ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ பால காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

முநே வஹ்யாம் அஹம் புத்த்வா –7- வால்மீகி முனிவரே நான் அறிந்து சொல்லுவேன்

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –சிறிய திருமடல் -21-

பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இறே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் என்றான் இறே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரஸ்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இறே –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே-

வாக்மீ ஸ்ரீ மான் –9-

பெருமாள் திருவடியைப் பற்றி –
நன்றாகக் பேசும் திறமை யுள்ளவன் –
பேசும் பொழுது விலக்ஷணமான ஸோபை யுள்ளவன் –

நாவுடையாய்–திருப்பாவை -14-
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –திருப்பாவை -16-
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
பூ அலர்ந்தால் போல் வார்த்தை சொல்லுகிற போதை ஓஷ்டஸ்ப்புரணம் -என்னவுமாம்

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்–சேஷ பூதரான எங்களுக்கு
நிரவதிக கிருபை பண்ணி
உஜ்ஜவலமான திருப்பவளத்தை சாந்த்வ வாதம் பண்ணி
உனக்கு அசாதாரணமான தாமரை போலே இருக்கிற திருக் கண்களாலே பூர்ணமாகப் பார்த்து அருள வேணும் –

சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்-ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே- என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –

————-

ஸர்வதா அபி கதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி —15-

ஸ்ரீ ராமன் -கடல் நதிகளால் அடையப்படுவது போல் -சாதுக்களால் எப்போதும் தாமாக வந்து அடையப்படுபவன்

நல்லார் நவில் –திரு விருத்தம் -100-
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –

ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் )
சர்வதாபி கதஸ் சத்பி
பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே –
பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –
நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

குஹேந ஸஹிதோ ராமோ லஷ்மணேந ச ஸீதயா –28-

ஸ்ரீ ராமன் கானோடும் லஷ்மணனோடும் சீதையோடும் கூடினான்

ஈட்டில்-ஆடியாடி -பிரவேசம் –கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

———-

ரம்ய மாவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய –30-

பெருமாள் பிராட்டி இலக்குவன் மூவரும் -அழகிய க்ருஹத்தை -பர்ணசாலையைக் கட்டி -காட்டில் -களிக்கின்றவராய் இருந்தனர்-

ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது –2-8-1–அணைவது புணர்வது –
பொதுவான சப்தங்கள் -அணைந்தான் என்று அவனுக்கு பிரதான்யம் –அவன் ஏற்றான் என்று
இவனுக்கு பிரதான்யம் இல்லாமல் அணைவது -இருவருக்கும் பொது -ஆனந்தம் சமம் -மூவருக்கும் என்று காட்டி அருள –
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வெத்தலை பாக்கு இளைய பெருமாள் சேகரித்து பட்ட ஹர்ஷம் -மடித்துக் கொடுத்த ஹர்ஷம் பிராட்டிக்கு -போட்டு அனுபவித்த ஹர்ஷம் பெருமாளுக்கு
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –-நாச்சியார் திருமொழி-14-1-
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

———

நந்தி க்ராமே கரோத் ராஜ்யம் ராமா கமந காங்க்ஷயா –37-

பரதன் -ராமனது வரவில் விருப்பத்தால் நந்திக்ராமம் என்னும் இடத்தில் ராஜ்யத்தை நடத்தினான்-

ஆடியாடி யகம் கரைந்து –2-4-1-முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே –

ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை
பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்

—-

பம்பா தீரே ஹநுமதா சங்கதோ வாநரேண ஹ –56-

ராமன் பம்பை என்னும் தாமரைப் பொய்கையின் கரையில் ஹநுமானுடன் கூடினான்

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!–6-1-1–வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.
ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.

ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம்,
சத்தை நோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.

———-

ததோ வாநர ராஜேந –59-

ஸ்நேஹமான பிறகு குரங்குகளுக்கு அரசனால் -ஸூக்ரீவனால் -வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட விரோதம் முதலியன ராமனுக்குத் தெரிவிக்கப்பட்டன

சங்கரையா –நாச்சியார்-7-7-
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன
 -என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –

க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத்
 –
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்

வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –

—————-

தேந நாதேந மஹதா நிர் ஜகாம ஹரீஸ்வர
அநு மான்ய ததா தாராம் ஸூக்ரீவேண ஸமா கதா
–66-

பெரிய அந்த ஸப்தம் நிமித்தமாக வானர ராஜனான வாலி அந்தப்புரத்தில் இருந்து வெளிக் கிளம்பினான் -அப்போது தாரை என்னும் தனது பத்நியை -நல்ல வார்த்தை சொல்லி சம்மதிக்கச் செய்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்வதற்காக வந்து சேர்ந்தான்
ததா தாராம் அநு மான்ய நிர் ஜகாம -என்று அந்வயம்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்-10-1–எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே

அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் –பெரிய திருமொழி-9-5-8-

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்

நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படுவான் என் என்னில்

ஹரீஸ்வர
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே

வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-திருவிருத்தம் -51 –

வேரித் துழாய் துணையா
நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு –
அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )
சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா
மஹதா –
மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –

நிர்ஜகாம –
புறப்பட்டான் –

ஹரீஸ்வர
பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –

அநுமான்ய-
ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –

ததா-
சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )
பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்

(சுக்ரீவேந ஸமாஹிதா
சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி )

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே
பரமபதம் கிட்டிற்று என்னா-கடுக கால் வாங்கிப் போகப் பாராதே காண் –
பல நாள்கள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின-இவ் உலக வாழ்க்கையை புரிந்து-பார்த்து சிரித்து போரு காண் –
உன்னை வென்றோம் அன்றோ -என்று புரிந்து பார்த்து சிரித்து போரு-
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

அண்டை கொண்ட பலம் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68-
என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ
முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும்
ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –
பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும்
உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-
இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்
இங்கு மற்றை நரகம் -8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

————

அபி ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
–83-

க்ருதார்த்தனாக பெருமாள் தாபம் நீங்கி ஸந்தோஷித்தான்

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!-
6-2-10-

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-
என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.-அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-

———

ராமஸ் ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக –87-

பெருமாள் பிராட்டியுடன் மீண்டும் ஸிம்ஹாசனத்தில் இருந்து அருள -ஜனங்கள் ஹேஹத்தில் மயிர்க்கூச்சலும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அடைந்தனர்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
-7-10-1-

‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே
, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ?

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக:
துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’-என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2
ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக,
அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

—————–

ந ச அக்நி ஜம் பயம் கிஞ்சித் ந அப்ஸூ ஜந்தவ–90-

நெருப்பினால் ஏற்படும் பீதி கொஞ்சம் கூட இல்லை -பிராணிகள் ஜலத்தில் மூழ்கிப் போகிறதும் இல்லை

வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’
-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:– கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

——-

ஸ சாபி ராம பரிஷத் கத சநை புபூக்ஷயா சக்த மந பபூவஹ –4-36-

அந்த ராமனும் மெதுவாக சபையை அடைந்து கொடவிருந்து அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் குசலவர்கள் காநத்தைக் கேட்பதில் மனப்பற்றுள்ளவனாய் இருந்தான்-

வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;

அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”
-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். -அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.-

———

த்ரஷ்டும் சக்யம் அயோத்யாயாம் ந வித்வான் ந ச நாஸ்திக
ஸர்வே நராச்ச நார்யச்ச தர்ம ஸீலாஸ் ஸூ ஸம்யதா
–6-8-

அயோத்யையில் படிப்பில்லாதவன் காணப்பட முடியாது -நாஸ்திகனும் காணப்பட முடியாது -அனைவரும் தர்ம ஸ்வ பாவமுடையவர்கள் -இந்த்ரிய ஜெயமுடையவர்கள் –

கலை இலங்கு மொழியாளர்–பெரிய திருமொழி-8-1-1-

நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில்   சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –

த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-
பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு  வன்னியம் அறுத்து   நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )

அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள்  ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின
-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை  வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –

ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள் 
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –

தர்ம சீலா
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –

——-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –பால காண்டம் -18-31-

சம்பத்தோடு கூடிய லஷ்மணன் வெளியில் உள்ள ராமனின் உயிர் போன்றவன் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை
 –4-4-8-

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான்
-என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

——-

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
-73-33-

மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே –

————-

ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹுந் ருதூந்
மநஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித
-77-32-

திருவாய் மொழி -23- ஈடு பிரவேசம்-ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
அந்த ராமனோ என்னில் -72 ருதுக்கள் -12 வருஷங்கள் -பிராட்டி திரு உள்ளத்தில் சேர்ந்தாரே -தகப்பனார்கள் பார்த்து திருமணம் செய்ததால் -பித்ரு ஹ்ருதயா –ஐயரை கேட்டே பின்பே திருக் கல்யாணம் –
பங்குனி உத்தரத்தில் திருக் கல்யாணம் -ஒன்றாக கலந்தார்களே -ஜானகி மைதிலி வைதேகி சீதா-இயல் பெயர் –
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ் ரோதஸ் ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் – போக உபத்காதம் -தொடக்க நிலை தாண்ட வில்லையே –
பஹூன் ருதூன் –நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு –அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –
கடல் பள்ளியில் நீங்கி –அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மனம் மாறிற்று -இப்பொழுது தான் அவர் அவர் மனஸ் அவர் இடம் வந்தது –

விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்–6-1-9-விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
(இங்கோ நீள் இரவாய் அன்றோ நீண்டு உள்ளது சங்கு ஒலிக்க பிரஸ்துதமே இல்லையே இங்கு )
ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

‘ராம: –
ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும்
மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.

து –
தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரச தாரையிலே இழிந்த பின்பு,

‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத் கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

‘இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,
‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர்,
இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரம பதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில்
ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு
ஒத்தவராக அவதரித்தாரே யாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலை நின்றார்.

‘அதற்கு அடி என்?’ என்னில், இராச புத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.
விஜஹார – (அனுபவ பூவ என்னாமல் விளையாட்டு )பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி.
பஹூ ந்ருதூந் – ‘ஸமா த்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே.

‘ஸமா த்வாதஸ தத்ராஹம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.
‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று,
அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு கால அவயவங்கள் தோறும்
அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,
‘குளிர் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி.

(வசந்த ருது – சித்திரை, வைகாசி – இளவேனிற்கலம்
கிரீஸ்ம ருது – ஆனி, ஆடி – முதுவேனிற்காலம்
வருஷ ருது – ஆவணி, புரட்டாசி – கார்காலம்
சரத் ருது – ஐப்பசி, கார்த்திகை – குளிர்காலம்
ஹேமந்த ருது – மார்கழி, தை – முன்பனி
சசி ருது – மாசி, பங்குனி – பின்பனி)

மநஸ்வீ –
பிரணய தாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம்
யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று.

தத் கத:
திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;
‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், ‘சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ

அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. இது,
இராவண வதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.-இருவர் வார்த்தைகளும்?

தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: –
இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,
‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழ நிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று
எப்போதும் இந்த நினைவே செல்லுகை -அநு சந்தானமே யாத்திரையாக -ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள்.
தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.

தத் கத – என்கையாலே,
இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி-பரதந்தரமாக- சொல்லிற்று

‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே.
அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி பரதந்தரமாக-சொல்லுகிறது.

இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான்
ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading