ஸ்ரீ விதுர நீதி-ஸ்ரீ மஹாபாரதம்-உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ்யேத்
பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மாமயம் பிரதர்ஷயதி

மஹத்வம் பாரவத்யம் -மஹா பாரதம் –வேத வியாசர் உபநிஷத் கடலைக்கடைந்து அளித்த அம்ருதம்–ஸூர்ய பகவானின் புதல்வரான-யமதர்மராஜனே விதுரராக அவதாரம் -ராமோ விக்ரஹவான் தர்ம-கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் -போல் தர்மமே மனிதனாகப் பிறந்தது-பரதாழ்வான் சத்ருக்ந ஆள்வான் ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் போல் விதுர ஆழ்வான் -கண்ணனைக் கண்டவுடன் மனமுருகி -தன்னிலை மறந்து -மிக்க பரிவுடன் ஆஸனத்தில் அமர்த்திப் பழங்களைச் சமர்ப்பித்து அருளியதாலே ஆழ்வான் எனப்பட்டார் -மாண்டில்ய ரிஷியின் சாபத்தால் தர்ம ராஜாவே மனிதனாகப் பிறந்து தர்மத்தைப் போதித்ததே விதுர நீதி-

விதுர -அறிவுடையோர் -சான்றோர் என்றும் பொருள் -சந்தனு மஹாராஜருக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தார் பீஷ்மாச்சார்யார்-சந்தனுவுக்கும் மற்ற மனைவியான சத்யவதிக்கும் இரண்டு புதல்வர்கள் -விசித்திர வீர்யன் -சித்ராங்கதன் -இரண்டாமவன் இளைமையில் மாண்டான் – விசித்திரம் வீரனுக்கு அம்பிகா அம்பாலிகா -என்ற இரண்டு மனைவியர் -குழந்தைப்பேறு பெறுவதற்கு முன்பே விசித்திரம் வீர்யனும் மாண்டான் -நாட்டைக் காக்க புதல்வர்கள் வேண்டும் என்றும் வேத வ்யாஸாரை வேண்டிக் கொள்ள அம்பிகாவுக்கு கண் பார்வை அற்ற த்ருதராஷ்ட்ரனனும் அம்பாலிக்கு வெளுத்த பாண்டுவும் அம்பிகாவின் தாதிக்கு விதுரரும் பிறந்தார் -மூவரும் பீஷ்மாச்சார்யாரிடம் அனைத்து வித்யைகளும் கற்றனர் -பாண்டுவுக்கு குந்திதேவியும் த்ருதராஷ்ரனுக்கு காந்தாரியையும் விதுரருக்கு தேவக மன்னனின் மகளையும் மணம் முடித்து வைத்தார் பீஷ்மர் -பாண்டு அரசப் பொறுப்பேற்று மாண்டு போக த்ருதராஷ்ட்ரன் அரசாக விதுரர் மந்திரியானார் -காலத்தில் கோலத்தால் இவருடைய அறிவுத் திறனும் தர்ம சிந்தனையும் அரசனுக்குப் பிடிக்காமல் போனதே

அறிவொன்றும் இல்லாத – இப்போது இல்லை யாகில் விடுங்கோள்- விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த ஞானம் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை –

எதிரியின் உள்ளத்தை படிப்பவனே ஆபத்தைத் தாண்டுகிறான் கூர்மையான ஆயுதத்தை விட கொடியதை அறிந்தவனைக் கொல்ல முடியாது -நெருப்பு காட்டை அழிக்கும் ஆனால் வலையில் இருக்கும் எலியை எரிக்காது -முள்ளம் பன்றி சுரங்கத்தில் புகுந்து நெருப்பில் இருந்து தப்பிக்கும் நடந்து செல்பவன் நக்ஷத்ரங்களைப் பார்த்து வழி தெரிந்து கொள்கிறான் -புரிந்து நடந்து கொள் -மதி நுட்பத்தால் பாண்டவர்களைக் -வாரணாவதம் -இன்று பர்னாவா -அரக்கு மாளிகை நெருப்பில் இருந்து காத்த விதுரர் –

பக்திஸ் ச ஞான விசேஷ—ஸம் ஸ்ப்ருஸன் ஆஸனம் ஸுவ்ரே விதுர ஸ மஹா மதி –விதுர அன்னானி புபுஜே ஸூஸீநி குணவந்தி ச -தூய்மை சுவை என்றும் ஏற்றுக் கொண்டு அருளினவன் கண்ணன்

தன்னை விட பலசாலியுடன் பகை கொண்டவன் -தன் பொருள் அனைத்தையுமே திருட்டுக் கொடுத்தவன் -எதிலும் பேராசை கொண்டவன் -திருடன் -ஆகியோர் தூக்கம் வராமல் தவிப்பர் –

அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-நமக்குக் கசப்பாய் இருப்பினும் நல்லதைச் சொல்பவர் கிடைப்பதும் கேட்பவர் கிடைப்பதும் அரிது -விதுரர் எந்தக் கவலையும் இல்லாமல் தர்ம ஸாஸ்த்ரம் போதிப்பதையே அறிவுரையாகக் கூறினான்

மன்னா தர்மபுத்திரர் தயை தர்ம சிந்தனை ஸத்யம் பராக்ரமம் ஆகியவை கொண்டவர் -பெரியவர்களை மதிப்பவர் -நீ அவரை காட்டுக்கு அனுப்பிவிட்டு மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறாய் -என்னை பண்டிதன் என்று புகழ்கிறாய் -யார் பண்டிதன் என்று கூறுகிறேன்

ஆத்ம ஞானம் -விடாமுயற்சி -துன்பம் சகிக்கும் சக்தி -தர்மத்தில் உறுதி -இவை இருப்பவனே பண்டிதன் -கோபம் மகிழ்ச்சி கர்வம் வெட்க்கம் பிடிவாதம் இவற்றால் பாதிக்கப்பட்டு தனது இலக்கிலிருந்து யார் மாறுவதில்லையோ அவனே பண்டிதன் -குளிர் வெட்பம் இன்பம் துன்பம் செல்வம் ஏழ்மை இவற்றால் எடுத்த காரியங்களில் தவறாமல் இருப்பவனே பண்டிதன் -அவன் கிடைக்க அரியதானவற்றை விரும்புவதில்லை -சிந்தித்து தீர்மானம் செய்த பின்பே கார்யங்களைத் தொடங்குவான் -தொடங்கிய பின்பும் இடையில் நிறுத்தாதவன் -நேரத்தை வீணாக்காதவன் -கார்யங்களை செய்யும் முறைகளை அறிந்து செய்பவன் -யாருடைய பேச்சை தடை இன்றி மதிக்கப்படுகிறதோ -நூல்களின் ஆரியத்தை சட்டென்று கூறுபவன் யாரோ -சான்றோர்களால் அறிவுரையை மீறாதவன் யாரோ -அவனே பண்டிதன் –

அறிவு ஓன்று
அத்தால் அறிய வேண்டியது செய்வன மற்றுமோர் தவிர்வன ஆகிய இரண்டு
அவற்றைத் செய்து பகைவர் நண்பர் அயலார் ஆகிய மூவரையும்
சாம தான பேத தண்டம் ஆகிய நான்கு உபாயங்களால் வெல்ல வேண்டும்
மேலும் அடக்கத்தால் உட்பகைவர்களான செவி வாய் கண் மூக்கு தோல் ஆகிய ஐவரை -சிற்றின்பத்தை -வெல்ல வேண்டும்
இணைத்தல் பிரித்தல் பெயர்ச்சி இருத்தல் இரு மனப் படுத்தல் சார்ந்து அடைதல் ஆகிய ஆறு செயல்முறைகளை அறிய வேண்டும்
பெண்ணாசை சூது கள் வேட்டை கடுஞ்சொல் கூறுதல் -கடும் தண்டனை அளித்தல் -தீய வழியில் பொருள் சேர்த்தத்தால் ஆகிய ஏழையும் தவிர்க்க வேண்டும் –
இதன்படி வாழ்பவன் மகிச்சியும் மனநிம்மதியும் அடைவானோ –

நல்லது ஒரு உணவை தனியே உண்ணலாகாது
எந்த ஒன்றையும் தனியாகத் தீர்மானிக்கலாகாது
தீர்த்த யாத்திரையில் தனியாகச் செல்லக் கூடாது
அனைவரும் தூங்கும் பொழுது ஒருவன் மட்டுமே முழித்து இருத்தல் கூடாது
மேல் உலகமடைய ஸத்யம் ஒன்றே போதும்
விஷம் பருகுமொருவனைக் கொல்லும்
அம்பு தைத்தால் ஒருவன் மடிவான்
அரசியல் புரட்சி ராஜ்யத்தை அழித்து பல்லாயிரம் மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் –
பொறுமை ஒன்றே அமைதிக்கு வழி
தர்மம் ஒன்றே அனைத்து நன்மைகளையும் அளிக்கும்
கல்வி ஒன்றே திருப்தி அளிக்கும்
அஹிம்சை ஒன்றே இன்பம் அளிக்கும்
திறமைசாலிகளுக்கு பொறுமை ஆபரணம் -பொறுமையாளிகளை கையாலாகாத்தவர் என்று உலகம் பழிக்கும் -பொறுமை ஒன்றே அனைத்தும் தரப்பினரையும் வசப்படுத்தும்
புல் இருக்கும் இடத்தில் நெருப்புப் பற்றி எரியும் -புல் இல்லாத இடத்தில் நெருப்புத் தானே அணைந்து விடும் -பொறுமை இல்லாதவன் பிறரையும் கெடுத்துத் தானம் கெடுகிறான் –

பூ மண்டலத்தில் தாழ்ந்தவர்கள் இருவர் -முயற்ச்சி இல்லாத இல்லறத்தாரும் மிகுதியாகச் செயல்படும் சன்யாசியும்
நான் யார் என்பதைத் பொறுத்துத் தான் செயல்பாடு இருக்காய் வேண்டும்
விரோதம் கொண்ட பகைவனிடமும் போர் புரியாத அரசனையும் விரோதம் கொண்டு தொண்டு செய்யாத அந்தணனையும் இவ்வுலகம் விழுங்கி விடும்
கடும் சொல் பேசாதவர் துஷ்டர்களை ஆதரிக்காதவர் இருவரையும் உலகம் கொண்டாடும்
தன்னிடம் பணமா இல்லாத போது விலை உயர்ந்த பொருளைக் ஆசை வைத்தால்-வலிமை அற்றவனாய் இருந்தும் கோபம் கொள்ளுதல் இரண்டுமே நம்மைக் குத்தும் முள்கள்
வலிமை மிக்கவனாய் இருப்பினும் பொறுமை காப்பார் -காசில்லாத வறியவனாய் இருப்பினும் இயன்ற தானம் கொடுப்பவன் -இவ்விருவரும் உலகில் புகழுடன் விளங்குவர்
நியாயமான வழியில் சம்பாதிப்பதை தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருத்தல் -தவறானவர்களுக்குக் கொடுத்தல் -இவ்விரண்டும் அடாத செயல்களாகும் –
செல்வந்தனாக இருப்பினும் தானம் செய்யாதவர் -வறியவனாக இருப்பினும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளும் தவமில்லாதவர் ஒவ்வொருவருக்கும் தண்டனை நிச்சயம்
வறுமையினும் இயன்ற வரை உதவுபவன் வினை தொலைத்து மேலுலகை அடைகிறான் -விதை நெல் கொண்டு பாகவத விருந்தளித்த விருத்தாந்தம் –

நாம் விரும்பிய கார்யம் நிறைவேற மூன்று வழிகள் -உத்தமம் -மத்யமம் -அதமம் -இடம் நேரம் நம் ஆற்றல் இவற்றைப் பொறுத்து வழியைத் தேர்ந்து எடுக்க வேண்டும் -பிறர் சொத்தை அபஹரித்தல் -பிறர் மனைவியை விரும்புதல் -நன்மை விரும்பும் நண்பனை விடுதல் ஆகிய மூன்றும் மனிதனின் ஆயுள் அறம் புகழ் ஆகிய மூன்றையும் அழிக்கும் -காமம் கோபம் பேராசை ஆகிய மூன்றும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் -இவற்றில் ஓன்று இருந்தாலும் மற்ற இரண்டுமே தானே வந்து விடும் -வைராக்கியத்துடன் ஆசையைக் கட்டுப் படுத்தினால் தான் காமத்தையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் அடக்க முடியும் -யயாதி விருத்தாந்தம் அறிவோம் -தனது பக்தன் -தன்னிடம் வேலை செய்பவர் தன்னையே தஞ்சம் என்று சரணாகதி செய்தவர் இம் மூவரையும் கை விடவே கூடாது-

எவை உடனே பலன் தருபவை என்றும் இந்திரன் கேட்க -அதற்கு தேவகுரு பிரஹஸ்பதி -தேவைதைகளின் ஸங்கல்பம் -விருப்பம் -புத்திசாலியின் ஆற்றல் -பண்டிதரின் பணிவு -நாசம் தரும் திருட்டு ஆகிய நான்கு உடனே பலன் அளிக்கும் என்றார் -ஸ்ரத்தையுடன் கற்றல் ஆர்வத்துடன் அக்னி ஹோத்ராதிகளைச் செய்தல் -கவனத்துடன் பூஜை செய்வது-மதிப்புடன் மவ்ன விரதம் கடைப்பிடித்தல் ஆகிய நான்கும் முறையுடன் கடைப்பிடித்தால் இவ்வுலக இன்பத்தையும் பின்னர் முக்தியையும் அளிக்கும் -பசுமாட்டை அடிக்க வந்தவரிடம் முனிவர் -என் கண் பார்க்கும் ஆனால் பேசத் தெரியாது -வாய் பேசும் ஆனால் அது பார்க்காது -பார்த்தவன் பேசினால் தான் அது உண்மையாக இருக்கும் -அது முடியாதபடியா மவ்னம் காத்தேன் -என்றார் -துரத்தி வந்தவன் ஒன்றுமே புரியாமல் போக பசு காப்பாற்றப் பட்டதே -கோதாவரி ராவணனுக்கு அஞ்சி மவ்னம் காத்ததே -பேசியே கார்யத்தைக் கெடுக்கலாம் -மவ்னத்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம் –

அஞ்சலி அறிந்தால் அஞ்சாமல் இருக்கலாமே
அக்ரம் நயதி இதி அக்னி -ஆராதிப்பவனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் அக்னி பகவான் -தாய் தந்தை குரு ஆத்மா அக்னி ஐவரையும் ஆராதித்தால் முன்னேறலாம் -தெவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் சந்யாசிகள் அதிதிகள் ஆகிய ஐவரையும் பூஜித்தால் உலகம் நிறைந்த புகழ் பெறலாம் -நாம் எங்கும் என்றாலும் நண்பர் பகைவர் உதாசீனர் -நம்மிடம் அடைக்கலம் பெறுபவர் -நமக்கு அடைக்கலம் தருபவள் ஆகிய ஐவரும் பின் தொடர்வர் -தண்ணீர் நிறைந்த பானையில் ஒரு சிறு ஓட்டை விழுந்தாலும் தண்ணீர் முழுவதும் வெளியேறுவது போல் கண் காது மூக்கு நாக்கு தோல் ஆகிய ஐந்து புலன்களில் ஓன்று பாதை மாறினாலும் மற்ற நான்கு அதைப் பின் தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -ஸூ முகன் -பெரிய திருவடி -பசிக் கோபத்தால் பராமனையே எதிர்த்த வ்ருத்தாந்தம் -நாம் புலன்கள் எவ்வளவு கெடுக்கும் என்ற உணரவே நடத்திக் காட்டினார் –

ஆறு தெரிந்தால் ஆறி இருக்கலாம் –
உண்மை தானம் சோம்பலின்மை பொறாமையின்மை பொறுமை தைர்யம் -இவற்றை விடாதவன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் -நோயற்று இருத்தல் -நல் வெளிப்படுத்தும் மனைவி -மனத்துக்குப் பிரியமான சொற்களைப் பேசும் மனைவி-சொன்னதைக் கேட்க்கும் மகன் – செல்வத்தைக் கொடுக்கும் கல்வி -ஆகிய ஆறும் கிடைப்பதற்கு அரியவை -ஸூ தர்சனர் -பார்க்க அழகாக இருப்பவர் நல்ல வழியைக் கொடுத்து அருள்பவர் -ஜ்வாலா நேமி அரம் கும்பம் என்னும் நடு அச்சாணி -மையத்தில் இருக்கும் பகவான் -ஆகிய ஐந்து பகுதிகள் கொண்டவை -பொறாமை -அளவுக்கு மிஞ்சிய இரக்கம் கொள்பவர் -எவ்வளவு பொருள் சேர்த்து மகிழ்ச்சி இல்லாதவன் சடடென்று கோபம் கொள்பவன் -எதிலும் ஸந்தேஹப் படுபவர்-பிறரை அண்டியே பிழைப்பவர் ஆகிய அறுவரும் துயரத்தையே அடைவர் -பசுக்கள் பிறரிடம் சேவை செய்பவன் உழவு மனைவி கல்வி தனக்கும் சமமில்லாதவரிடம் நட்பு -இவற்றை மதிப்புடன் பராமரிக்க வேண்டும் -இல்லாவிடில் அழிந்து விடுவர் –

ஸப்த ஸமுத்ரங்கள் -ஸப்த கன்னிகைகள் -ஸப்த லோகங்கள் -ஸப்த ரிஷிகள் -ஸப்த மராமரங்கள் -ஏழுக்கு தனிச்சிறப்பு -சூது -கள் பெண் கொடுமை பிராணி ஹிம்ஸை பேராசை பொய்ம்மை கோபம் ஆணவம் பகைமை காமம் -இவற்றைக் கைவிடாதவன் சக்தியுள்ள அரசனாக இருந்தாலும் அழிவைத் தேடிக் கொள்வான் –
பரீக்ஷித் பத்து இடங்களை கலிக்கு ஒதுக்கினான் -அவை -பெண்களை அவமதிக்கும் இடம் -பிராணி வதை நாடாகும் இடம் -கள் குறிக்கும் இடம் -சூதாடும் இடம் -தங்கத்தில் அதிக ஆசையுள்ள இடம் -காமம் கோபம் பகை பொய்மை ஆணவம் -இவற்றின் அருகில் நாம் செல்லா விட்டால் கலியுகத்தில் வாழ்ந்தாலும் அதன் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம் -நாம் எப்படிப் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே கலியுகமும் க்ருதயுகமாகலாம் -க்ருதயுகமும் கலியுகமாகலாம் –

திக்கு எட்டும் புகழோடு வாழ -நல்ல அறிவு -நற்குடியில் பிறப்பு -புலனடக்கம் -நூல்களில் கேள்வி அறிவு -உடல் வலிமை -அதிகம் பேசாது இருத்தல் -சக்திக்குத் தக்கபடி தர்மம் செய்தல் -செய்ந்நன்றி அறிதல் -ஆகியவை கிடைத்தற்கு அறிய பண்புகள் -திருவடியை ஆலிங்கனம் செய்து பெருமாள் ஆம் பரிசு வழங்கினார் அன்றோ –

நம் வாழ்க்கை முறை -நற்பண்புகள் -ஞானம் பக்தி ஆகியவை கிரஹங்களின் பாதிப்பை நன்கு கட்டுப் படுத்தும் -நமது உடல் இரண்டு கண்கள் இரண்டு காதுகள் மூக்கு த்வாரங்கள் இரண்டு வாய் ஓன்று மலம் காலம் கழிக்கும் இரண்டு த்வாரங்கள் -ஆகிய ஒன்பது வாசல்கள் கொண்ட சரீரம் -ஒன்பது வாசல்களும் திறந்தே இருக்கிற படியால் ஆத்மா எளியேறுவது எளிது -அதற்குள் ந்தப் வீட்டில் வாழ்ந்து சாதிக்க வேண்டியவற்றை முடிக்க வேண்டும் -i-இதில் ஆத்மா ஒலி தொடு உணர்ச்சி உருவம் சுவை மணம் ஆகிய ஐந்தும் சாஷிகளோடே வசிக்கிறார் -இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபீதியதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ இத் தத் வித-உடல் விளை நிலம் -ஆத்மா என்னும் உழவன் இதை உணர்வது நல்ல பயிர்களை -பண்புகளை -விளைக்க வேண்டும் -இப்படி பல உடல்களும் ஆத்மாக்களும் கொண்ட இந்த ஸம்ஸாரமே ஒரு தலைகீழான அஸ்வத்த மரம் -இதைப் படைக்கும் ப்ரஹ்மா மேலே இருக்கிறபடியால் இதம் வேர் மேலே இருக்கிறது -நாமும் நம் சந்ததிகளுமாகிற கிளைகள் கீழே உள்ளன -ஸத்வம் ரஜஸ் தமஸ் முக்குணங்கள் நீராகவும் எருவாகவும் கொண்டு வளர்க்கப் படுகிறது-கர்மங்களே விதைகள் -ஸப்தாதி -வளர்க்கும் முளைகள் -வைராக்யம் என்னும் கோடாரி கொண்டு வெட்டி முக்தி அடையாளம் –

விட வேண்டிய தீய பத்து பண்புகள் -குடியினால் மதி மயங்கினவன் -கவனம் இல்லாதவன் -பைத்தியம் களைப்படைந்தவன் -கோபக்காரன் -பசி மிக்கவன் -பரபரப்பவன் -பேராசை கொண்டவன் -அச்சமுற்றவன் -காமத்துக்கு வசப்பட்டவன் -இவர்களுடன் அறிவாளர்கள் பழக மாட்டார்கள் -இப்பத்தையும் விட்டு ஒழித்தால் தர்மத்தை அறியலாம் -தாரை லஷ்மண இடமும் கிம் கோப மூலமும் மனுஜேந்த்ர புத்ர-அரசனான உனது தந்தை சக்ரவர்த்தி பரபரப்போ கோபமோ ப்பட்டிருந்தால் 60000 ஆண்டு அரசாண்டு இருக்க முடியுமா -விச்வாமித்ரரும் காமத்துக்கும் கோபத்துக்கும் வசப்பட்டாரே -இரண்டு பகைவர்களையும் வெல்ல வேண்டுமே –

பெரிய நம்பியின் பெண்ணுக்கு சீதன வெள்ளாட்டியாக முதலியாண்டான் அனுப்பிய விருத்தாந்தம் -வேதாந்த விசாரம் வர சட்டென்று பதில் கூறி ஐயம் தீர்க்க -அங்கு கூடி இருந்தவர் இவரது விநயம் கண்டு வியந்தனர் –
வங்கி புரத்து நம்பிக்கை திருவாராதனம் செய்யும் முறையை உடனே உபதேசிக்காமல் கூரத்தாழ்வான் ஹனுமந்த தாஸர் இவர்களுக்கு உபதேசிக்க வாசலில் வந்த நம்பியைக் கண்ட ராமானுஜர் அச்சமும் வெட்கமும் அடைந்த -லோக நாயகனான திருமால் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடி யசோதையிடம் பிடிபட்ட போது உண்மையில் அச்சமும் வெட்கமும் பட்டிருப்பாரோ என்ற ஐயம் வெகுநாட்களாக இருக்க இப்பொழுது உம்மைக் கண்டதும் நான் பட்டதால் புரிந்து கொண்டேன் என்றாராம் –

ராவணனை இன்று போய் நாளை வா -மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தாலும் திருந்தவில்லை-சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்-ஆழ்வார் -ஒரு செயலில் வஞ்சனையால் நிறைவேறும் என்றால் அத்தைச் செய்யக் கூடாது-செய்தாலும் அதன் பலன் நிலைக்காது -நேர்மையான வழியில் செய்தால் நிறைவேறாது என்றாலும் அத்தைச் செய்ய வேண்டும் -நாளடைவில் பயன் தரும் -அரசன் பதவி லாபம் நஷ்டம் கஜானா தேசம் தண்டனை இவற்றில் அளவை அறியவில்லையோ அவன் நிலைக்க மாட்டான் –

தேனீ தனக்கு வேண்டிய அளவு தேன் ஒரே பூவில் கிட்டும் என்றும் உறிஞ்சினால் தேனும் கிடைக்காத பூவும் பட்டுப் போகும்-பல பூக்களில் இருந்து துளித்துளியாக சேகரிக்க வேண்டும் -மாலை தொடுக்க பூக்களை மட்டும் பறிப்பான்-செடியை வெட்ட மாட்டான் -இலக்கு எதுவோ அதற்குத் தக்க செயலில் இறங்க வேண்டும் -ஒரு பொருளைக் உரியவர்க்கும் பகிராமல் நீயே கொள்ள நினைத்தால் அதை முழுவதுமாக இழப்பாய் -கிட்டாதாகில் வெட்டென மறக்க வேண்டும் -பேராசைப்பட்டு பெரு முயற்சி செய்தாலும் நிறைவேறாது -பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீ கேச தேவதத்தம் தனஞ்சய ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -இலக்கு தார்மீக முறையில் இருக்க வேண்டும் -கருத்து இலக்கில் இருக்க வேண்டும் -இலக்கை என்றும் வரை பின்னால் மறைந்து இருக்கும் ஆபத்தையும் நோக்க வேண்டும் –

செல்வம் கல்வி குடிப்பிறப்பு ஆகியவை ஆணவத்துக்கு வழி கொடுக்கும் முக்குறும்புகள் -அவற்றை அறுத்து வென்றவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் -பொறாமை ஆணவம் இரண்டுமே ஒழுக்கத்தைக் கெடுக்கும் -ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட்டும் -அழகு புகழ் இவையும் குறும்புகள் -ராமானுஜரின் திருவடி இணைகளே -நமது ஆச்சார்யரே -விலை மதிப்பில்லாத தங்கம்

உடல் ஒரு தேர் -ஐம்புலன்கள் குதிரைகள் மனஸ் கடிவாளம் -ஜீவாத்மா தேரோட்டி -புலன் அடக்கம் இல்லாமையால் மற்ற சிறப்புக்களை மறைத்து விடும் -உனது புலன்களாலேயே நீ வீழ்ந்தாய் என்றாள் மண்டோதரி -மனம் தறி கெட்டு ஓடிஏ பகுத்தறிவு என்னும் அம்பு கொண்டு அடக்க வேண்டும் -புலன் அடக்கம் இல்லாதவர்களோடே சேர்ந்து மற்றையோரும் கெடுவர் -காய்ந்த விறகோடே சேர்ந்து இருக்கும் ஈர விறகும் எரியுமே -புலன்களைக் கொண்டே நல்ல கார்யங்களையுமே சாதிக்கலாம் -அடக்காமல் நாமும் வீழுவோம் –

மவ்னம் பேச்சை விட வலிவானது –லஷ்மீ வஸதி ஜிஹ்வாக்ரே -ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா -ஜிஹ்வாக்ரே பந்தனம் பிராப்தம் -ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் -நாக்கு நுனியில் லஷ்மீ தேவி வஸிக்கிறாள் -நாக்கு நுனியில் உறவினரும் நண்பர்களும் வாழ்கிறார்கள் -நாக்கு நுனியில் தான் கட்டுக்குள் சிக்குகிறோம் -நாக்கு நுனியில் மரணம் திண்ணம் -நன்மை தீமைகளை பலவும் நாக்கு நுனியில் தான் இருக்கின்றன -ராமர் தமது நன்மையைக் கருதியே வானர முதலிகள் பேசுகின்றார்கள் என்றும் உணர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்ட பின்பும் –மமாபி ச விவிஷாஸ்தி காகித பிரதி விபீஷணம் -வேண்டுகோள் விடுக்கும் த்வனியில் பேச -அனைவரும் உருகிப் போக -பேசுவதை விட மவ்னமே கார்யங்களைச் சாதித்துத் தரும் என்றும் காட்டி அருளினார் –

கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தரும் -நாடு நிலையில் இருந்து பிறழாமல் இருப்பதே நேர்மை -மனத்தால் நினைத்ததையே பேசி-பேசினத்தையே செயல்படுத்தலாகிய ஆர்ஜ்வமே நேர்மை-யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்திதஸ் தேந சேத விவாதஸ்தே மா கங்காம் மா குரூன் கம -மநு –தர்மத்தின் வழி நடப்பவரும் நம்பிக்கை இல்லாதவரும் -இருவருமே கங்கையை நீராட வேண்டாமே -கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தருமே –

கேஸிநீ என்னும் அரசகுமாரியின் ஸ்வயம்வரம் -ஸூதன்வா அந்தணப் பண்டிதனும் -பலசாலியான அசுரனான விரோசனனும் வர -யார் பெரியவன் போட்டி வர உயிரையே பயணம் வைக்க -ப்ரஹ்லாதனையே தீர்ப்பு சொல்லச் சொல்ல -தவறான தீர்ப்புச் சொன்னால் முதல் மனைவி இருக்கும் பொழுது -மற்ற ஒருத்தியை மணந்தால் அவளுக்கு வரும் துக்கம் போலவும் -சூதாட்டத்தில் அனைத்தும் செல்வங்களையும் இழந்தவன் துக்கம் போலவும் -துன்பம் பட வேண்டும் -ஆடு விஷயத்தில் பொய் சொன்னால் ஐந்து தலைமுறை முன்னோர்களையும் -பசு விஷயமாக பொய் சொன்னால் பத்து தலைமுறை முன்னோர்களையும் -குதிரை விஷயமாக பொய் சொன்னால் நூறு தலைமுறைகளுக்கும் -மனித விஷய பொய் சொன்னால் பின்வரும் அனைத்தும் தலைமுறைகளுக்கும் நரகத்தில் விழ வேண்டி வரும் -மகன் என்றும் பார்க்காமல் ஸூதன்வா -தான் சிறந்தவன் என்றும் தீர்ப்பு சொல்ல -அவரைப் பாராட்டி உனது மகனின் உயிர்க்கு ஒன்றுமே வாராது -அவரே கேசினியை மணந்து கொள்ளட்டும் என்றான் -அதே போல் த்ருதராஷ்ட்ரா-பிள்ளைக்காகப் பரிந்து பேசி நடுநிலை தவறினால் உங்கள் சொத்து அனைத்தையுமே இழப்பாய் -நேர்மை மாறாவிடில் எல்லாரும் வாழ்வார்கள்

அபர் யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபி ரக்க்ஷிதம் பர் யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபி ரஷிதம் -அஞ்சி துரியோதனன் வார்த்தை -தஸ்ய ஸஞ்சயன் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதா மஹா -அச்சம் போக்க பீஷ்மர் சங்கு ஊதினார் -தைர்யத்துக்கு உடல் பலம் மட்டுமே போதாது -ஆத்ம பலமும் தர்ம சிந்தனையும் வேண்டும் –

மூப்பு அழகை அழிக்கும் -ஆசை தைரியத்தையும் -மரணம் உயிரையும் அழிக்கும் -பொறாமை தர்ம வழி நடப்பதையும் கோபம் செல்வத்தையும் தீயவனுக்குத் தொண்டு செய்தல் நல்ல பண்புகளையும் -காமம் வெட்கத்தையும் அழிக்கும் -ஆணவம் எல்லாவற்றையும் அழிக்கும் -மங்களமான செயல்களால் லஷ்மீ உத்பத்தி ஆகிறாள் -தைர்யம் மற்றும் நம்பிக்கையால் செல்வம் வளர்கிறது -சாதுர்யத்தால் செல்வம் நிலை பெறுகிறது -பணிவால் செல்வம் வேரூன்றுகிறது -ஆணவம் இல்லாமல் பக்தியுடன் இருப்பவர்களுக்கு பொருத்தமான ஒளியும் பொறுமையும் திறலும் புகழும் நல்ல ஞானமும் செல்வமும் பிறக்கும் -பின் வளரும் –
லஷ்மீ கடாஷித்தால் –ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதீ ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய-
வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ
கரதல கமலே சர்வதா தான லஷ்மீ
தோர் தண்டே வீர லஷ்மீ ஹ்ருதய சரசிஜே பூத காருண்ய லஷ்மீ
கட்காக்ரே சௌர்ய லஷ்மீ நிகில குண கணாடம்பரே கீர்த்தி லஷ்மீ
சர்வாங்கே சௌம்ய லஷ்மீ மய து விஜயதாம் சர்வ சாம்ராஜ்ய லஷ்மீ

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாஸான நிஸார்த்தம் அர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோ இஹ ஜன்மநா ச
-பெரியாழ்வார் -வல்லபதேபன் பொற்கிழியை வென்ற வ்ருத்தாந்தம் -நித்தியமான ஆத்மாவின் ஆத்மாவின் இப்பொழுதே நற்செயல்களைச் செய்ய உறுதி வேண்டும் –

இனிய வாழ்க்கைக்கு இனிய பேச்சு வேணும் -அத்ரி முனிவர் அநஸூயா தேவிக்கு மகன் தத்தாத்ரேயர் -மஹா விஷ்ணுவின் கிருதயுக அவதாரம் -நம் குற்றங்களை பெருமாள் இடம் விண்ணப்பம் செய்ய நேரமில்லாததால் -நமக்குத் பதிலும் குற்றங்களைச் சொல்லுவர் மேல் க்ருதஜ்ஜை வேண்டுமே – உண்மையையே பேச வேண்டும் அதிலும் பிரியமானவற்றையே பேச வேண்டும் -அதிலும் தர்மங்களையே பேசுவது சாலச் சிறந்தது

ஆரோக்யமான மனம் ஆரோக்யமான உடலுக்குள் முக்கிய காரணம் -சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்த மப்யஹோ -நெருப்பு உயிர் அற்ற உடலைக் கொளுத்தும் -சிந்தை கவலை உயிருடன் இருப்பவனையே கொளுத்தும் -நல்லறிவு மட்டுமே கவலையைப் போக்கும் -பற்று குறைந்தால் கவலை நீங்கி உத்ஸாஹம் அடைவோம் -கல்வி தர்மம் யுத்தம் புண்ணியம் தவம் இவை பெரும் இன்பத்தைக் கொடுக்கும் –

தவம்- புலனடக்கம்- வேதங்களைப் பயின்று பகவானை அறிதல் -தேவபூஜை செய்தல் -சிறப்பான திருமணம் -தினம் தோறும் அன்ன தானம் -நல்ல ஒழுக்கம் -இவை எழும் இருந்தால் தான் உயர்ந்தவன் -அன்னதானம் செய்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று விதித்து திருக்கல்யாண பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் -இதுவே உயர் குலம்

அனைவரும் அவன் உறுப்புக்கள் ஆனபடியால் யாரும் பகைவர்கள் அல்லர் -அனைவரும் நண்பர்களே -கந்தாடை தோழப்பர் -நம்பூர் வரதாச்சார்யரான நம்பிள்ளை -இருவரும் ஒருவருக்கு ஒருவரே ஷாமணம் பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் –
உள்ளத்தில் ஓன்று வைத்துக் புறம் வேறே ஒரு மாதிரி நடந்தால் நீயே உன்னை எதிர்க்கிறாய் -அது அச்சம் அளிக்கும் -அது கவலையாக மாறும் -மன அமைதி உண்டாக்க சிறந்த கல்வி தவம் புலனடக்கம் பேராசையை ஒழித்தல் இவை தவிர வேறே வழி இல்லை -பயன் கருதாது தொண்டு செய்து ஒரே நோக்கக்கூடு செயல்பட்ட திருவடிக்கு -நடுக்கடலும் ஆழ் மணலும் போல் அமைதியாக-விருப்பு வெறுப்புக்களை இல்லாமல் மன அமைதி எளிதிலே கிட்டிற்று அந்தோ

ஒற்றுமையே வலிமை -எரிகின்ற கட்டை தனித்தனியே இருந்தால் புகை வரும் -கூட்டமாக எறிந்தாள் பற்றிக்கொண்டு எரியும் -தனிமரம் தோப்பாகாது -ஸூலபா புருஷா ராஜன் ஸததம் ப்ரிய வாதிந அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-விபீஷணன் ராவணனுக்கு உபதேசம் -தனித்து நின்ற மரங்கள் வெள்ளத்தில் விழ கூட்டமாக இருந்தவை தப்பிற்றன -பணிவும் வணக்கமும் வேண்டும் -தாமிரபரணி வெள்ளத்தில் நாணல் நீர் வஞ்சிக்கொடி சாயாமல் இருக்க பெரிய மரங்கள் வேரற்று விழுந்தனவே

ஆணவம் தராதரம் இல்லாமல் அதிகமாக பேசுதல் த்யாஜ்யம் இல்லாமல் இருத்தல் -கோபம் கொள்ளுதல் -சுய நலத்தால் தன்னையே பேணுதல் நண்பர்களை ஏமாற்றுதல் இந்த ஆறும் மனிதனை அழித்து விடும் என்றும் யமன் சொல்லுகிறார் என்றார் விதுரர் -தியாகம் உயர்த்தி விடும் என்பதை ஓர் ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா-உண்மையாகப் புகழ்ந்தான் குகன் -த்யாகேனைகே அம்ருதத்வ மாநசு -தியாகம் ஒன்றாலேயே முக்தி அடையாளம் -வேதங்கள் பறை சாற்றுகின்றன -மருந்தும் வைத்தியமும் பிடிக்காதாகிலும் நோட் தீரக் ஆசைப்படுவர் -உனது கவலை தீர உரிய மருந்தை நான் கூறினால் உன்னால் ஏற்க முடியவில்லை -சிந்தித்துப்பார் -என்றார் விதுரர் –

உனது புதல்வர்கள் காட்டுக்கு ஒப்பு -பாண்டவர்கள் புலிக்கு ஒப்பு -புலி இருந்தால் தானே காட்டுக்குப் பாதுகாப்பு -தர்மத்தில் இருந்து செல்வம் விலகாது -செல்வமும் தர்மமும் வெவ்வேறு பாதைகள் அல்ல -அறத்தைக் கடைப்பிடித்து செல்வத்தைச் சேர்க்கவும் காக்கவும் வேண்டும் -தர்மமே செல்வத்துக்குப் பாதுகாப்பு -புத்தி குடும்பம் செல்வம் நண்பர் தோள் ஆகிய ஐந்தும் பலன்கள் -தோள் வலிமையை மட்டுமே நம்பி உன் புதல்வர்கள் ஆணவம் கொள்கிறார்கள் -கற்றது கைமண் அளவும் கல்லாதது உலகளவு என்றும் புரியாமல் உன் மகன் செய்வதும் நன்மையில் முடியாத -அளவோடு உண்பவனுக்கு ஆரோக்யம் ஆயுள் பலம் ஸூகம் மக்கட்பேறு பெரும் தீநீ உண்பவன் என்ற அவப்பெயர் நீங்குதல் ஆகிய ஆறு நன்மைகளும் உண்டாகும் –

காஷாய உடை தரிப்பதால் ஸந்நியாஸி யாக மாட்டான் -கோபமற்று -கல்லையும் பொன்னையும் சமமாக மதித்து -துயரமற்று -நட்ப்போ பகையோ பாராமல் -புகழ்ந்தாலும் இகழ்தலும் கவலை அற்று -விருப்பு வெறுப்பு அற்று -பற்றற்று -இருப்பவன் இல்லறத்தில் இருந்தாலும் ஸந்நியாஸியே -நம்பத் தக்காதவனை நம்பாதே -நம்பத் தக்கவனையும் அதிகமளவு நம்பாதே -சான்றோர்களால் மதித்து நடக்க வேண்டும்

எவன் நண்பன் இல்லையோ – எவன் நண்பனாக இருப்பினும் பண்டிதன் இல்லையோ -பண்டிதனாக இருப்பினும் மனத்தை கட்டுப் படுத்தாதவனாக இருப்பாரிடம் ரஹஸ்யங்களைப் பேசாதே -அனுபவம் மிக்கவர்களிடமே ஆலோசனை செய்ய வேண்டும் -த்ருவன் மகன் வேணன் -தீய பண்புகளுடன் மக்களைத் துன்பறுத்த பூமித்தவி அனைத்தும் செல்வங்களையும் மறைக்க -நாடே அவதிப்பட -குல குருக்கள் அவனை அழித்து அவன் உடலில் இருந்து ப்ருது என்பவனை உருவாக்க -பூமி தேவி பசுவின் உருவில் நிற்க -ரிஷிகள் தேவர்கள் பித்ருக்கள் தொடக்கமான பலரும் வேதம் அன்னம் மூலிகைகள் முதலான பல பொருள்களையும் கறந்து பெற்றார் -கல்வியால் பண்புகளால் குடிப்பிறப்பால் வயதினால் யார் பெரியவர்களாக உள்ளாரோ அவற்றைத் முட்டாள்கள் மதிக்க மாட்டார்கள் -பயனுள்ள காரியங்களில் ஈடுபட்டு பயனற்ற செயல்களில் விலகி இருப்பவன் அறிவாளி

சிலர் தானத்தாலோ இனிய பேச்சாலோ மந்திரத்தாலோ மூலிகையினாலோ பிரியவராக இருப்பர் -நிர்ஹேதுக பிரியம் நிலைத்து இருக்கும் -ஸத்யேந லோகான் ஜயதி தீநாந் தாநேந ஜயதி குரூன் ஸுஸ்ஸுரூஷயா வீர தநுஷா யுதி ஸாத்ரவாந் -ஸர்வருக்கும் ஸர்வ காலமும் மனத்துக்கு இனியான் -எந்த வளர்ச்சி பிற்காலத்தில் தீமை தருமோ அது வளர்ச்சியே அல்ல -எந்தத் தேய்தல் பிற் காலத்தில் வளர்ச்சியில் முடியுமோ அதுவே உண்மையில் வளர்ச்சி -உனது பிள்ளைகளை உண்மையான வளர்ச்சியைத் தேடச்சொல் என்றார் விதுரர் –

நீ பாண்டவர்களை அரசில் அமர்த்தியானால் இப்போதே உன் பிரஜைகளும் தெய்வமும் உன்னை மன்னிப்பர் -வல்மீகி வழிப்பறி செய்பவராக இருந்தாலும் ராம நாம ஜபத்தால் திருந்தி உலகம் புகழும் ஸ்ரீ இராமாயணம் இயற்றி அருளினார் -கடலில் விழுந்த பொருள் இழந்ததே -திரும்பக் கிடைக்காதே – சான்றோர்களிடம் அடிபணிந்து உபதேசம் பெறாதவன் பேசுவது வீண் -புலனடக்கம் இல்லாதவனின் ஸாஸ்த்ர அறிவு வீண் -எரியாத நெருப்பில் -சாம்பலில் -பண்ணப்பட்ட ஹோமம் வீண் -உன் மகன் கூடா நட்பு கொண்டு வீணாகிறான் -யார் இவருடைய மனமும் அறிவும் ரஹஸ்யங்களும் தர்மத்துக்கு விரோதம் இல்லாமல் ஒத்துப் போகிறதோ அந்த நட்பே நிலைக்கும்

நடாதூர் ஆழ்வானின் திருக்குமாரர் வாத்ஸ்ய வரதர் -திருவெள்ளறை விஷ்ணு சித்தர் என்னும் எங்கள் ஆழ்வான் இடமும் ஸ்ரீ பாஷ்யம் உபதேசம் கேட்டு வர – நான் செத்து வாரும் -அடியேன் வந்திருக்கிறேன் -நான் அஹங்கார அடையாளம் -மாறி அடியேன் -என்றதும் ஆச்சார்யர் மகிழ்ந்து ஸ்ரீ பாஷ்யம் கற்பித்து அருளினார் -கற்றபின் நிற்க அதற்குத் தக-கற்றதைப் பணிவுடன் கடைப் பிடிக்க வேண்டும் –

இங்குள்ள பகவத் தொண்டர்கள் விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுவர் -யார் தர்மத்தை மீறாமல் -மனித நேய ஒழுக்கத்தைத் தாண்டாமல் -அப்படி தெரியாமல் தாண்டினால் வெட்கப்படுபவனாய் -மென்மையான உள்ளம் கொண்டவனாய் அஹிம்சையைக் கடைப்பிடிப்பவனாய் உள்ளானோ அவன் எங்குப் பிறந்தாலும் சிறந்தவர் களே -அவனைச் சான் றோரும் போற்றுவர் -குறும்பறுத்த நம்பி -தொண்டைமான் சக்ரவர்த்தி விருத்தாந்தம் அறிவோம் -ஒருவன் எப்படிப்பட்டவன் என்றும் முதலில் நம் புத்தியால் அறிய வேண்டும் -பின் அனுபவத்தால் பலமுறை ஆராய வேண்டும் சில நல்லவர்களிடத்திலும் அவரைப் பற்றி கேட்க வேண்டும் -இறுதியில் நம் கண்ணாலே பார்த்துக் முடிவும் செய்ய வேண்டும் -எங்கு பிறந்தார் என்றும் பாராமல் அவனுடைய பண்பு ஞானம் பக்தி இவற்றையே பார்க்க வேண்டும் –

பாண்டவர்கள் வஞ்சனையால் இழந்த ராஜ்யத்தை நியாயமான வழியில் போரிட்டு மீட்க்கப் பார்க்கிறார்கள் -வெற்றி உறுதி -உன் பிள்ளைகள் நியாயமற்ற வழியில் அடைந்த அரசைத் தக்க வைக்கப் பார்க்கிறார்கள் -தோல்வி உறுதி -இந்திரன் இழந்த செல்வதை த்ரிவிக்ரமனாய் தன்னதாக்கிக் கொண்டு மீண்டும் கொடுத்து அருளினான் -இன்றும் இழந்த சொத்தை மீட்கவோ தொலைத்த பொருளைக் கண்டு பிடிக்கவோ ஸூந்தர காண்டம் பாராயணம் செய்வதும் மரபில் உள்ளது -யார் ஒருவன் கடந்த காலத்துச் செயல்களில் மிச்சம் இருப்பதைக் நினைவில் கொள்கிறானோ -நிகழ் காலத்துச் செயல்களை முடிப்பதில் உறுதியுடன் இருக்கிறானோ -வரும் காலத்து ஆபத்துக்களைப் போக்க வழிகளை அறிந்து வைத்திருக்கிறானோ அவன் செல்வத்தை இழக்கவே மாட்டான் -நடந்து முடிந்தவைகளால் அனுபவமும் -நடப்பவைகளில் ஊக்கமும் -நடக்கப் போவதில் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் –மனத்தாலும் மொழியாலும் மெய்யாலும் எதில் ஒருவன் இடைவிடாமல் ஈடுபடுகிறானோ அந்தக் காரியமே அவனைத் தன பாக்களில் இழுத்து விடும் -ஆகவே ஒருவன் நல்ல செயல்களிலேயே முக்காலத்திலும் ஈடுபட வேண்டும் -சக்தி இல்லாதவன் அனைவரிடத்திலும் பொறுமையுடன் இருப்பான் -சக்தி இருப்பவன் தர்மத்துக்காகப் பொறுமையுடன் இருப்பான் -யார் பார்வையில் வேற்றுமை இல்லையோ அவரிடம் பொறுமை காப்பதே நமக்கு நல்லது –

ஊக்கமே தவம் -தர்மத்தின் வழியில் நடந்து விடாமுயற்சியுடன் ஒரு செயலில் ஈடுபட்டால் அதற்கு தெய்வம் துணை நிற்கும் –மனத் தளர்ச்சி இல்லாமல் ஊக்கத்துடன் உழைப்பதே செல்வம் லாபம் சுபம் ஆகியவற்றுக்கு மூலமாகும் -ஒன்றி ஓன்று உலகம் படைக்கிறான் அன்றோ -தவறான வழியில் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு செய்யும் யாகம் ஹோமமும் பலனைத் தர மாட்டாவே -யோகிகளுக்கு தவமே வலிமை -வேதம் கற்றோருக்கு வேதமே வலிமை -கொடியவர்களுக்கு ஹிம்ஸையே வலிமை -நல்ல குணசாலிகளுக்கு பொறுமையே வலிமை –

ஆச்சார்ய தேவோ பவ -பகவான் அருளும் குரு மூலமே கிட்டும் -அறிவிலி கூட குரு பக்தியால் ஞானம் ஆயுள் புகழ் வலிமை ஆகியவை பெற்று முக்தி யடைகிறான் -மன்னா நீயும் வேத வியாஸரிடம் பக்தியுடன் இரு -அவர் சொல்லை மீறாதே -விலங்கோ மனிதனோ பறவையோ அனைவருமே ஆச்சார்யன் கடாஷித்தால் நன்மை அடைகின்றனர்

நல்லவன் பின் நின்றாலே பெரு -விபீஷணனுடன் வந்த நால்வரும் விசாரணை இல்லாமல் ஏற்கப்பட்டனர் அன்றோ -காம சுகத்தை அனுபவித்து காரணத்தை வெல்ல முடியாத -விறகுகளை மேலே மேலே போட்டு நெருப்பை அணைக்க முடியாத -தர்ம புத்ரன் இப்போதும் உங்களுக்கு நன்மையையே நினைக்கிறான் -இது புரியாத உன் பிள்ளைகள் அவனுக்குக் கெடும் நினைத்துத் தங்களுக்கே தீமை தேடிக் கொள்ளுகிறார்கள் -பூமியின் செல்வம் எல்லாமே ஒருவனே அனுபவிப்பதற்கு இல்லை என்று புரிந்தவன் நிம்மதி அடைகிறான் -இவை எல்லாமே எனக்கே என்றும் நினைப்பவன் அழிந்தே போகிறான் -வெள்ளியுடன் சேர்ந்து தங்கத்துக்கு குறை -வெண்கலம் சேர்ந்தால் வெள்ளிக்கு குறை -ஈயம் சேர்ந்தால் வெண் கலத்துக்கு குறை -ஈயத்துக்கு தன்னிடம் சேர்ந்து அழுக்காலே குறை -தலை கீழாகப் பார்த்தால் வெண் கலத்துடன் சேர்ந்து ஈயத்துக்கும் வெள்ளியுடன் சேர்ந்து வண காலத்துக்கும் -தனித்தே சேர்ந்து வெள்ளிக்கும் மதிப்பு கூடுமோ -யாருடன் சேர்கிறோமோ அதன் பலன் கிட்டும் –

த்ருதராஷ்ட்ரா -நீ அழியக்கூடிய சொத்தைப் பற்றி நினைத்து கவலைப்படுகிறாய் -அழியாத ஆத்மாவுக்கு நல்லதை நினைத்தால் உயர் கதி அடையாளம் -எவ்வளவு விறகை இட்டாலும் நெருப்புக்கும் -எவ்வளவு தண்ணீர் வந்தடைந்தாலும் கடலுக்கும் எத்தனை உயிர்களைக் கவர்ந்தாலும் யமனுக்கும் திருப்தி பிறப்பதில்லையே -போதும் என்பதை நாம் அசையும் பொருளிலோ நம் முயற்சியிலோ இல்லை நம் மனத்தில் தான் உள்ளது -இந்த ஜீவாத்மா ஒரு வற்றாத நதி -இது ஸத்யம் பரமாத்மா என்னும் மலையிலிருந்து பிறக்கிறது -புண்ணியம் இதன் தண்ணீர் -தைர்யம் இதன் கரைகள் -இரக்கம் இதன் அலைகள் -புண்யாத்மாக்கள் இதில் நீராடி ஆசை யற்றவர்களாகி தூய்மை அடைகிறார்கள்-ஆத்மா இறுதியில் கலங்காத் தன்மையை -கடலை -அடைகிறான் – அழியாததையே நினை -அழிவதை மறந்து ஒழி –
இதுகாறும் கூறிய சத்தியத்தையும் தர்மத்தையும் நன்கு ஆராய்வாய் -சரி என்றும் மனதில் படுபவனாய் கவலையை ஒழித்துக் கடைப்பிடி -என்று கூறி உபதேசத்தை முடித்தார்
த்ருதராஷ்ட்ரன் -விதுரா நீ சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்கிறேன் -ஆனால் விதியை வெல்ல முடியாத -துரியோதனன் பேசும் போது இவை அனைத்தும் மறந்து விடுகின்றன -ஏன் நிலையை பகவான் தான் நேர் படுத்த வேண்டும் -என்று கூறி முடித்தார் –

தர்ம புத்ரன் தானும் விதுரரும் ஒரே யம தர்மனின் சக்தியால் பிறந்தவர்கள் என்று உணர்ந்தார் -அசரீரி -தர்மபுத்திரர் மஹாத்மா விதுரர் ஸாந்தானிக லோகத்தை அடைந்தார் -அவருடைய ஸந்நியாஸ நிலையை நினைத்து சடங்குகளைச் செய் -என்று உத்தரவு விட தர்மபுத்ரன் அப்படியே செய்தான் -பின்பு வேத வியாஸர் அங்கு வந்து விதுரர் தர்மத்தின் உருவம் அவரே சநாதன தர்ம தேவன்-அவருடைய தவமும் பக்தியும் எட்டுத் திக்கிலும் நிறைந்து இருக்கும் -அவர் பரம பொருளான கண்ணனின் திருவடிகளை அடைந்தார் -அவர் உபதேசித்ததே தர்மம் -என்று கூறி மறைந்தார் –
விதுரரின் நீதி நமது செயல்களிலே தெரியட்டும் –

————————————

உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்-மொத்தம் 8 அத்தியாயங்களில் -604-ஸ்லோகங்கள் உள்ளன

முதல் அத்யாயத்தில் இருந்து சில
ஒரே மரத்தில் இருந்து வேள்விக்கான பாத்திரங்களும் கரண்டிகளும் உருவாகும் -அதிலிருந்தே நீர்த்தொட்டியும் உடலும் உலக்கையும் உருவாகும்-ஒன்றிலிருந்தே கெட்டதும் நல்லதும் தோன்றலாம் –ஒரே குலத்தில் கவ்ரவர்களும் பாண்டவர்களும் -அறிவிலியும் அறிவாளியும் தோன்றுவது இயல்வே

ஒன்றால் இரண்டை நிர்ணயித்துக் கொண்டு மூன்றால் நான்கை வசப்படுத்துவீர் -ஐந்தை வென்று ஆறை உணர்ந்து -ஏழைத் தவிர்த்து சுகம் பெறுவீர்-1-38-
ஒன்றால் -நல்லறிவால்
இரண்டையும் –நல்லதையும் கெட்டதையும்
மூன்றால் -நண்பன் எதிரி உதாசீனன்
நான்கை -சாம தான பேத தண்டம் -மென்மையுள்ள பேச்சு -பொருள் உதவி -மிரட்டிப் பணிவித்தல் -தண்டித்துப் பணிவித்தல்
ஐந்து-புலன் உணர்வுகளில் நாட்டம்
ஆறு -சமாதானம் போர் படையெடுப்பு நல்ல தருணம் பார்த்துக் எதிர்க்கும் வரை முற்றுகை -வஞ்சித்து மனம் மாறச் செய்தல்-சரண் அடைதல் ஆகியவை ஆறும்
ஏழு -ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் ஏமாறுதல் சூதாடுதல் வேட்டையாடுதல் மது அருந்துதல் தடித்துப் பேசுதல் கொடூரமான தண்டனை பொருளாதரத்துக்கு நாசம் விளைவித்தல் -ஆகியவற்றைத் தவிர்த்து சுகம் பெறுதல்

விஷ நீர் குடித்தவனை மட்டுமே அழிக்கும் -ஆயுதம் அவனாலே அடிபட்ட ஒருவனையே மட்டுமே அழிக்கும் -அரசவையில் செய்த மந்த்ர ஆலோசனையின் தவறு அரசனை நாட்டுடன் நாட்டு மக்களையும் அழிக்கும்

சாம தான பேத தண்டங்களில் -பேதம் தாழ்ந்தது -தானம் மத்தியது -சாமம் உயர்ந்தது -இம் மூன்று உபாயங்களும் பயம் அளிக்காத போது மட்டுமே தண்டம் உபயோகிக்கத் தக்கது

தேவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் துறவிகள் அதிதிகள் -ஐவரையும் வழிபடுபவன் பெரும் புகழ் அடைகிறான் -நமக்குள்ளே இந்திரியங்களை -வாக்கில் அக்னியாகவும் -கண்களில் ஸூர்யனாகவும் -மனத்தில் சந்த்ரனாகவும் நின்றும் இயக்கி -வெளியில் மழை வெப்பம் காற்று முதலியவற்றைத்தந்து உதவின வாழ வைக்கும் தேவதைகள் -நமக்கு உருவளித்து ஆயுஸ் அறிவு சக்தி பொருள் தந்து உதவி-மறைந்த பின்பும் நம் நலனைக் கோரி நிற்கும் பித்ருக்கள் -நண்பனாக உறவினனாக உணவு ஆசை குடியிருப்பு போன்ற வாழும் வசதிகளைத் தரும் மனித இனம் -பற்றற்றுத் திரிந்து நல்லதையும் நலம் தருபவையையும் நமக்காக சேமித்து வைத்து அளிக்கும் துறவி -நாடோடியாக இறைவனே வருகிறான் என்னும்படி வரும் அதிதிகள் -இந்த ஐவரையும் இறைவனின் பிரதிநிதிகள் என்று எண்ணி வாழ வேண்டும்-

ஒன்பது வாயில்கள் -காதுகள் கண்கள் மூக்குத் துவாரங்கள் -வாய் -மலவழி -சிறுநீர் வழி -கொண்ட இந்த உடல் என்னும் வீட்டில் -வாயு பித்தம் கபம் என்னும் மூன்று தூண்கள் -பஞ்சபூதமாகிய ஐந்து சாட்சிகள் -ஒரு ஸ்வாமிகள் உடையவன் ஆத்மா உண்டு என்று உணர்ந்தவனே அறிஞன்

———

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.
மகாபாரதத்தில் பகவத் கீதை ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொதுநீதி மொழி எனலாம்                                                                                                                  பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன் அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.
சஞ்சையன் தூது
ஆனாலும் இருதரப்பினருக்கும் பொதுவான சிலர் போரினைத் தவிர்க்க தூது முயற்சிகளிலும் ஈடுபட்டனர். திருதராடிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும் படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையனை அனுப்பி இருந்தான்.
சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து அவர்கள் தரப்பிலேயே நியாயம் இருப்பதை உனர்ந்து கொண்டு, பாரதப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனை உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால் அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.
திருதராட்டிரன் குழப்பம்
சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள் அவனுடைய தூதின் விளைவினைப் பட்டவர்த்தனமாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான்.
“அரசே! வலிமை குன்றியும் யுத்த தளவாடங்கள் சரியில்லாத நிலையிலும் இருக்கும் போது வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் உறக்கம் வராது. பொருளைப் பறி கொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், பிறர் பொருளில் ஆசை வைத்தவன், திருடன் ஆகியோருக்கும் உறக்கம் சாத்தியமாவதில்லை. இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள்?” என்று கேட்கும் ஆரம்பத்திலேயே விதுரனின் புத்திக் கூர்மை தெளிவாகத் தெரிகிறது.
விதுரநீதி
அவனுக்கு நேரடியாக விடை கூற முடியாத திருதராட்டிரன், “எதையாவது சொல். என் மன ஆறுதலுக்காகச் சொல். நீ நீதிவான். நீ சொல்லும் நியாய உரைகள் எப்போதுமே கேட்க நன்றாக இருக்கும்” என்று அவனை ஊக்கிப் பேச வைக்கிறான். அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர நீதியாகும் .
இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது. இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.
எடுத்துக்காட்டு நீதி உரைகள்                                                                                                      இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்…

1.பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டல் மட்டுமே சொல்லுவான்.
2.பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
3.அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
4.வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது;
6.பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
7.இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; 8.முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
8.அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.
 8.சுக வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
 9.மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறுமையின்மை, தைரியம் ஆகிய ஐந்து குணங்களையும் ஒருபோது எந்த நிலையிலும் விட்டுவிடக் கூடாது                                                   10.விவேகி எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்பதால் அதை மாற்ற வழியில்லை.
11. வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான காலம் உண்டு.
 12.தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் நற்செயல்களையும் செய்தாக வேண்டும்.
 13.ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக் கூடாது.
 14.ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், பூச்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப் போய் அதில் மாட்டிக் கொள்கிறது. ஆசை வயப்பட்ட மனிதனின் நிலையும் இதுதான்.
 15.அளவுக்கு மிஞ்சிய தூக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், மயக்கம், எதையும் தாமதமாகச் செய்தல் எனும் ஆறு குணங்கலும் முன்னேற்றப் பாதையின் முட்டுக்கட்டைகளாகும்.
 16.அறிவிலி எனப்படுபவன், மற்றவர்கள் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் வயிறு புடைக்க உண்டு களிப்பான்.
 17.அறிவிலி எனப்படுபவன், தனக்கு அறிவு இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் கர்வமாக இருப்பான்.
18. தன்னை நாடி வரும் தீயவர்களையும் நல்லவன் கைவிடமாட்டான்.
 19.மற்றவர்கள் அவமதித்தாலும், தாக்கினாலும் பழிவாங்க விரும்பாமல் அமைதியாக இருப்பதுதான் பொறுமை.
 20.அறிவிலி எனப்படுபவன் தான் அழைக்கப்படாத இடங்களுக்கும் வேண்டுமென்று செல்வான்.
 21.தன்னடக்கமில்லாதவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காது.
22. தைரியம் என்பது உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் தொடர்புடையது.
 23.முதல்தரமான மனிதன் இந்த வையகம் வாழ வேண்டும் என்கிற கொள்கையை உடையவனாக இருப்பான்.
24. தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக மகிழ்ச்சி கொள்வதில்லை. அவமதித்தாலும் தாபத்தை அடைவதில்லை. கங்கையின் மடுவைப் போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
 25.தீயோரின் சேர்க்கை அஞ்சத்தக்கது. அது எப்படிப்பட்ட நல்லவரையும் கெடுத்து விடும். காய்ந்த கட்டையுடன் சேர்ந்த ஈர மரமும் எரிந்துவிடும்.
 26.அகங்காரம் எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், கோபம் கொள்ளல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று கருதுதல், நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீய குணங்களும் கூர்மையான கத்தி போல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால், இவையே மனிதர்களைக் கொல்லுகின்றனவல்லாமல் யமன் கொல்கிறான் என்பதில்லை.
 27.புண்ணில் வேல் பாய்ச்சுபவனாகவும், கொடுஞ்சொல் பேசுபவனாகவும் இருக்கக் கூடாது.
28. மனத்தின் ஈடுபாட்டிற்கு ஏற்ப முயற்சியில் வெற்றியின் அளவு அமைகிறது.
 29.நல்லவர் உள்ளம் நல்லவர் அறிவர்.
30. நல்லவர்களைத் திட்டுவதனால் ஒருவன் பாவம் செய்தவனாகிறான்.
31. மனிதனின் மனத்தில் தீய விசயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.
 32.அறிவிலி எனப்படுபவன், பகைவனை நண்பன் என்று நம்பி ஏமாறுவான்.
 33.ஒன்றை விரும்பும் போது அது நம்மிடம் இருக்கிறதா, அது நமக்குத் தேவைதானா, அதைத் தவிர்க்க முடியுமா என்று சிந்திப்பது அவசியமாகும்.
 34.படிப்பு, பாவச் செயல் செய்பவனைக் காப்பாற்றாது. நற்பண்பு ஒன்றுதான் காப்பாற்றும்.

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான ஆபத்தான மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. 

ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான – யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்து கிணற்றுக்கு மேலே ஏறி ஒருவழியாக தப்பித்தான்.

அவன் மனம், ’தடக், தடக்’ என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. ’அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்!’ என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, 

கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது. அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… 

அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்… 

உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்… அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.

என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அது முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. 

முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். 

மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

உறவினர்கள் இங்கே காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் மூழ்கிவிடுகிறார்கள்

நல்ல குணமுள்ளவர்கள் இங்கே காப்பாற்றப்படுகிறார்கள், கெட்ட குணமுள்ளவர்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள் [5.39.23]

“இந்த உலகில், உறவினர்கள் காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள். நல்ல நடத்தையைப் பின்பற்றுபவர்கள் காப்பாற்றுகிறார்கள். தீய நடத்தையைப் பின்பற்றுபவர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள்.”பணிவு மற்றும் நன்னடத்தை பற்றிய விதுரரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கூறத்தக்கவை:

பணிவு உள்ளுணர்வைக் கொல்லும், வீரம் தீமையைக் கொல்லும்.

மன்னிப்பு எப்போதும் கோபத்தைக் கொல்லும், நடத்தை எப்போதும் பண்புகளைக் கொல்லும்.

“பணிவு தீய நடத்தையை அழிக்கிறது. வீரம் பாதகமான சூழ்நிலைகளை அழிக்கிறது. மன்னிப்பு எப்போதும் கோபத்தை அழிக்கிறது. நல்ல நடத்தை தீய சகுனங்களை அழிக்கிறது.”பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன் திரௌபதியிடம் மன்னிப்பின் மகத்துவத்தை, ” 

மன்னிப்பு என்பது தர்மம். மன்னிப்பு என்பது தியாகம். மன்னிப்பு என்பது வேதங்கள். மன்னிப்பு என்பது புனித நூல்கள் ” என்று கூறியிருந்தார். இந்த ஸ்லோகங்கள் இவ்வாறு தொடங்குகின்றன: மன்னிப்பு என்பது மதம், மன்னிப்பு என்பது தியாகம், மன்னிப்பு என்பது வேதங்கள், மன்னிப்பு கேட்பது [3.3.36a]. இங்கே விதுரர் மன்னிப்பு என்ற கருத்துக்கு ஒரு நேர்த்தியான நுணுக்கத்தைச் சேர்க்கிறார்: 

மன்னிக்க முடியாதவனே நீதியின் பொருட்டு அனைத்திற்கும் வல்லவன் [5.39.46அ]

“ஒரு பலவீனமான நபர் எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டும். ஒரு வலிமையான நபர் தர்மத்திற்காக அதைச் செய்ய வேண்டும்.”நிச்சயமாக, யுதிஷ்டிரன் அந்த வார்த்தைகளைப் பேசியபோது நிலைமை வேறுபட்டது, நிர்ப்பந்தத்தாலும், அந்த நேரத்தில் பாண்டவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான நிலையை உணர்ந்தும் அதிகமாக உச்சரித்தார், எனவே அந்த வார்த்தைகளையும், மகாபாரதத்திலிருந்து வேறு எந்த வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தத்தை உண்மையான முறையில் புரிந்துகொள்ள அவற்றின் பொருத்தமான சூழலில் வைப்பது முக்கியம்.இந்த அத்தியாயம், ஒருவர் எதற்காக வருத்தப்பட வேண்டும், வயதாவதற்கு என்ன காரணம், குறைவதற்கான காரணம் என்ன, இன்னும் பலவற்றைப் பற்றி விதுரரின் ஆலோசனையுடன் முடிகிறது.

  • கோபமின்றி கோபத்தையும், நன்மையால் தீமையையும் வெல்ல வேண்டும்.
  • தர்மத்தால் தீமையை வெல்ல வேண்டும், உண்மையால் பொய்யை வெல்ல வேண்டும்.
  • ” கோபமின்மையால் கோபத்தை வெல்ல வேண்டும்.
  • தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
  • கஞ்சத்தனத்தை பெருந்தன்மையால் வெல்ல வேண்டும்.
  • பொய்யை உண்மையால் வெல்ல வேண்டும். “
  • ஒரு அறியாமையுள்ள மனிதன் பரிதாபப்பட வேண்டும், குழந்தைகள் இல்லாத ஒரு ஜோடி பரிதாபப்பட வேண்டும்.
  • பட்டினியால் வாடும் மக்கள் துக்கப்படுகிறார்கள், ராஜா இல்லாத தேசம் துக்ககரமானது.
  • ” கல்வி இல்லாத ஒரு மனிதனைப் பற்றி ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • குழந்தை இல்லாத தம்பதியருக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • பசியால் வாடும் குடிமக்களுக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • ராஜா இல்லாத ஒரு ராஜ்யத்திற்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். “
  • மலைகளின் நீருக்குக் கீழே உடல்களுடன் கூடிய முதுமை
  • அஸம்போகோ ஜரா ஸ்த்ரீணம் வக்ஷாலயா மனசோ ஜரா [5.39.63]
  • ” உடல் உள்ளவர்கள் பயணங்களால் வயதாகிறார்கள். 
  • மழையால் மலைகள் வயதாகின்றன. 
  • உடலுறவு இல்லாதது பெண்களை வயதாக்குகிறது. 
  • கடுமையான வார்த்தைகள் மனதை வயதாக்குகின்றன. “
  • வேதங்கள் பெயரில்லாமல் தூய்மையற்றவை, பிராமணரின் சபதங்கள் தூய்மையற்றவை.
  • பெண்கள் ஆர்வத்தில் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள், நாடுகடத்தலில் தூய்மையானவர்கள்.
  • ” வேதங்கள் மீண்டும் சொல்லப்படாவிட்டால் அவை களங்கப்படுத்தப்படும்.” 
  • பிராமணர்கள் சபதம் இல்லாததால் களங்கப்படுகிறார்கள். 
  • கற்புள்ள பெண்களை ஆர்வம் கறைபடுத்துகிறது. 
  • வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது பெண்களை களங்கப்படுத்துகிறது. 
  • தங்கத்தின் அழுக்கு வெள்ளி, வெள்ளியின் அழுக்கு ட்ரபு.
  • டிராபுமலா ஈயம் என்று அழைக்கப்படும் ஈயத்தின் அழுக்கும் அழுக்குதான்.
  • வெள்ளி தங்கத்தை கறைபடுத்துகிறது. 
  • தகரம் வெள்ளியைக் கறைபடுத்துகிறது. 
  • ஈயம் தகரத்தை கறைபடுத்துகிறது. 
  • தூசி ஈயத்தைக் கறைபடுத்துகிறது. “
  • கனவுகளால் தூக்கத்தை வெல்லக்கூடாது, காமத்தால் பெண்ணை வெல்லக்கூடாது.
  • நெருப்பை விறகினால் வெல்லக்கூடாது, மதுவை பானத்தால் வெல்லக்கூடாது.
  • ” அதிக தூக்கத்தால் தூக்கத்தை வெல்லாதே. 
  • பெண்களை ஆசையால் வெல்லாதீர்கள். 
  • நெருப்பை மூட்டி அதை வெல்லாதீர்கள். 
  • மதுவின் மூலம் தாகத்தை வெல்லாதீர்கள். “

முடிவில், விதுரர் திருதராஷ்டிரனை ஆசையை கைவிடுமாறு அறிவுறுத்துகிறார், ஏனெனில் ” 

ஆயிரம் உள்ளவர்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளவர்களும் வாழ்கிறார்கள். ” ( 

சஹஸ்ரினோ’பி ஜீவந்தி ஜீவந்தி ஷதினஸ்ததா  – 5.39.68அ)அடுத்த அத்தியாயத்தில் விதுரர் தொடர்ந்து, ” 

நம்பிக்கை உறுதியை அழிக்கிறது. மரணம் செழிப்பை அழிக்கிறது. கோபம் செல்வத்தை அழிக்கிறது. கஞ்சத்தனம் புகழை அழிக்கிறது. பராமரிக்கத் தவறுவது விலங்குகளை அழிக்கிறது. ஓ ராஜா! கோபக்கார பிராமணர் ஒருவர் கூட ஒரு ராஜ்யத்தை அழிக்கிறார் ” என்று மன்னரிடம் கூறுகிறார்.( 

நம்பிக்கை பொறுமையைக் கொல்லும், செழிப்பை அழிக்கும்; கோபம் செல்வத்தைக் கொல்லும், புகழ் என்பது இழிவானது.)

மன்னா, அலட்சியம் கால்நடைகளைக் கொல்லும்; கோபக்கார பிராமணன் ஒருவன் தேசத்தைக் கொல்கிறான் – 5.40.7 )விதுரர், ராஜாவுக்கு அறிவுரை கூறியதன் நோக்கம், அவர் திருப்தி அடைந்து நிலையற்றதை விட்டுவிடுவதாகும் என்று கூறுகிறார். உடல் நிலையற்றது, ஒருவரின் செயல்கள் மட்டுமே அவரைப் பின்தொடர்ந்தன, இறந்தவரின் உடலை நெருப்பில் எறிந்துவிட்டு உறவினர்களும் நலம் விரும்பிகளும் திரும்புவது போல, இறந்தவரின் செயல்கள்தான் அவரைப் பின்தொடர்ந்தன. இங்கே, விதுரர் ஆன்மா, செயல்கள் மற்றும் பலவற்றின் ஒரு படத்தை முன்வைக்க துடிப்பான கற்பனையை அழைக்கிறார், மேலும் இது முழுமையாக மீண்டும் உருவாக்கத் தகுந்தது: 

ஆத்ம நதி பாரத புண்யதீர்த்தம்; சத்தியத்தின் நீர் பொறுமையின் மூலமாகவும், கட்டுப்பாட்டின் அலைகளாகவும் இருக்கிறது.

அதில் நீராடுபவன் பக்திமான்களைத் தூய்மைப்படுத்துகிறான்; புனித ஆன்மா எப்போதும் தண்ணீர்தான், தண்ணீர் தானே

ஆன்மா ஒரு நதி. தூய்மை அதன் தீர்த்தங்களைக் குறிக்கிறது. உண்மை அதன் நீர். உறுதியானது கரைகளை உருவாக்குகிறது. சுயக்கட்டுப்பாடு அலைகளைக் குறிக்கிறது. இவற்றில் குளிப்பதன் மூலம், தூய செயல்களைச் செய்பவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார். ஆன்மா தூய்மையாகி, நித்திய நீரில் உள்ள தண்ணீரைப் போல இருக்கிறது. மற்றும் 

காமத்தையும் கோபத்தையும் பற்றிக்கொள்ளும் ஐந்து புலன்களின் நீரின் நதி.

பொறுமையின் படகை உருவாக்கி, பிறவியின் கோட்டைகளைக் கடக்கவும்.

ஒரு நதி இருக்கிறது, அதில் ஐந்து புலன்கள் தண்ணீராகவும், ஆசை மற்றும் கோபம் முதலைகளாகவும் இருக்கின்றன. உறுதியிலிருந்து ஒரு படகை உருவாக்கி, மீண்டும் மீண்டும் பிறக்கும் கடினமான சுழல்களைக் கடக்கவும்.விதியின் முதன்மையைப் பற்றிய புலம்பலுடன் ஏழாவது அத்தியாயத்தைத் தொடங்கிய திருதராஷ்டிரன், எட்டாவது அத்தியாயத்தை மற்றொரு புலம்பலுடன் முடிக்கிறார் – ” 

விதி என்பது செயல்படுபவன் என்று நான் நினைக்கிறேன், மனித முயற்சி பயனற்றது. ” விதுர நிதியின் கடைசி அத்தியாயத்தில், திருதராஷ்டிரன் விதுரரிடம், அவர் இதுவரை பேசாத ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். விதுரர், சனத்சுஜாத முனிவர் தான் ராஜாவுடன் பேசக்கூடியவர் என்று பதிலளித்தார். முனிவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார், விதுரர் ராஜாவின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு முனிவரைக் கேட்டார்.இத்துடன் விதுர நிதியைக் கொண்ட பிரஜாகர பர்வம் முடிகிறது .

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விதுரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading