப்பதையும்] ஓதி யிருக்கின்றது. அது பிரஹ்மத்தினுடைய அநிர்வசநீயமான சக்தி விசேஷத்தைப் பொறுத்தது. அத்புத சக்தி யுக்தமான ப்ரஹ்மத்தினிடத்திலே நாம் லௌகிக வஸ்து த்ருஷ்ட்யா சோத்யம் செய்வது தகாது. ஒன்று பாருங்கள். கண்ணுடையவன் தான் காணமுடியும், காதுடையவன் தான் கேட்கமுடி யும் ; கண்ணிலாதான் காண்கில்லான் ; செவியிலாதான் கேட்ககில்லான்- என்று ஒரு வ்யாப்தி சொல்ல நினைத்தால் பர ப்ரஹ்மந் தவிர மற்ற பேர்களிடத்தில் தானே இப்படிச் சொல்ல முடியும் பரம புருஷனிடத்திலே இந்த வயாப்தி பயன் பெறாதன்றோ. ஆகவே உலகில் காணும் நியாயத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தினிடத்தில் சோத்யம் செய்வது கூடாது.

    48-வேதாந்திகள் இங்கு விசேஷித்துக் குறிக்கொள்ள வேண்டிய விஷயமுண்டு: ப்ர ப்ரஹ்மத்திற்கு ஜகதாத்மநா பரிணாமம் போலவே ப்ரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி ஸித்தமா யிருக்கின்றது.நிரவயவமான ப்ரஹ்மம் வஸ்து தோறும் எங்ஙனே பரிஸமாய வர்த்திக்க முடியும்? என்று சிலர் சோத்யம் செய்வதுண்டு. அந்த சோத்யமும் ” ஸ்ருதேஸ்து சப்த மூலத்வாத்” என்கிற இந்த ஸூத்ரத்தினால் சிக்ஷிக்கப் பட்ட ந்யாயத்தினாலேயே மடிந்தொழிகின்றது. இவ் விஷயத்தை ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் ந்யாய ஸித்தாஞ்ஜநத்தில் வெகு சதுரமாக அருளிச் செய்து முடித்திருக்கிறார். அப்படி யிருந்தும் இதில் இன்னமும் சிலர் தெளிவு பெறாமல் கலங்கி யிருக்கிறார்கள். பகவான் ஒரு வஸ்துவிலே பரி ஸமாப்ய வர்த்தித்து விட்டால் அவ்வளவோடு பகவான் உப ஷீணனாய் விடுகிறபடியால் மற்றொரு பொருளில் வியாபிக்க எப்படி முடியுமென்று இந்த சோத்யத்தையே திருப்பித் திருப்பிச் செய்து கொண்டு காலங் கழிக்கிறார்கள். அந்தோ! அன்னவர்கள் * ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் * என்கிற ஸூத்ரம் என்ன சிக்ஷிக் கிறதென்பதையும் இந்த ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி என்ன அருளிச் செய்கிற
    ரென்பதையும் சிறிதும் நோக்க மாட்டிற்றிலர். – ஸ்ரீபாஷ்யஸுக்தியைப் பற்றின விரிவுகளை
    நம்முடைய ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா, அத்புத சக்தி முதலான கிரந்தங்களிலே காண்க.

    49-இனி, ப்ரயோஜநவத்த்வாதி கரணத்தின் ப்ரமேயம் பற்றிப் பேசுவோம். கீழே விவரித்த அதிகரணத்திற்கு அடுத்த அதிகரணமே இது. பரம புருஷன் ஸர்வ சக்தி யுக்தனாகையாலும் ஸத்ய ஸங்கல்பனாகையாலும் அவன் ஸங்கல்ப மாத்ரத்தாலே ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதாகச் சொல்லப்படுகிற விஷயம் ஸம்பாவிதமன்று; ஏனென்னில்; ப்ரஹ்மம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது ஏதேனுமொரு ப்ரயோஜனம் இருந்து தீர வேண்டும். உலகில் ஒருவன் ஒரு காரியத்தைச் செய்யும் போது நிஷ் ப்ரயோஜ மாகச் செய்ய மாட்டான். பரயோஜன மென்பது தன்னையுஞ் சேரும், பிறரையும் சேரும். ப்ரக்ருதத்தில் அவாப்த ஸமஸ்த காமனான பகவானுக்கு ஸ்ருஷ்டியினால் ஒரு ப்ரயோஜநமும் உண்டாக விரகில்லை.உண்டாகுமாகில் அவனை அவாப்த ஸமஸ்த காமனென்னப் போகாது. ஸ்ருஷ்டியினால் பகவானுக்கு ப்ரயோஜனமில்லை யாகிலும் நம் போன்ற ஜீவர்களுக்கு ப்ரயோஜனமாகிற தென்னவும் இடமில்லை. ஆத்யாத்மிகாதி துக்கங்களுக்கே ஹேதுவாகின்ற ஸ்ருஷ்டியானது ஜீவர்களுக்கு ப்ரயோஜநப்பட விரகில்லை யன்றோ. பகவானுக்குப் பஷபாதித்வம் நிர்தயத்வமாகிற தோஷங்களை சங்கிக்கச் செய்வதாயு முள்ளது ஜகத் ஸருஷ்டி. ஆகவே பகவான் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாதென்று பூர்வ பக்ஷம் செய்வதாக வுள்ளது இவ் வதிகரணத்தில் முதல் ஸூத்ரம் ந ப்ரயோஜநவத்த்வாத்* என்பது :இங்கு ஸ்ருஷ்டே: என்றொரு பதம் வருவித்துக் கொள்ள வேணும். ஸ்ருஷ்டியானது ப்ரயோஜனத்தோடு கூடியிருக்க வேண்டியதாகையாலே ப்ரஹ்மம் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாதென்று ஸூத்ரத்திற்குப் பொருள். இதன் மேல் ஸித்தாந்த ஸூத்ரம் லோகவத் து லீலா கைவல்யம் * என்பது. உலகில் ஸார்வ பௌமனாயிருக்கு மோரரசன் பிரயோஜநாந்தர மொன்றையும் கணிசியாமலே ‘லீலை யாகவே பந்து விளையாடல் முதலியன செய்யக் காணா நின்றோம். அதனால் அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வத்திற்குக் கொத்தை யொன்றுமில்லை. அது போலவே பரம புருஷனும் லீலார்த்தமாகவே ஜகத் ஸ்ருஷ்டி பண்ணக் குறையில்லை யென்றபடி, மன் பல்லுயிர்களுமாகிப் பல பல மாய மயக்குக்களால், இன்புறுமிவ் விளையாட்டுடையான் * என்று நம்மாழ்வாரும், நாட்டைப் படை யென்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் * என்று ஆண்டாளு மருளிச் செய்தவை இங்கே அநுஸந்தேயம். விஷம ஸ்ருஷ்டி காண்பதனாலே பகவானுக்குப் பக்ஷ பாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே யென்னில், அந்த சங்கை * வைஷம்ய நைர்க்குண்யே ந ஸாபேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி என்கிற அடுத்த ஸூத்ரத்தினால் பரிஹரிக்கப் படுகிறது . அந்தந்த ஜீவர்கள் செய்த கருமங்களுக்குத் தக்கபடி நீசோச்ச ஸ்ருஷ்டிகள் ஏற்படுகிறபடியாலே பரம புருஷனுக்கு வைஷம்யமோ நைர்க்ருண்யமோ ப்ரஸங்கிக்க மாட்டாதென்றபடி. இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு அடுத்த ஸுத்ரம் பரிஹார முணர்த்துகின்றமை கண்டு கொள்வது.

    50-இனி இரண்டாமத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் ஸர்வதாநுபபத்தி யதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது . ஸர்வ சூந்ய வவாதிகளான பௌத்த ஏகதேசிகளின் பக்ஷம் இங்கு நிரஸிக்கப்படுகிறது. பர ப்ரஹ்மமே ஜகத் காரண மென்று நன்கு நிலை நாட்டத் தோன்றிய இந்த அத்யாயத்தில் ஸர்வ சூந்யத்வ வாதத்தை நிரஸிக்க என்ன ப்ரஸக்தி யென்று சிலர் நினைக்கக் கூடும் ஜகத் காரண வஸ்து ப்ரதாநமா? பரமாணுவா? பரப்ரஹ்மமா? என்கிற விசாரம் எப்போது பொருந்து மென்னில்: உண்மையில் ஜகதுத்பத்தி யென்பதொன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்.அடியோடு இல்லாதவொரு பிள்ளைக்கு மாதா பிதாக்களைப் பற்றி விசாரம் செய்வதுண்டோ? ஜகதுத்பத்தியே நிரூபிக்க முடியாததாயிருக்க, எதுக்கு காரணம்? என்கிற சர்ச்சை ஏதுக்கு ? உத்பத்தியானது (ஸத் )பாவத்திலிருந்து அங்கீகரிக்கப் படுகிறதா அபாவத்திலிருந்து அங்கீகரிக்கப் படுகிறதா வென்று கேட்கிறோம். பாவத்திலிருந்து என்பது சேராது; மண் பிண்டத்திலிருந்து பானை முதலியன உண்டாகின்றன வென்றால் மண் பிண்டத்தை உபமர்த்தித்துக் கொண்டு தானே யுண்டாகின்றன. எந்த காரியப் பொருளும் காரணப் பொருளை உபமர்த்தியாமல் உண்டாவதில்லை யென்பதைக் காணா நின்றோம். காரணாகாரத்தின் விநாசந் தானே உபமர்த்தமாவது ; அது தான் அபாவமே.ஆக பாவத்தில் நின்றும் உத்பத்தி யில்லை யென்று தேறிற்று. அபாவத்தில் நின்றுங் கூட உத்பத்தியில்லை யென்பது அநாயாஸமாகத் தெரிய வரும். அபாவத்திலிருந்து வோத்பத்தி ஸம்பவிக்க மாட்டாதன்றோ. ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாதிருப்பதால் உத்பத்திக்குப் பிற்பட்ட வான விகாரங்கள் எதுவுமே கிடையா வென்பது ஸித்தம்.லோக வியவஹார மெல்லாம் ப்ரம மூலகமே. ஆக சூன்யமே தான் தத்துவம் என்பவர்கள் இங்கு நிரஸிக்கப்படுகிறார்கள்.[ஸர்வதா நுப பத்தேச் ச ] என்பது ஸூத்ரம். ப்ரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம், இல்லை யாகிலுமாம் : பூர்வ பக்ஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாதாகையாலே மாத்யமிக தர்சநம் அஸ்மஞ்ஜஸமென்றபடி. ஸர்வம் சூன்யம் ? என்று சொல்லுபவர்கள் தங்களுக்கு அபிமதமான் இவ் வர்த்தத்தை ஸாதித்துத் தரும்படியான பிரமாணமொன்று உண்டென்று இசையும் பக்ஷத்தில் பரமாண ஸ்த் பாவத்தை யிசைந்த போதே ஸர்வ சூந்ய வாதம் தொலைந்தது பிரமாணமில்லை யென்னும் பக்ஷத்தில், பிரமாண மில்லாமையினாலேயே தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அஸித்தமென்று முடிந்தது. மேலும்,ஸர்வம் சூந்யம் ‘ என்கிற விந்த வார்த்தையினால் நாஸ்தித்வந்தானே விவக்ஷிதமாக வேணும். ஒரு ரூபத்தை விட்டு மற்றொரு ரூபத்தைடைவதே நாஸ்தி பதார்த்தமாகையாலே ரூபாந்தரத்தாலே அஸ்தித்வமே சொல்லப்பட்டதாக முடிகிறது. மண்ணுண்டை யொன்று இருந்தது. அது நசித்த வளவிலே ம்ருத் பிண்டோ நாஸ்தி’ என்று சொல்லுகிறான். இந்த வ்யவஹாரத்தில் பானை யென்கிற அவஸ்தை தானே விஷயமாகிறது.

    51- உலகில் அஸ்தி நாஸ்தித்வங்களை வழங்குகிறவர்கள் இப்போது மண்ணுண்டை யிருக்கிறது, இப்போது மண்ணுண்டை யில்லை: இங்கு மண்ணுண்டை யிருக்கிறது, இங்கு மண்ணுண்டை யில்லை? என்றிப்படி இடத்தையும் காலத்தையும் உட்படுத்தியே வியவஹரிக்கிறார்கள். தேச காலங்களைச் சேர்க்காமல் வெறுமனே மண்ணுண்டை யில்லை என்கிற ப்ரதீதியோ விவயவஹாரமோ எங்கும் காண்பதில்லை. ‘இப்போது மருத் பிண்டமிருக்கிறது’ என்றோ இங்கு மருத் பிண்டமிருக்கிறது’ என்றோ ஒருவன் விவயவஹரித்தால் மண் என்னும் திரவ்யத்திற்கு பிண்டத்வாவஸ்தை விஷயம்.இப்போது மருத் பிண்டமில்லை என்றோ “இங்கு மருத் பிண்டமில்லை என்றோ விவயவரித்தால் பிண்டத்வாவஸ்தையின் நாசமாகிய (கட ) த்வாவஸ்தை விஷயம். நாஸ்தித்வ விவ்யவகாரம் பண்ணினாலுங் கூட வேறொரு ஆகாரத்தாலே அஸ்தித்வமே தேறி நிற்கிற தென்பதை ஸர்வாநுபவ ஸாக்ஷிகமாகக் காணலாம். இன்ன வஸ்து இங்கில்லை என்றால் மற்றோரிடத்திலுள்ளதாகத் தேறியே தீரும். இப்போதில்லை யென்றாலும் மற்றொரு போதில் உண்டென்றதாகத் தேறியே விடும்.ஆகவே ஒருபடியாலும் ஸர்வ சூந்ய வாதம் ஸித்தியாது என்றதாயிற்று. ஸுத்ரத்தின் மேல் பொருள் காண்பது எங்ஙனே யென்னில் ; ஸர்வதா -ஸர்வ ப்ரகாரத்தாலும், அநுபபத்தே :-ஸ்வாபிமதமான ஸர்வ சூந்ய வாதம் உபபந்நமாகாமையினாலே என்றபடி. ஸர்வ ப்ரகாரத்தாலும்’ என்றதை ஸ்ரீ பாஷ்யாதிகளில் ஸ்வாமி விவரித்தருளும் போது இவ்வாறு அருளிச் செய்கிறார். சங்கரபாஷ்யத்தில் இவ்விதமாக அர்த்தம் செய்யப்பட வில்லை. லௌகிகத்தில் இதற்கு எவ்விதமாகப் பொருள் கொள்கிறோமோ அவ் விதமாகவே சங்கராசாரியர் பொருள் கொண்டார். நம் ஸ்வாமி கொண்ட பொருள் தான் உண்மையில் ஸமஞ்ஜஸமானது. ஸ்வாமிக்கு இப் பொருள் தோன்றினது எதனாலென்னில் ; திருவாய்மொழியில் (1-1-9) * உள்னெனிலுளன் அவனுருவ மிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவ மிவ்வருவு கள், உள்னெனவில்னெனவிவைகுண முடைமையின், உளனிந்தகைமையோ டொழி விலன் பரந்தே என்ற பாசுரங் கொண்டே இந்த ஸூத்ரத்தின் பொருளை ஸ்வாமி அறுதி யிட்டருளினாரென்பது நிஸ் ஸந்தேஹம். அப்பாசுரத்தின் ஆறாயிரப்படியை ஸேவித்தால் இஃது எளிதிற் புலனாம். அப்பாட்டிற்குத் தமிழ் மொழியாலெழுதப் பட்டுள்ள பொருள் தான் ஸ்ரீபாஷ்யத்தில் வடமொழியாலெழுதப் பட்டுள்ளதென்க.

    உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
    உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
    உளன் என இலன் என விவை குணமுடைமையில்
    உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
    –1-1-9-

    ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது –
    இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும்
    வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
    ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
    ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –

    இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
    தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
    அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
    இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
    உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந் யவாதியை நிரசித்தது –

    52- இனி மூன்றாமதியாயத்தில் சிறிது செல்வோம். கீழ்க் கழிந்த இரண்டு அத்யாயங்களுள் முதலத்யாயத்தினால்- ஜகஜ் ஜந்மாதி காரணமாய் ஸர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே யென்றும், நான்முகன் சிவன் இந்திரன் முதலானவர்கள் அப் பரம புருஷனாலேயே தன்னுடைய லீலைக்காக ஸ்ருஷ்டிக்கப் பட்டு உபஸம்ஹரிக்கப் படுகிறார்களென்றும், அந்த பரம புருஷன் ப்ரக்ருதி மண்டலத்திற்குப் புறம்பாய் நித்ய ஸூரி ஸேவிதமான ஸ்தாந விசேஷத்திலே ஸ்வேச்சையினாலே சுடரொளி மயமான திவ்ய மங்கள் விக்ரஹத்தைப் பரிக்ரஹித்து அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய் தன்னடி பணிந்தார்க்கும் அபரிமிதமான ஆனந்தத்தை யளிப்பவனாய் ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அநுபவிக்கப் பட்டுக் கொண்டிரா நின்றா னென்றும் தெரிவிக்கும் முகத்தினால்-ஸம்ஸாரிகளுக்கு பகவதநுபவ குதூகலத்தை யுண்டாக்குவதற்காக பரம் புருஷார்த்தமான பகவத ஸ்வரூப ஸ்வபாவாதிகள் நிரூபிக்கப்பட்டன. பிறகு இரண்டாமத்யாயம் செய்தென்னென்னில் ; முதலத்யாயத்தினால் நிரூபிக்கப்பட்ட அர்த்தம் ஸர்வாத்மநா அசைக்க முடியாததென்று பரபஷ ப்ரதிஷேப பூர்வகமாக ஸாதித்ததுடன் ஸ்ரீ பாஞ்சராத்ர மென்கிற பகவத் ப்ரணீத ஸாஸ்த்ர விசேஷத்தினால் தேறிய பொருளென்றும் நிரூபித்து ஸகல சேதநாசேதநப் பொருள்களும் பரம புருஷ கார்ய பூதங்களே யென்பதை நன்கு சோதிக்கும் முகத்தால் கார்ய ஸாமான்யமும் பர ப்ரஹ்ம் கார்யமே யென்பதும் ஸ்தாபிக்கப் பட்டது. ஆக இரண்டத்யாயங்களாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாகத் தேறிற்று. இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப்பட்டாலும், அநாதி வாஸநா பலத்தாலே ஷூத்ர புருஷார்த் தங்களையே நச்சிக் கிடக்கும் ஸம்ஸாரிகளுக்குப் பரம புருஷார்த்த ப்ராப்தியில் பதற்ற முண்டா காமைக்குக் காரணம்- தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பாஸ்திரங்களென்பதை ஆராய்ந் துணராமையே யென்று கருதிய சாஸ்த்ர காரர், அந்த ஸம்ஸாரிகளுக்கு இதர புருஷார்த்தங்களில் வைராக்யத்தையும் பரம புருஷார்த்தத்தில் மிகுந்த ருசியையு முண்டாக்குவதற்காக கர்ம பலங்களெல்லாம் க்ஷயிஷ்ணுக் களென்றும் பரம புருஷ உபாஸந பலமான அபவர்க்க மொன்றே நித்ய புருஷார்த்த மென்றும் தெரிவித்து இவ் வழியாலே பரம புருஷார்த்த பிராப்தியில் வராதிசயத்தை யுண்டாக்கவே பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிக்கின்றார். ஏற்கெனவே கர்ம விசாரம் செய்து அதன் பலன்களை நஸ்வரங்களென்றறிந்து வைராக்யம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்ஸையில் அதிகாரமென்று ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலேயே நிரூபிக்கப் பட்டிருப்பதனால் மறுபடியும் வைராக்யத்தை யுண்டாக்குவதற்காக இந்த ப்ரயத்னம் வீணல்லவோ வென்று சிலர் சங்கிக்கவுங் கூடும்; ஆகிலும் கேண்மின்; பஞ்சாக்நி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் எப்படிப்பட்ட வைராக்யம் உண்டாகுமோ அது கர்ம விசாரத்தினால் உண்டாக மாட்டாதென்று கருதியே இங்கு புநாரயநம் கொள்ளப்படுகிறது. ஆகவே இது நிஷப் பலமன்று, ஸபலமே. இந்த மூன்றாமத்யாயத்தின் முதற்பாதத்தில் பஞ்சாக்நி வித்யா நிரூபணம் செய்து கர்ம பலன்களெல்லாமும் நஸ்வரங்களென்றும் நரக துல்யங்களென்றும் தெரிவிக்கப் படுகிறது. மூன்றாமத்யாயமானது பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்தைத் தெரிவிப்பதென்றும், நான்காமத்யாயமானது உபாய பலமான உபேயத்தைத் தெரிவிப்பதென்றும் நெஞ்சிற்கொள்க.

    53-உபய லிங்காதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது. இது மூன்றாமத்யாயத்தின் இரண்டாவது பாதத்திலுள்ளது. ஜீவாத்மாவானவன் ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு அவ்வவஸ்தைகளில் ஸுக துக்கங்களை யதுபவிக்கிறா னென்னுமிடம் கீழே நிரூபிக்கப் பட்டது. அப்படிப்பட்ட ஜீவனாலே அதிஷ்டிதமான சரீரத்தில் பரமாத்மாவும் ஸம்பந்தப்பட்டிருந்தாலும் தத் பிரயுக்தமான ஸுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஒட்டப் பெறாமலிருக்கிறா னென்பதையும் கல்யாண குணக் கடலாயிருக்கிறா னென்பதையும் நிரூபிக்க இவ் வதிகரணம் தோன்றியது. ந ஸ்தாந தோபி பரஸ்யோபய லிங்கம் ஸர்வத்ர ஹி- என்பது இவ் வதிகரணத்திற்குத் தலையான ஸுத்ரம். பரஸ்ய – பரம புருஷனுக்கு, ஸ்தாநத: அபி- ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும், அபுருஷார்த்த ஸுக துக்க ஸம்பந்தம் கிடையாது. (இதற்கு ஹேது வென்னெனில்:) ஸர்வத்ர ஹி உபய லிங்கம்- பரம புருஷன் ஸர்வ ஸ்ருதி ஸ்மிருதிகளிலும் ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாணை கதாநத்வம் என்கிற இரண்டு அஸாதாரண தர்ம்ங்களோடு கூடியவனாக ப்ரதிபாதிக்கப் படுகையாலே – என்பது ஸுத்ரத்தின் பொருள் -இதைச் சிறிது விவரிப்போம்-ஸ்ம்ருதிகளிலும் பரம புருஷன் இயற்கையாகவே ஹேய ப்ரத்யநீகனாயும் கல்யாணக குணாகரனாயு மிருக்கிறானென்று சொல்லப் படுகையாலே ஹேய ப்ரதிபடனான அப் பரம புருஷனிடத்தில் சரீர ஸம்பந்தமானது அபுருஷார்த்த ஸுக து:க்காபத்திக்கு ஹேதுவாக மாட்டாது. அவன் அபஹதபாப்மா வெனப்படுகிறான். அபஹதபாப்மத்வமாவது இன்ன தென்பதைக் கீழே ஆனந்த மயாதிகரணத்தில் விவரித்திருக்கிறோம். புண்ய பாப ரூப கருமங்களின் பலன் ஸ்பர்சிக்கப் பெறாதிருத்தலே அபஹத பாப்மத்வமாம். அதாவது, புண்ய பாப ஸஜாதீயங்களான கருமங்களைத் தான் செய்தாலும் அவை பலன் கொடுக்கும்படியான சக்தியைப் பெறாதபடி அந்த சக்தியைத் தொலைத் திடுகையேயாம்-ஹேய ப்ரத்யநீகத்வமென்பதும் இதுவே. இப்படி விலக்ஷண சக்தி யுக்தனான பரம புருஷனிடத்தில் ஹேய தேஹ ஸம்பந்த முண்டானாலும் அது அபுருஷார்த்த ஸுக துக்க ஸமுத்பாதகமாக ஆக மாட்டாது. ஹேய தேஹ ஸம்பந்தமானது கர்மாதீநமன்றிக்கே ஸ்வேச்சா க்ருதமாகையாலே. இதற்கு மேல் ஒரு சங்கை தோன்றும் : பரம புருஷனுக்கு தேஹ ஸம்பந்தம் கர்ம ப்ரயுக்த மன்றிக்கே ஸ்வேச்சா க்ருதமாகவே யிருக்கட்டும்.ஹேய ஸம்பந்தமானது வஸ்து ஸ்வபாவத்தாலே அபுருஷார்த்தா பாதகமாகியே தீருமன்றோ -மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர வெள்ளத்தில் ஒருவன் ஸ்வேச்சையினாலே அமிழ்ந்தாலும் ஹேய சம்பந்த முண்டாகித் தானே தீரும்- என்று சங்கிக்கக் கூடும். இங்கு உணர வேண்டிய தத்துவமாவது – ஹேயத்வமென்பது கர்ம க்ருதமே யொழிய வஸ்து ஸ்வபாவ ப்ரயுக்தமன்று.ஸம்ஸாரதசையில் எந்தவஸ்துவும் அநுகூலமாகத் தோன்றுவதும் பிரதிகூலமாகத்தோன்றுவதும் வஸ்துஸ்வபாவத்தாலன்று. அப்படியாகில் எதுவும் எவனுக்கும் அனுகூலமாகவேயோ ப்ரதிகூலமாகவேயோ இருந்து தீரவேணும். இப்படி எங்கும் காணப்படவில்லை.இன்று அநுகூலமானதே நாளைக்கு ப்ரதிகூலமாகிறது. அதுதானே மற்றொருநாள் அநுகூலமாகிறது. ஆகவே எந்த வஸ்துவும் ஸம்ஸார தசையில் அநுகூலமா யிருப்பதும் பிரதிகூலமா யிருப்பதும் கர்ம க்ருதமே யாதலால் அகர்ம வஸ்யனான பரம புருஷனுக்கு ஸர்வ வஸ்துக்களும் தன் விபூதியாய்க் கொண்டு அநுகூலமாகவே யிருக்குமென்று கொள்ளக் கடவது.ஆகவே ஹேய பூத தேஹ ஸம்பந்தம் பரம புருஷனிடத்தில் அபுருஷார்த்தா பாதகமாக தென்க. இந்த சாரீரக மீமாம்ஸையிலேயே முதலத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் பரமாத்மாவுக்கு ஜீவாதிஷ்டித சரீர ஸம்பந்த மிருந்தாலும் அகர்ம வஸ்யனாகையாலே ஸு-க து:க்காதி ரூப கர்ம பல ஸ்பர்சமில்லை யென்னுமிடம் நிரூபிக்கப்பட்டே இருப்பதால் இவ் வதிகரணம் அத்தோடு புநருக்தமாகிறதே யென்று சிலர் சங்கிக்கக் கூடும்.அவ் விடத்துப் பூர்வ பக்ஷ சரீரம் வேறு, இவ் விடத்துப் பூர்வபஷ சரீரம் வேறு என்பதை ஸுஷ்மேக்ஷிகையா லுணர வேணும். இங்கு விரிவுக்கு அஞ்சி நிற்கிறோம்.

    54- இனி,மூன்றாமத்யாயத்தின் கடைசி பாதத்திலுள்ள ஸர்வாந்நாநுமத்யதி கரணம் பற்றிப் பேசுவோம். இதற்கு முந்தின அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் ஆவஸ்யகமென்று சொல்லிற்று.போஜந நியமமாகிற சம விசேஷம் ப்ரஹ்ம வித்துக்கு உண்டா இல்லையா என்பதை விசாரித்து நிர்ணயிக்க இவ் வதிகரணம்
    தோன்றியது-(ஸர்வாந் நாநுமதிச்ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் ] என்பது ஸூத்ரம். சப்தமானது அவதாரணப் பொருளது. ப்ராண வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாமென்று அனுமதிப்பது ப்ராணாபத் தசையைப் பற்றியதேயாம் ; ப்ரஸ்ம வித்தான அதிகாரியின் விஷயத்தில் ப்ராணாபத் விஷயமாகவே காண்கையாலே- என்று ஸுத்ரார்த்தம். இங்கு பூர்வ பக்ஷம்;சாந் தோக்யத்தில் ஐந்தாவது ப்ரபாடகத்தில் ப்ராண வித்யா பிரகரணத்தில் ஓதப் பட்டிருக்கிறது. ப்ராண வித்யா நிஷ்டனுக்கு அன்னமாகாதது எதுவுமில்லை யென்று இதற்குப் பொருள். ப்ராண வித்யா நிஷ்டனுக்கு நிஷித்தாந்ந போஜனமும் ஸர்வதா கூடுமென்றும், வித்யா மாஹாத்மியத்தினால் இதில்
    தவறில்லை யென்றும் சொல்லுவதாகத் தெரிகிறது.அல்ப சக்திகனான ப்ராண வித்யா நிஷ்டனுக்கே நிஷித்தாந் போஜனம் அனுமதிக்கப் படுமானால் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அந்த அநுமதி கைமுதிக ந்யாய ஸித்தமே – என்று பூர்வ பக்ஷம். இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு :- ப்ரஷ்ம வித்யா நிஷ்டனான உஷஸ்தன் பிராணாபத் தசையில் ஒரு யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புஜித்து அதனால் உயிர் தரிக்கப்
    பெற்றானென்றும், பிறகு அந்த ஆனைப் பாகன் கொடுத்த பானத்தை அவன்(உஷஸ்தன்] ஏற்றுக் கொள்ள வில்லை யென்றும் சாந்தோக்யத்தில் முதல் ப்ரபாடகத்தில் (கண்டம்-9)
    உஷஸ்த வ்ருத்தாந்த ப்ரகரணத்தில் காண்கிறது. இதனால், மஹா மஹிம சாலியான ப்ரஹ்ம வித்துக்கும் நிஷித்தாந்ந பஷணம் ஆபத்விஷயமென்று தெரிவதனாலும், ஆஹார சுத்தி ஆவஸ்யகமென்று தெரிவதாலும் ப்ராஹ்மண ஸாமாந்யத்திற்கும் ஆபத் காலத்தில் ஸர்வாந்நமும் அநுமதிக்கப் படுவதாகக் காண்கையாலும் ப்ரஹ்ம வித்தான அதிகாரி விசேஷத்திற்கும் ஸர்வாந்நாநுமதியானது ஆபத் கால மாத்ர விஷயகமென்று ஸித்திக்கும் போது, அல்ப சக்தியான ப்ராணோபாஸகனுக்குக் காணும் ஸர்வாந்நாதுமதியும் ஆபத் விஷய கந்தானென்பது பற்றிச் சொல்ல வேணுமோ?

    55-இனி நான்காவது அத்யாயத்திற்குச் செல்வோம். பெரும்பாலும் உபாஸந பரமாகச் சென்றது மூன்றாமத்யாயம். உபாஸநத்தின் பலனை நிரூபிக்க அவதரிக்கின்றது நாலாமத்யாயம். இதில் முதலதிகரணம் ஆவ்ருத்த்யதிகரணம்– மோக்ஷத்திற்கு உபாய பூதமான பகவதுபாஸநம் அஸக்ருதா வ்ருத்தி ரூபம் (அதாவது),தைலதாராவத் அவிச்சிந்ந ஸ்மருதி ஸந்தான ரூபம் ; ஏனென்னில் ஸ்ருதிகளில் விதிக்கப்பட்ட வேதநமானது அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாந ரூப த்யாநத்வா வஸ்தையை யுடைய தென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே – என்னும் பொருளதான ஸூத்ரம்* (ஆவ்ருத்தி ரஸக்ருதுபதேசாத் ] என்பது முதல் ஸுத்ரம். இங்கு பூர்வபக்ஷம் : ஸ்ருதி யாதி களில் ஸ்வர்க்க ஸாதனமாக விதிக்கப்பட்ட யாகாதிகள் ஸக்ருத் கரணத்தாலேயே எப்படி ஸ்வர்க்காதி பல ஸாதகமாகிறதோ அப்படி இங்கும் ப்ரஹ்மவிதாப்நோதி பரம் இத்யாதிகளில் மோஷ ஸாதநமாக விதிக்கப்பட்ட பகவச் சிந்தந ரூபமான வேதனமும் ஸக்ருதநுஷ்டாநத்தாலேயே மோக்ஷ ஸாதகமாகக் கூருமாதலால் அது ஒருகாலே செய்யப்பட வேண்டுமென்று. இப் பூர்வ பக்ஷத்தின்மேல் ஸித்தாந்தம் வருமாறு : வேதாந்த சாஸ்த்ரங்களில் மோஷ ஸாதநமானதைச் சொல்லி வருமடைவுகளில் வேதனம், உபாஸநம், தியாநம், த்ருவாஸ்ம்ருதி,ஸாக்ஷாத்காரம், பக்தி என்கிற சப்தங்கள் காணப் படுகின்றன- இவை யெல்லாம் பர்யாய பதங்களென்று நிச்சயிக்கப்படுமிடத்து தைலதாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாந ரூபமானதென்றே அறுதி இட வேண்டியதாகிறது. ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்(6-7-91) இத்யாதி ஸ்லோகங்களும் * பக்த்யா த்வந்யயா சக்ய: அஹமேவம் விதோர் இத்யாதி கீதா ஸ்லோகங்களும் இதையே வற்புறுத்துகின்றன.மேலே ஆறாவதாக ஆப்ரயாணதி கரணமுள்ளது. ஆப்ரயாணாத் தத்ராபி ஹி திருஷ்டம் * என்பது ஸூத்ரம்.மோக்ஷ ஸாதனமான ப்ரஹமோபாஸநமானது மரணாந்தமாக அநுஷ்டிக்கப்பட வேண்டு மென்று அதில் நிகமிக்கப் படுகின்றமை யறிக.

    56- இனி, தததிகமாதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது. தததிகம் உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசெள தத் வ்யபதேசாத்-என்பது ஸூத்ரம். ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு ஸாஷாத்காராவஸ்தையை யடைந்த ப்ரஹ்ம வித்யா நிஷ்பத்தி யுண்டாகுமளவில் ப்ரஹ்ம வித்யா மஹிமையினாலே பூர்வ பாபங்களுக்கு விநாசமும் உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமுமாகும்; ஸ்ருதிகளில் அப்படி சொல்லி யிருப்பதனாலே- என்பது ஸூத்ரார்த்தம். ப்ரஹ்ம ஜ்ஞானத்திற்கு முன்பு செய்த பாபங்கள் நசித்துப் போய் விடும்: பிறகு அபுத்தி பூர்வகமாக நேரும் பாபங்கள் தாமரை யிலையில் தண்ணீர் போல் ஓட்டமாட்ட என்றபடி. சாந்தோக்ய ஸ்ருதியில் உபகோஸல வித்யா ப்ரகாரணத்திலும் அவ் விடத்திலேயே வைஸ்வாநர வித்யா பிரகரணத்திலும் ப்ரஹ்ம வித்யையின் பலன் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆகையாலே உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமும் பூர்வ பாபங்களுக்கு விநாசமும் சொல்லப்படுகிற தென்கை.இங்குப் பூர்வ பக்ஷம் –நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்று பலனை யநு பவித்தே கருமங்களைத் தொலைக்க வேணு மென்று ப்ரஹ்ம வைவர்த்தத்தில் சொல்லி யிருக்கையாலே கர்ம பலன்களை அநுபவித்தே தீர வேண்டும் ; ப்ரஹ்ம வித்யையினாலேயே கருமங்கள் தீர்ந்து போவதாகச் சொல்லுவது ப்ரசம்ஸா பரமான வார்த்தை யாமத்தனை என்று. இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு; பூர்வ பாபங்களுக்கு விநாசமும் உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமும் ப்ரஹ்ம வித்யா ப்ரபாவத்தாலே நேருவதாகப் பல உபநிஷத்துக்கள் கூறியிருப்பது அபலபிக்க முடியாதது. *நாபுக்தம் ஷீயதே கர்ம என்ற வசனமும் யுக்தமானதே ; அது ப்ரஹ்ம வித்துக்களல்லாத ஸாமாந்யர் விஷயமாக ஓதுக்கத் தகும். ஆகவே இவை பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களே யாம். நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும்’ என்று ஒருவன் சொல்லுகிறான்; ‘பற்றி யெரிகிற நெருப்பைத் தண்ணீர் அணைத்தே தீரும்’ என்று மற்றொருவன் சொல்லுகிறான்.இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிதேனுமுண்டோ? தண்ணீர் இல்லை யானால் படர்ந்தெரிகிற நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீருமென்றும், தண்ணீரை யிட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடுமென்றும் அர்த்தமாக வில்லையோ. அது போல, ப்ரஹ்ம வித்யை இல்லாத வளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீருமென்றும், ப்ரஹ்ம வித்யை யுண்டாகில் கருமங்களின் சக்தி ப்ரதிஹதமாய் விடுமென்றும் எளிதாக அர்த்தமாகுமன்றோ.

    57-இனி நிசாதிகரணத்தைப் பற்றிப் பேசுவோம்- ஒரு ஸூத்ரமே கொண்டது இவ் வதிகரணம்-இரவில் இறந்தவற்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது. நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாகச் சொல்லப் பட்டிருப்பதனால் பரம புருஷார்த்தமான மோக்ஷமானது ஸம்பவிக்க மாட்டாது–பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் ப்ரசஸ்தமாகக் காண்கிறது. நிசா மரணம் இதற்கு விபரீதமானது -ஸ்பஷ்டமாக சாஸ்த்ரமிருப்பதால் நிசி மரணம் அதமகதிக்கே ஹேது வாகுமாதலால் இரவில் இறப்பவற்கு ப்ரஹ்ம ப்ராப்தி ஸம்பவிக்க மாட்டாது என்று பூர்வ பக்ஷம்
    ப்ராப்தமாக, இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு:-ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம ஸம்பந்தம் தேஹமுள்ள வரைக்குமே யாதலால் நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகமாகாது. (இதைச் சிறிது விவரிப்போம்.) பாப கருமங்சள் ஆரப்த கார்யங்களென்றும் அநாரப்த கார்யங்களென்றும் இருவகைப் படும். இன்னமும் பூர்வ பாபங்களென்றும்
    உத்தர பாபங்களென்றும் இருவகைப்படும். பலன் கொடுக்கத் தொடங்கிவிட்ட
    கருமங்கள் ஆரப்த கார்யங்களெனப்படும். இவையே ப்ராரப்த கர்மமென்று வழங்கப்
    பெறும். பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்க ளெனப்படும்-ஸஞ்சித கர்மமென்பது இதுவே. ப்ரஹ்ம வித்யையை ஸம்பாதிப்பதற்கு முன்னே செய்யப்பட்ட பாபங்கள் பூர்வ பாபங்களெனப்படும்.அதற்குப் பிறகு புத்தி பூர்வமான பாபங்கள் நேருவதற்கு ப்ரஸக்தி யில்லாமையாலே அபுத்தி பூர்வமாகவும் அகதிகமாகவும் நேருமவை உத்தர பாப மெனப்படுமென்று இதை முன்னமே சொன்னோம். இவற்றுள் அநாரப்த கார்யங்களைான கருமங்கள் ப்ரஹ்ம வித்யா ஸம்பந்த முண்டானவன்றே
    தொலைந்து போயின வாதலாலும், உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களிடத்தில் ஒட்ட
    மாட்டாவென்று சொல்லப் படுகையாலும் ப்ராரப்த கர்மமொன்றே சேஷித்து நிற்கிறது -அக் கருமம் சரம தேஹத்தோடு கழியுமாதலால் பந்த ஹேதுவாக மாட்டாது. ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும் பரம புருஷார்த்தமான ப்ரஹ்ம பிராப்திக்குக் குறை யில்லை யென்றதாயிற்று. திவா ச சுக்ல பக்ஷச் ச என்று கீழே காட்டின
    வசனம் பரஹ்ம வித்துக்களல்லாதார் விஷயமென்றும் முடிந்தது-

    58-இதற்கு மேலுள்ள தக்ஷிணாயநாதி கரணத்தின் ப்ரமேயமும் விவரிக்கப் படுகிறது -ஒரு ஸுத்ரமே கொண்டது இவ் வதிகரணமும். நிசி மரணமடைந்தாலும் பிரஹ்ம ப்ராப்திக்குக் குறையில்லை யென்பதற்கு, முந்தின அதிகரணத்தில் எந்த ஹேது சொல்லப் பட்டதோ, அந்த ஹேதுவினாலேயே தக்ஷிணாயநத்தில் மரணமடைந்தவற்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில் குறையில்லை யென்பது ஸித்தமே. ஆனாலும் இவ் வதிகரணத்தில் அதிகப் படியான சங்கை என்னவென்றால்,, தக்ஷிணாயநத்தில் மரணமடைந்தவற்கு சந்திர ப்ராபதி சொல்லப்படுகிறது; சந்த்ர பிராப்தி பெற்றவர்களுக்குப் புநராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது.பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணிதாகத் தெரிய வருகிறது. ஆக இக் காரணங்களினால் தக்ஷிணாயனத்தில் இறந்தவருக்கு ப்ரஹ்ம ப்ராப்தி ஸம்பவிக்க ஒளசித்யமில்லை- என்பதாம். இதற்குப் பரிஹாரமாவது, சந்த்ர ப்ராபதியினால் புநராவ்ருத்தி யென்பது ப்ரஹ்ம வித்துக்களல்லாதார்க்கே யொழிய ப்ரஹ்ம வித்துக்களுக் கன்று. ப்ரஹ்ம வித்துக்களுக்கும் சந்த்ர ப்ராப்தி யுண்டானாலும் இடையில் இளைப்பாறும் ஸ்தானமாகுமத்தனை. பந்த ஹேதுவான கருமம் தொலைந்து விட்டதென்கிற பூர்வோக்த ஹேதுவுக்குக் கண்ணழிவில்லாமையாலே ப்ரஹ்ம ப்ராப்தி யவர்ஜநீயமாகவே தேறும்-பீஷ்மர் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணினாரென்ற விஷயத்தில் அறியத் தக்க தொன்றுண்டு.அவர் மது வித்யா நிஷ்டர். மதுவித்யா பிரபாவத்தினால் ஸ்வச்சந்த மரணத்வமுள்ளது. அதனாலும், உத்தராயணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும் மரணமடைந்தவர்களுக்கு அவர் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணின வளவால் தஷிணாயனத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு , ப்ரஹ்ம ப்ராப்தியில் கண்ணழிவு சொல்ல முடியாது. ஆக இவ்வளவால் ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணமோ க்ருஷண பக்ஷ மரணமோ தஷிணாயன மரணமோ நேர்ந்தாலும் கூட பரம புருஷ பிராப்தியில் குறையில்லை என்றதாயிற்று –

    59-இனி,சாரீரக மீமாம்ஸையில் முடிவான அதிகரணமாகிய ஜகத் வியாபார வர்ஜாதி கரணத்தின் ப்ரமேயம் தெரிவிக்கப் படுகிறது. முக்த புருஷனுக்கு ஜகத் ஸ்ருஷ்டியில் அதிகாரமில்லை யென்பதும் பரம பதத்தினின்று மீட்சியில்லை யென்பதும் இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன. முதல் ஸூத்ரத்தின் அர்த்தமாவது, முக்தனுடைய ஐஸ்வர்யம் ஜகந் நியமனத்தைத் தவிர்த்தேயாம். ஏனென்னில் ; பர ப்ரஹ்மத்தைக் குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே ஜகத் ஸ்ருஷ்டி முதலானவற்றைச் சொல்லி யிருக்கிற படியாலும்,அவற்றைச் சொல்லும் ப்ரகரணங்களில் ஜீவன் ப்ரஸ்துதனாக இல்லாமையாலும் – என்பதாம். இங்கு பூர்வ பக்ஷம் வருமாறு – முண்டகோபநிஷத்தில் * முக்தனுக்குப் பர ப்ரஹ்மத்தோடு ஸாம்யம் ஓதப்பட்டுள்ளது. இன்னமும் சாந்தோக்யோபநிஷத்தில் முக்த புருஷனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஓதப்படுகிறது. இவ்விரண்டும் முக்தனுக்கு ஐகந் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வ மிருந்தாலொழியப் பொருந்த மாட்டாது -முக்தனுக்கு ஈஸ்வரத்வ மில்லையானால் ப்ரஹ்மத்தோடு பரம ஸாம்ய முண்டாவதாகச் சொல்வது சேராது- ஆகையாலே முக்தனுக்கும் பர ப்ரஹ்மத்திற்குப் போலவே ஈஸ்வரத்வத்தை அவசியம் இசைந்து தீர வேண்டும். ஆனது பற்றியே முக்தனைப் பற்றி ஓதுமிடங்களில்
    ஸர்வ லோக ஸஞ்சாரமும் காமாந்நித்வமும் காமரூபித்வமும் பொருந்துகின்றன மென்பது . ஸர்வலோக சஞ்சாரம் என்பது ஸர்வ லோக நியமனத்திற்காகத் தானே; அது தவிர மற்றொரு பலனும் தேறுகின்ற தில்லை யாகையாலே ஜகந் நியமனம் முக்தனுக்கு ஸித்தித்தே தீரும்.காமாந்நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு அதீன மென்பது தேறி நிற்கும். ஆனால் இதற்கு மேல் ஒன்று சொல்லாம்: முக்தனுக்கு ஸர்வ லோக ஸஞ்சார மானது ஆங்காங்கு போக்ய பதார்த்தங்களை அநுபவிப்பதற்காகவே யொழிய உலகங்களை நியமிப்பதற்காக வன்று என்று சொல்லலாம்; இதுவும் சொல்ல முடியாது : விகாராஸ் பதங்களாகையாலே ஹேயங்களா யிருக்கின்ற லோகங்களையும் அவற்றிலுள்ள பொருள்களையும் போக்யமாகக் கொள்ள ப்ரஸக்தி யில்லை யன்றோ – அவை ஹேயங்களானாலும் ஸ்வாமியான பரமபுருஷனுடைய விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி ஸம்பவிக்கலாமாகையாலே அவற்றைப் புஜிக்கைக்காகவே அவ்வோ லோகங்களில் ஸஞ்சாரம் ப்ராப்தமாகிறது என்கிற வாதமும் ஒவ்வாது. சாந்தோக்யத்தில் ஸ ஸ்வராட் பவதி * என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லி யிருக்கையாலே முக்தனுக்கு வேறு யாரும் அதிபதி யல்லரென்று நன்கு அறியலாகிறது. முக்தி தசையில் முக்தனைக் குறித்து பர ப்ரஹ்மம் சேஷி யன்று என்று தேறுவதால் ஸ்வாமியின் விபூதிகளை யநுபவிப்பதற்காக ஸர்வ லோக சஞ்சாரம் என்பதும் பொருந்தாது -அது நியமன அர்த்தமாகத்தான் -ஆகவே முக்தனுக்கும் ஜகத் வியாபாரமுண்டு என்பதாகப் பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகிறது –

    60-இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு – *யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே இத்யாதி யுபநிஷத் வாக்யத்தில் ஜகத் ஸ்ருஷட்யாதி ரூபமான நியாமகத்வத்தைப் பரப்ரஹ்ம லஷணமாகச் சொல்லி யிருக்கையாலே அது பர ப்ரஹ்மத்திற்கு அஸாதாரண மானதென்று விளங்குகிறது. அஸாதாரண தர்மந் தானே லக்ஷணமா யிருக்க முடியும் ஆகவே பர பரஹ்மத்திற்கு அசாதாரண தர்மமாக ஓதப்பட்ட ஜகந் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வமானது முக்தனுக்கு ஸம்பவிக்க மாட்டாது. ஸம்பவிக்குமாகில் அது பர ப்ரஹ்மத்திற்கு அசாதாரண லக்ஷணமாக வழியில்லை -இத்யாதி ஸ்ருதிகளாலும் ஜகந் நியாமகத்வம் பர ப்ரஹ்மத்திற்கே அஸாதாரணமென்று காண்கிறது -பரமாத்மாவுக்குத் தவிர மற்றை யோர்க்கு நியாமகத்வ மில்லை யென்று ஸ்பஷ்டமாகவும் சொல்லப் படுகிறது. ஆகவே முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வம் ஸம்பவிக்க மாட்டாது. * பரமம் ஸாம்ய முபைதி *என்று பரம புருஷனோடு முக்தனுக்கு வெறும் ஸாம்யம் சொல்லாதே பரம ஸாம்யாபத்தி சொல்லி யிருக்கையாலே அவனுக்குள்ள தெல்லாம் இவனுக்கும் பிராப்தமானாலொழிய பரம ஸாம்யம் நிர்வஹிக்க வழி யில்லையே என்றதற்குச் சொல்கிறோம் – யாரோட எந்த அம்சத்தில் ஸாம்யமென்று விசாரிக்குமளவில், “வித் வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஸாம்யமுபைதி” என்ற சொற் செறிவால் என்ன கிடைக்கிற தென்னில், வித்யா ஸாத்யமான யாதொரு புண்ய பாப விதூநந முண்டோ,அதனாலாகும் பலனில் ஸாம்யமென்று ஏற்படுகிறது -வித்யை யென்பது ப்ரஹ்ம ப்ராப்தி ப்ரதிபந்தகமான புண்ணிய பாப ரூப கருமத்திற்கு ப்ராயச் சித்தமானது ஏவஞ்ச, புண பாப ரூப கர்ம விதூநந ஸாத்யமான பலன் பரஹ்மாநுபவமே யென்று தேறிற்று. அதில் தான் ஸாம்யம் விவக்ஷிதமாகும். முன்னே பரம புருஷ ப்ரஸ்தாவமிருக்கையாலே அவனோடு தான் ஸாம்யமென்றும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த ஸாம்யத்தில் பாரம்யமாவது, ப்ரஹ்மாநுபவம் செய்யுமிடத்து தத் குணங்களிலும் தத் விபூதிகளிலும் ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அநுபவிப்பதே யாம். ஆக ஸமஸ்த கல்யாண குண விபூதி விஸிஷ்ட ப்ரஹ்மாநுபவத்தில் ஸாம்யமென்று தேறிற்று -இந்த ஸாம்யம் தான் ஸ்ருதியிலும் சொல்லப்படுகிறது.ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் ஸித்தித்த போது ஆநந்த ஸாம்யமும் இந்த ஸ்ருதியினாலேயே ஸித்தம்-ஸ ஸ்வராட் பவதி என்றதும் கர்ம வஸ்யத்வமில்லாமையைச் சொல்லுகிறத்தனை. * ஏஷ ஹ்யேவா நந்தயாதி * இத்யாதி ஸ்ருதிகளாலே முக்தனுடைய ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருதிகளெல்லாம் பரம புருஷாதீ மென்று தேறுகையாலும், முத்தனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வம் இயற்கையா யிருந்தாலும் கருமங்களினால் மறைந்திருந்த வது பரம புருஷனுடைய அநுக்ரஹத்தாலேயே ஆவிர்ப்பவிப்பதாக ஓதுகையாலும் முக்த்தைஸ்வர்யம் முழுவதும் பகவதிச்சாதீந மாய்றுகையாலே பரம புருஷனுடைய அஸாதாரண தர்மமான ஜகந் நியமந ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை யென்று முடிந்தது.

    61- இப்படி முக்தனுடைய ஐஸ்வர்யம் பரம புருஷாதீநமாகில் அந்த பரம புருஷன் தான் ஸ்வதந்த்ரனாகையாலே அவன் தனது ஸங்கல்பத்தாலே ஒரு ஸமயம் முக்தனைப் பரம பதத்தில் நின்றும் இந் நிலத்திற்குத் திருப்பி யனுப்பி விடவுங் கூடுமாகை யாலே மோஷ புருஷார்த்தமும் அநித்யமாக வேண்டி வருமே என்கிற சங்கை அடுத்தபடி யாக உண்டாகக் கூடியது. அந்த சங்கைக்குப் பரிஹாரமாக —அநா வ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-என்கிற சரம ஸூத்ரம் அவதரிக்கிறது. சங்கா பரிஹார ப்ரகாரம் யாதெனில்; அந்யதா ஸித்தமான ஸ்ருதி வாக்கியங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை சாஸ்த்ரம் சொன்னபடியே தான் அறிய வேண்டும். பரம புருஷனொருவனுள்னென்பதை நாம் எந்த சாஸ்தரங்கொண்டு அறிகிறோமோ அந்த சாஸ்தரமே முக்தர்களுக்கு மீட்சி யில்லை யென்பதை யுமறிவிக்கின்றது;

    62- முக்தர்களுக்கு மீட்சி யில்லை யென்பதை ஸூத்ரகாரர் சாஸ்த்ரத்தைக் காட்டி ஸ்தாபித்தார். பகவானே கேட்பாரற்ற ஸ்வதந்திரன். சாஸ்த்ரத்தையும் மீறிச் செய்வதற்கு அவன் அசக்தனல்லன்-ஸ்வாதந்திரியத்தாலே ஈஸ்வரன் ஒன்று செய்யப் புகுந்தால் சாஸ்த்ரம் குறுக்கே நிற்குமோ?என்று சோத்யம் பண்ணினால் இதற்கு ஸூத்ரகாரர் சொன்ன ஸமாதானம் திருப்தியை விளைக்காது.-சங்கராசார்யரும் தம்முடைய பாஷ்யத்தில் சாஸ்த்ரத்தை யெடுத்துக் காட்டினவளவோடு நின்று விட்டார். ஸ்வாமி யெம்பெருமானார் ஆழ்வாரருளிச் செயற்கடலில் ஆழ்ந்து அரும் பெரும் பொருள்களை யறிந்தவராகையாலே அவ் வருளிச் செயல் பரிமளம் கமழ இங்கு அருளிச் செய்திருக்கும் அர்த்த விசேஷம் ஸ்ரீபாஷ்யத்திற்குச் சிகரமாக விளங்குகின்றது. அவ்வர்த்த விசேஷம் கேண்மின் ; ஈஸ்வரன் ஸ்வதந்திரனே யானாலும் உன்மத்தனல்லன், மூர்க்கனல்லன், அரஸிகனல்லன். ஸத்ய ஸங்கல்பனென்று பேர் பெற்றவன். தன்னுடைய மநோரதத்திற்கு மாறுபாடாக நடந்து கொள்பவனல்லன். ஒரு சேதநனைப் பெறுவதற்கு அப் பரம புருஷன் என்ன பாடுபடுகிறான்!எவ்வளவு க்ருஷி பண்ணுகிறான்! தெரியுமோ? அவன் ஸ்ருஷ்டி பண்ணுவதும் அவதாரங்கள் பண்ணுவதும் சேதநரை லபிக்கைக்காக வன்றோ. எவ்வளவோ தவப் பயனாக ஒரு சேதநன் வந்து சேர, அவனை லபித்த பின்பும் இழப்பனோ? என்னுமபிப்ராயத்தை இன் சுவையே வடிவெடுத்த திவ்ய ஸூக்தியாலே காட்டி யருளி சங்கா பரிஹாரத்தை மிக வழகாகத் தலைக் கட்டினார். இதில் பரம புருஷ ஜ்ஞாநிநம் லப்த்வா ” என்கிற ஸ்ரீ ஸூக்தி விந்யாஸ்மானது எம்பெருமானார் திருவுள்ளத்தில் திருவாய்மொழி யமுதக் கடல் அலை யெறிகிற படியை நன்கு காட்டுகின்றது.*யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்,தானோட்டி வந்தென் தனி நெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்று என்னுயிருள் கலந்து,இயல்வானொட்டுமோ இனி யென்னை நெகிழ்க்கவே (2747) * என்றும், வாரிக் கொண்டன்னை விழுங்குவன் காணிலென்று, ஆர்வுற்ற வென்னை யொழிய என்னில் முன்னம் பாரித்து,தானென்னை முற்றப் பருகினான்,காரொக்குங் காட்கரையப்பன் கடியனே (8621) *என்றுமுள்ள திருவாய்மொழிப் பாசுரங்களின் திவ்யார்த்த லௌரபத்தோடே ஸ்ரீபாஷ்யம் தலைக்கட்டப் பட்டிருக்கின்ற தென்பதை உபய வேதாந்த ரஸிகர்களே அறிய வல்லார்.

    ——————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ திருக் கண்ண மங்கை பதிகம் பாசுரங்களின் விவரணம் -ஸ்ரீ ஸ்வாமிகள் அருளிச் செய்த ஒன்பது ஸ்ரீ திவ்ய கிரந்தங்கள்-

    April 10, 2025

    1-ஸ்ரீ பாஷ்யம்
    2-வேதார்த்த தீபம் –
    3-வேதார்த்த சாரம்
    4-வேதார்த்த ஸங்க்ரஹம்
    5-சரணாகதி கத்யம்
    6-ஸ்ரீ ரங்க கத்யம்
    7-ஸ்ரீ வைகுண்ட கத்யம்
    8-நித்ய கிரந்தம்
    9- கீதா பாஷ்யம்

    சித்தி த்ரவ்யம் -ஸ்ரீ பாஷ்யம் -வேதார்த்த சக்கரம் -வேதார்த்த தீபம்
    ஸ்தோத்ரம் ரத்னம் சாதுஸ்லோஹி -கத்ய த்ரவ்யம்
    ஆகம பிரமாணம் -நித்ய கிரந்தம்
    கீதார்த்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம்
    மாயாவாதக்கண்டனம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ பாஷ்யம்

    பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
    திருக்கண்ண மங்கை -பத்தராவி பெருமாள்
    திருக்கண்ண புரம்
    திருக்கண்ணங்குடி -தாமோதர நாராயண பெருமாள்
    வரிசையாக காட்டிக் கொடுக்க அனுபவம்
    திருக்கோவலூர்
    கபிஸ்தலம் -மற்ற இரண்டும்
    பெரிய வடிவம் -நின்ற திருக்கோலம் -பெரும் புறக் கடல்
    கற்கலாம் கவியின் பொருள் தானே இதிலே -இறுதியில் –
    நம்பூர் வரதாச்சார்யார் -நம்பிள்ளை-கலி கன்றி தாஸர் -கார்த்திகை கார்த்திகை –
    பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோஹிணி – –

    முதல் சொல்லே பெருமாள் திரு நாமம் -ப்ருஹத் பஹிர் ஸிந்து -பாற் கடல் இல்லாமல் வெளிக்கடல்
    லஷ்மீ வனம்-கிருஷ்ணாரண்யம் -கண்ணன் கடு -கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
    மங்கையைக் கண்டு மணம் புரிந்த தேசம்
    கடலைக் கடைந்து பெண் அமுதைக் கொண்டு உகந்தானே
    பிராட்டி தபஸ் இருந்து திருக்கல்யாணம்
    தேவர்கள்-வண்டு ரூபம் –
    கண்ண மங்கை தாயார் -இன்றும் -தேன் வண்டுகள்
    அயனம் மாறி பிறையில்
    தர்சன புஷ்கரணி
    சப்த அம்ருத க்ஷேத்ரம்
    மூலவர் பத்தராவி
    உத்சவர் -அபிஷேக வல்லி தாயார் பெரும் புற கடல்
    திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனி சஸ் சிஷ்யர் –
    நாய்கள் சண்டை -எஜமானர்கள் -வாக்குவாதம்
    பார்த்து -பரமசேதனன் அபிமானம் இருக்க என்ன குறை
    கௌஸ்துபம் ஸ்தானம் -நன் பொருள்
    ஸ்வ வியாபாரத்தை விட்டார்
    பகவத் கைங்கர்யம் ஒன்றே கார்யம்
    சக்தி லஜ்ஜை வியாபாரம் விட உபாயம்
    இவர் திருவரசும் இங்கே சந்நிதியில் தெற்குப்புறம்
    பெரிய உடையார் இளைய பெருமாள் தீர்க்க சிந்தயந்தி நறையூர் அரையர் -உபேய த்ருஷ்டாந்தம்
    இந்த பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளை -அனைத்துக்கும் வியாக்யானம்
    உத்பல விமானம்
    ஆராமம் சூழ்ந்த அரங்கம் -கண மங்கை -கண்ணனூர் -மடலில்
    கருத்தினால் வாக்கினால் நான்மறை காணாத இவனைக் ககாணலாம் -பிள்ளைப்பெருமாள் ஐ யங்கார்

    பெரும் புறக் கடல் -பிரவேசம் –

    அவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை என்று
    பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
    அமலா அருளாய்-7-9-8- -என்றும்
    உன தடியே சரணாமே -7-9-9–என்றும்
    தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி  தலைக் கட்டினார் –

    ( கீழே இப்படி பிரார்த்தித்தவர்
    பரம ப்ராப்யம் பெறாமல் –
    ஸ்ரீ வைகுந்தம் பெறாமலேயே –
    இதில் கண்டு கொண்டேனே-ஒன்பதில் கால் – ஹ்ருஷ்டராய் அருளுகிறார்
    நாட்டார் திருந்த இன்னும் இவரைக் கொண்டு பாசுரம் பெற வேண்டுமே
    நம்மாழ்வார் ஆயிரம் ப்ரதிஜ்ஜை உண்டு
    இவர் இடம் அது இல்லையே )

    இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து
    வேறே ஒராசனமாக ( எழுந்து அருளி ) விருந்து
    தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய
    காட்டிக் கொடுத்து
    நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
    பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
    (விபூதிகள் எண்ணிறந்தவை -ஸ்ரீமத் -உயர்ந்த எல்லாம் எனது தேஜஸ்ஸின் அம்சம் –
    சிறந்ததாக உள்ளேன் சில வற்றைக் காட்டி அருளி ஸ்ரீ கீதையில்-பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் )
    உமக்கு ( மானஸ அனுபவமாக மட்டும் இல்லாமல் ) கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
    நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
    இனி
    மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
    அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –
    (சரீர யாத்திரை கர்மாதீனம் -ஆத்மயாத்ரை கிருபாதீனம்
    அனைத்தும் உபமானம் – பிரகாரம்
    கண்ண மங்கையுள் கண்ணாலே கண்டேன் களித்தேன் என்று பேசி அருளுகிறார் )

    ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
    பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
    நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
    ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-

    அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –

    ———————————————————–

    பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
    தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
    அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
    கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

    திரட்கோவையை-இனிமை பாக்யம் -ப்ராப்யம்
    பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்
    முத்து மாலை -ப்ராப்யம் -கழுத்தில் போட்டு அனுபவிக்க
    முத்துக்குவியல் -ப்ராபகம் -வித்து ஜீவிக்கலாம் -உபாயம்-ரக்ஷகனாய் -பிராபகம்
    அரும்பினை யலரை-யுவா குமாரா –
    திருமணம் பண்ண யுவா வாய் இருக்க வேண்டும் -பாலகன் மாறிக்கொண்டே யுவாவாய் இருப்பானே எப்பொழுதும்
    மனத்தாசையை-ஆசை நிறைவேற்றுபவன் இல்லை -ஆசைக்கு விஷயமாகவே இருப்பானே –
    அமுதம் பொதியின் சுவைக்கரும்பினை–அமுதமே நீராகி கருப்பஞ்சாறு போல் போக்யன் –

    சென்று நாடி -ஆசையே வேண்டுவது
    தபஸை -தப -ஆலோசனை பண்ணும் சர்வஞ்ஞன்

    பெரும் புறக் கடலை –
    சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே
    அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
    எல்லா கடலுக்கும் புறம்பாய்
    தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –

    யடல் ஏற்றினைப்-
    ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த்த வஸ்துக்களையும்
    தன்னுள்ளே இட்டு நோக்கும் படி
    இவற்றை உடையன் ஆகையாலே வந்த
    மேனாணிப்பை உடையவனை –

    பெண்ணை –
    அப்படி இருந்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படியாய்
    இருக்குமோ என்னில்
    பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

    வெறும் பாரதந்த்ரமேயாய்  இருக்கம் இத்தனையோ என்னில் –
    யாணை-
    நிரங்குசமான ஸ்வா தந்த்ர்யத்தை உடையவனை –

    எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை –
    எண்ணிறந்த தபஸை உடைய யோகிகளுக்கு
    அந்த தப  பலத்தை கொடுக்கும்
    தபஸ் ஆனவனை –

    முத்தின் திரட்கோவையைப் –
    கண்ட போதே ஸ்ரமம் எல்லாம் ஆறும்படி
    உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு அனுபவிக்கலாம் படி
    முத்தின் உடைய திரண்ட மாலை போலே இருக்கிறவனை-

    பத்தராவியை –
    தன் பக்கல் பரிவை உடையார்க்கு
    தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

    நித்திலத் தொத்தினை –
    மேன் மேல் என நமக்கு உண்டு என்று
    தேறி இருக்கலாம்படி
    முத்துக் குவை போன்று இருக்கிறவனை –
    நித்திலம் -முத்தும் -அழகும் -சௌந்தர்யத் தொத்தை-

    அரும்பினை யலரை –
    இரண்டு அவஸ்தையும் ஒரு காலே
    சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
    யுவா குமார –

    அடியேன் மனத்தாசையை –
    நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
    இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
    பிறக்கிற ஆசை யானவனை –

    அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக்
    அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே
    நிரதிசய போக்ய பூதமான
    கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –

    கனியைச் –
    அப்போதே நுகரலாம்படி
    பக்வ பலமாய் இருக்கிறவனை –

    சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே   –
    பசித்த இடத்தே
    ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
    அபேஷை பிறந்த இடத்தே
    கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

    —————————————-

    எவ்வழியால் காட்டினார்
    பக்திக்கும் பிரபத்திக்கும் அவன் இட்ட வழக்கு -நிர்வாகன்
    அவ்வழியால் அடைந்து பெரும் இன்பத்தை பெற்று அனுபவிக்கிறார்
    நிரதிசய போக்யதையாய் -அவன் காட்டக்கண்டு பெற்று அனுபவிக்கிறார் –

    மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
    மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
    நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
    கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-

    மெய்யை-விஸ்வசீயமான பிரபத்திக்கு விஷயமானவன்-
    கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை -உடையவனை இல்லையே ஆகவே சேர்த்தே பொருள்
    மைந்நிறக் கடலை கடல் வண்ணனை-மை நிறம் -நிறம்சொல்லி வண்ணம் ரக்ஷண ஸ்வபாவம்
    நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய்–கடந்த வர்த்தமானம் வரும் காலம் –
    நினைத்த மாத்திரமே இன்ப மயம் எப்பொழுதும் -ஆனந்தமயம் -சைந்தனம் போல் –

    மெய்ந் நலத் தவத்தைத் –
    ஸ்வரூப அனுரூபமாய்
    சிநேக  ரூபமாய் இருக்கிற அபிமத சாதனமான பக்தியை –
    (போஜனத்துக்கு ஷூத்து போல் )

    திவத்தைத் தரும் மெய்யை –
    பிரபத்தியை –

    பொய்யினைக் –
    இவ்விரண்டும் இல்லாதார்க்கு
    தன் படிகளை ஒன்றும் அறிய ஒண்ணாது இருக்குமவனை –

    கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை –
    கீழ்ச் சொன்ன இரண்டும் உடையார்க்கு
    காட்சி கொடுக்கும் வடிவை உடையவனை –
    கண்டத்தை எல்லாம் அடைய உள்ளே இட்டு நோக்கும்
    கடல் போல் அன்றியே
    ஓர் சங்குடை மைந்நிறக் கடலை –
    (சேர்த்தி வெள்ளை விழி சங்கும் மைந்நிறம் -பராபக வண்ணம்-நிறம் இங்கு )

    கடல் வண்ணனை –
    சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி
    சிறியதை பெரியது நலியாத படி
    தன் திரைகள் ஆகிற கைகளால் நோக்கும்
    கடல் போலே இருக்கும் ஸ்வபாவத்தை உடையவனை –

    மாலை –
    சர்வாதிகனை –

    ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –
    அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவனை –
    ஒரு சிறு வடிவாலே சகல லோகங்களையும் அடக்கி
    ஒரு பவனான ஆலந்தளிரிலே
    கண் வளர்ந்து அருளின
    ஆச்சர்ய பூதனை –

    நென்னலைப் பகலை-
    அபிமத லாபம் உண்டான பிற்றை நாளிலே நிர்வ்ருதி ( நினைவு )போலே
    நேற்றைப் பகலிலே அனுபவம் இருந்தபடி என்-என்று
    ஸ்மரித்து தரிக்கலாம் படி இருக்கிறவனை –

    யிற்றை நாளினை –
    அநு பூயமான நாள் ஆனவனை –

    நாளையாய் வரும் –
    இவ்வனுபவத்துக்கு விச்சேதம் பிறவாமே
    நாளையாயும் வரப்  புகா நின்றது என்று
    அனுசந்திக்கலாம்படி இருக்கிற நாளையாய்

    நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
    அது தான் ஒரு நாளேயாய்ப் போகாமே
    அப்படி என்றும் ஒக்க யாண்டினைக்-
    அப்படிப் பட்ட மாசங்களை உடைய ஆண்டு ஆனவனை –
    இனி அவ்வாண்டு  தன்னை
    அப்படியே இரட்டித்துக் கொள்ளும் இத்தனை –

    கன்னலைக் –
    நிரதிசய போக்கியம் ஆனவனை –

    கரும்பினிடைத் தேறலைக் –
    நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே
    அப்போதே பருகலாம்படி இருக்கிற
    கரும்பில் ராசம்சம் ஆனவனை –
    கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

    ————————————————

    கீழே தவம் மெய் இரண்டையும் வியாஜ்யமாக்கி ரஷிப்பான்
    பக்தி பிரதிபத்தி -இதில்
    உமக்கு எத்தாலே ரக்ஷித்தான்
    நிருபாதிக கிருபையாலே ரக்ஷித்தன் என்று அருளிச் செய்கிறார் –

    எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
    பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
    மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
    கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

    எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை –
    அநந்ய கதிகளான எங்கள் பக்கலிலே
    நிர்ஹேதுக கிருபையை  பண்ணுகிற
    சர்வேஸ்வரனை –

    வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் –
    எங்களைப் போல் அன்றியே -தானும் ஒரு ஸ்திரீயுமாய்
    ஈஸ்வர அபிமானம் கொண்டாடி இருக்கிற ருத்ரனை
    தன் திருமேனியிலே ஒரு பார்ஸ்வத்திலே வைத்து
    அது தன்னை தன் பேறாக வைத்து உகந்து இருக்கிற சீலத்தை உடையவனை –

    பான்மையைப் –
    இந்த சீலம் தான் புழுக் குறித்து எழுத்தாமாப் போலே
    ஒரு கால் உண்டாய் போமது அன்றிக்கே
    இதுவே ஸ்வ பாவமாம்படி இருக்கிறவனை –

    பனி மா மதி யந்தவழ் மங்குலைச் –
    குளிர்ந்து நிறைந்து இருக்கிற சந்தரன் உடைய சஞ்சாரத்தை உடைய
    ஆகாசம் ஆனவனை –

    சுடரை –
    நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடான
    கிரணங்களை உடைய ஆதித்யனை –

    வட மா மலை யுச்சியை –
    இப்படி சாதாரணமான வடிவே அன்றியே
    அசாதாரணமான விக்ரஹத்தோடே
    அத் திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –

    நச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப்  –
    நசையை  உடையோமாய்க் கொண்டு நம்மாலே
    ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –

    பகலைச் –
    அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான
    காலம் ஆனவனை
    சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

    —————————————————————-

    திருக்கோவலூர் சேர்த்து அனுபவம் -கிருஷ்ண க்ஷேத்ரம் அன்றோ –
    நிர்ஹேதுக கடாக்ஷம் உம்மை மட்டுமேயோ -பலரையோ
    முதல் ஆழ்வார்களும் கடாக்ஷித்தான்
    என்றவர் திவ்ய தேசம் சொல்லாமல் போக மாட்டார்
    ஆயனது பிள்ளைச் சேவகம் சேர்த்து அனுபவம்
    அனைத்து ஆழ்வார்களும் கடாக்ஷித்து அருளினான் என்கிறார் இதில்
    தெள்ளியார் என்று -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –

    பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
    மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
    ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
    காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

    தேவனை-ஆழ்வார்களை பெற்றதும் தேஜஸ் மிக்கு ஆனவனை –
    அந்தணர்-பட்டர் பிரான் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமழிசைப்பிரான் -த்விஜர் இரு பிறப்பு

    பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் –
    பூதனை உடைய முலை ஸ்தலத்தில் உண்டான விஷத்தை அமுது செய்து
    விழுக்காடு அறியாத முக்த்தனை-

    தெள்ளியார் வணங்கப் படும் தேவனை –
    இப்படி முக்க்தர் அன்றியே
    அறிவுடையாராய் இருப்பாராலே ஆஸ்ரயிக்கப் படுவானாய்-
    அத்தாலே தீப்யம் ஆனவனை –
    (தெள்ளியார் -முதல் ஆழ்வார்கள் மூவரும் )

    மாயனை –
    ஆச்சர்ய பூதனை –

    மதிள் கோவலிடைக் கழி மைந்தனை –
    இடம் இல்லாத இடத்தே
    ஆஸ்ரிதரோடு புகுந்து நெருக்கின
    நித்ய யௌவன ஸ்வ பாவனை –

    யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை-
    அதுக்கு மேலே ஆஸ்ரிதர் உடைய ஹிருதயத்திலே புகுந்து
    அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டு இருக்கிறவனை –
    (அந்தணர் சிந்தையுள் ஈசனை-பெரியாழ்வார் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -திருமழிசைப் பிரான்
    பாடுபவர் இவர் தானே
    இவர்களை உப லக்ஷணம் ஆக்கி
    ஆஸ்ரிதர் ஹிருதயம் -என்றது மாறன் குலசேகரப்பெருமாள் பாணன் )

    யிலங்கும் சுடர்ச் சோதியை  –
    இவர்கள் உடைய சரீரத்திலும் ஆத்மாவிலும்
    வர்த்தியா நிற்கச் செய்தே
    அவற்றைப் பற்றி வரும் தோஷங்கள் தன் பக்கலிலே தட்டாதபடி இருக்கிறவனை –

    எந்தையை –
    இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –

    எனக்கு எய்ப்பினில் வைப்பினைக் –
    எனக்கு கைம் முதல் இல்லாத வன்று
    அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான
    நிதியானவனை –

    காசினை –
    பொன் போலே ஸ்ப்ருஹணீயம் ஆனவனை –

    மணியைச் –
    அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ
    ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
    சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

    —————————————————

    திரு நின்றவூர்
    பத்தராவிப்பெருமாள் இருவரும்
    சேர்த்து அனுபவிக்கப் பண்ண அருளுகிறார்
    பால்யர் -ஒன்றும் அறியாதவர் போல் ஞானிகள்
    கீழே தம்மை விஷயீகரித்தது த்ருஷ்டாந்தம் சொல்லி
    ஆழ்வார்களைப் பெற்ற மேனாணிப்பு தோற்ற
    திருப் ப்ரீதி தொடங்கி இவ்வளவும் வந்து அனுபவத்து ஹ்ருஷ்டராய்
    அவனது ஐஹிக ஆமுஷ்கிக மோக்ஷ பிரதத்வம் அனுசந்தித்து அருளுகிறார்

    ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
    ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
    கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
    காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

    ஏற்றினை-
    ஸ்வ ஆனந்த அனுபவத்தால் வந்த
    செருக்கை உடையவனை –

    இமயத்துள் எம் மீசனை-
    ஹிம வானில் திருப் பிரிதியில் இருக்கும் இருப்பைக் காட்டி
    என்னை வசீகரித்தவனை –

    இம்மையை மறுமைக்கு மருந்தினை –
    ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

    ஆற்றலை-
    ஒரு வஸ்துவோ எல்லாவற்றையும் தர வற்றோ என்னில்
    அக் கண்  அழிவு   சொல்ல ஒண்ணாத படி
    சர்வ சக்தி உக்தனாய் உள்ளவனை –

    யண்டத்தப் புறத்து உய்த்திடும் –
    இந்த சர்வ சக்தித்வம் கொண்டு கொள்ள இருக்கிற கார்யம் என் என்னில் –
    இவற்றை பரம பதத் தளவும் செல்ல நடத்துகை –

    அது தான் அவனுக்கு வேண்டுகிறது என் என்னில் –
    ஐயனைக் –
    நிருபாதிக பந்துவாகை-

    கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் –
    ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுத்து
    கொடு போகா நின்றால்
    ஆரேனும் சிலர் விலக்கினார் உண்டாகில்
    இரு துண்டம் ஆக்குகைக்கு ஈடான பரிகரத்தை உடையவனாய்
    சத்ருக்களுக்கு மிருத்யு போல் ஆனவனை –

    குரு மா மணிக் குன்றினைக் –
    ஸ்லாக்யமான நீல ரத்ன பர்வதம் போன்ற வடிவை உடையவனை –
    அங்கே கொடு போனால் காட்சி  கொடுக்கும் படியான வடிவு இருக்கிறபடி –

    நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக் –
    அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு
    (திருமங்கை ஆழ்வார் போல் அர்ச்சாவதாரத்தில் மண்டி அனுபவிப்பாருக்கு
    அங்கு போகும் வரை காத்து இருக்க முடியாத ஆர்த்தர்களுக்கு )
    காட்சி கொடுக்கைக்காக
    திரு நின்றவூரிலே நிற்கிற
    முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

    காற்றினைப் –
    ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்
    ஸூகமாய் இருக்கிறவனை –

    புனலைச் –
    தாரகம் ஆனவனை –
    சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

    (வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம் )

    ——————————————————–

    கீழ் பல பிரத உபயுக்தமான
    சாமர்த்தியம் தத் கார்யமான விரோதி நிரசனத்தையும்
    இவற்றுக்கு நிதானமான ஸ்ரீ யபதித்தவம் அனுசந்தானம் இதில்

    துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
    செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
    யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
    கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

    கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று –

    துப்பனைத்-
    தான் நினைத்தது செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
    சாமர்த்தியத்தை உடையவனை -( ஸத்ய ஸங்கல்பன் அன்றோ )

    துரங்கம் படச் சீறிய தோன்றலைச் –
    கேசி உடைய வாய் கிழியும்படி
    சீறிய முக்த்தனை -( அழகனை )

    சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை –
    ஒளியை உடைத்தாய் –
    பெரிய விலையனாய் இருந்துள்ள ஆபரணங்களை
    இட்டு வைக்கும் செப்பானவனே –
    ( பத்து ஆழ்வார்களைப் பூட்டி வைத்துள்ள பெட்டி அன்றோ இவன் )

    சுடர் வான் கலன் ஆகிறது தான் என் என்னில் –
    திருமங்கை மணாளனைத் தேவனைத் –
    பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே
    உண்டான ஒத்து மஞ்சளும்
    செம்பஞ்சிக் குழம்பும்
    மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு
    திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

    திகழும் பவளத்தொளி யொப்பனை-
    சர்வைஸ் ஸ்ப்ருஹணீயமானவனை-

    யுலகேழினை –
    போக்ய
    போக உபகரண
    போக ஸ்தானங்களாய் உள்ளவனை  –

    யூழியை –
    காலமே சேஷித்த அன்று
    காலமாய் நின்றவனை –

    ஆழி ஏந்திய கையனை –
    நித்தியமான திவ்ய ஆயுதங்களை
    ஏந்தும் திருக் கையை உடையவனை –
    நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –

    யந்தணர் கற்பினை –
    பிராமணர்  உடைய மரியாதை போலே இருக்கிற
    சங்கல்பத்தை உடையவனை –
    பிராமணராலே   அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –

    கழுநீர் மலரும் வயல் –
    செங்கழுநீர் தொடக்கமான புஷ்பங்கள் அலரா நின்றுள்ள
    வயலை உடைத்தான –
    கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே  –

    ————————————–

    ஸ்ரீ யபதியாய்
    பரம ஸ்வாமி -அபரமன் –அப ரமன் ரம சம்பந்தம் இல்லாதவர்
    சர்வ சக்தித்வம் சொல்லி
    ஆஸ்ரித விரோதி நிரஸனம் அனுபவம் –

    திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
    விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
    அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
    கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

    திருத்தனை-திருப்தன் –

    திருத்தனைத் –
    ஸ்வ ஆனந்த அனுபவத்தாலே
    நித்ய த்ருப்தன் ஆனவனை –
    (நித்யோதிக சாந்தோதிக திசைகள் உண்டே
    த்யேயம் -த்யேயா இருவரும் அவனும்
    ஸ்வரூபம் குண அனுபவம் செய்து திருப்தனாய் இருப்பானே)

    திசை நான்முகன் தந்தையைத் –
    இவ்வருகில் உள்ளாரைக் காட்டில் அதிகனாய் இருக்கிற
    சதுர்முகனுக்கு
    ஜனகன் ஆனவனே –

    தேவ தேவனை-
    அவன் ஒருவனுக்கும் அன்றிக்கே
    தேவர்கள் ஆனார் எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்
    படுமவனை –

    மூவரில் முன்னிய விருத்தனை –
    மூவருமான நிலையில்
    மற்றை இருவருக்கும் தானே நியாமகனாய்
    தானான நிலையில் வந்தால்
    சேஷித்வத்தால் வந்த உறைப்புத் தோற்ற இருக்கிறவனை
    விருத்தனை -தலைமகனை –

    விளங்கும் சுடர்ச் சோதியை-
    த்ரிமூர்த்தி மத்ஸ்யத் தனான நிலை ஒழிய
    அசாதாரணமான
    திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையன் ஆனவனை –

    விண்ணை –
    போக பூமிகளான ஸ்வர்க்காதிகள் ஆனவனை –

    மண்ணினைக் –
    அதுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணும்
    கர்ம பூமி யானவனை –

    கண்ணுதல் கூடிய அருத்தனை –
    லலாட நேத்ரனான ருத்ரனை உடைத்தான
    அர்த்த பாகத்தை உடையவனை –
    அருத்தன் -அர்த்த பாகன் –

    யரியைப் –
    விரோதிகளைப் போக்குமவன் –

    பரி கீறிய அப்பனை-
    விரோதி நிரசனத்தை சீலமாக உடைய
    உபகாரகனை –

    யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை –
    படபாமுகாக்னி ஜலம் அடைய தன் பக்கலிலே வந்து
    சுவரும்படி இருக்குமா போலே
    சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து
    லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –

    (படபாமுகாக்னி-குதிரை முக அக்னி கடலுக்குள் இருந்து -தண்ணீருக்கு லய ஸ்தானம் )

    களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே-

    ——————————————————–

    சர்வ ஸமாச்ரயணீயன்
    அதுக்கு உறுப்பாக விரோதி நிரசனம் பலபடியாக அனுசந்தித்து
    அப்ரதிஹதன் எதிர்ப்பவர்கள் இல்லாதவன் -என்கிறார் –

    வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
    நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
    நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
    கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

    தோன்றலை-பாலகனாய் –

    வெஞ்சினக் களிற்றை –
    வெவ்விய சினத்தை உடைய மத ஹஸ்தி போலே
    தர்ச நீயமானவனை –

    விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை-
    கன்றாயும் விளவாயும் வந்த அசுரர்கள் இருவரையும்
    தன்னைக் கொண்டு தன்னையே மாய்த்துத் தர
    தான் நினைத்தது தலைக் கட்ட வல்லவனை –

    பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் –
    பூதனை முடியும்படி அவளுடைய விஷத்தைப் போக்யமாகக் கொண்டு
    அமுது செய்த முக்த்தனை –

    தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை-
    சத்ருவாக சர்வ லோகங்களிலும் பிரசித்தனாய்
    சாயுதனுமாய் இருக்கிற
    ராவணன் முடியும்படி தோன்றின மிருத்யுவை –

    அமுதத்தினை-
    அவ் விருப்பு தானே அனுகூலர்க்கு போக்யமாய்
    இருக்கிறவனை –

    நாதனை-
    நிருபாதிக சேஷியை-

    நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக் –
    தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
    அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
    ( உச்சி உளானே திரு முடி சேவை இன்றும் சேவிக்கிறோமே
    ஆற்றாமை உள்ளாருக்கு சமகாலத்தில்
    ஆசையின் தலை மேல் சடக்கென
    வந்து ரக்ஷித்து அருளுவான்
    ஆங்கு அப் பொழுதே தோற்றுவானே )

    கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் –
    கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி
    உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
    கண்ண மங்கையுள் கண்டேனே –

    ———————————————

    விரோதி நிரசனத்துக்கு மட்டும் அன்றியே
    ஒப்பனையை
    நிரதிசய போக்யனாய்
    சர்வபிரகார வை லக்ஷண்யம் அனுசந்திக்கிறார் –

    பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
    விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
    மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
    கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

    மறையோர் தங்கள் கண்ணினை-வேதார்த்தம் விளங்க வைக்கும் கண் -அவனே

    பண்ணினைப் –
    யஆத்யஸ் ஸ்வா தூ நாம் -என்கிறபடியே
    பண் போல் இனியன் ஆனவனை –

    பண்ணில் நின்றதோர் பான்மையைப் –
    இன்னார் இனையார் என்று அன்றியே
    எல்லாரையும் ஒக்க வருத்தக் கடவதாய் இருக்கிற
    அந்த பண்ணின் இசை போலே நிரதிசய போக்யன் ஆனவனை –

    பாலுள் நெய்யினை –
    சாராம்சத்தோடு ருஜீஷாம்சத்தோடு வாசி அற
    இரண்டிலும் உண்டான உபாதேய அம்சம் ஆனவனை –

    (பண்ணின் பான்மை
    பாலில் நெய்
    சார அம்சம் என்று மட்டும் இல்லை
    சாரமாகவும் சாரா அம்சமும் அவனே
    எல்லாவற்றிக்கும் போக்யம் உண்டே
    பண்ணை போல் அல்லவே பால்
    பாலே இனிமை -பாட்டு இசை இல்லாமல் ருசிக்காதே )

    மாலுருவாய் நின்ற விண்ணினை-
    த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய
    நித்ய விபூதி உக்தன் ஆனவனை –

    விளங்கும் சுடர்ச் சோதியை –
    அங்கே நிரவதிக தேஜோ ரூபமான
    திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –

    வேள்வியை –
    அத் தேசத்தை பிராபிக்கைக்கு
    சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –

    விளக்கின் ஒளி தன்னை –
    ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை –
    (தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )

    மண்ணினை –
    செய்தார் செய்த குற்றங்களை அடைய மறக்குமவனாய்
    குற்றம் செய்வார்க்கு தன்னைப் பற்றி
    நிற்கும்படி இடம் கொடுக்குமவனை -( பூமியைப் போல் )

    மலையை –
    இப்படிப் பட்ட தன் ஸ்வபாவத்தை ஒருவரால் சலிப்பிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

    யலை நீரினை –
    நினைத்த இடம் எங்கும் ஏற்றிப் பாய்ச்சிக் கொள்ளலாம்படி
    இருக்கிறவனை –

    மாலை –
    ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை

    மா மதியை-
    ததாமி புத்தி யோகம் தம் -என்கிறபடியே
    தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான
    புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
    ( மதி கொடுப்பவன் மா மதி )

    மறையோர் தங்கள் கண்ணினைக்-
    வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு
    தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
    அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –

    கண்கள் ஆர அளவும் நின்று –
    காணப் பெறாமையால்
    உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று
    கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

    கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

    ——————————————————-

    பல ஸ்ருதி அவனுக்கே சொல்லி நிகமிக்கிறார் –
    ஸ்ரீ கீதா உபநிஷத்துக்கு அவன்
    ஸ்ரீ திராவிட உபநிஷத் சாரம் அருளவே கண்ணனாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

    கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
    வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
    விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
    கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

    கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று –
    ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை
    சம்சாரத்திலே
    திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று

    காதலால் கலிகன்றி யுரை செய்த –
    அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –

    வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை –
    இசையை உடைத்தாய்
    அழகியதாய் இருக்கிற
    இவை பத்தையும் –

    வல்லராய் யுரைப்பார் –
    அனுசந்திப்பார்க்கு
    அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே
    வல்லராய் -என்கிறார் –

    மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
    மதி தவழ் அம் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
    உபாதான லோகங்களில்
    போக பூமிகள் எல்லாம் புக்கு
    அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்-

    மெய்மை சொல்லில்-
    அர்த்த தத்வம் இருந்த படி சொல்லில் –

    வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் –
    ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே
    உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில்
    எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று
    இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –

    குறிப்பாகில்
    திரு உள்ளமாகில் –

    கற்கலாம் கவியின் பொருள் தானே
    ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
    என்னோடு அதிகரிக்கில் அறியலாம்

    ஒரு வசிஷ்டனோடே
    ஒரு சாந்தீபனோடே
    தாழ நின்று அதிகரிக்கக் கடவ
    அவனுக்கு
    திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –

    அவதாரிகை

    இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
    ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
    திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
    எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

    முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
    கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
    தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
    இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

    சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த
    செருக்கை உடையனாய் கொண்டு -திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி
    பிரதிபாத்யார்த்த கௌரவத்தாலே சாம்சாரிக்க சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
    திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-எங்களுக்கு நாதரான –
    எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் -துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும்
    இது வந்ததே என்று வெறார்கள்–சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும்
    பக்வபலம் போலே மனசு இளையார்கள் -ஆன பின்பு நீங்களும் இவற்றால்
    வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
    முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

    ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து  அருளும் என்றவாறு –
    கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —கண்ண மங்கையுள் நின்றான் -நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –
    ஆடினவன் நின்றான் —

    பெரும் புறக்கடல் -பிருஹத் பஹு சிந்து -திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த -முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
    பத்தர் ஆவி பத்தராவி -பெருமாள் -கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் -திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
    அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூ க துக்க சமம் -திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
    கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பராங்குச முகத்தாமரை ராமானுஜர் என்றாலே மலரும் –

    ————————————————————————–

    பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
    அவதாரிகை –
    கீழ் எல்லாம் ஆழ்வார்களை இட்டே எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
    இப்படி எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
    ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
    பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
    எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
    ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

    வியாக்யானம் –
    கலை பரவும்
    -சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
    -வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
    சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-
    தனி யானையை
    -த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் -சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
    திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –
    கண்ண மங்கையுள் நின்றானை –
    முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
    -அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
    தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -பத்தராவியை –
    தண் தமிழ் செய்த
    -நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
    அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
    சகல தாபங்களும் மாறும்படி -சரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின
    நீலன் தனக்கு –
    திரு மங்கை ஆழ்வாருக்கு-
    கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –
    உலகில் இனியானை –
    இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான -பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
    எங்கள் இராமானுசனை –
    என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின எம்பெருமானாரை –
    வந்து எய்தினரே
    -ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து -சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்
    முனியார் துயரங்கள் முந்திலும் –
    துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள் ..முனிவு -வெறுப்பு .
    .இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
    சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே – மனசிலே ஏகாகாரங்களாய்
    –மொய்த்தல் -திரளுதல் -ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே கீதாசார்யரும் .
    -மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

    ————————————————————————–

    அமுது உரை
    அவதாரிகை

    இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து எம்பெருமானாரைப் பற்றிடினும்
    இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான எம்பெருமானாரைப்-பற்றினவர்கள் இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

    பத உரை –

    கலை-சாஸ்திரங்கள்
    பரவும் -துதிக்கும்
    தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
    கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எளுந்துஅருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
    தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
    நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
    உலகில் -உலகத்தில்
    இனியானை -அன்பரான
    எங்கள் -எங்களுடைய
    இராமானுசனை -எம்பெருமானாரை
    வந்து -அடைந்து
    எய்தினர் -பற்றினவர்கள்
    துயரங்கள் -துன்பங்கள்
    முந்திலும் -முன் முன்னாக வரினும்
    முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
    இன்பங்கள் -சுகங்கள்
    மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
    மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

    வியாக்யானம் –
    முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
    துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் -எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
    துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
    கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
    வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
    ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப்
    பெற்று களிப்புறலாகாது –விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது
    இங்கு நினைவு உரத்தக்கது -ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து
    அதனைப் பெற முயல்வானாய் -உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
    ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் -அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும்
    அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த கீதா ஸ்லோகம் –
    எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு
    உரிமை பட்டு இருத்தலே ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே
    ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும்
    அறியாமையை விட்டு ஒழிந்து -ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -எங்க –இங்கு –
    ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
    என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
    இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
    பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
    விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
    தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
    பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –
    கண்ண மங்கை நின்றானை –
    திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள எம்பெருமானுக்கு
    பத்தராவி -எனபது திரு நாமம்
    கலை பரவும் தனி யானையை –
    பரவுதல்-துதித்தல்
    சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
    வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி வேதம் அனைத்தும் துதிக்கும்
    நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
    தோற்றம் அளிக்கிறான் -அவ் எம்பெருமான் திருமங்கை ஆழ்வாருக்கு –
    வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து
    இருக்கும் மதம் போன்று உள்ளது –வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8- -என்று
    வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
    கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -எனபது அதன்கருத்து –
    கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
    ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் -வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத்
    தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக காட்டுவது வியப்பூட்டுவதாக
    இருந்தது அவ் எம்பெருமானுக்கு .வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
    இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில்
    இறங்கினான் -தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை -வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும் கற்றே அறிய வேண்டும்படியாக
    அமைந்து இருந்ததாம் இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –நின் தனக்கும் குறிப்பாகில்
    கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார் -உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்
    உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
    இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
    தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –
    தமிழ் -தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
    கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவதுகவி வாணர் நோக்கம் –
    திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
    இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
    தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
    கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –
    ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே
    கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
    பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் –
    செய்து -சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
    நீலன்-
    திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
    இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
    பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
    நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –
    வந்து எய்தினர் –
    சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
    தாம் எப்பொழுதும் பிரியாது எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் –
    எய்தினர் -வினையால் அணையும் பெயர் –
    நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
    காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
    இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
    எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
    அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
    இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
    எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் -மூன்றாம் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

    March 31, 2025

    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

    பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
    ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
    பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
    ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
     ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
    வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

    ——-

    ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

    இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
    ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
    ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
    வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

    முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

    இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
    ஆராய்தல்

    ——–

    மூன்றாம் பாதத்தின் ஸங்கதிகள்
    முதல் அத்யாயத்தின் இரண்டாவது மூன்றாவது நான்காவது பாதங்களில் பரமாத்மாவைத் தவிற வேறு ஒருவரும் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று அந்ய யோக₃ வ்யவச்சே₂தம் செய்யப் படுகிறது.-அதிலும் இரண்டாவது பாதத்தில் தெளிவற்ற வாக்யங்களைக் கொண்டு பூர்வ பக்ஷீ எழுப்பிய ஐயங்களுக்கு வ்யாஸர் பதிலுரைத்தார், இப் போது மூன்றாம் பாதத்தில் தெளிவான வாக்கியங்களைக் கொண்டு பூர்வபக்ஷீ எழுப்பும் ஸந்தேஹங்களுக்கு விடை அளிக்கிறார்.-இரண்டாம் பாதத்தில் ப்ரஹ்மம் சேதந மற்றும் அசேதநப் பொருள்களைத் தனக்கு உடலாகக் கொண்டு, தான் அந்தர் யாமியாய் இருப்பவர் என்று சொல்லும் வாக்கியங்களை ஆராய்ந்தார். இனி மூன்றாம் பாதத்தில் சேதந அசேதநப் பொருள்களுக்கு ப்ரஹ்மம் ஆதாரமாய் (தாங்குபவராய்) இருக்கிறார் என்று கூறம் வாக்கியங்களை ஆராய்கிறார்.

    ஸ்வ நிஷ்டா

    கீழ் இரண்டாவது பாதத்தின் 6 அதிகரணங்களாலே பரமாத்மாவின் முக்கியமான பண்புகள் சொல்லப்பட்டன.
    1-ஸ்வாதீ₄ந அசேஷ ஸத்தா ஸ்தி₂தி யதநதயா ஸர்வ பா₄வேந திஷ்ட₂ந்
    2- க்₃ரஸ்தேசேஷ:
    (3) அக்ஷி நித்ய ஸ்தி₂தி:
    (4) அகி₂லதநு:
    (5) கல்பித அக்₃ந்யாதி₃ கா₃த்ர: |
    (6) ஸ்வர் லோகாத்₃யங்க₃வைஸ்வாநர மதி விஷய: லக்ஷணஸ்ய ஆதி₃மஸ்ய
    ப்ரோக்த: பாதே ₃ த்₃விதீயே ஸ்ருதி நிகர சிரச் சேக₂ர: ஶ்ரீநிவாஸ: ||

    1-எல்லாப் பொருள்களின் உண்டாக்கம், இருப்பு, செயல்பாடு இவை யனைத்தும் தன் அதீனமாக தானே அனைத்துப் பொருள்களாகவும் இருக்கிறார்
    2-அனைத்தையும் ஸம்ஹரிப்பவர்
    3-எப்போதும் நம் கண்ணில் உணர்பவர்
    4-உலகிலனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டவர்
    5-அக்நி முதலானவற்றை உடலாகக் கொண்டவராக த்யானிக்கப்பட வேண்டியவர்
    6-விண்ணுலகம் முதலானவற்றை அங்கங்களாகக் கொண்டவராக த்யானிக்கப்பட வேண்டியவர் என்று முதல் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில் ஶ்ரீநிவாஸனான பரமாத்மா சொல்லப் பட்டார்.

    1.3.1 த்யுப்₄வாத்₃யதி₄கரணம்
    நெறி வாசல் தானேயாய் நின்றான்

    த்யுப்வாத்யதிகரணத்தின் பின்புலம்
    1.3.1 த்₃யுப்₄வாத்₃யாத்₃யதி₄கரணம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்ரம் ’த்₃யுப்₄வாதி₃’ என்று துவங்குகிறபடியால் இவ்வதிகரணம் இப் பெயரைப் பெற்றது.

    ஸங்கதி – 1.2.5-அத்₃ருச்யத்வாதி₃கு₃ணகாதி₄கரணத்தில் முண்டக உபநிஷத்தை ஆராய்ந்து வந்தார் வ்யாஸர். அப்போது உலகத்தை யெல்லாம் உடலாகக் கொண்டவர் என்று சொன்னபடியால், அதோடு தொடர்பு பட்டதாய் 1.2.6-வைஸ்வாநர அதிகரணத்தில் உலகத்தை உடலாகக் கொண்டவர் யார் என்ற ஆராய்ச்சியைச் செய்தார். அது முடிந்ததும், விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக முண்டக உபநிஷத்தின் அடுத்த பகுதியை 1.3.1 அதிகரணத்தில் ஆராய்கிறார்

    ஒரே உபநிஷத்தாய் இருந்தாலும் தெளிவான வாக்ய விசாரமாக இருப்பதால் இது மூன்றாம் பாதத்துக்கு வந்தது

    உபநிஷத்தில் த்₃யயௌ: ப்ருதி₂வீ -சுருக்கமாக த்₃யு பூ₄ என்று ஸூத்ரம்

    விஷய வாக்யம் – இரண்டாம் முண்டகத்தின் இரண்டாம் கண்டத்தில் உள்ள ஒரு வாக்யம்
    யஸ்மிந் த்₃யயௌ: ப்ருதி₂வீ ச அந்தரிக்ஷம் ஓதம் மந: ஸஹ ப்ராணை : ச ஸர்வை : |
    தமேவ ஏகம் ஜாநத₂ ஆத்மாநம் அந்யா: வாச: விமுஞ்சத₂…
    …. ||
    எவரிடத்தில் த்₃யௌ: (விண்ணுலகம்), ப்ருதி₂வீ (பூமி), அந்தரிக்ஷம் (வானம்), மனது, ஐந்து ப்ராண வாயுக்கள் இவை யெல்லாம் தாங்கப் படுகின்றனவோ , அந்த ஆத்மா ஒருவரையே அறிந்து கொள்வாய். மற்றப் பொருள்களைப் பற்றின பேச்சை யெல்லாம் கை விட்டு விடு

    ஸம்சயம் – இங்கு த்₃யு பூ₄ முதலான வற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா

    பூர்வ பக்ஷியின் யுக்திகள்
    பூர்வ பக்ஷம் – இங்கு த்₃யு பூ₄ முதலானவற்றின் ஆதாரமாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவே . ஏனெனில் –
    1- (அரா இவ ரத₂நாநபௌ₄ ஸம்ஹதா யத்ர நாட்₃ய:) அதாவது“சக்கரத்தின்
    அரங்கள் நடுவிலுள்ள நாபியில் சேர்வது போல் உடலிலுள்ள நாடிகள் எல்லாம் இவரிடம் சேர்கின்றன” என்று சொல்லப் படுகிறது. ஜீவாத்மா தான் நாடிக்களைப் பயன்படுத்துபவர், அவற்றோடு சேர்ந்தவர்

    2-(ஸ ஏஷ: அந்த: சரதி ப₃ஹுதா₄ ஜாயமாந:) அதாவது-“உள்ளே இருக்கும் இவர் பலவிதமான பிறவிகணை எடுக்கிறார்” என்று சொல்லப் பட்டுள்ளது. ஜீவாத்மா தான் தன் கர்மங்களின் காரணமாக தேவன் மனிதன் விலங்கு தாவரம் கல் முதலான பல விதமான பிறவிகளை எடுப்பவர்.

    3- (ஓதம் மந: ஸஹ ப்ராணை: ச ஸர்வை : )-அதாவது “மனதும் ஐந்து விதமான ப்ராண வாயுக்களும் இவரால் தாங்கப் படுகின்றன” என்று சொல்லப் பட்டுள்ளது. மனதும் ப்ராணனும் ஜீவாத்மாவுக்குத் தானே .

    கர்மங்கள் மூலம் உலகங்களை ஜீவாத்மா தாங்குகிறது என்று சொல்லலாம் அன்றோ

    ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 6 ஸூத்ரங்கைளால் நிராகரித்து, சரியான பொருளைக் காட்டுகிறார் வ்யாஸர்
    1-த்₃யுப்₄வாதி₃ ஆயதநம் ஸ்வ சப்₃தா₃த்

    த்₃யுப்₄வாதி₃ – விண்ணுலகம் மண்ணுலகம் முதலானவற்றின்
    ஆயதநம் – ஆதாரம் (பரமாத்மாவே )
    ஸ்வ சப்₃தா₃த் – அவருடைய சொல்லால் அதாவது அவருக்கே உரித்தான சொல்லால்

    இங்கும் அந்ய பதம் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும் -அசாதாரண – அவருடைய சொல்லால் அதாவது அவருக்கே உரித்தான சொல்லால்-சொல்வதால் வேறு யாருக்கும் பொருந்தாதே

    ஸித்தாந்த யுக்திகள்
    ஸ்வ சப்₃த₃ம் அதாவது-பரமாத்மாவுக்கே உரித்தான சொல்’ இங்கு என்ன உள்ளது என்று பார்ப்போம் –
    1-(அம்ருதஸ்ய ஏஷ ஸேது:)
    ஸேது என்றால் அக்கரையை அடைவதற்கான பாலம் என்று பொருள். “அம்ருதம் எனப்படும் மோக்ஷத்தை அடைவதற்கான வழி இவர் தான்” எனப்படுகிறது. இது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.(தமேவம் வித்₃வாந் அம்ருத: இஹ ப₄வதி)-அதாவது“அந்தப் பரமாத்மாவை அறிந்தவன் முக்தி அடைகிறான்” என்று உபநிஷத்தே கூறுகிறது.
    2-(ஆத்மாநம் ஜாநத₂) – “அந்த ஆத்மாவை அறிய வேண்டும்” என்று சொல்லப் படுகிறது. ஆத்மா என்ற சொல்லுக்கு ’ ஒரு உடலுக்குள்ளே புகுந்து அதை இயக்குபவர்’ என்று பொருள். கல்லின் ஆத்மா, பூனையின் ஆத்மா, மனித உடலின் ஆத்மா என்று தான் பொதுவாகச் சொல்ல வேண்டும். எந்த அடை மொழியுமின்றி ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொன்னால், உலகப் பொருள்கள் அனைத்துக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்.

    3-(யஸ் : ஸர்வஜ்ஞஸ் : ஸர்வ வித்) – “யார் ஸர்வஜ்ஞனோ ” என்று உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமான ஆத்மாவை ஸர்வஜ்ஞன் என்று சொல்கிற படியாலும் இது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
    இப்படி பூர்வபக்ஷீ மூன்று யுக்திகளையும் ஸித்தாந்தீ மூன்று யுக்திகளையும் சொன்னால் எப்படி முடிவெடுப்பது? அதைக் காட்டுகிறார் பகவத் ராமாநுஜர். வேதத்தின் எந்த ஒரு பகுதியையும் தவறானது என்று கூற இயலாது -. எனவே எந்தப் பொருளைக் கொண்டால் இங்கு காட்டப்பட்ட 6 வாக்கியங்களுமே பொருந்தும் என்று பார்க்க வேண்டும்.

    ஜீவாத்மா என்று பொருள் கொண்டால் ஸித்தாந்தீ காட்டின மூன்று வாக்கியங்களும் முற்றிலும் பொருந்தாது.-ஆனால் பரமாத்மா என்று பொருள் கொண்டால் பூர்வ பக்ஷீ காட்டிய வாக்கியங்களுக்கும் ஒருவாறு பொருள் கொள்ளலாம் –
    1-இதயத்தில் பரமாத்மா இருக்கிற படியால் நாடிகள் அவரிடம் சேர்கின்றன
    2-பரமாத்மாவும் தான் ஆசைப் பட்டு பல விதமான அவதாரங்களைச் செய்கிறார்
    3-பரமாத்மா உலகமனைத்தையும் தாங்குகிற படியால் மனதுக்கும் ப்ராணனுக்கும் ஆதாரம் என்பதும் பொருந்தும். ஆகவே த்₃யு பூ₄ முதலானவற்றின் ஆதாரம் பரமாத்மாவே .

    வேண்டித் தேவர் இரக்கவும் –தானே விரும்பி -தேவர்களும் வேண்ட அவதாரம்-பஹுதா விஜாயதே -சன்மம் பலபல செய்து -பஹுதா ஜாயமானம் பொருந்தும் –

    1.3.1 த்யுப்₄வாத்₃யதி₄கரணம்-பரமாத்மாவே உலகங்களைத் தாங்குபவர்

    1.3.1 த்₃யுப்₄வாத்₃யாத்₃யதி₄கரணத்தில் உலகங்களை எல்லாம் தாங்குபவராகச் சொல்லப் பட்டவர் ஜீவாத்மா தான் என்று பூர்வ பக்ஷீ வாதிட, பரமாத்மாவுக்கே உரித்தான சொற்கள் இங்குள்ள படியால் இது பரமாத்மாவையே குறிக்கிறது என்று இவ்வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் வேத வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்கள் –
    2- முக்த உபஸ்ருப்ய வ்யபதே₃சாத் ச – “முக்தனாலே அடையப் படுபவராகச் சொல்கிறபடியாலும்” உலகத்துக்கு எல்லாம் ஆதாரமாகச் சொல்லப்பட்ட பொருள் தான் முக்தி அடைந்த ஜீவாத்மாவால் அடையப்பட வேண்டியவர் என்று முண்டக உபநிஷத் கூறுகிறது –யதா₃ பஸ்ய: பஸ்யதே ருக்ம வர்ணன் கர்தாரம் ஈசம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம் |
    ததா₃ வித்₃வாந் புண்ய பாபே விதூ₄ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி ||
    -எப்போது ஒரு உபாஸகன் 1-தங்கம் போன்ற ஒளி பொருந்தியவராய், 2-உலகத்தைப் படைத்தவராய்,3- உலகப் பொருள்களை எல்லாம் இயக்குபவராய், 4-உலகத்துக்குக் காரணமாய் உள்ள பரம புருஷனைத் த்யானத்தால் காண்கிறானோ , அப்போது அவன் எல்லா பாப புண்யங்களையும் கழித்து, ப்ரக்ருதியோடு இருக்கும் தொடர்பையும் வெட்டிக் கொண்டு
    பரமாத்மாவோடு ஒற்றுமை அடைகிறான் (அதாவது முக்தி அடைகிறான்).

    யதா₂ நத்₃ய: ஸ்யந்த₃மாநா: ஸமுத்₃ரே அஸ்தம் க₃ச் ₂ந்தி நாம ரூபே விஹாய |
    ததா₂ வித்₃வாந் நாம ரூபாத் விமுக்த: பராத் பரம் புருஷம் உபைதி தி₃வ்யம் ||

    நதிகள் எல்லாம் தங்கள் தனிப்பட்ட பெயர்களையும் வடிவங்களையும் இழந்து கடலில் கலப்பது போல், உபாஸகன் ஸம்ஸாரத்திலிருக்கும் பெயர் உறுவ வேறுபாடுகளை எல்லாம் கடந்து பரம புருஷனை அடைகிறான்.-இப்படி முக்தனால் அடையப்படுபவர் பரமாத்மாவே ஒழிய ஜீவாத்மா அல்ல, எனவே அவரே தான் உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமானவரும் என்று தெளிவாகிறது.

    பிரளயத்தில் நாம ரூபம் இல்லை -அத்தை வியா வ்ருத்திப்பதற்காக இங்கு முக்தனுக்கும் என்றும் சேர்த்து அருளிச் செய்கிறார்

    இரண்டு ஸூத்திரங்களையும் சேர்த்துப் பார்த்து உபாயமும் உபேயமும் இவனே -நெறி வாசல் தானேயாய் நின்றான் அன்றோ –இங்கு தாங்குபவன் என்றும் சொல்ல வந்த பிரகரணமாக இருந்தும் இவ் வர்த்தம் கிடைக்கிறது அன்றோ –

    ஜீவாத்மா உலகங்களுக்கு ஆதாரம் அல்ல
    3-ந அநுமாநம் அதச் ச₂ப்₃தா₃த் ப்ராண ப்₄ருத் ச
    அநுமாநம்
    – அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானம் என்ற மூல ப்ரக்ருதி
    – உலகங்களுக்கு எல்லாம் ஆதாரம் அல்ல
    அதச் ச₂ப்₃தா₃த் – அதைச் சொல்லும் பதம் இல்லாதபடியால்
    ப்ராண ப்₄ருத் ச – ப்ராணனைத் தாங்கும் ஜீவாத்மாவும் அல்ல (அதே காரணத்தால்)
    உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமாக இங்கு சொல்லப்பட்டது அசேதனமான மூல ப்ரக்ருதி என்கிற கேள்வியே எழவில்லை , ஏன் எனில் ப்ரதானத்தைக் குறிக்கும் சொல்லோ அடையாளமோ இங்கு காணப்படவில்லை . அதே போல், ப்ராண வாயுவைத் தரிக்கும் ஜீவாத்மாவைக் காட்டும் சொற்களோ அடையாளங்களோ இல்லாத படியால் இங்கு சொல்லப் படுபவர் ஜீவாத்மாவும் அல்ல என்று தெரிகிறது.

    4-பேத₄₃ வ்யபதே₃சாத் ச – “-உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமான பொருளை, ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவராகச் சொல்கிற படியாலும் -அது ஜீவாத்மா அல்ல-”

    ஸமாநே வ்ருஷே புருஷோ நிமக்₃ந: அநீசயா சோசதி முஹ்யமாந: |
    ஜுஷ்டம் யதா₃ பஸ்யதி அந்யம் ஈசம் அஸ்ய மஹிமாநம் இதி வீதசோக: ||-
    ஸம்ஸாரத்தில் மூழ்கி யிருக்கும் ஜீவன் அசேதனமான ப்ரக்ருதியின் காரணமாக மயங்கி, சோகம் அடைகிறார்-அதைக் காட்டிலும் வேறு பட்டவராய், எல்லாருக்கும் ஈஸ்வரனாய், தன் கர்மங்களாலே மகிழ்பவரான பரமாத்மாவையும் அவரது பெருமை களையும் எப்போது அறிகிறானோ அப்போது சோகம் நீங்கப் பெருகிறான்.-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே ’ஆத்மா ஒருவரே அறியப்பட வேண்டியவர்’ என்று சொல்லி , அவர் தான் உலகங்களை எல்லாம் தாங்குகிறார் என்று சொல்லி, இங்கு மறுபடியும் ’பரமாத்மாவை அறிந்தால் தான் சோகம் விலகும்’ என்று கூறுகிறபடியால் அந்த பரமாத்மா தான் உலகங்களைத் தாங்குபவர் என்று தெரிகிறது.

    ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்
    5-ப்ரகரணாத் ச
    – “ப்ரகரணத்தாலும் (உலகங்களுக்கு எல்லாம் ஆதாரம் பரமாத்மாவே)”
    முன்னமே 1.2.5-அத்₃ருச்வாதி₃கு₃ண அதி₄கரணத்தில் இந்த முண்டக உபநிஷத் ப்ரகரணம் முழுவதும் பரமாத்மாவைப் பற்றியது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே அதில் அடங்கிய இந்த வாக்யமும் பரமாத்மாவைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். எனவே த்₃யுப்₄வாத்₃யாயதனம் பரமாத்மாவே –

    6-ஸ்தி₂த்யத₃நாப்₄யாம் ச – “இருத்தலாலும் உண்பதாலும் கூட”–
    ஸ்தி₂தி என்றால் இருத்தல். அதுவும், ஏதோ ஒரு செயலைச் செய்யாமல் வெறுமனே இருத்தல். எந்தச் செயல்? அடுத்து உள்ள அத₃நம் என்ற சொல்லுக்கு உண்பது என்று பொருள். எனவே அந்தச் செயல் தான் முன்னாலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இருத்தல் என்பதற்கு ’உண்ணாமல் இருத்தல்’ என்று பொருள்-நிர் வியாபரத்வம் -ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஸ்திதி -அடுத்து உன்பதைச் சொல்வதால் உண்ணாமல் இருப்பத்தைச் சொன்னவாறு

    கூடிற்றாகில் நல்லுறைப்பே -கூடாமையைக் கூடினால் அது அதுவே – ஜீவன் பரனோடு ஒன்றாம் என்னும் அவ்வல்லல் எல்லாமே ஒழித்தான் ராமானுஜன்

    இந்த ப்ரகரணத்தில் ஒரு வாக்யம் இருவரைப் பற்றிப் பேசுகிறது – ஒருவர் உண்கிறார், மற்ற ஓருவர் உண்பதில்லை என்று கூறுகிறது.
    த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருஷம் பரிஷஸ்வஜாதே |
    தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநஸ்நன் அந்ய: அபி₄சாகசீதி ||

    ஒற்றுமை யுடைய நண்பர்களான இரண்டு பறவைகள் (பரமாத்மாவும் ஜீவாத்மாவும்) ஒரு மரத்தில் (இந்த உடலில்) இருக்கிறார்கள். அதில் ஒருவர் (ஜீவாத்மா) அந்த மரத்தில் வளரும் பழங்களை (தன்னுடைய பாப புண்யங்களில் பயன்களான இன்ப துன்பங்களை ) உண்கிறார், ஒளி குறைந்து போகிறார். மற்ற ஓருவர் (பரமாத்மா) அந்தப் பழத்தை
    (வினைப் பயனை ) உண்ணாமல் ஒளி விடுகிறார்.-இப்படி ஜீவனும் பரனும் வெவ்வேறாகச் சொல்லப் பட்டுள்ளார்கள். இவர்களில் த்₃யுப்₄வாத்₃ யாயதநமாக இருக்கும் தகுதி பரமாத்மாவுக்கே உண்டு. ஜீவாத்மாவுக்கு இல்லை . ஆகவே த்₃யுப்₄வாத்₃ யாயதனம் பரமாத்மாவே –

    —————————–

    ஸ்ரீ மத் ரெங்கம் ஜயது பரமந்தாம தேஜோ நிதாநம்
    பூமா தஸ்மின் பவது குஸலீ கோபி பூமா ஸஹாய
    திவ்யம் தஸ்மை திசது வைபவம் தேசிகோ தேஸிகா நாம்
    காலே காலே வர வர முனி கல்பயன் மங்களாநி
    –7-மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
    பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
    பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
    அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
    வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

    ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

    1-3-2 -பூ₄மாதி₄கரணம்-கவலை போக்கும் ஆத்ம ஜ்ஞாநம்

    பூமாதிகரணத்தின் பின்புலம்
    1.3.2 பூ₄மாதி₄கரணம் – ஸங்கதி
    – கீழ் அதிகரணத்தோடு இவ்வதிகரணுத்துக்கு இரண்டு விதமான ஸங்கதிகள் உள்ளன
    1-முண்டகோபநிஷத்தில் பரமாத்மாவைப் பற்றி பேசத் தொடங்கி, அந்தப் ப்ரகரணம் முடியாத படியால், உலகங்களுக்கு ஆதாரமாகச் சொல்லப் பட்டவரும் பரமாத்மா தான் என்று கூறப் பட்டது. அதே போல் இங்கு சாந்தோக்ய உபநிஷத்தில் ஜீவாத்மாவைப் பற்றி பேசத் தொடங்கி, அந்தப் ப்ரகரணம் முடியாத படியால் இந்த விஷய வாக்யமும்
    ஜீவாத்மாவைப் பற்றித் தான் கூறுகிறது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.

    2-கீழ் அதிகரணத்தில் முண்டகோபநிஷத்தில் ப்ராணங்களுக்கும் ஆதாரமானவர் பரமாத்மா தான் என்று சொல்லப் பட்டது. ஆனால் சாந்தோக்யத்தில் ப்ராணன்களுக்கு ஆதாரமானவர் ஹிம்ஸை செய்யப்பட்ட முடிந்தவர் என்று சொல்லப் படுகிற படியால் அது ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

    விஷய வாக்யம் – பூம வித்யா – சாந்தோக்ய உபநிஷத்தின் 7ஆம் ப்ரபாடகம் முழுவதும் (1-26 கண்டங்கள்)-அதீ₄ஹி ப₄க₃வ இதி ஹோபஸஸாத₃ ஸநத் குமாரம் நாரத₃: | தம் ஹோவாச யத்₃வேத்த₂ தேந மோபஸீத₃ ததஸ்த ஊர்த்₄வம் வக்ஷ்யாமீதி-“எனக்கும் ப்ரஹ்மத்தை உபதேசிக்க வேண்டும்” என்று கூறி நாரதர் ஸநத் குமாரரைப் பணிந்தார். “உமக்கு என்ன தெரியுமென்று கூறினால் அதற்கு மேல் வேண்டியதை உபதேசிக்கிறேன்” என்றார் ஸநத் குமாரர்.

    ருக்₃வேத₃ம் ப₄க₃வ: அத்₄யேமி யஜுர் வேத₃ம் ஸாம வேத₃மாத₂ர்வணம் சதுர்த₂மிதிஹாஸ புராணம் பஞ்சமம் வேதா₃நாம் வேத₃ம் பித்ர்யம் ராஶிம் தை₃வம் நிதி₄ம் வாகோ வாக்ய மேகாயநம் தே₃வ வித்₃யாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் பூ₄த வித்₃யாம் க்ஷத்ர வித்₃யாம் நக்ஷத்ர வித்₃யாம் ஸர்வ தே₃வ ஜந வித்₃யாம் ஏதத் ப₄க₃வ: அத்₄யேமி–எலலா வேதங்கள், அதன் அங்கங்கள், இதிஹாஸ புராணங்கள் இவற்றை எல்லாம் கற்றிருக்கிறேன் என்றார் நாரதர்.

    வேதா₃நாம் வேத₃ம்-வியாகரணம்
    பித்ர்யம் -பித்ரு பற்றியவை
    ராஶிம் -ஜ்யோதிஷம்
    தை₃வம்
    நிதி₄ம் -அர்த்த சாஸ்தம்
    வாகோ வாக்ய -நியாயம்
    மேகாயநம் தே₃வ வித்₃யாம்
    ப்₃ரஹ்ம வித்₃யாம்
    பூ₄த வித்₃யாம்
    க்ஷத்ர-சர்ப்ப – வித்₃யாம்-நாகங்கள் பற்றியவை
    நக்ஷத்ர வித்₃யாம்
    ஸர்வ தே₃வ ஜந வித்₃யாம்
    ஏதத் ப₄க₃வ: அத்₄யேமி-

    பூமா என்ற சொல்லின் பொருள்
    ஸ: அஹம் ப₄க₃வோ மந்த்ர விதே ₃வாஸ்மி நாத்மவித் | ஸ்ருதம் ஹ்யேவ மே ப₄க₃வத்₃ த்₃ருஸேப்₄ய: – தரதி ஸோகம் ஆத்ம விதி₃தி | தம் மா ப₄க₃வாந் ஸோகஸ்ய பாரம் தாரயது-
    -“ஆனால் நால் வெறும் மந்த்ரங்களை (நூல்களை ) அறிந்தவனாகவே உள்ளேன், ஆத்மாவை அறியவில்லை . உங்களைப் போன்றவர்களிடம் கேள்விப் பட்டிருக்கிறேன் – ஆத்மாவை அறிந்தவன் தான் ஸம்ஸாரமென்னும் துன்பத்தைக் கடக்கிறான் என்று. எனவே நீர் தான் என்னை ஸோகத்தைத் தாண்டு விக்க வேண்டும்” என்றார் நாரதர்.

    யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூ₄மா | அத₂ யத்ர அந்யத் பஶ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி தத₃ல்பம்-எதை அறிந்தால் வேறு எதையும் பார்க்கவோ கேட்கவோ அறியவோ மாட்டானோ , அதுவே பூமா. எதை அறிந்தால்
    மற்றவற்றைப் பார்ப்பானோ , கேட்பானோ , அறிவானோ , அது அல்பம்.-பூ₄மா என்ற சொல் ப₃ஹு என்ற சொல்லிலிருந்து வருகிறது. ப₃ ஹு என்றால் அதிகமானது என்று பொருள்.-இங்கு எண்ணிக்கையால் அதிகமானதைப் பற்றிச் சொல்ல வில்லை ; அடுத்த வாக்யத்தில் இருக்கும் அல்பம் என்ற சொல்லுக்கு அளவாலே குறைந்தது என்று பொருளான படியால், அதற்கு எதிர் மறையான இந்த பூ₄மா என்ற சொல்லுக்கு ’அளவால் அதிகமானது’ என்று பொருள் கொள்வது தான் தகுந்தது.-தொடக்கத்தில் ’ஆத்மாவை அறிந்தவன் ஸோகத்தைக் கடக்கிறான்” என்று சொல்லி, இடையில் ’ பூ₄மா’ என்ற பொருளைப் பற்றி உபதேசித்து, இறுதியில் ’இது அனைத்தும் ஆத்மாவே’ என்று உள்ள படியால், இந்த பூ₄மா என்ற பொருள் தான் ஆத்மா என்ற பொருள் என்று தெரிகிறது.

    பூமா -விபுலம் -அதிகமான பொருளைப் பற்றிச் சொல்கிறது -அதிகமான இருத்தல் குணம் -அதைச் சொல்லாமல் -அதிகமானதாக இருக்கும் பொருள் பற்றியே சொல்கிறது –

    ஸம்சயம் – ’
    பூ₄மா’ அதாவது-அதிகமான அளவுடையது’ என்று சொல்லப் பட்ட பொருள் ஜீவாத்மாவா? பரமாத்மாவா

    ஸநத்குமாரரின் உபதேசங்கள்
    பூர்வ பக்ஷம்
    – ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து, அந்தப் ப்ரகரணம் முடியாமலிருக்கும் பொழுதே பூ₄மா என்பதை உபதேசிக்கிற படியால் பூ₄மா ஜீவாத்மா தான். ஸநத் குமாரர் செய்த உபதேசங்களைப் பார்ப்போம் –

    யத்₃வை கிஞ்ச ஏதத் அத்₄யகீ₃ஷ்டா₂ நாம ஏவ ஏதத் | ஸ யோ நாம ப்₃ரஹ்ம இத் யுபாஸ்தே யாவந் நாம்நோ க₃தம் தத் ராஸ்ய யதா₂காம சாரோ ப₄வதி–நீர் கற்ற நூல்கள் எல்லாம் வெறும் நாமங்கள் (சொற்களே ). சொற்களையே ப்ரஹ்மம் என்று உபாஸித்தால் சொற்களால் அடைய முடிந்த பயனை மட்டும் தான் அடையலாம்

    அஸ்தி ப₄க₃வோ நாம்நோ பூ₄ய: | வாக் வாவ நாம்நோ பூ₄யஸீ |….. மந: ஸங்கல்ப: சித்தம் த்₄யாநம் விஜ்ஞாநம் ப₃லம் அந்நம் ஆப: தேஜ: ஆகாச: ஸ்மர: ஆசா ப்ராண:“நாமத்தை விட உயர்ந்தது உண்டா?” என நாரதர் கேட்க ஸநத் குமாரர் “சொல்லை விட பேச்சு உயர்ந்தது” -என்றார். இதே போல் அடுத்தடுத்து உயர்ந்த பொருள் உண்டா உண்டா என்று நாரதர் கேட்க, அடுத்தடுத்து மனது, உறுதி, சிந்தனை , த்யானம், அறிவு, உடல் பலம், உணவு, நீர், நெருப்பு, ஆகாயம், நினைவு, ஆசை , ப்ராணன் என்பவற்றை ஸநத் குமாரர் உபதேசித்தார்.-இறுதியில் சொல்லப் பட்ட ப்ராணன் என்பவர் ஜீவாத்மா தான், வெறும் மூச்சுக் காற்று அல்ல என்று பூர்வ பக்ஷியும் ஒப்புக் கொள்கிறார், ஸித்தாந்தியும் அதை ஏற்கிறார். பூ₄மா எனப்படுபவர் யார் என்பதில் தான் விவாதம் உள்ளதே தவிற, ப்ராணன் எனப்படுபவர் ஜீவாத்மா தான் என்பதில் ஐயமில்லை . ஏன் என்று பார்ப்போம்.

    (மனஸ்-இதுவே மூன்று ஆகாரங்கள் கொண்டதாய் இருக்கும் -முதலில் –புத்தி-உறுதியாக இருப்பது -அடுத்து அஹங்காரம்-கர்வம் அடைதல் -மூன்றாவது – சித்தம் -யோசித்துப் பார்க்கும் கருவி)

    ப்ராணன்’ எனப்படுபவர் ஜீவாத்மாவே
    ’ப்ராணன்’ ஜீவாத்மா தான் என்பதற்கான காரணங்களைப் பூர்வ பக்ஷீ கூறுகிறார் –

    1-ஆத்மாவைப் பற்றிய கேள்வியோடு தொடங்கிய உபதேசம் இந்தப் ப்ராணன் என்பதைப் பற்றிய உபதேசத்தோடு முடிகிறது. எனவே ப்ராணன் தான் அந்த ஆத்மாவாக இருக்க வேண்டும், இல்லாவிடில் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பே இல்லாமல் போகும்.

    2- (ப்ராணோ பிதா ப்ராணோ மாதா) அதாவது“இந்தப் ப்ராணன் அன்றோ தந்தை , ப்ராணன் அன்றோ தாய்” என்று ஸநத் குமாரர் கூறுகிறார். மூச்சுக் காற்று என்ற அசேதனப் பொருள் தாய் தந்தை முதலான சேதன (அறிவுடைய) பொருள்களாக மாற இயலாது. எனவே , தாய் தந்தை அனைவரும் ஜீவாத்மாக்களாக இருக்கிறபடியால், இங்கு ’ப்ராணன்’ என்ற சொல் ஜீவாத்மாவையே குறிக்க வேண்டும்.

    3-ஸ யதி₃ பிதரம் வா மாதரம் வா கிஞ்சித்₃ப்₄ருஸமிவ ப்ரத்யாஹ தி₄க் த்வா அஸ்து இதி ஏவ ஏநமாஹு ꞉ பித்ருஹா வை த்வமஸி இதி| அத₂ யத்₃யபி ஏநாந் உத்க்ராந்த ப்ராணாந் சூலேந ஸமாஸம் வ்யதிஷந்த₃ஹேத் நைவ ஏநம் ப்₃ரூயு꞉பித்ருஹாஸீ இதி-ஒருவன் தந்தை முதலானவர்களை சிறிது எதிர்த்துப் பேசினாலும் கூட அவனைப் பார்த்து உலகம் ’நீ தந்தையை ஹிம்ஸிக்கிறாய்’ என்று பழி கூறுகிறது. ஆனால் ’ப்ராணன்’ புறப்பட்டுச் சென்ற பிறகு சூலத்தால் குத்தினாலும் நெருப்பால் எரித்தாலும் ‘தந்தையைக் ஹிம்ஸிக்கிறாய்’ என்று பழி சொல்வதில்லை -இத்தால் ப்ராணன் எனப்படுபவரை ஹிம்ஸிக்க முடியும் என்று தெரிகிறது. வெறும் உடலோ , வெறும் மூச்சுக்காற்றோ , பரமாத்மாவோ ஹிம்ஸிக்கப் பட முடியாது. எனவே ப்ராணன் ஜீவாத்மா தான்

    தர்ம புத்ரனை அர்ஜுனன் -காண்டீபத்தைக் குறை சொன்னதால் கொல்லப் புக -நீ -த்வங்காரம் -சொன்னாலே கொல்வதற்கு சமம் என்று கண்ணன் சொல்ல –த்வங்கார அத்யாயம் -உண்டே

    இப்படி ஜீவாத்மா தான் ப்ராணன் என்ற முடிவாகி விட்டால், அவரைப் பற்றின உபதேசத்தை முடிக்காமலேயே பூ₄மா என்பதை உபதேசிக்கிறபடியால், பூ₄மா எனப்படுபவரும் ஜீவாத்மாவே என்பது பூர்வ பக்ஷியின் வாதம்.

    1.3.2 பூ₄மாதி₄கரணம்-பொருளாலும் அளவு படாதவர் பரமாத்மா-
    ப்ராணனே பூ₄மா என்று பூர்வ பக்ஷம்
    – – முக்தி அடைவதற்காக ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கும்படி நாரதர் கேட்க, ஸநத் குமாரர்-நாம, வாக், மனஸ், ஸங்கல்பம், பலம், அந்நம், ஜலம், தேஜஸ், ஆகாசம், ஸ்மரணம், ஆசா முதலான அசேதனப் பொருள்களைப் பற்றி உதேசித்து, பின் ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்தார்-இனி, அந்த ப்ராணன் என்ற ஜீவாத்மா தான் பூ₄மா எனப்படுகிறார் என்று வாதிடுகிறார் பூர்வ பக்ஷீ.

    இதுவரை பிராணன் பற்றிய விவாதம் –பிரகரண விச்சேதம் இல்லாமல் மேல் பூமா -அளவில் பெரியது என்று மேல் வருகிறது-என்று பூர்வ பக்ஷம் -பிரகரணம் மாற்றி பூமா பற்றி சொல்வதாக ஸித்தாந்தம்

    ஸ வா ஏஷ ஏவம் விஜாநந் அதிவாதீ₃ ப₄வதி-எவன் ஓருவன் இவ்வாறு ப்ராணன் என்ற ஜீவாத்மாவை அறிந்து உபாஸிக்கிறானோ அவன் ’அதிவாதி₃’ ஆவான்.-அதிவாதி₃ என்றால் தான் அறிந்த பொருளை மற்ற அனைத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகப் புகழ்ந்து பேசக் கூடியவன்.-ஏஷ து வா அதிவத₃தி ய꞉ ஸத்யேந அதிவத₃தி-எவன் ஸத்யத்தோடு அதிவாத₃ம் செய்கிறானோ , அவன் அன்றோ அதிவாதி₃. இத்தால், ப்ராணன் என்ற ஆத்மாவை த்யானிப்பவன், அந்த த்யானத்தின் அங்கமாக, ஸத்யம் பேச வேண்டும் என்று கிடைக்கிறது என்கிறார் பூர்வ பக்ஷீ.

    யதா₃ விஜாநாத்யத₂ ஸத்யம் வத₃தி | மநுதே அத₂ விஜாநாதி |ஶ்ரத்₃த₃தா₄த்யத₂ மநுதே | நிஸ் திஷ்ட₂த்யத₂ ஶ்ரத்₃த₃தா₄தி|கரோத்யத₂ நிஸ் திஷ்ட₂தி|ஸுக₂ம் லப₄தே அத₂ கரோதி | யோ வை பூ₄மா தத் ஸுக₂ம் நால்பே ஸுக₂ம்-எப்போது த்யானிக்கிறானோ , அப்போது அதிவாத₃ம் செய்கிறான். எப்போது சிந்திக்கிறானோ அப்போது தான் த்யானிப்பான். எப்போது ஸ்ரத்தா (ஈடுபாடு) கொள்கிறானோ , அப்போது தான் சிந்திக்கிறான். எப்போது நிஷ்டா₂ (கேட்க வேண்டும் என்கிற உறுதி) கொள்கிறானோ அப்போது தான் ஈடுபாடு கொள்கிறான். எப்போது மற்ற பொருள்களின் தாழ்ச்சியை சிந்திப்பதில் முயற்சி செய்கிறானோ (க்ருதி) அப்போது தான் உறுதி கொள்கிறான். எப்போது ஸுகத்தை அறிகிறானோ அப்போது தான் க்ருதியில் ஈடுபடுகிறான். எது அளவால் பெரியதோ, அதுவே ஸுகம் ஆகும்.-இவ்வாறு, ப்ராணன் என்ற ஆத்மாவின் தூய்மையான நிலை தான் அளவற்ற ஸுகமான பூ₄ம என்று சொல்லப் படுகிறது

    உலக இன்பத்தின் தாழ்ச்சியையும் அவனது பெருமையையும் அறிந்த பின்பு-தானே முயற்சி வரும் -முதல்படி -பின்பு ஸ்ரத்தா-கேட்டு – -த்யானம் -சத்யம் -படிப்படியாக வரும் அன்றோ -அஹம் என்று சொல்லிக் கொள்வதால் இங்கு ஜீவாத்மாவையை பூமா என்கிறது என்பர் பூர்வ பக்ஷி

    அதிவாதி₃கள் இருவர்
    ஸித்தாந்தம் – 1- பூ₄மா ஸம் ப்ரஸாதா₃த் அதி₄ உபதே₃சாத்

    பூ₄மா – பூ₄மா அதாவது அளவில் பெரியயவர் என்று சொல்லப் படுபவர்(பரமாத்மாவே )
    ஸம் ப்ரஸாதா₃த் – ஸம் ப்ரஸாத₃ம் எனப்படும் ஜீவாத்மாவைக் காட்டிலும்
    அதி₄ உபயத₃சாத் – அதி₄கமாக (உயர்ந்ததாக) உபதேசிக்கப் படுகிற படியால்-

    ஸம் ப்ரஸாதம் -ஜீவாத்மாவுக்கு பதமாக பல இடங்களிலே ஸ்ருதியில் உண்ட -ஸ்வேந ரூபேண -ஆவிர்பாவம் அடைகிறான் என்ற ஸ்ருதியில் இப்பத பிரயோகம் உண்டு

    ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து விட்டு, அவரைக் காட்டிலும் உயர்ந்தவராக ஸத்யம் என்று ஒருவரைச் சொல்லி, அந்த ஸத்யத்தைப் பற்றின உபதேசத்தின் நடுவே தான் பூ₄மா என்ற பொருள் சொல்லப் பட்டுள்ளது. -உபநிஷத்தில் ஸத்யம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிப்பதற்கே பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு, ப்ராணன் என்ற ஜீவாத்மாவின் ப்ரகரணம் முடிந்து, ஸத்யம் என்ற பரமாத்மாவின் ப்ரகரணமே நடக்கிற படியால், பூ₄மா எனப் படுபவர் பரமாத்மாவே என்கிறார் வேத வ்யாஸர்.

    ப்ராணனைக் காட்டிலும் உயர்ந்ததாக ஸத்யம் என்ற பொருள் எங்கு சொல்லப்படுகிறது? அதற்கு விடை அளிக்கிறார் –-ஏஷ து வா அதிவத₃தி ய: ஸத்யேந அதிவத₃தி” என்ற வாக்கியம் உயிரானது. இதை நுட்பமாக ஆராய்வோம்.
    எடுத்துக் காட்டு 1 – “ஆத்மாவை உணர்ந்தவன் ஜ்ஞாநீ. அஹிம்ஸை கடைப் பிடிப்பவன் அவன் அன்றோ ஜ்ஞாநீ”. -இதில் இரண்டு ஜ்ஞாநிக்கள் இருப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை – ஜ்ஞாநியாய் இருப்பவன், அஹிம்ஸை என்ற பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் பொருள் படுகிறது.
    எடுத்துக்காட்டு 2 – “ஆத்மாவை உணர்ந்தவன் ஜ்ஞாநீ. பரமாத்மாவை உணர்ந்தவன் அன்றோ ஜ்ஞாநீ”.-இந்த வாக்கியங்களில் இரண்டு ஜ்ஞாநிகள் இருப்பதாகவும், ஜீவனை மட்டும் அறிந்த ஜ்ஞாநியை விட பரமாத்மாவை அறிந்த ஜ்ஞாநி உயர்ந்தவன் என்றும், இதன் காரணம் பரமாத்மா ஜீவனை விட உயர்ந்தவரானது என்றும் தெரிகிறது.-இங்கும் இந்த இரண்டாவது எடுத்துக் காட்டு போல், ஜீவனைப் பற்றி அதிவாத₃ம் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஸத்யம் என்ற பரமாத்மாவைப் பற்றி அதிவாத₃ம் செய்பவர் என்று தெரிகிறது. எனவே ஸத்யம் வேறு ப்ராணன் வேறு.

    ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று ஸத்யம் பதபிரயோகம் ப்ரஹ்மத்தைக் காட்டுவது போல் இங்கும் என்றவாறு-ஸத்யம் என்ற பத பிரயோகம் பிரகரணம் மாற்றி -அதுவே பூமா என்று முடிகிறது –

    மேலும் சில ஸித்தாந்த யுக்திகள்
    மேலும், உபதேசத்தின் இறுதியில் ஸநத் குமாரர் “ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்” அதாவது “ஸத்யத்தைத் தான் உபாஸிக்க வேண்டும்” என்கிறார்.-பூர்வபக்ஷீ சொன்னது போல் ஸத்யம் என்பது உண்ணம பேசுதல் என்று கொண்டால் அதை எப்படி த்யானிக்க இயலும்? எனவே , ஸத்யம் என்பது ஜீவாத்மாவை விட உயர்ந்தவராய், உபாஸிக்கத் தகுந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க முடியும்

    மேலும், “ஆத்மாந: ப்ராண :” அதாவது “ஆத்மாவிடமிருந்து ப்ராணன் உண்டாகிறார்” என்று ஸநத் குமாரர் கூறுகிறார். -ஆத்மாவைப் பற்றி தான் நாரதர் தொடக்கத்தில் கேட்டால். எனவே ஸநத் குமாரரால் உபதேசிக்கப்பட்ட பூ₄மா தான் அந்த ஆத்மாவாக இருக்க வேண்டும். அந்த ஆத்மா என்ற பூ₄மாவிடமிருந்து ப்ராணன் எனப்படும் ஜீவாத்மா
    உண்டாகிறார் என்று இந்த வாக்கியம் சொல்கிறபடியால், ப்ராணனைக் காட்டிலும் வேறே ஓருவர் தான் பூ₄மா என்று தெரிகிறது. எனவே , அவர் ஸத்யம் என்ற பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    கேள்வி – ப்ராணனை விட உயர்ந்த பொருளாக ஸத்யம் என்ற பரமாத்மா உபதேசிக்கப்படுகிறார் என்றால், ஏன் நாரதர்-ப்ராணனைக் காட்டிலும் உயர்ந்த பொருள் எது?” என்று கேள்வி கேட்டு ஸநத் குமாரர் விடை கூற வில்லை ?
    பதில் – நாமம் வாக் மநஸ் பலம் அந்நம் ஜலம் தேஜஸ் ஆகாசம் போன்ற அசேதனப் பொருள்களை ஒவ்வொன்றாக உயர்ந்தவை என்று உபதேசித்தார் ஸநத் குமாரர். அவை தாழ்ந்தவை யான படியால் தான் கேட்ட ஆத்மாவாக இருக்க இயலாது என்று நாரதர் உணர்ந்து, இதை விட உயர்ந்த பொருள் உண்டா என்று கேட்டுக் கொண்டே வந்தார். ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து, அவரைப் பற்றி அதிவாத₃ம் செய்ய வேண்டும் என்று ஸநத் குமாரர் கூறிய படியால், “இந்த ஜீவாத்மா தான் நான் அறிய ஆசைப் பட்ட ஆத்மா” என்று நினைத்து நாரதர் எண்ணி, அதை விட உயர்ந்தது உண்டா என்று கேட்காமல் இருந்தார். சிஷ்யன் அறியாமையால் கேட்கா விட்டாலும், உண்மை அறிந்த
    ஸநத் குமாரர், பரமாத்மாவைப் பற்றின ஜ்ஞாநம் தான் ஸம்ஸாரத்தைத் தாண்டுவிக்கும் என்று அறிந்து, பரமாத்மாவைப் பற்றி நாரதர் கேட்காமலேயே உபதேசம் செய்தார். எனவே கேள்வி இல்லாமை ஒரு குற்றம் அல்ல.

    பரமாத்மா ஏன் பூ₄மா எனப் படுகிறார்?
    இவ்வாறு பரமாத்மா தான் பூ₄மா என்று நிரூபிக்கப்பட்டது. இனி பூ₄மா என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.
    “எந்தப் பொருளை அறிந்தால் வேறு எதையும் அறிய மாட்டோமோ அதுவே பூ₄மா” என்று ஸநத் குமாரர் கூறினார். -உலகிலுள்ள சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கு உடலாக இருக்கின்றன, அவர் அந்தர்யாமியாக உள்ளார். எனவே , பரமாத்மாவை அறிவது என்றால், உலகனைத்தோடும் கூடியவராக அவரை
    அறிவது. அப்படி அறிந்து விட்டால், வேறு எந்தப் பொருளையும் அறிய இயலாது, ஏனென்றால் பரமாத்மாவைத் தவிற வேறு பொருளே உலகில் கிடையாது. அவரை அண்டாமல், அவருக்கு உடலாக இல்லாமல் எந்தப் பொருளும் உலகில் இல்லை . எனவே அவரை விட்டு தனித்திருப்பதாக எந்த ஒரு பொருளையும் அறிய இயலாது என்று பொருள்

    மேலும், பரமாத்மா எல்லை யற்ற ஸுக வடிவமானவர் என்று சொல்லி, அவரை அறிந்தவர் வேறு ஒன்றை அறிய மாட்டார் என்று சொன்னால், துக்கத்தை அறிய மாட்டார் என்று பொருள். -உலகிலுள்ள பொருள்கள் நமக்கு துக்கத்தைத் தந்து கொண்டு தானே இருக்கின்றன என்று தோணும். ஆனால் அது உண்மையில் நம் அறியாமையால். பொருள்களை நம்மதென்றும் பிறரதென்றும் பிரித்துப் பார்ப்பதால் தான் துக்கம் எழுகிறது. எல்லாமே பகவானின் சொத்து என்று பார்த்தால் எல்லாமே ஸுகத்தை மட்டுமே வழங்கும்

    2-த₄ர்மோப்பத்தே: ச – “(இங்கு பூ₄மாவுக்குச் சொல்லப்பட்ட) தர்மங்கள் பொருந்துகிற படியாலும்”இந்தப் ப்ரகரணத்தில் பூ₄மாவுக்குச் சொல்லப்பட்ட பண்புகள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்துகின்றன-“ஏதத் அம்ருதம்” – “இவரே மரணமற்றவர்” என்று சொல்லப்பட்டது பரமாத்மாவுக்கே பொருந்தும்–“ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டி₂த:” – உலகனைத்தையும் தாங்கும் இந்த பூ₄மா,“தன் பெருமையிலேயே நிலை நிற்கிறார்”அதாவது இவரைத் தாங்கும் வேறு ஓருவர் கிடையாது என்று சொல்லப்படுகிறது.-இதுவும் பரமாத்மாவுக்கே உரியது-“ஆத்மத: ப்ராண :” என்று ப்ராணன் எனப்படும் ஜீவனுக்கும் காரணமாக பரமாத்மா தான் இருக்க இயலும்-ஆக இவ்வாறு, உலகில் அனைத்தாகவும் இருக்கும் பூ₄மா எனப்படும் பொருள் பரமாத்மாவே எனப் பட்டது

    அஹம் -நான் -அனைத்துக்கும் அந்தராத்மா பரமாத்மாவே தானே -வஸ்தாந்த்ரம் -அப்ரஹ்மாத்வ வஸ்து இல்லையே

    ——–

    1-3-3 அக்ஷராதி₄கரணம்-பரமாத்மாவின் தடையற்ற ஆணை

    அத்ருஸ்யாதி குணக அதிகரணம் -1-2-5- -பார்க்க முடியாத பண்பு கொண்ட அக்ஷரம் பரமாத்மாவே -பார்த்தோம் -இங்கே நேரடியாக அக்ஷரம் பற்றிய விசாரம் –

    1.3.3 அக்ஷராதிகரணத்தின் பின்புலம்
    ஸங்கதி
    -1.3.2 பூ₄மாதி₄கரணத்தில் “ த₄ர்மோப்பத் தேஶ்ச” என்ற இரண்டாம் ஸூத்ரத்தில், பூ₄மாவின் குணங்களில் ஒன்றாக “ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டி₂த:” என்று தன் பெருமையிலேயே நிலை பெற்றிருத்தல் சொல்லப் பட்டுள்ளதால் அவர் பரமாத்மவாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேல் ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ருஹதாரண்யகத்தில் ’தன் பெருமையில் நிலை பெற்றவர்’ என்று வேறே ஓரு பொருள் சொல்லப்பட்டுள்ளதே என்று.

    விஷய வாக்யம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 3ஆம் அத்யாயத்தில் 8ஆம் ப்ராஹ்மணம் – கார்கீ ப்ரஸ்நம்–ஜநக மஹாராஜரின் ஸபையில் யாஜ்ஞ்ய வல்க்யரைப் பார்த்து கார்கீ என்ற பெண் 2 கேள்விகள் கேட்டாள்.
    யதூ₃ர்த்₄வம் யாஜ்ஞவல்க்ய தி₃வவா யத₃வாக் ப்ருதி₂வ்யா꞉ யத₃ந்தரா த்₃யாவா ப்ருதி₂வீ இமே யத்₃பூ₄தம் ச ப₄வச்ச ப₄விஷ்யச் சேத்யா சக்ஷதே ஆசக்ஷதே கஸ்மிந் ததோ₃தம் ச ப்ரோதம் சேதி-விண்ணுலகத்து மேலும், பூமிக்குக் கீழும், பூமிக்கும் விண்ணுலகுக்கும் இடைப் பட்ட பகுதியிலும், கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் வருங் காலத்திலும் இருக்கும் எல்லாப் பொருள்களும் குறுக்கும் நீளமுமாக நூல்கள் கோர்க்கப் படுவது போல் எதில் கோர்க்கப் பட்டுள்ளன அதாவது- எதால் தாங்கப் படுகின்றன
    என்று பொருள்.-ஸ ஹோவாச – ஆகாசே தத் ஓதம் ச ப்ரோதம் ச-யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறினார் – “ஆகாசத்தில் அவை அனைத்தும் தாங்கப் படுகின்றன” என்று.- ஸா ஹோவாச – கஸ்மிந் நு க₂லு ஆகாச: ஓத: ச ப்ரோத: ச இதி-கார்கீ கேட்டாள் – “அந்த ஆகாசம் எதால் தாங்கப் படுகிறது” என்று

    ப்ரக்ருதியே அக்ஷரம் என்ற பூர்வ பக்ஷம்–ஸ ஹோவாச – ஏதத்₃வை தத₃க்ஷர(அ) கா₃ர்கி₃ ப்₃ராஹ்மணா அபி₄வத₃ந்தி – அயஸ்தூ₂லம் அநணு அஹ்ரஸ்வம்-அதீ₃ர்க₄ம் அலோஹிதம் அஸ்நேஹம் அச்சா₂யம் அதம: அவாயு அநாகாஶம் அஸங்க₃ம் அசக்ஷுஷ்கம் அஶ்ரோத்ரம்-அவாக் அமந: அதேஜஸ்கம் அப்ராணம் அமுக₂ம் அமாத்ரம் அநந்தரம் அபா₃ஹ்யம்-யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறினார் – அந்தப் பொருள் தான் உபநிஷத்துக்களில் ’அக்ஷரம்’ என்று கூறப்படுகிறது.-அப் பொருள் பெரியது அல்ல, சிறியது அல்ல, குள்ளம் அல்ல, நீளம் அல்ல, வாயு அல்ல, ஆகாசம் அல்ல, கண் உடையது அல்ல,காது உடையது அல்ல, பேச்சுக்கான புலன் உடையது அல்ல, ப்ராணன் உடையது அல்ல, முகம் உடையது அல்ல, புலன்கள் உடையது அல்ல, உள்ளே இருப்பது அல்ல, வெளியே இருப்பது அல்ல.

    ஸம்சயம் – இங்கு அக்ஷரம் என்று சொல்லப் படுபடுவது மூல ப்ரக்ருதியா? ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
    பூர்வபக்ஷம் – ப்ரதாநம்- மூல ப்ரக்ருதி எனப்படும் அசேதனப் பொருள் தான் இந்த அக்ஷரம் என்கிறார் பூர்வ பக்ஷீ.-“அக்ஷராத் பரத: பர:” முதலான உபநிஷத் வாக்கியங்களில் அக்ஷரம் என்ற சொல் மூல ப்ரக்ருதியையே குறிக்கிறது.-“அஸ்தூ₂லம் அநணு” முதலான பண்புகள் எல்லாம் இந்த மூல ப்ரக்ருதிக்குப் பொருந்துகின்றன-எல்லா உலகங்களிலும் முக் காலத்திலும் இருக்கும் பொருள்களுக்கு எல்லாம் ஆதாரமாக இருக்கும் ஆகாசம் எனப்படும்
    வானத்துக்கும் ஆதாரமாய் இருத்தல் ப்ரக்ருதிக்குப் பொருந்தும், ப்ரக்ருதி ஆகாசத்துக்கே காரணமானபடியால்.

    கேள்வி – ’கூடஸ்த₂: அக்ஷர: உச்யதே ”-யயா தத₃க்ஷரம் அதி₄க₃ம்யதே ” முதலான வாக்கியங்களில் ஜீவாத்மா -பரமாத்மா கூட அக்ஷரம் என்ற சொல்லால் அறியப் படுகிறார்களே ?
    பதில் – ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தால், அவற்றில் எது வேகமாகச் செயல்படும் ப்ரமாணத்தால் அறியப்பட்டதோ , அது தான் முதலில் தோன்றும். ஸந்யாஸம் என்ற சொல்லிலிருந்து துறவறம் தோன்றுவது போல்-எனவே , அக்ஷரம் என்பது அநுமானத்தால் அறியப்படும் ப்ரக்ருதியே , வேதத்தால் அறியப்படும் பரமாத்மா அல்ல.

    ஸன்யாஸி -ப்ரத்யக்ஷமாக அறிவது துறவறம் -கீதை மூலம் அறிவது பயன்களில் ஆசை இல்லாமல் கர்மங்களைச் செய்வது-இதில் முதல் அர்த்தமே நேராக கொள்கிறோம் -இதே போல் ஈஸ்வரன் என்றால் சிவபெருமான் -அறிகிறோம் -வேதம் கற்ற பின்பே அவனும் கர்ம வஸ்யன் என்றும் அறிந்து பர ப்ரஹ்மமே ஸர்வேஸ்வரேஸ்வரன் என்றும் அறிகிறோம் -ஸாஸ்த்ர யோநித்வாத் -கீழேயே பார்த்தோம் –அதே போல் என்பர் பூர்வ பக்ஷி-

    ஆகாசம் எனப்படுவதே ப்ரக்ருதி; அக்ஷரம் பரமாத்மாவே
    ஸித்தாந்தம்
    – இந்தப் பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் எதிர்க்கிறார் வேத வ்யாஸர்.
    1-அக்ஷரம் அம்ப₃ராந் தத்₄ருதே :
    அக்ஷரம்
    – அக்ஷரம் என்று இங்குச் சொல்லப்பட்டவர் (பரமாத்மாவே )
    அம்ப₃ராந்த – ’அம்ப₃ரம்’ என்ற வானத்துக்கும் ’அந்தம்’ அதாவது முடிவான (காரணமான) ப்ரக்ருதியையும் கூட
    த்₄ருவத: – தாங்குகிறபடியால்

    உலகப் பொருள்களை எல்லாம் தாங்கும் ஆகாசம் என்றழைக்கப் பட்ட பொருள் வானம் தான் என்றார் பூர்வ பக்ஷீ. இது தவறு. ’ராஜ்யத்தில் உள்ளவர்களை எல்லாம் ஆள்பவர் யார்?’ என்று கேட்டால், ராஜ்யத்தில் ஒருவரான மந்திரி என்று கூறுவது தவறாகும். அதே போல் உலகப் பொருள்களுள் ஒன்றாய், தானே உண்டாகி அழியக் கூடியதான வானம் எப்படி உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக இருக்க முடியும்? எனவே இங்கு ஆகாசம் என்ற சொல்லே மூல ப்ரக்ருதியைத் தான் குறிக்கிறது என்று கொள்ள வேண்டும். அது தான்’அம்ப₃ராந்தம்’ எனப்படுகிறது. அந்த மூல ப்ரக்ருதிக்கும் ஆதாரமான அக்ஷரம் பரமாத்மாகவே இருக்க முடியும்.-ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தால் அதில் வேகமான ப்ரமாணத்தால் அறியப் பட்டதையே கொள்ள வேண்டும் என்பதும் தவறு. எந்தப் பொருளில் ஒரு சொல் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறதோ அது தான் அந்தச் சொல்லின் முக்கியமான பொருள் என்று கொள்வதே சரியானது. -அக்ஷரம் என்பது யௌகி₃கச் சொல் (காரணப் பெயர்). ’ந க்ஷரதி இதி அக்ஷரம்’ அதாவது-எது அழியாதோ அது அக்ஷரம்’ என்று பொருள் தோற்றுகிறது. அழியாமை எந்தப் பொருளுக்கு மிகுதியாகவோ இயற்கை யாகவோ உள்ளதோ , அந்தப் பொருளைத் தான் கொள்ள வேண்டும். அழியாமை இயற்கையில் பரமாத்மவுக்கே உள்ளது. அவரே அக்ஷரம்.–ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு ’ஆள்பவர்’ என்று பொருள். ஆனால் அச் சொல்லைக் கேட்டதும் ஓரிருவரை ஆளும் மனிதனா தோன்றுகிறான்? அனைத்தையும் ஆளும் பரமாத்மாவே தோன்றுகிறார்-அதே போல் தான் இங்கும்

    விகார ஜாதம் -உலகப்பொருள்கள் அனைத்துக்கும் ஆதாரம் ஆகாசம் என்பது வானத்தைச் சொல்ல வில்லையே -இதனால் மூல பிரக்ருதியையே சொன்னவாறு – இதற்கும் மூலம் காரணம் பரமாத்மாவே -என்றவாறு

    அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் அர்த்தமே பிரதானம் -ஈஸ்வரன் ஆள்பவன் -அரசனே ப்ரத்யக்ஷமாக இருந்தாலும் இறைவனையே குறிக்கும் அன்றோ –

    ஜீவாத்மாவும் அக்ஷரம் அல்ல
    மற்ற ஓரு பூர்வ பக்ஷீ கேள்வி எழுப்புகிறார்– “ஜீவாத்மாவே அக்ஷரம் என்று கொள்ளலாமே ?அவரைக் குறிக்கவும் அக்ஷரம் என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அஸ்தூ₂லம் முதலான பண்புகள் ஜீவனுக்கும் பொருந்தும். ப்ரக்ருதிக்கு ஆதாரமாக ஜீவன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்” என்று. அதற்கு பதிலுரைக்கிறார் வேத வ்யாஸர் –
    2- ஸா ச ப்ரசாஸநாத் – “அதுவும் (அனைத்தையும் தாங்குவதும்) தடையற்ற ஆளுமையாலே ”
    அக்ஷரம் என்ற பொருள் உலகில் அனைத்தையும் தாங்குகிறது என்று மட்டும் யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறவில்லை . அப்படித் தாங்குவது அதனுடைய தடை யற்ற ஆணை – இயக்கத்தால் என்றும் கூறுகிறார்.

    ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா₃ர்கி₃ ஸூர்யா சந்த்₃ரமஸஸௌ வித்₄ருஸதௌ திஷ்ட₂த: | ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா₃ர்கி₃ த்₃யாவா ப்ருதி₂வ்யௌ வித்₄ருதே திஷ்ட₂த-இந்த அக்ஷரத்தின் ப்ரசாஸனத்தால் (ஆணையால்) தான் ஸூர்யனும் சந்திரனும் தாங்கப் படுகிறார்கள், விண்ணுலகும் மண்ணுலகும் தாங்கப்படுகின்றன.
    ப்ரசாஸநம் = ப்ரக்ருஷ்டம் சாஸநம் = உயர்ந்த ஆட்சி = தடை யில்லாமல் அனைத்துப் பொருள்களையும் இயக்குதல்.-இது பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியது, எந்த ஒரு ஜீவாத்மாவுக்கும் கிடையாது. எனவே அக்ஷரம் ஜீவாத்மா அல்ல.

    3-அந்ய பா₄வ வ்யாவ்ருத்தே: ச – இந்த ஸூத்ரத்திற்கு இரண்டு விதமாகப் பபாருள் கொள்ளலாம்.
    1-அந்ய பா₄வ -வேறு ஓன்றாய் இருக்கும் தன்மை
    வ்யாவ்ருத்தே: ச தவிர்க்கப் படுகிறபடியால் –
    அக்ஷரம் என்பது’அத்₃ருஷ்டம் த்₃ரஷ்ட்ரு’ அதாவது ’அறியப்படாதது, மற்றவற்றை அறிவது’ என்று சொல்லப்படுகிறது. மற்றவற்றை அறிகிற படியால் இது அசேதனம் அல்ல, தான் அறியப் படாதபடியால் இது அசேதனமும் அல்ல என்று தெரிகிறது.
    2-அந்ய -வேறு ஓன்றினுடைய
    பா₄வ: இருப்பு
    வ்யாவ்ருத்தே: ச தவிர்க்கப் படுகிறபடியால் –
    இந்த அக்ஷரம் அனைத்தையும் தாங்குவது போல், இதைத் தாங்கும் வேறு ஓரு பொருளில்லை என்று கூறப்படுகிறது – “நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்ட்ரு” என்று. எனவே அக்ஷரம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்

    -உம்மைத் தொகையால் -இவரை அறிந்தே மோக்ஷ பேறு போன்றவையைக் காட்டியவாறு

    ————————

    1.3.4 ஈக்ஷதி கர்மாதி₄கரணம்-ஸ்ரீ வைகுந்தம் சென்று அடையப்படுபவர்
    பரமாத்மாவே

    (1-1-5- ஈஷத் அதிகரணம் பார்த்தோம்)

    (யோ விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை” என ஸ்வேதாஸ்வதர உபநிஷத் வாக்கியம் கூறுகின்றது-அவரையே உபாஸித்து பேறு)

    1.3.4 ஈக்ஷதிகர்மாதிகரணத்தின் பின்புலம்
    ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் ’அத்₃ருஷ்டம் த்₃ரஷ்ட்ரு’ அதாவது பரமாத்மா அனைத்தையும் பார்ப்பவர் என்று கூறப்பட்டது. அதற்கு மேல் தான் ஆஷேபம் எழுகிறது – உலகில் பொதுவாக பார்ப்பவரும் பார்க்கப்படும் பொருளும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே பரமாத்மா பார்ப்பவர் என்று சொல்லப் பட்டுள்ள படியால், மற்ற ஓரு உபநிஷத்தில் பார்க்கப்படும் பொருளாகச் சொல்லப்பட்டது பரமாத்மா அல்ல, வேறு ஓன்று தான் – என்று.

    விஷய வாக்யம் – அத₂ர்வண வேத₃த்தின் ப்ரஸ்ந உபநிஷத்தில் உள்ள ஐந்தாவது ப்ரஸ்நம்
    அத₂ ஹைநம் ஸைப்₃ய꞉ ஸத்ய காம꞉ பப்ரச்ச₂ । ஸ யோ ஹ வை தத்₃ப₄க₃வந் மநுஷ்யேஷு ப்ராயணாந்தம் ஓங்காரம் அபி₄த்₄யாயீத ।கதமம் வா வஸதேந லோகம் ஜயதீதி ।-ஸத்ய காமம் என்ற சிஷ்யன் தன் ஆசார்யரிடம் கேட்டான் – “எந்த ஒரு மனிதன் தன் மரணம் வரை ஓம் என்ற ப்ரணவத்தைத் த்யானிக்கிறானோ , அவன் எந்த உலகங்களைச் செல்கிறான், அதாவது, எந்தப் பயனை அடைகிறான்?“

    ஏதத்₃வை ஸத்ய காம பரம் ச அபரம் ச ப்₃ரஹ்ம யதோ₃ங்கார꞉ ।தஸ்மாத்₃ வித்₃வாநே தேநைவாயத நேதைக தரமந் வேதி-“உலகத்திலுள்ள தாழ்ந்த மற்றும் உயர்ந்த பொருள்கள் அனைத்தையும் தன் வடிவமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொல் இந்த ஓம் என்பது. எனவே இந்த ஓம்காரத்தைத் த்யானிப்பவன் அந்த உயர்ந்த மற்றும் தாழ்ந்த பொருள்கள் அனைத்தையும் அடைய முடியும்” என்றார் ஆசார்யன்.

    ஸ யதி₃ ஏக மாத்ரம் அபி₄த்₄யாயீத தம் ருச: மநுஷ்ய லோகம் உபநயந்தே | ஸ தத்ர தபஸா ப்₃ரஹ்ம சர்யேண ஶ்ரத்₃த₄யா ஸம்பந்நோ மஹிமாநம் அநுப₄வதி-ஒரு மாத்திரை கொண்ட ஓம்காரத்தைத் த்யானிப்பவன் மநுஷ்ய லோகத்தை அடைந்து, தவம் ப்ரஹ்ம சர்யம் மற்றும்
    ஸ்ரத்தையோடு கூடியவனாய் மேன்மையை அநுபவிக்கிறான்

    நான்முகனே பார்க்கப்படுபவர் என்ற பூர்வ பக்ஷம்
    அத₂ யதி₃ த்₃வி மாத்ரேண மநஸி ஸம்பத்₃யதே ஸ: அந்தரிக்ஷம் யஜுர் பி₄ருந்நீயதே ஸோமலோகம் । ஸ ஸோமலோகே விபு₄தி மநுபூ₄ய புநராவர்ததே ॥
    இரண்டு மாத்திரை கொண்ட ஓம்காரத்தை த்யானிப்பவன், ஸோமலோகம் என்ற ஸ்வர்கத்தை அடைந்து, அங்குள்ள செல்வங்களை அநுபவித்து, மீண்டும் மநுஷ்ய லோகத்தை அடைகிறான்.

    ய꞉ புநரேதம் த்ரிமாத்ரேண ஓமிதி ஏதேநைவ அக்ஷரேண பரம் புருஷமபி₄த்₄யாயீத ஸ ஸாம பி₄ருந்நீயதே ப்₃ரஹ்ம லோகம | ஸ ஏதஸ்மாத் ஜீவக₄நாத் பராத்பரம் புரிஸயம் புருஷம் ஈக்ஷதே । -எவன் மூன்று மாத்திரை கொண்ட ஓம்காரத்தைக் கொண்டு உயர்ந்த புருஷனை த்யானிப்பவன் ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான். அசேதனத்தோடு இறுகியுள்ள ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்த புருஷனை அங்கு காண்கிறான்.

    (தத் க்ரது நியாயம் -உபாசிக்கப்படும் பொருளின் தன்மையை அடைந்து பேறு -அபஹத பாப்மத்தாதி அஷ்ட குண சாம்யம்)

    (கணீ பூதர்கள் -பிரக்ருதியால் கட்டுப்பட்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் -ஜீவ கநம்)

    ஸந்தேஹம் – இங்கு ப்ரஹ்மலோகம் சென்று காணப்படுபவராகச் சொல்லப் பட்டுள்ள ’உயர்ந்த புருஷன்’ எனப்படுபவர் இந்த அண்டத்திற்குத் தலைவரான நான்முகக் கடவுளா? அல்லது பரமாத்மாவா?
    பூர்வ பக்ஷம் – இங்கு பார்க்கப்படுபவராகச் சொல்லப் படுபவர் நான்முகக் கடவுள் தான். ஏனெனில் –1-மநுஷ்ய லோகம், ஸ்வர்க லோகம், ப்ரஹ்ம லோகம் என்று வரிசையாகச் சொல்லப் பட்டுள்ளபடியால், இங்கு ப்ரஹ்ம லோகம் என்று சொல்லப் படுவது நான்முகக் கடவுள் இருக்கும் ஸத்ய லோகம் தான். எனவே அங்குச் சென்று காணப்படும் ’உயர்ந்த புருஷன்’ அந்த நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்-2-உடல் புலன்கள் முதலானவற்றைக் காட்டிலும் உயர்ந்தவராக ஜீவாத்மா இருந்தாலும், அந்த அசேதனப்
    பொருள்களோடு பின்னிப் பிணைத்து இருக்கிற படியால் அவர் ஜீவ க₄நம் (இறுகிப் போன ஜீவன்) என்று சொல்லப் படுகிறார். அவரைக் காட்டிலும் உயர்ந்தவராகச் சொல்லப் பட்டவர், இந்த அண்டத்தில் பொருள்களை எல்லாம் ஸ்ருஷ்டிப்பவரான நான்முகனே . ஆக, அவர் தான் உயர்ந்த புருஷன்’ என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும்.

    அவன் மேவு ஸ்ரீ வைகுந்தம்
    ஸித்தாந்தம் – ஒரே ஸூத்ரத்தால் இந்தப் பூர்வ பக்ஷத்ணத கண்டிக்கிறார் வ்யாஸர்.
    1-ஈக்ஷதி கர்ம வ்யபதே₃சாத் ஸ:-
    “பார்க்கப்படுபவர் பரமாத்மா, அவ்வாறு சொல்லுகிற படியால்”-இங்கு ப்ரஹ்ம லோகம் சென்று பார்க்கப்படும் பொருளுக்குச் சொல்லப்படும் குணங்கள் பரமாத்மாவுக்கே உரியவை –தம் ஓங்காரேண ஏவ ஆயதநேந அந்வேதி வித்₃வாந் யத் தத் சாந்தம் அஜரம் அம்ருதம் அப₄யம் பரம் சேதி–“அந்த ஓம்காரத்தைக் கொண்டு சாந்தமான, மூப்பற்ற, மரணமற்ற, பயமற்ற, உயர்ந்த பொருளை அடைகிறான்”-இந்தப் பண்புகள் எல்லாம் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவுக்கே சொல்லப் பட்டுள்ளன. நான்முகனுக்கும் பிறப்பு, இறப்பு, கவலை , பயம் முதலானவை புராணங்களில் சொல்லப் பட்டுள்ளன. எனவே அவர் அல்ல- (ஏதஸ்மாத் ஜீவக₄நாத் பராத் பரம்) என்று சொல்வதும் பரமாத்மாவுக்கே பொருந்தும்.-ஜீவ கனம் என்றால் அசேதனப் பொருளோடு இறுகி யிருக்கும் ஜீவாத்மா.-அண்டத்துக்கே அதிபதியான நான்முகனும் பாப புண்யங்களால் உடற்பிறவி அடைந்து அசேதனத்தோடு பின்னிப் பிணைத்து இருப்பவரே . எனவே , ஜீவ கனத்தைக் காட்டிலும் உயர்ந்தவராக அவர் சொல்லப்பட முடியாது. பரமாத்மாவுக்கே அது பொருந்தும்.

    (கர்த்தா- செய்பவன் -subject-கர்ம-செயப்படும் பொருள்-object)

    (சாந்தி –பசி தாகம் கவலை மயக்கம் மூப்பு மரணம் -ஷட் ரஹிதம்)

    (கணீ பூதர்கள் -பிரக்ருதியால் கட்டுப்பட்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் -ஜீவ கநம்–ஆ பிரம்மா ஸ்தம்ப பரியந்தம் -சம்சார வசத்தில் கட்டுப் பட்டவர்கள் தானே )

    ப்ரஹ்ம லோகம் என்பது ஸத்ய லோகம் என்றும் கொள்ள இயலாது.
    (யதா₂ பாதோ ₃த₃ரஸ்த்வஸா விநிர்முச்யத ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர்முக்த꞉ உந்நீயவத ப்₃ரஹ்ம லோகம்)
    – ஒரு பாம்பு தன் சட்டையை விட்டு வெளி யேறுவது போல் இந்த ஜீவாத்மா பாபங்களிலிருந்து விடுபட்டு ப்ரஹ்ம லோகம் அடைகிறான் என்று சொல்கிறபடியால், ப்ரஹ்ம லோகம் ஸ்ரீ வைகுந்தமே -(தத் கவயோ வேத₃யந்தே ) – கவிகள் எனப்படும் நித்ய ஸூரிகளால் பார்க்கப்படும் உலகம் என்று சொல்கிற படியாலும் அது ஸ்ரீ வைகுந்தமாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ வைகுந்தம் சென்று காணப்படுபவர் பரமாத்மாவே , நான்முகன் அல்ல–இவ்வாறு ஓம்காரத்தை முழுமையாகக் கொண்டு பரமாத்மாவை த்யானிப்பவன், ஸ்ரீ வைகுந்தம் அடைந்து, அந்தப் பரமாத்மாவையே கண்டு அநுபவிக்கிறான் என்று சொல்லப் பட்டுள்ளது என்று வேத வ்யாஸர் நிரூபித்தார்

    (பாதோதரம் -பாத -உதரம் -காலே வயிறாகக் கொண்ட பாம்பு -சஷுஸ்ஸு ஸ்ரவா கண்ணையே காதாக உடையது பாம்பு)

    (பாட்டுக் கேட்க்கும் இடமும் -கவி-ஏதத் சாம காநம் ஆஸ்தே -சதா பஸ்யந்தி ஸூரயா-பார்த்துக் கொண்டே இருப்பார்கள் அன்றோ)

    (மனுஷ்ய லோகம் ஸ்வர்க்க லோகம் -அடுத்து மகர் லோகம் தானே- சத்ய லோகமாகத்தான் இருக்க வேண்டாமே –ஆகவே ஸ்ரீ வைகுண்டமே -இதுவும் நாலாவது யுக்தி)

    ——–

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

    10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

    (வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
    ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
    க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
    ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
    -ஶ்லோகம் 18 –)

    நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
    1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
    2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
    3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
    4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
    5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
    6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
    7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
    8) இனிமையானவன்
    9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
    10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
    11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
    12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

    உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
    ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
    கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
    ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
    ||-ஶ்லோகம் 19 –

    வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

    1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
    ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
    உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

    விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

    (ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

    ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

    பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

    பரமாத்மாவே தஹராகாஸம்
    ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
    :-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

    (கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

    தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

    (மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

    கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
    பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

    கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
    பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

    ————

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

    நாம் அறியாத செல்வம்
    தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

    (உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறார்)

    2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
    க₃தி சப்₃தா₃ப்₄யாம் – “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
    ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
    க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
    (தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
    “எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
    இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
    2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
    சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
    லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

    உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
    3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
    அஸ்ய-
    இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
    த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
    அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

    இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
    ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
    அதாவது
    “இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

    4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
    தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
    சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
    ஸமுத்பத்₃யந்தே )
    அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

    ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
    இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
    5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
    இதர பராமர்சாத் ஸ:
    -பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
    இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
    அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

    பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
    ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
    ) அதாவது
    “இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
    தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
    இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
    அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

    ————–

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

    (அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
    I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

    ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
    1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
    6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
    உத்தராத் சேத்
    – “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
    ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
    ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

    (அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
    தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
    ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே
    ॥ 8.12.2॥।

    ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
    ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
    ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
    ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
    ப்ராணோ யுக்த:
    ॥ 8.12.3॥)

    முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
    ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
    ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
    உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
    அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
    7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
    இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
    8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

    அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
    இதி சேத் – என்று கேட்டால்
    தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
    9-அநுக்ருதே : தஸ்ய ச –
    தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
    அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
    என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
    10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.

    இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
    ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச

    இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து,
    மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர்,
    ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார்,
    ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.

    இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

    ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

    ——————————

    1.3.6 ப்ரமிதாதி₄கரணம்-பரமாத்மா அருவெறுப்பு இல்லாமல் உறைகிறார்

    சப்தா தேவ ப்ரமித-ஸூத்ரம் இருப்பதால் இந்த அதிகரணத்தின் பெயர்-மித -அளக்கப் பட்டது –அமித-அளவிடமுடியாதவர் –பிரமித -கட்டை விரல் அளவாக அளக்கப்படுபவர்

    ப்ரமிதாதி₄கரணத்தின் பின்புலம்
    1.3.6 ப்ரமிதாதி₄கரணம் – ஸங்கதி
    – இதற்கு முன் தஹராதிகரணத்தில் “அல்பச்ருதே : இதி வேத் தது₃க்தம்” என்கிற ஸூத்ரத்தில் பரமாத்மாவுக்கு சிறிய வடிவம் எப்படிப் பொருந்தும் என்று காட்டப்பட்டது.-அதற்கு மேல் ஒரு ஸந்தேஹம் எழுகிறது – கடோபநிஷத்தில் இப்படி சிறிய வடிவம் ஜீவாத்மாவுக்குத் தானே சொல்லப்பட்டுள்ளது என்று
    விஷய வாக்யம் – கடோபநிஷத்தின் இரண்டாவது அத்யாயத்தின் முதல் வல்லியில் உள்ள வாக்கியங்கள் –அங்கு₃ஷ்ட₂மாத்ர: புருஷ: மத்₄யே ஆத்மநி திஷ்ட₂தி | ஈசாநோ பூ₄தப₄வ்யஸ்ய ததோ ந விஜுகு₃ப்ஸதே ||-கட்டை விரல் அளவுடைய ஒரு புருஷன் உடலுக்குள்ளே இருக்கிறார். அவர் கடந்த காலப் பொருள்கள் வருங்காலப் பொருள்கள் என அனைத்தையும் இயக்குபவர்.

    அங்கு₃ஷ்ட₂மாத்ர: புருஷ: ஜ்யோதிரிவ அதூ₄மக: | ஈசாநோ பூ₄தப₄வ்யஸ்ய ஸ எவாத்₃ய ஸ உ ஶ்வ: ||-கட்டை விரல் அளவுடைய புருஷன் புகை யில்லாத நெருப்புபோல் ப்ரகாஸ மானவர். அவர் தான் உலகில் அனைத்துப் பொருள்களாகவும் இருக்கிறார்.
    தம் ஸ்வாத் சரீராத் ப்ரவ்ருஹேத் | தம் வித்₃யாத் சுக்ரம் அம்ருதம் -அந்தக் கட்டை விரல் அளவுடைய புருஷனைத் தன் உடலைக் காட்டிலும் வேறுபட்டவனாய் அறியவேண்டும். அவரே ப்ரகாஸ மானவர், மிக இனியவர்.

    ஸந்தேஹம் – இந்தக் கட்டை விரல் அளவுடைய புருஷன் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
    பூர்வ பக்ஷம் – இங்கு சொல்லப்படுபவர் ஜீவாத்மாவே -வேறொரு உபநிஷத்தில் அவ்வாறு சொல்லப்பட்டபடியால்.
    ப்ராணாதி₄ப: ஸஹ்சரதி கர்மபி₄: | அங்கு₃ஷ்ட₂மாத்ரோ ரவிதுல்யரூப: ஸங்கல்பாஹங்கார ஸமந்விதோ ய: ||-அந்த கட்டை விரல் அளவுடை யவர் ப்ராண வாயுவுக்கு தலைவன், கர்மங்களால் பிறந்தவர் என்று சொல்கிற படியால்.

    தன் சொத்தில் அழுக்கையும் ஏற்கும் பரமாத்மா
    கேள்வி
    – ஜீவாத்மா உண்மையில் அணுவானவர் என்று தானே சொல்லப்படுகிறார். எனவே இங்கு கட்டை விரல் அளவு என்று சொன்னது ஒரு பேச்சுக்காகத் தான் இருக்க வேண்டும். பரமாத்மாவுக்கும் அப்படிச் சொல்லலாமே ?
    பதில் – உண்மை தான், ஜீவாத்மா அணுவே . ஆனால் அவர் ஹ்ருதயத்துக்குள் இருக்கிற படியால் ஒரு பேச்சுக்காவது அவரை கட்டை விரல் அளவுடையவர் என்று சொல்லலாம். பரமாத்மாவை அப்படிச் சொல்ல வழியே இல்லை .
    கேள்வி – கடந்தகால மற்றும் வருங்காலப் பொருள்களை யெல்லாம் இயக்குபவராக ஜீவாத்மா எப்படி ஆவார்?

    பதில் – தன்னுடைய சொத்தான உடல், புலன்கள், பொருள்கள் முதலானவற்றை இயக்குகிற படியால்
    ஸித்தாந்தம் – 1-சப்₃தா₃தே₃வ ப்ரமித: – (ஸப்தாத் ஏவ ப்ரமித)கட்டை விரல் அளவுடையவர் (பரமாத்மாவே ) சப்தத்தாலேயே –இங்கு கட்டை விரல் அளவுடையவரை ’ஈசாந :’ அதாவது’இயக்குபவர்’ என்று சொல்கிற படியால் அந்தச் சொல்லைக் கொண்டு அவர் பரமாத்மா தான் என்று புரிந்து கொள்ளலாம். உலகில் சில பொருள்களை மட்டும் இயக்கும் பண்பு ஜீவாத்மாவுக்கும் உள்ளதே என்று பொருளைக் குறைத்துக் கொள்ள முடியாது-வேதமே ஸ்பஷ்டமாக ’பூ₄தப₄வ்யஸ்ய’ என்று ’முக் காலத்திலிருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரன்’ என்று சொல்லப்பட்டபடியால்-

    (பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -பரந்த அண்டம் இதுவென கரந்து எங்கும் பரந்துளன்-அனைத்தும் சொத்து என்பதால் ஜுகுப்ஸை இல்லாமல் உள்ளே உகந்து உறைகிறான்–ஆமவை ஆயவை யாய் நின்ற அவரே–யானும் நீ என்னுடைமையும் நீயே -ஆத்மாவும் சரீரம் அவனுக்கு சரீரம் -அவரே ஆத்மா)

    அளவற்ற பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் சிறிய வடிவம் கொண்டவர் என்று சொல்லலாம் என்கிறது அடுத்த ஸூத்ரம்-2- ஹ்ருதி அபேக்ஷயா து மநுஷ்யாதி₄காரத்வாத் –
    ஹ்ருதி₃
    – (உபாஸநத்தின் ஸௌகர்யத்துக்காக) ஹ்ருதயத்தில் (பரமாத்மா இருக்கிற படியால்)
    அபேக்ஷயா து – அதன் அளவை வைத்து (பரமாத்மாவுக்கு அளவு சொல்வதில் தவறில்லை )
    ஹ்ருதயம் கட்டை விரல் அளவுடையது என்று புராணங்கள் சொல்கிறபடியால் அதற்குள் இருக்கும் பரமாத்மாவுக்கும் அதே அளவு சொல்லப்படுவதில் தவறில்லை

    கேள்வி – விலங்குகளுக்குக் கட்டை விரல் இல்லாததால் அவர்கள் ஹ்ருதயத்திலிருக்கும் பரமாத்மாவின் அளவு என்ன?
    பதில் – மநுஷ்யாதி₄காரத்வாத் – மனிதர்களுக்கு மட்டுமே உபாஸநத்தில் தகுதி உள்ளபடியால் (இக்குறை இல்லை )

    (வாலாக்ர்யம் –இத்யாதி –அணு மாத்ரம் -நுண்ணியவர் -கட்டை விரல் என்பது பேச்சுக்குச் சொன்னபடி -உபசார யுக்தி)

    (கொண்டல் வண்ணன் –ஒண் சங்கதை வாள் ஆழியான் அடியேன் உள்ளான் -விக்ரஹத்துடன் உள்ளான் –கருட வாஹனம் கொண்டு அருளுகிறவன் ஆழ்வார் திரு உள்ளத்தில்-அரவிந்தப்பாவையும் தானும் –அகம்படி வந்து புகுந்தான் -பாற்கடலுடன் -அலைஓசை கேட்க்கும்)

    இந்த அதிகரணத்தின் மீதமுள்ள இரண்டு ஸூத்ரங்கள்-அடுத்த மூன்று அதிகரணங்களுக்குப் பின்னர் அமைத்துள்ளார்

    ———————————-

    1.3.7 தே₃வதாதாதி₄கரணம்-தேவதைகள் உபாஸனம் செய்யலாமா?

    தே₃வதாதி₄கரணத்தின் பின்புலம்
    1.3.6 ப்ரமிதாதி₄கரணம் இன்னும் முடியவில்லை . அதற்கு இடையிலேயே மூன்று அதிகரணங்களை அமைத்துள்ளார் வேத வ்யாஸர். அதற்குப் பிறகு மறுபடியும் ப்ரமிதாதி₄கரணத்தின் மீதமிருக்கும் ஸூத்ரங்களைப் பார்க்கலாம்.

    (ஸ்ம்ருதஸ்ய உபேஷா அநஹர்த்வம் -நினைவுக்கு வந்தவற்றை விலக்க முடியாமை பிரசங்காத் மூன்று அதிகரணங்களில் விசாரம் -அனைத்தையும் தாங்குபவரைப் பற்றிய விசாரம் மூன்றாம் பாதத்தில் பார்த்து வருகிறோம் -இந்த மூன்றிலும் அது இல்லாவிட்டாலும் தொடர்புடைய விசாரம் என்பதால் இங்கே அமைத்துள்ளார்)

    1.3.7 தே₃வதாதி₄கரணம் – ஸங்கதி – ப்ரமிதாதிகரணத்தின் இரண்டாவது ஸூத்ரத்தில் “மநுஷ்யாதி₄காரத்வாத்”-அதாவது “மனிதர்களுக்கு மட்டும் உபாஸநத்தில் தகுதி உள்ள படியால்” என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையுள் ஒரு கேள்வி எழுகிறது – ’மனிதர்களுக்கு மட்டும்’ என்று சொல்வதால் யாருக்குத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறது? என்று.
    விஷய வாக்யம் – இந்த அதிகரணத்தில் விஷய வாக்யம் கிடையாது. யுக்திகளின் அடிப்படை யில் தான் விசாரம்.

    ஸந்தேஹம் – விலங்குகள் முதலான தாழ்ந்த பிறவிகளுக்கு மட்டும் உபாஸநம் செய்யத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறதா? அல்லது மனிதர்கணை விட உயர்ந்த பிறவிகளான தேவர்கள் முதலானவர்களுக்கும் தகுதி இல்லை என்றும் சொல்லப்படுகிறதா?
    பூர்வ பக்ஷம் – தேவர்களுக்குத் தகுதி இல்லை , அர்தி₂த்வம் ஸாமர்த்₂யம் என்ற இரண்டும் இல்லாதபடியால்.
    அர்தி₂த்வம் – ஒரு பயனை அடைய வேண்டும் என்னும் ஆசைக்கு அர்தி₂த்வம் என்று பெயர். உபாஸநத்தின் பயன் முக்தி, அதாவது உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுதல். எனவே முக்தியில் ஆசை இருப்பவர்கள் தான் உபாஸநம் செய்யத் தகுதி உடையவர்கள். ஆனால் தேவர்களுக்கு அந்த ஆசை கிடையாது. ஒருவருக்கு துக்கம் இருந்தால் தான்-அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட முடியும். துக்கம் இருக்க வேண்டும் என்றால் உடல் இருக்க வேண்டும். தேவர்களுக்கு உடலே இல்லாதபடியால் துக்கம் கிடையாது, எனவே அந்த துக்கத்தைப் போக்கிக் கொள்வதில் ஆசையும் இருக்க முடியாது. எனவே அர்தி₂த்வம் இல்லாதபடியால் தகுதி கிடையாது.
    ஸாமர்த்₂யம் – ஒரு செயலைச் செய்வதற்கான திறமை தான் ஸாமர்த்₂யம். உபாஸநம் என்பது கர்மாநுஷ்டானம்,-ப்ராணாயாமம், ஆஸனம், அர்ச்சனை , நாம ஸங்கீர்தனம் முதலான பல செயல்களை உள்ளடக்கியது. இவற்றைச் செய்வதற்கு உடல் தேவை -தேவர்களுக்கு உடல் இல்லாதபடியால் உபாஸநம் செய்யும் ஸாமர்த்₂யம் கிடையாது –

    (மீமாம்சகர் -தேவதை வியக்தி அல்ல -சொற்களைக் கொண்டே -அடையாளம் என்பர்-விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியா -கல்யாணம் -அநவசாதம் -அனுத்ருஷ்யம் -சாதன சப்தகம் சொல்வார்கள் அன்றோ)

    தேவர்களுக்கு உடல் உண்டா?
    பூர்வ பக்ஷியின் வாதத்தின் அடிப்படை தேவர்களுக்கு உடல் கிடையாது என்பது தான். அதை எப்படி நிரூபிக்கலாம்?-உடல் உள்ளது என்று சொல்லும் ப்ரமாணம் இல்லாதபடியால் உடல் கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.-கேள்வி 1 – உபநிஷத்துக்களில் பல இடங்களில் தேவர்களின் செயல்கள் சொல்லப்படுகின்றனவே ?
    பதில் 1 – உபநிஷத்துக்களில் சொல்லப்படும் பொருள்களுக்கு ஏதாவது ஒரு ப்ரயோஜநம் இருக்க வேண்டும். அதில் சொல்லப்படும் உபாஸனத்துக்குப் பயன் உள்ளது. அதில் சொல்லப்படும் ப்ரஹ்மம் தானே புருஷார்த்தமாக உள்ளது, எனவே அந்த வாக்கியங்களுக்கும் ப்ரயோஜனம் உள்ளது. ஆனால் தேவதைகளுக்கு உடல் உள்ளது என்று சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. எனவே அந்த வாக்கியங்களுக்கு அப்படியே உண்மைத் தன்மையை ஏற்க முடியாது.

    கேள்வி 2 – கர்ம காண்டத்தில் சில மந்த்ரங்களிலும் அர்த்த வாதங்களிலும் தேவர்களின் உடல்கள், அவர்களின் சக்திகள்,அவர்கள் செய்யும் வீரச் செயல்கள் முதலானவை சொல்லப் பட்டுள்ளனவே ? எனவே உடல் இருக்க வேண்டுமே ?
    பதில் 2 – அந்த வாக்கியங்களும் செய்யப்படும் யாகத்தைப் புகழ்வதற்காகவே வந்தவை – யாகம் உயர்ந்தது என்று சொல்வதற்காக அந்த யாகத்தில் பூஜிக்கப்படும் தேவதையைப் பற்றி இல்லாத பெருமைகளை எல்லாம் சொல்லி நம்மை யாகம் செய்ய ஊக்குவின்றனவே தவிற, அந்தப் பெருமைகளை எல்லாம் உண்மை என்று கொள்ள முடியாது.

    கேள்வி 3 – கர்ம காண்டத்தில் இந்த இந்த பயனை விரும்புபவன் இந்த இந்த கர்மத்தைச் செய்ய வேண்டும் என்று கர்ம விதி₄கள் (கட்டளைகள்) உள்ளனவே . இன்று செய்யப்படும் ஒரு யாகம் என்றோ பயனளிக்கும் என்று சொல்வது பொருந்தாது. எனவே அந்த யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்று உண்ட தேவதை தான் த்ருப்தி அடைந்து பிற்காலத்தில்
    பயனளிக்கிறார் என்று கொள்ள வேண்டும். இதெல்லாம் தேவர்களுக்கு உடல் இருந்தால் தானே நடக்க முடியும்
    பதில் 3 – கர்மங்களைச் செய்வதால் அபூர்வம் என்றழைக்கப்படும் புண்ணியம் உண்டாகிறது. அது ஆத்மாவிடம் வெகு காலத்துக்கு இருக்கும். அது தான் பிற்காலத்தில் ஸ்வர்கம் முதலான பயன்களை அளிக்கிறது. தேவர்கள் ஹவிஸ்ஸை ஏற்பதோ , உண்பதோ , த்ருப்தி அடை வதோ , பயனளிப்பதோ கிடையாது. எனவே அவர்களுக்கு உடல் கிடையாது.

    தேவர்களும் ஸம்ஸாரிகளே
    ஸித்தாந்தம்
    – இந்தப் பூர்வபக்ஷத்தை 5 ஸூத்ரங்களாலே வேத வ்யாஸர் தவறென்று நிரூபிக்கிறார்.
    1- தத் உபரி அபி பா₃த₃ராயண: ஸம்ப₄வாத்
    தத்
    – “அது”-, அதாவது மோக்ஷம் அடைவதற்காக ப்ரஹ்மத்தைப் பற்றின உபாஸநம் என்பது
    உபரி அபி – “மேலேயும் உண்டு”-, மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் முதலானவர்களுக்கும் உண்டு
    பா₃த₃ராயண: – என்பது பா₃த₃ராயணர் என்கிற வேத வ்யாஸரின் கருத்து
    ஸம்ப₄வாத் – “ஸாத்தியமான படியால்”-, அதாவது அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் தேவர்களுக்கு ஸாத்தியமானபடியால்

    அர்தி₂த்வம் – இந்த்ரன் சந்த்ரன் முதலான தேவர்களும் இந்த உலகத்தில் தான் பிறந்துள்ளார்கள். ஒரு புல் தொடங்கி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா வரை இந்த உலகில் பிறந்த அனைவருமே கர்மத்துக்கு வஸப்பட்டு உடற்பிறவி அடைந்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் ஸம்ஸாரிகள் தான். எனவே தேவர்களுக்கும் அந்த துக்கத்திலிருந்து விடுதலை அடைவதாகிற முக்தியில் ஆசை இருக்கலாம். எனவே அர்தி₂த்வம் அவர்களுக்கு ஸாத்தியமே .
    ஸாமர்த்₂யம் – உபாஸநம் செய்யும் திறமையும் கூட அவர்களுக்கு உண்டு, மிக உயர்ந்த உடல் இருக்கிறபடியால்.
    அவர்களுக்கு உடல் இருப்பதற்கு என்ன ப்ரமாணம் உள்ளது என்று கேட்டார் பூர்வ பக்ஷி. அதற்கான பதில் –
    (1) உபநிஷத்துக்களில் தத்த்வங்களைச் சொல்லும் வாக்கியங்கள் – சாந்தோக்ய உபநிஷத்தில் பரமாத்மா உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது “நான் பலவாக ஆகக் கடவேன். என்னுடைய உடலான ஜீவாத்மாக்களைக் கொண்டு ப்ராணிகளின் உடல்களுக்குள்ளே புகுந்து அவர்களை பெயராலும் உருவத்தாலும் வேறுபடுத்தப் போகிறேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. ஜீவாத்மாக்களை பெயராலும் உருவத்தாலும் தேவர்கள்,மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று வேறுபடுத்துகிறார் பரமாத்மா. இந்த வேறுபாடுகள் ஜீவாத்மாவுக்கு நேரடியாக ஏற்பட முடியாது. ஒரு உடல் மூலமாகத் தான் வர முடியும். எனவே , தேவர்கள் என்று சொன்னாலே ஒரு விதமான உடலை எடுத்துக் கொண்டுள்ள ஜீவாத்மா என்று தான் பொருள். எனவே தேவர்களுக்கும் உடல் உண்டு.

    தேவர்களுக்கும் உடல் உண்டு
    2–உபநிஷத்துக்களில் உபாஸநத்தைப் பற்றிச் சொல்லும் கதைப் பகுதிகள் – ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் உபதேசம் செய்தார், இந்த்ரன் ப்ரஜாபதியிடம் உபதேசம் பெருவதற்காகச் சென்றார், 32 ஆண்டுகள் தொண்டு செய்தார், தன் ப்ரதிபிம்பத்தைத் தண்ணீரில் பார்த்தார், ப்ரஜாபதியிடம் கேள்வி கேட்டார் என்று தேவர்கள் செய்யும் பல செயல்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்படுகின்றன. இவற்றை யெல்லாம் பொய் என்று கொள்ள இயலாது. எனவே உடல் உண்டு

    3-கர்ம காண்டத்தில் மந்த்ரங்களும் அர்த்த வாதங்களும் – ’வஜ்ர ஹஸ்த: புரந்த₃ர:’ முதலான பல மந்திரங்களும் அர்த்தவாதங்களும் (புகழ்ச்சி வாக்கியங்களும்) தேவர்களின் உடல்கள், ஆயுதங்கள், சண்டைகள், சக்திகள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஏற்க வேண்டும்.

    (தை. ஸம். (2-4-12) –வஜ்ர ஹஸ்தபுரந்தர: | தேவேந்த்ரோ. வஜ்ரம் உதயச்சத் இந்த்ரன் வஜ்ராயுதத்தைக் கையில் கொண்டிருந்தான்.)

    ஆஷேபம் – ஒரு குழந்தையை மருந்து சாப்பிட வைப்பதற்காக ’இதை சாப்பிட்டால் உயரமாக ஆவாய்’ என்று பொய் சொல்வது போல், யாகத்தில் நம்மை ஊக்குவிப்பதற்காகப் பொய்யான பண்புகளை யெல்லாம் சொல்லுகிறது வேதம்
    ஸமாதாநம் – அக்குழந்தைக்கு அந்த வார்த்தை பொய்யானது என்று தெரிந்து விட்டால் மருந்து உண்பதில் ஆசையே பிறக்காது. அது போல், யாகம் செய்வதற்கு முன்னால் வேதத்தை ஆராய்ந்து புரிந்து கொள்ளும் ஒருவனுக்கு இந்தப் புகழ்ச்சி வாக்கியங்கள் எல்லாம் பொய்யானவை என்று தெரிந்து விட்டால் ஊக்கமே ஏற்படாது. வேதத்தின் குறிக்கோள் நிறை வேறாமல் போய்விடும். இல்லாத குணத்ணதச் சொல்லிப் புகழ்வதை விட, இருக்கும் உயர்வுகளைச் சொல்லிப் புகழ்ந்தால் தான் கேட்டு ஆராய்பவர்களுக்கு உண்மையான ஊக்கம் ஏற்படும். எனவே இவை எல்லாம் உண்மையே .

    4-கர்ம விதி₄கள் – கர்மங்கள் எப்படிப் பயனளிக்கின்றன என்னு கேள்வி எழும் போது வேதமே சொல்லுகிறது – நீ செய்யும் யாகத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பயன் அளிக்கிறார்கள் என்று. இதை விட்டுவிட்டு,’அபூர்வம்’ அல்லது ’புண்ணியம்’ என்று புதிதாக ஒரு பொருளைக் கற்பிப்பது வீணானது. நம் ஸித்தாந்தத்திலும் புண்ணியத்தை
    ஏற்கிறோம், ஆனால் அது யாகம் செய்யும் நம்மிடம் இருப்பதல்ல. வேதத்தின்படி நாம் நடந்தால் பகவானுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே புண்ணியம். வேதத்தை மீறி நடந்தால் அவருக்கு ஏற்படும் சீற்றமே பாபம். எனவே தேவர்களின் த்ருப்தியாலும் கோபத்தாலும் தான் நமக்குப் பயன்கள் கிடைக்கின்றன. எனவே அவர்களுக்கு உடல் உண்டு.

    1.3.7 தே₃வதாதாதி₄கரணம்-வேதங்களின் நித்யத்துவம்

    ஆஷேபங்களுக்கு விடை
    தேவர்களுக்கும் உடல் இருக்கிறபடியால் அவர்களுக்கும் அர்தி₂த்வம் ஸாமர்த்₂யம் என்ற இரண்டும் இருக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கும் உபாஸனத்தில் அதிகாரம் உண்டு என்றார் வேத வ்யாஸர்.-அதற்கு மேல் எழும் சில ஆஷேபங்களுக்கு மேல்வரும் ஸூத்ரங்களில் விடை அளிக்கிறார் –

    2-விரோத₄: கர்மணி இதி தேத் ந அநேக ப்ரதிபத்தே: தர்ஸநாத்
    விரோத₄: கர்மணி
    – (தேவதைகளுக்கு உடல் உண்டு என்று கொண்டால்) கர்மத்தில் முரண்பாடு ஏற்படும்
    இதி தேத் ந – என்று கூறினால் அது தவறு
    அநேக ப்ரதிபத்தே: தர்ஸநாத் –சக்திசாலிகள் பல சரீரங்கணை ஏற்றுக் கொள்வதை புராணங்களில் காண்கிறபடியால்
    ஆஷேபம் – ஒரே தேவதையைக் குறித்து பலரும் ஒரே காலத்தில் கர்மங்களைச் செய்யும் போது, அந்த தேவதை தன் உடலோடு ஒருவரிடம் மட்டும் தான் ஹவிஸ்ஸை ஏற்க முடியும் என்பதால் மற்றவரின் கர்மங்கள் பயனற்றவை ஆகும்.
    ஸமாதாநம் – ஸௌபரி முதலான ருஷிகளைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவர்களான தேவர்களும் ஒரே காலத்தில் எண்ணற்ற உடல்களை எடுத்துக் கொள்ள முடியும். எனவே எத்தனை பேர் ஒரே காலத்தில் ஹவிஸ்ஸை வழங்கினாலும் அந்த தேவதை அதை ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு ஒன்றுமில்லை

    3-சப்₃தே₃ இதி தேத் ந அத: ப்ரப₄வாத் ப்ரத்யஷ அநுமானாப்₄யாம்
    சப்₃தே₃
    – (வேதம் என்கிற) சப்தத்தில் (இந்த்ரன் முதலான அழியக் கூடிய பொருள்களைப் பற்றிப் பேசுவதால், இந்தரன் இல்லாத போது இல்லாத பொருளைச் சொல்லுவதால் உண்மைத் தன்மை இல்லாமை என்ற முரண்பாடு ஏற்படும்)
    இதி தேத் ந – என்று குறினால் அது தவறு
    அத: ப்ரப₄வாத் – அந்த சப்தத்திலிருந்தே உலகப் பொருள்கள் உண்டாகிறபடியால்
    ப்ரத்யஷ அநுமானாப்₄யாம் –-ஸ்ருதிகளாலும் ஸ்ம்ருதிகளாலும் (இவ்வாறு கூறப்படுகிறபடியால்)
    ஒரு இந்த்ரன் அழிந்தாலும் அதே போன்ற மற்ற ஓருவரை நான்முகன் படைத்து விடுகிறார் என்பதால் வேதத்தில் சொல்லப்பட்ட பொருள்கள் இல்லாமல் போகும் காலமே கிடையாது. எனவே இந்த தோஷமில்லை-

    4-அத ஏவ ச நித்யத்வம் – ஆகையாலேயே (வேதத்தின்) அழியாத் தன்மையும் (உறுதி யாகிறது)
    ஆஷேபம் – வேதத்திலேயே சில ரிஷிகளை ’மந்த்ர க்ருத்’ அதாவது மந்த்ரங்களைச் செய்தவர்கள் என்று சொல்கிறபடியால், வேதங்கள் இயற்றப்பட்டவையே , நித்யமாக இருக்க முடியாது
    ஸமாதாநம் – ’இந்த ரிஷி இந்த மந்த்ரத்தைச் செய்தார்’ என்பதும் வேதத்தலேயே உள்ள படியால், கீழ் ஸூத்ரத்தில் சொன்னபடிக்கு, அந்த ரிஷியின் பெயரைத் தன் மனதில் கொண்டுள்ள ப்ரஹ்மா அந்த ரிஷியைப் படைத்து, அவரைத் தவம் செய்யத் தூண்டி, அவர் ஆழ்ந்த த்யானத்தில் இருக்கும் போது அந்த மந்த்ரத்தை அவருக்குக் காட்டித் தருகிறார்.
    இப்படி யாரிடமும் கற்காமல் த்யானத்தில் மந்த்ரத்தைக் கண்டறிந்தபடியால் அவர்கள் ’மந்த்ர க்ருத்’ எனப்படுகிறார்கள்.

    (ஒவ்வொரு சதுர்யுகத்திலும் வியாசர் படைக்கப்படுகிறார் -வசிஷ்டர் வால்மீகி போல்வாரும் அவ்வாறு படைக்கப்பட்டு -தவம் செய்யத்தூண்டி -மந்த்ர த்ரஷ்டா -கண்டு அறிந்தவர்கள் -discovery வேறு invention வேறு -வர்ணதயா தர்சனம் -சந்தஸ்ஸுடன் கண்டு வெளியிடுகிறார்கள்-தமிழ் வேதம் -அருளிச் செயல்களும் அவ்வாறு தான் -இவையும் நித்யம் -யானாய்த் தன்னைத்தானே பாடி -என் முன் சொல்லும் மூவா முதல்வன் -இவர்கள் மூலமும் வெளிப்படுத்தினான்-ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
    ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்
    ||-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!)

    5-ஸமாந நாம ரூபத்வாச்ச ஆவ்ருத்தவ் அபி அவிரோத ₄: த₃ர்ஸநாத் ஸ்ம்ருதே:
    ஆவ்ருத்தவ் அபி ச
    – ப்ரளயத்தில் உலகமே அழிந்து திரும்பவும் ஸ்ருஷ்டி ஏற்படும் போதும்
    அவிராேத₄: – ப்ரஹ்மாவோ வேதச் சொற்களோ இல்லாதபடியால் வரும் முரண்பாடு இல்லை
    ஸமாந நாம் ரூபத்வாத் – ஒரே வடிவத்தோடும் பெயரோடும் பொருள்கள் உள்ள படியால் வேதமும் மாறாதபடியால்
    த₃ர்ஸநாத் ஸ்ம்ருதே: ச – ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் இவ்வாறு அறிகிறபடியால்.
    ப்ரளயத்தில் ப்ரஹ்மாவும் அழிந்து வேதச் சொற்களும் அழிந்தாலும், பகவானின் மனதில் எப்போதும் வரிசை மாறாமல் நித்யமாக வேதங்கள் உள்ள படியால் அவர் அடுத்தமுறை ஸ்ருஷ்டி செய்து, தன் நாபீ கமலத்தில் ப்ரஹ்மாவை உண்டாக்கி, அவருக்கு வேதங்களையும், பொருள்களின் வடிவங்களைப் பற்றின ஜ்ஞாநத்தையும் கொடுத்து, அவரை ஸ்ருஷ்டி செய்யச் சொல்கிறபடியால் அப்போதும் வேதச் சொற்களிலிருந்து தான் ஸ்ருஷ்டி நடக்கிறது, வேதமும் நித்யமானது அதாவது என்றும் மாறாத ஒரே வரிசையைக் கொண்டது என்பது நிரூபிக்கப்படுகிறது.
    ஆக, எந்த முரண்பாடுகளும் இல்லாதபடியால் தேவர்களுக்கும் உடல் உண்டு. எனவே அவர்களுக்கும் அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் இருக்கிறபடியால் அவர்களுக்கும் உபாஸநத்தில் தகுதி உண்டு என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.

    (யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் -)

    —————–

    1.3.8 மத்₄வதி₄கரணம்-குறிப்பிட்ட உபாஸநத்தில் ஸந்தேஹம்-மத்₄வதி₄கரணத்தின் பின்புலம்-மத்₄வதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் பொதுவாக தேவர்களுக்கு உபாஸநம் செய்யத் தகுதி உண்டு என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட தேவர்களுக்கு சில குறிப்பிட்ட உபாஸநங்களில் தகுதி உண்டா என்கிற சிறப்புக் கேள்விக்கு இந்த அதிகரணத்தில் பதில் அளிக்கப்படுகிறது.
    விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் மூன்றாம் அத்யாயத்தில் உள்ள மது₄ வித்₃யா
    அஸஸௌ வா ஆதி₃த்ய: தே₃வ மது₄, தஸ்ய த்₃யௌதேவ திரஶ்சீனவம்ச:, அந்தரிக்ஷம் அபூப:, மரீசய: புத்ரா:-இந்த ஸூர்யன் தான் தேவர்களின் தேன். த்₃யுலோகம் தான் கிளை , வானம் தான் தேன்கூடு, கிரணங்களே தேனீக்கள்

    ப்ராஞ்ச: ரச்மய: ப்ராச்ய: மது₄நாட்₃ய: | ருச: ஏவ மது₄க்ருத:, ருக்₃வேத₃ ஏவ புஷ்பம் | யச: தேஜ: இந்த்ரியம் வீர்யம் அந்நாத்₃யம் ரஸ: | தத் வஸவ: உபஜீவந்தி |
    ஸூர்யனின் (1) கிழக்குக் கிரணங்களே கிழக்கு தேன்கூடு- ருக் மந்த்ரங்களே தேனீக்கள், -ருக்வேத கர்மங்களே புஷ்பங்கள். அந்தக் கர்மங்களிலிருந்து பிறக்கும் தேஜஸ், ப₃லம் முதலானவையே தேன். அதை வஸுக்கள் பயன்படுத்துகிறார்கள்.
    (2) தெற்கு–யஜுஸ்– யஜுர்வேத-ருத்ரர்கள்
    (3) மேற்கு -ஸாமங்கள்-ஸாமவேத-ஆதித்யர்கள்
    (4) வடக்கு மற்றும்–அத₂ர்வாங்கி₃ரஸ் மந்த்ரங்கள் மற்றும் -இதிஹாஸ புராணக் கர்மங்கள் மற்றும்-மருத்துக்கள் மற்றும்
    (5) மேல் புறங்களில்,-உபநிஷத்துக்கவள தேனீக்கள், -ப்ரஹ்மம் தான் புஷ்பங்கள், – அத் தேனை ஸாத்ய தேவர்கள் பயன்படுத்துகிறார்கள்

    ந வை தே₃வா: அச்நந்தி ந பிப₃ந்தி ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி
    தேவர்கள் தேனை உண்பதோ குடிப்பதோ கிடையாது, அது பார்த்து மட்டுமே த்ருப்தி அடைகிறார்கள்

    (அந்தர்யாமியான அவனே தேன் -அவனைப் பார்த்தே திருப்தி அடைகிறார்கள் -வஸூக்களில் ஒருவனாக இருந்து பார்த்து மகிழ்கிறார்கள் -இதே போல் ருத்ரர்களில் ஒருவனாகவும் ஆதித்யர்களில் ஒருவனாகவும் மருத்துக்களில் ஒருவனாகவும் -ஸாத்ய புருஷர்களில் ஒருவராக கண்டு மகிழ்கிறார்கள் –இதுவே பலன்)அந்தர்யாமி உபாஸனமே சொல்லிற்று

    பூர்வபக்ஷியின் வாதம்
    ஸ ஏவ ஏத்தே₃வ ஏவம் அம்ருதம் வேத₃ வஸூநாமேவ ஏகோ பூ₄த்மா த்ருப்யதி

    எவனொருவன் இப்படி உபாஸநம் செய்கிறானோ அவன் வஸுக்கள்/ஆதித்யர்கள்/ருத்ரர்கள்/மருத்துக்கள்/ ஸாத்ய தேவர்களுக்குள் ஒருவனாக ஆகி அந்த அம்ருதத்தைப் பயன்படுத்தி மகிழ்கிறான்
    அத₂ த்த ஊர்த்₄வ: உதே₃த்ய நைவ உதே₃தா ந அஸ்தமேதா ஏகல ஏவ ஸ்தா₂தா | ஸக்ருத்₃தி₃வா ஹைவ அஸ்மை ப₄வதி ய ஏதாம் ஏவம் ப்₃ரஹ்ம உபநிஷத₃ம் வேத₃-இந்த உலகத்தைத் தாண்டிய பிறகு அவனுக்கு ஸூர்யன் உதிப்பதுமில்லை , அஸ்தமிப்பதுமில்லை . ப்ரஹ்மத்தைப் பற்றிய இந்த ரஹஸ்யமான உபதேசத்தை அறிந்து உபாஸநம் செய்பவனுக்கு எப்போதுமே பகல் போல் இருக்கிறது.

    ஸந்தேஹம் – இந்த மது₄ வித்₃யையில் வஸுக்கள் ஆதித்யர்கள் முதலாவனாருக்குத் தகுதி உண்டா? கிடையாதா?
    பூர்வ பக்ஷம் – அவர்களுக்கு இந்த உபாஸநத்தில் தகுதி கிடையாது.

    (இதில் முதல் இரண்டு ஸூத்ரங்களும் பூர்வபக்ஷ வாதம் மட்டுமே -மூன்றாவது மட்டுமே ஸித்தாந்த ஸூத்ரம்)

    1-மத்₄வாதி₃ஷு அஸம்ப₄வாத் அநதி₄காரம் ஜைமிநி:
    மத்₄வாதி₃ஷு –
    மது₄ வித்யை முதலான வற்றில்
    அநதி₄காரம் – (வஸுக்கள் முதலான தேவர்களுக்கு) அதிகாரம் இல்லை
    ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
    அஸம்ப₄வாத் – (அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் அவர்களுக்கு இருக்க) வாய்ப்பு இல்லாதபடியால்.
    ஸாமர்த்₂யம் இல்லை – எந்த ஒரு செயலிலும் கர்த்தா (எழுவாய்) வேறாகவும் கர்மம் (செயப்படுபொருள்) வேறாகவும் இருக்க வேண்டும். எனவே , இந்த மது₄ வித்₃யையில் வஸுக்கள் முதலானோர் உபாஸிக்கப் படுகிறபடியால், அவர்கள் தங்களையே உபாஸித்துக் கொள்வது பொருந்தாத படியால், அவர்களுக்கு இவ் வுபாஸநத்தில் ஸாமர்த்₂யம் இல்லை .
    அர்தி₂த்வம் இல்லை – நம்மிடம் இல்லாத பொருளைத் தான் ஆசைப் பட முடியும். இந்த உபாஸநத்தின் பயன் வஸுக்கள் முதலானவர்களாக ஆகுவது. அதில் வஸுக்களாகவே இருப்பவர்களுக்கு ஆசை பிறக்க முடியாது.

    வேத வ்யாஸரின் பதில்
    2-ஜ்யோதிஷி பா₄வாத் ச –
    “ஜ்யோதிஸ்ஸில் இருக்கிறபடியாலும்”
    “தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி: ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம். அதில், “தேவர்கள் ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறார்கள்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதைச் சொல்வதால் ப்ரயோஜநம் இல்லை . “தேவர்கள் மட்டும் தான் ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறார்கள்” என்று பொருள் கொள்வது பொருந்தாது, மனிதர்களுக்கும்
    அத் தகுதி இருக்கிறபடியால். எனவே , “தேவர்கள் ப்ரஹ்மத்தை மட்டுமே உபாஸிக்கிறார்கள்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். எனவே , மது வித்யை என்ற உபாஸநம் ப்ரஹ்மத்தைப் பற்றியது அல்ல என்பதால் வஸுக்கள் முதலான தேவர்களுக்கு அதில் தகுதி கிடையாது.

    ஸித்தாந்தம் – ஒரே ஸூத்ரத்தாலே இதற்கு வ்யாஸர் பதிலளிக்கிறார்.
    3- பா₄வம் து பா₃த₃ராயண: அஸ்தி ஹி
    பா₄வம் து
    – (அந்த தேவர்களுக்கும் இந்த உபாஸநத்தில்) தகுதி உள்ளது
    பா₃த₃ராயண: – என்று பா₃த₃ராயணர் எனப்படும் வேத வ்யாஸர் கூறுகிறார்.
    அஸ்தி ஹி – (அவர்களுக்கும் அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் இருப்பதற்கு வாய்ப்பு) உள்ளதன்றோ
    இந்த உபாஸநத்தின் பயனைச் சொல்லும் போது “ஸக்ருத்₃தி₃வா ப₄வதி” அதாவது எப்போதும் பகல் போல் இருக்கிறது என்று ஸர்வஞ்ஜத்வம் (அனைத்தையும் அறியும் தன்மை ) சொல்லப் படுகிறது. எனவே இந்த உபாஸநத்தின் பயன் மோக்ஷம் தான். அதனால் இதுவும் பரமாத்மாவைப் பற்றிய உபாஸநமாகத் தான் இருக்க வேண்டும். நேரடியாகவும்-“ப்₃ரஹ்மோபநிஷத்” அதாவது-“ப்ரஹ்மத்தைப் பற்றிய ரஹஸ்யமான உபதேசம்” என்றும் சொல்லப்பட்டுள்ளது.
    ஆகையால், இங்கு உபாஸநம் செய்யும் வஸுக்களைக் காட்டிலும் உபாஸிக்கப்படும் ப்ரஹ்மம் வேறானபடியால்,அவர்களுக்கு ஸாமர்த்₂யம் உண்டு. ஒருமுறை வஸுவாக இருந்தாலும் திரும்பவும் வஸுவாக ஆகி, பின் பரமாத்மாவை அடையும் ஆசையும் இருக்கும் வாய்ப்பு உள்ளபடியால் அர்தி₂த்வமும் உள்ளதே -எனவே வஸுக்கள் முதலானவர்களுக்கு இந்த மது₄வித்₃யையில் அதிகாரம் உண்டு என்று தெளிவாகிறது.

    (மன்னவராய் உலகாண்டு பின் வானவராய் மகிழ்வு எய்துவர் போல் வசுவாகி பின்பு ப்ரஹ்ம அனுபவம் இந்த உபாசனத்தின் பலன்-இது பூர்வகமாக ப்ரஹ்ம பிராப்தி என்றவாறு -ப்ரஹ்மத்தைப் பற்றிய உபாசனமே -போதாயனாரும் அருளிச் செய்கிறார் -)

    ————————

    1-3-9-அபசூத்ராத்₄வதி₄கரணம்-சோகமே ப்ரஹ்ம ஜ்ஞாநத்துக்குத் தகுதி

    அபசூத்₃ராதி₄கரணத்தின் பின்புலம்-1-3-9-அபசூத்₃ராதி₄கரணம் – ஸங்கதி – அர்தி₂த்வம் மற்றும் ஸாமர்த்₂யம் இருந்தால் உபாஸநம் செய்யும் தகுதி உண்டு என்று சொல்லப்பட்டபடியால், மனிதர்களுள் நான்காம் வர்ணத்தவர்களுக்கும் தகுதி உண்டா என்று கேள்வி எழுகிறது.
    விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் நான்காம் அத்யாயத்தில் உள்ள ஸம்வர்க₃ வித்₃யா ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண꞉ ஶ்ரத்₃தா₄தே₃யோ ப₃ஹுதா₃யீ ப₃ஹுபாக்ய ஆஸ | ஸ ஹ ஸர்வத ஆவஸதா₂ந்மா பயாஞ்சக்ரே ஸர்வத ஏவ மே அந்ந மத்ஸ்யந்தீதி
    ஜாநஸ்ருதி என்பவர் ஸ்ரத்தையோடு பல தானங்களைச் செய்பவராய், அதிகமாக அன்ன தானம் செய்பவராய் இருந்தார்.-மக்களுக்கு உணவளிப்பதற்காகப் பல சத்திரங்களைக் கட்டி வைத்திருந்தார். அவருடைய தர்ம ஸ்ரத்தையால் மகிழ்ந்த இரண்டு ரிஷிகள் அவருக்கு ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி, ஹம்ஸத்தின் வடிவத்தை
    எடுத்துக் கொண்டு அவர் அருகிலே பரந்தனர்

    ஹம்ஸோ ஹம்ஸம் அப்₄யுவாத₃ – ஹோ ஹோ அயி ப₄ல்லாக்ஷ ப₄ல்லாக்ஷ ஜாநஶ்ருதே ꞉ பௌத்ராயணஸ்ய ஸமம் தி₃வா ஜ்யோதிராததம் | தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா மா ப்ரதா₄க்ஷீரிதி-ஒரு ஹம்ஸம் மற்ற ஓன்றிடம் சொன்னது – “அடேய்! உனக்குக் கண் தெரிய வில்லையா? அங்கு ஜாநஸ்ருதியின் தேஜஸ் ஸூர்யனைப் போல் ப்ரகாஸமாக உள்ளது. அதனருகில் செல்லாதே , அது உன்னை எரித்து விடும்”கம்வர ஏநமேதத் ஸந்தம் ஸயுக்₃வாநமிவ ரைக்வமாத்த₂ | ஸர்வம் தத₃பி₄ஸமைதி யத் கிஞ்ச ப்ரஜா꞉ ஸாது₄ குர்வந்தி
    யஸ்தத்₃வேத₃ யத்ஸ வேத₃ ஸ மயைதது₃க்த-
    அதற்கு அந்த ஹம்ஸம் பதில் சொன்னது – “எதற்கு இந்த ஜாநஸ்ருதியை ரைக்வர் அளவுக்கு உயர்ந்தவன் போல் புகழ்கிறாய்? அவருடைய செயலிலும் ஜ்ஞாநத்திலும் தான் மற்ற அனைவர் செயலும் ஜ்ஞாநமும் அடக்கம்”

    செல்வம் கொடுத்து உபதேசம் பெற்றான்
    ஜாநஶ்ருதி꞉ உபஶுஶ்ராவ | ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாச | ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித₃மிதி ப்ரத்யேயாய| தம் ஹோவாச – யத்ராரே ப்₃ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே ₃நமர்ச்சே₂தி
    –இதைக் கேட்ட ஜாநஸ்ருதி, தனக்குக் குறை இருப்பதை உணர்ந்து வருந்தினான். அப் பெருமையை உடைய ரைக்வரைக்
    காண வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னுடைய தூதர்களை அனுப்பி அவரைத் தேடினார். அவர்கள் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினார்கள். இப்படிப்பட்ட ஜ்ஞாநீ நகரங்களில் இருக்க மாட்டார், காடுகளில் தேட வேண்டும் என்று ஜாநஸ்ருதி கூறினார். அங்கு தேடி ரைக்வரைக் கண்டுபிடித்தார்கள் தூதர்கள்.

    ஷட்ஶதாநி க₃வாம் நிஷ்கம் அஶ்வதரீரத₂ம் ததா₃தா₃ய ப்ரதிசக்ரமே | அநு ம ஏதாம் ப₄க₃வோ தே ₃வதாம் ஶாதி₄ யாம் தே₃வதாமுபாஸ்ஸ இதி தயைவ ஸஹ கோ₃பி₄ரஸ்த்விதி-ஜாநஸ்ருதி உடனே அவரைக் காண ஓடி வந்தார். அவருக்கு 600 மாடுகள், தேர்கள் முதலானவற்றை ஸமர்ப்பித்து, நீங்கள் உபாஸிக்கும் தெய்வத்தை எனக்கும் உபதேசிக்க வேண்டும் என்றான். ஆனால் ரைக்வர், இந்தச் செல்வத்தை நீயே வைத்துக் கொள் என்றார். ஏனென்றால், பணி விடை செய்யாமல் உபதேசம் பெற விரும்பும் ஜாநஸ்ருதி தன்னுடைய செல்வத்துக்கு ஏற்ற தக்ஷிணையைக் கொடுத்தால் தான் அவனுக்கு ஸ்ரத்தை இருக்கும் என்ற ரைக்வருக்கு எண்ணம்.ஸஹஸ்ரம் க₃வாமயம் நிஷ்க: அஶ்வதரீரத₂ இயம் ஜாயாயம் க்₃ராமோ -யஸ்மிந்நாஸ்ஸே | அந்யேவ மா ப₄க₃வ꞉ ஶாதீ₄தி–ஜாநஸ்ருதி மறுபடியும் 1000 மாடுகள், தேர்கள், பெண் மற்றும் க்ராமங்களை ஸமர்ப்பித்துப் ப்ரார்த்தித்தான்.

    ஆஜஹார இமா꞉ ஶூத்₃ர அநேநைவ முகே₂ந ஆலாபயிஷ்யதா₂-“சூத்ரனே ! இந்தச் செல்வத்தைக் கொண்டு நான் உனக்கு உபதேசிக்கிறேன்” என்று ரைக்வர் கூறினார்.
    ஸந்தேகம் – நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவர்களுக்கு ப்ரஹ்ம உபாஸநத்தில் தகுதி உண்டா? கிடையாதா?

    பூர்வபக்ஷியின் வாதங்கள்-பூர்வபக்ஷம் – அவர்களுக்கும் அர்தி₂த்வம் மற்றும் ஸாமர்த்₂யம் இருக்கிறபடியால் அவர்களுக்கும் தகுதி உண்டு.-வேத அத்யயனம் செய்து அதன் மூலம் அடையும் ஜ்ஞாநமும், ஆதா₄னம் என்ற வைதிகச் செயலால் கிடைக்கும் மூன்று
    அக்நிகளும் இருந்தால் தான் யாகம், ஹோமம் முதலானவற்றைச் செய்ய முடியும். நான்காம் வர்ணத்தவர்களுக்கு அத்யயனமும் ஆதானமும் இல்லாதபடியால் அவர்களுக்கு வைதிக கர்மங்களில் தகுதி இல்லை என்று பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -ஆறாவது அத்தியாயத்தில் -ஜைமிநி ரிஷியால் சொல்லப்பட்டது. ஆனால் உபாஸநம் என்பது மனதால் செய்யும் செயலானபடியால்-அதற்கு வேறு எதுவும் தேவையில்லை , எனவே நான்காம் வர்ணத்தவர்களும் அதைச் செய்ய இயலும்.

    கேள்வி – உபாஸநத்துக்கு அங்கமாக யாகம் ஹோமம் முதலான வைதிக கர்மங்கள் தேவை யாயிற்றே ?
    பதில் – அது யாகம் ஹோமம் தான் என்று நிர்பந்தம் இல்லை . நான்காம் வர்ணத்தவர்கள் வர்ணாஸ்ரம தர்மமே போதும்
    கேள்வி – வேதம் கற்காமல் ப்ரஹ்மத்தைப் பற்றியும் அதை உபாஸிக்கும் முறையையும் அறிய இயலாதே ?
    பதில் – இதிஹாஸ புராணங்களை நான்காம் வர்ணத்தவர்களும் கேட்கலாம் என்று ஸாஸ்த்ரம் சொல்கிறபடியால்-அதன் மூலம் அவர்களும் ப்ரஹ்மத்தை யும் அதை உபாஸிக்கும் முறையையும் அறிய முடியும்.
    ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்துக்கு 7 ஸூத்ரங்களில் விடை அளிக்கிறார் வேத வ்யாஸர்.
    1–சுக் அஸ்ய தத₃நாத₃ர ஸ்ரவணாத் ததா₃ ஆத்₃ரவணாத் ஸூஸ்யதே ஹி

    அஸ்ய சுக் – இந்த ஜாநஸ்ருதியின் ஸோகம்
    தத₃நாத₃ரஸ்ரவணாத் – தன்னை அநாதரித்துப் பேசிய ஹம்ஸத்தின் வாக்கியத்தைக் கேட்டதாலும்
    ததா₃ ஆத்₃ரவணாத் – அப்போதே ரைக்வரைக் காணத் துடிப்போடு ஓடிவந்த படியாலும்
    ஸூஸ்யதே ஹி – கோடி காட்டப்படுகிறது அன்றோ
    இங்கு ’சூத்ரன்’ என்ற சொல் நான்காம் வர்ணத்தைக் குறிக்கவில்லை . அச் சொல்லுக்கு’ஸோகம் உடையவன்’ என்று மற்ற ஓரு பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தில் தான் ரைக்வர் ஜாநஸ்ருதியை அழைக்கிறார். அவனுக்கு ஹம்ஸத்தின் வாக்கியத்தைக் கேட்டதால் ஸோகம் இருந்தது என்பதை அவன் ஓடிவந்ததே காட்டிக் கொடுக்கிறது.

    வேத வ்யாஸரின் பதில்கள்
    தான் தற்போது இருக்கும் நிலையைக் குறித்து ஸோகம் இருந்தால் தான் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிவதற்குத் தகுதி உடையவன் ஆகிறான். அதனால் தான் ரைக்வர் ஜாநஸ்ருதியை ’ஸோகம் உடையவனே ’ என்று அழைக்கிறார்.-இதிஹாஸ புராணங்களை நான்காம் வர்ணத்தவர்களும் கேட்கலாம் என்று ஸாஸ்த்ரம் சொன்னாலும், அது தங்கள்
    பாபங்களைப் போக்கிக் கொள்வதற்காகத் தான். அதன்மூலம் உபாஸநம் செய்வதற்கு அல்ல.-உபநிஷத்துக்களைக் கற்காமல் இதிஹாஸ புராணங்கள் மூலம் மட்டும் ப்ரஹ்மத்தையும் அவரை உபாஸிக்கும் முறையையும் சரியாக முழுமையாக அறிய இயலாது. அவை விவரண நூல்கள் தான், மூல நூல்கள் அல்ல. உபாஸநத்துக்கு அங்கமாக யாகம், வேதம் ஓதுதல், தவம் முதலானவை சொல்லப்பட்டுள்ளன. அவற்றைச் செய்ய
    தகுதி இல்லாதபடியால், நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபாஸநம் செய்யத் தகுதி கிடையாது

    2-ஷத்ரியத் வக தேச – “க்ஷத்ரியன் என்று அறிகிறபடியாலும்”
    ஜாநஸ்ருதி அதிகமாக அன்னதானம் செய்தார், அவருக்குத் தூதர்கள் இருந்தார்கள், அவர் ரைக்வருக்கு க்ராமம் தேர்கள் முதலானவற்றை வழங்கினார் என்னும் அடையாளங்களை வைத்து அவர் க்ஷத்ரியன் என்று அறிய முடிகிறது. எனவே அவர் நான்காம் வர்ணத்தவர் அல்ல.

    3- உத்தரத்ர ஸைத்ர்ரதே₂ந லிங்கா₃த் – “மேலே ஸைத்ர்ரதனாலே ,-அடையாளத்தால்”
    ரைக்வர் ஜாநஸ்ருதிக்குச் செய்யம் உபதேச த்தில் காபேயர்கள் என்ற ப்ராஹ்மணர்கணளயும் அபிப்ரதாரி என்ற க்ஷத்ரியனையும் பற்றிச் சொல்கிறார். எனவே இந்த வித்யையில் க்ஷத்ரியர்களுக்கு தான் தொடர்பு உள்ளது என்று தெரிகிறது. எனவே ஜாநஸ்ருதியும் க்ஷத்ரியனாகத்தான் இருக்க வேண்டும்.-அபிப்ரதாரி என்பவன் க்ஷத்ரியன் என்று எப்படித் தெரியும்? அதற்கு பதில் ’லிங்கா₃த்’ என்று. அவனுக்குச் சைத்ர்ரத₂ன் (அழகான தேரை உடையவன்) என்று சொல்லப்பட்ட அடையாளத்தைக் கொண்டு அவன் க்ஷத்ரியன் என்று அறியலாம்.

    வேத வ்யாஸரின் பதில்கள்
    4- ஸம்ஸ்கார பராமர்சாத் தத₃பா₄வ அபி₄லாபாத் ச-
    ப்ரஹ்ம உபாஸநத்தைப் பற்றிச் சொல்லும் இடங்களில் எல்லாம் ’உபநயனம்’ என்ற ஸம்ஸ்காரம் சொல்லப்படுகிறது. ஆனால் நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபநயனம் என்ற ஸம்ஸ்காரம் கிடையாது என்று
    ஸாஸ்த்ர நூல்கள் கூறுகின்றன. எனவே நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபாஸனத்தில் அதிகாரம் கிடையாது.

    5-தத₃பா₄வ நிர்தா₄ரணே ச ப்ரவ்ருத்தே : சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள ஸத்யகாமனின் கதை முதலான இடங்களில் மாணவன் நான்காம் வர்ணத்தவன் இல்லையா என்று தெரிந்து கொண்டு ஆசார்யன் ப்ரஹ்ம உபாஸனத்தைப் பற்றி உபதேசிப்பது காணப்படுகிறது.

    ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
    உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
    இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
    எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

    6- ஸ்ரவண அத்₄யயன அர்த₂ ப்ரதிஷேதா₄த்-நான்காம் வர்ணத்தவர்கள் வேதத்தைக் கேட்கவவோ , ஓதவவோ , அதில் சொல்லப்பட்ட யாகம் முதலானவற்ணறச் செய்யவோ கூடாது என்று கட்டளைகள் வேதத்தில் உள்ளபடியால், அவர்கள் உபாஸநம் செய்வது பொருந்தாது.

    தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

    7-ஸ்ம்ருதே : ச-ரிஷிகள் எழுதிய ஸ்ம்ருதிகளிலும் இதே போல் கட்டளைகள் காணப்படுகிறபடியாலும் இந்த அர்த்தம் நிரூபிக்கப்படுகிறது.

    அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
    ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்

    இவ்வாறு, நான்காம் வர்ணத்தவர்களுக்கு பக்தி யோகம் எனப்படும் உபாஸநத்தைச் செய்ய அதிகாரம் இல்லை என்று வேதவ்யாஸர் நிரூபித்தார். ஆனால் அவர்களுக்கும் முக்தி அடையவதற்கான எல்லா உரிமையும் உண்டு. -அதனால் தான் வேதமே ’ ஸரணாகதி ’ என்ற மற்ற ஓரு உயர்ந்த மார்கத்தை உபதேசித்து, அது அனைவருக்கும் பொதுவானது, யார் வேண்டுமானாலும் ஸரணாகதியின் மூலம் முக்தி அடையலாம் என்று கூறுகிறது. ஆழ்வார்கள், நம்முடைய ஆசார்யர்கள் முதலான அனைவருமே ஸரணாகதியை சிறந்த மார்கமாகக் கருதி பின்பற்றினார்கள்

    உடலை வைத்து வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்ய வேண்டும் -பக்தியோகம் த்ரைவர்ணத்தவர்க்கும் ஆண்களுக்கும்-யாகம் ஹோமம் செய்ய பல கட்டுப்பாடுகள் உண்டே- -உடலைப் பார்க்காதே -ஆத்மாவை உஜ்ஜீவிக்க சரணாகதி விதிக்கப்பட்டுள்ளதே

    —————

    1.3.6 ப்ரமிதாதி₄கரணம்–மீதமிருக்கும் ஸூத்ரங்கள்-பரமாத்மாவைக் கண்டு பயப்படும் தேவர்கள்-1-3-6-ப்ரமிதாதிகரணத்தில் கட்டை விரல் அளவில் உடலுக்குள் இருப்பவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல என்று-முதல் இரண்டு ஸூத்ரங்களால் நிரூபித்தார் வேதவ்யாஸர். அப்போது உபாஸநத்தில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி எழ, மூன்று அதிகரணங்களாலே அதற்கு பதில் அளித்தார். இனி, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, மேலும் இரண்டு ஸூத்ரங்களால் கட்டை விரல் அளவுடையவர் பரமாத்மாவே என்று நிரூபிக்கிறார்.

    3-கம்பநாத் – “நடுக்கத்தால்”-கட்டை விரல் அளவுடைய புருஷனைப் பற்றிச் சொல்லும் வாக்கியங்களுக்கு இடையே , இந்த வாக்யம் உள்ளது –
    யதி₃த₃ம் கிம்ச ஜக₃த் ஸர்வம் ப்ராண ஏஜதி நி꞉ஸ்ருதம் ।
    மஹத்₃ப₄யம் வஜ்ரமுத்₃யதம் ய ஏதத்₃விது₃ரம்ருதாஸ்தே ப₄வந்தி ||

    இந்த உலகத்திலிருக்கும் அனைத்து ப்ராணிகளும் எந்தப் ப்ராணனால் வாழ்கின்றனவோ , யாரிடமிருந்து உண்டாகின்றனவோ , தூக்கிய வஜ்ராயுதம் போலிருக்கும் யாரைப் பார்த்துப் பயந்து செயல்படுகின்றனவோ அவரே கட்டை விரல் அளவுடையவர்.
    ப₄யாத₃ஸ்யாக்₃நிஸ்தபதி ப₄யாத்தபதி ஸூர்ய꞉ । ப₄யாதி₃ந்த்₃ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா₄வதி பஞ்சம꞉ ||
    அவருக்கு பயந்து தான் அக்₃நி தஹிக்கிறார், ஸூர்யன் உதிக்கிறார், இந்த்ரன் அக்₃நி வாயு ம்ருத்யு முதலான தேவர்களும் செயல்படுகிறார்கள்.
    இவ்வாறு தேவர்கள் எல்லாரும்கூட ’இவருடைய ஆணையை மீறினால் என்ன ஆகுமோ ?” என்று பயந்து செயல்படுவது பரமாத்மாவைக் கண்டு மட்டும் தான் என்று மற்ற உபநிஷத்துக்களில் நாம் காண்கிவறாம் – “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ ஸூர்யா சந்த்₃ர மஸௌ வித்₄ருதௌ திஷ்ட₂த:” முதலான இடங்களில்.-எனவே இந்த கட்டை விரல் அளவுடையவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    பரமாத்மாவின் ஒப்பற்ற ஒளி
    4-ஜ்யோதி: த₃ர்சநாத் –
    “ஒளி காணப்படுகிறபடியால்”
    கட்டை விரல் அளவுடைய புருஷனைப் பற்றிச் சொல்லும் வாக்கியங்களுக்கு இடையே இந்த வாக்யம் உள்ளது –
    ந தத்ர ஸூர்யோ பா₄தி ந சந்த்₃ரதாரகம் நேமா வித்₃யுதோ பா₄ந்தி குத: அயமக்₃நி꞉ ।
    தமேவ பா₄ந்தமநுபா₄தி ஸர்வம் தஸ்ய பா₄ஸா ஸர்வமித₃ம் விபா₄தி ||

    “அந்தப் புருஷனுக்கு முன் ஸூர்யனோ , சந்த்ரனோ , நக்ஷத்ரங்களோ , மின்னலோ , அக்நியோ ஒளிவிடுவதில்லை . அவருடைய ஒளியில் ஒரு பகுதியை அவர் அநுக்ரஹத்தால் அடைந்து தான் இவை ஒளி விடுகின்றன”
    இப்படி மிகவும் ஒளி பொருந்திய உலகப் பொருள்களையே இருட்டடிப்பு செய்யும் அளவுக்கு ஒளி வாய்ந்தவராய், அவர் அநுக்ரஹத்தால் ஸூர்யன் முதலானவற்றைப் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா தான் என்று மற்ற உபநிஷத்துக்களில் காணப்படுகிறது.
    பரமாத்மா தான் பல இடங்களில் ’பரம் ஜ்யோதிஸ்’ (மிக உயர்ந்த ஜ்யோதிஸ்) என்று அழைக்கப்படுகிறார்.-எனவே , இங்கு கட்டை விரல் அளவுடையவராகச் சொல்லப்பட்டவர் பரமாத்மாவே என்று நிரூபிக்கப்பட்டது.

    ————–

    1-3-10-அர்த்தாந்தரத்வாதி₃ வ்யபதே₃சாதி₄கரணம்-முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா

    அதி₄கரணத்தின் பின்புலம்
    1.3.10 அர்தா₂ந்தரத்வாதி₃ வ்யபதே₃ச அதி₂கரணம் – ஸங்கதி
    – கீழ் 1.3.5 தஹராதிகரணத்தில் சாந்தோக்ய உபநிஷத்தின்-8ஆம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட தஹர வித்யை ஆராயப்பட்டது. அதில் எழுந்த கேள்விகளுக்கு விடை யளிக்கத் தான்
    6,7,8,9 அதிகரணங்கள் பிறந்தன. அவை முடிந்தபடியால், மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக அதே சாந்தோக்யத்தின் 8ஆம் அத்யாயத்தின் இறுதியான பகுதியை ( 14 கண்டங்கள் இதில் உண்டு -இறுதி இரண்டு கண்டங்கள் இதன் விஷயம் )இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார் வ்யாஸர்.
    விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் 8ஆம் அத்யாயத்தின் 14ஆம் கண்டத்திலிருக்கும் முதல் மந்த்ரம்-ஆகாஸோ வை நாம நாமரூபயோர் நிர்வஹிதா தே யத₃ந்தரா தத்₃ப்₃ரஹ்ம தத₃ம்ருதம் ஸ ஆத்மா-ஆகாசம் தான் பெயர்களையும் வடிவங்களையும் நிர்வாஹம் செய்கிறது, அது பெயர்களும் வடிவங்களும் அற்றது,
    அதுவே ப்ரஹ்மம் (பெரியது), அதுவே அம்ருதம் (மரணமற்றது), அதுவே ஆத்மா (உள் புகுந்து வ்யாபிக்கக் கூடியது)

    ஸந்தேகம் – இங்கு ஆகாசம் என்று சொல்லப்படுபவது முக்தி அடைந்த ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?
    பூர்வபக்ஷம் – முக்தி அடைந்து, தன் இயற்கையான நிலையில் இருக்கும் ஜீவாத்மா தான் இங்கு சொல்லப்படுகிறார்.
    அஶ்வ இவ ரோமாணி விதூ₄ய பாபம் சந்த்₃ர இவ ராஹோ : முகா₂த் ப்ரமுச்ய |
    தூ₄த்வா ஸரீரம் அக்ருதம் க்ருதாத்மா ப்₃ரஹ்ம லோகம் அபி₄ஸம்ப₄வாமி ||

    இதுக்கு முன் மந்த்ரத்தில் ’குதிரை ரோமங்களை உதிர்ப்பது போல் பாபங்களை உதிர்த்து, ராஹுவின் முகத்திலிருந்து சந்த்ரன் வெளி யேறுவது போல் உடலிலிருந்து வெளியேறி, நித்யமான ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான்’ என்றுள்ளது.–எனவே , முன் மந்த்ரத்தில் முக்தாத்மாவைப் பற்றி பேசியிருக்கிறபடியால், இந்த மந்த்ரமும் அவரைப் பற்றியது தான்.நாமரூபயோ : நிர்வஹிதா’ (பெயர் உருவங்களை உடையவர்) என்று முக்தி அடைவதற்கு முன் ஜீவாத்மாவின் நிலை சொல்லப்படுகிறது. ’தே யத₃ந்தரா’ (பெயர் உருவங்களுக்கு அப்பாற்பட்டவர்) என்று முக்தி நிலை சொல்லப்படுகிறது.
    ஆகாசம்’ என்பது ஜீவாத்மாவே . இடையில் ப்ரஜாபதி வாக்யம் உள்ள படியால் தஹராகாசம் என்கிற பரமாத்மா அல்ல.

    ஆ காசம் நன்றாகப் ப்ரகாசிப்பதால் -தல் லிங்காத் -முன்பே பார்த்தோம் -இதுவும் முக்தாத்மாவுக்கும் பொருந்தும் -பிரஜாபதி வாக்கியத்தில் விஷயமும் முக்தாத்மா பற்றியதே -என்பது அவர் வாதம்

    வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
    (1) ஆகாச: அர்தா₂ந்தரத்வாதி₃ வ்யபதே ₃சாத்

    ஆகாச: – இங்கு ஆகாசம் என்று சொல்லப்படுபவர் [பரமாத்மா தான்]
    அர்தா₂ந்தரத்வாதி₃ – வேறுபடுத்தும் தன்மை முதலானவை
    வ்யபதே ₃சாத் – சொல்லப்படுகிறபடியால்
    அர்த₂ம் என்றால் பொருள். அர்தா₂ந்தரம் என்றால் வேறு பொருள். அர்தா₂ந்தரத்வம் என்றால் வேறுபாடு. இங்கு அதே சொல் வேறுபாட்டை உணர்த்தும் தன்மைகளைக் குறிக்கிறது. இந்த ஆகாசம் என்ற பொருளை ஜீவாத்மாவிடமிருந்து வேறுபடுத்தும் தன்மை இங்கேயே சொல்லப்பட்டுள்ளது தான் முதல் யுக்தி, இந்த ஆகாசம் பரமாத்மா என்று நிரூபிக்க.
    “ஆகாஸோ வை நாம நாமரூபதயா: நிர்வஹிதா” என்று இந்த ஆகாசம் தான் பெயர்களையும் உருவங்களையும் நிர்வாஹம் செய்கிறது அதாவது ஆள்கிறது என்று சொல்லப்படுகிறது. ஸம்ஸாரத்தில் இருக்கும் பத்₃த₄ ஜீவாத்மா இந்த பெயர் உருவங்களை உடையவரே தவிற அவற்றை ஆள்பவர் அல்ல. முக்த ஆத்மாவும் இதைப் போன்ற உலகச்
    செயல்களைச் செய்வதில்லை என்று உபநிஷத்துக்கள் சொல்வதை ’ஜக₃த்₃ வ்யாபார வர்ஜம்’ என்ற அதிகரணத்தில் காட்டப் போகிறோம். மேலும், பெயர் உருவங்களை ஆள்பவர் பரமாத்மாவே என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன.

    “அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி” (சாந்தோக்ய உபநிஷத் 6.3.2)
    “என் உடலாக இருக்கும் இந்த ஜீவாத்மா மூலம் பொருள்களுள் புகுந்து பெயர் மற்றும் வடிவங்களைப் பிரிப்பேனாக”
    “ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ₄ர: நாமாநி க்ருத்வா அபி₄வத₃ந் யதா₃ஸ்தே ” (புருஷ ஸூக்தம்)
    “எல்லா உருவங்களையும் செய்த பரமாத்மா பெயர்களையும் செய்து அவற்றை ஓதிக் கொண்டிருகிறார்”
    மேலும், ’தே யத₃ந்தரா’ என்று இதற்குப் பொருத்தம் சொல்லப்படுகிறது. பரமாத்மா நாம ரூபங்கள் இல்லாதவர், -அதாவது பாபமற்றவரான படியால் பிறப்புக்கு அப்பாற்பட்டவர். எனவே அவரே இவற்றை ஆள்கிறார் என்று.
    ’ஆதி₃ வ்யபதே ₃சாத்’ (முதலானவை சொல்லப்படுகிறபடியால்) என்று ’ப்ரஹ்மம்’
    , ’அம்ருதம்’, ’ஆத்மா’
    என்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. இவையும் இயற்கையில் பரமாத்மாவுக்கே முழுமை யாகப் பொருந்தக் கூடியவை .

    ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு
    கேள்வி –
    அச்வ இவ ரோமாணி’ என்ற முன் மந்த்ரத்தில் முக்தாத்மா தானே சொல்லப்படுகிறார்?
    பதில் – அல்ல, அங்கும் இறுதியில் ’ப்ரஹ்மத்தின் லோகத்தை அடைகிறான்’ என்றுள்ள படியால், இந்த மந்த்ரமும் முன்னால் தஹராகாசம் என்று சொல்லப்பட்ட பரமாத்மாவைப் பற்றித் தான் சொல்கிறது. உபாஸநம் செய்பவனால் இவ்வாறு அடையப்படுகிறார் பரமாத்மா என்று அவர் பெருமையே சொல்லப்படுகிறது. எனவே அவரே ஆகாசம்.

    ஆகாசம்’ என்ற சொல்லும் நமக்கு ’தஹராகாசம்’ என்று இதே அத்யாயத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவையே நினைவூட்டுகிறது. இடையில் ப்ரஜாபதி வாக்யத்தில் ஜீவாத்மா பேசப்பட்டிருந்தாலும், அங்கு ஜீவாத்மாவின் தன்மையைச் சொன்னதும் “இவ்வாறு தன் உண்மைத் தன்மையை உணர்ந்த உபாஸகன் தஹராகாசம் என்கிற பரமாத்மாவைத் த்யானிக்க வேண்டும்” என்று சொல்வதற்கே . எனவே பரமாத்மாவைப் பற்றின பேச்சு முடியவில்லை

    கேள்வி – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவே தான் முக்தி அடைந்த பிறகு தூய்மையான நிலையில் இருக்கிறபடியால் பரமாத்மா, பர ப்ரஹ்மம் எனப்படுகிறார். தனியாக பரமாத்மா கிடையாதே ? எனவே முக்தனே தான் இந்த ஆகாசம்.
    பதில் – இதற்கு மேல் இரண்டு ஸூத்ரங்களாலே விடை யளிக்கிறார் வேத வ்யாஸர்.
    2-ஸுஷுப்தி உத்க்ராந்த்தயோ : பே ₄தே ₃ந – ’வ்யபதே ₃சாத்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்க.
    ஸுஷுப்தி உத்க்ராந்த்தயோ : – ஸுஷுப்தி
    (ஆழ்ந்த உறக்கம்) மற்றும் உத்க்ராந்தி (மரணம்) ஏற்படும் போது
    பே ₄தே ₃ந – [ஜீவாத்மாவைக் காட்டிலும்] வேறுபட்டவராக [பரமாத்மா சொல்லப்படுகிறபடியால்]
    ஸுஷுப்தி –(्ப்ராஜ்ஜேந ஆத்மநா ஸம்பரிஷ்வக்த: ந பா₃ஹ்யம் கிஞ்சந
    வேத₃ நாந்தரம்)
    – “ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையும் வெளிப் பொருள்களையும் அறியாதவனான அறிவிலியான ஜீவாத்மாவை மிக்க அறிவுடையவர் அணைக்கிறார்”. எனவே , அந்த மிக்க அறிவுடையவர் வேறு ஓருவர் தான்.
    உத்க்ராந்தி -(ப்ராஜ்ஜேந ஆத்மநா அந்வாரூட₄: உத்ஸர்ஜந் யாதி) – “இந்த ஜீவன் மிக்க அறிவுடை யவரான ஆத்மாவாலே செலுத்தப்பட்டு உடலை விட்டுப் புறப்படுகிறான்”. இங்கும் மிக்க அறிவுடையவர் என்று சொல்லப்படும் பரமாத்மா முக்தி அடையும் ஜீவனைக் காட்டிலும் வேறு என்று தெரிகிறது.

    கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
    ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே
    வீடைப் பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
    ஓடித் திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே  

    3- பத்யாதி₃ சப்₃தத₃ப்₄ய: – “பதி முதலான சப்தங்களாலும்”
    பரமாத்மாவைப் பற்றிப் பேசும் இடங்களில் பதி, ஈச்வரன், பாலகன், ஸேது, அம்ருதம், அபயம் முதலான சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், எந்த ஜீவனுக்கும் பொருந்தாது.
    (ஸர்வஸ்ய அதி₄பதி: ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ்ய ஈசாந: )
    “அனைத்துக்கும் தலைவர் (ஸ்வாமீ), அனைத்தையும் தன் வசத்தில் கொண்டவர், அனைத்தையும் இயக்குபவர்”
    ( ந ஸாது₄நா கர்மணா பூ₄யாந் நோ ஏவ அஸாது₄நா கநீயாந்)
    “அவர் நற் செயல்களால் பெருமை அடை வதும் இல்லை , தீய செயல்களால் தாழ்ச்சி அடைவதும் இல்ல, அதாவது பாப புண்யங்களுக்கு அப்பாற்பட்டவர்.”
    (ஏஷ ஸேது: வித₄ரண : ஏஷாம் லோகாநாம் அஸம்பே ₄தா₃ய)
    “இவர் தான் அணையாக இருந்து உலகங்களைத் தாங்குகிறார், பொருள்களில் தன்மைகள் கலக்காமல் பார்க்கிறார்”
    இவ்வாறு வருணிக்கப்படுபவர் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்

    (ஸ்வ நிஷ்டா -தானே தமது பெருமையில் நிலை நின்றும் அனைத்தையுமே தாங்குகிறார்)

    பாதத்தின் சுருக்கம்
    இந்த பாதத்தில் பரமாத்மாவுக்குச் சொல்லப்பட்ட குணங்கணை ஶ்ரீ வேதாந்த தேசிகன் கூறுகிறார் –
    (1) விச்வாத்மா
    (2) அநந்த பூ₄மா
    (3) நியமந த்₄ருதி க்ருத்
    (4) முக்த போ₄க்ய ஸ்வபா₄வ:
    (5) த₃ஹ்ர ஸ்வாதா₄ர ஸர்வ:
    (6) ஹ்ருத₃ய பரிமித அவஸ்த₂யா ஸர்வ யந்தா |
    (7) தே ₃வாதீ₃நாம் உபாஸ்ய:
    (8) வஸுமுக₂ விபு₃தை ₄: ஸ்வாத்ம பா₄வேந ஸேவ்ய:
    (9) சூத்₃ராத்₃ யுபாஸ்த்யனர்ஹ : ப்ரபு₄ ரிஹ பு₃பு₃தே ₄
    (10) நாமரூபைக கர்தா ||

    (1) உலகத்தை உடலாகக் கொண்டவர்,
    (2) எல்லை யற்ற ஆநந்தமே வடிவானவர், (3) அனைத்தையும் தாங்கி இயக்குபவர்,
    (4) முக்தர்களால் அநுபவிக்கப்படுபவர்,
    (5) மிகச்சிறிய ஆகாசமாக அனைத்தையும் தாங்குபவர்,
    (6) ஹ்ருதயத்திலிருந்து இயக்குபவர்,
    (7) தேவர்களாலும் உபாஸிக்கப்படுபவர்
    (8) வஸு முதலான வர்களாலும்கூட தனக்கு அந்தர்யாமியாக உபாஸிக்கப்படுபவர்,
    (9) நான்காம் வர்ணத்தவர்களால் உபாஸிக்கப் படாதவர்,
    (10) பெயர் உருவங்களை நிர்வஹிப்பவர் பரமாத்மா
    என்று மூன்றாம் பாதத்தில் பத்து அதிகரணங்களால் சொல்லப்பட்டது.

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பாஷ்யம் —ஸமுதாயா அதிகரணம் (2-2-3)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

    March 9, 2025

    சூத். 2-2-17 :: ஸமுதாய உபய ஹேதுகே அபி ததப்ராப்தி ::

    புத்தாவதாராம் பகவதவதாரம் ஆன்படியாலே அவனும் ஸர்வஜ்ஞன்தான். அவனுக்கு கிஞ்சித்தும் மோகம் கிடையாது.
    இல்லை மற்றவர்களை மோகிப்பனோ என்னில் அவனும் தான் ஸர்வலோக ஸுக்ருது, தயாவான் ஆனபடியாலே
    விப்ரலிப்சை கிஞ்சித்தும் கிடையாதே. ஆகையாலே பாஞ்சராத்ர சாஸ்த்திரத்தைப் போலே புத்தாகமத்தையும்
    பிரமாணமாக கொள்ளவேண்டும் என்று பூர்வ பக்ஷம் வருமேல் , அப்படி அன்று. புத்தாகமாம் நமக்கு பிரமாணம் ஆகாது.

    வேதாபஹாரிணம் தைத்யம் மீன ரூபே நிராகரோது
    ததர்த்தாபகாரோ தைத்யாம் வியாஸ ரூபி நிராகரோது

    என்று புத்தாவதாரம் எடுத்து பிரவர்த்தனம் பண்ணின பிரக்ரியைகளை எல்லாம் வியாஸாவதாரம் எடுத்து நிராகரித்தார் என்பது பார்க்கத்தக்கது.
    பகவானே சொன்னானாகிலும், வேத விரோதமானால் அதை நிரசிக்க வேண்டியது தான். பௌத்தர்களுடைய ஆசார பிரக்ரியைகளை
    ஜைமினி பூர்வ காண்டத்தைக் கொண்டு நிரசிக்க, அவருடைய ஆசாரியரான வியாசர் அவர்களுடய தத்வங்களை நிராசனம் பண்ணுகிறார் இங்கு.

    பகவான் தான் இட்ட கட்டளைகளை யார் பாலனம் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு எதிரானவர்களை
    தண்கடல் வட்டத் துள்ளே திண்கழல் அசுரர்களை தடிந்துண்ணும் –என்றபடி அவர்களுடைய மோகன சாஸ்த்திர
    நிரசனம் பண்ண பகவான் எடுத்த ஆவேசாவதாரம்தான் வியாஸாவதாரம்.

    இப்படிப் பட்டதான புத்தாவதாரத்தில் என்னவெல்லாம் சொன்னாரோ, அதை பின்பற்றி இந்த கலியுகத்தில்
    மாத்யமிகன்
    வைபாஷிகன்
    சௌத்ராந்த்ரன்
    யோகோசாரன்
    என்று நால்வகை பௌத்த சாகைகள் ஏற்பட அவர்களில் , முதல் முன்னம்
    யோகாசாரனும், சௌத்திராந்திகனும் நிராசனம் பணப் படுகிறார்கள் இந்த அதிகரணத்தில்.

    இவர்கள் நால்வருமே க்ஷணிக வாதிகள். இவர்கள் சித்தாந்தத்தில் காலம், ஆகாசம், திக்கு, விதிக்கு எதுவும் கிடையாது.
    இவர்கள் மதத்தில் ஜ்ஞானம் ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஜ்ஞாத்ரு ஞேயங்கள் ஒப்புக்கொள்ளப் படவில்லை.
    அந்த ஜ்ஞானமும் எப்படி இருக்கிறது என்றால் அது க்ஷணிகம் என்கிறான்.
    அவ்வோ க்ஷணம் என்பதும் தோன்றும் போதே மறைவது. க்ஷணிக கடபடாதிகள் இருப்பால், க்ஷணம் என்கிற காலம்
    ஆனுமானித்து அறியலாவது. அதை கடக்ஷண : என்கிறார்கள்.
    இமை கொட்டும்போது, இமையோடு இமை சேரும் கால பரிமாண அளவே ஆகும் அது.
    வைசேஷிகனோ ஒரு பொருள் உண்டாகும்போது உற்பத்தி, ஸ்திதி, விநாசம் என்று 3 கால அளவைகளையாவது ஒத்துக் கொள்கிறான்,
    ஆனால் பௌத்தன் உற்பத்தி ஸ்திதியிலேயே விநாசம் என்பததாக அத்யந்த அல்பமாக அதை கணக்கிட்டு,
    இல்லாமைக்கு ஈடாக சொல்லிவிடுகிறான்.

    வைசேஷிகன் என்ன சொன்னான்? பாஷாணம்போல இருக்கிற பிரக்ருதி மேலே தர்மபூத ஜ்ஞானம் வந்தேறி என்கிறான்.
    அத்வைதி ஸ்வரூபத்தில் தான் ஜ்ஞானம் உண்டு. அதற்கு சுடர், பிரகாசம், தர்மபூத ஜ்ஞானம் இவை எதுவும் கிடையாது என்றான்.
    நம்முடைய சித்தாந்தத்தில் தீபம் போல ஸ்வரூப கத ஜ்ஞானம் உண்டு. தீப பிரபை போலே அத்தல் பரம்பி வருகிற
    தர்ம பூத ஜ்ஞானம் என்ற இரண்டும் ஆத்மாவுக்கு உண்டு என்பதாகும்.

    பௌத்தர்களின் மாதயமிகன் ஆத்மா சூன்யம் என்றான். மற்ற மூன்று பேரும் க்ஷணிக விஜ்ஞானம் ஆத்மா என்றனர்.
    அதனுடைய உற்பத்தி விநாசம் எத்தனை வேகம் என்றால், அது நம்முடைய இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாத அளவுக்கு
    க்ஷணிக பிரவிருத்தி என்றனர். அது உள்ளே இருந்தால் ஆலய விஜ்ஞானம். வெளியே வந்தது என்றால் பிரவிருத்தி விஜ்ஞானம் என்றனர்.
    ஜ்ஞாத்ரு ஞேயங்கள் எல்லாம் பிரமம் என்றும் சொல்லி வைத்தார்கள்.

    ஜகத் அபல பதி என்று முதல் முதலில் அத்வைத மதத்தைச் சொன்னவன் யோகாசாரன்.
    இத்தால் அவர்களுக்கு அத்வைத விநாயகன் என்ற பெயரும் உண்டு. சங்கரருடைய ஆசாரியரான கௌடபாதர் அதை வாங்கி,
    வைதிக மதத்தோடு பொருத்தி பிரஹ்ம ஏக வாதத்தை பிரவர்த்திப்பித்தார். இத்தால் இவர்களை ,
    இந்த ஏக பிரஹ்ம காரண வாந்தியை பிரச்சன்ன பௌத்தன் என்று சொல்வதும் உண்டு.

    சத்ருக்களை ஜெயிக்க அபிசார மார்க்கத்தை வேதமே சொல்வது போல, இந்த பௌத்தர்களை ஜெயிக்க அவர்களுடைய
    ஏக விஜ்ஞான வாதத்தைக் கொண்டே பிரஹ்ம சத்ய வாதத்தை சித்திக்க வேண்டி வந்தது.
    எப்படி கர்ம காண்டத்தை ஜைமினி பண்ணி ஜ்ஞான காண்டத்தை வியாஸர் பண்ணும்படி விட்டாரோ ,
    அதே போல பௌத்தர்களுடைய ஜகன் மித்யா வாதத்தை ஒப்புக்கொண்டு சங்கரர் நிர்விசேஷ பிரஹ்ம ஸத்ய வாதத்தை செய்து போகவே ,
    பகவத் ராமானுஜர் கிஞ்சித்து அதை திருத்தி, ஸவிசேஷ பிரஹ்மாத்வைதத்தை நிலை நாட்டலாயிற்று.
    இல்லையாகில், பிரஹ்ம சத்யம் என்பதிலிருந்தே தொடங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா?

    ஜகன் மித்யாவாதிகளான அத்வைதிகள் , போக்தா, போக்கியம், பிரேரிதா என்கிற த்ரிபுடியில்
    போக்தா போக்கியம் இரண்டும் பிரகிருதி தர்மமாகையாலே அவை வியாவஹாரிகா சத்யம் என்று தள்ளி விட்டு,
    பிரேரித்தாவாகிற பிரஹ்மம் ஒன்றே பாரமார்த்திகம் என்றனர். ,

    வைபாஷிகனும், சௌத்திராந்தனும் ஞேயமான ஜகத்தை க்ஷணிகம் என்றாலும் அதை ஒத்துக் கொண்டவர்கள்.
    அதிலும் வைபாஷிகன் அவை பிரத்யக்ஷ சித்தம் என்றான். சௌத்திராந்திகன் அனுமான சித்தம் என்றான்.
    இது தான் இருவருக்குமான வித்யாசம். ஒப்புமை மூவருமே க்ஷணிக வாதிகள்.

    ஜகத் காரண- காரிய வாதத்தில்
    தார்கிகனுடையது — ஆரம்ப வாதம்.
    வைபாஷிக, சௌத்திராந்திகன் – – ஸங்காத வாதம்
    சாங்கியன் , விசிஷ்டாத்வைதி — பரிணாம வாதம்.
    மாத்தியமிக்கான் — சூன்ய விவர்த்த வாதம்
    (முத்துச் சிப்பியைப் பார்த்து வெள்ளி என்று பிரமித்து போல சூன்யத்தைப் பார்த்து இந்த அஹம் என்பதும்,
    ஜகத்தும் வருகின்றன என்ற வாதம். )
    யோகாசாரன் – விஜ்ஞான விவர்த்த வாதம்.
    சங்கரர் — நிர்விசேஷ பிரஹ்ம விவர்த்த வாதம்
    பர்த்ருஹரி – ஸப்த விவர்த்த வாதம் (ஸப்த விஸ்போட – Big Bang Theory)

    ஸங்காத வாதிகளான வைபாஷிக, சௌதிராந்திகன் சொல்வது
    நிலம், நீர், தீஎரி , கால் என்கிற நான்கும் கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம் என்கிற தன்மைகளை அடைவே
    நிலம் 4ம் , நீர் கந்தம் தவிர்ந்த 3ம், எரிதீ கடை 2ம், கால் ஸ்பர்ச தன்மை மட்டும் உடைய பரமாணுக்களின் சங்காதம் ஆகும்.
    பல பூமி பரமாணுக்கள் சேர்ந்து பூமியும், பல ஜல பரமாணுக்கள் சேர்ந்து ஜலமும், பல தேஜஸ் பரமாணுக்கள் சேர்ந்து தேஜஸும்,
    அவ்விதமே பல வாயு பரமாணுக்கள் சேர்ந்து வாயுவும் உண்டாக, இந்த 4பூதங்களும் சேர்ந்து
    தேஹம், இந்த்ரியங்களாகிற பௌதிக பொருள்கள் உண்டாகின்றன.
    இந்த 4 தத்துவங்களின் அபாவமே ஆகாசம் என்றும் சொல்கிறான்.

    அதில் அஹம் என்கிற ஆத்ம விஷயம்,
    தேஹத்தின் உள்ளிருக்கிற பொருள்களின் ஜ்ஞானத்தின் ஸந்தானமே/சமூகமே ஆகும் .
    இதை அனுமானத்தால் அறியலாம் என்கின்றனர்.
    ஸௌத்ராந்திகன் பாஹ்ய பதார்த்தங்களான ஞேயங்களும் அனுமானிகமே என்கிறான் அவன்.
    யோகாசாரன் பாஹ்ய பதார்த்தங்களை சொப்ன துல்யம் என்று சொல்லி மித்யா என்கிறான்.

    உபயஹேதுகே ஸமுதாயே அபி — ஸ்பர்ச,ரூப, ரஸ, கந்த தன்மாத்திரங்களின் சமுதாயமான
    காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய 4 பூதங்களும், அவைகளை காரணமாகக் கொண்ட தேக, இந்திரிய சமுதாயத்திலும்
    ததப்ராபதி – ஸங்காதமாகும் தன்மை ஒவ்வாது, ஸர்வ க்ஷணிக வாதத்தாலே..

    ———–

    சூத். 2-2-18 :: இதரேதர பிரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந, ஸங்காதபாவா நிமித்ததவாத் ::

    இதரேதர பிரத்யயத்வாத் -இந்த சுழச்சியில் ஒன்றுக்கொன்று காரணமாக இருப்பதால்
    உபபந்நம் – சமுதாயமாகும் தன்மை பொருத்தும்.
    இதிசேத் ந – என்று இப்படி சொல்வது பொருந்தாது
    ஸங்காத அபாவா நிமித்வத்வாத் – அவித்யை முதலானவை பூத சமுதாயத்துக்கு காரணம் ஆகமாட்டாது –

    பாஹ்யார்த்த அஸ்தித்வ வாதிகளான வைபாஷிக, ஸௌத்ராந்திகன் இருவரில் ஒருத்தன் ஜகத்து பிரத்யக்ஷ பரம் என்றான்.
    மற்றோருத்தன் அனுமானிக பரம் என்றான். ஸ்பர்ச, ரஸ ரூப கந்தம் இவைகளின் பரமாணுக்களின் ஸங்காதம் 4 பூதங்களாய்,
    அப்படியே இந்த 4 பூதங்களின் ஸங்காத்தம் பௌதிகமான தேஹேந்திரிய மாகும் என்றும்,
    இந்த ஸங்காத்தமும் க்ஷணிகம் ஆனபடியால், இவைகளின் தோற்றம் மித்யையாய் ஸத்யமன்று.
    அண்டத்தில் உள்ளபடியே பிண்டத்தில் என்ற வகையில், தேகத்தின் உள்ள பொருள்களின் ஜ்ஞான ஸந்தான பரம்பரையே ஆத்மா
    ஆன படியாலே கார்யா காரணம் அனைத்தும் க்ஷணிகம் என்கிறான்.

    நாம் சொல்லுகிற அவித்யா, கர்ம, வாசனா, ருசி , பிரகிருதி ஸம்பந்தமாகிற 5 – பஞ்ச ஆராதி (spokes ) கர்ம பிரவாக
    சக்கரத்தால் வந்த ஷாட்பாவ விகாரம் சுக துக்க ஹேது போல
    இவர்களும் க்ஷணிக பொருள்களை ஸ்திரமானவைகளாக நினைப்பிடும் விபரீத ஜ்ஞானத்தால் பந்தமும்,
    அதனால் ராக துவேஷமும் உண்டாகி ஜனனமரண சக்ரம் சுழல்கிறது என்கின்றனர்.

    இதெல்லாம் நடக்க நாம் ஆத்மா என்பது ஸ்திரமாக உண்டு. புண்ய பாபங்கள் என்பன உண்டு.
    பகவான் தான் இதை எல்லாம் நடத்துகிறான் என்று ஒத்துக் கொள்கிறோம்.
    ஆனால் இவர்கள் இவை எதுவும் ஸ்திரம் என்பதை ஒத்துக்க கொள்ளாமல் அவித்யா-பிரகிருதி சம்பந்த சக்ரத்தைத் பற்றி விவரிக்கிறார்கள்.
    அவர்கள் சொல்லுகிற அவித்யா என்பது
    அவித்யா, விஜ்ஞானம் ஸம்ஸ்கார: நாமரூபம் ஷடாயதனம் ஸ்பர்ஸ: வேதநா திருஷ்ணா உபாதானம் பவா ஜாதி
    ஜரா மரண சோக : பரிவேதனம் துக்கம் துர்மனஸ்தா என்கிற ஆரங்களைக் கொண்டதாய்
    ஒன்றுக்கு கொன்று காரணமாக இருந்து லோக யாத்திரை நடக்கிறது என்கின்றனர்.
    இதற்கு ஸுத்திகையில் ராஜத புத்தி பண்ணுகையாகிற அதஸ்மிந் தத் புத்தி – காரணமாகிறது என்கின்றனர்.
    இவன் சொல்லுகிற ஆவித்யை பிரமத்துக்குக் காரணமாகலாம் ஒழிய, ஸங்காதத்துக்கு காரணமா முடியாது என்பது கேள்வி.

    ஸர்வம் யதார்த்தம் பிரமா என்று அவன் சொல்லுகிறான்.
    ஸர்வம் யதார்த்தம் ஜ்ஞானம் என்று நாம் சொல்லுகிறோம்.
    சித்தம் என்பது க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவைக் குறிக்கும்.
    சைத்யம் ஸ்ரத்தை வீர்யம் ஸ்ம்ருதி ப்ரீத்தி இத்தோடு பூத தாதுக்கள் சேர்வதால் தேஹேந்த்ரிய பிராணன் சம்பவிக்கின்றன என்கிறான்.

    ஜ்ஞாநாதி -இச்சேதி- யததே-கரோதி- அநுபவதி- ஸுக்யதி என்று இவை அனைத்தும் எத்தனை சுருக்கமாக நடந்தாலும்
    அவை நடப்பதற்கு அத்யல்ப காலமாவது வேண்டாவோ ?
    அதற்குள்ளாகவே தோன்றும் பூத பௌதிகங்கள் நசிந்து விடுகின்றன என்கிற க்ஷணிக விஜ்ஞானத்தால்
    சமுதாய உத்பன்னத்துக்கு அவகாசமே கிட்டாது என்பதால் இவர்கள் சொல்வது பொருந்தாது.

    ஸ்திரத்தில் அஸ்திரத்தவ புத்தி பண்ணுகிற ஜீவன் அவனும் அஸ்திரம் என்றான போது,
    அஸ்திரமான ஜ்ஞானத்தால், அஸ்திரமான ஜீவன் ஸ்திரத்தவ புத்தி பண்ணுகிறான் என்பது எங்கனம் பொருந்தும் ?
    காரணமான அந்த பிரமாத்மக ஜீவனும் அஸ்திரமேயாய் ஸங்காதம் யாரைக் கொண்டு உண்டாகும் ?
    உத்தர க்ஷணம் உண்டாக்குவதற்கு முன்பாக, பூர்வ க்ஷணம் நஷ்டமானால், பதார்த்தங்களின் உற்பத்தி எப்படி சாத்தியம் ?
    இங்கு க்ஷணம் என்பது பதார்த்தங்களைக் குறிக்குமல்லது காலத்தைக் குறிக்காது.
    காரணம் பௌத்தன் காலம். ஆகாசம். திக்கு இவைகளை ஒத்துக் கொள்வதில்லை என்பதை முன்பே பார்த்தோம்.
    ஸதி குட்யேது சித்ர கர்ம : ? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத?
    கந்தர்வ லோக சலா – என்று கூடிக் கலைகிற மேகக் கூட்டம் – ஜலதர படலம் – போல உள்ள இவர்களுடைய
    க்ஷணிக வாதத்தால் இதரேயிதர பிரத்யய உத்பந்நம் அஸம்பவம்.

    ————–

    சூத். 2-2-19 :: உத்தரோத்பாதே ச பூர்வ நிரோதாத் ::

    உத்ரோத்பாதே – பின் க்ஷணம் உண்டாகும் வேளையில்,
    பூர்வநிரோதாத் ச — முன் க்ஷணம் அழிந்து விடுவதால் , இவர்கள் வாதம் பொருந்தாது.

    உங்களைப் போல் ஸத் காரிய வாதம் என்றால் நீங்கள் சொல்வது ஏற்புடைத்து. ஆனால் அஸத்தே காரியமாகிறது
    காரணம் அஸது என்பது எங்களுடைய வாதம்.
    இல்லாததனின்றும் (5ஆம் வேற்றுமை உறுபு) இருப்பு உண்டாகி நசிகிறது என்பதாக சொன்னான்.
    நையாயிகன் இல்லாததால் (6ஆம் வேற்றுமை) – காரியம் அஸதாகையால் – புதிதாக உண்டாகிறது என்பதாக அவர்கள் வாதம்.

    இதற்கு மறுப்பு என்ன வென்றால் – இல்லாத தின்றும் பொருள்கள் உண்டாவதானால், எப்போதுமே சிருஷ்டி நடக்கலாமே ?
    காரணம் என்ற நிமித்தம் இருக்க வேண்டாவே ? என்றால் அதற்கு அவர்கள் சமாதானம் இப்படி உள்ளது.
    அதாவது ஒரு பொருள் உண்டாகி நசியும் போது அந்த பொருளின் அபாவம் ஏற்படுகிறதே,
    அந்த அபாவத்தால் அப்பொருளின் உற்பத்தி அடுத்தடுத்து நடப்பதற்கு காரணமாகிறது என்கிறான்.

    அபாவம் ஒன்று இருந்தால் பொருள் உண்டாகும் என்றால், கட அபாவத்தால் கடம் தான் ஏன் உண்டாக வேண்டும்?
    கடம். படம். அஸ்வம். சிம்மம் இவை ஏன் உண்டாக்க கூடாது என்பதற்கு அவர்கள் சொல்வதாவது
    கட அபாவத்தில் இருந்து கட ஜாதிதான் உண்டாகும் வேறு பொருள் உண்டாகாது என்கிறான்.
    அதாவது காரண காரியத்துக்கு விசஜாதியத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஸஜாதீயத்தைத்தான் ஒத்துக் கொள்வதாகச் சொல்கிறான்.

    ஆக, அதை வாதத்திற்காக ஏற்றாலும், , ஒருகடத்தினுடைய அபாவத்தால்
    நானா வர்த்தித – வேறு வேறு இடத்தில், தேசத்தில் உள்ள கடங்களின் உத்பன்னம் – சாத்தியமோ என்ன? இல்லை
    எந்த இடத்தில் எந்த கடத்தின் அபாவம் உண்டாச்சுதோ அந்த இடத்தில் அந்த கடஜாதி உத்பன்னமே சாத்தியம் என்றான்.
    தேச காலங்களை இவர்கள் ஒத்துக் கொள்ளாததால் , கிரகிக்கிற ஆலய விஜ்ஞானமோ, பிரவர்த்தக விஜ்ஞானமோ
    எதுவும் ஸ்த்ரமில்லாதபோது இவர்களுடைய இந்த வாதம் தள்ளத் தக்கது.

    இவர்கள் சொல்லுகிற அவித்தையைக் காட்டிலும் நாம் சொல்லுகிற அவித்யை வேறுபட்டது.
    அநஹத்தில் அஹம் புத்தி பண்ணுகை அஹங்காரம்– சரீரமே ஆத்மா என்று நினைக்கை அஹங்காரம்.
    இந்த பாவ பந்தம் பாரமார்த்திகம் . அத்வைதிகள் சொல்வது போல் அபாரமார்த்திகம் – ஸ்வப்ன துல்யம்.
    வாக்யார்த்த ஜ்ஞானத்தால் போக்க வல்லது என்பது அல்ல. அது பகவத் கேவல கிருபையால் மட்டும் போக்க வல்லது.
    பகவத் கிருபா பிரசாத லப்த ஜ்ஞாநாந் மோக்ஷ : என்பது நம்முடைய சம்பிரதாயம்.

    தர்மி கல்பனார்த்தோ வரம் தர்ம கல்பனா – தர்மி ஸப்த வாச்சயமான ஆத்மா என்பது க்ஷிணிகம் தான்.
    அது க்ஷணிக விஜ்ஞான சந்தானமே. அதுவே சரீரகதமாக இருக்கும் போது ஆலய விஜ்ஞானம் என்றும்,
    அந்த ஆலய விஜ்ஞானம் பாஹ்ய பதார்த்தங்களோடு சையோகம் கொண்டு பாஹ்ய பதார்த்தங்களை விநிவேசனம் பண்ணிக் கொண்டால்
    அதுதான் பிரவிருத்தி விஜ்ஞானம் (அ ) சித்த விஜ்ஞானம் – என்கின்றனர்.
    இத்தாலே தர்மத்தையே (ஆலய விஜ்ஞானத்தையே), தர்மியாக அதாவது புத்தியையே ஆத்மா என்று சொல்வது தவறு ,
    யஸ்யாநுபவ தஸ்யேவ ஸ்மிருதி : என்று ஸ்ம்ருதி, பிரத்யபிக்ஞா வியவகாரங்கள் உண்டாக.
    ஸ்திரமான ஆத்மா (அ ) தர்மி இருந்தால் அல்லது மறுபடி நினைத்துப் பார்க்கை, நினைவு இவை எல்லாம் ஏற்படவழி இல்லை.

    கடக்ஷணிக வாதத்தில் பலாபலன்கள் மாறிப்போவது குற்றம் என்று நாம் சொல்ல,
    குற்றமாகாது என்பதற்கு அந்யதீய பாலார்த்தஸ்ய அந்யஸ்ய பிரவிருத்தி : குழந்தை பிறந்த போது தகப்பனார் செய்கிற ஜாத கர்ம,
    நாம கரண ஹோமத்தில் பலன் செய்கிறவனுக்கன்றி, அவன் குழந்தைக்கு என்று வேத கர்ம காண்டத்தில் நீங்களும்
    ஒத்துக் கொண்டிருக்கிற போது, எங்களுடைய வாதம் குற்றமாகாது. எங்கள் க்ஷணிக வாதத்தாலே
    உற்பத்தி விரோதங்கள் உண்டாகாது என்று மறுதலிக்க;

    இதற்கு உத்தரமாக, விசேஷ சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஒன்றை சாமான்ய சாஸ்திரத்துக்கு பயன் படுத்தக் கூடாது.
    அர்த்தார்த்தி ராஜகுலம் கச்சேத் . போஜனார்த்தி போஜனசாலா கச்சேத் – என்பதாக சாமான்ய சாஸ்திரத்துக்கு
    சாமான்ய சாஸ்திரத்தில் இருந்தே உதாகரிக்க வேண்டும் என்று அவன் வாதத்தை தள்ளிப் போட்டனர்.

    ————

    சூத். 2-2-20 :: அஸதி ப்ரதிஜ்ஞோபரோத : யௌகபத்யம் அந்யதா ::

    உற்பத்தியும் அஸத்தாலே லீனமும் அசத்தாகவே என்கிற இவர்களுடைய ஸித்தாந்தம் அதார்மிகமானது.
    ஜைனனும் நைராத்மா பாவத்தை ஆதரிப்பதில்லை.
    குமாரில பட்டர்
    அகளங்க தேவன்
    சங்கரர்
    ஞாயகுஸுமாஞ்சாலி உத்யநாச்சார் என்ன
    இவர்கள் எல்லோரும் கூட பௌத்த சித்தாந்தத்தை கண்டனம் பண்ணுகின்றனர்.
    ஆகவே தான் இவர்களுக்கு பின்பு வந்த எம்பெருமானாருக்கு ஜகத் ஸத்யத்தை நிலைநாட்டல் எளிதாயிற்று.

    அஸதி – காரணம் நசிந்த உத்தர க்ஷணம் காரியம் உண்டாகிறது –
    ஒரு உத்தர கடக்ஷணத்திற்கு ஒரு பூர்வ கடக்ஷணம் அபாவம் காரணம் என்றால்
    ப்ரதிஜ்ஞோபரோத — அதிபதி (இந்திரியங்கள்) ஸஹகாரி (தீபம்) ஆலம்பந (பாஹ்ய பதார்த்தங்கள்)
    ஸமநந்தர ப்ரத்யயா: ( முன் க்ஷணத்தில் ஏற்பட்ட ஜ்ஞானம்) சத்வாரா விஜ்ஞாந :
    உத்பத்தௌ ஹேதவ : என்கிற ஜ்ஞானம் உண்டாக காரணமாக இருக்கின்ற பௌத்த மத பிரதிஞையை அதுக்கு விரோதம்.வரும்.
    அந்யதா – இந்த அவர்களுடய கொள்கையை விரோதிக்காமல் இருக்கவே காரணம் இருக்கும் போதே காரியம் உண்டாகிறது என்றால்
    யௌகபத்யம் -இருந்தது (காரணம்) அழியும் முன்பே காரியம் உத்பன்னமாகிறது –
    த்வி சந்திர ஜ்ஞானம் போலே காரியம் காரணம் இரண்டும் தோற்றமளிப்பதான –
    காரண கடம், காரிய கடம் இரண்டும் ஒரே சமயத்தில் காணப்பட வேண்டும்.
    உண்மையில் அப்படிக் காண்பதில்லை யாகையால் பௌத்த மதம் பொருந்தாது.

    ஜ்ஞானம் ஏற்படுவதும் , மனப் – பிராணன் – இந்திரியம் – பாஹ்ய வஸ்து பிரதர்சனமாகிற
    சுவை, ஒளி, ஒலி, நாற்றம் இவை அதே பிரகாரம் உள்வாங்கப்பட்டு புத்திக்கு அறிவிக்கப்பட்டு,
    பிறகு அது நினைவுப் படிவமாக மனதில் நிறுத்தப்பட, ஆத்மாவுக்கு அவை பிரதர்சனமாகிறன.
    இத்தனைப் படிகளில் எத்தனை வேகமாக நடந்தாலும், அதற்கும் ஒரு கால இடைவெளி அவசியம்.
    இதனை மறுக்கும் விதமாக செய்கிற க்ஷணிக வாதத்தால், இந்திரிங்களால் விஷயங்கள் அறியப் படுதலும்,
    அதனை ஆத்மா உணர்வதான ஜ்ஞான உற்பத்தியும் ஒரே க்ஷணத்தில் நிகழ்வது போலாகிவிடும். இது உண்மைக்குப் புறம்பானது.

    —————-

    சூத். 2-2-21 :: ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத அப்ராப்தி : அவிச்சேதாத் ::

    கீழ் சூத்திரங்களால் உற்பத்தி க்ஷிணிகத்தல் உண்டாகிறது என்பது நிராகரிக்கப் பட்டன்.
    இப்போது அவன் சொல்லுகிற விநாசம் (அ ) பிரளய பிரகாரமும் சரியில்லை என்பது பேசப்படுகிறது. .
    நம்முடைய சித்தாந்தத்தில்
    லீன் = ஸ்லேஷ்ணே என்று காரணத்தில் காரியம் போய் ஸூக்ஷ்மாவஸ்தையில் ஒட்டிக் கொள்வதையே லயம் என்கிறோம்.
    திருமழிசை ஆழ்வாரும்
    தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
    தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் (திருச்சந்த விருத்தம்-10) இதையே காட்டிக் கொடுக்கிறார்.
    நச அதர்ஷணே என்பதாக அவன் சொல்லுகிறான்.

    ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத– பார்க்கப்படுகிற ஸ்தூல வஸ்த்துக்களின் விநாசமும்,
    கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம வஸ்து விநாசமும் ஜகத்துக்கு ஏற்படாது. காரணம்
    அவிச்சேதாத் – உள்ள பொருள் அடியோடு அழியும் என்பது சேராதாகையாலே.

    ருதிர் = ஆவரணே என்று பிரளயத்துக்குப் பெயர். இங்கு விநாசத்தைக் குறிக்கும்.
    ஸாங்கிய = கியா = பிரகடனே பிரகடனே அனைய இதி = புத்தியில் இருப்பதையே சொல்லப் போகுமாகையால், இங்கு புத்தியைக் குறிக்கும்.
    ஸங்கியாம் பிரதி விரோதம் = இந்திரியங்களுக்கு கோசாரமாகக் கூடிய விநாசம். பாஹ்யமான பதார்த்தங்களுக்கு ஏற்படுகிற ஸ்தூல விநாசம்
    அப்பிரதி ஸங்கியா விரோதம் என்பது பௌத்தன் சொல்லுகிற புலன்களால் ஊகிக்க முடியாத கடக்ஷண விநாசம்.
    பிரளயத்தில் வஸ்துக்கள் நாசமடைந்து கண்ணுக்குப் புலப்படாதபடி மாயமாகி விடுகின்றன.
    க்ஷிணிகம் – தீப ஜ்வாலா பேத அநுமானம் = சுடர் ஒரு ஜுவாலைப் போல தோற்றினாலும், உண்மையில் அது பிரதிக்ஷணமும்,
    அணு அணுவாக எண்ணை உறிஞ்சி திரி எரிவதன் தொடர்ச்சியாகும். அதுபோல
    ஜோதி நிர்வாணம் = என்பது அணைந்த விளக்கின் ஜோதி மாயம் ஆவது போல என்கிறான். இதுவே நிரண்மய விநாசம் என்பது.
    இப்படி அசத்தால் உண்டாவது அசத்தையே போய்ச் சேருகிறது என்று ஸ்ருஷ்டி பிரளயங்களைப் பற்றிச் சொல்கிறான்.
    நாம் சொல்வது பிரஹ்மதிடத்தினின்று உண்டாகி, பிரம்ஹத்திடத்தில் போய்ச சேருகின்றது என்பதற்கு எதிர்மறையானது இவர்கள் வாதம்.
    இதை வைதிகனும், ஸாங்க்யனும் கூட ஒத்துக் கொள்வதில்லை.
    பௌத்தர்களும், அத்வைதிகளும் கூட பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக பேசுகிறார்கள் என்பதே உண்மை.

    நிரந்வய விநாசம் என்பது கிடையாது. பொருள்கள் நாசமாகும்போது அவை அவஸ்தாந்திர பேதத்தை அடைகின்றனவே ஒழிய,
    பதார்த்தம் இல்லாமலே போவதில்லை. பானை உடைந்தால் சில்லு. சில்லு மண்ணில் கரைந்தால் பாம்சு.
    பாம்சு பிண்டமாகி மீண்டும் கடாவாஸ்தாயைப் பெறலாம்.
    தார்கிகன் இப்படி மாறி உண்டாகிற திரவ்யமே வேறு என்றான்.
    சாங்கியன் எள்ளுக்குள் எண்ணை இருப்பது போல் காரியம் காரணத்தில் இருக்கிறது என்றான்.
    நாம் சொல்வது திரவியம் ஒன்றாய், காரண அவஸ்தையில் இருந்து காரிய அவஸ்தைக்கு மாறுகிறது என்பதாக.

    திரவியம் என்றால் என்ன? எது உபாதான காரணமோ அதுதான் திரவியம்.
    உபாதான காரணம் என்றால் என்ன? அவஸ்தாஸ்ரயமாக எது உள்ளதோ அதுதான் திரவியம்.
    அவஸ்தா என்றால்? அபிரதக் ஸித்த ஸம்பந்தமாய், காகாசித்தமாய் இருப்பது. விட்டுப் பிரியாததாய்
    பரிணமிக்கக் கூடியதாய் இருப்பது என்று பொருள்.

    எரிகிற தீபம் அணைந்த பிறகு, தீபம் பிரகாசம் மாயமாவதுபோல் நிரந்வய விநாசத்தால் அஸத்தோடு சங்கமிக்கிறது என்றான்.
    இதுவும் சரியில்லை. காரணம் கரி எரியும்போது ஜுவாலையோடு தூமம் வெளியேறுகிறது. அது சற்று கரிப்புகையாக இருக்கும்.
    விறகு எரியும்போது புகை அம்சம் நலிந்து ஜுவாலை அதிகம் காணலாம்.
    அதுபோல் தீபம் எரியும்போது தூமம் வெளுத்து கண்ணுக்குப் புலளப் படாமல் இருக்கலாம்.
    விளக்கு அணையும் போது, அது புகையாக வாயு மண்டலத்தில், கலந்து அது மலினமாகி பரிணாமத்தை அடைவதே அவஸ்தா பேதம்.
    எனவே நிரந்வய விநாசம் என்பது கிடையாது. எல்லாம் ஸாந்வய விநாசமாகத்தான் இருக்கிறது என்பது சித்தாந்தம்.

    —————-

    சூத். 2-2-22 :: உபயதா ச தோஷாத் ::

    உபயதா – இல்லாத வஸ்துவிலிருந்து உள்ள பொருள் உண்டாதல், இருக்கிற பொருள் இல்லாது போவதும் ஆன இரண்டும்
    தோஷாத் ச – தோஷம் உடைத்தால் , பௌத்த மதம் பொருத்தாது.

    பதார்த்தங்கள் ஜாதி, ஆகாரம், வியக்தி மூன்றும் கூடிய வஸ்துவாகும்.
    ஆகாரத்தையே குறிக்கும் ஜாதியானது திரவ்யத்தையே ஆஸ்ரயித்து இருப்பதாகும்.
    கடத்தவம், படத்துவம், மனுஷ்யத்வம் இவை ஜாதி போல்
    அஸ்வத்வம் என்பது 4 கால், குளம்பு, பிடரி மயிர், கற்றை வால் உடைய விலங்கின் ஆகாரத்துக்குள்ளே அடக்கம்.
    தார்கிகன் சொல்வதுபோல் கடத்வ படத்வங்கள் அஸ்வத்தம் என்று பிரதக்காக தனித்த பதார்த்தம் இல்லை.
    இன்னும் நீல கடம் என்றால், கருமை என்கிற குணம் குடத்தினுடைய அவினா பாகம்.
    அதே போல அபாவம் என்பதும் அவஸ்தாந்தரமே ஒழிய தனித்து பதார்த்தம் இல்லை .

    ஸது ஏவ சௌம்யா! இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
    ஏகம் — துவைதிகள் சொல்லுகிற 5 விதமான பேதம் இங்கு சொல்லப்பட வில்லை.
    பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஸ்வகத குணம் கிடையாது. விகத ஜீவாத்மா கிடையாது. விஜாதீயமான அசித்து கிடையாது என்பதால்.
    அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – பஹுஸ்யாம் பிரஜாஏய – ஸதபோ தப்பியத – தப ஆலோசநே என்று சங்கல்ப மாத்ரேண
    மயி ஸர்வ இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ -என்று பகவான் தானும் சொல்லி இருக்கிற படியே
    இந்த ஜகத்து அவனால் படைக்கப்பட்டு, தரிக்கப்பட்டு, அந்தராத்மாவாய் ஸத பத்ர கோச ஸூஜி நியாயத்தாலே
    அன்னமய கோசம்
    பிராணமய கோசம்
    மனோமய கோசம்
    விஜ்ஞானமய கோசம்
    ஆனந்தமய கோசம்
    வரை அநுபிரவேசம் செய்து , நியமிப்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த அத்விதீய ஸப்தமெல்லாம்
    சரீராத்மா பாவத்தை இட்டே சொல்லப் பட்டதாக பொருள்படும்..

    அவனுக்கு ஒரு ஆத்மா உண்டோ? என்றால் இல்லை,
    பதிம் விஸ்வ – விஸ்வபதியாய்
    ஸ்வரகும் ஈஸ்வரம் – தனக்கொரு பதி இல்லையாய்
    அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்ய ஸ்தித நாராயண : ஸதைக ரூப ரூபாய என்று அவனுடைய ஸ்வரூபத்தில் விகாரம் இல்லையாய்
    விசேஷணாம்சமான அசித்தில் ஸ்வரூபதயா விகாரமும்; சித்தில் ஸ்வபாவதயா விகாரமும் ஏற்று
    பரிணமிக்கையாகிற இது மாயையால் வந்ததோ – சங்கரர்
    உபாதியால் வந்ததோ – பாஸ்கரர்
    சக்தியால் வந்ததோ – யாதவபிரகாசர்
    அல்லாமல் பகவத் சங்கல்பத்தால் வருவது என்கிற
    திரவியா-அதிரவ்ய விபாகம் அனைத்தும் சத்யம் நித்யம் பகவத் ஆஸ்ரய ஆஸ்ரயணீயம்.

    உபநிஷத் சித்தமான இதை எல்லாம் இல்லை செய்து வஸ்துக்கள் துச்சத்தில் உண்டாகி, துச்சத்தில் போய் சேருகிறது.
    இடையில் க்ஷணிகமாய் இருக்கிறது என்று இவர்கள் சொல்ல அது பொருந்தாது
    உள் இருக்கிற ஆலய விஜ்ஞானம் என்ன, வெளியில் இருக்கிற பிரவ்ருத்தி விஜ்ஞானம் என்ன இரண்டுமே ஸ்திரமானது தான்.
    இல்லாததிலிருந்து இந்த ஜகத்து உண்டானால் , இதுவும் துச்சமாய் காணப்பட வேண்டும்.
    மாத்யமிகனைப் போல் இவர்கள் உலகம் சூன்யம் என்று ஒப்புக் கொள்கிறார்கள் இல்லை.
    ஆன பின்பு, ஜகத் இருப்பை ஒப்புக்கொள்ளுகிற வைபாஷிகர்களின் இந்த வாதம், அவர்களுடைய
    உற்பத்தி கிரமம், பிரளய கிரமம் இரண்டும் துச்சம் என்பதற்கு சேராது.

    —————

    சூத். 2-2-23 :: ஆகாஸே ச அவிசேஷாத் ::

    ஆகாஸே ச – ஆகாச விஷயத்திலும் வைசேஷிகர் சொல்கிற சூன்ய வாதம் பொருந்தாது.
    அவிசேஷாத் – பிரத்யக்ஷமாக பார்க்கப் படுகிற பூமி முதலானவற்றிற்கும், ஆகாசத்துக்கும் வேற்றுமை கிடையாதாகையால்.

    வைபாஷிகன் ஆகாசத்தை நிருபாக்யா என்று வாங்மனஸா அகோசரம் என்பதுபோலே சொல்கிறான்.
    அது 4 விதமான அபாவத்தோடே இருக்கிறது என்கிறான்.
    1. ப்ராகபாவம் – பொருள் உண்டாவதற்கு முன்னும் இருப்பது – கடத்துக்கு மண்கட்டி
    2. ப்ரத்வம்ஸாபாவம் – அது அழிந்ததற்கு பின்னும் இருப்பது – கடம் நஷ்டமாக இருக்கும் சில்லு
    3. அந்யோந்யாபாவம் – கடத்வோ படத்துவம் ந ; படத்தவே கடத்வம் ந – ஒன்றின் தன்மை இன்னொன்றில் இல்லாது இருப்பது.
    4. அத்யந்தாபாவம் – கடம் அடியோடு இல்லை என்கிற துச்சமான நிலை.

    நிலம், நீர், தீ, வளியாகிற 4 பூதங்களின் அபாவமே ஆகாசம் என்கிற போதும் அது பிரத்யக்ஷ கோசரமாகவே இருக்க வேண்டும்.
    கடாபாவம் பூதலமாக காண்கையாலே, ஆகாஸாபாவம் பாவாந்தர ஸித்தமாய் துச்சம் என்னவாகாது.
    இந்த வகையில் பூமிக்கும் ஆகாசத்துக்கும் வாசி இல்லையாதலால், ஆகாசம் சூன்யமாக மாட்டாது.
    நீலமாக காண்கிற ககன இடைவெளி தான் ஆகாசம் என்று காட்ட, அருகில் உள்ள ஆகாசம் நீலமாக காண்பதில்லையே
    எனவே அது தோற்றம் (ஆபாஸம் ) என்று தள்ளிவிட, கிணற்றின் வீழ்சியிலும், ஊசி புகும் துளையிலும்,
    பக்ஷி பறக்கும்போது ஆஸ்ரயமாயும் இருப்பதுவும் ஆகாசம் என்று விளக்கப்பட்டது.

    சங்கரர் ஆகாசத்தை ஆவரணா அபாவம் என்றார்.
    த்ரிவ்ருத்கரணம், பஞ்சீகரணம் ஆனபோது, ஆகாசத்தில், பிருத்வி முதலான மற்ற பூதங்களின் அம்சமும் கலந்து இருப்பதால்,
    அது பிரத்யக்ஷ கம்யம் என்பது சித்தம் என்பதாக பகவத் ராமானுஜர் காட்டினார்.
    ஆகாசம் பரமாணு ஸங்காத ரூபமாய் . நிரவயவம் என்பதால் அகோசரம். ஸப்தமும் அநித்யம் என்று நிராகரணம் பண்ணுகிறான்.
    அப்படியானால் சப்த தன்மாத்திரத்தை எப்படி நிர்வகிப்பது? என்றால்
    சப்தத்துக்கும் பொருளுக்கும் சம்பந்தம் நித்தியமாய், அவை முக்கியார்த்தத்தையே குறிக்கும்.
    இதையும் பௌத்தன் ஏற்பதில்லை.

    வியாச சித்தாந்தத்தில் விஷ்ணு பாரம்யத்தையே சொல்லி இருக்கிறார்.
    சங்கரரும் கூட நாராயண: நாராயண: என்று விஷ்ணு பாரம்யத்தையே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.
    ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் வருமிடத்து திரிமூர்த்தி சாம்யம் சொல்வது போல் பிரமை ஏற்படலாம்.

    ஸத் பிரஹ்மத்துக்கு பிரகிருதி சம்பந்தமே கிடையாது. அவித்யா சம்பந்தம் வந்த போது, அதனுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் காரணமாக
    மூன்று வித காரண சரீரம் ஏற்பட்டு, அவரே பிரஹ்மா, விஷ்ணு, சிவன் என்றாகி ஸ்ருஷ்டி, ஸ்திதி. சம்ஹாரங்களை செய்வதாகவும்,
    இவர்களுக்கு ஆத்மா ஒன்றாய், சரீரம் மூன்றாய் த்ரிமூர்த்தி ஐக்கியம், சாம்யம் சொல்லகின்றனர் அத்வைதிகள்.
    இது தவறான வாதம்.

    மத்யே விரிஞ்சி கிரீஸ : விஷ்ணுரேவ அவதரிதி – என்று நாராயணனே ஸ்வயம் விஷ்ணுவாகவும்,
    பிரம்ம, ருத்ராதிகளில் அந்தர்யாமியாகவும் நின்று சிருஷ்டி ஸ்திதி லயங்களை செய்கிறான் —
    மச்ச, கூர்மாதி ஆதாரங்களுக்கு முன்னம், இந்த த்ரி மூர்த்திகள் நடுவே விஷ்ணுவாக அவதாரம் பண்ணினது தான்
    அவனுடைய முதல் அவதாரம் என்பது நம்முடைய ஸித்தாந்தம். அதுவே வியாஸ சித்தாந்தமும் கூட.
    வியாசர் இதை எங்கே சொன்னார் ? என்றால்

    ஜன்மாதி அஸ்ய யத : என்று பிரஹ்மா ஸூத்ரத்தில் வியாசர் ஆதி சம்பதத்தால்
    ஸ்ருஷ்டி, ஸ்திதி, பிரளயம் இந்த மூன்றையும் செய்ப்பவன் எவனோ அவன் தான் பர பிரஹ்மம் என்று சொன்னதோடு,
    உத்தவ கீதை பிரகரணத்தில், பகவான் கிருஷ்ணன் திருவாக்காக

    ஆத்மந : பித்ரு புத்தராப்யாம் அநுமேயோ மம பவாப்யயௌ
    ந பவாப்யே வஸ்தூணாம் அவிக்ஞோ அத்வய லக்ஷ்ண :

    பவா = உற்பத்தி
    அவ்யயௌ = விநாசம்
    ஜீவாத்மா = ந ஜாயதே ம்ரியதே வா என்று இரண்டும் அறியாதவன். இந்த அத்வைத லக்ஷ்ணத்தை உடைய ஜீவாத்மா.
    இந்த உற்பத்தி விநாசத்தை யாரும் சரியாக அறிந்தார் இல்லை. காரணம் இந்த ஜீவாத்மா அத்வைத லக்ஷணமானவன்.
    அவனுக்கு உற்பத்தியும் விநாசமும் கிடையாது. பிரகிருதி சம்பந்தத்தால் வந்த ஜனன மரண துவயத்தை அறியாதவன்.
    பரமாத்மா அறியானோ என்னில் ?
    பஹுனிமே வியதீதாநி ஜன்மநா நான்யஹம் வேத்தி தவஸார்ஜுணா – என்று அவன் அறிவான் –
    ஸ்வேச்சா க்ருஹீத அபிமத உரு தேஹம் ஆனபடியாலே–ஆனால் அவன் அறிந்தபடி நாம் அறிவதில்லை.
    நித்யர்களோ என்னில் , அவர்களும் இன்னொரு ஜீவாத்மாவை இட்டே அறியலாம் தாங்கள் ஸ்வத :பிறவாதவர்கள் என்பதால்.
    நம் பிறப் இறப்பை நாம் அறிவதும் தனக்கொரு குழந்தை பிறப்பதைப் பார்த்தும், தன் தந்தை இறப்பதைப் பார்த்துமே யாகும்.

    வைபாஷிகன் இதற்கு எதிர் தட்டாக வஸ்துக்கள் அஸத்தாலே உண்டாகிறது, அஸத்திலே போய் சேருகிறது என்பதை
    இங்கு நிராகரணம் பண்ணி, சரீராத்மா பாவத்தை இட்டு சமர்த்தனம் பண்ணவேண்டி இருக்க
    நீங்கள் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தம் என்ன, மூலா ஜ்ஞானம் என்ன, அவித்யா நிவிர்த்தி என்ன இதுகளால் அல்ல என்பதே வியாச சித்தாந்தம் .
    இதைக் கொண்டே கிரியா, தேவதா, யோகம் சூன்யம் என்பதான 4 வகைப் பட்டவரான பௌத்தர்களையும்
    இந்த சமுதாயாதிகாரணத்தில் வியாசர் நிரஸனம் பண்ணுகிறார்.

    இத்தால், ஸர்வ சித்தாந்த சங்கிரகத்தில் வியாஸ பாரத தர்ஸனமாக
    சங்கரரால் சொல்லப்பட்ட பஞ்சவிம்சதி தத்வ விமர்சனமோ, திரிமூர்த்தி சாம்யா வாதமோ கண்டு மயங்க வேண்டாம் .
    வியாஸ சித்தாந்தமும், அவருடைய சரீரக ஸித்தாந்தமும் இரண்டும் ஒன்றே அல்லது வேறு அல்ல.

    —————–

    ஸூத். 2-2-24 :: ஆநுஸ்ம்ருதேஸ்ச ::

    பிரத்யபிஜஜ்ஞை என்பதைக் கொண்டு இரு வேறு காலங்களில் உள்ள பொருள் ஒன்றே என்று சொல்ல வேண்டுமானால்,
    அந்த பொருள் ஸ்திரமானதாக இருக்க வேண்டும். பொருள்கள் க்ஷணிகமானால், இருவேறு காலங்களில்
    உள்ள பொருள் ஒன்றே என்கிற இந்த பிரத்யபிஜ்ஞா ஒட்டாது.

    அநுஸ்ம்ருதே : முன் அனுபவிக்கப் பட்ட பொருள் அனைத்தும் மீண்டும் அனுபவத்துக்கு வருவதால் ,
    வஸ்துக்களுக்கு க்ஷணிகத்வம் செல்லுபடியாகாது என்றதற்கு
    அநுஸ்மரணமாகிற பிரத்யபிக்ஞா – ஜ்வாலாபேத வியாமோகம் போலே பிராந்தியால் வந்தது என்கிறான்.

    எதை வைத்து இப்படிச் சொல்கிறான் என்றால் இரண்டு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
    1. அர்த்த க்ரியா காரித்வம்
    2. ஸத்வம்
    யது ஸது க்ஷணிகம் – எதெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் க்ஷணிகம், யதா ஜலதர படலம்–என்பது அவன் வாதம்.
    அதற்கு ஸித்தாந்தி பிரத்யபிக்ஞா ஸோ அயம் தேவதத்த –என்ற வார்த்தை பாடில் 3 சொற்கள் உள்ளன.
    இவை அனைத்தும் பிரதமா விபத்தியில் சாமான்யாதிகாரணத்தில் ( முன்நிலை படர்க்கையில் .} அமைந்துள்ளாதால்
    அவை ஒரு வியக்தியையே உணர்த்தும்.
    பூத காலத்தில் இருந்தவரும் இப்போது காட்சியளிக்கிற இவரும் ஆனா தேவதத்தன் என்று தானே இந்த வார்த்தைப் பாட்டுக்கு பொருள்.
    எனவே சித்ரத்வம் உண்டு. யது ஸது க்ஷணிகம் என்கிற உங்கள் வாதம் பொருந்தாது- எனறாக

    எதெல்லாம் ஸம்ஸ்கார பலமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமம் – என்றான்.
    வெள்ளியை – ராஜதம் – முன்பே பார்த்திருந்த படியால் அதனுடைய நினைவு – சம்ஸ்காரம் புத்தியில் இருக்க,
    முத்து சிப்பியைப் – சுத்திகை – பார்க்கும்போது வெள்ளி என்கிற பிரமிக்கிறான்.
    ஆகவே இதெல்லாம் சம்ஸ்காராதீனமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமாத்மகம் என்று சொல்லி விட்டான்.
    எனவே இந்த தேவதத்தன் விஷயமான பிரத்யபிக்ஞையும் சுத்திகா ரஜத பிரமம்போலே அன்று
    பார்த்த தேவதத்தன் வேறு, இவர் வேறு என்று சொல்லி விட்டான்.

    அதற்கு சித்தாந்தி துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானமானால் அப்படி, எல்லா பிரத்யபிக்ஞா ஜ்ஞானமும் பிரமம் ஆகாது.
    எதுபோல் என்றால்
    சந்தன கொட்டடியில் மணம் வீசுவதை அறிந்த ஒருவன், மலையில் சந்தன மரத்தைப் பார்த்ததும் இதற்கு மணம் உண்டு
    என்று நினைவு படுத்துவது போல –
    நிர்துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானம் சத்யம் என்று சொல்ல ;
    இப்போது அவன் சத்வத்தை விடுத்து, அர்த்த கிரியா வாதத்துக்கு வந்தான்.

    பாய்சல் நிலத்தில் உள்ள நெல் விளைகிறது. தானிய கிடங்கில் – க்ருஸூலத்தில் – வைத்த நெல் விளைகிறதோ?
    சாமர்தியா அசாமார்தியம் இரண்டுக்கும் வேறுபட காண்கையால் – விருத்த தருமம் ஒரு ஆச்ரயத்தில் இருக்க வழியில்லை ஆதலால் –
    இந்த நெல் இரண்டும் வேறு வேறு தான் – என்றான்.
    ஆல் விதைக்க மா முளைக்குமா? அசமர்த்தமான கடம் என்றும் அசமர்த்தமே. சமர்த்தமான பீஜம் என்றும் சமர்த்தமே.
    அதற்கு வேண்டியது ஸஹகாரி சையோகமே.
    தரணி-ஜல சையோக ஸாகார அபாவத்தாலே நெல் க்ருசூலத்திலே முளைப்பத் தில்லை , அன்றி அசாமர்த்தியதால் அன்று –

    அநுஸ்மரணம் –பூர்வாநுபூதி வஸ்து விஷய ஜ்ஞானம் பிரத்யபிஜ்ஞானம் இத்யர்த்த :
    ஆகவே எதுவும் க்ஷணிகமில்லை. எல்லாம் ஸ்திரம் தான். என்று விளக்கப்பட்டது.

    யஸ்யாநுபவ தஸ்யைஹி ஸ்ம்ருதி : ஸ்ம்ருதி வியதீத விஷய: மதி ஆகாமி நிர்மிதா. புத்தி தாற்காலிகா புரோக்தா
    பிராஜ்ஞா த்ரைகாரிகா மதா – என்று காவ்யப் பிரகாசத்தில் உம்மதப்பட்டன சொன்னபடி
    பிரத்யபிஜ்ஞா உண்டாக ஆத்மா ஸ்திரமானதாக இருக்க வேண்டும்.
    ஜ்வாலாபேத வியாமோகமும் ஸ்திரமான ஆத்மா விடத்திலேயாய் , இவர்கள் சொல்லுகிற க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவுக்கு சொல்லப் போகாது
    மேலும் வியாமோகம் ஜ்வாலைக்கு வேண்டுமானால் பொருந்தலாம், கடம் போன்ற பொருள்கள் நசிந்தபோது வியாமோகம் ஏற்பட வழியில்லை ,
    வஸ்து மொத்தமாக மாயமாவ தில்லையால்–என்று விஷ்யாதர முகமாகவும் இவர்கள் வாதத்தை தள்ளிவிட

    இதுவரை பிரத்யக்ஷத்தைக் காட்டி பேசியவன், இப்போது அனுமானத்தை இட்டுப் பேசு, அந்த அனுமானத்தை அவனுக்கே திருபாலாவது. .
    யது ஸது தது ஸ்தாஷ்னு . யது துச்ச : ததேவ அநர்த்த கிரியாகாரி யதத்யத் ஸது தது அர்த்த கிரியா காரிரேவ .
    எனவே அர்த்த கிரியா வாதம் அக்ஷணிகத்துத்வதையே காட்டும்.
    தவிர, ஸ்தைர்யம் இருந்தால் தான் அனுமானத்தையே பண்ண முடியும். 5 வாக்கியங்களைச் சொல்லி அனுமானத்தை
    ஸ்தாபிக்குமளவாக ஆத்மா இருக்க வேண்டுமே? க்ஷணிக விஜ்ஞானத்தால் அது ஆகாது.

    இதுவரை வைபாஷிகன், சௌத்திராந்திகன் ஆகிய இரண்டு பேருக்கும் பொதுவான விஷய சூத்ர விமர்சனம் பார்த்தோம்.
    வைபாஷிகன் ஜகத்தை பிரயக்க்ஷ சித்தம் என்றான்.
    சௌதாந்த்ரிகன் அதை ஆனுமானிகம் என்கிறான்.
    இதனை அடுத்த சூத்திரத்தில் நிராசனம் பண்ணுகிறார் சூத்ரகாரர்.

    https://srivasanesa24d.blogspot.com/–33/34-july 4th

    இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
    ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
    ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
    இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

    ————————————————————————–

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பாஷ்யார்த்தம் -ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் –(ஸ்ரீ மெய் விரத மான்யம்)–பாசுரங்கள்-

    February 17, 2025

    சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
    சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
    சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
    சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1- ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

    சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று
    சாஸ்திரங்களில் விளக்கிக் கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து –
    அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
    சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள
    சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள் முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது
    பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
    சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற
    பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் –
    சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
    வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொள்ளாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்
    சித்தரத்தொழிலை-என்பதால் பிரகிருதி சம்பந்தத்தினால் ஆத்மாக்களுக்கு தேவாதி பேதங்கள் என்பது த்யோதிதம் –
    சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில்
    ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின் பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
    பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால்
    வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
    அசேதனம் ஜகத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் ஜகத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
    இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –
    நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே –எல்லையில்லா பெருமை உடையவன் என்றதாயிற்று –

    ———

    கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
    கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
    கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
    கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

    கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை
    ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை
    பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
    ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள்
    நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –
    கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும்
    பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
    மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை
    வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
    கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
    ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
    பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்
    கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள்
    கர்ம இந்திரியங்கள் மனஸ் முழுதும் தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
    இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

    ———

    ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
    உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
    உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
    உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

    ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
    இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
    இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
    நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று
    உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும்
    லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில் சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் –
    அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்
    உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
    வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
    பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும்
    வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
    சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்
    உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
    எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
    சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
    இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

    ———–

    சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
    சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
    தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
    தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

    சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
    சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
    சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
    அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
    தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
    காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான
    ஸ்ரீ ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்
    தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
    தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த
    ஸ்ரீ பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்-

    ஸ்ரீ பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

    ————

    —————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –