திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும்
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்
உள்உள் ஆர்அறி வார்அ வன்தன்
கள்ள மாய மனக்க ருத்தே?

    பொ – ரை : ‘ஆலந்தளிராகிய படுக்கையில் சயனித்திருக்கிற வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய வயிற்றையுடைய பெருமான்; ஒருவர்க்கும் தோன்றாத ஆச்சரியமான, உள்ளே உள்ளே செல்லுகின்ற, அவனுடைய மனத்தின் எண்ணத்தை அறிய வல்லவர் எவர்தாம்? ஒருவர் இலர்,’ என்றவாறு.

    வி – கு : ‘கொள்ளும்’ என்னும் எச்சத்தை ‘வயிறு’ என்னும் பெயருடன் முடிக்க. ‘வள்ளல், வல்’ இவ்விரண்டும், வயிற்றுக்கு அடைமொழி. கள்ளம் – ஒருவருக்கு அறிய முடியாத தன்மை. மாயம் – ஆச்சரியம். ‘அறிவார் ஆர்?’ என்ற வினா, இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஏழாம் பாட்டு, 1‘அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    பள்ளி ஆல் இலை – அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிராகிய படுக்கையிலே ஏழ் உலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் – ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து அப்படுக்கையில் அறிதுயில் செய்கிறின்றவன்.2உள்ளே புக்க உலகங்கட்கு இடம் கொடுத்தலோடு அமையது. இன்னம் வேறு தனியாக உலகங்கள் இருப்பினும், அவற்றிற்கும் இடம் கொடுக்க வல்ல வயிறு ஆதலின், ‘வள்ளல் வயிறு’ என்றும், உள்ளே புக்க பொருள்கட்கு அச்சமென்பது சிறிதும் இல்லாத வண்ணம் காப்பாற்ற வல்ல மிடுக்கினையுடைத்தாய் இருத்தலின், ‘வல் வயிறு’என்றும், இப்படிக் காப்பாற்ற வேண்டிய கடமையினையுடையவனாதலின், காப்பாற்றுகிறான் என்பார்,‘பெருமான்’ என்றும் அருளிச் செய்கிறார்.அவன் தன் கள்ளம் மாயம் மனம் கருத்தை ஆர் அறிவார் – ஒருவரும் அறியாதவாறு இன்னம் உள்ளே உள்ளே இருப்பதாய், அறிந்த தன்மை ஆச்சரியமாக இருக்கிற அவனுடைய மனத்தின் வியாபாரத்தை யாவர் அறிவார்? ‘ஏன்? நீர் அறிந்து சொன்னீரே?’ எனின், கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி, ‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’ என்பார், ‘யார் அறிவார்?’ என்கிறார்.

அகதி கடனா சமர்த்தன்
பெரிய உலகம் சிறிய வயிற்றில் கொண்டவனே பரன்
ஏழாம் பாட்டு –
ஆல் இலை சரித்ரம் –
ஏழு உலகும் கொண்ட வாளால்
வால் வாயிற்று பெருமான்
அவன்தான் கள்ள கிருத்ரிமம்
மாய மனக் கருத்தை
உள்ளே சென்று யார் அறிவர்
பள்ளி -படுக்கை
பவனாய்- இருப்பதாய் -முகிளும் தளிர்  –ஆல் இலை -கூட இல்லை தளிர் தான்
அதிலே ஏழு லோகமும் -சப்த லோகம்
வள்ளல் -இன்னும் இடமாய் உண்டாகும் படி -வஸ்து இல்லையே –
வலிமை வயிற்ருக்கு உல் புகுந்த வச்துவுக்குபய பிரசங்கமின்றி மிடுக்கை உடையவன்
பெருமான் -ரஷிக்க வேண்டியது பெருமான் ஆனபடியால் -உடையவன் ஸ்வாமி சொத்து -பாவம்
அவனுடைய உள்ளுள் -கள்ள மாய மன கருத்தை யார் அறிவார்
கண்ட ஒன்றை பார்த்த  இத்தை  சொல்வதை போக்கி
யாருக்கும் அறியாதபடி கள்ளமாய்
ஆச்சர்யமாய் -மாய
மார்கண்டேயர் கண்ணால் கண்டதை சொல்லி நாமும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் .
நளிர் மதி சடையன் எங்கோ முதல் தீர்த்த காரர்
அம் கண்ஞாலம் உண்ட பொது வெள்ளி வெற்பு அகன்றதோ கைலாச்யம்
பாஹ்யமான வியாபாரமும் நிலை அன்று
வெளி செயலும் பேச நிலம் அன்று

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading