அஹம் ச ரகு வம்சச்ச லஷ்மணச்ச மஹா பல
வைதேஹ்யா தர்சநே நாத்ய தர்மத பரி ரக்ஷிதா –1-12-
திருவாய்மொழி – -6-8–1-நல் நலம் –
அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,
ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,
மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,
வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக,
தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?
வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”
‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி
(உழைக்கும்படி – தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.
“அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.
—————-
ஏஷ ஸர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத
மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந -1-14-
உடனே உண்பன் நான் என்று –பெரிய திருமொழி-5-8-2-
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )
ஒண் பொருள் –
சீரிய அர்த்தம்
திருவாய்மொழி – -4-1-5-ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’ என்கையாலே, கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;
‘அபிமதம்’என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது;
சர்வ ஸ்வபூத : –இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே
எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!
மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –
ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.
மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று
குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி,
இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;
‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ என்பது.
—-
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா
ஏததேவாநுசோசாமி வயோஸ் யாஹ்யதி வர்த்ததே –5-5-
ஸ்ரீ பெரிய திருமொழி-9-3-4-மங்கை நல்லாய் தொழுதும் எழு –
ஓம் காண்-
உன் பருவம் நோக்கி அழகிதாக உண்டாகை இறே-கடுகப் புறப்படாய்-என்கிறாள் –
தன்னுடைய பருவம் அழியா நின்ற நின்ற பின்பு
நீ பருவம் நோக்குகிறோம் என்று இருக்கிற இத்தால் பிரயோஜனம் என் –
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே-என்றார் இறே
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா எததேவா நு ஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்திலே வர்த்தியா நின்றாள் -என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
இனி வலிய ரஷசாலே பிரிவும் பிறந்தது –
இனி எங்கனே நாம் சாதிக்கும் படி –என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது கடக்க இருந்தாள் ஆகில் கடலை அணை செய்து நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு கொடுத்து பொகடத் தீருகிறது அக்கார்யம்
நான் இது ஒழிந்த அல்லாத வற்றுக்கும் வெறேன்
இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது
அது ஏது என் என்னில்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே –
இவை போல காலம் என் அம்பால் மீள விடலாவது ஓன்று அன்று இறே
அணைக்கு கிழக்கு பட்ட நீரை மீட்கப் போகாது இறே –
திருவாய்மொழி – -2-1-10-புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்-
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்-இனியாவது எம்மை சோரேல்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம் –பின் நின்ற காதல் –கழிய மிக்கோர் காதல் –
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே
—————-
வாஹி வாத யத காந்தா தம் த்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருச
த்வயி மே காத்ர ஸம் ஸ்பர்ச சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம –5-6-
திருவாய்மொழி….6-8-3-தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ –“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?
த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.
நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” -அற்றது பொருந்தும்படி
வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு.
த்ரௌபதி வார்த்தையால் இற்று விழுந்த மாம்பழம் கொம்பிலே ஒட்டிக் கொண்டதே போலே –
“காணப்பட்டாள் சீதை” “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.
என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.
நிர்பயம் -காற்று காண முடியாதே -வாயு பகவான் போலே இல்லை -உன் மூலம் சீதையை அணைக்கப் பெற்றேனே
சந்த்ரனை -உன்னைக் கண்டால் போலே -சொல்ல வேண்டுமே -காற்றை பார்த்து கண்டாரை கண்டால் போலே –
சந்தரன் தாரகம் போலே உன் ஸ்பர்சம் தாரகம் -ஸ்பர்சம் போலே தர்சனம் –வாயுவைத் திருஷ்டாந்தம் ஆக்கி -என்றுமாம்
———–
உத்ப பாத கதா பாணிச் சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷஸை–16-17-
திருவாய்மொழி – -4-9-கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது
————
தீப்த பாவக சாங்காசை சிதை காஞ்சன பூஷணை
நத்வா மிச்சாம்யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் சரை –16-24-
ஸ்ரீ பெரிய திருமொழி-2-8-2-ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-
தீ வாய் வாளி –திருவாய்–6-10-4-
பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது;
படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை.
ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்து கொண்டு செல்லா நிற்கும்.
குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. -குணம் -நாண்- சாடு -குண ஹீனம் -கிருபா ஹீனம் –
“தீப்த பாவக ஸங்காஸை: – படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.
“தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.
ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.
காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.
“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே,
அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.
நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன்.
நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது;
அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே,
தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.
வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”
“ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.
————–
மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –18-3-
ஸ்ரீ திரு விருத்தம் -42-மித்ர பாவேன-
அவன் பக்கலில் பாவமே அமையும் –
அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-
அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –
இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –
இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –
உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –
திருவாய்மொழி – -5-1-1-“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே
எம்பார், ‘சர்வ ஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை
அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.
இப்போது கிருபா பரதந்திரனாய் இருந்தானே யாகிலும், சர்வஜ்ஞன் சர்வசக்தி அலனோ, அபராதங்கட்குத் தகுதியாக அவற்றின்
காரியங்களும் பிறவாவோ?-என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “மித்ரபாவேந” என்று தொடங்கி.
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்.” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:3.
இந்தச் சுலோகத்தில் உள்ள “தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,
“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ -என்றும் அருளிச்செய்கிறார்.
———
ஸூஹ்ருதோ வா பவத் விதா –18-15-
திருவிருத்தம் -56–ஸூஹ்ருதோ வா பவத் விதா –நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரியாகி அவனிலும் நம்மை அந்தரங்கராக்கி கார்யம் கொள்ளும் தனை ஸுஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார்-
————
பிசாசாந் தானவான் யஷான் பிருதிவ்யாம் சைவ ராக்ஷஸான்
அங்குல்ய அக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர –18-23-
திருப்பல்லாண்டு -1-கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து -புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ -மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்-
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட-அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்தது-
————
கிம் புநர்மத் விதோ ஜநா –18-25-
திருவாய்மொழி – -6-8-6-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத்
தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும்
என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –
“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.
பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.
என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு.
அது, அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,
‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.
இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:
‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி
கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –
மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –
சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –
—————
ஆர்த்தோ வா யதிவா திருப்த ப்ரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –18-23-
ஸ்ரீ திரு விருத்தம் -42–ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –
உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –
(அரும்பதம்
சரணாகதி ஸ்லோகம்
காற்றுத்தானும் வேண்டாவாயிற்று தனது காலின் மேன்மை
அவன் ஸுஹார்த்தம் எதுவுமே வெண்டாதே
ஆபி முக்கிய ஸூ சகமான ஆர்த்த ப்ரபத்தியும் வேண்டா
மானஸ பிரபத்தியும் வேண்டா
மித்ரா பாவேந உண்டே
ஆனால் ஆர்த்த பிரபத்தியோ திருப்த பிரபத்தியோ
சரணம் சொன்ன எதிரியாகவோ -பரேஷாவாக – இருக்கட்டும் -துல்ய விகல்பமாக உள்ளதே
ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே
பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி
அதிகாரி வேண்டுமே
புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும்
தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்
இத்தையே மேல் வியாக்யானம் விளக்கும் )
ஆர்த்தன் ஆகையாவது –
இத் தலையை பெறில் ஜீவித்தும்
பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை–
த்ருப்தன் ஆகையாவது –
நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே
நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே
நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –
(நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து
கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்
திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி
ஆர்த்த ப்ரபன்னன்
நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழ்வாரைப் போலே சொல்லுவது
நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல் )
(அவனுக்கு உடன் பேறு
இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு
பலம் வேறுபாடு உண்டே என்னில்
இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை
ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே
கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்
18 நாடான் பெரும் கூட்டம் உண்டே )
ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி
எங்கனே எனில்
இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே –
சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –
ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் –
ஆர்த்தி பரிகரமான இடத்தில் –
இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –
ஆகையாலே
ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –
த்ருப்தனுக்கு –
இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது
இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும்
அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –
(விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி
முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க
அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே
நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே
இரக்கமே பரிகரம் என்றதாயிற்று -)
பரேஷாம் கத அரி –
சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –
அதாவது –
உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –
கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே )
ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –
அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க
பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –
ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது –
அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி
ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –
(பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –
கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே )
க்ருதாத்மன-
இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –
தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –
(க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் -தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால் )
திருவாய்மொழி – -6-2-“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )
ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.
திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.
அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.
அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.
கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,
“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.
———–
யதிவா ராவண ஸ்வயம் –18-19-
திருவாய்மொழி – -10-2-2-ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா-
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –அது உள்ளது இராவணனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே-
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே-நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே-
———–
ராகவேணாபயே தத்தே ஸன்னதோ ராவண அநுஜ–19-1-
திருவாய்மொழி – -8-7-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்) ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலே-
———–
ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி –19-321-
திரு விருத்தம் -42-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –
இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று
பெருமாள் முதலிகள் அடைய கேட்க –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –
2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –
3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –
பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –
சமுத்ரம் –
பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –
ராகவோ ராஜா –
ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே
அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்
இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?
சரணம் கந்து மர்கதி –
வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே
அறிவில்லாத கடலின் பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –
(அதிகாரி நியமம் இல்லை
கால தேச பிரகார நியதி களும் இல்லை
கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் )
சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய்
(குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று
(அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி
த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி
சாதேவேச்மின் பிரயுஜ்யதாம்
சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும் )
————-
தத சாகர வேலாயாம் தர்ப்பாநாஸ்தீர்ய ராகவ
அஞ்ஜலிம் பிராங்முக க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோ ததே
பாஹும் புஜக போகாப முபதாயாரி ஸூதந–21-1-
திருவாய்மொழி – -6-9-3-கிடந்தும் –
“பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலைக்கு அணையாகக் கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள்
கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு சமுத்திரத்திற்கு நேர் முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;
“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம்
ஈட்டிலே உள்ளதே -பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்-
திருவாய்மொழி – -2-8-7-கிடந்து –
1-திருப் பாற் கடலிலே கிடந்தபடி யாதல் –
2-அஞ்சலிம் க்ருத்வா –பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்தபடி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும்படி
படுக்கை எல்லாம் திரு வநந்த ஆழ்வான் அம்சம்
அரி ஸூதன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –கிடந்ததோர் கிடந்த அழகிலே-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றாயோ காகுத்தா -இங்கே மல்லணை —
———
ஷமயா ஹி ஸமா யுக்தம் மா மயம் மகராலய
அஸமர்த்தம் விஜாநாதி திக் க்ஷமா மீத்ருசே ஜநே –21-21-
திருவாய்மொழி – -6-10-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )
சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்
“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –
கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –
மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே
“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –
————
ராம லஷ்மண குப்தா ஸா ஸூக்ரீவேண ச வாஹிநீ
பபூவ துர்த்தர்க்ஷ தரா ஸர்வைரபி ஸூரா ஸூரை –25-32-
திருவாய்மொழி – -6-9-3-காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற் போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கை வாங்கினேன், (ஸ்வ ரக்ஷணம் தவிர்ந்தேன் )
இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக் கொள்.
“இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.
கடற்கரையிலே விட்ட போது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப் போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனை பேரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ;
உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
(ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்யவம் இல்லாத போது தானே அவன் ரக்ஷித்து அருளுவான் –
முதலிகள் பரிவாலே நோக்கிக் கொண்டு இருந்தார்கள் -பக்தி பாரவஸ்யத்தால் பரிந்து –
பொங்கும் பரிவாலே -தட்டு மாறிக் கிடந்ததே )
—————–
ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபிஷேசித -27-2-
பெரிய திருமொழி-4-6-3–ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-
ஸ்ரீ மதா
உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது
ராஜ ராஜேன
உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –
லங்காயாம் அபிஷேசித –
இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்
அவன் பரிகரமாய் இருந்து வைத்து
அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே
இப்படி சொல்லுகைக்கு அடி
அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே
இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-
————–
அத ஹரி வர நாத ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிசி சரபதி மாஜவ் யோஜயித்வா ஸ்ரமேண
ககந மதி விலாஸம் லங்கயித்வார்க்க ஸூநு
ஹரி வர கண மத்யே ராம பார்ஸ்வம் ஜகாம –40-29-
திருவாய்மொழி – -7-4-1–பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திரு முன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று
பொறாமையாலே-பொறுக்காத படியாக – மேல் விழுந்தார் அன்றோ?
அத ஹரி வர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸி சர பதிம் ஆஜௌ யோஜ யித்வா ஸ்ரமேண,
ககந மதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரிவர கண மத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29
‘அத ஹரி வர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.
நிசி சர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜ யித்வா ஸ்ரமேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதி விசாலம் லங்கயித்வா – பரப்பை யுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்க ஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.
பிறப்புக்கு ஈடாகச் செய்தார். தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ?
ஹரி வர கண மத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’
என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.
திருவாய்மொழி – -10-6-8-அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே
பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே
இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்று
பெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32-
திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-
வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-
ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத –
ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது
தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்
பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –
ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-
பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –
நிசிசர பதிம் –
களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி
தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –
ஆஜௌ –
அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –
யோஜயித்வா ஸ்ரமேண-
அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –
ககன மதி விசாலம் லங்கயித்வா –
நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –
அர்க்க ஸூந-
அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –
உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –
ராம பார்ச்வம் ஜகாம-
பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே
நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார்
பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து
திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-
கொழு மணி முடிகள் தோறும் கொண்டன குழுவின் கூட்டம்
அழுதயர் வுறுகின்றான் தன் அடித்தலம் அதனில் சூட்டித்
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ள யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே -கம்பர் வுயுத் மகுட பங்கம் படலம் -27-
—————
த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –41-4-
திருவாய்மொழி – –1-2-6-முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பிராட்டிக்காக கிஞ்சித் அவதி பட்டாய் இதற்கு நிமித்த பூதையான அவளிலும் பிரிய-பிரிய தர -பிரிய தம -இளைய பெருமாள் பரத -சத்ருக்னன்
-இவர்களுக்கு ஜீவனமான என் திரு மேனியும் வேண்டேன் -என்றாரே பெருமாள்
கிஞ்சித் கொஞ்சம் ஆபத்து வந்து இருந்தால் -வாயால் சொல்ல முடியாமல் -சீதை விடுவேன் சொல்லும் வாயால் –
திருவாய்மொழி – -4-5-8-இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.-‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.
‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக் கொள்ள வேண்டிற்று?
———–
சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம்
திருவாய்மொழி – -7-1-ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,
திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.
முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
———–
சத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வமகமத் கபே -59-118-
திருவாய்மொழி-1-3-1-சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று –வஸ்து ஸ்வபாவம் இருக்கும் படி யாயிற்று இது –
————-
ஸ்மரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர–60-3-
பெரிய திருமொழி-8-1-1-சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –
விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —
ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –
சிலை –
ஒன்றை இட்டு விசேஷிக்க வேண்டாதே
தன்னையே சொல்ல அமைந்து இருக்கிற ஸ்ரீ சார்ங்கம் –
—————-
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜ நீயஸ்ய விக்ரமை
பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ்த்வயா –106-6-
பெரிய திருமொழி-2-8-2-வெந்திறல் இத்யாதி -வெவ்விய திறல் உண்டு -பர அபிந சாமர்த்தியம் -அத்தை உடையரான வீரர்கள்
தாங்கள் மடல் எடுக்கும்படியான ஆண் பிள்ளைத் தனம் உடையவர் சக்கரவர்த்தி திருமகனார் –
ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-
————–
உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ப்ராப்தே பரிபவே நம
அத்ய வை நிர்ப்பயா லங்காம் ப்ரவிஷ்டாஸ் ஸூர்ய ரஸ்மய –114-82-
பெரிய திருமொழி-1-2-2-(ராவணன் பட்டுக் கிடக்க மண்டோதரி-அருளிச் செய்த ஸ்லோஹார்த்தம்-)
ஆதித்ய கிரணங்கள் உள் புகுந்து சஞ்சரியா நின்றன கிடாய் –
இதுக்கு முன்பு இல்லாத ஓன்று இப்பொழுது உண்டாயிற்று கிடாய்-
முன்பு நெல் உலர்த்த வேண்டுவது சஞ்சரித்து போம் இத்தனை யாயிற்று ராவண பயத்தாலே –
இப்போது நிர்பயமாய்க் கொண்டு உலாவா நின்றன –
————
மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந ப்ரயோஜநம்
க்ரியதா மஸ்ய ஸம்ஸ்கார மமாப்யேஷ யாததவ –114-101-
திருவாய்மொழி – -2-7-சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –
மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே
———
நிப்ருதஸ் பிரணத் ப்ரஹ்வ–116-
திருவாய்மொழி – -2-7-2-நிப்ருதஸ் -ஒரு அவயவத்திலே எல்லா அவயவங்களை அடங்கும்படி இருக்கை
பிரணத் -வேறு சிலர் எடுக்க வேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை
ப்ரஹ்வ–இப்படிக்கிடந்தோம் என்னுமது நெஞ்சில் நடையாடாது இருக்கை
———–
தாஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயா மீஹ தூர்பலா –116–41-
திருவாய்மொழி – -5-4-5-என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே,
திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப் பட்டவர்களாகையாலே
என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில்,
அது தனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன
‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்து போந்த இப் பெண் பையல்களை
இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன,
“துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள்
கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.”
இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று
“தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய்,
ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-
திருவாய்மொழி – -6-10-10-“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ.
என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித் தர வேணும்’ என்ன,
‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி.
ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.
“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில்,
திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.
————-
பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருணமார்யேண ந கச்சின் ந அபராத்யதி —116-45-
பாபாநாம் வா ஸுபாநாம் வா-
இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம்.
நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;
“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.
“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.
இன்று வந்தான் என்றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தானென் றுண்டோ புகலது கூறுகின்றான்
தொன்றுவந்தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.
அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ
நாம் முகம் கொடுக்கவேண்டுவது.
நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கை கொடுக்குமே;
கோ தானம் பசுவின் வாலைப் பிடித்து தாங்களே தாண்டுவார்களே –
கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள்.
வதார்ஹாணாம் –
தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்
தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,
‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்
உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.
“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும்
“நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.
பிலவங்கம-
பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.
அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;
யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;
நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.
கார்யம் கருணம் –
இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்.
ஆர்யேண –
இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.
அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.
“நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.
ந கஸ்சித் ந அபராத்யதி-
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்!
திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ?
நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ?
நீ தான் குற்றவாளன் அல்லையோ?
பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்:
அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்;
தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்;
என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்;
தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்க மாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி;
இத்தனை நாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்?
பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என் பக்கல் தன்றோ குற்றம்?
இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று,
பெருமாள் அருளிச் செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ
இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்!
‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி போக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்;
நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகு வாசல் உண்டோ?’ என்கிறாள்.
—————–
தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதி கூலாஸி மே த்ருடம் –118-17-
திருவாய் -2-3-7- இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி -நேத்ர தோஷத்தால் வந்தது போக்கி தீப தோஷத்தால் வந்தது அன்று -என்று
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யார்த்தீ சேத் ஸ்வயம் பவேத்
ப்ரசாஸ்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் அகிலாம் ரகு நந்தன –128-16-
திருவிருத்தம் -51-ஐயர் நியமிக்க ஆச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் ராஜ்யத்தைத் தனக்கே கொடுத்துப் போரச் செய்தேயும் நம்மைப் பின் தொடர்ந்து வந்து சொன்ன நாள் எல்லை கடந்தால் பின்னை ஒரு க்ஷணம் நான் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சில் படுத்திப் போந்தான் -இன்று நாம் சென்று கிட்டினால் பதினாலு ஆண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே நீ முடி சூடு என்றால் -அல்லேன் என்னாதே அத்தை இசையப் பெறுவது காண் –ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு நாம் பிள்ளையை முடி சூட்டிக் கண்டு தீரப் பெறுவது காண்
சநைர் ஜகாம ஸாபேஷா -என்கிறதை ஸாவேஷா -என்று திருத்தி கீழ் விழியால் பார்த்துப் போனார் என்று பொருள் சொன்ன படியைப் பட்டர் கேட்டருளி -அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் உப கரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் -என்னும் அபேக்ஷை யோடே போனார் என்கிறது காண் என்று அருளிச் செய்தார்-
———-
ந ஹி தே ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம்
பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை தர்ம வத்ஸலம் –128-16-
திருவாய் -9-2-2-ந ஹி தே இத்யாதி -அருகே இருக்கச் செய்தேயும் இவனைச் சூழ இருக்கிற பவ்ரரானவர்கள் இவனை அநுபவிக்கையில் நசை அற்றார்கள் -அதுக்கடி என் என்னில்
ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம் பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை –பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ -இவனோ தான் நமக்குத் தொங்கப் புகு கிறான் என்று இருந்தார்கள்
தர்ம வத்ஸலம் -இதுக்கும் அவனோடு ஒக்கும் -தர்மத்துக்காகத் தன்னை அழிய மாறினான் இறே அவன்-
—————–
ததோ ஹர்ஷ ஸமுத்பூதோ நிஸ்வநோ திவமஸ் ப்ருஸத்
ஸ்த்ரீ பால யுவ வ்ருத்தாநாம் ராமோயமதி கீர்த்திதே –130-31-
திருவாய் -3-7-3-தம் தாம் கற்பு அழியும் வார்த்தை சொன்னால் -என்று இருக்கும் ஸ்த்ரீகள் -முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலர்கள் –வாய் விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள் -கரண பாடவம் இல்லாத வ்ருத்தர்கள் -இவர்கள் அத்தனை பேரும் வாய் விட்டு ஏத்தும் படி யாயிற்று பெருமாள் அழகு-
————-
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி –131-80-
திருப் பல்லாண்டு –8-இந்த்ரன் வரக் காட்டிய ஹாரத்தைப் பெருமாள் வாங்கிப் பார்த்து அருளிப் பிராட்டிக்குக் கொடுக்கிற போது அத்தை வாங்கு கிறவள் பெருமாளை ஒரு கண்ணாலும் திரு வடியை ஒரு கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷிதஜ் ஞாஸ்து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் யாகையாலே அவனுக்கு கொடுக்க லாகாதோ என்று அருளினார்
ஸூபகே-அடியார் ஏற்றம் அறிந்து கொண்டாடுகைக்கு ஈடான ஸுபாக்யம் உள்ளது உனக்கே யன்றோ என்ன -உம்முடைய திரு உள்ளத்தாலே யன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி அருளிச் செய்ய நான் முற் பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்க லாகாதோ -என்றார்-
————-
ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம் அபவந் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –-131-101-
அழகிய மணவாளப் பெருமாள் நாய னார் வியாக்யானம் -அமலனாதி பிரான்-2- -ராமோ ராமோ ராம இதி –பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது அத்தனை என்று இறே நிர்வஹிப்பது
இத் த்ரை வித்யத்துக்குப் பொருள் -1-ரூப ஒவ்தார்ய குணங்களை வென்ற வடிவு அழகும் -2-ரூப ஒவ்தார்ய குணை -என்கிற படியே -அத்தை அனுபவிக்கக் கொடுக்கையும் -3- கொடா நின்றால் இறு மாப்பு அற்று இருக்கையும்
பும்ஸாம் தாருண்யமச -என் கிற படியே ஸ்த்ரீ பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்கிறது –
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆவது
ப்ரஜா நாம் அபவந் –மாதா பிதாக்களுக்கு அன்று -வஸிஸ்டாதிகளுக்கு அன்று -ஜநி தர்மாக்களுக்கு
கதா –லோக யாத்ரை களுக்கு உறுப்பாம் வார்த்தை களும் பெருமாளைப் பற்றி அல்லாது இராது
ராம பூதம் ஜகத் பூத் –ஜகத்தடைய ராம அத்வைதம் ஆய்த்து -ஐததாத்ம்யமிதம் ஸர்வம் –என்கிற பொது அல்ல
ராம பூதம் என்று ராம அத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வைதத்தை வ்யா வர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு வில் கொண்டு லீலா ரஸம் அனுபவிக்கிற காலத்திலேயோ என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –தஹ பச என்கிற காலத்தில்
திருவாய் -7-3-1-ராமோ ராமோ ராம இதி –சோறு சோறு சோறு என்பாரைப் போலே
ப்ரஜா நாம் அபவந் கதா-மநி தர்மாக்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே
ராம பூதம் ஜகத் பூத் –நாடு அடங்க ராம அத்வைதம் ஆன படி
நித்ய விபூதியில் பரி மாறக் கடவது இங்கே பரி மாறுகைக்கு ஹேது என் என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –நாடு அடங்கலும் தம் தாமுடைய கர்ம பலம் புஜிக்கப் பெற்றார்கள் இல்லை –ராம பாக்யமே அனுபவித்து விட்டது-
————
ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திச் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி –உத்தர காண்டம் -1-
அமலனாதி பிரான் -பிரவேஸம் —
ஸ்நேஹோ மே பரமோ -என் தன் அளவன்றால் யானுடைய அன்பு
ராஜன் த்வயி -இது தானும் என்னால் வந்த தன்று -அதுவும் அவனது இன்னருளே
நித்யம் ப்ரதிஷ்டித -இன்று அன்றாகில் மற்ற ஒரு போது கொடு போகிறோம் என்ன
அங்கன் செய்யுமது அன்று -தர்மியைப் பற்றி வருகையாலே
நின்னலால் இலேன் காண் –என்னுமாப் போலே
பக்திச் ச நியதா -ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த நிலை ஸ்நேஹம்
பக்தி யாவது நில் என்ன குருஷ்வ என்னும் படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை
வீர -தன்னைத் தோற்ப்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா இங்கு வெல்ல முடியாது
தானும் வீர னாகையாலே தோற் ப்பித்த துறையைப் பிடித்துப் பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அந்யத்ர -என்கிறது மற்று யாரானும் உண்டு என்பார் என்னுமாப் போலே கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் தனக்கு அஸஹ்யமாய் இருக்கிற படி
திருவாய் -7-5-1-ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே
ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.
நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .
பக்திஸ்ச நியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.
வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,
பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.
‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.-
—————
ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷோ ந ராஞ்ஜோ ந ச ராகவஸ்யா
வந ப்ரவேஸே ரகு நந்தனஸ்ய மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத் –அயோத்யா காண்ட ஸ்லோகம் -இப்போது இந்த ஸ்லோகம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை
ஓர் பழி –திரு நெடும் தாண்டகம் -12-
அத்விதீயமான பழி –
(இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.)
(‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.)
ஏ பாவமே
இவள் குறையும் அன்று
அவன் குறையும் அன்று
நான் பண்ணின பாபமே இதுக்கு ஹேது என்கிறாள் –
ந மந்தராயா -இத்யாதி –
இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதை மந்தரை என்று நினையா -அவளுடைய தோஷம் அன்று
அவள் வார்த்தை கேட்ட கைகேயி தோஷம் என்று நினைத்தான்
ந ச மாதுரஸ்ய-இவளுடைய தோஷமும் அன்று –
இவள் வார்த்தையைக் கேட்ட சக்கரவர்த்தி தோஷம் என்று நினைத்தான் –
தோஷோ ந ராஜ்ஞா-ராஜாவுக்கு ஒரு தோஷம் இல்லை
அவன் வார்த்தை கேட்டு -தமக்கு வகுத்த அபிஷேகத்தை பொகட்டு காட்டிலே போன அவர் குற்றமே இத்தனை –
ந ச ராகவஸ்ய -அவருக்குத் தான் குற்றம் என்
அவர் அபிஷிக்தராய் அனுகூல வ்ருத்தி பண்ண கடவனாய் இருக்க
அதுக்கல்லாத என் பாபமே இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதம் –
வனப்ரவேச ரகு நந்தனஸ்ய -இக்குடி வாழப் பிறந்த செல்வப் பிள்ளை
வனவாசம் பண்ணுகைக்கு நிமித்தம் என் பாபமே யாம் இத்தனை –
கூனி சொன்னது கைகேயி கேட்க வேண்டா
அவள் சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டா
அவன் சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டா
கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது-அடியாத்தி யாகையாலே
கைகேயி சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில்
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்ன வார்த்தையை
பர்த்தாவுக்கு கேட்க வேணுமோ –
சக்கரவர்த்தி சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில் –
தர்ம ஆபாசத்தை ஆலம்பனம் ஆக்கிக் கொண்டு
ஸ்திரீ பாரதந்த்ர்யத்தாலே பிரமித்து சொன்ன வார்த்தையை பெருமாளுக்கு கேட்க வேணுமோ
தம்முடைய அந்ய வ்யதிரேகங்களில் நான் படும் பாடு அறிவர் தாம் ராஜ்ய ப்ராப்தர் என்னும் இடம் அறிவர்
ஆன பின்பு அவனைக் கட்டி இட்டு வைத்து ராஜ்யத்தை ஆளத் தட்டேன் –
அவன் சொன்ன வசனத்தை அநாதரித்து -ராஜ்யத்தை ஆண்டார் ஆகில்
தம்முடைய வ்யதிரேகத்தில் நான் முடியாத படி ரஷித்தார் ஆகில் ஆயத்தே
ஆகையால் என் பாபமே இதுக்கு நிமித்தம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான் —
(நானே தான் ஆயிடுக
இல்லாத குற்றத்தை இருப்பதாக ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே இருப்பதாக இசைவதே
நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்)
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply