அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வஸிதமேதத்யத் ருக் வேதோ யஜுர் வேத : ஸாம வேதோ தர்வாங்கிரஸஹிஹாஸ: புராணம் வித்யா உபநிஷூத ”-சுக்ல யஜுர் வேத பிருஹதாாண்யகோபநிஷத்தில் 4-ம் அத்தியாயம் 4-ம் பிராம்மணம்.-இத்யாதியாகிய ப்ரமாணங்களின்படியே சர்வ நியந்தாவாயும்,
சர்வ வேதோபப்ரஹ்மணாதி நூல்களின் ப்ரதிபாத்தியனாயும்,
சர்வாந்தர்யாமியாயுமிருக்கும் சர்வேஸ்வரனது ஸங்கல்ப ஸ்வாஸமே ருக், யஜுர், ஸாமம், அதர்வண முதலாகிய வேதங்களும் இதிஹாசம், புராணம், வித்தை, உபநிஷத் முதலியன என அறுதியிட்டுள்ளபடியால், எம்பெருமானது ஜாயமான கடாக்ஷமில்லையாயின் வேதத்தின் யதார்த்தம் வெளிப்படையாய் தோன்றாதாகையால் தமது பரம க்ருபையால் தாமே தம் ப்ரஜைகளுக்கு விளக்கிக் காட்டியபடியால்
வேதங்கள் அனாதியாய் கல்பங்கள் தோரும் ப்ரஜைகளாகிய
ப்ரம்ம, ருத்ர, இந்த்ராதி தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும்,
ஸர்வேஸ்வரனால் போதிக்கப்படுவதால், அவ்வேத ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வான் பக்கலிலும், வேதத்தின் பக்கலிலுமுள்ள ஏற்றங்களை அறிந்தவர்களில் தலைமை யானவர்கள் எமதாரியர்களேயாம்.
காலக்ரமத்தில் வேதாத்யயனம் குறைவு பட்டுப்போய் வேதமானது கோர்வை யின்றி சிதரிப்
போனமையால் அதை சீர்திருத்த வேண்டி எமதருட் பெருங்கருணை யப்பன் தமது பரம க்ருபையால் “பரமேஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்” என்கிறபடியே பரமேஸ்வராயும், பரம பத நிர்வாணனனாயும், விளங்காகின்ற மஹா விஷ்ணுவினம்சமாய் “ வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ் ரூபாய விஷ்ணுவே” என்றும் “ ஸ ஹோதா வ்யாச பராசர்ய :” என்றும் “வ்யாஸய தீ திவ்யாஸ ” என்கிற யஜுர் வேதத்தில் வித்பத்யின் பிரகாரம் வேதங்களினுடைய யதார்த்தத்தை ஸ்தாபிக்கவும், அனர்த்தங்களை நிராகரிக்கவும்,கல்பங்கள் தோரும் அம்ஸாரூடராயும், பராசரர் புத்திரராயும்,விளங்கிய வேத வ்யாஸ பகவான் அவதரித்து அஹோ பாஹ்யமாய் கெம்பீரார்த்தமாய், தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்று பெயர் பெற்றிருந்த வேதங்களை தமது பரம க்ருபையாலே எதிர்கால நிகக்ஷியைக் கணித்து சிற்றறிவினோர் அறிந்துய்யுமாரு ருக், யஜுர். ஸாமம், அதர்வணம் என்பதாகப் பிரித்து தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க அவர்கள் அவ்வொவ்வொரு பாகத்தையும் அநேக பகுதிகளாகத் தொகுத்து அவ் வாறு தொகுத்த பாகங்களுக்கு வேத ஸாகைளென்று பெயராய் அதிலும் ருக்வேதத்தில் 21, யஜூர்வேதத்தில் 109, ஸாமவேதத்தில் 1000, அதர்வண வேதத்தில் 50, இப்படி 1180, ஸாகைகளாய் ஒவ்வொரு சாகைகளுக்கும் ஒவ்வொரு உபநிஷதென்று பெயராய் ஒவ்வொரு ஸாகையும் முந்தியபாகம் யஜ்ஞாதி நித்ய, நைமித்ய, கருமங்களையும், அவைகளை அனுஷ்டிக்க வேண்டிய விதிகளையும், செய்ய யோக்யதையுள்ள அதிகாரிகளையும், செய்விக்றவர்களின் யோக்யதையும், ஆராதிக்க வேண்டிய தேவதைகளையும், தத் தேவதைகளைப் பற்றிய மந்தரங்களையும்,தத்தத் கருமங்களின் பலன்களையும், கூறுகிறது.அக் காரணத்தால் இதற்கு கரும காண்டமென்றும், அவித்தை என்றும் கருதப்படுகிறது. வேதத்தில் கரும காண்டத்திற்கு அவித்தை என்னும் நிரூபணம் மைத்திராயண்ணி யுபநிஷத்தில்7, 9 கடோபநிஷத்தில் 2, 4 ஈஸாவாஹியோபநிஷத்தில் 11லும் காணலாம். உத்ர பாகமானது சர்வேஸ்வரனை உபாஸிக்கும் மார்க்கமாகிய ஸாங்கிய யோகம், நிஷ்காம கரும யோகம், தபசு, ஸகுண நிர்க்குண ப்ரஹ்மோபாசனா விதியும், ஆத்ம லக்ஷணமும், ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ரக்ஷகத்வமும்,ஸமஸ்த்த கல்யாண குணாத் மஹத்வமும், ஸர்வ சேஷித்வமும், ஸ்ரீய:பதித்வம் முதலியவைகளையும், அவைகளுக்க அங்கோபாங்கமான விஷயங்களையும் கூறுகையாலே, ஸ்வ பாகத்திற்கு ஞான காண்டமென்றும், வித்தையென்றும், மேலே கூறிப் போந்தமைத்திராயண்ணியம், கடோபநிஷத்தும், ஈஸாவாஹியம் முதலிய ஸ்ருதிகள் கூறுகிறது இவ்வாறு விவரிக்கப்பட்ட விஷயங்களை முக்திகோபநிஷத்திலும், விஷ்ணு புராணத்திலும் விரிவாகக் காணலாம் இப்படி 1180 ஸாகைகளுடைய வேதங்களின் கில பாகங்களே தற்போது 108, உபநிஷத்துகளாக வெளியாயிருக் கின்றது இவ் 1180 ஸாகைகளையுடைய வேதங்களை வேத புருஷனால் வெளியிடப்பட்ட மீமாம்ஸா ஸாஸ்த்திரங்களன்றி வேதத்தின் யதார்த்தம் விளங்காது. அம்மீமாம்ஸா ஸாஸ்த்திரம் 20 அத்யாயங்களாயும்,அதில் பூர்வ பாகம் 14 அத்தியாயங்களையுடையதாயும், கரும நிச்சய ஸாதனமாயும், ஜைமினி முனிவரால் விளக்கப்பட்டதாயும், உத்ரபாகம் ப்ரஹ்மத்தினுடைய நிச்சயத்தின் ஸாதனமாயும், 6 -அத்யாயங்களை யுடையதாயும்,வ்யாஸ பகவானால் விளக்கப்பட்டதாயுமிருக்கும்.
யஜுர்வேத ப்ரதிபாத்யரான – வேதவ்யாஸ பகவான்« வேத ஸாஸ்த்ராத்பரம்” என்கையாலே அவ் வேதங்களை யனுசரித்தே பர தத்வ பரம் பொருளை யறிய வேண்டும்.
அந்நபூர்ணோபநீஷத்தில்
“யச்சூன்யவாதிநாம் சூந்யம் ப்ரஹம ப்ரஹ்ம விதாம் சயத்
விஜ்ஞாந மாத்ரம் விஜ்ஞாந விதாம் யதமலாத்மகம்
புருஷஸ் ஸாங்கய தருஷ்டீநா மீஸ்வரோ யோகவாதிநாம்
ஸிவச்சைவா கமஸ்தாநாம் கால: காலைக வாதிநாம்
யத் ஸர்வ ஸாத்ர ஸித்தாந்தம் யத் தத்வம் ததயௌஸ்திக:”
இதன் பொருள்,
ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரனை உய்யும் வகை எண்ணிலவாயினும், சூன்யவாதி சூன்யமாகவும், ப்ரஹ்மவாதி ப்ரஹ்ம மாகவும், விஞ்ஞானமுளோன் ஆன்மாவினிடத்தில் விஞ்ஞானமாகவும், ஸாங்க்யன் புருஷனாகவும், யோகவாதி ஈஸ்வரனாகவும், ஸைவ, ஆகமி சிவனாகவும், காலைகவாதி காலமாகவு மறிகிறானாதலால், ஸர்வ ஸாஸ்த்திர சித்தாந்தங்களினு முடிந்த தத்வப் பொருளும், விகாராஹிதமான நிர்விகாசனும், கல்பங்கள்
தோரும் ப்ரம்ம, சிவ, இந்த்ராதி தேவர்களை நிக்ரஹித்து
ஹரிக்கின்றவனுமான ஸர்வேஸ்வரன் ஒருவனே யுளன்.
அதர்வசிரோபநீஷத்.
காரணாநாம் த்யாதா காரணந்து த்யேயஸ் ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர’ என்கிறபடியே சராசர ப்ரபஞ்சங்களுக்கும் காரண வஸ்துவும், க்யாதாவும்.அறிபொருளும், பரவின வஸ்துவும், ஸர்வ வ்யாபகனுமான ஸர்வேஸ்வரனே யாவன். மேலே கூறியுள்ள ஈஸ்வர ஸப்தத்தால் அஸாஸ்த்ர வாதிகளும், நவீன பண்டாரங்களும் நிகண்டுகளில் கூறும் ஈஸ்வர ஸப்தங்களுக்கு ருத்ராதி தேவர்களுக்குத் தான் பொருந்துமென நம்புகின்றனர் அதற்கிணங்க சிற் சில ஆபாசமான உதாரணங்களையும்,கதைகளையும், பிதற்றுகின்றனராயிலும் ஆராயுமளவில் சில காரணத்தால் சிற் சில தேவர்களால், தங்களுக்கேற்பட்டுள்ள கடுமைகளைத் தவிர்த்து காப்பாற்றும் பொருட்டு துதித்துக் கொண்டாடப் பெற்றதாம் அதாவது கடுமையால் வருந்தும் ஒருவன் தனது போஷகத்துக்காக பிரரை வருந்திக் கொண்டாடப்பட்ட பட்டப் பெயர்களுக்கு எவ்வாறு அர்த்தம் பொருந்தாதோ அவ்வாறே பெற்றவையாம் ருத்ராதி தேவர்களின் ஈஸ்வரத்வம்.
சகல ஈஸ்வர சப்தங்களுக்கும் பிரதிபாத்யன் யாவனெனில்.
“ யதா ஈஸ்வர ஸப்தோயம் நாராயணோ பிரதிஷ்டதே” என்றும்,
“ யத்வா ஈஸ்வர ஸப்தோயம் ரூட்யாவத்தி ஜநார்த்தநம்” என்றும்,வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் வியாகரண சூத்திரங்களினாலே ஈஸ்வர சப்தங்களுக்கு ப்ரதிபாத்யனும், அச்சப்தார்த்தங்களுக்கு அர்ஹனுமானவன் ஸ்ரீமந் நாராயண னொருவனே யாவன் என்றும், ஜீவ கோடிகளினுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை கொடுக்குமவனான ஜநார்த்த னொருவனே யாவன் என்றும் ஹிதாநு ஸாகர கர்மாநுகுண நியாமக ஸ்வரூப ரூப நாம விபூதிகளையும், பரத்வ காரணத்வாதி கல்யாண குண ஸமூஹங்களையும், வேத வேதாந்தாதிகளெல்லாம் ஒதத்தக்க அநந்த வைபவ ஸஹிதனாய் விளங்குமவனாதலால், ஸமஸ்த விலக்ஷண ப்ரமேய ப்ரமா தாக்களான சதுர்முக, பஞ்சமுக,வ்யாச பராசர, சுக செளநக, விகனச, வசிஷ்டாதி ப்ரஹ்ம வித்துக்களும், ஸ்ரீபராங்குச பாகால பட்டர்பிரரன் ஆதியான ப்ரஹ்ம விதாக்ரேசர்களும் அப்பரமேஸ்வர ஸப்த்த ப்ரதிபாத்யனான பர ப்ரஹ்மத்திற்கு நாராயணனென்ற திருநாமமே அஸாதாரண திருநாம மென்று அறிவுறுத்தினார்களிறே–நாராயணோ ப்ரதிஷ்டதே” என்கிற
சப்தார்த்தமானது, ஜகஜந்மாதி காரண பூகனாய், சர்வாந்தர்யாமியாய், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அதீதமானவனாய்,சர்வ வேத ப்ரதிபாத்யனாய், ஜீவோத்பதியாய், பரம பாவன சச்சித்தானந்த ஸ்வரூபமாயுமுள்ளப் பரமபத நிர்வாஹனுமான,
பரமாத்மாவையே ஈஸ்வர சப்தம் ப்ரதிபாதிக்கும் என்றே சூத்திரகாரர்களும் அறுதி யிட்டனர், இதற்கிணங்கியே மீமாம்ஸர்களும், மதுவும் அருளிச் செய்தனர்.
ஜகஜ்ஜன்மாதி காரண பூதனாவது.-யஜுர்வேதம் தைத்ரியோபநிஷத்
“ யதோவா இமாநி பூதானி ஜாயந்தே யேந ஜாதாநி வந்தி யத் ப்ரயந்த்யபிஸம், விஸந்தி தத் விஜிஜ்ஞாஸ்வ ப்ரஹ்மேதி-என்கிறபடியே முன்னம் இச் சராசராத்மகமான பூத, பெளதி
ப்ரபஞ்சங்களும், அதற்குள்ளடங்கிய உடலும், உயிரும், சரப, அசரபமுமாய் காணப்படுகிற சகல வஸ்த்துக்களும் எவனிடத்திலடங்கினவோ, பிறகு அடங்கின யாவும் எவனிடத்திலிருந்து வெளிப்படுகின்றனவோ, வெளிப்பட்ட யாவும், தத்தமக்கு விதித்த காலம் வரை கடவாது நிலை பெற்று நிற்க எவனால் ரக்ஷிக்கப்படுகின்றனவோ அப்பரம் பொருளே நாராயண பர ப்ரஹ்மம் என்று அறிக –
நாராயணோபநிஷத்
நாராயணாத் ப்ரம்மா ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோ ஜாயதே,நாராயணாத் த்வாதச ஆதித்யா,ருத்ரா வஸ்வஸ் ஸர்வானி சந்தாம் ஹி நாராயணா தேவா ஸமுத்பத்யந்தே,நாராயணாத் ப்ரவர்த்தியந்தே, நாராயணே ப்ரலீயந்தே”
என்கிறபடியே புருஷோத்தமனாயும், ப்ரணவ மந்திரப் ப்ரதி பாத்யனாயுள்ள ஸ்ரீமந் நாராயணன் இடத்திலிருந்தே ப்ரம்மா, சிவன், இந்திரன், த்வாதசாதித்யர் முதலான பன்னிரண்டு ருத்ரர்களும்,தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும்
உண்டாயிற்றென்றும், அத் தயா பரக் கடலாகிய ஸ்ரீமந்நாராயணனாலேயே அவ் ஒவ்வொன்றும் தத்தமக்கு விதித்த நாள் வரை,நிலை பெற்று நிற்கின்றனவென்றும், பின்னர் கற்ப க்ஷயத்தில் அகில ஈஸ்வர சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் இடத்திலேயே அவையாவும் லயமாகின்றன வென்றும்
பைங்களோபநிஷத்.
” ப்ராணி கர்ம வஸாதேஷ படோயத்வத ப்ரஸாரித:
பராணி கர்ம ஷயாத் புநஸ்த்திரோ பாவயதி தஸ்மிந்
நேவாகிலம் விஸ்வம் ஸங்கோஸ்தித படவர்வர்ததே
ஈஸாதிஷ்டி தாவரண சக்திதோ ரஜோ த்ரிக்தாமஹ தாக்யா -என்கிறபடியே ப்ரம்ம, ருத்ர, இந்தராதி தேவர்கள் முதல் ஸ்தாவரம் வரையிலுள்ள யாவும் ப்ராணிகளே யாயினும் கர்ம வசத்தினாலே மாறுதலடைவதேயாம், சுருட்டப்பட்ட சித்ரப் படம் போலே சகல ஜகத்தையும், அதிலடங்கிய ப்ரம்ம, ருத்ர, ஈசான்ய ப்ரிதிவ்யாதி பதார்த்தங்களனைத்தும் தனக்குள்ளே
லயிக்கவும், அனந்தரம் நிக்ரஹிக்கவும், பின்னர் ஹரிக்கவும், வல்லவனாகையாலே (ஹரி) என்னும் திருநாமமுண்டாயிற்றென்று வயாஸ பகவானும், ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், சங்கராசாரியரும், மத்வாசரியரும், வித்யாரண்யர் முதலானோரும் தங்கள் பாஷ்யங்களிலே ஸ்பஷ்டமாக அறுதியிட்டனர். இக் காரணத்தால் ஸர்வ நியந்தாவும், திருவஷ்டாக்ஷர ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனை ஜெகஜ் ஜன்மாதி காரண
பூதனெனத் தட்டில்லையிறே.
சர்வாந்தர்யாமித்மாவது.
நாராயணேபநிஷத்,
“அந்தர்ப் பஹிச்ச நாராயண : நாராயண யேவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் நிஷ்களங்கோ நிரஞ்ஜநோ நிர்விகவ்போ நிராக்யா தச்சுத்தோ தேவ ஏகோ நாராயண : என்கிறபடியே அவித்யாதி கர்மகட்டுகளும் நாராயணன், ஊர்த்தவமும் நாராயணன், அதோங்கமும் நாராயணன், உள்ளும், புறம்பும் நாராயணன், பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான சர்வ லோகங்களிலும் அணுவிற்கணுவாயும், மேருக்கு மேர்வாயும்,
யாதொரு பூ த காலம், பவிஷ்யத்காலம், சர்வமும் நாராயணனே யாய், நிஷ்களங்கனாப், நிரஞ்சனனாய், நிர்விகல்பனாய், சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து சங்கல்பத்தால் ஆட்டி அசைப்பிக்கும் அகடித கடனா சாமர்த்தியமமைந்த பரம் பொருளன்றோ சர்வார்ந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணனென்றும்,
யஜுர் வேதத்தில் தஹர வித்தையில்.
“புருஷயேவேதம் ஸர்வம் யத்பூதம் யச்சபவ்யம்-என்கிற படியே கால பரிச்சேத ரஹிதமாய், கழிந்த காலத்திருந்த ஜகத்தும், எதிர் கால நோக்குடைய ஜகத்தும், நம் முன் காணப்படுகிற ஜகத் யாவும் அதிருத்த நாராயணனின் அந்தர்யாமித்வமென்றும், இம் முக்கால நோக்குள்ள ஜகத்தும் அதிலுள்ள சேதனா சேதனங்களும் அப் பரம புருஷனுக்கு சரீரமாயமையப் பட்டவை என்றும்,
சுக்ல யஜுஸ் சுபாலோபநிஷத்.
“ சக்ஷ்ஷு க்ஷ த்ருஷ்டவ்யம்ஸ நாராயண: ஸ்ரோத்ரஸ் ஸ ஸ்ரோதவ்யம்ஸ நாராயண :
என்கிறபடியே சகல லோகங்களிலுமுள்ள சகல வஸ்துக்களையும் பார்க்கின்றவனும், பார்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களும் நாராயணன், கேட்க்கின்றவனும், கேட்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களிலும், சகல சப்த்தங்களிலும் அந்தர்யாமியானவன் நாராயணனே என்றும்,
“ அந்தச் சரீரே நிஹிதோ ஹுஹாயாம்”-ஒவ்வொரு தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி ஸ்தூல சூஷ்மாதி சரீரங்களிலும், உள்ளும், புறம்பும் வ்யாபித்துள்ளோன் நாராயணனென்றும்,=மஹாநாராயணோபநிஷத்.
“ யச்ச கிஞ்சித் ஜகத்தஸ்மிந் துர்ஷ்யதே ஸுர்யதேபிவா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்யா நாராயண ஸ்தித :”-என்கிறபடியே காலபரிச்சேத ரஹிதனாய், த்ரிகால நோக்குள்ள ஜகஜ் ஜீவகோடிகளின் துருஷ்டிக்குக் காணப்படுகிற மேரு த்ரணாதிகளினுள்ளும் புறம்பும் வியாபிப்பவனும், அவ்வொவ் வொன்றினின்று மெழும் சப்தங்களை கேட்கும் ஜீவகோடிகளிலும், அவ்வாறு நிகழும் சப்தங்களிலும், நிஷ்களங்கனாய், நிரஞ்சனனாய், நிர்மலனாய், அபின்னனாய், அவாங் மனோ கோசரனாய்,
தனக்குப் புறம்பிற் போகவிட்ட சிதசித்துக்களில்லாமல் அவைகளை விடாதே வளைத்துக் கொண்டு சுக சயனனாய் எழுந்தருளியிருக்கும் பரம்பொருளே ஸ்ரீமந்நாராயண னென்றும் மஹா நாராயணேபநிஷத்.
” அநந்தமவ்யயம் கவிம் சமுத்ரேந்தரம் விஸ்வசம்
பவம் பத்மகோச பிராதிகாசம் ஹிருதயம் சாப்யதோமுகம்-என்று சகல பிரம்மாண்டங்களின் ப்ருதிவியில் வசிக்கும் ஜீவ கோடிகளின் வியாபகமின்றிக்கே சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள சப்த சமுத்ரங்களில் வசிக்கும் மச்ச குழாங்களிலும்,
அச் சமுத்ரங்களினின்றெழும் குமிழிகளிலும், அலைகளிலும்,
அவ்வலைகளினின்று சிதரும் ஜலத் துளிகளிலும், அத்துளிகளின் ஒவ்வொன்றிலும் தனித்தனியாய், உள்ளும் புறம்பும் வியாபியா நின்றவன் ஸ்ரீமந் நாராயணனே என்றும்,
கோபாலதாபன்னியூபநிஷத்.
” ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூடஸ் ஸர்வ வ்யாபீ mஸர்வ பூதாந்தராத்மா”
சகல பிரம்மாண்டங்களிலும், சராசர பூதங்களிலும், சகல ஜீவ கோடிகளிலும், சர்வாந்தர்யாமி யாயிருக்குமவன் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவே என்றும்,
அதர்வசிரோபநிஷத்,
அஹமேஹ பிரதமமாசம் வர்த்தாமி பவிஷ்யாமி சநாந்யய: கச்சிந் மத்தோ வியக்துருக்க: ஹிதிசோ
ந்ராந்தரம் பிராவிசத்தி சன்சாந்தரம் பிராவிஸச் சோஹம்நித்யா நித்யோஹம் பிரபஞ்ச்யோஹம் ப்ரத்யஞ்ச்யோஹம் முதஞ்ச்யோஹம் மதஞ்ச்
யோத்வா திஷத்சாஹம் த்ருஷு ஜகத் அனுஷத் சோஹம் சந்தோஹம் தியரஹம் பார்கஸ் வத்சோஹம்-என்கையாலே சிவபிரான் தானே தெய்வ சபையில் நின்றும்,. யதார்த்தமாயும், சர்வ வேத தாத்பர்யார்த்தமாயும், சொல்வதாக நிச்சயித்து, சர்வாந்தாயாமியாயும், ஜீவோதபதியுமான,ஸ்ரீமந் நாராயணன் எனக்குள் அந்தர்யாமி யாயிருக்கையால் தான் நான் திரிலோகாதிபதி யாயிருக்கப் பெற்றேனென்றும், அவ்வேற்றத் தாலே பூத பவுஷ்ய வர்த்தமான காலங்களிலும், எனக்கீடானவ ரொருவருமில்லை என்றும் தனது சந்தோஷப் பெருக்காலே பிர சங்கித்தனரென்றும், இப்பிரமாண பெருக்கை ஸ்கந்தோப நிஷத்தும் காணலாம்.
மஹோபநிஷத்.
“பீதாபாஸ் யாத்தனுபமா தஸ்ய ஸிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித ஸ பிரம்மா ஸ ஸிவாஸ ஸிந்த்ரோக்ஷர பரம ஸ்வராட்” என்று ஒவ்வொரு ஜீவ கோடிகளின் ஹிருதய நடு நிலைமையில் இருக்கும் ஜடாக்கினியின் மத்தியில், கறு மேகத்தினை பிளவுபட ஒடி ஒளியும் மின்னல் கொடி போலும், நெல் நுனி போல் மெல்லியதாயும், ஸ்வயம் பிரகாசமாய், சமனற்றதாய், விராட் புருஷனான பரமாத்மா வியாபித்துளன் -அவ் விராட் புருஷனான ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவிற்குள்ளும், சிவனுக்குள்ளும், இந்தரனுக்குள்ளும் இவ்வாறே அந்தாயாமி யாயிருக்கிறானென்றும் அப் பரம புருஷன் மூவித பேதமற்றவனென்றும், தன்னை யொழிந்த சர்வராலும் தொழப்படு மவனென்றும், கருமத்திற்கு வசப்
படாதவனென்றும், ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல வேத வேதாந்தாதிகளும் ஸ்ரீமந்நாராயணனே சர்வாந்தர்யாமி என்றும், பர ப்ரஹ்ம மென்றும் நிச்சயிக்கப்பட்டது. இத்யாதிப் ப்ரபல
ப்ரபாவங்களைக் கொண்டே (ஹரி: ஓம்) என்று மும்முறை ஆரணங்கள் முறையிடுகின்றன.
ஸத்வ, ரஜ தமோ குணங்களுக்கு அதீதமான நிற்குணமாவது.
திருபாத் விபூதி மஹாராயணோபநிஷத்.
”ஸுத்த சத்வம் மயோலீலா க்ருஹீத நிரதிசய ஆனந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத் ஸயே வநித்ய பரிபூரண பரத விபூதி வைகுண்ட நாராயண-என்று சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்திலுள்ளவனானாலும் அச்சத்வ குண ரஹிதனாயும், மாய்கையை ஸ்வாதீனமாயுடை யவனானாலும் அம்மாய்கை ரஹிதனாயும், விளங்கும் ஸ்ரீமந் நாராயணனை தியாநிக்கின்றேனென்று இச் சுருதி உத்கோஷிக்கின்றது.
அதர்வண வேத திருபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்.
” நாராயணாம் ஸை:ஜோகுண ப்ரதாநை ரேகைக-ஸ்ருஷ்டி கர்த்ருபி ரதிஷ்டிதாநி விஷ்ணு மஹே ச்வராக்யைர் நாராயணாம் சைஸ் ஸத்வ தமோ குண ப்ரதாநை
ரேகைக ஸ்திதி ஸம்ஹார கர்த்ரு பியாதிஷ்டிதாநி” என்று யாதொரு பொருளே ஆதி மத்யந்த மென்னும் பாகுபாடாக விருத்தல் போலே சர்வேஸ்வரனான நாராயணனே ஸத்வ
ரஜ தமஸ்சுக்களாகிய முக் குணங்களுக்கும் ப்ரதாநியாயும் அதீதனாயும், விஷ்ணு, ப்ரம்ம,ருத்த, யென்பவர்களின் முத் தொழிலுக்கும் ப்ரதானியாயும், அதீதனாயும் இம் மூவித தெய்வங்களைக் கடந்தவனாயும், விளங்கா நின்றவன் ஸ்ரீமந் நாராணனென்று வேதங்களிலும், ஸ்ருதியாதி உபநிஷத்துக்களிலும், நிவாச தீக்ஷித முதலான பாஷ்யங்களிலும், ப்ரஹ்ம ஸூத்ரத்தாலும் நிரூபிக்கப்பட்டது.
வேத ப்ரதிபாத்யனாவது.—வ்யாகாண ஸூத்திரம்.
“சர்வ வேதாய யத் பதம் மாமநந்தி சர்வ வேதாய
த்ரைகம்பவந்தி நதஸ்ம வசஸாம் பரதிஷ்டாவச
சாம் வாத்ஸ்ய உத்தமம் நாராயண பரோ வேத?””-என்று சர்வ வேத வேதாந்தாதிகளும் யாதொரு பரதத்வமான பதத்தை நாடுகின்றனவோ, ஸ்ருதியாதி சகல ப்ரமாணங்ளும் யாதொரு மங்கள வஸ்துவை தியாநிக்கின்றனவோ, இதிஹாசாதி சகல சாஸ்த்திரங்களிலும் யாதொரு பரம பாவன பரம் பொருளைத் துதித்துக் கொண்டாடப்படுகின்றனவோ அவ் வுத்தம பர தத்வ பரம்பொருளே ஸ்ரீமந் நாயணனென்றும்,
ஸாஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மத்திய மகீர் தனும் மகியானானுத்ரதே லோகாந் காருண்ய ஸாஸ்த்ர பாணினாம்”)-என்று யாதொரு வேத முதல்வனும் சர்வ நியந்தாவும் சகல ஜீவ கோடிகளாலும், உபாயோபேயமாக ஆஸ்ரயிக்கப்படுவதுமான பரம்பொருளை ஸ்ரீமந்நாராயணனென்றும்
“நாராயண பரோ வேதோ தேவா -நாராயண நாங்கஜா” என்றும்,
” ஆலோடீயா ஸர்வ ஸாஸ்ராணி விசாரியே ஸுப் புன புன்:
யிதமேஹ ஸுநிஷ்பன்னம் த்தேயோ நாராயண சத :”என்று சர்வ சாஸ்த்ர ஸித்தாந்த்ங்களிலும், மநுவாதி நூல்களிலும் வஸிஸ்டாதி ஸூத்ரங்களிலும், பலவாராக பரிசோதித்து நாராண நாமமுள்ளான் யாவனோ அவன்றான் சுத்த சாத்விக ப்ரஹ்மமென்றும் ஆணை யிட்டுரைத்து விட்டன வேத வேதாந்தங்க ளென்றுணரக் கடவீர்
ஜீவோத்பதியாவது,
மஹா நாராயணாதி உபநிஷத்துக்களிலும், ஈசம், கேனம்,கடகம், மஹோபநிஷத் முதலான உபநிஷத்துக்களிலும்
“நாராயணாத் ப்ராணோ ஜாயதே,-என்றும்,நாராயணாத்
ப்ரவிர்த்யந்தே, என்றும், நாராயணாத் ப்ரலீயந்தே என்றும்,”
ஜகஜ் ஜன்மாதி சர்வ ஜீவன்களையும் நிக்ரஹிக்கவும், ரஷிக்கவும் பின்னர் ஹரிக்கவுமான அசாதாரண க்ருத்யங்களை செய்ய வல்லோனாகையால் ஸ்ரீமந் நாராயணனே ஜீவோத்பதி என சகல ப்ரமாணங்களிலும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன –பகவத் ஸாஸ்த்ரமாகிய ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் ஜீவோத்பதி ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் லிளக்கப்படுவதால் அதை அனுசரித்தே ஸ்ருதிகளும்
மஹோபநிஷத்
“விஸ்வமேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுப ஜீவதி-பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ அச்சுதம் நாராயண மஹாங்கேயம்)-என்று சகல பிரம்மாண்டங்களும் அதிலுள்ள ஜீவ கோடிகளும் உஜ்ஜீவிப்பதற் குடலாய் ஆஸ்ரயிக்கப்படுமவன் எவனோ சகல
சேதனாசேதனங்களும் எவனால் நிலை பெற்று நிற்கின்றனவோ சகல ப்ரம்மாண்டங்களுக்கும் அதிலுள்ள தேவ மநுஷ்யாதி சகல பதார்த்தங்களுக்கும் (பதி) நாயகனாய் நின்றவன் எவனோ பரமேஸ்வராயும், அழிவற்றவனாயும், மங்கள ஸ்வரூபனாயும், அச்சுதனாயும் விளங்கா நின்றவன் எவனோ அவனே ஸ்ரீமந் நாரயணனென்று வேத வேதாந்தாதிகளும், இதிஹாசாதி சாஸ்திரங்களும்,வெளிப்படையாய் ஆணை யிட்டுரைத்து விட்டன-இத்யாதி ப்ரமாணங்களால் பரமாத்மாவாயும், ஜீவோத்பதியுமான ஸ்ரீமந் நாராயணன் சேஷியான தான் நவவித ஸம்மந்தத்தால் ஜீவாத்மாவை தனக்கு சேஷப்படுத்தி ரக்ஷிக்க முன் வருகிறனாகையாலும் ஜீவோபதி யென தட்டில்லையிறே.
ஸ்ரீ பாஷ்யம்.
இச்சயாயது பாதேயம் யஸ்யாதி ஸய ஸி த்தயே
உபயா நுபயைகைக ஜூஷாதெள ஸேஷ ஸேஷிணௌ” என்றும்.
அயமே வாத்ம ஸரீர பாவ : பருதக் ஸித்தய நாஹாதாராதேயபாவ :
‘நியந்த்ரு நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்ச” என்றும்
“பரகத அதிஸயாதா நேச்ச யோபாதேயத்வமே
வயஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ: பரஸ் ஸேஷி” என்றும்.
“யஸ் சேதநஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச ஸக்யம் தச் சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய ஸரீரம்” என்னும் ஸ்ருதி வாக்யங்களுக்கு, வேதார்த்த சங்க்ரஹத்திலும், ஸ்ரீபாஷ்யத்திலும், நியந்த்ரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று சம்மந்தத்தையும் தெளிவாய் விளக்கப் பட்டிருக்கிறது.
“யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே
நகத்யதே ஈஸ்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டமவி நியுஜ்யமத”என்று ஸர்வ ஸேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கு சகல ஜீவ கோடிகளும் எப்போதும் எக்காலத்தும் இஷ்ட விநியோஹார்த்தமாக ஸேஷப்பட வேண்டி யிருக்கையாலும்,
” தேவகீ ஸூத கோவிந்த வாஸு தேவ ஜகத் பதி” என்றும்.
“நாராயணப் பதிம் ஸர்வ லோகாந்” என்றும்,
” நாராயணப் பதிம் ஸர்வ ஜீவாநாம் ” என்றும்.
ஸர்வ லோகங்களுக்கும், சகல ஜீவன்களுக்கும் நாயகனாயும், பர ப்ரஹ்மமாயும், தேவகீ புத்ரனாயும், கோகுல திலகமாயும், வாசு தேவனான ஸ்ரீமந்நாராயணனை தியானிக்கின்றேனென்று மஹா நாராயணோபநிஷத் முதலான ஸ்ருதிகள் உத்கோஷிக்கை யாலும்,
“ மநூநாம் ஸர்க்க மசுரோந் முக பாஹு ரூபாதது : சதுர்னாம்
பராஹ்மணாதீநாம் ஸர்க்க மகத்வாரம் ஜகத் பதி:“என்று ஸ்ரீபாஞ்சராத்ர, விஷ்வக்ஸேந , பராசா, நாரத, அனுருத்த,பாத்மாதி முதலிய ஸம்ஹிதைகளிலும் ஜீவோத்பதி
ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் கூறுகையாலும், ப்ரம்ம ருத்ரேந்தராதி பிபீலிக்காநந்தமான சேதனாசேதன வர்க்கங்களை யெல்லாம் வளைத்துக் கொண்டு அவ்வவ் பகுதியாதிகளைத் தமது ஜாயமான கடாக்ஷத்தால் ரக்ஷித்துப் பின்னர் பஞ்ச பிரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக தம்மில் அயனப்படுத்துவோனாதலால் (ஜீவோத்பதி) ஜகஜ் ஜீவ நாயகனெனத் தட்டில்லையிறே.
சச்சிதாநத்த மயமான பரமபத நிர்வாஹனாவது.
சுக்ல யஜுஸ் நிராலம்ப உபநிஷத்.
” ப்ராணேந்தர்யா அந்த கணர்ண குணாதேஹ பர தரம் சத்சிதாநந்தமயம் ஸர்வ சாஷிஹம்
நித்ய முக்தர் ப்ரஹ்மமஸ்தாநம் பரம பதம்”-என்று வாக்கு மனசுக்களாகிய ப்ராணேந்தர்ய வியாபாரங்களுக்கு எட்டாததும், ப்ரம்ம ருத்ரேந்தராதி தேவர்களளால் அறியத், தகாததும், த்ரிகாலத்தும் பரத்வ நிலை பெற்றதும், சத், சித்,ஆநக்த மயமானதும், சர்வ சாக்ஷியமானதும், விஷ்வக் சேநாதி நித்தியர்களும், ஸ்ரீமந் நாரணனையே உபாயோபேயமாய் ஆஸ்ரயித்துய்யும் சடகோபாதி ஜீவந் முக்தர்களும், வர்த்திக்கும் பர ப்ரஹ்ம ஸ்தானம் பரமபதம் என்றும்,
த்ருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
“ஸுத்த சத்வம் மயோ லீலா க்ருஹித நிரதிசயானந்த லக்ஷணோ மாயோபாதிகோ வைகுண்ட நாராயண-என்று சுத்த ஸத்வமாயும், பஞ்ச பிரளயானந்தரம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனின் வாஸஸ்தானமாயும், நிரதிசையானந்தமயமானதும், மாயையாதி சகல விகார ரஹிதமான தாயும், நித்யமானதாயும் விளங்கியது பரமபதம் -என்றும்
அதர்வசிகை
“யந்த தேவாந்த முநயோந ஸாஹந்ந ஸ ஸங்ரஹ
ஜாநந்தி பரமே ஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்”என்று தெய்வ சபைபில் தானே பிரம்மா, யதார்த்த பிரசங்கிதமாக தேவர்களாலும், ஜனகாதி முனீஸ்வரர்களாலும், பிரம்மாவாகிய என்னாலும், சம்ஹார காத்தர்வாகிய சங்கரனாலும், பரமேஸ்வரனாய் விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனது நிரதிசையானந்த மயமான பரம பதத்தை அறிய முடியாது என்றும்,
யஜுஸ் மண்டல ப்ரம்ம உபநிஷத்
“ தந் மனோ விலயம்யாதி தத் விஷ்ணு: பரமம் பதம் ”என்று மஹா மேருவை ஆதாரமாய் கொண்ட கைலையாதி சத்யலோகம் முதலான லோகங்களும் பிரம்ம, சிவ , இந்தராதி சகல தேவர்களும், கற்ப க்ஷயத்தில் ஸ்ரீமந் நாராயணனால் ஹரிக்கப் பட்டு பின்னர் பரம பத நிர்வாஹநாய் விளங்குகிறானென்றும்
“பேதாபாவாத்யேத தேவ பரமதத்வம் ” என்று சச்சிதாநந்த மயமானதும்,நிர்விகாரமானதும், ஸ்வயம் பிரகாசமானதாயுமுள்ள, பரம பதமே பரமாத்மாவின் வாஸஸ்தானமான தென்றும், அப் பதமே மோக்ஷ ப்ரதானமென்றும் மிச் சுருதி ஆணை யிட்டுரைத்து விட்டது.
ஸ்ரீவிஷ்ணுபுராணம் 6-ம் அம்சம்.
“தத் ப்ராஹ்ம தத் பரந்தாம தத்யேயம் மோக்ஷகாங்ஷிபி
ஸ்ருதி வாக்யோதிதம் ஸூக்ஷ்மம் தத் விஷ்ணு: பரமம் பதம்”-என்று யாதொரு பர ப்ரஹ்மம் இச் சராசர ப்ரபஞ்சங்களனைதையும் உண்டுமிழ்ந்து அளந்தாண்டதுமான வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து நடத்த வல்லதோ அப் பரம் பொருளே பரந்தாமனென்று ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசங்களும் ப்ரதிபாதிக்கின்றதோ அப் பொருளின் நிர்வாஹ ஸ்தானமே மோக்ஷ ஸ்தான பரமபதம் என கண்டிதமாயுரைத்து விட்டபடியால் ஸ்ரீமந் நாராயணனே பரம பத நிர்வாஹனென குறை யில்லையிறே ஆகையாலே யிறே ஜகஜ் ஜன்மாதி காரண பூதனும், சர்வாந்தர்யாமியும்,
த்ரிகுண அதீ தமானவனும், சர்வவேத ப்ரதிபாத்யனும், ஜீவோத்பதியும், சச்சிதாநந்தமயமான பரம பத நிர்வாஹனுமான ஸ்ரீமந் நாராயணனே சகல நிர்வாஹனென்றும், ப்ரஹ்ம சப்த பரதிபாத்யனென்றும், பரமேஸ்வரனென்றும், ஸர்வ ஸேஷி என்றும், வேத வேதாந்தாதிகள் பன்முறை முறையிடுகின்றன.
நீலகண்ட சிவாச்சாரியரும், சிற் சில சாஸ்த்ர பயிர்ச்சி யுள்ளோராயினும், தாம் ஓர் பாஷ்யம் செய்ய வல்லோராயினும்,வேத யதார்த்தம் விளங்காததினாலோ, அர்த்த மறியாமையினாலோ, சைவ அபிமானத்தினாலோ வேத தாத்பர்யங்களுக்கு சிவ பரமாய் வியாக்யானம் செய்யப் புகுந்த காலத்தும் மஹோபநிஷதாதி ஸ்ருதிகள் இடங்கொடாமையால் கேவல நிமித்த காரணம் சிவனென்கிற சைவ வாதத்துக்கு நேர் விருத்தமாய் ஜகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ப்ரஹ்மமென்று தமது நீலகண்ட பாஷ்யத்தில் சொல்லி யிருக்கிராறாயினும் இவரது பாஷ்யத்தை ஸ்ருதியாதி ஸாஸ்த்ரங்களும், யதார்த்தவாதிகளும், பாஷ்யகாரரென சரஸ்வதியால் பட்டப் பெயர் தரித்து மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த சத்வ குண விசிஷ்டாத்வைத மதத்தை நிலைநாட்டிய ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், இன்னும் இதர பாஷ்யகாரரும் சம்மதியாராகையால் இவரது பாஷ்யம் கண்டிக்கத் தக்கதே.
ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனாவது.
அதர்வண முண்டகோபநிஷத்,
“ யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்யஸ்ய ஜ்ஞாநமயம் தப :
தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நம் சஜாயதே”?-என்று யாதொரு பரமேஸ்வரன் அநந்தங்கோடி பிரம்மாண்டங்களையும் தனது வக்ஷஸ்தலத்தில் லயிக்க வல்லவனாயும், த்ரிகுண பிரதானியாயும், சர்வஞ்யத்வாதி கல்யாண குண பரிபூரணனாயுமுள்ளான் யாவனோ அவனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், “யதேதத் பரமம் பரமஹ : வேத வேதேஷு பக்ஷயதே ஸ தேவ: புண்டரீ காக்ஷ: ஸ்வயம் நாராயண ப்ரபு : என்று த்விதீயமான பர ப்ரஹ்மமாயும், சர்வ வேத பாதிபாத்யனாயும்,பர தேவதையாயும், செந் தாமரை புஷ்பமொத்த நேத்ரங்களை யுடையவனும், ப்ரபுவுமான ஸ்ரீமந் நாராயணனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், சாம வேத மஹோபநிஷத். “நாராயண பர ப்ரஹ்மத்வம் நாராயண பர:”என்று நாராயண சப்த வாச்சியனான ஸ்ரீ மந் நாராயணனே ப்ரஹ்ம
சப்த ப்ரதிபாத்யனென ஸ்ருதிகளும் ஊர்ஜிதப் படுத்தி விட்டன.
திருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
” நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர : நாராயண பரோ ஜோதி ஆத்மா நாராயண பர :”என்று ஸ்ரீமந் நாராயணனே பர ப்ரஹ்மமென்றும், பரமாத்மா வென்றும், அந் நாராயணனே பரஞ்ஜோதி மய ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென நிலை நாட்டப்பட்டது.
ஷ உபநிஷத்
“ திசச்ச நாராயண; காலச்ச நாராயண :
கர்மாலகிலஞ்ச நாராயண : காரணாத்மகம் ஸர்வம் கார்யாத்மகம் ஸகலம் நாராயண : நாராயண பர ப்ரஹ்ம நாராயண நமோஸ்துதே” என்று சர்வ அண்டங்களும், அதிலுள்ள சராசர சமூஹங்ககளும், ஸர்வ திசைகளும், த்ரிகாலங்களும், நாராயணன், வேதாத்யயன கருமங்களும் தத்தத் பலன்களும், தக் கருமதேவதைகளும், தத் கருமத்தை செய்பவனும் நாராயணன் சகல காரணங்களும், சகல காரியங்களும் நாராயணனே அப் பர ப்ரஹ்ம் ஸ்வரூபனும், பரமாத்மாவுமான ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரிக்கின்றேனென்று ஸ்ருதி உத்கோஷிக்கின்றது.
” அதகஸ்மாதுச்சீதே யேகோ நாராயண பரப்ரஹ்ம்?” என்று ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனான நாராயணனுக்கு சகல ப்ரம்மாண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாகந்த முள்ள தேவ,
மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி பூத பௌதிக சராசர சமூகங்களும் த்ரணீகரிக்குமாறு வரம்பிடப் போகாத ஒத்தார் மிக்காரில்லை யெனக் கண்டிதமா யுறைத்து விட்டது.
ந நாராயண சமோ நாந்ய ஸர்வ லோகேஷ வித்யதே“. என்று போதாயனரும் தமது ஸூத்ரத்தில் அவ்வாறே அண்டங்களும், சர்வ தேவர்களிலும் ஸ்ரீமந் நாராயணனுக்கு
மேரு த்ரணாதியென வரம்பிடப் போகாத அளவிறந்த வேற்றத்தை யுடைய பர ப்ரஹ்மமென்று அறுதியிட்டனர்.-இத்யாதி ப்ரஹ்ம சப்த்த ப்ரதிபாத்யனும்,ஜீவோத்பதி
யும், ஜகஜன்மாதி கரரண பூதனும், சச்சிதாநந்த மய பரம்பத நிர்வாஹனுமாய் நின்றவன் ஸ்ரீமந் தாராயணனென்று வேத வேதாந்தாதிகள் ஏக கண்டமாய் ஊர்ஜிதப்படுத்தி விட்டன.
பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனேயாய் ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகலதேவ மநுஷ்யாதி வர்க்கங்களனைத்தும் ஜீவாத்மாக்களேயாயினும், சிவபிரான் பக்த சிரேஷ்டனெனல்
சுக்ல யஜுர் ப்ரஹதாரண்யோபநிஷத்
” யச்ரமாத் தப ஸோபிஜாதோ ஸித்யப்ரவித் “என்று ருதான் செய்ததவங்கள் செய்து சிவனாயினான் என்றும்
க்ருஷ்ணோபநிஷத் ” ருத்ரேபக்தேப்ரஹ்மணி ” என்று ருத்ரனான சிவன் ப்ரஹ்ம ஞ்ஞானியான மஹா பக்தனென இச்சருதி கூறுகையாலும்,
க்ருஷ்ண யஜுஸ் ஸ்வேதாஸ்வத உபநிஷத்-3-ம் அத்தியாயம் 4-வது மந்த்ரம்
“விஸ்வாதி கோருத்ரோடமஹருஷி : என்று சிவபிரான் இப்பிரபஞ்சத்தில் சிரேஷ்டமான தபசியாய் விளங்குகிறானென்றும்.
ருத்ரகீதை அகஸ்தியசம்ஹிதை, பிரம்ம புராணம் ” சாம்பேய புஷ்ப ஸஹஸ்ரை: ஆநர்ச்ச சங்கரோ ஹரிம் ” என்று சிவபிரானது பக்தியின் மிகுதியாலே ஆயிரம் சண்பசக புஷ்பங்களினால் பரமாத்மாவான ஹரியை அர்சித்து பக்திப் பெருக்கைப் பிரசித்தப்படுத்தினா ரென்றும்.
பாத்மோத்ரகாண்டம்
” கைலாஸ சிகரோம்யே விஷ்ணுமாராத் தயசங்கர : உபவிஷ்டத்ததோ போக்தும் பார்வதீம் சங்கரோப்ரவித் “” என்று கைலாய சிகரத்தை ஸ்தானமாய்க் கொண்டு இந்நிக்ருஷ்டமான சம்ஹாரத் தொழிலிநின்றும் விடுபட்டு பரப்ரஹ்ம சாயுஜ்யமான பரமபதத்திற்சென்று பரமாத்மா வைபவாதந்தத்தை அனுபவிக்க வேண்டியே நான் ஸ்ரீ மாஹாவிஷ்ணுவை இடைவிடாது தியாநிக்கிறேனென்று தனது பத்நியும், பர்வத ராஜனின் புத்ரியுமான பார்வதியுடனே சிவபிரான் பரமாத்மாவினிடம் தனக்குள்ள அந்தரங்க பக்தியை வெளி யிட்டன ரென்றும்.
இத்யாதி ச பாகவதத்தில் ஸ்ரீ வேதவ்யாஸ பகவான்
“ஹஸ்தேக்ஷ்மாலா ஹ்ருதய ராமதத்வம் ஜி
ஹ்வாக்ரபாகேவரராம மந்த்ரம் ஸமஸ்த்தகே கேசவ பாத தீர்த்தம் ஸ்வம் மஹாபாகவதம் ஸ்மராமி ”-என்று சிவனது ஹ்ருதயத்தில் ஸ்ரீ ராமபிரானே ஜகத்காரண வஸ்து என்ற தியானமும்,நாவில் அம் மஹாமந்தரமே உச்சரிப்பும், கரத்தில் அம்மந்தர ப்ரதானனென விளக்கப்படும் ஜப மாலிகையும்,அப்பரமாத்மாவின் ஸ்ரீபாத தீர்த்தத்தா லலங்கிருதமான
சிரசும், அப்புருஷோத்தமனுக்கே தான் அந்தரங்க பக்தனென வெளிப்படையாய் விளக்கிக் காட்டவல்ல ஜடையாதி சின்னங்களாகையால் சிவன் மஹா பக்தனே என்று நிச்சயிக்கப்பட்டது.ஸ்வாக்ருதி: பஸ்மவிகிதகாத்ரேசர்மம்பரம். பிரம்ம கபால மாலாத்ருதாக்ஷமாலாபி ருகாகநஸ்த ஜடாதராதி வசனாகிமேயம்-என்று சிவபிரானது பக்தியின் நிலைமை, திரேகமெல்லாம் பஸ்மத்தாலலங்கிருதமாயும், பிரம்ம ஹத்தியினாலே தொத்திய மண்டையோடுடைய அஸ்தமும்,ஜபமாலிகையாதி ஜடை முடி தரித்து சிரசும், புலித்தோலுடைய ஸ்மஷான நிரவாணி ஸ்வரூபமமையப்
பெற்றதுமான பக்தியின் பெருக்கை நிரூபிக்க வல்லவனென்றும்.இத்யாதி சகல ப்ரமாணங்களாலும் சிவன் பக்த சிரேஷ்டனென்றே நிரூபித்து விட்டன.
இதற்கிணங்கியே வேதபுருஷனாய் விளங்கிய திவ்யகவி அழகிய மணவாளர் அருளிச் செய்த. அஷ்ட பிரபந்தத்தில்
புகலிராமனடி கொள் பாதுகையகலு முக்கண்ணன் காமதே
திங்கள்சூழ்திருச்சித்ர கூடமேவிய யெங்கள் கோவிந்தராஜர்க்கு
தினமுமே கூத்தாடியானவன் திருச்சிற்றம்பல வணனே” என்றும்,
” கானேந்து தாமரை வாவி யுளானை கராவினயர்ந்
தூனேந்து மூல மென்றோதிய நாட் சென்றுதவுகையால்
தேனேந்து சோலை யரங்கனல்லாற் றெய்வமில்லை யென்றே
மானேந்து கையன் மழுவேந்தினானிந்த மாநிலத்தே” என்றும்,
சர்வ சாஸ்திர நிபுணரும் வேத யதார்த்தம் நன்குணர வல்லவருமான ஸ்ரீமாந் ராமாநுஜ நாவலரும் தமது வைராக்ய சூர்யோதய மென்னும் சாத்விக க்ரந்தத்தில், பதித பாவனனான அப்பராமாத்மாவினுடைய ஸதா ஸ்ரீபாத தீர்த்த மாலாலங்காரண சேகரராம்.
கரத்திலுறுஞ் சபவடத்தை யகற்றேனென்னைக் காணு மகக்கண்ண தனைக் களையே லென்றும் சிறத்தை யுறச் சீராம நமவோ மென்னுஞ் செந்நாவை யெந்நாளுந் தெரிந்து நீக்கேல் ”என்கிறபடியே ஸ்ரீராம ராம ராமா வென்று வாய் நிறைந்து குளிரடைய, உடலம் புளகிக்க, ஜபமாலிகையோடு அவனது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஸ்ரீராமாந்தத் நாண்டவஞ் செய்து ,வர்த்தித்து வருதலில் சாம்பசிவ நடேச மஹாப் பிரபுவைப் போலே யிருக்கவேண்டும் பக்தியின் மிகுதியென்றும், சிவனது பக்தியும் பரமாத்மாவின் பிரசன்னமும்-பாத்ம புராணம் 37-வது அத்தியாயம்.’அச்யுதாநந்த கோவிந்தம் மந்த்ர மானுஷ்டுபம் சுபம் ஒந் நமஸ் ஸம்பு டீருத்வா ஜபந் விஷ ரோஹர் : என்று திருப்பாற் கடைந்ததில் நின்றும் பெருகிய விஷத்தைப்பார்த்து திடுக்கிட்டு பயந்து தன்னால் நிவர்த்திக்க சக்தி யற்ற காலத்து (அச்சுதாநந்த கோவிந்த) வென்ற திருநாமத்தை பக்தி புரஸ்சரமாகத் த்யாநிக்க,அபயஸ்தமானதும் அநந்யாரஹமானதுமான தத் பக்திக்கு பரமாத்மா பிரசன்னராகி ருக்வேதம் 8-ம் அத்தியாயம் 23- ம் வர்க்கம் ” கேச்யாக்ம் கேசி விஷம் கேசீ பிபர்த்தி ரோதஸீ கெசி விஷஸ்ய பாத்ரேன யத் ருத்ரேணா பிபத்ஸஹ” என்று ருத்ரனாகிய அச் சிவ பிரானின் பீதி யடங்கத் தான் அவ் விஷத்தைப் பக்ஷித்து உம்மையும் ரக்ஷிக்கிறேன் பயப்படாதே யென்று கேசியான ஸ்ரீமந்நாராயணன் பீதியடைந்த பிள்ளைக்கு,எவ் வஸ்துவால் அப்பிள்ளைக்குப் பீதி ஏற்பட்டதோ அவ் வஸ்துவைக் கொண்டே அப்பிள்ளையின் பீதியைப் போக்குமாப் போலே சிவபிரானை பீதியடையச் செய்த அவ்விஷத்தை அச்சிவனின் கரத்தையே அவ் விஷத்திற்குப் பாத்திரமாகக் கொண்டு விஷத்தைத் தான் பானம் செய்து ரக்ஷித்தனரென்றும்,
ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அசம் 33 ம் அத்தியாயம்
‘ க்ருஷ்ண க்ருஷ்ண ஜகநாத ஜாநேவாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாத்ம நாதிநித நம் ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத்மிகா லீலேயம் ஸர்வ பூதஸ்ய தவ சேஷ்டோப லக்ஷண–என்று சிவபிரான் தன்னை சாணமடைந்த வாணாஸூரனை தலை
மயிர் பூ வாடாமல் ரக்ஷிக்கிறேனென்று ப்ரதிஞ்ஞை பண்ணித் தன்னை தொழுத கைகளைத் தன் முன்னே கள்ளிக் காட்டைச் சீத்தாற்போல் ஸ்ரீகண்ணபிரான் சீக்கக் கண்டு உயிரோடிருந்தால் உப்பு மாறியேனும் பிழைக்கலா மென்றெண்ணி நடுங்கி, குடும்பத்தோடு நெற்றிக் கண்ணை புதைத்துக் கொண்டு ஸர்வ சரண்யனான கிருஷ்ணனை அஞ்சவியஸ்தனாய், ஒ க்ருஷ்ண பரமாத்மா, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஆதியந்தமில்லாதவனே,லோக ரக்ஷணார்த்தம் அவதரித்தவா, இவ் வமயம் தேவரீர் மநுஷ்ய சரீரத்தை அவலம்பித்ததை அடியேனறியேன் இச் சமயம் அடியேனை ரக்ஷித்தாண்டருள வேணுமென்று பிரார்தித்து சரணமடைந்த அப்பக்திக்கு இரங்கி ரக்ஷித்தனரென்றும்,
பாத்மபுராணம் உத்ரபாகம் மஹாமஹாத்மியம் 20-ம் அத்யாயம்.
“ ப்ரக்ருதம் ச்ருணு ராஜேந்த்ர கபால பாணி
நாதத் லோகேக பாவீ பிக்ஷார்த் தீ பக்ஷமடதி சங்கா ?”-என்று சிவன் பிரம்மஹத்தியினால் தொத்திய மண்டையோட்டுடன் லஜ்ஜை யுற்றவாைய் ஷேத்திரங்கள் தோரும் பிக்ஷை
யாசிக்கப்பட்டும், தமது பிரம்ம ஹத்தியை நிவர்தித்துக்கொள்ள யதொரு உபாயமும் காணப் பெறாமல் வருந்தினவனாய் ராமேஸ்வரமே தமக்குப் பிரதான க்ஷேத்ரமெனக் கருதி பாத்மோத்திரத்தில்,ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வராநநே-தனது தாரக மந்தரமாயுமுள்ள, ஸ்ரீராம மஹா மந்தராதி ஜப மாலிகையுடன் ஸ்ரீராமாநந்தத் தாண்டவஞ்செய்து வர்த்தித்து வரும் தத் பக்தியை,யஜுர் ராமோபநிஷத் 22-ம் ஸ்காந்தம் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதேத ஸரதாத்மஜே”-என்று பரமாத்மாவும், வேத ப்ரதிபாத்ய பரமபுருஷன் சக்ரவர்த்தித் திருமகனாய் வவதரித்தவனுமான ஸ்ரீ புருஷோத்தமன்-ராமோபநிஷத் பக்த்ய மந்த்ரேணா நேநமாம் ஸிவ பிரஹ்மஹத்தி யாதி பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூஸ:” என்று சிவபிரானினது அகோசரமான பக்திக்குப் பிரசன்னராக சந்தோஷித்து இஸ் க்ஷேத்திரத்தில் ராம தாரக மந்திரங்களினாலே உண்மையான பக்தியுடன் என்னை தியானித்தீராகையால் யாம் கருதார்த்தாரானோம். உமது பிரம்மஹத்தியாதி பாபங்களில் நின்றும் விடுவிக்கிறோம். க்ரம க்ரமாந்திரத்தில் என்னுடைய சாயுஷ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறோம். ஓய் சிவனே பயப்படாதே யென்று அபயஸ்தம் கொடுத்து பிரம்மஹத்தியைப் போக்கிய க்ஷேத்திரமே ராமேஸ்வரமென்றும்
பிரயாஹைமஹாத்மியம் தத்ர நாராயண : ஸ்ரீமாந் மயாபிக்ஷாம் பராய ஸித விஷ்ணு ப்ரஸாதாத் ஸு ச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ர தாஸ்புடி தம் பஹுதாயாதம் ஸவப்ந லப்தம் தநம் யதா “என்று பர்வதராஜன் புத்ரியும், எனது பத்நியுமான பார்வதியே என்னுடைய பிரம்ம ஹத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னால் ஸ்ரீமந் நாராயணனிடம் பிக்ஷை யாசிக்கப்பட்டு அப்பரமாத்மாவின் பிரசாதத்தினால் யென் கையிலொட்டிய பிரம்ம கபாலமானது ஆயிரம் சுக்கலாய் தூளியாய் ஸ்வப்னத்தில் கண்ட தனமானது விழித்துப் பார்க்குமளவில் காணாதாப்போல் பறந்து போயிற்றென்று உமாதேவிக்கு யதார்த்தத்தை வெளியிட்டதுமான க்ஷேத்திரமே ராமேஸ்வரமாய் நிற்க,அதைச் சார்ந்த பாம்பன் கிராமத்தில் வசிக்கும் குமரகுரு தாஸனென்பானால் வரையப்பட்டுள்ள சைவ சமய சரபமென்னும் த்வேஷ்ப் பண்டாரச்சுவடியில்,தனது பூரண பாண்டித்வத்தைக் காட்டும் பொருட்டோ,தான் சங்கரனுக்கே அறத்தீர்ந்த பக்தனென பிறர் மெச்சும் பொருட்டோ, அல்லது சைவ எல்லப்பநாவலன், துறைமங்கலம் சிவப்பிரகாசன், கச்சியப்ப சிவாச்சாரி முதலானவர்களைப் போல் தாமும் பண்டார சமயாச்சாரியாக வேணுமென்னும் ஆவலுள்ளவனும், தன்னைத்தானே புகழ்ந்தவனுமாய்த் தான் சிவ நிஷ்டையிலிருந்ததாயும், அந்நிடை முடிந்தவுடன் பசி,தாகாதி, சோகங்களினால் இந்திர்ய மாருதலினாலோ,பித்த அபிவிரத்தியினால் திகைத்த நினைவினாலோ, தாமஸ குணனான சிவ நிஷ்டையினாலேற்பட்ட தாமஸத்தினாலோ, அல்லது அறிவின்மையினாலோ, அப் பண்டாரத் தூஷணச் சுவடியை வரைந்தன னென்றும், தாம் 108 உபநிஷத்துக்களையும், 18 ஸ்ம்ருதி,18 புராணங்களையும் நன்குணர்ந்தவனென்றும், இவ்வாறு மேல் குறித்த யாவும் கரதலமலமாக நன் குணர்ந்தோனாகையால்,அவைகளிலுள்ள அசாரங்களைத் தள்ளி சாரங்களே தாமாகக் கருதி உபநிஷத்துக்களில் 109 ஆவதாகவும் ஸ்ம்ருதிகளில் 19, ஆவதாகவும், புராணங்களில் 19, ஆவதாகவும், தனது சைவ சமய சரபமென்னும் தூஷணப் பண்டாரச்சுவடியை கல்பித்துத் தாமும், தம்மைச் சார்ந்தவர்களும், மற்ற யாவரும் மதிக்கத் தக்கதென அபிப்பிராயமேற்படுவதாலும், தமதுச் சுவடியில் ஆதியந்தமென்னும் புத்தக ரூப கோட்பாடில்லாமையாலும், வீண் நிந்தகமே புத்தக ரூபமாயிருப்பதாலும், புரட்டுகளும், அனர்த்தங்களும், அஹங்காரங்களுமான க்ரூர வசனங்களால் நிந்தித்துத் திரியும் த்ரோஹியாயிருப்பதாலும், வேத வேதாந்தாதி சகல ப்ரமாணங்களாலும், த்வேத யதார்த்தங்களாலும், அகில பாஷ்யங்களுக்கிணங்கியும், சகல ஜன சம்மதமாயும், இவனதுச் சுவடியின், புரட்டுகளை வெளிப்படையாய் கண்டிக்கவும்,அனர்த்தங்களை நிராகரித்து யதார்த்தங்களை ஸ்தாபிக்கவும்,அஹங்கார க்ரூர வசனங்களை வெட்டி யடியோடொழிக்கவும்,சகல வேத வேதாந்த்தப் பிரதிபாத்தியமான மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த ஸத்வ குண விசிஷ்டாத்வைத மதமே சத்யமென நிலை நாட்டவுமே யாம் முன் வந்தோம்.
யதார்த்தமாய் வேத சாஸ்திரங்களால் முறையிடப்படும் ஸ்ருஷ்டிக் கிரமம்.
ஸாம வேதம் சாந்தோக்ய உபநிஷத் 6-வது ப்ரபாடகம்-2-வது காண்டம் 3-வது வாக்யம்.
“ததைக்ஷத பஹுயாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜா” என்று பரமபத நிர்வானான ஸ்ரீமந்நாராயணன் பரமபதத்தை விட்டு மூலப்ரக்ருதியை யடைந்து அநந்தங்கோடி ப்ரம்மாண் டங்களையும் சங்கல்ப்பித்தார்,-ருக்வேதம் நாராயண உபநிஷத்-ஹரி ஓம் ஹத புருஷோஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ்ருஜே யேதி நாராயணாத் ப்ராணோஜாயதே, மநஸ் ஸர்வேந்திரியானிச கம் வாயுர் ஜ்யோதி ராப ப்ரதி விச்வஸ்ய தாரிணி நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நராயணாத் ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோஜாயதே,நாராயணாத் வாதசாதித்ய ருத்ராவஸவஸ் ஸர்வாணி சந்தாம்பி நாராயணாத் தேவாஸ் முத்பத்யந்தே, நாராயணாத் ப்ரவர்த்தந்தே நாராயணாத் பரலீயந்தே.”என்று ஆதியந்தகிதனான ஸ்ரீமந்நாராயணனது சங்கல்ப மாத்திரத்திலேயே சகல ஜீவாத்ம கோடிகளும் ஸ்ருஷ்டியாயி அவனிடத்திலிருந்தே மனஸ் ஸர்வேந்திர்யங்களும், ஆகாசம் தொடக்க மான ப்ருதிவி வரைக்குமுள்ள அநந்தங்கோடி ப்ரமமாண்டங்களும் பிரம்ம, ருத்ர, இந்த்ர, த்வாதசாதித்ய,ஏகாதச ருத்ர, அஷ்ட வசுக்களுமான தேவர்களும், சகலமும் உண்டாயினவென்று.., அவனாலேயே அவையாவும் ஜீவித்திருக்கின்றன வென்றும், பின்னர் அவனாலேயே யாவும் ஹரிக்கப்படுகின்றன வென்றும் ஸ்ருதிகள் முறை யிடுகையாலும்,
மஹா நாராயணோபநிஷத்.
ஹத புருஷோஹவை நாராயணஸ் ஸோகாமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி
ஆஸ்ருஜன் நாராயணாத் ப்ரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே,
நாராயணா திந்தரோ ஜாயதே,நாராயணா த்வாதஸாதித்யா ருத்ர வஸவ:ருஷய: ப்ரஜாதயச்ச பூர்வே தேவாஸ் ஸமுத்பத்யந்தே) என்று பரமபுருஷனான ஸ்ரீமந் நாராயணனிடத்திருந்தே ப்ரம்மன், சிவன் இந்த்ரன், த்வாதசாதித்யர் ஏகாதச ருத்ரர்கள் அஷ்ட வசுக்கள் ஸப்த ருஷிகள், நவ ப்ராஜாபதிகள் முதலானோர் உண்டாயின ரென்றும்
யஜுர்வேதம்
” யதோர்ண நாபீஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா ஒஷதயஷ்
ஸம் பவந்தி யோசௌச யதோ விஷ்ணுஸ் ஸத்வ குண ப்ரணீதோபவத் தஸ்ய நரபேர ஜோத்மா ஸ்வயம்பூ : ததாதஸ் யப்ருவோந்த ராலாத் தமோ ருத்ர : “என்று ஊர்நாபி என்கிற சிலந்திப் பூச்சியானது எவ்வளவு காலத்தில் நூலை ஸ்ருஷ்டித்து பின்பு கிரஹிக்கின்றதோ அவ்வாறே பரமாத்மா பருதிவ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து,
ஸ்ருஷ்டித் தன்றே கிரஹிக்கின்றானென்றும் அன்றே என்கையாலே, அவனது நித்யத்தைச் சொன்னபடியாலும் சுத்த சத்வ குணனென்றும், அவன் தன்னை யொழிந்த சர்வராலும் தொழப் படுகிறானென்றும் அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து ராஜஸ குணனான ப்ரம்மா பிறந்தானென்றும், அப்பிரம்மாவின் நெற்றிப் பிரதேசத்திலிருந்து தாமஸ குணனான சிவன் பிறந்தானென்றும், கூறுகையாலும்,
அதர்வண முண்டகோபநிஷத்
“யதோர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா வோஷதயஸ் ஸம்பவந்தி யதாஸ்த புருஷாத்கேஸ லோமாநி ததா அஷராத் ஸம்பவதீஹவிஸ்வம் “-என்று சிலந்திப் பூச்சியானது நூலை ஸ்ருஷ்டிக்கவும், பின்பு ஹரிக்கவுமான ஜாலத்தை செய்ய வல்லதோ, அவ்வாறே விராட் புருஷனான நாராயணன் அனந்தங்கோடி பிரம்மாண்டமும்,பிரம்ம, சிவ, இந்த்ராதி சகல சேதனாசேதனங்களனைத்தையும் ஸ்ருஷ்டிக்கவும், ரக்ஷிக்கவும், பின்னர் ஹரிப்பதுமான அசாதாரண க்ருத்தியங்களைச் செய்ய வல்லோனென்றும்,
யஜுர்வேதம்.–ஸப்ரஜாபதிரேக : புஷ்கர பன்னே ஸமபவத் லலாடாத் க்ரோதஜா ருத்ர: தரயக்ஷ: கண்ட பரசு: வரஜ்ஜநத் ஸம்வத்ஸரோ ஜாயத இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர: பர்ஜந்யோயம்: ப்ரம்ஹண புத்ரா யஜ்யேஷ்டாய ச்ரேட்டாய புத்ராய ருத்ராய–என்று பிரம்மா ஒருவனே பரமாத்மாவின் நாபிக் கமலத்திலிருந்து உண்டாயினனென்றும், மற்ற ருத்ர, இந்திராதி தேவர்கள் அனைத்தும் ப்ரம்மனால் படைக்கப்பட்டவர்களே யென்றும்,ஆயினும் சிவனே ப்ரம்மாவின் ஸ்ரேஷ்டப் புத்திரனென்று இச் சுருதி கூறுகையாலும்,
யஜுர்வேதத்தில் 24 மந்திரங்கொண்ட தகர வித்தை.-“தஸ்மாத் விராட ஜாயதா விராஜோ ஹதிபுருஷ:ஸஜாதோ ஹத்யரிச்சதா யத்ஸ்யா பூமி மதோபுர.“-என்று விராட் புருஷனான அநிருத்த நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து ஸ்வயம் பிரகாசமானதாயும், ஸ்வர்ண மயமானதாயுமுள்ள ப்ரம்மாண்ட முண்டாகி அதில் சதுர்முகப் பிரம்மா உண்டாயினர் பரம்மாண்டத்தை சரீரமா யுடைய அநிருத்த நாராயணனுடைய நாபிக் கமலத்திலுண்டான சதுர்முகப் பிரம்மா பெரிய தேஹத்தை யுடையவராய் ஸ்ருஷ்டியாதி க்ரமங்களில்
ப்ரவேசித்தாரென்றும்,
ஸாமவேதம் மஹோபநிஷத்-* ருத்ரச்ச ஸர்வாவா பூத ஜாதய: நாசமேவா
நுதா வந்திலி ஸலாநீவ பாடபம்.”என்று வேத ப்ரதிபாத்யனான நாராயணன், ப்ரம்ம, ருத், இந்ராதி தேவர்களையும், பூதங்களையும் ஸ்ருஷ்டித்தனரென்றும்,
மநு ஸ்ம்ருதி.-” ஸோபித்யாய சரீராத் ஸ்வத்ஸ்ஸ்ரு ஸுர் விவிதா ப்ரஜ:-என்று பகவத் சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியிலிருந்து வேறு பட்ட ஆத்மாக்களின் தத்தத் காமானுகுண சரீரங்களை சங்கல்ப்பித்தவராய் ஜலத்தைத்
தோற்றுவித்து அதில் அண்டத்தை நிர்மித்து தன் நாபிக் கமலத்தில் நின்றும் சதுர்முகனை ஸ்ருஷ்டித்து அப் பிரம்மனால் அவ்வாத்மாக்களை ஸ்ருஷ்டிக்க நியமித்தனரென்றும், மநுஸ் மருதியிலும் ஸ்பஷ்டமாய் விளக்கப்பட்டிருக்கையாலும், இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல ப்ரமாணங்களாலும் ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே பிரம்ம, சிவாதி தேவர்களும், அனந்தமான பிரம்மாண்டங்களும் உண்டாயினவென்று நிர்ணயித்துவிட்டன. –
பஞ்சப்ரளய கால சம்ஹார க்ரமம்.-ஸாம வேதம் மஹோபநிஷத்-” ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந : ந ஹிமே ப்ருதிவ்யாந நக்ஷத்ராணி “என்று பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான அகிலாண்டங்களும்,-ஒவ்வோரண்டங்களிலுமுள்ள பிரம்ம, சிவன் முதலான தேவர்களும் பஞ்ச ப்ரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக சம்ஹரிக்கப்பட்டு பின்பு நாராயணனொருவனே யிருக்கின்றானென்றும்,
ஆங்கீரஸ உபநிஷத்.
” ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரம்மா ந சங்கர: ஸமுநிர்பூத்வாஸ்
மசிந்தயத் தத ஏதேத்யா நாஜ்ஜாயந்தே விஸ்வோ ஹிரண்ய கர்ப்போக்நி, யம், வருண,ருத்ர, இந்தர;-என்று பிரம்ம, ருத்ர, ஈசான்ய பருதிவ்யாதிப் பதார்த்தங்களனைத்தும், கற்ப ஷயத்திலழிந்து, நாராயணனொருவனே முடிவிலிருக்கின்றானென்றும், பின்பு அழிந்த யாவும் அந் நாராயணனிடத் திலிருந்தே உண்டாகின்றன என்றும் இஸ் ஸ்ருதி கூறுகையாலும்,
ஷை உபநிஷத்.” யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரம் சோபேபவத ஓதநம்“-என்று நாராயணனுக்கு பிரளய காலத்தில், ப்ரம்மனும், குரோதசநான ருத்ரனும் இரண்டு கவள அன்ன ஸ்தானமாகிறார்களென்றும்
ஷை உபநிஷத்-“ ம்ருதயுர்ஸ்யோ ஸேசநம்”என்று பரமாத்மாவான நாராயணனுக்கு, கற்பக்ஷயத்தில் அநதங்கோடி ப்ரம்மாண்டங்களும், அதிலடங்கிய தேவ, மநுஷ்ய,திரியக் ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும் அன்னஸ்தானமும் பிரம்ம, ருத்ரர், ஊர்க்காய் ஸ்தானமுமா கின்றனவென்றும்
நாராயணோபநிஷத்-“நாராயணாத் ப்ரலீயந்தே”என்கையாலே நாராயணனிடத்திலேயே, சகல அண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள யாவும் லயிக்கின்றன
வென்றும்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1-ம் அம்சம் 2-ம் அத்தியாயத்தில் ஸ்ரீமந் நாராயணன் காலாக்கினி ருத்ரனைப் போலே பிரளய காலத்தில் மேக மண்டலத்தை பெருக்காற்றடித்தது போலச் சம்ஹாரம் செய்கிறானென்றும்.சிவ ரகசியத்தில் 3-ம் அம்சம் 1-வது காண்டம் 12-வது சர்க்கத்தில் ஸ்ரீமந் நாராயணன் ப்ரளய காலத்தில் ஜலத்தைப் பெருகும்படிச் செய்து காலாக்கினி ருத்ரனைப்போலே சர்வத்தையும் சம்ஹாரம் செய்கிறானென்றும்.
இத்யாதி வேத வேதாந்தங்களிலுள்ள ஸ்ருதி ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்களாலும், சகலாண்டங்களும், பிரம்ம ருத்ராதிதேவர்களும், ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே உண்டாயின வென்றும், பின்பு அவனாலேயே ஹரிக்கப்படுகின்றன வென்றும், நிச்சயிக்கப்பட்டிருக்கிறதே–அதர்வசிகோபநிஷத்.-” ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேஸ்வரச் சம்புராகாச மத்யே”என்று தியானிக்கப் படும் தியேயனும் ஸர்வேஸ்வரனும் சம்பு வும்,சர்வாந்தர்யாமியும் ஆகாச மத்தியில் வியாபித்துள்ளோனுமானவன் ஸ்ரீமந் நாராயணன் என்பதே இச் சுருதியின் கருத்து.-மஹா நாராயணோபநிஷத்.-* ஸஹஸ்ர ஸீரிஷம் தேவம் விஸ்வாக்ஷம் விஸ்வ சம்புவும் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரம ப்ரபும் விஸ்வதஹ பரமாம் நித்யம் விஸ்வம் நாராயணோ ஹரி:”,
மைத்திராயண்ணியுபநிஷத், 7-வது பிரபாடகம் “அவித்யா மஸ் ரஜத்யா சிவ மசிவ மித்யூத்தி-என்று அவித்தையாகிய, கருமகாண்டத்தில், சொல்லும், மோசடியான சாஸ்திரத்தை அஞ்ஞானிகள் நம்பி மங்களத்தை அமங்களமென்றும்,அமங்களத்தை, மங்களமென்றும் நம்பி நரகத்துக்கு ஆளாகிறார்களென்று இச்சுருதி கூறுகிறது. ஆதலால், இச்சுருதி “ சிவ ” யென்கிற சப்தத்திற்கு மங்களமென்றும், ” மசிவ,” அமங்களமென்றும்,அர்த்தம் கொள்கிறது-மஹா நாராயணோபநிஷத்
“விஸ்வ மேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுபஜீவதி பதிம் விஸ்வஸ்
யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவ அச்சுதம் நாராயண மஹாங்யேயம் விஸ்வாத்மானம் பராயணம் நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர:“-என்று இச்சுருதியில் பலவிடங்களிலும், மேஸ்வரம், சிவ முத லான சப்தங்களால் ஸ்ரீமந் நாராயணனுடைய குண முதலான பரமாத்ம லக்ஷணங்களை அலங்கார ரூபமாய் உத்கோஷியா நின்றது அன்றோ -அதாவது மேஸ்வரம் பரமேஸ்வரனாய், ஸாஸ்வதம்-அழிவற்றவனாய், சிவம் மங்களமானவனுமாய், அச்சுதம்–ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய், நாராயண மஹாங்யேயம்-நாராயண சப்த ப்ரதிபாத்யனாயும் விளங்கிய பர ப்ரஹ்மம் நாராயண னென்று பொருள் தரும்-சிவ, சம்பு, பரப்ரஹ்ம, பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா முதலிய சப்தங்களால் தியானிக்கப் படும் தேவதை சொல்லப்பட்டிருப்பதால் அச் சப்தங்களுக்கும் நாராயணனே பொருளென்று ஸ்தாபித்தனர்.
க்ருஷ்ண யஜுர் ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.-” ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் நதஸ்மஸ்ஸாப்தி கஸ்ஸத்துர்ஸ்யதே“-என்று ஜகத் காரணனான மஹேஸ்வரனுக்கு ஒத்தார்மிக்காரில்லை யென்றும்
“யத் வேதாதவ் யீஸ்வர ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ்ய: பரஸ்ய மஹேஸ்வர :என்று வேதங்களின் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகின்ற பிரணவமெதுவோ அதன் பிறப்பிடமாகிய அகாரத்தி லினமாயிருப்பவனெவனோ அவனே பானும் மஹேஸ்வரனுமான பரப்ரஹ்மமென்றும் கூறுகையாலே ப்ரணவ ப்ரதிபாத்தியனும் அகாரத்தி லீனமாயிருப்பவனுமான ஸ்ரீமந் நாராயணனே மஹேஸ்வர சப்த பிரதிபாத்திய னெனத் தட்டில்லை.
மஹா நாராயணோபநிஷத் “” அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபிதாம்“-என்று மேலே விளக்கப்பட்ட சுருதியில் கூறிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமென்றும்,-நாராயணோபஷத்” ஒமிதி சர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரண ரூப அகாரம் ?என்று சர்வ வேத பாதிபாத்தியமாயுள்ள ப்ரணவம் சர்வபூதங் களுக்கும் த்யாதாவாயும், அப் பிரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமாயும் விளங்குகின்றது என்றும்,
தியாநபிந்தூபநிஷத்
” அகாரே துல்யம் ப்ராப்தே ப்ரதமே பிரணவாம்சகே
அந்தரிக்ஷம் யஜூர் வாயுர்புவோ விஷ்ணுர் ஜநார்த்தந “ என்று ப்ரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரத்திலீனமாயிருப் பவன் யாவனோ அவனே ஜனார்த்தனனென்றும் த்ரயீ யென்கிற வேதங்கள் உத்கோஷிக்கையாலும்,
முண்டகோபநிஷத்-பிரணவோ தநு ?”-என்று பிரணவமானது நாராயணனது திருக்கரத்திலுள்ள ஸ்ரீ பாஞ்ச சன்னியமே யென்றும்,
” ஒங்காரோ பகவான் விஷ்ணு : த்ரயீன வசநாம்பதி
தஸ்யோ சாரமாத்ரேண பரப்ரஹ்மாதி கச்சதி “‘என்று, ஓங்காரத்திற்கு ப்ரதிபாத்தியன் விஷ்ணு ஒருவனே யென்றும் அவன் த்ரயீ யென்கிற வேதங்களுக்கு நாயகனென்றும் – ஜீவர்கள் ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்தி லவனையே யடைகிறார்களென்றும், அவ் ஒங்காரத்தின் பிறப்பிடமாகிய அகாரம் அவனுடைய பிரதான திருநாமமென்றும்,
‘அகாரோவிஷ்ணு: பிரதமநாமோச்சயதே” என்று அகாரமானது நாராயணனின் பிரதான திருநாமமென்றும்
நாராயணோபநிஷத்-“ஒம் பிரதிகாநந்தம் -பரம் புருஷம் ப்ரணவ ஸ்வரூபம் “ என்றும்,
ஆத்மபோதோபநிஷத்
“ஓம் பிரதிகானந்தம் பரஹ்ம புருஷம் பிரணவ ஸ்வரூபம்
அகார, உகார, மகார, இதிதானே கதாசம்பவத் ததே ததோமிதி
யமுத்வாமுச்சயதே யோகீ ஜன்ம சமசார பந்தனாத்-ஓம் நமோ நாராயணாய இதிமந்த்ரோபச ?”என்று சர்வாந்தர்யாமியாயும், ப்ரஹ்ம புருஷனாயும், ப்ரணவ ஸ்வரூபனாயும், யோகிகளின் சம்சார பந்தத்தைத் திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தாலே போக்குமவனாயும் விளங்கிய ஸ்ரீமந் நாரா யணனை இச்சுருதி தியானிக்கையாலும்,
கீதோபநிஷத்து
”அக்ஷராணா அகாரோக்ஷரம்“-என்று அக்ஷரங்களில் அகாரம் நானாகிறேனென்று கண்ணன் கீதையில் கூறுகையாலும்,
இத்யாதி சகல பிரமாணங்களிலும் சிவ, சம்பு, மஹேஸ்வராதி நாமங்களனைத்தும் நாராயணனது கல்யாண குணங்களைக் காண்பிக்கும் பொருப்டே” சுருதிகள் அச் சப்தங்களால் வர்ணித் துரைக்கின்றமையாலும், வேத வேதாந்தாதிகளிலுள்ள ஸர்வாக்ஷரங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களாக விருக்கு மன்றிக்கே இதரமானவர்களைச் சொன்னதே யில்லை— சொல்லிய போதிலும் விஸ்வருபனான நாராயணனுடைய சரீரங்களாக விருக்குந் தேவதைகளைச் சொன்ன வாசங்களுக்
கெல்லாம் வாஸ்ய பூதன்ஸ்ரீய பதியே யாவன்,
பைங்களோபநிஷத்
” ஸஸ்வாதீந மாயஸ் ஸர்வஜ்ஞஸ் ஸ்ருஷ்டி ஸ்திதி லயா நாமாதி கர்த்தா ஜகதங்குர ரூபோபவதி”-என்று அநந்த கோடி பிரம்மாண்டங்களின் ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயங்களுக்குக் காரண பூதனான ஸ்ரீமந் நாராயணன் தனது இச்சா-சத்தியாலுண்டான மாஹா மாயை யாகிய மூலப் பிரக்ருதியை ஸ்வா தீனமாயுடையவனாய், அம்மாயயைக் கொண்டே சகல ஜகத்தையும் படைத்தனன் என்றும்,
மஹா நாராயணோபநிஷத்
“ஸுத்த ஸத்வ மயோ லீலா க்ருஹீத நிரதிசயாநந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத்”-என்று கற்ப க்ஷயத்தில் அம் மஹா மாயையான மஹாலக்ஷிமிக்கு வாசஸ்தானமானதும், அம் மாயையின் ஸ்வாதீனனான நாராயணனது விகாரமற்றதும், சுத்த சத்வ மயமானதுமான பரமபதம் என்றும்,
ஸ்ரீஸுக்த்தம்
” அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தீநாத ப்ரபோதநீம்
ஸ்ரீயம் தேவீ மூபாஹ்வய ஸ்ரீமார்தேவீ ஜுஷதாம்”-என்று சராசர பிரபஞ்சங்களையும் தமது ஜாலத்தாலே நிக்ரஹிக்கவும், ஹரிக்கமுடைய ஜாலமே குதிரைகளாகவும், அப் பிரம்மாண்ட ஸ்ருஷ்டி சம்ஹாரக் கர்த்தர்களை ரதமாகவும் கொண்டு ஜகத் காரணங்களை நடத்துபவளாயும், யாவற்றிற்கும் நாயகியாகவும், ஜகத் நாயகனான ஸ்ரீமந் நாராயணனின் திரு மார்பையே வாஸஸ்தானமாய், அந்த பரமேஸ்வரனோடே நித்ய ஸம்யுக்தை
யாய், “ பூத நாயகன் புவிமகணாயகன் பொருவில், வேத நாயகன் மார்பகத்தினது வீற்றிருந்த ஆதி நாயகி ” என்றும்
” உலகம் யாவையு மீன்றளித் தழித்திட்டு மொருவன் இலக மார்பகத்திருந் துயிர்யாவையுமீன்ற, திலகவாணுதல்”-என்றும்–“ ஏக நாயகன் மார்பகத்தினது வீற்றிருக்கும் ஆதி நாயகி “-என்றும் மலரில் மணமும், கல்லில் ஒளியும் போலே ஸர்வ லோக நாதனுடைய வக்ஷஸ்தலத்தில் நிரந்தரம் அநபாயினியாய் வாஸம் பண்ணிப் போருமவளென்றும், அவ்வாறிருக்கக் கருத்தேதென்னில், எம்பெருமான் தண்டதரனாதலாலே இவ்வாத்மாக்களோ, எந்நாளும் அபராதமே வடிவமாய் அவ் வெம்பெருமான் பக்கல் நன்றியற்ற பாவிகளா யிருக்குமிவ் வாத்மகோடிகளினது குற்றங்களை நற்றமாகக் கொண்டருள் புரிய வேண்டியும், சதுர்முக, பசுபதி, மகபதி முதலானோர் கேட்டுக் கொண்ட படியும், அவனது திருமார்பை விட்டகலாதவளாயுமிறே சர்வ
லோக சுந்தரியான எமதரும் கருணைத் தாயாரிருப்பது.
ஸ்ரீ பாஞ்சாராத்ரத்தில் “‘ க்யாநாதயோ குணாரூபம் லக்ஷ்மிர் நித்யாநபாயி பூமி நீளா தயோ தேவ்யா சேநேசாத்யாச சூர்ய: ததாமபரம் காலஹ புருஷஸ் ப்ரகுருதிஸ்தா மஹதாதிதராந்தா நிசப்த சாவரணான்யபி பிரம்ம
மந்தம் ததந்தஸ்தா லோகஸ்வஸ சராஸராஹ யேவமந்தாய நந்தாநி தத் சர்வம் நாராயணமுச்சதே-என்று ஸ்ரீமந் நாராயணனுடைய நித்யமான ஜ்ஞாந சக்தியாதி திவ்யாத்ம குணங்களும், குண ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹமும், அவ்விக்ரஹ குணமான ஸௌந்தர்யாதிகளும், அச் சௌந்தர்யாதிகளோபாதி சாத்தின கிரீட மகுடாதி திவ்யாபாணங்களும், அவ்வாபரணங்களோடே விகல்ப்பிக்கலாம்படியான சங்கச் சக்ராதி திவ்யாயுதங்களும், இவ்வளவிருந்த வேற்றத்தை யுடைய பர வாசுதேவனை, காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்தது அநு பவிக்கிற மாமாபையாகிய மஹா லஷ்மியும்,மஹருஷி வர்க்கங்களும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்தக் கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான நித்ய ஸூரி ஸங்கமும்,அவர்களோபாதி அடிமை செய்கிற முக்தரும், அவ்வடிமைக்கு பிரவர்த்தகமாய் பஞ்சோப நிஷண் மயமான பரமபதமும், குண த்ரயாத்மகமான மூல ப்ரக்ருதி மண்டலமும், புருஷ ஸமஷ்டியும் அஹோராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும் ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும், தத் கார்யமான அண்டங்களும், அண்டாந்தர்வர்த்திகளான தேவ, மநுஷ்ய, திர்யக் ஸ்தாவரங்களுமாக ஸ்ரீமந் நாராயணன் மஹா மாய்கையை ஸ்வாதீனமாகக் கொண்டு அண்டாதி ஜகத் காரணத்தை யாதொரு குறைவுமின்றியே நடத்துகிறானென்றும், இத்யாதிபடியே மாமாயை என்றும், பராசக்தி என்றும், இச்சா சக்தி என்றும்,-க்ரியாசக்தி என்றும், தேவீ என்றும், மஹா லஷ்மி என்றும், வேத வேதாந்தாதிகளால் முறையிடா நின்ற நமது தீன தயாளச் செல்வியார் ஸர்வாந்தர் யாமியான ஸர்வேஸ்வரனாடே தானும் அபின்னா பூதையாய் யவனை விடாது நிற்கின்றபடியால் அகாரத்திற் சொல்லுகின்ற ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வசேஷித்வ,ஸமஸ்த கல்யாண குணாத்மகவாதிகளுக் கெல்லாம் ஆதார பூதையாய், ஸ்ரீ ஸூக்த ப்ரதி பாத்யையான பெரிய பிராட்டியாருடைய நித்ய ஸம்பந்த முள்ளதன்றோ ? அந்த ப்ரஹ்மமே என்று வேதங்களும், வேதோபப்ருஹ்மணங்களும் வாயோலை யிட்டு வைத்த காரணத்தாலிறே, ஸ்ரீய பதியான முகுந்தனுக்கன்றி ப்ரஹ்ம சப்த வாஸ்யனாந் தன்மை மற்றையாருக்கு மில்லை யாயிற்று, இவ்வளவேற்றமுடைய மஹா லஷ்மியாராற்றன் எந்தப் பதவிகளினு மிருக்கின்ற தேவதைகளுக்கும்,அவர்கள் தொண்டர்களுக்கும் மங்களமுண்டாக வேண்டியது-இவர் தாம் அதைக் கொடுக்க வேண்டியது எந்த மதாந்தர காமரானவர்களும் நமது லஷ்மி கடாக்ஷம் வேண்டுமென்றே கோருவார்களேயன்றி, இவருக்கெதிர்த்தட்டான ஜேஷ்டையினுடைய கடாக்ஷத்தைக் கோர மாட்டார்கள் இந்த ஸாது ஸேவ்யை யாரது கடைக் கண்ணினின்றுங் கொட்டுண்டு கிடக்கப்பட்டதிறே அணிமாதி அஷ்டசித்திகளும், அஷ்டைஸ்வர்யங்களும், ஸர்வாங்க ஸுந்தர ஸுகாநந்த ரூபியான இவர் கடாக்ஷமற்ற காலத்தில் விதி சிவ சதமகாதி சராசரங்கள் பட்ட கஷ்டங்கள் ஸகல வித்யா ஸமூஹங்களெல்லாவற்றினும் கண்டு கொள்ளலாம். இத் தாயார் கடாக்ஷித்தால் நாம் எப்போதும் ஸூமங்களைகளாய் நமது மகிழ்நரோடு கூடி அமங்களை களென்னாது ஸகல பாக்ய ஸுகத்தோடும் வாழலாமே யென்றன்றோ ? ஸதா காலமும் பாரதி, பார்வதி,சகி, அருந்ததி முதலான தேவ, மநுஷ்ய, பந்நகாதி ஸமஸ்தமான ஸ்திரீகளும், மஹா விஸ்வாஸத்தோடு சுக்ரவார முதலான தினங்களில் அதி நியமனமான விரதமிருந்து நோன்பெடுப்பது, ஸ்ரீவர லக்ஷ்மி வரத சரித்ரத்தைக் கேட்டரிவர்களாயின் பார்வதி நோற்ற நோன்பு விசதமாகும் இவ்வாறு பராசத்தியும்,ஸ்ரீமந் நாராயணனின் வல்லபையுமான மஹா லக்ஷிமியின் ஸர்வ சக்த்யாதி சகல கல்யாண குண சமூஹங்களையும் அநந்த ப்ரமாணங்களாலும் வெளிப்படையாய் விளக்கப்பட்டிருக்குமே
ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அம்சம்
க்ருஷ்ண க்ருஷ்ண ஜகந்நாத ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் காதி நித ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத் மிகாலியெம் “-என்று வாணாசுரவதத்தில், சிவன், க்ருஷ்ணனைப் பார்த்து, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஜெகத்நாயாகா, ஆதியந்த மில்லாதவா, லோகோஜ் ஜீவநார்த்தம் அவதரித்தவர், என்று பலவாராகத் துதித்துச் சரணமடைந்ததாலும்,
மஹா நாராயணோபநிஷத்
“தேவகீ ஸூத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே-என்று தேவகி புத்ரனாயும், கோகுல நிர்வாஹனாயும், அவதரித்த வாசுதேவன் ஜகத்பதி என்று கூறுகையாலும்,
அதர்வண சிரசில்
” ப்ரஹ்மண்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மண்ய மது சூதந –என்று தேவகி புத்ரனாயவதரித்த மதுசூதனன் பரப்ரஹ்மமென்றும்,
ருகவேதம் ஆத்மபோதோபநிஷத்
“வைகுண்ட புவனங்க மிஷ்யதி ததிதமபுண்டரீகம் விஜ்ஞானகம் தஸ்மாத் கடிதாப: மாத்ரம் ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்ய மதுசூதந :” என்று யோகிகளினது ஜனனத்தை அரத்திக்கும் ஸ்ரீவைகுண்ட நாதனும், பர ப்ரஹ்மமுமான மதுசூதனன் தேவகி புத்ரனா யவதரித்தான் என்றும்,
யஜுர்வேதம் கலிசந்தாரணோபநிஷத்
*ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண ஹரே”-என்று இச் சுருதி க்ருஷ்ண பரமாத்மாவை தியானிக்கையாலும்,
பவிஷ்யபுராணத்தில்
‘ த்ரவிடாநாய நிரதம் யோநிம் ததி ஸ்துமம் திம்பிரம்ம: பிரளய பரியந்தம் கும்பிபாகேச பச்யதே” என்று ஸ்ரீமந் நாராயணனை உபாயோபேயமாய் ஆஸ்ரயித்து மோக்ஷ சாம்ராஜ்யமாகிய பரம பதத்தை யடையப் ப்ராப்தமாயுள்ள சகல ஜீவன்களுமெளிதில் உணரும் பொருட்டுத் தமது பரம க்ருபையால் (வியாஸ ரூபாய விஷ்ணுவே ) என்றும் (விஸ்வத் சேநோ ஜநார்தந🙂 என்றும் (சடகோபாய விஸ்வத்சே :)என்றுமித்யாதி வாக்கியங்களின் படியே வேத யதார்த்தங்களை ஸ்தாபிக்க வியாசரும், அவ் வேதார்த்தங்களை திரவிட வேதமாய் ஸ்தாபிக்கச் சடகோபருமாக, பகவான் அம்சாரூடராய் கல்பங்கள் தோரும் அவதரிக்கின்றபடியால் அவர்களிடத்தும்,அவரருளிச் செய்த திரவிடோபநிஷத்தினிடத்தும் திரி கரணங்களாலும், அத்யந்த பிரீதி யுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும், அவரையும் அவரருளிச் செயல்களையும் நிந்திப்பவர் பிரம்ம பிரளய பர்யந்தம் றௌரவாதி நரகத் துன்புறுவது திண்ணமென நிச்சயிக்கப்பட்டது.ஸ்ரீ பாஞ்சராத்ரம்-அதித்யாத்ரமிடாம் நாயம் ஸ்வசாகாத்யாய நாத் பரம் ஸ்ரமந்ந குரத்தேந்ய த்ரசோபியாதி பராங்கதிம்”-என்று வேதத்தில் அவித்தை யாகிய கரும காண்டத்தை நீக்கி வித்தை யாகிய ஞான காண்டத்தின் ரசமே திரவிடோபநிஷத்தாக கல்பங்கள் தோறும் ஸ்ரீமத் சடகோபரால் ஸ்தாபிக்கப்பட்டு அத் திரவிடோப நிஷத்தைக் கொண்டே சகல திவ்ய தேசங்களிலும் க்ரஹங்களிலும் ஈஸ்வரார்த்யயநம் – செய்ய வேண்டியதென்றும் ஸ்தாபிக்கப்பட்டது.
அனுருத்தசம்ஹிதா
“ ஸ்வாசாக : தரமிடாம் நாமவ் விசித்வேதேத் திரி புருஷம் யஸ்ய தஸ்மி நாவாஷாஸ் யாத்திரௌ ப்ராந்ஹம் நனாமிதி ஸ்ருதிம்”.-என்று யாதொரு பிரம்ம வித்துக்கள் மோக்ஷத்தை யடைந்தாலும் இந்த திராவிட ஸ்ருதியைக் கொண்டே ப்ரஹ்மமேத ஸமஸ்காரம் செய்ய வேண்டிய தென்றும் திரவிட ஸ்ருதி, வேதங்களால் ஸ்தாபிக்கக் கூடரத பரம புருஷார்த்தத்தை ஸ்தாபித்துள்ளபடியால் வேத அத்யயநத்திற்கு முன் செல்ல வேண்டியதென்றும் மற்றை யாவையையும் கண்டித்து கூறுகையாலும் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது” பக்தாம் ருதம் விஸ்வஜநாநுமோதம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம்”என்று 1180 ஸாகைகளை யுடைய வேதங்களின் சகல ரகஸ்யங்களையும் விவரிக்க வல்லதாயும் அஹோபாஹ்யமாய் கம்பீரார்த்தமாய் அறுபதினாயிரப்படியெனவும், முப்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஆறாயிரப்படி, மூவாயிரப்படியென பிரம்மவித்துக்களால் வியாக்யான முடையதாயும், ஈஸ்வர ஸ்வரூப, ரூப குண சேஷ்டிதங்களையே நன்குணர்த்த வல்லதுமான திரவிடவேதமென்கிற மஹா சமுத்திரத்தை ஸ்ரீமத் சடகோபரால் அருளிச் செய்யபட்டவை என்றும்,திருக்குருகைப்பிரான்” ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராத வுள்ளம் பெற” என்றும்,மணவாளமாமுனிகள்” ஏரார் வைகாசி விசாகத்தினேற்றத்தை பாரோரறியப் பகர்கின்றேன் சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்” என்றும்,மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள்–ஈயாடுவதோ கருடற்கெதிரே யிரவிக்கெதிர் மின்மினியாடுவதோ நாயோடுவதோ வுருமிப்புலிமுன் நரகேசரிமுன் நடையாடுவதோ பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமானடி சேர் வகுளாபரணன் ஓராயிர மா மறையின் தமிழிலொரு சொற் பொருமோ வுலகிற்கவியே-என்றும்-திருவள்ளுவர்“ குருமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்” என்றும்,ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த செம் பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்-தண் குருகூர்ச் சேய்மொழியதென்பர் சிலர் யானிவ்வுலகின் தாய்மொழியதென்பன் நகைந்து” என்றும்,ஔவையாரும் “ சேய் மொழியோ தாய் மொழியோ செப்பினிரண்டுமொன்றவ் வாய் மொழியை யாருமறையென்ப-வாய்மொழி போல்-ஆய்மொழிகள் சாலவுளவெனினு மம்மொழியின் சாய்மொழிக ளென்பேன் றகைந்து” என்றும்,இத்யாதி வேதங்களை யொத்த 108 சம்மிதைகளை யுடைய ஸ்ரீ பாஞ்சராத்ர முதலான சாஸ்திரங்களாலும்,ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமான ப்ரஹ்ம விதாக்ரேசர்களாலும், ஆத்மோஜ்ஜீவனார்த்த தாரகமே, திரவிடோப நிஷத்தென்று பரமோதக்ருஷ்டமாய்க் கொண்டாடியுள்ளதாயும், சகல வேதங்களினும் முற்பட்டதென்றும், கல்பங்கள் தோறும் இதன் ஏற்றங்களையே பிரதிபாதிக்கையாலும், இத் திரவிடோபநிஷத்திற்கு வொத்த சாஸ்திரங்களுமில்லை என்றும், இதை யருளிச் செய்த சடகோபருக்கு மேம்பட்ட பரம புருஷன் எக்கல்பங்களிலும் கிடையாதெனக் கண்டிகமாய் சகல சாஸ்திரங்களாலும் ஆணை யிட்டுரைத்து விட்டன,
சாந்தோக்ய உபநிஷத், பிரதம பிரபாடகம் 6-ம் காண்டம்-” நாராயணஸ் ஸரஸிஜா ஸந்நிவிஷ்ட : கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்கசக்ர : தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ அக்ஷிணீ என்று ஸ்ரீமந் நாராயணனுடைய லக்ஷணங்களைக் கூறு மிச்சுருதி நாராயண சப்தங்களால் ஜகத் காரணத்தைச் சொல்லிற்றே-பகவத் சப்தம், பரமேஸ்வர சப்தம், ப்ரஹ்ம சப்தம் முதலான சகல சப்தங்களும் அந் நாராயண னொருவனை யுணர்த்துமே யன்றி மற்ற யாவரையும் கூறினதே யாகாது-பர்க்க சப்தத்திற்கு” பர்கோ தேவஸ்ய தீ மஹித்யோயோந ரசோதயாத்”-என்னும் பர்க சப்த வாக்யத்திற்கு வஸிஷ்டர் விஸ்வாமித்ரர் தங்கள் வியாகாண சூத்திரத்திலும் ஸ்ரீமத் ராமாநுஜர் சங்கரர், மத்வர் வித்யாரண்யர், குண்ணத்தூர் அய்யன் ஸ்வாமி, வைத்ய
நாதர், க்ருஷ்ணபட்டர், நாராயணசாமி முதலியனரும் தங்கள் பாஷ்யங்களில் பர்க்க சப்தத்திற்குப் பொருள் ஸ்ரீமந்நாராயணனே என்றே அருளிச் செய்துள்ளனர் –
யஜுர்வேதத்தில், வாகோபநிஷத் ஜீவன் முக்தி லக்ஷணத்தில்-“யஸ்மஸ்தார்த ஜாலேஷு வியவஹார்யபி ஸீதள பரார்தே ஸ்வீவா பூர்ணாத்மா ஸ ஜீவன் முக்த உச்சயதே-என்று ரிபு மஹருஷியினிடம் வராகமூர்த்தி தமது க்ருபையால் கடாக்ஷித்து ஓ! முனியே எப்பொழுது சித்தத்திலுள்ள சகல கருமங்களையும் விட்டு ஜெகஜ் ஜன்மாதிகாரண பூதனான என்னையே உபாயோபேயமாகப் பற்றுகிறானோ அப்பொழுது தானவன் ஜீவ முக்தனென்று சொல்லப்படுமென வெளியிட்டபடியாலும்.யஜுர்வேதம் இராமோபநிஷத்-பக்த்யாமந்தரேணாநேந மாம் சிவ ப்ரஹ்மஹத்யாதி-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:“என்று இராம தாரக மந்த்ரங்களாலே பக்தியுடன் தியானிக்குமுன்னை பிரஹ்ம ஹத்யாதி பாபங்களினின்றும் விடுவித்து க்ரம க்ரமாந்திரத்தில் என் சாயுஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று தமது பரம க்ருபையை வெளியிடுகையாலும் –பகவத்கீதை-“ ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூசா?என்று அர்ஜனா! சகல கருமங்களையும் அடியோடொழித்து அநந்த கோடி யண்டங்களுக்கும் நிர்வாணனான என்னையே சரணமாக அடைவாயாக உன்னை சகல பாபங்களினின்றும் விடுவித்து என் சாயுஜ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறேன் பயப்படாதே என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கீதையில் வெளியிட்ட படியாலும்,இத்யாதி வராஹமூர்த்தி, ரிபுசம்வாதத்தால் வராகோப நிஷத்தும், ஸ்ரீராமபிரான் சிவன் சம்வாதத்தால் ராமோபநிஷத்தும், ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுன சம்வாதத்தால், கீதோபநிஷத்தும், ஆக இம்மூன்று சரம சுலோகங்களின் ரசங்களையும் அவைகளின் அங்கோபாங்கங்களான நியமங்களையுமே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் வெளியிட்டனர்- தைத்திரீயோபநிஷத்-” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதிபி:நராணாம் ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”என்கிறபடியே பஹு தர ஜந்மங்களாக, அவித்தையாதி அஞ்ஞாந கரும ஹோமாதிகளைச் செய்தே அநந்தமான ஜீவாதமாக்கள் ஷீண தசையாகிய ஜனன மரணங்களை யடைவதால், அவித்யாதி கருமங்களை முற்றும் விட்டு ஸ்ரீமந் நாராயணனையே உபாயோபேயமாக அடையும் பொருட்டே நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று பாவங்களை அடைந்தே பரமபத சாயுஜ்யத்தைப் பெற வேணுமென்று மிச் சுருதி கூறுகையாலும், சுருதி, ஸ்மருதி, சூத்ர, மீமாம்ஸா,பகவத் சாஸ்த்ராதிகளின் ரசங்களைத் திரட்டின-பரம புருஷார்த்தத்தையே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச் செய்தனர்-ஸ்ரீமத் ராமாநுஜரது ஸ்ரீபாஷ்யம்” தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வேஹ்யாத்மாந பரமாத்மம் : நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக் ஷததைவ “-என்று ஒருவனுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளும், ஸேஷமாய் ஸ்வ சரீரமும், ஸேஷமாயிருக்கச் செய்தே, க்ருஹ க்ஷேத்ராதிகள் ப்ருதக் ஸித்யாதிகளுக்கு அர்ஹமாய், ஸரீரம் அவற்றிற்கு அநர்ஹமா யிருக்கக் காண்கையாலே, இவ் வாத்மாவானது ஈஸ்வரனுக்கு சேஷமாமென்னுமிடம் தட்டில்லை யென்க,” பரகத அதிஸய ஆதாநேச்சய உபாதேயத்வமே வயஸ் யஸ்வரூபம், ஸஸேஷ : பரஸ் ஸேஷி’ என்றும்,“ இச்சயாய துபாதேயம் யஸ்யாதிஸய ஸித்தயே உபயாநுபயைகைக ஜுஷாதௌஸே ஸேஷிணௌ” என்றும்,”அயமே வாத்மா சரீர பாவ : ப்ருதக் ஸித்த்யநர்ஹா தாராதேயபாவு : நியந்த நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்??-என்று ஸ்ரீமந் நாராயணனுக்கும், ஜீவாத்மாக்களுக்குமுள்ள நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற சம்மந்தங்களால் ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேணுமென்றும் அனாதியான இச் சம்மந்தங்களைக் கொண்டே உஜ்ஜீவிப்பிக்கச் செய்கிறானாகையால் ஸ்ரீமந் நாராயணனே வோத்பதி என்றும் தமது ஸ்ரீபாஷ்பத்தில் தெளிவாய் நிரூபித்தனர்.ஸ்ரீ பாஷ்யம் “யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே நகத்யதே-ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே”-என்று ஸேஷ சப்தப் பொருள்களாகிய பிரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகல சேதனாசேதனங்களும் ஸேஷி சப்தப் பிரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணனுக்கு இஷ்ட விநியோஹார் மென்று-ஸ்ரீபாஷ்யத்தில் மற்ற யாவையும் கண்டித்துரைத்து விட்டனரிறே எதிகட் கிறைவனான எம் மிராமாநுஜன்,பிரம்மாண்டபுராணம்-”மந் நியோகாத் பூத புர்யாம் அஹீநாம் ஈஸ்வர : கலௌ ஸ்ரீராமாநுஜ ரூபேண ஜநிஷ்யதி ஸதாம்முதே” என்று ஸ்ரீபத்ரிகாஸ்ரமத்திலே நாராயணனுக்கும் நரனுக்கும் நடந்த சம்வாதத்தில், ஓ நரா! என்னுடைய நியோகத்தால் ஸ்ரீ பெரும்பூதூரில் ஸர்பங்களுக்கெல்லாம் ராஜனான திருவனந்த ஆழ்வான் கலியுகத்தில் ஸ்ரீமத்ராமாநுஜரென்ற ரூபத்தாலே லோக உஜ்ஜீவனார்த்தமாக அவதரிக்கப் போகின்றாரென்று திருவாய் மலர்ந்தருளினாராதலாலும்,ஸ்ரீபாஞ்சராத்ரம்-” அநந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச் சதது: பரம்’என்று அநந்தனுடைய 4-வது அவதாரமே கலி யுகத்தில் ஸ்ரீமத் ராமாநுஜர் என்னுமோரவதார முண்டென்று கூறுகையாலும்,தாடீபஞ்சகம்-“பாஷண்ட ருமண்டதாவதஹ ச் சார்வாக சைலாசநி பெளத்தத்வாந்த நிராஸ்வாஸரபதிர் ஜைநேபகண்டீரவு:மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடாமணி : ஸ்ரீரங்கேச ஜயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் “” பாஷண்டஷண்ட கிரி கண்டந வஜ்ரத் தண்டா:ப்ரசந்த பௌத்த மகராலய மந்த தண்டா வேதாந்த ஸார ஸுக தர்சம் தீப தண்டா ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:-என்கிறபடி அடர்ந்த ஆரண்யங்களைப் போன்ற வேதங்களின் ரசங்களையே திரட்டி ஸ்ரீபாஷ்யமாயும், இவ் வுலகிலுள்ள சாக்ய, உலூக்க,அக்ஷபாத, சமுண, கபில்,பதஞ்சலிகளாகிய பாஹ்ய சமயங்களையும், சைவ, மாயாவாத, நியாய, வைஸேஷிக, பாட்ட ப்ரபாகராதிகளாகிய குத்ருஷ்டி சமயங்களையும்,அடியோடறுத் தெரிந்துத் தமது சுத்த சத்வ குண விஸிஷ்டாத்வைத மதமே மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த பரம வைதிக மதமென திக் விஜயம் செய்து ஸ்தாபித்து த்ரி தண்டம் தரித்தவனிறே எதிராஜன்.யதிராஜவிம்சதி”ஸ்ரீமாதவாங்கரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் காமாதி தோஷ ஹர மாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜஸ் யதிபதிம் பரணமாமி மூர்த்நா”-என்று இப்பிரபஞ்ச முழுமையும் பேரின்ப வெள்ளமான பரமபதத்தை பிரம்மா முதல், பிபீலிகாநந்தமுள்ள யாவும் கருதவல்ல ஞானங்களை ஊட்டி வளர்த்த எம்மிராமாநுஜனை,எதிகட்கிறைவனை தியானிக்கிறேனென்றும்,தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்ச் சடையோன் சொற் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமாநுசழனி போர்ந்த பின்னே” என்றும்,பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே” என்றும்,”வாழ் வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம் தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினற்கு அந்நாழற்றது நம் இராமாநுஜன் தந்த ஞானத்திலே” என்றும்,சாருவாகம் தம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட மாறுசெய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த் தற மிகுத்து மேல் வந்த பாசுபதர் சிந்தியோடும் வகைவாது செய்த எதிராஜனார் ”என்றும் ” எதிராஜோத் ஜகத் குரு” என்றும்,” ராமாநுஜோ சதுரா சதுரக்ஷரி” என்றும்,” ராமா நுஜாய நம? என்றும்,இத்யாதி அளவிறந்த ஏற்றங்களை யுடையவராயும், இவ்வுலக முதல் பரமபதம் வரை, ஸ்வாதீன முள்ளவராயும், மோக் ஷவதிகாரியானாலும், இவரது கடாக்ஷம் பெற்றே மோக்ஷமடைய வேண்டியதாலும், ஸர்வாந்தர்யாமியாயும், ஸர்வேஸ்வரனாயும், ஸர்வ வேத ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந்நாராயணனால் சாக்ஷாத்கரித்துப் பட்டங் கட்டிய ஸர்வலோக ஸரண்யனாயும் விளங்கா நின்றானிறே எம்மிராமாநுஜன்
அதர்வண மஹோபநிஷத் ப்ரஹ்ம ஸூக்த்தத்தில்-தக்ஷிணேது புஜே விப்ரோ பிப்ருயாத்வை ஸுதர்சனம் ஸவ்யேது சங்கம் பிப்ரூயாதிதி ப்ரஹ்ம விதோவிது : என்று முமுக்ஷ வானவன் வலது புஜத்தில் சுதர்சன மென்னும் சங்கத்தையும்,இடது புஜத்தில் பாஞ்சிய சந்யமென்னும் சங்கத்தையும் தரிக்கக் கடவர்களென்று பிரம்மவித்துக்களரிவர்களென்று மிச்சுருதி நிரூபிக்கையாலும்,மஹோபநிஷத் 4வது காண்டத்தில்” தேவாஸோயேந வித்ருதேந பாஹுநா ஸுதர்சநேந ப்ரயாதம் ஸ்வர்க்க மாயாந்தி தாம லோக விஸ்ருஷ்டவீ தஸ்வயந்தி ப்ரஹ்ம ணேளவேஸ் ஸர்வா வம்ஸர்வை தேவதாநாம், ஸர்வாவை விப்ராணாம் ஸர்வாவை க்ஷத்ரியாணாம் ஸர்வாவை வைச்யாநாம், சூத்ராணாமித்யக்நிநா வைஹோத்ரா, த தம் சக்ரம் த்வி புஜே தார்யே தோர்த்வபுண்ட்ர மாலிகேத் தஸ்மாத் விரேகம் பவதிபு நராகமநந்ந சேதி ப்ரஹ்மணஸ் ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்நோதி“-என்று பிரம்ம ருத்ரர்கள்முதல் சமஸ்த தேவர்களும், சமஸ்த பிராம்மணர்களும், சமஸ்த க்ஷத்திரியர்களும், சமஸ்த வைசி யர்களும், சமஸ்தசூத்திரர்களும், அக்னியில் தப்தம் பண்ணின சக்ராங்கிதத்தை இரண்டு புஜங்களிலும் தரிக்கக் கடவர்க ளென்றும் இடைவெளியோடு க்ஷடின ஊர்த்வ புண்டாங்களையும் தரிக்கக் கடவர்களென்றும், இவ்வநுஷ்டானமுள்ள தேவர்கள் முதல் மநுஷ்யர் வரையிலும் பரமபதமென்னும் சாம்ராஜ்யத்தைப் பெறுவர்க ளென்றும் பிரம்மாவிடைய சத்ய லோகம் போலேயும், சிவனுடைய கைலாயம் போலேயும் மீண்டும் பிறப்பதில்லை என்றும், ருக்வேதம் வாக சங்கிதையிலும், யஜுர்வேதம் முதல் பிரசனத்திலும் சாமவேதம் 6-வது அத்தியாயத்திலும், சுக்ல யஜுர் வேதம் பிரஹதாரணயோபநிஷத்திலும் கடவல்லிலும், சகடக மென்கிற சுருதி
யிலும், ஸ்பஷ்டமாய் காணலாம்.”ஸக்ராதி தாாணம் பும்சாம் பர சம்மந்த நிவேதனம் பதி வ்ரதா நிமித்தமஹி வளையாதி பூஷணம்”-இத்யாதி அநந்த ப்ரமாணங்களாலும் முமுக்ஷவான பரம்புருஷார்தத்தை பெருவதற்கே சக்ராங்கிதம் பிரதானச் சின்னமாகக் கூறா நின்றதிறே
ஸ்ரீ பாஞ்சராத்ரம் பராசரா சம்ஹிதை
“விஷ்ண்வர்ப்பிதம் ரக்த வர்ணம் ஹரித்ரா சூர்ண முக்தமம் லக்ஷ்மீ நிவாஸ ஸித்யர்த்தம் தீபாகாரந்து சூக்ஷ்மகம் ஊர்த்வ புண்டரஸ்ய மத்யேது லலாடே தாரயேத்விஜ :”-என்று ஏ ப்ராஹ்மணா ஸ்ரீமந்நாராயணனுக்கு சமர்ப்பித்ததாய்ச் சிவந்த நிறமுள்ள உயர்ந்த ஸ்ரீ சூரணத்தைப் பிராட்டி நிலை பெறுகைக்காக தீபாகாரம் போலே மெல்லியதாய்த் திருமண் காப்பின் நடுவில் நெற்றியில் தரிக்க வேண்டுமென்று கூறுகையாலும்,
ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்ம சம்ஹிதை
“நாஸாத்வியங்குலம் பாதம் மத்யம் ஸார்த்தாங்குளம் பவேத்
பார்ச்வ மங்குள மாத்ரந்து ஸுஸ்ஸ்பஷ்டம் தாரயே த்விஜ:-என்று இரண்டங்குலம் பாதமும் நடுவிலொன்னறை யங்குலமிடமும், விட்டு இருபக்கங்களிலும் ஓரங்குலமுமுள்ள ஊர்தவ புண்டரம் தரிக்க வேண்டியதென்றும் கூறுகையாலும்,
பாத்மபுராணம்
“ஊர்த்வ புண்டாம் மதாபூர்வ மநுஷ்டாநம் ஸமாசரேத்.-என்று ஆசமனத்திற்குப் பிறகு ஊர்த்வ புண்டரந்தரித்துக் கொண்டு சந்தியா வந்தன முதலிய வனுஷ்டானங்களை முடிக்கக் கடவனென்றும்,
பிரம்மாண்டபுராணம்
ஊர்த்வ புண்டரம் ம்ருதா பூர்வ மநிஷ்டாய ஸமாசரேத்-என்று பூர்வத்தில் ஊர்த்வ புண்டரம் தரித்துக்கொண்ட பிறகு அனுஷ்டானம் செய்யக் கடவனென்றும் கூறுகையாலும், இத்யாதி பரமாணங்களாலும் மோஷ காமியானவன் சக்ராங்கித ஊர்த்வ புண்டராதிகளைத் தரிக்கக் கடவனென்றும் சொல்லிற்று அன்றோ
1-இதிஹாச ஸ்ரீ மத் பாகவதம் -வேத வியாசர் அருளிச் செய்தது -18000 ஸ்லோகங்கள் -12 ஸ்கந்தங்கள் -200 அத்யாயங்கள் கொண்டது-இதற்கு வக்தா சுகமுனீந்திரர்-ஸ்ரோத பரீக்ஷித்துராஜன், புலவர் திலகராகிய ஆரியப்புலவரால் 4970-திருவிருத்தங்களாகத் தமிழில் மொழி பெயர்த் தருளப்பெற்றது இப்பாகவதமேயாம்.
2- புராண பாகவதம் -இதுவும் வேத வியாசர் அருளிச் செய்தது -இதற்கு-வக்தா நாரத பகவான் -ஸ்ரோதா, உருக்மணி பிராட்டியார்,.இதுவே அட்டாதச மகா புராணங்களுள் ஒன்றே பாகவதம்,
3- ஸம்ஹிதா பாகவதம் -வைராக்ய ரசம் நிறைந்தது -1100-அத்தியாயங்களாய் விரிந்த 18-காண்டங்களாகப்பகுக்கப்பட்டது. இதற்கு வக்தா வைசம்பாயன முனிவர் ஸ்ரோதா ஜனமேஜயன்
4- உப ஸம்ஹிதா பாகவதம்-70000-சுலோகங்களாய் 2000-அத்தியாயங்களாய்ப் பிரிக்கப் பட்டு – இதற்கு வக்தா அகஸ்திய மகரிஷி-ஸ்ரோதா, சுதர்சனர்
தா, சுதர்சனர்
5-விஷ்ணு ரகஸ்ய பாகவதம்:- தண்டங்க ளிடையிடையே கலந்த 100000-ஸ்லோகங்களுடையதாய் 1000-அங்கங்களாய் 10000- அத்தியாயங்களாய் விரிந்தது – இதற்கு தாவ ஹாரீத முனி, ஸ்ரோதா காசிபரிஷி.
6-விஷ்ணுயாமள பாகவதம் :-இது 80000 ஸ்லோகங் களை யுடையதாய் 800-அத்தியாயங்களை யுடையது இதற்கு வக்தா பராசர மகரிஷி, ஸ்ரோதா மைத்திரேயர்
7.கெளதம சம்மித பாகவதம் இது 10000-ஸ்லோகங்கள் அடங்கிய 100-அத்தியாயங்களை யுடையது. இதில் மோக்ஷமளிக்கத்தக்க க்ருஷ்ண சரித்திர மாத்திரம் சொல்லப்பட் டிருக்கின்றது.இதற்கு வக்தா கௌதம ரிஷி ஸ்ரோதா கௌசிக ரிஷி.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply