திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

தகும்சீர்த் தன்தனி முதலி லுள்ளே
மிகும்தேவும் எப்பொருளும் படைக்கத்
தகும்கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும்சோதி மேல்அறிவார் எவரோ?

    பொ – ரை : ‘படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடையதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றும் எப்பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகிய தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளி உருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஓர் இறைவன் உளன் என்று அறிகின்றவர் யாவர்? ஒருவரும் இலர்’ என்றபடி.

    வி-கு : தனி முதல் – தனித்த காரணமான மூலப்பகுதி. தனி என்பது, இரண்டாவது வேறு காரணம் இன்மையைக் குறிக்க வந்தது. மேல் – மேம்பட்ட பொருள். அறிவார் – வினையாலணையும் பெயர். ‘யவர்’ என்பது, முன்பு உள்ள பாடம். ‘எவர்’ என்னும் வினா ஈண்டு இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘தாமரைக்கண்ணன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    தகும் சீர் – படைத்தலுக்குத் துணையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன். தன் தனி முதலினுள்ளே – காரிய வர்க்கத்துக்கு அடையக் காரணமான மூலப் பிரகிருதி.

இனி, இதற்கு, 1‘நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள் கூறலுமாம். 2‘உலகத் தோற்றத்திற்குப் பரமாணுக்களே காரணம்’ என்பாரும் உளராதலின், அவர் கொள்கையினின்றும் வேறுபடுத்துவதற்குத் ‘தனி’ என்னும் அடைபுணர்த்து ஓதுகிறார். மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

    எப்பொருளும் படைக்கத் தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி – ‘மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான்-ஒருவன்’ என்னுமிடத்தைத் தெரிவிப்பனவாய், காக்குந் தன்மை இல்லையாயினும், ‘காட்சிக்கு இனியவாய்க் குளிர்ந்திருக்கிற திருக்கண்களையுடைவனாய், அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே மிக்க பேரொளியை யுடையவன். ‘தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார். 6‘பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்

நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1‘எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

    ‘உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி. 2‘பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

 

புண்டரீகாட்ஷன் இவன் ஒருவனே
தாமரை கண்ணன்
சங்கல்பம்
மிகும் தேவும் எல்லா பொருளையும் படைக்க தக்க எம்பெருமான்
மேல் பட்ட ஜோதி யார்
சிருஷ்டிக்கு -செய்ய உபயோகி ஞான  சக்தி யாதிகளை உடையவன்
தன் தனி முதல்
தனக்கு ச்வம்மாய் -சொத்து
மூல பிரகிருதி
பரமாணு காரனத்வாதியை வ்யாவர்த்திகிறது
ஏக காரணம் -பரமாணு காரணம் -அதுக்கும் இவன் காரணம்
பகு ச்யாம் சங்கல்பம்
மிகும் தேவும் -தன்னோடு விகல்பிகலாம் படி  அந்தர்யாமியாய் நின்றாலும் –
தானே நிற்கும் படி -கொடி படர சுள்ளி கால் கொள் கொம்பு -கொம்பே தெரியாமல் படர -கொடியே நிற்பதாக
அது போல் மிகும் தேவும் -இவனை மறைத்து
வில்லை வளைத்த போதாகா -வால்மீகி ராமாயணம் பரசு ராமர்
ஐந்தாம் பாட்டில்

தகும் சீர் -மூல காரணமான பிரகிருதி தனி

முதல் சங்கல்பம் இரண்டையும் சொல்லி -தனி முதல் –
மிகு சீர் -மசக்கு  பறல் இடலாம் படி போலி தேவ ஜாதி -duplicate -போலே
வில்லை வளைத்த பொது
தகும் போலே தாமரை கண்ணன்-ரஷகன் இல்லாவிடிலும்
கண் அழகில்
திருவடி தோற்ற துறையில் இவரும் தோற்றார்
விஸ்வ கர்மா இரண்டு வில் பண்ண -ருத்ரன் -நாராயணன் இருவருக்கும் கொடுக்க –
மூச்சு விட ருத்ரன் விழி முறிய ஹூங்காரம் -ஒன்றாலே –
அதிகம் மேனிரே விஷ்ணு சொல்லும் படி மிக்க தேவர் –
தகும் கோல தாமரை கண்ணன் ஸ்பஷ்டம்
ரஷகத்வம் இல்லை என்றாலும் ஜிதம் தோற்பித்த துறை கண் அழகு
விடப்போகாத தர்சநீயமான கண் அழகு
கார்ய வர்க்கம் தோற்ற துறையில் இவர் தோற்றார்
ராமக கமலா பத்ராட்ஷா -திருவடி வார்த்தை
சர்வ சத்வ மனோ கர -தேஜச ஆதித்ய சங்காச பிரகஸ்பதி சம புத்தா –
சர்வாங்க சுந்தராக இருக்கை -அதிலே சுழி ஆயிற்று கண் அழகு -அமிழுவாருக்கு வேண்டியது
கமலா பத்ர அஷர தாமரை இலை போன்ற கண் -காஞ்சி ஸ்வாமி –
கமலம் இவ அஷினி பத்ரம் இவ தேவ -அசாம் கண் காயம் உடம்பு இரண்டு அர்த்தம்
அக்கமலத்து இலை போலும் திருமேனி –
எல்லை எது சர்வ சத்யா மனோ கரைய
திர்யக் ஜாதியாக பனை தாவும் என்னையும் ஈர்த்ததே
தேக ஆத்மா குணம் -குறை அற்றவனாய் இருக்கிறான்
உத்பத்தி தொடக்கமாக -சகஜம் –
நாராயண பரம் ஜோதி மிகும் சோதி ஜோதிஸ் வடிவாக
வேத அபகாரக -ச்வாபிவிக அதிசய -பரத்வம் சொல்லி வைதிகன் அனைவரும்
அநந்ய பரர் -நாராயண அனுவாதிகம்
வைதிகன்  காக உண்டாகில் அவைதிகனாம் இத்தனை
உன்னை பரத்வமில்லை என்பவன் வைதிகன் அல்லன்
நாராயணம் பத்ம புரானம்விஷ்ணு பக்தி இல்லாதவன் சாஸ்திரம் கற்றவனாலும் ப்ராக்மானுயமும் இல்லை
புத்திரன் தகப்பனை த்வேஷித்தால் —
மேல் அறிவர் எவரே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading