Archive for February, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 26, 2013

‘உய்ம்மின் திறைகொணர்ந்து’ என்றுஉலகு
ஆண்டவர் இம்மையே
4தம்மின் சுவைமட வாரைப்
பிறர்கொள்ளத் தாம்விட்டு
வெம்மின் ஒளிவெயில் கானகம்
போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித்திரு மாலை
விரைந்துஅடி சேர்மினோ.   
   

பொ-ரை : ‘திறைப்பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின்’ என்று கூறி, உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழே ஆண்ட சக்கரவர்த்திகள் இன்பத்தை அளிக்கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு, கொடிய மின் ஒளி பரக்கின்ற காட்டிற்குச் சென்று, அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப்படுவார்கள்; ஆகையாலே, ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைந்து சேர்மின்,’ என்றவாறு.

    வி-கு : ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என மாறுக. திறை – கப்பம். தம்மின்  – தம்முடைய. இனி, தம் இன் என்பதில் ‘இன்’ என்பதனைச் சுவைக்கு அடையாக்கலுமாம். குமைதின்பர் – நலியப்படுவர். ‘திருமாலை அடி விரைந்து சேர்மின்,’ எனக் கூட்டுக. திருமாலை உருபு மயக்கம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1இராச்சியத்தை இழத்தலே அன்றிக்கே, இராச்சியம் பண்ணுகிற காலத்தில் மணஞ்செய்துகொள்ளப்பட்ட இன்சுவை மடவார்களையும் பகைவர்களுக்குக் கொடுத்து எளிமைப்படுவர் என்கிறார்.

    ‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என்று உலகு ஆண்டவர் 2பகைவர்களுடைய இராச்சியத்தைத் தனக்கு ஆக்கக் கோலினால் போர்செய்து ஆக்கிக்கொள்ளுகை அன்றிக்கே, ‘நீ உன் பிராணனை நோக்கிக்கொள்ள வேண்டியிருந்தாயாகில், உன் செல்வம் அனைத்தையும் நம் பக்கலிலே கொண்டுவந்து தந்து, உன்னைக்கொண்டு பிழைத்து ஓடிப் போ’, என்கிற வார்த்தையாலே ஆயிற்றுத் தனக்கு ஆக்குவது; என்றது, ‘படையும் குதிரையும் கொண்டு போர் செய்து தனக்கு ஆக்கிக்கொள்ள வேண்டா; திறையைக் கொண்டு வந்து கொடுத்து உயிர் பிழைத்துச் செல்லுங்கோள்’ என்கிற சொல்லாலே உலகத்தை ஆண்டவர்கள் என்றபடி. இம்மையே – இப்படி அரசு ஆண்ட இந்தப் பிறவியிலேயே. தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ள – தத்தமக்கு எல்லையில்லாத இனிய பொருள்களான பெண்களைப் பகைவர்கள் கொள்ளும்படியாக; என்றது, ‘தான் அரசு ஆளுங்காலத்தில் அந்தத் தேசத்திலே

உள்ள பெண்களை எல்லாம் திரட்டுமே? இவன் திரட்டினபடியே வேறு ஒருவன் வந்து கைக்கொள்ளும்,’ என்றபடி. இது, 1நரகபுரம் அழிந்த அன்று கண்டதே அன்றோ? பாண்டவர்களுடைய இராஜசூயமும் செருக்கும் எல்லாம் கிடக்க, திரௌபதி சபையிலே மானபங்கம் அடைந்த அதுவே அன்றோ இதில் பிரமாணம்? தாம் விட்டு – தம்முடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுவதில் உண்டான நசையாலே, மனம் அறியத் தாங்களே 2கூறைப்பையும் சுமந்துகொண்டு போய் விட்டுப் போவர்கள்; 3‘ஆபத்தின்பொருட்டுச் செல்வத்தைச் செலவு செய்யாமல் காக்கக் கடவன், அப்பொருள்களைச் செலவு செய்தாகிலும் மனைவிமார்களைக் காக்கக் கடவன், அம்மனைவிமார்களைக்கொண்டும் அப்பொருள்களைக்கொண்டும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கடவன்,’ என்றார் பிறரும்.

    வெம் மின் ஒளி வெயில் கானகம் போய் – பேய்த்தேரையும் வெயிலையும் உடைத்தான காட்டிலே போய். அன்றிக்கே, ‘வெவ்விய மின்னின் ஒளி போலே இருந்துள்ள வெயிலையுடைத்தான காட்டிலே போய்’ என்னுதல். என்றது, ‘பின்னையும் இவன் இங்கே காணில் நலியும்’ என்று தண்ணீர் அற்றதாயும் மனித சஞ்சாரம் இல்லாததாயும் இருக்கின்ற காட்டிற்குச்செல்லும்’ என்றபடி. குமைதின்பர்கள் – நலிவுபடுவர்கள்; என்றது, 4செல்வம் உடையவர்களுக்கு எங்கும் ஆள் ஓடுமே? ‘அவன் போன இடத்தே போய்க் கொன்று வருகிறோம்; 5எங்களுக்கு வெற்றிலை

இட்டருளீர்’ என்பார்கள்; அருகே நின்று. ‘அப்படியே செய்து வாருங்கோள்’ என்று அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கொடுத்து விடுவார்கள்; அங்குப் போய்க் கொலை தப்பாது என்றபடி.

    1அடியிலே நாய் அடி இட்டு நலியத் தொடங்கிற்றே? 2நாய் முதலிலே காற்கூறு கொண்டது; ஆன பின்பு, செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மின் – சிவந்து மின்னுகின்ற முடியையுடைய திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைவில் பற்றுவதற்குப் பாருங்கோள். தன்னை அடைந்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடி உண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே இருப்பாரும் உண்டு; ‘விரையாமையால் உள்ள இழவே உள்ளது’ என்பார், ‘செம்மின் முடித் திருமாலை விரைந்து’ என்கிறார். ‘அவன் முடியைத்தரினும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்’ என்பார், ‘அடி சேர்மினோ’ என்கிறார். ‘நீங்கள் 3உங்கள் அடிவிடாதே கொள்ளுங்கோள்’ என்பதாம்.

மேல் திருப்பாசுரத்தோடு கூட்டி ரசோக்தியாக அருளிச்செய்கிறார்.
‘அடியிலே’ என்று தொடங்கி. அடியிலே என்பதற்கு ‘முதற்பாசுரத்திலே’
என்பதும், ‘காலிலே’ என்பதும் இரு பொருள். அடியிட்டு என்பதற்கும்
‘தொடங்கி’ என்பதும், ‘காலிலே பிடித்து’ என்பதும் இரு பொருள்.

2. மேலே கூறியதை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘நாய் முதலிலே’ என்று
தொடங்கி. ‘காற்கூறு’ என்றது, சிலேடை : ‘காலாகிற பாகம்’ என்பதும்,
‘நாலில் ஒரு பாகம்’ என்பதும் பொருள். ‘காற்கூறு கொண்டது’ என்றதனால்,
‘முக்காற்கூறும் வெற்றிலை பிடித்தவர்கள் கொள்ளுகிறார்கள்’ என்பது
தொனி.

3. ‘உங்கள் அடி விடாதே கொள்ளுங்கோள்’ என்றது, சிலேடை : அடி –
திருவடியும் மூலமும்.

ஐஸ்வர்யம் நிலை இல்லையாதது
திருநாரணன் -புருஷகார பூதை
நாரணன் திருத்தாள் -திருவடியிலே பிராட்டி சேவை உண்டே
ஸ்ரீ மன் -நாராயண ஸ்ரீ மன் சரணவ் -திருநாராயணபுரத்தில் திருவடியிலே
ஸ்திரீகளையும் சத்ருக்குகளுக்கு கொடுத்து –
உசந்த வஸ்து ராஜாவுக்கு சேர்ப்பார்கள்
ரத்னம் போன்றவை
தனக்குபோக்யமாக உள்ளவற்றை பிறருக்கு கொடுத்து ஜீவிக்கும்
திறை கொணர்ந்து உய்ம்மின் -கப்பம் கட்டி பிழைத்து போக சொல்லி ஆண்டு
இம்மையே
தமது இன் சுவை மடவார் பிறர் கொள்ள
வெம்மின் -கானகம் போய் குமைதின்பர் கஷ்டப்படுவர்கள்
முடித் திருமால் -விரைந்து அடி சேர்மின் –
வாய் வார்த்தையால் ஆண்டு கொண்டு இருந்தவன்
படை திரட்ட வேண்டாம் உக்தி மாதரத்தில்
இம்மையே -விளால் அன்று சொலால் ஆண்டவன்
ராஜ்யத்தில் உள்ள ஸ்திரீ ரத்னன்களை திரட்டி
வேறு ஒருவன் கைக் கொள்ளுவான்
நரகாசுரன் 16108 கன்னிகைகள் திரட்டி வாய்த்த வ்ருத்தாந்தம்
ராஜ சூய யாகம் பண்ணின பாண்டவர்கள் தமது ஸ்திரீ திரௌபதி இழந்து –
சரஸில் பரிபூதை ஆனாள்
ஸ்திரீகளை சத்ருக்கள்
தாமே கொண்டு போய் விட்டு –
ஜீவிக்க தனது பத்னியை தாமே –
பிராண ரஷணத்தில் நசையால் -இவனே சம்மதித்து
கூறையும் சுமந்து கொண்டு போய் விட்டு போவான்
ஆபத்தில் காக்க தனம் வேண்டும்
தாரை ரஷிக்க தனம் செலவழித்து
ஆத்மாநாம் -தனம் தாரை அனைத்தையும் விட்டு -சுபாஷித பிரமாணம்
கானகம் போய் -இங்கேயே இருந்தால் நலியும் என்று
தண்ணீர் இல்லாத மனுஷ்ய சஞ்சாரம் இன்றி
பாலைவனம் போய்
வெவ்விய மின்னின் ஒளி
துன்பம் பட்டு -எதிரிகள் -நிறைய ஆள் உண்டே
திரும்பி வருவான் -போன இடத்தில சென்று கொள்ளுவோம்
வெற்றிலை இட்டு அருள் என்பார்கள்
அப்படியே செய்து வாரும் சொல்லி
அங்கும் நிம்மதி இன்றி குமைந்து இருப்பார்கள்
நலிவு நாய் முதலிலே
அடியிலே நாய் அடி இட்டு நலிய தொடங்கிற்று
மீதி கடிக்க இவர்கள்

முடி கொடுத்தாலும் திருவடி சேரும்
முடி தருவான் ராஜ்ஜியம்
அடி விடாதே கொள்ளும்
சொன்னதை விடாமல்
திருவடியை விடாமல் கொள்ளும் என்று அருளுகிறார்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -349-360–அரும் பத விவரணத்துடன்–

February 25, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -349-
நம்பிள்ளையை -ஒருவன் எம்பெருமானை ஒழிய தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள் –
நித்ய நைமித்திகாதிகளில் -அக்நி இந்திராதிகளை பஜிப்பான் என் –
ஆலயத்தில் பஜியாது ஒழிவான் என் -என்ன –

அக்நி ஹோத்ராதிகளில் அக்நியை உபாசித்தும் ஸமஸாந அக்நிகளை நிவர்தித்தும் போகிறாப் போலே —

இரண்டு இடத்துக்கும் வாசி எங்கனே என்னில் –

நித்யாதிகளில் பகவத் ப்ரகார புத்த்யா பண்ணுகிற உபாசநம் -பகவத் உபாசநமேயாக விதிக்கையாலும் –
அவற்றினுடைய பிரதிஷ்டைகளில் பர அபர தத்வ ப்ரத்யயம் பண்ணி இருக்கும்
தாமஸ புருஷர்களாலே வேத வ்ருத்த ஆகம மந்த்ர ப்ரகிரியையாலே
ஸ்வ தந்தரமாக தேவதாந்த்ரங்கள் க்ருத ப்ரதிஷ்டிதம் ஆகையாலும் –
இவ் விடத்தில் பகவத் ப்ரகார புத்யயா உபாசிக்க விதி இல்லாமையாலும்

தேவதாந்தர வர்க்கங்களில் தூரதோ வர்ஜநீயத்வம் ருத்ரனுக்கு உண்டு –
எங்கனே என்னில் –
சத்வஸ்தருக்கு அத்யந்தம் விரோதியான தம ப்ராசுர்யத்தாலே –

நித்யாதிகளில் போலே ஆலயங்களிலும் பகவத் ப்ரகாரா புத்யயா உபாசிக்கலாமோ என்ன –

அப்படி உபாசிக்க விதி இல்லாமையாலே ஆகாது –

த்யாஜ்யதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் ஸ்வீ காரத்துக்கு உடலாகவும் –
உபாதேயதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் விஷயம் த்யாகத்துக்கு உடலாகவும் கடவதோ
என்று அருளிச் செய்தார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூம் தாமம் -திருவாய்மொழி -2-8-6-என்கிற
பாட்டில் ப்ரஸ்துதமான தேவதாந்தர பஜனம் அர்ஜுனனுக்கு ருத்ரன் பக்கலிலே
ஓர் அஸ்தர லாபத்துக்காக பகவந் நியோகத்தாலே வேண்டிற்று -எம்பெருமானால் நியமிக்க பெற்ற பூஜை –

(தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-பாசுபத அஸ்திரத்துக்காக த்யானம்-)

—————————————————

வார்த்தை -350-

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது -மூன்று பிரகாரமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
சத்கார யோக்யர் என்றும் -சஹ வாஸ யோக்யர் என்றும் -ஸதா அநுபவ யோக்யர் -என்றும் –

சத் கார யோக்யர் -ரூப நாம ப்ரதானர் -உச்சாரண ப்ரதானர் -அபிமான ப்ரதானர் –

சஹ வாஸ யோக்யர் -ஜ்ஞான ப்ரதானர் -அனுஷ்டான ப்ரதானர் -அங்கீகார ப்ரதானர் –

ஸதா அநுபவ யோக்யர்  -ஆர்த்தி பிரதானர் -அபி நிவேச பிரதானர் -அபி ருசி பிரதானர் -என்று
ஆட் கொண்ட வில்லி ஜீயர் –

(ஸத்காரம் செய்ய மட்டுமே யோக்யதை – கூடிய வாழ தகுதி இல்லாதவர் -ரூப நாமங்கள் மட்டுமே தரித்து ஆத்ம குணங்கள் இல்லாமல் அனுஷ்டானங்களும் இல்லாமல் இருப்பவர்கள் – திருமந்ரார்த்தத்தில் ஊன்றாமல் -வைஷ்ணவன் என்று கர்வம் கொண்டிருப்பார்கள் -உத்தம அதிகாரிகளிடமுள்ள ஆர்த்தி அபிநிவேசம் அபிருசி-பெருத்த ஈடுபாடு – இல்லாதவர்கள் -ஸதா அனுபவ யோக்யர் –ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ர வாந் -ஸதா பர குணாவிஷ்ட த்ரஷ்டவ் யஸ் ஸர்வ தேஹிபி -விஷ்ணு தத்வம் -உடலைப் படைத்த பயன் இவர்களை அனுபவிப்பதே -) 

(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே என்னை உள்ளபடி -ப்ராப்ய ப்ராபகங்களாக இருப்பவன் என்று-அறிகிறான்)

———————-

வார்த்தை -351-

வைஷ்ணவன் ஆகையாவது -தத்வ ஜ்ஞான நிஷ்டனாகை –
தத்வ ஜ்ஞானம் தான் -ஆசார்ய விஷயீ கார லப்யம் –
ஆசார்ய விஷயீ காரம் தான் -தத்வத்தை நாமறிய வேண்டும் என்னும் அபிநிவேச
அதிசய பூர்வகமாக பஜன லப்யம் –

இந்த இச்சைக்கு முதலடி பகவத் விஷயத்தில் அத்வேஷம் –
அந்த அத்வேஷதுக்கு காரணம் பகவத் கடாஷம் –

பகவத் கடாஷத்துக்கு ஹேது என் என்னில் –

இஸ் சம்ஸார சேதனனுக்கு அநாதியாக
எம்பெருமான் பக்கல் த்வேஷ தூஷிதத்வம் உண்டாகையாலே அவன் பார்த்து அருளுகைக்கு ஈடாக ஓன்று செய்யக் கூடாமையாகையாலே பகவத் நிர்ஹேதுக கடாஷம் –

ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் -இச் சேதனனுக்கு அஜ்ஞாதமான அநந்ய பிரவ்ருத்தி களிலே பிறப்பன சில ஸூக்ருதம் அடியாக
பார்த்து அருளுகிறான் ஆகையாலே வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராது –

இங்கனே இருப்பதொரு ஸூ க்ருதம் அடியாய் இருக்க
நிரஹேதுகம் ஆவான் என் என்னில் –

விழ விட்டு மறந்து போன பொருளை எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தவனை –
நம்மதை நமக்குத் தந்தான் என்று இராதே –
இவன் நமக்குத் தந்தான் என்று இருக்கும் க்ருதஜ்ஞதை போலே –
தன் தலையிலே ஒன்றும் இன்றியிலே இருக்க -எம்பெருமான் பார்த்து அருளினான் என்று
க்ருதஜ்ஞனாய் இருக்கிற இவ்வதிகாரி அபிசந்தியாலே நிர்ஹேதுகம் என்கிறது –

இந்த யாத்ருசிக ஸூ க்ருதம் என்கிறதுக்கு அடி சௌஹார்த்தம் –
அவனுக்கு சர்வாத்ம விஷயமாக எப்போதும் உண்டாய் இருக்க -ஒருத்தனுக்கு
ஒருகாலாக யாத்ருசிக ஸூக்ருததை உண்டாக்குவான் என் என்னில் –

நெடும்காலம் அனுபவித்து போந்ததொரு பாபம் சுருக்கம் ஒழிய தொலைந்த அளவிலே
இந்த சௌஹார்த்தம் இவனுடைய யாத்ருசிக ஸூக்ருததுக்கு அடியாம் –

ஜபாகுஸூமச் (செம்பருத்திப் பூ)சாயை பதார்த்தங்கள் எல்லாம் கிடக்க -பளிங்கிலே பிரதி பலிக்குமா போலே-அச்சபாபனான  அதிகாரி (தேய்ந்த -ஷீணித்த பாபத்தால் –தூய்மையான உள்ளம்)பக்கலிலே சௌஹார்த்தம் பலிக்கக் கடவது-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —
யாதிருச்சா ஸூஹ்ருதம்
விஷ்ணோ கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாத்விக சம்பாஷணம்
ஆச்சார்ய பிராப்தி )

(நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -என்கிறபடியே
யாதிருச்சிக ஸூஹ்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் யுண்டாகும்
அந்த ஸதா சார்ய ஸமாஸ்ரயணத்தாலே ஸ்ரவண ஞானம் பிறக்கும்
அந்த ஸ்ரவண ஞானத்தாலே -(அது பரிணமித்து )யதா ஞானம் பிறக்கும்-அது பரிணமித்து ஸம்யக் ஞானம் பிறக்கும்-
அந்த ஸம்யக் ஞானத்தாலே அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே ராக த்வேஷங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே துஷ் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம்
அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம்
அத்தாலே சரீர விமோசநம் பிறக்கும்
அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும்
பின்பு ஈஸ்வரன் நயாமி க்ரமத்தாலே ஆனந்தயாதி என்னும்படி யாக்குவிக்கும்
ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்–ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த–ஸாமக்ரீ பரம்பராநாதம்-)

———————————————————-

வார்த்தை -352-

ஒருவன் தன்னை வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கலாவது
எவ்வளவு ஜ்ஞானம் பிறந்தால் -என்று பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –

பகவத் பாகவத விஷயங்களிலே ஒரு உச்சாராயம் கண்டால் நெஞ்சு சிவீல்
என்று இருந்தது இல்லை யாகில் (பொறாமை வராமல்)தன்னை -வைஷ்ணவன் என்று இருப்பது –

சிவீல் என்று இருந்தது ஆகில் நமக்கு எம்பெருமானோடு உறவு இல்லை யாகாதே –
சம்பந்த ஜ்ஞானம் பிறந்தது இல்லை யாகாதே என்று நினைப்பது இருப்பது என்று
அருளினார் –

———————————————————

வார்த்தை -353-
த்ருஷ்டத்துக்கு நாக்கு நீட்டாது ஒழிகையும்
அத்ருஷ்டத்துக்கு கை நீட்டாது ஒழிகையும் காண் –
வைஷ்ணவ லஷணம் -என்று நம் பிள்ளை வார்த்தை –

(நாக்கு நீட்டுதல் -ஆசைப்படுதல் -கை நீட்டுதல் -முயலுதல்)

———————————————————–

வார்த்தை -354-

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது
சர்வ உபாய சூன்யதையோ -இதர விஷய வ்ரக்தியோ -சித்த உபாய ஸ்வீகாரமோ -பகவத் பிரேமமோ -என்று கேட்க –

சர்வ உபாய சூன்யதை சம்சாரிக்கும் உண்டு -இதர விஷய விரக்தி ஷபணனுக்கும்(ஜைனனுக்கும்) உண்டு –
சித்த  உபாய ஸ்வீகாரம் கேவலனுக்கும் உண்டு -பகவத் ப்ரேமம் ஏகாயநனுக்கும் உண்டு –
ஆகையால் இவை இத்தனையும் அன்று –

இவற்றோடே கூட- பகவத் அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தாலே பிறப்பதொரு தாந்தி விசேஷம் –அதாவது -பரிபவத்தில் நிர் தோஷ அநுசந்தானம் -நிர் பரத்வ அநுசந்தானம் -உபகார ஸ்ம்ருதி –இரக்கம் என்று அருளிச் செய்தார்-(சாந்தி தாந்தி மன புலன்கள் அடக்கம்-நாம் பண்ண வேண்டிய நம்முடைய தோஷ அனுசந்தானம் இவர் பண்ணுவதால் அவர் மேல் உபகார ஸ்ம்ருதி இருக்க வேண்டுமே-பெருமாள் சீற்றம் பட்டு இவற்றை தண்டிக்கக் கூடாதே -இரக்கமும் வேண்டும்)

————————————————-

வார்த்தை -355-

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது ரூப ப்ரதான்யம் -சிஹ்ன ப்ரதான்யம் -உக்தி பிரதான்யம் –
க்ரியா ப்ரதான்யம் -சம்பந்த விசேஷ ப்ரதான்யம் -த்யான ப்ரதான்யம் -இவை ஒன்றும் அன்று –

பாவந ப்ரதான்யமே ப்ராதான்யம் – நால்வர் அறிந்த வைஷ்ணத்வம் அன்று –
நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே

(யாவையும் எவரும் தானாய் அவர்அவர் சமயந் தோறும்
தோய்வுஇலன்; புலன்ஐந் துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதும்ஓர் பற்றுஇ லாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.)

வைஷ்ணத்வம் -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -திருப்பல்லாண்டு -4-என்ன வேண்டும் –
நாடு வைஷ்ணவன் என்று கை விட வேண்டும் –
நகரம் வைஷ்ணவன் என்று கைக் கொள்ள வேண்டும் –

நாடாவது -சம்சாரம்
நரகமாவது பரமபதமும் -உகந்து அருளின திவ்ய தேசங்களும் – ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –

(ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.)

—————————————————

வார்த்தை -356-

வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
அடுக்கு குலையாத முஷ்டியும்
ஆஸ்திக்யம் குலையாத ஸ்ரீ வைஷ்ணத்வமும்-

(அவனே ப்ராப்யம் ப்ராபகம் -ததீய பர்யந்தம் -பாகவதருக்கு உகந்த கைங்கர்யம் செய்தல் இவற்றில்-உறுதி குலையாமல் மஹா விஸ்வாஸம் -)

——————————————————

வார்த்தை -357-

திருநகரிப் பிள்ளை -ஆழ்வார்கள் அருளிச் செயலிலே அந்வயம் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தன் உயிராக நினைத்து இருப்பன் –
ஆசார்யர்கள் பாசுரங்களிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை தன்னுடைய சத்தை யாக நினைத்து இருப்பன் –
இரண்டோடும் அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை அல்லது ஸ்ரீ வைஷ்ணவன் என்று அறுதி இட ஒண்ணாது-

——————————————

வார்த்தை -358-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இவர்களுக்கு பேராகைக்கு அடி ஏது என்று கேட்க –
1-ஸ்ரீ மத் புத்ரர் ஆகையாலும் (ராஜகுல மஹாத்ம்யம்)-2-ஸ்ரீ மான் பிதா வாகையாலும் -3-ஸ்ரீ புருஷகாரம் ஆகையாலும் -4-ஸ்ரீ மான் வைபவத்தை அறிகையாலும் -5-இவர்கள் ஸ்ரீ மத் பதத்தே பிறக்கையாலும் (த்வய நிஷ்டர்கள்)- ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் -என்று பெரிய கோயில் வள்ளலார் அருளிச் செய்வர்-

————————————————–

வார்த்தை -359-

ஸ்ரீ வைஷ்ணவனுடைய தின சரிதம் –
1-குரு பரம்பரையும் -திரு மந்த்ரத்தினுடைய விசத அநுசந்தானமான த்வயத்தையும்
சதா அநுசந்தானம் பண்ணுகை –
2-த்வய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சஹ வாஸம் பண்ணுகை –
3-அஹங்கார க்ரஸ்தரான சம்சாரிகளோடு அணுகி வர்த்தியாது ஒழிகை-

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-
4-சாத்விக சமாசாரம் ஒழிய நாட்டாருடைய பரிமாற்றங்களை நேராக நிவர்திக்கை –
5-உத்தேஸ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களை உதாசீனம் பண்ணாது ஒழிகை –
6-த்யாஜ்யரான சம்சாரிகளை த்ருஷ்டம் அடியாக அனுவர்த்தியாது ஒழிகை –
7-ஆசூர பிரக்ருதிகளுக்கு அத்ருஷ்ட வார்த்தை சொல்லாது ஒழிகை -(ஸாஸ்த்ர விதி நம்பாமல் விஷ்ணு பக்தர் அல்லாமல் இருப்பவள் அசுர ப்ரக்ருதிகள்-விஸ்வாமித்திரர் திரிசங்குக்கு ஸ்வர்க்கம் தந்தது கூடாதது தானே)
8-சாது பரிக்ரஹமும் சதாசார்ய பிரசாதமும் ஸ்வரூப வர்த்தகம் என்று இருக்கை –
9-பகவத் பாகவத விஷயங்களில் அநுகூல வ்ருத்தியை தேக யாத்ரா சேஷம் ஆக்காது ஒழிகை(வ்ருத்தி செய்து அதற்குக் கூலியாக பணம் வாங்கி கால ஷேபம் பண்ணக் கூடாது)
10-ஸ்துதி நிந்தைகளில் அவிக்ருதனாய் இருக்கை –
11-ஸ்வ தோஷ தர்ஸனம் பண்ணுகை –
12-ஸ்வ ப்ரசம்சை பண்ணாது ஒழிகை –(தற்புகழ்ச்சி கூடாது)
13-ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பாரதந்த்ர்ய பராகாஷ்டை
பாகவத பாரதந்த்ர்யம் என்று இருக்கை –

14-இவ்வோ அர்த்தங்களை அனுசந்தித்து உண்டான அம்சத்துக்கு உபாய பூதனான
எம்பெருமான் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணுகை –
15-இல்லாத அம்சத்துக்கு அநுதாப பூர்வகமாக ஈஸ்வரனை இரக்கை –
16-இவ்வர்த்த நிஷ்டை தனக்கு உண்டான போது நிஷ்டை இல்லாத வேஷ தாரிகளை நெஞ்சாலே நெகிழ நினையாதே பகவத் ப்ரபாவத்தை இட்டு ஆதரிக்கை –

நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந (ஸாத்வத-16-23) -என்று
இவ் வர்த்த நிஷ்டை தான் பகவத் பிரசதத்தாலே பலிக்கும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தாலே வருமதன்று –

அக்ரூர மாலாகார அதீந் பரம பாகவதான் க்ருத்வா-(கீதா பாஷ்ய அவதாரிகை )என்று பிரமாணம் –

(துரா சாரோ அபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக புரா ஸமாஸ்ரயே தாதி தேவம் ஸ்ரத்தாயா சரணம் யதி நிர்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந (ஸாத்வத-16-23) -தீய ஒழுங்கங்களை யுடையனாய் -எதையும் உண்பவனாய் -செய்ந்நன்றி கொன்றவனாய் -நாஸ்திகனாய் அநாதி காலம் இருந்தாலும் ஆதி தேவனான எம்பெருமானை ஸ்ரத்தையுடன் சரணம் அடைந்தானாகில் பரமாத்மாவின் பெருமையால் தோஷ மற்றவன் அவன் என்றும் அறிவாயாக –அக்ரூர மாலாகாரதீந் பரம பாகவதான் க்ருத்வா -கீதா பாஷ்ய அவதாரிகை -அக்ரூரர் மாலாகாரர் முதலானவர்களை பரம பாகவதர்களாச் செய்தவையே இவ் விஷயத்தில் பிரமாணம்-)

இவ்வோ அர்த்தங்கள் தங்களுக்கு உறுப்பாக அதிகரிக்குமவை அல்லது பிறருக்கு சொல்லுகைக்கு கற்குமவை அன்று -(தாமும் அனுஷ்டித்த பின்பே சிஷ்யர்களுக்கு உபதேசித்து அருளி திருத்திப் பணி கொண்டருள வேண்டும்)

———————————————————–

வார்த்தை -360-
பெருமாள் எழுந்து அருளா நிற்கத் திருவடி தொழப் புறப்பட்டருளி
நஞ்சீயர் திருமேனியிலே திருநாமங்கள் இன்றியிலே இருந்தபடியைப் பார்த்து –
பர்த்தாவின் முன்பே தாலி கட்டாமல் நின்ற ஸ்த்ரியைப் போலே இரா நின்றது
திருமண் கொண்டு வாரும் கோள் என்று அருளினார் –

(திருத் தை புஷ்ப உத்ஸவம் கல்யாணி புஷ்கரணிக்கு வேகமாக முக்காடு போட்டு எழுந்தருளி பின்பு மெதுவாகத் திரும்பி உத்ஸவம் கண்டருளுகிறார்)

——————————————-—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 25, 2013

நான்காம் பத்து

முதல் திருவாய்மொழி – ‘ஒரு நாயகம்’

முன்னுரை

     ஈடு : முதற்பத்தால், 1பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்; மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது 2பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்; இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய 3கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.

      முதல் மூன்று பத்துகளாலும் 4துவயத்தில் பின் வாக்கியத்தின்பொருளை அருளிச்செய்தார்; இனி, 1மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார். முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை 2அடியிலே அறுதியிடுகிறார். 3இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்? 4நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது? தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல். சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின விஷயங்கள் 1தண்ணியவான பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று பரோபதேசத்தில் இழிகிறார் இத்திருவாய்மொழியில்.

    ‘நன்று; ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்; ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்; இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக் கருத்து ஏன்?’ எனின், இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் அர்த்தத்தில் நோக்காய் இருக்கும். ‘யாங்ஙனம்?’ எனில், ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் ‘இதர விஷய வைராக்கியம்  முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்; ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக்கொண்டு பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்; இத்திருவாய்மொழியில் ‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று அவற்றினுடைய சிறுமை, நிலையின்மை முதலிய தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

    செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங்களையுடையதாகையாலே தண்ணிது; ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும், புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது; இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையவனாய் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்; ஆனபின்பு அவற்றை விட்டுப் பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான நன்மையை விளக்கிப் பேசாநின்றுகொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.

    2இவர் தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு, ‘எங்களுக்கு நலத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்க, உபதேசிக்கிறார் அன்றே? பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ இவருடைய பரோபதேசம்? 1‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.


ஒருநா யகமாய் ஓட உலகுஉடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்2
திருநா ரணன்தாள் காலம்பெறச் சிந்தித் துய்ம்மினோ.

    பொழிப்புரை : ‘ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம்

ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள், கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்; ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால் நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

    விசேடக்குறிப்பு : நாயகம் – முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக. ‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.

    இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

    ஈடு : முதற்பாட்டில், 1‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்; ஆன பின்பு, 2‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே, அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

    ஒரு  நாயகமாய் – தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் 4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி. நிலை

நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி 1நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார். ஓட – ‘இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது, ‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி. ‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில், உலகு – கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; 2‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ, அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும் யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே, 3முந்திரிகை நிலம் உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது. உடன் ஆண்டவர் – இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல். அன்றிக்கே, 4‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த கார்த்தவீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.

    ‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில், 5‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்யமுடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்; அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே, அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்: கருநாய் கவர்ந்த காலர் – ‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு வாழ்கிறது

என்?’ ‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே! வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே, பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே 1இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது; இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்; அவை கடிக்கும். அன்றிக்கே, கருநாய் என்பதற்கு, கருமை – 2சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல். அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்; என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி. காலர் – ‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது? இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார். சிதைகிய பானையர் – கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே போகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக்கொள்ளும். இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார், ‘சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார், ‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

    பெரு நாடு காண – 3முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ? அதற்கும் போர

இப்போது தடை அற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக, அன்றிக்கே, முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே எல்லாரும் காண வருவர்கள் ஆதலின், ‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல். ‘இப்படிச் செய்வது ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில், இம்மையிலே – அப்படி வாழ்ந்த இந்தப் பிறவியிலே. பிச்சை – 1முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது. 2முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே அன்றோ வாங்குவது? இப்போது தாமே கொள்வர். அன்றிக்கே. இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், ‘தாம்கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

    இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு, திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ – ‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’ 3‘இடர் கெடுத்த திருவாளன்இணை அடி’ என்றும், 1‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும். இதனால், 2ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக்கதி இல்லை என்பது போதரும்; 3‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ? தாள் – 4‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன, ‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்? அப்படித் 5தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை  6‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ? காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; 7‘வாழ்வு சாதலை முடிவாக உடையது; உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன; செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின், நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார். அன்றிக்கே, 8‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கணநேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு? அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது; கேடு வருகைக்கு

அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’ என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.

    சிந்தித்து – “இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்; நெஞ்சிலே 1அடி பட நினைக்க அமையும்’ என்றபடி. உய்ம்மின் – அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது. 2‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்; இரவு பகல் எந்நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான். ‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக ‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார். தாள் சிந்தித்து உய்ம்மின் – 3அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.

மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்
பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி. இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்
நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின்
பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி. பெரிய பிராட்டியார்
புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம்
சத்திகளாகிய குணங்களையுடைய எம்பெருமானுடைய திருவடிகளை
உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார்
என்பதனைத் தெரிவிக்கின்றார். (முதல் பத்து அவதாரிகை    – ‘திருமகள்
கேள்வன் இரண்டு’ காண்க.) “இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய
பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது
ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.

2. ‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும்,
திருவடிகளிலே என்பதும் பொருள். திருவடிகளிலே என்று பொருள்
கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று
பொருள் கொள்க. ‘சந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில்
உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு. உபாயத்வம் – உபாயத்தினது
தன்மை. உபாயம் – வழி.

3. ‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர்
திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும் வினாவிற்கு விடையாக,
‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி –
திருவடிகள்.

4. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
அருளிச்செய்கிறார். ‘நிரவதிகப் பிரீதியோடே’ என்று தொடங்கி, நிரவதிகம்
– தனக்குமேல் ஒன்று இல்லாதது.

பௌண்ட்ரக வாசுதேவன்:

  ‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே!
சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுக லானேல் ஆடமர்க் கெழுக’ என்னா
வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’

  என்பது பாகவதம். இவன் சரிதையைப் பாகவதம் பத்தாங்கந்தம் 88-ஆம்
அத்தியாயத்தால் உணரலாகும்.

பிச்சை தாம் கொள்வர்’ என்று இடர்ப்பட்டமை சொல்லுகையாலே,
‘சர்வேசுவரனை அடைந்தால் இடர் இல்லையோ?’ என்னும் வினாவிற்கு
விடையாக, ‘இல்லை’ என்பதற்கு இரண்டு பிரமாணங்கள் காட்டுகிறார்.
‘இடர் கெடுத்த திருவாளன்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி.
6: 9 : 1.

  ‘பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணையடியே அடைநெஞ்சே!’

  என்பது அத்திருப்பாசுரமாகும்.

தான் பெற்ற அனுபவம் பேசி அருளிய பின்பு ஆழ்வார்
ஐஸ்வர்யம் கைவல்யம் அனுபவிக்கும் சம்சாரிகளைப் பார்த்து
நிலை அற்ற அத்ய அல்பம்விட்டு பகவத் விஷயம் பற்ற அருளுகிறார் இந்த திருவாய்மொழியில்

உண்டியே உடையே திரிந்து போவாரை பார்த்து
திருநாரணன் தாள் பற்றி காலம் பெற சிந்திமினோ
உத்தர வாக்கியம் அர்த்தம் -மேல் மூன்று பத்தால்
முதல் பத்தில் திருமகளார் தனிக் கேள்வன்
ஒழிவில் காலம் புருஷார்த்தம் மூலம் கைங்கர்யம்
உபாயம் அடியிலே வைத்து –
தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ இதில் -அருளி –
உபாயம் தெரிவித்து -அடியிலே அறுதி இடுகிறார்
ஆரம்பத்திலே அருளி -தாள் திருவடி -அறுதி இடுகிறார் –
இப்படி அறியாதார் -உபாயாந்தரங்களில் இழிந்து
பூர்வ வாக்கியம் முதலில் சொல்லாமல் உத்தர வாக்கியம் முதலில் அருளி –
விஷய வைலஷ்ண்யம் அருளி பின்பு –
சாதன தசை -புருஷார்த்தம் தசை –
அனுஷ்டான வேளை –
அநுபவம் -பலன் சொல்லி சாதனம் சொல்லுவது போலே
கைங்கர்யம் பேற்றுக்கு காரணம் அவனே உபாயம்
அர்த்த பஞ்சக ஞானம் ஏற்படுத்த வந்த திருவாய்மொழி –
பரோ உபதேசம்
வீடு முன் முற்றவும் -இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் விஷயம் பற்ற
சொன்னால் விரோதம் -பகவத் இதர விஷய பஜனம் தவிர உபதேசித்து -மானிடம் பாட
வல்ல கவியேன் அல்லேன் –
இதில் -அல்பம் அஸ்திரம் -பலன்களுக்கு –
ஐஸ்வர்யம் கைவல்யம் விட்டு அவனைப் பற்ற –
தோஷ தர்சனம் அருளிச் செய்கிறார் –
ஐஸ்வர்யம் -அவனே கொடுத்தாலும் நிலையாய் இருக்காதே
செல்வம் செல்வோம் என்று போய் கொண்டே இருக்கும்
அல்பம் -அஸ்தரம் -இவை –
ஆத்ம அனுபவம் கைவல்யம் -அபுருஷார்த்த  நிலை நிற்கும் தண்ணியது –
தாழ்ந்த புருஷார்த்தம் -என்று காட்டி –
ஐஸ்வர்யம் போலே அழிந்த பின்பு பகவத் விஷயம் இழந்தோமே என்று
இருக்க
அநந்ய பிரயோஜனர் வாழாட்பட்டு
கைவல்யம் ஆபத்து வாளேறு கண்டவன் தேளேறு கண்டவன்
அதனால் இதை சொல்லி அப்புறம் ஐஸ்வர்யம் சொல்லுகிறார் திருப்பல்லாண்டில்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது -திருமங்கை ஆழ்வார்
இறப்பு கைவல்யத்தில் விடுகை
பகவத் பஜனம் பண்ண அருளுகிறார்
சம்சாரிகள் கேட்காமல் உபதேசிக்க
ஹிதம் சொல்வது -துர்கதி கண்டு போருக்க மாட்டாமல்
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்கும்
ராவணன் ஹிதம் கேட்க்காமல் பிராட்டிவிபீஷணன்
கம்பாவது கிடக்குமோ -என்று
கொழுந்து விட்டு எரியும் வீட்டில் -உபதேசிக்கிறார்
ஒருவராவது கிடைப்பாரா பார்க்கிறார் இதில்
சார்வ பௌமர் ராஜாக்கள் பிச்சை எடுத்து
ஸ்ரீ வஸ்த்ச நித்ய ஸ்ரீ இருக்க சர்வேஸ்வரனைப் பற்ற பாரும் கோள் என்கிறார் –
ஒரு நாயகமாய் ஏக சக்கரவர்த்தி

சிதைகிய பானையர்
பிச்சை தாம் கொள்ள –
காலம்பெற சீக்கிரமாக
நிலை நிலாத ஐஸ்வர்யம் நீர் குமிழி போலே
வாழ்ந்தார் -மொக்குளில் மாய்ந்து மாய்ந்து
மா மழை -நீர் குமிழி போலே உடைந்து
இருக்கும் நாள் அஹங்கரித்து
பதிம் விச்வச்ய ஈஸ்வர ஐஸ்வர்யம் போலே நினைத்து
தானே பதி என்கிற அஹங்காரம்
பௌண்டரீக வாசுதேவன் போலே -நினைத்து –
ஷேத்திர பாலகர் நகர பாலகராய் இருந்தும் –
கொடைக் கீழ் -உலகம் ஆண்டு
ஓட -நெடும் காலம் 60000 ஆண்டு போலே நெடுக
கொற்றம்குடை கீழே ஆண்டு –
கடல் சூழ்ந்த பூமிப் பரப்பு அளவும் ஆண்டு
கை யளவு நிலம் காப்பது போலே -காத்து -குறை இன்றி ஆண்டு
கார்த்த வீர்ய அர்ஜுனன் போலே –
கையும் வில்லுமாய் நின்று நோக்கிக் கொண்டு போனவன்
உலகு உடன் ஆண்டவன் -ஏகாதிபதியாய் ஆண்டு
அபிமான பங்கமாய் வந்து –
வாசுதேவ -கிலேசித்து -பிள்ளைகளை விட்டு –
அண்ணன் தம்பிகளையும் விரோதித்து ராஜாவாகி இழந்து கிலேசிப்பர்
கரு நாய் -கவர்ந்த காலர்
பட்டினி இருக்க முடியாமல் –
வெளியில் உட்கார்ந்து பசி எடுக்க -பிச்சை எடுத்து
எளிமை பட்டு ஜீவிப்பது என்ன –
நசையாலே பிச்சை பண்ண பார்ப்பான்
தெரியும்படி செய்ய அவமானம்
கௌரவ குறை
இருட்டில் சந்து வெளியில்
போகும் பொழுது நாய் காலைக் கடிக்க கரு நாய் கருப்பாய் தெரியாமல்
இருள் திரண்டது போலே கருமை
சீற்றமாய் உள்ள நாய்
கருவை உடைத்த நாய் குட்டியைக் காத்து இருக்கும் நாய்
நாய் கடித்த கா ல் வீரக் கழல் முன்பு
சிதைகிய பானையர்
தங்க தாம்பாளம் முன்பு
இட்டது உண்டாகில் -போட்டதும் கீழே போகும்படி பானை
முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் -சமர்ப்பிக்க -காத்து இருக்க –
குறியே இருந்து இப்பொழுது
எல்லாரும் காண வருவார்கள்
பெரு நாடு காண
இவை எல்லாம் இம்மையிலே வேற ஜன்மத்தில் இல்லை
எம்பார் -வார்த்தை -பரம பதம் சூழ் விசும்பு வர்ணித்து ஒரு நாயகமாய் சத்யம் நம்புவது போலே இதையும் அருளிச்
செய்தார் பார்த்து கொண்டு இருக்கிறோமே
பிச்சை தாம் கொள்வர்
சோற்றுக்கு கை ஏந்தி நிற்கிறான்
தாம் கொள்வர் -ஆளிட்டு முன்பு வாங்கினவர் ராஜ்யத்தை
இவனே கேட்டு வாங்கி –
இடுவர் பக்கல் -கொள்வது இவர் சித்தம் -கொடுத்தால் தேவலை நினைத்து இருக்கிறான்
ராஜ்ய ஸ்ரீ இப்படி ஆனபின்பு
திரு நாரணன் தாள்
இடர் கெடுத்த திருவாளன் -பிராட்டி சேர்ந்து இணை அடி ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிது நாராயண ஸ்ரீ மான் -உலகு ஏழும் திரியும் பெரியோன்
உண்டியான் சாபம் தீர்த்து -துக்கம் போக்கியது எம்பெருமான் திருவடிகள்
ஓடு கொண்டு இரப்பார்க்கு இவன் தான் ரஷிப்பான் –
நக்கன் -நான்முகன் திருவந்தாதி –
தாள் பற்றி -ஸ்ரீ ராமாயணம் -ஸ்லோஹம்

பரத ஆழ்வான் வார்த்தை எடுத்துக் காட்டி
பிராது சரணவ் -சக்ரவர்த்தி ஒரு ககாலில் சங்கு உள்ளடி பொருந்தி
பிள்ளாய் உனது உள் வெதுப்பு ஆறுவது
எனக்கு வகுத்தவடி அடி சூடும் அரசு
அவனும் தமக்கு உண்டான அரசு சூடி
தலையாக பிரார்திகப்பட்ட திருவடிகளை
காலம்பெற -அரை நாளிகை முன்பு ஆவது பற்ற வேண்டுமே
-ஜீவிதம் -மரணாந்தம் -மூப்பு யவனம் -செல்வம் விநாசம்
சீக்கிரமே ஒல்லை பற்ற அருளுகிறார் –
எண்ணம் வந்த உடனே பண்ண வேண்டும்
எந்த முகூர்த்தம்
ஷணம் வீணாக்காமல்
வாசுதேவனை சிந்திக்க வேண்டும்
அநர்த்தம் வரும் முன்
நிஷித்த அனுஷ்டானம் விச்லேஷம்

யமன் தலை பிடித்து இருக்கிறான் நினைத்து -காலம் பெற சிந்தித்து மனம் உண்டே அவன் தந்த கரணங்களை
நெஞ்சிலே அடிபட அமையும்
நன்மையைக் கொடுக்கும்
சிந்திப்பதே உஜ்ஜீவனம்
தானே கொடுக்கும் –
விளக்கு ஏற்றின உடனே இருள் தானே போகுமே
சிந்தித்து உய்மினோ
அனைவருக்கும் உஜ்ஜீவனம்
அடியில் பேணி –
அடி அடிகடி
வேர் அற்றால் மரம்
அடி அற்றால்
வாழ்வு திருவாரணன் தாள் பேணும் கோள்
எம்பெருமானார் நிர்வஹிப்பார் –
சோழ உபத்ரவம்
மேலை நாட்டுக்கு எழுந்து அருளி
ஸ்ரீ வைஷ்ண சமர்த்தி நிறைந்த தேசம் அன்றே இருந்தது –
செல்வம் உற்றும் திருத்திய பின்பு அங்கு
அனந்தாழ்வான் இங்கே இருந்து -ஸ்ரீவைஷ்ண லஷணம் –
மிகுந்து -உபதேசித்து –
பிரதிஷ்டை செய்து  அருளி –
திருநாரணன் தாள்
விசேஷ அர்த்தம் -திரு தாளுக்கும் நாரணன் இரண்டுக்கும் விசேஷணம்
ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ்
ஹரிக்கும் சரணதுக்கும் விசேஷம்
பரம பாக்கியம் நிர்ஹெதுக கிருபையால் இங்கேயே அனுபவிக்கப் பெற்றோம்
எம்பெருமானே பற்றி கைங்கர்யம் செய்து போது போக்கி
அடைக்கலம் கொடுத்த திவ்ய தேசம்
பிரமாணம் பிரமாதா பிரமேயம் மூவருக்கும்
பிரமேயம் -திருவரங்க ஆபத்தை போக்கி ஸ்ரீ ரெங்கனுக்கும் கனுக்கும் இடம் கொடுத்து அருளி
பிரமாதா எம்பெருமானாரையும் ரஷித்து கொடுத்து பிரமாணம் ஸ்ரீ பாஷ்யம் நாலாயிர திவ்ய பிரபந்தம்
மேல் நாட்டில் இருந்து போன ஸ்ரீ வைஷ்ணவர்கள் -நாதமுனி கேட்டு
பகவத் விஷயம் ஈடு முப்பத்தாறு நம்பிள்ளை -அருளி
மணவாள மா முனி -திருவாய் மொழிப் பிள்ளை -தேவப் பெருமாள் -நாலூர் ஆச்சான் பிள்ளை சேவித்து கொண்டு இருக்க -இவர்களும் மேல தேசம் மூலம் வந்தவர் –
நாலூர் பிள்ளை -ஆச்சான் பிள்ளை குமாரர் ஈடு முப்பத்தாறு கால ஷேபம்
திரு நாராயண புரத்தில் வெளி இட திருவாய்மொழிப் பிள்ளை பெற்றார்
ஸ்ரீ பாஷ்யம் இங்கே இருந்து பிரசாரம் ஆகி
ஆக மூவரையும் காத்துக் கொடுத்த திவ்ய தேசம் -வைபவம் மிக்கது
தானே விக்ரஹம் செய்து ஆலிங்கனம் செய்து -பின்பு திருவரங்கம் எழுந்து அருளினார் எம்பெருமானார் -தான் உகந்த திருமேனி –

தானான திருமேனி தமர் உகந்த திருமேனி மூன்றும் இங்கேயே
திருநார ணன்
செல்வ நாராயணன்
வண் புகழ் நாரணன்
பேரர்களுக்கும் ஆழ்வார் திருநாமங்கள்
துழாய் முடி அரசர்
முடி கொண்டு பெரும் புகழ்
கருட ஆழ்வான் -சமர்ப்பிக்க –
அவர் தான் முதலில் வைர முடி சேவிக்க
அர்ச்சகர் கூட கண்ணை மூடி செமர்ப்பித்து –
கருட ஆழ்வான் முதலில் சேவிக்க பத்து பாட்டும் எதிராஜ சம்பத்குமாரர்
பாக்கியம் பெற்றோம் இங்கேயே சாதிக்க கேட்க பெற்றோமே

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 25, 2013

கேடுஇல் விழுப்புகழ்க் கேசவ னைக்குரு
கூர்ச்சட கோபன்சொன்ன
பாடல்ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும்
பயிற்றவல் லார்க்குஅவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
நலனிடை ஊர்திபண்ணி
வீடும் பெறுத்தித்தன் மூவுல குக்கும்
தரும்ஒரு நாயகமே.

    பொ-ரை : ‘அழிவில்லாத விழுமிய புகழையுடைய கேசவனைப்பற்றி, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவல்லவர்கட்கு, அவ்விறைவன், நாடும் நகரமும் நன்மையோடே கூடக் காணும்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பத்தோடு நடக்கச் செய்து, மோக்ஷத்தையும் பெறச்செய்து, தன்னுடைய மூன்று உலகங்கட்கும் ஒப்பற்ற தலைமையையும் தருவான்,’ என்றபடி.-கு : ‘கேடுஇல் விழுப்புகழ்’ என்கிறார். ‘தாவா விழுப்புகழ்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். ‘பொருள் சேர் புகழ்’ என்றார் தெய்வப்புலமைத் திருவுள்ளுவனார், ‘பயிற்ற’ என்பது, ஈண்டுத் தன்வினையின்கண் வந்தது. ‘வல்லார்கட்கு நாயகத்தைத் தரும்,’ என முடிக்க. நாடு, நகரம், உலகு என்பன இடவாகு பெயர்கள். ‘காணப் பண்ணிப் பெறுத்தித் தரும்,’ என்க.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி, மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

    கேடு இல் விழுப்புகழ் கேசவனை – கேடு இல்லாமல் விழுப்பத்தையுடைத்தான நித்தியமாய் இருக்கிற மங்களம் பொருந்திய நற்குணங்களையுடைய, கேசியைக் கொன்ற கிருஷ்ணனை. குரு கூர்ச்சடகோபன் சொன்ன – 2‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே, அவதாரத்துக்கு அவ்வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட. பாடல் ஓர் ஆயிரம் – 3‘பாடத்திலும் கானத்திலும் கேட்பதற்கு மதுரமாய் இருக்கிற’ என்கிறபடியே, இசையோடே சேர்ந்த ஆயிரத்துள். இவையும் ஒரு பத்தும் – முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார். பயிற்ற வல்லார்கட்கு – கற்க வல்லவர்கட்கு. ‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று கூட்டுக.

    நாடு – பொருளின் விசேடத்தை அறியாத சாதாரண மக்கள். நகரம் – பொருளின் விசேடம் அறிந்திருக்கும் பெரியோர்கள். நன்கு உடன் காண – நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி. நலன் இடை ஊர்தி பண்ணி – நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா

வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ. வீடும் பெறுத்தி – பரமபுருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து. மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் – தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக்கொடுக்கும். ‘ஆயின், சர்வேசுவரனைப் போன்றவனோ இவனும்?’ எனின், அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது, ‘இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித் தன் ஐஸ்வர்யத்திலே அடங்கியதாகும்படி செய்து கொடுப்பான்,’ என்றபடி.

(

திருவாய்மொழி நூற்றந்தாதி

‘சன்மம் பலசெய்து தான்இவ் வுலகுஅளிக்கும்
நன்மையுடை மால்குணத்தை நாடோறும் – இம்மையிலே
ஏத்தும்இன்பம் பெற்றேன்!’ எனும்மா றனைஉலகீர்!
தாத்தழும்ப ஏத்தும்ஒரு நாள்.

நிகமத்தில் –
சர்வ லோக பிரசித ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
பரம பதம் இவனிட்ட வழக்காய் ஆகும்
அவதாரத்துக்கு அவ்வருகு போக மாட்டாத
பாட்டும் இனிமை
இசை உடன் பிறந்ததே –
இவையும் ஒரு பத்தும்
முத்து முகம் வைக்கும் -கோத்து அழகு பார்ப்பது போலே ஆழ்வார் பார்க்க
சொல்ல வல்லார் பைத்த பயில கற்றுக் கொடுப்பாருக்கு
நாடு நகரம் -கிராமம் நகரம் அனைவரும்
நலன் இடை ஊர்தி பண்ணி கொண்டாட்டம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ தான் நன்மை
வீடும் கொடுத்து
த்ரிவித -மூவுலகும் -ஆத்மாக்களுக்கும் நிர்வாஹன் பக்த முக்த நித்யர்
தன்னைப் போலே ஆக்கி அருளி
அத்வதீய நாயகன் பண்ணிக் கொடுக்கும்
தன்னைதான ஐஸ்வர்யம் இவனுக்கும் கொடுத்து என்னது எண்ணும்படி
புறம்பாய் எண்ணாமல் -அந்தபூதராய்
ஈசன் அடங்கு எழில் அடங்கி –
சாரம்
சன்மம் பல செய்து ரஷிக்கும் மாலின் குணத்தை
நாள் தோறும் ஏத்து வதை இம்மையிலே பெற்று
உலகீர் நா தளும்ப ஏற்றும்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 25, 2013

தளர்வுஇன்றி யேஎன்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம்ஒன்றாய்
அளவுடை ஐம்புலன் கள்அறி யாவகை
யால்அரு வாகிநிற்கும்
வளர்ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்
ஐந்தை இருசுடரைக்
கிளர்ஒளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
யான்என்றும் கேடுஇலனே.

    பொ-ரை : ‘தளர்ச்சியில்லாமல் எக்காலத்திலும் எல்லா இடத்திலும் பரந்திருக்கின்ற தனித்த காரணமான ஒப்பற்ற ஞானத்தினையுடையவனாகி, அளவிற்குட்பட்ட ஐம்புலன்களும் அறியாதபடி அருவாகி நிற்கின்ற. வளர்கின்ற ஒளியையுடைய தலைவனை, திருமேனியையுடையவனை, ஐம்பெரும்பூதங்களையும் சூரியசந்திரர்களையும் சரீரமாக உடையவனை, கிளர்கின்ற ஒளியையுடைய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனை, கிருஷ்ணனைத் திருவடிகளைப் பிடித்ததனால் யான் எக்காலத்திலும் கேடு இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஒன்றாய் அருவாகி நிற்கும் ஈசன்’ என்க. பற்றி – பற்றியதனால்; ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘உலகமே உருவமாய்ச் சத்தையையும் நோக்குமவனாய், தன்னிடத்து விருப்பம் செலுத்தினாரைத் தனக்கே உரியதான சிறப்பையுடைய விக்கிரகத்தோடே வந்து அவதரித்துக் காக்குமவனைப் பற்றி எனக்கு ஒரு கேடு இல்லை,’ என்கிறார்.

    2தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய் – என்றும் உண்டாய் எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து நின்றால் ஒரு தளர்த்தி இல்லாமலே, படைக்குமிடத்தில்

இரண்டாவதாக வேறு ஒரு காரணம் இல்லாததாய் உள்ள நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய். அன்றிக்கே, ‘ஒரு பொருளிலும் குறைவு வாராதபடி எங்கும் ஒக்க ஒரே உருவமாய் எல்லாக் காலத்திலும் பரந்து நிறைந்து, இவற்றைப் படைக்குமிடத்தில் மூன்று விதக்காரணமும் தானேயாய், வேறுபட்ட சிறப்பையுடைய ஞான உருவனாய்’ என்னுதல். அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் – உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார். அருவாகி நிற்கும் – அவற்றால் அறிய ஒண்ணாதபடி உருவம் இல்லாதபடி நிற்பான்.

    வளர் ஒளி ஈசனை – ‘இப்படி அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களோடே கூடி அவற்றுக்கு உள் உயிராய்ப் புக்கு நின்றால், அவற்றிற்கு உண்டாகும் குற்றங்கள் அவனைத் தீண்டாவோ?’ என்னில், 1‘ஆத்துமா கர்மபலத்தை நன்றாக நுகர்கின்றது; இறைவன் கர்மபலத்தை நுகராமல் வேறாக மிகுதியாகப் பிரகாசிக்கின்றான்,’ என்கிறபடியே, அவற்றிற்கு உண்டான குற்றங்களால் தீண்டப்படாதவனாய், எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றமையால் வந்த புகரையுடையனாய் இருப்பான். மூர்த்தியை – இப்படி உலகமே உருவாய் இருக்கவும் இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய விக்கிரகத்தோடு கூடினவனாய் நித்தியவிபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. பூதங்கள் ஐந்தை இரு சுடரை – காரணமான மண் முதலான ஐம்பெரும்பூதங்களையும், காரியக் கூட்டத்தில் தலையான சந்திர சூரியர்களையுமுடையவனாய் லீலா விபூதிக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. இதனால், அவனுக்கே உரியதான விக்கிரகத்தைப் போன்று

உலகமே உருவமாக நிற்கிற அதுவும் இவர்க்கு அனுபவிக்கத் தக்கதாய் இராநின்றது என்பது போதரும்.

    கிளர் ஒளி மாயனைக் கண்ணனை – இவ்வுலகத்துள்ளே இவ்வுலக சம்பந்தம் இல்லாத தனது திருமேனியை, இதர சாதிகளின் தன்மையை உடையதாம்படி ஆக்கிக்கொண்டு வந்து கிருஷ்ணனாய் அவதரித்தவனை. கண்ணனைத் தாள் பற்றி – 1‘என் ஒருவனையே பற்றுக்கோடாகப் பற்று,’ என்றவன் திருவடிகளைப் பற்றி. யான் என்றும் கேடு இலன் – ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

    ‘மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்’ என்று கூட்டுக.

ஜகத் சரீரியாய்
எங்கும் பரந்த
மாயனை -கண்ணனை தாள் பற்றி கேடு இலன்
மூர்த்தி
பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹன்
தளர்வின்றி வியாபித்து
சிருஷ்டிக்கும் இடத்தில் -தனி முதல் -மூவகை காரணமும் அவன்
பரி பூர்ண வ்யாப்தி என்றுமாம்
என்றும் ஒக்க ஏக ரூபமாய் மூன்றுவித காரணனும்
உழக்கு கொண்டு அளக்க முடியாத படி புலன்களால் அறிய ஒண்ணாத படி
அப்பால் பட்டு இருந்தும்
ஈசன் -அந்தராத்மா
தோஷம் இன்றி
வளர் ஒளி ஈசன் நியமிக்கும் காரணத்தால் வந்த புகர் உடையவன்
மூர்த்தி -சரீரியாய் இருந்துய்ம் அப்ராக்ருத திவ்ய விக்ரக விசிஷ்டன்
பூதங்கள் இரு சுடர் அனைத்துக்கும் அந்தர்யாமி
இதுவும் அனுபாவ்யம் ஆழ்வாருக்கு
காரணம் -கார்யம் எல்லாம் அவனே
லீலா விபூதி நிர்வாஹகன்
கிளர் ஒளி மாயன் கண்ணன் இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
தாழ் பற்றி –
மாம் ஏகம் -அருளி -சரணம் வ்ரஜ
யான் என்றும் கேடு இலேன்
ஆபிமுக்கியம் செய்தாலே தோன்றி
முறையிலே பற்றி -பிராட்டி மூலம்
குறை ஒன்றும் இல்லையே

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 25, 2013

துக்கம்இல் ஞானச் சுடர்ஒளி மூர்த்தி
துழாய்அலங் கல்பெருமான்
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து
வேண்டும் உருவுகொண்டு
நக்கபி ரானோடு அயன்முத லாகஎல்
லாரும் எவையும்தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்கவல் லானைப்பெற்று
ஒன்றும் தளர்வுஇலனே.

    பொ-ரை : துக்கம் இல்லாத ஞானமும் மிக்க ஒளியோடு கூடிய திருமேனியும் திருத்துழாய் மாலையுமுடைய பெருமான், அளவு இல்லாத பல வகைப்பட்ட ஆச்சரியமான சத்திகளோடு

கூடி வேண்டிய வடிவைக்கொண்டு சேராச்சேர்த்தியான காரியங்களைச் செய்து, சிவபெருமானோடு பிரமன் முதலாக உள்ள எல்லாச் சேதநரையும் அசேதனங்களையும் சமமாகத் தன்னுள் அடங்கும்படி விழுங்கும் ஆற்றலை உடையவனுமான எம்பெருமானைப் பெற்றுச் சிறிதும் தளர்வு இல்லாதவன் ஆனேன்.

    வி-கு : ‘வேண்டும் உருவு கொண்டு விகிர்தம் செய்து’ என மாறுக. நக்கன் – வஸ்திரம் இல்லாதவன்; சிவன். அயன் – அஜன்; விஷ்ணுவிடம் தோன்றினவன்; பிரமன். அ – விஷ்ணு.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘அகடிதகடநா சமர்த்தனான ஆல் இலையில் துயில்கொண்ட அண்ணலை நுகரப்பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை’ என்கிறார். இனி, ‘மஹாப்பிரளயத்தின் செயலை நினைக்கிறார்,’ என்னலுமாம்.

    துக்கம் இல் ஞானம் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் – தள்ளத்தக்கனவான குற்றங்கட்கு எதிர்த்தட்டான ஞானத்தையும், எல்லை இல்லாத ஒளியின் உருவமான விக்கிரகத்தையுமுடையவனாய், அவ்வடிவிற்கு அலங்காரமாகத் தக்கதான திருத்துழாய் மாலையையுடையனான சர்வேசுவரன். அலங்கல் – மாலை. மிக்க பல மாயங்களால் – அளவு கடந்தன வாய்ப் பல வகைப்பட்ட ஆச்சரிய சத்திகளின் சேர்க்கையாலே. வேண்டும் உருவு கொண்டு விகிர்தம் செய்து – இச்சையினாலே கொள்ளுகின்ற விக்கிரகங்களை மேற்கொண்டு விகிருதங்களைச் செய்யாநிற்கும். விகிருதம் – வேறுபட்ட காரியங்கள். என்றது, சிறிய வடிவைக் கொண்டு, பெரிய உலகங்களை வயிற்றிலே வைத்து, அப்பொழுது தோன்றியது ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளுகையாகிற அகடிதகடநா சாமர்த்தியத்தைச் சொல்லுகிறது.நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை – 1தன் கூட்டத்துக்கு உபகாரகனாகப் பிரசித்தனாய் இருக்கிற சிவபிரானோடு கூட, அவனுக்கும் தந்தையான ஏற்றத்தையுடைய நான்முகன் தொடக்கமான எல்லா அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களையும் ஒரே தடவையில் பிரளயம் தேடிலும் காணவொண்ணாதபடி வயிற்றிலே வைத்துக் காப்பாற்ற வல்ல சர்வ ரக்ஷகனை. ஒடுங்க விழுங்குகையாவது, 2‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய் கோத்தது போன்று 3விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை, பெற்று ஒன்றும் தளர்வு இலனே – 4’எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.

    5‘நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.

அகடிகடதன சமர்த்தன்
ஆலிலை விருத்தாந்தம்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லான்
நக்க பிரான் -ருத்ரன் நக்னன் வஸ்த்ரம் இன்றி
துக்கமில் ஞான ஹேய பிரத்யநீகமான ஞானம்
ஸ்வரூப குணம் –
நிரவதிக தேஜோ ரூபம் ரூப குணம்
அலங்கல் மாலை
மிக்க பெரும் மாயங்களால் -அவரிசித்த செஷ்டிதன்கள்
விக்ரிதம் செய்து -விக்ரிதி மாறுபாடு செய்து
இதர சஜாதீயம் பிரதி பத்தி பண்ணும்படி –
இச்சா கிரஹீதமாக
சிறிய வடிவு கொண்டு பெரிய வஸ்துவை வயிற்றில் வைத்துக் கொண்டு
ஆலிலை சயனம்
அன்றிக்கே
நக்க பிரானும் -பிரான் உபகாரகன் எதற்கு –
அவர் கோஷ்டிக்கு
எல்லாம் எவையும் சேதன அசேதனங்கள்
ரஷிக்க வல்ல
ஒருங்க விழுங்கி-மேலும்  இடம் உடைத்து என்னும்படியாக
அடங்கி-ஈர்க்கில் அத்திக்காய் கோப்பது போலே -வேறாய் இராதே அடங்கி தகுதியாய்
இருக்கை -இப்படிப்பட்டவனை –
பெற்ற -எனக்கு –
அநந்ய பிரயோஜனனாய் ஆச்ரயித்த என்னை –
பிரளயம் நித்யம் அநாந்தர மைமித்திக –
ஒக்க விழுங்கி -நைமிதிக்க பிரளயம் -த்ரைலோக்ய ரஷிப்பத்தால் இரண்டையும் கொள்ளலாம் -பிரமாதிகள் விழுங்க வில்லை -சொல்லாமோ என்னில்
தரை லோகம் அளக்கும் பாரிப்பால் பிரம லோகம் வரை சென்ற திருவடி போலே
இவற்றை ரஷிக்கும் பாரிப்பாலே -விரோதம் இல்லை
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள்
நைமித்திக பிரளயம் –
நித்ய பிரளயம் –
பிரமாதிகளுக்கு ரஷ்யமான த்ரைலோக்லம் ரஷித்து

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 25, 2013

அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும்
அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு
எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
யான்ஓர்துக் கம்இலனே.

    பொ-ரை : ‘துன்பம் இல்லாத இன்பத்திற்கு அளவு இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்திய அழகும் எல்லா இடங்களிலும் சூழ்ந்த ஒளியும் உடையவனும், அக இதழ்களையுடைய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் சேர்க்கையால் உண்டான ஆனந்தங்களையுடையனாய் நிற்கின்ற தலைவனும், முடிவு இல்லாத ஞானத்தை உடையவனும், அந்த ஞானத்தினால் படைத்தல் முதலான எல்லாக் காரியங்களையும் செய்கின்ற, எல்லை இல்லாத ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும், கண்ணபிரானாய் வந்து அவதரித்தவனும் ஆன எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றி, யான் ஒரு துக்கமும் இலேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘இறந்து அமர் ஒளியன்’ எனக் கூட்டுக. ‘செய் மாய்’ என்க.ஈடு : எட்டாம் பாட்டு. 1நித்திய விபூதியை அனுபவித்துக் கொண்டிருக்கிற மேன்மையையுடையவன் உலகினைக் காக்கும் நீர்மையினை நினைக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து – சுவர்க்கம் முதலான உலகங்களிற்போன்று துக்கம் கலந்ததாய் அளவுக்கு உட்பட்ட தாய் இராமல், துக்கத்தின் வாசனை சிறிதும் இல்லததாய் இன்பத்திற்கே நிலைக்களனாய் அளவிடப்படாததான ஆனந்தத்தை உடையவன். 2எங்கும் அமர் அழகன் – மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியையுடையவன். எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன். அன்றிக்கே, ‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம். அன்றிக்கே, ‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால் ‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதிகேசம் பழிப்பு அன்று, சூழ் ஒளியன் – மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.

    அல்லி மலர் மகள் போக மயக்குகள் – 3இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது. மலரில் வாசனை வடிவு கொண்டு இருப்பதைப் போன்று தனக்குமேல் ஓர் இனிய பொருள் இல்லாதவளான பெரிய பிராட்டியுடைய சேர்க்கையாலே பிறந்த ஆச்சரியமான ஆனந்தத்தையுடையனான சர்வேசுவரன் மயக்குகள் – ஆனந்தங்கள். மயங்கள் – கூடல், கலத்தல்.

ஆகியும் நிற்கும் – 1தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும். அம்மான் – 2ஆனந்தமயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?

    எல்லை இல் ஞானத்தன் – 3‘மநஸ்வீ – அவளிடத்தில் சென்ற மனத்தை உடையவன்’ என்னுமாறு போன்று, பிரணய தாரையில் அவளுக்கும் 4யானைக்குக் குதிரை வைக்க வல்ல ஞானத்தின் மேம்பாட்டை உடையவன். ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் – 5தானும் அவளுமான சேர்த்தியிற்பிறந்த வெளிச்சிறப்பையே வேறு துணையை வேண்டியிராதே கருவியாகக் கொண்டு, இக்காரியங்களின் கூட்டத்தை எல்லாம் உண்டாக்குகிறவன். 6‘யாதொரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு அம்முகக் குறிப்பில் பரவசப்பட்டவனாய், படைத்தல் முதலான எல்லாத் தொழில்களையும் செய்கிறானோ, அவன்’ என்றார் அன்றோ பட்டரும்? இம்முகத்தாலே அன்றோ 7பஹூஸ்

யாம் – பல பொருள்கள் ஆகக்கடவேன்’ என்பது? மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும் உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்குமாதலின், ‘ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்’ என்கிறார்.

    எல்லை இல் மாயனை – நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல ஆச்சரியமான சத்திகளோடு கூடியவனை. ‘இப்படிப்பட்டவன் யார்?’ என்னில், கண்ணனை – கிருஷ்ணனை. ‘ஆயின், கிருஷ்ணனுக்குப் படைத்தல் முதலான தொழில்கள் உண்டோ?’ எனின், 1‘உலகங்களினுடைய உற்பத்தியும் கிருஷ்ணனேயாவன்; உலகங்கள் பிரளயத்தால் அழிவதும் கிருஷ்ணனேயாவன்,’ என்பது பாரதம். கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், 2‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

நித்ய விபூதியை அனுபவிக்கும் மேன்மை உடையவன்
ஜகத் ரஷணம் செய்யும் நீர்மையை அனுபவிக்க பெற்ற எனக்கு துன்பம் ஒன்றும் இல்லை
அல்லலில் இன்பம் -துக்கமே கலக்காத இன்பம்
துக்க கந்த ரஹீதமாய் –
ஸ்வர்க்காதி போலே அன்றிக்கே –
பரிச்சினம் அளவு பட்டவை இவை –
எங்கும் அழகன் -காந்தி எங்கும் பரவி
அழகு அவயவ சோபை -சௌந்தர்யம்
எழில் லாவண்யம் மொத்த அழகு –
சமமாக ஒரே மாதிரி அழகு அனைத்தும்
சூழ் ஒளி -சமுதாய சோபை
எங்கும் அழகன் சூழ் ஒளி -பாதாதி கேசம் ஒவ் ஒன்றும் அழகு
த்ரிபாத் விபூதி முழுவதும் காந்தி வெள்ளம்
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
அழகு காட்டில் எரித்த நிலா போலே இன்றிக்கே

நெஞ்சோடு அனுபவிப்பாரை சொல்கிறது
மயக்குகள் ஆனந்தம்
ஸ்ரீ ய பதித்தவ ஆனந்தம்
அம்மான்
நிற்கும்
எல்லையில் ஞானந்தன் –
சீதா பிராட்டி உடன் கூடி இருந்த பெருமாள் -மஹந்தி -தஸ்ய -அவளை விட –
யானைக்கு குதிரை வைத்தால் போலே
போக மயக்கில் இருந்தாலும் எல்லையில் ஞானம் கொண்டவன்
சஹாயாந்தர நிரபெஷமான ஞானம்
பிராட்டி முகம் -தஸ் இங்கித பராதீனக -குறிப்பை அறிந்து
சிருஷ்டித்து இம்முகத்தாலே பஹுசயாம் –
கர்மம் அடியாக ஸ்ருஷ்டி -அதற்க்கு மேல் இவள் புருவ நெறிப்பு காரணம்
ஈச ஈசிதவ்ய உயர்வும் தாழ்வும் பிறவி அடைகிறார்கள்
ஈசனும் இத்தாலே
ஈசிதவ்யரும் இத்தாலே –
எப்படி பொருந்த விடுவது -கர்மம் அடி தான் ஸ்ருஷ்டித்து –
புண்யம் செய்பவன் -கண்டு ஆச்சர்யம் கொண்டு புருவம் தூக்க
அடுத்தவன் -பாபமே செய்ததால் புருவம் சுருங்கி -தாழ்ந்த பிறவி
இத்தால் இரண்டும் பொருந்தும்
சம தீர்த்தம் அண்ணன்கார் பட்டர் ஸ்ரீ ரெங்கத்தில் -கோயில் அண்ணன் வம்சம்
பட்டர் வம்சம் இருவரும் ஒருவர் கை பார்த்து கொடுப்பது போலே
விஷயம் -ஞான ஹானி தன ஹானி சரீர ஹானி
பகவத் விஷயம் பிராட்டி கலவி ஞானம் வ்ருத் தியாகுமே
ஆத்ம மாயயா -ஆசார்யம் செப்பிடு வித்தை சங்கரர் வியாக்யானம்
எம்பெருமானார் ஆத்மா ஞானேன சங்கல்பத்தால்
இது கொண்டு சூத்ரம் ஒருங்க விட்டார் எல்லையில் மாயன்
கிருஷ்ணன் -இப்படிப் பட்டவன் -தாள் பற்றி
பிராட்டி சந்நிதியும் உண்டாய்
புருஷகாரம் செய்து நமது கார்யம் செய்விக்கும்
தானும் ஆனந்தித்து நம்மையும் ஆனந்தப்படுத்தி
குறை இல்லையே இத்தால்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -337-348–அரும் பத விவரணத்துடன்–

February 24, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -337-
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி ததீய சேஷத்வம் –
பர ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அர்ச்சாவதாரம் –
விரோதி ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அஹங்கார மமகாரங்கள் –
உபாய  ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவத் கிருபை –
உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவந் முகோல்லாசம் –
என்று நம்பிள்ளை வார்த்தை –

(பெரும் புறக் கடலும் ஸ்ருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்தோடும் இடங்களில்
அயோக்யர்க்கு சமைத்த மடுவும் சாய்கரமும் மாநமேயசரமம் ..சூரணை–74-)

——————————————————————————

வார்த்தை -338-

கைகேயி பகவத் அபசாரம் பண்ணினாளே யாகிலும் -தன் மகன் என்றாகிலும் –
பாகவத ஸ்நேகம் உண்டாகையாலே முக்தை யானாள் –
சக்ரவர்த்தி பகவத் ஸ்நேகம் பண்ணினானே யாகிலும் முக்தன் ஆகிறிலன் –

———————————————————————————–

வார்த்தை -339-
அம்மணி ஆழ்வான் இரு நூற்று காதம் ஆறு வந்து பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டனிட்டு –
நெடுமாற்கு அடிமை அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்று அபேஷிக்க –

பட்டரும் -எம்பெருமானை அறிகை யாவது -அவனுக்கு அரை வயிற்றுப் படி –
ததீயரை அறிகை யாவது -அவனை முழுக்க அறிகை -என்று அருளிச் செய்ய –

இனி பலவகையாக அருளிச் செய்யில் அடியில் மறப்பேன் -என்று அவர்
அது தன்னையே தாரகமாக கொண்டு போனார் –

(பக்த வைபவம் கேட்டால் அல்லிக் கமலக் கண்ணனாக இருப்பானோ அன்றோ_

————————————————————————————

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

(தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10—நறையூர் நம்பிக்கை நூறு பாசுரங்கள் இறுதி பாசுரம் -அடுத்தது திருச்சேறை பாசுரம்-நல்ல மா மலர் சேவடி -என்பதே பாகவதர்களைக் காட்டும்-கால் வாசி –திருவடி பெருமை முழுவதும் அறிய நம்பிக்கு ஆசை)

பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச்சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

(அம்புருவ வரி நெடுங்கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-)

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

(விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-)

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

(மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-)

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

(பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-)

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

(பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6–திரிதந்தாகிலும் –கரிய கோலத்திரு உரு காண்பன்-ஆழ்வார் உகந்த விஷயம் என்று காண்பன்)

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

(வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-)

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

(ஒருகாலும்-உபாயத்துக்கு புருஷகாரத்துக்காகவும் உபேயத்துக்கு ஸீமா பூமி யாகையாலும் -போதயந்த பரஸ்பரம் ஆகையாலும்)

(தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)

(இவர் முன்னிடுமவரை அவன் முன்னிடுவது இருவரும் தம் தாம் குற்றங்களை ஷமிப்பைக்காக -பெருமாளும் மஹாராஜாரை இட்டே விபீஷணன் அங்கீகாரம் அருளினார்)

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

(மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-)

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட (வாடினேன் வாடி தொடங்கி திவ்யதேச மங்களாசாசனமாக உபக்ரமித்து)என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜ புருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

(என்னிலும் மேலாக ததீயரைச் சொன்னீரே என்ன -பிராட்டியை உத்க்ருஷ்டமாக பட்டர் பாட பெரிய பெருமாளுடைய கவசம் ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பூரித்து வெடிக்குமா போலே உகப்பான் அன்றோ)

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

(நடையாடும் ஜங்கம விமானம் -பகவானை உள்ளத்துக் கொண்டு உலாவும் பெருமாள் தானே ததீயர்)

———————————————————

வார்த்தை -341-
1-ஒரு தேச விசேஷத்து ஏறப் போய் அனுபவிக்கும் அநுபவம் சாத்மிக்கைக்காகாவும் –
2-உபகார ஸ்ம்ருதிக்காகவும் –
3பிரபத்தி பண்ணின போதே -பரம பதத்து ஏறப் போக்கில் –நச்சுப் பொய்கை என்று சம்சாரிகள் இத் துறையில் இழிவார் இல்லாமையாலும் –
4-இவன் சம்சாரிகளைத் திருத்த வேண்டுகையாலும் –
5-பிரபன்னனுடைய சரீரம் சரம சரீரம் ஆகையாலும் –
6-சர்வேஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும் -(சரம விமல திருமேனி -த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -மங்க ஒட்டி மா மாயை என்று பிரார்த்திக்க வேண்டுமே)
7-இத் தேசத்தில் பகவத் அனுபவம் தான் இவனுக்கு அபூர்வம் ஆகையாலும் -(அச்சுவை பெறினும் வேண்டேன் -திருவாறன்விளை உத்தேச்யம் அவன் உபாயம் என்றும் இருப்பார்கள் அன்றோ)
8-ஆசை கிளரவும் – 9-இவன் தன் இசைவாலும்(மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவர் உலகம் எய்வாரே) இவ் வர்தங்களைப் பற்ற வாய்த்து சரீர அவசாநத்திலே மோஷம் ஆகைக்கு அடி -)மரணமால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)

————————————————————-

வார்த்தை -342-

கழிந்த நாளைக்கு அநுதபிக்கையும்
வருகிற காலத்தை பழுது போக்காமையும் -காண்
வைஷ்ணத்வம் ஆகிறது -என்று நம்பிள்ளை –

பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் -முதல் திருவந்தாதி -16
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-
பிறந்த பின் மறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-.
அரவணை மேல் கண்டு தொழுதேன் -முதல் திருவந்தாதி -16

———————————————————

வார்த்தை -343-
நம்பிள்ளை நஞ்சீயரை -தான் தனக்கு வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது எவ் வவஸ்தை பிறந்தால் -என்ன –
அர்ச்சாவதாரதுக்கு உயிர் உண்டு என்று நெஞ்சில் பட்ட வன்றும் –
ஒரு வைஷ்ணவன் பக்கல் புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹத்தளவாகிலும் ஸ்நேஹம் பிறந்த வன்றும் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை சொன்னால் தன் நெஞ்சில் சிவிட்குத் தட்டாமல் –(கோபம் கொள்ளாமல்) -போக ரூபமான வன்றும் –
பர தார பர த்ரவ்யங்களில் நசை யற்ற வன்றும் –
ஏகாந்தி என்று அறியலாம் –

ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களில் நசை யற்ற வன்று பரமை காந்தி என்று
அறியலாம் என்று அருளிச் செய்தார் -(நாராயணாய பதார்த்தம் அநந்ய போக்யத்வம் வேண்டுமே )

————————————————————-

வார்த்தை -344-
பொன்னாய்ச்சியார் வார்த்தை –
பாண்டிய மண்டலத்திலே ஒரு வைஷ்ணவனுடைய வைஷ்ணவத்தைக் கொண்டாட
எழுதி அணிந்த வைஷ்ணவத்வமோ -எல்லை நிலத்தில் வைஷ்ணவத்வமோ -என்று –

(நாம ரூப மாத்திரமே இல்லாமல் ததீயர் வரை செல்ல வேண்டுமே)

———————————————————-

வார்த்தை -345-

பட்டர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் சேவிப்பார் ஒரு வைஷ்ணவரை –
நீர் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி
என் -என்று கேட்டு வாரும் என்ன –

அவரும் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் செல்ல –
அன்று பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கே  அமுது செய்து அருள –

அவரும் இடம் பெறாமையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யும் அளவும் பேசாதே இருக்க –

அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து –
அமுது செய்து அருளிற்று இல்லையே -நெடும் போதுண்டே இளைப்போடே நிற்கிறது
என்று -அனந்தாழ்வான் தாமும் அவருமாக உள்ளே அமுது செய்து அருளி -பின்னை
எங்கு நின்றும் எழுந்து அருளுகிறது -என்ன –

பட்டர் -அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என்னென்று கேட்டு வா என்று அருளிச் செய்து விட்டார் -என்ன –

ஆகில் –
கொக்குப் போலே இருக்கும் -கோழி போலே இருக்கும்–உப்பு போலே இருக்கும் – உம்மைப் போலே இருக்கும் என்றும் விண்ணப்பம் செய்யும் என்றும் அருளிச் செய்தருளினார்

(ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு -அதே போல் நீர் வண்ணனிடம் அசார அல்ப சார சார சார தரங்களை உபேக்ஷித்து சார தமமான பாகவதர்கள் உகந்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று இருப்பார்கள் -கோழி குப்பையைக் கிளறிக் கிளறி நெல் மணியைக் கொள்ளுமா போலே ஸாஸ்த்ரார்த்தங்களை ஆராய்ந்து ஆச்சார்ய அபிமான நிஷ்டையில் ஒதுங்குவார்கள் -உப்பு மறைந்து இருந்து பதார்த்தங்களை போக்யமாக்குவது போல் –பாண்டித்யம் நிர்வித்ய பால்யே ந திஷ்டாஸேத்-பாண்டித்யத்தை மறைந்து குழந்தை போல் கூட்டத்துக்கு போக்யமாக இருப்பார்கள் –இம் மூன்று லக்ஷணங்களும் பரிபூர்ணமாக நிறைந்த உம்மைப் போலே இருப்பர்)

—————————————————————

வார்த்தை -346-

பர ஸம்ருத்தி அஸஹத்வம் –
பர ஸம்ருத்தி ஸஹத்வம்-
பர ஸம்ருத்தி ஸ்வ ஸம்ருத்தி ப்ரயோஜநத்வம்-
பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜநத்வம்-

(நான்கு வித அதிகாரிகள் -மேல் மேல் உயர்ந்தவர்கள் -1–பிறர் மினுக்கும் பொறாமை-பிறர் பெருமை பெறாதவர்கள் -2-பிறர் பெருமை பொறுப்பவர்கள் -3 பிறர் பெருமை தங்களுக்கு பயனாக கொள்பவர்கள் -4- பிறர் பெருமையையும் தம் பெருமையையும் பயனாக கொள்ளாமல் பிறர் பெருமையையே பயனாகக் கொள்பவர்கள்)

(தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-)

————————————————————–

வார்த்தை -347-
ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிறான் சம்சாரத்தில் நசை யற்று -பரம பதத்திலே
ஆசை பிறந்தவன் -இவனுக்கு பரிஹரிக்க வேண்டுவது என் என்னில் –

உடம்பில் ருசி விளையாது ஒழிகையும்
உறவு முறையார் பக்கல் ஆசை வளராது ஒழிகையும் –
உடம்படியாக உகக்கும் அவர்களோடு உறவு கொண்டாடாது ஒழிகையும் –
லோகம் சிலுகிடாமல் ஒதுங்கி வர்த்திக்கையும் –
உடம்புக்கு இரை தேடி ஒருவனுக்கு ஏவல் தொழிலை ஒருபடியாலும் செய்யாது ஒழிகையும் –
உள்ளத்துக்கு உள்ளே நிற்கும் ஒருவன் பக்கல் ஒருபடிப்பட்ட ருசி உண்டாய்ப் போரவும்-(உண்டியே உடையே என்று உகந்து இருக்கும் இம்மண்டலத்தோடே கூடாமையும் -புலன்களை அவன் பால் திருப்பியும்)

தலை அறுப்புண்டவனையும் தலை அறுத்து அத்தாலே சந்நிதியிலே தலையோடு ஏந்தினவனையும் -இவர்களுக்கு கீழான சந்திர ஆதித்யர்களையும் சரணம் என்று புகாது ஒழிகையும் –
இவர்களை சரீரம் ஆகவும் அடிமையாகவும் உடைய எம்பெருமான் பக்கல் ஆன அடிமை செய்து போரவும் –

எம்பெருமானே தஞ்சம் என்று சரணம் புக்கவர்களைத் தனக்குத் துணையாகவும்
உயிராகவும் நினைத்துப் போரவும் –
இவர்களோடு விளையாடியும் பொல்லாங்கு சொல்லாது ஒழியவும் –
இவர்களைப் பொல்லாங்கு சொல்லுவார் உடனே கூடினர் ஆகில் அவர்களை
வாயைக் கிழித்தல் -தான் செவியைப் புதைத்துக் கொண்டு கடக்கப் போதல் செய்யவும் –

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக் கியர்கள் நின் பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.-8-இது பகவத் விஷயத்தில் இங்கு பகவத் பக்தரான அடியவர்கள் விஷயத்தில்

எம்பெருமான் திரு வாசலுக்கு உள்ளேயே மயிர் விரித்தல்  -உமிழ்தல்- கால் நீட்டுதல்
தொடக்கமானவை வருந்தியும் தவிரவும் –
ஆபத்துகளாலே புகுந்து ஒதுங்க வேண்டிற்று ஆகில் -அனர்த்தப் படா நின்றோமே -என்று அஞ்சிப் போரவும் –

இப்படிப்பட்ட போது போக்கு சம்சாரத்தில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –

——————————————————————–

வார்த்தை -348-
பட்டரை ஒருவன் -தேவதாந்தரங்களை வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது
ஒழிவான் என் -என்ன –

பிரமாண விரோதம் உள்ள இடத்தில் அன்றோ சந்தேஹம் உள்ளது -இங்கு சந்தேஹம் இல்லை காண் -என்று அருளிச் செய்தார் –

ஆவதென் என்ன –

சத்வ ப்ரசுரரை -ரஜஸ் தம பிரசுரர் அனுவர்த்திக்குமது ஒழிய
சத்வ ப்ரசுரர்- ரஜஸ் தம ப்ரசுரரை அனுவர்த்திக்கக் கடவதோ -என்று அருளிச் செய்தார் –
தேஷாமபி நமோ நம -என்கிறபடியாலே –

(யஸ் த்வைவம் ப்ரஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வஸே -புருஷ ஸூக்தம்-2-5- எவன் பரம புருஷனான உன்னையே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் அறிகிறானோ அவனுக்கு எல்லாமே தேவர்களுக்கும் வசப்பட்டு இருப்பார்கள் –
ஸர்வே அஸ்மை தேவா பலிமா வஹந்தி -சீஷா -5-எல்லா தேவர்களுக்கும் பகவத் பக்தனுக்கு கப்பம் கட்டுகிறார்கள்
தஸ்ய யஞ்ஞ வராஹஸ்ய விஷ்ணோர் அமித தேஜச பிரணாமாம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம -சாந்தி -46-130-அளவற்ற தேஜஸ்ஸை யுடையவனாய் யஞ்ஞ வராஹ ரூபியாய் அவதரித்த விஷ்ணுவுக்கு ஒரு நமஸ்காரம் செய்பவர்களுக்கு இடைவிடாமல் நமஸ்காரம் செய்து கொண்டே இருக்க வேண்டும் -என்று யமன் கூறினான் -)

(ஆழி மழைக் கண்ணா –இவர்களை வர்ஷ தேவதை-அடியேனுக்கு ஒரு கிஞ்சித் காரம் நியமித்து அருள வேணும்-என்று பிரார்த்திக்க- இவர்கள் அவனுக்கு கைங்கர்யம் நியமித்த படியைச் சொல்லுகிறது –-ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் – தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்-தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்- பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 24, 2013

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய்உல கங்களுமாய்
இன்பம்இல் வெந்நர காகி இனியநல்
வான்சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல
மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்று
ஏதும்அல் லல்இலனே.

பொ-ரை : ‘துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாகிய நல்வினை தீவினைகளுமாகி, உலகங்களுமாகி, இன்பம் இல்லாத கொடிய நரகமாகி, இனிய பொருள்கள் தங்கியிருக்கின்ற மிகச்சிறந்த சுவர்க்கலோகம் முதலிய உலகங்களுமாகி, நிலை பெற்ற

பல உயிர்களுமாகி, மாயையால் உண்டாகும் பல விதமான மக்களுடைய மயக்கங்களால் இன்புறுகின்ற இவ்விளையாட்டுடையவனைப் பெற்றுத் துன்பம் யாதும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஆய் ஆய் ஆகி ஆய் ஆகி இன்புறும் விளையாட்டுடையவன்,’ என முடிக்க. ‘மன் பல் உயிர்’ என்ற இடத்து ‘மன்னுயிர் எல்லாம் தொழும்’ என்ற திருக்குறள் ஒப்பு நோக்கல் தகும்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘இறைவன் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆகையாலே, அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ளது லீலா ரசமாத்திரம் ஆகையாலே, அதனை அநுசந்திக்கும் நான் கர்மங்கட்குக் கட்டுப்படவும் வேண்டா; இவ்வுலகத்தில் தோன்றவும் வேண்டா,’ என்கிறார்.

    ன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் – 2இன்ப துன்பங்களுக்குக் காரணமான புண்ணிய பாப உருவங்களான கர்மங்களை ஏவுகின்றவனாய். உலகங்களுமாய் – இவற்றை ஈட்டுதற்கு உரிய 3இவ்வுலகங்கட்கு நிர்வாஹகனாய். அன்றிக்கே, போக பூமியைச் சொல்லுதலும் ஆம். இன்பம் இல் வெம் நரகு ஆகி – இன்பம் என்பது சிறிதும் இல்லாத நரகலோகத்துக்கு நிர்வாஹகனாய். இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய் – நரகத்தைக்காட்டிலும் சிறிது சுகத்தை உடைத்தான சுவர்க்கம் முதலிய உலகங்கட்கு நிர்வாஹகனாய். ‘உலகங்களும் ஆய்’ என்ற இடம் புண்ணிய பாவங்களை ஈட்டுதற்குரிய உலகத்தைச் சொல்லிற்

றாகில் 1இவை, போக பூமிகள் ஆகின்றன; அன்றிக்கே, அங்கே, போக பூமியைச் சொல்லிற்றாகில், இங்கு, இன்ப துன்பங்களை மாத்திரமே சொல்லுகின்றன.

    மன் பல் உயிர்களும் ஆகி – நல்வினை தீவினைகளைச் செய்கின்றவர்களும் அவற்றின் பலன்களை நுகர்கின்றவர்களுமாய், என்றும் உள்ளவர்களாய், பலராய் உள்ள ஆத்துமாக்களுக்கு நிர்வாஹகனாய். பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று – கணக்கு இல்லாததான பிரகிருதியின் விகாரமுகத்தால் உண்டான மக்களுடைய மதிமயக்கங்களாலே பிரீதிக்கு இடமான விளையாட்டுகளை உடையவனைப் பெற்று. ‘எல்லார்க்கும் நலத்தையே செய்கின்றவனாய்ப் பேரருட் கடலான சர்வேசுவரனுக்கு, தன்னை நீங்கி மக்கள் துதிக்கப்படுகிற இது பிரீதிக்குக் காரணம் ஆகிற படி யாங்ஙனம்?’ என்னில், இவற்றைத் தன்னுடைய பேரருளால் காக்க நினைத்தால் அது இவற்றுக்கு விருப்பம் இல்லாததாய் இருக்கும் இருப்பு இறைவனுக்கு நகைக்குக் காரணமாய், அவ்வழியாலே லீலா ரசத்துக்குக் காரணமாய்விட்டது; இதற்கு நேர்கொடு நேரே கருத்து இது. கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.

    ஏதும் அல்லல் இலனே – ‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ என்கிறார். என்றது, 2‘என்னைக் கர்மங்கள் ஒட்டுவது இல்லை; கர்மபலத்தில் எனக்கு ஆசை இல்லை; இவ்விதமாய் என்னை எவன் அறிகின்றானோ, அவன், கர்மங்களினால் கட்டுப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, அவனைஅறிந்தவன் கர்மங்கட்குக் கட்டுப்படமாட்டான் ஆகையாலே, எனக்கும் கர்மங்கட்குக் கட்டுப்படுதல் இல்லை,’ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, ‘உலகத்தின் படைப்பு முதலானவைகளை அவனுடைய விளையாட்டாக நினைக்கின்ற எனக்கு இந்த லீலா விபூதியில் சேர்தலாகிற துக்கம் இல்லை,’ என்கிறார் என்னலுமாம். என்றது, 1‘‘நான் கட்டிய கட்டினை எவன் ஒருவன் என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ளப் பார்க்கிறான்? அவன் இதனைக் கடப்பான்,’ என்று அவன் சொல்லி வைத்தபடியே, அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ என்கிறார் என்றபடி.

அகர்ம வச்யன் ஆகையாலே -லீலா விபூதியிலே -இன்புறும் இவ் விளையாட்டு உடையான்
இதை அனுசந்திக்க நாமும் கர்ம வச்யர் ஆக மாட்டோம் –
எல்லாம் அவனே
ஆகி ஆகி -நிர்வாகம் கீழ் கொண்டவன்
துன்பமும் இன்பமும் ஆகி -புண்ய பாப கர்மங்களுக்கு நிர்வாஹன்
இவற்றை ஆர்ஜிக்கும் பூமி யாகும்
உலகம் போக ரூபமான பூமி
இன்பமில் வென் நரகம் -அதற்கும் நிர்வாஹன்
சம்சாரம் இன்பமில் நரகம் -ஸ்வர்க்கம் இன்பம் உள்ள நரகம் -புண்யம் கழிந்த பின்
தள்ளு
நித்தியராய் -ஆத்மவர்க நிர்வாஹன்
முக்தர் கேவலர் பக்தர் நித்யர் அனைவருக்கும்
அசந்கேயதமான பல பல -இத்யாதி -உடையானைப் பெற்று மாய மயக்குகள்
மதி விகற்பகங்கள் -மாய மயக்கு மம மாயா கீதை –
புத்தி கலக்கம் -ஏற்படுத்துவது அவனுக்கு ப்ரீதி -லீலை -உண்டாகுமா
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை தத்வ த்ரயம்
ஸ்ருஷ்டிக்கே இல்லை
சிருஷ்டி என்கிற வியாபாரத்துக்கு -மணவாள மா முனிகள் வியாக்யானம்
சர்வ சுக்ருதாய் -இருப்பவன் –
இவற்றை தனது தயையால் ரஷிக்க நினைத்தால் -அது சேதனனுக்கு
நன்மை என்று புரியாமல் -அநிஷ்டமாய் இருக்கும் இருப்பு லீலா ரசத்துக்கு
கொடுத்த சைதன்யம் பொதுவாய் -இருக்க –
ஸ்வா தந்த்ர்யம் கொடுத்து -லீலா கைவல்யம் -ஸ்ரீ பாஷ்யம் –

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது –
ஆத்மாவை சரீரம் இந்திர்யங்கள் சேர்த்து வைத்து
பிரவ்ருத்தி நிவ்ருத்தி நிர்வஹித்து
அனுமதி தானம் கொடுத்து
உதாசீனனாய் இருந்து-
கர்ம பலன் அனுபவிக்க வைத்து
சாஸ்திரம் விதிக்கு வேலை வேண்டுமே
பிராட்டி முகம் பார்த்து ஸ்மிதம் பண்ண –
ஹாஸ்யம் இதனால் தான் –
வாத்தியார் பாடம் நடத்தி பரிட்ஷை நடத்தி மதிப்பெண் தருவதுபோலே
ஸ்ருஷ்டி -லீலா –

விதி படி நடக்கும் –
பிள்ளை படிக்காவிடில் பிரயத்தனம் செய்ய –
உபதேசம் செய்யும் பொழுது ஒரு மாதிரி –
தலை எழுத்து என்று விடாமல் -முயன்று செய்வது போலே
ஸ்வா தந்த்ர்யமும் அவன் இடம் ஒப்படைப்பது தான் சரணா கதி –
இந்த அகர்ம வச்யதை அனுசந்தித்தால் நமக்கும் கர்ம வச்யதை அகலும் –
கர்மம் ஒட்டாது ஆசையும் இல்லை -அறிந்தவன் -கர்மத்தில் இருந்து விடுபடுகிறான் -கீதை
இவனைப் பற்றி குறை ஒன்றும் இல்லாமல் ஆகிறேன் -ஆழ்வார்
நம்மை அறிந்தவன் கர்மங்களால் கட்டுப்படான்
நீயே உபாயம் –
அவன் தன்னையே பற்றி விடுவித்து கொள்ள வேண்டும்
சித்தாந்த முக்கிய விஷயம் –
அவன் அருளால் ஒன்றே
குருவி பிணைத்த கூட்டை அவிழ்க்க போகாதே நம்மால்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 24, 2013

துயர்இல் சுடர்ஒளி தன்னுடைச் சோதி
நின்றவண் ணம்நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக்கண் காணவந்து
துயரங்கள் செய்துதன் தெய்வநிலை உலகில்
புகஉய்க்கும் அம்மான்
துயரம்இல் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யான்ஓர்துன் பம்இலனே.

பொ-ரை : ‘துன்பங்கட்கு எதிர்த்தட்டான மிக்க ஒளியுடன் கூடிய தன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகமானது பரமபதத்தில் நிற்கிறவாறே இவ்வுலகத்திலும் நிற்கும்படியாக, துன்பங்களால் மிக்கிருக்கின்ற மனிதப் பிறவியில் தோன்றி, ஊனக் கண்கள் காணுமாறு வந்து துன்பங்களைச் செய்து, தனது தெய்வத் தன்மையை உலகத்தில் புகும்படியாகச் செலுத்துகின்ற இறைவனும், குற்றம் இல்லாத புகழையுடைய கண்ணபிரானும், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும் ஆன எம்பெருமானது நற்குணங்களை அனுபவித்த யான் ஒரு துன்பமும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.

வி-கு : ‘நிற்கத் தோன்றிக் காண வந்து துயரங்கள் செய்து புக உய்க்கும் அம்மான்’ எனக் கூட்டுக. துயரங்கள் செய்தலை வியாக்கியானத்திற்காண்க. துற்ற – நுகர்ந்த.

ஈடு : ஆறாம் பாட்டு. 1‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய விக்கிரகத்தை, இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கிச் சமுசாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்கின கிருஷ்ணனுடைய குணங்களை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு துக்கத்தின் வாசனையும் இல்லை,’ என்கிறார்.

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி – தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய், பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது. நின்ற வண்ணம் நிற்கவே – அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க. 1‘எனக்கு உரியதான பிரகிருதியை அதிஷ்டித்து என் மாயையால் உண்டாகிறேன்,’ என்று சொல்லப்பட்டதே அன்றோ? துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி – துக்கக் கடலிலே அழுந்தாநின்றுள்ள மனிதர்களுடைய பிறவிகளிலே தோன்றி. 2‘எல்லா உலகங்கள் ஆகிற தாமரை மலரும்படி தேவையாகிற கீழைச்சந்நிதியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’ என்கிறபடியே, தோன்றினவன் ஆதலின், ‘தோன்றி’ என்கிறார்.

கண் காண வந்து – ஊனக்கண்களுக்குப் புலப்படுதல் இன்றி நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னை ஊனக்கண்களுக்குப் புலப்படச் செய்து. துயரங்கள் செய்து – அடியார்களை அழகாலே நோவுபடுத்தியும்; பகைவர்களை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்; 3‘நீண்ட கண்களையுடைய கிருஷ்ணர் பூமியினுடைய பாரத்தைப் போக்கி, எல்லா உலகத்தையும் மயங்கச் செய்து, தம்முடைய மேலான இருப்பிடத்தை அடைந்தார்,’ என்கிறபடியே, பகைவர்களை முட்கோலாலே சாடியும் அடியார்களை கண்ணழகாலே சாடியும் போனபடி. 4‘ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்! ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன்!’ என்னும்படி அன்றோ கண்ணற்று நலியும்படி?

தன் தெய்வ நிலை – இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய தன்மையை. உலகில் – இதற்கு இட்டுப்பிறவாத சமுசாரத்திலே. புக உய்க்கும் – செலுத்துகின்ற. அம்மான் – அவர்கள் விரும்பாமலே, சமுசாரிகளுக்குத் தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் சம்பந்தத்தைச் சொல்லுகிறார். ‘ஆக, ‘பரமபதத்திலே நடையாடக் கூடிய இவ்வுலக சம்பந்தம் இல்லாத விக்கிரகத்தைச் சமுசாரிகளுக்குத் தெரிவித்து, அங்கு உள்ளாரோடு சம்பந்தம்இங்கு உள்ளாரோடும் ஒத்திருக்கையாலே, ‘தன் தெய்வ நிலை புக உய்க்கும் அம்மான்’ என்கிறார்,’ என்றபடி. அன்றிக்கே, 1‘தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’ என்றுமாம்.

துயரம் இல் சீர்க் கண்ணன் – குற்றங்கட்கு எதிர்த்தட்டான கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன். மாயன் – ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன். புகழ் துற்ற யான் – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான். ஓர் துன்பம் இலன் – ‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம்படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?

இதர சஜாதீயமாக்கி
சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்கி –
தன்னுடை சோதி -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து
அம்மான் -மாயன் -புகழ் அனுபவித்து துக்கம் இல்லை
ஹேய பிரத்யநீகமாய்
தனக்கே அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரஹம்
தன்னுடை சோதி -சுத்த சத்வமயம்
நிரவதிக தேஜஸ் கொண்ட –
நின்ற வண்ணம் நிற்கவே -அங்கே இருக்கும் படி ஒன்றுமே குறையாமல் –
விளக்கில் கொளுத்திய விளக்கு போலே –
சம்பவாமி -பூதானாம் ஈஸ்வரோ -இயற்கையான பிரகிருதி உடன்
துயரில் மலியும் மனிசர் துக்க சாகாரத்தில் அழுந்தி
தோன்றி ஆவிர்பவித்து
நித்ய சூரிகள் விஷயமான தன்னை -சம்சாரிகள் காணும்படி வந்து அவதரித்து –
துயரங்கள் செய்து –
அனுகூலரை அழகால் நோவுபடுத்தி
பிரதிகூலரை ஆயுதங்களால் நோவுபடுத்தி –
பூபாரம் நீக்கி -லோஷன -மோக யித்வா ஜகத் சர்வம் -ஸ்லோகம்
அழகும் ஆயுதமும்
கண் அழகால் சாடி இணைக் கூற்றங்கள் கொலோ
தனது தெய்வ நிலை -ச்ப்ராக்ருதமான ச்வாபத்தை
உலகில் புக வைக்கும் அம்மான் -அபெஷா நிரபெஷமாக
பிராப்தி உண்டே -அம்மான் ஆகையாலே
தெய்வ நிலை காட்டியது –
இங்கு உள்ளாருக்கும் அனுபவிக்கும்படி
தூத்ய சாரத்யங்கள் காட்டி எழுதிக் கொண்டவன்
கண்ணன் -மாயன் –
புகழை புஜிக்க பெற்ற யான்
இவ்வுடம்புடன் அணைவான் கிட்டும் பொழுது
அங்கு போய் அனுபவிப்பிக்க கேட்க வேண்டுமா

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.