Archive for the ‘பிரமாணத் திரட்டுக்கள்’ Category

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ கிஷ்கிந்தா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ஸ தாம் புஷ்கரிணீம் கத்வா பத்ம உத்பல ஜஷா குலம்
ராமஸ் சவ்மி த்ரி ஸஹிதோ விலலாபா குலேந்த்ரிய
-1-1-

இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று-
அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
ஸ –
பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்-
இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –
பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –
பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார்
கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் –
பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –

உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –
பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –
அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மா

ஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126-
ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே
விலலாப ஆகுலேந்த்ரிய –
பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது

——-

மயூரஸய வநே தூநம் ரக்ஷஸா ந ஹ்ருதா ப்ரியா
தஸ்மாந் ந்ருத்யதி ரம்யேஷு வநேஷு ஸஹ காந்தயா –1
-40-

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே-3-6-1–மயூரஸ்ய நேநூநம் ரஷா பஹ்ருதா ப்ரியா –
இந்த மயில்கள் இருந்த இடத்தில் வந்திலனோ அப்பையல்-என்கிறார் –
இருவரை இருப்பார் எல்லாரையும் –
தனி யாக்கினான் என்றே யாயிற்று இருப்பது –

கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-10-3-1-கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

———-

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்ச்வாஸ இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர
-1-71-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–1—பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு   மேற்பட
ஆழ விழியுமது   அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத  –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –

———-

பத்ம ஸுகந்திக வஹம் சிவம் சோக விநாஸநம்
தன்யா லஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம் –
-1-105-

ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–8-2-
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ

பம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக் காலாலே துகை உண்ணக் கடவேனோ

பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –
சிவம்
 -இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –
சோக விநாசனம்
 -நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இறே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே –
அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்-

ஈடு -1-4-7–பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
அரி மிதியான -வண்டு காலால் மிதிக்கப்பட்ட -என்றுமாம்
-சிவம் கலப்பற்று பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
தாய்த் தலை தென்றல் -பிரதமம் ஸ்லாக்கியமான தென்றல் –
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது -பிராணனை போக்கி -நல்லது பண்ணும்படி –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -பாடபாக்னி -கடலுக்குள் வெப்பமான அக்னி போலே –

சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு ஸூதநே –3-9-
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்-8-1-1-சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –

அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து-1-2-1-

வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும்
அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-
(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் போலே )

சத்ரு நாசனே -என்கிறது கிடக்க –
சக்ர சாப நிபே -என்கிறதை அனுபவிக்கிறார்
உகப்பாரோடு உகவதாரோடு வாசி யற இரண்டு திறத்தாரையும் அழிக்கும் ஆயிற்று –

சக்ர சாப நிபே -இத்யாதி
இந்திர தனுஸ் போலே அனுகூலருக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க
வேண்டும்படி தர்சநீயமாக இருக்கும் –

க்ருஹீத்வா -வில் பிடித்த பிடியிலே பிரதிகூலர் முடிந்து போம் படியுமாய் இருக்கும் –
அநுகூலரை அழகாலே அழியச் செய்யும் —
பிரதி கூலரை அம்பாலே அழியச் செய்யும் –

————-

ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவ பரி கோபமா
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா
-3-15-

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-திரு விருத்தம் -44-

நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —

ஆயதா –
திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –

ஆயதா ஆஜான பாஹூ —
திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –

பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )

சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –

கிமர்தம் ந விபூஷிதா –
இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –

(திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ )

————

நாந் ருக் வேதவிநீ தஸ்ய நா யஜுர் வேத தாரிண
நா ஸாம வேத விதுஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் –3-29-

பெரிய திருமொழி-8-1-

என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )

———–

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -4-11-

ஈடு -1-1-1- இளைய பெருமாளை நீர் இவருக்கு என்ன ஆவீர் என்ன -பெருமாள் ஒருபடி நினைத்து இருப்பர் -நானும் ஒருபடி நினைத்து இருப்பன் -என்றார்
அவர் நினைத்து இருக்கும்படி என் -நீர் நினைத்து இருக்கும்படி என் என்ன
அவர் தன் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்றார் இறே –

———–

லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி –4-18-

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—
ஸூக்ரீவம் நாதம் இச்சதி
 –கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-

லோக நாத புரா பூத்வா –
லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இறே

இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இறே
அநாதன் இறே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்

ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள –
அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் –
இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு
உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் –
 என்று அருளிச் செய்து அருளினாராம்

———

நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்நா நாம் பரா கதி
ஆர்த்தா நாம் ஸம்ஸ்ரயஸ் ஸைவ யஸஸ்ஸைக பாஜநம்
–15-19-

திருவிருத்தம்-58-

திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –( பெரியாழ்வார் )
ஆஸ்ரித ரஷகனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –

நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )

நிவாச வ்ருஷ ஸாதூநாம்-
வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்-
அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-
கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன

அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –

பெருமாள்-என்றாள் –

ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன –
சொல்லுகிறாள்

நிவாச வ்ருஷ ஸாதூநாம் –
இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –
பூவாயும்
பழமாயும் 
நிழலாயும்-
தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும்
தன் கீழே இருந்து தன்னை அழியச்  செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் –
இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –
(வாஸம் மட்டும் அல்லவே
நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம்
கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )

நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ –
செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –

ஆபன்நாநாம் –
ஒதுங்கோம் என்னாமை போராது காண் –  
ஆபன் நராகவும் வேணும் காண் –

நான் தான் ஆபன்னன் அன்றோ –
உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –

ஆர்த்தா நாம் –
ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –
ஆபத்தை இசையவும் வேணும் காண் –
நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –

இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு
இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன

யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்-
இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –

நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே
அவர்களை சொல்லுகிற  இதில்  ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க
இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் –
வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே –
கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –

ஏக பக்திர் விசிஷ்யதே -என்கிற ஞானியை சொல்கிறதாய்-
முந்துற சம்சாரத்தில் நொந்து –  
பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-
அநந்தரம்
பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    –
இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –

(நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )
இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே
ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்
ஆபன்னானாம் கைவல்ய பரர்
ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி
அனைவருக்கும் -பராம் கதி )

————-

அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுர் ஊர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்த்துஸ் சைவ அநுஜம் ஸுபா –19-26

திருவாய்மொழி – -5-10–6-நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இனித் தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்து போனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.
(வல்லசுரர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ -)

நின்றும் –6-9-3-
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.

———————

நிஸ் ஸ்வநம் சக்ர வாகாணாம் நிசம்ய ஸஹ சாரி ணாம்
புண்டரீக பலா சாஷீ கதம் ஏஷா பவிஷ்யதி
–30-10-

திரு விருத்தம் -51-

அழைக்கின்றதே –
கார்யப்பாட்டால் கூப்பிடா நின்றது –
வழிப்பறிக்காரர் அழைக்குமா போலே –

ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று
அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை –
அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று

(இப்படி ஓசை படுத்தின இடத்துக்கு மேல்
பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதா பிராட்டிக்கு )

நிச்வசஞ் சக்ரவாகாநாம்  –
பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான  படி–

சஹ சாரணாம்-
பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்-

புண்டரீக விசாலாட்ஷி-
வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே
வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –

கதேமேஷா பவிஷ்யதி –
என்ன துன்பம் பட்டாளோ-

—————-

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் –
-32-17-

திருவாய்மொழி – -1-1-5-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் -நாண் ஒலி -கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே-

———–

ஸா ப்ரஸ் கலந்தீ மத விஹ்வாஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸ லக்ஷணா லஷ்மண ஸந்நிதானம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி -33-38-

மென்னடைய அன்னங்காள்–திருவாய் ஈடு-1-4-3-
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தேற்றமாய் வந்து திற -தேராமல் வந்து திறந்த தாரை போலே இல்லாமல் -அங்கே வியாக்யானம்
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கல்வியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும்
-இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –-சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –-மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –

—–

கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே –33-41-

திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
ஓதி நாமம் குளித்து –உச்சிதன்னால் –பாதம் நாளும் பணிவோம் –உபாய புத்தியாக -திருப்புல்லாணி —
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸுவ பிரவ்ருத்தி –
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள்
-என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே –
உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே -காமம் கோபம் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள் -விஸ்வாமித்ரர் கதை -தாரை –
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு- ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
பதிகத்துக்கு நிதானம் அபராத சஹத்வம் தானே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஆரண்ய காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ரூப ஸம்ஹநநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வந வாஸிந —
1-12-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே–திரு விருத்தம் -43-

(தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்
ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் )

சொவ்குமார்யம் –
பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )

ஸூவேஷதாம் –
தாபச வேஷம் இருந்தபடி –

தத்ருசிர்  விஸ்மிதாகாரா –
விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-

ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத
அவயவ சோபையையும்
திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

ஈடு -8-1-2-ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்
அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார -ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –
யார்தாம் என்னில்
வனவாசிநாம்–ராமஸ்ய ஆரண்ய காண்டம் -1-13
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை
சருகு இல்லை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –

——

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -1-19-

ஈடு -3-5-2-தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பதுஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று.-

ஆர்த்த ரஷணம் -தண்ட காரணிய -ஆர்தர்
வாசிகள் என்பதே காரணம் -தபசுக்காக இல்லை –
தபசே ரஷிக்க -விஷயத்திலே கண் வட்டத்திலே இருக்க –
சுபிரயத்ன பரர் அன்று -கண் அழிவு வரலாமே அப்படி இருந்தால்
காக்க வல்ல  எல்லைக்கு புறம்பாய் இல்லையே

தண்டனை கொடுக்க வேறு தேசம் கடத்த முடியாதே பகவானால்
ராஜாவால் முடியுமே -பெரியவன் தான் பண்டிதன் வார்த்தை  –
புறம்பு சொல்ல முடியுமானால் சொல்லிக் காண் -ரிஷிகள் வார்த்தை-

———

ரஷிதவ்யாஸ் த்வயா சஸ்வத் கர்ப்ப பூதாஸ் தபோதநா –1-20-

ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–1-

காடுறைந்தான் –
ரிஷிகள் உடைய ரஷணத்துக்காக காட்டிலே வர்த்தித்தான் காண் –
ரஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்ப பூதாஸ் தபோ தநா-
எங்களுடைய ரஷணம்-உமக்குத் தவிர ஒண்ணாது –
உமக்குத் தலையோட்டில் பொறி –
( தலையோட்டில் பொறி –தலை எழுத்து -திருவடி எழுத்து அன்றோ -)
உங்கள் தபஸ்ஸும் ப்ரபாபவமும் கிடக்க நான் ரஷிக்க வேண்டுகிறது என் –  என்ன

கர்ப்ப பூதா
எங்களுக்கு கைம் முதல் உண்டானாலும் ரஷணத்தில் பிராப்தி இல்லை காணும் –
(சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே )
ராஜ மகிஷியானவள் சக்தி உண்டு என்னா அவகாதம் பன்னாள் இறே
ஜனனி தானே கைச்சதும் புளித்ததும்   தவிர்ந்து நோக்கும் இத்தனை அன்றோ –
இவ் வாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்ந்தாலும் உம்மைக் குறித்து நித்ய ஸ்தநந்தமாய் காணும் இருப்பது –
இப்படிச் சொன்ன மாற்றத்துக்கு
ஒரு மாற்றம் இல்லாமை இறே
பிரசீதந்து -என்றது –
(ஆமோதித்தார் -பெண் வெட்கப்பட்டால் போல் பட்டார்
அதுக்கு ரிஷிகள் வார்த்தை மேல் )

————

ப்ரஸீ தந்து பவந்தோ மே ஹ்ரீ ரேஷா ஹி மம துலா
யதீத்ருசைரஹம் விப்ரை ருபஸ்த்தேயை ருபஸ்த்தித
-10-9-

காடுறைந்தான்-ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–பூர்ணரராய் இருக்கிற நீங்கள் குறைவாளர் அளவில் இரங்கும் அத்தனை அன்றோ –
நாங்களும் பிறர் கையில் நோவு பட்டு நிற்கையாலே குறைவாளர் அன்றோ என்ன-

உங்களுக்கு நோவு வந்தது உங்களால் அன்றே
நோவு பட்ட உங்கள் அளவு அல்ல
நோவுக்கு ஹேது பூதரான நம்முடைய லஜ்ஜை –
யதீத்ருசைர் அஹம்  விப்ரை  –
ஈத்ருசமான விலஷண புத்தியை உடையவர்களாலே

(ஈத்ருசமான- இப்படிப்பட்ட சிறப்பான புத்தி உடையவர்கள் -அப்படிப்பட்ட சொல்லாமல் –
சீதாப்பிராட்டியைப் பார்த்து சொன்ன வார்த்தை
ஸீதா விஷயம் சொல்லி -இத்தை விளக்குகிறார் மேல் )

நெருப்பை குளிருக -என்ற வாயைக் கொண்டு
ராவணனை -நஷ்டாவாய் -என்று சொல்ல மாட்டாமை யன்று இறே இருந்தது –
நம்முடைய ரஷணத்தில் நமக்குப் பிராப்தி இல்லை
தத் தஸ்ய -என்று இருந்தவளைப் போலே இறே இவர்களும் சிலர் –

நோவு பட்டால் அங்கே வந்து அவர்கள் குறை தீர்க்க ரஷணத்துக்கு ஸ்வரூபமாய் இருக்க
நோவு படுவுதிகளும் நீங்களே யாய்
பட்ட குறை அறிவிப்பிகோளும் நீங்களே யாம் படி
நாம் பிற்பாடார் ஆனோம் எனபது யாதொன்று –

————

ஏவ முக்தஸ்து ராமேண லஷ்மண ஸம்யத் அஞ்சலி
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்த்தம் இதம் வசனம் அப்ரவீத் –15-6-
பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்த்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத –15-7-

‘ஈடு -2-9–நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல-

———-

இஹ வத்ஸ்யாமி ஸுமித்ரே சார்த்த மேதேந பக்ஷிணா –15-18-

ஈடு -9-4-6-

இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது

மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி-

ஈடு -10-8-6–இன்று வந்து- இருப்பேன் என்று -ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

———

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம் வ்ருத்தஸ் பிதா மம –15-28-

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று-ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-6-

நல் அரவணை –
அத் தலைக்கே உறுப்பாய் இருக்கை –
சேஷ பூதனுக்கு நன்மை யாவது-எனக்கு என்னுமது அன்றிக்கே
சேஷிக்கே உறுப்பாய் இருக்கை இறே-(பிரபலதர விரோதி – நமஸ் அர்த்தம்)

பாவஞ்ஞேந  -க்ருதஞ்ஞேந -தர்மஞ்ஞேந -லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம-

பாவஞ்ஞேந  –
க்ரியதாம் -என்று சொல்லுகிறவர் இறே இளைய பெருமாள்
இப்படி செய்ய வல்ல நீர் நம்மை கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையை சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இறே –

பாவஞ்ஞேந  –
அல்லாதவை சொன்னாலும் தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள் சமைக்கும்படி 
இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இறே
நெஞ்சாலே நினைக்கும் இத்தனை இறே –
இந் நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஞ்ஞேந –
அதுவே அன்றிக்கே செய்து போம்படி அறிந்து செய்தார்-
நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே இவர் என் நினைந்து இருக்கிறாரோ –
என்று நினைவை ஆராய்ந்தும் –
இவருக்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவராயிற்று-

தர்மஞ்ஞேந –
நினைவு அறிந்தாலும் -செய்து போருமிடம் அறிந்தாலும் –
தானும் ராஜ புத்திரன் ஆன பின்பு எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ –
என்று இருக்குமவனுக்கு இது செய்ய ஒண்ணாது இறே –
அங்கன் அன்றிக்கே
அத் தலையில் தாதர்யதமே நமக்கு ஸ்வரூபமான பின்பு
அத் தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு -வகுத்தது என்று
அத் தலைக்கு செய்யுமத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-

லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வன்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே என்கிறார்

புத்ரே
புத் என்று ஒரு நரக விசேஷமாய் -அதில் புகாதபடி நோக்கும் என்றாயிற்று
புத்திரன் என்று பேராகிறது
ஐயருக்கு நம்முடைய அபிமத ஸித்தி இன்றிக்கே ஒழிகை தனக்கு மேற்பட நிரயம் இல்லை இறே
அவருக்கு அது வராதபடி நோக்குகிறீர் நீர் இறே
(ஸ்ரீ ராம கைங்கர்யம் சிறிது குறைந்தாலும் ஸ்ரீ சக்கரவர்த்திக்கு அதுவே நரகம் –
அத்தைப் போக்கி அருளினார் அன்றோ ஸ்ரீ இளைய பெருமாள் )

தர்மாத்மா –
சக்ரவர்த்தி ப்ரஸ்துதன் ஆனவாறே -நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் தாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன வன்றும் நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்று
தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே

மம –
இருவருக்கும் பிதா ஆவது ஒத்து இருக்கச் செய்தே -மம -என்கிறார் ஆயிற்று –
அவர் நமக்கு செய்யுமவை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்
நீர் இழந்தார் ஆகில் இத்தனை இறே-

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிற இடத்தில் சேஷி உடைய வியாபாரமும்
புகாதாகில் -சர்வம்-என்ன ஒண்ணாது இறே-
(ஸ்ரீ சக்ரவர்த்தி பிதா காட்டும் ஆசை அன்பும் பரிவும் சர்வத்துக்குள்ளும் அடங்கும் )

ஈடு -5-4-8-கைவந்த சக்கரத்து-5இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந – இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந – 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

——————–

அத்யந்த ஸூக ஸம் வ்ருத்தஸ் ஸூ குமார ஸூ கோஸிதஸ்
கதம் ந்வ பர ராத்ரேஷு ஸரயூம் அவகாஹதே —
16-30-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்-ஸ்ரீ திரு விருத்தம் -24-ஸோபி வேலாமிமாஂ நூநமபிஷேகார்தமுத்யதஃ.
வரிதஃ ப்ரகரிதிபிர்நித்யஂ ப்ரயாதி ஸரயூஂ நதீம்৷
৷3.16.29৷৷

வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–
ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….
பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-

அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ.
கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷3.16.30৷৷

அத்யந்த ஸூக சம்விருத்த ஸூகுமார ஸூ கோஜித –ஆரண்ய காண்டம் -16-30-
சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,
அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே

கதந்னு-
தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-
சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்

(ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்
குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல
கூடி இருப்பதால் இவ்வாறு
இவன் தாபத்தால் சரயுவே சுடுமே
தசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு
பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு )

அபர ராத்ரேஷு —
அகாலத்திலே போவான் என் என்னில் ,
புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே
மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே
கைகேயி மகன் என்றும்,
இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி

சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-
(நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )

தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷
ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ.
ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷

நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்

———-

நதேம்பா மத்யமா தாத கர்ஹி தவ்யா கதஞ்சன
தாமேவேஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு –
-16-37-

ஈடு -9-1-4–வருணித்து என்னே
உபகாரம் செய்வார்களுக்கு அபகாரம் செய்வார் படியை நினைந்து வெறுத்து –
வருணித்து என்னே -என்கிறார்
இளைய பெருமாள் கைகேயின் தன்மையை நினைந்து
தன் கார்யத்தில் நோக்கு உள்ளவளும் -எப்போதும் கொடிய தன்மை உடையவளும்
கோபம் உள்ளவளும் -தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவளுமான என் தாயான கைகேயி -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் சொன்னால் போலே –
ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ
அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10
வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே
அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள்
எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-என்கிறபடியே –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன
தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37-
ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை
தாமேவ –
வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்
இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –
ஐயரோ போகட்டு முடிந்து போனார்
நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை
குலையாதபடியாக நோக்கிக் கொண்டு
கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –
பரதச்ய கதாம் குரு –
நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

———-

கதான் வஹம் ஸமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயாஸ ரகு நந்தன –16-40-

ஈடு -2-4-1-ஸ்ரீ பரதாழ்வானோடும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானோடும் கூடப்பெறாத கிழிக்குறையால் கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோற்றிற்று இல்லை இறே

————–

விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித–17-24-

ஈடு -5-3-4-விபீஷணஸ் து தர்மாத்மா -இவன் இக் குடியில் உள்ளார் படி அல்லன் -இவனுக்கு வாசியுண்டு
அந்த வாசி தன்னைச் சொல்லுகிறது -தர்மாத்மா-என்று
மறக்குடி அறம் செய்யக் கெடும் என்னக் கடவது இறே
ந து ராக்ஷஸ சேஷ்டித–ஜாதி மாத்ரமே இவன் பக்கலில் ஜீவிக்கலாவது –

————

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிக்ஷஸ்வஜே –30-31-

திரு நெடும் தாண்டகம்–21–-தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
 -என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –

ஈடு -3-5-4–வம்புஅவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழும் அடர்த்த செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் -பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.-தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு
வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்
குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்
கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்
திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –
ஸ்ரீராமபிரான்.

————

தவ் வநாநி கிரீம் சைவ ஸரி தச்ச ஸராம்ஸி ச
நிகிலேந விசின்வாநவ் ஸீதாம் தசரதாத் மஜவ் —
61-21-

ஈடு -2-1-4-ஸீதாம் –தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜவ் –தேடப்பிறந்தவர்கள் அல்லர்

—————

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா சிலா தலே பூர்வம் உபோவிஷ்டா
காந்த ஸ்மிதா லஷ்மண ஜாத ஹாஸா த்வாமாஹ ஸீதா பஹு வாக்ய ஜாதம் –
63-12-

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-

எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது

அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்

அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும்  இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய்  இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –

மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –

உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –

சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க

ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-

உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –

காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று

த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது  இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்

————

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம்

புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்

அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –

யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –

சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம் —


உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-

———–

ராஜ்யாத் ப்ரம்சோ வநேவாஸஸ் ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் –
-67-25-

பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.  2‘இராச்சியத்தினின்று  நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

திரு அபிஷேகம் பண்ண நாளிட்ட வாறே -ராஜ்ஜியம் எனக்கு வேணும் என்றார்கள் சிலர் -அத்தை இழந்தால் படைவீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் இறே
என் மகன் ராஜ்யம் பண்ண வேண்டா -பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க அமையும் என்றார் இறே கௌஸல்யை யார்
ஸீதா நஷ்டா –பிராட்டியும் தாமுமாய் ஏகாந்தமாக புஜிக்கலாம் என்று போர இருவரும் இரண்டு இடத்திலேயாம் படி விழுந்தது –
ஹதோ த்விஜ–பிராட்டிக்குத் தனி இடத்திலே உதவப்புக்க பெரிய யுடையாரையும் இழந்தது
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம்

ராஜ்ய நாசம் -ராம சந்தரன் -இரவில் பிரகாசிக்கும் படி -அன்று அலர்ந்த தாமரையை ஒத்ததே -என்றாரே –ராஜ்யோ நாஸோ பகர்ஷயதி வந வாஸோ மஹோதய -என்றும் சொல்லிப் போந்தவற்றை- இங்கு அனர்த்தமாக சொல்வான் என்
ஆஸ்ரித சம்ச்லேஷம் -ரிஷிகள் கூட -இருக்க அன்றோ புகுந்தது–
புருஷகாரம் -இழந்த நிலை -ஜடாயு இழந்தார்- அதனால் வருத்தம் தோன்ற வார்த்தை –

நிர்தஹேதபி பாவகம்–பிரியாத இளைய பெருமாளையும் பிரிக்கவும் வற்றாய் இறே இந்தத் துக்கங்கள் இருப்பது

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ அயோத்யா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 20, 2024

கச்சதா மாதுல குலம் பரதேந தத அநக
சத்ருக்நோ நித்ய அயோத்யாநீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–21-1-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

திருவாய் மொழி-3-9- ஈடு பிரவேசம்–கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –

அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.

எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.

———-

ஸஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
அர்த்திதோ மாநுஷ லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந –
-1-7-

பாரின் மேலாய் –திரு நெடும் தாண்டகம் -9-
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி  ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –

(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)

ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –

ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –

உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –

அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –

மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது

ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –

விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது

சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது

இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –

(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே-பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )

நாட்டிற் பிறந்து படாதன பட்டு –திருவாய் மொழி -7-5-2-

‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7

5ஸ:-ஜஞே ஹி – ‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி. ‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,

‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. 1இரப்புதான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? 2‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?

‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

தேவை:- 3தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக்காட்டினவாறே எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர், ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’  திருவிருத். 92.என்பார்கள். என்றது, ‘இலங்கையை சுட்டுத் தரவேணும்,’ என்பர்கள் என்றபடி. உதீர்ணஸ்ய ராவணஸ்ய – 4அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வரபலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு. வத அர்த்திபி:-5தாங்கள் பட்டி நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள். 6‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச்செய்தானைத்தனை. அர்த்தித:- 1தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற்பட்டக் கிடந்து இதுவே.அர்த்தித:– 2உபாசித்தவர் அல்லர்.

மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;- 3‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்; அவர்கள் மனிதத் தானத்திலேயாம்படியான பொருள்கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார். மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.- ஜஜ்ஞே– 4தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம்.  ‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.

5‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.

————

குணைர் தசரத உபம –1-9-குணங்களில் தசரதருக்கு ஒப்பாவான்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர்–நாச்சியார்-9-3-நஞ்சீயர் ஸூந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –
குணைர் தசரத உபம
 -அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு –
பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து –
அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று
அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி

சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்

பெரிய திருமொழி -10-4-1—பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
(ஸுசீல்யம் சொல்ல வந்ததை அறியாமல் இருந்தானே
ஆத்மாநாம் மானுஷ்ய மன்யம் என்னுமவன் அன்றோ )
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை  சில சொன்ன அத்தனை –
சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே  –
(பகவத் விஷயத்தில் அதி வாதம் பண்ணுபவனே சிறப்பானவன் )

அபியாதா ப்ரஹர்த்தாச ஸேநாநய விசாரத –1-29

யுத்தத்தில் தானாக எதிர்த்துச் செல்பவன் -எதிரிகளைக் கொல்லுபவன் -ஸேனையை நடத்துவதில் ஸமர்த்தன்

காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.-5-4-3-
தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.

“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.

——–

த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந் நாதவ்த் தரம் –2-13-

மூன்று உலகும் எந்த ராமன் நாதனாக இருந்தால் மிகவும் நாதனை யுடையதாக இருக்குமோ

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை–8-4-10-

அமர்ந்த நாதனை –
உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை
எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி
மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்
பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –—————

பஹவோ நிருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –2-26-

அரசனே உங்கள் பிள்ளை ராமனுக்கு அநேக கல்யாண குணங்கள் உள்ளன-

திருவாய் -7-6- ஈடு பிரவேசம்–பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி, ‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, ‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி, ‘நான்  இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, 3‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து, ‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து, ‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால், ‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்: அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய, படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

1‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது, 2‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி. 3‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு

போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது, ‘இவ்வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். 

திருவாய் -9-6- ஈடு பிரவேசம்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ
பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின
இராச்சியத்தை
இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ
என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித
ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி
பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக
பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –
இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்
அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –

ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது
தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்
உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை
உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் கான் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்
ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்
சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

———-

ப்ரிய வாதீ ச பூதா நாம் ஸத்ய வாதீ ச ராகவா -2-33-

ராமன் பிராணிகளுக்கு பிரியமானதை பேசுவான் -உண்மையானதை பேசுவான்

திருவாய் -7-1-ப்ரியவாதீ ச –பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை -செவிப்பதில் இனியதாய் அன்றி இராது
யாருக்குத் தான் என்னில்
பூதா நாம் -சத்தா யோகி ஸகல பதார்த்தங்களுக்கும் -அஸத் வ்யாவ்ருத்தி மாத்ரமே வேண்டுவது –
அப்போது பிரியமாய் விபாகத்தில் வேறு ஒன்றைப் பலிக்குமோ என்னில்
ஸத்ய வாதீ ச -அருளிச் செய்யுமது தான் பூத ஹிதமாய் அன்றி இராது என்கிறது
ஒரு யுக்தியே இரண்டுமாகா நின்றாள் அல்லாததுக்குச் சொல்ல வேண்டா விறே

————

வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவம் துக்கித –2-41-

மனிதர்களின் வ்யாசனங்களால் மிகவும் துக்கித்தவனாக ராமன் ஆகிறான்

வண் தீங்கவி செய்குந்தன் தன்னை எந் நாள்சிந்தித்து ஆர்வனோ?-7-9-7-வண் தீம் கவி செய் குந்தன் – வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது, 3‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று. 5சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ? ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம் வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால், மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி – துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று,

‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.

இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு; இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது. 1‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க.

இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ?

‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’-என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.

————–

சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச புண்ய புஷ்பித காநந –3-4-

திருப்பாவை -1-சைத்த்ரச் ச்ரீமா நயம் மாஹ -என்று-
ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-சைதர–

அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்
பாவனமாயும்
போக்யமுமாயும் இருக்கை-

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –

———-

ரூப ஒவ்தார்ய குணைர் பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் –3-28-

முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
-5-3-6-

“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ –

———–

ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -6-1-என்றபடி. 

ஆராஅமுதே – 5-8-1-1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.

———

ஜ்ஞாதி தாஸீ யதோ ஜாதா –7-1

இதனால், ‘நிலமிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை. ‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியத்’ என்கிறபடியே அன்றோ? 1கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?

நற்பால் அயோத்தியில் – 7-5-1-நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

‘பவித்ரம் பரமம்
புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.

    ‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.

‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1

‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.2‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ? 

——

அஹம் புநர் தேவ குமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யன் அபி தர்சநேந பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ
-12-106-

இவருக்கும் அவ்வல்லவியோ என்று சிறியாத்தான் கேட்க -தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி ரிஷி கரி பூசுகிறான் என்றார் –
அலங்க்ருதம் -அத்தாலும் வெறும் புறம் கிடீர் ஒரு போலி சொல்லலாவது -ஒப்பித்தால் ஒக்கச் சொல்வார் இல்லை
தம் ஸூதம் -இவனுக்கு இரண்டு படியும் உத்தேச்யமாய் இருக்கிற படி
ஆவ்ரஜந்தம்–புஷ்பம் அலரும் போது எங்கும் ஓக்க பிறக்கும் விகாஸம் போலே -அதுவும் வண்டை நோக்கி இறே–ஐவரும் போக்தாக்களைக் குறித்து இறே
நந்தாமி பஸ்யன் அபி –கண்டபடியே இருக்கச் செய்தே காணாது கண்டது போலே யாயிற்று நாள் தோறும் நாள் தோறும் க்ஷணம் தோறும் க்ஷணம் தோறும் உகக்கும் படி –
தர்சநேந –அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா -காட்சியே அமையும் -கரை புரண்டு அனுபவம் உள்ள இடத்திலே போலே காணும் பிரயோஜனம்-ஸதா பஸ்யந்தி இறே
பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ –அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் வயசைப் புக்கு வ்ருத்தனான சக்ரவர்த்தி பெருமாளைக் கண்ட பின்பு பெருமாளுக்கும் தனக்கும் வாஸி தெரியாதபடி யானான்
காளையைப் பயந்த காளை என்னுமா போலே -தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலவே ஆக்கி உஜ்ஜீவிப்புக்கும் விஷயம் போலே காணும்
யுவேவ வஸூதேவ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் -என்னும்படி யானாரே இறே வஸூ தேவரும்

தத்ர காஷாயிணோ வ்ருத்தான் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதான்
ததர்ச விஷ்டிதான் த்வாரி ஸ்த்ரயத்யஷான் ஸூ ஸமாஹிதான்
–16-3-

சூடுமலர் குழலீர்” -5-9-3-அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ. “தத்ர காஷாயிந:– அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது.

ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார்
‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.

தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் ஸ்வலங்க்ருதாந்
ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 16 : 3.

இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
“ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.

“விருத்தாந் – முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும். “ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

————–

பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷிணா
ஆத் வாரம் அநுவவ்ராஜ மங்கலான் யபிதத்யுஷீ —
16-2-

புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே -திரு விருத்தம் –24–

பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–
பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,
தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு
திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,
நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..

(சூடிக்களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப்போந்தான் என்றபடி )

அஸி  தேஷணா –
இவர் தோளில் மாலை  இட்டதுக்கு
இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

(அரும்பூதம்
பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ
வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ எண்ணில்
ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்
இனி உசிதம் என் என்னில்
தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று
அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர் )

—-

தீஷிதம் விரத ஸம் பந்நம் வராஜி நதரம் சுஸிம்
குரங்கச் ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீ த்வா பஜாம் யஹம்
–16-28-

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே-14-2-

முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –

தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும்
போர்த்த உறுப்புத் தோலும்
யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி

வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே –
அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்

வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே
வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்

ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இறே -என்றால்
அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்

தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூசிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச
பஸ்யந்தீ த்வாம் பஜாம்யஹம் -அயோத்யா -16-23-
(மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )

இதற்கு எதிர் தட்டு இறே –
கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே–திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –

பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும்  காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக

இன்பத்துக்காகத் துதிக்கிறாள் காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?-நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?    

———

யச்ச ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே —
17-14-

வாடினேன் வாடி வருந்தினேன்-1-1-1-

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்

யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-

ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்

எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்

எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை

விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –

திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே

வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது

வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது  என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )

————–

ந நூநம் மயி கைகேயி கிஞ்சிதாசம்ஸஸே குணம்
யத் ராஜாநம் அவோசஸ் த்வம் மமேஸ்வரதரா ஸதீ
-19-24-

சிற்றவை பணியால் முடி துறந்தானை-2-3-1-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

——

ராஜ்யஞ்ச தவ ரஷேயம் அஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜாநாமி தே வீர மா பூவம் வீர லோக பாக்
—-23-28-

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்-அவதாரிகை 

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

————-

ஈர்ஷ்யா ரோஷவ் பஹீஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம்
நய மாம் வீர விஸ் ரப்த பாபம் மயி நவித்யதே
-27-8-

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-பெரிய திருவந்தாதி–9-
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

ஈடு பிரவேசம் -6-2-

வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்

தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

———————

கிந்த் வாமந்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜா மாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –3
0-3-

அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2–பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே

நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை  சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே   –

திருவாய் ஈடு ப்ரவேஸம்-

இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு
– பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன்
விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம்
என்க. தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம்
ஆதலாலும், ‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’ மேலிட்டு
வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க. மேலிட்டு வார்த்தை
சொல்லுகையாவது, வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை
சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், 2‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்-

————

யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ
–30-18-

நலம்என நினைமின் நரகுஅழுந் தாதே;
நிலம்முனம் இடந்தான் நீடுஉறை கோயில்
–2-10-7-காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?

———

ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே நத்வ யாவிநா
-31-5-

ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-பெரிய திருவந்தாதி -79-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )

அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –

ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே

ஈடு மஹா ப்ரவேஸம் -வானவர் நாடு என்கிற பரமபதம் -ஆத்ம லாபம் -லோகா நாம் ஐஸ்வர்யம் இவை அனைத்தும் மக்குப் புறம்பாய் வருமன்று வேண்டேன்-

குருஷ்வ மாம் அநு சரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே –31-24-

திருவாய் -2-9-ப்ரவேஸம்-ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று-

————

ஸ்ருஷ்டஸ்த்வம் வந வாஸாய ஸ்வநுரக்தஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10—ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –3-9-9- 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.

 ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.

————

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –
40-9-

நான்முகன் -47–ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –

———

யேது ராமஸ்ய ஸூஹ்ருத ஸர்வே தே மூட சேதஸ
சோக பாரேண சாக்ராந்தா சயனம் நஜ ஹுஸ் ததா

நாச்சியார் திருமொழி -3-1-யேது -சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் -ஸ்ரீ கௌசல்யார் மங்களா ஸாஸனம் பண்ணி விட்டார் -அவ்வளவு அன்றிக்கே பத்தன்பதாம் பாஷையாயத்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூஹ்ருத -தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உடப்புக்கவர்கள் இறே தோழன்மார் ஆகிறார் -தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மை எண்ணிப் போந்தவர்கள் படு குலைப்பட்டார்கள் என்கிறது
ஸர்வே தே -ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதஸ–ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்திருந்து காலைக்கட்டி மீளாது ஒழிவான் என் எனில் -அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா -மலை அமுக்கினால் போல் சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என்
சயனம் நஜ ஹுஸ் ததா -படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்களாகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ -தந்தாமே படுக்கையில் கிடந்து போந்தவர்கள் இறே

———-

புத்ர த்வய விஹீ நம் தத் ஸ்நுக்ஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ர மிவாம்பரம்
–42-30-

ஈடு -6-7- ப்ரவேஸம்-க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள்.-

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி

புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.

3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

———

ராமம் மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ
–42-34-

என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17-
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

இணை –
களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு
உபமானம் இல்லை-

முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்
இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –

இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து
சேதன சமாதியாலே தானே களியா நின்றன –

ராமம் மே அநுகதா த்ருஷ்டி –

கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே
அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே
விஷய ஸ்வபாவம் இருப்பது –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்--நாச்சியார்-10-7-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இறே

ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
சாது மா பாணி நா ச்ப்ருச
—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு
நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று
ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும்
நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —
சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —
என்னக் கடவது இறே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –

பவள வண்ணா எங்குற்றாய் –திருநெடும் தாண்டகம்–17
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –

(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )

ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –

மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்

மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்

(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)

அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –

நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்

நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –

கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே

சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்

அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்

கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –

என்று தடவும் என் கைகள்–திருவாய் மொழி-3-8-3-கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டுமலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.

‘ராமம் மேநுகதா த்ருஷ்டி: அத்யாபி நநிவர்ததே
ந த்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’

‘என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்
திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’
என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது
முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.
பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’
என்றது கண்களை.

————–

கதம் தாசரதவ் பூமவ் சயாநே ஸஹ ஸீதயா
சக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸூகாநி வா
-51-9-

திருவிருத்தம் -30–நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம்  –என்று பெருமாள்
ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில்
ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு
ஸ்ரீ குகப் பெருமாள் —
இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே  படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —

கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று
அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவை கொண்டு ,
தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?

சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்-
படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே

சக்யா நித்ரா மயா லப்தும்  —
என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –

ஈடு -5-9-4—

பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீகுகப்பெருமாள் இளையபெருமாளைப் பார்த்து, ‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்; நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்; ‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன, ‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’

இளையபெருமாள் காத்த பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பெருமாளும்’ என்று
தொடங்கி.

“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா
ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”

என்பது, ஸ்ரீராமா. அயோத். 9. குகப்பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது.

வாரீர், மஹாராஜனானசக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக்கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய்  அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்-

————

ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதவ்
–53-31-

நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்—பெரிய திருமொழி-4-9-1-

ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண  காலம்
ஜலான்   மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே

அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-

அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து  ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )

ஈடு ப்ரவேஸம்
உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால் -ஜலாத் உத்த்ருதமான மத்ஸ்யம் நீர் நசை அறும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திரு உள்ளத்தில் உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது என்றார் இறே -அத்தலையால் நினைவால் இறே இத்தலை ஜீவிப்பது
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -என்கிறபடி அவன் நினைவு இல்லாத வென்று இவையும் இல்லை இறே

தாந யஜ்ஞ விவாஹேஷு ஸமாஜேஷு மஹத் ஸூ ச
ந த்ரஷ்யாம புநர் ஜாது தார்மிகம் ராம மந்தரா –
5-13-

வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் –6-1-2- இவற்றின் அறிவுகேடு 6பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோவரமாட்டாதே நிற்கிறது. 1“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;

“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச
ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”-  என்பது, ஸ்ரீராமா. அயோத்.

தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும். விவாஹேஷூ-இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர். ஸமாஜேஷூ மஹத்ஸூச – 2தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல். ச – 3யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது. ந த்ரக்ஷ்யாம: புனர்ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம் ராம மந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில், தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியேயன்றோ அவன்படிகள்.

——

மம த்வச் வா நிவ்ருத்தஸ்ய ந பிராவர்த்தந்த வர்த்தமநி
உஷ்ண மஸ்ரு விமுஞ்சந்தோ ராமே ஸம் ப்ரஸ்திதே வநம்
-59-7-

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூமந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன

—————-

குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸாந் பஹுந்
ஆசயா யதி மாம் ராம புநஸ் ஸப்தாபயேதிதி
-59-7-

ஈடு ப்ரவேஸம் -3-8–ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே, ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி. 2‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க. ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம். ‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

—————

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ஸ புஷ்ப அங்குர கோரகா –59-8-
உபதப்தோ தகா நத்ய பல்வலாநி ஸராம்ஸிச
பரி சுஷ்க பலாசாநி வநாந் யுபவநாநி ச
-59-9-

ஈடு 2-1-1-ஆறுகளோடு சிறு குழி களோடு பெரும் குழி களோடு வாசியற கரை யருகும் சென்று கிட்ட ஒண்ணாத படி விரஹ அக்னியால் கொதித்தது இறே
சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசியற விரஹ அக்னி கொளுத்திற்று

ஈடு 6-1-10-“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் -இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. 3நிலைநீர்கள்தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன. “பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம்.

ஈடு -7-5-1—ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ணநீர் விழவிட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடிநின்றனஉப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி. உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை. பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை, ‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.

———–

அதோ து கிம் துக்க தரம் ஸோஹமிஷ்வாகு நந்தனம்
இமாம் அவஸ்தாம் ஆபந்நோ நேஹ பஸ்யாமி ராகவம்
–59-30-

ஈடு -6-7-6-

இன்று எனக்கு உதவாது அகன்ற – 2பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும், இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே! 3“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?” “அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம்  இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.

என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி. எனக்கு உதவாது – சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி

ஈடு -9-7-9-இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை
இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது
எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி
ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –
தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு
இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி –

———-

கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வநம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம் ஸ்ரிதா
–60-20-

ஒருதரம் தலையை வணக்கியவர் விஷயத்தில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து பார்த்தால் வணக்கத்தின் மேன்மை வெளியாகும். “ஏபிச்சஸசிவைஸ்ஸார்த்தம் சிரஸா யாசிதோ மயா, ப்ராது:சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்துமரர்ஹஸி” என்று தலையால் யாசித்த பரதாழ்வான் விஷயத்தில் பெருமாள் எப்படி உளங்கனிந்திருந்தார் என்பது இராவண வதத்திற்குப் பிறகு விபீஷணனுக்கு பெருமாள் அருளிச் செய்யும் பாசுரத்தால் வெளியாகிறது. “சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்று வாடுகிறான் எம்பெருமான். பரதன் தலையால் வணங்கி யாசித்த விஷயத்தை (வார்த்தையை) நான் தலைக்கட்டவில்லையே என்று துக்கித்து அவனைக் காணப் பதைக்கிறான் பிரபு. பெருமாள் திருவுள்ள மறிந்த பிராட்டியும் திருவடியை (ஹனுமனை) நோக்கி “சிரஸா சாபிவாதய” (எனக்காக அவனை நீ தலையால் வணங்கு) என்று வேண்டுகிறாள். தலை தாழ்த்து இருகை கூப்பாத தமது பாழ்த்த விதியை மீறி “தலையில் வணங்கவுமாங் கொலோ”(நமக்கு வணங்கும் நாட்களும் வாய்க்குமோ) என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

பலர் கண்ண நீர் கண்டால் மீளாரோ என்னுமதைப் பற்ற வினை செய்யப் போவாரைப் போலே ஆனை குதிரைகளைத் திரட்டிக் கொடு போனான் ஆயிற்று –
பிரிவாற்றாமைக்குத் தன்னில் குறைந்தார் ஒருவரும் இல்லையாயிற்று பரிகரத்தில்
நான் தலையால் இரந்த காரியத்தையும் மறுப்பாரோ
சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்றார் இறே அவனும் –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் -நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் என்றார் இறே
அவன் தலையால் இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்று இறே அவர் திரு உள்ளம் புண் பட்டது
ப்ராதா ஸ்வ மூர்த்திராத்மந -என்கிறபடியே அவர் தம் திரு மேனியாக யன்றோ என்னை நினைத்து இருப்பது

—–

நந்தந்யுத ஆதித்யே நந்தந்த்யஸ்த மிதே ரவவ்
ஆத்மநோ நாவபுத்த்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்
-105-24-

பெரிய திருமொழி -6-2-5–நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-

————

பதி ஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தா மப்ய பகமத் தீநோ வித்த நாசா திவாதந
–118-34-

ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ பால காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

May 18, 2024

முநே வஹ்யாம் அஹம் புத்த்வா –7- வால்மீகி முனிவரே நான் அறிந்து சொல்லுவேன்

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –சிறிய திருமடல் -21-

பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இறே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் என்றான் இறே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரஸ்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இறே –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே-

வாக்மீ ஸ்ரீ மான் –9-

பெருமாள் திருவடியைப் பற்றி –
நன்றாகக் பேசும் திறமை யுள்ளவன் –
பேசும் பொழுது விலக்ஷணமான ஸோபை யுள்ளவன் –

நாவுடையாய்–திருப்பாவை -14-
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –திருப்பாவை -16-
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
பூ அலர்ந்தால் போல் வார்த்தை சொல்லுகிற போதை ஓஷ்டஸ்ப்புரணம் -என்னவுமாம்

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்–சேஷ பூதரான எங்களுக்கு
நிரவதிக கிருபை பண்ணி
உஜ்ஜவலமான திருப்பவளத்தை சாந்த்வ வாதம் பண்ணி
உனக்கு அசாதாரணமான தாமரை போலே இருக்கிற திருக் கண்களாலே பூர்ணமாகப் பார்த்து அருள வேணும் –

சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்-ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே- என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –

————-

ஸர்வதா அபி கதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி —15-

ஸ்ரீ ராமன் -கடல் நதிகளால் அடையப்படுவது போல் -சாதுக்களால் எப்போதும் தாமாக வந்து அடையப்படுபவன்

நல்லார் நவில் –திரு விருத்தம் -100-
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –

ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் )
சர்வதாபி கதஸ் சத்பி
பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே –
பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –
நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

குஹேந ஸஹிதோ ராமோ லஷ்மணேந ச ஸீதயா –28-

ஸ்ரீ ராமன் கானோடும் லஷ்மணனோடும் சீதையோடும் கூடினான்

ஈட்டில்-ஆடியாடி -பிரவேசம் –கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

———-

ரம்ய மாவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய –30-

பெருமாள் பிராட்டி இலக்குவன் மூவரும் -அழகிய க்ருஹத்தை -பர்ணசாலையைக் கட்டி -காட்டில் -களிக்கின்றவராய் இருந்தனர்-

ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது –2-8-1–அணைவது புணர்வது –
பொதுவான சப்தங்கள் -அணைந்தான் என்று அவனுக்கு பிரதான்யம் –அவன் ஏற்றான் என்று
இவனுக்கு பிரதான்யம் இல்லாமல் அணைவது -இருவருக்கும் பொது -ஆனந்தம் சமம் -மூவருக்கும் என்று காட்டி அருள –
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வெத்தலை பாக்கு இளைய பெருமாள் சேகரித்து பட்ட ஹர்ஷம் -மடித்துக் கொடுத்த ஹர்ஷம் பிராட்டிக்கு -போட்டு அனுபவித்த ஹர்ஷம் பெருமாளுக்கு
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –-நாச்சியார் திருமொழி-14-1-
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

———

நந்தி க்ராமே கரோத் ராஜ்யம் ராமா கமந காங்க்ஷயா –37-

பரதன் -ராமனது வரவில் விருப்பத்தால் நந்திக்ராமம் என்னும் இடத்தில் ராஜ்யத்தை நடத்தினான்-

ஆடியாடி யகம் கரைந்து –2-4-1-முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே –

ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை
பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்

—-

பம்பா தீரே ஹநுமதா சங்கதோ வாநரேண ஹ –56-

ராமன் பம்பை என்னும் தாமரைப் பொய்கையின் கரையில் ஹநுமானுடன் கூடினான்

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!–6-1-1–வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.
ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.

ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம்,
சத்தை நோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.

———-

ததோ வாநர ராஜேந –59-

ஸ்நேஹமான பிறகு குரங்குகளுக்கு அரசனால் -ஸூக்ரீவனால் -வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட விரோதம் முதலியன ராமனுக்குத் தெரிவிக்கப்பட்டன

சங்கரையா –நாச்சியார்-7-7-
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன
 -என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –

க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத்
 –
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்

வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –

—————-

தேந நாதேந மஹதா நிர் ஜகாம ஹரீஸ்வர
அநு மான்ய ததா தாராம் ஸூக்ரீவேண ஸமா கதா
–66-

பெரிய அந்த ஸப்தம் நிமித்தமாக வானர ராஜனான வாலி அந்தப்புரத்தில் இருந்து வெளிக் கிளம்பினான் -அப்போது தாரை என்னும் தனது பத்நியை -நல்ல வார்த்தை சொல்லி சம்மதிக்கச் செய்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்வதற்காக வந்து சேர்ந்தான்
ததா தாராம் அநு மான்ய நிர் ஜகாம -என்று அந்வயம்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்-10-1–எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே

அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் –பெரிய திருமொழி-9-5-8-

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்

நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படுவான் என் என்னில்

ஹரீஸ்வர
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே

வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-திருவிருத்தம் -51 –

வேரித் துழாய் துணையா
நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு –
அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )
சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா
மஹதா –
மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –

நிர்ஜகாம –
புறப்பட்டான் –

ஹரீஸ்வர
பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –

அநுமான்ய-
ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –

ததா-
சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )
பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்

(சுக்ரீவேந ஸமாஹிதா
சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி )

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே
பரமபதம் கிட்டிற்று என்னா-கடுக கால் வாங்கிப் போகப் பாராதே காண் –
பல நாள்கள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின-இவ் உலக வாழ்க்கையை புரிந்து-பார்த்து சிரித்து போரு காண் –
உன்னை வென்றோம் அன்றோ -என்று புரிந்து பார்த்து சிரித்து போரு-
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

அண்டை கொண்ட பலம் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68-
என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ
முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும்
ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –
பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும்
உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-
இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்
இங்கு மற்றை நரகம் -8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

————

அபி ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
–83-

க்ருதார்த்தனாக பெருமாள் தாபம் நீங்கி ஸந்தோஷித்தான்

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!-
6-2-10-

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-
என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.-அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-

———

ராமஸ் ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக –87-

பெருமாள் பிராட்டியுடன் மீண்டும் ஸிம்ஹாசனத்தில் இருந்து அருள -ஜனங்கள் ஹேஹத்தில் மயிர்க்கூச்சலும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அடைந்தனர்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
-7-10-1-

‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே
, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ?

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக:
துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’-என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2
ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக,
அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

—————–

ந ச அக்நி ஜம் பயம் கிஞ்சித் ந அப்ஸூ ஜந்தவ–90-

நெருப்பினால் ஏற்படும் பீதி கொஞ்சம் கூட இல்லை -பிராணிகள் ஜலத்தில் மூழ்கிப் போகிறதும் இல்லை

வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’
-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:– கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

——-

ஸ சாபி ராம பரிஷத் கத சநை புபூக்ஷயா சக்த மந பபூவஹ –4-36-

அந்த ராமனும் மெதுவாக சபையை அடைந்து கொடவிருந்து அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் குசலவர்கள் காநத்தைக் கேட்பதில் மனப்பற்றுள்ளவனாய் இருந்தான்-

வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;

அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”
-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். -அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.-

———

த்ரஷ்டும் சக்யம் அயோத்யாயாம் ந வித்வான் ந ச நாஸ்திக
ஸர்வே நராச்ச நார்யச்ச தர்ம ஸீலாஸ் ஸூ ஸம்யதா
–6-8-

அயோத்யையில் படிப்பில்லாதவன் காணப்பட முடியாது -நாஸ்திகனும் காணப்பட முடியாது -அனைவரும் தர்ம ஸ்வ பாவமுடையவர்கள் -இந்த்ரிய ஜெயமுடையவர்கள் –

கலை இலங்கு மொழியாளர்–பெரிய திருமொழி-8-1-1-

நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில்   சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –

த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-
பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு  வன்னியம் அறுத்து   நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )

அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள்  ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின
-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை  வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –

ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள் 
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –

தர்ம சீலா
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –

——-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –பால காண்டம் -18-31-

சம்பத்தோடு கூடிய லஷ்மணன் வெளியில் உள்ள ராமனின் உயிர் போன்றவன் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை
 –4-4-8-

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான்
-என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

——-

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
-73-33-

மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே –

————-

ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹுந் ருதூந்
மநஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித
-77-32-

திருவாய் மொழி -23- ஈடு பிரவேசம்-ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
அந்த ராமனோ என்னில் -72 ருதுக்கள் -12 வருஷங்கள் -பிராட்டி திரு உள்ளத்தில் சேர்ந்தாரே -தகப்பனார்கள் பார்த்து திருமணம் செய்ததால் -பித்ரு ஹ்ருதயா –ஐயரை கேட்டே பின்பே திருக் கல்யாணம் –
பங்குனி உத்தரத்தில் திருக் கல்யாணம் -ஒன்றாக கலந்தார்களே -ஜானகி மைதிலி வைதேகி சீதா-இயல் பெயர் –
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ் ரோதஸ் ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் – போக உபத்காதம் -தொடக்க நிலை தாண்ட வில்லையே –
பஹூன் ருதூன் –நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு –அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –
கடல் பள்ளியில் நீங்கி –அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மனம் மாறிற்று -இப்பொழுது தான் அவர் அவர் மனஸ் அவர் இடம் வந்தது –

விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்–6-1-9-விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
(இங்கோ நீள் இரவாய் அன்றோ நீண்டு உள்ளது சங்கு ஒலிக்க பிரஸ்துதமே இல்லையே இங்கு )
ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

‘ராம: –
ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும்
மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.

து –
தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரச தாரையிலே இழிந்த பின்பு,

‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத் கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

‘இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,
‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர்,
இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரம பதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில்
ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு
ஒத்தவராக அவதரித்தாரே யாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலை நின்றார்.

‘அதற்கு அடி என்?’ என்னில், இராச புத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.
விஜஹார – (அனுபவ பூவ என்னாமல் விளையாட்டு )பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி.
பஹூ ந்ருதூந் – ‘ஸமா த்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே.

‘ஸமா த்வாதஸ தத்ராஹம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.
‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று,
அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு கால அவயவங்கள் தோறும்
அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,
‘குளிர் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி.

(வசந்த ருது – சித்திரை, வைகாசி – இளவேனிற்கலம்
கிரீஸ்ம ருது – ஆனி, ஆடி – முதுவேனிற்காலம்
வருஷ ருது – ஆவணி, புரட்டாசி – கார்காலம்
சரத் ருது – ஐப்பசி, கார்த்திகை – குளிர்காலம்
ஹேமந்த ருது – மார்கழி, தை – முன்பனி
சசி ருது – மாசி, பங்குனி – பின்பனி)

மநஸ்வீ –
பிரணய தாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம்
யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று.

தத் கத:
திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;
‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், ‘சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ

அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. இது,
இராவண வதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.-இருவர் வார்த்தைகளும்?

தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: –
இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,
‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழ நிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று
எப்போதும் இந்த நினைவே செல்லுகை -அநு சந்தானமே யாத்திரையாக -ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள்.
தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.

தத் கத – என்கையாலே,
இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி-பரதந்தரமாக- சொல்லிற்று

‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே.
அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி பரதந்தரமாக-சொல்லுகிறது.

இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான்
ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீவாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ தத்வ நிரூபணம்”

April 7, 2024

ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம்புஜம்|
ஸம்ஸாரார்ணவ ஸம் மக்ந ஜந்து சந்தார போதகம்||-
தனியன்

ஸம்ஸாரக் கடலில் அமிழ்ந்த ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸரணடைகிறேன்.

உவமானம் சொல்லி உபமேயம் பின்-அல்லது மாற்றியும் சொல்லுவது உண்டே
சரணாம்புஜம் -புருஷ வ்யாக்ர -திருவடித்தாமரை
பவ அடவி -ஸம்ஸாரம்
ஐந்து -ஜெனியையுடைய-திருநாவாய் -முகுந்தன் -நாவாய் முகுந்தன்

———–

1242-திருவவதரித்து 1350 வரை 108 ஸம்வத்ஸரம் –இருந்தவர்
நாயனார் ஆச்சான் பிள்ளை ஸச் சிஷ்யர்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் —
———45-

தம் பெரிய போதம் உடன் -தமது பெரிய ஞானத்தினால் -ஆசார்ய க்ருபாதீனமான போதம் அன்றிக்கே -ஸ்வ தந்த்ரமான போதம் -என்றபடி
ஏதமில் -குற்றமற்றதான –
பிரதி பதார்த்த ரூபமான வியாக்யானம் -எளிய உரை -என்பதால் பின்போரும் அன்போடு கற்று அறிந்து பேசுகைக்காக-என்கிறார்

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில
———-47-

மன்னார் கோயில் -ஜென்ம ஸ்தானம்– குலசேகரப் பெருமாள் திருவரசு

சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம், த்ராவிடோபநிஷத்  சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை, ரஹஸ்ய த்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம், பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ஸ்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.

————————–

அஸ்மத் ஹித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்
-க்ரந்த கர்த்ரு தனியன்

அஸ்மத் ஹித பரித்ராண-அன்பு பெருகி –
வாதி கேஸரி-வாதிகளில் ஸிம்ஹம்

இவர் அருளிய நூல்களில் ஒன்றான “தத்வ நிரூபணம்” என்னும் க்ரந்தத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அர்த்தம்:

ஆஸீர் வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்தேசம் -மங்களா ஸாஸனம்

அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||
–ஆச்சார்ய வந்தனம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

மாந மேய மயம் ஸர்வம் மதம் யஸ்மிந் நவஸ்திதம்
ஸமஸ்த ஜகதா தாரம் தந் நமாமி ஸ்ரீ யபதிம்

பிரமாணம் ப்ரமேயம் இவற்றுக்குள் அனைத்தும் சேரும்
ப்ரஹ்மத்திடமே நிலை நிற்கும்
மதம் -ஞானம்
அவரே ஜகத்துக்கு ஆதாரம்
அந்த ஸ்ரீயப்பதியை வணங்குகிறேன்

பகவந்தம் யதி வரம் ப்ரணிபத்ய குரூநபி
தத் ப்ரஸாதாத் கரிஷ்யேஹம் ஸம்யக் தத்வ நிரூபணம்
–மங்களா சரணம்

பிரணிபத்ய குருக்களுக்கும் சேர்த்து
கரிஷ்யே -செய்யப்போகிறேன்-தத்துவங்களை உண்மையாக நிரூபிக்கப் போகிறேன் என்றும் கிரந்த திருநாமம் என்றும் கொள்ளலாம்

ஸ்ருதப்பிரகாசர் -13 மங்கள ஸ்லோகங்கள் பாடி விக்னங்களை போக்க வேண்டுகிறார்

————–

அதிகாரம் 1 – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
அதிகாரம் 2 – ஸ்ருஷ்டி – காரணத்வம்
அதிகாரம் 3 – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
அதிகாரம் 4- நரக நிரூபணம்
அதிகாரம் 5 – ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
அதிகாரம் 6 – கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
அதிகாரம் 7 – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்

—————

விஷய ஸூசி கா
பிரதம அதிகாரம்– – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
1- மங்களா ஸாஸனம்
2- பிராமண நிரூபணம்
3-ப்ரத்யஷாதி நிருபணம்
4-வேதஸ்ய பூர்வ உத்தர பாக த்வய ஆத்மதத்வ கதநம்
5-தஸ்ய பரமாத்ம ப்ரதிபாதிகத்வ கதநம்
6- உபமாநாதி பஞ்சகஸ்ய ப்ரத்யக்ஷ அநுமானாக மேஷு அந்தர்பூதகத்வ கதநம்

7- வேத அங்காத்மக சிஷாதி ஸ்வரூப நிரூபணம்
8-பூர்வ உத்தர மீமாம்ஸயோர் ஐக ஸாஸ்த்ர கதநம்
9-ஸ்ம்ருதே இதிஹாஸ புராணயோஸ் ச பூர்வ உத்தர பாக உப ப்ருஹ்மணத்வ கதநம்
10- புராண லக்ஷண நிரூபணம்
11-இதிஹாஸ நிரூபணம்
12-புராண அபேக்ஷய இதிஹாஸஸ்ய பிரா பல்ய கதநம்

13- அஷ்டாதஸ வித்யா ஸ்வரூப நிரூபணம்
14-புராணஸ்ய ஸாத்விகத்வாதி நிரூபணம்
15- அஷ்டாதஸ புராணஸ்ய ருத்ர பரத்வ சங்கா பூர்வக நாராயண பரத்வ ஸமர்த்தநம்
16-வேதஸ்ய நித்யத்வ ஸமர்த்தநம்
17- ஸாங்க்யாதி தந்த்ரஸ் யாபி பரமாத்ம ப்ரதிபதிகத்வ கதநம்
18-ஸாங்க்ய யோக பாஸூபத மத நிரூபணம்

19- பாஞ்ச ராத்ரஸ்ய ப்ராமண தமத்வ ஸமர்தநம்
20- ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபணம்
21-தஸ்ய காரணத்வ நிரூபணம்

லோகத்தில் பரீஷகரானார் ப்ரமாணத்தாலே ப்ரமேயத்தை நிஸ்ஸயிக்கக் கடவர் களாய் இருப்பார்கள்
ப்ரமாணமாவது யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்
ஆகையால் ஸம்யக் அநுபவ ஸாதனம் பிரமாணம் என்று சொல்லுகிற நையாயிகாதிகளைப் போலே கரண பிரமாணம் சொல்லுகை அன்றியே ஞானப் பிரமாணம் சொல்லுகை ஸித்தாந்திகளுக்கு அபிமதமாய் இருக்கும்

பிரமாணம் கருவி ப்ரமேயம் -அறிவால் இது என்று காட்டும்-யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்-உண்மை நிலையைக் காட்டும்-

பிரமாணம் தான்
1-ப்ரத்யக்ஷம் என்றும்
2- அநு மானம் என்றும்
3- ஆகமம் என்றும்
4-உபமானம் என்றும்
5-அர்த்தா பத்தி என்றும்
6-அபாவம் என்றும்
7-ஸம்பவம் என்றும்
8- ஐதிஹ்யம் என்றும் -எட்டு வகையாகச் சொல்லுவார்கள்

ப்ரத்யக்ஷ மேகம் ஸார்வாகா —
கணாத ஸூகதவ் புந அநுமாநாஞ்ச –தச்சாஹு

சாங்க்யாஸ் சப்தஞ்ச தே அபி
நியாய ஏக தேஸி நோப்யேவம் உபமா நஞ்ச கேசந
அர்த்தா பத்த்யா ஸஹைதாநி ஸத்வார்யாஹ ப்ரபாகர
அபாவ ஷஷ்டாந் யேதாநி பாட்டா வேதாந்திநஸ் ததா
ஸம்பவ ஐதிஹ்ய யுக்தாநி தாநி பவ்ராணிகா ஜகு

இதில் ஸார்வாகர் -(லோகாயகர்-)ப்ரத்யக்ஷம் ஒன்றுமே பிரமாணம் என்பர்
வைசேஷிகரும் புத்தர்களும் அத்தோடே அனுமானத்தையும் கூட்டிக் கொண்டு இரண்டு பிரமாணங்கள் என்பர்கள்
நையாயிகரில் பூஷண மதத்தில் உள்ளோர் அவற்றோடு ஆகமத்தையும் கூட்டிக் கொண்டு மூன்று பிரமாணங்கள் என்பர்
உதயந மதித்தில் உள்ளோர் (
புது நியாய சாஸ்த்ரா ப்ரவர்த்தகர்)அதோடு உபமானத்தையும் கூட்டிக் கொண்டு நான்கு பிராமணர்கள் என்பர்
பிரபாகரர் அவற்றோடு அர்த்தா புத்தியையும் கூட்டி ஐந்து பிரமாணங்கள் என்பர்
பாட்டர் அவற்றோடு அபாவத்தையம் கூட்டி ஆறு பிரமாணங்கள் என்பர்
ஐதி ஹாசிகர் அவற்றோடு சம்பவத்தையும் ஐதிஹ்யத்தையும் கூட்டிக் கொண்டு எட்டு பிரமாணங்கள் என்பர்

நிச்சயிக்கப்பட்ட ஹேது அனுமானம்
தேவதத்தன் பருத்து இருக்கிறான் -பகலில் உண்ணவில்லை -இரவில் உண்ணுகிறான் -ஹேது மாறலாம் -இதுவே அர்த்தா பத்தி-

இன்மை காணாமை -அபாவம் -தனி பிரமாணமாக கொள்ளுவார் சிலர்-அனுப லப்தி -இல்லை நான் காணாமையாலே-

ஐதிஹ்ய -வாழ்வும் வாக்கும் -தனி பிரமாணம் -முன்னோர் மொழிந்த முறை செவி வழி

1-இவற்றில் ப்ரத்யக்ஷமாவது –இந்திரியங்களுக்கு அர்த்தங்களோடு உண்டான சன்னிகர் க்ஷத்தாலே அபரோஷமாகப் பிறக்கும் ஞானம்(அக்ஷம் கண்ணைச் சொன்னது அனைத்து புலன்களுக்கும் உப லக்ஷணம்)
2- அநுமானமாவது -வியாப்தமான லிங்க பார்மர்சத்தாலே வியாபகமான ஸாத்ய விஷயக ஞானம்
அதாவது தூம அக்னிகாதிகளுடைய நித்ய ஸஹ சார்யத்தை மஹாந ஸாதிகளிலே கண்டவன் பர்வத கதமான தூம தர்சனத்தாலே அக்னி உண்டு என்று அறுதியிடுகை

லிங்கம் அடையாளம்
பெரியது வியாபகம்
நெருப்பு இருக்கும் இடத்தில் புகை இருக்கும் தேவை இல்லையே -மின்சாரம் -புகை இல்லையே
புகை குறைவு -நெருப்பு அதிகம்

3-ஆகமமாவது -ஆப்த உபதேஸம் -அதாவது வேத வைதிக வசனங்கள்)வேத நூல் ஓதுவது உண்மை-ஆப்த -நம்பத்தக்க -அபவ்ருஷேயம்)
4- உபமானமாவது –ஸத்ருஸ வஸ்து தர்சனத்தில் பூர்வ த்ருஷ்ட்ய ஸாத்ருஸ்ய ஞானம் -அதாவது
முன்பு கோவைக் கண்டவன் பின்பு கவயத்தைக் கண்டால் கோ ஸத்ருசம் கவயம் என்று பிறக்கிற ஸாத்ருஸ்ய புத்தி
5-அர்த்தா பத்தியாவது -அநுப பத்யமான அர்த்தத்தைக் கண்டால் அதுக்கு உப பாதகமான அர்த்தாந்தரத்தைக் கல்பிக்கை -அதாவது
ஜீவிக்கிற புருஷனை க்ருஹத்தில் காணாது ஒழிந்தால் புறம்பே போனானாகக் கல்பிக்கிற ஞானம்
6- அபாவமாவது -ஒன்றினுடைய இல்லாமையை ஸாதித்துக் கொடுக்கிற ஞானம் -அதாவது
இந்த பூ தலத்தில் கடம் முதலானவை இல்லை என்று பிறக்கிற ஞானம் முதலானவை
7- ஸம்பவமாவது -ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் கூடும் என்று பிறக்கும் அறிவு
8-ஐதிஹ்யமாவது -லோக ப்ரஸித்தமான வார்த்தையைக் கொண்டு அர்த்த நிஸ்ஸயம் பண்ணுகை

இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும் அனுமானத்தையும் ஆகமத்தையும் -இம்மூன்றை வைதிகர் பிரமாணமாக பரிக்ரஹிக்கிற அளவில்
ஆப்த உபதேஸ ரூபமான ஆகமத்தை அபவ்ருஷேய மாகையாலே பிரம விப்ர லம்பாதி (
ஐயம் திரிபு)தோஷ ரஹித நித்ய பிரமாமாகையாலே
ஆப்த உபதேஸம் என்று வேதத்தையும்
தந் மூலமான முநி வசநாதிகளையும் சொன்னார்கள்
(ஆர்ஷம் தர்ம உபதேசம் -வேதத்தை மூலமாகக் கொண்ட முனி வசனங்கள்)

இவை ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாம் இடத்தில்
பவ்த்தாதிகளைப் போலே ப்ரமாண்யம்–
(அ
பிராமண்யம் இதி -ஸ்வா பாவிகமாய் )அப்ராமாண்யம் -(ப்ராமாண்யம்) -குண க்ருதமாயும் –
நையாயிதிகளுக்குப் போலே அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் – ப்ராமாண்யம் குண க்ருதமாயும் இருக்கை

யன்றியே ஸர்வ ப்ரகாரத்திலும் ப்ராமாண்யம் ஸ்வதஸ் ஸித்தமாய் அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் இருக்கும்-

இயற்கையில் பொய் அறிவு -புத்தர்
வேதாந்திகள் இயற்க்கையில் நல் அறிவு-தோஷங்களால் பொய்யாகிறது

இப்படி ஸ்வ ஸித்த ப்ரமாணங்களான இம் மூன்றிலும்
ப்ரத்யக்ஷ அனுமானங்கள் இந்த்ரிய க்ரஹண யோக்யங்களில் பிரமாணங்களாய் இருக்கும்
அதீந்த்ரிய அர்த்தத்தில் பிரமாணம் அறிவது -வேதம் ஒன்றுமே
இது தான் தனக்கு ப்ரகாரங்களான -உபகரணங்களான -ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ந்யாய மீமாம்ஸைகளோடே கூடி ஸ விபூதிகனான ஸர்வேஸ்வரனுடைய வைபவத்தைப் ப்ரதிபாதிக்கையிலே தத் பரமாய் இருக்கும்

அதில் கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாகம்
பகவத் ஆராதன விதியிலே தத் பரமாய் இருக்கும்
ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாகம்
பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அறிவித்து அவனை பிராபிக்கையில் தத் பரமாய் இருக்கும்
ஆகையால் -வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய 15-15–என்று பகவா
ன் தானே அருளிச் செய்த படியே க்ருத்ஸ்ன வேதமும் ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும்

இந்த ப்ரத்யக்ஷ அநுமான ஆகமங்கள் மூன்றிலும் –
அல்லாத ஐந்து பிரமாணங்களை அந்தர் பவிக்கும்
அதில் உபமானமும் அர்த்தா பத்தியும் ஸம்பவமும் வ்யாப்தி ஸஹ க்ருதமாகையாலே அனுமானத்திலே ஸம்பவிக்கும்
ஐதிஹ்யம் ஸப்த ஜன்யமாகையாலே ஆகமத்த்திலே அந்தர் பவிக்கும்
அபாவம் -பாவாந்தர பர்யவசாயி யாகையாலே யதா யோகம் ப்ரத்யாஷிகள் மூன்றிலும் அந்தர் பவிக்கும்-

இப்படி ஸ்வத ஸித்த பிரமாண பாவத்தை யுடையவையாய் -ருக் யஜுஸ் ஸாம அதர்வண ரூப சாதுர் வித்யத்தை யுடைய வேதங்களுக்கு
1-சிஷா
2-வியாகரணம்
3-நிருக்தம்
4-ஸந்தோ விஸிதி
5-கல்ப ஸூத்ரம்
6-ஜ்யோதிஸ் ஸாஸ்த்ரம் -(ஆபஸ் தம்ப தர்மே -2)- அங்கங்கள் ஆறாய் இருக்கும்

1- அதில் சிஷையாவது -வர்ண ஸ்வர மாத்ராதி நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
2- வியாகரணமாவது -ப்ரக்ருதி ப்ரத்யயாதி முகத்தாலே அர்த்தாபி தாயகமான பதங்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
3- நிருக்தமாவது -அக்ஷர ஸாம்ய மாத்ரத்தாலே பதங்களில் அர்த்தத்தை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
4-சந்தோ விசிதியாவது –காயத்ரீ உஷ்ணிக் அநுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹநீ பங்க்தி ஜகததீ -சர்வரீ இதி ஸர்வத்ர பா என்கிற ஸப்தஸ் சந்தஸ்ஸூக்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
(பாதத்தில் 6 எழுத்துக்கள் தொடங்கி)
5-கல்ப ஸூத்ரமாவது -வேதார்த்த அனுஷ்டான பிரகார நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
6-ஜ்யோதிஷமாவது -அத்யயன அனுஷ்டானங்களுடைய கால நியமம் பண்ணும் ஸாஸ்த்ரம்

(சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா
–உத்தர சதகம்-18-

ஹே ரங்க நாத

சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்

வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –

பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –

சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்

கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –

கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட

நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்

அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்

புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்

தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே

தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –விசாரிக்கின்றன -என்றவாறு-பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே

நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே)

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
வ்யாக்ரணம் -இலக்கணம்
ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

—————-

சந்த பாதவ் ஸப்த ஸாஸ்த்ரம் ச வக்த்ரம் கல்ப பாணிர் ஜ்யோதிஷம் சஷுஷீ ச -சிஷா கிராணம் ஸ்ரோத்ரமேதத் நிருக்தம் வேதஸ் யாங்காந் யாஹுரேதாநி ஷட் ச -என்று
அவயவ ரூபங்களாகவும் நிரூபிப்பர்கள்

இப்படி ஸ அங்கமான வேதங்களினுடைய அர்த்த தவ்சித்யத்தை பிரமாணாதி நிரூபணங்களாலும் தர்க்க மர்யாதையாலும் ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் நியாய ஸாஸ்த்ரம்(ஆர்ஷம் தர்ம உபதேசம் -கண்டு -எழுதி -நியாய வேத சாஸ்திரம் அவிரோதமாக இருப்பதே தர்மம்)

மீமாம்ஸை யாவது -வேத வேதாந்த அர்த்தங்களுடைய அர்த்த கமஹத்வத்துக்கு உபயுக்தமாக பூர்வ பக்ஷ ஸித்தாந்த ரூபேண உண்டான விசாரம்
இது தான் பூர்வ மீமாம்ஸை -உத்தர மீமாம்ஸை என்கிற பேதேந ப்ரஸித்தமாகையாலும்
கர்ம ப்ரஹ்ம ரூபேண ப்ரதிபாத் யர்த்த பேதத்தாலும் ஜைமிநீயம் பாதாராயணீயம் என்கிற கர்த்ரு பேதத்தாலும்
ஸாஸ்த்ர பேதம் உண்டு என்கிற சங்கைக்கு விஷயமாய் இருந்ததே யாகிலும் நிரூபணீயமான வேதம் உபநிஷத் விசிஷ்டமாகையாலே ஏகமாகையாலும்
ரத கோபுராதி நிர்மாணத்தில் போலே கர்த்ரு பேதம் அப்ரயோஜனகமாகையாலும்
ஸூ மந்தம் ஜைமிநீம் பவ்வம் (பைலர்
)ஸூகஞ்சைவ ஸ்வ மாத்மஜம் -வேதாநத்யாபயாமாஸ –மோக்ஷ -341-19-என்கிற இத்யாதி வசனத்தாலே ஜைமினி ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு நேரே சிஷ்யனாகையாலும்
த்வீபே பதரி காமத்யே பாதராயணம் அச்யுதம் -பராசராத் சத்யவதீ

(ஸர்வ கர்ம ஆராதனாய்
சர்வ தேவ அந்தர்யாமியாய்
ஸர்வ பல பிரதானனாய் ப்ரஹ்மம் இருக்கும்
20 அத்தியாயங்கள்
ரஹஸ்ய த்ரய அக்ஷரங்களும் 20
யதிராஜ விம்சதி -20 ஸ்லோகங்கள் இதனாலே)

புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும்

புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்நதே ஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும் உபாஸன ரூபமான கார்யத்திலே அதி

புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்ந தேஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும்

(கார்ய அர்த்தம் -விதி வாக்கியமும் பல வாக்கியமும்
ஜ்யோதிஷட ஹோமம் செய்து சுவர்க்கம்-இரண்டையும்
ராத்ரீ சத்ர விதி வாக்கியம் உண்டு பலம் இல்லையே
வேறே இடத்தில் பிரதிஷ்டா பலம் கொண்டு கூட்டிக்கொள்ளுவது போல்)

உபாஸன ரூபமான கார்யத்திலே அதிக்ருத்தனான புருஷனுக்கு பலமான ப்ரஹ்ம ஸ்வரூப ரூப குண விபவாதிகள் ஸ்வ அர்த்தங்களில் வேதாந்த வாக்கியங்கள் ப்ரமாணமாகையாலும்

ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைமிநீ யேந ஷோடஸ லக்ஷணேந இது ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி -போதாயன வ்ருத்திகார வசனம் உண்டாகையாலும்(ஸூத்ர -விருத்தி -பாஷ்யம் -மூன்றும் வ்யாஸர் போதாயனர் பாஷ்யகாரர்)
மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-இத்யாரப்ய -அநா வ்ருத்தி ஸப்தாத் அநா வ்ருத்தி ஸப்தாத் -இத்யேதத் அந்தம் சங்கதி விசேஷண விஸிஷ்ட க்ரமம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் வசனம் உண்டாகையாலும் ஏக ஸாஸ்த்ரமாய் இருக்கும்

அதில் ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரதஸ் இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்த அர்த்த ப்ரகாஸ் யதே வாயு புராணம் பூர்வ -4-10–என்கிறபடியே ஆசார்ய வ்யவஹார பிராயச்சித்த ரூப ப்ரதிபாதகமான தர்ம ஸாஸ்த்ரம் -கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது-இதிஹாச புராணங்கள் -ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது
தர்ம சாஸ்திரங்களும் இதிஹாச புராணங்களும் வேதத்தினுடைய அர்த்தத்துக்கு வைஸத்ய ஹேதுவாய்க் கொண்டு உப ப்ருஹ்மணங்களாய் இருக்கும்

அதில் புராணமாவது
சர்க்கஞ்ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச வம்ச அநு சரிதம் சேதி புராணம் பஞ்ச லக்ஷணம் -வாயு புராணம் -என்று
ஸ்ருஷ்ட்டிகளும்
ஸம்ஹாரங்களும்
வம்ஸங்களும்
மன்வந்தரங்களும்
வம்ஸ அநு சரிதங்களும்
ஆகிற பஞ்ச லக்ஷணத்தை யுடைத்தாய் இருக்கிற
ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவம் முதலான கிரந்த ராஸி

பஞ்ச லக்ஷண லஷிதமான புராணங்கள் அல்ப புராணம் என்றும் தச லக்ஷண லக்ஷிதமானவைகள் மஹா புராணம் என்றும் சிலர் சொல்லுவார்கள்
அப்படியே பாகவதத்தில் 12 வது சர்க்கத்தில் 7-8-9–ஸ்லோகங்களில்–சர்க்கோஸ்யாத வி சர்க்கஸ் ச வ்ருத்தி ரஷாந்தராணி -வம்சோ வம்ச அநு சரிதம் ஸம்ஸ்தா ஹேதுர் உபாஸ்ரய தசபிர் லக்ஷணைர் யுக்தம் புராணம் தத் விதோ விது-கேஸித் பஞ்ச விதம் ப்ரஹ்மன் மஹத் அல்ப வ்யவஸ்தயா -என்று சொல்லப்பட்டது

இந்த வசனத்துக்கு விரோதம் வாராமல் கொள்ளவும்

1-சர்க்கோஸ்யாத
2-வி சர்க்கஸ் ச
3-வ்ருத்தி -ஜீவ ஸாதனம்
4-ரஷா
5-அந்தராணி -மன்வந்தரம் -14 மன்வந்தரம் 1000 சதுர்யுகம் ஒரு கல்பம் -நாம் 7 வது மன்வந்தரத்தில் உள்ளோம் -மனு தேவர் மனு புத்திரர்கள் ஸப்த ரிஷிகள் மாறாமல் இருப்பார்கள்
6-வம்சோ
7-வம்ச அநு சரிதம்
8-ஸம்ஸ்தா -பிரளயம்
9-ஹேதுர் -கர்மகாரணம்
10-அபாஸ்ரய -ஆதாரம்


இதிஹாஸமாவது -இந்த லக்ஷண நியம அபேக்ஷை இன்றியே ஸ்ரீ ராமாயணம் மஹா பாரதம் ஸ்ரீ விஷ்ணு தர்மாதியான கிரந்த ராஸி

இவற்றில் புராண நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா -வேதா ஸ்தாநாநி வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்த்த ஸ -மனு என்று தர்ம வித்யா ஸ்தானங்கள் பதினாலாக மனுவும் சொன்னான் –

(வேதங்கள் நாலு
அங்கங்கள் 6
உப அங்கங்கள் 4 என்றும் 8 என்றும் சொல்வர்
அங்க உப அங்கங்கள் -14
வேத சதுஷ்ட்யத்துக்கு-நம்மாழ்வாரது நான்கும் -பரகாலரது ஆறும் -மற்ற எட்டு ஆழ்வார்களது அருளிச் செயல்களும்

நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.
வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.
இவையே நான்கு உபவேதங்கள்-
ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்
அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்
தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்
காந்தர்வ வேதம்– நுண்கலைகள்


இவ்விடத்தில் வித்யா ஸ்தானமாக புராணம் ஒன்றுமே பரிகணிதமாயிருக்க இதிஹாஸத்தையும் கூட்டுவான் என் என்னில்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ருஹ்மயேத் -பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மா மாயம் ப்ரதர்ஷ்யதி -ஆதி பர்வம் -1-2-3-
வேதத்துக்கு ப்ரதாரணமாவது தத் அபி ப்ரேத விபரீத அர்த்த வர்ணநமே என்று வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பரிக்ருஹீத மாகையாலும்
இதிஹாஸ புராணம் -ப்ருஹ உப -6-1-2-
இதிஹாஸன் புராணாநி இதி -என்று
ஸ்ருதியிலும் ஸஹ படிதமாகையாலும்
இதிஹாஸ புராணம் பஞ்சமம் -சாந்தோக்யம் -7-1-1- என்று அல்ப அஸ்த்ரம் அன்றி இருக்க அப்யரஹிதமாகையாலே பூர்வ ப்ரயுக்தமான இதிஹாசத்துக்கு புராணாத் வை லக்ஷண்யம் உண்டாகையாலும்(
அத்தாலே அது முற்பட்டது)
இந்த புராண ஸப்தம் இதிஹாஸத்துக்கும் உப லக்ஷணமாகக் கடவது

அங்காநி வேதாஸ் ஸத்வார மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யாஹ் யேதாஸ் சதுர்தச -விஷ்ணு புராணம் -3-6-27-என்று
எண்ணப்பட்ட இந்த பதினாலு வித்யைகளோடே
ஆயுர்வேதா தநுர் வேதோ வேதோ காந்தர்வ ஏவ ச அர்த்த ஸாஸ்த்ரம் இதி ஹ்யேதா வித்யாஹ் யஷ்டா தச ஸ்ம்ருதா -விஷ்ணு புராணம் -3-6-28- என்று
சரீர ஸ்திதி ஹேதுவான ஆயுர் வேதமும்
ஸத்ரு நிவாரண அர்த்தமான தனுர் வேதமும்
போக உபயுக்தமான காந்தர்வ வேதமும்
ஸம்பத் அர்த்தமான அர்த்த ஸாஸ்த்ரமுமான நாலு உப வேதமும்
சத்வாரமாக உப யுக்தமாகையாலே பதினெட்டு வித்யை என்று சொல்லப்பட்டது இறே
ஆயுர் வேதோ
வைத்ய ஸாஸ்த்ரம் காந்தர்வோ கீதி சாஸநம் -அர்த்த ஸாஸ்த்ரம் தண்ட நீதி தநுர் வேதோ அஸ்த்ர சாஸநம் -ஸத்வார உப வேதாஸ்தே இதி வைஜயந்தீ

இந்தப் புராணங்கள் தான் -யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா –தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே–மாத்ஸ்ய புராணம் -289–15-என்று
ஸர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மாவாய் -அவனுக்கு யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தில் யாதொரு குணம் விஞ்சி இருக்கும் அந்தக் குண அனுபவ குண தேவதையினுடைய மஹாத்ம்யத்தை அந்த புராணங்களிலே சொல்லக் கடவனாகையாலே
அக்நேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்தியதே ராஜஸேஷு ச மஹாத்ம்யம் அதிகம் ஹரே(
ப்ரஹ்மணோ விது) -தேஷ்வேவ யோக ஸம் ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் -சங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே -மாத்ஸ்ய புராணம் -289-என்று தாமஸ கல்பங்களிலே புராணங்களாலே அக்னி சிவர்களுடைய மஹாதம் யத்தையும் ராஜஸ கல்பங்களில் புராணங்களாலே ப்ரஹ்மா தன்னுடைய மஹாத்ம்யத்தையும் -ஸாத்விக கல்பங்களிலே புராணங்களாலே ஸர்வேஸ்வரனான ஹரியினுடைய மஹாத்ம்யத்தையும் -ஸங்கீர்ண கல்பங்களிலே ஸரஸ்வதியினுடையவும் பித்ருக்களினுடைய மஹாத்ம்யத்தையும் சொல்லக் கடவனாய் இருக்கும்

இதில் ஸாத்விக புராண ஏக நிஷ்டரானவர்கள் யோக முகத்தாலே ஞானத்தைப் பெற்று பர கதியைப் பெறுவார்கள் என்று சொல்லுகையாலே பகவத் பிரதி பாதகங்களான ஸாத்விக புராணங்களே ப்ராமாண்யத்தில் ப்ரக்ருஷ்டங்களாய் இருக்கும் -ஆனால் இதர தேவதா ப்ரதிபாதகங்களான ராஜஸ தாமஸ ஸங்கீர்ண புராணங்கள் அப்ரமாணம் இத்தனையோ என்னில் -அவற்றிலும் பகவத் உத்கர்ஷ ப்ரதிபாதகத்வம் விசிஷ்டமாகையாலே (பொதுவாகையாலே)தன் நிபந்தமான ஸாத்விக்யம் உண்டான அம்சத்தில் யதா ஞான சாதகத்வம் அடியான ப்ராமாண்யத்தில் குறை யில்லை-

அஷ்டா தஸ புராணேஷு தசபிர் கத்யதே சிவ -என்று பதினெட்டு புராணத்திலும் பத்து புராணத்தாலே சிவன் சொல்லப்படுகிறான் என்று உண்டாய் இருக்க -ஸகல புராணங்களும் பகவத் ப்ரதி பாதகங்கள் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டா தச புராணாநி புராணாஜ்ஞா ப்ரசக்ஷதே -1-ப்ராஹ்மம் 2-பாத்மம் 3-வைஷ்ணவஞ்ச 4-சைவம் 5-பாகவதம் ததா -ததாந்யம் 6-நாரதீயஞ்ச 7-மார்க்கண்டே யஞ்ச ஸப்த தமம்–ஆக்நேய மஷ்ட மஞ்சைவ பவிஷ்யந் நவமம் ஸ்ம்ருதம் -தசமாம் ப்ரஹ்ம கை -வை -வர்த்தம் 11-லைங்க மேகா தசம் ஸ்ம்ருதம் -12-வராஹம் த்வாதஸஞ்ச 13-சைவ ஸ்காந்தம் ஸாத்ர த்ரயோதஸம் -சதுர்த ஸம் வாமநஞ்ச கௌர்மம் பஞ்சத ஸம் ததா –மாத்ஸ்யஞ்ச காருடஞ்சைவ பிரஹ்மாண்டஞ்ச தத பரம் சர்க்கஸ் ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச -ஸர்வேஷ் வேதேஷு கத்யந்தே வம்ஸ அநு சரிதஞ்ச யத் யதேதத் தவ மைத்ரேய புராணம் கத்யதே மயா ஏதத் வைஷ்ணவ ஸம்ஜ்ஞம் வை பாத்மஸ்ய சமனந்தரம் சர்க்கே ச ப்ரதி சர்க்கே ச வம்ஸ மன்வந்த்ராதி ஷு கத்யதே பகவான் விஷ்ணு அஸேஷேஷ்வேவ சத்தம -என்று
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே புராணங்கள் பதினெட்டையும் அநுக்ரமித்து இப் புராணங்கள் எல்லாவற்றிலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப்படுகிறான் என்று சொல்லுகையாலும்

ஏவமேவ புராணேஷு தச ஸ்வஷ்டஸூ நான்யதா -என்று பதினெட்டு புராணத்திலும் பகவானே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாத்யன் அல்லது தத்வாந்தரம் அன்று என்று புராணாந்தர வசனம் உண்டாய் இருக்கையாலும் இனி ஸர்வ புராணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாத்யன்
தேவதாந்த்ர உத் கர்ஷம் சொல்லுகிற இடம் பகவான் நிஸ்ருஷ்ட காரண புருஷத்வாதி (
ஆதி ஸம்ஹார புருஷன்)பத பிராப்தி உடையராகையாலே தத் விபூதி நிபந்தமான உத்கர்ஷ ப்ரதிபாதனத்திலே தாத்பர்யமாகக் கடவது

1-புராணாதிகளிலே (ஆதி ஸ்ம்ருதி போல்வன)ஸர்வ ஜகத்தினுடைய யுகபத் (ஒரே சமயத்திலே)ஸம்ஹாரதிகளைச் சொல்லுகையாலும்–2- ஆகாச விசேஷ குணமான சப்தத்துக்கும் ஸ்வ ஆஸ்ரயமான ஆகாஸத்தோடே ஸம்ஹாரம் உண்டாகையாலும் (தன் மாத்திரை பூத ஸூஷ்மம் தத்வம் -சப்தாதி குணங்கள் வேறே -24 தத்துவங்களில் இவை இல்லையே)3-வர்ணாத்மகமான சப்தத்துக்கு புருஷனுடைய தால்வாதி (தாலு -தாடை)வ்யாபார ஜன்யத்வம் உண்டாகையாலே கர்த்ரபேஷை உண்டாகையால் புருஷ புத்த் யன்வய மூலத்வம் ஸம்பாவிதமாகையாலும் -4-இதா நீ மிவ ஸர்வத்ர த்ருஷ்டாந்தாதி கமிஷ்யதே -என்கிற மீமாம்ஸக மர்யாதையாலே வேதத்துக்கு அவிச்சின்ன பாட ஸம் ப்ரதாயம் அசம்பாவித மாகையாலே (குரு முக உச்சாரண அநு உச்சாரண அத்யயனம்
(வேத அத்யயனம் குரு பூர்வகம் )அக்ஷர ராசி கிரஹணம்ஸம்பாவிதம் இல்லையே) வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்கள் கூடும்படி எங்கனே என்னில் -ஸப்த நித்யத்வம் கொள்ளுகிற பக்ஷத்திலும் அத்யேத்ரு புருஷா அவிச்சேத நிபந்தமான பாட ஸம்ப்ரதாய விச்சித்தி இறே நித்யத்வாதிகளுக்கு மூலமாயிற்று –

அது ஸகல ஸம்ஹார அவஸ்தையிலும் குறையில்லை -அதாவது ஸூப்த ப்ரபுத்தரான உபாத்யாயாதிகள் பூர்வ உச்சாரண க்ரமத்தை ஸ்மரித்து சிஷ்யாதிகளை அத்யயனம் பண்ணுவிக்குமா போலே -ஸம்ஹ்ருதி சமயங்களிலே ஸர்வேஸ்வரன் இந்த வேத சந்தர்ப்பத்தைத் (ஆனு பூர்வியை வரிசைக் கிரமத்தை)தன் திரு உள்ளத்திலே ஸம்ஸ்கார விசேஷத்திலே இட்டு வைத்து ஸ்ருஷ்ட்டி காலத்திலே இந்த வேத ஸப்தங்களாலே ஸ்மரிக்கப்பட்ட நாம ரூபங்களை ஸ்ருஷ்ட மான அவ்வோ அர்த்தங்களிலே வ்யாகரித்து -வ்யாபரித்து -(பிரித்து வைத்து)உறங்கி உணர்ந்த பிரஜைகளை பிதா ஓதி வைக்குமா போலே ப்ரஹ்ம ப்ரமுகரான ஸர்வ ப்ராணிகளையும் யோக்யதா அநு கூலமாக அத்யயனம் பண்ணுவித்து அவ்வவருடைய ஹிதங்களையும் சாஸித்துக் கொண்டு போருகையாலே அஸ்மர்யமாண (நினைவிலே வராததான)கர்த்ருத்வாதி நிபந்தநமான வேத ப்ராமாண்யம் வ்யவஸ்திதம் என்றதாயிற்று(தேவதாதிகரணம் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தவை ஒற்றியே இங்கு)

வாஸா விரூப நித்யயா -என்று ஸந்தர்ப்ப விசேஷண ரூபத்தாலே வாக்கு நித்யையாய் இருக்கும் என்று ஸ்ருதி தன்னிலும் சொல்லிற்று(சப்தம் நித்யம் அல்ல ஆனு பூர்வி நித்யம் என்றதாயிற்று)
ஏததேவ ச வேதாநாம் அபவ்ருஷேயத்வம் நித்யத்வஞ்ச -யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார விஸேஷேண தமேவ க்ரம விஸேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யமாணத்வம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -என்று பாஷ்யகாரரும் வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்களை ஸம்ஸ்கார ரூபமான ஸந்தர்ப்ப நித்யதா நிபந்தனமாக அருளிச் செய்தார் இறே
இப்படி புருஷ புத்தி மூலத்வாதி தோஷம் இல்லாமையாலே நித்தியமான வேத ராஸி ஸ்வத ஏவ ஸூத்ருட ப்ரமாணம் என்றதாயிற்று
(சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்)

இப்படி ஸ அங்க உப அங்கமான ஸகல வேதங்களும் ஸர்வேஸ்வரனையே ஏக கண்டமாக ப்ரதிபாதிக்கும் அளவில் சாங்க்ய யோக பாஸூபத -பாஞ்ச ராத்ர ரூப தந்த்ர விசேஷங்கள் ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாகிற படி என் என்னில்
1-சாங்க்யம் 2-யோக 3-பஞ்ச ராத்ரம் 4-வேதா 5-பாஸூ பதம் ததா -கிமேதான் யேக நிஷ்டாநி ப்ருதங் நிஷ்டாநி வா முநே -மோஷ -350-1- என்று மஹா பாரதத்தில் நிஷ்டா நிர்ணயாத் யாயத்திலே பஞ்ச ஸித்தாந்த நிர்ணயத்திலே -ஸாங்க்யாதி பஞ்ச ஸித்தாந்தங்களும் ஏக தத்வ ப்ரதிபாதகங்களோ – ப்ருதக் தத்வ ப்ரதிபாதகங்களோ -என்று ப்ரஸ்னம் பண்ண
பஹவோ ஹி யதா மார்க்கா வி சந்தி ஏகம் மஹா புரம் -தத் ஞாநாதி ஸர்வாணி பிரவிசந்தி தமீஸ்வரம் -பாரத வசனமாக -நாரஸிம்ஹ புராணம் -ச 64-68-என்று
பல வழியும் ஒரு படை வீட்டிலே புகுருமாப் போலே ஸர்வ ஞானங்களும் ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும் என்று உத்தரம் சொல்லுகையாலே ஸர்வ ஸித்தாந்தங்களும் ஸர்வேஸ்வரனையே பிரதிபாதிக்கக் கடவது
(ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு-வ்யாபனாத் தாரணாத் ஸ்வாமித்வாத் இத்யாதி புருஷோத்தமன் ஒருவனே)

அதிலே வேதமானது கர்த்ராத்ய பாவத்தாலே நிர்த் தோஷமாய்க் கொண்டு பகவத் ப்ரதி பாதனத்திலே ப்ரபல பிரமாமாகையாலே அல்லாத நாலு ஸித்தாந்தங்களும் தன் மூலங்களாய்க் கொண்டு ப்ரமாணங்களாகக் கடவன-
அதில் சாங்க்ய -யோக -பாஸூ பாதிகள் வேத விருத்த அம்சம் ஒழிய ப்ரமாணங்களாகக் கடவன-அதாவது
1-சாங்க்யன் ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரனுடைய ஸகல இதர வ்யாவ்ருத்தமாய் வேதாந்த வேத்யமான ஸ்வரூபத்தை இசையாதே பஞ்ச விம்சதி தத்வ மாத்ரத்த்லேயே பர்யவசித்து அந்த பஞ்ச விம்சதி புருஷனை உதா ஸீனனாகவும் சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-1-

பிரதானம் புருஷன் -இரண்டையும் -செம்பருத்திப்பூ ஸ்படிக்கல் இரண்டும் அருகில் -இருக்க அசித்தின் தன்மை ஏறிட்டு –
குருடன் நொண்டி -சேர்ந்து -வழி சொல்ல நடக்க -கர்த்ருத்வம் ஒருவன் இடம் ஞாத்ருத்வம் ஒருவனிடம் -உலகம் நடக்கும் –
விவேக ஞானத்தால் மோக்ஷம்
நிரீஸ்வர சாங்க்யன் -ஸ்ரீ பாஷ்யத்தில்
கபிலர் –
தேவபூதி கடைசிப்பிள்ளை -தாயாருக்கு உபதேசம் -பக்தி ஈஸ்வரன் எல்லாம் சொல்லுவார்
சேஸ்வர சாங்க்ய மதம்

ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-

அனுமானம் -பிரதானமானது
ந -ஜகத் காரணம் அல்ல
ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
உபாதான காரணத்வம் கூடாது என்று
ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது

2-யோகி யானவன் யோக ஸாஸ்த்ரத்தில் ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம் யோக ஜன்யமாய்க் கொண்டு ப்ரதி பலநம் போலே ஓவ்பாதிகமாம் ஒழிய ஸ்வ பாவிகம் அல்ல என்று சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-3-

இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –-ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-

வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –

ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே

ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –

3- பாஸூ பதன் பிச்சையுண்ணி எம்பெருமான் என்னுமாப் போலே சாப உப ஹதனான ருத்ரனை பரமேஸ்வரனாக ப்ரமித்தான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-

இவர்கள் மூவருக்கும் இந்த வேத விருத்த அம்சங்கள் ஒழிய -1-தத்வ க்ரம உத்பத்தி கதநத்திலும் -2-யோக ஸ்வரூப ப்ரதிபாத நத்திலும் -3-யோக பிரகார உப பாத நத்திலும் -4-உபாஸ்ய உபாஸக பாவாதி ப்ரதிபாதனத்திலும் விரோதம் இல்லாமையாலே அந்த அந்த அம்சங்களில் இந்தத் தந்திரங்கள் ப்ரமாணங்களாகக் குறையில்லை

ஆனால் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும்
வாஸூ தேவாத் ஸங்கர்ஷணோ நாம ஜீவோ ஜாயதே (
சங்கர்ஷணன் இடம் இருந்து பிரத்யும்ன என்னும் மனஸ் பிறக்கிறான்-என்று மேலும் சொல்லும்)-ப்ரஹ்ம ஸம்ஹிதா -என்று வேதாந்த விருத்தமான ஜீவ உத்பத்தியாதிகளைச் சொல்லுகையாலே அதிலும் தந்த்ர சாமான்யத்தாலே வேத விருத்த அம்சம் உண்டாய் இருந்ததே என்னில் -ப்ரஹ்ம ஸூத்ர -2-2-39-40- அங்கே ஜீவ அதிஷ்டாத்ரு ரூபமான ஸங்கர்ஷண வ்யூஹத்தினுடைய உத்பத்தி சொல்லுகிறது –
ஆகையாலே ஜீவ உத்பத்திக்கு ப்ரஸங்கம் இல்லாமையாலும்
இதம் மஹ உபநிஷதம் ஸர்வ வேத ஸமந்விதம் -சாந்தி பர்வ -340-111-என்று ஸகல வேத அநு கூலத்வம் இந்த பாஞ்சராத்ர வசனத்திலே ஸித்தமாகையாலும்
பகவான் தான் பர வ்யூஹ விபவாதிகளுடைய யாதாத்ம்யத்தை ஸ ப்ரகாரமாக ஸாத்விகாதிகளிலே -ஸாத்விக ஸம்ஹிதைகளிலே -அருளிச் செய்கையாலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸனமும் ப்ரமாணமாகக் கடவது(ஒன்றும் இடாமல் எல்லாம் -சகல எல்லாம் விட இதுக்கு முழுமை உண்டே) -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-41-42-

(2-2-எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்

ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

———

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிரமாண தர்மம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-

இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து

ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்

இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

————–

இங்கன் அன்றிக்கே
சாங்க்யாதிகளுக்கும் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸ ப்ரமாணமாம் கொள்ளத் தேடில் ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ ப்ரசங்க இதி சேத் ந அந்நிய ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ பிரசங்காத் –ப்ரஹ்ம ஸூத்ர -2-1-1-என்கிற அதிகரணத்திலே -ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளுக்கு ப்ராமாண்யம் கொள்ளுமளவில் ஜகத்துக்கு ப்ரஹ்ம உபாதாந காரத்வம் சொல்லுகிற மன்வாதி ஸகல ஸ்ம்ருதிகளுக்கு அநவகாசமாகிற தோஷம் வரும் என்று வேதாந்த ஸூத்ரத்திலே உப பாதிக்கையாலும்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய -யாஸ் ச காஸ் ச குத்ருஷ்டய -ஸர்வாஸ்தா நிஷ்பலா ப்ரேத்ய நமோ நிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா -மநு -12-95- என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸ்ம்ருதிகள் தமஸ் கார்யமான அஞ்ஞாந வர்த்தகைகள் ஆகையாலே நிஷ் பிரயோஜனங்களாய்க் கொண்டு ஸம்ஸார வார்த்திகைகளாம் -என்று மநு வசனம் உண்டாகையாலும் சாங்க்யாதிகளுக்கு ப்ராமாண்யம் கவாசித்தகமாய் ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்துக்கு ப்ராமாண்யம் சார்வத்ரிகம் என்றதாயிற்று

(ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1–ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-

முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –

ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –

அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்

ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்

இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –

ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-

வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து)

ஆகையால் ஸ அங்க உப ப்ரும்ஹண ஸர்வ தந்த்ர ஸஹிதமான ஸமஸ்த வேதங்களும் ஸகல விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய ஸமாப் யதிக ரஹிதமான வைபவத்தையே ஸம்யக் ப்ரதி பாதனம் பண்ணுகின்றன என்றதாயிற்று(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்)

இதி தத்துவ நிரூபணே பிரமாண நிரூபணம் நாம பிரதம அதிகாரம் ஸம் பூர்ணம்

————–

த்விதீயதிகாரம்– – ஸ்ருஷ்டி – காரணத்வம்
1-தஸ்ய திரிவித காரணத்வ நிரூபணம்
2- தஸ்ய உபாதாந காரணத்வ நிரூபணம்
3-ஸ்ருஷ்டி த்வைவித்ய கதநம்
4- சமஷ்டி ஸ்ருஷ்டி நிரூபணம்
5-அவ்யக்த நிர்ணயம்
6-மஹத் தத்துவ நிர்ணயம்
7-தத்ர ஸாத்விக புத்தி நிரூபணம்
8-தத்ர ராஜஸ புத்தி நிரூபணம்
9-தத்ர தாமஸ புத்தி நிரூபணம்
10-மஹத் தத்தவாத அகங்கார உத்பத்தி கதநம்
11-வைகாரிக அஹங்காராத் ஏகாதஸ இந்த்ரிய உத்பத்தி கதநம்
12- ஏகாதஸ இந்த்ரியாணாம் பூதாதே உத்பத்தி கத ந வசநாநாம் அந்நிய பரத்வ கதநம்
13-ஞான இந்திரிய பரிகணநா
14-கர்ம இந்திரிய பரிகணநா
15- மனஸ-ஞான கர்ம இந்த்ரிய உபய ஸஹ காரித்வ கதநம்
16-இந்த்ரியாணாம் அணுத்துவ சமர்த்தனம்
17-பூதாதேஸ் தன்மாத்ராத் யுத்ப்பத்தி கதநம்
18- பரமாத்மந பூத உத்பத்தி கதந வசநாநாம் தாத்பர்ய கதநம்
19-தன்மாத்ராதே ராகாஸாத் யுத் பத்தி க்ரம நிரூபணம்
20- பஞ்சீ கரண பிரகார கதநம்
21-அண்ட ஸ்ருஷ்டி பிரகார நிரூபணம்
22-சதுர்முக ஸ்ருஷ்டி கதநம்

———-

இப்படி வேத வேத்யமாய் -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான பரதத்வம் ஓன்று -அதுவே முமுஷுக்களுக்கு ஞாதவ்யம் -அதுக்கு ஞாபகமான லக்ஷணங்கள் ஏதென்னில்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த் யபி -ஸம் விஸந்தி – தத் விஜிஜ்ஞாஸஸ்வ -தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு -1-1-என்று(
வர்ணன் பிள்ளை பிருகு -அவனுக்கு உபதேசம்)
ஜகஜ் ஜென்ம ஸ்திதி லயங்கள் வேதாந்தங்களிலே யுக்தம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்ம ஸூத்ரம் 1-1-1- என்று ப்ரஹ்ம ஞானத்தை விதித்த வேதாந்த ஸூத்ரம் அந்த ப்ரஹ்மதுக்கு லக்ஷணமாக –
ஜந்மாத் யஸ்ய -1-1-2- என்கிற ஸூத்ரத்தாலே ஜகத்தினுடைய ஜன்ம ஸ்தேம லயங்களை ஸூசிப்பித்ததே இறே

ஜகத்துக்கு ப்ரஹ்மத்தின் பக்கல் உண்டான ஜென்ம ஸ்தேம லயங்களாவன உத்பத்தி ஸ்திதி விநாஸங்கள்

அதிலே ப்ரஹ்மத்துக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வமாவது
கடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான காரத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ -என்னில் -அப்படி அன்று –
லோகாதி கார்ய உத்பத்தியில்
உபாதாநம் என்றும்
நிமித்தம் என்றும்
ஸஹ காரி என்றும்
காரணங்கள் மூன்று
அதில் உபாதாந காரணமாவது -கார்ய ஸ்வரூபத்திலே அந்தர் பவிக்கும் படி யாதொரு வஸ்துவினுடைய ஸ்வரூபத்தை உபாதாநம் பண்ணி (
பரிணாமத்தை உண்டாக்கி)காரியத்தை உத்பாதிக்கிறான் -அது உபாதாந காரணம் -அதாவது
கடமான கார்யத்திலே ம்ருத்தான காரண ரூபத்தை ஸ்வீ கரித்து அத்தை உண்டாக்கினாப் போலே
நிமித்த காரணமாவது -அந்த உபாதாந ஸ்வரூபமான ம்ருத்தை குலாலன் விகரிக்குமா போலே கார்யா காரேண விகரிக்குமது
ஸஹ காரி காரணமாவது -குலாலன் ம்ருத்தாலே கடத்தை உத்பாதிக்குமளவில் தண்ட சக்ராதிகளைப் போலே கார்ய உத்பத்திக்கு உபகரணமாமவை
இவை மூன்றும் லோகத்தில் ஒன்றினுடைய சக்தி ஒன்றுக்கு இல்லை -(
இயத்தா ராஹித்யம்)
ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாம் அளவில் இவை மூன்றும் தானேயாய் இருக்கும் என்று ஸ்ருதி சொல்லிற்று

சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்-பரிணாமம் அடையலாம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்–பஹு ஸ்யாம் ப்ரஜாயேய
ஞான சக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி காரணம்-வேர் முதல் வித்தாய்

அதாவது -கிம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் -யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு -( நிஷ்ட தஷு-என்கிற இடத்தில் (ஆற்றல் உடன் படைக்கப்பட்டவை)பஹு வசனம் விவஷிதமன்று -ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் திவஞ்ச ப்ருதி வீஞ்ச -என்று த்யாவா ப்ருத்வியாதிகளுக்கு ஏக கர்த்ருகத்வ ஸ்ரவணத்தாலே கர்த்ரு பஹுத்வம் ஸம்பவியாமையால் இப்படியே ஸ்ருத ப்ரகாஸி காச்சார்யர் அருளிச் செய்தது -1-4-25-)
மநீஷிணோ மனஸா ப்ருச்ச தேது தத் யதத் யுதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் அஷ் -2-8-7-8–என்று
லோக த்ருஷ்டி மர்யாதையாலே நிமித்த உபாதாநாதிகளை பின்னமாக பிரதிபத்தி பண்ணி யாதொரு வஸ்து புவனங்களைத் தரித்துக் கொண்டு நின்று நிமித்தத்தைச் சொல்லி
யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு -என்று யாதொன்றாலே த்யாவா ப்ருத்விகளை வகுத்தார்கள் -அந்த வனம் எதுவென்றும் அந்த வ்ருக்ஷம் எதென்றும் உபாதானத்தையும் ததிதர உபகரணத்தையும் பிரித்து ப்ரஸ்னம் பண்ணி
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு மநீஷிணோ மனஸா விப்ரவீ மிவ –ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் -2-8-9-8-என்று
அதிஷ்டிக்கும் நிமித்த காரணமும் உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று த்ரிவித காரணமும் ப்ரஹ்மமாகச் சொல்லிற்று-

(சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25–வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே-நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-)

(கிம்ஸ்வித் -இத்யாதி –
அத்ர ஸாயநாசார்ய பாஷ்யம் -லோகே ஹி க்ருஹம் சிகீர்ஷு புமான் வனம் கத்வா –தத்ர கஞ்சித் வ்ருக்ஷம் சித்வா ததீயை காஷ்டை -க்ருஹம் நிர்மிமீதே –தத் த்ருஷ்டாந்தேன அத்ராபி (
இன்புறும் இவ்விளையாட்டுடை விமலன் -தன்னை தனது பயனுக்காக உருவாக்கினான்)-யத யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதிவீ -த்யு லோக பூ லோகவ் நிஷ்டதஷு- தக்ஷணேந நிர்மிதார -நிர்மிதவந்த தாத்ருசம் வனம் கிம்ஸ்வித் பவேத் கஸ் ச தாத்ருஸ ஸ வ்ருக்ஷ ஆஸீத்- ஹே மநீஷிண -புத்தி மந்த -மனஸா -ஸ்வ கீயேந விசார்ய- ததித மரத்த த்வயம் ஆசார்ய ஸமீபே ப்ருச்சத மிஞ்ச -யத் காரண பூதம் வஸ்து புவநாநி -ஸர்வாந் லோகான் ஸ்வாத்மநி தாராயன் அத்யதிஷ்டத் -நியமன கரோத் -ததிது ததபி ப்ருச்சத யதுக்தம் மநீஷிணாம் ப்ரஸ்ன த்ரயம் (காடு எது வனம் எது)தஸ்ய ஆச்சார்ய உத்தரம் ப்ரூதே -யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதி வ்யவ் நிர்மிமீதே (தாங்குவது யார்)தத் வந ஸ்தாநீயம் வ்ருக்ஷ ஸ்தா நீயம் ப்ரஹ்ம ஏவ -தஸ்ய ஸர்வ சக்தித்வாத் -யஸ்ய உத்பாத் யஸ்ய சா சாமக்ர் யபேஷிதா ஸா ஸர்வா தஸ்மிந் வித்யதே ததேவ ப்ரஹ்ம ஸர்வாணி புவநாநி அஸ்மின் தாரயதி நியமயதி ச ஹே மநீஷிண ஆசார்யோஹம் மனஸா நிச்சித வ -யுஷ்மத்ப்யம் விப்ரவீமி விவிதம் உத்தரம் ப்ரவீமி இதி )

(அபூர்வ அர்த்த ப்ரதிபாதனமே வேதம் -யதார்த்த கதனம் வேதம் -அனைத்துக்குள்ளும் ப்ரஹ்மம் -அனைத்தையும் ஸ்ருஷ்டித்து தரித்து நியமித்து -ஸ்வாமித்வம் ப்ரஹ்மமே -வேதம் கொண்டே அறிகிறோம்-ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் -ஒன்றை அறிந்தால் அனைத்துமே அறிந்ததாகுமே-ஒன்றை அறிந்தால் -ப்ரஹ்மத்தை அறிந்தால் -அது சத்தாகவே இருந்தது -ஒன்றாகவே இருந்தது -இரண்டாவது அற்றதாகவே இருந்தது-ஸஹ காரி அற்றதாக இருந்தது -ஒன்றாகவே இருந்ததுஉபாதானமும் ப்ரஹ்மமே -இதன் காரியமே ஸகலமும்
அசத்தைக் காரணமாக் கொண்டது ஜகத்து இல்லையே-பஞ்ச ஸ்தவம் -சத்- -ஆத்மா-ஞானமுடையது -ப்ரஹ்மம் -பெரியது -யவன் அவன் -விவரித்து -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-தத்வம் ஆத்மா ஜ்யோதிஸ் -பரம் ஒவ்வொன்றுக்கும் நாராயணனே )

இந்த அர்த்தம் -ஸதேவ ஸோம்யேத மக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் –6-2-1- என்று காரண வாக்யத்தில் ஜகத்து ஏகமாகக் கொண்டு லயிக்கும்படி உபாதான ஸச் ஸப்த வாஸ்ய வஸ்து -அத்விதீயம் என்று சொல்லுகையாலே அதிஷ்டாந்தர்த்தைக் கழித்து நிமித்த உபாதாநாதிகள் எல்லாம் ஏக பூத வஸ்து என்றும் சொல்லப்பட்டது

அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதாநத்வ ரூப உபய லிங்க விஸிஷ்ட நித்ய பரி ஸூத்த ஸ்வ பாவ பர ப்ரஹ்மம்
ஜடத்வ துக்கித்வ யுக்தமான சித் அசித் மக பிரபஞ்சத்துக்கு உபாதாநமாம் படி எங்கனே என்னில்
நிர்தோஷ ப்ரமாணமான வேதாந்த பாகத்தில் காரண வாக்யங்களாலே சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய உபாதானாதி பாவத்துக்கு அந்யதா ஸித்தி இல்லாமையாலே ப்ரமாண அனுக்ராஹகமான உபபத்தி விசேஷங்களாலே இவ் வர்த்தத்தை வேதாந்த வித்துக்கள் நிஷ்கர்ஷியா நின்றார்கள் –
எங்கனே என்னில்

ப்ருதிவ் யப்ஸூ லீயதே -ஸூபா உபநிஷத் -என்று துடங்கி தத்துவ க்ரமத்திலே லயத்தைச் சொல்லி – மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் (விபக்த)தமஸ் லீயதே -தமஸ் பரே தேவ ஏகீ பவதி -என்று
மஹத் தத்துவத்துக்கு லய ஸ்தானமான அவ்யக்தம் தன்னுடைய ஸூஷ்ம தஸா ரூபமான அக்ஷர தமோ அவஸ்தமாய்க் கொண்டு பர தேவதை பக்கலிலே ஏகீ
பவிக்கும் என்கையாலே

(அவ்யக்தம் அக்ஷரம் விபக்த தமஸ் அவிபக்த தமஸ் -நான்கும்-பிரகிருதியின் நான்கு அவஸ்தைகள்-விதை-தண்ணீர் பருத்து வெடித்து –முளை விட்டு மேல் -வருவது போல்-மெழுகு தங்கத் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் ஜீவ சமஷ்டிகள் ஒட்டிக்கொண்டு இருக்கும் பிரகிருதி அக்ஷரம்–குணங்கள் சமமாக இருப்பது அவ்யக்தம் –ஸூஷ்ம பரிணாமங்கள் இவை -ஸ்தூல பரிணாமங்கள் மேல் மஹான்-குண வைஷம்யம் மஹானில் -அஹங்காரம் -ஸூஷ்மம் -கண்ணுக்குப் புலப்பாடாதது -விபுவாக இருந்தாலும்
ப்ரஹ்மம் பிரகிருதி – -காலம் இவை அனைத்துமே விபு ஸூஷ்மம்
ஏகீ பவதி ஒன்றாக -ஒன்றி விடும் -ஒன்றாம் என்னும் இவ் வல்லல் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-ஜீவ த்வாரா அதிஷ்டானம் -நேராக அதிஷ்டானம் இரண்டு வகை அசித்க்குள் உண்டே-)

சித் அதிஷ்டித்தமான அவ்யக்தினுடைய ஸூஷ்ம அவஸ்தை அக்ஷரமாய் -அக்ஷரத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையை தமஸ்ஸாகாச் சொல்லுகையாலே புஷபத்தினுடைய முகுள கோரகத்ய வஸ்தைகள் போலே தத்வாந்தரம் இன்றியிலே ஒன்றினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே மஹாதாதிகளோ பாதி நாம ரூப விபாகத்துக்கு அர்ஹமில்லாத ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை தமஸ் ஸப்தத்தாலே சொல்லி அதுக்கு பரமாத்மாவின் பக்கல் ஏக பாவம் சொல்லுகையாலே காரண பூத பர ப்ரஹ்மதுக்கு ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டத்வம் அவர்ஜனீயம்
ஆகையிறே –
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தாவ்யக்த ஸ்வ ரூபிணீ -புருஷஸ் சாப்யு பாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39-என்று

சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பரமாத்மாவின் பக்கலிலே லயத்தைச் சொல்லிற்று –
இப்படி ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மத்தை இதிலே ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -சாந்தோ -6-2-1- என்று முதலான வாக்கியங்கள் ஜகத் காரணமாகச் சொல்லுகிறன
இப்படி இவைகளுக்கு லய ஸ்தானமாகையாலே ப்ரஹ்மம் ஜகத் உபாதான காரணம் என்றதாயிற்று

இந்த ப்ரஹ்மம் ஜகத் உபாதாநமாம் இடத்து
நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் -ஸ்வே -6-18-
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்த -1-1-என்று
விகாராதி ரஹிதமாக ஸ்ருதி ஸித்தமான ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதோ என்னில்
ஸூஷ்ம சித் அசித் மிஸ்ரமான பர ப்ரஹ்மம் ஸ்தூல சித் அசித் மிஸ்ரமான ஜகதாகாரத்தை உடைத்தாமளவில் ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதபடி ஜகத்துக்கு உபாதாநமாய் பரிணமிக்கக் குறையில்லை-

அதாவது –
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய அசித் அம்சத்திலே ஸ்வரூப பரிணாமம்
சித் அம்சத்திலே ஞானமாகிற ஸ்வ பாவத்திலே சங்கோச விகாஸ ரூப பரிணாமமுமாய் -சித் அம்சத்துக்கு ஸ்வரூப பரிணாமம் இன்றியிலே ஒழிகிறவோ பாதி –
உபய நியந்தாவான ப்ரஹ்ம அம்சத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டிலும் பரிணாமம் இன்றியிலே பஹு ஸ்யாம் -சாந்தோ -6-2-3–என்கிற தாதாத்மிக ஸங்கல்ப ரூப பரிணாமமே யாகையாலே சித் அசித்துக்களோ பாதி ஸ்வரூப விகாரம் ஸ்வ பாவ விகாஸ சங்கோசாதிகளாகிற தோஷ ரூப பரிணாமம் இன்றியே கர்த்ருத்வ லக்ஷணாதி ஸித்தமான ஸத்ய சங்கல்பாதிகளும் நியந்த்ருத்வ ஸித்தமான ஞான சக்த்யாதி குண உத்கர்ஷமுமாகிற வைலக்ஷண்ய அதிசயம் பிரகாசிகையாலே விகாரத்துக்கும் கல்யாண குண யோகத்துக்கும் ஒரு குறை இல்லை
இப்படி உபாதானமான பர ப்ரஹ்மம் தானே தன்னுடைய ஸத்ய சங்கல்பத்வாதிகளாலும் ஞான சக்த்யாதி குண யோகத்தாலும் ஸ்வ சரீர பூத சித் அசித்துக்களை அதிஷ்டித்து கார்ய ரூபமான அவஸ்தாந்தரா பத்தியைப் பண்ணுவிக்கையாலே நிமித்த காரணமாய் இருக்கும்
தன்னுடைய ஸர்வ ஸக்தி யோகத்தாலே இதர நிரபேஷமாக காரியத்தை உத்பாதிக்கையாலே ஸஹ கார்யாந்தர ஸா பேஷமுமாய் இராது
ஆகையால் ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மம் என்றதாயிற்று

இப்படி ப்ரஹ்மாத்மகமான ஸூஷ்ம சித் அசித்துக்கள் ஸ்தூலமான ஜகதாகாரமாய்க் கொண்டு ஸ்ருஷ்டமாமளவில்
சமஷ்டி என்றும்
வ்யஷ்டி என்றும்
ஸ்ருஷ்டி த்விவிதமாய் இருக்கும்
அதில் சமஷ்டியாவது -பிரம உத்பத்தி பர்யந்தமான ஆத்ய ஸ்ருஷ்டி
வ்யஷ்டி ஸ்ருஷ்டி யாவது – அண்டாந்தர வர்த்தியான லோக லௌகிக ஸ்ருஷ்டி-

அதில் சமஷ்டி ஸ்ருஷ்டியில் -ஆஸீதி தம் தமோ பூதம் அப்ரஜ்ஞாதம் லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்த மிவ ஸர்வத-மநு -1-5- என்று ஞான சூன்யமாய் விபாக லக்ஷண ரஹிதமாய் -விசார யோக்யம் இன்றியிலே விசேஷ ஞான விஷயம் இல்லாதபடி ஸூப்தமாய்க் கொண்டு அவிசேஷிதமாய் தமோ வஸ்தமாய்க் கொண்டு தன் பக்கலிலே ஏகீ பவித்த இந்த ஜகத்தை –
ப்ராது ராஸீத் தமோ நுத -மநு -1-6- என்று ஸ்வரூபாத் விபக்தமாம்படி ப்ரேரித்து ஸ்ருஷ்டி யுன்முகனாய் தமஸ்ஸை அக்ஷரமாக்கி -அக்ஷரத்தை அவ்யக்தமாக்கும்
இவ் வக்ஷர தமஸ் ஸுக்கள் அவ்யக்தத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே தத்வாந்தரம் அல்ல என்று முன்பே சொல்லப்பட்டது-

இந்த அவ்யக்த்தமாவது -த்ரி குணம் தஜ் ஜகத் யோநி அநாதி பிர்பவாப்யயம் -ஸ்ரீ விஷ்ணு புராண -2-21-1- என்கிறபடியே
ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயத்தை ஸ்வ பாவமாக உடைத்தாய் மஹதாதி சமஷ்டி வ்யஷ்டி ரூப ஜகத்துக்குக் காரணமாய் உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்தியமாய்
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –கீதா -7-13- என்கிறபடியே பகவானுக்கு லீலோ பகரணமாய் -ஸ்வ ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு துரத்யயமாய் பகவானுக்கு ப்ரகார தயா சேஷமாய் -சதத பரிணாமியாய் இருக்கும்
ஆக விறே -விகார ஜநநீம் அஜ்ஞாம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம் -மாந்த்ரீக உபநிஷத் -3–என்றும்
(அவ்யக்தம் மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் ஆகிய அஷ்ட)அசேதநா பரார்த்தா ச நித்யா சதத விக்ரியா -பரம ஸம்ஹிதா -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் இதினுடைய ஸ்வபாவங்களை பஹு ஸ ப்ரதிபாதித்தது-

இதனுடைய விகாரமாவது –
ஸூஷ்ம ரூபமாய் ஸ்தூல ரூபமாய் இருந்துள்ள த்வி விதமான ஸ்வரூப பரிணாமம்
அதில் ஸூஷ்ம பரிணாமம் நாம ரூப விபாக நிர்தேச அநர்ஹமாய் இருக்கும்
ஸ்தூல பரிணாமம் மஹதாதியான கார்யமாகையாலே நாம ரூப விபாக நிர்தேச அர்ஹமாய் இருக்கும்
இந்த மஹதாதி பரிணாமியாய் ஜகத் உத்பத்திக்கு உபயுக்தமாய் அறுவது ஸூஷ்ம பரிணாமம்
இந்த அவ்யக்தத்துக்கு ஸ்வரூப ப்ரயுக்தமான ஆகார விசேஷம் இத்தனை இறே
பரிணாமமாவது ஸூஷ்ம தசையோடு ஸ்தூல தசையோடு வாசியற உண்டான பூர்வ அவஸ்தா பரித்யாக பூர்வகமான அவஸ்தாந்தர ப்ராப்தி
அது ஸ்தூல தசையிலே வந்தவாறே கார்யம் என்று சொல்லப்படும்
அவஸ்தாந்தரா பத்தி ரேவ ஹி கார்யதா ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-என்று இறே ஸ்ரீ பாஷ்யகார வசனம்
அந்த அவ்யக்தம் குண ஸாம்யம் அநுத் ரிக்தம் ந்யூ நஞ்ச மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-34- என்று காரண தசையிலே ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயங்களாகிற ஸ்வ பாவங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று ந்யூநாதி ரேகங்கள் உண்டாதல் -க்ருத்ஸ் உத்ரேகம் உண்டாதல் செய்யாதே சம ஸ்வ பாவமாய் இருக்கும் –

குண ஸாம்யாத் ததஸ் தஸ்மாத் ஷேத்ரஞ்ஞாதிஷ்டி தான்மு நே -குண வ்யஞ்ஜன ஸம் பூதி சர்க்க காலே த்விஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -1-2-33- என்று
இப்படி குண ஸாம்யமுடைத்தாய் ஷேத்ரஞ்ஞானான பத்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும் வ்யக்த குணோந்மேஷ ஹேதுவாகையாலே குண வ்யஞ்ஜனம் என்று பேரான மஹத் தத்வம் உத்பன்னமாம்
அந்த மஹத் தத்வம் -ஸாத்விகோ ராஜஸஸ் ச ஏவ தாமஸஸ் ச த்ரிதா மஹாந் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-2- என்று ப்ரகாஸ ப்ரவ்ருத்தி மோஹோன்நேயமான சத்வ ரஜஸ் தமோ ரூப குணான்வயத்தாலே
சாத்த்விகம் (ப்ரகாஸ
)ராஜஸம் (ப்ரவ்ருத்தி)தாமஸம் (மோஹ)என்று மூன்று வகையாய் இருக்கும் –

1-இதில் ஸாத்விக புத்தியாவது -ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்யாகார்யே பயாபயே –பந்த மோக்ஷஞ்ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ —கீதா 18-30- என்று
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளினுடையவும் கார்யா கார்யங்களினுடையவும் பயாபயங்களினுடையவும் பந்த மோஷங்களினுடையவும் யதாவத் வ்யவசாயம் -என்றும்

2- ராஜஸ புத்தியாவது -யயா தர்ம மதர்மஞ்ச கார்யஞ்சா கார்யமேவ ச -அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ –18-31-என்று
தர்மாதர்மங்களையும் கார்யா கார்யங்களையும் அந்யதாவாக அறுதியிடுகை என்றும்

3-தாமஸ புத்தியாவது -அதர்மம் தர்மமிதி யா மன்யதே தமஸா வ்ருதா ஸர்வார்த்தான் விபரீதாம்ஸ் ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ -18-32–என்று
அதர்மத்தைத் தர்மமாகவும் தர்மத்தை அதர்மமாகவும் -இப்படி ஸர்வார்த்தங்க ளையும் விபரீதங்களாகவும் நிஸ்ஸயிக்கை என்றும் கீதாச்சார்யன் கீத உபநிஷத்திலே புத்தி த்ரை வித்யத்தை அருளிச் செய்தான் இறே

இப்படி புத்தி லக்ஷணமான மஹானை ஸ்வ காரணமான ப்ரதான தத்த்வம் ஆவரிக்கும் -அங்குர உத்பாதகமான பீஜத்தை அதனுடைய த்வக்கு -தோல் -ஆவரித்து இருக்குமா போலே -அவ்யக்தத்தாலே ஆவ்ருத்தமான மஹத் தத்துவத்தில் நின்றும் அபிமான கார்ய உன்னேயமான அஹங்காரம் உத்பன்னமாம் –
இவ் வஹங்காரம் அபிமான ஹேதுவாகையாவது -தேஹாத்ம அபிமாநாதிகளான அதஸ் மிம்ஸ் தத் புத்தியை ஜநிப்பிக்கை
இவ் வஹங்காரம் தான் வைகாரிகஸ் தேஜஸஸ் ச பூதாதிஸ் சைவ தாமஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-35- என்று ஸாத்விக ராஜஸ தாமஸ ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும்
தைஜஸம் என்றும்
பூதாதி என்றும்
மூன்று வகையாய் இருக்கும்
ஏவம் விதமான அஹங்காரத்தை ஸ்வ காரணமான மஹத் தத்வம் ஆவரித்து இருக்கும்
குண க்ருதமான த்ரை வித்யத்தை யுடைத்தான மஹத் தத்துவத்தால் உண்டான ஆவரணம் இறே அஹங்கார த்ரை வித்யத்துக்கு ஹேது

இதில் வைகாரிகமாவது -ஸாத்விக -அஹங்காரமாகையாலே இதில் நின்றும் சத்த்வ கார்யமான லகுத்தவ ப்ரகாஸகாத்வங்களை உடைத்தான இந்த்ரியங்கள் உத்பன்னமாம்
ஸாத்விக அஹங்காரத்தில் நின்றும் –இத்யாதி கபாட –
இந்த்ரியங்களை -தைஜஸாநி இந்த்ரியாண்யாஹு தேவா வைகாரிகா தச –ஏகாதஸம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-49- என்று வைகாரிக -தேவாதிஷ்டிதங்களாகையாலே தேவ ஸப்த இந்த்ரி யங்கள் பதினொன்றும் தைஜஸமான ராஜஸ அஹங்கார கார்யமோ -வைகாரிகமான ஸாத்விக அஹங்கார கார்யமோ என்று மத பேதத்தாலே விகல்பித்து வைகாரிக கார்யங்கள் என்று ஸ்வ ஸித்தாந்தத்தாலே ஸ்ரீ பராசர பகவான் நிஸ்ஸயிக்கையாலே இந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்கார கார்யங்களாகையாலே நையாயிக மர்யாதையாலே பூத விசேஷ பரிணாமங்களும் அல்ல என்னும் இடம் ஸம் பிரதிபன்னம்

இவ் விந்த்ரியங்களுக்கு இதிஹாஸத்திலே பூத சர்க்கம் சொல்லுகிற இடம் -பாரதம் சாந்தி -291-10-11-பூதங்களால் உண்டான ஆப்யாயந மாத்ரத்தைப் பற்ற இந்த்ரியங்கள் தான் ஞான இந்த்ரியங்கள் என்றும் கர்ம இந்த்ரியங்கள் என்றும் இரண்டு
1- அதில் ஞான இந்த்ரியங்களாவன -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்கள் ஆகிற விஷய பஞ்சகத்தையும் ப்ரதி நியாமாய்க் கொண்டு க்ரஹிக்கிற ஸ்ரோத்ர -த்வக் -சஷு ர் -ஜிஹ்வா -கிராணங்கள் என்கிற ஐந்தும்
2-கர்ம இந்த்ரியங்களாவன -வசன -தான -கமன -மூத்ர -புரீஷ நிஸ் சரண ஹேதுவான வாக் -பாணி -பாத -பாயூ பஸ்தங்கள் என்கிற ஐந்தும் -ஸப்தாதி பஞ்சகத்தையம் அடைவே ஒட்டி யிருக்கும் –

ஸ்ரோத்ர க்ராஹ்யமான ஸப்த விஷயமாயும் -த்வக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும் -சஷுர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருதஹி ஹேதுவாயும் -ரஸநா விஷய ரஸாஸ்ரயமான ஜலத்தினுடைய நிஸ் சரண ஹேதுவாயும் -க்ராண விஷய கந்த ஆஸ்ரய பிருதிவி யம்சமான அந்நாதிகளில் ருஜீஷோத்ஸர்ஜ்ந ஹேதுவாயும் இருக்கும்

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

மனஸ் ஸூ உபய ஸஹ காரியாகையாலே ஞான இந்த்ரியமுமாய் கர்ம இந்த்ரியமுமாயும் இருக்கும் -உபயாத் மகம் மந -என்று இறே சொல்லுவது –
இந்திரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வ்யஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்

தேஷாம் து அவயவான் ஸூஷ்மான் ஷண்ணாம் அப்யமிதவ் ஜஸாம் -சன்னிவேஸ்ய ஆத்ம மாத்ரா ஸூ ஸர்வ பூதாநி நிர்மமே –மநு -1-16-என்று அணுக்களாகையாலே ஸூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்ம மாத்ரைகளிலே (தன் மாத்ரைகளிலே)பிரவேசிப்பித்து ஸர்வ பூதங்களையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டித்தான் என்று மனு வசனம் உண்டாகையாலே –

இதில் ஸூஷ்மான் -என்கையாலே -அணவஸ் ச -ப்ரஹ்ம ஸூத் -2-4-6- என்கிற ஸூத்ர மர்யாதையாலே இந்த்ரியங்கள் அணு என்றும்
அவயவான் -என்கையாலே இந்த்ரியங்கள் தோறும் வ்யக்தி பாஹுள்யம் உண்டு என்றும்
ஆத்ம மாத்ரைகளிலே கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத் ஸம்ஹாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத் க்ராம தீஸ்வர –க்ருஹீத் வைதாநி ஸம்யாதி வாயுர் கந்தாநி வாசயாத்–கீதை -15-8- என்கிறபடியே சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போதும் இந்த்ரியங்களைக் கிரஹித்து கொண்டு போம் என்று தோற்றுகிறது
ஷண்ணாம் -என்றும் மனஷ் ஷஷ்டாநி என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை -இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே
(ருசி வாசனைகளை இவையே கொண்டு செல்லும்)

(ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6--இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –என்று பூர்வபக்ஷம்–அத்தை நிரசிக்கிறார்-அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –)

இனி பூதாதி ஸப்த வாஸ்யமான தாமஸ அஹங்காரத்தனின்றும் தன் மாத்ரா பஞ்சகமும் -தத் விசேஷமான ஆகாசாதி பூதங்களும் உத்பன்னமாம்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -ஆகாஸாத் வாயுர் -வாயோர் அக்னி -அக்னேர் ஆப அத்ப்ய பிருதிவீ -தைத்த ஆனந்த -1-2- என்று
பரமாத்மாவின் பக்கல் நின்றும் ஆகாசாதி பூதங்கள் க்ரமேண உத்பன்னமாம் என்று ஸ்ருதி சொல்லா நிற்க -தாமஸ அஹங்காரத்தினின்றும் பஞ்ச தன்மாத்திரைகளும் பூதங்களும் உத்பன்னலாம் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டவ் ப்ரக்ருதய ஷோடஸ விகாரா -என்று அவ்யக்த மஹத் அஹங்காரங்களும் தன் மாத்ராதி பஞ்சகமும் காரணமாகவும் இந்த்ரியங்கள் பதினொன்றும் பூத பஞ்சகங்களும் கார்யங்களாகவும் ஸ்ருதி சொல்லுகையாலும்
மூல ப்ரக்ருதிர் அவி க்ருதிர் மஹதாத்யா ப்ரக்ருதி விக்ருதயஸ் ஸப்த -ஷோடஸ கஸ் ச விகாரோ ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ -சாங்க்ய கௌமு -3-என்று சாங்க்யன் தத்வ விபாகம் சொல்லுகிற இடத்தில் மூல ப்ரக்ருதி ஒன்றின் கார்யாமன்றியிலே தான் எல்லாவற்றுக்கும் காரணமாய் இருக்கையாலே ப்ரக்ருதி என்றும் மஹதாதி சப்தகமும் ப்ரக்ருதி காரியமாய் ஒன்றுக்கு ஓன்று காரணமாயும் கார்யமாயும் உண்டாய் இருக்கையாலே ப்ரக்ருதி விக்ருதிகளாய் இருக்கும் என்றும்
புருஷன் ஒன்றுக்கு காரணமாய் இருத்தல் காரியமாய் இருத்தல் செய்யாமையாலே ப்ரக்ருதியும் அல்லன் விக்ருதியும் அல்லன் என்று சொல்லுகையாலும் இங்கு தன்மாத்ர உத்பத்தி ஒழிய பூத உத்பத்தி கூடாமையாலும் பூதங்களுக்கு தன் மாத்ரா பூர்வகத்வமும் அவற்றுக்கு அஹங்கார கார்யத்வமும் கொள்ள வேணும் இறே
ஆனால் பரமாத்மாவின் பக்கல் நின்றும் பூதங்கள் உத்பன்னமாம் என்று சொல்லுகிற ஸ்ருதிக்கு தாத்பர்யம் என் என்னில் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமாய் ஸச் ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே ஸகல ஜகத்துக்கும் உபாதானமாகையாலே ப்ரக்ருத்யாதி தத் தத் அவஸ்தா வஸ்திதனான பரமாத்மாவின் பக்கல் நின்றும் தன் மாத்ரா ஸஹிதமான பூத உத்பத்தியைச் சொல்லுகையிலே ஸ்ருதிக்கு தாத்பர்யமாகக் கடவது-

ஆகை யிறே -ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி -சாந்தோ -6-2-3- என்று சாந்தோக்யத்திலே காரண வஸ்துவினுடைய ஈக்ஷண அந்வயத்தைச் சொல்லுகிற இடத்தில் -தத் தேஜஸ் ஐக்ஷத -சாந்தோக் -6-2-2-4- என்றும் தா ஆப ஐஷந்த -6-3-2- என்றும் ததன்நமைக்ஷத -என்றும் தேஜோ பன்னங்களான பூதங்களுக்கு (தேஜஸ் அப்பு அன்னம்)ஈஷண அந்வயம் சொல்லிற்று -அநு ப்ரவேஸம் அடியாக தத் தச் சரீர விஸிஷ்டனான பரமாத்ம அந்வய முகத்தாலே இறே -அல்லது அசேதனங்களான இவற்றுக்கு ஸங்கல்ப ரூப ஞானம் ஸம் பாவிதம் அல்ல -ஆகையிறே
ஹந்தாஹமி மாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று இந்த அசித் தத்வங்களினுடைய நாம ரூப ஸித்தி அநு ப்ரவேஸ நிபந்தந மேயாகச் சொல்லிற்று
இங்குச் சொன்ன தேஜோ பன்ன மாத்ரங்கள் ஸ்ருத் யந்திரத்தில் சொன்ன ஆகாஸ வாயுக்களுக்கும் அவ் யக்த மஹத் அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்

தச குணித உத்தரம் ஆவரண ஸப்தகம் -ஒன்றுக்கு ஓன்று தச மடங்கு -ஏழு ஆவரணங்கள் -ஸப்த ஆவரணங்கள்-இமையோர் வாழும் தனி முட்டை -ஷீராப்தி ஆறாவது –

ஏவம் பூதமான தாமஸ அங்காரத்தின் நின்றும் ஆகாசத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையான ஸப்த தன் மாத்ரை பிறக்கும்
தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தன் மாத்ரம் தேந தன் மாத்ரதா ஸ்ம்ருதா –தன் மாத்ராண் யவிசேஷாணி அவிசேஷாஸ் ததோ ஹி தே ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாஸ் சா விஸேஷிண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-84-85- என்று அவ்வோ பூத விசேஷங்களினுடைய அவ்யக்தா விசேஷ குணோந் மேஷமான ஸூஷ்ம ஆகாஸத்துக்கு தன் மாத்ரம் என்று பெயர்

தன் மாத்ராண் ய விசேஷாணி என்று இவற்றுக்கு ஸ்தூல அவஸ்தா பூதங்களான பூதங்களைப் போலே சாந்தத்வாதி விசேஷம் தோற்றாமையாலே இவற்றை அவிசேஷங்கள் என்று சொல்லக் கடவது
இந்த ஸப்த தன் மாத்திரத்தில் நின்றும் இதினுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த ஸப்த குணகமான ஆகாஸம் உத்பன்னமாம் -இந்த ஸப்த தன்மாத்ரையும் ஆகாஸத்தையும் பூதாதியான தாமஸ அஹங்காரம் ஆவரிக்கும் -இப்படி தாமஸ அஹங்கார ஆவ்ருதமான ஸ்தூல ஆகாஸ ஸஹ க்ருதமாய்க் கொண்டு விக்ருதமான ஸப்த தன் மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை உத்பன்னமாம் -இதில் நின்றும் ஸ்பர்ச குணமான வாயுவானது பிறக்கும் -இந்த ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவையும் ஸ்வ காரணமான ஸப்த தன்மாத்திரை ஆவரிக்கும் -ஸப்த தன் மாத்ராத்தாலே
ஆவ்ருதமான வாயு ஸஹ க்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தன் மாத்திரத்தில் நின்றும் ரூப தன் மாத்ரம் உத்பன்னமாம் -இதில் நின்றும் ரூப குணமான தேஜஸ்ஸூ பிறக்கும் –வாயோர் அக்னி -தைத்த -1-2- என்று தேஜோ விசேஷத்தை ஸ்ருதி சொல்லிற்றே யாகிலும் தேஜஸ் ஸாமான்யத்துக்கும் உப லக்ஷணமாகவே கடவது -இந்த ரூப தன் மாத்ரையும் தேஜஸ்ஸையும் ஸ்வ காரணமான ஸ்பர்ச தன் மாத்திரை ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் தேஜஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரூப தன் மாத்ரையில் நின்றும் ரஸ தன் மாத்ரை பிறக்கும் -அதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் -இந்த ரஸ தன் மாத்ரையும் ஜலத்தையும் ஸ்வ காரணமான ரூப தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் அம்பஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரஸ தன் மாத்திரத்தில் நின்றும் கந்த தன் மாத்ரம் உத்பன்னமாம் -அதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வி பிறக்கும் -அந்த கந்த தன் மாத்ரையும் ப்ருதிவியையும் ஸ்வ காரணமான ரஸ தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் –
இப்படி உத்தர உத்தர தன் மாத்திரைகளுக்கு பூர்வ பூர்வ தன் மாத்ர ஆவ்ருதத்வமும் பூர்வ பூர்வ பூத ஸஹ காரத்வமும் சொல்லுகிற இது
ஆத்யாத் யஸ்ய குணாநேதான் ஆப்நோதி ச பரஸ்பர -மநு -1-20- என்று உத்தர உத்தர பூத குணங்களிலும் பூர்வ பூர்வ பூத குணங்கள் அநு வர்த்திக்கைக்காக

ஆகையால் ஆகாஸத்துக்கு ஸப்தம் ஒன்றுமே குணமாய்
வாயுவுக்கு ஸப்த ஸ்பர்சங்கள் இரண்டும் குணமாய்
தேஜஸ் ஸுக்கு ஸப்த ஸ்பர்ச ரூபங்கள் மூன்றும் குணமாய்
ஜலத்துக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்கும் குணமாய்
ப்ருதிவிக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ காந்தங்கள் ஐந்தும் குணமாய்ச் சொல்லப்பட்டது ஆய்த்து

ஆகாஸம் ஸப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் சாமாவிசத் -ரூபம் ததைவ விசத ஸப்த ஸ்பர்ச குணா வுபவ் –ஸப்த ஸ்பர்சஞ்ச ரூபஞ்ச ரஸ மாத்ரம் சாமாவிசத் தஸ்மாச் சதுர் குணாஹ் யாபோ -விசேஷாஸ் சேந்த்ரிய க்ரஹா -விஜ்ஜே யாஸ்து ரஸாத் மிகா –லிங்க -90-43-44-என்கிற புராணாந்தர வசனத்தாலும்
தேப்யஸ் தன்மாத்ரேப் யோ யதா சங்க்யமேகே த்வி த்ரி சது பஞ்சப்யோ பூதான் யாகாஸ நில நல ஸலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே -என்று இதில் அதி க்ருதனான சாங்க்ய வாசஸ்பதி வசனத்தாலும் பூர்வ பூர்வ தன் மாத்ரா ஆவ்ருதத்வம் அவஸ்யம் கொள்ள வேணும்

இப்படி உப பன்னங்களான மஹதாதி விசேஷாந்தமான பதார்த்தங்கள் அண்டமாகப் பரிணமிக்கும் அளவில் பரஸ்பர சங்கங்களானால் அல்லது அண்ட உத் பாதகங்கள் ஆக மாட்டாது
நாநா வீர்யா ப்ருதக் பூதா ததஸ்தே ஸம் ஹிதம் விநா நா ஸக்நுவந் பிரஜா-ஸ்ரஷ்டும் அஸமாகம்ய க்ருத்ஸ்ந ஸ -ஸமேத யாந்யோந்ய ஸம் யோகம் பரஸ்பர சமாஸ்ரயா -ஏக சங்காத லஷ்யாஸ் ச ஸம் ப்ராப்யைக்ய மஸேக்ஷத — மஹ தாத்யா விசேஷாந்தாஹ் யண்ட முத்பாத யந்திதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-52-53-54-என்கிறபடியே
சாந்தத்வ -கோரத்வ -மூடத்வங்களாலே நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் இருக்கிற இம் மஹதாதி பதார்த்தங்களை பரஸ்பர ஸம்ஹதி யாவது ஏது என்னில்
ஆகாஸாதி பூதங்களுக்கு புராணங்களிலே ஏவம் ஜாதேஷு பூதாநி ப்ரத்யேகம் ஸ்யுர்த் விதா தத –சதுர்த்தா பின்னமேகைகம் அர்த்த மர்த்தம் ததா ஸ்திதம் வ்யோம் நோர்த்தா பாகாஸ் ஸத்வாரோ வாயு தேஜஸ் பயோ புவாம் –அர்த்தாநி யாநி வாயோஸ் து வ்யோம தேஜஸ் பயோ புவாம் -என்று துடங்கி விபஜித்து பஞ்சீ கரணம் சொல்லப்பட்டது -அதாவது
ஆகாசாதி பூதங்கள் ஐந்தினையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி -அவற்றிலே ஒரு கூறை நாலு கூறாக்கி -அந்தக் கூறுகளை பூதாந்தரங்கள் நாலிலும் விபக்தர்த்தங்களிலே கூட்டி -ஸர்வ பூதங்களிலும் ஸர்வ பூதங்களும் உண்டாம்படி பண்ணுகை
இப்படி பஞ்சீ க்ருதமானாலும் அவிபக்தங்களான அர்த்தங்கள் ப்ரதானங்களாய் நிற்கையாலே ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்குக் குறையில்லை
இப் பஞ்சீ க்ருத பூதங்களோடே கூட மஹத் அஹங்காரங்களும் ண்ட உத்பாதகங்களாகச் சொல்லுகையாலே அவற்றினுடைய ஸம்மேளந ஸித்திக்காக சப்தீ கரணம் என்றும் சொல்லுவார்கள் –

(அனைத்து நதிகளும் கங்கையில் கலந்த பின்பும் கங்கை என்ற பெயரிலே ஓடும் -அதே போல் இவை அவற்றின் பெயராலே வ்யவஹாரம் பண்ணக் குறையில்லையே)

ஆனால் தாஸாம் த்ரி வ்ருதம் த்ரி வ்ருதம் ஏகைகாம் கரவாணி –சாந்தோ -6-3-3- என்று சாந்தோக்யத்திலே த்ரி வ்ருத் கரணத்தைச் சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜோ அப ந்ந தத்வ த்ரய மாத்ர உத்பத்தியைச் சொல்லிற்று ஆகையாலே அவ்வளவிலே பர்யவசித்தது -ஸ்ருத் யந்தர ஸித்தமான பூதாந்தர உத்பத்தியிலும் ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே இங்கும் ஸித்தம் என்று கொள்ள வேணும் -ஆகையாலே தேஜோ ஆபந்ந ஸ்ருஷ்டி தத்வாந்தரங்களுக்கும் உப லக்ஷணமானாப் போலே த்ரி வ்ருத்த கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம் என்றதாயிற்று

அண்டத்துக்குள்ளே மஹதாதி காரியங்களும் காண்கையாலே மஹதாதி பதார்த்தங்கள் எல்லாவற்றுக்கும் ஸம் மேளனம் அவர்ஜநீயம் -ஆகையாலே பூதேப்யோண்டம் மஹா புத்தே ப்ருஹத் ததுதகே ஸயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-55-என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் -அது உதகத்திலே கிடக்கும் –
அப ஏவ ஸ ஸர்ஜாதவ் தாஸூ வீர்யமபாஸ்ருஜத்–ததண்ட மபவத்தை மம் ஸஹஸ்ராம் ஸூ ஸம ப்ரபம் –மனு -1-8 என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னவிடம் பூதாந்தரத்துக்கும் உப லக்ஷணம் -அதாவது
பூர்வ பூதங்களோடே ஸம் ஸ்ருஷ்டமாய் பிருத்வியும் தன் அகவாயிலே லீனையாகக் கிடக்கிற ஜல தத்துவத்தில் நின்றும் அண்டம் உத்பன்னமாய் அதிலே கிடக்கும் என்று -என்றபடி

இந்த அண்டம் க்ரமேண பரிணமிக்குமோ -ஏக காலத்திலே பரிணமிக்குமோ என்னில் -ஒரோருப்படையாக -இட்டு அகமெடுக்குமா போலே க்ரமேண பரிணமிக்கை யன்றியே -தத் க்ரமேண விவ்ருத்தம் ஸத் ஜல புத் புத வத் சமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2–55- என்று நீர்க் குமிழி போலே ஏக காலத்திலே உத்பன்னமாம்

இப்படி அண்டம் உத்பன்னமாம் போது -அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்ய யுதாநி ச -ஈத்ருஸா நாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27- என்று புராணங்களிலே பரஸ்பர ஸத்ருசமாய்க் கொண்டு அஸங்கயாதமான அண்டங்கள் –
ஏக காலே அபி ஸ்ருஜ்யந்தே ஸம் ஹ்ரூயந்தே ச பூர்வ வத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-17- என்கிற படியே க்ரமத்தாலே தனித் தனியே உத்பத்தி விநாசங்கள் உண்டாகை யன்றியே யுகபதேவ ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை உடையவையாய் இருக்கும்

இவ் வண்டத்துக்குள்வாயிலே பரிணதங்களான ஆகாசாதி பூதங்களை அதிஷ்டித்து (14)லோகங்களை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் தேவாதி சதுர்வித பூத விபாகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் கர்ம வஸ்ய ஸமஸ்த சேதன ஆஸ்ரய சரீரனாகையாலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவானவன்(ஆதார ஆதேய பாவம் மட்டுமே
அப்ருதக் ஸித்த விசேஷணம் பரமாத்மா ஒருவன் இடமே
மூன்று லோகம் அழியும் பொழுது கீழ் 7 லோகங்களும் இந்த மூன்று லோகங்களும் நான்முகன் இடம் ஆஸ்ரயம் என்றவாறு)தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதா மஹ -மநு -1-9- என்கிறபடியே ஜகத் உத்பாதகரான ப்ரஜாதி ப்ரப்ருதிகளுக்கும் உத்பாதாகனாகையாலே பிதா மஹ ஸப்த வாச்யனாயக் கொண்டு வ்யஷ்டி ஸ்ருஷ்டி யர்த்தமாக பகவத் ஸங்கல்பத்தாலே உத்பன்னனாம்

இப்படி அண்ட உத்பன்னனான ப்ரஹ்மாவுக்கு பத்ம ஜத்வாதி சொல்லுகிற பிரமாணங்கள் ஆத்ய ஸ்ருஷ்டிகளில் உத்பத்தி பேத விவேக தையாலே யாகக் கடவது
இந்த ப்ரஹ்ம உத்பத்தி பர்யந்தையான மஹதாதி சமஷ்டி ஸ்ருஷ்டி ஸத்ய ஸங்கல்பனான ஸர்வேஸ்வரனுடைய பஹு ஸ்யாம் -சாந்தோ -6-3-2- என்கிற அவ்யவ ஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
ப்ரஹ்மோ பஞ்ஞமான வ்யஷ்டி ஸ்ருஷ்டி தத் அந்தர்யாமியான பரமாத்மாவினுடைய வ்யவஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
ஆகை யாலே –
தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11
ப்ரஹ்மணோ அஸ் ருஜத் ப்ரபு
மாம் த்வம் பூர்வம் அஜீஜந -உத்தர காண்டம் -104-4
என்று பகவத் ஸ்ருஷ்டனாக பிரமாணங்கள் சொல்லுகின்றன இறே

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
–3–

இதி தத்துவ நிரூபணே சமஷ்டி ஸ்ருஷ்ட்டி நிரூபணம் நாம த்விதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –

———————

த்ருதீய அதிகாரம்- – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
1-சதுர் தச புவந நிர்ணயம் -ஸப்த பாதாள நிரூபணம்
2-அநந்தஸ்ய பாதாளாதி தாரகத்வ கதநம்
3-தஸ்மாத் காலாக்நி ருத்ர உத்பத்தி கதநம்
4-பூ மண்டல ஸ்வரூப கதநம்
5- பூ மண்டல உபரி வர்த்தமாந மேரு ஸ்தான நிரூபணம்
6-மேரோ பார்ஸ்வஸ்த வர்ஷ பர்வத நாமாதி கதநம்
7-பாரத வர்ஷாதி நிரூபணம்
8- பாரத வர்ஷ ஸ்ரேஷ்டதாக கதநம்
9-பாரத வர்ஷ நவ பேதக கதநம்
10-ப்லஷ த்வீப வர்ண நம்
11-ஸால் மலித்வீப வர்ணநம்
12-குஸ த்வீப வர்ணநம்
13-கிரௌஞ்ச த்வீப வர்ணநம்
14-ஸாக த்வீப வர்ணநம்
15-புஷ்கர த்வீப வர்ணநம்
16-பஞ்சாஸத் கோடி பூ மண்டல நிர்ணயம்
17-யோஜநாதி சங்க்யா நிரூபணம்

இப்படி உத்பன்னரான ப்ரஹ்மாதி சேதனர்க்கு அந்தர்யாமியாய் ஹ்ருதயத்திலே நின்று ஸங்கல்ப ரூப ஞாநிதிகளை ஜநிப்பித்து ஸ்ருஷ்ட்யாதிகளிலே பிரவர்த்திகைக்கையாலே ஸர்வ ப்ரவ்ருத்திக்கும் ஹேது ஸர்வேஸ்வரனே என்னக் குறையில்லை
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோ ஹநஞ்ச –கீதா -15-15- என்று
ஸகலருக்கும் சரீரியாய்க் கொண்டு ஸர்வ காரியங்களுக்கும் ப்ரவரத்தகன் தானேயாக அருளிச் செய்தான் இறே

இவ் வண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் ஏது என்னில்
பத்தாத்மாக்களுடைய கர்மம் அடியாக போக்ய போக உபகரண போக ஸ்தானமாம் படி அண்டத்தை பரிணமிப்பிக்கை -அதாவது
தஸ்மிந் அண்டே ஸ பகவான் உஷித்வா பரி வத்ஸரம் -ஸ்வயமேவ ஆத்மநோ த்யாநாத் ததண்ட மகரோத் த்விதா –தாப்யாம் ஸ சகலாப் யாஞ்ச திவம் பூமிஞ்ச நிர்மமே -மத்யே வ்யோம திஸஸ் ஸ ஷ்டாவ் அபாம் ஸ்தாநஞ்ச ஸாஸ்வதம் -மநு -1- என்று
மநுவும் அண்டாந்தர் வர்த்தியான லோக விபாகத்தையும் ஆகாஸம் அஷ்ட திக்குகள் ஸமுத்ரங்கள் இவற்றினுடைய விபாகத்தையும் ஸ்ரஷ்டாவான பகவான் ஸ்ருஷ்ட்டித்தான் என்றான் இறே-

பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் ஏதும் தோளா அண்டம் திருமுடியா நின்றான் பக்கல் செல்ல கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே

1-இவற்றில் போக்ய அநு ரூபமான ஸூக துக்க அநுபவத்துக்கு விஷயமாகையாலே போக்யம் என்பது சப்தாதிகளை
2-இவ்வநுப ரூப ஞானங்களுக்கு உபகரணமாகையாலே போக உபகரணம் என்பது இந்த்ரி யாதிகளை
3-இந்த போகத்துக்கு அதிகரணங்கள் ஆகையாலே போக ஸ்தாநங்கள் என்கிறது தேவாதி ஸரீரங்களையும் -சதுர் தச புவனங்களையும்

இஸ் சரீர விஸிஷ்ட பத்தாத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமான சதுர் தச புவனங்களாவன
பூமிக்குக் கீழ் அண்ட கபாலத்துக்கு மேலாக 83 100 50000 யோஜனை உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே
ஸப்ததிஸ் து ஸஹஸ்ராணாம் த்விஜ உச்சாராயோ அபி கத்யதே -தச ஸாஹஸ்ர மேகைகம் பாதாளம் முநி சத்தம –
அதலம் விதலஞ்சைவ நிதவஞ்ச கபஸ்திமத் மஹாக்யம் ஸூதலம் சாக்ர்யம் பாதலாஞ்சாபி ஸப்தமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-என்கிறபடியே
ஓரொன்று தனித்தனியே 16000 யோஜனத்தளவு உயர்த்தியையும் பரப்பையும் உடைத்தாய்
தைத்ய தாநவ பந்நக ஸூ பர்ணாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
ஸிதா க்ருஷ்ண ருணா பீதா சர்க்கராஸ் ஸை காஞ்சநா -பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ரஸாத ஸோபிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-3-என்கிறபடியே
ஸூத்த வர்ணங்களாயும் -க்ருஷ்ண வர்ணங்களாயும் அருண வர்ணங்களாயும் பீத வர்ணங்களாயும் வாலுகா மயமான (
கூழாங்கல்)சர்க்கரா ரூபங்களாயும் ஸைல ரூபமாயும் ஸூவர்ண மயமாயும் இருக்கிற ஸ்தல விசேஷங்களை உடையவையாய் விலக்ஷணமான மாளிகைகளாலேயும் ப்ரஸாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ஸ்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமாய்
1- அதலம் என்றும்
2- விதலம் என்றும்
3- நிதலம் என்றும்
4-கபஸ்தி மத் -என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
5-மஹாதலம் என்றும்
6- ஸூ தலம் என்றும்
7-பாதாலம் என்றும்
பேரை யுடைத்தான அதோலங்கள் ஏழாய் இருக்கும்

இந்த ஸப்த பாதாலங்களுக்குக் கீழே -30 000 யோஜனை அளவில்
பாதாலாநாம் அதஸ் சாஸ்தே விஷ்ணோர்யா தாமஸீ தநு -சேஷாக்யா தத் குணாந் வக்தும் ந ஸக்தா தைத்ய தாநவா யோ அநந்த பட்யதே ஸித்தை தேவ தேவர்ஷி பூஜித யஸ் ஸஹஸ்ர ஸிரா வ்யக்த ஸ்வஸ்திகா மல பூஷண -பணா மணி ஸஹஸ்ரேண யஸ் ஸ வித்யோதயன் திச —-ஸ பிப்ரத் ஸேகரீ பூதம் அஸேக்ஷம் ஷிதி மண்டலம் –ஆஸ்தே பாதால மூலஸ்த –ஸேஷோ அசேஷா ஸூரார்ச்சித –ஸ்ரீ விஷ்ணு புரா -2-5–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
பாதாளே ப்யோப் யத ஸ்தாத் த்வாத்ரிம் ஸத் ஸஹஸ்ர யோஜநோ -(32000-)அநந்த -பாகவதம் -5 ஸ்கந்தம் -இவ் வாக்யம் ஸ்ரீ மத் பாகவதத்தில் காணவில்லை
தஸ்ய மூல தேஸே த்ரிம்ஸத் யோஜந ஸாஹஸ்ராந்தர ஆஸ்தே யா வை கலா பகவத தாமஸீ சமாக்யாதா நந்த – என்று 5-24-1- இருக்கின்றன
பாதாளாநாம் –இதி பூர்வோ தாஹ்ருதஸ் லோக வ்யாக்யானத்திலும் தஸ்ய இத்யாதி வாக்யத்தையே ஸ்ரீ விஷ்ணு சித்தரும் எடுத்து அருளினது –
இவ் வாக்கியத்தில் அதிக சங்க்யா தோஷமும் காண்கிறது -சரியானபடி கண்டு கொள்க என்று ஸ்ரீ பாகவதத்தில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனுடைய தாமஸ மூர்த்தியாய் அநந்த ஸப்த வாஸ்யனான சேஷனானவன் தன் ஆயிரம் பணாங்களாலும் பாதாள ஸஹிதமான அசேஷ பூதளத்தையும் ஒரு புஷ்ப மாலையைத் தரிக்குமா போலே அநாயாசேன தரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும்
கல்பாந்தே யஸ்ய வக்தேரேப்யோ விஷாநல ஸிகோஜ்வல – சங்கர்ஷணாத் மகனான காலாக்நி ருத்ரனானவன் த்ரைலோக்ய ஸம்ஹார அர்த்தமாக இந்த மஹா ஷேத்ரனுடைய முகத்தில் நின்றுமிறே உத்பன்னனாய் ஜகத்தை ஸம் ஹரிப்பது –

இது வரை கீழே உள்ள லோகங்களை விவரித்தார்
இப் பாதாளங்களுக்கு மேலே 70000 யோஜனம் அகலத்தை யுடைத்தாய் ஸப்த த்வீப சாகர பர்வதாதி விஸிஷ்டமாய் பாதாசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய் பத்மகாரமான பூ மண்டலம் இருக்கும்
யத் தத்தி கர்ணிகா மூலம் இதி ஸத் ஸம் ப்ரகீர்த்திதம் -தத் யோஜந ஸஹஸ்ராணாம் ஸப்த தீநாமத ஸ்ம்ருதம் -இதி வாயு புராண யுக்தே
இந்த பூ பத்மத்துக்கு கர்ணிகை போல் கனக மயமான மஹா மேரு பர்வதமாய் இருக்கும் – இம்மேரு பூமிக்கு மேலே 84000 யோஜநம் உயர்த்திய யுடைத்தாய் -பூமிக்கு உள்ளே 16000 புதைந்து ஆக ஒரு லக்ஷம் யோஜனமாய் நிற்கும் -முப்பத்து ஈராயிரம் யோஜனை பரப்பை யுடைத்தாய் 16000 யோஜனை அடிப்பரப்பை யுடைத்தாய் அச்சு வெல்லத்தை அடி மேல் பண்ணினாப் போலே சதுரஸ்ரமுமாய் இருக்கும் -இம்மேருவுக்கு தெற்கே நிஷதம் என்றும் ஹேம கூடம் என்றும் ஹிமவான் என்றும் மூன்று வர்ஷ பர்வதமாய் இருக்கும் –
மேருவுக்குக் கிழக்கே மால்யமான் என்றும் தெற்கே கந்த மாதநம் என்றும் வர்ஷ பர்வதங்களாய் இருக்கும் –
அதற்குத் தெற்குக் கடை எல்லை பாரத வர்ஷம் –
அதுக்கு அநந்தரம் கிம் புருஷ வர்ஷம்
அதற்கு அநந்தரம் ஹரி வர்ஷம்
மத்யமான மேருவைச் சூழ இலா வ்ருத வர்ஷம்
மேருவுக்கு வடக்கே இலா வ்ருதத்தை அண்டை கொண்டு ரம்ய வர்ஷம்
அதுக்கு அநந்தரம் ஹிரண்மய வர்ஷம்
அதுக்கு அநந்தரம் கடை எல்லை உத்தர குரு வர்ஷம்
மேருவுக்குக் கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேது மூல வர்ஷம்
என்று ஒன்பது வர்ஷமாய்
ஜம்பூ த்வீப ப்ருதிவீ நவ கண்ட மாய் இருக்கும் –
இவற்றிலே இலா வ்ருதம் பத்ராஸ்வம் கேது மூலம் ஒழிந்த ஆறு வருஷமும் ஓரொன்றும் ஒன்பதினாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் இருக்கும் –

மத்யமான இலா வ்ருதம் மேருவைச் சூழ நாலு திக்கும் 9000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் மேரு ஸ்தானத்தோடே ஆயாம விஸ்தாரம் 34000 யோஜனையாய் சதுரஸ்ரமுமாய் இருக்கும் –
கிழக்கு பத்ராஸ்ரவமும் மேற்கு கேது மூலமும் கீழ் மேல் முப்பத்தீராயிரம் யோஜனை நீளமாய் இருக்கும்
பத்ராஸமம் கேது மூலமுமான வர்ஷங்களில் வர்ஷ பர்வதமான மால்யவானும் கந்த மாதநமும் ஆயிரமாயிரம் யோஜனை உயர்த்தியையும் நீளத்தையும் உடைத்தாய் இருக்கும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் 34000 யோஜனை நீளத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
இதில் முதல் சொன்ன வர்ஷ பர்வதங்களின் நடுவாக மஹா மேருவை அணைந்த ஹேம கூடமும் ஸ்வேத பர்வதமும் 90000 –90000- யோஜனை நீளத்தை யுடையவையாய் இருக்கும்
இவ்வாறு வர்ஷ பர்வதங்களும் தனித்தனியே 2000 யோஜனை உயர்த்தியையும் பரப்பையும் யுடையவைகளாய் இருக்கும் –
இந்த மஹா மேருவில் நான்கு எல்லைகளிலும் 16000–16000-யோஜனை உயர்த்தியை யுடைத்தாய் இருக்கும்
பூர்வே து மந்தரஸ் தஸ்ய தஷிணே கந்த மாதந –விபுல பஸ்சிமே பார்ஸ்வே ஸூ பார்ஸ்வஸ் சோத்தரே ஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புரா -3-2-18- என்கிறபடியே
மந்த்ர பர்வதம் கிழக்காய் -கந்த மாதநம் தெற்காய் -விபுலம் மேற்காய் ஸூ பார்ஸ்வம் வடக்காய் இருக்கும்
இவை கீலம் போலே மஹா மேருவை எல்லை யறாமல் பற்றி நிற்கையாலே விஷ்கம்பங்கள் (
தடுப்புக்களாய்)என்று மேரோ தாரகா கீலா விஷ்கம்பா –பேராய் இருக்கும்
இந்த பர்வதங்களின் மேலெ 1500 யோஜநம் உயர்த்திய யுடையவைகளாய்-அம் மலைத் தலைகளுக்குக் கோடித்த தண்டு போலே அலங்கார ரூபங்களாய் இருப்பனவான நாலு வ்ருக்ஷங்களாய் இருக்கும்
அவைகளில் கிழக்குத் திக்கிலது கதம்பம் -தெற்கு திக்கிலது ஜம்பு -மேற்கு திக்கிலது அரசு -வடக்குத் திக்கிலது ஆலை
இவைகளில் கிழக்கில் கதம்பையாவது ஸஹஸ்ரா லம்ப ஸாகா நிசயங்களாலும் மஹா ஸ்கந்தங்களாலும் உப ஸோபிதமாய் மஹா கும்ப ப்ரமாணங்களாய் விகசித கேஸரங்களாய் -ஸர்வ கால ஜங்களாய் -மஹா கந்தங்களான புஷ்ப வாஸனையாலே 1000 யோஜநம் பரிமிளிதமாய் பத்ராஸ்வ தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்

தெற்குத் திக்கிலான ஜம்பு வ்ருக்ஷமானது மஹாஸாகோப ஸோபிதமாய் ஸதா புஷ்ப் பலா கீர்ணமாய் ம்ருது ஸ்வாதுக்களாய் மஹா கஜ ப்ரமாணமான பழங்கள் மலைத் தலையில் விழுந்து உடைத்து சாறாய் ஆறாய் ஜம்பூ நதீ என்று பேராய மேருவைச் சூழ ப்ரவஹியா நிற்கும்
அதின் ரஸத்தை பாநம் பண்ணுகிற அத் தேச வாசிகளுக்கு -நஸ்வேதோ நச தவ் கந்த்யம் ந ஜரா நேந்த்ரியக்ஷய -என்றும்
வேர்ப்பும் -வியர்வையும் -தவ்ர் கந்த்யமும் ஜரையும் இந்த்ரிய க்ஷயமும் உண்டாகாது
அந்த ரசத்தாலே அந்தக் கரையில் ம்ருத்து ஸூத்த ஜாம்பூநதம் என்கிற பொன்னாய் ஸித்தாதிகளுக்கு பூஷணமாகா நிற்கும்
இந்த ஜம்பு வானது ஜம்பூ த்வீ பத்தினுடைய நாமத்துக்கு ஹேதுவாம் படி ப்ரதாநமாய் இருக்கும் –

மேற்கு திக்கிலான வ்ருக்ஷமானது -மஹாச்ச் ராய மஹாஸ்கந்தங்களை யுடைத்தாய் ஸர்வ காலீந மஹா கும்ப பிரமாண பலவத்தாய் கேது மூல தேசத்துக்கு கேது வ்ருஷமாய் இருக்கும்
உத்தர திக்கில் வட வ்ருஷமும் விபுலோச்ச் ராய ஸ்கந்தோப ஸோபிதமாய் ப்ரவாள ஸத்ருஸ மஹா கும்ப பிரமாண பலங்களை யுடைத்தாய் உத்தர குரு தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்

இந்த விஷ்கம்ப பர்வதங்கள் நாலுக்கும் புறம்பே -பூர்வம் சைத்ரரதம் நாம தக்ஷிணம் கந்த மாதநம் -வைப்பராஜம் பஸ்சிமே தத்வ துத்தரே நந்தநம் வநம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-25- என்கிறபடியே
கிழக்கே சைத்ரரதம் என்றும் -தெற்கே கந்த மாதநம் என்றும் மேற்கே வைப்ராஜம் என்றும் வடக்கே நந்த நவநம் என்றும் நாலு வனமாய் இருக்கும்
அதுக்குப் புறம்பாக -அருணோ தந்து பூர்வேண தஷிணே மாநஸம் ஸ்திதம் -சிதோதம் பஸ்சிமே மேரோ -மஹா பத்ரம் ததோத்தரே –லிங்க புரா -பு பூ 49-38- என்கிறபடியே
கிழக்கிலது அருணோதம் என்றும் தெற்கே மாநஸ ஸரஸ் என்றும் மேற்கே ஸிதோதம் என்றும் -வடக்கே மஹா பத்ரம் என்றும் நாலு சரஸ்ஸாய் இருக்கும்
அருணோத ஸர பூர்வம் தக்ஷிணம் மாநஸம் ஸ்ம்ருதம் -ஸிதோதம் பஸ்சிம ஸரோ மஹா பத்ரம் ததோத்தரம் – என்று லிங்க வாராஹாதி புராண பாடம் –

இதுக்குப் புறம்பே சிதாந்த குமுதஸ் சைவ கர வீரா சலோத்தம மஹா நிலோத குஞ்ஜாஸ் ச மாஷாக்யஸ் சாச லோத்தம -வீருங்கோ மணி ஸ்ருங்கஸ் ச ஸ பிந்துர் மந்தரஸ் ததா வேணுமாம் ச ஸ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வதா -லிங்க பு பூ -43-42-43–
சிதாம்பஸ் ச குமுத் யாம்ஸ் ச குரரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்க ப்ரமுகா மேரோ பூர்வத கேஸராஸவா இதி -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-27-
பாட சிதாந்தஸ் ச குரண்டஸ் ச குரரஸ் சாசலோத்தம விகாரோ மணி சைலஸ் ச வ்ருஷ வாம்ஸ் சாச லோத்தம – மஹா நீலோத ருசக ஸ பிந்துர் தர்து ரஸ் ததா -வேணுமாம்ஸ் ச ஸூ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வத -இதி லிங்க பாட -49-1-
சிதாந்தஸ் ச குமத்வாம்ஸ் ச குவரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்கோமணி ஸைலஸ் ச ருக்ஷவாம்ஸ் சாச லோத்தம —-ஸ பிந்துர் மந்தரஸ் ததா -இதி கௌர்ம புராண பாட -பூ -44-
சிதாந் தஞ்ச குமுஜ் ஐஸ் ச ஸூ வீரஸ் சா ச லோத்தம -வி கங்கோ மணி ஸீலஸ் ச வ்ருஷபஸ் சா ச லோத்தம –இதி வாயு புராண பாட -பூ -36-18-
அந்யத்ராபி பஹு தா பாடாந்தர முப லப்யதே நாம பேத மத்ரேண கோ அபி ந விரோத இதி பாதி ஏவம் அந்யத்ர அபி த்ரஷ்டவயம் -என்கிறபடியே
சிதாந்தம் முதலான இப் பர்வதங்கள் மேருவுக்குக் கிழக்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும்

மானஸ சரஸ்ஸுக்குப் புறம்பே -ஸைலஸ் த்ரி ஸிரஸஸ் சைவ சிகரஸ் சா ச லோத்தம கபிங்கஸ் ச பதங்கஸ் ச ருசகஸ் சைவ ஸாநுமாந் -தாம் ராபஸ் ச விசாலஸ் ச ததா ஸ்வேதோதரோ கிரி -ஸூ மூலோ வஸூ தாரஸ் ச ரத்ந தாரஸ் ச பர்வத -ஏக ஸ்ருங்கோ மஹா மூ ஸூலோ கஜஸைல பிஸாசக –பஞ்ச ஸைலஸ் ச கைலாஸோ ஹிமவாம்ஸ் சா ச லோத்தம –லிங்க புரா -49-46-47-48-வாயு ச பூ 36-22-24- என்கிறவை தெற்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும் –

ஸிதோ தத்துக்குப் புறம்பே கபில பிங்க லோ பத்ர ஸூரஸஸ் ச மஹா சல குமுதோ மது மாம்ஸ் சைவ அஞ்ஜநோ மகுடஸ் ததா -க்ருஷ்ணஸ் ச பாண்டரஸ் சைவ ஸஹஸ்ர சிகரஸ் ததா -பாரிஜாதஸ்ய சைலேந்திர ஸ்ரீ ஸ்ருங்கஸ் சா ச லோத்தம –லிங்க புரா பூ 49-50-51- என்கிற கேஸரபர்வதங்கள் மேருவுக்கு மேற்காய் இருக்கும்

மஹா பத்ரத்துக்குப் புறம்பே -சங்க கூடோ மஹா சைலோ வ்ருஷ போஹம் ஸ பர்வத நாகஸ் ச கபிலஸ் சைவ இந்த்ர சைலஸ் ச ஸா நுமாந் -நீல கண்டக ஸ்ருங்கஸ் ச சதசிருங்கஸ் ச பர்வத புஷ்கரோ மேக சைலஸ் ச விரஜஸ் சா ச லோத்தம -ஜாருதிஸ் ச த்ரி ஸ்ருங்கஸ் ச இத்யேத உத்தராஸ் ஸ்ம்ருதா -லிங்க புரா -49-54-55- என்கிற கேஸர பர்வதங்கள் மேருவுக்கு வடக்காய் இருக்கும் –

இவற்றில் நிஷதாதிகள் வர்ஷ பர்வதங்களாகச் செய்தேயும் கேஸரங்களிலும் அந்தர் பவிக்கும்-இவ்வர்ஷ பர்வதங்கள் அவ்வோ வர்ஷ பர்வதங்களுக்கு எல்லைகளாய் இருக்கும் -இதில் கிழக்கில் மால்யவானும் -மேற்கில் கந்த மாதனமுமாகிற வர்ஷ பர்வதங்கள் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை உடைத்தாய் இருக்கும்
பத்ராஸ்வமும் பாரதமும் கேது மூலமும் உத்தர குருவும் மர்யாதா சைலங்களுக்குப் புறம்பான இந்நாலு வர்க்ஷ பர்வதங்களும் பூ பத்மத்துக்கு சதுர் தளங்களாய் இருக்கும் மர்யாதா சைலங்களாவன -கீழை திக்கில் பத்ராஸ் வத்துக்கு மர்யாதைகளான வர்ஷ பர்வதமான மால்யவானோபாதி ஜடரமும் தேவ கூடமும் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை யுடைத்தாய் இருக்கும் -தெற்குத் திக்கில் கந்த மாதநமும் கைலாசமும் ஹிமவானோபாதி இரண்டு கடலுக்கு நடுவு கீழை எல்லை இரண்டு கடலையும் தட்டி-தாண்டி – 80000 யோஜநம் நீளமாய் இருக்கும் -மேலை திக்கில் நிஷதமும் பாரியாத்ரமும் வர்ஷ பர்வதமான கந்த மாத நத்தோபாதி ஆ நீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளமாய் இருக்கும் -இதில் கிழக்கு மேற்கு தென் வடக்கு நீளமான பர்வதங்கள் 34000 யோஜனமாய் இருக்கும் வடக்குத் திக்கில் மர்யாத சைலங்களான த்ரி ஸ்ருங்கமும் ஜாருதியும் கீழை மேலை இரண்டு கடலுக்கு நடுவு ஸ்ருங்க வானோடொத்த 80000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் தட்டி தாண்டி இருக்கும்

பத்ராஸ் வத்துக்கு கேது வ்ருக்ஷமான கதம்பத்தடியிலே ஹயக்ரீவ ரூபியாயும் -பாரத வருஷத்துக்கு கேது வ்ருஷகமான ஜம்புவின் அடியிலே கூர்ம ரூபியாயும் -கேது மூலத்துக்கு கேது வ்ருக்ஷமான பிப்பலத்தடியில் வராஹ ரூபமாகவும் உத்தர குருவுக்கு கேது வ்ருக்ஷமான ந்யக்ரோதத் தடியிலே மத்ஸ்ய ரூபமாயும் ஸர்வேஸ்வரன் ஸமாராதனம் கொண்டருளும் -அல்லாத வர்ஷங்களில் தத் தத் அநு ரூபமான ஸமஸ்த ரூபங்களாலும் ஸமாராதானம் கொண்டு அருளும்

ஏவம் பூதமான பூ பத்மத்துக்கு கர்ணிகாகாரமான மஹா மேருவின் தலையிலே 14000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் ப்ரஹ்மாவினுடைய படை வீடாய் இருக்கும் -இதுக்கு எட்டுத் திக்கிலும் லோக பாலகராய் இந்த்ராதிகளான எண்மருக்கும் படை வீடாய் இருக்கும் -இதில் ப்ரஹ்மாவின் படை வீட்டைச் சூழ திரி விக்ரமன் திருவடி விளக்கின தீர்த்தமான கங்கை விழுந்து நாலு திக்கிலும்
சிதை என்றும்
அலக நந்தை என்றும்
சஷு என்றும்
பத்ரை என்றும்
நாலு ஸ்ரோதஸ்ஸாய் ப்ரவஹிக்கும்

அதில் கீழைத் திக்கில் -சிதை மலைத் தலைகளால் ஆகாசத்தில் கிளம்பி பத்ராஸ் வத்திலே சென்று கடலிலே பிரவேசிக்கும்
தெற்கில் அலக நந்தை முன்னே த்ருவ பதத்தில் சென்று த்ரை லோக்யத்திலும் வந்து ஊர்தவே மந்தாகிநீ -என்றும் அதோ போகவதீ என்றும் -காம் கதேதி கங்கா என்றும் சொல்லப்பட்டு ப்ரவாஹ த்ரயத்தை யுடைத்தாய் த்ரிபதகையாய் ப்ரவஹித்து பூ லோகத்தில் ப்ரவாஹம் ருத்ரன் தலையிலே விழுந்து ஏழு வகையாய் ப்ரவஹித்து கீழே சகர புத்ரர்களையும் உத்தரிப்பித்துக் கடலிலே பிரவேசிக்கும்
மேலை திக்கில் சஷு வானது பர்வத சிகரங்களாலே கேது மூலத்தில் சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்
வடக்கில் பத்ரையானது பர்வதங்களாலே உத்தர குருவிலே சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்

இம் மஹா மேருவுக்குக் கீழை திக்கிலே கேஸர பர்வதங்களான சிதாந்த குமுத பர்வதங்களின் நடுவே 300 யோஜநம் நீளமாய் 100 யோஜனை அகலமான தொரு த்ரோணி சரச மல பா நயமான ஸ்ரீ ஸரஸ்ஸாய் இருக்கும் – அது த்ரோண பாத்ர (சிவம் த்ரோணம் அளவுகோல்கள்)ப்ரமாணமான புண்டரீக ஷண்டங்களாலும் ஹம்ஸ காரண்ட வாதி பக்ஷி சங்கங்களாலும் விளங்கா நின்று கொண்டு ஸரோ மத்யத்திலே சத ஸஹஸ்ர தள பத்ம வந மத்யே கோடி தள யுக்த ஸ்வர்ண பங்கஜ கர்ணிகார் கூடையாய் ஸாஷாத் லஷ்மி இரா நிற்கும் -அந்த பில்வ வனம் 100 யோஜனை விஸ்தீர்ணமாய் 100 காதம் நீளமாய் ஸாகா ஸஹஸ்ர கலிதார்த்த க்ரோஸ பிரமாண (1 க்ரோசம் 2 மைல்)மஹா வ்ருஷ க்ஷண்ட மஹா கும்ப பிரமாண ஸூகந்தி ஸ்வாது பலவத்தாய் ஸ்ரீ வனம் என்று சொல்லப்படும் -அங்கேயே ஸ்ரீ யானவள் ஸித்த சங்க நிஷேவிதையாய் இருக்கும்

பின்னையும் வைகங்க மணி சைலாந்தரத்திலே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி ஸத ஆயாம யுக்த த்ரோணி விமல பங்கஜ (வெண் தாமரை)வன ஸோபிதமாய் இருக்கும் -தத் தீரத்தில் அதி மாத்ர ப்ரமாணமான ஸதா புஷ்ப பலவத்தாய் மஹாஸ் கந்தோப ஸோபி தார்த்த க்ரோஸோச் ச வ்ருஷ ஷண்டங்களின் நடுவே கஸ்யபனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்

பின்னையும் மஹா நீல குமுஜ்ஜ சைலாந்தரே பத்ம ஷண்டோப ஸோபிதமாய் ஸூக நதீ என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலும் பஞ்சா ஸத் யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதார்த்த க்ரோஸோச் சதாள வனமாய் இருக்கும் -ஐராவத தேவ சைலாந்தரே வ்ருஷ வீருத வர்ஜிதமாய் பாத மாத்ர பிரமாண ஸவிலா வ்ருதமாய் ஸஹஸ்ர யோஜந ஆயாம சத யோஜந விஸ்திருதைக சிலாதல பூமி -ஐராவத கஜஸ்ய க்ரீடா சிலாதலமாய் இருக்கும் –

மேருவுக்குத் தெற்கே கேஸர பர்வதங்களான த்ரிஸர பதங்க யோர் மத்யே –ஸிஸிர பதங்க -என்று வாயு பு பூ -38-2-வராஹ பு 80-1–ப்ரசன்னா ஸ்வாது சலிலமாய் பஹு தகம் -பஹுதகா நத்யோ வஹந்தி -என்று வராஹ பு -80-3-என்கிற நதீ ப்ரவஹிக்கும் –தத் தீரத்திலேகோஸத்திலே -தத் தீரத்திலே சத யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதமாய் -எண்டு பாடம் காண்கிறது –வாராஹாதி புராணங்களில் சத யோஜந விஸ்த்ருதம் என்றே இருக்கிறது
சத் யோஜந விஸ்த்ருதமாய் ப்ருது ஷே போச்ச யவ்தும்பரா வனம் –ப்ருது ஷேபோச்ச சிகரை –இதி வாயு புராண -38-3- அநு சாரேண த்ருத இஷுஷேப- என்று வராஹாதி பு -80-1-
சர்வர்த்துஜ ப்ரவாள ஸத்ருச மஹா கும்ப பிரமாண பலோப ஸோபிதமாய் கர்த்தம ப்ரஜாபதிக்கு ஆஸ்ரமாய் இருக்கும் –
தாம்ராப பதங்க சைல யோரந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத ஆயாம யுக்தமாய் பால ஸூர்ய சங்காச ரக்தோத் பல ஸோபிதமாய் மஹத் ஸரஸ்ஸாய் இருக்கும் -அந்த ஸரோ மத்யே சத யோஜந உந்நதமாய் த்ரிம் ஸத் யோஜநம் விஸ்தீர்ணமாய் இருபத்தொரு கிரி சிகரத்திலே ரத்ன பிரகார தோரணோல் லசிதமான வித்யாதர புரமாய் இருக்கும்-

விசாகாசல ஸ்வேத பர்வத யோரந்தரே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோஜந ஆயாமமான ஸரஸ் தீரத்திலே மஹதாம்ர வனம் (மாந்தோட்டம்)-கநக சங்காஸாதி ஸூ கந்த மஹா கும்ப மாத்ர பலோப ஸோபிதமாய் இருக்கும் –
ஸூமுலாச லேந்த்ர வஸூதாரயோர் மத்யே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோனாயாதமாய் வில்வஸ்தவி என்கிற வனம் இருக்கும் என்று இப்படியும் ஒரு வாக்யம் இங்கிருக்க வேணும் என்று ஸூமுலஸ்யாச லேந்த் ரஸ்ய வஸூ தாரஸ்ய சாந்தரே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணே பஞ்சாஸத் யோஜநாயதே -வில் வஸ்தலீ நாம -என்று வராஹ புராணத்திலும் -அது -80-வாயு புராணத்திலும் -பூ 38-23- இருக்கையாலே தோற்றுகிறது
வஸூ தார ரத்நதாரயோர் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் -வராஹ புராணத்தில் அது -80- வஸூதார ரத்ந தாராயோர் மத்யே விம்சத் யோஐந விஸ்தீர்ணம் என்று பாடம் காண்கிறது -வாயு புராணாதிகளில் -பூ 38-27-த்ரிம் ஸத் யோஜனை என்றே பாதாம் – சத யோஜநா யாமமான ஸூ காந்தி கிம் ஸூக வனமாய் இருக்கும் -ஸார்வ காலீ ந ஸூ கந்த கிம் ஸூக வந புஷ்ப ஆமோதம் சத யோஜநம் வாஸியா நிற்கும் -அதிலே ஆதித்யனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்
இவ்விடத்தில் பஞ்ச கூடஸ்ய கைலாஸஸ்ய சாந்தரே ஸஹஸ்ர யோஜநா யாமம் விஸ்தீர்ணம் சத யோஜநம் ஹம்ஸ பாண்டூரம் ஷூத்ர ஸத் வைர நாத் ருஷ்யம் ஸ்வர்க்க ஸோபாந மிவ பூ மண்டலம் –

அத பஸ்சிமதி க்பாகே —-ஸூ பார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே சமந்தாத் யோஜந சதமேகம் பவ்ம சிலாதலம் நித்யதப்தம் துஸ் ஸ்பர்சம் -என்கிற வாராஹ புராண -அது 80- ப்ரகரண வாக்ய அநு சாரேண -சில வாக்யங்கள் வேணும் – தாள கோசங்களில் இல்லை -ஆகையால் புராண அநு சாரேண வாக்யங்களைச் சேர்த்துக் கொண்டு அநு சந்திக்கவும் –

மேருவுக்கு மேற்கே கேஸர பர்வதங்களான ஸூபார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே ஆயாம விஸ்தாரம் சத யோஜநம் வஹ்நி சந்தப்தஸ்தலம் துஸ் ஸ்பர்சமாய் இருக்கும் -தன் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணம் வஹ்நி மண்டலமாய் இருக்கும் -அதிலே லோக க்ஷய காரியான ஸம்வர்த்தக அக்னி இந்தநம் இல்லாதே ஜ்வலியா நிற்கும்

அநந்தரம் குமுதாஞ்ஜந யோர் மத்யே புண்ய ஹ்ரதம் என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலே ஸதா பலித பீத வர்ண மஹா பலாவ்ருத மாதுளங்க வனம் தச யோஜந விஸ்தீர்ணமாய் இருக்கும்
மாதுளங்க ஸ்தலீ தத்ர ஹ்யா யாமா தச யோஜநா -என்று வாயு புராணே -பூ 38-42- வாராஹேது -அது-80- அந்தரே ச சைல வரயோ குமுதாஞ்ஜந யோஸ் சத யோஜந விஸ்தீர்ணா மாதுலங்க கஸ்தலீ ஸர்வ ஸத்வா நாம கம்யா பீத வர்ணை பலைராவ்ருதா ஸாஸ்தலீ ஸோபதே -தத்ர ச புண்யோ ஹ்ரதஸ் ஸித்தை ருபேத ப்ருஹஸ் பதேஸ் தத் வனம் -இதை பாடம்
அதிலே ப்ருஹஸ்பதிக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

பிஞ்சரம் கௌர சைலேந்தரே -அநேக சத யோஜந ஆயாம விஸ்த்ருத மஹாத் ரோணி ஸரஸ்ஸாய் இருக்கும் –பிஞ்சர கௌர யோரந்தரே ஸரோத்ரோண்யோ ஹ்யநேக சத யோஜநா யாதா –இதி வாராஹே -அது -80-
பங்கஜ க்ஷண்ட சம்யுக்தமானவதிலே விஷ்ண்வாயதந மாய் இருக்கும்

க்ருஷ்ண பாண்டர ஸைலாந்தரத்திலே வ்ருஷ வீருத் விவர் ஜிதமாய் த்ரிம்சத் யோஜந விஸ்தீர்ணமாய் நவத்யாதமான நிஷ் கம்பா தீர்க்கிகையாய் இருக்கும் -அதிலே பஞ்ச யோஜந விஸ்தீர்ணமான ந்யக்ரோதம் ஸரோ மத்யே நிற்கும் -க்ருஷ்ண பாண்டு ராயோரபி த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணம் நவத் யாயத யோஜநம் –இதி வாயு பு பூ 38-49-ஸூக்ல பாண்டு ராயோரபி இதி வாராஹபு -அது -80-அவ் வ்ருக்ஷத்தில் சந்த்ர ப்ரபனாய் ஸஹஸ்ர வதநன் என்கிற எம்பெருமான் யஷாதிகளாலே ஆராதிக்கப்படும்

தஸ் யாஸ் ச மத்யே பஞ்ச யோஜந ப்ரமாணோ ந்யக்ரோதோ வ்ருஷ தஸ்மிம் ஸ் சந்த்ர ஸேக ரோமா பதிர் நீல வாஸாஸ் ச தேவோ நிவஸதி யஷாதி பிரீட்யமாந -இதி வாராஹே -அது 80- வாயு புராணே ச மத்யே தஸ்யாஸ் ச பத்மின்யா பஞ்ச யோஜந மண்டல -ந்யக்ரோதோ விபுலஸ் கந்தோ ஹ்யநேகாரோஹ மண்டித -தத்ர சந்த்ர ப்ரப ஸ்ரீ மான் பூர்ண சந்த்ர நிபாநந ஸஹஸ்ர வதநோ தேவோ நீல வாஸாஸ் ஸூராரிஹா பத்ம மால்ய தரஸ் தல்யாம் மஹா பாகோ அபராஜித-இஜ்யதே யக்ஷ கந்தர்வை வித்யாதர கணைஸ் ததா தஸ்மிந் ஆயதநே ஸாஷாத் அநாதி நிதநோ ஹரி -பத்மோ பஹாரைர் விவிதை இஜ்யதே ஸித்த சாரணை -இதி -பூ 38-55-58–

ஸஹஸ்ர சிகர குமுதாந்தரத்திலே பஞ்சாஸத் யோஜந விஸ்த்ருதமாய் -இஷுஷே போச்சமான மது ஸ்ரவ பலோப ஸோபிதமான வனம் –பஞ்சாஸத் யோஜந ஆயாமம் விம்சத் யோஜந விஸ்த்ருதம் இஷுஷே போச்ச சிகரம் இதி வாராஹே –80- ததா ஸஹஸ்ர சிகர குமுதஸ் யாந்தரேண ச பஞ்சாஸத் யோஜநா யாமம் த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதம் –இஷு ஷே போச்ச சிகரம் –இதி வாயு பு பூ 38-60–சந்திரனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும் –

சந்த்ரஸ்ய மஹா நாஸ்ரம –இதி வாராஹே ஸூக்ரஸ்ய இதி வாயு பு-மேருவுக்கு வடக்கே கேஸர பர்வதங்களான சங்க கூட நிஷதங்களுக்கு நடுவே புருஸ் தலம் –புருஷஸ்தலீ இதி வாராஹே புருஷஸ்தலீ இதி வாயு பு – என்று பேரை யுடைத்தாய் அநேக யோஜந விஸ்த் ருதமாய் அத் யுச்சராய வ்ருஷ ஷண்டங்களை யுடைத்தாய் மஹோத்ரிக்த கஜங்களை யுடைத்தாய் இருக்கும் -கபிஞ்ஜல நாக சைல யோந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத யோஜநா யாதமாய் ஸ்வாது பல ஸம் புஷ்டத்ராஷா கர் ஜுர வனமாய் இருக்கும்

புஷ்க்ரமேக சைல யோரந்தரே சத யோஜனா யதமாய் ஷஷ்டி யோஜந விஸ்த்ருதமாய் தரு குல்ம லதாஹீநமாய் பாணி தல ப்ரக்யமான சிலா தலமாய்
இருக்கும் -அதனுடைய நாலு பார்ஸ்வத்திலும் மஹா விஸ்த்ருதமான நாலு சரஸ்ஸும் நாலு வனமுமாய் இருக்கும்

கேஸர மர்யாதவர்ஷ பர்வதங்களின் மேலே அஷ்ட வித தேவ ஜாதிகளுக்கும் படை வீடு களாய் இருக்கும் -இந்த பாரதம் ஒழிந்த எட்டு வர்ஷமும் பவ்மமான ஸ்வர்க்கங்கள் என்னலாம் படி போக பூமியாய் பாப காரிகளுக்கு ப்ரவேஸ யோக்யம் இன்றிக்கே அதி ஸயித ஸூக கரங்களாய் அநு பவிதாக்களான புருஷர்கள் 16000-பன்னீராயிரம் வயஸ்ஸுக்களில் இருந்து அநுபவிக்கலாம் படி ம்ருத்யு பயமற்று இருக்கும்
இவ் வர்ஷங்கள் தனித் தனியே ஸப்த குல பர்வதங்களும் நதிகளும் தேச விபாகங்களும் யுண்டாய் இருக்கும்

அப்படி யன்றி இந்த பாரத வர்ஷம் கர்ம பூமியாய்- ஸ்வர்க்க மோக்ஷ பலன்களுக்கு சாதன அநுஷ்டானம் பண்ணுகைக்கு ஸ்தலமுமாய் -நிஷித்த அநுஷ்டானங்களாலே நரக ப்ரவேசத்துக்கும் திர்யக் யோநி ஜாதிகளுக்கும் ஹேதுவாய் -அதிசயித புண்ய ஆர்ஜிதத்துக்கும் ஹேதுவான ஸ்தலமாகையாலே தேவாதிகளும் ஆசைப்படும் படி நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கும் –

அத்ர ஜன்ம சஹஸ்ராணாம் ஸஹஸ்ரை ரபி சத்தம -கதா சில் லபதே ஐந்து மாநுஷ்யம் புண்ய சஞ்சயாத் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-23- என்று ஆயிரம் கோடி ஜென்மம் புண்யத்தைத் திரட்டினால் இந்த தேசத்திலே ஒருக்கால் மநுஷ்யனாய்ப் பிறக்கப் பெறும் என்னும் படியாயும் -காயந்தி தேவாகில கீதகாநி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே ஸ்வர்க்காப வர்க்காஸ் பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷா ஸூரத்வாத் கர்மாண்ய ஸங்கல்பித தத் பலாநி சந்யஸ்ய விஷ்ணவ் பரமாத்ம ரூபே அவாபியதாம் கர்ம மஹீம நந்தே தஸ்மிந் லயம் யே த்வமலா ப்ரயாந்தி -ஜாநீம நைதத் க்வ தே மநுஷ்யா யே பாரதே நேந்த்ரிய விப்ர ஹீநா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-24-26- என்று
ஸ்வர்க்க வாசிகளான தேவர்களும் ஸ்வர்க்க மோஷங்கள் இரண்டையும் அடைகைக்கு மார்க்க பூதமான பாரத பூ பாகத்திலே தேவத்வத்தை விட்டுப் போய்ப் பிறக்கிறவர்கள் தன்யர் என்றும் –அந்த பாரதமாகிற கர்ம பூமியைப் பெற்று பல ஸங்கல்பங்களை ஒழிந்த கர்மங்களை பரமாத்மாவான விஷ்ணுவின் பக்கலிலே ஸமர்ப்பித்து நிர்மலனாய் அபரிச்சின்னனானவன் பக்கலிலே யாவர் சிலர் ஏகீ பாவத்தை அடைகிறார்கள் -அவர்கள் தன்யர் என்றும்- இந்த ஸ்வர்க்க ப்ரதமான கர்மம் லயித்து அவ் வளவிலே அவ் விடத்திலே தேஹ ஸம்பந்தத்தை நாம் அடைகிறோம் என்று இருக்கிலோமே -பாரத வர்ஷத்திலே ஜிதேந்தியராய்க் கொண்டு இருக்கிறார்கள் யாவர் சிலர் -அந்த மநுஷ்யர் தன்யர் இறே -என்றும் -அவர்கள் அங்கிருந்து பாடும்படியாயும் இறே இத் தேசத்தில் வைபவம் இருப்பது

இந்த பாரத வர்ஷம் நவ பேதமாய் இருக்கும் -அவையாவன –
1-இந்த்ர த்வீபம்
2-கஸேரு
3-தாம்ர பர்ணம்
4- கபஸ்தி மாந்
5- நாக த்வீபம்
6-சவும்யம்
7-கந்தர்வம்
8-வாருணம்
9- பாரதங்கள்
இவற்றில் பாரதம் ஒழிந்த எட்டும் கடலுக்கு உள்ளாய் தென் வடல் ஆயிரமாயிரம் யோஜனமாக பாரதம் கூட்டி சாகராந்தரிதங்களான த்வீபங்கள் ஒன்பதாய் இருக்கும் -இந்த பாரத வர்ஷம் -மஹேந்த்ரோ மலயஸ் ஸஹ்ய ஸூக்திமாந் ருஷ பர்வத விந்த்யஸ் ச பாரியாத் ரஸ்ச சப்தாத்ர குல பர்வதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-3- என்று மஹேந்த்ரம் முதலான ஏழு குல பர்வதத்தை யுடைத்தாய் இருக்கும்

அவைகளில் கங்கா -ஸிந்து – ஸரஸ்வதீ சதத்ரூ சந்த்ர பாகை முதலான ஆறுகள் ஹிமவத் பர்வதத்திலே பிறந்தன–வேகவதி முதலானவை ஸூக்திமாந் பர்வதத்திலே பிறந்தன -நர்மதை ஸூரஸை முதலானவை ருக்ஷ பர்வதத்திலே பிறந்தன
நர்மதா ஸூர ஸாத்யாஸ் ச நத்யோ விந்த்ய விநிர் கதா தாபீ பயோஷ்ணீ நிர் விந்த்யா ப்ரமுகா ருஷ ஸம்பவா என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -2-3-11-இருக்கையாலே அப்படியே இவ்விடத்திலும் பாடம் கொள்ள வேண்டும் –
தாபீ பயோஷ்ணீ முதலான ஆறுகள் விந்த்ய பர்வதத்தில் பிறந்தன கோதாவரீ பீமரதி முதலான நதிகள் ஸஹ்ய பர்வதத்திலே பிறந்தன -க்ருத மாலை தாம்ர பர்ணீ துடைக்கமான ஆறுகள் மலய பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -ருஷீகா குமாரை முதலான நதிகள் ஸ்ரீ ஸூக்திமத் பர்வதத்திலே பிறந்தன

இந்த பாரத வர்ஷத்திலே க்ருத -த்ரோதா -த்வாபர -கலி யுகங்களாகிற யுக பேதத்தால் யுண்டான வேறுபாடு உள்ளது -போக பூமி யாகையாலே அல்லாத எட்டு வர்ஷங்களுக்கு இவையில்லை -நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைய இந்த ஐம்பூ த்வீ பத்தை நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் வலயா காரமான லவண ஸமுத்ரம் ஆவரித்து இருக்கும் -இப்படி ஜம்பூ ப்லஷாஸ் ஸால் மலிஸ் ச குஸ கிரௌஞ்சவ்வ ததைவ ச -சாகஸ் ச புஷ்கரஸ் சேதி ஸப்த த்வீபா ப்ரகீர்த்திதா -கா பு பூ -45-4- என்று காருட புராணத்திலும்
ஜம்பூ ப்லஷா ஹ்வயவ் த்வீபவ் ஸால்ம விஸ் சாபரோ த்விஜ -குமஸ் ததா க்ரவஞ்ச ஸாக புஷ்கரஸ் சைவ சப்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5- என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்ட ஸப்த த்வீ பங்களையும் -ஏதே த்வீபாஸ் ஸமுத்ரைஸ் து ஸப்த ஸப்தபி ராவ்ருதா -லவணே ஷுஸாரா சர்ப்பிர் ததி துக்த ஜலைஸ் சமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-6- என்று சொல்லுகிறபடியே த்வீப சமங்களான லவணாதி ஸமுத்ரங்களும் ஸப்த த்வீ பங்களையும் ஆவரித்து இருக்கும் -அதில் ஜம்பூ த்வீபா வரணமான லவண சமுத்திரத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ப்லஷ த்வீ பம் ஆவரித்து இருக்கும் –

அந்த ப்லக்ஷ த்வீபமும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே
1-சாந்தா பயம் என்றும்
2-ஸஸிரம் என்றும்
3-ஸூ கதம் -ஸூமுகோதயம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
4-ஆனந்தம் என்றும்
5-சிவம் என்றும்
6-ஷேமகம் என்றும்
7-த்ருவம் என்றும் ஏழு வர்ஷமாய் இருக்கும் –
இவற்றில்
1- கோமேதம் என்றும்
2-சந்த்ரம் என்றும்
3- நார்த்தம் என்றும்
4- துந்துபி என்றும்
5- ஸோ மகம் என்றும்
6- ஸூநாவம் -ஸூமநா -இதை புராணம் -என்றும்
7-வைப்ராஜம் என்றும் ஏழு வர்ஷ பர்வதமாய் இருக்கும்
இப்பவாதங்களிலே பிறந்து சமுத்ர காமிநிகளான நதிகள்
1-அநு தப்தை-என்றும்
2- ஸிகி என்றும்
3- விபாயை என்றும்
4- த்ரிதிவை என்றும்
5-க்லமை என்றும்
6-அம்ருதை என்றும்
7- ஸூக்ருதை என்றும் பாப ஹரைகளான இவைகள் ஏழும் இருக்கும்

இவ் வேழு வர்ஷத்திலும்–யுக பேத வ்யவஸ்தைகள் இல்லை -ஸர்வ காலமும் த்ரேதா யுக ஸமானமாய் இருக்கும் -இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்களுக்கு ஆர்யர்கள் குரர்கள் விதேஸ்யர்கள் -விதம் ஸத்துக்கள் பாவிகள் என்று பேராய் இருக்கும் -இவர்களுக்கு யுக பேதங்களாலே வரும் ஹ்ராஸ வ்ருத்த் யவஸ்தைகளும் இல்லை

இந்த ப்லக்ஷ த்வீபம் தொடங்கி ஸாக த்வீபம் ஈறாக ஐந்து த்வீ பத்திலும் மனுஷ்யர் நோயற்று 5000 வயஸ்ஸு புகுருவர்கள் -வர்ணாஸ்ரம அநு ரூபமான தர்மங்களும் அவிகலமாக நடக்கும் -ஜம்பூ த்வீ பத்தில் ஜம்புவோ பாதி பிரமாணத்தை யுடைத்தாய் இருந்த ப்லக்ஷ த்வீ பத்தினுடைய மத்யத்திலே நிற்கும் -இந்த த்வீ பத்தில் ஸோம ரூபியான ஸர்வேஸ்வரன் அந்த ப்ராஹ்மணாதி களாலே ஆராதிக்கப்படா நிற்கும் -இந்த ப்லக்ஷ த்வீ பத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான இஷுரஸாத் மகமான ஸமுத்ரம் ஆவரித்த இருக்கும்

இந்த இஷுர சாத்மகமான ஸமுத்ரத்தை இதிலிரட்டு நாலு நூறாயிரம் பரப்பை உடைத்தான் ஸால் மலி த்வீ பம் ஆவரித்து இருக்கும் -அதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-ஸ்வேதம்
2-ஹரிதம் என்றும்
3-ஜீமுதம் என்றும்
4-ரோஹிதம் என்றும்
5-வைத்யுதம் என்றும்
6- மாநஸம் என்றும்
7- ஸூப்ரபம் என்றும் பெரி யுடையவையாய் இருக்கும்
இவற்றில் வர்ஷ பர்வதங்கள் ரத்ந உத்பத்தி ஸ்தா நமாய்க் கொண்டு
1-குமுதம்
2-உன்னரம்
3-பலாஹகம்
4- மஹவ்க்ஷதி ஸ்தானமான த்ரோணம் என்றும்
5- கங்கம் என்றும்
6- மஹிதம் என்றும்
7- ககுத்மாந் என்றும் ஏழுமாய் இருக்கும்

இவற்றில் ஆறுகளும்
1- யோநி என்றும்
2- தோயை என்றும்
3-வித்ருஷணை என்றும்
4- சந்த்ரை -என்றும்
5-ஸூக்லை என்றும்
6-விமோசநி என்றும்
7- நிவ்ருத்தி என்றும் ஏழாய் இருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -கபிலர்கள் என்றும்
அருணர் என்றும் பீதர் என்றும் கிருஷ்ணர் என்றும் பேராய் வாயு சரீரியான பகவானை அங்கே ஆராதிப்பர்கள்
இந்த ஸால் மலி த்வீ பம் என்கிற பேருக்கு ஹேதுவான ஸால் மலமாகிற வ்ருக்ஷம் முன்பு சொன்ன ஜம்பு ப்லஷங்களோ பாதி த்வீப நிர்வாஹக மாயிருக்கும் -இந்த ஸால் மலி த்வீ பம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான மதுர சாத்மகமான ஸமுத்ரத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும்

இந்தக் கடல் இதிலிரட்டியான எட்டு நூறாயிரம் யோஜநம் குஸ த்வீ பத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்
இதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன –
1-உத்பிதம் என்றும்
2-வேணுமான் -என்றும்
3-ஸ்வைரதம் -என்றும்
4- லம்ப நம் என்றும்
5-த்ருதி என்றும்
6-ப்ரபாகரம் என்றும்
7-கபிலம் என்றும் பேராய் இருக்கும்
இதில் வர்ஷாசலங்கள்
1-வித்ருமம் என்றும்
2-ஹேம சைலம் என்றும்
3-த்யுதிமான் என்றும்
4-புஷ்பவான் -என்றும்
5-குஸேஸயம் என்றும்
6-ஹரி என்றும்
7-மந்த்ரம் என்றும் ஏழாய் இருக்கும்
இதில் பிறந்த ஆறுகளும்
1-தூதபாபை என்றும்
2-சிவை என்றும்
3-பவித்ரை என்றும்
4-ஸூ மதி என்றும்
5-வித்யுதை என்றும்
6-அம்பை என்றும்
7-மஹீ என்றும் ஏழாய் இருக்கும்
இதை ப்ராஹ்மண-ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -தமிநர் என்றும் ஸூஷ்மிணர் என்றும் சைஹர் என்றும் மந்தேஹர் என்றும் பேராய் ப்ரஹ்ம ரூபியான ஸர்வேஸ்வரனை அந்த த்வீ பத்திலே தந்தாமுடைய கர்மா விதி பாரதந்ர்ய ரூபமான அதிகார ரஷார்த்தமாக ஆராதியா நிற்பர்கள் -இந்த குஸத்வீ பத்தினுடைய பேருக்கு நிர்வாஹகமான குசஸ்தம்பம் அந்தத்த்வீப மத்யத்திலே நிற்கும் -இந்த குசத்வீபாம் அத்தோபாதி பரப்பை யுடைத்தான நெய்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்

இந்த நெய்க் கடல் -இதிலிரட்டியான பதினாறு நூறாயிரம் பரப்பை யுடைத்தான கிரௌஞ்ச த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் – இதுவும் முன்பு போலே -ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-குஸலம் என்றும்
2-மநுகம் என்றும்
3-உஷ்ணம் என்றும்
4-ஸீவரம் என்றும்
5-அந்தகாரகம் என்றும்
6-முனி என்றும்
7-துந்துபி என்றும் பேராய் இருக்கும்
இதில் வர்ஷ பர்வதங்கள்
1-கிரௌஞ்சம் என்றும்
2-வாமனம் என்றும்
3-அந்த காரகம் என்றும்
4-ப்ரகாஸ கரமான ரத்ன சைலம் என்றும்
5-திவாவ்ருத் என்றும்
6-புண்டரீகவான் என்றும்
7-துந்துபி என்றும் ஏழாய் இருக்கும் –
இவற்றில் ஆறுகளும்
1-கௌரி என்றும்
2-குமுத்வதி என்றும்
3-ஸந்த்யை என்றும்
4-ராத்ரி என்றும்
5-மனோஜவை என்றும்
6-க்யாதி என்றும்
7-புண்டரீகை என்றும் ஏழாய் இருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -புஷ்கரர் என்றும் புஷ் கலர் என்றும் தன்யர் என்றும் திஷ்யர் என்றும் பேராய் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரனை யாகாதி கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள்
இந்த கிரௌஞ்ச த்வீ பாம் என்கிற பேருக்கு நிர்வாஹம் இதில் ப்ரதமமான வர்ஷ பர்வதமாயுள்ள கிரௌஞ்ச பர்வதம் தானேயாய் இருக்கும் -இந்த கிரௌஞ்ச த்வீ பாம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தயிர்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்

இந்தத் தயிர்க் கடல் இதிலிரடித்த 32 நூறாயிரம் யோஜனம் பரப்பை யுடைத்தான ஸாக த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் -இதுவும் ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-ஜலதம் என்றும்
2-குமாரம் என்றும்
3-ஸூ குமாரம் என்றும்
4-மரீ சகம் என்றும்
5-குஸூ மோதம் என்றும்
6-ஸம்மோதம் என்றும்
7- மஹா த்ருமம் என்றும் ஏழாயிருக்கும்
இதில் வர்ஷ பர்வதங்கள் -கிழக்கே
1-உதயகிரி என்றும்
2-ஜலதார கிரி என்றும்
3-ரைவதகம் என்றும்
4-ஸ்யாமம் என்றும்
5-அம்போகிரியான அஸ்த கிரி என்றும்
6-ஆம்பி கேயம் என்றும்
7-ரம்யம் என்றும் ஏழாயிருக்கும்
இவற்றில் ஆறுகள்
1-ஸூ குமாரி என்றும்
2-குமாரி என்றும்
3-நளினி என்றும்
4-வேணுகை என்றும்
5-இஷுமதி என்றும்
6- தேனுகை என்றும்
7-கபஸ்தி என்றும் ஏழாயிருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் வங்கர் என்றும் மா கதர் என்றும் மாநஸர் என்றும் மந்தகர் என்றும் பேராய்
ஸூர்ய ரூபியான ஸர்வேஸ்வரனைத் தம் தம்முடைய வர்ண அநுரூப கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள் – இவ்வர்ஷங்களிலே ஸ்வர்க்கத்திலும் புண்ய வசத்தாலே போந்த புருஷர்கள் பரஸ்பரம் ராக த்வேஷாதிகள் அற்று இந்த புண்ய நதிகளுடைய ஜலத்தை விநியோகம் செய்து கொண்டு நித்ய ஸூகி களாய் வர்த்திப்பார்கள்
இந்த சாக த்வீ பத்தினுடைய பேர்க்கு நிர்வாஹகமான சாக ஸ்தம்பமாகிற மஹா வ்ருக்ஷம் அந்த த்வீப மத்யே நிற்கும் -இந்த த்வீ பங்கள் ஆறிலும் யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஜம்பூ த்வீ பம் தொடங்கி ஒன்றுக்கு ஒன்று இரட்டியான த்வீ பங்களோ பாதி பர்வதங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்த நீளத்தையும் அகலத்தையும் உயர்த்தியையும் யுடைத்தாய் இரண்டு சமுத்ரங்களையும் பற்றி இருக்கும் -அதாவது

இரண்டு ஸமுத்ரத்துக்குள் நடுவு ஜம்பூ த்வீ பத்துக்கு ப்ரதாநங்களாய்க் கொண்டு நூறாயிரம் யோஜநம் கீழை மேலை நீளமும் இரண்டாயிரம் யோஜநம் உயர்த்தியையும் -அவ்வளவு பரப்பை யுமுடைத்தான நீல நிஷதங்களில் காட்டில் ப்லக்ஷ த்வீ பத்தில் வர்ஷ பர்வதங்கள் லவணேஷு ஸமுத்ரங்களுக்கு நடுவு இரண்டு நூறாயிரம் யோஜநா யாமத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் பற்றி நாலாயிரம் யோஜநம் உயர்த்தி யையும் அவ்வளவு விஸ் தாரத்தையும் யுடைத்தாய் இருக்கும்

இப்படி ஜம்பு ப்லக்ஷ மால் மலி குச கிரௌஞ்ச சாக பர்யந்தமாக யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று -இந்த சாக த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான ஷீராப்தி ஆவரித்து இருக்கும்
இந்த ஸாக த்வீ பத்துக்குள் அந்தர் பூதம் ஸ்வேத த்வீபம் -ஸாக த்வீபம் ஸமா வ்ருத்ய ஷீரோத சாகரஸ் ஸ்தித –ஸ்வேத த்வீபஸ் ச தந் மத்யே நாராயண பராயணா -என்று துடங்கி கூர்ம புராணத்தில் பூர்வ பாகத்தில் 48 வது அத்யாயத்தில் விஸ்தரேண ஸ்வேத த்வீப வர்ணநமும் தத்ரஸ்த புருஷர்களுடைய ரூபாதி வர்ணநமும் அவ் விடத்தில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரியா ஸார்த்தம் ஸ்ரீ மன் நாராயணனுடைய ஸ்வரூபாதி வர்ணநமும் சொல்லப் பட்டது இறே-

இந்த ஷீரார்ண வத்தை இதில் இரட்டித்து அறுபத்து நாலு நூறாயிரம் பரப்பை யுடைத்தான புஷ்கர த்வீ பம் ஆவரித்து இருக்கும் -இந்த புஷ்கர த்வீபம் நிர்வாஹக ராஜ பேதத்தாலே –
1- மஹா பீதம் என்றும்
2-தாடகீ ஸம்ஜ்ஞம் என்றும் -இரண்டு வர்ஷமாய் இருக்கும் –
இரண்டுக்கும் நடுவே மாநஸோத் தரம் என்று பேராய் 50000 யோஜநம் உயர்த்தியை யும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய்க் கொண்டு மதிள் இட்டால் போலே மண்டலமாகார மானதொரு வர்ஷ பர்வதமாய் இருக்கும் -இதில் மஹா பீத மலை புறம்பில் வலயமாய் இருக்கும் -தாடகீ உள்ளில் வவலயமா யிருக்கும் -இவற்றில் வர்த்திக்கிற புருஷர்கள் 16000 வயஸ் ஸு புகுருவர்கள் -ஆதி வ்யாதி களும் ராக த்வேஷாதி களும் அற்று இருப்பர்கள் -ஸர்வரும் உத் க்ருஷ்ட ராகையாலே அதம உத்தம விபாகம் இல்லை-ஸத்யம் ஒழிய நடவாமையாலே ஸத்யாந்ருத விபாகம் இல்லை -அவ் விடத்தில் பர்வதங்களும் நதிகளும் அபேக்ஷிதங்கள் இல்லை-

அவ் விடத்தில் மனுஷ்யர்கள் தேவர்களோடு ஒத்த வடிவை யுடையவர் களாய் இருப்பர்கள் -பவ்மமான ஸ்வர்க்கமாய்க் கொண்டு போக பூமியாய் இருக்கையாலே வர்ணாஸ்ரம ஆசார அபேக்ஷையும் பல சாதந தர்மார்ஜந அபேக்ஷை யும் அற்று யுத்தமமான தேசமாய் இருக்கும் இந்த புஷ் கரத்திலே ப்ரஹ்மா வுக்கு ஸ்தானமாய் புஷ்கரம் என்று பேராய் இருபத்தொரு ஆலயத்திலே பதினாயிரம் தளமாய் இருபத்தொரு தாமரைப் பூவின் மேலே ப்ரஹ்மா தேவா ஸூரராலே ஆராதிதனாய் இருக்கும் அந்த புஷ்கரம் இந்த த்வீ பத்தினுடைய பேருக்கு ஹேதுவாய் இருக்கும் -இந்த புஷ்கர த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தண்ணீர்க் கடல் ஆவரித்து இருக்கும்

இப்படி ஸப்த த்வீப ப்ரமாணமான ஸப்த ஸமுத்ரங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று –இந்த ஸமுத்ர ஜலங்களுக்கு சந்த்ர உதய அஸ்தமிதங்களில் வ்ருத்தி ஷயங்களாய் இருக்கும் -இப்படி ஸப்த த்வீப ஸமுத்ர ஸஹிதமான பூ மண்டலம் மேரு மத்யமாக இரு பக்கமும் (வடக்கும் தெற்கும் சேர்ந்து)ஐந்து கோடி ஏழு நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைத்தாய் இருக்கும் -இது மநுஷ்யாதி ஜனங்களுக்கு ஆவாஸ யோக்யமான பூ மண்டல பரிணாமம் இதுக்குப் புறம்பே மநுஷ்யாதி ஸஞ்சார யோக்யம் இன்றியிலே லோகாலோக பர்வதத்தளவும் கண்ணாடிப் புறம் போலே நிர்மலமாய் ஸ்வர்ண மயமாய் முன்பு சொன்ன பூ மண்டலத்துக்கு இரட்டியாய்- பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ஸ்தல விசேஷத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும் -இத்தைப் பதினாயிரம் யோஜநம் உயர்த்தியையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தான லோகாலோக பர்வதம் ஆவரித்து இருக்கும் -இதில் மஹா மேருவைத் தொடங்கி சக்ர வாளாத்ரி முடிவாகப் பன்னிரண்டரை கோடி பதினேழு நூறாயிரத்து அறு பதினாயிரம் அளவாய் இருக்கும் –

எங்கனே என்னில் -முன்பு லோக பரிமாணாகச் சொன்ன ஐந்து கோடி ஏழு நூறாயிரத்தில் மத்யமான மேருவுக்கு ஒரு பக்கம் இரண்டரை கோடி மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமும் -இதுக்குப் புறம்பான ஜன ஸூந்ய தர்ப்பண தேஸம் பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜனமும் சக்ர வாளாத்ரி பதினாயிரம் யோஜனமுமாய் பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் யோஜனமுமாய் இருக்கும் என்றதாயிற்று -இந்த சக்ர வாளத்ரிக்கு அப்பால் அண்ட கடாஹ பர்யந்தமாகப் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் குறைந்த பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் இருக்கும்

ஆக மஹா மேருவுக்கு ஒரு பக்கம் 25 கோடியாய் மற்ற பக்கமும் இப்படியாகையாலே ஆயாம விஸ்தாரங்கள் பஞ்சாஸத் கோடியாய் பூ பரி மண்டலம் -இதில் மும் மடங்கான 150 கோடி யோஜனம் ஆயாம விஸ்தாரமாய் இருக்கும் -இத்தை வராஹ புராணத்திலே பூ மண்டலந்து சத கோடி விஸ்தாரம் ச ண்ட கடாஹம் என்று மஹா மேருவைச் சூழ பஞ்சாஸத் கோடியாய் பூ மண்டலம் அடைய சத கோடி விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது

இப்படியே -ஸ்கந்த புராணத்தில் சிவ ரஹஸ்யத்திலும் விஸ்தரேண சொல்லப்பட்டது -கோடி த்வயம் த்ரி பஞ்சாஸத் லஷாணி ச தத பரம் -பஞ்சாஸச் ச ஸஹஸ்ராணி ஸப்த த்வீபாஸ் ஸ ஸாகரா –ததோ ஹிரண் மயீ பூமி தச கோட்யோ வராநநே தேவா நாம் க்ரீட நார்த்தாய லோகாலோகஸ் தத பரம் பர்வதோ வலயகாரோ யோஜநாயுத விஸ்த்ருத –தஸ்மாத் பாஹ்யம் தமோ கோரம் துஷ் ப்ரேஷம் ஜீவ வர்ஜிதம் -பஞ்ச த்ரிம் ஸத் ஸ்ம்ருதா கோட்யோ லஷாண்யே கோந விம்சதி ஸத்வாரிம் ஸத் ஸஹஸ்ராணி யோஜநாநாம் வராந நே -ஸப்த சாகர மாநம் து கர்த்தோதஸ் ததனந்தரம் -கோடி யோஜந மா யாநந்து கடாஹஸ் ஸம் வ்யவஸ்தித -என்று சொல்லுகையாலே

மேருவுக்கு ஒரு பக்கம் ஐம்பது கோடியாய்- மற்ற பக்கமும் அப்படியே ஆகையாலே -ஆக சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுகிற பக்ஷம் ஸாஸ்த்ரீயமான மாநாங்குளாதிகளைப் பற்ற லௌகிக மாநாங்குளம் அர்த்தாம்சமாகையாலேயும் ஹஸ்தமாகிற தச்ச முழத்தில் அவிதஸ்தி யாகிற லௌகிக ஹஸ்தம் அர்த்தாத்சமாய் அதில் இரட்டிப்பாலே சொல்லிற்றாம் இத்தனை
ஸாஸ்த்ரீ யாங்குள சித்தைர் யோஜனை பஞ்சாஸத் கோட்ய ஏவ லௌகிகாங்குளி ஸித்த யோஜனை சத கோட்யஸ்ஸ்யு –இதி ஸ்ரீ விஷ்ணு சித்தீய அநு ஸாரேண அவிரோதேந நேதவ்ய இத் யபிப்ராய —
பஞ்சஸாத் கோடியே ஸர்வத்ர அவிருத்தமாகக் கடவது -இதில் சக்ர வாளாத்ரிக்கு அவ் வருகு தாமஸ பூதங்கள் வர்த்திக்கும் தேசமாய் கோராந்த காரமுமாய் கர்த்தோத முமாய் இருக்கும் -அதுக்கு அவ் வருகு மஹா புருஷ ஸ்தானமாய் அண்ட கடாஹத்துக்கு நடுவே எங்கும் ஒக்கக் கீழ் மேல் எங்கும் சூழ்ந்து வைகுண்டாக்ய மஹா லோகங்களாய் இருக்கும்

இப்படி ஸ்ரீ பாகவதத்திலும் -10-8-9- வைதிக புத்ர ஆநயன வ்ருத்தாந்தம் -பார்க்கவும் –
ஹரி வம்சம் மூன்று ஸ்லோகத்திலும் வைதிக புத்ர ஆநயன ப்ரஸ்தாவத்திலே இந்த பகவஸ்லோகங்கள் வர்ணிக்கப் பட்டன
ஹரி வம்சே விஷ்ணு பர்வணி -115–11-12-13-ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்டவா நஸி- அஹம் ஸ பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸனாதனம் -ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்தா வ்யக்தா ச பாரத -தாம் ப்ரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரத சத்தம –ஸா சாங்க்யா நாம் கதி பார்த்த யோகி நாஞ்ச தத் பரம் பரமம் ப்ரஹ்ம ஸர்வம் விபஜதே ஜகத் — கோடி யோஜந மாநந்து கடாஹ ஸம் வ்யவஸ்தித -என்று அண்ட கடாஹம் ஒரு கோடி யோஜநம் அடிப்பத்தை (
அகலத்தை தடிமனை)உடைத்ததாகச் சொல்லப்பட்டது

இப்படி அண்ட கடாஹத்துக்கு நடுவுள்ள பூ விஸ்தாரம் பஞ்சாஸத் கோடியானவோபாதி ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவுள்ள உயர்த்தியும் பஞ்சாஸத் கோடியாய் இருக்கும் –

யோஜனமாவது –
ஜால காந்த ப்ரவிஷ்டே அர்க்க ரஸ்மவ் த்ருஸ்யாத்ருசாஸநை –ஏதே அணவ இதி க்யாதாஸ்த -ஏவ பரமாணவ -தேப்ய பரதரம் நாஸ்தி பரமாணு கதஞ்சன -ஏஷாம் அஷ்ட குணோ ரேணுபிஸ் -ச அஷ்டபி பரைஸ் ரோமாக்ர இதி நிர் திஷ்டம் லிக்யா லோம பிர் அஷ்டபி -லிக்ய அஷ்ட குணிதா யூகா- யூகாஷ்ட குணிதா யவா -யவாஷ்ட குணிதம் யத் தன்மாநாங்குளம் உதா ஹ்ருதம் -ஸ்வஸ்ய தக்ஷிண ஹஸ்தஸ்ய மத்யமாங்குளி பர்வணா மத்யமேந மிதம் யத் தன்மாத்ராங்குள மிதி ஸ்ம்ருதம் ஹஸ்தோங்குளி விம்ஸத்யா சதுரஞ்சி தயா சதுஷ் கரோ தண்ட -தண்டா நாம் பஞ்ச சதம் கோஸம் ச த்வி குணம் அர்த்த கவ்யூதம் -தத் த்வி குணம் கவ்யூதம் த்வி குணம் யோஜநம் வித்யாத் -என்று சொல்லுகிறபடியே

ஜாலக ரந்தரத்திலே ஆதித்ய கிரணங்களிலே தோற்றுகிற த்ரச ரேணுகளுக்கு அணு என்று பேராய -அந்த பரமாணுக்கள் எட்டுக் கொண்டது ரேணுவாய் -ரேணு எட்டுக் கொண்டது மயிர் நுனியாய் -ரோமாக்ரம் எட்டுக் கொண்டது ஈராய் -ஈரு எட்டுக் கொண்டது பேனாய் -பேன் எட்டுக் கொண்டது நெல்லாய் -நெல் எட்டுக் கொண்டது மானாங்குளமாய் -மா நாங்குளம் இருபத்து நாலு கொண்டது ஹஸ்தம் என்று சொல்லப்பட்ட தச்ச முழமாய் – ஹஸ்தம் நாலு கொண்டது கோலாய் -கோல் 500 கொண்டது கோஸமாய் -கோஸம் இரண்டு கொண்டது அரத்த கவ்யோதியாய் -அது இரட்டித்தது கவ்யூதியாய்-கவ் யூதி இரட்டித்தது யோஜனம் என்கிற மாநாங்குள மர்யாதையாலும் புருஷனுடைய தக்ஷிண ஹஸ்தத்தில் மத்யமாங்குளி மத்யம பர்வத்தாலே பரிமிதமான மாத்ராங்குள மர்யாதையாலும் ஹஸ்த விதஸ்தி பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று அர்த்தாம்சமாய் இருக்கையாலும் பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ணை யான பூமியை சத கோடி ப்ரமாணை என்கிற வாராஹாதி வசனங்களுக்கு விரோதம் இல்லை

இதி தத்வ நிரூபணே ஸாதாரண பூ மண்டல நிரூபணம் நாம த்ருதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –———

சதுர்த்தாதிகாரம்— நரக நிரூபணம்
1- நரக நிரூபணம்
2-நரக ஸ்தாந நாமாதி நிரூபணம்
3-பிராயஸ் ஸித்த நிரூபணம்
4-அந்தரிக்ஷ லோகாதி நிரூபணம்
5-ஆதித்ய சந்த்ர நக்ஷத்ர புத ஸூக்ர அங்காரக ப்ருஹஸ்பதி ஸநி ஸப்த ரிஷி த்ருவாதி பத நிரூபணம்
6-பூர் புவஸ் ஸூவ ராதி லோக நிர்ணயம்
7-ஸத்ய லோக அந்தர்கத சதுர் முக ஸிவ விஷ்ணு லோக நிரூபணம்
8-அக்ருதக க்ருதக க்ருதாக்ருதக ஸப்தார்த்த நிரூபணம்

இப்படி புண்ய பாப அர்ஜநாதி களுக்கு யோக்யமான பூ மண்டல நிரூபணம் பண்ணிற்றாய் அநந்தரம் இவற்றினுடைய பல போக ஸ்தானம் நிரூபிக்க ப்படுகிறது -அது போக்தாவான சேதனனுக்கு வைராக்ய ஹேதுவாகையாலே முதல் பாப பல ரூபமான நரகங்கள் நிரூபிக்கப் படுகின்றன

இந்த நரகங்களுக்கு ஸ்தானம் -அந்தராள ஏவ த்ரி ஜகத்தியஸ் (க்ருதக -அக்ருதக -க்ருதக்ருதக என்று மூன்றும் -10-1-3-இவற்றுக்கு உள்ள)ச திசி தஷிணஸ் யாம் அதஸ்தாத் பூ மேருபரிஷ்டாச் ச அண்ட ஜலாஸ்யஸ்ய –பாகவதம் -5-26-5- என்று ஸ்ரீ பாகவதத்திலேயும்
ததஸ்து நரகா விப்ரா புவோதஸ் ஸலிஸ்ய ச பாபிநோ யேஷு பஸ்யந்தே தான் ஸ்ருணுஷ்வ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -கீழே அண்ட கடாஹத்தின் மேலான கர்ப்போதக ரூபமான ஜலாசயத்தின் மேலான பாதாளத்திலே நரக ஸ்தானங்களாய் இருக்கும் –

அவையாவன -ரௌரவஸ் ஸூகரோ ரோதஸ்தாலோ விஸஸநஸ் ததா மஹா ஜ்வாலஸ் தப்த கும்போ லவண உத விலோஹித ருதி ராம்போ வைதரணி க்ரிமிஸ க்ரிமி போஜன -அஸி பத்ர வனம் கிருஷ்ணோ லாலாபஷஸ் ச தாருண ததா பூத வஹ பாபோ- வஹ்நி ஜ்வாலோ ஹ்யதஸ் ஸிரா -சந்தம் ஸ க்ருஷ்ண ஸூத்ரஸ் ச தமஸ் சா வீசி ரேவ ச ஸ்வ போஜனஸ் சா ப்ரதிஷ்டோ ஹ்யவீசிஸ் ச ததா பர இத்யேவ மாதயஸ் சாந்யே நரகா ப்ரு ஸதாருணா யமஸ்ய விஷயே கோராஸ் சஸ்த்ர க்நி பய தாயிந பதந்தி யேஷு புருஷா பாப கர்ம ரதாஸ்துயே –ஸ்ரீ விஷ்ணு புரா -2-6- என்று விஷ்ணு புராணத்திலும்
பூ மேரதஸ்தி தோ கோர உஷ்ணாத்மா ரௌரவோ மஹான் ஸூதாரணஸ் து ஸீதாத்மா தஸ்யாதஸ்தாத் தமஸ் ஸ்ம்ருத நிக்ருந்தந க்ருஷ்ண ஸூத்ரோ மோஹஸ் சாப்யதிதாருண அகோரஸ்து வத ப்ரோக்தோ நவ ஸ்தாநோ ப்ரதிஷ்டித -ஏகீ பூத சரீரஸ் ச விவேச் யோ அவீசிரேவ ச ஸூ கோரோ தாருணோ ரோத மஹா ரௌரவ ஏவ ச –வாயு உ 39-175-176- என்று வாயவ்யத்திலும் சொல்லுகிறபடியே நரகங்கள் அசங்க்யாதங்களாய் இருக்கும் –

பாகவதம் -5-26-தத்ர ஹைகே நரகா நேக விம்சதிம் கண யந்தி என்று தொடங்கி அஷ்டா விம்சதி நரக நாமாதிகளை விஸ்தாரமாகக் காணலாம்
இவற்றில் ரௌரவம் என்று பேராய் பரிதாப ரூபமான நரகத்திலே ஸாக்ஷி அறிந்து சொல்லாது இருக்குமவனும்- அந்யதாகச் சொல்லுமவனும் -கூழை ஸாக்ஷியும் தர்மாதி க்ருதனாய் வைத்து அஸம்யக் பாஷணம் பண்ணுமவனும் -பக்ஷ பாதியும் -அஸத்யவாதியும் ப்ரவேசிப்பார்கள்
கூட ஸாஷீ ததா ஸம்யக் பக்ஷ பாதேந யோ வதேத் -யஸ் சான்ய தந்ருதம் வக்தி ஸ நரோ யாதி ரௌரவம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-7-இத்யாதி ஸ்லோகங்களைப் பற்றியே மேலில் வாக்யங்கள் என்று கண்டு கொள்க –

இந்த ரௌரவ ஸூகரங்களாகிற நரகங்கள் ருருவும் ஸூ கரமுமாகிற மான் பன்றிகளைக் கொல்லும் ப்ரகாரத்திலே பீடிக்கை என்று ஸ்ரீ பாகவதத்திலே சொல்லப்பட்டது -5-26-11-
ப்ரூண ஹாவும் புர ஹந்தாவும் கோக்நனும் உச்ச்வாஸ நிரோதகனும் குழியைக் கல்லில் புதைக்கை யாகிற ரோதம் என்கிற க்ரூர நரகத்தை அடைவர்கள் -இதில் ப்ரூண ஹாவாகிறான் -கர்ப்ப வாஸம் பண்ணினவனாதல் -விஸிஷ்ட ப்ராஹ்மண ஹந்தாவாதல் -அதாவது -உப நீத மாத்ரோ ப்ரஹ்ம சாரீ வேதாநாம் கிஞ்சித் அதீத்ய ப்ராஹ்மண -ஏகாம் ஸாகாம் அதீத்ய ஸ்ரோத்ரிய -அங்காத் யாயீ ஹ்யநூசாந- கல்பாத் யாயீ ருஷி கல்ப -ஸூத்ர ப்ரவச நாத் யாயீ ப்ரூண –சதுர் வேத தரோ ருஷி -அத ஊர்த்வம் தேவா -என்று போதாயந பகவான் சொன்னபடியே
ப்ரூணனாகிறான்-சூத்ர ப்ரவசந த் யாயியான விஸிஷ்ட ப்ராஹ்மணன் -ஸூராபனும் ப்ரஹ்ம ஹந்தாவும் ஸூவர்ணத்தை ஷோடஸ மாஷத்தளவு (
16 உளுந்து அளவு)அபஹரித்தவனும் -குருதல்பகனும்-இவர்களோடு ஓக்க ஒரு ஸம்வத்ஸரம் வசித்தவனும் ஸூkara நரகத்திலே விழுவர்கள்

ராஜாவையும் வைஸ்யர்களையும் கொன்றவனும் குரு தல்பகனும் தாலமாகிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது மஹா ப்ரமாணமான பனை மரத்திலே ஏறவிட்டுத் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-10–ஸாத்வியான ஸ்திரீயை விற்றவனும் சிரைக் கூறு செய்யுமவனும் குதிரை விற்குமவனும் பக்த பரித்யாகியும் ஸ்வ ஸாகாமியும் ராஜ பட ஹந்தாவும் தப்த கும்பத்திலே விழுவர்கள் -அதாவது காய்ந்த எண்ணெய்க் குடத்திலே புகட்டு எரிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-

குருக்களை அவமதி பண்ணினவனும் வேதத்தை தூஷித்தவனும் -வேதத்தைக் கூலிக்கு விற்பவனும் மாதுளை ஸ்த்ரீ கமநம் பண்ணினவனும் லவணம் என்கிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது அக்னி மையமாக எரிகிற உப்பு மண்ணிலே புரட்டு சுடுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-12-13-

ஸதாசாரங்களாலே ஸித்தமான மர்யாதா தூஷகனும் -தேவ ப்ராஹ்மண குரு பித்ருக்கள் பக்கலிலே த்வேஷம் பண்ணினவனும் க்ரிமி பஷ்யத்திலே விழுவர்கள் -அதாவது ஸூ தீஷ்ண தம்ஷ்ட்ராஸ்ய ஜலூகாதி க்ரீமி கீடம் கடித்து அந்த தாமிரஸ்ர கூபத்திலே சுழற்றித் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-15-
பித்ரு வேத ஸூரரைப் புறம்பிட்டு பஞ்ச மஹா யஜ்ஞ பராங்முகனாய் முதலிலே தனக்கு என்னாக்கி உண்கிறவன் லாலாபக்ஷத்திலே விழுவார் -அதாவது காறி யுமிழ் எச்சிலை பஷிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-16- –
சிலுக்கோலான அம்புமுத் கரங்கள் பண்ணுமவனும் வாள் சொட்டை தொடக்கமான ஆயுதங்கள் பண்ணுமவனும் விசசனத்திலே விழுவர்கள் -அதாவது எரி எழக் காய்ந்து ஷுரப்ரங்களான ஆயுத கூபத்தில் விழுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-17-

அசத்தான பதார்த்தங்களை பரிக்ரஹித்தவர்கள் அதோ முகத்திலே விழுவர்கள் -அதாவது -தப்த்த ஸ்ருங்க லயா பத்தராய் அதோ முகோர்த்வ பாதராய் ஜ்வாலா ஸூராப கூபத்திலே நலிவு படுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-18–

சாஹஸியும் தனித்து ம்ருஷ்டான்ந யஜனம் பண்ணுமவனும் -அரக்கு மாம்ஸ ஷீர மத்வாதி ரஸ த்ரவ்யங்களையும் எள்ளுப் பூ விற்குமவனும் ப்ரயவஹத்திலே விழுவர்கள் -அதாவது கோர துர்க் கந்தா வஹமான சீயாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-20-

அல்லுப் பொரி விற்று யதேஷ்டமாகப் பானையோடே உண்ணுமவனும் -விஷத்தை இடுமவனும்- ராஜ காமியாம் படிக் கோள் சொல்லுமவனும்- ஸ்த்ரீ முகத்தாலே ஜீவித்தல் பர்வமன்றி இருக்க அபர்வத்திலே கார்யம் செய்யுமவனும்- பர்வத்திலே நிஷித்தமான தைல ஸ்த்ரீ மாம்ஸாதி ஸேவை பண்ணுமவனும் -அகங்களை நெருப்பு வைத்துச் சுடுமவனும் மித்ர வஞ்சகனும் பக்ஷி நிமித்தம் சொல்லுமவனும் பக்ஷி பிடித்து விற்று ஜீவிக்குமவனும் ஸ்ரம யாஜகனான ஷடங்கியும் இவர்கள் ருதி ராம்பத்திலே விழுவர்கள் -அதாவது பூய ஸோணித ஸம் பூர்ண அக்னி ஜ்வாலா ரூப கூபம் –ஸ்ரீ விஷ்ணு புரா 2-6-22-

தேன் கூண்டைக் கலக்குமவனும் க்ராமத்துக்குக் கேடு செய்யுமவனும் வைதரணியை அடைவர்கள் -அதாவது -அக்னி மயமான நெய்யாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-26-24-
தனத்தாலும் யவ்வனத்தாலும் மத்தராய் க்ராமஸீ மாதிகளை பேதித்தவர்களும் அஸூத்தரும் இந்த்ர ஜாலாதிகள் காட்டி ஜீவித்தல் ஸடராய் ஜீவித்தல் செய்யுமவர்களும் க்ருஷ்ணம் என்கிற நரகத்திலே விழுவார்கள்-அதாவது அக்னி மயமான கறுத்த இரும்பு முளைகளாலே செறிந்த தரையிலே நடக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-25-

கிடாய் வளர்ப்பாரும் ம்ருகம் பிடிப்பாரும் வ்ருஷச் சேதகரும் ப்ரஹ்மசாரியாய் இருந்து பகல் உறங்கி ஸ்வப்ன இந்த்ரிய பதனம் பிறந்தவனுக்கு ஸ்வ போஜனத்திலே விழுவர்கள் -அதாவது நாயாலே இழுப்புண்டு கடியுண்டு க்லேசிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா-2-6-29-

பர ஸ்த்ரீ கமனம் பண்ணுவாரும் அகம்யாகமநம் பண்ணுவாரும் எரி எழுகிற செம்பினாலே இயன்ற பாவையைக் கட்டி ஆலிங்கனம் பண்ணுவர்கள் –

இப்படி அபஷ்ய பக்ஷணம் -அபோஜ்ய போஜனம் -அபேய பாநம் -அயாஜ்ய யாஜனம் அஸத் பரிக்ரஹம் -பர தாரா அபி கமநம்- நீச பாபிஷ்ட ஸேவை -பர த்ர வ்யாபஹாரம் -ப்ராணி ஹிம்ஸை முதலானவை என்று காயிகமாகச் சொல்லுகிறவையும் –இவ்விடத்திற்கு அனுகுணமான வசனங்கள் -மநு ஸ்ம்ருதியில் -12-7- காண்க –
பாருஷ்யம் அன்ருதம் பை ஸூந்யம் -அசம்பத்த ப்ரலாபம் -விவாதம்- ஸ்ருதி விக்ரயம் -பராப வாதம் முதலானவை -மனு-12-6- என்று வாசகமாகச் சொல்லுகிறவையும்
பரோபதாபநம்- பராபி த்ரோஹம்- க்ரோதம்- காமம் -லோபம் -மோகம் -மதம் -மாத்சர்யம் அஹங்காரம் விததாபி நிவேசம்-மநு -12-5- என்று மாநஸமாகச் சொல்லுகிறவையும் தொடக்கமான த்ரிவித கரண தோஷங்களை ஆராய்ந்து யாத்ருச சரீரே யதவஸ்தா வஸ்திதானாய்ச் செய்கிறான் -தாத்ருஸ சரீர தத்வஸ்தா ரூபமாய் தஹந சேதன பேத நாதிகளிலும் விடாதே யாம்ய யாதனைகளை அனுபவிக்கைக்குக் உடலாக ஸூத்ருடமாய் இருபத்தொரு ஸரீரத்தை பரிக்ரஹிப்பித்து நரக யாதனைப் படுத்தும் -மநு- யாதிரு ஸேநது பாவேந யத் யத் கர்ம நிஷேவதே தாத்ருஸேந சரீரேண தத் தத் பலமுபாஸ் நுதே -12-18-

இத் தோஷங்களினுடைய யாதனை எங்கனே என்னில் -இவனை ஈர வளாலே அறுத்து உவடி தரையிலே புரட்டி ஜம்பீர ரஸ மய வாபியிலே அழுத்தி அக்னி மயமான தைலத் ரோணியிலே பொகட்டு எரித்தும் தீக்ஷண பர ஸூவினாலே சந்தி பந்தங்களிலே சேதிக்கப் பட்டு காகோலுக கங்க க்ருத் ரங்களுக்கும் பேய்க்கும் நாய்க்கும் சதை பறியுண்டு க்லேசிப்பித்தும் -அதுக்கும் மேலே அஸி பத்ரவனமாகிற வஜ்ர மய ஸிதாக்ரதாரா யுக்த -இலைக் கள்ளிக் காட்டிலே பட்ட விடமெங்கும் கண்டிக்கும் படி விட்டு எறிந்து கவணிலே வைத்து எறிந்தும் அத் யுச்சராய பர்வத சிகரத்திலும் ஸர்வ அவயவங்களும் சூர்ணித்தமாம் படி தலை கீழாய்த் தள்ளியும்
காஞ்ச காறாலும் -வறுத்த மணலிலும் இட்டுப் புரட்டுவது சந்தப்த கும்பத்திலே அறுத்துண்டு மூடி மஹா ஜ்வாலாக்னியாலே பசிப்பது-இப்படிக் கட்டுமது வெட்டுமது நெருக்குண்பது தள்ளுண்பதான நாநா வித நரகங்களிலே யாதனைப் படுவர்கள் -இந்நரகங்கள் தேஷாம் சங்க்யா ந வித்யதே -என்கிறபடியே அசங்க்யா தங்களாய் இருக்கும் -இனி மஹா பாதகங்களைப் பண்ணின புருஷர்களை இங்குச் சொன்னவை முதலாகக் கொண்டு அல்லாத வற்றிலும் பர்யாயேண ப்ரவேசித்து யாதனைப் படுவர்கள்

இப்படி வாங் மன காயங்களாலே வர்ணாஸ்ரம விருத்தமான துஷ் கர்மங்களைப் பண்ணி நரகத்திலே நின்று யாதனைப் படுவர்கள் -ஸ்வர்க்கத்திலே இருக்கும் தேவர்களை அந் நிலையிலே கண்டு தங்கள் துக்கத்துக்கு மிகவும் கிலேசியா நிற்பர்கள் -அந்த தேவர்களும் அதோ முகராய் கிலேசிக்கிற நரகங்களைக் கண்டு நாமும் புண்ய ஷயத்திலே இந்நரகங்களிலே வீழில் செய்வது என் -என்று -ஸ்வர்க்கோபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி –ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50-அஸந்தோக்ஷஸ் ச பவதி த்ருஷ்ட்வா தீப்தம் பரஸ்ஸ்ரியம் -என்கிறபடியே அங்கிருந்து பண்ணுகிற ஸூக அனுபவமும் நெஞ்சில் படாதே உண்டது உருக்காட்டாதே கிலேசியா நிற்பர்கள் –

பஹுன் வர்ஷ சதான் கோரான் நரகான் ப்ராப்ய தத் ஷயாத் சம்சாரான் ப்ரதிபத்யந்தே மஹா பாதகி நஸ்த்விமான் -மநு -12-54- என்கிறபடியே ஒவ்வொரு க்ஷணங்களிலே பண்ணின பாபங்களுக்கு பலமாக அநேகமாயிரம் ஸம்வத்சரங்கள் அதி கோரமான நரகங்களிலே ஐயோ என்பாரும் அன்றியே தனியே கிடந்து உழைந்து இந் நரகங்களிலே புக்த சேஷமான கர்மங்களை அநுபவிக்கைக்காக அங்கே அவ்வோ யோநி விசேஷங்களிலே வந்து பிறக்கும்படியும் இப்படிப் பிறக்கும் போது வாசிகை பசி ம்ருகதாம் மாநஸை அந்த்ய ஜாதிதாம் -சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -மநு -12-9- என்று வாசிகாபராதத்துக்கு பக்ஷி ம்ருகங்களாயும் மானஸா பராதத்துக்கு சண்டால மாதங்கனாயும் காயிகத்துக்கு வ்ருஷ குல்ம லதாதிகளாயும் பிறக்கும்படியும் எந்த கரணம் கொண்டு அபராதம் பண்ணினான் அந்தக் கரணத்தை குண்டிதமாக்கி விடும்

அதில்ப்ரஹ்மஹத்யா பலமாக -ஸ்வ ஸூகர கரோஷ்ட்ராணாம் கோஜாவி ம்ருக பக்ஷிணாம் -சண்டால புல்க ஸாநாம் து ப்ரஹ்மஹா யோநி ம்ருச்சதி -மனு -12-55- என்று நாய் பன்றி
கழுதை ஒட்டகம் வஸூ ஆடு செம்பிலிமான் பக்ஷி சண்டாலர் தொடக்கமான யோனிகளிலே -க்ரமஸோ யாந்தி லோகேஸ்மின் -12-53- என்று அடைவே பிறக்கும் படியாகவும் –

க்ரிமி கீட பதங்காநாம் விட் புஜாம் சைவ பக்ஷிணாம் ஹிம்ஸ்ரா நாஞ்சைவ சத்வாநாம் ஸூராபோ ப்ராஹ்மணோ வ்ரஜேத் -12-56- என்று ஸூரா பாந பலமாக கிருமி கீட பதங்கா மேத்ய புக்கான பக்ஷிகள் மற்றும் ஹிம்ஸா செல்லமான பதார்த்தங்கள் தொடக்கமான யோனிகளிலே ஒரு தடவை பிறக்கை இன்றிக்கே மடித்து மடித்துப் பிறக்கும்படியும்

லூதாஹி சரடா நாம் ச திரஸ் சாம் ச அம்பு சாரிணாம் ஹிம்ஸ்ராணாம் ச பிஸாசாநாம் ஸ்தேயோ விப்ரஸ் ஸஹஸ்ரஸ -12-57-என்று பர த்ரவ்ய அபஹாரத்துக்கு பலமாக சிலந்தி பாம்பு ஹிம்ஸா சீல ஐந்து ஜலசர ஜந்துக்கள் பர பார்த்தகமான பேய்கள் தொடக்கமான யோனிகளிலே நாலு பத்து பர்யாயம் பிறகும் அளவன்றியிலே நாலாயிரம் பர்யாயம் மடித்து மடித்துப் பிறக்கும் படியும் –

த்ருண குல்ம லதா நாஞ்ச க்ரவ்யாதாம் தம்ஷ்ட்ரிணாம் அபி க்ரூர கர்ம ரதா நாஞ்ச சதாசோ குருதாபக -என்று குரு தல்பாகமான பாபத்துக்கு பலமாகப் புல்லு தூறு கொடி காயும் மாம்ஸாசிகளான ஸ்வாநாதி யோனிகளிலும் க்ரூர கர்மரதமான மனுஷ்ய யோனிகளிலும் பிறந்து சத ஸஹஸ்ர வாரம் கிலேசிக்கும் படியாகவும் –

ஸம் யோகம் பதிதைர் கத்வா பரஸ் யைவ ச யோஷிதாம் அபவ்ருத்யாபி விப்ரஸ்வம் பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா -12-60-என்று பதித ஸம் சர்க்க தோஷத்தாலே ப்ரஹ்ம ராக்ஷஸ யோனியிலே மடித்து மடித்துப் பிறக்கும்படியாகவும்

இப்படி -இந்த்ரியாணாம் ப்ரசங்கேந தர்மஸ்யாஸேவ மேந ச பாபாஸ் ஸம் யாந்தி ஸம்சாராந வித்வாம்ஸோ நராதமா -மனு 12-52-என்றும்
ஸ்வேப்ய ஸ்வேப்யஸ் து கர்மப்ய ஸ்யுத வர்ணா ஹ்யநாபதி பாபாஸ் ஸம் ஸ்துத்ய ஸம் ஸாராத் பரே ததாம் யாந்தி தஸ்யுஷு -12-70-என்றும்
யத்வா தத்வா பர த்ரவ்ய மப ஹ்ருதய பலான் நர அவஸ்யம் யாதி திர்யக்த்வம் ஜக்த்வா சைவாஹுதம் ஹவிஸ் -மனு -12–68-என்று
விஷயாதி பிரசங்கத்தாலும் தர்ம அனுஷ்டானத்தில் உபேக்ஷையாலும் ஆபத்தன்றியிலே இருக்க ஸ்வ தர்ம அனுஷ்டான பிரஸ் யுதியாலும் அந்த பாப அநு ரூபமாக ப்ராயச் சித்தங்களில் பராங்முகனாகையாலும் பாப யோனிகளிலே பிறந்து -அனந்த்ரம் பேய்களாக பிறந்து பின்னையும் சோரர்களாய் பிறப்பார்கள்

ஸ்த்ரி பார்யாஸ் த்வ முப யாந்தி தா -மனு -12-69- என்று ஸ்த்ரீகளாய் ஸுர்யாதி பாபத்தைப் பண்ணினவர்கள் ஸ்வ ஸூகராதி யோனிகளிலே பிறந்தவர்களுக்கு பார்யைகளாய்ப் பிறக்கும் படிகளையும் ஆராய்ந்து பிறந்த பிறந்த ஜென்மங்கள் தோறும் பிரிய வஸ்து வியோகத்தாலும் அப்ரிய வஸ்து சங்கத்தாலும் ஜரா பீடையாலும் வியாதி பீடையாலும் கிலேசிக்கும் படியும் -தோஷ த்ரய உத்ரேகத்தாலும் விகாரமான ரோக ஸஹஸ்ரத்தாலும் யம கிங்கரனுடைய பீடையாலும் புத்ராதி பரித்யாக ஹேதுவான புத்தி கிலேசங்களாலும் நிரவதிக துக்கங்களை அநுபவித்தது கிலேசிப்பார்கள்

நமனும் முற் கலனும் பேச நரகில் நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்து வீழ்ந் தளிய மாந்தர்
கவலை யுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.-12

காவலிற் புலனை வைத்துக் கலி தனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.-1-

இப்படி ஜகத்திலே சேதனர் கர்ம தாரதம்யம் அடியாக -ஸ்தாவரா க்ரிமி யோப் ஜாஸ்ச பக்ஷிண பசவோ நரா -தார்மிகா த்ரிதஸா தத்வத் மோக்ஷிணஸ் ச யதாக்ரமம் ஸஹஸ்ர பாக ப்ரதம த்விதீய அநு க்ரமாஸ் ததா -ஸர்வேப்யேதே மஹா பாக யாவன் முக்திம் ஸமாஸ்ரயா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-34-35-என்றும்
பூதாநாம் ப்ராணிந ஸ்ரேஷ்டா பராணிநாம் புத்தி ஜீவிந புத்தி மத் ஸூ நரா ஷ்ரேஷ்டா நரேஷு ப்ராஹ்மணாஸ் ஸ்ம்ருதா ப்ராஹ்மணே ஷு ச வித்வாம்ஸோ வித்வத் ஸூ க்ருத புத்தய க்ருத புத்தி ஷு கர்த்தார கர்த்ரு ஷு ப்ரஹ்ம வாதி ந ப்ரஹ்ம வித்ப்ய பரம் பூதம் ந கிஞ்சி திஹ வித்யதே -மனு -1-96-97- என்று
ஒன்றுக்கு ஓன்று ஸூஹ்ருத தாரதம்யத்தாலே பூர்வ பூர்வ ஜென்மங்களுக்கு உத்தர உத்தர ஜென்ம லாபம் துர் லபமாகையாலும் அந்த பூர்வ ஜென்ம ஸஹஸ்ர ஏக தேசத்திலே என்னலாம் படி ஸங்கோசித்துப் போருகையாலே முமுஷுத்வம் அத்யந்தம் துர் லபமாய் இருக்கும் –

இப்படி இருக்கிற ஆத்மாக்கள் அஸங்க்யாத ராகையாலே ஸ்வர்க்கத்தோடு நரகத்தோடு வாசி இல்லை -போக்தாக்களான ஆத்மாக் களுடைய ஆனந்தத் யத்துக்கு -ஆகை யிறே -யாவந்தோ ஜந்த வஸ் ஸ்வர்க்கே தாவந்தோ நரகௌகஸ -ஸ்ரீ விஹனு புரா 2-6-36- என்று சொல்லிற்று

இந்த பாபம் அடியான நரக பிரவேசம் பிராயச்சித்தம் பண்ணாத விமுகனுக்கு இறே -பிராயச்சித்தம் பண்ணினவனுக்கு நரகத்திலே ப்ரவேசிக்க வேண்டுவது இல்லை -அப்படியே பாபங்கள் தாரதம்யத்தை நிரூபித்து தாதாத்மிக பிராயச்சித்த விசேஷங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் இறே –

பாபே குரூணி குரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத் வித -ப்ராயச்சித்தாநி மைத்ரேய ஜகுஸ் ஸ்வாயம்பு வாதய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-38- என்று குருவான பாப விஷயமாக குரு ப்ராயச்சித்தங்களையும் அல்ப பாபத்துக்கு அல்ப பிராயச் சித்தங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் -அதாவது 1-புத்தி பூர்வகமாக 2-மஹா பாதகாதிகளைப் 3-பலகாலுமாய் வர்த்தித்த குரு பாதகத்திலே அவ்யவஹித கர்த்தாவினுடைய ப்ராணாந்தி காதியான ப்ராயச்சித்தங்கள் விதிக்கப் பட்டது –

அல்ப பாபமாவது -1-ஸக்ருத் க்ருதமாதல் -2-அஞ்ஞான க்ருதமாதல் 3-ப்ரகாசி தமாதல் அ4-நுமதி மாத்ரமாதல் தொடக்கமானவை -தத் விஷயமான அல்ப பிராயச்சித்த மாவது -ரஹஸ்ய ப்ராயச்சித்தம் –

அவ் விடத்திலே அஞ்ஞான க்ருதமான ப்ரஹ்ம ஹத்த்யாதி மஹா பாதகத்தில் (தசரதன் ரிஷி குமாரன் மேல் தெரியாமல் அம்பு விட்டது போல்)பிராயச்சித்தம் த்வாதஸ வார்ஷிகம் புத்தி பூர்வகத்தில் இரட்டி -அத்யந்தா வ்ருத்தியில் அதில் இரட்டி -இது சாஷாத்கார்த்தாவுக்கு

அனுக்ராஹகனுக்கும் இதில் ஓன்று முக்கால் -ப்ரயோஜகனுக்குப் பாதி -அனுமந்தாவுக்குக் காலே அரைக்கால் -ப்ரோத்ஸா ஹகனுக்குக் கால் -புத்தி பூவாக மஹா பாதகத்துக்குச் சொன்ன த்வாதஸ வார்ஷிகம் கர்த்தாவினுடைய ஸூத்த் யர்த்தம் -அதாவது கர்ம யோக்யத்வ ஸம் வியவஹார யோக்யத்வ காரணமல்லது நிரய நிவ்ருத்தகம் -நிவர்த்தகம் -அன்று –

புத்தி பூர்வ க்ருத்தங்களுக்கு ஸ்ம்ருதியில் சொன்ன ப்ராணாந்திக ப்ராயச்சித்தம் வ்யாவஹார யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -புத்தி பூர்வகத்தில் இரட்டித்த த்வாதஸ வார்ஷிகமும் வ்யவஹார்ய கரத்வமாம் இத்தனை -நரக நிவர்த்தகம் அன்று

யஸ் ஸக்ருத் பாபம் குர்யாத் ஹ்ரியதே தத்தபோ பரம் –என்று சுருதி சொன்ன படியே பாப ப்ரவ்ருத்தி ஸஜாதீய பாபாந்தர ப்ரவ்ருத்தியிலும் மூட்டும்படியாய் இருக்கும் -அதாவது கர்மத்துக்கு விஸஜாதீய கர்ம யோக்யதா கரத்வமும் ஸஜாதீய கர்ம ப்ரவர்த்தகத்வமும் தத் அநுரூப பல ப்ரவர்த்தகத்வமும் என்று ஸக்தி த்ரயாத்வமும் உண்டு -அதில் பாவத்துக்கு விசஜாதீயமான புண்ய கரணத்துக்கு அயோக்யனாக்குகையும் அநிஷ்ட பல ப்ரதத்வமும் -ஸஜாதீய பாபாந்தரத்திலே ப்ரவர்த்திப்பிக்கையும் ஸ்வ பாவமாகையாலே ப்ராயச்சித்தங்கள் வை மூன்று சக்தியையும் கழிக்க மாட்டாது

அதில் சிலவை விஜாதீயமான புண்ய கரண யோக்யதையைப் பிறப்பித்து ஸூத்தனாக்கும் -பிராணாந்த காதிகளான சில ப்ராயச்சித்தம் புண்ய கரண யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -பாபாந்தர ருசி ஜனகமான வாஸனா ரூப ஸக்தி விசேஷத்தைப் போக்க வல்லதொரு பிராயச்சித்தம் இல்லை இறே –

அது உள்ளது க்ருஷ்ண விஷயம் ஒன்றுக்குமே இறே -எங்கனே என்னில் -ஸூத்திர் பவதி ஸம் ஸ்ம்ருத்ய ஸ்நாதோ பவதி தர்சநாத் -ப்ரணிபாதேந ஸூத்தாத்மா த்ரய க்ருஷ்ணே மஹா குணா -என்று இறே மஹ ரிஷிகள் ஸ்மரித்தது-அதாவது -ஸ்மரண மாத்ரத்தாலே புண்ய கர்ம யோக்யதா ரூபையான ஸூத்தி பிறக்கும் – கண்ணிட்டு விக்ரஹத்தைக் கண்ட அளவே பர லோபம் பிறவாத ஸ்தாநம் உண்டாம் -திருவடிகளில் ப்ரணாமத்தாலே பாப வாஸனா நாஸம் பிறக்கும்படி அந்தக்கரண ஸூத்தி உண்டாம் என்று பகவத் விக்ரஹத்துக்கு இந்த மஹா குணம் மூன்றும் சொல்லப்பட்டது –

ஆகையால் -ப்ராயச்சித்தாநி அசேஷாணி தப கரமாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-39- என்று ஸ்ரீ பராசர பகவானும் குருகுல பூத ஸமஸ்த ப்ராயச்சித்தங்களும் ஒரு தட்டும் -தத் ப்ரதிநிதியான கிருஷ்ண அநு ஸ்மரணத்தை உத்க்ருஷ்டமாகவும் சொல்லிற்று –

இவ் விடத்தில் அநு ஸ்மரணமாவது-அநுர் நிஹீநார்த்தே -என்று சேஷத்வ அனுரூபமான அநு ஸ்மரணம் -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர என்று தாஸ்யத்தை ஸ்மர்த்தவ்யமாக விதித்தது இறே -இவ் விடத்தில் கிருஷ்ண ஸப்தம் -க்ருஷிர் பூ வாசகஸ் ஸப்தோ ணஸ் ச நிர்வ்ருதி வாசக -விஷ்ணுஸ் தத் பாவ யோகஸ் ச கிருஷ்ண இத்யபி விஸ்ருத -உத்யோக -69-5- என்று ஆனந்த ரூபத்துக்கு வாசகமாக நிர்வசிக்கப் படுகையாலே நிரதிசய ஆனந்த ஸ்வரூபனான கிருஷ்ணனைச் சொல்லுகிறது

ஸக்ருத் ஸ்ம்ருதோ அபி கோவிந்தோ ந்ரூணாம் ஜன்மஸ தார்ஜிதம் -பாப ராஸிம் மஹத் யாஸூ தூல ராஸி மிவாநல -என்று ஒருக்கால் ஸ்மரித்த மாத்ரத்திலே அநேக ஜென்ம ஆர்ஜித பாப ராஸி பஞ்சுப்பொரி போலே சுடும்
யதேஷீகா தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -சாந்தோ -5-24-3- என்று நெருப்பிலிட்ட பஞ்சு போலே பகவத் த்யான பனுடைய ஸர்வ பாபங்களும் வெந்து போம் என்கிற பிரகாரத்தை ஸ்ருதியும் சொல்லிற்று இறே

இப்படி அதி மஹத்தாயும் அல்பங்களுமாயும் உள்ள ஸமஸ்த பாபங்களுக்கு அஞ்சி அநு தப்தனாய் தந் நிவர்த்தக ப்ராயச்சித்தங்களிலே அபிமுகனான வனுக்கு பாபாநாம் ஆனந்தயத்தாலே- ப்ராயச்சித்தங்களும் அசங்க்யா தங்களாகையாலே ஜென்ம சத ஸஹஸ்ரங்கள் கூடினாலும் பிராயச்சித்த அனுஷ்டானத்தாலே பாப நிவர்த்தகம் அஸக்யமாகையாலே இந்த ஸமஸ்த பாபங்களையும் ஸக்ருத் அநுஷ்டே யமாய் இருபத்தொரு ப்ராயச்சித்தத்தாலே போக்கிக் கொள்ளப் போகிறோமோ என்னும்படி பாகம் பிறந்தவனுக்கு விஹிதமானது இறே ஸ்ரீ கிருஷ்ண விஷயமான ஸக்ருத் ஸ்மரணம் –

எங்கனே என்னில் -க்ருதே பாபே அநுதாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ்யைகம் ஹரிஸம் ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-40- என்று பாப பயத்தால் பிறந்த அனுதாபத்தை அனுவர்த்தித்து பகவத் ஸ்மரணத்தையும் விதிக்கிற அளவில் ஏகம் என்று ஸக்ருத் கரணத்தையும் ஸம் ஸ்மரணம் என்று -ஸம் இத்யேகீ பாவே -என்கிறபடியே சரீராத்மா நிபந்தமான அப்ருதக் பாவ ஸ்மரணத்தையும் விதித்தது இறே –

இந்த ஸக்ருத் ஸ்மரணம் கேவலம் பாப க்ஷய அர்த்தமே யன்று-ஸ்வ அபி லஷித ஸமஸ்த புருஷார்த்த ப்ரதமமாய் இருக்கும் – ஆகை யிறே ப்ரஹ்லாதனும் -ஆயாஸ -ஸ்மரணே கோஸ்ய- ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -பாப க்ஷய ச பவதி -ஸ்மரதாம் தமஹர்நிகம் –ஸ்ரீ விஷ்ணு புரா -1-17-78- என்று உபதேசித்தது -அதாவது ஸ்மரண அநந்தரம் சோபனமான புருஷார்த்தகத்தை ஸர்வ காலமும் கூடா நிற்கும் -பிரதிபந்தகமான பாபம் ஸ்மரணத்தினுடைய ஆவர்த்தன மாத்திரத்திலே ஆதித்ய ஸந்நிதியில் அந்தகாரம் நசிக்குமா போலே ஸ்வயமேவ நஸியா நிற்கும் –இதுக்கு தேச கால அதிகாரி நியதியும் இல்லை என்றபடி –
ஆகையிறே -ப்ராதர்நிஸி ததா ஸந்த்யா மத்யாஹ் நாதி ஷு ஸம் ஸ்மரந் நாராயணன் அவாப்நோதி ஸத்ய பாப ஷயான் நர-ஸ்ரீ விஷ்ணு புரா –2-6-41- என்று ஸ்ரீ பராசர பகவானும் சொன்னார் இறே
இந்த ஸ்மரணம் ஸர்வ பல ப்ரதமே யாகிலும் முமுஷுவுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் அளவில் ஸ்வர்க்க பிராப்தியும் ப்ராப்ய பிரதிபந்தகமாம் படி ஸ்வயமேவ ரஸியா நிற்கும்

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

விஷ்ணு ஸம் ஸ்மரணாத் ஷீண ஸமஸ்த க்லேச சஞ்சய -முக்திம் ப்ரயாதி ஸ்வர்க்காப்தி தஸ்யந்தராய மைத்ரேய தேவேந்த்ரத்வாதிகம் பலம் -ஸ்ரீ விஸ்ணு புரா -2-6–42-43-என்று ஸ்மர்தவ்ய விஷய ஸ்வாரஸ்ய ப்ரீதி நிபந்தமான ஜப அர்ச்சநாதி கைங்கர்ய விசேஷங்களிலே அத்யர்த்த ப்ரியத்வத்தாலே இந்த்ராதி பத்யமும் அந்தராயம் என்று சொல்லப்பட்டது –

இந்த ஸ்மரணம் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்டப் ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்குமளவில் அநிச்சயா க்ருதமாகிலும் வஸ்து சாமர்த்யத்தாலே அவ்யபி சரிதமாய் இருக்கும் –
ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத -அநிச்சயாபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவக -ப்ருஹந் நார –11-99- என்று இச்சை இன்றியே ஸ்பர்சித்தாலும் அக்னி சுடுமா போலே ப்ரத் விஷ்டமான –(இவ் விடத்தில் சில வாக்கியங்கள் நஷ்டமானதாகக் காண்கிறன -அவை கோசாந்தரத்தில் காண்க) — நெஞ்சாலே நினைத்த ஸிஸூ பாலனுக்கு பலிக்கக் கண்டது இறே -இந்த ஸ்மரணம் கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் –

அவஸே நாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பதாகை -புமான் விமுச்யதே ஸத்யஸ் ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகைரிவ -ஸ்ரீ விஷ்ணு புரா -6–8-19
க்வ நாக ப்ருஷ்ட கமநம் புநரா வ்ருத்தி லக்ஷணம் க்வ ஜபோ வாஸூ தேவேதி முக்தி பீஜ மநுத்தமம்-ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-44-
ஸாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலந மேவ வா வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷாக ஹரம் வித்து -பாகவதம் -6-2–13-அஜோமில வ்யாக்யானம்
ஹத்யாயுதம் பாந ஸஹஸ்ர முக்ரம் குர்வங்க நாகோடி நிஷேவணஞ்ச ஸ்தேயாந்ய சங்க்யாநி ஹரே ப்ரியேண கோவிந்த நாம்நா நிஹதாநி ஸத்ய –
சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்த்தயேத் நா சவ்சம் கீர்த்தநே தஸ்ய ஸ பவித்ர கரோ யத –பாத்மோத்தர
பத்த பரிகரஸ் தேந மோஷாய கமநம் ப்ரதி ஸக்ருத் உச்சரிதம் யேந ஹரிரித் யஷர த்வயம் -காருட பூ 114-3-
நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வஸ வர்த்திநீ -ததா அபி நரகே கோரே பதந்தீஹ கிமத் புதம் –காருட -பூ 220-9

நாவாயில் உண்டே*  ‘நமோ நாரணா’ என்று,*
ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* – மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்*  வகைஉண்டே,*  என்ஒருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்


ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ் ச பீதா கோரேஷு ச வ்யாதி ஷு வர்த்தமாநா -சங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்தது காஸ் ஸூகிநோ பவந்தி
ஏதாவதால மகா நிர் ஹரணாய பும்ஸாம் ஸங்கீர்த்த நம் பகவதோ குண கர்மநாம்நாம் –ஆக்ருஸ்ய புத்ரம் அகவான் யத ஜாமிளோபி நாராயணேதி ம்ரியமாண உபைதி முக்திம்
கதவான் பரமம் பதம் தத –பதம் யத் என்றும் -இயாய முக்திம் என்றும் பாதாம் – -என்றும்
இது முதலான பிரமாண சதங்களாலே

பகவன் நாம ஸங்கீர்த்தனமும் ஸகல அநிஷ்ட சாந்தி பூர்வகமாக ஸர்வ அதிசயித புருஷார்த்த ப்ரதமாகச் சொல்லப்பட்டது இறே -இப்படி க்ருத ப்ராயச்சித்தனாகையாலே ஷீண பாபனானவனுக்கு ஸ்வ அனுஷ்டித புண்ய தாரதம்ய அநு ரூபமாக அநு பாவ்யங்களாய் இறே ஊர்த்வ லோகங்கள் இருப்பது –
இவ்விடம் தொடங்கி மேல் வாக்யங்களுக்கு அநு குணமாக ஸ்ரீ விஷ்ணு புராண -2-7- வசனங்களைக் கண்டு கொள்வது

இதில் கீழ் யுக்தமான பூ மண்டலத்துக்கு மேலே ஆதித்ய பதத்தளவும் நூறாயிரம் யோஜநம் உயர்த்தியாய் ஸித்த கந்தர்வாதிகள் ஸஞ்சரிக்கும் தேசமான அந்தரிக்ஷ லோகமாய் இருக்கும்
யாவத் பிரமாணா ப்ருதிவீ விஸ்தார பரி மண்டலாத் நபஸ் தாவத் பிரமாணம் வை வ்யாப்தம் மண்டலாதோ த்விஜ-ஸ்ரீ விஷ்ணு புரா -2-9-4- என்று அந்தரிக்ஷ லோகமும் பூமியோ பாதி விஸ்தாரத்தையும் சுற்றுடைமையையும் யுடைத்தாய் இருக்கும்

அந்த ஆதித்ய மண்டலத்துக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே சந்த்ர பதமாய் இருக்கும் -அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே நக்ஷத்ர பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே புதனுடைய பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸூக்ர -வெள்ளி
பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே அங்காரக -செவ்வாய்
பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ப்ருஹஸ்பதி பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸநி பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸப்த ரிஷி மண்டலமாய் இருக்கும்
அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஜ்யோதிஸ் சக்ர கூடஸ்தமான த்ருவ பதமாய் இருக்கும்
ஆக பூமி அந்தரிக்ஷ ஸ்வர்க்கங்கள் மூன்றினுடைய உயர்த்தி சொல்லப்பட்டது –

அதில் பாதாசாரிகள் வர்த்திக்கும் தேசம் பூ லோகம்
பூமிக்கும் ஆதித்யனுக்கும் நடுவு புவர் லோகம்
ஆதித்யனுக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாலு நூறாயிரம் யோஜநம் உயர்த்தியை யுடைத்தாய் ஸாதிகாரர்களான க்ரஹ நக்ஷத்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர்க்க லோகமாய் இருக்கும்

இதுக்கும் மேலே -த்ருவ பத்துக்கும் மேலே – ஒரு கோடி யோஜனம் உயர்த்தியை யுடைத்தாய் -விநிவ்ருத்தாதி காராஸ்து மஹர் லோக நிவாஸிந –சைவ புராணே என்று நிவ்ருத்தி அதிகாரராய் அதிகார அபேக்ஷையை யுடையராய் கல்பாந்த ஸ்தாயிகளான இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேஸமாயுள்ள மஹர் லோகமாய் இருக்கும் –

அதுக்கும் மேலே இரண்டு கோடி யோஜநம் உயர்த்தியாய் ப்ரஹ்ம புத்ரர்களாகிற ஸநகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜனர் லோகமாய் இருக்கும் –

அதுக்கும் மேலே அதில் நாலு மடங்காம் படி எட்டு கோடி யோஜனம் உயர்தியான -உயர்த்தியை யுடைத்தாய் வைராஜாக்யரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான தபோ லோகமாய் இருக்கும் – என்று தத்வ த்ரய வ்யாக்யான அநு ரோதேந பாடம் இருந்தால் நலம்
இது விஷ்ணு புராண ஸ்லோகத்துக்கும் -2-7-14-சேரும் –
தபோ லோகம் ஓங்காராதி பரம ரிஷிகள் வர்த்திக்கும் தேசமாய் இருக்கும் –

அதுக்கும் மேலே அதில் ஆறு மடங்காய் நாற்பத்தெட்டு கோடி உயர்த்தியை யுடைய ஸத்ய லோகமாய் இருக்கும்
இப்படி இத்யாதி வாக்ய அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -2-7-14-காண்க –
இப்படி ஸ்வர்க்க பர்யந்தமாக ஏக கோடியுமாய் கீழ் மேல் மஹர் லோகம் தொடங்கி ஐம்பத்து ஒன்பது கோடியாய் அறுபது கோடி உச்சாராயம் என்பாரும்- ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அண்ட உச்ச்சராயம் ஐம்பது கோடியாய் -ஸூர் யாண்ட கோலயோர் மத்யே கோட் யஸ்ஸ்யு பஞ்ச விம்சதி -சைவ புராணே -என்கையாலே ஸூர்ய மண்டலத்துக்குக் கீழே 25 கோடியும் மேல் 25 கோடியுமாக 50 கோடியாய் இருக்கும் என்பாருமாய் இருக்கும் –அப்போது ஸூர்ய பதத்துக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாறு லக்ஷமும் மஹர் லோகம் ஒரு கோடியும் ஜனர் லோகம் இரண்டு கோடியும் தபோ லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 8 கோடியும் சத்ய லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 12 கோடியும் இந்த ஸத்ய லோகத்துக்கு மேற்பட நாலு லக்ஷம் குறைந்த இரண்டு கோடி அண்ட கடாஹ ஊர்த்தளவாக இருக்கும்

இனி ஸூர்யனுக்குக் கீழ் அண்டாத கடாஹத்து அளவும் அந்தரிக்ஷ லோகம் பூ லோகம் ஸப்த பாதாளங்கள் அநந்த ஸ்தானம் கார்ப்போதகம் அளவாகச் சொன்ன ஸங்க்யைகளை நீக்கி உள்மானம் என்று அவிரோதேந கொள்ளக் கடவது -இப்படி உத் ஸேதத்தை யுடைத்தான -இவ்விடத்திற்கு அனுகுணமாக -2-9-15–ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் காண்க –

சதுர் தச புவனத்திலும் ஊர்த்வ லோகமான ஸத்ய லோகத்திலே -தேஷாமேஷாம் கேசந ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யான்யே சந்தி தத்ரைவ லோகா விஷ்ணோ ரன்யே சந்தி லோகா விஸாலாஸ் தாம் ஸ்தான் லோகாம்ஸ் தாநு பாஸ்ய வ்ரஜந்தி -என்று அம்ச பேதத்தாலே சில ப்ரஹ்ம லோகங்களாய் -சில சிவ லோகங்களாய் -சில விஷ்ணு லோகங்களாய் -அவ் வவரை உபாஸித்தவர்களுக்கு ப்ராப்யங்களாய் இருக்கும் –

இந்த சத்ய லோக வர்த்திகள் -வேதாந்த விஞ்ஞாந ஸூநிஸ் சிதார்த்தா ஸந்யாஸ யோகாத் யதயஸ் ஸூத்த ஸத்வா – தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரி முச்யந்தி ஸர்வே -தைத்த ஆனந்த -6-10-22- என்றும்
ப்ரஹ்மணா ஸஹ தே ஸர்வே ஸம் ப்ராப்தே ப்ரதி சஞ்சரே -பரஸ் யாந்தே க்ருதாத்மாந பிரவிசந்தி பரம் பதம் -கூர்ம பு பூ 12-269- என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறபடியே பரமான ஸம்ஹார காலம் வந்தவாறே ப்ரஹ்மாவோடே கூடி மோக்ஷத்தை பிராபிப்பர்கள்

ஆப்ரஹ்ம புவநால் லோகா புநரா வ்ருத்தி நோர்ஜூந -கீதை -8-16- என்று ப்ரஹ்ம லோகத்திலே போனவர்களுடைய ஆவ்ருத்தி வசனம் -ப்ராஹ்மம் ஸந்யாஸி நாம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-6-37- இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ணாஸ்ரமாதி தர்ம சர்யையாலே ப்ரஹ்ம லோக பிராப்தி பண்ணின அவித்வத் விஷயம் யோகாதி சயத்தாலே பிராபித்த வித்வத் விஷயம் அன்று என்று கொள்ள வேணும்

இந்த லோகங்களில் -ஜனஸ் தபஸ் ஸத்யம் என்று சொல்லப்பட்ட ஊர்த்வ லோகங்கள் மூன்றும் ஆதி ஸ்ருஷ்டி தொடங்கி ப்ரஹ்மாவினுடைய ஆயுரவஸாநத்தளவும் நிற்கையாலே நடுவு அழிவு வந்து ஸ்ருஷ்டிக்க வேண்டாமையாலே அக்ருதகம் என்று பேராய் இருக்கும் -இதுக்கு அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு புரா -7-7-19-21-ல் காணலாம்

கீழ் பூம் யந்தரிக்ஷ ஸ்வர்க்க ரூபமான த்ரை லோக்யமும் (இந்த மூன்றும் கீழ் உள்ள ஏழும்)ப்ரஹ்மாவினுடைய அஹரவஸா நத்திலே ஸம் ஹ்ருதமாயும் கல்பாதிகளிலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டும் இப்படி ப்ரஹ்மாவினுடைய திநே திநே ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்கள் உண்டாகையாலே க்ருதகம் என்று பேராய் இருக்கும் –

நடுவில் மஹர் லோகமானது த்ரை லோக்ய ஸம்ஹாரத்தில் -யாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந –பாடாந்தரம் கோஸாந்தரங்களில் காண்க -த்ரி லோக்யாம் தஹ்யமா நாயாம் கஸ்த்யா சங்கர்ஷணாக்னிநா யாந்த் யூஷ்மணா மஹா லோகாத் ஜனம் ப்ருக்வா தயோர்த்திதா -என்கிற ஸூக வசனத்தில் இவ் வர்த்தம் காண்க -என்கிறபடியே தாபாதிகள் பொறுக்க மாட்டாதே மஹர் லோகத்தார் குடி வாங்கி ஜனர் லோகத்தே குடி புகுருகையாலே லோகம் ஸூன்யமாய் கல்பாதிகள் தோறும் குடி புகுருகையாலே க்ருதா க்ருதங்களுக்கு நடுவு என்றிட்டு க்ருதாக்ருதம் என்று பேராய் இருக்கும் –

இந்த த்ரை லோக்யம் இஜ்யா ரூபமான கர்ம அநுஷ்டான ஸ்தானமுமாய் இஜ்யா பல போக ஸ்தானமுமாய் இருக்கும்
அல்லாத லோகங்கள் யோக ஜனித் புண்யாதிஸயத்தினுடைய பல போகத்துக்கு ஸ்தானங்களாய் இருக்கும்

இதி தத்வ நிரூபநீ போக பூமி நிரூபணம் நாம சதுர்த்த அதிகாரம் ஸம் பூர்ணம் –

——-

பஞ்சம அதிகாரம்— ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
1-ஸம்ஹார நிரூபணம்
2-நித்ய நைமித்திக ப்ராக்ருதாத் யந்திக ப்ரளய ஸ்வரூப நிரூபணம்
3-ஸம்ஹார ப்ரகார நிரூபணம்
4-சதுர் முக க்ருத பத்தாத்ம ஸ்ருஷ்டி நிரூபணம்
5-அணிமாத் யஷ்ட ஐஸ்வர ஸ்வரூப நிரூபணம்
6-த்வாதஸாதித்ய நாம நிரூபணம்
7-ஆதித்யாதி ஸப்த கண நாம க்ருத்ய நிரூபணம்
8- த்வாதஸ மாஸேஷு த்வாதஸாதித்யாதி ஸப்த கண பரி ப்ரமண நிரூபணம்
9-ஆதித்ய மண்டலாதிஷ்டித புருஷ அந்தர்யாமி -ஸ்ரீ மன் நாராயண ஸ்வரூப நிரூபணம்

——–

ஸம்ஹாரம் இருக்கும் படி எங்கனே என்னில்
1-நித்யம் என்றும்
2-நைமித்திகம் என்றும்
3-ப்ராக்ருதம் என்றும்
4-ஆத்யந்திகம் என்றும் நாலு வகைப்பட்டு இருக்கும்
ஸம்ஹாரப் ப்ரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-3-4-

அதில் 1-நித்யமாவது -உத்பன்ன சேதனருக்கு யமாதிகளால் வருகிற சரீர வியோகம்
2-நைமித்தகமாவது – ப்ரஹ்மாவினுடைய ராத்ரிகள் தோறும் உண்டாகிற த்ரை லோக்ய விநாஸம்
3- ப்ராக்ருதமாவது -ப்ரஹ்மாவினுடைய ஆயுர் அவஸா நத்திலே ப்ரக்ருதி பர்யந்தமாக உண்டாகும் விநாஸம்
4-ஆத்யந்திகமாவது -உத்பன்னமான அவித்யாதிகளோடே கூட புனர் உத்பத்தி வாராதபடி உண்டாகும் சரீர விநாஸம்

இதில் பிரகிருதி நாஸ பர்யந்தமான ஸம்ஹாரம் ப்ராக்ருத ஸம்ஹாரமாகையால் -அது கீழ்ச் சொன்ன உத்பத்தி கிரமத்துக்கு உடலாகையாலே அறிய வேணும் –
அப்யவ பூர்விகையாய் இறே ஸ்ருஷ்டி இருப்பது –
இதில் முதல் நைமித்திக ஸம்ஹார க்ரமத்திலே நூறு வர்ஷம் அநா வருஷ்டியாய்க் கிடக்கும்
அனந்தரம் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரன் -1-ஸூஷும்நோ 2-ஹரி கேஸஸ் ச 3-விஸ்வ கர்மா ததைவ ச 4-விஸ்வஸ்ய 5-ஸாஸ்வதா 6-ஸம்யத் வஸூரர் வாக்வ 7-வஸூஸ் ததா –கூர்ம பு பூ 42-3- என்று சொல்லுகிற ஸூஷும் நாதிகளான ஆதித்ய கிரணங்கள் ஏழிலும் பிரவேசித்து நின்று- பூமியிலும் ப்ராணிகளுடைய சரீரங்களிலும் உண்டான நீர்ப் பசையை அறுக்கும் -இப்படி லோகத்திலே துவட்டித்த நீர் கனத்தாலே அதிசயித்த தேஜஸ்ஸை யுடைத்தான இந்த ஏழு ஆதித்ய கிரணங்களிலும்
1-ஆரோகன் என்றும்
2-ப்ராஜன் என்றும்
3-படரன் என்றும்
4-பதங்கன் என்றும்
5- ஸ்வ வர்ணன் என்றும்
6- ஜ்யோதிஷ்மான் என்றும்
7-விபாஸன் என்றும்
ஆரோகோப்ராஜ படர பதங்க ஸ்வ வர்ணரோ ஜ்யோதி ஷீமான் விபாஸ -இதி ஸப்த ஸூர்யோ இதி ஸ்ருதே –யஜுஸ் ஆ -1-7-1-என்கிற பேர்களை யுடைத்ததாய்க் கொண்டு ஏழு ஆதித்யர்களாய் பரிணமிக்கும்
அவ் வேழும் இவ் வேழு லோகங்களையும் காறு காலில் பொறி கூறுபட்டது படுத்தித் தீயப் பண்ணும் –
இப்படித் தீய்கையாலே லோகத்தில் உண்டான மலைகளும் சுண்ணாம்புக் கல் போலே வெந்து நீராய் -நீறாய் -(பஸ்மமாய்
-) வ்ருஷ குல்மாதிகளும் வெந்து சாம்பலாய் பூ மண்டலம் அடைய ஒரு துரும்பு காண ஒண்ணாத படி ஆமை முதுகு போலே கிடக்கும்

இப்படி இவ் வாதித்யர்களாலே இந்த லோகத்தில் நெய்ப்பு நீர்ப் பசையும் அற்றவளவிலே ஈஸ்வரன் காலாக்கினி ருத்ர ரூபத்தைத் தரித்துக் கொண்டு பாதாள கதனான அநந்தன் முகத்திலும் குதித்து வைக்கோல் போரை அடியே தொடங்கிச் சுட்டுக் கொண்டு ஏறுமா போலே பாதாளம் தொடங்கி லோகங்களை அடைவிலே சுட்டுக் கொண்டு எரித்த அநந்தரம் முக நிஸ் வாசத்தாலே புஷ்கலா வர்த்தங்களான மேகங்களை ஸ்ருஷ்டிக்கும் -அம் மேகங்கள் ஆகாஸம் அடைய இடமடையும் படி மின்னலும் இடியுமாய் நூறு வர்ஷம் வர்ஷிக்கும் -அவ் வர்ஷ ஜலத்தால் எரிகிற நெருப்பும் அவிந்து லோகமடைய வெள்ளம் கோக்கும் -அநந்தரம் இப்படி வர்ஷிக்கிற மேகங்கள் அடையப் பாரிப் பரந்து போம்படி பகவன் முக நிஸ் வாசமாகிற காற்று நூறு வர்ஷம் ப்ரஹ்மாண்ட மடையக் குலுங்கும்படி அடிக்கும் -ஆன பின்பு நிரம்பி நிற்கிற ஜல தத்வம் அண்டாந்தர வர்த்தியான பூமியினுடைய பூமித்வ வ்யவஸ்தாபகமான கந்த குணத்தை க்ரஸிக்கும் -அக் கந்தையான பூமி ஜல தத்வமாயே விடும் –(குடம் உடைய மண் ஆகுமா போல் காரியப் பொருள் காரணப் பொருளாகவே ஆகி விடுமா போல்)

அந்த ஜலத்தினுடைய ரஸாத் மகமான குணத்தை தேஜஸ்ஸு க்ரஸிக்கும் -அந்த ரஸமான ஜலம் தேஜஸ்ஸாயே விடும் -அந்த தேஜஸ்ஸினுடைய ரூப குணத்தை வாயு க்ரஸிக்கும் பின்பு அந்த தேஜஸ்ஸு வாயுவாயே விடும் -வாயு குணமான ஸ்பர்சத்தை ஆகாசம் க்ரஸிக்கும் -பின்பு அந்த வாயு ஆகாசமாயே விடும் -ஆகாஸ குணமான ஸப்தத்தை பூதாதி க்ரஸிக்கும் -பின்பும் ஆகாஸமும் இந்த்ரியங்களும் ஒருக்காலே அஹங்காரத்திலே லயிக்கும் -அஹங்காரம் மஹானிலே லயிக்கும்

உர்வீ மஹாம்ஸ் ச ஜகத ப்ராந்தே அந்தர் பாஹ்யதஸ் ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-29- என்று அண்டத்துக்கு உள் வாயோடு புற வாயோடு வாசியற ஒரு ப்ராந்தத்திலே ப்ருதிவியும் ஒரு ப்ராந்தத்திலே மஹானும் என்று சொல்லுகையாலே -இதற்கு அநு குணமாக -6-4-29- விஷ்ணு சித்தீயத்திலே காண்க
உள் வாயில் ப்ரதம கோடியானபிருத்வி தொடங்கி சரம கோடியான மஹான் அளவும் செல்ல இவ் வண்டமான கார்யம் இப்படி அழிந்து ஆவரண ஜலமே சேஷித்து நிற்கும்

இஜ் ஜலம் தொடக்கமான ஆறு ஆரணமும் ஒன்றிலே ஓன்று லயித்து ப்ரக்ருதியே சேஷிக்கும் -அந்த ப்ரக்ருதி தானும் புருஷ சமஷ்டி யாத்மகமான அக்ஷர அவஸ்தையை பஜித்து- தத் அவஸ்தமான ப்ரக்ருதியும் புருஷனும் -ஆஸீதிதம் தமோ பூதம் அப்ரஞ்ஞாதம லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்தமிவ ஸர்வத–மநு -1-5- என்கிறபடியே அநிர்த் தாரணீயமாகச் சொல்லப் படுகிற ஒரு அவஸ்தையை அடைந்து -ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வ ரூபிணீ புருஷஸ் சாப் யுபாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39- என்கிறபடியே தமோ வஸ்தரான ப்ரதான புருஷர்கள் இருவரும் பரமாத்மாவின் பக்கலிலே விபாக நர்ஹ தஸா பத்தி லக்ஷண லயத்தை அடைந்து கிடப்பர்கள்-இப்படி பரமாத்மாவையே அடைந்து ப்ரக்ருதி புருஷாதி சகல விகல்ப ஸூன்யமாய்க் கொண்டு பரார்த்த காலம் கிடக்கும் -இது பிராகிருத ஸம்ஹார ப்ரகாரம்

இப்படி பகவாதாத்மகனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டமான லோகங்களில் கர்ம பல பேத ஸ்தானமாக நாநா வித சரீர பரிக்ரஹரம் பண்ணி உத் பன்னரான பத்தாத்மாக்களுடைய ஸ்ருஷ்டி ப்ரகாரம் நிரூபிக்கப் படுகிறது–ஸ்ருஷ்டி பிரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5- காண்க –

அதில் ஸ்ருஷ்டியிலே உபக்ரமித்த ப்ரஹ்மாவுக்கு அபுத்தி பூர்வக -விஷேத்யாந ரஹித -தமஸ் ப்ரசுரமாய் குல் மதியான (புதர் தொடக்கமான)சர்க்கம் முந்துற உண்டாயிற்று -இது தான் 1-தமஸ்ஸு 2-மோஹம் 3-மஹா மோஹம் 4-தாமிஸ்ரம் 5-அந்த தாமிஸ்ரம் என்று பஞ்ச ப்ரகாரமான அவித்யா ரூபமாய் இருக்கும் –

வ்ருஷாதிகளுக்கு ஸப்தாதி பாஹ்ய ப்ரகாஸமும் ஸூக துக்காத் யந்த ப்ரகாசமுமாகிற ப்ரக்ருஷ்ட விஞ்ஞாநம் இன்றியே ஜலாத் யாதாநம் ஷத பங்க ஸம் ரோஹணம் -தோஹதாதி ஸம் பர்க்கங்களுக்கு வேண்டுமதுவே யாம்படி இருக்கும் -மஹீருஹாதி களுக்கு கிஞ்சித் ஞாத்ருத்வம் இறே உள்ளது -ஆகை யிறே -அந்தஸ் ஸம்ஜ்ஞா பவந்த்யேதே ஸூக துக்க ஸமன்விதா -என்று சொல்லப்பட்டது -இதற்குச் சொன்ன பஞ்ச ப்ரகாரத்வம் ஆவது -வ்ருக்ஷம் -குல்மம் – லதை வீருத் த்ருணம் என்று அஞ்சு வகையாய் இருக்கும் –
வ்ருக்ஷமாவது -உள் காள் புண்டான மரங்கள்
குல்மமாவது -தூறுகள்
லதையாவது -கொடிகள்
வீருத்தாவது -பற்றமான பூண்டுகள்
த்ருணமாவது -உள் ஈரம் இல்லாதவைகள்
இந்த வ்ருஷாதி சர்க்கம் திர்யக் ஸ்ருஷ்ட்யாதி களுக்கு முன்பாகையாலே முக்ய சர்க்கம் என்று சொல்லப்படும்
அபுத்தி பூர்வகம் என்றும் சொல்லப் படுகையாலே ப்ரஹ்மாவினுடைய ஸ்ரஷ்டத்வம் பகவத் ஸங்கல்ப அதீனம் என்றும் இந்த சர்க்கத்தினுடைய தமஸ் பிராஸுர்யத்துக்கு இதுவே ஹேது என்றும் தோன்றுகிறது –

இந்த தமோ மோஹாதிகள் அஞ்ஞாந பேதமாய் பத்த சேதனர் எல்லாருக்கும் உண்டாய் இருக்கும் -எங்கனே என்னில்
1- ப்ரக்ருதி மஹத் அஹங்கார மாத்ரா பஞ்ச காத்மகமான அஷ்ட பேத கர்ப்பமாய் இருந்துள்ள அநாத்மாவில் ஆத்ம புத்தி தமஸ்ஸு
2-அணிமாத்ய ஐஸ்வர்ய லாபத்தில் மமத்வம் மோஹம்
3-திவ்ய மானுஷ பேதத்தாலே தஸதா பின்னமான ஸப் தாதிகளில் ராகம் -மஹா மோஹம்
4- இந்த அஷ்ட ஐஸ்வர்ய தச விஷயங்களுக்கு பரரால் விரோதம் வந்தால் பிறக்கும் க்ரோதம் -தாமிஸ்ரம்
5- இவற்றினுடைய போகத்தில் நடுவே விநாஸம் வருகிறதோ என்கிற பயம் -அந்த தாமிஸ்ரம்
இவை யதார்த்த ஞான விரோதிகள் –

இவை ஐந்தையும் -அவித்யை -அஸ்மிதை -ராகம் -த்வேஷம் -அபி நிவேசம் -என்று சொல்லப்பட்ட கிலேச பஞ்சகமாகவும் சொல்லுவார்கள்
யோக ஸூத்ர காரர்கள் சொல்லுவார்கள் என்றபடி – அவித்யாஸ்மிதா ராக த்வேஷாபி நிவேசா பஞ்ச கிலேசா இதி ஸூத்ரம் –

இந்த பஞ்ச பர்வையான 1-அவித்யையில் தமஸ்ஸு எட்டு வகையும் 2-மோஹம் எட்டு வகையும் 3-மஹா மோஹம் பத்து வகையும் 4-தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் 5-அந்த தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் -ஆக ஐம்பத்து இரண்டு பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் -என்று சாங்க்யத்திலே சொல்லப்பட்டது

அணிமாத் யஷ்ட ஐஸ்வர்யமாவன -அணிமா மஹிமா சைவ கரிமா லகிமா ததா ஈஸத் வஞ்ச வஸித் வஞ்ச பிராப்தி ப்ராகாம்ய மேவ ச -லிங்க பு பூ -88-9- என்கிறபடியே யோக பலமாய்க் கொண்டு முமுஷுவுக்கு மோக்ஷ ப்ரதிபந்தகமாய் வரும் ஐஸ்வர்ய விசேஷங்கள்

இதில் 1-அணிமா வாவது -அத்யந்தம் அணுவான பதார்த்தங்களை உள்ளே யுள்ள அடங்க வல்லனாம்படி தன் சரீரத்தைச் சிறுக்குகை
2- மஹிமா வாவது – சதுர்த் தச புவனங்களையும் வியாபிக்கும் படி தன் சரீரத்தைப் பெருக்குகை
3- கரிமா வாவது புவநோத்தரண க்ஷமமான அதிசய சக்திகளாலும் சலிக்க ஒண்ணாத கனத்தை உடையனாகை
4-லகிமா வாவது -நிலா வெய்யில் தொடக்கமான ஸ்வச்ச பதார்த்தங்களும் தன்னைத் தரிக்கும் படி கன சரீரத்தை நொய்த்தாக்குகை
5-ஈஸத்வமாவது -அப்ரதிஹதமான ஸ்வச் சந்த ப்ரவ்ருத்தியை உடையனாகை
6-வஸித்வமாவது -ஜனன மரணாதி களும் ஸ்வ அதீனமாகை
7-பிராப்தி யாவது அதீத நாகத தூரஸ்தமான விஷயங்களையும் ப்ரத்யஷித்து பிராபிக்கை
8-ப்ராகாம்ய மாவது -யத்ர காம வஸா யித்வமாகையாலே தன் அபிமத விஷயங்கள் துர்லபங்களே யாகிலும் தான் நினைத்த படியே பர காய ப்ரவேசத்தாலே யாதல் -சாயாநு ப்ரவேசத்தாலே யாதல் -தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தாலே அதிஷ்டித்து அநு பவிக்கை
லிங்க புரா பூ 88-10-
இந்த தமோ மோஹாதி பேத பஞ்சகம் நக -ஸ்தாவர சர்க்கத்தில் (
நக -மலை)வந்தால் வ்ருஷாதியான வஸ்து பேதத்துக்கு ஸூசகமாய் இருக்கும்

இந்த நக சர்க்கம் கர்மாதிகாரத்தை உடைத்தல்லாமையாலே சம்சார ப்ரவ்ருத்திக்கு யோக்யமல்ல என்று நினைத்து பின்னையும் சர்க்காந்தரத்தில் வந்தால் உபக்ரமித்த ஸ்ரஷ்டாவானவன் த்யானம் பண்ணின அளவிலே பஸ்வாதியான திர்யக் ஸரோதஸ் ஸானது உத் பன்னமாயிற்று – திர்யக்க்காக ஸஞ்சரிக்கையாலே திர்யக் ஸ்ரோதஸ் என்று பேராகிறது –
அந்த பஸ்வாதிகள் தமஸ் ப்ரசுரங்களாய் -அத்தாலே ஸம்யக் அநுபவ ஞானம் இன்றியிலே இருக்கச் செய்தே ஸம்யக் ஞான அபிமானிகளாய் அவிவேகிகளாய் ஸாஸ்த்ர வஸ்யம் இல்லாமையாலே மாத்ருகமநாதி துர் மார்க்க ப்ரவ்ருத்தங்களாய் ஸூக துக்காத் யநுபவத்தாலே அந்த ப்ரகாஸ யுக்தங்களாய்
அஹங்க்ருதா அஹம் மாநா -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5-11- என்று கர்விதங்களுமாய் -தேஹாத்ம அபிமானிகளுமாய் ஸ்வ பர ஸ்வரூப ஞானம் இல்லாதபடி ஆவ்ருத சித்தங்களுமாய் -அஷ்டா விம்சத்வதத்தை யுடையவையாய் இருக்கும்

அஷ்டா விம்சத் வதமாவது
ஏகாதஸ இந்த்ரிய வதா மதா-இந்த பங்க்திக்கு அனுகுணமாக ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -1-5-11- காண்க – வாயு புராணத்திலும் பூ -6-42-சொல்லுகிறபடியே
இந்த்ரிய வைகல்யம் பதினொன்றும்
அம்பாதி துஷ்டிகள் ஒன்பதும்
தாரகாதி ஸித்திகள் எட்டும்
ஆக அஷ்டா விம்சத் வதம் என்று சொல்லப்படும்

இவற்றில் இந்த்ரிய வைகல்யமாவது -பதிரத்வமும் -த்வக் தோஷமும் -ஆந்த்யமும் வைரஸ்யமும் -நாஸாத்வம்ஸமம் ஞான இந்த்ரிய வைகல்யம்
மூகத்வமும்- குணித்வமும் -பங்குத்வமும்- க்லீபத்வமும் -யூதா வர்த்தத்வமும் கர்ம இந்த்ரிய வைகல்யம்
ஜடத்வம் மநோ வைகல்யம்
அம்பாதி நவ துஷ்டிகளுக்கும் தாரகாத் யஷ்ட ஸித்திகளுக்கும் வைகல்யம் புத்தி வதம் என்று பேராய் பதினேழு படியாய் இருக்கும் -இது திர்யக்குகளுக்கும் மனுஷ்யாதிகளுக்கும் பிரதான்யமாய் இருக்கும்
இதில் நவ துஷ்டிகளாவது -அம்பை ஸலிலை ஆபை வ்ருஷ்டி ஸூதாரை ஸூபாரை ஸூநேத்ரை மாரீசிகை யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்

அதில் அஷ்ட வித ப்ரக்ருதி பரிணாம விசேஷத்தாலே -சித்த லயத்தில் நீண்டும் முக்தனாகா நின்றேன்- த்யானத்தாலே என்ன பிரயோஜனம் என்கிற துஷ்டிக்கு அம்பை என்று பெயர்
ஸன்யாஸ வேஷோபாதாந மாத்ரத்தாலே க்ருதார்த்தனாகா நின்றேன் என்கிற துஷ்டிக்கு ஸலிலை என்று பேர்
காலாந்தரத்திலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு ஆபை என்று பேர்
பாக்ய வசத்தாலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு வ்ருஷ்டி என்று பேர்
இவை நாலும் ஆத்யாத்மிகங்களாய்க் கொண்டு 1-ப்ரக்ருதி 2-உபாதானம் 3-காலம் 4-பாக்யம் என்கிற காம்யாந்தரங்களை யுடையவையாய் இருக்கும்

அர்த்தத்தினுடைய ஆர்ஜனத்திலும் -ரக்ஷணத்திலும் -ஷயத்திலும் கிலேச தர்சனத்தாலே மீண்டு இருக்கிற துஷ்டிகளுக்கு ஸூதாரை –ஸூபாரை ஸூநேத்ரை என்று பேர்களாய் இருக்கும்
ஸப்தாதி விஷய போகத்தில் திருப்தி பிறவாதே தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு மாரீசிகை என்று பேர்
விஷய போகத்தில் திருஷ்ணை கழியாது ஒழிந்தால் பாபாதி தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்

அஷ்ட ஸித்திகளில் அநு பதிஷ்டமான அர்த்தத்தைப் பற்ற புத்தியால் உண்டான ஊஹம் ஸ்தாராக்யையான ஸித்தி –ப்ராசங்கிக்கமான ஸப்த ஸ்ரவணத்தாலே யாதல்- லோக யாத்ரா தர்சனத்தாலே யாதல் -அர்த்த ஞானம் பிறக்கை ஸூதாராக்யையான ஸித்தி –
குரு உபதேசத்தாலே எதிலும் அதிகமான அர்த்த ஞானம் பிறக்கை தாராயந்த்யாக்யையான ஸித்தி
ஆத்யாத்மிக ஆதி பவ்திக ஆதி தைவீக ரூப தாப த்ரய ஜய லாபத்தாலே மூன்று வகைப்பட்ட மோத -பிரமுதித மோதமாநாக்யைகளான ஸித்திகள்

இவ் விடத்தில் ஆத்யாத்மிக தாபத்துக்கு ஆயுர் வேதத்தாலே ஜயம்
ஆதி பவ்திகத்துக்கு லௌகிகங்களான தத் தத் அநு ரூப உபாய விஷயங்களாலே ஜெயம்
ஆதி தைவிகமான சீதோஷ்ண வாதாதிகளுக்கு ப்ரதிஸ்ர யாச்சாத ந சய்யா கௌதுக மங்களா சரணாதிகளாலே ஜயம்
ஆதி தைவிகஸ்ய ப்ரதிஸ்ர யோசிச்சாந ப்ரதிஷ்டாதாந சய்யா கௌதுக மங்களா சரணாதி நா ஜய –இதிஹி -1-5-11- விஷ்ணு சித்தீய வாக்யம்

மித்ர யோக வசத்தாலே -அர்த்த ஸித்தி உண்டாகை அதிக மாக்யையான ஸித்தி
வித்வத்த பஸ்விஜந ஸூஸ் ரூஷையாலே லப்யையான அர்த்த ஸித்தி ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்தி

ஆக தாராக்யை-ஸூ தாராக்யை-தார யந்த்யாக்யை -மோதாக்யை -பிரமுதி தாக்யை -மோதமாநாக்யை -அதிகமாக்யை -ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்திகள் எட்டும்
அம்பாதி நவ துஷ்டியும்
புத்தி விபர்யாஸ ஜனிதங்களாய்க் கொண்டு புத்தி வதாத்மிகங்களான இவை பதினேழும்
இந்த்ரிய சக்திகள் பதினொன்றும்
மோஷாந்தராயங்களாக சாங்க்யத்திலே சொல்லப்பட்டது

ஏகாதஸ இந்த்ரிய வதாஸ் ஸஹ புத்தி வதைர ஸக்தி ருத்திஷ்டா -ஸப்த தச தாது புத்தேர் விபர்ய யாத் துஷ்டி ஸித்தீ நாம்
ஆத்யாத்மிகாஸ் ச தஸ்ர -ப்ரக்ருத் யுபாதாந கால பாக்யாக்யா–பாஹ்யா விஷயோ பரமா பஞ்ச நவ துஷ்டயோர் அபி ஹிதா -யூஹஸ் சப்தா அத்யயனம் துக்க விகாதாஸ் த்ரயஸ் ஸூஹ்ருத் பிராப்தி -தாநஞ்ச ஸித்தய அஷ்டவ் ஸித்தே பூர்வோங்குஸஸ்த்ரி வித -என்று ஸித்தே மோக்ஷஸ்ய -அங்குஸ அந்தராய த்ரிவித விபர்யாய ஸக்தி துஷ்டிரிதி

இப்படி அஷ்டா விம்சத் வதாத்மகமான திர்யக் சர்க்கம் ஸ்ருஷ்ட்யாதி ஜகத் ப்ரவ்ருத்தி ஹேது அல்லாமையாலே பின்னையும் ஸ்ருஷ்ட் யுன்முகனான ப்ரஹ்மாவினுடைய த்யான ரூப ஸங்கல்பத்தாலே யூர்த்வ ஸ்ரோதஸ் ஸப்த வாஸ்யமான தேவ சர்க்கம் உண்டாயிற்று
அநிமிஷ த்ருக்களாய் ஊர்த்வ ஸஞ்சார யுக்த ராகையாலே ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்கள் என்கிறது –
அந்த தேவர்களாகிறார் -ஸத்வ உத்ரிக்தராய் ஸூக ப்ரீதி பஹுளராய் -உள்ளோடு புறம்போடு வாசியற ஞாநாதி ரோதநம் இன்றியே ஸர்வதா ஸந்துஷ்ட சித்தராய் இருப்பார்கள் -அவர்களும் ஜகத் ப்ரவ்ருத்தி நிரபேஷராய் இருக்கையாலே கீழ்ச் சொன்ன முக்யமான நக சர்க்கம் (
ஸ்தாவர ஸ்ருஷ்டி)திர்யக் சர்க்கங்களோடு வாசியற அஸாதகமாக நினைத்து குண த்ரய விசிஷ்டராகையாலே ப்ரகாஸ ப்ரவ்ருத்தியாதி சீலரான மநுஷ்யர்களை ஸ்ருஷ்ட்டித்தான் -இந்த மனுஷ்ய சர்க்கம் -தேவ சர்க்கத்துக்குக் கீழாய் இருக்கையாலே அர்வாக்ஸ் ரோதஸ் என்று பேராய் இருக்கும் –

இப்படி ஸ்தாவ ராதிகளான நாலு ஸ்ருஷ்டிகளும் அந்விதங்களாய்க் கொண்டு கீழ்ச் சொன்ன ஸக்தி வதாதிகளான அநுக்ரஹ ஸ்ருஷ்டிகளோடே கூடி இருக்கும் –
1-மஹதாதி ஸ்ருஷ்டியும் 2-தன் மாத்ராதி பூத ஸ்ருஷ்டியும் -3-இந்த்ரிய ஸ்ருஷ்டியும் என்று ப்ராக்ருத ஸ்ருஷ்டி மூன்றாய்– (
ப்ரக்ருதி ஸ்ருஷ்ட்டியையும் சேர்த்து நான்காய்)ஸ்தாவராதிகளான நாலாயிருந்த அநுக்ரஹம் கூடி எட்டு ஸ்ருஷ்டிகளாய் இருக்கும் –

இது தான் அஷ்டம அநுக்ரஹஸ் சர்க்க ஸ சதுர்தா வ்யவஸ்தித -விபர்யயேண அசக்த்யா ச ஸித்தயா துஷ்ட்யா ததைவ ச -ஸ்தாவரேஷு விபர்யாசாத் திர்யக்யோ நிஷ்வ ஸக்தித -ஸித்த்யாத்மநா மனுஷ்யேஷு துஷ்ட்யா தேவேஷு க்ருத்ஸ் ந ஸ -என்று வாயவ்யத்திலே சொல்லுகிறபடியே ஸ்தாவர ஜாதியில் இந்த இந்த்ரியாதிகளுடைய ஸ்வரூப விபர்யாசத்தாலும் -திர்யக் ஜாதியில் ஸக்தி குண்ட நத்தாலும் -மநுஷ்ய ஜாதியில் ஸித்தி ரூபத்தாலும் -தேவ ஜாதியில் துஷ்டி ரூபத்தாலும் தத் தத் ஸ்வ பாவ அநுக்ரஹ ரூபம் என்றதாயிற்று

ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்களான தேவர்கள் ஆகிறார் -ஸநகாதி பரம யோகிகளும் நவ ப்ரஹ்மாக்களும் முதலானாரும் -இன்னமும் ஊர்த்வ லோக வாசிகளான தேவ வர்க்கங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களாகிறார் –ஏகாதஸ ருத்ரர்களும்- (திருநாம்கூர் 11 திவ்ய தேசங்களும் இந்த 11 ருத்ரர்களுக்கு)த்வாதஸ ஆதித்யர்களும் (துவாதச ஆதித்ய சீலம் பிருந்தாவனத்தில் உண்டு -பிரச்சந்தன தீர்த்தம் வியாவை தீர்த்த குளமும் உண்டு)-அஷ்ட வஸூக்களும் அஸ்விநீ தேவதைகளும்(குதிரைமுக வைத்தியர்கள் -இந்திரன் பிரஜாபதி இருவரும் என்றும் பிரமாணம்) என்று சொல்லப்பட்டு இருக்கிற த்ரயஸ் த்ரிம்ஸத் கோடி நிர்வாஹகமான தேவதா வர்க்கங்கள்
ஏதே த்ரயஸ்ரிம் சத்தேவா இதி – கதமேந த்ரயஸ் த்ரிம் ஸதித் யஷ்டவ் வஸவ ஏகாதஸ ருத்ரா த்வாதஸாதித்யா த ஏக த்ரிம் ஸத் இந்த்ரஸ் சைவ பதிஸ் ச த்ரயஸ் த்ரிம்ஸா விதி –இதி ப்ருஹதாரண்யக ஸ்ருதி -5-9-2-

இவர்களில் த்வாதஸ ஆதித்யர்கள் ஆகிறார் -தாதார்யமா ச மித்ரஸ் ச வருணஸ் ச இந்த்ர ஏவ ச -விவஸ்வாம்ஸ் த்வத பூஷா ச பர்ஜன்யஸ் சாம்ஸ ஏவ ச -பகஸ் த்வஷ்டா ச விஷ்ணுஸ் ச ஆதித்யா த்வாதஸ ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புரா -1-15-131-
ஸர்வ புராணங்களிலும் பாட வ்யத்யாஸம் காண்கிறது என்று செல்லப்பட்டவர்கள்
ஸ ரதோ அதிஷ்டிதோ தேவை ராதித்யை ருஷிபிஸ் ததா -கந்தர் வைரப் ஸரோபிஸ் ச க்ராமணீ ஸர்வ ராக்ஷசை –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-2- என்கிறபடியே
தந்தாமை அநு வர்த்திப்பார் ஆதித்யர்கள் -ஸப்த ரிஷிகள் -கந்தர்வர்கள் -அப்சரஸ் ஸுக்கள் -யக்ஷர்கள் -சர்ப்பங்கள் -ராக்ஷசர்களாகிற ஏழு வர்க்கத்தோடு கூடி அம்மண்டலத்துக்கு வாசஸ் ஸ்தானமான ரதத்திலே இருப்பார்கள்

இவர்களில் -புலஸ்த்ய புலஹஸ் சாத்ரி வஸிஷ்டோ அதாங்கிரா ப்ருகு கௌதமஸ் ச பரத்வாஜ காஸ்யப க்ருதுரேவ ச ஜமதக்நி கௌசிகஸ் ச முநயோ ப்ரஹ்ம வாதிந ஸ்துவந்தி தேவம் விவிதை சந்தோபிஸ் தே யதாக்ரமம் –கூர்ம பு பூ -4-1-5- என்று பன்னிரண்டு ருஷிகளும் வேதாத்யயந பரராய்க் கொண்டு ஸ்துதிப்பார்கள்

தும்புரு நாரதோ ஹாஹா ஹுஹுர் விச்வா வஸூஸ் ததா -உக்ரேஸேநோ வஸூ ருசிர் விச்வாவ ஸூரதாபர -சித்ரஸேநஸ் ததோர்ணாயுர்த்ரு தராஷ்ட்ரோ த்விஜோத்தமா ஸூர்ய வர்ச்சா த்வாத ஸைதே கந்தர்வா காயதாம் வரா –கூர்ம பு பூ -41-12-13- என்று
பன்னிரண்டு கந்தர்வர்களும் காந பரராய் இருப்பார்கள்

க்ருதஸ்தலாஸ் ஸரோவர்யா ததான்யா புஞ்ஜிகஸ்தலா மேனகா ஸஹ ஜன்யா ச ப்ரம்லோசாபி த்விஜோத்தமா அநும்லோ ச க்ருதாசீ ச விச்வாசீ சோர்வஸீ ததா -அன்யா ச பூர்வ சித்திஸ் ஸ்யாத் அன்யா சைவ திலோத் தமா -கூர் பு பூ 41-14-15- என்று
சொல்லப்பட்ட அப்சரஸ் ஸுக்களும் ந்ருத்த பரராய் இருப்பார்கள்

ரதஜிச் ச ரதவ்ஜாஸ் ச க்ராமணீஸ் ச ரதஸ்வந -சித்ரஸ் ஸ்ரோதா பூரணஸ் ச ஸூஷேணஸ் ஸேந ஜித் ததா -தார்ஷ்யஸ் சாரிஷ்ட நேமிஸ் ச ருதஜித் ஸத்ய ஜித்ததா -கூர்ம பு பூ 41-6- என்கிற பன்னிரண்டு யக்ஷர்களும் குதிரை பிடித்து ஸேவிப்பர்கள்

வாஸூகி கச்ச வீரஸ் ச தக்ஷக ஸர்ப்ப புங்கவ ஏலா பத்ரஸ் சங்க பால ததைராவத ஸம்ஜ்ஞக தனஞ்சயோ மஹா பத்மஸ் ததா கார்க்கோடகோ த்விஜ -கம்ப லோஸ்வ தரஸ் சைவ வஹந்த்யேநம் யதா க்ரமம் -கூர்ம பு பூ 41-10-11- என்று
பன்னிரண்டு நாகங்களும் தேரை நடத்துவார்கள்

அத ஹேதி ப்ரஹேதிஸ் ச பவ்ருஷேயோ வதஸ் ததா சர்ப்போ வ்யாக்ரஸ் ததா பஞ்ச வாதோ வித்யுத் திவாகர -ப்ரஹ்மோ பேதஸ் ச விப் ரேந்திர யஜ்ஜோ பேதஸ் ச ராஷஸா –கூர்ம -பு பூ 41–42- என்கிற பன்னிரண்டு ராக்ஷஸர்களை அநு சரராய் இருப்பார்கள்

இப்படி ஆதித்யாதி ஸப்த கணங்களும் சைத்ராதியான பன்னிரண்டு மாஸங்கள் தோறும் மாறி மாறி பர்யாயேண நிர்வஹித்துப் போருவார்கள்

(ஆட்டுமுக நக்ஷத்ர மண்டலம் மேஷ ராசி-இதுவே ஸூர்யன் மேஷ ராசியில் நுழைகிறான் என்கிறது-சித்திரை மது மாஸம் -வைகாசி மாதவ மாதம்-கேசவ மார்கழி -தாமோதர மாசம் கார்த்திகை -வடக்கில் சொல்வர்)

அதில் -தாதா க்ருதஸ் தலா சைவ புலஸ்த்யோ வாஸூகிஸ் ததா ரத ப்ருத் க்ராமணீர் ஹேதிஸ் தும்புருஸ் சைவ சப்தம ஏதே வஸந்தி வை சைத்ரே மது மாஸே ஸதைவ ஹி –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-3- என்கிறபடியே
தாதா என்கிற ஆதித்யனும் க்ருதஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் புலஸ்த்யன் என்கிற ரிஷியும் வாஸூகி என்கிற சர்ப்பமும் ரதப்ருத் என்கிற யக்ஷனும் ஹேதி என்கிற ராக்ஷஸனும் தும்புரு என்கிற கந்தர்வனும் ஆகிற ஏழு பேரும் சைத்ரமாகிற மது மாஸத்தில் எப்போதும் வசிப்பர்கள்

மதுஸ் ச மாதவஸ் ச வா சந்திகா வ்ருதூ -ஸூக்ரஸ் ச ஸூதிஸ் ச க்ரைஷ்மா வ்ருதூ- நபஸ் ச தபஸ் யஸ்ய ஸைஸி ராவ்ருதூ என்கிற ஸ்ருதியை -யஜுர் -4-4-11-29- உட்க்கொண்டு மது மாஸம் இத்யாதி

அர்யமா புலஹஸ் சைவ ரதவ்ஜா புஞ்ஜிகஸ் தலா ப்ரஹேதி கச்ச வீரஸ் ச நாரதஸ் ச ரதே ரவே -மாதவே நிவசந்த்யேன –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-5- என்கிறபடியே
அர்யமா என்கிற ஆதித்யனும் புலஹன் என்கிற ருஷியும் ரதவ்ஜா என்கிற யக்ஷனும் புஞ்ஜிகஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் ப்ரஹேதி என்கிற ராக்ஷஸனும் கச்ச வீரன் என்கிற சர்ப்பமும் நாரதன் என்கிற கந்தர்வனும் ஆகிய எழுவரும் வைகாஸி மாசமாகிற மாதவ மாஸத்திலே வசிப்பர்கள்

மித்ரோத்ரிஸ் தக்ஷகோ ரக்ஷ பவ்ருஷேயோ அத மேநகா ஹாஹாரதஸ்வ நஸ் சைவ மைத்ரே யைதே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-7- என்கிறபடியே
மித்ரன் என்கிற ஆதித்யனும் அத்ரி என்கிற ருஷியும் தக்ஷகன் என்கிற சர்ப்பமும் பவ்ருஷேயன் என்கிற ராக்ஷஸனும் மேநகை என்கிற அப்சரஸும் ஹாஹா என்கிற கந்தர்வனும் ரதஸ்வநன் என்கிற யஷனுமாகிற எழுவரும் ஆனி என்கிற ஸூசி மாஸத்திலே வஸிப்பர்கள்

வ்ருணோ வஸிஷ்டோ ரம்பா ச ஸஹ ஜன்யா ஹுஹுவத ரதசித்ரஸ் ததாஸ் வாஸோ வஸந்த் யாஷாட ஸம்ஜ்ஞகே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-8- என்கிறபடியே
வருணன் என்கிற ஆதித்யனும் வஸிஷ்டன் என்கிற ருஷியும் ஸஹ ஜன்யை என்கிற ரம்பையாகிற அப்சரஸ்ஸும் ஹுஹு என்கிற கந்தர்வனும் வதன் என்கிற ராக்ஷஸனும் அஸ் வாஸன் என்கிற சர்ப்பமும் ஆகிற எழுவரும் ஆடியாகிற ஸூக்ர மாஸத்திலே வசிப்பார்கள்

இந்த்ரோ விஸ்வாவஸூஸ் ஸ்ரோதா ஏலா புத்ரஸ் ததாங்கிரா ப்ரம்லோசா ச நபஸ்யதே ஸர்ப்பஸ் சார்க்கே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-9- என்கிறபடியே
இந்த்ரன் என்கிற ஆதித்யனும் விஸ்வா வஸூ என்கிற கந்தர்வனும் ஸ்ரோதா என்கிற யக்ஷனும் ஏலா புத்ரன் என்கிற சர்ப்பமும் அங்கிரா என்கிற ருஷியும் ப்ரம் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சர்ப்பன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் ஆவணியாகிற நபோ மாஸத்திலே வசிப்பார்கள்

விவஸ்வாநுக்ரஸே நஸ் ச ப்ருகு ராபூரணஸ் ததா -அநும் லோசா சங்க பாலோ வ்யாக்ரோ பாத்ர பதே ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-1-10- என்கிறபடியே
விவஸ்வான் என்கிற ஆதித்யனும் உக்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் ப்ருகு என்கிற ருஷியும் ஆபூரணன் என்கிற யக்ஷனும் அநும் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சங்க பாலன் என்கிற சர்ப்பமும் வ்யாக்ரன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் புரட்டாசி யாகிற நபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்

பூஷா வஸூ ருசிர் வாதோ கௌதமோ அத தனஞ்ஜய ஸூ ஷேணஸ் ச க்ருதாஸீ ச வஸந்த் யாஸ்வ யுஜேரதே-ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-11-என்கிறபடியே
பூஷா என்கிற ஆதித்யனும் -வஸூ ருசி என்கிற கந்தர்வனும் வாதன் என்கிற ராக்ஷஸனும் கௌதமன் என்கிற ருஷியும் தனஞ்சயன் என்கிற சர்ப்பமும் ஸூஷேணன் என்கிற யக்ஷனும் க்ருதாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் ஐப்பசி மாசமாகிற இஷ மாஸத்தில் வசிப்பர்கள்

விஸ்வா வஸூர் பரத்வாஜ பர் ஜன்யை ராவதவ் ததா விஸ்வாஸீ ஸேநஜிச் சாப கார்த்திகே ச தி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-12-என்கிறபடியே
விஸ்வா வஸூ என்கிற ஆதித்யனும் -பர்ஜன்யன் என்கிற கந்தர்வனும் ஆபன் என்கிற ராக்ஷஸனும் பரத்வாஜன் என்கிற ருஷியும் இராவதன் என்கிற சர்ப்பமும் ஸேநஜித் என்கிற யக்ஷனும் விஸ்வாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் கார்த்திகை மாசமாகிற ஊர்ஜத்திலே வசிப்பர்கள்

அம்ச காஸ்யப தார்ஷ் யாஸ்து மஹா பத்மஸ் ததோர் வஸீ சித்ரஸே
நஸ் ததா வித்யுந் மார்க்க ஷீர்ஷாதி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-13-என்கிறபடியே
அம்சன் என்கிற ஆதித்யனும் -சித்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் வித்யுத் என்கிற ராக்ஷஸனும் காஸ்யபன் என்கிற ருஷியும் மஹா பத்மன் என்கிற சர்ப்பமும் தார்ஷ்யன் என்கிற யக்ஷனும் ஊர்வசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மார்கழி மாசமாகிற ஸஹோ மாஸத்திலே வசிப்பர்கள்

க்ரதுர் பகஸ் ததோர்ணா யுஸ் பூர்ஜ கார்க்கோடகஸ் ததா அரிஷ்ட நேமிஸ் சைவான்யா பூர்வ சித்திர் வராப்ஸரா பவ்ஷ்மாஸே வஸந்த்யேதே ஸப்த
பாஸ்கர மண்டலே ஷ்ய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-14-என்கிறபடியே
பகன் என்கிற ஆதித்யனும் -ஊர்ணாயு என்கிற கந்தர்வனும் ஸ்பூர்ஜன் என்கிற ராக்ஷஸனும் க்ரது என்கிற ருஷியும் கார்க்கோடகன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் பூர்வ ஸித்தி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் தை மாசமாகிற
பவ்ஷ்ய மாஸத்திலே –ஸஹஸ்ய மாஸத்திலே இதி பாரதம் – வசிப்பர்கள்

(குரு புஷ்ய உத்சவம் -பூசம் பரதனுக்கு நக்ஷத்ரம் -ராமானுர் திவ்ய மங்கள விக்ரஹ பிரதிஷடை)

த்வஷ்டா ச ஜமதக்நிஸ் ச கம்ப லஸ் ச திலோத்தமா ப்ரஹ்மோபேதோத ரதஜித் த்ருதராஷ்ட் ரஸ் ச சப்தம மாக மாஸே வஸந்த்யேதே ஸப்த மைத்ரேய பாஸ்கரே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-16-என்கிறபடியே
த்வஷ்டா என்கிற ஆதித்யனும் –த்ருதராஷ்ட்ரன் என்கிற கந்தர்வனும் ப்ரஹ்மோ பேதன் என்கிற ராக்ஷஸனும் ஜமதக்நி என்கிற ருஷியும் கம்பளன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் திலோத்தமை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மாசி மாசமாகிற
தபோ மாஸத்திலே வசிப்பர்கள்

விஷ்ணுரஸ்வதரோ ரம்பா ஸூர்ய வர்ச்சாஸ் ச ஸத்யஜித் விச்வா மித்ரஸ் ததா ரஷோ யஜ் ஜோ பேதோ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-18–என்கிறபடியே
விஷ்ணு என்கிற ஆதித்யனும் –ஸூர்ய வர்ச்சஸ் என்கிற கந்தர்வனும் யஜ்ஜோ பேதன் என்கிற ராக்ஷஸனும் விஸ்வாமித்ரன் என்கிற ருஷியும் அஸ்வதரன் என்கிற சர்ப்பமும் ஸத்ய ஜித் என்கிற யக்ஷனும் ரம்பை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் பங்குனி மாசமாகிற தபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்

மாஸேஷ்வேதேஷு மைத்ரேய வஸந்த்யேதே த்ரி ஸப்தகா ஸவிதுர் மண்டலே ப்ரஹ்மன் விஷ்ணு சக்த்யுப ப்ரும்ஹிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-19–என்கிறபடியே
இம் மாஸங்கள் தோறும் இவ் வாதித்யாதி ஸப்த கணங்களும் பகவச் சக்தியாலே உப ப்ரும்ஹிதராய்க் கொண்டு த்ரயீ மயமாய் பகவச் சக்தி மயமாயுள்ள ஆதித்ய மண்டலத்தை ஆஸ்ரயித்து இருப்பர்கள் -அதில் ஆதித்யன் மண்டலாதி பதியாய்க் கொண்டு ப்ரதானனாய் இருப்பன்
அல்லாதார் அவனை அநு சரித்து இருப்பர்கள் -அவ் வாதித்யனுடைய ஹ்ருதயத்திலே உபாஸ்யனாய்க் கொண்டு
வித்யா சஹாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் ஸநாதநம் கபிலம் ப்ராஹூ ராசார்யாஸ் சாங்க்யயோக விசக்ஷநா -மோ -347-69–352-30- என்று
செய்யாளான வித்யா ஸப்த வாஸ்யையான லஷ்மியோடே கூடி ஹிரண்மய விக்ரஹ விஸிஷ்டனாய் மத்யஸ்த நீல தோயத வித் யுல்லேகா பாஸ்வர காந்தியாலும் அத்தை முட்டாக்கிடுகிற லோஹித வர்ண ஸூதர்ஸந காந்தியாலும் காபிலச் சாயமாய் இருக்கையாலே கபிலன் என்று சொல்லப்பட்ட என்னை ஆதித்ய மண்டல மத்யஸ்தனாக சாங்க்ய யோக வித்தமர்கள் சொல்லுவார்கள் என்று பகவத் வசனம் உண்டாகையாலே ஸூர்ய அந்தராத்மாவாய் ஸ்ரீய பதி எழுந்து அருளி இருக்கும்

இதி தத்த்வ நிரூபணே தேவாதி நிரூபணம் நாம பஞ்சம அதிகாரம் ஸம் பூர்ணம் –

———-

ஷஷ்டாதிகாரம்–கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
1-ஆதித்ய ரத பரிமணாதி நிரூபணம்
2-ஸம்வத்ஸர பரிவத்ராதி நிரூபணம்
3-சாந்த்ரஸாவந ஸுவ்ர நக்ஷத்ர ரூப சதுர்வித ஸம்வத்ஸர பேத நிரூபணம்
4- ஸோம ரத நிரூபணம்
5-புத ரத நிரூபணம்
6-ஸூக்ர ரத நிரூபணம்
7-பவ்ம ரத நிரூபணம்
8-ப்ருஹஸ்பதி ரத நிரூபணம்
9-ஸநி ரத நிரூபணம்
10-ராஹு ரத நிரூபணம்
11-கேது ரத நிரூபணம்
12-ஆதித்யாதீ நாம் ஸஞ்சார நிரூபணம்
13-சாதுர் வர்ண்ய க்ரம ஸ்ருஷ்ட்யாதி நிரூபணம்
14-ப்ராஹ்மணாதி க்ருத்ய நிரூபணம்
15- கால ஸ்வரூப நிரூபணம்
16-ஸப்த ரிஷி -அஷ்ட வஸூ -ஏகாதஸ ருத்ர -சதுர் தச மநு -சதுர் தச இந்த்ர திக் பாலகாநாம் நாம நிரூபணம்
17-யுகாதி ஸித்தி நிரூபணம்
18-யுகாதி தர்ம நிரூபணம்
19-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ரூப த்ரிவித காரணத்வமபி பரமாத்மந இத்யர்த்த நிரூபணம்

———

ஏவம் பூதனான மண்டல வியாப்தமான ரதாம்சம் ஒன்பதினாயிரம் யோஜனமாய்
கந்தர்வாதி பரிவாராதிஷ்டிதமான அம்சம் ஆயிரம் யோஜனமாய்
ஆயாம விஸ்தாரங்கள் பதினாயிரம் யோஜனம் நீளத்தையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் ருக்கும் என்று புராணங்களிலே
யோஜநாநாம் ஸஹஸ்ராணி பாஸ்கரஸ்ய ரதோநவ -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-2- என்றும்
தச யோஜந ஸாஹஸ்ரோ விஸ்தாரயாமதோ ரத -வாயு பு பூ -5-5- என்றும் சொல்லப்பட்டது இறே

ஏற் கால் -18 நாழிகை பகல் 12 நாழிகை இரவு –சித்திரை மாதம்-மாற்றி அடுத்த ஆறு மாசங்களில்

இத் தேரினுடைய ஈஷா தண்டமான பாரானாது -ஈஷா தாண்டஸ் ததை வாஸ்ய த்வி குணோ முநி சத்தம என்று
இதில் இரட்டிப்பாய் 20000 யோஜனமாய் இருக்கும்
இது எல்லாம் தேஜோ மயமாகையாலே தூரத்திலே மண்டல ஆகாரமாய்த் தோன்றும்
இத் தேரினுடைய அச்சு ஒன்றைக் கோடி எழு நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமாய்
மேரு தொடங்கி மாநஸோரத்தத்தளவும் நீளத்தை யுடைத்தாய் மகாஷம் என்று பேராய் -பூமிக்கு மேல் 84000 யோஜனமான மஹா மேருவுக்கு மேலே 16000 யோஜனத்தளவும் ஒரு தலைப்பும் மற்றைத் தலைப்பு புஷ்கரத்வீப மத்யத்திலே 50000 யோஜனம் உயர்த்தியை யுடைத்தான மாநஸோத்தர ஸைலத்துக்கு மேலே 50000 யோஜனத்து அளவிலேயாய் அத் தலையிலே கால சக்ர மயமான வேக சக்ரம் கோப்புண்டு இரண்டு தலையும் வாயு பாச பத்தமாய் மேல் த்ருவன் பக்கலிலே துவக்குண்டு இருக்கும்
ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-3- ல் இவ்
வினிடத்துக்கு அநு குணமாகக் காண்க
இதனுடைய ஹ்ரஸ் வாஷமமும் யுகமும் தனித் தனியே 45000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் த்ருவ கதமான வாயு பாஸங்களிலே இரண்டு தலையும் பத்தங்களாய் இருக்கும்

இவ் வாதித்யனுக்கு இடமான யுகத்திலே
காயத்ரி
ப்ருஹதி
உஷ்ணிக்
ஜகதி
த்ரிஷ்டுப்
அனுஷ்டுப்
பங்க்தி -என்கிற ஸப்த சந்தஸ்ஸுக்களும் பச்சைக் குதிரைகள் ஏழாய்க் கொண்டு ரதத்தை வஹிக்கும்
(புரவி ஏழு ஒரு காலுடைய தேர்)ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம் -யஜோர் ஆற -3-11- ருக்வேத -2-3-14-1-22-164-2-என்னக் கடவது இறே
ஆகில் ஏகோ அஸ்வோ வஹதி ஸப்த நாம – அதர்வ வேத -2-3-14–என்கிற ஸ்ருதியோடே விரோதியாதோ என்னில்
வேத ரூபமான ஹரி ரதஸ்வம் ஸப்த ஸந்தோ மயமான ஏழு ரூபத்தையும் ரூப அநு குணமான ஏழு பேரை யுடைத்தாய் ரதத்தை வஹிக்கும் என்று வஸ்து ஐக்யத்தைச் சொல்லிற்று இங்கு
ஸப்த யுஞ்ஜந்தி என்கிற ஸ்ருதி வ்யக்தி பின்னத்தைச் சொல்லிற்று -ஆகையால் விரோதம் இல்லை

(வடக்கு ராசி ஆறு
தெற்கு ராசி ஆறு
பூ மத்திய ரேகையில் இருந்து கடக்க ரேகை வரை வடக்கே செல்வதும்
மகர ரேகை வரை தெற்கே செல்வதும் உண்டு
12 ராசி -27 நக்ஷத்திரங்கள் -ஒரு ராசிக்கு இரண்டேகால் நக்ஷத்திரங்கள்-கால பேதம் -உஜ்ஜயின் திரும்பும் இடத்தில் -அங்கு இருந்து தான் விக்ரமாதித்யன் இருந்து –கடகரேகை – ஜ்யோதிஷம் கணித்தார்-)

இந்த மஹா ரதத்த்திலே -ஆதித்யனுடைய தக்ஷிண உத்தராயண கதிக்கு உறுப்பாக நூற்று எண்பத்து மூன்று ரேகையாய் அதுக்கு மேலே ஹ்ரஸ்வாக்ஷ பத்தமான ரதமாய்
அது வாயு பாஸ பத்தமாய்க் கொண்டு த்ருவ கதமாகையாலே மேருவுக்கு ஆஸந்நமாம்படி த்ருவன் ஆகர்ஷிக்கும்
தஷிணாயநத்தில் விப்ரக்ருஷ்ட மாம்படி பாஸத்தை நெகிழ விடும் -அதில் தை மாஸம் ப்ரதம திநம் தொடங்கி மாசி பங்குனி மூன்று மாஸமும் நித்யம் ஒரு வீதியாக வடக்கே போய்
சித்திரை மாஸம் ப்ரதம தினத்திலே வைஷு வதீ யாகிற வீதியிலே சென்று
மேலும் நித்யம் ஒரு வீதியாகச் சித்திரை வைகாசி ஆனி அளவும் வடக்கே போய்
ஆடி முதலாக தக்ஷிண யநத்திலும் ஆடி ஆவணி புரட்டாசி அளவும் நடந்து
ஐப்பசியிலும் விஷு வாகிற மத்ய வீதியிலே
வந்து மார்கழி மாச முடிவாக தக்ஷிண காஷ்டையிலே நடக்கும்
இப்படி மஹா மேருவை ப்ரதக்ஷிணம் வருமளவில் உத்தராயணத்தில் ப்ரதம தின ஸம்பந்தமாய் இருக்கும் -தஷிணாயநத்தில் தூரத்வ அநு ரூபமாக ஸீக்ர கதியாய் இருக்கும்

இப்படி வருகிற ஆதித்யனுக்கு தேச பேதேந வருகிற தர்சன அதர்சனங்கள் ஒழிய உதய அஸ்தமயங்கள் ஒருக்காலும் இல்லை –அதாவது
மேருவுக்குக் கிழக்கே -மத்யாஹ்நமாம் அளவில் தெற்குத்தைக்கு உதயமாம் – (
ஜப்பான் போன்ற இடம் மேருவுக்கு கிழக்கே-நாம் இருப்பது மேருவுக்கு தெற்கு)தெற்குத்திக்கு மத்யாஹ்நமாம் அளவில் கிழக்குத்தைக்கு அஸ்தனமாம் -மேற்குத்தைக்கு உதயமாய் தெற்குத்தைக்கு அஸ்தமயமாம் அளவில் கிழக்குத்தைக்கு அர்த்த ராத்ரியாம் -மேற்குத்தைக்கு மத்யாஹ்நமாம் –
இப்படி திக்குகள் எல்லாவற்றிலும் கண்டு கொள்வது –

இந்த ரதத்தில் மஹாஷத்தில் கோப்புண்ட ஏக சக்ரம் கால சக்ரமான படி என் என்னில்
த்ரி நாபி மதி சஞ்சாரே ஷண்ணேமிந் யக்ஷயாத்மகே -ஸம்வத்ஸரமயே க்ருத்ஸ்னம் கால சக்ரே ப்ரதிஷ்டிதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-4- என்கிறபடியே
சாதுர்மாஸ்ய த்ரயாத்மகமான –(இங்குத்தைக்குத் தகுதியான அர்த்தங்களை -2-8-4-ஸ்ரீ விஷ்ணு ஸித்தீயத்திலே காண்க )-நாபியை உடைத்தாய்
ஸம்வத்ஸரம் –
பரி வத்ஸரம் –
இதா வத்ஸரம் –
அநு வத்ஸரம் –
இத் வத்ஸரம் என்று சொல்லப்பட்ட ஐந்து வத்ஸரத்தையும் அரங்களாக யுடைத்தாய்
வஸந்த
க்ரீஷ்ம
வர்ஷ
ஸரத்
ஹேமந்த
ஸிஸி ரங்களாகிற ஷட் ருதுக்களையும் ஆறு நேமியாக யுடைத்தாய்
ப்ரவாஹ பரி வ்ருத்தியாலே அக்ஷய ரூபமாய் இருக்கிற கால சக்ரத்திலே ஸர்வமும் ப்ரதிஷ்டித மாகையாலே இந்த சக்ராத்மாவும் உபாஸ்யம் என்றபடி

இந்த பஞ்ச விதமான வத்சரங்களாவன -யதா மாகஸ்ய ஸூக் வஸ்ய ப்ரதி பச்சோத்தரா யணம் -ஸஹோயம் ஸ்ரவிஷ்டாபிஸ் ஸோமார்க்கவ் பிரதிபத்யத -ப்ரதமஸ் ஸோக்நி தைவத்யோ நாம்நா ஸம்வத்ஸரஸ் ஸ்ம்ருத -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் -)என்று
யாதொரு போது மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ப்ரதமை ஸ்ரவிஷ்டா நக்ஷத்ரங்களோடே கூடி நிற்கும் –
சந்த்ர ஆதித்ய ஸமவாயம் உண்டாகிறது -அது முதலான அக்னி தைவத்யமான ஸம்வத்சரம் என்று பேராய் இருக்கும்
(முதல் 12 ஆண்டுகள்)
யதா மாகஸ்யஸூக்லஸ்ய த்ரயோதஸ் யாமுதக்ரவி –யுக்தே சந்த்ரமஸா ரௌத்ரே வாஸநம் ப்ரதிபத்யதே -த்வீ தீய்யஸ் ஸோ அர்க்கதை வத்ய(த்விதீய ஸோமதைவத்ய -இதி விஷ்ணு சித்தீயே -2-8-72- பாடோ த்ருஸ்யதே )ப்ரோச்யதே பரிவத்ஸர -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் ) என்று
யாதொரு போது மாக மாஸத்தில் த்ரயோதசியிலே திருவாதிரை சந்த்ர மாவோடே கூடின அளவிலே ஆதித்யன் அவ்விடத்தை அடையும் – அது ஆத்யதைவமான த்விதீயமான பரிவத்சரம் என்று பேராய் இருக்கும்

ஸூக்லே -க்ருஷ்ணே இதி ச பார -மாகஸ்ய தஸமீம் வாஸ வாதவ் திவாகரே சந்த்ராத்ருதீயம் ஸம் பிராஹு ரிதா வத்சரகம் புதா -( வ்ரு கா )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் தசமியிலே ஆதித்யன் அவ்விடத்திலேயாம் –
அது கூடுங்கால் சந்த்ர தைவத்யமாய் த்ருதீயமான இதா வத்சரமாகச் சொல்லா நின்றார்கள் –
ஸப்தமீ மாக ஸூக் லஸ்ய வாஸ வாதவ் திவாகரே சதுர்த்த மிந்த்ரதைவத்யம் தமாஹுரநு வத்ஸரம் -(வ்ரு க )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ஸப்தமியிலே ஆதித்யன் -அவ்விடம் முதலானதிலே கூடி யுள்ள விதத்தில் இந்த்ரதைவத்யமாய் சதுர்த்தமான அநு வத்ஸரம் என்று சொல்லா நின்றார்கள்
யத் யுத்தராயணம் க்ருஷ்ணே சதுர்த்யாம் ஸ்ரவஸோ பவேத்- இத்வத்ஸரஸ் ஸ விஜ்ஜேய பஞ்சமோ ம்ருத் யுதைவத -மாக மாஸத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தியில் ஆதித்யன் ஸ்ர விஷ்டாதி நக்ஷத்ரங்களிலே நிற்கிறான் -அது ம்ருத்யு தைவத்யமாய் பஞ்சமமான இத் வத்சரமாக அறியப்படும் –

இப்படி பஞ்சவிதமான இவ்வத்சரங்கள் –
சாந்த்ரம் என்றும்
ஸாவநம் என்றும்
ஸவ்ரம் என்றும்
நாஷத்ரம் என்றும் சதுர் விதமாயும் இருக்கும்
தர்ஸாத் தர்ஸஸ் சாந்த்ரஸ் த்ரிம் ஸத் திவஸஸ்து ஸாவநோ மாச ஸுவ்ரோர்க் கராஸி போகான் நாஷத்ரஸ் சேந்து மண்டலாத் கதித -என்கிறபடியே
அமாவாஸ்யை தொடங்கி மேல் அமாவாஸ்யை அளவும் செல்ல ஸாந்த்ர மாஸம்(
27 நாள் கணக்கு-இதனால் அதிக மாசம் மூன்று வருஷங்களுக்கு ஒரு தடவை வைப்பார்கள்)
முப்பது நாள் ஸாவந மாஸம்
ஆதித்யனுடைய ராஸி போகம் ஸுவ்ர மாஸம்
அஸ்வின்யாதி ரேவத் யந்தமான சந்த்ர பரிவ்ருத்தி நாஷத்ரமான மாஸம்
ஏவம் விதமான பரிகணிதங்களாலே பரிகணி தங்களான வத்ஸரம் அஞ்சு படியாகச் சென்றால் ஏக காலத்திலே ஏகோத் யோகத்திலே முடியும் காலத்துக்கு யுக விபாகம் என்று பேராய் இருக்கும்

(இவ்வாறு ஐந்து பன்னிரண்டு ஸம்வத்சரங்கள் சேர்ந்து அறுபது ஸம்வத்சரங்களாய் மீண்டும் மீண்டும் வரும் என்றதாயிற்று)

ஸோமனுடைய ரதம் -மூன்று சக்ர யுக்தமாய் -குதிரைகள் வெளுத்து குந்தா பங்களாய் வாரி கர்ப்ப ஸமுத் பவங்களாய் -பத்தாய் இரண்டருகும் பூண்டு த்ருவனை ஆதாரமாக உடையவையாய் இருக்கும் -ஸ்ரீ விஷ்ணு பு -2-12-
இந்த சந்திரனுக்கு க்ஷய வ்ருத்திகளில் வந்தால் பூர்வ பக்ஷத்தில் பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் ஆதித்யனால் சங்க்ருஹீதமாய் அம்ருதமயமான பதினாலு களையும் -தேவர்கள் -ப்ரதமாம் பிபதே வஹ்நிர்த்விதீயாம் பிபதே ரவி -என்கிற அடைவிலே புஜிப்பார்கள்
அவசிஷ்டமான ஏக கலையோடே ஆதித்யனைக் கிட்டி அமை என்கிற ரஸ்மியிலே வசிக்கையாலே அமாவாஸ்யை என்று பேராகிறது
அமாவாஸ்யையில் ஆஹா ராத்ரத்திலே சந்திரன் பூர்வம் அப்பிலே ப்ரவேசித்து அநந்தரம் வீருத் ப்ரமுகமான வ்ருஷாதிகளிலே ப்ரவேசித்து -பின்னை ஆதித்யனைக் கிட்டுகையாலே அமாவாஸ்யையில் வ்ருஷாதிகளுடைய சேத நாதிகள் பண்ணும் இடத்தில் ப்ரஹ்ம ஹத்யா சமம் என்று சொல்லப்பட்டது –

புதனுடைய தேர் -வாய் வக்னி ஸம் பூதமாய் பொற் குன்று நிறத்தை யுடைய எட்டுக் குதிரையோடே கூடி இருக்கும்

ஸூக்ரனுடைய தேர் -பூ சம்பவங்களாய் இருக்கிற வெளுத்த நிறத்தை யுடைய எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்

செவ்வாயினுடைய தேர் -அக்னி சம்பவங்களாய் சிவந்த குதிரைகள் எட்டுக்களோடே கூடி இருக்கும்

காஞ்சன மயமான வெளுப்பு நிறத்தை உடைத்தான எட்டுக் குதிரைகளை யுடைத்தான தேரிலே ப்ருஹஸ்பதி இருக்கும்

ஆகாஸ சம்பவங்களாய் கிருஷ்ண வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடின தேரிலே ஸநை சரன் மெள்ள நடவா நிற்கும்

ராஹுவினுடைய தேர் கறுத்த குதிரை எட்டு பூண்டு நடவா நிற்கும்

கேதுவினுடைய தேர் சித்ர வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்

கிரஹண காலத்திலே ராஹு வானவன் தான் நிற்கிற த்ருதீய ஸ்தானத்திலும் கீழே போந்து ப்ரதிபத் பர்வ சந்நிதியிலே தூ சரமான சந்த்ராதித்யர்களை பூசாயை யாகிற தமஸ்ஸாலே உப ப்ரும்ஹிதனாய் திரோதானம் பண்ணும்
இது கேதுவுக்கும் ஒக்கும் இறே

இவர்களில் ஆதித்யனும் புதனும் ஸூக்ரனும் மேற்கே ராசியை ஒரு மாஸத்திலே சஞ்சரிப்பர்கள்
சந்த்ரன் இரண்டே கால் நாளிலே ஸஞ்சரிக்கும் –
செவ்வாய் ஒன்றரை மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
ப்ருஹஸ்பதி ஒரு வத்சரத்திலே ஸஞ்சரிக்கும்
ஸநைஸ் சரன் இரண்டரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
ராஹு ஒன்றரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
கேது இருபது மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் ஸப்தம ராஸியிலே இருப்பர்கள்

இந்த கிரஹங்கள் எல்லாம் ப்ரத்யங் முகமாய்க் கொண்டு மேருவை ப்ரதக்ஷிணமாய் வரச் செய்தே ராஸி போகத்தில் ப்ராங்முகராய்க் கொண்டு பிற் காலித்து புஜியா நிற்பர்கள் –
ஆகையால் நக்ஷத்ர மண்டலத்துக்கு ப்ரத்யக் கதி ஒழிய ப்ராக் கதி ஒருக்காலும் இல்லை
இப்படி ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரமான ஜ்யோதிர் மண்டலம் எல்லாம் தனித் தனியே வாயுபாஸ பத்தங்களாய்க் கொண்டு ஸிம்ஸூமார ப்ரஜாபதி புச்சஸ்திதனான த்ருவனை ஆதாரமாக யுடைத்தாய் பரி ப்ரமியா நிற்கும்
அந்த ஸிம்ஸூமார ப்ரஜாபதிக்கு ஆதாரம் -த்யவ்ஸ் ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திஸோ பூர் மஹோததி –வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந -பாரத ஆநு -149-121- என்று வாஸூ தேவஸ்ய வீர்யேண -என்கையாலே ஸங்கல்ப ரூப ஞாந விஸிஷ்டனான தத் அந்தர்யாமியான நாராயணானேயாய் இருக்கும் –

இந்த வாயு பாஸங்கள் -மேகங்களும் அர்க்கனும் இந்திரனும் நக்ஷத்ரங்களும் க்ரஹங்களும் ஸப்த ரிஷிகளும் த்ருவனுமாகிற ஏழு ஆஸ்ரயத்தையும் பற்றி
ஆவஹ ப்ரவஹஸ் சைவ ததைவ அநுவஹ பர -ஸம்வஹோ விவஹஸ் சைவ ததூர்த்வம் ஸ்யாத் பரோவஹ -ததா பரிவஹஸ் சோர்த்வம் வாயோர்வை ஸப்த நேமய -கூர்ம பு பூ -40-6- என்கிறபடியே
ஆவஹம் -என்றும்
ப்ரவஹம் என்றும்
அநு வஹம் என்றும்
ஸம் வஹம் என்றும்
விவஹம் என்றும்
பரோ வஹம் என்றும்
பரி வஹம் என்றும் வாயு நேமிகள் ஏழு வகையாய் இருக்கும்
இவை தன்னாலே பத்தங்களான ஸப்த பதார்த்தங்களுக்கும் ஆதார பூதனான த்ருவனுக்கும் ஆதாரமான ஸிம்ஸு மாரனுக்கும் ஆதார பூதன் நாரங்களுக்கு எல்லாம் அயநமான நாராயணனே என்றதாயிற்று

ஏவம் பூதரான தேவர்களை ஆராதித்து வர்ஷாதி ஸித்தியாலே ஸஸ்ய ஸம்ருத்தியைப் பெற்று யஜ்ஞாதி கர்மங்களைப் பண்ணுகைக்கு உறுப்பாக
ஸஹ யஜ்ஞ ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோ வாச ப்ரஜாபதி -அநேந ப்ரஸவிஷ்யத்வம் ஏஷாவோஸ் த்விஷ்ட காம துக் தேவான் பாவ யதாநேந தே தேவா பாவயந்து வ -பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத –கீதை -3- என்றும்
அஃனவ் ப்ராஸ்தாஹுதிஸ் ஸம்யகாதித்ய முபதிஷ்டதே – ஆதித்யாஜ் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர் அன்னம் தத ப்ரஜா –ப்ரஹ்ம பு -29-4- என்றும் சொல்லுகிறபடியே
யஜ்ஞாத் யாராதிதரான ஆதித்யாதி தேவர்களாலே வ்ருஷ்டி ஸஸ்ய ப்ரஜா வ்ருத்திகளானவை ப்ரதிபாதிக்கப்படா நின்றது இறே
ஆகையால் -சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ -கீதை -4-13- என்கிறபடியே
யஜ்ஞாத் யநுஷ்டான நிஷ்பத்தி பிறக்கைக்காக சாதுர் வர்ண் யமானது ஸர்வ ஸ்ரஷ்டாவான ஸர்வேஸ்வரனாலே முக பாஹுருபாத ஜாதரான ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ர விபாகத்தாலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது

(முகம் ப்ராஹ்மணர்
தோள்கள் க்ஷத்ரியர்
கைகள் வைஸ்யர்
திருவடி ஸூத்ரர்
)

ப்ராஹ்மணர் ஆகிறார் –
அத்யயனம்
அத்யாபநம்
யஜநம்
யாஜநம்
தானம்
ப்ரதி க்ரஹம் -என்கிற ஷட் கர்மத்துக்கும் கடவராய்
தபோ தமஸ் ஸமஸ் சவ்சம் ஷாந்திர் ஆர்ஜவமேவச ஞான விஞ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்
என்கிற ஸ்வபாவஜ கர்ம நிரதராய் இருப்பர்கள்
(ஆறு தொழில் அந்தணர்)

ஷத்ரியர் ஆகிறார்
அத்யயன
யஜன
தானங்கள் ஆகிற த்ரி கர்மத்துக்கும் கடவராய்
ப்ரஜா பாலந தத் பரராய்
சவ்ர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் தாநமீஸ்வர பாவஸ் ச ஷாத்ரம் கர்ம ஸ்வ பாவஜம் –கீதை -18-42-43- என்கிற
ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்

வைஸ்யர் ஆகிறார்
அத்யயநாதி கர்ம த்ரயத்துக்கும் அதிகாரிகளாய்
க்ருஷி கோ ரக்ஷ வாணிஜ் யங்களாகிற ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்

ஸூத்ரராகிறார்
இந்த வர்ண த்ரய ஸூஸ்ருஷை பண்ணுகையே ஸ்வா பாவிக கர்மமாக யுடையராய் இருப்பார்கள்

இவர்கள் வர்ணாஸ்ரம அநு ரூபமான கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் இடத்தில் -காலேஹ்நி கர்ம சோஸ்யதே -என்கிறபடியே கர்ம அனுஷ்டானம் காலாதீனம் ஆகையால் -கால ஸ்வரூபம் நிரூபணீயம் –
காலமாவது -அநாதிர் பகவான் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே -அவிச்சிந்நாஸ் ததஸ்த்வேதே சர்க்க ஸ்தித் யந்த ஸம்யாமா –தைத்த-நா -6-1-8-என்கிறபடியே
ஸர்வேஸ்வரனுடைய ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு பரிகர பூதமாய்
உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்யமாய்
கலா முஹுர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ -விஷ்ணு பு -1-2-26- இத்யாதி ஸ்ருதி மர்யாதையாலே
கலா முஹுர்த்தாதி மயமான அவயவ விபாகத்தை யுடைத்தாய் இருபதொரு அசித் விசேஷமாய் இருக்கும்

அதில் –காஷ்டா பஞ்சத ஸாக்யாதா -நிமேஷா முநி சத்தம காஷ்டா த்ரிம் ஸத் கலாத்ரிம்ஸத் கலா மவ்ஹுர்த்திகோ விதி -தாவத் ஸங்க்யைர் அஹோ ராத்ரம் முஹுர்த்தைர் மாநுஷம் ஸ்ம்ருதம் – அஹோ ராத்ராணி தாவந்தி மாஸ பக்ஷ த்வயாத்மக -தைஷ் ஷட்பிர் அயனம் வர்ஷம் த்வே அயநே தஷிணோத்தரே அயனம் தக்ஷிணம் ராத்ரி -தேவாநாம் உத்தரம் திநம் – திவ்யைர் வர்ஷ ஸஹஸ்ரைஸ் து க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞகம் -சதுர் யுகம் த்வாதஸபி ஸ்தத் விபாகம் நிபோதமே -ஸத்வாரி த்ரீணி த்வே ஸைகம் க்ருதாதி ஷு யதாக்ரமம் திவ்யாப்தாநாம் ஸஹஸ்ராணி யுகேஷ்வாஹு புராவித -தத் ப்ரமாணைஸ் சதைஸ் சந்த்யா பூர்வா தத்ராபிதீயதே -ஸந்த்யாம் ஸஸ்சாபி தத் துல்யோ யுக ஸ்யா நந்தரோ ஹி ஸ -ஸந்த்யா ஸந்த்யாம் ஸயோரந்தர்ய காலோ முநி சத்தம
யுகாக் யஸ்ஸது விஜ்ஜேய க்ருதத்ரேதாதி ஸம்ஜ்ஜித -க்ருதம் த்ரேதா த்வாபரஸ் ச கலிஸ் சேதி சதுர்யுகம் ப்ரோச்யதே தத் ஸஹஸ்ரஞ்ச ப்ரஹ்மணோ திவஸம் முநே ப்ரஹ்மணோ திவஸே ப்ரஹ்மன் மந வஸ்து சதுர் தச -பவந்தி பரிணாமஞ்ச தேஷாம் கால க்ருதம் ஸ்ருணு – ஸப்தர்க்ஷயஸ் ஸூராஸ் சக்ரோ மநுஸ் தத் ஸூநவோ ந்ருபா –ஏக காலே ஹி ஸ்ருஜ்யந்தே ஸம்ஹ்ரி யந்தே ச பூர்வவத் சதுர் யுகாணாம் சங்க்யாதா ஸாதிகாஹ்யேக ஸப்ததி –மந்வந்தரம் மநோ கால ஸூராதீ நாஞ்ச சத்தம -அஷ்டவ் சத ஸஹஸ்ராணி திவ்யயா சங்க்யா ஸ்ம்ருதம் -த்விபஞ்சா ஸத் ததான்யாநி சஹஸ்ராண்யதிகாநி து -த்ரிம் ஸத் கோட் யஸ்து ஸம் பூர்ணாஸ் சங்க்யாதாஸ் சங்க்யயா த்விஜ -ஸப்த ஷஷ்ட்டிஸ் ததான்யாநி நியுதாநி மஹாமுநே -விம்சதிஸ் ச ஸஹஸ்ராணி காலோயமதிகம் விநா மந்வந்த்ரஸ்ய சங்க்யேயாம் மானுஷை வத்ஸரை த்விஜ -சதுர்தச குணோஹ்யேஷா காலோ ப்ராஹ்மஹ ஸ்ம்ருதம் ப்ராஹ்மோ நைமித்திகோ நாம தஸ்யாந்தே ப்ரதி சஞ்சர -ததா ஹி தஹ்யதே ஸர்வம் த்ரை லோக்யம் பூர் புவாதி கம் ஜநம் ப்ரயாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந -ஏகார்ணவே து த்ரை லோக்யே ப்ரஹ்மா நாராயணாத்மக போகி ஸய்யாக தஸ்ஸேதே த்ரை லோக்ய க்ராஸ ப்ரும்ஹி -ஜனஸ்தைர்யோகி பிர் தேவஸ் சிந்த்யமாநோப்ஜ சம்பவ -தத் பிரமணாம் ஹி தாம் ராத்ரிம் ததந்தே ஸ்ருஜதே புந -ஏவஞ்ச ப்ரஹ்மணோ வர்ஷம் ஏவம் வர்ஷ சதம் து தத் -சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத்மந -ஸ்ரீ விஷ்ணு பு -1-3- என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

பதினைந்து நிமேஷம் கொண்டது காஷ்டையாய்
முப்பது காஷ்டை கொண்டது கலையாய்
முப்பது கலை கொண்டது முஹூர்த்தமாய்
முப்பது முஹூர்த்தம் கொண்டது மானுஷ்யமான அஹோ ராத்ரமாய்
முப்பது அஹோ ராத்ரம் கொண்டது பக்ஷ த்வயாத்மகமான மாஸமாய்
ஆறு மாஸம் கொண்டது அயனமாய்
தக்ஷிண உத்தரமான அயனம் இரண்டு கொண்டது வர்ஷமாய்

இந்த தஷிணாயனம் தேவர்களுக்கு ராத்ரியாய்
உத்தராயணம் பகலாய்
ஸம்வத்ஸரம் தேவர்களுக்கு நாளாய் இருக்கும்
இப்படி முந்நூற்று அறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வத்சரமாய்
தேவ வத்சரம் பன்னீராயிரம் கொண்டது க்ருத த்ரேதா த்வாபர கலி யுகம் என்று சொல்லப்பட்ட சதுர் யுகமாய் இருக்கும்

இதில் நாலாயிரம் தேவ ஸம்வத்ஸரம் க்ருத யுகமாய் இருக்கும்
மூவாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்ரேத யுகமாய் இருக்கும்
இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்வாபர யுகமாய் இருக்கும்
ஆயிரம் தேவ வத்ஸரம் கலியுகமாய் இருக்கும்

நிற்கிற இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரமும் -க்ருத த்ரேதாதி கணக்கிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமாயும் பிரியும்
இதில் க்ருத யுகத்திலே பூர்வ உத்தரங்களிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமுமாயும் தேவ ஸம்வத்ஸரம் நானூறு நானூறு கழியும்
த்ரேதையில் பூர்வ உத்தரங்களில் முந்நூறு முந்நூறு கழியும்
த்வாபரத்தில் பூர்வ உத்தரங்களில் இருநூறு இரு நூறு கழியும் கலி யுகத்தில் பூர்வ உத்தரங்களில் நூறு நூறு கழியும்

இப்படி விபக்தமான சதுர் யுகங்கள் ஆயிரம் ப்ரஹ்மாவினுடைய ஒரு பகலாய் இருக்கும்
இந்த ஒரு பகலிலே பதினாலு மந்வந்தரமாய் –
மந்வந்தரம் தோறும் –
ஸப்த ரிஷிகள்
அஷ்ட வஸூக்கள்
ஏகாதஸ ருத்ரர்கள்
த்வாதஸ ஆதித்யர்கள்
அஸ்வின தேவதைகள் என்கிற த்ரயஸ்த்ரிம்ஸமும்(முப்பத்து மூவரும்
)
சதுர் தச மநுக்கள்
சதுர்தச இந்த்ராதி திக் பாலரும்
கல்பாதியிலே ஸ்ருஷ்டருமாய்
கல்பாந்தே ஸம் ஹ்ருதருமாய்க் கொண்டு போருவர்கள்

இவர்களில் ஸப்த ரிஷிகள் ஆகிறார்
அத்ரி
ப்ருகு
வஸிஷ்ட
அகஸ்த்ய
அங்கிரச
கௌதம
பரத்வாஜர் என்று சொல்லப் பட்டவர்கள்
ஒவ்வொரு மந்வந்தரத்தில் ஸப்த ரிஷிகள் பேதிப்பர்கள் என்று அறியவும்
இவை ஸ்ரீ விஷ்ணு பு -3-1-ல் காணலாம்

அஷ்ட வஸூக்கள் ஆகிறார்
ஆபோ
த்ருவன்
ஸோமன்
தரன்
அநிலன்
அநலன்
ப்ரத் யூஷன்
ப்ரபாஸன்–என்று செல்லப்பட்டவர்கள்

ஏகாதஸ ருத்ரர்கள் ஆகிறார்
ஹரன்
பஹு ரூபன்
த்ர்யம்பகன்
அபராஜிதன் வ்ருஷாகபி
சம்பு
கபர்தீ
ரைவதன்
ம்ருக வ்யாதன்
சர்வன்
கபாலீ -என்று செல்லப்பட்டவர்கள்
ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ர்யம்ப கஸ் ச அபராஜித வ்ருஷாகபிஸ் ச சம்புஸ் ச கபர்தீ ரைவதஸ் ததா ம்ருக வ்யாதஸ் ச ஸர்வஸ் ச கபாலீ ச மஹா முநே ஏகாதஸைதே கதிதா ருத்ராஸ் த்ரி புவநேஸ்வரா –இதி ஸ்ரீ விஷ்ணு புராணே பாட
வ்ருஷாகபி சங்கரஸ் ச இதை ப்ராமாணத் திரட்டில் –1-5-3- –
பாரதம் புராணாந்தரங்களில் நாம பேதம் காண்கிறன
மாத்ஸ்யத்தில் -அ -5- அஜைக பாதஹிர் புத்ன்ய -விரூபாஷோ அத ரைவத ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ரயம்பகஸ் ச ஸூரேஸ்வர -சாவித்ரஸ் ச ஜயந்தஸ் ச பிநாகீ ச அபராஜித ஏதே ருத்ராஸ் ஸமாக்யாதா ஏகாதஸ கணேஸ்வரா -என்று காண்கிறன
கல்ப பேதேந நாம பேத பரன்களாக இவைகளைக் கண்டு கொள்வது
ஸ்ரீ விஷ்ணு பு-3-1-ல் காண்க

த்வாதஸ ஆதித்யர்கள் கீழே சொல்லப்பட்டது

இனிப் பதினாலு மனுக்கள் ஆகிறார்
ஸ்வயம்புவன்
ஸ்வாரோ சிஷன்
உத்தமன்
தாபசன் -தாமஸன் என்று புராணத்தில் பாடம்
ரைவதன்
சாஷுஸன்
வைவஸ்வதன்
ஸாவர்ணிகன்
தஷஸா வர்ணிகள்
ப்ரஹ்ம சா வர்ணிகள்
தர்ம ஸா வர்ணிகன்
ருத்ர ஸா வர்ணிகன்
ரோசமாநன்
பவ்மன் என்று செல்லப்பட்டவர்கள்

சதுர்தச இந்த்ரராகிறார்
ஸஸீ பதி
விபஸ்சித்
ஸூசாந்தி
ஸிபி
விபு
மநோஜவ
புரந்தர
விரோசந ஸூதபலி
மஹா வீர்ய
சாந்தி
வைவ்ருஷா
ருதுதாமா
திவஸ்பதி
ஸூசி -என்று செல்லப்பட்டவர்கள்

திக் பாலகர்கள் ப்ரஸித்தம் இறே
இந்த்ர அக்னி
யம நைர்ருத
வருண வாயு
குபேர ஈஸாந-என்று செல்லப்பட்டவர்கள் திக் பாலர்கள் என்று அறியவும்

ஒரு மந்வந்தரம் எழுபத்து ஒன்றே சிலவான சதுர் யுகமாய் இருக்கும் -1000 வகுத்தல் 14
அது தேவ ஸம்வத்ஸரம் என்று நூறாயிரத்து ஐம்பத்து ரீராயிரமாய் இருக்கும்
இது மானுஷ ஸம்வத்சரத்தில் முப்பது கோடியே அறுபத்து ஏழாயிரமும் இருபதினாயிரமும் அதிக அம்சம் இருபதினாயிரமுமாக முப்பது கோடியும் லக்ஷத்து ஏழாயிரமுமாய் இருக்கும்
இது ஒரு மந்வந்தரமாய் இருக்கும்
இப்படி பர்யாயமான மன்வந்தரம் பதினாலு ப்ரஹ்மாவுக்கு ஒரு பகலாய் –
அவ் வஹர் அவசாநத்திலே பூர் புவஸ் ஸூவ என்கிற த்ரி ஜகத் ப்ரளயமாய் இருக்கும்
பின்னை சதுர் யுக ஸஹஸ்ர ஆவ்ருத்தி காலம் அளவாக ராத்ரியாய்
ததந்தே ஸ்ருஷ்டியாய் இருக்கும்
இப்படியான அஹோ ராத்ரத்தாலே ப்ரஹ்மாவுக்கு பரம ஆயுஸ்ஸு வர்ஷ சதமாய் இருக்கும்

இப்படிச் சொன்ன சதுர் யுகங்களில் வைத்துக் கொண்டு க்ருத யுகத்திலே
க்ருதே து மிதுன உத்பத்தி ஸித்திஸ் சாபி ரஸோல்லஸா ஸக்ருத் வ்ருஷ்டி மயீ சான்யா க்ரஹ வ்ருஷாத் மிகா பரா பஸ்சாத் ஸங்கல்ப ஸித்திஸ் ச கல்ப வ்ருஷாத்மிகா பரா –
ப்ரகாம வ்ருஷ்டிஸ் சாக்ருஷ்ட பஸ்ய ஸித்திஸ் ததாஷ்டமீ -லிங்க பு -பூ 39-14-15—கௌர்மே ச பூ 28-21-22-முத்ரித புராணே கோஸே து கிஞ்சித் அந்யதா பட்யதே –என்கிறபடியே
ரஸோல்லாஸாதி யான -எல்லாக் கோசங்களிலும் ரஸோல்லாஸாதி -என்று தொடங்கிக் காண்கிறது ஸ்லோக பாட அநு குணமாகக் காணவில்லை
அஷ்ட ஸித்தியும் ஸ்வத ஏவ ஸம்பவியா நிற்கும்

அதில் ரஸோல்லாஸை யாவது
யோக அப்யாஸத்தாலே தன்னுடைய மூர்த்தாவில் சந்த்ர மண்டலம் உருகி ஒழுகின அம்ருதத்தாலே திருப்தி பிறந்து தாஹாதிகள் அற்று இருக்கை

மிதுன உத்பத்தி யாவது
ஸ்த்ரீ நிரபேஷமாக ஸூகம் பிறக்கை

ஸக்ருத் வ்ருஷ்டி மயியாவது
ஒருக்கால் வர்ஷிக்க ஸஸ்யங்கள் உண்டாகை

க்ரஹ வ்ருஷாத்மிகை யாவது
தன்னுடைய இச்சையால் க்ரஹத்தில் வருஷங்கள் உண்டாகை

ஸங்கல்ப ஸித்தி யாவது
தான் நினைத்த போதே அபிமதம் ஸித்திக்கை

கல்ப வ்ருஷாத்மிகை யாவது
பரத்வாஜனைப் போலே நினைத்தது எல்லாம் உண்டாகை
ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டத்தில் காண்கிறோம்

ப்ரகாம வ்ருஷ்டியாவது
வேண்டும் அளவிலே கநக்க வர்ஷிக்கை

அக்ருஷ்ட பஸ்ய ஸித்தியாவது
க்ருஷி பண்ணாமல் விளைகை

இப்படி அயத்ன லப்யங்களான இந்த ஸித்திகள் யுகாந்தரங்களில் ஸ்வ யத்னத்தாலே ஸாதித்துக் கொள்ளப்படும்
இதில் -த்யாயன் க்ருதே யஜன் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயன் -யதாப்னோதி ததாப்னோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு பு -6-2-17 என்று
யுகாந்தரங்களில் யாகாதிகளாலே லபிக்கும் பலத்தை கலி யுகத்தில் ஸங்கீர்த்தன மாத்ரத்தாலே லபிக்கும்

இப்படி நிஜமான மாநத்தாலே பரிகணிதமான த்வி பரார்த்த கால வர்த்தியான சதுர் முகனை சரீரமாகக் கொண்டு ஸ்ருஷ்டியைப் ப்ரவர்த்திப்பித்தும்
ஸ்வேந ரூபேண ரக்ஷணத்தைப் பண்ணியும்
ருத்ர ரூபியாய் ஸம்ஹரித்தும்
ஸகல ஜகத்தையும் ஸர்வேஸ்வரன் தானே லீலைக ப்ரயோஜனமாய்க் கொண்டு நிர்வஹிக்கும் என்னும் இடம்
அப்ரமேயா அநியோஜ்யஸ் ச யத்ர காம கமோ வஸீ மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ-சபா பர் -61-31-
அப்ரமேயத்வம் -பரிபூர்ணத்வம் -அநியோஜயத்வம்-அநிதர சேதன ப்ரேர் யத்வம் -யத்ர காமகம இத்யநேந வாயூதகாதி ப்ரேரணாதீநா அபுத்தி பூர்வகஸ் பந்தாதி சேஷ்டாவ்யாவ்ருத்தி -ஸ்வேச்சா க்ருத ப்ரவ்ருத்தி விகாத வ்யுதா ஸோ வா –ஸ்வா தீந லீலோப கரணத்வம்
வஸீ ஸப்தார்த்த –விஸ்வம் –வஸம் -யஸ்ய ஸ வஸீ —
இந்த்ரிய பராதீன சேஷ்டா வ்யாவ்ருத்த் யர்த்தோ வா வஸீ ஸப்த -பாலக த்ருஷ்டாந்தேந -லீலாயா -ப்ரயோஜனாந்தர நைர பேஷ்யம் -அபி ப்ரேதம்
அநேந ராஜ்ஞாம் பண பந்த பூர்வக த்யூதாதி வ்யாவ்ருத்தி கார்ய வர்க்க பேஷயா பகவன் மஹிம்நோ விபுல தரத்வம் -க்ரீட நகை -இத்யேநேந பலிதம்
இத்யஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ வர்ணித ஸ்ருத ப்ரகாசிகாயாம் மங்கள ஸ்லோக வ்யாக்யாந வஸரே
ஸ்ருஷ்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் -ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு பு -1-2-66–அஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ பாஷ்ய காரேண வேதார்த்த ஸங்க்ரஹே வர்ணித தத்ர த்ரஷ்டவ்ய-என்று இத்யாதியாலே சொல்லப்பட்டது இறே

ஆனால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு தஷாதிகளை கர்த்தாக்களாகச் சொல்லுவான் என் என்னில்
ப்ரஹ்மா தஷாதய காலஸ் ததைவ கில ஜந்தவ -விபூதயோ ஹரே ரேதா ஜகதஸ் ஸ்ருஷ்டி ஹேதவ -விஷ்ணுர் மன்வாதய -கால ஸர்வ பூதாநி ச த்விஜ -ஸ்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய -ருத்ர காலாந்த காத் யாஸ் ச ஸமஸ்தாஸ் சைவ ஜந்தவ சதுர்தா பிரளயாயைதா ஜநார்த்தன விபூதய –ஸ்ரீ விஷ்ணு பு -1-22- என்கிற படியே
பகவத் விபூதித்வேந ஸ்ருஷ்ட் யாத் யன்வயமாகக் கடவது
இவ் விடத்தில் விஷ்ணுத்வமாவது
ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாம் அஹம் –ஸ்ரீ கீதை 10-31- என்கிற இடத்தில் போலே அவதார ரூபேண விபூதியாக விவஷிதம்

இதி தத்வ நிரூபணே வர்ண நிரூபணம் நாம ஷஷ்ட்டி அதிகாரம் ஸம் பூர்ணம்

———–

ஸப்தம அதிகாரம் – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்
1-நியந்த்ருத்வ நிரூபணம்
2-ஈஸ்வரா நங்கீகாரே தோஷ நிரூபணம்
3-காரண வாக்யஸ்த ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் விசேஷ ஸப்த பர்யவஸாந நிரூபணம்
4-இந்த்ர அக்னி யாதித்ய சந்த்ர வைஸ்ரவண யம வருண வாயு ப்ரப்ருதி தேவதா ஸமூஹஸ்ய காரணத்வாத் யஸம்பவ நிரூபணம்
5- ருத்ர ஜகத் காரணத்வ மத நிரூபணம் -ருத்ரஸ்ய ஸ்வே தாஸ்வர உப நிஷத் ப்ரதிபாத்யத்வம்
6-தஸ்ய சாந்தோக்ய தஹர வித்யா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
7-தஸ்ய ப்ருஹதாரண்யக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
8-தஸ்ய அதர்வண ஸிகா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
10- தஸ்ய தைத்ரீய ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
11- தஸ்ய அதர்வ ஸிர உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
12- சதுர்முக காரணத்வ மத நிரூபணம்
13- தஸ்ய அம்பஸ்யநுவாக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
14- தஸ்ய முக்த ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
15-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸப்தவத் ஸிவாதி ஸப்தாநாம் ஸாதாரணத்வ ஸமர்த்தநம்
16- ருத்ரஸ்ய ஜன்யத்வ ப்ரதிபாதநம்
17-நாராயண பரத்வ சமர்த்தந ஆரம்ப
18-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் நாராயண ஸப்த பர்யவஸாந சமர்த்தனம்
19-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் இதி வாக்யார்த்த விசார
20-நாராயணஸ்ய மோக்ஷ ப்ரதத்வாதி நிரூபணம்
21-தஸ்ய நாராயண உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
22-தஸ்ய மஹா உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
23-தஸ்ய ஸ்வேதாஸ்வதர உப நிஷத் கடித சிவ ஸப்த வாஸ்யத்வ ஸமர்த்தனம்
24- சதுர்முக ருத்ரயோ நாராயண ஜன்யத்வ ஸம்ஹார்யத்வாதி நிரூபண முகேந காரணத்வாபாவ ஸமர்த்தனம்
25-காரண வாக்ய கடித ஹிரண்ய கர்ப்பாதி ஸப்த நாமபி பரமாத்ம பரத்வ ஸமர்த்தனம்
26-ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்ததாக்ரே இத்யஸ்ய பரமாத்ம பரதயா அர்த்த வர்ணனம்
27-அம்பஸ்யபாரே -இத்யனுவாகஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
28-புருஷ ஸூக்தஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
29-தாதா யதா பூர்வம் -என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
30-ப்ரஜாபதேஸ் ஸபாம் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
31-தத் ஸ்வயம் பூர் பகவான் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
32-நாராயண அநு வாக ப்ரதிபாத்ய நிரூபணம்
33-நாராயண பரம் இத்யாதியில் சொல்லும் பஞ்சமீ ஸமா ஸகண்டநம்
34-த்ருஷ்டாந்த ப்ரதர்சன பூர்வகம் நியாய விரோத ப்ரதர்சன பூர்வகஞ்ச தத் வாக்யார்த்த நிரூபணம்
35-த்ருஷ்டாந்தரங்களைக் கொண்டு பூர்வ யுக்த சமர்தன பூர்வக நிகமனம்
36-ஸ்வேதாஸ்வ தரஸ்த -ததோ யதுத்தரதரம் இத்யாதி வாக்ய கத சங்கா நிராகரணம்
37-உபக்ரமாதி கரண நியாய நிரூபணமும் தத் ஸமன்வயமும்
38-பூர்வ யுக்த -ததோ யதுத்தர தரம் இத்யாதி வாக்யத்தில் சங்காந்தரமும் தத் சமதானமம்
39-தத்ரைவ ஹேத்வந்தரங்கள்
40-தத் ப்ரகரணகத-ஸர்வாநநஸிரோக்ரீவ -இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
41-அத யதிதமஸ்மிந் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
42-யுக்த அர்த்தத்தில் வாக்யகார ஸம்வாதம்
43-துல்ய ந்யாயாத் -தஹ்ரம் விபாப்மம் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
44-யத் வேதாதவ் இத்யாதி ஸ்ருத்யர்த்த வர்ணனம்
45- காரணந்து த்யேய =இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
46-பரமே வ்யோமன் -என்கிற இடத்தில் பரம வ்யோம ஸப்தத்துக்கு பரமபத வாசகத்வாபாவ நிராகரணம்
47-அஹமேவ ப்ரதம மாஸம் -இத்யாதி ஸ்ருதிக்கு பாவமும் அதுக்கு த்ருஷ்டாந்தங்களும்
48-இதுக்கு ஸூத்ரகார ஸம்வாதம்
49-இதுக்கு மஹா பாரதத்தில் ஸம்வாதம்
50-அதர்வ ஸிரோத்வி தீய கண்டஸ்த -யோவை ருத்ர -இத்யாதிக்கு ருத்ர பரத்வாபாவோப பாதநம்
51- அதர்வ ஸிரோத்ருதீய சதுர்த்த கண்டஸ்த -ஸ ஓங்காரோ ய ஓங்கார -இத்யாதிக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
52-அதர்வ ஸிரோ பஞ்சம கண்டத்துக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
53-இதுக்கு த்ருஷ்டாந்தம்
54-ததுக்த பஸ்மஸ்பர்ஸ விதிக்கு பாஸூ பத விரத மாத்ரார்த் தத்வம்
55-விஸ்வாதி கோ ருத்ரோ மஹர்ஷி -இத்யாதிக்குத் தாத்பர்யம்
56-ஸ்ரீ ருத்ராதிகளுக்கு ருத்ர ஐஸ்வர்ய பரத்வாபாவ ஸமர்த்தனம்
57-ஏக ஏவ ருத்ர -இத்யாதிக்கு தாத்பர்யம்
58-ஸ்ருத் யந்தரங்களில் யுக்த ந்யாயாதிதேஸம்
59-ஸ்ருத் அநுஸாரி புராணங்களை ப்ராமாண்யமும் தத் இதரங்களுக்கு அப்ராமாண்யமும்
60-நாராயண பர புராணாதிகளுக்கு ஸாத்விகத்வாத் ப்ராமாண்யமும் -தத் இத்தரங்களுக்கு தத் அபாவாத் அப்ராமாண்யமும்
61-வக்தவ்ய அம்ஸாநுக்தியால் வந்த ந்யூனதைக்கு பரிஹாரம்
62-ப்ரபந்தார்த்த நிகமனம்

————

ஏவம் பூதமான சேதன அசேதன பிரபஞ்சத்துக்கு நியந்தாவாக
க்ஷரம் ப்ரதானம் -அம்ருத அக்ஷரம் ஹர
– (அபஹரித்து உண்ணும் ஜீவாத்மா) ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ் -1-10–
ஹர –ஜீவ -அம்ருத அக்ஷரம் ஹர இதி -போக்தா நிர் திஸ்யதே –ப்ரதாநம் ஆத்மநோ போக்யத்வேந ஹரதீதி ஹர -இதி ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-
தேவ ஏக -அத்விதீயோ நாராயண –திவ்யோ தேவ ஏகோ நாராயண -இதி ஸுபாலிக ஸ்ருதே
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -ஸ்வேதா -6–16-

குணேஸ -குணா -ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
தேஷாம் -ஈஸ -நியந்தா இத்யர்த்த -என்று வேதாந்தங்களிலே ப்ரதிபாதிக்கப் பட்டு
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம்-தைத்த -6-11-3
பதித்வம் -சேஷித்வம் -சேஷித்வம் பதித்வம் -இதி கீதா பாஷ்யம் -3-30-
பா -ரக்ஷண -இதி தாதோர் நிஷ் பந்நத்வாத் பதி ஸப்தோ -ரஷா -வாஸீ -நது சேஷி வாஸீ – இதி ந வாஸ்யம் -சேஷிணி ரூடத்வாத்
(ப்ரஸித்த ரூடி அர்த்தம்)அந்யதா கமேர் டோ இதி டோ ப்ரத்ய யாந்த -கமி தாதோர் நிஷ் பந் நத்வாத் கோ ஸப் தஸ்ய மானுஷ்யாதி வாசகத்வ ப்ரசங்க -கதி மத்ஸூ ஸர்வேஷு ப்ரயோக அபாவாத் -அத பதி ஸப்த சேஷிணி ரூட இதி -என்று விஸ்வத்துக்குப் பதியாகவும்

(பதி ரக்ஷணமா சேஷியா -விசாரம் -திருப்பல்லாண்டு -வயசான தந்தைக்கு பிள்ளை ரக்ஷணமாய் இருந்தாலும் சேஷி ஆகமாட்டான் அன்றோ)

ஆத்மேஸ்வரம் -தைத் -6-11-3- என்று தனக்குத் தானே ஈஸ்வரனாகவும்
ந தஸ்ய ஈஸே கஸ்ஸன-தைத்த -6-1-10-என்று-அவனுக்கு நியாந்தாக்களாய் இருப்பார் ஒருவரும் இல்லையாகவும்
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே –ஸ்வேதா -6-8- என்று-அவனுக்கு ஓத்தாரும் இல்லை மிக்காரும் இல்லையாகவும்
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -)
ஸ காரணம் கரணாதிப அதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ந ஜநித ச அதிப –ஸ்வே -6-9-
கரணாநாம் -ஸ்ரோத்ராதீ மாம் அதி பா ஜீவா தேஷாமதிப ஸர்வோ பாஸ்யத்வ ஸர்வ சேஷித்வ மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வ விஸிஷ்ட நாராயண இத்யர்த்த -என்று
ஸமஸ்த வஸ்துக்களினுடைய உத்பத்திக்குக் காரணமுமாகவும்
கரணாதிப ஸப்த வாஸ்யனான ஷேத்ரஞ்ஞனுக்கு அதிபனாகவும் -தனக்கு ஜனகரும் -அதிகரும் இல்லையாகவும்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்- தம் தேவதாநாம் பரமம் ச தைவதம் -பதிம் பதீநாம் -பரமம் பரஸ்தாத்- விதமா தேவம் புவநேஸ மீட்யம்–ஸ்வேதா -6-7-
மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வம் நாராயணஸ் யைவேதி வஹ்யதே -என்று
நியாந்தாக்களுக்கு எல்லாம் பரம உபாஸ்யனாகவும் -சேஷிக்களுக்கு எல்லாம் பரம சேஷியாகவும் -உப நிஷத்துக்களிலே ஓதப்பட்டு ஸர்வ லோக நியந்தாவான ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன்

அவன் இவ் வசித் ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு பந்த நிவ்ருத்த் யர்த்தமாக ஞாதவ்யனாகையாலே அவனுடைய யாதாத்ம்யமும் நிரூபணீயம்(பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் அறிய வேண்டுமே)

(ஸ்வேதாஸ்வர உபநிஷத் வாக்யங்கள் பிறரையும் பரனாகச் சொல்லும் படி அமைந்துள்ளதால்-வேதார்த்த ஸங்க்ரஹத்தில் அவற்றை எடுத்து விளக்கி உள்ளார் -அதே போல் இங்கு இவரும் இவற்றை எடுத்து விளக்குகிறார்)

ஏவம் பூதனாய் இருப்பானோர் ஈஸ்வரனைக் கொள்ளாத போது -இந்த ஷேத்ரஞ்ஞனானவன் இப்படி ஸூக துக்க அநுபவம் பண்ணக் கூடாது –எங்கனே என்னில்
நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் -ஸ்வேதா -6-13- கட -2-5-13- என்று
நித்யராய்
சைதன்ய குணகராய்
அசங்கயாதரான ஆத்மாக்களுக்கு–நித்யனாய் -சைதன்ய குணகனாய் -அத்விதீயனாய் இருப்பான் ஒருவன் அபிமதங்களைக் கொடா நிற்கும் என்று சொல்லுகையாலும் -துக்காத் யநுபவத்தில் வந்தால் அவற்றுக்கு ஹேதுவான அவித்யா கர்ம தேஹாதிகள் அசேதனங்களாகையாலே சேதன அதிஷ்டாநம் இல்லாத போது -புருஷா அநதிஷ்டிதமான வாஸ்யாதி கரணங்கள் ரத நிர்மாணத்துக்கு ஷமம் அல்லாதவோபாதி -அநுபவிப்பிக்க மாட்டாது -அநு பவிக்கிற சேதனன் தான் ஸூக அனுபவ ஸ்ரத்தை உண்டாகிலும் தன் மூலமான ஹேதுக்களை அறிந்து அதிஷ்டிக்க வேண்டும் –அதுக்கு யோக்யதையை உடையனாக இரான்
சேதனர்கள் தந்தாமுடைய கர்மாதிகளையும் அறியாது இருக்கப் பிறருடைய கர்மாதிகளையும் அறிந்து அதிஷ்டிக்கைக்கு யோக்யர் அல்லர்
ஆகையால் இவர்களுடைய கர்மாதிகளையும் அறிகைக்கு ஸர்வஞ்ஞனுமாய் -அறிந்தபடியே அதிஷ்டிப்பித்து அனுபவிப்பைக்கு ஸர்வ சக்தனுமாய் -இச் சேதனனுடைய விதி நிஷேத (அநுஷ்டான
நுஷ்டான)அநு வர்த்தந திவர்த்தநங்களில் அநுக்ரஹ நிக்ரஹங்களைப் பண்ணும்படி நியாந்தாவுமாய் –
தத் தத் ஆகார புண்ய பாப கர்மங்களுக்கு பலமான ஸூக துக்கங்களைக் கொடுக்கைக்குக் கீழ்ச் சொன்ன அசேதன ஜாதீயனும் இன்றியே உபய விலக்ஷணனாய் இருப்பானோர் ஈஸ்வரன் உண்டு என்று கொள்ள வேணும்

ஆகை இறே -போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோதம் த்ரி விதம் ஸர்வ மேதத் –ஸ்வே -1-12- என்று
போக்த்ரு போக்ய ப்ரேரயித்ரு ரூபமான சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயாத்மகமாக ஜகத்தை உபநிஷத் பாகத்திலே ஓதப்பட்டது

இந்த நியந்த்ருத்வ விஸிஷ்டமான ப்ரஹ்மத்தை -காரணம் து த்யேய – அதர்வஸிகோப -என்று ஜகத் காரண தயா ஜிஜ்ஞாஸ்யமாக உப நிஷத்திலே ஒதுகையாலே
காரண வாக்யங்களில் ஸத் ப்ரஹ்மாத் மாதி ஸப்தங்களாலே சொல்லப்பட்ட வஸ்து இது விறே என்று நிஸ்ஸயிக்கப் படும்
எங்கனே எனில்

(ப்ரஹ்ம ஸத் ஆத்மா -பொதுவான சொற்கள்
என் மூல காரணம் -ஸ்ருஷ்டி ப்ரகரணம்
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் ப்ரதிஜ்ஜை
சத்தாகவும் பெரியதாகவும் -ஆத்மா சேதனமாகவும் இருக்க வேண்டுமே
கூரத்தாழ்வான் பஞ்ச ஸ்தவத்திலும் இவற்றைக் காட்ட அருளுகிறார்)


சாந்தோக்யத்திலே -ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -6-2-1- என்று
பிருஹத் அப்ருஹத் சாதாரணமான ஸச் சப்தத்தாலே சொல்லப்பட்ட காரண வஸ்துவானது
வாஜஸ நேயத்திலே -ப்ரஹ்ம வா இதமே வாக்ர ஆஸீத் -ப்ரு -3-4-9- என்று ப்ருஹத்த்வைகாந்தமான ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்பட்டது
அவ் விடத்திலே ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே காரண வாக்யங்கள் எல்லாவற்றுக்கும் ஏக விஷயத்வம் வேண்டுகையாலே பஸூ மால பேத – சதபத ப்ரா -6-1-2-14-13- என்று சாமான்யமான பஸூ ஸப்தம் -சாகோ வா மந்த்ர வர்ணாத்-என்கிற ஸூத்ரத்தில் விசேஷ உபஸ்தாபகமான சாக பஸூ விலே பர்ய வசிக்குமாப் போலே இங்கும் ஸாமான்யமான ஸச் ஸப்த வாஸ்யம் என்று நிஸ்ஸயிக்கப் படுகிறது
ஏகம் வா ஸம்யோக ரூப சோதநாக்யா விசேஷாத் -என்று பூர்வ மீமாம்ஸை யில் -2-4-9- சொன்ன சாகாந்தர அதிகரண ந்யாயத்தாலே என்றபடி
ப்ரதீயதே யத் தத் ப்ரத்யயம் ப்ரதீயமாநம் இத் யர்த்த –ஸர்வ ஸாகா ஸூ ப்ரத்யயம் ஸர்வ ஸாகா ப்ரத்யயம் -தத்ர த்ருஷ்டோ ந்யாய ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாய என்று விக்ரஹம் கண்டு கொள்வது –

(அஞ்ஞானம் அறிவிக்கும் வேதம் மீண்டும் மீண்டும் சொல்வதால் வேறே வேறே கர்மங்களை சொல்லுகின்றனவா அல்லது வேறே வேறே பலன்களை சொன்னவையாஅல்லது வேறே வேறு அதிகாரிகளுக்குச் சொன்னவையா-ஒரே குணம் சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் இருப்பதாக பொதுத் தன்மை
சமாக்யா சோதனா பொது போல் இங்கும்-ஆகவே ஒருவரையே சொன்னதாக)

இந்த ப்ரஹ்ம ஸப்தம் தான் -மம யோநிர் மஹத் ப்ரஹ்மா -கீதை -14-3- என்றும் தத் ஞானம் ப்ரஹ்ம ஸம்ஜிதம் -என்றும்
சித் அசித் ஸாதாரணமாகையாலே -ஐத ரேயத்திலே ஆத்மா வா இதமேக ஏவ க்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் -ஐதரேய -1-1-1-என்று சேதநைக அசாதாரணமான ஆத்ம ஸப்தத்தாலே விசேஷித்தது

இந்த ஆத்மாக்களில் ஜகத் காரண பூதர் ஆர் என்று விசேஷா காங்ஷையிலே –
அந்த விசேஷமாவது –ஸர்வம் ததிந்த்ர தேவஸே –ஸாம -2-1-4-2—விஸ்வஸ் மாதிந்த்ர உத்தர இத்யாதிகளாலே சர்வோத்தரனாய்ச் சொல்லப்படுகிற இந்த்ரனோ
=

தமக்நேந்த்ரே வ்ருஷபஸ் ஸதாமஸி த்வம் விஷ்ணுருரு காயோ நமஸ்ய-த்வம் ப்ரஹ்மா ரயிவித் ப்ரஹ்மணஸ் பதே த்வம் விதத்தாஸ் ஸச ஸே புரந்த்ரிய -என்றும்
த்வம் அக்நே ருத்ரோ அஸூரோ மஹோதிவ -யஜுர் காடகே -2-2-என்றும்
இத்யாதிகளிலே ஸர்வாத்மகனாய்ச் சொல்லப்படுகிற அக்னியோ

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி -யஜுர் ஸம் -1-5-24
சித்ரந் தேவாநாம் உதகாதநீ கஞ்சா ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே ராப்ராத் யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்து ஷஸ்ச -யஜுர் 1-4-43
ஹம்ஸஸ் ஸூசிஷத் -யஜுர் -4-2-1-5-இத்யாதிகளிலே உபாஸ்யனாக ஓதப்படுகிற ஆதித்யனோ

ஸோம பவதே ஜனிதா மதீநாம் ஜனிதா திவோ ஜனிதா ப்ருதிவ்யா ஜனிதா அக்னேர் ஜனிதா ஸூர்யஸ்ய ஜனிதா இந்த்ரஸ்ய ஜனிதோத விஷ்ணோ -சாம -6-1-4-5
ஏவமாதிகளிலே ஸர்வ உத்பாதகனாய்ச் சொல்லப்படுகிற சந்திரனோ-

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே நமோ வயம் வைஸ்ரவணாய ததாது யஜுர் ஆர -1-21-
இத்யாதிகளிலே ஸர்வ பல பிரதனாகச் சொல்லப்படுகிற வைஸ்வரணோ-

யோஸ்ய க்ருஷ்ட்ய ஜகத பார்த்தி வஸ்ய ஏக இத்வசீயமம் பங்க்யஸ்ரவோ காயயோ ராஜாந பரோத்த்ய யமம் காய பங்க்யஸ்ரவோ யோ ராஜாந் அபரோத்த்ய-யஜுர் -ஆ -6-5-12-1-2-3-
இத்யாதிகளில் உத்க்ருஷ்டனாக ஓதப்படுகிற யமனோ-

இமம் மே வருண ஸ்ருதீ ஹவமத்யாச ம்ருடய த்வாமவஸ்யு ராசகே தத் வாயாமி ப்ரஹ்மணா வந்த மாநஸ் ததா ஸாஸ்தே யஜமானோ ஹவிர்பிரஹேட மானோ வருணே ஹபோத் யுரு ஸம் ஸமான ஆயுர் ப்ரமோஷீ -யஜுர்
இத்யாதிகளில் ஆராத்யனாகச் சொல்லப்படுகிற வருணனோ

இன்னமும் பிரதேசாந்தங்களிலே உத்க்ருஷ்டராக ஓதப்படுகிற வாயு முதலான தேவதா விசேஷங்களோ என்னில்

அவர்களாக மாட்டார்கள் -எங்கனே என்னில்
ப்ரஹ்மாவினுடைய பக்கலிலே மந்வந்தரம் தோறும் பதினாலு பர்யாயம் பதங்கள் இட்டு மாறும்படியாய்-அவ்வோ காலங்களிலே ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்கு கர்மீ பவிப்பாருமாய்
பீஷாஸ் மாத் வாத பவதி -பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத் அக்னிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம -தைத்ரம் -என்று
தங்களை ஒழிந்தானோர் ஈஸ்வரனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சி வர்த்திப்பாருமாய் -அவனை ஆராதித்து பதம் பெற்றாருமாய் -சாஸ்திரத்தினுடைய அநு வர்த்த நத்திலும் புண்ய பாபங்களைப் பெற்று- தத் தத் பலமான ஸூக துக்கங்களை அநுபவிப்பாருமாய் -பரிச்சின்ன விபூதிகராய்ச சொல்லிப் போருகையாலே
இப்படி அஸ்மாதாதிகளோ பாதி ஸர்வ சாதாரணமான ஸ்வ பாவங்களை உடைய –
இந்த்ர -யம -வருண -குபேராதிகள் ஈஸ்வரத்வ சங்கைக்குக் கூட அர்ஹர் அல்லர்

ருத்ர ஜகத் காரணத்வ வாத ஆரம்ப
இப்படி ஸ்வேதாஸ்வர உபநிஷத்திலே -யதா தமஸ் தந் ந திவா ந ராத்ரிர் ந ஸந் ந ச அஸச் சிவா ஏவ கேவல -என்றும்-தத் அக்ஷரம் தத் ஸவிதுர் வரேண்யம் ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -4-18- என்கிற இத்தாலே
அந்தக் காரண விசேஷம் சிவன் என்று புத்தி பண்ணப்படா நின்றது
ஸத் ப்ரஹமாத்மாதி சாமான்ய சப்தங்களுக்கு விசேஷ ஸப்த ஸா பேஷத்வம் உண்டாகையாலே ஸர்வ நிஷேத பூர்வக அவதாரண கடித சிவ ஸப்தத்திலே அவைகள் பர்யவசிக்கின்றன (சிவா ஏவ கேவல
)-இதி தேஷாம் அபிப்ராய

(நம் பூர்வர்கள் இவ்வாறு பூர்வ பக்ஷ விளக்கம் அருளிச் செய்தபின்பே ஸித்தாந்த நிர்ணயம் பண்ணி அருள்வார்கள்)

அங்கன் அன்றியே -ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -என்று மஹா உப நிஷத்திலே சொல்லப்பட்ட நாராயணன் அந்த விசேஷமானாலோ என்னில்
இவ் வுப நிஷத் வாக்யம் -ஹவை -என்கிற ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அனுவாத ரூபமாய் இருக்கையாலே
(அனுவாத வாக்கியம் என்றாலே முன்பு புரோ விதி வாக்கியம் உண்டாய் இருக்க வேண்டும் அன்றோ-இந்த வாதத்தால் ஆஹாஸ ப்ராண ஸப்தம் காரணமாக மாட்டாது என்று நிர்த்தேசித்ததை த்ருஷ்டாந்தமாகக் காட்டுகிறார்) ஸ்வயம் விசேக்ஷ உபஸ்தாபநம் பண்ண மாட்டாது -எங்கனே என்னில்

சாந்தோக்யத்தில் -ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத் யந்தே -1-9-1-
ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ பி ஸம் விசந்தி பிராண மப்யுஜ்ஜி ஹதே –1-11-5- என்று(
ஸ்ருஷ்டிக்கப்படுவதையும் லயிக்கும் படியையும் காட்ட இரண்டு பிரமாணங்கள்)
இவ் வாக்கியங்கள் இரண்டுக்கும் -ஹவை -என்கிற ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே யாதொருபடி அநு வாதத்வம் உண்டாயிற்று
ஆஹாஸஸ் தல் லிங்காத் -அத ஏவ ப்ராண -ப்ரஹ்ம ஸூத் 1-2-23-24-என்கிற அதிகரணங்களிலே
ஸர்வாணி ஹ வா என்கிற வாக்யத்துக்கு அநு வாதத்வம் ஸ்தாபிக்கப் பட்டதாகையாலே அநு வாதத்வம் உண்டாயிற்று -இத் யுக்தம்

அப்படியே இங்கும் ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே அநு வாதமாகையாலே ஆகாஸ ப்ராண ஸப்தங்களோ பாதி நாராயண ஸப்தமும் அநுவாத லிங்க ரஹிதமான- ஏவ காராத் யுபாதாந லிங்க விஸிஷ்டமாயுள்ள -சிவ பரமாக ப்ராப்தம் ஆகையால் ருத்ரனே ஜகத் காரணம் என்று நிச்சயிக்கப் படுகிறது-
ஆகையாலே மோக்ஷ ப்ரதத்வமும் அவனுக்கே என்று அர்த்த சித்தம்
(ஜகத் காரணம் யாரோ அவனுக்கே மோக்ஷ பிரதத்வம் -அனுமானத்தால் அர்த்த சித்தம்)

எங்கனே என்னில்
யதோ வா இமாநி பூதாநி -தைத்ரியம் – இத்யாதியாலே
1-ஜகத் காரண பூதனும் -2-முமுஷு உபாஸ்யனும் -3-மோக்ஷ ப்ரதனும் -என்று சொல்லப்படுகையாலே
இன்னமும் ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் ஸ்வேதாஸ்வர உப நிஷத்திலே நேரே சொல்லப்படா நின்றது
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் (இந்த மஹானை நான் அறிகிறேன்)ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி நான்ய பந்தா வித்யதேயநாய –யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கிஞ்சித் -வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் ததோ யதுத்தர தரம் ததரூபமநா மயம் -ய ஏதத் விதுரம்ரு தாஸ்தே பவந்தி- அதே தரே துக்க மேவாநு யந்தி -ஸர்வாநந ஸிரோக்ரீவ ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச பகவான் -தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ –ஸ்வேதா -3- என்று
வ்யாபகனான பரம புருஷனில் காட்டில் உத்தரமாய் இருபத்தொரு தத்வத்தைச் சொல்லி -அதினுடைய ஞான அஞ்ஞானங்களாலே மோக்ஷ ஸம்ஹாரங்களாகவும் சொல்லி -அத் தத்வம் ஸர்வ வ்யாபியான ஸிவன் என்று நிகமித்தது

அப்படியே சாந்தோக்ய தஹர வித்யையிலும் -அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர அஸ்மிந் நந்தர ஆகாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் தத் அந்வேஷ்டவ் யந் தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று இத்தாலே
ஹ்ருதய புண்டரீக மத்ய வர்த்தியான ஆகாஸ ஸப்த வாஸ்யமாக ஒரு வஸ்துவை நிர்தேசித்து -அதுக்குள்ளே இருக்கிற வஸ்து முமுஷுக்களுக்கு அன்வேஷ்டவ்யம் என்று சொல்லப்படா நின்றது

இவ் விடத்தில் ஆகாஸ ஸப்தம் -தத் ப்ரகரண உப ஸம்ஹாரத்திலே -ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யத் அந்தரா தத் ப்ரஹ்ம -8-14-1- என்று
நாம ரூப நிர்வோட்ருத்வ ஸ்ருதியாலே புருஷ ஸூக்தத்திலே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -என்று
நாம ரூப நிர் வாஹகனாகச் சொல்லப்பட்ட பரம புருஷனுக்கு வாசகமாகையாலே அந்த ஆகாஸ ஸப்த வாஸ்யனான பரம புருஷனுக்கு அந்தர் வர்த்தியாய் இருபத்தொரு வஸ்து முமுஷுக்களுக்கு உபாஸ்யம் என்று இவ் வாக்கியத்திலே தோன்றா நின்றது

தைத்ய தஹர வித்யையிலே -தஹ்ரம் விபாப்மம் வர வேஸ்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்ய ஸம்ஸ்தம் –தத்ராபி தஹ்ரம் ககநம் விசோகஸ் தஸ்மிந் யதன்தஸ்தது பாஸி தவ்யம்- யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தோ- வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ்ச மஹேஸ்வர -6-10- என்று
சாந்தோக்ய வாக்கியத்தில் போலே ஹ்ருதய அந்தர் வர்த்தியாயும் உபாஸ்ய ஆதாரமாகவும் ஆகாஸ ஸப்த பர்யாயமான ககந ஸப்தத்தாலே பரம புருஷனை நிர்தேசித்து ததாதேயமாய் இருபத்தொரு வஸ்துவை உபாஸ்யமாகச் சொல்லி -அந்த விஷயம் -யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர என்று மஹேஸ்வரனாக நிஷ்கர்ஷிக்கப் படா நின்றது –

அப்படியே ப்ருஹதாரண்யகத்தில் -யஸ் ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாசஸ் -தஸ்மிஞ் சேதே ஸர்வஸ்ய வஸீ– ஸர்வஸ் யேஸாந -6-4-22- என்று ஹ்ருதய மத்யஸ்தமாக ஆகாஸ ஸப்தத்தாலே சாந்தோக்யத்தில் போலே பரம புருஷனைச் சொல்லி- தத் அந்தர் வர்த்தியாக ஈஸாநன் ப்ரதிபாதிக்கப் படா நின்றான்

அப்படியே அதர்வ சிகையிலே -காரணந்து த்யேய ஸர்வ ஐஸ்வர்ய ஸம்பன்னஸ் ஸர்வேஸ்வர சம்பு ராகாஸ மத்யே த்யேய -என்று ஹ்ருதய மத்யஸ்தமான ஆகாஸ வர்த்தியாகக் கொண்டு உபாஸ்யமான வஸ்துவை சம்பு ஸப்தத்தாலே விசேஷித்து -சிவ ஏகோ த்யேய -சிவங்கரஸ் ஸர்வம் அந்யத் பரித்யஜ்ய -என்று அந்த ஷம்புவை சிவ ஸப்தத்தாலே நிகமியா நின்றது

அப்படியே தைத்ரியத்திலும் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி –1-1-2- என்று
குஹா ஸப்த நிர் திஷ்டமான ஹ்ருதய அந்தர் வர்த்தியாய் -உபாஸ்யமான ப்ரஹ்மத்துக்கு ஆதாரமுமாக -ப்ரஸித்த ஆகாஸ வ்யாவர்த்தகமான- பர ஸப்த விசேஷிதமாய் இருக்கிற வ்யோம ஸப்தத்தாலே புருஷோத்தமனைச் சொல்லி -அவன் பக்கலிலே இருக்கிற ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான உபாஸ்ய வஸ்து -முன்பு சொன்ன அநேக ஸ்ருதிகளோடு உண்டான ஐகார்த் யத்தாலே சிவன் என்று அறுதி இடப்படா நின்றது
காமாத் யதிகரணத்தில் ஸர்வே வேதாந்த படித தஹர வித்யை களுக்கு ஐக்யம் சொல்லி இருக்கையாலே ஸர்வ ஸ்ருதிகளுக்கு ஐகார்த்யம் ஸித்தம் என்று கருத்து

ஆகையாலே நாராயணனுக்கு பரனாய் தத் அந்தர் வார்த்தியான உபாஸ்யன் சிவனே என்னும் இடம் ஸர்வ ஸ்ருதிகளிலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது என்னும் இடம் நிஸ்ஸயிக்கப் பட்டதாகிறது

இப்படியே அதர்வ சிரஸ்ஸில் ப்ரதம கண்டத்திலே -தேவா ஹ வை ஸ்வர்க்கம் லோக மகமந் -தே தேவா ருத்ரம் அப்ருச்சன்–கோபவா நிதி ஸோ அப்ரவீத் -அஹமேக ப்ரதம மாஸம் -வர்த்தாமி ச பவிஷ்யாமி ச -நான்ய கஸ்ஸின் மத்தோ வ்யதிரிக்த -என்று
முதலான வாக்யத்தாலே தேவர்களாலே ப்ருஷ்டனான ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தைப் பரக்கச் சொன்னான்

அநந்தரம் தேவர்கள் அத்தை எடுத்து ருத்ரனை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று தொடங்கி
ததோ தேவா ருத்ரம் நாபஸ்யன் தே தேவா ருத்ரம் த்யாயந்தி -ததோ தேவா ஊர்த்வ பாஹவ ஸ்துந் வந்தி என்கிற ஸ்ருதி அர்த்த அநு வாதம்

த்விதீய கண்டத்திலே -யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா -தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச விஷ்ணுஸ் தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச மஹேஸ்வரஸ் தஸ்மை வை நமோ நம –
யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா பூர் புவஸ் ஸூவஸ் தஸ்மை வை நமோ நம -இதி பாரதம் -என்று முதலான
வாக்யத்தாலே ருத்ரனுடைய ஸர்வ ஐஸ்வர்யமானது ஸூ வ்யக்தமாகச் சொல்லப்பட்டது

த்ருதீய சதுர்த்த கண்டங்களிலே -ஸ ஏகோ ருத்ரஸ்ய ஈஸாந ஸ பகவான் ஸ மஹேஸ்வர ஸ மஹாதேவ -இதி தத் அசாதாரணாநேக நாம நிர்தேச தந் நிர்வசன முகத்தாலே ருத்ரனுடைய ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கப் படுகிறது

த்ருதீயேதி –இவ் விடத்தில் அதர்வ சிரஸ்ஸை ஐந்து கண்டமாகவே திரு வுள்ளம் பற்றி இருக்கிறதாகத் தோற்றுகிறது -தத்வ சேகர- ஸ்ருத ப்ரகாசிக -அதர்வ ஸிகா விலாஸாதிகளில் ஆறு கண்டமாகத் திருவுள்ளம் பற்றி வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள்
அநேக தத்வ நிரூபண கோசங்களில் ஐந்து கண்டமாகவே தோற்றுகையால் பரிஷ்கரிக்க சாமர்த்தியம் உடையோமாகிறிலோம்

தேவா ஹ வை –தொடங்கி ஸ்வேந தேஜசா பர்யந்தம் பிரதம கண்டம்
ததோ தேவா ஆரப்ய –யச்ச ஸத்யம் தஸ்மை நமோ நம -இத்யந்தம் த்விதீய கண்டம்
ஓமாதவ் மத்யே -தொடங்கி பாதோய உத்தர –பர்யந்தம் த்ருதீய கண்டம்
ஸ ஓங்கார -தொடங்கி -மஹா தேவ -பர்யந்தம் சதுர்த்த கண்டம்
ததேகஸ்மாதுச்யதே –தொடங்கி – தஸ்மா துச்யதே மஹா தேவ – பர்யந்தம் பஞ்சம கண்டம்
ததே தத் ருத்ர சரிதம் தொடங்கி ஸத்ய மித் யுப நிஷத் -இத்யந்தம் ஷஷ்ட கண்டம்
இவ்வர்த்தம் ஸர்வ வ்யாக்யாநாதி கரண -1-4-29- ஸ்ருத பிரகாசிகையில் ஸ்பஷ்டம்
அஸ்மதீய தத்வ சேகரப்படிப் பணியில் விசதமாகக் காண்க

அப்படியே பஞ்சம கண்டத்திலே -ததேதத் ருத்ர சரிதம் -ஏஷோ ஹ தேவ ப்ரதி ஸோநு ஸர்வா –பூர்வோ ஹி ஜாதஸ் ஸ உ கர்ப்பே அந்த -ஸ ஏவ ஜாதஸ்ஸ ஐநிஷ்யமாண -ப்ரத்யஞ்ஜ நாஸ்திஷ்டதி விஸ்வதோமுக —ததேதத் உபாஸி தவ்யம் -என்று தொடங்கி
வாலாக்ர மாத்ரம் ஹ்ருதயஸ்ய மத்யே விஸ் வந்தேவம் ஜாத வேதம் வரேண்யம்-தாமத்மஸ்தம் யேநு பஸ்யந்தி தீராஸ் -தேஷாம் சாந்திஸ் ஸாஸ்வதீ நேதரேஷாம் என்று
ஹ்ருதய மத்ய வர்த்தியான ருத்ரனுடைய உபாஸனத்தை மோக்ஷ பலமாகச் சொல்லி –
வ்ரதம் ஏதத் பாஸு பதம் -என்று தொடங்கி
அக்னிரித்யாதி நா பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ் யங்காநி ஸம்ஸ் ப்ருஸேத் –தஸ்மாத் வ்ரதமேதத் பாஸு பதம் -ப ஸு பாஸ விமோஷாயா – என்றதும் அங்கமாக சமந்த்ரகமான ஸர்வாங்க பஸ்ம ஸ்பர்ஸ லக்ஷணமான பாஸு பத வ்ரதமும் சொல்லப்பட்டது இறே

இப்படி ருத்ரனுடைய சர்வஸ்மாத் பரத்வம் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சத ப்ரஸித்தமாயுள்ள விடத்தில் பவ்ருஷேய வசஸ் ஸுக்களான புராணாதிகள் தத் அநு குணமாக நயிப்பிக்க வேண்டுகையாலே அந்த ஸ்ருதிகளோடே அநு குணங்களான இதிஹாஸ புராணாதிகள் ப்ரமாணங்களாய் -அத்தை உப ப்ரும் ஹிக்கின்றவாகக் கடவன-
அல்லாத ப்ராபத்யாதி ஸ்ம்ருதிகளும்- ஸ்ரீ விஷ்ணு புராணாதி புராணங்களும்- ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதத்தாலே- விரோதேத் வநபேஷம் ஸ்யாத் –பூ மீ -1-3-3-
விருதே த்வ நபேஷம் ஸ்யாத் அஸதிஹ் யநுமாநம் – ப்ரத்யக்ஷ ஸ்ருதி விருத்தம் ஸ்ம்ருதி வசனமநபேஷ்யம் – அநாதரணீயம் -ஸ்ம்ருதேரபி ஸ்ருதி மூலத்வ அநு மாநாத் ஆதரணீயத்வம் இத்யத்ராஹ –அஸ்தி ஹ்யநுமாநமிதி அசதி -ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதே ஹி ஸ்ம்ருதி மூல ஸ்ருத் யநுமாநம் இத்யர்த்த –இதை ஸ்ருத பிரகாசிகாயாம் -2-1-1-அஸ்யார்த்த உக்த -என்கிற நியாயத்தாலே அநாதரணீ யங்களாகக் கடவன-

மனுவும் -யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய –தாஸ் ஸர்வா நிஷ் பலா -ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா –மநு -1-2-95- என்று
வேத விருத்த ஸ்ம்ருதியாதிகள் த்யாஜ்யமாகச் சொன்னான் இறே –


ஆகையால் சிவனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று ஸோப ப்ரும்ஹண ஸ்ருதி சத ஸித்தம் என்றதாயிற்று –

————-

சதுர் முக காரணத்வ வாத ஆரம்ப
இவ் விடத்திலே சதுர் முகனான ஹிரண்ய கர்ப்பனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று சிலர் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினார்கள் எங்கனே என்னில்
காரண வாக்ய கதங்களான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம -ஸப்தங்கள் சாதாரண ஸப்தங்களாகையாலே -சேதன விசேஷ பர்யவஸாநத்தை அபேக்ஷித்தால்
ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்–ருக் 8ம் அஷ்டகம் 7 அத்யாயம் -வர்க்க –10 ம் மண்டலம் -10 அநு –121 சூத்ரே 1ம் வாக்கியம் -என்று
துல்ய ப்ரகரணஸ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்தாலே சொல்லப்பட்ட சதுர்முகனாகிற விசேஷத்திலே பர்யவஸியா நின்றது

அப்படியே -அம்பஸ் ய பாரே -தைத்த -6-1-1- என்கிற அநுவாகத்திலே -யஸ்மின் நிதம் சஞ்ச விசைதி ஸர்வம் –யத ப்ரஸூதா ஜகத ப்ரஸூதீ –ந தஸ்யேஸே கஸ்ஸன– தஸ்ய நாம மஹத் யஸ — ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம் –ஹ்ருதா மநீஷா மநஸாபி க்லுப்தோ ய ஏநம் விதுரம்ரு தாஸ்தே பவந்தி –தைத்த -6-1-2-4-10-11- என்று ஜகத் காரணமாகவும் மோக்ஷ ப்ரதனாகவும் ஒரு புருஷனைச் சொல்லி பின்பு
அத்ப்யஸ் ஸம் பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் –தைத்த -6-1-12- என்று
முன்பு சொன்ன வாக்யத்தோடே ஏக வாக்கியமாக -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகத்தையும்
ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே -என்கிற எட்டு ருக்கையும் உதா ஹரித்துக் கூட்டுகையாலே ஜகத் காரண பூதனாய் -அநந்ய ஈஸ்வரனாய் -மோக்ஷ ப்ரதனாக முன்பு சொல்லப்பட்ட புருஷன் ஹிரண்ய கர்ப்பன் என்று ஸ்பஷ்டமாயிற்று

ஆகில் -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகமும் -பூர்வ உக்தத்தோடு ஏக வாக்யமாகையாலே -ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் –என்கிற ஸ்ரீ யபதித்வ லிங்கம் முன்பு சொன்ன புருஷன் நாராயணன் என்று காட்டாதோ என்னில் -(ஸ்ருதி சொல்லே -அடுத்து லிங்கம்-அடையாளம் சொல் இல்லாமல் – -வாக்கியம் -பிரகரணம் -ஸ்தானம் -சமாக்கியம் -ஆறு படிகள் -முதலில் சொன்னதே பிரபலம்-கையால் எடுத்து ஆஹுதி கொடு -கரண்டியால் எடுத்து -கத்தியால் எடுத்து -மூன்றும் -அன்னம் நெய் வஸ்து சாமர்த்தியம் -சொல் இல்லாத இடத்தில் கொள்ளலாம்) லிங்கத்தில் காட்டில் ஸ்ருதி ப்ரபலை யாகையாலே ஸ்ரீயபதித்வ லிங்கத்தில் காட்டில் ஹிரண்ய கர்ப்ப ஸப்த ரூடையான ஸ்ருதி தானே விசேஷத்தை நிரபேஷமாகக் காட்டவற்று
ஏக பத ஸாமர்த்யம் ஸ்ருதி வஸ்து ஸாமர்த்யம் லிங்கம் -என்று இறே மீமாம்சகர் நிஷ்கர்ஷித்தது
ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் -தைத் -6-1- என்று ஜகத் ஸ்ரஷ்டாவை ஹிரண்ய கர்ப்ப பர்யாயமான தாத்ரு ஸப்தத்தாலே சொல்லிற்று இறே

ப்ரஜாபதி ப்ரஜா அஸ்ருஜத -தைத்த ப்ரா -1-4-2- என்று முதலான காரண விஷய ஸ்ருதிகளும் ப்ரஜாபதியையே காரணமாகி சொல்லா நின்றன

ப்ரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1-என்று சாந்தோக்ய -தஹர வித்யையிலே பிராஜா பத்ய ஸ்தாநத்தை முக்த ப்ராப்யமாகச் சொல்லிற்று இறே

ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம ஸப்தங்கள்
சிவ சம்பு மஹேஸ்வராதி ஸப்த வாஸ்யமான வஸ்து விசேஷத்திலே பர்யவசிக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது அன்றோ -என்னில்
அது சொன்னாலும் விஷயமாக மாட்டாது – எங்கனே என்னில்
ஸத் ப்ரஹ்ம ஆத்ம ஸப்தங்களோ பாதி ஸிவாதி சப்தங்களும் சாதாரணங்கள் ஆகையாலே
அப்படி ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சாதாரணம் அல்ல

ஸிவாதி ஸப்தம் சாதாரணமான படி எங்கனே என்னில்
சிவமஸ்து ஸர்வ ஜகதாம்(
உலகு எங்கும் மங்களம் ஏற்படட்டும்) -என்றும்
ஸிவா நஸ் சந்து பந்தாந —
சிவம் கர்மாஸ்து என்றும்
சிவா ருதவஸ் சந்து -என்றும்
சிவா நஸ் சந்தமா பவ -அதர்வ 7-17-68-என்றும்
சிவஸ் சிவா நாம சிவோ அஸிவா நாம் -உத்யோக பர் -42-6- என்றும்
யோவஸ் சிவ தமோ ரஸ -தைத் -6- என்றும்
லோக வேதங்களிலே ஸூத்தி மங்கள்யா குண யோகத்தால் அநேக வஸ்துக்களிலே சிவ சப்தம் ப்ரயோகிக்கக் காணப் படா நின்றது –

இப்படி சம்பு ஸப்தமும் –சம்புஸ் ஸ்வயம்பூர் த்ருஹிண -என்று ப்ரஹ்மாவின் விஷயமாகவும் காணப்படா நின்றது(காம க்ரோதங்களையும் துஷ்டர்களை அழிப்பதால்)

மஹேஸ்வர ஸப்தமும் மஹான் ஈஸ்வர என்கிற அவயவ ஸக்தியாலே ராஜாதிகளிலேயும் பிரயோகிக்கப் படா நின்றது

இனி ருத்ர ஸப்தமும் -ருத்ரோ வா ஏஷ யதக்னி-யஜுக்கே அஷ் -2-3-
வீரான்மா நோ ருத்ர பம்மிதோவதீ ஹவிஷ் மந்தோ நமஸா விதேம தே -யஜுர் ஸம் -4-5-10-23- என்று க்ரவ்ர்யாதி குண யோகத்தாலே அக்னி யாதிகளிலும் பிரயோகம் காணப்படா நின்றது

இப்படி ஹிரண்ய கர்ப்ப சப்தத்துக்கு சதுர்முகனை ஒழிய வேறு ஒருவர் இடத்தில் காணப்பட்டது இல்லை
அப்போது இறே ஸிவாதி ஸப்தங்களோ பாதி ஸாதாரணம் என்னாலாவது

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் – கட உப -1-1-1- இத்யாதி வாக்கியங்கள் ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அநுவாதமாகையாலே விசேஷ உப ஸ்தாபகம் அன்று என்று முன்பே சொல்லப்பட்டது

ஆகையாலே -ப்ருகுடீ குடிலாத் தஸ்ய லலாடாத் க்ரோத தீ பி தாத் ஸமுத் பன்னஸ் ததா ருத்ர –மத்யாஹ் நார்க்க சம ப்ரப –
அர்த்த நாரீ தர வபு ப்ரஸண்டோதி சரிரவான் -ஸ்ரீ விஷ்ணு பு -1-7-12 என்கிறபடியே
அர்த்த நாரீதர சரீரியான ருத்ரனுக்கும் உத்பாதகனான ஹிரண்ய கர்ப்பமே முமுஷு உபாஸ்யமான பர ப்ரஹ்மம் என்று வேதாந்தங்கள் ப்ரதிபாதிக்கின்றன என்னும் இடம் ஸித்தம்

புராணங்களும் ப்ரஹ்ம பரத்வ ப்ரதி பாதக ஸ்ருதிகளை உப ப்ரும்ஹிக்கிறவையே பிரமாணங்கள் –அல்லாதவை ஸ்ருதி விரோதத்தாலே உபேஷணீ யங்கள்
ஆகை இறே மநுவும் ததஸ் ஸ்வயம் பூர் பகவான் -11-6- என்று ஸ்வயம்பு சப்ததத்தாலே ஜகத் காரணத்தைச் சொல்லிற்று
ஸ்வயம்பு ஸப்தம் -சதுர்முகனுக்கு பர்யாய பதம் என்னும் இடம் ப்ரஸித்தம்

ஆகையாலே சதுர்முகனே பர ப்ரஹ்மமாக ஸ உப ப்ரும்ஹணமான வேதாந்தத்தில் ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்னும் இடம் ப்ரஸித்தம் என்றதாயிற்று –

——————-

அத ஸித்தாந்த ஸ்தாபநம்-இவ் விடத்தில் பரிஹாரமான ஸித்தாந்தம்
நாராயண ஸப்த வாஸ்யமான வஸ்துவே பர ப்ரஹ்மமாகக் கடவது
காரண வாக்கியங்களில் இவனையே காரணமாகச் சொல்லுகையாலும்
மோக்ஷ பிரகரணங்களில் இவனையே மோக்ஷ பிரதனாகவும் முக்த ப்ராப்யனாகவும் சொல்லுகையாலும்
எங்கனே என்னில்

காரண வாக்கியங்களில் சாதாரணமான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மாதி ஸப்தங்கள் விசேஷ பர்யவஸாந ஆகாங்ஷங்களாய்க் கொண்டு
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஆபோ ந அக்னிர் ந சோமோ ந ஸூர்ய- ஸ ஏகாகீ ந ரமேத- தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய -ஏகா கந்யா (கந்யா-மநஸ் –ப்ரகாசகத்வாத் –கந தீப்தவ் இதி தாது -இதி ஸ்ருத ப்ர-4-4-17) தச இந்த்ரியாணி —-ஜாயந்தே –மஹா உப -1-1-1 இத்யாரப்ய
அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -தா இமா ஆபாச தத் தேஜோ ஹிரண்மய மண்டலபவத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜயதே –1-2-1-
அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -ஸ்வேதாத் புத்புதம பவத் புத் புதாத் த்ர்யஷ ஸூல பாணி புருஷோ ஜாயதே -1-3-1- என்று
முதலான மஹா உபநிஷத்தாலே காட்டப்பட்ட நாராயணனாகிற விசேஷத்திலே பர்யவசியா நின்றன –

இந்த வாக்யம் அநுவாத ரூபம் என்று முன்பே சொல்லப்பட்டதன்றோ என்னில் -அப்படி யன்று -பின்னை எங்கனே என்னில்
ஸாஸ்த்ரமானது அப்ராப்த ப்ராபகமாய் இருக்கும்
-(அறியாதது அறிவித்த அத்தா போல்)அதாவது இவ் விடத்தில் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் பிரமாணாந்தரங்களால்(பிரத்யஷத்தாலும் அனுமானத்தாலும்) ப்ராப்தம் அன்று -ஆகாஸ ப்ராணாதி களோபாதி ப்ரஸித்த வந் நிர்தேசம் அன்று –ப்ரஸித்த வந் நிர்தேசம் அநுவாத ஸூசகமன்றோ என்னில்
ஸர்வாணி ஹா வா இமாநி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத் யந்தே –சாந்தோ -1-9-1-என்கிற இடத்தில் ஹ வை என்கிற ப்ரஸித்த வந் நிர்தேச மாத்ரம் -அநுவாத ஸூசகம் அன்று
யதாக் நேயோஷ்டாகபால -யஜுர் -2-5-2-
உபரி ஹி தேவேப்யோ தாரயதி-என்று முதலான வாக்யங்களிலும் -அப்போது அனுவாதத்வம் ப்ரசங்கிக்கும் –
(ஸமித் -கரண்டி எங்கே பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஸ்ருதி-திருஷ்ட அக்னி ஹோத்த்ரம் -சரீரமே சாதனம் இவர்களுக்கு -பிரதிபத்தி கர்மா
சமித்தை கரண்டிக்கு கீழே வைத்து செல்ல வேணும்
தேவர்களுக்கு மேலே அன்றோ -ஹி -சமித்தைப் பிடிக்கிறான்
விதி வாக்யமே இது தான் -அனுவாதம் அல்லவே)

அவ் விடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் – வசநாநி த் வபூர்வத்வாத் –பூ மீ -3-5-21-என்றும்
விதிஸ் து தாரணே அபூர்வத்வாத் –பூ மீ -3-4-15- என்றும் பூர்வ மீமாம்ஸா ஸூத்ரங்களாலே விதித்வம் ஸமர்த்திக்கையாலே ஸித்தம்

ஸர்வாணி ஹ வா -இத்யாதி வாக்யங்களால் ஆகாஸ ப்ராணங்களுக்கு ப்ரமாணாந்தரங்களாலே -கார்யத்வ -ஹேயத்வங்கள் ஸம் பிரதிபன்னங்கள் ஆகையாலே இவற்றுக்கு
பரம காரணத்வம் -ப்ராப்யத்வம் -தத் அநு குண கல்யாண குண யோகத்வம் இவற்றினுடைய ப்ரதிபாதனம் கூடாமையாலே -உபக்ரமத்திலே லோக கதியாக ப்ரதீதமான பரத்வமே -ஆகாஸ ப்ராணங்களாக பரத்வ விஸிஷ்ட லிங்கங்களாகையாலே -தத் தச் ஸப்த வாஸ்யங்களாக -சாரீரக மீமாம்ஸா ஸூத்ரங்களாலே -11-22-23-அநுவாதமாக ப்ரதிபாதிக்கப் பட்டதாயிற்று
ப்ரஸித்த வந் நிர்தேசத்வம் அநுவாதத்துக்கு ஹேதுவாகச் சொல்லப் பட்டது என்றதாயிற்று

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -மஹா -1-1-1- என்கிற மஹா உப நிஷத்தில் -நாராயணனையே பரம காரணனாகச் சொல்லி -தத் வ்யதிரிக்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஸம் ப்ரதிபந்தங்களான கார்யாந்தரங்களோ பாதி நாராயணனாலே ஸ்ருஜ்யராகவும் -ஸம்ஹார்யராகவும் சொல்லுகையாலே -வேறு ஒரு வஸ்து காரணமாக விதிக்கப் படுகிறது என்கிற ப்ரசங்கமே இல்லை
ப்ரஹ்மா விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே -அதர்வசிகா என்கிற இடத்தில் விஷ்ணு உத்பத்தி கார்யத்வா பாதகம் அன்று –
உபேந்த்ர – ராம – கிருஷ்ணாத் அவதாரங்களோபாதி ஜகத் ரக்ஷண அர்த்தமாக ப்ரஹ்ம ஈஸ மத்ய கதமான அவதார விசேஷமாக பிரமாண ஸித்தம்
ஆகையால் இவ் வாக்யத்துக்கு அப்ரமாணத்வம் இல்லை என்று இந்த வாக்யத்தில் சொல்லுகிற விசேஷமான நாராயணன் பக்கலிலே ஸதாதி ஸப்தங்களுக்கு பர்யவஸாநம் யுக்தம்
இந்த வாக்யம் அநுவாதமானாலும் அநுவாத லிங்க ரஹிதமாக நாராயணத்வத்தைச் சொல்லுகிற ஸ்ருதி அர்த்தத்தை அநுவதிக்கக் குறையில்லை

அதில் ஸூபால உப நிஷத்திலலே
கிம் ததாஸீத் நைவேஹா மிஞ்ச நாக்ர ஆஸீத் -அமூல மநாதாரா இமா ப்ரஜா- ப்ரஜாயந்தே திவ்யோ தேவ ஏகோ நாராயண என்றும்
புருஷ ஸூக்தத்திலும்
தஸ்மாத் விராட ஜாயத – விராஜோ அதி பூருஷ -என்றும்
இத்யாதியாலே நாராயண காரணத்வத்தைச் சொல்லி
கட வல்ல்யாதிகளும் அவனுடைய மோக்ஷ பிரதத்வத்தையும் சொல்லுகையாலே
ஜகத் காரணத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்கும் –

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -தைத் -1-1-
அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -ததோ வை சத ஜாயத ததாத்மாநம் ஸ்வய மகுருத – தஸ்மாத் தத் ஸூஹ்ருதம் உச்யத இதி -யத்வை தத் ஸூஹ்ருதம் ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி –தைத் -7-1-
இத்யாதி வாக்யங்களிலே ஜகத் காரணமே இறே -மோக்ஷ ப்ரதமாகவும் -முக்த ப்ராப்யமாகவும் ப்ரதிபாதிக்கப் படுகிறது

ஆகையாலே மஹா உபநிஷத் வாக்கியம் அநுவாதமாம் இடத்திலும் -தேவதாந்தர காரணத்வத்தை அநுவதிக்கிற பிரசங்கமே இல்லை
ப்ரஸித்த வந் நிர்தேசம் உண்டானாலும் -அபூர்வ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கும் இடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப்பட்டது

இப்படி நாராயண உபநிஷத்திலும்
அத புருஷோ ஹ வை நாராயணோ அகாமயத- ப்ரஜாஸ் ஸ்ருஜேயமிதி -அதாப ஸ சர்ஜ —நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –நாராயணாத் ருத்ரோ ஜாயதே –நாராயணாத் இந்த்ரோ ஜாயதே- நாராயணாத் ப்ரஜா ப்ரஜாயந்தே –நாராயணாத் த்வாதஸ ஆதித்யா ஏகாதஸ ருத்ரா வஸவ ப்ரஜாபத யஸ்ச ஸர்வே தேவாஸ் ஸமுத் பத்யந்தே -ஸர்வே லோகாஸ் ஸர்வாணி ச பூதாநி நாராயணா தேவ ஸமுத்பத்யந்தே -நாராயணே ப்ரலீ யந்தே -என்று நாராயணனையே ஸர்வ காரணமாகவும் சொல்லிற்று

மஹா உப நிஷத்திலும்
ஸர்வஸ் யாயதநம் ஹரிம் -என்று தொடங்கி
யந் நாபி பத்மாத் அபவந் மஹாத்மா ப்ரஜாபதிர் விஸ்வஸ்ருக் விஸ்வ ரூப -தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நாந்ய பந்தா வித்யதே அயநாய -என்று
ஸகல ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் காரணமாக- நாராயண பர்யாய பதமான ஹரி ஸப்தத்தாலே நாராயணனைச் சொல்லுகையாலே- காரண வாக்யங்கள் எல்லா வற்றிலும் நாராயணனே பரனாக ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்றதாயிற்று

ஆகையாலே -ந சத் ந அசத் சாச் சிவ ஏவ கேவல -ஸ்வே -4-18- என்கிற இடத்தில் சிவ ஸப்தம் அர்வாசீந சிவனுக்கு வாசகம் அன்றியிலே– ஸூத்த மங்கள்ய குண யுக்தமான அநேக அர்த்தங்களிலும் ப்ரயோகம் காண்கையாலே- பவித்ராணாம் பவித்ரனாய் -மங்களா நாம் மங்களனான – ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -தைத் -6-11-3- என்று நாராயண அநுவாகத்திலே சொன்ன ஸாஸ்வத சிவனான நாராயணனுக்கே வாசகமாம் இத்தனை-
இப்படி நாராயண சப்தத்துக்கு வ்யக்த்யந்தரத்தில் ப்ரயோகம் கண்டது இல்லை இறே-
இப்படி பஹு உப நிஷத்திலும் -பஹு ஸ அப்யஸ்யமாந நாராயண ஸப்த வாஸ்யனே -பரம காரண தயா நிர்ணீதனாகையாலே -க்வாசித் கதமாய் வ்யக்த்யந்த்ர ப்ரயோகத்தாலே ஸாவகாஸமான சிவ ஸப்தம் நாராயண வாசகமாகை யாலே யுக்தம் என்றதாயிற்று

இன்னமும் ஆகாஸ பிராணாதி களோபாதி
ந ப்ரஹ்மா நேஸாந -மஹா உப -1-1-
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே- நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண உப-1
த்ர்யக்ஷ ஸூல பாணி -புருஷோ ஜாயதே -மஹா உப -1-3-
யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேஷ ந்ரும்ண
இத்யாதிகளிலே ஸ்ருஷ்டி ஸம்ஹார கர்ம பாவத்தையும்
அஸ்ய தேவஸ்ய மீடுஷோ வயோ விஷ்ணோர் அக்ஷஸ்ய அவப்ருதே ஹவிர்பிர் விதேஹி ருத்ரோ ருத்ரியம் மஹத்வம் -என்று பஹ்வ்ருச ஸ்ருதியிலே ருத்ரனுக்கு பகவத் ஸமாராதநத்தாலே ஸ்வ மஹிம ப்ராப்தியையும் சொல்லுகையாலே அர்வாசீந சிவனுக்கு பரம காரணத்வம் அநுப பன்னம் என்றதாயிற்று-

இப்படியே காரண வாக்ய கதமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சதுர்முகனை பரம காரணமாக ப்ரதிபாதிக்க மாட்டாது -எங்கனே என்னில்
கார்யதயா ஸம் பிரதி பன்னனான ஹிரண்ய கர்ப்பனுக்கு பரம காரணத்வம் கூடாமையாலே
தா இமே ஆபஸ் தத் தேஜோ ஹிரண்ய மய மண்டமபவத் தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ ஜாயத -மஹா உப -1-2-
ஆப ஏவ ஸ சர்ஜா தவ் தாஸு வீர்யமபாஸ்ருஜத் -ததண்டம பவத் ஹைமம் ஸஹஸ்ராம்ஸு சம ப்ரபம் -தஸ்மிந் ஜஜ்ஜெ ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதாமஹ -மநு -1-8-9- என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே சொல்லுகிறபடியே
ஹிரண்ய மஸ்ய கர்ப்போ பூத் -லிங்க பு -பூ 70-106—வாயு பு பூ 5-42- என்கிற
வ்யுத்பத்தி ப்ரகாசத்தாலே ஹிரண்மயமான அண்டம் இவனுக்கு உத்பத்தி ஸ்தானம் என்று தோன்றுகையாலே இவனுடைய கார்யத்வம் ஸித்தம் என்றதாயிற்று-

ஸ பிரஜாபதி ரேக புஷ்கரபர்ணே ஸமபவத்-ந்ரு தாபா வீரயோப -பூ 1-1-ப்ருஹ்ஜ்ஜா பால் யுப -1-1-
விராஜோ அதி புருஷ -ருக் வேத -8-4-17-10-7
ப்ரஹ்மாணம ஸ்ருஜத் ப்ரபு
மாம் த்வம் பூர்வமஜீ ஜந – உத்தர ரா -104-4-
தத் விஸ் ருஷ்டஸ் ஸ புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11-என்று
முதலான ப்ரமாணங்களும் சதுர் முகனுடைய கார்யத்வ ப்ரதிபாதகங்களாய் இருக்கும்

ஆகையால் -ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் -யஜுர் – ஸம் -4-2-34-என்கிற
வாக்யத்துக்குப் பொருள் – ஹிரண்ய கர்ப்பன் ஸ்வ கார்யமான ஸ்ருஷ்டிக்கு பூர்வ பாவியாய் -ஸ்வ ஸ்ருஷ்டங்களான பூதங்களுக்கு பதியுமாய் இருக்கும் என்றதாயிற்று-ஜாத பதிர் ஆஸீத் என்கையாலே இவனுடைய பதித்வம் ப்ரதமஜத்வ ரூப நிபந்தன மாகையாலே ஒவ்பாதிகம் என்று தோற்றுகிறது

(பிரஜாபதி -முதலில் பிறந்தவன் என்பதால் பெற்ற பெயர்)

ஆகையாலே இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் பரம காரண விஷயமான போது -ஹித ரமணீய கர்ப்பத்வாத் ஹிரண்ய கர்ப்ப -என்று உபாய உபேய மான ஸ்வரூபத்தை யுடையவன் என்கிற அவயவ ஸக்தியாலே யாதல் – ஹிரண்ய கர்ப்ப சரீரியான பரமாத்மாவின் பக்கல் பர்யவசான வ்ருத்தியாலே யாதல் – ஸர்வ காரண பூதனான நாராயணனுக்கே வாசகமாகக் கடவது

அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே(கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்) -என்கிற அநுவாகத்தில் –
யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி –
ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி-என்று
ஸமுத்ர ஸாயித்வ-வித்யுத் வர்ண புருஷத்வங்களாகிற லிங்கங்களாலே- நாராயண ஸப்த வாஸ்யனான பரம புருஷனைச் சொல்லி
ந தஸ்யேஸே கஸ்சந தஸ்ய நாம மஹத் யஸ –ய ஏவம் விதுரம்ருதாஸ்தே பவந்தி -என்று
இவனுக்கே அநந்ய ஈஸ்வரத்வத்தையும் -மோக்ஷ ப்ரதத்வத்தையும் சொல்லி
அத்ப்யஸ் சம்பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் -என்று
பூர்வ உக்தத்தோடு ஏக வாக்கியமாக
ஹிரண்ய கர்ப்ப -இத்யாதி ருகஷ்ட கத்தையும் உதா ஹரித்துச் சொல்லுகிற வாக்யமானது இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு நாராயண பரத்வத்தை அடைவிப்பியா நின்றது –

இன்னமும் இந்த ஹிரண்ய கர்ப்ப வாக்யத்தோடே
அத்ப்யஸ் ஸம்பூத -என்கிற அநுவாகத்துக்கும் ஏக வாக்யத்வம் உண்டாகையாலே
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் -என்று அங்குச் சொல்லுகிற ஸ்ரீயபதித்வத்தாலும்
புருஷ ஸூக்த ப்ரகரணத்தவத்தாலும்
நாராயண விஷயத்வம் நிஸ்சிதமாகையால் இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் நாராயண பரம் என்று அறியப்படும்
ஸ்ரவ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் லிங்கமான ஸ்ரீ ய பதித்வத்தில் காட்டில் ப்ரபலமாய்க் கொன்டு சதுர் முக வாசகம் என்கிற விடம் அநுப பன்னம்
காரண விஷய ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு கார்ய பூத சதுர் முக பரத்வம் கூடாமையாலே ஸ்ருதி அசித்தை யாகையாலும்
(பொய்யாகி விடுமே )- ஏக பத ஸாமர்த்ய ரூபமான ப்ராமாண்யம் -அக்னிநா சிஞ்சேத் (அக்னியாலே நனை -காரணத்தைச் சொல்லி கார்யம் தண்ணீரால் நனை-தேவ லோக பசுக்கள் தலை கீழ் நடக்கும் அர்த்த வாதம் அங்கு )-இத்யாதி வாக்கியங்களில் போலே அநுப பன்ன அர்த்தங்களில் ஸம்பவியாமையாலும்- ஸ்ருதிக்கு ப்ராபல்யம் சொல்ல ஒண்ணாது –

புருஷ ஸூக்தம் நாராயண பரம் என்னுமிடம் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட
ஸஹஸ்ர ஸீர்க்ஷ –விஸ்வாக்ஷ –புருஷ இத்யாதி லக்ஷணமான புருஷ ஸூக்தாதி லஷிதமான –நாராயண அநு வாகாதி — என்று பாடமாகில் நலம் -தாள கோசங்களில் புருஷ ஸூக்தாதி -என்றே காண்கிறது
1-ப்ரத்யபிஜ் ஞாநத்தாலே ஸித்தம் என்று லிங்க பூயஸ்த்வாத் -3-3-44- என்கிற வேதாந்த அதி கரணத்திலே ப்ரஸித்தம் இறே

2-அதர்வண வேதத்தில் அஷ்டாதஸ மஹா சாந்தி ப்ரகரணத்திலே — வைஷ்ணவ்யாம் புருஷ ஸூக்த மீதம் -என்று
வைஷ்ணவியான மஹா சாந்தியிலே புருஷ ஸூக்தத்தை விநியோகிக்கையாலே இதினுடைய விஷ்ணு விஷயத்வம் ப்ரதீத மாயிற்று
3-இந்த வாக்யத்துக்கு உத்தர நாராயண அநு வாகத்திலே சொல்லப்பட்ட லஷ்மீ பதித்வ லிங்கத்தாலும்
4-புருஷஸ்ய ஹரே ஸூக்தம் -என்கிற ஸ்ம்ருதி வசனத்தாலும்
5-கல்ப ஸூத்ரங்களிலும் புருஷம் நாராயணம் -என்று (புருஷ இத் யுபஹிதாம் புருஷேண நாராயணனை யஜமான உப திஷ்டதே –ஸஹஸ்ர சீர்ஷா புருஷ இதி புருஷேண நாராயணேந பராஞ்சோநு ஸம் சந்தி -இதி போதாயந ஆபஸ்தம்ப கல்ப ஸூத்ரே ) என்று
இரண்டு அநுவாகத்தையும் சொல்லுகையாலும் நாராயண பரம் என்னும் இடம் நிஸ்ஸயம்

உக்த ந்யாயத்தாலே -தாதா யதா பூர்வ மகல்பயத் -தைத்த -6-1- என்கிற இடத்தில் தாத்ரு ஸப்தம் பரம காரணத்வத்தில் பகவத் விஷயமாகவும்
அவாந்தர காரணத்வத்தில் சதுர் முக விஷயமாயும் இருக்கும்
பிரஜாபதி ஸப்தமும் அப்படியே
பிரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1- என்று
முக்த ப்ராப்யத்வம் சொல்லுகிற விடம் சதுர் முக பரமன்று –
கட வல்லி நாராயண அநுவாகம் தொடக்கமான அநேக உப நிஷத்துக்களிலே நாராயணனையே முக்த ப்ராப்யனாகச் சொல்லுகையாலும்
பகவத் பர தயா நிர்ணீ தவ்யமான தஹர வித்யாகதமான இந்த வாக்யத்துக்கு தத் பரதை யுக்தமாகையாலும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -4-3-14-ப்ரஹ்ம ஸூத் -என்று
சதுர்முகனுடைய முக்த ப்ராப்யத்வம் வேதாந்த விருத்தமாகையாலும்
இந்த ப்ரஜாபதி ஸப்தம் அவயவ ஸக்தியாலே ஸர்வ சேஷியான நாராயணனையே சொல்லுகிறதாகக் கடவது-

தத ஸ்வயம் பூர் பகவான் -மநு -1-6- என்கிற இடத்தில் ஸ்வயம்பு ஸப்தம் நாராயண பரமாகக் கடவது
அநந்தரத்தில் -தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ் ஸ்ம்ருத -மநு -1-10- என்று அவனை நாராயணனாகச் சொல்லி
தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -என்று அவனாலே ஸ்ருஷ்டனாக ப்ரஹ்மாவைச் சொல்லுகையாலே
நாராயணனே பரம காரண பூதன் -சதுர் முகன் அல்லன் -என்றதாயிற்று

நாராயண அநுவாகமானது – ஸஹஸ்ர ஸீர்க்ஷம் தேவம் -6-11-1- என்று தொடங்கி –
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர பரம ஸ்வராட் -6-11-1-என்று முடிவாக ஸர்வ சாகைகளிலும் பரத்வ ப்ரதிபாதகமாக ப்ரஸித்தமான தேவ -சம்பு -அக்ஷர -ப்ரபு -பதி -சிவ -அச்யுத -ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு-ப்ரஜாபதி -ஸ்வயம் பூ -விஸ்வாத்ம -பரம் ப்ரஹ்ம -பர தத்வ -பரஞ்ஜ்யோதி -பரமாத்ம – ப்ரப்ருதிகளான ஸப்தங்களாலே நியாய நிரபேஷமாக நாராயண ஸாமாநாதி கரண்யத்தாலே கண்டோக்தி பண்ணி -பரத்வேந சங்க நீயரான பிரம்மா ஸிவர்களுக்கு தத் விபூதித் வத்தையும் சொல்லி நிகமித்தது

இப்படி ஸர்வ வேதாந்த நிகமன பூமியான இந்த அநுவாகம் உபாஸந விசேஷ விதி பரமாத்ரமும் அன்று – ப்ரக்ருதமான தஹர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பர மாத்ரமும் அன்று -ஸர்வ பர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பரம் என்று வேதாந்தத்திலே –(ப்ரஹ்ம ஸூத் -3-3-44–சாரீரிக மீமாம்ஸாயாம் லிங்க பூயஸ்த்வாதி கரணே யமர்த்தஸ் ஸமர்த்தித )– நிர்ணயிக்கப் பட்டது-

நாராயண பரம் ப்ரஹ்ம –நாராயண பரோ ஜ்யோதி –தைத் -6-11-4-3- என்கிற இடத்தில் பஞ்சமீ ஸமாஸ சங்கையாலே (நாராயணனைக் காட்டிலும் என்ற சங்கை)நாராயணாத் பரமாய் இருபத்தொரு வஸ்து என்று சொல்லுகிற விடம் அயுக்தம்
1-தத்வம் நாராயண பர -இத்யாதிகளிலே வ்யஸ்தமான ப்ரயோகம் காண்கையாலும்
2-அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித —
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்தர –இத்யாதிகளிலே நாராயணனே ஸர்வ ஸ்மாத் பரன் -அல்லாதார் அவனுக்கு விபூதி பூதர் என்று தோற்றுகையாலும்
இவ் விடத்தில் ப்ரதமா விபக்தி -ஸூபாம் ஸூலுக் -பாணிநி ஸூ -7-11-39-இத்யாதி ஸூத்ரத்தாலே
( லுப்த்தை என்கிற விபாக நிர்தேசத்தாலே இந்த ஸம்சயத்தை நிவர்த்திப்பித்து ஸமாஸத்திலும் அப்படியாய்க் கிடக்கிறதாகக் கடவது ) லுப்த்தையாய்க் கிடக்கிறதாகக் கடவது-

மஹா உப நிஷத்திலும் -நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பாரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர -என்று வ்யக்தமாகக் கிடக்கிறது –
நிஷாத ஸ்தபதி ந்யாயத்தாலே பஞ்சமீ ஸமாஸத்தில் காட்டில் ஸாமாநாதி கரண்ய ஸமாஸம் யுக்தம்

(நிஷாத ஸ்த பதீதி –ஸ்த பதிர் நிஷாதஸ் ஸ்யாத் ஸப்த ஸாமர்த்யாத் –இதி ஸூத்ரம் பூர்வ மீமாம்ஸா ஷஷ்டாத்யாய கதம் -6-1-51–ஏதயா நிஷாத ஸ்த பதிம் யாஜயேத் -இதி ஸ்ருதி தஸ்ய விஷய தத்ர நிஷாதாநாம் ஸ்தபதிரிதி விக்ரஹேண -நிஷாத அபின்ன ஸ்தபதி ப்ரதீயதே வா-சம்பந்தி ஸ்தபதி ப்ரதீயதே வா -இதி ஸம்ஸய ஷஷ்டீ தத் புருஷாஸ்ரயணே ஸ்த பதேஸ் சமர்த்தத்வாத் -வித்வத்வாத் -அக்னி மத்வாச்ச யஜ்ஞாத் யநுஷ்டானம் யுஜ்யத இதி பூர்வ பக்ஷ -ஸித்தாந்தஸ்து -ததாஸதி ஸ்ருதி கத நிஷாத பதஸ்ய லக்ஷணா பத்த்யா கர்ம தாரய பக்ஷ ஏவ ஆஸ்ரயணீய -இதி தாத்ருஸ ந்யாயேத் யர்த்த )

(நிஷாத ஸ்த பதீதி -நிஷாதர்களுக்குத் தலைவன் என்றும் நிஷாதரனாகவும் தலைவனாகவும் என்றும்
ராஜ சேவகன் -ராஜா சேவகன் -ராஜாவினுடைய சேவகன்-இருவரும் வேறுபட்டவர் அல்லர் அபேத அந்வயம்-
தத் புருஷ ஸமாஸம் -ராஜா என்பதற்கு ராஜாவினுடையவனான -லக்ஷணையால் கொள்கிறோம்
நேர் பொருள் சொல்ல முடியாமல் லக்ஷணையால் சொல்கிறோம்)

ஆகையாலே இந்த அநுவாகத்தில் ஸர்வ வேதாந்தங்களிலும் 1-முமுஷுபாஸ்ய மாகவும் -2-முக்த ப்ராப்யமாகவும்- 3-ஜகத் காரணமாகவும்- 4-ஜகத் அந்தராத்மாவாகவும் ப்ரஸித்தமாய் -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மதத்வம் ஜ்யோதி-ஆதி ஸாமான்ய ஸப்தத்தாலே நிர் திஷ்டமான வஸ்துவை தத் ப்ரத்யபிஜ் ஞாபகமான அவ்வோ ஸப்தங்களாலே அநுவதித்து அந்த வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது என்றதாயிற்று –

ஜூஹ்வா ஜூஹோதி என்று ஹோம சாதனதயா விஹிதமான ஜூஹு வுக்கு(மரப் பாத்திரம் -யாக அங்கம்) -யஸ்ய பர்ண மயீ ஜூஹுர் பவதி (அப் பாத்திரம் இலையாகவே இருக்கும்)-என்று ஜூஹு ஸப்தத்தாலே அநு வதித்து பர்ண மயத்வ விதாநம் பண்ணினாப் போலே

இப்படி மைத்ராயணீய உப நிஷத்திலும்
தத் ஸவிதுர் வரேண்யம் த்ருவம் அசலம் அம்ருதம் விஷ்ணு ஸம்ஜ்ஞம் ஸர்வ ஆதாரம் தாம -என்று
த்ருவத்வ -அசலத்வ -அம்ருதத்வ -ஸர்வாதாரத்வ விசிஷ்டமாக ஸர்வ வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மம் விஷ்ணு ஸம்ஜ்ஞமாக விசேஷிக்கப் பட்டது

கட வல்ல் யாதி யிலும் -ஸர்வே வேதா யத் பதமாம நந்தி -என்று தொடங்கி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி -என்று சொல்லி
ஸோத் வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் –கட -1-3-9- என்று
ஸர்வ வேதாந்த ப்ரதிபாத்யமாய் -முக்த ப்ராப்யமான வஸ்து வைஷ்ணவமான பதம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டது

ஆகையால் நாராயணனே மோக்ஷ ப்ரதனும் -முக்த ப்ராப்யனும் -பர தத்வமும் என்று ஸர்வ வேதாந்த ஸித்தம் என்றதாயிற்று-

இனி ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலே -ததோ யதுத்தர தரம் –3-10-என்று தொடங்கி ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வம் சொல்லுகிறது என்கிற விடம் அநுப பன்னம்- உப க்ரமத்தோடு சேராமையாலே
உபக்ரமத்தில் -வேதாஹம் ஏதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனைச் சொல்லி –தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேதி நான்ய பந்தா வித்யதே அயநாய -என்று
தத் வேதநமே மோக்ஷ ஹேது -வேறு ஓன்று அன்று -என்கிற அர்த்தத்தினுடைய ப்ரதிஜ்ஜை பண்ணப்பட்டது
அநந்தரம் அத்தை உப பாதிக்கைக்காக -யஸ்மாத் பரம் நா பரமாஸ்தி கிஞ்சித் -யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்ஸித் -வ்ருஷ இவ ஸ்தப்தோதி விதிஷ்டத் யேக- தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -ஸ்வேதாஸ் –3-9- என்று
யாவன் ஒருவனில் காட்டில் வேறு பரமாய் இருபத்தொரு வஸ்துவில்லை – மஹத் தரமாய் இருபத்தொரு வஸ்து இல்லை
நிஸ் தரங்க ர்ணவோபமனான பரமபத நிலயனாலே இந்த விஸ்வம் வ்யாப்தமாய் இருக்கும் என்று கொண்டு-nஸர்வ ஸ்மாத் பரனான பரம புருஷனைச் சொல்லி
ததோ யதுத்தர தரம் என்று அவனில் காட்டில் உத்க்ருஷ்டமாய் இருபத்தொரு வஸ்து உண்டு என்கை உபக்ரமத்தோடு சேராது

ஸேயம் ஸ்ருதி பரமாத்ம பர தயா பார்க்கவஸ் ஸ்ம்ருத்யாதிஷு மஹர்ஷிபி ருப ப்ரும்ஹிதா -ததாஹி -யஸ்மாத் பர தரம் நாஸ்தி புருஷாத் பரமேஷ்டிந- ந ஜ்யா யோஸ்தி ந சாணீயா ஸ து நாராயணோ ஹரி -யேநேதா மகிலம் பூர்ணம் புருஷேண மஹவ்ஜசா -ஸ து நாராயணோ தேவ -இதீயம் வைதிகீ ஸ்ருதி இதி அத்ர வக்தவ்யம் ஸர்வமபி தத்வ ஸேகரடிப் பண்யாம் ப்ரபஞ்சிதம் தத்ர த்ரஷ்டவ்யமிதி உபக்ரம அநு குணமாக உப ஸம் ஹாரம் -என்று சொல்லுகை உபக்ரமாதி கரண ஸித்தம்

(ததோ யதுத்தர தரம்-ஆகையால் என்றும் அதை விட என்றும் -இரண்டு
அத்தைக் காட்டிலும் மிக உயர்ந்தது என்றும் அதனால் மிக உயர்ந்ததாக -என்றும் கொள்ளலாமே)

(நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் இனிதோ நீ அருளும் வைகுந்தம் என்னும் வான்-
கல்யாண குணங்களே அவனைக் காட்டிலும் அம்ருத மாயம்
குணங்கள் மூலம் உபாசனம் ஸ்வரூப உபாசனத்தை விட உயர்ந்தது என்றதாயிற்று)


(உபக்ரமாதி கரணமிதி -பூர்வ மீமாம்ஸா த்ருதீயாத்யாய ப்ரதமாதி கரணம் -3-3-1-கைஸ்சித் வேத தர்மதாதி கரணம் இத்யபி பட்யதே–தததிகரணே ஹி -ப்ரஜாபதிர் வா இதமக்ர ஆஸீத் -ஸ தபோதப்யதா–தஸ்மாத் தபஸ் தேபா நாத் த்ரயோ வேதா அஜாயந்த -அக்நிர் வாயுர் ஆதித்யஸ்தே தபோதப்யந்த -தேப் யஸ்தேபா நேபியஸ் த்ரயோ வேதா (தேவா பாட பேதம் சிறக்கும்)அஜா எந்த அக்னே ருக் வேதோ -வாயோர் யஜுர் வேத- ஆதித்யாத் சாம வேத இத் யுபக்ரம்ய ஸ்ரூயதே –தஸ்மா துச்சை ருசா க்ரியதே உபாம்ஸு யஜுஷா உச்சைஸ் ஸாம்நா இதி அத்ர ஸம்ஸய –(அநுபூத விரோதம் –பொருந்தாதது இன்னும் உருவாக வில்லை -உப ஸம்ஹாரத்தில் விரோதம் வந்தால் -உபக்ரமத்துக்குத் தக்கபடி மேல் கொண்டு அர்த்த சொல்லலாம்
வேறே சாகைகளுக்கு விரோதம் வாராமல் இருந்தால் அப்படிக் கொள்ளலாம்
இந்த்ரன் மாம் உபாஸ்வ உபக்ரமத்தில்
மேல் பர ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லி அவனை உபாஸிக்கச் சொல்லும் பொழுது
உபக்ரமத்தில் மாம் -என்னை அந்தராத்மாவாகக் கொண்ட நாராயணன் அர்த்தம் கொள்ளுகிறோம் -அன்றோ
இங்கு ருக்கை சொல்லும் போது உச்ச சுவரத்தாலும் யஜுஸ் முனு முனு குரலிலும் சாமத்தை மீண்டும் உச்ச ஸ்வரம்
அபிக்கு வேத சப்தம் இல்லாமல் –
ருக் யஜுர் சாம மந்த்ரம் என்று கொள்ள வேண்டுமா
ருக் வேதத்தை -யஜுர்வ்தாத்தை சாம வேதத்தைச் சொல்ல வேண்டுமே சங்கை
ருக் வேதத்தில் மூன்று மந்திரங்களும் உண்டே -)தத்ர கிம் உச்சைஷ்ட் வாதய ருகாதி தர்மா உத வேத தர்மா இதி -உபக்ரமே வேத ஸப்த ஸ்ரவணாத்-உப ஸம்ஹாரே ச ருகாதி ஸப்த ஸ்ரவணாத்-வேத சப்தஸ்ய ஹி மந்த்ர ப்ராஹ்மண சமுதாயத்வா வச்சிந்நே ஸக்தி (வேதம் ரூக்கின் சமுதாயத்தைச் சொல்லும்)-ந து ஏகை கஸ்மின் மந்த்ர வாக்யே- ப்ராஹ்மண வாக்யே வா -ததா ஸதி மந்த்ராதி ரூப ஏக த்வி -த்ரி வாக்ய -அத்யயநேபி – வேதாநதீத்ய வேதவ் வா வேதம் வாபி யதாக்ரமம் -இதி ஸாஸ்த்ராநுஷ்டாந பிரசங்காத் –பாத வ்யவஸ்தாவத் மந்த்ரத்வா வச்சிந்நே ருக் சப்தஸ்ய மந்த்ரத்வ ஸமாநாதி கரண கீதித்வா வச்சிந்நே ஸாம சப்தஸ்ய ருக் ஸாம பின்ன மந்த்ரத்வாவச்சிந்நே ச யஜுஸ் சப்தஸ்ய ஸக்தி –-(ருக் ஸப்தம் -பாதம் ஒரே மாதிரி எழுத்து -கட்டளை இருக்கும்
ஸாம சப்தம் -யஜுர் ஸப்தம் -இதுக்கு இந்த கட்டளைகள் இருக்காது)தேஷாம் ம்ருக் யத்ரார்த்த வஸேந பாத வ்யவஸ்தா –கீதுஷு ஸாமாக்யா ஸேஷி யஜுஸ் ஸப்த –இத்யாதி ஸூத்ர த்ரயேண ததா வ்யவஸ்தாபநாத் -அத்ர உபக்ரம உப ஸம்ஹார யோர் விரோதாத் த்வயோ ரவிரோதே வர்ணநீயே உப ஸம்ஹாரஸ்ய விதித்வேன் ப்ரபலத்வாத் தத் அநு ரோதேந உபக்ரமஸ்தவேத பதஸ்யாபி ததேகதே ஸ ருகாதி மந்த்ர பரத்வம் இதி பூர்வ பக்ஷே –உபக்ரமஸ் யாநுத் பூத விரோதித்வேந ப்ரபலத்வாத் உபக்ரமகத வேத பதாநுஸாரேந உப சம்ஹாரஸ் ருகாதி பதா நாமேவ ருக் வேதாதவ் லக்ஷணேதி ஸித்தாந்திதம் ஏதத் அதி கரணார்த்தம் ஸங்க்ரஹேண பிரதிபாதயாத்தி
எங்கனே என்னில்
(லக்ஷனையால் ருக் மந்த்ரம் சொல்லாமல் வேதத்தைச் சொல்லுகிறது என்றே கொள்ள வேண்டு இது ஸித்தாந்தம்)

உபக்ரமாதி கரணத்தில் உப ஸம்ஹாரத்தில் காட்டில் உபக்ரமம் ப்ரபலமாகச் சொல்லப்பட்டது இறே -எங்கனே என்னில்
உச்சை ருசா க்ரியதே -உச்சைஸ் ஸாம்நா உபாம்ஸூ யஜுஷா -என்று
உச்சைஷ்ட் வாதியானது ருகாதியான மந்த்ர மாத்ரத்துக்குத் தர்மமோ -தத் தன் மந்த்ர பிராயமான வேத தர்மமோ என்று சம்சயித்து- மந்திரத்துக்கு வாசகமான ருகாதி ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே மந்த்ர தர்மத்வத்தைச் சொல்லி -உபக்ரம வேத ஸப்தம் -வேதயதீதி வேத -என்கிற வ்யுத்பத்தியால் அநுஷ்டே யார்த்த ப்ரகாசகமாய்க் கொண்டு மந்த்ர பரமாகக் கடவது –
வேத ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே வேத தர்மமாகச் சொல்லில் ருகாதி பதங்களுக்கு லாஷணிகத்வம் ப்ரசங்கிக்கும்

ஆகையாலே–உச்சைஷ்ட்வாதி மந்த்ர மாத்ர தர்மம் என்று பூர்வ பக்ஷமாக -மந்த்ர ப்ராஹ்மண ஸமுதாய ரூபமான வேத தர்மத்வமே உச்சைஷ்ட்வாதிகளுக்கு உபக்ரம ஸ்வாரஸ் யத்தாலே யுக்தம் -எங்கனே என்னில்
உபக்ரமமானது அநுத் பூத விரோதியாகையாலே சரம பாவியான உப சம்ஹாரத்தில் காட்டில் பலவான் -யாதொருபடி அக்னியின் அனுஷ்ணத்வ ப்ரதிபாதகமான அநு மானத்தில் காட்டில் அக்னியினுடைய ஒவ்ஷ்ண்ய க்ராஹியான ப்ரத்யக்ஷம் பலவத்து -யாதொரு படி அநுத் பூத விரோதியான ஸ்ருத் யாதிகளில் பூர்வ பூர்வங்கள் உத்தர உத்தரங்களில் காட்டில் பிரபலங்கள்
(ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தாந ஸமாக்யாநாம் சமவாயே பாரதவ்ர் பல்யம் அர்த்த விப்ரகர்ஷாத் -இதி பூர்வ மீமாம்ஸா ஸூத்ரே -3-3-14- அயமர்த்தோ த்ரஷ்டவ்ய)
அப்படியே பலவானான உபக்ரமத்தினுடைய ஸ்வாரஸ்ய அநு குணமாக துர் பலமான உப ஸம்ஹாரத்தினுடைய பாக்தத்வம் யுக்தம் -என்று கொண்டு உச்சைஷ்ட் வாதிகள் வேத தர்மங்கள் என்று ஸித்தாந்திக்கப் பட்டது

ஆகையால் உபக்ரம விரோதம் உண்டாகையாலே
ததோ யதுத் தர தரம் -என்கிற உப ஸம்ஹார வாக்யமானது உபக்ரம கதனான பரம புருஷனை ஒழிய வஸ்த்வந்தரத்தை ப்ரதிபாதிக்க மாட்டாது
கோபலீ வர்த்த ந்யாயத்தாலே ஸாமான்ய ஸப்தத்துக்கு விசேஷ ஸந்நிதியில் அர்த்த ஸங்கோசம் உண்டாகையாலே (
கோ ஆநய பலி ஆநய -பெண் மாடு காளை மாவு இரண்டுக்கும் கோ -பின் சொல்லியதால் பெண் மாட்டையே குறிக்கும் -அர்த்த சங்கோசம் உளது கோ -இல்லாதது பலீ சப்தம்)இவ் விடத்தில்
ததோ யதுத் தர தரம் —தஸ்மாத் ஸர்வ கத தஸ் ஸிவ –ஸ்வேதாஸ் -3-11- என்கிற விசேஷ ஸந்நிதியில்
நான்ய பந்தா வித்யதே அயனாய யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -ஸ்வேதாஸ் -3-9- என்று ஸர்வ விஷயமாகத் தோற்றுகிற ஸாமான்யத்துக்கு- அர்த்த ஸங்கோசம் பிறந்து -பரம புருஷனைக் காட்டில் வ்யதிரிக்தனைச் சொன்னாலோ என்னில்
அது கூடாது –
பதாந்தரத்தினுடைய வையர்த்த பரிஹார அர்த்தமாக பதாந்தரத்துக்கு அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டா
ததோ யதுத் தர தரம் என்கிறதுக்கு வையர்த்ய ப்ரசங்கமும் இல்லை -கீழ் ப்ரதிஜ்ஞாதமான அர்த்தத்தை தத என்று ஸ ஹேதுகமாக நிகமிக்கையாலே
(ஆகையால் -ஹேதுக்களைச் சொல்லி கல்யாண குணங்களையே உபாஸிக்கச் சொல்லிற்று என்று சித்தாந்தம்)

இன்னமும் -ஸர்வ கத ஸிவ என்று சொல்லி
மஹாந் ப்ரபுர்வை புருஷஸ் ஸத்வஸ்யைக்ஷ ப்ரவர்த்தக -ஸ்வே -3-12- என்று மோக்ஷ உப யோகியான ஸத்வத்துக்கு ப்ரவர்த்தகமான மஹா புருஷனை ப்ரத்யபிஜ்ஜை பண்ணி வைக்கிறது
(ஏஷ சாராய சப்தம் முன்பு சொன்ன சிவ -சப்தத்தைக் குறிக்கும்
அது -என்று சொல்லி ஒன்றைக் காட்டி-அவரோ நீர் –அவர் ஸ்ம்ருதி
நீர் ப்ரத்யக்ஷம்
அவரோ நீர் ப்ரத்யபிஜ்ஜை)

இன்னமும் -அதயோ ஹ வை கலு வாஸ்ய ராஜ ஸாம்ஸ்ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ப்ரஹ்மா -அதயோ ஹ வை கலு வாஸ்ய ஸாத்விகாம்ஸஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் விஷ்ணு -அதயோ ஹ வை கலு வாஸ்ய தாமஸ ஆம்ஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ருத்ர -4 வது ப்ரபாடக கண்டம் –என்று மைத்ராயணீய உப நிஷத்திலும்
ஸத்வ ப்ரவர்த்தகம் விஷ்ணும் – ஸர்வ பூத குஹாஸயம் என்று ஸ்ம்ருதியிலும் விஷ்ணுவுக்கு ஸத்வ ப்ரவர்த்தகத்வம் ஓதப்படா நின்றது

இவ் விடத்தில்
ஸர்வாநந ஸிரோ க்ரீவஸ் -ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச -பகவான் தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ -ஸ்வே -3-11 என்கிற சப்தங்கள்
புருஷ ஸூக்த நாராயண அநு வாக்கங்களில் பரம புருஷனுக்கு அசாதாரணமான- ஸஹஸ்ர ஸீர்ஷத்வ –ஸர்வ அந்தராத்மத்வ – ஸர்வ வ்யாபித்வ -ஸாஸ்வத ஸூத்தி மாங்கள்யாதி குண யோகங்களை ப்ரத்யபிஜ்ஜை பண்ணா நின்றது
ஆகையால் இந்த ப்ரகரணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப் படுகிறான் -என்றதாயிற்று-
(அந்தராத்மா =உருவத்துடன் -அந்தர்யாமீ -நியமிப்பவன்-ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -நாராராயணனே)

இன்னமும் -சாந்தோக்ய தஹர வித்யையிலே –
அத யதித மஸ்மிந் ப்ரஹ்ம புரே –8-1-1- இத்யாதியாலே நாம ரூப நிர்வோட் ருத்வ விசேஷிதமான ஆகாஸ ஸப்தத்தாலே பரம புருஷனைச் சொல்லி
தஸ்மிந் யதந்த –8-1-2- என்று
தத் அந்தர் வர்த்தியானதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லப்படுகிறது என்றதுவும்
அஸ்ரோத்ரியனுடைய ஆசா மாத்ர விலஸிதம் –
(ஸாஸ்த்ரம் தெரியாதவன் ஆசைக்காகப் பேசுவது போல்)

அந்த ஸ்ருதி தானே இத்தை ப்ரஸந பூர்வகமாக பரிஹரிக்கையாலே
தஹரோஸ்மிந் நந்தர ஆகாஸஸ் -தஸ்மிந் யத் அந்தஸ் -ததன்வேஷ்டவ்யம் -தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று சொல்லி
கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ் டவ்யம் -யத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-2-என்று சோத்யம் பண்ணி
தத் பரிஜிஹீர் ஷையாலே
யாவான்வாய மாகாஸஸ் தாவாநேஷோந்தர் ஹ்ருதய ஆகாஸ உபே அஸ்மின் த்யாவா ப்ருதிவீ அந்தரேவ ஸமாஹிதே -உபாவக்நிஸ் ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம ஸாவுபவ் -வித்யுந் நக்ஷத்ராணி -யச்சாந்யே ஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் ததஸ்மிந் ஸமாஹிதம்—–நாஸ்ய ஜரயை தஜ் ஜீர்யதி -ந வதே நாஸ்ய-ஹந்யதே ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் -சாந்தோக் -8–1-3-5- என்று கொண்டு ப்ராக்ருதமான தஹர ஆகாஸத்துக்கு அதி மஹத்த்வ ஸர்வ ஆதாரதவாதியைச் சொல்லி
அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா -8-1-5- என்று
தத் அந்தர் வர்த்திகளாய்க் கொண்டு உபாஸ்யங்களாகச் சொல்லப்பட்டவை காமங்கள் (காமங்கள் -கல்யாண குணங்கள்
)என்று பரிக்ரஹித்து
மேல் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விஸோகோ விஜிகத்ஸோ அபிபாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப –8-1-5- என்று
தகர ஆகாஸ நிர் திஷ்ட பரமாத்மா -தத் அந்தர் வர்த்தியாய் இருக்கிறது
காம் யந்த இதி காமா -(
விரும்பப் படுபவையே குணங்கள் காமங்கள்)என்று கல்யாண குணங்களாய்
அபஹத பாப்மத்வாதியான குண அஷ்டகம் என்று சொல்லி
ய இஹாத்மா நமநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ஸ்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –8-1-6–என்று
ஏதத் குண அஷ்டக விஸிஷ்டனான பரமாத்மாவினுடைய உபாஸனமும்- தத் பலமும் சொல்லப்பட்டது

இது வாக்ய காரராலேயும்
தஸ்மிந் யத் அந்தரிதி காம வ்யபதேஸ -என்று சொல்லப்படுகையாலே
தஸ்மிந் யத் அந்த -என்றது
கல்யாண குண ஜாதம் என்றதாயிற்று

தைத்ரீயத்திலே
தஹ்ரம் விபாப்மம் -6-10-23- இத்யாதியாலே
பரம புருஷாந்தர வர்த்தியாய் இருபதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லி
அதினுடைய விசேஷ ஜிஜ்ஞாஸை உண்டாய் உள்ள வளவில்
ய பரஸ் ஸ மஹேஸ்வர -6-10–24- என்று
விசேஷ நிர்ணயம் பண்ணப்படுகிறது என்றதும் இத்தாலே ப்ரத்யுக்தம்

(ஸர்வ வேதாந்த படித தஹர வித்யாயா ஐக்யம் சாரீரக மீமாம்ஸா யாம்
காமாதீ தரத்ர தத்ர சாயதநாதிப்ய -3-3-38- இத்யஸ்மிந் நதி கரணே ஸமர்த்திதம் –
ததபி ப்ரேத்ய –இத்தாலே ப்ரத்யுக்தம் இத்யுக்தம் )

யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தா -வேதாந்ததே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய- ய பரஸ்ச மஹேஸ்வர -6-10-24 -என்றது
வேதத்துக்கு முதலாக யாதொரு ப்ரணவ ரூப ஸ்வரூபமானது சொல்லப்பட்டது -அது வேதாந்தத்திலும் உத் கீத ப்ரகரணங்களிலே சொல்லப்பட்டது
அந்த ஸ்வரத்தினுடைய முதலில் எல்லா வாசகங்களுக்கும் ப்ரக்ருதி பூதமான ஆகாரத்துக்கு வாஸ்யனானவன் யாவன் ஒருவன் அவன் மஹேஸ்வரன்
அகாரோ விஷ்ணு வாசக –
அ இதி ப்ரஹ்ம -ருக் வேத ஆர
அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதம அபிதாநம்
அக்ஷராணாம் அகாரோஸ்மி -கீதா -10-என்று
அகார வாஸ்யனான நாராயணனே மஹேஸ்வர ஸப்த வாஸ்யன் என்றதாயிற்று

(அஸ்யா ஸ்ருதே பாத்மோத்தரே-அ -226-ஸ்ரீமன் நாராயண பரத்வேந உப ப்ரும்ஹிதத்வாத் ததபி ப்ரேத்ய–(அகார வாஸ்யனான –என்றதாயிற்று –இத்யநுக்ருஹீதம்)

ததாஹி பார்வதீம் ப்ரதி ஸர்வஜ்ஜோ ருத்ர –
யோ வேதாதவ் —ஸ மஹேஸ்வர -யோஸா வகார வாஸ்யோவை விஷ்ணுர் நாராயணோ ஹரி -ஸ ஏவ புருஷோ நித்ய பரமாத்மா மஹேஸ்வர -தஸ்யாம்ஸ பூதம் ஐஸ்வர்யம் யஸ்மின் கஸ்மின் ஹி வர்த்ததே -தஸ்மிந் ஈஸ்வர ஸப்தாதி ப்ரோச்யதே முநிபிஸ் ததா–நிருபாதீஸ் வரத்வம் து வாஸூ தேவ ப்ரதிஷ்டிதம் -ஆத்மேஸ்வர இதி ப்ரோக்தோ வேதவாதைஸ் ஸநாதநை –தஸ்மான் மஹேஸ்வரத்வம் து வாஸூ தேவே ப்ரதிஷ்டிதம்-அசவ் த்ரிபாத் விபூதேஸ் து லீலாயா அபி சேஸ்வர விபூதி த்வயம் ஐஸ்வர்யம்- தஸ்யைவ சகலாத்மந ஸ்ரீ பூ நீளா பதிர்யோசவ் ஈஸ்வரஸ் ஸ உதாஹ்ருத–தஸ்மான் மஹேஸ்வரத் வந்து வாஸூதேவே ப்ரதிஷ்டிதம்-இதி )
மஹேஸ்வர ஸப்தமும் அவயவ வ்யுத்பத்தியாலே ராஜாதிகளிலும் ப்ரஸித்தம் என்று முன்பே சொன்னோம்

அதர்வ சிகையிலே
காரணம் து த்யேய –இத்யாதியாலே
பரம புருஷ அந்தர் வர்த்தியாய் -சம்பு ஸிவாதி நாமகனான ருத்ரனுக்கு உபாஸ்யத்வம் தோன்றுகிறது என்றதுவும் யுக்த ரீதியாலே நிரஸ்தம்

இந்த ஆகாஸ ஸப்தம் ஹ்ருதய ஆகாஸ வாஸி யாகையாலே பரம புருஷ பரமாக மாட்டாமையாலும் -தத் அந்தர் வர்த்திக்கு காரணத்வாதியான பகவத் ஸாதாரண குணங்களைக் கொள்ளுகையாலும்-
சம்பு ஸிவாதி ஸப்தங்களுக்கு ருத்ரனை ஒழியவும் லோக வேதங்களிலே ப்ரஸித்தி உண்டாகையாலும்
விஸ்வாக்ஷம் விஸ்வ ஸம்புவம் –ஸாஸ்வதம் சிவம் அச் யுதம் –தைத்-6-11-1-3 என்று
நாராயணன் பக்கலிலும் பிரயோகம் காண்கையாலும் இவ் விடத்தில் நாராயணனே த்யேயன் என்றதாயிற்று

இன்னமும்
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –அதர்வ ஸிகா -என்கிற இடமும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -ஸ்வே -6-18-
ஸ ப்ரஜாபதிரேக புஷ்கர பர்ணே சம பவத் – ந்ருஸிம்ஹதாபபூ 1-1
யன் நாபி பத்மாத் பவன் மஹாத்மா ப்ரஜாபதி
தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ அஜாயதே -மஹா உப -1-2-
யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேக்ஷ ந்ரும்ண
அதவா இதம் தர்ஹி ப்ரஜாபதவ் ஹர ஆஸீத்
த்ர்யக்ஷ ஸூல பாணி புருஷ ஜாயதே -மஹா உப -1-3-
விரூபாஷாய -ப்ரஹ்மண புத்ராய- ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
தத் விஸ்ருஷ்டஸ் -ஸ புருஷ லோகே ப்ரஹமேதி கீர்த்யதே –தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதாமஹ -மனு-1-11-9-
ருத்ர சர்க்கம் ப்ரவஹ்யாமி -ஸ்ரீ விஷ்ணு பு -1-8-2-
ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் ப்ரஸாத க்ரோதஜவ் ஹரே –ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகவ் -மோக்ஷ பர் -389-18
க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம் –ஆவான் தவாங்கே ஸம் பூதவ் தஸ்மாத் கேஸவ நாமவான் -ஹரி வம்சே –131-48
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத் அந்தர் வ்யவஸ்திதா -ப்ராணிந கர்ம ஜெனித ஸம்ஸார வச வர்த்தி ந -வி த 104-23-இத்யாதிகளாலே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு கர்ம நிமித்த ஸ்ருஜ்யத்வ லக்ஷணையான உத்பத்தி ப்ரஸித்தியாலும்

ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந -யஜுர் தாய் ப்ரா -3-6–1-3
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -முண்டக -3

இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-84
ஸம்பவாமி யுகே யுகே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -ஏவம் யோ வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -4-என்று
ஜகத் உபகார அர்த்தமாக பரம புருஷனுக்கு இச்சா ஜென்மம் உண்டாகையாலும்
(பல பிறப்பால் ஒளி வரும் ஜென்மம் இவனுக்கே)

ஸாஷான் நாராயணோ தேவ ஸர்வ பூதேஸ்வரேஸ்வர –ரஷார்த்தம் ஸர்வ லோகாநாம் விஷ்ணுத்வம் உப ஜிக்மிவான் -உத்தர ராமாயணே -என்கையாலும்
உபேந்திர ராம கிருஷ்ணாத் யவதாரங்கள் போலே ப்ரஹ்ம ருத்ர மத்ய வர்த்தியான விஷ்ணுத்வம் உண்டாகையாலும் யுக்தம் –

இவ் விடத்தில் த்யேயத்துக்கு விரோதமான வாக்யத்திலே இது சொன்னது -த்யேயத்வ உப யோகி ஸுலப்ய ப்ரதர்சந அர்த்தமாகையாலே

இன்னமும்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத்ரி -ஆ -1-1- என்கிற இடத்தில்
பரம வ்யோம ஸப்தம் பரம பதத்தைக் காட்டுகிறதன்று என்கிற இடம் அசாரம்
(பரமபதத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்ட நாதனை விட-தனது ஹிருதய வ்யோமம் -அடியார் உள்ளமே அவனுக்கு பரம வ்யோமம் –இங்கேயே இருந்து அனுபவித்து ஆனந்தம் -ஆனால் இது அசாரம் -1000 தூண்கள் உள்ள ஆயிரம் கால் மண்டபத்துக்குள் இத்யாதிகள்-)


ராஜாநாவநபி த்ருஹவ் த்ருவே ஸதஸ் யுத்தமே ஸஹஸ்ரஸ் தூணே ஆஸாதே -என்றும்
சாமான்ய பி யுக்தே தூரே -அந்தே த்ருவே பதே தஸ்தது ஜாக ரூகே -என்றும்
ததஷரே பரமே வ்யோமன் -தைத் -6-1-2-
யோ அஸ்யாத் யக்ஷ பரமே வ்யோமன் -யஜுர் அஷ் -2-8-2-
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் தைத் -6-1-1-
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ் கலம் – தச் சுக்லம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்ம வைத்தோ விது -முண்டக -32-9–என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந –ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை – பாரதம் அர -163-19-என்றும்
ஏகாந்தி நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகி நோ ஹி யே -தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் -யத்வை பஸ்யந்தி ஸூரய –ஸ்ரீ விஷ்ணு பு -1-6-39-என்றும்
அண்ட கோஸாத் ஸாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்தி தோஹம் பரமே வ்யோம்நீ அப்ராக்ருத சரீரவான் -என்றும்
இப்படி பஹு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண சத ப்ரமாணத்தாலே ஸித்த பர லோகத்தைச் சொல்லுகிறதாகையாலே-

இன்னமும் அதர்வ சிரஸ்ஸிலே பிரதம கண்டத்தில் ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தை கோஷித்ததும்
ஸோந்தரா தந்தரம் ப்ராவிஸத் –அதர்வ -1–என்கிற வாக்யத்தாலே
பரமாத்மா அநு ப்ரவேசத்தாலே என்றதாயிற்று -எங்கனே என்னில்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் ப்ரதர்தந வித்யையிலே –
ப்ரதர்த நோ ஹ வை தைவோதா ஸிரிந்த்ரஸ்ய ப்ரியம் தாமோபஜகாம -3-1- என்று கொண்டு
த்வமேவ மே வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே –3-1- என்று
மோக்ஷ உபாயத்தை ப்ரஸ்னம் பண்ணின ப்ரதர்சனனுக்கு
மாமேவ விஜாநீஹி –ப்ராணோஸ்மி- ப்ரஞ்ஞாத்மா- தம் மாம் ஆயுர் அம்ருதமித்
யுபாஸ்வ –3-1-2- என்று
இந்த்ரன் தன் அந்தராத்மாவினுடைய உபாஸநம் மோக்ஷ சாதனம் என்று உபதேஸித்தான்-

இன்னமும் -ஸ்ருத்யந்தரத்திலே
தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாம தேவ ப்ரதி பேதே –அஹம் மநு ரபவம் -ஸூர்யஸ் ச
-அஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர -இத்யாதியாலே
ப்ரஹ்மத்துக்கு ஸர்வ அந்தராத்மத்தையையும்-ஸர்வ ஸப்தங்களுக்கும் தத் பர்யவஸாயி த்வத்தையும் சொல்லி
யஸ் யாத்மா ஸரீரம் –யஸ்ய ப்ருதிவீ சரீரம்–ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும்
ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –என்று தொடங்கி
அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூப வ்யாகரவாணி -என்றும்
ஸோகாமயத பஹுஸ்யாம் –என்று தொடங்கி தத் அநு ப்ரவஸ்ய ஸச் ச த்யச்சா பவத் –ப்ரும்ஹ உப -3-4-10- இத்யாதி
ஸ்ருதி ஸித்தமான ஸமாதியாலே ஸாஷாத் கரித்த வாம தேவன் -அஹம் -ஸப்தத்தாலே தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவைச் சொல்லி
தத் ஸாமா நாதி கரண்யத்தாலே மனுஷ்யாதிகளையும் வ்யபதேஸித்தான் இறே
(ஐக்யம் -அனைவருக்குள்ளும் ப்ரஹ்மமே சொல்வதில் அல் வழக்கு ஒன்றும் இல்லை -ஏக -நாராயணன் -ஒருவன்
அங்கு சென்று அவனுடன் ஒன்றும் என்று சொல்லும் அல்லலை ஒழித்தான் ராமானுஜன்)


ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானும்
ஸர்வ கத்வாத் -அநந்தஸ்ய ஸ ஏவாஹ மவஸ்தி த –மத்தஸ் ஸர்வம் அஹம் சர்வம் மயி ஸர்வம் ஸநாதநே –ஸ்ரீ விஷ்ணு பு -1-19–85-என்றான் இறே

இது எல்லாம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா து உபதேஸோ வாம தேவ வத் -ப்ரஹ்ம ஸூ -1-1-30- என்று ஸூத்ர காரராலே நிர்ணயிக்கப் பட்டது இறே

(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்)

ஸ்ரீ மஹா பாரதத்திலும்
விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவ்ஸ்ய மி தேஜஸ –தஸ்மாத் தநுர் ஜ்யா ஸம் ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர -என்றும்
பின்னும் அந்த மஹா பாரதத்திலே ப்ரஹ்ம ருத்ர ஸம்வாதத்திலே
த்வாந்தராத்மா -மம ச யே ச ந்யே தேஹி ஸம்ஜ்ஞக –ஸர்வேஷாம் ஸாஷி பூதோசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் – மோக்ஷ -352-4 என்றும் சொல்லுகிற ப்ரமாணங்களாலே விஷ்ணுவுக்கு ருத்ராந்தராத்மத்வம் ஸூ ப்ரஸித்தம்

இனி த்விதீய கண்டத்தில்
யோவை ருத்ரஸ் ஸ பகவான் -இத்யாதி வசனமும் ருத்ர வாக்ய அநு வாதமாகையாலும்
தத்ர பூஜ்ய பதார்த்த உக்தி பரிபாஷா ஸமன்வித –சப்தோயம் நோபசாரேண ஹ்யன்யத்ர ஹ்யுப சாரத –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-77 -என்று
பரம புருஷ அசாதாரணமான பகவச் ஸப்தத்தாலும் ருத்ர ஐஸ்வர்ய பரம் அன்று என்று ஸித்தம்-

மூன்று நாலாம் கண்டங்களிலும்
ஸ ஓங்காராய ஓங்காரஸ் ஸ ப்ரணவோ யஸ் ப்ரணவ -என்று
ஓங்காராதி மஹா தேவ அந்தமான் ப்ரணவ நாம நிர்தேச தந் நிர்வசன பரதையாலும்
இவ் வாக்கியத்திலும் பகவத் ஸப்த ஸாமாநாதி கரண்யத்தாலும்
பகவத் பரத்வமே யுக்தம்
(பிரகர்ஷமாக இத்தால் ஸ்துதிக்கப்படுகிறவன் அகார வாஸ்யனான -ஸ்த்வயம் ஸ்துதி இரண்டுமே பிரணவம்)

பஞ்சம கண்டத்தில் ருத்ர உபாஸநம் மோக்ஷ சாதந தயா ஸித்தம் என்றது யுக்த ரீதியாலே
மோக்ஷம் இச்சேத் ஜநார்த்தநாத் – மாத்ஸ்யபு -67-41 என்ற பகவத் உபா ஸநம் என்று அவஸேயம்
(நிச்சயிக்கப் பட வேண்டும் -மார்கண்டேனயனும் கரியே
ஆரோக்யம் பாஸ்கரன் ஞானம் ருத்ரன் –இங்கு ருத்ரன் -நாராயண உபாசனமே)


சாந்தோக்ய மது வித்யையிலே
அசவ் வா ஆதிதியோ தேவ மது –3-1-1- இத்யாதியாலே
வஸ்வாதி தேவதைகளுக்கு போக்யனான ஆதித்யனுடைய உபாஸநம் மோக்ஷ சாதநம் என்று விதித்தது -அந்த ஆதித்யனுக்கு அந்தர் யாமியான பரமாத்ம உபாஸந பரம் என்று
மத்வாதிஷ்வ ஸம்பவாத் –ப்ரஹ்ம ஸூத் -1-3-31 என்கிற அதிகரணத்திலே யாதொருபடி நிர்ணீதம் ஆயிற்று -இங்கும் அப்படியேயாகக் குறையில்லை
(வஸூ ருத்ர ஆதித்யர்களைக் குறித்து உபாஸனம் -அவர்களுக்கும் மது உபாஸனம் விதிக்கிறதே-அந்தராத்மா உபாசனமே)

இன்னமும் இவ் விடத்திலே உபாஸந அங்கமாகச் சொன்ன பஸ்ம ஸ்பர்ச விதியும் ஸர்வ உபாஸந விஷயமன்று –பாஸூபத விரத அங்கம் என்று சொன்னபடி
சவ்த்ராமணீ சேஷமான ஸூ ராக்ரஹத்துக்கு ஸர்வ க்ரது விஷயத்வம் இல்லாதப் போலே-
(ஸூத்ராமா -இந்திரனுக்கு இந்தப்பெயர் -மூன்று கும்ப கள்ளும் மூன்று கும்ப பாலும் -கண்டு வருவது அங்கு அங்கம்)

அணோர் அணீயான் -தைத்து -6- என்கிற அநு வாகத்தில்
யோ வை தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி -ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத ஜாயாமாநம் ஸ நோ தேவ ஸூபயா ஸ்ம்ருத்யோ ஸம்யு நக்து -என்றது
ஈஸ்வராத் ஞானம் இச்சேத் -என்கையாலே
பகவத் உபாஸந உப யோகியான உபகாரகத்வம் சொல்லிற்று

மஹா பாரதத்தில் உமா மஹேஸ்வர ஸம்வாதத்திலே
உபாஸ்யோயம் ஸதா விப்ரா உபாயோஸ்மின் ஹரேஸ் ஸ்ம்ருதவ் -ஹரி வம்ச -133-18- என்கையாலே
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாயமாநம் -தைத் -6-என்றதுவும்
ருஷி யாகையாலே யோக ப்ரபாவத்தாலே ஹிரண்ய கர்ப்பனுடைய ஜந்ம -தர்சித்வம் – ஞாந கோசரம் அல்லது -சஷுர் கோசரம் அன்று -ஹிரண்ய கர்ப்பாத் ப்ராகவ ஸ்திதி இவனுக்கு இல்லை இறே-

(தந்தை பிறப்பைப் பார்த்தவன் –மோக்ஷ பிரதன் நல்ல எண்ணம் -ஞானம் வளர்ப்பவன் -ருத்ரன் -பஸ்யதே-மனக்கண்ணால் தியானத்தால் பார்த்தவன்

ஸ்ரீ ருத்ராதிகளும் ருத்ர ஐஸ்வர்ய பரமன்று – ஜகத் காரணத்வ -மோக்ஷ ப்ரதத்வாதிகளான ஸர்வேஸ்வரனுடைய அசாதாரண தர்மத்தாலும் -அக்னி சயனத்திலே அர்த்தாந்தர பரமாக விநியோகிக்கையாலும் -பூர்வ யுக்தமான அநந்ய பரங்களான அநேக ஸ்ருதி விரோதம் வருகையாலும்
இத்தால் பஞ்ச ப்ரஹ்மாதி மந்த்ரங்களுக்கும் ருத்ர வைபவ பரத்வம் இல்லை

(தண்டிலம் ஹோம குண்டம் -வேறே வேறே வடிவில் வைப்பார்கள்
செங்கற்களைக் கொண்டு கட்டும் பொழுது ருத்ரம் வாசிக்கச் சொல்லி
யாகம் சபலமாக வேறே வித அர்த்தங்கள் சொல்லுவார்கள்)

(பஞ்ச ப்ரஹ்மாக்ய மந்த்ரமாவது
சத்யோ ஜாதம் -இத்யாரப்ய-ஸதா ஸிவோம் -இத்யந்தமான ஸ்ருதிகள்
நாராயண அநுவாக ஸமாக்ய அந்தர் கதத்வத்தாலே நாராயண பரத்வம் இதுக்கு ஸித்தம் என்று விஸ்தரேண தத்வ சேகர அடிப்பணியில் -குறிப்பில்
சொல்லப்பட்டது
ஸ்காந்த புராணத்தில் நிர்வாண கண்டத்தில் ராம கீதையில் இந்த ஸ்ருதியை பரமாத்ம விஷய மாகவும் உப ப்ரும்ஹித் தார்கள்
ப்ரவ்ருத்திஸ் ச ப்ரதிஷ்டா ச வித்யா சாந்திஸ் ததோத்தமா சாந்த்யதீதா பரா ஸூஷ்மா ஸமாநா சோந்மநா ததா –ஸீதா விலஸிதம் ஸர்வம் நாநாகாரேண த்ருஸ்யதே -ததாநுக்ர ஹர சக்த்யாவ- த்வதை க்ய லப்யதே –ஸத்யோஜாத ப்ரவ்ருத்தேஸ் த்வம் ஈஷ்டே நக்ஷத்ர ரஷக (சந்திரன்
)வாமதேவ ப்ரதிஷ்டாய வாஸநாதருமாஸ்ரித -வித்யாநா மப்ய கோராஸ் த்வம் தேஜஸாம் நிதிரக்ஷய –ப்ரணாந்தத் புருஷஸ் சாந்தைஸ் தத் ராஸாம் யாத்ர வாஹக ஈசாநஸ் சாந்த்ய தீதாயா வ்யாபகோ வ்யோம விக்ரஹ -விஷ்ணுஸ் ச ஸமநா யாந்த்வம் உந்மநாயாம் நிரஞ்ஜந )
ஸர்வோவை ருத்ர -தைத் -நா -6-என்றதும்
ப்ராஹ்மணோ வை ஸர்வா தேவதா என்றும்
ஆபோ வா இதம் சர்வம் என்றும்
இத்யாதி போலே ஆகக் கடவது-

ஏக ஏவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -ஸ்வே -3-2- என்றும்
யஜ்ஞ அம்சமான பாக்த்வ -பரத்வ -பரம் -பரத்வ பரமன்று
ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் ஸ இந்த்ரஸ் ஸ அக்ஷர பரமஸ்வராட் -என்கிறவிடம்
யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய ய பத்ம பூ –(புநஸ் த்ரை லோக்யதாத் ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூஸ்ரும -இதிஹாஸ சமுச்சயே -114-8-என்றும்
மஹா தேவஸ் ஸர்வ மேதே மஹாத்மா ஹுத்வ த்மாநம் தேவ தேவோ பபூவ –ராஜதர்ம -20-12-
இத்யாதிகளாலே ஸ்ருஜ்யத்வ -ஸ்ரஷ்ட் ருத்வ -அர்ச்ச கத்வ -அர்ச் யத்வாதி பேதம் தத் அந்தர் வர்த்தித்வ நிபந்தனம் என்றதாயிற்று
ஏவம் விதங்களான ஸ்ருத் யந்தரங்களும் யுக்த ரீதியாலே நிர்வாஹ்யங்கள்
ஆகையாலே ஸகல வேதாந்தங்களும் நாராயணனையே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கிறான் -ப்ரஹ்ம ருத்ரர்களை அன்று என்று ஸித்தம்

ஆகையால் இப்படி ப்ரத்யக்ஷ ஸ்ருதி சதங்களினாலே நாராயணனுக்கே பரத்வம் தோற்றுகையாலே -பவ்ரு ஷேயங்களான புராண இதிஹாஸாதி களுக்கும் தத் அநுரோதேந ப்ராமாண்யம் உண்டாகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளும் உபாதேயங்கள் -ததிதரங்கள் அநு பாதேயங்கள் இறே
கிஞ்ச
நாராயண பரங்களான புராண இதிஹாஸாதிகளுக்கு ஸத்வ மூலத்வாத் ப்ராமாண்யம் உண்டு
தத் அந்யங்களான புராண விசேஷ வசனங்களுக்கு ரஜஸ் தமஸ் ஸங்கீர்ண தயா அப்ராமாண்யம் ஸித்தம் இறே
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டம் ச யாஸ்ச அன்யா தேவதாஸ் ஸ்ம்ருதா -ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –(தஸ்மாத் இதி ச பாடோ த்ருஸ்யதே –மோக்ஷ தர்மம் -350-36 என்று இத்யாதி பிரமாண சதங்கள் எல்லாம் (ராமானுஜர் சாதித்து அருளிய
)வேதார்த்த ஸங்க்ரஹ -(ஆளவந்தார் சாதித்து அருளிய மஹா)புருஷ நிர்ண யாதி ப்ரபந்தங்களிலே ஸூ வ்யக்த மாகக் கண்டு கொள்வது

ஆகையாலே ஸ்ரீ மன் நாராயணனே
ஜகத் காரண பூதன்
ஸர்வ ஸ்மாத் பரண்
முமுஷு உபாஸ்யன்
மோக்ஷ ப்ரதன்
முக்த ப்ராப்யன் -என்று ஸித்தமாய் நின்றது

இதி தத்வ நிரூபணே பரதத்வ நிர்ணயோ நாம சப்தம அதிகாரம் ஸம் பூர்ணம்

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த் ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம்

ஸ்ரீ தத்வ நிரூபண பிரபந்தம் ஸமாப்தம்

—————————————————————-

27 தத்துவங்களின் வ்யஷ்டி ஸ்ருஷ்டி
மூலப்ரக்ருதி -அவ்யக்தம் -ப்ரதாநம் -முக்குணங்கள் வெளிப்படாத நிலை –
மஹான் -முக்குணங்கள் வெளிப்படும் நிலை
அஹங்காரம்-வெளிப்பட்ட முக்குணங்கள் பயன்படும் நிலை
ஸாத்விக அஹங்காரம் -வைகாரிகம்
ராஜஸ அஹங்காரம் -தைஜஸம்
தாமஸ அஹங்காரம் -பூதாதி
ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து வாக் பாணி பாதம் பாயு உபஸ்தம் ஆகிற கர்ம -ப்ரவ்ருத்தி -இந்தியர்களும்
செவி தோல் கண் நாவு நாசி மனம் ஆகிற ஞான இந்திரியங்களும் உண்டாகின்றன
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தம் ஆகிற பஞ்ச தன்மாத்திரங்களும்–அவை மூலமாக ஆகாஸம் வாயு தேயு அப்பு ப்ருத்வீ -அதாவது விண் கால் தீ நீர் நிலம் ஆகிற பஞ்ச பூதங்களும் உண்டாகின்றன
ராஜஸ அஹங்காரம் இவை இரண்டுக்கும் உதவி செய்கிறது

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம்

March 5, 2024

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–ஸ்ரீ
பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.

ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தை பெற்றார்.

மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே
“[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]

என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார். “உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர். அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன் அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டுஅருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான். அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.

பெரியவாச்சான் பிள்ளைக்கு “பரம காருணிகர்” மற்றும் “அபார கருணாம்ருத சாகரர்” என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் “அபயப்ரதராஜர்” என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், “இராமாயணப் பெருக்கர்” என்றும் இவருக்கு ஒரு பெயர்உண்டு.

பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான “நாயனாச்சான் பிள்ளை” என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும் நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும் அறிந்து கொள்ளலாம். அவைகளில் சில கீழே:

  1. “நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
    அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம் உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம் [நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள். ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.
  2. இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று. பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது, உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது (சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது. இவையே பாரதந்த்ரியம்”.
  3. மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?  நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”. பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல. எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
  4. ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”. அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து, அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
  5. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது, பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார். பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ – பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும் அதுவும் நன்மைக்கே’ என்கிறான். ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார். இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே, அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
  6. ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது  எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
  7. ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச்செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே.”
-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய கிரந்தங்கள்

  1. அபய ப்ரதான வியாக்கியானம்
  2. அனுசந்தான ரஹஸ்யம்
  3. ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
  4. உபகார ரத்னம்
  5. கத்ய த்ரய வ்யாக்யானம்
  6. கலியன் அருள்பாடு
  7. சகல ப்ரமான தாத்பரியம்
  8. சரம ரகசியம்
  9. தனி ஸ்வோகி வ்யாக்யானம்
  10. திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
  11. நவரத்னமாலை
  12. நிகமனப் படி
  13. பரந்த படி
  14. பரந்த ரகசிய விவரணம்
  15. பாசுரப்படி இராமாயணம்
  16. மாணிக்கமாலை

இந்த விரிவுரை நூல்களுடன் பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார். 1. ரகஸ்யத்ரய விவரணம் 2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம் 3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம் 4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம் 5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம் 6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம் 7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம் 8. திருமாலை வ்யாக்யாநம் 9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம் 10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம் 11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம் 12. பெரியதிருமொழி வ்யாக்யாநம் 13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம் 14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம் 15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம் 16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம் 19. திருவிருத்தம் வ்யாக்யாநம் 20. திருவாசிரியம் வ்யாக்யாநம் 21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம் 22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம் 23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம் 24. பெரிய திருமடல் வ்யாக்யாநம் 25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம் 26. பரந்த ரஹஸ்ய விவரணம் 27. மாணிக்கமாலை 28. நவரத்னமாலை 29. ஸகல ப்ரமாண தாத்பர்யம் 30. உபகார ரத்னம் 31. கத்யத்ரய வ்யாக்யானம் 32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம் 33. சதுச்லோகி வ்யாக்யானம் 34. சரம ரஹஸ்யம் 35. அநுஸந்தான ரஹஸ்யம் 36. நிகமனப்படி 37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி 38. பாரதாதி தனி ஸ்லோகம் 39. அபய ப்ரதான சாரம் 40. ரகஸ்ய தீபிகை 41. பரந்தபடி 42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம் 43. கலியனருள்பாடு 44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம் பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

————-

ஸ்ரீ யபதியாய்
விஷ்ணு வாஸூதேவ நாராயணாதி ஸப்த வாஸ்யனான
ப்ரஹ்மம் ஒன்றுமே முமுஷுவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று
ஸகல ப்ராமண தாத்பர்யம்

(ப்ரமாணம் -நல்ல அறிவுக்கு வழி –ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் போல்வன-தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி ந அந்நிய பந்தா-பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -திருவில்லாததேவரை தேறேன் மின்

ப்ரஹ்மம் தான் பெரியவனாய் தன்னை ஆஸ்ரயித்த அனைவரையும் பெரியவனாக்கும்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா
||-)

அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும் விசேஷ்யம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
விசேஷணம் ஆகிறது விசேஷ்யத்தோடே பிரிந்து இராத தர்மம் –
விசேஷ்யம் ஆகிறது ஸ்வ விசேக்ஷணத்தோடே பிரித்து இராத தர்மம்

(விசேஷணம் -சார்ந்து இருக்குமது -பூவைச் சார்ந்த மணம் –ரத்னத்தைச் சார்ந்த ஒளி -தர்மம் குணம் -குணியை- தர்மியைச் சார்ந்து இருக்கும்-விசேஷணங்கள் வ்யாவர்த்தி அர்த்தம்-வேறுபடுத்திக் காட்டும்-சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸமஸ்த குண -ஞான ஸக்த்யாதி -விஸிஷ்ட ப்ரஹ்மம் -திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஸர்வ வியாபகம் ஸர்வாந்தர்யாமி)

(ஸரீராத்மா பாவம் நமது அசாதாரண தர்மம்–யஸ்ய சேதனஸ்ய யத்த்ரவ்யம் ஸர்வாத்மனா ஸ்வார்தே நியந்தும் தாரயிதம் ச ஷக்யம் தத் .அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷ சாயினேI நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று-சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்-நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்)

(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –-உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டதுசர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்-நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்)

விசேஷணமும் போக உபகரணம் என்றும்
லீலா உபகரணம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
போகமாகிறது
இஷ்ட பல அநு பாவம்
லீலையாகிறது காலாந்தரத்திலே ஒரு பலம் அன்றிக்கே தாத் காலிக ரஸ ஹேதுவான வியாபாரம்

(கர்த்தா உபகரணங்களைக் கொண்டு கர்மாவைச் செய்கிறான்
குயவன் சக்கரம் கொண்டு மண் குடம் பண்ணுகிறான்
ப்ரஹ்மமே ப்ரஹ்மத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் -போக ஸ்ரீ நிவாஸன் -பேரர் உண்டே திருமலையில்-
இதற்கு லோக த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே)

போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனன் என்றும் த்விவிதம்
சேதனமாகிறது ஞான ஆஸ்ரய வஸ்து
அசேதனம் ஆகிறது ஞான சூந்ய வஸ்து

அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வி விதம்
நித்ய வர்க்கமாகிறது ஒரு நாளும் ஸம்ஸாரத்தை ஸ்பர்ஸியாதே பகவந் நித்ய கைங்கர்ய நிரத ரஸராய் இருந்துள்ள அநந்த வைநதேய விஷ்வக் ஸேநாதி ஸூரி (வர்க்கம்)சங்கம்
-(அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தமே இல்லாதவர்-ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் கூரத்தாழ்வான் -இவர்களையும் கீழே அனுப்பி கார்யம் கொள்ளுவான்)
முக்த வர்க்கமாகிறது (
நிர்ஹேதுகமான)பகவத் கிருபையால் அநாதியான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு நித்ய வர்க்கத்தோடே கலந்து அது முதலாக யாவதாத்மபாவி (நித்தியமாக)பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –

அசேதனம் ஆகிறது ஸூத்த ஸத்வாத்மகமாய் தன்னோடே சம்பந்தித்த சேதனர்க்கு ஸ்வரூப ப்ரகாசகமாய் –நித்யமாய்- ஸ்வயம் ப்ரகாசகமாய் -கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே திவ்ய விக்ரஹங்களாய் -திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஜன பதங்களாய் அபரிச்சின்னமாய் நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும்

(உபய விபூதி நாயகன் உத்தம புருஷன் திரு வயிற்றில் மூன்று மடிப்புக்கள்- த்ரிவித சேதன அசேதன –கீழ் போக -நித்ய விபூதி பார்த்தோம் -மேல் லீலா விபூதி பார்க்கப் போகிறோம்)

இனி லீலா உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதிலே சேதன ஜாதியும் -சம்சாரிகளை யென்றும் முமுஷுக்கள் என்றும் த்வி விதம்
ஸம்ஸாரிகள் ஆகிறார் அநாதியான அசித் ஸம் ஸம்பந்தத்தாலே திரோஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய்
அது அடியாக அந்யதா ஞான விபரீத ஞானங்களை யுடையராய் -(
அந்யதா ஞான-குணமே மாறாடுவது -வெளுத்த சங்கத்தை மஞ்சளாகப் பார்ப்பது -சேஷத்வம் அடிமைத்தனம்-குணம் பார்க்காமல் ஸ்வ தந்திரம் என்று நினைக்க-விபரீத ஞானங்களை –பொருளையே மாறாடிப் பார்ப்பது யுடையராய் -தேஹமே ஆத்மா என்று பிரமித்து)
தத் கார்யங்களான ராக த்வேஷாதி (விருப்பு வெறுப்பு முதலாக)ஜன்யங்களான புண்ய பாப ரூப நாநா வித கர்மங்களை யுடையராய் அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர் வித நாநா சரீரங்களிலே நிரந்தரமாக ப்ரவேசியா நின்று கொண்டு அந்த சரீரங்களிலும் சரீர அனுபந்திகளிலும் அஹங்கார மமகாரங்களாலே வருகிற துக்கங்களில் ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு விஷய ப்ரவணராய் தாப த்ரய தஹ்மானராய் நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள்

(காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?)

முமுஷுக்களும் (ஸம்ஸாரம் விடுபட ஆசை கொண்டவர்)ஆத்ம பிராப்தி காமர் என்றும் பகவத் பிராப்தி காமர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்ஆத்ம பிராப்தி காமர் ஆகிறார் (கேவலர்)-ராஜ பதம் அளவாக யுடைத்தான ஐஹிக ஐஸ்வர்யமும் பிரம பதம் பர்யந்தம் உள்ள ஆமுஷ்மிக ஐஸ்வர்யமும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விவேகித்து -ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் இருக்கையாலே ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுமவர்கள் -இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள்

பகவத் பிராப்தி காமர் ஆகிறார் -ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய் -ஞான ஆனந்த மயனாய் -அபரிச்சின்னமான குணகனுமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷமாகையாலே -அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு ஸ்வ அனுபவம் அணுவாய் -ஸ்வ தந்திரமுமாகையாலே -ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து –
நித்தியமாய் -நிர்மலமாய் -அபரிச்சின்ன ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய் -ஸர்வ சேஷியாய் -ஸர்வ சரண்யனாய் -ஸர்வ ப்ராப்யனான -ஸ்ரீ யபதியுடைய திருடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பரம புருஷார்த்தமாக நிச்சயித்து -ஒரு தேச விசேஷத்திலும் தேஹ விசேஷத்திலும் அன்றியே சித்திப்பதாகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான தேச சம்பந்தமும் தேஹ சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள்

இவர்களும் உபாஸக நிஷ்டர் என்றும் ந்யாஸ நிஷ்டர் என்றும் த்வி விதம்
உபாஸக நிஷ்டர் ஆகிறார் -பல சங்க பரித்யாக பூர்வகமாக -யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்ட்டிக்க விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸுக்கள் நன்றாக நசித்து -யதா ஞான ஹேதுவான ஸத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஞானம் யுண்டாய்
அது ஸாஷாத் கார ஸமானமாய் -அந வரத பாவனை யுண்டாய் -பக்தி ரூபா பன்னமாய்
ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய்-
ஸாஸ்திரங்களிலே மோக்ஷ சாதன தயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள்

(வேதந – ஸ்மரண – த்யான -உபாஸன–அன்பு கலந்த பக்தி -அறிந்து -உபாயம் -சமீபத்தில் அழைத்துச் செல்லும்-நம் யத்னம் -சாதன உபாயம் -ஸாத்ய உபாய நிஷ்டை -ஞான தர்சன பிராப்தி தசைகள் -பர பக்தி பர ஞான பரம பக்தி –

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-


ஸ்வா தந்திரம் லேசமும் இல்லாமல் பாரதந்த்ரம் கொண்டு – -அவனைப் பற்றுவதே சரணாகதி பிரபத்தி ந்யாஸம் -ப்ரஹ்மமே ந்யாஸம் -ஸித்த உபாயம்
சரணம் இதி ஆகதி -நீயே உபாயம் என்று வந்து விடுவதால் -நம்புவதே சரணாகதி -ஸித்த உபாய நிஷ்டை -அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் -)

ந்யாஸ நிஷ்டராகிறார் -உபாஸனமும் அநேக ஜன்ம ஸாத்யமாகையாலே துஷ் கரம் என்றும் -தேச கால அதிகாரி ப்ரப்ருத் யனேக நியம அபேக்ஷமாகையாலே ஸ அபாயம் என்றும்
ப்ராரப்த கர்மாவஸாந பலமாகையாலே ஸ விளம்பம் என்றும்
அசேதனமாகையாலே அஸமர்த்தம் என்றும்
ஸ்வ யத்ன ஸாத்யமாகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
பின்னையும் சொல்லப்படுகிற உபாய ஆபாசங்கள் எல்லாவற்றையும் ஸ அங்கமாகவும் ஸ வாஸநமாகவும் விட்டு

அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
நிவ்ருத்தி சாத்யமாகையாலும்
ஸக்ருத் அநுஷ்டேயமாகையாலும்
ஸூ கரமாயும்
ஒரு நியமமும் வேண்டி இராமையாலே நிர் அபாயமாயும்
தேஹ அவஸாந பலிதமாகையாலே சீக்ர பல ப்ரதமாயும்
பரம சேதனமாகையாலே பல ப்ரதாநத்தில் ஸ்வயம் ஸமர்த்தமாயும்
நிருபாதிகமாகையாலே ஸ்வரூப அநு ரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலக்ஷண உபாயமாக நிச்சயித்து
அதிலே ந்யஸ்த பரராய் இருக்குமவர்கள்

இந்த ந்யாஸ நிஷ்டரும் ஸ்வயம் ந்யஸ்த பரர் என்றும் பர ந்யஸ்த பிறர் என்றும் த்வி விதம்
ஸ்வயம் ந்யஸ்த பரராகிறார் -ஸதாச்சார்ய கிருபையாலே லப்த ஞானராய் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து ஹித பரனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தைத் தாங்களே ஆஸ்ரயிக்க அஞ்சி -ஸர்வேஸ்வரனுக்குப் பத்நியாய் -வல்லபையாய் -ஸர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநியாய் -மாதாவாய் -அவனோடே நித்ய ஸம் யுக்தையான பிராட்டி பிரஸாதத்தாலே பயம் கெட்டு
வாத்சல்யாதி ஸமஸ்த கல்யாண குண கண விஸிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளைத் தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள்

பர ந்யஸ்த பரராகிறார் -தங்களுக்காக ஆசார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட ஏதாத்ருஸ ந்யாஸத்தை யுடையவர்கள்
இவரும் ஸ நிபந்தன பர ந்யஸ்த பரர் என்றும் நிர் நிபந்தன பர
ந்யஸ்த பரர் என்றும் த்வி விதமாய் இருப்பார்கள்

ஸ நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தம்முடைய அநு வர்த்தநாதிகளாலே மந்த்ர பிரதனனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

நிர் நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தனக்கு ப்ராப்தமான புருஷார்த்தத்தினுடைய யுக்த வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அது இவர்களுக்கு இல்லாத மாத்திரம் அன்றிக்கே இவர்கள் படுகிற துர்க் கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

இவர்களில்
ஸம்ஸாரிகள் ஈஸ்வரனுடைய சிக்ஷைக்கு விஷயமானவர்கள்
கேவலர் -உபேக்ஷைக்கு விஷயமானவர்கள்
உபாஸகர் அனுக்ரஹத்துக்கு விஷயமானவர்கள்
ப்ரபன்னர் கிருபைக்கு விஷயமானவர்கள்

(அருள் தயா அனுக்ரஹம் கிருபை அனுகம்பா -பர்யாய பதங்கள்
அனு க்ரஹம் பின் தொடர்வது அனு பத பிரயோகம் -யாத்திரை அனு யாத்ரை -யாகம் அநுயாகம்
அனு க்ராஹதம் -பண்ணினதால் பலன் -பக்தி செய்வதால் அருள் -சோபாதிகம் -உபாதி இருக்க வேண்டுமே
கிருபா -நிருபாதிகம் -அளவுக்கு உட்படாமல் -)

ப்ரபன்னர் எல்லாருக்கும் தேஹ அவசானத்திலே பலமே ஒக்கும்
உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரிகள்
இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்வி விதம்
ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் (
கூண்டுக்குள்)இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோற்றித் தந் நிவ்ருத்திக்குத் த்வரிக்குமவர்கள்

(இனி இனி இருப்பதின் கால் -திரு விருத்தத்தில் 3 தடவையும் திருவாய் மொழியில் 17 தடவையும் கூப்பிடடாலும் இங்கேயே வைத்தான்
இனி என்றதும் உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று ஆக்காமல்
பிரபந்தம் தலைக் கட்ட -நச்சுப் பொய்கை ஆகாதற்காக -ஆர்த்தி பெருக்க -வீடு திருத்த -இங்கே வைத்தான்-த்யாஜ்ய தேகத்தில் பிராவண்யம் மிக்கு இத்துடன் கூட்டிச் செல்லப் பார்த்தான் -அவனுக்கும் மங்க ஒட்டு உன் மா மாயை உபதேசித்தார் அன்றோ)


த்ருப்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான தேஹாந்தர ஸம்பந்தமும் ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய் தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள்

இவரும் ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் என்றும் ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்
ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் –சரீர அவசானத்திலே போகம் எத்தனையேனும் விலக்ஷணமானாலும் ருசி வாசனைகளாலே இத்தை விட்டு விட த்வரியாதவர்கள்

ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் -தனக்கும் அவனுக்கும் உண்டான நிருபாதிக சரீர சரீரி ஸம்பந்தத்தை அனுசந்தித்து அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக போக தாஸ்யத்திலே மண்டி இருக்குமவர்கள்

ஆர்த்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோன்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள்
இவரும் பிரதி கூல போக ர்த்தர் என்றும் அநு கூல போக ர்த்தர் என்றும் த்வி விதம்

பிரதி கூல போக ர்த்தர் ஆகிறார் -ப்ரத்யக்ஷ ஸித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் ஸஹமாய்த் தோன்றி அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும் தேசிகருடைய ஸஹ வாஸத்தையும் பொறாதே ஸாஸ்த்ர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்களுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய் -அந்த துக்க கந்தமும் இன்றிக்கே நிரதிசயமான பகவத் பிராப்தி ரூப ஸூகத்திற்கு த்வரைப் படுமவர்கள்

அநு கூல போக ர்த்தர் ஆகிறார் -நிரந்தரமான த்வய அநு சந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தினுடைய வைலக்ஷண்யம் விசதமாக பிரகாஸிக்க அது இல்லாத க்ஷண காலமும் கல்ப ஸஹஸ்ரமாய்த் தோன்றும்படி (ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ)ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கின்றவர்கள் –

இந்த ப்ரபந்ந விஷயமான உபாய க்ருத்யம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்தியும் என்று த்வி விதமாய் இருக்கும்(அநிஷ்டமும் இஷ்டமும் அதிகாரிகளுக்குத் தக்க வேறு வேறாகவே இருக்கும்)
அநிஷ்டம் தான் பூர்வாகம் என்றும் உத்தராகம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அகமாகிறது புண்ய பாப ரூபமான கர்மம் –
ஸ்வர்க்காதி சாதனமாக புண்யமும் பாபம் போலே பேற்றுக்கு பிரதிபந்தகமாகையாலே அகம் எனப்பட்டது

இதிலே பூர்வாகம் ஆகிறது -ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –
இதுவும் ஸஞ்சிதம் என்றும் ப்ராரப்தம் என்றும் த்வி விதமாய் இருக்கும்

ஸஞ்சிதமாகிறது -பல ப்ரதானத்துக்கு உத் யோகியாமல் இருக்கிறது
ப்ராரப்தமாகிறது -பல பிரதானத்துக்கு உத் யோகிக்கிறது

ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்தராரப்தம் என்றும் த்வி விதம்

உத்தராகமாகிறது –ஆஸ்ரயணக்கு அநந்தரம் தேஹ அவசான பர்யந்தம் வாஸநா பலத்தாலே செய்யப்பட கர்மம்
இதுவும் ஞான க்ருதம் என்றும் அஞ்ஞான க்ருதம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
இதுவும் ஸ அநுதாபம் என்றும் நிரநுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்வி விதமாய் இருக்கும்

இப்படிப்பட்ட பேதங்களை யுடைத்தான அநிஷ்டத்தை இவன் இடத்திலே ப்ரீதி அதிசயத்தாலே உபாய பூதனான ஈஸ்வரன் போக்கும்படி எவ்வாறு என்னில்

(ஸஞ்சித பிராரப்த ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -நானும் வேண்டா நீயும் வேண்டா -தன்னடையே போகும்)

(போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-மாரீசனை ஒட்டி ஸூ பாஹுவை முடித்தால் போல்-ஏழு வர்க்க பாபங்கள் -ஸஞ்சித கர்மா மூட்டை பெரியது –
பக்தி உபாசகனுக்கும் ப்ரபன்னனுக்கும் முடிக்கும் முறை -அநுகூல பிரதிகூல இடம்
சரீராராப்த ஆரப்த கர்மம் -தீயில் இட்ட பஞ்சு போல் அழித்தே விடுகிறான் -பக்தனுக்கு இது இல்லை
மூன்றாவது வர்த்தமான சரீர ஆரப்த கர்மாவை ப்ரபன்னனுக்கு தேக அவசா னத்திலே அதற்குள்ள அனுபவம் கொடுத்து தீர்க்க வேண்டும்
ஆகவே ஸரணாகதி செய்த உடன் ஸுகமீ என்று சொல்ல முடியாது -மோக்ஷம் நிச்சயம்-அஜ் ஞான க்ருத பாபம் அப்படியே காணாக் கண் இட்டு இருப்பான்-

சிந்தையந்திக்கு அப்போதே -வேணுகானம் கேட்டு ஆனந்தம் புண்யங்களைப் போக்கி -கண்ணனைப் பார்க்கப் போகாமல் துக்கப்பட்டு பாபங்களை போக்கி அப்போதே பேறு -அவள் ஆர்த்த ப்ரபந்தனை
நம்மாழ்வார் தீர்க்க சிந்தையந்தி)


வர்த்தமான சரீரார்ப்பத்தை ஒழித்து பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை இவனை ஸ்நேஹித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
பாப அம்சத்தை த்வேஷித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
ஸரீராரப்தத்தை ஸரீரத்தோடே போக்கும்
இவனுக்கு எப்போதும் அநு கூல போகார்த்தி யுண்டாம்
அந்த ஆர்த்தி ரூபமான மஹா துக்கத்தினாலும் தத் ஹேதுவான அநுபவ ஆஹ்லாத ரூபமான மஹா ஸூகத்தினாலும் சரீர அநுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
உத்தராகத்தில் அஞ்ஞான க்ருதமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றிக்கே போம்
ஸ அநுதாபமான ஞான க்ருதமும் அவனுடைய க்ஷமைக்கு விஷயமாம்
அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அநு தாபத்தாலே போம்
பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அநு தாபத்தாலே போம் –
நிரநுதாப ஞான க்ருதமும் சரீர அநு பாவ்யம் போலே அனுபவித்துப் போக்குவன்

ஸாமான்ய நிஷித்த அநுஷ்டானமும் பகவந் நிக்ரஹ ஹேதுவாகையாலும் சிஷ்ட ஐந கர்ஹிதமாகையாலும் க்ரூரம்
பகவத் விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தரம்
பாகவத விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தமம்
ஆகையாலே ப்ரபந்நன் பகவத் பாகவத் ப்ரஸாதத்துக்கு ஒழிய க்ஷமைக்கு விஷயமாகை அநுரூபம் அல்லாமையாலே ஸாவதாநத்தோடே நடக்க வேணும்
ஆகையாலே ஞான க்ருதமான் ஸ அநு காமமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அநுதாப சூந்யமும் தூரதோ நிரஸ்தம்
ஆனாலும் ஈத்ருஸ கடிந ப்ரக்ருதிகள் உண்டாகுவாரோ என்று ஸாஸ்த்ரம் சொல்லிற்று ஆயிற்று

இப்படி ஸர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் யாகையாலே தத் கார்யமான தேஹ ஸம்பந்தம் இல்லை
தேஹ ஸம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை
இம் மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாஸநா ருசிகள் இல்லை
ஆகையாலே ப்ரபன்னனுக்கு சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர க்ரியைகளும் உபாயம் அன்று
ஆனாலும் உத்தர க்ரியைகளும் ஆந்ரு ஸம்ஸ்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை

இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்வி விதம்
ஐஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்வி விதம்
கைங்கர்யமாவது -இஷ்டம் செய்கை (
கிம் கரோ -என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்து கேட்டு செய்ய வேண்டுமே)-அது தான்
ஸாமான்ய விஹித அநுஷ்டானமும் (
வர்ணாஸ்ரம தர்ம அநுஷ்டானம்)பகவத் ஸந்தோஷமாகையாலே கைங்கர்யம் என்னக் கடவது இறே
பகவானுக்கு இஷ்டம் ஸாஸ்த்ர முகத்தாலே அறிய வேணும்
பாகவதருக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும் –

ஆக கைங்கர்யமும் மாநஸம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
மாநஸ மாகிறது -அந்நிய பரமாகாமல் தத் பரமாக்குகை (
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நாம் கொள் சிறப்பே)-அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும் -செய்யக் கடவ உபகாரத்தை அபேக்ஷிக்கையும் என்று த்வி விதம்
இதில் ஈஸ்வரன் செய்த உபகாரமாகிறது -ஸதாசார்யனை ஆஸ்ரயிப்பிக்கையும் -தத் அர்த்தமான அதிகாரி ஸம்பத்தும்
ஆமுஷ்மிகமான கைங்கர்யமும் இதுவே
அந்தக் கைங்கர்யமும் வாசிகம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
வாஸிகமாகிறது -ஸ்துதி -திருநாம ஸங்கீர்த்த நாதிகள்(
வாசிகமான அங்கு கைங்கர்யம் செய்தான் மொய் மாம் பொழில் -பதிகம்)
காயிகமாகிறது -ஸம்மார்ஜமான மாலா
பந்தநாதிகள்

பாகவத கைங்கர்யமும் ஆசார்ய கைங்கர்யம் என்றும் தத் துல்யரான பாகவத கைங்கர்யமும் என்றும் த்வி விதம்

ஆசார்யரும் மந்த்ர ப்ரதர் என்றும் -மந்த்ர ரத்ன பிரதாரி யென்றும் த்வி விதம்
இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்த ஸமமாய் இருக்கும்
பகவானுடைய திருவடிகள் இரண்டிலும் வைஷம்யம் உண்டாகில் இறே ஆசார்ய விஷயத்தில் வைஷம்யம் உண்டாவது

(மந்த்ரத்திலும் மந்த்ர ப்ரதிபாத்ய வஸ்துவிலும் மந்த்ர ப்ரதான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கணக்கா உண்டாக வேணுமே -பெரிய திருமொழி முதல் நான்கு பதிகமும் இத்தைக் காணலாம்
மந்த்ரம் கொடுத்த திருநறையூர் நம்பி மந்த்ரார்த்தம் கொடுத்தக திருக்கண்ணபுரத்துக்கும் 100 பாசுரங்கள் மங்களா சாசனம்
ஸ்ரீ ரெங்கம் மட்டுமே 50 பாசுரம் -வேறே யாருக்கும் இல்லையே)


இப்படிப்பட்ட ஆசார்யர்கள் செய்த உபகாரமாகிறது -அநாதி காலம் விமுகனான சேதனனை பகவத் விஷயத்தில் அபி முகனாகச் செய்கையும் -மந்த்ரார்த்த முகத்தாலே அஞ்ஞானத்தை நிரஸித்து ஞானத்தை யுண்டாக்கி தத் அநு ரூபமான வ்ருத்தியிலே நியமித்து ததீய அந்தர் பவாத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகையும்
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-

உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி ————-62-

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-

இனி பாகவதர் செய்த உபகாரமாவது -குண லேசமும் இன்றிக்கே தோஷங்களினாலே பூர்ணனான தன்னை ஆசார்ய ஸம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அநு ரூபமான போகத்திலே கூட்டிக் கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயமாக்குகை

(-அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆஸ்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்.-திருவேங்கடமுடையான் அனந்தாழ்வானுக்கு சமர்ப்பித்த தனியன்)

இனி லீலோ உபகரணமான அசேதனமும் ப்ரக்ருதி என்றும் காலம் என்றும் த்வி விதம்
ப்ரக்ருதி யாகிறது -ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய் நித்யமாய்- தன்னோடே சம்பந்தித்த சேதனருக்கு தத் தத் கர்ம அநு குணமான தேஹ இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -ஸப்தாதி விஷய ப்ராவண்யத்தையும் பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்

காலமாகிறது -நித்தியமாய் -நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹு விகாரங்களை யுடைத்தாய் சேதனருடைய கர்மத்துக்கும் தத் அநு குண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்

இனி லீலா பரிகரமும் போக பரிகாரமுமான சேதன அசேதன வர்க்கம் -ஸ்வ விஸேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு வ்யாப்யமாய் –தார்யமாய் -நியாம்யமாய் -சரீரமாய்- சேக்ஷமாய் இருக்கும்

இனி விசேஷ்யமும் அகில ஹேய ப்ரத்ய நீகமாய்- கல்யாணை கதாநமாய் -ஸதைக ரஸமாய் -விபுவாய்- நித்யமாய் -ஞான ஆனந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய் -ஞான ஸக்த்யாதி அநந்த குண கண பூஷிதமாய் -ஸ்வ விசேஷணமான ஸகல சேதன அசேதனங்களுக்கும் வ்யாபகமாய் -தாரகமாய் -நியாமகமாய் -ஸரீரியாய் -சேஷியாய் -விலக்ஷண விக்ரஹ யுக்தமாய்- லஷ்மீ பூமி நீளா ஸமேதமாய் -நித்ய முக்தர் அநு பாவ்யமாய் -ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய் -ஸர்வ லோக சரண்யமாய் -ஸகல பல ப்ரதமாய் -ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும்- ஸநக ஸநந்தாதி யோகிகளுக்கும் -அவாங் மநஸகோசரமாய் -ஸ்ருத் ஏக ஸமதி கம்யமாய் -ஸமாஸ்ரித ஏக ஸூலபமாய் -தத் உஜ்ஜீவந ஏக ப்ரயோஜனமாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார ரூபங்களை யுடைத்தாய் இருக்கும்

இப்படிப்பட்ட ஸமஸ்த விசேஷண விஸிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன்
இந்த அதிகாரியே ஞானாதிகரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நித்ய முக்தர்களுக்கும் ஆசார்யனுக்கும் பிராட்டிக்கும் ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த பிரிய தமன்

ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம் முற்றிற்று

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –நான்காம் பத்து –

December 8, 2023

1. பத்தம் காலஸ்ய பாஸேந ஸர்வபூதாபஹாரிணா
நநஸ்யந்தம் உபேக்ஷேயம் ப்ரதீப்தம் ஸரணம் யதா:-ஸ்ரீராமா. யுத். 16 : 21.

பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ இவருடைய பரோபதேசம்? 1‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார்

2. ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வத: த்ருவ:(ஸ்ரீ ராமாயணம் யுத்தகாண்டம். இது, மண்டோதரி வார்த்தை.)

முதற்பாட்டில், 1‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்; ஆன பின்பு, 2‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே, அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

3. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்.-தைத்திரீய நாராயண. உப. 11 : 8.

ஒரு  நாயகமாய் – தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் 4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி. நிலை

செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே!
  சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
  அங்கவை விடுக லானேல் ஆடமர்க் கெழுக’ என்னா
  வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’ ( என்பது பாகவதம். -10-88)

4. யாவத் ஸூர்ய: உதேதிஸ்ம யாவச்ச ப்ரதிதிஷ்டதி
  ஸர்வம் தத்யௌவ நாஸ்வஸ்ய மாந்தாது: க்ஷேத்ரம்   உச்யதே.(ஸ்ரீ விஷ்ணு புரா. 4. 2 – 65.)

உலகு – கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; 2‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ, அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும் யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே, 3முந்திரிகை நிலம் உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது. உடன் ஆண்டவர் – இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல். அன்றிக்கே, 4‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த கார்த்தவீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.

5. அகாயசிந்தா ஸமகாலமேவ
  ப்ராதுர்ப்பவம்ஸ்சாபதர: புரஸ்தாத்
  அந்த: ஸரீரேஷூ அபிய: ப்ரஜாநாம்
  பிரத்யாதி தேஸாவிநயம் விநேதா.

‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில், 5‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்யமுடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்; அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே, அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்: கருநாய் கவர்ந்த காலர்

7. தத்ர நாராயண: ஸ்ரீமாந்மயா பிக்ஷாம் ப்ரயாசித:
  தத: தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்.( மச்ச புராணம்.)

அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும். இதனால், 2ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக்கதி இல்லை என்பது போதரும்

8. யாவத் நசரணௌப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜ நாந்விதௌ
  ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.(ஸ்ரீராமா. அயோத். 98 : 8. )

பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன, ‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்? -ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம்.

9. ஜீவிதம் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூப யௌவநே
  ஸம்பதஸ்ச விநாஸாந்தா: ஜாநந்க: த்ருதிம் ஆப் நுயாத்.

காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; 7‘வாழ்வு சாதலை முடிவாக உடையது; உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன; செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த எவன் தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின், நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார்

10. யந்முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூதேவோ ந சிந்த்யதே
   ஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸாச விக்ரியா.

ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கணநேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு? அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது

11. அஸந்நேவஸபவதி அஸத்ப்ரஹ்மேதி வேதசேத்
  அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம்ததோ விதுரிதி.(தைத்திரீய. ஆந. 6.)

தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் 6‘பரம் பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன், இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி போந்தவர் அவனைத் தொழுது உய்வு பெற்றாற் போலே காணும், இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி. வீற்றிருப்பாரே

12. ஆயாஸ: ஸ்மரணேக: அஸ்ய ஸ்மிருத:யச்சதி ஸோபநம்
   பாபக்ஷய: ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 17 : 78.)

அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்; இரவு பகல் எந்நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.

13. ஆபதர்த்தம் தநம் ரக்ஷேத் தாராந் ரக்ஷேத் தநைரபி
   ஆத்மாநம் ஸர்வதாரக்ஷேத் தாரைரபி தநைரபி.

ஆபத்தின்பொருட்டுச் செல்வத்தைச் செலவு செய்யாமல் காக்கக் கடவன், அப்பொருள்களைச் செலவு செய்தாகிலும் மனைவிமார்களைக் காக்கக் கடவன், அம்மனைவிமார்களைக் கொண்டும் அப்பொருள்களைக் கொண்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கடவன், என்றார் பிறரும்.

14. மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத:
   ஸிரஸா யாசத: தஸ்ய வசநம் நக்ருதம் மயா. (ஸ்ரீராமா. யு.  24 : 19).

தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே, ‘பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ

தொழுகின்றவன் ஆதரத்தோடு தொழ, தொழப்படுகின்றவன் குணஹீநன் ஆகையாலே அநாதரித்திருக்கின்றான் என்பதனை உதாரண முகத்தாலே விளக்குகிறார்.

15. ஸ்வபுருஷம் அபிவீக்ஷ்ய பாஸஹஸ்தம்
   வததியம: கில தஸ்ய கர்ணமூலே
   பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
   பிரபு: அஹம் அந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 71 : 14. )

‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல். என்றது, 3‘யமன், கையில் பாசத்தைத் தரித்த தன்னுடைய கிங்கரனைப் பார்த்து, ‘பகவானிடத்தில் பத்தியுள்ளவர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்;

16. ஸஹஸ்ர யுகபர்யந்தம் அஹ: யத் ப்ரஹ்மணோவிது:
   ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தே அஹோராத்ர விதோ ஜநா :(ஸ்ரீ கீதை.  8 : 17. )

பிரமாவினுடைய ஒரு பகலை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் ஓர் இரவை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் அறிகிறார்கள்,’ என்கிறபடியே, 4ஆயிரம் சதுர்யுகம் கூடியது ஒரு பகலாய், இப்படி இராத்திரியாய், இங்ஙனம் நூறு ஆண்டு இருந்து துவிபரார்த்தகாலம் உயிர் வாழ்ந்து முடிந்து போகும் பிரமன் முதலானோர்’ என்கிறார் மேல்

 15 நிமிஷம் ஒரு காஷ்டை; 30 காஷ்டை ஒரு கலை; 30 கலை ஒரு  முகூர்த்தம்; 30 முகூர்த்தம் ஒரு நாள்; 15 நாள் ஒரு பக்ஷம்; 2 பக்ஷம் ஒரு
மாதம்; 2 மாதம் ஒரு ருது; 2 ருது ஓர் அயனம்; 2 அயனம் ஒரு வருஷம்;  இப்படி மனித வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம்; தேவ வருஷம்
12000 கொண்டது ஒரு சதுர் யுகம்; 71 சதுர் யுகம் ஒரு மந்வந்தரம்; 14  மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம்; இது பிரமனுக்கு ஒரு பகல்; இரண்டாயிரம்
சதுர்யுகம் பிரமனுக்கு ஒரு நாள். இந்த நாள்களால் மாதங்களையும், மாதங்களால் வருஷங்களையும் பெருக்கி, அதனால் வருகின்ற வருஷம் நூறு
ஆனால், பிரமனுடைய ஆயுள் முடிவாகும் என்பர்.

17. கங்காயா: ஸிகதா தாரா யதா வர்ஷதி வாஸவே
   ஸக்யா கணயிதும் லோகே ந வ்யதீதா: பிதாமஹா(வைஷ்ணவ தர்ம சாஸ்திரம்.)

உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண்மணலிற்பலர்’ என்கிறார்.

18. ஸபார்யாவசநம் ஸ்ருத்வா ஸாடீம் ஆச்சாத்ய துஸ்சதாம்
   ஸப்ராதிஷ்டத பந்தாநம் யத்ர ராம நிவேஸநம்.(ஸ்ரீராமா. அயோத். 32 : 32)

துணி முன்பு நால – 1‘அந்தத் திரிஜடன் என்னும் பிராஹ்மணன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு உடுத்துவதற்குப் போராத துணியை உடுத்திக்கொண்டு புறப்பட்டான்,’ என்கிறபடியே, பின்பு கொண்டு இணைக்க எட்டம் போராமையாலே முன்னே தொங்காநிற்கும்

20. நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம்
   ததாபி புருஷகாரோ பக்தாநாம்த்வம் ப்ரகாஸஸே.(ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.))

தேவரீருடைய திவ்யாத்ம சொரூபமானது தேவரீருக்கு அன்று; திவ்ய  மங்கள விக்கிரஹமும் தேவரீருக்கு அன்று; திருவாழி முதலான
ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று; அப்படியிருந்தும், திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவராகவே இருக்கிறீர்; தேவரீர் பத்தர்களுக்காகவே
பிரகாசிக்கின்றீர்,’ பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் : மணி மின்னு மேனி 

19. ஜீர்யந்தி ஜீர்யத: கேஸா: தந்தாஜீர்யந்திஜீர்யத:
   சக்ஷூ: ஸ்ரோத்ரேச ஜீர்யேதே த்ருஷ்ணைகா நிருபத்ரவா.

21. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
   மயாகாலமிமம் ப்ராப்ய தத்த: தஸ்ய மஹாத்மந:- (ஸ்ரீராமாயுத். 1 : 13.)

திருமேனி பத்தர்களுக்காகவே இருக்குமோ?’ எனின், 3‘இரண்டு சரீரங்களைக் கொடுத்து உதவிய மகாத்துமாவான அந்த அனுமானுக்கு, விலக்காதது ஒரு சமயத்தைப் பெற்று, என்னால் கொடுக்கப்பட்டதான இந்த ஆலிங்கனமானது எல்லாக் கொடைக்கும் சமானமாகக் கடவது என்று 1கொடுக்கும்படி அன்றோ? நம் மாயவன் – அடியார்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி எல்லை காணப் போமோ?

ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது  என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:  (விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே.  ‘இச்சா க்ருஹீதம்’  என்கையாலே,  கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது; ‘அபிமதம்’  என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது; சர்வ ஸ்வபூத : –  இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை  கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே;  சர்வஅபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது! மற்றுக்  கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது  பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!  ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை
விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே. மயா காலமிமம் பிராப்ய  தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று
கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று குறைபட்டிருந்தவர், இவன்  விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை  போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள்  ஆக்கினான்; ‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற  பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு  கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி  உபகரித்தார்,’

22. தத் க்ரமேண விவ்ருத்தம் ஸஜ்ஜல புத்புதவத்ஸமம்.(ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 2 : 55)

மா மழை மொக்குளின் – பெருமழைக் குமிழி போலே. 2‘தண்ணீரில் தோன்றுகிற குமிழிக்குச் சமம்’ என்றார் பிறரும். ‘பின் விழுந்த துளியோடே நசிக்கும்,’ என்பார், ‘மாமழை’ என்கிறார்.

23. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்
   அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:(தைத்திரீய உப. பிரு. 10.)

24. ஸ: அஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா.(ஆனந்த வல்லி, 1 : 2.)

ஆதி அம் சோதி குணங்கள் கோமின் – எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள். 1‘சொரூபத்தைப் பற்றியதாயும் விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார், ‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார். 2‘நான் பரமாத்துமாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்றும், 3‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்,’ என்றும், 4‘ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ (பெரிய திருவந்தாதி, 78.)என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணைநாளும் இன்புடைத்தா மேலும் – கணைநாணில்
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே!
ஓவாத ஊணாக உண்.’(பெரிய திருவந்தாதி, 78.)

25. ராமோ ராஜ்யம் உபாஸித்வா ப்ரஹ்மலோகம் கமிஷ்யதி.(சங்க்ஷேப  ராமாயணம்.)

‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை எல்லாரையும் அநுசரித்துக்கொண்டு ஆண்டார்,’ என்கிறபடியே, சேர்த்துக்கொண்டு அரசு ஆண்டார்களேயாகிலும்’ என்றபடி

26. ஸகலு ஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் பிரஹ்மலோகமபி
   ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.(சாந்தோக்யம், 8 – 15.)

மீள்வு இல்லை – 4‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘எத்தால்?’ என்னில், பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள். ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார். ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார்.

27. ஏவம்வித் பாதேந அத்யாரோஹதி.

அன்றிக்கே, ‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான படுக்கையையுடையவன் என்பார், ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

28. இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரிபுவநம்த்வயா
   ஸ்மரத்பிரிவ தத்வைரம் இந்த்ரியை: ஏவநிர்ஜித:(ஸ்ரீராமா. யுத். 114 : 18.  மண்டோதரி கூற்று.)

ஐம்புலன் வென்று – அவற்றில் ருசிக்குக் காரணமான ஐம்பொறிகளும் விஷயங்களிற்போகாதபடி வென்று. 3‘உன்னால் முன்பு இந்திரியங்கள் வெல்லப்பட்டு மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன,’ என்றாள் மண்டோதரி.

உபாசகன் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வேண்டும்; ‘செல்வத்தை  விரும்புகின்றவனுக்கு விஷய அனுபவமன்றோ பலம்? அவனுக்கு
இந்திரியங்களை அடக்குதல் வேண்டாவே?’ என்னும் வினாவைத்  திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உன்னால்’ என்று
தொடங்கி. இங்கு, செல்வத்தை விரும்பிய இராவணன் இந்திரிய நிக்ரஹம்  செய்தமை கூறப்பட்டுள்ளவாறு காண்க.

29. ஸாகரம் தர்த்தும் உத்யுக்தம் ரூபம் அப்ரதிமம் மஹத்
   த்ருஷ்டும் இச்சாமி தேவீர—–

திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, 2‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே, ‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ? அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடியாலேயும், தன் ஆசையின் மிகுதியாலேயும் இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

‘நீட்டு மவ்வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்;
  மீட்டும் நல்வரம் ஒன்றுமுன் வேண்டினன் வீமன்;
  ஈட்டு மாநிதி இலங்கைதீ இட்டநாள் இசைந்த
  மோட்டு ருத்தனைக் காட்டுகென் றிறைஞ்சினன் முதல்வன்.’(வில்லி பா.ஆரணிய பர்.புட்ப யாத். செய். 49.

30. ஆத்மாநம் மா நுஷம் மந்யேராமம் தஸர தாத்மஜம்
   யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாந் தத் ப்ரவீதுமே.(ஸ்ரீராமா. யுத். 120 : 11.)

என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘பாலனாய்’ என்கிறாள்.

31. பதிஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்டவாச மேபிதா
   சிந்தார்ணவகத: பாரம் நாஸஸா தாப்லவோயதா.(ஸ்ரீராமா. அயோத். 119 : 36. )

மடம் வல்லி – ஒரு கொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள். 1‘தமப்பபனாரான ஜனகமஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் – பற்றிற்று விடாமை.

32. அத்ருஷ்ட பூர்வ வ்யஸநா ராஜபுத்ரீ யஸஸ்விநீ
   தேநதுக்கேந ருததீ நைவமாம் கிஞ்சித் அப்ரவீத்.( ஸ்ரீராமா. அயோத். 58 : 85.)

சூழ் வினையாட்டியேன் – தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். 3‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள், தன்னைச் ‘சூழ் வினையாட்டியேன்’ என்கிறாள்

33. ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி
   தபாம்ஸி ஸர்வாணிச யத்வ தந்தி.( கடவல்லி உபநிடதம், 1. 2 : 15.)

34. வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:
   வேதாந்தக்ருத் வேதவித் ஏவச அஹம்.(ஸ்ரீகீதை, 15 : 15.)

 நல் மாலை பல கொண்டு – அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது, ஸ்ரீ புருஷசூக்தம் முதலியவைகளை. 3‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 4‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’ என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும் சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும், சொரூப ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றை நன்மாலைகள்’ என்கிறார். 1அன்றிக்கே, ‘ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும் ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.(இப்பொருளில் வேதங்களும் நன்மாலைகளும் என்று உம்மைத் தொகை.  முன்னைய பொருளில் வேற்றுமைத் தொகை; ‘வேதத்திலேயுள்ள  நன்மாலைகள்’ என்பது பொருள்.)

35. ஸங்கை: ஸூராணாம் திவி பூதலஸ்தை:
   ததாமநுஷ்யை: ககநேச கேசரை:ஸ்துத: க்ரமாந்ய: ப்ரசகார ஸர்வதா
   மமாஸ்து மாங்கள்யவிவ்ருதயே ஹரி:

தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற – தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் 2‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும் ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன், எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற. சே அடி

36. துல்யஸீல வயோவ்ருத்தாம் துல்யாபிஜநலக்ஷணாம்
   ராகவ: அர்ஹதி வைதே ஹீம்தம்சேயம் அஸிதேக்ஷணா.(ஸ்ரீராமா. சுந். 16 : 5.)

தோளி சேர் பின்னை – 2‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம் இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்; பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க் ‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற்போலே, மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்; தோள் அழகு அவனைக் காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது. (சேர் பின்னை’ என்னாது, ‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு பாவம் அருளிச் செய்கிறார். ‘ஒத்த’ என்று தொடங்கி)

37. உத்திஷடத: தஸ்ய ஜலார்த்ர குக்ஷே
   மஹாவராஹஸ்ய மஹீம் ப்ரக்ருஹ்ய
   விதூந்வதோ வேதமயம் ஸரீரம்
   ரோமாந் தரஸ்தா: முநய: ஸ்துவந்தி.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 4. 29.)

அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் – பெரிய இவ்வுலகத்தை அண்டப்பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே 5‘அந்த வராக நயினாருடைய மயிர்க் கால்களில் உள்ள மஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே, ‘சனகன் முதலானோர் இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது. இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.

38. திவ்ய மால்ய அம்பரதரா ஸ்நாதா பூஷணபூஷிதா
பஸ்யதாம் ஸர்வதேவாநாம் யயௌவக்ஷஸ்தலம் ஹரே:(ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9 : 105.)

மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் – 2‘மஹா லக்ஷ்மியானவள் பார்த்துக் கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில் பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே, அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் 3‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ (அம்மா’ என்றது, சிலேடை : ‘ஸ்வாமி’ என்பதும், ‘அந்தத் திருமகள்’  என்பதும் பொருளாம்.)என்று தன்பாடு ஏற வர, அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின் மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருத் துழாய்ப் பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள்.

வெருவு மாலமும் பிறையும்வெவ் விடையவற் கீந்து
 தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
 மருவு தொல்பெரு வளங்களும் வேறுற வழங்கித்
 திருவு மாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’–
  என்பது (கம்ப ராமாயணம் பால காண். வேள். 26)

39. ஸக்யா லோபயிதும் நாஹம் ஐஸ்வர்யேண தநேநவா
   அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரணே ப்ரபா யதா.(ஸ்ரீராமா. சுந். 21 : 15. )

கொம்பு போல் – ‘வஞ்சிக்கொம்பு போலே’ என்னுதல்; 3‘அநந்யா – வேறுபட்டவள் ஆகேன்’ என்கிறபடியே, ஒரு பொருளில் ஒரு பகுதியான உறுப்பு’ என்னுதல்.(சூரியனுடைய ஒளியைப் போன்று ஸ்ரீராகவனை  விட்டுப் பிரியாமல் இருப்பவள் நான்,’ என்பது அப்பகுதியின் பொருள்.-  கொம்பு என்பது மரத்தினது ஓர் உறுப்பு ஆகையாலே, ‘ஒரு பொருளில்  ஒரு பகுதியான உறுப்பு’ என்கிறார்.)

40. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.( தைத்திரீய உப. ஆந. 9 : 1. )

இவள் படி பேச்சுக்கு நிலம் ஆகில் அன்றோ நான் சொல்லுவது? என்றது, 3‘மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் வேதவாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்புகின்றன,’ என்கிற பகவானுடைய குணங்களை நிலமாகப் பேசிலும், நற்குணக் கடலிலே ஆடுகின்றவர்களுடைய (ஆழ்வார்களுடைய) படி பேச்சுக்கு நிலம் அன்றே?’ என்றபடி

41. ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவாந
   ஸதா பரகுணாவிஷ்ட: த்ரஷ்டவ்ய: ஸர்வ தேஹிபி🙁ஸ்ரீவிஷ்ணு  தத்துவம்.)

42. தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: ஏகபத்தி: விஸிஷ்யதே
   ப்ரிய: ஹி ஜ்ஞாநிந: அத்யர்த்தம் அஹம் ஸ சம மப்ரிய🙁ஸ்ரீகீதை. 7 : 17.)

பகவானுடைய குணங்களில் ஈடுபட்டவனாய் எல்லாராலும் எப்பொழுதும் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான்’ என்கிறபடியே, கண்டிருக்கும் அத்தனை போக்கிப் பேச முடியாது. 5‘என் ஒருவனிடத்திலேயே பத்தியுடைய ஞான சிரேஷ்டன் ஆகிறான்; அத்தகைய ஞானிக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன்; அவனும் எனக்குப் பிரியமுள்ளவன்,’ என்பதே அன்றோ அவன் வார்த்தையும்? தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்த பொருள்களை அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூடினதாகப் பெறவேண்டும் என்கிற இவள் படி என்னாலே பேசலாய் இருந்ததோ?

43. ஸங்க சக்ர கதாபாணே த்வாரகாநிலயாச்யுத
   கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் ஸரணாகதாம்.(இது,  துச்சாதனனால் துகில் உரியப்படுகின்ற காலத்தில் திரௌபதி கூறியது.)

சங்கு என்னும் – 2மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே, சக்கரம் என்னும்3மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள். இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து, துழாய் என்னும் – 4சங்கு சக்கரங்கள்’ என்றும், 5கூரார் ஆழி வெண் சங்கு’ என்றும் சொல்ல மாட்டுகின்றிலள். 6ஆபத்து மிக்கவாறே ஒருத்தி, ‘சங்க சக்ர கதா பாணே – சங்கையும் சக்கரத்தையும் கதையையும் கைகளில் தரித்திருப்பவனே!’ என்றாள் அன்றோ? இங்ஙனே சொல்லும் -சொல்லத் தொடங்குவது, சொல்லித் தலைக் கட்ட மாட்டாது ஒழிவதாய்ப் படா நின்றாள்.

44. ததாகதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம்
வ்யபேதஹர்ஷாம் பரீதீந மாநஸாம்

   ஸூபாந்நிமித்தாநி ஸூபாநி பேஜிரே
   நரம்ஸ்ரியா ஜூஷ்டமிவ உபஜீவிந:(ஸ்ரீராமா. சுந். 29 : 1. )

நிந்திக்கப் படாதவள்’ என்னுமாறு போலே. அவன் புருஷத் தன்மைக்கு இலக்கணமான கௌஸ்துபம் போலே ஆயிற்று, பெண் தன்மைக்கும் பசலை; ஆதலின், ‘மின் செய் பூண் மார்பினன் – பொன் செய்பூண் முலை’ என்று விசேடித்துக் கூறுகின்றாள். 1காதலனைப் பிரிந்ததால் உளதாய விரகத்தில் இப்படிப் பொன் பயக்கையே அன்றோ பெண் தன்மைக்கு இலக்கணம்? 2தனம் படைத்தாரில் இவளைப் போன்று தனம் படைத்தார் உளரோ? 3‘தன் காதலனைப் பிரியமாட்டாமையாலே பொன் இட்டுக்கொள்ளுகிறது’ என்பாள், ‘மென்முலை’ என்கிறாள். மெலியும் – ‘மென்முலைக்கு வேண்டும்’ என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.

(பசலையே ஆபரணமாக இருத்தற்கு மேற்கோள், ‘நிந்திக்கப்படாதவள்’  என்பது.-பெருமாளைப் பிரிந்து அழகு   அழிந்திருக்கிற நிலையிலே பிராட்டியை ‘நிந்திக்கப்படாதவள்’ என்று  ஸ்ரீவால்மீகி பகவான் கூறுவதால், பசலை நிறமும் ஆபரணமாக இருக்கும்  என்பது கருத்து. பசலையாவது, பிரிவாற்றாமையான் வருவதோர்  நிறவேறுபாடு. இந்நிறம் பீர்க்கம்பூவின் நிறத்தைப்போன்றது என்பர்.)

45. தாஸாம் ஆவிரபூத்ஸௌரி: ஸ்மயமாந முகாம்புஜ:
   பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத🙁ஸ்ரீ பாகவதம், 10.)

நம் கண்ணன் -இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது. 3‘புன்முறுவலோடு கூடின தாமரை போன்ற  திருமுகமண்டலத்தையுடையவனாயும் பீதாம்பரத்தைத் தரித்தவனாயும்  அணிந்த புஷ்பமாலையை உடையவனாயும் மன்மதனுக்கும் மன்மதனாயும்  இருக்கிற கண்ணன் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து  தோன்றினான்’ என்பது ஸ்ரீபாகவதம்.

46. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
   அஹம் த்வா ஸர்வ பாபேப்ய: மோக்ஷயிஷ்யாமி மாஸூச:( ஸ்ரீ கீதை, 18 : 66.)

47. நஷ்ட: மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயாஅச்யுத
   ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம்தவ.(ஸ்ரீ கீதை, 18 : 73.)

ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாசுச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன்,- 2‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின்படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ? பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி, 3கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற்போலே அனுபவத்திற்குத் தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக் கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.

48. யதா ராகவ நிர்முக்த: ஸர: ஸ்வஸந விக்ரம:
   கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம்.(. ஸ்ரீராமா. சந். 1 : 39.)

மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், 3‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே, மண்பாடு  தானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்கு மேலே உள் நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி

கறங்கு கால்புகா, கதிரவன் ஒளிபுகா, மறலி
மறம்பு காது,இனி வானவர் புகாரென்கை வம்பே;
திறம்பு காலத்துள் யாவையுஞ் சிதையினுஞ் சிதையா
அறம்பு காதுஇந்த அணிமதிட் கிடக்கைநின் றகத்தின்’–
  கம்ப ராமாயணச் செய்யுள்

49. ஸ்தலஸ்தஸ்யச ராமஸ்ய ரதஸ்தஸ்யச ரக்ஷஸ:
   ந ஸமம்யுத்தம் இத்யாஹூ: தேவகந்தர்வ தாநவா:(ஸ்ரீ ராமா. யுத்தகாண்டம்.  )

ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.

சுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே
  ஆவயோ : காத்ர சத்ருசம் தீயதா மநுலேபநம்.’(ஸ்ரீவிஷ்ணு புரா. 5 )

செயற்கை வாசனையையுடைய இந்தச் சந்தனமானது அரசர்க்கு உரியது.  எங்கள் இருவருடைய சரீரங்கட்கும் தகுந்ததான சந்தனத்தைக் கொடுப்பாய்,’

பூவை வீயாம் நின் மேனிக்கு -பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு. அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது, ‘மலர்ந்த மலரைப் போன்ற மிருதுத் தன்மையை யுடைய திருமேனிக்கு’ என்றபடி. வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய்விடுவதே! நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையிற்போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு, ‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன, 1வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்; ‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்; ‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்; ‘நிறமே இதில் கொள்ளக் கூடியது’ என்ன, இப்படி அருளிச் செய்தவாறே, ‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று, அதனால் வந்த உவகை தோன்றப் புன் முறுவல் செய்தாள்; ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக, ‘நற் சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்; நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனி என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு, மேனி’ என வேண்டாது கூறுகிறார்.

50. ஸர்வகந்த: ஸர்வரஸ: ஸர்வமிதம் அப்யாத்த:  அவாகீ அநாதர:

பூசும் சாந்து என் நெஞ்சமே – 1‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்(சேருமே’ என்றது, ‘சேராது’ என்றபடி.)

51. ஸதேவ ஸோம்யஇதம் அக்ர ஆஸீத் ஏகமேவ   அத்விதீயம்.(சாபால உபநி. 6. 2 : 1.)

ஏக மூர்த்தி – 3‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே, படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும், அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் நீறு பூத்த நெருப்புப்போலே இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி

52. ஸூர்யா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வம்  அகல்பயத்.(தைத்திரீய உபநிட, 1.)

இரண்டு சுடராய் – 1‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது. இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம். (ஐந்து பூதமாய்’ என்றது முடிய, சமஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தது.  ‘இரண்டு சுடராய்’ என்றது முதல் வியஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தபடி.  சமஷ்டி – கூட்டம். வியஷ்டி – வேறு வேறு.)

53. தத் ஸ்ருஷ்ட்வா, ததேவ அநுப்ராவிஸத்,
   தத் அநுப்ரவிஸ்ய, ஸச்ச த்யச்ச அபவத்.(தைத்திரீய ஆனந். 6.)

அருவாகி – 2‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ்வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.

54. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய  நாமரூபே வ்யாகரவாணி.( சாந்தோக்ய உபநிட, 6 : 3.)

நன்று; மேலே, அசித்தை அருளிச் செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல் ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், 3‘இந்த ஆத்துமாக்களை எல்லாம் சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த ஆத்துமாக்களை யெல்லாம் சரீரமாக வுடைய சர்வேசுவரனுக்கு அநுப் பிரவேசமாகையாலே அப் பொருளும் சொல்லிற்றாயிற்று.

(அரு என்பதற்கு  ஆத்துமா என்று பொருள் கூறில், அநுப்பிரவேசம்  சித்தியாமையாலும், அநுப்பிரவேசத்தைச் சொல்லுகிறவிடத்தில் ஜீவனுக்கு
அந்தரியாமியாய் இருக்கிற இறைவனுக்கு அநுப்பிரவேசமாகையாலே  ஆத்துமா சித்திக்கையாலும் அநுப்பிரவேசத்தையே சொல்லுகிறது என்றபடி.)

55. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
   ராக்ஷஸ: அப்யேதி பஸ்யத்வம் அஸ்மாந் ஹந்தும் நஸம்ஸய🙁ஸ்ரீராமா. யுத். 17 : 5.-)

ஓர் உயிரே அன்றோ அவன்1‘நம்மைக் கொல்ல வருகின்றான்; சந்தேகம் இல்லை,’ என்றாரே அன்றோ மஹாராஜர்? ஆக, ‘அவள் கோலி வந்த படி அவசியம் சிலர் பரியவேண்டியதாக இருந்ததாதலின்’ ‘மாய்த்தல் எண்ணி’ என்கிறார் என்றபடி

ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்ல வந்தது, தம்மைக் கொல்ல வந்ததாகத்  திருவுள்ளம் பற்றி, ‘மாய்த்தல் எண்ணி’ என்றார் என்னலுமாம்’ என்று
பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி அப்பொருளுக்குப் பிரமாணம்  காட்டுகிறார், ‘நம்மைக் கொல்ல வருகின்றான்’ என்று தொடங்கி. இது,
விபீஷணனைக் குறித்துச் சுக்கிரீவன் கூறியது.

56. தஸ்யஹை தஸ்ய புருஷஸ்ய ரூபம்யதா மஹாரஜதம் வாஸ🙁பிருஹதாரண்ய உபநிடதம், 4 : 3.)

ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, 2‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே, ‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம். இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ? 3அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ (திருவாய்மொழி, 2. 3 : 3.)என்கிறபடியே, இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ?

57. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரமீஸ்வரம்
   நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதாஜநா:( ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 1 : 41.)

கால சக்கரம் – ‘காலத்தை நடத்துகின்ற சக்கரம்’ என்றபடி. அன்றிக்கே, 4‘கலிகாலத்தில் பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் விஷ்ணுவாகிய சர்வேசுவரனைப் பூஜிக்கின்றார்கள் இல்லை,’ என்கிற காலத்திலும், இருள் தரு மா ஞாலத்திலும் இருளை ஓட்டி, 5அருளார் திருச்சக்கரமாய்த் திருக்கரத்திலே விளங்கிக்கொண்டிருப்பவன் ஆதலின்,(அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும்பும் நிலனும்  இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’) ‘காலத்திற்குக் கட்டுப்பட்டிருக்குந்தன்மையைப் போக்கும் சக்கரம்’ என்னுதல். சர்வேசுவரன் திருக்கரத்தைத் தான் பிரியாமல் இருத்தல் போலே, திருவடிகளைத் தாம் பிரியாதபடியான ருசியை உண்டாக்கக்கூடிய திருவாழி என்பதனைத் தெரிவித்தபடி. அவனுடைய திருக்கையிலே நின்ற அழகாலே மக்கள் சென்று காலிலே விழும்படி செய்யுமவன் என்பதாம்.

58. உபப்லாவ்யாத் இஹ க்ஷத்த: உபயாத: ஜநார்த்தந:
   குஸஸ்தலே நிவஸதி ஸச ப்ராத : இஹ ஏஷ்யதி.(பாரதம் உத்தியோக பர்வம்.)

ஒன்றும் வாராயாகிலும் – 1‘உபப்பிலாவியம் என்ற நகரத்திலிருந்து வந்தவரான ஸ்ரீ கிருஷ்ணன் குசஸ்தலம் என்கிற இடத்தில் தங்கியிருக்கிறார்; அவர் காலையில் இங்கு வருவார்,’ என்கிறபடியே, அங்குநின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று வருகைக்குக் காரணம் இல்லையேயாகிலும். 2அன்றிக்கே, ‘கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின் ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக்கடவதன்றோ?

என் சென்னிக்குக் கோலமாம். – (ஸ்ரீராமா. அயோத். 98 : 8.)3‘ஸ்ரீராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம்.

59. நாமக்ரா ஹம்ச நாதஸ்ய ஸீதள: காஹளத்வநி:

கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின் ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக் கடவதன்றோ?

60. ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிமஸீதேந வாரிணா
   தத: அப்யவகிரந்து அந்யே லாஜை: புஷ்பை: ச ஸர்வத:

விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் – வாசனையையுடைத்தான பூவையும் நீரையும் கொண்டு 5‘எல்லாமாய் இருக்கிற பூமியைப் பனி போன்று குளிர்ந்திருக்கின்ற தண்ணீரால் நனைக்கட்டும்; பின்னர், மற்றவர்கள் எங்கும் பொரிகளாலும் மலர்களாலும் வாரி இரைக்கக் கடவர்கள்,’

61. ராமோ ராமோ ராமஇதி ப்ரஜாநாம் அபவன் கதா:
   ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி(ஸ்ரீ ராமா. யுத். 130 : 6.)

உரை கொள் சோதித் திரு உருவம் – 1‘சக்கரவர்த்தி திருமகன் இராச்சியத்தை ஆளுகின்ற காலத்தில் மக்களுக்கு இராமன் இராமன் இராமன் என்று எல்லா வார்த்தைகளும் உண்டாயின; உலக முழுவதும் இராமன் சொரூபமே ஆயிற்று,’ என்பது போன்று, 2‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருக்கிற சோதி மயமான திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘மாற்றும் உரையும் அற்ற திருமேனி’ என்னுதல்; 3‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது,’ என்பது தமிழ் மறை அன்றோ?

62. அகால பலிநோ விருக்ஷா: ஸர்வே சாபி மது ஸ்ரவா:
   பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத🙁ஸ்ரீராமா. யுத். 127 : 17.)

செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச்சடகோபன் – சிவந்த தாமரையை யுடைய பழனங்களை யுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த. அவனுடைய காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே 2‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும் பழங்களை யுடையன ஆகக் கடவன,’ என்கிறபடியே ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.

63. ந தே வாக் அந்ருதா காவ்யே காசித் அத்ர பவிஷ்யதி
   குரு ராம கதாம் புண்யாம் ஸ்லோக பத்தாம் மநோரமாம்.(ஸ்ரீராமா. பால. 2 : 37.)

பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் – 3‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும் பொய்யாக மாட்டாது,’ என்கிறபடியே, ‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க. ‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே 4அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ? அன்றிக்கே, ‘அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து’ என்னுதல்

64. க்வசித் உத்ப்ரமதே வேகாத் க்வசித் விப்ரமதே பலாத்
   க்வசித் மத்த இவாபாதி காந்தாந்வேஷண தத்பர🙁ஸ்ரீ ராமா. ஆரண்ய. 60 : 35.)

பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்; ‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்; ஓரிடத்தில் பித்தனைப் போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது, அதுதானும் மாட்டாது ஒழிவது, ‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது, ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே தேடுவதாய், அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள்

65. தேந ஏஷ பூர்வம் ஆக்ராந்த ஆஸ்ரம: ஸ்ரம நாஸந:
   மயாது பக்த்யா தஸ்யைவ வாமநஸ்ய உபபுஜ்யதே.(ஸ்ரீராமா. பால.- 29 : 22 ; விஸ்வாமித்திர முனிவர் ஸ்ரீ ராமனைப் பார்த்துக் கூறியது.)

அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; 1‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி. ‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. 2‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’ என்றான் அன்றோ விசுவாமித்திரன்?

66. அத தாஸரதி: வீர: ராமோநாம மஹாபல;
   விஷ்ணு: மாநுஷ ரூபேண சசார வஸூதாதலே.( பாரதம், ஆரணியபருவம். இது, வீமசேனனைப் பார்த்து அனுமான் கூறியது)

விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான் திருவடி. ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ?

இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்’  என்றதனானே ‘பெருமாள் சஞ்சரித்த இடத்தை விடமாட்டாமையால்,  இங்கேயே தங்கியிருக்கிறேன்,’ என்பது திருவடியின் உட்கோள்.

அந்த வார்சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும்
  சிந்தை யால்அவன் திருப்பதம் சிந்தைசெய் பவனும்
  முந்தை யாகிய வாயுவுக்கு உற்பவித் தவனும்
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன்.
’(வில்லிபா. ஆரணிய. புட்பயாத். 36.)

67. கந்தவதீ ப்ருதிவீ.

 வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள். 3‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னாநின்றாள் என்றபடி, 4‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில்

விண்ணொலி தழுவும், காற்று மேவுறும் ஒலியு மூறும்,
நண்ணுமால் ஒலியும் ஊறும் நலந்திகழ் உருவும் செந்தீ,
தண்ணறல் ஒலியும் ஊறு முருவமுஞ் சுவையும் சாரும்,
மண்ணிதை நான்கி னோடு மணத்தையும் புணர்ந்து மன்னும்.’–
பாகவதம், சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயம்.)

68. யுவதிஸ்ச குமாரிணீ.

என் பெண்ணை – 2‘யுவதியாயும் குமாரிணியாயும் இருப்பவள்’ என்றபடியே, கலவியிலும் உட்புக மாட்டாத பருவமாயிற்று இவளது

69. ஸக்யா லோபயிதும் நாஹம் ஐஸ்வர்யேண தநேநவா
  அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா

பெருமயல் செய்தார்க்கு – 1‘தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்றுகாணும் இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள். அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?

70. யத்ர ரிஷய: ப்ரதமஜா யே புராணா:

1‘மைத்ரேய!’ என்னுமாறு போலே, தனக்கு ஓர் ஊற்றங்கோல் தேடுகின்றாள். என் தெய்வ உருவின் – ஒப்புமையுள்ள பொருள்களையும் நினைக்க நினைக்க, நித்தியானுபவம் பண்ணுகின்ற நித்திய சூரிகள் வடிவில் பிறக்கும் 2ஒளி பிறவாநின்றதாயிற்று இவளுக்கு; ஆதலின், ‘தெய்வ உருவின்’ என்கிறாள்.ஆயின், அவர்களில் இவளுக்கு வாசி உண்டு; சிறுமான் – 3‘புராணா: – பழையர்’ என்றும், 4‘விண்ணாட்டவர் மூதுவர்’ (திருவிருத்தம், 2.) என்றும் சொல்லுகின்றபடியே, பழையராய் இருப்பார்களே அன்றோ அவர்கள்-‘இவள் சிறுமி ஆகையாலே கலங்குகிறாள்,’ என்றபடி

71. தம் த்ருஷ்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்.

செந்தீயைத் தழுவி – எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்; ‘மந்திரம் மருந்து முதலியவைகளால் தடைசெய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்றுதான் தழுவுகிறாளோ?’ 2‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள். அன்றிக்கே, 3பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ (திருவாய்மொழி, 8. 9 : 3.)என்னுமாறு போன்று, இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி (இரத்தினாங்கி;
இரத்தினத்தாலாய சட்டை.)சார்த்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்

72. முகாத் இந்த்ர: ச அக்நி: ச.

73. ஸது ஆஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாந: மஹோரகை:
நவிவேத ஆத்மந : காத்ரம் தத்ஸ்மிருதி ஆஹ்லாத ஸம்ஸ்தித:(ஸ்ரீ விஷ்ணு புரா.  1. 17 : 39. )

74. தாத ஏஷ வஹ்நி: பவநேரிதோபி
ந மாம் தஹதி அத்ர ஸமம் ததோஹம்
பஸ்யாமி பத்மாஸ்தரணாஸ்த்ருதாநி
ஸீதாநி ஸர்வாணி திஸாம் முகாநி.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 17 : 47. இது, அவன் நினைவாலே சுடாதிருப்பதற்குப்  பிரமாணம்.)

அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில், 1‘அந்த விராட்புருஷனுடைய முகத்திலிருந்து இந்திரனும் அக்கினி தேவனும்உண்டானார்கள்,’ என்கிறபடியே, அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. (அச்சுதன் முகத்தாலே’ என்றது, சிலேடை : ‘அச்சுதன் காரணத்தால்’  என்பதும், ‘அச்சுதனுடைய முகத்திலே’ என்பதும் பொருள்.)அன்றிக்கே, ‘செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய்வேவாள்’ என்கிறாள் ஆகையாலே, 2இவளுடைய அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல். (சப்த மாத்திரமே போதுமாயிற்று வேகாமைக்கு’ என்றபடி.)அன்றிக்கே, 3‘அந்தப் பகவானை நினைப்பதனால் உண்டான சந்தோஷத்தோடு கூடினவனாய்’ என்கிறபடியே, ‘அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ என்னுதல். 4‘தந்தையே! இந்த நெருப்புக் காற்றாலே தூண்டப்பட்டதாக இருப்பினும், இங்கு என்னைக் கொளுத்த இல்லை; நான் நான்கு பக்கங்களிலும் எல்லாத் திக்குகளிலும் தாமரைப்பூக்களாகிற விரிப்பினால் பரப்பப் பட்டனவாயும் குளிர்ந்திருப்பனவாயும் பார்க்கிறேன்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்?

திண்சுட ராழி அரங்கேசர் திக்குத் திருச்செவியில்,
மண்கழ லில்,சத்ய லோகஞ் சிரத்தின், மருத்துயிரில்,
தண்கதி ருள்ளத்தில், வானுந்தி யில்,செந் தரணிகண்ணில்,
ஒண்கன லிந்திரன் வான்முகப் போதி லுதித்தனரே.’(திருவரங்கத்து மாலை)

75. யதி அஸ்தி பதிஸூஸரூஷா யதிஅஸ்தி சரிதம்தப:
   யதிவா அஸ்தி ஏகபத்நீத்வம் ஸீதோபவ ஹநூமத🙁ஸ்ரீராமா. சுந். 53 : 28.)

76. வாயோரக்நி.(தைத்திரீய உபநிடதம்.)

77. பிராணாத் வாயு: அஜாயத.

ஸீதோபவ – தண்ணிது ஆகக்கடவாய்’ என்றவளும் இல்லை அன்றோ? ‘தண்ணிதாகக் கடவாய்’ என்றவள் தானே இங்ஙனம் செய்கிறாள்? ஆதலின், எரித்திலது’ என்னுதல்

பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை (வாயு புத்திரன் – நெருப்பும், அனுமானும்.)நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ என்றபடி. 3‘ஹநுமானான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது’ (ஸ்ரீராமா. யுத். 1 : 13.)என்றதனால், நாயகன் தழுவினமை உணரலாகும். 4‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.

தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்
  என்றார் கம்பநாட்டாழ்வார்.

ஆய காலையின் அமரர் ஆர்த்தெழத்
 தாயின் அன்பனைத் தழுவி னான்தனி
 நாய கன்பெருந் துயர நாமறத்
 தூய காதல்நீர் துளங்கு கண்ணினான்.’கம்பநாட்டடிகள்.

தலைமைசால் சிறப்பு வாய்ந்த தாமத அகங்கா ரத்தின்
ஒலிஎழும்: ஒலியிற் றோன்று மோங்குவான்; வானிற் றோன்றும்
மலியுமூறு; ஊற்றிற் றோன்றும் வளி;எறி வளியிற் றோன்றும்
நிலவொளி; ஒளியி னின்று நிமிர்சுடர்க் கனலி தோன்றும்.’-
 என்பது பாகவதம்

78. சிரம் ஜீவதி வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
   ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்.(ஸ்ரீ ராமா. சுந். 66 : 10. )

என்னுடைக் கோவிந்தன் என்னும் – 2‘நீங்கி ஒரு கணநேரமும் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்!’ என்கிறபடியே, ‘பிரிவில் பொறுக்க வல்லனோ? அவன் உண்மை பிறர்பொருட்டாக அன்றோ இருப்பது?’ என்று சொல்லாநிற்கும். அன்றிக்கே, ‘கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்,’ என்னுதல். 3‘உலகத்தார் படியும் அன்று; விரஹநோயினர்கள் படியும் அன்று; உலகத்தார் படியாகில் நெருப்புச் சுடவேண்டும்; விரஹநோயினர்கள் படியாகில் காற்றுச் சுடவேண்டும்; இரண்டும் கண்டிலோம்,’ என்கிறாள்.

79. ஸ ததர்ஸ ததா தத்ர க்ருஷ்ணம் ஆதோஹநே கலாம்
   வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்.(விஷ்ணு புரா. 5. 17 : 19.)

கோவிந்தன் மேய்த்தன என்னும் – 2‘கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனுமான கிருஷ்ணன்’ என்றும், 3கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்’ என்றும் வருகின்றவாறே. ‘இவற்றினுடைய பாதுகாவலுக்கு முடி சூடினவன் உகந்து காப்பாற்றினவை’ என்பாள். 4‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு. 5கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு, ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.(அவன் ஓடுமாறு போலே இவையும் ஓடாநின்றன,’ என்பது  கருத்து.)

80. விஷ்ணோ: ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம்
   ஸ்திதி ஸம்யமகர்த்தா அஸௌ ஜகத: அஸ்ய ஜகத்சஸ🙁ஸ்ரீ விஷ்ணு  புரா. 1. 1 : 32)

எல்லா உலகங்களும் மஹாவிஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின; அந்த விஷ்ணுவினிடத்தில் தானே எல்லா
உலகங்களும் லயமாகின்றன?’ என்னா நின்றாள்.

81. க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய:
   க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்.(இது, பாரதத்தில்  ராஜசூய யாகத்தில் வீடுமன் கூறியது.)

உலகங்களினுடைய பிறப்பும் கிருஷ்ணனே, பிரளயமும் கிருஷ்ணனே என்னும் இவை பிரசித்தம்’ என்கிற இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி

82. உத்த்ருதா அஸி வராஹேண க்ருஷ்ணேந ஸதபாஹூநா.(தைத்ரீய உபநிடதம்.)

 நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு2 ‘மகா வராஹத்தை எடுத்த மஹாவிஷ்ணுவினால் தூக்கப்பட்டவள் ஆகிறாய்’ என்கிறபடியே, என்றும் ஒக்க பகவானுடைய சம்பந்தம் மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப் போருமவர்களாகக் கொண்டு மயங்கி, ‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்

83. மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா
   ராஜ்ஞா தஸரதேந அஸி லப்த: அம்ருதமிவ அமரை🙁ஸ்ரீராமா. ஆரண். 66 : 3.)

அரும் பெறல் பெண்ணினை – 2ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும் அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்லகண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது; 3அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்

84. குரூணாம் அக்ரத: வக்தும் கிம் ப்ரவீஷி நந: க்ஷமம்
   குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா.(  ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 27. இது, கோபிகைகள் வார்த்தை.)

மாயோன் – 4‘குரவர்களாகிய தாய் தந்தையர்கள் நம்மை என் செய்வார்கள்?’ என்கிறபடியே, பெற்றவர்களைக் கைவிடும்படி செய்ய வல்லவன். அலற்றி அயர்ப்பிக்கின்றான் – எப்போதும் தன்னையே வாய் வெருவும்படி செய்து, அத்துணையில் நில்லாது மயங்கும்படி பண்ணாநின்றான்.

85. ஸ ஸ்வராட்பவதி.(வேதவாக்கியம்.)

வீற்று இருக்கப் பெறுவர்கள். 1‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது, ‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.

86. தஸவர்ஷஸஹஸ்ராணி தஸவர்ஷ ஸதா நிச
   ராமோ ராஜ்யம் உபாஸித்வா ப்ரஹ்மலோகம் கமிஷ்யதி:(ஸ்ரீராமா. பா. 1 : 97.)

ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் – 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று ‘செருக்கு அற்றவனாய் ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது, 1வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய் இருக்கின்றமையையும் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர். இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –மூன்றாம் பத்து –

December 8, 2023

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – ‘சொல்லில், தாமரைச் சாதியாக உன்னுடைய திருக்கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாக மாட்டாது. அனுபவித்துக் 2குமிழிநீர் உண்டுபோம் இத்துணையே அன்றிச் சொல்லப் போகாது,’ என்பார், ‘கட்டுரைக்கில்’ என்கிறார். கட்டுரைக்கில் – கட்டுரை என்பது ஒரு சொல். ‘தாமரைச் சாதியாக ஒப்பாக மாட்டாது,’ என்பார், அடைகொடுத்து விதந்து கூறாது, வாளா ‘தாமரை’ என்றும், ‘தனித்தனியே ஒவ்வோர் உறுப்புக்குங்கூட ஒப்பாகமாட்டாது’ என்பார், ‘கண் பாதம் கை’ எனத் தனித்தனியாக விதந்தும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், பாதாதி கேசமாகக் கூறாது, ‘கண் பாதம் கை’ எனக் கூறல் யாது கருதி?’ எனின், குளிர நோக்குவன கண்கள்; நோக்கிற்குத் தோற்று விழுமிடம் திருவடிகள்; விழுந்தவனை எடுத்து அணைப்பன திருக்கைகள். ஆதலின், இம்முறையே ஓதுகிறார். இனி-அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவச க்ரம: ‘மேம்பட்ட பத்தியையுடையவனுக்குச் சாஸ்திரமும் இல்லை, முறையும் இல்லை,’ என்பவாகலின், பிரபத்தி நிஷ்டரான இவர் திருவாயிலும் அம்முறை கெட வருகின்றன என்று கோடலுமாம்

சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது – காய்ச்சி ஓடவைத்து உரைத்த நன்றான பொன்னானது உன்னுடைய சுவபாவிகமான திவ்விய விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பாகாது. சாதாரணமான பொன் உவமை சொல்லத் தக்கதன்றாதலின், ‘சுட்டு உரைத்த நன்’ என்று மூன்று அடைகொடுத்து விதந்து ஓதுகிறார், இத்தனை அடை கொடுத்தாலாயிற்று ஒப்பாகச் சொல்லப் 2பாத்தம் போராதது;-ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்’ மநு ஸ்மிருதி,12: 122 ‘பரம்பொருள் ஓடவைத்த பொன்னின் நிறமுடையவன்’ என்பது மநு ஸ்மிருதி

இவ்வுலகு புகழ்வு–யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.-அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்னும்படி மீளும்படியான உன்னை-அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை-‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்-ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம் 3‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர: நாராயண பரோஜ்யோதி: ஆத்மா நாராயண:பர: தைத்திரீய நாராயண. அநு. 11.- பரஞ்சோதீ – 2’நாராயணன் மேலான ஒளியுருவன்’ என்கிறபடியே, அவன் எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட சாதியான்

தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வம்    இதம் விபாதி.-அந்தப் பர ப்பிரஹ்மத்தினுடைய பேரொளியால் இவை யெல்லாம் பிரகாசிக்கின்றன,’ என்பது கடோபநிடதமாகும்

‘மாட்டாய’ என்பதனை ‘மட்டு ஆய’ என்ற சொல்லின் நீட்டல் விகாரமாகக் கொண்டு, ‘திருவடிகளில் தேனினுடைய வெள்ளம் பெருகுகிறது,’-விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ:

 ஸ்மிருதி ப்ரம்ஸாத் புத்திநாஸ: புத்திநாஸாத் ப்ரணஸ்யதி.–ஸ்ரீ கீதை, 2 : 69.-நினைவு தவறுவதால் புத்தி நாசமடைகிறது; புத்தி நாசத்தினால் நாசமடைகின்றான்,’ என்கிறபடியே ‘புத்தி நாசமடைவதற்குரிய பொருள்களில் இவர்கள் பிரவணர்களாய் இங்ஙனம் நோவு பட்டே போமித்தனையாகாதே!’ என்கிறார்

 நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்நச
ஸரீரக்ரஹணம் வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம்.
ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 50.

அகாரணம்’ என்றது, காரியத்தை;
‘காரணம் என்றது, மூலப்பிரகிருதியை;
‘காரணாகாரணம்’ என்றது, மகத்து முதலான தத்துவங்களை.
இதனால், ‘நீ சரீரத்தை மேற் கொள்ளுவது இவைகளினாலே யன்று; தர்மத்திற்காகவே,’ என்பதனைக் குறித்தவாறு

எங்கும் நிறைந்தவனாய் உலகமே உருவனாயிருக்கிற இறைவன் சரீரத்தை மேற்கொள்ளுவது, 1காண வாராய்’ என்று விடாய்த்திருப்பார் கண்டு அனுபவிக்கைக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்தபடியேயாம் என்றபடி-அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும் 5பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?.ஆழிப்பிரான்தன்னை – 3நாயுதாநி – ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே, தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற ‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை 2தேவரீருடைய திவ்விய மங்கள விக்கிரகமும் தேவரீருக்கன்று; தேவர் அடியர்களுக்காகவே பிரகாசிக்கின்றீர்,’ என வருதல் காண்க.–நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம்    ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.-ஜிதந்தா ஸ்தோத்திரம், 5. 

வர்ஷபிந்தோ: இவ அப்தௌ ஸம்பந்தாத் ஸ்வாத் மலாப:’–ஸ்ரீரங்கராஜ ஸ்தவம். 1 : 12.-கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால், கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை

மலராது குவியாது’ என்பதற்கு, 3’தன் சொரூபத்திற்குத் துல்லியமான ஒரே தன்மையையுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்’ என்கிறபடியே, 4குறைதல் வளர்தலின்றி இருக்கின்ற திருமேனியையுடையையாய்’ என்று பொருள்–அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைகரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே.–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 1.

மாசூணா வான்கோலத்து அமரர்கோன்’ என்றதனால் கற்பிக்கப்பட்ட பிரமன் என்பது போதரும். ‘எவ்வாறு?’ எனில், இப்பொழுதுள்ள பிரமனுக்குத் தனது அதிகாரத்தின் முடிவிலே ஞானத்துக்கு மறைப்பு உண்டு; இவனுக்கு அது இல்லை என்று கூறப்படுதலின். வழிபடுதற்கு உறுப்பாகச் சொல்லப்படுகின்ற இடமாதலின், ‘கோலம்’ என்பது ஈண்டு வழிபடுதற்கு உறுப்பான ஞானத்தைக் காட்டுகின்றது. ‘பிரமனுடைய ஆயுளை யுடையவனும் கோடிக்கணக்கான முகத்தையுடையவனும் மிகவும் சுத்தமான மனத்தையுடையவனுமான ஒரு மனிதன் இருப்பானேயானால், அவன், உம்முடைய குணங்களில் பதினாயிரத்தில் ஒரு குதியைச் சொல்லுவானோ, சொல்லமாட்டானோ அறிகிலோம்!’ என்பது வராஹ புராணம். –சதுர்முகாயு: யதிகோடிவக்த்ர: பவேந்நர:
க்வாபி விஸூத்த சேதா:   ஸதேகுணாநாம் அயுதைகதேஸம் வதேந்நவா தேவவர ப்ரஸீத

மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே – வேதங்களிலே எல்லாரைக்காட்டிலும் அதிகனாகவும் நிரதிசய போக்கியனாகவும் பிரகாசிக்கின்றவனே! புறம்பானவர்களாய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலே, ‘மறை’ என்றும், ‘ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் பொருளை வெளியிட்டுக் காட்டுகையாலே ‘வேதம்’ என்றும் இரண்டு படியாகச் சொல்லப்படுதலின் ‘மறையாய நால்வேதம்’ என்கிறார்: முற்பகுதி – ஆராதன சொரூபத்தைச் சொல்லுகிறதாய், பிற்பகுதி – ஆராதிக்கப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைச் சொல்லுகிறதாய், 2’பூர்வபாகம் என்றும், உத்தரபாகம் என்றும் பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுபவன்,’ என்கிறபடியே, எல்லா வேதங்களும் தன்னையே சொல்லும்படி இருக்கையாலே உண்டான புகரையுடையவன்

ஆதௌவேதா: ப்ரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: ந்யாயை: ஸார்த்தம்
த்வத் அர்ச்சரவிதிம் உபரி பரிக்ஷீயதே பூர்வபாக: ஊர்த்வோபாக: த்வத் ஈஹா குணவிபவ பரிஜ்ஞாபநை:
த்வத்பதாப்தௌ வேத்ய: வேதை: ச ஸர்வை: அஹம்இதி  பகவந் ஸ்வேநச வ்யாசகர்த்த.-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 1 : 19.

அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்திப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோவிது:-தைத்திரீய ஆனந். 6.
ஆயிரத்திலும் இப்பத்தும்-ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் -, ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே 2‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே, அசத்துக்கு ஒப்பானவர்களை, ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே, உய்வு பெறச் செய்து விரோதிகளையும் போக்கும்-என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார். ‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள்-தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ– தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று, தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’

அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூ வீர்யம் அவாஸ்ருஜத்– மனு ஸ்மிருதி, 1 : 8.இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே, முதன் முன்னர்த் தண்ணீரைப் படைத்துப் பின்னரே அண்டத்தைப் படைத்தானாதலின், முந்நீர்-4முன்னே படைத்த நீர் –

அந்நாள். நீ – இந்நிலையிலே 4‘பிரகிருதியில் லயப்பட்டிருந்த அக்காலத்தில் ஆத்துமவர்க்கமில்லாமையால் –‘ஸ ஏகாகீநரமேத’- மஹோபநிடதம்.-அவன் தனியனாக மகிழ்ச்சியடைந்தானில்லை,’ என்கிறபடியே, இழவு உன்னதாக முகங்காட்டின நீ. தந்த – திருவடிகளிலே தலைசாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை உதவி செய்த

அசித் அவிஸேஷிதாந் ப்ரளய ஸீமநி ஸம்ஸரத:  கரணகளேபரை: கடயிதும் தயமாந மநா:
வரத நிஜேச்சயைவ பரவாந் அகரோ: ப்ரக்ருதிம்   மஹத் அபிமாநபூத கரணாவளி கோரகிணீம்.–ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், 2 : 41. 

வரதனே! பிரளய காலத்தில் அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்துமாக்களை இந்திரியங்களோடும் சரீரங்களோடும் சேர்ப்பதற்கு விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கற்பத்தின் வசப்பட்டு மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன, ‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளையுடையதாம்படி செய்தாய்,’ என்றார் பட்டர்.-நிர்ஹேதுக கிருபையாலே படைத்தான்  என்பதற்கும், ‘யௌகபத்யம் அருளின் காரியம்’ என்பதற்கும் மேற்கோள்.  யௌகபத்யம் – ஒருசேரப் படைப்பது

 ராக்ஷஸாநாம் க்ஷயம் க்ருத்வா ஸூதயித்வாச ராவணம்
லங்காம் உந்மூலிதாம் க்ருத்வா கதா த்ரக்ஷ்யதிமாம் பதி:–ஸ்ரீராமா, சுந். 37 : 6.-
என் கணவர், இராக்கதர்களுக்கு அழிவினைச்செய்து, இராவணனையும் கொன்று, இலங்கையையும் வேரோடு அழித்து, எப்பொழுது என்னைப் பார்ப்பார்?’ என்று பிராட்டி கூறியது போன்று ‘எந்நாள் இனி வந்து கூடுவன்?’ என்கிறார்.

பூர்ணே சதுர்தஸே வர்ஷே பஞ்சம்யாம் லக்ஷ்மணாக்ரஜ:
பரத்வாஜாஸ்ரமம் ப்ராப்ய வவந்தே நியத: முநிம்.–ஸ்ரீராமா. யுத்த. 127 : 1.-
பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதி    யன்று’ என்கிறபடியே, ‘ இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும்.-உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது

எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் – பல விதமான பெரிய மூலப்பகுதி-தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா-ஸ்ரீ கீதை, 7 : 14.

விலங்கு. நின் மா தாள் சேர்ந்து – 1பரமப் பிராப்பியமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி. நிற்பது -எஞ்ஞான்று கொலோ -நித்திய சமுசாரிகளுக்குப் பகவானையடைதல்-அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே அத ஸ: அபயம் கதோபவதி.-(தைத்திரீய உபநிடதம், 7.)-பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான நிஷ்டையை யடைகிறவன் பயமின்மையை அடைகிறான்,’

அபீதாநீம் ஸ கால: ஸ்யாத் வநாத் ப்ரத்யாகதம் புந:
யத்த்வாபுத்ரக பஸ்யேயம் ஜடாமண்டலதாரிணம்.–ஸ்ரீராமா. அயோத். 24 : 37.-
நிற்பது எஞ்ஞான்றுகொலோ – 4‘அது எந்நாளாக வற்றோ? ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ, அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ (கௌசல்யா தேவியார் கூறிய  வார்த்தை)என்பதுபோன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார்

படைத்துணை வேண்டி வந்து, துரியோதனன் திருமுடிப் பக்கத்தேயிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலேயிருந்தான்; பள்ளியுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன,பவாந் அபிகத: பூர்வம் அத்ர மே நாஸ்தி ஸம்ஸ்ய: மயாதுத்ருஷ்ட: ப்ரதமம் குந்தீபுத்ரோ தநஞ்சய:–(பாரதம், உத்தியோகபர். 6).- 1‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று, அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன

சூழ்ச்சி சொல்லாய்’-ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ    அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:(ஸ்ரீ கீதை, 18 : 66.)எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கிறேன்; நீ துக்கப்படாதே!’ என்று அருளிச்செய்யவேண்டும்–திருத்தேர்த்தட்டிலே நின்று எல்லா ஆத்துமாக்களும் உய்வு பெறும்படி சரம சுலோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனேயன்றோ?’-கண்ணன் என்கோ – 3’உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!

பிறரிடம் சேவிப்பது நாய்த் தொழில்-ஸர்வம் பரவஸம் துக்கம்; ஸர்வம் ஆத்மவஸம் ஸூகம்.-மநு ஸ்மிருதி, 4 : 6.நாய்த்தொழிலே அன்றோ புறம்பு தொழுவது?

யதா தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோவா மாதரம்   சாயாவா ஸத்வம் அநுகச்சேத்.(மூலசம்ஹிதை).-நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.

எங்கு வந்து அணுகிற்பன்–அந்தப் பரமாத்துமா எவனை வரிக்கிறானோ, அவனால் அடையத்தக்கவன்; பரமாத்துமா அவனுக்கே தன் சொரூபத்தைக் காட்டுகிறான்–யம்ஏவஏஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்யஏஷ  ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்.–முண்டக உபநிடதம், 3. 2 : 3.

மெய்ஞ்ஞானம் இன்றிததஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 87.) 2பரம்பொருளையறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்; மற்றை ஞானமெல்லாம் அஞ்ஞானமென்று சொல்லப்படும்’,-ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 41.)3மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய வித்யையே வித்யை; மற்றையவை தொழில் திறமையைக் காட்டக் கூடியவை,’ என்கிறபடியே, புறம்பே சில ஞானம் உண்டு அத்தனையல்லது சம்யக் (உண்மை) ஞானமில்லை கண்டாயே

ஏக: அஹம் அஸ்மீதிச மந்யஸே த்வம்
நஹ்ருச்சயம் வேத்ஸி முநிம் புராணம்.
யோவேதிதா கர்மண: பாபகஸ்ய
தஸ்யாந்தி கேத்வம் வ்ருஜிநம் கரோஷி.
(பாரதம், சம்பவ பர். 38 : 29.–(துஷ்யந்த மகாராசனை நோக்கிச்) சகுந்தலை. )நீ, நான் ஒருவன் தான் இருக்கிறேன் என்று எண்ணுகிறாய்; மனத்தில் நித்தியவாசம் செய்கிற ஆதிபுருஷனாகிய பகவானை நீ அறியவில்லை; எவர் பாப காரியங்களை அறிகின்றவரோ, அவருடைய அண்மையில் நீ பாவத்தைச் செய்கிறாய்,’ என்றாள்

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் – திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச.ஸ்ரீரங்க கத்யம்–2எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே, இவ்வாத்துமாவோடு பிரிக்க வொண்ணாதபடி யிருப்பதாய், துக்கத்தை விளைப்பதாயிருக்கிற பாவங்களைத் –தர்மேண பாபம் அபநுததி.–(தைத்திரீயம்)3‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே, விதித்தனவான கர்மங்களைச் செய்வதனாலே போக்கிற்றிலேன்.

ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் – ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யா: ஸ்ரோதவ்ய:    மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:4(பிருகதாரண்ய உபநிட. 4 : 5.)‘இடைவிடாது தியானம் செய்வதனால் அறியத் தக்கவன்’ என்கிறபடியே, எப்பொழுதும் தியானித்து உன்னை நேரே காணுவதற்கு விரகு பார்த்திலேன். ‘ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார். ‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவசரம் இல்லை,’ என்னுமாறு போன்று, 5‘இந்திரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் நன்மை பார்த்திலேன்,’ என்கிறார் என்றபடி. ‘

பாவு தொல் சீர்க் கண்ணா   விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகதவத்ஸல:
தேந மைத்ரீபவதுதே யதி ஜீவிதும் இச்சஸி.(ஸ்ரீராமா. சுந். 21 : 20.)
பெருமாள் நியாயம் அறிந்தவர்; சரணம் புகுந்தவரிடத்தில்
அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர். ஆதலால், நீ பிழைத்திருக்க   விரும்புவாயாகில், உனக்கு அவரோடு நட்பு உண்டாகட்டும்,’

அன்று மேவி ஆ நிரை காத்தவன் – தத: தத்கோகுலம் ஸர்வம் கோகோபீஜந ஸங்குலம்
அதீவார்த்தம் ஹரி: த்ருஷ்ட்வா மைத்ரேய அசிந்தயத்ததா.(ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.)
1இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அந்த ஆயர்பாடியைப் பார்த்துச் சிந்தித்தான் கிருஷ்ணன்,’ என்கிறபடியே, நோவு பட்டவன்று ஒரு பசுவின்மேலே ஓர் ஆயன் மேலே ஒரு துளி விழாதபடி, தோன்றியதொரு மலையை எடுத்து உதவி செய்தவனை

ஸர்வஸ்ய ச அஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட:
மத்த: ஸ்மிருதி: ஜ்ஞாநம் அபோஹநம்ச

கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு – வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத் வேதவித் ஏவசஅஹம்.(ஸ்ரீ கீதை, 15 : 15.)
2’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும், வேதங்களையறிந்தவனும் நானே,’

‘நாலு வேதப் பயன்’ என்கிறார் வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத் வேதவித் ஏவசஅஹம்.(ஸ்ரீ கீதை, 15 : 15.)
23‘பூர்வபாகம் உத்தரபாகம் என்று பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுமவன்’ என்பது ஸ்ரீ கீதை

(கடோபநிடதம், 1. 2 : 15.) எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், *தைத்திரீய ஹோதாரே. ஆர. பிர. 3.)2‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்

உயிர் நீடு பெற்றது –வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்துமாவும்’ அழியப் புக்கது; அங்ஙனம் அழியப்புக்க ஆத்துமாவும் இப்போதாயிற்று அழிவின்மையைப் பெற்றது. ‘ஆயின், ஆத்துமாவிற்கு அழிவு உண்டோ?’ எனின்–அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய:  அஸோஷ்ய ஏவச
நித்ய:ஸர்வகத:ஸ்தாணு: அசல:அயம் ஸநாதந:(ஸ்ரீ கீதை, 2 : 24.)
, ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினையுடையது’ என்ற இத்துணையேயல்லது, தன்னில் சூக்ஷ்மமாய்ப் புக்கு எங்கும் பரந்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை

அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேச அபிமது ஸ்ரவா:
பவந்துமார்கே பகவந் அயோத்யாம் ப்ரதிகச்சத:

இனித்தான் அங்குப் போனாலும் —ஸ: அஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹமணா விபஸ்சிதா(ஆனந்தவல்லி, 1 : 2.)5‘அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான இறைவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது?

பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின், இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது;பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஹாநுஷூ ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்ச தே.-ஸ்ரீராமா. அயோத். 31 : 25.
3‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி? 4உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மனோரதம்.

ஸ: உத்தம: புருஷ: தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடந்
ரமமாண: ஸ்திரீபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபி:
வாநஉபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்.(சாந்தோக்யம், 8. 12 : 3.)
ஜனங்களின் நடுவிலிருந்தும் இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே, கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயன்றோ உள்ளது

நமேதுக்கம் ப்ரியாதூரே நமேதுக்கம் ஹ்ருதேதி வா
ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்தே.
ஸ்ரீராமா. யுத். 5 : 5.)இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில், ‘பிராட்டியினுடைய வயதானது வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்;

ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா: வநேத்ரய:-பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’ என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்; அவ்விருவர்க்கும் பரஸ்பரம் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே

இனி, 4‘சுவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால்–நகேவலம் த்விஜஸ்ரேஷ்ட நரகே துக்கபத்ததி:
ஸவர்க்கேபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோ: நாஸ்தி நிர்விருதி:ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 50.–
சுவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்

விலலாப ஸபாமத்யே ஜகர்ஹேச புரோஹிதம்.

 உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜ புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹிஸோசந்தி ஸந்த: ஸதஸிஸம்மதா:-ஸ்ரீராமா. அயோத். 72 : 24.
ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி 2‘ராஜந்’ என்ன, அப்போது சுவாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ? இதனால், 3பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும்

ஏபிஸ்சஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோமயா
ப்ராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹதி.
 – (ஸ்ரீராமா, அயோத். 101 : 12.)சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்-கைங்கரியம் பிரார்த்தித்துப் பெறத் தக்கது என்பதற்கு மேற்கோள் ‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ? ‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ? ‘ப்ராது: – பின் பிறந்தவன்’யத்விநா பரதம் த்வாம்ச ஸத்ருக்நம் சாபி மாநத    பவேத் மமஸூகம் கிஞ்சித் பஸ்மஸாத்குரு தாம்ஸிகீ. -(ஸ்ரீராமா. அயோத். 97 : 8.) 2‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி, ‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? எல்லா ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது? ‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பியகாரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’

தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்
தம்தேவ தாநாம்பரமம் ச தைவதம்.
பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத்
விதாம தேவம் புவனேஸம் ஈட்யம்.–ஸ்வேதாஸ்வதர உபநிடதம், 6. –
அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ?

அந்தமில் புகழ்’ என்கிறது.ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ. (ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.), 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு

 எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?’ என்றதிற்காட்டில் ஏற்றமாகச் சொன்ன பொருள் என்?’ என்னில், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ற இடத்தில் ஏற்றங்கண்டோம்; அதைப்போன்று, ‘எல்லா உலகுந்தொழும்’ என்பதனைக் காட்டிலும் ‘தீதில் சீர்த்திருவேங்கடத்தான்’ என்ற இடத்தில் ஏற்றம் யாது?’ எனின், ‘என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு,(ஸ்ரீராமா. அயோத். 59 : 3. இது, சுமந்திரன் கூற்று.) 5‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்

எண் இல் தொல் புகழ்–யதா ரத்நாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்ரக
ததா குணாஹி: அநந்தஸ்ய அஸங்க்யேயா மஹாத்மந:
ஸ்வேதாஸ்வதர உபநி. 6.–சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்துமாவான பகவானுடைய குணங்களும் அளவிறந்தன,’ என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய. வானவர் ஈசன் – குணங்களை அனுபவிப்பித்து நித்தியசூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன்

அமர்யாத: க்ஷூத்ர: சலமதி: அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஸ: வஞ்சநபர:
ந்ருஸம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹம் இத: துக்கஜலதே:
அபாராத் உத்தீர்ண: தவபரிசரேயம் சரணயோ:

தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்; சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்; ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்; அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது ‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்; நன்மை சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்; உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்; அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்; அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்; புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும் அபகரிப்பவன்; ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்; இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக் காரியம் பார்ப்பவன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்1‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான். ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி. ‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் 2இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

சோதியாகி – தனக்குமேல் ஒன்று இல்லாத பேரொளியுருவமான திருமேனியையுடையவனாய்.- தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதா தரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63. 
வன்மையுள்ள பேரொளிகளின் கூட்டமாயுள்ள அந்த விஷ்ணு’

‘ஒளியாகில் சிவந்தன்றோ இருப்பது? நீல நிறத்தையுடைய திருமேனியைச்  சிவந்த சோதியாகச் சொல்லக் கூடுமோ?’ என்ன, திருமேனிக்கு
நீலநிறமுமுண்டு, ஒளியுமுண்டு: இரண்டும் ஒன்றை ஒன்று விட்டிரா; இரண்டும்  உண்டானாலும் ஒளியே விஞ்சியிருக்கும் என்னுமதனை வேத
வாக்கியத்தைக்கொண்டு விளக்குகிறார்

தஸ்ய மத்யே வஹ்நி ஸிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித:
நீல தோயத மத்யஸ்தாத் வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தந்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா.தைத்திரீய நாராயண உபநி. 11. –
நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னற்கொடி போன்று ஒளியுடன் கூடியதாயும், நீவாரதானியத்தின் வால் போன்று மெல்லியதாயும், உருக்கிய தங்கம் போன்று காந்தியையுடையதாயும் இருக்கிற ஒரு சிகையிருந்தால், அது பரமாத்துமாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம்’ ஆக  இவ்விரண்டு நிறத்தையும் தனித்தனியே பார்த்தால், ‘இதுவே ஸ்வரூபம்,  இதுவே ஸ்வரூபம்’ என்னும்படி தோன்றும் என்பதாம். ‘மயிலின்  கழுத்தைப்போன்று இருக்கும்’ என்றபடி.இதனால், சிரமத்தைப் போக்கும் வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்கும் என்கையும், அப்புகர்தன்னைச் சிரமத்தைப் போக்கும் வடிவு தன்னுள் அடக்கிக்கொண்டிருக்குமென்கையும் போதரும். இத்தால், ‘ஒன்றையொன்று விடாதே இரண்டும் வேறொன்றை வேண்டாதிருக்கும்’ என்றபடி. ஆயினும், ‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னல் போன்று’ என்று கூறி, ‘உருக்கின தங்கம் போன்று காந்தியையுடையதாய்’ என்றும் கூறுதலின், ஒளியே விஞ்சியிருக்கும் என்பது போதருதலின், இவரும் ‘சோதியாகி’ என்கிறார்.

த்ருஷ்ட்வா க்ருஷ்ணம் ததாயாந்தம் ப்ரதபந்தம் இவ ஓஜஸா
யதார்ஹம் கேஸவே விருத்திம் அவஸா: ப்ரதிபேதிரே.(பாரதம், சா பர். 75.)
கிருஷ்ணனிடத்தில் பரவசப்பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோமல்லோம் என்ற நினைவினைச் செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார்-சோதியாகையாலே எல்லா உலகும் தொழும்  என்கிறார்,’ என்றபடி.

கங்கை மகன்கதி ரோன்மகன் அம்பிகை காதன் மகன்தனயர்
அங்கவை யின்க ணிருந்த நராதிப ரடைய எழுந்தடைவே
செங்கை குவித்த சிரத்தின ராயுணர் வொன்றிய சிந்தையராய்
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே.’-  (வில்லிபா. கிருஷ். 211.)

பிறஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன–யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாகாநி ஜீவந்தி
யத் ப்ரயந்தி அபி ஸம்விஸந்தி தத் விஜிஞ்ஜாஸஸ்வ தத் ப்ரஹ்ம–தைத்திரீய. பிருகு. 1.-
எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது

அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, காரணம்து த்யேய:-(அதர்வசிகை.)2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும்,யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்    யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை. (ஸ்வேதாஸ்வதரம்.)3‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.

 இனி, ‘அளவாகாது’ என்று சொல்லும்போதும் சிறிதளவு சொல்லிப் பின்னர்,. (தைத்திரீய ஆனந். 9 : 1.)4‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் மீளுகின்றனவோ என்னும் வேதம் வேண்டாவோ?’ என்கிறார்

மேல்; வேதியர் முழு வேதத்து அமுதத்தை –ஸாஹி ஸ்ரீ: அம்ருதா ஸதாம். (யஜூஷி.)5‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது,’ என்கிறபடியே, வேதங்களைச் செல்வமாகவுடைய பிராமணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை.ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத் (தைத்திரீய. பிருகு. 6 : 1.)6‘பிரஹ்மம் ஆனந்தமானது’, ரஸோ வை ஸ:(தைத்திரீய உபநி.)7‘அந்தப் பிரஹ்மமானது ரச மயமாய் இருக்கிறது,’ என்பன உபநிடத வாக்கியங்கள்

வேதியர் முழுவேதத்து அமுதத்தை’ என்பதற்கு இரண்டு வகையில்  பொருள் அருளிச்செய்கிறார்: முதலது, ஸ்வரூபத்தில் இனிமை; இரண்டாவது குணத்தில் இனிமை

ஸர்வே வேதா யத் பத்மாமநந்தி தபாம்ஸி
ஸர்வாணி ச யத்வதந்தி, யத் இச்சந்த: ப்ரஹ்ம சர்யம்
சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேண
ப்ரவீமி ஓம் இதி.-கடோபநிடதம், 1. 2 : 15.
எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும்–ஸர்வே வேதா யத்ர ஏகம் பவந்தி.-தைத்திரீய ஹோதாரே. ஆர. பிர. 3.-எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்-எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் நானே’ (ஸ்ரீகீதை, 15 : 15.)என்றும் வருகின்றவாற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற ஆனந்த குணத்தை யுடையவனை என்னுதல்

என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு,-குஹேந ஸார்த்தம் தத்ரைவ ஸ்தித:    அஸ்மி திவஸாந் பஹூந், ஆஸயா யதி வா ராம: புந:  ஸப்தாபயேதிதி.–(ஸ்ரீராமா. அயோத். 59 : 3. இது, சுமந்திரன் கூற்று.)பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே நிற்கிறான் என்பதனைத் தெரிவித்தமையால், அவ்வாறு நிற்றலே ஓர் ஏற்றம் என்க

பாதுகாக்கிறவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் பெற்ற அளவிற்கு மனநிறைவு வருதல் பாதுகாத்தலுக்குக் குற்றமாமாதலின், ‘தீதில்சீர்’ என்கிறார் என்னுதல்;அஸந்துஷ்ட: த்விஜோ நஷ்ட: ஸந்துஷ்ட: க்ஷத்ரியஸ்ததா   ஸலஜ்ஜா கணிகா நஷ்டா நிர்லஜ்ஜாச குலாங்கநா. 1‘க்ஷத்திரியன் பெற்றதைக்கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்,’ என்பது பொதுவான தர்மம்.-சுலோகத்தின் பொருள்  :- ‘பிராஹ்மணன் பெற்றதற்கு
மகிழானாயின், நஷ்டமடைவான்; அப்படியே, க்ஷத்திரியன் பெற்றதைக்  கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்; பொதுமகள்  நாணத்தை யுடையவளாயின் நஷ்டமடைவாள்; நற்குலப்பெண் நாணத்தை  விடுவாளாயின் குற்றமுடையவளாவள்,’ என்பது

கடங்கள் வேம்த்ரிபி: ருணவா ஜாயதே ப்ரஹ்மசர்யேண ருஷிப்ய:    யஜ்ஞேந தேவேப்ய: ப்ரஜயா பித்ருப்யா.(யஜூஷி காண்டம், 6.)2‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும்,ருணாநி த்ரீணி அபாக்ருத்ய மநோ மோக்ஷே நிவேஸயேத்    அநபாக்ருத்ய மோக்ஷம்து ஸேவமாநோ வ்ரஜத்யதா:(மநு ஸ்மிருதி, 6 : 35)3‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’தத் அதிகம உத்தர பூர்வாகயோ: அஸ்லேஷ விநாஸௌ  தத் வ்யபதேஸாத். (பிரஹ்ம சூத்திரம், 4. 4 : 13.)என்றும்  சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள்வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி.

 ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே     ய ஏதமேவம் வித்வான் அக்நிஹோத்ரம் ஜூஹோதி (சாந்தோக்கிய உபநிட. 5 -25.)ஞானத்தை யடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ என்றும்-இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும் நெருப்பிற்போடப்பட்ட பஞ்சு தூசி  போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும் சொல்லுகிறபடியே ‘வேம் என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற்போய்விடுகையும் சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற்போதலைச் சொல்லிற்றாகவுமாம்.

யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம்.இப்படிச் செய்கின்றவனுடைய எல்லாப் பாவங்களும் அழிகின்றன ‘என்பது உபநிடத வாக்கியம். ‘

பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம.(யஜூஷி)நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?

கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் க்ருஷ்ணமாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவமே ஹ்ருதயாத் ந அபஸர்பதி.( பாரதம் உத்தியோக பர். 58 : 22.)
திரௌபதி வெகுதூரத்தில் வசிக்கின்ற என்னைக் ‘கோவிந்தா!’ என்று கூவி அழுதாள் என்பது யாதொன்று உண்டு; அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே-நினைத்திருக்கை மாத்திரமன்றி, அநுஷ்டானமும் உண்டு,’ என்கிறார்-, ‘கோவிந்தா!’ என்று நம் பேரைச் சொன்னாள்; நாம் ஒன்றும் செய்திலோம் என்று அவளைக் கொண்டாடி, தன்னை நிந்தித்துத் திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனன்றோ? அப்போது சபையில் பிறந்த பரிபவம் நீக்கப்பட்டிருந்தும், ‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங்காட்டப் பெற்றிலோம்’ என்று தான் உள்ளதனையும் இழவுபட்டிருந்தான் என்றபடி. ‘இழவுபடுகிறது என்? காரியம் செய்யப்படவில்லையோ?’ எனின், 3‘நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான். ‘

நங்கட்கு – கைங்கரிய ருசியையுடைய நமக்கு. சமன் கொள் வீடு தரும் –ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி.(முண்டக உபநிட, 3 : 2.)3‘பிரஹ்மத்தையறிந்தவன் பிரஹ்மம்போல ஆகிறான்,’ என்றும்-ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந:    பரமம் ஸாம்யம் உபைதி.(முண்டக உபநிட. 3. 1 : 3.)4‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’ என்றும், இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யம் ஆகதா:(ஸ்ரீ கீதை, 14 : 2.)5‘இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’ என்றும், 6‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ (பெரிய திருமொழி, 11. 3 : 5.)என்றும் சொல்லுகிறபடியே, அவன், ‘அவனோடு

சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்  செய்கிறார். முதற்பொருளும், மூன்றாவது பொருளும் சாம்யாபத்தி ரூபமான
மோக்ஷம் என்பது. இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான  மோக்ஷம் என்பது. சமம் – ஒத்தல்; தகுதி.–ஏஷ ஸம்ப்ரஸாத: அஸ்மாத் ஸரீராத் ஸமுத்தாய  பரஞ்ஜ்யோதி:   உப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே.–. சாந்தோக்யம்.-இவ்வாத்துமாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே,

தடங்குன்றம் – திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை–ஸூபக: சித்ரகூடோயம் கிரிராஜோபமோ கிரி:    யஸ்மிந் வஸதி காகுத்ஸ்த்த: குபேர இவ நந்தநே.-ஸ்ரீராமா. அயோத். 98 : 123ஸீபக: – வீறுடைத்தாயிருக்கை. கிரிராஜ உபம: – திருமலையோடு ஒத்திருக்கை. யஸ்மிந்வஸதி – அதற்கு ஏது சொல்லுகிறது. காகுஸ்த்த: – போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு? குபேர இவ நந்தநே – தன்  அரண்மனையை நீங்கித் துஷ்ட மிருகங்கள் நிறைந்த நந்தவனத்திலே துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன் போது போக்குகைக்காகத் தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’

விசித்ரா தேஹ ஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்    பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.–விஷ்ணு தத்துவம்.–ஓ பிரமனே! திருமகள் கேள்வனை வணங்கும்பொருட்டு, கை கால் முதலிய உறுப்புகளுடன் கூடின விசித்திரமான இச்சரீரம் முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது’ என்கிறபடியே, ‘சர்வேசுவரன் இவ்வாத்துமாவிற்குச் சரீர சேர்க்கையைக் கொடுத்தது, நரகத்திற்குக் காரணமான விஷயங்கள் இருந்த இடம் தேடிப் போகைக்காக அன்று; திருமலைக்குப் போகைக்கு’ என்கிறார்.-சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது? வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்; சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்; அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.

ஸ்ருஷ்ட:த்வம் வநவாஸாய ஸவநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே  ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.ஸ்ரீராமா. அயோத். 40 : 5. அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

அன்னான் அவர்தங் தனஆ தரத்தோடும் ஏந்தி
இன்னா இடர்தீர்ந் துடனே கெனஎம்பி ராட்டி
சொன்னா லதுவே துணையா மெனத்தூய நங்கை
பொன்னார் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்.

  ‘ஆகாத தன்றா லுனக்கவ் வனம்இவ் வயோத்தி
மாகாத லிராமன் நம்மன் னவன்வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம்பூங் குழற்சீதை என்றே
ஏகாய் இனிஇவ் வயின்நிற் றலும்ஏதம் என்றான்.

  ‘பின்னும் பகர்வாள்: மகனே யிவன்பின்செல்; தம்பி
என்னும் படியன்று; அடியா ரினில்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்வந் திடின்வா; அதன்றேல்
முன்னம் முடிஎன் றனள்பால் முலைசோர நின்றாள்.’(கம். அயோத். 150-152)

 முத்தன் 3‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின், அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம். ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள் என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு வேற்றுமை அற அனுபவிக்கப்படும்

அந்யத் பூர்ணாத் அபரம் கும்பாத் அந்யத் பாதா வநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஸ்நாத் நசேச்சதி ஜநார்தந:– பாரதம், உத்தியோக பர். 87 : 13.–
ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே, எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றதுகொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்; 4புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனேயன்றோ அவ்விறைவன்,

த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம்    பரிஷஸ்வஜாதே
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந்     [அந்யோ அபிசாகஸீதி.-இருக்கு வேதம்.–
சிறைக்கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாயிருந்தது. 1‘ஆத்துமாவும் இறைவனும் ஒரு சரீரத்தைப் பற்றித் தங்கியிருக்கின்றார்கள்; அவர்களுள் ஆத்துமாவானது கர்ம பலத்தை அனுபவிக்கின்றது; இறைவன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்பது மறை மொழி.ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப்பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகரையுடையவனுமாய்-அவை அல்லனாய் – கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய்; 4‘வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்

பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ! இனி,பத்ப்யாம் பூமி: 2‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.முதற்பொருளில், ‘பொரு இல்’ என்பது, சீர்க்கு அடை; இரண்டாவது  பொருளில், பூமிக்கு அடை.

இகழ்வு இல் இவ்வனைத்தும் என்கோ – ஒன்று ஒழியாமே எல்லாம் என்பானோ! யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹம் அர்ஜூந   நததஸ்தி விநா யத்ஸ்யாத் மயா பூதம் சராசரம்.(ஸ்ரீ கீதை, 10 : 39.)3‘எல்லாப் பூதங்களுக்கும் காரணமான வித்து யானே; என்னை அன்றிச் சராசரங்கள் இல்லை,’ என்றான் இறைவனும். இனி, இவைதாம் சில பொருள்களாகத் தோன்றுகை யன்றிக்கே அவனுடைய செல்வமாகத் தோன்றுகையாலே, விடத்தக்கது ஒன்றுமின்றிக் கொள்ளத்தக்கனவாகவே இருத்தலின், ‘இகழ்வு இல்’ இவ்வனைத்தும்’ என்கிறார் என்னுதல்.–இகழ்வில்’ என்பதற்கு, ‘ஒன்றும் ஒழியாமல்’ என்றும், ‘இகழ்ந்து  தள்ளப்படாத’ என்றும் இரு வகையான பொருள் கொள்க.

அவனுக்கேயுரிய நாமத்தையிட்டுக் கண்ணனைக் கூவவொண்ணாதோ? ‘பூமி’ என்பான் என்?’ எனின், ஸகேதி மத்வா ப்ரஸபம்யதுக்தம் ஹே க்ருஷ்ண
ஹே யாதவ ஹே ஸகேதி.
அருச்சுனன், ‘ஏ கிருஷ்ண’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.

 வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி: பூர்யதே.‘வேதாந்தத்தைக் கேட்பதனால்தான் ஞானம் நிறைவு பெறுகின்றது,’ என்னா நின்றதன்றோ? இதனால், எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

 யத் யத் விபூதிமத் ஸத்வம் ஸ்ரீமத் ஊர்ஜிதமேவ வா    தத் தத் ஏவ அவகச்ச த்வம் மம தேஜோம்ஸ ஸம்பவ–ஸ்ரீ கீதை, 10 : 41.–இவ்விபூதியிலும் 3‘விபூதியோடு கூடினவும் செல்வத்தையுடையனவும் நல்ல காரியங்களைச் செய்ய முயற்சி செய்வனவுமான பொருள்கள் எவை எவை உளவோ, அவையெல்லாம் என்னுடைய தேஜஸ்ஸின் ஒரு கூற்றிலிருந்து உண்டானவை என்று நீ அறிவாயாக,’ என்கிறபடியே, எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.சாதி மாணிக்கம் என்கோ-இத்யாதியால்

ஆதி அம் சோதி என்கோகார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்யம் உத்தமம்    யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது:–ஜிதந்தா.–1‘பரமபதத்தைக் காரியங்களுக்கெல்லாம் முற்பட்ட காரணமாக அறிகின்றார்கள்’ என்கிறபடியே, இவ்வருகுண்டான காரியங்களுக்கெல்லாம் தான் காரணமாய், இவற்றினுடைய தோற்றத்திற்கு முன்னே உண்டாய்த் தான் ஒரே தன்மையாய்ச் ( பாரதம், ஆரண்யபர்வம்.)2சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகின்ற பரமபதம்’ என்கிறபடியே, எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாகவுடையவன் என்பேனோ! ‘ஆயின், பரமபதம் காரணமானபடி என்?’ எனின், (காரிய நியத பூர்வ விருத்தி காரணம் – காரியத்திற்கு இன்றியமையாததாய்  முன் கணத்திலே இருக்கக் கூடியதாயிருப்பது காரணம்,’ என்று  காரணத்திற்கு இலக்கணம் கூறப்படும்.)3காரியத்துக்கு நியமமாக முன் கணத்தில் இருப்பது ஒன்றற்கன்றே காரணமாம் தன்மை உள்ளது? அன்றி, ஆதி என்கிறது, அஸ்த்ர பூஷண அத்தியாயத்தின்படியே சொல்லிற்றாகவுமாம். என்றது, 4ஸ்ரீ வத்சரூபத்தாலே பிரகிருதி அமிசத்தைத் தரிக்கும் என்றும், ஸ்ரீ கௌஸ்துபத்தாலே உயிர்களின் கூட்டத்தைத் தரிக்கும் என்றும் சொல்லா நின்றதே

‘புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்   பிரகிருதி மறுவாக மான்தண் டாகத்
தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள்   சார்ங்கஞ்சங் காகமனம் திகிரி யாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்க ளாக    இருபூத மாலைவன மாலை யாகக்
கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன்   கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கின் றானே.’

மொய் கொள் சோதியோடு ஆயினான்அத்யார்க்காநல தீப்தம் தத்ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:    ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை:(பாரதம் ஆரண்ய பர்வம்.)3’சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்ரீ வைகுண்டம்’ என்கிறபடியே, செறிந்துள்ள ஒளியை உடைத்தான நித்திய விபூதியையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.  சுடர் ஒளியாய் நின்ற–சூரியன் சந்திரன் அக்கினி இவர்களைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டமானது தன்னுடைய ஒளியினாலே தேவர்கள் முதலியோர்களாலும் காண்டற்கு அரியதாகி விளங்குகிறது,’ என்கிறபடியே, ஆயிரம் கோடி அக்கினி ஆதித்தியர்களுடைய ஒளியை ஓடவைத்து ஒரு தேசமாக வகுத்தாற் போலே இருக்கையாலே இவர்களுக்குக் கண்கொண்டு பார்க்க வொண்ணாது;

சமய நீதி நூல் என்கோ – வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான இதிகாச புராணங்கள் என்பேனோ! இவை வேதங்களின் பொருள்களை விரித்துக் கூறுவனவாதலின், ‘நீதி நூல்’ என்கிறார். நீதி – நிர்வாஹகம்.இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுப ப்ருஹ்மயேத்    பிபேதி அல்ப ஸ்ருதாத் வேதோ மாம் அயம் ப்ரதரிஷ்யதி.(பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.)4‘வேதமானது இதிகாசங்களாலும் புராணங்களாலும் விவரிக்கப்பட வேண்டியது’ என்பது ஸ்மிருதி வாக்கியம்.

மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந    தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்(ஸ்ரீராமா. யுத். 18 : 3. இது, ஸ்ரீராமபிரான் கூற்று.)    சினேகிதன் என்று நெருங்கி வந்த இவனை, என் உயிருக்குக் கேடு வருவதாக இருப்பினும் விடமாட்டேன்; அவனிடம் தோஷம் இருப்பினும் இருக்கட்டும்; இந்த விபீடணனை ஏற்றுக்கோடலைப் பெரியவர்கள் நிந்திக்கமாட்டார்கள்,’ என்னும் தானும்–இறைவன், ரக்ஷிக்கைக்கு (ஸ்ரீராமா. யுத். 18 : 33.)1‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார்.

 மற்றினி யுரைப்ப தென்னை? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி யன்ன தன்றெனில் பிறிதொன் றானும்
வெற்றியே பெறுக தோற்க வீகவீ யாது வாழ்க
பற்றுத லன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின் றானை?’–  என்றார் கம்ப நாட்டாழ்வார்

‘நான் இருக்கிறேன் நீ துக்கப்படாதே’ என்று அருச்சுனனை நோக்கிக் கூறியவன், உடனே இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந   நாச ஸூஸ் ரூஷவே வாச்யம் நசமாம் யோப்யஸூயதி.-ஸ்ரீ  கீதை, 18 : 67. 4‘உனக்கு ஞானமுண்டாகும் நிமித்தமாகச் சொன்ன இந்தக் கீதை, தவஞ்செய்யாதவனுக்கும் பத்தி இல்லாதவனுக்கும் சிரத்தை இல்லாதவனுக்கும் என்னிடத்தில் அசூயையுடையவனுக்கும் உபதேசிக்கத் தக்கதன்று,’ என்று கூறினானாதலின், ‘அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ!’ என்கிறார். 1‘‘இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே  ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத் ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே   ஸூபாத். ( இது, ஸ்ரீ கீதை. 9 : 1.) எதனை அறிந்து அநுஷ்டித்துப் பாவங்களினின்றும் விடுபடுவாயோ,  அப்படிப்பட்ட அதிரகசியமான பத்தி ரூபமான உபாசனை என்கிற  பெயரையுடைய ஞானத்தை அசூயை இல்லாத உன்பொருட்டு நன்றாகச் சொல்லுகிறேன் -நம்முடைய சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை; உன்தனை அதிகாரிகளைக் கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானே யன்றோ ஸ்ரீ கீதையில்– 2‘இதம் தே நாத பஸ்காய’ என்ற சுலோகத்தையும் முன்னரன்றோ சொல்லல் வேண்டும்? அங்ஙனஞ்செய்யாது, ‘சர்வ தர்மாந்’ என்ற சுலோகத்தை முந்துறச் சொல்லிப் பின்னர், ‘இதந் தே நாத பஸ்காய’ என்றான்; இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று 3பதண்பதண் என்றான்காணும்,’ என்று அருளிச்செய்தார்.

மாயன் என்கோ – அடியார்கட்குத் தூது போதல் சாரதியாதல் முதலியவற்றைச் செய்யும் ஆச்சரியத்தையுடையவன் என்பேனோ!க்ருதார்தா புஞ்ஜதே தூதா: பூஜாம் க்ருஹ்ணந்தி சைவஹி  க்ருதார்த்தம் மாம் ஸஹாமாத்ய: த்வம் அர்ச்சிஷ்யஸி பாரத.(பாரதம், உத்தியோகபர்வம்.) 4‘தூதர்கள் தாம் வந்த காரியம் முடிந்த பின்னர்த் தூது வந்த வீட்டில் உண்பர்கள்; ஆதலால், யானும் வந்த காரியம் முடிந்த பின் உன் வீட்டில் உண்கிறேன்,’ என்று கூறியதனால் தூது சென்றமை உணரலாகும்.

என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
மின்னின் முன்னிலகு விறல்நெ டும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்;
உன்னி வின்னமுள தொன்று: பஞ்சவ ருரைக்க வந்தவொரு தூதன்யான்;
நின்னி லின்னடிசி லுண்டு
நின்னுடன்வெ றுக்க எண்ணுவது நீதியோ?’–பாரதம், உத்தியோகபர்வம்.–வில்லி பாரதச் செய்யுள்

வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ–நித்திசூரிகளுக்கு ‘எல்லாம் கண்ணன்’ என்கிறபடியே, எல்லாம் தானேயாய் இருப்பான்; அவர்களும்     வாஸூ தேவ: ஸர்வம்.-‘எல்லாம் வாசுதேவனே’ என்கிறபடியே, ‘எல்லாம் வாசுதேவனே’ என்று நினைத்திருப்பார்கள்;-அவர்களுக்கு 3உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாமானவன் என்பேனோ! -தாரக போஷக  போக்கியங்கள் எல்லாம் தானேயாக இருப்பான்,’அவர்களுக்குச் சொல்லப்படாத எல்லாப் பொருள்களும் என்பேனோ என்றபடி

விபூதி விஷயமாகப் பரக்கச் சொல்லிக்கொண்டு போந்து ஹந்த தே கதயிஷ்யாமி விபூதி: ஆத்மந: ஸூபா:  ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்யமே.–ஸ்ரீ கீதை, 10 : 19.2‘அருச்சுனா! முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன்; ஏனென்றால், என் விபூதியின் விரிவிற்கு முடிவு இல்லை,’ என்றானன்றே? அப்படியே, இவரும் மேலே சிலவற்றைச் சொல்லி, ‘இவனைச் சொல்லும் வகையினை அறிகின்றிலேன்,’ என்கிறார்.

முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே–அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்;   அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:(தைத்திரீய உபநி. பிருகு. 10.) 4‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று களியாநிற்பர்கள் அன்றோ? அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ?

ஆவித்யத் அஜிநம் ஹ்ருஷ்ட: பவிஷ்யத் பூத ஜல்பக:  ஸர்வ ஸம்ஸய நிர்முக்த: நாரத: ஸர்வதர்மவித்.(பாரதம், ராஜசூ. 21.)–இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும், ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர் முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகா நிற்பர்கள் அன்றோ?

விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து,இஷ்டம் மதுவநம் ஹிஏதத் பக்ஷயிஷ்யத வாநரா:
அஹம் ஆவாரயிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:
 2‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’    (விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க, ‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது,- நைஷாம் அக்ருத க்ருத்யாநாம் ஈத்ருஸ: ஸ்யாத் உபக்ரம:(ஸ்ரீராமா. சுந். 63 : 15. )3‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும் பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்கவொட்டாமல், வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. 1நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று, ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

ஏம்பலோ டெழுந்துநின் றிரவி கான்முளை
பாம்பணை அமலனை வணங்கிப் பைந்தொடி
மேம்படு கற்பின ளென்னும் மெய்ம்மையைத்
தாம்புகன் றிட்டதிச் சலமென் றோதினான்.

  ‘பண்டரு கிளவியாள் தன்னைப் பாங்குறக்
கண்டன ரன்னதோர் களிப்பி னாலவர்
வண்டுறை மதுவன மழித்து மாந்தியது
அண்டர்நா யக!இனி அவலம் தீர்கெனா.’  என்ற செய்யுள்களை ஒப்பு நோக்கலாகும்.

மேலும், ‘ஏம்பலோடெழுந்து’   என்ற பகுதியில், அப்போதுண்டான மகிழ்ச்சி இருந்த இடத்தில் இருக்க  வொட்டாமல் வாலானது ருஸ்யமுக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று   அறைந்ததாயிற்று,’ என்ற வியாக்கியானத்தின் கருத்துத் தொனித்தல்   காணலாகும்.

என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சித் தாழா
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்.’-  என்றும்,

  ‘போயினர் களிப்பி னோடும் புங்கவன் சிலையி னின்றும்
ஏயின பகழி என்ன எழுந்துவிண் படர்ந்து தாவி’- என்றும் வரும் கவிச்சக்கரவர்த்தியின் வாக்குகள்

பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்றகஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே    தயோ: த்வந்த்வஸமம் யுத்தம் திவ்யம் வர்ஷஸஹஸ்ரகம்:–விஷ்ணு தர்மம்.–5தன் நிலம் அல்லாமையாலே வேறுபட்ட சாதியது ஒன்றன் கையிலே அகப்பட்டது; வெளி நிலமாகில் யானையே வெல்லுமன்றோ? யானைக்கு யானை யன்று; யானைக்குச்சிங்கம் அன்று; அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.

யானையின் காலில்    ஸ்தலஸ்தம் தாரயாமாஸ க்ராஹம் சக்ரேண மாதவ: (விஷ்ணு தர்மம்.) 2விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ அன்றோ? ஆக முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே தொட்டு, 3திருமால் சக்கரத்தால் முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, அதனுடைய 4கிராஹத்தைப் போக்கி நின்ற நிலையைத் தெரிவித்தபடி.-ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ, தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது? அங்ஙனம் உதவி செய்யும் அந்நீர்மையை அநுசந்தித்தால், விகாரமில்லாத வராயிருப்பவர்கள் மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’ என்கிறார்.

தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.தே வயம் பவதா ரக்ஷ்யா பவத்விஷய வாஸிந:    நகரஸ்தோ வநஸ்தோவா த்வம்நோ ராஜா ஜநேஸ்வர:(ஸ்ரீராமா. ஆரண்ய. 1 : 20.) 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பது ஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று. ஆக, ‘இவர்கள், தங்கள் கண் வட்டத்திலே உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலிவர்கள்,’ என்பதாயிற்று

இறைவன், ரக்ஷிக்கைக்கு–ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே  அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் விரதம் மம.( ஸ்ரீராமா. யுத். 18 : 33.)-1‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, –இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்குவிரதம்’ என்கிறானோ?

தத: ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜயஹர்ஷிதா
அவோசத் யதி தத்தத்யம் பவேயம் ஸரணம்ஹி(ஸ்ரீராமா. சுந். 58 : 44.)-
திரிசடை சொன்னவைகள் உண்மையாக இருக்குமேயாயின், அபயம் தந்து உங்களைப் பாதுகாக்கிறேன்,’ என்னுமவளும் கூட இருந்து எண்ணுவார்கள் ஆயிற்று.

கதாந் பஸூநாம் ஸஹ்ஜன்ம பந்துதாம்    க்ருஹாஸ்ரயம் ப்ரேம வநேஷூபிப்ரத: ததர்ஸ கோபாந் உபதேநு பாண்டவ:  க்ருதாநுகாராந்இவ கோபி: ஆர்ஜவே.–பசுநிரைதன்னைத் தொலைவு தவிர்த்த’ என்பான் என்?’ என்னில், 2பாதுகாக்கப்பட்டவர்களில் பிரதானரைச் சொல்ல வேணுமே? செய்த உபகாரத்தை அறிந்திருப்பாரைச் சொல்ல வேணுமே! ஆதலால், சொல்லுகிறது. ‘பசுக்களால் பரிகாசம் பண்ணப்பட்டவர்கள் போல இருக்கிற ஆயர்கள்’ என்கிறபடியே, ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களேயன்றோ?

அவாகீ அநாதர:–சாந்தோக்ய உபநிடதம், 3 : 4, மௌனமாக இருப்பவன், ஒன்றிலும் ஆசை இல்லாதவன்,’ என்கிறபடியே, இருக்கக்கூடிய பரம்பொருள்,

யஸ்த்வயா ஸஹ ஸ ஸவர்க்க: நிரய: யஸ்த்வயாவிநா    இதி ஜாநந்பராம் ப்ரீதிம் கச்ச ராம மயாஸஹ.–ஸ்ரீராமா. அயோத். 30 : 18.-ஸ்ரீராமா! உம்மோடு கூடியிருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது நரகம்,’ என்றார்

ஸ்ரேயாம்ஸி பஹூவிக்நாநி பவந்தி மஹதாமபி
அஸ்ரேயஸி ப்ரவ்ருத்தேது குத்ரயாந்தி விகாதகா:

தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே.

தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு  போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’ என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன  துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று  கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,  கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு  வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே  போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்  சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை  எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான  ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.  பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்  சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’  என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –  தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்  குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க  என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று  அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்   கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று   ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; கிம் த்வாமந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப: ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்.(ஸ்ரீராமா. அயோத். 30 : 3.)‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’  என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்   திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்  பிராட்டி அணைக்க நின்றபடி.

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு – சாது சனத்தை நலிந்த கஞ்சனை அழிக்கைக்காக; ‘சாதுசனம்’ என்றது, ஸ்ரீ வசுதேவரையும் தேவகியாரையும். ‘கஞ்சன் இவர்களை நலிந்தானோ?’ எனின், பத்மபத்ர விஸாலாக்ஷ: க்ருத்வாத்மாநம் சதுர்விதம்    பிதரம் ரோசயாமாஸ ததா தஸரதம் ந்ரூபம்.(ஸ்ரீராமா. பாலகாண். 77 : 26.)2‘தந்தையாக அடைய வேண்டும் என்று நிச்சயித்தார்’ என்று தான் அவதரிக்க நினைத்த இவர்களையன்றோ அவன் நலிந்து நெடுநாள் சிறையிட்டு வைத்தது? பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாயச துஷ்க்ருதாம்   தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே.(ஸ்ரீகீதை, 4 : 8.)3‘சாதுக்களுடைய நலத்திற்காகவும் துஷ்டர்களுடைய நாசத்திற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்தும்பொருட்டும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்’ என்கிற பிரமாணப் பிரசித்தியைப் பற்ற ‘சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்குப் பிறந்த வேத முதல்வன்’ என்கிறார்.

அங்கு வைத்து இங்குப் பிறந்த – அங்கு இருந்தபடியே வைத்துக்கொண்டு இங்கே வந்து பிறந்த;அஜோபிஸந் அவ்ய்யாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா.(ஸ்ரீகீதை, 4 : 6.)
4‘என்னுடையதான தன்மையை நிலைக்களமாகக் கொண்டு என்னுடைய சங்கற்பத்தினால் அவதரிக்கிறேன்,’ என்றான் ஸ்ரீ கீதையில். ‘நித்திய விபூதியில் உள்ளார் 5அனுபவிக்கிறபடியே (அனுபவிக்கிற படியே’ என்றது சிலேடை; அனுபவிக்கிற பிரகாரமும்,  அனுபவிக்கிற திருமேனியும்.)லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்,’ என்றபடி.

படி – திருமேனி; 1‘படிகண்டு அறிதியே’,(முதல் திருவந். 85.) 2‘செவ்விப் படிக்கோலம்’ என்பன அருளிச்செயல்.(இரண்டாந்திருவந். 82.) 3‘பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்(பலபடிகளாலும்’, ‘ஒருபடியாலும்’ என்பனவும் சிலேடை) திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது? ‘ஆயின், பல படிகளால் அவதரிக்குமோ?’ எனின்,-அஜாய மாநோ பஹீதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.( யஜுர் வேதம்ஆ. பிர, 3. 8 : 17.  )4‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமலிருக்கிற சர்வேசுவரன் இச்சையடியாக அநேக விதங்களாக மற்றைய இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்,’ என்றும்,நதஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி: மாம்ஸமேதோஸ்தி ஸம்பவா (பாரதம்)5‘அந்தப் பரமாத்துமாவினுடைய சரீரமானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாயது அன்று,’ என்றும், ‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சதை கொழுப்பு எலும்பு இவைகளால் உண்டான இவ்வுலக சம்பந்தமான சரீரம் இல்லை,’ என்றும், திவ்யம் ஸ்தாநம் அஜரம் சாப்ரமேயம்    தூவிஜ்ஞேயம் சாகமை:கம்யம் ஆத்யம் கச்சப்ரபோ ரக்ஷச அஸ்மாந் ப்ரபந்நாந்  கல்பே கல்பே ஜாயமாந: ஸ்வமூர்த்யா.(பாரதம்)7‘கல்பந்தோறும் கல்பந்தோறும் உம்முடைய திருமேனியோடு அவதரித்தவராய் அடைந்தவர்களான எங்களைக் காப்பாற்றவேண்டும்,’ என்றும், 8‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்’ (பெரிய திருமொழி, 4. 9 : 8.)என்றும், 9‘பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம், போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டு உலாம் நீல நீர்மை’ (திருச்சந்தவிருத்தம், 44.)என்றும் சொல்லுகிறபடியே பல படிகளாலே அன்றோ திருவவதரிப்பது?‘பல விக்கிரஹங்களாலே’ என்றபடி. இப்படிப் பிறவா நின்றாலும்,ப்ராதுர்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா    நைஷ கர்ப்பத்வம் ஆபேதே நயோந்யாம் அவஸத் ப்ரபு:(பாரதம், மௌஸல பர்வம்) 6 10‘பிரபுவான கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோனியிலும் வசிக்கவில்லை’ என்கிற படியே, கர்ப்பத்தில் சம்பந்தமில்லை.

‘இதுதான் கூடுமோ?’ என்ன ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் 1‘அஜாய மாநோ பஹீதா விஜாயதே  தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.:( யஜுர் வேதம்ஆ. பிர, 3. 8 : 17.  ) என்ற சுருதியேயன்றோ?

மனிசரும் மற்றும் முற்றுமாய்இயம் வையூஹிவை ஸ்திதி: அதகில இச்சாவிஹ்ரு   தயே விபூதீநாம்மத்யே ஸூர நரதிரஸ்சாம் அவதரந்.–(வரதராஜஸ்தவம், 18.)2‘தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே, மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய். மாயப் பிறவி பிறந்த – ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன். கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது. ‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம்.

தாஸ்யம் ஐஸ்வர்ய வாதேந ஜ்ஞாதீநாஞ்ச கரோம்யஹம்  அர்த்தபோக்தாச போகாநாம் வாக்துருக்தாநிச க்ஷமே.(ஸ்ரீ கீதை, 9 : 1. )நம்முடைய சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை; உன்தனை அதிகாரிகளைக் கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானேயன்றோ ஸ்ரீ கீதையில்?

 முழுது உணர் நீர்மையினாரேஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாநம். ‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்: ஞானபலமான இது உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லையன்றே? ‘ஆயின், மனத்தின்கண் உள்ள ஞானத்தை அறிந்தவாறு என்?’ எனின், அவர்கள் சரீரத்தில் பிறந்த விகாரத்தைக்கொண்டே அவர்களுடைய ஞானமிகுதியை அறியலாம்.

பாண்டவர்களைப் பாதுகாத்தற்குக் காரணம், ‘நாங்கள் பந்துக்களையொழிய ஜீவிப்பது இல்லை’ என்றது. யேஷாம் அர்த்தே காங்க்ஷிதம்நோ ராஜ்யம் போகா: ஸூகாநிச  த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாந் த்யக்த்வா தநாநிச.(ஸ்ரீ கீதை, 1 : 33.)2’நம்மால் இராச்சியமும் போகங்களும் சுகங்களும் யாருக்காக விரும்பப்படுகின்றனவோ’ என்றபடியே, 3‘நாட்டார் பொருள் தேடுவதும் இராச்சியங்கள் சம்பாதிக்கிறதும் எல்லாம் பந்துக்களும் தாங்களும் கூட ஜீவிக்கைக்கு அன்றோ? ஆன பின்னர், நாங்கள் பந்துக்களைக் கொன்று ஜீவிக்கப் பார்க்கிலோம் என்னும் நீர்மையாலேயாயிற்று; அவர்கள் இங்ஙன் அன்றிக்கே, ‘இவர்களுக்கு 4ஒரு கோல் குத்து நிலமும் கொடுப்பது இல்லை; அவர்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவியோம்,’ என்ன, ‘இவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்தார்கள்; இவர்களை அழியச் செய்யாவிடின் விபூதியும் அழியும்,’ என்று பார்த்து அதற்குத் தகுதியாக ஒருப்பட்டான்,’ என்றபடி.

ஐவர்க்கு அருள் செய்து – தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்கு. க்ருஷ்ணாஸ்ரயா. க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாஸ்ச    பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜயோதிஷாமிவ சந்த்ரமா:(பாரதம், துரோண பர். 183. 24. )
5‘பாண்டவர்கள் கண்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கண்ணனையே துணையாக உடையவர்கள்; கண்ணனையே நாதனாக உடையவர்கள்; பூர்ணசந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாய் இருத்தலைப் போன்று, அந்தப் பாண்டவர்களுக்குக் கண்ணன் சிறந்த உபாயமாய் இருக்கிறான்,’ என்பது பாரதம். யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தந:
ஹரி: த்ரைலோக்யநாத: ஸகிந்து தஸ்ய ந நிர்ஜிதம்.(ராஜ சூய  யாகத்தில் சஞ்சயன் வார்த்தை.)
6‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனாத்தனனுமான கிருஷ்ணன், தர்மபுத்திரனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சினேகிதனாயும் இருப்பதனால், அந்தத் தருமனுக்கு வெற்றி கொள்ள முடியாதது யாது உளது?’ என்கிறபடியே, அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது

நினைந்து ஆடி – அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங்குணத்தை அநுசந்தித்து, அவ்வநுசந்தானம் இருந்தவிடத்தே இருக்கவொட்டாமையால் ஆடி. நீர் மல்கு கண்ணினராய்ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவாந்    ஸதா பர குணாவிஷ்ட: த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:(விஷ்ணு தத்துவம்.)2‘பகவானுடைய அனுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாய், மயிர்க்கூச்சோடு கூடின சரீரத்தையுடையனாய், எப்பொழுதும் பரமாத்துமாவின் குணங்களால் ஆவேசமடைந்தவனாய் இவ்விதமாய் எல்லா மக்களாலும் பார்க்கத் தக்கவனாய் இருப்பான் ஞானியானவன்,’ என்கிறபடியே, கண்ணநீரை இட்டு நிரூபிக்க வேண்டும்படியான கண்ணையுடையராய்.

வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.-இராவணன் —அந்யஸ்து ஏவம்விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிஸாசர அஸ்மிந் முஹூர்த்தே நபவேத் த்வாம்து திக் குலபாம் ஸநம்.-ஸ்ரீராமா. யுத். 16 : 15.3‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?

அவன்தன்னோடு ஒன்றாக அமரத் துணிய வல்லார்கள் ஒழிய – இறுதிக்காலத்தில் வந்தவாறே, அவனோடே இவ்வாத்துமவஸ்து சமானம் என்று புத்தி பண்ண வல்ல தாழ்ந்தவர்களை ஒழிய. ‘ஒன்றாக’ என்பதற்குச் ‘சமானமாக’ என்பது பொருள். ‘‘ஒன்றாக’ என்பது, சமானம் என்னும் பொருளைக் காட்டுமோ?’ என்னில், ஸர்வ பூதஸ்திதம் யோமாம் பஜதி ஏகத்வம் ஆஸ்தித:  ஸர்வதா வர்த்தமாநோபி ஸயோகீ மயி வர்த்ததே.(ஸ்ரீ கீதை, 6 : 31.-இது, கிருஷ்ணன் கூற்று )2‘எல்லாப் பொருள்களிலும் இருக்கிற என்னை எவன் ஒருவன் ஒன்றாக இருக்கும் தன்மையை அடைந்தவனாய்ப் பூஜிக்கின்றானோ, அவன் எப்பொழுதும் என்னிடத்திலே இருக்கிறான்,’ என்று ஒன்றாயிருக்குந்தன்மையைச் சொல்லி, பின்னர் அதுதன்னை மீண்டும் எடுத்துச் சொல்லும் இடத்தில்-யோயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந   ஏதஸ்ய அஹம் நபஸ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்.(ஸ்ரீகீதை, 6 : 33. இது, அருச்சுனன் கூற்று.) 1‘மதுசூதநா! எந்த யோகமானது சமமாக உள்ள தன்மை என்று உன்னால் சொல்லப்பட்டதோ, அது செய்ய முடியாததாய் இருக்கிறது,’ என்று ‘சமமாக உள்ள தன்மை’ என்று சொல்லப்பட்டதன்றோ? ஆக, இறுதிக்காலத்தில் இவ்வாத்துமா அவனோடு ஒத்த சுத்தியை உடைத்தாக நினைக்க வல்ல துணிவுள்ள கேவலரை ஒழிய’ என்றபடி.-இவ்விடத்தில், 31ஆம் ஸ்லோகத்தில் ‘ஏகத்துவத்தைச் சொல்லி,  அதனையே, 33ஆம் சுலோகத்தில் ‘சாம்யேந’ என்று கூறுவதால், ஒன்று  என்பதும், சமம் என்பதும் ஒரு பொருளைக் குறிப்பனவாம் என்றபடி. ‘

இராவணன் பிராட்டிபக்கல் 1‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் 2பிதற்றப் புக்கவாறே–யதா த்ருப்தஸ்ச மாதங்க: ஸஸ:ச ஸஹிதௌவநே    ததா த்விரதவத்ராம: த்வம் நீசஸஸவத் ஸ்ம்ருத:(ஸ்ரீராமா சுந். 22 : 16.) 3‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப்போல எண்ணப்படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து, பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? 4இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று இரக்கங்கொண்டு மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்சஅ நிச்சதா கோரம் த்வயா அஸௌ புருஷர்ஷப:(ஸ்ரீராமா சுந். 21 : 19.)
5‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன் தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று, இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :- ‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால்  அப்பையல் அதனைத் தனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே? அதற்காகத்  ‘தோழமை கொள்’ என்கிறாள். தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற்  காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்; ‘மித்ரபாவேந’ என்றும்,
‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும். ஸ்தாநம் பரீப்ஸதா  – வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே?
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற   வேணுங்காண். எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில்
பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ? வதஞ்சாநிச்சதா கோரம் –  அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன்
முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்   சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையேயாகிலும் அவரைப்
பற்ற வேணுங்காண். த்வயா – உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு   அவரைப் பற்றவேணும். அசௌ-உருவெளிப்பட்டாலே
முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு; அவனுக்கும் தானே மாயாமிருகத்தின்   பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும்
முன்னிலையாயிருப்பரிறே. புருஷர்ஷப:- ‘நான் பண்ணின அபராதத்துக்கு  என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை
ஒன்றாக நினைத்திரார்காண்; அவர் புருஷோத்தமர்காண். அசௌ  புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி யெனும்பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர்
வானரஞ் சுட்டதுஎன் றுணர்தல் மாட்சித்தோ?’–  என்றார் கம்பநாட்டாழ்வார்.

கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின் றோயை
அடுக்குமீ தடாதென் றான்ற ஏதுவோ டறிவு காட்டி
இடிக்குந ரில்லை; உள்ளா ரெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்குந ரென்ற போது முடிவின்றி முடிவ துண்டோ?’-  என்பது கம்பராமாயணம்.

அர்ச்ய: ஸர்வஸஹிஷ்ணு: அர்ச்சக பராதீந அகிலாத்மஸ்திதி:  ப்ரிணீஷே ஹ்ருதயாளுபி: தவதத: ஸீலாத் ஜடீபூயதே.(ஸ்ரீ கீதை, 4 : 11.)எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாக வேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள் எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு

பாபம் ஹரதியத்பும்ஸாம் ஸ்மிருதம் ஸங்கல்பநாமயம்  தத்புண்டரீக நயநம் விஷ்ணோ: த்ரக்ஷ்யாமி அஹம்முகம்.1. (ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.)-சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது, பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்; விபவங்களில் வந்தால் அதுதன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக ஆக்கிற்றாய் இருக்கும்; இங்ஙன் அன்றிக்கே,யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாமி அஹம்    மம வர்த்ம அநுவர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வஸ: 2அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி, இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.

அருச்சுனா! எவர்கள் எவ்விதமாய் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே இருந்து நான் அருள் புரிகிறேன்,’ என்றும்,(தைத்திரீய நாராயண உபநிடதம். இவ்வுபநிடத வாக்கியத்தோடு,  ‘மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே’ என்ற பரிபாடற்பகுதி ஒப்பு நோக்குக. )2‘சலனம் அற்ற மனத்தினால் செய்யத்தக்கவன்’ என்றும்,ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: (ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.) 3‘சங்கற்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்றும், ஸூரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ: ப்ரஸந்ந வதநேக்ஷணாம்   க்ருத்வா ஆத்மந: ப்ரீதிகரீம் ஸூவர்ண ரஜதாதிபி:    தாமர்ச்சயேத்.(ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.)4‘பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படுகின்ற திருமேனி’ என்றும், பிரமாணங்கள் கூறாநிற்கும். ‘

  செய்ய தாமரைக் கண்ணனாய்–தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ.(சாந்தோக்ய உபநிடதம், 1 : 6.)சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ்வண்ணம் இருக்கும்? அவ்வண்ணமே அந்தப் பரம்பொருளான நாராயணனுடைய திருக்கண்கள் இருக்கின்றன-ஸ்ரூயதாம்து நரவ்யாக்ர வேதவேதாந்த நிஸ்சய: யஞ்ஜேஸோ யஞ்ஜபுருஷ: புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞித:  ஸவிஷ்ணு: பரமம் ப்ரஹ்ம யதோ நாவர்த்ததேபுந:(விஷ்ணு தர்மம்)யாகங்களுக்கு ஈஸ்வரனாயும் யாகபுருஷனாயும் தாமரைக்கண்ணன் என்னும் பெயரையுடையவனாயுமிருக்கிற அந்த விஷ்ணு’ என்றும் சுருதி ஸ்மிருதி முதலியவைகளில் சொல்லப்படாநின்றுள்ள அப்போது அலர்ந்த செவ்வித்தாமரை போலே இருந்துள்ள திருக்கண்களையுடையவனாய்.

மண்பா லமரர் வரம்பாருங் காணாத
எண்பா லுயர்ந்த எரியோங்கு நல்வேள்வி
உண்பாய்நீ ஊட்டுவாய் நீஇரண்டும் ஒக்கின்ற
பண்பா ரறிவார் பகராய் பரமேட்டி!’- என்றார், கம்பநாட்டாழ்வார்.

பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி.(தைத்திரீய ஆனந். 6 : 91.)பல பொருள்களாக ஆகக்கடவேன்’ என்றும் சொல்லுகிற

செய்ய சூழ் சுடர் ஞானமாய் – ஞானத்துக்குச் செவ்வையாவது, வருத்தம் அற்று இருக்கை. அன்றியே,தாதா யதாபூர்வம் அகல்பயத்.(தைத்திரீய நாராயண உபநிடதம், 1.)‘முன்பு படைத்த வண்ணமே படைத்தார்’ என்கிறபடியே, ‘அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’

சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். 4‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.

எனவிவை யன்ன மாற்றம் இயைவன பலவுங் கூறிப்
புனைகழல் புலவு வேற்கைப் புளிஞர்கோன் பொருவில் காதல்
அனையவற் கமைவிற் செய்தான்; ஆரவற் கன்பி லாதார்?
நினைவருங் குணங்கொ டன்றோ இராமன்மேல் நிமிர்ந்த காதல்?’–  என்றார், கம்பநாட்டடிகள்.-அயோத். குகப். 37

தனக்குக் காரணன் ஆகையாவது என்?’ என்னில், தான் இவர்களுக்குக் காரணனாய் இருப்பது போன்று தனக்கு அவ்வருகு வேறொரு காரணம் இன்றியே இருத்தலைத் தெரிவித்தபடி.பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’ என்பது உபநிடத வாக்கியம்.

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி   ஆபத் விமோசந மஹிஷ்டபல ப்ரதசநை:-ஸ்தோத்திரரத்நம். 13.-வேதங்கள் கொள்ளை கொள்ளப்பட்டது என்ன, தமப்பனாகிய பிரமனிடத்திற்செய்த பிரமஹத்தி என்ன, அசுரர்களால் உண்டான துன்பங்கள் என்ன’ என்பன போன்று சொல்லுகின்றவற்றைப் போக்கும் தன்மையனாய் உள்ளவனை. போக்குகிற அவன் பாரிப்புக்கு இவை மிக அற்பமாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பார் ‘உள்ளன’ என்கிறார்.

வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யிற் பூசிக் கையகத்தோர்
சந்தார் தலைகொண் டுலகேழும் திரியும் பெரியோன் தான்சென்று
‘எந்தாய் சாபம் தீர்’ என்ன இலங்கு அமுதுநீர் திருமார்பில்
தந்தான் சந்தார் பொழில்சூழ்ந்த சாளக் கிராமம் அடைநெஞ்சே!’-  என்றார், திருமங்கை மன்னன்.

பாவநாசனை – கையும் வில்லுமாய் இருக்கிறபடியைக் காண எல்லாருடைய பாவங்களும் போம். என்றது,-அத்யத்புதம் இதம் வாக்யம் தவராம ஸூபாக்ஷரம்    பாவந: ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந.-(ஸ்ரீராமா, உத். 82 : 9.) 1‘இரகு நந்தன! நீதான் எல்லா உலகத்தாருடைய பாவங்களையும் போக்குகிறவன்,’ என்கிறபடியே, அந்நிலையிலே மக்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்கும் தன்மையன் ஆனவனை என்றபடி

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந.–தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறைகெடப் புகழுங்கோள்.

பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை; என்றது, தத்விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே   விஷ்ணோ: யத்பரமம் பதம்.(இருக்கு வேதம்.)2‘பரமபதத்திலே இருக்கின்ற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.-ஏஷ ஸம்ப்ரஸாத: அஸ்மாத் ஸரீராத் ஸமுத்தாய  பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே.(சாந்தோக்யம்) 3‘பரஞ்சோதி என்னும் சொல்லின் பொருளான பரம்பொருள்’ என்பது உபநிடத வாக்கியம்.

அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற –உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்.(இது, நரசிம்ஹ மந்த்ரஸ்தபதம்.) 1ஒரு விக்கிரஹத்தையுடையனான அதற்கு மேலேயும் ஒன்றே அன்றோ, சீற்றத்தையும் அருளையும் ஒரே காலத்தில் உடையனானதுவும்? இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்கச்செய்தே, திருவருளுக்கும் பாத்திரனான ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் திருவடிகளின் கீழே வந்து புகுரலாம் படி நின்ற. இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின், ‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது

ததா வித்வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந:   பரமம் ஸாம்யம் உபைதி.–(முண்டகோபநிடதம், 3. 1 : 3.)புண்ணியத்தையும் பாவத்தையும் நீக்கி விட்டு முற்றுவமையை அடைகிறான்,’ என்பது உபநிடத வாக்கியம். 

(இருக்கு வேதம்.)வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகா

உயர நின்றது ஓர் சோதியாய்தம் த்வா க்ருணாமி தவஸம் அதவீயாந் க்ஷயந்தம்  அஸ்ய ரஜஸ: பராகே.(யஜீர் வேதம், 2. 2 : 12.)1‘ரஜோ மயமான இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலே உள்ள பரமபதத்தில் நித்திய முத்தர்களோடு எழுந்தருளியிருக்கின்ற தேவரீரை’ என்றும்,தமஸ: பரஸ்தாத்.(சாந்தோக்யம்) ‘பிரகிருதியைக்காட்டிலும் மேலே இருக்கின்றார் பரமாத்துமா,’ என்றும் சொல்லுகிறபடியே, இங்குள்ளாராற் சென்று கிட்ட ஒண்ணாததாய் இருக்கிற பிரகிருதிக்கு மேலே இருக்கிற பரமபதத்திலே எல்லை இல்லாத ஒளி உருவமான திவ்விய விக்கிரகத்தை உடையனாய் இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது.

விஸ்வத: ப்ருஷ்டேஷூ ஸர்வத: ப்ருஷ்டேஷூ.

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம்ச மங்களம்   தைவதம் தேவதாநாம்ச பூதாநாம்ய: அவ்யய: பிதா.(பாரதம்)சர்வேசுவரன் எல்லா ஆத்துமாக்களுக்கும் அழிவற்ற தந்தையாய் இருக்கின்றான்,’ ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதாச மாதவ:  கச்சத்வம் ஏநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:(பாரதம்)3‘உலகத்தில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமகள் கேள்வன் தந்தையும் தாயுமாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, உள்ளனவான எல்லாப் பிராணிகளுக்கும் தந்தையாய் இருக்கின்றவன்

அவை அல்லனாய் – தந்தை, தாய், தான் என்னும் இவ்வளவு அன்றிக்கே மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹ்ருத் கதி:  நாராயண:(விஷ்ணு தத்துவம்)4‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் நட்டோனும் பேறும் ஆகிய எல்லாம் நாராயணனே,’ என்றும்,

பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ர ஆதயோபிவா    ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ:(சுபாலோபநிடதம்)-தந்தை தாய் மகன் உடன் பிறந்தவன் மனைவி நட்டோன் இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு பலத்தின் பொருட்டு; கேசவன் எல்லா லாபத்தின்பொருட்டு,’

அக்நௌ திஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி திஷ்டதி யோகிநாம்    ப்ரதிமாஸூ அப்ரபுத்தாநாம் ஸர்வத்ர ஸமதர்ஸிநாம்.-‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.

ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயிநித்யம் ப்ரதிஷ்டித:  பக்திஸ்ச நியதா வீர பாவ: ந அந்யத்ர கச்சதி.(ஸ்ரீராமா. உத். 40 : 16.)சுவாமி! எனக்குத் தேவரீரிடத்தில் மேலான பிரீதியானது நிலைத்துவிட்டது; ‘பத்தியும் எப்பொழுதும் இருக்கின்றது; சூரரே! என்னுடைய மனமானது வேறிடத்தில் செல்லுகிறதில்லை,’ என்றனேயன்றோ திருவடி

ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹ ராக்ஷஸை:   ராக்ஷஸ: அப்யேதி பஸ்யத்வம் அஸ்மாந் ஹந்தும் நஸம்ஸய:–(ஸ்ரீராமா. யுத். 17 : 5.)விபீஷணன் நான்கு அரக்கர்களோடு நம்மைக் கொல்லுதற்கு எதிர்முகமாய் வருகிறான்; சந்தேகம் இல்லை; பாருங்கள்!’ என்பது போன்று, அங்கே நலிய வருகிற இது, தம்மை முடிக்க வந்தது போன்று இருத்தலின், 2‘சென்ற படை’ என்னாது, ‘வருபடை’ என்கிறார்,

பார்த்தம் ரதிநம் ஆத்மாநம் ச ஸாரதிம் ஸர்வலோக   ஸாக்ஷிகம் சகார.- ஸ்ரீராமா. யுத். 17 : 5.-அருச்சுனனை ரதியாகவும் தன்னைச் சாரதியாகவும் எல்லா உலகத்துள்ளவர்கள் கண்களுக்கும் இலக்காக்கினான்,’

ஸ ஸ்வப்ரபாவம் அதிவேலம் அபுத்யமாந:  லக்ஷ்மீ ஸஹாய குணமங்கள பங்கலக்ந:
தத் பக்தி நிக்ந மநஸாம் க்ரய விக்ரயார்ஹ: வாரிப்ரதாரித இவத்வரித: பபூவ.
அநந்யார்ஹ சேஷத்துவமாவது, ததீயர்க்குக் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாம்படியாகை. ‘அந்தப் பகவானுடைய பத்தியில் ஈடுபட்ட மனத்தையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கிரய விக்கிரயங்களுக்குத் தகுந்தவராய்’ என்றும், ‘எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ (பெரியாழ்வார் திருமொழி, 4. 4 : 10.)என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க.

ஸம்ஸார விஷ விருக்ஷஸ்ய த்வே பலேஹி அம்ருதோபமே  கதாசித் கேஸவே பக்தி: தத் பக்தைர்வா ஸமாகம:சமுசாரமாகிற விஷமரத்துக்கு அமிருதத்திற்குச் சமானமான இரண்டு பழங்கள் உண்டு; அவை ஒரே காலத்தில் கிருஷ்ணனிடத்தில் பத்தியும் அவன் அடியார்களிடத்திலேயே எப்பொழுதும் கூடியிருத்தலுமாம்,’ என்னும் பொருளையுடைய சுலோகத்தில் ‘தத்பக்தைர்வா ஸமாகம: பத்தர்களிடத்திலேயே கூடியிருத்தல் ‘என்கிற இடத்தில் ‘வா’ என்றதனை தேற்றேகாரத்திலே ஆக்கி, ‘உத்தேஸ்யந்தானே இங்கே சித்திக்குங்காண்’ என்று எம்பெருமானார் அருளிச்செய்வர். பெறத்தக்க பேற்றிக்கு முதல் எல்லை பகவானுக்கு அடிமை என்ற அளவிலே நிற்றல்; முடிவின் எல்லை, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமை அளவும் வருகை.

கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக ஸத்ருக்நோ நித்ய ஸத்ருக்ந: நீத: ப்ரீதி புரஸ்க்ருத:-(ஸ்ரீராமா.  அயோத். 1 : 1.)–கச்சதா-போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும் ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.

ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’ என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்; 2குருஷ்வமாம் அநுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே    க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த: ப்ரகஸ்பதே.’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்; ‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்; ‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.

நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறரில்லை:
பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’(கம்ப அயோத்: நகர் நீங்கு. 136)

அநந்யா: சிந்தயந்த: மாம் யே ஜநா: பர்யுபாஸதே  தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாமி அஹம்.–(ஸ்ரீ கீதை 9 : 22.)அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால் இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

விப்பிரர்க்குக் கோத்திர சூத்திர சரண கூடஸ்தர் பராசர பாராசர்ய  போதாயநாதிகள்,’ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.  (ஆசார்ய ஹ்ருதயம், பிரதமப் பிரகரணம், 36.)

கோத்திர சூத்திரங் குடியு ரைத்துளார்   வேத்திர கீயமா நகரின் மேயினார்.’- என்பது, வில்லி பாரதம்.

சத்ருக்ந:’ – பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன். ‘நித்ய சத்ருக்ந:’ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப ஹாரிணம்.(ஸ்ரீராமா. அயோத்.) 2புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட்பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது, 3‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் – ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி. அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!   தாடகை என்பதச் சழக்கி நாமமே.’  என்பர் கம்ப நாட்டாழ்வார்.

முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச்
சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-  என்ற கம்பராமாயணச் செய்யுள்

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’–என்றார் ஸ்ரீ குகப்பெருமாள்.

என்றும் உளதாவதாவது, எல்லாக்காலத்திலும் இருப்பது ஒன்று ஆகையாலே, ‘பயிலும்’ என நிகழ் காலத்தால் அருளிச்செய்கின்றார். 1ஆக, ‘சுத்த சத்துவமயமாய்ச் சொரூபப் பிரகாசகமான விக்கிரகத்தையுடையவன்’ என்கை.  2நிஷ்கிருஷ்ட சத்துவமேயாய்(அறுதி செய்யப்பட்ட  சத்துவம்.) தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம் அநாமயம்   ஸூக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக.-ஸ்ரீ கீதை, 14 : 6. 3‘அந்த முக்குணங்களுக்குள்ளே பரிசுத்தமாயிருப்பதனாலே ஸ்படிகம் போன்று பிரகாசிக்கிறதும் சாந்தமாயிருப்பதுமான சத்துவகுணம்’ என்றும், தத் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்   அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்.–(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63.)4‘கிளர்ச்சியோடு இருக்கிற ஒளிகளினுடைய கூட்டமாய் இருக்கிற அந்த விஷ்ணு’ என்றும்,திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபத் உத்திதா  யதி பா: ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸ: தஸ்ய மஹாத்மந:-(ஸ்ரீ கீதை, 11 : 12)5‘ஆகாயத்தில் அநேகம் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் உண்டானால் அது அம்மகாத்துமாவினுடைய ஒளிக்கு ஒப்பாகும்’ என்றும் சொல்லுகிறபடியே, எல்லை இல்லாத ஒளி உருவமாய் ‘ஆறு குணங்களுடைய விக்கிரஹம்’ என்று மயங்குவார்க்கு மயங்கலாம்படியாய், ஞானம் முதலான குணங்களுக்கும் சொரூபத்துக்கும் பிரகாசகமான விக்கிரகம் என்பதனைத் தெரிவித்தபடி.

பங்கயக்கண்ணனை – 6வடிவழகு எல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும்.ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:  ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூத: ஜநகாத்மஜே.(ஸ்ரீராமா. சுந். 53. 3.)என்னு‘பயிலும்  சுடரொளி மூர்த்தி’ என்றதனால், ‘ராம:’ என்றதன் பொருளையும், ‘பங்கயக்
கண்ணனை’ என்றதனால் ‘கமல பத்ராக்ஷ:’ என்றதன் பொருளையும்  அருளிச்செய்தார் என்றபடி-வடிவிலே துவக்கு உண்பாரை வளைத்துக்கொள்வது கண் அழகாயிற்று. ஒரு சுடர்க்கடல் போலே ஆயிற்று வடிவு; அது பரப்பு மாறத் தாமரை பூத்தாற்போலே ஆயிற்றுக் கண் அழகு. வடிவுதானே கவரும் தன்மையது? அதற்கு மேலே அகவாயில் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கும் பிரகாசகமாய் இருக்குமன்றோ திருக்கண்கள்? ஆக, ‘என்றும் உள்ளதாய் எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையும் அதிலும் கவர்ச்சிகரமான கண்ணழகை யுடையவனை’ என்றபடி.

அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோத: விபீஷண:   அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந் ப்ராதா வை ராக்ஷாஸாதிபம்(ஸ்ரீராமா. யுத். 16 : 17.)அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ஆகாயத்தை அடைந்தவன் ஸ்ரீமானாக உள்ளவன்’, பரமாபதம் ஆபந்ந: மநஸா அசிந்தயத் ஹரிம்   ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண:(விஷ்ணு தர்மம். 68.)ஸது நாகவரஸ் ஸ்ரீமான் – அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய் இருந்தான்,’ ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர(ஸ்ரீராமா. யுத்த.)4‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும் இடங்களில் இதனைத் திருவாகக் கூறப்பட்டுள்ளமை காண்க. ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ – இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில் வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத் தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி. ‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ – சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை ஒரு செல்வமாகச் சொல்லப்பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு? ‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் 1ஸர்வாத்மநா ப்ரயநுநீயமாநோ யதாந ஸௌமித்ரி:       உபைதியோகம்  நியுஜ்யமாநோபிச யௌவராஜ்யே தத: அப்யஷிஞ்சத்  பரதம் மஹாத்மா.(.ஸ்ரீராமா. யுத்த. 131 : 88).–முடி சூட இசையாத இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?

மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க, யாவத்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ  ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி(ஸ்ரீராமா, அயோத். 98 : 8.)2‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ, அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’ என்றான் அன்றோ? 3அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார்(பெருமாள் திருமொழி, 10 : 7.  ஸ்ரீ குலசேகரப் பெருமாள்.) ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி.‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்’  என்றது, சிலேடை: திருவடிகளிலே தலையை வைத்துக்கொண்டு வாழ’  என்றும், ‘முன்னே சிறப்பாக வாழ’ என்றும் பொருள்படும்.

இதீதம் உக்த்வா ஸ மஹாநுபாவ: ஸஸ்மார சக்ரம்   நிஸிதம் புராணம்
ஸூதர்சநம் சிந்திதமாத்ரம் ஆஸூ தஸ்ய அக்ரஹஸ்தம்  ஸ்வயம் ஆரூரோஹ.(பாரதம்,  வீடும பர்வம்.)-
தான் தாழ நின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கைக்கும் பெருநிலை நிற்கும் கருவியை உடையவனை. ‘நினைத்த மாத்திரத்தில் உடனே கண்ணபிரானுடைய திருக்கையில் உச்சியில் தானாகவே வந்து அடைந்தார்’ என்கிறபடியே, ஒரு கையிலே ஏறி விரோதிகளை அழியச் செய்பவன் அன்றோ? ‘நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்’ என்பதாம். கையும் திருவாழியுமான அழகினை அடியார்கட்கு ஆக்கி அதனைக்கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி அதுதன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின், ‘ஆழிப்பிரான்’ என்கிறார்.

தோளும் ஓர் நான்குடை – விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள்தாமே அமைந்திருக்கை00ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா:  ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் ந விபூஷிதா:(ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.)‘நீண்டனவாயும் அழகோடு திரண்டனவாயும் இரும்புத்தூண்களை ஒத்தனவாயும் எல்லா ஆபரணங்களாலும் (கண்ணெச்சில் வாராதபடி) அலங்கரிக்கப்படத் தக்கனவாயுமிருக்கிற திருத்தோள்கள் என்ன பிரயோஜனத்திற்காக அலங்கரிக்கப்படவில்லை?’

நான்காகத் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ?’ எனின்-ஜாதோஸி தேவ தேவேஸ ஸங்க சக்ர கதா தர
திவ்யம் ரூபம் இதம் தேவ ப்ரஸாதேந உபஸம்ஹர.(வசுதேவர் கூற்று. இது, பாகவதம், 5 : 3.)
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது? ‘மறைத்துக்கொள்க’ என்ன, மறைத்தான் மற்றைத் தோள்களை

நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன,-தமஸ: பரமோ தாதா ஸங்க சக்ர கதா தர:  ஸ்ரீ வத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வத: த்ருவ:(ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரி கூற்று.) 2‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன, வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராய் இருக்க, ‘பிரமாணப்போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச்செய்தார்.

ததோ ஹர்ஷ ஸமுத்பூதோ நிஸ்வந:திவம் அஸ்ப்ருஸத்  ஸ்த்ரீ பாலயுவ வ்ருத்தாநாம் ராமோயமிதி கீர்த்திதே.(ஸ்ரீராமா, யுத். 130 : 32.)-தத்தமது கற்பு அழியும் வார்த்தை சொன்னால் என்றிருக்கும் பெண்கள், முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலகர்கள், வாய்விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள், உறுப்புகளின் சத்தி குறைந்த முதியோர்கள் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஏத்தும்படி ஆயிற்றுப் பெருமாள் அழகு,’ என்றார் ஸ்ரீ வால்மீகி பகவான்

தேவாநாம் தாநவாநாம்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்தம் வ்ரஜாமி ஸரணம் தவ.(ஜிதந்தா)-
திருமகள் கேள்வன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே அன்றோ இறைவனுக்கு

ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்னடிமை அல்லாமை யுண்டோ?’–கம்பரா. ஆரணி.)

உடை ஆர்ந்த ஆடையன் – திரு அரை பூத்தது போன்று இருக்கிறபடி. ‘திருஅரை மலர்ந்தது போன்று இருக்கின்ற பட்டாடை’,-தாஸாம் ஆவிரபூத் ஸௌரி: ஸ்மயமாந முகாம்புஜ:  பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மதமந்மத:(ஸ்ரீ பாகவதம்)0 2‘பீதாம்பரத்தைத் தரித்திருப்பவர்’ என்பது

தாஸாம் ஆவிரபூத் – ஸ்ரீ பிருந்தாவனத்திலே உலாவாநிற்கச்செய்தே,  அவர்கள் படும் அலமாப்புக் காண்கைக்காக மறைய நின்றான்; ‘இனி,
இவர்கள் தரிக்கமாட்டார்கள்,’ என்று தோற்றினவாறே வந்து தோற்றினான்.தாஸாம் – கமர் பிளந்தவிடத்தே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே  இருக்கை. ஸ்மயமான முகாம்புஜ: – தன்னையொழியச்  செல்லாமையுண்டானால், பின்பு அவன் முகம் இருக்கும்படி இதுபோலே  காணும். பீதாம்பரதர: – இவன்பக்கல் இடைப்பெண்கள் நெஞ்சிற்பிறந்த  பிரணய ரோஷத்தாலுள்ள மறமெல்லாம் ஆறும்படியாயிற்று உடை வாய்ப்பு  இருப்பது; நெஞ்சுகளிற் பிறந்த புண்களெல்லாம் தீர்ந்து இத்தோடே பணி  போரும்படியாயிற்று இருப்பது. (பணி போருதல் – அந்த விஷய  விகாரமேயாய்ச் செல்லுதல். அதனை விரிக்கிறார் ‘படிச்சோதி’ என்று  தொடங்கி.) ‘படிச்சோதியாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்,  கடிச்சோதி கலந்ததுவோ?’ என்று இதுவே பணிபோந்திருக்குமிறே.  (‘இங்ஙனம் கவர்ச்சிகரமாயிருப்பது பெண்களுக்குமாத்திரமேயோ?’  என்னில்,) ‘சாக்ஷாத் மந்மத மந்மத:’, ‘பும்சாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்’  என்கிறபடியே என்பது.)

பெருமக்கள் – நித்தியசூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. 2‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ (பெரிய திருமொழி, 7. 4 : 4.)என்பது அன்றோ மறைமொழி? மஹாத்மாநஸ்து மாம்பார்த்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:
பஜந்தி அநந்ய மநஸோ ஜ்ஞாத்வா பூதாதிம் அவ்யயம்.(ஸ்ரீ கீதை, 9 : 13.)
3‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும்,பஹூநாம் ஜந்மநாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே வாஸூதேவ: ஸர்வம்இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:(ஸ்ரீ கீதை, 7 : 19.) 4‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’என்றும், ‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ? 1சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால், நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே? (மேற்காட்டிய பிரமாணங்கள் எல்லாம் நித்தியசூரிகளைக் குறிப்பன  அல்லவே? முமுஷுக்களையல்லவோ குறிப்பனவாகும்?’ என்ன, அதற்கு  விடை அருளிச்செய்கிறார், ‘சமுசாரத்திலே’ என்று தொடங்கி.)

பெருமை – உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்  ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.(ஸ்ரீ கீதை, 7 : 18. )4‘உதாரர்கள்’ என்கிறபடியே, தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்குப் போலே, செல்வம் முதலியவற்றை விரும்பியவர்கட்கும் ‘இதனையாகிலும் நம் பக்கல் கொள்ளப்பெற்றோமே! இவர்கள் நமக்குச் சர்வஸ்வதானம் பண்ணுகிறார்கள் அன்றோ?’(சர்வஸ்வ தானம் – எல்லாவற்றையும் கொடுத்தல்.) என்று இருக்கும் பெருமை. 5நாட்டார் படி அல்ல இவனது: நாட்டில் கொடுப்பார் உதாரராயிருப்பார்; இங்குக் கொள்வார் உதாரராயிருப்பார். யாதேனுமாகக் குறை தீர்ப்பார் உதாரராமித்தனை அன்றோ?

இவர்கள் உத்தேசியராவது எத்தனை நாள்களுக்கு?’ என்ன, வருமையும் இம்மையும் –தஸ்மை நமோ மதுஜித் அங்க்ரி ஸரோஜ தத்வ   ஜ்ஞாந அநுராக மஹிமாதிஸய அந்தஸீம்நே   நாதாய நாதமுநயே அத்ர பரத்ரசாபி  நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்.( ஸ்தோத்திர ரத்நம்.) 1‘இவ்வுலகம் மேலுலகம் இரண்டிலும்’ என்கிறபடியே, இவ்வுலகம் மேலுலகம் என்னும் இரண்டிலும். இவ்வுலகத்தில் 2நாட்டாரோடு இயல்வொழித்து, அவ்வுலகத்தில் நாரணனை நண்ணுவித்து(திருவாய். 10. 6 : 2.), 3அடியார்கள் குழாங்களிலே உடன்கூட்டும் உபகாரகர். நம்மை அளிக்கும் பிராக்கள் – நம்மை உஜ்ஜீவிக்கும் ஸ்வாமிகள். சர்வேசுவரன் ஒரு நாள்வரையிலே தன்னிடத்தில் ஒடுக்கி வைத்து, ஒரு நாள் வரையிலே சமுசாரத்திலே 4தரு துயரம் தடாதே வைப்பான் அன்றோ? ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து வசிக்கப்பெறில் ‘சமுசாரந்தானே நன்று’ என்னும்படி அன்றோ அவர்கள் படி? ஆதலின், ‘அளிக்கும் பிராக்களே’ எனத் தேற்றேகாரங் கொடுத்து ஓதுகிறார். மேலே 5‘நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் உறுமோ?’ (திருவாய். 8. 10 : 3.)என்றாரே அன்றோ?

தன்மை பெறுத்தித் தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை – 1‘மரணமானால்’ என்கிறபடியே, சரீரம் பிரியுமளவும் பொறுத்திருந்து உயிர் உடம்பின் நீங்குங் காலத்து நினையும் நினைவையும் பத்தியையும் இவர்களுடைய பணியாக்காமல் ததஸ்தம் ம்ரியமாணம்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மதபக்தம் நயாமி பரமாம் கதிம்.(ஸ்ரீ வராக சரமம். ‘
பின்னர் கட்டையைப் போன்றும் கல்லைப் போன்றும்  பரதந்திரனாயிருக்கிற என் பத்தனை உயிர் உடலை விட்டு நீங்குங் காலத்து நானே நினைக்கிறேன்; மேலான கதியை அடையச் செய்கிறேன்,’)2’அஹம் ஸ்மராமி – நானே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்றேன்’ என்கிறபடியே, தானே வந்து 1‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ (பெரிய திருமொழி. 3. 7 : 4.)என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு,ஏஷ ஸம்ப்ரஸாத: அஸ்மாத் ஸரீராத் ஸமுத்தாய
பரஞ்ஜோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே.(சாந்தோக்யம்)
2’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளையடைந்து’ என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும்படியாகச் செய்து, பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை.ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா: யே தீவிரபக்தா: தபஸ்விந:   கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா. 3‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய் எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’ எனப்படுதலால் ‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’ என்கிறார். ‘தன்மை பெறுத்தி’ என்றது, ‘தனது சொரூபம் தோன்றும்படி செய்து’ என்றவாறு

நடைபெற அங்கி பகல்ஒளி நாள்உத்த ராயணம்ஆண்டு
இடைவரு காற்றுஇர விஇர வின்பதி மீன்வருணன்
குடையுடை வானவர் கோன்பிர சாபதி என்றிவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழிற்பதம் ஏறுவரே.’(ஸ்ரீ தேசிகப் பிரபந். அதிகார சங். 28)

தொன்மை பிதற்ற வல்லாரை – இயற்கையாக அமைந்த வள்ளல் குணத்திலே ஈடுபட்டு முறை கெடப் புகழுமவர்களை-தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந்   க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவ யோநிஷூ.(ஸ்ரீ கீதை, 16 : 19.) 1‘என்னைத் தூஷித்தவர்களையும் துவேஷம் செய்தவர்களையும் கொடிய தன்மையுடையவர்களையும் பிறப்பு இறப்பு வழிகளிலே என்னை அடைவதற்குத் தடையாகவுள்ள பிறவிகளிலே எப்பொழுதும் தள்ளுகிறேன்,’ என்று தள்ளுமது இவன் செய்த குற்றங்களைக் கண்டு ஆகையாலே, அது ஒரு காரணம் பற்றி வந்த தன்மையே; இயற்கையான நிலையாவது, இப்படிப் பாதுகாத்தலேயாம்

நம்பனை – நம்பப்படுமவனை; 2‘எத்தகைய தீய நிலையிலும் ஆத்துமாவுக்குத் தஞ்சமானவனை’ என்றபடி. ‘மேற்பாசுரத்திலே அடியார்களை நம்பர் என்றாரே?’ எனின், ‘மேற்சொன்னவர்களும் நம்பர் ஆகைக்கு அடியானவனை என்கிறார்’ இப்பாசுரத்தில். இதனால், 3‘இவனை ஒழிந்த பந்துக்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்’ என்கை; ஸபித்ராச பரித்யக்த: ஸூரைஸ்ச ஸமஹர்ஷிபி:
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் கத:(ஸ்ரீ ராமா, சுந், 38 : 33.)
4‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன். ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி

ஸபித்ராச – ஈசுவரன் தனக்கும் ஆகாதவன்றும் தஞ்சமாவான்  தானேயாயிற்று. ‘பெருமாள் பக்கல் பண்ணின அபராதத்தைக் கண்டு  தமப்பன் கை விட்டான். சகாரத்தாலே தாயும் கைவிட்டாள்,’ என்கிறது;  அவள் பற்று முன்னாகப் பற்றும் இவன் விடும் போது அவளும்  விட்டாளாக வேணுமிறே. வாத்சல்யம் உறைத்த இடத்திலேயிறே முந்துற  விழுவது; ஆகையாலே, அவன் காலிலே முந்துற விழுந்தான்; அவன் மையெழுதி மஞ்சள் பூசிப் புறப்பட்டு நின்றாள்; இவனும் குடநீர் வழித்து  நின்றான், பரித்யக்த: – இவன் விருத்தஹாநி கண்டு ‘பண்டே விட்டிலோமோ?’  என்றார்கள். ஸீரைஸ்ச – மாதா பிதாக்கள் கைவிட்டாலும் சஜாதீயர் விடாதே  கைக்கொள்ளுவர்களாயிற்று, ‘இவர்கள் முடிய விடுகிறார்களோ?’  என்னுமத்தாலே ‘அவர்களுக்குப்பிரியம்’ என்று நினைத்து. ஸ மஹர்ஷிபி: – அவர்கள் விட்டாலும் விடாத  ஆந்ருஸம்ஸ்யப் பிரதானரான ருஷிகளும் விட்டார்கள்.  ஆந்ருஸம்ஸ்யத்துக்கு விஷய வியவஸ்தை உண்டிறே. பெற்றவர்கள்  கைவிட்டால் நாட்டார்க்குப் பணியன்றிறே காக்கை நோக்குகை;  ஆகையாலே, த்ரீந்லோகாந் ஸம் பரிக்ரம்ய – லோகங்களில் திறந்து கிடந்த  வாசல் எல்லாம் ஒரு கால் நுழைந்தாற்போலே ஒன்பதின்கால்  நுழைந்தானாயிற்று; ‘ஒரு கால் அல்லா ஒரு காலாகிலும் கிருபை    பிறக்கக் கூடுமோ?’ என்று; இவன் புகப்புகத் தள்ளிக் கதவை அடைத்தார்கள்.  தமேவ சரணம் கத: – தன் மேலே பிரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்துக்கொண்டு  நிற்கிறவர் திருவடிகளிலே வந்து விழுந்தானாயிற்று. அதாவது,  ‘அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே
அழுங்குழவி’ (பெருமாள் திருமொழி) என்கிறபடியே; அவன் திருவடிகளை  ஒழியப் புகல் இல்லாமை.

மஹாவியாதியாளனானவன்,  ‘எனக்கு இன்ன போது இன்ன வியாதி வந்து நலியும்; அப்போது நான்  என்னை அறியேன்; பிரானே! அப்போது ரக்ஷிக்கவேணும்,’ என்று ஸ்வஸ்த  தசையிலே அறிவித்து வைத்தால் அவர்கள் உணர்ந்திருந்து நோக்குமா  போலே, தான் தனக்கு உதவாத தசையிலும் ஈசுவரன் ரக்ஷிக்கும்படி. இது,  பெரிய திருமொழி, 8. 9 : 7.

திருமார்பனை – அவளுக்குப் பிரியமாக.யஸ்யா வீக்ஷ்ய முகத் தத் இங்கித பராதீந: விதத்தே  அகிலம், க்ரீடா இயம்கலு ந அந்யதா அஸ்ய  ரஸதா ஸ்யாத் ஐகரஸ்யாத் தயா (ஸ்ரீஸ்தவம், 1.)2‘பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக்கொண்டு அந்த முகத்தின் குறிப்புகளைப் பின் சென்றவனாய்ப் படைத்தல் முதலான காரியங்களைச் செய்கிறான்,’ என்னக் கடவதன்றோ?

அடி ஆர்ந்த ஆயிரத்துள் – இருக்கு வேதம் போலவும்,பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமந்வித: ஸோகார்த்தஸ்ய ப்ருவ்ருத்த: மே ஸ்லோக: பவது நாந்யதா.( ஸ்ரீராமா. பால. 2 : 18.) 1‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம்.

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபிகர்ஸிதை:
ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமா அஹம் ததா குரு தயாம் மயி.(
ஸ்ரீராமா. சுந். 40 : 3, இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.)மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத் தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய் இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான் அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள்

இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று.-யாப்ரீதி: அவிவேகாநாம் விஷயேஷூ அநபாயிநீ
த்வாம் அநுஸ்மரத: ஸாமே ஹ்ருதயாத் மாபஸர்பது.(ஸ்ரீ விஷ்ணு புரா. 12. 20 : 19.)
 1’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.

ஆழ்கடலைக் கடைந்தாய்ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்துமர்ஹதி
காநித: ஸகரேணாயம் அப்ரமேயோ மஹோததி:(ஸ்ரீராமா. யுத். 19 : 31.)
3‘அளவிட முடியாத கடல் என்கிறபடியே, ஒருவரால் அளவிடப்போகாதபடி இருக்கிற கடலைக் குளப்படி போலே கலக்கினவனே! மேல் திருவாய்மொழியில் ‘ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி

கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு
இருசுடர் இருபுறத்து ஏற்றி ஏடுஅவிழ்
திருவொடும் பொலியஓர் செம்பொற் குன்றின்மேல்
வருவபோற் கலுழன்மேல் வந்து தோன்றினான்.’–கம்பநாட்டாழ்வாருடைய திருவாக்கு

மலையின் மேலே இருக்கின்ற நீர் உண்ட மேகம் போல’ என்பது 1பாரதம். –ததோ மஹதி பர்யங்கே மணிகாஞ்சந சித்ரிதே    த்தர்ஸ க்ருஷ்ணம் ஆஸீநம் நீலம்மேரௌ இவ அம்புதம்.

நெடியானே!’ என்றால் காணவேணும் கேட்கவேணும் என்கிற சொல்லால் தலைக்கட்டமாட்டுகின்றது இல்லை; ‘நெடியானேஎ!’ என்று பாடு ஓடிக் கிடக்கின்றது. துக்காபிதப்த: பரத: ராஜபுத்ரஹ மஹாபல:   உக்த்வா ஆர்ய இதி ஸக்ருத்தீநம் புந: நுவாச கிஞ்சந.(ஸ்ரீராமா. அயோத். 99 : 88.)5‘துக்கத்தால் மிகுதியும் தபிக்கப்பட்டவராயும் மிக்க பராக்கிரமத்தையுடையவராயும் இருக்கிற ஸ்ரீ பரதாழ்வான் ஒரு முறை தீனசுரத்தோடு ‘ஆர்யா!’ என்று கூறி, வேறு வார்த்தை ஒன்றையும் கூற இல்லை,’ என்று சொல்லப்பட்ட ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று கிடக்கிறது என்றபடி.

 மந: பூர்வோ வாக்உத்தர:(யஜீஷீயம் சுருதி.)மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிறபடியே, ‘மனத்துக்குப் பின்னதான வாக்கு, மனத்தின் தொழிலையும் தன் தொழிலையும் ஆசைப்படாநின்றது,’ என்கிறார்.

ஒன்றுக்கும் வேறுபடாதவனான திருவடியும் இலங்கையில் கட்டளையைக் கண்டு,அஹோ வீர்யம் அஹோ தைர்யம் அஹோ ஸத்வம்
அஹோ த்யுதி: அஹோ ராக்ஷஸ ராஜஸ்ய ஸர்வ லக்ஷ்ண யுக்ததா.(ஸ்ரீராமா. சுந்த. 49 : 17.)
 4‘இது என்ன வீர்யம்! இது என்ன தைர்யம்! இது என்ன பலம்! இது என்ன ஒளி! அரக்கர் தலைவனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்!’ என்று மதித்த ஐஸ்வர்யமாதலின், ‘தண் இலங்கை’ என்கிறார். ‘தண்’ என்பது ஆகுபெயரால் கட்டளைப்பாட்டைக் காட்டுகிறது.

என்று தடவும் என் கைகள் – படலை அடைத்து உள்ளே புக்குக் 4கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது. அன்றிக்கே, ‘வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை; அதனாலே, தேடுகின்றன’ என்னுதல்.ராமம்மே அநுகதா த்ருஷ்டி: அத்யாபி ந நிவர்த்ததே   நத்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாதுமா பாணிநா ஸ்ப்ருஸ.(ஸ்ரீராமா. அயோத். 42 : 34.) 5‘கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.

என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்  திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’ என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.  பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’  என்றது கண்களை.

:(ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.)3சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது? வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்; சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்; அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.

முத்தர்களுக்கு இலக்கணம் சொல்லும் போது–முக்தாநாம் லக்ஷணாம் ஹி ஏதத் ஸ்வேத் த்வீபநிவாஸிநாம்
நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா: நம இதி ஏவ வாதிந
(நாராயணீயம்)4சுவேதத் தீவில் வசிக்கின்றவர்களுக்கு எது இலக்கணமோ, அதுவே முத்தர்களுக்கு இலக்கணமாம்; ‘அவர்கள் தன்மை என்னை?’ எனில், எக்காலத்திலும் கைகூப்பி வணங்கிக்கொண்டே இருப்பார்கள்; அவ்வாறு செய்தலே தமக்கு விருப்பம் என்று சந்தோஷத்துடன் இருப்பார்கள்; ‘நம:’ என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்,’ என்று சுவேதத்தீவில் வசிக்கின்றவர்கள் படியைச் சொல்லியிருத்தல் ஈண்டு நினைத்தல் தகும்.

முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் – என்று முத்தர்க்கு லக்ஷணம்  சொல்லுகிறவிடத்தில் ஸ்வேத த்வீப வாசிகள் படியாகச் சொல்லி  அவர்களையிறே நித்யாஞ்சலிபுடா: என்கிறது. ஹ்ருஷ்டா: – பசியிலே  உண்ணப்பெற்றாற் போலேயாயிற்றுத் தொழுதால் இருக்கும்படி. நம  இத்யேவ வாதிந: – இதுவே சீலமாயிருக்கை.

சக்ஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண:   ஸ்ரோத் ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண:(சுபாலோபநிடதம்.)-பார்க்கின்ற கண்களும் பார்க்கப்படுகிற பொருள்களும் நாராயணனே,’ என்கிறபடியே, ‘கண்ணுக்கு வகுத்த அப்பரமனைக் காண வருமோ?’ என்னாநின்றது -ஆயின், அறிவு இல்லாத கரணங்களுக்கு ‘வருங்கொல்’ என்று விடாய்க்கை கூடுமோ? எனின்,(ஸ்ரீராமா. சுந். 40 : 3.) 4‘அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்களால் ஆடவர் திலகனான ஸ்ரீ ராமபிரானை எப்படித் தொடுவேனோ?’ என்றாள் பிராட்டி.

  நஇஹ அபிக்ரமநாஸ: அஸ்தி ப்ரத்யவாய: நவித்யதே
ஸ்வல்பமபி அஸ்யதர்மஸ்ய த்ராயதே மஹத: பயாத்.-(ஸ்ரீகீதை, 2 : 40.)-
சாஸ்திரங்களிற் கூறப்பட்ட காரியங்களைத் தொடங்குவது வீண் ஆகாது; தோஷமும் இல்லை,’ என்பது ஸ்ரீகீதை

பாவியேன் நெஞ்சம் புலம்ப’ என்கிறார்.மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி நஸம்ஸய:   ஸமர்த்தாவபி தௌ யத் மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ.(ஸ்ரீராமா. சுந், 38, 48.)1‘என்னுடைய தீவினைகள்தாம் காரணம்’ என்றாள் பிராட்டி

 ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ரு ம் பவேத்.(ஸ்ரீராமா,  சுந். 9 : 30.)
இராக்கதர்களைக் கொன்று என்னை அழைத்துச் செல்வாராயின், அது அவருக்குத் தக்க செய்யலாம்,’ என்று இருக்கப் பெற்றேன் அல்லேன்;

காலஸ்ய ச ஹி ம்ருத்யோஸ்ச ஜங்கம ஸ்தாவரஸ்யச
ஈஸதே பகவாந் ஏக: ஸத்யமேதத் ப்ரவீமி தே.(பாரதம் உத்தியோகபர். 68: 13.)-
காலத்திற்கும் எமனுக்கும் இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கட்கும் பகவான் ஒருவனே ஏவுகின்றவன் ஆகிறான்; உனக்குச் சொல்லுகிறேன்; இது சத்தியம்,’ என்பது சஞ்சயன் கூற்று

பதார்த்தங்களினுடைய உற்பத்திக்கு முன்பும் நின்று இவையழிந்தாலும் நிற்கக் கடவ காலத்துக்கும், இவற்றையெல்லாம் அழிக்கின்ற தேவர்களுக்கும்
இவற்றை எல்லாம் படைக்கின்ற தேவர்களுக்கும், ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ரஸ:(ஆயின், ‘மிருத்யு’ என்ற சொல்லானது யமன் ஒருவனைக் குறிக்குமேயன்றி அழிக்கின்றவர்களைக் காட்டுமோ?’ எனின்,) ‘ம்ருத்யு: யஸ்ய உபசேஸநம்’ என்று ‘ம்ருத்’  சப்தத்தாலே அழிக்கின்ற தேவர்களைச் சொல்லக் கடவதிறே.
(படைக்கின்ற தேவர்கள் என்ற பொருள் ‘மிருத்யஸ் ச’ என்ற  பதத்திலேயுள்ள ‘சகாரத்’தால் கொள்ளப்பட்டது.) சிருஷ்டிக்குக் கர்மீபவித்த
பதார்த்தங்களினுடைய உற்பத்திக்கு முன்பும் உளனாய், அழிந்தாலும் உளனாய், என்றும் ஒக்க உணர்ந்திருந்து சிரஷ்டாக்களுக்கும்
ஸம்கர்த்தாக்களுக்கும் ஸ்ருஞ்சயருமான இவற்றையடையத் தன்புத்தி அதீனமாக நியமிக்கிறான் ஒருவனே! ‘சத்யம் இத்யாதி’ – பகவத்விஷயத்தில் அர்த்தவாதமில்லை; தன்னை ‘ஆப்தன்’ என்று விஸ்வசித்தவனுக்குப் பொய் சொல்வாரில்லை என்பது. ((‘மிருத்யு’ இது,  கடவல்லீ உபநிடதம், 1 : 2.)

உன்னை எந்நாள் கண்டு கொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது, (ஸ்ரீராமா. யுத். 117 : 1.)  2‘பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’ என்றாற்போன்று, நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.

வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் –அத ஸ: அபயங்கதோ பவதி.(தைத்திரீயம்)1‘சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி 2கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை வந்தவனே(கைமேலே’ என்றது, சிலேடை: ‘உடனே’ என்பதும், ‘கையோடே’ என்பதும்  பொருள். ‘)

உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரணே ப்ரபா யதா.(ஸ்ரீ ராமா. சுந். 21 : 15.)
4சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 5‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற் போலே இருக்கிறதுகாணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி

உன் கழல் காணிய –தத: கடகடாஸப்த ஸமாகர்ணந தத்பர:  ஆஜகாம வ்ரஜஜந: ததர்ஸச மஹாத்ருமௌ. 2‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவைமுரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. என்றது,வ்யக்ராயாம் அத தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம்   யமளார்ஜூநயோ:மத்யே ஜகாம கமலேக்ஷண:(ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 6.மஹரிஷி’ என்றது, ஸ்ரீ பராசரபகவானை.) 3‘தாமரைக் கண்ணரான அந்தக் கண்ணபிரான் சென்றார்’ என்று புரிந்து பார்த்த கண்களைக் காண ஆசைப்பட்டான் மஹரிஷி; தவழ்ந்து போகிற போதைத் தம்முடைய
சேஷத்துவத்திற்குத் தகுதியாகத் 
திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றபடி

ஸ ஏகதாபவதி த்ரிதாபவதி பஞ்சதா.(சாந்தோக்யம், 26.)அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, பல சரீரங்களை மேற்கொண்டு அவ்வச்சரீரங்களில் உறுப்புகளும் பூர்ண அனுபவம் பண்ணலாம்படியான தேசத்திலே புகப்பெறுவர்,’

ப்ராத: தேவேதி க்ருஷ்ணேதி கோவிந்தேதிச ஜல்பதாம்
மத்யாஹ்னேச அபராஹ்ணே சய: அவஸாத:ஸ உச்யதாம்.(ஸ்ரீ விஷ்ணு புராணம்.)-
காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ? இருந்தால் சொல்லப்படட்டும்,’ என்கிறபடியே, திருநாமத்தைச் சொன்னால் உடனே இடிவிழும் என்று வரும் கேட்டினைச் சொல்லுங்கோள்; இன்றேல் திருநாமத்தைச் சொல்லுதல் செய்யுங்கோள்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை?

அன்றிக்கே,ஸ்வபுருஷம் அபிவீக்ஷ்ய பாஸஹஸ்தம்   வததியம: கில தஸ்ய கர்ணமூலே.பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
ப்ரபு: அஹம் அந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்.(ஸ்ரீ விஷ்ணு புராணம்-3. 7 : 14.) )
2‘காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின் மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று, ஓலக்கத்திற்சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும் என் வாயாற்சொல்ல ஒண்ணாது; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ? யமன்,
கையில் பாசத்தைத் தரித்த தன் கிங்கரனைப் பார்த்துப் ‘பகவானிடத்தில்  பத்தியுள்ள பாகவதர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்
பாகவதர்களுக்கு எஜமானன் அலன்’ என்று அவனுடைய காதின் அடியில்  சொன்னான் அல்லவா?

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’–  என்றார் திருமழிசைப்பிரான்.

என் நாத்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸ: ததா ஸூத:
யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்யதத்தநம்.(பாரதம், உத்தியோகபர்வம்.)-
1இவர்கள் யாருக்கு உரிமைப் பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடையது,’ என்கிறபடியே, நான் அவனுக்கு அடிமை ஆகையாலே, எனக்குக் கரணமாய் அவனுக்கு அடிமை ஆன என் நா.

உளன் ஆகவே எண்ணி – 1இலன் ஆகவே அறுதியிட்டு இருக்கிறார் ஆயிற்று இவர். ‘அந்தப் பரம்பொருளைத் தவிரப் பலவகைப்பட்ட பொருள்கள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே, அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒரு பொருள் இல்லை என்று இருக்கும்படியாலே.மநஸைவ இதம் ஆப்தவ்யம்ந இஹ நாநாஸ்தி கிஞ்சந  ம்ருத்யோ: ஸம்ருத்யும் கச்சதி ய இஹ நாநேவபஸ்யதி.( 2‘நினைக்கின்ற காலத்திலும் அவனை உளன் ஆக நினையாத போது ‘இவனும் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, தாம் உளர் அன்றிக்கே இருப்பர் அன்றோ? அவனை ‘உளன்’ என்று நினைத்துத் தான் உளனாக வேண்டியிருக்க, அவனை ‘இலன்’ என்று தான் உளனாக விரகு இல்லையே?’ என்றபடி. 3தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?நேயம் அஸ்தி புரீ லங்கா நயூயம் நச ராவண:    யஸ்மாத் இக்ஷ்வாகு நாதேந பத்தம்வைரம் மஹாத்மநா.(ஸ்ரீராமா. சுந். 43 : 25.)4தன்னைக் கட்டிக்கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ, அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?அழிவு அண்மையில் இருப்பதனாலே ‘நேய  மஸ்தி’ என்று திருவடி சொன்னாற்போன்று, இவரும் இவர்களுடைய  நிலையாமையைத் திருவுள்ளம் பற்றி, ‘இவர்கள் தங்களை நித்தியராக  நினைத்திருப்பதே!’ என்கிறார் என்பது கருத்து. ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார்,

ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவ – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் இடைவிடாமல் தங்கும்படி. என்றது,

ஸகலு ஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகம்
அபிஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுராவர்த்ததே.(சாந்தோக். உப. 8 : 15.)
 2’மீண்டும் வருகிறான் இல்லை’ என்கிறபடியே, ‘உயிர் உள்ள காலம் வரையிலும் சரீரத்தின் சம்பந்தம் அற்று வழுவிலா அடிமை செய்கைக்கு’ என்றபடி. காலத்தால் வேறுபாடு இல்லாத தேசத்திலே (பரமபதத்தில்) அனுபவத்தைச் சொல்லாநிற்கச்செய்தேயும், காலம் நடையாடும் தேசத்திலே வாழ்கின்றவர்

இதி உக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணாநுஜ:
ஆஜகாம முஹூர்த்தேந யத்ர ராம:ஸலக்ஷ்மண:(ஸ்ரீராமா. யுத். 17 : 1.)
ஆஜகாம – வந்தார்’ இளையபெருமாளோடு கூடின பெருமாள் எங்கு இருப்பாரோ அங்கு ஸ்ரீ  விபீஷணாழ்வான் வந்தார்

 வான் கவி – கனத்த கவி. அதாவது,தத் உபகத ஸமாஸ ஸந்தியோகம், ஸம மதுர உபநதார்த்த   வாக்ய பத்தம்   ரகுவர சரிதம் முநிப்ரணீதம், தஸஸிரஸஸ்சவதம்  நிஸாமயத்வம்.(ஸ்ரீராமா. பால. 2 : 48.) 1‘சேர்க்கப்பட்ட தொகை சந்தி இவைகளையுடையதும்’ என்கிறபடியே, சொற்செறிவுடைத்தாய் இருக்கை. ஆக, ‘மிகவும் நல்லவாய் அரணியவான கவிகளைக்கொண்டு’ என்றபடி.

தன்னாகவே கொண்டு –இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா.(ஸ்ரீ கீதை, 14 : 2.)1‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ என்றும், 2‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும், 3‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும் கூறப்படுகின்றவாறே தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கே உரியவனாகக் கொண்டு’ என்னுதல். சன்மம் செய்யாமையும் கொள்ளும்

பௌமம் மநோரதம் ஸ்வர்க்யம் ஸ்வர்க்கி வந்த்யம் ச யத்பதம்
ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி:(விஷ்ணு தர்மம்._-
மோக்ஷத்தைத் தருபவரான பகவான், தியானம் செய்கின்றவர்களுக்கு இவ்வுலகில் விருப்பமானவற்றையும், சுவர்க்கங்களில் உள்ள பேறுகளையும், சுவர்க்கத்தில் உள்ளவர்களால் சேவிக்கப்படுகின்ற அந்தப் பரமபதத்தையும் கொடுக்கிறார்’,

தேவேந்த்ர: த்ரிபுவநம் அர்த்தம் ஏகபிங்க:
ஸர்வத்திம் த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய:
வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும்
ஸம்ப்ராப்த: ஸகல பலப்ரத: ஹி விஷ்ணு:-
(விஷ்ணு தர்மம்.)3‘விஷ்ணு பகவான் எல்லாப் பலன்களையும் கொடுக்கிறார்’

யே யஜந்தி பித்ரூந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹூதாஸநாந்
ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்திதே.(தக்ஷஸ்மிருதி.)
எவர்கள், பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடின பிராமணர்களையும் பூஜிக்கின்றார்களோ, அவர்கள், எல்லாப் பூதங்கட்கும் அந்தரியாமியாய் இருக்கிற விஷ்ணுவையே பூஜித்தவர்கள் ஆவர்கள்,’ என்பது ஸ்மிருதி.

பாடிப் போய்க் காயம் கழித்து –இதம் ஸரீரம் க்ருத்ஸ்நஸ்ய லோகஸ்ய சரதாஹிதம்
பாண்டரஸ்ய ஆதபத்ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா.(ஸ்ரீராமா. அயோத், 2 : 7.) 
1‘சக்கரவர்த்தி மக்களுடைய காவல் நிமித்தம் சுற்றும் பயணம் திரிந்து முத்தின் குடை நிழலிலே இருந்து சரீரத்தால் முதுமைப்பருவத்தை அடைந்தார்,’ என்றது போன்று, பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு

ஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின்,     ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ.2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;

பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:(ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)_

அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதாமத்யே ஸூமத்யமா
ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மண: அநுஜகாமஹ.(ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) 

ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய – ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற  எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’  என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று  அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன் வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை  அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே  ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு  நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று  உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை  செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை  மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம் பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்  புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு  நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை  வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்  தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே  இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
 மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.) என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை  இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே   கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப் பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி(பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.)

தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ (ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து முனிவர்கள்  கூறுவது. ஸ்ரீ ராமா. ஆரண். 1 : 20.)என்னுமதுவும் தன் பக்கலிலேயாய் இருக்கிறது. நீ கண்டுகொள் என்று –அவேக்ஷதாம் பவாந் கோஸம் கோஷ்டாகாரம் புரம் பலம்    பவத: தேஜஸா ஸர்வம் க்ருதம் தஸகுணம் மயா.(ஸ்ரீ ராமா யுத். 127 : 55.) 2‘தேவரீர், பொக்கிஷத்தையும் பசுக்கொட்டிலையும் நகரத்தையும் பலத்தையும் பார்த்தருள வேண்டும்; தேவரீருடைய ஒளியால் எல்லாம் பத்துமடங்கு அதிகமாக என்னால் செய்யப்பட்டது,’ என்கிறபடியே, ஸ்ரீ பண்டாரத்தை வளர்த்து வைத்து, பெருமாள் மீண்டும் எழுந்தருளின போதே ஸ்ரீ பரதாழ்வான் காட்டிக் கொடுத்தாற்போலே வானவர் நாட்டை நீ கண்டுகொள்’ என்கிறார்.

இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம.(
ஸ்ரீ ராமா. யுத். 41 : 4. இது, சுக்ரீவ மஹாராஜரைப் பார்த்து ஸ்ரீ ராமபிரான்  கூறியது)ஏ வீரனே! நீ சிறிது வருத்தமுற்று இருந்தால் சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்றார் பெருமாள். என்று – இப்படி அன்போடே சொல்லி. வீடும் தரும் – 1கைங்கரிய சுகத்தைத் தரும்.

இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தி யாயின்
நன்னுதற் சீதை யால்என்? ஞாலத்தாற் பயன்என்? நம்பி!
உன்னையான் தொடர்வல்; என்னைத் தொடரும்இவ் வுலக மென்றால்
பின்னைஎன் இதனை நோக்கி விளையாடிப் பிழைப்பச் செய்தாழ்?’- என்றார் கம்பநாட்டாழ்வார்.

ஏதத் ஸாம காயந் ஆஸ்தே.(தைத்திரீய. பிரு. 10.) 1‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும், 2அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ (தைத்திரீயம்.)நான் பரமாத்துமாவுக்கு இனியன்; நான் இனியனாகிற பரமாத்துமாவை  அனுபவிக்கிறவன்-என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ

சன்மம் பலபல செய்து – பலப்பல அவதாரங்களை எடுக்கின்றான் ஆயிற்று. 1இவ்வவதாரங்களின் அடி அறியுமவர்கள் அவதாரத்துக்கு அப்பால் பரத்துவத்திலும் போகமாட்டாதே அன்றோ இருப்பது? 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாத சர்வேசுவரன் இச்சை அடியாகப் பல விதமாக மற்றை இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்; அவ்வவதாரத்தின் காரணத்தை ஞானிகள் நன்கு அறிகின்றார்கள்,’ என்பது மறை மொழி.

ஜந்ம கர்மசமே திவ்யம் ஏவம்யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜூந.(ஸ்ரீ கீதை, 4 : 9.)
என்னுடைய அவதாரமும் அவதாரத்தில் நிகழ்த்தும் செயல்களும் தெய்வத்தன்மை வாய்ந்தவை,’ என்று அவன் தானும் நெஞ்சு உளுக்கி அன்றோ இருப்பது

கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தால்ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ.(ஸ்ரீராமா. பால.)4‘பிறகு பன்னிரண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில் நவமி திதியில் ஸ்ரீராமனைப் பெற்றாள்’ என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து வந்து அவதரித்தானாதலின், ‘செய்து’ என்கிறார்

பிதா புத்ரேண பித்ருமாந் யோநி யோநௌ    ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்.-காடகம், 3 : 9.உலகிற்கு எல்லாம் தமப்பனான சர்வேசுவரன், தனது ஒவ்வொரு பிறவியிலும் தன் புத்திரர்களைத் தான் தமப்பனாக உடையவனாய் இருக்கிறான்; அந்தச் சர்வேசுவரனுடைய அவதாரத்தின் பெருமையை அறிவில்லாதவர்கள் அறியார்கள்,’ என்கிறபடியே, ‘எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே

வெளிப்பட்டுந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா   ந அந்யை: தேவை: மநஸா கர்மணாவா ஜ்ஞாந ப்ரஸாதேந விஸூத்த ஸத்வ:
தத: துதம் பஸ்யதே நிஷ்களம் த்யாயமாந:-முண்டகோபநிடதம், 3 : 1.
7‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது, ‘இச் ‘சரீரத்தோடு சம்பந்தம் இல்லாத கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை. 1‘என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’ *பெரிய திருவந் 28.)என்றபடி

ஸ: அஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ராஹ்மணா விபஸ்சிதா.(ஆனந்த வல்லி, 1 : 2.)அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே, ‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப்பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார்

தயா ஸஹ ஆஸிநம் அநந்த போகிநி
ப்ரக் ருஷ்ட விஜ்ஞாந பல ஏக தாமநி
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாசமா நோதர திவ்ய தாமநி.-(ஸ்தோத்திர ரத்நம்.)
சிறந்த ஞானத்துக்கும் ஆற்றலுக்கும் இருப்பிடமான ஆதிசேடன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். மென்மை நாற்றம் குளிர்த்தி இவற்றை இயற்கையாக உடையவன் ஆதலின், ‘அரவு’ என்கிறார்.

ஓர் யோகு புணர்ந்த – ‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக் கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தல்; அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே ஆத்ம மாயா மயீம் திவ்யாம் யோக நித்ராம் ஸமாஸ்த்தித:    ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயந் மதுஸூதந:(ஸ்ரீவிஷ்ணு. 6. 4 : 6.)2‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக் கூறுகிறார்’ என்னலுமாம். இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:

உபஸ்திதம் தேந புரோ கருத்மதா  த்வத் அங்க்ரி ஸம்மர்த்த கிண அங்க ஸோபிநா(ஸ்தோத்திரரத்நம்)-தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?

ஒத்தாரும் மிக்காரும் இல்லாத தனி நாயகன். என்றது, அநுரூப: ஸவை நாத: லக்ஷ்மீவாந் லக்ஷ்மணாக்ரஜ:  த்ரைலோக்யமபி நாதேந யேந ஸ்யாத் நாதவத்தரம்( ஸ்ரீராமா. அயோத். 2. 13.)3‘எந்த நாதனால் மூன்று உலகமும் நல்ல நாதனை உடையன ஆகுமோ, அந்த இராமபிரான் தகுந்த நாதன்,’ என்கிறபடியே, 4தன்னை நாயகன் என்றால், பின்னர் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கை. பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’

ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே   நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்.( ஸ்ரீராமா. யுத்-இது, வானர முதலிகளைப் பார்த்து ஸ்ரீ விபீஷணாழ்வான் கூறியது)-எல்லா உலகங்களும் அடைக்கலமாக அடையத் தக்கவரும் மஹாத்துமாவுமான ஸ்ரீ ராமபிரான்’ என்று, என்னைப் போன்று பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ?’ என்னும்படி அன்றோ இருப்பது?

யத்வா ஏதத் ஸூக்ருதம், ரஸோ வை ஸ:, ரஸம் ஹி    ஏவ அயம் லப்த்வா ஆநந்தீ பவதி.(தைத்திரீயம்.)‘அந்தப் பரம்பொருள் சுவை உருவம்’ என்கிறபடியே, உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய் இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார்

 பாரவஸ்யம் ஸமாயாத: ஸூலி ஜ்ரும்பண தேஜஸா
பாஞ்ச ஜன்யஸ்ய கோஷேண ஸார்ங்க விஸ்பூர்ஜிதேநச.
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம்   புருஹோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதிநிதநம் பரம்.–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 41. இது சிவபிரான் கூற்று.

பொன் சக்கரத்து அரியினை – அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை. 4‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே! நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும் பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே, தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேசுவரன் என்று அறிந்தது. அச்சுதனை – அடியார்களை நழுவ விடாதவனை.-சிவபிரான், தன்னை அடைந்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ

தத: அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பாநுநா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா.- ஸ்ரீ விஷ்ணு பரா. 5. 3 : 2.

துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி – துக்கக் கடலிலே அழுந்தாநின்றுள்ள மனிதர்களுடைய பிறவிகளிலே தோன்றி. 2‘எல்லா உலகங்கள் ஆகிற தாமரை மலரும்படி தேவையாகிற கீழைச்சந்நிதியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’ என்கிறபடியே, தோன்றினவன் ஆதலின், ‘தோன்றி’ என்கிறார்.

க்ருத்வா பாராவதாரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்.பாரதம்

கண் காண வந்து – ஊனக்கண்களுக்குப் புலப்படுதல் இன்றி நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னை ஊனக்கண்களுக்குப் புலப்படச் செய்து. துயரங்கள் செய்து – அடியார்களை அழகாலே நோவுபடுத்தியும்; பகைவர்களை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்; 3‘நீண்ட கண்களையுடைய கிருஷ்ணர் பூமியினுடைய பாரத்தைப் போக்கி, எல்லா உலகத்தையும் மயங்கச் செய்து, தம்முடைய மேலான இருப்பிடத்தை அடைந்தார்,’ என்கிறபடியே, பகைவர்களை முட்கோலாலே சாடியும் அடியார்களை கண்ணழகாலே சாடியும் போனபடி. 4ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்! ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன்!’ (திருவாய். 7. 7 : 1. )என்னும்படி அன்றோ கண்ணற்று நலியும்படி?

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் ய: அபிஜாநாதி கர்மபி: ந ஸ பத்யதே.-ஸ்ரீ கீதை, 4 : 14.

தைவீ ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே.–ஸ்ரீ கீதை, 7 : 14.

ஏதும் அல்லல் இலனே – ‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ என்கிறார். என்றது, 2‘என்னைக் கர்மங்கள் ஒட்டுவது இல்லை; கர்மபலத்தில் எனக்கு ஆசை இல்லை; இவ்விதமாய் என்னை எவன் அறிகின்றானோ, அவன், கர்மங்களினால் கட்டுப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, அறிந்தவன் கர்மங்கட்குக் கட்டுப்படமாட்டான் ஆகையாலே, எனக்கும் கர்மங்கட்குக் கட்டுப்படுதல் இல்லை,’ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, ‘உலகத்தின் படைப்பு முதலானவைகளை அவனுடைய விளையாட்டாக நினைக்கின்ற எனக்கு இந்த லீலா விபூதியில் சேர்தலாகிற துக்கம் இல்லை,’ என்கிறார் என்னலுமாம். என்றது, 1‘‘நான் கட்டிய கட்டினை எவன் ஒருவன் என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ளப் பார்க்கிறான்? அவன் இதனைக் கடப்பான்,’ என்று அவன் சொல்லி வைத்தபடியே, அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ என்கிறார் என்றபடி.

    க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபி ச அப்யய;
க்ருஷ்ணஸ்யஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்.   ஏஷ ஹி ஏவ ஆநந்தயாதி.-பாரதம்

எல்லை இல் மாயனை – நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல ஆச்சரியமான சத்திகளோடு கூடியவனை. ‘இப்படிப்பட்டவன் யார்?’ என்னில், கண்ணனை – கிருஷ்ணனை. ‘ஆயின், கிருஷ்ணனுக்குப் படைத்தல் முதலான தொழில்கள் உண்டோ?’ எனின், 1‘உலகங்களினுடைய உற்பத்தியும் கிருஷ்ணனேயாவன்; உலகங்கள் பிரளயத்தால் அழிவதும் கிருஷ்ணனேயாவன்,’ என்பது பாரதம்

 ——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –இரண்டாம் பத்து –

November 30, 2023

1. விஷயதே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா:
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா: ஸபுஷ்பாங்குர கோரகா: ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன

———


2. உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸூஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச. –ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்

இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

———


3. ஸீதே ம்ருத: தேஸ்வஸூர: பிதராஹீந: அஸி லஷ்மண. –ஸ்ரீராமா. அயோத். 102 : 4

ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.

——–


4. நசஸீதா த்வயாஹீநா நசாஹம் அபிராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவோத் த்ருதௌ.–ஸ்ரீராமா, அயோத். 53 : 31.

இத்திருவாய்மொழியில், இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.

———


5. கிரயோ வர்ஷதாராபி: ஹந்யமாநா ந விவ்யது:
அபி பூயமாநா: வ்யஸநை: யதாதோக்ஷஜ சேதஸ:. – பாகவதம். 10. 20 : 15.

சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே!

———-


6. பதிஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத : பாரம்நாஸஸாத ஆப்லவோயதா. –ஸ்ரீராமா, அயோத். 119 : 36

பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; ‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

——–


7. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.–ஸ்ரீராமா. சுந். 9 : 30.

 

பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-என்கிறாள்.

———


8. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.–தைத்திரீய நாராய. 11 : 8.

 

இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’

——–


9. யஸ்ய அஸ்மி. 

இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்

————


10. தௌ வநாநி கிரீம்ஸ்சைவ ஸரிதஸ்ச ஸராம்ஸிச
நிகிலேந விசிந்வாநௌ ஸீதாம் தஸரதாத்மஜௌ.  ஸ்ரீராமா. ஆரண். 61 : 20.

கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆகையாலே, தேடப் பிறந்தவர்கள் அல்லர்’  என்றும்,
சீதாம்’என்றதனாலே, ‘தேடிக்கண்டிலோம் என்று ஆறியிருக்கலாம் விஷயமன்று’ என்றும்,
‘இத்தால், அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருளுண்டோ? ஜீவித்தல் சக்கியமன்று’
என்றும் உரையாசிரியர் அச்சுலோகத்திற்கு விசேடப்பொருள் அருளிச் செய்வர்.

——-


11. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம.–ஸ்ரீராமா. யுத் 18 : 33.

 

அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? ‘என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தினின்றும் நீக்கிப் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை-இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, (ஆயின், அவ்வார்த்தை பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின், பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும் 1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.-ஆயுதம் எடேன்’ என்ற சூளுறவைப் பொய்யாக்கின கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்  என்றபடி-)பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

———

12. ஏஹிஏஹி புல்லாம்புஜபத்ர நேத்ர
நமோஸ்துதே தேவவர அப்ரமேய.
ப்ரஸ்ஹ்ய மாம் பாதய லோகநாத
   ரதோத்த மாத் பூத ஸரண்ய ஸங்க்ஸேய.-(பார. பீஷ்ம.  59 : 98)

ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி   மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை  மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்  பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்  இருக்கிற வரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோக நாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது   அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள்.

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
  காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
  நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
  வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’-  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்

———


13. ஸபங்காம் அநலங்காராம் விபத்மாம் இவ பத்மிநீம்
வ்ரீளிதாம் துக்க ஸந்தப்தாம் பரிம்லாநாம் தபஸ்விநீம். –ஸ்ரீராமா. சுந். 15 : 22.

14. அவ்யக்தலேகாம் இவ சந்த்ரலேகாம்
    பாம்ஸூ ப்ரதிக்தாம்இவ ஹேமலேகாம்
    க்ஷதப்ர்ரூடாம்இவ பாணலேகாம்
    வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம்

நைவாய எம்மே போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; ‘பூமியினின்றும் தோன்றினவளைப் போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும், பெருமாள் வரினும் ‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், அம்பு வாய் (அம்பு பட்ட புண்.)உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், (பெருமாளுடைய திருமேனியிற் பிரிக்கப்பட்ட ஏகதேசம் என்று தோற்ற இருந்தாள்  என்றபடி.)ஆன சீதை’ என்றார் வால்மீகி பகவானும்.

——–


15. பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸிதேக்ஷணா
ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களாநி அபிதத்நுஷீ. 

——–


16. ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹதா ஜ்வலதா நித்யம் அக்நிநேவாக்நிபர்வதா:. –ஸ்ரீராமா. சுந்த. 35 : 44.


17. அந்தர்தாஹேந தஹந: ஸந்தாபயதி ராகவம்
வந தாஹாபிஸந்தப்தம் கூடோக்நிரிவ பாதபம். –ஸ்ரீராமா. அயோத். 85 : 17

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான்

ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

—————


18. ஸாரதீம் ரஜநீஞ்சைவ த்ருஷ்ட்வா ஜ்யோத்ஸ்நாநு லேபநாம்
காமவ்ருத்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம்
   புத்த்வா காலமதீதஞ்ச முமோஹ பரமாதுர:.–  ஸ்ரீராமா, கிக்ஷ்கிந். 30 : 3.

கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும்

———


19. ந மே துக்கம் ப்ரியாதூரே ந மே துக்கம் ஹ்ருதேதிவா
   ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்ததே.-ஸ்ரீராமா. யுத்த 5 : 5.

போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

——–   


20. அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
    க்ருதக்ருத்ய: ததாராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ. –சங்க்ஷேப ராமாயணம். 

விபீஷணனுக்கு முடி சூட்டிய பின்னர்ச் செய்து முடிக்க
வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவராய் நடுக்கமும் தீர்ந்து மகிழ்ந்தவர் ஆனார்’

இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்; திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி. துளக்கு அறுதலாவது, ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான 1ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல் 2‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. இனி, துளக்கு அறுதலாவது, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது

————-


21. க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிச அப்யய:
   க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம். -மஹாபாரதம். பீஷ்ம பர்வம்.

 சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.

———-


22. ஸ்தயம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
   வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி நதைவம் கேஸவாத் பரம்.

அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் – இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.

    ‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.  

————

23. அத்யத்புதம். இதம் வாக்யம் தவ ராம ஸூபாக்ஷரம்
     பாவந: ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந, –ஸ்ரீராமா. உத்தர. 82 : 9.

அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்

—————


24. நஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

 

காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,

மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

————


25. தத: கரோத பரீதேந ஸம்ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேணச்சிந்நம் தஸ்ய ஸிரோமயா.–மத்ஸபுராணம்

தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

——–
26. ஸஏஷ ப்ருது தீர்க்காக்ஷ: ஸம்பந்தீ தே ஜநார்த்தந: – பாரதம்.

27. தம்இமம் ஸர்வஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்
அர்ச்யம் அர்ச்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்தும் அர்ஹத.–பாரதம், ராஜசூய

பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள்.

இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

———–


28. பஹூஸ்யாம் பிரஜாயேயேதி. பக். –தைத்திரீய. ஆனந். 6 : 3.

நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள்

  ஜ்ரும்பிதம் தத்தநு: த்ருஷ்ட்வா ஸைவம் விஷ்ணு பராக்ரமை:
அதிகம் மேநிரே விஷ்ணும் தேவா: ஸர்ஷிகணா: ததா. – ஸ்ரீராமா. பால. 75 : 19.

மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான (சந்தேகம் கொள்ளும்படி)தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

—–


29. ராம: கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
ரூபதாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே. –ஸ்ரீராமா. சுந். 53 : 8

தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார்.

ராம சர்வாங்க சுந்தரராய் இருக்கை. கமலபத்ராக்ஷ – அதிலே ஒரு சுழியாயிற்று-  அமிழ்ந்துவராக்கு வேண்டுவது. ‘அக்கண் அழகுக்கு எல்லை என்?’ என்னில், ஸர்வ  ஸத்வ மநோஹர:- திர்யக் ஜாதியனாய்ப் பணையோடு பணை தத்தித் திரிகிற என்  நெஞ்சையும் அபஹரித்தன்றோ? ரூப தாக்ஷிண்ய ஸம்பந்த ப்ரஸூத; – தேக  குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றதுதான் ஒளத்பத்திகமாயிருக்கும்.  ஜநகாத்மஜே -‘அற விஞ்சச் சொன்னாய்; இனி, இங்ஙன் சொல்லலாவார் உண்டோ, இல்லையோ?’ என்று பிராட்டிக்குக் கருத்தாக, பின்னை உம்மைச் சொல்லலாம், நீரும்  உண்டு’ என்கிறான்திருவடி

——-

30. ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மாத் ஸமுத்தாய பரஞ்ஜ்யோதி:
உபஸம்பத்ய ஸ்வேநரூபேண அபிநிஷ்பத்யதே. –சாந்தோக்கியம்.

31. நாராயண பரோஜ்யோதி:. –தைத்திரீய நாரா, அநு. 11.

32. ஸ்வாபாவிக அநவதிகாரிஸய ஈஸித்ருத்வம்
நாராயண த்வயி நம்ருஷ்யதி வைதிக: க:. –தோத்திர ரத்நம், 11.

பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி

————


33. விஷ்ணுபக்தி விஹீந: ய: ஸர்வ ஸாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய நபவேத் தஸ்ய உத்பத்தி: நிரூப்யதாம்.-பத்மபுராணம்.

பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின் கண் ஐயப் படும்.’

——–
34. யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம்
தத் அபஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்யகுகௌ மஹாத் மந:.–பாரதம், ஆரண்ய.

தன்னுள் ஒடுங்க நின்ற1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற(இது அவாந்தர சம்ஹாரத்தைக் குறித்தது.). இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம்(இது மஹாசம்ஹாரத்தைக் குறித்தது. இப்பொருளில் ‘கவர் வின்றி’ என்பதற்கு, ‘ஒன்றும்
தப்பாமல்’ என்று பொருள் கொள்க.)

————

35. நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே.
ஸமர்த்தோ த்ரூஸ்யதே கஸ்சித் தம்விநா புருஷோத்தமம்.

காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  விரிகமல உந்தியுடை விண்ணவனை’-  என்றார் இளங்கோவடிகள்.

—————-

36. அந்யம் தேஹி வரம் தேவ ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷூ
மர்த்யோ பூத்வா பவாநேவ மாம் ஆராதய கேஸவ. 

கள்வா1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த

——-

37. தேவகார்யாவதாரேஷூ மநுஷ்யத்வம் உபேயிவாந்
     த்வாமேவ ஆராதயிஷ்யாமி ஹரத்வம் வரதோபவ. –ஹரி வம்ஸம்.கைலாச யாத்திரை.

38. அஞ்ஜலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணும் உத்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தமீஸாநோ மாஹாத்ம்யம் வக்தும் ஐஹத.

நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ (மீன் துடித்தல் போல நாக்குத் துடிக்கிறபடி’)என்றான். 7நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?

———–

39. ஸங்கை: ஸூராணாம் திவி பூதலஸ்தை:
ததா மநுஷ்யை: ககநேச கேசரை:
ஸ்துத: க்ரமாந்ய: ப்ரசகார ஸர்வதா
மம அஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி–
. விஷ்ணு தர்மம்.

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட

——

40. ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஐஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தக்கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:

இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.

ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்  சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ  சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த  இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’  என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்  பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்  பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –  ‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த  போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –  ஸம்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-  தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்  இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி  ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்  இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’  என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

——–

41. மநஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் –ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.

———


42. ஸர்வகந்த: ஸர்வரஸ:. –சாந். உபநிட 2 : 14.

‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.

————
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே நதத் ஸம:ச அப்யதிகஸ்ச த்ருஸ்யதே. -அதிமா நுஷ ஸ்தவம், 15.

எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்

———-

43. ப்ரஹ்மேஸமத்ய கணநா கணநார்க்க பங்க்தௌ
இந்த்ராநுஜத்வம் அதிதே: தநயத்வயோகாத்
இக்ஷ்வாகுவம்ஸ யதுவம்ஸ ஜநிஸ்ச ஹந்த
ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந:  பக். 65.

————-

44. யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்ய:
தஸ்மை நத்ருஹ்யேத் கதாசந
ஸஹி வித்யாத: தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜன்ம
ஸரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: –ஆபஸ்தம்ப தர்ம சூத்

தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார்.

———–

45. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் விரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸச:ஸ்ரீ கீதை. 18 : 66

46. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹ்ருத் கதி:  நாராயண: 

இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள்.-(ஸ்ரீராமா, யுத். 33 : 18) 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது சுபாலோபநிடதம்.. 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது  பெரிய திருவந். 5

——————-

47. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:.

48. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸா நூஷூரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

 

49. குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மியம் நேஹ வித்யதே
க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்ப்யதே.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’ என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார், ‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும்.

முலையோ முழுமுற்றும் போந்தில; மொய்பூங் குழல்குறிய;
கலையோ அரையில்லை;நாவோ குழறும் ‘கடல்மண்ணெல்லாம்
விலையோ!’ எனமிளிரும்கண் இவள்பர மேபெருமான் மலையோ திருவேங் கடமென்று
கற்கின்ற வாசகமே?’–திருவிருத்தம். 60

——–

50. க்ரயஸ்ச பரிவ்ருத்திஸ்ச விபாகஸ்ச ஸமே யதி
ஆதஸாஹாத் நிவர்த்தந்தே விஷமே நவ வத்ஸராத். –.

51. வபுராதிஷூ யோபிகோபி வா குணத: அஸாநியதா ததாவித:
தத் அயம் தவ பாதபத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:.–ஸ்தோத்திர ரத்நம், 52.

52. மமநாத யத் அஸ்தி யோஸ்மி அஹம் ஸகலம் தத் ஹி தவைவ மாதவ

நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ: அதவா கிந்நு ஸமர்ப் பயாமி தே.–ஸ்தோத்திர ரத்நம், 53.

மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும், 3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீஆளவந்தார் திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.  

———                          

53. இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா
நித்யம் ப்ரியாஸ்தவது கேசந தேபி நித்யா:
நித்யம் த்வ தேகக பரதந்த்ர நிஜஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸநம் ந: –ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், 36.

எனது ஆவி யார் யான் ஆர்  – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

————

54. த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்
ஏஷமே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவோ துரதிக்ரம:. –ஸ்ரீராமா. யுத். 36 : 11.

சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்

————

55. ந அஹம் ஆராதயாமி த்வாம் தவபத்த: அயம் அஞ்சலி:
வரார்த்திநாந்த்வம் வரத ப்ரயச்ச அபிமதாந் வரான். –விஷ்ணு தர்மம்.

அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான். ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம்

————

56. அமர்ஷீ துர்ஜயோ ஜேதா விக்ராந்தோ புத்திமாந் பலீ
ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: நித்யம் பிராணோ பஹிஸ்சர:.–ஸ்ரீராமா. ஆரண் 34 : 14.

மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே? 3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.

நீருள எனின்உள் மீனும் நீலமும்
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு வாய்’ என்றான்.–
  என்ற கம்பராமாயணச் செய்யுள்


57. யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹகச்சதி.

பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி – 3பின்னே சொன்னவழி என்றபடி.

58. ஸ: அஸ்துதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணாவிபஸ்சிதா.–ஆனந்தவல்லி, 1 : 2.

இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று மகிழ்கிறார்.

 

59. ஆகர்ண பூர்ணை: இஷூபி: ஜீவலோகம் துராஸதை:
கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம் –ஸ்ரீராமா. ஆரண் 64 : 66

 குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

60. கதாநு அஹம் ஸமேஷ்யாமி பரதேந பஹாத்மநா
ஸத்ருக்நேந ச வீரேண த்வயாச ரகுநந்தந.–ஸ்ரீராமா. ஆரண். 16 : 10.

61. குஹேந ஸஹிதோ ராம: லக்ஷ்மணேந ச ஸீதயா. –ஸ்ரீராமா. பால. 1 : 29

இலக்குமணா! மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார் பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே, (கிழிக்குறை – நிறைந்திராமல் குறைந்திருக்கிற பணப்பை. கிழி – பணப்பை. ‘வேண்டிய,  வேதங்கள் ஒதி விரைந்து ‘கிழி அறுத்தான்’ என்ற இடத்துக் ‘கிழி’ என்பது இப்பொருட்டு.)கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான், குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார் வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது, 5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும் 6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும் படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம்.

62. ராமலக்ஷமண ஸீதார்த்தம் ஸ்ரவந்தீம் வாரிநேத்ரஜம்
அஸக்ருத் ப்ரைக்ஷத ததா ந்ருத்யந்தீமிவ மாதரம். –ஸ்ரீராமா. அயோத். 40 : 25.

63. ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே
நரம் ஸ்ரியாஜூஷ்டம் இவ உபஜீவிந:.–ஸ்ரீராமா. சுந். 29 : 1 .

ஸ்ரீகௌசல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர்.

64. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருசன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.–ஸ்ரீராமா. பால. 1 : 38.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; 5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் அன்றோ?

 

65. மந: பூர்வோ வாக் உத்தர:.

இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை.

66. மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வ மே. –ஸ்ரீராமா. சுந். 64 : 15.

பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ (திருச்சந். 105.)ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.

67. கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி ஸோகஜம்
புண்டரீக பலாஸாப்யாம் விப்ரகீர்ணம் இவ உதகம். –ஸ்ரீராமா. சுந். 33 : 4.

 கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? (முடியானே’ என்ற திருவாய்மொழியின்  பொருளை ஈண்டு நினைத்தல் தகும்.)மங்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ (இராவணன் குடி வேர் பறியவோ, இராக்காதர்கள் என்று
சொல்லப்படுகிற எல்லாருடைய குடிகளும் வேர் பறியவோ?’)என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.

யாரைச் சேதநராகக் கொண்டு?’ என்றது, ‘யாருடைய இன்பத்திற்காக?’ என்றபடி.  சேதநன் -இன்பத்தை நுகர்கின்றவன். ‘தாமரை இதழிலே முத்துப்பட்டாற்போன்று  இருக்கிற இந்த அழகினை அனுபவித்தற்குத் தக்கவரான பெருமாள் அருகில்  இல்லாதிருக்க, இக் கண்ணீருக்குப் பயன் யாது?’ என்பது கருத்து.

68. ஸாதிர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாத் நிரீக்ஷ மாணாம் அசிந்த்யபுத்திம்

ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யம் இவ உதயஸ்தம்.–ஸ்ரீராமா. சுந். 31 : 119.

எங்கும் நாடி நாடி – தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே இருக்கச் செய்தேயும், வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். ‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, ‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே

கீழே பார்த்ததற்குக் கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து  கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், அல்லாத
திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’ என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா  விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் – அவன்  வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து  இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல நெஞ்சையுடைய  வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் – ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்  இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் – பெருமாளுக்குப் பிராணஹேதுவான பிராட்டிக்குப் பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்  பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் –  இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய உதயத்துக்கு  அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு  ‘ஹரி ஹரி’ என்கிறபடியே இருக்கிறது.’

69. மத்த: ஸர்வம் அஹம் ஸ்ரவம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்மா ஆத்மஸம்ஸ்ரய:.– ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19 : 85.

என்னிடமிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் பொருள்களும் நானாகவே இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. 


70. தாதா யதாபூாவம் அகல்பயத்.–தைத்திரீய நாராயண் உபநிடதம்.

இவ்வாணுதலே – ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி.

70a. இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்மசரீ தவ
       ப்ரதீச்சசைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா.–ஸ்ரீராமா. பால. 73 : 24.

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்     

71. துஷ்கரம் க்ருதவாந் ராம்: ஹீநோ யத் அநயா ப்ரபு:
    தாரயதி ஆத்மநோ தேஹம் ந ஸோகேநாவஸீத்தி. –ஸ்ரீராமா. சுந். 15 : 53

இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

72. துல்ய ஸீல வயோ வருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
    ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சேயம் அஸிதேக்ஷணா.–ஸ்ரீராமா. சுந். 16 : 5.

சக்கரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை  உடையளான இப்பிராட்டியும் பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை என்னும் கடல்’ (பெரிய திருமொழி, 4. 9 : 3.)என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று என்கிறாள்’ என்றயடி..

73. நைவ தம்ஸந் ந மஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந். –ஸ்ரீராமா. சுந். 36 : 42.

நீர் இரக்கம் இலீர்6‘தன் சரீரத்தின்மேல் தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணிகளால் உண்டாகும் துன்பத்தையும் அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ? ‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார் கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்

74. நாயம் ஆத்மா ப்ரவசநேந லப்யோ நமேதயா ந பஹூநா ஸ்ருதேந

யம் ஏவ ஏஷ வ்ருணுதே தேநலப்ப: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருதே தநூம் ஸ்வாம்.–முண்டகோபநிடதம். 3. 2 : 3

இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.

இவ்வுபநிடத வாக்கியத்தின் பொருளோடு ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய் முதற்பொருளை   உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவணை என்பன: அவற்றுள்  கேள்வி இதனாற்கூறப்பட்டது,’ என்னும் (கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப் படுவர் மற்றீண்டு வாரா நெறி.-குறள். 356)பரிமேலழகருரை ஒரு புடை ஒப்பு நோக்கத்தகும்                        

75. விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:–ஸ்ரீராமா. பால. 1 : 18.

சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது

76. தஹந்தீமிவ நிஸ்வாஸை: வ்ருக்ஷாந் பல்லவதாரிண:
ஸங்காதமிவ ஸோகாநாம் துக்கஸ்ய ஊர்மிமிவ ஸ்திதாம்.–ஸ்ரீராமா. 17 : 29.

உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.  

 

மகளிர், தெளிந்திருக்கும் காலத்துக் கணவனது அன்பைப் பெறுவதற்கு அவனை  வணங்கமாட்டார்’ என்பது கருத்து. ‘ஞானிகள் இறைவனுடைய திருவருளைப் பெறுதல்  நிமித்தம். அவனை வணங்கமாட்டார்கள்’ என்ற விசேடப்பொருளும் தோன்றும்.
அடியேன் நான் முயற்சியின்றி நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே’ என்றார்  திவ்வியகவி.

77. அநித்ர: ஸததம் ராம: ஸூப்தோபிச நரோத்தம:
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே.–ஸ்ரீராமா. சுந். 38 : 48 

சீதேதி மதுராம் வாணீம் வியாகரந் ப்ரதிபுத்யதே’ என்று வாய்வெருவுவான்  அவன் கிடீர். அநித்ரஸ் ஸததம் ராம: – நித்திரையோடே காலக்ஷேபம் பண்ணவேண்டும்  செலவுடையவர், ஸந்ததம் அநித்ரராயிருப்பர். சுப்தோபிச – ஸததம் நித்ர : என்று  வைத்து, ஸூப்தோ பிச என்கிறது, பராகர்த்த அநுசந்தான அபாவத்தைப் பற்ற.  நரோத்தம: – அபிமத விஸ்லேஷத்தில் இங்ஙனே இருக்கைபோலே – புருஷோத்தமத்தமாவது.’

இவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் *கவனம், ஞாபகம்.)பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.

78. மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத்அஹ்தி நஸம்ஸய:
ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ.
பக். 106.

79. அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அசோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந: –ஸ்ரீகீதை. 2 : 24.

உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே -வேவாரா வேட்கை நோயாகையாலே -அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று

80. அந்தகாரே அதி தீவ்ரேச நரஸிம்ஹம் அநுஸ்மரேத்
     தரதி அகிலதுக்காநி தாபார்த்தோ ஜலஸாயிநம்
    கருடத்வஜ அநுஸ்மரணாத் விஷவீர்யம் ப்ரஸாம்யதி.–விஷ்ணு தர்மம். அத், 40.

வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.   

81. சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம். ஸ்ரீராமா. சுந். 66 : 10.

தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

அளவுபடை-சிறுபடை; இங்கு, நாயகன். பெரும்படை – நாயகி. கண்ணழகு  முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.

82. ததோ மலிந ஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம்
உபவாஸ க்ருஸாம் தீ நாம் நிஸ்வஸந்தீம் புந: புந: –ஸ்ரீராமா. சுந். 15 : 18

இந்தச் சுலோகம், பலகாலும் பெருமூச்சு விடுதற்கு மேற்கோள்.–பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3உள்ளம் மலங்க’ (திருவாய். 2. 4 : 4)என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ (திருவாய். 2. 4 : 7)என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.

83. ஸஹி தேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷணு: ஸநாதந:.–ஸ்ரீராமா. அயோத். 1 : 7.

கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ (இலங்கையை அடியோடு அழித்தது போன்று, இவளையும் அழியாதே  கொள்ளும்)என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள்,(உம்முடைய ஜீவனம்’ என்றது, ‘மணநோக்கம் உண்டானே’ (பெரியதிரு. 8. 10 : 1.)  என்றதனை நோக்கி;) ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

84. உதார வ்ருத்தார்த்த பதை: மநோரமை:
ததாஸ்ய ராமஸ்ய சகார கீர்த்திமாந்
ஸமாக்ஷரை:ஸ்லோகஸதை: யஸஸ்விந:
யஸஸ் கரம் காவ்யம் உதாரதீ: முநி: — ஸ்ரீராமா. பால. 2 : 42.

வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின், ‘வண்சடகோபர்’ என்கிறார்.

85. கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ: ஆகர்ஷதே ஜலே
தயோ: த்வந்த்வ ஸமம் யுத்தம் திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரகம்.– விஷ்ணு தர்மம், 68.

கஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’ 2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;-பிரிவால் உண்டாகிய துன்பம் முடிக்கத் தேட,  நசையானது முடிக்க ஒட்டாமல் ஜீவிப்பிக்க, இப்படியே, மேல் ‘ஆடிஆடி’ என்ற  திருவாய்மொழியில் ஆழ்வாருடைய நிலை சென்றது என்றபடி.

 

86. அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தமஸ்வீக்ருத
ப்ரணீத மணிபாதுகம் கிமிதிச ஆகுலாந்த: புரம்
அவாஹந பரிஷ்க்ரியம் பதகராஜம் ஆரோஹத:
கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம: –ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத். 59.

87. ஸ்தலஸ்தம் தாரயாமாஸ க்ராஹம் சக்ரேண மாதவ:

அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’(திருவாய். 2. : 4. 4)

88. ஸ ஏகாகீ ந ரமேத. -மஹோபநிடதம்.

அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’

89. அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைகரூப ரூபாய விஷ்ணுவே ஸர்வஜிஷ்ணவே. -ஸ்ரீ விஷ்ணு புரா. 1 . 2 : 1

செந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம்

90. ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்
ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்.-மனு ஸ்மிருதி. 12 : 122.

செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.

 ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்  கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்  கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி  சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்  ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.

91. இச்சாக்ருஹீத அபிமதோருதேஹ:
ஸம்ஸாதி தாஸேஷ ஜகத்திதோஸௌ. — ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.

92. ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹ நூமத:
மயா காலம் இமம் ப்ராப்ய தத்த: தஸ்ய மஹாத்மந:–ஸ்ரீ ராமா. யுத். 1 : 13.

விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர். ‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? (இதனால், இவர் அனுபவ பரவாஹ ரூபமான ஸ்ரீசூக்தியும் பரமப் பிரமாணம் என்றபடி)அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.

93. தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதா தரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம். –ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63

வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின், ‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.-பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.

94. பஸ்பர்ஸாங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்யாபி ஸர்வத:
கரேண ம்ருதுநா தேவ: பாபாந்நிர்மோசயந் ஹரி:–ஹரி வம்ஸம்.

கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார்.

95. யச்சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் ததஹம் அர்ஜூந
நததஸ்தி விநா யத்ஸ்யாத் மயா பூதம் சராசரம். –ஸ்ரீ கீதை. 10 : 39.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு, ‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும் நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே; இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு இரண்டு கருத்து  அருளிச்செய்கிறார். முன்னையது, சங்கல்பாஸ்ரிதம்; உள் – உள்ளம். இரண்டாவது,  சொரூபாஸ்ரிதம்; தன்னுள் – தன்னிடத்தில். ஸ்ரீகீதையின் சுலோகம், சொரூபாஸ்ரிதத்திற்கு  மேற்கோள்.

96. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.– தைத்தீரிய ஆனந். 9 : 1

தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காணமாட்டாது 3‘வாக்கிற்கு அப்பாற்பட்டவனே’ என்று மீளும்படி இருப்பானாய் இருக்கின்ற தண்துழாய் மாலையனை. எல்லை காண வொண்ணாத பரம்பொருளுக்குத் திருத்துழாய் மாலை அடையாளம் ஆதலின், ‘தன் முடிவு ஒன்று இல்லாத தண்துழாய் மாலையனை’ என்கிறார்.

 

97. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸூ: விதாதா க்ருத லக்ஷண:–ஸ்ரீ சஹஸ்ரநாமம்.

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – 4அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் 5செம்பளித்து (மூடிக்கொண்டு.)வந்து கலந்தான். இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி. இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் ‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து ஒரு கணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்று கூறலுமாம்.
கண்செம் பளித்திருந்து கைத்துருத்தி நீர்தூவி அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று.’–ஞானசாரம், 33

98. நைநம் வாசா ஸ்த்ரியம் ப்ருவந் நைநம் அஸ்த்ரீபுமாந் ப்ருவந்
புமாம்ஸம் நப்ருவந் நைநம் வதந் வததி கஸ்சந  அ இதி ப்ரஹ்ம.–
2. ருக்வேதம், ஆர. 2 : 2.

99. ஸவை ந தேவாஸூர மர்த்யதிர்யங்
ஸ்த்ரீந ஷண்டோ ந புமாந் நஜந்து:
ந அயம் குண: கர்மந ஸத் ந ச அஸத்
நிஷேத ஸேஷோ ஜயதாதஸேஷ: —
3. பாகவதம், 8. 3 : 24.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாட்டில் காண்கிற ஆண்களின்படியும் அல்லன், பெண்களின்படியும் அல்லன், உபயோகத்திற்குத் தகுதியில்லாத அலியின்படியும் அல்லன். பட்டர் இவ்விடத்தில், 2‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை; ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை. அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; 3‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை; ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை; கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ என்னும் இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், 4‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே! (4. இயலறிவுக்கு – சொல் இலக்கணத்துக்கு. ‘அர்த்தஞானமே அன்றிச் சப்த ஞானமும்  இல்லையே!’ என்றபடி.)‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.

100. ஸ்துத: அஹம் யத்தவயா பூர்வம் புத்ரார்த்திந்யா தத் அத்யதே.
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாத: அஹம் யத்தவ உதராத்.

காணலும் ஆகான் -ஆண் பெண் அலி என்னும் இவற்றைக் காண்கிற பிரமாணங்களால் காணப்படாதவன். இத்தால், 2ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை. உளன் அல்லன் அல்லாதார்க்கு. இல்லை அல்லன், அடியார்கட்கு. இவற்றை விரிக்கிறார் மேல்: பேணுங்கால் பேணும் உருவாகும் –3‘தேவீ, நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானேஉனக்குப் புத்திரனாய்த் தோன்றவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானே உனக்குப் புத்திரனாய்த் தோன்றிவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான். இனி, இதற்குத் 4‘தன்னை அர்த்திக்குங் காட்டில் அன்போடு தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிப்பான்’ என்று கூறலுமாம்      

பேணுங்கால் பேணும் உருவாகும்’ என்பதற்கு, இரு பொருள் அருளிச்செய்கிறார்:
முன்னையது, ‘அடியார்கள் ஆசைப்பட்ட வடிவோடே அவதரிக்கும்’ என்பது;  பின்னையது, ‘மங்களாசாசனம் செய்ய வேண்டும்படியான விக்கிரகத்தையுடையவனாய்  அவதரிக்கும்’ என்பது. முதற்பொருளில், பேணுதல் – விரும்புதல். இரண்டாவது  பொருளில், பேணுதல் – பரிவு.

101. மஹாத்மந: ஸங்க சக்ராஸிபாணே:
    விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸூதேவாத்மஜஸ்ய.  பாரதம், கர்ண பர்வம்.

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை – தன்படிகளைப் பேசப் புக்கால், 3ஆனந்தவல்லியிற்சொல்லுகிறபடியே, (யாதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது. (தைத்தீரிய ஆனந். 9 : 1) அந்த ஆனந்த  குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன’)பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை. அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று. 4‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும், ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள் அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்

102. வைதேஹி ரமஸே கச்சித் சித்ரகூடே மயா ஸஹ
     பஸ்யந்தீ விவிதாந் பாவாந் மநோ வாக்காய ஸம்யதா.-ஸ்ரீராமா. அயோத். 94 : 18

இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று 2ஐயங்கொண்டு, அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் ஐயத்தை நீக்கி, அவனை உளன் ஆக்குகிறார். 3‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடுகூட இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றாற்போலே ஆயிற்று இதில் சுவையும்; 4‘மைதிலி, உன்னை அறிந்தாயே நம்மை அறிந்தாயே, கலக்கிற தேசம் அறிந்தாயே! என்கிறார் என்றபடி.

சம்ஸ்லேஷ ரசாதிசயத்துக்கும், அத்தாலே  ஐயங்கொண்டதற்கும் மேற்கோள், ‘விதேககுலத்தில்’ என்று தொடங்கும் பொருளையுடைய  சுலோகம். ரமியாநிற்கச்செய்தே ‘ரமஸேகச்சித்’ என்கையாலே, நீர் வாய்ப்பும் நிழல்  வாய்ப்புமான சித்திரகூட பரிசரத்தில் அழகையும், தங்கள் சேர்த்தியழகையும் கண்டு, ‘இது  தொங்கப் புகுகிறதோ!’ என்று ஐயங்கொண்டது தோன்றுகிறது. அப்படிப் பெருமாள்  ஐயங்கொண்டது போன்று, இங்கும், ஆழ்வார் விஷயத்தில் இறைவனுக்கும் ஐயம்  உண்டாயிற்று என்றபடி.

103. குமுத: குந்தர: குந்த:–சஹஸ்ரநாமம்.

செய் குந்தா வரும் தீமை – செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்குந்தீமை. இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை எனப்பொருள் கூறலுமாம். உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா – உன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருப்பார்க்கு வாராதபடி நீக்கி, அசுரத்தன்மையுடையவர்கள் மேலே போகடும்படியான சுத்தியையுடையவனே! குந்தம் – குருந்தம் என்ற சொல்லின் விகாரம்; அது ஆகுபெயராய் அதன் மலருக்கு ஆயிற்று; அதன் மலர் வெளுத்து இருக்குமாதலின், அவ்வழியாலே பரிசுத்தத்தை நினைக்கிறது. இனி, ‘குந்தன்’ என்பதனை இறைவனுடைய திருபெயர்களில் ஒன்றாகக் கோடலும் அமையும், 4குமுத, குந்தா, குந்த’ என வருதல் காண்க.

104. விஸ்ருஷ்டம் பகதத்தேந ததஸ்த்ரம் ஸர்வ காதுகம்
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸஞ்சாத்ய மாதவ: —பாரதம்.

 முன் பிராதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே, பின்னர் அவர்கள் பகைவர்கள் மேலே போகடுவான் என்பதனைத் தெரிவித்தபடி. கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் முகங்காட்டினவாறே மருகாந்தாரத்தில் அசுரர்கள் மேலே தொடுத்தமையை 5ஸ்ரீராமாயத்தால் உணர்க. அங்ஙனம் ஒரு போக்கடி கண்டிலனாகில், 6‘பகதத்தனால் விடப்பட்டதும் எல்லாப் பொருள்களையும் அழிக்கக் கூடியதுமான அந்தச் சத்தி என்னும் பாணத்தைக், கிருஷ்ணன் அருச்சுனனை மறைத்துத் தன் மார்பிலே ஏற்றுக்கொண்டான்’ என்கிறபடியே, 1பகதத்தன் விட்ட சத்தியை, அருச்சுனனைத் தள்ளித் தன் 2அந்தப்புரத்திலே (மார்பு.)ஏற்றாற்போலே, தாம் ஏறிட்டுக்கொண்டு அனுபவித்தல் செய்யுமித்தனை. 3பாவங்கள்தாம் – அசேதனமாய் இருப்பன சில கிரியா விசேடங்களாய் அவை செய்தபோதே நசிக்கும்; செய்தவன் அறிவில்லாதவன் ஆகையாலே செய்ததை மறப்பான்; முற்றறிவினனான சர்வேஸ்வரன் உணர்ந்திருந்து பலத்தை நுகர்விக்க நுகர்வான் இத்தனை. அவன் மார்பிலே ஏற்றுக்கொள்கையாவது. ‘பொறுத்தேன்’ எனத் தீர்தல். 4‘அபூர்வங்காண், சத்திகாண், பலாநுபவம் பண்ணுவிக்கிறது’ என்று கூறுவதைக் காட்டிலும், முற்றறிவினனான இறைவன் செய்விக்கிறான் என்கை அழகிதே அன்றோ?

105. ஸ்ருத அயமர்த்த: ராமஸ்ய ஜாமதக்ந்யஸ்ய ஜல்பத:– பாரதம், மோக்ஷதர்மம்
பக் 153.

106. நிரவத்ய: பர: ப்ராப்தே: நிரதிஷ்ட: அக்ஷர: கிரம:
ஸர்வேஸ்வர பராதார தாம்நாம் தாமாத்மகாக்ஷய –ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 48.

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை – ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால் அதிலே தோற்றுச் சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று 1அடைவு கெட ஏத்தாநிற்பர்கள் ஆயிற்று நித்தியசூரிகள். 2‘ஜமதக்நியின் புதல்வரும் அடைவு கெடப் பேசுகிறவருமான பரசுராமரிடத்தில் இப்பொருள் கேட்கப்பட்டது’ என்பது பாரதம். தலை மகனை – இவர்கள் ஏத்தாநின்றாலும் 3‘குற்றம் இல்லாதவர், அடைவதற்கு முடியாதவர்’ என்கிறபடியே, அவன் பரன் ஆகவே இருப்பான்

துழாய் விரை பூமருவு கண்ணி எம்பிரானை – விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க்கண்ணி எம்பிரானை. நித்தியசூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான். அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’ என்றபடி

107. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.–உபநிடதம்.

கடவுள் உளன் என்று நினைத்தால் இவனும் உள்ளவன் ஆகின்றான்’ என்கிறபடியே உய்வு பெற்று. போந்து -சம்சாரிகளைக்காட்டிலும் வேறுபட்டவனாய். இருந்து – பாரம் இல்லாதவனாய் இருந்து. ‘வள்ளலே! மதுசூதனா! உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்க

 

108. ஆத்ம மாயாமயீம் திவ்யாம் யோகநித்ராம் ஸமாஸ்ரித:
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயந் மதுஸூதந:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6.4 : 6.

ஐந்து பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் – பெருவெள்ளத்துக்குப் பல 3வாய்த்தலைகள் (வாய்க்கால்கள்.)போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பல தலைகளை உடையவனாய், கட்குடியரைப் போலே ஆடுகின்றவனாய், 4சைத்திய சௌகுமார்ய சௌகந்தியங்களை உடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே, ‘எல்லாப்பிராணிகளும் கரைமரம் சேர்ந்தாம் விரகு என்?’ என்று யோகநித்திரையில் திருவுள்ளம் செய்த என் நாயன் ஆனவனே! யோகநித்திரை – 5‘பரமபுருஷன் வாசுதேவன் என்ற தன்னைச் சிந்தித்துக் கொண்டு தனது மாயாரூபமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத யோக நித்திரையை அடைந்தார்’ என்கிறபடியே, தன்னை நினைத்தல். எந்தாய் – நீர்மையைக் காட்டி என்னை உனக்கே உரிமை ஆக்கினவனே! ‘உன்னைச் சிந்தை செய்து செய்து – நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம் உண்டோ?’ என மேலே கூட்டுக.

109. ஆத்மாவா அரே த்ர்ஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய:
மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய: — பிருகதாரண்ய உபநிடதம். 4 : 5.

 உன்னைச் சிந்தை செய்து செய்து – இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. உன்னை – இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை. சிந்தை செய்து செய்து – 2‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து.

110.  உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.–நரசிம்ஹ அநுஷ்டுப்

என் முன்னைக் கோள் அரியே– 4நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி. கோளரி‘மஹாவிஷ்ணும்’ என்கிற 5மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.(மிடுக்காவது, சர்வலோக வியாபன சக்தி.) 6ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல். முடியாதது என் எனக்கே – நீ சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?     

111. ஸபித்ராச பரித்யக்த: ஸூரைஸ்ச ஸமஹர்ஷிபி:
    த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் கத: –ஸ்ரீராமா. சுந்த. 38 : 33.

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ – முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, 2‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி 3எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ

112. விதித: ஸஹிதர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:
     தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி. — ஸ்ரீராமா. சுந்த. 21 : 20.

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே– பரம்பி இருப்பதாய், 4இயல்பிலே அமைந்த (தொன்மை – பழமை; அதனால் பலித்த பொருள், ‘இயல்பிலேயமைந்த’ என்பது.)நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! 5‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

113. மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜநம்
      க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்கார: மமஅபிஏஷ யதா தவ.–ஸ்ரீராமா. யுத். 114 : 101

‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் (எமர் கீழ் மேல் எழு பிறப்பும்)அங்கீகரிப்பான் என்?’ எனின், சர்வேஸ்வரன் ஒருவனை அங்கீகரித்தால், அது பின்னை அவன் அளவிலே நில்லாதே அன்றோ? 2‘இருடிகள் குடியிருப்பை அழித்தான்; மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீஜடாயு மஹாராஜரை நலிந்தான். இவை எல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; இவன் ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவதுகாண்’ என்று இருந்தோம்; அது அந்நாளில் பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ? வேண்டுவன செய்யப் பாரும்; நீர் இறாய்தது   இருந்தீராகில், 1குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை அன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கட்ட நில்லீர்’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீவிபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது – ஸ்ரீவிபீஷ்ணாழ்வானைப் பெருமாள் தமக்கு உடன் பிறந்தவனாகக் கொண்டார்  ஆகையாலே, அவனுக்குத் தமையனான இராவணனும் உடன் பிறந்தவன் ஆவன்;  ஆதலின், தம்மைக் ‘குடல் தொடக்குடையாரிலே ஒருவன்’ என்கிறார்

கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்  மாற்றே மாற்றல் இலையே; நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலர்எனும்  வேற்றுமை இன்று;அது போற்றுநர்ப் பெறினே.’–(பரிபா. 4)

உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும்  உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை உளவல்ல என்றவாறாம்’

 ‘அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித்
  தன்னதோ ளிணையை நோக்கி, ‘வீடணா! தக்க தன்றால்;
  என்னதோ இறந்து ளார்மேல் வயிர்த்தல்?நீ இவனுக்கு ஈண்டு
  சொன்னதோர் விதியி னாலே கடன்செயத் துணிதி’ என்றான்.’ 
  என்றார் கம்பநாடரும்.

114. இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகுப்ரவீர: ஸ்ருத்வாவசோ     வாலி ஜகந்யஜஸ்ய
    ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம்  விமநா பபூவ. –ஸ்ரீராமா. கிஷ்கிந். 23 : 24.

115. தர்மே மநஸ்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி
    யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கம்ஆயு: பவிஷ்யதி. –ஸ்ரீவிஷ்ணு புரா 5. 19 : 27.

‘மகாராஜர்க்குப் பகைவன்’ என்று வாலியைக் கொன்ற பின்னர், மகாராஜர் கண்ண நீர் பொறுக்கமாட்டாமல் 3‘விடப்பட்ட கண்ணநீரை உடையவர் ஆனார்’ என்கிறபடியே, தாமும் கண்ணநீர் விழ விட்டார். 4‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது!’ என்கிறபடியே, ஸ்ரீமாலாகாரர் பக்கல் அங்கீகாரம் அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீகண்டாகர்ணன் பக்கல் பண்ணின அங்கீகாரம் அவன் தம்பி அளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில் 5‘அவன் முன்னாகப் போ’ என்று அருளிச்செய்தான். ஆக, இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.

எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீவைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பராம். ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்துவாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.

நெடுமாற்கடிமை’  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச்  சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

116. க இதி ப்ாஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
     ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவன் தமர் – பிரசஸ்தகேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது, அவனுடைய அவயவங்களின் அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி. அன்றிக்கே, பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்; அன்றிக்கே, 1‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’     

கேசவன் என்பதற்கு மூன்று பொருள் அருளிச்செய்கிறார்; கேசத்தை யுடையவன்; கேசம்  – மயிர் முடி. ‘கேசி’ என்னும் அசுரனைக் கொன்றவன் கேசவன்; பிரமனையும்  சிவனையும் தன் திருமேனியிலே வைத்திருப்பவன் கேசவன். பிரசஸ்தகேசன் – நீண்ட  மயிர் முடியை உடையவன்.

117. ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்தம் உதகம் குரு
    குலம் தாரயதே தாத ஸப்த ஸப்தச ஸப்த ச. –மஹாபாரதம்.

118. தஸபூர்வாந் தஸ அபராந் ஆத்மாநம்ச. –போதாயனதர்மம்:

சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது; ‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது. இத்தால் இறைவன் அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி. எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும் கேசவன் தமர் ஆனார்கள் என்க. 1‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும், 2‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.

உன்னைஇங்கு உயிர்த்த ஆற்றால் உரைக்கும்நின் குலத்து மூவேழ்
  என்னும்நன் மரபு ளோரும் இயைந்தனர் புனிதம் என்றால்
  அன்னவன் புனிதன் ஆதற்கு ஐயம்என்? அவனுக்கு ஈமம்
  மன்னுநல் வினைசெய் கென்ன மைந்தன்அவ் வினைசெய் தானால்.’-
  என்னும் பாகவதச் செய்யுள் . 7-ஆம் ஸ்கந்தம். இரணியனைக்  கொன்ற அத். 107.

119. நாராயண பரம்பிரஹ்ம தத்வம் நாராயண; பர:
    நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயணபர:

நாரணன் – ‘இதற்குப் பொருள் என்?’ என்னில், முழு ஏழ் உலகுக்கும் நாதன் -சர்வ ஸ்வாமி. ‘இவ்வர்த்தத்தில் பிரமாணம் என்?’ என்னில், வேத மயன் -‘நாராயண பரப்பிரஹ்ம’ என்று இது போன்று பிரமாணங்களால் ‘சர்வ ஸ்வாமி’ என்று ஓதப்படுகிறவன். காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் – தன்உலகத்தில் (மண் ஆதியான) காரணமாயும், (குடம் முதலான) காரியமாயும், (தண்ணீர்கொண்டு வரலாகிற) பலமாயும் வரக் கூடியதான இவற்றுக்கு 1நியந்தாவாக உள்ளவன். (காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்’ என்ற இதனால்,  ஐம்பெரும்பூதங்களையும், அவற்றின் காரியமான அண்டம் முதலானவற்றையும் அவற்றில்  வசிக்கிற ஆத்துமாக்களின் செயல்களையும் கூறியபடி.)-இனி, 2‘கிரியா சாதனம், அது அடியாக வரும் கிரியை, அதனால் சாதிக்கப்படுகிற காரியம், இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன்’ என்றும் ஆம்

கிரிதா சாதனம் – மட்பிண்டம். தண்டசக்கரங்கள் முதலானவைகள். கிரியை  – தொழில்.  அதனால் சாதிக்கப்படுகிற காரியம், குடம் முதலான காரியங்கள். இங்குக் கூறிய  இரண்டாவது பொருளால், நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களையும்,  அவற்றின் காரியமான படைத்தல் முதலான காரியங்களையும், அவற்றால் உண்டான  தேவர்கள் முதலான பதார்த்தங்களையும் தெரிவித்தபடி.

120. ஸ்தலஸ்தஸ்ய ச ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ராக்ஷஸ:
     நஸமம் யுத்தம் இதி ஆஹூ: தேவ கந்தர்வ தாநவா:–ஸ்ரீவிஷ்ணு புரா.

சீர் அணங்கு அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று வாரணம் மருப்பு ஒசித்த பிரான் – சேஷத்வத்திற்குத் தகுதியான ஆத்தும குணங்களைத் தரிக்கின்றவர்களாய்ப் பிரகிருதி சம்பந்தம் இல்லாத தன்மையரான நித்தியசூரிகள், இவ்வருகு உண்டான சம்சாரிகள்,இப்படி, ‘சிறியார் பெரியார்’ என்னும் வாசி இன்றிக்கே, எல்லாரும் 3எழுத்து வாங்கி ஏத்தும்படியாக நின்று, 4குவலயாபீடத்தின் கொம்பை வருத்தம் இன்றி முரித்த உபகாரகன். 5‘தரையில் இருக்கும் இராமனுக்கும் தேரில் இருக்கும் அரக்கனுக்கும் சண்டை தகுந்தது அன்று என்று தேவர்கள் கந்தருவர்கள் தானவர்கள் ஆகிய இவர்கள் கூறினார்கள்’ என்பது போன்று, ‘அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று’ என்கிறார்    

அகாரத்தின் விவரணமான நாராயண சப்தத்திலே ‘அவ ரக்ஷண’ என்கிற ரக்ஷகத்வமும் அர்த்தசித்தமாகையாலே, ‘வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்’ என்று அரிஷ்ட  நிவர்த்தியையும் இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

121. மாதர் லக்ஷ்மி யதைவ மைதிலஜந: தேநாத்வநா: தேவயம்
     த்வத் தாஸ்யைகரஸ அபிமாந ஸூபகை: பாவை: ஹரிம் [ இஹ  அமுத்ரச
     ஜாமாதா தயித:தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா
      பஸ்யேம ப்ரதியாம யாமச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேம ச.–குணரத்நகோசம் 52-ஆம் சுலோகம்

மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார்(மாதவன் என்றதே கொண்டு – நான் ‘மாதவன்’ என்று கூறிய சொல்மாத்திரத்தையே கொண்டு; ‘). ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக் கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்’ என்று அருளிச்செய்தார் அன்றே பட்டர்?    

அல்லாத திருநாமங்களுக்கும் இதற்கும் வாசி அறிவதே!’ என்று இதனையே குவாலாகக் கொண்டான் ஆதலின், ‘மாதவன் என்றதே கொண்டு’ என்கிறார். என்னை – மற்றைத் திருப்பெயர்கட்கும் இதற்கும் வாசி அறியாத என்னை. 

122. காமவ்ருத்தம்ச ஸூக்ரீவம் நஷ்டாம்ச ஜநகாத்மஜாம்
      புத்வா காலமதீதம்ச முமோஹ பரமாதுர: ஸ்ரீராமா. கிஷ்கிந். 30 : 3.

முன்பு கழிந்த காலம் கழிந்துவிட்டது அன்றோ? இதனால், மேலுள்ள காலம் மிகச் சிறிய காலமாகத் தோன்றாநின்ற தாயிற்று ஈஸ்வரனுக்கு! 1‘பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன், அரவணைமேல் கண்டு தொழுதேன்’ என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருப்பைத் தான் என்பக்கலிலே கொண்டுள்ளான் என்கிறார். ‘சுக்கிரீவன் சொன்ன தவணைக் காலம் கடந்துவிட்டது என்று கருதி மூர்ச்சித்தார்’ என்கிறபடியே, இராநின்றான் என்றபடி.

123. கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா
      நிஷ்க்ருதி: விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்ருதி:.ஸ்ரீராமா. கிஷ். 33 : 12. 

தீது அவம் கெடுக்கும்தீதாவது, பொய்ந்நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த பாவங்கள்; அவமாவது, ஞானம் பிறந்த பின்பு தம்மை அறியாமல் நேர்ந்தவைகள் ஆக, இவ்விரண்டாலும் பகவானை அடைவதற்குத் தடையாக இருந்த கர்மங்களைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘பசு வதை செய்தவன் விஷயத்திலும், சுராபானம் செய்பவன் விஷயத்திலும், திருடன் விஷயத்திலும், விரதங்களை நியமம் தவறி நடத்தினவன் விஷயத்திலும், பிராயச் சித்தம் பெரியோர்களால் சொல்லப்பட்டது; நன்றி கெட்டவன் விஷயத்தில் பிராயச்சித்தம் சொல்லப்படவில்லை’ என்கிறபடியே, பிராயச்சித்தம் உள்ள பாவங்களையும் அஃது இல்லாத பாவங்களையும் சொல்லிற்றாகவுமாம். ‘இவற்றைக் கெடுப்பது கஷாயத்தைக் குடிக்கச் செய்தோ?’ என்னில், அமுதம் – தன்னுடைய இனிமையை அனுபவிப்பித்ததாயிற்று.

124. வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ்வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி. -ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

செந்தாமரைக்கண் குன்றம் – வாக்கு இத்திரியத்திற்கே அன்றிக் கண்ணுக்கும் இனியனாய் இருக்கை. இத்தலையில் தீதும் அவமும் போக்கினானாய் இருக்கை அன்றியே, 1‘தனக்கு உண்டாய்க் கழிந்தது’ என்று தோன்றும்படி வடிவில் பிறந்த பேரொளியோடு விளங்குகிறான் ஆதலின், செந்தாமரைக் கண் குன்றம்’ என்கிறார். 2‘மனிதர்கட்குத் துன்பம் வரும் காலத்தில் அவர்கள் படும் துன்பத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான துன்பத்தைத் தான் அடைகின்றான்’ என்கிறபடியே இருக்குமவனன்றோ இறைவன்

125. அவாக்யநாதர: -சாந். உபநிட. 3 : 14.

குடக்கூத்தாவது. 2‘எல்லாம் நிறைந்தவனாதலின், ஒன்றிலும் விருப்பம் இல்லாதவன்; ஆதலால், மௌனமாக இருக்கிறான்,’ என்கிறபடியே, இருக்கக் கூடிய பொருள், 3தைரிய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச்சாவி வெட்டி ஆடினபடி இது.

126. பரதஸ்ய வச: குர்வந் யாசமாநஸ்ய ராகவ
ஆத்மாநம் நாதிவர்த்தேதா: ஸத்ய தர்ம பராக்ரம.

தேவும் என்றது, இறைமைத் தன்மையினை. தன்னை என்கிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மையை; அது அன்றோ 1தானான தன்மை? ‘ஆத்மாநம் நாதி வர்த்தேதா: – நீரான தன்மையை இழவாதே கொள்ளும்’ என்றார் வசிஷ்ட பகவானும். இச்சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதனை ஸ்ரீ பரதாழ்வானுக்கு அடைமொழியாக்கி, ‘ஆத்துமாவைப் போன்ற பரதனை இழவாதே கொள்ளும்’ என்று இதற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவர் சிலர். ‘நீரான தன்மையாகிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவராய் இருத்தல்; ‘உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து, நீரான தன்மையை இழவாதே கொள்ளும் 2என்கிறான்’ என்று பொருள் அருளிச்செய்வர் பட்டர். பாடி ஆடத் திருத்தி – தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போன்று, நித்திய சூரிகள் யாத்திரையே யாத்திரையாம்படி திருத்தி. ‘ஆயின், மேல் அடியில், ‘என்று என்றே குனித்து’ என்றதற்கும், இங்குப் ‘பாடி ஆடி’ என்பதற்கும் வேற்றுமை என்?’ என்னில், மேலிடம், 3சௌலப்யத்திலே நோக்கு; இங்கு, இறைமை,

தானான தன்மை – தன்னுடைய சுவபாவம்; அதாவது, இறைவனுக்கு இயற்கைத்  தன்மையாவது, அடியார்கட்குப் பரதந்திரனாய் இருத்தல் என்பதாம். ‘அப்படி ஆஸ்ரித  பாரதந்தர்யமே தானான தன்மையாக இருக்குமோ?’ எனின், அதற்கு, ‘ஆத்மாநம்  நாதிவர்த்தேதா:’ என்னும் ஸ்ரீராமாயணச் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.

சத்தியம் தர்மம் பராக்கிரமம் இவற்றையுடைய இராகவனே! யாசிக்கின்ற  பரதனுடைய வார்த்தையை மறுத்து நீரான தன்மையை (ஆஸ்ரித பாரதந்தர்யத்தை)  இழவாதே கொள்ளும்’ என்கிறான்

சௌலப்யத்திலே நோக்கு’ என்றது, ‘கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன்’ என  வருகின்றவற்றை நோக்கி. ‘இங்கு, இறைமை சௌலப்யம் இரண்டிலும் நோக்கு’ என்றது,  ‘தேவும் தன்னையும்’ என்றதனை நோக்கி. தேவு என்றதில் இறைமைத்தன்மை; தன்னை  என்றதில் சௌலப்யத் தன்மை, சௌலப்யத்தை, அநுசந்தித்த காரணத்தால் வந்த  கூத்தைச் சொல்லுகிறது; இறைமைத்தன்மையினையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்த  காரணத்தால் வந்த பாடுதல் ஆடுதல்களைச் சொல்லுகிறது என்றபடி.

127. விஸோதித ஐட : ஸ்நாத: சித்ர மால்யாநுலேபந:
      மஹார்ஹ வஸந: ராம: தஸ்தௌ தத்ர ஸ்ரியா ஜ்வலந்.–(ஸ்ரீராமா. யுத்.  131 : 15.)

திருமலையாண்டானிடத்தில் எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற காலத்தில் பாசுரந்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து, ‘இது அர்த்தம் ஆனாலோ?’ என்றால், ‘இது விஸ்வாமித்திர சிருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்’ என்று பணிக்குமாம் ஆண்டான். ஆண்டான் ‘இப்பாசுரத்திற்கு விஸ்வாமித்திர் சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ’ என்ன, எம்பெருமானார் 1இப்பாசுரத்தால், தன் அவயவ சௌந்தர்யத்தால் என்னைத் தனக்கு ஆக்கினான் என்கிறார்’ என்று அருளிச்செய்தனராம். அதுவும் கிடக்க, பட்டர், ‘ஆழ்வாரையும் ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்ததனால் திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்வர்; ‘நீராட்டம் முடிந்த பின் பல வித மலர்களால் கட்டப்பட்ட மாலை, கலவைச் சந்தனம் இவற்றை அணிந்திருப்பவரும், மிக உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்திருப்பவருமான ஸ்ரீராமர், சுத்தமான திருக்குழலை உடையவராய் அந்தச் சிம்மாசனத்தில் அலங்கார இலக்குமியோடு பிரகாசித்தவராய் நின்றார்,’ என்றார் ஸ்ரீ வால்மீகியார்.      

சபரிகரமாகத் தம்மை அங்கீகரித்தது எத்தாலே?’ என்னில், ‘தன்னுடைய அவயவ  சௌந்தர்யத்தாலே என்கிறார்’ என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். ‘எமர்  ஏழெழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கின குணத்துக்குத் தோற்று, ‘விட்டிலங்கு’  என்று இன்னோரன்ன விசேஷணங்களை இட்டு ஏத்துகிறார்,’ என்பது  திருமாலையாண்டான் நிர்வாஹம்.

128. ஸோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா
அத்ருஸ்யத ததா ராம: பால சந்த்ர இவோ தித: –ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு 1‘இராமர் தமது திருமேனியின் ஒளியாலே தண்டகவனத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரன் போன்று காணப்பட்டார்’ என்னுமாறு போன்று இராநின்றது வடிவழகு; தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி.

129. தேஹி மே ததாமி தே. –யஜூர்வே. 1 : 8. ‘

துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும் – கல்பந்தோறும் கல்பந்தோறும் துதி செய்த பாடல்களைக்கொண்டு பாடுவது ஆடுவதாம்படி பண்ணினான். துதி சூழ்ந்த பாடல் – துதி உருவமான பாடல்கள் என்னுதல்; துதிக்கப்படுகிற குணங்களை விளாக்கொலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல். ‘நின்று’ என்கிறார், 2‘எனக்குக்கொடு’ என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை இன்றியே இருத்தலின்.

எனக்கு நீ ஒரு பலனைக் கொடு; நான் உனக்கு ஒருபலனைக்  கொடுக்கிறேன்’ என்று வேறு பிரயோசனங்களைக் கொண்டு நீங்காமல் என்றபடி.

130. ஸதம் நிபதிதம் பூமௌ ஸரண்ய: ஸரணாகதம்
      வதார்ஹம்அபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத். –ஸ்ரீராமா. சுந். 38 : 34.

தங்களிலும் (தங்கட்குக் கேடுவரினும் கிருபையே மிகுந்து  என்றபடி.)திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்; கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் 2கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.

ககுஸ்த வம்ஸத்தில் பிறந்த சரண்யரான அவ்விராமபிரான்,  பூமியில் விழுந்தவனும் சரணம் அடைந்தவனுமான அந்தக் காகாசுரன் கொல்லத்  தக்கவனாயிருந்தும், பரமகிருபையால் அவனைக் காப்பாற்றினார்’

எந்தை நின்சர ணம்சரண் என்றஇ தன்னால்
முந்தை நின்குறை யும்பொறை தந்தனம்; முந்துன்
சந்தம் ஒன்று கொடித்திரன் கண்கள் தமக்கே
வந்தொர் நன்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய்.’ –கம்பரா. சுந். சூடா. 82)

சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டுஎறிய அனைத்துலகும் திரிந்தோடி
‘வித்தகனே! இராமாவோ! நின்னபயம்!’ என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓர் அடையாளம்–(பெரியாழ். 3. 10 : 6)

131. சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
     தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்.–ஸ்ரீ கீதை. 6 : 34.

மருவித் தொழும் மனமே தந்தாய் – கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார்   -அளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்

132. நது மாம் ஸக்ஷ்யஸே தர்ஷ்டும் அநேநைவ ஸ்வ சக்ஷூஷா
திவ்யம் ததாமி தே சக்ஷூ: பஸ்ய மே யோகம் ஜஸ்வரம்.– ஸ்ரீ கீதை, 11 : 18.

உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி

என் வாமனனே வல்லைகாண் – வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் – உகப்பின் மிகுதி.           

133. ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜாம்.
      வக்ஷஸ்தலேந ஸ்ரியம் உத்வஹந் விபு:
      விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசநோ
      மமாஸ்து மங்கள்ய விவிருத்தயே ஹரி;–விஷ்ணு தர்மம்.

சிரீதரன் – பெரியபிராட்டியாரைத் திருமார்விலே உடையவன். செய்ய தாமரைக் கண்ணன்1‘பிராட்டியைத் திருமார்விலே தரித்துக்கொண்டு இருப்பவரும், எங்கும் நிறைந்தவரும் விசாலமான தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்’ என்கிறபடியே, நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமாறு போன்று, பிராட்டி மார்வில் இருக்கையாலே குளிர்ந்த கண்ணழகினையுடையவன்

134. ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்.–சாந்தோக்கிய உபநிடதம். 6. 2 : 1. 

தனி முதல்வனை –3‘சத் என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத் தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது’ என்கிறபடியே மூன்று விதக் காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப்போமோ?

 

135. த்யக்த்வா காமம் பயம் குரோதம் லோபம் மோஹம்ச மத்ஸரம்
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 4 : 50.

மூவகைத் துன்பங்களாலே நொந்த சம்சாரி சேதனன், 3‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே, 4இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப் போன்று இருக்கின்றான் ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது. 5சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி    

136. ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய:–சங்க்ஷேபராமாயணம்.

 பூம்பாவை ஆகம் புணர்வது2இன்பமே ஒரு வடிவுகொண்டவளாய் ஒரு காரணத்தால் வந்த பெண்மையினையுடையள் அல்லாதவளாய் உள்ள பெரிய பிராட்டியாரோடே கலந்து ஒழுகுவது. ஆகம் புணர்வது என்றதனால், 3ஆத்ம குணங்கள் குமரி இருந்து போமித்தனை. 4மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே ‘அணைவது, புணர்வது’ என்கிறார்.

ஆத்ம குணங்கள் குமர் இருந்துபோம் இத்தனை’ என்பதற்கு, பரமரசிகனான  சர்வேஸ்வரன் பிராட்டியினுடைய திருமேனியின் சௌந்தர்யம் முதலிய குணங்களில்  ஈடுபட்டதனால் ஆத்ம குணங்கள் பர்யந்தம் சென்றிலன் என்பதும், அதனால்,  பிராட்டியின் ஆத்ம குணங்கள் பயன் அற்றுக் கிடக்கின்றன என்பதும் கருத்து

மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே’ என்றது, அக்ர்யப் பிராய நியாயத்தாலே,  பிராட்டியோடே கூட எடுக்கையாலே இவ்விருவர்க்கும் பிறக்கும் ரசம், சேர்த்தியைக்  கண்டு அனுபவிக்கையாலே திருவனந்தாழ்வானுக்கும் உண்டு என்பதாம். இதற்கு  மேற்கோள் காட்டுகிறார், ‘காட்டில் கட்டிய ஆசிரமத்தில்’ என்று தொடங்கி, இச்சுலோகம்,  சங்க்ஷேபராமாயணம். இதற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்: – ரம்யமா வசதம்  கிருத்வா – அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்குத்  தகுதியாகச் சமைத்த மாளிகைகளிலும் திருவுள்ளத்துக்குப் பொருந்தி அழகியதாய்  இருந்தது காட்டிலே இளைய பெருமாள் சமைத்த ஆசிரமமாயிற்று. த்ரயோ ரமமாணா: –  நாயகரான பெருமாள் ரசம் அன்றே பிராட்டியது? பிராட்டிக்குப் பிறக்கும் ரசம் அன்றே  பெருமாளது? அப்படியே, அச்சேர்த்தி கண்டு உகக்குமவரன்றோ இளையபெருமாள்?  வநே -‘படைவீடர் காட்டிலே வசித்தார்கள்’ என்று தோற்றாமல், காடர் காட்டிலே  வசித்தாற்போலே பொருந்தி இருந்தபடி. படைவீடர் – படைவீட்டிலே இருப்பவர்கள்;  படைவீடு – நகரம். அக்ர்யப் பிராயம் – முதன்மை பெற்றவர்கள் வகுப்பிலே சேர்த்தல்.  இது ஒரு நியாயம்.

பிராட்டி, இளையபெருமாள் ஆகய மூவரும் களிக்கின்றவர்களாய் வாழ்ந்தார்கள்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. ஆக, சொல்லிற்றாயிற்று, சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை, முக்தப் பிராப்பியபோகம் என்றபடி

137. தஸ்யா: ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:
     ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்தர: ஸ: அக்ஷர: பரம: ஸ்வராட்.–தைத்திரீயநாரா. உப. 11. 

138. ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர்வ்யஸ்திதா:
      ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஸவர்த்திந: -விஷ்ணு தர்மம்

இங்கு ‘முதல்’ என்கையாலே, இவ்வுலகத்தில் காரிய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும், இதுதான் ஆவது அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது. இதனால், பிரமனும் சிவனும் 2சம்சார பத்தர்கள் என்னுமிடமும், சர்வேஸ்வரனே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறது. ஆக, அடையத் தக்கவன் அவனே; பிரமனும் சிவனும் அடையத் தக்கவர்களல்லர் என்கை. 3‘பிரமன் முதல் புழு இறுதியாக உள்ள இவ்வுலகத்துப் பொருள்கள் புண்ணிய பாவ ரூப கருமங்களால் உண்டு பண்ணப்பட்ட சம்சாரத்துக்கு உட்பட்டவைகள்’ என்னாநின்றது அன்றோ? ஆக, இப்படிப் பிரஹ்ம ருத்திரர்களுக்கும் காரணனாய் இருக்கையாலே வந்த மேன்மை உடையவன்.    

139. ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
      த்வாமேவ ஸரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

140. ஸ்ம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
     விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்.

புணைவன்’ என்பதற்கு, ‘புணையாமவன்’ என்றும், ‘சர்வபர நிர்வாஹகனாமவன்’ என்றும் பொருள் கோடலுமாம். 2‘ஞானிகள் தேவரீரையே சரணமாக அடைந்து, கொடியதாயும் எல்லை இல்லாத துக்கத்துக்கு இருப்பிடமாயும் இருக்கிற சம்சாரமாகிற கடலைத் தாண்டுகிறார்கள்,’ என்றது காண்க. ‘விஷ்ணு போதம்’ என்று கூறப்பட்டுள்ளது அன்றே? (விஷ்ணுவாகிற ஓடம். இது, விஷ்ணு தர்மம்.)இதனால், ஓர் இடத்தைப் பற்றி நிற்கை அன்றிக்கே, அக்கரையும் இக்கரையுமாய் நிற்கும் ஓடம் என்பது போதரும்.

பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி நனிநின்ற சமயத்தோர் எல்லோரும் நன்றுஎன்னத்
தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகில்  இனிநின்ற முதல்தேவர் என்கொண்டுஎன் செய்வாரே?’    –விராதன் வதைப். 52)   —    

141. முக்தி: மோக்ஷோ மஹாநந்த:

142. நிரஸ்த ஆதிஸயாஹ்லாத ஸூக பாவைக லக்ஷணா
     பேஷஜம் பகவத் ப்ராப்தி: ஏகாந்தாத்யந்திநீமதா. —

மேற்பாசுரத்தில் ‘பிறவிக்கடல் நீந்துவார்க்கு’ என்ற அதனுடைய விவரணமாய் இருக்கின்றது இப்பாசுரம். நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் – கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான பிறப்புத் தொடக்கமான மற்றும் உண்டான 1அபக்ஷயகேடு முதலானவைகளையும் (உண்டாதல், பிறத்தல், பரிணமித்தல், வளர்தல்,  குறைதல், மரணம் என்பனவற்றை அபக்ஷயம்-குறைதல்.)கடத்தும். ‘கடக்க அரிது’ என்பது போதர ‘நீந்தும்’ என நிகழ்காலச் சொல்லால் அருளிச்செய்கிறார். துயர் இல்லா வீடு முதலாம் -துக்கத்தின் வாசனையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம். இனி, இதனை ஒரு தொடராகக் கொண்டு, ‘கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான பிறவி தொடக்கமாக நீந்தும் துயரான மற்றும் எவ்வெவையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம்’ என்று பொருள் கோடலுமாம். 2இப் பொருளில், இரண்டாம் அடியிலுள்ள ‘நீந்தும்’ என்பதும் பெயரெச்சம். இவர் ’வீடு’ என்கிறது, பிறவி நீங்குதல் மாத்திரத்தை அன்று; சுகமாக இருத்தலையே இலக்கணமாகவுடைய பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுகிறது. ‘ஆயின், வீடு என்ற சொல் பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுமோ?’ எனின், 3‘முக்திர் மோக்ஷா மஹாநந்த’ என்பது நிகண்டு.

முதல் இரண்டு அடிகட்கு, இரண்டு வகையாகப் பொருள்  அருளிச்செய்கிறார். முதற்பொருள், அநிஷ்ட நிவர்த்தி பூர்வமாக இஷ்டப் பிராப்தியைச்  சொல்லுகிறது. இரண்டாவது பொருள், கேவலம் இஷ்டப் பிராப்தியைச் சொல்லுகிறது.

முத்தி என்பதும், மோக்ஷம் என்பதும், பெரிய ஆனந்தம் என்பது ஒரு பொருளன’  என்பது பொருளாம். இங்கு மோஷத்திற்கு ‘மஹானந்தம்’ என்ற பெயர் இருத்தல்  கருதத்தக்கது.

143. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்ம்ருதௌ
     ததாதர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம், சாந்தி பர்வம், 169.

144. உத்பாத்ய ப்ருதிவீம் ஸம்பயக் ஸ்தாபயித்வா யதாபுரம்
     ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாம் ஆவிஸ்ய ப்ரஜாபதே.-விஷ்ணு தர்மம்.

புணர்க்கும் அயன் ஆம் – இவற்றைப் படைத்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிற பிரமனும் ஆம். அழிக்கும் அரன் ஆம் – சுடுதடி போலே இவற்றை அடைய அழித்துக் கொண்டிருக்கிற சிவனும் ஆம். 2‘அந்த நாராயணனால் நன்கு காண்பிக்கப்பட்ட படைத்தல் அழித்தல் என்னும் தொழில்களை உடையவர்களாய்ப் படைத்தல் அழித்தல்களைச் செய்கிறார்கள்’ என்றும், 3‘பிரமனே! உன்னிடத்தில் அந்தாரத்துமாவாய் நின்று சிருஷ்டியைச் செய்யப்போகிறேன்’ என்றும் வருகிறபடியே, அவன் அந்தராத்துமாவாய் நின்று நடத்துவிக்க இவற்றைச் செய்கிறார்கள். புணர்த்த தன் உந்தியோடு மன்னிப் புணர்க்கும் அயன் ஆம் ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம் – இவைதாம் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றி இருந்த போதாயிற்று;    பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று, இவர்களும் திருமேனியை விட்டு விலகின், ஆற்றல் இல்லாதவர்கள் ஆவர்கள் என்றபடி. 1இத்தால், சாமாநாதிகர்ணயத்தாலே அந்தர்யாமித்துவம் சொல்லிற்று. ‘புணர்த்த தன் உந்தி’ என்கையாலே, 2காரணத்துவம் சொல்லிற்று; ‘ஆகத்து மன்னி’ என்கையாலே, திருமேனியைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினை உடையவர் என்னுமிடம் சொல்லிற்று.

145. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரமிதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யபயம்.–ஸ்ரீ கீதை, 9 : 2.

பலம் முந்து சீரில் படிமின் – அவனுடைய பலம் முற்பட்டிருக்கின கல்யாணகுணங்களிலே அன்புடையர் ஆகுங்கோள். 5‘செய்வதற்குச் சுக ரூபமாக இருக்கும், நினைத்த பலன்களைக் கொடுத்துத் தான் அழிவில்லாமல் இருக்கும்’ என்னும்படி அறுதி செய்யப்பட்ட விஷய 6சாரஸ்யத்தாலே, சாதன தசையே தொடங்கி இனியதாய் இருத்தலின் ‘பலம் முந்து சீர்’ என்கிறார். ஓவாதே – ‘பௌர்ணமி அல்லாத மற்றை நாள்களில் கடல் தீண்டலாகாது’ என்னுமாறு போன்று ஒரு நியதி இலை இதற்கு    

146. மர்யாதாநாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ: –ஸ்ரீராமா. சுந். 35 : 11

அந்த இராகவன் உலகினுடைய மரியாதையைச் செய்கிறவன், செய்விக்கிறவன்’ என்றார் ஸ்ரீ வால்மீகி

ஒழுக்கத்தை அநுஷ்டித்துக் காட்ட வந்த அவதாரங்கள்

அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித்
திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி”–கம்பர்

147. யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத்ததேவ இதரோ ஜந:
      ஸயத் ப்ரமாணம் குருதே லோக: ததநுவர்த்ததே. –ஸ்ரீ கீதை, 3 : 21.

பெரியவன் எதனை எதனைச் செய்கிறானோ, அதனையே மற்றை மக்களும் செய்கிறார்கள்; அப் பெரியவன்  எதனைப் பிரமாணமாக வேண்டுமென்று செய்கிறானோ, அதனையே உலகமும் அநுசரிக்கிறது’, என்பது ஸ்ரீ கீதை.

இப்படித் தாழவிட்டு அவதரிக்கிறவன்தான் யார்?’ என்னில், தேவாதி தேவபெருமான் – மனித மணம் பொறாத தேவ மணம் பொறாத நித்திய குரிகட்கு அவ்வருகானவன்.

148. வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
     ஆபத் விமோசந மஹேஷ்ட பலப்ரதாநை:
      க: அந்ய: ப்ரஜாபஸூபதீ பரிபாதி கஸ்ய
      பாத உதகேந ஸஸிவ: ஸ்வஸிரோத்ருதேந.–ஸ்தோத்திர ரத்தினம்.

149. ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார ஸிரஸா ஹர:
பாவநார்த்தம் ஜடாமத்யே யோக்ய: அஸ்மி இதிஅவதாரணாத்– ஈஸ்வர சம்ஹிதை.

 தீர்த்தன்1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல்.

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
  மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் – கறைகொண்ட
  கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
  அண்டத்தான் சேவடியை ஆங்கு-நான்முகன் திருவந். 9

குறைகொண்டு – தன்னுடைய செல்லாமையை முன்னிட்டுக்கொண்டு. நான்முகன்  குண்டிகைநீர் பெய்து – அருகே நின்ற தர்ம தத்துவம் ஜலமாய் இவன் குண்டிகையிலே  பிரவேசித்தது, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷசூக்தாதிகளைக் கொண்டு துதித்து. கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் -‘யுக்தாயுக்த  நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போக  வேணும்’ என்று இவன் ஜடையிலே ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்;ஸ்ரீபாததீர்த்தம் கொண்டு துஷ்புத்திரர்கள் தலைகளிலே தெளிக்குமாறு போன்று’ என்பன
மேல் பாசுரத்துக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்.

 ‘புவிஅளந்தவன் பொன்னடித் தாமரை   
  தவழும் கங்கைஅம் தண்புனல் பொன்னென
  அவிர்ச டாமுடி மீதுவைத் தன்றுகொல்
  சிவனும் ஓர்சிவ னாகித் திகழ்ந்தனன்-பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், கபிலர் தத்துவம் உரைத்த அத். செய். 51)

தேனந்து சோலை அரங்கேசர் சேவடி மேல்விசயன்
  தானந்த நாளையிற் சார்த்திய மாலையும் தாள்விளக்கும்
  வானம் தரும்கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப்பெற்ற
  ஆனந்தத் தான்அல்ல வோமுக்க ணான்மன்றுள் ஆடுவதே?’–திருவரங்கக்கலம். 45.

150. பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய
      பாதாரவிந்த அர்பபித சித்ரபுஷ்பம்
      ததர்ஸ கங்காதர மௌளிமத்யே
      பபூவவீர: க்ருத நிஸ்சயார்த்த: -ஸ்ரீகீதை, 11 : 40

151. நம: புரஸ்தாத் அத பருஷ்டத: தே. 

பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?

152. தத: ஸாகர வேலாயாம் தர்ப்பாந் ஆஸ்தீர்ய ராகவ:
     அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹூம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந: –ஸ்ரீராமா. யுத். 21 : 1.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்

பாஹூம்புஜகபோகாபம் – திருவனந்தாழ்வான் மேலே  சாய்ந்தாற்போலேயாயிற்றுத் திருக்கையை மடித்துச்சாய்ந்தால் இருக்கும்படி. அரிஸூதந:
கிடந்த கிடையிலே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை –பிரதிஸிஸ்யே  மஹேததே:- ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பரிசித்துச் சாய்ந்தாற்போலே இருக்கை’

153. உடஜே ராமம் ஆஸீநம் ஜடாமண்டல தாரிணம். ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்; இருந்து – பரமபதத்திலே இருந்தபடியாதல்; 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீராமர்’ என்கிறபடியே, இருடிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தபடியாதல்

154. அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ஸதநு: ஊர்ஜிதம்
       ராமம் ராமாநுஜம் சைவ பர்த்து: சைவ அநுஜம் ஸூபா.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 19 : 25.
நின்று – திருமலையிலே நின்ற படியாதல்; இராவணனைக் கொன்ற பின்னர்க் கையும் வில்லுமாய் இலங்கையிலே நின்றபடியாதல்; 3‘வலிய வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீராமனையும் இலக்குமணனையும், தன் கணவனுக்குத் தம்பியான சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்

155. தவஸ: பரமோதாதா ஸங்க சக்ர கதாதர:
     ஸ்ரீ வத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வதோ த்ருவ:.–ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரியின் கூற்று.

அவர்களுடைய பெண்கள் பக்கலிலே கேட்குமித்தனையே அன்றோ இவனுடைய பரத்துவம்? 4‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே இருக்கிற ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், கொடுக்கிறவர், ஸ்ரீவத்சம் என்னும் மறுவைத் திருமார்விலுடையவர், பிரியாமல் இருக்கிற பெரிய பிராட்டியாரையுடையவர், ஒருவராலும் வெல்ல முடியாதவர்,   

156. த்வம் அப்ரமேய: ச துராஸதஸ்ச ஜிதேந்த்ரிய: ச உத்தம     தார்மிக: ச
     அக்ஷயகீர்த்தி: ச விசக்ஷண: ச க்ஷிதிக்ஷமாவாந்   க்ஷதஜோபமாக்ஷ:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 24 : 31. இது தாரையின் கூற்று.

தேவரீர் வேதங்களாலும் அளவிட முடியாதவர்; அணுக முடியாதவர்; இந்திரியங்களை வென்றவர்; உயர்ந்த தார்மிகர்; அழிவற்ற கீர்த்தியினை உடையவர்; பூதேவி போன்ற பொறுமை உடையவர்; இரத்தம் போன்ற திருக்கண்களையுடையவர்’ என்னுதல் சொல்லாநிற்பர்கள் அன்றே?

செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
  கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
  ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
  ஊழி யாவரும் உணரா
  ஆழி முதல்வ!நின் பேணுதும் தொழுது.’ –(பரி. 2 : 15  -19

காலவீட்டம் கழிந்த பின் உயிர்கள் உளவாதற்பொருட்டு  அந்நிலத்தினை எடுத்திட்ட கேழல் கோலத்தால், திகழ்வரப் பெயர் பெற்ற இவ்வராக
கற்பம் நின் செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனை உணர்த்துதலின், அச்செயல்கள்  பலவற்றையும் செய்கின்ற நின் முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாத’-  என்ற அதன் உரை

157. மயாததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்திநா
     மத்ஸ்தாநி ஸர்வபூதாநி நசாஹம் தேஷூ அவஸ்தித:–ஸ்ரீ கீதை, 9 : 4.

கண்ணன் எங்கும் உளன் – இது ஆயிற்று அவன் சொன்ன தப்பு; ‘சர்வேஸ்வரன் எங்கும் உள்ளவன்’ என்றான். 1‘இவ்வுலகம் எல்லாம் என்னால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், 2‘யாது ஒன்று இருக்கின்றது, அது என்னை அன்றி இல்லை,’ (ஸ்ரீ கீதை, 10 : 39)என்றும் அவ்விறைவன் தான் சொன்னவார்த்தை ஆயிற்று இவன் தான் சொல்லிற்று   

158. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்ய
     ஸச்ச த்யச்சாபவத். –தைத்திரீய ஆனந். : 6.

 வேர் முதலாய் வித்தாய்2மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து –3‘உயிர்களைப் படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள் ஆனார்’ என்கிறபடியே, முந்துற இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. தனி நின்ற கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேன்-‘இப்படி, உலகமே உருவமாய் நின்ற அளவே அன்றி, தன்னுடைய சிறப்புத் தோன்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே மழை பெய்யும் மேகம் போலே இருக்கிற அழகிய திருமேனியையுடையனாய் இருந்தும், கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாள் ஆனவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்கிறார்.

முதல் துணை நிமித்த காரணங்கள். வேர் –  துணைக் காரணம்; முதல் – நிமித்த காரணம்; வித்து – முதற் காரணம்.
ஞானசத்தியாதிகளோடு கூடிய வேஷத்தால் துணைக் காரணமும், சங்கல்பத்தோடு கூடிய  வேஷத்தால் நிமித்த காரணமும், சூஷ்ம சித்து அசித்துகளோடு கூடின தன்மையால்  முதற் காரணமும் கொள்க.

159. அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந்

ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி ஸமநுப்ரவிஷ்ட:
ப்ரஜாபதி: சரதி கர்ப்பே அந்த:

160. உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ராஜந் புத்ர மஹாபஸ:
த்வத்விதா ந ஹிஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸம்மதா:–ஸ்ரீராமா. அயோத். 72 : 24.

கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ      

161. ஸபாஷ்பகலயா வாசா கலஹம் ஸஸ்வரோ யுவா
    விலலாப ஸபா மத்யே ஜகர்ஹேச புரோஹிதம்.
    ராஜ்யம்சஅஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹஸி
    ததம் தஸரதாத் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக. –ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 11.

162. ஏகஸ்மிந்நபி அதிக்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜ்ஜிதே
தஸ்யுபி: முஷிதேநேவ யுக்தம் ஆக்ரந்திதும் ப்ருஸம்.
     

163. நியமாதிக்ரமம் ரஹஸி போதயேத். 

அன்னத்தின் குரல் போன்று குரலையுடைய யுவாவாகிய அந்தப் பரதாழ்வான், கண்ணீர்   அடைப்பினால் தெளிவில்லாத வார்த்தைகளால் சபை மத்தியில் கதறினான்;  புரோகிதனான வசிஷ்டனையும் குறை கூறினான்; இராஜ்யமும்  நானும் இராம்பிரானுடைய  சொத்து; இந்த விஷயத்தில் தர்மத்தைச் சொல்லக்கடவீர்; தசரதரிடமிருந்து பிறந்தவன்  ராஜ்யத்தை அபஹரித்துக்கொள்ளுகின்றவனாக எப்படி ஆகக்கூடும்?

விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – 5அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை  அபகரித்து, அவரைப் பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

  ‘தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்
பள்ளம்எனும் தகையானைப் பரதன்எனும் பெயரானை’–கம்பநாட்டடிகள் திருவாக்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
  கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’

சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்  என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;  தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால்  வந்த கைங்கர்ய பலத்தை  அடைந்தவனாகப் போகிறேன்

ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத் தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி.

164. ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷமண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம்வசநம் அப்ரவீத்.

165. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
     ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாம்இதி மாம் வத.

பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’(ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )

 ‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்  நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,  ‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.

மேலும், 4பரவா நஸ்மி – (ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

‘இதுதான் ஒருவர் விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

பரவாநஸ்மி – பரதந்திரனாக இருக்கிறேன். நான் பரதந்திரனாக  இருக்கிறேன் என்றதனால் நீர் ஸ்வதந்திரராக இருக்கின்றீர் என்பது போதருதலின்,
அதனையே, ‘உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்று அருளிச் செய்கிறார். அஸ்மி – ஆகிறேன்; ஆகிறேன் ஆகுந்தன்மை – அஸ்மிதை.

நீருள எனின்உள் மீனும் நீலமும்;
  பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
  நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
  யாருளர் எனின்உளேம்? அருளுவாய்’ என்றான். -கம்ப. நகர் நீங். 157
   

166. யாவந்ந சரணௌ ப்ராது: பாரத்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.–ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

இராஜ லஷணம் பொருந்திய தமையனாரான ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை  என் தலையில் எதுவரையிலும் தரிக்கமாட்டேனோ’ அது வரையிலும் எனக்குச்  சாந்தியானது உண்டாகமாட்டாது. -. இது, ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ  சத்ருக்நாழ்வானிடம் கூறியதானாலும், ஸ்ரீகௌசல்யையார் முதலாயினாரோடும்  கூறியதாகவும் கோடல் தகும்.

167. பரமாபதம் ஆபந்ந: மநஸா அசிந்தயத் ஹரிம்
     ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண: –விஷ்ணு தர்மம். 68.

கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது – வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே – 1நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.

168. துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோரத:
யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா. –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

துன்பத்தை நீக்க வேண்டும்’ என்கிறேன். அல்லேன்; 2‘துன்பம் வந்த காலத்திலும், உன்னை அடைந்திருக்கிற என்னுடைய எண்ணமானது கேட்டை அடையாமல் இருந்ததே ஆனால், அதைக்கொண்டு எப்பொழுதும் பேறு பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறபடியே, ‘ஏதேனும் 3உத்கிரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி செய்தருளவேண்டும்’ என்றபடி

169. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
      தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம். –யஜூர்வேதம் ஆ. பிர. 3. 8 : 17.

பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை – பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை. 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமல் இருக்கிற சர்வேஸ்வரன் இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன் காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள்,

170. யத்ரருஷய: ப்ரதமஜாயே புராணா:

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே அன்றோ?’ என்கிறார்; அதாவது, பகவானுடைய அனுபவத்தில் மிக்காராய், ‘எல்லாவற்றையும் அறிந்தவர்கள், பழையராய் இருந்தும் புதியராகவே காணப்படுகின்றவர்கள்’ என்கிறபடியே, வேதத்திலே குற்றமற்றவர்களாகச் சொல்லப்பட்டுள்ள நித்திய சூரிகள் அனுபவிக்கின்ற அக்காரம் போலவும், கனி போலவும் உள்ள உன்னுடைய இனிமையின் மிகுதியை எனக்குப் பிரகாசிப்பித்தவனே! அன்றோ?’ என்கிறார்.

நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன்’ என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க, ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது; ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.

171. தத்ஹி ஏதத் பஸ்யந்ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே
அஹம் மநு: அபவம் ஸ்ூர்யஸ்ச.–ஸ்ரீராமா. அயோத். 31 : 25.

பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ என்ன, யானே நீ – யானும் நீயே. 3முத்தர்கள், 4‘நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னாநிற்பர்; சம்சாரத்தில் தெளிவுடையார் 5‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’ எல்லாப் பொருள்களும் நானே’ என்னாநிற்பர்; இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை?’ எனின், ‘அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘

172. ஏகம் ஸதைகம் பரம: பரேஸ:
     ஸவாஸூதேவோ நயத: அந்யத் அஸ்தி. –பிருகதாரண்ய உபநிடதம், 3.

173. த்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸ: ததா ஸூத:
     யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம். -ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 85.

அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘இது எங்கே நிகழக்கண்டு சொல்லும் வார்த்தை?’ என்ன, ‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது?’ என்கிறார்

174. அஹோ வீர்யம் அஹோ தைர்யம் அஹோஸத்வம்  அஹோத்யுதி: –ஸ்ரீராமா. சுந். 49 : 17.

175. பபூவ புத்திஸ்து ஹரீஸ்வரஸ்ய யத் ஈத்ருஸீ ராகவ தர்மபத்நீ
இமாயதா ராக்ஷஸ ராஜபார்யா: ஸீஜாதம்அஸ்யேதி ஹி  ஸாதுபுத்தே: — ஸ்ரீராமா. சுந். 9 : 12.

ஏர் கொள் இலங்கையை – காட்சிக்கு இனியதாய்க் கட்டுடைத்தான இலங்கையை. 2‘இது என்ன வீரியம்! இது என்ன தைரியம்! இராக்ஷச அரசனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்’ என்றும், 1‘இராவணனும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைக் கண்டவாறே, ‘பையல், தானும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைப் பெருமாளும் பிராட்டியுமாய் இருக்கச் சம்மதித்தானாகில், இந்த ஐஸ்வரியம் குலையாதிருக்குமே!’ என்றும் நினைத்தான், ‘பகைவர்கட்கும் நன்மை வேண்டும்’ என்று இருக்கும் புத்தியையுடைய அனுமான்; தானும் ஒரு கூட்டத்துக்குத் தலைவன் ஆகையாலே இங்ஙனே இருப்பது ஒரு புத்தி பிறந்தது’ என்றும் கூறப்படுகின்றபடியே, திருவடி மதிக்கும்படியான இலங்கை ஆதலின், ‘ஏர் கொள் இலங்கை’ என்கிறார்.

176. பால்யே க்ரீடநகா ஸக்தா: யௌவநே விஷயோந்முகா:
177. தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயஸே ஸதா. –ஸ்ரீ விஷ்ணு புரா. 17. 74 : 75. இது பிரஹ்லாதாழ்வான் கூற்று.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – ‘கிளர் ஒளி இளமை’ என்றது, 1‘மனத்தில் உண்டாகும் சிரத்தையாய், பிறந்த இச் சிரத்தை இதினின்றும் மாறி வேறு விஷயங்களில் பிறப்பதற்கு முன்னே’ என்றபடி. என்றது, ‘ஒருவனுக்கு ஒரு விஷயத்தில் ஒரு கால் சிரத்தை பிறக்கும்; அவனதனக்கே அவ்விஷயத்திலே சிரத்தை இன்மையும் பிறக்கக் கூடியதாய் இருக்கும். ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே’ என்றவாறு. ‘கிளர் ஒளி இளமை’ என்பதற்கு, ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்பது பொருள். ஒளி என்றது, ஞானத்தை; அது ஈண்டு இச்சைக்கு ஆயிற்று. ‘இளமை’ என்றது, அவ்விச்சை உண்டாகும் ஆரம்ப நிலையைக் குறித்தது. அந்த இச்சை தோன்றுவது மனத்திலே ஆகையாலே ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்று பொருள் அருளிச்செய்கிறார்

இனி, ‘கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்’ என்பதற்கு,  ‘அடையத் தக்கது’ என்னும் நினைவு பிறந்தாலும், 2‘கரணபாடவம் இல்லையே!’ (கரணங்கள் தத்தம் காரியங்களைச் செய்வதற்குத் தக்க ஆற்றலுடன் சேர்ந்திருத்தல்.)என்று கை வாங்க வேண்டாதபடி கரணபாடவம் உள்ள போதே என்று பொருள் கூறலுமாம். உயர்வு பற்றி ‘ இளமை கெடுவதன் முன்னம்’ என்றாராயினும், இனம் பற்றிப் பால்ய யௌவன பருவங்களையும் கொள்க. 3‘பாலியத்தில் விளையாட்டில் ஆசையுள்ளவர்களாகவும், யௌவன காலத்தில் விஷயங்களை அனுபவித்தலில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று கூறி, ‘ஆகையாலே, பால்யத்திலே அறிவோடு கூடினவனாய் எக்காலத்திலும் புகழின்பொருட்டு முயற்சி செய்தல் வேண்டும்’ என்றும் கூறுதல் காண்க.

178. யத் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூதேவோ நசிந்த்யதே
ஸாஹாநி: தத் மஹத் சித்ரம் ஸாப்ராந்தி: ஸாசவிக்ரியா.

தளர்வு இலர் ஆகில் – ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால் வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும் புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் (கேட்டினையடைகின்றவர்கள்.)அல்லாதாராய் ஒழிய வேண்டில் எனலுமாம்

தளர்விலராகில்’ என்பதற்கு, இருவகைப் பொருள் அருளிக் செய்கிறார்; முன்னையது, ‘திருமலையைச் சாராமையாகிற துக்கம் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது ஸ்ரீ  ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள். பின்னையது, ‘திருமலையைக்  கிட்டுகைக்கு விரோதியான பாவங்கள் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது  எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள் 

179. நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நா சாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.

பக்தா நாம்’ என்கிறபடியே, பிறர்களுக்கு உரியதாய் நிரதிசய போக்கியமாய் இருக்கும்  விஷயம் அன்று; ஆதலின், ‘மதியாது’ என்கிறார்

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப் பைம்பூம் பள்ளி
  அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்’–திருவாய். 4. 4. 5.

பாண்தேன் வண்டுஅறையும் குழலார்கள்பல் லாண்டுஇசைப்ப
  ஆண்டார் வையமெல்லாம் அரசாகிமுன் ஆண்டவரே
  மாண்டார் என்றுவந்தார் அந்தோமனை வாழ்க்கைதன்னை
  வேண்டேன் நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!’–பெரிய திருமொழி. 6. 2 : 5

180. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.–ஸ்ரீகீதை.
    

181. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸ்ம்பவாமி யுகே யுகே. –ஸ்ரீகீதை. 4 : 8.

182. தத: தக்கோகுலம் ஸர்வம் கோ கோபீஜந ஸங்குலம்
அதீவார்த்தம் ஹரி: த்ருஷ்ட்வா மைத்ரேய அசிந்தயத்ததா.–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்2‘பசுக்கள் ஆயர்கள் ஆயச்சிகள் எல்லாரும் வருந்திக் கொண்டிருக்கிற அந்தக் கோகுலம் முழுதையும் கிருஷ்ணன் பார்த்து அப்போது சிந்தித்தான்’ என்கிறபடியே, ஆயர்களும் ஆய்ச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன், அந்த ஐஸ்வர்யத்தோடு வந்து நித்தியவாசம் செய்யுங்கோயில். இதனால், அரியன செய்தும் அடைந்தவர்களைப் பாதுகாப்பவன் என்பதனைத் தெரிவித்தபடி. ஐந்து லட்சம் குடிகளும் நிழலிலே ஒதுங்கலாம்படி மலையின் பரப்பு இருந்தது ஆதலின், ‘பெருமலை’ என்கிறார். பீடு – பெருமை; என்றது, ஆபத்திற்குத் துணையாதல் முதலாயினவற்றை. ‘பெரு மலை எடுத்தான் பீடு உறை கோயில்’ என்றதனால், ‘ஒரு மலையை 3ஆதேயமாகக் கொண்டு ரஷித்தவன், ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு காப்பாற்றுகின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி. ‘ஆயின், திருமலையில் நிற்றல் காத்தலுக்கோ?’ எனின், 4‘சாதுக்களைக் காத்தற்காகவும், துஷ்டர்களை அழித்தற்காகவும், தர்மங்களை நிலைநிறுத்துதற்காகவும், யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்கிறபடியே, விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை அன்றோ 5அவதாரங்களுக்குப் பிரயோஜனம்?

183. ஸமுத்வஹந்த: ஸலிலாதிபாரம் பலாகிநோ வாரிதரா நதந்த:
மஹத்ஸூ ஸ்ருங்கேஷூ மஹீதராணாம் விஸ்ரம்ய விஸ்ரம்ய
புந: ப்ரயாந்தி. -ஸ்ரீராமா. கிஷ். 28 : 22.

நின்ற இடத்தே நின்று பெய்வது ஒரு மேகமும், போவதும் வருவதுமாய் இருந்து பெய்வது ஒரு மேகமும் என ஊர்க்கு மேகம் இரண்டாதலின்’ ‘வருமழை தவழும்’ என்கிறார். ‘ஆயின், இறைவன் மேகமோ?’ எனின், ‘புயல் மழை வண்ணர்’ என்றாரே முன்னர்

மிக அதிகமான தண்ணீரைத் தாங்குவனவும், கொக்குகளின் வரிசையையுடையனவும், ஒலிப்பனவுமான மேகங்கள், மலைகளின் பெரிய கொடுமுடிகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றன’ என்பவாகலின், ‘மழை தவழும்’ என்கிறார்.

184. ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்யச தீமத:
     ந அத்யர்த்தம் க்ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே.-ஸ்ரீராமா. சுந். 16 : 4

அறம் முயல் ஆழ்ப்படையவன் கோயில்3‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறபடியே, (இங்கு, பெருமாளைக் காட்டிலும் அடியார்களைக் காப்பதில்
சிரத்தையுள்ளவன் இலக்குமணன் என்பதனைக் காட்டுவதற்காக ‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறார்.)அடியார்
களைப் பாதுகாத்தலிலே முயலாநின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் வந்து வாழ்கிற தேசம். 1சர்வேஸ்வரன் கடைக்கணித்துவிட அரைக்கணத்திலே வாராணசியை எரித்து வந்து நின்றவன் ஆதலின், ‘அறம் முயல் ஆழி’ என்கிறார்.

185. அகர்த்தமம் இதம் தீர்த்தம் பரத்வாஜ நிஸாமய
ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந் மநுஷ்ய மநோ யதா. –ஸ்ரீராமா. பால. 2.

மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை புற மலை சாரப் போவது கிறியே – 2‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே, மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே பகவானை அடைதலை வேண்டியிருப்பார்க்கு வருத்தம் அற அடையக்கூடிய நல்விரகு.

186. ய: த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க: நிரயோ ய: த்வயா விநா
இதிஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மாய ஸஹ. –ஸ்ரீராமா. அயோத். 30 : 18.

187. யதி த்வம் ப்ரஸ்திதோ துர்க்கம் வநம் அத்யைவ ராகவ
    அக்ரத: தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸகண்டகாந். –ஸ்ரீராமா. அயோத். 27 : 9.

188. நச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ
     முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

நரகு அழுந்தாதே – பிரிவால் வரும் துன்பத்தை நுகராமல். ‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’ எனின், நரகங்களும் இவர்களுக்கு முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது? ‘காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?     

189. ய ஆத்மதா பலதா.– யஜூர் வேதம், காண்டம், 7, 5 : 36.

வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே – சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் – திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.   (வலம் செய்தல் – வலிமையை உண்டாக்குதல்; ‘வலம்’ பலம் என்ற சொல்லின் சிதைவு.  முதற்பொருளில், வலஞ்செயல் – வலம் வருதல்.)

வானோர் வலம் செயும் மாலிருஞ்சோலை – பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிற போது இலக்குமணபரதர்கள் பின் தொடர்ந்தது போன்று, சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்தியசூரிகளும் போந்து வலஞ்செய்கிற மாலிருஞ்சோலை. உகந்தருளின மற்றைத் திவ்விய தேசங்கள் எல்லாம் கிடக்க, திருவேங்கடத்தை 4‘விண்ணோர் வெற்பன்’ (திருவாய். 1. 8 : 3.)என்றார் மேல்; இங்கே இதனை ‘வானோர் மாலிருஞ்சோலை’ என்கிறார்; ‘இதற்கு நினைவு என்?’ எனின், ‘குழந்தைக்குத் தாயினுடைய உறுப்புகள் எல்லாம் கிடக்க முலைக்கண்ணிலே அன்றோ வாய் வைக்கலாகாவது? அப்படியே இங்குத் 5‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையாவடிவு அமைந்த, அன்ன நடைய அணங்கு’ (பெரிய திருமடல், 6,7.)என்கிறபடியே, அவை இரண்டும் முலைகள் ஆகையாலே, அவர்களுக்கேயாகி இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார்

190. ய: அந்யதாஸந்தம் ஆத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
     கிம் தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா.–பாரதம் உத்தியோக பர்வம். இது திருதராஷ்டிரனைப் பார்த்து சனத்ஸூஜாதன் கூறுவது.

 சூது என்று களவும் சூதும் செய்யாதே-நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல். 2நூல்கள் ‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும் விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’ என்கிறார். இனி, களவாவது, 3‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே, ஆத்துமாவைத் திருடுதல் என்றும்; சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன் இரட்சகன்’ என்று நம்பி இருந்தால், ‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்துமா வாவது என்?’ என்று காணக் காணக் கொள்ளை கொள்ளுதல் என்றும் 4கூறலுமாம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –முதல் பத்து –

November 29, 2023

1- ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா
ஸூபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸீதா.–ஸ்ரீ விஷ்ணு புராணம்

பகவான்’ என்னும் திருநாமத்தையுடையவனும், எக்காரியங்களையும் வருத்தம் இன்றிப் பயனுடன் முடியும்படி செய்கின்றவனும், பசுக்களின் வளர்ச்சியை விரும்புகின்றவனும் ஆன கண்ணபிரான், தனது தூய்மையான மனத்தினால்

2. உத்பந்ந நவஸஷ்பாட்யா ஸக்ரகோபாஸ்த்ருதாமஹீ
ஸ்தலீமாரதகீவாஸீத் பத்மராக க்ருதாந்தரா.-ஸ்ரீ விஷ்ணு புராணம்

‘பிருந்தாவனம் புற்கள் நிறைந்த காடாக மாறல்வேண்டும்,’ என்று நினைந்த அளவில், 4தோன்றிய புற்களாலே நிரம்பி, இந்திர கோபம் என்னும் பட்டுப்பூச்சிகள் பரவப் பெற்ற பூமியானது, இடையிடையே பதுமராகக் கற்கள் பதித்த மரகதமணி மயமானது ஓர் இடத்தைப் போலத் தோன்றியது,’ என்னலாம்படி மாறியது போன்று, இவரும் உண்மைப் பொருள்களை உள்ளவாறு 5விளக்கமாக அறிய வல்லவரானார்.

3. “ப்ரதாநக்ஷேத்ரஜ்ஞபதி: குணேஸ:
ஸம்ஸாரபந்த ஸ்திதிமோக்ஷஹேது:”- சுவேதாஸ்வதர உபநிடதம், அத். 6.

சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’

4. தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம்ஏதாம் தாந்தி தே.– ஸ்ரீ கீதை 7 : 14.

என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’

5. ஜராமரணமோக்ஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே
தே பிரஸ்ம தத்விது: க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்மச அகிலம்-ஸ்ரீ கீதை. 7 : 29.

முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும்பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’

6. ஸம்ஜ்ஞாயதே யேந தத்அஸ்ததோஷம் சுத்தம் பரம்  நிர்மலம் ஏகரூபம்

ஸம்த்ருச்யதே வாபி அதிகம்யதே வா தத் ஜ்ஞாநம்   அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 ; 87.

பகவானை அறிகிற அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லப்படும்; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானவை எல்லாம் அஞ்ஞானமாகச் சொல்லப்பட்டன,’

7. தத்கர்ம யந்நபந்தாய ஸா வித்யா யாவி முக்தயே
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19: 41.

பந்தத்தை உண்டாக்காத தொழிலே தொழில்; மோக்ஷத்தை உண்டாக்கும் கல்வியே கல்வி; மற்றைத் தொழில்கள் எல்லாம் வருத்தத்தை

8. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதா ஜநா:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 41.

ஓ மைத்திரேயரே, கலியுகத்தில், உலகத்திற்குத் தலைவனும் எங்கும் நிறைந்திருப்பவனும் எல்லாரையும் படைத்தவனும் ஈஸ்வரன் என்ற பெயரை உடையவனும் ஆன திருமாலை பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் வழிபடுகின்றார்கள் இலர்

9. துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:
தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரியதர்ஸநம்.

மனிதசரீரம் கிடைத்தல் அரிது; கிடைப்பினும், கிடைத்த அச்சரீரமும் கணநேரத்தில் அழியுந்தன்மையது; அழியாதிருப்பினும், ஸ்ரீ வைகுண்டநாதனே நமக்குப் பற்றுக்கோடு என்னும் ஞானம் உண்டாதல் மிகவும் அரிது என்று நான் நினைக்கிறேன்,’

மானிடராக வரலரி தோர்மண் டலத்தினெறி
  மானிடராக மிலாதவ ராதன் மலரயனார்
  மானிடராகமத் தாலன்ப ராய அரங்கத்துளெம்
  மானிடராக மலரடிக் காட்படும் வாழ்வரிதே.’– என்ற திவ்விய கவியின் திருவாக்கு

10. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்வத:–ஸ்ரீகீதை. 7: 3.

மனிதர்களில் ஆயிரவருள் ஒருவன் சித்தியின்பொருட்டு முயல்கின்றான்; அங்ஙனம் முயல்கிற ஞானிகள் ஆயிரவருள் ஒருவன் என்னை அறிகிறான்; இது உண்மை,’ என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான்.

11. தத: அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீபூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா.– ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3: 2.

தேவகி கருத்தரித்த பிறகு எல்லா உலகங்களாகிற தாமரையை மலர்த்துவதற்காக, தேவகியாகிற கீழைச்சந்தியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’

12. ஹஸிதம் பாஷிதம் சைவ கதி: யா யச்ச சேஷ்டிதம்
தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபஸ்யதி:-ஸ்ரீராமா. பால. 3 : 4.

ஸ்ரீ ராமபிரானுடைய நகையினையும் பேச்சையும் நடையினையும் செயல்களையும் மற்றும் உண்டான எல்லாவற்றையும் என் சங்கற்பத்தால் அருளப்பெற்ற தவ வலிமையால் உண்மையாக நன்கு அறிவாய்,’ என்கிறபடியே, பிரமனுடைய திரு அருளால் ஸ்ரீ வான்மீகி பகவான் எல்லாவற்றையும் அறிந்தது போன்று,

13. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.–. ஸ்ரீகீதை. 7 : 18.

ஐஸ்வரியம் ஆத்மலாபம் ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம். அவற்றை நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்; ஞானியானவன் எனக்குத் தாரகன்,’ என்று சர்வேஸ்வரன் அருளிச்செய்த ஞானிகளுக்கு முதன்மை பெற்றவராய் இருப்பர்.

14. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோலக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ–ஸ்ரீராமா. பால. 18 : 27.

கைங்கர்யத்தை வளர்த்துப் போருமவனான இலக்குமணன் இளமைப்பருவம் தொடங்கி ஸ்ரீ ராமபிரானிடத்தில் பரம சிநேகிதனாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, இளமைப்பருவந்தொடங்கிப் பெருமாள் திருத்தொட்டிலோடு அணையத் திருத்தொட்டில் இடாதபோது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போன்று, அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’

15-நசஸீதா த்வயாஹீநா நசஅஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவ   உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’ என்பது இளைய பெருமாள் திருவார்த்தை

தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன், நீர் நசை அறும் அளவும் பிழைத்து இருக்குமாறு போன்று, நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திருவுள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவுங்காணும் நாங்கள் பிழைப்பது; ஆதலால், உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இலள்; யானும் இலன்; பிழைத்து இருப்போமாயின், ஒரு முகூர்த்த நேரமே பிழைத்திருப்போம்,’ என்றார் இளைய பெருமாள்.

:

16. நதேவலோக ஆக்ரமணம் ந அமரத்வம் அஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா.-ஸ்ரீராமா, அயோத். 31 : 5

வானவர் நாடு. என்கிற பரமபதம், ஆத்மலாபம், உலகங்களின் ஐஸ்வரியம் இவை இத்தனையும், உமக்குப் புறம்பாக வரும் அன்று வேண்டேன்,’ என்ற இளைய பெருமாளைப் போன்று, இவரும்

17. அஹம்தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபலக்ஷயே
ப்ராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:

நான் சக்கரவர்த்தியிடத்தில் தமப்பன் முறையைப் பார்க்கின்றிலேன்; எனக்கு ஸ்ரீ ராம பிரானே தமையனும் சுவாமியும் உறவும் தமப்பனுமாக இருக்கின்றான்

(21)

18. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸாநுஷூ ரம்ஸ்யதே
அஹம்ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

நான் இரவு பகல் எந்நேரத்திலும் எல்லா அடிமைகளையும் உமக்குச் செய்வேன்; நீரோ, பிராட்டியோடு மலை அடிவாரங்களில் இன்புற்றிரும்,’ என்று இளைய பெருமாள் எவ்வகைத் தொண்டுகளையும் செய்து அல்லது தரியாதது போன்று; இவரு

19. விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிஞ்ச ஜநார்த்தன
பூய: கதய த்ருப்தி: ஹி ஸ்ருண்வதோ நாஸ்திமே அம்ருதம்

ஓ ஜனார்த்தனரே, உம்முடைய கல்யாண குணங்களின் சேர்க்கையையும், விபூதி நியமனத்தையும் மீண்டும் விரிவாகக் கூறுக; ஏன் என்றால், உம்முடைய மாகாத்மியமாகிய அமிருதத்தைக் கேட்கும் எனக்குத் திருப்தி கிடையாது,’ என்று கூறிய அருச்சுனனைப் போலவும்

20. கர்மாபிதப்தா: பர்ஜந்யம் ஹ்லாதயந்தமிவ ப்ரஜா:
நததர்ப ஸமாயாந்தம் பஸ்யமாநோ நராதிப:

சமீபத்தில் வருகிற ஸ்ரீ ராமபிரானைப் பார்த்துக்கொண்டேயிருந்தும் தசரத சக்கரவர்த்தி திருப்தி அடைந்திலன்,’ என்று கூறப்படுகின்ற தசரத சக்கரவர்த்தியைப் போலவும்,

21. தர்மாத்மா ஸத்யஸௌசாதி குணாநாம் ஆகர: ததா
உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம்ய: ஸதாபவத்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 15 : 15.

அறத்தின் உருவமாயும் சத்தியம் ஒழுக்கம் முதலியவற்றிற்குக் கொள்கலமாயும் சாதுக்களுக்கு எல்லாம் உவமானமாகச் சொல்லத் தக்கவனாயும் எவனொரு பிரகலாதன் இருந்தான்’ என்று பிரகலாதனைச் சாதுக்களுக்கு எல்லாம் உவமைக்கு எல்லையாகச் சொல்லுவது போன்று, இவரும்

22. அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
க்ருதஞ்ஜஸ்ய பஹூஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாம நாமத:.-ஸ்ரீராமா கிஷ். 4 : 12.

நான் பின் பிறந்த தம்பி; அவருடைய குணங்களால் அடிமையை அடைந்துள்ளேன்.’ என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போன்று, இவரும் பகவானுடைய குணங்களிலே தோற்று. 3‘உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார்.

                                   

23. மாநிஷாத பாதிஷ்டாம் த்வமகம: ஸரஸ்வதீ: ஸமா:
யத்க்ரௌஞ்சமிதுநாத் ஏகம் அவதீ: காமமோஹிதம்.

நிஷாத – ஓ வேடனே,
த்வம் – நீ,
யத் – யாதொரு  காரணத்தால்,
கிரௌஞ்ச மிதுநாத் – இரண்டாகக் கூடியிருந்த அன்றிற்
பறவைகளில்,
காமமோஹிதம் – காமத்தால் மோகத்தையடைந்த,
ஏகம் – ஓர்  ஆண் பறவையை,
அவதீ: – கொன்றாயோ, (அதனால்)
ஸாஸ்வதீ: –  நிலைத்திருக்கிற,
ஸமா: – வருஷங்களில்
பிரதிஷ்டாம் – இருப்பை,
மாகம: –  அடையமாட்டாய்’ என்றவாறு.

‘மா நிஷாத – ஸ்ரீநிவாசனே, த்வம் – நீ, யத் – யாதொரு காரணத்தால், கிரௌஞ்ச மிதுநாத் – இருவராகக் கூடியிருந்த
இராக்கதர்களான இராவண மண்டோதரி என்னும் இவர்களில், காம  மோஹிதம் – ஆசையால் பீடிக்கப்பட்ட, ஏகம் – ஒருவனை (இராவணணை),
அவதீ: – கொன்றாயோ, (அதனால்) ஸாஸ்வதீ: ஸமா: – நிலைத்துள்ள  வருஷங்களில், பிரதிஷ்டாம் – இருப்பை, அகம: – அடையக்கடவாய்’ என்பது.

24. மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம.

ஹே பிரஹமந் – ஓ முனிவனே,
இயம் ஸாஸ்வதீ – ‘மாநிஷாத’ என்னும் இந்த ஸ்லோகமானது,
மசசந்தா தேவ – என்னுடைய திருவருளால்,
தேப்ரவிருத்தா – உனக்கு உண்டாயிற்று,
ஹே ருஷி ஸத்தம – முனிபுங்கவனே,
த்வம் – நீ,
ஸர்வம் ராம சரிதம் – இராமசரிதம் எல்லாவற்றையும்,
குரு – செய்வாய்.

25. ஹரிகீர்த்திம் விநாஏவ அந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம
பாஷாகாநம் நகாதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயாக்ருதம்.-மச்ச புராணம்.

மக்களுள் உயர்ச்சி பெற்ற அரசனே, பிராமணன், திருமாலின் புகழினைத் தவிர, ஏனையோர் புகழை வேறு மொழியில் பாடக் கூடாது; அங்ஙனம் இருக்கவும், வேறு மொழியில் பாடியதைக் கொண்டு அவனை வெளியே போகச் செய்த காரணத்தால் நீ பாவம் செய்தவன் ஆனாய், என்று இயமன் கூறியதாக மச்சபுராணத்திலே கூறப்படுகின்றது

26. பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வைஷணா விநிர்முக்த: ஸபைக்ஷம் போக்தும் அர்ஹதி.-பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.

எவன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தியினையுடையவனாக இருக்கின்றானோ அவன் மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை உடையவனாக இருக்கின்றான்

27. அகுத்ஸிதே கர்மணி ய: ப்ரவர்த்ததே
நிவ்ருத்த ராகஸ்யக்ருஹம் தபோவநம்.–இதிகாச சமுச்சயம்

ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற்கு உரிய வனமாம்,’ என்கிறபடியே, ஆசை நீக்கியவனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு ஏகாந்தத் தலம் என்பது போதரும். ‘

28. ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததாப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஆக, இவ்வைம்பொருள்களுமே திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன. அல்லாதவை ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன இத்தனை(இடையிலே வந்தவை’ என்றபடி.). ‘யங்ஙனம்?’ என்னில், பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் என்றும், அநந்யார்ஹ சேஷத்துவமே சொரூபம் என்றும், இறைவனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் பிரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், அகங்கார மமகாரங்கள் அதற்கு விரோதி என்றும், அவை நீங்குதற்கும் கைங்கரிய சித்திக்கும் சர்வ சுலபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும், ஐம்பொறிகளையும் அடக்கல் தொடக்கமாகக் கைங்கரியம் முடிவாக உள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் சொல்லப்பட்டன.

அடையத் தகுந்த பரம்பொருளின் சொரூபத்தையும், அடைகின்ற ஆத்துமாவின் சொரூபத்தையும், அடையும் உபாயத்தையும், அடைவதற்குப் பலத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியையும் இதிகாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் கூறுகின்றன; மகாத்துமாக்களும் வேதங்கள் வேதங்களின் பொருள்கள் இவற்றை அறிந்தவர்களுமான முனிவர்களும் சொல்லுகிறார்கள்,’ என்பதை விவரிக்கும் முறையில் எல்லா வேதங்களினுடைய கருத்து இவ்வைம்பொருள்களுமே என்றும், இவ்வைம்பொருள்களும் திருவாய்மொழிக்கு வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரியவங்கிப் புரத்து நம்பி அருளிச்செய்தார்.

29. உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜந் புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹி ஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸத்தமா:.. ஸ்ரீராமா. அயோத்.

தமையனாராகிய ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் மனம் உவக்கும் அடிமைகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவோடு வந்து சேர, கைகேயி 4‘ராஜந்’ என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரதாழ்வான் பட்டபாடு போலே இருக்கிறது, திருவிருத்தத்தில் நிலை; திருச்சித்திரகூட மலையிலே பெருமாள் எழுந்தருளியிருந்தார்

30. ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
ப்ராது:ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி.-ஸ்ரீராமா. அயோத். 101 : 12.

என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்கமாட்டாதவர் இத்தனை பேர் ஆற்றாமை கண்டால் மீளாது ஒழிவரோ? எனக்கு விருப்பமான காரியங்களைத் தம் தலையாலே இரந்து செய்யக்கடவ அவர், நான் என் தலையாலே இரந்த காரியத்தை மறுப்பரோ? நான் தம் பின் பிறந்தவன் அல்லனோ? பின் பிறந்தவன்

31. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருஸன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.-ஸ்ரீராமா. பாலகா. 1 : 38.

ஸ்ரீ ராமபிரான் வருவார் என்ற பேரவாவோடு நந்திக்கிராமத்தில் இருந்து அரசை நடத்திக்கொண்டிருந்தார்’ என்கிறபடியே, பதினான்கு ஆண்டும் ஆசையை வளர்த்துக்கொண்டிருந்தாற்போலே இருக்கிறது – பெரிய திருவந்தாதியில்; மீண்டு எழுந்தருளித் திருவபிஷேகம் செய்து கொள்ள, ஸ்ரீ பரதாழ்வானும் 4சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெற்றாற்போல இருக்கிறது, இவர்க்குத் திருமொழியில் பேறு.

32. ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநிச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்ச அந்யதபி வாங்கமயம்.–பாஞ்சராத்திர ஆகமம்.

இருக்கு யஜூர் சாமவேதங்களும், அப்படியே அதர்வணமும், மற்றும் ஒலி உருவமாக உள்ளவை அனைத்தும், எட்டு எழுத்துக்களையுடைய திருமந்திரத்திற்குள் அடங்கி இருப்பனவாம்’ என்கிறபடியே, நான்கு வேதங்களின் சுருக்கம் திருமந்திரமாய், அதனுடைய சுருக்கம் பிரணவமாய், அதனுடைய சுருக்கம் 6அகரம் ஆயினாற்போன்று, திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பதிகம்; முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் மூன்று திருப்பாசுரங்கள்; முதல் மூன்று திருப்பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பாசுரம்; முதல் திருப்பாசுரத்தின் சுருக்கம், முதல் அடி. 7மற்றும், ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் முதலானவைகளைச் செய்த முனி புங்கவர்களும் சுருக்கியும் விவரித்தும் செய்து போந்தமை அவ்வந்நூல்களால் தெளிக.

33. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சநேதி. – தைத்திரீ. ஆன. 9 : 1.

அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்தகுணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன

34. ஸர்வே க்ஷயாந்தாநிசயா: பதநாந்தா: முச்சரயா:
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம்.-ஸ்ரீராமா. அயோத். 105.16.

செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன; வாழ்தல், சாதலை முடிவாகவுடையன

35. ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ.-ஸ்ரீ விஷ்ணுபு. 6. 5 : 84.

அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்

36. வர்ஷாயுதை: யஸ்யகுணா நஸக்யா வக்தும் ஸமேதைரபி
ஸர்வலோகை:
மஹாத்மந: ஸங்கசக்ராஸி பாணே: விஷ்ணோர்ஜிஷ்ணோர்
வஸூதேவாத்மஜஸ்ய.-வியாசபார. வீடுமபருவம்.

எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’

37. ஜ்ஞாந விஜ்ஞாந ஸம்பந்ந: நிதேசே நிரத: பிது:
தாதுநாமிவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்.-ஸ்ரீ ராமா. கிஷ். 15 : 20.

மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’

38. தே தம்ஊசு: மஹாத்மாநம் பௌர ஜாநபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே.-ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.

அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும்

39. ஸ்வாபாவிகாநவதிகாதிஸயாஸங்க்யேய கல்யாண குணகண:–ஸ்தோத்திரரத்தினம். 11.

இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

40. யதா ஸைந்தவகந: அநந்தர: அபாஹ்ய: க்ருத்ஸ்ந:
ரஸ கநஏவ, ஏவம்வா அரே அயமாத்மா அநந்தர:

அபாஹ்ய: க்ருத்ஸ்ந: ப்ரஜ்ஞாந கநஏவ.–பிரஹதா. உபரி. 6. 5 : 23.

உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’

41. தம் அக்ரதும் பஸ்யதி வீதஸோக: தாது: ப்ரஸாதாத் மஹிமாநம் ஈஸம்.-தைத். நாராயண. 6 : 10.

மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமான

42. வ்யஸநேஷூமநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி.-ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத்தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், 6இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வ

 

43. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதிவேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதிசேத வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.-தைத்திரீய. ஆன : 6.

கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்னும் நிலை கழிந்து, ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,’ என்கிறவர்கள் கோட்டியிலே எண்ணலாம்படியாக நன்னெறியில் செல்லப் பார்ப்பாய்

44. மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

45. நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டத: தே நம: அஸ்துதே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்ய அமிதவிக்ரம: த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி தத: அஸிஸர்வ:–பகவத்கீதை. 11 : 40.

கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க.

46. யதோவா இமாநிபூதாநி ஜாயந்தே யேநஜாதாநி ஜீவந்தி
யத்ப்ரயந்தி அபிஸம்விஸந்தி தத்விஜிஞ்ஜாஸஸ்வ தத் ப்ரஹ்ம.- தைத்திரிய. பிருகு. 1.

எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ, எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்; அவன்தான் பரம்பொருள்,’

47. ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபிவாசா, மநாஸாது விஸூத்தேந,–வேதவாக்கியம்

மிக்க தூய்மையோடு கூடிய மனத்தால் அறியப்படுகிறான் இறைவன்

48. அதாத ஆதேச: நேதிநேதி நஹி ஏதஸ்மாத் இதிநேதி அந்யத்பரம் அஸ்தி.- பிரஹதாரண். 4. 6 : 62.

இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ என்று அளவிட்டு அறிய முடியாது

49. யம் ஆத்மா நவேத, யம் ப்ருதிவீ நவேத.தைத்திரீய. பிருகு. 6 : 1.

50. ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத்.

ஆனந்தமே இறைவன்,’ ‘ஆனந்தமயமானவன்’

51. ப்ரஹித: ப்ரதநாய மாதவாந் அஹம் ஆகாரயிதும் மஹீப்ருதா
நபரேஷூ மஹௌஜஸ: சலாதபகுர்வந்தி மலிம்லுசா இவ.-ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.

இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச் செய்கிறார்.

52. நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் ஸமஸ்ச அபி அதிகஸ்ச த்ருஸ்யதே,
பராஸ்யஸக்தி: விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ- ஜ்ஞாநபல க்ரியாச.

53. ஸஉத்தம:புருஷ: ஸதத்ர பர்யேதிஜக்ஷத் க்ரீடன்
ரமமாண: ஸ்தீரிபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜநம் ஸ்மரந் இதம்ஸரீரம்.-
சாந்தோக்யம், 7 : 26.

முத்தன் ஆனவன் எல்லாப்பொருள்களையும் பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகாநின்றது முத்தனுக்கு.

54. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்.– தைத்திரீயநாரா. 11 : 8.-தைத்திரீ. நாரா. 6. 1 : 11

உலகத்திற்குத்தலைவன்’ என்னுமித்தனை

55. யச்சகிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா,
அந்தர் பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:
தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.

உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்

56. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்யஸ்ச்ச த்யச்ச அபவத்.-தைத்திரீயம்.

57. அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா.-தைத்திரீயம்.

பொருள்களை. இவற்றை உண்டாக்கி, உயிர் வழியாக அநுப்பிரவேசித்துப் பின்னர் இவற்றிற்குப் பொருளாகை, பெயர் பெறுகை என்னும் இவை உண்டாம்படி செய்து, 4‘எல்லாச் சேதநர்களுடைய உள்ளத்திலும் பிரவேசித்து நியாமகனாய்ச் சர்வர்க்கும் ஆத்துமாவாய் இருக்கும் படியை’ ‘ஓடு’ என்பது காட்டுகிறது. ‘

58. த்வாஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம்
பரிஷஸ்வஜாதே, தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாகஸீதி–இருக்கு வேதம்.

தான் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராய் நின்றால், சரீரத்தினுடைய வளர்தல் தேய்தல் முதலிய நிலை மாறுபாடோ, உயிர்களுடைய இன்பதுன்பங்களோ தன்னையும் பொருந்தும்படி இருக்கின்றானோ?’ என்னில், புலன் அலன் – தான் ஒட்டு அற்று நின்று விளங்காநிற்பவன்; 5அவ்வப்பொருள்களினுடைய தன்மைவேறுபாடுகளும் இன்பதுன்பங்களும் தன்னைத் தீண்டாவண்ணம் இருப்பான் என்பதாம். 6‘பரமான்மா சீவான்மா என்று கூறப்படும் இருவர், சிறந்த ஞானரூபமான சிறகுகளையுடையவர்களாய், ஒத்த குணங்களையுடையவர்களாய்,

59. கிம்நு ஸ்யாத் சித்தமோஹ: அயம்பவேத் வாதகதி: துஇயம்
உந்மாதஜ: விகாரோவா ஸ்யாத்இயம் ம்ருகத்ருஷ்ணிகா.–ஸ்ரீராமா. சுந். 34. 23.

அந்நலனுடை ஒருவனை’ என்கிறார். நணுகினம் – ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – இது, பொய்யோ? 1‘இது ஏதேனும் மயக்கம் ஸ்வப்பனம் முதலியவைகளோ?’ என்று பிராட்டி நினைந்தாற்போன்று, இவரும் ‘நணுகினம் நாமே’ என்கிறார்

60. கச்சித் நதுஷ்டோவ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம்தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவமே–ஸ்ரீராமா. அயோத். 85 : 7.

 அஹம் என்றால் இறைவன் அளவிலே சென்று முடிய வேண்டும்படியாக இருக்க, தேகத்து அளவிலே ஆகும் படியன்றோ முன்பு போந்தது? கைகேயி, ‘அரசனே!’ என்று விளிக்கும்படியாகப் பிறந்து, 3‘அவள் மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ?’ என்று எண்ணும்படியான நிலையில் நின்ற நான்– கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ – கீழ்வயிற்றில் எழுந்த  கட்டியைப்போன்று துன்புறுத்த வருகின்றானோ என்றபடி.

61. சத்ருக்நஞ்ச அப்ரவீத் ஹ்ருஷ்ட: தாநமாத்யாம்ஸ்ச ஸர்வஸ:
மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம்தேஸம் பரத்வாஜ:யம் அப்ரவீத்-ஸ்ரீராமா. அயோத். 99 : 8 – 9.

அப்பரத்துவாச பகவான் சொன்ன ஆச்சிரமத்தை அடைந்தேனோ என்று ஐயப்படுகிறேன்!’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான்

62. க்வதே ராமேண ஸம்ஸர்க்க: கதம் ஜாநாஸி லக்ஷ்மணம்
வாநராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத ஸமாகம:.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 2.

காட்டிலே வசிக்கின்ற குரங்குகளுக்கும் நாகரிகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும் ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே?’ என்று

63. ஸர்வர்க்ஷ ஹரிஸைந்யாநாம் ஸூக்ரீவம் அகரோத் பதிம்
ராம ஸூக்ரீவயோ: ஐக்யம் தேவிஏவம் ஸமஜாயத.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 31.

பெருமாளும் மகாராஜரும் சேர்ந்த சேர்த்தி, பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க, அடியேன் அந்தப்புரக் காரியத்திற்கு வரும்படியாக அன்றோ? நானும் 2இங்ஙனே கூடிக் கொண்டு நிற்கக்கண்டேனித்தனை,’ என்றான் சிறிய திருவடி. இறைவனுடைய அனுபவத்துக்குப் புறம்பான நாம், அன்றி, இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் என்பார் ‘நாமே’ என்கிறார் எனினுமாம்.

(

64. ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத.-சாந்தோக்யம். 3. 4.

இவை எல்லாம் பிரஹ்மம் அல்லவா

65. தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேதகேதோ.-சாந்தோக்யம். 6. 12.

இது நீயாய் இருக்கிறாய்

ஆய்நின்ற’ என்னுஞ்சோல், பொருள்களைக் காட்டுவதோடு அமையாமல், இறைவன் அளவுஞ்சொல்லும்படி என்?’ என்ன,உடலும், உடலை விரும்பி நிற்கின்ற உயிரும், உயிருக்குள் தங்கி இருக்கின்ற இறைவனும் ஆன இக்கூட்டம் இத்தனைக்கும் வாசகமாக நிற்கிறது இச்சொல். ‘அவர்’ என்றது ‘இவையாகி நிற்கிறார் அவர்’ என்றபடி

66. நஹிபாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவத்யந்யஸ்ய கஸ்யசித்.-ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று

67. யத்வேதாதௌ ஸ்வர: பரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதிலீ நஸ்ய ய: பர: ஸமஹேஸ்வர:-தைத்திரிய நாராய. 6. : 10.

செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ-அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’

68. அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ.-பரத்துவாச சம்ஹிதை.

இரு கைகளையும் குவித்துச் செய்கிற ஓர் அஞ்சலி என்னும் மேலான முத்திரையானது, இறைவனுடைய திருவருளை விரைவிலே உண்டாக்கக் கூடியதாக இருக்கின்றது,

69. க்ருதாபரா தஸ்யஹிதே நாந்யத் பஸ்யாமி அஹம்க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத்.
ஸ்ரீராமா. கிஷ்.

இளையபெருமாளுடைய நாண் ஒலியினைக் கேட்ட மகாராஜர், கழுத்தில் அணிந்திருந்த மாலையினை அறுத்து எறிந்து, குரங்குகள் இயற்கையாகச் செய்கின்ற தொழில்கள் சிலவற்றைச் செய்துகொண்டு அருகே நின்ற திருவடியைப் பார்த்து, ‘இச்சமயத்தில் நாம் செய்யத்தக்கன யாவை?’ என்று கேட்க, ‘அபராத காலத்தில் அநுதாபம் பிறந்து மீண்டோம் என்று நினைப்பதற்கு எளியன் அல்லோம்; சில செய்வோம்; தீரக் கழிய அபராதம் பண்ணினோம்; செய்த பின்னர் இனி, ஓர் அஞ்சலி நேராமற் போகாது,’ என்ற கருத்து அமைய, 2‘செய்யப்பட்ட பாவங்களையுடைய உனக்கு இலக்குமணனைக் கண்டு இரு கைகளையும் கூப்பி வணங்கி, அதன் திருவருளைப் பெறுதல் தவிர, அவனைப் பொறுப்பிக்கைக்கு வேறு வழி ஒன்றையுங் காணேன்,’ என்றான் திருவடி என்று கூறும் ஸ்ரீ ராமாயணமும் இங்கு அறிதல் தகும்.

70. யோயோ யாம் யாம் தநும்பக்த: ஸ்ரத்தயார்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்.–பகவத்கீதை. 7 : 21.

எவன் எவன் பத்தியுள்ளவனாகி எவ்வெத்தேவர்களை வணங்குவதற்கு விரும்புகின்றானோ, அவன் அவனுக்கு அவ்வத்தேவர்களை வணங்குதற்கு உரிய பத்தியினை நான் கொடுக்கிறேன்

71. ஸதயாஸ்ரத்தயா யுக்த: தஸ்யாராதநமீஹதே
லபதேசத்த: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்

72. அருணயா பிங்காக்ஷ்யா ஸோமங்க்ரீணாதி.

நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். (ஆகிருதி – சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய
பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது   அச்சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று
என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது – ஒரு சொல் தனக்குரிய   பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும்
செல்வது.)2குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும் செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று, தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று 3முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், 4சாமாநாதிகரண்யம் சித்தியாது. ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன.

73. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி.–சாந்தோக்யம், 6 : 3

இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’

74. யஸ்யாத்மா ஸரீரம். . .யஸ்யப்ருதிவீ ஸரீரம்.–தைத்திரீயம்

உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று 2‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார்.

தாரகன் – தரித்துக்கொண்டிருப்பவன். நியாமகன் – ஏவுகின்றவன். சேஷி –  தன் விருப்பின்படி விநியோகங்கொள்ளுகின்றவன்.

தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும் இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது, தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள். நியாம்யமாவது,
சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா
வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல்.  சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று,
இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.

75. ஆத்மந ஆகாஸ: ஸம்பூத:, ஆகாஸாத்வாயு:-தைத்திரீ. ஆனந். 1.

திடம் விசும்பு எரி வளி நீர் நிலம் – திடம் என்பதனைப் பிரித்து ‘எரி’ முதலிய ஏனைய நான்கு பூதங்கட்கும் கூட்டுக. இனி, 6‘பரம்பொருளிடத்திலிருந்து ஆகாயம் உண்டாயிற்று,’ என்கிறபடியே, ஏனைய நான்கு பூதங்கட்கும் முன்னே தோன்றி, அவை அழிந்தாலும் சில நாள் நின்று பின் அழியக்கூடியது ஆகையாலே விசும்பிற்குத் திடம் என்ற அடை புணர்த்து ஓதினார் எனக்கோடலுமாம். இனி, 1‘காரணமான பூதங்கள், காற்றுத் தீ நீர் மண் என்னும் நான்கேயாம்,’ என்கிற (பார்ஹஸ்யபத்திய சூத்)அருகமதத்தாரை மறுக்கும் பொருட்டு, விசும்பிற்குத் ‘திடம்’ என்ற அடையினைத் தந்து அருளிச்செய்தார் என்றலும் ஒன்று. ஆக, ஐம்பூதங்களையும் அருளிச்செய்கிறா

76. சத்வார்யேவ பூதாநி மிதஸ்ஸம்பத்தாநி. 

77. பஹூயாம் ப்ரஜாயேயேதி. தைத்திரீய. ஆன. 6. 3.

பல பொருள்களாக விரிகின்றேன்’ என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், வைதிக நிர்த்தேசம்-மறைமொழி.-  இருக்கிறபடி

78. யமாத்மா ந வேத.–. பிரஹதாரண்யம்.

எவன் ஒருவன் உயிர்களால் அறிய முடியாதவனோ’ என்கிறபடியே, பிறர்களால் காண முடியாதவனாய் இருப்பான். எங்கும் பரந்து உள்ளும் புறமும் நிறைந்து ‘இதற்குப் பிரமாணம் என்?’ என்னில், உளன் சுடர்மிகு சுருதியுள் – புருஷனால் செய்யப்படாததாய், குற்றம் இல்லாததாய் இருக்கிற வேதங்களால் சொல்லப்பட்டவன். பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் போன்று வேறு காரணங்களால் கழித்துத் தள்ள ஒண்ணாதபடி இருத்தலின், ‘சுடர்மிகு’ என்றும், முன்னர் உள்ள பெரியோர்கள் கூறி வந்த முறையைப் பின்பற்றியே பின் வருகின்றவர்களும் கூறிக்கொண்டு வருகின்றமையின், ‘சுருதி’ என்றும் அருளிச்செய்கிறார்.

79. அக்ஷரம் அம்பராந்த த்ருதே:-பிரஹதாரண்யம், 5 : 8.

80. கஸ்மிந்நு கலு ஆகாஸ ஓதஸ்ச ப்ரேரதஸ்ச.

ஆகாயம் என்று கூறப்படுகின்ற மூலப்பகுதியானது எவனிடத்தில் குறும்பாவாகவும் நெடும்பாவாகவும் கோத்துக் கொண்டு கிடக்கிறது?’ என்று உபநிடதத்தில் கார்க்கி வித்தையில் ஆகாச சப்தத்தால் மூலப்பகுதியைச் சொல்லுகையாலே இவரும் ‘விண்’ என்ற சொல்லால் மூலப்பகுதியினை அருளிச்செய்கிறர்

ஆகாயம்’ என்ற சொல் மூலப்பகுதியைத்தான் காட்டுகிறது என்று கொள்ளுமாறு யாங்ஙனம்?’ எனின், 3ஆகாயத்திற்குக் காரணமான மூலப்பகுதியைத் தரித்திருப்பதனால் அக்ஷரம் என்று சொல்லப்படுமவன் பரம்பொருளே,’ என்பது பிரம சூத்திரம் ஆதலின், (சாரீரக மீமாம்சை, சூ. 9.)மூலப்பகுதியின் காரியமான ஆகாயத்தைக் காட்டுகிற ‘விண்’ என்ற சொல்லால் காரணமான மூலப்பகுதியை உபசாரத்தால் அருளிச்செய்கிறார்

81. யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரஞ்ச உபேபவத ஓதந;
ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் கஇத்தா வேத யத்ர ஸ:-கடவல்லி. 1 : 2.

யாவன் ஒருவனுக்குப் பிராமண க்ஷத்திரிய சாதிகள் இரண்டும் உணவாக இருக்கின்றன? யாவன் ஒருவனுக்கு யமதருமன் ஊறுகாய் நிலையிலே இருக்கின்றான்? அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவருக்கு அறிய நிலமோ?’

இங்ஙனம் உணவாகக் கூறப் படுதலின், இவரும், உணவின் தொழிலாகிய ‘  அவை முழுது உண்ட’ என்னும் சொல்லால் அழித்தலை அருளிச் செய்கிறார்

82. பர: பராணாம் பரம: பரமாத்மா ஆத்மஸம்ஸ்தித:
ரூபவர்ணாதி நிர்த்தேஸ விஸேஷண விவர்ஜித:-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 10.

உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ என்கிறபடியே, அவர்கள்தங்களுக்கும் மேலானவனாய் இருக்குமவன். 3‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்பது திருவாய், 8. 1 : 5.)

83. விஷ்ணு: ஆத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:-பாரதம்

மிக்க ஒளியினையுடைய உருத்திர பகவானுக்குத் திருமால் உயிராக இருக்கின்றார்; ஆதலால், அந்தச் சிவபெருமான் வில்லினுடைய நாணினைத் தொடும் ஆற்றலையடைந்தான்’ என்றார் அடி அறியும் வியாசர்

84. யோ ப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை.–சுவேதாஸ்வதரம்.

நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்; அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்,’ என்கிறபடியே, அதற்கும் இறைவன் அடியாக இருப்பான்.

85. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரெஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்மிருதௌ
ததா தர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம். சாந்தி பர். 169.

அரன் என உலகு அழித்து உளன் அயன் என உலகு அமைத்து உளன் – ‘அரன் செய்தான்; அயன் செய்தான்’ என்ன உலகையழித்தும் அமைத்தும் உளன். பிரமன் சிவன் என்னும் இவர்கள் இருவரும் தேவர்களுக்குள் தலைமை பெற்றவர்கள்; இறைவன் தெளிந்திருந்த காலத்தும் கோபத்துடன் இருந்த காலத்தும் உண்டானவர்களாக எண்ணப்படுகிறார்கள்; இவர்கள், அவ்விறைவனாலே காட்டப்பட்ட வழிகளையுடையவர்களாய், படைத்தல் அழித்தல்களாகிய காரியங்களைச் செய்கிறார்கள்,’ என்று இவ்வாறு பிரமாணங்கள் உள்ளபடியால் படைப்பில் ஒரு பகுதியும் அழிப்பில் ஒரு பகுதியுமே அவர்களுக்கு உள்ளவை; அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன். ஆகையாலே, சொன்னேன் அத்தனை; ஒருவனிடத்திலே பக்ஷபாதத்தாலே சொன்னேன் அல்லேன்,’ என்று குத்ருஷ்டிகளை மறுக்கிறார்.

86. ஏஷம ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா:–சாந்தோக்கிய உபநிடதம்.

நீர் தொறும்–ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. 2‘ஆகாயத்திலும் பெரியன் என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் – அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்

87. அத்ர க்ருத்ர: பததி.

88. ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகி: பகவாந்ருஷி:-ஸ்ரீராமா. பா. 4 : 1.

இறைவனுடைய திருவடிகளின்மேல். குருகூர்ச் சடகோபன் சொல்- 3‘வால் மீகிர்ப் பகவான் ருஷி:’ என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார்.

89. பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை: த்ரிபி: அந்விதம்
ஜாதிபி: ஸ்ம்தபி: பத்தம் தந்த்ரீலய ஸமந்விதம்.

90. பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமமவித:-ஸ்ரீராமா. பா. 2 : 18.

91. காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருஸை: கரவாணி அஹம்.

நிரன் நிறை’ என்று கொண்டு நேரே நிறுத்தப்படுகை. அதாவது- நான்கு அடிகளோடு கூடியதாயும், ஒவ்வோர் அடியும் எழுத்துகளால் ஒத்ததாயும், வீணையின் நரம்பு தாளங்கள் அவற்றிற்கு ஒத்ததாயும் இருக்கின்ற ஸ்ரீராமாயணம்,’ என்பது போன்று, இங்கும் செய்யுள் இலக்கணத்திற்குறையாமல் எழுத்து அசை சீர் தளை அடிகளும் பொருளும் அந்தாதியும் முறையாக நிறுத்தப்படுதல் என்னுதல்

92. உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்யைகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்ய:–ஆத்தும சித்தி.

பத்தி என்பது ‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’ என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு உண்டாவது அன்றோ?

93. நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்.-முண்டக உபநிடதம், 1. 2 : 13.

-ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன் அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.–வீடுமின்’ என்று பலரைக் குறித்துப் பரோபதேசம் செய்கையாலே ‘ஒரு  வருடம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

94. ஸோஹம் பருஷிதஸ்தேந தாஸவச்ச அவமாநித:
த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:-ஸ்ரீராமா. யுத். 17 : 14.

95. பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச
பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச.–ஸ்ரீராமா. யுத். 19 : 5.

புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ என்றும், 2‘என்னால் விடப்பட்டது இலங்கை’ என்றும் விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும்-விபீஷணன் முதலியோர்.- பற்றினார்கள்? ‘

96. யமோ வைவஸ்வதோ ராஜா ய: தவஏஷஹ்ருதிஸ்தித:
தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம:-பிரஹதாரண்யம்.

 உம் உயிர் வீடு உடையானிடை – எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில். அன்றி, இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக உடையவனிடத்தில்’என்றும், ‘உம்உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ என்றும்,  (ஈண்டு, விடுதல் – சமர்ப்பித்தல்)உம் உயிரை வீட்டினை (அதாவது – மோக்ஷத்தினை) உடையவனிடத்தில்’ என்றும் பொருள் கூறலும் ஆம். ‘அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ? நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்பார், ‘உயிர்’ என்றும், ‘அதுதானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ என்பார், ‘உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார். பொதுவிலே ‘உடையானிடை’ என்கிறார்; சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால் 1வண்புகழ் நாரணன்’ என்கைக்காக.

97. அநாத்மநி ஆத்மபுத்தி: யா அஸ்வே ஸ்வமிதி யா மதி:
அவித்யா தருஸம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்-ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.

98. அச்யுத அஹம் தவஅஸ்மி இதி ஸைவ ஸம்ஸார பேஷஜம்.–ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.

உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, எனப் பிறப்பு ஈனும் வித்து இன்னது என்றும், 2‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’, என அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது. ஆதலால், அளிக்குமவன் ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

99. ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநாநஅந்யத் கிஞ்சித் அஸ்திபராயணம்.-விஷ்ணு தர்மம், 122.

பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால் இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத் தவிர, சிறந்த வேறே பாராயணம் இல்லையே

100. ஜ்யோதீம்ஷிவிஷ்ணு: புவநாநிவிஷ்ணு: வநாநிவிஷ்ணு: கிரயோதிஸஸ்ச
நத்ய: ஸமுத்ராஸ்ச ஸஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்திச விப்ரவர்ய.–ஸ்ரீ விஷ்ணு. புரா. 2. 21 : 93.

101. ஸத்யஞ்ச அந்ருதஞ்ச ஸத்யம் அபவத்.–தைத்திரீயம். 6.

‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ என்று விஷ்ணு புராணமும்5‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ என்று தைத்திரீய உபநிடதமும் கூறுதல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

102. ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ
தந்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்யோபஜீவந:– ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.

‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்

103. ஸமோஹம் ஸர்வபூதேஷூநமேத்வேஷ்ய: அஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி துமாம் பக்த்யா மயிதே தேஷூ சாப்யஹம்.-ஸ்ரீ கீதை. 9 : 24.

 முற்றவும் நின்றனன் – ‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்; அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ என்கிறபடியே அடையும் திறத்தில் ஒத்தவனாய் இருந்தான்.

கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும் அருளும்  கோட்டமும் செப்பமும் ஆகிய மறமும் அறமும் உடையாரிடத்து
உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாய் இருத்தல் அல்லது  மாற்றாருயிரின் கண்ணும் கேளிருயிரின் கண்ணும் அதனை மாற்று
தற்றொழிலும் அதற்கு எமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை; நினக்கு  மாற்றோரும் கேளிரும் இலராதலான். என்றது, குற்றமாகிய மறமுடையாரிடத்து  இல்லையாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும்  செம்மையுமுடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப்  பகையாயினாருயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்குக் கேளிராயினாருயிரின்கண் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை;  அவ்விரு திறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு,’ என்ற பரிபாடல்  உரைப்பகுதி ஒப்பு நோக்கல் தகும்.

104. வாஸூதேவோஸி பூர்ண:

105. இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபன்னே கிம்கார்யம் ஸீதயாமம.-ஸ்ரீராமா யுத். 41 : 4.

இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார். 1உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின், சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை, (சுக்கிரீவனை.)என்றும் தன்னையே அடைந்திருக்கிற பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ! ஆதலால், இறைவனுக்கு அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்; இங்கு, இவ்விலக்காமையினை யுடையவர்களேயாவர். ‘காரணம் என்னே?’ எனின், அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்; குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!-

106. பஹூநாம் ஜந்மநாம் அந்தேஜ்ஞாநவாந் மாம்ப்ரபத்யதே
வாஸூதேவ: ஸ்ர்வம் இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:

107. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹருத்கதி: நாராயண:

108. பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரமித்ரா தயோபிவா
ஏகைக பலலாபாய ஸர்வலாபாய கேஸவ:

109. ப்ராயஸ: பாபகாரித்வாத் ம்ருத்யோ: உத்விஜதே ஜந:
க்ருதக்ருத்யா: பாதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியம் இவ அதிதிம்.

110. ஸர்வே வேதா: ஸர்வ வேத்யா: ஸஸ்ஸ்த்ரா:
ஸர்வேயஜ்ஞா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாபதா:

111. நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர:
நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண:பர:.-தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8. 

உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ 4‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,

112. நித்யம் த்வதேக பரதந்த்ர நிஐஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸனம் ந:–ஸ்ரீ வைகுண்டராஜ ஸ்தவம், 35.

‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன

113. பித்யதே ஹ்ருதய க்ரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஸயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே- முண்டக உபநிடதம்.

‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய இறைவனைப் பரபத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’

114. ததோமாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்.– ஸ்ரீ கீதை, 18 : 55.

பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்

115. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜூந
தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப.-ஸ்ரீ கீதை, 4 : 5.

பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன; உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்; அவற்றை நீ அறியாய்,’ என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் கிருஷ்ணன்; அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.

116. ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-ஸ்ரீ கீதை, 4 : 9.

அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே; இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,  ‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’ என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும். 6நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்; 7அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;

117. மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந
தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம்.ஸ்ரீ ராமா. யுத். 18 : 3.

நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ என்னுமவன்

118. அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபீஷண:
அந்தரிக்ஷ கத:ஸ்ரீமாந் ப்ராதாவை ராக்ஷஸாதியம்.-ஸ்ரீராமா. யுத். 16. 17.

119. லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-ஸ்ரீராமா. பால. 18 28.

இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ, 7விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’ என்றார்? 8‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ என்றார் இளைய பெருமாளை. இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்; இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார்.

120. இமௌ ஸ்ம முநிஸார்த்தூல கிங்கரௌ ஸமுபஸ்திதௌ
ஆக்ஞாபய யதேஷ்டம் வை ஸாஸநம் கரவாவகிம்.-ஸ்ரீராமா. பாலகா. 34 : 4.

விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய் இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்? விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ என்கிறபடியே, ‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி

121. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும்.–ஸ்ரீகீதை. 10 : 12.

122. பக்த்யாது அநந்யயா ஸக்ய: அஹமேவம் வித: அர்ஜூந
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்த்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப,-ஸ்ரீகீதை. 11 : 54.

மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, 5‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன்

123. ப்ராம்யதாம் அதர ஸம்ஸாரே நராணாம் கர்மதுர்கமே
ஹஸ்தாவலம்பநோஹ்யேகோ பக்தி கரீதோ ஜநார்தந:–வைஷ்ணவ தர்மம்.

உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன், ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக அடிமைப்படுவானாயின், பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று, சர்வேஸ்வரனும் பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால், பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்; கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூதுபோ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைப்பான். 1‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்; அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’ என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.

124. ஹிமவாந் மந்தரோ மேரு: த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
ஸகயம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:ஸ்ரீராமா. யுத். 59 : 111.

125. வாயு ஸூநோ: ஸூஹ்ருத்த்வேந பக்த்யா பரமயா ச ஸ:
ஸத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வம் அகமத் கபே:ஸ்ரீராமா. யுத். 59 : 120

இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ 4‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ என்பன ஸ்ரீராமாயணம்

உள்ளி வெம்பிணத் துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’ —  
என்னும் கம்பராமாயணச் செய்யுள்கள் நோக்கல் தகும்.

126. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே.–ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.

‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ, அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’

127. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ.

உனக்கு பூதேவியும் ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ எனக் கூறப்பட்டுள்ளது அன்றே? அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற, ‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.

128. தாம்நா சைவோதரே பத்வா-ப்ரத்ய பத்நாத் உலூகலே
க்ருஷ்ணம் அக்லிஷட கர்மாணம் ஆஹச இதம் அமர்ஷிதா.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 14-

129. யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதிசஞ்சல சேஷ்டித
இதி உக்த்வா அதநிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 15-

‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்; பொத்தி, ‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!’ என்று உறுக்கிவிட்டால் போகமாட்டாதே இருந்தான்

இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது’ என்று ஓதப்படும் பொருள், இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள்

130. மந்யே ஸாபரணா ஸூப்தா ஸீதா அஸமிந் ஸயநோத்தமே
தத்ர தத்ர ஹி த்ருஸ்யந்தே ஸக்தா: கநக பிந்தவ:

131. ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:
பரிஷ்வஜ்ய ருரோத உச்சை: விஸம்ஜஞ: ஸோக கர்ஸித:

132. ஸாதம் ஸமீக்ஷ்யைவ ப்ருஸம் விஸம்ஜ்ஞா கதாஸூ கல்பேவ பபூவ ஸீதா.
சிரேண ஸம்ஜ்ஞாம் ப்ரதிலப்யசைவ விசிந்தயாமாஸ விஸாலநேத்ரா.–ஸ்ரீராமா. சுந். 38 : 8.

பெருமாளும் பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல்  புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’ எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே  காணப்படுகின்றனவே! ஆதலால், பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’  (அயோத். 88.  14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப்பெருமாள் ஆச்சிரமத்தினின்று நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான்  வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன; பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின்,  சிறந்த காவல் செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை பெறுவதும்.

எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக்கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப்பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக்கொண்டிருந்த இடத்தைகாட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் என்னும்படி இங்கு,மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர், விசாலமான கண்களை யுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.

காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’–  என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.

133. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.

 பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் 2பல பிறவி’ என்பன்; உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார், பல பிறப்பு’ என்பர். பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி, அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு இருந்தான் ஆதலின், ‘பிறந்து’ என்னாது ‘பிறவியாய்’ என்கிறார்.

134. ஆத்மாநம் மாநுஷம் மந்யேராமம் த ரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யத: ச அஹம் பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே.-ஸ்ரீராமா. யுத். 120 : 11.

135. ந அஹம் தேவோ ந கர்தர்வோ நயக்ஷோ நசதாநவ:
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோந்யதா.-ஸ்ரீ விஷ்ணு புராணம். (5. 13 : 12.)

பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும், -நான் தேவன் அலன், கந்தருவன் அலன், இயக்கன் அலன் அசுரனும்  அலன். நான் உங்களுக்குச் சுற்றத்தானாய்த் தோன்றி யிருக்கிறேன்; இப்படித்  தோன்றி யிருப்பதனால் வேறு விதமாக நினைக்கத்தக்கவன் அல்லன்,- என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும்

136. யுவா ஸூவாஸா: பரிவீத ஆகாத் ஸ உ ஸ்ரேயாந் பவதி ஜாயமாந:-யஜூர் வேதம். 3. 6 : 9.

 இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான்

137. நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே
நமோநம: அநந்த மஹா விபூதயே
நமோநம: அநந்த தயைக ஸித்தவே.-ஸ்தோத்திர ரத்தினம், 21.

எம்பெருமான்’ என்ற சொல்லால், ‘அடியார்க்கு எளியனாய் அடியர் அல்லாதார்க்கு அரியனான என் 2நாயன் நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக்கொடுக்கிறார். 3‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற உனக்கு வணக்கம் வணக்கம்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

138. ஸஹஸ்ர பாஹூ: ஸர்வஜ்ஞோ தேவோநாம ஸஹஸ்ரவாந்.

139. நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவாதௌ தேவாதீநாம் சகார ஸ:–பாரதம்.

பேரும் ஓர் ஆயிரம் – அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திருநாமங்களையுடையவனாய் இருக்கை. குணம் பற்றி வருவனவும், சொரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார். 4‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ எனப் புகலும் பாரதம்

140. அநேக ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி:

பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின், ‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ என்றும். பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ என்றும் பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது 7திருமேனியைக் காட்டும்

141. தத்ர பூஜ்யபதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
ஸப்த: அபயம் ந உபசாரேணஹி அந்யத்ரஹி உபசாரத:

142. நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே.- ஸ்ரீகீதை, 9 : 14.

143. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.-ஸ்ரீகீதை, 9 : 34. 

வணக்குடைத் தவநெறி வழி நின்று-வனக்கத்தையுடைய பத்திமார்க்கமாகிற வழியிலே நின்று; பகவத்கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் ‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால், இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவநெறி’ என்கிறார்

பகவான் என்பதற்கு ஆறு குணங்களை யுடையவன் என்பது பொருளாதலின்,  குணங்களை யுடையான் பக்கல் செலுத்தம் பத்தி இன்பமயமாக
இருக்குமாதலின், ‘காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்ப மயமாக  இருக்கும்’ என அருளிச் செய்கிறார்.

144. ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநம்யம் தப:-முண்டகோபநிடதம் 1. 1 : 10.

பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் அதனைச் சொல்லுகிறார்; அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’ என்கிற நியாயத்தாலேயாதல், இவனுடைய அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலேயாதல்.

தவநெறி’ என்பதற்குப் பத்தி  மார்க்கம், பிரபத்தி மார்க்கம் என்னும் இரண்டனையும் பொருளாகக் கொள்க.

145. ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே.ஸ்ரீகீதை, 2 : 59.

ருசி வாசனைகளும் நீங்குகின்றன,’

146. மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார:-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 2 : 8.

பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ என்கிறபடியே, பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;

147 ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:-சுபால உபநிடதம்.

நன்று எழில் நாரணன் – ‘நன்று’ என்பதனால், அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார். ‘எழில்’ என்பதனால், ‘நீங்கின குற்றங்களையுடையவனும் மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனேயானவனும் ஆன நாராயணன்’ என்கிற புகரை நினைக்கிறார். இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு, வடிவின் அழகினைப் பார்த்தவாறே, ‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, ‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம். திருப்பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க்கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின், ‘நாரணன்’ என்கிறார்.

148. ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணுஸிவாத்மிகாம்
ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாநேகஏவ ஜநார்த்தந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 23.

படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன் என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’ என்கிறபடியே, பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன

149. நந்தந்தி உதிக ஆதித்யே நந்தந்தி அஸ்தமிதே ரவௌ
ஆத்மநோ நாவபுத்யந்தே மநுஷ்யா ஜீவிதக்ஷயம்.-ஸ்ரீராமா. அயோத். 105 : 24.

நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? ‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம்  அருளிச்செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.

150. ஸூக்ருத: ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம்–சாட்யாயன சாகை.

151. அபூத பூர்வம் மமபாவி கிம்வா ஸர்வம் ஸஹேமே ஸஹஜம் ஹி துக்கம்
கிம்து த்வதக்ரே ஸரணாகதாநாம் பராபவோ நாத ந தேநுரூப:-ஸ்தோத்திர ரத்தினம், 25.

நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், (காலம் அறியப்படாமல் வருகின்றமையை நோக்கி ‘உடல்களின் சேர்க்கையும்  நித்தியம்’ என்கிறா)அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம. ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, 5எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்

பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள்

152. யதா இஷீகதூலம் அக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத.
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே.-சாந்தோக்ய உபநிடதம், 5. 2

உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும். ‘6தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன

இங்கு, ‘தாயைக் குடல் விளக்கஞ்செய்த  தாமோதரனைத், தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால்
பாடி மனத்தினால் சிந்திக்கப், போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்,’ என்ற திருப்பாவை ஒப்பு நோக்கல் தகும்.

153. மேரு மந்தர மாத்ரோபி ராஸி: பாபஸ்ய கர்மண:
கேஸவம் வைத்யம் ஆஸாத்ய துர்வியாதிரிவ நஸ்யதி.-விஷ்ணு தர்மம். 78.

பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும், கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,

154. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் திகச்சதி
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி– ஸ்ரீ கீதை, 9 : 81.

ஓர் குறைவு இல்லை – ‘மேல் ஒரு குறையும் வாராது. இனி, விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம் ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்; நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராதுகாண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ என்பது பகவான் திருவாக்கு

155. துராசாரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா
ஸமாஸ்ரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா ஸரணம்யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்ந:பாரதம் சாந்தி பர்வம்.

156. ந வாஸூதேவ பக்தாநாம் அஸூபம் வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் வாப்யுபஜாயதே.பாரதம் அநுசாசன பர்வம்.

தீய ஒழுக்கமுடைமை, உண்ணத் தகாதனவற்றை உண்டல், நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல், வேதநெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன் ‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின், பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில், இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும், 4‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ என்றும் கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு; மனன் அகம் மலம் அறக் கழுவி – சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால், ‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து, ‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும். ‘

157. த்விதா பஜ்யேயம் அப்யேவம் நநமேயம்து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:.ஸ்ரீ ராமா. யுத். 36 : 11.

மாளும் ஓரிடத்திலும்-முடிகின்ற ஒரு கணத்திலும். வணக்கொடு மாள்வது வலம்-இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ என்னாது கிடக்கிற சீரைப்பாயைக் (சீரையாகிய பாயையும்.)கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும். இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பெற்றோடே தலைக்கட்டும் ஆதலின், ‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார். இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்; இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்

158. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே.ரீ கீதை. 4 : 8

 பிரமன் முதலியோர்கட்கும் காரணனாய் அவர்களுக்கு இரட்சகனான சர்வேஸ்வரன், அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின், 1பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும்-பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காக’ என்றது,  ‘நல்லார்கள் தம்மை நலம் புரிந்து காத்தல்’ என்றதன் பொருள். ‘ருசியைத்   தோற்றுவிப்பவன் ஆகைக்காக’ என்றது, ‘எல்லாம் முந்தை அறம் நாட்டம்  உய்த்தற்கு’ என்றதன் பொருள். ‘ஆயின், ‘பொல்லாரைப் போக்கல்’ என்றது  என்னை?’ எனின், ‘பொல்லாரைப்போன்று நெறி போக்கல் அதனுடைய  பலமாய் வருமதுவே’ என்ற வாக்கியத்தால் அது அமுக்கியம் என்கிறார்.
அது, சங்கற்பமாத்திரத்தாலே செய்யலாம் ஆகையாலே, பிரதானம் அன்று  என்றபடி. விரைவும் ருசியும் நேரிற் கண்டால் அல்லது உண்டாகா; ஆதலால்,
அவற்றிற்கே பிராதாந்யம்.

159. பஸ்ய ஏகாதஸ மே ருத்ராந் தக்ஷிணம் பார்ஸ்வம் ஆஸ்ரிதாந்.-மோக்ஷ தர்மம், 36, 11.

160. ப்ரஹ்மாணம் ஈஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாந் உரகாம்ஸ்ச திவ்யாந்.ஸ்ரீ கீதை, 11 : 15.

 வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார். முப்புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திருமேனியில் வலப்பாகத்தைப் பெற்றுச் சொரூபத்தை அடைந்தவனாய் இருப்பன். 1‘எனது வலப்பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர் பதினொருவரையும் பார்ப்பாய்,’ என்பது மோட்ச தர்மம். ஏழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து – எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித் திருநாபிக் கமலத்தில் இருப்பான். ‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர். 2‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று. இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான காத்தலுக்கும் உபலக்ஷணம்.

161. அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா.–ஸ்ரீ கீதை.

162. த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி.-ஸ்தோத்திர ரத்தினம், 31.

தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார். 2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.

163. ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே.-ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 2.

அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து – வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

164. தத் விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே விஷ்ணோ: யத் பரமம்பதம்.-இருக்கு வேதம்.

சடகோபன் குற்றேவல்கள் – இத்திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக்கொண்டு அடிமை செய்தபடியாயிற்று இவைதாம். ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின், எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே! -அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

165. அயம் அபர: காரக நியம:-இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர். 

166. ஆத்மாவா அரேத்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:-பிரஹதாரண்யம். 6. 5 : 6.

மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. ‘இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, (வேற்றுமைகள்  வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,)மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; 3இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன், பார்க்கத் தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.

167. ஆர்த்தோ வா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா.-ஸ்ரீ ராமா. யுத். 18 : 28

ஆர்த்தன் – பேறு பெறுவதற்கு விரைகின்றவன்.  திருப்தன் – ‘பெறுகின்ற காலத்தில் பெறுவோம்,’ என்று இருப்பவன்.
ஆர்த்தன் – அமிதவாதி. திருப்தன் – மிதவாதி.

ஆயின், ‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று, மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;

168. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர பலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.- ஸ்ரீராமா. சுந். 9 : 30.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?

169. ஹம்ஸகா ரண்டவாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம்
க்ஷீப்ரம் ராமாய ஸம்ஸத்வம் ஸீதாம் ஹரதி ராவண:ஸ்ரீராமா. ஆரண். 49 : 32.

170. ஆஸோக ஸோகாபநுத ஸோக உபஹத சேதஸம்
த்வந்நாமாநம் குருக்ஷிப்ரம் ப்ரியாஸந்தர்ஸநேந மாம்.ஸ்ரீராமா. ஆரண். 6 : 17.

பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின், அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்; ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும், ‘சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும் எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ என்று பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

171. ஸபர்யாபூஜித: ஸம்யக் ராமோ தஸரதாத்மஜ:
பம்பாதீரே ஹநுமதா ஸங்கதோ வாநரேணஹ,-ஸ்ரீராமா. பால. 1 : 57

இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், 2‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய  கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால்
நெஞ்சு பறியுண்கை

172. ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம்உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்.-ஸ்ரீராமா. அயோத். 31. 12.

இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே, என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது

173. ஏஹபஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதாவநே.ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.

முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.

174. விக்ராந்த: த்வம் ஸமர்த்த: த்வம் ப்ராஜ்ஞ: த்வம் வாநரோத்தம
யேநஇதம் ராக்ஷஸபதம் த்வய ப்ரதர்ஷிதம்.-ஸ்ரீராமா. சுந். 36 : 7.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.

175. ததாவித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி.-முண்டக உபநிடதம். 3. 1 : 3.

பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” என்கிறபடியே, பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்? நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம் என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல்வார்த்தை சொல்லுகிறாள்: வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப் பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.

176. அக்ரூர: க்ரூர ஹ்ருதய: ஸீக்ரம் ப்ரேரயதே ஹயாந்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 18 : 19.

அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே, 1தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று. புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;

177. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேஸே க்ரியதாம் இதி மாம் வத.-ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள். சென்றக்கால் ‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ பலன் சித்திக்கப் புகுகிறது? (இறைவனை நேரிற் கண்டு மகிழ்தல்.)என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள். இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ?’ (அடிக்கழஞ்சு : அடி – ஈண்டுப் பாதத்தைப் பெயர்த்து வைத்தல்; கழஞ்சு –  பொன் ; அதாவது – மேன்மை பெறுதல் என்றபடி.)என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம். வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின், அரச குமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது (வெற்றிலை கொடாதபோது.)அவர்கள் வருந்துவார்கள் : அது போன்று, இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள்

178. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
மயாகாலம் இமம் ப்ராப்ய தத்த்: தஸ்ய மஹாத்மந:ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக்காட்டிலும் சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள். இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம். அருளி – இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

179. லோகே த்வந் முக ஸத்ருஸம் க்வாபிந த்ருஷ்டம் இதி மயி வததி ராகாத்
ஹரி ஹரி குபி தாஸா அபூத் அந்யத் உபக்ராந்தம் அந்யத் ஆபதிதம்.–ஸ்ரீராமா. சுந். 36 : 7.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது

180. ஸா ப்ரஸ்கலந்தீ மதவிஹ்வலாக்ஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸலக்ஷணா லக்ஷ்மண ஸந்நிதாநம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி:–ஸ்ரீராமா. கிஷ். 33 : 37-

ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள்.
ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல் அடியாக இட்டு வந்தாள்.
மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளால் தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள்.
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடிய பேணாதே வந்தாள்.
ஸலக்ஷணா – புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள்.
லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்.
தாரா – தாரையானவள்.
நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்க என்று தோற்றும்படி இருந்தாள்.
அப்படிப்பட்ட நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று இருக்கிறாள்.

இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது.

181. கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்.– ஸ்ரீராமா. யுத். 21 : 77.

ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் கால தூர தர்சி (மிக்க தூரத்திலுள்ளவற்றை எல்லாம் அறிகிறவர்)என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.

182. தத்சித்த விமலாஹ்லாத க்ஷீணபுண்யசயா ததா
ததப்ராப்தி மஹாதுக்கவிலீநா ஸேஷபாதகா.
சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸ தயாமுக்திம் கதாஅந்யா கோபகந்யகா.

183. அதவாகிம் ததாலாபை: அபராக்ரியதாம் கதா.
அப்யஸௌ மாதரம் த்ரஷ்டும் ஸக்ருத்அபி ஆகமிஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.

ஆசையின் மிகுதியினாலே, ‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:

184. நசாஸ்ய மாதா நபிதா நசாந்ய:
ஸ்நேஹாத் விசிஷ்ட: அஸ்தி மயா ஸமோவா
தாவத்த்யஹம்தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய.-ஸ்ரீராமா. சுந். 36 : 30.

பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே ‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன ‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாது உன்முன்
நாணிலாது இருந்தேன் அல்லேன்; நவையறு குணங்கள் என்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்.’கம்ப. யுத். 1603.

185. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத்விரதம் மம.-ஸ்ரீராமா. யுத்த. 18 : 33.

அருளாத நீர்-‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்

186. ஜீவந்தீம் மாம் யதாராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்
தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசாதர்மம் அவாப்நுஹி.-ஸ்ரீராமா. சுந். 3 : 10

கீர்த்தியை யுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. ‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள்

187. பத்ம ஸௌகந்திகவஹம் ஸிவம் ஸோகவிநாஸநம்
தந்யா லக்ஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம்.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 105,

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத் தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான் மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை இவளுக்கு

நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே-ஆகாயத்தில் உண்டாகிற காற்றாலே. ‘தாழ்ந்த
சாதியின் கால்களிலே’ என்பது தொனிப் பொருள்.

188. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண:-ஸஹஸ்ரநாமம்.

189. பாபாநாம்வா ஸூபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சிந்ந அபராத்யதி.-ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.

நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச்சிகை (பழங்கணக்குகளிலே நிற்கிற நிலுவை.)வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, ‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக் ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவு படுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை

190. ஸகுருஷ்வ மாஹாத்ஸாஹ க்ருபாம் மயி நரர்ஷப
ஆந்ருஸம்ஸ்யம் பரோதர்ம: த்வத்தஏவ மயாஸ்ருத:–ஸ்ரீராமா. சந். 40 : 41.

பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.

191. கிம்கோபமூலம் மநுஜேந்தரபுத்ர கஸ்தேந ஸந்திஷ்டதி வாங்கிநிதேஸே
கஸ்ஸூஷ்க வ்ருக்ஷம்வநம் ஆபதந்தம் தவாக்நிம் ஆஸீததி நிர்விஸங்க:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 33 : 40.

கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்-மநுஜேந்த்ரபுத்ர – அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த  குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டுகொண்டு போந்தார் உங்கள்  தமப்பனார்; அவர் வயிற்றிலே பிறந்து, குற்றம் செய்தோம் என்று தலையறுக்க வந்து நின்றீர் நீர்; அழகிதாயிருந்தது உம்முடைப் போக்கு? கஸ்தேந  ஸந்திஷ்ட திவாஙநிதேஸே – சாஸ்திரவஸ்யமன்றிக்கே கண்டதிலே கடுகச் சாபலத்தைப் பண்ணி மீளமாட்டாத விலங்குளை நீரே ‘இழந்த போகங்களை புஜிப்பது’ என்று சேர்த்துவிட்டு. நீர் சொன்னவற்றைச் செய்தன என்று தலையறுக்க வந்து நின்றீர்; இப்படிச் சொல்லாம்படியன்றே இவர்
பொறையிருப்பது?’ என்பது அச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த  பொருள்.

192. லௌகிகம் வைதிகம் வாபிததா ஆத்யாத்மிகம் ஏவ வா
ஆத்தீத யதோஜ்ஞாநம் தம்பூர்வம் அபிவாதயேத்.

193. ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம்புவி
ததர்ஸராமோ துர்தர்ஸம்யுகாந்தே பாஸ்கரம்யதா.–ஸ்ரீராமா. அயோத். 100 : 1.)

ஜடிலம்-நல்ல மாலை வத்தால் ‘பிள்ளை பரதன் மயிருக்காயிருந்தது’ என்றாயிற்றுச் சக்கரவர்த்தி கூறுவது; அவனாயிற்றுச் சடை புனைந்திருக்கிறான்.
சீரவஸநம்-நல்ல வஸ்திரம் கண்டால் ‘இது பிள்ளைக்கு ஆம்’ என்று கூறுவர்; அவனன்றோ மரவுரி உடுத்திருக்கிறான்’ ப்ராஞ்ஜலிம்-அவர்கள் இரந்து கொடுக்கப் பெறுமவன், தன் விருப்பத்துக்குத் தான் இரப்பாளனாயிருந்தான்.
பதிதம் புவி – ‘படுக்கையுறுத்தும்’ என்று மடியில் கண் வளருமவனாயிற்றுத் தரைக் கிடை கிடக்கிறான்.
ததர்ச ராமோ துர்த் தர்சம்- வத்த கண் வாங்காதே கண்டு கொண்டிருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாதபடி இருக்கிறவனை.
யுகாந்தேபாஸ்கரம் யதா–பெருமாள் ஒருவர்க்கும் கண் வைக்க ஒண்ணாமையே யன்றி ‘உலகமே அழியப் புகுகின்றதோ!’ என்னும்படி யிருந்தான்’

சாதுர்த்திகம் – இது ஒரு முறை ஜூரம்; நான்கு நாள்களுக்கு ஒரு முறை  வருவது; உடலிலுள்ள நீர் இரத்தம் சதை எலும்பு இவற்றைப் பற்றி வருவது.
‘சாதுர்த்திகமாயிராதது போன்று’ என்றது, ஸ்ரீராமபிரானைப் பிரிந்ததால்  உளதாய விரஹதாபமாகிய நோய் விட்டு நீங்குதல் இன்றி, என்றும்
நிலைபெற்று நின்று ஸ்ரீ பரதாழ்வானை வருத்தியதாதலின், உலகமக்கட்கு விட்டுவிட்டு வருகின்ற முறை ஜூரம் முதலிய நோய்களைப் போன்றது
அன்று ஸ்ரீ பரதாழ்வானுடைய நோய் என்றபடி.

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.

வெயர்த்த மேனியன் விழிபொழி மழையன்மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்துழந்து அழிவான்
அயிர்த்து நோக்கினும் தென்றிசை அன்றிவேறு அறியான்
பயத்த துன்பமே உருவுகொண்டு என்னலாம் படியான்.’–
  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஈண்டு நினைவு கூர்க.

194. ஸ்ருஷ்ட: த்வம் வநவாஸாய ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.- ஸ்ரீராமா. அயோத். 40 : 5.

நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளையபெருமாளைப் பார்த்துச் சுமித்திராதேவி கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள். ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய், எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி. ‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் சொரூப லாபம் ஒழிய இறைவனுக்கு இத் தொண்டுகளால் பயன் இல்லை யாதலின், அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக்காட்டுச் சேராதே?’ எனின், அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் சொரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அன்றோ சொரூப சித்தி?

195. அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூவீர்யம் அபாஸ்ருஜத்.

எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.
ஆழி நீர் கடல் தோன்றி- 2‘அப்பரம்பொருள் முதன்முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே, மிக்க தண்ணீரையுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி. அதனுள்ளே கண்வளரும்-இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும்

196. வாஹிவாதயத: காந்தா தாம்ஸ்ப்ருஷ்ட்வா மாமபிஸ்ப்ருஸ
த்வயி மே காத்ரஸ்ம்ஸ்பர்ஸ: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:- ஸ்ரீராமா. யுத். 5 : 9.

சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்; ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு

197. விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.

இது சொல்லி-‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி. இனி, ‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கைகால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச்சரீரமானது முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும் இதனைச் சொல்லி என்று கூறலும்

198. அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந்நயோத்யாம் ப்ரதி கச்சத:ஸ்ரீராமா. யுத். 127, 17.

வளம் வயல் – ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ என்கிறபடியே, திருநகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று. வாய்ந்து

கண்ணனை – இவ்வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே அடியார்க்கு எளியவன் ஆனான். இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் கிருஷ்ணன் என்னவும் ஆம். இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்பியமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

கண்ணன்’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள்,  கண்ணுக்கு விஷயமானான் என்பது; இப்பொருளில், குறிப்பு
வினையாலணையும் பெயர்; இரண்டாவது பொருளில் பெயர்ச்சொல்.

‘வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்துஇமை யாது நின்ற
மாதரார் கண்க ளூடே வாவுமான் தேரிற் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத்தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.’–என்ற கம்பராமாயணச் செய்யுள்

 199. யதிப்ரீதி: மஹாராஜ யதி அநுக்ராஹயதா மயி
ஜஹிமாம் நிர்விஸங்க: த்வம் ப்ரதிஜ்ஞாம் அநுபாலய.-ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.

200. நகலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீஜலே
த்யஜேயம் ராகவம் வம்ஸே பர்த்து: மாபரிஹாஸ்யதி.-ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.

தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியஸூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, ‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? மேலும்,  இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே  பிராட்டி? (நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப்  பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,’ என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.)அப்படியே, இவரும், ‘ஊருணியிலே (ஊருணி-குளம். ‘ஊரிலுள்ள மக்களால் தண்ணீர் உண்ணப்படுவது’ என்பது
பொருள்.)கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய ஸூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்-

201. நஷ்டோமோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயா அச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யேவசநம்தவ.-ஸ்ரீகீதை. 18 : 73.

உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, ‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,

202. க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதஸ்ச பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா:-பாரதம், துரோணபர்வம், 183 : 24.

வல் ஆன் ஆயர் தலைவனாய் – ‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ என்பது போன்று, கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்

203. ஹேஸூந்தர ஏகதரஜந்மநி க்ருஷ்ணபாவே
த்வௌ மாதரௌச பிதரௌச குலேஅபித்வே
ஏகக்ஷணாத் அநுக்ரஹீதவத: பலம்தே
நீளாகுலேந ஸத்ருஸீகில ருக்மணீச.–சுத்தரபாஹூ ஸ்தவம், 7.

வாரீர் அழகரே, உம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும் இரண்டு குலத்தையும் ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற நப்பின்னைப் பிராட்டியும் உருக்குமிணிப் பிராட்டியும்’ என்றார் கூரத்தாழ்வானும். இத்தால் – ‘ஆயர்குலத்தினன் ஆகையாலே நப்பின்னைப்பிராட்டியை ஏற்றாய்; அரசகுலத்தினன் ஆகையாலே உருக்குமிணிப்பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி

வல் ஆன் ஆயர் தலைவனாய்–அவ் வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், 1உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்? எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல். ‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே? ஆதலால், பெண் கோடலே பயன்.

204. துல்யஸீலவயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சஇயம் அஸிதேஷணா.– ஸ்ரீராமா. சுந் 16 : 5.

தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்; கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத்தக்கவள்,’ என்கிறபடியே, ஈண்டும், கிருஷ்ணனும் நப்பின்னைப்பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும், எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்’ எனலும் ஒன்று.    இளஏறு ஏழும் தழுவிய – யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் 4ஊட்டியாக ஒருக்காலே தழுவினான்

205. ஸ: அவதீர்ணோ ஜகர்யத்தே மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி.- ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17 : 12.

நினைந்து நைந்து வணங்கினால் – பிரமன் முதலிய தேவர்கள், திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களைச் சமைத்துக்கொண்டாயிற்று இழிவது. நாம் இவற்றைக்கொண்டு சென்றால் நம்மைக் குளிர நோக்குவனே; ‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று, கம்ஸன் ஏவலால் கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று, ‘நம்மை வினவக்கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்; பின்னர், தரித்திருக்க மாட்டாதே கட்டுக் குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள். உள் கரைந்து உருகி – நையுமது தூலம் என்னும்படி உள்கரைவர்கள்; பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால், இமையோர் பலரும் முனிவரும் – பிரமன் முதலான தேவர்களும், சனகன் முதலான முனிவர்களும், ‘ஆயின், இச்செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக்கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின், இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்ட போது செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே, சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக்குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும். புனைந்த கண்ணிநீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – இப்படி அவர்கள் அன்பே மிக்கு இருப்பவர்கள்

206. ஸதேவ ஸோம்யஇதம் அகர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.

 நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 4‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் – கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’

தான் ஓர் உருவே தனி வித்தாய்-‘சோமபானம் செய்தற்குரிய சுவதே கேதுவே, காணப்படுகிற இவ்வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ என்கிறபடியே 3இங்கும், இரண்டு இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன; ‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின், படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. ‘தான்’ என்கிற இதனால், முதற்காரணம் வேறு இல்லை என்கை. ‘ஓர்’ என்கிற இதனால் துணைக்காரணம் வேறு இல்லை என்கை. ‘தனி’ என்கிற இதனால், நிமித்த காரணம் வேறு இல்லை என்கை

தன்னுளே ஆகியும்-‘இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி. அவன் ஒருவனே’ என்கிறபடியே, தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக்கொண்டு தரித்து இருந்தபடியைச் சொல்லுகிறார்

207. ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட்.- நாராயண அநுவாகம்.

இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 1தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க. இனி, தன்னின் மூவர் முதலாய-பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம். 2இந்திரனோடு கூட’ என்று புகலும் உபநிடதமும்.

முன்னுரு வாயினை நின்திரு நாபியின் முளரியின் வாழ்முனிவன்
தன்னுரு வாகி இருந்து படைத்தனை பலசக தண்டமுநீ
நின்னுரு வாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
என்னுரு வாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’–  என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கிக் கூறிய கூற்று ஈண்டு
நினைக்கத் தகும். வில்லி பா. 13-ஆம் போர். 220.

208. தயா அவலோகிதா தேவா விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தயா
லக்ஷ்ம்யா மைத்ரேய ஸஹஸா பராம் நிர்விடுதிமாகதா:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.

மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே

209. நதேரூபம் நச ஆகாரோ ந ஆயுதாநி நசாஸ்பதம்
ததரபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.-ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.

வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்

210. ததஸ்ய ப்ரியம் அபிபாதோ அஸ்யாம் நரோயத்ர தேவயவ: மதந்தி
உருக்ரமஸ்ய ஸஹிபந்து: இத்தா விஷ்ணோ: பதேபரமே மத்வ உத்ஸ:-விஷ்ணு சூக்தம்.

உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 2‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே, தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க.

211. க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம்தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவா-(என்று பிரம ருத்திரர்களுக்கு உத்பாதகனான பிரத்யும்நனைச் சொல்லுகிறார்.)‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்

212. ஸ்துத: அஹம் யஸ்ந்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்யதே
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத்தவ உதரரத்.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 8 : 14.

213. ப்ராதுர்ப்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா
ந ஏஷ கர்ப்பத்வம் ஆபேதே ந யோந்யாம் அவஸத் ப்ரபு:பாரதம்.

முன்னமே உலகு ஏழ் உண்டாய்-முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய். உமிழ்ந்து-பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து. மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் – இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய். ஈண்டு ‘மாயை’ என்றது, 2மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை. அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால், சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி – சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப் பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு உண்டாக்கிக்கொண்டு வந்து இப்படிச் செய்தாய். ‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுதுசெய்தான் என்றபடி. ‘தேவகியே நீ முற்பிறவியிற்செய்த நல்வினையானது இப்பொழுது பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ என்பதனால் கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், ‘இந்தக் கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோநியிலும் வசிக்க இல்லை,

214. தஸ்யா: ஸ்தநம் பபௌ க்ருஷண: ப்ராணை: ஸஹநநாதச
ஸ்தந்யம் தத் விஷ ஸம்மிஸ்ரம் ஆஸீத் ஜகத் குரோ:ஹரி வம்ஸம். 53.

தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த உலக குருவான கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவையுடையதாயிற்று,’ என்கிறபடியே, உலகத்துக்கு வேர்ப்பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையை யுடையளாய், யசோதைப் பிராட்டியைப் போன்று அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு வருகின்றவளாய், தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனையுடையவளான பூதனை முடியும்படியாக  தூய குழவியாய்-ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடாநிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தையுடையனாய். ‘இவனுக்குப் பிள்ளைத்தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில், விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலேயாயிற்றுப் பிறந்தது. ‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை மாயன் – விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.

அவள் பால் உயிர் – அவளுடைய தாழ்ந்த சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர். பால்-ஏழனுருபு. செக-முடியும்படி. இனி, ‘அவள் பால் உயிர் செக’ என்பதற்கு, ‘அவள் பாலும் உயிரும் முடியும்படி என்று கோடலும் ஆம். ‘முலையூடு உயிரை, வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே,’ என்றார் திருமங்கை மன்னனும். ‘முலை உண்டான்’ என்றால் ‘முலைப்பால் உண்டான்’ என்று பொருள் படுமாறு போன்று, ‘முலையூடு’ என்ற இடத்தும் ‘முலை’ என்றது முலைப்பாலை. உண்ட பெருமான் – ‘முலையின் வழியே வருகின்ற விஷம் கலந்த பாலைக் குடித்து, அவளை முடித்து, உலகிற்கு எல்லாம் குருவாகிய தன்னைத் தந்தவன்’ என்கிறபடியே, அவள் முலை உண்டு அவளை முடித்து, உலகிற்கு ஒரு சேஷியைத் தந்தவன்.

215. திலதைலவத் தாருவஹ்நிவத் துர் விவேச த்ருகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந
ப்ரக்ருதிவ்யாப்திரூப துரத்யய பகவந் மாயா திரோஹித ஸ்வப்ரகாஸ:–ஸ்ரீ ரங்க கத்யம்.

சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து – ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,

216. த்வதங்க்ரி முத்திஸ்ய கதாபி கேநசித் யதா ததாவாபி ஸக்ருத்க்ருத: அஞ்ஜலி:
ததைவ முஷ்ணாத்யஸூபாந்யஸேஷத: ஸூபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே.-ஸ்தோத்திர ரத்தினம்

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடி விடுகின்றன; மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம். இங்கு, ‘உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும் இறைவனுக்கு உண்டான வேற்றுமையும், இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச்செய்தாராவார். மேலும், ‘ஒரு காலத்தில்’ என்றதனால், இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும், ‘அஞ்சலி’ என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும், ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அழியாமலிருக்கின்றது’ என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச்செய்திருத்தல் நோக்கல் தகும். மற்றும், ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், 1சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே, பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்.

217. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்ய ப்ரயச்சதி
ததஹம் பத்தியுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந:.- ஸ்ரீகீதை.

பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

218. அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஹ்நாத் நசஇச்சதி ஜநார்த்தந:பாரதம்.

பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

219. யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்தகத புத்திபி:
தா: ஸர்வா: ஸிரஸா தேவ: ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 

ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்; அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று. இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும், தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக்கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம். இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக்கிடப்பு உண்டாயினும் 5மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

220. ஏதத் ஸாமகாயந் ஆஸ்தே.–தைத்திரீ. பிரு. 10.

பாடி – சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கையின்றி, மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி. விரிவது மேவல் உறுவீர். ‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே, பாடி

221. ந கண்டகாரிகா புஷபம் தேவாய விநிவேதயேத்.

புகை பூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகை(கூளம்; பதர்.)யிட்டுப் புகைக்க அமையும்; கண்டகாலி இடவும் அமையும்,’ என்று அருளிச்செய்வர்.

222. ஸாஸ்த்ர யோநித்வாத். உத்தர மீமாம்சை, 1. 1 : 3.

வேத முதல்வன் என்பது, ‘வேதவாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே, வேதங்களால் சொல்லப்பட்டவன் என்கை

223. தேவாநாம் மாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி ஸரணம்தவ.-ஜிதந்தா. 1 : 2.

 ஈடும் எடுப்பும் இல் ஈசன்–சிலரை வெறுத்தல், சிலரை ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன். இறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே? 4‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே, ஏற்றுக் கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன் என்கிறார் =

224. ஸகலுஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகமபி
ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.-சாந்தோக். உபநிட. 8 : 15.

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். –அழிவு இன்றி ஆக்கம் தரும் – ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.

225. ஏஷஹிஏவ ஆநந்தயாதி.-ஆனந்தவல்லி, 7.

மேல் திருவாய்மொழியில் ‘எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவன் இறைவன்,’ என்றார்; ‘அவ்வாராதனையானது இன்ப மயமாய் இருக்கும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 1திருமகள் கேள்வனாய், எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய், எல்லா ஆத்துமாக்களுக்கும் சேஷியாய், எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் ‘மேற்கூறிய இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ என்கிறபடியே, தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின், அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.

226. அஸ்ரத்ததாநா: புருஷா: தர்மஸ்ய அஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்ஸாரவர்த்மநி.-ஸ்ரீ கீதை. 9 : 3.

இறைவனுடைய ஆராதனையானது அவனாலும் விரும்பப் படும்  தகையது என்பதற்குக் காட்டப்படும் மேற்கோள்கள்.‘பகைவர்களை அழிக்கின்ற அருச்சுனா, வழிபட்டு வணங்குதலாகிய இந்தத் தர்மத்தில் அன்புடன் கூடின முயற்சி இல்லாதவர்கள் செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற் செலுத்துகின்ற என்னை யடையாது, அழிவினை உண்டு பண்ணுகிற சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,

227. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.ஸ்ரீகீதை, 9-2.

இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது; இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது; நேராக என்னைக் காட்ட வல்லது; மோட்சத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது; என்றும் அழிவற்றது,’ என்றும் பகவான் தானும் அருளிச்செய்தான். ஆக, இப்படி வழிபடுதலே தொடங்கி, மோட்சத்தை அடைதல் ஈறாக, அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்பமயமாகவே இருக்கவும், அவனை விட்டு மிகச்சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று கேவலரை நிந்தித்துக்கொண்டு,(இத்திருவாய்மொழியில் முதல்  திருப்பாசுரத்தை நோக்கி.) இதனை ஒழியில் தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே இவ்வழிபாட்டின் இனிமையைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.என்னுள், இரான் எனில் பின்னை யான் ஓட்டுவேனோ?’ என்றதனை
நோக்கித் ‘தாமுளராகாதபடி’ என்கிறார்

228. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிந: அர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப.ஸ்ரீ கீதை, 7 : 16

அருச்சுனா, நீங்கின செல்வத்தை மீண்டும் அடைய விரும்புகின்றவன், புதிய செல்வத்தை விரும்புகின்றவன், கேவலன், இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் என்னும் இந் நால் வகைப்பட்ட நல் வினைகளை யுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்’ என்பது இறைவன் திருவாக்கு.(நல்வினைகளையுடைய மக்கள்’  என்றதனால், நல்வினையின் தாரதம்மியம் சித்தம் என்று கொள்க, )ஆக, அவரவர்களுடைய நல்வினைகளுக்குத் தகுதியாகப் புருஷார்த்தங்களில் ருசி உண்டாகும்; ருசிக்குத் தகுதியாக வழிபாடு உண்டாகும்; வழிபாட்டிற்குத் தகுதியாகப் பலம் இருக்கும் என்று அறிதல் தகும்.

229. ய ஆத்மதா பலதா.வேத மொழி

வைப்பாம் – ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் – ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தியோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின்(உண்டறுத்தல்ஜீர்ணமாக்கிக்கோடல்.)‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர். 4‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத் தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி. ‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில், அடியரை-5‘வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு, இனி, இதற்கு, ‘அவனைப்பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன்தன்னையே பற்றி அவன் 7படிவிடப் பிழைக்கின் அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம்

230. தம்த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 68.

ஒண் சுடர்க்கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இராநின்றான்’ என்கிறார். இனி, இதனால், தம்மை வசீகரித்த அழகை அருளிச்செய்கின்றார் என்று கூறலுமாம். ‘வலிமை பெற்ற ஒளியின் தொகுதி போன்றவன்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம். ‘இப்படித் தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரங்கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு இல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை-

231. அத்யமே மரணம் வாபி தரணம் ஸாகரஸ்யவா.–ஸ்ரீராமா. யுத். 21 : 8.

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் – நான் இசைந்து ‘என்னுடைய மனத்தில் இருத்துவேன்’ என்றிலேன். ‘இசைவு என்னால் வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னால் வந்ததாவது?’ என்றபடி. தான் ஒட்டி வந்து ‘இக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார். என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து – தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப் போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

232. யத்ர ருஷய: ப்ரதமாஜா யே புராணா:யஜூர் வேதம்.

முன்னை அமரர் முழு முதலான்– ‘ஞானவான்களும் முன்னர்த் தோன்றியவர்களும் ஆதிமுதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியராய்த் தோன்றுகிறவர்களுமான நித்தியசூரிகள் எங்கு உள்ளார்களோ, அந்தப் பரமபதத்தில்’ என்கிறபடியே, பழையராய் இருந்துள்ள நித்தியசூரிகளுடைய சொரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்

233. ராமேண ஹி ப்ரதிஜ்ஞாதம் ஹர்யர்க்ஷ கண ஸந்நிதௌ
உத்ஸாதநம் அமித்ராணாம் ஸீதா யை: பரிவஞ்சிதா.ஸ்ரீராமா. சுந். 5. 11 : 32.

முதுமை நிறைந்த வானரங்களின் கூட்டத்தில் சூளுறவு செய்தான்’ என்கிறபடியே, நித்திய சூரிகள் முன்னிலையில் சூளுறவு செய்தான்

234. ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷணோவா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்.ஸ்ரீராமா. யுத். 18 : 34.

235. ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலாபலம்.ஸ்ரீராமா. யுத். 19 : 6.

அகலில் அகலும்-விபீஷணனே ஆயினும், அன்றி, இராவணன் தானே ஆயினும், இவனை அழைத்துக்கொண்டுவா,’ என்கிற ஆசை உள்ளே கிடக்கவும் கண்ண நீரோடே கைவாங்கும். அதாவது, ‘நான் இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்பொழுதும் வணங்க மாட்டேன்,’ என்னும் உறுதியோடே நிற்கில் முடித்துவிடுவான் என்பதாம். அணுகில் அணுகும் – தன் பக்கலில் எதிர் முகம் ஆனால், ‘இராக்கதர்களுடைய பலாபலத்தை உள்ளவாறு எனக்குச் சொல்லுவாய்,’ என்பான். அதாவது, இளையபெருமாள் நிற்க, நால் அடி வர நின்றவனான விபிஷணனை அன்றோ

236. யத்ர க்ருஷ்ணௌ ச க்ருஷ்ணாச ஸத்யபாமாச பாமிநீ
நச அபிமந்யு: நயமௌ தம் தேஸம் அபிஜக்மது:பாரதம், உத்தியோகபர். 49.

பொரு அல்லன் – அடியார்கள் தன்னைக் கிட்டுமிடத்தில் தடையுடையன் அல்லன். பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர்நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடையையுடையன் அல்லன் என்றபடி. 1‘கிருஷ்ணனும் அருச்சுனனும் திரௌபதியும் அழகுள்ள சத்தியபாமையும் எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்’ புத்திரர்களும் புக ஒண்ணாத சமயத்திலே அன்றே சஞ்சயனை அழைத்துக் காட்சி அளித்தது?

237. வஸீ வதாந்ய: குணவாந் ருஜூ: ஸூசி: ம்ருது: தயாளு: மதுர: ஸ்திர: ஸம:—ஸ்ரீ ஸ்தோத்திர ரத்தினம், 18.

மேல் திருவாய்மொழியில் ‘இறைவன் எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; 1அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.(ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,  ‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி ‘ஆர்ஜவ  குணத்தைச் சொல்லுகிறார்இத்திருவாய்மொழியில்’ என்கிறார். )‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்தார்; இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின், சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன் திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு தான் 2பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. ‘சௌசீல்யம், ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப்படினும், வேறு வேறு என்பதே நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். ஸ்ரீ ஆளவந்தார் 3‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச்செய்து, பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச்செய்தார்.

238. உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க ஸோபிநா.–ஸ்ரீ ஸ்தோத்திர ரத்நம், 41.

மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன்மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு. ‘ஆயின், பெரிய திருவடியின்மேல் எழுந்தருளல் அங்கு உள்ளார்க்குக் காட்சி கொடுத்தற்காக அன்றோ?’ எனின், பெரிய திருவடியை மேற்கொள்ளுமதுதான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய சொரூப லாபத்துக்காகவும் இருக்கும். மற்றும், காமத்தில் இச்சையுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். ‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

239. ஸ்ரக் வஸ்த்ராபரணை: யுக்தம் ஸ்வாநு ரூபை: அநுபமை:
சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை:- பௌஷ்கர சம்ஹிதை

 சூடும் தண் துழாய் – திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும் அளவில் அப்போதே பறித்துத் திருக்குழலிலே வைப்பன். ‘ஆயின், துழாய்க்கு அறிவு உண்டோ?’ எனின், 3‘மலர்மாலைகள், பீதாம்பரம், ஆபரணங்கள் முதலானவைகள் திருமாலினுடைய திருமேனிக்குத் தக்கவைகளாகவும், ஒப்பு அற்றவைகளாகவும் ஞானத்தோடு கூடினவைகளாகவும், வேறு ஒன்றன் துணையின்றித் தாமே பிரகாசிக்கின்றவைகளாகவும் இருக்கின்றன,’ என்னும் பௌஷ்கர சம்ஹிதை இங்கு அறிதல் தகும். ‘ஆயின், நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘

அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்கவேண்டாவோ?’ எனின், 4அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள அறிவுத்தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாகவுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’ எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின், கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில் திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.

240. சக்ஷ்ர்தேவாநாமுத மர்த்யாநாம்.– யஜூர் வேதம். 4. 6 : 8.

 கண்ணாவான் – ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற கருதி அர்த்தத்தை அருளிச்செய்கிறார். கண்ணாமவன் என்றபடி. இனி, இதற்குக் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம். மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் – இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.

தண்ணார் வேங்கடம் – இறைவனுக்குக் காத்தற்கு உரிய பொருள்கள் கிடையாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி, இவ்வுயிர்கட்குப் பாதுகாப்பவனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி இரு திறத்தார்க்கும் குளிர்ச்சியை உண்டாக்க வல்லது ஆதலின், ‘தண்ணார் வேங்கடம்’ என்கிறார். ‘குளிர் அருவி வேங்கடம்’ என்பர் ஸ்ரீ ஆண்டாள். விண்ணோர் வெற்பன்-‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார்.

241. நது மாம் ஸக்ஷ்யஸே த்ருஷ்டும் அநேகஏவ ஸ்வசக்ஷூஷா
திவ்யம் ததாமி தேசக்ஷூ: பஸ்ய மே யோகம் ஐஸ்வரம்.- ஸ்ரீ கீதை. 11 : 8.

அருச்சுனன், ‘விபூதி சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக 3உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப் (பத்தி ரூபாபந்ந ஞானத்தை விளங்கச் செய்து.)பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர்(மூன்றாம் பாசுரத்தின் ‘ஒரு கதியின் சுவை தந்திட்டு’)ஒருவரோடு பரிமாறுகிறானாய், அதுதன்னையும் குளப்படியிலே (மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)கடலை மடுத்தாற்போன்று அன்றி, பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,(என்னுடைச்  சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்-  ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.) இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, (என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா  இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை  நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார்.

242. யஸ்ய ப்ரஸாத ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸ ராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே.-ஸ்ரீ ராமா. கிஷ், 4 : 21.

243. ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி.–ஸ்ரீ ராமா. கிஷ். 4 : 18.

பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான். ‘எந்த இராமனுடைய திருவருளால் இம்மக்கள் எப்பொழுதும் தெளிந்த மனத்தையுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட இராமன் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்துடன் விரும்புகிறான்,’ என்றும், ‘தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதனாய் இருக்கும் ஸ்ரீராமர், சுக்கிரீவனை நாதனாக விரும்புகிறார்’ என்றும், கூறப்படுகின்றவாறே, ‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார், ‘என்னுடைச்சூழலுளானே’ என்கிறார்.

244. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
ராக்ஷஸோப்யேதி: பஸயத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஸய:–ஸ்ரீராமா. யுத். 17 : 5.

ஒக்கலை வைத்து – பரிவுடைய யசோதைப்பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப்பால் உண் என்று தந்திட – ‘முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; ‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார். இனி, தருகை, கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்றார் எனலுமாம். வாங்கி – அவள் முலை கொடாவிடில் தரியாதாளாய்க் கொடுத்தாற்போன்று, இவனும் முலை உண்ணாவிடில் தரியாதானாய் உண்டான் ஆதலின், ‘வாங்கி’ என்கிறார்.

245. யோ வாசி திஷ்டன் வாச: அந்தர: யம் வாக் நவேத யஸ்ய வாக் சரீரம்.

என்னுடை நாவினுளான் – என்னுடைய துதிக்கு விஷயமானான். இனி இதற்கு ‘வாக்கில் இருந்துகொண்டு வாக்கின் உள் இருக்கிறான்,’ என்கிற படியே, ‘வாக்கு இந்திரியத்துக்கு அந்தர்யாமியாய் உள்ளவன்’ என்று கூறலும் ஒன்று.

246. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ அஹமந்நாத:.தைத்திரீய உபநிடதம், பிரு. 10.

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது  அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு  அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’ என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை–  திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து  நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்  பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்  செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்  செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்  அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்  ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்   பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)   ‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது  கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி  அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்  திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்  புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்  படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’  (இரண்டாந்திருவந். 71.)

247. வத்யதா மேஷ தண்டேந தீவ்ரேண ஸ்சிவைஸ்ஸஹ
ராவணஸ்ய ந்ருஸம்ஸஸ்ய ப்ராதா ஹிஏஷ விபீஷண:-ஸ்ரீராமா. யுத். 17 : 27.

248. பரதஸ்ய வதே தோஷம் ந அஹம் பஸ்யாமி ராகவ
பூர்வாபகாரிணாம் த்யாகோ நஹி அதர்மோ விதீயதே.ஸ்ரீராமா. அயோத். 96 : 24.

249. அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீநி ஆயுதாநி தம்
ரக்ஷந்தி ஸகலாபதப்ய: யேநவிஷ்ணு: உபாஸித:.–விஷ்ணு தர்மம், அத் : 78.

அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. ‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? ‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், ‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே, சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.திருவாழியாழ்வானும், இஷீகாஸ்திரமும், தூர்வாசரையும் காகத்தையும்  மெள்ளமெள்ளப் பின் தொடர்ந்தமை இங்கு நினைவு கூர்க. அவ்வாறு  தொடர்ந்தமையாலன்றோ அவர்கட்குச் சரணாகதிக்கு அவகாசம் கிடைத்தது.-நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார்

250. ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்தும் அர்ஹதி.-ஸ்ரீராமா. யுத். 19 : 31.

இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க, 1அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை; ‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள் இக்ஷவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா, அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்’, என்று அருளிச்செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

251. தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவயோநிஷூ-ஸ்ரீ கீதை, 16 : 19.

எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – தம்மளவிலேயாய் அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மைகளை யுடையவர்களையும், தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’ என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை கொம்பு போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே யுடையவனை என்கிறா

252. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நசாஸூஸ்ரூஷவே வாச்யம் நசமாம் ய: அப்யஸூயதி.–ஸ்ரீ கீதை, 18 : 67.

நெஞ்சமே சொன்னேன் – ‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு ‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று ‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –