Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம்-ஸ்ரீ எம்பெருமானார் பின்புள்ளார்-

November 2, 2025

இராமானுஜரது திரிதண்டம்‌, பவித்ரம்‌ என்று சொல்லப்படும் பிரதம சீடர்களான முதலியாண்டான்‌, கூரத்தாழ்வான்‌ என்ற இருவரில்‌ முதலில்‌ காண இருப்பது கூரத்தாழ்வான்‌ வைபவம்‌.ஜீவ காருண்யம்‌, ஆச்சார்ய பக்தி, பகவத் பக்தி, வைராக்யம்‌, பாண்‌டித்யம்‌, ஸத்கர்மானுஷ்டானம்‌ (நல்ல காரியங்களையே செய்தல்‌) முதலிய எண்ணிறந்த நற் குணங்களுக்கும்‌ பிறப்பிடமென்ன அமைந்த கூரத்தாழ்வானது திவ்ய சரிதத்தை, தினந்தோறும்‌ அனுசந்‌திப்பது ஸ்ரீவைஷ்ணவர்களது கடமையாகும்‌.
கச்சிமாநகருக்கு வடமேற்கிலுள்ள கூரம்‌ என்னும்‌ நகரில்‌ முன்னோர்‌ அனுசந்தித்தபடி கலியுகம்‌ 4180-ம்‌ ஆண்டில்‌ செளம்ய வருஷத்தில்‌ தைமாதம்‌ அஸ்த நட்சத்திரத்தில்‌ வடமான்‌ குலத்தில்‌ இம் மகான்‌ அவதரித்தார்‌. இவரது இயற்பெயர்‌ திருமறுமார்பன்‌ என்பது. இவரது தகப்பனார்‌ அனந்தர்‌. தாயார்‌ பெருந்தேவி நாயகி தேவியார்‌ – ஆண்டாள்‌. பகவத்‌ விஷயத்திலே மிக்க ஊக்கமுடையவரான போதிலும்‌ எம்பெருமானாருக்குத்‌ தாம்‌ சிஷ்யராகையால்‌, அவருக்கு நேர்‌ ஸ்தானத்தில்‌ குருவாக இருந்து உபதேசிக்க விரும்‌பாமல்‌ ஏனைய முதலிகளுக்கு (சீடர்களுக்கு) உபதேசிக்க, அவர்‌கள்‌ அதைக்கேட்டு அப்படியே எம்பெருமானார்‌ முன்‌ விண்ணப்‌பம்‌ செய்வதாக ஒரு நியதி ஏற்பட்டு, முதலிகளுக்கு ‘உயர்வற உயர்நலம்‌’ உடையவன்‌ என்ற திருவாய்மொழிப் பாசுரம்‌ தொடங்கினவாறே மதியெலாமுள்‌ கலங்கி மயங்கித்‌ தரையில்‌ விழுந்தார்‌.
பர சமயவாதிகள்‌ பிரஹ்மத்திற்குக்‌ குணமென்பதே கிடையாது. நிர்குணமென்கிறார்களே, ஆழ்வார்‌ முதலடியிலேயே உயர்வற உயர்நலமுடையவன்‌ என்கிறபடி என்னே! என்று சொல்லிக்‌ கொண்டே மோஹித்தவாறு மூர்ச்சித்து விழ முதலிகள்‌ ஓடிச்சென்று இராமானுசரிடம்‌ விவரத்தைக்கூற, அவரும்‌ ஒடிவந்து ‘எத்திறம்‌ உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே, என்று ஆறு மாதம்‌ மோகித்துக்‌ கிடந்த நம்மாழ்வாரைக்‌ காணப்‌ பெறாத குறைதீர, இன்று கண்ணாரக்‌ காணப் பெற்றோமே என ௨ள்ளமெலாமுருகிக்‌ குரல்‌ தழுத்து ஆழ்வான்‌, ஆழ்வான்‌ எனக்கூவித்‌ தட்டி எழுப்பி உணர்த்தத்‌, தொடங்கும்போதே உயர்வற உயர்நலமுடையவனென்‌பதே என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்‌. உருக்கத்திலே நம்‌ ஆழ்வாரைப் போன்றே இருந்தமையால்‌ எம்பெருமானார்‌ ‘ஆழ்‌வான்‌’ என்று ஏக வசனமாகத்‌ தட்டி எழுப்பினார்‌. அது முதல்‌ இவருக்கு ஆழ்வான்‌ என்று திருநாமம்‌ வழங்கலாயிற்று. கூரத்தில்‌ பிறந்தமையால்‌ கூரத் தாழ்வான்‌ என்று அழைக்கப்பட்டார்‌.ஆழ்வானின்‌ வைபவத்தைக் காட்டிலும்‌ அவரது தேவியார்‌ ஆண்டாளின்‌ வைபவம்‌ அளவற்றிருக்கும்‌. சாஸ்திரங்களில்‌ தமக்கு ஏதாவது சந்தேகம்‌ தோன்றினால்‌ தேவியாரைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்வது வழக்கம்‌ என்று பெரியோர்‌ கூறுவர்‌. கூரம் மா நகரில்‌ பெருஞ்செல்வராக வாழ்ந்த இவர்‌ தம்‌ செல்வத்தினால்‌ பல ஏழைகளையும்‌, சாதுக்களையும்‌ மற்றும்‌ பலரையும்‌ பலவகையால்‌ போஷித்துக் கொண்டு மகா தர்மவானாய்‌ இருந்து வந்தார்‌. நாள் தோறும்‌ பெருமாள் கோயில்‌ (காஞ்சி) திருக்கதவுகள்‌ இரவில்‌ மூடப்‌பட்ட பின்பே இவரது மாளிகைக்‌ கதவுகள்‌ இரவில்‌ மூடப்படும்‌.ஒரு நாள்‌ திருவிழாவை முன்னிட்டு கோயில்‌ கதவு மூடுவதற்குத்‌ தாமதமாயிற்று. ஆனால்‌ ஆழ்வார்‌ பணியாட்கள்‌ குறித்த நேரத்தில்‌ அவர்‌ வீட்டுக் கதவை மூடி விட்டனர்‌. அந்த மணியோசையைக்‌ கேட்ட பேரருளாளன்‌ தனக்கு ஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்யும்‌ திருக்கச்சி நம்பியிடம்‌ நமது இரவுத்‌ திருவாராதனம்‌ முடியு முன்பே கதவுகள்‌ சாத்தப்படுகின்றனவே என்று கேட்க, அவர்‌ கூரத்தாழ்வானது வீட்டுக் கதவுகள்‌ மூடப்பட்டன என்று சொன்னாராம்‌.அதைக் கேட்ட தேவர்பிரான்‌ ஆழ்வான்‌ செல்வமோ நம்மை இவ்வாறு மயக்கிற்று என்றாராம்‌. இந்த உரையாடலைப்‌ பின்னர்‌ கேட்டறிந்த கூரத்தாழ்வான்‌ தமது அந்திம காலத்துக்கு வேண்டிய சிறிதளவு செல்வத்தை மாத்திரம்‌ வைத்துக் கொண்டு பாக்கியை யெல்லாம்‌ ஏழை எளியவர்களுக்கு தானம்‌ செய்து விட்டு இனித்‌ தான்‌ ஒர்‌ நல்லாசிரியரை அடைந்து உய்வு பெற விரும்பி, விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகரான உடையவர்‌ இராமானுஜ முனிவரைச்‌ சரணடைந்து, பஞ்ச சம்ஸ்காரங்களைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்று அவரது திருவடிகளை விட்டு நீங்காமல்‌, சாமான்ய சாஸ்திரங்களையும்‌, அத்யாத்ம சாஸ்திர சம்பிரதாயங்களையும்‌ ஓதியும்‌, ஒதுவித்துக் கொண்டும்‌ வாழ்ந்து வருவாராயினார்‌-இவ்வாறு இருக்கும்‌ காலத்தில்‌ திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, இராமானுசரைத்‌ திருவரங்கம்‌ அழைத்துச் சென்ற பொழுது,அவரை விட்டகல முடியாத கூரத்தாழ்வானும்‌, அவருடையே பிரதான சீடராய்‌, சகல சாஸ்திர நிபுணர்‌ என்று எல்லோராலும்‌ போற்றப்படுபவராய்‌, அவரோடேயே வாழ்ந்து வந்தாராதலால்‌,அவர்‌ முன்னர்‌ தம்‌ ஊரிலே தம்‌ அந்திம காலத்துக்காகச்‌ சேமித்து வைத்த சிறு பொருளையும்‌, அவசியமற்றது என்று கருதியதால்‌,இராமானுசரது அனுமதி பெற்றுக்‌ கூரம் நகருக்கு வந்து அப்பொருளைப்‌ பரம பாகவதர்களுக்கு தானம்‌ செய்து விட்டுத்‌ தமது தேவியாரான ஆண்டாளையும்‌ கூட்டிக் கொண்டு, திருவரங்கத்துக்கு நம்‌பெருமாள்‌ சந்நிதிக்கு வரும்‌ வழியில்‌, மதுராந்தகம்‌ சமீபத்தில்‌ காட்டு வழியில்‌ தேவியார்‌ பயமாக இருக்கிறதே என்று கூற,மடியில்‌ கனம்‌ இருந்தாலல்லவா வழியில்‌ பயம்‌ வரும்‌. நீ ஏதேனும்‌ விலை மதிப்புள்ள பொருள்‌ வைத்திருக்கிறாயா? என்று கேட்க ஆண்டாளும்‌, தாங்கள்‌ வழக்கமாக உணவு கொள்ளும்‌ பொன் வட்‌டிலை மட்டும்‌ கொணர்ந்தேன்‌ என்று கூறவே, ஆழ்வானும்‌ அப் பொன்‌ வட்டிலை வாங்கத்‌ தூர எறிந்து விட்டு, மதுராந்தகத்து ஏரி காத்த பெருமாளைத் தொழுது ‘த்வயம்‌’ விளைந்த இடம்‌ என்று அந்த மகிழ மரத்தைச்‌ சேவித்துப்பின்‌ மறுநாள்‌ தொடங்கி பயண கதியாய்‌, வழியிலுள்ள திருப்பதிகளைச்‌ சேவித்துக் கொண்டு திருவரங்‌கம்‌ சென்று முன் போலவே உடையவர்‌ பாதத்தில்‌ அத்தாணிச்‌ சேவகராய்‌ வாழ்ந்து வந்தார்‌. பொன் வட்டில் தனை எறிந்த புகழினைப்‌ பெற்றார்‌.

ஒரு நாள்‌ கோயில் கொத்தி(ஊழியர்கள்‌)லுள்ள வர்களுக்குத்‌ தலைவராயிருந்த திருவரங்கத்தமுதனார்‌ உடையவரை அணுக),மகா பாபியான என்னைத்‌ திருத்திப்‌ பணி கொள்ளத் தக்க ஒரு சாத்விகரை நியமித்தருள வேண்டும்‌ என்று வேண்டிக் கொள்ள உடையவரும்‌ ஆழ்வானை அக் காரியத்திற்கு நியமித்தார்‌. இவருடைய தாழ்வுகளைப்‌ பாராமல்‌ இவரை அனுகூலராக்க, நம்‌ பக்கலிலே கொண்டு வந்து சேரும்‌ என்று கட்டளையிட, ஆழ்வானும்‌ அவரை ஆறுமாத காலம்‌ உபதேசம்‌ பண்ணி பரிபக்குவராக்கி உடையவரிடம்‌ அழைத்து வர, உடையவரும்‌ அவ்வமுதனாரை, ஆழ்வான்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிப்பித்தார்‌. இந்நன்றியை மொழியைக்‌ கடக்‌கும்‌ பெரும்புகழான்‌ வஞ்சமுக்குறும்பாங் குழியைக்‌ கடக்கும்‌ நம்‌ கூரத்தாழ்வான்‌ சரண்‌ கூடிய பின்‌ என்று குறிப்பிடுகிறார்‌. தாம்‌ அருளிய இராமானுச நூற்றந்தாதியில்‌. அமுதனார்‌ ஆழ்வானது சீடனாகி வாழ்ந்து வருகிற காலத்‌திலே, அமுதனாரது தாயார்‌, ஆச்சாரியன்‌ திருவடி யடையவே(இறந்துவிடவே) பத்து நாளும்‌ கடந்த பின்‌ ஏகாஹத்துக்கு (ஈமச்சடங்கின்போது ஆத்மா நற்கதி பெற வேண்டிச்‌ செய்ய வேண்டியஒரு சடங்கு] ஒருவரை அனுப்புமாறு வேண்ட, உடையவரும்‌ ஆழ்வானை நீர்‌ போய்‌ வாரும்‌ என்ன, ஆழ்வானும்‌ சிறிதும்‌ தயங்காமல்‌ சென்றார்‌. அமுதனாரும்‌ ஆச்சாரியார்‌ இங்கனே எழுந்தருளுவதே என்று மிகவும்‌ தாழ்ந்து, ஏஹாக்கரத்திலே அமுதுசெய்யப் பண்ணுவித்து, அபரிமிதமான பொருள்களைச்‌ சமர்ப்பிக்க,ஆழ்வானும்‌ அவற்றை யெல்லாம்‌ அங்கீகரித்து பின்‌ அவற்றைத்‌ தெருவிலே பொன்‌ மழையாக இறைத்து விட்டு காவேரியிலே நீராடி திருமண்‌ காப்பிட்டு உடையவர்‌ முன் வந்து சேவித்து நிற்கவே, உடையவரும்‌ அங்கு இடைத்தது என்ன என்று கேட்‌கவே, ஆழ்வானும்‌ அவை அனர்த்தமாகையாலே அப்பொழுதே கழிந்து போயின என்று நடந்தவற்றைக்‌ கூறினார்‌. இவ்வாறு பணத்தாசையே யில்லாத ஒருவர்‌ இருக்கிறாரே என்று உடையவரும்‌ மிகவும்‌ ஆனந்தமடைந்தார்‌. அவர்‌ அமுதனார்‌ வீட்டிற்கு ஆழ்வானை அனுப்பியதற்குக்‌ காரணம்‌ நம்‌ பெருமாள்‌ கோயில்‌ திறவுகோல்‌ அமுதனாரது கை வசம்‌ இருந்ததனால்‌ அதை உடையவர்‌ ஒரு உபாயமாகக்‌ கைப்பற்ற எண்ணி, ஆழ்வானிடம்‌ நீர்‌ போய்‌ ஏகாஹத்தில்‌ புசித்து முடிவில்‌ சந்நதித் திறவு கோலைப்‌ பெற்றாலன்றி சர்வம்‌ சம்பூர்ணம்‌ என்று சொல்ல வேண்டாம்‌ என்று நியமித்தனுப்ப ஆழ்வானும்‌ அப்படியே செய்து திறவு கோலை அமுதனாரிடமிருந்து பெற்று வந்து உடையவரிடம்‌ சமர்ப்பித்தார்‌.

எம்பெருமானார்‌ கோஷ்டியில்‌ உபய வேதாந்த கிரந்த காலட்‌சேபம்‌ நடக்கையில்‌, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களும்‌ சேஷத்வமும்‌ நிருபகமாகச்‌ சொல்லப்பட்டது. இவற்றுள்‌ அந்தரங்க நிரூபகம்‌ எது என்ற சர்ச்சை எழ, எம்பெருமானார்‌ இதை ஆச்சார்யார்‌ மூலமாக வெளியிடக்கருதி ஆழ்வானை திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ சென்று அறிந்து வாரும்‌ என்று அனுப்பி விட நம்பியும்‌ ஆறுமாத காலமாக ஆழ்வான்‌ காத்திருந்தும்‌ பதிலனுப்பாததால்‌, தான்‌ உடையவர்‌ பக்கம்‌ போகப் போவதாக ஆழ்வான்‌ சொல்லவே நம்பி அவரை அழைத்து மயர்வற மதிநல மருளப் பெற்ற நம்மாழ்வார்‌.-அடியேனுள்ளான்‌ என்றருளிச்‌ செய்தபடி கண்டாயே’ என்று மொழிந்தருள, ஆழ்வானும்‌ ‘தந்யோஸ்மி என்றெழுந்தருளினார்‌.-இதன்‌ கருத்து யாதெனில்‌ அடியேனுள்ளான்‌ என்ற பாசுரம்‌ திருவாய்மொழி (9-8-2)ம்பாட்டு. ஆத்மாவிலுள்ளான்‌ என்று சொல்‌லாமல்‌, என்னுள்ளான்‌ என்றும்‌ சொல்லாமல்‌, அடியேனுள்ளான்‌ என்று அடிமையை விட்டு ஆத்மாவை நிரூபித்தமை தோற்ற அருளிச் செய்ததாலே, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களைக் காட்டிலும்‌ சேஷத்வமே மகத்தான நிரூபக மென்றதாயிற்று. அதாவது ஞானத்தை விட சரணாகதியே பிரபத்தியே, சிறந்ததாயிற்று என்பதாகும்‌.
ஆழ்வான்‌ எந்நாளும்‌. மாதுகரம்‌ (உஞ்ச விருத்தி) பண்ணின பொருளை வைத்தே தேக யாத்திரை (வாழ்வது) நடத்துவது வழக்கம்‌. ஒருநாள்‌ விடாமல்‌ மழை பெய்ததால்‌ வெளியே செல்ல முடியாமல்‌ நாண் மலர்‌, கொண்டு உன் பாதம்‌ நண்ணா நாள்‌ எனக்குப்‌ பட்டினி நாளே என்றபடியே அருளிச்செயல்‌ அனுசந்தானமே தாரகமாகக்‌ கொண்டு வேறு உணவின்றியே கண் வளர்ந்திட, அன்றிரவு பெரிய பெருமாள்‌ அமுது செய்கிற பொழுது திருச்சின்ன ஒலி கேட்ட ஆழ்வானது தேவி ஆண்டாள்‌, உமது பக்தர்‌ பட்டினியா யிருக்க நீர்‌ குலவிக் குலவி அமுது செய்கிறீரே என்று மனத்தளவில்‌ நினைத்ததை உணர்ந்த எம்பெருமான்‌ தனக்குக்‌ கைங்கர்யம்‌ செய்‌கிற உத்தம நம்பிக்கு அர்ச்சகர்‌ மூலம்‌ தாம்‌ அமுது செய்த அக்கார அடிசிலை ஆழ்வானுக்குக்‌ கொடுக்குமாறு கட்டளையிட கோயில்‌ மரியாதைகளுடன்‌ அவர்கள்‌ கொண்டு வருவதைக் கண்ட ஆழ்வான்‌ பதறி எழுந்து எதிர் கொண்டு தனக்கும்‌ தேவிக்குமாக இரு திரளைகளை எடுத்துக் கொண்டு மிகுதியை அனுப்பி விட்டார்‌. தசரதனது பத்தினியர்‌ புத்திர காமேஷ்டி யாகத்தில்‌ பெற்ற பாயசத்தை உண்டதால்‌ ராம லட்சுமணாதிகள்‌ பிறந்ததைப் போல, இப்பொழுது இவர்க்கும்‌ திரு பராசர பட்டர்‌ திரு வேத வியாச பட்டர்‌ (ஸ்ரீராமப்‌பிள்ளை] என்ற இரு திருக் குமாரர்கள்‌ .பிறக்க ஏதுவாயின.-சோழ ராஜ சபையில்‌ நேர்ந்த கஷ்டங்களுக்குப் பிறகு திருவரங்‌கம்‌ திரும்பிய ஆழ்வான்‌, அரங்கனைச்‌ சேவிக்கக்‌ கோயிலுக்குச்‌ சென்ற பொழுது சோழனது காவலர்கள்‌ இராமானுஜரது சம்பந்தம்‌ உள்ளவர்கள்‌ கோயிலுக்குள்‌ நுழையக் கூடாது என்று தடுத்து விட ஆழ்வான்‌ எல்லோருக்கும்‌ உண்டாகும்‌ ஆத்ம குணம்‌ ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஏதுவாக இருந்தது. என்னுடைய ஆத்ம குணம்‌ ஆச்சார்ய சம்பந்தத்தை அறுத்துக் கொள்ள ஏதுவாகி விட்டதே என்று வருந்தி அன்றே கோயில்‌ வாசத்தை விட்டொழித்து திருமாலிருஞ்‌ சோலைக்கு தேவியோடு பயண கதியாய்ப்‌ புறப்பட்டு வழியிலே தங்கள்‌ மனக் கவலையை மறக்குமாறு பகவானது ஸ்வரூப, ரூப குண விபூதிகளை நினைந்து நெஞ்சு கனிந்து ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌, அதிமானுஷ ஸ்தவம்‌ என்ற இரு ஸ்தோத்ரங்களை அருளிச்‌ செய்தார்‌. நூறு ஸ்லோகங்களைக்‌ கொண்ட ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌.-இவர்‌ அருளிய பஞ்ச ஸ்தவங்களில்‌ முதலானது. இதனை அடுத்த அதிமானுஜ ஸ்தவத்தில்‌, நரசிம்மரது அவதாரங்களைச்‌ சுருக்கமாகவும்‌ இராம கிருஷ்ணாவதாரங்களைப்‌ பெருக்கமாகவும்‌ பேசி அனுபவித்தார்‌. இது வரை உலகில்‌ வெளிவந்த சம்ஸ்கிருத வாங்மயங்களில்‌ இவற்றுக்கு ஈடில்லை என்னும்படி சொல்‌ நோக்கு,பொருள்‌ நோக்கு, தொடை நோக்கு, நடை நோக்கு அமைந்துள்‌ளது என்று வித்வத்‌ ரஸிக விவேகிகள்‌ (சகல கலா: வல்லுநர்கள்‌!ஒரு முகமாக விளம்பி யுள்ளனர்‌.-இவ்வாறு அழகர்‌ கோயிலை அடைந்து, அடி வாரம்‌ தன்னில்‌ அழகர்‌ வடிவழகைப் பற்றி, முடியும்‌ அடியும்‌ படிகலனும்‌ முற்றும்‌ அனுபவித்து அவ்வெம்பெருமான்‌ விஷயமாக 148 ஸ்லோகங்கள்‌ கொண்ட ‘சுந்தரபாஹு ஸ்தவம்‌’ அருளிச் செய்து திருவரங்க மாநகர்‌ சோழன்‌ கொடுமையிலிருந்து விடுபட்டு எம்பெருமானார்‌ திரும்பி வந்து அவர்‌ திருவடி நிழலில்‌ தாம்‌ வாழ வேண்டும்‌ என்று பிரார்த்தித்துக் கொண்டு 18 வருட காலம்‌ அங்கு வாழ்ந்து வந்தார்‌.சோழ மன்னன்‌ மாண்டானென்று கேள்விப்பட்டு ஆழ்வான்‌ அழகர்‌ கோவிலை விட்டு மீண்டும்‌ திருவரங்கம்‌ வந்தார்‌. சோழன்‌ உபத்திரவத்திற்குப்‌ பயந்து திருநாராயண புரத்திலிருந்த எம்பெருமானாரும்‌ சோழன்‌ மடிந்ததை அறிந்து, அங்கிருந்து புறப்பட்டு,கோயிலுக்கு எழுந்தருளி, ஆழ்வானைப் பார்க்க அவர்‌ திருமாளிகைக்கு வர, ஆழ்வானும்‌, உடையவரை எதிர் கொண்டு அவர்‌ காலடியில்‌ விழுந்து கிடக்க, இருவரும்‌ வார்த்தை ஒன்றும்‌ பேச இயலாமல்‌ இருந்த பின்‌ உடையவர்‌ ஆழ்வானிடம்‌ இந்த வைணவ தர்சனத்திற்குக்‌ கண்‌ போன்றவரான உமக்குக்‌ கண்‌ போனதே என்று வருந்திப்‌ பின்‌ அவரையும்‌ அழைத்துக் கொண்டு மடத்திற்குச்‌ சென்றார்‌. ஆழ்வான்‌ தாம்‌ அருளிய மூன்று ஸ்தவங்களையும்‌ படிக்கக்‌ கேட்டு மகிழ்ந்தவராய்‌ அவரைப் பார்த்து நாம்‌ காஞ்சிக்குச்‌ சென்று பேரருளாளரிடம்‌ உமக்குக்‌ கண் பார்வை தருமாறு வேண்டி வருவோம்‌ என்று கூறி காஞ்சியில்‌ வரதராஜ ஸ்தவத்தைப்‌ பேரருளாளர்‌ திரு முன்பு விண்ணப்பஞ்‌ செய்து முடிக்கிற போது உடையவர்‌,கவனியாதிருக்கும் பொழுது, ஆழ்வான்‌ உடையவர்‌ திரு உள்ளப்‌படி தனக்குக்‌ கண்‌ வேண்டிக் கொள்ளாமல்‌ நான்‌ பெறும்‌ பேறு நாலூரானும்‌ பெற வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டார்‌. ௮ச்‌ சோழ ராஜனை அடுத்திருந்த நாலூரானுடைய முயற்சியே பெரியநம்பி திருநாடு அலங்கரிப்பதபற்கும்‌ (இறப்பதற்கும்‌] ஆழ்வான்‌ கண்‌ இழப்பதற்கும்‌ காரணமாகும்‌. அத்தகைய படுபாவியான நாலூரானுக்குக்‌ கொடிய நரகம்‌ நிச்சயம்‌ கிடைக்குமாதலால்‌,வைணவ குலத்தில்‌ பிறந்த ஒருவன்‌ படுகுழியில்‌ விழலாகாது என்று இரக்கமுற்று, நம்மாலல்லது அவன்‌ உய்வு பெற வழியில்லை என்று அறுதி யிட்டு, பரம துரோகியான அவனுக்கும்‌ நற் கதி வேண்டினார்‌. இச் சிறந்த குணம்‌ ஆழ்வான்‌ ஒருவனுக்கே அசாதாரணமாக அமைந்துள்ளது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்‌.-ஆழ்வான்‌ பிரார்த்தித்ததை பேரருளாளன்‌ அங்கீ கரித்ததைக் கேட்ட எம்பெருமானார்‌ பதறி பேரருளாளரான நீர்‌ என்‌ நினைவைத்‌ தலைக்கட்ட வில்லையே என்றும்‌, ஆழ்வானை நோக்கு, ‘நீர்‌ ஸ்வதந்திரராய்‌ என்‌ நினைவைத்‌ தலைக் கட்டாதே உபயோகமற்ற ஒன்றை வேண்டிக் கொண்டீரே என்றும்‌ வெறுத்துரைத்து இனி என்‌ செய்வது என்று மனக்குறைபட்டு நிற்க, அதனை உணர்ந்த பேரருளாளன்‌, ‘இராமானுஜா’ ஆழ்வான்‌. நம்மையும்‌ உம்மையும்‌ காணு மிடத்து உட் கண்ணால்‌ காணக் கடவன்‌’ என்று வரமருளினார்‌.அவ்வாறு இருப்பதைச்‌ சோதித்துத்‌ தேர்ந்து தெளிந்த உடையவர்‌ திரு உள்ள முகந்தவராய்‌ ஆழ்வானுடன்‌ மீண்டும்‌ கோயிலுக்கே எழுந்தருளினார்‌. ஒருநாள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ சிலர்‌ ஆழ்வானிடம்‌ மகா பாபியான நாலூரானுக்கு நற்கதி வேண்டிக் கொண்டதற்குக்‌ காரணம்‌ வினவ, அப்படிப்பட்ட பாவிகளுக்கன்றோ இரங்க வேண்டுவது, மீனுக்குத்‌ தண்ணீர்‌ வார்த்துப் பலனென்ன என்றார்‌. இதைக்‌ கேட்டவர்கள்‌ எம்பெருமானாரிடத்தில்‌ கூடக் காணக் கிடைக்காத நற் குணங்கள்‌ ஆழ்வானிடத்தில்‌ அழகாக அமைந்திருப்பதைக்‌ கண்டார்கள்‌.ஆழ்வானுடைய சிஷ்யர்கள்‌ பலரில்‌ பிள்ளைப் பிள்ளையாழ்‌வான்‌ என்பவர்‌ நற்குல நற் செல்வத்தால்‌ மேன்மை பெற்ற செருக்கினால்‌, பாகவதர்களிடம்‌ வினயமின்றிக்கே அபசாரப் பட்டுக்‌ கொண்‌டே யிருந்தார்‌. இவரைத்‌ திருத்திப்‌ பணிக் கொள்ளத்‌ தீர்மானித்த ஆழ்வான்‌, ஒரு புண்ணிய தினத்திலே நீராடின பின்பு, அவரிடம்‌ பிள்ளைப் பிள்ளாய்‌ எல்லாரும்‌ புண்ணிய காலமென்று தானம்‌ வழங்குவார்கள்‌. நீர்‌ நமக்கு ஒரு தானம்‌ வழங்க மாட்டீரோ என்று கேட்க, நான்‌ எதைத் தானம்‌ பண்ணுவது? எல்லாமே சாமியினுடையதே யன்றோ என்று கூறினார்‌. அதற்குப் பதிலாக அவ்வளவு போதாது. மனமொழி, மெய்களால்‌ பாகவத அபசாரப் படாமல்‌ இருக்க வேண்டும்‌ என்று கேட்டு அப்படியே அவரும்‌ வாக்குறுதி செய்தார்‌. பின்பு ஒரு நாள்‌ அவர்‌ மானசீகமாக, ஒரு பாகவதரிடத்தில்‌ அபசாரப் பட நேர்ந்தது. ஆனால்‌ மிகவும்‌ வருந்தியவர்‌ மள,மொழி, மெய்களால்‌, அபசாரப் படாதபடி இப் பொல்லா அழுக்குடம்புடனே இருப்பது அரிதாய்‌ இருக்கிறது என்று வருந்தவே இத்தனை நற்குணம்‌ இவருக்கு உண்டாயிற்றே என்று ஆழ்வானும்‌ மகிழ்ந்து பிள்ளைப் பிள்ளாய்‌, நெஞ்சினால்‌ நினைத்தற்கு அனுதாப முண்டாகிய படியால்‌ எம்பெருமான்‌ பொறுத்தருள்வான்‌. ராஜ தண்‌டம்‌ நேருமென்ற அச்சத்தினால்‌ சரீர மூலமாக ஒருவரையும்‌ நலியமாட்டீர்‌. ஆன பின்னர்‌ மானஸீகமாகப்‌ பட்ட அபசாரத்தை உமக்குக்‌ கழித்துத்‌ தந்தோம்‌. இனி வாக்கை மாத்திரம்‌ நன்றாகக்‌ குறிக் கொண்டு நல்ல முறையில்‌ வாழக் கடவீர்‌’ என்று கூறினார்‌.

எம்பெருமானின்‌ அருளினாலே, ஆழ்வானுக்கு இரண்டு புத்திரர்கள்‌ பிறந்தமையை முன்னரே கண்டோம்‌.-அக் குழந்தைகளைக்‌ காண வேண்டி உடையவர்‌ ஆழ்வான்‌ திரு மாளிகைக்குச்‌ சென்று தம்‌ சிஷ்யரான எம்பாரை நோக்கிக்‌ குழந்தைகளை எடுத்துக்‌ கொண்டு வருமாறு சொன்னார்‌. அவரும்‌ பிரபந்ந குலக் கொழுந்‌தான அக் குழந்தைகளை எடுத்து வரும் பொழுது காப்பாக ‘த்வயம்‌”* மந்திரத்தை அனுசந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக்‌ காட்டினார்‌. அவரும்‌ மிக மகிழ்ந்து,இக் குழந்தைகளிடம்‌ ‘த்வயம்‌’ பரிமளிக்கின்றதே, காரணம்‌ என்ன’ என்று கேட்க, எம்பாரும்‌ குழந்தைகளுக்குக்‌ காப்பாகத்‌ ‘த்வயானுசந்தானம்‌” செய்து கொண்டு வந்தேன்‌’ என்று சொன்னார்‌. அவ்‌வாறு எம்பார்‌ காப்பிட்டதற்கு உகந்து எம்பாரிடம்‌ அக் குழந்தைகளை உய்யும்‌ வகையை நாடிச் சென்று முற்பட்டீராதலில்‌ நீரே இவர்கட்கு ஆச்சாரியராகக்‌ கடவீர்‌ என்று நியமித்தார்‌. அதன் படியே அத் திருக் குமாரர்களுக்கு எம்பாரே ஆச்சார்ய கிருத்யங்கள்‌ செய்தருளினாரென்றும்‌, இது பற்றியே எம்பெருமானார்‌, எம்பார்‌, பட்டர்‌,நஞ்சீயர்‌, நம்பிள்ளை என்றபடி ஆச்சார்ய பரம்பரை வருகிற தென்பது பிரசித்தமாயிருக்கும்‌.-இவ்வாறிருக்க ஆழ்வானுக்கும்‌ ஆச்சார்ய பரம்பரையில்‌ அனுப் பிரவேசம்‌ (இடம்‌) உண்டானதே, அது எங்கனம்‌ என்று கேட்டால்‌, ஆழ்வான்‌ தம்‌ திருக் குமாரர்கட்குத்‌ திருவாய்மொழிக்‌குப்‌ பொருள்‌ கற்பித்து வரும் பொழுது ‘எண்பெருக்கந்நலத்‌ தொண்‌பொருள்‌ ஈறில, வண் புகழ்‌ நாரணன்‌ திண் கழல்‌ சேரே‘ என்ற பாசுரம்‌ வந்தது. அந்த அளவிலே இது திருமந்திர வார்த்தையை விவரிக்கிறதாகையாலே இம் மந்திரத்தின்‌ அர்த்தத்தை ஆச்சாரியரி னிடத்திலேயே கேட்டறிய வேண்டியதாகையால்‌, தான்‌ அவர்களுக்குச்‌ சொல்லாது நிறுத்தி, இதனை உங்கள்‌ ஆச்சாரியரிடம்‌ சென்று கேட்டுக் கொள்ளுங்கள்‌ என்று சொல்ல, அதனை விரைவில்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌ என்ற ஆவலினால்‌ அவர்கள்‌ உடனே எழுந்து ஆச்சாரியரான எம்பாரிடத்திற்குப்‌ போகப்‌ புறப்‌ பட்டார்கள்‌.ஆனால்‌ ஆழ்வான்‌ அவர்களைத்‌ தடுத்து நிறுத்தி ‘மின்னின்‌ நிலையில்‌ மன்னுயிராக்கைகள்‌’ என்றபடி யாக்கை நிலையாமையைத்‌ திரு உள்ளத்தில்‌ கொண்டு அவர்களை அழைத்து இருந்து கேளுங்கள்‌ என்று கூறித்‌ திருமந்திரத்தைச்‌ சொல்லி, இப் பாட்டின்‌ பொருளையும்‌ விவரித்து, இப் பாசுரத்தைத்‌ திருமந்திரத்தின்‌ அர்த்தமாக நினைத்திருங்கள்‌ என்று பணித்தருளினமையால்‌ தம்‌ இரு குமாரர்களுக்கு ஆழ்வானும்‌ ஒரு ஆச்சாரியராக அமைந்தருளினார்‌.

ஆகவே தான்‌ பட்டர்‌ ஸஹஸ்ரநாம பாஷ்யமருளிச்‌ செய்த பொழுது ஆசார்ய வந்தனம்‌ செய்கிற முதல்‌ ஸ்லோகத்தில்‌ ‘வந்தே கோவிந்த தாதெள என்று எம்பாரையும்‌ திருத் தகப்பனாரையும்‌ தொழுகின்‌றேன்‌ என்றருளிச் செய்து உபய ஸம்பந்தம்‌ தமக்கு உண்டான வழியைக்‌ காட்டுகிறார்‌.-பட்டர்‌ சிறுவராக இருந்த காலத்தில்‌ ஒருநாள்‌ தம்‌ தகப்பனாரான ஆழ்வானிடத்தில்‌ திருவாய்மொழி அனுசந்திக்கும் பொழுது
உறுமோ பாவியேனுக்கே’ (8.10.3) என்ற பாசுரத்தில்‌ ‘சிறு மா மனிசராய்‌ என்னை ஆண்டாரிங்கே திரியவே! என்றதைக்‌ கேட்டு, சிறுமை பெருமை இரண்டும்‌ ஒரு சேர எவ்வாறு ஒரு பொருளுக்குப்‌ பொருந்தும்‌ என்று பட்டர்‌ வினா எழுப்ப ஆழ்வான்‌ வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர்களும்‌ மனிதரென்று பார்க்கும்‌ பொழுது சிறுமை தோன்றினாலும்‌, பகவத்‌ பக்தி, ஞானம்‌,அனுஷ்டானம்‌ முதலிய நற் குணங்களை நோக்கும்‌ அளவில்‌ நித்ய முக்தர்களுக்கு நேர் மேன்மை பெற்று விளங்குகிறவர்கள்‌. அத்தகைய மகா புருஷர்களையே ஆழ்வார்‌ சிறுமாமனிசர்‌ என்று குறிப்பிடுகிறார்‌ என்று விளக்க, பட்டர்‌ அது தகும்‌ என்று இசைவு கொண்டார்‌.
ஆழ்வானுடைய குடும்ப காரியங்கள்‌ அனைத்தையும்‌ எதிராசரே நிர்வஹித்து (நடத்தி) வந்தார்‌. ஆழ்வானது குமாரர்கள்‌ இருவருக்கும்‌ சகல வித்யைகளையும்‌ புகட்டுவித்த பின்‌ அவர்கள்‌ விவாகத்‌துக்குரிய பருவத்தை அடைந்த அளவில்‌ ஆண்டாள்‌ ஆழ்வானைப்‌ பார்த்து, இவர்களுக்கு விவாகம்‌ செய்விக்க வேண்டாமோ என்று வினவ, ஆழ்வானும்‌ உடையவரிடம்‌ சென்று இப் புத்திரர்களுக்கு விவாகம்‌ செய்விக்க வேண்டும்‌ என்று சொல்கிறார்களே என்று விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ பெரிய நம்பி உறவினருக்குப்‌ பெண்‌ கொடுக்கும்படி வேண்ட முதலில்‌ மறுத்தவர்கள்‌ பின்னர்‌ பெருமாள்‌ தாமே கனவில்‌ தோன்றி கன்னிகைகளைக்‌ கல்யாணம்‌ செய்து கொடுக்கும்படி கட்டளை யிட அவர்களும்‌ இசைந்து, ஆழ்வான்‌ குமாரர்களுக்கு தங்கள்‌ குமாரத்திகளை கன்னிகா தானம்‌ செய்து கொடுத்துச்‌ சிறப்பாக விவாகமும்‌ நடந்தேறியது. இதனால்‌ ஆழ்வானுடைய குடும்ப கார்ய மனைத்தும்‌ எம்பெருமானார்‌ தலையில்‌ கடந்தது என்பது விளங்கும்‌.

நம்‌ ஆச்சாரியார்கள்‌ எல்லோரும்‌ சகல சாஸ்திரங்களிலும்‌ வல்லவராக இருந்த போதிலும்‌, ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களையே கொணடு, சகல சாஸ்த்ரார்த்தங்களையும்‌ அருளிச் செயல்களிலேயே நயிப்பித்து அனுபவிப்பார்கள்‌. இந்த அனுபவம்‌ ஆழ்வானுக்கு அதிகமாகவே இருக்கும்‌. திவ்யப்‌ பிரபந்தங்கவில்‌ பல பாசுரங்களில்‌ ஆழ்வானுடைய நிர்வாகம்‌ அருமையாகக்‌ கொண்டாடப்படும்‌. உதாரணமாக,திருவாய் மொழியில்‌ ஆழ்வார்‌ நாயகி பாவனையிலே பேசுகின்ற பாசுரங்களில்‌ மாசறுசோதி (5:83) என்ற
பாசுரத்தை உபந்யசிக்கும் போது தலையால்‌ வணங்கவுமாங்‌கொலோ தையலார்‌ முன்பே (5:3:7] என்ற ஈற்றடியின்‌ பொருளை விவரிக்குமளவில்‌ ஆமருவி நிரை மேய்த்தான்‌ நம்பியார்‌ என்ற பெரியவர்‌ எழுந்து தலைவி, தலைவனைத்‌ தலையில்‌ வணங்குவதுண்டோ என்று கேட்க, ஆழ்வான்‌ ஸீதாப் பிராட்டி, சிறிய திருவடியிடத்தில்‌ சந்தேகம்‌ சொல்லி அனுப்பும் பொழுது எனக்காக அவரைத்‌ தலையால்‌ வணங்கு என்று சொன்னது கண்டீரே என்று கூறியதைக்‌ கேட்டு அப்பெரியவர்‌ மகிழ்ச்சியடைந்தார்‌. இதைப்போன்ற பல விஷயங்களைப்‌ பிரபந்த வியாக்யானங்களில்‌ காணலாம்‌.
திருமாலிருஞ்சோலை யாத்திரையில்‌ அருளிய மூன்று ஸ்தவங்‌களும்‌ பின்பு எம்பெருமானார்‌ நியமனத்தால்‌ அருளிய வரதராஜஸ்தவமும்‌ பின்னர்‌ அருளிய ஸ்ரீஸ்தவமும்‌ ஆக மொத்தம்‌ ஐந்து ஸ்தவங்களாகும்‌. இவை தவிர வேறு வேறு சில ஸ்தோத்ரங்களும்‌ அருளிச் செய்தார்‌ என்பதை பட்டர் தம்‌ தகப்பனார்‌ அருளிச் செய்ததாகச்‌ சொல்லும்‌ ஸ்தோத்திரங்களிலிருந்தும்‌ தெரிகிறோம்‌. இவை தவிர பட்டரும்‌ ஆழ்வானும்‌ தாங்கள்‌ அருளிச் செய்த நித்ய கிரந்தங்களில்‌ என்று இருக்கக்‌ காண்கையில்‌ ஆழ்வான்‌ நித்யக் கிரந்தம்‌ ஒன்றும்‌ அருளியிருப்பதாக விளங்குகிறது. இவ்விடத்திலேயே ஆழ்வானுடைய சரமஸ்லோக வியாக்யானத்தையும்‌ நாம்‌ குறிப்‌பிட வேண்டும்‌. ஆனால்‌ சரம ஸ்லோக வியாக்யானம்‌ நமக்குக்‌ கிடைக்கவில்லை.ஆழ்வான்‌ திருநாட்டுக்கு ஏக வரம் பெற்றதைக்‌ கேட்டு வருந்‌திய உடையவர்‌ முன்னர்‌ தான்‌ தம்‌ ஆச்சாரியார்‌ திருக் கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ பட்ட அபசாரத்தால்‌ நமக்கு நரகமே கிட்டும்‌ என்று வருந்தினேன்‌. ஆனால்‌ இப்பொழுது ஆழ்வானோடு சம்பந்தமுடையார்‌ அனைவருக்கும்‌ மேல் வீடு கிட்டும்‌ என்று நம்‌ பெருமாள்‌ நியமித்தபடியால்‌, நமக்கு ஆழ்வானோடு சம்பந்தமுண்டாதலால்‌ ஒரு குறைவுமில்லை என்று களிப்புற்றுத்‌ தம்‌ காஷாயத்தை ஆகாயத்திலே வீசி யெறிந்து மகழ்ச்சிக்குப்‌ போக்கு விட்டதாகவும்‌ சொல்வர்‌.-ஆனாலும்‌ தனக்குயிரான ஆழ்வானைப்‌ பிரிந்து எங்கனம்‌ உயிர் தரிப்பது என்று திருஉள்ளம்‌ நொந்து ‘இப்படிச்‌ செய்தீரே,எங்களையும்‌ அரங்கனையும்‌ மறந்து மேல்நாடு போகத்‌ தீர்மானித்தது ஏன்‌ என்று கேட்க ஆழ்வானும்‌ உடையவருக்கு முன்னே போய்‌ உடையவரை எதிர் கொண்டழைக்கவே என்று கூற இப்படியும்‌ ஒரு ஆச்சார்ய பக்தி உண்டோ என்று வியந்து ‘உம்முடைய பேற்றுக்கு நாம்‌ விலக்காகலாமோ? சுகமாக நித்யவிபூதி யேற எழுந்தருளுவீர்‌: என்று சொல்லிச்‌ செவியிலே த்வயத்தை அருளிச் செய்தார்‌. பின்னர்‌ ஆழ்வானது திருமுதுகைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்தருளினார்‌.உடையவரின்‌ நிரூபணம்‌ பெற்ற ஆழ்வான்‌ உடையவரின்‌ திருவடித்‌ தாமரைகளைக்‌ கண்களிலும்‌ மார்பிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்ரீ பாத தீர்த்தம்‌ கொண்டு ‘இனி மடமேறி எழுந்தருள வேண்டும்‌”என விண்ணப்பம்‌ செய்ய, வடவாற்றங்கரை வழியாக உடையவர்‌ பின்னே செல்ல, இனி நில்லும்‌ எனத்‌ தண்டம்‌ சமர்ப்பித்து மீண்டும்‌ ஆழ்வான்‌ திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக்காவணத்தின்‌ நடுவே எழுந்தருளி யிருந்து தம்‌ தேவியார்‌ ஆண்டாளைப் பார்த்து என்ன நினைத்திருக்கிறாய்‌ என்று கேட்க, தேவரீர்‌ திரு உள்ளத்தைப்‌
பின்‌ செல்வதன்றி வேறு நினைவுண்டோ என்று கூறி விட ஆழ்வானும்‌, பட்டரையும்‌ ஸ்ரீராம பிள்ளையையும்‌ அருகிலழைத்து பெருமாளும்‌ நாச்சிமாரும்‌ எழுந்தருளி யிருக்க உங்களுக்கு ஒரு குறையுமில்லை. நம்‌ பெருமாள்‌ பெற்று வளர்த்தார்‌ என்று இறுமாந்திராதே, எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌ என்றிருங்கள்‌.ஆண்டாளுக்குக்‌ குறைவு வராமல்‌ நடந்து கொள்ளுங்கள்‌. பாகவத அபசாரப்‌்படாமல்‌ அவர்களை ஆதரித்துப்‌ போங்கள்‌ என்று உபதேசித்து அவர்கள்‌ கண்ணீரைத்‌ துடைத்து நீங்கள்‌ பிராக்ருத சம்பந்‌தத்தை நினைத்து வருந்தினீர்களானால்‌ உடையவர்‌ திருவடி சம்பந்‌தத்தைத் தூஷித்தவர்‌ ஆவீர்கள்‌. ஆத்ம ஸம்பந்தத்தை நினைத்து வருந்துவீர்களானால்‌ நம்முடைய ஒழிக்க ஒழியாத உறவை அறிந்திலீர்கள்‌ ஆவீர்கள்‌ என்று அவர்களைத்‌ தேற்றிப் பின்‌ கோயிலுக்கு நேரே, பிள்ளைப் பிள்ளை யாழ்வான்‌ மடியிலே திருமுடியையும்‌,ஆண்டாள்‌ மடியிலே திருவடிகளையும்‌ வைத்துக் கொண்டு, ஆளவந்தார்‌ திருவடிகளைச்‌ சிந்தை செய்து கொண்டு அன்றே திருநாட்‌டுக்கு எழுந்தருளினார்‌. பின்னர்‌ எம்பெருமானார்‌ எழுந்தருளித்‌ திருக் குமாரர்களைக் கொண்டு சரம கைங்கர்யங்களைப்‌ பெருக்க நடத்தி யருளினார்‌. மொழியைக் கடக்கும்‌ பெரும் புகழாகிற திருமேனியோடும்‌ அர்ச்சாவதாரத் திருமேனியோடும்‌ இவ் விபூதி எங்கும்‌ நிறைந்து விளங்குகிறாராகையால்‌ நாமும்‌ கண்கள்‌ துஞ்சாதே கண்ணாரக் கண்டு களிக்கும்‌ பாக்யம்‌ பெற்றோம்‌.

சீராருந்‌ திருப்பதிகள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
தென்னாங்கர்‌ சீரருளைச்‌ சேருமவன்‌ வாழியே.
பாராரும்‌ எதிராசர்‌ பதம்‌ பணிந்தோன்‌ வாழியே.
பாடியத்தின்‌ உட்பொருளைப்‌ பகருமவன்‌ வாழியே.
நாராயணன்‌ சமயம்‌ நாட்டினான்‌ வாழியே.
நாலூரான்‌ தனக்கு முக்தி நல்கினான்‌ வாழியே.
ஏராருந்‌ தையிலத்துத்‌ திங்குவந்தான்‌ வாழியே.
எழில்‌ கூரத்தாழ்வான்‌ தன்‌ இணையடிகள்‌ வாழியே
.

திருவரங்கத்தமுதனார்‌ -அவதாரஸ்தலம்‌ திருவரங்கம்‌. தகப்பனார்‌ அணியரங்‌கத் தமுதனார்‌. இவரது இதர நாமங்கள்‌ மூங்கில் குடி யமுதனார்‌. இவரது நட்சத்திரம்‌ பங்குனி ஹஸ்தம்‌. இவர்‌ 138 வருஷம்‌ வாழ்ந்திருந்‌தார்‌ என்பன இவரது வாழ்க்கைக்‌ குறிப்புகள்‌. ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரனை அடைவதற்கு அடி நிலையாகச்‌ சொல்லப்படுவது ஆச்சார்ய சம்பந்தம்‌. அத்தகைய ஆச்சார்ய சம்பந்தம்‌ பெற்று உய்ந்து போனவர்‌ திருவரங்கத் தமுதனார்‌. இவர்‌ பல கலைகளும்‌ பயின்று கோயிலில்‌ புரோஹிதராய்‌ செல்வாக்குடன்‌ பெரிய கோயில்‌ நம்பி என்னும்‌ பெயருடன்‌ திகழ்ந்து வந்தார்‌. பெரிய கோயிலில்‌ உடையவர்‌ பெரிய பெருமாளால்‌ உபய விபூதிகளும்‌ இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்படி வழங்கப்பட்டமையால்‌ கோயில்‌ காரியங்‌களை உடையவர்‌ ஆராய்ந்து வரலானார்‌. அக் காலத்தில்‌ பெரிய கோயில்‌ நம்பி ரஜோ குணம்‌ மிக்கவராய்‌ உடையவருக்குக்‌ கீழ்ப்படியாமல்‌ கோயில்‌ நிர்வாஹத்திற்கு இடையூறுகள்‌ பல செய்து வந்தார்‌. அதனால்‌ உடையவர்‌ மனம்‌ உடைந்து பெரிய கோயில்‌ நம்பியைக்‌ கோயிலின்றும்‌ வெளியேற்றத்‌ திருஉள்‌ளம்‌ கொண்டிருந்தார்‌. ஒரு நாள்‌ பெருமாள்‌ புறப்பாட்டிற்காகக்‌ காத்திருக்கும் பொழுது, உடையவர்‌ கனவிலே பெருமாள்‌ முதிய வேதியனாகத்‌ தோன்றி, பெரிய கோயில்‌ நம்பி வெகு நாட்களாக நம்மையே நம்பி இருக்கிறார்‌. பிறகு தேவரீர்‌ திரு உள்ளம்‌ என்று கூறி மறைந்தார்‌. உடையவர்‌ தான்‌ கண்ட கனவினைக்‌ கூரத்தாழ்வானிடம்‌ சொல்லி நம்‌ திறத்துப்‌ பகைமை பாராட்டும்‌ பெரிய கோயில்‌ நம்பியை வெளியேற்றலாகாது. இங்கேயே வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்பது பெருமாள்‌ திரு உள்ளம்‌ போலும்‌.-நம்மால்‌ அவனோடு நிர்வாகம்‌ நடத்த இயலாது. ஆகையால்‌ நாம்‌ பெருமாள்‌ கோவிலுக்கே போய்‌ விடுவோம்‌ என்று கூறினார்‌.-அதைக் கேட்டு ஆழ்வான்‌ இவ் விதம்‌ அருளிச்செய்த பெருமாளுக்‌குப்‌, பெரிய கோயில்‌ நம்பியைத்‌ திருத்திப் பணி கொள்ள வேண்‌டும்‌ என்பது தான்‌ திருஉள்ளமாக இருக்க வேண்டும்‌ என்று கூறினார்‌. உடையவர்‌ அவ்வாறாயின்‌ நீரே அவரைத் திருத்தும்‌ என்று கூறினார்‌. ஆச்சாரியன்‌ கட்டளையைத்‌ தலைமேற் கொண்டு, ஆழ்‌வானும்‌ புலமை வாய்ந்த பெரிய கோயில்‌ பெரிய நம்பியை மெல்ல மெல்லச்‌ சீர்திருத்தினார்‌. திருத்தப்பட்ட நம்பியை ஆழ்‌வான்‌ உடையவர்‌ திருவடிகளிலே பொருத்தமுறச்‌ சேரவிட்டார்‌.-நம்பியை உடையவர்‌ அகமகிழ்ந்து முகமலர்ந்து ஏற்றுக்‌ கொண்டார்‌.-பெரிய கோயில் நம்பி ஆத்ம ஹித சிந்தனையில்‌ தம்மிலும்‌
மேம் பட்டவராய்‌ விளங்கனமையால்‌, ஆழ்வான்‌ திருவடிகளையே அவர்‌ குருவாகப்‌ பற்றும்படி செய்தருளினார்‌ உடையவர்‌. அரங்கனுக்குச்‌ சேஷப்பட்டு அவன்‌ செய்ய தானிணைகள்‌ பேர்வின்றிஇருந்தாலும்‌, தொண்டு பட்டவர்‌ பால்‌ சார்வின்றி நின்றதாகத்‌ தம்மைப் பற்றி (இராமானுஜ நூற்றந்தாதி (80)) இவர்‌ கூறிக் கொள்வதால்‌ இவர்‌ அரங்கனுக்குச்‌ சேஷப்பட்டவராய்‌ பணிவிடை புரிந்துகொண்டிருந்தாலும்‌, எம்பெருமானார்‌ அடியார்கள்‌ விஷயத்தில்‌ அனுகூலராய்‌ இல்லாமலிருந்தமை புலனாகிறது.
அன்பார்ந்த இன்பம்‌ ததும்பும்படி யமைந்த பெரிய கோயில்‌ நம்பியின்‌ சொல்லின்‌ இனிமையை நுகர்ந்த உடையவர்‌ இவருக்கு-அமுதன்‌’ என்று திருநாமம்‌ சூட்டினார்‌. அதிலிருந்து இவருக்குத்‌ திருவரங்கத்தமுதனார்‌ என்ற பெயர்‌ வழங்கலாயிற்று. நம்மாசாரியர்‌கள்‌, இவரிடத்திலுள்ள நம்‌ மதிப்புத்‌ தோன்ற ‘பிள்ளை அமுதனார்‌! என்று இவரைக்‌ குறிப்பிடுவார்கள்‌. ஈட்டிலும்‌ பெரிய ஜீயர்‌ மணவாள மாமுனி இராமானுஜ நூற்றந்தாதிக்கு இயற்றிய உரையிலும்‌, ஸ்ரீவசன பூஷணத்திற்கு அவரருளிய வியாக்யானத்திலும்‌(சூத்திரம்‌ 416) பிள்ளை யமுதானாரென்று தான்‌ வழங்கப்பட்டுள்‌ளது.-சில நாட்களுக்குப் பின்னர்‌ அமுதனார்‌ தாயாருக்குச்‌ சரம கைங்‌கர்யம்‌ செய்ய நேர்ந்தது. ஏகாதிஹ்த்திற்கு ஆள்‌ வேண்டி உடையவரிடம்‌ விண்ணப்பித்துக்‌ கொண்டார்‌. பூரியரோடுள்ள சுற்றம்‌ புலத்‌திக் கொண்டவராதலால்‌, மற்றெவருமே துணிந்து ஏற்காத இப் பணியை உடையவர்‌ கட்டளைப்படி ஆழ்வான்‌ துணிந்து ஏற்றுக்‌ கொண்டார்‌. ஆழ்வான்‌ அமுது செய்து திருப்தி கூறும்‌ காலத்தில்‌ அமுதனாருடைய கோயில்‌ புரோகிதத்தையும்‌, புராண படநதையும்‌தானம்‌ செய்யச் சொல்லி அவற்றைப் பெற்று உடையவரிடம்‌ ஒப்படைத்தார்‌. உடையவர்‌ நியமனத்தினால்‌ கோயிற் புரோகிதமும்‌,புராண படநமும்‌ ஆழ்வானாலே நிர்வஹிக்கப்பட்டு வந்தன.
உடையவர்‌ கோயிற் பணியை ஆழ்வானுக்குத்‌ தானமாக வழங்‌கி விட்டபடியால்‌, கோயிலிலே ஒட்டற்றிருந்தார்‌ அமுதனார்‌. இந்நிலையினை நோக்கிய, உடையவர்‌ வித்வானான அமுதனார்‌ இப்படி ஓய்ந்திருக்கலாகாது என்று எண்ணி, பிள்ளை திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌ திருமாளிகைக்கு எழுந்தருளி, இயற்பா, ஸ்ரீகோசத்தை தானமாகக்‌ கேட்டு வாங்கி இன்று முதல்‌ ஸந்நிதியில்‌ இயற்பாவை நீங்கள்‌ சேவிக்க வேண்டாம்‌ என்று கூறி, அதனை அமுதனாரிடம்‌ கொடுத்து, ஒர்‌உரு இயற்பாவினைச்‌ சாதித்து, இயற்பா ஆயிரமும்‌ ஸந்நிதியில்‌ சேவிக்கும்‌ அந் நாட்களிலே அரையருக்கு நடப்பவைகளான மரியாதைகளனைத்தையும்‌ நடத்தும்படி ஏற்பாடு செய்தார்‌. நாச்சியார்‌ ஸந்நிதி முதலிய இடங்களிலும்‌, அமுதனார்‌ இயற்பாவை தொடங்க,ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தொடர்ந்து அனுசந்திக்கும்படி நியமித்தருவினார்‌. திவ்யப் பிரபந்தங்களிலே இயற்பா நீங்கலாக மற்ற இசைப் பாக்கள்‌ அனைத்தும்‌ அரையராலேயே அனுசந்திக்கப் படுகின்றன. இவ்வாறு உடையவர்‌ திட்டம்‌ செய்த சில நாட்களுக்குப் பிறகு
அமுதனார்‌ எம்பெருமானார்‌ விஷயமாக, காயத்ரியை உரு எண்‌ணும்‌ கணக்கில்‌ நூற்றெட்டுக்‌ கட்டளைக் கலித்துறையில்‌ அமைந்த அந்தாதி நூலை அருளிச் செய்து பெருமாளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌. பெருமான்‌ ஒரு ஸப்தாபரணத் திருநாளிலே, உடையவரை நம்முடன்‌ கூட, வர வேண்டாம்‌ என்று நியமித்து திரு வீதி யிலே சகல வாத்யங்களையும்‌ நிறுத்தி, ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ இதை அனுசந்திக்கக் கேட்டு போர உகந்தருளினார்‌. அதுமுதல்‌ பெருமாள்‌ நியமனத்தாலே பெரிய ஸந்நிதியில்‌ இயற்பா அனுசந்தித்தவுடனே நூற்றந்தாதியைப்‌ பெருமாள்‌ வரிசையுடன்‌ கேட்டருள்கிறார்‌. நாச்சியார்‌ சன்னிதியிலும்‌ அப்படியே பெருமாள்‌ திருஉள்ளத்தை அனுசரித்து எம்பெருமானார்‌ முதலாயிரத்திலே கண்ணி நுண் சிறுத்தாம்பினைப்போல இயற்பாவின்‌
இறுதியில்‌ இராமானுஜ நூற்றந்தாதியையும்‌ சேர்த்து ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌, இந்த நூற்றந்தாதியை பிரபந்ந காயத்ரியாக நாடோறும்‌ அனுசந்திக்க வேண்டுமென்று கட்டளையிட்டருளினார்‌.-இந்த இராமானுஜ நூற்றந்தாதி ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிய வேண்டிய விஷயங்கள்‌ அனைத்தையும்‌ விரிவாகவிளக்கிக் காட்டுகிறது. ஆச்சார்ய அபிமான நிஷ்டன்‌ பகவானை அறவே விட்டவனாக மாட்டான்‌. ஆசார்ய வழிபாட்டிலேயே, எம்பெருமானும்‌ வழிபட்டவனாகி விடுகிறான்‌ என்னும்‌ உண்மையைப்‌ பிரபந்தத்தைக் கொண்டு அறுதியிட்டு எம்பெருமானாரையே வழிபடுவார்களாயினர்‌ முன்னோர்கள்‌. இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌: (106) என்னும்‌ பாசுரம்‌ இவ்வுண்மையை உணர்த்தும்‌.நம்மாழ்வாருக்கு மதுரகவிகள்போல எம்பெருமானாருக்கு அமுத னார்‌ அமைந்துள்ளார்‌. இருவரும்‌ ஆச்சார்யன்‌ திறத்துத்‌ தங்கள்‌ நிலையை விளக்கியும்‌ பிறருக்கு உபதேசித்தும்‌ உய்வுறுத்தும்‌ பொருள்களை உலகற்கு வெளியிட்டு உதவுகின்றனர்‌. ஆயினும்‌ மதுரகவிகளைப்‌ போலச்‌ சுருங்கக்‌ கூறாது, அமுதனார்‌ பரக்கக் கூறிப்‌ பரமோபகாரம்‌ புரிவதை நன்குணர்ந்து நாம்‌ நன்றி பாராட்டக்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.-இங்கனம்‌ அறிவில்‌ முதிர்ந்தோர்களால்‌, முக்கிய பிரமாணமாக ஏற்கப்பட்ட இப்பிரபந்தத்தை வைணவர்களனைவரும்‌ பிரபந்நகாயத்ரியாக நாடோறும்‌ அனுசந்திக்க வேண்டுமென்று உடையவர்‌ இட்ட கட்டளைக்கு ஏற்பவும்‌ அவரது மறு அவதாரமான மணவாள மாமுனிகள்‌ உபதேசித்ததற் கேற்பவும்‌ இந்த இராமானுஜ நூற்றந்‌தாதியை ஒதி ௨ய்வுறுவோமாக.

நயந்தரு பேரின்பமெல்லாம்‌ பழுதென்று நண்ணிதைபால்‌
சுயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணைமேல்‌ உயர்ந்த குணத்தத்‌ திருவரங்கத்தமுது ங்கும்‌ அன்பால்‌ இயம்பும்‌ கலித்துறை யந்தாதி ஓத இசை நெஞ்சமே.

எந்தாதை கூரேசர்‌ இணையடியோன்‌ வாழியே.
எழில்‌ மூங்கிற்குடிவிளங்க இங்கு வந்தோன்‌ வாழியே.
நந்தாமல்‌ எதிராசர்‌ நலம்‌ புகழ்வோன்‌ வாழியே.
நன்மதுர கவிநிலையை நண்ணினோன்‌ வாழியே.
பைந்தாம அரங்கன்‌ பதம்‌ பற்றினான்‌ வாழியே.
பங்குனியில்‌ அத்தநாள்‌ பாருதித்தான்‌ வாழியே.
அந்தாதி நூற்றெட்டும்‌ அருளினான்‌ வாழியே. அணியரங்கத்தமுதனார்‌ அடியிணைகள்‌ வாழியே.

உடையவர்‌ மேல்நாட்டிலே சைவர்கள்‌ மிகுந்திருந்த கோவையூரிலே ஒரு புஷ்கரணியிலே நீரெடுக்கும்‌ துறையிலே முதலியாண்‌டானைத்‌ திருவடி விளக்கி வரச்செய்தார்‌. அந்த ஸ்ரீபாத தீர்த்தப்‌ பிரபாவத்தாலே அவ்வூரார்‌ அனைவரும்‌ எம்பெருமானை ஆஸ்ரயித்தனர்‌. அவ்வூருக்கு ஸ்ரீ சாளக்கிராமம்‌ என்று திருநாமம்‌ வழங்கினார்‌. அங்கிருந்துதான்‌ வடுகநம்பிக்கு தர்ஸநார்த்தங்களை அருளிச்‌செய்தார்‌. வடுநம்பியின்‌ தகப்பனார்‌ பெயர்‌ ஸாலக்ராம ஐயன்‌. பிறந்த நட்சத்திரம்‌ ஸர்வ ஜீத்‌ வருஷம்‌ மாசிப் புனர்பூசம்‌. திருநாமங்‌கள்‌ ஸாலக்ராம ஐயன்‌. வடுக நம்பி பஞ்சமோபாய சம்பந்தர்‌ முதலியன. இவர்‌ 895 வருடம்‌ வாழ்ந்திருந்தார்‌. இவர்‌ பரமஏகாந்தியாய்‌ ஆச்சார்ய அபிமான நிஷ்டராகையாலே இவருக்கு
இருப்பிடம்‌ எம்பெருமானார்‌ சந்நிதியே. வடுகநம்பி எம்பெருமானார்‌ திருவடிகளே உபாயோபேயம்‌ என்று விஸ்வசித்து அவர்‌ திருவடிநிலைகளையே திருவாராதனம்‌
பண்ணிப்‌ போகுவார்‌.-இவ்வாறிருக்கையில்‌ ஒரு நாள்‌ உடையவர்‌
திருவாராதனத்தையும்‌, தன்னுடைய திருவாராதனத்தையும்‌ (வணங்கும்‌ கடவுள்‌) சேர எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு வர உடையவர்‌ கண்டு, ‘வடுகா இது என்‌ செய்தாய்‌ என்ன?” இவரும்‌ உங்கள்‌ தேவரில்‌ எங்கள்‌ தேவருக்கு வந்த குறையென்‌’ என்றார்‌.-வடுகநம்பி உடையவருடன்‌ பெருமாளைச்‌ சேவிக்கப் போனாலும்‌, உடையவர்‌ விக்கிரகத்தையே சேவித்துக் கொண்டு போவார்‌. ஒரு நாள்‌ எம்பெருமானார்‌ பெரிய பெருமாள்‌ திருக்கண்ணழகைப் பாராய்‌ என்ன இவரும்‌ உடையவர்‌ திருக்கண்ணழகையும்‌ பெரிய பெருமாள்‌ கண்ணழகையும்‌ பார்த்து என்னமுதினைக்‌ கண்ட கண்கள்‌, மற்றொன்றினைக்‌ காணாவே என்ன உடையவரும்‌ இதொன்றிருந்தபடி என்‌, என உகந்து பூரண கடாட்சம்‌ செய்தருளினார்‌.-வடுகநம்பி எம்பெருமானார்‌ அமுது செய்தருளி பிரஸாதம்‌ ஸாதித்தால்‌, இரண்டு கைகளாலும்‌ ஏற்றுக்கொண்டு ஸ்வீகாரம்‌ பண்ணித்‌ தம் திருமுடிமிலே கைகளைத்‌ தடவிக்கொள்‌வார்‌. இதைக் கண்டு உடையவர்‌ மிகவும்‌ கோபித்து வடுகா கையைக்‌ கழுவிக்கொள்‌ என்ன கழுவிக் கொண்டு மற்ற நாள்‌ நம்பெருமாள்‌ பிரஸாதத்தை உடையவர்‌ தாமும்‌ ஸ்வீகரித்து இவருக்கும்‌ பிரஸாதிக்க வாங்கி ஸ்வீகரித்து கைகழுவிக் கொண்டார்‌உடையவர்‌ இதைப் பார்த்து என்‌ செய்தாய்‌ என்ன வடுக நம்பி நேற்று அருளிச்செய்தபடி செய்தேன்‌ என்றார்‌. இதைக்கேட்ட உடையவர்‌ வடுகா உமக்குத்‌ தோற்றோம்‌ என்றார்‌. மற்றொரு நாள்‌ வடுகநம்பி உடையவருக்குப்‌ பால்‌ காய்ச்சும்‌ பொழுது, பெருமாள்‌ பெரிய திருநாளில்‌ உடுத்து முடித்துப்‌ பூண்டு புறப்பட்டுவர உடையவரும்‌ நம்பியைத்‌ தம்மோடு பெருமாளை சேவிக்க வருமாறு அழைத்தார்‌. வடுகநம்பியும்‌ உம்முடைய பெருமாளைச்‌ சேவிக்க வந்தால்‌ என்‌ பெருமாளது பாலமுது பொங்கப்‌போகும்‌, வரக்கூடாது என்று கூறினார்‌. வடுக நம்பியகத்தே, பூர்வ சம்பந்திகளாயிருப்பவர்கள்‌ வந்து தங்கிப்போக, அகத்தையெல்‌லாம்‌ சுத்தி பண்ணி, உபயோகித்த பாத்திர பண்டங்களையும்‌ தூர எறிந்துவிட்டுப்‌ பிராயச்சித்தமாக ஸ்ரீ வைஷ்ணவனான முதலியாண்‌டான்‌ புழக்கடையில்‌ கழித்துக்‌ இடந்த பாத்திரங்களைக்‌ கொண்டு போய்‌ ஒரு பக்தனுடைய எச்சில்‌ நமக்குப்‌ பிரசாதம்‌ என்று உபயோகித்தார்‌. இவர்‌ உடையவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தமல்லால்‌ மற்றொருவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தம்‌ கொள்ளார்‌. உடையவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தத்தை
சாளக்கிராமத்திலே தாம்‌ சேர்த்த தனமாகச்‌ சேமித்து உடையவர்‌ திருவடிகளையே தஞ்சமாகக்‌ கொண்டு தமது சரம தசையிலும்‌ தமக்கு அந்தரங்கரான பந்துக்களுக்கும்‌, தஞ்சமாகக்‌ காட்டிக் கொடுத்து சீர்த்ததனமிது வருந்தியும்‌ பேணிக் கொண்டு போங்கள்‌ என்றுஅடைக்கலங்காட்டிக்‌ கொடுத்தருளினார்‌.

உன்னையொழிய ஒரு தெய்வம்‌ மற்றறியா
மன்னுபுகழ்சேர்‌ வடுகநம்பி தன்நிலையை
என்‌ தனக்கு நீ தந்து எதிராஜா எந்நாளும்‌ உன்தனக்கே ஆட்கொள்‌ உகந்து
: (ஆர்‌.பி.ர 11)

வடுகநம்பி தாம்‌ எழுதிய ஸ்ரீ யதிராஜ வைபவம்‌ என்ற நூலின்‌ இறுதியில்‌; தனது அந்தரங்க சிஷ்யர்களில்‌ ஒவ்வொருவரையும்‌ ஒவ்வொரு கைங்கர்யத்தில்‌ நியமித்த எதிராஜர்‌ மிகவும்‌ தகுதியற்ற என்னையும்‌ தமக்குப் பால்‌ காய்ச்சும்‌ கைங்கர்யத்தில்‌ நியமித்தருளினார்‌. அத்துடன்‌ தம்‌ அடியார்க்கு அடியார்க்கு, அடியார்க்கு அடியனாகவும்‌, தமக்கு நல்லது செய்பவனாகவும்‌ கொண்டு என்‌னையும்‌ ரட்சிக்கிறவரான அவர்‌ பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறார்‌. இறுதியில்‌ பல ஸ்ருதியில்‌ எதிராஜரின்‌ வைபவத்தை விளக்குவதாய்‌, கலியின்‌ குற்றங்களைப்‌ போக்குவதான இந்நூலை எவர்கள்‌ படிக்கிறார்களோ அவர்கள்‌ உபய விபூதி நாயகராவார்கள்‌ என்பது உறுதி என்று நூலின்‌ பயனையும்‌ கூறி முடிக்கிறார்‌.

முதலியாண்டான்‌ திரு அவதார ஸ்தலம்‌, தொண்டை மண்டலத்தில்‌ ஸ்ரீபுருஷமங்‌கலம்‌. திரு நக்ஷத்திரம்‌ ப்ரபவ வருஷ சித்தரை மாதம்‌ 85-ம்தேதி கிருஷ்ண பக்ஷ தஸமி வியாழக் கிழமை, புனர் பூசம்‌, தகப்பனார்‌. ஆனந்த தீஷிதர்‌, தாயார்‌, நாச்சியாரம்மன்‌; குலம்‌- வடமான்‌ வாதூல கோத்ரம்‌. திருநாமங்கள்‌:-தாஸரதி, ராமானுஜன்‌ பொன்‌னடி, ஸ்ரீவைஷ்ணவதாசர்‌, திருமறுமார்பன்‌ முதலியன. குமாரர்‌ -கந்தாடை யாண்டான்‌. ஆசாரியார்‌ – எம்பெருமானார்‌. திருவாராதனம்‌ – அழகிய சிங்கர்‌.-இருப்பிடம்‌. கோயில்‌ பிரபந்தங்கள்‌-அருளிச் செய்தவர்‌ திருத்தகப்பனார்‌. இவர்‌ எம்பெருமானாருக்குத்‌ திருமருமகனாராய்‌, திருவடிகளுமாய்த்‌ த்ரிதண்டமுமாயிருப்பார்‌.-இவர்‌ அருளிய பிரபந்தம்‌ ரஹஸ்யத்ரயம்‌. இவர்‌ கந்தாடை திருவம்‌ ஸத்துக்கெல்லாம்‌ கூடஸ்தர்‌. இவர்‌ 150 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌.-இராமானுஜர்‌ (இளையாழ்வார்‌ சுவாமிகள்‌) சந்யாச தர்மத்தை மேற்கொண்ட பின்னர்‌ வாதூல குலத்து வந்த முதலியாண்டானும்‌, கூரத்தாழ்வானும்‌ அவரை ஆஸ்ரயித்து அவரது சீடர்களானார்கள்‌, முதலியாண்டானைத்‌ தன்னுடைய தண்டமாகவும்‌ கூரத்தாழ்வானைத்‌ தன்னுடைய பலித்ரமாகவும்‌ கருதி ஏற்றுக் கொண்டார்‌ இராமானுஜர்‌. அவர்‌ பதினெட்டு முறை திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாளிகைக்கு அலைந்த பின்னர்‌ அவர்‌ மனமிரங்கித்‌ திருமந்தரத்தை உபதேசிக்கத்‌ தீர்மானித்து நீர்‌ மட்டும்‌ தனியாக வாரும்‌ என்று சொல்லி யனுப்ப உடையவர்‌ முதலியாண்டானையும்‌, ஆழ்‌வானையும்‌ உடன்‌ அழைத்துச் சென்று, ஆண்டானை இவர்‌ என்‌ திரிதண்டம்‌ என்றும்‌ ஆழ்வானை இவர்‌ என்‌ பவித்ரம்‌ என்றும்‌ கூறி அவர்களுக்கும்‌ அப்பேறு கிடைக்குமாறு செய்தமை நமக்குத்‌ தெரிந்ததே. பின்னர்‌ சரமஸ்லோக அர்த்தத்தையும்‌ உபதேசிக்க எண்ணி நீர்‌ ஒருவர்‌ மாத்திரம்‌ வாரும்‌ என்று கூறிட ஆழ்வானுக்கு நான்‌ இதை வெளியிடாதிருக்க முடியாதே என்று கூறவே, நம்பியும்‌ அவரது அத்யாவஸியத்தை (தகுதியை)ப்பரீஷித்தறிந்து உபதேசியும்‌ என்றார்‌. ஆகவே ஆழ்வானின்‌ தகுதியைச்‌ சோதித்து அவரது மாஸோபவாஸம்‌ கடந்த பின்‌ அவ்வர்த்தத்தை உபதேசித்தார்‌. பிறகு முதலியாண்டானும்‌ வந்து தொழுது பிரார்த்திக்க நீர்‌ நம்பி பக்கல்‌ அனுமதி பெற்று வாரும்‌ என்றிட ஆண்டானும்‌ திருக்கோட்டியூர்‌ சென்று ஆறுமாத காலம்‌ அவருக்கு அடிமை செய்து காத்திருந்தும்‌, பெறாமையால்‌ வருந்தி, ஒருநாள்‌ நம்பியை உபதேசம்‌ செய்யுமாறு கனக்கப்‌ பிராத்திக்கைமில்‌, முக்குறும்பும்‌ போனால்‌ எம்பெருமானார்‌ தாமே பிரஸாதிப்பார்‌-போய்க் கேளும்‌ என்று விடை கொடுத்து அனுப்பிவிட ஆண்டானும்‌ மிக ஆவலோட எம்பெருமானாரிடம்‌ யாசித்த பின்னர்‌ மிகவும்‌ மகிழ்வோடு ஆண்டானுக்கு அதை உபதேசித்தருளினார்‌.-எம்பெருமானார்‌ வடநாட்டு யாத்திரை சென்ற பொழுது அவரது யாத்ரா சகாவாக உடன்‌ சென்றவர்‌ முதலியாண்டான்‌. அவர்கள்‌ யாத்திரையின் போது வஹ்நி புஷ்கரிணியாகிற கிராமத்திற்குச்‌ சென்று தங்கிவிட்டு, அருகிலுள்ள மிதிலாபுரி சாளக்கிராமத்துக்குச்‌ சென்ற பொழுது அவ்வூர்‌ ஜனங்கள்‌ அனைவரும்‌ பிரச்சந்த விரோதிகளாகையாலே (வேறு மதத்தவர்கள்‌ உடையவரை ஆதரிக்கவில்லை. உடையவர்‌ முதலியாண்டானிடம்‌, நீர்‌ போய்‌ அவ்வூரார்‌ நீர் முகக்கும்‌ துறையிலே உம்முடைய ஸ்ரீபாதத்தை நீட்டிக்‌ கொண்‌டிரும்‌ என்று சொல்ல, அவரும்‌ அப்படியே செய்ய, அவரது ஸ்ரீபாத தீர்த்த விசேஷத்தால்‌ மக்கள்‌ மனம்‌ தெளிந்து உடையவரிடம்‌ வந்து ஆஸ்ரயித்தனர்‌. இவரது பெருமையை விளக்கும்‌ மற்றொரு சம்பவம்‌ வடுகநம்பியின்‌ செயலாகும்‌. அதை நாம்‌ வடுக நம்பி வைபவத்திலேயே கண்டோம்‌.
எதிராஜருடைய பாதுகைகள்‌ எவருடைய பெயராலே (முதலியாண்டான்‌ என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி என்னும்‌ திருநாமமுடைய அந்த முதலியாண்டானின்‌ திருவடிகளை யான்‌ தலையிலே தரிக்கிறேன்‌ என்கிறார்‌ குரு பரம்பராப்‌ பிராமணத்திரட்டு என்ற நூலின்‌ ஆசிரியர்‌.ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையில்‌ கூரத்தாழ்வானை யடுத்து வருபவர்‌ முதலியாண்டானாகும்‌.

அத்தகிரி யருளாள ரடிபணிந்தான்‌ வாழியே.
அருட்‌ பச்சை வாரணத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே.
சித்திரையிற்‌ புனர்பூசம்‌ சிறக்க வந்தான்‌ வாழியே. சீபாடிய மீடுமுதல்‌ சீர்‌ பெறுவோன்‌ வாழியே.
உத்தமமாம்‌ வரதூலம்‌ உயர வந்தான்‌ வாழியே.
ஊர்‌ திருந்தச்‌ சீர்பாத மூன்றினான்‌ வாழியே.
முத்திரையும்‌ செங்கோலும்‌ முடிபெறுவோன்‌ வாழியே.
முதலியாண்டான்‌ பொற்பதங்கள்‌ ஊழிதோறும்‌ வாழியே.

எம்பெருமானாரது சகோதரியின்‌ புதல்வரான ஸ்ரீவத்ஸ கோத்‌தரத்தில்‌ வந்த வரத விஷ்ணு என்னும்‌ பெயர்‌ கொண்ட நடதாராழ்‌வான்‌, எம்பெருமானாரது எழுபத்து நான்கு ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸ னாதிபதிகளில்‌ ஒருவர்‌. அணுவான ஆத்ம ஸ்வரூபம்‌ முக்தி தசையில்‌ விபுவாகி விடுகிறது என்ற இவரது வாதத்தை அதிவாதம்‌ என்று வேதாந்த தேசிகர்‌ கூறியுள்ளார்‌. எம்பெருமானார்‌ சிஷ்யர்களி டையிலேயே சில கருத்து வேற்றுமைகள்‌ உண்டென்பதும்‌ அதை எம்பெருமானாரே தடை செய்யாமல்‌ விட்டிருந்தார்‌ எனவும்‌தேசிகர்‌ அருளியுள்ளார்‌.

திருவெள்ளறையில்‌ ஸ்ரீ விஷ்ணு சித்தர்‌ என்ற பெயருடன்‌ சித்தரை ரோஹினியில்‌ அவதரித்தவர்‌ இவர்‌. கூரத்தாழ்வான்‌ கண்ணை இழந்த பின்பு அவருக்குப் பதிலாக, ஸ்ரீபாஷ்யத்தின்‌ எஞ்சிய பகுதியை எம்பெருமானார்‌ எழுதி முடிக்க உறு துணையா யிருந்தவர்‌. இவர்‌ ஆழ்வாரைப் போலவும் கூரத்தாழ்வானைப் போலவும் அறிவாளியாயிருந்ததால்‌ உடையவர்‌ ‘எங்கள்‌ ஆழ்வானோ’ என்று அபிமானித்தார்‌ என்பது கர்ண பரம்பரைச் செய்தி.

“இன்னவாறு திருப்பதிகள்‌ எங்கும்‌ வாழ்வித்து எதிராஜன்‌
தன்னதாக்கித்‌ தரிசனமும்‌ தரணியெங்கும்‌ விளங்குவித்து
முன்னமுரைத்த பாடியத்தின்‌ முற்றமூன்றத்‌ தொருகூறு
தன்னைச்‌, சென்றாண்டாயிரந்தாங்‌ கெழுபத் தேழில் -சாற்றினான்
-என்று ராமானுஜர்‌ மேல்‌ நாட்டிலிருந்து திரும்ப வந்து ஏழெட்டு வருடங்கள்‌ கழிந்த பின்பே ஸ்ரீ பாஷ்யத்தில்‌ மூன்றிலொரு பகுதியைப் பூர்த்தி செய்தார்‌ என்று குறித்திருப்பது கர்ண பரம்பரைச் செய்தியை வலியுறுத்துகிறது-74-ஸிம்ஹஸனாதிபதிகளில்‌ இவரும்‌ ஒருவர்‌. இவர்‌ மணிப் பிரவாள நடையில்‌ எழுதிய ஸர்வார்த்த சதுஷ்டயம்‌ வார்த்தாமாலையில்‌ உள்ளது. நடதூராழ்வானது பேரரான வாத்ஸ்ய வரதாசார்யார்‌ என்னும்‌ நடதூரம்மாள்‌ இவருடைய சிஷ்யர்களில்‌ முதன்மை யானவர்‌.நடதூராழ்வான்‌, நடதூரம்மாளுக்குத்‌ தக்கபடி காலட்சேபம்‌
சொல்லுவது தம்மால்‌ இயலாது என்பதை உணர்ந்து, திருவெள்ளறைக்கு எங்களாழ்வானிடம்‌ பாடம்‌ கேட்க அனுப்பினார்‌. ஆனால்‌ எங்களாழ்வான்‌, ‘நான்‌ என்னும்‌ அகங்காரம்‌ செத்த பின்‌ வா, என்றும்‌ எனக்கு சரம கைங்கர்யம்‌ (அந்திம காலச்சடங்கு) செய்ய உன்‌ தாய்‌ தந்தையர்‌ அனுமதி தர வேண்டும்‌ என்றும்‌ பலமுறை திருப்பி அனுப்பிய பின்‌ தாய்‌ தந்தையர்‌ அனுமதி பெற்று எங்களாழ்‌வானிடம்‌ நீண்ட நாட்கள்‌ திருவெள்ளறையிலேயே தங்கி இருந்து ஸ்ரீ பாஷ்யார்த்தங்கள்‌ அனைத்தையும்‌ கற்றார்‌. இவ்வாறு அம்மாளுக்கு ஆச்சார்யரானபடியாலே அம்மாளாசார்யார்‌ என்றழைக்கப்‌பட்டார்‌. எங்களாழ்வான்‌. இன்றும்‌ அப்பட்டத்தால்‌ அந்தவம்சத்தினர்‌ அழைக்கப்படுகின்றனர்‌.
எங்களாழ்வான்‌ எம்பெருமானாரை விட மிகவும்‌ இளையவராக இருக்க வேண்டும்‌. இவர்‌ நூறு வயதுவரை வாழ்ந்திருந்தார்‌.
கி.பி. 12-ம்‌ நூற்றாண்டின்‌ பெரும்பகுதி வாழ்ந்தவராதலால்‌ நம்‌பிள்ளை காலம்‌ வரை இவர்‌ வாழ்ந்திருந்ததாகக்‌ கூறப்படுகிறது.-சகல சாஸ்திரங்களும்‌ வல்லவர்‌ எங்களாழ்வான்‌ என்று நம்பிள்ளை அருளியதாகக் கூறுவர்‌. எங்களாழ்வானது கடைசிக் காலத்தில்‌ அவரது பூட்டனான வரதாசாரியார்‌ என்பவரை ஸ்வீகார புத்திரராக்கி நடாதூரம்மாள்‌ சகல அர்த்தங்களையும்‌ கற்பித்து வந்தார்‌.

எம்பெருமானாரது சிஷ்யர்களில்‌ ஒராண் வழிக் குரு பரம்பரையில்‌ இடம்‌ பெறுபவர்‌ எம்பார்‌ ஒருவரே. எம்பெருமானாருக்குப்‌ பின்‌ திருவரங்கத்தில்‌ தர்சன நிர்வாகராயிருந்து தமது சிஷ்யரான பட்டரிடம்‌ அதை ஒப்பித்தவர்‌ எம்பாரே யாவார்‌. எம்பெருமானார்‌
அவதரித்து எட்டு வருடங்களுக்குப் பின்‌ குரோதன வருஷத்தில்‌ கி.பி. 1026-ல்‌ ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த வட்ட மணிக்குடியில்‌ உடையவரது சிறிய தாயாரான பெரிய பிராட்டி ஸ்ரீதேவிக்கும்‌ அவரது கணவர்‌ கமலநயன பட்டருக்கும்‌ குமாரராக கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமத்துடன்‌ அவதரித்தவர்‌ எம்பார்‌. இவர்‌ அருளிய பிரபந்தம்‌ விஜ்ஞானஸ்துதி என்பது-நல்லொழுக்கமுடையவராய்‌, எம்பெருமானாரது சகமாணவராய்‌ இருந்த கோவிந்த பட்டரும்‌ யாதவப்‌ பிரகாசனுடைய கெட்ட எண்ணத்தை நடுக்காட்டில்‌ ராமானுஜருக்கு அறிவித்து அவரை நிறுத்தித்‌ தாம் மட்டும்‌ யாதவரோடு யாத்திரை செல்லும்‌ கோஷ்டியோடு தொடர்ந்து சென்றார்‌ என்ற விபரம்‌ முன்னரே கூறப்பட்டது.
யாதவாது மந்திர சக்திக்குக்‌ கட்டுப்பட்ட கோவிந்தரும்‌ கங்கையில்‌ நீராடும்பொழுது தமது உள்ளங்கையில்‌ சிவலிங்கத்தைப்‌ பெற்றவராய்‌ தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச்‌ சென்று அந்த லிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்து காளஹஸ்தி சென்று அங்குள்ள
சிவாலயக்‌ கைங்கர்யங்களில்‌ ஈடுபட்டவராய்‌ வசித்து வந்தார்‌ என்பதையும்‌ முன்னரே கண்டோம்‌.-இராமானுசருடைய பிரார்த்தனைக்கு இரங்கி அவருடைய மாதுலரான பெரிய திருமலை நம்பி காளஹஸ்திக்குச்‌ சென்று இவரை மறுபடியும்‌ வைஷ்ணவராகத்‌ திருத்தினார்‌. இவ்வாறு திருந்திய ஸ்ரீ கோவிந்தப் பெருமாள்‌ திருமலைநம்பி திருமாளிகையில்‌ சகல கைங்கர்யங்களும்‌ செய்து வந்தார்‌.-ஒருநாள்‌ நம்பிக்குப்‌ படுக்கை விரித்து அதில்‌ முதலில்‌ தாம்‌படுத்துறங்குவதைக் கண்ட எம்பெருமானார்‌ அவரது அடாத
செயலை நம்பிக்குத்‌ தெரிவிக்க அவர்‌ கூப்பிட்டு விசாரித்த பொழுது, கோவிந்தர்‌ ஆசார்யரது அபசாரத்திற்காகத்‌ தனக்கு நரகமே கிடைததாலும்‌ தேவரீர்‌ திருமேனியில்‌ ஒன்றும்‌ ஊறுதல்‌, உறுத்தல்‌ செய்யக் கூடாது என்று எண்ணினேன்‌ என்றார்‌. அவரது ஆச்சார்ய பக்தியைக் கண்டு எல்லோரும்‌ வியந்தனர்‌. மற்றொரு நாள்‌ உடையவர்‌ நம்பியின்‌ நந்தவனத்தில்‌ உலவி வந்த சமயம்‌ ஓரிடத்திலே கோவிந்தப் பெருமாள்‌ ஒரு பாம்பின்‌ வாயிலே கையிட்டு, அதன்‌ நாக்கில்‌ இருக்கும்‌ முள்ளை எடுத்து விட்டு நீராடி ஏனைய கைங்கர்‌யத்தைச்‌ செய்தார்‌. இராமானுசரும்‌ அவரது பூத தயை கண்டு
வியந்து மகிழ்ந்தார்‌. எம்பெருமானார்‌ முதல்முறை திருமலைக்குச்‌ சென்ற போது கோவிந்தரைத்‌ தானமாகப்‌ பெற்றுத்‌ தம்‌ சிஷ்யராக அழைத்துச்‌ சென்றார்‌. அவ்வாறு அவர்கள்‌ திரும்பி வரும் வழியில்‌ கடிகாசல மேறி மிக்கார்‌ வேத விமலர்‌ விரும்பும்‌ ௮க்காரக்கனியையும்‌ சேவித்துக் களித்து மீண்டும்‌ திருக்கச்சி நம்பி, ஸந்நிதியில்‌
எழுந்தருளியிருந்தார்‌. கோவிந்தரை அழைத்துக் கொண்டு திருவரங்கம்‌ செல்லும்‌ போது வழியில்‌ கோவிந்தரது முகம்‌ வாடி வெளுத்திருப்பதை கண்டு திருமலை நம்பியைப்‌ பிரிந்து வந்ததின்‌ விளைவு ஈதென்று அனுமானித்து, திரும்பவும்‌ அவரைப் போய்ச்‌ சேவித்து வாரும்‌ என்று கோவிந்தரைத்‌ துணையோடு திருமலை நம்பியிடமே அனுப்பி வைத்தார்‌. ஆனால்‌ திருமலை நம்பி அவரை வர விடாமல்‌ விற்ற பசுவுக்குப்‌ புல்லிடுவாருண்டோ, பித்தனைப் போகச்‌ சொல்‌லுங்கள்‌ என்று சொல்லித்‌ தாம்‌ முகம்‌ கொடாமல்‌ வெறுத்து அனுப்பி விட்டார்‌. ஆகவே நம்பியைக் காணும்‌ ஆசையைத்‌ துறந்து சிறிதும்‌ தாமதிக்காமல்‌ எம்பெருமானாரிடம்‌ திரும்பி, அவர்‌ காலடியே தஞ்சமென்று விழுந்து கிடக்க, நடந்ததை யெல்லாம்‌ கேட்டறிந்த உடையவர்‌, நம்பி நம்‌ நினைவறிந்து நடந்து கொண்‌டாரே என்று வியந்து உகந்தார்‌. கோவிந்தரை எடுத்தணைத்துக் குளிர நோக்கி உடன்‌ அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம்‌ சென்றடைந்து பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ சேவித்து மகிழ்ந்தார்‌ உடையவர்‌.திருவரங்கத்தில்‌ உடையவரையே தமக்கு மாதா, பிதா, ஆசார்யன்‌ தெய்வம்‌ எல்லாமாகக்‌ கொண்டு அவர்‌ திருமேனி யழகிலும்‌ ஆத்மகுணங்களிலும்‌ ஈடுபட்டு அவருக்கு ஆட்செய்வதையே பணியாகக்‌ கொண்டு வாழ்ந்து வரலானார்‌ கோவிந்தர்‌. கோவிந்தருடைய ஞானம்‌ ஆசார்ய பக்தி வைராக்யம்‌ (பற்‌றின்மை) முதலான பண்புகள்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்து வரவே கண்டவர்‌ யாவரும்‌ அவரை நேருக்கு நேராகவே கொண்டாடிப்‌ பேசினார்கள்‌. அவரும்‌ இவை யாவும்‌ ஒக்கும்‌ ஒக்கும்‌ என்று தம்மைத் தாமே மெச்சிக் கொண்டார்‌. இதைக் கண்ட உடையவர்‌ “பலரும்‌ உம்மைப்‌ பாராட்டினால்‌’ நீர்‌ நைச்சிய வார்த்தை (தகுதியின்மை) தாழ்மை தெரிவிப்பது) சொல்லாமல்‌, உம்மை நீரே போற்றிக் கொள்ளுதல்‌ தகுமோ என்று கேட்க அவர்‌ ‘ஐயோ அவர்கள்‌ அடியேனைக்‌ கொண்டாடுவதென்றால்‌ காளஹஸ்தியில்‌ சிவ வேடத்தில்‌ இருந்த பொழுது கொண்டாடினால் தான்‌ என்னைக்‌கொண்டாடியதாகும்‌. ௮டியேனைத்‌ திருத்திப்‌ பணிக் கொள்ள தேவரீர்‌ பண்ணிய கிருஷி பலனை (சுபமான எண்ணம்‌, அதற்கேற்றசெயல்‌ இவற்றின்‌ பயன்‌) கொண்டாடுபவை யன்றோ? இதை அடியேனும்‌ சேர்ந்து நன்றிப் பெருக்கோடு கொண்டாடுவதன்றோ முறை என்றார்‌. இதைக் கேட்ட உடையவர்‌ மகிழ்ந்து உமது உயர்ந்த ஆத்ம குணங்கள்‌ நமக்கும்‌ படியும்படி உமது நெஞ்சினால்‌நம்மை அணைத்துக் கொள்வீர்‌ என்று கூறித்‌ தம்பியை வாரி யெடுத்து அணைத்துக் கொண்டு அதனால்‌ தாம்‌ தூய்மை பெற்றதாகக்‌ கருதினார்‌ இராமானுஜர்‌-ஒருநாள்‌ திருவரங்கத்து வீதி ஒன்றில்‌ ஒரு (தேவதாசி) அடியாள்‌ வீட்டு வாசலில்‌ கோவிந்தர்‌ தம்‌ வேலைகளைப்‌ புறக்கணித்து விட்டு நெடுநேரம்‌ நின்று உள்ளிருந்து வந்த இனிமையான குரலில்‌
அமைந்த இராமானுசரது தாலாட்டைக் கேட்டு மெய்மறந்திருந்தார்‌.-இவரைத்‌ தப்பாகப்‌ புரிந்து கொண்டவர்கள்‌ இந்நிகழ்ச்சியை உடையவருக்குத்‌ தெரியப்படுத்தினர்‌. கோவிந்தரை அழைத்துவிசாரித்து உண்மையைத்‌ தெரிந்துகொண்டவர்கள்‌ அவரது யதிராஜ பக்தியைக்‌ கண்டு வியந்து கொண்டாடினர்‌. இந்த நிலை நாளுக்கு
நாள்‌ முதிர்ந்து வந்தது. இராமானுஜர்‌ குணானுபவமும்‌, அவர்‌ திருமேனி யழகில்‌ ஈடுபாடும்‌ கோவிந்தருக்கு உண்ணும்‌ சோறு, பருகும்‌ நீர்‌, தின்னும்‌ வெற்றிலை எல்லாம்‌ என்ற நிலை நாளுக்குநாள்‌ முதிர்ந்தது.
எம்பெருமானார்‌ வடிவழகில்‌ ஈடுபட்ட எம்பார்‌ எழுதியபாசுரம்‌
பற்பமெனத்‌ திகழ்‌ பைங்கழலுன்றன்‌ பல்லவமே விரலும்‌
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்‌
முப்புரி நூலோடு முன்கையிலேந்திய முக்கோல்‌ தன்னழகும்‌
முன்னவர்‌ தந்திடு மொழிகள்‌ நிறைந்திடு முறுவல்‌நிலாவழகும்‌
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்க ண்ணழகும்‌,
காரி சுதன்‌ கழல்‌ சூடிய முடியும்‌ கனக நற்சிகை முடியும்‌,
எப்பொழுதும்‌ எதிராசன்‌ வடிவழகென்னிதயத் துளதால்‌
இல்லையெனக்கெதிரில்லையெனக்கெதர்‌ இல்லையெனக்‌கெதிரே.
–என்பதாகும்‌.
கோவிந்தர்‌ இராமானுசன்‌ மிக்க சீலமல்லால்‌ உள்ளாது என்‌ நெஞ்சு என்றபடியே வாழ்ந்து வருகையில்‌ அவரது தாயார்‌ கோவிந்தா, நம்‌ குடும்பம்‌ விளங்க மாட்டுப் பெண்‌ வாழ ஒரு குழந்தை வேண்டாமோ என்று கேட்க, அவரும்‌ தான்‌ தனியாய்‌ இருக்கும் போது அவகாசம்‌ பார்த்து அவளை அனுப்பி வையும்‌ என்றார்‌. தாயார்‌ பல நாள்‌ காத்திருந்தும்‌ அப்படியொரு அவகாசம்‌ காணாமையாலே உடையவரிடம்‌ முறையிட்டாள்‌. உடையவர்‌ தம்பியை அழைத்து ‘கோவிந்தரே நம்‌ ஆணை. நல்ல வேளையில்‌ மனையாளுடன்‌ கிருஹஸ்த தர்மம்‌ நடத்துவீராக என்றார்‌. கோவிந்‌தரும்‌ தம்‌ மனையாளை அழைத்து ஓரிரவு பூராவும்‌ அவளுக்கு அந்தர்யாமியான பகவானைக்‌ காட்டித்‌ தந்து பகவத்‌ குணானுபவத்‌தைப்‌ பண்ணி வைக்க வேறு எதற்கும்‌ வாய்ப்பில்லாமல்‌ போயிற்று. இவ்விருப்பை மருமகள்‌ சொல்லி யறிந்த தாயார்‌ மகனிடம்‌ தம்‌ விருப்பம்‌ நிறைவேறாமைக்கு வருத்தப்பட அவரும்‌
அந்தர்யாமி ஒளிவிட்டு விளங்க அழிச்சாட்டம்‌ கூடவில்லையே என்று கூறி விட்டதால்‌ மீண்டும்‌ உடையவரிடமே முறையிட்டாள்‌. அவரும்‌ தம்பியை அழைத்து விசாரிக்க இவரும்‌ அந்தர்யாமி
பிரகாசிக்கும்போது இதற்கு இருட்டேது? தனிமை யேது? அடியேன்‌ செய்யக்கடவது என்‌ என்றார்‌.ஆச்சாரியரும்‌ இவரது பற்றற்ற நிலை கண்டு மகிழ்ந்து உமக்கு
விஷயாந்திர விரக்தி இந்த அளவுக்கு உள்ளதாகில்‌ உத்தமாஸ்ரமம்‌ தானே (துறவுநிலை) கைக்கொள்ளும்‌ என்று நியமித்து, அவருக்குத்‌ திரிதண்டம்‌ காஷாயங்களை யணிவித்து, தம்மைப் போன்றே முக்‌கோற் பகவராக்கி யருளினார்‌. அப்புதிய துறவிவிக்கு எம்பெருமானார்‌ என்று தமது பெயரையே தாஸ்ய நாமமாகச்‌ சூட்டினார்‌.
பெயரைப்‌ பெற்றவரோ இத்திருநாமம்‌ அடியேனால்‌ சுமக்க முடியாது. சுவாமிக்கு நிழலும்‌ அடி தாறுமாய்‌ உள்ளவனுக்கு பொருந்தும்படி பெயரருள வேண்டும்‌ என்று வேண்‌ட சுவாமியும்‌ அப்பெயரைச்‌ சுருக்கி ‘எம்பார்‌’ என்று பெயரைச் சூட்டினார்‌. பின்னர்‌ எம்பார்‌ கூரத்தாழ்வான்‌ குமாரரான பராசர பட்டருக்கு ஆசாரியராகி பட்டரால்‌ அருளுப்பட்ட பின் வரும்‌ தனியனைப்‌ பெற்றார்‌.
“ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வாக பாயிநீ
த்தாயத்ததஸ்வ ரூபாஸகஜீயாத் மத்விச்ர மஸ்தவி’

எம்பெருமானார்‌ என்ற பெயரைச்‌ சுருக்கிப்‌ பெற்ற திருநாமத்தை எம்பார்‌ எமக்கு இளைப்பாறுமிடம்‌’ என்று பொருள்‌ கொண்டு“மத்‌ விச்ரமஸ்‌ தவீ” என்று தனியனிட்டது பட்டரின்‌ மாமேதைக்கு எடுத்துக் காட்டாகும்‌. அந்தர்யாமி பிரகாசித்துக்‌ கொண்டிருக்கையில்‌ அழிச்சாட்டம்‌ கூடுமா என்று எம்பார்‌ கூறியது முழுதும்‌ உண்மை யென்று உடையவர்‌ மற்றவர்களுக்குக்‌ காட்ட விரும்பிச்‌ செய்த செயல்‌ குருபரம்பரைச்‌ செய்திகளில்‌ கூறப்பட்டுள்ளது. கோவிந்தர்‌ முன்னிரவக்கமித்த ஓர்‌ இருட்டறையில்‌ ஒரு ஊசியை எறிந்துவிட்டு அங்குள்ள ஊசியைக்‌ கொண்டு வாருங்கள்‌ என்று சிஷ்யர்களுக்குக்‌ கட்டளை இட அவர்களால்‌ ஒளிமிக்க விளக்குடன்‌ சென்று தேடியும்‌ ஊசி இடைக்க வில்லையாம்‌. பின்னர்‌ கோவிந்தரை அழைத்து அவ்வறையில்‌ தரையில்‌ ஏதாவது பொருள்‌ இருந்தால்‌ எடுத்து வாரும்‌ என்று அனுப்ப அவர்‌ கையில்‌ விளக்கேதுமில்லாமலேயே சென்று அங்கு ஊசியிருக்கக்‌ கண்டு எடுத்து வந்து ‘இதுவே அங்கு தரையில்‌இருந்தது என்று கொடுத்தாராம்‌.-அந்தர்யாமியான எம்பெருமான்‌ ஒளி விட்டுப்‌ பிரகாசித்ததால்‌ அவ் வூசியை அவரால்‌ எளிதில்‌ கண்டு பிடிக்க முடிந்தது.-ஆச்சாரியார்‌ தமக்குத்‌ துணையாக சைவத்தனின்றும்‌ மீட்டுக்‌கொண்டு வரப்பட்ட இவரைக்‌ கொண்டாரென்றும்‌ ஸ்வாமிக்கு அணுக்கராய்‌ பல குற்றேவல்களை இவர்‌ புரிந்திருந்தார்‌ என்றும்‌ ஊஹிக்கிறோம்‌.-எம்பெருமானாருக்கும்‌ இவருக்கும்‌ நெருங்கிய தொடர்பு இருந்தது. எதிராஜர்‌ அமுது செய்ததும்‌ நூறு அடி நடப்பதுஎன்ற பழக்கத்தைக்‌ கொண்டவர்‌. இப்படி உலாவுகையில்‌ ஸ்வாமி ஆழ்வார்களின்‌ பாசுரங்களை மனதில்‌ அனுசந்திப்பது வழக்கம்‌.-ஒருநாள்‌ வழக்கமாகச்‌ செல்லும்‌ தூரம்‌ செல்லாமல்‌ சடக்கெனத்‌ திரும்பக் கண்ட எம்பார்‌ திருமாலிருஞ் சோலையாகாதே திரு ௨ள்‌ளத்தில்‌ ஓடுவது என்றாராம்‌. மடித்தேன்‌ மனை வாழ்க்கையினில்‌ நிற்பதோர்‌ மாயையை என்று சொல்லி மடித்தேன்‌ என்று திரும்ப
இந்தப் பாசுரம்‌ சுவாமி மனதில்‌ ஓடுகின்றது என்று கண்டு கொண்ட செய்தி அதிசயமாக இருக்கிறது.-சரணாகதி கத்யம்‌ எம்பெருமானாருக்கும்‌ எம்பெருமானுக்கும்‌ நடந்த உரையாடலாக அமைந்துள்ளது. எக்காலமும்‌ தேவரீருக்கடிமை செய்திருப்பவனாக வேண்டும்‌ என்று எம்பெருமானார்‌ வேண்டிட; என்றும்‌ எனக்காட் செய்பவராக இருப்பீராக. ‘த்வயத்‌தை அர்த்தத்துடன்‌ அனுசந்தித்துக் கொண்டு இத் திருவரங்கத்தே இனிதிரும்‌ என்று பெருமாள்‌ ஸ்வாமியை நியமித் தருளியதாகத்‌ தெரிகிறது. இப்படிப்‌ பெரிய பெருமாள்‌ அருளிச் செய்தார்‌ என்‌பதை நாங்கள்‌ நம்புவது எப்படி என்று எம்பார் கேட்க, எனக்குப்‌ பெரிய பெருமாள்‌ தனது சவ்லப்யாதி குணங்களை கையில்‌ நெல்லிக்கனியாகக்‌ காட்டித்தந்து அவர்‌ சொல்லிக்கச்‌ சொன்ன வார்த்தையாகையாலே அவர்‌ அருளிச் செய்த வார்த்தை என்று எடுத்துக் கொள்ளத்‌ தடையில்லை என்று எம்பெருமானார்‌ அருளினார்‌. எம்பாருக்கு
உடையவர்‌ திருவாக்கில்‌ நம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை. நம்‌ போல்வார்‌ நெஞ்சில்‌ தோன்றும்‌ ஐயப்பாட்டை ஸ்வாமி திருவாக்கைக்‌ கொண்டே போக்க வேண்டுமென்றேஎம்பார்‌ இக் கேள்வியைக்‌ கேட்டிருக்க வேண்டும்‌. சாமான்யமாக ஒரு சிஷ்யன் தன்‌ ஆச்சாரியரைக்‌ கேட்கக்‌ கூடாத கேள்வியை எம்பார்‌ இங்கு கேட்டிருக்கிறார்‌. எந்த அர்த்தத்‌தையும்‌ ஆச்சார்யர்‌ மூலமாய்‌ வெளியிட்ட பெரியோர்கள்‌ பாங்கறிந்து பின்பற்றத்தக்கது. எம்பார்‌ திருவாக்கான பாசுரம்‌ ஒன்று
எங்கள்‌ கதியே இராமானுசமுனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்‌ மங்கையர்‌ கோனீந்த மறையாயிரமனைத்தும்‌ தங்கு மனம்‌ நீ எனக்குத் தா-என்ற பாசுரத்தைப் போலவே எம்பாரின்‌ பிரிய சிஷ்யர்‌ பட்டர்‌ திருவாய்மொழி தங்கு மனத்தை எம்பெருமானாரிடத்தில்‌ வேண்‌டிப்‌ பாசுரம்‌ சாதித்துள்ளது, ஏய்ந்த பெருங்கீர்த்தி…..
என்பது இவர்கள்‌ கருத்தில்‌ ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ஆச்சாரியரான உடையவர்‌ அருளினால் தான்‌ மனதில்‌ தரிக்க முடியும்‌ என்பது தெரிூறது.-முன்பொருகால்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ ஒரு சலவைத்தொழிலாளி தன்‌ குழந்தைகளைத்‌ தனித் தனியே சடகோபா, காரிமாறா ,குருகூர் நம்பி என்று நம்மாழ்வாரின்‌ இனிய பெயர்களை யிட்டு,
அழைத்ததைக் கேட்ட உடையவர்‌ தமக்கு இந்தப் பாக்கியம்‌ கிடைக்‌வில்லையே என்று நினைத்து வருந்தியதாகச்‌ சொல்வதுண்டு.-அது போலவே “இராமானுஜ பதச்‌ சாயா’ என்று ராமானுஜரின்‌ நிழலும்‌ அடி தாறுமான எம்பார்‌ ராமானுஜர்‌ என்றழைத்து அந்த
நாமத்தின்‌ அமுதச்‌ சுவையைப்‌ பருக தனக்கு ஒரு சிறுவன்‌ இல்லையே என்று ஏங்கினாராம்‌. இவ் விஷயத்தைக்‌ கேள்விப்‌பட்ட இராமானுஜர்‌ எம்பாரை அழைத்து, அழகான திருவாழி, திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால்‌ அலங்கரிக்கப்பட்ட தம்முடைய உப பாத்திரத்தை (பஞ்ச பாத்திரம்‌) அவருக்குத்‌ தந்தருளி இத்தை நமது பெயரால்‌ அழைப்பீராக! என்று நியமிக்க எம்பார்‌
அப்பாத்திரத்தை நிதி எனப்பெற்று அதை இராமானுஜன்‌ என்று அழைத்து வரலானார்‌. அது முதலாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் தாம்‌ கையாளும்‌ உபபாத்திரத்தை ராமானுஜன்‌ என்றே அழைத்து வருகின்றனர்‌.-நம்‌ பெருமாள்‌ நம்‌ மணவாளமாமுனிகளுக்கிட்ட தனியனில்‌
ஸ்வாமியை ‘தீபக்யாதி குணார்ணவம்‌’ என்று போற்றுகிறார்‌.-ராமானுஜர்‌ உட்பட பூர்வாசாரியார்கள்‌ அனைவரும்‌ மெய்யறிவு, பகவான்‌ மற்றும்‌ ஆச்சாரியார்களிடம்‌ அளவு கடந்த பிரேமை,விஷய வைராக்யம்‌ முதலான குணங்களைக்‌ கடல் போன்று பெற்‌றுள்ளவர்கள்‌. எம்பெருமானார்‌ எம்பாருக்கு அறிய வேண்டிய அர்த்தங்களை யெல்லாம்‌ தாமே புகட்டினார்‌. கூரத்தாழ்வானுக்கும்‌,
முதலியாண்டானுக்கும்‌ எம்பெருமானார்‌ அவர்கள்‌ தகுதியைச்‌ சோதித் தறிந்த பின்னரே உபதேசம்‌ பண்ணினார்‌. ஆகவே அவர்கள்‌ அதைப் பெற அரும்பாடு பட வேண்டியதாயிற்று . ஆனால்‌ எந்தவிதமான சிரமமும்‌ வைக்காமல்‌, எவ்விதச்‌ சோதனைகளுக்கும்‌ உள்‌ளாக்காமல்‌ தாமே எம்பாருக்கு உபதேசித்தார்‌-மேலும்‌ ஆண்டான்‌ ஆழ்வானுக்கில்லாத ஒரு தனிப் பெருமையும்‌ எம்பாருக்கு உண்டு. ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையிலன்‌வயம்‌
லஷ்மி நாத ஸமாரம்பாம்‌ நாத யாமுந மத்யமாம்‌
அஸ்மதாசார்ய பர்யந்‌தாம்‌ வந்தே குரு பரம்பராம்‌-என்று ஆழ்வான்‌ அருளிய பிரசித்தமான தனியன்‌, திருமகள்‌
கேள்வனான, பெரிய பெருமாள்‌, பெரிய பிராட்டி, சேனை முதலியார்‌, நம்மாழ்வார்‌, நாத முனிகள்‌, உய்யக் கொண்டார்‌, மணக்கால்‌நம்பி, ஆளவந்தார்‌ பெரிய நம்பி எம்பெருமானார்‌ எம்பார்‌ என்று ஆழ்வான்‌ அனுசந்திக்கும்‌ ஆசார்ய பரம்பரையில்‌ இடம்‌ பெறுகிறார்‌ எம்பார்‌.-அருளிச்செயல்‌ வியாக்யானங்களில்‌ பலப் பல இடங்களில்‌
பட்டர்‌ நிர்வாஹம்‌ என்று மிகவும்‌ சுவையான பொருள்கள்‌ காட்டப்பட்டுள்ளன. இவற்றுக்குத்‌ தோற்றுவாய்‌ பட்டரின்‌ ஆச்சாரியராக எம்பெருமானாரால்‌ நியமிக்கப்பட்ட எம்பாரும்‌, திருத்‌தகப்‌பனாரான கூரத்தாழ்வானுமே யாகும்‌. ‘எம்பார்‌ நிர்வாஹம்‌’ என்று திவ்யப் பிரபந்த வியாக்யானங்களில்‌ காணப்படுபவை
பொருட் சுவை மிக்குள்ளவை. உதாரணமாக ‘நாச்சியார்‌ திருமொழி
(4.11) ஊடல்‌, கூடல்‌, உணர்தல்‌ புணர்தலை, நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர்‌ என்ற இடத்தில்‌ ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது கிருஷ்‌ணனை இன்னவள்‌ பட்டினி கொண்டாள்‌ என்ற புகழ்‌ காணும் என்கிறார்‌ எம்பார்‌. ஆயர்‌ மகளீர்‌ கண்ணனிடம்‌ ஊடுவது அடிக்கடி நிகழும்‌ நிகழ்ச்சியாகும்‌. வாசுதேவன்‌ வரவு பார்த்துக்‌ காத்திருப்பவர்‌ பல பெண்கள்‌. ஒருத்தி, ஒரே வேளையில்‌ சினம்‌ தீர்ந்து கண்ணனை அழைப்பாள்‌. ஒருத்தி கோபம்‌ நான்கு நாட்கள்‌ வரை நீடிக்கும்‌. இவனும்‌ அது வரை பொறுத்துக்‌ கடப்பது அந்த ஆய்ச்சியின்‌ ரூபம்‌, குணம்‌, இவற்றால்‌ கவரப்பட்டதால் தான்‌. இப்படிக்‌
கண்ணனைக்‌ காக்க வைப்பது அவர்கள்‌ நிறை புகழ்‌ என்பார்‌ எம்பார்‌.

பூவளரும்‌ திருமகளார்‌ பொலிவுற்றேசன்‌ வாழியே.
பொய்கை முதல்‌ பதின்மர்‌ கலைப் பொருளுரைப்போன்‌வாழியே.
மாவளரும்‌ பூதூரன்‌ மலர்ப் பதத்தான்‌ வாழியே.
மகரத்திற்‌ புனர் பூசம்‌ வந்‌துதித்தான்‌ வாழியே.
தேவு மெப்பொருளும்‌ படைக்கத்‌ திருந்தினான்‌ வாழியே.
திருமலை நம்பிக் கடிமை செய்யுமவன்‌ வாழியே.
பாவையர்கள்‌ கலவி யிருள்‌ பகலென்றான்‌ வாழியே.
பட்டர் தொழும்‌ எம்பார்‌ பொற்பதமிரண்டும்‌ வாழியே.

தம்முடைய தரிசனத்தில்‌ எம்பெருமானாருடைய பதவியை வஹித்தவராய்‌ அவரினும்‌ விஞ்சிய ஞான, வைராக்கியத்தை உடையவரான பட்டர்‌ என்னும்‌ ஆச்சாரியாரது வைபவத்தைக்‌ காண விழைகின்றோம்‌. இவர்‌ கூரத்தாழ்வான்‌ திருக் குமாரர்‌ என்றும்‌ ஸ்ரீ
ரங்கநாதனுடைய திருக்குமாரர்‌ என்றும்‌ வழங்கப்படுவார்‌. இவரது பிறப்பு வரலாற்றை நாம்‌ கூரத்தாழ்வான்‌ வைபவத்திலேயே விரிவாகக்‌ கண்டுள்ளோமாதலால்‌ இங்கு குறிக்கப் படவில்லை. கூரத்‌தாழ்வான்‌ திருக்குமாரர்கள்‌ இருவரின்‌ திருநாமங்கள்‌ முறையே ஸ்ரீபராசரபட்டர்‌, ஸ்ரீ ராமப்பிள்ளை என்ற வேத வியாச பட்டர்‌ என்பதாகும்‌. பெயர்‌ பராசரபட்டர்‌ என்ற போதிலும்‌ பட்டர்‌ என்றே சுருக்கமாக இவ்வாச்சாரியார்‌ வழங்கப்படுவார்‌. பட்டர்‌ என்ற சொல்‌ வேத விற்பன்னர்களையும்‌ ஸ்தோத்திரம்‌ சொல்பவர்களையும்‌ குறிக்கும்‌ பொதுச்சொல்‌. விளையும்‌ பயிர்‌ முளையிலே தெரியும்‌, என்றபடி பட்டர்‌ என்ற பெயருக்குப்‌ பொருத்தமாக இவரும்‌ சர்வஞ்ஞராய்‌ விளங்கிப் புகழ்‌ பெற்று எம்பெருமானாருடைய சத்ய சங்கல்பத்தை நிலை நாட்டினார்‌. இவர்‌ 105 திருநட்சத்திரம்‌ வாழ்ந்திருந்தார்‌.-இவர்‌ பிறந்த உடனேயே இவரை எம்பெருமானார்‌ பார்க்குமுன்னரே இவருக்கு ‘த்வயம்‌’ என்னும்‌ மந்திரம்‌ காப்பாக எம்பாரால்‌ அனுசந்திக்கப்பட்டது என்பதும்‌ எம்பெருமானார்‌ நியமனப்‌படி எம்பாரே இவருக்கு ஆச்சாரியராக விளங்கினார்‌ என்பதும்‌ முன்னரே கண்டோம்‌. ஆகவே பட்டருக்கு ஆச்சாரிய கிருத்யங்கள்‌ எம்பாரே செய்தருளினார்‌. இருந்தும்‌ ஆழ்வானும்‌ பட்டருக்கு ஒரு
ஆச்சாரியராயினார்‌ என்பதும்‌ முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது.பட்டரை இளங்குழந்தைப்‌ பருவத்திலேயே ஸ்ரீரங்கநாதன்‌ தனது புத்திரனாக அங்கீ கரித்துத்‌ தன்னுடைய சந்நிதியிலேயே திருமணத் தூணினருகே தொட்டிலில்‌ விடுவித்து, ஸ்ரீரங்கநாச்சியாரும்‌ தானுமாகச்‌ சீராட்டி வளர்க்க, அங்கனம்‌ வளர்கின்ற ௮க்‌குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள்‌ அமுது செய்வதற்கு வைத்துள்ள அடிசிலைக்‌ கைகளால்‌ அள்ளி அளைந்து துழாவ,பெருமாள்‌ அது கண்டு உகந்தருளி, அந்த இன்னடி சிலை பிரியமாக அங்கீகரிப்பாராம்‌. இப்படி ஸ்ரீ ரங்கநாதன்‌ இவரைப்‌ புத்திர ஸ்வீகாரம்‌ செய்தருளியபடியால்‌, பட்டர்‌ ஸ்ரீ ரெங்கநாத புத்திரர்‌ என்றழைக்கப்பட்டார்‌. -‘வானிட்ட கீர்த்தி வளர்‌ கூரத்தாழ்வான்‌ மகிழ வந்த தேனிட்‌டதா நம்‌ பெருமாள்‌ குமாரர்‌ பட்டர்‌’ என்று இவரது சிஷ்யரான பிள்ளைப் பெருமாள்‌ ஐயங்கார்‌ தமது திருவரங்கக்‌ கலம்பகக்‌ காப்புச்‌ செய்யுட்களில்‌ ஒன்றில்‌ கூறியுள்ளார்‌. பட்டர்‌ தாமும்‌ (ஸ்ரீ ரங்கவாஜ ஸ்தவத்தில்‌ 17-ம்‌ ஸ்லோகத்தில்‌ ‘ஸ்ரீரங்கராஜ கமலாபத லாலி தத்வம்‌ என்ற பதத்தினால்‌ இதனைக் குறிப்பிட்டுள்ளார்‌. இப்‌ பேராசிரியர்‌ சகல சாஸ்திரங்களிலும்‌ அபாரமான பாண்டித்யம்‌ பெற்றவர்‌ என்பதை இவர்‌ அருளிய விஷ்ணு ஸகஸ்ரநாம பாஷ்யம்‌ ஒன்று கொண்டே உணரலாம்‌. இவர்‌ கவித் திறமையில்‌ ஒத்தாரும்‌ மிக்காரும்‌, இல்லாதவர்‌ என்பதை இவரது ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ ஸ்ரீகுணரத்ந கோசாதிகளால்‌ உணரலாம்‌.-அருளிச் செயல்களில்‌ அற்புதமான விசேஷார்த்தங்களை அருளிச்‌ செய்வர்‌ என்று பெரியவாச்சான்‌ பிள்ளை முதலானோர்‌ அடிக்கடி கூறுவதுண்டு. உதாரணமாக ஒன்றை மட்டும்‌ காணலாம்‌.
திருநெடுந்தாண்டகத்தில்‌ ‘அறுகாலச்‌ சிறுவண்டே’ தொழுதேனுன்னை‘ என்ற பாசுரத்தில்‌ வண்டுக்கு ஆறு கால்கள்‌ உள்ளமையை எதற்காகச்‌ சொல்லலாயிற்று என்பதை விளக்கப் புகுந்து இரண்டு காலாகவும்‌, நாலு காலாகவும்‌ இன்றி விரைந்து செல்லுகைக்கு உறுப்பாக ஆறு கால்கள்‌ இருக்கப்பெற்ற பாக்யம்‌ என்னே என்று வியந்து கூறுவதாகச்‌ சிலர்‌ பொருள்‌ கூறுவார்கள்‌. இந்தக் கூற்று அவ்வளவு பொருத்தமானதாகத்‌ தெரியவில்லை. வண்டு பறந்து செல்வதற்குச்‌ சாதனம்‌ சிறகே யன்றிக்‌ கால்களில்லை. ஆகவே ஆறுகாலே என்ற அடைமொழிக்கு அவ்வாறு கருத்துரைத்தல்‌ பொருத்தமில்லை என்று பட்டர்‌ அருளிச் செய்வது. தொழுதேனுன்னை என்று தொடர்ந்து கூறுவதால்‌ என்‌ தலையில்‌ வைப்பதற்கு ஆறு கால்கள்‌ உள்ளனவே என்று வியந்து சொல் கறைபடியாகும்‌. தூது சென்று திரும்பி வந்தால்‌ வண்டின்‌ கால்களைத்‌ தலையில்‌ வைத்துக் கொண்டு கூத்தாடிக்‌ குதூகலித்திருப்பதனால்‌ அதற்குப்‌ பொருத்தமாக இவ்வாறு கருத்துரைப்பதாகும்‌.–வழக்கமாக வண்டாகச்‌ சொல்வது ஆச்சாரியர்களையே. ஆச்சாரியனும்‌, அவருடைய தேவியாரும்‌ அவர்களுடைய திருக்குமாரரும்‌ ஆக மூவருக்கும்‌ சேர்த்து ஆறு திருவடிகளாதலால்‌ அக்கருத்துத்‌ தோன்றவே ‘அறுகாலச்‌ சிறுவண்டே’ என்றது என்பது பட்டர்‌ வியாக்யானம்‌. கொங்கார்‌ பூந்துழாய்முடி என்குடக்‌ கூத்தற்கென்‌ தூதாய்‌ நும்கால்கள்‌ என்‌ தலைமேல்‌, எழுமிநோநுமரோடே ‘ என்று திருவாய்மொழிப்‌ பாசுரத்துக்கு மிகவும்‌ பொருத்தமாக இருக்கிறது இவ் விளக்கம்‌.-பட்டருடைய அதி ஞான பக்தி வைராக்யங்களை விளக்கும்‌ வேறொரு நிகழ்ச்சியும்‌ சொல்லப்படுவதுண்டு. அவர்‌ ஐந்து வயதுப் பாலகனாய்‌ தெருவில்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கையில்‌ ஒருவன்‌ ‘ஸர்வஜ்யபட்டன்‌ வந்தான்‌ என்று எக்காள மூதிக் கொண்டு வர, உடையவர்‌ ஆழ்வான்‌ ஆண்டான்‌ போன்றவர்கள்‌ இருக்க இவன்‌ யார்‌ தன்னைச்‌ சர்வஜ்யபட்டன்‌ என்று சொல்வது என்று மனதில்‌ எண்ணி இருகைகளிலும்‌ மண்ணை அள்ளிக் கொண்டு அவனைப்‌ பார்த்து நீ ஸர்வஜ்யனன்றோ? இது எத்தனை சொல்‌? என்று கேட்க அவன்‌ ஒன்றும்‌ சொல்ல மாட்டாது வெட்டித் தலைகுனிய இது ஒருகைப்புழுதி மண்‌ என்று கூடத்தெரியாத நீ என்ன ஸர்வஜ்யன்‌ என்று அவமானப்படுத்தி அனுப்பினார்‌ என்பது கர்ண பரம்பரைச்‌ செய்தி. திரிபுவன வீர தேவராயன்‌ என்ற அரசன்‌ பட்டர்‌ வைபவத்‌தைக்‌ கண்டும்‌, கேட்டும்‌, அவரிடத்து மதுப்புக் கொண்டு அவரைச்‌ சன்மானிக்க எண்ணியவனாய்‌ பட்டரே, அரண்மனைக்கு வந்து போம்‌ என்றழைக்க பட்டர்‌ அதற்குச்‌ சிறிதும்‌ இணங்காமல்‌ ‘நம்‌ பெருமாள்‌ அஞ்சல்‌ என்ற கை மறித்தாலும்‌ அவர்‌ வாசலொழிய வேறு போக்கிடமுண்டோ எமக்கு என்று சொல்லி மறுத்துவிட்‌டார்‌. தன்னைத்‌ தஞ்சடைந்தவர்களுக்கு ஆவன வெல்லாஞ் செய்து,அவர்களைப்‌ பாதுகாத்தலையே விரதமாகக்‌ கொண்டு அவர்களுக்கு அபயமளிப்பவனான பரம புருஷனுக்கு அடிமைப்பட்ட நாம்‌ சில சிற்றரசரின்‌ வாசலிலே கிடந்து துவளக் கூடவோ மல்‌லோம்‌ என்ற அவரது திண்ணிய தீர்மானத்தையே காட்டுகிறது-இந்தச் செயல்‌.

தென்னரங்கர்‌ மைந்தனெனச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
திருநெடுந்தாண்டகப்‌ பொருனைச்‌ செப்புமவன்‌ வாழியே.
அன்னவயல்‌ பூதூரானடி பணிந்தோன்‌ வாழியே.
அனவரதம்‌ எம்பாருக்காட்‌ செய்வோன்‌ வாழியே.
மன்னுதிருக்கூரனார்‌ வளமுரைப்போன்‌ வாழியே.
வைகாசியனுடத்தில்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
பன்னுகலை நால்‌ வேதப்பயன்‌ தெரிவோன்‌ வாழியே.
பராசரனாம்‌ சீர்பட்டர்‌ பாருலகில்‌ வாழியே.

நஞ்சீயர் ஆதியில்‌ அத்வைதியாக இருந்தவர்‌. மாதவாச்சாரியார்‌ என்பது இவரது பூர்வீகத்திருநாமம்‌. வேதாந்தி என்பது இவரது சிறப்புத்‌ திருநாமம்‌. ஆறு சமயங்களுக்கு ஆறு ஆசனமிட்டு நிகரற்ற வித்வானாக மேல்நாட்டில்‌ எழுந்தருளியிருந்தார்‌. பல பிற மத வித்வான்‌௧ளைத்‌ திருத்துப்‌ பணி கொண்ட உடையவர்‌ இவரையும்‌ திருத்திப்‌ பணி கொள்ள விரும்பினார்‌. ஆனால்‌ அவரது வாழ் நாளில்‌ அது முடியாமற் போகவே தனது அந்திம காலத்தில்‌ தனது தர்சன வாரிசான பட்டரிடம்‌ மேல் நாட்டிலுள்ள வேதாந்தியைத்‌ திருத்திப்‌ பணி கொள்வீர்‌ என்று நியமித்தார்‌. பட்டரும்‌ அதனை நிறைவேற்றுவதற்குச்‌ சமயம்‌ பார்த்துக்‌ காத்திருந்தார்‌.இந் நிலையில்‌ மேல்‌ நாட்டிலிருந்து வந்த ஒரு அந்தண யாத்ரிகர்‌ பட்டரிடம்‌ மேல் நாட்டிலும்‌ உம்மைப் போலவே சகல கலைஞானங்களும்‌ அறிந்த வேதாந்தி ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று கூறினார்‌. பின்னர்‌ அவர்‌ திரும்பித்‌ தன்‌ ஊருக்குச்‌ சென்ற பொழுது வேதாந்தியிடம்‌, ‘ஸ்ரீரங்கத்தில்‌ பட்டர்‌ என்றொரு வித்வான்‌ இருக்‌கிறார்‌. அவரது பக்தியும்‌ ஞானமும்‌ சொல்லிலடங்கா. அவரது சிஷ்யர்களின்‌ பெருமை அளவிட முடியாது என்று கூறினார்‌. வேதாந்தி, ‘அவர்‌ நமக்கு ஒத்த வித்வான்‌ தானோ? என்று கேட்க, அவர்‌ உம்மிலும்‌ மேம்பட்டவர்‌ என்று யாத்ரிகர்‌ சொல்லவே, நம்மில்‌ மிக்கார்‌ யாருமில்லையென்றிருந்தோம்‌.-பட்டர்‌ நம்மிலும்‌ மிக்கார்‌ என்று சொல்கிறாரே என்று கவலையோடு இருந்தார்‌. இந்தச் சம்பவத்தை அந்த யாத்ரிகர்‌ திரும்ப ஸ்ரீரங்கம்‌ வந்தபொழுது பட்டரிடம்‌ தெரிவிக்கப்‌ பட்டர்‌ அவரிடம்‌ நமக்குத்‌ திருநெடுந்‌ தாண்டக சாஸ்திரம்‌ தெரியும்‌ என்று சொன்னீரா என்று கேட்க, அந்தணரும்‌ அப்படியே சொல்கிறேன்‌ என்று வேதாந்தியிடம்‌ சென்று பட்டருக்குத்‌ திருநெடுந்தாண்டக சாஸ்திரம்‌ அசாதாரணம்‌ என்று கூற அந்த சாஸ்திரம்‌ இன்னதென்றறியாத வேதாந்தி அது என்னவோ என்று வியந்து கொண்டிருந்தார்‌. இவ்வாறு சிலநாள்‌ சென்றபின்‌ உடையவர்‌ நியமனத்தை நிறைவேற்ற வேண்டி வேதாந்தியைத்‌ திருத்திப்‌ பணிகொள்ள நம்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே நியமனம்‌ பெற்றுப்‌ கோலாகலமாகப்‌ பரிவாரங்களோடு புறப்பட்டு, மேல்நாட்டில்‌ எழுந்தருளிச்‌ சிறுபுத்‌தூர்‌ என்ற இடத்திற்கு அருகில்‌ செல்கையில்‌ அங்கு திருமலையிலிருந்து உடையவர்‌ சிஷ்யர்‌ அனந்தாழ்வான்‌ வந்து பட்டரைச்‌ சேவித்து, அவர்‌ காடும்‌, மலையும்‌ கடந்து வந்த காரணம்‌ கேட்க,பட்டரும்‌ வேதாந்தியைத்‌ திருத்துவதற்காகத்‌ தன்னை உடையவரும்‌ நம்‌ பெருமாளும்‌ நியமித்திருப்பதாகவும்‌ அதை நிறைவேற்றத்‌ தான்‌ வந்திருப்பதையும்‌ கூறினார்‌. அதைக்கேட்ட அனந்தாழ்வான்‌ மிகவும்‌ மகிழ்ந்து பட்டரையும்‌ அவரது பரிவாரங்களையும்‌ திரு நாராயண புரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மங்களாசாசனம்‌ செய்வித்த பின்‌ வேதாந்தி இருக்கும்‌ ஊருக்கும்‌ அழைத்துச்‌ சென்‌றார்‌.சிஷ்ய கோஷ்டிகளுடனும்‌, பரிவார சேனைகளுடனும்‌ இவர்‌ எழுந்தருளுவதைக் கண்ட அங்குள்ள அந்தணர்கள்‌ பட்டரிடம்‌ நீர்‌ இப்படி வந்தால்‌ வேதாந்தியைக்‌ காண இயலாது. அவரது சிஷ்யர்‌கள்‌ உம்மை வாசலிலேயே நிறுத்தி அனுப்பி விடுவார்கள்‌. ஆனால்‌ வேதாந்தி மிகப்பெரிய செல்வராதலால்‌ தினம்‌ பிராமண போஜனம்‌ செய்விக்கிறார்‌. அங்கு புசிக்க வருகிறவர்களுடன்‌ கலந்து தேவரீரும்‌ சென்றால்‌ அவரைக் காணலாம்‌ என்று வழி சொன்னார்கள்‌.-அதன்படியே பட்டரும்‌ போஜன சாலைக்குள்‌ சென்று பந்தியில்‌ சென்று சேராமல்‌ வேதாந்திகள்‌ பக்கத்திலேயே நிற்க, அவரும்‌ அவர்‌ வந்த காரணத்தை வினவ பட்டரும்‌ ‘நான்‌ அன்ன பிட்சைக்கு வரவில்லை. உம்முடனே தர்க்க பிட்சை கேட்டு வந்துள்ளேன்‌: என்றார்‌.-இதைக்கேட்ட வேதாந்தி திடுக்கிட்டு ‘நீர்தாம்‌ பட்டரோ:என்று வினவ இவரும்‌ ‘ஆம்‌’ என்ன, இவருடைய வித்யானுபவம்‌ காண்போமென்று தீர்மானித்து இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ சளைக்காமல்‌ ஒன்பது நாள்‌ தர்க்கித்தனர்‌. பத்தாம்‌ நாள்‌ பட்டர்‌ அத்வைதத்தைக்‌ கண்டித்து, விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்துத்‌ திருநெடுந்தாண்டக பாசுரத்தின்‌ விழுமிய பொருளையும்‌ அற்புதமாக விளக்கியருள, வேதாந்திகள்‌ மிகவும்‌ மூழ்ந்து கூப்பிய கரங்களுடன்‌ நின்று உம்மை மனிதராகவே எண்ணி யிருந்தேன்‌.-உமக்கும்‌ நம்பெருமாளுக்கும்‌ வாசி (வேறுபாடு)யில்லை. ‘உறங்‌கும்‌ பெருமாள்‌ அவர்‌. உலவும்‌ பெருமாள்‌ நீர்‌: என்று பலவாறு துதித்து அடியேனை அங்கீ கரித்தருள வேண்டும்‌ என்று விண்ணப்‌பம்‌ செய்ய, பட்டரும்‌ தம்‌ காரியம்‌ பலித்ததென்று மகிழ்ந்து,வேதாந்திகளுக்கு பஞ்ச ஸமஸ்காரம்‌ பிரசாதித்து, மகாபாகவதோத்தமராக்கி, எம்பெருமானார்‌ தர்சனத்தை நிர்வஹித்துப்‌ போரீர்‌ என்று நியமித்து விரைந்து திருவரங்கம்‌ திரும்பி அன்று மாலையே நம்‌பெருமாள்‌ திருமுன்பு வணங்கி நிற்க, பெருமாளும்‌ ‘பட்டரே நீர்‌ போன காரியம்‌ என்ன ஆயிற்று! என்று வினவ, பட்டரும்‌, வேதாந்திகள்‌ தேவரீருடைய திருவடிகட்கு அடியவராயினார்‌ என்று கூறி நடந்தவற்றையெல்லாம்‌ கூறவே ‘எங்கனே’ என்று கேட்க திருநெடுந்தாண்டகத்தைத்‌ திருவோலக்கத்திலே பட்டர்‌ உபதேஸித்‌தார்‌. அன்று தொட்ஙகி இன்று வரை நம்‌ பெருமாள்‌ ஸன்னிதியில்‌ திரு அத்யயன உத்ஸவத் தொடக்கத்திற்கு முன்னால்‌, திருநெடுந்‌ தாண்டகத்‌ திருநாள்‌ என்று மிகச் சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர்‌ பட்டர்‌ இக் கைங்கர்யத்தை அரையருக்கு அளித்‌தாராம்‌.-இது இங்கனமிருக்க வேதாந்திகள்‌ தன்‌ தேசத்திலே திருமாலடியார்களைப்‌ பூசித்து வரும்‌ நாளில்‌ சம்சாரத்தில்‌ விரக்தி ஏற்பட்டு,பட்டர்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து (சரணடைந்து) சந்யாச தர்மம்‌ பூண்டு அவரது தாசனாக வாசம்‌ செய்ய விரும்பி, கோயிலுக்கு எழுந்தருளும்‌ வழியில்‌ சிறுபுத்தூாரிலே அனந்தாழ்வானைக்கண்டு,
அவர்‌ ஆட்சேபித்ததையும்‌ புறக்கணித்து கோயிலுக்கு எழுந்தருளியதைக்‌ கண்ட பட்டர்‌ மிகவும்‌ உகந்தருளி, நம்‌ ஜீயர்‌ வந்தார்‌ என்று சொல்லித் தம்‌ திருவடிகளில்‌ விழுந்து கிடக்கும்‌ வேதாந்தகளை எடுத்தணைத்து அவருக்கு சகல அர்த்தங்களையும்‌ ஓதுவித்துப்‌ பிரஸாதித்தருள, ஜீயரும்‌ பட்டரை யன்றித்‌ தேவு மற்றறியேன்‌ என்றிருந்தார்‌. பட்டர்‌ நம்முடைய ஜீயர்‌ என்று சொல்லி அணைத்‌துக் கொண்டதால்‌ அன்று முதல்‌ வேதாந்திகளுக்கு நஞ்சீயர்‌ என்ற பெயர்‌ வழங்கலாயிற்று.

நம்பெருமாள்‌, நம்மாழ்வார்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை
என்பர்‌ அவரவர்‌ தம்‌ ஏற்றத்தால்‌ அன்புடையோர்‌
சாற்று திரு நாமங்கள்‌ தானென்று நன்னெஞ்சே
ஏற்று அதனைச்‌ சொல்லி நீ இன்று
(உ.தே.மா. 66)

நஞ்சீயருடைய ஆச்சாரிய பக்தி மிகவும்‌ போற்றுதற்குரியது.-ஒரு கைசிக ஏகாதசி யன்று பட்டர்‌ திருவீதி அலங்கரிக்கப்‌ புறப்பட்‌டவாறே நஞ்சீயரும்‌ ஸ்ரீபாதம்‌ தாங்கப்புக, அங்குள்ளோர்‌ திரிதண்ட தாரியான (சந்யாசி) உமக்கு இது தகாது என்று ஆட்சேபிக்க எனக்கு உறுதுணையாகி என்னை ரட்சிக்க வேணும்‌ என்ற பொருளுடைய ‘ஸகாமா கோபாய” என்ற மந்திரம்‌ சொல்லி அளிக்கப்பட்ட இந்த முக்கோல்‌ எனக்கு விரோதியாமாகில்‌ எனக்கு அது வேண்டாம்‌ என்று தூர வீசப் போக, எல்லோரும்‌ அவரது பக்தி விசேஷத்தைக் கண்டு வியந்தனர்‌. பட்டர்‌ ஒரு நாள்‌ பகலெல்லாம்‌
வழிநடந்த களைப்பால்‌ ஒருமரத்தடியில்‌ நஞ்சீயர்‌ மடியில்‌ தலையை வைத்துக்‌ கண்வளர்ந்தருள இரவு முழுவதும்‌ அசையாமல்‌ இருந்தார்‌ என்பதும்‌ இவரது ஆச்சார்ய பிரேமத்தின்‌ சிறப்பினை நன்கு விளக்குகிறது.-நஞ்சீயர்‌ வெகுநாள் வரை அருளிச் செயல்களின்‌ வாசனையையும்‌ அறியாதவரா யிருந்தும்‌ பட்டரால்‌ தடுத்தாட் கொள்ளப்பட்ட பின்னர்‌ அவரது அருள்‌ நோக்கால்‌ திவ்யப் பிரபந்தங்களை ஒதித் தரித்து, அவற்றின்‌ விசேஷார்த்தங்களை நிர்வஹிப்பதில்‌ நல்ல விரகராய்‌ இருந்தார்‌ என்பது அதிசயிக்கத் தக்கதாகும்‌. அவட்கு மூத்தோனை வெந்நரகம்‌ சேராவகையே சிலை குனித்‌தான்‌’ என்ற பதத்திற்கு நஞ்சீயர்‌ சாதாரணப் பொருள்‌ கூற ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்‌ இந்தப் பதத்திற்கு பட்டர்‌ வெகு அழகாகப்‌ பொருள்‌ கூறுவர்‌ என்று சொல்லி அவர்‌ கூறும்‌ பொருளைக் கூறவே, அதைக்‌ கேட்ட ஜியர்‌, இவ்வாறு பொருள்‌ கூற வல்ல பட்டரை சேவிக்க வேண்டும்‌ என்ற காதல்‌ வளர்ந்ததாலேயே அவர்‌ ஸ்ரீரங்கத்திற்கு வந்து பட்டரைக் கண்டு அவர்‌ திருவடியில்‌ சரணடைந்தார்‌ என்று கூறுவர்‌.
இவரது திருஅவதார ஸ்தலம்‌ மேல்நாட்டில்‌ திருநாராயணபுரம்‌. திரு நக்ஷத்திரம்‌ விஜய வருஷம்‌ பங்குனி மாதம்‌ உத்தரம்‌. குலம்‌, வடமான்‌. திருநாமங்கள்‌ வேதாந்தி, நிகமாந்த யோகி ,ஸ்ரீமாதவர்‌, நஞ்சீயர்‌. இருப்பிடம்‌ கோயில்‌, ஆசார்யர்‌ பெரிய பட்‌
டர்‌. திருவாராதனம்‌ கிருஷ்ண விக்ரகம்‌ சிஷ்யர்‌ நம்பிள்ளை. இவர்‌ செய்தருளின கிரந்தங்கள்‌. திருவாய்மொழிக்கு வியாக்யானம்‌ 9000படி. திருப்பாவைக்கு வியாக்யானம்‌ ஈராயிரப்படி திருப்பல்‌லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு திருவந்தாதிகளுக்கு உரை,
ரஹஸ்ய த்ரய விவரமான நூற்றெட்டு, ஸரணாகதி கத்ய வியாக்யானம்‌, திருவாய்மொழி நூறுரு வியாக்யானம்‌ செய்கையாலே நஞ்சீயர்‌, ஸதாபிஷேகம்‌ பண்ணினார்‌ என்பது பிரசித்தம்‌. இவர் தொண்ணூற்றஞ்சு திருநட்சத்திரம்‌ வாழ்ந்திருந்தார்‌ என்பன இவரைப்‌ பற்றிய முக்ய குறிப்புகள்‌.

தெண்டிரை சூழ்‌ திருவரங்கம்‌ செழிக்க வந்தான்‌ வாழியே.
சீமாதவனென்னும்‌ செல்வனார்‌ வாழியே.
பண்டை மறைத் தமிழ்ப்‌ பொருளைப்‌ பகர வந்தோன்‌ வாழியே.
பங்குனியில்‌ உத்தரதாள்‌ பா ன்‌ வாழியே.
ஒண்டொடியான்‌ கலவி தன்னை ஒழித்திட்டான்‌ வாழியே.
ஒண்பதினாயிரப்‌ பொருளை ஓதுமவன்‌ வாழியே.
எண்டிசையும்‌ சீர் பட்டரிணை யடியோன்‌ வாழியே

நம்பிள்ளைக்குத்‌ திருவவதார ஸ்தலம்‌ சோழ மண்டலத்தில்‌ நம்‌பூர்‌. திருவவதார நக்ஷத்திரம்‌ பிரபவ வருஷம்‌ கார்த்திகை மாதம்‌ கிருத்திகை.-குலம்‌ – வடமான்‌ குடி-நம்பூர்‌. இவரது திருநாமங்கள்‌ வரதராஜன்‌,திருக்கலிகன்றிதாஸர்‌, கலிவைரிதாஸர்‌, நம்பிள்ளை, லோகாசார்‌யார்‌, ஜகதாசார்யார்‌, உலகாரியர்‌ முதலியன. தேவியர்கள்‌ -ஸ்ரீரங்கநாச்சியாரும்‌, ஆண்டாளுமாகும்‌. இருப்பிடம்‌. கோயில்‌ திருவாராதனம்‌ – வயலாலி மணவாளர்‌. ஆசார்யர்‌ – நம்‌ ஜீயர்‌குமாரர்‌ – ராமானுஜாசார்யார்‌.

நஞ்சீயர்‌ சிஷ்யர்களில்‌ முதன்மையானவர்‌ நம்பிள்ளை. அவரது இயற்பெயர்‌ நம்பூர்‌ வரதராஜாசாரியார்‌ என்பது. அவருக்கு நம்பிள்ளை என்ற பெயர்‌ வரக்காரணம்‌ வருமாறு:நஞ்சீயர்‌, பட்டர்‌ நியமனப்படி (உத்தரவின்‌) திருவாய்மொழியின்‌ அர்த்தங்களை உபந்யாசம்‌ செய்வதையே பொழுது போக்காகக்‌ கொண்டு வாழ்ந்து வந்தார்‌. திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ அவரது உபந்யாசத்தைக்‌ கேட்க வருபவர்களில்‌ நம்பூர்‌ வரதராஜாசார்யரும்‌ ஒருவர்‌. இவர்‌ நீறு பூத்த நெருப்புப் போல இருந்த படியால்‌ இவருடைய பக்தி ஞான வைராக்யம்‌ போன்ற பெருமைகளை யாரும்‌ அறியாதிருந்தனர்‌. இப்படி யிருக்கையில்‌ பட்டர்‌, நஞ்சீயரிடம்‌ திருவாய்மொழிக்‌குத்‌ திருக்குருகைப்பிரான்‌ பிள்ளானது(எம்பெருமானார்‌ ஞானபுத்‌திரன்‌) ஆறாயிரப்படி வியாக்யானத்தை விட விரிவாக ஒரு வியாக்‌யானமிடும்படி கட்டளையிட்டபடியால்‌, அதைச் செவ்வையாகப்‌ பட்டோலை எடுக்கவல்லார்‌ யாரென்று விசாரிக்க; அவரது அந்தரங்கர்கள்‌ நம்பூர்‌ வரதராஜாச்சாரியார்‌ என்றொருவர்‌ ஸ்வாமியின்‌ காலட்க்ஷேப கோஷ்டிக்குத் தவறாது வருகிறார்‌. அவர்‌ நல்ல விரகர்‌,எழுத்திலும்‌ வல்லவர்‌. அவரைக் கொண்டு இப் பணியை நிறைவேற்றிக் கொள்ளலாம்‌ என்றனர்‌. ஆகவே அவரை அழைத்துஆரார்ந்து பார்க்கையில்‌ அவரது திறமை தெரிய வந்தது. அதனால்‌ மகிழ்ந்த ஜீயர்‌ அவரிடம்‌ கருணை காட்டி தம்முடைய ஒன்பதினாயிரப்படியை வரியடைவே அவருக்கு விளக்கிக் காட்டி அதை எழுதித்‌
தரும்படி ஸ்ரீகோசத்தை அவரிடம்‌ கொடுத்தார்‌. அதைப் பெற்றுக் கொண்டு தம்‌ ஊருக்குப்‌ போகையில்‌ வழியில்‌ காவேரியில்‌ நீந்திச்‌ செல்கையில்‌ அந்த ஸ்ரீகோசம்‌ நெகிழ்ந்து விழுந்து வெள்ளத்தில்‌ போய் விடவே மிகவும்‌ வருந்தியவர்‌, அந்த வியாகயானத்தைச்‌ ஜீயர்‌ சொல்லக்‌ கேட்டிருந்தபடியால்‌ அவரது கிருபையால்‌, அவரது திருவடிகளைச்‌ சிந்தித்துக் கொண்டே தம்‌ நினைவிலிருந்தே பட்டோலை எடுத்து அந்த ஸ்ரீகோசத்தை ஆசாரியரிடம்‌ சமர்ப்பித்தார்‌. நான்‌ கொடுத்த ஏடு எங்கே? என்று நஞ்சியர்‌ கேட்கவே நடந்தவற்றை விவரிக்க வேண்டியதாயிற்று. பின்னர்‌ நஞ்சியர்‌ ஸ்ரீகோசத்தை விரித்துப்‌ பார்க்கையில்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸ்ரீ ஸூக்திகள்‌ விடாமலும்‌, தம்மிடம்‌ அவர்‌ கேட்டிருந்த அர்த்த விசேஷங்கள்‌ ஈடும்‌ பொருத்தமாக அமைந்தும்‌ விரிவுமில்லாமல்‌ இருந்த அழகுக்கு மிகவும்‌ உகந்து ‘வாரீர்‌ நம்முடைய பிள்ளையே” என்று எடுத்தணைத்துக்‌ கொண்டார்‌. அது முதல்‌ நம்பிள்ளை என்றே இவர்‌ அழைக்கப்பட்டார்‌. திருக்கலிகன்றிதாசர்‌ என்பதும்‌ இவருக்கு நஞ்சீயர்‌ சாத்தின திருநாமமாகும்‌. திவ்யப்‌ பிரபந்தங்களுக்கும்‌ இதிகாச புராணாதிகளுக்கும்‌ ஆழ்ந்த இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை அருளிச்‌ செய்வதில்‌ இவருக்கு ஒத்தாரும்‌ மிக்காரும்‌ இல்லை என்று பெரிய வாச்சான்‌ பிள்ளை போன்ற பிரபல வைஷ்ணவ சீலர்களும்‌ கூறியுள்ளனர்‌.-லோகாச்சார்யார்‌ என்ற திருநாமமும்‌ இவருக்குண்டு. இவர்‌ கோயிலில்‌ வாழ்ந்த காலத்தில்‌ சகல ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ இவருடைய சீடர்களாகி ஸகல அர்த்தங்களையும்‌ கேட்டு வந்தனர்‌. நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ என்னும்படி ஸம்பத்துடன்‌ வாழ்ந்து வந்தார்‌.அப்பொழுது முதலியாண்டான்‌ பேரனான கந்தாடை தோழப்பர் தாம்‌ வித்வானாயிருந்தும்‌ தம்மிடம்‌ யாரும்‌ பாடங்கேட்க வரவில்லையே என்ற பொறாமையில்‌ இழிந்த வார்த்தைகளால்‌ பரிபவித்து விட்டுத்‌ தன்‌ வீட்டிற்குச்‌ சென்றார்‌. வீட்டில்‌ அவருடைய மனைவியார்‌ இப்படியும்‌ ஆச்சாரியாரை நிந்திப்பீரோ? உமக்கு உய்வும்‌ உண்டோ என்று பலவுஞ்‌சொல்லி அவரது தவறை உணர்த்த தோழப்பரும்‌ நம்பிள்ளையிடம்‌
மன்னிப்புப்‌ பெறவேண்டுமென்று காத்திருந்தார்‌.-அதற்குள்‌ நம்பிள்ளை தாமே தோழப்பர்‌ வீட்டிற்குச் சென்று தேவரீருடைய திருஉள்ளம்‌ வருந்தும்படி நடந்துகொண்ட அடியேனுக்கு தேவரீருடைய மன்னிப்பைத் தவிர வேறு கதியில்லை என்று அவர்‌ திருவடிகளில்‌ விழுந்து வேண்டவே, தோழப்பர்‌ அந்த சீல குணத்திற்கு வியந்து ஸ்வாமி இதுநாள்‌ வரை நான்‌ தங்களைச்‌ சில பேர்களுக்கே ஆச்சாரியார்‌ என்றிருந்தேன்‌. இப்போது லோகத்‌துக்கெல்லாம்‌ தேவரீர்‌ ஆச்சாரியார்‌ என்று அறிந்து கொண்டேன்‌ என்றார்‌.-அது முதல்‌ லோகாசார்யார்‌ என்ற திருநாமமும்‌ வழங்கி வந்தது.

துன்னு புகழ்‌ கந்தாடை தோழப்பர்‌ தம்முகப்பால்‌
என்ன உலகாரியனோ என்றுரைக்க – பின்னை
உலகாரியனென்னும்‌ பேர்‌ நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல்‌ நின்றது என்றும்‌ மேல்‌
(உ.தே.மா. 51)

பின்பழகராம்‌ பெருமாள் ஜீயர்‌. பெருந் திவத்தில்‌
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்‌ – நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள்‌ செய்‌ அந் நிலையை நன்னெஞ்சே
ஈனமற எப்பொழுதும்‌ ஓர்‌
(உ.தே.மா.66) -நம்‌ பிள்ளைக்குப்‌ பல சிஷ்யர்கள்‌ இருந்த போதிலும்‌, பின்‌பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ பக்தி ஒப்பற்றது.

இப்பேராசிரியரிடம்‌ சகல அர்த்தங்களையும்‌ கேட்டுத் தரித்த வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ உலகுக்குச்‌ செய்திருக்கும்‌ உபகாரம்‌ நிகரற்றது. பட்டர்‌ ஸந்ததியில்‌ தோன்றிய மகா வித்வான்‌ நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌, தோழப்பரைப் போலவே பொறாமை கொண்டிருந்தார்‌. அவர்‌ ஒரு நாள்‌ ராஜ சபைக்குச்‌ சென்றிருந்த பொழுது, அந்த ராஜா ‘ஸ்ரீராமன்‌ தன்னுடைய பரத்வத்தை மறைத்துக்‌ கொண்டு மனிதனாக அவதரித்திருக்கையில்‌ ஜடாயுவுக்கு முக்தியளித்தது எவ்வாறு பொருந்தும்‌ என்று கேட்க விடையளிக்க முடியாமல்‌ ஆலோசிக்க வேண்டியதாயிற்று. அந்நேரத்தில்‌ ௮ங்கு வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம்‌ இந்தக்‌ கேள்விக்கு நம்பிள்ளை எப்படிப்‌ பதிலளிப்பார்‌ என்று கேட்டார்‌. ஏனெனில்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ நம்பிள்ளையிடம்‌ அந்த விஷயங்களை ஏற்கெனவே கேட்டறிந்தவர்‌. அவர்‌ ‘ஸத்யேக லோகாந்‌ ஜயதி’ என்ற ஸ்லோகத்தைக்‌ கொண்டு பதிலளிப்பார்‌ என்று சொல்ல, அதை மனதில்‌ நன்றாக வாங்கிக் கொண்டு ராஜாவுக்கு விடை யளித்தார்‌. அரசனும்‌ மிகவும்‌ மகிழ்ந்து விசேஷமாகப்‌ பரிசுகள்‌ வழங்கினான்‌. அவற்றை நம்‌பிள்ளை திருவடிகளில்‌ அர்ப்பணித்து தேவரீருடைய சிந்திப்போன ஸ்ரீ ஸூக்த்திகளில்‌ ஒரு சொல்லுக்குப்‌ பெற்ற பரிசு இது. இதைத்‌ தாங்கள்‌ அங்கீ கரித்து என்னை வாழ்விக்க வேண்டுமென்று பணிவுடன்‌ வேண்டினார்‌. நம்‌ பிள்ளையும்‌ அவரையும்‌ தம்‌ கோஷ்டியில்‌ சேர்த்துக் கொண்டு உய்வித்தார்‌. நடுவில்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்‌ளையின்‌ விஷயார்த்தங்களை விளக்கி ஒரு லட்சம்‌ கிரந்தம்‌ எழுதியிருந்தார்‌. ஆனால்‌ அதை நம்பிள்ளை பிரசாரத்திற்கு அனுமதிக்கவில்லை. நம்‌ பிள்ளையின்‌ அர்த்த விசேஷங்கள்‌ திவ்யப்பிரபந்த வியாக்யானங்களிலும்‌ வார்த்தாமாலை முதலியவற்றிலும்‌ பாக்யசாலிகளால்‌ உய்த்து உணரப்படுகின்றன.

இந்திரன்‌ வார்த்தையு நான்முகன்‌ வார்த்தையு மீசனுடன்‌
கந்தன்‌ சொல்‌ வார்த்தையுங் கற்பவ ராரிந்தக்‌ காசினிக்கே
நந்தினமுத்தெறி நம்பூர்‌ வரதர்‌ தம்‌ மாளிகையிற்‌
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திரை கொள்ளுவரோ
-என்று -நம்பிள்ளை வைபவத்தை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அனுசந்தித்தனர்‌.

வாழி பதின்மருடன்‌ ஆண்டாள்‌ மதுரகவி
வாழிய நாதன்முதலா மாமறையோர்‌ – வாழி
யொருக்‌ கோலரை நெருக்கி வேட்டு மெதிராசன்‌
திருத்தாள்‌ வணங்கினார்‌ சீர்‌.

தேமருவும்‌ செங்கமலத் திருத்தாள்கள்‌ வாழியே.
திருவரையில்‌ பட்டாடை சேர் மருங்கும்‌ வாழியே.
தாம மணி வடமார்பும்‌ புரிநூலும்‌ வாழியே.
தாமரைக்கை இணையழகும்‌ தடம்புயமும்‌ வாழியே.
பாமருவுந்‌ தமிழ் வேதம்‌ பயில் பவளம்‌ வாழியே.
பாடியத்தின்‌ பொருள் தன்னைப்‌ பகர் நாவும்‌ வாழியே.
நாமநுதல்‌ மதிமுகமும்‌ திருமுடியும்‌ வாழியே.
நம்பிள்ளை வடிவழகும்‌ நாடோறும்‌ வாழியே.
மாதகவா வெவ்வுயிர்க்கும்‌ வாழ்வளித்தான்‌ வாழியே.
மதிஅரங்க ரோலக்கம்‌ வளர்த்திட்டான்‌ வாழியே.
நாதமுனி யாளவந்தார்‌ நலம் புகழ்வோன்‌ வாழியே.

நம்பிள்ளை திருவடிகள்‌ நாடோறும்‌ வாழியே.
காதலுடன்‌ நஞ்சீயர்‌ கழல்‌ தொழுவான்‌ வாழியே.
கார்த்திகை கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே.
போதமுடன்‌ ஆழுவார்‌ சொற் பொருளுரைப்போன்‌ வாழியே.
பூதூரன்‌ பாடியத்தைப்‌ புகழுமவன்‌ வாழியே.

பெரியாழ்வாரைப் போல ஆனியில்‌ சோதியில்‌ அவதரித்தவர்‌ இவர்‌. ஸ்ரீவசன பூஷணம்‌, முழுக்ஷப்படி முதலிய அஷ்டதச ரகஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியருக்கும்‌ ஆச்‌சார்ய ஹிருதயம்‌ அருளிச் செய்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருக்கும்‌ திருத்தந்தையார்‌ இவர்‌, இவருடைய இயற்பெயர்‌ ஸ்ரீ கிருஷ்ண மஹாகுரு என்பது. இந்தத்‌ இருநாமமே பெரியவாச்‌ சான்‌ பிள்ளை என்ற மற்றொரு ஆச்சாரியருக்கும்‌ இருந்ததால்‌, நம்பிள்ளை சிஷ்யர்களான இவர்களுக்குள்‌ வாசி (வித்யாசம்‌) தெரிவதற்காக இவர்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை என அழைக்கப்‌ பட்டார்‌. திருவரங்கம்‌ பெரிய கோயிலில்‌ வடக்குத்‌ திருவீதியில்‌ வாழ்ந்து வந்ததே இப் பெயர்‌ வந்ததற்குக்‌ காரணம்‌. இவருடைய ஞானப்பெருமைகள்‌ மிகப்பல. பகவத்‌ விஷயமென வழங்கப்படுகிற (திருவாய்மொழி வியாக்யானமான) ஈடு 36,000 படியை இவரே பட்டோலை கொண்டவர்‌.

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை,
வள்ளல்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை
இந்த நாடறிய மாறன்‌ மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம்‌

நம்‌ பிள்ளை அருளிய ஈடு சொல் நயமும்‌ பொருளாழமும்‌ உடையது. ஈட்டின்‌ (பங்க்தி ஸந்நிவேசம்‌) விளக்கம்‌ வேறு எந்தக் கிரந்தத்தலும்‌ கண்டறியாததும்‌ காண முடியாததுமான அத்வீதிய விலக்ஷண சந்தர்ப்பம்‌. தமிழ்‌ வித்வான்‌௧ஞம்‌ ஸமஸ்க்ருத வித்‌வான்களும்‌ தனித்தனியே உள்‌ குழையத் தக்க உயர்ந்த ரசனாவிசேஷம்‌. ககனம்‌, ககநாகாரம்‌, ஸாகரஸ்‌ ஸாக ரோபம்‌” என்கிறாப்‌ போல ஈட்டுக்கு ௨வமை ஈடே. பெரிய புலவர்கள்‌ பத்தெட்டு வரிகளில்‌ எழுத வேண்டியவற்றை ஒரு வரியில்‌ கம்பீரமாக அடக்கி எழுதும்‌ திறன்‌ இவ்வாசிரியர்க்கே அமைந்தது.-மணவாள மாமுனிகள்‌ இவ்வாகிரியரை வள்ளல்‌ என்று
குறிப்பிடுகிறார்‌. திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ அருளிய ஆறாயிரப்படி வியாக்யானம்‌ நஞ்சியர்‌ அருளிய ஒன்பதினாயிரப்படி வியாக்யானம்‌ இருந்த போதிலும்‌ ரசிகர்களுக்குப்‌ பரிபூரணத் திருப்‌தியை விளைவிக்கப்‌ போதாதவை. நம்பிள்ளை தம்‌ நல்லருளால்‌ ஏவி விட பெரியவாச்சான்‌ பிள்ளை யருளிய 24,000 படி வியாக்யானம்‌ சிறிது விரிவாக இருக்கும் -, ஸ்ரீ ராமாயணம்‌ போன்ற இதிகாஸ புராணங்களிலிருந்து மேற்கோளாக ஸ்லோகங்‌கள்‌ எடுத்துக்‌ கையாளப்பட்டிருப்பதாலும்‌ இது சிறப்படைந்துள்‌ளது. திருவிருத்தத்துற்கும்‌ ஈடு வியாக்யானம்‌ அருளி யுள்ளார்‌. தவிர அஷ்டாக்ஷர தீபிகை என்ற கிரந்தமும்‌ இவ்வாசிரியரது படைப்பு என்று தெரிய வருகிறது. இவையெல்லாவற்றிற்கும்‌ மேலாக உலகுக்கெல்லாம்‌ உயிரான பிள்ளை லோகாச்‌சாரியாரையும்‌, அவர்‌ தம்பி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரையும்‌ பெற்றுக் கொடுத்தருளியதேயாகும்‌.

ஆனிதனில்‌ சோதிநாள்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆழ்வார்கள்‌ கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே,
தாணுகந்தநம்பிள்ளை தாள்‌ தொழுவோன்‌ வாழியே.
சடகோபன்‌ தமிழ்க்கீடு சாற்றினான்‌ வாழியே.
நானிலத்தில்‌ பாடியத்தை நடத்தினான்‌ வாழியே.
நல்ல உலகாரியனை நமக்களித்தான்‌ வாழியே.
ஈனமற எமையாளும்‌ இறைவனார்‌ வாழியே.
எங்கள்‌ வடவீதிப்பிள்ளை இணையடிகள்‌ வாழியே.

பிள்ளை லோகாச்சாரியாரும்‌ அவர்‌ தம்பி அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ நைஷ்டிகப் பிரமச்சாரிகள்‌. ஐப்பசியில்‌ திருவோணத்தவதரித்த பரம காருணிகரான இவர்‌ கிருபா மாத்ரப் பிரஸந்‌நாச்சாரியார்‌. அனுவர்த்தப்‌ பிரஸன்னாச்‌ சாரியர்களைப்‌ போலன்றி
சிஷ்யப்‌ பிரார்த்தனையைச்‌ சிறிதும்‌ எதிர் பார்க்காமல்‌ பயனன்றாகிலும்‌, பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்தப்‌ பணி கொள்பவர்கள்‌. நமது ஆச்சார்ய கோஷ்டியில்‌ எம்பெருமானாரே முதல்‌ கிருபா மாத்ரப்‌ பிரசன்னாசாரியார்‌ ஆவர்‌. அவர்‌ பிரஹ்ம ஸூத்திரத்‌திற்கு (பாஷ்யம்‌) அர்த்தத்தை விளக்கும்‌ நூல்கள்‌ எழுதியபோதிலும்‌ ரகஸ்யார்த்த விவரணமாக ஒரு சிறு நூலும்‌ எழுதவில்லை.பின்னால்‌ இன்னுமொரு திருக் கோலம்‌ பூண்டு (மணவாள மாமனிகளாக) செய்யலாம்‌ என்று விட்டு விட்டார்‌ போலும்‌. அக்குறையைத்‌ தீர்க்கவே பிள்ளை லோகாச்சாரியார்‌ தோன்றி ஸ்ரீ வைஷ்ணவ மண்டலிக்கு பேருபகாரம்‌ செய்துள்ளார்‌. இவர்‌ தகப்பனார்‌ இவருக்‌குத்‌ தமது ஆச்சாரியரான நம்‌ பிள்ளையின்‌ பெயரான உலோகாச்சாரியார்‌ என்றே திருநாமம்‌ சாத்தினார்‌. வாசி தெரிவதற்காக பிள்ளைலோகாச்சாரியார்‌ என்று வழங்குதல்‌ நிகழ்ந்தது என்பதை உபதேச
ரத்ன மாலையில்‌.
பின்னை வடக்குத் திரு வீதிப்பிள்ளை – அன்பால்‌ அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ்‌. மைந்தர்க்குச்‌ சாற்றுகையால்‌ வந்து பரந்தது எங்கும்‌
இந்தத்‌ திருநாமம்‌ இங்கு
(உ.தே.மா. 52) -என்கிறார்‌.

இவர்‌ அருளிச் செய்த நூல்கள்‌ அஷ்டாதச ரகஸ்யம்‌. அவற்றுள்‌ ஸ்ரீவசன பூஷணம்‌, தத்வத்ரயம்‌, முமுக்ஷப்படி என்ற மூன்றும்‌ ஸூத்திர வடிவில்‌ அமைந்தவை. ஸ்ரீவசன பூஷணத்தின்‌ பெருமையை, மணவாள மாமுனிகள்‌ உபதேச ரத்னமாலையில்‌ ஏழு பாசுரங்களில்‌ கொண்டாடியுள்ளார்‌. ஆசார்ய பரம்பரப்‌ பிராப்தமான அர்த்தங்களில்‌ முன்னோர்கள்‌ ரகசியமாக உபதேசித்துப்‌ போந்தமையால்‌, அந்த அர்த்த விசேஷங்களை பின்புள்ளோர்‌ இழக்க ஒண்ணாதபடி தன்னுடைய கிருபையோடு பெருமாளும்‌ ஸ்வப்பனத்தில்‌ நியமித்தபடியால்‌ ஸ்ரீவசன பூஷணமாகிய பிரபந்‌தத்தை அருளிச் செய்தவர்‌. முன்பே பேரருளாளப்‌ பெருமாள்‌ கிருபையால்‌ மணப் பாக்கத்தில்‌ இருப்பாரொரு நம்பியாருக்கு விசேஷக்‌ கிருபை பண்ணி தஞ்சமாயிருப்பதான சில விசேஷ அர்த்தங்‌களை விளக்கி, அவரைத்‌ திருவரங்கத்தில்‌ போய்க்‌ காத்திரும்‌, அங்கு நாம்‌ உமக்கு விசேஷ அர்த்தங்களைச்‌ சொல்லுவோம்‌ என்று அருளினார்‌.-ஆகவே அவரும்‌ திருவரங்கத்தில்‌ ஏகாந்தமாக ஒரு கோயிலிலே காத்திருந்தார்‌, பிள்ளை லோகாச்சாரியாரும்‌ அந்த இடத்‌திற்கு வந்து ரகஸ்யார்த்தங்களை அருளிச் செய்து கொண்டிருந்தார்‌.-கோயிலிலிருந்த நம்பியும்‌ வெளியே வந்து அவர்‌ பாதங்களில்‌ தண்டனிட, அவரும்‌ மிகவும்‌ மகிழ்ந்து முன்னரே காஞ்சியில்‌ வாக்களித்தபடி அவரையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டு பெருமாள்‌ கட்டளைப்படி பிரபந்தமிட்டருளினார்‌ என்பது பிரசித்தம்‌ என்‌பவை மணவாள மாமுனிகள்‌ வியாக்யானம்‌.திவ்யப்‌ பிரபந்தங்களுக்கோ ஸ்தோத்ரங்களுக்கோ உரையிடாமல்‌ (அஷ்டதச ரகஸ்யங்கள்‌) பதினெட்டு ரகஸ்யங்களை அருளிய இவர்‌ இந்த நூல்களில்‌ விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக்‌ கொள்கைகளையும்‌ திவ்யப்‌ பிரபந்த வியாக்யாதாக்கள்‌ அருளிய ரஹஸ்ய கிரந்தங்களையும்‌ விரிவாக விளக்கி யுள்ளார்‌. வாழ் நாள்‌ முழுவதும்‌ திருமணமும்‌ செய்து கொள்ளாமல்‌, வைஷ்ணவ தர்சனத்துக்காகவே வாழ்ந்து முகமதியர்‌ படையெடுப்பின்போது அரங்‌கனைக்‌ காப்பாற்றுவதற்காக உயிரையும்‌ அர்ப்பணித்த மஹானுபாவர்‌ இவர்‌,அன்ன புகழுடும்பை அண்ணல்‌ உலகாசிரியன்‌ இன்னருளால்‌ செய்த கலையாவையிலும்‌ – உன்னில்‌ திகழ் வசன பூடணத்தின்‌ சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய்‌ இப்போது (உ.தே.மா. 53)இவரது அஷ்ட தச ரகஸ்யங்களில்‌ பல இவரது தம்பியாலும்‌,நாயனாராச்சான்பிள்ளை (சமகாலத்தவர்‌)யாலும்‌ அடுத்து வந்த மணவாள மாமுனிகளாலும்‌ தமது நூற்களில்‌ மேற்கோள்களாகக்‌ காட்டப்பட்டுள்ள. ஆகவே அஷ்டதச ரகஸ்ய நூல்களில்‌, பல அவற்றின்‌ ஆசிரியர்‌ காலத்திலேயே மிகப்புகழ்‌ பெற்று விட்டன எனத் தெரிகிறது. இந்நூல்களில்‌ முமுஷுப்படியே காலத்தால்‌ முற்‌பட்டது.-சிறப்பால்‌ முற்பட்டதுமாகும்‌ எனத் தெரிகிறது. பிள்ளை லோகாச்சாரியார்‌ தாமே தமது ரகஸ்யங்கவில்‌ முற்பட்டவை சிலவற்றைப்‌ பிற்பட்ட ரகஸ்யங்களில்‌ குறிப்பிட்டுள்ளதாகச்‌ சொல்கிறார்‌. மணவாள மாமுனிகள்‌ உபதேச ரத்னமாலையில்‌ அன்ன புகழ்‌ முடும்பை அண்ணல்‌ உலகாசிரியன்‌ இன்னருளால்‌ செய்த கலை யாவையிலும்‌, திகழ்‌ வசன பூடணத்தின்‌ சீர்மை ஒன்றுக்கில்லை இவ்வார்த்தை மெய்‌ இப்போது என்று தொடங்கி உ.தே.மா.(59-59) முடிய 7 பாசுரங்களால்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌ அருளிய ரகஸ்யக் கிரந்தங்கள்‌ அனைத்திலும்‌ தலைசிறந்தது ஸ்ரீவசன பூஷணமே என்று நிரூபிக்கிறார்‌.-ஆக பதினெட்டு ரகஸ்யங்கவில்‌ உரையிடுவதன்‌ மூலமும்‌ மேற்கோள்‌ காட்டுவதின்‌ மூலமும்‌ மற்ற ஆசார்யர்களால்‌ கையாளப்பட்டிருப்பவை முறையே 1) முமுஷுப்படி 2) தத்வத்திரயம்‌,3] ஸ்ரீ வசன பூஷணம்‌, 4) ஸார ஸங்கரஹம்‌, 5) நவரத்ன மாலை,6) யாத்ருச்சிகப்படி, 7) பரந்தபடி, 8) ஸ்ரீயப்பதிப்படி, 9) தத்வ சேகரம்‌, 10) அர்ச்சசாதி ஆகியவை பிள்ளை லோகாச்சாரியராலேயே குறிப்பிடப்பட்டவை. பிரபந்ந பரித்ராணம்‌, தத்‌வ சேகரம்‌, அர்ச்சராதி பிள்ளைலோகம்‌ ஜீயர்‌ உரையிட்டது. அர்த்த பஞ்சகம்‌ அழகிய மணவாள நாயனாரால்‌ எடுத்தாளப்பட்டது. முன்னோர்களால்‌ கையாளப்பட்ட இந்த ரகஸ்யங்களுடன்‌, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌,நவவித ஸம்பந்தம்‌, தனித் த்வயம்‌, தனிப் பிரவணம்‌ என்னும்‌ நான்கையும்‌ சேர்த்து நெடுங்காலமாகப் பிள்ளை லோகாச்சாரியார்‌ அருளிய அஷ்டதச ரகஸ்யம்‌ என்று சொல்லப்பட்டு வருகிறது.-இவை தவிர இவர்‌ தனிச்சுலோகமும்‌ கத்ய வியாக்யானமும்‌ அருளியிருப்பதாக மாமுனிகள்‌ மேற்கோள்‌ காட்டுகிறார்‌. ஆனால்‌ அவை இப்போது கிடைக்கவில்லை.

அத்தகிரியருளாள ரனுமதியோன்‌ வாழியே.
ஐப்பசியில்‌ திருவோணத்தவதரித்தான்‌ வாழியே.
முக்திநெறி மறைத்தமிழால்‌ மொழிந்தருள்வோன்‌ வாழியே.
மூதரிய மணவாளன்‌ முன்புதித்தான்‌ வாழியே.
நித்தியம்‌ நம்பிள்ளை பதம்‌ நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே.
நீள்வசன பூடணத்தால்‌ நியமித்தான்‌ வாழியே.
உத்தமமாம்‌ முடும்பை நகருதித்த வள்ளல்‌ வாழியே.
உலகாரியன்‌ பதங்கள்‌ ஊழிதோறும்‌ வாழியே.

நம்‌பிள்ளை சீடர்களில்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவீதிப்பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ண என்னும்‌ வடக்‌குத்‌ திருவீதிப்பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌, ஈயுண்ணி மாதவப் பெருமாள்‌ முதலியோர்‌ முக்கியமானவர்கள்‌. இவர்களில்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌, ஊணும்‌ உறக்கமுமின்றியே பிள்ளை திருவடிகளிலே வழுவிலா அடிமை செய்து கொண்டு வாழ்ந்திருந்‌தார்‌. இங்கனம்‌ மிருக்கையில்‌ பிள்ளையிடம்‌ இவ்வாத்மாவுக்கு, ஸ்வரூப, உபாய, புருஷார்த்தங்கள்‌ எவையென்று அருளிச் செய்ய வேண்டுமென்று விண்ணப்பிக்க, பிள்ளை இச்சை ஸ்வரூபம்‌, இரக்கமே உபாயம்‌, இனிமை உபயம்‌ என்று அருளிச் செய்ய, அதை மறுத்து ஜீயர்‌, தேவரீர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, அடிமையாய்‌ இருக்கையே ஸ்வரூபம்‌, அவர்‌களது அபிமானமே உபாயம்‌ அவர்களது முக மலர்ச்சியே உபேயம்‌ என்று நினைத்திருப்பேன்‌ என்றார்‌. பின்பழகிய பெருமாள் ஜீயர்‌ திருநட்சத்திரம்‌ ஐப்பசி சதயம்‌. அவர்‌ அருளிய கிரந்தம்‌ குரு பரம்பராப்‌ பிரபாவம்‌ என்பது.

அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ இரண்டாவது குமாரர்‌. இவர்‌ பிறந்த நட்சத்திரம்‌ மார்கழி அவிட்டம்‌. இவரது ஆச்சாரியார்‌ இவரது தமையனார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌. இவர்‌ அருளிய கிரந்தம்‌, ஆசார்ய ஹிருதயம்‌, திருப்பாவை வியாக்யானம்‌, திருவந்‌தாதி; கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்‌, அருளிச் செயல்‌ ரகஸ்யம்‌ முதலியன. இவர்‌ சிஷ்யர்‌ கூர குலோத்தம தாஸர்‌.

பெரிய வாச்சான்பிள்ளை கிபி. 1167ல்‌ பிறந்தார்‌ அவதார ஸ்தலம்‌, சோழ நாட்டுச்‌
சங்கநல்லூர்‌, நட்சத்திரம்‌ ஸர்வஜித்‌ ஆவணி மாத கிருஷ்ணாஷ்டமி ரோஹிணி. குலம்‌ பூர்வசிகை. இவர்‌ தகப்பனார்‌ யாமுனா தேசிகர்‌. தாயார்‌ நாச்சியாரம்மன்‌. இவரது இதர திரு நாமங்கள்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை, அபயப் ப்ரத ராஜர்‌, ஸ்ரீமத்‌ கிருஷ்ணர்‌ முதலியன.
திருவாராதனம்‌: கிருஷ்ண விக்கிரஹம்‌. இருப்பிடம்‌: பெரியகோயில்‌. இவர்‌ செய்தருளின கிரந்தங்கள்‌ திருவாய்மொழி 24,000 படி.-மற்ற பிரபந்தங்களுக்கும்‌ அவர்‌ ஒருவரே வியாக்யானம்‌ செய்தவர்‌.-ஆகவே ஸ்ரீரங்கநாதனால்‌ அபயப் ப்ரதராஜா என்று அழைக்கப்பட்‌டார்‌. ஸகல பிரமாணதாத்பர்யம்‌, உபகார ரத்னம்‌ கத்ய த்ரய வியாக்‌யானம்‌, அபயப் பிரதான வியாக்யானம்‌, சரம ரஹஸ்யம்‌, அனுசந்தான ரஹஸ்யம்‌, நியமனப்படி, மாணிக்கமாலை, நவரத்ன மாலை, ஆளவந்தார்‌ ஸ்தோத்ர ரத்னம்‌, முதலியன. இவர்‌ 95 வருடம்‌ வாழ்ந்திருந்தார்‌. இவரது சிஷ்யர்கள்‌ பரகால தாஸர்‌, பின்‌ பழகிய
பெருமாள்‌ ஜீயர்‌, ஸ்ரீ ரங்காச்சாரியார்‌ முதலியோர்‌.

ஸ்ரீ ராமாயாண விசேஷார்த்தங்களை தனிச்சுலோக வியாக்யானமாகவும்‌ அருளி ஸ்ரீராமாயணப்பெருக்கர்‌ என்று புகழ்‌ பெற்றவர்‌.-கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார்‌, கலிகன்றிதாஸரான நம்பிள்‌ளையாகவும்‌ கிருஷ்ண பரமாத்மாவுக்குச்‌ சமானமாக (கிருஷ்ணஸுரி) எனும்‌ பெரியவாச்சான் பிள்ளையாகவும்‌ அவதரித்தனர்‌
என்பர்‌ பெரியோர்‌. நம்‌ பிள்ளைக்குப் பின்னர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ தர்ஸனம்‌ நிர்வகித்தவர்‌ இவரே. இவரது தீர்த்தம்‌ இறந்த காலம்‌ (கி பி.1262) எனக் கொள்ளலாம்‌.
நஞ்சீயர்‌ செய்த வியாக்கியைகள்‌ நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்குமில்லையே – தம்‌ சீரால்‌
வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும்‌ சில.
(உ.தே.மா. 47).
பெரியவாச்சான்‌ பிள்ளை பின்புள்ள வைக்கும்‌
தெரிய வியாக்கியைகள்‌ செய்வரால்‌ – அரிய
அருளிச்‌ செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச்‌ செயலாய்த்‌ தெரிந்து
(உ.தே.மா. 46)-என்று மாமுனிகள்‌ அருளிச் செய்தபடி இவராலேயே பின்புள்ளோர் அனைவரும்‌ அருளிச் செயலின்‌ பொருளை யறிந்து ஆசார்ய பதம்‌ நிர்வஹித்தார்கள்‌.

தன்மை சிங்கம்‌ ரோகினிநாள்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே.
தாரணியில்‌ சங்கநல்லூர்‌ தானுடையோன்‌ வாழியே.
பூன்மை தவிர்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே.
பூதூர்‌ எதிராசர்தாள்‌ புகழுமவன்‌ வாழியே.
மன்புகழ்சேர்‌ சடகோபர்‌ வளமுரைப்போன்‌ வாழியே.
மறைநாலின்‌ பொருள்தன்னைப்‌ பகுத்துரைத்தோன்‌ வாழியே.
அன்புடன்‌ உலகாரியர்‌ தம்‌ அடியிணையோன்‌ வாழியே.
அபயப்ரதராசர்‌ தாள்‌ அனவரதம்‌ வாழியே.

வாதிகேஸரி அழகிய மணவாளப்‌ பெருமான்‌ ஜீயர்‌-அவதாரஸ்தலம்‌ தென்‌ தேசத்தில்‌ பிரமதேசம்‌ மன்னார்‌ கோவில்‌. இவரது திருநட்சத்திரம்‌ ஆனிமாதத்து ஸ்வாதியாகும்‌.-பஞ்ச ஸமஸ்காரங்களும்‌, நித்யானுசந்தானங்களும்‌ அருளிய ஆச்சாரியார்‌ பெரியவாச்சான் பிள்ளை. திருவாய்மொழி முதலிய பிரபந்தங்களும்‌ ஈடு முதலான வியாக்யானங்களும்‌ ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும்‌ தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும்‌ அருளியவர்‌ நாயனாராச்‌சான்‌ பிள்ளை. திருவாராதனம்‌. அழகிய சிங்கர்‌. இருப்பிடம்‌-கோயில்‌. சிஷ்யர்‌ திருமாலை யாண்டான்‌. பின்‌ சென்ற வில்லி ஜீயர்‌-
அருளிச்‌ செயல்கள்‌. திருவிருத்தத்துக்கு உரை (பாவனத்வ பிரபோதகை)-திருவாய்மொழிக்கு உரை 18,000 படி. இருபத்தி நாலாயிரப்‌ பிரமாணத் திரட்டு, கீதா சாரம்‌, சதுஸ்லோகி , தமிழ்க்கவி-முதலியன இவரது திருநாமங்கள்‌; வரதராஜர்‌ சுந்தர ஜாமாத்ரு முனி முதலியன.

நாயனாராச்சான்‌ பிள்ளை-பெரியவாச்சான்‌ பள்ளியின்‌ தத்து புத்திரர்‌. இவரது அவதாரஸ்தலம்‌ சங்க நல்லூர்‌.-செய்தருளிய கிரந்தங்கள்‌ ஜ்ஞாநார்ணவம்‌,
தத்வத்ரய விவரணம்‌ சரமோபாய நிர்ணயம்‌, முக்த போகாவளி-முதலியன
.

ஓராண் வழி ஆசார்யர்‌ வரிசையில்‌ பிள்ளை லோகாசாரியரை யடுத்து வருபவர்‌ கூர குலோத்தம தாசர்‌. இவரது திருவவதார ஸ்தலம்‌-கோயில்‌. இருப்பிடம்‌ கோயில்‌. குலம்‌ பூர்வசிகை. திருநக்ஷ்த்திரம்‌-ஐப்பசி மாதம்‌ திருவாதிரை. பஞ்ச ஸம்ஸ்காரங்களும்‌ நித்யானுசந்‌தானங்களும்‌ சாதித் தருளியவர்‌ ஆசார்யார்‌ வடக்குத்‌ திருவீதிப்‌
பிள்ளை. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும்‌ ஈடு முதலான
வியாக்யானங்களும்‌ ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும்‌ சாதித்தருளியவர்‌
ஆசார்யார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌, தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும்‌, ஸகல ரஹஸ்யார்த்தங்களும்‌ அருளியவர்‌ அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாராசார்யர்‌. திருவாராதனம்‌ ஸ்ரீரங்கராஜர்‌,
சிஷ்யர்கள்‌, திருவாய்மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள்‌ (பெரிய ஜீயர்‌) முதலானவர்கள்‌.

சந்ததமுமாழ்வார்கள்‌ தமிழ்‌ வளர்த்தோன்‌ வாழியே.
தாரணியிற்‌ சிறுநல்லூர்‌ தானுடையோன்‌ வாழியே.
எந்தை உலகாரியனை யிறைஞ்சுமவன்‌ வாழியே.
இலகு துலா ஆதிரையிலிங்குதித்தான்‌ வாழியே.
இந்த வுலகத்தோர்க்கிதமுரைத்தோன்‌ வாழியே.
எழில்‌ வசனபூடணத்துக்கினிமை செய்தான்‌ வாழியே.
குந்திநகர்‌ சிந்தை கொண்ட செல்வனார்‌ வாழியே.
கூரகுலேத்தமதாசர்‌ குரைகழல்கள்‌ வாழியே.

திருவாய்மொழிப்பிள்ளை அவதாரஸ்தலம்‌ பாண்டிய நாட்டிலுள்ள குந்திகை .
இவரது நட்சத்திரம்‌ விபவ வருஷம்‌ வைகாசி விசாகம்‌. இவரது திருநாமங்கள்‌ திருமலை யாழ்வார்‌, திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீசைலேசர்‌ முதலியன. பஞ்ச ஸம்ஸ்காரங்களும்‌ பிரபந்தங்களும்‌ அருளியர்‌ இவரது ஆச்சாரியார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌. ஈடு முதலான பகவத் விஷயங்களை அருளியவர்‌, நாலூராச்சான்‌ பிள்ளை, கூரகுலோத்தமதாஸர்‌, விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோர்‌. இவர்‌ அருளிய வியாக்யானம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி.
இருப்பிடம்‌ திருநகரி. இவர்‌ செய்த கைங்கர்யம்‌ ஆழ்வார்‌ திருநகரி கோயில்‌ ஜீரணோத்தாரணம்‌ (புதுப்பிக்கப்படுதல்‌) இவர்‌ சிஷ்யர்‌கள்‌, பெரிய ஜீயர்‌ (மணவாளமாமுனி) எம்பெருமானார்‌ ஜீயர்‌, சடகோப ஜீயர்‌ முதலானோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்‌தார்‌..

வையக மெண்சடகோபன்‌ மறைவளர்த்தோன்‌ வாழியே.
வைகாசி விசாகத்தில்‌ வந்துதித்தான்‌ வாழியே.
ஐயணருண்‌ மாரிகலை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே.
அழகாரு மெதிராசரடி பணிவோன்‌ வாழியே.
துய்யவுலகாரியன்‌ தன்‌ துணைப்பதத்தோன்‌ வாழியே.
தொல்குருகா புரியதனைத்‌ துலக்கினான்‌ வாழியே.
தெய்வநகர்‌ குந்திதன்னில்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள்‌ வாழியே.

மணவாள மாமுனிகள்‌ (பெரிய ஜீயர்‌)அவதாரஸ்தலம்‌ பாண்டிநாட்டில்‌ உள்ள கடாரம்‌ என்ற ஊர்‌. இவரது திருநட்சத்திரம்‌ ஐப்பசியில்‌ திருமூலம்‌. இவரது திருஅவதாரத்தை எம்பெருமானாரது இரண்டாவது அவதாரம்‌ என்பர்‌. இவரது திருத்தகப்பனார்‌ பிள்ளை லோகாச்சாரியாரது சிஷ்யரான திகழக்கிடந்தான்‌. திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணன்‌. தாயார்‌ ஸ்ரீ ரங்கநாச்சியார்‌. திருத்தம்‌பியார்‌ திருமலையாழ்‌வார்‌. இருப்பிடம்‌ கோயில்‌. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும்‌ ஈடு முதலான வியாக்யானங்களும்‌ அருளியவர்‌ திருவாய்மொழிப்பிள்ளை. ஸ்ரீ பாஷ்யாதி. கிரந்தங்களை அருளியவர்‌ கிடாம்பி திருமலை ஐயங்கார்‌, கூரகுலோத்தமதாஸர்‌ முதலியோர்‌. இவரது திருவாராதனப்‌ பெருமாள்‌ ஸ்ரீ ரங்கராஜர்‌. இவரது திரு நாமங்கள்‌-பெரிய ஜீயர்‌, மணவாள மாமுனி, இராமானுசன்‌ பொன்னடி,யதீந்திர பிரவணர்‌, வரயோகி, வரவரமுனி போன்று பதினொரு நாமங்கள்‌. இவர்‌ அருளிய கிரந்தங்கள்‌ முறையே தத்வத்ரயம்‌,ரகஸ்யத்திரயம்‌, ஸ்ரீவசன பூஷணம்‌, ஆசார்ய ஹிருதயம்‌ ஞானசாரம்‌, பிரமேயசாரம்‌, பெரியாழ்வார்‌ திருமொழி, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய எட்டுப்‌ பிரபந்தங்களுக்கு வியாக்யானமும்‌, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, (ஆறாயிரம்‌) தத்வத் திரயம்‌ பிரமாணத்‌ திரட்டு, ஸ்ரீவசன பூஷண பிரமாணத் திரட்டு, ஆர்த்தி பிரபந்தம் – யதிராஜவிம்ஸதி, உபதேசரத்னமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி திருவாராதன கிரமம்‌ முதலான பிரபந்தங்கள்‌ முதலியன.எம்பெருமானாருடைய புனரவதாரமான பெரிய ஜீயர்‌,பூப் பிரதட்சணம்‌ பண்ணி அனேக ஸ்தலங்களில்‌ உள்ள கோயில்களுக்கு ஜீரணோத்தாரணம்‌ பண்ணி யருளினார்‌. திருநகரியில்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்குத்‌ தன்னுடைய நிஜஸ்வரூபமான ஸேஷாவதாரத்தைக்‌ காட்டினார்‌. பரமத நிரஸன சுப மத ஸ்தாபனம்‌ பண்ணினார்‌. (பிற மதங்களைக்‌ கண்டித்து வைஷ்ணவக்‌ கொள்கைகளைப்‌ பரப்பினார்‌) ஸர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு மோக்ஷம்‌ சாதித்‌தருளினார்‌. வடமதுரையில்‌ ஜீரணோத்தாரணம்‌ பண்ணினார்‌. நம்‌
பெருமாளுக்கு ஒரு வருஷமாக திருவாய்மொழி ஈடு விண்ணப்பஞ்‌ செய்கையாலே பெரிய ஜீயர்‌ என்று நம்‌ பெருமாள்‌ திருநாமம்‌ சாத்தியருளினார்‌.ஆகவே இவர்‌ எல்லோருக்கும்‌ உத்தேஸ்யர்‌ (தலைமையானவர்‌) இவர்‌ திரு மேனி ஸ்வேதவர்ணம்‌, (வெள்ளை) ஆகையால்‌ வெள்ளை ஜியர்‌ என்ற திருநாமமுண்டு. இவரது திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்‌ வானமாமலை ஜீயர்‌, பத்தங்கி பரவஸ்நு, பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, பிரதிவாதி பயங்கர மண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை,அப்பிள்ளான்‌. இவரெல்லாரும்‌ அஷ்ட திக்கஜங்கள்‌, சேனை முதலியாண்டான்‌ நாயனார்‌, நாலூர்‌ சிற்றாத்தான்‌, கந்தாடை போரேற்று நாயன்‌ போன்றவர்கள்‌ நவரத்னங்கள்‌. திருப்பாணாழ்‌வார்‌ தாஸர்‌, வடுகநம்பி ஜீயர்‌, நாயனார்‌ தொடக்கமானவர்கள்‌-சிஷ்யர்கள்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌ உடையவருக்கு முதலியாண்டானைப்போல இவருக்கு மெய்க்காப்பாளர்‌. எறும்பியப்பா வடுகநம்பியைப் போல தேவுமற்றறியாத அத்யந்த அபிமானி. பிரதிவாதி பயங்கர மண்ணா கூரத்தாழ்வானைப்போல உசாத்‌ துணையா யிருப்பார்‌. அப்பிள்ளார்‌ மடத்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ நடத்திக் கொண்டு போவார்‌. வானமாலை ஜீயர்‌, ஆஸ்ரயித்த நாளிலிருந்து பிரியாது ஆட்செய்திருப்பார்‌. பட்டர்‌ ஜீயர்‌ எம்பாரைப்‌ போல திருவடியாக இருப்பார்‌. ஜீயர் நாயனார்‌ திருக்குருகைப்பிரான்‌ பிள்ளானைப் போல ஞானகுமாரராய்‌ இருப்பர்‌. இவர்கள்‌ எல்லோருக்கும்‌ ஸ்வரூபோபாய புருஷார்த்தங்கள்‌ சாதித்துக்‌ கொண்டு பெரிய ஜீயர்‌ நம்பெருமாள்‌ கோயிலில்‌ 72 ஆண்டுகள்‌ வாழ்ந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. என்ற விபரங்கள்‌ கோயில்‌ கந்தாடை நாயன்‌ அருளிய பெரிய திருமுடி அடைவிலிருந்து தெரிந்து கொள்கிறோம்‌. மணவாள மாமுனிகளைப்‌ போலவே ராமானுஜ தர்சனத்தின்‌ சரணாகதி தத்துவத்தை எங்கும்‌ பரவச்‌ செய்தவர்‌ அகோபில மட ஸ்தாபகரான ஸ்ரீ சடகோப யதீந்தர ஜீயர்‌

இனி மணவாள மாமுனிகள்‌ சீடர்களான, வானமாமலைஜீயர்‌, பட்டர்‌ பிரான்ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌ எறும்‌பயப்பா, அப்பிள்ளை, ராமானுஜரென்னும்‌ அப்பிள்ளான்‌ கோயில்‌ கந்தாடையண்ணன்‌, கந்தாடை போரேற்றுநாயனார்‌, ஸ்ரீசைல நரசிம்மாச்சாரியார்‌, மணவாள மாமுனி தாமே விரும்பி மறுபடி அவதரித்தாரோ எனும்‌ படியான அவரது பேரர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, ஸ்ரீநிவாசாச்சாரியார்‌ என்ற கோயில்‌ கந்தாடை யப்பன்‌,ஆத்தான்‌, ராமானுஜம்‌ பிள்ளை, அழகிய மணவாள சீயர்‌, கந்‌தாடை அண்ணனின்‌ பிள்ளையான கந்தாடை நாயன்‌ போன்று பலர்‌ உள்ளனர்‌ என்ற விவரங்கள்‌ கோயில்‌ கந்தாடை அண்ணன்‌ அருளிய பெரிய திருமுடி அடைவு பிரபந்தத்திலிருந்து தெரிந்து
கொள்கிறோம்‌.

இப்புவியில்‌ அரங்கேசர்க்கீடளித்தான்‌ வாழியே.
எழில்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை இணையடியோன்‌ வாழியே.
ஐப்பசியில்‌ திருமூலத்தவதரித்தான்‌ வாழியே.
அரவரசப்‌ பெருஞ்சோதி அனந்தனென்றும்‌ வாழியே.
எப்புவியும்‌ ஸ்ரீசைல மேத்தவந்தான்‌ வாழியே.
ஒராரு மெதிராசரென வுதித்தான்‌ வாழியே.
முப்புரிநூல்‌ மணிவடமும்‌ முக்கோல்‌ தரித்தான்‌ வாழியே.
மூதரிய மணவாள மாமனிகள்‌ வாழியே.

செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுவான்‌
சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுநாள்‌
மந்தமதிப்‌வி மானிடர்‌ தங்களை வானிலுயர்ந்திடுநாள்‌
மாசறு ஞானியர்‌ சேரெதிராசர்தம்வாழ்வு முளைத்திடுநாள்‌
கந்தமலர்ப்‌ பொழில்சூழ்‌ குருகாதிபன்‌ கலைகள்‌ விளங்கிடுநாள்‌
காரமர்‌ -மேனியரங்கநகர்க்கிறைகண்கள்‌ களித்திடுதாள்‌
அந்தமில்சீர்‌ மணவாள முனிப்பரனவதாரம்‌ செய்திடுநாள்‌
அழகுதிகழ்ந்திடுமைப்பசியில்‌ திருமூலமதெனுநாளே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம்-ஸ்ரீ எம்பெருமானார் வரையிலும்-

November 1, 2025
வீர நாராயணபுரத்திலே (தற்பொழுது காட்டு மன்னார்கோவில்‌) சுவாமி
மன்னனார்‌ திருவடிகளிலே சகலவித கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டு வாழ்ந்து வருகிற ஈஸ்வர பட்டாழ்வாரும்‌ அவரது குமாரர்‌ ஸ்ரீ ரங்கநாதமுனிகளும்‌ அவர்‌ குமாரர்‌ ஈஸ்வர முனிகளும்‌, மன்னனனாரிடம்‌ அருளாசி பெற்று, வடக்கே பத்ரிஹாஸ்ரமத்திலி௫ந்து பெருமாள்‌ அவதரித்து விளையாடியருளின வடமதுரை, திருவாய்ப்பாடி, பிருந்தாவனம்‌, யமுனாதீரம்‌, கோவர்த்தனகரி, அயோத்தி, சாளக்கிராமம்‌ முதலான வடதிசையில்‌ உள்ள திவ்ய தேசங்களை யெல்லாம்‌ சேவிக்க எண்ணிக்‌ குடும்பத்தோடு புறப்‌பட்டுப்‌ போய்ச்‌ சேவித்து வருகையில்‌, யமுனா தீரத்திலுள்ள ஸ்ரீகோவர்த்தனபுரம்‌ என்ற நகரின்‌ அழகிலே ஈடுபட்டு அங்கு நித்தய வாசம்‌ பண்ண வேண்டும்‌ என்று தீர்மானித்து வாழ்ந்து வரும்‌ காலத்தில்‌ சுவாமி மன்னனார்‌ நாதமுனிகள்‌ கனவில்‌ தோன்றி நம்முடைய வீரநாராயணபுரத்திற்கே வாரும்‌ என்று கூறியதால்‌,அங்கிருந்து புறப்பட்டு வாரணாசி, புருஷோத்தமம்‌ (பூரி ஜகந்தாத்‌) சிருங்கேரி, அகோபிலமடம்‌ வழியேத்‌ திருவேங்கடம்‌ வந்து,அங்கேயும்‌ நித்ய வாசம்‌ பண்ண மன்னனார்‌ இசையாததால்‌, அங்கிருந்தும்‌ புறப்பட்டுக்‌ காஞ்சி திருக்கோவலூர்‌, திருவரங்கம்‌, திருக்குடந்தைப்‌ பெருமான்களையும்‌ சேவித்து மீண்டும்‌ வீரநாராயணபுரத்‌துக்கே வந்து, மன்னாருக்குத்‌ திருநந்தவனம்‌ அமைத்தும்‌ புஷ்ப கைங்கர்யமும்‌ ஏனைய கைங்கர்யங்களும்‌ செய்து கொண்டு
வாழ்ந்து வருவாராயினர்‌.
இவ்வாறிருக்கையில்‌ ஒரு நாள்‌ சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ மன்னனாரைச்‌ சேவித்து அவர்‌ திருமுன்பு ஆரா அமுதே" என்றுதொடங்கும்‌ திருவாய்மொழிப்‌ பாடலை அனுசந்திக்க அதைக்‌கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள்‌ அவர்களிடம்‌ உங்களுக்கு இப்பிரபந்‌தம்‌ முற்றும்‌ தெரியுமா என்று கேட்டபொழுது அவர்களும்‌ எங்களுக்கு இப்பத்துப்பாட்டு மட்டுமே தெரியும்‌ என்று சொல்லிவிடவே, நாதமுனிகள்‌ சடகோபன்‌ அவதரித்துள்ள திருக்குருகூர்‌ திருநகரிக்குச்சென்று அங்கு எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற
பிரான்‌, சடகோபன்‌, முதலானோரைச்‌ சேவித்து நின்றார்‌. அங்‌குள்ள மதுரகவியாழ்வாரது சிஷ்யரான பராங்குஸதாஸரைச்‌ சேவித்து அவரிடம்‌ இவ்விடம்‌ திருவாய்மொழி ஒதினவர்கள்‌ உண்டா என்று கேட்க, அவரும்‌ திருவாய்‌ மொழியும்‌ ஏனையப்‌பிரபந்தங்களும்‌, வெகு காலத்துக்கு முன்பே அனுசந்திப்பார்‌ இல்‌லாமல்‌ மறைந்து போயின. என்னுடைய ஆச்சாரியார்‌ அடியேனுக்கு அருளிய 'கண்ணினுண்சிறுதாம்பு' பதிகம்‌ மட்டுமே உள்ளது என்றார்‌. அதை அவரிடம்‌ கற்று, திருப்புளியாழ்வாரடியில்‌, ஆழ்‌வார்‌ திருமுன்பு பன்னீராயிரம்‌ உரு 'கண்ணினுண் சிறுத்தாம்பு" பாசுரத்தை நியமத்தோடு அனுசந்தித்தார்‌.
நம்மாழ்வார் அவருக்கு ஞானக் கண்‌ அருளித்‌ திவ்யப் பிரபந்தங்களையும்‌,, ரஹஸ்யத்திரயத்‌தையும்‌, தர்ஸன தாத்பர்யங்களையும்‌, அஷ்டாங்க யோக ரகஸ்யத்‌தையும்‌ அருளிச்செய்தார்‌. 'மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌ நிற்கப்பாடி என்‌ நெஞ்சுள்‌ நிறுத்தினான்‌! என்கிறபடி இவர்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌, நம்மாழ்வாரையும்‌ அனுபவித்து வரும்பொழுது, மன்னனார்‌ மீண்டும்‌ அவர்‌ கனவில்‌ தோன்றித் தான்‌
பிரபந்தத்தைக்‌ கேட்க விரும்புவதாகவும்‌, அதனால்‌ மீண்டும்‌ வீரநாராயண புரத்துக்கே வாரும்‌ என்று கூறிவிடவே, அவரும்‌ ஆழ்‌வார்‌, ஆதிப்பிரான்‌ அனுமதி பெற்று, வீரநாராயணபுரம்‌ வந்து மன்னனார்‌ திருமுன்பு ஓதினார்‌. அதன்‌ அழகிலும்‌ சுவையிலும்‌ ஈடுபட்டு மன்னனார்‌ இத்தகைய உயர்ந்த செல்வம்‌ மீண்டும்‌ மறைந்துவிடக்கூடாது. நீர்‌ இவற்றை இயலும்‌ இசையுமாக்கும்‌ என்று அர்ச்சகர்‌ மூலமாகக்‌ கட்டளையிட்டு நியமித்தார்‌. நாதமுனிகளும்‌ தன்‌ மருமக்களான கீழையகத்தாழ்வான்‌ (கிருஷ்ணமாச்சார்‌யார்‌] மேலையகத்தாழ்வான்‌ (வரதாச்சார்யார்‌] இவர்களை அழைத்து, அவர்களின்‌ மூலமாக இன்கவிபாடும்‌ பரமகவிகளாக, திவ்யகானத்திலேயமைத்து, இயலும்‌ இசையுமாக பாடுவித்தருள அது உலகத்தில்‌ மீண்டும்‌ சிறப்புற்று எல்லோராலும்‌ பாடப்பட்டுப்‌
பரவி வந்தது.கோயில்களில்‌ உற்சவ காலங்களில்‌ இசையுடன்‌ அபிநயித்துப்‌ பாடவைத்தனர்‌. இவ்வாறு ஆரம்பித்த அரையர்சேவை இன்றும்‌ ஸ்ரீரங்கம்‌, ஆழ்வார்‌ திருநகரிபோன்ற முக்கிய வைணவ ஸ்தலங்களில்‌ மட்டும்‌ நடைபெறுகிறது. வேதவியாசர்‌ அருளிய சூத்திரத்தின்‌ விரிவாக்கமாக அமைந்தது நாதமுனிகள்‌ அருளிய யோக ரஹஸ்யங்‌கள்‌ என்பர்‌. தியான யோகமே இறைவனையும்‌ ஜீவனையும்‌ இணைக்கின்ற பாலமாகும்‌. இந்த உணர்வு எல்லோராலும்‌ பெற முடியாது. மனதில்‌ தானாகவே உருவாக வேண்டும்‌. இந்த உள்‌ளொளியே உலகுக்கு நித்தியப்‌ பிரகாசாதிபரன்‌ எனச்‌ சுயம் பிரகாசியாக உள்ளது.-இவருடைய முக்கிய சிஷ்யர்கள்‌ உய்யக்கொண்டாரும்‌ (புண்‌டரீகாக்ஷர்‌) குருகைக்‌ காவலப்பனுமாவார்கள்‌. அவர்கள்‌ மூலமாகத் திவ்யப்பிரபந்தத்தையும்‌ யோக ரகஸ்யத்தையும்‌ பிரசாரம்‌ செய்‌வித்து, இனிப்பிறக்க இருக்கும்‌ தன்னுடைய பேரனான யமுனைத்‌துறைவருக்கு இவற்றை அளிக்கும்படி நியமித்து விட்டு குருகைக்‌ காவலப்பன்‌ கோயிலிலேயே பரம பதித்தருளினார்‌. இவர்‌ சுமார்‌ 102 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌. இவர்‌ கி.பி, 822ல்‌ ஆனி மாதம்‌ ஏழாம்‌தேதி பிறந்தார்‌. இவர்‌ பிறந்த இடம்‌ சோழ நாட்டில்‌ வீரநாராயணபுரம்‌, பிறந்த குலம்‌ சொட்டைக்குலம்‌. இவருக்குத்‌ தகப்பனார்‌ இட்ட பெயர்‌ ரெங்கனாதன்‌ என்பது. இவர்‌ யோகாப்யாசம்‌ கைவந்தவராகையாலே இவரை ரெங்கநாதமுனிகள்‌ என்றனர்‌.
அப்பெயரைச்‌ சுருக்கி நாதமுனிகள்‌ என்றும்‌ அழைத்தனர்‌. ஆளவந்தார்‌ என்ற யமுனைத்துறைவர்‌ அருளிய ஸ்தோத்திர ரத்னத்தின்‌ கடைசி ஸ்லோகத்தில்‌ 'என்னுடைய நடத்தையை நினைக்காமல்‌, உன்னுடைய திருவடித்தாமரைகளில்‌ இயற்கையாக
இருக்கும்‌ மேலான அன்பிற்கு எல்லை நிலமாயிருப்பவரும்‌,ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவரும்‌, எனக்குப் பாட்டனாருமாகிய நாதமுனிகள்‌ கடாக்ஷித்து எனக்கு அருள்‌ புரிய வேண்டும்‌" என்கிறார்‌. நாதமுனிகள்‌ வீட்டில்‌ இல்லாதபோது வில்லேந்திய இருவீரரும்‌, ஒரு பெண்ணும்‌ ஒரு குரங்கும்‌ அவரைத் தேடி வந்துவிட்டுப்‌ போனதாக வீட்டிலுள்ளவர்கள்‌ சொன்னதாகவும்‌, அவ்வாறு வந்தவர்‌ ஸீதா ராமலட்சுமண அனுமானாகத்தான்‌ இருக்க வேண்டும்‌ என எண்ணி அவர்களைத்‌ தொடர்ந்து அவர்கள்‌ போன இடமான கங்கைகொண்ட சோழபுரம்‌ சென்று அங்கேயே தேகப்பிராப்தி அடைந்தார்‌ என்பதும்‌ கர்ண பரம்பரைச்செய்தி. நாதமுனி அதிக நாட்கள்‌ வாழ்ந்தால் கூட அவர்‌ வாழ்நாளிலேயே ஒரே மகனை இழக்கும்‌ அவல நிலை ஏற்பட்டதாகச்‌ சொல்லப்படுகிறது. அவரது மகன்‌ ஈஸ்வர முனியின்‌ மகனான யமுனாச்சாரியார்‌ இளவயதிலேயே மிகக்‌ கீர்த்தி வாய்ந்தவராக இருந்தார்‌.

ஆரப்பொருள்‌ தென்குருகைப்பிரான்‌, அமுதத் திருவாய்‌ ஈரத்தமிழின்‌ இசையுணர்ந்தோர்கட்டு, இனியவர்தம்‌
சீரைப்‌ பயின்றுய்யும்‌ சீலங்கொள்‌ நாதமுனியை நெஞ்சால்‌
வாரிப் பருகும்‌ இராமானுசன்‌ என்தன்‌ மாநிதியே
(இரநூந்‌. 20)
தெருளுற்ற ஆழ்வார்கள்‌ சீர்மை அறிவாரார்‌?
அருளிச் செயலை அறிவாரார்‌? — அருள்‌ பெற்ற
நாதமுனி முதலான நம்‌ தேசிகரை யல்லால்‌
பேதை மனமே! உண்டோ பேசு
.(உபதே. 36)

நாதமுனிகள்‌ அருளிய நம்மாழ்வார்‌, பெரியாழ்வார்‌ திருவாய்மொழி, மதுரகவியாழ்வார்‌ இவர்களைப் பற்றி யருளிய தனியன்களில்‌ மதுரகவி பற்றிய தமிழ்த் தனியன்‌ வருமாறு.
வேறொன்றும்‌ நானறியேன்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த
மாறன்‌ சடகோபன்‌ வண்குருகூர்‌ ஏறு – எங்கள்‌
வாழ்வாமென்றேத்தும்‌ மதுரகவியார்‌ எம்மை
ஆழ்வார்‌ அவரே அரண்‌
–என்பதாகும்‌. இவர்‌ யோகத்தில்‌ இருக்கும் பொழுதே குருகைக்‌
காவலப்பன்‌ கோயிலில்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனார்‌ திருவடிகளில்‌ சேர்ந்தார்‌ என்று கூறப்படுகிறது.

ஆனிதனில்‌ அனுடத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆளவந்தார்க்குபதேசம்‌ அருளி வைத்தான்‌ வாழியே.
பானு தெற்கில்‌ கண்டவன்‌ சொல்‌ பலவுரைத்தான்‌ வாழியே
பராங்குசனார்‌ சொற்பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌ வாழியே
கானமுறத் தாளத்தில்‌ கண்டுறைத்தான்‌ வாழியே
கருணையினால்‌ உபதேசக்கதியளித்தான்‌ வாழியே
நானிலத்தில்‌ குருவரையை நாட்டினான்‌ வாழியே
நலந்திகழும்‌ நாதமுனி நற்பதங்கள்‌ வாழியே

நாதமுனிகளின்‌ பிரதான சீடரான உய்யக் கொண்டார்‌, என்ற புண்டரீகாக்ஷர்‌, நாதமுனிகள்‌ அவதரித்து 63 வருடங்களுக்குப் பின்‌னர்‌ கி.பி. 886-ல்‌ சித்திரை மாதம்‌ கார்த்திகை நட்சத்திரத்தில்‌ திருவெள்ளறை என்னும்‌ திருத்தலத்தில்‌ ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குலத்தில்‌ பிறந்தவர்‌, ஆச்சார்ய பரம்பரையில்‌ நாதமுனிகளாகிய மலையிலிருந்து விழுகிற அருவியாக அமைந்தவர்‌ உய்யக்கொண்‌டார்‌. ஆதி காலத்தில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ காடாக இருந்த காலத்திலே ஸ்ரீராமபிரானுக்கு முன்னோனாகிய சிபிச்சக்கவர்த்தியால்‌, மத்தியப் பிரதேசத்திலிருந்து 2700 ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குடும்பங்கள்‌ திருவெள்ளறையில்‌ எழுந்தருளியிருக்கும்‌ புண்டரீகாக்ஷப்‌ பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதற்காகக்‌ கொண்டு வரப்பட்டனர்‌. இவ்வாறு ஆதி காலத்திலேயே ஏற்பட்ட புனிதத்தல மாகையால்‌ இதை இன்றும்‌ மக்கள்‌ ஆதித் திருவெள்ளறை என்று அழைக்கின்றனர்‌. ஆதிகாலத்திலேயே சோழ தேசத்திற்கு வந்தவர்களாதலால்‌ சோழியர்கள்‌ என்றழைக்கப்பட்டனர்‌. இத்தகைய ஸ்ரீ
வைஷ்ணவப் பிரமாண குலத்தில்‌ பிறந்தவர்‌ உய்யக் கொண்டார்‌. ஞான ஜன்மமே தேக ஜன்மத்தை விடச்‌ சிறந்ததாகக்‌ கருதப்பட்டு வந்த காலமாதலால்‌ உய்யக்கொண்டாரது ஆச்சார்ய, சிஷ்யர்களைப்‌ பற்றிக்‌ குறிக்கப்பட்டது போல, அவரது பெற்றோர்களைப்‌ பற்றியும்‌ மக்களைப்‌ பற்றியும்‌ விவரங்கள்‌ குறிக்கப்படவில்லை. சிறந்த வைணவ பக்தர்களுக்குக்‌ குமாரராக அவதரித்தவர்‌ என்றும்‌ பெற்‌றோர்களால்‌ முறைப்படி புண்டரீகாக்ஷன்‌ என்று திருநாமம்‌ சூட்டப்‌பட்டு உரிய காலங்களில்‌ அன்னப் பிரசானம்‌ செளனம்‌, உபநயனம்‌ முதலான சடங்குகளெல்லாம்‌ செய்யப்பட்டு தக்க ஆச்சாரியனை எதிர்நோக்கிக்‌ காத்திருந்தவர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
இந்நிலையில்‌ அவரை நாதமுனிகளிடத்தில்‌ சீடராய்‌ இருந்து பாடங்கேட்குமாறு அனுப்பிவைத்தனர்‌. அந்நாளிலிருந்து நாதமுனிகளையல்லாது அறியாதவராய்‌, குருகுலவாசம்‌ செய்து வந்தார்‌.-நாதமுனிகள்‌ சிஷ்யர்களில்‌ முக்கியமானவர்கள்‌ உய்யக்கொண்டாரும்‌, குருகைக்‌ காவலப்பனுமேயாவார்கள்‌. இதில்‌ குருகைக்‌ காவலப்பன்‌, நாதமுனிகள்‌ அருகில்‌, எப்போதும்‌ யோகத்தில்‌ எழந்தருளியிருக்கும்‌ இடத்திற்கு அருகிலேயே யோகத்திலே எழுந்‌தருளியிருந்தார்‌. நாதமுனிகளிடம்‌ இரு நிதிகள்‌ இருந்தன. பகவத்‌ பிராப்தக்கு (முக்திக்கு) உறுப்பான பக்தி யோகம்‌ ஒன்று. பகவத்‌
குண ஸ்வரூப விபூதிகளைத்‌ தெளியப் பேசும்‌ நாலாயிரம்‌ பாசுரங்களடங்கய திவ்யப்பிரபந்தம்‌ மற்றொன்று. முதல்‌ நிதியினிலால்‌ சேதனன்‌ ஒருவன்தான்‌ முக்தி யடைய முடியும்‌. இரண்டாவது நிதியினாலே உலகத்தையே உய்விக்க முடியும்‌. இவற்றுள்‌ எது வேண்டும்‌ என்று குருகைக்‌ காவல் அப்பனை வினவினார்‌ நாதமுனிகள்‌.-நான்‌ பக்தி யோகத்தைப் பெற்று உய்ந்து போகிறேன்‌ என்றார்‌ அவர்‌. அதன்‌ படியே உபதேசம்‌ பெற்று உஜ்ஜீவனமடைந்தார்‌. நாதமுனிகள்‌ புண்டரீகாஷரையும்‌ வினவ, அவர்‌ ‘பிணங் கெடக்க மணம்‌ புணருவாருண்டோ? உலகமே ஆத்ம நாசமடைந்து, பிணக்காடாயிருக்கும் பொழுது அடியேன்‌ ஒருவன்‌ பெருமானோடு ஆத்ம விவாஹம்‌ செய்து கொண்டு மோட்சமடைவது சரியாகுமோ, அடியேன்‌ எப்படியானாலும்‌ பரவாயில்லை. உலகம்‌ உய்யும்‌ வகையாகத்‌ திவ்யப் பிரபந்தங்களை உபதேஸிப்பீர்‌’ என்றார்‌.

இதைக் கேட்ட நாதமுனிகள்‌ அவரை வாரி அணைத்துப்‌ “புண்‌டரீகாக்ஷ்ரே! நீரே உலகையும்‌, உலகை உடையவனான நாராயணனையும்‌, அவனைச்‌ சொல்லும்‌ அருளிச் செயல்களையும்‌ அதைப்‌ பெற்ற என்னையும்‌ உய்யக் கொண்டவர்‌. உம்மாலே தான்‌ நான்‌அரும்பாடு பட்டுப் பெற்ற அத்தமிழ்‌ மறைகள்‌ உலகெங்கும்‌ பரவி அனைவரையும்‌ உய்விக்கப்‌ போகின்றன. இன்று முதல்‌ நீர்‌ ‘உய்யக் கொண்டார்‌’ என்ற திருநாமத்தாலேயே விளங்கக்‌ கடவீர்‌’
என்று அருளிச்‌ செய்து திவ்யப் பிரபந்தங்களை உய்யக்கொண்டாருக்கு உபதேசித்தருளினார்‌, உய்யக்கொண்டாரது இத்தகைய சுயநலம்‌ பேணாத பரந்த மனப்பான்மையினால்‌ இன்று நாம்‌ அருளிச்‌ செயல்களாலேயே உய்ந்து போகிறோம்‌. இதனாலேயே இவர்‌ ஸ்ரீ வைஷ்ணவ சமூகம்‌ முழவதற்கும்‌ பிரேமாச்சாரியராய்‌, நாதமுனிகளுக்கு பின்‌ அனுசந்திக்கப்படுகிறார்‌.
நாதமுனிகள்‌ யோக திசையில்‌ நம்மாழ்வாரிடம்‌ திருவாய்‌மொழி உபதேசம்‌ பெறும் பொழுது ‘பொலிக பொலிக: என்னும்‌ திருவாய்மொழி வந்தவுடன்‌ கலியும்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌:என்று நான்‌ சொன்னதை மெய்யாக்க ஒரு மஹான்‌ அவதரிக்கப் போகிறார்‌ என்றார்‌ ஆழ்வார்‌. அவரைச் சேவிக்க வேண்டும்‌ என்று நாதமுனி வேண்ட, ஆழ்வாரும்‌ அப்படியே இராமானுஜரின்‌ உருவைச்‌ சேவை சாதிக்க தேவரீரைக்‌ காட்டிலும்‌ அழகிய இந்தத்‌ திருமேனியை அடியேன்‌ எப்பொழுதும்‌ சேவித்து வழிபட வேண்‌டும்‌ என்று நாதமுனி பிரார்த்திக்க ஆழ்வாரும்‌ சிற்பிகளை கனவு மூலமாக நியமித்து எம்பெருமானாருடைய விக்ரகத்தைச்‌ செய்‌வித்து நாதமுனிகளிடம்‌ கொடுத்தருளி, இவரை நம்முடைய -அடியாக நினைத்திரும்‌ என்று அருளினார்‌ என்று நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற வைஷ்ணவ சீலர்‌ அருளிச் செய்வார்‌.
தம்முடைய அந்திம காலத்திலே நாதமுனிகள்‌, உய்யக்கொண்டாரிடம்‌ ‘ஒருவருக்கும்‌ வெளியிடாதே கொள்ளும்‌ என்று அந்தப்‌ பவித்திரமான விக்ரகத்தைக்‌ கொடுத்து ‘இதை என்‌ பேரனுக்கு. நான்‌ விரும்பின விஷயம்‌’ என்று கொடும்‌ என்று கூறி ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌ என்று சடகோபன்‌ பொன்னடியான அவ்விக்ரகத்தைத்‌ தியானம்‌ பண்ணிக் கொண்டு இறைவனடி சேர்ந்தார்‌.
உய்யக்கொண்டாரது கடைசிக்காலம்‌ வரை நாதமுனிகளது பேரன்‌ அவதரிக்காததால்‌, அவ் விக்ரகத்தைத்‌ தம்முடைய பிரதான சீடரான மணக்கால்‌ நம்பியிடம்‌ கொடுத்து நாதமுனிகளது பேரன்‌ யமுனைத்‌ துறைவரிடம்‌ அதை அளிக்கும்படி கட்டளையிட்டார்‌ என்றும்‌ அவரும்‌ அவ்வண்ணமே அளித்தார்‌ என்றும்‌ கூறுவர்‌.
உய்யக்கொண்டார்‌ சீடர்கள்‌ ஐந்துபேரில்‌ பிரதானமான மணற்‌கால்‌ நம்பியின்‌ இயற்பெயர்‌ ‘ஸ்ரீராமன்‌’ என்பது. இவர்‌ உய்யக்‌கொண்டார்‌ திருவடிகளில்‌ 13 வருடகாலம்‌ சகல கைங்கர்யங்களும்‌ செய்து கொண்டிருந்தார்‌. ஒரு சமயம்‌ உய்யக் கொண்டாரது மனைவி இறந்துவிடவே திருமாளிகை (வீடு) காரியமெல்லாமும்‌ தானே செய்துவந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ உய்யக் கொண்டாரது சிறுமிகள்‌ இருவரையும்‌ நீராட்டி அழைத்து வரும் பொழுது வழியில்‌ வாய்க்கால்‌ சேறாயிருப்பதைக்‌ கண்டு அவர்கள்‌ திகைத்துநிற்க, தாம்‌ படியாய்க்கிடந்து, அவர்களைத்‌ தன்‌ முதுகிலே கால்‌ வைத்து நடக்குமாறு செய்து கூட்டிப் போக, உய்யக் கொண்டார்‌,தம்‌ புத்திரிகள்‌ கால்‌ சுவடுகள்‌ (மணற்கால்‌] அவர்‌ முதுகில்‌ பொலிய நின்றதைப் பார்த்து அவரை மணற்கால்‌ நம்பி என்றும்‌ அவர்‌ பிறந்த ஊருக்கு மணற்கால்‌ என்றும்‌ திருநாமம்‌ சாத்தினார்‌.இத்தகைய ஆச்சார்ய நிஷ்டையினால்‌ உய்யக் கொண்டாரது போற்‌றுதலுக்கும்‌ பாத்திரரானார்‌ மணற்கால்‌ நம்பி. உய்யக்கொண்டாரது அந்திம காலத்தில்‌ இந்த வைணவ தர்ஸனத்தை நடத்துபவர்‌ யார்‌ என்று கேட்க மற்ற முதலிகளையும்‌ (ஸ்ரீவைஷ்ணவர்கள்‌) கூட்டிக் கொண்டு நீரே நடத்துவீர்‌: பின்னர்‌ நாதமுனிகளுக்குப்‌ பேரன்‌ பிறந்த பின்னர்‌ அவருக்கு யமுனைத் துறைவர்‌என்ற பெயரை வழங்கி இந்த எம்பெருமானார்‌ விக்ரகத்தையும்‌ கொடுத்து தகுந்த ஆச்சாரியரைத்‌ தேடிக்கண்டுபிடித்து அவரிடம்‌ தர்ஸன நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டியது அவரது கடமை என்று நாதமுனிகள்‌ நியமித்ததாகச்‌ சொல்லி அவருக்கு எல்லா அர்த்தங்களையும்‌ உபதேசியும்‌ என்று கூறி நாதமுனிகள்‌ திருவடிகளை நினைத்தவாறே திருநாட்டுக்கு ஏகினார்‌. உய்யக் கொண்டார்‌ கிரந்தம்‌ எதுவும்‌ எழுதினதாகத்‌ தெரியவில்லை. இவரது வேறு பெயர்கள்‌ புண்டரீகாக்ஷர்‌, பத்மாக்ஷர்‌, அரவிந்தாக்ஷர்‌ என்பர்‌.
இவரது ஆச்சாரியார்‌ நாதமுனிகள்‌ என்று கண்டோம்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகின்றது. இவர்‌ அருளிய திருப்பாவைத் தனியன்கள்‌.

அன்ன வயல்‌ புதுவை ஆண்டாள்‌ அரங்கற்குப்‌
பன்னு திருப்பாவை பல் பதியம்‌ – இன்னிசையால்‌
பாடிக் கொடுத்தாள்‌ நற் பா மாலை பூ மாலை
சூடிக்‌ கொடுத்தாளைச்‌ சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவாய்‌
பாடி யருள வல்ல பல் வளையாய்‌ – நாடிநீ
வேங்கடவெற் கென்னை விதி யென்ற இம் மாற்றம்‌
நாம்‌ கடவா வண்ணமே நல்கு:

நாதமுனிகள்‌ உய்யக் கொண்டாரிடம்‌, குளப்படியில்‌ நீரைத் தேக்கினால்‌ வற்றிப் போகும்‌. வீராணத்து ஏரியில்‌ தேக்கினால்‌ நாட்டுக்கு உபகாரமாகலாம்‌. ஆகவே இந்தப்‌ பிரமேய ரத்னத்தை ஆளவந்தாருக்கு உபதேசியும்‌ என்று சொன்னதாகச்‌ சொல்லுவர்‌.

வால வெய்யோன்‌ தனை வென்ற வடிவழகன்‌ வாழியே
மால் மணக்கால்‌ நம்பி தொழும்‌ மலர்ப் பதத்தான்‌ வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்பான்‌ வாழியே
சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தான்‌ வாழியே
நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌ வாழியே
நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தினான்‌ வாழியே
மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்பான்‌ வாழியே
வையமுய்யக்‌ கொண்டவார்‌ தாள்‌ வையத்தில்‌ வாழியே
நாலிரண்டு
– திருவெட்டெழுத்துதிருமந்திரம்‌
ஐயைந்து இருபத்தைந்து எழுத்துக்களுள்ள த்வையம்‌ மந்திரம்‌
நாலெட்டு – முப்பத்திரண்டு எழுத்துக்களுள்ள சரம ஸ்லோகம்‌-ரகஸ்ய த்ரயம்‌ சொன்னபடி.

நாதமுனிகளுக்கு மேலையகத்தாழ்வான்‌ (வரதாச்சார்யார்‌,கீழையகத்தாழ்வான்‌ (கிருஷ்ணமாச்சார்யார்‌] என்ற மருமக்கள்‌ இருவர்‌ உண்டு. இவர்களைப் பற்றி வேங்கட சேஷாச்சாரியார்‌ என்பவர்‌ வரதாச்சார்யார்‌ என்பவர்‌ ஸ்ரீதர யோகாபதி என்றும்‌, கிருஷ்ணமாச்சார்யார்‌ ஸ்ரீதர யோகக்கல்பகத்தரு என்னும்‌ பெயருடைய
யோக சாஸ்திரங்களைச்‌ செய்தனர்‌ என்பார்‌. வரதாச்சார்யார்‌ குமார ரான நிர்மல தாஸர்‌ ஸ்ரீமத்நாதமுனிகள்‌ அருளிச் செய்த யோகசாராப்ரத்துக்கு விருத்தி (விளக்கம்‌) அருளிச்செய்தார்‌. இவர்‌ குமாரரான ஞான வராஹாச்சாரியார்‌ நாதமுனிகளுடைய யோக சாஸ்திரத்‌துக்கும்‌ பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கும்‌, ஐக கண்டயம்‌ செய்தார்‌.
குருகைக் காவலப்பன்‌ என்னும்‌ இவர்‌ குமாரரான குருகேசர்‌ ஸ்ரீஆளவந்தாருக்கு யோக சாஸ்திரத்தை உபதேசிக்க விரும்பி நான்‌ நித்ய விபூதிக்கு எழுந்தருளும்போது (மரணமடையும்‌) வருமாறு நியமித்திருக்க அக் காலத்தை ஆளவந்தார்‌. மறந்து வராமலிருந்து விட்டபடியால்‌ ஸ்ரீ குருகைக்காவலப்பன்‌ வரை வந்த யோகானுஷ்‌டானம்‌ நின்று விட்டது.
குருகைக்‌ காவலப்பன்‌ நாதமுனிகளின்‌ மருமகனின்‌ பூட்டன்‌ -அக் காலத்தில்‌ தமக்குத்‌ தெரிந்த ஞான சாஸ்திரங்களைப்‌ பிறருக்குச்‌ சொல்வதில்‌ எவ்வளவு கண்டிப்பாக இருந்தார்கள்‌ என்பதை அறிகிறோம்‌. இராமானுஜர்‌ காலத்தில்‌ எவ்வாறு இந்த நிலை மாற்றமடைந்தது என்பதைக் காண இருக்கிறோம்‌. நாதமுனிகள்‌ தன்னுடைய மருமக்களான கீழையகத்தாழ்வாரையும்‌, மேலையகத்தாழ்‌வாரையும்‌ அழைத்து ஆழ்வார்‌ பாசுரங்களை இயலும்‌ இசையுமாகப்‌ பாடுவித்தருளிய வைபவத்தை ஸ்ரீவேதாந்த தேசிகர்‌ குருபரம்‌பரா ஸாரத்தின்‌ இறுதிப்பகுதியில்‌
காளம்‌ வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்‌
தாளம்‌ வழங்கித்‌ தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்‌
மூளூம்‌ தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளூம்‌ தொழுதெழுவோம்‌ நமக்கார்‌ நிகர்‌ நானிலத்தே.-
என்று அவர்கள்‌ இருவரையும்‌ காளம்‌ வலம்புரி போல வைத்து இனிய தேவ கானத்தை அமைத்துக்‌ கொடுத்த நாதமுனி என்று புகழ்கிறார்‌.

குருகைக்‌ காவலப்பன்‌ நாதமுனிகளின்‌ சிஷ்யரென்றும்‌ அவரிடமிருந்து யோக
ரகஸ்யத்தைக்‌ கேட்டுப் பெற்றார்‌ என்றும்‌ முன்னரே கண்டோம்‌.ஆளவந்தாருக்குக்‌ குருகைக்‌ காவலப்பன்‌ கூறியதாகச்‌ சொல்லும்‌ ஒரு செய்தி உண்டு. அப்பன்‌ ஸ்ரீபாதத்தில்‌ ஒரு ரகஸ்ய விசேஷம்‌உண்டு என்று மணற்கால்‌ நம்பி கூற அதைக்கேட்க வேண்டும்‌ என்று ஆளவந்தாரும்‌, குருகைக்‌ காவலப்பன்‌ ஒரு குட்டிச்சுவரருகே யோகத்திலே இருக்கும்‌ இடத்திற்கு வந்தார்‌. ஆளவந்தார்‌ அவரதுசமாதி நிலையைக்‌ கலைக்க விரும்பாது மறைந்து நிற்க, அப்பனும்‌ யோகத்திலிருந்து கலைந்து கண்விழித்துப் பார்த்து இங்கு சொட்‌டைக்‌ குலத்திலிருந்து வந்தவர்‌ யாரேனும்‌ உண்டா என்று .கேட்க ஆளவந்தார்‌ நாங்கள்‌ மறைந்திருந்தது தேவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டாராம்‌. அதற்குக்‌ குருகைக்‌ காவலப்பனும்‌ நானும்‌ பெருமாளும்‌ தனித்திருக்கும் பொழுது பெரிய பிராட்டியார்‌ வந்‌தால்‌ கூடக்‌ கவனிக்காத எம்பெருமான்‌, என்‌ கழுத்தை அமுக்கி நாலு தரம்‌ எட்டிப் பார்த்தார்‌. அப்படி அவர்‌ பார்த்தால்‌ சொட்டைக்‌குடியில்‌ யாரேனும்‌ வந்திருக்க வேண்டும்‌ என்று நினைத்தேன்‌ என்றாராம்‌.-ஜகத்திற்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பு எத்தகையது என்று ஒருவர்‌ அப்பனைக்‌ கேட்டபொழுது இந்த சரீரத்திற்கும்‌, இதற்கு ஈஸ்வரனாயுள்ள ஜீவாத்மாவிற்கும்‌ உள்ள தொடர்பாகிற சரீராத்மாத்‌ தன்மையே; உலகிற்கும்‌ ஸர்வேஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பாகும்‌ என்று கூறினாராம்‌. அதே மனிதன்‌ அப்பனைப்‌ பார்த்து எப்பொழுதும்‌ எம்பெருமானை நினைத்துக்‌ கொண்டிருக்‌கும்‌ நீர்‌ அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்‌ என்று வேண்ட, அதற்கு அவர்‌, நான்‌ உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்லுகிறேன்‌. நீ அவனை மறக்க எனக்கு வழி சொல்கிறாயா என்றாரம்‌. இதன்‌ பொருள்‌, எந்தப்பொருளுமே எம்பெருமானுக்குச்‌ சரீரியாய்‌ இருப்பதால்‌ சரீரமாய்‌ விசேஷமான அவனுடைய நினைவே வரவேண்டியிருக்கும்‌. ஆகவே உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களும்‌ பகவானது சரீரத்தின்‌ பகுதிகளே, பார்க்குமிடமெங்கும்‌ நீக்கமற நிறைந்திருப்பவன்‌ அவன்‌ என்பது கருத்து. ஆளவந்தாரால்‌ இவரிடமிருந்து யோகானுஷ்டா னத்தைப் பெற முடியாமல்‌ போன சம்பவத்தை முன்னரே பார்த்தோம் –

குருகைக்‌ காவலப்பன்‌ பிறந்த இடம்‌ பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூர்‌. பிறந்த நட்சத்திரம்‌ தை மாதத்தில்‌ விசாகம்‌. அவர்‌ இருந்த இடம்‌ நாதமுனிகளது திருப்பள்ளி. அது அன்று முதலாக சோழ தேசத்திலே காவிரிக் கரையிலே குருகைக்‌ காவலப்பன்‌ கோயில்‌ என்றழைக்கப்படுகிறது. அவருடைய ஆச்சார்யார்‌ நாதமுனிகள்‌. அவருடைய திருவாராதனப்‌ பெருமாள்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனார்‌. இவரது இளமைப்பெயர்‌ புண்டரீகாக்ஷர்‌. இவர்‌ 157ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகிறது. இவர்‌ அருளிய மூன்றாம்‌ திருவந்தாதித் தனியன்‌
சீராரும்‌ மாடத்‌ திருக்கோவலூரதனுள்‌
காரார்‌ கருமுகிலைக்‌ காணப்புக்கு – ஓராத
திருக்கண்டேன்‌ என்றுரைத்த சீரான்‌ கழலே
உரைக்கண்டாய்‌ நெஞ்சே உகந்து
:-என்பதாகும்‌.

மகரமதில்‌ விசாகம்‌ நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே
மாறன் தாள்‌ நாதமுனி மலரடியோன்‌ வாழியே
நிகரில்‌ நன்‌ ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌ வாழியே
நிர்ணயமா ஐந்து பொருள்‌ நிலையறிவான்‌ வாழியே
அகமறுக்குமிராமர்‌ பதம்‌ ஆசையுள்ளோன்‌ வாழியே
ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
செகதலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌ வாழியே
செய்குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ வாழியே

திருக்கண்ணமங்கையாண்டான்‌ நாதமுனிகளின்‌ முக்கிய சிஷ்யர்கவில்‌ ஒருவர் – இவர்‌ திருக்‌கண்ணமங்கை என்ற ஊரில்‌ பிறந்தவர்‌. இவரைப் பற்றிய பல செய்திகள்‌ பல கிரந்தங்களில்‌ உள்ளன. நாதமுனிகள்‌ இவருக்குத்‌ திருவாய்‌ மொழி உபதேசிக்கும்பொழுது ‘பொலிக பொலிக’ என்ற பாசுரம்‌ வந்தபொழுது நம்மாழ்வார்‌ அளித்துள்ள இராமானுஜரது
விக்ரகத்தின்‌ விருத்தாந்தங்களை யெல்லாம்‌ கூறக்கேட்டு, அத்தகைய பேற்றைப் பெற்ற தங்களுடைய சீடனான எனக்கு ஒரு குறைவும்‌ இல்லை என்று கூறினார்‌ என்பர்‌.-ஒரு நாள்‌ அவர்‌ ஒரு மகிழ மரத்தடியில்‌ உள்ள சருகுகளைப்‌ பெருக்கிச்‌ சுத்தம்‌ செய்து கொண்டிருந்த பொழுது ஒரு நாஸ்திகர்‌ அவரிடம்‌ உமக்கும்‌ எனக்கும்‌ என்ன வித்யாசம்‌ என்று கேட்க,
அவர்‌ பெருக்க இடமும்‌ பெருக்காத இடமும்‌ போல என்றாராம்‌.
“உபாயத்தை நிலையிட்டவர்கள்‌, பிராட்டி, திரெளபதி, திருக்‌கண்ணமங்கை ஆண்டான்‌ என்பவர்கள்‌’ என்று பெரியவாச்சான்‌பிள்ளை மாணிக்கமாலை என்ற நூலில்‌ அருளிச் செய்துள்ளார் . அவன்‌ தன்‌ சுயவியாபாரத்தை விட்டான்‌ என்ற பதத்திற்கு உரை கூறும்பொழுது, ஒரு சேவகனது நாயை ஒரு சேவகன்‌ அடிக்க, அதைப்‌ பொறாமல்‌ அடித்தவனை எதிர்த்துப்‌ பொருது, அவனையும்‌ கொன்று தானும்‌ குத்திக் கொள்வதாக இருக்கிறதைப்‌ பார்த்து, ஒரு சாதாரண மனிதன்‌ ஒரு தாய்க்காகத்‌ தன்‌ உயிரையும்‌ இழக்க இருக்கப்‌ பரம சேதனான இறைவன்‌ அவனடியாரை எவ்வளவு நிச்சயமாகப்‌ பரிபாலிப்பான்‌ என்று கருதித்‌ தன்‌ சுய வியாபாரத்தை விட்டுத்‌ திருக்கண்ணமங்கையில்‌ பக்தராகி, திருவாசலில்‌ அடைக்கலம்‌ புகுந்தார்‌. எறும்பியப்பா என்ற பக்தர்‌ திருக்கண்ண மங்கையாண்டானைப்‌ போலப்‌ பற்றற்றிருந்தால்‌ அவனுக்கு உலக அபவாதமும்‌ வராது. சாஸ்திர விரோதமும்‌ வராது, லோக அபராதமும்‌ வராது, பகவத நிக்ரகமும்‌ வராது என்றார்‌. இவர்‌ அருளிய நாச்சியார்‌ திருமொழித்தனியன்‌,
அல்லிநாட்டாமரைமேல்‌ ஆரணங்கின்‌ இன்துணைவி
மல்லி நாடாண்ட மடமயில்‌ – மெல்லியலாள்‌
ஆயர்குல வேந்தன்‌ ஆகத்தாள்‌ தென்புதுவை வேயர்‌ பயந்த விளக்கு’ –
என்பதாகும் –

உய்யக்கொண்டாரது சிறந்த சீடரான மணற்கால்‌ நம்பி என்ற ஸ்ரீ ராமமிஸ்ரர்‌, உய்யக்கொண்டார்‌ அவதரித்து 33 வருடங்களுக்குப்‌ பின்னர்‌ கி.பி. 929-ல்‌ லால்குடி அருகே இப்பொழுது மணற்கால்‌ என்று கூறப்படும்‌ கிராமத்தில்‌ அந்தணர்‌ குலத்தில்‌ மாசி மாதம்‌ மக நட்சத்திரத்தில்‌ பிறந்தார்‌. இவருக்கு எதனால்‌ மணற்கால்‌ நம்பி என்ற பெயர்‌ வந்தது என்பதை முன்னரே கண்டோம்‌. இவர்‌ தம்‌ ஆச்சார்யரான உய்யக்கொண்டார்‌ நியமனப்படி நாதமுனிகள்‌ பேரரான ஆளவந்தாரைத்‌ திருத்திப்‌ பணிகொண்டு அவருக்குத்‌ திவ்யப்‌ பிரபந்தங்களையும்‌ ரகஸ்ய த்ரயத்தையும்‌ நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற பவித்ரமான ராமானுஜ விக்ரகத்தையும்‌ கொடுத்தருளினார்‌.-அவரது அவதார ஸ்தலத்தில்‌ உள்ள அவரது திருவிக்ரகம்‌ திரிதண்‌டத்துடன்‌ காணப்படுவதால்‌ அவர்‌ கடைசிக் காலத்தில்‌ சந்யசித்திருக்க வேண்டும்‌ என்று தெரிகிறது. இவரும்‌ கிரந்தம்‌ எதுவும்‌ எழுதினதாகத்‌ தெரியவில்லை.
இவரது சீடர்கள்‌ ஆளவந்தார்‌ என்ற யமுனாச்சாரியார்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌, தெய்வத்துக்‌ கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலைதாஸர்‌, வங்கிபுரத்தாச்சி முதலியோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகிறது. இவரையும்‌ எம்பெருமானார்‌ சீடர்‌ வடுக நம்பியையும்‌ ஆச்சார்ய கைங்கர்யத்திற்கு உதாரணமாகச்‌ சொல்வர்‌. இவர்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
ஆரம்‌ கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடு குடற் பாம்‌பிற் கை யிட்டவன்‌, மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல்‌ கொல்லி காவலன்‌ வில்லவர் கோன்‌
சேரன்‌ குலசேகரன்‌ முடி வேந்தர்‌ சிகா மணியே”

தேசமுய்யக்‌ கொண்டவர்‌ தாழ் சென்னி வைப்போன்‌ வாழியே.
தென்னரங்கர்‌ சீரருளைச்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே.
தாசரதி திரு நாமம்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே.
தமிழ் நாத முனி யுகப்பைத் தாபித்தோன்‌ வாழியே.
நேசமடன்‌ ஆரியனை நியமித்தோன்‌ வாழியே.
நீனிலத்தில்‌ பதின்மர்‌ கலை நிறுத்தினோன்‌ வாழியே.
மாசிமகந் தனில்‌ விளங்க வந்துதித்தான்‌ வாழியே.
மால்‌ மணற்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே.

மணற்கால்‌ நம்பி அவதரித்து 47 வருடங்களுக்குப்‌ பிறகு கி.பி. 976-வது வருஷம்‌ ஆடி மாதம்‌ பெளர்ணமி திதியில்‌ உத்தராட நட்சத்திரத்தில்‌ நாதமுனிகளின்‌ குமாரரான ஈஸ்வர முனிகளுக்கும்‌ அவருடைய தர்ம பத்தினியான ஸ்ரீரங்க நாயகிக்கும்‌, நாதமுனிகள்‌ அவதரித்த காட்டுமன்னார்‌ கோவிலிலேயே அவதரித்தார்‌. நாதமுனிகள்‌ நியமித்தபடியே அவருக்கு யமுனைத்துறைவன்‌ என்ற நாமம்‌ சூட்டப்பட்டது. ஈஸ்வர முனிகளால்‌ உரிய காலத்தில்‌ அன்னப்பிரசானம்‌ உபநயனம்‌ போன்ற சடங்குகளெல்லாம்‌ செய்‌யப்பட்டன. அவருக்கு வேதத்தை அப்யஸித்தபொழுது ஏகசிந்தைஉடையவராய்‌ மகா மேதாவிலாசத்தை உடையவராய்‌ இருந்தார்‌. உரிய காலத்தில்‌ இவருக்கு விவாகமும்‌ செய்விக்கப்பட்டது.மகா பாஷ்ய பட்டர்‌ என்பவரிடம்‌ இவர்‌ சாஸ்திரங்களைக்‌ கற்று வந்தார்‌. அக்காலத்தில்‌ ராஜப் புரோகிதரான ஆக்கி யாழ்வான்‌ என்பவன்‌ தன்‌ வித்யா கர்வத்தாலே எல்லா வித்வான்களிடமும்‌ கப்பம்‌ வாங்கி வந்தான்‌. அவன்‌ ஒரு நாள்‌ கப்பம்‌ கேட்டு மஹாபாஷ்ய பட்டருக்கு ஓலை அனுப்ப, பட்டர்‌ கப்பம்‌ செலுத்த வழியில்லாமல்‌ தகைத்து நிற்பதைப் பார்த்து யமுனைத் துறைவர்‌ அவ்வோலையைக்‌ கிழித்தெறிந்து விட்டார்‌. அதைக்‌ கேட்ட ஆக்கி யாழ்வான்‌ அவ்வோலையைக்‌ கிழித்தவன்‌ வெறும்‌ கவியோ அல்லது சாஸ்திரம்‌ தந்திரம்‌ எல்லாம்‌ அறிந்த பண்டிதனோ என்றுகேட்டனுப்பினான்‌. அதற்கு அவர்‌ ‘நாம்‌ வெறும்‌ பண்டிதன்‌ மாத்திரமல்லோம்‌ மீமாம்ஸ சாஸ்திரக்கடலை மாத்திரம்‌ கரை கண்டவர்களல்லோம்‌. எதிர்வாதம்‌ புரிபவர்களாகிய யானைகளின்‌ மத்தகத்தைப்‌ பிளக்கும்‌ வல்லமை யுடையோம்‌’ என்று பதில்‌ அனுப்பினார்‌. உடனே அரசன்‌ யமுனைத் துறைவரை ராஜசபைக்கு வரச் சொல்லி ஒலை அனுப்பினார்‌. அவர்‌ ராஜ ஓலையையும்‌ கிழித்துப் போட அவர்‌ ஒரு மகான்‌ என்பதை உணர்ந்து பல்லக்குபரிவாரங்களை அனுப்பினார்‌ அரசர்‌.யமுனைத் துறைவரும்‌ அப்பல்லக்கில்‌ ராஜசபைக்கு வந்து தனக்குப்‌ பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை இரண்டிலும்‌ விசேஷமான பயிற்சி உண்டு. என்னைப் போன்ற மற்றொருவன்‌ தேடினாலும்‌ கிடைக்க மாட்டான்‌ என்ற பொருளுடைய ஸ்லோகத்தை எழுதி யனுப்பினார்‌. அதற்குப் பின்னர்‌ இவருக்கும்‌ ஆக்கி யாழ்வானுக்கும்‌ வித்வான்‌௧ள்‌ முன்னிலையில்‌ சம்வாதம்‌ (தர்க்கம்‌) நடந்‌தது. இந்த வாதத்தில்‌ ராஜாவும்‌, மகிஷியும்‌ பின்வருமாறு சபதம்‌ செய்து கொண்டனர்‌. யமுனைத்துறைவர்‌ தோற்றாராகில்‌ நான்‌ மகிஷி பதவியைத்‌ துறந்து உமக்கு வேலைக்காரியாவேன்‌ என்றாள்‌ ராஜமகஷி. ஆக்கியாழ்வான்‌ தோற்றானாகில்‌ நான்‌ யமுனைத்துறைவருக்குப்‌ பாதி ராஜ்யம்‌ தருவேன்‌ என்றார்‌ ராஜா. பின்னர்‌ வாதம்‌ ஆரம்பித்தது.இளம்‌ பிள்ளையான இவரை சாஸ்திர விவாதமில்லாமல்‌ லெளகிக விஷயங்களிலேயே தோற்கடித்து விடலாமென்றெண்ணிய ஆக்கி யாழ்வான்‌ லெளசீகங்களில்‌ நீர்‌ இல்லையென்பது நான்‌ உண்டு என்பேன்‌, நீர்‌ உண்டு என்பதை நான்‌ இல்லையென்பேன்‌.வென்றவன்‌ தோற்றவன்‌ தலையில்‌ அடிக்க வேண்டியது என்று கூறினான்‌. அதற்கிசைந்த யமுனைத் துறைவர்‌, 1) உன்‌ தாய்‌ மலடியல்ல, 3) அரசன்‌ தார்மீகன்‌, 3) ராஜ பத்தினி பதி விரதை என்ற மூன்று வாக்கியங்களைச்‌ சொல்லி அவனை மறுக்கச்‌ சொன்னார்‌. அவற்றை மறுக்க இயலாமல்‌ மெளனியாய்‌ இருந்தான்‌. பின்பு சாஸ்திர விவகாரமும்‌ நடந்தது. அதிலும்‌ அவன்‌ தோல்வியுற்றான்‌.பின்னர்‌ நீர்‌ சொன்ன மூன்று லெளகிக வாக்கியங்களை உம்மால்‌ மறுக்க முடியுமா என்று அரசனும்‌ அரசியும்‌ கேட்டனர்‌. முடியும்‌ என்று சொல்லி யமுனைத்துறைவர்‌ பின்வருமாறு மறுத்துக்காட்டினார்‌.-ஒர் மரமும்‌ தோப்பல்ல. ஒரு பிள்ளையும்‌ பிள்ளையில்லை-என்ற ௨லக வழக்கின்படி நிலையற்றதான இவ்வுலகில்‌ ஒரு பிள்ளையைப் பெற்றதாய்‌, இப் பிள்ளை நமக்குத்‌ தக்க வேணுமே என்று கலங்கிக் கொண்டே இருப்பாளாதலால்‌, அவள்‌ பிள்ளை பெற்றும்‌ மலடியே யாவாள்‌. இம் முறையில்‌ ஒரு பிள்ளை பெற்ற ஆக்கியாழ்வானுடைய தாய்‌ மலடியே யாவாளாதலால்‌ முதல்‌ வாக்‌கியம்‌ மறுக்கப்பட்டது. அடுத்துக்‌ குடிகள்‌ செய்யும்‌ பாபம்‌ அரசனைச்‌ சேருமாகையால்‌, பரம தார்மீகமான இவ்வரசனும்‌ குடிகள்‌ செய்யும்‌ பாவத்தில்‌ பங்கு பெறுகிறானாதலால்‌, இரண்டாவது வாக்கியமும்‌ மறுக்கப்பட்டது. இறுதியாகச்‌ சோமன்‌ முதல்‌ நாள்‌ உன்னை மணம்‌ புணர்ந்தான்‌. கந்தர்வன்‌ அடுத்த நாள்‌ உன்னை மணம்‌ புரிந்தான்‌. மூன்றாவது நாள்‌ அக்கினி உனக்குப்‌ பதியாகிறான்‌. நான்காவது நாளிலே தான்‌ கைப்பிடித்த கணவன்‌ உனக்குக்‌ கணவனாகினான்‌ என்ற வேத வாக்யெத்தின்படி எல்லாப்‌ பெண்களுக்கும்‌ முதல்‌ மூன்று நாட்களில்‌ தேவதைகளோடு தொடர்பு உண்டாகையால்‌ பதிவிரதை தத்துவத்துக்குக்‌ குறையுண்டு. ௮க்‌ குறை பரம வைதிகமான முறையில்‌ அரசனைக்‌ கைப்பிடித்த அரசிக்கும்‌ உண்டாகையால்‌ மூன்றாவது வாக்கியமும்‌ மறுக்கப்பட்‌டது.இவ்வாறு லெளகீக, சாஸ்திர வாதங்களில்‌ ஆக்கியாழ்வானை வென்ற போதிலும்‌ முதலில்‌ பண்ணின சபதத்தின்படி அவன்‌ தலையில்‌ அடிக்க மறுத்து விட்டார்‌. அவருடைய பண்பையும்‌, புலமையையும்‌, உலக அனுபவத்தையும்‌ கண்டு வியப்புற்ற அனைவரும்‌ அவரைப்‌ பெருமைப்படுத்தி கெளரவித்தனர்‌. ராஜமாதேவி “என்னை ஆளவந்தீரே’ என்று தன்‌ பிள்ளையைப்‌ போல்‌ எடுத்தணைத்துக் கொண்டு அரசனுடன்‌ அரண்மனைக்குள்‌ புகுந்தாள்‌.-அரசன்‌ தான்‌ ஒப்புக் கொண்டபடியே இவருக்குப்‌ பாதிராஜ்யம்‌ கொடுத்தான்‌. இவரை எல்லோரும்‌ ஆளவந்தார்‌ என்றே அழைக்கலாயினர்‌. இவரும்‌ தம்‌ பத்தினியோடு கூடி அரசாட்சி செய்து கொண்டு அரச போகத்தில்‌ ஆழ்ந்திருந்தார்‌. உய்யக்கொண்டார்‌ நியமனத்தாலே யமுனைத்துறைவரைத்‌ தர்ஸன கைங்கர்யத்திலே ஈடுபட வைக்க ஆசைகொண்ட மணற்கால்‌ நம்பியால்‌ கட்டுங்காவலுமாய்‌ இருந்த அரண்மனைக்குள்‌ சென்று ஆளவந்தாரைக்‌ காண இயலவில்லை. தூதுவளைக்கீரையே ஆளவந்தார்‌ விரும்பி உண்‌ணும்‌ கறியமுது என்றறிந்து மடப்பள்ளிக்கு ஆறுமாத காலம்‌ கீரையை அளித்து வந்தார்‌. அப்போதும்‌ இவரைப் பற்றி ஆளவந்தார்‌ விசாரிக்காமல்‌ இருக்கவே நாலு நாள்‌ தூதுவளை கொடுப்பதைத்‌ தவிர்த்து இருந்தார்‌. ஆளவந்தார்‌ அமுது செய்யும் பொழுது தூதுவளை இல்லாமல்‌ இருப்பதேன்‌ என்று வினவிய பொழுது ஆறு மாத காலமாக ஒரு வயோதிக அந்தணர்‌ அளித்து வந்தார்‌. நாலு நாளாக வரவில்லை என்றனர்‌. மறுநாள்‌ மணற்கால்‌ நம்பியும்‌ இன்னமும்‌ முயற்சி செய்து பார்க்கலாமென்றெண்ணி தூதுவளை கொண்டுவந்து மடைப்பள்ளியில்‌ கொடுத்தார்‌. அவர்களும்‌ நம்‌பியை ஆளவந்தாரிடம்‌ : அழைத்துச் சென்றனர்‌. ஆளவந்தாரும்‌ அவரை நல்லமுறையில்‌ வரவேற்று ‘நீர்‌ தூதுவளை கொண்டு வந்து கொடுக்கக்‌ காரணம்‌ யாது என்று வினவ, இவரும்‌ உம்முடைய பாட்டனார்‌ தேடி வைத்த நிதி ஒன்று என்னிடம்‌ இருக்கிறது. அதை உம்மிடம்‌ அளிப்பதற்கு நான்‌ இங்கு வந்து போகத்‌ தடை செய்யாமல்‌ இருக்கும்படி உத்தரவிட வேண்டும்‌ என்று கூறினார்‌.

அன்றுமுதல்‌ அவ்வாறே செய்யுமாறு அரண்மனை ஏவலாளர்‌களுக்குக்‌ கட்டளையிட்டிருந்தார்‌ ஆளவந்தார்‌. நம்பியும்‌ தினமும்‌அரண்மனைக்குச்‌ சென்று கீதையின்‌ செம்மைப்பொருளை உபதே சிக்க அதில்‌ ஆவல்மிகுந்த ஆளவந்தார்‌ எம்பெருமானை அடைய உபாயமேது என்று நம்பியைக்‌ கேட்டார்‌. நம்பியும்‌ அவருக்கு சரம
ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை) உபதேசித்து அவனை
அடைய அவனே உபாயம்‌ என்ற உறுதியை அவருக்கு உண்டாக்கினார்‌. ஆழ்வார்கள்‌ அருளிச்செயல்களையும்‌ அவற்றின்‌ அரும்பொருள்களையும்‌ உபதேசித்தார்‌. பின்னர்‌ திருவரங்கத்திற்கு அவரை அழைத்துச்சென்று பெரிய பெருமாளைத்‌ திருவடி தொழச்செய்து உங்களுடைய பாட்டனார்‌ தேடிவைத்த பெருநிதி இதுவேயாகும்‌
என்று காட்டிக்கொடுக்க, பெரியபெருமானிடம்‌ ஈடுபட்ட ஆளவந்‌தார்‌, ராஜ்ய பாரத்தைத்‌ துறந்து துறவு பூண்டு ஸ்ரீரங்கத்தில்‌ தர்ஸன நிர்வாகம்‌ செய்து வந்தார்‌. அக்காலத்திலே, பெரியதம்பி திருக்‌கோட்டியர்‌ நம்பி, பெரிய திருமலைநம்பி, திருமாலையாண்டான்‌
முதலான வைணவ பிராமணோத்தமர்களும்‌, திருக்கச்சி நம்பி, மாறனேரிநம்‌பி முதலான பாகவதோத்தமர்களும்‌ அவரை ஆஸ்ர யித்திருந்தார்கள்‌. (அடைக்கலமடைந்திருந்தார்கள்‌].

பின்னர்‌ மணற்கால்‌ நம்பி, ஆளவந்தாரிடம்‌ நாதமுனிகள்‌ குருகைக்‌ காவலப்பனிடம்‌ யோக ரகசியத்தைத்‌ தெரிந்து கொள்ளச்‌ சொன்னதையும்‌, அது நிறைவேறாமற்போனதையும்‌ நாம்‌ குருகைக்‌ காவலப்பன்‌ வைபவத்திலேயே தெரிந்து கொண்டோம்‌. ஆளவந்‌தார்‌ கோயில்‌ நிர்வாகத்தின்போது நம்‌ பெருமாள்‌ திரு அத்யயன உத்சவத்தில்‌, திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையர்‌, ஆளவந்தார்‌ திருமுகத்தைப்பார்த்து ‘நடமினோ நமர்களுள்ளீர்‌, நாமுமக்கறியச்‌ சொன்‌னோம்‌” என்று பல காலம்‌ பாடியருள, ஆளவந்தாரும்‌, பெரியபெருமாள்‌, நியமனம்‌ பெற்று திருவனந்தபுரம்‌ சென்று சேவித்துத்‌ திரும்பாமுன்‌, இவருடைய பிரிவினால்‌, மடத்துக்குக்‌ காவலாயிருந்த தெய்வவாரியாண்டான்‌, வாடி வலிய அவரை ஆளவந்தாரிடம்‌ கூட்டிச் செல்லும்பொழுது பாதிவழியில்‌ ஆளவந்தார்‌ திரும்பி வரவும்‌, அவரைக்கண்டபின்‌ உடல்‌ முன்போல்‌ தேறி அவருக்கு ஆச்சார்ய கைங்கர்யம்‌ செய்து வருவாரானார்‌.-இந்நிலையில்‌ தனக்குப்பின்‌ இந்தத்‌ தர்ஸனத்திற்கு அதிகாரி யார்‌ என்று மிகுந்த கவலையோடு இருந்தபொழுது காஞ்சியிலிருந்து வந்த இரு வைணவர்கள்‌ ஆளவந்தாரிடம்‌, யாதவப்பிரகாசன்‌ என்ற ஏகதண்டி சந்நியாசியிடம்‌ ஸ்ரீ பெரும்புதூர்‌ இளையாழ்வார்‌ என்ற ஒருவர்‌ வேதாந்தம்‌ கற்று வருகிறாரென்றும்‌, அவர்‌ வேதப்‌ பொருளுக்கு விளக்கம்‌ சொல்வது மிகவும்‌ நன்றாக இருக்கிறது என்றும்‌ சொன்னார்கள்‌. ஒரு நாள்‌ இளையாழ்வார்‌ யாதவப்பிரகாசருக்கு எண்ணை தேய்த்துக்‌ கொண்டிருக்கும்பொழுது யாதவப்பிரகாசர்‌ ‘கப்யாசம்‌’ என்ற பதத்திற்கு குரங்கின்‌ ஆசனவாய்‌ என்று தப்பர்த்தம்‌ சொன்னதைக்கேட்ட இளையாழ்வார்‌ மனக்கிலேசப்‌பட்டு கண்ணீர்‌ விட அது அவன்‌ தொடையில்‌ விழ அவன்‌
கிலேசத்திற்குக்‌ காரணம்‌ கேட்க, இவரும்‌ சூரியனைக்‌ கண்டு மலர்ந்த கமலம்‌ போல பரமபுருஷன்‌ கண்கள்‌ என்று சொல்ல வேண்டியிருக்க தாங்கள்‌ தப்பர்த்தம்‌ சொல்லியதைக்கேட்டு வருந்‌தினேன்‌ என்று சொன்ன சம்பவத்தைச்‌ சொன்னார்கள்‌-

இந்த விருத்தாந்தங்களை யெல்லாம்‌ கேட்ட ஆளவந்தார்‌ இளையாழ்வாரது மேதா விலாசத்தையும்‌, ஞானவைராக்யங்களையும்‌ கேட்ட மாத்திரத்திலேயே மிகவும்‌ மகிழ்ந்தவராய்‌, அவரைக்‌ காண வேண்டும்‌ என்ற ஆவலுடன்‌ பெரிய பெருமாள்‌ அனுமதி
பெற்று காஞ்சி சென்று, அங்கு திருக்கச்சி நம்பிகள்‌ மிகவும்‌ பக்தியோடு இவரை வரவேற்க இவரும்‌ மிக உகந்து பேரருளாள௫க்கு அவர்‌ ஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்து வருகிறதை சிலாகித்து அவரையும்‌ உடன்கொண்டு அங்கு கோயில்‌ அருகிலுள்ள புற்றின்‌ சமீபத்தில்‌ உள்ள திருவனந்தாழ்வானையும்‌, கரிய மாணிக்கத்தாழ்‌வாரையும்‌ சேவித்து வரும்பொழுது யாதவப்பிரகாசருடைய கூட்‌டம்‌ வரக்கண்டு, இதில்‌ யார்‌ இளையபெருமாள்‌ என்று கேட்க
நம்பியும்‌ சிவந்து நெடுக வலியவராய்‌, ஆஜானுபாகுவாய்‌ நடுவில்‌ வருகிறவர்‌ என்று காட்டக்கண்டு மிகவும்‌ மகிழ்ந்து ‘ஆம்‌ முதல்‌வன்‌ இவன்‌’ என்று மனதில்‌ தெளிந்து, பின்னர்‌ பேரருளாளரிடம்‌ அடியேனுக்கு இளையாழ்வாராகிய மகானைத்‌ தர்ஸனத்நிற்குத்‌
தந்தருள வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அப்போது அவருக்கு ஒரு நல்வார்த்தை சொல்ல வாய்ப்பில்லாததால்‌ மீண்டும்‌ திருவரங்கம்‌ கோயிலுக்கே எழுந்தருவினார்‌. இவரது அபிலாஷை நிறைவேறி இளையாழ்வார்‌ கோயில்‌ நிர்வாஹத்தைக்‌ கைக்‌கொண்ட வரலாற்றை பார்க்கும் முன்பே ஆச்சார்யர் திருவடி சேர்ந்தார் என்பதை இளையாழ்வார்‌ வைபவத்தில்‌ காண இருக்கிறோம்‌.

ஆளவந்தார்‌ தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடனேயே கோயில்‌ தர்ஸனத்தை இளையாழ்வாரிடம்‌ கொடுக்க எண்ணி,
பெரியநம்பி ஸ்வாமிகளைக்‌ காஞ்சிக்கு அனுப்பி அவரைத்‌ திருவரங்கத்துக்கு அழைத்து வரப்பணித்தார்‌. ஆனால்‌ அவர்‌ வருமுன்பே ஆளவந்தார்‌ பரமபதித்து விட்டதால்‌, அவரை உயிரோடு நேரில்‌ காணாத விரக்தியினால்‌, ஏமாற்றமடைந்து காஞ்சிக்கே திரும்பச்‌ சென்று விடுகிறார்‌ இளையாழ்வார்‌. ஆளவந்தாரது திஸ்ருமேனியை இளையாழ்வார்‌ கண்டு சேவிக்கும் பொழுது கைவிரல்கள்‌ மூன்று மடங்கி இருப்பதைப் பார்த்து, முன்னர்‌ இவரது விரல்கள்‌ இவ்வாறு தான்‌ இருந்தனவா என்று விசாரித்து இல்லை என்று தெரிந்தவுடனே, அவரது மனதில்‌ ஏதேனும்‌ நிறைவேறாத ஆசைகள்‌ இருந்தனவா என்று கேட்க, அங்குள்ளவர்கள்‌ ஆளவந்தார்க்கு மூன்று விருப்பங்கள்‌ உண்டு. அவை, பிரஹ்ம ஸூத்திரத்துக்கு மஹா பாஷ்யம்‌ எழுதுதல்‌, விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்குப்‌ பாஷ்யம்‌
எழுதுதல்‌, திருவாய்மொழிக்கும்‌ பாஷ்யம்‌ எழுதுதல்‌
என்பன என்றார்கள்‌. அவர்‌ விருப்பத்தைத்‌ தாம்‌ நிறைவேற்றி வைப்பதாக உறுதிபூண்டு சபதம்‌ செய்யவே, ஆளவந்தாரது மடங்கிய விரல்கள்‌ மூன்றும்‌ நிமிர்ந்தன என்பர்‌.

ஆளவதந்தாரது அந்திமகாலத்தில்‌ அருகிருந்த அவரது சீடர்கள்‌ எங்களுக்கு இனியார்‌ தஞ்சம்‌ என்று கேட்க, உங்களுக்கு நாம்‌ ஒருவரை உண்டாக்கி யன்றோ பேறு பெறப் போகிறோம்‌. உங்களுடைய இழவைத் தீர்த்து நாம்‌ மாத்திரமன்றோ இழவோடு போகிறோம்‌ என்றாராம்‌. இவருக்கு ஆச்சாரியார்‌ ஸ்ரீமத்‌ நாத முனிகளும்‌ புருஷாகாரர்‌ (போதித்தவர்‌) மணற்கால நம்பியுமாகும்‌. இவர்‌ 125ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌ என்பர்‌.
ஓம்‌ நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தில்‌ முதற்பதமான பிரணவம்‌ ‘ஒம்‌’ ஸ்வரூப ஞானத்தை விளக்கு கையாலே பகவத்‌ சம்பந்தத்தையும்‌ ‘நம” பதம்‌ பிரபத்தி வித்யா நிஷ்டை (சரணாகதி தத்துவம்‌)யையும்‌, மூன்றாவதான ‘நாராயணாய: என்ற பதம்‌
பகவத்‌ பாகவத கைங்கர்யமாகிற நல்லொழுக்கத்தையும்‌ ஜீவனுக்கு
விளைவிக்கிறது என்பது ஆளவந்தார்‌ கருத்து. திருக்கோஷ்டியூர்‌
நம்பி ஆளவந்தாரிடம்‌ இறைவனை அடைய உபாயம்‌ என்ன என்று கேட்க இறைவனுக்கும்‌ ஜீவனுக்கும்‌ உள்ள உறவு (பர்த்தா, பார்யா) கணவன்‌ மனைவி உறவைப் போன்றது. அறியாமையாகிற அழுக்கு மண்டிக் கிடக்கும்‌ ஜீவன்‌ இவ்வழுக்கை அகற்ற அகற்ற, எம்பெருமான்‌ திருஉள்ளம்‌, கணவன்‌ மனைவியிடம்‌ உள்ள குண நலனள்களும்‌
அழகும்‌ வெளிப்பட வெளிப்பட அவளை நேசிப்பதைப் போல பக்தனிடம்‌ மிகவும்‌ ஈடுபடும்‌ ஆகவே இவனுக்கு வேறு ஒரு உபாயமும்‌ தேவையில்லை என்று கூறினார்‌ என்பர்‌.
ஏழைக்குப்‌ புதையல்‌ கிடைத்ததைப்போல நமக்கெல்லாம்‌’த்வய மந்திரம்‌’ என்பார்‌ ஆளவந்தார்‌. தம்‌ சீடர்களில்‌ ஒருவரான அம்மங்கி என்ற வாலிபனைப் பார்த்து உன்னுடைய வாலிப வயதைக்‌ கவனிக்காமல்‌ உனக்கு பகவத்‌ விஷயத்தைச்‌ சொல்லிவிட்‌டேன்‌. உடம்புக்கு இரையிட்டு ஆத்ம நாசத்தை விளைவிக்காமல்‌,உயிருக்கு இரையிட்டு ஆத்ம ஜீவிதத்தை விளைவிப்பாயாக என்றாராம்‌. இறைவனை அணுகும்போது வேறு எந்தப்பலனையும்‌ விரும்பாது இறைவனையே விரும்பித்தொழ வேண்டும்‌. எம்பெருமானாரின்‌ திருவடிகளை உபாயமாக உடையவனாக இருக்கிறேன்‌.-அந்த எம்பெருமானார்‌ யமுனைத்துறைவர்‌ குலவிளக்காய்‌ இருக்கிறார்‌. அந்த யமுனைத்துறைவர்‌ நாதமுனிகள்‌ வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகள்‌ நம்மாழ்வார்‌ வழிவந்தவர்‌. அந்த நம்மாழ்வார்‌ பெரியபிராட்டியின்‌ திருவருள்‌ பெற்றவர்‌. வரதராஜரே இவ்விதம்‌ தேவருக்கு வழி வழித்‌ தொண்டன்‌. தேவரீர்‌ திருவருளுக்கு உரியவனாகிறேன்‌ என்பது கூரத்தாழ்வான்‌ அருளிய ‘ஸ்ரீவரதராஜஸ்தவம்‌’ ஸ்லோகத்தின்‌ தமிழாக்கச் சுருக்கம்‌.

நிதியைப்‌ பொழியும்‌ முகிலென்று நீசர்‌ தம்வாசல்பற்றித்‌
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன. இனித்தூய்நெறிசேர்‌
எதிகட்கிறைவன்‌ யமுனைத்‌ துறைவன்‌ இணையடியாம்‌
கதிபெற்றுடைய இராமானுசனென்னைக்‌ காத்தனனே

ஆளவந்தார்‌ எழுதிய பிரபந்தங்கள்‌ – ஆகமப்பிராமாண்யமும்‌,புருஷ நிர்ணயமும்‌, ஆத்மஸித்தி ஈஸ்வர ஸித்தி, ஸம்வித்ஸித்தி என்ற ஸித்தித்திரயமும்‌, ஸ்ரீ கீதார்த்த சங்ரஹமும்‌, ஸ்தோத்ர ரத்னமும்‌, சதுஸ்லோகியும்‌ ஆக எட்டும் -. அவரது
குமாரர்கள்‌ திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, தெய்வத்துக்கரசுநம்பி, பிள்ளை அரசு நம்பி, சொட்டை நம்பி என்று பெரிய திருமுடியடைவு குறிப்பிடுகிறது. இவர்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளிய (இறந்த) இடம்‌ பெரிய கோயில்‌, திருப்பள்ளிப்படுத்தப்பட்ட
(அடக்கம்‌ செய்யப்பட்ட) இடம்‌ திருப்பராய்த்துறையாகும்‌.
பரப்பிரஹ்மமே மாயையால்‌ மறைக்கப்பட்டு அறிவு குறைந்த ஜீவனாகவும்‌, சம்ஸாரத்தில்‌ ஈடுபட்டதாகவும்‌ ஆகிறது-அந்தப் பரப்பிரஹ்மமே தேவர்‌ மனிதர்‌ முதலான உண்மையான சரீரங்களாகிற உபாதிகளோடு சம்பந்தப்பட்டு சம்சாரி ஜீவனாகிறது. அந்தப்‌ பரப்பிரஹ்மமே உலகோடு இயல்பாகவே பேதாபேதமுடையதாகையாலும்‌, உலகமாகப்‌ பரிணமிக்கையாலும்‌ தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமாகிறது. -இவ்விதம்‌ கூறும்‌ சங்கரருடைய மாயா வாதமும்‌ பாஸ்கரருடைய ஸத்யோபாதிமதமும்‌, யாதவப் பிரகாசருடைய பேதா பேதமதமுமாகிற மூன்று மதங்களும்‌ ஸ்ருதிக்‌கும்‌ யுக்தக்கும்‌ பொருந்தாதவையாகும்‌. ஆயினும்‌ மோகத்தை விளைவிக்கும்‌ இம் மூன்று மதங்களாகிய இருள்‌ எவரால்‌ தமது
நூல்களின்‌ மூலம்‌ நீக்கப்பட்டதோ, அந்த யமுனைத் துறைவரான ஆளவந்தார்‌ வெற்றியுடன்‌ விளங்குகிறார்‌. ஆளவந்தாராகிய அமுதக் கடலில்‌ மூழ்கி, அறிந்த அளவு நான்‌ பக்தி யோகமாகிற ரத்‌னத்தை எடுத்துக் காண்பிக்கிறேன்‌ என்கிறார்‌. ஸ்ரீ வைகுண்ட கத்ய
மங்கள ஸ்லோகத்தில்‌ கூரத்தாழ்வான்‌.
என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
யானடைவேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிறை வணங்கி
இன்னருளால்‌ பெரும்புதூர்‌ வந்த வள்ளல்‌
பெரியநம்பி, ஆளவந்தார்‌ மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
நாதமுனி சடகோபன்‌ சேனைநாதன்‌
இன்னமுதத்‌ திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே.
நீளவந்தின்று விதி வகையால்‌ நினை ஒன்றிய நாம்‌
மீள வந்தின்னும்‌ வினையுடம்‌ ஒன்றி விழுந்துழலாது ஆள வந்தாரென்று வந்து அருள் தந்து விளங்கிய சீர்‌
ஆளவந்தா ரடியோம படியோமினி அல்வடிக்கே–என்று அருளிச் செய்கிறார்‌ ஸ்ரீ தேசிகர்‌ அதிகார சங்கிரஹம்‌ என்ற நூலில்‌.
“மாதாபிதா யுவதயஸ்தநயாவிபூதிஸ்‌
ஸர்வம்‌ யதேவ நியமேந மநந்வயாநாம்‌
அத்யஸ்யந: குலபதேர்‌ வகுளாபிராமம்‌
ஸ்ரீமத்‌ ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா ॥ ஆளவந்தார்‌ அருளிச்செய்த நம்மாழ்வார்‌ தனியன்‌.
மச்சணியும்‌ மதிள் அரங்கம்‌ வாழ்வித்தான்‌ வாழியே
மறை நான்கும்‌ ஓருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌ வாழியே
பச்சை யிட்ட இராமர்‌ பதம்‌ பகருமவன்‌ வாழியே
பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌ வாழியே
கச்சி நகர்‌ மாயனிருகழல்‌ பணிந்தோன்‌ வாழியே
கடக வுத்த ராடத்துக்‌ காலுதித்தோன்‌ வாழியே
அச்சமற மன மகிழ்ச்சி யணைத்‌ திட்டான்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌ வாழியே

ஆளவந்தார்‌ பிறந்து 11 வருடங்களுக்குப் பின்னர்‌ (கி பி.997-98-ல்‌] மார்கழிக் கேட்டையில்‌ பிராமண குலத்தில்‌ பரத்வாஜ கோத்திரத்தில்‌ பராங்குச தாஸர்‌ என்ற திருநாமத்தில்‌ அவதரித்தவர்‌ பெரியநம்பி ஸ்வாமிகள்‌. ஆளவந்தாருடைய சிஷ்யர்களில்‌ பெருமை பெற்றவர்‌ இவர் தான்‌. எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தவர்‌. ஆளவந்தார்‌ காலத்திற்குப் பின்‌ ஆளவந்தாரது மற்ற சிஷ்யர்கள்‌ கேட்டுக்கொண்டதன்‌ பேரில்‌ இவரே இராமானுஜரை திருவரங்கர்‌ சேவைக்கு அழைத்து வரக்‌ காஞ்சிக்குச்‌ சென்றவர்‌.
காஞ்சியில்‌ தேவப் பெருமானின்‌ நியமனம்‌ பெற்று, இராமானுசரும்‌ இவரிடம்‌ சரண் புக எண்ணி திருவரங்கத்துக்குப்‌ புறப்பட இருவரும்‌ வழியில்‌ மதுராந்தகம்‌ ஏரி காத்த பெருமாள்‌ கோவிலில்‌ சந்திக்க நேர்ந்தது. அங்கு இராமானுசருக்கு ஸமாஸ்ரயணம்‌ நடை பெற்றது.-எம்பெருமானார்‌ வெள்ளை உடுத்தி மேல்‌ நாட்டுக்குச்‌ சென்ற பொழுது, கூரத்தாழ்வானோடு சோழ ராஜனது சபைக்குச் சென்று நம்‌ தர்ஸனத்திற்காகத்‌ தம் தர்ஸனத்தையும்‌ (கண்களையும்‌) உயிரையும்‌ இழந்தவர்‌ தியாக மூர்த்தியான இந்தப்‌ பெருமகனார்‌. இவர் தம்‌ குமாரரான புண்டரீகாக்ஷ்ரையும்‌ பெண்ணான அத்துழாயையும்‌ எம்பெருமானாருடைய திருவடிகளிலேயே சரணமடையச்‌ செய்தவர்‌. ஆளவந்தாரது சிஷ்யரான தாழ்ந்த குலத்தில்‌ பிறந்த மாரனேரி நம்பிக்கு ஈமச்சடங்குகள்‌ செய்து பெருமை பெற்றவர்‌. இவரைப்‌ பற்றிய விரிவான செய்திகளை இராமானுசருடைய வைபவத்தில்‌ காண உள்ளோம்‌.-ஆளவந்தாரது சீடர்கள்‌ எல்லோரும்‌ கூடியிருந்து பெரிய நம்பியிடம்‌, இனி இந்தத்‌ தர்ஸனத்தை நடத்துபவர்‌ யார்‌? என்று கேட்க இவரும்‌ முன்னர்‌ இராமானுஜர்‌, தான்‌ ஆளவந்தாரது மூன்று ஆசைகளையும்‌ நிறைவேற்றுவதாகச்‌ சொன்னவுடனேயே அவரது விரல்கள்‌ நிமிர்ந்தனவே, அந்தக்‌ குறியீடே ஆளவந்தார்‌ தமக்குப்‌ பின்‌ அந்தப் பணியை இராமானுஜர் தான்‌ செய்ய வேண்டும்‌ என்று விரும்பினார்‌ என்பதைத்‌ தெரிவிக்கவில்லையா என்று சொல்ல, எல்லோரும்‌ இராமானுசரையே தம்‌ ஆச்சாரியராக முடிவு செய்து அவரைக்‌ காஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்து வருமாறு பெரிய நம்பியையே அனுப்பினார்கள்‌. அவரும்‌ அப்போதே குடும்ப சகிதமாகப்‌ புறப்பட்டு நம்‌ பெருமாள்‌ அனுமதி பெற்று, காஞ்சிக்குச்‌ செல்லும்‌ வழியில்‌, மதுராந்தகத்தில்‌ ஏரி காத்த பெருமாள்‌ கோயிலிலே, இராமானுஜரும்‌ ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌ அங்கு வர இருவரும்‌ சந்தித்து மிகப் பிரீதியுடன்‌ தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர்‌. இளையாழ்வாரும்‌ பெரிய நம்பியைத்‌ தனக்கு அப்‌போதே ஹிதோபதேசம்‌ செய்து ரட்சிக்க வேண்டும்‌ என்று விண்‌ணப்பிக்க, பெரிய நம்பியும்‌ இவருடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து திருவிலச்சனை பிரசாதித்து (சங்கு சக்கர முத்திரைகளைக்‌ கையில்‌ பொரித்து) தன்‌ வலது புறத்தில்‌ அடக்கத்தோடும்‌ அஞ்சலியோடும்‌ கூடிய சீடனை இருத்தி ஞானத்தைத்‌ தரவல்ல தனது வலது கரத்தைச்‌ சீடனின்‌ சிரசில்‌ வைத்து தனது இடது கையைச்‌ சீடனின்‌ மார்பில்‌ வைத்து, அருளுடன்‌ சீடனை ஆச்சார்யன்‌ காப்பாற்றக் கடவன்‌, தன்‌ ஆச்சார்யனை இருதயத்தில்‌ தியானித்து குரு பரம்பரையை ஜபித்து, இவ் வகையாக எம்பெருமானைச்‌ சரண மடைந்து, ரிஷி, சந்தஸ்‌ தேவதைகளுடன்‌ கூடிய மூமலந்திரத்தைத்‌ தானே சீடனுக்குக்‌ கருணையால்‌ உபதேசிக்கக்‌ கடவன்‌ என்று சொல்லுகிறாப்போல, ஆளவந்தார்‌ திருவடிகளை மனதில்‌ தியானம்‌ பண்ணிக் கொண்டு த்வயத்தை (மந்திர ரத்னத்தை) இராமானுஜருக்கு அவரது வலது காதில்‌ ஓதினார்‌.-இராமபிரான்‌ தன்‌ பாதுகைகளைப்‌ பரதாழ்வானிடம்‌ கொடுத்‌துக்‌ காட்டுக்குப்‌ போனாற்போல, ஆளவந்தாரது ஏவலாளன்‌ நான்‌.உமக்கு நேரே ஆச்சார்யார்‌, யமுனைத்‌ துறைவரான ஆளவந்தாரே என்று கூறினார்‌. ஆதலால் தான்‌ இராமானுஜ நூற்றந்தாதியில்‌-பிள்ளை அமுதனார்‌ ‘எதிகட்கு இறைவன்‌ யமுனைத் துறைவன்‌ இணையடியாம்‌ கதிபெற்றுடைய இராமானுஜன்‌ ‘என்றருளிச்‌ செய்‌தார்‌. இராமானுஜரும்‌ ‘பிரமாணம்‌ எது? பிரமேயம்‌ எது? பிரமாதாக்‌கள்‌ யார்‌? என்று பெரிய நம்பியைக்‌ கேட்க, அவரும்‌ மாதவன்‌ பேர்‌ சொல்வதே ஓத்தின்‌ சுருக்கு என்றபடியே ‘பிரமாணம்‌ த்வயமே’. பிரமேயமும்‌ அத்தகிரி மேலிருக்கும்‌ பெருமாளே, பிரமாதா நீர் தாம்‌. இந்தப் பிரமாணத்தாலே பிரமேயத்தை அனுபவிக்க வாரும்‌ என்று கூறினார்‌. இருவரும்‌ காஞ்சியில்‌ பெருமாள்‌ கோவிலுக்குச்‌ சென்றார்கள்‌. அங்கு திருக்கச்சி நம்பியும்‌ பெரிய நம்‌பியைச்‌ சரணடைய அவரையும்‌ ஆசீர்வதித்து ஏற்றுக் கொண்டார்‌. இராமானுஜர்‌ பெரிய நம்பிகளைக்‌ குடும்பத்துடன்‌ தன்‌ இல்‌லத்துக்கு அழைத்துச் சென்று தம்‌ தேவியையும்‌ பெரிய நம்பி திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கச்‌ செய்தார்‌. பெரிய நம்பி இளையாழ்வாருக்கு திருவாய்மொழி நீங்கலாக அருளிச் செயல்‌ மூவாயிரத்தையும்‌, தர்ஸனார்த்‌தங்களையும்‌ போதித்துக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது அவ்விருவருடைய தேவிகளுக்குள்ளும்‌ மனஸ்தாபம்‌ வர, பெரியநம்பி, இளையாழ்வாரிடம்‌ சொல்லாமலே மனைவியுடன்‌ ஸ்ரீரங்கத்திற்குத்‌ திரும்பிவிட்டார்‌.-பெரிய நம்பி திருமகளாரான அத்துழாய்‌ புக்ககத்தில்‌ வாழுங்‌காலத்தில்‌, ஒருநாள்‌ நீராடி வரத் துணைக்கு வருமாறு மாமியாரை வேண்ட அவளும்‌ உன்‌ சீதன வெள்ளாட்டியை அழைத்துக்‌ கொண்டு போ என்று சொல்லி விடவே, அத்துழாய்‌ பெரிய நம்பியிடம்‌ விவரம்‌ கூற அவர்‌ ‘எனக்குத்‌ தெரியாது. உங்கள்‌ ஜீயரிடம்‌ (இராமானுஜர்‌) சொல்‌ என்று கூறிவிட, அவளும்‌ அங்கே போய்‌ விண்ணப்பம்‌ செய்ய, ஜீயரும்‌ அருகிருந்த முதலியாண்‌டானை “இந்தாரும்‌ உமக்குச்‌ சீதன வெள்ளாட்டி என்று சொல்லி“போம்‌” என்ன ஆண்டானும்‌ கூடப்‌ போய்‌ நீராடப் பண்ணுவித்து அவளுடைய புக்கத்தில்‌ வேலை செய்யத்‌ தொடங்க, புக்ககத்தார்‌ அவரிடம்‌ ஆண்டான்‌ இது என்‌’ என்று கேட்க அவரும்‌ என்னை வரவிட்ட ஜீயரைக்‌ கேளுங்கள்‌. ஆச்சார்யார்‌ சொன்னதைச்‌ செய்ய வேணுமே’ என்று சொல்லிவிடவே அவர்களும்‌ பெரிய நம்பியிடம்‌ போய்‌, ‘முதலியாண்டானை அனுப்பி எங்களை இப்படித்‌ தண்டிக்க வேண்டுமா: என்று கேட்க அவரும்‌ ‘நான்‌ அறிந்தேனா? ஜீயரைக்‌ கேளுங்கள்‌ என்று சொல்லி விடவே அவர்களும்‌ அங்கே சென்று விண்ணப்பிக்க இராமானுசரும்‌, அத்துழாய்க்குச்‌ சீதன வேலைக்காரியாகத்‌ தந்தோம்‌ அவர்‌ அங்கிருப்பது பிடிக்கவில்லையாகில்‌ இங்கிருந்து அடிமை செய்கிறார்‌ என்று மீண்டும்‌ அவரை அழைப்பித்துக்‌ கொண்டார்‌.பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு அந்திமக் கிரியைகள்‌ செய்ததைக்‌ கேட்ட இராமானுஜர்‌ அவரிடம்‌ ‘இவ்வாறு செய்யலாமா:என்று கேட்க அவரும்‌ இக்ஷ்வாகு வம்சத்து இராமபிரான்‌ சடாயுக்கு ஈமக்கிரியைகள்‌ செய்ய வில்லையா? அவரைவிட நான்‌ உயர்ந்தவனா? ஜடாயுவை விட இவர்‌ தாழ்ந்தவரா? தருமபுத்திரன்‌ விதுரனுக்குச்‌ செய்ய வில்லையா?தருமரைக்‌ காட்டிலும்‌ நான்‌ உயர்ந்தவனா? விதுரனைக் காட்டிலும்‌ இவர்‌ சிறியவரா? இத்தகைய மகான்கள்‌ விஷயத்திலாவது இதைச்‌ செய்யாவிடில்‌ நம்மாழ்‌வார்‌ அருளிச்செய்த ‘பயலுஞ்சுடரொளி’ (திருவாய்‌ 3:7) நெடுமாற்‌கடிமை (இருவா 8:10) என்னும்‌ திருவாய்மொழிகள்‌ கடலோசை போல பொருளற்றதாகி விட்டதா என்று சொல்ல இராமானுஜரும்‌ கேட்டு உகந்து இசைந்தார்‌. பெரியநம்பி செய்த இக்காரியத்தைக்‌ கண்டு ஸ்ரீரங்கத்தில்‌அந்தணர்‌ பெரும்பாலோர்‌ அவரைத்‌ தள்ளி வைத்தனர்‌ என்றும்‌, நம்பெருமாள்‌ சித்திரைத்‌ தேரில்‌ எழுந்தருளும்போது, பெரிய நம்பி திருமாளிகையிலிருந்து தேர்‌ நகராமல்‌ நிற்கவே அவருக்கு அருளப்‌ பாடிட்டுத்‌ தீர்த்தப் பிரசாதம்‌ சாதித்து அவர்‌ பெருமையை அனைவருக்கும்‌ உணர்த்திய பின்னரே தேர் மேலே புறப்பட்டது என்பதும்‌ வரலாற்றுச்செய்தி.-சோழ மன்னனால்‌ கண்கள்‌ பிடுங்கப்பட்டு சோழபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம்‌ திரும்பி வரும்‌ வழியில்‌ பெரிய நம்பிக்கு அந்திம காலம்‌ நெருங்க வரும் பொழுது உயிர்‌ பிரியுமுன்‌ ஸ்ரீரங்கம்‌ சென்று விட வேண்டும்‌. வேகமாகச்‌ செல்ல வாகனம்‌ இருந்தால்‌ நன்றாக இருக்கும்‌ என்று அவர்‌ குமாரி அத்துழாய்‌ தெரிவித்தபோது இங்கேயே உயிர்‌ பிரிந்தாலும்‌ எம்பெருமான்‌ அருளாலே பரமபதம்‌ நிச்சயம்‌. ஸ்ரீரங்கத்துக்குப் போய்‌ பிராணனை விட்டால்‌, மற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ இதை முன் மாதிரியாகக்‌ கொண்டு ஸ்ரீரங்கத்‌திதில்‌ மரணமடைந்தால் தான்‌ மோட்சம்‌ என்று முடிவு கட்டி மற்ற இடங்களில்‌ உயிர் விடப்‌ பயப்படுவார்கள்‌ என்று சொல்லி வழியிலேயே பரமபதமடைந்தார்‌ என்று அறிகிறோம்‌.-பதி விரதைக்கு மங்கள ஸூத்திரம்‌ போல நமக்குத்‌ ‘த்வயம்‌:என்பார்‌ பெரியநம்பி. ஒரு தரம்‌ பிள்ளை உறங்கா வில்லி தாஸர்‌ என்ற வைணவர்‌ இராமானுஜரிடம்‌, விபீஷணாழ்வார்‌, இராமபிரானிடம்‌ சரணம்‌ புக வந்தபோது, வானர சேனைகள்‌ அவரைத்‌ தடியாலும்‌ கல்லாலும்‌ அடித்தனர்‌ என்பதை எண்ணிப் பயப்படுகிறேன்‌ என்ற போது இராமானுஜர்‌ கமுகுண்ணில்‌ வாழை உண்ணும்‌.எமக்குப்‌ பெரிய நம்பியுண்டு. உமக்கு நானுண்டு. கமுகுக்குத்‌ தண்ணீர்‌ பாய்ச்சும் பொழுது வாழையும்‌ அந்நீரை உண்டு வளருவதைப்‌ போல, பெரிய நம்பி சம்பந்தத்தைப் பார்த்து பெருமாள்‌ என்னை ரக்ஷிப்பார்‌. என்‌ சம்பந்தத்தைப் பார்த்து உம்மையும்‌ ரட்சிப்‌பார்‌ என்று கூறித்‌ தேற்றினாராம்‌.-ஒரு நாள்‌ இராமானுஜரும்‌ முதலிகளும்‌ எழுந்தருள பெரிய நம்பி தண்டனிட இராமானுஜர்‌ அஞ்சலி பண்ணிப் போக முதலிகள்‌ இது ஏன்‌ என்று வினவ, இராமபிரான்‌ கட்டளை யிட்டதற்கு இணங்கி பரதன்‌ அரச பாரத்தை ஏற்றுக் கொண்டதைப் போல
பெரிய நம்பி தண்டனிட்டதை ஏற்றுக் கொள்வதே நமக்கு ஸ்வரூபம்‌ என்றாராம்‌.

ஒரு நாள்‌ பெரிய நம்பி திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாலையாண்டான்‌ மூவருங்‌ கூடி யிருந்து தங்கள்‌ ஆச்சாரியாரான ஆளவந்தார்‌ வைபவத்தை எண்ணி அனுபவித்துக்‌ கொண்டிருந்தபொழுது திருவரங்கச் செல்வர்‌ (பலி சாதிக்கும்‌ பெருமாள்‌) புறப்பட இவர்களது பகவத்‌ பாகவத ஆச்சார்ய அனுபவத்துக்குத்‌ தடை பிறந்து எழுந்திருந்து தண்டனிட வேண்டுமாகையால்‌ கூட்டம்‌ கலக்கியார்‌ வந்தார்‌. இனிமேல்‌ பலி பெருமான்‌ எழுந்தருளாத கோயிலிலேயே இருக்கக் கடவோம்‌ என்று நீர்மானித்ததாகவும்‌, இவ்வாறு மகாத்‌மாக்களுக்குத்‌ தொல்லையா யிருப்பதைப்‌ பார்த்த திருவரங்கச்‌ செல்‌வர்‌, தம்மைப்‌ பலி சாதிக்க எழுந்தருளப்‌ பண்ண வேண்டாம்‌ என்று நியமித்து விட்டதாகவும்‌ அந்த நியமனம்‌ இன்றளவும்‌ நடப்பதாகவும்‌ கூறுவர்‌. வித்தாகுங் காய்‌ பிஞ்சிலேயே தெரியும்‌ என்றார்‌ பெரியநம்பி, உலகம்‌ வாழ வந்தவர்‌ எம்பெருமானார்‌ என்பதை அவருடைய சிறுவயதிலேயே நாங்கள்‌ கண்டு கொண்டு விட்‌ டோம்‌ என்ற கருத்தில்‌.-ஏற்றங்கள்‌ பிராமணரல்லாத ஸ்ரீ வைஷ்ணவர்களிடமும்‌ இருக்‌கிறது என்பதை மனதில்‌ கொண்டே ஸ்ரீராமபிரான்‌ ரிஷிகளைக்‌ காட்டிலும்‌ குகப் பெருமானிடமும்‌, வானர முதலிகளிடமும்‌, விபீஷணாழ்வாரிடமும்‌ ஈடுபட்டார்‌. நம்‌ பெருமாள்‌ லோக சாரங்க முனியைக் காட்டிலும்‌ திருப்பாணாழ்வாரிடமும்‌ திருமலையப்‌பன்‌, முடி மன்னனாகிய தொண்டைமான்‌ சக்கரவர்த்தியைக்‌ காட்டிலும்‌, குயவரான குறும்பறுத்த நம்பியிடமும்‌ ஈடுபட்டார்‌. பெரியநம்பி பிராமண, ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய விரோதத்தைப்‌ பொருட்படுத்தாமல்‌ மாறனோர்‌ நம்பிக்கு அந்திம ஸம்ஸ்காரங்கள்‌ செய்தருளினார்‌. ஆகவே இதை உணர்ந்தவர்கள்‌ சாத்தாத முதலிகளின்‌ (பிராமணரல்லாதவர்‌) பெருமையை அறிவர்களாதலால்‌ அவர்களிடம்‌ அபசாரம்‌ ஏற்படாது. எம்பெருமான்‌ திருவடிகள்‌ எளிதில்‌ கிட்டும்‌ என்று இராமானுஜர்‌ முதலியாண்டானுக்கு ௮ருளிச் செய்தார்‌-ஆளவந்தாருடைய கட்டளையாலே ஸ்ரீ பாஷ்யகாரரான இராமானுஜரை அங்கீ கரித்த பூர்ணரான பெரிய நம்பி, அவரைத்‌ தமக்கு நண்பர்களான திருக்கோட்டியூர்‌ நம்பியிடம்‌, அர்த்த சிக்ஷை பண்ணவும்‌, திருமாலை யாண்டானிடம்‌ திருவாய்மொழி கேட்கவும்‌, திருவரங்கப் பெருமான்‌ அரையரிடம்‌ நல்‌ வார்த்தை கேட்கவும்‌ நியமித்‌தார்‌. பெரிய நம்பி சோழ மன்னனால்‌ ஹிம்சிக்கப்பட்டு கண்ணையும்‌ இழந்து வரும்‌ வழியில்‌, இறுதிக் காலம்‌ நெருங்கவே ஆழ்வான்‌ மடியிலே கண் வளர, கோயிலும்‌ பாஷ்யகாரரும்‌ இருக்க, இங்கே மரணம்‌ ஏற்படவா என்று ஆழ்வான்‌ சோகிக்க, பெரிய நம்பி ஒரு பாகவதர்‌ மடியை விடக்‌ கோயில்‌ சிறப்பான தல்ல என்று கூறி உயிர்‌ நீத்தார்‌. பாஷ்யகாரருக்கு ‘த்வயத்தை’ அருளிச்‌ செய்தவர்‌ பெரியநம்பி, அதன்‌ அர்த்தத்தை அருளிச்‌ செய்தவர்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி, ஞான பூர்ணரான ஆளவந்தார்‌ சீடர்‌ பெரிய நம்பி அருளிய திருப்பாணாழ்வார்‌ தனியனில்‌ இரு காவிரிகளுக்கு நடுவில்‌ பள்ளி கொண்ட பெருமாளைத்‌ திருவடி முதல்‌ திருமுடி வரை அனுபவித்து பேரானந்தம்‌ கொண்ட நெஞ்சினராய்த்‌ தம்‌ கண்கள்‌ மற்றொன்றைக்‌ காணா என்று எவர்‌ அறுதியிட்டாரோ, அந்த முனி வாஹனரை அனுசந்திக்கிறேன்‌ என்றார்‌. பெரிய நம்பிக்குத்‌ திரு அவதாரஸ்தலம்‌ கோயில்‌ (ஸ்ரீரங்கம்‌) இவரது இதர திருநாமங்கள்‌ பராங்குசதாஸர்‌, மஹாபூர்ணர்‌ பூரணாசார்யார்‌ என்பன. இவரது குமாரர்‌-பெயர்‌ புண்டரீகாக்ஷர்‌ திருவாராதனப் பெருமாள்‌ அழகிய சிங்கன்‌-இவரது ஆச்சாரியார்‌ ஆளவந்தார்‌. இவரது சிஷ்யர்கள்‌ திருக்கச்சி நம்பி, எம்பெருமானார்‌, மலைகுனிய நின்றார்‌, சடகோப தாஸர்‌,அணி அரங்கத்தமுதனார்‌ (திருவரங்கத்தமுதனாரின்‌ தந்‌தை ) திருவாய்க்குலமுடையார்‌ பட்டர்‌ முதலானோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌. இவர்‌ இறந்த இடம்‌, சோழ தேசத்தில்‌ பசுபதி கோயில்‌.

அம்புவியில்‌ பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணையை அடைந்துய்ந்தோன்‌ வாழியே.
உம்பர் தொழும்‌ அரங்கேசர்க்குகப் புடையோன்‌ வாழியே.
ஓங்கு தனுக் கேட்டை தனில்‌ உதித்த பிரான்‌ வாழியே.
வம்பவிழ்தார்‌ வரதருரை வாழ்வளித்தான்‌ வாழியே.
மாறனோர்‌ நம்பிக்கு வாழ்வளித்தான்‌ வாழியே.
எம்பெருமானார்‌ முனிவர்க்‌ கிதமுரைத்தான்‌ வாழியே.
எழில்‌ பெரிய நம்பி சரண்‌ இனிதூழி வாழியே.

ஆளவந்தார்‌ அவதரித்துப்‌ 11 வருடங்கள்‌ கழிந்த பின்‌ கிபி-987-ல்‌ பெரியாழ்வாருக்குப்‌ பரம ஆப்தரான செல்வ நம்பியின்‌ சந்ததியில்‌ பிராமண குலத்திலே திருக்குருகைப்பிரான்‌ என்னும்‌ திருநாமமுடையவராய்ப்‌ பிறந்தார்‌ திருக்கோஷ்டியூர்‌ நம்பி. நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார்‌, மணற்கால்‌ நம்பி மூலம்‌ கிடைத்த அந்தப் பவித்ரமான இராமானுஜ விக்ரகத்தை ஆளவந்தார்‌ தம்முடைய அந்திம காலத்தில்‌ இவரிடம்‌ கொடுத்து அது வந்த
வழியையும்‌ கூறி ரகஸ்யார்த்தங்கள்‌ அனைத்தையும்‌ இராமானுஜருக்கு உபதேசிக்கும்படியும்‌, நம்‌ தர்ஸனத்தை அவர்‌ நாமத்தாலே விளங்க வைக்கும்படியும்‌ நியமித்துச்‌ சென்றார்‌. அதன்படியே நம்பியும்‌, அனுவருத்தி பிர்சந்நாச்சாரியார்‌ (ஒராண் வழி ஆச்சார்‌யர்‌] பரம்பரை தன்னுடன்‌ முடிவு பெற்று எம்பெருமானார்‌ தொடங்கி (கிருபாமாத்ர பிரசந்நாச்சார்யார்‌) ஆசையுள்ளோர்‌ அனைவரும்‌ கற்கும்‌ உரிமைகளுடைய பரம்பரை வளர வேண்டும்‌ என்னும்‌, திருவுள்ளத்தாலே ஸ்ரீ ராமானுஜரை பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு நடக்கச் செய்து வேறு யாருக்கும்‌ உபதேசிக்கக் கூடாது என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவருக்குத்‌ திருமந்‌திரத்தை உபதேசிதார்‌. இராமானுஜர்‌ தம்‌ எல்லையற்ற கருணையினால்‌ ஆச்சார்யார்‌ கட்டளையையும்‌ மீறித்‌ தமக்கு நரகம்‌ வந்தாலும்‌ வரட்டும்‌. பலர்‌ உய்ந்து போனால்‌ போதும்‌ என்னும்‌ திருஉள்ளத்துடன்‌ பலருக்கும்‌ திருமந்திரத்தை உபதேசித்தார்‌. இதைக் கேள்விப்‌பட்ட நம்பி ‘எம்பெருமானாரே’ என்று இராமானுஜரை அணைத்‌துக் கொண்டு, அவர்‌ பெயராலேயே எம்பெருமானார்‌ தர்சனம்‌ என்றே அந்தத் தர்சனம்‌ விளங்கட்டும்‌ என்று அனுக்கிரகித்து அவருக்குத்‌ தாமே சரம ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை] உபதேசித்து அதைத் தக்க அதிகாரிகளுக்கு உபதேசிக்கும்படி கட்டளையிட்டார்‌-திருமாலை யாண்டானை எம்பெருமானாருக்குத்‌ திருவாய்‌மொழி காலட்சேபம்‌ சொல்லும்படி நியமித்தவரும்‌ இவரே-ஆளவந்தாரிடம்‌ கேட்காத அர்த்தங்களை விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியாக (தானே புதிதாக உண்டாக்கி) எம்பெருமானார்‌ கூறியதாலே கோபமடைந்த திருமாலையாண்டான்‌ காலட்சேபத்தை நிறுத்திய பொழுது எம்பெருமானாருடைய பெருமையைத்‌ திருமாலை யாண்‌டானுக்கு எடுத்துரைத்து மறுபடியும்‌ காலட்சேபம்‌ தொடங்குமாறு செய்தவரும்‌ இவரே. இராமானுஜர்‌ உஞ்ச விருத்தி செய்து வரும்‌பொழுது ஸ்ரீரங்கத்தில்‌ உள்ள ஒருவர்‌ விஷங்கலந்த அன்னத்தை இட்டபடியால்‌, இராமானுஜர்‌ உபவாசமிருக்கிறார்‌ என்று கேள்விப்‌பட்டுத்‌ திருக்கோஷ்டியிலிருந்து பதறி ஓடிவந்து, எம்பெருமானார்‌ சிஷ்யர்களில்‌ கிடாம்பி யாச்சானுக்கே, எம்பெருமானாரது திருமேனியில்‌ பரிவு உள்ளதைச்‌ சோதித்து தெரிந்து கொண்டு அவரை உடையவருக்கு மடப்பள்ளிக்‌ கைங்கர்யம்‌ செய்யுமாறு நியமித்தவரும்‌ இவரே. இவற்றிலிருந்து இவர்‌ ஒரு பெரிய தீர்க்கதரிசி என்பதும்‌ எம்பெருமானாரிடம்‌ பொங்கும்‌ பரிவை உடையவர்‌ என்பதும்‌ தமக்குக்‌ கெட்ட பெயர்‌ ஏற்படும்‌ என்றாலும்‌ எம்பெருமானாருக்குச்‌ சிறப்பு விளைவிப்பதில்‌ ஊன்றி நின்றவர்‌ என்பதுவும்‌, ஆளவந்தார்‌ சிஷ்யர்களில்‌ தலைமை பெற்றவர்‌ என்பதும்‌ விளங்குகிறது.இவர்‌ குமாரத்தி தேவகிப்பிராட்டி ஒரு ஞானாதிகை (ஞானம்‌ வாய்க்கப் பெற்றவர்‌). எம்பெருமானாருடைய சிஷ்யை! உந்து மத களிற்றன்‌ பாட்டை (திருப்பாவை 18) எம்பெருமானார்‌ பாடிக்‌கொண்டு உஞ்ச விருத்திக்கு வந்த பொழுது திருக்கோட்டியூர்‌ நம்பி வாசலிலே செந்தாமரைக்‌ கையால்‌ சீரார்‌ வளை யொலிப்ப வந்து திறவாய்‌ மகிழ்ந்து என்று பாடிய அளவிலே, தேவகிப் பிராட்டியார்‌ கதவைத் திறக்க அவளை நப்பின்னையாகவே எண்ணித் திருவடியில்‌ விழுந்தார்‌, எம்பெருமானார்‌ என்ற விபரம்‌ பல நூல்களில்‌ காண்கிறோம்‌.திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாளிகை வாசலிலே திருப்பாவை அனுசந்தானத்துடனே தண்டன்‌ சமர்ப்பித்து சீரார்‌ வளை யொலிப்ப வந்து திறவாய்‌ மகிழ்ந்து என்ற விருத்தாந்தம்‌ ராமானுஜார்ய திவ்ய சரிதையில்‌ பின் வருமாறு உள்ளது.மாதுகரத்துத்‌ கெழுந்தருளிவரும்‌ போதன்றிப்‌ போம் போதும்‌ ஓதும்‌ கோதை திருப்பாவை உரையோடுலாவித் திரிபவரும்‌ வேதம்‌ வல்ல திருக்கோட்டி நம்பி மனையில்‌ மெய் ஞானப்‌போதமுடையார்‌ ஆங்கொரு நாள் புக்கார்‌ உந்து மகளிற்றில்‌.(மாதுகரம்‌-பிக்ஷ, மெய்ஞ்ஞான போதம்‌ மெய்ஞான அறிவு).பந்தார்‌ விரலி உன்‌ மைத்துனன்‌ பேர் பாடச்‌ செந்தாமரைக் கையால்‌ சீரார்‌ வளை யொலிப்ப வந்தாரணங்கே திறவென்ன வாசலின் முன்‌ எந் தாதை நின்றார்‌, அவ்வெல்லையினில்‌ நம்பி தரும்‌ அன்னமென்‌ நடையாள்‌ தேவகி யென்னும்‌ அரும் பெயருடைய ஆரணங்கு தன்னொரு கரத்தால்‌ கந்துகமொன்று தாங்கியோர்‌ தாமரைக்‌ கையால்‌ இன்னிசை எதிகட்கிறைவனார் திறவென்‌றிசைத்தசொல்‌ இறுமுனம்‌ திறந்தாள்‌ மின்னுமா மணி சேர்ந்திலங்கிய கபாடம்‌ விண்டுவின்‌ தொண்டர்‌ மெல்லியவாள்‌ கண்டனர்‌. பின்னைப்‌ பிராட்டி மற்றிவளும்‌ கள்வனேன்‌ பொருட்டினாலலர்ந்த புண்டரீகச்சீர்‌ திருவடி வருந்தப்‌ போந்திவை திறந்தனளென்னப்‌ பண்தரும்‌ பனுவல்‌ மறந்தனர்‌, மண்ணில்‌ பதைப்புற வொடுங்கினர்‌, விழுந்தார்‌ ஒண்டொடி கண்டு வெகுளியோடேகி உற்றதைப்‌ பெற்றவர்க்‌ குரைப்பாள்‌ என்றிவை மகளார்‌ இயம்பிட நம்பி இன்பமுற்றிருந்து இளையாழ்வீர்‌! ஒன்று சீர்‌ உந்து மதகளிறென்ன ஓதிய பாடலோ சந்தை இன்று நம்‌ வாசல்‌ தலையுறுமளவில்‌ என்றனர்‌. ‘ஆம்‌’ என எழுந்து சென்று மா மாதுகரம்‌ பரிமாறத்‌ தேசிகக்‌ குன்றையும்‌ வணங்கி-என்று வடிவழகிய நம்பி தாஸராலும்‌-இவ் விருத்தாந்தம்‌ வர்ணிக்கப்‌பட்டுள்ளது.

இராமானுஜர்‌ திருக் கோட்டியூர்‌ சென்று அங்குள்ளவர்களிடம்‌ நம்பி திருமாளிகை எங்கே என்று கேட்க அவர்களும்‌ அதோ தெரிகிற கூரை என்று கூறக் கேட்டு அவ் விடத்திருந்தே நம்பி திருமாளிகை யளவும்‌ தண்டனிட்டுக் கொண்டே எழுந்தருளியதால்‌, அவ்வூரிலுள்ள, குற்றமின்றிக்‌ குருக்களுக்கு அனுகூலராய்‌ வாழும்‌ நல்லவர்கள்‌ நம்பியின்‌ பெருமையை அறிந்து அவரை வழிபடலா யினர்‌.
ஒரு நாள்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி கோயில்‌ தர்ஸனம்‌ செய்து திரும்பும்பொழுது எம்பெருமானார்‌ அவரை அணுகித்‌ தனக்குத்‌ தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளுமாறு வேண்ட அவரும்‌ தான்‌ ஆச்சார்யார்‌ ஆளவந்தார்‌ நீராடும் பொழுது அவரது திரு முகுது இருக்கும்‌ அழகைக் கண்டு அதுவே தஞ்சம்‌ என்றிருப்பேன்‌. நீரும்‌ மறவாமல்‌ இதை நினைத்திரும்‌ என்றாராம்‌ கூரத்தாழ்வான்‌ ஒரு மாத காலம்‌ உபவாசமிருந்து இராமானுஜரிடமிருந்து சரம ஸ்லோகத்தின்‌ பொருளை அறிந்து கொண்டவராதலால்‌, முதலியாண்‌டான்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பி பக்கம்‌ ஆறுமாதம்‌ தொண்டு செய்து அவரிடம்‌ ஸ்வரூப சிட்சை பெற்றபின்னர்‌ இராமானுஜரிடம்‌ சரம ஸ்லோகார்த்தத்தைப்‌ பெற்றார்‌.
திருக்கோஷ்டியூர்‌ நம்பி இராமானுஜருக்கு அருளிச்செய்த உபதேச மொழிகள்‌ வருமாறு. ஒரு பக்தனது நித்தியக் கடமைகள்‌ முறையே, ஆஸ்ரயண விரோதி, அதாவது நான்‌, எனது என்னும்‌ அகங்கார மமகாரங்களும்‌ உடலின்‌ மேல்‌ உள்ள ஆசையும்‌ நீக்குதல்‌, அடுத்தது புருஷாகாரமான பிராட்டியையும்‌, ஆச்சார்யர்களையும்‌ அவமதிக்காது இருப்பது, அடுத்து பகவத்‌ பிராப்தி (அருள்‌)கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயமும்‌ ஒரு ஜீவனை எம்பெருமானை அணுகாதபடி தடுத்து விடுகின்றது என்ற கருத்து, அடுத்து ஸ்ரவண விரோதி என்பது தன்னை மறந்து மற்ற தெய்வங்களைப்‌பற்றிய கதைகளைக்‌ கேட்பது எம்பெருமானைப் பற்றிய பெருமைகளைக்‌ கேட்பதைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து, அடுத்து அனுபவ விரோதி என்பது சந்தனம்‌, புஷ்பம்‌ முதலான போகப் பொருள்‌களை உபயோகிப்பதால்‌ உலக இச்சைகளில்‌ பற்றுகளை விளைவிப்பதன்‌ மூலம்‌ பகவதனுபவத்தைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து.-அடுத்து ஸ்வரூப விரோதி என்பது எம்பெருமான்‌ இட்ட வழக்காக பரதந்திரனாக இல்லாமல்‌ தன்னை ஸ்வதந்தந்திரனாக நினைத்து அவன்‌ ஆணையை மீறுவது. அடுத்து பரத்வ விரோது என்பது பிரமன்‌, உருத்திரன்‌ முதலான தேவதைகள்‌ தன்னை விட விஞ்சியவர்களாக இருப்பதால்‌ அவர்களை வணங்கினால்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அறிய முடியாதபடி தடுத்து விடும்‌ என்ற கருத்து=அடுத்து ப்ராப்தி விரோதி என்பது எம்பெருமானை இனியவனாக
நினையாது தனக்கு உடல்‌ சம்பந்தமான காரியங்களைச்‌ செய்து தரும்‌ பாவனனாக நினைப்பவரோடு சேருவது பகவத் பிராப்தியைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து என்பதாகும்‌.-பொன்னைப் புடம்‌ போடப்‌ போட ஒளி விஞ்சுவதைப் போல ஜீவாத்மா ஸ்வரூபம்‌ பொன்‌ போல குற்றமற்றது. தேக சம்பந்தத்‌தால்‌ ஏற்பட்ட அழுக்குகள்‌ நீங்கி முக்தி நிலையில்‌ அனன்ய சேஷத்வம்‌, அனன்ய சரணத்வம்‌, அனன்ய போக்யத்வம்‌, ஸம்ஸ்‌லேஷத்தில்‌ (கூடினால்‌) தரிப்பது, பிரிந்தால்‌ தரியாமை, எம்பெருமானிட்ட வழக்கா யிருக்கை என்னும்‌ ஆறு வகையாலே ஜீவனுக்கு நற் கதி உண்டாகும்‌ என்ற கருத்து. எம்பெருமான்‌ உபேயமாகும்‌ போது பிராட்டிமார்‌ நித்ய முக்தர்கள்‌ முதலானவர்களோடு சேர்ந்தே உபேயமாகிறான்‌.
திருக்கோஷ்டியூர்‌ நம்பி தனது அந்திம காலத்தில்‌ தன்‌ குமாரத்தி தேவகிப் பிராட்டியிடம்‌ என்‌ பிரயாணத்தில்‌ (மரணத்தில்‌) நீ நினைத்திருப்பது என்‌ என்று கேட்க, ‘அய்யரே, எங்கள்‌ ஆச்சார்யரான எம்பெருமானாரோடு உண்டான சம்பந்தத்தினால்‌ தேவரீருக்கு நற்கது உண்டாகப்‌ போகிறது என்று நினைத்தேன்‌’ என்றாளாம்‌. அவரும்‌ தன்‌ மகளிடம்‌ ஆளவந்தாரிடம்‌ பெற்ற இராமானுஜர்‌ விக்ரகத்தைக்‌ கொடுத்து வளர்த்ததனால்‌ ஆய பயன்‌ பெற்றேன்‌ என்று கூறி எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌ என்று கூறி திருநாடு ஏகினார்‌.
திருக்கோட்டியூர்‌ நம்பியின்‌ வேறு திருநாமங்கள்‌:- கோஷ்டிபூரணர்‌, கோஷ்டி புரீசர்‌, என்பன. இவரது குமாரரான தெற்காழ்வானும்‌, இராமானுஜரது சீடரே. இவரது இருப்பிடம்‌ திருக்கோஷ்டியூர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌.

மன்னியசீர்‌ ஆளவந்தார்‌ மலர்ப்பதத்தோன்‌ வாழியே.
வைகாசிரோஹினிநாள்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
இன்னிளவஞ்சிக்கினிதுரைத்தான்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்பேர்‌ இயம்புமவன்‌ வாழியே.
தென்னணியாம்‌ காசிபகோத்திரத்துதித்தான்‌ வாழியே.
திருக்குருகைப்பிரான்‌ எனும்‌ பேர்‌ திகழ வந்தான்‌ வாழியே.
முன்னாரும்‌ பெரும்‌ புதூர்‌ முனிக்குரைத்தான்‌ வாழியே.
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில்‌ வாழியே.
காசிபன்‌ தன்‌ கோத்திரத்தைக்‌ கருதி வந்தோன்‌ வாழியே
கலையனைத்தால்‌ முன்னவர்க்குக்‌ கதியளித்தான்‌ வாழியே.
மாசற மெய்ப்பொருள்‌ எதிக்கு வழங்குவோன்‌ வாழியே.
வையகமுன்‌ தர்சனத்தால்‌ வாழுமென்றான்‌ வாழியே.
ஏசறவே யுகந்தெதியை எடுத்தணைத்தான்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்‌ பெயர்‌ இயம்புமவன்‌ வாழியே.
தேசுபுகழ்‌ செல்வன்‌ மொழி தேர்ந்துரைப்பான்‌ வாழியே.
திருக்கோட்டியூர்‌ நம்பி சகதலத்தில்‌ வாழியே.
ஈரேழு மூன்றொன்றில்‌ இதமுரைத்தான்‌ வாழியே.
ஏற்றமா ஆளவந்தாரிணையடியோன்‌ வாழியே.
ஈரெழுவருக்கும்‌ பதம்‌ ஈயுமவன்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்‌ பேரியம்புமவன்‌ வாழியே.
நாலேழில்‌ நாலாநாள்‌ நாடி வந்தான்‌ வாழியே.
நன்மதுர கவி நிலையை நண்ணினான்‌ வாழியே.
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான்‌ வாழியே.
நங்கள்‌ திருக்கோட்டி நம்பி நற் பதங்கள்‌ வாழியே.
அல்லும்‌ பகலும்‌ ஆளவந்தார்‌ அடி நினைவான்‌ வாழியே.
அனவரதம்‌ தெற்காழ்வார்க்‌ காட் செய்வோன்‌ வாழியே.
வெல் பொருள்வெளியிட எதியை வெறுத்துரைத்தான்‌ வாழியே.
மேதினியோர்‌ உய்வெரென்று மெச்சினான்‌ வாழியே.
உள்மந்திர மெதிராசர்க் கொளித்துரைத்தான்‌ வாழியே.
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான்‌ வாழியே.
செல்வநம்பி குலம் தழைக்கச்‌ செகத்‌ துதித்தான்‌ வாழியே.
திருக்கோட்டியூர்‌ நம்பி செகதலத்தில்‌ வாழியே.

திருக்கோட்டியூர்‌ நம்பி பிறந்த மறு வருடம்‌ அழகர் கோவிலான திருமாலிருஞ்சோலையில்‌ ஸ்ரீ வைஷ்ணவப்‌ பிராமண குலத்‌தில்‌ பிறந்தவருக்கு ஞான பூரணர்‌ என்று பெயர்‌ சூட்டினர்‌ பெற்றறோர்கள்‌. இவருடைய முன்னோர்களில்‌ ஒருவரான கண்ணுக்கினியான ஸ்வாமி என்பவர்‌, ஒரு முறை சில மலையாள மாந்திரீகர்கள்‌ கண்ணில்‌ மையிட்டுக்கொண்டு வந்து அதன்‌ மகிமையால்‌ அழகரது தேஜசை அபகரித்துக் கொள்ள முயன்றதைக் கண்ட இந்த ஸ்வாமி,அவர்கள்‌ உண்ணும்‌ பிரசாதத்தில்‌ மிளகை அதிகம்‌ சேர்த்திட அதனால்‌ அந்த மாய மை கண்ணிலிருந்து கரைந்திட அவர்கள்‌ குற்றம்‌ வெளிப்பட்டுத்‌ தண்டிக்கப்பட்டார்களாம்‌. அதனால்‌ அந்தக்‌ கண்ணுக்கினியான்‌ ஸ்வாமிக்குத்‌ திருமாலை யாண்டான்‌ என்ற பட்டப்பெயரும்‌ ஏற்பட்டு அந்தக்கோயில்‌ புரோகிதராகவும்‌ நியமிக்கப்பட்டு, பரம்பரையாக இன்றளவும்‌ அப் பெருமைகள்‌ அவருடைய சந்ததியாரால்‌ அனுபவிக்கப்பட்டு வருகின்றன.திருக்கோட்டியூர்‌ நம்பி கட்டளைப்படி இராமானுஜருக்கு திருவாய்‌ மொழி உபதேசித்து வரும்‌ காலத்தில்‌, ஆளவந்தார்‌ அருளிய அர்த்தங்களுக்கு மாறாக, இராமானுஜர்‌ சில இடங்களில்‌ அர்த்தஞ்சொல்லிய காரணத்தால்‌ மனம்‌ வெதும்பிப்‌ பாடம்‌ சொல்‌வதை நிறுத்தி விட்டார்‌. பின்னர்‌ திருக்கோட்டியூர்‌ நம்பியினால்‌ ஆளவந்தாருக்குத்‌ தோன்றாத அர்த்தம்‌ இராமானுஜருக்குத்‌ தோன்‌றாது. ஸ்ரீ கிருஷ்ணன்‌ சாந்தீப முனியிடம்‌ பாடம்‌ கேட்டதைப்‌ போல இராமானுஜர்‌ உம்மிடம்‌ சந்தை கேட்கிறார்‌. ஆகவே நீர்‌ தொடர்ந்து சொல்லும்‌ என்று கட்டளையிட அவரும்‌ தொடர்ந்து நடத்தி நிறைவு செய்தார்‌. இவர்‌, தம்‌ குமாரரான சுந்தரத் தோளுடையானை எம்பெருமானாரது சீடராக்கினார்‌. திருமாலையாண்டான்‌ வம்சத்தில்‌ வந்த யமுனாச்சாரியார்‌ என்பவர்‌ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயருக்கு சிஷ்யராயிருந்தவர்‌.இவர்‌ அருளிய பல கிரந்தங்களில்‌ பிரமேய ரத்தினம்‌ தத்வ பூஷணம்‌ என்ற இரண்டும்‌ இப்போதும்‌ கிடைக்கின்றன. திருமாலை யாண்டான்‌ வம்சத்தவர்கள்‌ இன்றும்‌ அழகருக்குப்‌ புரோகிதராயிருந்து பல விசேஷ கெளரவங்களைப் பெற்று வருகின்றனர்‌. சித்திரா பெளர்ணமி யன்று மதுரைக்கு அழகர்‌ எழுந்தருளும்‌ மகோத்ஸவத்‌தில்‌ அழகர்‌ வரு முன்னரே திருமாலை யாண்டான்‌ வம்சத்தினர்‌ பல்லக்கில்‌ எழுந்தருளுவதைக் கண்ட பொது ஜனங்கள்‌ ஆண்டான்‌ பல்லக்கு முன்னே, அழகர்‌ பல்லக்குப் பின்னே என்று கூறுவார்கள்‌.திருமாலை யாண்டான்‌ உடையவருக்கு திருவாய்மொழிச்சந்தை சொல்லும் பொழுது நீர்‌ ஆளவந்தாரைக்‌ கண்ணாலும்‌ காணாதிருக்க, இப்படி அருளிச் செய்யார்‌ என்று சொல்லக் காரணம்‌ என்ன என்று வினவ, நான்‌ ஆளவந்தாருக்கு ஏகலைவனன்றோ என்று பதில்‌ சொல்லவே திருமாலை யாண்டானும்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி சொல்லியதை ஒத்திருந்தது. நாம்‌ ஆளவந்தாரிடம்‌ கேளாத அர்த்தமெல்லாமல்‌ இவரிடம்‌ கேட்டோம்‌ என்று அவரை வணங்கினாராம்‌.வங்கிபுரத்து நம்பி திருமாலை யாண்டானது சிஷ்யனாக, பாஷ்‌யகாரரடம்‌ ஞானோபதேசம்‌ பெற்றார்‌.-நாலூராண்டான்‌ என்பவர்‌ ஆளவந்தாரிடம்‌ ஆஸ்ரமித்துத்‌ திருமாலை யாண்டானிடம்‌ ஞான ஜீவனம்‌ பண்ணினார்‌.-பெரியாண்டான்‌ என்பது திருமலை யாண்‌டான்‌ புதல்வன்‌ சுந்தரத் தோளுடையான்‌. பெரியாண்டான்‌ திருத்‌தோரணம்‌ தொடங்கி அழகர்‌ திருவடிகளிலேயே பதினெட்டு வருடங்கள்‌ இரவும்‌ பகலும்‌ தண்டனிட்டுக்‌ கிடப்பார்‌. ஆண்டான்‌ இடக்கிறாரோ பசுக் கடக்கிறதோ, வழி பார்த்துப்‌ போங்கள்‌ என்று சொல்லுமாறு பகவதனுபவம்‌ சலியாமல்‌ பண்ணுவார்‌. கிணற்றில்‌ விழுந்தவனை இரண்டு. பேருமாக எடுத்தாற்போல, பர்ஷ்யகாரரும்‌, எம்பாரும்‌ என்னைக்‌ கடாக்ஷித்தார்கள்‌ என்று பெரியாண்டான்‌ கூறுவார்‌.அழகர்‌ திருவோலக்கத்தில்‌ பிள்ளை யழகப்‌ பெருமான்‌ என்பவர்‌ பெரியாண்டானைப் பார்த்து ‘பரமபதம்‌ எப்படி இருக்கும்‌:என்று கேட்க ‘இப்படியே தான்‌ இருக்கும்‌. ஆனால்‌ இங்கிருந்தால்‌ முதுகு கடுக்கும்‌ அங்கு பேனால்‌ அது செய்யாது’ என்றாராம்‌.ஒரு பாக்கு மரத்தைப்‌ பயிரிட்டு 16 ஆண்டுகள்‌ பாடுபட்டாலும்‌ பெறும்‌ பலன்‌ வெகு சொற்பமே. மிகத் தாழ்வானவருக்குச்‌ சம்ஸாரத்தைப்‌ போக்கி மிகச்‌ சிறந்ததான பரமபதத்தைத்‌ தருவதற்கு த்வயத்தை அருளிச் செய்த ஆச்சாரியரது திருவடிகளில்‌ எப்போதுமே நன்றி யில்லாத ஸம்ஸாரிகளுக்கு எத்தைச் சொல்லி என்ன பயன்‌ விளையப் போகிறது என்று திருமாலை யாண்டான்‌ வெறுத்‌துக் கூறினார்‌. எதிராஜர்‌ திருமாலை யாண்டானிடம்‌ திருவாய்மொழி பெரிய திருமொழி முதலாயிரம்‌ இயற்பா அனைத்தும்‌ சந்தைகளையும் கேட்டவர்‌.

அம்புவியில்‌ ஆளவந்தாரடியிணையோன்‌ வாழியே.
ஆரியனாம்‌ அவர்‌ பதத்தை அன்பு செய்தோன்‌ வாழியே.
வெம்பிவரும்‌ வாதியரை வேர் களைந்தோன்‌ வாழியே.
மேதினியில்‌ நாலூர் விளக்க வந்தான்‌ வாழியே.
எம்பெருமானெதிகாசர்க்‌ கீடுரைத்தான்‌ வாழியே.
ஏற்றமுள்ள மாசி மகமிலங்க வந்தோன்‌ வாழியே.
வம்பவிழும்‌ சோலை மலை வாழ வந்தோன்‌ வாழியே.
மாலாதராரியன்‌ தாள்‌ மாநிலத்தில்‌ வாழியே.
வீசு புகழ்ச்‌ சங்காழி விளங்கு புயம்‌ வாழியே.
விண்ணுயர்ந்த மலை யழகர்‌ விரும்புமவன்‌ வாழியே.
மாசி மகம்‌ இப் புவியில்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
மறைப் பொருளை உடையவர்க்கு வகுத்துரைத்தோன்‌ வாழியே.
காசிப நற் குலத்துதித்த கருணை நிதி வாழியே.
கையாழி சங்கதனால்‌ கதி தருவோன்‌ வாழியே.
தேசு புகழ்‌ ஆளவந்தார்‌ திருவடியோன்‌ வாழியே.
திருமாலை யாண்டான்‌ தாள்‌ செகதலத்தில்‌ வாழியே.

பெரிய திருமலை நம்பி இராமானுஜருக்கு மாதுலராகும்‌ (தாய்‌ மாமன்‌). இவரது
மூத்த சகோதரி பூதேவி என்னும்‌ காந்திமதிக்கும்‌ ஸ்ரீபெரும்புதூர்‌ கேசவ சோமயாஜாலுவுக்கும்‌ பிறந்த மகனே எம்பெருமானாரான இராமானுஜர்‌. இவரது இளைய சகோதரியான ஸ்ரீ தேவியை மதுரமங்கலம்‌ கமல நயன பட்டருக்கு மணம்‌ செய்து கொடுத்தார்‌.அவர்களது குமாரர்கள்‌ எம்பார்‌ என்னும்‌ கோவிந்தரும்‌ அவரது தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளும்‌ ஆவார்கள்‌. இவர்‌ எம்பெரு மானாருக்கு ஒரு வருடகாலம்‌ கீழத்திருப்பதியில்‌ வால்மீகியின்‌ இராமாயணத்தை காலட்சேபம்‌ செய்தார்‌. திருவேங்கடமுடையான்‌ இவரைத்‌ திருத் தகப்பனாராக அபிமானித்தார்‌ என்பர்‌. சைவராக மாற்றப்பட்டுக்‌ காளஹஸ்தியில்‌ உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக இருந்த மருமகன்‌ கோவிந்தரை மறுபடி ஸ்ரீ வைஷ்ணவராகத்‌ திருத்தியவர்‌ இவர்‌. தம்முடைய குமாரர்களான பிள்ளை திருமலை நம்பியையும்‌, பிள்ளானையும்‌, இரு குமாரத்திகளையும்‌ உத்தாரகரான எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ அபிமானம்‌ வைக்கச்‌ செய்‌தார்‌. உடையவரது வாழ்க்கையோடு பின்னிப்‌ பிணைந்ததே இவரது வாழ்க்கையாகும்‌.-எம்பெருமானார்‌ தம்‌ சீடர்களுடன்‌ திருப்பதிக்கு யாத்திரை சென்ற பொழுது ஆழ்வார்கள்‌, தரிசிக்காத இடத்திற்குத் தானும்‌ போக விரும்பாமல்‌ அடிவாரத்திலே எழுந்தருளியிருக்கிற ஆழ்வாராதிகளைச்‌ சேவித்துக் கொண்டு திருப்பதியில்‌ விட்டலதேவனையும்‌ மற்றும்‌ முப்பது வைஷ்ணவர்களையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டு வாழ்ந்து வரும்‌ நாளில்‌ திருமலையிலிருந்து அனந்தாழ்‌வான்‌ முதலிய வைணவர்கள்‌ இதைக் கேள்விப்பட்டு கீழே இறங்கி வந்து எம்பெருமானாரை திரு மலைக்கு எழுந்தருளுமாறு வேண்ட,
அவரும்‌ ஆழ்வார்கள்‌ செல்லாத இடத்திற்கு தாமும்‌ செல்ல விரும்பவில்லை என்று கூற உடனே உடனிருந்த ஏனைய வைணவர்களும்‌ நாங்களும்‌ ‘ஏறோம்‌’ என்று கூறவே உடையவரும்‌ ஏற ஒருப்பட்டுத்‌ திருமலையில்‌ திருப்பரியட்டப்‌ பாறை யளவிலே ஏறியிருக்கும்பொழுது அவரை எதிர்கொண்டு, திருவேங்கடமுடையானது தீர்த்தப்‌ பிரசாதங்களுடன்‌ திருமலை நம்பியே அழைக்க வந்தார்‌. அவரிடம்‌ வேறு யாரேனும்‌ சிறியவர்களை அனுப்பக் கூடாதா, தாங்களே வர வேண்டுமா என்று உடையவர்‌ கேட்கத்‌ திருமலை நம்பி, என்னை விடச்‌ சிறியவர்கள்‌ யாரையும்‌ காணவில்லை. ஆகவே நானே வந்தேன்‌ என்றார்‌. உடையவர்‌ அம்மலை யழகில்‌ மனமகிழ்ந்து இது பூலோகவைகுந்த மாயிருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு திருமஞ்சனம்‌ கண்‌டருளி, இவ்விடம்‌ விண்ணோர்‌ வெற்பாகையாலே, அமரர்‌ முனிக்‌கணங்கள்‌ போன்ற நித்ய ஸூரிகள்‌ வாழுமிடம்‌. நாம்‌ இப்போதே இங்கிருந்து இறங்க வேண்டும்‌ என்று கூற பெரிய திருமலைநம்பி திவ்ய தேசங்களில்‌ மூன்று நாளாவது இருக்க வேண்டும்‌ என்று கூறினார்‌. ஆகவே உடையவரும்‌ மூன்று நாட்களும்‌ அமுது செய்யாமல்‌ பகவானை அனுபவித்து, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்து மூழ்ந்தார்‌. பின்னர்‌ கீழிறங்கி கீழத்திருப்பதியில்‌ மாதுலரான பெரிய திருமலை நம்பியின்‌ திருமாளிகையில்‌ உணவருந்தி அவரிடம்‌ வால்மீகி இராமாயணம்‌ பிரவசனம்‌ கேட்டவாறு ஒரு வருடகாலம்‌ தங்கி இருந்தார்‌.
பெரிய திருமலை நம்பியின்‌ ௮வதார ஸ்தலம்‌: திருமலை(திருப்பதி) அவரது திரு நட்சத்திரம்‌, சித்திரை மாதத்து ஸ்வாதி ஆகும்‌. ஆனால்‌ இவரது வாழித் திருநாமத்தில்‌ வைகாசி ஸ்வாதி என்று வருவதால்‌ நிச்சயிக்கக்கூடவில்லை. இவரது இதர திருநாமங்கள்‌ ஸ்ரீ சைல பூர்ணர்‌, பெரிய திருமலைநம்பி. இவரது குமாரர்‌கள்‌ பிள்ளை திருமலைநம்பி, அப்புள்ளான்‌ ஆவர்‌, குமாரத்திகள்‌இருவருண்டு.-திருவாராதனப்பெருமாள்‌: மலை குனிய நின்ற பெருமாள்‌.இவர்‌ அருளிய அமலன்‌ ஆதிப்பிரான்‌ தனியன்‌
காட்டவே கண்ட பாத கமலம்‌ நல்லாடை உந்தி
தேட்டரு முதர பந்தம்‌ திருமார்பு கண்டம்‌ செவ்வாய்‌
வாட்டமில்‌ கண்கள்‌ மேனி முனியேறித்‌ தனி புகுந்து
பாட்டினால்‌ கண்டு வாழும்‌ பாணர் தாள்‌ பரவினோமே’

வைகாசி சோதி நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே.
வண் திருவேங்கட முடையான்‌ வரபுத்ரன்‌ வாழியே.
அய்யன்‌ ஸ்ரீ ஆளவந்தார்‌ அடி தொழுவோன்‌ வாழியே,
அனவரதம்‌ மலை குனியோர்க்கு அடிமை செய்வோன்‌ வாழியே.
மெய்யன்‌ இராமானுசாரியான்‌ விரும்புமவன்‌ வாழியே.
மிக்க திருமலையார்க்கெல்லாம்‌ மேலாவான்‌ வாழியே.
செய்ய தமிழ் வேதத்தின்‌ சிறப்பறிந்தான்‌ வாழியே.
திருமலை நம்பிகள்‌ உபய திருவடிகள்‌ வாழியே.

திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ எம்பெருமானார்‌ அவதரித்த அதே வருஷத்தில்‌ (கி.பி. 7017) வைகாசி கேட்டையில்‌ யமுனாச்சாரியாருக்கும்‌ ஸ்ரீரங்கநாயககிக்கும்‌ முதல்‌ குமாரராய்‌ அவதரித்தவர்‌. இவரைத்‌ தம்‌ ஆச்சாரியரான மணக்கால்‌ நம்பியிடம்‌ சிஷ்யராக இருந்து வருமாறு பணித்தார்‌ ஆளவந்தார்‌. நம்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்கநாதன்‌ நியமனத்தாலே காஞ்சியில்‌ தேவப் பெருமாளைத்‌ தமது இசையாலே மயக்கி வரம்‌ பெற்று எதிராஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர்‌ இவர்‌. ஸ்ரீரங்கநாதனுக்கு அரையராய்‌ இருந்த இவர்‌, எம்பெருமானாருக்கு அருளிச்‌ செயல்‌ சந்தையும்‌ சரமோபாயமும்‌ நல் வார்த்தைகளும்‌ உபதேசித்தவர்‌. இவருக்குச்‌ சந்ததி யல்லாமையால்‌ தம்‌ தம்‌பிகளான தெய்வத்‌துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியவர்‌களை எம்பெருமானாருக்கு சிஷ்யர்களாக்கினார்‌.-ஆகவே எம்பெருமானாருடைய ஆச்சாரியர்களான பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாலை யாண்டான்‌ பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமான்‌ அரையர்‌ ஆகிய ஐவரும்‌,எம்பெருமானாரே எல்லோருக்கும்‌ உத்தாரக ஆச்சாரியார்‌ என்பது தோற்றத்‌ தங்களுடைய தம்பிகளையும்‌ குமாரர்களையும்‌, குமாரத்திகளையும்‌ எம்பெருமானாரிடமே அடைக்கலமாகக்‌ கொடுத்தனர்‌.-எம்பெருமானார்‌ திருவரங்கப் பெருமாள்‌ அரையருக்கு மனது உகக்‌கும்படியாக ஆறுமாத காலம்‌ பாலமுதம்‌ பக்குவமாகக்‌ காய்ச்சிக்‌ கொடுத்தும்‌ திருவத்யயன காலத்தில்‌ மஞ்சள்‌ காப்பரைத்து நீராடப்‌ பண்ணுவித்தும்‌ அவரை மகிழ்வித்ததனால்‌ அவரும்‌ ‘வாரீர்‌ எம்பெருமானாரே, உமக்கு சரம புருஷார்த்தம்‌ சொல்கிறோம்‌ என்று தொடங்கி தேவுமற்றறியாத மதுரகவிகளைப் போல நீரும்‌ குருவே மேலான பிரஹ்மம்‌. குருவே மேலான தவம்‌, குருவே மேலான காமம்‌. குருவே மேலான பிராப்யம்‌, குருவே மேலான கல்வி குருவே மேலான பிராபகம்‌. அப் பரம் பொருளையே உபதேஸிப்பதால்‌ குரு அதைக் காட்டிலும்‌ உயர்ந்தவர்‌. தீ மனம்‌ கெடுத்தும்‌,மருவித் தொழும்‌ மனம்‌ தந்தும்‌, அறியாதன அறிவித்த ஆச்சார்யனே -உபாயோபாயம்‌ என்ற விசுவாசத்துடன்‌ ‘பீதகவாடைப்‌ பெருமானார்‌ பிரம குருவாகி வந்து என்று சொல்வது போல உறங்கும்‌ பெருமாளே உலவும்‌ பெருமாளாக வந்தாரென்றிரும்‌’ என்று-பஞ்சோபாய நிஷ்டையான் பரம பர்வார்த்த விசேஷத்தைப்‌ பிரசாதித்தருளினார்‌.திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ காஞ்சிபுரத்தில்‌ வரதராஜப்‌ பெருமாளைச்‌ சேவித்து மிகுந்த பக்தியோடு ‘என்‌ நெஞ்சமே நான்‌:என்று தொடங்கி தொழுதெழு தொண்டர்கள்‌ தமக்கு பிணி யொழித்து அமரர்‌ பெரு விசும்பருளும்‌ பேரருளாளன்‌ என்று பாலேய்‌ தமிழில்‌ பண்ணார்‌ பாடல்‌ இன்னிசையில்‌ பாடிட பெருமாள்‌ மிக மகிழ்ந்து அவருக்கு முத்துத்‌ தாழ் வடம்‌ போன்ற வெகு மதிகளை வழங்க முற்பட அரையர்‌ தமக்கு இவையெல்லாம்‌ தேவை யில்லை. இராமானுசரை அடியேனுக்குத்‌ தந்தருளு வேண்டும்‌ என்று விண்ணப்பஞ்செய்ய பெருமாளும்‌ முன்னர்‌ எதுவும்‌ தருவோம்‌ என்று வாக்குக் கொடுத்ததை மறுக்க இயலாமல்‌ இராமானுசரை அனுப்ப இசைந்தார்‌. இராமானுசரும்‌ பேரருளாளரைச்‌ சேவித்து விடை கொண்டு, கூரத்தாழ்வாரையும்‌ முதலியாண்டானையும்‌ மடத்துக்குச்‌ சென்று தனது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனை எடுத்துவரச்‌ சொல்லித்‌ திருக்கச்சி நம்பியிடமும்‌,மற்றங்குள்ளோரிடமும்‌ விடைபெற்றுக் கொண்டு பெரிய கோயிலுக்கு எழுந்தருளினார்‌. இவ்வாறாக இராமானுசரைக்‌ கோயிலுக்‌குக்‌ கொண்டு வந்தவர்‌ இவ் வரையரே. இவர்‌ 175 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌. இவரது இதர நாமங்கள்‌ ரங்கார்யர்‌, குடிசொட்டை என்பன.-இவரது இசைப் புலமையும்‌ பகவத்‌ அனுபூதியும்‌ சேர்ந்து திரு அத்யயன உத்சவத்தில்‌ இவர்‌ இசைத்து நாட்டியமாடி நடித்துக் காட்‌டிய பெருமாள்‌ விபவாதாரத்தில்‌ (இராம கிருஷ்ண அவதாரங்கள்‌)செய்தருளின. அபதாநங்களைக்‌ கண்டு பெருமாள்‌ மிகவும்‌ மகிழ்ந்து இவருக்குக்‌ ‘கோயிலுடைய பெருமாளரையர்‌ என்ற திருநாமத்தைச்‌ சாத்தினார்‌. உத்ஸவங்களிலெல்லாம்‌ பெருமாள்‌ தோளுக்கினியான்‌ வாகனத்தில்‌ உலா வரும் போது நம்‌ நடையழகுக்கு யீடாகப்‌ பாடிடும்‌ என்று அருளிட இவரும்‌ இசையில்‌ ஏத்திக்‌ கொண்டு வரக்‌ கோயிலுக்கு எழுந்தருளுவார்‌. அதிலிருந்து அடுக்‌குச்‌ சாத்திக்கொண்டு அந்தந்தத்‌ திருக் கோலத்துடனே உத்சவ காலங்‌களில்‌ பெருமாளுடன்‌ எழுந்தருளுகிற வைபவம்‌ நடந்து வருகிறது.அரையர்‌ அருளிய திருமாலை, திருப் பள்ளி யெழுச்சித் தமிழ்த்தனியன்கள்‌.

மற்றொன்றும்‌ வேண்டா மனமே – மதினரங்கர்‌
கற்றினம்‌ மேய்த்த கழலிணைக்கீழ்‌ – உற்ற திருமாலை பாடும்‌ சீர்த்‌ தொண்டரடிப்‌ பொடியெம்‌
பெருமானை எப்பொழுதும்‌ பேசு(திருமாலை)
மண்டங்குடியென்பர்‌ மாமறையோர்‌ மன்னிய சீர்‌
தொண்டரடிப்பொடி தொன் நகரம்‌ – வண்டு
திணர்த்த வயல்‌தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
உணர்த்தும்‌ பிரான்‌ உதித்த ஊர்‌”(திருப்பள்ளி)

நாதமுனி குலந்திகழ நன்குதித்தோன்‌ வாழியே,
நற்றமிழின்‌ மறைக்கிசையை நவின்றுரைப்போன்‌ வாழியே.
காதலரங்கேசரிரு கழல்‌ பணிவோன்‌ வாழியே.
கானவர நாவிசையால்‌ களிப்பிப்போன்‌ வாழியே.
ஏதமில்‌ வண் கச்சியனை ஏத்திசைப்போன்‌ வாழியே.
எதிபதியைப்‌ பரிசாக ஏற்று வந்தோன்‌ வாழியே.
தீதில்‌ யமுனைத் துறைவன்‌ சேவடியோன்‌ வாழியே.
திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ திருவடிகள்‌ வாழியே.

திருக்கச்சி நம்பி சென்னைக்கு அருகிலுள்ள பூவிருந்தவல்லி என்ற ஊரில்‌
வைசியர்‌ குலத்தில்‌ வீர ராகவருக்கும்‌ கமலைக்கும்‌ நான்காவது குமாரராய்‌ அவதரித்தார்‌. சிலர்‌ இவரை நான்காம்‌ வர்ணத்தில்‌-(சூத்திரர்‌) பிறந்தவராகவும்‌ கூறுவர்‌. அக்காலத்திலேயே க்ஷத்திரிய வைஸ்யர்கள்‌ வேதாத்யயனம்‌ முதலியவற்றை விட்டு விட்டதால்‌ நாலாவது வர்ணமாகக்‌ கூறியிருக்கலாம்‌. இவரது இயற்பெயர்‌ கஜேந்திர தாஸர்‌ என்பது. இவர்‌ பார்க்கவரான திருமழிசை யாழ்வாருடைய அருளாலே பிறந்தவராதலால்‌ இவருக்குப்‌ பார்க்கவப் பிரியர்‌ என்றும்‌ பெயரிட்டனர்‌. இவர்‌ ஆளவந்தாரது சிஷ்யர்களில்‌ ஒருவர்‌. ௮வர்‌ அளித்த திருநாமம்‌ பேரருளாள தாஸர்‌ என்பது.-கச்சியில்‌ வாழ்ந்தமையால்‌, திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சி பூர்ணர்‌ என்றழைக்கப்பட்டார்‌. இவர்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளுக்குத்‌ திருவால வட்டக் கைங்கர்யம்‌ செய்து கொண்டிருந்தார்‌-அப்பெருமான்‌ ஒருவருக்கும்‌ தெரியாமல்‌ இவருடன்‌ பேசிக்‌ கொண்டிருந்தார்‌ என்பது பிரசித்தம்‌. அந்திம காலத்தில்‌ மோட்சம்‌ விரும்பிய நம்பிக்கு, ‘நீர்‌ வீசினீர்‌’ நான் பேசினேன்‌ இரண்டும்‌ சரியாயிற்று. ஒரு பரம பாகவதரின்‌ அபிமானத்தைப்‌ பெற்றாலே உமக்கு மோட்சம்‌ என்று பெருமான்‌ கூறி விட்டார்‌. அதற்குப் பின்‌ மாறுவேஷத்தில்‌ திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ மாடு மேய்க்கும்‌ கைங்கர்யம்‌ செய்து ‘நம்‌ பையல்‌’ என்று அவரால்‌ அபிமானிக்கப்‌ பெற்று அவ்வபிமானமே காரணமாக மோட்சம்‌ பெற்றார்‌ என்று கூறப்படுகிறது.-இராமானுஜர்‌ இவரிடம்‌ சீடராக வேண்டுமென்று ஆசைப்பட்‌டார்‌. நம்பி மறுத்து விட்டார்‌. இவர்‌ உண்ட கலத்திலே உண்ண வேண்டும்‌ என்று ஆசைப்பட்டார்‌ இராமானுஜர்‌. அதை இராமானுஜரது மனைவி நிறைவேறாமல்‌ செய்து விட்டாள்‌. தேவராஜப்‌ பெருமாளிடமிருந்து ஆறு வாக்கியங்கள்‌ பெற்றுக் கொடுத்து தர்ஸநார்த்தங்களை உறுதிப் படுத்திய மகானுபாவர்‌ இவரே. தேவராஜப்‌ பெருமானைப்‌ பற்றிய எட்டு ஸ்லோகங்கள்‌ கொண்ட தேவராஜாஷ்‌டகம்‌ என்னும்‌ ஸ்துதி நூல்‌ இவர்‌ அருளிச் செய்தது. இராமானுஜர்‌ கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர்‌ பேரருளாளரிடம்‌ கேட்டு இராமானுஜருக்குச்‌ சொன்ன ஆறு விஷயத்திற்கும்‌ பேரருளாளர்‌ கூறிய பதில்‌ வருமாறு.
1) பரத்வம்‌ நாமே, 2) பேதமே தர்ஸனம்‌, 3) உபாயமும்‌ பிரபத்தியே, 4) அந்திம ஸ்மிருதியும்‌ வேண்டா, 5) ஸரீராவசானத்‌தாலே மோட்சம்‌, 6) பெரிய நம்பி திருவடிகளை ஆஸ்ரயிப்பதுவே
என்று கூறியவற்றை நம்பி இராமானுஜரிடம்‌ கூறி இதுவோ நீர்‌ நினைத்திருந்தது என்று கேட்க இராமானுஜரும்‌ ஆம்‌ என்ன. இருவர்‌ நினைவும்‌ ஒத்திருந்தபடியை எண்ணி மகிழ்ந்தார்‌. மேலே சொன்ன வாக்கியங்களின்‌ பொருள்‌ ஸ்ரீமானான நானே பரத்வம்‌. உலகிற்கும்‌ எனக்கும்‌ பேதம்‌ உண்டு என்பதே. என்‌ மதம்‌,
என்னைச்‌ சரணடைவதே என்னைப்‌ பெறுவதற்குக்‌ கண்ணழிவற்ற
உபாயம்‌, அப்படிச்‌ சரணடைந்தவர்களுக்கு அந்திம காலத்தில்‌ என்‌ நினைவு தேவையில்லை. இப்பிறப்பின்‌ இறுதியிலேயே அவர்களுக்கு மோட்சம்‌ உறுதி. பெரியநம்பியே இராமானுஜரால்‌ ஆஸ்ரயிக்கத்தக்கவர்‌ என்பது, இந்த ஆறு வார்த்தைகளையும்‌ இராமானுஜருக்குக்‌ கூறி ‘ராமானுஜமாந்யர்‌’ (இராமானுசரால்‌ கெளரவிக்கப்பட்‌டவர்‌) என்னும்‌ பெயரைப்‌ பெற்றார்‌. இவரிடம்‌ சரண்‌ புகுந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்குப்‌ பிரபத்தியை அருளிச் செய்தார்‌. அது பொறுக்காத அவனது உறவினர்கள்‌ அவனைப்‌ பிரித்துக்‌ கொண்டு போய்‌ பிராயச்சித்தம்‌ பண்ண முயற்சிக்க, அவன்‌ அவர்களிடமிருந்து தப்பி வந்து நம்பியிடம்‌ சரண் புக, நீர்‌ போகா விட்டால்‌ அவர்கள்‌ என்னைப்‌ பொல்லாங்கு கூறுவார்களே என்று நம்பி கூற,அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம்‌ பொறுக்காமல்‌ பிராணத் தியாகம்‌ செய்தார்‌ என்பர்‌.
திருக்கச்சி நம்பி அருளிய திருச்சந்த விருத்தத்‌ தனியன்கள்‌
திருச்சந்தம்‌ பொழில்‌ தழுவு தாரணியின்‌ துயர் தீர
திருச்சந்த விருத்தம்‌ செய் திருமழிசைப்‌ பரன் வருமூர்‌
கருச்சந்தும்‌ காரமுகிலும்‌ கமழ் கோங்கு மண நாறும்‌
திருச்சந்தத்துடன்‌ மருவு திருமழிசை வளம்பதியே.
உலகு மழிசையும்‌ உள்ளுணர்ந்து தம்மில்‌
புலவர்‌ புகழ்க் கோலால்‌ தூக்க – உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும்‌ மா நீர்‌ மழிசையே
வைத்தெடுத்த பக்கம்‌ வலிது.

மருவாருந்‌ திருமல்லி வாழ வந்தோன்‌ வாழியே.
மாசி மிருசீரிடத்தில்‌ வந்துதிததோன்‌ வாழியே.
அருளாளருடன்‌ மொழி சொல்‌ அதிசயத்தோன்‌ வாழியே.
ஆறுமொழி பூதூரர்க்‌ களித்த பிரான்‌ வாழியே.
திருவாலவட்டம்‌ செய்து சேவிப்போன்‌ வாழியே.
தேவராசாட்டகத்தைச்‌ செப்புமவன்‌ வாழியே.
தெருளாரு மாளவந்தார்‌ திருவடியோன்‌ வாழியே.திருக்கச்சி நம்பியிரு திருவடிகள்‌ வாழியே

மாறனேரி நம்பி ஆளவந்தார்‌ சிஷ்யர்களிலே ஒருவர்‌. பஞ்சம குலத்தில்‌ பாண்டிய நாட்டில்‌ புராந்தகம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ ஆடிமாதம்‌ ஆயில்ய நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்‌. ஆளவந்தாருக்கு ஏற்பட்ட ராஜபிளனயை அவரிடம்‌ பிரார்த்தித்து ஆசார்யப்‌ பிரசாதமாகப்‌ பெற்றுக் கொண்டவர்‌ இவர்‌ என்று கூறுவர்‌. இவர்‌ தம்‌ கடைசிக் காலத்தில்‌ ஆளவந்தார்‌ உகந்ததான இந்த தேகத்தை அவைஷ்ணவர்களான என்‌ உறவினரிடத்தில்‌ ஒப்படைக்காமல்‌ நல்லடக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்று பெரிய நம்பிகளிடம்‌ பிரார்த்‌தித்தார்‌. அதன் படியே, இவர்‌ பரமபதித்த பின்‌ பெரிய நம்பி தாமே அவரது அந்திமக்‌ கிரியைகளைச்‌
செய்தார்‌. பஞ்சமரான அவருக்குப்‌ பிராமணரான நீர்‌ ஈமச்சடங்குகள்‌ செய்தல்‌ தகுமோ என்று கேட்ட இராமானுஜருக்கு அவர்‌ அளித்த பதில்‌ பெரியநம்பி வைபவத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஆனிதனில்‌ ஆயில்யம்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆளவந்தார்‌ திருவடிகள்‌ ஆஸ்ரயித்தான்‌ வாழியே.
மாநிலம்‌ எதிராசர் மனம்‌ வாழ்வித்தான்‌ வாழியே.
மதிளரங்க நகரமதில்‌ வாழ்ந்தருள்‌வோன்‌ வாழியே.
தேனமருந்‌ தென்மொழியின்‌ சிறப்பறிந்தோன்‌ வாழியே.
திகழ் ஞான பத்திகளால்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே.
வானவரில்‌ ஒருவரிங்கு மகிழ்ந்து வந்தோன்‌ வாழியே.
மாறனேரி நம்பி யிணை மலரடிகள்‌ வாழியே.

தெய்வ வாரி யாண்டான்‌–வகுளாபரண ஸோமயாஜியார்‌ என்ற ஸ்ரீ வைஷ்ணவர்‌ தெய்வ வாரி யாண்டானை எம்பெருமான்‌ இங்கு வந்து அவதரிக்கக் காரணம்‌ என்ன என்று கேட்க, பாகவதாபசாரம்‌ பொறுக்காமையால்‌ என்றாராம்‌. ஆளவந்தாரது பிரிவை சிறிது காலம்‌ கூடப் பொறுக்க முடியாதவர்‌ இவர்‌. ஒருதரம்‌ மடத்துக்காரியத்தை இவர்‌ பொறுப்‌பில்‌ விட்டுவிட்டு, ஆளவந்தார்‌ திருவனந்தபுரம்‌ சென்று விட மிகவும்‌ மெலிந்து விடவே உடனிருந்தோர்‌ இவரைத்‌ திருவனந்தபுரத்திற்குக்‌ கொண்டு போகத்‌ தீர்மானத்த போது, அந்த எண்ணத்திலேயே உடல் நலம்‌ தேறி வந்தது. பின்னர்‌ ஆளவந்தாரை நேரில்‌ பார்த்தவுடன்‌ திருமேனி வாட்டம்‌ தீர்ந்தது. ஆளவந்தார்‌ இவரை திருவனந்தபுரம்‌ போய்‌ ஸ்வாமி தரிசனம்‌ செய்து வரச் சொன்ன போது, என்னுடைய திருவனந்தபுரம்‌ இதோ என்‌ எதிரிலேயே இருக்கிறது என்று ஆளவந்தாரைக் காட்டி, திருவனந்தபுரம்‌ போக இசைய வில்லையாம்‌. வனமாமலை யாண்டான்‌ என்னும்‌ ஆளவந்‌தார்‌ சிஷ்யர்‌ பகவத்‌ பக்தர்கள்‌ பெருமாளுக்கும்‌ பிராட்டிக்கும்‌ கெளஸ்துப மாலை போன்று இனிமை யானவர்கள்‌. அவர்களிடம்‌ அபசாரப்படுவது கெளஸ்துப மாலையில்‌ கரிக்கோடு கிழிப்பதை ஒத்தது என்றாராம்‌.

ஆளவந்தார்‌, சிஷ்யர் அம்மங்கி யிடம்‌ உடையவர்‌ திருக்கண்ணபுரத்திலிருந்து போய் வர விண்ணப்‌பித்த போது அம்மங்கி அவரிடம்‌ அக்கினி ஜ்வாலையில்‌ அகப்படாதே கிடீர்‌. அரு நஞ்சு தின்னாதே கிடீர்‌. அஸி மிதியாதே இடர்‌. அபலைகளோடு செறியாதே கிடீர்‌. ஆஸ்திகரோடு சேர்ந்து போருங்‌ கிடீர்‌ என்றாராம்‌. அதன்‌ விரிவாக்கம்‌, அக்னி ஜுவாலையில்‌ அகப்படாதே கிடீர்‌ என்பது பெளத்தர்கள்‌, ஜைனர்கள்‌, அத்வைதிகள்‌, சைவர்கள்‌ முதலானோர்‌ வேதத்துக்குப்‌ புறம்பானவர்கள்‌.-இவர்களோடு வாதிடும் பொழுது பாம்பு, ௮க்னி போன்றவற்றோடுபழகுவது போல நெருங்காமல்‌ இருக்க வேண்டும்‌ என்பது,-அடுத்து அருநஞ்சு தின்னாதே கிடீர்‌ என்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய நாம ரூபங்களைத்‌ தரித்துக் கொண்டு வைஷ்ணவத்தைக்‌ கெடுப்பவர்களோடு கலந்தால்‌ ஆத்ம நாசத்தை விளைவித்து விடுவார்கள்‌. இலுமிச்சம்பழமும்‌ கற்பூரமும்‌ கலந்து உண்டால்‌ உயிரை முடிப்பதைப் போல இவர்களது உறவு ஆத்ம நாசத்தையே உண்டு பண்ணச்‌ செய்யும்‌ என்பது. அடுத்து அஸீசி மிதியாதே கிடீர்‌ என்பது சரீரத்தை வளர்ப்பதிலேயே கவனம்‌ செலுத்தும்‌ சம்சாரிகள்‌, கல்‌, கட்டை போன்றவர்கள்‌. அவர்களை விட்டு விலகச் செல்ல வேண்டும்‌ என்பது. அடுத்து அபலைகளோடு செறியாதே கிடீர்‌ என்பது அனுகூலர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்த போதிலும்‌, கொள்ளத் தக்கவை எவை, தள்ளத் தக்கவை எவை என்ற பாகுபாடு தெரியாத தெளியாத அறிவைப்‌ பெற்றவர்களது உறவை விட வேண்டும்‌ என்பது. அடுத்து ஆஸ்திகரோடு செறிந்து போகுங்‌கள்‌ என்பது பகவத்‌ பாகவத விஷயங்களை அனுபவிக்கத் தக்க பூர்ணாதிகாரிகள்‌. அவர்களது உறவு அனுபவிக்கத்தக்கது. ஆகையால்‌ அவர்ளோடு நெருங்கிப் பழக வேண்டும்‌ என்பதாகும்‌.-வைத்த கையிலும்‌ வாங்கிக் கொடுத்த கை தஞ்சம்‌ என்றார்‌ ௮ம்‌மங்கி. அஞ்சேல்‌ என்று அபய கரம்‌ வைத்துக்‌ காட்டிய பெருமாஞடைய கையைக் காட்டிலும்‌, அவரிடம்‌ உபய விபூதிச்‌ செல்வத்தை வாங்கின கையாகிற எம்பெருமானாருடைய கையே தஞ்சம்‌ என்ற கருத்து விளங்குகிறது.

ஆளவந்தாரின்‌ சிஷ்யர்களாகவும்‌ எம்‌பெருமானாரின்‌ ஆச்சாரியாராகவும்‌ விளங்கியவர்‌ பெரியநம்பி தொடங்கி, திருக்கோட்டியூர்‌ நம்பி, திருமாலையாண்டான்‌ பெரிய
திருமலை நம்பி திருவரங்கப்‌ பெருமாளரையார்‌, திருக்கச்சி நம்பி,
மாறனேரி நம்பி முதலிய எழுவர்களில்‌, முன்னர்‌ கூறிய ஐவரே உடையவரது ஆச்சாரியார்களாகவும்‌ விளங்கினார்கள்‌. இவர்‌ பெரியநம்பி திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த போதே ஸ்வரூப சித்தி உண்டாகியிருக்க, இவர்‌ ஏன்‌ பலர்‌ திருவடிகளிலும்‌ விழுந்து உபதேசம்‌ கேட்க வேண்டும்‌-ஆளவந்தார் தம்‌ திருவருள்‌ செல்வத்தை அவர் தம்‌ சிஷ்யர்கள்‌ பலர்‌ மூலமாகத்‌ தனது ஆத்ம புத்திரரான இராமானுசரிடம்‌ ஒப்படைக்கச்‌ சொன்னது; ஒரு அரசன்‌ தன்‌ அரசச் செல்வத்தை பல அமைச்சர்களிடத்தே பகிர்ந்து கொடுத்துப்‌
பின்‌ அரச குமாரர்‌ அவற்றை நிர்ஹிக்கும்‌ பொறுப்புக்கு வந்தவுடன்‌ அந்த ஐஸ்வர்யத்தை அரச குமாரனிடம்‌ ஒப்படைக்கச்‌ சொன்னதாப்‌ போலாகும்‌; ஆளவந்தாரும்‌ இவர்களிடத்தில்‌ ஒவ்வொரு அர்த்த விசேஷத்தை உபதேஸித்து வைத்து எம்பெருமானார்‌ ஆளவந்‌தாரிடம்‌ நேரில்‌ உபதேசம்‌ பெற முடியாத இழவைத்‌ தீர்த்தார்‌ என்று கொள்ள வேண்டும்‌. இவ்வாசார்யர்களுக்கு முன்னரே, ஆளவந்தார்‌ -முதன்முதலாக இராமானுசரைக்‌ கண்டவுடனேயே ‘ஆம் முதல்வன்‌ இவன்‌’ என்று கடாட்சித்து (கிருபை செய்து) நாம்‌ உங்களுக்குச்‌ சொல்லும்‌ பரம ரகஸ்யத்தை இளையாழ்வாருக்குச்‌ சொல்லுங்கள்‌என்று நியமித்த படியால்‌ சிஷ்யனாக வேணும்‌ ஆச்சார்யனாகவேணும்‌ ௮வரது இலட்சண சம்பந்தம்‌ வேண்டும்‌ என்று தாமாகவே இராமானுசரோடு தொடர்பை பெற்றுக் கொண்டார்கள்‌. ஆகவே முன்புள்ள ஆச்சாரியர்கள்‌ இவருக்கு ஆச்சாரியர்களாகத்‌ திகழ்ந்து
பெருமை பெற்றார்கள்‌. பின்புள்ளவர்கள்‌ இவரது சீடராகத்‌ தோன்றி பெருமை பெற்றார்கள்‌. ஒரு மாலையின்‌ நடுவிலே பதிக்கப் பெற்ற மாணிக்கப் பதக்கம்‌ போலே இருந்து அந்த மாலையை அழகு படுத்துமாப் போலே, இராமானுச முனியாய்‌ விளங்கி பரப்பிரஹ்மம்‌ ஸ்ரீமந் நாராயணனே என்று அறுதி யிட்டுத்‌ தர்ஸனப்‌ பிரவர்த்தனம்‌ பண்ணிக் கொண்டு வந்தார்‌ இராமானுஜர்‌.-மஹோப நிஷத்தில்‌ ஆரம்பத்தில்‌ நாராயணன்‌ ஒருவன்‌ முதலில்‌ இருந்தான்‌. பிரளய காலத்தில்‌ லீலா விபூதிகள்‌ அழிந்து கிடந்த போது இவன்‌ ஒருவனாயிருந்து இன்புறவில்லை. ௮சத்‌தாய்க்‌ கிடந்த பக்த சேதனரைக் கண்டு அவர்கள்‌ உய்யும்‌ வழியாக உலகைப் படைத்து இச் சேதனர்களுக்கு சரீர இந்திரியங்களைக்‌ கொடுத்து, அஞ்ஞான இருளைப் போக்கும்‌ சாஸ்திரத்தைக்‌ கொடுத்‌தும்‌ அவர்கள்‌ இருந்தமையாலே, தானே பலவிதமான அவதாரங்‌களை எடுத்தும்‌, ஆழ்வார்களையும்‌ ஆச்சாரியர்களையும்‌ அவதரிக்‌கச்‌ செய்யத்‌ திருஉள்ளங் கொண்டான்‌ ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்‌.-உயிர்களாகிய பயிர்களைச்‌ செழிப்பிக்க வேண்டித்‌ தண்ணீர்ப்‌ பிரவாகத்தைப்‌ பருகும்‌ காளமேகமாக ஆழ்வாராதிகளையும்‌ அந்நீரைத்‌ தாங்கும்‌ மலையாக நாதமுனிகளையும்‌, அம்மலையில்‌ இருந்து விழும்‌ அருவிகளாக உய்யக் கொண்டார்‌, மணக்கால்‌ நம்பிகளையும்‌, அவ்வருவி நீர்‌ பெருகும்‌ ஆறாக ஆளவந்தாரையும்‌ அவ்வாற்றிலிருந்து வெட்டப்பட்ட கால் வாய்களாக, பெரிய நம்பி, முதலான ஆச்சாரியர்களையும்‌ அவதரிக்கச்‌ செய்தான்‌. எம்பெருமானான ஸர்வேஸ்வரன்‌, பெரிய நம்பி தொடங்கிய வாய்க்கால்களின்‌ மூலம்‌, அந்நீர்‌ தேங்கும்‌ பெரிய ஏரியாக விளங்கினார்‌ இராமானுஜர்‌. ௮வ்வேரியிலிருந்து உயிர்களாகிய பயிர்களுக்கு நீரைப் பாய்ச்‌சும்‌ மதகுகளாக எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளையும்‌ அவதரிப்பித்தார்‌ என்பது எம்பெருமானாரது பாதுகையான எம்பார்‌ கருத்து. இதுவரை எம்பெருமானார்‌ வரை வந்துள்ள வைணவ தரீசனத்தைச்‌ சுருக்கமாகக்‌ கண்டோம்‌. இனி எம்பெருமானார்‌ தொடக்கமாகக்‌ காண உள்ளோம்‌.

ஆளவந்தாரது பிரதம சீடர்களில்‌, ஒருவரான பெரிய திருமலை நம்பியிடம்‌, ஆளவந்தார்‌ தனக்குப் பின்‌ இந்த வைஷ்ணவ தர்சனத்‌தைத்‌ திறம்பட நடத்தக்கூடிய ஆச்சாரியரைக்‌ கண்டு பிடித்து அவரிடம்‌ தர்ஸன்‌ நிர்வாகத்தை ஒப்புவிக்க வேண்டும்‌ என்று கட்டளை
யிட்டிருந்நதையே குறிக்கோளாகக்‌ கொண்டு திருமலையில்‌ வாழ்ந்து வருவாரானார்‌. தம்முடைய இரு சகோதரிகளுக்கும்‌ தகுந்த வரன்களைத் தேடி மூத்தவளான பூதேவியை, ஸ்ரீ பெரும்பூதூரில்‌ வாழ்ந்து வரும்‌ ஸ்ரீ வைஷ்ணவரான கேசவ சோமயாஜி என்பவருக்கு மணமுடித்துக்‌ கொடுத்தார்‌. அவர்களுக்குப்‌ பிறந்த பிள்‌ளையே இராமானுஜராகும்‌. உலகிற்கே மங்களமளிக்கும்‌ பிங்கள வருஷத்தில்‌ வியாழக் கிழமை யன்று சிம்ம லக்கனத்தில்‌, மறைமுடிகளின்‌ முடிவை நிலநாட்டுவதற்காகவும்‌, வேதத்திற்குப்‌ புறம்பான செய்திகளைச் சொல்லும்‌ மதங்கள்‌ அழிவதற்காகவும்‌ ஒளி மிகுந்த ஒரு மகா புருஷராய்‌ அவதரித்தார்‌ ஸ்ரீ இராமானுஜர்‌. செய்தி அறிந்த திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூருக்கு விரைந்து வந்து அற்புதமான மருமகனை ஆசீர்வதித்து குழந்தையின்‌ ரட்சையின்‌ பொருட்டு பஞ்சாயுதங்கள்‌ கொண்ட ஐம்படைத் தாலியை அணிவித்து இளையாழ்வார்‌ என்ற திருநாமமும்‌ சூட்டினார்‌.-இளையாழ்வாரும்‌ உரிய காலத்தில்‌ அன்னப் பிரசானம்‌ உபநயனம்‌ முதலான கிரியைகள்‌ எல்லாம்‌ செய்யப் பெற்று வேதத்தையும்‌ கற்றுத் தேர்ந்து, சகல கலைகளும்‌ கற்றுணர்ந்த பண்டிதராக விளங்கினார்‌. உரிய காலத்தில்‌ தஞ்சமாம்பாள்‌ என்ற பெண்ணையும்‌ திருமணம்‌ செய்து கொண்டு, காஞ்சியில்‌ வரதராஜப்‌ பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வருகிற நாளில்‌, திருப்புட்குழி என்ற இடத்தில்‌ யாதவப் பிரகாசன்‌ என்ற ஒரு அத்வைதிப் பிராமணர்‌ வேதாந்தம்‌ போதிக்கிறார்‌ என்று கேள்விப்பட்டு, அவரிடம்‌ மாணாக்கனாக இருந்து வேதாப்யாசம்‌ செய்து வரும்பொழுது, ஒரு நாள்‌ யாதவர்‌,ஸர்வம்‌ கல்விதம்‌ பிரஹ்ம (இவ்வுலகனைத்தும்‌ பிரம்மமே) எனும்‌ வேதவாக்கியத்திற்கு அவப் பொருளை உரைத்ததைக்‌ கேட்ட இளையாழ்வார்‌, உண்மைப்‌ பொருளைக் கூறி வேதார்த்த சாரத்தை அவருக்கு அறிவுறுத்தினார்‌.-இச் சம்பவத்தைத்‌ திருவரங்கத்தில்‌ ஆளவந்தார்‌ கேள்விப்‌ பட்டு, இராமானுஜரைக்‌ காண வேண்டித் தன்‌ சிஷ்யர்களோடு காஞ்சிக்கு வந்து பேரருளாளரையும்‌ பெருந் தேவித்‌ தாயாரையும்‌ வணங்கிப்‌ பின்‌ கோயிலில்‌ சிஷ்யர்களால்‌ சூழப்பட்ட யாதவரையும்‌, அவர்களிடையே ஒளிவீசும்‌ முகமுடைய இளையாழ்வாரையும்‌ கண்டார்‌. இந்த யாதவர்‌ இராமானுஜருக்குச்‌ சிஷ்யராகவே இருக்கத் தக்கவர்‌ என்று எண்ணினார்‌ ஆளவந்தார்‌. ஸ்ரீ வைஷ்ணவர்‌கள்‌ பல்கிப்‌ பெருகுவதற்கு இளையாழ்வாரைக்‌ காத்தருள்வீர்‌ என்று பெருமாளை வேண்டிக் கொண்டு, அவரிடம்‌ இப்பொழுது
பேசினால்‌ அவரது வேதபாடம்‌ தடைப்படும்‌. இவரே வைஷ்ணவ தர்சனத்தை விளங்க வைக்கும்‌. ஆம்‌ முதல்வன்‌ என்று தீர்மானித்து, அவரிடம்‌ பேசாமலேயே ஸ்ரீரங்கத்திற்குத்‌ திரும்பிவிட்டார்‌. இளையாழ்வாரும்‌ யாதவரிடம்‌ பாடம்‌ படித்து வரும்‌ நிலையில்‌ அந்‌ நாட்டு அரசனுடைய புத்திரி பிசாசத்தால்‌ பீடிக்கப்பட்டு, எவர்‌ செய்யும்‌ மந்திரத்திற்கும்‌ கட்டுப்படாதிருக்கவே, அரசன்‌ யாதவருடைய மந்திரத்திற்குக்‌ கட்டுப்படும்‌ என்று நினைத்து யாதவரை அரண்னைக்கு வரவழைத்தான்‌. தன்‌ அந்தரங்க சிஷ்யர்களோடு சென்ற யாதவரைக்‌ கண்டு சிரித்து அவரை அவமானப்படுத்திய பிரம்மராட்சசன்‌ இளையாழ்‌வாரைச்‌ சரணடைந்து அரசனது புதல்வியையும்‌ தன்‌ பாபத்தையும்‌
ஒருங்கே விட்டது. அதி அற்புதமான இந்த நிகழ்ச்சியைக்‌ கண்ட அரசன்‌ இளையாழ்வாரைச்‌ சிலாகித்துப்‌ பரிசளித்தான்‌. அவரும்‌ அதைக்‌ குருயாதவரிடம்‌ அடக்கத்தோடு சமர்ப்பித்தார்‌.-இந்நிகழ்ச்சியால்‌ இளையாழ்வாரிடம்‌ பொறாமை கொண்ட யாதவர்‌ அவரது கருத்தைப்‌ பரீட்சிக்கும்‌ நோக்கோடு வேதாந்த பாடங்களைப்‌ போதித்து வந்தார்‌. பின்னர்‌ ஒருநாள்‌ இளையாழ்வார்‌ யாதவருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ‘கப்யாசம்‌ புண்டரீகம்‌’ என்று பரமாத்மாவின்‌ திருக் கண்களை வர்ணிக்கும்‌ ஸ்லோகத்துக்கும்‌ அவப் பொருள்‌ கூறுவதைக் கேட்டு இளையாழ்‌வார்‌ துன்பக் கண்ணீர்‌ உருக்க அது யாதவரின்‌ தொடையைச்‌ சுட்டது. யாதவர்‌ சோகத்துக்குக்‌ காரணம்‌ கேட்க, ஆழமான நீரில்‌ முளைத்த தாமரை போன்ற கண்களை உடையவன்‌ என்று பொருள்‌ இருக்க குரங்கின்‌ ஆசனவாய்‌ என்று தாழ்ந்த திருஷ்டாந்தம்‌ சொன்னதாலே வருந்திக் கண்ணீர்‌ வடித்தேன்‌ என்று சொல்லவே, ஆத்திரமடைந்த யாதவர்‌ இனி இங்கே படிக்க வர வேண்டாம்‌ என்றார்‌. இராமானுஜரும்‌ குருவிடம்‌ மன்னிப்புக்‌ கோரினார்‌.

இதனாலெல்லாம்‌ கோபமடைந்த யாதவர்‌ இளையாழ்வாரை,ஒழித்துக் கட்ட வேண்டும்‌ என்று தீர்மானித்தவராய்‌, இளையாழ்வாரையும்‌ கூட்டிக் கொண்டு கங்கா ஸ்நானத்தின்‌ பொருட்டுக்‌ காசியாத்திரை செய்யும்‌ வியாஜ்யத்தோடு அவரைக்‌ கொலை செய்யப்‌ புறப்பட்டார்‌. நல்லொழுக்கமுடையவரான இளையாழ்வாரோடு கூடப் படித்த நண்பரும்‌, அவருடைய சிறிய தாயாரின்‌ பிள்ளையுமான கோவிந்த பட்டர்‌, யாதவரது கெட்ட எண்ணத்தை நடுக்காட்‌டில்‌ அந்தரங்கமாக இளையாழ்வாருக்கு அறிவித்து, அவரை நிறுத்தித் தான்‌ மட்டும்‌ காசி யாத்தரை செல்லும்‌ யாதவரோடு தொடர்ந்து சென்றார்‌-நடு இரவிலே நடுக்காட்டிலே அகப்பட்ட இளையாழ்வார்‌ மிக வருந்திய நெஞ்சினராய்‌, பெருந்தேவியோடு விளங்கும்‌ பேரருளாளரைச்‌ சரண்‌ புகுந்தார்‌. கடவுட்‌ தம்பதியரிருவரும்‌ வேட வுருவோடு வந்து அவருக்கு ஆறுதல்‌ சொல்லி, காஞ்சியை எளிதில்‌ அடையலாம்‌ என்று முன்னே வழிகாட்டிச் சென்று, இளையாழ்வாரிடம்‌ வேண்டிப்பெற்ற சாலைக்கிணற்று நீரைத்‌ தம்‌ தேவியோடு கூடப்பருகி மறைந்தனர்‌. விடியற்காலை வேளையில்‌ அத்திகிரியின்‌ புண்யகோடி விமானம்‌ அருகில்‌ தெரிவதைக் கண்டு நீர்‌ பருகியவர்கள்‌ பேரருளாளனும்‌ பெருந்தேவித்தாயாருமே என அறுதியிட்ட இளயாழ்வார்‌ பேரானந்தமும்‌, பேராச்சரியமும்‌ அடைந்தார்‌. அன்றிலிருந்து அவ் வரதன்‌ விரும்பிப் பருகிய சாலைக்‌ கிணற்று நீரைத்‌ தினந்தோறும்‌ தாமே சுமந்து சென்று அபிஷேகத்‌துக்கு அளித்து மகழ்ந்தார்‌. யாதவரின்‌ மந்திர சக்திக்கு வசப்பட்ட கோவிந்தரும்‌ கங்கையில்‌ நீராடும் பொழுது தமது உள்ளங்கையில்‌ சிவ லிங்கத்தைப்‌ பெற்றவராய்‌, தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச்‌ சென்று அந்த லிங்கத்தை அங்குள்ள கோயிலில்‌ பிரதிஷ்டை செய்து, காளஹஸ்‌திக்குச்‌ சென்று அங்குள்ள சிவாலய கார்யங்களை மேற் பார்வை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி கோயில்‌ பூசை செய்து கொண்டு வாழ்ந்து வருவாராயினார்‌.காஞ்சி திரும்பிய யாதவரும்‌ அங்கு இளையாழ்வாரைக்‌ கண்டு வியந்து விருத்தாந்தங்களைக்‌ கேட்டு அவரை அழைத்து மயக்கத்‌ திரும்பவும்‌ தம்‌ சிஷ்யர்களோடு சேர்த்துப் பாடம்‌ சொல்லி வந்தார்‌. திரும்பவும்‌ யாதவர்‌ உபநிஷத்‌ வாக்கியத்திற்கு அவப் பொருள்‌ சொல்லவே, அந்த வாக்கியம்‌ சகல கல்யாண குணங்களும்‌ பொருந்திய பிரஹ்மத்தையே சொல்கிறது என்று சரியான பொருளைச்‌ சொல்லி அவருக்கு அறிவுறுத்தி யாதவரிடம்‌ படிப்பதை அடியோடு கைவிட்டார்‌ இளையாழ்வார்‌.யாதவரிடமிருந்து விடுபட்டு இளையாழ்வர்‌, வரதரது சேவையிலேயே இருக்கிறார்‌ என்று கேள்விப்பட்ட ஆளவந்தார்‌, அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு தமது சிஷ்யரான பெரிய நம்‌பியை அனுப்பினார்‌. காஞ்சிக்குச்‌ சென்று பெரிய நம்பியும்‌ ஆளவந்தார்‌ அருளிய ‘ஸ்தோத்திர ரத்னத்தை’ அனுசந்தித்து, இளையாழ்வாரை உகப்பித்து, அவரால்‌ அபிமானிக்கப்பட்டுத்‌ தாமும்‌ உகந்தார்‌. பெரிய நம்பியோடு கூடிய இளையாழ்வாரும்‌ ஆளவந்தாரை சேவிப்பதற்கு ஸ்ரீரங்கம்‌ நோக்கிச்‌ செல்லும்பொழுது வட திருக்காவிரியில்‌ மிகுதியான வைணவர்‌ திருக்கூட்டத்தைக்‌ கண்‌டார்‌. ஆளவந்தார்‌ திருக்குமாரரான திருவரங்கப்பெருமாளரையர்‌ முதலான அந்த வைணவர்கள்‌ ஆளவந்தார்‌ பரமபதமடைந்ததை விண்ணப்பிக்கக்‌ கேட்ட இளையாழ்வார்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தினார்‌. ஒருவாறு ஆறுதலடைந்தவராய்‌ அவரது திருமேனியைத்‌ தரிசிக்கும் பொழுது அவரது இடது கையில்‌ மூன்று விரல்கள்‌ மடங்கி யிருப்பதைக்‌ கண்டார்‌.திருவிரல்கள்‌ மடங்கியிருப்பதற்குக்‌ காரணமான ஆளவந்தாருடைய மூன்று மனக் குறைகளைப்‌ பற்றிக் கேள்விப்பட்ட இளையாழ்வார்‌ அவருடைய மனக் குறையைத்‌ தீர்ப்பதற்காக 1) வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்திற்கு பாஷ்யமெழுதி விவரிப்பேன்‌. 2) அவருடைய தகப்பனாரான பராசர மகரிஷி பெயரையும்‌, நம்மாழ்வார்‌ பெயரையும்‌ இருவருக்கு இடுவதன்‌ மூலம்‌ அவர்களுக்கு நன்றி செலுத்துவேன்‌ என்று சபதம்‌ செய்து அவரது திருவடிகளை வணங்கினார்‌. ௮க் கணத்தலேயே ஆளவந்தாரது மூன்று விரல்களும்‌ முன் போல்‌ நிமிர்ந்தன. அதைக் கண்ட அனைவரும்‌ இவரே வைதீக சிந்தாந்தத்தை நிலை நிறுத்துபவர்களுக்குத்‌ தலைவராவார்‌ என்பது உறுதி என்று நிச்சயித்தார்கள்‌.ஆளவந்தாரை உயிரோடு சேவிக்காத மனக் குறையாலே, அரங்‌க நகரப்பனை சேவிக்காமலேயே காஞ்சிக்குத்‌ திரும்பின இளையாழ்வார்‌ முன்போல்‌ கோயில்‌ கைங்கர்யங்களைச்‌ செய்து கொண்டு வந்தார்‌, ஒரு சமயம்‌ தான்‌ இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திததார்‌. காஞ்சியில்‌ வாழ்பவராய்‌ பரம வைஷ்ணவராய்‌ வரதனுக்கு அந்தரங்கராய்‌ அவருக்குத்‌ திருஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்து வரும்‌ திருக்கச்சி நம்பிடம்‌ மிகவும்‌ பணிவுடன்‌ ‘நம்பியே நான்‌ நெஞ்சில்‌ கொண்டுள்ள அர்த்தங்களைத்‌ (கருத்துக்களை) தேவப் பெருமாளிடமிருந்து அறிந்து அவை பெருமாள்‌ உகந்தவை தாமா என்பதை எனக்குச்‌ சொல்லுவீர்‌ என்று பிரார்த்தித்தார்‌. அவை என்ன என்பதையும்‌ அதன்‌ தத்வார்த்தத்தையும்‌,திருக்கச்சிநம்பி வைபவத்திலேயே கண்டோம்‌.-இளையாழ்வாரும்‌ பெரிய நம்பியை ஆச்சாரியராகக்‌ கொள்வதற்காக, ஸ்ரீரங்கத்துற்குச்‌ செல்கின்றவர்‌. வழியில்‌ மதுராந்தகத்தில்‌ ஸீதையோடு கூடிய ஏரிகாத்த ராமனைச்‌ சேவித்திருக்கையிலே, ஆளவந்தாரின்‌ மற்ற சிஷ்யர்களால்‌ இளையாழ்வாரை ஆட்கொள்ளும்‌படி நியமிக்கப்பட்டு, மதுராந்ததத்தை அடைந்திருந்த பெரிய நம்பியையும்‌ அங்கேயே தெய்வச்‌ செயலால்‌ சந்தித்து அவருடைய இணையடி வணங்கி, தங்களுக்கு ஏற்பட்ட நியமனத்தை விசாரித்து அறிந்த பின்‌, அந்த மதுராந்தகம்‌ கோயில்‌ மகிழ மரத்தடியிலேயே பெரிய நம்பியை இளையாழ்வார்‌ ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்‌. சங்கசக்கர லாஞ்சனம் ஊர்த்வ புண்டர தாரணம்‌ (12 திரு நாமங்கள்‌ அணிதல்‌)தாஸ்ய நாமம்‌. யாக ஸம்ஸ்காரம்‌, மந்திர ரத்னமாகிய த்வயம்‌ திரு அஷ்டாட்சரம்‌ என்னும்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களைப்‌ பெரிய நம்பி இளையாழ்வாருக்குச்‌ செய்தருளினார்‌. இராமானுச முனி என்று அவருக்குத்‌ தாஸ்ய நாமம்‌ வழங்கப்பட்டது. பின்னர்‌ அவ்விடத்திலிருந்து இராமானுஜரும்‌ ஆசார்ய பெரிய நம்பியும்‌ காஞ்சியை அடைந்து வரத ராஜரை வணங்கிய பின்‌ இராமானுஜருடைய இருப்பிடத்தை அடைந்தனர்‌. மிக வுகந்த பெரியநம்பி பிரபந்தத்தில்‌ (திராவிட வேத சாரம்‌) முதல்‌ இரண்டாயிரமும்‌, வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்தின்‌ பொருளையும்‌ ராமானுஜருக்கு உபதேசித்தார்‌. மனைவியோடு வந்துள்ள அவரை இராமானுசரும்‌ அவருக்கு வேண்டிய கைங்கர்யங்களைச்‌ செய்து ஆராதித்து வந்தார்‌. பின்னர்‌ ஒரு நாள்‌ இராமானுஜர்‌ இல்லாத நேரத்தில்‌ அவரது தேவிக்கும்‌ பெரிய நம்பி தேவிக்கும்‌ மன கிலேசம்‌ உண்டாகவே, இராமானுசர்‌ திரும்பி வரு முன்‌ மனைவியை அழைத்துக்‌ கொண்டு ஸ்ரீரங்கம்‌ சென்று விட்டார்‌ பெரியநம்பி. விபரமறிந்த இராமானுஜர்‌ மனைவியைக்‌ கோபித்துத்‌ தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு துறவறம்‌ மேற் கொண்டார்‌.-பேரருளாளப்‌ பெருமான்‌ சன்னிதியில்‌ தேவப் பெருமாள்‌ அவருக்கு எதிராஜர்‌ என்ற தாஸ்ய நாமத்தை அளித்து அவரது துறவறத்தை ஏற்றுக் கொண்டார்‌. அதற்‌குப்பின்‌ எதிகட்கிறைவனான இராமானுஜர்‌ திரி தண்டத்தை உடையவராய்‌ சிகை, யஞ்ஞோபவீதம்‌, காஷாயம்‌ ஆகியவற்றோடுகூடியவராய்‌, மந்திர ரத்னமான த்வயத்தை அனுசந்திப்பவராய்‌ வர்ணாஸ்ரம தர்மப்படி நடப்பவராக வாழ்ந்து வருவாராயினார்‌,

அக்காஞ்சியிலேயே கூரத்தாழ்வானும்‌ ராமானுஜருடைய மருமக்களான வாத்ஸ்ய குலத்‌ தலைவரான நடதூராழ்வானும்‌ வாதூல குலத்‌ தலைவரான முதலியாண்டானும்‌ இராமானுஐரை ஆஸ்ரயித்‌தனர்‌. ராமானுஜரான எதிராஜர்‌ அவர்களுக்குப்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்‌கள்‌ செய்வித்தார்‌. ஆளவந்தாரது அருள் நோக்கால்‌ சுத்தி யடைந்த யாதவப்‌ பிரகாசரும்‌, எதிராஜர்‌ சிஷ்யராகி கோவிந்த ஜீயர்‌ என்ற தாஸ்ய நாமம்‌ பெற்று, எதிராஜர்‌ பணித்த வண்ணம்‌ சந்யாசிகளின்‌ தர்மத்தை விளக்கும்‌ ‘யதி தர்ம சமுச்சயம்‌* என்ற நூலை இயற்றினார்‌. அதில்‌ 1) ஸந்யாச விதி, 2) ஸந்யாசம்‌ செய்து கொள்ள வேண்டிய காலம்‌, 3) ஸந்யாசியின்‌ சரீரத்திலுள்ள சிகை முதலிய அடையாளங்களும்‌ சரீரத்திற்கு வெளியிலுள்ள தண்டம்‌ முதலிய அடையாளங்களும்‌, 4) ஸந்யாச ஸ்வீகார க்ரமம்‌, 5) ஸந்யாசி முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டிய யோகாப்யாசம்‌ முதலியவை,6) ஸந்யாசி இரவும்‌ பகலும்‌ செய்ய வேண்டிய கிரியைகள்‌,7) ஸந்யாசிக்குரிய சமம்‌, தமம்‌ முதலான ஒழுக்கம்‌, 8) யதிகளுக்குரிய சாதுர் மாஸ்ய விரதம்‌ முதலியவை, 9) ஸந்யாசி ஒரிடத்தில்‌ இருக்கைக்கும்‌ ஸஞ்சரிக்கைக்கும்‌ உரிய தேச காலங்கள்‌, 10) ஸந்‌யாசிக்கு ௮க்ருத்ய கரணமும்‌, க்ருத்யா கரணமும்‌ நேரிட்டால்‌ செய்ய வேண்டிய பிராயச்‌ சித்தங்கள்‌, 11) ஸந்யாசி சரீர விவேகத்‌திற்குப்பின்‌ செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்கள்‌ என்ற பதினோரு பாவங்களும்‌ விளக்கப்பட்டுள்ளன.-கோபிகள்‌ காமத்தினாலும்‌, கம்ஸன்‌ அச்சத்தினாலும்‌, சிசுபாலன்‌ துவேஷத்தினாலும்‌ வருஷிணி குலத்திலுள்ளவர்கள்‌ ஸம்பந்‌தத்தினாலும்‌ பாண்டவர்கள்‌ ஸ்நேகத்தினாலும்‌ நாங்கள்‌ பக்தயினாலும்‌ புனிதமடைந்தோம்‌ என்றபடி இராமானுஜருக்குப்‌ பண்ண எண்ணிய துவேஷமே. இறுதியில்‌ அவருக்கு உஜ்ஜிவிதமான நல் வழியைக் காட்டியது. ஒரு சமயம்‌ ஆளவந்தாரது முதல்‌ குமாரரான திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ காஞ்சிக்கு சென்று வரதனை வணங்கி அவரிடமிருந்து ராமானுஜரை வரமாகப்‌ பெற்று அழைத்‌துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குப்‌ புறப்பட்டார்‌. அவர்களுடன்‌ கூரத்‌தாழ்வான்‌ முதலியாண்டான்‌ போன்ற அந்தரங்க சிஷ்யர்களும்‌, உடன்‌ வந்தனர்‌, மதுராந்தகப் பெருமாளை வணங்கிய பின்‌ ஸ்ரீரங்கம்‌ வரும்பொழுது பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனது ஆக்ஞை (கட்‌டளை)ப்படியே அவரை எதிர் கொண்டழைக்க பெரிய நம்பி முதலான கோஷ்டிகள்‌ வந்து கோயில்‌ மரியாதைகளைச்‌ செலுத்தி அபிமானம்‌ செய்யப்பட்டவராய்‌ பெரிய பெருமாளையும்‌ பெரிய பிராட்டியாரையும்‌, பரிவாரத் தேவதைகளையும்‌ வணங்கி ஸ்ரீரங்க ஸ்ரீகார்ய நிர்வாஹத்திற்குத்‌ தலைவரானார்‌.

பெரிய பெருமாளும்‌ இராமானுஜரைத்‌ தம்‌ தாமரைக்‌ கண்களால்‌ குவிர நோக்கி ஜோதி வாய் திறந்து ‘பொங்கோதஞ்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌” என்ற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும்‌ எமது கோயில்‌ நிர்வாஹத்தையும்‌ உமக்கும்‌ உம்முடையார்க்கும்‌ தந்தோம்‌. நம்‌ வீட்டின்‌ கார்யத்தை யெல்லாம்‌ ஆராய்ந்து நடத்தும்‌ என்று திருவாய் மலர்ந்து அருளி உடையவரென்ற தாஸ்ய நாமத்தையும்‌ வழங்கித்‌ திரு விக்ரமன்‌ வீதியில்‌ வடக்கு மாடத் திருவீதியில்‌ கீழ்க்கண்டத்தில்‌ முதல்‌ மனையான சேரன்‌ மடத்திலே உடையவரை வாழப் பண்ணிலனார்‌. அங்கு வாழ ஆரம்பித்த காலத்திலிருந்து சுமார்‌ அறுபத்தைந்து ஆண்டுகளாக திருவரங்கன்‌ செல்வம்‌ முற்றும்‌ திருத்தி வைத்த வரலாற்றைக்‌ காண்போம் ஆழ்வானை தர்ஸன நிர்வாஹத்துக்குத்‌ தமக்கு உதவியாக நியமித்து முதலியாண்டானை உள் துறைக்‌ கைங்கர்யத்திலே நியமித்தார்‌. தாம்‌ திருக்கொட்டார வாசலுக்குத்‌ தென் புறத்தில்‌ உமிக்‌கட்டில்‌ குறட்டிலே யிருந்து திருவிடையாட்டப்‌ பிரபாவமும்‌, மேல்‌ முகம்‌ கீழ்முகங்களான திருத்தோப்புகளில்‌ விசேஷங்களும்‌ திருக்‌கொட்டாரத்தில்‌ மரியாதைகளும்‌ அறிவறியாக விசாரித்து, படித்தனம்‌ முதலானதுகளும்‌ திட்டம்‌ பண்ணி நாள் தோறும்‌ கணக்குகளைப்‌ பெருமாளிடம்‌ பெருமாள்‌ பெரிய அவசரம்‌ செய்தருளிய பின்பு, ஏகாந்தமாக ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்து ஸ்ரீ கார்யம்‌ விசாரித்து ஒழுங்கு படுத்தினார்‌. இவரது கண்டிப்பை விரும்பாத விஷமிகள்‌ உபாதைகளை உண்டாக்கியதையும்‌ பொருட்படுத்தாமல்‌, அகளங்க நாட்டாழ்வான்‌ சமர்த்தராகையாலே திருவிடையாட்‌டம்‌ விசாரிக்கன்ற பணியை அளித்து ஆலிநாடன்‌ திருவீதியில்‌ பெரிய திருமண்டபத்தின்‌ குறட்டின்‌ மேலே மண்டபங்‌ கட்டுவித்‌தார்‌.-ஒருநாள்‌ ஆண்டான்‌ ததீயாநத்தோடு நாவல்பழம்‌ அழுது செய்ததினால்‌, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ முகம்‌ வாடியிருப்பதைக்‌ கண்டு ஆண்டானைக்‌ கோபித்து, கருடவாகன பண்டிதரைக்‌ கொண்டு பெருமாளுக்குச்‌ சிகிச்சை அளித்துத்‌ தன்வந்திரியைப்‌ பிரதிஷ்டை செய்து அந்தக் கோயில்‌ கார்யத்தைக்‌ கவனிக்க கருட வாஹன பண்டிதருக்குக்‌ கட்டளையிட்டு தினமும்‌ இரவில்‌ திருக்‌காப்புச்‌ சேர்க்கறதிற்கு முன்பாக குடிநீர்‌ பாலமுது செய்தருளும்படி திட்டம்‌ பண்ணித்‌ திருவரங்கத் திருப்பதி வைகாநஸமாயிருக்கலாகாது என்று முன் போல பாஞ்சராத்திரமாக மாற்றி ஏகாயநருக்கு ஐந்து பேருக்கு தீக்ஷை சாதித்து பாகவத நம்பியார்‌ என்ற பெயரும்‌ வளங்கி, தோதவத்தித்‌ தூய மறையோரான (வெள்ளை வஸ்திரம்‌ தரிப்பவர்‌) கொடுவாளெடுப்பார்‌ கையிலே பூட்டும்‌ திறவு கோலும்‌, தளையிடுவார்‌ முத்திரையான கருடமுத்திரையும்‌ சாதித்து ஆரியபட்டான்‌ காவலும்‌, பல்லவன்‌ விருப்பரையன்‌ கணக்குமாக நடந்து வர ஏற்பாடு செய்தார்‌.ஸ்தலத்தார்‌ அனுமானித்த படியே வேளாளனான விழுப்பரையனுக்கு கோயில்‌ கணக்கனுக்குள்ள சடகோப தாஸன்‌ என்ற தாஸ்ய நாமத்தை வழங்கி, ஸ்தல சம்பிரதி என்ற பெயரையும்‌ நாட்டி, அவரவர்களுக்குக்‌ கைங்கர்யங்களும்‌ நிர்ணயம்‌ பண்ணி முன்னர்‌ கொடுவனர்‌, கொடவர்‌, கொடு வாளைடுப்பார்‌, பாடுவார்‌, தளையிடுவார்‌ என்று ஐந்து கொத்திலே பரிஜனங்கள்‌ அடங்கி நடந்து வந்ததைப்‌ பத்துக் கொத்தாகப்‌ பெருக்கி நடத்த வழி வகுத்தார்‌.-அவை யாவன முதல்‌ கொத்தாக திருப்பதியார்‌ என்பவர்‌ முன்னால்‌ கோயில்‌ சம்பந்தமற்றுத்‌ தன்னுடைய திருவடிகளை ஆஸ்ரயித்த திவ்ய தேசத்து வாசிகளாவார்‌. திருப்பாற்கடல்‌ தாஸர்‌, திருக்குருகைப் பிரான்‌ போன்றவர்களுக்குக்‌ கைங்கர்யம்‌ நிர்ணயித்தார்‌.-இரண்டாம்‌ கொத்தாக கொடவரில்‌ திருத்தாழ்வரை தாஸர்‌ வம்சரான அஞ்சு திருநாமத்துக்கு, திருக்குருகூர்‌ தாஸர்‌, நாலு கவிப்‌ பெருமாள்‌ தாஸர்‌, ஸடகோபதாஸர்‌. திருக்கலிகன்றி தாஸர்‌, ராமானுஜ தாஸர்‌ என்ற திருநாமம்‌ சாதித்து அவர்களுக்குக்‌ கோயில்‌ கைங்கர்யங்களையும்‌ நிர்ணயம்‌ பண்ணி திருப்பணி கொள்வார்‌ என்று குறிப்பிட்டார்‌. மூன்றாம்‌ கொத்தாக பாகவத நம்பிமாரை பிரதிஷ்டிப்பித்து அவர்களுக்குக்‌ கைங்கர்ய மரியாதை செய்வித்‌தார்‌, நான்காவதாக கொடுவாளெடுப்பாரில்‌, பெரியபெருமாள்‌ திருவரங்கமாளிகையார்‌ போன்றோருக்கு ஆஸ்ரயணாதிகளைப்‌ பண்ணுவித்து உள்ளூரார்‌ என்று பெயரிட்டார்‌.அடுத்துப்‌ பாடுவாரான நாதமுனி அரையர்களுக்கும்‌ ஆஸ்ரயணாதிகளைச்‌ சாதித்து கைங்கர்யங்களையும்‌ நிர்ணயித்து விண்ணப்‌பஞ்‌ செய்வார்‌ என்று குறிப்பிட்டார்‌. ஆறாவதாக திருவரங்க வள்ளலார்‌ தூயமணி வேழம்‌ என்ற தம்முடைய சிஷ்யர்களுக்கு திருமஞ்சனம்‌ முதலான கைங்கர்யங்களை உண்டு பண்ணி திருக்கரகக்‌ கையார்‌ என்று பெயரிட்டார்‌. தளையிடுவாரான சேனைநாதப்‌ பிரஹ்மராயர்‌ முதலானோருக்கு ஆஸ்ரயணாதிகளை சாதித்து அவர்‌களுக்குப்‌ பூர்வம்‌ அந்தந்த பிரபுக்கள்‌ பேர்‌ கொடுத்துக்‌ களை விளங்கும்படி பண்ணி அவர்களை ஸ்தாநத்தார்‌ என்று குறிப்பிட்‌டார்‌. அடுத்து ஸ்ரீ பாஷ்யம்‌ முதல்‌ சகல வேதாந்தங்களையும்‌ தினமும்‌ ஸந்நிதியில்‌ திருவாராதனை காலங்களில்‌ விண்ணப்பம்‌ செய்யும்படி தன்னுடைய சிஷ்யர்களான கருட வாகன பண்டிதர்‌,பெரியநம்பி, ஆழ்வான்‌, கோவிந்தப் பெருமாள்‌ திருவரங்கத்தமுதனார்‌, பிள்ளான்‌, போன்றவர்களை நியமித்து அவர்களைப்‌ பட்‌டான்‌ கொத்து என்று பெயரிட்டார்‌. ஆரியபட்டாளையும்‌ ஒரு கொத்தாக்கி அவர்கள்‌ கைங்கர்யத்தையும்‌ திட்டம்‌ பண்ணினார்‌.-புண்டரீக தாஸர்‌ கைங்கர்யத்தையும்‌ ஒரு கொத்தாக்க தாஸன்‌ கொத்து என்றழைத்தார்‌. இவ்வாறு பத்துக் கொத்துக்கும்‌ கைங்கர்யம்‌ நிர்ணயம்‌ பண்ணி தேசாந்திரிகளான ஏகாங்கிகள்‌ நான்கு பேருக்கும்‌ சில கைங்கர்யங்‌களை நியமித்துத்‌ தங்கப்பிரம்பு 4, வெள்ளிப்பிரம்பு 2, தலைவளைசல்‌ பிரம்பு 8 ஆக எட்டுப் பிரம்புக்கும்‌ திருநாமதாரிகளை நியமித்‌துத்‌ தேசாந்திரிகளான சாத்தாத முதலிகளுக்கும்‌ கைங்கர்யங்களை நியமித்து திருவரங்கச் செல்வம்‌ சிந்தாமே மங்காமே பொங்கும்படி ஆராய்ந்து கொண்டுவந்தார்‌. திருநகரியிலிருந்து திரு அத்யயன உத்ஸவத்துக்கு ஆழ்வார்‌ வரமுடியாமற்போகவே, தாமே கோயிலில்‌ மங்கை மன்னனைத் தவிர ஏனைய ஆழ்வார்களையும்‌ நாதமுனியையும்‌ பிரதிஷ்டை செய்து பெருமாள்‌ அருளப்பாடு, அரையருக்கு அருளப்பாடு முதலியன சாதிக்கும்படி பண்ணினார்‌.இவ்வாறு கோயில்‌ கைங்கர்ய பரரையும்‌ அவரவர்க்குரிய பொருத்தமான கைங்கர்யங்களையும்‌ திட்டம்‌ செய்தருளி ஆழ்வார்‌களையும்‌ பிரதிஷ்டை செய்து அவர்களுக்கு திருநட்சத்திர உபாஸனங்களையும்‌ ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமப்‌ பிரகாரம்‌ நடக்கத்‌ திட்டம்‌ பண்ணி பெருமாளுக்குத்‌ திருவாராதனம்‌ நித்யோத்ஸவ பக்ஷோத்‌ஸவ, மாஸோத்ஸவ, வருஷோத்ஸவ, மகோத்ஸவங்களையும்‌ விஸ்தாரமாக நடத்தி யருளினார்‌. திருவீதியில்‌ சிறியதாக ஒரு கோசாலை கட்டுவித்து அஞ்சு கிராமத்தை அழித்து வனமாக்கி ஆநிரை காத்த பெருமானைப்‌ பிரதிஷ்டை செய்து பிருந்தாவனத்‌தைப்போல பசுக்கள்‌ இருக்குமாறு பண்ணினார்‌.-இவ்வாறு அரங்கனால்‌ அளிக்கப்பட்ட உபய விபூதி சாம்ராஜ்‌யத்தை பெரிய நம்பியின்‌ அருள்‌ நோக்கால்‌ (கடாட்சம்‌) கிடைத்ததாக எண்ணி, அவரது திருவடிகளை வணங்கி அவருக்கு வசப்பட்‌டவராய்‌ விளங்கினார்‌ உடையவர்‌. பின்னர்‌ பெரியநம்பி சொற்படி திருக்கோட்டியூர்‌ நம்பியின்‌ திருவடிகளை வணங்கி, திருமந்திரார்த்‌தத்தையும்‌, சரம ஸ்லோகார்த்தத்தையும்‌, அவரிடமிருந்து உபதேசம்‌ பெற்று, அவர்‌ ஒருவருக்கும்‌ சொல்லாதே கொள்ளும்‌ என்று

சொன்ன ஆணையையும்‌ மீறி, திருக்கோஷ்டியூரிலேயே பலருக்கும்‌
திருமந்ரத்தை உபதேசித்தார்‌ இராமானுஜர்‌. திருக்கோஷ்டியூர்‌ நம்பியும்‌ ராமானுஜரது திருஉள்ளத்தில்‌ பொங்கும்‌ கருணையை அப்‌போதே அறிந்து எதிகட்கிறைவரை ‘எம்பெருமானாரே’ என்று அழைத்துக்‌ கொண்டாடி மிக வுகந்தவராய்‌ இந்தத்‌ தர்ஸனம்‌ இன்று முதல்‌ உமது பெயராலேயே “எம்பெருமானார்‌ தர்ஸனம்‌ என்ற பெயர்‌ பெற்று விளங்கும்‌ என்று கூறினார்‌.-ஆகவே தான்‌ வைணவம்‌ அது முதல்‌ இராமானுஜர்‌ தர்சனம்‌ அல்லது எப்மெருமானார்‌ தர்ஸனம்‌ என்ற பெயரில்‌ விளங்குகிறது.-மறுபடியும்‌ பெரியநம்பி நியமனப்படி திருவரங்கப்‌ பெருமாளரையரை அணுகி வணங்கி அவரிடமிருந்து நம்மாழ்வார்‌ திருவாய்மொழியையும்‌ அதன்‌ சாரார்த்தத்தையும்‌ மற்ற ஆழ்வார்களின்‌ பிரபந்தங்களையும்‌, ஆளவந்தார்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னம்‌, சதுஸ்லோகி என்ற இரு ஸ்தோத்ரங்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ பெற்றார்‌. மறுபடியும்‌ பெரியநம்பி ஏவியபடி திருமாலை யாண்டானை அணுகி அவரிடமிருந்து திருவாய்மொழி, திருமங்‌கையாழ்வாரது பெரிய திருமொழி, மற்றும்‌ முதலாயிரம்‌, இயற்பா ஆகிய அனைத்துப்‌ பொருளையும்‌, கற்றார்‌. இப்படிக்‌ கற்று வரும் பொழுது சிற்சில இடங்களில்‌ இப்படியும்‌ அர்த்தமாகலாம்‌ என்று எதிராஜர்‌ அவரிடம்‌ கூறினார்‌. அதைக் கேட்டு திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடமும்‌ பெரிய நம்பியிடமும்‌ ஆளவந்தார்‌ அருளாத அர்த்தங்களை இவர்‌ இப்படி விசுவாமித்ர சிருஷ்டியாகச்‌ சொல்கிறாரே என்று குறைபட இவர்‌ சொன்னவையும்‌ ஆளவந்தார்‌ வேறு உருக்களில்‌ அருளிச்‌ செய்யப்பட்டவையே யாகும்‌. ஆளவந்தார்‌ திருஉள்ளம்‌ உகக்காதது இவர்‌ நெஞ்சில்‌ தோன்றாது” என்று அவர்களால்‌ கொண்டாடப்படவே பட்டார்‌ எதிராஜர்‌.இவ் வண்ணமாக ரகஸ்யார்த்தங்களோடு கூடிய உபய வேதாந்‌தங்களையும்‌, ஆசார்யர்களிடமிருந்து கற்று கூரத்தாழ்வான்‌, நடதூராழ்வான்‌, முதலியாண்டான்‌ முதலிய சிஷ்யர்களோடு மிகவுகந்து திருவரங்கத்தில்‌ வாழ்ந்தார்‌ எதிராஜர்‌. அதற்குப்பின்‌ ஆத்ரேய குலத்துதித்த பிராணதார்த்திஹரர்‌ என்னும்‌ கிடம்பியாச்சான்‌, எதிராஜரிடம்‌ சீடனாக வந்து சரணடைந்தார்‌. தனது அத்தைக்கும்‌ இராமானுஜரின்‌ மாமாவான பெரிய திருமலை நம்பிக்கும்‌ பிள்ளையான பிள்ளானை இராமானுஜருக்கு அறிமுகப்படுத்தி, அவருடைய நல்லொழுக்கத்தையும்‌ எதிராஜ பக்தியையும்‌, அவருக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதில்‌ உள்ள விருப்பத்தையும்‌ விண்ணப்பித்து இந்த யதிராஜரையே திருவேங்கடமுடையானாக நினைத்து அடைவாயாக என்று திருமலை நம்பி அவனுக்குச்‌ சொன்ன வார்த்தையையும்‌ ஆச்சான்‌ இராமானுஜருக்குக்‌ கூறினார்‌. இளம்‌ வயதினரான அப் பிள்ளானைக்‌ கருணையோடு நோக்கி, அப்போதே கிடாம்பி ஆச்சானுக்கு எல்லா மந்திரங்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ உபதேசித்து அவரையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டருளினார்‌.-அப்போது ஒரு சமயம்‌ அவரிடம்‌ விரோதம்‌ கொண்ட ஒருசிலர்‌, அவர்‌ மாதுகரத்துக்கு (உஞ்ச விருத்தி ) வரும் பொழுது விஷங்கலந்த பிட்சையை இடுவதை உணர்ந்த எதிராஜர்‌ மூன்றுதினங்கள்‌ உணவே கொள்ளாமல்‌ உபவாசமிருந்தார்‌. விஷயத்தைக்‌ கேள்விப்பட்ட பெரிய நம்பியும்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பியும்‌ பதறியபடியே திருவரங்கம்‌ வந்தார்கள்‌. அவர்களை எதிர் கொண்டழைக்க வந்த எதிராஜர்‌, நடுப் பகலில்‌ காவேரி மணலில்‌ அவர்களைக்‌ கீழே விழுந்து வணங்கா நிற்க, அவரது திருமேனியின்‌ பரிவாலே கிடாம்பி யாச்சான்‌ பதறிக் கோபிக்க, உம்முடைய திருமேனியில்‌ பரிவுடைய இந்த கிடாம்பியாச்சானால்‌ தயாரிக்கப்பட்ட பிட்சையையே நீர்‌ தினந்தோறும்‌ கொள்வீர்‌ என்று நம்பிகளிருவரும்‌, யதிராஜருக்கு நியமித்தனர்‌. அதுமுதல்‌ அவரும்‌ அப்படியே செய்து வந்தார்‌.-தனது சிறிய தாயாரின்‌ பிள்ளையான கோவிந்த பட்டரின்‌ கருத்தைத்‌ திருத்தித்‌ திரும்பவும்‌ வைணவத்திற்குக்‌ கொண்டு வருவதற்காக பெரிய திருமலை நம்பியிடம்‌ எதிராஜரால்‌ அனுப்‌பப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அங்கு சென்று திரும்பி வந்து கோவிந்‌த பட்டர்‌ உள்ளங்கை கொணர்ந்த நாயனாராயிருந்த நிலை போய்‌,சிவலிங்க சம்பந்தம்‌ கழியப் பெற்று பெரிய திருமலைநம்பியின்‌ திருவடித் தாமரையில்‌ வண்டு போலாயினார்‌ என்னும்‌ நற்செய்‌தியை எதிராஜருக்குத்‌ தெரிவித்தனர்‌. அதற்குப்பின்‌ எதிராஜர்‌ வேதார்த்த ஸங்க்ரஹத்தையும்‌, பிரஹ்ம ஸூத்ர வியாக்யானங்களான வேதாந்த சாரங்களையும்‌ கீதோபாஷ்யத்தையும்‌ அருளி, கூரத்தாழ்‌வான்‌, முதலியாண்டான்‌ முதலான சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்‌.ஆதி யந்தமற்ற வேத வாக்கியங்களுக்கு முரண்படாத பொருளை விளக்குவதன்‌ மூலம்‌, வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உண்மைப் பொருளை விளக்கும்‌ ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச்‌ செய்து ஆளவந்தாரின்‌ மனோ ரதமான தனது பொறுப்புகளில்‌ முதலாவதை நிறைவேற்றினார்‌.

அதற்குப்பின்‌ ஒரு பங்குனி உத்‌திரத் திருநாளில்‌ ஸ்ரீரங்க நாயகியும்‌ ஸ்ரீரங்கநாதனும்‌ சேர்த்தியிலே பேரானந்தத்தோடு திருமஞ்சனம்‌ கண்டருளிய பின்னர்‌, அவர்களைச்‌ சரணமடைந்து அதை விளக்கும்‌ கத்ய த்ரயத்தையும்‌ அருளிச்‌ செய்தார்‌ எதிராஜர்‌, ஸ்ரீ பாஷ்ய கீதோபாஷ்ய சார தீப வேதார்த்த ஸங்க்ரஹங்களால்‌ தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிந்தவனாய்‌, மூன்று கத்யங்களாலும்‌ ஸ்ரீமன்‌ நாராயணனைச்‌ சரணமடைந்தவனாய்‌, அந்த ஸ்ரீயப்பதிக்கே கைங்கர்யம்‌ செய்யும்‌ அதிகாரிக்கு அந்த லக்ஷிமி பதியை அடையும்‌ வரையில்‌ செய்ய வேண்டிய நித்ய கைங்‌கர்யங்களை நித்ய கிரந்தம்‌ என்னும்‌ நூலின்‌ மூலம்‌ தெரிவித்தார்‌.
அதற்குப் பின்‌ யதிராஜர்‌ பல சிஷ்யர்களோடு கூடியவராய்‌, காஞ்சி மார்க்கமாகப்‌ பக்தியோடு பேரருளாளனைச்‌ சேவித்துப் பின்‌ திருவேங்கட மலைக்குச்‌ சென்றார்‌. அங்கு பெரிய திருமலை நம்பி என்றெ ஆச்சாரியரால்‌ எதிர் கொண்டழைக்கப்பட்டு அவரை வணங்கி அவரிடமிருந்து தீர்த்தப் பிரசாதம்‌ பெற்று அவருடைய அருள் நோக்கினால்‌ அலர் மேல்‌ மங்கை யுறை மார்பனை சரணடைந்து, அத் திருமலையிலேயே ஒரு வருட காலம்‌ வாழ்ந்து அத் திருமலை நம்பியிடமிருந்து பலவிதமான அரும்‌ பொருள்கள்‌ நிறைந்த வால்மீகி வழங்கிய ஸ்ரீராமாயணத்தை உபதேசம்‌ பெற்‌றார்‌. ௮வர்‌ தம்முடைய குமாரர்களான பிள்ளானையும்‌ பிள்ளை திருமலை நம்பியையும்‌ எம்பெருமானாரது சீடர்களாக்கினார்‌-அவர்கள்‌ இருவரும்‌ எதிராஜரிடமிருந்து எல்லா அர்த்தங்களையும்‌ உபதேசமாகப்‌ பெற்றனர்‌. திருமலை நம்பியின்‌ பிள்ளையான பிள்‌ளானை திருமலைநம்பி எதிராஜருக்கு அபிமான புத்திரராகத்‌ தத்துக்‌ கொடுத்தார்‌.-யதிராஜரும்‌ நம்பியால்‌ அளிக்கப் பெற்ற அப்பிள்ளானையும்‌,தானே யாசித்துப் பெற்ற சிறிய தாயாரின்‌ பிள்ளையான கோவிந்த பட்டரையும்‌ அழைத்துக் கொண்டு காஞ்சி மார்க்கமாகவே ஸ்ரீரங்‌கத்தை அடைந்தார்‌. அந்த கோவிந்த பட்டர்‌ இல் வாழ்க்கையில்‌ ஈடுபாடின்றி விஷய வைராக்கியம்‌ உள்ளவராய்‌ இருப்பதைக்‌கண்டு அவருக்கு ஸந்யாச தர்மத்தையும்‌ அவர்‌ வேண்டிக் கொண்டபடி தனது பெயரைச்‌ சுருக்கி எம்பார்‌ என்ற தாஸ்ய நாமத்தையும்‌ வழங்கினார்‌ எம்பெருமானார்‌. ஸ்ரீரங்கநாதரின்‌ அருட் பிரசாதத்‌தாலே கூரத்தாழ்வானுக்குப்‌ பிள்ளையாகப்‌ பிறந்தார்‌. பிஞ்சாய்ப்‌ பழுத்தவரான பட்டர்‌, அந்தப் பிள்ளைக்கு பராசர மகரிஷி பெயரைச்‌ சூட்டி, அவரால்‌ இயற்றப்பட்ட விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும்‌ அரங்கேற்றி ஆளவந்தாரது இரண்டாவது மநோ ரதத்தை நிறைவேற்றினார்‌ எதிராஜர்‌. ‌ ஒரு பாசுரத்தின்‌ பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இராமானுஜரைக்கண்டு, பிள்ளான்‌ அவர்‌ ஆராய்ந்து கொண்டிருக்‌கும்‌ பொருள்‌ இது வன்றோ என்று உரைத்தார்‌. தாம்‌ முடிவு கட்டிய பொருளும்‌ பிள்ளான்‌ கூறிய பொருளும்‌ ஒத்திருப்பதைக்‌ கண்ட
எதிராஜரும்‌ மிக்க ஆச்சர்யமடைந்தவராய்‌, நாதமுனிகளின்‌ ஞானவம்சத்தில்‌ பிறந்த பெருமையினால்‌ இவர்‌ இந்தப் பொருளை அறிந்தார்‌ என எண்ணி ‘என்‌ ஞான புத்திரரே’ என்று அணைத்துக்‌ கொண்டார்‌. எதிராஜரான இராமானுஜருக்கு ஞான புத்திரர்‌ என்றும்‌
அவரது பாதுகை என்றும்‌ புகழ்‌ பெற்றவரான பிள்ளான்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வியாக்யானம்‌ அருளிச்‌ செய்தார்‌. பிள்ளான்‌ என்ற பெயருடைய அவருக்கு நம்மாழ்வாரின்‌ திருநாமமான திருக்குருகைப்பிரான்‌ என்னும்‌ பெயரை இட்டு அவர்‌ அருளிய ஆறாயிரப்படி வியாக்யானத்தையும்‌ அரங்கேற்றி
ஆளவந்தாரது மநோ ரதத்தை நிறைவேற்றினர்‌. அநந்தரம்‌ எம்பார்‌ திருத் தம்பியார்‌ சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர்‌ அவதரித்தருள அதைக் கேட்டு வுகந்து அக்குமாரருக்கு ‘பராங்குச நம்பி’ என்று நம்மாழ்வார்‌ திருநாமத்தைச்‌ சூட்டி ஆளவந்தாரது
மூன்றாவது மநோ ரதத்தையும்‌ நிறைவேற்றினார்‌ இராமானுஜர்‌.
அதற்குப் பின்னர்‌ எதிராஜருக்கும்‌, யக்ஞமூர்த்தி என்ற அத்வைதிக்கும்‌ விவாதம்‌ நடந்தது. இவ் விவாதத்தில்‌ தோற்றவர்கள்‌ வென்‌றவர்கள்‌ மதத்தைப்‌ பின்பற்ற வேண்டும்‌ என்பது உடன்பாடு.-ஸ்ரீரங்கத்தில்‌ பதினெட்டு நாள்‌ விவாதப் போர்‌ நடந்தது. மனம்‌ சோர்ந்த எதிராஜரது கனவில்‌ அவரது ஆராதன மூர்த்தியான வரதராஜர்‌ தோன்றி அபயமனித்தார்‌. அவரது அருள்‌ பெற்ற எதிராஜர்‌ பதினெட்டாவது நாள்‌ மாயாவதி மதத் தலைவரான யக்ஞமூர்த்‌தியை வாதத்தில்‌ வென்று, அருளாளப் பெருமாள்‌ அருளால்‌ வென்‌றமையால்‌, அவருக்கு அப் பெருமானின்‌ திருநாமத்தையும்‌ தமது பெயரையும்‌ சேர்த்து அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ என்னும்‌ தாஸ்ய நாமத்தை யிட்டார்‌. எதிராஜர்‌ சிஷ்யராகி அவரும்‌ ஞான சாரம்‌’ ‘பிரமேய சாரம்‌’ என்ற இரு பிரபந்தங்களை யிட்டருவினார்‌. அவற்றில்‌ ஸச் சிஷ்யனுக்கு (நல்ல சிஷ்யன்‌) ஸதாசார்யனே பரதேவதை. அவன்‌ திருவடிகளில்‌ கைங்கர்யமே பரம ப்‌ராப்யம்‌. (பெருந்தனம்‌) அவன் தான்‌ பகவதவதார விசேஷம்‌ என்ற கருத்துக்களை அருளிச்‌ செய்தார்‌.

அதற்குப்‌.பின்னர்‌ எதிராஜர்‌ திக் விஜயம்‌ செய்ய எண்ணி, பல சிஷ்யர்களோடு புறப்பட்டு ஆங்காங்கு சென்று பிற மதத்தினர்‌-அனைவரையும்‌ வென்று காஷ்மீர தேசத்திலுள்ள ஸரஸ்வதி பீடத்தை அடைந்தார்‌. அங்கு அவருடைய பிரஹ்ம ஸூத்திரப் பாஷ்‌யத்தை சிரசா வகித்த ஸரஸ்வதி தேவி, இதுவே ஸ்ரீபாஷ்யம்‌-மிகச் சிறந்த பாஷ்யத்தைச்‌ செய்த நீர்‌ இனி ஸ்ரீ பாஷ்யகாரர்‌ என்றே புகழ்‌ பெறுவீர்‌ என்று கூறி அந்த ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கோசத்தையும்‌ தனது ஆராதன மூர்த்தியான ஹயக்கிரீவரையும்‌ அவரிடம்‌ ஒப்படைத்தாள்‌. அவற்றையும்‌ ஏற்றுக் கொண்டு தனது திருவாராதனப்‌ பெருமாளான வரதராஜனோடு தினந்தோறும்‌ ஆராதித்துக்‌ கொண்டு, திருவேங்கடமலைக்கு மீண்டும்‌ எழுந்தருளினார்‌.
பக்தனான தொண்டைமான்‌ சக்கரவர்த்தியின்‌ வசம்‌ சங்கு சக்கரங்களைக்‌ கொடுத்திருப்பதைப்‌ பற்றாகக் கொண்டு ஸ்ரீநிவாசன்‌ சிவனே யொழிய விஷ்ணு அல்ல என்று சைவர்கள்‌ வாதம்‌ புரிய முற்பட, அவர்‌ விஷ்ணுவே என்பதை நிலைநாட்டினார்‌ எதிராஜர்‌-ஆனால்‌ சைவர்கள்‌ பிடிவாதம்‌ பிடித்தமையால்‌ அனைவரும்‌ கூடிச் சேர்ந்து நிச்சயித்து சங்கு சக்கரங்களையும்‌, சூலத்தையும்‌ கர்ப்பக் கிரகத்தில்‌ வைத்துக்‌ கதவைச் சாத்தி எல்லோரும்‌ ஒன்றாக இருந்து காவல்‌ காத்து, காலையில்‌ ஒன்றாகவே வந்து கதவைத் திறந்து உள்ளே புகுந்து திருவேங்கடமுடையானைக்‌ கண்டனர்‌. சூலத்தை விடுத்துச்‌ சங்கு சக்கரங்களைத்‌ தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனைக் கண்ட சைவர்கள்‌ உடனே ஓடிவிட்டார்கள்‌. யதிராஜரும்‌ திருமலை நம்பியும்‌ மிக உகந்தனர்‌. திருமலை நம்பியால்‌ பரிபூரணமாகக்‌ கடாட்சிக்கப்பட்ட எதிராஜர்‌, எல்லா சிஷ்யர்களோடும்‌ ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி, வேதாந்த சித்தாந்தத்தை நிலைநாட்‌டுவதில்‌ வல்லவரானார்‌. பிற மதத்தவர்கள்‌ அதனால்‌ பொறாமை கொண்டனர்‌.பிற மதத்தவர்களால்‌ துர்ப்போதனை செய்யப்பட்ட சோழராஜன்‌ சிவனைக் காட்டிலும்‌ மோலனவன்‌ இல்லை என்று ஏட்டில்‌ எழுதிக்‌ கையெழுத்திடுமாறு நல்லவர்கள்‌ அனைவரையும்‌ துன்‌புறுத்தி வந்தான்‌. அவன்‌ இதற்காக எதிராஜரை அழைத்து வரத்‌ தன்‌ சேவகர்களை அனுப்பினான்‌. சிஷ்யர்கள்‌ மூலம்‌ இச் செய்தி ஸ்ரீரங்கத்தை எட்டியது. இதைச்‌ செவியுற்ற கூரத்தாழ்வான்‌ காஷாயத்தையும்‌ திரிதண்டத்தையும்‌ தரித்தவராய்‌ பெரிய நம்பியோடு கூட ராஜசபைக்குச்‌ சென்றார்‌. நடதூராழ்வான்‌ முதலானோரோடு கூடியவராய்‌ யதிராஜரும்‌ வெள்ளை வஸ்திரம்‌ சாத்திக் கொண்டு -மேற்குத்‌ திக்கை நோக்கிப்‌ புறப்பட்டார்‌. அரங்க நகரப்பனே வழித்‌ துணையாகக்‌ கூடச்‌ சென்றான்‌. ஒரு மலையடியிலே இவரது சிஷ்யரான திருமலை நல்லானின்‌ சிஷ்யர்களான வேடமுதலிகள்‌, மிகவும்‌ தளர்ந்து வந்த எம்பெருமானார்‌ கோஷ்டியை வரவேற்று உபசரித்து குளிர் போக்கி உண்ண தேனும்‌ தினைமாவும்‌ அளித்தனர்‌. பின்னர்‌ பக்கத்திலுள்ள ஒரு ஊரில்‌ உள்ள அந்தணர்‌ இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கட்டளைவாரி என்ற அந்தணனகத்திலே ‘அமுது செய்‌யப்‌ பண்ணுவியுங்கள்‌’ என்று கூறிவிட்டுச்‌ சென்றனர்‌. அவனது பார்யை முன்னரே எதிராஜர்‌ சிஷ்யையாதலால்‌, முதலில்‌ எதிராஜரை அடையாளம் காண மாட்டாது திகைத்தவள்‌ பின்னர்‌, தன்‌ ஆத்மாவை உய்வித்த எதிராஜர்‌ என்று கண்டு, தன்‌ கணவனை எம்பெருமானாரது சிஷ்யனாக்கி, தன்‌ வீட்டில்‌ அவர்கள்‌ சில நாள்‌ தங்கிப் போகுமாறு உபசரித்து, பின்னர்‌ அவருக்கு வேண்டிய காஷாயம்‌ திரி தண்டம்‌ முதலியவற்றையும்‌ சமர்ப்பித்தாள்‌. சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்ட முறையில்‌ மறுபடியும்‌ ஏற்றுக் கொண்டு எம்பெருமானார்‌, எம்பெருமான்களுக்குத்‌ திருவாராதனம்‌ செய்து வந்தார்‌. இவ்வாறு வழிநடந்து மேல்நாட்டை (மைசூரை) அடைந்‌தார்‌ எதிராஜர்‌.அந்த தேசத்து அரசன்‌ விட்டல தேவராயனும்‌, அவனது மகளுக்குப்‌ பிடித்திருந்த பிசாசை ஓட்டிய எதிராஜரது திறமையான பக்தியில்‌ ஈடுபட்டுத்‌ தானும்‌ வைணவனாக மாறி விஷ்ணு வர்த்தனன்‌ என்ற நாமமேற்று அவரது சீடரானான்‌. எதிராஜரை அவனுக்கு அறிமுகம்‌ செய்த தொண்டனூர்‌ நம்பி போன்ற சில அந்தணர்‌ தலைவர்களும்‌ எதிராஜரது சீடர்களானார்கள்‌. அவ் வரசனை வசப்படுத்தி யிருந்த ஜைனர்களும்‌ எதிராசரால்‌ வாதில்‌ தோற்கடிக்கப்பட்டு
அரசனால்‌ தண்டிக்கப்பட்டனர்‌. தொண்டனூர்‌ நம்பிக்கு ‘நம்பி தம்‌பிரான்‌’ என்ற திருநாமம்‌ வழங்கப்பட்டது. எம்பெருமானாரது மஹாப் பிரபாவம்‌ எல்லோருக்கும்‌ தெரியலாயிற்று.
இவ்வாறு எம்பெருமானார்‌ சிங்கர்‌ கோவிலில்‌ இருக்கும் பொழுது அவர்கள்‌ கனவில்‌ தோன்றிய திருநாராயணன்‌, யாதவாத்ரியில்‌ பூமிக்கு அடியில்‌ இன்ன அடையாளமுள்ள இடத்தில்‌ நான்‌ புதைந்து இருக்கிறேன்‌. என்னை அங்கு பிரதிஷ்டை செய்வாய்‌.-ஊர்த்வ புண்டரத்திற்கு (திருநாமம்‌) வேண்டிய வெள்ளை மண்‌ணையும்‌ எடுத்துக் கொள்வாய்‌ என்று அவரிடம்‌ கூறி அருளினான்‌.
அப்போது எதிராஜரும்‌ மிகவும்‌ உகந்தவராய்‌ கல்யாண ஸரஸ்ஸில்‌ -நீராடிப்‌ பரிசுத்தி பெற்றவராய்‌, அவ்வடையாளங்களைக்‌ கொண்டு திருநாரணனோடு கூடிய விமானத்தைக்‌ கண்டுபிடித்து, அக்கோயிலிலே மூலமூர்த்தியான திருநாரணனைப்‌ பிரதிஷ்டை செய்தார்‌.-வெள்ளை மண்ணையும்‌ சிஷ்யர்களைக்‌ கொண்டு எடுத்துத்‌ தரித்‌துக் கொண்டு திருநாராயணனின்‌ உத்ஸவ மூர்த்தியான ராமப்பிரியரைத்‌ தேடிக் கொண்டு டில்லிக்குச்‌ சென்றார்‌. அங்கு டில்லி அரசனான சுல்தானின்‌ பெண்ணின்‌ அந்தப் புரத்தில்‌ இருந்த அப்பெருமாளை ‘என்‌ செல்லப்‌ பிள்ளாய்‌ வருக” என்று கூவினார்‌. ஓடி வந்து மடியில்‌ ஏறிய ராமப் பிரியரை அழைத்துக்‌ கொண்டு வந்து திருநாராயணபுரத்தில்‌ உற்சவ மூர்த்தியாகச்‌ சேர்த்து, அந்தச் செல்வப் பிள்ளையான திருநாரணனுக்கு உற்சவம்‌ முதலானவற்றைச்‌ செய்து இன்புற்‌றார்‌. அப்பெருமானைத் தேடி வந்த சுல்தானின்‌ பெண்‌ அங்கேயே ஒன்றுபட்டு மறைந்தாள்‌. அவளையும்‌ ஆண்டாளைப் போல துலுக்‌க நாச்சியார்‌ என்று வணங்குகின்றனர்‌.பெரிய நம்பியும்‌ கூரத்தாழ்வானும்‌, தர்சனத்திற்காக (வைணவத்திற்காக) தர்சனத்தை (கண்களை) இழந்ததைக்‌ கேள்விப்பட்டு மிக வருந்திய எதிராஜர்‌ பெரிய நம்பி பரமபதமடைந்த போதிலும்‌, கூரத்தாழ்வான்‌ க்ஷேமமாயிருப்பதையும்‌, சோழ அரசன்‌ விரைவிலேயே துர் மரணம்‌ அடைந்ததையும்‌ கேள்விப்பட்டு ஸ்ரீரங்கச்‌ செல்வத்திற்கு உபத்திரவம்‌ நீங்கியதை எண்ணி ஆனந்தமடைந்தார்‌.-அதற்குப் பின்னர்‌ கல்யாண தீர்த்தம்‌ சிறப்படைந்தது. அந் நகரமும்‌ திருநாராயணபுரமாயிற்று. அங்குள்ள ஸ்ரீயப்பதியும்‌ ஸம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) ஆனார்‌. யதிராஜரின்‌ ஜயஸ்தானமாயிற்று அவ்‌வூர்‌. மேலும்‌ எதிராஜர்‌ தமது திருவடிகளைச்‌ சரண் புகுந்த ஜனங்களின்‌ நன்மைக்காக தமது அர்ச்சா மூர்த்தியை (மூலவரை) அவர்களுக்கு அளித்தார்‌. அதனால்‌ கிரேதா யுகத்தில்‌ நாராயணாத்ரி என்றும்‌ திரேதா யுகத்தில்‌ வேதாத்ரி என்றும்‌ துவாபர யுகத்தில்‌ யாதவாத்ரி என்றும்‌ அழைக்கப்பட்டு வந்த :யாதவாத்ரி, இராமானுஜர்‌ பெயரால்‌ யதுகிரி என்றும்‌ பெயர்‌ பெற்றது.-செல்வப் பிள்ளையையும்‌ யதுகிரி நாச்சியாரோடு கூடிய திருநாராயணனையும்‌ வணங்கி, அங்குள்ள சிஷ்யர்களை (திருநாராயணனை) முறையாகப்‌ பூஜிக்கும்படி நியமித்து விட்டு சில அந்தரங்க சிஷ்யர்களோடு திரும்‌பிய எதிராஜர்‌ ஸ்ரீரங்கத்திற்குச்‌ சென்று ஸ்ரீரங்கநாதனை ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார்‌. குலோத்‌துங்க சோழன்‌ மனந்திருந்தி உடையவரிடம்‌ மன்னிப்புக் கேட்டு திருவரங்கச்‌ செல்வத்தைத்‌ திருப்‌பிக் கொடுக்க வாங்கி முதலியாண்‌டானுக்குத் தான ஸாஸனம்‌ பண்ணுவித்து அந்த விருத்தாந்தத்தை (சம்பவத்தை) ஆர்யபட்டாள்‌ வாசலிலே சிலாசாசனம்‌ செய்தார்‌.இவ்வாறு ஆண்டானைக்‌ கொண்டு, ஸ்ரீகார்யம்‌ நடத்தி வருகையில்‌ பெரிய நம்பி குமாரருக்கு ஆளவந்தார்‌ மடத்தையும்‌, ஆழ்வானுக்‌கும்‌ ஆண்டானுக்கும்‌ மனைகளையும்‌ ஸ்ரீ சேநாபதி பட்டையமும்‌ ஸாதித்தருளினார்‌. இவ்வாறு எம்பெருமானார்‌ முதலிகளுடன்‌ வாழ்ந்தருளி நூறு சாதுர்மாஸ்யா நந்தரம்‌ (நூறு ஆண்டுகாலம்‌] கழித்து ஸதாபிஷேகமும்‌ கண்டருளி எதிராஜன்‌ என்னும்‌ பேர்‌ பெறறு தம்‌ சிஷ்யரான ராமானுஜதாசன்‌ மூலம்‌ தன்னுடைய விக்ரகத்தைப்‌ பண்ணுவித்து தன்‌ சத்தியை அதில்‌ ஆதானம்‌ பண்ணிக்‌ கந்தாடை ஆண்டானைக்‌ கொண்டு ஸ்ரீபெரும்புதாரில்‌ பிரதிஷ்டை செய்தார்‌.அவதாரங்களெல்லாம்‌ ஒத்திருக்க ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு முக்யத்வம்‌ உண்டானாற்போல, திவ்ய தேசங்களெல்லாம்‌ ஒத்திருக்க கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயில்‌, திருநாராயண புரத்திற்கு முக்கியத்வம்‌ உண்டாவதைப் போல, ஆச்சார்யர்கள்‌ எல்லோரைக் காட்டிலும்‌ எம்பெருமானாருக்கு முக்கியத்வம்‌ ஏற்‌பட்டது. பின்னர்‌ அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீரங்கத்திற்குத்‌
திரும்பிச் சென்று ஸ்ரீரங்கநாதரை ஆனந்தக் கண்ணீர்‌ ததும்ப வணங்கினார்‌. பின்னர்‌ அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்‌; ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களுக்கான திருஅத்யயன உத்ஸவம்‌ ஆழ்வார்‌ திருநகரியிலிருந்து நம்மாழ்வார்‌ எழுந்தருள இயலாமையால்‌ தடைப்‌பட்டு விட்டது என்று அவரிடம்‌ கூறினார்கள்‌. அந்த ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார்‌ விக்கிரகம்‌ ஒன்றைப்‌ பிரதிஷ்டை செய்வித்து, அவரைக் கொண்டு அரங்கநகரப்பனுக்கு இருபது நாள்‌ அத்யயன உத்ஸவத்தைச்‌ செய்வித்து பிற்காலத்தில்‌ மற்ற ஆழ்வார்களின்‌ பிரபந்தங்களையும்‌, தன்‌ விஷயமான இராமானுஜ நூற்றந்தாதியையும்‌ சேர்த்துத்‌ திருவரங்கன்‌ செவி சாத்துப்படி செய்தார்‌. மற்றைய ஆழ்வார்களுக்கும்‌ ஆண்டாளுக்கும்‌ விக்கரகப்‌ பிரதிஷ்டையும்‌ செய்து வைத்தார்‌. அதைப் போலவே மிகச்சிறந்த திவ்ய தேசங்களிலும்‌ ஆழ்வார்‌களுடையவும்‌ ஆண்டாளுடையவும்‌ விக்கரகங்களைப்‌ பிரதிஷ்டை செய்து அத்யயன உத்ஸவமும்‌ நடக்கும்படி செய்தார்‌. எம்பெருமாளுக்கு ஏற்பட்டதான பாஞ்சராத்திர ஆகம விதி திருவாராதனம்‌,ஆளவந்தார்‌ காலத்திற்குப் பின்‌ வைகானஸ ரீதியாக மாறி நடந்ததை மாற்றி உடையவர்‌ முன்‌ போலவே பாஞ்சராத்திர விதிப்படி நடக்கும்படி பண்ணுவித்தார்‌. உடையவர்‌ திருவரங்கப் பெருமாளரையரிடத்திலே திருவாய்‌ மொழியை பண்‌ இசை தாளத்துடன்‌ ஓதி அப்படியே பாடவல்ல பல விண்ணப்பஞ்‌ செய்வாரை(அரையர்களை) ஏற்படுத்தி , அவர்களுக்குத்‌ தனி அலங்காரமும்‌ மான்யங்களும்‌ வழங்கினார்‌. பிள்ளை உறங்கா வல்லி தாஸரைப்‌ பெரிய பெருமாளது அடியாராக்கி, பெருமாளுக்குத்‌ திருமேனிக்‌ காவலராய்‌ நியமித்தார்‌. அவருடைய மருமக்களான வண்டரும்‌,சுண்டரும்‌ மடத்திற்குத்‌ ததியாராதனத்துக்கு அழுதுபடி முதலானவை நடத்திக் கொண்டு வந்தார்கள்‌.-உடையவர்‌, திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌ சந்நிதியில்‌ ஆளவந்தாரது ஸ்தோத்ரத்திற்கு ஆசார்யன்‌ உபாயம்‌ என்னும்‌ அர்த்தத்‌தைப்‌ பெற்று லட்சுமண முனி என்ற நாமத்தையும்‌ பெற்றார்‌. உடையவர்‌ கொங்குப் பிராட்டி என்ற பெண்மணிக்கு இருமுறை த்வயத்தை உபதேசித்துத்‌ தன்‌ திருவடி நிலைகளை அருளிச் செய்தார்‌.-உடையவர்‌ திருவேங்கட யாத்திரைக்கு எழுந்தருளும்‌ வழியில்‌ திருவெள்ளறை , திருக் கோவலூர்‌ ஆகிய கோவில்களைச்‌ சேவித்து அங்கிருந்து புறப்பட்டு அஷ்ட ஸஹஸ்ரநாமம்‌ (எண்ணாயிரம்‌) குடியைச் சேர்ந்த யக்ஷேசர்‌ (எச்சான்‌) என்பவர்‌ ரஜோ குணம்‌ மிகுந்‌தவராய்‌ இருக்கையாலே அவர்‌ வீட்டில்‌ அமுதுண்ண மறுத்து,சாத்வீகையான பருத்திக்‌ கொல்லை யம்மாள்‌ வீட்டில்‌ எழுந்தருளி,அமுது செய்தார்‌. பின்னர்‌ எச்சானையும்‌ அவன்‌ தவறை உணர்ந்து திருந்தும்படி செய்தார்‌.-உடையவர்‌ தம்‌ தர்சனத்தை நிலை நாட்ட திக்விஜயங்கள்‌ செய்தார்‌. திருமாலிருஞ்சோலை அழகரை மங்களாசாசனம்‌ செய்து, தென் மதுரையில்‌ கூடலழகரையும்‌, ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ பெரியாழ்‌வாரையும்‌, வடபெருங்கோயிலுடையானையும்‌, ரங்கமன்னாரையும்‌ ஆண்டாளையும்‌ மங்களாஸாஸனம்‌ செய்தார்‌. ஆண்டாள்‌ பாரித்தபடியே நூறுதடா நிறைய அக்கார அடிசிலும்‌, நூறுதடா நிறைய வெண்ணையும்‌ சமர்ப்பித்து ஆண்டாளின்‌ அருள் நோக்கையும்‌ அவளால்‌ கோவிலண்ணர்‌ என்று சிறப்பாகச்‌ சொல்லப்படும்‌ சன்மானத்தையும்‌ பெற்றார்‌.பின்னர்‌ திருப்புளிங்குடி முதலான திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, திருக்குருகூரில்‌ நம்மாழ்வாரையும்‌, பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாஸாஸனம்‌ செய்தார்‌. ‘மதுரகவிகள்‌’ என்று திருநாமமாயிருந்த ஆழ்வார்‌ திருவடி நிலைகளுக்கு ‘இராமானுசன்‌’என்று திருநாமம்‌ ஆக வேண்டும்‌ என்று உடையவர்‌ பிரார்த்தித்‌ததை ஆழ்வார்‌ அங்கீகரித்தார்‌, உடையவர்‌ திருக்கோளூரில்‌ வைத்த மாநிதிப்‌ பெருமாளைச்‌ சேவிக்கச்‌ சென்றபொழுது அங்குள்ள ஒரு சிறு பெண்ணோடு ஸம்வாதம்‌ செய்து அவளது பிரபந்த அறிவினை மெச்சி அக்குடும்பத்தை ரட்சித்தார்‌. பின்னர்‌ நவ திருப்பதி பெருமாள்களை யெல்லாம்‌ வணங்கி, வானமாமலை, திருக்குறுங்குடி எம்பெருமான்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்தார்‌. திருக்குறுங்குடி நம்பிக்கு ஆசார்சயராக இருந்து த்வயத்தை உபதேசித்து ‘வைஷ்‌ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமத்தையும்‌ சாத்தி யருளினார்‌. திருவண்‌பரிசாரம்‌, திருவட்டடாரம்‌, திருவனந்தபுரம்‌ போன்ற குட்ட நாட்‌டுத்‌ திருப்பதிகளையும்‌ மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌ மங்களாசாசனம்‌ செய்தார்‌. சோழராஜாவால்‌ இடிக்கப்பட்ட தில்லைச்சித்திரகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்த ராஜப்‌பெருமாளின்‌ உத்சவ மூர்த்தியை வேங்கடமலை அடிவாரத்தில்‌ பிரதிஷ்டை செய்து முறைப்படி ஆராதனைக்கு ஏற்பாடு செய்தார்‌.நம்மாழ்வார்‌ முதலான ஏனைய ஆழ்வார்களையும்‌, பிரதிஷ்டை செய்த பின்‌ வெற்றி வீரராய்‌ சிஷ்ய கோடிகளோடு திருவரங்கத்திற்‌குத்‌ திரும்பச்‌ சென்று பின்‌ மற்ற மதங்களைப்‌ பற்றியிருந்த ஜனங்களைத்‌ தன்‌ அடியார்களாக்கி சிஷ்யர்களுக்கு முறைப்படி ஓவ்வொரு கைங்கர்யத்தையும்‌ பிரித்துக் கொடுத்து கவலை நீங்கப்‌ பெற்றவராய்‌ இன்புற்றிருந்தார்‌ எதிராஜர்‌.உடையவர்‌ தெற்கிலுள்ள திவ்ய தேசத்துப்‌ பெருமான்களை எல்லாம்‌ சேவித்து மங்களாசாசனம்‌ செய்த பின்‌ வடநாட்டிலுள்ள பத்ரிஹாஸ்ரமத்தில்‌ நர நாராயணனையும்‌, சாளக்ராமத்தில்‌ மலை யையும்‌, மற்றும்‌ அயோத்தி, மிதிலை, காசி, ஜகன்னாதம்‌ முதலிய இடங்களில்‌ பெருமாள்களையும்‌, சேவித்து மங்களாசாசனம்‌ செய்‌தார்‌. வாரங்கல்‌ என்ற பட்டிணத்தில்‌ ‘பாஞ்சாலராயன்‌’ என்ற பெருமாளை பிரதிஷ்டை செய்தார்‌. ஸ்ரீகாகுளத்தில்‌ ஸ்ரீவல்லபன்‌ என்னும்‌ எம்பெருமானுக்கு தெலுங்குராயன்‌ என்று திருநாமம்‌ சாத்தினார்‌. இவ்வாறு உடையவர்‌ வடநாடு தென்னாடு முதலிய எல்லா இடங்களுக்கும்‌ சென்று வைணவத்திற்குச்‌ சேவை செய்த பாங்கினை எல்லாம்‌ ஸ்ரீபிள்ளை லோகம்‌ ஜீயர்‌ அருளிய ‘ஸ்ரீ ராமானுஜார்ய திவ்ய சரிதை’ என்ற மணிப்பிரவான நடையில்‌ எழுதப்பட்ட நூலில்‌ காண்கிறோம்‌.எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான்‌ த்ரிதண்டம் முதலிஆண்டான்‌ பவித்ரம் -பாதுகைகள்‌, எம்பார்‌ பாதச்சாயை (திருவடி நிழல்‌)அருளாளப்பெருமாள்‌ எம்பெருமானார்‌ ஆத்ம ஸமர்‌. பிள்ளை உறங்கா வில்லி தாசர்‌ (பாஹிசமர்‌) தோழர்‌. பெரிய நம்பி தொடக்கமான ஐந்து ஆசார்யர்கள்‌ ஐந்து தலைகள்‌. திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ புத்திரஸமர்‌ ஆவார்கள்‌. ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களைக்‌ கொண்டு பாஷ்யகாரர்‌ ஸ்ரீ ஸுத்ர பாஷ்யத்தை அருளிச்‌செய்து அதைக்‌ கிடாம்பி ஆச்சான்‌ கிடாம்பிப்‌ பெருமாள்‌ முதலானோர்‌ மூலமாக சாரதா பீடத்துக்கு அனுப்பினார்‌. ஸரஸ்வதி தேவி அதைத்‌ தலையில்‌ தரித்து ஸ்ரீ பாஷ்யகாரர்‌ என்று எம்பெருமானாருக்‌குத்‌ திருநாமம்‌ சாத்தினாள்‌ என்பதை முன்பே கண்டோம்‌. உடையவர்‌ ஒர்‌ ஊமைக்கு தம்முடைய திருமேனியை ரக்ஷகமாகக்‌ காட்டியருள அதைக்கண்ட கூரத்தாழ்வான் தான்‌ ஊமையாய்‌ பிறக்கவில்‌லையே என்று தம்மை வெறுத்தார்‌. முதலியாண்டான்‌ தன்‌ குமாரனுக்கு இராமானுஜன்‌ என்று திருநாமம்‌ சாத்தினார்‌. கந்தாடையாண்‌டான்‌ என்று பிரசித்தி பெற்ற அவரை ஆட்கொண்ட வில்லி ஜீயரது சீடனாக்கினார்‌. ஏனைய சீடர்களும்‌ தம்‌ குமாரர்களுக்கு உடையவரது திருநாமம்‌ இட்டனர்‌. அவ்வாறு செய்த ஒரு வைணவ வண்ணானுடைய பிள்ளைக்கும்‌ இராமானுசர்‌ அருள்‌ புரிந்தார்‌. . இவ்வாறு உபய கைங்கர்ய நிர்வாஹகராய்‌ செங்கோல்‌ செலுத்தி உபயவிபூதியிலும்‌ தம்முடைய சிறு முறி செலுத்தி, 74 ஆச்சார்யார்களும்‌ எழுநூறு ஜீயர்களும்‌ பன்னீராமிர ஏகாங்கிகளும்‌ அனேக வைணவர்களும்‌ சேவிக்க திருவரங்கத் திருப்பதியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌,எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ சரணமடைந்த முதலிகளான எழுபத்து நாலு ஆச்சார்யர்களாவது, ஆளவந்தார்‌ குமாரர்களில்‌ சொட்டை நம்பி தொடங்கி பெரிய நம்பி குமாரர்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பி குமாரர்‌, திருமாலையாண்டான்‌, பெரிய திருமலைநம்பி முதலிய ராமானுசரது ஆச்சார்ய குமாரர்களும்‌, கூரத் தாழ்வான்‌ முதலியாண்டான்‌ முதலான அவரது சிஷ்யர்களின்‌ குமாரர்களுமாக எழுபத்து நாலு சிம்மாசனாதிபதிகளையும்‌ நியமித்தார்‌. அவர்களில்‌ முக்கியமானவராக நால்வரை ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனாதிபதிகளாகவும்‌ அந்நால்வரிலும்‌ தன்‌ ஞான புத்திரனான பிள்ளானை உபய வேதாந்த பாஷ்ய சிம்மாசனாதிபதியாகவும்‌, ராமானுஜாச்சாரியார்‌ நியமித்தருளினார்‌. அந்த 74 சிம்மாசனாதிபதிகளுடன்‌ எழுநூறு ஸந்யாசிகளுடனும்‌, பன்னீராயிரம்‌ பரம ஏகாந்திகளுடனும்‌, முன்‌னூறு கொற்றியம்மையார்களுடனும்‌, எண்ணிறந்த ராஜாக்களாலும்‌, மற்றும்‌ பல சாத்தன. சாத்தாத முதலிகளாலும்‌ பிள்ளையுறங்கா வில்லிதாசர்‌ முதலான திருநாம தாரிகளாலும்‌ பொன்னாச்சியார்‌ போன்ற திருநாம தாரி ஸ்‌த்ரீகளாலும்‌, ஆசர்யமான சிஷ்ய ஸம்விருத்தி பெற்றவராய்‌ விளங்கினார்‌.

பெரியவர்களான கூரத்தாழ்வான்‌ முதலியாண்டான்‌, தம்பியான எம்பார்‌, ஞான புத்ரரான பிள்ளான்‌ அனைவரையும்‌ தம்‌ அருள் நோக்கால்‌ ஆசிர்வதித்து மூழ்ந்தார்‌. சிஷ்யர்களால்‌
பிரார்த்தக்கப்பட்டவராய்‌ (உத்ஸவ மூர்த்திகளான] தம்‌ அர்ச்சா விக்கிரங்களை முறையே ஸ்ரீங்கத்திலும்‌, ஸ்ரீ பெரும்புதூரிலும்‌ திரு நாராயணபுரத்திலும்‌ பிரதிஷ்டை செய்து சீடர்களின்‌ விருப்பத்‌தைப்‌ பூர்த்தி செய்தார்‌-இப்பொழுதும்‌ எனக்கு இடமின்றி விரட்டியதால்‌, நான்‌ எனக்குச்‌ சமயம்‌ வாய்க்கும் பொழுது, உமது மதத்தையும்‌ கலக்குவேன்‌ என்று ஆணையிடுகிறேன்‌ என்று கலி புருஷன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்டு, ஆதிபுருஷனான ஸ்ரீயப்பதியைச்‌ சரணடைந்து எனது தர்சனம்‌ (மதம்‌) தடையற்றதாய்‌ வாழக் கடவது என்று அருள் புரியுமாறு பிரார்த்தித்தார்‌ எதிராஜர்‌. தனது அந்திம தசையில்‌ தன்‌ குலதெய்வமான தேவப் பெருமாளையும்‌ ஸரஸ்வதி அளித்த ஹயக்‌ரீவனையும்‌ தன்‌ ஞான புத்திரரான பிள்ளானுக்கு அளித்தார்‌ மூவுலகிலும்‌ சிறப்புறப்‌ புகழடைந்தவரான எதிராஜர்‌.இப்படியிருக்கிற உடையவர்‌ திருவடிகளில்‌ நித்ய கைங்கர்யம்‌ பண்ணும்‌ முதலிகள்‌:- கூரத்தாழ்வானும்‌ முதலியாண்டானும்‌,நடதூராழ்வானும்‌, பட்டர் வர்க்கமும்‌ ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத்துணையாக இருப்பவர்கள்‌. அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ திருவாராதனம்‌ செய்தருளுவார்‌. கிடாம்பிப்‌ பெருமாளும்‌ கிடாம்பியாச்சானும்‌ திருமடைப்பள்ளிக்குக்‌ கடவராயிருப்பர்‌. வடுகநம்பி எண்ணைக் காப்புச்‌ சாத்துவார்‌. கோமடத்துச்‌ சிறியாழ்வான்‌ கலசப்‌பாளையும்‌ ஸ்ரீபாதாட்சையும்‌ எடுப்பார்‌. அவரது சீடரான பிள்ளை உறங்கா வல்லிதாசர்‌ கருவூலம்‌ (பணப்பற்றுகள்‌] நோக்குவார்‌. அம்மங்கி பாலமுதம்‌ காய்ச்சுவார்‌. உக்கலாழ்வான்‌ பிரசாதம்‌ எடுப்பார்‌.-உக்கலம்மாள்‌ தரு ஆலவட்டம்‌ பரிமாறுவார்‌. மாருதிப்‌ பெரியாண்டான்‌ திருக்கைச்‌ செம்பு பிடிப்பார்‌. மாருதிச்சிறியாண்‌டான்‌ மடத்திற்கு அமுதுபடி கறியமுது, நெய்யமுது முதலானவை நடத்திப் போகுவார்‌. தூயமுனிவேழம்‌ திருமஞ்சனமெடுப்பார்‌. திருவரங்க மாளிகையார்‌ ஸ்ரீ பண்டாரம்‌ நோக்குவார்‌. பிள்ளை உறங்காவல்லிதாசர்‌ சீடர்களான வண்டரும்‌ சுண்டரும்‌ கைக்கு ஆயிரம்‌ பொன்னுக்கு ராஜ சேவகம்‌ பண்ணி மடத்துக்கு திருக்கை வழக்காக்‌கி யருள்வார்கள்‌. இராமானுச வேளைக்காரர்‌ திருமேனிக்காவலாய்‌ இருப்பார்கள்‌. அகளங்க நாட்டாழ்வான்‌ பிரதிபக்ஷ நிரஸனம்‌ பண்ணுவார்‌.-இவ்வாறு நூற்றிருபது பிராயங்கள்‌ வரை வாழ்ந்திருந்து திருவரங்கர்‌ செல்வம்‌ முற்றும்‌ திருத்த வைத்த இராமானுஜர்‌,வாழ்க்கையில்‌ ௮ருசி பிறந்து, எம்பெருமானிடம்‌ என்னைக்‌ காலக்‌ கழிவு செய்யாமல்‌ உன்‌ பொன்னடி சேர்த்து, ஒல்லை வேறே போகவிடாது, எஞ்ஞான்றும்‌ விடாதொழிய வேணும்‌ என்று பிரார்த்திக்க அரங்கனும்‌ இற்றைக்கேழாம்‌ நாள்‌ அப்படியே செய்கிறோம்‌ என்று திருவாய்‌ மலர்ந்தருளினார்‌. பின்பு எதிராஜர்‌ மடத்திலுள்ள அனைத்துக்‌ கொத்திலுண்டானவர்களையும்‌ சித்த மகிழ்ச்சியுடன்‌ அனுப்பி யருளி, சிஷ்ய வர்க்கங்களுக்கு அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ மூன்று நாளாக உபதேசித்து, இவ் வர்த்தங்களை யெல்லாம்‌ நீங்களும்‌ விஸ்வசித்து உங்களைப்‌ பற்றினார்க்கும்‌ பரம்பரை பரம்பரையாய்‌ உபதேசியுங்கள்‌ என்று அருளினார்‌.பின்னர்‌ தாம்‌ இற்றைக்கு நாலாம்‌ நாள்‌ பெரிய பெருமாள்‌ திருவடிகள்‌ ஏறப் போகிறோம்‌ என்பதை எல்லோர்‌ மனமும்‌ கலங்குமாறு கூறவே அவர்கள்‌ நாங்களும்‌ கூட வருவோம்‌ என்று கூற,உடையவர்‌ அப்படிச் செய்தால்‌ அவர்களுக்குத்‌ தம்மோடு சம்பந்தம்‌ இராது என்று சொல்லித்‌ தேற்றித்‌ தரிக்கப் பண்ணினார்‌.பின்னர்‌ அந்தத்‌ தர்சனத்தைத்‌ தனக்குப் பின்னர்‌ ஏற்று நடத்துமாறு பெரிய பட்டருக்கு (பராசரபட்டர்‌) கட்டளை இட்டருளி,திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ முதலான முதலிகளை பட்டருக்கு இஷ்டமாயிருங்கள்‌ என்று ஆக்ஞாபித்து கோயில்‌ அனைத்துக்கொத்‌தையும்‌ (ஊழியர்களையும்‌) அழைப்பித்து (அபராத ஷாமணம்‌)மன்னிப்பு வேண்டினார்‌. அவர்கள்‌ எவ்வாறு நாங்கள்‌ தரித்திருப்‌போம்‌ என்று துக்கிக்க அணியரங்கரனிருக்க உங்களுக்கு ஒரு தாழ்வில்லை என்று கூறி எல்லோரும்‌ பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள்‌ என்று கூறிப்‌ பட்டரைப் பார்த்து பெரிய பெருமாள்‌ திருவாராதனத்தையும்‌ பெருக்க நடத்திக் கொண்டு நம்‌முடைய தர்சனத்தையும்‌ நன்றாய்‌ நடத்திக் கொண்டு வாரும்‌ என்று
கூறியருளினார்‌. பின்னரும்‌ அவர்களைப் பார்த்து ஒருவன்‌ பிரபந்நனானால்‌ அவனது ஆத்ம யாத்ரை ஈஸ்வராதீனமாகையாலே அதற்கு வருந்தக் கூடாது. வருந்தினால்‌ ஆத்ம சமர்ப்பணம்‌ பொய்யாகிவிடும்‌. அவனது தேக யாத்திரை கர்மாதீனமாகையாலே அதுக்கும்‌ வருந்தக்கூடாது. வருந்தினால்‌ நாஸ்திகன்‌ என்றாகிவிடும்‌. ஆகவே உபய யாத்திரையிலும்‌ இவனுக்கு அந்வயமில்லை என்று அருளிச்‌ செய்து பின்‌ முதவிகளை நோக்க நீங்கள்‌ அனுசந்திக்க வேண்டியது மூன்று விஷயங்களுண்டு என்று கூறினார்‌. அவை யாவன அனுகூலர்‌, பிரதிகூலர்‌, அனுபயர்‌ என்பதாகும்‌. அவை என்ன என்பதையும்‌ விளக்கி தெளிவுபடுத்தினார்‌.பின்னர்‌ பட்டரிடம்‌ மேல்நாட்டிலுள்ள வேதாந்ததி யென்ற வித்‌வானை வாதில்‌ வென்று நம்‌ தர்னத்திற்குக்‌ கொண்டுவர வேண்டும்‌ என்று ஆணையிட்டு பின்பு திருக் கண்களைச்‌ செம்பளித்தருளி;பரவசமான பொலிவுடன்‌ எம்பார்‌ திருமடியில்‌ திருமுடியும்‌, வடுகநம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண்‌ வளர்ந்தருளினார்‌. ஆயிரஞ்சுடர்வாய்‌ அரவணையோடே நம்பி மூத்த பிரானைப்‌ போல எம்பெருமானாரான இவரும்‌ கூடி யருளினார்‌.

பின்பும்‌ அன்பருடன்‌ களித்த சீர் பெரும்புதூர்‌ எதிராசன்‌
இன்பமுடன்‌ இசைந்தொரு நூற்றிருபதாண்‌ டிங்கிருந்ததன்பின்‌
அன்பன்‌ ஆழ்வான்‌ ஆண்டான்‌ நற்குமாரர்க்கு அடியாமுடி
புனைந்து மன்பதையை வாழ்வித்தாங்கமருமென வாழ்வித்தருளி
ஆராமஞ்‌ சூழ்‌ அரங்கர் தமை, மலர் மா மகளை மடி யிறைஞ்சித்‌
தாரீர்‌ சரணந்தனை யென்னத்‌ தந்‌தோமெனலும்‌ எதிராசர்‌
பாரோர்‌ பரவும்‌ பாகவதர்‌ பிரிவால்‌ பிரிவில்‌ படர் கூரச்‌
சீரோர்‌ திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனராம்‌

பின்னர்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ (உடையவரதுஞான புத்ரர்‌) உடையவருக்கு அந்திமக் கிரியைகள்‌ நடத்தினார்‌.-அவர்‌ திருமேனியை ஆழ்வார்‌ திருமேனியைப் போல கோயிலுக்‌குள்ளேயே பள்ளிப் படுத்தி வைத்தார்கள்‌.

இன்னமுத மூட்டுகேன்‌ இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம்‌ பாடவல்ல சீர்ப்பெருமாள்‌ – பொன்னஞ்‌
சிலைசேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌, எங்கள்‌
குலசேகரனென்றே கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
வாழிபரகாலன்‌ வாழிகலிகன்றி
வாழிகுறையலூர்‌ வாழ்வேந்தன்‌ – வாழியரோ
மாயோனை வாள்வலியால்‌ மந்திரங்‌ கொள்‌, மங்கையர்கோன்‌
தூயோன்‌ சுடர்மான வேல்‌
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருமொழித் தனியன்‌
முந்துற்றநெஞ்சே முயற்றித்‌ தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ – பொருதல்‌ குருகூரன்‌ மாறன்‌ பேர்கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருவந்தாதி தனியன்‌

சீரார்‌ திருவெழு கூற்றிருக்கை யென்னும்‌ செந்தமிழால்‌
ஆராவமுதன்‌ குடந்தைப் பிரான்‌ றனடியிணைக்கீழ்‌
ஏரார்‌ மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம்‌ துணை நமக்கே.
-திருவெழு கூற்றிருக்கை தனியன்

அழுக்கென்றிவையறிந்தேன்‌ அம்பொன்‌ அரங்கா
ஒழித்தருள்வாய்‌ உள்ளில்‌ வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’
-விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது

சீராரும்‌ எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி.
திருவரையிற்‌ சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும்‌ செய்ய வடிவு எப்பொழுதும்‌ வாழி.
இலங்கிய முந் நூல்‌ வாழி இணைத் தோள்கள்‌ வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல்‌ வாழி துணை மலர்க்‌ கண்கள்‌ வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில்‌ வாழி.
இனி திருப்போடெழில்‌ ஞான முத்திரை வாழியவே.

அறு சமயச்‌ செடி யதனை யடி யறுத்தான்‌ வாழியவே.
அடர்ந்து வரும்‌ குதிட்டிகளை யறத் துறந்தான்‌ வாழியவே.
செறு கலியச்‌ சிநிதுமறத் தீரத்து விட்டான்‌ வாழியவே.
தென்னரங்கர்‌ செல்வ முற்றும்‌ திருத்தி வைத்தான்‌ வாழியவே.
மறையதனில்‌ பொருளனைத்தும்‌ வாய் மொழிந்தான்‌ வாழியவே.
மாறனுரை செய்த தமிழ்‌ மறை வளர்த்தோன்‌ வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர்‌ அவதரித்தான்‌ வாழியவே.அழகாரும்‌ எதிராசர்‌ அடியிணைகள்‌ வாழியவே.

அத்தகிரி யருளாளரடி பணிந்தோன்‌ வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன்‌ வாழியவே.
பக்தியுடன்‌ பாடியத்தைப்‌ பகர்ந்திட்டோன்‌ வாழியவே.
பதின்மர்‌ கலையுட்‌. பொருளைப்‌ பரிந்து கற்றோன்‌ வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன்‌ வாழியவே.
தொல்‌ பெரிய நம்பி சரண்‌ தோன்றினான்‌ வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியவே.
சீர் பெரும்புதூர்‌ முனிவன்‌ திருவடிகள்‌ வாழியவே.

எண்டிசை யெண்‌இளையாழ்வார்‌ எதிராசன்‌ வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான்‌ குரைத்தான்‌ வாழியவே.
பண்டை மறையைத்‌ தெரிந்த பாடியத்தான்‌ வாழியவே.
பரகால னடிஇணையைப்‌ பரவுமவன்‌ வாழியவே.
தண்டமிழ்நூல்‌ நம்மாழ்வார்‌ சரணானான்‌ வாழியவே.
தாரணியும்‌ விண்ணுலகும்‌ தானுடையோன்‌ வாழியவே.
தெண்டிரைசூழ்‌ பூதூரெம்பெருமானார்‌ வாழியவே.
சித்திரையிற்‌ செய்ய திருவாதிரையோன்‌ வாழியவே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹரிஷி ஜாபாலி! –

October 24, 2025

ஸ்ரீ ஜாபாலி என்ற பெயரில் நான்கு மஹரிஷிகள் இருப்பதை புராண, இதிஹாஸங்களில் காண்கிறோம்.

நாம் இங்கு ராமாயண காலத்து மஹரிஷியான ஜாபாலி குறித்து மட்டும் பார்ப்போம்.ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதம் வால்மீகி ராமாயணத்தில் மட்டுமே உள்ளது; கம்ப ராமாயணத்தில் கம்பன் இதைச் சொல்லவில்லை.

தசரதரின் அரசவையில் எட்டு ரிஷிகள் இருந்ததாக வால்மீகி ராமாயணம் பால காண்டம் 48ஆம் ஸர்கத்தில் காண்கிறோம். சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், வசிஷ்டர் போன்றோர் தசரதரின் அரண்மனையில் வசித்து வந்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வந்தனர்.

பரதன் ராமரை மீண்டும அயோத்திக்கு வருமாறு வேண்டிக் கொள்ள ஆரண்யம் சென்ற போது ஜாபாலியும் பரதனுடன் கூட வே சென்றார்.

அங்கு அவர் ராமரிடம் மீண்டும் அயோத்தி வருவதற்காகப் பல காரணங்களைக் கூறினார். இவையனைத்தும் ராமருக்கும் கோபத்தை உண்டு பண்ணின. ஒரு மஹரிஷியிடம் ராமர் கோபம் கொண்டது இந்த ஒரு தடவை தான் என்பதைப் பார்த்து வியக்க முடிகிறது.

ஏன் ராமர் கோபம் கொண்டார் எனில் ஜாபாலி ராமரிடம் கொண்ட அளவு கடந்த அன்பால் நாத்திக வாதம் பேச ஆரம்பித்தார்.

அதையெல்லாம் செவி மடுத்த ராமர் அஸத்தியத்தைப் பேசும் அவரது ஒரு வார்த்தையைக் கூடத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல,

“விஷமபுத்தியைக் கொண்ட உம்மை எனது தந்தையார்  தமது சேவையில் சேர்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டுகிறேன். இப்படிப்பட்ட தவறுதலான வழிகாட்டும் புத்தியால் உண்மையை விட்டு விலகும் நாஸ்திகத்தில் நீர் வீழ்ந்து விட்டீர்” என்று கடுமையான வார்த்தைகளையும் ராமர் கூறுகிறார்.

“நிந்தாம்யஹம் கர்ம பிது: கர்தும் த

த்யஸ்த்வாமாஹ்ரிநாத்ய விஷமஸ்த புத்திம்

புத்தயாநயைர்ஏவம் வித்யயா சரந்தம்

சுநாஸ்தீகம் தர்மர்பயாதபேதம் ||

33. aham = I; nindaami = accuse; tat = that; karma = act; kR^itam = done; pituH = by my father; tvam aagR^ihNaat = in taking you into his service; yaH = you; viSamastha buddhim = with your misleading intelligence; charantam = moving; evam vidhayaa = with this type; buddhyaa = of intelligence; sunaastikam = a firm atheist; apetam = fallen; dharma pathaat = from the true path.

“I accuse the act done by my father in taking you into his service, you with your misleading intelligence, a firm atheist fallen from the true path.”

இப்படி ராமரைக் கோபமுறை வைத்த அவர் பேசிய நாத்திக வாதம் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

ஜாபாலி பற்றி மஹாபாரதம், அநுசாஸன பர்வத்தில் நான்காம் அத்தியாயத்தில் 55வது ஸ்லோகத்தில் ,”அவர் விஸ்வாமித்திரரின் புதல்வர்களில் ஒருவர்” என குறிப்பிடுகிறது.

ஆனால் அவர் வசிஷ்டரிடம் சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். (வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே உள்ள போட்டி, பகையை நினைத்தால் இது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும்!)

வியாஸர் வேதத்தை நான்காக வகுத்து அதர்வண வேதத்தை சுமந்துவுக்குக் கற்பித்தார். சுமந்து தனது சிஷ்யர் கபந்தருக்குக் கற்பிக்க, அவர் அதை இரண்டு பகுதிகளாக்கி  தமது இரண்டு சிஷ்யர்களான தேவதர்ஸருக்கும் பத்யருக்கும் கற்பித்தார்.

தேவதர்ஸர் தனது சிஷ்யர்களான மகதர், ப்ரஹ்மபாலி, சௌத்காயனி ஆகியோருக்கு இதைக் கற்பிக்க பத்யர் தமது பங்கிற்கு தான் கற்றதை ஜாபாலி, குமுதர், சௌனகர் ஆகிய மூவருக்குக் கற்பித்தார்.

ஆக ஜாபாலி அதர்வண வேதத்தில் நிபுணர் என்பது தெரியவருகிறது. இந்தத் தகவல்களை விஷ்ணுபுராணம் மூன்றாம் அம்சத்தில் தெரிவிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் பட்டாபிஷேக ஸர்க்கத்தில் (யுத்த காண்டம் 131வது ஸர்க்கம், 60ஆம் ஸ்லோகம்) ராமரின் பட்டாபிஷேகத்தின் போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி கூறிய ரிஷிகள் எண்மர். வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், காத்யாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய இந்த எண்மரில் ஜாபாலியும் ஒருவர். இவர் ராமரின் மீது கொண்ட பேரன்பாலேயே அவர் அயோத்திக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆசையினாலேயே நாத்திகவாதத்தை முன் வைத்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜாபாலி வாதம் இன்றைய நாஸ்திகர்களுக்கு பெரிதும் பிடித்த வாதம்.

ஓ! ராமா! தனது தேசத்தின் ஒழுக்கங்களில் பற்றுடையவனும் குலதர்மானுஷ்டம் உடையவனுமான்  உனக்கு பாமர மனிதனுக்கு ஏற்ற இந்த சமயத்திற்கொவ்வாத புத்தி நிச்சயம் கூடாது. (அயோத்யா காண்டம் அத்தியாயம் 108 ஸ்லோகம் 2)

யாருக்கு யார் பந்து? யாரால் யாருக்கு என்ன ஆக வேண்டும்? ஏனெனில் ஒரு ஜீவன் தனியாகவே பிறக்கிறது. தனியாகவே இறக்கிறது. (3)

ஒ! ராமா! எந்த மனிதன், “இவர் எனது தந்தை,இவள் எனது தாய்” என்று பாசம் வைக்கிறானோ அவன் முழுப் பித்தன் என்று அறி!  எவனும் எவனுக்கும் எந்த உறவும் இல்லை. (4)

ஓ! ராமா! ஒரு மனிதன் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது ஓரிடத்தில் இரவைக் கழிக்கிறான். அடுத்த நாள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி தனது பயணத்தைத்  தொடர்கிறான். அதே போலத் தான் தாய், தந்தை, வீடு, உடைமைகள் எல்லாம்! அவை தங்குமிடமே! புத்திசாலி அவற்றின் மேல் பற்று கொள்வதில்லை. (5,6)

ஓ! புருஷோத்தம!  தந்தையிடமிருந்து வந்த அந்த ராஜ்யத்தைத் துறந்து துன்பம் தருவதும் பல பீடைகளையுடையதுமான இதுவரை முன்னோர்களால் அனுஷ்டிக்கப்படாததுமான வக்ர வழியை நீ அனுஷ்டிக்கக் கூடாது. (7)

நகர தேவதையானது ஒற்றைப் பின்னலுடன் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். உன்னை பாக்கியம் பெற்ற அயோத்தியில் அபிஷேகம் செய்து கொள். (8)

ஓ! சக்ரவர்த்தி குமாரா! தேவ லோக அரசனான இந்திரனுக்கு நிகராக அயோத்தியில் மிகச் சிறந்த அரச சுக போகங்களை அனுபவி. (9)

தசரதன் உமக்கு உறவினர் அல்லர்;  அவருக்கு நீரும் உறவுமில்லை. அரசன் வேறு; நீர் வேறு. ஆகவே நான் சொல்வதைக் கேள். (10)

இவ்வுலகில் தந்தை ஒரு ஜீவனுக்கு நிமித்த மாத்திரமே. ஒருவனுக்கு ருது நீராடியுள்ள தாயால் சேகரிக்கப்பட்ட  சுக்கிலம், சோணிதமே முழு முதற் காரணம். (11)

அந்த அரசன் அவர் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார். இதுவே மனிதர்களுக்கு இயல்பு. ஆகவே பொய்யான சம்பந்தத்தால் நீ துன்புற்றுக் கொள்கிறாய். (12)

பொருள், தர்மம் இவற்றில் எவரெல்லாம் பற்றுள்ளவர்களோ அவர்களைக் கண்டு நான் வருந்துகிறேன். மற்றவர்களைப் பற்றி நான் வருந்தவில்லை. ஏனெனில் அவர்கள் இவ்வுலகிலும் துன்பத்தை அடைந்து  செத்தும் அழிந்தனர். (13)

இந்த மூட ஜனம் அஷ்டகா சிரார்த்தம் (எட்டாம் நாள் கிரியை), பிதிரு சிரார்த்தம் என்று இதுவே நோக்கமாக அனுஷ்டிக்கிறது. எவ்வளவு உணவு வீணாகிறது என்று நீயே பார்! செத்த மனிதன் எப்படி உண்ணுவான்? (14)

அன்னமானது ஒருவனால் இங்கு உண்ணப்பட்டு இன்னொரு உடலைச் சேருமானால், தூரப் பயணம் மேற்கொண்டு வேறு தேசம் செல்பவனுக்கு இவ்விடத்திலேயே சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். அப்போது அவர்களுக்கு வழியில் கட்டுச்சாதம் தேவையில்லை. (15)

யாகம் செய்; தானம் கொடு; தீக்ஷை மேற்கொள்; தவம் புரி; அனைத்தையும் துற என்று கூறும் இந்த நூல்கள் தானங்களில் ஆசை உண்டு பண்ணுவதற்காக புத்திமான்களால் செய்யப்பட்டவையே! (16)

ஓ! புத்திசாலியே! ஆகவே,  இந்த உலகமன்றி பரலோகம் இல்லை என்றே தீர்மானி!! எது கண்களுக்கு புலன் ஆகின்றதோ அதை மட்டும் எடுத்துக் கொள்; கண்ணுக்குப் புலன் ஆகாததை விட்டு விடு. (17)

பரதனால் வேண்டப்பட்ட நீ,உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொண்ட முன் சொன்ன நிச்சயத்தை முன்னிட்டு ராஜ்யத்தை ஏற்றுக் கொள். (18)

இப்படி ஜாபாலி நாத்திகர்களுக்குத் தலைவனாக இருந்து அந்தப் பழைய காலத்திலேயே நாத்திகத்தைச் சொல்லி இருக்கிறார்.  இதை ராமர் தூக்கி எறிந்து விட்டார்.

“அஸத்தியத்தைப் பேசாதீர்” என்று அவரை அடக்கி விட்டார். அவர் மீது சிறிது கோபமும் கொண்டார். ராமரின் பதிலையும் மஹரிஷி ஜாபாலி பற்றிய இதர சில விஷயங்களையும் அடுத்த கட்டுரையில் காண்போம்!

ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதத்தை, ராமர் வெறுத்து ஒதுக்குவதை வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 109வது ஸர்க்கம் விரிவாகச் சொல்கிறது. இந்த ஸர்க்கம் 40 ஸ்லோகங்களைக் கொண்டது.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

ஜாபாலியின் நாத்திக வாதத்தைக் கேட்ட ராமபிரான் தனது சுபுத்தியாலேயே இப்படிச் சொல்ல ஆரம்பித்தார் என்று முதல் ஸ்லோகம் கூறி இயல்பாகவே ராமர் ஆத்திகர் என்பதைக் கூறுகிறது. (இறைவன் ஒரு ஆத்திகன்!)

நீர் சொல்வது செய்யக் கூடாதது (அகார்யம்!), இதமளிக்காதது (அபத்யம்).

ஒருவன் சுசியா அல்லது அசுசியா என்பதை ஒழுக்கம் ஒன்றே உரைக்கின்றது. (சாரித்ரம் ஏவ வ்யாக்யாதி)

ராஜானுஷ்டானம் சத்யம் மட்டுமே தான்! (ராஜவிருத்தம் சத்யம் ஏவ!)

சத்யம் ஏவ பஜேத்! (ஒவ்வொருவனும் சத்யத்தையே சர்வமுமாகக் கொள்ள வேண்டும். சத்யத்தை  மேற்கொண்ட நான் அதன்படியே நடப்பேன்!)

பரலோக நம்பிக்கை கொண்டவனாக இருந்து கொண்டு உலக வாழ்வை நடத்துவேன். (ச்ரத்ததான: சன் லோகயாத்ராம் ப்ரவர்த்தயே)

ஒரு புத்திமானானவன் ஜனங்களுக்கு நாத்திகவாதத்தால் சந்தேகப்படுபவனாக எவன் ஒருவன் இருக்கிறானோ அவனுக்கு முகமே கொடுக்க மாட்டான். (நாத்திகவாதியை முகத்தாலும் பார்க்க மாட்டான்!)

     கோபத்துடன் (சரோஷம்) இப்படிக் கூறிய ராமரைப் பார்த்து தணிந்த குரலில் ஜாபாலி கூறினார் இப்படி : நான் நாத்திகர்களுடைய வசனத்தைச் சொல்லவில்லை. (அஹம் நாஸ்திகானாம் வசனம் வ்ரவீமி ந). நான் நாத்திகனும் இல்லை. (அஹம் நாஸ்திக: ச ந) எதுவும் இல்லை என்பதும் இல்லை (கிஞ்சன ந அஸ்தி ந). சமயத்திற்கேற்றபடி ஆத்திகனாய் இருப்பேன். (காலம் சமீக்ஷய ஆஸ்திக: பவேய). இச்சமயத்தில் சமயத்திற்கேற்றபடி நாஸ்திகனாய் இருந்தேன். (காலே புன: ஏவ நாஸ்திக: அபவம்)

இப்படி  ஒரேயடியாக மாறிய (பல்டி அடித்த) மஹரிஷி ஜாபாலி ராமரை திருப்பி அழைத்துப் போவதன் பொருட்டே தனது வார்த்தைகள் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

இப்படியாக ஜாபாலியின் போலி வாதம் ஒரு முடிவுக்கு வந்தது.

அடுத்து ஜபல்பூர் நகரமே ஜாபாலி மஹரிஷியின் பெயரால் அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நர்மதை நதிக் கரையில் ஜாபாலி வெகு காலம் தவம் புரிந்ததாகவும் நாம் காண்கிறோம்.

திருப்பதியில், கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஜாபாலி தீர்த்தம் என்று ஒரு அழகிய தீர்த்தம் உள்ளது. இந்த இடத்தில் தான் மஹரிஷி ஜாபாலி தவம் செய்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

இங்கு ஒரு ஆஞ்சனேயர் ஆலயமும் அஞ்சனா தேவி தீரத்தமும் உள்ளன.

திருப்பதியில் உள்ள இன்னொரு பிரசித்தி பெற்ற தீர்த்தமான பாபவினாசன தீர்த்தமும் கூட ஜாபாலி மஹரிஷியுடன் தொடர்பு படுத்தப்பட்டு இங்கு ஜாபாலி தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் சிங்கப்பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. அப்போது ஜாபாலி மஹரிஷி விஷ்ணு எடுத்த நரசிம்ம கோலத்தை இங்கு காண விரும்பியதாகவும்  அதன்படி விஷ்ணு அவருக்கு அருள் பாலித்து தன் நரசிம்ம கோலத்தைக் காண்பித்ததாகவும் இந்தத் தலத்தின் தல வரலாறு கூறுகிறது.

 இதே போல வட நாட்டிலும் ஜாபாலி மஹரிஷியை தொடர்பு படுத்திக் கூறப்படும் தலங்களும் உள்ளன.

மஹரிஷி ஜாபாலி விஷ்ணு பக்தர் என்பதையும் ராமரின் அரசவையில் இடம் பெற்றவர் என்பதையும் இராமாயணம் மற்றும் புராணங்கள், தல வரலாறுகள் ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.

பெரும் மஹரிஷிகளில் இடம் பெறும் ஜாபாலி வித்தியாசமான ஒரு மஹ ரிஷி!


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாஞ்சராத்ரம்–ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்-ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

September 17, 2025

கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹ மேதிநம்
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பாஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
-புராணம் வேதம் வேதாந்தம் சாங்க்யம் யோகம் ஸாஸ்திரங்கள் அனைத்தும் இதம் எதிரில் இரவாகின்றன
பஞ்சாயுத அம்சமான ஒவ்பகாயனர் சாண்டில்யர் பரத்வாஜர் கௌசிகர் மௌஞ்யாயனர் -ஐவருக்கும் ஐந்தும் தினங்களில் தானே உபதேசித்து அருளினார் –
ஆகமம் பரதம் சில்பம் வைத்தியம் ஜ்யோதிஷ மேவ ச
பஞ்ச சாஸ்த்ராணி ஸம் யோகாத் பாஞ்சராத்ரம் இதி ஸ்ம்ருதம்

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸந்ந வதந ஈஷணம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரிம் ஸூவர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத்தாம் விசிந்தயேத்
விசத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஸ்ம ரூபிணாம்
–ஸுநகபகவான்

108 ஸம்ஹிதைகள் கொண்டதும் பாஞ்சராத்ர ஆகமம் -இவற்றுள் ரத்ன த்ரயம் -சாஸ்வத பவ்ஷ்கர ஐயாக்ய ஸம்ஹிதைகளால் திருநாராயண புரம் திருவரங்கம் காஞ்சிபுரம் இவற்றில் திரு ஆராதனம்-திருவேங்கடமுடையான் வைகாநஸ ஆகமத்தினால் திருவாராதனம் கண்டு அருளுகிறான்

த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா
-சரணாகதி தீபிகா–32–வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள் வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–

பாஞ்சராத்ர மரபில் இருந்து உருவான ஆகமநூல்களை பாஞ்சராத்ர ஆகமம் என ஒற்றை நூல்தொகையாக பிற்காலத்தில் ஒருங்கிணைத்தனர். பாஞ்சராத்ர ஆகம முறை இன்றைய வைணவத்தின் முதன்மையான வழிபாட்டு நெறிமுறைத் தொகுதியாக நீடிக்கிறது.-பாஞ்சராத்ர என்ற சொல் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில்( 7.1.10 என்ற வரிகளில்) உள்ளது. வேதச்சொல் தெளிவுறும் பொருட்டு ஒரு முனிவர் பாஞ்சராத்ரம் என்னும் சடங்கைச் செய்ததை அது குறிப்பிடுகிறது.-சதபதபிராமணம் (13.6) பாஞ்சராத்ரச் சடங்கின் முதன்மைத்தெய்வம் நாராயணன் என்று குறிப்பிடுகிறது. மகாபாரதத்தின் நாராயணியப் பகுதி (மகாபாரதம் சாந்திபர்வத்தில் உள்ள நாராயணன் புகழ்பாடும் பகுதி.) ஏழு ரிஷிகளைக் குறிக்கிறது, அவர்கள் வேதச்சடங்காகிய பாஞ்சராத்ரத்தைச் செய்தனர் எனக் கூறுகிறது. ஆனால் இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லுக்கு நேர்ப் பொருள் ஐந்து இரவுகள். இச் சொல் பலவாறாக விளக்கப்படுகிறது.-வைணவ ஆகம நூல்களில் ஒன்றாகிய நாரதீய சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவு நிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப் பெயர் என்று சொல்லப்படுகிறது-வைணவ ஆகம நூலான ஈஸ்வர சம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந் நூல்கள் பேசுவதனால் இப்பெயர் எனச் சொல்கிறது-நாராயணன் ஐந்து இரவுகளிலாகச் செய்த பெருவேள்வியின்படி இப்பிரபஞ்சமாகத் தான் மாறினார் என்ற தொன்மம் சாண்டில்ய சூத்திரங்களில் உள்ளது. நாராயணன் என்னும் முனிவரை அது குறிப்பிடுகிறது என்று ஒரு தரப்பு உண்டு-

செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்””
(மூன்றாம் பரிபாடல்: 81-82)-செங்கட் காரி – சிவந்த கண்களை யுடைய வாசுதேவன், கருங்கண் வெள்ளை – கரிய கண்களை யுடைய சங்கருடணன், பச்சை – பிரத்யும்னன், பைங்கண் மால் – பசிய உடம்பினையுடைய அநிருத்தன் என்று பொருள் கொள்கின்றனர்-

இது அருவமான தத்துவத் தெய்வம் உருவம் கொண்ட வழிபாட்டுத்தெய்வங்களாக ஆவதற்கான தத்துவ அடிப்படையையும், அழகியல் அடிப்படையையும், சடங்கு முறைகளையும் வகுத்தளிக்கிறது.-வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. இன்று புழக்கத்திலுள்ள வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இருந்திருக்கலாம், அவை இப்போது கிடைப்பதில்லை. பாஞ்சராத்ர மரபு பின்னர் பாஞ்சராத்ர ஆகமம் ஆக மாறியது.வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் தொன்மையானவை, முக்கியமானவை. இவை ரத்ன த்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகம சம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை-பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்ம சம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் பௌஷ்கர சம்ஹிதையின் மாறுபாடான பரமேஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஜெயாக்ய சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
மேல்க்கோட்டை செல்வநாராயண சுவாமி கோவிலில் ஈஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
திருவெள்ளறையில் உள்ள புண்டரிகாக்ஷ சுவாமி கோயிலில் பத்ம சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீபிரஸ்ன சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
கௌடிய வைஷ்ணவர்கள் பிரம்ம சம்ஹிதையையும் நாரதிய சம்ஹிதையையும் பின்பற்றுகிறார்கள்.
கேரளத்தில் திருவல்லா ஸ்ரீவல்லபா கோவில் துர்வாச சம்ஹிதை மற்றும் அஹிர்புத்னிய சம்ஹிதையை பின்பற்றுகிறது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் நூல்கள் சம்ஹிதைகள் அல்லது தந்திரங்கள் எனப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுப்பின்றன.
ஆலயவழிபாடு
பிராசாத (ஆலயம்)
பிரதிமா (சிலை)
பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
பூஜா (வழிபாடு)
பிராயச்சித்தம் (பிழையீடு)
உத்ஸவம் (விழா)
ஆசாரம் (நெறி)
மந்திரம் (மந்திரங்கள்)
யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
தீக்ஷை (நோன்பு)
தனிநபர் கைக்கொள்ளவேண்டிய நெறிகளை பாஞ்சராத்ர ஆகம முறை பஞ்சகால பிரகிரியைகள் என வகுக்கிறது
அபிகமனா (காலைநேரத் தூய்மைநெறிகள்)
உபதானா (வழிபாட்டுமுறைகள்)
இஜ்ய- (நோன்புகள்)
ஸ்வாத்யாயம் (மெய்யியல் கல்வி)
யோகம் (தியானம் போன்றவை)
தாப சம்ஸ்காரம்: தோள்பட்டையில் சூட்டுக்கோலால் சுட்டு விஷ்ணுவின் சங்குசக்கர முத்திரைகொண்ட பாதங்களை தழும்பாக்கிக்கொள்ளுதல்
புண்ட்ர சம்ஸ்காரம்: திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
நாம சம்ஸ்காரம்: திருமால் மற்றும் வைணவ ஆசாரியார்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்ளுதல்
மந்திர சம்ஸ்காரம்: வைணவ ஆசிரியர்களிடமிருந்து தியானத்துக்கான மந்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்/
யாக சம்ஸ்காரம்: வேள்விகள், பூசைகளை கற்றுக்கொள்ளுதல்

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்
ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய
ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே.
நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும்,
இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது
மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்!
ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக
தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

———-

“ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது
நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

——-

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
“சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

——–

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள்,
உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது
வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

——-

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்–ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்-

மூலம் – அப்போது,
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும்,
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும்
சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே
ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

பௌஷ்கர ஸம்ஹிதை –
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –
எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும்,
அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை –
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர்,
அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை –
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) –
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின்
அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா –
என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) –
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும்
எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு,
தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவு தடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில்
என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும்
கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில்
உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத் தன்மை
ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) –
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) –
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய்
என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) –
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ,
அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை
மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் –
தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர் பார்த்திருப்பது தான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த
பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும்,
சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என்னில் முன்னம் பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே -திருவாய்மொழி 9-6-10

———

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).
குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).
இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

——–

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனு தினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய
புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த
பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!
தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய்
சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற
ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.!
சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை
அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!)
நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய
எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது.
இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.
இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!
இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!
எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை
இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!
இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள
மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவை எவை யென்று இந்த
பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும்
கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம்
மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய
ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)
1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

—-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.
படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச” என்று
மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளே சொல்லக் கூடாது.
உரத்த குரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார்.
புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

—–

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!
இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!
இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?
கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!
இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!
நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள்
அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!)
சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

———-

தியான ஸ்நானம்
மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

——

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

———

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி
செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான
ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட
ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

———-

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம்,
நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

——-

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

———

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை
உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி
நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும்,
ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக
உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

:பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள் உள்ளனவோ,
இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும்,
நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்க வேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும்,
அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள்
மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன்,
மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய இந்த அக்னியைத் தியானிக்க வேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள் இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும்.
இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய் தியானிக்கவும்.

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத் தியானிக்கவும்.
பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.
பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.
பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.
பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.
இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.
பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

———

ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

ஸ்ரீ வைகானஸ ஆகமம் என்பது ஸ்ரீ பகவச் சாஸ்திரமாகும்.
ஸ்ரீ விகநஸ முநிவரால் சொல்லப்பட்டதால் ஸ்ரீ வைகானஸ சூத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ விகனஸரின் ஸம்பந்தமுற்றோர் ஸ்ரீ வைகானஸர் என்று அழைக்கப்படுவர்.
இவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மாநஸ புத்திரர். இவருக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீவைகானஸ சாஸ்திரத்தை உபதேசித்தார்.

ஸ்ரீ வைகானசர்கள் பிற்புரிமையால் வரும் சமூகத்தைச் சேர்ந்துள்ளனர். யாவரும் அந்தணர்கள்.
இவர்கள் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் சம்பந்தப்படாதவர்கள்.
அவர்கள் இராமாநுஜரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் திவ்யப் பிரபந்தங்களை அவர்கள் அத்யயனம் செய்வதில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதும் இல்லை.
பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீiக்ஷயை இவர்கள் பெறுவதில்லை.
அத்தகைய தீiக்ஷயை இவர்கள் கர்ப்ப வாசத்தின்போதே மந்திர ஸம்ஸ்காரத்தால் பெற்றுவிடுகிறார்கள்.

இவர்கள் கொள்கை லக்ஷ;மி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது.
இராமாநுஜ ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பிராட்டியை ஈச்வர கோடியில் சேர்க்கிறார்கள்.
கைவல்யமும் மோக்ஷமே என்று கருதுகின்றனர்.

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.
ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால்
இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற
ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால்
பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.
ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால்
இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும்
நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் :-
பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை,
அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம்,
யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது.
இவையனைத்தும்
ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன),
யோகம் (கடவுளை அடையும் வழி),
கிரியா (ஆலய – பிம்ப நிர்மாணங்கள்),
சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் 108 என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என்று மூன்று ஸம்ஹிதைகளும் பகவானால் சொல்லப் பட்டதால் ரத்ன த்ரயம் என்றும்,
மூல ஸம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது.
பௌஷ்கரத்தின் விரிவை பாரமேச்வர ஸம்ஹிதையும்,
ஸாத்வத்தின் விரிவை ஈச்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்தின் விரிவை பாத்ம ஸம்ஹிதையும் தெரிவிக்கிறது.
இவற்றுள் ஜயாக்யம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

மேலும்
1. அஹிர் புத்ந்ய ஸம்ஹிதை
2.ஈச்வர ஸம்ஹிதை
3. ஜயாக்ய ஸம்ஹிதை
4. பாத்ம ஸம்ஹிதை
5. பாரமேச்வர ஸம்ஹிதை
6.லக்ஷ;மீ தந்த்ரம்
7. விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
8. ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதை
9. ஸாத்வ ஸம்ஹிதை முதலிய ஸம்ஹிதைகளும் உள்ளன.

ஸ்ரீ பாஞ்சராத்ர – ஸ்ரீ வைகானஸ ஆகமங்களின் வேறுபாடுகள்

1. வைகானஸ ஆகம விதிகளின்படி வைகானஸ ப்ராம்மணர்களே கருவறையிலுள்ள
இறைவனுடைய திருமேனியை தீண்ட உரிமை பெறுகிறார்கள்.

2. வைகானஸ அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற பஞ்ச ஸம்ஸ்கார தீiக்ஷ பெறுவதில்லை.

3. குரு பரம்பரையில் ஸம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதில்லை.

4. வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

5. பலி பீடத்தின் பின்னால் கொடி மரம் இருக்கும்

6. விஷ்ணு, புருஷன், சத்யன், அச்யுதன், அநிருத்தன் முதலியோர்களை வழிபடுகின்றனர்.

மற்றும் கோயில் அமைப்புக்களிலும்
திருவாராதன முறையிலும்,
மூர்த்தியின் அமைப்பிலும் ,
நூப தீபங்கள் சமர்ப்பிப்பதிலும் வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் வேறுபடுகின்றன.

————

நிர்மமே சார முத்யர்த்த ஸ்வயம் விஷ்ணு ரஸ அனுகூலம்
தத் பர வ்யூஹ விபவ ஸ்வபாவாதி நிரூபணம்
பாஞ்சராத் வயம் தந்த்ரம் மோக்ஷ ஏக பல லக்ஷணம்
ஸூ தர்சனாஹ்வயோ யோசவ் சங்கல்போ வைஷ்ணவா பரா
ஸ ஸ்வயம் பிபிதே தேந பஞ்சத பஞ்ச வக்த்ராக –அஹிர்புத்ய ஸம்ஹிதா ஸ்லோகம்

ஸூரி ஸூஹ்ருத் பாகவதா ஸாத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகா தன்மயச் ச பாஞ்ச ராத்ரிக இத்யபி
ஏவமாதி ப்ராக்யாபி ஆக்யேய கமலாசன –ஸ்ரீ பத்ம ஸம்ஹிதா ஸ்லோகம் || (2-87)” -பாகவதருக்கு பர்யாய சப்தங்கள்

பஞ்ச கால வியவஸ்தியை வேங்கடேச விபாசித
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸித்தாந்த வியவஸ்தேயம் சமர்த்தித – ஸ்ரீ பாஞ்சராத்ர ரஷா ஸ்லோகம் –

இதம் மஹா உபநிஷதம் சதுர் வேத சமான விதம்
சாங்க்ய யோக க்ரதான்தேந பஞ்ச ராத்ர அனு சப்தித்தம் –(ஸ்ரீ மஹா பாரதம் 339,112).

ராத்ரா – கதி -மார்க்கம்
ராத்ரம் ச ஞான வசனம் ஞான பஞ்ச விதம் ஸ்மர்தம்
தேநேதம் பாஞ்ச ராத்ரம் ஹி ப்ரவதந்தி மனிஷினா
தத்வம் –முக்த பிரதம் –பக்தி பிரதம் -யோகம் -வைஷயிகம் -விஷயாந்தர போகம் என்றவாறு

புராணம் வேத வேதாந்தம் ததா சாங்க்ய யோக ஜம்
பஞ்ச பிரகாரம் விஞ்ஞானம் யத்ர ராத்யேதேபிஜஜ || -பவ்ஷ்கர ஸம்ஹிதை

பாஞ்சராத்ரம் – ஏகாயான சாகை -சாந்தோக்ய சாரம் -என்பர் தேசிகர் தத்வ முக்த கலாபத்தில்

—————–——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்

June 16, 2025

ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்

ராம —  ராமனுக்கு; அநுஜ — பிற்பாடு உண்டான–இந்தப் பதம் ப்ரதமாசார்யனான எம்பெருமான் தொடக்கமாக ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளார் வரையிலாக ப்ரஸித்தி பெற்று விளங்கும் குருபரம்பரையிலுள்ள எல்லா ஆசார்யர்களையும் குறிக்கும்-யோகிகள் எல்லோரும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் செய்யப்படும் த்யானத்தினால்பரம ப்ரீதியை அடைகிறார்களோ, அப்படிப் பட்ட ப்ரீதி விஷயமான பரப்ரஹ்மம் ‘ராம’ என்னும் பதத்தினால் சொல்லப் படுகின்றது. இந்தப் பரமாத்மா திருவனந்தாழ்வானான திருப்பள்ளி மெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேண்டுமென்று ஸஹ்ருதயனாய் இருந்தபோதிலும் அந்த எண்ணம் கைகூடாமல் உலகத்தவர் உண்டியே உடையே உகந்து ஓடித் திரிந்து நின்றமையினால் அவன் ஏகாகியைப் பொலவே ஸந்தோஷமில்லாதவனாய் இருக்கும்படியாயிற்று. அந்த நிலைமையை மாற்றி “திருத்திப் பணிகொள்வான்” என்றபடி ஜனங்களைத் திருத்தி, ப்ரபத்தியாகிற உபாயத்தின் ப்ரபாவத்தை உலகெங்கும் பரப்பினான்.

ராம: என்பது ஆத்மாராமனான எம்பெருமானைக் குறிக்கிறது. அதாவது தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபகுண விக்ரஹாதிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதினால் பரம ப்ரீதனாய் இருப்பவன் பரமாத்மா. அப்படிப்பட்ட பரமாத்மாவை இல்லையென்றும், நிரவயவன் என்றும், நிர்குணன் என்றும் கூறும் பிறமத வாதங்களைக் கண்டித்து பரமாத்மா ஸகல கல்யாண குணங்களை உடையவன் என்று ஶததூஷணீ முதலான ஶ்ரீஸூக்திகளில் ஸ்தாபித்து அவனுடைய தயூக்குப் பாத்திரமானார் ஸ்வாமி.

லக்ஷ்மியின் ஸம்பந்தம் பெற்றவர் எம்பெருமான். அதனாலேயே அவனுக்கு ஏற்றம். பரப்ரஹ்மம் யார் என்று நிர்ணயம் செய்ய ஆரம்பித்தவர்கள் லக்ஷ்மியைத் திருமார்பில் தரித்திருப்பவன் என்று அறுதியிட்டார்கள்

ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி

ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம்
   -(தயா ஶதகம் 8)

 பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில்  (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.-க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை-வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||
-தயா ஶதகம் 7-நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்  அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.

 ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.-பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் | யதுபஜ்ஞமஶேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகா  ப்ரபாவ:||(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)-பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும், பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகுக்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.

 ராமாநுஜ  என்பது இளைய பெருமாளைக் குறிக்கிறது. ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யத்தையும் பகவானுக்குச் செய்வதே நமது கடமை. இப்படிப்பட்ட ஶேஷத்வ நிலைமை இல்லாதபோது ஸ்வரூபம் முடிந்ததாகப் பாவிக்க வேண்டும்

ராமாநுஜ  என்னும் பதம் சத்ருக்னாழ்வானைக் குறிக்கிறது. இவர் அநுஷ்டித்துக் காட்டிய பாகவத தாஸ்யமே நமக்கு ப்ரதானம் என்று கொண்டு அதையே ஸாரஶாஸ்திரத்தில் மத்திமமான பதினாறாவது புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில் நிரூபித்தருளியபடி.

ராமாநுஜ  என்கிற பதம் கீதாசார்யனைக் குறிக்கிறது.தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல் மாதுற்ற மாயன் மருவ இக்கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே-என்று ஸ்ரீகீதை பக்தி யோகம் செய்பவர்களுக்கும் ஶரணாகதி நிஷ்டர்களுக்கும் ப்ரயோஜநமாகும் என்று நிரூபித்தருளி கீதையினுடைய ஸாரமான ஸமுதாயார்த்தமாகும்

ராமாநுஜ என்ற பதம் பரதத்வ வாமனனாய் அவதரித்து த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்த உத்தமமான அவதாரத்தைக் குறிக்கிறது.

ராமௌ என்ற பதம் பெருமாளையும் பிராட்டியையும் குறிக்கிறது. அநுஜ என்ற பதம் விஷ்வக்ஸேநரைக் குறிப்பிடுகிறது. இவர் அந்த திவ்ய தம்பதிகளின் நியமனத்தின்பேரில் அவதாரம் செய்து, விஶிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவர்.இவருக்கு ஸேனைநாதன், ஸேனை முதலியார் என்ற திருநாமங்கள் உண்டு. இவருடைய ப்ரபாவத்தை ஸ்வாமி, குருபரம்பரை அநுஸந்தானப் பாசுரத்தில் பெரிய பிராட்டிக்கு அடுத்தபடியாக ஸேனைநாதன் என்று அருளிச் செய்துள்ளபடி.-வந்தே வைகுண்டஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம் |
யத்வேத்ரஶிரவரஸ்யபந்தே விஸ்வமேதத்வய வஸ்திதம் ||
  ( யதிராஜஸப்ததி)

தநுஜமதநே விஷ்வக்ஸேநோ ஹரேஸ்ததநந்யதீ:
அசேஷவிக்ரசமநமநீகேச்வரமாச்ரயே|
ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத்த இவோத்திதம் || 
( தயாஶதகம்)

ராமாநுஜ என்கிற பதம் திவ்யதம்பதிகளுக்குப் பிறகு மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைக் குறிக்கிறது.-அந்த பகவான் கலியுகத்தில் ஶரணாகதி தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு தன்னுடைய அம்ஶமாக தன்னுடைய ஸங்கல்ப விஶேஷத்தாலே பத்து ஆழ்வார்களை அவதாரம் செய்வித்து த்ராவிட வேதத்தை (திவ்யப்ரபந்தம்) வெளிப்படுத்தி மற்றுமோர் அபிநவ தஶாவதாரத்தை நிகழ்த்திக் காட்டினான். ஆழ்வார்கள் வாயிலாக வந்த அவை நித்யமானது என்பதை ஸ்வாமி தேஶிகன் ஸம்ஸ்க்ருத வேதத்தில் புரியாத அர்த்தங்களை திராவிட வேதமான திவ்யப்ரபந்தத்தை ஓதி தெளியாத மறைநிலங்களை தெளிகின்றோமே என்று அருளிச் செய்துள்ளபடி.-எத்தனை வேதங்கள் எம்பெருமானைப் பின்தொடர்ந்து வந்தாலும் ‘தேடியோடும் செல்வன்’ என்றபடியும் “மெய் நின்று கேட்டருள்வாய்” என்றபடியும் எம்பெருமான் பின்தொடர்ந்து செவிசாய்ப்பதால் ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளின் உயர்வைக் காட்டுகிறது.

ராமாநுஜ என்ற பதம் முதலாழ்வார் மூவரைக் குறிப்பிடுகின்றது. பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளால் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) அநுபவித்தவர்கள். ஆகையால் இவர்களை இன்கவி பாடும் பரம கவிகளால் (திருவாய்மொழி) என்றும் செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி) என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.-பாட்டுக்குரிய பழையவர் (அதிகாரஸங்க்ரஹம்) என்ற பாசுரத்தில் தமிழ்ப்பல்லாண்டு இசையுடன் பாடும் ஸூரிகளின் அவதாரம் என்றும், “நாட்டுக்கு இருள்செக, நான்மறையந்தி நடைவிளங்க, வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் மெய்விளக்கு” என்னும்படியான தீபத்தை ஏற்றி பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தார்கள்.

ராமாநுஜ என்கிற பதம் திருமழிசை ஆழ்வாரையும் குறிக்கிறது. இவர் சக்கரத்தாழ்வானுடைய அவதாரம் என்பதை “மழிசை வந்த சோதி” (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்) என்று காண்பித்துள்ளார்.

ராமாநுஜ என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவருக்கு ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் அந்வயம் உண்டு.த்³ரமிடோ³பநிஷத் த்³ரஷ்டுரஸ்ய யாதா²த்ம்யமத்³பு⁴தம்|ஸம்யக் ஶ்ருதவதாம் நாத்ர ஶங்கநீய உபப்லவ:||
தே³வகு³ஹ்யோஷு சாந்யேஷு ஹேதுர்தே³வி நிரர்த² இத்யாதி³
ந்யாயத்³ருஷ்டயா ச தோஷ்டவ்யமிஹ ஸூரிபி
⁴:(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)அத² பராஶரப்ரப³ந்தா⁴த³பி வேதா³ந்தரஹஸ்ய வைஶத்³யாதிஶயஹேதுபூ⁴தை: ஸத்³ய: பரமாத்மசித்த ரஞ்ஜகதமை: ஸர்வோபஜீவ்யை: உபப்³ருஹ்மணை: மது⁴ரகவிப்ரப்⁴ருதி ஸம்ப்ரதா³யபரம்பரயா நாத²முநேரபி உபகர்தாரம் கால விப்ரகர்ஷேபி பரமபுருஷஸங்கல்பாத்  கதா³சித்  ப்ராது³ர்பூ⁴ய ஸாக்ஷாத³பி ஸர்வோபநிஷத் ஸாரோபதே³ஷ்டா²ரம் பராங்குஶமுநிம்(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)த்³ரமிடோ³பநிஷந்நிவேஶஶூந்யாநபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யாத் |
த்⁴ருவமாவிஶதிஸ்ம பாது³காத்மா ஶட²கோப: ஸ்வயமேவ மாநநீய:||
 (ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்)பா⁴ஷா கீ³தி: ப்ரஶஸ்தா ப⁴க³வதி வசநாத் ராஜவச்வோபசாராத்”  (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)நித்யம் ஜாதா ஶட²ரிபுதநோ: நிஷ்பதந்தி முகா²த்தே| ப்ராசீநாநாம்ஶ்ருதிபரிஷதா³ம் பாது³கேபூர்வக³ண்யா(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்) தாம்ரவர்ணீதடக³தஶட²ஜித் த்³ருஷ்ட ஸர்வீய ஶாகா² (ஸ்ரீத்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளி) ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்³ருஷ்டவந்தம்    (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)அகி²லத்³ராமிட³ப்³ரஹ்மத³ர்ஶீ
 (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)வகுளத⁴ரதநுஸ்த்வம்ஸம்ஹிதாம் யாமபஶ்ய: (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)வகுளத⁴ரமார்ஷித்³ருஷ்டே த்³ரமிட³ நிக³மே  (ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை)ஶ்ராவ்யவேதா³த்  (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஶட²ஜிது³பசிஷத்³து³க்³த⁴ஸிந்து⁴ம்   (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)வேதா³நாக³ஸ்த்ய பா⁴ஷா ப³புஷ உத³த⁴ரச்ச்²ரேயஸே தே³ஹிநாம் ய:  (தாத்பர்யரத்னாவளி)ஶட²மத²நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ⁴மீ வகுளத⁴ரமஹர்ஷித்³ருஷ்ட விஶ்வஜநீநோபநிஷத் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒருவரே என்று நிரூபித்தருளியுள்ளார்

ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது.

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது.

ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார்.

ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார்–ஆசார்ய நிஷ்டை-வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே(நாச்சியார் திருமொழி)

ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்)

ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.-தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.

ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது.

ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது.

ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்-ஸ்ரீதத்வமுக்தா கலாபம்)-தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்||
 (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)-மஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்| சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் || (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)-பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார்.-ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம்-ஸ்ரீதத்வடீகை

ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது.ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும் 

ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)

ராமாநுஜ என்கிற பதம் தர்ஶந ஸ்தாபகரான எம்பெருமானாரைக் குறிக்கிறது-ஸ்ரீபாஷ்யகார பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புத: (ஸ்ரீதேஶிக மங்களம்)-ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ம ஶரீரத்தில் ஜந்துக்களைப்போல பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கநம் பண்ண அவரோடுண்டான குடல் துவக்கத்தாலே நாம் உத்தீர்ணராவுதோம்’ (ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற முதலியாண்டான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை அறியாமல் எம்பெருமானார் அனுஷ்டித்த ஶரணாகதியே போதும், வேறொரு உபாயம் வேண்டாம் என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஆழ்வான் அந்திம தஶையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய, இப்பேறு நமக்கு வருகை அரிது, நாம் என்ன செய்யக்கடவோம், என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்கள் அபிப்பிராயத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ, இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்ட சர்க்கரையையும் இட்ட மாத்திரமன்றோ, நாம் உபாயத்திற்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம் என்றருளிச்செய்ய, முதலிகள் தெளிந்து நிர்ப்பரரானார்கள்” என்று ஆழ்வான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை வெளியிட்டருளினார். எம்பெருமானார் அனுஷ்டித்துக் காட்டிய உபாயம் எல்லாம் மோக்ஷத்திற்கு ஸாதகமாகாது என்று சிலர் கூற அதற்கு பெரியோர்களின் வார்த்தைகளே நமக்கு ப்ரமாணம் அனுஷ்டித்த சிற்சில பாகங்கள் ப்ரமாணமாகும் ईश्वराणां वचस्सत्यं
 ஈஶ்வராணாம் வசஸ்ஸத்யம் (ஸ்ரீமத் பாகவதம்) என்றபடி அவர்களுடைய வர்ணாஶ்ரம பேதமில்லாமல் (விரோதமில்லாமல்) உள்ள அம்ஶங்களே ப்ரமாணமாகும். அநுஷ்டானமும் ஶாஸ்த்ர விரோதமாக இருக்கவில்லை என்பதை திருவுள்ளம் கொண்டு கர்மாநுஷ்டானத்தில் மிகவும் விழிப்புடன் இருந்தார் என்பதை ‘பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ ‘எம்பெருமானுள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திம திவஸாவதியான அநுஷ்டானங்களை (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) 
  என்று அருளிச் செய்துள்ளார். மேலும் ஸ்ரீபரமபத ஸோபானத்தில் எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே என்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில்  இதி யதிராஜமஹாநஸபரிமள பரிவாஹ வாஸிதாம் என்றும் அருளிச் செய்துள்ளார்.

ராமாநுஜ என்கிற பதம் திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் குறிக்கிறது. இவர் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஜ்ஞாநபுத்ரர் என்று வடுக நம்பியால் கொண்டாடப்பட்டவர். இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற வ்யாக்யானம் செய்தருளியுள்ளார்

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்கிற திருநாமமுடைய எங்களாழ்வானைக் குறிக்கிறது. இவர் வேதார்த்த ஸங்க்ரஹத்திற்கு வ்யாக்யாநமிட்டுள்ளார்-உக்தம் ச ஸ்ரீவிஷ்ணுசித்தை: ச்யேந கபோதீய கபோதோபாக்யாந காகவிபீஷண க்ஷத்ரபந்துமுசுகுந்த கஜேந்த்ரத்ரௌபதீ தக்ஷக சதமகாதிஷு மோக்ஷார்ததயா க்ஷணகாலநிர்வர்த்ய ப்ரபதநார்த தர்சநாத் அபதிராணாம் தத்ர முக்யத்வம் இதி (ஸ்ரீநிக்ஷேபரக்ஷை),

ராமாநுஜ என்கிற பதம் நடாதூர் அம்மாளைக் குறிக்கிறது.-ஸ்ரீமத்பயாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம் (அதிகரண ஸாராவளி)-வ்யாதாநீத்  வேங்கடேசோ வரதகுரும் க்ருபா லம்பிதோத்தாம் பூமா (ஸ்ரீ தத்வமுக்தாகலாபம்
)ப்ரணம்ய வரதாசார்ய (ஸ்ரீதத்வடீகை)

ராமாநுஜ என்கிற பதம் வஸிஷ்டரையும், ஸாந்திபிநி ரிஷியையும் குறிக்கிறது.-பத்யு: ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாதகோடீரயோ: ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ்ததாந்யாந் குரூந்  (ந்யாயபரிஶுத்தி) என்றும், மேலும் பெரிய நம்பிகளையும், ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளாரையும் குறிக்கிறது.  இவருடைய பெருமையை அப்புள்ளார் அருளிச் செய்த விரகு, கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார், கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாய்ப் போலே பழக்குவிக்க, அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்),ஶ்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி தத(ஸ்ரீதத்வமுக்தாகலாபம்)ஸ்ரீமத்பயாம்ராமாநுஜாப்யா(அதிகரணசாராவளி)அஶ்ரௌஷம்  சேஷகலபாதஹமபி வீதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத (அதிகரணஸாராவளி)நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயிநே (வாழித்திருநாமம்)வந்தே ஆத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம் (அப்புள்ளார் தனியன்)ததூக்தா ….. மம குருபி: வாதிஹம்ஸாம்புவாஹை: (அதிகரண ஸாராவளி)

ராமாநுஜ என்கிற பதம் எம்பெருமானாருக்கு திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த வேதாந்தோயநர் என்ற கிடாம்பி ஆச்சானைக் குறிக்கிறது. இவர் வழியில் வந்தவர் எல்லோருக்கும் பயன்பெறுமாறு முப்பத்து நான்கு ரஹஸ்யங்களாக அருளிச் செய்துள்ளார் என்றபடி “ஆச்சான் பக்கலிலே கேட்டு” (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்” (ஸ்ரீபரமபதஸோபாநம்)இதி யதிராஜமஹாநஸ பரிமளபரிவாஹ வாஸிதாம் பிபத (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம் (ஸ்ரீஶரணாகதி தீபிகை)யோ மஹாநஸிகோ மஹாந் யதிபதே நீதச்ச தத்பௌத்ரஜாந் ஆசார்யாந் (ஸ்ரீந்யாஸதிலகம்)

ராமாநுஜ என்கிற பதம் திருமலையாண்டானைக் குறிக்கிறது. திருமலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்  (ரஹஸ்யத்ரயஸாரம்)

மேலும் ஆசார்ய பரம்பரையில் எம்பெருமானாருக்கு ரஹஸ்யார்த்தங்கள் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமாயணார்த்த விசேஷங்களை உபதேசித்த பெரியதிருமலை நம்பிகளும் இவர்களுடைய ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யஸாரம், ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி முதலியவற்றில் நிரூபித்திருப்பதால் அவர்களுடைய தயைக்குப் பாத்ரமானார் ஸ்வாமி என்றபடி.

                                                                            

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பர ப்ரஹ்ம தத்வ விளக்கம்-

June 11, 2025

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வஸிதமேதத்யத் ருக் வேதோ யஜுர் வேத : ஸாம வேதோ தர்வாங்கிரஸஹிஹாஸ: புராணம் வித்யா உபநிஷூத ”-சுக்ல யஜுர் வேத பிருஹதாாண்யகோபநிஷத்தில் 4-ம் அத்தியாயம் 4-ம் பிராம்மணம்.-இத்யாதியாகிய ப்ரமாணங்களின்படியே சர்வ நியந்தாவாயும்,
சர்வ வேதோபப்ரஹ்மணாதி நூல்களின் ப்ரதிபாத்தியனாயும்,
சர்வாந்தர்யாமியாயுமிருக்கும் சர்வேஸ்வரனது ஸங்கல்ப ஸ்வாஸமே ருக், யஜுர், ஸாமம், அதர்வண முதலாகிய வேதங்களும் இதிஹாசம், புராணம், வித்தை, உபநிஷத் முதலியன என அறுதியிட்டுள்ளபடியால், எம்பெருமானது ஜாயமான கடாக்ஷமில்லையாயின் வேதத்தின் யதார்த்தம் வெளிப்படையாய் தோன்றாதாகையால் தமது பரம க்ருபையால் தாமே தம் ப்ரஜைகளுக்கு விளக்கிக் காட்டியபடியால்
வேதங்கள் அனாதியாய் கல்பங்கள் தோரும் ப்ரஜைகளாகிய
ப்ரம்ம, ருத்ர, இந்த்ராதி தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும்,
ஸர்வேஸ்வரனால் போதிக்கப்படுவதால், அவ்வேத ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வான் பக்கலிலும், வேதத்தின் பக்கலிலுமுள்ள ஏற்றங்களை அறிந்தவர்களில் தலைமை யானவர்கள் எமதாரியர்களேயாம்.

காலக்ரமத்தில் வேதாத்யயனம் குறைவு பட்டுப்போய் வேதமானது கோர்வை யின்றி சிதரிப்
போனமையால் அதை சீர்திருத்த வேண்டி எமதருட் பெருங்கருணை யப்பன் தமது பரம க்ருபையால் “பரமேஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்” என்கிறபடியே பரமேஸ்வராயும், பரம பத நிர்வாணனனாயும், விளங்காகின்ற மஹா விஷ்ணுவினம்சமாய் “ வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ் ரூபாய விஷ்ணுவே” என்றும் “ ஸ ஹோதா வ்யாச பராசர்ய :” என்றும் “வ்யாஸய தீ திவ்யாஸ ” என்கிற யஜுர் வேதத்தில் வித்பத்யின் பிரகாரம் வேதங்களினுடைய யதார்த்தத்தை ஸ்தாபிக்கவும், அனர்த்தங்களை நிராகரிக்கவும்,கல்பங்கள் தோரும் அம்ஸாரூடராயும், பராசரர் புத்திரராயும்,விளங்கிய வேத வ்யாஸ பகவான் அவதரித்து அஹோ பாஹ்யமாய் கெம்பீரார்த்தமாய், தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்று பெயர் பெற்றிருந்த வேதங்களை தமது பரம க்ருபையாலே எதிர்கால நிகக்ஷியைக் கணித்து சிற்றறிவினோர் அறிந்துய்யுமாரு ருக், யஜுர். ஸாமம், அதர்வணம் என்பதாகப் பிரித்து தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க அவர்கள் அவ்வொவ்வொரு பாகத்தையும் அநேக பகுதிகளாகத் தொகுத்து அவ் வாறு தொகுத்த பாகங்களுக்கு வேத ஸாகைளென்று பெயராய் அதிலும் ருக்வேதத்தில் 21, யஜூர்வேதத்தில் 109, ஸாமவேதத்தில் 1000, அதர்வண வேதத்தில் 50, இப்படி 1180, ஸாகைகளாய் ஒவ்வொரு சாகைகளுக்கும் ஒவ்வொரு உபநிஷதென்று பெயராய் ஒவ்வொரு ஸாகையும் முந்தியபாகம் யஜ்ஞாதி நித்ய, நைமித்ய, கருமங்களையும், அவைகளை அனுஷ்டிக்க வேண்டிய விதிகளையும், செய்ய யோக்யதையுள்ள அதிகாரிகளையும், செய்விக்றவர்களின் யோக்யதையும், ஆராதிக்க வேண்டிய தேவதைகளையும், தத் தேவதைகளைப் பற்றிய மந்தரங்களையும்,தத்தத் கருமங்களின் பலன்களையும், கூறுகிறது.அக் காரணத்தால் இதற்கு கரும காண்டமென்றும், அவித்தை என்றும் கருதப்படுகிறது. வேதத்தில் கரும காண்டத்திற்கு அவித்தை என்னும் நிரூபணம் மைத்திராயண்ணி யுபநிஷத்தில்7, 9 கடோபநிஷத்தில் 2, 4 ஈஸாவாஹியோபநிஷத்தில் 11லும் காணலாம். உத்ர பாகமானது சர்வேஸ்வரனை உபாஸிக்கும் மார்க்கமாகிய ஸாங்கிய யோகம், நிஷ்காம கரும யோகம், தபசு, ஸகுண நிர்க்குண ப்ரஹ்மோபாசனா விதியும், ஆத்ம லக்ஷணமும், ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ரக்ஷகத்வமும்,ஸமஸ்த்த கல்யாண குணாத் மஹத்வமும், ஸர்வ சேஷித்வமும், ஸ்ரீய:பதித்வம் முதலியவைகளையும், அவைகளுக்க அங்கோபாங்கமான விஷயங்களையும் கூறுகையாலே, ஸ்வ பாகத்திற்கு ஞான காண்டமென்றும், வித்தையென்றும், மேலே கூறிப் போந்தமைத்திராயண்ணியம், கடோபநிஷத்தும், ஈஸாவாஹியம் முதலிய ஸ்ருதிகள் கூறுகிறது இவ்வாறு விவரிக்கப்பட்ட விஷயங்களை முக்திகோபநிஷத்திலும், விஷ்ணு புராணத்திலும் விரிவாகக் காணலாம் இப்படி 1180 ஸாகைகளுடைய வேதங்களின் கில பாகங்களே தற்போது 108, உபநிஷத்துகளாக வெளியாயிருக் கின்றது இவ் 1180 ஸாகைகளையுடைய வேதங்களை வேத புருஷனால் வெளியிடப்பட்ட மீமாம்ஸா ஸாஸ்த்திரங்களன்றி வேதத்தின் யதார்த்தம் விளங்காது. அம்மீமாம்ஸா ஸாஸ்த்திரம் 20 அத்யாயங்களாயும்,அதில் பூர்வ பாகம் 14 அத்தியாயங்களையுடையதாயும், கரும நிச்சய ஸாதனமாயும், ஜைமினி முனிவரால் விளக்கப்பட்டதாயும், உத்ரபாகம் ப்ரஹ்மத்தினுடைய நிச்சயத்தின் ஸாதனமாயும், 6 -அத்யாயங்களை யுடையதாயும்,வ்யாஸ பகவானால் விளக்கப்பட்டதாயுமிருக்கும்.

யஜுர்வேத ப்ரதிபாத்யரான – வேதவ்யாஸ பகவான்« வேத ஸாஸ்த்ராத்பரம்” என்கையாலே அவ் வேதங்களை யனுசரித்தே பர தத்வ பரம் பொருளை யறிய வேண்டும்.

அந்நபூர்ணோபநீஷத்தில்
யச்சூன்யவாதிநாம் சூந்யம் ப்ரஹம ப்ரஹ்ம விதாம் சயத்
விஜ்ஞாந மாத்ரம் விஜ்ஞாந விதாம் யதமலாத்மகம்
புருஷஸ் ஸாங்கய தருஷ்டீநா மீஸ்வரோ யோகவாதிநாம்
ஸிவச்சைவா கமஸ்தாநாம் கால: காலைக வாதிநாம்
யத் ஸர்வ ஸாத்ர ஸித்தாந்தம் யத் தத்வம் ததயௌஸ்திக:”

இதன் பொருள்,
ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரனை உய்யும் வகை எண்ணிலவாயினும், சூன்யவாதி சூன்யமாகவும், ப்ரஹ்மவாதி ப்ரஹ்ம மாகவும், விஞ்ஞானமுளோன் ஆன்மாவினிடத்தில் விஞ்ஞானமாகவும், ஸாங்க்யன் புருஷனாகவும், யோகவாதி ஈஸ்வரனாகவும், ஸைவ, ஆகமி சிவனாகவும், காலைகவாதி காலமாகவு மறிகிறானாதலால், ஸர்வ ஸாஸ்த்திர சித்தாந்தங்களினு முடிந்த தத்வப் பொருளும், விகாராஹிதமான நிர்விகாசனும், கல்பங்கள்
தோரும் ப்ரம்ம, சிவ, இந்த்ராதி தேவர்களை நிக்ரஹித்து
ஹரிக்கின்றவனுமான ஸர்வேஸ்வரன் ஒருவனே யுளன்.

அதர்வசிரோபநீஷத்.
காரணாநாம் த்யாதா காரணந்து த்யேயஸ் ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர’ என்கிறபடியே சராசர ப்ரபஞ்சங்களுக்கும் காரண வஸ்துவும், க்யாதாவும்.அறிபொருளும், பரவின வஸ்துவும், ஸர்வ வ்யாபகனுமான ஸர்வேஸ்வரனே யாவன். மேலே கூறியுள்ள ஈஸ்வர ஸப்தத்தால் அஸாஸ்த்ர வாதிகளும், நவீன பண்டாரங்களும் நிகண்டுகளில் கூறும் ஈஸ்வர ஸப்தங்களுக்கு ருத்ராதி தேவர்களுக்குத் தான் பொருந்துமென நம்புகின்றனர் அதற்கிணங்க சிற் சில ஆபாசமான உதாரணங்களையும்,கதைகளையும், பிதற்றுகின்றனராயிலும் ஆராயுமளவில் சில காரணத்தால் சிற் சில தேவர்களால், தங்களுக்கேற்பட்டுள்ள கடுமைகளைத் தவிர்த்து காப்பாற்றும் பொருட்டு துதித்துக் கொண்டாடப் பெற்றதாம் அதாவது கடுமையால் வருந்தும் ஒருவன் தனது போஷகத்துக்காக பிரரை வருந்திக் கொண்டாடப்பட்ட பட்டப் பெயர்களுக்கு எவ்வாறு அர்த்தம் பொருந்தாதோ அவ்வாறே பெற்றவையாம் ருத்ராதி தேவர்களின் ஈஸ்வரத்வம்.

சகல ஈஸ்வர சப்தங்களுக்கும் பிரதிபாத்யன் யாவனெனில்.
யதா ஈஸ்வர ஸப்தோயம் நாராயணோ பிரதிஷ்டதே” என்றும்,
“ யத்வா ஈஸ்வர ஸப்தோயம் ரூட்யாவத்தி ஜநார்த்தநம்” என்றும்,வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் வியாகரண சூத்திரங்களினாலே ஈஸ்வர சப்தங்களுக்கு ப்ரதிபாத்யனும், அச்சப்தார்த்தங்களுக்கு அர்ஹனுமானவன் ஸ்ரீமந் நாராயண னொருவனே யாவன் என்றும், ஜீவ கோடிகளினுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை கொடுக்குமவனான ஜநார்த்த னொருவனே யாவன் என்றும் ஹிதாநு ஸாகர கர்மாநுகுண நியாமக ஸ்வரூப ரூப நாம விபூதிகளையும், பரத்வ காரணத்வாதி கல்யாண குண ஸமூஹங்களையும், வேத வேதாந்தாதிகளெல்லாம் ஒதத்தக்க அநந்த வைபவ ஸஹிதனாய் விளங்குமவனாதலால், ஸமஸ்த விலக்ஷண ப்ரமேய ப்ரமா தாக்களான சதுர்முக, பஞ்சமுக,வ்யாச பராசர, சுக செளநக, விகனச, வசிஷ்டாதி ப்ரஹ்ம வித்துக்களும், ஸ்ரீபராங்குச பாகால பட்டர்பிரரன் ஆதியான ப்ரஹ்ம விதாக்ரேசர்களும் அப்பரமேஸ்வர ஸப்த்த ப்ரதிபாத்யனான பர ப்ரஹ்மத்திற்கு நாராயணனென்ற திருநாமமே அஸாதாரண திருநாம மென்று அறிவுறுத்தினார்களிறேநாராயணோ ப்ரதிஷ்டதே” என்கிற
சப்தார்த்தமானது, ஜகஜந்மாதி காரண பூகனாய், சர்வாந்தர்யாமியாய், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அதீதமானவனாய்,சர்வ வேத ப்ரதிபாத்யனாய், ஜீவோத்பதியாய், பரம பாவன சச்சித்தானந்த ஸ்வரூபமாயுமுள்ளப் பரமபத நிர்வாஹனுமான,
பரமாத்மாவையே ஈஸ்வர சப்தம் ப்ரதிபாதிக்கும் என்றே சூத்திரகாரர்களும் அறுதி யிட்டனர், இதற்கிணங்கியே மீமாம்ஸர்களும், மதுவும் அருளிச் செய்தனர்.

ஜகஜ்ஜன்மாதி காரண பூதனாவது.-யஜுர்வேதம் தைத்ரியோபநிஷத்
“ யதோவா இமாநி பூதானி ஜாயந்தே யேந ஜாதாநி வந்தி யத் ப்ரயந்த்யபிஸம், விஸந்தி தத் விஜிஜ்ஞாஸ்வ ப்ரஹ்மேதி-என்கிறபடியே முன்னம் இச் சராசராத்மகமான பூத, பெளதி
ப்ரபஞ்சங்களும், அதற்குள்ளடங்கிய உடலும், உயிரும், சரப, அசரபமுமாய் காணப்படுகிற சகல வஸ்த்துக்களும் எவனிடத்திலடங்கினவோ, பிறகு அடங்கின யாவும் எவனிடத்திலிருந்து வெளிப்படுகின்றனவோ, வெளிப்பட்ட யாவும், தத்தமக்கு விதித்த காலம் வரை கடவாது நிலை பெற்று நிற்க எவனால் ரக்ஷிக்கப்படுகின்றனவோ அப்பரம் பொருளே நாராயண பர ப்ரஹ்மம் என்று அறிக –

நாராயணோபநிஷத்
நாராயணாத் ப்ரம்மா ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோ ஜாயதே,நாராயணாத் த்வாதச ஆதித்யா,ருத்ரா வஸ்வஸ் ஸர்வானி சந்தாம் ஹி நாராயணா தேவா ஸமுத்பத்யந்தே,நாராயணாத் ப்ரவர்த்தியந்தே, நாராயணே ப்ரலீயந்தே”
என்கிறபடியே புருஷோத்தமனாயும், ப்ரணவ மந்திரப் ப்ரதி பாத்யனாயுள்ள ஸ்ரீமந் நாராயணன் இடத்திலிருந்தே ப்ரம்மா, சிவன், இந்திரன், த்வாதசாதித்யர் முதலான பன்னிரண்டு ருத்ரர்களும்,தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும்
உண்டாயிற்றென்றும், அத் தயா பரக் கடலாகிய ஸ்ரீமந்நாராயணனாலேயே அவ் ஒவ்வொன்றும் தத்தமக்கு விதித்த நாள் வரை,நிலை பெற்று நிற்கின்றனவென்றும், பின்னர் கற்ப க்ஷயத்தில் அகில ஈஸ்வர சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் இடத்திலேயே அவையாவும் லயமாகின்றன வென்றும்

பைங்களோபநிஷத்.
” ப்ராணி கர்ம வஸாதேஷ படோயத்வத ப்ரஸாரித:
பராணி கர்ம ஷயாத் புநஸ்த்திரோ பாவயதி தஸ்மிந்
நேவாகிலம் விஸ்வம் ஸங்கோஸ்தித படவர்வர்ததே
ஈஸாதிஷ்டி தாவரண சக்திதோ ரஜோ த்ரிக்தாமஹ தாக்யா
-என்கிறபடியே ப்ரம்ம, ருத்ர, இந்தராதி தேவர்கள் முதல் ஸ்தாவரம் வரையிலுள்ள யாவும் ப்ராணிகளே யாயினும் கர்ம வசத்தினாலே மாறுதலடைவதேயாம், சுருட்டப்பட்ட சித்ரப் படம் போலே சகல ஜகத்தையும், அதிலடங்கிய ப்ரம்ம, ருத்ர, ஈசான்ய ப்ரிதிவ்யாதி பதார்த்தங்களனைத்தும் தனக்குள்ளே
லயிக்கவும், அனந்தரம் நிக்ரஹிக்கவும், பின்னர் ஹரிக்கவும், வல்லவனாகையாலே (ஹரி) என்னும் திருநாமமுண்டாயிற்றென்று வயாஸ பகவானும், ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், சங்கராசாரியரும், மத்வாசரியரும், வித்யாரண்யர் முதலானோரும் தங்கள் பாஷ்யங்களிலே ஸ்பஷ்டமாக அறுதியிட்டனர். இக் காரணத்தால் ஸர்வ நியந்தாவும், திருவஷ்டாக்ஷர ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனை ஜெகஜ் ஜன்மாதி காரண
பூதனெனத் தட்டில்லையிறே.

சர்வாந்தர்யாமித்மாவது.
நாராயணேபநிஷத்,
அந்தர்ப் பஹிச்ச நாராயண : நாராயண யேவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் நிஷ்களங்கோ நிரஞ்ஜநோ நிர்விகவ்போ நிராக்யா தச்சுத்தோ தேவ ஏகோ நாராயண : என்கிறபடியே அவித்யாதி கர்மகட்டுகளும் நாராயணன், ஊர்த்தவமும் நாராயணன், அதோங்கமும் நாராயணன், உள்ளும், புறம்பும் நாராயணன், பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான சர்வ லோகங்களிலும் அணுவிற்கணுவாயும், மேருக்கு மேர்வாயும்,
யாதொரு பூ த காலம், பவிஷ்யத்காலம், சர்வமும் நாராயணனே யாய், நிஷ்களங்கனாப், நிரஞ்சனனாய், நிர்விகல்பனாய், சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து சங்கல்பத்தால் ஆட்டி அசைப்பிக்கும் அகடித கடனா சாமர்த்தியமமைந்த பரம் பொருளன்றோ சர்வார்ந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணனென்றும்,

யஜுர் வேதத்தில் தஹர வித்தையில்.
“புருஷயேவேதம் ஸர்வம் யத்பூதம் யச்சபவ்யம்-என்கிற படியே கால பரிச்சேத ரஹிதமாய், கழிந்த காலத்திருந்த ஜகத்தும், எதிர் கால நோக்குடைய ஜகத்தும், நம் முன் காணப்படுகிற ஜகத் யாவும் அதிருத்த நாராயணனின் அந்தர்யாமித்வமென்றும், இம் முக்கால நோக்குள்ள ஜகத்தும் அதிலுள்ள சேதனா சேதனங்களும் அப் பரம புருஷனுக்கு சரீரமாயமையப் பட்டவை என்றும்,
சுக்ல யஜுஸ் சுபாலோபநிஷத்.
சக்ஷ்ஷு க்ஷ த்ருஷ்டவ்யம்ஸ நாராயண: ஸ்ரோத்ரஸ் ஸ ஸ்ரோதவ்யம்ஸ நாராயண :
என்கிறபடியே சகல லோகங்களிலுமுள்ள சகல வஸ்துக்களையும் பார்க்கின்றவனும், பார்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களும் நாராயணன், கேட்க்கின்றவனும், கேட்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களிலும், சகல சப்த்தங்களிலும் அந்தர்யாமியானவன் நாராயணனே என்றும்,
அந்தச் சரீரே நிஹிதோ ஹுஹாயாம்”-ஒவ்வொரு தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி ஸ்தூல சூஷ்மாதி சரீரங்களிலும், உள்ளும், புறம்பும் வ்யாபித்துள்ளோன் நாராயணனென்றும்,=மஹாநாராயணோபநிஷத்.
“ யச்ச கிஞ்சித் ஜகத்தஸ்மிந் துர்ஷ்யதே ஸுர்யதேபிவா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்யா நாராயண ஸ்தித
:”-என்கிறபடியே காலபரிச்சேத ரஹிதனாய், த்ரிகால நோக்குள்ள ஜகஜ் ஜீவகோடிகளின் துருஷ்டிக்குக் காணப்படுகிற மேரு த்ரணாதிகளினுள்ளும் புறம்பும் வியாபிப்பவனும், அவ்வொவ் வொன்றினின்று மெழும் சப்தங்களை கேட்கும் ஜீவகோடிகளிலும், அவ்வாறு நிகழும் சப்தங்களிலும், நிஷ்களங்கனாய், நிரஞ்சனனாய், நிர்மலனாய், அபின்னனாய், அவாங் மனோ கோசரனாய்,
தனக்குப் புறம்பிற் போகவிட்ட சிதசித்துக்களில்லாமல் அவைகளை விடாதே வளைத்துக் கொண்டு சுக சயனனாய் எழுந்தருளியிருக்கும் பரம்பொருளே ஸ்ரீமந்நாராயண னென்றும் மஹா நாராயணேபநிஷத்.
” அநந்தமவ்யயம் கவிம் சமுத்ரேந்தரம் விஸ்வசம்
பவம் பத்மகோச பிராதிகாசம் ஹிருதயம் சாப்யதோமுகம்
-என்று சகல பிரம்மாண்டங்களின் ப்ருதிவியில் வசிக்கும் ஜீவ கோடிகளின் வியாபகமின்றிக்கே சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள சப்த சமுத்ரங்களில் வசிக்கும் மச்ச குழாங்களிலும்,
அச் சமுத்ரங்களினின்றெழும் குமிழிகளிலும், அலைகளிலும்,
அவ்வலைகளினின்று சிதரும் ஜலத் துளிகளிலும், அத்துளிகளின் ஒவ்வொன்றிலும் தனித்தனியாய், உள்ளும் புறம்பும் வியாபியா நின்றவன் ஸ்ரீமந் நாராயணனே என்றும்,

கோபாலதாபன்னியூபநிஷத்.
” ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூடஸ் ஸர்வ வ்யாபீ mஸர்வ பூதாந்தராத்மா”
சகல பிரம்மாண்டங்களிலும், சராசர பூதங்களிலும், சகல ஜீவ கோடிகளிலும், சர்வாந்தர்யாமி யாயிருக்குமவன் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவே என்றும்,

அதர்வசிரோபநிஷத்,
அஹமேஹ பிரதமமாசம் வர்த்தாமி பவிஷ்யாமி சநாந்யய: கச்சிந் மத்தோ வியக்துருக்க: ஹிதிசோ
ந்ராந்தரம் பிராவிசத்தி சன்சாந்தரம் பிராவிஸச் சோஹம்நித்யா நித்யோஹம் பிரபஞ்ச்யோஹம் ப்ரத்யஞ்ச்யோஹம் முதஞ்ச்யோஹம் மதஞ்ச்
யோத்வா திஷத்சாஹம் த்ருஷு ஜகத் அனுஷத் சோஹம் சந்தோஹம் தியரஹம் பார்கஸ் வத்சோஹம்
-என்கையாலே சிவபிரான் தானே தெய்வ சபையில் நின்றும்,. யதார்த்தமாயும், சர்வ வேத தாத்பர்யார்த்தமாயும், சொல்வதாக நிச்சயித்து, சர்வாந்தாயாமியாயும், ஜீவோதபதியுமான,ஸ்ரீமந் நாராயணன் எனக்குள் அந்தர்யாமி யாயிருக்கையால் தான் நான் திரிலோகாதிபதி யாயிருக்கப் பெற்றேனென்றும், அவ்வேற்றத் தாலே பூத பவுஷ்ய வர்த்தமான காலங்களிலும், எனக்கீடானவ ரொருவருமில்லை என்றும் தனது சந்தோஷப் பெருக்காலே பிர சங்கித்தனரென்றும், இப்பிரமாண பெருக்கை ஸ்கந்தோப நிஷத்தும் காணலாம்.

மஹோபநிஷத்.
“பீதாபாஸ் யாத்தனுபமா தஸ்ய ஸிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித ஸ பிரம்மா ஸ ஸிவாஸ ஸிந்த்ரோக்ஷர பரம ஸ்வராட்” என்று ஒவ்வொரு ஜீவ கோடிகளின் ஹிருதய நடு நிலைமையில் இருக்கும் ஜடாக்கினியின் மத்தியில், கறு மேகத்தினை பிளவுபட ஒடி ஒளியும் மின்னல் கொடி போலும், நெல் நுனி போல் மெல்லியதாயும், ஸ்வயம் பிரகாசமாய், சமனற்றதாய், விராட் புருஷனான பரமாத்மா வியாபித்துளன் -அவ் விராட் புருஷனான ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவிற்குள்ளும், சிவனுக்குள்ளும், இந்தரனுக்குள்ளும் இவ்வாறே அந்தாயாமி யாயிருக்கிறானென்றும் அப் பரம புருஷன் மூவித பேதமற்றவனென்றும், தன்னை யொழிந்த சர்வராலும் தொழப்படு மவனென்றும், கருமத்திற்கு வசப்
படாதவனென்றும், ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல வேத வேதாந்தாதிகளும் ஸ்ரீமந்நாராயணனே சர்வாந்தர்யாமி என்றும், பர ப்ரஹ்ம மென்றும் நிச்சயிக்கப்பட்டது. இத்யாதிப் ப்ரபல
ப்ரபாவங்களைக் கொண்டே (ஹரி: ஓம்) என்று மும்முறை ஆரணங்கள் முறையிடுகின்றன.

ஸத்வ, ரஜ தமோ குணங்களுக்கு அதீதமான நிற்குணமாவது.
திருபாத் விபூதி மஹாராயணோபநிஷத்.
”ஸுத்த சத்வம் மயோலீலா க்ருஹீத நிரதிசய ஆனந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத் ஸயே வநித்ய பரிபூரண பரத விபூதி வைகுண்ட நாராயண-என்று சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்திலுள்ளவனானாலும் அச்சத்வ குண ரஹிதனாயும், மாய்கையை ஸ்வாதீனமாயுடை யவனானாலும் அம்மாய்கை ரஹிதனாயும், விளங்கும் ஸ்ரீமந் நாராயணனை தியாநிக்கின்றேனென்று இச் சுருதி உத்கோஷிக்கின்றது.

அதர்வண வேத திருபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்.
நாராயணாம் ஸை:ஜோகுண ப்ரதாநை ரேகைக-ஸ்ருஷ்டி கர்த்ருபி ரதிஷ்டிதாநி விஷ்ணு மஹே ச்வராக்யைர் நாராயணாம் சைஸ் ஸத்வ தமோ குண ப்ரதாநை
ரேகைக ஸ்திதி ஸம்ஹார கர்த்ரு பியாதிஷ்டிதாநி”
என்று யாதொரு பொருளே ஆதி மத்யந்த மென்னும் பாகுபாடாக விருத்தல் போலே சர்வேஸ்வரனான நாராயணனே ஸத்வ
ரஜ தமஸ்சுக்களாகிய முக் குணங்களுக்கும் ப்ரதாநியாயும் அதீதனாயும், விஷ்ணு, ப்ரம்ம,ருத்த, யென்பவர்களின் முத் தொழிலுக்கும் ப்ரதானியாயும், அதீதனாயும் இம் மூவித தெய்வங்களைக் கடந்தவனாயும், விளங்கா நின்றவன் ஸ்ரீமந் நாராணனென்று வேதங்களிலும், ஸ்ருதியாதி உபநிஷத்துக்களிலும், நிவாச தீக்ஷித முதலான பாஷ்யங்களிலும், ப்ரஹ்ம ஸூத்ரத்தாலும் நிரூபிக்கப்பட்டது.

வேத ப்ரதிபாத்யனாவது.—வ்யாகாண ஸூத்திரம்.
“சர்வ வேதாய யத் பதம் மாமநந்தி சர்வ வேதாய
த்ரைகம்பவந்தி நதஸ்ம வசஸாம் பரதிஷ்டாவச
சாம் வாத்ஸ்ய உத்தமம் நாராயண பரோ வேத?””
-என்று சர்வ வேத வேதாந்தாதிகளும் யாதொரு பரதத்வமான பதத்தை நாடுகின்றனவோ, ஸ்ருதியாதி சகல ப்ரமாணங்ளும் யாதொரு மங்கள வஸ்துவை தியாநிக்கின்றனவோ, இதிஹாசாதி சகல சாஸ்த்திரங்களிலும் யாதொரு பரம பாவன பரம் பொருளைத் துதித்துக் கொண்டாடப்படுகின்றனவோ அவ் வுத்தம பர தத்வ பரம்பொருளே ஸ்ரீமந் நாயணனென்றும்,
ஸாஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மத்திய மகீர் தனும் மகியானானுத்ரதே லோகாந் காருண்ய ஸாஸ்த்ர பாணினாம்”)-என்று யாதொரு வேத முதல்வனும் சர்வ நியந்தாவும் சகல ஜீவ கோடிகளாலும், உபாயோபேயமாக ஆஸ்ரயிக்கப்படுவதுமான பரம்பொருளை ஸ்ரீமந்நாராயணனென்றும்
நாராயண பரோ வேதோ தேவா -நாராயண நாங்கஜா” என்றும்,
” ஆலோடீயா ஸர்வ ஸாஸ்ராணி விசாரியே ஸுப் புன புன்:
யிதமேஹ ஸுநிஷ்பன்னம் த்தேயோ நாராயண சத
:”என்று சர்வ சாஸ்த்ர ஸித்தாந்த்ங்களிலும், மநுவாதி நூல்களிலும் வஸிஸ்டாதி ஸூத்ரங்களிலும், பலவாராக பரிசோதித்து நாராண நாமமுள்ளான் யாவனோ அவன்றான் சுத்த சாத்விக ப்ரஹ்மமென்றும் ஆணை யிட்டுரைத்து விட்டன வேத வேதாந்தங்க ளென்றுணரக் கடவீர்

ஜீவோத்பதியாவது,
மஹா நாராயணாதி உபநிஷத்துக்களிலும், ஈசம், கேனம்,கடகம், மஹோபநிஷத் முதலான உபநிஷத்துக்களிலும்
“நாராயணாத் ப்ராணோ ஜாயதே,-என்றும்,நாராயணாத்
ப்ரவிர்த்யந்தே, என்றும், நாராயணாத் ப்ரலீயந்தே
என்றும்,”
ஜகஜ் ஜன்மாதி சர்வ ஜீவன்களையும் நிக்ரஹிக்கவும், ரஷிக்கவும் பின்னர் ஹரிக்கவுமான அசாதாரண க்ருத்யங்களை செய்ய வல்லோனாகையால் ஸ்ரீமந் நாராயணனே ஜீவோத்பதி என சகல ப்ரமாணங்களிலும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன –பகவத் ஸாஸ்த்ரமாகிய ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் ஜீவோத்பதி ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் லிளக்கப்படுவதால் அதை அனுசரித்தே ஸ்ருதிகளும்
மஹோபநிஷத்
“விஸ்வமேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுப ஜீவதி-பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ அச்சுதம் நாராயண மஹாங்கேயம்)-என்று சகல பிரம்மாண்டங்களும் அதிலுள்ள ஜீவ கோடிகளும் உஜ்ஜீவிப்பதற் குடலாய் ஆஸ்ரயிக்கப்படுமவன் எவனோ சகல
சேதனாசேதனங்களும் எவனால் நிலை பெற்று நிற்கின்றனவோ சகல ப்ரம்மாண்டங்களுக்கும் அதிலுள்ள தேவ மநுஷ்யாதி சகல பதார்த்தங்களுக்கும் (பதி) நாயகனாய் நின்றவன் எவனோ பரமேஸ்வராயும், அழிவற்றவனாயும், மங்கள ஸ்வரூபனாயும், அச்சுதனாயும் விளங்கா நின்றவன் எவனோ அவனே ஸ்ரீமந் நாரயணனென்று வேத வேதாந்தாதிகளும், இதிஹாசாதி சாஸ்திரங்களும்,வெளிப்படையாய் ஆணை யிட்டுரைத்து விட்டன-இத்யாதி ப்ரமாணங்களால் பரமாத்மாவாயும், ஜீவோத்பதியுமான ஸ்ரீமந் நாராயணன் சேஷியான தான் நவவித ஸம்மந்தத்தால் ஜீவாத்மாவை தனக்கு சேஷப்படுத்தி ரக்ஷிக்க முன் வருகிறனாகையாலும் ஜீவோபதி யென தட்டில்லையிறே.

ஸ்ரீ பாஷ்யம்.
இச்சயாயது பாதேயம் யஸ்யாதி ஸய ஸி த்தயே
உபயா நுபயைகைக ஜூஷாதெள ஸேஷ ஸேஷிணௌ”
என்றும்.
அயமே வாத்ம ஸரீர பாவ : பருதக் ஸித்தய நாஹாதாராதேயபாவ :
‘நியந்த்ரு நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்ச
” என்றும்
“பரகத அதிஸயாதா நேச்ச யோபாதேயத்வமே
வயஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ: பரஸ் ஸேஷி
” என்றும்.
யஸ் சேதநஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச ஸக்யம் தச் சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய ஸரீரம்”
என்னும் ஸ்ருதி வாக்யங்களுக்கு, வேதார்த்த சங்க்ரஹத்திலும், ஸ்ரீபாஷ்யத்திலும், நியந்த்ரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று சம்மந்தத்தையும் தெளிவாய் விளக்கப் பட்டிருக்கிறது.

“யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே
நகத்யதே ஈஸ்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டமவி நியுஜ்யமத”
என்று ஸர்வ ஸேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கு சகல ஜீவ கோடிகளும் எப்போதும் எக்காலத்தும் இஷ்ட விநியோஹார்த்தமாக ஸேஷப்பட வேண்டி யிருக்கையாலும்,
” தேவகீ ஸூத கோவிந்த வாஸு தேவ ஜகத் பதி” என்றும்.
“நாராயணப் பதிம் ஸர்வ லோகாந்” என்றும்,
” நாராயணப் பதிம் ஸர்வ ஜீவாநாம் ” என்றும்.
ஸர்வ லோகங்களுக்கும், சகல ஜீவன்களுக்கும் நாயகனாயும், பர ப்ரஹ்மமாயும், தேவகீ புத்ரனாயும், கோகுல திலகமாயும், வாசு தேவனான ஸ்ரீமந்நாராயணனை தியானிக்கின்றேனென்று மஹா நாராயணோபநிஷத் முதலான ஸ்ருதிகள் உத்கோஷிக்கை யாலும்,
“ மநூநாம் ஸர்க்க மசுரோந் முக பாஹு ரூபாதது : சதுர்னாம்
பராஹ்மணாதீநாம் ஸர்க்க மகத்வாரம் ஜகத் பதி:
“என்று ஸ்ரீபாஞ்சராத்ர, விஷ்வக்ஸேந , பராசா, நாரத, அனுருத்த,பாத்மாதி முதலிய ஸம்ஹிதைகளிலும் ஜீவோத்பதி
ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் கூறுகையாலும், ப்ரம்ம ருத்ரேந்தராதி பிபீலிக்காநந்தமான சேதனாசேதன வர்க்கங்களை யெல்லாம் வளைத்துக் கொண்டு அவ்வவ் பகுதியாதிகளைத் தமது ஜாயமான கடாக்ஷத்தால் ரக்ஷித்துப் பின்னர் பஞ்ச பிரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக தம்மில் அயனப்படுத்துவோனாதலால் (ஜீவோத்பதி) ஜகஜ் ஜீவ நாயகனெனத் தட்டில்லையிறே.

சச்சிதாநத்த மயமான பரமபத நிர்வாஹனாவது.
சுக்ல யஜுஸ் நிராலம்ப உபநிஷத்.
” ப்ராணேந்தர்யா அந்த கணர்ண குணாதேஹ பர தரம் சத்சிதாநந்தமயம் ஸர்வ சாஷிஹம்
நித்ய முக்தர் ப்ரஹ்மமஸ்தாநம் பரம பதம்”
-என்று வாக்கு மனசுக்களாகிய ப்ராணேந்தர்ய வியாபாரங்களுக்கு எட்டாததும், ப்ரம்ம ருத்ரேந்தராதி தேவர்களளால் அறியத், தகாததும், த்ரிகாலத்தும் பரத்வ நிலை பெற்றதும், சத், சித்,ஆநக்த மயமானதும், சர்வ சாக்ஷியமானதும், விஷ்வக் சேநாதி நித்தியர்களும், ஸ்ரீமந் நாரணனையே உபாயோபேயமாய் ஆஸ்ரயித்துய்யும் சடகோபாதி ஜீவந் முக்தர்களும், வர்த்திக்கும் பர ப்ரஹ்ம ஸ்தானம் பரமபதம் என்றும்,
த்ருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
“ஸுத்த சத்வம் மயோ லீலா க்ருஹித நிரதிசயானந்த லக்ஷணோ மாயோபாதிகோ வைகுண்ட நாராயண-
என்று சுத்த ஸத்வமாயும், பஞ்ச பிரளயானந்தரம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனின் வாஸஸ்தானமாயும், நிரதிசையானந்தமயமானதும், மாயையாதி சகல விகார ரஹிதமான தாயும், நித்யமானதாயும் விளங்கியது பரமபதம் -என்றும்
அதர்வசிகை
“யந்த தேவாந்த முநயோந ஸாஹந்ந ஸ ஸங்ரஹ
ஜாநந்தி பரமே ஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்”
என்று தெய்வ சபைபில் தானே பிரம்மா, யதார்த்த பிரசங்கிதமாக தேவர்களாலும், ஜனகாதி முனீஸ்வரர்களாலும், பிரம்மாவாகிய என்னாலும், சம்ஹார காத்தர்வாகிய சங்கரனாலும், பரமேஸ்வரனாய் விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனது நிரதிசையானந்த மயமான பரம பதத்தை அறிய முடியாது என்றும்,
யஜுஸ் மண்டல ப்ரம்ம உபநிஷத்
“ தந் மனோ விலயம்யாதி தத் விஷ்ணு: பரமம் பதம் ”
என்று மஹா மேருவை ஆதாரமாய் கொண்ட கைலையாதி சத்யலோகம் முதலான லோகங்களும் பிரம்ம, சிவ , இந்தராதி சகல தேவர்களும், கற்ப க்ஷயத்தில் ஸ்ரீமந் நாராயணனால் ஹரிக்கப் பட்டு பின்னர் பரம பத நிர்வாஹநாய் விளங்குகிறானென்றும்
“பேதாபாவாத்யேத தேவ பரமதத்வம் ” என்று சச்சிதாநந்த மயமானதும்,நிர்விகாரமானதும், ஸ்வயம் பிரகாசமானதாயுமுள்ள, பரம பதமே பரமாத்மாவின் வாஸஸ்தானமான தென்றும், அப் பதமே மோக்ஷ ப்ரதானமென்றும் மிச் சுருதி ஆணை யிட்டுரைத்து விட்டது.

ஸ்ரீவிஷ்ணுபுராணம் 6-ம் அம்சம்.
“தத் ப்ராஹ்ம தத் பரந்தாம தத்யேயம் மோக்ஷகாங்ஷிபி
ஸ்ருதி வாக்யோதிதம் ஸூக்ஷ்மம் தத் விஷ்ணு: பரமம் பதம்”-
என்று யாதொரு பர ப்ரஹ்மம் இச் சராசர ப்ரபஞ்சங்களனைதையும் உண்டுமிழ்ந்து அளந்தாண்டதுமான வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து நடத்த வல்லதோ அப் பரம் பொருளே பரந்தாமனென்று ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசங்களும் ப்ரதிபாதிக்கின்றதோ அப் பொருளின் நிர்வாஹ ஸ்தானமே மோக்ஷ ஸ்தான பரமபதம் என கண்டிதமாயுரைத்து விட்டபடியால் ஸ்ரீமந் நாராயணனே பரம பத நிர்வாஹனென குறை யில்லையிறே ஆகையாலே யிறே ஜகஜ் ஜன்மாதி காரண பூதனும், சர்வாந்தர்யாமியும்,
த்ரிகுண அதீ தமானவனும், சர்வவேத ப்ரதிபாத்யனும், ஜீவோத்பதியும், சச்சிதாநந்தமயமான பரம பத நிர்வாஹனுமான ஸ்ரீமந் நாராயணனே சகல நிர்வாஹனென்றும், ப்ரஹ்ம சப்த பரதிபாத்யனென்றும், பரமேஸ்வரனென்றும், ஸர்வ ஸேஷி என்றும், வேத வேதாந்தாதிகள் பன்முறை முறையிடுகின்றன.

நீலகண்ட சிவாச்சாரியரும், சிற் சில சாஸ்த்ர பயிர்ச்சி யுள்ளோராயினும், தாம் ஓர் பாஷ்யம் செய்ய வல்லோராயினும்,வேத யதார்த்தம் விளங்காததினாலோ, அர்த்த மறியாமையினாலோ, சைவ அபிமானத்தினாலோ வேத தாத்பர்யங்களுக்கு சிவ பரமாய் வியாக்யானம் செய்யப் புகுந்த காலத்தும் மஹோபநிஷதாதி ஸ்ருதிகள் இடங்கொடாமையால் கேவல நிமித்த காரணம் சிவனென்கிற சைவ வாதத்துக்கு நேர் விருத்தமாய் ஜகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ப்ரஹ்மமென்று தமது நீலகண்ட பாஷ்யத்தில் சொல்லி யிருக்கிராறாயினும் இவரது பாஷ்யத்தை ஸ்ருதியாதி ஸாஸ்த்ரங்களும், யதார்த்தவாதிகளும், பாஷ்யகாரரென சரஸ்வதியால் பட்டப் பெயர் தரித்து மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த சத்வ குண விசிஷ்டாத்வைத மதத்தை நிலைநாட்டிய ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், இன்னும் இதர பாஷ்யகாரரும் சம்மதியாராகையால் இவரது பாஷ்யம் கண்டிக்கத் தக்கதே.

ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனாவது.
அதர்வண முண்டகோபநிஷத்,
“ யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்யஸ்ய ஜ்ஞாநமயம் தப :
தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நம் சஜாயதே”?-
என்று யாதொரு பரமேஸ்வரன் அநந்தங்கோடி பிரம்மாண்டங்களையும் தனது வக்ஷஸ்தலத்தில் லயிக்க வல்லவனாயும், த்ரிகுண பிரதானியாயும், சர்வஞ்யத்வாதி கல்யாண குண பரிபூரணனாயுமுள்ளான் யாவனோ அவனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், “யதேதத் பரமம் பரமஹ : வேத வேதேஷு பக்ஷயதே ஸ தேவ: புண்டரீ காக்ஷ: ஸ்வயம் நாராயண ப்ரபு : என்று த்விதீயமான பர ப்ரஹ்மமாயும், சர்வ வேத பாதிபாத்யனாயும்,பர தேவதையாயும், செந் தாமரை புஷ்பமொத்த நேத்ரங்களை யுடையவனும், ப்ரபுவுமான ஸ்ரீமந் நாராயணனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், சாம வேத மஹோபநிஷத். “நாராயண பர ப்ரஹ்மத்வம் நாராயண பர:”என்று நாராயண சப்த வாச்சியனான ஸ்ரீ மந் நாராயணனே ப்ரஹ்ம
சப்த ப்ரதிபாத்யனென ஸ்ருதிகளும் ஊர்ஜிதப் படுத்தி விட்டன.

திருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
” நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர : நாராயண பரோ ஜோதி ஆத்மா நாராயண பர
:”என்று ஸ்ரீமந் நாராயணனே பர ப்ரஹ்மமென்றும், பரமாத்மா வென்றும், அந் நாராயணனே பரஞ்ஜோதி மய ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென நிலை நாட்டப்பட்டது.
ஷ உபநிஷத்
“ திசச்ச நாராயண; காலச்ச நாராயண :
கர்மாலகிலஞ்ச நாராயண : காரணாத்மகம் ஸர்வம் கார்யாத்மகம் ஸகலம் நாராயண : நாராயண பர ப்ரஹ்ம நாராயண நமோஸ்துதே
” என்று சர்வ அண்டங்களும், அதிலுள்ள சராசர சமூஹங்ககளும், ஸர்வ திசைகளும், த்ரிகாலங்களும், நாராயணன், வேதாத்யயன கருமங்களும் தத்தத் பலன்களும், தக் கருமதேவதைகளும், தத் கருமத்தை செய்பவனும் நாராயணன் சகல காரணங்களும், சகல காரியங்களும் நாராயணனே அப் பர ப்ரஹ்ம் ஸ்வரூபனும், பரமாத்மாவுமான ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரிக்கின்றேனென்று ஸ்ருதி உத்கோஷிக்கின்றது.
” அதகஸ்மாதுச்சீதே யேகோ நாராயண பரப்ரஹ்ம்?” என்று ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனான நாராயணனுக்கு சகல ப்ரம்மாண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாகந்த முள்ள தேவ,
மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி பூத பௌதிக சராசர சமூகங்களும் த்ரணீகரிக்குமாறு வரம்பிடப் போகாத ஒத்தார் மிக்காரில்லை யெனக் கண்டிதமா யுறைத்து விட்டது.
ந நாராயண சமோ நாந்ய ஸர்வ லோகேஷ வித்யதே“. என்று போதாயனரும் தமது ஸூத்ரத்தில் அவ்வாறே அண்டங்களும், சர்வ தேவர்களிலும் ஸ்ரீமந் நாராயணனுக்கு
மேரு த்ரணாதியென வரம்பிடப் போகாத அளவிறந்த வேற்றத்தை யுடைய பர ப்ரஹ்மமென்று அறுதியிட்டனர்.-இத்யாதி ப்ரஹ்ம சப்த்த ப்ரதிபாத்யனும்,ஜீவோத்பதி
யும், ஜகஜன்மாதி கரரண பூதனும், சச்சிதாநந்த மய பரம்பத நிர்வாஹனுமாய் நின்றவன் ஸ்ரீமந் தாராயணனென்று வேத வேதாந்தாதிகள் ஏக கண்டமாய் ஊர்ஜிதப்படுத்தி விட்டன.

பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனேயாய் ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகலதேவ மநுஷ்யாதி வர்க்கங்களனைத்தும் ஜீவாத்மாக்களேயாயினும், சிவபிரான் பக்த சிரேஷ்டனெனல்
சுக்ல யஜுர் ப்ரஹதாரண்யோபநிஷத்
” யச்ரமாத் தப ஸோபிஜாதோ ஸித்யப்ரவித் “என்று ருதான் செய்ததவங்கள் செய்து சிவனாயினான் என்றும்
க்ருஷ்ணோபநிஷத் ” ருத்ரேபக்தேப்ரஹ்மணி ” என்று ருத்ரனான சிவன் ப்ரஹ்ம ஞ்ஞானியான மஹா பக்தனென இச்சருதி கூறுகையாலும்,
க்ருஷ்ண யஜுஸ் ஸ்வேதாஸ்வத உபநிஷத்-3-ம் அத்தியாயம் 4-வது மந்த்ரம்
“விஸ்வாதி கோருத்ரோடமஹருஷி : எ
ன்று சிவபிரான் இப்பிரபஞ்சத்தில் சிரேஷ்டமான தபசியாய் விளங்குகிறானென்றும்.
ருத்ரகீதை அகஸ்தியசம்ஹிதை, பிரம்ம புராணம் ” சாம்பேய புஷ்ப ஸஹஸ்ரை: ஆநர்ச்ச சங்கரோ ஹரிம் ” என்று சிவபிரானது பக்தியின் மிகுதியாலே ஆயிரம் சண்பசக புஷ்பங்களினால் பரமாத்மாவான ஹரியை அர்சித்து பக்திப் பெருக்கைப் பிரசித்தப்படுத்தினா ரென்றும்.

பாத்மோத்ரகாண்டம்
” கைலாஸ சிகரோம்யே விஷ்ணுமாராத் தயசங்கர : உபவிஷ்டத்ததோ போக்தும் பார்வதீம் சங்கரோப்ரவித் “
” என்று கைலாய சிகரத்தை ஸ்தானமாய்க் கொண்டு இந்நிக்ருஷ்டமான சம்ஹாரத் தொழிலிநின்றும் விடுபட்டு பரப்ரஹ்ம சாயுஜ்யமான பரமபதத்திற்சென்று பரமாத்மா வைபவாதந்தத்தை அனுபவிக்க வேண்டியே நான் ஸ்ரீ மாஹாவிஷ்ணுவை இடைவிடாது தியாநிக்கிறேனென்று தனது பத்நியும், பர்வத ராஜனின் புத்ரியுமான பார்வதியுடனே சிவபிரான் பரமாத்மாவினிடம் தனக்குள்ள அந்தரங்க பக்தியை வெளி யிட்டன ரென்றும்.

இத்யாதி ச பாகவதத்தில் ஸ்ரீ வேதவ்யாஸ பகவான்
“ஹஸ்தேக்ஷ்மாலா ஹ்ருதய ராமதத்வம் ஜி
ஹ்வாக்ரபாகேவரராம மந்த்ரம் ஸமஸ்த்தகே கேசவ பாத தீர்த்தம் ஸ்வம் மஹாபாகவதம் ஸ்மராமி ”
-என்று சிவனது ஹ்ருதயத்தில் ஸ்ரீ ராமபிரானே ஜகத்காரண வஸ்து என்ற தியானமும்,நாவில் அம் மஹாமந்தரமே உச்சரிப்பும், கரத்தில் அம்மந்தர ப்ரதானனென விளக்கப்படும் ஜப மாலிகையும்,அப்பரமாத்மாவின் ஸ்ரீபாத தீர்த்தத்தா லலங்கிருதமான
சிரசும், அப்புருஷோத்தமனுக்கே தான் அந்தரங்க பக்தனென வெளிப்படையாய் விளக்கிக் காட்டவல்ல ஜடையாதி சின்னங்களாகையால் சிவன் மஹா பக்தனே என்று நிச்சயிக்கப்பட்டது.ஸ்வாக்ருதி: பஸ்மவிகிதகாத்ரேசர்மம்பரம். பிரம்ம கபால மாலாத்ருதாக்ஷமாலாபி ருகாகநஸ்த ஜடாதராதி வசனாகிமேயம்-என்று சிவபிரானது பக்தியின் நிலைமை, திரேகமெல்லாம் பஸ்மத்தாலலங்கிருதமாயும், பிரம்ம ஹத்தியினாலே தொத்திய மண்டையோடுடைய அஸ்தமும்,ஜபமாலிகையாதி ஜடை முடி தரித்து சிரசும், புலித்தோலுடைய ஸ்மஷான நிரவாணி ஸ்வரூபமமையப்
பெற்றதுமான பக்தியின் பெருக்கை நிரூபிக்க வல்லவனென்றும்.இத்யாதி சகல ப்ரமாணங்களாலும் சிவன் பக்த சிரேஷ்டனென்றே நிரூபித்து விட்டன.

இதற்கிணங்கியே வேதபுருஷனாய் விளங்கிய திவ்யகவி அழகிய மணவாளர் அருளிச் செய்த. அஷ்ட பிரபந்தத்தில்
புகலிராமனடி கொள் பாதுகையகலு முக்கண்ணன் காமதே
திங்கள்சூழ்திருச்சித்ர கூடமேவிய யெங்கள் கோவிந்தராஜர்க்கு
தினமுமே கூத்தாடியானவன் திருச்சிற்றம்பல வணனே
” என்றும்,
கானேந்து தாமரை வாவி யுளானை கராவினயர்ந்
தூனேந்து மூல மென்றோதிய நாட் சென்றுதவுகையால்
தேனேந்து சோலை யரங்கனல்லாற் றெய்வமில்லை யென்றே
மானேந்து கையன் மழுவேந்தினானிந்த மாநிலத்தே”
என்றும்,
சர்வ சாஸ்திர நிபுணரும் வேத யதார்த்தம் நன்குணர வல்லவருமான ஸ்ரீமாந் ராமாநுஜ நாவலரும் தமது வைராக்ய சூர்யோதய மென்னும் சாத்விக க்ரந்தத்தில், பதித பாவனனான அப்பராமாத்மாவினுடைய ஸதா ஸ்ரீபாத தீர்த்த மாலாலங்காரண சேகரராம்.
கரத்திலுறுஞ் சபவடத்தை யகற்றேனென்னைக் காணு மகக்கண்ண தனைக் களையே லென்றும் சிறத்தை யுறச் சீராம நமவோ மென்னுஞ் செந்நாவை யெந்நாளுந் தெரிந்து நீக்கேல் ”என்கிறபடியே ஸ்ரீராம ராம ராமா வென்று வாய் நிறைந்து குளிரடைய, உடலம் புளகிக்க, ஜபமாலிகையோடு அவனது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஸ்ரீராமாந்தத் நாண்டவஞ் செய்து ,வர்த்தித்து வருதலில் சாம்பசிவ நடேச மஹாப் பிரபுவைப் போலே யிருக்கவேண்டும் பக்தியின் மிகுதியென்றும், சிவனது பக்தியும் பரமாத்மாவின் பிரசன்னமும்-பாத்ம புராணம் 37-வது அத்தியாயம்.’அச்யுதாநந்த கோவிந்தம் மந்த்ர மானுஷ்டுபம் சுபம் ஒந் நமஸ் ஸம்பு டீருத்வா ஜபந் விஷ ரோஹர் : என்று திருப்பாற் கடைந்ததில் நின்றும் பெருகிய விஷத்தைப்பார்த்து திடுக்கிட்டு பயந்து தன்னால் நிவர்த்திக்க சக்தி யற்ற காலத்து (அச்சுதாநந்த கோவிந்த) வென்ற திருநாமத்தை பக்தி புரஸ்சரமாகத் த்யாநிக்க,அபயஸ்தமானதும் அநந்யாரஹமானதுமான தத் பக்திக்கு பரமாத்மா பிரசன்னராகி ருக்வேதம் 8-ம் அத்தியாயம் 23- ம் வர்க்கம் ” கேச்யாக்ம் கேசி விஷம் கேசீ பிபர்த்தி ரோதஸீ கெசி விஷஸ்ய பாத்ரேன யத் ருத்ரேணா பிபத்ஸஹ” என்று ருத்ரனாகிய அச் சிவ பிரானின் பீதி யடங்கத் தான் அவ் விஷத்தைப் பக்ஷித்து உம்மையும் ரக்ஷிக்கிறேன் பயப்படாதே யென்று கேசியான ஸ்ரீமந்நாராயணன் பீதியடைந்த பிள்ளைக்கு,எவ் வஸ்துவால் அப்பிள்ளைக்குப் பீதி ஏற்பட்டதோ அவ் வஸ்துவைக் கொண்டே அப்பிள்ளையின் பீதியைப் போக்குமாப் போலே சிவபிரானை பீதியடையச் செய்த அவ்விஷத்தை அச்சிவனின் கரத்தையே அவ் விஷத்திற்குப் பாத்திரமாகக் கொண்டு விஷத்தைத் தான் பானம் செய்து ரக்ஷித்தனரென்றும்,

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அசம் 33 ம் அத்தியாயம்
‘ க்ருஷ்ண க்ருஷ்ண ஜகநாத ஜாநேவாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாத்ம நாதிநித நம் ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத்மிகா லீலேயம் ஸர்வ பூதஸ்ய தவ சேஷ்டோப லக்ஷண
–என்று சிவபிரான் தன்னை சாணமடைந்த வாணாஸூரனை தலை
மயிர் பூ வாடாமல் ரக்ஷிக்கிறேனென்று ப்ரதிஞ்ஞை பண்ணித் தன்னை தொழுத கைகளைத் தன் முன்னே கள்ளிக் காட்டைச் சீத்தாற்போல் ஸ்ரீகண்ணபிரான் சீக்கக் கண்டு உயிரோடிருந்தால் உப்பு மாறியேனும் பிழைக்கலா மென்றெண்ணி நடுங்கி, குடும்பத்தோடு நெற்றிக் கண்ணை புதைத்துக் கொண்டு ஸர்வ சரண்யனான கிருஷ்ணனை அஞ்சவியஸ்தனாய், ஒ க்ருஷ்ண பரமாத்மா, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஆதியந்தமில்லாதவனே,லோக ரக்ஷணார்த்தம் அவதரித்தவா, இவ் வமயம் தேவரீர் மநுஷ்ய சரீரத்தை அவலம்பித்ததை அடியேனறியேன் இச் சமயம் அடியேனை ரக்ஷித்தாண்டருள வேணுமென்று பிரார்தித்து சரணமடைந்த அப்பக்திக்கு இரங்கி ரக்ஷித்தனரென்றும்,

பாத்மபுராணம் உத்ரபாகம் மஹாமஹாத்மியம் 20-ம் அத்யாயம்.
“ ப்ரக்ருதம் ச்ருணு ராஜேந்த்ர கபால பாணி
நாதத் லோகேக பாவீ பிக்ஷார்த் தீ பக்ஷமடதி சங்கா ?”-
என்று சிவன் பிரம்மஹத்தியினால் தொத்திய மண்டையோட்டுடன் லஜ்ஜை யுற்றவாைய் ஷேத்திரங்கள் தோரும் பிக்ஷை
யாசிக்கப்பட்டும், தமது பிரம்ம ஹத்தியை நிவர்தித்துக்கொள்ள யதொரு உபாயமும் காணப் பெறாமல் வருந்தினவனாய் ராமேஸ்வரமே தமக்குப் பிரதான க்ஷேத்ரமெனக் கருதி பாத்மோத்திரத்தில்,ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வராநநே-தனது தாரக மந்தரமாயுமுள்ள, ஸ்ரீராம மஹா மந்தராதி ஜப மாலிகையுடன் ஸ்ரீராமாநந்தத் தாண்டவஞ்செய்து வர்த்தித்து வரும் தத் பக்தியை,யஜுர் ராமோபநிஷத் 22-ம் ஸ்காந்தம் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதேத ஸரதாத்மஜே”-என்று பரமாத்மாவும், வேத ப்ரதிபாத்ய பரமபுருஷன் சக்ரவர்த்தித் திருமகனாய் வவதரித்தவனுமான ஸ்ரீ புருஷோத்தமன்-ராமோபநிஷத் பக்த்ய மந்த்ரேணா நேநமாம் ஸிவ பிரஹ்மஹத்தி யாதி பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூஸ:” என்று சிவபிரானினது அகோசரமான பக்திக்குப் பிரசன்னராக சந்தோஷித்து இஸ் க்ஷேத்திரத்தில் ராம தாரக மந்திரங்களினாலே உண்மையான பக்தியுடன் என்னை தியானித்தீராகையால் யாம் கருதார்த்தாரானோம். உமது பிரம்மஹத்தியாதி பாபங்களில் நின்றும் விடுவிக்கிறோம். க்ரம க்ரமாந்திரத்தில் என்னுடைய சாயுஷ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறோம். ஓய் சிவனே பயப்படாதே யென்று அபயஸ்தம் கொடுத்து பிரம்மஹத்தியைப் போக்கிய க்ஷேத்திரமே ராமேஸ்வரமென்றும்

பிரயாஹைமஹாத்மியம் தத்ர நாராயண : ஸ்ரீமாந் மயாபிக்ஷாம் பராய ஸித விஷ்ணு ப்ரஸாதாத் ஸு ச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ர தாஸ்புடி தம் பஹுதாயாதம் ஸவப்ந லப்தம் தநம் யதா “என்று பர்வதராஜன் புத்ரியும், எனது பத்நியுமான பார்வதியே என்னுடைய பிரம்ம ஹத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னால் ஸ்ரீமந் நாராயணனிடம் பிக்ஷை யாசிக்கப்பட்டு அப்பரமாத்மாவின் பிரசாதத்தினால் யென் கையிலொட்டிய பிரம்ம கபாலமானது ஆயிரம் சுக்கலாய் தூளியாய் ஸ்வப்னத்தில் கண்ட தனமானது விழித்துப் பார்க்குமளவில் காணாதாப்போல் பறந்து போயிற்றென்று உமாதேவிக்கு யதார்த்தத்தை வெளியிட்டதுமான க்ஷேத்திரமே ராமேஸ்வரமாய் நிற்க,அதைச் சார்ந்த பாம்பன் கிராமத்தில் வசிக்கும் குமரகுரு தாஸனென்பானால் வரையப்பட்டுள்ள சைவ சமய சரபமென்னும் த்வேஷ்ப் பண்டாரச்சுவடியில்,தனது பூரண பாண்டித்வத்தைக் காட்டும் பொருட்டோ,தான் சங்கரனுக்கே அறத்தீர்ந்த பக்தனென பிறர் மெச்சும் பொருட்டோ, அல்லது சைவ எல்லப்பநாவலன், துறைமங்கலம் சிவப்பிரகாசன், கச்சியப்ப சிவாச்சாரி முதலானவர்களைப் போல் தாமும் பண்டார சமயாச்சாரியாக வேணுமென்னும் ஆவலுள்ளவனும், தன்னைத்தானே புகழ்ந்தவனுமாய்த் தான் சிவ நிஷ்டையிலிருந்ததாயும், அந்நிடை முடிந்தவுடன் பசி,தாகாதி, சோகங்களினால் இந்திர்ய மாருதலினாலோ,பித்த அபிவிரத்தியினால் திகைத்த நினைவினாலோ, தாமஸ குணனான சிவ நிஷ்டையினாலேற்பட்ட தாமஸத்தினாலோ, அல்லது அறிவின்மையினாலோ, அப் பண்டாரத் தூஷணச் சுவடியை வரைந்தன னென்றும், தாம் 108 உபநிஷத்துக்களையும், 18 ஸ்ம்ருதி,18 புராணங்களையும் நன்குணர்ந்தவனென்றும், இவ்வாறு மேல் குறித்த யாவும் கரதலமலமாக நன் குணர்ந்தோனாகையால்,அவைகளிலுள்ள அசாரங்களைத் தள்ளி சாரங்களே தாமாகக் கருதி உபநிஷத்துக்களில் 109 ஆவதாகவும் ஸ்ம்ருதிகளில் 19, ஆவதாகவும், புராணங்களில் 19, ஆவதாகவும், தனது சைவ சமய சரபமென்னும் தூஷணப் பண்டாரச்சுவடியை கல்பித்துத் தாமும், தம்மைச் சார்ந்தவர்களும், மற்ற யாவரும் மதிக்கத் தக்கதென அபிப்பிராயமேற்படுவதாலும், தமதுச் சுவடியில் ஆதியந்தமென்னும் புத்தக ரூப கோட்பாடில்லாமையாலும், வீண் நிந்தகமே புத்தக ரூபமாயிருப்பதாலும், புரட்டுகளும், அனர்த்தங்களும், அஹங்காரங்களுமான க்ரூர வசனங்களால் நிந்தித்துத் திரியும் த்ரோஹியாயிருப்பதாலும், வேத வேதாந்தாதி சகல ப்ரமாணங்களாலும், த்வேத யதார்த்தங்களாலும், அகில பாஷ்யங்களுக்கிணங்கியும், சகல ஜன சம்மதமாயும், இவனதுச் சுவடியின், புரட்டுகளை வெளிப்படையாய் கண்டிக்கவும்,அனர்த்தங்களை நிராகரித்து யதார்த்தங்களை ஸ்தாபிக்கவும்,அஹங்கார க்ரூர வசனங்களை வெட்டி யடியோடொழிக்கவும்,சகல வேத வேதாந்த்தப் பிரதிபாத்தியமான மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த ஸத்வ குண விசிஷ்டாத்வைத மதமே சத்யமென நிலை நாட்டவுமே யாம் முன் வந்தோம்.

யதார்த்தமாய் வேத சாஸ்திரங்களால் முறையிடப்படும் ஸ்ருஷ்டிக் கிரமம்.
ஸாம வேதம் சாந்தோக்ய உபநிஷத் 6-வது ப்ரபாடகம்-2-வது காண்டம் 3-வது வாக்யம்.
“ததைக்ஷத பஹுயாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜா” என்று பரமபத நிர்வானான ஸ்ரீமந்நாராயணன் பரமபதத்தை விட்டு மூலப்ரக்ருதியை யடைந்து அநந்தங்கோடி ப்ரம்மாண் டங்களையும் சங்கல்ப்பித்தார்,-ருக்வேதம் நாராயண உபநிஷத்-ஹரி ஓம் ஹத புருஷோஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ்ருஜே யேதி நாராயணாத் ப்ராணோஜாயதே, மநஸ் ஸர்வேந்திரியானிச கம் வாயுர் ஜ்யோதி ராப ப்ரதி விச்வஸ்ய தாரிணி நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நராயணாத் ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோஜாயதே,நாராயணாத் வாதசாதித்ய ருத்ராவஸவஸ் ஸர்வாணி சந்தாம்பி நாராயணாத் தேவாஸ் முத்பத்யந்தே, நாராயணாத் ப்ரவர்த்தந்தே நாராயணாத் பரலீயந்தே.”என்று ஆதியந்தகிதனான ஸ்ரீமந்நாராயணனது சங்கல்ப மாத்திரத்திலேயே சகல ஜீவாத்ம கோடிகளும் ஸ்ருஷ்டியாயி அவனிடத்திலிருந்தே மனஸ் ஸர்வேந்திர்யங்களும், ஆகாசம் தொடக்க மான ப்ருதிவி வரைக்குமுள்ள அநந்தங்கோடி ப்ரமமாண்டங்களும் பிரம்ம, ருத்ர, இந்த்ர, த்வாதசாதித்ய,ஏகாதச ருத்ர, அஷ்ட வசுக்களுமான தேவர்களும், சகலமும் உண்டாயினவென்று.., அவனாலேயே அவையாவும் ஜீவித்திருக்கின்றன வென்றும், பின்னர் அவனாலேயே யாவும் ஹரிக்கப்படுகின்றன வென்றும் ஸ்ருதிகள் முறை யிடுகையாலும்,

மஹா நாராயணோபநிஷத்.
ஹத புருஷோஹவை நாராயணஸ் ஸோகாமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி
ஆஸ்ருஜன் நாராயணாத் ப்ரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே,
நாராயணா திந்தரோ ஜாயதே,நாராயணா த்வாதஸாதித்யா ருத்ர வஸவ:ருஷய: ப்ரஜாதயச்ச பூர்வே தேவாஸ் ஸமுத்பத்யந்தே)
என்று பரமபுருஷனான ஸ்ரீமந் நாராயணனிடத்திருந்தே ப்ரம்மன், சிவன் இந்த்ரன், த்வாதசாதித்யர் ஏகாதச ருத்ரர்கள் அஷ்ட வசுக்கள் ஸப்த ருஷிகள், நவ ப்ராஜாபதிகள் முதலானோர் உண்டாயின ரென்றும்

யஜுர்வேதம்
” யதோர்ண நாபீஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா ஒஷதயஷ்
ஸம் பவந்தி யோசௌச யதோ விஷ்ணுஸ் ஸத்வ குண ப்ரணீதோபவத் தஸ்ய நரபேர ஜோத்மா ஸ்வயம்பூ : ததாதஸ் யப்ருவோந்த ராலாத் தமோ ருத்ர
: “என்று ஊர்நாபி என்கிற சிலந்திப் பூச்சியானது எவ்வளவு காலத்தில் நூலை ஸ்ருஷ்டித்து பின்பு கிரஹிக்கின்றதோ அவ்வாறே பரமாத்மா பருதிவ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து,
ஸ்ருஷ்டித் தன்றே கிரஹிக்கின்றானென்றும் அன்றே என்கையாலே, அவனது நித்யத்தைச் சொன்னபடியாலும் சுத்த சத்வ குணனென்றும், அவன் தன்னை யொழிந்த சர்வராலும் தொழப் படுகிறானென்றும் அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து ராஜஸ குணனான ப்ரம்மா பிறந்தானென்றும், அப்பிரம்மாவின் நெற்றிப் பிரதேசத்திலிருந்து தாமஸ குணனான சிவன் பிறந்தானென்றும், கூறுகையாலும்,

அதர்வண முண்டகோபநிஷத்
“யதோர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா வோஷதயஸ் ஸம்பவந்தி யதாஸ்த புருஷாத்கேஸ லோமாநி ததா அஷராத் ஸம்பவதீஹவிஸ்வம் “
-என்று சிலந்திப் பூச்சியானது நூலை ஸ்ருஷ்டிக்கவும், பின்பு ஹரிக்கவுமான ஜாலத்தை செய்ய வல்லதோ, அவ்வாறே விராட் புருஷனான நாராயணன் அனந்தங்கோடி பிரம்மாண்டமும்,பிரம்ம, சிவ, இந்த்ராதி சகல சேதனாசேதனங்களனைத்தையும் ஸ்ருஷ்டிக்கவும், ரக்ஷிக்கவும், பின்னர் ஹரிப்பதுமான அசாதாரண க்ருத்தியங்களைச் செய்ய வல்லோனென்றும்,

யஜுர்வேதம்.–ஸப்ரஜாபதிரேக : புஷ்கர பன்னே ஸமபவத் லலாடாத் க்ரோதஜா ருத்ர: தரயக்ஷ: கண்ட பரசு: வரஜ்ஜநத் ஸம்வத்ஸரோ ஜாயத இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர: பர்ஜந்யோயம்: ப்ரம்ஹண புத்ரா யஜ்யேஷ்டாய ச்ரேட்டாய புத்ராய ருத்ராய–என்று பிரம்மா ஒருவனே பரமாத்மாவின் நாபிக் கமலத்திலிருந்து உண்டாயினனென்றும், மற்ற ருத்ர, இந்திராதி தேவர்கள் அனைத்தும் ப்ரம்மனால் படைக்கப்பட்டவர்களே யென்றும்,ஆயினும் சிவனே ப்ரம்மாவின் ஸ்ரேஷ்டப் புத்திரனென்று இச் சுருதி கூறுகையாலும்,

யஜுர்வேதத்தில் 24 மந்திரங்கொண்ட தகர வித்தை.-“தஸ்மாத் விராட ஜாயதா விராஜோ ஹதிபுருஷ:ஸஜாதோ ஹத்யரிச்சதா யத்ஸ்யா பூமி மதோபுர.“-என்று விராட் புருஷனான அநிருத்த நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து ஸ்வயம் பிரகாசமானதாயும், ஸ்வர்ண மயமானதாயுமுள்ள ப்ரம்மாண்ட முண்டாகி அதில் சதுர்முகப் பிரம்மா உண்டாயினர் பரம்மாண்டத்தை சரீரமா யுடைய அநிருத்த நாராயணனுடைய நாபிக் கமலத்திலுண்டான சதுர்முகப் பிரம்மா பெரிய தேஹத்தை யுடையவராய் ஸ்ருஷ்டியாதி க்ரமங்களில்
ப்ரவேசித்தாரென்றும்,
ஸாமவேதம் மஹோபநிஷத்-* ருத்ரச்ச ஸர்வாவா பூத ஜாதய: நாசமேவா
நுதா வந்திலி ஸலாநீவ பாடபம்.”
என்று வேத ப்ரதிபாத்யனான நாராயணன், ப்ரம்ம, ருத், இந்ராதி தேவர்களையும், பூதங்களையும் ஸ்ருஷ்டித்தனரென்றும்,
மநு ஸ்ம்ருதி.-” ஸோபித்யாய சரீராத் ஸ்வத்ஸ்ஸ்ரு ஸுர் விவிதா ப்ரஜ:-என்று பகவத் சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியிலிருந்து வேறு பட்ட ஆத்மாக்களின் தத்தத் காமானுகுண சரீரங்களை சங்கல்ப்பித்தவராய் ஜலத்தைத்
தோற்றுவித்து அதில் அண்டத்தை நிர்மித்து தன் நாபிக் கமலத்தில் நின்றும் சதுர்முகனை ஸ்ருஷ்டித்து அப் பிரம்மனால் அவ்வாத்மாக்களை ஸ்ருஷ்டிக்க நியமித்தனரென்றும், மநுஸ் மருதியிலும் ஸ்பஷ்டமாய் விளக்கப்பட்டிருக்கையாலும், இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல ப்ரமாணங்களாலும் ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே பிரம்ம, சிவாதி தேவர்களும், அனந்தமான பிரம்மாண்டங்களும் உண்டாயினவென்று நிர்ணயித்துவிட்டன. –

பஞ்சப்ரளய கால சம்ஹார க்ரமம்.-ஸாம வேதம் மஹோபநிஷத்-” ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந : ந ஹிமே ப்ருதிவ்யாந நக்ஷத்ராணி “என்று பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான அகிலாண்டங்களும்,-ஒவ்வோரண்டங்களிலுமுள்ள பிரம்ம, சிவன் முதலான தேவர்களும் பஞ்ச ப்ரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக சம்ஹரிக்கப்பட்டு பின்பு நாராயணனொருவனே யிருக்கின்றானென்றும்,
ஆங்கீரஸ உபநிஷத்.
” ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரம்மா ந சங்கர: ஸமுநிர்பூத்வாஸ்
மசிந்தயத் தத ஏதேத்யா நாஜ்ஜாயந்தே விஸ்வோ ஹிரண்ய கர்ப்போக்நி, யம், வருண,ருத்ர, இந்தர
;-என்று பிரம்ம, ருத்ர, ஈசான்ய பருதிவ்யாதிப் பதார்த்தங்களனைத்தும், கற்ப ஷயத்திலழிந்து, நாராயணனொருவனே முடிவிலிருக்கின்றானென்றும், பின்பு அழிந்த யாவும் அந் நாராயணனிடத் திலிருந்தே உண்டாகின்றன என்றும் இஸ் ஸ்ருதி கூறுகையாலும்,
ஷை உபநிஷத்.” யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரம் சோபேபவத ஓதநம்“-என்று நாராயணனுக்கு பிரளய காலத்தில், ப்ரம்மனும், குரோதசநான ருத்ரனும் இரண்டு கவள அன்ன ஸ்தானமாகிறார்களென்றும்

ஷை உபநிஷத்-“ ம்ருதயுர்ஸ்யோ ஸேசநம்”என்று பரமாத்மாவான நாராயணனுக்கு, கற்பக்ஷயத்தில் அநதங்கோடி ப்ரம்மாண்டங்களும், அதிலடங்கிய தேவ, மநுஷ்ய,திரியக் ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும் அன்னஸ்தானமும் பிரம்ம, ருத்ரர், ஊர்க்காய் ஸ்தானமுமா கின்றனவென்றும்
நாராயணோபநிஷத்-“நாராயணாத் ப்ரலீயந்தே”என்கையாலே நாராயணனிடத்திலேயே, சகல அண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள யாவும் லயிக்கின்றன
வென்றும்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1-ம் அம்சம் 2-ம் அத்தியாயத்தில் ஸ்ரீமந் நாராயணன் காலாக்கினி ருத்ரனைப் போலே பிரளய காலத்தில் மேக மண்டலத்தை பெருக்காற்றடித்தது போலச் சம்ஹாரம் செய்கிறானென்றும்.சிவ ரகசியத்தில் 3-ம் அம்சம் 1-வது காண்டம் 12-வது சர்க்கத்தில் ஸ்ரீமந் நாராயணன் ப்ரளய காலத்தில் ஜலத்தைப் பெருகும்படிச் செய்து காலாக்கினி ருத்ரனைப்போலே சர்வத்தையும் சம்ஹாரம் செய்கிறானென்றும்.
இத்யாதி வேத வேதாந்தங்களிலுள்ள ஸ்ருதி ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்களாலும், சகலாண்டங்களும், பிரம்ம ருத்ராதிதேவர்களும், ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே உண்டாயின வென்றும், பின்பு அவனாலேயே ஹரிக்கப்படுகின்றன வென்றும், நிச்சயிக்கப்பட்டிருக்கிறதேஅதர்வசிகோபநிஷத்.-” ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேஸ்வரச் சம்புராகாச மத்யே”என்று தியானிக்கப் படும் தியேயனும் ஸர்வேஸ்வரனும் சம்பு வும்,சர்வாந்தர்யாமியும் ஆகாச மத்தியில் வியாபித்துள்ளோனுமானவன் ஸ்ரீமந் நாராயணன் என்பதே இச் சுருதியின் கருத்து.-மஹா நாராயணோபநிஷத்.-* ஸஹஸ்ர ஸீரிஷம் தேவம் விஸ்வாக்ஷம் விஸ்வ சம்புவும் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரம ப்ரபும் விஸ்வதஹ பரமாம் நித்யம் விஸ்வம் நாராயணோ ஹரி:”,
மைத்திராயண்ணியுபநிஷத், 7-வது பிரபாடகம் “அவித்யா மஸ் ரஜத்யா சிவ மசிவ மித்யூத்தி
-என்று அவித்தையாகிய, கருமகாண்டத்தில், சொல்லும், மோசடியான சாஸ்திரத்தை அஞ்ஞானிகள் நம்பி மங்களத்தை அமங்களமென்றும்,அமங்களத்தை, மங்களமென்றும் நம்பி நரகத்துக்கு ஆளாகிறார்களென்று இச்சுருதி கூறுகிறது. ஆதலால், இச்சுருதி “ சிவ ” யென்கிற சப்தத்திற்கு மங்களமென்றும், ” மசிவ,” அமங்களமென்றும்,அர்த்தம் கொள்கிறது-மஹா நாராயணோபநிஷத்
“விஸ்வ மேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுபஜீவதி பதிம் விஸ்வஸ்
யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவ அச்சுதம் நாராயண மஹாங்யேயம் விஸ்வாத்மானம் பராயணம் நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர:
“-என்று இச்சுருதியில் பலவிடங்களிலும், மேஸ்வரம், சிவ முத லான சப்தங்களால் ஸ்ரீமந் நாராயணனுடைய குண முதலான பரமாத்ம லக்ஷணங்களை அலங்கார ரூபமாய் உத்கோஷியா நின்றது அன்றோ -அதாவது மேஸ்வரம் பரமேஸ்வரனாய், ஸாஸ்வதம்-அழிவற்றவனாய், சிவம் மங்களமானவனுமாய், அச்சுதம்–ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய், நாராயண மஹாங்யேயம்-நாராயண சப்த ப்ரதிபாத்யனாயும் விளங்கிய பர ப்ரஹ்மம் நாராயண னென்று பொருள் தரும்-சிவ, சம்பு, பரப்ரஹ்ம, பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா முதலிய சப்தங்களால் தியானிக்கப் படும் தேவதை சொல்லப்பட்டிருப்பதால் அச் சப்தங்களுக்கும் நாராயணனே பொருளென்று ஸ்தாபித்தனர்.

க்ருஷ்ண யஜுர் ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.-” ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் நதஸ்மஸ்ஸாப்தி கஸ்ஸத்துர்ஸ்யதே“-என்று ஜகத் காரணனான மஹேஸ்வரனுக்கு ஒத்தார்மிக்காரில்லை யென்றும்
“யத் வேதாதவ் யீஸ்வர ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ்ய: பரஸ்ய மஹேஸ்வர
:என்று வேதங்களின் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகின்ற பிரணவமெதுவோ அதன் பிறப்பிடமாகிய அகாரத்தி லினமாயிருப்பவனெவனோ அவனே பானும் மஹேஸ்வரனுமான பரப்ரஹ்மமென்றும் கூறுகையாலே ப்ரணவ ப்ரதிபாத்தியனும் அகாரத்தி லீனமாயிருப்பவனுமான ஸ்ரீமந் நாராயணனே மஹேஸ்வர சப்த பிரதிபாத்திய னெனத் தட்டில்லை.
மஹா நாராயணோபநிஷத் “” அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபிதாம்“-என்று மேலே விளக்கப்பட்ட சுருதியில் கூறிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமென்றும்,-நாராயணோபஷத்” ஒமிதி சர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரண ரூப அகாரம் ?என்று சர்வ வேத பாதிபாத்தியமாயுள்ள ப்ரணவம் சர்வபூதங் களுக்கும் த்யாதாவாயும், அப் பிரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமாயும் விளங்குகின்றது என்றும்,
தியாநபிந்தூபநிஷத்
” அகாரே துல்யம் ப்ராப்தே ப்ரதமே பிரணவாம்சகே
அந்தரிக்ஷம் யஜூர் வாயுர்புவோ விஷ்ணுர் ஜநார்த்தந “
என்று ப்ரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரத்திலீனமாயிருப் பவன் யாவனோ அவனே ஜனார்த்தனனென்றும் த்ரயீ யென்கிற வேதங்கள் உத்கோஷிக்கையாலும்,
முண்டகோபநிஷத்-பிரணவோ தநு ?”-என்று பிரணவமானது நாராயணனது திருக்கரத்திலுள்ள ஸ்ரீ பாஞ்ச சன்னியமே யென்றும்,
” ஒங்காரோ பகவான் விஷ்ணு : த்ரயீன வசநாம்பதி
தஸ்யோ சாரமாத்ரேண பரப்ரஹ்மாதி கச்சதி “
‘என்று, ஓங்காரத்திற்கு ப்ரதிபாத்தியன் விஷ்ணு ஒருவனே யென்றும் அவன் த்ரயீ யென்கிற வேதங்களுக்கு நாயகனென்றும் – ஜீவர்கள் ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்தி லவனையே யடைகிறார்களென்றும், அவ் ஒங்காரத்தின் பிறப்பிடமாகிய அகாரம் அவனுடைய பிரதான திருநாமமென்றும்,
‘அகாரோவிஷ்ணு: பிரதமநாமோச்சயதே” என்று அகாரமானது நாராயணனின் பிரதான திருநாமமென்றும்
நாராயணோபநிஷத்-“ஒம் பிரதிகாநந்தம் -பரம் புருஷம் ப்ரணவ ஸ்வரூபம் “ என்றும்,
ஆத்மபோதோபநிஷத்
“ஓம் பிரதிகானந்தம் பரஹ்ம புருஷம் பிரணவ ஸ்வரூபம்
அகார, உகார, மகார, இதிதானே கதாசம்பவத் ததே ததோமிதி
யமுத்வாமுச்சயதே யோகீ ஜன்ம சமசார பந்தனாத்-ஓம் நமோ நாராயணாய இதிமந்த்ரோபச ?”
என்று சர்வாந்தர்யாமியாயும், ப்ரஹ்ம புருஷனாயும், ப்ரணவ ஸ்வரூபனாயும், யோகிகளின் சம்சார பந்தத்தைத் திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தாலே போக்குமவனாயும் விளங்கிய ஸ்ரீமந் நாரா யணனை இச்சுருதி தியானிக்கையாலும்,
கீதோபநிஷத்து
”அக்ஷராணா அகாரோக்ஷரம்
“-என்று அக்ஷரங்களில் அகாரம் நானாகிறேனென்று கண்ணன் கீதையில் கூறுகையாலும்,
இத்யாதி சகல பிரமாணங்களிலும் சிவ, சம்பு, மஹேஸ்வராதி நாமங்களனைத்தும் நாராயணனது கல்யாண குணங்களைக் காண்பிக்கும் பொருப்டே” சுருதிகள் அச் சப்தங்களால் வர்ணித் துரைக்கின்றமையாலும், வேத வேதாந்தாதிகளிலுள்ள ஸர்வாக்ஷரங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களாக விருக்கு மன்றிக்கே இதரமானவர்களைச் சொன்னதே யில்லை— சொல்லிய போதிலும் விஸ்வருபனான நாராயணனுடைய சரீரங்களாக விருக்குந் தேவதைகளைச் சொன்ன வாசங்களுக்
கெல்லாம் வாஸ்ய பூதன்ஸ்ரீய பதியே யாவன்,

பைங்களோபநிஷத்
” ஸஸ்வாதீந மாயஸ் ஸர்வஜ்ஞஸ் ஸ்ருஷ்டி ஸ்திதி லயா நாமாதி கர்த்தா ஜகதங்குர ரூபோபவதி
”-என்று அநந்த கோடி பிரம்மாண்டங்களின் ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயங்களுக்குக் காரண பூதனான ஸ்ரீமந் நாராயணன் தனது இச்சா-சத்தியாலுண்டான மாஹா மாயை யாகிய மூலப் பிரக்ருதியை ஸ்வா தீனமாயுடையவனாய், அம்மாயயைக் கொண்டே சகல ஜகத்தையும் படைத்தனன் என்றும்,
மஹா நாராயணோபநிஷத்
“ஸுத்த ஸத்வ மயோ லீலா க்ருஹீத நிரதிசயாநந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத்”-
என்று கற்ப க்ஷயத்தில் அம் மஹா மாயையான மஹாலக்ஷிமிக்கு வாசஸ்தானமானதும், அம் மாயையின் ஸ்வாதீனனான நாராயணனது விகாரமற்றதும், சுத்த சத்வ மயமானதுமான பரமபதம் என்றும்,
ஸ்ரீஸுக்த்தம்
” அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தீநாத ப்ரபோதநீம்
ஸ்ரீயம் தேவீ மூபாஹ்வய ஸ்ரீமார்தேவீ ஜுஷதாம்
”-என்று சராசர பிரபஞ்சங்களையும் தமது ஜாலத்தாலே நிக்ரஹிக்கவும், ஹரிக்கமுடைய ஜாலமே குதிரைகளாகவும், அப் பிரம்மாண்ட ஸ்ருஷ்டி சம்ஹாரக் கர்த்தர்களை ரதமாகவும் கொண்டு ஜகத் காரணங்களை நடத்துபவளாயும், யாவற்றிற்கும் நாயகியாகவும், ஜகத் நாயகனான ஸ்ரீமந் நாராயணனின் திரு மார்பையே வாஸஸ்தானமாய், அந்த பரமேஸ்வரனோடே நித்ய ஸம்யுக்தை
யாய், “ பூத நாயகன் புவிமகணாயகன் பொருவில், வேத நாயகன் மார்பகத்தினது வீற்றிருந்த ஆதி நாயகி ” என்றும்
” உலகம் யாவையு மீன்றளித் தழித்திட்டு மொருவன் இலக மார்பகத்திருந் துயிர்யாவையுமீன்ற, திலகவாணுதல்”-என்றும்–“ ஏக நாயகன் மார்பகத்தினது வீற்றிருக்கும் ஆதி நாயகி “-என்றும் மலரில் மணமும், கல்லில் ஒளியும் போலே ஸர்வ லோக நாதனுடைய வக்ஷஸ்தலத்தில் நிரந்தரம் அநபாயினியாய் வாஸம் பண்ணிப் போருமவளென்றும், அவ்வாறிருக்கக் கருத்தேதென்னில், எம்பெருமான் தண்டதரனாதலாலே இவ்வாத்மாக்களோ, எந்நாளும் அபராதமே வடிவமாய் அவ் வெம்பெருமான் பக்கல் நன்றியற்ற பாவிகளா யிருக்குமிவ் வாத்மகோடிகளினது குற்றங்களை நற்றமாகக் கொண்டருள் புரிய வேண்டியும், சதுர்முக, பசுபதி, மகபதி முதலானோர் கேட்டுக் கொண்ட படியும், அவனது திருமார்பை விட்டகலாதவளாயுமிறே சர்வ
லோக சுந்தரியான எமதரும் கருணைத் தாயாரிருப்பது.

ஸ்ரீ பாஞ்சாராத்ரத்தில் “‘ க்யாநாதயோ குணாரூபம் லக்ஷ்மிர் நித்யாநபாயி பூமி நீளா தயோ தேவ்யா சேநேசாத்யாச சூர்ய: ததாமபரம் காலஹ புருஷஸ் ப்ரகுருதிஸ்தா மஹதாதிதராந்தா நிசப்த சாவரணான்யபி பிரம்ம
மந்தம் ததந்தஸ்தா லோகஸ்வஸ சராஸராஹ யேவமந்தாய நந்தாநி தத் சர்வம் நாராயணமுச்சதே
-என்று ஸ்ரீமந் நாராயணனுடைய நித்யமான ஜ்ஞாந சக்தியாதி திவ்யாத்ம குணங்களும், குண ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹமும், அவ்விக்ரஹ குணமான ஸௌந்தர்யாதிகளும், அச் சௌந்தர்யாதிகளோபாதி சாத்தின கிரீட மகுடாதி திவ்யாபாணங்களும், அவ்வாபரணங்களோடே விகல்ப்பிக்கலாம்படியான சங்கச் சக்ராதி திவ்யாயுதங்களும், இவ்வளவிருந்த வேற்றத்தை யுடைய பர வாசுதேவனை, காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்தது அநு பவிக்கிற மாமாபையாகிய மஹா லஷ்மியும்,மஹருஷி வர்க்கங்களும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்தக் கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான நித்ய ஸூரி ஸங்கமும்,அவர்களோபாதி அடிமை செய்கிற முக்தரும், அவ்வடிமைக்கு பிரவர்த்தகமாய் பஞ்சோப நிஷண் மயமான பரமபதமும், குண த்ரயாத்மகமான மூல ப்ரக்ருதி மண்டலமும், புருஷ ஸமஷ்டியும் அஹோராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும் ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும், தத் கார்யமான அண்டங்களும், அண்டாந்தர்வர்த்திகளான தேவ, மநுஷ்ய, திர்யக் ஸ்தாவரங்களுமாக ஸ்ரீமந் நாராயணன் மஹா மாய்கையை ஸ்வாதீனமாகக் கொண்டு அண்டாதி ஜகத் காரணத்தை யாதொரு குறைவுமின்றியே நடத்துகிறானென்றும், இத்யாதிபடியே மாமாயை என்றும், பராசக்தி என்றும், இச்சா சக்தி என்றும்,-க்ரியாசக்தி என்றும், தேவீ என்றும், மஹா லஷ்மி என்றும், வேத வேதாந்தாதிகளால் முறையிடா நின்ற நமது தீன தயாளச் செல்வியார் ஸர்வாந்தர் யாமியான ஸர்வேஸ்வரனாடே தானும் அபின்னா பூதையாய் யவனை விடாது நிற்கின்றபடியால் அகாரத்திற் சொல்லுகின்ற ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வசேஷித்வ,ஸமஸ்த கல்யாண குணாத்மகவாதிகளுக் கெல்லாம் ஆதார பூதையாய், ஸ்ரீ ஸூக்த ப்ரதி பாத்யையான பெரிய பிராட்டியாருடைய நித்ய ஸம்பந்த முள்ளதன்றோ ? அந்த ப்ரஹ்மமே என்று வேதங்களும், வேதோபப்ருஹ்மணங்களும் வாயோலை யிட்டு வைத்த காரணத்தாலிறே, ஸ்ரீய பதியான முகுந்தனுக்கன்றி ப்ரஹ்ம சப்த வாஸ்யனாந் தன்மை மற்றையாருக்கு மில்லை யாயிற்று, இவ்வளவேற்றமுடைய மஹா லஷ்மியாராற்றன் எந்தப் பதவிகளினு மிருக்கின்ற தேவதைகளுக்கும்,அவர்கள் தொண்டர்களுக்கும் மங்களமுண்டாக வேண்டியது-இவர் தாம் அதைக் கொடுக்க வேண்டியது எந்த மதாந்தர காமரானவர்களும் நமது லஷ்மி கடாக்ஷம் வேண்டுமென்றே கோருவார்களேயன்றி, இவருக்கெதிர்த்தட்டான ஜேஷ்டையினுடைய கடாக்ஷத்தைக் கோர மாட்டார்கள் இந்த ஸாது ஸேவ்யை யாரது கடைக் கண்ணினின்றுங் கொட்டுண்டு கிடக்கப்பட்டதிறே அணிமாதி அஷ்டசித்திகளும், அஷ்டைஸ்வர்யங்களும், ஸர்வாங்க ஸுந்தர ஸுகாநந்த ரூபியான இவர் கடாக்ஷமற்ற காலத்தில் விதி சிவ சதமகாதி சராசரங்கள் பட்ட கஷ்டங்கள் ஸகல வித்யா ஸமூஹங்களெல்லாவற்றினும் கண்டு கொள்ளலாம். இத் தாயார் கடாக்ஷித்தால் நாம் எப்போதும் ஸூமங்களைகளாய் நமது மகிழ்நரோடு கூடி அமங்களை களென்னாது ஸகல பாக்ய ஸுகத்தோடும் வாழலாமே யென்றன்றோ ? ஸதா காலமும் பாரதி, பார்வதி,சகி, அருந்ததி முதலான தேவ, மநுஷ்ய, பந்நகாதி ஸமஸ்தமான ஸ்திரீகளும், மஹா விஸ்வாஸத்தோடு சுக்ரவார முதலான தினங்களில் அதி நியமனமான விரதமிருந்து நோன்பெடுப்பது, ஸ்ரீவர லக்ஷ்மி வரத சரித்ரத்தைக் கேட்டரிவர்களாயின் பார்வதி நோற்ற நோன்பு விசதமாகும் இவ்வாறு பராசத்தியும்,ஸ்ரீமந் நாராயணனின் வல்லபையுமான மஹா லக்ஷிமியின் ஸர்வ சக்த்யாதி சகல கல்யாண குண சமூஹங்களையும் அநந்த ப்ரமாணங்களாலும் வெளிப்படையாய் விளக்கப்பட்டிருக்குமே

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அம்சம்
க்ருஷ்ண க்ருஷ்ண ஜகந்நாத ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் காதி நித ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத் மிகாலியெம்
“-என்று வாணாசுரவதத்தில், சிவன், க்ருஷ்ணனைப் பார்த்து, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஜெகத்நாயாகா, ஆதியந்த மில்லாதவா, லோகோஜ் ஜீவநார்த்தம் அவதரித்தவர், என்று பலவாராகத் துதித்துச் சரணமடைந்ததாலும்,
மஹா நாராயணோபநிஷத்
“தேவகீ ஸூத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
-என்று தேவகி புத்ரனாயும், கோகுல நிர்வாஹனாயும், அவதரித்த வாசுதேவன் ஜகத்பதி என்று கூறுகையாலும்,
அதர்வண சிரசில்
” ப்ரஹ்மண்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மண்ய மது சூதந –
என்று தேவகி புத்ரனாயவதரித்த மதுசூதனன் பரப்ரஹ்மமென்றும்,
ருகவேதம் ஆத்மபோதோபநிஷத்
“வைகுண்ட புவனங்க மிஷ்யதி ததிதமபுண்டரீகம் விஜ்ஞானகம் தஸ்மாத் கடிதாப: மாத்ரம் ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்ய மதுசூதந :”
என்று யோகிகளினது ஜனனத்தை அரத்திக்கும் ஸ்ரீவைகுண்ட நாதனும், பர ப்ரஹ்மமுமான மதுசூதனன் தேவகி புத்ரனா யவதரித்தான் என்றும்,
யஜுர்வேதம் கலிசந்தாரணோபநிஷத்
*ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண ஹரே”
-என்று இச் சுருதி க்ருஷ்ண பரமாத்மாவை தியானிக்கையாலும்,

பவிஷ்யபுராணத்தில்
‘ த்ரவிடாநாய நிரதம் யோநிம் ததி ஸ்துமம் திம்பிரம்ம: பிரளய பரியந்தம் கும்பிபாகேச பச்யதே”
என்று ஸ்ரீமந் நாராயணனை உபாயோபேயமாய் ஆஸ்ரயித்து மோக்ஷ சாம்ராஜ்யமாகிய பரம பதத்தை யடையப் ப்ராப்தமாயுள்ள சகல ஜீவன்களுமெளிதில் உணரும் பொருட்டுத் தமது பரம க்ருபையால் (வியாஸ ரூபாய விஷ்ணுவே ) என்றும் (விஸ்வத் சேநோ ஜநார்தந🙂 என்றும் (சடகோபாய விஸ்வத்சே :)என்றுமித்யாதி வாக்கியங்களின் படியே வேத யதார்த்தங்களை ஸ்தாபிக்க வியாசரும், அவ் வேதார்த்தங்களை திரவிட வேதமாய் ஸ்தாபிக்கச் சடகோபருமாக, பகவான் அம்சாரூடராய் கல்பங்கள் தோரும் அவதரிக்கின்றபடியால் அவர்களிடத்தும்,அவரருளிச் செய்த திரவிடோபநிஷத்தினிடத்தும் திரி கரணங்களாலும், அத்யந்த பிரீதி யுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும், அவரையும் அவரருளிச் செயல்களையும் நிந்திப்பவர் பிரம்ம பிரளய பர்யந்தம் றௌரவாதி நரகத் துன்புறுவது திண்ணமென நிச்சயிக்கப்பட்டது.ஸ்ரீ பாஞ்சராத்ரம்-அதித்யாத்ரமிடாம் நாயம் ஸ்வசாகாத்யாய நாத் பரம் ஸ்ரமந்ந குரத்தேந்ய த்ரசோபியாதி பராங்கதிம்”-என்று வேதத்தில் அவித்தை யாகிய கரும காண்டத்தை நீக்கி வித்தை யாகிய ஞான காண்டத்தின் ரசமே திரவிடோபநிஷத்தாக கல்பங்கள் தோறும் ஸ்ரீமத் சடகோபரால் ஸ்தாபிக்கப்பட்டு அத் திரவிடோப நிஷத்தைக் கொண்டே சகல திவ்ய தேசங்களிலும் க்ரஹங்களிலும் ஈஸ்வரார்த்யயநம் – செய்ய வேண்டியதென்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

அனுருத்தசம்ஹிதா
“ ஸ்வாசாக : தரமிடாம் நாமவ் விசித்வேதேத் திரி புருஷம் யஸ்ய தஸ்மி நாவாஷாஸ் யாத்திரௌ ப்ராந்ஹம் நனாமிதி ஸ்ருதிம்”.-
என்று யாதொரு பிரம்ம வித்துக்கள் மோக்ஷத்தை யடைந்தாலும் இந்த திராவிட ஸ்ருதியைக் கொண்டே ப்ரஹ்மமேத ஸமஸ்காரம் செய்ய வேண்டிய தென்றும் திரவிட ஸ்ருதி, வேதங்களால் ஸ்தாபிக்கக் கூடரத பரம புருஷார்த்தத்தை ஸ்தாபித்துள்ளபடியால் வேத அத்யயநத்திற்கு முன் செல்ல வேண்டியதென்றும் மற்றை யாவையையும் கண்டித்து கூறுகையாலும் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது” பக்தாம் ருதம் விஸ்வஜநாநுமோதம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம்”என்று 1180 ஸாகைகளை யுடைய வேதங்களின் சகல ரகஸ்யங்களையும் விவரிக்க வல்லதாயும் அஹோபாஹ்யமாய் கம்பீரார்த்தமாய் அறுபதினாயிரப்படியெனவும், முப்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஆறாயிரப்படி, மூவாயிரப்படியென பிரம்மவித்துக்களால் வியாக்யான முடையதாயும், ஈஸ்வர ஸ்வரூப, ரூப குண சேஷ்டிதங்களையே நன்குணர்த்த வல்லதுமான திரவிடவேதமென்கிற மஹா சமுத்திரத்தை ஸ்ரீமத் சடகோபரால் அருளிச் செய்யபட்டவை என்றும்,திருக்குருகைப்பிரான்” ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராத வுள்ளம் பெற” என்றும்,மணவாளமாமுனிகள்” ஏரார் வைகாசி விசாகத்தினேற்றத்தை பாரோரறியப் பகர்கின்றேன் சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்” என்றும்,மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள்–ஈயாடுவதோ கருடற்கெதிரே யிரவிக்கெதிர் மின்மினியாடுவதோ நாயோடுவதோ வுருமிப்புலிமுன் நரகேசரிமுன் நடையாடுவதோ பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமானடி சேர் வகுளாபரணன் ஓராயிர மா மறையின் தமிழிலொரு சொற் பொருமோ வுலகிற்கவியே-என்றும்-திருவள்ளுவர்“ குருமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்” என்றும்,ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த செம் பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்-தண் குருகூர்ச் சேய்மொழியதென்பர் சிலர் யானிவ்வுலகின் தாய்மொழியதென்பன் நகைந்து” என்றும்,ஔவையாரும் “ சேய் மொழியோ தாய் மொழியோ செப்பினிரண்டுமொன்றவ் வாய் மொழியை யாருமறையென்ப-வாய்மொழி போல்-ஆய்மொழிகள் சாலவுளவெனினு மம்மொழியின் சாய்மொழிக ளென்பேன் றகைந்து” என்றும்,இத்யாதி வேதங்களை யொத்த 108 சம்மிதைகளை யுடைய ஸ்ரீ பாஞ்சராத்ர முதலான சாஸ்திரங்களாலும்,ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமான ப்ரஹ்ம விதாக்ரேசர்களாலும், ஆத்மோஜ்ஜீவனார்த்த தாரகமே, திரவிடோப நிஷத்தென்று பரமோதக்ருஷ்டமாய்க் கொண்டாடியுள்ளதாயும், சகல வேதங்களினும் முற்பட்டதென்றும், கல்பங்கள் தோறும் இதன் ஏற்றங்களையே பிரதிபாதிக்கையாலும், இத் திரவிடோபநிஷத்திற்கு வொத்த சாஸ்திரங்களுமில்லை என்றும், இதை யருளிச் செய்த சடகோபருக்கு மேம்பட்ட பரம புருஷன் எக்கல்பங்களிலும் கிடையாதெனக் கண்டிகமாய் சகல சாஸ்திரங்களாலும் ஆணை யிட்டுரைத்து விட்டன,

சாந்தோக்ய உபநிஷத், பிரதம பிரபாடகம் 6-ம் காண்டம்-” நாராயணஸ் ஸரஸிஜா ஸந்நிவிஷ்ட : கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்கசக்ர : தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ அக்ஷிணீ என்று ஸ்ரீமந் நாராயணனுடைய லக்ஷணங்களைக் கூறு மிச்சுருதி நாராயண சப்தங்களால் ஜகத் காரணத்தைச் சொல்லிற்றே-பகவத் சப்தம், பரமேஸ்வர சப்தம், ப்ரஹ்ம சப்தம் முதலான சகல சப்தங்களும் அந் நாராயண னொருவனை யுணர்த்துமே யன்றி மற்ற யாவரையும் கூறினதே யாகாது-பர்க்க சப்தத்திற்கு” பர்கோ தேவஸ்ய தீ மஹித்யோயோந ரசோதயாத்”-என்னும் பர்க சப்த வாக்யத்திற்கு வஸிஷ்டர் விஸ்வாமித்ரர் தங்கள் வியாகாண சூத்திரத்திலும் ஸ்ரீமத் ராமாநுஜர் சங்கரர், மத்வர் வித்யாரண்யர், குண்ணத்தூர் அய்யன் ஸ்வாமி, வைத்ய
நாதர், க்ருஷ்ணபட்டர், நாராயணசாமி முதலியனரும் தங்கள் பாஷ்யங்களில் பர்க்க சப்தத்திற்குப் பொருள் ஸ்ரீமந்நாராயணனே என்றே அருளிச் செய்துள்ளனர் –

யஜுர்வேதத்தில், வாகோபநிஷத் ஜீவன் முக்தி லக்ஷணத்தில்-“யஸ்மஸ்தார்த ஜாலேஷு வியவஹார்யபி ஸீதள பரார்தே ஸ்வீவா பூர்ணாத்மா ஸ ஜீவன் முக்த உச்சயதே-என்று ரிபு மஹருஷியினிடம் வராகமூர்த்தி தமது க்ருபையால் கடாக்ஷித்து ஓ! முனியே எப்பொழுது சித்தத்திலுள்ள சகல கருமங்களையும் விட்டு ஜெகஜ் ஜன்மாதிகாரண பூதனான என்னையே உபாயோபேயமாகப் பற்றுகிறானோ அப்பொழுது தானவன் ஜீவ முக்தனென்று சொல்லப்படுமென வெளியிட்டபடியாலும்.யஜுர்வேதம் இராமோபநிஷத்-பக்த்யாமந்தரேணாநேந மாம் சிவ ப்ரஹ்மஹத்யாதி-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:“என்று இராம தாரக மந்த்ரங்களாலே பக்தியுடன் தியானிக்குமுன்னை பிரஹ்ம ஹத்யாதி பாபங்களினின்றும் விடுவித்து க்ரம க்ரமாந்திரத்தில் என் சாயுஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று தமது பரம க்ருபையை வெளியிடுகையாலும் –பகவத்கீதை-“ ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூசா?என்று அர்ஜனா! சகல கருமங்களையும் அடியோடொழித்து அநந்த கோடி யண்டங்களுக்கும் நிர்வாணனான என்னையே சரணமாக அடைவாயாக உன்னை சகல பாபங்களினின்றும் விடுவித்து என் சாயுஜ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறேன் பயப்படாதே என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கீதையில் வெளியிட்ட படியாலும்,இத்யாதி வராஹமூர்த்தி, ரிபுசம்வாதத்தால் வராகோப நிஷத்தும், ஸ்ரீராமபிரான் சிவன் சம்வாதத்தால் ராமோபநிஷத்தும், ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுன சம்வாதத்தால், கீதோபநிஷத்தும், ஆக இம்மூன்று சரம சுலோகங்களின் ரசங்களையும் அவைகளின் அங்கோபாங்கங்களான நியமங்களையுமே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் வெளியிட்டனர்- தைத்திரீயோபநிஷத்-” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதிபி:நராணாம் ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”என்கிறபடியே பஹு தர ஜந்மங்களாக, அவித்தையாதி அஞ்ஞாந கரும ஹோமாதிகளைச் செய்தே அநந்தமான ஜீவாதமாக்கள் ஷீண தசையாகிய ஜனன மரணங்களை யடைவதால், அவித்யாதி கருமங்களை முற்றும் விட்டு ஸ்ரீமந் நாராயணனையே உபாயோபேயமாக அடையும் பொருட்டே நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று பாவங்களை அடைந்தே பரமபத சாயுஜ்யத்தைப் பெற வேணுமென்று மிச் சுருதி கூறுகையாலும், சுருதி, ஸ்மருதி, சூத்ர, மீமாம்ஸா,பகவத் சாஸ்த்ராதிகளின் ரசங்களைத் திரட்டின-பரம புருஷார்த்தத்தையே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச் செய்தனர்-ஸ்ரீமத் ராமாநுஜரது ஸ்ரீபாஷ்யம்” தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வேஹ்யாத்மாந பரமாத்மம் : நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக் ஷததைவ “-என்று ஒருவனுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளும், ஸேஷமாய் ஸ்வ சரீரமும், ஸேஷமாயிருக்கச் செய்தே, க்ருஹ க்ஷேத்ராதிகள் ப்ருதக் ஸித்யாதிகளுக்கு அர்ஹமாய், ஸரீரம் அவற்றிற்கு அநர்ஹமா யிருக்கக் காண்கையாலே, இவ் வாத்மாவானது ஈஸ்வரனுக்கு சேஷமாமென்னுமிடம் தட்டில்லை யென்க,” பரகத அதிஸய ஆதாநேச்சய உபாதேயத்வமே வயஸ் யஸ்வரூபம், ஸஸேஷ : பரஸ் ஸேஷி’ என்றும்,“ இச்சயாய துபாதேயம் யஸ்யாதிஸய ஸித்தயே உபயாநுபயைகைக ஜுஷாதௌஸே ஸேஷிணௌ” என்றும்,”அயமே வாத்மா சரீர பாவ : ப்ருதக் ஸித்த்யநர்ஹா தாராதேயபாவு : நியந்த நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்??-என்று ஸ்ரீமந் நாராயணனுக்கும், ஜீவாத்மாக்களுக்குமுள்ள நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற சம்மந்தங்களால் ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேணுமென்றும் அனாதியான இச் சம்மந்தங்களைக் கொண்டே உஜ்ஜீவிப்பிக்கச் செய்கிறானாகையால் ஸ்ரீமந் நாராயணனே வோத்பதி என்றும் தமது ஸ்ரீபாஷ்பத்தில் தெளிவாய் நிரூபித்தனர்.ஸ்ரீ பாஷ்யம் “யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே நகத்யதே-ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே”-என்று ஸேஷ சப்தப் பொருள்களாகிய பிரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகல சேதனாசேதனங்களும் ஸேஷி சப்தப் பிரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணனுக்கு இஷ்ட விநியோஹார் மென்று-ஸ்ரீபாஷ்யத்தில் மற்ற யாவையும் கண்டித்துரைத்து விட்டனரிறே எதிகட் கிறைவனான எம் மிராமாநுஜன்,பிரம்மாண்டபுராணம்-”மந் நியோகாத் பூத புர்யாம் அஹீநாம் ஈஸ்வர : கலௌ ஸ்ரீராமாநுஜ ரூபேண ஜநிஷ்யதி ஸதாம்முதே” என்று ஸ்ரீபத்ரிகாஸ்ரமத்திலே நாராயணனுக்கும் நரனுக்கும் நடந்த சம்வாதத்தில், ஓ நரா! என்னுடைய நியோகத்தால் ஸ்ரீ பெரும்பூதூரில் ஸர்பங்களுக்கெல்லாம் ராஜனான திருவனந்த ஆழ்வான் கலியுகத்தில் ஸ்ரீமத்ராமாநுஜரென்ற ரூபத்தாலே லோக உஜ்ஜீவனார்த்தமாக அவதரிக்கப் போகின்றாரென்று திருவாய் மலர்ந்தருளினாராதலாலும்,ஸ்ரீபாஞ்சராத்ரம்-” அநந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச் சதது: பரம்’என்று அநந்தனுடைய 4-வது அவதாரமே கலி யுகத்தில் ஸ்ரீமத் ராமாநுஜர் என்னுமோரவதார முண்டென்று கூறுகையாலும்,தாடீபஞ்சகம்-“பாஷண்ட ருமண்டதாவதஹ ச் சார்வாக சைலாசநி பெளத்தத்வாந்த நிராஸ்வாஸரபதிர் ஜைநேபகண்டீரவு:மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடாமணி : ஸ்ரீரங்கேச ஜயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் “” பாஷண்டஷண்ட கிரி கண்டந வஜ்ரத் தண்டா:ப்ரசந்த பௌத்த மகராலய மந்த தண்டா வேதாந்த ஸார ஸுக தர்சம் தீப தண்டா ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:-என்கிறபடி அடர்ந்த ஆரண்யங்களைப் போன்ற வேதங்களின் ரசங்களையே திரட்டி ஸ்ரீபாஷ்யமாயும், இவ் வுலகிலுள்ள சாக்ய, உலூக்க,அக்ஷபாத, சமுண, கபில்,பதஞ்சலிகளாகிய பாஹ்ய சமயங்களையும், சைவ, மாயாவாத, நியாய, வைஸேஷிக, பாட்ட ப்ரபாகராதிகளாகிய குத்ருஷ்டி சமயங்களையும்,அடியோடறுத் தெரிந்துத் தமது சுத்த சத்வ குண விஸிஷ்டாத்வைத மதமே மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த பரம வைதிக மதமென திக் விஜயம் செய்து ஸ்தாபித்து த்ரி தண்டம் தரித்தவனிறே எதிராஜன்.யதிராஜவிம்சதி”ஸ்ரீமாதவாங்கரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் காமாதி தோஷ ஹர மாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜஸ் யதிபதிம் பரணமாமி மூர்த்நா”-என்று இப்பிரபஞ்ச முழுமையும் பேரின்ப வெள்ளமான பரமபதத்தை பிரம்மா முதல், பிபீலிகாநந்தமுள்ள யாவும் கருதவல்ல ஞானங்களை ஊட்டி வளர்த்த எம்மிராமாநுஜனை,எதிகட்கிறைவனை தியானிக்கிறேனென்றும்,தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்ச் சடையோன் சொற் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமாநுசழனி போர்ந்த பின்னே” என்றும்,பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே” என்றும்,”வாழ் வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம் தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினற்கு அந்நாழற்றது நம் இராமாநுஜன் தந்த ஞானத்திலே” என்றும்,சாருவாகம் தம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட மாறுசெய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த் தற மிகுத்து மேல் வந்த பாசுபதர் சிந்தியோடும் வகைவாது செய்த எதிராஜனார் ”என்றும் ” எதிராஜோத் ஜகத் குரு” என்றும்,” ராமாநுஜோ சதுரா சதுரக்ஷரி” என்றும்,” ராமா நுஜாய நம? என்றும்,இத்யாதி அளவிறந்த ஏற்றங்களை யுடையவராயும், இவ்வுலக முதல் பரமபதம் வரை, ஸ்வாதீன முள்ளவராயும், மோக் ஷவதிகாரியானாலும், இவரது கடாக்ஷம் பெற்றே மோக்ஷமடைய வேண்டியதாலும், ஸர்வாந்தர்யாமியாயும், ஸர்வேஸ்வரனாயும், ஸர்வ வேத ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந்நாராயணனால் சாக்ஷாத்கரித்துப் பட்டங் கட்டிய ஸர்வலோக ஸரண்யனாயும் விளங்கா நின்றானிறே எம்மிராமாநுஜன்

அதர்வண மஹோபநிஷத் ப்ரஹ்ம ஸூக்த்தத்தில்-தக்ஷிணேது புஜே விப்ரோ பிப்ருயாத்வை ஸுதர்சனம் ஸவ்யேது சங்கம் பிப்ரூயாதிதி ப்ரஹ்ம விதோவிது : என்று முமுக்ஷ வானவன் வலது புஜத்தில் சுதர்சன மென்னும் சங்கத்தையும்,இடது புஜத்தில் பாஞ்சிய சந்யமென்னும் சங்கத்தையும் தரிக்கக் கடவர்களென்று பிரம்மவித்துக்களரிவர்களென்று மிச்சுருதி நிரூபிக்கையாலும்,மஹோபநிஷத் 4வது காண்டத்தில்” தேவாஸோயேந வித்ருதேந பாஹுநா ஸுதர்சநேந ப்ரயாதம் ஸ்வர்க்க மாயாந்தி தாம லோக விஸ்ருஷ்டவீ தஸ்வயந்தி ப்ரஹ்ம ணேளவேஸ் ஸர்வா வம்ஸர்வை தேவதாநாம், ஸர்வாவை விப்ராணாம் ஸர்வாவை க்ஷத்ரியாணாம் ஸர்வாவை வைச்யாநாம், சூத்ராணாமித்யக்நிநா வைஹோத்ரா, த தம் சக்ரம் த்வி புஜே தார்யே தோர்த்வபுண்ட்ர மாலிகேத் தஸ்மாத் விரேகம் பவதிபு நராகமநந்ந சேதி ப்ரஹ்மணஸ் ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்நோதி“-என்று பிரம்ம ருத்ரர்கள்முதல் சமஸ்த தேவர்களும், சமஸ்த பிராம்மணர்களும், சமஸ்த க்ஷத்திரியர்களும், சமஸ்த வைசி யர்களும், சமஸ்தசூத்திரர்களும், அக்னியில் தப்தம் பண்ணின சக்ராங்கிதத்தை இரண்டு புஜங்களிலும் தரிக்கக் கடவர்க ளென்றும் இடைவெளியோடு க்ஷடின ஊர்த்வ புண்டாங்களையும் தரிக்கக் கடவர்களென்றும், இவ்வநுஷ்டானமுள்ள தேவர்கள் முதல் மநுஷ்யர் வரையிலும் பரமபதமென்னும் சாம்ராஜ்யத்தைப் பெறுவர்க ளென்றும் பிரம்மாவிடைய சத்ய லோகம் போலேயும், சிவனுடைய கைலாயம் போலேயும் மீண்டும் பிறப்பதில்லை என்றும், ருக்வேதம் வாக சங்கிதையிலும், யஜுர்வேதம் முதல் பிரசனத்திலும் சாமவேதம் 6-வது அத்தியாயத்திலும், சுக்ல யஜுர் வேதம் பிரஹதாரணயோபநிஷத்திலும் கடவல்லிலும், சகடக மென்கிற சுருதி
யிலும், ஸ்பஷ்டமாய் காணலாம்.”ஸக்ராதி தாாணம் பும்சாம் பர சம்மந்த நிவேதனம் பதி வ்ரதா நிமித்தமஹி வளையாதி பூஷணம்”-இத்யாதி அநந்த ப்ரமாணங்களாலும் முமுக்ஷவான பரம்புருஷார்தத்தை பெருவதற்கே சக்ராங்கிதம் பிரதானச் சின்னமாகக் கூறா நின்றதிறே

ஸ்ரீ பாஞ்சராத்ரம் பராசரா சம்ஹிதை
“விஷ்ண்வர்ப்பிதம் ரக்த வர்ணம் ஹரித்ரா சூர்ண முக்தமம் லக்ஷ்மீ நிவாஸ ஸித்யர்த்தம் தீபாகாரந்து சூக்ஷ்மகம் ஊர்த்வ புண்டரஸ்ய மத்யேது லலாடே தாரயேத்விஜ
:”-என்று ஏ ப்ராஹ்மணா ஸ்ரீமந்நாராயணனுக்கு சமர்ப்பித்ததாய்ச் சிவந்த நிறமுள்ள உயர்ந்த ஸ்ரீ சூரணத்தைப் பிராட்டி நிலை பெறுகைக்காக தீபாகாரம் போலே மெல்லியதாய்த் திருமண் காப்பின் நடுவில் நெற்றியில் தரிக்க வேண்டுமென்று கூறுகையாலும்,
ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்ம சம்ஹிதை
“நாஸாத்வியங்குலம் பாதம் மத்யம் ஸார்த்தாங்குளம் பவேத்
பார்ச்வ மங்குள மாத்ரந்து ஸுஸ்ஸ்பஷ்டம் தாரயே த்விஜ:
-என்று இரண்டங்குலம் பாதமும் நடுவிலொன்னறை யங்குலமிடமும், விட்டு இருபக்கங்களிலும் ஓரங்குலமுமுள்ள ஊர்தவ புண்டரம் தரிக்க வேண்டியதென்றும் கூறுகையாலும்,
பாத்மபுராணம்
“ஊர்த்வ புண்டாம் மதாபூர்வ மநுஷ்டாநம் ஸமாசரேத்
.-என்று ஆசமனத்திற்குப் பிறகு ஊர்த்வ புண்டரந்தரித்துக் கொண்டு சந்தியா வந்தன முதலிய வனுஷ்டானங்களை முடிக்கக் கடவனென்றும்,
பிரம்மாண்டபுராணம்
ஊர்த்வ புண்டரம் ம்ருதா பூர்வ மநிஷ்டாய ஸமாசரேத்
-என்று பூர்வத்தில் ஊர்த்வ புண்டரம் தரித்துக்கொண்ட பிறகு அனுஷ்டானம் செய்யக் கடவனென்றும் கூறுகையாலும், இத்யாதி பரமாணங்களாலும் மோஷ காமியானவன் சக்ராங்கித ஊர்த்வ புண்டராதிகளைத் தரிக்கக் கடவனென்றும் சொல்லிற்று அன்றோ

1-இதிஹாச ஸ்ரீ மத் பாகவதம் -வேத வியாசர் அருளிச் செய்தது -18000 ஸ்லோகங்கள் -12 ஸ்கந்தங்கள் -200 அத்யாயங்கள் கொண்டது-இதற்கு வக்தா சுகமுனீந்திரர்-ஸ்ரோத பரீக்ஷித்துராஜன், புலவர் திலகராகிய ஆரியப்புலவரால் 4970-திருவிருத்தங்களாகத் தமிழில் மொழி பெயர்த் தருளப்பெற்றது இப்பாகவதமேயாம்.
2- புராண பாகவதம் -இதுவும் வேத வியாசர் அருளிச் செய்தது -இதற்கு-வக்தா நாரத பகவான் -ஸ்ரோதா, உருக்மணி பிராட்டியார்,.இதுவே அட்டாதச மகா புராணங்களுள் ஒன்றே பாகவதம்,
3- ஸம்ஹிதா பாகவதம் -வைராக்ய ரசம் நிறைந்தது -1100-அத்தியாயங்களாய் விரிந்த 18-காண்டங்களாகப்பகுக்கப்பட்டது. இதற்கு வக்தா வைசம்பாயன முனிவர் ஸ்ரோதா ஜனமேஜயன்
4- உப ஸம்ஹிதா பாகவதம்-70000-சுலோகங்களாய் 2000-அத்தியாயங்களாய்ப் பிரிக்கப் பட்டு – இதற்கு வக்தா அகஸ்திய மகரிஷி-ஸ்ரோதா, சுதர்சனர்
தா, சுதர்சனர்

5-விஷ்ணு ரகஸ்ய பாகவதம்:- தண்டங்க ளிடையிடையே கலந்த 100000-ஸ்லோகங்களுடையதாய் 1000-அங்கங்களாய் 10000- அத்தியாயங்களாய் விரிந்தது – இதற்கு தாவ ஹாரீத முனி, ஸ்ரோதா காசிபரிஷி.

6-விஷ்ணுயாமள பாகவதம் :-இது 80000 ஸ்லோகங் களை யுடையதாய் 800-அத்தியாயங்களை யுடையது இதற்கு வக்தா பராசர மகரிஷி, ஸ்ரோதா மைத்திரேயர்

7.கெளதம சம்மித பாகவதம் இது 10000-ஸ்லோகங்கள் அடங்கிய 100-அத்தியாயங்களை யுடையது. இதில் மோக்ஷமளிக்கத்தக்க க்ருஷ்ண சரித்திர மாத்திரம் சொல்லப்பட் டிருக்கின்றது.இதற்கு வக்தா கௌதம ரிஷி ஸ்ரோதா கௌசிக ரிஷி.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் ஸ்வாமிகள்-

April 27, 2025

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் (அன்னமய்யா) (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) தென்னிந்திய இசையில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற வடிவத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். திருமலை திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றன.

தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் (1408-1503) ஆந்திராவில் உள்ள தாள்ளபாக்கம் கிராமத்தில் பிறந்த தெலுங்கு வைணவ ஆச்சாரியர் ஆவார். இவர் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தெலுங்கு இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். 95 ஆண்டுகள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் துவாதசி (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார். 

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாளபாக்கம் கிராமத்தில் ருக்வேத பாரத்வாஜ கோத்திரத்தில் நாராயணசூரிக்கும், லக்கமாம்பாவிற்கும் மே 9, 1408- அன்று அன்னமாசாரியர் மகனாகப் பிறந்தார். நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். இவர் தந்தை உழவுத்தொழில் செய்து வந்ததால் அன்னமையாவும் இளமையில் உழவுத்தொழில் செய்துவந்தார். “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான “திம்மக்கா” அன்னமாச்சாரியாரின் மனைவி. மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

தாளப்பாக்கம் அன்னமாசாரியரின் தந்தை இவரை அடுத்த ஊருக்குச் சென்று அங்கிருந்து வைக்கோல் கட்டைத் தூக்கிவரும்படி ஏவினார். வைக்கோல் கட்டைத் தூக்க இயலாது இவர் திருமலை திருப்பதிக்கு ஓடிவிட்டார். அங்கு பசி மேலிட்டுத் துன்புற்றபோது, திருமாலின் சதியான அலர்மேல் மங்கைத்தாயார் இவருக்குப் பசி நீங்க அன்னமளித்து ஆட்கொண்டார். அன்னையின் அருளால் கவிஞரானார். அன்னை மீது ஒரு சதகம் பாடினார். பெற்றோர்கள் இவரைத் தேடி வந்து தம் கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். வீரசைவமரபில் பிறந்த இவர் திருப்பதிக்கு ஓடியது முதல் திருமாலடியவரானார். தினமொரு பாடலாக திருமால் மீது பாடினார். இவர் பாடல்களின் அருமையைக் கேள்வியுற்று, அப்பகுதியில் ஆட்சிபுரிந்த சாளுவ நரசிம்மராயர் இவரைப் பாடுமாறு வேண்டினார். மனிதரைப் பாட மறுத்தவரை சாளுவ மன்னர் விலங்கிட்டுச் சிறையிலிட்டார். விலங்குகள் தாமே தெறித்து விழுவதைக் கண்ட மன்னர் இவரது பெருமையை உணர்ந்து பணிந்ததாக நம்பப்படுகிறது.

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் சிருங்கார சங்கீர்த்தனம், அத்யாத்மிக சங்கீர்த்தனம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இசைநூல்களை எழுதினார். சதக நூல்கள், சிருங்கார மஞ்சரி, இரண்டடி இராமாயணம், வேங்கடாசல மாகாத்மியம் போன்ற பிற தெலுங்கு நூல்களையும் இயற்றினார். அன்னமாசாரியர் பாடிய இசைப்பாடல்கள் கீர்த்தனங்களல்ல, பல்லவி அனுபல்லவி சரணம் கொண்டவையல்ல. இவை திருவேங்கடநாதன் புகழையும், நாம சங்கீர்த்தனங்களையும் பாடியவை. அன்னமாசாரியரின் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டில் சங்கீத வடிவம் பெற்றன. அவர் பாடிய இசை தமிழிசை; மொழி தெலுங்கு மொழி. இவருடைய புதல்வரும் பின்வந்தோரும் இவருடைய பாடற்பரம்பரையை வளர்த்தனர்.

இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சார யாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, ”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர்.

அன்னமாச்சாரியார் 32,000-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றினார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலிலுள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறையில் வைக்கப்பட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் 1922-ல் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. கீர்த்தனைகள் சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என வகைப்படுத்தப்பட்டன. வைணவ ஆச்சாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தைத் தழுவிய இவரின் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல்களைப் போன்ற கருத்துடையவை. ராமானுஜர் மீதும், ஆழ்வார்கள் மீதும் சில பாடல்களைப் பாடினார்.

அன்னமய மார்க்கம் : அன்னமாச்சாரியா தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப்படுகிறது. அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, “மோக்காலு_மிட்டா” என்னும் இடம் இருக்கிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு “முழங்கால் முறிச்சான்” என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை “மோகாலு மிட்டா” என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்த போது அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் ராமானுஜர் மீதும் (கதுலன்னி கிலமைனா, உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (வாடே வேங்கடேசுனனே வாடே வீரு…) சில பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதியக் கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் “ப்ரஹ்மம் ஒக்கடே” என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளைக் கண்டித்தார். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளைத் தொடர்ந்து கேட்பதினாலேயே பொருள் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டும் கீர்த்தனைகளை இயற்றினார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு. வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் எழுதினார். இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் எழுதிய திவிபர்த ராமாயணா(இரண்டடி ராமாயணம்), சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டு நூல்களும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.

அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரைவரிசை செய்தார்.

அக்காலத்தில் தெலுங்கு கன்னடப் பிரதேசங்களில் முகம்மதியப் படைகள் கொலை கொள்ளை மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தன. இவற்றால் கோயில்களுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தது. அன்னமாச்சாரியரின் பாடல்களினால் ஆந்திரநாட்டில் பக்தியுணர்வு கிளர்ந்தெழுந்தது. ஆழ்வார், நாயன்மார் பாசுரங்களினால் உந்தப்பட்டு அன்னமாச்சாரியர் பக்திப்பாடல்கள் பாடினார்.

அன்னமையா பாடியவை கர்நாடக சங்கீதத்தின் ஆதிக் கீர்த்தனங்கள் என்று பெயர் சூட்டுவது பிழை என்பது அறிஞர்கள் கருத்து. அவை கீர்த்தனங்கள் அல்ல என்று அறிந்தோர் எழுதினர்.

ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் “தலப்பாகமரா” எனப்படும் “சங்கீர்த்தன பண்டார” என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். “தலப்பாக” கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு “சங்கீர்த்தன பாதுகாப்பு அறை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. “ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை” பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார். 1922ம் ஆண்டில்தான் இவரது கவிதை மீண்டும் வெளிகொணரப்பட்டது. “சங்கீர்த்தன பண்டார” அறையில் இருந்த இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’அன்னமய்யா’ என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். இவரது பாடல்கள் பல தெலுங்கு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொண்ணூற்றி ஐந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா பிப்ரவரி 23, 1503-ல் காலமானார்.2019-ல் ஆந்திர மாநிலம், துவாரகையில் அன்னமாச்சாரியாருக்காக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு, தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும் அன்னமாச்சாரி பட்டி – தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர் – சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் ப்ரஹ்மம் ஒக்கடே என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்தவர் இவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையில், மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. திவிபர்த ராமாயணா’ ‘சிருங்கார மஞ்சரி’ ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம்வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உடையதாக இருந்தது. சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

இசைநூல்கள்

சங்கீர்த்தன லட்சணம்

தெலுங்கு நூல்கள்

வேங்கடாசல மாகாத்மியம்

12 சதக நூல்கள்

சிருங்கார மஞ்சரி

இரண்டடி இராமாயணம்

சிருங்கார சங்கீர்த்தனம்

அத்யாத்மிக சங்கீர்த்தனம்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ திவ்யார்த்த தீபிகையில் இருந்து சிறப்பு குறிப்புக்கள்-

April 27, 2025

அத்யாத்ம க்ரந்த நிர்மாணம், அந்யேஷாம் ச அவ போதநம் அர்ச்சாவதார – ஸேவாச…”என்ற ஸ்லோகத்தின் படி வாழ்ந்தவர்

நூலுக்கு வயது நூறு! காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது-அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர் எழுதிய முதல் நூல்.அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் – 1200!-எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!ஒரு மொழியில் எழுதிய புத்தகத்தை மற்றொரு மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்யவில்லை.

குவலயங் கண்ணி கொல்லி யம் பாவை‘ (பெரி.திரு.2.7:1) என்ற திருவிட எந்தை பற்றிய திருமொழிப் பாசுர அடியிலுள்ள ‘கொல்லியம் பாவை- என்பதற்குத் தீபிகையிலுள்ள குறிப்பு வருமாறு: ‘வல்வில் ஓரி’ என்றசிற்றரசனுக்கு உரியதாய்க் ‘கொல்லி’ என்னும் பெயர் கொண்டான். மலையின் கண்ணுள்ள(இது சேலம் மாவட்டம் – திருச்சி மாவட்டங்களில் (சேந்த மங்கலம் துறையூர்) அருகில் பரவி யுள்ள ‘கொல்லிமலை’ என்று கருத இடம்
தருகின்றது.) ஒரு பெண்பாற் பிரதிமையே கொல்லியம் பாவை யாகும். இது தேவ சிற்பி போல் அமைக்கப் பெற்ற அழகிற் சிறந்த பதுமை யாகும்.அம்மலை யிலுள்ள தேவரையும் மனிதரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும் போது அவர்களது வாடை பட்டவுடனே அது தானே நகை புரியுமாறு பொறி வைக்கப் பெற்ற தென்பர் இப் பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம்(சித்திர மடல்). . இப் பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவரப்படுவதாய் பெருங் காம வேட்கை
உறுவித்து இறுதியில் கொல்லும் என்று கூறுவது. இது தெய்வ நிர்மாணம் என்பர். ஒரு காலத்தில் திருமகள் தம் முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இக் கொல்லியம் பாவை உருக் கொண்டு ஆடினள் என்பதை,செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று சிலப்பதிகாரம் செப்பும். இக் கொல்லிப் பாவை கொல்லி மலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெல்லா வகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணையில் காணத் தகும்.இப் பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவக சிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப் பாவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.ஆகவே தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப் படும்.இப் பாசுரத்தில் ‘கொல்லியம்பாவை போன்றவள்’ என்று கூறாமல் ‘கொல்லியம் பாவை’ என்றே சொல்லி வைத்தது முற்றுவமை(உருவகம்). ‘தாவி வையங் கொண்ட தடந் தாமரைக்கே’ என்றது போல-

‘துளையார் மென்குழல் ஆய்ச்சியர்‘ (பெரி.திரு. 3.8:8)என்ற தொடருக்கு எவ்வாறு பொருள் எழுதுவது?குழலாகிய கூந்தலுக்குத் துளை உண்டோ? துளை பொருந்துவது புல்லாங் குழலுக்கே யாகும். ‘துளை’ என்ற அடைமொழி கூந்தலுக்கு ஏற்காது. எனவே, “துளைகள் நிரம்பிய புல்லாங் குழலைச் சொல்லக் கடவதான ‘குழல்’என்ற சொல்லால் கூறப்படுகின்ற கூந்தலை யுடையவர்களான ஆய்ச்சிகள்” என்று பொழிப்புரை வரைய வேண்டும்.இங்கே ஆழ்வார் சங்கப் பாடல்களில் வரும் அரியதோர் தமிழ் மரியாதையைப் பின்பற்றி யுள்ளார். சங்க நூல்களிலிருந்து நம் சுவாமி எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்.
(i) புல்லிலை வஞ்சிப் புரமதிலலைக்கும் பொருநை |(புறம்-387)
(ii) “நெட்டிலை வஞ்சிக்கோ” (பரிபா, 102 பரிமேலழகர் உரை மேற்கோள்)
இவ் விரண்டிகளிலும் வஞ்சி மா நகர் விவட்சிதமே யல்லாது வஞ்சி மரம் விவட்சிதம் அன்று. ஆயினும் விருட்ச விசேடப் பொருட்கு உரிய புல்லிலை, நெட்டிலை என்னும் அடைமொழிகளை அம் மரப் பெயர் அடைமொழிகளை அம்மரப் பெயர் கொண்ட வஞ்சி மா நகர்க்கு ஏற்றியுள்ளார்கள்.
( iii) ‘ஒளி திகழ் உத்தி உருக் கெழு நாகம்” (பரிபா.12)’நாகம்’ என்னும் சொல் புன்னை மரத்துக்கும் பாம்புக்கும் பெயர். பரி பாடலில் ‘நாகம்’ என்ற சொல்லை யிட்டுப் புன்னை மரத்தைப் பேசுங்கால் பாம்புக்குரிய அடைமொழியைப் புன்னைக்கு இட்டனர். இவ்வாறு தமிழில் ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழியை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு. ‘இங்ஙனே தமிழ் நூல்களிலுள்ள சம்பிரதாயம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஏறி யுள்ளதை உணர வேண்டும்’ என்பர் நம்சுவாமி.

நாச்சியார் திருமொழியில் (3:9) ‘கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து’ என்ற இடத்தில் எல்லில் இரவில் என்று சுவாமி பொருள் கூறியதை தமிழ்ப் புலவர் ஒருவர் மறுத்து எல்லி என்பது பகலையே குறிக்குமாதலால்,’அல்லில் பிழைத்து’ என்று பாடத்தையே திருத்த வேண்டும் என்றும் எழுதினார். ‘அல்லும் பகலும்’ என்ற உலக வழக்கை அவர் தம் கருத்துக்கு அரணாகக் காட்டினார். ஆனால் நம் சுவாமியோ ‘எல்லூர்ச் சேர் தரும் ஏறுடை யினத்து’ (குறுந்.275) என்ற குறுந்தொகைப் பாடலின் அடியையும் மலை படு கடாத்தில் (அடி 416)வரும் ‘எல்லினிப் புதினே’ என்ற தொடரையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய ‘இராக் காலத்தை யுடைய யாயிராய்’என்ற பொருளையும் காட்டி நாச்சியார் திரு வாக்கின் தூய்மையை நிலை நாட்டினார்.

பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றி நன் னீர்தூய் –
புரிவது வும் புகை பூவே
(திருவாய் 1.6:1)
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘பரிவதில் ஈசன்’என்பதற்கு ‘ஹேய ப்ரத்ய நீகனான ஈஸ்வரனை’ என்று பிள்ளானும் பெரிய வாச்சான் பிள்ளையும் உரைப்பர். இதனை நம்பிள்ளை விவரித்து, கல்யாண குண யோகத்தையும் சேர்த்து உரைப்பர். எம்பெருமான் எப்படிப் பட்டவன் எனில்: ‘பரிவதில் ஈசன்’ என்கிறார். அதாவது துக்கம் இல்லாதவன்;எம்பெருமானுக்குத் துக்கம் இல்லை என்று சொல்லி விட முடியாது. பிராட்டியைப் பிரிந்து பட்ட துக்கம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பிறர் படும் துன்பத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை என்ற தயை குணம் எம்பெருமான் ஒருவனுக்கே உள்ள தென்றாகையால் இந்தத் துக்கம் குற்றமன்று என்று கூறுவர் நம் சுவாமிகள். இதனால் எம்பெருமானின் தயை என்னும் கல்யாண குணம் சொல்லப்பட்டது.-திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது கண்ண பிரானின் திருநாமமே யாயினும் தான் நேரில் சென்று உதவாத துக்கத்தைக் காட்ட,கண்ணன் திருவுள்ளம் புண்பட்டுக் கதறினது அனைவரும் அறிந்ததே. மேலும் எம்பெருமான் ஆனையின் துயரம் தீர அரை குலைய தலை குலைய மடுக் கரைக்கு ஓடி வந்து உதவினான். இது பிறர்க்காகப் படும் துக்கம் என்பதும் வெள்ளிடை மலை.

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லிய செவ் விதழே (திருவாய் 8.9:6)’எம்பெருமான் திருவருளால் இத் திருப்பதியில் வளர்ந்த கமுகு ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை யொத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்’ என்கின்றாள். ‘திருவருள் கமுகு’என்பதற்கு நம் சுவாமி இன்சுவைமிக்க ஈட்டின் ஸ்ரீ சூக்தியை எடுத்துக் காட்டுவார். அச் சூக்தி : “திருவருள் கமுகு என்று சில உண்டு; அதாவது நீரால் வளருகை யன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன’ சில”. இதனை எண்ணி எண்ணி மகிழ வேண்டும். இப் பாசுரத்தால் “இந்த ஆன்மா பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டது மன்று; தனக்குத் தானே உரியதுமன்று; பகவான் ஒருவனுக்கே உரியது” என்ற கருத்தாகிய ‘அநந்யார்ஹ சேக்ஷத்துவம்‘ தெளிவாக விளங்குகின்றது.

சேதந லாபம் தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே சித்தாந்தம். எம்பெருமான் சிருஷ்டி அவதாராதி முகத்தாலே கிருஷி பண்ணுவ தெல்லாம் ‘ஒரு சேதநன் நமக்குக் கிடைப்பனா’ என்கின்ற நப்பாசை யினாலன்றோ?கீதையிலே ‘ஸ மஹாத்மா துர்லப:‘ என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகின்ற வார்த்தை யன்றோ? ‘வாஸு தேவஸ் ஸர்வம்’ என்றிருக்கின்ற மகாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே! என்றன்றோ சொல்லுகின்றான்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகின்ற தன்றோ?எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் – ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவில் –ஜநாநிநம் லப்தவா” என்கின்ற அற்புதமான ஸ்ரீஸுக்தியில் இப் பரமார்த்தம் தன்னை ஆழ்வார் சுவாநுபவ முகத்தாலே இப்பாசுரத்தில் வைத்தருள்கின்றார்-என்னில் முன்னம் பாரித்துத்தானென்னை முற்றப் பருகினான்” என்றது சத் சம்பிரதாய சுவைஞர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. ‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன்’ என்று தாம் ஆசைப் பட்டிருந்ததாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மநோரதமே வலிதென்றும் அதுதான் முற்பட்டதாயிருந்து கார்ய கரமாகின்ற தென்றும் சொல்லிற்றாயிற்று.
என் உயிருண்ட மாயன்’ (7)என்றும் ‘என்னுயிர் தானுண்டான்’ (8) என்றும் எம்பெருமான் உண்ட படியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேட்சிதமா யிருக்குமே; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப் பாசுரத்தில் “தான் என்னை முற்றப் பருகினான்” என்று. இவருடைய ‘உண்ணுஞ்சோறு பருகுநீர்’ அவன்; அவனுடைய ‘உண்ணுஞ் சோறு பருகு நீர்’இவர். இங்கு தம்மை மறந்து இப் பாசுரத்தை நம் சுவாமிகள் அநுபவித்ததைக் காண முடிகிறது.

‘என் ஆனாய்'(பெரி.திரு. 1.9:2) என்பதற்கு ‘ஆனை’ விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே என்றபடி.”தென்னானாய், வடவானாய், குட பாலானாய், குண பால மதயானாய்” என்று திருநெடுந் தாண்டகத்திலும் (10)அருளிச் செய்வர். “என்னானை, என்னப்பன், எம்பெருமான்”என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

‘என் தந்தை’ என்பது (பெரி.திரு. 1.1:6)’எந்தை’ என மருவிற்று. ‘வாழ்நாள்’ என்பது ‘வாணாள்’ என மருவிற்று. ‘கொள்ள’ என்பது ‘கொள’ எனத் தொக்கி நிற்கின்றது; வெருக்கொள – அச்சங் கொள்ள என்றாயிற்று.பாடா வருவேன் (பெரி.திரு. 4.7:5) உன்னுடன் பாடிக் கொண்டு வருகின்ற என்கை. ‘பாடா’ ‘செய்யா’ என்னும் வாய்பாட்டுடன் இறந்த கால வினையெச்சம்,

தொழுதாடித் தூ மணி, வண்ணனுக்கு ஆட் செய்த‘ (திருவாய். 4.6:11) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் அடியில் ‘ஆட் செய்த நோய் தீர்ந்து‘ என்று தொடர் அமைந்திருப்பினும் ‘உருபு பிரித்துக் கூட்டுதல்’என்ற முறைமையின் கீழ் நோய் தீர்ந்து ஆட் செய்த’ என்று பொருள் கொள்ளத் தகும். ‘ஆட் செய்த’ என்று உருபு பிரித்துக் கூட்டியதால் ‘சொல் திரிந்து பொருள் திரியா வினைக் குறை’ (நன்னூல்- 346) என்ற நன்னூல் நூற் பாவிற்கு ஏற்ப ‘செய்து’ என்பதை எச்சத் திரிபாகக் கொண்டு ‘செய்ய’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறுவர். இவ்விடத்தில் சிறந்து விளங்கும் பொருளையும் வழங்குகிறார் சுவாமிகள். அஃதாவது, ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று. ஆன்மா உள்ள வரையில் தொடருமது.ஆகையால் ‘நோய் தீர்ந்த’ என்றது மோகம் தெளிந்து சற்று உணர்த்தி உண்டானமை பற்றியதாகும். இவ்வாறு இலக்கண வழி மூலமும் பொருட் சுவையை உணர்த்துகிறது என்று சுவாமிகள் தெளிவிப்பதால் சுவாமியின் தமிழ்ப் புலமை தெற்றென விளங்கும்.

திருவாய் மொழி (6.8)தலைமகள் பறவைகளைத் தூது விடும் பதிகமாகும். இதில் 8-ஆம் பாசுரத்தில் ‘அருள் செய்து ஒரு நாள்’ (2-ஆம்அடி) என்ற பாடமே நம்பிள்ளை முதலாக ஆசாரியர்களின் காலத்தில் வழங்கி வந்தது. இப்பாடத்தில் வினை முற்று(கிரியா பதம்) இல்லை யாகிறது. குருகிடம் ‘நீ போய்ச் சொல்ல வேணும்’ என்கின்ற வேண்டுகோள் இருக்க
வேணுமே; அ ஃது இங்கு இல்லை; ஆனாலும் வருவித்துக் கொள்ளலாம் என்பது நம்பிள்ளையின் திரு வுள்ளம்.பன்னீராயிரப்படி ஆசிரியர் வாதி கேசரி ஜீயர் ‘அருள் செய் ஒரு நாள்’ என்று பாடம் காட்டுகின்றார்;” ‘அருள் செய்து’என்று பாடமான போது ‘என்று சொல்’ என்று வாக்கிய சேஷமாகக் கூடாது” என்று எழுதி யுள்ளார். ‘அருள் செய்து‘என்று வினை எச்சமான பாடமே பிரசித்தம் என்று நம் சுவாமிகள் அதனையே கொள்வார். தொடர்ந்து ஈற்றடியின் முதலிலுள்ள ‘ஏசறு’ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டி யருள்கின்றார் என்பதையும் சுட்டி யுரைத்து தம் கருத்துக்கு அரணாக்கிக் கொள்வர். ஏசறு துக்கப்படு. ‘நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு’ என்பது தாற்பரியம். இவ்வாறு விளக்குவர் நம் சுவாமிகள்..

வியாக்கியானத்தில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’என்று வருகிறது. அது பிழை என்று காட்டி விளக்கமும் தருவார் நம் சுவாமி. “சக்கர வர்த்தி என்பது தசரதனைக் குறிக்கும். அவனுடைய மகன் என்ற பொருளில் ‘சக்ரவர்த்தி திருமகன்’ என்று ஒற்று மிகாது வர வேண்டும். வேற்றுமைத் தொகை யன்றோ?” என்பர். இங்ஙனமே “பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று ஒற்று மிகாது எழுத வேண்டும்” என்பர்.

‘ப்ரஹ்ம்’ என்று எழுதுவதே நேர்மை யானது;’ப்ரம்ஹ’ என்று எழுதுவோரைக் கண்டித்தார்- ஸ்ரீ’ என்ற சொல்லும் தமிழில் பயிலாது என்றும், அதனைத்’திரு’ என்று பெயர்த்தோ அல்லது ‘சீர்’ என்று திரித்துத் தற்பவமாகவோ தான் வழங்க வேண்டும் என்பது அவர் தம் கொள்கை. ‘சீர் வசன பூடணம்’ என்ற உபதேச ரத்னமாலைப் பிரயோகத்தைக் காட்டி ‘ஸ்ரீபாஷ்யம்’ என்பதுபோன்று செய்யுளில் வழங்குவதைக் கண்டித்துள்ளார்.

கற்றறிந்த பெரியார் ஒருவர் தம் கட்டுரை யொன்றில் “முயற்சிக்கத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது”என்று எழுதி யிருந்தார். அதனைக் கண்ணுற்ற நம் சுவாமி”முயற்சி என்கின்ற சொல் உண்டே யல்லது அதன் மேல் ஒரு ப்ரத்யய மேற்றி ‘முயற்சிக்க’ என்பது பரிஹாஸ்யங்களிலும் கடையானது” என்று கண்டித்தார். மற்றொருவர்”முயற்சிக்கிறேன்” என்று எழுதிய போது ‘முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கன்பையே‘ (கண்ணி நுண்.10) என்ற மதுர கவிகளின் திரு வாக்கினை நினைவுப் படுத்தித் திருத்தினார்-சொற்றொடர்களை மிகவும் பிரித்தெழுவது தமிழின் நரம்பறியாத செயல் என்பர் நம் சுவாமி. சொற்கள் புணர்ந்து தொடருவதில் ஓசை யின்பம் சிறக்கும் என்பது ஸ்வாமியின் கருத்து. இவ் வாய்வு வுரை, வீற்று இருக்கும்,நூற்று அந்தாதி, நூற்று எட்டுத் திருப்பதிகள் போன்ற தொடர்ப் பிரிவுகளைக் கண்டு ஸ்வாமியின் திரு வுள்ளம் புண்பட்டதுண்டு.

லட்சித லட்சணை’ என்பது ஒரு மரியாதையாகத் தமிழ் நூல்களில் வரும் மரபாகும். பரிபாடலில் (3-30)கேசியை வதம் செய்த கண்ண பிரானைக் குறிப்பாக ‘கூந்தல் எரி சினம் கொன்றோய்’ என்று வருகிறது. இங்குப் பரிமேலழகர் “கேசி – குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன். இப் பெயர் கேசம் என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றிக் கூந்தல் என்றார்” என்று விளக்குகின்றார்.-முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும் ‘கூந்தல் வாய் கீண்டானை‘(இரண். திருவந். 93) என்று பிரயோகித்துள்ளார். தீபிகை யுரையில் ஸ்வாமியின் குறிப்பு : “தலை மயிர்க்கு வாசகமான கூந்தல் என்னும் சொல்லாட்சி லட்சணை என்னும் வழியில் கேசி என்பவனைக் குறிக்கும். எங்ஙனமே என்னில்; கூந்தல் என்பதற்கு வடமொழிப் பெயர் ‘கேசம்’ என்பதாகும்.அச் சொல் கேசியை நினைப்பூட்டும்” என்பதாகும்.
திருமங்கை மன்னனும், தம் திருமொழியில்,-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள (10.9:1) என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருட் கண் வந்த பூதனை புள்ளுருவாகி வர வில்லை. அவள் பேய்ச்சியாக வந்தாள்-இங்கு ஸ்வாமி தம் தீபிகை உரையில் “மேலே சஞ்சரித்துக் குழந்தைகளை அனுங்கப் பண்ணும் சில பறவைகள் உண்டு; அப்படிப் பட்டவளாய் வந்தாள் என்று இவளது கொடுமையைக் குறிப்பிட்டவாறு” என்று வரைந்த உரை குறிப்பதாகும். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்வாறே உரைப்பார்.

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை‘ என்ற தொடருக்கு லட்சித லட்சணை வழியில் அரிய விளக்கம் அளித்தார். ‘புள்’ என்பது அலகை (=கேடு)உடையது அன்றோ! ஆதலால் அலகை ( பேய் மகள் நள்ளிருள் வந்த பூதனை என்று தேறுகின்றது. வடமொழி தமிழ்மொழி இலக்கண மரியாதைகள் எல்லாம் ஸ்வாமிக்கு நன்கு வசப்பட்டிருந்தது

தமிழ் நெறியை அறியாதார் சிலர் “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்’ (பெரியாழ். திரு . 4.9:3) என்ற விஷ்ணு சித்தன் திரு வாக்கில் உள்ள ‘போலும்’ என்பதை ஐயப் பொருளாக்கி அவப் பொருள் கண்டனர். ‘ஆங்கவுரையசை’ ‘ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்’ (தொல்.சொல். 277, 278) என்ற நூற் பாக்களைக் கொண்டு’போலும்’ என்பதை அசை நிலையாகக் கொள்வதே தமிழ் மரியாதைக்குச் சேரும் என்பது ஸ்வாமியின் முடிபாகும்.

இருந் தமிழ் நூற் புலவன்‘(பெரி.திரு.1.8:10) என்று சிங்கவேள் குன்றத் திருமொழியில் குறிப்பிடுவர். இவர் தம் ஆறு பிரபந்தங்களும் மாறன் அருளிய மா மறைக்கு ஆறு அங்கங்கள் என்று வகுத்துக் கூறுங்கால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ‘இருந்தமிழ் நூற் புலவர் பனுவல் ஆறும்‘ என்று குறிப்பிடுவர். அதனால் ‘இருந் தமிழ்’ என்று கலியனால் கருதப் பெற்றது நம்மாழ்வாருடைய நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகும் என்பது தெளிவு.

பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ் வாயன் என்கோ?
அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங் கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்வன் எங்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே!(
திருவாய். 3.3:3)
ஆழ்வார் பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக் கருதுபவர்கள்’அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை எடுப்போமா?”என்று அலமந்து கிடப்பது போல், அத்தைச் சொல்லுவேனா?இத்தைச் சொல்லுவேனா? என்று அலமந்து, எங்கும் எல்லா வகைப் பொருள்களுமாயும் தோன்றுகின்ற அப் பெருமானுக்கு வாசிகமாகக் கைங்கரியம் செய்ய நினைத்து ‘சகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம் பெருமானுடைய தன்மையை யான் என்ன வென்று சொல்லுவேன்?’ என்று நிர்வேதத்துடனே அவனது சர்வாத்மத்தைப் பேசுகின்றார் இத் திருவாய் மொழியில். அதில் மூன்றாவது பாசுரம் இது : இதற்குச் சுவாமியின் அநுபவ உரை இது :“ஆழ்வார் தம்மைக் கடாட்சித்து தம்மோடு முதலுறவு)பண்ணின திருக் கண்களின் அழகில் ஈடுபட்டு முதலில்’பங்கயக் கண்ணன்’ என்றார். அந்தக் கண்ணோக்குக்குத் தப்பினாலும் தப்ப வொண்ணாத புன் முறுவலை யுடைய வாயழகில் ஈடுபட்டுப் ‘பவளச் செவ் வாயன்’ என்றார். அந்த நோக்கத்திலும் புன் சிரிப்பிலும் ஈடுபட்டுத் தோற்று விழும் நிலமாகிய திருவடிகளில் ஈடுபட்டு ‘அங் கதிர் அடியன்’என்றார். அத் திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகில் ஈடுபட்டு ‘அஞ்சன வண்ணன்’ என்றார்.அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகை யுடையவன் ஈடும் எடுப்பும் இல்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியழகில் ஈடுபட்டுச் “செங்கதிர் முடியன்” என்றார்.திருமுடியினால் விளங்குகின்ற ஸ்வாமித்துவத்தைக் கண்டு’இப் பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது!’ என்று கருதி பின் வாங்காதபடி எப்போதும் அப் பெருமானின் திரு மார்பில் ‘அகலகில்லேன் இறையும்’ என்று இருந்து புருஷகாரம் செய்யும் தாயான பிராட்டியின் சம்பந்தத்தைக் கருதித் ‘திரு மறு மார்பன்’ என்றார் பெருமாளும் பிராட்டியுமான இச் சேர்த்திக்கு என்ன தீங்கு வருகின்றதோ என்று பொங்கும் பரிவினால் பாப சங்கை கொள்ளுகின்ற அடியார்களுடைய அச்சத்தைத் தவிர்ப்பனவான திவ்வியாயுதங்களைக் கருதி ‘சங்கு சக்கரன்’ என்றார்.” சாதி மாணிக்கத்தை) போலி யன்றிக்கே ஆதரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே நிர்த் தோஷமாய்(குற்றமில்லாததாய்) ஸ்வத சித்தமான வடிவழகுடையவனை”என்பது ஈடு முப்பத்தாறாயிரம். மறு – ஸ்ரீவத்ஸம் என்கின்ற மயிர்ச் சுழி.-உரையை ஊன்றிப் படிக்குங்கால் ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நம் ஸ்வாமி அநுபவித்ததை அறிகின்றோம்.உரை நம்மையும் மறந்து இறையபவத்தில் ஆழ்ந்து விடச் செய்கின்றது.

1- யானையை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப் பார்ப்பது போல் பரமானந்தத்தைத் தரும்; எம் பெருமானும் “அப் பொழுதைக் கப்பொழுது என் ஆரா அமுதமே” (திருவாய்2.5:4) என்று இனிப்பான்.
2-யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3-யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனும் கயிற்றினால்”(திருச்சந்த. 83) என்ற படி எம்பெருமானைக் கட்டுப் படுத்தும் பக்தி யாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள்வான். “மதி நலம் அருளினவன்” (திருவாய். 1.1:1)
4-யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமான் சுத்த பவித்திரனாய் சுத்த சத்துவ மயனாய் இருக்கச் செய்தேயும்”பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்”(திருவிருத்.1) உடைய நம் போலியருடன் சேரத் திருவுள்ளமா யிருப்பன், வாத்சல்யத்தாலே.
5-யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டு பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.
6-யானை பாகனுடைய அநுமதி யின்றித் தன் பக்கம் வருகின்றவர்களைத் தள்ளி விடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” (திருவாய். 4.6 8) என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீ கரித்தருளான்.
7-யானையின் மொழியைப் பாகனே அறிவான்;எம்பெருமானின் மொழி திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்?
8-யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல்,திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு;எம்பெருமானும், “கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா நீ கிடக்க வேண்டா…! உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த. 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லா வகையிலும் அடியன்.
9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்.எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோ மன்றோ?
10-யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்”அலம் புரி நெடுந் நடக்கை ஆயன்” (பெரி. திரு. 1.6:2)அன்றோ? “நீண்டவத்தைக் கரு முகிலை” (பெரி.திரு. 2.5:2)
11-யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?
12-யானைக்கு ஒரு கையே உள்ளது; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கை யொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ண முடையவன்” (அர்த்தி தார்த்த பரிதாந தீட்சிதம்)
13-பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான்.

1-நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமானும் சாதி முதலிய வற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்க்காகத் தூது எழுந்தருளும் போது ‘ஞானத்தால் சிறந்தோம்’என்றிருக்கும் வீடுமரையும் துரோணரையும், ‘செல்வத்தால்’சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொருளாக மதியாமல் இவை யெல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதி யிருந்த விதுரருடைய திருமாளிகையிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான். ஆகவே பள்ளத்தை யோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.
2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பியதை வோறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ்வேறு விருப்பத்தை யுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அது போலவே எம்பெருமானையும்..
3-நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம்பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறி யாயிருக்கும் “நீரிலே நெருப்புக் கிளறு மாப் போலே குளிர்ந்த திரு வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்” என்ற முமுட்சுப்படி திவ்விய ஸூக்தி காண்க.
4-நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். “தரு துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை” என்றார் குலசேகரப் பெருமாள்.
5-நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தா யிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே;ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்தாலே ஓலை கட்டித் தூது நடந்தான்.
6-நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயு மிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம்,உபேயத்துவம் என்ற இரு தன்மைகள் உண்டல்லவா?எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக் கொள்வாரும் உள்ளமை காண்க.
7-அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய் கனி கிழங்கு வேர் பலா முதலியவற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதி யொன்றையும் சகிக்க மாட்டாது நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாநுசந்தத்தாலும் போது போக்குதல் அரிது.”ஒருநாள் காண வாராயே” “அடியேன் தொழ வந்தருளே”என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்.
8-சோறு உண்ணும் போது நீர் இல்லாமல் முடியாது;அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே; உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்;எம்பெருமான் இவற்றை விரும்பாதவன், “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்.”
9-கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பி யிருக்கும் எம்பெருமானும் “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் வள்ளல்” கொள்வார் குறையே யத்தனை ஐஸ்வரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதும் என்பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமே யாகும்.
10- நீர் ஐவகைப் பட்டிருப்பது போல எம் பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன். எங்ஙனே என்னில் (i) பூமிக்குள்ளே பொதிந்து கிடக்கும் நீர்; (ii) ஆவரண நீர்; (iii) பாற்கடல் நீர்;(iv) பெருக் காற்று நீர்; (v) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி,அர்ச்சை என எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பான்.
11-நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும்.இடத்துக்குத் தக்கதாய்க் கொள்ளத் தக்கதாயும் விடத் தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்மியான எம்பெருமான் விடத் தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் விடத்தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.
12-நீர் தோண்டத் தோண்டச் சுரக்கும்;’கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில் தந்திடும்”
13-நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தனவாயும் அவனை அடைத்தவர்க்காகவே இருக்கும்.
14-நீர் தானாகப் பெய்ய வேண்டுமே யன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாது; எம்பெருமான் இயல்பும் அப்படியே.
15-நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன் படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத் தக்கவனாகின்றான்.
16- வசிட்ட சண்டாள வேறு பாடின்றியே அனைவரும் ஒரு துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம்பெருமானும் ‘நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத் தானே” என்றும், “கானமும் வானரமும் வேடும் உண்ட வேங்கடம்” என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்னும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன்.
17- நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள் புகுந்து விடும்; எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும்.’திருமாலிருஞ்சோலை மலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
18- தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்.
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது,படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமந் தன்னால்,மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதூர வாங்கி”விழுங்குவார்கள் எம்பெருமானையும்.
20-நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணா நின்றோம். “நேரே, கடிக் கமலத்துள்ளிருந்தும் காணகிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அவன்” “மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாயிடை முத்தும் தருதலும், உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ளம் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ் வுரையும்,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்பன அடைவே பிரமாணம்.பகவத் குணங்களில் சிறு மா மனிசர் அமிழ்தலும், “ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கமையில் நிற்றலும் கொள்க.
21-நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத்தல் போதும் என்பன்; “கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால், வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே”

1-பெய்ய வேண்டும் இடமளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் “வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து என்று ஆங்காங்குச் சென்று அநுக்கிரகிப்பன்.
2-மின்னலுள்ள காலம் நீர் நிரம்பி யிருக்கும் மேகம்;எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடி யிருக்கும் காலத்தில்
கிருபா ரசம் மிஞ்சி யிருக்கும். “இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது; அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்” என்ற முமுட்சுப்படியின் திவ்விய ஸூக்தியும் காண்க.
(3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்; தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான்.வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தரும ஸூஷ்மங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.
(4) பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும் மேகம்;நெஞ்சுலர்ந்து பேசினான்றோ எம்பெருமானும், திரௌபதிக்கு ஆபத்திலே அருகே யிருந்து உதவப் பெறாத குறைக்காக-
5- இன்ன காலத்திலே மேகம் பெய்யு மென்று அறுதி யிட வல்லார் எவரும் இலர். பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யா தொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே; “வந்தாய் போல வாராதாய்! வாராதாய் போல் வருவானே”திரௌபதிக்கு ஆபத்திலே வந்து முகங் காட்டா தொழிந்தான்;விரும்புதலை எதிர்பாராமல் “தாவி யன்றுலகமெல்லாம் தலை விளாக் கொண்டான்”
6-‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்” என்று வளைப்பிட வொண்ணாதது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே””பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழித் தவஞ் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருள வந்தவனிறே”
7- ஜல ஸ்தல விபாக மின்றியே பெய்யும் மேகம்.வேடன், வேடுவச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி,இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிண விருந்து வேண்டடிசிலிட்டவர், அவர் மகன், அவன் தம்பி ஆனை அரவம், மறையாளன் பெற்ற மைந்தன்” ல் என்னும் படியிறே பகவத விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.
வேடன் -குகன்;வேடுவிச்சி – சபரி; பட்சி சடாயு; குரங்கு – சுக்கிரீவன், சராசரம் அயோத்தியில் வாழும் சராசரம்; இடைச்சி சித்தயந்தி; இடையர் -ததிபாண்டன்; தயிர்த் தாழி – ததி பாண்டனுடைய தாழி; கூனி -கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்-கண்ணன் காலத்து, பக்தர்; பிணவிருந்து இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர் பக்த விலோசன ரிஷிபத்தினிகள்; அவன் மகன் – பிரகலாதன்; அவன் தம்பி -வீடணன்;ஆனை கஜேந்திராழ்வான்; அரவம் -சுமுகன்; மறையாளன்-
கோவிந்த சாமி; பெற்ற மைந்தன் -மார்க்கண்டேயன் ஆகிய பதினெண்மர்.
8-மேகம் சரத் காலத்தில் பெரு முழக்க மிட்டுப்போய் விடும், மழை பெய்யாது; பெய்யுங் காலத்தில்ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனேயிறே.
9-விராட பர்வ காலஷேபத்துக்கு வரும் மேகம்;பகவத் விஷய காலஷேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான். ஸ்ரீ சைலேஸ தயா பாத்ர (தனியன்) என்று வந்தானிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே.
10-சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்;அடியார்க்கு இன்ப மாரியாகிய (திருவாய் 4.5:10) கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே.
(11) “விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்கள்”’+ இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்;எம்பெருமான் றானும் “இன்னார் தூதன் என நின்றான்”(பெரி.திரு. 2.2:3); கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான். தூதனாய் மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 11.5:7)
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்;எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. “கஞ்சன் நாள் கவர் கருமுகில்; எந்தாய்”
“தாயர் மகிழ ஒன்னார் தளர”# இத்யாதி.
13-“எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று அநந்ய கதிகளால் எதிர்ப்பார்க்கப் படுகை ஒக்குமிறே.
(14) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கும் துப்பாய தூஉம் மழை’ (குறள். 12) என்கின்றபடியேஅன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயுமிருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப் படுபவனாயுமிறே எம்பெருமான் இருப்பது.
15-எத்தனை கண்ண நீர் விழ விட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளா கிடக்கும் மேகம்; பரதாழ்வான் பலருடனே சித்திர கூடத்தருகே போந்து கண்ண நீரை விழ விட்டு வேண்டின விடத்தும் தம் மனோ ரதம் பெறாமலே மீண்டானிறே’

1-இரத்தினத்தைச் சொந்தமாகவும் அனுபவிக்கலாம்;விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம்.அப்படியே எம்பெருமானைப் புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்;அவனை உபாயமாக்கி ஐஸ்வர்ய கைவல்யாதிகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்.
2-இரத்தினத்தின் மதிப்பை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன்; மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன்; உத்தம அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலணிந்து அநுபவித்து மகிழ்வான். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐஸ்வரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோஷ உபாயமாகக் கொண்டு மோஷ புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை’எனக்குத் தேனே, பாலே, கன்னலே அமுதே’ என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.
3-இரத்தினத்தை இழந்தவன் கதறி யழுவான்.எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. இராம ரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறி யழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்”: ‘இன்பத்தை இழந்தபாவியேன் என தாவி நில்லாதே” “உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன் தொழுவன் ‘ என்றிப்படி யெல்லாமாக கதறி யழுவார்கள்.
4-இரத்தின முடையவன் மார்பு நெறிப்பன்.எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே” “மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே””எனக் கென்னினி வேண்டுவதே “இல்லை யெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்கள்.
5-இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே.
6-இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து. “
7-இரத்தினத்திற்குச் சிலசில ஆதாரங்களில்(ஆஸ்ரயங்களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே. ஆழ்வார்கள் திரு வாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்.
8-இரத்தினம் ஒளியை விட்டு இராது; எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்.
9-இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை; எம்பெருமானுக்கும் பிராட்டியால் ஏற்றம்.
10-இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும்,இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.
11-இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.
12-இரத்தினம் எவ்வளவு உயர்ந்த தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும். எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து (அர்ச்சையில் சௌலப்பியத்தைக் காட்டுகின்றவனன்றோ?
13-இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார்; எந்த
வேளையில் யார் கொள்ளை கொள்வாரோ என்று துஞ்சாதிருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை;கண்ட பின்பும் இல்லை.

நிதியையும் வைத்த மாநிதியையும் ஒப்பு நோக்கி நம் ஸ்வாமிகள் அநுபவித்தவை: ஸ்வாமிகளின் சிந்தனை யோட்டம்.
1-புதைத்து வைக்கப் பெறும் பொருள் ‘நிதி’எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப் பெறுபவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;எம்பெருமானாகிய நிதி வைத்த மா நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.
(2) நிதியானது தன்னை யடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வாரோ என்ற அச்சத்தால் துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” . காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை;கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை.நிதியானது ‘சித்தாஞ்சனம்’ அணிந்த சில பாக்கியவான்களுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே கிடைப்பன்-
3-நிதி யுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் ‘எனக்கு ஆரும் நிகரில்லையே ‘மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே” ‘இல்லை யெனக்கெதிரில்லை யெனக், கெதிரில்லை யெனக் கெதிரே என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்துள்ளவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர்.
4-நிதியை இழந்தவன் கதறி யழுவன். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. ஸ்ரீ ராமனாகிய வைத்தமா நிதியைஇழந்த பரதாழ்வான் சபையில் கதறி யழுதானன்றோ?“பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” “இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே “எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே” * “உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்”” “என சொல்லிப் புலம்புவனே”” என்று இப்படி யெல்லாம் கதறி யழுவார்கள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லா சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறி யழக் கூடுமோ அப்படிக் கதறி யழ வேண்டும் என்பர்.

ஐதிகங்கள்
அம்மங்கி அம்மாள் என்ற ஓர் ஆசிரியர் நோயால் வருந்தி யிருக்க, நஞ்சீயரும்?நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப் படுவதைக் கண்டு நஞ்சியர் ‘ஸ்வாமின்! தேவரீர் சாமானிய மனிதரன்றே;எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கின்றீர்; குணாநுபவத் தாலல்லது போது போக்கி அறியீர்; இப்படி யிருக்க உம்மை மற்றவர்களைப் போல இப்படிக் கஷ்டப்படுத்துகிறானே (இறைவன்) என்றாராம்.அதற்கு அவர் “நீயாள, வளையாள மாட்டோமே” என்றானன்றறோ கலியன் பாசுரம். எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால்)கிலேசப்பட்டு தானே ஆக வேண்டும்” என்றாராம். பிறகு வெளியே எழுந்தருளிய பின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி ‘பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பெரி. திரு. 3.6:9 உரை -புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ் வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்)

2- ‘குடதிசை முடியை வைத்து’ (திருமாலை19) என்ற பாசுர உரையில் காணப் பெறுவது. “மேலைத் திக்கு உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிடேகத்தை யுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத் திக்கு – சகல லோகமும்,உய்விக்கும்படி சரணமடையக் கூடிய தன் திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு – முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத் திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகை யெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத் திக்கு – தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது இரு கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற் கொள்கை.

3- ‘அமலனாதி பிரான்’ (1) – இதன் உரையில் : பிள்ளை திருநறையூர் அரையரைச் சிலர்”பெரிய பெருமாளை அநுபவிக்க இருந்த இந்த ஆழ்வார்(திருப்பாணாழ்வார்) திருவேங்கடமுடையான் பக்கம் போவானேன்?” என்று கேட்க, “ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையில் ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப் போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையில் கால் தாழ்ந்தார்” என்றாராம். “ஒருவனைக் கவி பாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்;பரம பதத்தில் நின்றும், வட மதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப் போலே வைகுண்டத்தில் நின்றும் திருமலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது;அவ் வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்.

4-‘கொண்டல் வண்ணனை‘ (அமலனாதி10) என்பதன் உரையில் வருவது. கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹு ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற் போல,இவரும் (திருப்பாணாழ்வார்) பண்டு வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் திருப் பவளத்திலே கமழா நிற்பதாகக் கருதி அநுபவிக்கிறார் ‘வெண்ணெய் உண்ட வாயன்’ என்று தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐஸ்வர்யத்தைப் புசிக்கைக்கு ‘எனக்கு ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெருமாளைப் (இராமனைப்) பெற்றதைப் போல நந்தகோபரும் “கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்” என்றபடியே திருவாய்ப்பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு அடங்கலும் (கவ்ய ஸம்ருத்தி அடங்கலும்) பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம்.

5- ‘அருள் கொண்டாடும்‘ (கண்ணி நுண்-8) என்பதன் உரையில் வருவது. திருவாய் மொழியில்“எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி” (10.7:3) என்றவிடத்து அருள் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அநுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர்களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம்.எண்ணாத வற்றை எண்ணுகையாவது என்? எனில்:திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு பல பெரியோர் அவை கூடி “எம்பெருமானுடைய ஸ்வரூப குண விக்கிரக விபூதிகளை யெலாம் முற்றும் நிறைவாகப் பேச வல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம்ஒன்று அவதரிக்க வேணுமென்று நாம் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்” என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி ‘எம் பெருமானுக்கு இன்னமும் குண விக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்’என்றார்களாம். உள்ள குண விக்கிரக விபூதிகளை யெல்லாம் திருவாய்மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார் என்பது இதன் கருத்து.

5- ‘முற்ற முத்துக் கோல் துணையா’ (பெரி.திரு. 1.3:1) என்ற தொடரில் ‘கோல் துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் இரு ஐதிகங்கள்-
நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற் கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது ‘ஓ திரி தண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற பொருளை யுடைய மந்திரத்தை (ஸகர மா கோபாய ) உச்சரிக்க வேண்டும்என்று கேட்டு “எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலை யுடையவரையும் உள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டி யிருக்க, அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ஙனம் சொல்லும்படியாக நேர்ந்ததே” என்று சாதித்தாராம். சாத்திர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு; கிழத் தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்றலற்றமையினாலேஇங்கு.
இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கிற நாளிலே ஒரு கைசிக துவாதசி யன்று பட்டர் பிரம்ம ரதத்தில் எழுந்தருளித் திருவீதி அலங்கரிக்கப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, ‘உத்தமாஸ்ரமியாய் திரி தண்ட தாரியான உமக்கு இக் காரியம் தகாது’ என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர் “எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்” என்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்டஇந்த முக் கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகின்றதோ?இக் கோல் எனக்குத் துணை யல்லவோ? ஸ்வரூப ரட்சணத்துக்கு இக் கோல் இடையூராயின் இஃது எனக்கு வேண்டா” என்று சொல்லித் திரி தண்டத்தை விட்டெறியப் போனாராம்.அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம்.

6- ‘ஓதலும் உன் பேரன்றி மற்றோ தாள்'(பெரி.திரு. 2.7:5) இந்தப் பாசுரத்தின் (இது தாய்ப் பாசுரம்)இக் காட்டிய அடிக்கு ஓர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஓர் ஆய மங்கை இடைவிடாது கண்ண பிரானையே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந்திருந்தாள்; அது கண்ட அவன் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றி விடக் கருதி, தயிர் பால் நெய் முதலியவற்றை அவளிடம் கொடுத்து ‘இவற்றை விற்று வா’ என்று சொல்லி யனுப்பினான். அம் மங்கை கண்ண பிரானை யன்றி வேறொன்றையும் அறியாதவளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு, தெரு வழியே நடந்து செல்லும்போது, ‘தயிர்! பால்! நெய்!’ என்று விற்பது தவிர்த்து “கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று இங்ஙனே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அது போலவே இப் பரகால நாயகியும் ‘ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள்.

7-‘வாத மா மகன் ‘ (பெரி.திரு. 5.8:2) என்ற திருமொழிப் பாசுரத்தின் ‘கோதில் வாய்மையி னாயொடும்உடனே உண்பன் நான்’ என்ற அடிக்கு ஓர் ஐதிகம்.முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையில் உள்ளது போலவே இடை நரம்பு இல்லாமல் இருந்ததென்றும், இப்பொழுது இராமன் அநுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன்உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினானாக, அது முதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர்.இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாஸிஷ்ட இராமாயணத்தில்உள்ளது என்பர்.

8- ‘பண்டை நாளாலே‘ (திருவாய். 9.2:1) என்ற திருவாய்மொழியின் உரையில் இரண்டு ஐதிகங்கள் -கோயில் சீய்த்து (இரண்டாம் அடியில் உள்ளஇதற்கு) ஐதிகம். திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. “கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினைக் களையலாமே‘ (திருவாய்10.2:7) என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல்,,மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே’கோயில் சீய்க்கை’ என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக் கண்ணமங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்றுஉள்ளது. அஃது இது : திருங்கண்ணமங்கை யாண்டான் திருக்கண்ணமங்கை என்னும் திவ்விய தேசத்திலே ஒருமகில மரத்தடியிலிருந்து சருகைத் திரு அலகிடா நிற்க, கூட வாசித்து நாத்திகராயிருப்பான் ஒருவன் ‘பகவான் உபாயம்,நாம் வேறு பயன் கருதாதவர்கள், இப்போது செய்யும் பணிக்குப் பயன் என்ன?’ என்றானாம். அப்போது திருக்கண்ண மங்கையாண்டான் திருஅலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத்தையும் காட்டி,’இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே;இங்கொரு பலம் இல்லை என்று தோற்றி யிருந்ததோ? என்று பணித்தாராம். இங்கு அறியவேண்டுவதாவது; நேரில் காணும் பயன் என்றும் நேரில் காணாப் பயன் என்றும் இருவகைப்படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு பயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை. இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவலகிடாத இடம் கண் கொண்டு காண வொண்ணாததாயும், திருவலகிட்ட இடம் கண்ணால் காண இனிதாயிருப்பதுவும் பயன் காட்டப் பெறுகின்றன.

9-மேற்கட்ட பாசுரத்தின் மூன்றாவதுஅடியில் ‘தாமரைக் கண்களால் நோக்காய்‘ என்ற அடியின் பகுதியின் உரையில் கண்ட ஐதிகம் வார்த்தையிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத்தில்) பிள்ளை தேவ பெருமாள் அரையர் இப் பாசுரத்தைச் சேவிக்கையில் ‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் ‘நோக்காய்,நோக்காய், நோக்காய்….’ என்று பலகாலும் சொல்லிக் கொண்டிருந்து மேலடியிலே போக மாட்டாதே நின்றாராம்.அப்போது கோஷ்டியிலே வீற்றிருந்த அவரது
திருத் தந்தையாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து “பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ஙனம் பலகாலும் சொல்லி
நிர்ப்பந்திக்கலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும், செல்வத்தையும் தந்தருளி யிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைந்து இன்னமும், ‘நோக்காய் நோக்காய் … என்றால் ‘இஃது என்னே!மேலே பாடு’ என்றாராம்.

10- ‘கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன’ (திருவாய் 10.12:1) என்ற பாசுரத்தின் ‘கொடு வினை செய்யும் கூற்றின்’ என்ற அடியின் பொருளுரைக்கும் போது வருவது:யமனுடைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டா என்னுமதற்கு ஐதிகம் காட்டுகிறார் ஈட்டாசிரியர். ஒரு திரு வேட்டையிலே பட்டர் திரு வூற்றங்கரையிலே பேரோலக்கமாக இருக்க, ‘மாலைப் பொழுது ஆயிற்று’ என்று சிலர் விண்ணப்பம் செய்ய, “நாம் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒரு நாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழ்கின்றோம் என்றால் இது குற்றமாக எமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கொடு வரா நின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான்.ஒருவன் பெயரை வாசித்தால் ‘ஓம் காண்! அது கிடக்க;மேலே செல்’ என்றால், பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண்; இந்த விஷயத்திலே’உனக்காகிக் தொண்டு பட்ட, நல்லேனை வினைகள் நலியாமை நம்பு தம்பி” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்குக்காகத் தொண்டுபட்டுப் போது போக்குபவர்களை வினைகள் நலியுமோ?’ என்று அருளிச் செய்தாராம்.

11-‘புண்ணியம் செய்து நல்ல‘ (திருவாய்10.2:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘எந்தை நாமம்‘என்பதிலுள்ள ஐதிகம். இடறினவன் ‘அம்மே’ என்னுமாறு போல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. நஞ்சீயர், “திருநாமம் சொல்லும் போது பக்தி யுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?”என்று பட்டரைக் கேட்க, ‘கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறு ஓர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தர மாட்டாதோ?’ என்று அருளிச் செய்தாராம். திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.

12- ‘கடு வினை களையலாகும்‘ (திருவாய்.10.2:8). என்ற பாசுரத்தில் ‘படமுடை அரவில்… சொன்னோம்’(3-4 அடிகள்) என்ற அடிகளில் அநுசந்திக்கும் ஐதிகம்.ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி ‘யோக ரகஸ்யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!’ என்று சாதித்திருந்த படியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று ‘அடியேனுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போக விட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.அரையர் கோட்டியிலே சேர்ந்த அவர் சேவிக்கும் திருப்பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அரையர்’கடுவினை களையலாகும்’ என்கின்ற இந்தப் பாசுர
அளவிலே வரும் போது, எழிலணி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக் கறியச் சொன்னோம் என்ற அடிகளைச் சேவிக்கும் போது, ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க,,ஆளவந்தாரும் இதைக் கேட்டு ‘ஆழ்வாருடைய தமர்களிலே தாம் சேர வேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப்தம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போதே ஸ்ரீபாதத்தை உடையாரைக் கொண்டு நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார்.° இந்த நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித்தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்த அந்நாளே அவர்குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலைந்து ‘ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்க விமானம் பெற்றிலோமே’ என்று சோகித்து எழுந்தருளி யிருந்தார்.

இங்கே ஈட்டு ஸ்ரீசூக்தி : “திருவத்யயனம் பாடா நிற்க இதைக் கேட்டருளி ஆளவந்தார் ‘நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தம் உண்டாக வேணும்’ என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு (அனந்தபுரத்துக்கு) எழுந்தருளினார்”

13- “வானேற வழி தந்த வாட்டற்றான் பணி வகையே” (திருவாய். 10.6:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் ‘நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே (இறுதி அடி) என்பதற்கு ஐதிகம். பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால் வாங்கிப் போகப் பாராதே காண்! பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளி வரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தைப்) புரிந்து புரிந்து பார்த்துச் சிரி; ‘உன்னை அடி யறுத்தோமே'(உன்னை வென்றோமோ) என்று பார்த்துச் சிரி” என்கின்றார்.பின்பழகிய மணவாளப் பெருமாள் அரையர் ஒரு நோயால் வருந்தா நிற்க திருவரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளைக் கைவிட்டருளின அளவிலே,’நானேறப் பெறுகின்றேன். நரகத்தை நகு நெஞ்சே’ என்று இப்பாசுரத்தைச் சொல்லிக் கிரந்தியை (கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம்.‘நரகத்தை நகு’ என்ற இவ்விடத்திற்கு’நரக லோகத்தைப் பார்த்துச் சிரி’ என்று சிலர் பொருள் கூறுவர். அது வேண்டா; சம்சாரத்திற்கு ‘நரகம்’ என்ற பெயராதலால் ‘சம்சார பூமி’ என்ற பொருளே ஈண்டுக் கொள்ளத் தகும்.

இதிகாசங்கள்
‘தேனுகன் ஆவி போயுக
(பெரி.திரு. 9.8:7) என்ற திருமொழியில் உள்ளது. கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக்குள்ளே கண்ண பிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாகப் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப் பழங்களை விரும்பி உதிர்த்துக் கொண்டு வருகையில் அவ் வனத்துக்குத் தலைவனும்.கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினம் கொண்டு ஓடி வந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதி லாவகமாக அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பற்றி அவ் வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனை மரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. இத்தகைய பல இதிகாசங்கள் தீபிகையை அழகு செய்கின்றன.

இதிகாசமும் ஐதிகமும் – ஓர் அற்புதக் கலப்பு : இந்த இரண்டும் கலந்த நிலையை ஸ்வாமியின் உரையில் கண்ணுறும் போது அது நமக்குத் ‘தேனும் பாலும் கன்னலும் அமுதும்’ கலந்து அநுபவிப்பது போன்ற நிலையைத் தருகின்றது.
“வேங்கடங்கள் மெய்ம்மேல்” (திருவாய் 3.3:6)என்ற அடிகட்கு ஸ்வாமி அருளும் உரை:
கடன்கள் சிலர்’கடன்கள் மேல் வினை முற்றவும் வேம் (இது)’ என்று அந்வயித்துப் பொருளுரைக்க. கடங்கள்-எம்பெருமான் நாம் செய்த பாவங்களை மன்னித் தருள்வது மாத்திரம் அன்றிக்கே பகைவர்கள் மேலும் போக்குவான்,,எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் பழ வினைகள் மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய சிறிய முயற்சியால் தொலைந்திடுமோ என்று ஐயுற்றார்களாம்; அவர்கட்குப் பட்டர் ரசோகதிகளுடன் ஓர் இதிகாசம் எடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலரசனை நோக்கி மூன்று நாள் தரை கிடந்து தவம் செய்தார்;அவ்வளவில் கடலரசன் முகம் காட்டாதொழியவே சீறிச் சினந்து அக் கடல் மீது அம்பு தொடுத்து நின்றார். அது கண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து, அவன் நாலடி வர நின்ற போது ‘உனக்காக அம்பு தொடுத்தேன்’என்றுரைக்க நாணப்பட்டு “உன் விரோதிகளைச் சொல்லுக,அவர்கள் மீது இவ் வம்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல, அப்படியே அவன் தன் விரோதிகள் இருக்குமிடம் குறிப்பிட அங்கே அம்பைச் செலுத்தி உபகாரம் செய்தாரென்து வான்மீகி இராமாயணத்தால் அறிகின்றோம். வணங்கிய மாத்திரத்தில் சேதநன் பண்ணின பாவங்களை யெல்லாம் மறப்பான் இறைவன் என்பதற்குஇந்த இதிகாசம் சான்று.
இவ் விடத்தில் இன்னுமோர் ஐதிகத்தையும் அருளிச் செய்வர் பட்டர். “பண்டு தலை மயிர் இல்லாத ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்று மில்லை கண்டுபோக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்து விட, அதனை அவன் கொடு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து,’இது பெற்றது எங்கே!’ என்ன, ‘உன்தனை மொட்டைத்தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கே யுள்ள அவனைக் கண்டு ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே!’என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து ‘ஏன் தான் குழல்கள் அலைய அலைய, ஓடி வாரா நின்றாய்!’ என்ன,,’ஒன்று மின்று; இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்’ என்றானாம்; அப்படியே கடலை முகங்காட்டுவித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது,கோலைக் கோலைத் தொடுப்பதாக நிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே ‘உமக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’என்றார் அன்றோ?

சம்வாதம் என்பது சம்பாஷணை; உரையாடல். எ.டு.’வீவின்றி நின்றவர்’ (திருவாய் 7.5:11) என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடைபெற்றதைப் போன்றது.அதாவது, “அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க அதற்கு அவர் அளித்த மறுமொழி: “அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்?எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமே யொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்த்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே” என்று அருளிச் செய்தாராம்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்று மேய்த்துவிளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே
-2-5-3-
வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை‘ என்பதற்கு நஞ்சீயர் பொருள் சொல்லும் போது வேறு விதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளை யழகிய மணவாளப் பெருமாளரையர் “இவ் விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் பொருள் இப்படி யன்றே” என்று சொல்லி பட்டர் அருளிச் செய்த விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்;மலை மேல் காட்டில் உள்ள தடாகங்கங்களில் தண்ணீர் குடிக்கப் புகுங்கால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னே யிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்; அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீர்முது செய்து காட்டுவன்;அதைச் சொல்லுகிறது ‘வரை மீ கானில் தடம் பருகு‘என்று,

திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியனவாக அமைந்துள்ளன. பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள்23; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்;மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள். இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர்.
சம்பந்த உபாய பயன்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஞா வஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்” (138)(பிரஜ்ஞாவஸ்தை – மூன்று காலங்களையும் அறியும்
அறிவின் நிலை)-என்று ஆசாரிய ஹிருதயம் கூறும்.

ஞானாவஸ்தைகள்‘ என்னாமல் ‘பிரஜ்ஞாவஸ்தைகள்’என்பதற்குக் காரணம் என்ன? இந் நிலைகள் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக. திருவெட்டெழுத்தின் முப்பதப் பொருள்களைப் பற்றிய ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது?’ஓம் நமோ நாராயணாய’என்பது திருமந்திரம். இதிலுள்ள மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் சொல்லுகின்றன. °அவை சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் என்பன-அதாவது ‘பிரணவம்’ சேஷத்துவத்தையும் (பிறருக்கு அடிமையாய் இருத்தலையும்), ‘நமஸ்ஸு’ பாரதந்திரியத்தையும் (பரன் அல்லது பகவானுக்கு வசப்பட்டு இருத்தலையும்), ‘நாராயனாய’ சேதநன் ஈஸ்வரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்’ தெரிவிக்கின்றன-அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்)நான்காம் வேற்றுமை சேஷத்துவத்தையும் (அடிமைத் தன்மையையும்), உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யர்ஹ சேஷத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈஸ்வரன் ஒருவனுக்கே உரித்தாய் இருத்தலையும்)மகாரம் ஞானவானான ஜீவான்மாவையும் தெரிவிக்கின்றன.திருவெட்டெழுத்தின் மூன்று பதங்களாலும் குறிப்பிடப் பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே தோழி தாய் மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெறுகின்றன.இதனை ஆசாரிய ஹிருதயம் அவஸ்தா திரயம் (திரயம் மூன்று; அவஸ்தை – நிலை) என்று பேசும்.

ஸ்ரீ வைணவத் திருத் தலங்களில் திருவரங்கம் ‘கோயில்‘ என்றும்,திருவேங்கடம் ‘திருமலை’ என்றும், சம்பிரதாயமாக வழங்கப் பெற்று வருகின்றன. நம்மாழ்வாரின் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் திருவரங்கம், திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் (28, 26,31) வருவதால் இச் சிறப்புப் பெயர்கள் பெற்றனவாகப் பெரியோர் பணிப்பர். திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடி ‘திருப் பொலிந்த சேவடி’ (பெரியாழ். திரு. 5.4:7)என்றும் கச்சி நகரிலுள்ள தேவப் பெருமாளுடைய திருவடி’துயரறு சுடரடி’ (திருவாய் 1.1:1) என்றும், திருவேங்கடமுடையான் திருவடி ‘பூவார் கழல்கள்‘ (திருவாய் 6.10:4)என்றும் சம்பிரதாயத் திருநாமங்களாகப் பெரியோர் பணிப்பர்.

திருவரங்க விமானம் ஏழு சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது. பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பர வாசுதேவன் இதிலிருந்து சேவை சாதிக்கின்றான். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் ‘நமோ நாராயணாய’ என்பதிலுள் ஏழு எழுத்துக்கள் ஏழு திரு மதில்களாகவும் அமைந்துள்ளன.எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திரு அரங்கத்திற்குச் செல்பவர்கட்கும் இறைவன் நேரே புலனாவான் என்பது கருத்து.
விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம்; விஷ்ணு காயத்திரியின் அறிகுறியாக தூண்களால் அமைக்கப் பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்)

காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி’ அருளாளனைச்)சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள் : அதாவது தந் மாத்திரைகள் 5;ஞானேந்திரியங்கள் 5 ; கருமேந்திரங்கள் 5; பூதங்கள் 5;ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1,அகங்காரம் 1. மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (ஆன்மா),மகா புருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம்’அட்டாங்க விமானம்’ என்பது; 90 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. தஞ்சைக் கோபுரத்தின் நிழல் போல ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை யுடையது. மேல் தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும் விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஓம் நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ+ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்

நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவர்களுள் சடகோபர் ‘நம்மவர்’ என்று போற்றத் தக்கபெருமை வாய்ந்து ‘நம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயவமாகவும் நம்மாழ்வாரை அவயவி யாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்மாழ்வார். பூதத்தாழ்வாரைத் தலையாகவும் பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும்,
குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக் கைகளாகவும், தொண்டைரடிப்பொடியாழ்வாரைத் திரு மார்பாகவும்,திருமங்கையாழ்வாரைத் திரு நாபியாகவும் மதுரகவிகளையும்எம்பெருமானாரையும் (இராமாநுசர்) திருவடிகளாகவும்
பெரியோர் அருளிச் செய்வர்.

இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமாகவும்,உய்யக்கொண்டாரை (புண்டரீகாட்சரைக்) கண் ஆகவும் மணக்கால் நம்பியை (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும்,ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாகவும், திருக்கச்சி நம்பிகையைத் திருக்கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தனமாயும்,திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலை யாண்டானை முதுகாகவும், கிடாம்பி யாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாகவும்; பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாகவும், வடக்குத் திருவீதிப் பிள்ளையைத் முழங்கால்களாகவும், பிள்ளைலோகாகாரியரைத் திருவடியாகவும், திருவாய்மொழிப் பிள்ளையை பாதரேகை யாகவும், மணவாள மாமுனிகளைத் பாதுகையாகவும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்ட்ரமாகவும்,(திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும்,முதலியாண்டனைத் திரிதண்டமாகவும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும்,திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் தோமாலை யாகவும்,பிள்ளை யுறங்காவில்லி தாசரை நிழலாகவும் இங்ஙனம் இராமநுசரைச் சர்வாசார்ய ஸ்வரூபராகக் கொள்வது மரபு.

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்-

April 24, 2025

ஸ்ரீ பரம புருஷனுடைய ப்ரதி வஸ்து பூர்ணத்வத்தைப் பற்றி ஸ்ரீ தேசிகன் முதலான பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்

தேசிக வந்தந மாலா த்விதீய புஸ்தக விமர்ச ருபமிதம்,ஸகல விபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதி

ஸாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா என்று சாஸ்த்ரமே காட்டின கட்டளையிலே, தத்வ தர்சிகளான மஹா ப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டி யெடுத்துக் கொடுக்குமா போலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள்.

எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலக மனைத்தும் உணரும். “கருதரிய உயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயக மென்றால் உன் பெருமைக்கு அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துளன் என்பது வேதாந்திகளின் கொள்கை.
(1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக் காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துளன் என்று ஒப்புக் கொள்ளலாம்; அணு பதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக் கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ள இயலாது – என்பது ஒரு ஆக்ஷேபம்.
(2) உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும்,பகவான் தன்னுடைய ஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துளன் என்று இசையத் தகாது ; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போகுமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணு மல்லவா?அதற்கு அவகாச மில்லாமற் போகுமே. ஒரு உதாரன் தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்து விட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்க வேணுமே;அது போல பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச் சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பவிக்கும் ? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளானென்கை பொருந்த மாட்டாது. ஒன்றில் நிச் சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்க ப்ரஸக்தி யேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளதன்று கொள்ளத் தகாது என்பது மற்றொரு ஆஷேபம்.

பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்க கில்லாதவர்களே இந்தக் கக்ஷிகளைக் கிளப்ப வேண்டும். பகவான் அத்புத சக்தி யுக்தன் என்றும் அகடித கடநா ஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலி பந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கக்ஷிகளைக் கிளப்ப ஒரு போதும் நினையார்கள்.

வஹஸி ணிமித் தத்தணம் வி அப்புய ஸத்தீ வஹஸி நிமித்தத்வமபி அத்புத சக்தி* என்றன்றோ அச்யுத சதக ஸ்லோகமுள்ளது-ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ப ப்ரஹ்மண -என்று ஸ்ரீ பாஷ்யகாராதிகள் அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற் குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.-பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே * என்பது முதலான சுடர் மிகு சுருதி வாக்கியங்கள் பலபல இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றை யெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார்.
நரகும் சுவர்க்கமுமாய், வெல் பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் * கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் * நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் **புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசி யுள்ளார். இப் பதிகத்திற்கு நம் தேசிகன் அத்புதமான ஸ்லோக மிட்டருளுகிறார் : * ஸம்பத் தாரித்ர்ய பாவாத்… அகடித கடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்றருளி யுள்ளார்.

இத் திருவாய் மொழியில்* வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய் என்பதும் (8) ஒரு பாசுரம். பகவான் தைவ ப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூர ப்ரருதிகளுக்கு மருத்யு வாயுமுளன் என்று இப் பாசுரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனாயும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங் காணா நின்றோம்.இப்படி யிருப்பதற்கு ஒரு அகடித கடநா சக்தி வேண்டிய அவசியமே யில்லை. இது போல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனா யிருக்கிறா னென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல் குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்;சிலர்க்கு நரக ப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்க பிராப்தியையும் பண்ணி வைக்கிறான் என்றால் இதில் அஸம்பாவிதத்வ சங்கைக்கு உதயமே யில்லை யன்றே இத்திருவாய்மொழியை இப் புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை . ஒன்றுமில்லை.எம்பெருமான் இப்படியாக வுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்தியம் விளங்குகைக்கு ப்ரஸக்தி யேது.சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும்- (1) * அகடிதகடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய் மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூற வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? வர்ஷ சதமானாலும் இவ் விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடை யிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப் பதிகத்தினால் ஸர்வ நியந்த்ருத்வம் அநுபவிக்கப் பட்டதென்று அருளிய ஆறாயிரப்படி யாசிரியரான பிள்ளான் வழியிலே நின்று ஸ்லோகமிடாமல் நம் பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே* அகடித கடநம் ப்ராஹ * என்றருளிச் செய்த தேசிகனுடைய திரு வாக்கு இவ் விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ரஸக்தி யுண்டோ? உண்டெனில் அருளலாமே ; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளி வந்து தீருமே . ப்ராஸங்கிகமான விது நிற்க.

இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும் ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும் கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய கல்யாண குணங்களையும் பேசுகிறார் –ஆறாயிரப்படி —

திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு –ஒன்பதினாயிரப்படி —

இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துபன்னீராயிரப்படி —

தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது –நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு
இருபத்து நாலாயிரப்படி –

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.-‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.– பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.-ஈடு முப்பத்தாறாயிரப்படி

ஸ்வாமி தேசிகன் அருளிய அற்புதமான ஸ்லோகமொன்று * பக்தஸ்ய தாகவசிசோ : பரிபாலநாய * இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் * எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப் புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகக்தினும் ஒவ்வொரு வஸ்துவிலும்-ஒவ்வோரிடத்திலும் நரஸிம்ஹ ரூபியாக ஆவேசித்து விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால்அந்த வொரு தூணில் நின்று மாத்திரம் ஒரு நர ஸிம்ஹம் மூர்த்தி மாத்திரமே வெளிவந்த படியால்
மற்ற ஸகல இதர தேசங்களினும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹ மூர்த்திகள் இன்னமும் அப்படியே நித்ய வாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப் பட்டிருக்கிறது.இதை அதிவாத மென்று சொல்லி விட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாக வுள்ள ஏற்றம் போய் விடும். ‘ ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானாருங்கூட அதிவாதிகளே;நம் தேசிகனொருவரே அதிவாதி க ஏவ தேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சதா ஸர்வ கர்ப்ப வாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசி யுண்டோ?

”வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்று கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து வில்லையாகும் ” என்று தூஷணம் கொடுப்பதுண்டே. இது தான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தி யுடைத்தாயிருக்கை”என்று எழுதி வைத்தால் எவ்வளவு அழகாயிருந் திருக்கும்.

த்ருஷ்டேபஹ் நுத்யபாவாதநுமிதி விஷயே லாகவஸ்யாநபாயாத்
சாஸ்த்ரே ணைவாவஸேயே விமதி விரஹிதத நாஸ்திகத்வ ப்ரஹாணாத்|
நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய ப்ரபந்தை : த்ராதம்
ஸம்யக் யதீந்த்ரை ரித மகிலதம: கர்சநம் தர்சநம் ந:||

நாதமுநிகள் காலத்திலேயே சிறந்து விளங்கியா ஸித்தாந்தம் ஆளவந்தாரின் அரிய க்ரந்தங்களால் அழகாக வளர்ந்தது.-அவருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு இணையாே ஸூக்திகளோ உலகில் இல்லை எனலாம். மதுர கம்பீரமான நடை மிக்க சாஸ்திர ஆராய்ச்சிகளைச் சொற்கள் தோறும் செவ்வனே காணலாம். சாஸ்த்ர வாக்யங்கள் எல்லாம் கத்ய பத்ய ரூபங்கள். அவர் கவிதார்க்கிக ஸார்வ பௌமபர் என்பதை அவருடைய ஒவ்வொரு க்ரந்தமும் உணர்த்தும். இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஆங்காங்கு ஸ்ரீபகவத் ராமானுஜமுநிகள் தமது க்ரந்தங்களிலே இடை யிடையே அழகாக இணைத்துத் தம் க்ரந்தத்திற்கு ஒரு பெருமையைக் கருதினார்.இவர் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் என்ற சிறிய க்ரந்தம் ஓன்றைக் கண்டால்கூட இவருக்குள்ள நிஷ்கர்ஷ சக்தி நன்கு விளங்கும். ஸ்ரீபாஷ்யகாரருக்கு முன்னரே இந்த மதம் மேன்மை பெற்றிருந்தது என்பதும் எளிதில் அறியப்பெறும். பாஞ்சராத்ரம் ப்ரமாணம் என்பதை இவருடைய ஆகம ப்ராமாண்யம் என்ற க்ரந்தம் ஸ்தாபிக்கிறது. இவர் பிதாமஹரான ஸ்ரீமந் நாதமுநிகள் வெளி யிட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இருந்து கூட பஞ்ச ஸம்ஸ்காரம், திருவஷ்டாஷர மேன்மை முதலிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் விசதமாக அறியப்படுகின்றன . அதற்கு முன்னமே அவை எல்லாம் அனுஷ்டானத்தில் இருந்தன என்பதும் அங்கே தெளியலாம்-. “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஓற்றுண்டு நின்று குடி குடி யாட்செய்கின்றோம்”

ஆத்மநி திஷ்டன் -திண்ணையில் தீ இருக்கிறது என்றால் உழலும் வெளியும் இருப்பதைக் காட்டாதே -ஆகவே ஆத்மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்புமொக்க வாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும் வ்யாப் தி; வேதியில் அக்நி யிருப்பது போலவும் வ்யாப்தி;இப்படிப் பட்ட விலக்ஷண வ்யாப்தியை விளங்கக் காட்டுவதற்கே ஸ்ருதி * ஆத்மநி திஷ்டந் , ஆத்மா: அந்தர :* என்று இரண்டு படியாகவும் ஓதிற்று- என்று ஸ்ருத ப்ரகாசிகையில் விவரணமுள்ளது.-அணு வஸ்துவில் அந்தர் வ்யாப்தி விஷயம் நிஷ் கல்மஷமாய்முடிவு பெற்றது.

ஜாதி வ்யக்தி தோறும் பரிமாப்ப வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறை வற வியாபித்து நிற்கும் என்றும், ஜாதி வ்யக்தி தோறும் பரி ஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசேதநத்துக்கு அது கூடுமென்றிருப்பர்கள் ; பரம சேதநனாய் ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறா னென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்”-ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்ய வர்த்தித்தால் மற்றொன்றில் அது காண முடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிந்ததென்று முடிய வில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சுஒரு புறமிருக்க, ப்ரஹ்ம வாதிகளில் தலைவரான ஸ்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீஸுக்தி யன்றே நமக்குத் தலை மேலது.-ஏகஸ்மிந்நேவ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா ” என்ற வாக்யமானதுபர ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸ்து தோறும் பூர்ண விருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான * அந்யத்ர வ்ருததி அயோக்யத்வ சங்கா வ்யுதாஸ என்றதானது பஹிர் வ்யாத்திக்கு விருத்தமா மென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டு போட்டு விட்டது.

ஆர்ஷம் தர்மோபைதேசஞ் ச வேத சாஸ்த்ரா விரோதிநா, யஸ் தர்க்கேணாநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: * என்பது ப்ரஸித்தமாதலால் சாஸ்தரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப் பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. பிரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் பிரதி வஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்கலாமே யல்லது வேறு செய்யத் தகாது. பிறர் செய்வது என்ன வென்றால், பிரதிவஸ்து பூர்ணத்வத்தை அபலாபம் செய்வதற்கு யுக்தி வாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள் -அநி ஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்தரானவர்கள் மாத்திரமல்ல,ஸ்ரீ வசந பூஷணாதிகளால் நிரஸ்தரானவர்களும் கூட அந்த விருது சுமப்பவர்களே யென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈஸ்வரனை அங்கீகரியா நின்றார்களெனினும் அவர்கள் அனுமானத்தைக் கொண்டு ஈஸ்வரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமாநிகேஸ்வரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன்.-இங்கு சாஸ்த்ர பிரதர்சநம் தவிர யுக்தி ப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் திருப்தி யடையக் கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்கா பரிஹாரம் ஆகவில்லை யென்றால் அதோகதி தவிர வேறில்லை கிடீர்.-பரம புருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்த ப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம் புரிந்தனனென்பதும் -இப்படிப்பட்ட பிரியனை ஒருகாலும் ஸம்ஸார பந்தத்திற்குத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்தரங் கொண்டே யன்றோ பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்கப்பட்டன – * ய ஏவமாஹ * என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்ரத்தையே யன்றோ காட்டி யருளினர்.-முக்தைஸ்வர்ய மொன்று உண்டென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அது பரம புருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அந்த பரம புருஷன் ஸ்வதந்திரன் ஸத்ய ஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ர வேத்யம் இப்படியான போது அவன் முக்தனைத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்த்ரைக வேத்யமாகக் கூடியதே-

ஸ்ரீபாஷ்யத்தில் நச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா என்ற ஸ்ரீ ஸூக்தி அவதரித்தது எதற்காக வென்னில்,பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்த மென்றும், இவன் தானே உபாயா நுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெற வேணு மென்றும், இவனே போக்தா வென்றும்… இப்படி யெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரருளிச் செயலைப் பேணுங் குடியிலே தலை காட்டத் தகா என்பது நம் மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்ளம்
பகவானுடைய வ்யாப்தி யானது யறிக்கைக்காக – நியமநத்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தி யானது அதற்காக வல்ல.ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது.நியந்த்ருத்வா விசிஷ்ட வ்யாபகத்வம் பகவானுக்கு, தத் ரஹித வியாபகத்வம் ஆகாசாதிகளுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிற புடை இது.

ஸ்வாமி ந்யாய ஸித்தாஞ்சனத்தில் ஈஸ்வர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈஸ்வர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வ ஜ்ஞாந ஸ்வேதர ஸகல த்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாக வுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகல த்ரயங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கை லக்ஷண மென்கிறார். நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அனுபவிக்குமிடத்து” விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநாதிகரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் “‘ என்று நிஸ் ஸந்தேஹமாக அருளி யுள்ளார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விதுர நீதி-ஸ்ரீ மஹாபாரதம்-உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்

April 21, 2025

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ்யேத்
பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மாமயம் பிரதர்ஷயதி

மஹத்வம் பாரவத்யம் -மஹா பாரதம் –வேத வியாசர் உபநிஷத் கடலைக்கடைந்து அளித்த அம்ருதம்–ஸூர்ய பகவானின் புதல்வரான-யமதர்மராஜனே விதுரராக அவதாரம் -ராமோ விக்ரஹவான் தர்ம-கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் -போல் தர்மமே மனிதனாகப் பிறந்தது-பரதாழ்வான் சத்ருக்ந ஆள்வான் ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் போல் விதுர ஆழ்வான் -கண்ணனைக் கண்டவுடன் மனமுருகி -தன்னிலை மறந்து -மிக்க பரிவுடன் ஆஸனத்தில் அமர்த்திப் பழங்களைச் சமர்ப்பித்து அருளியதாலே ஆழ்வான் எனப்பட்டார் -மாண்டில்ய ரிஷியின் சாபத்தால் தர்ம ராஜாவே மனிதனாகப் பிறந்து தர்மத்தைப் போதித்ததே விதுர நீதி-

விதுர -அறிவுடையோர் -சான்றோர் என்றும் பொருள் -சந்தனு மஹாராஜருக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தார் பீஷ்மாச்சார்யார்-சந்தனுவுக்கும் மற்ற மனைவியான சத்யவதிக்கும் இரண்டு புதல்வர்கள் -விசித்திர வீர்யன் -சித்ராங்கதன் -இரண்டாமவன் இளைமையில் மாண்டான் – விசித்திரம் வீரனுக்கு அம்பிகா அம்பாலிகா -என்ற இரண்டு மனைவியர் -குழந்தைப்பேறு பெறுவதற்கு முன்பே விசித்திரம் வீர்யனும் மாண்டான் -நாட்டைக் காக்க புதல்வர்கள் வேண்டும் என்றும் வேத வ்யாஸாரை வேண்டிக் கொள்ள அம்பிகாவுக்கு கண் பார்வை அற்ற த்ருதராஷ்ட்ரனனும் அம்பாலிக்கு வெளுத்த பாண்டுவும் அம்பிகாவின் தாதிக்கு விதுரரும் பிறந்தார் -மூவரும் பீஷ்மாச்சார்யாரிடம் அனைத்து வித்யைகளும் கற்றனர் -பாண்டுவுக்கு குந்திதேவியும் த்ருதராஷ்ரனுக்கு காந்தாரியையும் விதுரருக்கு தேவக மன்னனின் மகளையும் மணம் முடித்து வைத்தார் பீஷ்மர் -பாண்டு அரசப் பொறுப்பேற்று மாண்டு போக த்ருதராஷ்ட்ரன் அரசாக விதுரர் மந்திரியானார் -காலத்தில் கோலத்தால் இவருடைய அறிவுத் திறனும் தர்ம சிந்தனையும் அரசனுக்குப் பிடிக்காமல் போனதே

அறிவொன்றும் இல்லாத – இப்போது இல்லை யாகில் விடுங்கோள்- விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த ஞானம் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை –

எதிரியின் உள்ளத்தை படிப்பவனே ஆபத்தைத் தாண்டுகிறான் கூர்மையான ஆயுதத்தை விட கொடியதை அறிந்தவனைக் கொல்ல முடியாது -நெருப்பு காட்டை அழிக்கும் ஆனால் வலையில் இருக்கும் எலியை எரிக்காது -முள்ளம் பன்றி சுரங்கத்தில் புகுந்து நெருப்பில் இருந்து தப்பிக்கும் நடந்து செல்பவன் நக்ஷத்ரங்களைப் பார்த்து வழி தெரிந்து கொள்கிறான் -புரிந்து நடந்து கொள் -மதி நுட்பத்தால் பாண்டவர்களைக் -வாரணாவதம் -இன்று பர்னாவா -அரக்கு மாளிகை நெருப்பில் இருந்து காத்த விதுரர் –

பக்திஸ் ச ஞான விசேஷ—ஸம் ஸ்ப்ருஸன் ஆஸனம் ஸுவ்ரே விதுர ஸ மஹா மதி –விதுர அன்னானி புபுஜே ஸூஸீநி குணவந்தி ச -தூய்மை சுவை என்றும் ஏற்றுக் கொண்டு அருளினவன் கண்ணன்

தன்னை விட பலசாலியுடன் பகை கொண்டவன் -தன் பொருள் அனைத்தையுமே திருட்டுக் கொடுத்தவன் -எதிலும் பேராசை கொண்டவன் -திருடன் -ஆகியோர் தூக்கம் வராமல் தவிப்பர் –

அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-நமக்குக் கசப்பாய் இருப்பினும் நல்லதைச் சொல்பவர் கிடைப்பதும் கேட்பவர் கிடைப்பதும் அரிது -விதுரர் எந்தக் கவலையும் இல்லாமல் தர்ம ஸாஸ்த்ரம் போதிப்பதையே அறிவுரையாகக் கூறினான்

மன்னா தர்மபுத்திரர் தயை தர்ம சிந்தனை ஸத்யம் பராக்ரமம் ஆகியவை கொண்டவர் -பெரியவர்களை மதிப்பவர் -நீ அவரை காட்டுக்கு அனுப்பிவிட்டு மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறாய் -என்னை பண்டிதன் என்று புகழ்கிறாய் -யார் பண்டிதன் என்று கூறுகிறேன்

ஆத்ம ஞானம் -விடாமுயற்சி -துன்பம் சகிக்கும் சக்தி -தர்மத்தில் உறுதி -இவை இருப்பவனே பண்டிதன் -கோபம் மகிழ்ச்சி கர்வம் வெட்க்கம் பிடிவாதம் இவற்றால் பாதிக்கப்பட்டு தனது இலக்கிலிருந்து யார் மாறுவதில்லையோ அவனே பண்டிதன் -குளிர் வெட்பம் இன்பம் துன்பம் செல்வம் ஏழ்மை இவற்றால் எடுத்த காரியங்களில் தவறாமல் இருப்பவனே பண்டிதன் -அவன் கிடைக்க அரியதானவற்றை விரும்புவதில்லை -சிந்தித்து தீர்மானம் செய்த பின்பே கார்யங்களைத் தொடங்குவான் -தொடங்கிய பின்பும் இடையில் நிறுத்தாதவன் -நேரத்தை வீணாக்காதவன் -கார்யங்களை செய்யும் முறைகளை அறிந்து செய்பவன் -யாருடைய பேச்சை தடை இன்றி மதிக்கப்படுகிறதோ -நூல்களின் ஆரியத்தை சட்டென்று கூறுபவன் யாரோ -சான்றோர்களால் அறிவுரையை மீறாதவன் யாரோ -அவனே பண்டிதன் –

அறிவு ஓன்று
அத்தால் அறிய வேண்டியது செய்வன மற்றுமோர் தவிர்வன ஆகிய இரண்டு
அவற்றைத் செய்து பகைவர் நண்பர் அயலார் ஆகிய மூவரையும்
சாம தான பேத தண்டம் ஆகிய நான்கு உபாயங்களால் வெல்ல வேண்டும்
மேலும் அடக்கத்தால் உட்பகைவர்களான செவி வாய் கண் மூக்கு தோல் ஆகிய ஐவரை -சிற்றின்பத்தை -வெல்ல வேண்டும்
இணைத்தல் பிரித்தல் பெயர்ச்சி இருத்தல் இரு மனப் படுத்தல் சார்ந்து அடைதல் ஆகிய ஆறு செயல்முறைகளை அறிய வேண்டும்
பெண்ணாசை சூது கள் வேட்டை கடுஞ்சொல் கூறுதல் -கடும் தண்டனை அளித்தல் -தீய வழியில் பொருள் சேர்த்தத்தால் ஆகிய ஏழையும் தவிர்க்க வேண்டும் –
இதன்படி வாழ்பவன் மகிச்சியும் மனநிம்மதியும் அடைவானோ –

நல்லது ஒரு உணவை தனியே உண்ணலாகாது
எந்த ஒன்றையும் தனியாகத் தீர்மானிக்கலாகாது
தீர்த்த யாத்திரையில் தனியாகச் செல்லக் கூடாது
அனைவரும் தூங்கும் பொழுது ஒருவன் மட்டுமே முழித்து இருத்தல் கூடாது
மேல் உலகமடைய ஸத்யம் ஒன்றே போதும்
விஷம் பருகுமொருவனைக் கொல்லும்
அம்பு தைத்தால் ஒருவன் மடிவான்
அரசியல் புரட்சி ராஜ்யத்தை அழித்து பல்லாயிரம் மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் –
பொறுமை ஒன்றே அமைதிக்கு வழி
தர்மம் ஒன்றே அனைத்து நன்மைகளையும் அளிக்கும்
கல்வி ஒன்றே திருப்தி அளிக்கும்
அஹிம்சை ஒன்றே இன்பம் அளிக்கும்
திறமைசாலிகளுக்கு பொறுமை ஆபரணம் -பொறுமையாளிகளை கையாலாகாத்தவர் என்று உலகம் பழிக்கும் -பொறுமை ஒன்றே அனைத்தும் தரப்பினரையும் வசப்படுத்தும்
புல் இருக்கும் இடத்தில் நெருப்புப் பற்றி எரியும் -புல் இல்லாத இடத்தில் நெருப்புத் தானே அணைந்து விடும் -பொறுமை இல்லாதவன் பிறரையும் கெடுத்துத் தானம் கெடுகிறான் –

பூ மண்டலத்தில் தாழ்ந்தவர்கள் இருவர் -முயற்ச்சி இல்லாத இல்லறத்தாரும் மிகுதியாகச் செயல்படும் சன்யாசியும்
நான் யார் என்பதைத் பொறுத்துத் தான் செயல்பாடு இருக்காய் வேண்டும்
விரோதம் கொண்ட பகைவனிடமும் போர் புரியாத அரசனையும் விரோதம் கொண்டு தொண்டு செய்யாத அந்தணனையும் இவ்வுலகம் விழுங்கி விடும்
கடும் சொல் பேசாதவர் துஷ்டர்களை ஆதரிக்காதவர் இருவரையும் உலகம் கொண்டாடும்
தன்னிடம் பணமா இல்லாத போது விலை உயர்ந்த பொருளைக் ஆசை வைத்தால்-வலிமை அற்றவனாய் இருந்தும் கோபம் கொள்ளுதல் இரண்டுமே நம்மைக் குத்தும் முள்கள்
வலிமை மிக்கவனாய் இருப்பினும் பொறுமை காப்பார் -காசில்லாத வறியவனாய் இருப்பினும் இயன்ற தானம் கொடுப்பவன் -இவ்விருவரும் உலகில் புகழுடன் விளங்குவர்
நியாயமான வழியில் சம்பாதிப்பதை தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருத்தல் -தவறானவர்களுக்குக் கொடுத்தல் -இவ்விரண்டும் அடாத செயல்களாகும் –
செல்வந்தனாக இருப்பினும் தானம் செய்யாதவர் -வறியவனாக இருப்பினும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளும் தவமில்லாதவர் ஒவ்வொருவருக்கும் தண்டனை நிச்சயம்
வறுமையினும் இயன்ற வரை உதவுபவன் வினை தொலைத்து மேலுலகை அடைகிறான் -விதை நெல் கொண்டு பாகவத விருந்தளித்த விருத்தாந்தம் –

நாம் விரும்பிய கார்யம் நிறைவேற மூன்று வழிகள் -உத்தமம் -மத்யமம் -அதமம் -இடம் நேரம் நம் ஆற்றல் இவற்றைப் பொறுத்து வழியைத் தேர்ந்து எடுக்க வேண்டும் -பிறர் சொத்தை அபஹரித்தல் -பிறர் மனைவியை விரும்புதல் -நன்மை விரும்பும் நண்பனை விடுதல் ஆகிய மூன்றும் மனிதனின் ஆயுள் அறம் புகழ் ஆகிய மூன்றையும் அழிக்கும் -காமம் கோபம் பேராசை ஆகிய மூன்றும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் -இவற்றில் ஓன்று இருந்தாலும் மற்ற இரண்டுமே தானே வந்து விடும் -வைராக்கியத்துடன் ஆசையைக் கட்டுப் படுத்தினால் தான் காமத்தையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் அடக்க முடியும் -யயாதி விருத்தாந்தம் அறிவோம் -தனது பக்தன் -தன்னிடம் வேலை செய்பவர் தன்னையே தஞ்சம் என்று சரணாகதி செய்தவர் இம் மூவரையும் கை விடவே கூடாது-

எவை உடனே பலன் தருபவை என்றும் இந்திரன் கேட்க -அதற்கு தேவகுரு பிரஹஸ்பதி -தேவைதைகளின் ஸங்கல்பம் -விருப்பம் -புத்திசாலியின் ஆற்றல் -பண்டிதரின் பணிவு -நாசம் தரும் திருட்டு ஆகிய நான்கு உடனே பலன் அளிக்கும் என்றார் -ஸ்ரத்தையுடன் கற்றல் ஆர்வத்துடன் அக்னி ஹோத்ராதிகளைச் செய்தல் -கவனத்துடன் பூஜை செய்வது-மதிப்புடன் மவ்ன விரதம் கடைப்பிடித்தல் ஆகிய நான்கும் முறையுடன் கடைப்பிடித்தால் இவ்வுலக இன்பத்தையும் பின்னர் முக்தியையும் அளிக்கும் -பசுமாட்டை அடிக்க வந்தவரிடம் முனிவர் -என் கண் பார்க்கும் ஆனால் பேசத் தெரியாது -வாய் பேசும் ஆனால் அது பார்க்காது -பார்த்தவன் பேசினால் தான் அது உண்மையாக இருக்கும் -அது முடியாதபடியா மவ்னம் காத்தேன் -என்றார் -துரத்தி வந்தவன் ஒன்றுமே புரியாமல் போக பசு காப்பாற்றப் பட்டதே -கோதாவரி ராவணனுக்கு அஞ்சி மவ்னம் காத்ததே -பேசியே கார்யத்தைக் கெடுக்கலாம் -மவ்னத்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம் –

அஞ்சலி அறிந்தால் அஞ்சாமல் இருக்கலாமே
அக்ரம் நயதி இதி அக்னி -ஆராதிப்பவனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் அக்னி பகவான் -தாய் தந்தை குரு ஆத்மா அக்னி ஐவரையும் ஆராதித்தால் முன்னேறலாம் -தெவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் சந்யாசிகள் அதிதிகள் ஆகிய ஐவரையும் பூஜித்தால் உலகம் நிறைந்த புகழ் பெறலாம் -நாம் எங்கும் என்றாலும் நண்பர் பகைவர் உதாசீனர் -நம்மிடம் அடைக்கலம் பெறுபவர் -நமக்கு அடைக்கலம் தருபவள் ஆகிய ஐவரும் பின் தொடர்வர் -தண்ணீர் நிறைந்த பானையில் ஒரு சிறு ஓட்டை விழுந்தாலும் தண்ணீர் முழுவதும் வெளியேறுவது போல் கண் காது மூக்கு நாக்கு தோல் ஆகிய ஐந்து புலன்களில் ஓன்று பாதை மாறினாலும் மற்ற நான்கு அதைப் பின் தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -ஸூ முகன் -பெரிய திருவடி -பசிக் கோபத்தால் பராமனையே எதிர்த்த வ்ருத்தாந்தம் -நாம் புலன்கள் எவ்வளவு கெடுக்கும் என்ற உணரவே நடத்திக் காட்டினார் –

ஆறு தெரிந்தால் ஆறி இருக்கலாம் –
உண்மை தானம் சோம்பலின்மை பொறாமையின்மை பொறுமை தைர்யம் -இவற்றை விடாதவன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் -நோயற்று இருத்தல் -நல் வெளிப்படுத்தும் மனைவி -மனத்துக்குப் பிரியமான சொற்களைப் பேசும் மனைவி-சொன்னதைக் கேட்க்கும் மகன் – செல்வத்தைக் கொடுக்கும் கல்வி -ஆகிய ஆறும் கிடைப்பதற்கு அரியவை -ஸூ தர்சனர் -பார்க்க அழகாக இருப்பவர் நல்ல வழியைக் கொடுத்து அருள்பவர் -ஜ்வாலா நேமி அரம் கும்பம் என்னும் நடு அச்சாணி -மையத்தில் இருக்கும் பகவான் -ஆகிய ஐந்து பகுதிகள் கொண்டவை -பொறாமை -அளவுக்கு மிஞ்சிய இரக்கம் கொள்பவர் -எவ்வளவு பொருள் சேர்த்து மகிழ்ச்சி இல்லாதவன் சடடென்று கோபம் கொள்பவன் -எதிலும் ஸந்தேஹப் படுபவர்-பிறரை அண்டியே பிழைப்பவர் ஆகிய அறுவரும் துயரத்தையே அடைவர் -பசுக்கள் பிறரிடம் சேவை செய்பவன் உழவு மனைவி கல்வி தனக்கும் சமமில்லாதவரிடம் நட்பு -இவற்றை மதிப்புடன் பராமரிக்க வேண்டும் -இல்லாவிடில் அழிந்து விடுவர் –

ஸப்த ஸமுத்ரங்கள் -ஸப்த கன்னிகைகள் -ஸப்த லோகங்கள் -ஸப்த ரிஷிகள் -ஸப்த மராமரங்கள் -ஏழுக்கு தனிச்சிறப்பு -சூது -கள் பெண் கொடுமை பிராணி ஹிம்ஸை பேராசை பொய்ம்மை கோபம் ஆணவம் பகைமை காமம் -இவற்றைக் கைவிடாதவன் சக்தியுள்ள அரசனாக இருந்தாலும் அழிவைத் தேடிக் கொள்வான் –
பரீக்ஷித் பத்து இடங்களை கலிக்கு ஒதுக்கினான் -அவை -பெண்களை அவமதிக்கும் இடம் -பிராணி வதை நாடாகும் இடம் -கள் குறிக்கும் இடம் -சூதாடும் இடம் -தங்கத்தில் அதிக ஆசையுள்ள இடம் -காமம் கோபம் பகை பொய்மை ஆணவம் -இவற்றின் அருகில் நாம் செல்லா விட்டால் கலியுகத்தில் வாழ்ந்தாலும் அதன் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம் -நாம் எப்படிப் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே கலியுகமும் க்ருதயுகமாகலாம் -க்ருதயுகமும் கலியுகமாகலாம் –

திக்கு எட்டும் புகழோடு வாழ -நல்ல அறிவு -நற்குடியில் பிறப்பு -புலனடக்கம் -நூல்களில் கேள்வி அறிவு -உடல் வலிமை -அதிகம் பேசாது இருத்தல் -சக்திக்குத் தக்கபடி தர்மம் செய்தல் -செய்ந்நன்றி அறிதல் -ஆகியவை கிடைத்தற்கு அறிய பண்புகள் -திருவடியை ஆலிங்கனம் செய்து பெருமாள் ஆம் பரிசு வழங்கினார் அன்றோ –

நம் வாழ்க்கை முறை -நற்பண்புகள் -ஞானம் பக்தி ஆகியவை கிரஹங்களின் பாதிப்பை நன்கு கட்டுப் படுத்தும் -நமது உடல் இரண்டு கண்கள் இரண்டு காதுகள் மூக்கு த்வாரங்கள் இரண்டு வாய் ஓன்று மலம் காலம் கழிக்கும் இரண்டு த்வாரங்கள் -ஆகிய ஒன்பது வாசல்கள் கொண்ட சரீரம் -ஒன்பது வாசல்களும் திறந்தே இருக்கிற படியால் ஆத்மா எளியேறுவது எளிது -அதற்குள் ந்தப் வீட்டில் வாழ்ந்து சாதிக்க வேண்டியவற்றை முடிக்க வேண்டும் -i-இதில் ஆத்மா ஒலி தொடு உணர்ச்சி உருவம் சுவை மணம் ஆகிய ஐந்தும் சாஷிகளோடே வசிக்கிறார் -இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபீதியதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ இத் தத் வித-உடல் விளை நிலம் -ஆத்மா என்னும் உழவன் இதை உணர்வது நல்ல பயிர்களை -பண்புகளை -விளைக்க வேண்டும் -இப்படி பல உடல்களும் ஆத்மாக்களும் கொண்ட இந்த ஸம்ஸாரமே ஒரு தலைகீழான அஸ்வத்த மரம் -இதைப் படைக்கும் ப்ரஹ்மா மேலே இருக்கிறபடியால் இதம் வேர் மேலே இருக்கிறது -நாமும் நம் சந்ததிகளுமாகிற கிளைகள் கீழே உள்ளன -ஸத்வம் ரஜஸ் தமஸ் முக்குணங்கள் நீராகவும் எருவாகவும் கொண்டு வளர்க்கப் படுகிறது-கர்மங்களே விதைகள் -ஸப்தாதி -வளர்க்கும் முளைகள் -வைராக்யம் என்னும் கோடாரி கொண்டு வெட்டி முக்தி அடையாளம் –

விட வேண்டிய தீய பத்து பண்புகள் -குடியினால் மதி மயங்கினவன் -கவனம் இல்லாதவன் -பைத்தியம் களைப்படைந்தவன் -கோபக்காரன் -பசி மிக்கவன் -பரபரப்பவன் -பேராசை கொண்டவன் -அச்சமுற்றவன் -காமத்துக்கு வசப்பட்டவன் -இவர்களுடன் அறிவாளர்கள் பழக மாட்டார்கள் -இப்பத்தையும் விட்டு ஒழித்தால் தர்மத்தை அறியலாம் -தாரை லஷ்மண இடமும் கிம் கோப மூலமும் மனுஜேந்த்ர புத்ர-அரசனான உனது தந்தை சக்ரவர்த்தி பரபரப்போ கோபமோ ப்பட்டிருந்தால் 60000 ஆண்டு அரசாண்டு இருக்க முடியுமா -விச்வாமித்ரரும் காமத்துக்கும் கோபத்துக்கும் வசப்பட்டாரே -இரண்டு பகைவர்களையும் வெல்ல வேண்டுமே –

பெரிய நம்பியின் பெண்ணுக்கு சீதன வெள்ளாட்டியாக முதலியாண்டான் அனுப்பிய விருத்தாந்தம் -வேதாந்த விசாரம் வர சட்டென்று பதில் கூறி ஐயம் தீர்க்க -அங்கு கூடி இருந்தவர் இவரது விநயம் கண்டு வியந்தனர் –
வங்கி புரத்து நம்பிக்கை திருவாராதனம் செய்யும் முறையை உடனே உபதேசிக்காமல் கூரத்தாழ்வான் ஹனுமந்த தாஸர் இவர்களுக்கு உபதேசிக்க வாசலில் வந்த நம்பியைக் கண்ட ராமானுஜர் அச்சமும் வெட்கமும் அடைந்த -லோக நாயகனான திருமால் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடி யசோதையிடம் பிடிபட்ட போது உண்மையில் அச்சமும் வெட்கமும் பட்டிருப்பாரோ என்ற ஐயம் வெகுநாட்களாக இருக்க இப்பொழுது உம்மைக் கண்டதும் நான் பட்டதால் புரிந்து கொண்டேன் என்றாராம் –

ராவணனை இன்று போய் நாளை வா -மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தாலும் திருந்தவில்லை-சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்-ஆழ்வார் -ஒரு செயலில் வஞ்சனையால் நிறைவேறும் என்றால் அத்தைச் செய்யக் கூடாது-செய்தாலும் அதன் பலன் நிலைக்காது -நேர்மையான வழியில் செய்தால் நிறைவேறாது என்றாலும் அத்தைச் செய்ய வேண்டும் -நாளடைவில் பயன் தரும் -அரசன் பதவி லாபம் நஷ்டம் கஜானா தேசம் தண்டனை இவற்றில் அளவை அறியவில்லையோ அவன் நிலைக்க மாட்டான் –

தேனீ தனக்கு வேண்டிய அளவு தேன் ஒரே பூவில் கிட்டும் என்றும் உறிஞ்சினால் தேனும் கிடைக்காத பூவும் பட்டுப் போகும்-பல பூக்களில் இருந்து துளித்துளியாக சேகரிக்க வேண்டும் -மாலை தொடுக்க பூக்களை மட்டும் பறிப்பான்-செடியை வெட்ட மாட்டான் -இலக்கு எதுவோ அதற்குத் தக்க செயலில் இறங்க வேண்டும் -ஒரு பொருளைக் உரியவர்க்கும் பகிராமல் நீயே கொள்ள நினைத்தால் அதை முழுவதுமாக இழப்பாய் -கிட்டாதாகில் வெட்டென மறக்க வேண்டும் -பேராசைப்பட்டு பெரு முயற்சி செய்தாலும் நிறைவேறாது -பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீ கேச தேவதத்தம் தனஞ்சய ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -இலக்கு தார்மீக முறையில் இருக்க வேண்டும் -கருத்து இலக்கில் இருக்க வேண்டும் -இலக்கை என்றும் வரை பின்னால் மறைந்து இருக்கும் ஆபத்தையும் நோக்க வேண்டும் –

செல்வம் கல்வி குடிப்பிறப்பு ஆகியவை ஆணவத்துக்கு வழி கொடுக்கும் முக்குறும்புகள் -அவற்றை அறுத்து வென்றவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் -பொறாமை ஆணவம் இரண்டுமே ஒழுக்கத்தைக் கெடுக்கும் -ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட்டும் -அழகு புகழ் இவையும் குறும்புகள் -ராமானுஜரின் திருவடி இணைகளே -நமது ஆச்சார்யரே -விலை மதிப்பில்லாத தங்கம்

உடல் ஒரு தேர் -ஐம்புலன்கள் குதிரைகள் மனஸ் கடிவாளம் -ஜீவாத்மா தேரோட்டி -புலன் அடக்கம் இல்லாமையால் மற்ற சிறப்புக்களை மறைத்து விடும் -உனது புலன்களாலேயே நீ வீழ்ந்தாய் என்றாள் மண்டோதரி -மனம் தறி கெட்டு ஓடிஏ பகுத்தறிவு என்னும் அம்பு கொண்டு அடக்க வேண்டும் -புலன் அடக்கம் இல்லாதவர்களோடே சேர்ந்து மற்றையோரும் கெடுவர் -காய்ந்த விறகோடே சேர்ந்து இருக்கும் ஈர விறகும் எரியுமே -புலன்களைக் கொண்டே நல்ல கார்யங்களையுமே சாதிக்கலாம் -அடக்காமல் நாமும் வீழுவோம் –

மவ்னம் பேச்சை விட வலிவானது –லஷ்மீ வஸதி ஜிஹ்வாக்ரே -ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா -ஜிஹ்வாக்ரே பந்தனம் பிராப்தம் -ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் -நாக்கு நுனியில் லஷ்மீ தேவி வஸிக்கிறாள் -நாக்கு நுனியில் உறவினரும் நண்பர்களும் வாழ்கிறார்கள் -நாக்கு நுனியில் தான் கட்டுக்குள் சிக்குகிறோம் -நாக்கு நுனியில் மரணம் திண்ணம் -நன்மை தீமைகளை பலவும் நாக்கு நுனியில் தான் இருக்கின்றன -ராமர் தமது நன்மையைக் கருதியே வானர முதலிகள் பேசுகின்றார்கள் என்றும் உணர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்ட பின்பும் –மமாபி ச விவிஷாஸ்தி காகித பிரதி விபீஷணம் -வேண்டுகோள் விடுக்கும் த்வனியில் பேச -அனைவரும் உருகிப் போக -பேசுவதை விட மவ்னமே கார்யங்களைச் சாதித்துத் தரும் என்றும் காட்டி அருளினார் –

கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தரும் -நாடு நிலையில் இருந்து பிறழாமல் இருப்பதே நேர்மை -மனத்தால் நினைத்ததையே பேசி-பேசினத்தையே செயல்படுத்தலாகிய ஆர்ஜ்வமே நேர்மை-யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்திதஸ் தேந சேத விவாதஸ்தே மா கங்காம் மா குரூன் கம -மநு –தர்மத்தின் வழி நடப்பவரும் நம்பிக்கை இல்லாதவரும் -இருவருமே கங்கையை நீராட வேண்டாமே -கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தருமே –

கேஸிநீ என்னும் அரசகுமாரியின் ஸ்வயம்வரம் -ஸூதன்வா அந்தணப் பண்டிதனும் -பலசாலியான அசுரனான விரோசனனும் வர -யார் பெரியவன் போட்டி வர உயிரையே பயணம் வைக்க -ப்ரஹ்லாதனையே தீர்ப்பு சொல்லச் சொல்ல -தவறான தீர்ப்புச் சொன்னால் முதல் மனைவி இருக்கும் பொழுது -மற்ற ஒருத்தியை மணந்தால் அவளுக்கு வரும் துக்கம் போலவும் -சூதாட்டத்தில் அனைத்தும் செல்வங்களையும் இழந்தவன் துக்கம் போலவும் -துன்பம் பட வேண்டும் -ஆடு விஷயத்தில் பொய் சொன்னால் ஐந்து தலைமுறை முன்னோர்களையும் -பசு விஷயமாக பொய் சொன்னால் பத்து தலைமுறை முன்னோர்களையும் -குதிரை விஷயமாக பொய் சொன்னால் நூறு தலைமுறைகளுக்கும் -மனித விஷய பொய் சொன்னால் பின்வரும் அனைத்தும் தலைமுறைகளுக்கும் நரகத்தில் விழ வேண்டி வரும் -மகன் என்றும் பார்க்காமல் ஸூதன்வா -தான் சிறந்தவன் என்றும் தீர்ப்பு சொல்ல -அவரைப் பாராட்டி உனது மகனின் உயிர்க்கு ஒன்றுமே வாராது -அவரே கேசினியை மணந்து கொள்ளட்டும் என்றான் -அதே போல் த்ருதராஷ்ட்ரா-பிள்ளைக்காகப் பரிந்து பேசி நடுநிலை தவறினால் உங்கள் சொத்து அனைத்தையுமே இழப்பாய் -நேர்மை மாறாவிடில் எல்லாரும் வாழ்வார்கள்

அபர் யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபி ரக்க்ஷிதம் பர் யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபி ரஷிதம் -அஞ்சி துரியோதனன் வார்த்தை -தஸ்ய ஸஞ்சயன் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதா மஹா -அச்சம் போக்க பீஷ்மர் சங்கு ஊதினார் -தைர்யத்துக்கு உடல் பலம் மட்டுமே போதாது -ஆத்ம பலமும் தர்ம சிந்தனையும் வேண்டும் –

மூப்பு அழகை அழிக்கும் -ஆசை தைரியத்தையும் -மரணம் உயிரையும் அழிக்கும் -பொறாமை தர்ம வழி நடப்பதையும் கோபம் செல்வத்தையும் தீயவனுக்குத் தொண்டு செய்தல் நல்ல பண்புகளையும் -காமம் வெட்கத்தையும் அழிக்கும் -ஆணவம் எல்லாவற்றையும் அழிக்கும் -மங்களமான செயல்களால் லஷ்மீ உத்பத்தி ஆகிறாள் -தைர்யம் மற்றும் நம்பிக்கையால் செல்வம் வளர்கிறது -சாதுர்யத்தால் செல்வம் நிலை பெறுகிறது -பணிவால் செல்வம் வேரூன்றுகிறது -ஆணவம் இல்லாமல் பக்தியுடன் இருப்பவர்களுக்கு பொருத்தமான ஒளியும் பொறுமையும் திறலும் புகழும் நல்ல ஞானமும் செல்வமும் பிறக்கும் -பின் வளரும் –
லஷ்மீ கடாஷித்தால் –ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதீ ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய-
வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ
கரதல கமலே சர்வதா தான லஷ்மீ
தோர் தண்டே வீர லஷ்மீ ஹ்ருதய சரசிஜே பூத காருண்ய லஷ்மீ
கட்காக்ரே சௌர்ய லஷ்மீ நிகில குண கணாடம்பரே கீர்த்தி லஷ்மீ
சர்வாங்கே சௌம்ய லஷ்மீ மய து விஜயதாம் சர்வ சாம்ராஜ்ய லஷ்மீ

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாஸான நிஸார்த்தம் அர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோ இஹ ஜன்மநா ச
-பெரியாழ்வார் -வல்லபதேபன் பொற்கிழியை வென்ற வ்ருத்தாந்தம் -நித்தியமான ஆத்மாவின் ஆத்மாவின் இப்பொழுதே நற்செயல்களைச் செய்ய உறுதி வேண்டும் –

இனிய வாழ்க்கைக்கு இனிய பேச்சு வேணும் -அத்ரி முனிவர் அநஸூயா தேவிக்கு மகன் தத்தாத்ரேயர் -மஹா விஷ்ணுவின் கிருதயுக அவதாரம் -நம் குற்றங்களை பெருமாள் இடம் விண்ணப்பம் செய்ய நேரமில்லாததால் -நமக்குத் பதிலும் குற்றங்களைச் சொல்லுவர் மேல் க்ருதஜ்ஜை வேண்டுமே – உண்மையையே பேச வேண்டும் அதிலும் பிரியமானவற்றையே பேச வேண்டும் -அதிலும் தர்மங்களையே பேசுவது சாலச் சிறந்தது

ஆரோக்யமான மனம் ஆரோக்யமான உடலுக்குள் முக்கிய காரணம் -சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்த மப்யஹோ -நெருப்பு உயிர் அற்ற உடலைக் கொளுத்தும் -சிந்தை கவலை உயிருடன் இருப்பவனையே கொளுத்தும் -நல்லறிவு மட்டுமே கவலையைப் போக்கும் -பற்று குறைந்தால் கவலை நீங்கி உத்ஸாஹம் அடைவோம் -கல்வி தர்மம் யுத்தம் புண்ணியம் தவம் இவை பெரும் இன்பத்தைக் கொடுக்கும் –

தவம்- புலனடக்கம்- வேதங்களைப் பயின்று பகவானை அறிதல் -தேவபூஜை செய்தல் -சிறப்பான திருமணம் -தினம் தோறும் அன்ன தானம் -நல்ல ஒழுக்கம் -இவை எழும் இருந்தால் தான் உயர்ந்தவன் -அன்னதானம் செய்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று விதித்து திருக்கல்யாண பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் -இதுவே உயர் குலம்

அனைவரும் அவன் உறுப்புக்கள் ஆனபடியால் யாரும் பகைவர்கள் அல்லர் -அனைவரும் நண்பர்களே -கந்தாடை தோழப்பர் -நம்பூர் வரதாச்சார்யரான நம்பிள்ளை -இருவரும் ஒருவருக்கு ஒருவரே ஷாமணம் பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் –
உள்ளத்தில் ஓன்று வைத்துக் புறம் வேறே ஒரு மாதிரி நடந்தால் நீயே உன்னை எதிர்க்கிறாய் -அது அச்சம் அளிக்கும் -அது கவலையாக மாறும் -மன அமைதி உண்டாக்க சிறந்த கல்வி தவம் புலனடக்கம் பேராசையை ஒழித்தல் இவை தவிர வேறே வழி இல்லை -பயன் கருதாது தொண்டு செய்து ஒரே நோக்கக்கூடு செயல்பட்ட திருவடிக்கு -நடுக்கடலும் ஆழ் மணலும் போல் அமைதியாக-விருப்பு வெறுப்புக்களை இல்லாமல் மன அமைதி எளிதிலே கிட்டிற்று அந்தோ

ஒற்றுமையே வலிமை -எரிகின்ற கட்டை தனித்தனியே இருந்தால் புகை வரும் -கூட்டமாக எறிந்தாள் பற்றிக்கொண்டு எரியும் -தனிமரம் தோப்பாகாது -ஸூலபா புருஷா ராஜன் ஸததம் ப்ரிய வாதிந அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-விபீஷணன் ராவணனுக்கு உபதேசம் -தனித்து நின்ற மரங்கள் வெள்ளத்தில் விழ கூட்டமாக இருந்தவை தப்பிற்றன -பணிவும் வணக்கமும் வேண்டும் -தாமிரபரணி வெள்ளத்தில் நாணல் நீர் வஞ்சிக்கொடி சாயாமல் இருக்க பெரிய மரங்கள் வேரற்று விழுந்தனவே

ஆணவம் தராதரம் இல்லாமல் அதிகமாக பேசுதல் த்யாஜ்யம் இல்லாமல் இருத்தல் -கோபம் கொள்ளுதல் -சுய நலத்தால் தன்னையே பேணுதல் நண்பர்களை ஏமாற்றுதல் இந்த ஆறும் மனிதனை அழித்து விடும் என்றும் யமன் சொல்லுகிறார் என்றார் விதுரர் -தியாகம் உயர்த்தி விடும் என்பதை ஓர் ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா-உண்மையாகப் புகழ்ந்தான் குகன் -த்யாகேனைகே அம்ருதத்வ மாநசு -தியாகம் ஒன்றாலேயே முக்தி அடையாளம் -வேதங்கள் பறை சாற்றுகின்றன -மருந்தும் வைத்தியமும் பிடிக்காதாகிலும் நோட் தீரக் ஆசைப்படுவர் -உனது கவலை தீர உரிய மருந்தை நான் கூறினால் உன்னால் ஏற்க முடியவில்லை -சிந்தித்துப்பார் -என்றார் விதுரர் –

உனது புதல்வர்கள் காட்டுக்கு ஒப்பு -பாண்டவர்கள் புலிக்கு ஒப்பு -புலி இருந்தால் தானே காட்டுக்குப் பாதுகாப்பு -தர்மத்தில் இருந்து செல்வம் விலகாது -செல்வமும் தர்மமும் வெவ்வேறு பாதைகள் அல்ல -அறத்தைக் கடைப்பிடித்து செல்வத்தைச் சேர்க்கவும் காக்கவும் வேண்டும் -தர்மமே செல்வத்துக்குப் பாதுகாப்பு -புத்தி குடும்பம் செல்வம் நண்பர் தோள் ஆகிய ஐந்தும் பலன்கள் -தோள் வலிமையை மட்டுமே நம்பி உன் புதல்வர்கள் ஆணவம் கொள்கிறார்கள் -கற்றது கைமண் அளவும் கல்லாதது உலகளவு என்றும் புரியாமல் உன் மகன் செய்வதும் நன்மையில் முடியாத -அளவோடு உண்பவனுக்கு ஆரோக்யம் ஆயுள் பலம் ஸூகம் மக்கட்பேறு பெரும் தீநீ உண்பவன் என்ற அவப்பெயர் நீங்குதல் ஆகிய ஆறு நன்மைகளும் உண்டாகும் –

காஷாய உடை தரிப்பதால் ஸந்நியாஸி யாக மாட்டான் -கோபமற்று -கல்லையும் பொன்னையும் சமமாக மதித்து -துயரமற்று -நட்ப்போ பகையோ பாராமல் -புகழ்ந்தாலும் இகழ்தலும் கவலை அற்று -விருப்பு வெறுப்பு அற்று -பற்றற்று -இருப்பவன் இல்லறத்தில் இருந்தாலும் ஸந்நியாஸியே -நம்பத் தக்காதவனை நம்பாதே -நம்பத் தக்கவனையும் அதிகமளவு நம்பாதே -சான்றோர்களால் மதித்து நடக்க வேண்டும்

எவன் நண்பன் இல்லையோ – எவன் நண்பனாக இருப்பினும் பண்டிதன் இல்லையோ -பண்டிதனாக இருப்பினும் மனத்தை கட்டுப் படுத்தாதவனாக இருப்பாரிடம் ரஹஸ்யங்களைப் பேசாதே -அனுபவம் மிக்கவர்களிடமே ஆலோசனை செய்ய வேண்டும் -த்ருவன் மகன் வேணன் -தீய பண்புகளுடன் மக்களைத் துன்பறுத்த பூமித்தவி அனைத்தும் செல்வங்களையும் மறைக்க -நாடே அவதிப்பட -குல குருக்கள் அவனை அழித்து அவன் உடலில் இருந்து ப்ருது என்பவனை உருவாக்க -பூமி தேவி பசுவின் உருவில் நிற்க -ரிஷிகள் தேவர்கள் பித்ருக்கள் தொடக்கமான பலரும் வேதம் அன்னம் மூலிகைகள் முதலான பல பொருள்களையும் கறந்து பெற்றார் -கல்வியால் பண்புகளால் குடிப்பிறப்பால் வயதினால் யார் பெரியவர்களாக உள்ளாரோ அவற்றைத் முட்டாள்கள் மதிக்க மாட்டார்கள் -பயனுள்ள காரியங்களில் ஈடுபட்டு பயனற்ற செயல்களில் விலகி இருப்பவன் அறிவாளி

சிலர் தானத்தாலோ இனிய பேச்சாலோ மந்திரத்தாலோ மூலிகையினாலோ பிரியவராக இருப்பர் -நிர்ஹேதுக பிரியம் நிலைத்து இருக்கும் -ஸத்யேந லோகான் ஜயதி தீநாந் தாநேந ஜயதி குரூன் ஸுஸ்ஸுரூஷயா வீர தநுஷா யுதி ஸாத்ரவாந் -ஸர்வருக்கும் ஸர்வ காலமும் மனத்துக்கு இனியான் -எந்த வளர்ச்சி பிற்காலத்தில் தீமை தருமோ அது வளர்ச்சியே அல்ல -எந்தத் தேய்தல் பிற் காலத்தில் வளர்ச்சியில் முடியுமோ அதுவே உண்மையில் வளர்ச்சி -உனது பிள்ளைகளை உண்மையான வளர்ச்சியைத் தேடச்சொல் என்றார் விதுரர் –

நீ பாண்டவர்களை அரசில் அமர்த்தியானால் இப்போதே உன் பிரஜைகளும் தெய்வமும் உன்னை மன்னிப்பர் -வல்மீகி வழிப்பறி செய்பவராக இருந்தாலும் ராம நாம ஜபத்தால் திருந்தி உலகம் புகழும் ஸ்ரீ இராமாயணம் இயற்றி அருளினார் -கடலில் விழுந்த பொருள் இழந்ததே -திரும்பக் கிடைக்காதே – சான்றோர்களிடம் அடிபணிந்து உபதேசம் பெறாதவன் பேசுவது வீண் -புலனடக்கம் இல்லாதவனின் ஸாஸ்த்ர அறிவு வீண் -எரியாத நெருப்பில் -சாம்பலில் -பண்ணப்பட்ட ஹோமம் வீண் -உன் மகன் கூடா நட்பு கொண்டு வீணாகிறான் -யார் இவருடைய மனமும் அறிவும் ரஹஸ்யங்களும் தர்மத்துக்கு விரோதம் இல்லாமல் ஒத்துப் போகிறதோ அந்த நட்பே நிலைக்கும்

நடாதூர் ஆழ்வானின் திருக்குமாரர் வாத்ஸ்ய வரதர் -திருவெள்ளறை விஷ்ணு சித்தர் என்னும் எங்கள் ஆழ்வான் இடமும் ஸ்ரீ பாஷ்யம் உபதேசம் கேட்டு வர – நான் செத்து வாரும் -அடியேன் வந்திருக்கிறேன் -நான் அஹங்கார அடையாளம் -மாறி அடியேன் -என்றதும் ஆச்சார்யர் மகிழ்ந்து ஸ்ரீ பாஷ்யம் கற்பித்து அருளினார் -கற்றபின் நிற்க அதற்குத் தக-கற்றதைப் பணிவுடன் கடைப் பிடிக்க வேண்டும் –

இங்குள்ள பகவத் தொண்டர்கள் விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுவர் -யார் தர்மத்தை மீறாமல் -மனித நேய ஒழுக்கத்தைத் தாண்டாமல் -அப்படி தெரியாமல் தாண்டினால் வெட்கப்படுபவனாய் -மென்மையான உள்ளம் கொண்டவனாய் அஹிம்சையைக் கடைப்பிடிப்பவனாய் உள்ளானோ அவன் எங்குப் பிறந்தாலும் சிறந்தவர் களே -அவனைச் சான் றோரும் போற்றுவர் -குறும்பறுத்த நம்பி -தொண்டைமான் சக்ரவர்த்தி விருத்தாந்தம் அறிவோம் -ஒருவன் எப்படிப்பட்டவன் என்றும் முதலில் நம் புத்தியால் அறிய வேண்டும் -பின் அனுபவத்தால் பலமுறை ஆராய வேண்டும் சில நல்லவர்களிடத்திலும் அவரைப் பற்றி கேட்க வேண்டும் -இறுதியில் நம் கண்ணாலே பார்த்துக் முடிவும் செய்ய வேண்டும் -எங்கு பிறந்தார் என்றும் பாராமல் அவனுடைய பண்பு ஞானம் பக்தி இவற்றையே பார்க்க வேண்டும் –

பாண்டவர்கள் வஞ்சனையால் இழந்த ராஜ்யத்தை நியாயமான வழியில் போரிட்டு மீட்க்கப் பார்க்கிறார்கள் -வெற்றி உறுதி -உன் பிள்ளைகள் நியாயமற்ற வழியில் அடைந்த அரசைத் தக்க வைக்கப் பார்க்கிறார்கள் -தோல்வி உறுதி -இந்திரன் இழந்த செல்வதை த்ரிவிக்ரமனாய் தன்னதாக்கிக் கொண்டு மீண்டும் கொடுத்து அருளினான் -இன்றும் இழந்த சொத்தை மீட்கவோ தொலைத்த பொருளைக் கண்டு பிடிக்கவோ ஸூந்தர காண்டம் பாராயணம் செய்வதும் மரபில் உள்ளது -யார் ஒருவன் கடந்த காலத்துச் செயல்களில் மிச்சம் இருப்பதைக் நினைவில் கொள்கிறானோ -நிகழ் காலத்துச் செயல்களை முடிப்பதில் உறுதியுடன் இருக்கிறானோ -வரும் காலத்து ஆபத்துக்களைப் போக்க வழிகளை அறிந்து வைத்திருக்கிறானோ அவன் செல்வத்தை இழக்கவே மாட்டான் -நடந்து முடிந்தவைகளால் அனுபவமும் -நடப்பவைகளில் ஊக்கமும் -நடக்கப் போவதில் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் –மனத்தாலும் மொழியாலும் மெய்யாலும் எதில் ஒருவன் இடைவிடாமல் ஈடுபடுகிறானோ அந்தக் காரியமே அவனைத் தன பாக்களில் இழுத்து விடும் -ஆகவே ஒருவன் நல்ல செயல்களிலேயே முக்காலத்திலும் ஈடுபட வேண்டும் -சக்தி இல்லாதவன் அனைவரிடத்திலும் பொறுமையுடன் இருப்பான் -சக்தி இருப்பவன் தர்மத்துக்காகப் பொறுமையுடன் இருப்பான் -யார் பார்வையில் வேற்றுமை இல்லையோ அவரிடம் பொறுமை காப்பதே நமக்கு நல்லது –

ஊக்கமே தவம் -தர்மத்தின் வழியில் நடந்து விடாமுயற்சியுடன் ஒரு செயலில் ஈடுபட்டால் அதற்கு தெய்வம் துணை நிற்கும் –மனத் தளர்ச்சி இல்லாமல் ஊக்கத்துடன் உழைப்பதே செல்வம் லாபம் சுபம் ஆகியவற்றுக்கு மூலமாகும் -ஒன்றி ஓன்று உலகம் படைக்கிறான் அன்றோ -தவறான வழியில் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு செய்யும் யாகம் ஹோமமும் பலனைத் தர மாட்டாவே -யோகிகளுக்கு தவமே வலிமை -வேதம் கற்றோருக்கு வேதமே வலிமை -கொடியவர்களுக்கு ஹிம்ஸையே வலிமை -நல்ல குணசாலிகளுக்கு பொறுமையே வலிமை –

ஆச்சார்ய தேவோ பவ -பகவான் அருளும் குரு மூலமே கிட்டும் -அறிவிலி கூட குரு பக்தியால் ஞானம் ஆயுள் புகழ் வலிமை ஆகியவை பெற்று முக்தி யடைகிறான் -மன்னா நீயும் வேத வியாஸரிடம் பக்தியுடன் இரு -அவர் சொல்லை மீறாதே -விலங்கோ மனிதனோ பறவையோ அனைவருமே ஆச்சார்யன் கடாஷித்தால் நன்மை அடைகின்றனர்

நல்லவன் பின் நின்றாலே பெரு -விபீஷணனுடன் வந்த நால்வரும் விசாரணை இல்லாமல் ஏற்கப்பட்டனர் அன்றோ -காம சுகத்தை அனுபவித்து காரணத்தை வெல்ல முடியாத -விறகுகளை மேலே மேலே போட்டு நெருப்பை அணைக்க முடியாத -தர்ம புத்ரன் இப்போதும் உங்களுக்கு நன்மையையே நினைக்கிறான் -இது புரியாத உன் பிள்ளைகள் அவனுக்குக் கெடும் நினைத்துத் தங்களுக்கே தீமை தேடிக் கொள்ளுகிறார்கள் -பூமியின் செல்வம் எல்லாமே ஒருவனே அனுபவிப்பதற்கு இல்லை என்று புரிந்தவன் நிம்மதி அடைகிறான் -இவை எல்லாமே எனக்கே என்றும் நினைப்பவன் அழிந்தே போகிறான் -வெள்ளியுடன் சேர்ந்து தங்கத்துக்கு குறை -வெண்கலம் சேர்ந்தால் வெள்ளிக்கு குறை -ஈயம் சேர்ந்தால் வெண் கலத்துக்கு குறை -ஈயத்துக்கு தன்னிடம் சேர்ந்து அழுக்காலே குறை -தலை கீழாகப் பார்த்தால் வெண் கலத்துடன் சேர்ந்து ஈயத்துக்கும் வெள்ளியுடன் சேர்ந்து வண காலத்துக்கும் -தனித்தே சேர்ந்து வெள்ளிக்கும் மதிப்பு கூடுமோ -யாருடன் சேர்கிறோமோ அதன் பலன் கிட்டும் –

த்ருதராஷ்ட்ரா -நீ அழியக்கூடிய சொத்தைப் பற்றி நினைத்து கவலைப்படுகிறாய் -அழியாத ஆத்மாவுக்கு நல்லதை நினைத்தால் உயர் கதி அடையாளம் -எவ்வளவு விறகை இட்டாலும் நெருப்புக்கும் -எவ்வளவு தண்ணீர் வந்தடைந்தாலும் கடலுக்கும் எத்தனை உயிர்களைக் கவர்ந்தாலும் யமனுக்கும் திருப்தி பிறப்பதில்லையே -போதும் என்பதை நாம் அசையும் பொருளிலோ நம் முயற்சியிலோ இல்லை நம் மனத்தில் தான் உள்ளது -இந்த ஜீவாத்மா ஒரு வற்றாத நதி -இது ஸத்யம் பரமாத்மா என்னும் மலையிலிருந்து பிறக்கிறது -புண்ணியம் இதன் தண்ணீர் -தைர்யம் இதன் கரைகள் -இரக்கம் இதன் அலைகள் -புண்யாத்மாக்கள் இதில் நீராடி ஆசை யற்றவர்களாகி தூய்மை அடைகிறார்கள்-ஆத்மா இறுதியில் கலங்காத் தன்மையை -கடலை -அடைகிறான் – அழியாததையே நினை -அழிவதை மறந்து ஒழி –
இதுகாறும் கூறிய சத்தியத்தையும் தர்மத்தையும் நன்கு ஆராய்வாய் -சரி என்றும் மனதில் படுபவனாய் கவலையை ஒழித்துக் கடைப்பிடி -என்று கூறி உபதேசத்தை முடித்தார்
த்ருதராஷ்ட்ரன் -விதுரா நீ சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்கிறேன் -ஆனால் விதியை வெல்ல முடியாத -துரியோதனன் பேசும் போது இவை அனைத்தும் மறந்து விடுகின்றன -ஏன் நிலையை பகவான் தான் நேர் படுத்த வேண்டும் -என்று கூறி முடித்தார் –

தர்ம புத்ரன் தானும் விதுரரும் ஒரே யம தர்மனின் சக்தியால் பிறந்தவர்கள் என்று உணர்ந்தார் -அசரீரி -தர்மபுத்திரர் மஹாத்மா விதுரர் ஸாந்தானிக லோகத்தை அடைந்தார் -அவருடைய ஸந்நியாஸ நிலையை நினைத்து சடங்குகளைச் செய் -என்று உத்தரவு விட தர்மபுத்ரன் அப்படியே செய்தான் -பின்பு வேத வியாஸர் அங்கு வந்து விதுரர் தர்மத்தின் உருவம் அவரே சநாதன தர்ம தேவன்-அவருடைய தவமும் பக்தியும் எட்டுத் திக்கிலும் நிறைந்து இருக்கும் -அவர் பரம பொருளான கண்ணனின் திருவடிகளை அடைந்தார் -அவர் உபதேசித்ததே தர்மம் -என்று கூறி மறைந்தார் –
விதுரரின் நீதி நமது செயல்களிலே தெரியட்டும் –

————————————

உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்-மொத்தம் 8 அத்தியாயங்களில் -604-ஸ்லோகங்கள் உள்ளன

முதல் அத்யாயத்தில் இருந்து சில
ஒரே மரத்தில் இருந்து வேள்விக்கான பாத்திரங்களும் கரண்டிகளும் உருவாகும் -அதிலிருந்தே நீர்த்தொட்டியும் உடலும் உலக்கையும் உருவாகும்-ஒன்றிலிருந்தே கெட்டதும் நல்லதும் தோன்றலாம் –ஒரே குலத்தில் கவ்ரவர்களும் பாண்டவர்களும் -அறிவிலியும் அறிவாளியும் தோன்றுவது இயல்வே

ஒன்றால் இரண்டை நிர்ணயித்துக் கொண்டு மூன்றால் நான்கை வசப்படுத்துவீர் -ஐந்தை வென்று ஆறை உணர்ந்து -ஏழைத் தவிர்த்து சுகம் பெறுவீர்-1-38-
ஒன்றால் -நல்லறிவால்
இரண்டையும் –நல்லதையும் கெட்டதையும்
மூன்றால் -நண்பன் எதிரி உதாசீனன்
நான்கை -சாம தான பேத தண்டம் -மென்மையுள்ள பேச்சு -பொருள் உதவி -மிரட்டிப் பணிவித்தல் -தண்டித்துப் பணிவித்தல்
ஐந்து-புலன் உணர்வுகளில் நாட்டம்
ஆறு -சமாதானம் போர் படையெடுப்பு நல்ல தருணம் பார்த்துக் எதிர்க்கும் வரை முற்றுகை -வஞ்சித்து மனம் மாறச் செய்தல்-சரண் அடைதல் ஆகியவை ஆறும்
ஏழு -ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் ஏமாறுதல் சூதாடுதல் வேட்டையாடுதல் மது அருந்துதல் தடித்துப் பேசுதல் கொடூரமான தண்டனை பொருளாதரத்துக்கு நாசம் விளைவித்தல் -ஆகியவற்றைத் தவிர்த்து சுகம் பெறுதல்

விஷ நீர் குடித்தவனை மட்டுமே அழிக்கும் -ஆயுதம் அவனாலே அடிபட்ட ஒருவனையே மட்டுமே அழிக்கும் -அரசவையில் செய்த மந்த்ர ஆலோசனையின் தவறு அரசனை நாட்டுடன் நாட்டு மக்களையும் அழிக்கும்

சாம தான பேத தண்டங்களில் -பேதம் தாழ்ந்தது -தானம் மத்தியது -சாமம் உயர்ந்தது -இம் மூன்று உபாயங்களும் பயம் அளிக்காத போது மட்டுமே தண்டம் உபயோகிக்கத் தக்கது

தேவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் துறவிகள் அதிதிகள் -ஐவரையும் வழிபடுபவன் பெரும் புகழ் அடைகிறான் -நமக்குள்ளே இந்திரியங்களை -வாக்கில் அக்னியாகவும் -கண்களில் ஸூர்யனாகவும் -மனத்தில் சந்த்ரனாகவும் நின்றும் இயக்கி -வெளியில் மழை வெப்பம் காற்று முதலியவற்றைத்தந்து உதவின வாழ வைக்கும் தேவதைகள் -நமக்கு உருவளித்து ஆயுஸ் அறிவு சக்தி பொருள் தந்து உதவி-மறைந்த பின்பும் நம் நலனைக் கோரி நிற்கும் பித்ருக்கள் -நண்பனாக உறவினனாக உணவு ஆசை குடியிருப்பு போன்ற வாழும் வசதிகளைத் தரும் மனித இனம் -பற்றற்றுத் திரிந்து நல்லதையும் நலம் தருபவையையும் நமக்காக சேமித்து வைத்து அளிக்கும் துறவி -நாடோடியாக இறைவனே வருகிறான் என்னும்படி வரும் அதிதிகள் -இந்த ஐவரையும் இறைவனின் பிரதிநிதிகள் என்று எண்ணி வாழ வேண்டும்-

ஒன்பது வாயில்கள் -காதுகள் கண்கள் மூக்குத் துவாரங்கள் -வாய் -மலவழி -சிறுநீர் வழி -கொண்ட இந்த உடல் என்னும் வீட்டில் -வாயு பித்தம் கபம் என்னும் மூன்று தூண்கள் -பஞ்சபூதமாகிய ஐந்து சாட்சிகள் -ஒரு ஸ்வாமிகள் உடையவன் ஆத்மா உண்டு என்று உணர்ந்தவனே அறிஞன்

———

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.
மகாபாரதத்தில் பகவத் கீதை ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொதுநீதி மொழி எனலாம்                                                                                                                  பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன் அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.
சஞ்சையன் தூது
ஆனாலும் இருதரப்பினருக்கும் பொதுவான சிலர் போரினைத் தவிர்க்க தூது முயற்சிகளிலும் ஈடுபட்டனர். திருதராடிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும் படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையனை அனுப்பி இருந்தான்.
சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து அவர்கள் தரப்பிலேயே நியாயம் இருப்பதை உனர்ந்து கொண்டு, பாரதப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனை உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால் அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.
திருதராட்டிரன் குழப்பம்
சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள் அவனுடைய தூதின் விளைவினைப் பட்டவர்த்தனமாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான்.
“அரசே! வலிமை குன்றியும் யுத்த தளவாடங்கள் சரியில்லாத நிலையிலும் இருக்கும் போது வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் உறக்கம் வராது. பொருளைப் பறி கொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், பிறர் பொருளில் ஆசை வைத்தவன், திருடன் ஆகியோருக்கும் உறக்கம் சாத்தியமாவதில்லை. இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள்?” என்று கேட்கும் ஆரம்பத்திலேயே விதுரனின் புத்திக் கூர்மை தெளிவாகத் தெரிகிறது.
விதுரநீதி
அவனுக்கு நேரடியாக விடை கூற முடியாத திருதராட்டிரன், “எதையாவது சொல். என் மன ஆறுதலுக்காகச் சொல். நீ நீதிவான். நீ சொல்லும் நியாய உரைகள் எப்போதுமே கேட்க நன்றாக இருக்கும்” என்று அவனை ஊக்கிப் பேச வைக்கிறான். அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர நீதியாகும் .
இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது. இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.
எடுத்துக்காட்டு நீதி உரைகள்                                                                                                      இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்…

1.பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டல் மட்டுமே சொல்லுவான்.
2.பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
3.அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
4.வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது;
6.பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
7.இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; 8.முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
8.அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.
 8.சுக வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
 9.மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறுமையின்மை, தைரியம் ஆகிய ஐந்து குணங்களையும் ஒருபோது எந்த நிலையிலும் விட்டுவிடக் கூடாது                                                   10.விவேகி எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்பதால் அதை மாற்ற வழியில்லை.
11. வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான காலம் உண்டு.
 12.தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் நற்செயல்களையும் செய்தாக வேண்டும்.
 13.ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக் கூடாது.
 14.ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், பூச்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப் போய் அதில் மாட்டிக் கொள்கிறது. ஆசை வயப்பட்ட மனிதனின் நிலையும் இதுதான்.
 15.அளவுக்கு மிஞ்சிய தூக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், மயக்கம், எதையும் தாமதமாகச் செய்தல் எனும் ஆறு குணங்கலும் முன்னேற்றப் பாதையின் முட்டுக்கட்டைகளாகும்.
 16.அறிவிலி எனப்படுபவன், மற்றவர்கள் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் வயிறு புடைக்க உண்டு களிப்பான்.
 17.அறிவிலி எனப்படுபவன், தனக்கு அறிவு இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் கர்வமாக இருப்பான்.
18. தன்னை நாடி வரும் தீயவர்களையும் நல்லவன் கைவிடமாட்டான்.
 19.மற்றவர்கள் அவமதித்தாலும், தாக்கினாலும் பழிவாங்க விரும்பாமல் அமைதியாக இருப்பதுதான் பொறுமை.
 20.அறிவிலி எனப்படுபவன் தான் அழைக்கப்படாத இடங்களுக்கும் வேண்டுமென்று செல்வான்.
 21.தன்னடக்கமில்லாதவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காது.
22. தைரியம் என்பது உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் தொடர்புடையது.
 23.முதல்தரமான மனிதன் இந்த வையகம் வாழ வேண்டும் என்கிற கொள்கையை உடையவனாக இருப்பான்.
24. தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக மகிழ்ச்சி கொள்வதில்லை. அவமதித்தாலும் தாபத்தை அடைவதில்லை. கங்கையின் மடுவைப் போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
 25.தீயோரின் சேர்க்கை அஞ்சத்தக்கது. அது எப்படிப்பட்ட நல்லவரையும் கெடுத்து விடும். காய்ந்த கட்டையுடன் சேர்ந்த ஈர மரமும் எரிந்துவிடும்.
 26.அகங்காரம் எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், கோபம் கொள்ளல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று கருதுதல், நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீய குணங்களும் கூர்மையான கத்தி போல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால், இவையே மனிதர்களைக் கொல்லுகின்றனவல்லாமல் யமன் கொல்கிறான் என்பதில்லை.
 27.புண்ணில் வேல் பாய்ச்சுபவனாகவும், கொடுஞ்சொல் பேசுபவனாகவும் இருக்கக் கூடாது.
28. மனத்தின் ஈடுபாட்டிற்கு ஏற்ப முயற்சியில் வெற்றியின் அளவு அமைகிறது.
 29.நல்லவர் உள்ளம் நல்லவர் அறிவர்.
30. நல்லவர்களைத் திட்டுவதனால் ஒருவன் பாவம் செய்தவனாகிறான்.
31. மனிதனின் மனத்தில் தீய விசயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.
 32.அறிவிலி எனப்படுபவன், பகைவனை நண்பன் என்று நம்பி ஏமாறுவான்.
 33.ஒன்றை விரும்பும் போது அது நம்மிடம் இருக்கிறதா, அது நமக்குத் தேவைதானா, அதைத் தவிர்க்க முடியுமா என்று சிந்திப்பது அவசியமாகும்.
 34.படிப்பு, பாவச் செயல் செய்பவனைக் காப்பாற்றாது. நற்பண்பு ஒன்றுதான் காப்பாற்றும்.

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான ஆபத்தான மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. 

ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான – யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்து கிணற்றுக்கு மேலே ஏறி ஒருவழியாக தப்பித்தான்.

அவன் மனம், ’தடக், தடக்’ என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. ’அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்!’ என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, 

கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது. அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… 

அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்… 

உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்… அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.

என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அது முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. 

முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். 

மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

உறவினர்கள் இங்கே காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் மூழ்கிவிடுகிறார்கள்

நல்ல குணமுள்ளவர்கள் இங்கே காப்பாற்றப்படுகிறார்கள், கெட்ட குணமுள்ளவர்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள் [5.39.23]

“இந்த உலகில், உறவினர்கள் காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள். நல்ல நடத்தையைப் பின்பற்றுபவர்கள் காப்பாற்றுகிறார்கள். தீய நடத்தையைப் பின்பற்றுபவர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள்.”பணிவு மற்றும் நன்னடத்தை பற்றிய விதுரரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கூறத்தக்கவை:

பணிவு உள்ளுணர்வைக் கொல்லும், வீரம் தீமையைக் கொல்லும்.

மன்னிப்பு எப்போதும் கோபத்தைக் கொல்லும், நடத்தை எப்போதும் பண்புகளைக் கொல்லும்.

“பணிவு தீய நடத்தையை அழிக்கிறது. வீரம் பாதகமான சூழ்நிலைகளை அழிக்கிறது. மன்னிப்பு எப்போதும் கோபத்தை அழிக்கிறது. நல்ல நடத்தை தீய சகுனங்களை அழிக்கிறது.”பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன் திரௌபதியிடம் மன்னிப்பின் மகத்துவத்தை, ” 

மன்னிப்பு என்பது தர்மம். மன்னிப்பு என்பது தியாகம். மன்னிப்பு என்பது வேதங்கள். மன்னிப்பு என்பது புனித நூல்கள் ” என்று கூறியிருந்தார். இந்த ஸ்லோகங்கள் இவ்வாறு தொடங்குகின்றன: மன்னிப்பு என்பது மதம், மன்னிப்பு என்பது தியாகம், மன்னிப்பு என்பது வேதங்கள், மன்னிப்பு கேட்பது [3.3.36a]. இங்கே விதுரர் மன்னிப்பு என்ற கருத்துக்கு ஒரு நேர்த்தியான நுணுக்கத்தைச் சேர்க்கிறார்: 

மன்னிக்க முடியாதவனே நீதியின் பொருட்டு அனைத்திற்கும் வல்லவன் [5.39.46அ]

“ஒரு பலவீனமான நபர் எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டும். ஒரு வலிமையான நபர் தர்மத்திற்காக அதைச் செய்ய வேண்டும்.”நிச்சயமாக, யுதிஷ்டிரன் அந்த வார்த்தைகளைப் பேசியபோது நிலைமை வேறுபட்டது, நிர்ப்பந்தத்தாலும், அந்த நேரத்தில் பாண்டவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான நிலையை உணர்ந்தும் அதிகமாக உச்சரித்தார், எனவே அந்த வார்த்தைகளையும், மகாபாரதத்திலிருந்து வேறு எந்த வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தத்தை உண்மையான முறையில் புரிந்துகொள்ள அவற்றின் பொருத்தமான சூழலில் வைப்பது முக்கியம்.இந்த அத்தியாயம், ஒருவர் எதற்காக வருத்தப்பட வேண்டும், வயதாவதற்கு என்ன காரணம், குறைவதற்கான காரணம் என்ன, இன்னும் பலவற்றைப் பற்றி விதுரரின் ஆலோசனையுடன் முடிகிறது.

  • கோபமின்றி கோபத்தையும், நன்மையால் தீமையையும் வெல்ல வேண்டும்.
  • தர்மத்தால் தீமையை வெல்ல வேண்டும், உண்மையால் பொய்யை வெல்ல வேண்டும்.
  • ” கோபமின்மையால் கோபத்தை வெல்ல வேண்டும்.
  • தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
  • கஞ்சத்தனத்தை பெருந்தன்மையால் வெல்ல வேண்டும்.
  • பொய்யை உண்மையால் வெல்ல வேண்டும். “
  • ஒரு அறியாமையுள்ள மனிதன் பரிதாபப்பட வேண்டும், குழந்தைகள் இல்லாத ஒரு ஜோடி பரிதாபப்பட வேண்டும்.
  • பட்டினியால் வாடும் மக்கள் துக்கப்படுகிறார்கள், ராஜா இல்லாத தேசம் துக்ககரமானது.
  • ” கல்வி இல்லாத ஒரு மனிதனைப் பற்றி ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • குழந்தை இல்லாத தம்பதியருக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • பசியால் வாடும் குடிமக்களுக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • ராஜா இல்லாத ஒரு ராஜ்யத்திற்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். “
  • மலைகளின் நீருக்குக் கீழே உடல்களுடன் கூடிய முதுமை
  • அஸம்போகோ ஜரா ஸ்த்ரீணம் வக்ஷாலயா மனசோ ஜரா [5.39.63]
  • ” உடல் உள்ளவர்கள் பயணங்களால் வயதாகிறார்கள். 
  • மழையால் மலைகள் வயதாகின்றன. 
  • உடலுறவு இல்லாதது பெண்களை வயதாக்குகிறது. 
  • கடுமையான வார்த்தைகள் மனதை வயதாக்குகின்றன. “
  • வேதங்கள் பெயரில்லாமல் தூய்மையற்றவை, பிராமணரின் சபதங்கள் தூய்மையற்றவை.
  • பெண்கள் ஆர்வத்தில் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள், நாடுகடத்தலில் தூய்மையானவர்கள்.
  • ” வேதங்கள் மீண்டும் சொல்லப்படாவிட்டால் அவை களங்கப்படுத்தப்படும்.” 
  • பிராமணர்கள் சபதம் இல்லாததால் களங்கப்படுகிறார்கள். 
  • கற்புள்ள பெண்களை ஆர்வம் கறைபடுத்துகிறது. 
  • வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது பெண்களை களங்கப்படுத்துகிறது. 
  • தங்கத்தின் அழுக்கு வெள்ளி, வெள்ளியின் அழுக்கு ட்ரபு.
  • டிராபுமலா ஈயம் என்று அழைக்கப்படும் ஈயத்தின் அழுக்கும் அழுக்குதான்.
  • வெள்ளி தங்கத்தை கறைபடுத்துகிறது. 
  • தகரம் வெள்ளியைக் கறைபடுத்துகிறது. 
  • ஈயம் தகரத்தை கறைபடுத்துகிறது. 
  • தூசி ஈயத்தைக் கறைபடுத்துகிறது. “
  • கனவுகளால் தூக்கத்தை வெல்லக்கூடாது, காமத்தால் பெண்ணை வெல்லக்கூடாது.
  • நெருப்பை விறகினால் வெல்லக்கூடாது, மதுவை பானத்தால் வெல்லக்கூடாது.
  • ” அதிக தூக்கத்தால் தூக்கத்தை வெல்லாதே. 
  • பெண்களை ஆசையால் வெல்லாதீர்கள். 
  • நெருப்பை மூட்டி அதை வெல்லாதீர்கள். 
  • மதுவின் மூலம் தாகத்தை வெல்லாதீர்கள். “

முடிவில், விதுரர் திருதராஷ்டிரனை ஆசையை கைவிடுமாறு அறிவுறுத்துகிறார், ஏனெனில் ” 

ஆயிரம் உள்ளவர்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளவர்களும் வாழ்கிறார்கள். ” ( 

சஹஸ்ரினோ’பி ஜீவந்தி ஜீவந்தி ஷதினஸ்ததா  – 5.39.68அ)அடுத்த அத்தியாயத்தில் விதுரர் தொடர்ந்து, ” 

நம்பிக்கை உறுதியை அழிக்கிறது. மரணம் செழிப்பை அழிக்கிறது. கோபம் செல்வத்தை அழிக்கிறது. கஞ்சத்தனம் புகழை அழிக்கிறது. பராமரிக்கத் தவறுவது விலங்குகளை அழிக்கிறது. ஓ ராஜா! கோபக்கார பிராமணர் ஒருவர் கூட ஒரு ராஜ்யத்தை அழிக்கிறார் ” என்று மன்னரிடம் கூறுகிறார்.( 

நம்பிக்கை பொறுமையைக் கொல்லும், செழிப்பை அழிக்கும்; கோபம் செல்வத்தைக் கொல்லும், புகழ் என்பது இழிவானது.)

மன்னா, அலட்சியம் கால்நடைகளைக் கொல்லும்; கோபக்கார பிராமணன் ஒருவன் தேசத்தைக் கொல்கிறான் – 5.40.7 )விதுரர், ராஜாவுக்கு அறிவுரை கூறியதன் நோக்கம், அவர் திருப்தி அடைந்து நிலையற்றதை விட்டுவிடுவதாகும் என்று கூறுகிறார். உடல் நிலையற்றது, ஒருவரின் செயல்கள் மட்டுமே அவரைப் பின்தொடர்ந்தன, இறந்தவரின் உடலை நெருப்பில் எறிந்துவிட்டு உறவினர்களும் நலம் விரும்பிகளும் திரும்புவது போல, இறந்தவரின் செயல்கள்தான் அவரைப் பின்தொடர்ந்தன. இங்கே, விதுரர் ஆன்மா, செயல்கள் மற்றும் பலவற்றின் ஒரு படத்தை முன்வைக்க துடிப்பான கற்பனையை அழைக்கிறார், மேலும் இது முழுமையாக மீண்டும் உருவாக்கத் தகுந்தது: 

ஆத்ம நதி பாரத புண்யதீர்த்தம்; சத்தியத்தின் நீர் பொறுமையின் மூலமாகவும், கட்டுப்பாட்டின் அலைகளாகவும் இருக்கிறது.

அதில் நீராடுபவன் பக்திமான்களைத் தூய்மைப்படுத்துகிறான்; புனித ஆன்மா எப்போதும் தண்ணீர்தான், தண்ணீர் தானே

ஆன்மா ஒரு நதி. தூய்மை அதன் தீர்த்தங்களைக் குறிக்கிறது. உண்மை அதன் நீர். உறுதியானது கரைகளை உருவாக்குகிறது. சுயக்கட்டுப்பாடு அலைகளைக் குறிக்கிறது. இவற்றில் குளிப்பதன் மூலம், தூய செயல்களைச் செய்பவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார். ஆன்மா தூய்மையாகி, நித்திய நீரில் உள்ள தண்ணீரைப் போல இருக்கிறது. மற்றும் 

காமத்தையும் கோபத்தையும் பற்றிக்கொள்ளும் ஐந்து புலன்களின் நீரின் நதி.

பொறுமையின் படகை உருவாக்கி, பிறவியின் கோட்டைகளைக் கடக்கவும்.

ஒரு நதி இருக்கிறது, அதில் ஐந்து புலன்கள் தண்ணீராகவும், ஆசை மற்றும் கோபம் முதலைகளாகவும் இருக்கின்றன. உறுதியிலிருந்து ஒரு படகை உருவாக்கி, மீண்டும் மீண்டும் பிறக்கும் கடினமான சுழல்களைக் கடக்கவும்.விதியின் முதன்மையைப் பற்றிய புலம்பலுடன் ஏழாவது அத்தியாயத்தைத் தொடங்கிய திருதராஷ்டிரன், எட்டாவது அத்தியாயத்தை மற்றொரு புலம்பலுடன் முடிக்கிறார் – ” 

விதி என்பது செயல்படுபவன் என்று நான் நினைக்கிறேன், மனித முயற்சி பயனற்றது. ” விதுர நிதியின் கடைசி அத்தியாயத்தில், திருதராஷ்டிரன் விதுரரிடம், அவர் இதுவரை பேசாத ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். விதுரர், சனத்சுஜாத முனிவர் தான் ராஜாவுடன் பேசக்கூடியவர் என்று பதிலளித்தார். முனிவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார், விதுரர் ராஜாவின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு முனிவரைக் கேட்டார்.இத்துடன் விதுர நிதியைக் கொண்ட பிரஜாகர பர்வம் முடிகிறது .

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விதுரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –