ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஆரண்ய காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

ரூப ஸம்ஹநநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வந வாஸிந —
1-12-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே–திரு விருத்தம் -43-

(தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்
ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் )

சொவ்குமார்யம் –
பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )

ஸூவேஷதாம் –
தாபச வேஷம் இருந்தபடி –

தத்ருசிர்  விஸ்மிதாகாரா –
விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-

ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத
அவயவ சோபையையும்
திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

ஈடு -8-1-2-ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்
அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார -ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –
யார்தாம் என்னில்
வனவாசிநாம்–ராமஸ்ய ஆரண்ய காண்டம் -1-13
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை
சருகு இல்லை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –

——

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -1-19-

ஈடு -3-5-2-தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பதுஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று.-

ஆர்த்த ரஷணம் -தண்ட காரணிய -ஆர்தர்
வாசிகள் என்பதே காரணம் -தபசுக்காக இல்லை –
தபசே ரஷிக்க -விஷயத்திலே கண் வட்டத்திலே இருக்க –
சுபிரயத்ன பரர் அன்று -கண் அழிவு வரலாமே அப்படி இருந்தால்
காக்க வல்ல  எல்லைக்கு புறம்பாய் இல்லையே

தண்டனை கொடுக்க வேறு தேசம் கடத்த முடியாதே பகவானால்
ராஜாவால் முடியுமே -பெரியவன் தான் பண்டிதன் வார்த்தை  –
புறம்பு சொல்ல முடியுமானால் சொல்லிக் காண் -ரிஷிகள் வார்த்தை-

———

ரஷிதவ்யாஸ் த்வயா சஸ்வத் கர்ப்ப பூதாஸ் தபோதநா –1-20-

ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–1-

காடுறைந்தான் –
ரிஷிகள் உடைய ரஷணத்துக்காக காட்டிலே வர்த்தித்தான் காண் –
ரஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்ப பூதாஸ் தபோ தநா-
எங்களுடைய ரஷணம்-உமக்குத் தவிர ஒண்ணாது –
உமக்குத் தலையோட்டில் பொறி –
( தலையோட்டில் பொறி –தலை எழுத்து -திருவடி எழுத்து அன்றோ -)
உங்கள் தபஸ்ஸும் ப்ரபாபவமும் கிடக்க நான் ரஷிக்க வேண்டுகிறது என் –  என்ன

கர்ப்ப பூதா
எங்களுக்கு கைம் முதல் உண்டானாலும் ரஷணத்தில் பிராப்தி இல்லை காணும் –
(சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே )
ராஜ மகிஷியானவள் சக்தி உண்டு என்னா அவகாதம் பன்னாள் இறே
ஜனனி தானே கைச்சதும் புளித்ததும்   தவிர்ந்து நோக்கும் இத்தனை அன்றோ –
இவ் வாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்ந்தாலும் உம்மைக் குறித்து நித்ய ஸ்தநந்தமாய் காணும் இருப்பது –
இப்படிச் சொன்ன மாற்றத்துக்கு
ஒரு மாற்றம் இல்லாமை இறே
பிரசீதந்து -என்றது –
(ஆமோதித்தார் -பெண் வெட்கப்பட்டால் போல் பட்டார்
அதுக்கு ரிஷிகள் வார்த்தை மேல் )

————

ப்ரஸீ தந்து பவந்தோ மே ஹ்ரீ ரேஷா ஹி மம துலா
யதீத்ருசைரஹம் விப்ரை ருபஸ்த்தேயை ருபஸ்த்தித
-10-9-

காடுறைந்தான்-ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–பூர்ணரராய் இருக்கிற நீங்கள் குறைவாளர் அளவில் இரங்கும் அத்தனை அன்றோ –
நாங்களும் பிறர் கையில் நோவு பட்டு நிற்கையாலே குறைவாளர் அன்றோ என்ன-

உங்களுக்கு நோவு வந்தது உங்களால் அன்றே
நோவு பட்ட உங்கள் அளவு அல்ல
நோவுக்கு ஹேது பூதரான நம்முடைய லஜ்ஜை –
யதீத்ருசைர் அஹம்  விப்ரை  –
ஈத்ருசமான விலஷண புத்தியை உடையவர்களாலே

(ஈத்ருசமான- இப்படிப்பட்ட சிறப்பான புத்தி உடையவர்கள் -அப்படிப்பட்ட சொல்லாமல் –
சீதாப்பிராட்டியைப் பார்த்து சொன்ன வார்த்தை
ஸீதா விஷயம் சொல்லி -இத்தை விளக்குகிறார் மேல் )

நெருப்பை குளிருக -என்ற வாயைக் கொண்டு
ராவணனை -நஷ்டாவாய் -என்று சொல்ல மாட்டாமை யன்று இறே இருந்தது –
நம்முடைய ரஷணத்தில் நமக்குப் பிராப்தி இல்லை
தத் தஸ்ய -என்று இருந்தவளைப் போலே இறே இவர்களும் சிலர் –

நோவு பட்டால் அங்கே வந்து அவர்கள் குறை தீர்க்க ரஷணத்துக்கு ஸ்வரூபமாய் இருக்க
நோவு படுவுதிகளும் நீங்களே யாய்
பட்ட குறை அறிவிப்பிகோளும் நீங்களே யாம் படி
நாம் பிற்பாடார் ஆனோம் எனபது யாதொன்று –

————

ஏவ முக்தஸ்து ராமேண லஷ்மண ஸம்யத் அஞ்சலி
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்த்தம் இதம் வசனம் அப்ரவீத் –15-6-
பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்த்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத –15-7-

‘ஈடு -2-9–நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல-

———-

இஹ வத்ஸ்யாமி ஸுமித்ரே சார்த்த மேதேந பக்ஷிணா –15-18-

ஈடு -9-4-6-

இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது

மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி-

ஈடு -10-8-6–இன்று வந்து- இருப்பேன் என்று -ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

———

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம் வ்ருத்தஸ் பிதா மம –15-28-

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று-ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-6-

நல் அரவணை –
அத் தலைக்கே உறுப்பாய் இருக்கை –
சேஷ பூதனுக்கு நன்மை யாவது-எனக்கு என்னுமது அன்றிக்கே
சேஷிக்கே உறுப்பாய் இருக்கை இறே-(பிரபலதர விரோதி – நமஸ் அர்த்தம்)

பாவஞ்ஞேந  -க்ருதஞ்ஞேந -தர்மஞ்ஞேந -லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம-

பாவஞ்ஞேந  –
க்ரியதாம் -என்று சொல்லுகிறவர் இறே இளைய பெருமாள்
இப்படி செய்ய வல்ல நீர் நம்மை கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையை சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இறே –

பாவஞ்ஞேந  –
அல்லாதவை சொன்னாலும் தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள் சமைக்கும்படி 
இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இறே
நெஞ்சாலே நினைக்கும் இத்தனை இறே –
இந் நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஞ்ஞேந –
அதுவே அன்றிக்கே செய்து போம்படி அறிந்து செய்தார்-
நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே இவர் என் நினைந்து இருக்கிறாரோ –
என்று நினைவை ஆராய்ந்தும் –
இவருக்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவராயிற்று-

தர்மஞ்ஞேந –
நினைவு அறிந்தாலும் -செய்து போருமிடம் அறிந்தாலும் –
தானும் ராஜ புத்திரன் ஆன பின்பு எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ –
என்று இருக்குமவனுக்கு இது செய்ய ஒண்ணாது இறே –
அங்கன் அன்றிக்கே
அத் தலையில் தாதர்யதமே நமக்கு ஸ்வரூபமான பின்பு
அத் தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு -வகுத்தது என்று
அத் தலைக்கு செய்யுமத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-

லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வன்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே என்கிறார்

புத்ரே
புத் என்று ஒரு நரக விசேஷமாய் -அதில் புகாதபடி நோக்கும் என்றாயிற்று
புத்திரன் என்று பேராகிறது
ஐயருக்கு நம்முடைய அபிமத ஸித்தி இன்றிக்கே ஒழிகை தனக்கு மேற்பட நிரயம் இல்லை இறே
அவருக்கு அது வராதபடி நோக்குகிறீர் நீர் இறே
(ஸ்ரீ ராம கைங்கர்யம் சிறிது குறைந்தாலும் ஸ்ரீ சக்கரவர்த்திக்கு அதுவே நரகம் –
அத்தைப் போக்கி அருளினார் அன்றோ ஸ்ரீ இளைய பெருமாள் )

தர்மாத்மா –
சக்ரவர்த்தி ப்ரஸ்துதன் ஆனவாறே -நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் தாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன வன்றும் நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்று
தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே

மம –
இருவருக்கும் பிதா ஆவது ஒத்து இருக்கச் செய்தே -மம -என்கிறார் ஆயிற்று –
அவர் நமக்கு செய்யுமவை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்
நீர் இழந்தார் ஆகில் இத்தனை இறே-

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிற இடத்தில் சேஷி உடைய வியாபாரமும்
புகாதாகில் -சர்வம்-என்ன ஒண்ணாது இறே-
(ஸ்ரீ சக்ரவர்த்தி பிதா காட்டும் ஆசை அன்பும் பரிவும் சர்வத்துக்குள்ளும் அடங்கும் )

ஈடு -5-4-8-கைவந்த சக்கரத்து-5இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந – இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந – 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

——————–

அத்யந்த ஸூக ஸம் வ்ருத்தஸ் ஸூ குமார ஸூ கோஸிதஸ்
கதம் ந்வ பர ராத்ரேஷு ஸரயூம் அவகாஹதே —
16-30-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்-ஸ்ரீ திரு விருத்தம் -24-ஸோபி வேலாமிமாஂ நூநமபிஷேகார்தமுத்யதஃ.
வரிதஃ ப்ரகரிதிபிர்நித்யஂ ப்ரயாதி ஸரயூஂ நதீம்৷
৷3.16.29৷৷

வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–
ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….
பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-

அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ.
கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷3.16.30৷৷

அத்யந்த ஸூக சம்விருத்த ஸூகுமார ஸூ கோஜித –ஆரண்ய காண்டம் -16-30-
சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,
அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே

கதந்னு-
தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-
சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்

(ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்
குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல
கூடி இருப்பதால் இவ்வாறு
இவன் தாபத்தால் சரயுவே சுடுமே
தசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு
பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு )

அபர ராத்ரேஷு —
அகாலத்திலே போவான் என் என்னில் ,
புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே
மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே
கைகேயி மகன் என்றும்,
இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி

சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-
(நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )

தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷
ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ.
ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷

நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்

———-

நதேம்பா மத்யமா தாத கர்ஹி தவ்யா கதஞ்சன
தாமேவேஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு –
-16-37-

ஈடு -9-1-4–வருணித்து என்னே
உபகாரம் செய்வார்களுக்கு அபகாரம் செய்வார் படியை நினைந்து வெறுத்து –
வருணித்து என்னே -என்கிறார்
இளைய பெருமாள் கைகேயின் தன்மையை நினைந்து
தன் கார்யத்தில் நோக்கு உள்ளவளும் -எப்போதும் கொடிய தன்மை உடையவளும்
கோபம் உள்ளவளும் -தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவளுமான என் தாயான கைகேயி -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் சொன்னால் போலே –
ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ
அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10
வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே
அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள்
எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-என்கிறபடியே –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன
தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37-
ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை
தாமேவ –
வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்
இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –
ஐயரோ போகட்டு முடிந்து போனார்
நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை
குலையாதபடியாக நோக்கிக் கொண்டு
கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –
பரதச்ய கதாம் குரு –
நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

———-

கதான் வஹம் ஸமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயாஸ ரகு நந்தன –16-40-

ஈடு -2-4-1-ஸ்ரீ பரதாழ்வானோடும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானோடும் கூடப்பெறாத கிழிக்குறையால் கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோற்றிற்று இல்லை இறே

————–

விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித–17-24-

ஈடு -5-3-4-விபீஷணஸ் து தர்மாத்மா -இவன் இக் குடியில் உள்ளார் படி அல்லன் -இவனுக்கு வாசியுண்டு
அந்த வாசி தன்னைச் சொல்லுகிறது -தர்மாத்மா-என்று
மறக்குடி அறம் செய்யக் கெடும் என்னக் கடவது இறே
ந து ராக்ஷஸ சேஷ்டித–ஜாதி மாத்ரமே இவன் பக்கலில் ஜீவிக்கலாவது –

————

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிக்ஷஸ்வஜே –30-31-

திரு நெடும் தாண்டகம்–21–-தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
 -என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –

ஈடு -3-5-4–வம்புஅவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழும் அடர்த்த செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் -பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.-தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு
வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்
குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்
கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்
திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –
ஸ்ரீராமபிரான்.

————

தவ் வநாநி கிரீம் சைவ ஸரி தச்ச ஸராம்ஸி ச
நிகிலேந விசின்வாநவ் ஸீதாம் தசரதாத் மஜவ் —
61-21-

ஈடு -2-1-4-ஸீதாம் –தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜவ் –தேடப்பிறந்தவர்கள் அல்லர்

—————

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா சிலா தலே பூர்வம் உபோவிஷ்டா
காந்த ஸ்மிதா லஷ்மண ஜாத ஹாஸா த்வாமாஹ ஸீதா பஹு வாக்ய ஜாதம் –
63-12-

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-

எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது

அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்

அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும்  இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய்  இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –

மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –

உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –

சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க

ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-

உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –

காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று

த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது  இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்

————

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம்

புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்

அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –

யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –

சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம் —


உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-

———–

ராஜ்யாத் ப்ரம்சோ வநேவாஸஸ் ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் –
-67-25-

பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.  2‘இராச்சியத்தினின்று  நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

திரு அபிஷேகம் பண்ண நாளிட்ட வாறே -ராஜ்ஜியம் எனக்கு வேணும் என்றார்கள் சிலர் -அத்தை இழந்தால் படைவீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் இறே
என் மகன் ராஜ்யம் பண்ண வேண்டா -பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க அமையும் என்றார் இறே கௌஸல்யை யார்
ஸீதா நஷ்டா –பிராட்டியும் தாமுமாய் ஏகாந்தமாக புஜிக்கலாம் என்று போர இருவரும் இரண்டு இடத்திலேயாம் படி விழுந்தது –
ஹதோ த்விஜ–பிராட்டிக்குத் தனி இடத்திலே உதவப்புக்க பெரிய யுடையாரையும் இழந்தது
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம்

ராஜ்ய நாசம் -ராம சந்தரன் -இரவில் பிரகாசிக்கும் படி -அன்று அலர்ந்த தாமரையை ஒத்ததே -என்றாரே –ராஜ்யோ நாஸோ பகர்ஷயதி வந வாஸோ மஹோதய -என்றும் சொல்லிப் போந்தவற்றை- இங்கு அனர்த்தமாக சொல்வான் என்
ஆஸ்ரித சம்ச்லேஷம் -ரிஷிகள் கூட -இருக்க அன்றோ புகுந்தது–
புருஷகாரம் -இழந்த நிலை -ஜடாயு இழந்தார்- அதனால் வருத்தம் தோன்ற வார்த்தை –

நிர்தஹேதபி பாவகம்–பிரியாத இளைய பெருமாளையும் பிரிக்கவும் வற்றாய் இறே இந்தத் துக்கங்கள் இருப்பது

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading