கச்சதா மாதுல குலம் பரதேந தத அநக
சத்ருக்நோ நித்ய அயோத்யாநீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத –21-1-
இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –
ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –
அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே
இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்
பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-
பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்
திருவாய் மொழி-3-9- ஈடு பிரவேசம்–கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.
‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.
எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?
அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.
———-
ஸஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
அர்த்திதோ மாநுஷ லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந –-1-7-
பாரின் மேலாய் –திரு நெடும் தாண்டகம் -9-
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –
(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –
ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –
உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –
அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –
மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது
ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –
விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது
சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது
இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –
(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே-பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )
நாட்டிற் பிறந்து படாதன பட்டு –திருவாய் மொழி -7-5-2-
‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7
5ஸ:-ஜஞே ஹி – ‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி. ‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,
‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. 1இரப்புதான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? 2‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?
‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.
தேவை:- 3தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக்காட்டினவாறே எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர், ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’ திருவிருத். 92.என்பார்கள். என்றது, ‘இலங்கையை சுட்டுத் தரவேணும்,’ என்பர்கள் என்றபடி. உதீர்ணஸ்ய ராவணஸ்ய – 4அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வரபலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு. வத அர்த்திபி:-5தாங்கள் பட்டி நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள். 6‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச்செய்தானைத்தனை. அர்த்தித:- 1தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற்பட்டக் கிடந்து இதுவே.அர்த்தித:– 2உபாசித்தவர் அல்லர்.
மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;- 3‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்; அவர்கள் மனிதத் தானத்திலேயாம்படியான பொருள்கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார். மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.- ஜஜ்ஞே– 4தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம். ‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.
5‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.
————
குணைர் தசரத உபம –1-9-குணங்களில் தசரதருக்கு ஒப்பாவான்
கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர்–நாச்சியார்-9-3-நஞ்சீயர் ஸூந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –
குணைர் தசரத உபம -அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு –
பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து –
அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று
அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி
சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்
பெரிய திருமொழி -10-4-1—பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
(ஸுசீல்யம் சொல்ல வந்ததை அறியாமல் இருந்தானே
ஆத்மாநாம் மானுஷ்ய மன்யம் என்னுமவன் அன்றோ )
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை சில சொன்ன அத்தனை –
சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே –
(பகவத் விஷயத்தில் அதி வாதம் பண்ணுபவனே சிறப்பானவன் )
அபியாதா ப்ரஹர்த்தாச ஸேநாநய விசாரத –1-29
யுத்தத்தில் தானாக எதிர்த்துச் செல்பவன் -எதிரிகளைக் கொல்லுபவன் -ஸேனையை நடத்துவதில் ஸமர்த்தன்
காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.-5-4-3-
தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.
“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.
——–
த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந் நாதவ்த் தரம் –2-13-
மூன்று உலகும் எந்த ராமன் நாதனாக இருந்தால் மிகவும் நாதனை யுடையதாக இருக்குமோ
அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை–8-4-10-
அமர்ந்த நாதனை –
உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை
எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி
மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்
பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –—————
பஹவோ நிருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –2-26-
அரசனே உங்கள் பிள்ளை ராமனுக்கு அநேக கல்யாண குணங்கள் உள்ளன-
திருவாய் -7-6- ஈடு பிரவேசம்–பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி, ‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, ‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி, ‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, 3‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது
‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.
நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து, ‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து, ‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால், ‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்: அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய, படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,
1‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,
‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.
எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது, 2‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி. 3‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,
‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு
போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது, ‘இவ்வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.
திருவாய் -9-6- ஈடு பிரவேசம்-
குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ
பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின
இராச்சியத்தை
இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ
என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித
ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி
பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக
பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –
இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்
அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –
ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது
தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்
உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை
உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் கான் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்
ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்
சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –
———-
ப்ரிய வாதீ ச பூதா நாம் ஸத்ய வாதீ ச ராகவா -2-33-
ராமன் பிராணிகளுக்கு பிரியமானதை பேசுவான் -உண்மையானதை பேசுவான்
திருவாய் -7-1-ப்ரியவாதீ ச –பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை -செவிப்பதில் இனியதாய் அன்றி இராது
யாருக்குத் தான் என்னில்
பூதா நாம் -சத்தா யோகி ஸகல பதார்த்தங்களுக்கும் -அஸத் வ்யாவ்ருத்தி மாத்ரமே வேண்டுவது –
அப்போது பிரியமாய் விபாகத்தில் வேறு ஒன்றைப் பலிக்குமோ என்னில்
ஸத்ய வாதீ ச -அருளிச் செய்யுமது தான் பூத ஹிதமாய் அன்றி இராது என்கிறது
ஒரு யுக்தியே இரண்டுமாகா நின்றாள் அல்லாததுக்குச் சொல்ல வேண்டா விறே
————
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவம் துக்கித –2-41-
மனிதர்களின் வ்யாசனங்களால் மிகவும் துக்கித்தவனாக ராமன் ஆகிறான்
வண் தீங்கவி செய்குந்தன் தன்னை எந் நாள்சிந்தித்து ஆர்வனோ?-7-9-7-வண் தீம் கவி செய் குந்தன் – வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது, 3‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று. 5சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ? ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம் வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால், மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி – துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று,
‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.
இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு; இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது. 1‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க.
இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ?
‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’-என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.
————–
சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச புண்ய புஷ்பித காநந –3-4-
திருப்பாவை -1-சைத்த்ரச் ச்ரீமா நயம் மாஹ -என்று-
ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-சைதர–
அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-
ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது
அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-
புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்
பாவனமாயும்
போக்யமுமாயும் இருக்கை-
புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –
———-
ரூப ஒவ்தார்ய குணைர் பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் –3-28-
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.-5-3-6-
“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ –
———–
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -6-1-என்றபடி.
ஆராஅமுதே – 5-8-1-1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.
———
ஜ்ஞாதி தாஸீ யதோ ஜாதா –7-1
இதனால், ‘நிலமிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை. ‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியத்’ என்கிறபடியே அன்றோ? 1கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?
நற்பால் அயோத்தியில் – 7-5-1-நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.
‘பவித்ரம் பரமம்
புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.
‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.
‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1
‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.2‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?
——
அஹம் புநர் தேவ குமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யன் அபி தர்சநேந பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ -12-106-
இவருக்கும் அவ்வல்லவியோ என்று சிறியாத்தான் கேட்க -தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி ரிஷி கரி பூசுகிறான் என்றார் –
அலங்க்ருதம் -அத்தாலும் வெறும் புறம் கிடீர் ஒரு போலி சொல்லலாவது -ஒப்பித்தால் ஒக்கச் சொல்வார் இல்லை
தம் ஸூதம் -இவனுக்கு இரண்டு படியும் உத்தேச்யமாய் இருக்கிற படி
ஆவ்ரஜந்தம்–புஷ்பம் அலரும் போது எங்கும் ஓக்க பிறக்கும் விகாஸம் போலே -அதுவும் வண்டை நோக்கி இறே–ஐவரும் போக்தாக்களைக் குறித்து இறே
நந்தாமி பஸ்யன் அபி –கண்டபடியே இருக்கச் செய்தே காணாது கண்டது போலே யாயிற்று நாள் தோறும் நாள் தோறும் க்ஷணம் தோறும் க்ஷணம் தோறும் உகக்கும் படி –
தர்சநேந –அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா -காட்சியே அமையும் -கரை புரண்டு அனுபவம் உள்ள இடத்திலே போலே காணும் பிரயோஜனம்-ஸதா பஸ்யந்தி இறே
பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ –அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் வயசைப் புக்கு வ்ருத்தனான சக்ரவர்த்தி பெருமாளைக் கண்ட பின்பு பெருமாளுக்கும் தனக்கும் வாஸி தெரியாதபடி யானான்
காளையைப் பயந்த காளை என்னுமா போலே -தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலவே ஆக்கி உஜ்ஜீவிப்புக்கும் விஷயம் போலே காணும்
யுவேவ வஸூதேவ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் -என்னும்படி யானாரே இறே வஸூ தேவரும்
தத்ர காஷாயிணோ வ்ருத்தான் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதான்
ததர்ச விஷ்டிதான் த்வாரி ஸ்த்ரயத்யஷான் ஸூ ஸமாஹிதான் –16-3-
சூடுமலர் குழலீர்” -5-9-3-அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ. “தத்ர காஷாயிந:– அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது.
ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார்
‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.
“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் ஸ்வலங்க்ருதாந்
ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”என்பது, ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
“ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.
“விருத்தாந் – முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும். “ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.
————–
பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷிணா
ஆத் வாரம் அநுவவ்ராஜ மங்கலான் யபிதத்யுஷீ —16-2-
புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே -திரு விருத்தம் –24–
பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–
பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,
தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு
திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,
நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..
(சூடிக்களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப்போந்தான் என்றபடி )
அஸி தேஷணா –
இவர் தோளில் மாலை இட்டதுக்கு
இவள் கண்ணாலே மாலை இட்ட படி-
(அரும்பூதம்
பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ
வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ எண்ணில்
ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்
இனி உசிதம் என் என்னில்
தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று
அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர் )
—-
தீஷிதம் விரத ஸம் பந்நம் வராஜி நதரம் சுஸிம்
குரங்கச் ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீ த்வா பஜாம் யஹம் –16-28-
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே-14-2-
முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும்
போர்த்த உறுப்புத் தோலும்
யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி
வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே –
அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்
வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே
வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்
ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இறே -என்றால்
அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்
தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூசிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச
பஸ்யந்தீ த்வாம் பஜாம்யஹம் -அயோத்யா -16-23-
(மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )
இதற்கு எதிர் தட்டு இறே –
கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே–திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –
பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.
தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும் காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக
இன்பத்துக்காகத் துதிக்கிறாள் காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?-நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?
———
யச்ச ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே —17-14-
வாடினேன் வாடி வருந்தினேன்-1-1-1-
யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்
யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-
ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்
எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்
எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை
விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –
திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே
வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது
வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )
————–
ந நூநம் மயி கைகேயி கிஞ்சிதாசம்ஸஸே குணம்
யத் ராஜாநம் அவோசஸ் த்வம் மமேஸ்வரதரா ஸதீ -19-24-
சிற்றவை பணியால் முடி துறந்தானை-2-3-1-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை
ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல
அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-
——
ராஜ்யஞ்ச தவ ரஷேயம் அஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜாநாமி தே வீர மா பூவம் வீர லோக பாக் —-23-28-
ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்-அவதாரிகை
ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –
————-
ஈர்ஷ்யா ரோஷவ் பஹீஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம்
நய மாம் வீர விஸ் ரப்த பாபம் மயி நவித்யதே -27-8-
எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-பெரிய திருவந்தாதி–9-
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –
ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்
உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ
ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )
நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்
வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு
விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்
பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு
அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன
சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –
(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)
ஈடு பிரவேசம் -6-2-
வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.
3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.
“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.
2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.
3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.
———————
கிந்த் வாமந்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜா மாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –30-3-
அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2–பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே
நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே –
திருவாய் ஈடு ப்ரவேஸம்-
இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.
“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு
– பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன்
விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம்
என்க. தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம்
ஆதலாலும், ‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’ மேலிட்டு
வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க. மேலிட்டு வார்த்தை
சொல்லுகையாவது, வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை
சொல்லுதல்.
என் சொன்னாள்? என்னில், 2‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.
3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.
“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.
2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.
3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்-
————
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ –30-18-
நலம்என நினைமின் நரகுஅழுந் தாதே;
நிலம்முனம் இடந்தான் நீடுஉறை கோயில்–2-10-7-காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.
‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?
———
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே நத்வ யாவிநா -31-5-
ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-பெரிய திருவந்தாதி -79-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )
அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –
ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே
ஈடு மஹா ப்ரவேஸம் -வானவர் நாடு என்கிற பரமபதம் -ஆத்ம லாபம் -லோகா நாம் ஐஸ்வர்யம் இவை அனைத்தும் மக்குப் புறம்பாய் வருமன்று வேண்டேன்-
குருஷ்வ மாம் அநு சரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே –31-24-
திருவாய் -2-9-ப்ரவேஸம்-ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று-
————
ஸ்ருஷ்டஸ்த்வம் வந வாஸாய ஸ்வநுரக்தஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –
திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10—ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.
வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –3-9-9- 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.
‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.
————
ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –40-9-
நான்முகன் -47–ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –
———
யேது ராமஸ்ய ஸூஹ்ருத ஸர்வே தே மூட சேதஸ
சோக பாரேண சாக்ராந்தா சயனம் நஜ ஹுஸ் ததா
நாச்சியார் திருமொழி -3-1-யேது -சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் -ஸ்ரீ கௌசல்யார் மங்களா ஸாஸனம் பண்ணி விட்டார் -அவ்வளவு அன்றிக்கே பத்தன்பதாம் பாஷையாயத்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூஹ்ருத -தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உடப்புக்கவர்கள் இறே தோழன்மார் ஆகிறார் -தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மை எண்ணிப் போந்தவர்கள் படு குலைப்பட்டார்கள் என்கிறது
ஸர்வே தே -ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதஸ–ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்திருந்து காலைக்கட்டி மீளாது ஒழிவான் என் எனில் -அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா -மலை அமுக்கினால் போல் சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என்
சயனம் நஜ ஹுஸ் ததா -படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்களாகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ -தந்தாமே படுக்கையில் கிடந்து போந்தவர்கள் இறே
———-
புத்ர த்வய விஹீ நம் தத் ஸ்நுக்ஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ர மிவாம்பரம் –42-30-
ஈடு -6-7- ப்ரவேஸம்-க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள்.-
புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.
———
ராமம் மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ –42-34-
என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17-
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன
இணை –
களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு
உபமானம் இல்லை-
முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்
இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –
இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து
சேதன சமாதியாலே தானே களியா நின்றன –
ராமம் மே அநுகதா த்ருஷ்டி –
கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே
அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே
விஷய ஸ்வபாவம் இருப்பது –
உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்--நாச்சியார்-10-7-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இறே
ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
சாது மா பாணி நா ச்ப்ருச—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு
நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று
ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும்
நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —
சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —என்னக் கடவது இறே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –
பவள வண்ணா எங்குற்றாய் –திருநெடும் தாண்டகம்–17
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –
(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )
ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –
மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்
மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்
(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)
அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –
நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்
நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –
கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே
சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்
அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்
கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –
என்று தடவும் என் கைகள்–திருவாய் மொழி-3-8-3-கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டுமலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.
‘ராமம் மேநுகதா த்ருஷ்டி: அத்யாபி நநிவர்ததே
ந த்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’
‘என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்
திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’
என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது
முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.
பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’
என்றது கண்களை.
————–
கதம் தாசரதவ் பூமவ் சயாநே ஸஹ ஸீதயா
சக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸூகாநி வா -51-9-
திருவிருத்தம் -30–நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம் –என்று பெருமாள்
ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில்
ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு
ஸ்ரீ குகப் பெருமாள் —
இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —
கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று
அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவை கொண்டு ,
தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?
சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்-
படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே
சக்யா நித்ரா மயா லப்தும் —
என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –
ஈடு -5-9-4—
பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீகுகப்பெருமாள் இளையபெருமாளைப் பார்த்து, ‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்; நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்; ‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன, ‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’
இளையபெருமாள் காத்த பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பெருமாளும்’ என்று
தொடங்கி.
“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா
ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 9. குகப்பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது.
வாரீர், மஹாராஜனானசக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக்கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய் அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்-
————
ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதவ் –53-31-
நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்—பெரிய திருமொழி-4-9-1-
ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண காலம்
ஜலான் மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே
அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )
ஈடு ப்ரவேஸம்
உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால் -ஜலாத் உத்த்ருதமான மத்ஸ்யம் நீர் நசை அறும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திரு உள்ளத்தில் உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது என்றார் இறே -அத்தலையால் நினைவால் இறே இத்தலை ஜீவிப்பது
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -என்கிறபடி அவன் நினைவு இல்லாத வென்று இவையும் இல்லை இறே
தாந யஜ்ஞ விவாஹேஷு ஸமாஜேஷு மஹத் ஸூ ச
ந த்ரஷ்யாம புநர் ஜாது தார்மிகம் ராம மந்தரா –5-13-
வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் –6-1-2- இவற்றின் அறிவுகேடு 6பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோவரமாட்டாதே நிற்கிறது. 1“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;
“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச
ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”- என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும். விவாஹேஷூ-இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர். ஸமாஜேஷூ மஹத்ஸூச – 2தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல். ச – 3யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது. ந த்ரக்ஷ்யாம: புனர்ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம் ராம மந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில், தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியேயன்றோ அவன்படிகள்.
——
மம த்வச் வா நிவ்ருத்தஸ்ய ந பிராவர்த்தந்த வர்த்தமநி
உஷ்ண மஸ்ரு விமுஞ்சந்தோ ராமே ஸம் ப்ரஸ்திதே வநம் -59-7-
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –
மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூமந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன
—————-
குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸாந் பஹுந்
ஆசயா யதி மாம் ராம புநஸ் ஸப்தாபயேதிதி -59-7-
ஈடு ப்ரவேஸம் -3-8–ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே, ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி. 2‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க. ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம். ‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?
—————
விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ஸ புஷ்ப அங்குர கோரகா –59-8-
உபதப்தோ தகா நத்ய பல்வலாநி ஸராம்ஸிச
பரி சுஷ்க பலாசாநி வநாந் யுபவநாநி ச -59-9-
ஈடு 2-1-1-ஆறுகளோடு சிறு குழி களோடு பெரும் குழி களோடு வாசியற கரை யருகும் சென்று கிட்ட ஒண்ணாத படி விரஹ அக்னியால் கொதித்தது இறே
சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசியற விரஹ அக்னி கொளுத்திற்று
ஈடு 6-1-10-“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் -இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. 3நிலைநீர்கள்தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன. “பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம்.
ஈடு -7-5-1—ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ணநீர் விழவிட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடிநின்றனஉப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி. உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை. பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை, ‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.
———–
அதோ து கிம் துக்க தரம் ஸோஹமிஷ்வாகு நந்தனம்
இமாம் அவஸ்தாம் ஆபந்நோ நேஹ பஸ்யாமி ராகவம் –59-30-
ஈடு -6-7-6-
இன்று எனக்கு உதவாது அகன்ற – 2பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும், இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே! 3“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?” “அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.
என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி. எனக்கு உதவாது – சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி
ஈடு -9-7-9-இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை
இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது
எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி
ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –
தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு
இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி –
———-
கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வநம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம் ஸ்ரிதா –60-20-
ஒருதரம் தலையை வணக்கியவர் விஷயத்தில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து பார்த்தால் வணக்கத்தின் மேன்மை வெளியாகும். “ஏபிச்சஸசிவைஸ்ஸார்த்தம் சிரஸா யாசிதோ மயா, ப்ராது:சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்துமரர்ஹஸி” என்று தலையால் யாசித்த பரதாழ்வான் விஷயத்தில் பெருமாள் எப்படி உளங்கனிந்திருந்தார் என்பது இராவண வதத்திற்குப் பிறகு விபீஷணனுக்கு பெருமாள் அருளிச் செய்யும் பாசுரத்தால் வெளியாகிறது. “சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்று வாடுகிறான் எம்பெருமான். பரதன் தலையால் வணங்கி யாசித்த விஷயத்தை (வார்த்தையை) நான் தலைக்கட்டவில்லையே என்று துக்கித்து அவனைக் காணப் பதைக்கிறான் பிரபு. பெருமாள் திருவுள்ள மறிந்த பிராட்டியும் திருவடியை (ஹனுமனை) நோக்கி “சிரஸா சாபிவாதய” (எனக்காக அவனை நீ தலையால் வணங்கு) என்று வேண்டுகிறாள். தலை தாழ்த்து இருகை கூப்பாத தமது பாழ்த்த விதியை மீறி “தலையில் வணங்கவுமாங் கொலோ”(நமக்கு வணங்கும் நாட்களும் வாய்க்குமோ) என்று பாடுகிறார் நம்மாழ்வார்.
பலர் கண்ண நீர் கண்டால் மீளாரோ என்னுமதைப் பற்ற வினை செய்யப் போவாரைப் போலே ஆனை குதிரைகளைத் திரட்டிக் கொடு போனான் ஆயிற்று –
பிரிவாற்றாமைக்குத் தன்னில் குறைந்தார் ஒருவரும் இல்லையாயிற்று பரிகரத்தில்
நான் தலையால் இரந்த காரியத்தையும் மறுப்பாரோ
சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்றார் இறே அவனும் –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் -நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் என்றார் இறே
அவன் தலையால் இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்று இறே அவர் திரு உள்ளம் புண் பட்டது
ப்ராதா ஸ்வ மூர்த்திராத்மந -என்கிறபடியே அவர் தம் திரு மேனியாக யன்றோ என்னை நினைத்து இருப்பது
—–
நந்தந்யுத ஆதித்யே நந்தந்த்யஸ்த மிதே ரவவ்
ஆத்மநோ நாவபுத்த்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம் -105-24-
பெரிய திருமொழி -6-2-5–நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-
————
பதி ஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தா மப்ய பகமத் தீநோ வித்த நாசா திவாதந –118-34-
ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி.
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply