Archive for February, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 24, 2013

இடர்இன்றி யேஒரு நாள்ஒரு போழ்தில்எல்
லாஉல கும்கழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னும்உடன்
ஏறத்திண் தேர்கடவிச்
சுடர்ஒளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
ஒன்றும் துயர்இலனே.

பொ-ரை : ‘ஒரு நாளிலே ஒரு முகூர்த்தத்திலே, துன்பம் இல்லாமல், எல்லா உலகங்கட்கும் அப்பால் படர்ந்த புகழையுடைய அருச்சுனனும் பிராமணனும் தன்னுடன் ஏறி வரும்படியாகத் திண்ணிய தேரைச் செலுத்தி, ஒளிப்பிழம்பாய் உள்ள தனது பரமபதத்தில் தங்கியிருந்த பிராமணனுடைய பிள்ளைகளைச் சரீரத்தோடும் கொண்டுவந்து கொடுத்த இறைவனை அடைக்கலமாக அடைந்து சிறிதும் துயர் உடையேன் அல்லேன்,’ என்கிறார்.

வி-கு : ‘இன்றி ஏறக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும், ‘கழியக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும் முடிக்க, கொடுத்தவன் – வினையாலணையும் பெயர்.

ஈடு : ஐந்தாம் பாட்டு. 1பிராமணனுடைய புத்திரன் நிமித்தமாகச் சென்ற செலவைக் கூறிக்கொண்டு, ‘இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை,’ என்கிறார்.இடர் இன்றியே – ஒரு வருத்தமும் இல்லாமல். ஒரு நாள் – ஒரே நாளில் செய்யும் தீக்ஷையையுடைய யாகத்திலே. ஒரு போழ்தில் – காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்து நடுப்பகலில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடிப்பதற்கு முன்னே. எல்லா உலகும் கழிய – ஆவரணங்கள் ஏழற்கும் அப்பாற்பட. படர் புகழ் பார்த்தனும் – புகழையுடைய அருச்சுனனும். 1‘மூன்று உலகங்களுக்கும் நாதனும் ஜனார்த்தனனுமான ஸ்ரீ கிருஷ்ணன் எவனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சிநேகிதனாயும் இருக்கிறானோ’ என்கிறபடியே, கிருஷ்ணனையே எல்லாவித உறவுமாகப் பற்றினவன் ஆதலின், ‘படர் புகழ்ப் பார்த்தன்’ என்கிறார். வைதிகனும் – கிருஷ்ணன் திருவடிகளிலே எல்லை இல்லாத பத்தியையுடைய பிராமணனும். உடன் ஏற – தன்னோடே கூட ஏற. திண் தேர் கடவி – இவர்களைத் தேரிலே ஏற்றிக்கொண்டு, காரியத்தின் தன்மை குலையாமல், மூலகாரணமான பிரகிருதி முடிவாகத் தேருக்குத் திண்மையைக் கொடுத்து நடத்தி. 2மண் பிண்டமாய் இருக்கும் நிலையிலும் குடம் தொடர்வதைப் போலே.

சுடர் ஒளியாய் நின்ற – எல்லை இல்லாத ஒளி உருவமாய் ஒரே தன்மையாய் நின்ற. ஒளி – அழகு. தன்னுடைச்சோதியில் – தனக்கே உரியதான சிறப்பையுடைய பரமபதம். அன்றிக்கே, ‘தன்னுடைய ஒளி வெள்ளம் இட்டாற்போன்று இருக்கின்ற பரமபதம்’ என்னலுமாம். 3‘சூரியன் சந்திரன் அக்கினி இவர்களைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டமானது தன்னுடைய ஒளியினாலே தேவர்கள் முதலியோர்களாலும் காண்டற்கு அரியதாகி விளங்குகிறது,’ என்கிறபடியே, ஆயிரம் கோடி அக்கினி ஆதித்தியர்களுடைய ஒளியை ஓடவைத்து ஒரு தேசமாக வகுத்தாற் போலே இருக்கையாலே இவர்களுக்குக் கண்கொண்டு பார்க்க வொண்ணாது; ஆகையாலே, மூலப்பகுதியின் அளவிலே இவர்ளை நிறுத்தி, தன் நிலமாகையாலே தானே போய்ப் புக்கான். தண்ணீரிலே மீன் உலாவுமாறு போன்று தேசிகரே புகவேண்டும் நிலம் அன்றோ அது?

வைதிகன் பிள்ளைகளை – பிரமாணனுடைய புத்திரர்களை. 1உடலொடும் கொண்டு கொடுத்தவனை – காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன். அன்றிக்கே, ‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல். ‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள் ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர்காணும்’ என்று அருளிச்செய்தார். பற்றி ஒன்றும் துயர் இலனே – 2கடலில் நீரை மலையின்மேலே ஏற்றுமதுவே வருத்தமுள்ளது; மலையில் உள்ள நீரைக் கடலுக்குக் கொண்டு வருமன்று ஒரு வருத்தம் இல்லையே? அப்படியே, அங்குப் புக்காரை இங்கே மீட்கையாகிறது அவன் திருவுள்ளத்தோடு சேராதது; இங்குள்ளாரை அங்கே கொண்டுபோகையாயிற்று அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்துவது.புத்திரன் நிமித்தமாக விரும்பியதைப் போன்று அன்றி, சொரூபத்திற்குத் தகுதியாக அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தின செயலை ஆசைப்பட்ட எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார். கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று. ‘ஆயின், கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று. அன்றிக்கே, 2‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, 3‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும், 4‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், 5‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும், 6‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் என்னுதல்.

தாளாற் சகம்கொண்ட தார்அரங் கா!பண்டு சாந்திபன்சொல்
கேளாக் கடல்புக்க சேயினை மீட்டதும், கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தரை மீட்டதும், மாறலவே
மீளாப் பதம்புக்க மைந்தரை நீஅன்று மீட்டதுவே?’

என்றார் திவ்விய கவியும்.

அகடிகடதனா சாமர்த்தியம்
வைதிக புத்திரன் மீட்டிய வ்ருத்தாந்தம்
இடர் இடறி எல்லா உலகும் தாண்டி திண் தேர் கடாவி
தன்னுடைச் சோதி
உடலோடு கொண்டு கொடுத்தான் –
பிறப்பகத்தே -பெரியாழ்வார்
வேத வாய் –அந்தணன் கலியன்
தீஷையில் இருந்த பொழுதில் –
அண்ட கடாகம் தாண்டி
பார்த்தன் -புகழ் கிரிஷ்ணனை சர்வ வித பந்துவாக கொண்ட படர் புகழ்
திண்ணிய தேர் பரம பதம் வரை போகும்
பிரகிருதி பர்யந்தம் போகும் வரை –
சூஷ்ம நிலை அடையாமல்
சுடர் ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமாய்
நின்ற =ஏக ரூபமாய் நின்ற அழியாத
தன்னுடைய காந்தி வெள்ளம் இட்டபடியாய் இருக்கை
ஆயிரம் கோடி அக்னி ஆதித்யன் தேஜஸ் ஓட வைத்து -தேசமாக வகுத்தது போலே –
உள்ளே வந்தால் கண் தெரியாதே வெளியில் நிறுத்தி –
தமஸ் அளவில் இவர்களை நிறுத்தி –
தன்னுடை -தன்னிலம் ஆகையால் ஜலத்திலே மத்ஸ்யம் உலாவுவது போலே
தேசிகரே புக முடியும்
உடலோடு கொண்டு -சௌலப்யம் சேவிக்க பிராட்டிமார் ஆசைப்பட்டு

கொண்டு போகும் படியில் ஒன்றும் குறையாமல் கொண்டு வந்து கொடுத்தான் –
நான்கு குழந்தைகளும் ஒரே வயசாம் திரும்பும் பொழுது
கால தத்வம் நடையாடாத தேசம் என்பதால் –
பட்டர் -உடுத்தின பட்டும் -பூசின மஞ்சள் -இட்ட காதணிகள் -பூணல் உடன்
பிறக்க பிறக்க கொண்டு போனார்கள் ஆனால் இவை எல்லாம் உண்டோ –
கேட்க நஞ்சீயர்
ரிஷி புத்ரர் என்பதால் பிறக்கும் பொழுதே பிறந்தார்கள்
அப்படி செய்தவனைப் பற்றி எனக்கு குறை இல்லை
அங்கு உள்ளாரை கொண்டு வந்தவன் இங்கு உள்ள என்னை கொண்டு போவது கஷ்டம் இல்லை
சமுத்திர நீரை சகயம் ஏற்றுவது
அங்கு புக்காரை இங்கு சேர்ப்பது அவன் திரு உள்ளத்துக்கு சேராது
இங்கு உள்ளாரை அங்கு கொண்டு போக அவன் திரு உள்ளம்
நச புன ஆவர்திதே -சங்கல்பத்தால் செய்யலாம் –
புத்ராதி மீட்டுக் கொடுக்க ஆசை இல்லை
கைங்கர்யம் கேட்கிறேனே கொடுப்பான்
கர்ம சம்பந்தம் அற்று போனதால் மீண்டார்கள் புத்ரர்கள்
கர்ம சம்பந்தம் -நாய்சிமார் தங்கள் ஸ்வா தந்த்ர்யம் காட்ட
அங்கன் அன்றிக்கே
நான் திரும்ப மாட்டேன் –
மீண்டு வரும் துக்கம் இல்லை
இந்நின்ற நீர்மை இனி யான் உறாமை
மங்க ஒட்டு
பாடின ஆழ்வார் மடி பிடித்து கூப்பிடும்படி விரக்தி
எம்பெருமான் ஆசையும் -காதல் கடலில் மிக பெரியதாய்
ஏழு கடலும் -அதனில் பெரிய என் அவா -ஆசை வளர்ந்து போக
துக்க்ம் ஒன்றும் இல்லை

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 24, 2013

பரிவுஇன்றி வாணனைக் காத்தும்என்று அன்று
படையொடும் வந்துஎதிர்ந்த
திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
அங்கியும் போர்தொலையப்
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனைப் பொன்சக்கரத்து
அரியினை அச்சுத னைப்பற்றி யான்இறை
யேனும் இடர்இலனே.

பொ-ரை : அநிருத்தனைச் சிறை வைத்த அக்காலத்தில் ‘வாணாசுரனைத் துன்பம் இன்றிப் பாதுகாப்போம்’ என்று கூறிப் படையோடும் எதிர்த்து வந்த சிவபெருமானும் அவனுடைய மகனான சுப்பிரமணியனும் அதற்கு மேலே நெருப்பும் போரிலே அழியும்படியாக, பொருகின்ற சிறகுகளையுடைய கருடப்பறவையை ஏறிச் செலுத்திய மாயனை, ஆயனை, அழகிய சக்கரத்தையுடைய அரியினை, அடியார்களை நழுவவிடாதவனைப் பற்றி யான் சிறிதேனும் துன்பம் இல்லாதவன் ஆனேன்.

வி-கு : காத்தும் – ஒருமையின்கண் வந்த உயர்வுப்பன்மை. ‘தொலையக் கடாவிய மாயனை’ எனக்கூட்டுக. இலன் – குறிப்பு வினைமுற்று.

ஈடு : நான்காம் பாட்டு. 1‘வேறு தேவர்களைப் பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னுமிடத்தையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் விட்டுக்கொடான் என்னுமிடத்தையும் காட்டின இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

‘பரிவு இன்றி வாணனைக் காத்தும்’ என்றது, 2அநிருத்தாழ்வான் நிமித்தமாகக் கிருஷ்ணன் படை எடுத்துப் புறப்பட்ட அளவில், வாணன் சிவபிரான் பக்கலிலே சென்று, ‘கிருஷ்ணன் நமக்கு எதிரியாக வருகிறான்,’ என்று சொன்னவாறே, ‘தலையில் வைத்த பூ வாடாமல் வருத்தம் அற வாணனைக் காக்கக் கடவோம்’ என்று சொன்னான் ஆயிற்று, வீட்டிற்குள்ளே இருந்து தம்தம் வீரத்தைப் பேசுவோரைப் போலே; 3இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்குவிரதம்’ என்கிறானோ? அன்று – அநிருத்தாழ்வானைச் சிறையில் வைத்த அன்று. படையொடும் வந்து எதிர்ந்த – 1‘தனக்கு வெற்றி நிச்சயம்’ என்று அது காண்கைக்குச் சேனையைத் திரட்டிக்கொண்டு வந்த. ‘முண்டன் நீறன்’ என்ற திருப்பாசுரம் இங்கு அநுசந்திக்கத் தகும். இனி, ‘படை’ என்பதற்கு, ‘ஆயுதம்’ என்று பொருள் கூறலுமாம். ‘சூலத்தைத் தரித்த சிவன், கிருஷ்ணனால் போரில் எழுப்பப்படுகின்ற பல வகையான சப்தங்களைக் கேட்டு மயக்கத்தை அடைந்தான்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

‘தன் வறுமையை முன்னிட்டு அஞ்சலியைக் கொண்டுவந்து கிட்டுதற்குத் தக்க பரம்பொருளை இப்படி ஆயுதத்தோடு எதிர் இடுகைக்குக் காரணம் என்?’ என்ன, ‘திரிபுரம் செற்றமை’ என்கிறார் மேல்: திரிபுரம் செற்றவனும் – முப்புரங்களை எரித்த செயலாலே உண்டான செருக்கினை உடையவன் ஆகையாலே. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 2கடல் கடைகிறகாலத்தில் எட்டு வடிவு கொண்டு நின்று கடைந்தது போன்று, 1முப்புரங்களை எரித்த சமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும், நாணிக்குத் திண்மையாயும், அம்புக்குக் கூர்மையாயும், சிவனுக்கு உள்ளுயிராயும் இருந்து எதிரிகளைத் தலை சாயும்படி செய்து முப்புரத்தை அழித்துக் கொடுத்தான்; அச்செயலை அறியாமல் அறிவில்லாதவர்கள் அதனை அவன் தலையில் வைத்துக் கவி பாட, அதனைத் தானும் கேட்டு ‘உண்மையே அன்றோ’ என்று மயங்கி, ‘அது செய்த நமக்கு இவனை வெல்லத் தட்டு என்?’ என்று வந்து எதிர் இட்டான் ஆயிற்று என்றபடி.

மகனும் – தந்தையான சிவன் வளர்ந்த பின்பு செய்தவற்றைப் 2பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்து இளமறியாய்ப் பெருமிடுக்கனாய்த் தேவசேனாபதியான சுப்பிரமணியனும். பின்னும் அங்கி யும் – அவனுக்குமேல் நாற்பத்தொன்பது அக்கினிகளும். போர் தொலைய – போரிலே மாள. இதனால், ‘சிவபிரான் தன்னை அடைக்கலமாகப் பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக் கொடுத்து ஓடுவான்,’ என்பதனையும், ‘சர்வேசுவரன் தன்னைப் பற்றினாரை எல்லா அளவிலும் பாதுகாப்பான்,’ என்பதனையும் தெரிவித்தபடி.

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை – பகைவர்கள் மேலே பொருகிற சிறகுகளையுடைய பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்ல ஆச்சரியத்தையுடையவனை. இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை 1இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம். – 2‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ? ஆயனை – 3அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே. பொன் சக்கரத்து அரியினை – அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை. 4‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே! நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும் பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே, தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேசுவரன் என்று அறிந்தது. அச்சுதனை – அடியார்களை நழுவ விடாதவனை.

சிவபிரான், தன்னை அடைந்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ? 5சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவன்’ அன்றோ இவன்? தலைமையாவது, வாணனைக் கைம்முதல் அறுத்துத் தலை அழியாமல் வைத்த தலைமை. ஆக, இதனால், அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பு ஏற்கையாலே ‘அடியார்கட்குத் தஞ்சம்’ என்று நம்புதற்குத் தட்டு இல்லை என்று தெரிவித்தபடி. பற்றி யான் இறையேனும் இடர் இலனே – இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.

மோடி யோட அங்கி வெப்பும் மங்கி யோட ஐங்கரன்
முடுகி யோட முருகன் ஓட முக்கண் ஈசன் மக்களைத்
தேடி யோட வாணன் ஆயி ரம்பு யங்கள் குருதிநீர்
சிந்தி யோட நேமி தொட்ட திருவ ரங்க ராசரே!’

என்றார் திவ்ய கவியும்.

சிவன் திரிபுரங்களைச் செற்றது, சர்வேசுவரன் அந்தராத்துமாவாக
இருக்கையால் அன்றோ? அங்ஙனமிருக்க, அது செருக்குக் கொள்ளுதற்குக்
காரணமாயவாறு யாங்ஙனம்?’ என, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘கடல் கடைகிற காலத்தில்’ என்று தொடங்கி. கடல் கடைகிற காலத்தில்
எட்டு வடிவு கொண்டு நின்றதனை,

‘ஓருரு வெற்பைத் தரித்தது; தானவர் உம்பருள்ளாய்
ஈருகு நின்று கடைந்தது; வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமு தோடே பிறந்தது: பெண்மை கொண்டுஓர்
நாருரு நின்றது; அரங்கா! இதுஎன்ன நற்றவமே!’

(திருவரங்கத்து மாலை, 25) என்ற செய்யுளால் உணரலாகும்.

ஆவாய் அதன்கன்றாய் அந்தரியா மிப்பொருளாய்
ஏவாய் நிலைநின்ற எம்பெருமான் – காவானேல்
போரும் பொருமோ? புராந்தகன்என் றேபேரும்
சீரும் பெறுமோ சிவன்?’

என்றார் திவ்விய கவி.

தேவதாந்தரர் பற்றினாரை -தஞ்சம் இல்லை
வாணாசுர வ்ருத்தாந்தம் –
எம்பெருமான் ஒருவனே ரஷகன் –
பரிவின்றி வாணனை காக்கும் என்று சொல்லிய ருத்ரன் -மகன் -அனைவரும் –
விநாயகர் பிரஸ்தானம் ஆழ்வார்கள் பாசுரங்களில் இல்லை –
கரி முகன் –
திருத்தொண்டர் -வாதாபி இருந்து பிள்ளையார் அப்புறம் வந்து சேர்ந்தார் –
பின்னும் அக்நியும் –
புள்ளைக்கடாவிய மாயனை அச்சுதனை
அநிருத்த ஆழ்வானை கத்து
நீ தலையில் வாய்த்த பூ வாடாமல் காப்பேன் என்று –
கிரகத்துக்கு உள்ளே தனது பெருமை பேசிய -வாய் பேச்சு –
ஏதத் வ்ரதம் மம என்கிறானோ –
சக்கரவர்த்தி திருமகன் சொல்லி செய்யவும் வல்லவன் –
சிறை வைத்த அன்று
படை எடுத்து வந்த அன்று –
நாணி வாணனுக்கு இரங்கிய
முண்டன் நீறன் -மக்கள் -வெப்பு மோடி -காளி -அங்கி ஓடிடக் கண்டு –
பாரவஸ்யம் -மயங்கி விழுந்தான் ருத்ரன் -ஆயுதத்துடன் மோகித படி
அஞ்சலி கொண்டு வெல்லாமல் ஆயுதம் கொண்டு எதிரிட்டு
திரிபுர தகனம் செய்தோம் என்ற போலி கர்வத்துடன்
அதுவும் இவன் சகாயத்தால் செய்தோம் என்ற நினைவு இன்றி –
கடல் கடையும் பொழுது எட்டு வடிவம் கொண்டது போலே திரிபுர
வில்லு க்கு மிடுக்கு -நாணுக்கு பலம் -தான் பூட்டிய நாண் தனது கழுத்தை அறுக்காமல்
இருக்கவும் இவன் வேண்டுமே –
அஞ்ஞர் இவன் தலையில் வைத்து கவி பாட -இவனும் தானே செய்தோம் பிரமித்து

ஆபத்து என்றதும் தான் ஓடும் -என்று காட்டி
சர்வேஸ்வரன் எல்லா அளவிலும் ரஷிக்கும்
மகனும் -பிதா செய்ததை பருவம் வருவதருக்கு முன்பே தேவ சேனாபதியாய் –
சுப்ரமண் யனும் ஓடி 49 அக்னி தேவதையும் ஓட
பொறு சிறை புள் -கடாவிய மாயன் –
இறக்கையால் முடிக்கும் கருட ஆழ்வான்
வாணனை முடித்த -கரம் கழித்த ஆய மாலை
இவன் வென்றது தன்னை தாழ விட்ட எடுத்தில்
பொன் சக்கரத்து -கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹவ் -கொண்டாடி
அச்சுதன் நழுவ விடாதவன்
சடையான் ஓட –
தலைவன் -வாணனை கை முதல் அழித்து தலை காத்த தலைவன்
அநிருத்த ஆழ்வான் மேல் விட்ட அம்புகளை தான் ஏற்று கொண்டு
இவன் பற்றின எனக்கு அல்ப துக்கமும் இல்லை
சிறையில் பேரன் என்பதால்
அடியேன் என்றதால் எனக்கு அதுவும் இல்லை
தாசத்வம் இருந்தால் இறையாகிலும் இடர் இல்லை

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 24, 2013

முட்டுஇல்பல் போகத்து ஒருதனி நாயகன்
மூவுல குக்குஉரிய
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்
கனியைக் கரும்புதன்னை
மட்டுஅவிழ் தண்அம் துழாய்முடி யானை
வணங்கி அவன்திறத்துப்
பட்டபின் னைஇறை யாகிலும் யான்என்
மனத்துப் பரிவுஇலனே.

பொ-ரை : ‘தடை இல்லாத பல போகங்களையும் மூன்று உலகங்கட்குமுரிய ஒப்பற்ற முதன்மையையுமுடைய இறைவனை, வெல்லக்கட்டியை, தேனை, அமுதை, நல்ல பாலினை, பழத்தினை, கரும்பினை, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனை வணங்கி, அவனிடத்தில் அடிமைப்பட்ட பின்னர் யான் என் மனத்தின்கண் சிறிதும் துன்பமுடையேன் அல்லேன்’ என்கிறார்.

வி-கு : மட்டு – தேன். இறை – சிறிது. ‘மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன்’ என மாறுக. ‘மூவுலகுக்கு உரிய கட்டியை’ எனக் கட்டிக்கு அடைமொழி ஆக்கலுமாம்.

ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘சர்வேசுவரனுடைய இனிமையைச் சொல்லுவதால் உண்டாகும் பிரீதியின் நிர்ப்பந்தத்தாலே அவனுக்கு அடிமை செய்கையிலே இழிந்த எனக்குச் சிற்றின்ப விஷயங்களின் ஆசையால் வரும் மனத்தின் துக்கம் இல்லை,’ என்கிறார்.

முட்டு இல் பல் போகத்து மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன் – சில நாள் சென்றவாறே 2முட்டுப்படுதல் இன்றி, எல்லை இல்லாத இன்பங்களை உடையவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாத தனி நாயகன். என்றது, 3‘எந்த நாதனால் மூன்று உலகமும் நல்ல நாதனை உடையன ஆகுமோ, அந்த இராமபிரான் தகுந்த நாதன்,’ என்கிறபடியே, 4தன்னை நாயகன் என்றால், பின்னர் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கை. பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’அன்றிக்கே, 2‘மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை’ என்று கூட்டலுமாம். இதனால், இனிமையும் எல்லார்க்கும் பொதுவாய் இருக்கையைத் தெரிவித்தபடி. 3‘அந்தப் பரம்பொருள் சுவை உருவம்’ என்கிறபடியே, உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய் இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார். ‘தேனை’ என்கிறார், கட்டியின் வன்மை தவிர்ந்திருத்தலின். சாவாமல் காப்பதுமாய் வேறுபட்ட சிறப்பையுடைய இனிய பொருளுமாய் இருத்தலின், ‘அமுதை’ என்கிறார். ஞானிகள் அல்லாதார்க்கும் இனியனாய் இருத்தலின், ‘பாலை’ என்கிறார். கண்ட போதே நுகரலாம்படி பக்குவமான பலமாய் இருத்தலின், ‘கனியை’ என்கிறார். கைதொட்டுச் சுவைப்பிக்க வேண்டும் குற்றம் இன்றி இருத்தலின், ‘கரும்புதன்னை’ என்கிறார். மேற்கூறியவை எல்லாம் உவமையாகத் தக்கன அல்ல ஆதலின், அவ்வப்பொருள்களையே சொல்லுகிறார். ‘சர்வரஸ:’ என்பது மறை மொழி. ஆக, இவருடைய அறுசுவை இருக்கிறபடி.மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை – தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடையவனை. இதனால் அடைப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைத் தெரிவித்தபடி. வணங்கி அவன் திறத்துப்பட்ட பின்றை – 1காலயவனவன் சராசந்தன் முதலியவர்களைப்போன்று படைவீட்டை அடைமதிட்படுத்தி வந்து கிட்டுதல் அன்றி, முறையிலே அவன் பக்கலில் சேர்ந்த பின்பு. இதனால் ‘வணங்கிக் கொண்டு அவன் திருவடிகளிலே கிட்டுதல் அடியவனுக்குச் சொரூபம்’ என்பதனைத் தெரிவித்தபடி. இறை ஆகிலும் – மிகச் சிறிதாயினும். யான் மற்றைப் பொருள்களிலே விருப்பம் இல்லாத யான். என் மனத்துப் பரிவு இலன் – 2‘இந்த ஆத்துமாவானது ஆனந்த உருவமான பரம்பொருளை அடைந்து ஆனந்தத்தை உடையதாகின்றது,’ என்கிறபடியே, ‘பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.

காலயவனன் : இவன், யவன தேசத்து அரசன்; சராசந்தன்: இவன்,
மகததேசத்து அரசன்; இவர்கள் யாதவர்மேற்படை எடுத்தற்காக வந்து,
மதுரையை முற்றுகையிட்டனர்; இவர்களுடைய துன்பத்தினின்றும்
யாதவர்களை நீக்குவித்தற்காகவே மேலைச்சமுத்திரத்தில் துவாரகை என்ற
நகரை உண்டாக்கினான் கண்ணபிரான்.

‘மறியா எழுந்திரை மாநீர் மதுரையில் மன்னவரைக்
குறியா தவன்படை வந்தஅந் நாள்செழுங் கோகனகப்
பொறியா டரவணைத் தென்னரங் கா!ஒரு பூதரும்அங்கு
அறியா வகைத்துவ ராபதிக் கேஎங்ஙன் ஆக்கினையே?’

ப்ரீதி பலாத்காரத்தால் –
அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
சூத்திர விஷய ஈடுபாடு அற்று இருந்தேன்
ரச பதார்த்தங்கள் அனைத்தையும் சொல்லி
வணங்கி ஈடுபட்ட பின்னர் பரிவிலேன் -குறை இல்லை
முட்டு இல் பல் போகத்துக்கு ஒரு தனி நாயகன் –
முட்டுக்கட்டை இல்லை -அசந்க்யேமான
அத்வீதீயமான -இரண்டாம் விரலுக்கு அநாமி கா -சமஸ்க்ருதம் -மோதிர விரல் –
அங்குஷ்டம் கட்டை விரல்
பெயர் இல்லாத விரல் என்று அர்த்தம் அநாமிகா –
பகவான் எண்ணி சமமான ஒருவர் இல்லை –

பிரமாதிகளுக்கும் -அதிபதி பதினான்கு லோகங்கள்
இவன் ஒரு தனி நாயகன் -ஒப்பு பாலுண்ணி -மகா வருஷம் போலே
கள்ளிச் செடி =மகா வருஷம் -நாயகன் அல்லாதவருக்கும் நாயகன்
மூ உலகுக்கு உரிய தனி ஒரு நாயகன் கூட்டி –
முட்டில் பல் போகம் ஐஸ்வர்ய கைவல்ய வ்யவர்த்தி –
மூவருக்கும் உரிய நாயன் -த்ரைலோக்ய நாதன் பெருமாளை தசரதன்
சர்வ லோக சரண்யாய விபீஷண ஆழ்வான் -என்னோபாதி உங்களால் சொல்ல முடியாது
அன்றிக்கே
மூவுலகுக்கு உரிய கட்டி
மூவுலக்குக்கு உரிய தேன்
என்றும் கொண்டு
கட்டி -ரச கணம் உள்ளும் புறமும்
தேனை -காடினயம் தவிர்ந்து நக்கி உண்ணலாம்
அமுதை -சாவா மல் காத்து
நன் பாலை -அனைவருக்கும் கிட்டும்படி -நன்மை எங்கும் கொண்டு –
நன் கட்டி நல தேனை -அர்த்தம் கொண்டு
கனியை கண்ட போதே நுகரும்படி
கரும்பு தன்னை கை தொட்டு உண்ணா வேண்டாதபடி
ரசங்கள் -சர்வ ரச வேதாந்தம்
தன்னை -திருஷ்டாந்தம் சொல்லி முடியாமல்
இவருடைய ஷட்  ரசம் இருந்தபடி –
மது செவ்வி திருத் துழாய் சூடியவனை
வணங்கி -சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்
காளயவன ஜராசந்தன் -போல்வார் படை எடுத்து வர –
துவாராகை போனார் பெருமாள் –
முறையிலே அவன் பக்கல் அன்வயித்த பின்பு
ஆனந்தீ பவதி -முக்தர் போலே இங்கேயே குறை இன்றி
குறை யற -அனுபவிக்க -துக்கம் இன்றி –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 24, 2013

குறைவுஇல் தடம்கடல் கோள்அரவு ஏறித்தன்
கோலச்செந் தாமரைக்கண்
உறைபவன் போலஓர் யோகுபுணர்ந்த ஒளிமணி
வண்ணன் கண்ணன்
கறைஅணி மூக்குடைப் புள்ளைக் கடாவி
அசுரரைக் காய்ந்தஅம்மான்
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யான்ஒரு முட்டுஇலனே.

பொ-ரை : ‘குறைவு இல்லாத பெரிய பாற்கடலிலே வலிமை பொருந்திய ஆதிசேடன்மேல் ஏறி, தனது அழகிய செந்தாமரை மலர் போன்ற கண்களாலே உறங்குகிறவனைப் போன்று ஒப்பற்ற யோகத்தைக் கூடிய, ஒளியையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான், கறை தோய்ந்த மூக்கையுடைய கருடப் பறவையைச் செலுத்தி அசுரரைக் கொன்ற அம்மான், அவனுடைய நிறைந்த புகழை ஏத்தியும் பாடியும் ஆடியும் செல்கின்ற நான் ஒரு தடையினை உடையேன் அல்லேன்,’ என்கிறார்.

வி-கு : ‘ஏறிப் புணர்ந்த வண்ணன்’ என்றும், ‘கடாவிக் காய்ந்த அம்மான்’ என்றும் கூட்டுக. ‘பொருள் சேர் புகழ்’ ஆதலின், ‘நிறைபுகழ்’ என்கிறார்.ஈடு : இரண்டாம் பாட்டு. 1முதற்பாசுரத்தில் திருவவதாரங்களைச் சொன்னார்; இப்பாசுரத்தில், ‘திருவவதாரத்துக்கு மூலமாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்து, அங்குநின்றும் ஸ்ரீ வசுதேவ குமாரனாய் வந்து திருவவதாரம் செய்து, அடியார்களுடைய பகைவர்களை அழியச்செய்த கிருஷ்ணனுடைய புகழைப் பேசப்பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை,’ என்கிறார்.

தடம் கடல் – குறைவு இல்லாமல் கண்வளர்ந்தருளுவதற்கு இடமுடைத்தான கடல். ‘தடம் கடல்’ என்றவர், ‘குறைவு இல் தடம் கடல்’ என்கிறார்; ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, 2‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று, அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. 3யசோதைப்பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக்கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை. இதனால், ‘நானே அன்று; என்னிலும் குறைவு அற்றார் உளர்’ என்றபடி. கோள் அரவு ஏறி – திருமேனியினுடைய பரிசத்தால் தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியை உடையனான திருவனந்தாழ்வான் மேலே ஏறி. கோள் – ஒளி. அன்றிக்கே, ‘‘கோள்’ என்று மிடுக்காய், சர்வேசுவரனும் சர்வேசுவரியும் கூடித் துகையாநின்றால் பொறுக்கைக்கு ஈடான, தரிக்கும் ஆற்றலையுடைய திருவனந்தாழ்வான்’ என்னலுமாம். 5‘சிறந்த ஞானத்துக்கும் ஆற்றலுக்கும் இருப்பிடமான ஆதிசேடன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். மென்மை நாற்றம் குளிர்த்தி இவற்றை இயற்கையாக உடையவன் ஆதலின், ‘அரவு’ என்கிறார்.தன் கோலம் செந்தாமரைக்கண் உறைபவன் போல – 1வெறும்புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய், எல்லாச் செல்வங்கட்கும் அறிகுறியாய், பெரிய பிராட்டியாருடைய கலவியால் வந்த ஆனந்தத்திற்கு அறிகுறியாய், அப்போது அலர்ந்த செவ்வித்தாமரையை உவமை சொல்லலாம்படி அழகியதாய்ச் சிவந்து இருந்துள்ள திருக்கண்கள். கண் உறைகை – கண் வளர்ந்தருளுகை. என்றது, கண்ணுறங்குதல் என்று பேராய், உலகத்தைக் காக்கும் சிந்தனையோடு கூடியவனாய் இருத்தல். ஓர் யோகு புணர்ந்த – ‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக் கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தல்; அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே 2‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக் கூறுகிறார்’ என்னலுமாம். இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:

ஒளி மணி வண்ணன் கண்ணன் – ஒளியையுடைய நீலமணி போலே இருக்கிற வடிவையுடைய கிருஷ்ணன். ‘காக்கப்படும் பொருள்களைத் தன் வடிவழகாலே கரைமரம் சேர்க்கைக்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்’ என்றபடி. 3‘ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோ’ என்றார் பட்டர்பிரானும். கறை அணி புள்ளைக் கடாவி – பகைவர்களைக் கொன்று, கறை கழுவக் காலம் இல்லாது இருத்தலின் கறை ஏறி அதுவே ஆபரணமாக இருக்கும் மூக்கையுடைய புள்ளைச் செலுத்தி. அன்றிக்கே, ‘கறை அணி புள்’ என்பதற்குத் தாயான விந்தை, ‘புத்திரன் முகம் காணவேண்டும்’ என்னும் ஆசையின் மிகுதியாலே முட்டையாய்இருக்கிற பருவத்தில் ஒரு காரியத்தைச் செய்தாளாய், அத்தால் ஓர் அடையாளம் பிறந்து, அவ்வடையாளம், எம்பெருமானுக்கு இருக்கும் ஸ்ரீ வத்ஸத்தைப் போன்று ஆபரணமாய் இருத்தலின், அதனை ஆபரணமாக உடைய புள் என்னலுமாம். திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார். 1‘தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?

அசுரரைக் காய்ந்த – இப்படிப் பெரிய திருவடியை நடத்தா நின்றுகொண்டு அசுரக்கூட்டங்களை அழிப்பித்த. ‘அடியாருடைய இன்பத்துக்குக் காரணமாக இருக்கும் கருவியே அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதற்கும் கருவி’ என்கை. அம்மான் – இப்படிச் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்கும் 2நிருபாதிக சேஷி. நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.

திருவவதாரங்கள் முதலில் சொல்லி
கந்தமான -மூலமான வ்யூஹ மூர்த்தி -ஏஷ நாராயண ஸ்ரீ மான் ச்லோஹம் –
விட்டு மதுராபுரீம் -வந்த -வேர் போன்ற -திருபாற்கடலில் கண் வளர்ந்து
வாசுதேவ குமாரான கண்ணன் -அவனை பாடி ஒரு குறை இல்லை என்கிறார் இதில் –
குறைவிலாத திருபார்க்கடல் -யோக நித்தரை -ஒளி மணிவண்ணன்
கறை அணி மூக்கு -புள்ளூர்ந்து -த்வம்சம் செய்து கறை படிந்த
நிறை புகழ் ஏத்தியும் பாடியுமாடியும் –
யான் குறை இல்லை -திருப்பாற்கடல் குறை இன்றி
ஆளும் கரும் கடலே -திரு மேனி தீண்டப் பெற்ற பாக்கியம் பெற்றதால்
யசோதை பிராட்டி மடியில் வைத்து ஹர்ஷித்தல் போலே
தொல்லை இன்பத்து இறுதி கண்டது போலே
விகாசம் -தாளும் முடிகளும் -இடமுடைத்தான
நிரவதிகதேஜஸ் -கோள் -மிடிக்கு என்றுமாம்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் கூடித் துகையா நின்றாள் பொறுத்துக் கொள்ளும் மிடுக்கு
பிரக்ருத விஞ்ஞானம் பலம் கொண்ட அரவு -ஏகதாம -ஒரே இருப்பிடம் ஆளவந்தார்
மென்மை குளிர்ச்சி நாற்றம் இயற்கையாக உடையவன்
வெறும் புறத்தி;ல் ஆலத்தி -செவ்வித் தாமரை உவமை சொல்லும்படி செம்தாமரைக் கண்
சர்வேஸ்வர ஸூ சகம்
பெரிய பிராட்டி செர்த்தியால் ஹர்ஷிது சிவந்த திருக்கண் கள்
கண் வளர்ந்து அருளுகை பேராய் யோகு புணர்ந்த
ரஷன உபாய சிந்தனை பண்ணி அனுசந்தானம் -நாக்கு உலர –
தன்னைத் த் தானே -ஆத்மாநாம் வாசுதேவாக்யம் சிந்தையே -அனுசந்தித்து –
கற்ப்பூர –
சாயைப் போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
குளிர்ச்சியாக பாட வல்லார்
பாதுகை தலைமேல் வைத்து அர்த்தம் எம்பார் -எம்பெருமானார் அருளிச் செய்தார்
பாட வல்லார் நிழல் போன்ற அணுக்கர்கள் ஆவார் –

தன்னை அனுசந்ததால் ரஷன உபாயம் தோற்றும்
கரைக்கு போய் சேர கலங்கரை விளக்கம் –
கரையில் மரம் விளக்கு முதலில்
அப்புறம் கட்டடம் –
கரை மரம் சேர்க்க கிருஷ்ணன்
ஆள் கொள்ள ஆயர் கோன்
ஒளி -நீல மணி வண்ணன்
கிருஷ்ணன்
கறை அணி -பிரதிபஷ நிரசனம் -ஆபரணமாக கொண்ட மூக்கு
விநதை -தாயார் விசனம் -புத்திர முகம் காண முட்டை வெட்டி -அடையாளம் பிறந்து
எம்பெருமான் ஸ்ரீ வத்சம் போலே ஆபரணமாக கொண்ட
புள்ளைக் கடாவி -ரதாதிகளை நடத்துவதை போலே
நிமிர்ந்து வடிப்பிட்டு -திருமேனி ஸ்பரசத்தாலே மயங்கி இருக்க -இவன் கடாவி
அசுரரை காய்ந்த அம்மான் –
காலால் உதைத்து நடத்தி -ஆளவந்தார் ஸ்லோகம் –
திருவடி அடையாளம் -அங்க சோபினா –
பெரிய திருவடியை நடத்திக் கொண்டு ஆசுர வர்க்கத்தை -கடாவி
போக உபகரணம் -கர்ட ஆழ்வான் -விரோதி நிரசன்னா பரிக்க்ரகம்
சிரியத்தை பெரியது  நலிவாமல் -majarity -minority நலிவாமல் –
அசுரர் த்ர்வர்களை நலியாமல் –
ஆடியும் பாடியும் –
முட்டு இலேன்
பிரதிகதி தடை இல்லை விலங்கு இல்லை

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 20, 2013

பத்தாந்திருவாய்மொழி – ‘சன்மம் பலபல’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள் மீளாது ஒழிய, ‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன்முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்; ‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான அளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 2‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே, தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்; தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து, அவர்கள் கேட்டினைக் கண்டவாறே தமக்கு ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவுதானே பேறாய்த் தோன்றிற்று.

அதற்கு மேலே, ‘அடியார்களின்பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த 3திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த திவ்விய செயல்களையும் வடிவழகையும் ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள்சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநாசாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை
நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும், ‘மாளப்படைபொருத’
என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும். ‘எங்கும் அழகு
அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும், ‘மட்டவிழ்
தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’
என்றும், ‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம்
பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும், ‘துக்கம் இல்
ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா
சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்
சங்கொடு சக்கரம்வில்
ஒண்மை யுடைய உலக்கைஒள் வாள்தண்டு
கொண்டுபுள் ஊர்ந்துஉலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
மாளப் படைபொருத
நன்மை உடையவன் சீர்பர வப்பெற்ற
நான்ஓர் குறைவுஇலனே.

பொ-ரை : ‘பல பல பிறவிகளை எடுத்துக் கண்களுக்குப் புலனாகி, சங்கம் சக்கரம் வில் ஒளி பொருந்திய உலக்கை ஒளி பொருந்திய வாள் தண்டு இவற்றைக் கையில் தரித்துக்கொண்டு, கருடப்பறவையினை வாகனமாகக் கொண்டு, வலிமை பொருந்திய அரக்கர்களும் அசுரர்களும் படைகளோடு இறக்கும்படி போர் செய்த நன்மையையுடைய சர்வேசுவரனுடைய நற்குணங்களைத் துதிக்கப்பெற்ற நான், ஒரு குறையும் இல்லாதவனேயாவேன்’ என்கிறார்.

வி-கு : ‘செய்து வெளிப்பட்டுக் கொண்டு பொருத நன்மையுடையவன்’ என்றும், ‘ஊர்ந்து பொருத நன்மையுடையவன்’ என்றும் கூட்டுக. ‘மாளப் பொருத’ என்க. இப்பாசுரத்தில் இறைவனுடைய ஐந்து ஆயுதங்களும் கூறப்பட்டிருத்தல் காணலாம். உலக்கை – பலராமனுக்குரிய படை. இச்செய்யுள் இனவெதுகையாய் அமைந்தது.

ஈடு : முதற்பாட்டில், 1இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்; ‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடை நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.என்றது, ‘இனியது விஞ்சின இடங்களில் மிகவும் ஆழங்காற்படுகைக்கு உடலாமித்தனை அன்றோ?’ என்றபடி.

ஓர் அவதாரத்தைச் சொன்னால், 1‘எத்திரம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ?அதனால், ‘பல’ என்கிறார். ‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார். தன்னுடைய பிறவிகளைத் தானே சொல்லப் புக்காலும் 2‘பஹூநி – பல’ என்னும்படி அன்றோ இருக்கிறது? ஆக, கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி. அன்றிக்கே, ‘தேவர்கள் முதலான பிறவி பேதங்களையும் 3அவாந்தர பேதங்களையும் கருதிப் ‘பலபல’ என்கிறார்,’ என்னலுமாம். தோன்றுகிற அளவேயன்றி, கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தால், 4‘பிறகு பன்னிரண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில் நவமி திதியில் ஸ்ரீராமனைப் பெற்றாள்’ என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து வந்து அவதரித்தானாதலின், ‘செய்து’ என்கிறார். 5‘பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப்பாங்கினால்’ என்றார்கள் அன்றோ பெற்றவர்களும்?

அன்றிக்கே, 6‘உலகிற்கு எல்லாம் தமப்பனான சர்வேசுவரன், தனது ஒவ்வொரு பிறவியிலும் தன் புத்திரர்களைத் தான் தமப்பனாக உடையவனாய் இருக்கிறான்; அந்தச் சர்வேசுவரனுடைய அவதாரத்தின் பெருமையை அறிவில்லாதவர்கள் அறியார்கள்,’ என்கிறபடியே, ‘எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் என்னலுமாம்.

வெளிப்பட்டு – 7‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது, ‘இச்சரீரத்தோடு சம்பந்தம் இல்லாத கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை. 1‘என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’ என்றபடி. 2‘எப்போதும் செல்லுகிற இடத்தில் நிதி கண்டு எடுப்பாரைப் போன்று, இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கி வந்து அவதரிக்கின்றான்’ என்பார், ‘வெளிப்பட்டு’ என்கிறார். சங்கொடு சக்கரம் வில் ஒண்மையுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு – இதனால், 3அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

4‘ஸ்ரீ சத்துருக்நாழ்வான், அப்போது தாய் மாமனான யுதா ஜித்தினுடைய வீட்டிற்குச் செல்லுகின்ற ஸ்ரீ பரதாழ்வானால் அழைத்துச் செல்லப்பட்டார்,’ என்கிறபடியே, இறைவனை விட்டுப் பிரியாத ஒற்றுமையைத் தெரிவிப்பார், ‘சங்கொடு’ என்கிறார். ‘நல்லாரைக் காத்தற்கும் பொல்லாரைப் போக்கற்கும் சங்கு ஒன்றே போதியதாக இருக்க, சக்கரத்தையும் கொண்டு வந்தான்’ என்பார், ‘சங்கொடு சக்கரம்’ என்கிறார். ஒரு கொத்துக்கு ஒருவரைக் கொண்டு வருதலோடு அமையாது, வில்லையும் கொண்டுவந்தானாதலின், ‘சக்கரம் வில்’ என்கிறார். கருதும் இடம் பொரும்படி ஞானத்தாலே மேம்பட்டிருப்பவர்களாதலின், ‘ஒண்மையுடைய உலக்கை’ என்கிறார். ஒண்மை – அறிவு.

5
கையில் திவ்விய ஆயுதங்களைக் கண்டால், ‘இவற்றைப் போருக்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்,’ என்றுஇருப்பர்கள் சமுசாரிகள்; அவ்வாறு அன்றி, நித்தியசூரிகள், ‘அழகிற்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்’ என்று இருப்பர்கள்; இவரும் அவர்களிலே ஒருவர் ஆகையாலே, அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு. 1‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’ என்றபடி. ஆக, இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்தியசூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும், அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், 2‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.

புள் ஊர்ந்து – இதுவும் ஒரு சேர்த்தி அழகு; 3பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போன்று அன்றோ இருப்பது? உலகில் – இவ்வழகுதான் ஒரு தேசவிசேஷத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்குமது அன்றோ? அங்ஙனம் இருக்கவும் அவ்வழகினை இங்கே அனுபவிக்கும்படி செய்தானாதலின், ‘உலகில்’ என்கிறார். வன்மையுடைய அரக்கர் அசுரரை – இவ்வழகைக் கண்டு நெஞ்சு நெகிழாதவர்களான இராக்கதர்களையும் அசுரர்களையும். 4தமக்கு நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகுகின்றதாதலின், இவ்விஷயத்தில் தம்முடைய மென்மை போன்று எல்லார்க்கும் இருக்குமோ என்பார்,-அரக்கர்களுக்கு நெஞ்சு நெகிழ்ச்சி இல்லாமை சித்தமாயிருக்க,
‘வன்மையுடைய’ என்று விசேடிப்பதற்குத் தாத்பர்யம் அருளிச்செய்கிறார்,
‘தமக்கு நினைதொறும்’ என்று தொடங்கி.

‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு நெடிந்துகும்!
வினைகொள்சீர் பாடிலும் வேம்எனது ஆருயிர்!
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை என்னப்பா!
நினைகிலேன் நான்உனக்கு ஆட்செய்யும் நீர்மையே!’

என்பது இவருடைய ஸ்ரீசூக்தி,

‘வன்மையுடைய அரக்கர்’ என்கிறார். அவனைக் காணாத போது ‘ஈஸ்வரோகம் – ‘ஈசுவரன் ஆகின்றேன்’ என்று இருக்கலாம்; திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் என்றபடி.

மாளப் படை பொருத – அவர்கள் முடிந்து போம்படி ஆயுதத்தாலே பொருத. அன்றிக்கே, ‘போர்க்களத்தே பொருத’ என்னலுமாம். நன்மை உடையவன் – 1போர்க்களத்தில் ஆரோத மடித்தல் ‘தன்னுடைய பிள்ளைகள்’ என்று அன்பு பாராட்டுதல் செய்யாதே, ‘அடியார்களுக்குப் பகைவர்கள் என்று அழியச்செய்த நன்மையுடையவன். அன்றிக்கே, நன்மையாவது – நினைவினாலே செய்யாமல், அவதரித்துப் போரைச் செய்து முடித்த நன்மை ஆகவுமாம். 2‘மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதோ!’ என்றார் அன்றோ இவர்தாம்? ‘அடியார்கட்குப் பகைவர் என்று அழித்தாலும், அது கொலை அன்றோ?’ எனின், யாகத்தில் செய்யப்படுகின்ற உயிர்க்கொலைகளில் கை கூசினான் ஆகில், பிராயஸ்சித்தம் பண்ண வேண்டும் என்னாநின்றதே அன்றோ? நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற நான் – அவனுடைய மங்களம் பொருந்திய நற்குணங்களை முறை கேடாகச் சொல்லப்பெற்ற நான். பரவுதல் – அடைவு கெடக் கூறுதல். ஓர் குறைவு இலன் – ஒரு குறையும் உடையேன் அல்லேன்.முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல், அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல், சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல். ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின், ‘ஓர் குறைவிலன்’ என்கிறார். அன்றிக்கே, 2‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே, ‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப்பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற பொருளை’ என்றது, ‘பகவானைத்
துதி செய்தற்குத் தகுதியான உறுப்புகளையுடையராகப் பெறுகையாலே
உண்டான உவகையராதல் ஆகிற பொருளை’ என்றபடி. இப்பாசுரத்திற்கு
நான்கு வகையில் அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘சங்கொடு சக்கரம்
வில் ஒண்மையுடை உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு சன்மம் பலபல
செய்து வெளிப்பட்டவன் சீர் பறவப்பெற்ற நான் ஒரு குறைவிலன்,’ என்று
கொண்டுகூட்டி முதல் அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘அரக்கர் அசுரரை
மாளப்பொருத’ என்றதிலே நோக்காக இரண்டாவது அவதாரிகை
எழுதப்படுகிறது. ‘சன்மம் பலபல செய்து வெளிப்பட்ட நன்மையுடையவன்’
என்றதிலே நோக்காக மூன்றாவது அவதாரிகை அருளிச்செய்கிறார்;
‘நன்மையுடையவன்’ என்றதிலே நோக்காக நான்காவது அவதாரிகை
அருளிச்செய்கிறார்.

இதர ஸ்தோத்ரம் பன்னுவதருக்கு தகுதி அற்ற கரணங்கள்
பகவத் ஸ்தோத்ரம் செய்ய கரணங்கள்
முடியானே போட்டிப் போட்டிக் கொண்டு அனுபவிக்க கோலி
பெ ரு விடாய் பட்டு கூப்பிட்டார்
சம்சாரிகள் உலக விஷயத்தில் கூப்பிட்டதை -கண்டவாறே
தமது இழவு -பேறாக தோன்றிற்று
ஆஸ்ரித -சம்சாரிகள் ஒத்த சஜாதீயனாக அவதரித்து –
கர்மவச்யர் போலே படாதன பட்டு -செஷ்டிதன்கள் -வடிவு அழகு -ஆபரண
சேர்த்தி அழகு -திவ்ய ஆயுத அழகு

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை
நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும், ‘மாளப்படைபொருத’
என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும். ‘எங்கும் அழகு
அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும், ‘மட்டவிழ்
தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’
என்றும், ‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம்
பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும், ‘துக்கம் இல்
ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா
சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.
முதல் பாசுரம் நிதான பாசுரம் –

அநேக அவதாரங்கள் செய்து -அவதார அடி அறிந்துபரத்வதில் போக மாட்டாமல்
ஜன்ம கர்ம மே திவ்யம் தானும் நெஞ்சு உருகி
பிறந்தவாறும் வித்தராய்
ஞானி -பகவான் -ஞானாதிகர் மூவரும்
பிரபன்னர்கள் ஞானாதிக்யத்தால் -மூவரும் உண்டே ஸ்ரீ வசன பூஷணம்
பரவசம் அடைந்து -ஞான ஆதிக்யம் -இருந்ததால் ஆழம் கால் பட ஹேது

எத்திறம் மோகிக்கிறார் ஒன்றிலே
பல பல பொறுக்க மாட்டாரே
கர்ம வசய பிறவிக்கு எல்லை கண்டாலும் கிருபை அடியாக அவதாரம்
எல்லை இல்லையே
அனுக்ரகதுக்கு அவதி இல்லையே -பல பல என்கிறார் –
தானே சொல்லப் புக்கிலும் பஹு
தேவாதி யோநி -அவாந்தர பேதம் -மீன் ஆமை
வமான ஷத்ரிய மனுஷ்ய அவாந்தர
செய்து -ஆவிர்பாவம் அன்றிக்கே -ஏறி உட்காராமல்
பன்னிரண்டு மாதம் கற்ப வாசம் செய்து
பன்னிரண்டு திங்கள் வயிற்றில்
புத்ரர்களில் ஒருவனை பிதாவாக கொண்டு
அவன் சொன்னபடி கேட்டு
அடங்கி நின்று -செய்து
ஸு கார்யம் -பிள்ளையாக பிறந்து -செய்து
வெளிப்பட்டு -அடங்கி வைத்ததை காட்டி
உபநிஷத் கண்ணால் காண முடியாது
கண்ணுக்கு இலக்காக்கி
சகல மனுஷ –
நிதி கண்டு எடுப்பாரைப் போலே
எடுத்த பேராளன் நந்த கோபன் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் இதர சஜாதீயம் ஆக்கி
வந்து அவதரிக்கை

மாம்ச சஷுச்சால் காண முடியாதவிஷயத்தை கண்ணுக்கு இலக்காக்கி வெளிப்பட்டு
சங்கோடு சக்கரம் -பஞ்ச ஆயுதம்
பிரியாத -கச்சதா மாதுல குலம் போலே
ராஜா கருப்புடுத்தால் அந்தரங்கரும் கருப்புடுப்பார்
சங்கு சக்கர கதா தர அவதாரத்திலும்
அடியார் குழாம் களை உடன் கூட -பிரார்த்திக்க –
அதே போலே வந்து அவதரிக்கிறான்
ஒன்றே அமைந்து இருக்க –
ஒரு கொத்துக்கு ஒருவர் இன்றிக்கே அனைவரையும் –
ஒண்மை உடைய உலக்கை -அறிவு உடைய
கருது இடம் பொருதும் ஞானாதிகர்
அழகிய வாள்
வாளுக்குரிய அடையாகிய ‘ஒள்’ என்பதனை மற்றை ஆயுதங்கட்கும்
கூட்டி, அதனாற்போந்த பொருளை அருளிச்செய்கிறார், ‘கையில் திவ்விய
ஆயுதங்களை’ என்று தொடங்கி. ஆக, ‘ஞானாதிகருமாய் அழகியாருமாய்
இருப்பர்’ என்றபடி.
அழகுக்கு உடல்
சம்சாரிகள் ஆயுதமாகபார்க்
திவ்ய சூரி ஆழ்வார்
கற்பக மரம் பணைத்து -வடிவும் திவ்ய ஆயுதங்கள்
புள்ளூர்ந்து இதுவும் சேர்த்தி அழகு
மேரு மலையில்
தேச விசேஷத்தில் -அனுபவிக்கும் அழகு
வன்மை உடைய அரக்கர் -விரோதம்
நெஞ்சு நெகிழாமல்
தன்னுடைய நெஞ்சு போலே அனைவரும் என்று இருக்கிறார் –
நினை தோறும் நெஞ்சு உருகும்
‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு நெடிந்துகும்!
வினைகொள்சீர் பாடிலும் வேம்எனது ஆருயிர்!
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை என்னப்பா!
நினைகிலேன் நான்உனக்கு ஆட்செய்யும் நீர்மையே!’
கானா விடில் ஈச்வரோஹம்
கண்டால் -எழுது வாங்குதல் செய்கை அன்றி எதிரிட்டே போகும் வன்மை
அழகுக்கு இலக்காய் வாழ மாட்டாமல் அன்புக்கு இலக்காய்
சங்கல்பத்தால் செய்யாமல் -அவதரித்து
தொழும்பு -சுடர் சோதி மறையாதே
செய்து அசுரர் மாளப்

அக்னி சந்தரன் -பசு ஹிம்சை -பிராய சித்தம்
குறை இலன் என்கிறார்
அறியாது இல்லை
பாசுரம் இட்டு நிலம் இன்றி
நம்மில் ஒருவன் சிசுபாலன் போலே வையாமல்
அர்ஜுனன் போலே விஸ்வரூபம் கண்டு முழுகுதல்
குறை இன்றி -பிரமத்துடன் கூட
சகா –
மித்ரென சக போஜனம் -அவனையும் சேர்ந்து உன்ன வில்லை
கூட அனுபவம் –
அவனை போலே அனுபவம்
தன்னுடைய குணங்கள் அனுபவித்து தானே ஆனந்தம் அடைவது போலே

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 20, 2013

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்றனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்இவை யும்ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல் லார்க்குஇல்லை சன்மமே.

பொ-ரை : ‘தகுதியான பெரும்புகழையுடைய வானவர் ஈசனான கண்ணன் விஷயமாக, தகுதியான பெரிய புகழையுடைய வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த தகுதியான பெரிய புகழையுடைய ஆயிரம் பாசுரங்களுள் தகுதியான பெரிய புகழையுடைய ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கட்குப் பிறவி இல்லை,’ என்றபடி.

வி-கு : ‘ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்’ எனக் கூட்டுக.

ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தைக் கற்றவர்கட்கு, பிறரைக் கவி பாடத் தகுதியான பிறவி இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன் கண்ணன்தனக்கு – தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலே பரத்துவத்தையுடையவன் தனக்கு. ‘மனிதத் தன்மையில் பரத்துவம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின், ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ? ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் – ‘அவன் உபய விபூதிகளையுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று 2சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப் போரும்படியிருக்கிற ஆழ்வார் அருளிச்செய்த.

ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம் 3‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம். ஏற்கும் பெரும்புகழ் ஓர் இவை பத்தும்-ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும்புகழையுடைத்து. என்றது, ‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்துக்குச் சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,சொரூபத்திற்குத் தகுதியாக அடையத்தக்க பரம்பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும் சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று. சன்மம் இல்லை – 1நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது? பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        ‘சொன்னாவில் வாழ்புலவீர்! சோறுகூ றைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும்’ எனும்குருகூர்
மன்அருளால் மாறும்சன் மம்.

தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே:
நாவிற் சிறந்தஅம் மாறற்குத் தக்கநன் னாவலவன்
பூவிற் சிறந்தஆழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே.’

என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.

தகுதியான மிக்க புகழ்
நித்ய சூரி நிர்வாஹகன்
மேன்மையுடன் அவதரித்த கண்ணன்
பூத மகேஸ்வரன் –
ஆழ்வாருக்கும் -தகுதி யான –
எத்தனை சொன்னாலும் தகும் திருவாய்மொழி
இப்பத்து -எல்லா பெருமையும்
ஏற்கும் ஆத்ம ஸ்வரூப பிராப்தம்
எம்பெருமான் -ஆழ்வார் -திருவாய்மொழி -இப்பத்தும் ஏற்கும் புகழ்
சன்மம் இல்லையே
நித்திரை பிறரை கவி பாடாதீர் நிர்வகிக்க வேண்டாமே
பிறவாமை கொடுக்கும் இதை சொல்லி
தண்ணிய சன்மம் கிட்டாதே

நாவில் சொல் வாழ் புலவீர்
சாப்பாட்டுக்கும் வச்த்ரதுக்கும் மானிடரை வாழ்த்துவதால் என்னாவது
மாதவனை ஏத்தும்
குருகூர் மன் அருளால் சன்மம் போகும்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 20, 2013

நின்றுநின்று பலநாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்ச்
சென்றுசென் றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவிஆயி னேற்கு
என்றும்என் றும்இனி மற்றொரு வர்கவி ஏற்குமே?

பொ-ரை : ‘காலமுள்ள வரையிலும் இடைவிடாதே நின்று இன்ப துன்பங்களை அனுபவிக்கின்ற இச்சரீரத்தை நீங்கிச் சென்று, பல காலம் கழிந்த பின்னராயினும் நம்மைக் கண்டு பிறப்பினைஇவர்கள் நீக்க வேண்டும் என்று நினைத்துப் படைக்குந்தோறும் பொருந்தி உலகத்தைப் படைத்தவனுடைய கவியான எனக்குக் காலம் உள்ள வரையிலும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுமோ?’ என்கிறார்.

வி-கு : ‘சென்று சென்றாகிலும் கண்டு, நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய், சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’ எனக் கூட்டுக. கண்டு நீங்கிப் போய்ச் சன்மம் கழித்தல், சேதனர் தொழில். எண்ணுதல், இறைவன் தொழில். ‘எண்ணிப் படைத்தான்’ என்க.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘சர்வேசுவரன் கவியான எனக்குப் பிறரைத் துதிக்கும் உறுப்பு ஏற்றது அன்று,’ என்கிறார்.

பல நாள் நின்று நின்று – பல காலம் 2இடைவிடாதே. உய்க்கும் – செலுத்தும். என்றது, ‘இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்தும்’ என்றபடி. இவ்வுடல் – 3கூற்றம் கண்டாற் போன்று அச்சத்திற்குக் காரணமாய் இருக்கிறபடி. 4இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார். ‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு.

நீங்கிப் போய் – விட்டுப் போய். சென்று சென்றாகிலும் – ஒன்று அல்லா ஒரு பிறவியிலேயாகிலும். கண்டு – நம்மை இவன் கண்டு. சன்மம் கழிப்பான் எண்ணி – பிறவியின் சம்பந்தம் அறும்படி செய்ய வேண்டும் என்று நினைத்து. அன்றிக்கே, ‘சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி’ என்பதற்கு, ‘நெடுங்காலம் கூடவாகிலும் நம்மை அறிந்து இவை பிறவிகளிற் புகாதபடி பண்ணவேண்டும் என்று சிந்தித்து’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு, ‘சென்றுசென்றாகிலும்’ என்பதனைஒரு சொல் நீர்மையதாகக் கொள்க. ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் – 1‘சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’ என்கிறபடியே, ஒருகால் படைத்துப் பலியாவிட்டால் சோம்பிக் கைவாங்காதே ஒருப்பட்டு ஒருப்பட்டு உலகங்களைப் படைத்தவனுடைய; கிருஷிகன் ஒருகால் பயிர் செய்து, பதர்த்தால் பின்பும் பயிர்தன்னையே செய்யுமாறு போன்று, இவனும் ‘ஒருநாள் அல்லா ஒரு நாளாலும் ஆம்’ என்றே அன்றோ படைப்பது?

‘இறைவனைக் கிருஷிகனாகவும், உலகத்தை வயலாகவும் கூறலாமோ?’ எனின், 2‘பத்தி உழவன் பழம்புனமே’ அன்றோ இது? 3ஒரு நாள் அல்லா ஒரு நாளாகிலும் நம்மை அறிந்து, பல நாளும் இடைவிடாதே இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்துகிற இச்சரீரத்தை விட்டுப்போய், இனி இவ்வாத்துமாக்கள் பிறவாதபடி பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் ஆயிற்று. உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு – 4அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷிபலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?

‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவுதானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ? ஒரு நாளிலேயே பலிக்குமதுஎன்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் 1‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும், 2‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம். 3‘வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்

கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும்
புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று
தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு
வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,
பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே,
‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை
போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.

எம்பெருமானுக்கு என்றே கவி
உடல் நீங்கி தன்னிடம் அடைய
படைக்கிறான் -விழுந்தாலும் மீண்டும் படைக்கிறான் –
நின்று நின்று -அநாதி காலம்
பாதகம் செய்யும்படி இவ்வுடல் -கூற்றம் கண்டது போலே பயம் –
வர்த்தமான சரீரம் முன்புள்ளவைகள் -போகியாய் தொடருமே இவருக்கு
இதை நீக்கி -விட்டு போய்
சன்மம் சம்பந்தம் அடியுடன் போக்க உலகம் படைக்கிறான்
அவனும் கூட வந்தான்
ஒன்றி ஒன்றி -பொருந்தி இருந்து
ஒரு கால் -சோம்பிக் கை வாங்காதே ஒருப்பட்டு மீண்டும்
பக்தி உழவன் இவன்
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’- பெரிய திருவந். 18.என்கிறபடியே
‘பத்தி உழவன் பழம்புனமே’ -2. நான்முகன் திருவந். 23.
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷிபலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே

காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?
‘கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும்
புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று
தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.
அவன் சொவ்ஹார்தம் அன்றோ இப்படி பலித்தது
சென்று சென்றாகிலும் அவன் சங்கல்பம் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமல்

வேறு சிலர் கவி பாடேன்
அன்வயம் கொள்ளேன்
படைத்தான் கவி -என்றவாறே –
வேத சாம்யம் -வேதம் தமிழ் செய்த மாறன்
நாயனார் ஆழ்வார் திருவாக்கே வேதம்
அபௌ ருஷேயம் வேதம்
இது ஆழ்வார் அருளி –
படைத்தான் கவி என்றவாறே
பூர்வ கல்ப விஷயம் போலே ஸ்ருஷ்டிக்கிறான் எதா பூர்வம்
திருவாய்மொழியும் எதா பூர்வ கல்பனம்
வெளிப்படுத்த கருவி வியாசர் வேதம் வெளிப்படுதியதியது போலே
நினைவில் வைத்து வெளி இட்டான்
உயர்வு நலம் சப்தம் உண்டாக்க வில்லை
இருக்கும் சப்தம் தானே வெளி இட்டார்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 20, 2013

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப் பிரான்எனக் கேஉளன்;
சாய்கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீகண்டு கொள்என்று வீடும் தரும்நின்று நின்றே.

பொ-ரை : ‘வாயால் மனிதர்களைப் பாட வந்த புலவன் யான் அல்லேன்; ஆராயப்பட்ட குணங்களைக் கொண்ட வள்ளலாகிய ஆழிப்பிரான் எனக்கே இருக்கின்றான்; ஒளியையுடைய இவ்வுலகத்தில் இன்பத்தையும் கொடுத்து, பரமபதத்தையும் நீ கண்டு கொள்வாய் என்று கைங்கரிய சுகத்தையும் முறையாகக் கொடுப்பான்,’ என்கிறார்.

வி-கு : கவியேன் – கவியைப் பாடுகிறவன்; புலவன். ‘ஆய் சீர் கொண்ட’ என் மாறுக. ‘சாய்’ என்பது, ‘சாயை’ என்பதன் திரிவு; சாயை – ஒளி. ‘வீடு’ என்பது, ஈண்டு ஆகுபெயராய்க் கைங்கரியத்தைக் காட்டிற்று. ‘நின்று நின்று தரும்,’ என மாறுக.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘பெருவள்ளல் ஆனவன் என் கவிக்குத் தன்னை விஷயமாக்கி வைத்த பின்பு, மற்றையோரைத் துதித்தற்கு அதிகாரி அல்லேன்,’ என்கிறார்.

வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் – 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை. ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன் – ‘நீர் ‘அவனைக் கவி பாடக் கடவேன்’ என்று இருந்தாலும், 1‘அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வாக்குகள் பேச முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, ‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்? அவனைக் கவி பாடப் போமோ?’ என்ன, ‘அவன், 2‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, தன்னை எனக்கு ஆக்கிவைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.

ஆய் கொண்ட சீர் – ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள். வள்ளல் – பரம உதாரன். ஆழிப்பிரான் – 3இக்குணங்களைக் காத்து ஊட்ட வல்ல கருவியை உடையவன். எனக்கே உளன் – என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான். ஆழிப்பிரான் – 4தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான். 5‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.

சாய்கொண்ட இம்மையும் சாதித்து – ஒளியையுடைத்தான இவ்வுலக சுகத்தையும் தந்து. சாய் – ஒளி. கொள். கொள்கை – உடைத்தாகை. மோக்ஷசுகத்திலும் நன்றாம்படி இவ்வுலகத்திலே தன் அனுபவமே வாழ்க்கையாம்படி செய்து தந்தான் ஆதலின், ‘சாய் கொண்ட இம்மை’ என்கிறார். இவ்வுலக இன்பங்களோடு மேலுள்ளவற்றோடு வாசியற அவனே சாதனமாக இவர் பெறுபவராதலின் ‘இம்மையும் சாதித்து’ என்கிறார். வானவர் நாட்டையும் – அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார். இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி. 1‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ என்னுமதுவும் தன் பக்கலிலேயாய் இருக்கிறது. நீ கண்டுகொள் என்று – 2‘தேவரீர், பொக்கிஷத்தையும் பசுக்கொட்டிலையும் நகரத்தையும் பலத்தையும் பார்த்தருள வேண்டும்; தேவரீருடைய ஒளியால் எல்லாம் பத்துமடங்கு அதிகமாக என்னால் செய்யப்பட்டது,’ என்கிறபடியே, ஸ்ரீ பண்டாரத்தை வளர்த்து வைத்து, பெருமாள் மீண்டும் எழுந்தருளின போதே ஸ்ரீ பரதாழ்வான் காட்டிக் கொடுத்தாற்போலே வானவர் நாட்டை நீ கண்டுகொள்’ என்கிறார்.

‘‘வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற்போன்று சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’ என்க. 3‘ஏ வீரனே! நீ சிறிது வருத்தமுற்று இருந்தால் சீதையால்தான்எனக்கு என்ன பயன்?’ என்றார் பெருமாள். என்று – இப்படி அன்போடே சொல்லி. வீடும் தரும் – 1கைங்கரிய சுகத்தைத் தரும். ‘முக்தி: மோக்ஷோ மஹாநந்தா:’ என்பது நிகண்டு.

நின்று நின்றே – 2‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று 3திரௌபதியானவள் நீண்ட தூரத்தில் வசிக்கின்ற என்னை நினைத்துக் ‘கோவிந்தா!’ என்று அழுதாள் என்பது யாது ஒன்று உண்டோ, அது வட்டியின்மேல் வட்டி ஏறின கடன் போலே என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, திருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள். அன்றியே, ‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம். அன்றியே, ‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில், பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.

பாடுவது வாயைக்கொண்டேயாய் இருக்க, ‘வாய்கொண்டு’ என்று
விசேடித்ததற்கு ரசோக்தியாக பாவம் அருளிச்செய்கிறார், ‘வாய் வந்தபடி’
என்று தொடங்கி. இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப்
படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள். இறைவனைத்
துதிப்பதற்காகவே ‘நா’ படைக்கப்பட்டது என்பதனை.

‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே?
நாராய ணாஎன்னா நாஎன்ன நாவே?’

(சிலப். ஆய்ச். குர.)

  என்பதனான் உணரலாகும்.

ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருள் பின் வருமாறு: ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.

நான் அல்லேன்
இல்லை சொல்லக் கூடாது
இதர ஸ்தோத்ரம் சோழ வல்லவர் இவரே
வாய் எதருக்கு வந்ததோ அதன் படி
நா வாயில் உண்டே -எம்பெருமானுக்கு ஸ்தோத்ரம் செய்ய
வாய் படைத்த பயம் செய்பவர் –
வன வாசத்துக்கு ஸ்ருஷ்டிக்கப் பட்ட இளைய பெருமாள் -சுமத்ரை வார்த்தை –
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே?
நாராய ணாஎன்னா நாஎன்ன நாவே?’

(சிலப். ஆய்ச். குர.)

  என்பதனான் உணரலாகும்
நோன்பு நோற்கும் போதே -பிரார்திக்கும்போழுதே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய

ஒழிவில் காலம் -பத்தாம் பாசுரம் இதே வியாக்யானம் –
வைத்த நாள் –
சூஹூர்ஜனே -பந்துக்கள் இடம் ப்ரீதி உடையவன் -நீ -என்கிறாள் அங்கே
நீர் தான் பரிவீர் -உபதேச நிரபேஷமாக செய்வீரே
இங்கு இருந்து அடிமை ருசி சொல்ல வேண்டாமே
செவி கண்ணாகா செய்வீரே
கவனமாக –
ஆதி செஷன் கட்செவி ஒரே கார்யம் செய்யும் அவதாரம் –
கருமுகை மாலையை வெய்யில் இட்டால் போலே பெருமாள் காடேற போக
பித்ரு அனுவர்தனம் -பந்துக்கள் துக்கிக்க
அத்தை போக்க நீரே வல்லீர் –
திருத்தாயார் தொடக்கமான -அனைவருக்காக்கா பெருமாளை நோக்கித் தர
ராமே -ராமயிதீதி ராம-நடக்கையே மிகை வெறுமனே அழகு
பிரமாதம் -ஆபத்தை -உண்டாக்காதே -உண்டாகும்படி நடக்காதே சொல்ல வேணுமா
அன்வயத்தில் தரித்து -பால்யா பிரவர்த்தி
தொட்டில் பருவம் பிடித்து -வ்யதி ரேகத்தில் தரியாமல் –
தொட்டில் -சமாப்தி காலம் வரை -துர்வாச சாபம் -நியமனம் மீறி உள்ளே விட –

நடைக்கு குடை பிடிக்கும் படி
நடைக்கு சக்கரவர்த்தி
கானகம் படி உலாவி -உலாவி -ஆடல் பாடல் வெட்கி தேவ பெண்கள் –
நடை அழகில் கண் வையாதே என்றாள் –
இளைய பெருமாளைப் போலே கைங்கர்யம் செய்வேன்
யான் பிறரை கவி பாடினால் ஸ்ருஷ்டி வ்யவர்த்தி ஆகுமே –
தனக்கு பிரயோஜனம் செய்ய ஸ்ருஷ்டி -பட்டர் ஸ்லோகம் –
அவனுடைய ஸ்வரூப ஸ்ததிக்கு
கவி பாட வேதமே போகாதே
மனசாலே அடைய முடியாமல் திரும்ப
அவன் பக்தாநாம் எனக்காக்கி தன்னை பிரகாசிக்கப் பண்ண
சீர்களை பக்தர்கள் பாட -ஆய் கொண்ட -சீர் பிரான் எனக்கே உளன்
ஹேய பிரத்யநீக கல்யாண குணங்கள் –
ஆய்ந்து எடுக்கப் பட்ட
வள்ளல் -சீரை ஔ தார்யதுக்கு
ஆழிப் பிரான் –
எனக்கு உளன் -எனக்கே உளன் –
தன்னை விஷயமாக்கினான்

மலக்கு நாவுடை
பிரார்த்திக்கும் பொழுதும் கூராழி வெண் சங்கேந்தி –
கவி பாடவும் சேர்த்தி உடன் விஷயம் ஆக்கி
வீடும் தரும் –
சாயக் கொண்ட இம்மையும் –
ஒளி உடைதான இஹ லோக சுகம்
இங்கே இருந்து கொடுக்கும் அனுபவம் அதை விட உயர்ந்த அனுபவம்
என்பதை காட்டுகிறார் -திருப்த பிரபன்னர் இல்லையே –
மோஷ சுகத்திலும் நன்றாம் படி -இங்கே பண்ணித் தந்தான் –
அச்சுவை பெறிலும் வேண்டேன்
திருவாசிரியம் இரண்டாம் பாசுரம் -அமுத வெள்ளத் தான் சிறப்பு விட்டு
நல்வீடு பெறினும் -கொள்வது நம் ஆழ்வார் ஆசைப்பட்டார்
பெரிய திருவந்தாதி -நின் புகளில் வைக்கும் தம் சிந்தை அதிலும் மற்றும் இனிதோ
நீ கொடுக்கும் வைகுந்தம் என்று கொடுக்கும் வான்
திருவிருத்தம் -விண்ணுளா ரிலும் சீரியர்
இங்கே இருந்து விஷயாந்தரங்கள் விட்டு பற்றுவதால்
இந்த லோகத்தில் இருந்து கொண்டு உண்ணும் சோறு என்று அவனை அனுபவிக்கும் சுகம் –
ஸு அனுபவமே யாத்ரையாக பண்ணிக் கொடுத்து
சாதித்து -அவன் தான் சாதகம்
ஐ ஹிக சுகத்துக்கும் பர லோக சுகத்துக்கும் இவனே சாதனம் என்கிறார் –

வானவர் நாடு –
இது அவன் நாடு இல்லையா –
தானும் குடி வந்தது போலே இட்ட வழக்காய் இருப்பான்
குடி இருப்பார் போலே ஆக்கிக் கொண்டு –
பிராப்தி தேசம் நித்ய சூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்
பிரம்பின்-சிறகின் -மடியின் கீழும் இருக்கும் தத்வம் –
ரஷிக்கும் படியான ராஜ்யத்தில் உள்ள ரிஷிகள் -வயம் ரஷ்யா
பகுத் விஷய -இவனே சொல்லிக் கொள்கிறான்
அந்த நாட்டையும் நீ கண்டு கொள் -என்கிறான் –
சொல்லி வானவர் நாட்டையும் தரும் –
பரத ஆழ்வான் காட்டிக் கொடுத்தால் போலே
பாதுகை வைத்து ஆண்டு –
வந்தபின்பு கஜானா கூட்டிக் கொண்டு பொய் –
தச பங்கு ஐஸ்வர்யம் ஆக்கிக் காட்டினான் –

அது போலே வானவர் நாட்டை பெருக்கி வைத்து இருக்கிறேன் காட்டிக் கொடுத்தான் –
பாரும் -முன்பு அங்கு உளனான நித்யர் உடன் வாசி அற -எம்பெருமான் அனுக்ரஹம்
அந்நீன்ற கன்று வாத்சல்யம் –
ஸ்ரீ ராமா. யுத். 41 : 4. இது, விபீஷணாழ்வானைப் பார்த்து ஸ்ரீ ராமபிரான்
கூறியது.

‘இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தி யாயின்
நன்னுதற் சீதை யால்என்? ஞாலத்தாற் பயன்என்? நம்பி!
உன்னையான் தொடர்வல்; என்னைத் தொடரும்இவ் வுலக மென்றால்
பின்னைஎன் இதனை நோக்கி விளையாடிப் பிழைப்பச் செய்தாழ்?’

என்றார் கம்பநாட்டாழ்வார்.
சுக்ரீவன் கிரீடம் பறித்து 

வாத்சல்யம் -காட்டிய இடம் –

இன்று வந்த முக்தாத்மாவை நித்யர் விட உயர்வாக கருதுவதை
அனுஷ்டித்து காட்டிய பெருமாள் –
வீடும் தரும் -கைங்கர்ய சுகம் -மோஷம் மகா ஆனந்தம் -நிகண்டு –
நின்று நின்றே தரும் –
கொடுக்கும் பொழுதும் -இவன் செய்ததுக்கு ஈடாகா ஒன்றும் கொடுக்க முடியவில்லையே –
ரினம் பிரவிர்தம் போலே திரு உள்ளம் குறையாக
அடைவு அடைவே தருவான் தமிழன்
ஐகிக சுகம் -தேச விஷயம் காட்டி -கைங்கர்யம் –
அதவா –
சாத்மிக்க சாத்மிக்க தரும்

சாத்மிக போக பரதத்வம் நின்று நின்று –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

வேயின் மலிபுரை தோளிபின் னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லைஇ லாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன்என் வாய்கொண்டே?

பொ-ரை : ‘பசுமையாலும் திரட்சியாலும் செவ்வையாலும் மூங்கிலைக்காட்டிலும் மேம்பட்டுத் தனக்குத்தானே ஒத்த தோள்களை உடையவளான தப்பின்னைப் பிராட்டிக்குக் கேள்வனான இறைவனுடைய எல்லை இல்லாதனவான பொருந்திய பெரிய புகழைப் பாடிக்கொண்டே சென்று சரீரத்தைக் கழித்து அவனுடைய தாள் இணையில் புகுகின்ற காதலையுடையனான யான், அழியக்கூடிய இம்மனிதர்களை என் வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என்கிறார்.

வி-கு : வேயின் – ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. புரைதல் – ஒத்தல். ‘மணாளன்’ என்பது, ‘மணவாளன்’ என்பதன் திரிபு. ‘வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என மாறுக.

ஈடு : எட்டாம் பாட்டு. 2‘நான் பிறரைக் கவி பாடுவேன் என்னிலும், என் வாயானது அவனை ஒழியப் பாடாது,’ என்கிறார்.

3‘நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனுமாய் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமானவனுமான சர்வேசுரவனைக் கவிபாடி இச்சரீரத்தைக் கழித்து இதன் பின்னர் அடிமைக்கு ஈடாய் இருப்பது ஒரு சரீரத்தைப் பெற்று அவனுக்கு அடிமை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிற யான் என் வாயைக் கொண்டு 1நீர்க்குமிழி போலே இருக்கிற புல்லரைக் கவி பாட வல்லேனோ?’ என்கிறார்.

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் வேயிலும் விஞ்சின அழகையுடைத்தாய் ஒன்றற்கு ஒன்று ஒத்ததான தோள்களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளன் ஆனவனை. மலிதல்-மிகுதல். 2‘பிறரைக் கவி பாடுகைக்குத் தகுதியான இச்சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கும் வேறுபட்ட சிறப்பினையுடைய சரீர சம்பந்தத்தைப் பெற்றுத் திருவடிகளிலே அடிமை செய்வதற்கும் புருஷகாரமான நப்பின்னைப்பிராட்டி’ என்கை. ‘அவள் சேர்ந்திருக்கும் சேர்த்தியிலே கவி பாடி, யான் வேறு சிலரைக் கவி பாடவோ?’ என்கை. என்றது, 3‘இனி, கைகழியப் போக வல்லரோ, பிராட்டி கைப்புடையிலே நின்று கவி பாடுகிறவர்?’ என்றபடி. அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார். ஆய – ஆயப்பட்டு இருக்கை; என்றது, தாழ்வுகட்கு எதிர்த்தட்டாய் இருக்கை. அன்றிக்கே, ‘ஆய’ என்றது, ‘ஆன’ என்றாய், ‘சொரூபத்தோடு பொருந்தியிருக்கிற’ என்னுதல்.

பெரும்புகழ் – சரீர குணத்தோடு ஆத்தும குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றே எல்லை இல்லாமல் இருக்கை. எல்லைஇலாதன – இப்படிப்பட்ட குணங்கள் கணக்கு இன்றி இருத்தல். பாடிப் போய்க் காயம் கழித்து – 1‘சக்கரவர்த்தி மக்களுடைய காவல் நிமித்தம் சுற்றும் பயணம் திரிந்து முத்தின் குடை நிழலிலே இருந்து சரீரத்தால் முதுமைப்பருவத்தை அடைந்தார்,’ என்றது போன்று, பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு. அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன் – இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணியிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக்கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின்கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையையுடைய யான்.

மாய மனிசரை – பிறப்போடே முடிகின்ற அழிவினையுடையவர்களை. என்றது, ‘பாடத் தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மனிதரை’ என்றபடி. என் வாய் கொண்டு என் சொல்ல வல்லேன் – 2‘கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார். வேறே சிலர், ‘வாக்காலே பாடினால் பாடலாம்’ என்பார், ‘என் வாய் கொண்டு’ என்கிறார். 3‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்னக் கடவதன்றோ? அங்கே காதலைப்பண்ணிப் புறம்பே சிலரைக் கவி பாடப் போமோ? ‘ஆசைப்படுவது ஒரு விஷயமாய், பேசுவது ஒரு விஷயமாய் இருக்குமோ? 4எல்லா இந்திரியங்களுக்கும் அடி, மனம் அன்றோ? அதனைத் தொடர்ந்து சொல்லுமத்தனை அன்றோ மற்றைய உறுப்புகள்? 5இப்போது இப்படிச் சொல்லுகைக்குக் காரணம் என்?’

என்னில், ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.

முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே
‘கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.

3. தம்முடைய வாய்கொண்டு பாட முடியாமைக்கு ஏது, ‘மனம் முன்னே
வாக்குப் பின்னே’ என்பது. ‘அங்கே காதலைப் பண்ணி’ என்றது, ‘மனம்
ஈசுவரனிடத்தில் காதலோடு இருக்க’ என்றபடி.

4. ‘மனம் முன்னும் வாக்குப் பின்னுமாகைக்குக் காரணம் யாது?’ என்ன, விடை
அருளிச்செய்கிறார், ‘எல்லா இந்திரியங்களுக்கும்’ என்று தொடங்கி.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 19, 2013

சேரும் கொடைபுகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானைஅல் லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனையகை, மால்வரை ஒக்கும்திண் தோள்என்று,
பாரில்ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.

பொ-ரை : ‘தகுதியான கொடையும் புகழும் எல்லை இல்லாமல் இருக்கின்றவனை, ஒப்பற்ற ஆயிரம் திருப்பெயர்களையுமுடைய பெருமானை அல்லாமல், கைகள் மேகத்தைப் போன்றவை வலிய தோள்கள் பெரிய மலையை ஒத்தவை என்று பூமியில் தூறு போலப் பயன் அற்று இருக்கின்ற ஒருவனைப் பார்த்து மெய் கலவாத பசும்பொய்களைப் பேசுவதற்கு யான் தகுதியுடையேன் அல்லேன்,’ என்கிறார்.

வி-கு : ‘பிரானை அல்லால் பாரில் ஓர் பற்றையை ‘மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள்’ என்று பச்சைப் பசும்பொய்கள் பேச யான் கிலேன்,’ எனக் கூட்டுக. மற்று – பிறிது என்னும் பொருளில் வந்தது. கிலேன் – ஆற்றில் உடையேன் அல்லேன். பற்றை – சிறு தூறு.ஈடு : ஏழாம் பாட்டு. 1‘வழி பறிக்கும் நிலத்தில் தன்கைப்பொருள்கொண்டு தப்பினவன் மகிழுமாறு போன்று, இவர்களைப் போல அன்றிக்கே பகவானை ஒழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் ஆற்றலன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன்,’ என்று பிரீதர் ஆகிறார்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை – கொடையாலே சேர்ந்த புகழுக்கு எல்லை இல்லாதவனை. அன்றிக்கே, ‘தகுதியான கொடையால் உண்டான புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்னுதல். என்றது, ஒருவன் ஒருவனுக்கு ஒரு பசுவினைக் கொடுத்தானாகில், ‘இவனுக்கு இதற்கு அடி என்?’ என்று இருப்பர்கள்; பெருமாள் சிங்காசனமும் 2ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன் வந்து யாசிக்க, ‘சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று கொடுக்க, ‘பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.

ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை – 3கவி பாடுமிடத்தில் ஒன்று இரண்டு பேராய், அவைதாமும் ‘ஐலபில:’ என்றாற்போலேயாய், ஒரு பாட்டில் அடங்காதபடி இருத்தல் அன்றியே, நினைத்தபடி பாசுரமிட்டுக் கவி பாடலாம்படி பல பல திருநாமங்களை உண்டாக்கி வைத்த மஹோபகாரகனை. ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போரும்படி இரண்டாவது வேண்டாததாய் இருத்தலின், ‘ஓர் ஆயிரம்’ என்கிறார். அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது. அல்லால் மற்று யால் கிலேன் – இவனை ஒழிய வேறு ஒருவரைக் கவி பாட ஆற்றலன் ஆகின்றிலேன்.

‘எவைதாம் நீர் மாட்டாமல் ஒழிகிறவை?’ என்ன, கை மாரி அனைய – கொடுக்கைக்கு முதல் இன்றிக்கே இருக்கிறான் ஒருவனை, கொடையில் மேகத்தை ஒக்கும் என்கை. கைம்மாறு கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாதபோது உடம்பு வெளுக்கையும் 1முதலானவைகள் மேகத்தின் தன்மையாம். கை என்றது, கொடை. திண் தோள் மால் வரை ஒக்கும் – கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும், ‘இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’ என்றும். பாரில் ஓர் பற்றையை – பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே? அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி. 2‘போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார். 3அன்றிக்கே, பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,நத்தமாய், அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும், ‘இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும் ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர். ஆயின், 1திருணசமன்’ என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள். பச்சைப் பசும்பொய்கள் பேச – மெய் கலவாத பொய்களைச் சொல்ல.

‘ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மற்று, பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேச யான் கிலேன்,’ என்க.

கவி பாடுமிடத்தில் ஒன்றிரண்டு பேராய், அதுதானும் ‘ஐலபில:’
என்றாற்போலேயாய்’ என்னும் இவ்விடத்தில்,

‘மூவர் கோவையும் மூவிளங் கோவையும்
பாடிய என்றன் பனுவல் வாயால்
‘எம்மையும் பாடுக’ என்றனிர்; நும்மை
யாங்ஙனம் பாடுகன் யானே?
களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்;
வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்;
புலவர் வாய்ச்சொல் புலம்பலுக்கு இரங்கீர்:
இலவ வாய்ச்சியர் இளமுலை தோயீர்;
உடீஇர், உண்ணீர், கொடீஇர், கொள்ளீர்;
ஒவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றினிர் நீரே.’

என்ற செய்யுளை ஒப்பு நோக்கலாகும்.

வழி பறிக்கும் இடத்தில் கை பொருள் கொண்டு பிழைத்த
ஹர்ஷத்தால் பாடுகிறார் –
தம்முடைய பேற்றை கொண்டாடி ப்ரீதர் ஆகிறார்
பச்சை பசும் பொய்கள்
மாரியனைய கை
பாடுபவன் கேட்பவன் இருவரும் அறிவார்கள் பொய்கள் என்று
ஓர் ஆயிரம் பேர் உடையவன்
எல்லை இல்லாதவன்
தகுதியான புகழ்
பசுவை கொடுத்தால் -என்ன லாபம் என்று இருப்பார்கள்
தானம் எதிர்பாராமல் கொடுக்க வேண்டுமே
பெருமாள் -சிம்காசாசனம் பட்டத்து யானை சத்ருத்யஜன் கூட தானம்
சரயு நீர் இவ்வருக்கு வரை பசு கொடுக்க பெருமாள் கொடுத்தால் சேரும்
தகுதியான கோடிக்கு எல்லை இல்லாதவன்
கவி பாடும் இடத்தில் –
சந்தஸ் அடிபடாமல் அநேகம் பெயர்கள் உண்டே
குபேரன் எருபெரர் ஐரபிராக -ஓன்று இரண்டு பேராக இருக்க வாயில் நுழையாமல்
பிச்சை புக்காக்கிலும் தேவலை -ஐ லு பீலு பெயர் வைத்து -மாதவன் பெயர் வைக்கலாம்
கிண்டல் பண்ண ஆசார்யர்கள் வைக்கும் பெயர்
காதில் கேட்க கடுமையாக இருக்கும் -பெயர்கள் –

பிரான் -திருநாமங்கள் பிரகாசிக்கும் படி
வேறு ஒருவனை பாட சக்தன் இல்லை
மாறி யனைய கை -மேகம் போலே கொடுப்பான்
வர்ஷித் து வெளுக்கும் மேகம்
கோடை கை –
மால் திண் தோள் -லோகம் ஜீவிக்கும்
பாரில் ஓர் பற்றையை வைக்கோல் போலே
போக பூமியில் இல்லை பாரில்
முளைத்து எழுந்து காய்ந்து போகும் விநாசம் -பற்றை
தனக்கும் பிறருக்கும் உபயோகம் இல்லாதவன்
நற்றமாய் குடி இல்லாதது -பன்னாடை போலே

யாருக்கும் உபயோகம் இல்லை

பச்சை பசும் பொய்கள்
மெய் கலவாத பொய்கள்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.