ஸ்ரீ பராசர ஸ்மிருதி-

May 24, 2026

முதல்‌ அத்தியாயம்‌: ஆசார காண்டம்.

அதாதோ ஹிம ஸைலாக்ரே தேவ தாரு வநாலயே
வ்யாஸ மேகாக்ர மாஸிந மப்ருச் சந் ந்ருஷய புரா
மாநுஷாணாம் ஹிதம் தர்மம்‌ வர்த்தமாநே கலெள யுகே
சவ்சாரம் யதாவச்ச வத ஸத்யவதீஸுத.

முன்னொரு காலத்தில்‌ மகரிஷிகளெல்லாம்‌ தேவதாரு மரங்களால்‌ நிறைந்த இமய மலையில்‌ ஒரே மனதாய்‌ உட்‌ கார்‌ந்து கொண்டிருக்கும்‌ வியாஸரைப் பார்த்து ஓ ஸத்யவத குமாரரே! இந்தக் கலியுகத்தில்‌ மனிதர்களுக்கு ஹிதமான தர்மத்தையும்‌ சுத்தமான வாசாரத்தையும்‌ சிரமப்பட சொல்லுவிரென்று கேட்டார்கள்

தச் ச்ருத்வா முநிவாக்யந்து ஸஸிஷ்யோக்ந்யர்க ஸந்நிப:
ப்ரதயுவாச மஹாதேஜாஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி விஸாரத
ந சாஹம் ஸர்வ தத்வஜ்ஞ கேதம் தர்மம் வதாம் யஹம்‌
அஸ்மத் பிதைவ ப்ரஷ்டவ்ய இதி வ்யாஸஸ் ஸுதோ ப்ரவீத்

சிஷ்யர்களோடு கூடியும்‌ அக்நிக்கும்‌ ஸூரியனுக்கும்‌ சமமானவராயும்‌ அதிக தேஜோ வானவராகவும்‌ ஸ்ருதி ஸ்மிருதி இவைகளை உணர்ந்தவராகவும் பராசரருக்குப் புத்திரராயுமிருக்ற வியாஸர்‌ அந்த ரிஷிகளின்‌ வாக்யக்தைக் கேட்டு நான்‌ எல்லாத் தத்துவங்களையும் உணர்ந்தவன் அல்லேன் எவ் வண்ணம்‌ தர்மம் உரைக்கக் கடவேன்‌ என்‌ பிதாவைக் கேளுங்கள்‌ என்று பதில்‌ சொன்னார்

ததஸ்தே ருஷயஸ் ஸர்வே தர்ம தத்துவ ஸித்த காங்க்ஷிணா
ருஷிம் வ்யாஸம் புரஸ்க்ருத்ய கத்வா பத்ரிகாஸ்ரமம்‌

பிறகு அம் முனிவர்களெல்லாரும்‌ தர்மத்தினுண்‌மைப் பொருளை யறிய விரும்பினவர்களாய்‌ வியாஸ மகரிஷியை முன்‌னிட்டுக்கொண்டு பதரிகாச்ரமத்தை நோக்கிச் சென்று

நாநா புஷ்ப லதா கீர்ணம்‌ பல புஷ்பைர லங்க்ருதம்‌
நதீ ப்ரஸ்ரவணோ பேதம்‌ புண்ய தீர்தோப ஸோபிதம்‌

ம்ருக பஷி நிநா தாட்யம்‌ தேவதாய தநா வ்ருதம்‌
யஷ கந்தர்வ ஸித்தைஸ் ச ந்ருக்‌த கீதை ரலங்க்ருதம்

(அந்த பதரிகாஸ்ரமம்‌) அனேகம்‌ புஷ்பக் கொடிகளால்‌ நிறைந்தும்‌ பழங்களாலும்‌ புஷ்பங்களாலு மலங்கரிக்கப்‌ பட்டதாயும்‌ ஆறுகளோடும்‌ மலை யருவிகளோடும்‌ கூடினதாயும்‌ பரிசுத்த தீர்த்தங்களால்‌ விளங்குகிறதாயும்‌, மான்களுடையவும்‌ பஷிகளுடையவும்‌ சப்தங்களால்‌ பூர்ணமாகவும்‌ கோயில்களால்‌ சூழப்‌ பட்டதாயும்‌ யக்ஷர்கள்‌ கந்தருவர்‌ சித்தர்கள்‌ இவர்களுடைய ஆடல் பாடல்களால் அலங்கரிக்கப் பட்டதாயும்‌ விளங்குகிறது

தஸ்மிந் ருஷி ஸபா மத்யே ஸக்தி புத்ரம் பராஸரம்‌ –
ஸூகாஸீநம் மஹா தேஜா முநி முக்ய கணா வ்ருதம்‌
க்ருதாஞ்ஜலி புடோ பூத்வா வ்யாஸஸ்‌ து ருஷிபிஸ் ஸஹ
ப்‌ர தஷிண அபிவாதைஸ் ச ஸ்‌துதி பிஸ் ஸம பூஜயத்

அவ் விடத்தில்‌ ரிஷிகளின்‌ சபை நடுவில் சுகமாக உட்கார்‌ந்து மகரிஷிகளால்‌ சூழப்பட்டு சக்தி புத்திரராக விளங்கும் பராசரரை (மகா தேஜோவானான வியாஸர்‌ ரிஷிகளோடு கூடிக்‌ கை கூப்பிக் கொண்டு பிரதஷிண நமஸ்காரங்களாலும்‌ ஸ்தோத்திரங்களாலும் பூஜித்தார்

ததஸ் ஸந்துஷ்ட ஹ்ருதய பராஸர மஹா முநிர்
ஆஹ ஸுஸ்வாகதம் ப்ரூஹீ த்யாஸீநோ முனி புங்கவ

பிறகு சந்தோஷத்‌துடன்‌ பராசரர் முனிவர்களுக்குள்‌ உயர்ந்தவராதலால்‌ உட்கார்ந்தபடியே ஷேமமாக வந்தாயோ சொல்‌ என்று விசாரித்தார்-

குஸலம் ஸம்யகித் யுத்வா வ்யாஸ ப்ருச் சத்யத பரம்‌
நல்ல க்ஷேமம்‌ தானா வென்று விசாரித்த பிறகு வியாஸர்‌ கேட்கிறார்

யதி ஜாநாஸி பக்திம்‌ மே ஸ்‌நேஹாத்வம் பக்த வத்சல
தர்மம் கதய மேதா தஹ்‌ய நுக்‌ராஹ் யோப்யஹம் தவ.

நீர்‌ பக்த வத்சலனாதலால் தேவரிர் விஷயமான என்‌னுடைய பக்கியை யறிந்தாவது , எனக்குத்‌ தகப்பனாதலால்‌ புத்திர ஸ்நேகத்தாலாவது எனக்குத்‌ தர்மத்தைச்‌ சொல்ல வேண்டும்‌,-எவ்விதத்திலும் நான் தேவரீருடைய அனுக்ரஹம் பெறத்தக்கவன்-

ஸ்ருதாமே மாநவா தர்மா வாஸிஷ்டா காஸ்யபாஸ் ததா
கார்கீயா கெளதமீயாஸ் ச ததா செளஸந ஸாஸ் ஸூருதா
அத்ரேர் விஷ்ணோஸ்ச ஸம்வர்‌தாத் தஷா தங்கிரஸஸ் ததா
ஸாதாத பாச்‌சஹாரி தாத் யாஜ்ஞவல்க்யாத் ததைவ ச
ஆபஸ்தம்ப க்ருதா தர்மாஸ் ஸங்கஸ்ய லிகிதஸ்ய ச காத்யாயந க்ருசதாஸ் சைவததா ப்ராசேத ஸாந் முநே

மநு – வசிஷ்டர்‌ – காசிபர்‌ -கர்க்கர்‌ – கெளதமர்‌ -உசநஸ்‌-அத்திரி – விஷ்ணு – ஸம்வர்‌ததர்‌-தக்ஷர்‌ – அங்கிரஸ்‌ – சாதாதபர்‌-ஹாரீதர்‌-யாக்ய வல்க்யர்‌-ஆபஸ்‌தம்பர்‌-சங்கர்‌ -லிகிதர்‌-காத்தி யாயனர்‌ – பிரசேதஸ்‌ இவர்களால்‌ செய்யப்பட்ட ஸ்மிருதிகளை நான் அறிந்திருக்கிறேன்

ஸ்ருதாஹ் யேதேபவத் ப்ரோக்தாஸ் ஸ்ருத்யரத்தாமேந விஸ்ம்ருதா, அஸ்மிந் மந்வந்தரே தர்மா க்ருத த்ரேதாதிகே யுகே

தேவரிரால்‌ ஓதுவிக்கப்பட்ட வேதார்த்தங்களும்‌ – க்ருதம்‌ த்ரேதா முதலிய யுகங்களின்‌ தர்மங்களும்‌ எனக்கு மறக்க வில்லை-

ஸர்வே தர்மா க்ருதே ஜாதாஸ் ஸ்ர்வே நஷ்டா கலெள யுகே
சாதுர்வர்ணய ஸமாஸாரம்‌ கிஞ்சித் ஸாதாரணம் வத

எல்லாத் தர்மங்களும்‌ க்ருத யுகத்தில் உண்டானவை -தேச குல சாதி வயஸூ குண தேக கால ஆபத் தர்மங்களைக் போல் பலவும் உள்ளன-யுகம் தோறும் ஒரு கால் உடைந்து கலியுகத்தில் ஒரே கால் மட்டுமே இருப்பதால் அவைகள்‌ கலியுகத்தில்‌ நாசமடைந்தன. நான்கு வர்ணங்களுக்கும்‌ சில பொதுவான தர்மங்களைச்‌ சொல்ல வேண்டும்-சாமான்ய விசேஷ தர்மங்கள் இரண்டு வகைப்படுத்தலாம்-

சதுர்ணாமபி வர்ணா நாம் கர்‌தவ்யம் தர்ம கோவிதை
ப்ரூஹீர் தர்ம ஸ்வருபஜ்ஞ ஸூஷ்மம் ஸ்‌ தூலஞ்ச விஸ்தராத்‌ .

தர்மங்களுடைய ஸ்வரூபம்‌ தெரிந்த தேவரீர்‌ நான்கு வர்ணங்களுக்குள்‌ தர்மம் தெரிந்தவர்களால்‌ செய்யத் தகுந்த நுட்‌பமாயும்‌ பெரிதாயுமிருந்துள்ள தர்மங்களை விஸ்தாரமாக வுரைக்க வேண்டும்

வ்யாஸ வாக்யா வஸாநேது முநி முக்ய பராஸர
தர்மஸ்ய நிர்ணயம் ப்ராஹ ஸூக்ஷ்மம் ஸ்தூலம் ச விஸ்‌தாராத்

வியாஸருடைய வார்த்தையின்‌ முடிவில்‌ ரிஷிகளுக்‌குள் உயர்ந்தவரான பராசரர்‌ நுட்பமாயும்‌ பெரிதாயுமிருக்கற தர்‌மத்தினுடை.ய வாஸ்தவத்தை விரிவாக வுரைக்‌கலுற்றார்

ஸ்ருணு புத்ர ப்‌ரவஹ்யாமி ஸ்ருண்வந்‌து முநயஸ் ததா
புத்திரா! சொல்லுகிறேன் கேள்‌. அப்படியே ரிஷிகளும்‌ கேட்கட்டும்‌.

கல்‌பே கல்‌பே க்ஷய உத்பத்யா ப்ரஹ்ம விஷ்ணு மஹேஸ்வரா
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸமாசார நிர்ணே தாரஸ் ச ஸர்வதா

பிரமன்‌ விஷ்ணு ருத்திரன் இம் மூவரும்‌ ஸ்ருதி ஸ்ம்‌ருதிகளி னர்த்தங்களை நிச்சயிக்கற மநு முதலியவர்களும்‌ கல்பங்‌கள் தோறும்‌ நாசம்‌ உத்பத்திகளோடு கூடியிருக்கிறார்கள்-இவ்வண்ணம் ஸ்மிருதியை நிர்ணயித்தவர்கள் மனு, ஆங்கீரசு, வியாசர், வசிஷ்டர், பராசரர், போதாயனர், ஆபஸ்தம்பர் முதலாக முப்பத்தாறு ரிஷிகளென்று பைடீநசி ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும், வத்ஸர், மரீசி, முதலானவர்களும் அவரவர் சொல்லிய தருமங்களும் உண்டென்று
பாரதம் அசுவமேத பருவத்தில் சொல்லியிருக்கிறது.

ந கஸ்சித் வேத கர்த்தா ச வேதம் ஸ்ருத்வா சதுர்முக
ததைவ தர்மாந் ஸ்மரதி மநு கல்பாந்த ரேந்தரே

ஒருவரும்‌ வேதத்தைச் செய்தவர்களல்லர்‌ பிரம்மா வேதத்கைக் கேட்‌ட அப்படியே ஸ்மிருதிகளைச் செய்கிறார்‌. கல்பங்களுக் கிடையிடையில்‌ மனுவும்‌ ஸ்மிருதிகளைச் செய்கிறார் -அந்த ஸர்வேஸ்வரனும் அநாதியான வேதத்தைத் தோற்றுவித்தவரே யன்றிச் செய்தவரல்ல வென்று மச்சபுராணம் கூறுகின்றது. பிரமன் ஸ்மிருதிகளைச் செய்து தனக்குக் கற்பித்தாரென்று ஸ்வாயம்புவ மனு கூறினார்.

அந்யே க்ருதயுகே தர்மா ஸ்த்ரேதாயாம் த்வாபரே யுகே அந்யே கலி யுகே ந்ரூணாம்‌ யுக ருபாநுஸாரத
கிருத யுகத்தில்‌ தர்மங்கள்‌ வேறு, திரேதாயுக,துவாபர, கலி யுகங்களில்‌ தர்மங்கள் வெவ்வேறு. யுகங்களுக்கு அனுகுணமாகவே தர்மங்கள் இருக்கின்றன-தர்மத்தின் அனுஷ்டானம் வேறு பட்டிருக்கு மென்பது கருத்து

தபஸ் பரம் க்ருதயுகே த்ரேதாயாம் ஜ்ஞாந முச்யதே திவாபரே யஜ்ஞமேவாஹுர் தாந மேவ கலெள யுகே–
தபஸ்ஸே கிருத யுகத்திலும்‌,திரேதா யுகத்தில்‌ ஞாநமும்‌, துவாபர யுகத்தில் யஜ்ஞமும்‌,கலியுகத்தில் தானமுமே சிறந்ததென்று சொல்லுவார்கள்

க்ருதேது மாநவா தர்மா ஸ்‌த்ரேதாயாம் கெளதமா ஸ்ம்ருதா
த்வாபரே சங்க லிகதா கலெள பாராஸரா ஸ்ம்ருதா

கிருத யுகக்தில்‌ மனு ஸ்ம்ருதியும்‌ திரேதா யுகத்தில்‌ கெளதம ஸ்மிருதியும்‌ திவாபர யுகத்தில்‌ சங்‌க ஸ்மிருதியும்‌ கலியில்‌ பராசர ஸ்மிருதியும்‌ முக்யமானவை

த்யஜேத் தேஸம் க்ருத யுகே த்ரேதாயாம் க்ராமமுத் ஸ்ருஜேத்‌
த்வாபரே குலமேகந்து கர்தாரந்து கலெள யுகே

கிருதயுகத்தில்‌ பாபிஷ்டனிருக்கும்‌ தேசத்தையும்‌ திரேதா யுகத்தில்‌அவனிருக்கும்‌ கிராமத்தையும்‌ த்வாபர யுகத்தில்‌ அவனுடைய குலத்தையும்‌ கலி யுகத்தில்‌ பாபம்‌ செய்தவனையும்‌ விட வேண்டும்-

க்ருதே ஸம்பாஷணாதேவ த்ரேதாயாம் ஸ்பர்‌ஸநெந ச த்வாபரேத் வந்நமாதாய கலெள பததி கர்மணா:
கிருத யுகத்திற்‌ பாபியோட வார்த்தை சொல்வதாலும்‌, த்ரேதா யுகத்தில்‌ அவன்‌ மேல்‌ படுவதாலும்‌, த்வாபரத்தில்‌ அவனன்னம் வாங்குவதாலும்‌, கலியில்‌ பாபம்‌ செய்தாலும்‌ பதிதனாகிறான்-

க்ருதே தாத்ஷணிகஸ் ஸாபஸ் த்ரேதாயாம்‌ தஸபிர்‌ திநை
த்வாபரே சைகமாஸேந கலெள ஸம்வத்ஸரேண து

பெரியார்கள்‌ சபித்தால்‌ கிருத யுகத்தில்‌ தத் க்ஷணத்திலும் , திரேதா யுகத்தில்‌ பத்து நாளிலும்‌, துவாபர யுகத்தில்‌ ஒரு மாஸத்திலும் , கலி யுகத்தில்‌ ஒரு வருஷத்திலும்‌ பலிக்கும்-

அபிகம்ய க்ருதே தாநம் த்ரேதாஸ் வாஹு பதீயதே த்வாபரே யாசமாநாய ஸேவயாதீயதே கலெள
கிருத யுகத்தில்‌ கொடுப்பவன்‌ யாசகனிருக்கும் இடத்தில் சென்றும்‌, திரேதா யுகத்தில்‌ யாசகனை வரவழைத்தும் த்வாபரத்தில் தன்னிடத்தில்‌ வந்து யாசிப்பவனுக்கும்‌, கலி யுகத்தில்‌ தனனை யடுத்துக்‌ காத்திருப்பவனுக்கும்‌ தானம் செய்யப்படுகிறது-

அபிகம்யோத்தமம் தாநமாஹுயைவது மத்யமம்‌ அதமம் யாச மாதாய ஸேவா தாநந்து நிஷ்பலம்‌
தான்‌ சென்று கொடுக்கும்‌ தானம்‌ உயர்ந்தது -யாசகனை வரவழைத்துக் கொடுப்பது மத்திமம்‌ – யாசிப்பவனுக்கு கொடுப்பது அதமம்‌-அடுத்து காத்து இருப்பவனுக்குக்‌ கொடுப்பது பயனற்றது-கடலுக்கும் அளவு உண்டு தானே சென்று கொடுக்கும் தானத்தினாலும் கேட்காமல் கொடுக்கும் தானத்தினாலும் உண்டாகும் பலனுக்கு அளவில்லை யென்று புராண ஸாரம் கூறுகின்றது-

ஜிதோ தர்மோஹ்ய தர்மேண ஸத்யம் சைவா ந்ருதேந ச
ஜிதாஸ்‌ சோரைஸ்து ராஜாந ஸ்‌த்ரீ பிஸ்ச புருஷா கலெள

அதர்மத்தால்‌ தர்மமும்‌ அசத்தியத்தால்‌ சத்தியமும்‌ திருடர்களால்‌ அரசர்களும்‌ ஸ்திரிகளால்‌ புருஷர்களும்‌ கலியுகத்தில்‌ ஜயிக்கப்படுகிறதுகள்-

ஸீதம்திச அக்னி ஹோத்ராணி குரு பூரஜா ப்ரணஸ்யதி
குமார்யஸ்ச ப்ரஸூ பந்தே தஸ்மி்ந் கலி யுகெஸதா

அக்நி ஹோத்திரங்கள்‌ குறைகின்றன. ஆசார்ய சிஸ்ரூஷை நாசமடைகிறது. கன்னிகைகள்‌ பிரஸவிக்கிறார்கள்‌; அந்த கலி யுகத்திலிவ் வண்ணமாகவே எப்போதும்‌ நடக்கும்-

க்ருதேத் வஸ்தி கதா ப்ராணாஸ் த்ரேதாயாம் மாம்ஸமாஸ்ரிதா
த்வாபரே ருதிரம் சைவ கலெள த்வந் நாதி ஷுஸ்‌திதா?

கிருத யுகத்தில்‌ பிராணங்கள்‌ எலும்பைப்‌ பத்தியும்‌ திரேதா யுகத்தில்‌ மாம்ஸத்தைப்‌ பற்றியும்‌ துவாபர யுகத்தில் ரத்தைப் பற்றியும்‌ கலி யுகத்தில்‌ அன்னம்‌ முதலியவற்றைப் பற்‌றியும் இருக்கின்றன –

யுகே யுகே சயே தர்மாஸ் தத்ர தத்ர சயே த்விஜா
தேஷாம் நிந்தா நகர் தவ்யா யுக ரூபாஹிதே த்விஜா

யுகங்கள் தோறும்‌ எந்த தர்மங்கள்‌ ஏற்பட்டனவோ; அத் தர்மங்களைச்‌ செய்கிறவர்கள்‌ எந்த த்விஜர்களோ ; அவர்களை நிக்திக்கக் கூடாது, ஏனெனில்‌ அவர்கள்‌ யுகத்துக்‌கு அநு குணமாக நடப்பவர்கள்-

யுகே யுகேது ஸாமர்த்யம்‌ ஸேஷம் முநி விபாஷிகம்‌
பராசரேண சாப் யுக்தம்‌ ப்ராயஸ் சித்தம் விதீயதே

யுகங்கள் தோறும்‌ பராசரரால்‌ சொல்லப் படாத யுகத்தின்‌ சாமர்த்தியம்‌ மற்ற ரிஷிகளால்‌ கூறப் பட்டிருக்கறது – முன்‌ விருத்த பராசரரால்‌ சொல்லப்பட்ட பிராயச் சித்தங்கள்‌ விதிக்கப்‌ படுகிறது –

அஹமத்யைவ தத் ஸர்வ மநு ஸ்ம்ருத்ய ப்ரவீமிவ சாதுர் வர்ண்ய ஸமாஸாரம்‌ ஸ்ருண் வந்து முநிபுங்கவா –முநீஸ்வரர்களே ௮ந்த சகலமான நான்கு வர்‌ணங்களுடைய தர்மங்களையும்‌ நான் இப்பொழுதே யறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன் –

பராஸர மதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்‌
சிந்திதம் ப்ராஹ்மணார்‌ தாய தர்ம ஸம்ஸ்தாபநாயச

புண்ணியமானதும்‌ பரிசுத்த மானதும்‌ பாபங்களைப்‌ போக்க வல்லதுமான இந்த பராசரருடைய ஸாஸ்த்ரமானது பிராமணர்களுக்காகவும்‌ தர்மத்தை நிலை நிறுத்துகைக்காகவும்‌ ஆரம்‌பிக்கப் படுகிறது –

சதுர்ணாமபி வர்ணாநா மாசாரோ தர்ம பாலக
ஆசாரப்ரஷ்ட தேஹாநாம்‌ பவேத் தர்ம பராங்மக:

நான்கு வர்ணங்களுக்கும்‌ ஆசாரமே தர்மத்தைக்‌ காப்பாற்றுகிறது -ஆசாரமில்லாத தேகம் உடையவனுக்கு தர்மம் பலப்படாது –

ஷட் கர்மாபிரதோ நித்யம்‌ தேவதா திதி பூஜக ஹுத?ஸேஷம் துபுஞ்ஜாநோ ப்ராஹ்மணோ நாவ ஸீததி
யஜனம்‌ முதலிய ஆறு தொழிலில்‌ எக் காலத்திலும்‌ சிரத்தை யுள்ளவனாகவும்‌ தேவர்‌ அதிதி யிவர்களைப்‌ பூஜிப்பவனும்‌ ஹோமம் பண்ணின மீதி ஹவிஸ்ஸை சாப்பிடுகிறவனுமான பிராமணன்‌ துன்பப்படான் –

ஸந்த்யா ஸ்நாநம் ஜபோ ஹோமோ தேவதாநாஞ்ச பூஜநம்‌
ஆதித்யம் வைஸ்வ தேவம்‌ ச ஷட் கர்மாணி திநே திநே

ஸ்நானத்தோடு கூடின சந்தியாவந்தனம்‌ ஜபம் ஹோமம்‌ தேவதா பூஜை அதிதி பூஜை வைச்வதேவம்‌ இவை யாறு கருமங்களும்‌ பிரதி தினமும்‌ செய்ய வேண்டியது –

இஷ்டோவா யதிவா த்‌வேஷ்யோ மூர்க பண்டித ஏவ வா
ஸம்ப்ராப்தோ வைஸ்வதேவாந்தே ஸோ திதிஸ் ஸ்வர்க ஸங்க்ரம

மித்திரனானாலும்‌ சத்தருவானலும்‌ தெரியாதவனானாலும்‌ தெரிந்தவனானாலும்‌ வைச்வ தேவத்தின் முடிவில்‌ வந்தவ னெவனோ அவனே ஸ்வர்க்கக்தை யடைவிக்கும்‌ அதிதி-

தூரார்த்வோபகதம் ஸ்ராந்தம்‌ வைஸ்வ தேவ உபஸ்திதம்‌ அதிதிம் தம் விஜாநீயாந்நா திதி பூர்வமாகத
வெகுதூரம்‌ வழி நடந்து வருந்தி வைச்வதேவ காலத்தில்‌ எவன்‌ வருகிறானோ அவனே அதிதி யென்‌றறிய வேண்டும்‌ முன் வந்தவன் அதிதியாகான்-

நைகக்ராமீணமதிதிம் ஸம்‌ ருஹ்ணீ தகதாசந அநித்யமாகதோ யஸ்மாத் தஸ்மாத் அதிதிருச்யதே
ஒரே கிராமத்திலிருப்பவனை யொரு போதும் அதிதியாக வெண்ணக் கூடாது. தினந்தோறும்‌ வருகிறதில்லை யாதலால்‌ அவனுக்கு அதிதி என்று பெயர்‌ வந்தது. திதி யென்றால் தினம் –

அதிதிம் தத்ர ஸம் ப்ராப்தம்‌ பூஜயேத் ஸ்வாகதாதிநா
அர்க்யாஸந ப்ரதாநேந பாத ப்ரஷாள நேநச
ஸ்ரத்தயா சாந்நதாநேந ப்ரிய ப்ரஸோத்தரேணச
கச்சந்தம் சாநு யாநேந ப்ரீதி முத்பாத யேத்த்க்ஹீ

அந்த வைஸ்வ தேவ காலத்தில்‌ வந்த அதிதியை குசலப் பிரசனம்‌ முதலியதுகளாலும்‌ அர்க்யம்‌ அந்நம்‌ இவைகளைக் கொடுப்பதினலும்‌ கால்‌ கழுவுகிறதினாலும்‌ சிரத்தையோடு அன்‌னம் இடுவதாலும் பிரியமாகக் கேட்டு பதில் சொல்வதாலும்‌, போகிறவனைப் பின்‌ செல்வதினாலும்‌ கிரகஸ்தன்‌ பிரிதி யுண்டு பண்ணி பூசிக்‌கக் கடவன் –

அதிதிர் யஸ்ய பக்நாஸோ க்ருஹாத் ப்‌ரதி நிவர்த்ததே
பிதரஸ் தஸ்ய நாஸ்நந்தி தஸ வர்ஷாணி பஞ்சச
காஷ்டபார ஸஹஸ்ரேண க்ருத கும்பஸதே நச
அதிதிர் யஸ்ய பக்நாஸஸ் தஸ்ய ஹோமோ நிரர்‌தக

எவனுடைய வீட்டில்‌ அதிதி தன்னாசை நிறைவேறாமல்‌ திரும்பிப் போகிறானோ. அவனுடைய விட்டில் பதினைந்து வருஷம்‌ பித்ரு தேவதைகள்‌ அன்னம்‌ வாங்குகிறதில்லை. எவன்‌ வீட்‌டில்‌ வந்த அதிதியின்‌ ஆசை நிறைவேற வில்லையோ, அவன்‌ ஆயிரம் பாரம்‌ கட்டைகளைக் கொண்டும்‌ நூறு குடம்‌ நெய்யைக் கொண்டும்‌ ஓமம்‌ செய்த போதிலும்‌ அது பயன் படாது –

ஸூ ஷேத்ரேவாபயேத் பீஜம்‌ ஸூபாத்ரே நிக்ஷிபேத்தநம்‌
ஸுுஷேத்ரே ச ஸாுபாத்ரே சஹ் யுப்தம் தந்ந விநஸ்யதி

நல்ல பூமியில்‌ விதையை விதைக்க வேண்டும்‌; நல்ல பாத்திரத்தில்‌ தானம்‌ செய்ய வேண்டும்‌; நல்ல பூமியிலும்‌ நல்ல பாத்திரத்திலும்‌ செய்யப் பட்டது கெட்டுப் போகிற தில்லை –

ந ப்ருச்சேத் கோத்ர சரணே ந ஸ்வாத்யாயம் ஸ்ருதம் ததா ஹ்ருதயே கல்பயே தேவம்‌ ஸர்வ தேவ மயோ ஹிஸ- அதிதியாக வந்தவனுடைய கோத்திரத்தையும்‌ ஆசாரத்தையும்‌ வேகத்தையும்‌ சாஸ்திரத்தையும்‌ கேட்க வேண்‌டியதில்லை. அதிதி – எல்லா தேவதைகளுடைய ஸ்வரூபர்‌ என்பதொன்றையுமே மனதில்‌ வைக்க வேண்டியது-

அபூர்வஸ் ஸுவ்ரதீவி ப்ரோஹ்ய பூர்வச்சா திதிஸ் ததா
வேதாப்யா ஸரதோ நித்யம்‌ த்ரய பூஜ்யாதி நேதிநே

நல்ல விரதமுள்ள சன்னியாசியும்‌ முன்‌ வந்தவனல்‌லாத வதிதியும்‌ தினந் தோறும்‌ வேதமோதுகிற பிரம்மசாரியும்‌ இம் மூவரும்‌ தினந்தோறும் பூஜிக்கத் தக்கவர்கள் –

வைஸ்வதேவேது ஸம்ப்ராப்தே பிஷுகே க்ருஹமாகதே
உத்ருத்ய வைஸ்வதேவார்தம்‌ பிஷுகம் து விஸர்ஜ்யேத்‌

வைஸ்வதேவம்‌ செய்வதற்கு முன்‌ பிஷுகர்‌ வந்தால்‌ வைஸ்வதேவத்தின்‌ பொருட்டு தனியாக வெடுத்து வைத்து விட்டு, பிஷுகரை யனுப்ப வேண்டும் –

தத் யாச்ச பிஷா த்ரிதயம்‌ பரிவ்ராட் ப்ரஹ்ம சாரிணாம்‌
இச்ச யாசததோ வித்வாரந் விபவே ஸத்ய வாரிதம்‌

சன்னியாசிக்கும்‌ பிரம்ம சாரிகளுக்கும்‌ மூன்று தரம்‌ பிச்சை யிட வேண்டும்‌! தனது சக்திக்கும்‌ இச்சைக்கும்‌ ௮னுகுணமாக மேல்‌ எவ்வளவிட்டாலுமிடலாம்‌. அது விலக்கப் பட வில்லை –

யதி ஹஸ்தே ஜலம் தத்யாத்பி க்ஷரம் தத்வா புநர்ஜலம்‌ தத்பைக்ஷம் மேருணா துல்யம்‌ தஜ் ஜலம் ஸாகரோபமம்‌ – சன்னியாசி கையில் முன்னமே ஜலத்தைக் கொடுத்த பிறகு பிச்சை யிட்‌டு மறுபடியும்‌ ஜலத்தைக் கொடுக்க வேண்டும்‌ அப்படியிட்ட பிச்சை மேருவைக்‌ கொடுத்ததோடொக்கும்‌ அந்த ஜலம்‌ சமுத்திரத்தைக்‌ கொடுத்ததோடொக்கும்‌-

யஸ்ய சத்ரம் ஹயச்சைவ குஞ்சரா ரோஹ ம்ருத்திமத்‌ ஐந்தரம் ஸ்தாந முபாஸீத தஸ்மாத் தந்ந விசாரயேத்
எவன்‌ குடை குதிரை இதுகளுடன்‌ அதிதியாக வந்‌தானே அவனை யாதரித்தவன்‌-யானையிலேறி சம்பத்தோடு கூடிய விந்திர பதத்தை யடைவன்‌. ஆதலால் அதை யவன்‌ விசாரிக்க வேண்‌டிய தில்லை-

வைஸ்வதேவ க்ருதம் பாபம் ஸக்தோ பிஷுர் வ்யபோஹிதும்‌
நஹி பிஷு க்ருதம் தோஷம்‌ வைஸ்வ தேவோ வ்யபோஹிதும்‌

வைஸ்வதேவம்‌ செய்யாகதாலுண்டான பாவத்தை பிஷுர்‌ போக்கடிப்பார்கள்‌-பிச்சையிடாததால் உண்டான தோஷத்தை-வைஸ்வதேவம்‌ போக்காது –

அக்ருத்வா வைஸ்வதேவந்து புஞ்சதேயேத் விஜாதீய
தேஷாமந்நம் ந புஞ்ஜீத காக யோநிம் பஜந்திதே
அக்ருத்வா வைஸ்வதேவம் து புஞ்ஜதேயே த்விஜாயமா
ஸர்வேதே நிஷ்பலாஜ்யேயா பதந்தி நரகே ஸூசெள

எந்த பிராமணர்கள்‌ வைச்வதேவம்‌ செய்யாமல்‌ போஜனம்‌ செய்கிறார்களோ,. அவர்களுடைய அன்னத்தை புஜிக்‌கக் கூடாது, அப்படி புசித்தவர்கள்‌ காக்கையாக பிறப்பார்கள்‌. எந்த கெட்ட பிராமணர்கள்‌ வைஸ்வதேவம்‌ செய்யாமல்‌ போஜனம்‌ செய்கிறார்களோ அவர்கள்‌ பயனற்றவர்களாய்‌ அசுத்தமான நரகத்தில்‌ விழுகிறார்கள் –

வைஸ்வதேவ விஹீநாயே ஆதித்‌யேந பஹிஷ் க்ருதா
ஸர்வேதே நரகம் யாந்தி காக யோநிம் வரஜந்திச –

எவன்‌ வைஸ்வதேவத்தை விட்டும்‌ அதிதி பூஜை செய்யாமலகிருக்கிறானோ, அவர்களெல்லாரும்‌ நரகத்தை யடைகிறார்கள்‌; காக்கையின்‌ சன்மத்தையும்‌ அடைகிறார்கள் –

புஷ்ப மாத்ரம் விசு துயாந் மூலச் சேதம் ந காரயேத்‌
மாலாகார இவாராமேநய தாங்கார காரக

மாலை தொடுப்பவன்‌ பூந் சோட்டத்தில்‌ எப்படி பூக்களை மாத்தரம்‌ கொய்து கிளைகளை விறகு வெட்டுகிறவனைப் போல்‌ வெட்ட மாட்டானே. அப்படியே பிரஜைகளிடத்தில்‌ பகுதி மாத்‌திரம் பெற்று ஹிம்சிக்கக் கூடாது –

லாப கர்மததா ரத்நம்‌ கவாஞ்ச பரிபாலநம்‌ . க்ருஷி கர்மச வாணிஜ்யம் வைஸ்ய வ்ருத்தி ருதாஹ்ருதா
வட்டி வாங்குவதும்‌ ரத்ந வ்யாபாரமும்‌ பசுக்களை ரக்ஷிப்பது பயிரிடுதல்‌ இதர வியாபாரங்கள்‌ இவைகள்‌ வைச்ய விருத்தியாகக்‌ கூறப் பட்டது –

ஸூத்ரஸ்ய த்விஐ ஸூஸ்ரூஷா பரமோ தர்ம உச்யதே
அந்யதா குருதே கிஞ்சித் தத் பவேத் தஸ்ய நிஷ் பலம்‌ –

சூத்திரனுக்கு த்‌விஜர்களுடைய ஸூஸ்ரூஷையே பரம தர்ம மாகச்‌ சொல்லப் படுகிறது; வேறு ஏதாவது செய்தானே யாகில்‌ அது அவனுக்குப்‌ பயன்படாது

லவணம் மது தைலம்‌ ச ததி தக்ரம்க்ருதம் பய ந துஷ்யேச்ரூத்ர ஜாதீநாம்‌ குர்யாத் ஸர்வேஷுு விக்ரயம்‌ -உப்பு தேன்‌ எண்ணை தயிர்‌ மோர்‌ நெய்‌ பால்‌ இவைகளை நான்கு வர்ணங்களுக்குள்‌ சூத்திரன் விற்கலாம்‌, அதினால்‌ அவனுக்கு தோஷமில்லை –

விக்ரீணந் மத்ய மாம்ஸா நிஹ்ய பக்ஷ்யஸ்யச பக்ஷணம்‌
குர்வந் ந கம்யாகமநம் ஸூத்ர பததி தத்க்ஷணாத்
கபிலா க்ஷீர பாநேந ப்ராஹ்மணீ கமநே ந து
வேதாஷர விசாரேண ஸூத்ரஸ்ய நரகம் த்ருவம்‌

மத்யம்‌ மாம்ஸம்‌ இவைகளை விற்பதாலும்‌ சாப்‌படத் தகாதவைகளை சாப்பிடுவதாலும்‌ சேரத் தகாத ஸ்த்ரிகளைச்‌ சேர்வதாலும்‌ சூத்திரன்‌ அக்கணமே பதிதனாகிறான்‌, காராம்பசுவின் பால்‌ குடித்தலாலும்‌ பிராமண ஸ்திரியைப்‌ புணர்தலாலும்‌ வேத அஷரங்களை விசாரிப்பதாலும்‌ சூத்திரனுக்கு நரகம்‌ சம்பவிக்கும்‌.

முதல்‌ அத்தியாயம்‌ முற்றிற்று

இரண்டாவது அத்யாயம்

௮த:பரம் ஹ்ருஹஸ்‌ தஸ்ய கர்மாசாரம் கலெளயுகே
தர்மம் ஸாதாரணம் ஸக்தயா சாதுர்வர்ண் யாஸ்ரமாகசம்‌
தம் ப்ரவஹ்யாம் யஹம் பூர்வம் பராசர வசோ யதா

இதின்‌ பிறகு – இந்த கலியுகத்தில்‌ நான்கு வர்ணங்களுக்கும்‌ கிரகஸ்தனுடைய ஆசாரங்களுக்கும் உரியதாயும்‌ தர்மமான ஆசாரமாயும்‌ பொதுவாயுயிருக்கிற- தொழிலை விருத்த பராசர வாக்யானு குணமாகவே, முன்னிட்டுச் சொல்லுகிறேன்-

ஷுதிதம் க்ருஸிகம் ஸ்ராந்தம் பலீ வர்தநம் யோஜயேத் ஹீநாங்கம் வ்யாதிதம் க்லீபம் வ்ருஷம் விப்ரோ ந வாஹயேத்‌ –
பசித்தும் க்ருஸித்தும்‌ சிரமப்பட்டுமிருக்கற எருதை உழக்கூடாது. மேலும்‌ குறைந்த அங்கங்களுடையதும்‌ வியாதியுடன்‌ கூடினதும்‌ விரை யடித்ததுமான எருதை பிராமணன்‌ கட்‌டக் கூடாது

ஸ்‌திராங்கம் நீருஜம் த்ருப்‌தம் ஸூநர்‌தம் ஷண்ட வர்ஜிதம்‌ வாஹ யேத்தி வஸஸ் யார்‌தம் பச்சாத் ஸ்நாநம் ஸமாசரேத்‌ –
அங்கம் பழுதில்லாமலும்‌ மற்றதும்‌ கொழுப்புடையதும்‌ விரை யடியாததுமாய் இருக்கிற எருதை மத்தியானத்தின்‌ பாதி வரையிலுழ வேண்டியது – பிறகு அதற்கு ஸ்நானம்‌ செய்து வைக்க வேண்டியது-

ஜபம் தேவார்ச்சநம் ஹோமம் ஸ்வாத்யாயம் சைவமப்யஸேத்‌
ஏக த்வி த்ரி சதுர் விப்ராந் போஜயேத் ஸ்நாதகாந் த்விஜ-

பிராமணன்‌, ஐபம் செய்‌தல்‌ தேவதை பூசித்தல்‌ ஹோமம் செய்தல்‌ வேதமோதல்‌ இவைகளைச் செய்ய வேண்டியது பிறகு ஒன்று-இரண்டு-மூன்று நான்கு ஸ்நாதகப் பிரராமணர்களுக்கு அன்னம்‌ போட வேண்டும்-

ஸ்வயம் க்ருஷ்டே ததா ஷேத்ரே தாந்யைச் ச ஸ்வயமார்ஜிதை
நிர்வபேத் பஞ்ச யஜ்ஞாம் ஸ்சக்ரது தீஷாஞ் சகாரயேத்

பிராமணன்‌ தானே உழுது பயிர்‌ செய்தாலும்‌ ௮ல்‌லது வேறொருவர்‌ பயிர்‌ செய்து தான் சம்பாதித்து வந்தாலும்‌ அந்த தானியங்களால்‌ பஞ்ச மகா யஜ்ஞங்களைச்‌ செய்யக் கடவன்‌ அல்‌லது வேறொருவருக்குக் கொடுத்து செய்விக்கக் கடவன் –

திலா ரஸாந விக்ரே யா தாந்ய தஸ் ஸமா விப்ரஸ் யைவம் விதா வ்ருத்திஸ் த்ருண காஷ்டாதி விக்ரயம்‌
பிராமணன்‌ – எள்ளு-ரஸ வர்க்கங்க ளிவைகளை விற்‌கக் கூடாது-அப்படி அவஸ்யம்‌ விற்க வேண்டுமானால்‌ தானியங்களுக்குத்‌ துல்யமாகில்‌ விற்கலாம்‌ இந்த விருத்தி பிராமணனுக்கு உரியது. புல்‌ கட்டை முதலியவற்றை விக்கிரயம்‌ செய்யலாம் –

ப்ராஹ்மணச் சேத் க்ருஷிம் குர்யாந் மஹா தோஷ மவாப்நுயாத்‌ –
பிராமணன்‌ தானே யுழவு செய்து பயிரிட்டால் மஹா தோஷத்தை யடைவன் –

ஸம்வத்ஸரேண யத் பாபம் மத்ஸ்யகாதீ ஸமாப்றநுயாத்‌
அயோ முகேந காஷ்டே நததேகாஹே நலாகங்கலி

ஒரு வருஷ காலமாய்‌ மத்ஸ்யங்களைக் கொன்ற சூத்தரன்‌ எவ்வளவு பாபத்தை யடைவனே அந்த பாபத்தை கலப்பை யெடுத்த பிராமணன்‌ இலும்பை முளையிற் கொண்ட கட்டையால்‌ ஒரே தினத்தில்‌ அடைகிறான் –

பாஸகோ மத்ஸ்ய காதீச வ்யாதச் சாகுநிகஸ் ததா அதாதா கர்ஷ கச்சைவ பஞ்சைதே ஸம பாகிந
வலை வீசுகிறவன்‌ – மத்ஸ்யங்களைக் கொல்லுகிறவன் வேடன்‌ – பக்ஷிகளைக் கொல்லுகிறவன்‌ தானம்‌ செய்யாமல் பயிரிடுபவன்‌-இவர்களைவரும்‌ சமமான பாவமுள்ளவர்கள்-

வ்ருஷாம்ச் சித்வா மஹீம் பித்வா ஹத்வா து க்ரிமி கீடகாந் கர்ஷக கலயஜ்‌ஞேந ஸர்வ பாபை ப்ரமுச்யதே
விருக்ஷங்களை வெட்டியும்‌ பூமியைப் பிளந்தும்‌ புழு பூச்சிகளைக் கொன்றும்‌ பயிரிடுகிறவன்‌ களப் பிச்சை யிடுவதால்‌ எல்லாப் பாவத்தையும்‌ போக்கடிக்கிறான் –

யோந தத்யாத் த்விஜாதிப்யோ ராஸி முல முபாகத
ஸ சோரஸ்சை பாபிஷ்டோ ப்ரஹ்மக்நம்‌ தம் விநிர்திஸேத்‌

யாதொருவன்‌ தானிய ராசியினருகில் உட்கார்ந்து பிராமணர்களுக்குத் தானம்‌ செய்ய வில்லையோ அவன்‌ திருடன்‌-அவனே பாவி-அவனை பிர்ம்மஹத்தி செய்தவனாகச் சொல்ல வேண்டும் –

ராஜ்ஜே தத்வாது ஷட் பாகம் தேவாநாம் சைக விம்சகம்‌ த்ரிம் சத் பாகம் ப்ராஹ்‌மணாநாம் க்ருஷிம் குர்வந்ந தோஷ பாக்‌ –
ஆறில்‌ ஒரு பாகம்‌ அரசர்களுக் கிட்டும்‌ தேவதைகளுக்கு இருபத் தொன்றிலொரு பாகமிட்டும்‌ முப்பதில்‌ ஒரு பாகம்‌ “பிரரமணர்களுக்குக் கொடுத்தும்‌ பயிர்‌ செய்பவன்‌ தோஷமடைய மாட்டான் –

ஷத்ரியோபி க்ருஷிம் க்ருத்வா தேவாந் விப்ராம்ச் ச பூஜயேத்‌
வைஸ்யஸ் ஸூத்ரஸ் ததா குர்யாத் க்ருஷி வாணிஜ்ய ஸில்பநம்‌ –

க்ஷத்திரியனும்‌ பயிர் செய்து பிராமணர்‌-தேவதைகள் இவைகளைப்‌ பூசிக்கக் கடவன்‌ வைஸ்யனும்‌ சூத்திரனும்‌ பயிர் வர்த்‌தகம்‌ சித்திர வேலைகளைச் செய்து தேவாதிகளுக்கு பூஜை செய்யக்‌ கடவர்கள் –

விகர்ம குர்வதே ஸுத்ர சித்விஜ ஸூஸ்ரூஷ யோச்சிதா பவந்த் யல்பாயுஷஸ் தேவை நிரயம் யாந்ய ஸம்ஸயம்‌
பிராமண ஸூஸ்ரூஷையை விட்டு சூத்திரன்‌ தனக்கடைத்த கருமத்தைச் செய்யாமல்‌ விட்டால்‌ ஆயுள் குறைந்தவனாகிறான்‌ -பிறகு நரகத்தையுமடைவான்‌= இதில்‌ ஸம்சயமில்லை
சதுர்ணாமபி வர்ணாநாமேஷ தர்‌மஸ் ஸநாதந
நான்கு வர்ணங்களுக்கும் இந்த தர்மமே யநாதியானது-

இரண்டாவது அத்தியாயம்‌ முற்றிற்று.

மூன்றாவது அத்தியாயம்

அதஸ் ஸூத்திம் ப்ரவஹ்யாமி ஜநநே மரணே ததா –
இனி பிறப்பிலும்‌ இறப்பிலு முண்டாகும்‌ ஆசெளசத்‌திற்கு ஸூத்தி சொல்லுகிறேன்

திந த்ரயேண ஸூத்யந்தி ப்ராஹ்மணா ப்ரேத ஸூதகே ஷத்ரியோ த்வாதஸா ஹேந வைஸ்ய்ய பஞ்சத ஸாஹகை ஸூத்ரஸ் ஸூத்யதி மாஸேந பராஸர வசோ ததா
மரணத் தீட்டில்‌ சமானோதகனான பிராமணன் மூன்று தினத்திலும்‌ க்ஷத்திரியன்‌ பனிரெண்டு தினத்திலும்‌ வைச்யன்‌ பதினைந்து தினத்திலும்‌ சூத்திரன்‌ ஒரு மாதத்திலும்‌ வ்ருத்த பராசரர் வாக்‌கின்படி சுத்தி யாகிறான் –

உபாஸநேது விப்ராணா மங்கஸூத்திச் ச ஜாயதே –
பிராமணர்கள்‌ சந்தியா வந்தனம்‌ முதலியவற்றை யனுஷ்டிக்கும்‌ காலத்தில்‌ சரீர ஸூத்தி யுண்டாகிறது

மாதாவின்‌ வர்ணம்‌ வெவ்வேறாக விருந்தாலும்‌ (தகப்பன்‌) அதாவது மூல புருவனுடைய சமான பிண்டர்களான தாயாதிகள்‌ பிறப்பிலு மிறப்பிலும்‌ மூல புருஷ வர்ணத்துக்குரிய தீட்டையே யனுஷ்டிக்கக் கடவர்-

தாவத் தத் ஸூதகம் கோத்ரே சதுர்த்த புருஷேணது
கீழ்ச் சொல்லிய அன்னிய வர்ண ஸ்திரீயின்‌ சந்ததிக்கு மூன்று புருஷன்‌ வரையில்‌ தீட்டிருந்து நான்காம்‌ புருஷனில்‌ விடப்படும்-

தாயாத் விச்சேத மாப்நோதி பஞ்சமோ வாத்மவம் ஸஜ.
தன்‌ வம்சத்தில்‌ பிறந்த ஐந்தாம் தலைமுறைப்‌ புருஷனும்‌ பிண்டத்தில்‌ நின்றும்‌ நீக்க்கப் படுகிறான்-

சதுர்‌தே தஸ ராத்ரம் ஸ்யாத் ஷண்ணிஸா பும்ஸி பஞ்சமே
ஷஷ்டே சதுர ஹாச் சுத்திஸ் ஸப்‌தமே துதி நத்ரயாத்‌ –

புருஷ சந்ததியில்‌ நாலாம் தலைமுறையில்‌ பத்து நாளும் செளசமும்‌ ஐந்தாம் தலை முறையில்‌ ஆறு நாளும்‌ ஆறாவது தலை முறையில்‌ நாலு நாளும்‌ ஏழாவது தலைமுறையில்‌ மூன்று நாளும்‌ ஆசெளசம்‌

ப்ருக் வக்நி மாணே சைவ தேஸாந் தரம்ருதே ததா பாலே ப்ரேதேச ஸ்ந்யஸ்தே ஸத்யஸ்சவ் சம்விதீயதே
மலையிலிருந்து விழுந்தும்‌ நெருப்புப் பட்டும் இறந்தாலும்‌ தேசாந்தராத்தில் இறந்தாலும்‌ அதிக பாலனிறந்தாலும்‌ சந்நியாசியாய் இறந்தாலும்‌ ஸ்நான மாத்திரத்தால் ஸூத்தி –

தேசாந்தர ம்ருத கச்சித்ஸ கோத்ர ஸ்ரூயதேயதி ந த்ரி ராத்ர மஹோ ராத்ரம் ஸத்ய ஸ்நாநேந ஸூத்யதி
சமான கோத்திரன்‌ தேசாந்திரத்தில் இறந்ததாகக் கேள்விப்பட்டால்‌ அதாவது ஒரு வருஷமான பிறகு கேள்விப் பட்‌டால்‌ மூன்று நாளுமில்லை. ஒரு தினமுமில்லை. அப்பொழுது ஸ்நாந மாத்திரத்தால் ஸூத்தி –

அஜா ததந்தாயே பாலாயே ச கர்ப்பாத் விநிஸ்ருதா
ந தேஷா மக்நி ஸம்ஸ்காரோ நா சவ்சம் நோதகக்ரியா
– பல் முளைக்காத குழந்தைகளுக்கும்‌ சர்ப்பத்திலிருந்து நழுவி யிறந்த சிசுக்களுக்கும்‌ அக்நி ஸமஸ்காரம் கிடையாது தீட்‌டுமில்லை, தர்ப்பணமுமில்லை –

யதி கர்ப்போ விபத்யே தஸ்ரவ தேசாபி யோஷித யாவந் மாஸம் ஸ்த்திதோ கர்ப்போதிநம் தாவத் து ஸூதகம்‌-
கர்ப்பம்‌ கலைந்தாலும்‌ ஸ்ரவித்தாலும்‌ அந்த கர்ப்பம்‌ எத்தனை மாஸமிருந்ததோ அத்தனை நாள்‌ அதின் மாதாவுக்கு ஆ செளசம் –

ஆசதுர் தாத்பவேத் ஸ்ராவ பாத பஞ்சம ஷஷ்டயோ அத ஊர்த்வம் ப்ரஸுதிஸ் யாத்த ஸாஹம் ஸூதகம்பவேத்‌ –
நாலு மாதத்தில்‌ கர்ப்பமழிந்தால்‌ ஸ்ராவமென்றும்‌ ஐந்து ஆறில்‌ பாதமென்றும் பெயர்‌ அதின்‌ பிறகு பரஸவ மென்‌னப் படும்‌’ அப் பிரஸவத்தில்‌ பத்து நாள்‌ ஆசெளசம் –

தந்த ஜாதேநுஜா தேச க்ருதா ஸூடேச ஸம் ஸ்த்திதே
அக்நி ஸம்ஸ்கரணே தேஷாம் த்ரி ராத்ரம ஸூஸிர் பவேத்

பல் முனைத்தவனா யிருந்தாலும்‌ அவனுக்குப்‌ பின்‌ பிறந்தவன்‌, (அதாவது) பல் முளையாதவனா யிருந்தாலும்‌ செளனம்‌ செய்யப்பட்டவனா யிருந்தாலும்‌ அவன்‌ மரணமடைக்தால்‌, அவனுக்கு அக்நி ஸம்ஸ்காரம் செய்தால்‌ ஞாதிகளுக்கு மூன்று நாள்‌ ஆசெளசம் –

ஆ தந்த ஜந்மநஸ் ஸத்ய ஆசூடாந்நை ஸிகீக்ரியா திரி ராத்ர மா வ்ரதா தேஸாத் தஸ ராத்ரமத பரம்‌
ஜனனம் முதல்‌ பல்‌ முளைக்கும் வரையில்‌ ஸத்ய சுத்தி. அது முதல்‌ செளளம் வரையில்‌ ஒரு தினம்‌ ஆசெளசம்‌. ௮து முதல்‌ உபநயனம்‌ செய்யும் வரையில்‌ மூன்று நாள்‌ தீட்டு, பிறகு பத்து நாள்‌ தீட்டு.

ப்ரஹ்மசாரி க்ருஹே யேஷாம் ஹுய தேச ஹுதா ஸந ஸம்பர்க்கஞ்ச ந குரவந்தி ந தேஷாம் ஸூத கம்பவேத்‌
பிரம சாரியும்‌ – எவன்‌ அக்னி ஹோத்ரம்‌ செய்கிறானோ, அவனும்‌ தீட்டுக் காரரிடத்தில்‌ சேராமலிருந்தால்‌ அவர்களுக்‌குத் தீட்டில்லை-

ஸம்பர்க்காத் தூஷ்ப தேவி ப்ரோஜநநே மரணே ததா
ஸம்பர்க்காச்ச நிவ்ருத்தஸ்ய ந ப்ரேதம் நைவ ஸூதகம்‌ கன–

தீட்டுக் காரர்களோடு சேர்வதனால்‌ பிராமணன்‌ பிறப்பிலும் இறப்பிலும்‌ தீட்டுடையவனாகிறான்‌- சேர்க்கையை விட்‌டவனுக்கு ஜனன மரண செளசங்கள்‌ கிடையா –

ஸ்ல்பிந காருகா வைத்யா தாஸீ தாஸாச்சநா பிதா
ராஜாந ஸ்‌ரோத்ரியாச் சைவ ஸத்யஸ் செளசா ப்ரகீர்த்திதா
ஸவ்ரதஸ் ஸத்ர பூதச்ச ஆஹிதாக் நிச்சயோ த்விஜ
ராஜ்ஞச்ச ஸூதகம் நாஸ்தி யஸ்ய சேச்சதி பார்ததிவ
உதயதோ நித நேதாநே ஆதர்தோ விப்ரோ நிமந்தரித
ததை வருஷிபிர் த்ருஷ்டம் யதா காலேந ஸூத்யத –

சித்திர வேலை செய்கிறவன்‌ சமயல்காரன்‌ வைத்தியர்கள்‌ தாஸிகள்‌ வேலைக் காரர்கள்‌ ராஜாக்கள்‌ ஸ்ரோத்ரியர்கள் இவர்‌கள்‌ தந்தம் தொழிலைச்‌ செய்யுங் காலத்தில்‌ சுத்தர்கள்‌. பின்னும்‌ யஜ்ஞத்தில்‌ சங்கல்பித்தவனும்‌ யாகம் செய்கிறவனும்‌ அக்ந்யா தானம்‌ செய்தவனும்‌ அரசன்‌ தன்‌ கருமம் முடியக்‌ கோறினவனும்‌ ஆசெளசிகனல்ல. யுத்தத்தில் சென்ற அரசனும்‌ தானங்களில்‌ பிரவேசித்தவனும்‌ ஆபத்தை யடைந்தவனும்‌ நிமந்திரணம்‌ சொல்லப்‌ பட்டவனும்‌ அப் பொழுது சுத்தர்கள்‌. பிறகு அவரவர்களுக்கு விதித்த காலத்தில்‌ திட்டு நீங்கும் –

பிரணவ நிமித்தமான தீட்டில் கிருகஸ்தனானவன் (பிதாவானவன்) பிரஸவித்த ஸ்திரியுடன் ஸம்ஸர்க்கத்தைச் செய்யாதவனாயிருந்தால் பிரஸவித்தவுடன் ஸ்நாநத்தினால் சுத்தனாகிறான். மாதா பத்து நாட்களால் சுத்தியை அடைகிறாள்.

ஸகல ஸபிண்டர்களுக்கும் கர்மத்தில் அதிகாரத்தைப் போக்குவதான ஆசௌசம் மாதா பிதாக்களுக்கும் உண்டு; ஆனால் ஸ்பரிசிக்கத் தகாததான பிரஸவத் தீட்டு மாதாவுக்கே யுள்ளது. பிதா
வானவன் புத்திர ஜனநத்தில் ஸ்நாநத்தினால் சுத்தனாகிறான்.

பிரஸவித்தவளான பத்திநி யிடத்தில் பிராம்மணன் ஸம்பந்தத்தை அதாவது ஸ்பரிசிப்பது முதலியவைகளைச் செய்தானே யானால் அந்தப் பிராம்மணன் ஆறு வேதங்களையும். சகல கர்மங்களையும் அறிந்தவனான போதிலும் அவனுக்குப் பத்து நாள் ஸ்பரிசிக்கத் தகாத சூதகமுண்டு.

பிரஸவித்தவளான பாரியையினுடைய ஸம்பந்தத்தினால் பிராம்மணனிடத்தில் ஸ்பரிசிக்கத் தகாத தோஷம் ஸம்பவிக்கிறது. வேறு விதமான தோஷம் பிரஸ்வ நிமித்தத்தில் புருஷனுக்கில்லை. ஆகையால் பண்டிதனானவன் பிரஸவித்த ஸ்திரீயோடு சயநிப்பது உட்காருவது தாம்பூலம் முதலியவைகளைப் புசிப்பது முதலிய ஸம்பந்தத்தைப் பிரயத்தனப் பட்டாவது ஒழிக்கக் கடவன்

விவாகம், தேவோத்ஸவம், யக்கிய்ம் இவைகள் முன்னமே தொடங்கப்பட்டுச் செய்து வருகையில் இந்தக் கிரியைகளின் நடுவில் ஜநந மரணங்கள் ஸம்பவித்தால் முன்னமே இவைகளுக்கென்று மனதினால் உத்தேசித்து வைத்திருக்கும் திரவியமானது பிராம்மணாதிகளுக்கும் தேவதைகளுக்கும் கொடுக்கப்பட்டால் தோஷத்தை அடைகிறதில்லை.

ஒருவன் அனுஷ்டிக்கிற பத்து நாள் தீட்டின் நடுவில் ஜநந மரண நிமித்தமான வேறு ஆசௌசம் நேரிட்டால் முன் அநுஷ்டித்து வருகிற ஆசெளசமானது எவ்வளவு காலத்திற்குள் பத்துநாட்களைக் கடந்ததாகாதோ அவ்வளவு காலம் வரையில் பிராம்மணன் அசுசியாகிறான்-

பிராம்மணன் நிமித்தமாக அதாவது அவன் பிராணனை ரக்ஷிப்பதற்காக மரித்தவர்கள் விஷயத்திலும் சிறையில் வைக்கப் பட்டவர்களையும் ஆபத்தை அடைந்த பசுவையும் விடுவிப்பதற்காக
மரித்தவர்கள் விஷயத்திலும் யுத்தத்தில் தைரியமாய் எதிர்த்து மரித்தவர்கள் விஷயத்திலும் ஸபிண்ட ஞாதிகளுக்கு ஒருநாள் செளசம் அநுஷ்டிக்கத் தக்கதாகும்.

யோகத்தினால் ஸர்வேஸ்வரனை உபாஸிப்பவனான ஸந்நியாசி, யுத்தத்தில் பின் வாங்காமல் எதிர்த்துச் சத்துருக்களால் கொல்லப்பட்டவன் ஆகிய இவ் விரண்டு புருஷர்களும் சூரிய மண்டலத்தைப் பேதிப்பவர்கள்-சூரிய மண்டலத்தின் வழியாகப் ப்ரஹ்ம லோகத்திற்குச் செல்லுகிறார்களென்பது கருத்து.-

ஆயுத பாணிகளான அநேகம் சத்துருக்களால் நன்றாகச் சூழப்பட்டவனாகி அவர்களை எதிர்த்துப் பயமின்றி யுத்தம் செய்கிற சூரனானவன் அதைரியத்தைத் தோற்றுவிப்பதான வார்த்தையைச் சொல்லாமல் யுத்தம் செய்து சத்துருக்களால் அடிக்கப்பட்டு மரித்தால் அவன் அழியாத உத்தம லோகங்களை அடைகிறான்.

சத்துருக்களால் சேனையிலிருக்கும் ஐநங்கள் அடிக்கப்பட்டு நாலு புறமும் சிதறி யோடுகையில் ஏந்தச் சூரனானவன் அவர்களை ரக்ஷிப்பதற்காக மிகுந்த தைரியத்தினால் சத்துருக்களை எதிர்க்கிறானோ அவன் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவான்.

ஒருவனை ரக்ஷிப்பதற்காகச் சத்துரு சேனையில் புகுந்து யுத்தம் செய்கிற எவனுடைய சரீரமானது முத்கரமென்னும் இரும்புலக்கை,பாணம், தடி இவைகளால் கை கால் முதலிய அவயவங்களில் அடிக்கப் பட்டுக் காயமுள்ளதாகிறதோ சூரனான அவனைத் தெய்வப் பெண்கள் கிரகித்துக் கொண்டு அவனுடன் க்ரீடிக்கிறார்கள்.

யுத்தத்தில் மரணமடைந்த சூரனைக் கண்டு தெய்வப் பெண்கள் ஆயிரம் பேர் கூடி வேகத்தை யுடையவர்களாகி இவன் என் பர்த்தா இவன் என் பர்த்தா வென்று சொல்லிக் கொண்டு ஓடுகிறார்கள்.

பலனை இச்சிக்காதவர்களும் ஸ்வர்க்க போகத்தை இச்சிப்பவர்களுமான புருஷர்கள் அனேக விதங்களான யக்கியங்களாலும் தவத்தினாலும் எந்தப் புண்ணிய லோகத்தை எப்படி அடை கிறார்களோ, யுத்தங்களில் எதிர்த்துச் சண்டையினால் பிராணனை ஒழித்த வீரர்கள் ஒரு க்ஷணத்தினால் அப்படியே தெய்வப் பெண்களால் கொண்டாடப்பட்டு அந்தப் புண்ணிய லோகங்களை அடைகிறார்கள்-

யுத்தத்தில் ஜயத்தினால் ஸம்பத்தானது பெறப்படுகிறது. மரணத்தினால் தெய்வப் பெண் அடையப் படுகிறாள். ஆதலால் க்ஷண காலத்தில் நசித்துப் போவதாகிய இந்தச் சரீர விஷயத்தில் ஆசை வைத்து யுத்தத்தில் மரிப்பதில் சிந்திக்க வேண்டுவதில்லை-

யுத்தத்தில் அடிபட்ட நெற்றியினின்று எந்த ரக்தம் வடிகிறதோ அது வாயில் புகுந்ததாகில் ஸோம பாநத்தோடு சமானமாகும். இது யுத்தமென்னும் யாக்கியத்தில் விதிக்கப்பட்ட ஸோம
பாநமாக அறியப்பட்டது.-

பந்துக்களில்லாதவனும் தனக்கு ஞாதியாகாதவனுமான பிராம்மணனுடைய சவத்தைப் பிரதி யுபகாரத்தை எதிர்பாராமல் எந்த இரு பிறப்பாளர் சுமந்து போய்க் கொளுத்துகிறார்களோ அவர்கள் அடி வைப்புகள் தோறும் கிரமமாக யக்கியம் செய்த பலனைப் பெறுகிறார்கள் -அவர்களுக்குச் சிறிதும் அசுபமில்லை. நல்ல காரியத்தைச் செய்கிற அவர்களுக்குப் பாபமுமில்லை. ஜலத்தில் முழுகுவதினால் அப்பொழுதே அவர்களுக்குச் சுத்தி விதிக்கப்படுகிறது.

தன்கோத்திரனாகாதவனும் (ஞாதியாகாதவனும்) பந்துக்களில்லாதவனுமான பிராம்மணனுடைய சவத்தைச் சுமந்து தகித்தவன் பிராணாயாமத்தினால் சுத்தியை அடைகிறான்.

பிரேதமான ஞாதியையும், அதாவது பந்துவையும்,ஞாதியாகாதவனையும் அதாவது பந்துவாகாதவனையும் பின் சென்றவன் ஸசேல ஸ்நாநத்தைச் செய்தும் அக்நியை ஸ்பரிசித்தும் நெய்யைக் குடித்தும் சுத்தனாகிறான் –

எந்தப் பிராம்மணன் மரித்த க்ஷத்திரியனைத் தெரியாமையினால் பின் செல்லுகிறானோ அவன் ஒருநாள் ஆசௌசத்தை அநுஷ்டித்துப் பஞ்ச கவியத்தைப் புசிப்பதினால் சுத்தி யடைகிறான். வைசிய சவத்தைத் தெரியாமையினால் பிராம்மணன் பின் தொடர்ந்தானாகில் அவன் இரண்டு நாள் ஆசௌசத்தை அநுஷ்டித்து ஆறு பிராணா யாமங்களைச் செய்யக் கடவன். சூத்திர சவத்தைப் பின் சென்றவனான மூடப் பிராம்மணன் மூன்று நாள் ஆசௌசத்தை அநுஷ்டித்துப் பின்பு சமுத்திரத்தை யடைகிற மஹாந்தியில் ஸ்நாநம் பண்ணி நூறு பிராணாயாமங்களைச் செய்து நெய்யைக் குடித்தால் சுத்தனாகிறான்-

சூத்திரர்கள் எப்போது தர்ப்பண முதலிய வியாபாரங்களை முடித்து (ஆசௌசத்தை முடித்து) இருக்கிறார்களோ, அந்தக் காலத்தில் அவர்கள் பிராம்மணர்களால் அனுசரிக்கத் தக்கவர்கள் . இது அநாதியான தர்மமாகும்.-

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.
ஆசாரகாண்டம் ஸம்பூர்ணம்.

பிராயச்சித்தகாண்டம்.-முதல் அத்தியாயம்.-

தாய்,மனைவி, முதலானவர்களுடைய கடுஞ் சொல்லினால் உண்டான மாநஹாநி, புத்திர மித்திராதிகள் செய்த சில அபராதங்களுக்காக உண்டான பெருங் கோபம்,அதிகமான சிநேஹம், அதிகமான பயம், இந்த ஹேதுக்களிலேதேனு மொன்றினால் ஸ்திரீ அல்லது புருஷன் உச்சுருக்கிட்டுக் கொண்டு மரணமடைந்தால் அவர்களுக்கு அடுத்த சுலோகத்தில் சொல்லப் போகிற கதி (நரக யாதனை) விதிக்கப்படுகிறது.

உச்சுருக்கினால் மரித்தவன் சீயினாலும், ரக்தத்தினாலும் நிறைந்து கோரமாயிருக்கிற அந்ததாமிஸ்ரமென்னும் நரகத்தில் முழுகி அதில் தானே அறுபதினாயிரம் வருஷ காலம் இடைவிடாமல் வசிக்கிறான்.

(துர்மரணமடைந்தவனுடைய சவத்தை) எடுத்தவர்கள்,அக்கினியினால் ஸம்ஸ்காரம் செய்தவர்கள், உச்சுருக்கிட்டிருந்த கயிற்றை அவிழ்த்தவர்கள் (தில தர்ப்பணாதிகளைச் செய்தவர்கள்) ஆகிய இவர்கள் தப்தகிருச்சிரம் என்னும் விரதத்தினால் சுத்தியை அடைகிறார்களென்று பிரஜாபதி சொன்னார்.

எருதினால் அல்லது பசுவினால் கொல்லப்பட்டவன்(அத்துடன் விளையாட்டினால் எதிர்த்து மரித்தவன்),ஒருவனால் உச்சுருக்கிட்டுக் கொல்லப்பட்டவன், பிராம்மணனால் கொல்லப்பட்டவன், இவர்களை ஸ்பரிசித்தவர்கள், சுந்தவர்கள், அக்கிநி தகநம் செய்தவர்கள், அந்தச் சவத்தைப் பின் தொடர்ந்தவர்கள், உச்சுருக்குக்கயிற்றை அவிழ்த்தவர்கள் , ஆகிய இந்தப் பிராம்மணர்கள் தப்கிருச்சிரத்தால் சுத்தர்களாகிப் பிராம்மணபோஜனம் செய்வித்து ஒரு பிராம்மணனுக்கு விருஷபத்துடன் பசுவைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவர்கள்

தப்தகிருச்சிரமென்பது மூன்றுநாள் ஆறு பலம் விழுக்காடு உஷ்ண ஜலத்தையும், பின்பு மூன்றுநாள் மூன்று பலம் விழுக்காடு உஷ்ணமாகிய பாலையும், பின்பு மூன்று நாள் ஒரு பலம் விழுக்காடு உஷ்ணமாகிய நெய்யையும், குடித்துப் பின்பு மூன்று நாள் வாயுவைப் பக்ஷிப்பவனாகிச் (உபவாஸமிருந்து) செய்யும் விரதம்.

மஹாபாதகம்,உபபாதகம் முதலான பாபங்களைச் செய்தவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் முதலானவர்களுடன் அவர்கள் பாபிகளென்றறியாமல் பிராம்மண க்ஷத்திரியாதிகள் ஐந்து நாள், அல்லது பத்துநாள், அல்லது பனிரண்டுநாள், அல்லது அரைமாஸம், அல்லது ஒருமாஸம், அல்லது இரண்டுமாஸம், அல்லது அரை வருஷம், அல்லதுஒரு வருஷம் ஸம்ஸர்க்கத்தைச் செய்தால் பாபிகள் ஆகிறார்கள். ஒரு வருஷத்திற்கு மேற்பட்டால் அவர்களோடு சமானமாகிறார்கள்-

பதித ஸம்ஸர்க்க விஷயத்தில் கீழே சொன்ன எட்டு பக்ஷங்களில் முதல் பக்ஷமான ஐந்து நாளைக்கு த்ரிராத்ர கிருச்சிரத்தையும் (மூன்றுநாளுபவாஸத்தையும் ) இரண்டாவது படிமான பத்து நாளைக்கு கிருச்சிரத்தையும் (பிராஜாபத்திய கிருச்சிரத்தையும் ) செய்ய வேண்டும். ராஜாபத்திய கிருச்சிரமாவது மூன்றுநாள் பகவிலும் பினபு மூன்றுநாள் இரவிலும் பின்பு மூன்றுநாள் தான் யாசிக்காமல் வந்ததையும் புசித்துப் பின்பு மூன்றுநாள் புசிக்காமலிருப்பதென்று மனுகூறினார். பின்னும் மூன்றாவது பக்ஷமான பன்னிரண்டு நாளைக்கு ஸாந்தப கிருச்சிரத்தைச் செய்ய வேண்டும்.-

ஸ்திரீகளுக்கு ரஜ உண்டான நாள் தொடங்கிப் பதினாறு திநங்கள் ருது காலமாம்.அவைகளில் நாலாவது நாளில் ஸ்நாநம் செய்த ஸ்திரீ பர்த்தாவினால் அழைக்கப்பட்டும் புத்திரனை உண்டாக்குவதற்காக எவள் தன் பர்த்தாவை அடைய வில்லையோ அவள் மரித்து நரகத்தை யடைந்து பின்பு அடிக்கடி ஜனித்து விதவை யாகிறாள். இது போலவே ருது ஸ்நாநம் செய்த பாரியை அருகிலிருந்தும் வியாதி முதலிய தோஷமற்றிருக்கும் புருஷன் அவளைச் சேரா விட்டால் கோரமான ப்ரூணஹத்தி (சிசுஹத்தி)தோஷத்தில் ஸங்தேகமின்றிச் சேருகிறான்-

பெரு வெள்ளம் பெருங்காற்றுக்கள் இவைகளால் ஒருவனுடைய விரை வேறொருவனுடைய க்ஷேத்திரத்தில் தள்ளப்பட்டு முளைத்தெழுந்து பலித்தால் அந்த நிலக்காரன் ( ஷேத்திர) அந்தப் பலனை அடைகிறான். அந்த விரைக்கு உடையவன் (பிஜி) அந்தப் பாகத்தை அடைவதில்லை. (இது லோகப் பிரசித்தம்). இந்த நியாயத்தினால் குண்டனென்றும் கோளகனென்றும் சொல்லப்படுகிற பிள்ளைகளிருவரும் பர ஸ்திரியின் புத்திரர்களே (பீஜிக்குச் சம்பந்தமில்லை)

ஒவ்ரஸன்,க்ஷேத்திரஜன், தத்தன், கிருத்திரிமன்-என்றுபுத்திரர்கள் நாலுவகைப் பட்டவர்கள்-மனு இவர்களையுஞ் சேர்த்துப் பன்னிரண்டு பிள்ளைகளைச் சொல்லி யிருக்கிறார். -மாதா அல்லது பிதா (புத்திரனில்லாத ஒருவனுக்கு)எந்தப் பிள்ளையைக் கொடுக்கிறார்களோ அவன் தத்தனென்று சொல்லப்படுவன்-இங்குத் தாநங் கொடுப்பது போல் பிரீதியுடன் தாரா பூர்வகமாகக் கொடுக்கப்பட்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மூத்தவன் விவாகமில்லாதிருக்க இளையவன் விவாகம் செய்து கொண்டால் அவன் பரிவேத்தாவென்றும், மூத்தவன் பரிவித்தி யென்றும், விவாகம் செய்து
கொண்ட பெண் பரிவேதிநீ யென்றும்,அந்தப் பெண்ணைக் கொடுத்தவன் பரிதாதாவென்றும், விவாகம் செய்வித்த புரோஹிதன் பரியஷ்டா வென்றும் சொல்லப்படுவார்கள். ஆக இந்த ஐவரும் நரகத்தை அடைகிறார்கள். இவர்களில் பரிவித்திக்கு இரண்டு கிருச்சிரமும், அந்தப் பெண்ணுக்கு ஒரு கிருச்சிரமும், பெண் கொடுத்தவனுக்குக் கிருச்சிராதிகிருச்சிரமும், பிராயச் சித்தமாம். ஹோமம் செய்வித்த புரோஹிதன் சந்திராயண விரதத்தைச் செய்யக் கடவன்.

முதுகில் மாம்ஸ மிகுதியால் விகார சரீரத்தை யுடையவுனாகிய கூனன், சித்திர குள்ளன், நபும்ஸகன், நாவில் குற்றத்தினால் விரைவாகப் பேசச் சக்தி யற்றவன், எந்தக் காரியங்களையும் செய்ய வல்லமை யில்லாத ஜடன், பிறவிக் குருடன், பிறவிச் செவிடன், ஊமை, இவர்களில் ஒருவனாகத் தன் தமையன் இருக்கும் பக்ஷத்தில் அவனுக்கு விவாக யோக்கியதை யில்லாமையால் அவனுக்கு முன் கநிஷ்டன் விவாகம் செய்து கொண்டால் முன் சொன்ன பரிவேதன தோஷமில்லை .தமையன் சன்னியாசியாய் விட்டாலும் தேசாந்தரத்தை அடைந்திருந்தாலும் தம்பி விவாகம் செய்து கொள்ளலாம்.

சிறிய தகப்பனுடைய பிள்ளை, தனக்குச் சக்களத்தித் தாயார் பிள்ளை, தத்த மகன், இவர்கள் தனக்கு மூத்தவர்களா யிருந்தாலும், அவர்களுக்கு முன் கனிஷ்டனான தான் விவாகம்,யக்கியம் இவைகளைச் செய்து கொள்வதினால் பரிவேதந தோஷமில்லை.

ஜேஷ்டப் பிராதா இருந்து அவன் யக்கியத்தைச் செய்யாவிட்டால் அவனுடைய அநுமதி பெற்று இளையவன் அக்கிநியை ஆதாநம் செய்யலாம் (பக்கியம் செய்யலாம்),இவ்விதமாகச் சங்கர்சகமிருக்கிறது-இது போல் யக்கியம் செய்யாத பிதாவின் அனுமதியினால் புத்திரன் யக்கியம் செய்வதை மநு விலக்கினார்.

தன்பதியானவன் தேசாந்தரமடைந்து அவன் சங்கதியே தெரியாமலிருத்தல், மரணமடைதல், சன்னியாசி யாகுதல், நபும்ஸகனாயிருத்தல்,பதிதனாகுதல், ஆக இந்த ஐந்து விதமான ஆபத்துக்களில் ஸ்திரீகளுக்கு வேறு பதி விதிக்கப்படுகிறான்-

எந்த ஸ்திரியானவள் தன் பர்த்தா மரித்து விட்ட பின் பிர்ம்மசரிய விரதத்தை அநுஷ்டிக்கிறாளோ அவள் பிர்ம்மசாரிகள் மரித்தால் ஸ்வர்க்கத்தை அடைவது போல் மரித்த பின் ஸ்வர்க்கத்தை அடைகிறாள் –

எந்த ஸ்திரீ மரணமடைந்த தன் பதியை அநுகமநம் செய்கிறாளோ (உடன் கட்டை ஏறுகிறாளோ) அவள் ஒரு மனுஷியனுடைய தேகத்தில் மூன்றரை கோடி கணக்குள்ள எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அத்தனை கோடி காலம் ஸ்வர்க்க லோகத்தில் வசிக்கிறாள்-

பாம்பு பிடிப்பவன் புற்றின் ரந்திரத்திலழுந்திக் கிடக்கிற பாம்பைத் தன் பலத்தினால் எப்படி வெளியில் எடுத்து விடுகிறானோ அப்படி அநுமரணம் செய்த பதிவிரதை யானவள் (நரகத்திற்குச் செல்லுகிற பர்த்தாவைத் தன் புண்ணிய பலத்தினால் மீட்டுப் புண்ணிய லோகத்தில் சேர்த்து அவனுடன் ஆநந்திக்கிறாள்-

முதலாவது அத்தியாயம் முற்றிற்று.

இரண்டாவது அத்தியாயம்.

செந்நாய், நாய், குள்ள நரி, பன்றிமுதலான ஐந்துக்களால் பிராம்மணோத்தமன் கடிக்கப்பட்டால் அவன் ஸ்நாநம் செய்து வேதமாதாவும் பரிசுத்தமுமாகிய காயத்ரியை ஜபிக்கக் கடவன்

பின்னும் கோசிருங்க ஜல ஸ்நாநஞ் செய்தல், மஹாநதி சங்கமத்தில் ஸ்நாநம் செய்தல், சமுத்திரத்தைப் பார்த்தல் இவைகளைச் செய்தால் நாயால் கடிக்கப்பட்டவன் சுத்தனாகிறான்

வேதத்தை முழுதுமோதிப் பிராஜாபத்தியம் ஸௌம்மியம் முதலான விரதங்களை அநுஷ்டித்தவனான பிராம்மணன் நாயால் கடிக்கப்பட்டால் ஸ்வர்ணத்தோடு கூடின ஐலத்தில் ஸ்நாநம் செய்து நெய்யைக் குடித்தால் சுத்தானாகிறான்-

சாந்திராயணம்முதலான விரதத்தோடு கூடி யிருப்பவன் (விரதாநுஷ்டாந காலத்தில் ) நாயால் கடிக்கப்பட்டால் மூன்று நாள் உபவாஸமிருந்து நான்காவது தினத்தில் நெய்யையும் தர்ப்ப ஜலத்தையும் குடித்துப் பின்பு விரத சேஷத்தைச் செய்து முடிக்கக் கடவன்.

விரதத்தை அநுஷ்டிக்காதவன், விரதத்தோடு கூடினவன், இவர்களில் எவனாகிலும் நாயால் கடிக்கப் பட்டானே யாகில் அவ்விருவர்கவளும் பிராம்மணரைச் சேவித்து அவர்களால் பரிசுத்தமான பார்வைகளால் பார்க்கப்பட்டும் தகுந்த பிராயச் சித்தங்களைச் செய்தும் பரிசுத்தர்களாகிறார்கள்

எவன் நாயால் கடிக்கப்படாமல் மூக்கினால் முகரப்பட்டும் நாக்கினால் நக்கப்பட்டும் அல்லது நகங்களால் கீறப்பட்டுமாவது இருக்கிறானோ அவன் அந்த இடத்தை மண்ணினாலும் ஜலத்தினாலும் நன்றாக அலம்பி நெருப்பில் காய்ச்சினால் பரிசுத்தனாகிறான்.

பிராம்மண ஸ்திரீயானவள் நாய், குள்ளநரி, செந்நாய் முதலியவைகளால் கடிக்கப்பட்டால் அப்போது அந்தஸ்திரீ ராத்திரியில் உதயமாகின்ற சந்திரன் முதலான கிரகங்களையும் கிருத்திகை
முதலான நக்ஷத்திரங்களையும் பார்த்தால் சுத்தையாகிறாள்,

கிருஷ்ண பக்ஷத்திலும் மேகத்தால் ஆகாசம் மறைக்கப்படுகிற காலத்திலும் சந்திரனும் நக்ஷத்திரங்களும் காணப் படாவிட்டால் சாஸ்திர விதிப்படி அப்போது சந்திரன் இருக்கும் திசையையாவது பார்க்க வேண்டும்.

எந்த ஊரில் பிராம்மணர்கள் இல்லையோ அந்த ஊரில் நாயால் கடிக்கப்பட்டவன் பிராம்மணர்களைப் பற்றிச் செய்ய வேண்டிய பிரதக்ஷிணம் முதலான ஆசாரங்களை விருஷத்தினிடத்தில்
செய்து பின்பு ஸ்நாநம் பண்ணினால் சுத்தனாகிறான்-

சண்டாளனால் அல்லது சுவபாகனால் அல்லது பசுக்களால் அல்லது பிராம்மணர்களால் அடிக்கப்பட்டாவது தானே விஷந் தின்றாவது யாகஞ்செய்த பிராம்மணன் மரணமடைந்தால் அவனை அவனுடைய ஏழு தலைமுறைக்குட்பட்ட ஞாதிகளில் ஒரு பிராம்மணன் லௌகிகாக்நியில் மந்திரமில்லாமல் தகநம் செய்யக் கடவன். அந்தச் சவத்தை ஸ்பரிசித்தாலும் சுமந்தாலும் பின்பு பிராம்மணருடைய அநுமதி பெற்றுப் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக் கடவன்-

துர் மரணமடைந்த யாக சீலனுடைய சவத்தைத் தகநம் செய்த ஸமீப ஞாதியான பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்து கொண்ட பின்பு, முன் லௌகிகாக்நியில் மந்திரமின்றித் தகநம் செய்யப்பட்ட அஸ்திகளை எடுத்து அவைகளைப் பாலினால் அலம்பிக் காருபத்தியம் முதலான அக்நிகளாலே யாகஞ் செய்கிறவனுக்குச் சொல்லிய விதிப்படி புநர் ஸம்ஸ்கார மந்திரங்களைச் சொல்லி அந்த அஸ்திகளைப் பிரேதத்தைப் போல் தஹநம் செய்யக் கடவன்-

ஆஹிதாக்நியான ஒரு பிராம்மணன் தேசாந்தரம் சென்றவியத்தில் காலகதியினால் மரணமடைய அவனுடைய அக்னி வீட்டிலிருந்தால் அந்தப் பிரேதத்தை அக்நியினால் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டிய விதியைச் சொல்லுகிறேன் ரிஷிகளே கேளுங்கள். மான் தோலைப் பரப்பி அதன் மேல் தர்ப்பங்களாலும் எழு நூறு கணக்குள்ளது சிறிய பலாசம் சமித்துக்களாலும் அல்லது பலாசமரத்தின் இலைக்காம்புகளாலும் ஒரு புருஷாகாரத்தைச் செய்து பிறகு, முகத்தில் சடத்துக்கள் நாற்பது, கழுத்தில் பத்து, கைகளில் நூறு, விரல்களில் பத்து, தொப்புளின் கீழ் குயஸ்தநத்தில் நூறு, வயிற்றில் இருநூறு, ஜங்களில் எட்டு, ஆண் குறியில் ஐந்து, தொடைகளில் இருபத்தொன்று, முழங்கால் அதின் கீழ் ஐங்கைகளில் இருநூறு, கால விரல்களில் ஆறு, இவ்விதமாகச் சமித்துக்களை அல்லது இலைக் காம்புகளை வைத்துக் கட்டப்பட்ட அந்தப் புருஷ சரீரத்தில் சம்மியையை ஆண் குறியி லும் அரணிக் கட்டையை விருஷணத்திலும், ஐஹூ என்னும் பாத்திரத்தை வலது கையிலும்,உப்பிருத் என்னும் பாத்திரத்தை இடது கையிலும், உரல் உலக்கைகளை முதுகிலும், திருஷத் என்னும் பாத்திரத்தை (அம்மியை) மார்பிலும், அரிசி,நெய்,எள், இவைகளை முகத்திலும், புரோக்ஷ பாத்திரத்தைக் காதிலும், நெய்ப் பாத்திரத்தைக் கண்களிலும் தங்கத் தகடுகளைக் காது, கண், முகம், மூக்கு இந்த இடங்களிலும் இவ்விதமாக யக்கிய பாத்திரைங்களை எல்லாம் வைத்து மந்திரத்தால் ஒரு ஆகுதி(நெய்யாகுதி) செய்து புத்திரன் அல்லது பிராதா அல்லது வேறொரு சமீப பந்துவாவது சமர்த்தனாக இருந்து விதிப்படி தஹந ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்

இவ்விதமான ஆஹிதாக்நி ஸம்ஸ்கார விதியைச் செய்தால் அந்த ஆஹிதாக்நி ப்ரஹ்ம லோகத்தை நிச்சயமாய் அடைகிறான்.எந்தப் பிராம்மணர்கள் இவ்விதமாகத் தஹநம் செய்தார்களோ அவர்களும் உத்தம கதியை அடைகிறார்கள்

இவ்விதமாகச் செய்யாமல் தங்கள் புத்திக்குத் தோன்றின படியே எவர்கள் இந்தக் கருமத்தைச் செய்கிறார்களோ அவர்கள் அல்பாயுசுக்களாகி அசுசியான நரகத்தில் விழுகிறார்கள் –

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று

மூன்றாவது அத்தியாயம்.

பிரகீர்ணக பாபங்களுக்குப் பிராயச் சித்தத்தைச் சொல்லிய பின் விருத்த பராசரராலும் மனுவினாலும் விஸ்தரித்துச் சொல்லப்பட்டதும் மலிநீ கரண ரூபங்களான பிராணிஹத்திகளில் செய்ய வேண்டியதுமான பிராயச்சித்தத்தைச் சொல்லுகிறேன். (என்கிறார் பராசரர்)

கிரௌஞ்சம், வண்டாழ்வான், ஹம்ஸம், சக்கிரவாகம், கோழி, வாத்து, சரபம் ஆகிய இந்தப் பக்ஷிகளைக் கொன்றவன் ஒரு நாள் முழுதும் உபவாசமிருந்தால் சுத்தனாகிறான்-ஹம்ஸம் முதலிய பக்ஷிகளைக் கொன்றவன் கோ தாநம் செய்யக்கடவனென்று மனு யாக்கிய வல்கியர்கள் சொன்னது உபவாஸமிருக்க அசக்தனான தநிகன் விஷயமென்று கருத்து.

நாரை, சிறு குருவி, கிளி, மாடப்புற, ஸர்ப்பம், முதலை, இவைகளைக் கொன்றவன் பகலில் உபவாஸ் மிருந்து ராத்திரியில் போஐநம் செய்வதால் சுத்தனாகிறான்-

விருகம் என்னு மொருவித பக்ஷி, காக்கை, புறா பெண் கிளி, சிச்சிலவு இவைகளைக் கொல்லுகிறவன் ஜலத்தின் நடுவில் இரண்டு ஸந்தியைகளிலும் இடை விடாமல் அந்தந்த ஸந்தியைகள் முடியுமளவும் எவ்வளவுப் பிராணாயாமங்களைச் செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தால் சுத்தனாகிறான்-

கழுகு, பருந்து, முயலடிப்பா னென்னும் பக்ஷி,கோட்டான் இவைகளைக் கொல்லுகிறவன் அக்நியில் பசநம் செய்யப்படாத கிழங்கு, பழம் முதலியவற்றை ஒரு திநம் புசித்துப் பின்பு மூன்று காலம் ( ஓன்றரை நாள்) உபவாஸ மிருக்கக் கடவன்.-இவைகளைக் கொல்லுகிறவன் ஒரு நாள் உபவாஸமும் ஸகலவிதமான விரை தாநமும் செய்ய வேண்டுமென்று காசியபர் விதித்தது அசக்தனைப் பற்றியதென்று கருத்து.

வல்குலி என்னும் பக்ஷி,நாரையின் பேதம் அல்லது மீன் குத்திக்குருவி, குயில், வலியன், லாவிகை என்னும் பக்ஷி, கருடபக்ஷி,இவைகளைக் கொன்றவன் பகலில் உபவாஸ மிருந்து இரவில் புசிப்பதினால் சுத்தனாகிறான்.

நீர்க் காக்கை, சகோரமென்னும் நிலாமொக்கி, பெண் கோட்டான், அன்றில் பக்ஷி, பரத்துவாஜ பக்ஷி இவை முதலிய பக்ஷிகளைக் கொன்றவன் சைவ மந்திர கல்பத்தில் சொல்லியபடி சிவனைப் பூஜித்தால் சுத்தனாகிறான்

கெண்டபேரண்டம், காடை, தங்கம் போன்ற தலைக் கொண்டையை யுடைய ஒரு பக்ஷி, ஓர்வகைப் புறா,சித்திரவர்ணமான் இறகை யுடைய பக்ஷி, இவைகளைக் கொன்றவனும், மற்ற எல்லாப் பக்ஷிகளையும் கொன்றவனும் ஒரு பகலு மிரவும் சுத்தோபவாஸமிருக்க வேண்டும்.

பெருச்சாளி, அதின் பேதங்கள், பூனை, கீரிப் பிள்ளை, ஸர்ப்பம், மலைப் பாம்பு, தண்ணீர்ப்பாம்பு, இவைகளை அடித்துக் கொன்றவன் எள் பயறு இவைளோடு பசநம் செய்விக்கப்பட்ட கிருஸர மென்கிற அன்னத்தைப் பிராம்மணருக்குப் போஜனம் செய்வித்து எஃகினால் செய்த தடியைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவன்.

நீர்க் குரங்கு அல்லது ஒருவித முதலை, உடும்பு, ஆமை, சல்லியக மென்னும் ஒருவகை மத்ஸ்யம், முள்ளம் பன்றி, இவைகளைக் கொன்றவன் ஒரு பகலும் இரவும் கத்தரிக்காயை மாத்திரம்
புசித்தால் சுத்தனாகிறான்-இவைகளின் வதத்திலும் காசியபர் முதலானவர்கள் சொன்ன பிராய சித்த பேதங்கள் முன் சுலோகத்தில் சொல்லியபடி சில நிமித்தங்களால் வந்தன வென்று கண்டு கொள்க.-

செந்நாய், குள்ள நரி, கட்டி,சிவிங்கி, நாய் இவைகளைக் கொன்றவன், ஒரு படி எள்ளைப் பிராம்மணனுக்குக் கொடுத்து மூன்று நாள் சுத்தோபவாஸ மிருக்க வேண்டும்.-நாயைக் கொன்றவனுக்கு மூன்று நாள் உபவாஸத்தை விஷ்ணுவும், சூத்திரவத்திற்குரிய பிராயச் சித்தத்தைப் பைடீநஸியும் சொன்னது நெடு நாளாக இந்தப் பாதகத்தைச் செய்து கொண்டிருப்பவன் விஷயமென்று கொள்ள வேண்டும்.

யானை,குதிரை, எருமைக்கடா, ஒட்டகம், இவைகளைக் கொன்றவனுக்கு மூன்று கால ஸ்நாநத்தோடு கூடிய ஒரு நாள் உபவாஸம் பிராயச்சித்தமாம்.

மான், குரங்கு, சிங்கம், புலிபோன்றதான ஒருசித்திர மிருகம்,புலி இவைகளைக் கொன்றவன் பிராம்மண போஜநத்தைச் செய்விப்பதோடு மூன்று நாள் உபவாஸத்தால் சுத்தனாகிறான்.

மான் ஜாதிகள், குதிரையைப் போன்ற சரீரத்தையும் மூன்று கொம்புகளை யுமுடையதான ஒருவிதமான்,பன்றி, சண்டை செய்கிற அப்பியாஸமுடைய ஆட்டுக்கடா, பெண் ஆடு, இவைகளைக்
கொன்றவன் ஒரு நாள் உபவாஸ மிருந்து உழுத நிலத்தில் விளையாத செந்நெல் அரிசியைச் சமைத்துப் பாரணை செய்ய வேண்டும்-

நியாயத்தை உள்ளபடி அறிந்து பாப பேதங்களுக் கீடாகப் பிராயச்சித்தங்களை ஊஹித்து இவ் விதமாகக் கீழ சொல்லப்படாத சகல காட்டு மிருகங்கள் வதத்திலும் (ஐாதவேதஸம் என்
னும் மந்திர ஜபத்துடன் ஒரு நாள் உபவாஸ மிருக்க வேண்டும்.-மூன்று நாள் உபவாஸமும், ஸ்வர்ண தானமும் செய்ய வேண்டுமென்று கசியபர் சொன்னது தனிகனா யிருந்து இந்தப் பாபத்தை
அடிக்கடி செய்து கொண் டிருப்பவன் விஷயம்.

சித்திரம் எழுதுகிறவன் முதலானவன், சமையல் செய்கிறவன் முதலானவன், சூத்திரன்,ஸ்திரீ ஆகிய இவர்களைக் கொன்றவன் இரண்டு பிராஜாபத்திய கிருச்சிரங்களைச் செய்து பத்து பசுக்களையும் பதினோராவதாக ஒரு விருஷபத்தையும் தஷிணையாகக் கொடுக்கக் கடவன்.

தோஷமற்றவனா யிருக்கிற வைசியணை அல்லது அப்படிப்பட்ட க்ஷத்திரியனை எவன் கொல்லுகிறானோ அவன் இரண்டு அதி திருதிச்சி யங்களைச் செய்து இருந்து பசுக்களைத் தஷிணையாகக் கொடுக்கக் கட்டவன்.

அல்ப பாகம் நல்ல நடத்தையோடு கூடின வைசியனையும்,தன் நிலை தவறாத சூத்திரனையும், பிராம்மண வதம் முதலிய விருத்த கருமங்களைச் செய்பவனாகிய ஷத்திரியனையும், விருத்த கருமங்களில் நிலைத்திருப்பவனாகிய பிராம்மண சிரேஷ்டனையும், கொன்றவன் சாந்திராயண விரதத்தை அநுஷ்டித்து முப்பது பசுக்களைத் தக்ஷிணையாகக் கொடுக்கக் கடவன்-

சண்டாளர்களில் ஒருவனைக் கொன்ற பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தையும் இரண்டு கோதாநத்தையும் செய்தால் சுத்தனாகிறான். க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பிராம்மண ஸ்திரிக்கு க்ஷத்திரியனால் பிறந்த ஜாதியான ஸூத வம்சத்தான் முதலானவர்கள் ஆகிய இவர்கள் சண்டாளனைக் கொன்றால் பாதிப்பிராஜாபத்திய கிருச்சிரத்தால் சுத்தராகிறார்கள்.

சண்டாளன், சக்கிலி, இவர்கள் திருடராகவர அவர்களைப் பிராம்மணன் கொன்றால் ஒருநாள் உபவாஸமிருந்து பஞ்சகவியத்தைப் புசிப்பதினால் சுத்தனாகிறான்.

சுவபாகனென்னும் சக்கிலி, சண்டாளன் இவர்களோடு பிராம்மணன் ஸம்பாஷித்தால் அவன் அதற்குப் பிராயச்சித்தமாகப் பூர்ணமாய் வேத மோதின மஹா பிராம்மணர்களோடு ஸம்பாஷணம் செய்யக் கடவன், அல்லது காயத்திரியை ஒரு தரம் ஜபிக்கக் கடன்.

சண்டாளர்களுடன் சயனித்துத் தூங்கினவனுக்கு மூன்று நாள் உபவாஸத்தை விதிக்க வேண்டும். சண்டாளனுடன் வழி நடந்தவன் காயத்திரியை ஸ்மரித்தால் சுத்தனாகிறான்-

சண்டாளனைப் பார்த்தவன் சூரியனைப் பார்க்கக் கடவன்,சண்டாளனைத் தொட்டவன் ஸசேல ஸ்நாநத்தைச் செய்யக் கடவன்.-

சண்டாளன் வெட்டுவித்து கிணறுகளில் அல்லது நடைபாவிகளில் பிராம்மணன் அறியாமல் தண்ணீர் குடித்தால் ஒருவேளை ஆஹார விரதத்தினாலும் அறிந்து குடித்தால் ஒரு உபவாஸத்தினாலும் சுத்தனாகிறான்.

சண்டாளன் பாண்டத்தினால் எந்தக் கிணற்றினின்று ஜலம் எடுக்கப் படுகிறதோ அந்தக் கிணற்று ஜலத்தைக் குடித்த பிராம்மணன் மூன்று நாள் கோ மூத்திரத்தைக் குடிப்பதோடு யவ அரிசி மாவையும் புசித்தால் சுத்தனாகிறான்

சண்டாளனுடைய பாண்டத்து ஜலத்தைப் பிராம்மணன் அறியாமல் குடித்து உடனே அறிந்து அதைக் கக்கினால் அப்போது பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக் கடவன். அது வெளிப்படாமல் ஜெரித்து விட்டபஷத்தில் ஸபா ஐநங்கள் அவனுக்குப் பிராஜாபத்திய கிருச்சிரத்தைப் பிராயச்சித்தமாக விதிக்கக்கூடாது, ஸாந்தபநமென்னும் கிருச்சிரம் விதிக்கத்தக்கது.

சண்டாள பாண்ட லத்தை அறிந்து குடித்த பிராம் மணனுக்குஸாந்தப கிருச்சிரத்தையும், க்ஷத்திரியனுக்குப் பிராஜாபத்திய கிருச்சிரத்தையும், வைசியனுக்கு அதில் பாதியும், சூத்திரனுக்குக் கால்வாசியையும் பிராயச்சித்தமாக விதிக்க வேண்டும்.

அந்தியஜாதிகளுடைய பாண்டத்திலிருக்கின்ற ஜலம்,தயிர், பால்,இவைகளைப் பிராம்மணன் க்ஷத்திரி
யன் வைசியன் சூத்திரன் இவர்கள் அறியாமல் குடித்தார்களாகில் இருபிறப்பாளருக்குப் பிர்ம்மகூர்ச்சபாநத்துடன் உபவாஸமும், சூத்திரனுக்கு உபவாஸமும் சக்திக்கீடானதாமும் பிராயச்சித்தமாம்

அஞ்ஞாநத்தினால் சண்டாளாந்கத்தைப் புசித்த பிராம்மணன் கோமூத்திரத்தில் பசநம்செய்த யவஅரிசி அன்னத்தைப் பத்துநாள் புசித்தால் சுத்தனாகிறான்.

(அஞ்ஞாநத்தினால் சண்டாளார்கத்தைப் புசித்தவன்) கோமூத்திரத்தில் பசநம்செய்த யவஅரிசி அன்னத்தைத் திநம் ஒவ்வொரு கவளமாகப் பத்துநாள் புஜிக்கக்கடவன்.நியமத்திலிருப்பவனுக்கு அதாவது, ஸ்நாநம், மெளநம், உபவாஸம், யாகம், வேதமோதல், இந்திரியத்தை அடக்குதல், ஆசாரியன்பணிவிடை, செளசம், கோபமில்லாமை,மனம் நிலைத்திருக்கை இவைகளுடன் கூடி
யிருப்பவனுக்கு) இந்த யாவக ஆஹாரவிரதத்தை உபதேசிக்கவேண்டும்.

சண்டாளன் அறியப்படாதவனாகி எவனுடைய வீட்டில் வசிக்கிறானோ அந்தவீட்டுக்காரன் அவனைச் சண்டாளனென்றறிந்த பின்பு தங்களை அடுத்தானாகில் பிராம்மணர்கள் அவனுக்குப் பிராயச் சித்தோபதேசமாகிறஅநுக்கிரகத்தைச்செய்கிறார்கள்-

சகலவேதங்களையும் ஓதியும் தர்மங்களை அறிந்துமிருக்கிற பிராம்மணர்கள் மஹரிஷிகள் சொல்லியிருக்கின்ற தர்மங்களைச் சொல்லிப் பாபராசியினின்று பாபிஷ்டனைக் கரையேற்றுகிறார்கள்-

தயிரோடும் நெய்யோடும் பாலோடும்கூட்டிக் கோமூத்திரத்தில் பசநம் செய்த யவ அரிசி அந்நத்தைச் சண்டாள ஸஹவாசம் நேரிட்ட வீட்டுக்குடையவனும் அந்த வீட்டில் வசிக்கிற குழந்தை கிழவர் முதலிய எல்லாரும் புசிப்பதுடன் மூன்று காலத்திலும் ஸ்நாநமும் செய்யவேண்டும்.

கோமூத்திர பசந மான யவ அரிசி அந்நத்தைத் தயிரோடு கலந்து மூன்றுநாளும், நெய்யோடு கலந்து மூன்றுநாளும்,பாலோடுகலந்து மூன்றுநாளும் பின்பு இந்தவிதமாக ஒவ்வொருநாளும் ஆகப் பன்னிரண்டு நாள் புசித்தலாகிய இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்.

இந்தப்போசாத்தில் பாவதுஷ்டமானதையும், எச்சில், புழு, இவைகள் விழுந்து தூஷிக்கப்பட்டதையும், புசிக்கக்கூடாது.-எந்த அந்நம் பார்க்கும்போது அமேத்தியம் முதலானதுகளோடு பலவகையாலும் சமமாக புத்தியில் தோன்றுகிறதோ அது பாவதுஷ்டமானது அதாவது எண்ணத்தினால் தோஷமடைந்தது என்னப்படும்.

தயிர்ப் பால்களைத் திநத்திற்கு மூன்றுபலம் அளவாகவும் நெய்யை ஒருபலம் அளவாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாம்பிரம் வெண்கலம் இவைகளுக்குச் சாம்பலினால் சுத்தியும் வஸ்திரங்களுக்கு ஜலத்தில் அலம்புவதினால் சுத்தியும் உண்டாகும்.-மண்பாத்திரத்திற்கு அதைவிட்டுவிடுவதே சுத்தியாம். தாம்பிர பாத்திராதிகளுக்குப் போல் மண்பாத்திரத்திற்கு வேறு சுத்தியில்லை.

குசும்பம் (தைலசாதநமான ஒருதானியம்), வெல்லம், பஞ்சு,உப்பு,எண்ணெய்,நெய், தானியம் இவைகளைச் சண்டாள சகவாசம் நேரிட்ட வீட்டுவசற்படியில் வைத்து அந்த வீட்டை நெருப்பிட்டுக் கொளுத்தவேண்டும்.

இவ்விதமாகத்தானும் தன் ஜநங்களும் தன்வீடும் சுத்தி அடைந்தபின் பிராம்மணபோ நம் செய்வித்து முப்பது பசுக்களை ஒரு விருஷபத்துடன் பிராம்மணர்களுக்குத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்

பாண்டத்தை விடுவதுபோல் சண்டாளன் வசித்த பூமியை விடவேண்டுவதில்லை. அந்த வீட்டுச்சுவருக்கு மறுபடி பூசுதல், அந்தவீட்டுமண்ணைவெட்டி எடுத்தல் இவைகளைச்செய்வித்துப்
பிராம்மணர்களை அந்தவீட்டில் புகச்செய்து சாந்திஜபங்களையும் சாந்திஹோமங்களையும் செய்தால் அந்தப்பூமி சுத்தமாகிறபடியால் பூமிக்கு விடத்தக்க தோஷமில்லை.

சண்டாளர்களோடு ஒருமாஸம் அல்லது அரைமாஸம் ஸகவாஸம்செய்த பிராம்மணன் கோமூத்திர பாகமான யவ அரிசி அந்நத்தைப் புசிப்பதாகிய விரதத்தை ஒருமாஸதோஷத்திற்கு ஒரு மாஸமும் அரை மாஸ தோஷத்திற்கு அரை மாஸமும் பிராயச்சித்தமாகச் செய்யவேண்டும்.

வண்ணாத்தி, முச்சியின்ஸ்திரீ வேடுவச்சி,மூங்கில்பாய் நெசவுகளால் ஜீவநம்பண்ணுகிற ஒரு ஜாதிஸ்திரீ இவர்கள் பிர்ம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் வீட்டில் அறியப்படாதவர்களாக
வசிக்கப் பின்புஅவர்களை அறிந்தால் முன் சண்டாள ஸகவாஸத்திற்குச் சொன்ன பிராயச் சித்தத்தில் பாதியே செய்ய வேண்டும், வீட் டைக் கொளுத்த வேண்டியதில்லை. பாத்திரங்களைச் சுத்தி செய்வது முதலிய மற்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் .

பிராம்மணாதிகளுடைய வீட்டில் சண்டாளன் உள்ளேபுகுந்தால் அவனை அந்தவீட்டினின்று அப்புறப்படுத்தி மண்பாத்திரங்ககளை எடுத்தெறிந்து விடவேண்டும். எண்ணெய், நெய்முதலான ரஸங்களின் பாண்டங்களை எறியவேண்டியதில்லை .சாணி லத்தினால் அந்த வீட்டை நன்றாக அலம்ப வேண்டும்.

எந்தப் பிராம்மணனுக்குத் தேகத்தில் சீயும் ரக்தமும் பெருகிக் கொண்டிருக்கிற புண் வாயில் புழு உண்டாகிறதோ அவனுக்குப் பிராயச்சித்தம் எப்படி ஆகும்?-

சுக்களுடைய மூத்திரம் சாணி இவைகளாலும் தயிர் பால் நெய்களாலும் அதாவது பஞ்சகவியத்தால் மூன்றுநாள் ஸ்நாநம்பண்ணி மூன்றுநாள் பஞ்சகவியத்தைக் குடித்தால் புண்ணில் புழுத்தவன் சுத்தனாகிறான்.

ஷத்திரியனுக்கானால் ஐந்துமாஷம் அளவுள்ள ஸ்வர்ணதாநமும் வைசியனுக்கானால் கோதக்ஷிணையும் உபவாஸமும் விதிக்கவேண்டும். சூத்திரனுக்கு உபவாஸம் இல்லை, ஆனால் தாநத்தினால் சுத்தனாகிறான்

பூமிதேவர்களான பிராம்மணர்கள் அச்சித்ரம் (பரிபூர்ணம் என்று எந்தவாக்கியத்தைச் சொல்லுகிறார்களோ, அந்த வாக்கியமானது அக்கிஷ்டோமமென்னும் யாகத்தினால் கிடைத்த பலன் போன்றதாகையால் ஒருவன் அதைவணங்கிச் சிரத்தினால் கிரகித்துக்கொள்ள வேண்டும்.
ஒருபிராயச்சித்தத்தை அனுஷ்டிக்குங்காலத்தில் அதினுடைய ஏற்றக் குறைவுகளின் பூர்த்திக்காக ஸம்பூர்ணமாகட்டுமென்று பிரமாண வாக்கியத்தை அவசியம் பிரார்த்தித்துப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது கருத்து.

ஜபத்திலுண்டான சித்ரம் (குறைவு), தபஸிலுண்டான சித்ரம், யக்கியத்திலுண்டான சித்ரம் இவைகளெல்லாம் பிராம்மணர்களால் அச்சித்ரம் (ஸம்பூர்ணம்) என்று சொல்லப்பட்டனவாகி
அப்படியே ஸம்பூர்ணமாகின்றன.

ஒருவன் வியாதியினால் பீடிதனாயிருக்கையிலும் நெடுந் தூரம் வழி நடந்து இளைத்திருக்கையிலும் தெய்வீகமான துர்ப்பி காலத்திலும் அந்நிய ராஜாவினால் தன்தேசத்திற்குத் துன்பம்
உண்டாயிருக்கையிலும் தான்செய்யவேண்டிய உபவாசம்,விரதம், ஹோமம் இவைகளைப் பிராம்மணர்களைக்கொண்டு செய்வித்துக் கொள்ளலாம். தன் பிதா முதலியவர்களும் தனக்காகச் செய்யலாம்.

ஒன்றையும் செய்து கொள்ளக் கூடாத விசேஷ ஆபத்து நேரிட்ட பக்ஷத்தில் வேதத்தை முழுதுமோதின பெரியோர்களான பிராம்மணர்கள் இவன் முன் செய்திருந்த உபகாரத்தினால் சந்தோஷித்தவர்களாகி ஆபத்தை அடைந்திருப்பவனை நோக்கி நீ தோஷ மற்றவனாகக் கடவை யென்று அனுக்கிரகிக்கிறார்கள். அவ்வளவு மாத்திரத்தினால் ஒருவன் ஒரு விரதத்தையும் அனுஷ்ட்டிக்காமலே குரு பிதா முதல்வர்களாக யுள்ள பிராம்மணர்களுடைய ஆசீர்வாதத்தினால் ஸகல இஷ்டங்களையும் அடைகிறான்.

முன் சொல்லியபடி வியாதி முதலான காரணங்களால் பிராயச் சித்தத்தைச் செய்யச் சக்தியற்றவன் விஷயத்திலும், அப்படியே பால விருத்தர்கள் விஷயத்திலும்,பெரியோர்கள் அவர்களை அனுக்கிரகிக்கத் தக்கவர்கள். அப்படி யில்லாமல் சக்தி யுள்ளவன் விஷயத்தில் அநுக்கிரகித்தால் தோஷம் ஸம்பவிக்கும், ஆகையால் அப்படிப் பட்டவர்கள் விஷயத்தில் அனுக்கிரகம் செய்யத் தக்கதன்று.-தர்ம சாஸ்திரத்தை அறியாதவனும் ஒருத்தனாயிருப்பவனும் அந்த அநுக்கிரகத்தைச் செய்யக் கூடாதென்றும் தர்மங்களை அறிந்த பிராம்மணர்கள் அநேகர் கூடி அனுக்கிரகிக்க வேண்டுமென்றும் தேவலர் சொன்னார்.

புத்திரமித்திராதிகள் விரதத்தை அனுஷ்டிக்கச் சக்தி யுள்ளவர்களாயிருக்க அவர்களிடத்தில் ஸ்நேகத்தாலாவது தன்னிடத்தில் பொருளாசையிலாவது ராஜா முதலியவர்களிடத்தில்
பயத்தினாலாவது துர்ப்பலன் விஷயத்தில் அனுக்கிரகம் செய்ய வேண்டுமென்கிற சாஸ்திரத்தை அறியாமல் எவர்கள் கீழ்ச் சொன்ன சக்தர்கள் விஷயத்திலும் அநுக்கிரகத்தைச் செய்கிறார்களோர் அவர்களிடத்தில் அனுக்கிரகம் செய்யப்பட்டவர்களுடைய பாபம் சேருகிறது.

ஒருவன் பாபியாயிருந்து அவனுடைய சரீரத்திற்கு அந்தியம்வந்தால் (மரணகாலம் ஸம்பவித்து பூமியில் படுத்திருக்கை நேரிட்டால்) அந்தத்தசையில் அவனுக்குச்செய்ய அசாத்தியமான
பிராயச்சித்தத்தை எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்கள் மரிக்கப் போகிறஅந்தப்பாபியானவன் அருகேயிருக்கின்ற பந்துக்கள் வாக்கியத்தினால் அப்போதுசெய்கிற தேவதாத்தியானத்தைத் தடுப்பதினால் அவனுடைய பாபம் அவர்களிடத்தில் சேருகிறது. சுகமான சரீரத்தை யுடையவனுக்குக் கீழ்ச் சொன்ன தேவதாஸ்மரண விரோதமில்லாமையால் பிராயச்சித்தத்தைச் சொல்லலாம்

வியாதி முதலிய ஆபத்துக்களை யுடையவனுக்கு மாத்திரம் பதிலாக மற்றொருவன் விரதங்களை அனுஷ்டிக்கலாமென்கிற சாஸ்திரத்தைஅறியாதவர்களாகிச் சுகமாக இருக்கிற ஒரு தனிகனு
க்குப் பதிலாக விரதத்தை எவர்கள் அநுஷ்டிக்கிறார்களோ அவர்களும்,இது சாஸ்திரவி திதானென்று எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்களும், அவனுடைய பாபம் நீங்கும் விஷயத்தில் தடை செய்தவர்களாகையால் அசுசியான நரகத்தில் விழுகிறார்கள-

சாஸ்திரத்தில் சொல்லிய நியமத்தைவிட்டு அதைச் சொல்லுகிற பிராம்மணனையும் அலட்சியம் செய்து தனக்குத் தோன்றியபடி பிராயச்சித்தத்தைச் செய்பவன் பிராயச்சித்த பலனான புண்ணியத்தை அடைகிறதில்லை. அவனுடைய உபவாஸமும் வீணாகும்.

பிராம்மணர்களுடைய விதி வாக்கியத்தின்படி பிராயச்சித்தம் அனுஷ்டிக்கத்தக்கது, வெகு பிராம்மணர்கள் கிடையாதபக்ஷத்தில் ஒரு பிராம்மணனாவது சொல்லுகிறபிராயச்சித்தத்தைச் செய்ய
வேண்டும், அப்படிப் பிராம்மணர்களுடைய அனுமதியின்றியே தானாகச் சாஸ்திரங்களை ஆலோசித்துப் பிராயச்சித்தங்களைச்செய்பவன் புரூணத்தியின்தோஷத்தை அடைகிறான்.

பிராம்மணர்கள் ஐங்கமங்களான (ஸஞ்சரிப்பவைகளான) புண்ணிய தீர்த்தங்களென்னப்படுகிறார்கள். பெரியோர்கள் பரிசுத்தர்களாகையால் அவர்கள் தீர்த்தங்களுக்கு ஸமானமானவர்கள். அவர்கள் விதிக்கிறவாக்கியமென்னும் ஜலத்தினால் பாபமாகிய அழுக்கடைந்த மனிதர்கள் பரிசுத்தர்களாகின்றனர்.

பிர்ம்மம் என்பது வேதம், அதில் நிஷ்டையுடையவர் பிராம்மணர். அவர்கள் எந்த வசநங்களைச் சொல்லுகிறார்களோ அந்த வசகங்களைத் தேவதைகள் அப்படியே அநுமதிசெய்கிறார்கள்.
ஸகலதேவதைகளையும் சொல்லுகிற வைதிகமந்திரங்களைத் தரிக்கிறபடியால் பிராம்மணர் ஸகல தேவதா ஸ்வரூபியாகிறார்கள். அவர்கள்சொல்லுகிற வசநம் வேறாகிறதில்லை.

உபவாஸம், வேறுவிரதம்,நாநம், ஸ் தீர்த்தயாத்திரை,ஜபம், தவம், இவைகள் எவனுக்குப் பிராம்மணர்களுடைய அனுமதியினால் செய்யப்படுகின்றனவோ அவைகளுடைய பலன் அவனுக்குப்
பரிபூர்ணமாகக் கிடைக்கிறது

பக்குவமான அந்நமானது சமைத்த பாண்டத்தில் அல்லது போஜந பாத்திரத்தில் புழு ஈ மயிர் இவைகளால் தோஷத்தை அடைந்திருந்தால் அந்த அந்நத்தின் நடுவில் தீர்த்தத்தினால் புரோக்ஷித்துக்
கொஞ்சம் பஸ்மத்தைச் சேர்க்க வேண்டும்.

எந்தப்பிராம்மணன் இடதுகையினால் தன் பாதத்தைத் தொட்டுக்கொண்டு புசிக்கிறானோ அவனும் இரண்டு வகையான இலைகளைச் சேர்த்துத் தைத்த இலையில் எவன் புசிக்கிறானோ
அவனும் இடது கையால் போசந பாத்திரத்தை ஸ்பர்சிக்காமல் எவன் புசிக்கிறானோ அவனும் தங்களுடைய எச்சிலைத் தாங்களே புசிக்கிறவர்களாகிறார்கள்.

பீடத்தில் கால்களை வைத்துக்கொண்டுஉட்கார்ந்தும்,) பாதக்குறட்டின் மேலிருந்தும், படுக்கையிலிருந்தும், நின்று கொண்டும், புசிக்கலாகாது. புசிக்கும் போது நாய் சண்டாளன் முதலியவர்களைப் பார்க்கும்படி நேரிட்டால் அந்த அந்நத்தை விட்டுவிடவேண்டும்.

(ஓ ரிஷிகளே) எந்த அந்நம் நிஷதிக்கப்பட்டதோ அதையும்,அந்நத்திற்குச் சுத்தி எதினாலேயோ அதையும் முன் விருத்த பராசரர் எந்தவிதமாகச் சொல்லியிருக்கிறாரோ அப்படியே உங்களுக்கு நான் சொல்லுகிறேன் (என்கிறார் பராசரர்).இதனால் கல்பங்கள் தோறும் அதிகாரிபுருஷர்களான மனு வஸிஷ்டாதிகள் சிருஷ்டிக்கப்படுவது போலக் கலியுக தர்ம சாஸ்திராதிகாரியாகப் பராசர முனிவரும் அந்தந்தக் கல்பங்களில் சிருஷ்டிக்கப் படுகிறாரென்பதும் அவருடைய வாக்கியம் பிரமாணமா மென்பதும் பெறப்பட்டன.

துரோணம் ஆடகம் என்னும்அளவை மேலே சொல்லப் போகிறார்.ஒரு துரோணம் ஒரு ஆடகம் அளவுள்ள நெல்லின் சம்பந்தமான பக்குவாந்நமானது காக்கை, நாய் இவைகளால் நக்கப்படுதல் முதலிய சேஷ்டைகள் நேரிட்டுத்தூஷிக்கப்பட்டால் இந்த அந்நம் எதினால் சுத்தமாகுமென்று பிராம்மணர்களுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.

காக்கை நாய்இவைகளால் தூஷிக்கப்பட்டதான் கீழே சொன்ன துரோணாநத்தைத் தர்மத்தைஅறிந்த பிராம்மணன் பரித் தியாகம் செய்யக்கடவனல்லன்.

வேதங்கள் வேதாங்கங்கள் இவைகளைக் கற்றுணர்ந்தபெரியோர்களும் தர்மசாஸ்திரத்தைப் பரிபாலநம் செய்கிறவர்களுமான பிராம்மணர்களால் முப்பத்திரண்டுபடி அளவுள்ளது துரோணமென்றும் இரண்டுபடி அளவுள்ளது ஆட மென்றும் நிச்சயிக்கப்பட்டது.

வேதம் ஸ்மிருதி இவைகளை அறிந்தவர்கள் கீழ்ச்சொன்ன துரோண ஆடக அளவையுடைய அந்நம் சுத்தமானதென்று நிச்சயிக்கிறார்கள்

காக்கை நாய் இவைகளால் நக்கப்பட்டதும் கவ்வப்பட்டதும் கழுதையால் முகரப்பட்டதுமான துரோண ஆடக அளவுள்ள அந்நத்தில் ஸ்வல்ப பாகத்தை எடுத்தெறிந்துவிடுவதினால் அதற்குச் சுத்தியுண்டாகும்

துரோணாடகமளவையுடைய அந்நத்தில் எவ்வளவு பாகம் நாய் காக்கைகளால் கவ்வப்பட்டதோ அவ்வளவு பாகத்தையும் அப்போது நாயின் வாய்ச் சொள்ளு நீர் எவ்வளவு அந்த்தில் விழுந்திருக்குமென்று தோன்றுகிறதோ அவ்வளவு அந்நத்தையும் எடுத்தெறிந்துவிட்டு மிகுந்த அந்நத்தை ஸ்வர்ணத்தோடு சம்பந்தப்பட்ட ஜலத்தினால் புரோக்ஷித்துப் பின்பு ஒருதரம் அக்நியில்
சுடவைக்கவேண்டும். இவ்விதமாக ஸ்வர்ண ஐலத்தினாலும் அக்நியினாலும் ஸ்பர்சிக்கப்பட்டதும், பின்பு பிராம்மணர்களுடைய “பவமாக ஸக்தம்” முதலான வேதகோஷத்தினால் சுத்தி செய்யப் பட்டதுமான அந்த அந்நமானது பிராம்மணர்களுடைய அநுமதியினால் அப்பொழுதே புசிக்கத் தக்கதாகும்.

எண்ணெய் முதலிய ரஸம்,பால் முதலானவை ஆகிய இவைகளுக்கு நாய் காக்கை முதலானவைகளால் தோஷம் ஸம்பவித்தால் வஸ்து அல்பமாயிருந்தால் அதைப் பரிகரிப்பதினாலும் அதிகமாயிருந்தால் எண்ணெய் முதலிய ரஸங்களைக் காய்ச்சுவதினாலும் பால் முதலிய கோ ரஸங்களை அக்நி ஜ்வாலையில் காட்டுவதினாலும் அல்லது காய்ச்சுவதினாலும் சுத்தி விதிக்கப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

நான்காவது அத்தியாயம்.

அந்நத்திற்கும் ரஸத்திற்கும் சுத்தியைச் சொன்ன பின்பு கீழ்ச் சொன்ன பிராயச்சித்தம் முதலியவை திரவிய சுத்தி யன்றிச் சிறந்தவைகளாக மாட்டாவாகையால் விருத்த பாரசரார் கூறியபடி திரவிய சுத்தி சொல்லப்படுகிறது.

மரத்தால் செபய்யப்பட்ட ( ஸ்ருக்கு, ஸ்ருவை முதலிய ) பாத்திரங்களுக்கு மல மூத்திரப் பிரதேசங்களின் அதிக சம்பந்தத்தால் துர்க்கந்தமுதலிய அசுத்தி ஸம்பவித்து மண்ஜலங்களால் அலம்பியும் அந்தத் தோஷம் நீங்கா விட்டால் வாசிமுதலிய ஆயுதங்களைக்கொண்டு சீவுகிறதினால் அவைகளுக்குச் சுத்தி உண்டாகிறது.

வெண்கலம் பஸ்மத்தினாலும் தாம்பிரம் புளியினாலும் சுத்தமாகின்றன.-புளியாலும் உப்பாலும் ஈயம், ஸீஸம், தாம்பிரம் இவைகளுக்குச் சுத்தி யுண்டாகுமென்று யாக்கிய வல்கியர் சொன்னார்.

வியபிசாரம் செய்கிற ஸ்திரீ வியபிசாரத்தினால் கர்ப்பம் தரியாதவளாயிருந்தால் அவள் மாஸ ருதுவினால் சுத்தையாகிறாள்.

ஓடிக்கொண்டிருக்கிற நதியானது அகத்த மான வஸ்துக்களின் ஸம்பந்தம் வெள்ளத்தில் காணப்படாத பக்ஷத்தில் வேகத்தினால் சுத்தியை அடையும்.

நடைபாவி கிணறு குளம்இவைகள் தோஷத்தையடைந்தால் அவைகளினின்று நூறு குடம் ஐலத்தை எடுத்து வெளியே கொட்டுவதினாலும் பஞ்சகவியத்தை அவைகளில்சேர்ப்பதினாலும் சுத்தி யுண்டாகிறது.

எட்டுவயதினை யுடையவள் கௌரி, ஒன்பது வயதினை யுடையவள்ரோஹிணி, பத்துவயதினை யுடையவள் கந்நிகை, பத்துவயதிற்கு மேல்பட்ட வயதினையுடைய வள் ரஜஸ்வலை என்னப்படுவார்கள்.

பனிரண்டாவது வயதுவந்தபின் (ருது உண்டாவதற்குமுன்) எவன் தன் கந்நிகையைத் தாநம் செய்யவில்லையோ அவனுடையபிதிர்கள் அந்தப்பெண்ணினுடைய பிரதிமாத ருது
மலத்தைப் புசிக்கிறார்கள்

விவாகம் செய்வதற்கு முன் பெண்ணைத் தன் வீட்டில் ரஜஸ்வலையாகப் பார்த்த அந்தப் பெண்ணினுடைய தாய், தந்தை, மூத்த சகோதரன் இம் மூவரும் நரகத்தை அடைகிறார்கள்-இதனால் ருதுவாவதற்கு முன் கந்நியாதாநம் செய்யாதவன் தன் பிதிர்க்களை நரகத்தில் தள்ளுவது போல் தானும் குடும்பத்துடன் நரகத்தில் விழுகிறானென்பது சொல்லப்பட்டது.

பிதிர் கிருகத்தில் ருதுவான பெண்ணை எவன் மதத்தினால் விவேக மற்றவனாகி விவாகம் செய்கிறானோ அவன் ஸம்பாஷணம் செய்யத் தக்கவனன்று, அந்தப் பிராம்மணன் விருஷளீபதி என்னப் படுவன்-

எந்தப் பிராம்மணன் ருதுவான பெண்ணை விவாகம் செய்து அவளுடன் ஒரு நாள் சங்கமம் செய்கிறானோ அவன் மூன்று வருஷம் பிக்ஷாந்தத்தைப் புசித்தும் நித்தியமும் (காயத்திரியை)
ஜபித்தும் சுத்தனாகிறான்- இங்கு இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டுமென்று சொல்லாமையால் ஸர்வ பிராயச்சித்தமான காயத்திரி ஐபமே சொல்லப்பட்ட தென்று அறிக.

சூரியன் அஸ்தமனமானபின் சண்டாளன் பதிதன் பிரஸவித்த ஸ்திரீ இவர்களையும் பிணத்தையும் தொட்டவனுக்குச் சத்தி எதினால் விதிக்கப்படுகிறது (என்றால்) அக்கிநி,பொன், சுக் கிலபக்ஷத்தில் சந்திரன் அல்லது சந்திரனிருக்கும் மார்க்கம் இவை களில் எதாவதொன்றைப் பார்த்துப் பிராம்மணர்களின் அநுமதி பெற்று ஸ்நாநம் செய்வதினால் அவனுக்குச் சுத்தி யுண்டாகிறது.

ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரி அப்படிப்பட்ட பிராம்மணஸ்திரீயைத் தொட்டால் அவள்தொட்டதுமுதல் ஸ்நாங்காலம்வரையில் ஆகாரமில்லாமலிருந்து திரிராத்திர கிருச்சிரத்தைச்
செய்வதால் சுத்தையாகிறாள். இந்தவிஷயம் தொட்டவளுக்கும் தொடப்பட்டவளுக்கும் சரியானதே. ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மண ஸ்திரி அப்படிப்பட்ட க்ஷத்திரியஸ்திரீயை ஸ்பர்சித்தால் பிராம்மண ஸ்திரீ பிராஜாபத்திய கிருச்சிரத்தில் பாதியும், க்ஷத்திரியஸ்திரி அதில் பாதியும், அதாவது கால்வாசியும் செய்யக்கடவர்கள். ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரீ அப்படிப்பட்ட வைசியஸ்திரீயை ஸ்பர்சித்தால் அவள் பிராஜாபத்திய கிருச்சிரத்தைக் கால்பாகத்திற்குக் குறைந்ததாகவும், வைசியஸ்திரீ கால்பாகமும்,செய்யக்கடவர்கள். ரஜஸ்வலையாயிருக்கிற பிராம்மணஸ்திரீ அப்படிப்பட்ட சூத்திரஸ்திரீயை ஸ்பர்சித்தால் பிராம்மணஸ்திரீ பிராஜாபத்தியகிருச்
சிரத்தாலும் சூத்திரஸ்திரீதானத்தினாலும் சுத்தைகளாகிறார்கள்.-

ரஜஸ்வலையானஸ்திரீ நாலாவது நாளில் ஸ்நாநம்செய்வதினால் சுத்தையா கிறாள். அன்றைய திநத்தில் ரஜஸ் ஒழிந்திருந்தால் அவள் தைவகர்மத்தையும் பிதிர்கர்மத்தையும் செய்யத்தக்கவள்.

ஸ்திரீகளுக்கு ரோகத்தினால் தினந்தோறும் யாதொரு ரஜஸானது உண்டாகிறதோ, அந்த ரஜஸானது அகாலத்தில்உண்டானதாகையால் அதனால் அந்தஸ்திரீ அசுத்தையாகாள்.

ஸ்திரீக்கு எவ்வளவுகாலம் ரோகத்தினால் ரஜஸானது ஒழியாமலிருக்கின்றதோ அவ்வளவு காலம் அந்தஸ்திரீ தைவகர்மத்திற்கும் பிதிர்கர்மத்திற்கும் செய்யத்தக்க சமைத்தல்முதலிய நல்ல
காரியத்தைச் செய்யத் தக்கவளன்று. அந்த ர ஸானது ஒழிந்துவளவில் புருஷனால் அடையத்தக்கவளாகவும் கீழ்ச்சொன்ன சமைத்தல் முதலிய கிரு கிருதியங்களைச் செய்யத் தக்கவளாகவும் ஆகிறாள்.

ரஜஸ்வலையானவள் முதல்நாளில் சண்டாள ஸ்திரியாகவும் இரண்டாவது நாளில் பிர்ம்மஹத்தி செய்தவளாகவும் மூன்றாவதுநாளில் வண்ணார ஸ்திரீயாகவும் சொல்லப்படுகிறாள். நான்காவது திநத்தில் சுத்தையாகிறாள்

ஆதுரனென்றால் ஜ்வரம் முதலிய வியாதியால் பீடிக்கப்படுகிறவன். அவனுக்கு ரஜஸ்வலை முதலியவர்களுடைய ஸ்பர்சம் பந்துமரணம் இவைமுதலிய நிமித்தங்களால் ஸ்நாநம் செய்ய
நேரிட்டால் நோயில்லாத மற்றொருவன் ஆதுரனைத்தொட்டுத்தொட்டுப் பத்துதரம் ஸ்நாநம் செய்தால் ஆதுரன் சுத்தானாகிறான் –

உச்சிஷ்டனான பிராம்மணன்உச்சிஷ்டனான மற் றொரு பிராம்மணனால் தொடப்பட்டாலும் அல்லது நாயால் அல்லது சூத்திரனால் தொடப்பட்டாலும் ஓரிரவு மாத்திரம் உபவாஸமி ருந்து பஞ்சக வியத்தினால் சுத்தனாகிறான்.

உச்சிஷ்டனல்லாத சூத்திரனோடு பிராம்மணனுக்கு ஸ்பர்சம் நேரிட்டால் ஸ்நாநம் விதிக்கப்படுகிறது. உச்சிஷ்டனான சூத்திரனால் தொடப்பட்ட பிராம்மணன் பிராஜாபத்திய கிருச்சிரத்தைச் செய்யக்கடவன்

மத்தியத்தினால் நன்றாகப் பூசப்படாத வெண்கலபாத்திரமானது பஸ்மத்தினாலும் மத்தியத்தினால் நன்றாகப் பூசப்பட்ட வெண்கல பாத்திரமானது நெருப்பில் காய்ச்சுவதினாலும் ஆ த்தினால்
மேல்பாகத்தில் சீவுவதனாலும் சுத்தியையடைகின்றன.
மலமூத்திரங்களின் ஸம்பந்தத்திலும் இந்தச் சுத்தியேசெய்ய வேண்டுமென்றும் மாம்சத்தினால்தோஷத்தையடைந்தால் நெருப்பில் காய்ச்சுவதினால் சுத்தியென்றும் வேறுஸ்மிருதியில் சொல்லப்பட்டது.

பசுவினால் முகரப்பட்டதும் நாய் காக்கைகளால்தூஷிக்கப்பட்டதும்சூத்திரனுடைய எச்சில் அல்லது சூத்திரன் புசித்தசேஷம் இவைகளையுடையதுமான வெண்கலப்பாத்திரங்கள் பஸ்மத்தினால் பத்து தரம் அலம்பச் சுத்தங்களாகின்றன.

வெண்கலப் பாத்திரத்தினால் வாய் கொப்புளித்தலையும் கால்அலம்புவதையும் செய்தவன் அதை ஆறுமாஸம் பூமியில் புதைத்து வைத்துப் பின்பு எடுத்து உபயோகித்துக் கொள்ளக்கடவன்.

இரும்பினால் செய்த பாத்திரங்கள் தோஷத்தையடைந்தால் அவைகளை மற்றொரு இரும்பினால் ராவுவதினாலும் ஈய பாத்திரத்தை உருக்குவதினாலும் சுத்தி உண்டாகிறது.

யானையின் தந்தத்தி னால் செய்யப்பட்டபாத்திரம் யானையின் எலும்பினால் செய்யப்பட்ட கரண்டம்முதலியவை, எருமைக்கொம்பினால் செய்யப்பட்டகரண்டம், வெள்ளி பொன் இவைகளால் செய்யப்பட்ட பாத்திரம், ரத்திநங்களால் செய்யப்பட்ட பாத்திரம், சங்கம் ஆகிய இவைகளுக்கு அலம்புவதினாலும் கல்பாத்திரத்திற்கு அலம்புவதோடு மற்றொரு கல்லில் உரைத்தலாலும் சுத்தியுண்டாகிறதென்று சொல்லப்பட் டது.

மண் பாத்திரங்களுக்கு எச்சில் முதலிய தோஷம் சம்பவித்தால் நெருப்பில் கொளுத்துவத்தினாலும் தாநியத்திற்குப் புரோக்ஷணத்தினாலும் சத்தி உண்டாகிறது.

மூங்கில்,மூங்கிற்பாய், மூங்கில் விசிறிமுதலிய மூங்கிலால் செய்யப்பட்ட வஸ்துக்களுக்கும் காட்டில் வசிப்பவர்கள் தரிக்கிற மரவுரி, வெண்பட்டு,பருத்தி இவைகள்சம்பந்தமான வஸ்திரம் இவைகளுக்கும் கம்பளம் வன வாசிகள் தரிக்கின்ற பூர் மரப்பட்டை இவைகளுக்கும் புரோக்ஷணத்தினால் சுத்தி உண்டாகிறது.

முஞ்சிப்புல்லினால் செய்யப்பட்ட ஆஸநம் முதலியவைகள், முறங்கள், சணல்பிரியினாற் செய்த கோணி முதலியவைகள், மாம்பழம் முதலியவைகள், மான் தோல் முதலியவைகள், புல்,விறகு, கயிறு ஆகிய இவைகளுக்குப் புரோக்ஷிப்பதே சுத்தியாக நிச்சயிக்கப்பட்டது.

இலவம்பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தை,திண்டு, ஆஸநம், தலையணை, குஸ்-ம்பாசாயமேற்றின வஸ்திரம் முதலியவைகள் வெயிலில் உலர்த்துவதினாலும் புரோக்ஷணத்தினாலும் பரிசுத்தங்களாகும்.

பூனை,ஈ, பூச்சி, விளக்கு விட்டில்பூச்சி, புழு, தவளை இவைகள் பரிசுத்தமாயும் அபரிசுத்தமாயுமுள்ள வஸ்துக்களை ஸ்பர்சிப்பவைகளா யிருந்தபோதிலும் அவைகள் அசுத்தங்களன்றென்று மநு சொன்னார்.

கால்களை அலம்பும் போதும் ஆசமநம் செய்யும் போதும் பூமியில் விழுந்து பிந்துவாகத் தன்மேல்பட்ட ஜலமும் ஒருவர்க்கொருவர் ஸம்பாஷணம் செய்யும்போது முகத்தில் நின்று தேகத்தில் பிந்துவாக விழுந்த ஜலமும் போஜநம் செய்து கையை அலம்புகையில் விடாமலிருக்கிற நெய் எண்ணெய் இவைகளின்சிக்கும் எச்சிலல்லவென்று மநு சொன்னார் .

தாம்பூலம்,கரும்பு, பழம், புசித்தகையிலுள்ள நெய்ச்சிக்கு, மதுபர்க்கம், ஸோமம் இவைகளுக்குத் தர்மமாக எச்சில்தோஷமில்லை என்றறிகிறார்கள்.புசித்தகையிலுள்ள நெய் சிக்குக்கு எச்சில் தோஷமில்லாதது போல் தாம்பூலாதிகளை வாயில்வைப்பது விவாகத்தில் மதுபர்க்கபாநம்செய்வது யாகத்தில் ஸோமபாநம் செய்வது இவைகளுக்கும் எச்சில்தோஷமில்லை யென்று அறிக.

தெருவில் போகின்ற சேற்றுத்தண்ணீரும், ஓடங்களும், வழியும், புல்லும்,சுட்ட செங்கல் கட்டடங்களானமரத்தடியிலுள்ள மேடை முதலியவைகளும்,சண்டாளாதிகளால் தொடப்பட்டால் காற்றினாலும் சூரியனாலும் அவைகள் சுத்தியை அடைகின்றன.

கமண்டலம்முதலிய தீர்த்தபாத்திரங்களினின்று வாய்வரைக்கும் விடாமல் ஒரேதாரையாகவிழுகிற ஜலங்களும், பலஇடங்களினின்று காற்றினால் கிளப்பப்பட்ட தூளிகளும் சுத்தமானவைகளே. புருஷனைப்போல் பிராதஸ்நாநம்முதலியவைகளை அநுஷ்டிக்காதவர்களேயாகிலும் ஸ்திரீகளும், கிழவர்களும், பாலர்களும் ஒருகாலத்திலும் அசுத்தர்களாகமாட்டார்கள்-

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.


ஐந்தாவது அத்தியாயம்.

கட்டுவதற்கு யோக்கியங்களான கயி களில் கட்டப்பட்ட பசுக்களுக்கு (இங்குமங்கும் சஞ்சரிக்கையில் கழுத்தில் உச்சுருக்கு நேரிட்டு) அறியாமல் மரணம் ஸம்பவித்தால் அறியாமல் செய்தகோவதரூபமான அந்தப் பாபத்திற்குப் பிராயச்சித்தம் எவ் விதமாகும் ?

பாப த்தைச்செய்தவன் வேதங்களையும் வேதாங்கங்களையும் அறிந்தவர்களும் தர்மசாஸ்திரத்தைக் கற்றுணர்ந்தவர்களும் தம் வர்ணாச்சிரமதர்மங்களை அன்புடன் அநுஷ்டிப்பவர்களுமான பிராம்மணர்களுக்குத் தன்பாபத்தை அறிவிக்கக்கட்டவன்

பிராஜாபத்தியம் ஸெளம்மியம் முதலிய விரதங்களை அனுஷ்டிக்காதவர்களும் வேதத்தை ஓதாதவர்களுமாகிப் பிராம்மண ஜாதியில் பிறந்ததை மாத்திரம் சொல்லிக் கொண்டு
பிழைக்கிறவர்கள் ஆயிரம் பேர்களாகச் சேர்ந்தாலும் அவர்களுக்குப் பரிஷத்தன்மை கிடையாது.

புத்திக்குறைவினால் கு மநியாயங்களில்மூடர்களும், தம்மைப் பண்டிதரென்று நினைத்துக் கொண்டவர்களும், இன்னபாகத்திற்கு இவ்விதமான பிராயச்சித்தமென்று அறியாதவர்களுமான
புருஷர்கள் எந்தப்பாபத்திற்குப் பிராயச்சித்தத்தை வேறாகச்சொல்லுகிறார்களேர் அந்தப்பாபமானது நூறுபங்கு அதிகமாகி அந்தப்பிராயச்சித்தம் சொன்ன மூடர்களையே அடைகிறது.

தர்மசாஸ்திரங்களைப் படியாமல் பெரியோர்களிடத்தில் பிராயச்சித்த விதிகளைப் பார்த்து அறிந்துகொண்டுஎவன் பிராயச்சித்தத்தை விதிக்கிறானோ அந்தப் பிராயச்சித்தம் பெரியோர்கள்
டத்தில் அறிந்து சொன்னதாகையால் அதைச்செய்துகொண்டவன் சுத்தனாகிறான், ஆனால் அதை விதித்தவன் பாபத்தை அடைகிறான்.

வேதம் முதலிய சாஸ்திரங்களைக் கரைகண்ட நான்கு அல்லது மூன்று பிராம்மணர்கள் சேர்ந்து எதைச் சொல்லுகிறார்கள்ளோ அது தர்மமென்று அறியத்தக்கது. அப்படியல்லாத மூடர்கள் ஆயிரம்பேர் கூடிச் சொன்னாலும் அது தர்மமாகாது.

பிரமாணமார்க்கமென்று சொல்லப்படுகிற தர்மசாஸ்திரத்தின் முக்கியமான கருத்தை நியாயங்களைக் கொண்டு நிச்சயித் துத் தர்மத்தைச்சொல்லுகிறவர்கள் சாஸ்திரங்களை அடிக்கடிப்பார்த்து ஒருவர்க்கொருவர் விசாரித்து மனதில் சலிக்காதவர்களாகி நிதாநத்துடன் நிச்சயித்ததும் வேறுபாட்டை அடையாததுமான ஸத்தானதர்மத்தை யுபதேசிக்கிறார்களாகையால் அவர்கள் விஷயத்தில்
பாபம் பயப்படுகிறது (நாசத்தைஅடையத்தக்கதாகிறது).

கல்லில் தேங்கிய ஜலமானது காற்றினாலும் சூரியனாலும் வற்றிப்போகிறதுபோல பரிஷத்
தானது சாஸ்திரவிதிப்படி பிராயச்சித்தத்தை யுபதேசிப்பதினால் பாபிஷ்டனுடைய பாபத்தை நசிக்கச்செய்கிறது. பிராயச்சித்தம் செய்துகொண்டபின்பு அந்தப்பாபமானது பாபம் செய்தவனைப் பற்றுகிறதில்லை. பரிஷத்தையும் அடைகிறதில்லை.வாயு, சூரியன், அக்நி இவர்களின் சம்பந்தத்தினால் ஜலம் தானே நசித்துப்போவதுபோல் பாபம் நசித்துப்போகிறது

வேதமோதிச் சிறந்தவர்கள்ளும் அக்நிஹோத்திரம் செய்தவர்களுமாகிய பிராம்மணர்களில் மிகுந்த சமர்த்துடையவர்களான நால்வர் முக்கியபரிஷத்தென்றும்,அப்படிக் கிடையாவிட்டால் முன்றுபேர்குறைந்த பக்ஷமான பரிஷத் தென்றும் சொல்லப்படுகிறார்கள். அக்கிஹோத்திரம் செய்யாதவர்களும் வேதவேதாங்கங்களைக் கரைகண்டவர்களும் தர்ம சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தவர்களுமான பிராம்மணர்களில் ஐந்துபேர் முக்கிய பக்ஷமான பரிஷத்தென்றும் மூன்றுபேர் குறைந்தபக்ஷமான பரி ஷத்தென்றும் சொல்லப்படுகிறார்கள். பிரமவித்தையை யோதின வர்களும் யக்கியசீலர்களும் பரமாத்துமாவைத் தியானிப்பவர்களும் வேதவிரதங்களை அநுஷ்டித்து ஸ்நாதகர்களுமான பிராம்மணர்களில் ஒருவன்மாத்திரமே பரிஷத்தாகச்சொல்லப்படுவான். அக்நி ஹோத்திரம்செய்தவர்களில் இரண்டுபக்ஷமும், அதைச்செய்யாதவர்களில் இரண்டுபக்ஷமும், ஆத்துமஞாநமுள்ளவர்களில் ஒருபக்ஷமுமென்று ஐந்துபக்ஷங்கள் என்னால்சொல்லப்பட்டன. அந்தப்பபக்ஷங்களுடைய அஸம்பவத்தில் (கிடையாத பக்ஷத்தில்) ஆயுதமுதலியவைகளால் பிழைக்காமல் தமக்குரியஜீவனோபாயங்களால் மூவர் பரிஷத்தென்று சொல்லப்படுவார்கள்.

கீழ்ச்சொன்ன பிராம்மணர்களன்றிப் பிராம்மணரென்கிற பேரைமாத்திரம் தரிக்கின்றவர்கள் ஆயிரம்மடங்கு அதிகமாகக் கூடினாலும் அவர்களிடத் தில் பரிஷத்தன்மைஉண்டாகாது.

வேதாத்தியயனம் செய்யாத பிராம்மணன் கட்டை யினால் செய்யப்பட்ட யானைபோலவும் தோலால் செய்யப்பட்ட மான்போலவுமாகிப் பிராம்மணனென்னும் பேரைமாத்திரம் தரிப்பவனாகிறான்.

மந்திரமறியாத (வேதமோதாத பிராம்மணனைப் பிராம்மணனென்றுசொல்லுவது ஐந சூந்யமான விடத்தைக் கிராமமென்றும் ஜலமில்லாத பள்ளத்தைக் கிணறென்றும் சாஸ்திர விதிப்படி சுத்தி செய்யப்படாமையால் அக்த்தன்மையையடையாத அக்நியாயாபாஸத்தில் ஹோமம் செய்யப்பட்டதை ஆஹுதிஎன்றும் சொல்வதுபோலாகும்.

ஸ்திரீகள் விஷயத்தில் ஆண் தன்மை யுடைய புருஷன் கிடையாத பக்ஷத்தில் புருஷாபாஸனான நபும்ஸகன் எப்படிப் புத்திரனை ஜநிப்பிப்பதாகிய பிரயோஜநத்தைத் தர மாட்டானோ, முக்கியமான நிலங்கிடையாத பக்ஷத்தில் களர்பூமியானது எப்படி விளைவாகிய பலனைத் தர மாட்டாதோ, ஞாநமில்லாத மூடன் விஷயத்தில் செய்த தாநம் எப்படித் தாந பலனைத் தரமாட்டாதோ, அப்படி ருக்குவேதம் முதலிய வேதங்களை ஓதாத பிராம்மணன் பிராயச்சித் தோபதேசத்தினால் பாப நிவிர்த்தியாகிய பலனைத் தரத் தக்கவனாக மாட்டான்.

சித்திர வேலையானது அநேகமாயுள்ள அங்கங்களால் அதாவது பலவிதவர்ணங்களை அந்தந்த இடங்களுக்குத்தக்கபடி கொடுக்கிறதினால் எப்படி மெள்ளமெள்ளப் பிரகாசத்தை அடைகிற தோ அப்படிப் பிராம்மணத் தன்மையும் உபநயநம்முதலிய மந்திர ஸம்ஸ்காரங்களால் பிரகாசத்தை (உத்கர்ஷத்தை) அடைகிறது.-இதனால் நாமதாரகப்பிராம்மணனுக்கும் ஸம்ஸ்காரங்கள் ஏற்றவைகளென்பது சொல்லப்பட்டது.

உபநய நம்முதவிய ஸம்ஸ்காரங்களைச் செய்துகொண்டவனான ஒரு உத்தமபிராம்மணனோடு கூடினவர்களாய் நாமதாரகப் பிராம்மணரென்னும் பேரைமாத்திரமுடைய எந்தப்பிராம்மணர்கள் பிராயச்சித்தத்தை விதிக்கிறார்களோ, பாபகிருத்தியத்தைச்செய்ப வர்களான அந்தப்பிராம்மணர்கள் நரகத்தை அடைகிறார்கள்

எந்தப்பிராம்மணர்கள் வேதாத்தியயநம்செய்து பஞ்சமஹாயக்கியங்களை அநுஷ்டிக்கிறார்களோ அவர்கள் ஐந்துவிதமான கர்மேந்திரியங்களுக்குப் பிரீதியைச்செய்பவர்களானகிருகஸ்தர்களாயிருந்த
போதிலும் மூன்றுலோகத்தையும்கரையேற்றுகிார்கள் பாபத்தினின்றும் ரக்ஷிக்கிறார்கள்

மயாநங்களில் சவங்களைக் கொளுத்துவதில் உபயோகப்பட்டிருக்கிற அக்கியானவன் சகலத்தையும்ப
க்ஷிப்பவனாயிருந்தபோதிலும்எப்படித் தெய்வத்தன்மையை விடாதவனாகவே பிரகாசிக்கிறாம்னோ அப்படி வேதங்களை ஓதி யுணர்ந்த பிரா) ம்மணன் சகலத்தையும் பக்ஷிப்பவனாயிருந்தபோதிலும் அதாவது-பராந்நம்முதலியவைகளைப் புசித்தாலும் அவன் பூமிதேவனேயாகிறான்.

சகலவித அசுத்தவஸ்துக்களும் எப்படி ஜலத்தில் போடப்படுகின்றனவோ அப்படியே சகலவிதபாதகமும் வேதமோதின பிராம்மணோத்தமனிடத்தில் போடப்படவேண்டும்.

காயத்ரி மந்திரமில்லாதவன் அதாவது ஆலஸ்யத்தினால் காயத்ரியை நித்தியமும் ஐபிக்காதவன் சூத்திரனைக்காட்டி லும் அசுத்தனாவான். காயத்திரி த்துவமான அங்கநியாஸம் தியாநம்
முதலியவைகளையும், பிரமதத்துவமான வைதிக்கர்மங்களை அநுஷ்டிப்பதையும் கிரமமாக அறிந்த பிராம்மணர்கள் ஜநங்களால்பூஜிக்கப்படுகிறார்கள்

இந்திரியபரவசனாகிக்கெட்டநடத்தையோடுகூடியிருந்தபோதிலும் பிராம்மணன் பூஜிக்கத்தக்கவ
னாகிறான். இந்திரியங்களை ஜயித்துச்சாஸ்திரமுறை தவறாதவனாயிருந்தபோதிலும் சூத்திரன் பூஜிக்கத்தகாதவனாகிறான், அதற்குத்திருஷ்டாந்தம்.உதைப்பது முதலிய சேஷ்டைகளால் துஷ்டையான பசுவைவிட்டுப் பாலுள்ளதென்று பெண்கழுதையை எவன்கறப்பன்?

பிராம்மணர்கள் (இந்திரிய யத்தைப் பெறாதவர்களாகிலும் ) தர்மசாஸ்திரமென்னும் ரதத்தில் ஏறினவர்களும் வேதங்களென்னும் கத்தியை கையிலேந்தினவர்களுமாகி விளையாட்டுக்காக வாகிலும் யாதொன்றைச் சொல்லுகிறார்களோ அதுவே உத்தம தர்மமாகும்.

நான்குவேதங்களையும் அங்கங்களின்றி முழுதும் ஓதினவன் சாதுர் வைத்தியனென்றும், தர்மம்,பரிஷத்து,பிராயச் சித்தத்தின் கிரமம் இவைகளை அறிந்தவன் விகல்பியென் றும்,சிக்ஷை, வியாகரணம், சந்த நிருக்தம், ஜோதிஷம், கல்பம் என் னும் ஆறு அங்கங்களையும் அறிந்தவன் அங்கவித் என்றும், வேதங்களை முழுது மோதி வேதவிரதங்களையும் அநுஷ்டித்து ஸ்நாதகனா
கி நல்லகுலம் ஆசாரம் இவைகளோடுகூடித் தர்மசாஸ்திரங்களை வெ குவாய்ப்படித்தவன் தர்மபாடகனென்றும், சொல்லப்பட்டுக் கார்ஹஸ்தியம் முதலிய மூன்றாச்சிரமங்களில் ஒன்றி விருப்பவர்களான இவர்கள் முக்யராவார்கள். கீழ்ச்சொன்ன குணங்களோடு கூடின பத்துபேரைத் தாழ்ந்தகணக்காக வுடையது பரிஷத்தென்று சொல்லப்படும்.

ஆறாவது அத்தியாயம்-விலங்குகளைக் கொன்றதற்கான பிராயச்சித்தம்:-75 வசனங்களைக் கொண்டுள்ளது. இது பிராணி ஹத்யாவிற்கான பிராயச்சித்தங்களைப் பற்றி விளக்குகிறது

ஏழாம் அத்தியாயம்–பொருட்களின் தூய்மையாக்கல்:–4 வசனங்கள் உள்ளன. அது, மரம் மற்றும் உலோகத்தால் ஆன பாத்திரங்கள் போன்ற பல்வேறு பொருட்களைத் தூய்மைப்படுத்துவது பற்றியும், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் பற்றியும் விளக்குகிறது .

எட்டாவது அத்தியாயம்–தர்மத்தைப் பின்பற்றுவதற்கான விளக்கம்:50 வசனங்களைக் கொண்டுள்ளது. விருப்பமின்றி பசுக்கள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கான பரிகாரங்களையும், பிராமணர்களின் பரிஷத்தை அமைப்பதையும் இது விவரிக்கிறது .

ஒன்பதாவது அத்தியாயம்–பசுக்களுக்கான சேவை:-60 வசனங்கள் உள்ளன. அது ஒருவரின் பசுக்களை முறையாகப் பராமரிப்பதைப் பற்றியது

அத்தியாயம் 10-ல் 43 சுலோகங்கள் உள்ளன. அது சந்திராயணம் மற்றும் சாந்தபானம் போன்ற சில பரிகாரங்களைப் பற்றி விளக்குகிறது-

அத்தியாயம் 11-ல் 55 வசனங்கள் உள்ளன. அது, உணவு உண்பது தொடர்பான விதிகளை மீறுவதற்கும், விலங்குகளால் அசுத்தமான கிணறுகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் செய்யப்படும் பரிகாரங்களைப் பற்றியது.

அத்தியாயம் 12-ல் 77 வசனங்கள் உள்ளன. அது பின்வருவனவற்றைப் பற்றி விவாதிக்கிறது:பல்வேறு வகையான குளியல்-தூய்மைப்படுத்தும் குளியல்-பிராமணரைக் கொலை செய்தல், மது அருந்துதல், தங்கம் திருடுதல் போன்ற மரணப் பாவங்களுக்கான பரிகாரங்கள்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸாரமும்‌- ஸ்ரீ பாத்ம புராண கீதா கதைகளும்‌–

May 24, 2026

ஸ்ரீ கண்ண்ன் கறந்த ஆவின் பால்‌ பாரதத்தில்‌ உளது. வேத உபநிஷதங்களே பசுக்கள்‌. நந்த கோப குமாரனான பரமாத்மாவே பாலைக் கறந்தவர்‌. பார்ததனே கன்று, சித்தி சத்தியள்ள மஹான்௧ளே அதை அருந்துபவர்கள்‌-இதையே பெரியோரருந்தும்‌ பால்‌. என்னே அதன்‌ மஹிமை-பாத்ம புராணத்தில்‌ ஸ்ரீ கீதா மாகாத்ம்யம்‌ வெகு அருமையாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாத்ம புராணம்‌ உத்தர கண்டம்‌ நூற்று எழுபத்‌தோறாம்‌ அத்யாயம்‌ முதல்‌ பதினெட்டு அத்யாயங்களால்‌ஓர்‌ ௮த்யாயத்திற்கு ஓர்‌ கதையாக ஸ்ரீ கீதையின்‌ பெருமை வர்‌ணிக்கப்படுகின்றன -இதைக்‌ கேட்பவள்‌ உமையவள்‌. கூறுபவர்‌ பரம சிவனாம்‌.

பாற்கடலில்‌ பன்னசு சயநத்தில்‌ பள்ளி கொண்டிருக்கும்‌ பரந்தாமனை, லஷ்மி பிராட்டியார்‌ “ஐயனே?
உலக இன்பத்தை விட்டு ஸதா தாங்கள்‌ உறங்குவது ஏன் -என்று வினவினாள்‌. தேவி. யான்‌ நித்ரை கொள்ள வில்லை.-ஸகல உபகிஷத்துகளையும்‌ கடைந்தெடுத்த அமிருதத்தை அருந்தி அந்த ஆனந்தத்தில்‌ அமிழ்ந்திருந்தல் பிறர்க்கு உறக்கம் போல்‌ தோன்றுகிறது என்றார்‌ புண்டரீகாக்ஷன்‌–விரூபாஷனும்‌ இதையின்‌ முதல்‌ ஐந்து அதியாயங்கள்‌ எனது ஸத்யோஜாதம்‌ முதலிய ஐந்து முகங்கள்‌–அடுத்த பத்து அத்யாயங்கள்‌ எனது கரங்கள்‌-பதினாறாம் அத்யாயம்‌ என்‌ உதரம்‌. பதினேழாவது பதினெட்டாவது அத்யாயங்கள்‌ இரு கால்கள்‌”” என்றுரைத்தார்‌.

பஜகோவிந்தமெனும்‌ நாலில்‌ ஸ்ரீ சங்கரர்‌ *பகவத் கீதா கிஞ்சிததீதா?’?” கீதையைச்‌ சிறிதாவது கற்றாயா ? ஆனால்‌ எமன்‌ உன்னிடம்‌ அஞ்சுவான்‌ என்‌கிறார்-

கீதா கங்கா ச காயத்ரீ கோலிந்தேதி ஹ்ருதிஸ்திதே i சதுர்‌ ககார ஸம்‌ யுக்‌தே புநர் ஜன்ம ந வித்யதே [| -கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன்‌ என்ற நான்கு ககாரங்கள்‌ உள்ளத்தில்‌ உள்ளோருக்கு மறு பிறப்பில்லை என வேத வ்யாஸர்‌ கூறுகிறார்‌.

ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் ந்ரூப
–என்று பாத்ம புராண வசனமுண்டிறே.  ஓ அரசனே விஷ்ணு ஆராதனத்திற் காட்டிலும் விஷ்ணு பக்த ஆராதனமே மேலானது

ஸ்ரீ கீதை மாஹா பாரதத்தில்‌ அமைந்துள்ளது, அது பதினெட்டு பர்வதங்களாக ௮மைக்கப்பட்டிருக்கிறது , பாரதப்‌ போரும்‌ பதினெட்டு நாட்களில்‌ நடந்தன, அதில்‌ மாண்‌ட.து பதினெட்டு ௮ஷோஹிணி — 1- க முதல்‌ 10, ட முசல்‌ 10, ப முதல்‌ 5, ய முதல்‌ 10,எழுத்துக்கள்‌, ஐ என்பது கவிலிருந்து 8வது, அதை முன்னே
வைத்து ய என்ற ஒன்றைப்‌ பின்னால்‌ சேர்த்தால்‌ 18 என்றாகும்‌-கடபயாது எழுத்துக்‌ கணக்கில்‌ பாரதத்திற்கு பதினெட்டு என்று பொருளைத்தரும்‌ – ஜய”என்ற பெயரை பதினெண்‌ புராணமெழுதிய வியாஸாசாரியர்‌ ஓர்‌ காரணம்‌ பற்றியே வைத்துள்ளார்‌-பாரதத்தில்‌ கூறப்‌படுவதெல்லாம்‌ தர்மமே, தர்மமுள்ளவிடத்‌தில்‌ ஜயம்‌ உண்டு என்பதையும்‌ ஜய என்ற சொல்‌ காண்பிக்கின்றது -ஓர்‌ முறை கீதையில்‌ ஸ்நானம்‌ செய்‌தால்‌ ஸம்ஸார மலம்‌ அகலும்‌, என வராஹ புராணம்‌ கூறுகிறது -கீதா கீதா என்று ஓயாமல் கூறி வந்தால்‌ த்யாகீ த்யாகீ என்‌ற சொல்‌ தோன்றும்‌-

https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-22063-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81

ஸூசர்மா என்று ஒரு அந்தணன் இருந்தான் -அவன் மஹா பாபி,-பிராமணருக்குமிய ஓர்‌ வைதிக கர்மாவையும்‌ செய்தறியான்‌, கலப்பை கொண்டு பூமியை உழுவான்‌. மது பாநமும்‌ மாம்ஸாஹாரமும்‌ அவனுக்கு மிகப் ப்ரியமானவை-ஒரு நாள்‌ அரவம் தீண்ட ௮வன்‌ இறந்தான்‌, பின்னர்‌ தன்‌
பாபத்திற்‌ கேற்ற நரகங்களை ௮னுபவித்‌து பின்பு அவனியில்‌ ஒரு காளையாகப்‌ பிறந்தான்‌, அதை ஓர்‌ நொண்டி, விலைக்கு வாங்கி அதன்‌ மீறி தனது வேலைகளைக்‌ கவனித்‌து வந்தான் -இங்கனம்‌ ஏழெட்டாண்டுகள்‌ சென்ற பின்‌ ஒரு நாள்‌ ௮வசரமான வேலையின் பொருட்டு நொண்டி மிக கடும்‌ வெய்யிலில்‌ இக் காளையைத்‌ துறத்ததி ஒட்டினான்‌. உணவும்‌ ஜலமமின்றி சுடும்‌ வெய்யிலில்‌ ஓடிய களைப்பால்‌ காளை கீழ விழுந்தது – கண்கள்‌ சுழளமிட பெரு மூச்சு வாங்க வாயில்‌ நுறை தள்ள அது சாகாமலும்‌ பிழைத்தெழுந்திருக்க முடியாமலும்‌ ஸஹிக்க முடியாத துன்பத்தை அனுபவித்ததே தவிர மரிக்கவுமில்லை.-பிழைக்கவுமில்லை, தனது புண்ய.மின்னதென்றறியாக தாஸி ஒருவள்‌ மற்றவரைப்போல்‌ விளையாட்டாக தன்‌ புண்யத்தை அளித்தாள்‌. காளை கஷ்டமின்றி உயிரை விட்டது, யமன்‌ இவளது புண்யத்தை மதித்து மரியாதையுடன்‌ வரவேற்று யாதொரு நரகத்தையும்‌ கண்ணில்‌ காட்டாமல்‌ அவனியில்‌ ஒர்‌ ௮ந்தண குலத்‌தில் பிறக்கச் செய்தார்‌, ஆங்கு அவருக்குத்‌ தக்க வயது வந்தவுடன்‌ முற்‌ பிறவியின்‌ ஞாபகம் வந்தது உடனே தனக்கு உபகாரம்‌ செய்த வேசியின்‌ விட்டுக்குச்‌ சென்று நீ செய்த புண்யம்‌ யாதென வினவினார்‌–அவள்‌ நான்‌ யாதொன்றையுமறியேன்‌, என கிளி ஏதோ ஒன்றைக்‌ கூறும்‌, அது என்‌ மனதை இழுக்கும்‌, அதை அன்புடன்‌ கேட்பது தவிர யானொரு ஸுஹ்ருதமுமறியேன்‌ என்றாள்‌, ஸுசர்மா அக்நியிடஞ்‌ சென்று நீயார்‌? நீ கூறுவது யாது? அதை எங்கு கற்றாய்‌ ? என வினவினார்‌-யான்‌ முற்‌ பிறவியில்‌ ஓர்‌ மஹா வித்வான்‌, கல்லிக்கேற்ற ஒழுக்கமின்றி வித்வான்‌௧ளிடம்‌ பொறாமை கொண்டு அவர்‌கள்‌ குணத்தையும்‌ தோஷமாகக்‌ கூறி வந்தேன்‌. காலகதி அடைந்த பின்‌ பாபத்திற்கேற்ற நரகங்களை யனுபவித்து கிளியாகப்‌ பிறந்தேன்‌. அங்கும்‌ பெற்றோரை யிழந்து வெய்யிலில்‌ வாடி உணவின்றி தவித்தேன்‌, கருணை நிறைந்த முனிவர்கள்‌ என்னை எடுத்து வளர்த்தனர்‌, ஆங்கு முநி குமரார்‌ கூறும்‌ கீதை முதலத்யாயத்தைக்‌ கேட்டுக் கேட்டு யானுமதைக்‌ கூறி வந்தேன்‌, ஓர்‌ வேடன்‌ என்னைப்‌ பிடித்து இவளிடம்‌ விற்று விட்டான்‌. இங்கு யான்‌ கூறி வந்த இம்‌ முதலத்யாய ஸ்ரவண பலத்தால்‌ நீ காளைப்‌ பிறவியை விட்டு உத்தமப்‌ பிராமணனாய்‌. நானும்‌ இவ்‌
வேசியும்‌ இதனால்‌ நற் கதி அடையப்‌ போகிறோமென்று கூறி கிளி உருவை விட்டு திவ்ய உடல்‌ பெற்று விமானத்தின்‌ மீதேறி வானுலகு சென்றது- வேசியும்‌ வேதியனும் அதைப்‌ பாராயணம்‌ செய்து பின்னர்‌ உத்தம கதி யடைந்தனர் –

1-விஷாதயோகம்‌ –47 சுலோகங்கள்‌.(இதில்‌ திருதராஷ்ரன்‌ 1, ஸஞ்ஜயன்‌ 19,5, அர்ஜுன்‌ 2.5,ஸஞ்ஜயன்‌ 4.5, அர்ஜுனன்‌ 18.5, ஸஜ்ஜயன்‌ 1.]
ஆரம்பத்தில்‌ தர்ம சப்தமும்‌ முடிவில்‌ ஜப சப்தமும்‌ காணப்படுவதால்‌ –யதோ தர்மஸ்ததோ ஜய ” என்ற வ்யாஸ ஸித்தாந்தம் கூறப்படுகிறது – அதிகாரிக்கேற்றபடி ப்ரவிருத்தி நிவ்ருத்தி என இருவகை தர்மங்களும் இங்கு கூறப்‌படுகின்றன.-தர்ம ஷேத்ரே குருஷேத்ரே என்று ஆரம்பித்‌தது பாண்‌டவ கெளரவ யுத்தம்‌, இதம்‌ சரீரம்‌ கெளந்தேய ஷேத்ர மித்யபிதீயதே என்று பின்னர்‌ பகவான்‌ கூறுவதால்‌, நமது சரீரத்தில்‌ காம க்ரோதாதிகளுக்கும்‌ சமதமாதிகளுக்கும்‌. நடக்கும்‌ யுத்தம்‌ கூறப்படுகின்றது -ஸ்வ தர்மத்தைச்‌ செய்யும் போது போலியான கருணை புகுந்து அர்ஜுனனையே கலக்கிற்று, பரம புருஷன்‌ ஸ்வ தர்‌மோபதேசம்‌ செய்து அநுஷ்டானத்தை நிலை நாட்டினார் –

தேசிகனியற்றிய கீதார்த்த ஸங்க்ரஹம்‌,

கருமமம்‌ ஞானமுங்‌ கொண்டெழுங்‌ காதலுக்கோ ரிலக்கென்று
அருமறை யுச்சியுளா தரித்‌ சோதுமரும்‌ பிருமம்‌
திருமகளோடு வருந்தரு மாலென்று தானுரைத்தான்‌
தருமருகந்த தனஞ்ஜய னுக்கவன்‌ சாரதியே

கர்மத்தாலும்‌ . ஞாநத்தாலும்‌ உண்டாகும்‌ பக்திக்கு விஷயமானது உபநிஷத்தால்‌ போற்றப்படும்‌ ப்ரஹ்மமேயாம்‌–அந்த ப்ரஹ்மம் லக்ஷ்மீ நாராயணன்‌ என்று பார்த்த சாரதி தார்மிகனான அர்ஜுனனுக்‌குரைத்தார்‌.

உகவை யடைந்த வுறவுடையாருற வற்ற வந்நாள்‌
தகவுடையன்பு கரைபுரளத் தருமத்த ளவில்‌
மிகவுளமஞ் விழுந்தடி சேர்ந்த விஜயனுக்கோர்‌
நகையுட னுண்மை யுரைக்க வமைந்தனர்‌ நாரணரே –

தன்னிடமிருந்த அன்பை விட்டு பகைவருடன்‌ சேர்ந்து வந்த பீஷ்மர்‌ துரோணர்‌ முதலியவர்களைப்‌ பார்த்‌து தர்மா தர்ம மறியாமல்‌ அன்புடன்‌ இரக்கந் தோன்றி கரை கடந்‌தோட, தன்‌ திருவடியில்‌ விழ்ந்து கதரும்‌ அர்ஜுனனுக்கு தத்த வோபதேசஞ் செய்ய பகவானமைந்தார்‌-

2-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தென்‌ திக்கில்‌ புரந்தரம் என்றோர்‌ பட்டணமிருந்தது -அங்கு அந்தணர்‌ மரபினிலே தேவ சர்மா என்றோர்‌ வேதியனிருந்தார்‌. அவர்‌ தம்‌ ஜாதிக்கேற்ற தர்மத்தை விடாது ௮னுஷ்டிப்பவர்‌, வேத சாஸ்த்ரங்களின்‌ கரை கண்டவர்‌-பல வேள்விகளைச்‌ செய்தவர்‌, தேவ பூஜை ௮திதி பூஜை தவராதவர்‌, இத்தகைய ஸத் கர்மங்களாலும்‌ அவர்‌ மநதிற்கு சாந்தி தோன்றவில்லை. மனத்தை அடக்கி ஞாநத்தைப்‌ பெற்று மோஷமடைய வேண்டுமென்ப.து அவரவா-ஆதலின் ஞானிகளான தவஸிகளை ஆராதித்து வந்தார்‌, இங்கனம்‌ நெடு நாள் செல்ல அவர்‌ தவத்தால்‌ ஓர்‌ அரிய ஜீவன் முக்தர்‌ அவரருகே வந்தார்‌, அவர்‌ முகத்தில்‌ சாத்தியும்‌ ஆநந்தமும்‌ தாண்டவ மாடின-பேசிக் கொண்டிருக்கும் போது அவரை அறியாமல்‌ அவர்‌ மநம்‌ ஸமாதியிலமரும்‌. சர்மா அவரை வணங்கி நன்கு அதிதி பூஜை செய்தார்‌, தன்‌ மநம்‌ ஓடுங்க ஓர்‌ உபாயங் கூற அவரை வேண்டினார்‌, ௮ந்த யோகி புரமெனும்‌ நகரிலே உள்ள மித்ரவான்‌ எனும்‌ ஆட்டிடயனைக்‌ கேள்‌ எனக் கூறினார்‌, அவரைத்‌ தேடிச் சென்ற சர்மா ஓர்‌ ஆரண்‌யத்தில்‌ தியாநத்தில்‌ அவர்‌ அமர்கந்து இருப்பதைக்‌ கண்டார்‌, அவரைப்‌ பணித்து தன்‌ விருப்பைத் தெரிவித்தார்‌.

அவன்‌ வேதியரே ! கோதவரி தீரத்தில்‌ ப்‌ரதிஷ்டானமெனும்‌ நகரத்திலே துர்தமநன்‌ என்‌றொருவனிருந்தான்‌-அவன்‌ விக்ரம ராஜனலித்த பல தாநங்களைப்‌ பெற்று தன்‌ வயிற்றை வளர்த்து வந்தான்‌, அவன்‌ இறந்த பின்‌ தன்‌ பாபத்‌திக்கேற்ற பல நரகங்களை அனுபவித்து ஓர்‌ வேட குலத்திலே பிறந்தான்‌. தன்னிலும்‌ நீச குலத்துப்‌ பெண்ணான சண்‌டாளியை அவன்‌ மணந்தான்‌. ஜீவனத்திற்கு வகையின்‌றி அவன்‌ அலையும் போது அவன்‌ மனைவி வேசித்‌ தொழிலைக்‌ கைக் கொண்டு பணத்தைச்‌ சம்பாதித்தாள்‌, கொழுத்த ஓர்‌ சண்டாளனைக்‌ காதலனாகக்‌ கொண்டு அவன்‌ மூலமாக ஓர்‌ பெண்ணைப்‌ பெற்றாள்‌, அக் கன்யகை யெளவன பர்வத்தை அடைந்த பின்‌ அப் பஞ்சமன்‌ அவளையும்‌ மணந்தான்‌. முதல்‌ மனைவி இறந்து டாகிநீ எனும்‌ பூதமாகப் பிறந்து முதற்‌ புருஷனனான வேடனைப்‌ பஷித்தாள்‌. சண்டாளியும்‌ வேடனும்‌ யம லோகஞ் சென்‌று பற் பல நரகங்களை அனுபவித்து அவள்‌ ஆடாகவும்‌ வேடன்‌ சிறுத்தையாகவும்‌ பிறந்தனர்‌.. அச் சிறுத்தை ஆட்டைத் துறத்த ஆட்டு மந்தையுடன்‌ யானும்‌ பயந்தோடினேன்‌. இவ்விடத்‌திற்கு வந்த பின்‌ ஆடு ஓட்டத்தை நிறுத்தி என்னைப்‌ புசித்து பசியாறு என்று சிறுத்தைக்கு ஆதித்யம் செய்தது -சிறுத்தையோ ஒரு ப்‌ராணியைக்‌ கொன்று உடலை வளர்ப்பது பாபமன்‌றோ யென தர்மங்கூறிற்று. இதைக் கண்டு வியந்த யான்‌ சிறுத்தையே!இதென்ன ஆச்சரியம்‌ ! நீங்களிருவரும்‌ இங்கு வந்தவுடன்‌ மனிதரைப் போல்‌ பேசுவதும்‌ அதிலும்‌ தர்மம்‌ பேசுவதும்‌ மிக ஆச்சர்யமாக இருக்கிறதே? இதற்கென்ன காரணம்‌ என்ற கேட்டேன்‌, ௮து , யான் ஓன்றுமறியேன்‌. ௮௫கிலுள்ள வாநரத்தைக்‌ கேட்போமென்று கூற மூவருமங்கு சென்று வினவினோம்‌,

குரங்கு -ஐயா இங்கு பிரும்மனால்‌ ப்ரதிஷ்டை செய்‌:யப்பட்ட திரியம்பக லிங்க மொன்றிருக்கிறது. இதை ஸுகர்மா எனும்‌ வேதியன்‌ பூஜித்து அதற்கு. நிவேதனம்‌ ‘ செய்த கந்த மூலங்களைப் புஜித்து ஜீவித்து வந்தான்‌, தற்‌செயலாக அங்கு வந்த ஓர்‌ அதிதி ஸுசர்மாவின்‌ புண்‌ணியத்தைக்‌ கண்டு ஸந்தோஷித்து கீதையின்‌ இராண்டாம் அத்யாயத்தை அங்குள்ள கல்மீது எழுதி அதைப்‌ பாராயணம்‌ செய்யும்படி, கூறி மறைந்தார்‌. அன்று முதல்‌ இவ்விடத்தில்‌ இயற்கையான பகைமை நீங்க எங்கும்‌ சாந்தி பரவியிருக்கிறது என்றது , ஆதலின்‌ நீரும்‌ இதைப்‌ பாராயணம்‌ செய்‌தால்‌ மனச்சாந்தி உண்டாகுமென்று இடையன்‌ கூற வேத சர்மா ௮வரை வணங்கி தம்மிருப்பிடஞ் சென்றார்‌. வழியில்‌ ஒர்‌ ஆலயத்தில் அமர்ந்துள்ள ஓர்‌ ஆத்ம ஞானியை யடுத்து ௮வரிடம்‌ கீதை இரண்டாம் அத்யாயத்தைப்‌ பெற்று முக்தியடைந்தார்-

  1. ஸாங்க்யயோகம்‌ 72 சுலோகங்கள்‌.[ஸஞ்ஜயன்‌ 3, அர்ஜுசன்‌ 6, பகவான்‌ 63.) .

உடலமழிந்‌திடும்‌ உள்ளுயிரொன்றழியா தெனைப் போல்‌
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்குயிர் காட்டு நினைவதனாலுள தாம்‌
விடு மயலென்று விஜயனைத் தேற்றினன்‌ வித்தகனே.–
3-

உடல்‌ அழிவுள்ளது அறிவுள்ள உயிர்‌ என்னைப் போல்‌ என்‌றும்‌ அழியாதது. அவனவனது நித்ய கர்மா விடத்தக்க தல்ல -ஆனால் அதன்‌ பயனில்‌ பற்று வைக்கலாகாது -உனக்கு விரைவில்‌ ஞாநமுண்டாகும்‌, அஞ்ஞானத்தை விடு என கண்ணன்‌ விஜயனுக்குக்‌ கூறினான்‌

3-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
ஜநஸ்‌தானமெனும்‌ தேசத்திலே கெளசிகரது மரபினில்‌ ஜடன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌. அவன்‌ தன்‌ பெயருக்‌கேற்றபடி தன்‌ ஜாதிக்சூரிய கல்வியோ ஆசாரமோ இல்லாது வைச்ய விருத்தியான வியாபாரஞ் செய்து வயிறு வளர்த்‌தான்‌. ஓர்‌ ஸமயம்‌ பொருளில்லாமல்‌ போகவே யாகம் செய்த பெரியோர்‌ பொருளைக்‌ கொள்ளை யிட்டு வியாபார நிமித்தம்‌ தூரதேசம் சென்றான்‌.-ஆங்கு தேடிய பொருளைக்‌ கொண்டு மனைவியை மகழ்விக்கத் தன்னிருப்பிடத்துக்குத் திரும்பினான்‌, நடுவழியில்‌ ஸுுர்யாஸ்தாமனமாகி விட்டது-பகலிலேயே இருள் சூழ்ந்த காட்டைக்‌ கடக்க நேரிட்டது -அவன்‌ தன்னை யார்‌ அடிப்பர்‌ என்று அச்சமின்றி சென்‌றான்‌, ஆங்கு ஓர்‌ கொள்ளைக்‌ கூட்டத்தினர்‌ ஈவிறக்கமின்‌றி இவனை நையப் புடைத்துக் கொன்று பொருள்களை எடுத்‌துச்‌ சென்றனர்‌. வந்தபடியே தனம் போயிற்று,

துர் மரணமடைந்த ஜடனோ மிக பயங்கரமான ஓர்‌ பேய்‌ உடலை எடுத்தான்‌, அவனைக்‌ கடுமையான பசியும்‌ தாகமும்‌ பீடிக்க, ஓரிடத்தே நிற்கமுடியாமல்‌ அலைந்து திரிந்து கொண்டிருந்தான்‌. மிக்க தார்மிகனான அவனது புத்திரன்‌- அவர்‌ சென்று நீண்டகாலமானதால்‌ தந்தையை வனம்‌ வனமாகத்‌ தேடிச்‌ சென்றான்‌. ஓர்‌ வனவாஸி கூறியகைக்‌ கேட்டுத்‌ தன்‌ தந்தை கள்வரால்‌ அடித்து கொல்லப்பட்டாரென தீர்மானித்தான்‌, அவருக்கு நற் கதியை யளிக்க காசி சென்று ஈமக் கடன்களைச்‌ செய்யப்‌ புறப்பட்டான்‌. இடைவழியில்‌ ஒர்‌ மரத்தடியே அமர்ந்து நித்ய கருமங்களைச்‌ செய்து முடித்து வழக்கப்படியே கீதையின்‌ மூன்றாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்தான்‌. அந்த மரத்கினடியில் தான்‌ ௮வன்‌ தந்தை கொல்லப்பட்டான்‌. ஆங்கு அலைந்து கொண்டிருந்த ஜடப்ரேதத்தின்‌ காதில்‌ இது விழுந்தவுடன்‌ ப்ரேத உடல்‌ அகன்றது.

திவ்ய விமானத்தில்‌ திவ்ய சரீரத்துடன்‌ தோன்றிய ஜடன்‌ மைந்தனை நோக்கி அருமைக்‌ குழந்தாய்‌ -நீ காசி செல்ல வேண்டாம்‌.? எதற்காக நீ செல்கிறாயோ அந்தக் கார்யம்‌ கீதோ பாராயணத்தினாலேயே ஸித்‌தித்து விட்டது என்றான்‌. இதைக்‌ கேட்டு ஆச்சரியமடைந்த புத்ரன்‌ தந்தையை வணங்கி, இப்பொழுது தான்‌ யான்‌ புதல்வனானேன்‌. இதன்றோ புத்ரர்‌ கடமை! கீதையின்‌ மூன்றாம்‌
அத்யாயத்தின்‌ பெருமை இத்தகையதென போதித்து விட்டீர் – யான்‌ இப் புவியில்‌ இனி என்ன செய்ய வேண்டுமென கட்டளை யிடுங்கள்‌ என்றான்‌, ஜடன்‌ தனது மூதாதைகள்‌ தனது பாபத்தால்‌ நரகத்தில்‌ பல யாதனைகளை அனுபவிப்பதைக்‌ கண்டு அவர்களையும்‌ கீதையால்‌ வைகுண்டமனுப்பும்படி கூறி விட்டு வைகுண்டம் சென்றார்‌, ஜட புத்ரன்‌-தன்னூருக்கு வந்து தேவாலயத்தில் அமர்ந்து கீதா பாரயணஞ்‌செய்து அதை அந்த பித்ருக்களுக்குத்‌ தானம்‌ செய்தார்‌.-உடனே விஷ்ணு தூதர்கள்‌ யமனிடஞ்சென்று ஜடனது பித்ருக்களை வைகுண்டமனுப்பும்படி. கூற யம தர்ம ராஜன்‌ ௮ங்கனமே திவ்ய தேஹம் பெற்ற அவர்களுடன்‌ பகவானைத்‌ தர்சிக்கத் தானும்‌ கிளம்பினான்‌, பாற்கடலிலே
பன்னகசாபியாயுள்ள பரமாத்மாவைப்‌ பணிந்து துதித்து-நாத?! தங்களிட்ட கட்டளையை நிறைவேற்றி விட்டேன்‌.எனக்‌ கூறி அவரிடம்‌ விடைபெற்று தம்மிருப்பிடஞ்‌சென்றான்‌-

  1. கர்மயோகம்‌ 45 சுலோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 3, பகவான்‌ 40]

சங்கம் தவிர்ந்து சகஞ் சதிர் பெற்ற தனஞ்சயனே
பொங்குங் குணங்கள்‌ புணா்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
நங்கண்ணுரைத்த கிரிசை யெல்லாமெனவும் நவின்‌றார்‌
எங்குமறிவார்களே யென்று நாதன் இயம்பினனே-
-4-

அறியும்‌ ஸாமர்‌த்யம் வாய்ந்த அர்ஜுனா – பலனில்‌ பற்றை விட்டு முக் குணங்களால்‌ ஏற்பட்ட எல்லா வேலைகளையும்‌ அக் குணங்களிலும்‌ நம்மிடம்‌ விட்டு விட்டு, சாஸ்தர விஹிகமான கர்மங்களைச் செய்‌ என்று பகவான்‌ கூறினார்‌,

4வது அத்யாயம்‌–பாத்ம கதை,
பாகீரதீ கரையிலுள்ள வாராணஸீ நகரிலே. விச்வேச்‌வரது ஆலயத்தே பரதரெனும்‌ ஓர்‌ யோகி வஸித்‌து வந்தார்‌-அவர் எப்போதும்‌ கீதையின்‌ நாலாமத்யாயத்தில்‌ அளவிலா பற்று கொண்டு ஜபிப்பார்‌, அதைத் தவிர வேறொன்‌றிலும்‌ ௮வர்‌ மநம்‌ செல்லாது-ஒரு சமயமவர்‌ தற் செயலாக உத்யாநத்தில்‌ வஸிக்கும்‌ தேவதைகளைத்‌ தர்சிக்கச்‌ சென்றார்‌-ஆங்கு ௮வர்‌ ஒன்றோடொன்‌று பின்னிக் கொண்டு வளர்ந்திருந்த இரு இளந்த மரத்தடியே சிறிது நேரம்‌ படுத்துக்‌ களைப்பாறிச்‌ சென்றார்‌, அது முதல்‌ நாலைந்து நாட்களில்‌ அம்மரங்கள்‌ இலை உலர்ந்து பட்டுப் போயின-ஆனால்‌ ௮வை பரிசுத்தரான ஓர்‌ அந்தணர்‌ விட்டிலே பிறந்து இரு கன்யகைகளாக வளர்ந்தன. ஏழாண்டுகள்‌ சென்ற பின்‌ அவ் வழியாக வந்த அந்த பரத யோகியைக் கண்டு இக் கன்யகைகள்‌ அன்புடன்‌ வரவேற்ற, ஐயா !? உமதருளாலே நாங்கள் மரமாயிருந்த ஜன்மாவை விட்டு இவ் வுடலைப்‌ பெற்றோமெனப்‌ பணிந்தனர்‌,
பரத யோகி நீங்கள்‌ யார்‌? ஏன்‌ மரமானீர்கள்‌ ? எப்‌படி விடுபட்டீர்கள்‌ ? கூறுங்களென்றார்‌. கன்யகைகள்‌–கோதாவரி தீரத்தல்‌ -சிந்ந பாபமென-அறுக்கப்பட்ட பாவம் என -ஓர்‌ தீர்த்தம்‌ இருக்‌கிறது , ஆங்கு ஸத்ய தபஸ்‌ என்றோர்‌ மஹர்ஷி கடும் தவம்‌ செய்தார்‌. வெய்யில்‌ காலத்தில்‌ பஞ்சாக்நி மத்தியிலும் குளிர்‌ காலத்தில்‌ ஜலத்தின்‌ நடுவிலே இருந்தும் கடும் தவம் செய்தார் –
அவரது தபோ மஹிமையால்‌ பழுத்த மரங்கள்‌ வளைந்து அவர் மீது குடை போல்‌ நின்றன, பிராணிகள்‌ இயற்கைப்‌ பகைமையை லிட்டு அன்‌யோன்யமாக வாழ்ந்தன-ஆனால்‌ இந்திரன்‌ ஒருவனே அச்சங்கொண்டு பல விக்னங்களைச் செய்து அவர்‌ தவத்தைக்‌ கலைக்க முயன்றான்‌, அப் ஸரஸ்ஸூக்களான எங்களை அவரிடம்‌ ஏவினான்‌, நாங்கள்‌ திவ்ய உருவமேந்தி அவர்‌ முன் சென்று ஆடிப் பாடி தவத்தைக்‌ கலைக்க முயன்றோம்‌, அவர்‌ சிநம் கொண்டு நீங்கள்‌ கங்கைக் கரையில்‌ இளந்த மரமாக இருங்கள்‌ என்று சபித்தார்‌, உடனே நாங்கள் அவரடி பணிந்து நாங்கள் பராதீநர்கள்‌, யஜமானன்‌ உத்தரவு படி நடந்தோம்‌, ஆதலின்‌ மன்னித்து சாப விமோசநம்‌ செய்தருள வேண்டுமென பிரார்த்தித்தோம்‌-அவர்‌ கருணை கொண்டு பரத யோகியெனும்‌ ஸாது கீதையின் நான்காம் அத்தியாயத்தின்‌ மஹிமையால்‌ உங்கள் சாபத்தை ௮கற்‌றுவர் என்றார்‌-அங்கனமே தங்களருளால்‌ சாபத்திலிருந்து விடுபட்டது மாத்‌ரமல்ல, ஸாதுக்கள்‌ குலத்தில்‌ உயர்ந்த மானிடப்‌ பிறவியையும்‌ முற் பிறப்பின்‌ நினைவையும்‌ பெற்‌றோம்‌, கோரமான ஸம்ஸாரத்திலிருந்தும்‌ விடுபட்டோமென்‌றனர் -பரத யோகி அவர்கள்‌ செய்த பூஜையை ஏற்று தம்‌மிருப்பிடஞ் சென்றார்‌,

ஞாந கர்ம சன்யாஸ்‌ யோகம்‌-42 ஸ்லோகங்கள்‌-[அர்ஜுசன்‌ 1, பகவான்‌ 41 ]
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும்‌ பெருமைகளும்‌
துறவாக்‌ கிரிசைகள்‌ துர்மதி தன்னால்‌ துலங்குகையும்
இறவா வுயிர் நிலையும் கண்டிடும் உலகின் நிலையும்‌
மறைவாழி மாயவனே யெனக்கின்‌ றறிவித்தான்
–5-

ஜீவனுக்கு மோஷ்மளிக்க பிறப்பில்லாத தான் அவதாரம்‌ செய்ததையும்‌ விடாமல்‌ செய்ய வேண்டிய கர்மாக்‌களையும்‌, ௮தனால்‌ சோன்றும்‌ மநச்‌ சக்தியையும்‌ ஜீவனழியாமையையும்‌, தோன்றிய உலக நிலையையும்‌ மாயா கார்யங்களைச் செய்த மாதவன்‌ கூறினான்‌-

5 வது அத்யாயம்‌–பாத்ம கதை.
மத்ர தேசத்திலே புருகுத்ஸ புரத்திலே பிங்களன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌. அவன்‌ தனது குல உசிதமான வேத வித்யைகளை விட்டு காந வித்யை கற்று வந்தான்‌-அதில் அவன் ஒப்பற்ற கீர்த்தி பெற்று ராஜ ஸபைகட்குச்‌ சென்றான்‌. பல ராஜாக்களாலும்‌ நன்கு மதிக்கப்பட்டு ஏராளமாக பொருள் தேடினான்‌-கருமத்தால்‌ நீச குலத்தே பிறந்த ஒர்‌ பெண்ணை அழகிற் சிறந்தவளென மணந்தான்-அரசமிடமுள்ள செல்வாக்கால்‌ பல குல ஸ்த்ரீகளைக்‌ கெடுத்தான்‌-அவன்‌ மனைவி அருணை யென்பவள்‌ இவனை விரும்பாது பர புருஷனிடம்‌ ஆசை கொண்டாள்‌. அதைக் கண்ட கணவன்‌ கடிந்து விழுந்து அவளை ஹிம்ஸித்தான்‌. அருணை அவன் குடித்து மெய் மறந்து உறங்கும் போது சோர புருஷனைத்‌ துணை கொண்டு அவனைக் கொன்று பூமியில்‌ புதைத்து விட்‌டாள் –
பிங்களன்‌ யமலோகஞ்சென்று பற்பல நரகங்களை அனுபவித்து ஓர்‌ கழுகாகப்‌ பிறந்தான்‌-அருணை பகந்தரமெனும்‌ நோய் வாய்பட்டு பல நாட்‌ துன்புற்று இறந்தாள்‌, அவளும்‌ பற்பல நராகங்களிலிடர்பட்டு சொல்லொணாத்‌ துன்பங்களை யனுபவித்து காட்டில்‌ ஒர்‌ கிளியாகப்‌ பிறந்தாள்‌, இருவருக்‌கும்‌ பூர்வ ஜன்ம பகைமை மாத்திரமகல வில்லை, கிளியைக்‌ கழுகு மூக்கால்‌ குத்தித்‌ துறத்தி துறத்தி ஹிம்ஸதித்தது -கிளியோ தனக்கு பலமில்லாமையால்‌ பயந்‌தோடி. ஓரிடத்‌தே விழ்ந்தது – அங்கு ஓர்‌ மண்டை. ஓட்டில்‌ நீர்‌ தங்கி நிற்க அதன் மீது கிளி உடல் பட்டது . -அக் கழுகை அங்குள்ளோர்‌ கல்லாலடிக்க அதவும்‌ தத்தித் தத்தி ௮ம் மண்டை ஓட்டருகே விழ்ந்து உயிரை விட்‌டது, யம தூதர்‌ ஏக காலத்தில்‌ இவ் விருவரையும்‌ யமனிடஞ்‌ சேர்த்தனர்‌. யம தர்ம ராஜன்‌ சிறிது ஆழ்ந்து யோசித்து உங்கள்‌ பாபமகன்றது, நீங்கள்‌ இஷ்டமான உலகிற்குச்‌ செல்லலாமென்றார்‌-இதைக் கேட்டு பராமாச்சர்ய மடைந்த இரு பறவைகளும்‌ ஐயா-மஹா பாபிகளான எங்கள்‌ பாபம்‌ எப்படி யகன்றது? என்ன புண்யத்தால்‌ நல்லுலகம்‌ கிட்டிற்று என்று கேட்டனர் -தர்மராஜன்‌, பஷிகளே ! கங்கா தீரத்தில்‌ வடுயெனும்‌’ ஓர்‌ பிரும்ம வித்து இருந்தார்‌. அவர்‌ எப் பொழுதும்‌ மிச பவித்ரமான கீதையின்‌ ஐந்தாம் அத்யாயத்‌தையே ஜெபிப்பார் , அதனால்‌ நிர்மலமான சரீரம்‌ வாய்ந்த௮வர்‌ பிராரப்த கர்மம்‌ ஒழிந்தபின்‌ இவ்வுடலை விட்டு மோஷமடைந்தார்‌. அவரது மண்டை ஓட்டில்‌ தங்கிய ஜலம்‌ இறக்‌கும் போது உங்கள் உடல் மீது பட்டதால்‌ உங்கள்‌ பாபம்‌ பறந்தோடியது . அளவிலா புண்ய முண்டாயிற்று என்றார்‌ |
இதைக்கேட்டு ஆனந்தமடைந்த அவ் விருவரும்‌ திவ்ய தேஹம் பெற்று அருகில் வந்த விமானத்தின் மீதேறி வைகுண்டம்‌ சென்றனர்‌.ஐந்தாம் அத்யாயம்‌ பாராயணம்‌ செய்தவர்‌ மண்டை ஓட்‌டின்‌ ஜலத்திற்கே இத்தகைய பெருமை யெனில்‌ அவ்வத்யாயத்தின்‌ பெருமையைக் கூற எவரே வல்லவர்‌ –

5-கர்ம ஸன்யாஸ யோகம்‌- 29 ஸ்லோகங்கள்‌-(அர்ஜுன்‌ 1, பகவான்‌ 25.]

கண்டெனிதால்‌ கருமம்முயிர்‌ காட்டுங்கடுக தலும்‌
மண்டிய தன்படி யின்‌ மநங்‌ கொள்ளும்‌ வரிசைகளும்‌.
கண்டறியா வுயிரைக் காணலுற்ற நினைவுகளும்‌
வண்டு வரீசனியம்‌ பினன்‌ வாஸவன்‌ மைந்தனுக்கு–6-

பகவத் ஆராதன ரூபமான ததளுபமான நிஷ் காம்ய கர்மாவானது ஞான மார்க்கத்தை விட சீக்ரமாக ஆத்ம தர்சனத்திற்க்கு உபயோகமாகிறதென்றும்‌, அதைச்‌ செய்யும் போது யான்‌
செய்ய வில்லை யென்று எப்படி. நினைப்ப தென்றும்‌ ஆத்ம ஸ்வருபத்தைக் காண எப்படி தியாநம்‌ செய்வதென்றும்‌ துவாரகா நாதன்‌ இந்தர புத்ரனுக் குரைத்தார்‌.

6வது ஆத்யாயம்‌–பாத்மீ கதை.
கோதாவரரி தீரத்திலே ப்‌ரதிஷ்டானமென்றோர்‌ நகரமுண்டு -அங்கு பிப்பலேசன்‌ என்ற பெயரோடு பரமசிவன்‌ விளங்குகிருர்‌, அங்கு ஜாந ச்ருதி என்றோர்‌ வேந்தன்‌ அரசுபுரிந்து வந்தான்‌. அவன்‌ பற் பல வேள்விகளையும்‌ எண்‌ணிறந்த தாநங்களையும்‌ செய்து ஒப்பற்ற கீர்த்‌தி பெற்றான்‌-ஜனங்களால்‌ காதில்‌ கேட்கப் பட்டவனென்ற காரணப் பெயர்‌ அவனுக்கு உண்டாயிற்று, அவனது காட்டில்‌ பஞ்சமோ
ஈதிபாதையோ களவோ கலஹமோ கிடையாது, குடிகளை அவர்‌ தனது மைந்தர் போல கருதினார்‌, அவர்கள்‌ ௮ரசனை தந்தையென மதித்தனர்‌.
இவரது உயர்ந்த குணத்தைக் கண்டு வியந்த விண்ணவர்‌ இவர்‌ வேண்டாமலே அவருக்குப்‌ பேருதவி புரியக்‌ கருதினர்‌. உடனே அழகிய அன்னப் பறவையின்‌ உடல் எடுத்து மாடி மீது உலவும்‌ ஜாந ச்ருதியின்‌ தலை மீது பறந்தனர்‌.பின்னே செல்லும்‌ பறவைகள்‌ முன்‌ செல்பவைகளை நோக்கி
“என்ன வேகமாகச்‌ செல்கீறீர்களே. இக் கடினமான இடத்தில்‌ சேர்ந்தல்லவோ செல்ல வேண்டும்‌ ! முன்னே ஓர்‌ தேஜோ மண்டலம்‌ நிற்பதையும்‌ அதனிடையே _ தார்மிக ஜாந ச்ருதி நிற்பதையும்‌ நீங்கள்‌ காண வில்லையா ??” என்றன. இதைக்‌ கேட்டு அவைகள்‌ (என்ன அஞ்சுகிறீர்கள்‌ ? ரைக்வர் என்னும் பிரும்ம வித்தை விட இவர்‌ உயர்ந்தவரா என்ன ??* என்று பதில் கூறின-இங்கனம்‌ பக்ஷிகள்‌ தன்னைப்‌ போற்றுவதையும்‌ தூற்றுவதையுங் கேட்ட வேந்தன்‌ வியந்து ஸாரதியை யழைத்து ரைக்வர் என்னும் மஹாத்மாவைச்‌ தேடி யழைத்து வா வென கட்டளை யிட்டார்‌. ஸாரதி உடனே புறப்பட்டு பற்பல காடுகளைக் கடந்து காசி, கயை, இமயமலைச்சாரல்‌, கெளடதேசம்‌, துவராவதீ , ஸோமநாதபுரம்‌, அவந்தீபுரி, ஓங்காரம்‌, அச்வமேகம்‌, விஷ்ணு கயா, கொல்ஹாபுரம்‌, பஞ்சநதம்‌, அமலகிரி,
நந்திகேசம்‌, துங்கபத்ரா, ஸ்ரீசைலம்‌, விட்டலபுரம்‌, கோதாவரீ, மதுரா, காலிந்தீ , கோவர்த்தநம்‌, குருக்ஷேத்ரம் முதலிய விடங்களில்‌ அவரைத்‌ தேடி. ஆங்குள்ள நதிகளில்‌ மூழ்கி பகவத்‌ தர்சநம்‌ செய்து விட்டு காச்மீரஞ்‌ சென்றான்‌.
அந் நாடு நீர்வள நிலவளத்துடன்‌ கல்விக் களஞ்சியமா யிருந்தது -அந்நாட்டை ஆண்டுவந்த அரசன்‌ வநத்‌திலே வேட்டையாடும் போது ஓர்‌ ஸ்வயம்பு லிங்கத்தைக்‌ கண்‌டான்‌. அங்கு விதிப்படி ஆலயமமைத்து மாணிக்கத்தால் அவரை அர்ச்சித்தான்‌, அது முதல்‌ மாணிக்கேச்வாரென அவர்‌ அழைக்கப்படுகிறார்‌. அந்த ஆரண்யத்திலே ஓர்‌ வண்‌டிக் கருகே அமர்ந்து சொறி நிறைந்த தன்‌ உடலைச்‌ சொறிந்து கொண்டிருக்கும்‌ ஒருவரைக் கண்டான்‌, ௮வரது உடலொளியைக்‌ கண்டு அவர ரைக்வரென உணர்ந்தாலு மருகிலுள்‌ளோரைக் கேட்டு நிச்சயித்தான்‌, பின்னர்‌ ஸாரதி அவர்‌ திருவடி பணிந்து ஸாதோ! தாங்கள்‌ யார்‌? ஏனிங்கு தனியே அமர்ந்திருக்கிறீர்கள்‌ ? தமக்கென்ன வேண்டும்‌? என்று கேட்டான்‌. ரைக்வர்‌- நாம்‌ பூர்ண காமர்‌, நமக்கொன்றும்‌ தேவை யில்லை- -ஆனால்‌ நமது உள்ளத்‌தி லுள்ளதை யறிந்து பலர்‌ செய்யக்கூடிய தொண்டை ஒருவராக இருந்து செய்‌யும்‌ ஓர்‌ உத்த பரிஜனமே தேவை யென்றார்‌, இதைக்‌ கேட்ட ஸாரதி வேந்தனிடம்‌ விரைந்து சென்று நடந்ததைக்‌ கூறி
மன்னன்‌ எண்ணிறந்த ஆடை ஆபரணங்களையும்‌ ஆயிரக் கணக்கான கோக்களையும்‌ மிக அழகிய இரு குதிரைகள் பூட்டிய ஓர்‌ ரதத்தையும்‌ ரைக்வருக்குக்‌ காணிக்கையாக அளித்துப்‌ பணிந்து நின்றான்‌, இவைகளில்‌ சிறிதும்‌ விருப்‌பில்லாத ரைக்வர்‌ ஏ சூத்ரா-நமது ஸமாசாரத்தை நீ அறியாய் , இவைகளை நீயே எடுத்துக் கொள்‌ ! என்றார்‌. இதைக்‌ கேட்டு பார்த்திவன்‌ தன்னைச்‌ சபித்து விடுவாரோ யென்று பயந்து அவர்‌ திருவடியில்‌ பல முறை பணிந்து ஷமிக்கும்‌படி வேண்டினான்‌. அன்றியும் இத்தகைய காந்தி தமக்கு உண்டாகக்‌ காரண மென்ன வென்று வினவினான்‌. அவர்‌ கீதையின்‌ ஆறாமத்யாயத்தின்‌ பெருமை இது என்றுரைத்தார் -. ஜாந ச்ருதி அவரை ஆசார்யனாக அடுத்து ஆறாம் அத்தியாயத்தை உபதேசம் பெற்று அந்தப் பாராயணத்தால்‌ முக்தி பெற்றான்‌. ரைக்வரும்‌ மாணிகேச்வசர்‌ ஆலயத்தில்‌ ஆறாம் அத்யாய பாராயணம்‌ செய்து கொண்டிருந்தார்‌. ஹம்ஸ வடிவம் கொண்ட அமரரும்‌ தம்‌ பணி தீர்ந்ததென வானாடு சென்றனர்‌-
இக் கதை சாந்தோக்ய உபநிஷத்‌ திலும்‌ பிரும்ம சூத்ரம்‌-அப சூத்ராதிகரணத்திலும் இருக்கிறது –

  1. ஆத்ம ஸம்யம யோகம்‌- 47 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுன்‌ 5, பகவான்‌ 42.]

யோக முயற்சியும் யோகில் சம நிலை நால் வகையும்
யோகினுபாயமுப யோகு தன்னால் வரும்‌ பேறுகளும்‌
யோகுதனில் தன்‌ திறமுடையோகு தன் முக்கியமும்‌
நாகணை யோகி நவின்றனன் நன்‌ முடி வீரனுக்கே–7-,

யோக முயற்சியும்‌ யோகத்‌தில்‌ நால் வகை சம தர்ஸனமும்‌, மனதை யடக்கும்‌ உபாயமும்‌ யோக பலன்களும்‌ யோகத்தை விட தன்னை உபாஸிக்கும்‌ யோகம்‌ சிறந்தது எனவும் சேஷசாயி க்ரீடிக்கு உபதேசித்தான்‌-

முதல்‌ ஷட்கம்‌ முற்றிற்று –

7 வது அத்யாயம்‌–பாத்ம கதை,
நீர்வளம்‌ நிலவளம்‌ நிறைந்த பாடலீ புத்ரமென்ற நகரத்‌தில்‌ சங்கு கர்ணன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌, அவனுக்‌குப்‌ பணத்தில்‌ பேராசை தோன்றவே வைச்ய விருத்தியான வியாபாரத்தைக்‌ கைக் கொண்டு பெருஞ்செல்லம்‌ சேர்த்‌தான்‌. வேதியருக்குரிய, தேவ பூஜை பித்ரு பூஜை செய்தறியான் . பொருள்‌ தேடும்‌ நிமித்தம்‌ ௮ரசரையும்‌ இதர உத்‌யோகஸ்தர்களையும்
அழைத்து விருந்தளிப்பான்‌, மூன்று மனைவிகளை மணந்து சிற்றின்பத்தை அனுபவித்தான்‌-ஆசைக்களவேது? தந மதத்தால்‌ நான்காம்‌ மனவியை மணக்‌கத் தன்‌ பரிவாரத்துடன்‌ கிரமாந்தரம் சென்றான்‌. நடு வழியில்‌ ஓர்‌ மரத்தடியே அவன்‌ படுத்‌து உறங்கும்‌ போது கொடிய ஸர்ப்பமவனைத்‌ தீண்டியது , சில நிமிஷங்களுக்குள்‌ கண்‌ இருட்ட காதடைக்க நாவு உலர உயிரைத்‌ துறந்தான்‌-

அவன்‌ உடலை இலைகளால்‌ மூடி புத்ரர்கள்‌ தனது ஊருக்குக்‌ கொண்டு வந்து தீயிலிட்டார்கள்‌, இங்கனம்‌ அபமிருத்யுவால்‌ இறப்பவற் கேற்றபடி, பிரேத உடலை எடுத்‌தான்‌. தக்க காலத்திலே தநயர்கள்‌ விதிப்படி பரலோகத்‌திற்கு உசிதமான சடங்குகளைச்‌ செய்தனர்‌. சங்கு கர்ணன்‌ பாம்பை நினைத்தே இறந்ததற்கேற்க பாம்பாகவே பிறந்‌தான்‌. புத்ரர்கள் யாருக்கும் தெரியாமல்‌ ௮வன்‌ கோடிக்‌ கணக்‌கான தனத்தை எந்தவிடத்தில்‌ புதைத்து வைத்திருந்தானோ அவ்விடத்‌திலேயே தங்கி அதைக் காத்து வந்தான்‌.
ஓரிரவு தான்‌ பாப ஜன்மமெடுத்ததை நினைத்து வருந்தி தன்‌ பிள்ளைகளிடம்‌ கனவில் தோன்றி அப் பொருளை எடுத்துக்‌கொண்டு எனக்கு நல்ல கதியை அளியுங்கள்‌ என்றான்‌. மறுநாட்‌ காலையில்‌ புத்திரர்கள் அனைவரும்‌ ஒன்று கூடி ஒரே மாதிரியாக ஸ்வப்னம்‌ ஆனதைக் கூறி இது வெறுங்கனவல்ல, உண்மையே -தந்‌தையை எப்படி நற்கதி பெறும்படி செய்வது என யோசித்தனர்‌, அதில்‌ ஒருவன்‌ உண்மையாகவே பித்ரு பக்தி கொண்டு ௮வரை எப்படி. கரை எற்றுவது என எண்ணி உள்ளம்‌ உருகினான்‌. ஒருவன்‌ ௮ரவத்தை அடித்துக் கொன்று பொருளை ௮னுபவிக்கலாமென்று கருதினான்‌, மற்றொருவன்‌ தந்தை கதியை எண்ணி எண்ணிக்‌ கதறினான்‌. மத்யம புத்ரன்‌ பொருளாசையால்‌ ஒருவரிடமும்‌ கூறாமல்‌ அன்றிரவே அங்குச் சென்று அவ்விடத்தைத் தோண்ட முயற்சித்தான்‌. அதற்குள்‌ அங்கிருக்க பாம்பு சீறிக் கொண்டு -ஏ மூட நீ யார்‌? ஏனிதைத்‌ தோண்டுகிறாய் என்றது. யான்‌ தங்களது சிவனெனும்‌ குமாரன்‌, ஸ்வர்ணத்தில்‌ உள்ள மோஹத்தால்‌ இதை எடுக்க வந்தேன்‌, என்று அவன்‌ கூற,தந்‌தை அவனை நோக்கி நீ என்‌ புதல்வன்‌ ஆனால்‌ என்னை
இப் பிறவியிலிருந்து விடுவிப்பதன்றோ உனது முதற் கடமை யென்றான்‌. இதைக் கேட்ட சிவன்‌ அருமை தந்தாய்‌ -அங்கனமே செய்கிறேன்‌. அதற்கேற்ற உபாயத்தைக் கூறும்‌ என்றான்‌, தந்தை, புத்ர! தீர்த்தமோ தானமோ தவமோ என்னை இதிலிருந்து விடுவிக்காது , ஸ்ரீ பகவத் கீதையின்‌
ஏழாம் அத்யாயம் ஒன்றே என்னை விடுவிக்கவும்‌ ஜனன மரணம்‌ முதலியவற்றை அகற்றவும் வல்லது . ஆதலால்‌ எனது திதியில்‌ கீதை ஏழாமத்யாயம்‌ பாராயணம்‌ செயப்பவரைப்‌ பிராமணனாக வரித்து அன்னமிடு என்றார்‌, -இதைக்கேட்ட மத்யம புத்ரன் தன் சகோதரர்களிடம் தனக்கும்‌ தந்தைக்‌கும்‌ நடந்ததைக் கூறினான்‌. அனைவரும்‌ அங்கனமே ஸ்ரார்த்தம் செய்ய சங்கு கர்ணன்‌ திவ்ய தேஹம் பெற்று புத்ரர்‌களுக்குத்‌ தனத்தைப்‌ பிரித்துத் தந்தார்‌. புத்ரர்களும்‌ அப்‌ பொருளைக் கொண்டு குளம் வெட்டி கோயில்‌ கட்டி அன்ன தாநம்‌ முதலிய தர்மங்களையே செய்தனர்‌, அன்றியும்‌ ஏழாமத்யாயத்தின்‌ பெருமையை உணர்ந்து அவர்களும்‌ பாராயணம்‌ செய்து நற்கதி பெற்றனர்‌.

7-ஞான விஜ்ஞான யோகம்‌-30-ஸ்லோகங்கள்‌ –
ஆர்த்‌த-திரௌபதி – ஜிக்ஞாஸு : உத்தவர்‌ அர்தார்த்‌தி .- துருவர்‌ -க்ஞானீ-ப்ரஹ்லாதன்

தானின்ற உண்மையைத் தன்‌ தனி மாயை மறைத்தமையும்‌
தானன்றி மாயை தனைத்‌ தவிர்ப்பான்‌ விரகற்றமையும்‌
மேனின்ற பக்தர்கள் நால்வரின்‌ ஞானி தன்‌ மேன்மைகளும்‌
தேனின்ற செங்கழலான்‌ தெளிவித்தனன்‌ பார்த்தனுக்கே–7-

தனது உண்மையான ஸ்‌திதியையும்‌ மாயையால்‌ ௮து மறைக்கப் படுகிறதையும்‌, ௮தை அகற்ற தன்னையே அடைய வேண்டும்‌ என்பதையும்‌. தன்னை வந்தடையும்‌ நால்‌வரில்‌ ஜ்ஞானியே சிறந்தவனென்பதையும்‌ தாமரை போன்‌ற . பாதமுடைய பகவான்‌ பார்த்தானுக்குரைத்தான்‌-

8-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தஷிணா பதமெனும்‌ ப்ரதேசத்தில்‌ ஆமர்ததகம்‌ என்‌றோர்‌ பட்டணமிருக்கிறது. அங்கு பாவ சர்மா என்றோர்‌ பிராமணிருந்தான்‌. அவன்‌ பர ஸ்த்ரீகளிடம்‌ மோஹங்‌ கொண்டு மது அருந்தி மாம்ஸம்‌ உண்டு வந்தான்‌-அச் செலவிற்கு, ஸாதுக்களுடைய சொத்தைத் திருடுவான்‌. வேட்டையாடுவான்‌, ஒரு நாள்‌ அவன்‌ கழுத்துவரை பனங்‌ கள்ளைப்‌ பருகி அஜீர்ணத்தினால்‌ இறந்தான்‌. அதனால்‌ அவன்‌ ஓர்‌ வநத்‌திலே பனை மரமாகப்‌ பிறந்து இருந்தான் -அதே ஸமயத்தில்‌ குசீலன்‌ என்றோர்‌ வேதியனிருந்தான்‌.-

அவன் மனைவிக்கு குமதி என்று பெயர்‌, இருவரும்‌ தநத்தில்‌ பேராசை உள்ளவர்கள்‌. அவன்‌ வைதிகனாதலால்‌ எருமை கால புருஷன்‌ குதிரை முதலிய பல பாப தாநங்களை ப்ரதி திநம்‌ வாங்குவான்‌, ௮தில்‌ சிறிதளவு கூட நல்ல காலத்திலும்‌ நற் பாத்தரத்திலும்‌ கொடுக்க மாட்டான்‌.
இங்கனம்‌ பல நாட்கள்‌ சென்ற பின்‌ இருவரும்‌ இறந்தனர்‌. பாபத்திற்கேற்றபடி பிரும்மராஷஸர்களாக பிறந்து பசி தாஹத்துடன்‌ அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்‌-ஒரு நாள்‌ முன் கூறிய பனை மரத்தினடியே வந்து அடைந்தனர் –
மனைவி கணவனை நோக்கி எத்தனை நாள்‌ இத் துன்பத்தை அனுபவிப்போம்‌ ? இதிலிருந்து விடுபட வழி இல்லையா ?என்றாள்‌, பிரும்ம வித்யோபதேசம்‌, அத்யாத்ம விசாரம்‌,
கர்மவிதி , இவைகளைக்‌ தவிர இந்த ஸங்கடத்திலிருந்து கரை ஏற நமக்கேது வழி என்று கணவன்‌ உரைத்தார்‌. இதைக்‌ கேட்ட மனைவி அந்த ப்ரும்மம்‌ என்பதென்ன ? அக்யாத்‌மம்‌ எது ? கர்ம எது ? என வினவினாள்‌. இந்தக் கேள்விகள்‌ கீதையின்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ முதல்‌ பகுதியில்‌ அர்‌ஜூனனால் கேட்கப்பட்டவை, இதை அவ்ள்‌ கூறியவுடன்‌அப் பனை மரம்‌ முறிந்து விழுந்தது. அதிலிருந்து பாவ சர்மா திவ்ய தேஹம் பெற்று எழுந்தான்‌,
இந்த பிரும்ம ரஷஸ்‌ தம்பதிகளும்‌ ௮ந்த பாப உடலை விட்டு தேவ சரீரம் பெற்றனர்‌. அருகில் வந்த அழகிய விமாநத்‌தின் மீதமர்ந்‌து தம்பதிகள்‌ வைகுண்டம் சென்று அழியாத சுகமெய்தனர்‌, பாவசர்மா ஏனைய பாபிகளும்‌ நற் கதி அடையட்டு மென்றெண்ணி அங்கு நடந்த கதையையும்‌ எட்டாவதத்யாயத்தின்‌ முதல் பகுதியையும்‌ அங்கு நன்றாக எழுதி வைத்தான்‌. அன்றியும்‌ பூமியில்‌ மிக உயர்ந்த க்ஷேத்ரமான காசி மா நகரம் சென்று ஸ்ரீ மாதவனை ஆராதிக்கக்‌ கருதினான்‌. அங்கனமே பகவானுடைய ஸன்னதியில் அமர்ந்து இந்தக் கீதையின்‌ பகுதியை ஓயாமல்‌ ஜபம்‌ செய்து வந்தான்‌.-இதனிடையில்‌ வைகுண்டத்தில்‌ தூக்கத்தை விட்டெழுந்து பகவான்‌ எதையோ யோசனை செய்து கொண்டிருந்தார்‌, நாராயணனை நோக்கி பிராட்டி நாத! தூக்கத்தை விட்டு. என்ன யோசிக்கிறீர்கள்‌ ‘? என்று கேட்டாள்‌, காசியில்‌ பாவசர்மா என்பவர்‌ பக்தி ரஸம்‌ ததும்ப என்னைக்‌ கீதையின்‌
பாதி ஸ்லோகத்தால்‌ ஆராதிக்கிறான்‌. அதற்கேற்ற பயனளிக்க வேண்டுமே ? எதைத் தருவது? என யோசித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்று பகவான்‌ உரைத்தார்‌, அவர்‌ உடலை விட்ட பின்‌ பகவான்‌ தன் ௮ரண்மனையில்‌ தன்னருகே அவருக்கு ஸ்தாந மளித்து சாச்வசமான பேராநந்தத்‌தைகத் தந்தார்‌, அத்துடன்‌ ௮வன்‌ செய்த பாபத்தற்காக நரகத்தில்‌ பல யாதனைகளை அனுபவித்து வந்த அவனது பித்ருக்களுக்கும் உக்தம கதி யளித்தார்‌.

  1. அக்ஷர ப்ரம்ம யோகம்‌ 28 சுலோகங்கள்‌.[ அர்ஜுனன்‌ 2 பகவான்‌ 26 )

ஆராத செல்வரு மாருயிர் காணுமரும்‌ பயனும்‌
பேராத தன்‌ கழற் கீழ் அமரும்‌ பெரு வாழ்ச்சிகளும்‌
சோராதுகந்தவர்‌ தூய் மதி கொள்வதுஞ்‌ செய்வனவும்‌
தோரா விசயனுக்குத்‌ திருநாரணன்‌ செப்பினனே.
–8-

போதுமென்ற எண்ணம் தோன்றாத செல்வத்தையும்‌ ஆத்ம ஸ்வருபத்தைத் தார்சிப்பதெனும்‌ பெரும்‌ பயனையும்‌ பகவானது திருவடியை யடைந்து திரும்பாத சிறந்த புருஷார்த்தத்தையும்‌ விடா முயத்சி யுள்ளவர்‌ பெறும்‌ சுத்த அறிவையும்‌ ௮வர்‌ செய்ய வேண்டிய தசையும்‌ தோல்வி யுறாத விஜயனுக்கு நாரணன்‌ கூறினான்‌–

9-வது அத்யாயம்‌–பாத்ம கதை.
நர்மதா நதீ தீரத்தில்‌ மாஹிஷ்மதீ என்றோர்‌ பட்டணமுண்டு, அன்னகரில்‌ சிவத் விஜ மரபினிலே தோன்றிய மாதவன்‌ என்றோர்‌ வேதியரிருந்தார்‌. வேத வேதாந்தங்களின்‌ கரை கண்ட அவர்‌ கல்விக்கேற்ற செயல்‌ உள்ளவர்‌. அவர்‌ ஓர்‌ சமயம்‌ சிறந்த வேள்வி ஒன்றைச்‌ செய்தார்‌-அதில்‌ விதிப்படி, ௮ஜத்தினது வபையை எடுப்பதற்கான காரியத்தைச்‌ செய்யும் போது அது மனிதனைப் போல்‌
சிரித்துக் கொண்டு, ஸ்வல்ப பயனைக்‌ தரும்‌ இவ் வேள்விகளால்‌ என்ன பயன்‌ ? எனது நிலையைப் பாரும்‌ என்றது. இதைக்‌கேட்டு எல்லோரும்‌ ஆச்சர்யமடைந்தனர்‌. மாதவன்‌ ௮தனருகே சென்று அஞ்ஜலி செய்து “ஐயா நீர்‌ யார்‌? ஏன்‌இப் பிறவி பெற்றீர்‌ ”” என்று கேட்டார்‌.

ஆடு கூறிற்று, யான்‌ நிர்மலமான பிராமண குலத்‌திலே பிறந்‌தவன்‌, -நன்றாக வேத அத்யயனம் செய்து பல வேள்விகளைச்‌ செய்தேன்‌. எனக்கு ஸந்ததி இல்லாதிருந்து இறைவனருளால்‌ ஓர்‌ ஆண்‌ குழந்தை பிறந்தது , அது நோய்‌வாய்‌ பட்ட பொமுது அந் நோய்‌ அகல என்‌ மனைவி சண்டி தேவிக்கு ஓர்‌ ஆட்டைப்‌ பலி யிடச் சொன்னாள்‌. நானும்‌ புத்ர வாஞ்சையால்‌ அங்கனம்‌ செய்து விட்டேன்‌. அவ்வாட்‌டின்‌ தாய்‌, அதனால்‌ துக்க மடைந்து சாஸ்த்ர ஸம்மதமில்லாத வழியில்‌ என்‌ மகனைக்‌ கொன்றதால்‌ நீ ஆடாகப் பிறப்பாய்‌ என என்னைச்‌ சபித்தது-
யான்‌ பற்பல பிறவிகளைப்‌ பெற்று பல துன்பங்களை அனுபவித்த முடிவில்‌ இவ்வாடாகக்‌ தோன்றினேன்‌, ஈஸனருளால்‌ ஒவ்‌ வோர்‌ பிறப்பும்‌ எனக்கு நினைவிருக்கறது என்றது – இதைக் கேட்ட ஸதஸ்யர்கள்‌ குதூஹலத்தால்‌ நீ என்னென்ன ஜன்‌மமெடுத்தாய்‌ கூறென வேண்டினர்‌, ஆடு கூறிற்று, ஒரு ஸமயம்‌ யான்‌ குரங்காகப்‌ பிறந்தேன்‌, என்‌னைக்‌ குரங்காட்டி பிடித்து வீடு வீடாக ஆட்டி வைத்தான்‌,-ஒரு நாள்‌ எனது மனைவி மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்‌. அச் சமயம்‌ என்‌ யஜமானனிட்ட கட்டளைப்‌படி யான்‌ ஆடாதிருந்ததால்‌ ௮வன்‌ கோபங்கொண்டு என்னைத்‌ தடியாலடித்தான்‌. ௮ந்த வலியால்‌ நீரருந்தாமலும்‌ உண்ணாமலும்‌ இறந்தேன்‌, பின்னர்‌ நாயாக பிறந்து வீடு வீடாக ஓடி எச்லைத் தின்று ஜீவித்து வந்தேன் , ஒரு நாள்‌ பசியால் வருந்தி ஒருவருமில்லாத ஓர்‌ வீட்டிற்குள்‌ நுழைந்து உண விருந்த பாத்ரதில்‌ வாயை வைத்தேன்‌. அதற்குள்‌ ௮வ் வீட்டுக்‌ இழவியும்‌ சிறுவர்களுமாக ஓடி வந்து என்னைத்‌ தடியாலடித்தனர்‌. எனது எலும்புகள்‌ முறிந்து ஸந்‌தி பந்‌தங்கள் கலகலக்க ஊளை யிட்டுக் கொண்டே வெளியில்‌ வந்து வீழ்ந்தேன்-

அடிபட்டவிடத்தில்‌ புண்‌ பலமாக. புழுக்கள்‌ தோன்ற இறந்தேன்‌, அதன் பின்‌ குதிரையாகப்‌ பிறந்தேன்‌.ஒருவன்‌ பலமுள்ளவரை என்னிடம்‌ வேலை வாங்கிக் கொண்டு விற்றான்‌, அங்கோர்‌ கிழவி யாத்ரைக்குச் செல்ல என்னை. ஸ்வல்ப விலைக்கு வாங்கினாள்‌, இரண்டு மூன்று பிள்ளைகளை
என்மீது ஏற்றி கிழவியும் ஏறிக் கொண்டு துவாரகைக்குக்‌ கிளம்‌பினாள் -நடு வழியில் சேற்றில்‌ எனது கால்கள்‌ மாட்டிக்‌ கொண்டன. சிறுவர்கள்‌ என்னை வேகமாக எழுந்தொடும்‌படி பலமாக அடித்தார்கள்‌. யான்‌ அடி தாளாமல்‌ சேற்றில்‌ வீழ்ந்து உயிரைத்‌ துறந்தேன்‌, அதன் பின்‌ சாபத்தின் படி ஆடாகப் பிறந்து உன்னிடம்‌ சிக்கனேன்‌.
இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த பிராமணன்‌ ௮திருக்‌கட்டும்‌, ஸ்வல்ப பலத்தை அளிக்கும்‌ யாகத்தினால்‌ என்ன பயன்‌ என்றாயே – நித்யமான சுகத்தை அளிக்கும்‌ உபாயம்‌ யாது அதைக் கூறு என்றார்‌, ஆடு ஓர்‌ ஆச்சர்யமான விஷயத்தைக்‌ கூறுகிறேன்‌ கேள்‌ என்று , கதை கூற ஆரம்‌பித்தது .மோகத்தை அளிக்க வல்லதான. குரு ஷேத்திரத்தில் சூர்ய வம்சத்தில்‌ உதித்த சந்த்ர சர்மா என்றோர்‌ ௮ரசன் இருந்தான்‌, அவன்‌ சூர்ய கிரஹண காலத்தில்‌ கால புருஷ தாநம்‌’ செய்யக் கருதி அதற்கேற்றபொருள்களைப்‌ பரப்பி கால புருஷனை ஆவாஹநம் செய்தான்‌. தக்க தஷிணையையும்‌ வைத்து வேத வேதாந்தங்களை அறிந்த அந்த்தணோத்தமரை அதை வாங்குவதற்கு ஸன்னத்தமாயிருக்கும்படி செய்தான்‌.
அரசன்‌ புரோஹிதருடன்‌ ஸ்நாநம்‌ செய்யக் கிளம்பினான்‌–அச் சமயம்‌ கால புருஷன்‌ உறக்கச் சிறித்துக் கொண்டு ஓ. பிராமணா இந்த க்ஷேத்ரத்தில்‌ எவரும்‌ ௮ணு அளவு கூட தாநம்‌ வாங்க மாட்டார்‌, பண ஆசையால்‌ நீர்‌ எப்படி இதை வாங்கத் துணிந்தீர்‌ என்றது, , பிராமணன்‌ இத்தகைய மஹா பாப தாநங்களால்‌ வரும்‌ பாபம்‌ பெருங்கடலை ஒத்ததென்‌பதை அறிவன்‌. அதைத் தாண்ட என்னிடம்‌ ஓர்‌ உபாயம் இருக்கிறது என்று அலஷ்யமாக கூறிக் கொண்டே ஸ்நாநத்‌திற்குச் சென்றான்‌. மன்னன்‌ நீராடி சுத்த வஸ்திரம் அணிந்து விதிப்படி அவ் வேதியருக்குக்‌ கால புருஷ தாநம் செய்‌தான்‌,கால புருஷன்‌ ஹ்ருதயத்திலிருந்து அரசனது பாபங்கள்‌ ஓர்‌ சண்டாள வடிவமெடுத்துக்‌ கிளம்பியது – பர நிந்தை என்பது சண்டாளி ரூபமெடுத்து வந்தது . இருவரும்‌ அவ் வந்‌தணர் அருகே வந்து ௮வர்‌ அங்கத்தில்‌ நுழைய ஆரம்பித்தனர்‌.
உடனே அவர்‌ தன்‌ மநதில் உள்ள பகவத் கீதையின்‌ ஒன்பதாமத்யாயத்தைப்‌ பாராயணம் செய்தார்‌, அவர்‌ உடல்‌ கடலையைப் போல்‌ அசைந்தது, அனைவரும்‌ ஆச்சரியத்துடன்‌ அவருக்கு என்ன நேறுமோ என அஞ்சினர்‌, அவர்‌ ஜபம்‌ செய்த கீதாக்ஷங்களிலிருந்து விஷ்ணு கிங்கரர்கள்‌ கிளம்பி அச் சண்டாள தம்பதியை விறட்டினார்கள்‌, அவர்கள்‌ கண்ணுக்கெட்டாமல்‌ மறைந்த பின்‌ ஆச்சர்யமடைந்த அரசன் அவரை நோக்கி த்விஜோத்தமரே -இந்த பேராபத்‌தில் இருந்து எப்படி விடுபட்டீர்‌-எந்த மந்திரம்‌ ஜபித்தீர்‌?எந்த தேவதையை வேண்டினீர்‌ ? ௮ச் சண்டாள புருஷன்‌ யார்‌? ௮ச் சண்டாளி யார்‌ ? எப்படி. அவர்கள்‌ அடங்கினர்‌ ? என்று கேட்டார்‌, அதற்கு அந்தணன்‌ – அரசே. உமது பாபமெல்லாம்‌ சண்டாளனாகவும்‌ பிற நிந்தை சண்டாளியாகவும்‌ வந்தன, கீதையின்‌ ஒன்பதாமத்யாயத்தை ஸ்மரித்‌தேன்‌. அதனால்‌ இவ் வாபத்து என்னை விட்டகன்றது என்று கூறி கால புருஷ தானத்தில்‌ கிடைத்த அபரிமிதமான பொருளை எடுத்துக் கொண்டு தன்னிருப்பிடம் சென்றார்‌,-என்று ஆடு இக்கதையின்‌ மூலமாக கீதா நவம அத்யாயம்‌ எத்‌தகைய பாபத்தையும்‌ அகற்றி நற் கதியை யளிக்க வல்லது
என்பதை எடுத்துக்‌ காட்டிற்று, அதைக் கேட்ட மாதவனும்‌ ஆடின்‌றியே யாகத்தைப்‌ பூர்த்தி செய்து நவமாத்யாயத்‌தைப்‌ பாராயணம் செய்து அவர்‌ நற் கதி ௮டைந்ததுடன்‌ தனக்கு வழி காட்டிய அவ்வாட்டிற்கும்‌ கீதையால்‌ நற் கதி வருமாறு செய்தார்‌-

  1. ராஜ வித்யா ராஜ குஹ்யம்‌-34 ஸ்லோகங்கள்‌.

தன்மேன்மையும் தன் பிறப்பில்‌ தளராத்‌ தனிமையையும்‌
பன்‌ மேனி நண்ணினன்‌ பால் பிரியா வன்ப ராசைகளும்‌
புன்‌ மேனி விண்ணவர் பால்‌ புரியாததன்‌ பத்தியையும்‌
நன் மேனி நாரணன்‌ தான்‌ நரனுக்கு நவின்றனனே–9-

தனது மேன்மையையும்‌ தனது அவதாரங்களில் குறையாமல்‌ வருகின்ற குணங்களையும்‌, பலவிதமான தனது உடல்களிலும்‌ பிரியாத அன்புள்ள பக்தர்களின்‌ ஆசைகளையும்‌ அல்ப உடலுள்ள தேவர்களிடத்தில்‌ செல்‌லாது தன்னிடம்‌ செய்யும்‌ பக்தியையும்‌ நல்ல அழகுள்ள நாராயணன்‌ நரனுக்கு உபதேசித்தான் –

10-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
காசீ பட்டணத்தில்‌ தீரதீரன்‌ என்றோர்‌ பிராமணோத்‌தமனிருந்தான்‌. அவன்‌ மிக்க அடக்கமுள்ளவன்‌, புண்யசாலி, நிவிருத்கதி மார்க்கத்தில் ஈடுபட்டவன்‌, சிவபக்த்ன்ஜிதேந்திரியன்‌, எப்போதும்‌ சிவனையே மநதில்‌ தியாநம்‌ செய்வான்‌, உடல் பொருள்‌ ஆவி எல்லாவற்றையும்‌ சிவார்ப்‌பணம்‌ செய்து பற்றில்லாமல்‌ ஒப்புக்கு உலக வியவகாரத்தி லீடுபடுவான்‌, உடலை மறந்து அவன்‌ வெளியில்‌ செல்லும்‌
போது அன்புடன்‌ சிவன்‌ அவனது கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு போவது வழக்கம்‌, ஒரு ஸமயம்‌ அவர்‌ தியானநிஷ்டையில்‌ அமர்ந்த போது பிரிங்கிரிடி எனும்‌ கணன்‌ பரமனை வணங்கி பகவன்‌ இந்த தீரதீரன்‌ என்ற சாது என்ன விசேஷ புண்யஞ்‌ செய்தான்‌ ? எவருக்கும்‌ கிட்‌டாத தங்கள்‌ கரகமலம்‌ அவருக்கு எப்போதும்‌ சுலபமாகக்‌ கிடைக்கின்றதே ! என்று கேட்டான்‌. அதற்கு மஹா தேவன்‌ கூறினார்‌.-யான்‌ ஒரு ஸமயம்‌ கைலயங்கிரியில்‌ புன்னாக வநத்‌திடையே ஸகல கணங்களும்‌ சூழ வீற்று இருந்தேன் – இனிய மத்த மாருதம்‌ வீசிற்று -பக்தர்கள்‌ பணிந்து துதித்துக் கொண்டிருந்தனர்‌, இதனிடையே ஆகாயத்திலிருந்து ஓர்‌பஷி என்னெதிரே விழ்ந்தது, அதை எல்லோரும்‌ ஆச்‌சரியத்துடன்‌ பார்த்துக் கொண்டிருக்கும் போது அது திடீரென்றெழுந்து மனிதரைப் போல்‌ ஸ்பஷ்டமான வாக்கினால்‌ என்னைத் துதித்தது – யான்‌ அதைப்‌ பார்த்து நீ யார்‌? பார்வைக்கு ஹம்ஸம் போல்‌ காணப்படுகிறாய்‌ -ஆனால்‌ கறுப்‌பாக இருக்கிறாய்‌ ! உண்மையைச்‌ சொல்‌ என்றேன்‌ ! பக்ஷி என்னை வணங்கி தேவ? பிரம்மாவின்‌ வாஹமான யான்‌ மானஸ ஸரஸிலிருந்து பூமிலோகத்தை நாடிக்‌ கிளம்பினேன்‌-இடையே ஸெளராஷ்ட்‌ர நாட்டிற்கருகிலுள்ள தாமரைத்‌ தடாகத்திலிறங்கி தாமரைத்‌ தண்டுகளையும்‌ கிழங்குகளையும் உண்டு வழிக்கும்‌ சிறிது எடுக்‌துக் கொண்டு கிளம்பினேன்‌-அச் சமயம்‌ திடீரென்று புவி மீது விழுந்தேன்‌-சிறிது நேரம் சென்ற பின்‌ மோஹமகன்று நிஜ அறிவு வந்தது ,.
என்னுடல்‌ கறுப்பானதற்கு காரணமும்‌ தெரியவில்லை,.ஏன் நான்‌ விழுந்தேன்‌ ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்-அதற்குள்‌ தாமரை மலரிலிருந்து எழுந்‌திரு ஹம்ஸமே நான்‌ காரணம் கூறுகிறேன்‌ *? என்று ஒர்‌ குரல்‌ எழுந்தது -ஆச்சரியமடைந்து அதன் அருகே சென்றேன்‌-ஆங்கு ஐந்து கமலங்களை அவயவமாகக் கொண்டு ஓர்‌ பெண்‌கிளம்பினாள்‌. அவள்‌ தலை மீது ஆகாயத்திலே சங்க சக்ர
கதா பாணிகளாய்‌ பீதாம்பர தாரிகளாய்‌ மஹா விஷ்ணுவைப்‌ போல்‌ அறுபது ஆயிரம்‌ உருவங்கள்‌ காணப்பட்டன.
இதைக் கண்டு பேராச்சர்யமடைந்த யான்‌ நான்‌ ஏன்‌விழுந்தேன்‌ ? என்று முதலில்‌ கேட்டேன்‌, அதற்கு அவள்‌ என்னைக்‌ தாண்டிச்‌ சென்றாய்‌, அந்த பாபத்‌தினால்‌ விழ்ந்து கறுப்பாகவும்‌ ஆனாய்‌ என்றாள்‌. பிறகு விஷ்ணு வடிவம் தாங்கிய இவர்கள்‌ யார்‌ என்று கேட்டேன்‌. இந்த ஸரஸ்ஸின் கரை மீது தவம்‌ செய்த மஹர்ஷிகளிவர்கள்‌. ஒரு நாள்‌ ௮தி ரூப லாவண்யம்‌ வாய்ந்த ஓர்‌ யுவதி இவர்களெதிரே அழகாக வீணா காநம்‌ செய்தாள்‌, இதைக் கேட்டு பரவசர்களாகி அவளருகே ஓடினார்கள்‌. அவளது ஒப்பற்ற உருவம்‌ இவர்களது தவத்தைச்‌ சாந்தியை மறக்கும்படி செய்தது -நான் தான்‌ முதலில்‌ அவளைப்‌ பார்த்தேன்‌. நானே அவளை மணப்பேன்‌, நீ என்‌ மனைவியினருகே வரக் கூடாது என பரஸ்பரம்‌ சண்டை யிட்டுக்‌ கொண்டனர்‌, கோபம்‌ பலத்‌தன, அது எதைத் தான்‌ செய்யாது? அருகில் உள்ள கற்‌களையும்‌ கட்டைகளையும்‌ ஆயுதமாகக்‌ கொண்டனர்‌. ஒருவர்‌ கூட மிகுதி இல்லாமல்‌ அடித்துக் கொண்டு இறந்தனர் -எம லோகஞ்‌ சென்று பிரும்ம ஹத்திக்கேற்ற பற் பல கோர நரகங்களை அனுபவித்து பூமியில்‌ சண்டாளர்களாகப்‌ பிறந்தனர்‌, அந்த ஜாதிக்குரிய தொழிலுடன்‌ வழிப்‌ போக்கர்களை அடித்துப்‌ பணத்தைக்‌ கொள்ளை அடித்தனர் – தற் செயலாக ஒரு சமயம் வனத்திலுள்ள விஷ ஜலத்தை அருந்தி இறந்தனர்‌. மறுபடியும்‌ பல நரகங்களை அனுபவித்துக்‌ கழுதை ஓட்டை பூனை நரி முதலிய பிறவிகளைப்‌ பெற்று கடைசியாக இத் தடாகத்தில்‌ வண்டாகப் பிறந்தனர்‌-உனக்காக வெளியில்‌ யான்‌ வரும் போது எனது வாஸனையை முகர்ந்து விஷ்ணு ஸாரூப்யத்தை அடைந்து வைகுண்டம் செல்கின்றனர்‌ என்றாள்‌-

இதைக் கேட்டு முன்னிலும்‌ பன்மடங்கு ஆச்சரியமடைந்த யான்‌ இவ்வளவு பெருமை வாய்ந்த நீ யார்‌?உனக்கு எதனால்‌ இப் பெருமை? என்று கேட்டேன்‌, “பக்ஷி ராஜனே ! யான்‌ இதற்கு முந்திய மூன்றாவது பிறப்பில்‌ ஸரோஜ வதநா எனும்‌ ஓர்‌ பிராமண கன்யகை, எனது கணவனைத்‌ கெய்வமாகக்‌ கருதி பணி விடை செய்து வந்தேன்‌-இளைமை யானதால்‌ ஓர்‌ கிளியைப்‌ பிடித்‌துக்‌ கூட்டிலடைத்‌து அதற்கு அழகிய சொற்களைக்‌ கற்பித்தேன்‌-இதைக் கண்டு கோபங்கொண்ட என்‌ கணவன்‌ என்னைக்‌ கிளியாகும்படி சபித்தார்‌. கற்பின்‌ சிறப்பால்‌ மஹர்ஷிகள்‌ ஆச்‌ரமத்‌திலேயே கிளியாகப்‌ பிறந்தேன்‌, ஓர்‌ முநி குமரி என்னை அன்புடன்‌ வளர்த்தாள்‌. அவள்‌ தந்‌தை ப்‌ரதி திநம்‌ காலையில்‌ கீதையின்‌
விபூதி யோகம்‌ எனும்‌ பத்தாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்வார்‌. அது காதில்‌ விழ இனி ஜாதிக்‌ கேற்றபடி அவர்‌ சொன்னதை அவ்யக்கமாகக்‌ கூறி வந்தேன்‌, அந்த புண்‌யத்தால்‌ பத்மாவதி என்ற அப்ஸரஸாகப்‌ பிறந்து மஹா லக்ஷ்மியின்‌ ௮ந்தரங்ககத் தோழி யானேன்‌-தசமாத்யாயக்த்தைக்‌ கேட்டதனால்‌ இத்தகைய பெரும்‌ பாக்யம்‌ பெற்றேன் –
ஒரு சமயம்‌ விமானத்தின் மீதேறி வந்து இந்த ஸரஸ்ஸிலிறங்கி ஜல கிரீடை செய்தேன்‌. அச் சமயம்‌ துர்வாஸர்‌ அருகே வந்து விட்டார்‌, உடனே அங்குள்ள ஐந்து தாமரை மலர்களைக் கொண்டு என்‌ உடலை மூடிக் கொண்டேன்‌, அவர்‌ கோபங்கொண்டு இப்படியே நூறாண்டு ஜலத்திலிரு என்று சபித்தார்‌-கீதையின்‌ பலத்தினால்‌ எனக்கு வாக்குக்‌ கெடவில்லை. மற்றெவ்வித துன்பமும்‌ உண்டாக வில்லை, என்னைப்‌ ப்ரதக்ஷிணம் செய்யாமல்‌ தாண்டிச்‌ சென்ற உனக்கு இந்த கதி நேர்ந்தது என்று ஸரோஜவதனை தன்‌ சரிதத்தைக்‌ கூறி ஹம்ஸம்‌ முன்‌ போல்‌ வெண்மையாகவும்‌ திவ்ய கதி பெறவும்‌ கீதை தசமாத்யாயத்தை ஓர்‌ முறை பாராயணம்‌ செய்தாள்‌. உடனே ௮து அவனளித்த கமலத்தை என்‌ திருவடியில்‌ ஸமர்பித்து உடலை விட்டது என்று பரமசிவன்‌ கூறியதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த ப்ருங்கரிடி, நாத! ௮து முற்பிறவியில் யார்-என்ன தவம்‌ செய்தது ? என்று கேட்‌டார்‌.பரமசிவன்‌–பிரும்ம வாஹநமாய்‌. அமர்ந்த அந்த பக்ஷி முற் பிறவியில்‌ ஒர்‌ பிராமண பிரும்மசாரி, தவராமல்‌ குருவிற்குப்‌ பணி விடைசெய்து நியமத்துடன்‌ வேதமோதி வந்தான்‌, ஒரு நாள் இரவு தூக்கத்தில்‌ ௮வன்‌ தன்னை யறியாமல்‌ குருவின்‌ படுக்கையைக்‌ காலால்‌ தொட்டு விட்டான்‌.௮ந்த பாபத்தினால்‌ ௮வன்‌ பறவையாகப் பிறந்தான்‌. எனினும்‌ குருவிற்குச் செய்த பணி விடையால்‌ பிரும்மாவை வஹிக்கும்‌ உத்தம ஹம்ஸமாக ஆனான்‌, அந்த உடலை விட்ட பின்‌ அந்தண குலத்திலே தீரதீரன்‌ என்‌ற பெயருடன்‌ பிறந்தான்‌,பத்மினியால்‌ கூறப்பட்ட கீதை தசமாத்யாயத்தை மறவாமல்‌ இளமை முதல் ஜபித்து வருகிறார்‌, அவருக்கு எப்‌போதும்‌ வாசுதேவன்‌ கண் முன்னே தோன்றிக் கொண்டே இருக்கிறார்‌, தீரதீரன்‌ யாரைக்‌ கண்ணால்‌ பார்க்கிறானோ அவன்‌ செய்த பஞ்சமாபாதகங்களும்‌ பறந்து போம்‌. அத்‌தகைய ஸாது ஸஞ்சரிக்கும் போது காசியை விட்டு அவர்‌ வெளியில்‌ போகாதபடி அவர்‌ கரத்தை யான்‌ எப்போதும்‌ பிடித்துக் கொண்டே அவருடன் போகிறேன் -இதைக்‌ கேட்டவர் கூட உத்தம கதி அடைவர்‌ என கூறினார்‌.

10-விபூதியோகம்‌ 42 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுநன்‌ 7, பகவான்‌ 95,]

எல்லை யில்லாத தன்‌ சீலமுமின்ன முதக் கடலும்‌
எல்லை யில்லாத விபூதி யெல்லாம் தன தானமையும்‌
எல்லை யில்லாத பத்தி யெழு விக்கத் திரு வருளால்‌
எல்லை யிலீசனியம்பினன்‌ இந்திரன்‌ மைந்தனுக்கே–11-

எல்லையில்லாத தனது சீலத்தையும்‌ அமிருதக்‌ கடல்‌ போன்ற தன்‌ குணங்களையும்‌, எல்லா வஸ்‌துக்களும்‌. தனது விபூதி என்பதையும்‌ விசேஷமாக பக்தி உதிப்பதற்கும்‌ ௮து விருத்தி யாவதற்கும்‌ அநந்தனான பகவான் கருணை கொண்டு இந்த்ர புத்ரனுக்குக்‌ கூறினார்‌-

11-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
விச்வ ரூபாத்யாயமெனும்‌ இவ் வத்யாயத்தின்‌, பெருமையைக் கூறும்‌ கதைகள்‌ நூற்றுக்கணக்காக இருக்கின்றன.-௮தில்‌ ஒன்றைக்‌ கூறலாம்‌, வட நாட்டிலே ப்‌ரணீதா என்ற. நதிதீரத்தில்‌ மேகங்கரம்‌ என்றோர்‌ நகரமுளது , ௮து ஸதாசாரமுள்ள கோடீச்வர்களுச்கு இருப்பிடம்‌, அங்கு பகவான்‌ சார்ங்கபாணி திரு விக்ரமராகப் ப்ரகாஸிக்கிறார்‌, அவரருகே மேகல மென்றோர்‌ புண்ய தீர்த்தமிருக்கறது . ௮தில்‌ புனலாடி பகவானைத் தர்சிப்பவர்‌ வைகுண்டம் செல்‌வர்‌. அந் நகரில்‌ ஸுநந்தன்‌ என்றோர்‌ பிமாமணனிருந்தார்‌. கல்வி கேள்விகளில்‌ சிறந்தவர்‌ அவர்‌, இந்த்திரியங்களை அடக்கி பகவானிடத்தல்‌ ஸதா மநதைச்‌ செலுத்துவார்‌.-வாஸு தேவனருளால்‌ திவ்விய ஜ்ஞாநம் பெற்று ப்ரஹ்ம ஆனந்தத்தை அனுபவித்து வந்தார்‌, அதற்குக் காரணம்‌ அவர்‌ ஸதா பாராயணஞ் செய்யும்‌ கீதை பதினோறாமத்யாயமே,-அவருக்கு கோதாவரீ யாத்திரை செய்ய வேண்டுமென்று ஆசை தோன்றி கிளம்பினார்‌, ஆங்குள்ள விரஜம்‌ தாரா தர்க்கம்‌ முதலிய எட்டு புண்ய தீர்த்தங்களில்‌ விதிப்படி புனலாடி. பித்ரு தர்ப்பணம்‌ செய்து லக்ஷ்மீ நாசிம்மன்‌ முதலிய தேவர்களைக்‌ தர்சனம்‌ செய்தார்‌, யாத்ரிகர்களுடன்‌ கூட, மஹாலக்ஷ்மி ப்ரத்யக்ஷமாய்‌ அமைந்துள்ள கர ஸ்தாநமெனும்‌ நகரத்துக்கு வந்தார்‌. அங்கே இரவு தங்கி உறங்க ஒரு விட்டிலும்‌ இவர்களுக்கு இடங் கொடுக்க மறுத்தனர்‌,அங்கு தற்செயலாக வந்த நகர பாலகன்‌ விசாலமான ஓர்‌ மடத்தைக்‌ காட்டி அங்கு தங்கும்படி, கூறினான்‌, அங்கனமே அவர்‌ அவ் விடத்தில்‌ இரவைக் கழித்‌து காலையில்‌ எழுந்தார்‌.
தன்னுடன்‌ வந்த ஒருவரையும் காணாது தான மாத்ரம்‌ வீதியில் எரியப் பட்டிருந்ததைக்‌ கண்டு அவர்‌ சிந்திக்க ஆராம்பித்தார்‌. அச் சமயம்‌ நகர பாலகன்‌ அவரிடம்‌ வந்து ஸ்வாமி தாங்கள்‌ தைவப் பிறப்போ? நீர்‌ என்ன மந்த்ரம்‌ வைத்திருக்கிறீர்‌ ? எந்த தேவதையை உபாஸிக்கிறீர்‌ ?இல்லையேல்‌ நீர்‌ பிழைத்திருக்க முடியாது என்றார்‌. இதைக்‌ கேட்டு வியந்த ஸூநந்தர்‌ அதிருக்கட்டும்‌-இங்கு என்ன விசேஷம்‌? என்னுடன்‌ வந்தவரெங்கே ? ஏன்‌ எங்களுக்கு. ஒருவரும்‌ தங்க யிடமளிக்க வில்லை? என்று கேட்டார்‌.

நகரபாலன்‌..-ஐயோ, இங்கு ஓர்‌ ராக்ஷஸன் இருக்‌கிறான்‌,அவன்‌ இரவில்‌ வந்‌து நகர ஜனங்களை விழுங்கி வந்தான்‌. நகர ஜனங்கள்‌ அவனை வணங்கி மடத்தில்‌ வரும்‌ யாத்ரிகர்களை மாத்திரம் சாப்பிட்டு விட்டுத் தங்களை ரஷிக்கும்படி வேண்டினர்‌. அவனதை ஏற்றுக் கொண்டு மடத்தில்‌ தூங்குபவர்களை ப்‌ரதி தினம்‌ உண்பது வழக்கம்‌. நேற்றிரவில்‌ எனது புத்ரனது நண்பனொருவன்‌, இதை அறியாது இந்த மடத்‌தில்‌ தங்க அவனை அழைத்து வர என்‌ புத்ரன்‌ சென்றான்‌,
ராஷஸன்‌ அவ் விருவர்களையும்‌ விழுங்கி விட்டான்‌. இன்று காலை யான்‌ புத்ர சோகத்தால்‌ வருந்தி ௮வ் வரக்கனைத்‌ தேடி,ஐயோ ! எனது ஏக புத்ரனையும் கொன்று விட்டாயே -அவன்‌ பிழைத்து வர ஏதேனும்‌ உபாயமிருந்தால்‌ கூறென்‌றேன்‌. யானறியாமல்‌ யாத்திரிகனென அவனையும்‌ விழிங்கி
விட்டேன்‌, அவனையும்‌ என்னால்‌ கொல்லப்பட்ட ௮னைவரையும்‌ என்னையும்‌ காக்க கீதையின்‌ ஏகாதச அத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்யும்‌ ஒருவரால் தான்‌ முடியும்‌ என்றார்‌,அதற்கென்ன அவ்வளவு சக்தி என்று யான்‌ கேட்க ராக்ஷஸன் ஓர் கழுகு தனது மூக்கினால்‌. எலும்புகளைக்‌ கவ்வி ஆகாய மார்க்கமாகச்‌ சென்றது, அதிலிருந்து ஒரு துண்டு தற் செயலாக ஓர்‌ குளத்தில்‌ விழ அங்கு ஓர்‌ யோகி இது மிக உத்தம புண்ய தீர்த்தமென அதில்‌ மூழ்கி தர்ப்பணம்‌ செய்தார்‌,-அருகிலுள்ளோர்‌ நேற்று வரை இது ஸாதாரண தீர்த்தமல்லவா? இன்று எப்படி இதற்கு இவ்வளவு பெருமை என, ௮வரைக் கேட்டனர்‌. அதற்கு யோகி கீதையின்‌ ஏகாதச அத்யாயத்தைப்‌ பாராயணம் செய்யும்‌ வித்வான்‌ என்ற வேதியன்‌, திருடர்களால்‌ கொல்லப்பட்டார்‌, அவரது எலும்பு துண்டு இங்கே கழுகால்‌ போடப்பட்டது. அதனால் இதற்கு மஹிமை என்றார்‌, ஆதலால்‌ பதினோறாம்‌ அத்தியாயத்தை ஏழு முறை ஜபித்து ஜலத்தை என் மீது ப்‌ரோக்ஷித்ததால்‌ எனது சாபமகலும்‌, நேற்றிரவு மடத்தில்‌ படுத்‌தவரில்‌ ஒருவர்‌ அத் தகையவர்‌ ஆதலின்‌ அவரைச்‌ சாப்பிட முடிய வில்லை. அவரை வெளியில்‌ போட்டு விட்டேன்‌, அவரைக்‌ கொண்டு எனது சாபத்தை அகற்றி உனது புத்ரன்‌ அவனது நண்பன்‌ முதலியவர்களைப்‌ பிழைப்பிப்பாய்‌ என்றான்‌,

இதைக்‌ கேட்ட ஸநந்தர் அவருக்கு யார்‌ என்‌ சாபங்கொடுத்தது ? என்று கேட்டார்‌, நகரபாலன்‌–இவ்‌வூரில்‌ ௮வன்‌ ஓர்‌ ௮ந்தணனாகப்‌ பிறந்து உழுதுண்டு ஜீவித்‌தான்‌, அவன்‌ நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது அவ்‌வழியே செல்லும்‌ ஒருவனை ஓர்‌ கழுகு குத்திக் கொன்றது -அவனை ரக்ஷிக்கத் தக்க சக்தி இருந்தும்‌, இறந்தவன்‌ ஐயோ என்னை ரக்ஷி! என்று கத்தி அழைத்தும்‌ ௮வ்‌ வேதியனைக்‌ கவனிக்காமல்‌ உழுது வந்தான்‌, வெகு தூரத்திலிருந்து இதைக்‌ கவனித்து வந்த தவசி ஒருவர்‌, அவனைப் பார்த்‌து சரணாகதி என்பவனைக் காக்காமல்‌ சுயநலம்‌ பாராட்டியதால்‌ நீ ராக்ஷசனாவாய் என்று சபித்தார்‌. அவ்‌ வேதியன்‌, அவர்‌ காலில்‌ விழுக்து சாப விமஸனத்திற்கு வழி கேட்டான்‌.தபஸி கீதையின்‌ ஏகாதசாத்யாயத்தைத்‌ தினம் தோறும்‌ பாராயணம்‌ செய்பவர்‌ உன்னை ஜலத்தினால்‌ ப்ரோக்ஷித்தால்‌ உனக்கு நற்கதி உண்டாகும்‌ என்று கூறிச் சென்றார்‌, என்று சொன்னான்‌,
அதைக் கேட்ட ஸுநந்தர்‌ அங்கனமே எழு முறை ஜபித்து தீர்த்தத் தை அவ் வராக்கன் மீது தெளித்தார்‌,உடனே அவனும்‌ அவனால்‌ பக்ஷிக்கப்பட்ட அனைவரும்‌ சங்கு சக்‌ர கதா பாணிகளாகவும்‌ பீதாம்பர தாரிகளாகவும்‌ விஷ்ணுவின்‌ ஸாருப்ய முக்தி யடைந்து விமானத்‌திலமர்ந்து
வைகுண்டம்‌ கிளம்பினர்‌. இதைக்‌ கண்ட. நகரபாலன்‌ தான்‌ செய்த உதவிக்கு நன்றி கூறி விடைகேட்க தன்னிடம்‌ வந்த அரக்கனை நோக்கி , ஐயா இவர்களில்‌ எனது புத்ரன்‌ யார்‌ ?என்று கேட்டார்‌. ௮வர் காண்பிக்க, புத்ரனை நோக்கி அப்பா நம் விட்டிற்குச்‌ செல்வோம் வா என்று அழைத்தார் -புத்ரன் ஸ்ரீ நகரபாலனைப் பார்த்து தந்தையே! ஸம்ஸாரத்தில்‌ யான்‌ எத்தனையோ தந்தையை மைந்தனைப்‌ பார்த்தாய் விட்டது முன்னர்‌ செய்த புண்ணியத்தால்‌ தற் செயலாக ஸம்‌ஸாரம்‌ அகன்று நற்கதி கிடைத்தது ., நீரும்‌ இவ்வுத்தம பிராமணனிடம்‌ உபதேசம் பெற்று நற்கதி அடை என்று கூறி அனைவருடனும்‌ வைகுண்டம் சென்ரார்‌. அங்கனமே,நகர பாலகனும்‌ ஏகாதசாத்யாயத்கால்‌ நற்கதி அடைந்தார்‌.

11-விச்வருப தரிசனம்‌ 55 சுலோகங்கள்‌,[அர்ஜுநன்‌ 37, பகவான்‌ 10, ஸஞ்ஜயன்‌ 8.)

எல்லாந் தனக்‌ குருவாயிலங்கும்‌ வகை தானுரைத்துச்‌
சொல்லாலறிந்தது சோராமற்‌ கண்டிட வேண்டுமென்ற
வில்லாளனுக்கன்று மெய்க் கண்கொடுத் திது வேறுமுண்டோ
நல்லார்கள்‌ காண்பரென்றும்‌ நவின்றான் நங்கள் நாயகனே
–11-

உலகிலுள்ள எல்லா வஸ்‌துக்களும்‌ தனக்கு உரு என்று பகவான்‌ உபதேஸித்ததை, ஒன்றும்‌ விடாமல்‌ தர்‌ஸிக்க வேண்டுமென்று வேண்டிய காண்டீபனுக்கு திவ்ய சஷுஸ்ஸைத் தந்து வேறெவரும்‌ இதைக் காணார்‌, பக்தனே காண்பான்‌ என நமது பகவான்‌ கூறினார்‌-

12-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தஷிணா பதமெனும்‌ பிரதேசத்தில்‌ கோல்ஹாபுரம்‌ என்றோர்‌ நகரமிருக்கிறது, ௮து ஸாதுக்களுக்கு விரைவில்‌ ஸகல ஸித்திகளையும்‌ அளிக்க வல்லது, பராசக்திக்கு உயர்ந்த பீடஸ்‌தாநம்‌, அங்கு கோடிக் கணக்கான தீர்த்தங்களும்‌ லிங்கங்களு மிருக்கின்றன-ருத்ர கயா எனும்‌ பிரஸித்தமான இடமும்‌ அங்குதானிருக்கின்றது -ஒரு ராஜ புத்ரன்‌ அந் நகரை அடைந்து மணி குண்டமெனும்‌ தீர்த்‌தத்தில்‌ மூழ்கி மஹா லஷ்மியின்‌ ஸன்னதிக்கு வந்து தர்சநம்‌ செய்து அம்பாளைத்‌ துதித்தான்‌, அன்னையே ! உமக்கு பிராணிகளிடம்‌ அவ்யாஜமான கருணை, உமது அருளைக்‌ கொண்டே பிரும்மா படைக்கிறார்‌, விஷ்ணு காக்கிறார்‌-ருத்ரன்‌ உப ஸம்ஹாரம்‌ செய்கிறார்‌, உமது பெருமையைக்‌ கூற எவரே வவ்லவர்‌? ஸ குணமாகவும்‌ நிர் குணமாகவும் இருக்கிறாய்‌, பக்தர்களுக்குக்‌ கல்ப விருஷமான நீ எனக்கு அருள்‌ செய்வாய்‌ -இதைக்‌ கேட்டு ஸந்தோஷமடைந்து அவன் எதிரில் தோன்றி மகாலஷ்மி, ராஜகுமாரா ! உனக்கு வேண்டிய வராத்தைக்‌ கேள்‌ என்றாள்‌. ராஜ புத்ரன்‌, அன்னையே-எனது தந்தை அச்வமேத மெனும்‌ மஹா யாகத்தைச்‌ செய்தார்‌, அது முடிவதற்குள் நோயால்‌ அவர்‌ இறந்தார் -அவர்‌ உடலைத்‌ தீயிலிடாமல்‌ காய்ந்த எண்ணைக்‌ கொப்பரையிலிட்டு ஜாக்ரதையாக வைத்தேன்‌, ஓராண்டு திக்‌ விஜயம்‌ செய்து வந்த குதிரையையும்‌ யூப மரத்தில்‌ கட்டினேன்‌–இரவில்‌ அக் குதிரையை யாரோ கொண்டு போய்‌ விட்டார்‌.தேடித்‌ தேடி அதைக்‌ காணாமல்‌ ரித்விக்குகளிடம்‌ விடை பெற்று தங்களிடம்‌ வந்தேன்‌, தாங்கள்‌ ௮க்‌ குதிரையைத்‌ தேடித்‌ தந்து வேள்வியையும்‌ நிர் விக்நமாக பூர்த்தி செய்‌விக்க வேண்டும்‌, அப்படி செய்தால்‌ தான்‌ யான்‌ தந்தைக்குஎன்‌ கடமையைச்‌ செய்தவனாவேன்‌ என்றான்‌, லஷ்மி:பிராட்டி எனது வாயிற்‌ படியில்‌ ஸித்த ஸமாதி என்றோர்‌ பிராமணனிருக்கிறான்‌, அவனை அழைத்துப்‌ போய்‌ உனது கார்யத்தை ஸாதித்துக் கொள்‌ என்றாள்‌-

உடனே ராஜபுத்ரன்‌ அவரைத் தேடி வணங்‌கி தாயின்‌ கட்டளையைக்‌ கூறினான்‌. அந்தணர்‌ அவ்வாணையைச்‌ சிரஸா வஹித்து, ஓரிடத்தே அமர்ந்து ஏதோ ஒரு மந்திரத்தை ஜபித்தார்‌. ஸமஸ்த தேவர்களும்‌ பத்தாஞ்ஜலி செய்து கொண்டு அவரருகே வந்து நின்றனர்‌, அவர்களைப்‌ பார்த்து ஸித்த ஸமாதி இவ்வரசனது தந்தையின்‌ அச்வமேதக்‌ குதிரை இந்திரனால்‌ அபஹரிக்கப்‌ பட்டது. விரைவில்‌ ௮தை இங்கு கொண்டு சேருங்கள்‌ என்றார்‌. உடனே தேவர்கள்‌ அக் குதிரையை அவரிடம்‌ ஸமர்ப்பித்‌து வணக்‌கத்துடன்‌ விடை பெறறுச்‌ சென்றனர்‌, இதைக்‌ கண்டு ஆச்சர்ய மடைந்த ராஜ குமாரன்‌ அவரை வணங்கி, முனி : ஸ்ரேஷ்டரே .! உமது தவமே தவம்‌! ஆஹா? என்ன ஸாமார்‌த்யம்‌ ? தேவர்களைப்‌ பலாக்காரமாக இங்கு இழுத்து வந்து எனக்கு ௮ச்வத்தை அளித்தீர்‌, உம்மால்‌ ஆகாத கார்யம்‌ உலகில்‌ ஒன்றுமில்லை, என்‌ தந்‌தை பிருஹத்ரதன்‌ எனும்‌ அரசன்‌, இந்த ௮ச்வமேதக்‌ குதிரை உலகைச்சுற்றி வருவதற்குள்‌ நோய் வாய்‌ பட்டிறந்தான்‌, தயை கூர்ந்து ௮வரையும்‌ எழுப்பி விடும்‌. ௮வர்‌ உடலைக்‌ காப்பாற்றி வைத்திருக்கிறேன்‌ என்றான்‌, -இதைக்‌ கேட்டு முநிவர்‌ சிரித்துக்‌ கொண்டே ராஜ குமாரா ! ஆனால்‌ ௮ரசனது உடலுள்ள விடத்திற்குப்‌ போவோம்‌ வா என்றார்‌, இருவரும்‌ யாக சாலைக்குச் சென்றனர்‌, முநிவர்‌ கையில்‌ சிறிது ஜலத்தை எடுத்து ஜபித்து அவ் வுடல்‌ மீது தெளித்தார்‌, வேந்தன் தூங்கி எழுந்தவனைப் போல்‌ கண்களைக்‌ கசக்கிக் கொண்டே -புத்ர உனது ௮ருகில்‌ மஹா தேஜஸ்வியாய்‌ விளங்கும்‌ இவர்‌. யார்‌? என்று கேட்டான்‌, ராஜகுமாரர்‌ மஹா லஷ்மியினால்‌ அனுப்பப்பட்ட இவ் வுத்தம யோகி தேவர்களை அழைத்துக்‌ குதிரையைக்‌ கொண்டு வந்ததையும்‌ இறந்த அவரை எழுப்பியதையும்‌ கூறினான்-ஆச்சர்யமடைந்த அரசன்‌ அவர்‌ திருவடியை வணங்கி , ஸாதோ உமது சக்தி அபாரமானது .-எதணால்‌ இத்தகைய சக்தி உமக்கு உண்டாயிற்று? என்று கேட்டான்‌.மஹாராஜ! பகவத்‌ கீதையின்‌ பனிரண்டாமத்யாயத்தைச்‌ சோம்பலின்‌றி இடை விடாது யான்‌ ஜபித்து வருகிறேன்‌,௮ந்த புண்யத்தால்‌ இவை மாத்ரமல்ல இன்னும்‌ அதி விசித்தரமான கார்யங்களையும்‌ செய்யக்‌ கூடும்‌ என்றார்‌,பூ பாலன்‌ ௮வரடி பணிந்து தனக்கு அதை உபதேசம்‌ செய்யும்படி வேண்ட அவர்‌ அருள்‌ புரிந்தார்‌. அரசன்‌அதனால்‌ வேள்வியையும்‌ விக்னமின்றி முடித்து ஸத் கதி பெற்றான்‌-

12-பக்தி யோகம்‌. 20 ஸ்லோகங்கள்‌. .[அர்ஜுனன்‌ 1–பகவான்‌ 19 )

தன்‌ கழலிழ்‌ பக்தி தாழாதது மதின்‌ காரண
இன்‌ குணர்‌ சிந்தையு மீதறி யார்க் கவ்‌ வடிமை
தன்‌ கருமங்க ளறியா தவர்க் கிலகு நிலையும்‌
தன்‌ கழலன்பர்க்கு நல்லவன்‌ சாற்றினன்‌ பார்த்தனுக்கு–12-

பகவகத் பக்தி சீக்ரம்‌ பலன்‌ கொடுக்கும்‌,அதைச்‌ செய்ய முடியாதவர்‌ பகவத்‌ விக்ரஹத்தை தியாநம்‌செய்ய வேண்டும்‌. அதுவும்‌ முடியாதவர்‌ பகவத்‌ கைக்கரியம்‌ செய்ய வேண்டும்‌. ௮துவும்‌ முடியாதவர்‌ கர்மாவைச்‌ செய்ய வேண்டும்‌ என பகவான்‌ பார்த்தனுக்கு உரைத்தார் –

இரண்டாம்‌ ஷட்கம்‌ முற்றிற்று,

13-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
தென்னாட்டிலே துங்கபத்ரா நதீ தீரத்தில்‌ ஹரிஹர புரம்‌ என்றோர்‌ நகரமிருக்கிறது–தர்சந மாத்திரத்தினாலே ஸகல பாபங்களையு மகற்றக்‌ கூடிய ஹரிஹரன்‌ ஆங்கு ஆலயம் கொண்டிருக்கிறார்‌, அங்கே ஹரி தீக்ஷிதர்‌ என்றோர்‌ உத்தம வேதயரிருந்தார்‌-அவர் மிக்க உயர்‌ குணம்‌ வாய்ந்தவர்‌-அவர்‌ மனைவி பெயர்‌ துராசாரா – பெயருக்‌ கேற்றபடி மிகவும்‌ துராசாரம்‌ உள்ளவள்‌. ஒரு நிமிஷங் கூட வீட்டில்‌ தங்க மாட்டாள்‌.-வியபிசாரிணிகளுடன்‌ தான் அவளுக்கு நட்பு,புருஷனும்‌ அவனது பர்துக்களும்‌ பரம சத்ருக்கள்‌,ஒயாமல்‌ மது பாநம்‌ செய்வாள்‌, பல விட புருஷர்களைக்‌ கொண்டு தன்‌ காம வெறியைப்‌ பூர்‌த்தி செய்வாள்‌. கணவனே பந்துக்களோ வாயைத்‌ திறந்தால்‌ போதும்‌ மல்லுக்கு ஆரம்‌பித்து விடுவாள்‌. மாநத்திற்கும்‌ தர்மத்திற்கும்‌ ௮ஞ்சிய தீக்ஷிதர்‌ அதைக்‌ கவனியாமல்‌ அவளில்லாமலே தனது நித்ய நைமித்‌திக கர்மங்களைச்‌ செய்து வந்தார்‌,

வஸந்த ஸமயம்‌ வந்தது , புஷ்பங்கள்‌ மலர்ந்து மாலை யில்‌ எங்கும்‌ மணம்‌ வீசியது -பூர்ண சந்திரன்‌ தனது பூர்ண கலைகளுடன்‌ காமிகளின்‌ உள்ளத்தை மகிழ்வித்தான்‌–துராசாரையின்‌ மநம்‌ விடர்களின்‌ வீட்டை நாடிச்‌ சென்‌றது -கணவன்‌ தூங்கும்‌ வரை அவளால்‌ பொறுக்க முடிய வில்லை. நள்ளிரவில்‌ உத்யாநத்தில்‌ வந்திருக்கும்படி. ஆசை நாயகனுக்கு தூது அனுப்பினாள்‌. தீக்ஷிதரும்‌ கண்ணயர்ந்தார்‌. கதவைச்‌ தாளிட்டுக் கொண்டு துராசாரை உத்யாநம்‌ சென்றாள்‌. அளவு கடந்த மது பாநமும்‌ காம வெறியும்‌ அவளைப்‌ பயித்தியக்காரி, யாக்‌கிற்று. ஆசை நாயகனங்கு வர வில்லை, மரங்களை யெல்லாம்‌ கணவனோ எனக்‌ கட்டித்‌ தழுவினாள்‌. என் மீது கோபமா ? ஏன்‌ மறைந்திருக்கிறீர்‌ ? என வாய் விட்டுக்‌ கதறினாள்‌. இதைக் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஓர்‌ புலி விழித்தெழுந்து , அது அவளை அறைந்து நகத்தால்‌ கீறிய போது தான்‌ அவள்‌ நாயகனல்ல புலி ! தன்னை ஆலிங்கனம்‌ செய்ய வில்லை, அறைந்து கொல்கிறது என்று உணர்ந்தாள்‌, ஐயோ. என்னை ஏன்‌ கொல்கிறாய்‌ என்று அலறினாள்‌. புலி அவளைச்‌ சிறிது நேரம்‌ விட்டுத்‌ தனது விருத்தாந்தத்தைக்‌ கூறியது.-மலாபஹா எனும்‌ நதி தீரத்தில்‌ முநி பூர்ணா என்றோர்‌ நகரமிருக்கிறது , அங்கு யான்‌ ஓர்‌ பிராமணனாகப்‌ பிறந்து தகாக பல பாபங்களைச்‌ செய்தேன்‌, பலரை ஏமாற்றி பொருள்‌ தேடினேன்‌. பல பாப தாநங்களை வாங்கினேன் -கிழத்தன்மை வந்து பல்கள்‌ உதிர்ந்தும்‌ பார்வை குறைந்தும்‌ தன் ஆசை மாத்ரம்‌ குறைய வில்லை. கையில்‌ தர்ப்பையை எடுத்‌துக் கொண்டு யாசகம் செய்ய நதீ தீரஞ் சென்றேன்‌-அங்கு என்னை நாய்‌ கடித்தது – இறந்தேன்‌-பாபத்திற்கு ஏற்ப புலியாக பிறந்தேன்‌, இங்குள்ள பஞ்ச லிங்கத்தின்‌ மஹிமையால்‌ எனக்கு முற் பிறவியின்‌ நினைவு வந்தது-ஆதலின்‌ என்‌ வயிறு வளர்க்க ஸாதுக்களை விட்டு பாபிகளையே கொல்கிறேன்‌ என்று கூறி அவளைக்‌ கொன்று தின்றது -அவளை யம கிங்கரார்கள்‌ அழைத்துச் சென்று ரவ்ரவம்‌.முதலிய பற்பல நரகங்களிலே தள்ளினார்கள்‌, பின்னர்‌ அவள்‌ சண்டாளனது வீட்டிலே பிறந்தாள்‌, அங்கும்‌ பூர்வ பாபத்தினால்‌ குஷ்ட ரோகியாகவும்‌ கண்ணோய்‌ உள்ளவளாகவும்‌ பிறந்தாள்‌. அவள்‌ ஊர்‌ ஊராகச் சென்று பிச்சை எடுத்து ஹரிஹர ஷேத்‌ரத்திற்கே வந்தாள்‌, உடல்‌ மெலிந்து உணவின்றி ஓர்‌ மரத்தடியில்‌ விழ்ந்தாள்‌. தற் செயலாக கீதையின்‌ பதிமூன்றாமத்யாயத்தை ஓயாமல்‌ பாராயணம்‌ செய்யும்‌ வாசுதேவன் எனும்‌ ஸாது அதனருகே அமர்ந்து வழக்கப்படி பாராணயஞ் செய்தார்‌. ௮து அவள்‌ காதில்‌ வீழ்ந்து கொண்டிருக்கும் போதே ஆவியைத்‌ துறந்தாள்‌.யம கிங்கரர்‌ ௮ணுகுவதற்குள்‌ விஷ்ணு கிங்கரர்‌, அவளுக்குத் திவ்ய தேஹத்தைக்‌ தந்து விமாநத்தில்‌ ஏற்றி வைகுண்டத்‌திற்கு அழைத்துச்‌ சென்றார்கள்‌,

16-க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்‌-34 ஸ்லோகங்கள்‌.

ஊனின் படியும்‌ உயிரின்‌ பிரிவும்‌ உயிர் பெறுவார்‌
ஞாகம்‌ பெறு வகையும்‌ ஞாநமீன்ற உயிர்ப் பயனும்‌,
ஊனினின்‌ றதற்கடியும்‌ உயிர் வேறிடுமுள் விரகும்
தேனின்ற பரதன்‌ தெறிவித்தனன்‌ சிலைப்‌ பார்த்தனுக்கே –14-

உடலின்‌ இயற்கை, அதை விட உயிர்‌ வேறானது ஞானத்தை அடைய விரும்புபவர்‌ கைக் கொள்ள வேண்டிய குணங்கள்‌, அதனாலுண்டாகும்‌ பயன்‌, ஆத்மா தேஹத்துடனிருப்பதற்குக்‌ காரணம்‌ பிறித்தறியும்‌ உபாயம்‌ ஆகியவைகளைப்‌ பத்ம பாதன்‌ காண்டீவனுக்குச்‌ சொன்னான்‌.

14-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
காச்மீரம் எனும் தேசம்‌ ஸரஸ்வதீ தேவிக்குப்‌ பிறந்த விடு போன்றது , ஆங்குள்ள ஸரஸ்வதி தேவியைப்‌ பூஜித்‌துப்‌ பலர்‌ பிரும்ம லோகஞ் சென்றனர்‌. செளர்ய வர்மா எனும்‌ ௮ரசன்‌ அதை ஆண்டு வந்தான்‌. அவனுக்கு விக்ரம வேதாளன்‌ என்றோர்‌ நண்பனுண்டு. அவன்‌ கலைகளை நன்‌கறிந்த ஸிம்ஹ தேசத் தரசன்‌-இருவர்களும்‌ அடிக்கடி அபூர்வமான வஸ்‌துக்களை நண்பருக்கு அளித்து நட்பை வளர்த்து வந்தனர்‌, ஒரு நாள்‌ செளர்ய வர்மா மிக அழகானதும்‌ சுறு சுறுப்புள்ளதும்‌ யஜமான விச்வாஸ முள்ளதுமான இரு நாய்களை நண்பனுக்கு அனுப்பினான்‌, அதைப் பெற்று: அதற்கீடாக உத்தம கஜத்தை ஸிம்ஹளத்தரசன்‌ வனுக்‌களித்தான்‌. விக்ரம வேதாளன்‌ இன்னாய்களுடன்‌ காட்‌டிற்கு சென்றான்‌, அவனைத்‌ தொடர்ந்து பல ராஜகுமாரர்‌கள்‌ தன்‌ தன்‌ நாய்களுடன்‌ கிளம்பினர்‌, அங்கு பற் பல விளையாட்டுகளை விளையாடி, முதல்‌ முதல்‌ விரைவாக முயல்‌ மாம்ஸத்தைக் கொண்டு வருபவருக்கு இவ்வளவு வெகுமானம்‌ என ஏராளமான பொருளைப்‌ பந்தயமாக வைத்‌து முயல்‌ வேட்டை யாடினார்கள்‌. வேதாளனது நாய்களில்‌ பெண்‌ நாயை அழைத்து ஓர்‌ புதரின்‌ அருகே சென்று ‘மோப்பத்தால்‌ முயல்‌ இருக்கிறதா என கண்டறியச் சொன்‌னான்‌. அறிவுள்ள ௮து முயலிருப்பதாக ஸம்க்ஞை செய்‌தா து , உடனே வேடர்களை விட்டு புதரைக்‌ கிளப்ப ௮ங்கிருந்து முயல்‌ ஒன்று ஓடிற்று, அதைப்‌ பிடித்து வரும்படி வேந்தன்‌ நாயுக்கு உத்தரவிட்டான்‌, ௮து விரைந்து ஓட
முயல்‌ ஓர்‌ சந்தில்‌ புகுந்தது -நாய்‌ மெதுவாக கால்களால்‌ சந்தைப் பெரிதாக்கி உள்ளே நுழைந்து முயலின்‌ கழுத்தைக்‌ கவ்விக்‌ கொண்டு வந்து , அதன்‌ ஸாமர்த்யத்தைக் கண்டு அனைவரும்‌ ஸந்தோஷ ஆரவாரம்‌ செய்தனர்‌, அரசனுக்கே-வெற்றி? வெற்றி என பலர்‌ புகழ்ந்தனர்‌, இந்த கோலா
ஹலத்தைக் கண்டு நாயும்‌ ஸந்தோஷமடைந்து வாயைத்‌ திறந்தது -அதிலிருந்து விழுந்த முயல்‌ கழுத்தில்‌ ரத்தம்‌ பெருக, மெதுவாக இரண்டு முழ தூரம்‌ ஓடி விழுந்தது –
அத வத்ஸர் எனும்‌ மஹரிஷியினுடைய புண்ய ஆச்ரமம்‌,அங்கு துஷ்ட மிருகங்கள் கூட இயற்கையான துர்க் குணத்‌தை விட்டு பகைவரிடம்‌ நண்பர் போல்‌ பழகுகின்றன. புலியும்‌ பசுவும்‌, ஸிம்ஹமும்‌ யானையும்‌, பாம்பும்‌ கீரியும்‌ ஒன்று மேல்‌ ஒன்று விழந்து விளையாடுகின்றன. அங்கு ஸ்வகந்த்‌ரர்‌ எனும்‌ மாணவர்‌ காலைக்‌ கழுவிக் கொண்டிருந்தார்‌. இம் முயல்‌ அந்த ஜலத்தில்‌ விழ்ந்து பெரு மூச்சு விட்டது .
நாயும்‌ ௮தனருகே ஓடி அந்த நீரில்‌ காலை வைத்தது, இரண்‌டும்‌ உடனே தன்‌ தன்‌ உடல்களை விட்டு திவ்யமான தேஹத்‌துடன்‌ விமானத்தின் மீது காணப்பட்டன. இதைக் கண்டு எல்லோரும்‌ பேராச்சர்ய மடை.ந்தனர்‌.,
வேதாள ராஜன்‌, முநி மாணவனை நோக்கி இது என்ன ஆச்சர்யம்‌ ? இவர்கள்‌ யார்‌ எதனால்‌ இவர்களுக்கு இக்கதி என வினவினார்‌. வேந்தே! மஹா ராஷ்ட்‌ர தேசத்திலே ப்ரத்‌யுககமெனும்‌ நகரத்திலே கேசவன்‌ என்றோர்‌ பிராமணன்‌ இருந்தான்‌. ௮வன்‌ கபடமுள்ளவன்‌, சொல்வதொன்று செய்வதொன்று, விலோபநா என்ற அவன்‌ மனைவி வியபசாரிணீ -இதை ஒரு சமயம்‌ கணவன்‌ கண்ணால்‌ கண்டு விட்‌டான்‌, கோபம்‌ அதிகமாக பெண்‌ வதம்‌ என்று கூட கவனியாமல்‌ அவளைக்‌ கொன்று விட்டான்‌.சில காலஞ்‌ சென்ற. பின்‌ இவனுமிறக்க இருவரும்‌ யம புரியில்‌ சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்‌. கேசவன்‌ முயலாகவும்‌, விலோபநா நாயாகவும்‌ பிறந்தனர்‌, இப் பிறவியிலும்‌ அவர்‌களை வைரம் விடவில்லை, முற்பிறவியில்‌ மனைவியைக்‌ கொன்ற புருஷன்‌ இப்போது அவளால்‌ கொல்லப்பட்டான்‌-
எனது குரு பகவத் கீதையின்‌ பதினான்‌காமத்யாயத்‌தை ஓயாமல்‌ பாராயணம்‌ செய்பவர்‌, அவர்‌ எனக்கும்‌. அதையே இஹலோக பரலோக ஸாதகமானதென உபதேஸித்தார்‌. நானுமதைப்‌ பாராயணம்‌ செய்‌து வருகிறேன்‌-எனது கால்‌ அலம்பிய ஜலம்‌ பட்டவுடன்‌ இவ் விரண்டும்‌ பாபம்‌ அகன்று உத்தம கதியை அடைந்தன-என்று சிடன்‌ கூறினான்‌. அதைக்கேட்டு ௮ரசன்‌ கீதா ப்ரபாவத்தை உணர்ந்து மஹரிஷியிடம்‌ சென்று பதினான்காமத்யாயத்தை உபதேசம் பெற்று ஜபித்து நற்கதி அடைந்தான்‌.

14-குண த்ரய விபாக யோகம்‌-20- ஸ்லோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 1, பகவான்‌ 26].

முக்குணமே உயிர்‌ முற்றவுங் கட்டிட மூண்டமையும்‌
முக்குணமே அனைத்தும்‌ வினைகொள்ள முயன்‌றமையும்‌
முக்குண மாயை கடத்தலும்‌ முக்தி தந்தளிப்பும்‌
முக்குண மற்ற பிரான்‌ மொழிந்தான்‌ முடியோன்‌ றனுக்கே,–15-

முக்குணமே உடலில்‌ ஜீவனைக்‌ கட்டுகிறது முக்குணமே எல்லா வேலைகளையும்‌ செய்விக்கிறது , முக்‌குணமுள்ள மாயையைக்‌ கடக்கும் வழி, மூன்று வகையான கதியை அளிக்கின்றது என முக் குணத்தைக்‌ கடந்தவன்‌ கிரீடிக்கு உபதேசித்தான்‌.

15-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
கவ்ட தேசத்தில்‌ க்ருபாண நர ஸிம்ஹன்‌ என்றோர்‌ வேந்தன் இருந்தான்‌, அவன்‌ கத்தி ஒன்றையே ஸஹாயமாகக்‌ கொண்டு பகைவர்‌ அனைவரையும்‌ வென்றான்‌. ஆதலின்‌ கிருபாண (கத்தி) நரஸிம்ஹன்‌ என பெயர்‌ வழங்கிற்று.
அவனாக்ஷியில்‌ பதஞ்ஜலியாகக்‌ தோன்றிய ஸர்ப்பராஜன்‌ வியாகாண ஸூத்ரங்களுக்கு மஹாபாஷ்யம்‌ இயற்றினார்‌.அவ்வரசனுக்கேற்ற ஸேபாதிபதி ஸரப பேருண்டன்‌ என்பவன்‌, சஸ்த்திரத்லும்‌ சாஸ்திரத்திலும்‌ கரை கண்டவன்‌,
ஸேநா பதிக்கு ௮ரசனைப்‌ பரிவாரத்துடன் கொன்று தானே தரணியை ஆள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று, அதற்குத்‌ தக்க ஸமயத்தைக்‌ தேடிக் கொண்டிருந்தான்‌.தைவச் செயலாக, விஷுசீ (வாந்திபேதி) எனும்‌ நோய்‌ கண்டு அவன்‌ இறந்தான்‌. அவன்‌ குதிரை ஏற்றத்தில்‌ மிகஆசை கொண்டவன்‌, இறக்கும் போது குதிரையை நினைத்‌தே இறந்தான்‌. ஆதலின்‌ சிந்து தேசத்திலே மிக்க லஷ்ணம்‌ வாய்ந்த உத்தம குதிரையாகப்‌ பிறந்தான்‌. ௮ரசனிடம்‌ அன்புள்ள ஓர்‌ வியாபாரி ௮தை விலைக்கு வாங்கி வந்து சிம்ம ராஜனுக்களித்தான்‌, அரசன்‌ அதன்‌ மதிப்பிற் கேற்ற விலையும் தந்து தனக்கே இதைக்‌ கொடுக்க வேண்டுமென்ற அன்‌பிற் கேற்ற ஸம்மானம் செய்தான்‌. அன்று முதல்‌ வேந்தன்‌ அதைப்‌ பட்டத்துக்‌ குதிரையாகக்‌ கருதி தக்க அலங்காரம்‌ செய்து போஷித்து வந்தான்‌. ஒரு நாள்‌ ௮தன்மீதேறி’ வேட்டை ஆட வநஞ்சென்றான்‌. மான்‌ கூட்டமொன்று வெகுதூரம்‌ வநத்தில்‌ இழுத்துச்சென்றது. பரிவாரங்கள்‌ பின்னே தங்கி விட்டன அரசன்‌ தாகத்தால்‌ வருந்தி ௮ச்வத்தை இர்‌ ஆலமரத்‌திலே கட்டிவிட்டு அருகிலுள்ள ஓர்‌ இலைமீதேறி எங்கேனும்‌ தீர்த்த மிருக்கிறதோ என்ரு பார்த்தான்‌,
அதற்குள்‌ அவன்மீது விசாலமான ஓர்‌ இலை வீழ்ந்தது -அதைக்‌ கையில்‌ எடுத்தான்‌, அதில்‌ ஓர்‌ பாதி சுலோகம்‌. எழுதப் பட்டிருக்க, அதைப்‌ படித்தான்‌. அருகிலுள்ள அச்வம்‌ உடனே அவனியில்‌ விழ்ந்தது, ஓர்‌ திவ்ய புருஷன்‌ விமாநத்திலேறி வானுலகஞ்‌ செல்லக் கண்டான்‌. அந்த இலையுடன்‌ கீழ இறங்கி குதிரையை எழுப்பிப்‌ பார்த்தான்‌… என்ன பாடுபட்டும்‌ ௮து எழுந்திருக்க வில்லை, பாதசாரியாக அவ் வநத்தினுள்ளே சிறிது தூரஞ்சென்றான்‌. அங்கு ,மஹர்ஷி ஆச்ரமம்‌ காணப்பட்டது. அங்குள்ள மாமூநிவரைப்‌ பணிந்து நடந்த ஆச்சர்யத்தைக் கூறி இதற்கென்ன காரணமென்று கேட்டான்‌. முநிவர்‌ அரசனுக்கு ௮திதி பூஜை செய்து ஆஸநக்திலமர்த்தி ஞாநக் கண்ணால்‌ அதை நன்றாக அறிந்து கூறினார்‌. வேந்தே உம்மைக்‌ கொன்று உமது ராஜ்யத்தை ஆளக்கருதிய உமது சேனாதிபதி விஷுதியால்‌ இறந்து இவ் வச்வமாகப்‌ பிறந்தான்‌. கர்ம வசத்தால்‌ உம்மையே சுமந்தான்‌, உம் மீது விழுந்த இலையின் மீது எனது சிஷ்யன்‌ விளையாட்டாக கீதையின்‌ பதினைந்தாமத்யாயத்தின்‌ ஒர்‌ பகுதியை எழுதினான்‌. அதை நீர்‌ படிக்க. அது அச்வத்தின்‌ காதல்‌ வீழ்ந்தது, உடனே அதன்‌ பாபமனைல்தும்‌ அகன்று வைகுண்டஞ் சென்‌றது . ஓர்‌ பகுதியின்‌ ஸ்ரவணத்தால்‌ குதிரைக்கே உத்தம ௧தி எனில்‌ இவ்‌வத்யாயத்தின்‌ பெருமையை யார்‌ கூற முடியும்‌ ? என்று முனிவர்‌ கூறினார்‌. ௮ரசன்‌ தன்‌ நாட்டிற்கு இம் முநிவரை அழைத்துச் சென்று தன்‌ புதல்வனுக்குப்‌ பட்டஞ்‌ சூட்டி பதனைந்தாமத்யாயத்தை அவரிடம்‌ உபதேசமாகப்‌ பெற்று, நற்கதி ௮டைந்தான்‌.

புருஷோத்தம யோகம்‌ 20 ஸ்லோகங்கள்‌.

மூவெட்டிலும்‌ ௮தான்‌ மோஹமடைந்த உயிர்களிலும்‌
நா வெட்டெழுத்தோடு நல்விடு நண்ணின்‌ நம்பரிலும்‌
மேவெட்டு வன்குண விண்ணோர்களிலும்‌ விஜயனுக்குத்‌
தாவிட்டு உலகளந்தான்‌ தன்னை வேறென்று சாற்றினனே..
–18-
இருபத்து நான்கு வகையான ஷரத்தைக்‌ காட்டிலும்‌ ௮தில்‌ மோஹமடைந்தவரைக்‌ காட்டிலும அஷ்‌டாஷரத்தால்‌ முக்தி பெற்றவரைக்‌ காட்டிலும்‌ எட்டு நற்குண முள்ள நித்ய ஸுரிகளைக் காட்டிலும்‌ புருஷோத்தமன்‌ வேறு என உலகளந்தான்‌ விஜயனுக்கு உபதேசித்தான்‌.

    16-வது அத்யாயம்‌–பாத்ம கதை,
    கூர்ஜரநாட்டிலே சவ்ராஷ்ட்ரம்‌ என்னும் நகரத்தை கட்கபாஹு எனும்‌ அரசன்‌ ஆண்டுவந்தான்‌, அவனுக்கு . அரிமர்த்தனன்‌ என்றோர்‌ பட்டத்து யானை இருந்தது, ௮து ஓரு சமயம்‌ மதங் கொண்டு கட்டுத் தரியிலிருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு கட்டுடக் கடங்காமல்‌ கிளம்பிற்று, பல மா வத்தர்கள்‌ அதைப் பிடிக்க முயற்சித்தும்‌ அவர்களைத்‌ துதிக்கையால்‌ வாரி தூர எரிந்து விட்டுக்‌ கிளம்பிற்று, வீதியில்‌ நடமாடுபவர்‌ அனைவரும்‌ பயந்து உள்ளே புகுந்து கதவைத் தாளிட்டுக்‌ கொண்டனர்‌. சிலர்‌ ஜன்னலில்‌ ஒளிந்து வேடிக்‌கை பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌. அரசன்‌ இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து ராஜ புத்ரர்களுடன்‌ அரண்மனை மாடி மீதிருந்து வீதியில்‌ அந்த யானை செய்யும்‌ அட்டஹாஸத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தான்‌, அது வீலிட்டுக்‌ கத்திக்‌ கொண்டும்‌ அருகிலுள்ள மரங்களையும்‌ தூண்களையும்‌ பிடுங்கி எறிந்து கொண்டும்‌ சென்றது, ௮து இன்னும்‌ என்ன செய்யுமோ என்று ஜனங்கள்‌ நடுங்கினர்‌, அதற்கு எதிராக ஓர்‌ பிராமணன்‌, ஸ்நானம் செய்து சுத்தனாக கீதையின்‌ பதினாறா மத்யாயக்தைப்‌ பாராயணம்‌ செய்து கொண்டு வந்தார் -ஜனங்கள் மேலிருந்தபடியே யோ! உள்ளே வாரும்‌, பதுங்கிக் கொள்ளும்‌, கட்டுக் கடங்காமல்‌ யானை மதம்‌ பிடித்து வருவது உமக்குத் தெரிய வில்லையா ? என்று கூக்‌குறலிட்டனர்‌, பிராமணன்‌ அவர்களைப் பார்தது அவர்கள்‌ செய்த உதவிக்கு ஜாடையாக நன்றி செலுத்தி விட்டு ௮தே வழியாய்‌ தைரியமாகச்‌ சென்றார்‌, இவ்வளவு ௮ட்டஹாஸஞ்‌ செய்த ௮ந்த யானை இவரைக் கண்டவுடன்‌ மிக சாந்தமாக அவரை முட்டி யிட்டுப்‌ பணிந்து எழுந்திருப்பதற்குக்‌ கூட அவராணையை எதிர் பார்த்து நின்றன, அவர்‌ ஸம்க்ஞை
    செய்தவுடன்‌ மாவுத்தர்கள்‌ வழக்கப்படி சங்கிலியால்‌ அதைக்‌ கட்டி கஜ சாலைக்கு அழைத்துச்‌ சென்றனர்‌-அரசனும்‌ மற்றவர்களும்‌ பரம ஆச்சர்ய பரிதர்களாகி அந்த பிராமணனிடம்‌ வந்து வணங்கி ஸாதோ? உம்மிடத்‌தில்‌ என்ன வச்ய மந்த்ரமிருக்கிறது ? என்று கேட்டனர்‌.
    ௮வர்‌ கீதையின்‌ பதினாராமத்யாயத்தில்‌ சில ஸ்லோகங்களை ஸதா பாராயணம்‌ செய்வேன்‌. அந்த பெருமையால்‌ இன்னும்‌ இதை விட உயர்ந்த எத்தனையோ ஸித்திகளைக்‌ கண்டேன்‌ என்றார்‌, இதைக் கேட்ட அரசன்‌ அவரை அரண்மனைக்கு அழைத்து வந்து லஷக் கணக்கான திரவ்யத்‌தைக்‌ கொடுத்து உபசரித்து பதினாராமத்யாயத்தை உபதேசிக்கும் படி செய்தான்‌. பின்னர்‌ பல ஆண்டுகள்‌ சென்ற
    பின் அதே யானைக்கு முன் போல்‌ மதமுண்டாயிற்று. -மாவுத்தன்‌ தன்னால்‌ ஆனவரை அடக்க முயன்றும் பயனில்லாது பயந்து ஓடினான்‌, வேந்தன் தைர்யமாக கீதா பலத்தைக் கொண்டு அஞ்சாமல்‌ அதனருகே சென்றான்‌.உடனே ௮து அடங்கி வணங்கிற்று, ௮ரசன்‌ மதம்பிடிக்த
    யானையையே அடக்கிய கீதை மனதை அடக்காதோ என்று புத்ரனிடம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்து விட்டு ஸதா கீதை பதினாறாமத்யாய பாராயணம் செய்து மோக்ஷ மடைந்தான்‌.

    16-தேவாஸாுர ஸம்பத்‌ விபாக யோகம்‌–24 ஸ்லோகங்கள்‌.
    ஆணை மாறாதவர்‌ தேவர்‌ ௮ல்லா வழக்கோர்‌ ௮சுரர்‌
    கோணை மறாத குணச் செல்வ நீ குறிக்கொள்‌ மறையைப்‌
    பேணிய தத்துவமும்‌ பிணி யற்ற கிரிகைகளும்‌
    காணிதனால்‌ விஜயா வென்று கண்ணனியம்‌பினனே,-
    -17-
    பகவதாக்ஞையை மீறாதவர்‌ தேவர்‌,அதைச் செய்யாமல்‌ விரோதமாகப்‌ பேசுகிறவர்‌ அசுரர்‌-கோணலை விட்டு பகவதாக்ஞையை விடாத குண சம்பத்‌துள்ள விஜயா? இதைச்‌ செய்யலாம்‌, இதைச்‌ செய்யக்‌கூடாது என்பதற்கு வேதமே ப்ரமாணம்‌, அதனால்‌ தத்‌துவமும்‌ நிஷ்காம்ய கர்மாவும்‌ ௮றியத் தக்கதென கண்ணன்‌ உபதேசித்தார்‌.

    17-வது அத்யாயம்‌–பாத்மி கதை,
    முன் கதையில்‌ ஸெளராஷ்ட்‌ர பதியான கட்க பாஹுவின்‌ யானைக்கு மதம் பிடித்தது என்று கூறினோமல்லவா ?-அச் சமயம்‌ ராஜ குமாரனுக்குப்‌ பணிவிடை செய்யும்‌ துச்சாஸனன்‌ என்ற இங்கரன்‌, தன்னுடன்‌ உள்ள பாலர்களிடம்‌ இந்த யானை மீது நான்‌ ஏறி அதை அடக்கி விடுகிறேன் -என்ன பந்தயம்‌ கொடுக்கிறீர்கள்‌ என்று வீரம் பேசி அதனிடம்‌ சென்றான்‌, மற்றவர்‌ வேண்டாம்‌! ?வேண்டாம்‌ கொன்று விடும்‌ என்று கூறிக் கொண்டே இருக்கும்‌போது அதன் பின்‌ ஓடினான்‌. அருலுள்ளோர்‌ அவனை
    பலாத்காரமாக தடுக்கும் போது ஓ கஜமே எனக்கு நீ பணியத் தான்‌ வேண்டும்‌. இல்லையேல்‌ உன்னை அங்குசத்தால்‌ குத்துவேன்‌ என்று கூறிக் கொண்டே ஒடினான்‌. இதைக்‌கேட்டு யானை பின்னால்‌ திரும்பிற்று. எல்லோரும்‌ பயந்து ஓடினார்கள்‌, துச்சாஸனன்‌ இடரி விழுந்தான்‌, யானை அவனைத்‌
    துதிக்கையால்‌ தூக்கிச்‌ தலைகீழாக இறிது நேரம்‌ நிறுத்தி பூமியில்‌ அறைந்தது , அவன்‌ இறந்த பின்பும்‌ கோபத்தால்‌ யானை ௮வன்‌ கை கால்களைத்‌ தனித் தனியாகப்‌ பிய்த்து எறிந்தது . யானையால்‌ இறந்த ௮வன்‌ கர்ம வசத்தால்‌ ஸிம்மலத்வீ பத்தில்‌ ஒர்‌ யானையாகவே பிறந்தான்‌. ஜய தேவன்‌ எனும்‌ அத்தேச அரசன்‌ தன் நண்பனான கட்க பாகுவுக்கு ௮ந்த யானையைப்‌ பரிசாக அளித்தான்‌, அது தனது ஊருக்கே வந்து தமது பந்துக்களைப் பார்த்தவுடன்‌ பூர்வ ஜன்ம நினைவு உண்டாகி தன் செயலை நினைத்து வருந்திக் கொண்டே இருந்ததுஒரு மகா கவி கட்கபாகுவின்‌ ஸபைக்கு வந்து அரசன்‌ சொன்ன ஓர்‌ பகுதியைக் கொண்டு சொல்‌ சுவை நிறைந்தஓர்‌ ஸ்லோகத்தைச்‌ சொன்னார்‌. தன்‌ கருத்துக் கிசைந்த அதைக் கேட்ட அரசன்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்து கவிக்கு அந்த யானையையும்‌ நூறு பவுனையும்‌ ஸந்மானம்‌ செய்தான்‌. கவி சிறிது காலம்‌ கெளரவத்திற்காக அதை வீட்டில்‌ வைத்திருந்தார்‌. யானைக்குத்‌ தீனி போட யாரால்‌ முடியும்‌? கவி மாலவதேச மன்னனிடம்‌ ௮தை விற்று விட்‌டார்‌. அங்கு சென்று சில ஆண்டுகள்‌ சென்ற பின்‌ யானைக்கு ஜ்வரம்‌ உண்டாயிற்று, எவ்வளவு சிகித்ஸை செய்தும்‌ நோய்‌ அகல வில்லை, நீரும் அருந்தாமல்‌ உணவும்‌ உட் கொள்ளாமல்‌ ௮து நாளுக்கு நாள்‌ இளைத்து இறக்கும்‌ தருவாயில்‌ இருந்தது -பாகர்கள்‌ ௮ரசனை நேரில்‌ அழைத்து வந்து ௮தைக் காட்டினார்‌கள்‌, ௮ரசன்‌ அதைக்‌ கவலையுடன்‌ பார்‌த்‌துக் கொண்டிருக்‌கும் போது எல்லோரு மாச்சர்யப் படும்படி ௮து மனுஷ்யனைப்‌ போல்‌ பேசிற்று–அரசே எதற்காக கவலைப் படுகிறிர்‌-என்னோய்‌ எந்த சிகித்ஸையாலும்‌ அகலாது, யான்‌ நற் கதி பெற உமக்கு விருப்ப மிருந்கால்‌ கீதை பதினேழாம் அத்யாயம்‌ பாராயணம் செய்யும்‌ ஸாதுவை அழைத்து வாரும்‌ என்றது-௮ரசன்‌ அமைச்யர்களை அனுப்பி நாடு நாடாகத் தேடி அத்‌தகைய பெரியோரை அழைத்து வந்தான்‌. யானையின்‌ சொற்படி அவர்‌ அதைப்‌ பாராயணம்‌ செய்யும் போது, யானை உடலை விட்டு திவ்ய தேஹம் பெற்று விமானத்தின் மீதேறியது . முன்னிலும்‌ பன் மடங்கு ஆச்‌சரியமடைந்த வேந்தன்‌ அவரைப் பார்த்து நீர்‌ யார்‌ ? ஏன்‌ யானை யானீர்‌ ? எப்படி இவ் வுடல்‌ கிடைத்தது என்ற கேட்க, அவர்‌, தான்‌ துச்‌சாஸானனாக இருந்து யானையால்‌ கொல்லப்பட்டு யானையாக பிறந்ததையும்‌, கீதை பதினேழாமத்யாய மஹிமையால்‌ தான்‌ வைகுண்டம்‌ போவதையும்‌ கூறினார்‌. மாலவ தேசாதிபதியும்‌ அன்று முதல்‌ கீதை பதினேழாமத்யாய பாராயணம்‌
    செய்து உத்தமகதி அடைந்தான்‌.

    17-ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்‌-28 ஸ்லோகங்கள்‌.[அர்ஜுனன்‌ 1, பகவான்‌ -27)

    மறை பொருந்தாதவை வல்லசுரர்க்கு வகுத்‌தமையும்‌
    மறை பொருந்தும் நிலையும்‌. வன் குணப்படி மூவசையும்‌
    மறை நிலை தன்னை வகுக்கும்‌ குறி மூன்றின் மேன்மையையும்‌
    மறை யுமிழ்ந்தா னுரைத்தான்‌ வாஸவன்‌ தன்‌ இறுவனுக்கே,

    வேத விரோதமானவை அசுரர்களுக்கு
    ஏற்பட்டன, வேதோக்த கர்மாக்கள்‌ முக் குணங்களால்‌ வேறு படுகின்றன. வேதோக்கமானததை மூன்று அடையாளங்கள்‌ மற்றதை விட இது வேறென காட்டுகின்றன என்று வேதங்களைக் கூறிய பகவான்‌ இந்திரன்‌ புத்ரனுக்கு உபதேசித்தார்‌,

    18-வது அத்யாயம்‌–பாத்ம கதை.
    இந்த அத்யாயம்‌ ஸமஸ்த சாஸ்தரங்களின்‌ தத்வ சாரம்‌-ஸநகர்‌ முதலிய யோகிகளுக்கு இன்பம் தருவது , இதைப்‌ படிக்க ஆரம்பித்தவுடன்‌ யம கிங்கார்‌ பயந்தோடுவார்‌-நூற்றெட்டு நோய்களை அகற்ற கைகண்ட அருமருந்து -இதைத் தாவிற வேறு ரஹஸ்யமானது கிடையாது –
    பாதகங்களை அகறறவல்ல அமிருதமிது -, மலைகளில்‌ கை லாஸம்‌, தேவர்களில்‌ இந்த்ரன்‌, தீர்த்தங்களில்‌ புஷ்கரம்‌, புஷ்பங்களில்‌ தாமரை, பதிவிருதைகளில்‌ அருந்ததி , யாகத்‌தில்‌ ௮ச்வமமேதம்‌, தானத்தில்‌ பூதாநம்‌ எப்படி சிறந்தததோ அப்படி எல்லா நூல்களிலும்‌ கீதை சிறந்தது -கீதையிலும்‌ பதினெட்டாமத்யாயம்‌ மிக மிக உயர்ந்தது, மேரு மலை மீது அமராவதி எனும்‌ அழகிய பட்டணம்‌ பரமசிவனது லீலையின்பொருட்டு விச்வ கர்மாவால்‌ படைக்கப்பட்டது. பின்‌னர்‌ அது திருலோகாதிபதியான இந்த்ரனுக் களிக்கப்பட்‌டது . வேண்டிய வரத்தை அளிக்கும்‌ சிந்தா மணிகளாலேயே அங்கு அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது . ஒரு சமயம்‌ இந்த்ரன்‌ இந்த்ராணியுடன்‌ ஸிம்மாசநத்தில்‌ வீற்றிருக்க தேவ கணங்களனைவரும்‌ அங்கு சூழ்ந்து இருந்தனர் -அச் சமயம்‌ விஷ்ணு தூதர்களும்‌ அங்கு வர இந்த்ரன்‌ அவர்‌களை அழைத்து அர்ச்சித்து ஆஸநத்தில்‌ அமர்த்தினான்‌,அவர்களுடன்‌ சசீபதி யோக ஷேமம்‌ விசாரிக்துக் கொண்டு இருக்கும் போது ஆயிரம் கண் கொண்ட மற்றோர்‌ இந்திரன்‌ அங்கு வரக் கண்டான்‌. அவனுடைய தேஜஸ்‌ எல்லோரையும்‌ பிரமிக்கச் செய்தது -அவரைக் கண்டவுடன்‌ விஷ்ணு தூதர்‌ எழுந்து வரவேற்று தேவ கணங்களுடன்‌ இந்த்ரன்‌ சிம்மாசநத்தருகே அழைத்துச்‌ சென்றனர்‌. பழைய இந்த்‌ரன்‌ திடீரென்று ஆஸநத்திலிருக்து பூமியில்‌ விழ, அங்கு ஆஸநத்ததிலே புதிய இந்திரனை உட்கார வைத்து பட்டாபிஷேகம் செய்தனர்‌. இந்த்ரனுக்குரிய ஸகல உபசாரங்களும்‌ அவனுக்கே செய்யப்பட்டன, இந்த்ராணியும்‌ அவர்‌ மடி மீது அமர்ந்தாள் -இதைக் கண்டு பழைய இந்த்ரன்‌ சிந்‌தித்தான்‌, இவன்‌ யார்‌? இப்பதவிக்குரிய நூறு அச்வ மேதங்களை இவன்‌ செய்யவில்லை, தண்ணீர் பந்தல்‌ தடாகம்‌ சாலையில்‌ மரம்‌ வைத்தல்‌ விந்திய மலை மீதுள்ள தேவனைத்‌ தேவியுடன்‌ தர்‌சித்தல்‌ விரஜாநதி ஸ்நாநம்‌ காசி யாத்ரை மாதா புரத்தில்‌ வசிக்கும்‌ ரேணுகா தேவி தர்சநம்‌, காவேரிக்‌ கரையிலுள்ள ரெங்கநாத தர்சநம்‌, துர்பிஷ காலத்தில்‌ அன்ன தானம்‌, வெயில்‌ காலத்தில்‌ தண்ணீர் பந்தல்‌ தேவாலயங்கட்டல்‌, சரணாகதர்களை ரக்ஷித்தல்‌ முதலிய எந்த புண்யத்தையும்‌ இவன் செய்ய வில்லை. எப்படி இவன்‌ விஷ்ணு தூதர்களால்‌ இந்த்ர பதவியில்‌ ௮மர்த்தப்பட்டான்‌ என்று பகவானையே கேட்போம்‌ என்‌று வைகுண்டஞ் சென்றான்‌. அங்கு பகவானைப்‌ பணிந்து போற்றி பகவன்‌ நூறு வேள்விகளைச் செய்து யான்‌ இப்‌ பதவி பெற்றேன் -இப்போது புதிதாக வந்து எனது ஸ்தாநத்தில்‌ அமர்ந்தவன்‌ வேள்விகளைச்‌ செய்ய வில்லை. இதர புண்யங்களையும்‌ செய்ய வில்லை, அவன்‌ எப்படி இந்திரன் ஆனான் என வேண்டினான் -பகவான்‌ பன்னகை புரிந்து கூறினார்‌, இந்த்ரா அவன் செய்த புண்யத்தின்‌ எதிரே யாகங்களோ மற்ற புண்யங்களோ என்ன செய்யும்‌ ? கீதையின்‌ பதினெட்டாமத்யாயத்‌தில்‌ ஐந்து ஸ்லோகங்களை ப்ரதி திநம்‌ ஸ்ரத்தையுடன்‌ பாராயணஞ்செய்து ௮வன்‌ என்னைப்‌ பரவசப்‌ படுத்தி விட்டான்‌.அதற்காக இப்பதவி அளிக்கப்பட்டது , இதைக்‌ கேட்டு கீதையின்‌ மஹிமையை உணர்ந்த இந்த்ரன்‌ பிராமண வேஷம்‌ பூண்டு பூமியில்‌ பதினெட்டாமத்யாய பாராயணம்‌ செய்யும்‌ ஸாதுவைத்‌ சேடினான்‌. கோதாவரி தீரத்தில் காலிகா க்ரமத்தில்‌ அத் தகைய ஓர்‌ பிராமணோத்தமர்‌ கிடைத்தார்‌. அவரைப்‌ பணிந்து உபதேசம் பெற்று ஸ்ரத்‌தையுடன்‌ பூர்ணமாக ப.தினெட்டாமத்யாயத்தைப்‌ பாராயணம்‌ செய்து வந்தான்‌-அந்த புண்யத்தால்‌ பிரும்ம பதவி வரை உள்ள எல்லாம்‌ துச்சம்‌, நஸ்வரம்‌ என்று எண்ணி
    அவைகளை விட்டு மஹா விஷ்ணுவின்‌ ஸாயுஜ்ய பதவியைப்‌ பெற்றார்‌,

    18-மோக்ஷ ஸன்யாஸ யோகம்‌-78 ஸ்லோகங்கள்‌-[அர்ஜுன்‌ 2, பகவான்‌ 71, ஸஞ்ஜயன்‌ 5)

    ஸத்துவ வீடுடை நற் கருமமம் தானுகந்தமையும்‌
    ஸத்துவ முள்ளது தான்‌ குறிக்கொள் வகை செய்தனவும்‌
    ஸத்வ நற் கிரிசைப்‌ பயனும் சரணாகதியும்
    ஸத்துவமே தருவானுரைத்தான்‌ தனிப் பார்த்தனுக்‌கே–19-

    ஸாத்துவிக தியாகக்துடன் செய்யும்‌ சத் கர்மாவால்‌ பகவான்‌ சந்தோஷப்படுகிறார்‌. ஸத்வ குணமுள்ளதையே செய்வதென தீர்மானித்து செய்ய வேண்டும்‌. ஸத்‌வ குணத்தால்‌ கர்மாவைப்‌ பகவதாராதநமாக செய்து சரணாகதி அடைய வேண்டும்‌, என ஸத்வத்தையே அளிக்கும் பகவான்‌ பார்த்தனுக்கு உபதேஸித்தார்‌.

    பல ஸ்ருதி .
    வன் பற்றறுக்கு மருந்தென்று மாயவன்‌ தானுரைத்த
    இன்பக்கடல முதா மென நின்றவிக்‌ கீதை தன்னை
    அன்பர்க்குரைப்‌பவர்‌ கேட்பவரா தரித்து ஓதுமவர்
    துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே –20-

    விஷய வாஸனையை அகற்றும்‌ மருந்து கீதை என பகவானே கூறினான்‌, இன்பக் கடலான பாரதத்தில்‌ கடைந்தெடுத்த அமிருதமிது . இதைப்‌ பக்தருக் குரைப்பவர்‌ அனைவரும்‌ ஸம்ஸாரத்திலிருந்து விடு பட்டு சுகம் பெறுவர்‌-

    தீதற்ற நற் குணப் பாற் கடல்‌ தாமரைச் செம்‌ மலர் மேல்‌
    மாதுற்ற மாயன்‌ மருவிக்‌ கீதையின்‌ வண்‌ பொருளைத்‌
    தோற்ற நான்மறை மெளலியின்‌ ஆசிரியன் குறித்தான்‌
    காதத்று ணிவிடையார்‌ கற்கும் வண்ணம்‌ கருத்துடனே–21-

    திருப்பாற் கடலில்‌ செந் தாமரை மீது அமர்ந்த குற்றமில்லாது நற்குணமமைந்த பிராட்டியுடன்‌ கூடிய மாதவன் சந்தோஷமடைய கீதையின் சிறந்த பொருளைக்‌ குற்றமற்ற வேதாந்த தேசிகன்‌ பக்தர்கள்‌ ஊக்கமாகப்‌ படிக்க சுறுக்கமாக இயற்றினார்‌,


    ஒரு காலத்தில் இந்த பூமியே ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால், இதற்குப் பத்ம புராணம் என்று பெயர் வந்தது. வேத வியாசருக்குப் பின் இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு ஏழு அத்தியாயங்களையும், 55000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது. இக் காண்டங்கள் சிருஷ்டி காண்டம்; பூமி காண்டம் சுவர்க்க காண்டம் பிரம்ம காண்டம்; பாதாள காண்டம் உத்தர காண்டம் கிரியா யோகா முதலியனவாகும்.

    சிவசர்மாவின் கதை

    முன்னொரு காலத்தில் பல முனிவர்கள் ஒன்றுகூடி உரோமஹர்ஷனரிடம் பத்ம புராணத்தைத் தங்களுக்குக் கூறுமாறு வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கிணங்கி உரோமஹர்ஷனரே சிவசர்மாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

    மிகப் பழங்காலத்தில் துவாரகையில் சிவசர்மா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். வேதங்கள், அதன் அங்கங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சிவசர்மா, மந்திர சக்தியால் பல அற்புதங்களைச் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

    அவருக்கு யக்ஞசர்மா, வேதசர்மா, தர்மசர்மா, விஷ்ணு சர்மா, சோமசர்மா என்ற ஐந்து புதல்வர்கள் இருந்தனர். தம் பிள்ளைகள் தம்மிடத்தில் எவ்வளவு பணிவும், சொன்னதைச் செய்யும் திட சித்தமும் உடையவர்களாக இருந்தனர் என்பதை அறிய சிவசர்மா விரும்பினார். தம்முடைய அபூர்வ சக்தியால் தம் மனைவியைப் போல மாய மனைவியை உண்டாக்கி அவள் இறந்து போகுமாறு செய்தார். தம் மூத்த மகனாகிய யக்ஞ சர்மாவை அழைத்து, “உன் தாய் இறந்துவிட்டாள். அவள் உடம்பு வீட்டை அசுத்தம் செய்கிறது. கத்தி எடுத்து அவள் உடம்பைப் பல துண்டங்களாக வெட்டித் தூரத்தே எறிந்து விடு’ என்று ஆணையிட்டார். ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் தந்தையின் கட்டளையை யக்ஞசர்மா செய்து முடித்தான். மகனுடைய பணியைக் கண்டு மகிழ்ந்த சிவசர்மா தன் மாயா சக்தியால் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணை உற்பத்தி செய்து, தன் இரண்டாவது மகனாகிய வேதசர்மாவிடம் அனுப்பினார். மகனை அழைத்து, “இந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்; அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். அந்தப் பெண் வேதசர்மாவிடம் வந்து ‘உன் தந்தை மிகவும் வயதானவர், நோயுற்றுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றாள். வேதசர்மா தான் மணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறி, எப்படியாவது தன் தந்தையை அவள் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே அந்தப் பெண் நான் சொல்வதற்கு நீ கட்டுப்படுவதானால் உன்

    தந்தையைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றாள். அவள் என்ன விதித்தாலும் அதைச் செய்வதாக வேதசர்மா ஒப்புக்கொண்டான். அப்பெண் “உன் தலையை வெட்டி என் கையில் கொடுக்க வேண்டும். உன் தலை என் கைக்கு வந்தவுடன் உன் தந்தையை மணந்து கொள்கிறேன்’ என்றாள். மறுவார்த்தை பேசாமல் வேதசர்மா . தன் தலையை வெட்டி அவள் கையில் கொடுத்தான்.

    வேதசர்மாவின் வெட்டுண்ட தலையை மூன்றாவது மகனாகிய தர்மசர்மாவிடம் சிவசர்மா கொடுத்தார். அந்தத் தலையை வைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக தர்ம தேவதையை தியானம் செய்தான், தர்மசர்மா. தர்ம தேவதை நேரில் வந்தவுடன் என் அண்ணனின் உயிரைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அப்படியே அண்ணன் பிழைத்தவுடன் இருவருமாகச் சென்று தந்தையை வணங்கி நின்றனர். மகிழ்ச்சியடைந்த சிவசர்மா, நான்காவது மகனாகிய விஷ்ணுசர்மாவை அழைத்து, நீ இந்திர லோகம் சென்று இந்திரனிடம் கொஞ்சம் அமிர்தத்தை வாங்கி வா என்றார். விஷ்ணுசர்மா இந்திரலோகம் சென்று அமிர்தத்தைத் தேடுகையில் இவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்று இந்திரன் மேனகையை அவனிடம் அனுப்பினான். மேனகை அவனை மயக்கி, நாம் இருவரும் மணம் செய்துகொண்டால் மிகச் சிறப்பான இன்பத்தைத் தருவேன்’ என்று கூறினாள். விஷ்ணுசர்மா அதற்கு இசையாமல் போகவே, துர்த்தேவதைகளை அனுப்பி விஷ்ணுசர்மாவைக் கலைக்க முயன்றான்.

    அதற்கும் விஷ்ணுசர்மா மசியவில்லை என்றவுடன், தேவேந்திரன் ஒரு பாத்திரத்தில் அமிர்தத்தைக் கொடுத்தார். விஷ்ணுசர்மாவும் அந்த அமிர்தத்தைக் கொண்டுவந்து சிவசர்மாவிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா இந்த நான்கு பிள்ளைகளையும் நேரே விஷ்ணுலோகம் போகுமாறு அனுப்பி வைத்தார்.

    எஞ்சியிருக்கும் ஐந்தாவது பிள்ளையான சோமசர்மாவை அழைத்து, “நானும் உன் தாயாரும் தீர்த்தயாத்திரை போகிறோம். அதுவரை இந்த அமிர்தத்தை கவனமாகப் பாதுகாத்து வைத்திரு” என்று கூறிவிட்டு, அமிர்தத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போனார். சிலகாலம் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட உடம்புடன் சோமசர்மாவிடம் வந்து சேர்ந்தனர். அவன் முகம் சுளிக்காமல் அவர்களுக்குப் பணிவிடை செய்தான். சிவசர்மா தேவை இல்லாமல் கோபித்துக் கொண்டு சோமசர்மாவை வாயில் வந்தபடி ஏசினார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சோமசர்மா தொண்டு செய்தான்.

    ஒருநாள் திடீரென்று, உன்னிடம் அமிர்தத்தைக் கொடுத்து வைத்திருந்தேனே, அதைக் கொண்டுவா’ என்றார். மகனுக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே சிவசர்மா அந்த அமிர்தத்தைக் காணாமல் போகுமாறு செய்தார். இதை அறியாத சோமசர்மா பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து, தன் பெருஞ் சக்தியால் அந்தப் பாத்திரம் நிறைய அமிர்தத்தை வரவழைத்துத் தந்தையிடம் கொண்டு நீட்டினான். மகனுடைய சக்தியில் மகிழ்ச்சி அடைந்த சிவசர்மா மனைவியை அழைத்துக் கொண்டு நேரே விஷ்ணு லோகம் போய்விட்டார். தனியே விடப்பட்ட சோமசர்மா ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது துர்த்தேவதைகள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் கவனத்தைத் திருப்ப முயன்றன. தேவதைகளைக் கண்டு பயத்தால் இறந்து போனான். அதனால் அடுத்த ஜென்மத்தில் ஹிரண்யன் என்ற அரக்கனுடைய மகனாகப் பிரகலாதன் என்ற பெயருடன் பிறந்தான். மிகுந்த புண்ணியம் செய்திருந்ததால் அரக்கனாகப் பிறந்தும், மிகுந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான் பிரகலாதன்.

    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ நாரத பக்தி சூத்திரம்

    May 23, 2026

    வியாசரை பாகவதம் எழுதத் தூண்டுவதற்காக பக்தியின் பெருமையை இந்த சூத்ரங்கள் மூலமாகக் கூறுகிறார்.

    அத்தியாயம் 1: பக்தியின் மதிப்பு

    சூத்ரம் 1
    அத அதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம:
    அத (अथ) – இப்பொழுது
    அத:-(अत: )- ஆகையால்
    பக்திம்- (भक्तिं )- பக்தி என்பது என்ன என்று
    வ்யாக்யாயாம:-(व्याख्यास्याम:)-விளக்குவோமாக

    ஆகவே, கடவுள் மீதான தூய அன்பை (பக்தியை) நான் இங்கு விளக்குகிறேன்

    அத (अथ) என்ற சொல் ஒரு செயலுக்கோ எண்ணத்துக்கோ பிறகு தொடர்வதைக் குறிக்கிறது. இங்கு வியாசரின் பக்தியைப் பற்றி அறியும் ஆர்வத்தை தூண்டிய பிறகு அத:-(अत: )-பக்தி என்பது மிகவும் முக்கியம் ஆகையால் பக்தியைப் பற்றி விளக்குகிறேன் என்று சொல்கிறார் நாரதர்.

    சூத்ரம் 2
    ஸா து அஸ்மின் பரமப்ரேம ரூபா

    ஸா து- அந்த பக்தியோவேன்றால்
    அஸ்மின்- இறைவனிடத்தில் 
    பரமப்ரேமரூபா- எல்லை அற்ற அன்பு என்பது.

    பக்திப்பூர்வமான சேவையானது, கடவுள் மீதான மிகவும் மேன்மையான, தூய்மையான அன்பாக வெளிப்படுகிறது

    ராமானுஜர் பக்தி என்றால் என்ன என்பதை கீழ்க்கண்டவாறு கூறுகிறார் . த்ருவச்ம்ருதி , அதாவது தைல தாரையைப் போல் இடையறாத பகவத்யானம். கோபாலபூர்வதாபினி உபநிஷத்தில் அது பின்வருமாறு சொல்லப்படுகிறது. ‘பக்தி: அஸ்ய பஜனம்;ஏதத் இஹா ஆமுத்ர உபாதி நைராச்யேன அமுஷ்மின் மன:கல்பனம்.’இதன் பொருள்,
    இம்மையிலோ மறுமையிலோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவன் மேல் ஈடுபாட்டுடன் பக்தி செய்வது. இதத்தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே .’ என்றார்.-பாகவதத்தில் கிருஷ்ணர் கோபியரின் அன்பைப் பற்றி உத்தவரிடம் கூறுகிறார் ,
    தா ந அவிதன் மயி அனுஷங்கபத்த திய: 
    ஸ்வாத்மானம் அதை: ததா இதம் 
    யதா சமாதௌ முனைய: அப்திதோயே 
    நத்ய: பிரவிஷ்டா இவ நாமரூபே (பாக.11.12)

    “எண்ணங்கள் என்னிடம் லயிக்க அவர்கள் தங்கள் உடலையோ காலதேசத்தையோ உணர்ந்தாரில்லை. அவர் நிலை யோகிகள் ஸமாதி நிலையை ஒத்தது. எவ்வாறு நதிகள் கடலை அடைந்த பின் தங்கள் நாமரூபத்தை இழக்கின்றனவோ அதுபோல.”ஹனுமான் கூறுகிறார், 
    தேஹ புத்த்யா து தாஸோ அஹம் ஜீவபுத்த்யாது த்வதம்சக:
    ஆத்மபுத்த்யா த்வமேவ அஹம் இதி மே நிச்சிதா மதி:

    நான் தேஹம் என்ற பாவனையில் உன்னுடைய தாசன்., நான் ஜீவன் நீ என் அந்தராத்மா என்ற நிலையில் நான் உன் அம்சம். நாதான் ஆத்மா என்ற பாவனையில் நீயே நான். 
    இதைவிட த்வைதம் , விசிஷ்டத்வைதம், அத்வைதம் இவைகளை தெளிவாக விளக்க முடியாது. 
    இதுவே பரபக்தி.,

    அமிர்தஸ்வருப சா

    இந்த தெய்வீக அன்பு அதன் உள்ளார்ந்த இயல்பிலேயே அழியாத பேரின்பமாகும்.கடவுள் மீதான இந்தத் தூய அன்பு நித்தியமானது-தெய்வீக பக்தி எனப்படும் இறைவனின் மீதான உன்னத அன்பு, அழியாத தன்மையையும் உடையது.

    யல்லப்த்வா புமான் சித்தோ பவதி , அமிர்தோ பவதி த்ரிப்தோ பவதி

    கடவுள் மீதான இந்தத் தூய அன்பு நித்தியமானது.அதை அடைவதன் மூலம், ஒருவர் பரிபூரணமானவராகவும், அழியாதவராகவும், என்றென்றும் திருப்தி அடைந்தவராகவும் ஆகிறார்.கடவுள் மீதான தூய அன்பில், தெய்வீக பக்தித் தொண்டின் அந்த நிலையை அடையும்போது, ​​ஒருவர் பரிபூரணமானவராகவும், அழியாதவராகவும், அமைதி உடையவராகவும் ஆகிறார்.இந்த உன்னத பக்தியைப் பெறுவதன் மூலம், பக்தன் பரிபூரணத்தையும் அழியாமையையும் அடைந்து, மிகுந்த மனநிறைவு அடைகிறான்

    கடவுள் மீதான தூய அன்பில், தெய்வீக பக்தித் தொண்டின் அந்த நிலையை அடையும்போது, ​​ஒரு நபர் பரிபூரணமானவராகவும், அழியாதவராகவும், அமைதி உடையவராகவும் ஆகிறார்.

    சூத்ரம் 5
    யத் ப்ராப்ய ந கிஞ்சித் வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே ந உத்ஸாஹீ பவதி 
    இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.

    அத்தகைய தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர், புலனின்பத்திற்காக எதையும் விரும்புவதில்லை; எந்த இழப்பிற்காகவும் வருந்துவதில்லை; எதையும் வெறுப்பதில்லை; தன் சொந்த நலனுக்காக எதையும் அனுபவிப்பதில்லை; உலகியல் செயல்களில் மிகுந்த ஆர்வம் கொள்வதில்லை.

    யஜிநத்வா மத்தோ ভவதி ஸ்தব்தோ ভவத்யாத்மராமோ ভவதி-பக்தன் முதலில் ஆனந்தப் பரவசத்தில் மூழ்கலாம். பின்னர், அதை உணர்ந்தபின், அவன் செயலற்று மௌனமாகி, ஆத்மாவில் இன்பம் காண்கிறான்-பகவான் மீதான அன்பினால் செய்யப்படும் பக்தித் தொண்டின் செயல்முறையை முழுமையாகப் புரிந்துகொள்பவர், அதன் வெளிப்பாட்டில் பரவசமடைகிறார். சில சமயங்களில், அவர் பரவசத்தில் திகைத்து, பரமாத்மாவின் சேவையில் ஈடுபட்டு, தன் முழு ஆன்மாவையும் அனுபவிக்கிறார்.-எந்த பக்தியை அறிந்தவனோ, அதில் ஒருவன் பரவசமடைந்து, மௌனமாகி, ஆத்மாவில் இன்பம் காண்கிறான்.

    இறை அன்பில் செய்யப்படும் பக்தித் தொண்டின் செயல்முறையை முழுமையாகப் புரிந்துகொள்பவர், அதன் பிரவாகத்தில் திளைக்கிறார். சில சமயங்களில் அவர் பரவசத்தில் மதிமயங்கி, பரமாத்மாவின் சேவையில் ஈடுபட்டு, தன் முழு ஆன்மாவையும் அனுபவிக்கிறார்-

    ச ந கமயமாநா நிரோதரூபத்வாத்–பக்தியே எல்லா ஆசைகளுக்கும் தடையாக இருப்பதால், அதைக் கொண்டு எந்த ஆசையையும் நிறைவேற்ற முடியாது.-தூய பக்தித் தொண்டில் காமத்திற்கு இடமில்லை, ஏனெனில் அதில் எல்லா உலகியல் செயல்களும் துறக்கப்படுகின்றன-அது துறவு இயல்புடையதாக இருப்பதால், அந்த தெய்வீக அன்பில் ஆசையின் அம்சம் ஏதுமில்லை.

    தூய பக்தித் தொண்டில் காமத்திற்கு இடமில்லை, ஏனெனில் அதில் எல்லா உலகியல் செயல்களும் துறக்கப்படுகின்றன.

    நிரோধஸ்து லோகவேদவ்யாபரந்யாஸঃ ।–துறவு என்பது உலகியல் மற்றும் புனிதமான அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகும்.-பக்தித் தொண்டில் அத்தகைய துறவு என்பது, வேதக் கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் எல்லாவிதமான சமூகப் பழக்கவழக்கங்களையும் மதச் சடங்குகளையும் கைவிடுவதாகும்.-உண்மையில், துறவு என்பது அனைத்து உலகியல் மற்றும் மதச் செயல்பாடுகளையும் முற்றிலுமாகத் துறப்பதாகும்.

    பக்தித் தொண்டில் அத்தகைய துறவு என்பது, வேதக் கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் அனைத்து வகையான சமூகப் பழக்கவழக்கங்களையும் மதச் சடங்குகளையும் கைவிடுவதாகும்.

    தஸ்மிந்நநந்யதா தদ்விரோধிஷுদாசிநாதாச்ச–9-ஒரு பக்தரின் துறவு என்பது, அவருடைய முழு ஆன்மாவும் இறைவனை நோக்கிச் செல்வதும், இறை அன்பிற்குத் தடையாக இருப்பவை அனைத்தையும் நிராகரிப்பதுமாகும்.-துறவு என்பது, இறைவனுக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதையும், அவருடைய சேவைக்குத் தடையாக இருப்பவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் குறிக்கும்.இறைவனிடம் முழு மனதுடன், ஒரே குறிக்கோளுடன் கூடிய பக்தியும், அதற்கு முரணான மற்ற எல்லாவற்றிலும் முழுமையான பற்றின்மையும் கொள்வதே துறவறத்தின் இயல்பாகும்.

    துறத்தல் என்பது, ஆண்டவருக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதையும், அவருடைய சேவைக்குத் தடையாக இருப்பவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் குறிக்கும்-

    அந்யாஸ்ரயணம் த்யாகோ அந்யதா-10-முழுமனதுடனான பக்தி என்பது மற்ற எல்லாப் புகலிடங்களையும் துறந்து, இறைவனிடம் தஞ்சம் அடைவதாகும்.-இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிப்பது என்பது மற்ற எல்லா புகலிடங்களையும் துறப்பதாகும்.-மற்ற எல்லா ஆதரவுகளையும் துறப்பதே முழு மனதுடன் கூடிய பக்தியாகும்.-

    கர்த்தருக்கு மட்டுமே நம்மை அர்ப்பணிப்பது என்பது, அவரைத் தவிர மற்ற எல்லா புகலிடங்களையும் துறப்பதாகும்.

    லோகவேதேஷு தদநுகூலாசரணம்தদ்விரோধிஶுদாசிநாதா-11-இறை அன்புக்கு எதிராகச் செயல்படுவனவற்றை நிராகரிப்பது என்பது, இறை பக்திக்கு உகந்த உலகியல் மற்றும் புனிதமான செயல்களைச் செய்வதாகும்-பக்தித் தொண்டிற்குத் தடையாக இருப்பவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பது என்பது, பக்தித் தொண்டிற்கு உகந்த சமூக வழக்கம் மற்றும் வேதக் கட்டளைகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாகும்.-கடவுளுக்கு உகந்த அனைத்து உலகியல் மற்றும் சமயப் பணிகளையும் செய்வதும், கடவுளுக்கு விரோதமான செயல்கள் அனைத்தின் மீதும் முழு அலட்சியம் கொண்டிருப்பதும்… (அதுவே “அலட்சியம்”).-

    பக்தித் தொண்டிற்குத் தடையாக இருப்பவற்றைப் புறக்கணிக்குதல் என்பது, பக்தித் தொண்டிற்கு உகந்த சமூக வழக்கங்கள் மற்றும் வேதப் பரிந்துரைகளின் செயல்களை மட்டும் ஏற்றுக்கொள்வதாகும்.

    ভவது நிஶ்சயদாদ்யாদூர்ধ்வம்ஶாஸ்த்ரரக்ஷணம் ।-12-ஒருவரின் ஆன்மீக வாழ்க்கை கடவுளில் உறுதியாக நிலைபெறாத வரை, வேதவாக்கியங்கள் பின்பற்றப்படலாம்.-வாழ்க்கையில் பரிபூரணத்துவத்தை அடைவதற்கு பக்தித் தொண்டே ஒரே வழி என்ற உறுதியான நம்பிக்கையில் ஒருவர் நிலைபெற்ற பிறகும், சாஸ்திரங்களின் கட்டளைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.இவ்வாறு முழு மனதுடன் கூடிய பக்தி வாழ்க்கை வாழத் தீர்மானித்த பின்பு, வேத போதனைகளின் பாதுகாப்பு உண்டாகட்டும்.

    வாழ்க்கையின் பரிபூரணத்தை அடைவதற்கு பக்தித் தொண்டே ஒரே வழி என்ற உறுதியான நம்பிக்கையில் ஒருவர் நிலைபெற்ற பிறகும், சாஸ்திரங்களின் பரிந்துரைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    அன்யதா பதித்ய சங்கய--13-ஏனெனில், இல்லையெனில் கீழே விழும் அபாயம் உள்ளது.-இல்லையெனில் கீழே விழுவதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன.-அல்லது, (ஆன்மீகப் பாதையிலிருந்து) வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

    இல்லையென்றால் கீழே விழுவது மிகவும் எளிது.

    லோகோபி தவதேவ கிந்து ভோஜநாদிவ்யபரஸ்த்வஶரீரধரணவধீ–14-ஒருவரின் இறை அன்பு தீவிரமடையும் வரை மட்டுமே சமூகப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றலாம்; ஆனால், உடலைப் பாதுகாப்பதற்கு அவசியமான உண்ணுதல், பருகுதல் போன்ற செயல்களைக் கைவிடக்கூடாது.-உடல் இருக்கும் வரை, சமூக, அரசியல் நடவடிக்கைகளிலும், உணவு போன்ற விஷயங்களிலும் மிகக் குறைவாகவே ஈடுபட வேண்டும்.பல்வேறு சமூகத் தொடர்புகளில் உள்ள உலகியல் கடமைகளும், (புற உலகத்தைப் பற்றிய உணர்வு நம்மிடம் இருக்கும் வரை) அந்த அளவிற்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்; ஆனால், உண்ணுதல் போன்ற செயல்கள், உடல் இருக்கும் வரை நிச்சயமாகத் தொடரும்.

    உடல் இருக்கும் வரை, சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும், உணவு உண்ணுதல் போன்ற விஷயங்களிலும் மிகக் குறைவாகவே ஈடுபட வேண்டும்.

    அத்தியாயம் 2: பக்தியை வரையறுத்தல்-

    தல்லக்ஷணாநி வச்யந்தேநாநாமதபேதாத்–15-முனிவர்களின் கண்ணோட்டங்களில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக, தெய்வீக அன்பின் பண்புகள் அவர்களால் பலவிதமாக விவரிக்கப்பட்டுள்ளன-இப்போது, ​​பக்தி சேவையின் பண்புகள் பல்வேறு அதிகாரப்பூர்வமான கருத்துக்களின்படி விவரிக்கப்படும்.மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால், அதன் (பக்தியின்) பண்புகள் இப்போது விவரிக்கப்படுகின்றன.

    இப்போது, ​​பக்தி சேவையின் பண்புகள் பல்வேறு அதிகாரப்பூர்வ கருத்துக்களின்படி விவரிக்கப்படும்.

    பூஜாদிஷ்வாநுரகே இதி பராசார்யঃ–16-பராசரரின் வம்சாவளியைச் சேர்ந்த வியாசர், பக்தி என்பதை வழிபாடு மற்றும் அது போன்ற செயல்களில் ஈடுபடுதல் என வரையறுக்கிறார்.-பராசர முனியின் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீல வியாசதேவர், பக்தி என்பது பகவானைப் பல்வேறு வழிகளில் வழிபடுவதில் உள்ள பேரன்பு என்று கூறுகிறார்.-ஆழ்ந்த அன்போடும் உறுதியான பற்றோடும் இறைவனை வழிபடுவதில்” என பராசரரின் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ வேத வியாசர் கூறுகிறார்.

    பராசர முனியின் மகனான ஸ்ரீ வியாசர், பக்தி என்பது இறைவனைப் பல்வேறு வழிகளில் வழிபடுவதில் உள்ள பேரன்பு என்று கூறுகிறார்.

    கதாதிஷ்விதி கர்கா–17-கடவுளின் நாமத்தைக் கேட்பதிலும் அதைப் புகழ்வதிலும் உள்ள பக்தியே பக்தி என கார்கே முனிவர் வரையறுக்கிறார்.பகவானைப் பற்றிய, பகவானால் கூறப்படும் கதைகள் போன்றவற்றின் மீது கொள்ளும் பிரியமே பக்தி என்று கர்க முனிவர் கூறுகிறார்.-இறைவனின் மகிமைகள் முதலிய கதைகளைக் கேட்பதில் மிகுந்த பற்றுதல் கொள்வதே பக்தி” என்கிறார் மகரிஷி கர்கர்.

    பகவானைப் பற்றிய, பகவானால் சொல்லப்படும் கதைகள் போன்றவற்றின் மீது கொள்ளும் பிரியமே பக்தி என்று கர்க முனிவர் கூறுகிறார்-

    ஆத்மராத்யவிரோதேநேதி சாண்டில்யঃ–18-சந்திலிய முனிவர், பக்தி என்பதை, கவனத்தை சிதறடிக்கும் எண்ணங்கள் அனைத்தையும் தவிர்த்து, ஆத்மாவில் மட்டுமே இன்பம் காண்பது என்று வரையறுக்கிறார்-பரமாத்மாவில் இன்பம் காண்பதற்கு உள்ள எல்லாத் தடைகளையும் ஒருவன் அகற்றுவதாலேயே பக்தி உண்டாகிறது என்று சந்தில்யர் கூறுகிறார்.-உள்மனப் பற்றுக்கு முரண்படாத இறை பக்தியே உண்மையான பக்தி” என்கிறார் சாண்டில்ய முனிவர்.

    பரமாத்மாவில் இன்பம் காண்பதற்கு உள்ள எல்லாத் தடைகளையும் ஒருவன் அகற்றுவதாலேயே பக்தி உண்டாகிறது என்று சாண்டில்யர் கூறுகிறார்.-

    நாரদஸ்து தদர்பிடখிலாச்சரதদ்விஸ்மரணே பரமவ்யகுலதேதி–19-நாரதர் பக்தியின் அறிகுறிகளாக இவற்றைத் தருகிறார்: எல்லா எண்ணங்களும், எல்லா வார்த்தைகளும், எல்லா செயல்களும் இறைவனிடம் ஒப்படைக்கப்பட்டு, இறைவனைப் பற்றிய மிகச்சிறிய மறதிகூட ஒருவரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தும்போது, ​​அப்போது அன்பு தொடங்கிவிட்டது.-இருப்பினும், நாரதர், ஒருவன் தன் ஒவ்வொரு செயலையும் பரம இறைவனுக்கு அர்ப்பணிப்பதும், அதை மறப்பதில் மிகுந்த துயரத்தை அடைவதுமே பக்தி என்று கூறுகிறார்-தேவர்ஷி நாரதரின் கூற்றுப்படி, “எல்லா செயல்களையும் இறைவனின் பீடத்தில் முழுமையாக அர்ப்பணிப்பதும், இறைவனை மறக்கும் எல்லாத் தருணங்களிலும் தாங்க முடியாத வேதனைகளை அனுபவிப்பதும்” உன்னதமான தெய்வீக அன்பு (பக்தி) ஆகும்

    எனினும், நாரதர், ஒருவன் தன் ஒவ்வொரு செயலையும் பரம இறைவனுக்கு அர்ப்பணிப்பதும், அவரை மறப்பதில் மிகுந்த துயரம் கொள்வதுமே பக்தி என்று கூறுகிறார்.-

    அஸ்த்யேவமேவம்–20-அன்பின் அத்தகைய பரிபூரண வெளிப்பாடுகளுக்கு உதாரணங்கள் உள்ளன.-உண்மையில், பக்தி என்பது இந்த ஒவ்வொரு விதத்திலும் சரியாகவே விவரிக்கப்பட்டுள்ளது.-அது மேலே விவரிக்கப்பட்டபடியே இருக்கட்டும்.

    பக்தி என்பது, உண்மையில், இந்த ஒவ்வொரு வழிகளிலும் சரியாகவே விவரிக்கப்பட்டுள்ளது.-

    யதா விரஜகோபிகானம்–21-விரஜ கோபியர்கள் கொண்டிருந்தபடி.-விரஜ கோபியர்கள் தூய பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.-விரஜ கோபியர்களின் அன்பைப் போலவே.-

    விரஜத்தின் இடையர் பெண்கள் தூய பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.-

    தத்ராபி நாமஹாத்ம்யஜ்ஞாநவிஸ்மৃத்யபவদঃ-22-கிருஷ்ணரைத் தங்கள் காதலராக வழிபட்டபோதிலும், கோபிகள் கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மையை ஒருபோதும் மறக்கவில்லை.-கோபியர்களின் விஷயத்தில்கூட, அவர்கள் இறைவனின் மகத்துவத்தை மறந்ததற்காக அவர்களைக் குறை கூற முடியாது.-அங்கும், இந்த பரிபூரண அன்பு நிலையில், இறைவனின் மகிமையை மறக்கும் அபாயம் இல்லை

    கோபியர்களின் விஷயத்தில்கூட, அவர்கள் இறைவனின் மகத்துவத்தை மறந்ததற்காக அவர்களைக் குறை கூற முடியாது.-

    தத்விஹினம் ஜரநாமிவ–23-கிருஷ்ணரே கடவுள் என்ற ஞானம் அவர்களிடம் இல்லாதிருந்தால், அவர்களுடைய காதல், உலகியல் காதலன் ஒருவன் தன் காதலி மீது கொள்ளும் கீழ்த்தரமான காமத்தைப் போல இருந்திருக்கும்.-மறுபுறம், இறைவனின் மகத்துவத்தை அறியாமல் காட்டப்படும் பக்தி வெளிப்பாடுகள், முறையற்ற உறவுகளில் ஈடுபடுவோரின் விவகாரங்களை விடச் சிறந்தவை அல்ல.-கர்த்தருடைய மெய்யான சுபாவத்தை அறியாத அன்பு, முறையற்ற காதலின் மீதுள்ள முறையற்ற அன்பைப் போன்றது.-

    மறுபுறம், கடவுளின் மகத்துவத்தைப் பற்றிய அறிவு இல்லாமல் காட்டப்படும் பக்தி, முறையற்ற உறவுகளில் ஈடுபடுவோரின் விவகாரங்களை விடச் சிறந்ததல்ல.-

    நாஸ்த்யேவ தஸ்மிந்ஸ்தத்ஸுখஸுখித்வம்–24-காமத்தில் தன் சொந்த இன்பத்திற்கான ஆசை மட்டுமே உள்ளது; ஒருவரின் மகிழ்ச்சி, நேசிக்கப்படுபவரை மகிழ்விப்பதில் அடங்கியிருக்கவில்லை–அத்தகைய போலி பக்தியில், ஒருவன் இறைவனின் திருப்தியில் மட்டுமே பிரத்தியேகமான இன்பத்தைக் காண்பதில்லை.-கள்ளக் காதலன்-காதலி மீதான உலகியல் காதலில், மற்றவருக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சியில் கிடைக்கும் இன்பம் என்ற உணர்வு நிச்சயமாகச் சிறிதும் இருப்பதில்லை.

    அத்தகைய போலி பக்தியில், ஒருவர் ஆண்டவரின் சித்தத்தில் மட்டுமே பிரத்தியேகமான இன்பத்தைக் காண்பதில்லை.-

    ஸா து கர்மஜ்ஞாநயோகேভ்யாধிகாதரா–25-பக்தி என்பது கர்மத்தை விடவும், ஞானத்தை விடவும், யோகத்தை (ராஜ யோகத்தை) விடவும் மேலானது.–மறுபுறம், தூய பக்தித் தொண்டானது, பலன் தரும் செயல்கள், தத்துவார்த்த ஊகங்கள் மற்றும் ஆன்மிகத் தியானம் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும்.–உன்னதமான பக்தி என்னும் உத்தியானது, உண்மையில் கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் மற்றும் யோக மார்க்கம் ஆகியவற்றை விடவும் மேலானதாகும்.-

    மறுபுறம், தூய பக்தித் தொண்டானது, பலன் தரும் காரியங்கள், தத்துவார்த்த ஊகங்கள் மற்றும் ஆழ்நிலை தியானம் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் மேலானது.

    பலருபத்வத்–26-ஏனெனில், பக்தி என்பதே ஆன்மீக வாழ்வின் இறுதி இலக்கு அல்லது குறிக்கோள் ஆகும். மற்ற எல்லா வழிகளும் அதன் உணர்தலுக்கே இட்டுச் செல்கின்றன–எல்லாவற்றிற்கும் மேலாக, பக்தி என்பது எல்லா முயற்சிகளின் பலனாகும்.–ஏனெனில் அது எல்லா யோகங்களின் பலன்களின் இயல்பைச் சார்ந்தது.-

    எல்லாவற்றிற்கும் மேலாக, பக்தி என்பது எல்லா முயற்சிகளின் பலனாகும்.


    ஈஶ்வரஸ்யாப்யভிமாநদ்வேஷித்வாத் দிந்யா ப்ரியத்வாச்ச–27-பக்தி மிகச் சிறந்தது, ஏனென்றால் கடவுள் அகங்காரத்தை வெறுத்து, பணிவை விரும்புகிறார்.-மேலும், ஆண்டவர் பெருமைக்காரர்களை விரும்புவதில்லை, ஆனால் தாழ்மையானவர்கள் மீது பிரியப்படுகிறார்.-மேலும், கடவுளுக்கு அகங்காரம் பிடிக்காததாலும், சாந்த குணத்தின் மீதுள்ள அன்பினாலும் (பக்தி மட்டுமே மேலானது).-

    கர்த்தர் பெருமைக்காரர்களை விரும்புவதில்லை, ஆனால் தாழ்மையானவர்கள் மீது பிரியப்படுகிறார்.

    தஸ்ய ஜ்ஞாநமேவ ஸாধநமித்யேகே–28-பக்தியை அடைவதற்கு அறிவே வழி என்று சிலர் கருதுகின்றனர்.-பக்தியை வளர்ப்பதற்கு அறிவே வழி என்று சிலர் கூறுகிறார்கள்.–“தெய்வீக அன்பிற்கு, ஞானம் மட்டுமே வழி” என்று சில ஆச்சார்யர்கள் கூறுகின்றனர்.-

    பக்தியை வளர்ப்பதற்கு அறிவே வழி என்று சிலர் கூறுகிறார்கள்.


    அந்யோந்ய ஆஸ்ரயத்வம் இத் அந்யே–29-அறிவும் பக்தியும் ஒன்றையொன்று சார்ந்தவை என மற்றவர்கள் கருதுகின்றனர்.-மற்றவர்கள் பக்தியையும் ஞானத்தையும் ஒன்றையொன்று சார்ந்தவை எனக் கருதுகின்றனர்.–ஒன்றையொன்று சார்ந்தது” என மற்றவை அறிவிக்கின்றன.-

    மற்றவர்கள் பக்தியையும் அறிவையும் ஒன்றையொன்று சார்ந்தவை எனக் கருதுகின்றனர்.

    ஸ்வயம் ফலரூபதேதி ব்ரஹ்மகுமாரঃ–30-ஆன்மீக உணர்தலே அதன் ஒரே பலன் என்று நாரதர் கூறுகிறார்.-ஆனால் பிரம்மாவின் சந்ததி, பக்தியே அதன் பலன் என்கிறது.–அது (பக்தி) தனக்குத் தானே பலன்” என்று படைப்பாளனாகிய பிரம்மாவின் சந்ததியினர் கூறுகின்றனர்.-

    ஆனால் பிரம்மாவின் மகன், பக்தியே அதன் பலன் என்கிறார்.-

    ராஜগৃஹபோஜநாদிஷு ததைவாদৃஷ்டத்வாத்
    ந தேந ராஜபரிதோஷா க்ஷுধஸந்திர்வா ॥–31-32
    -ஒரு ஆட்சியாளரைப் பற்றி அறிந்துகொள்வதாலும், அவரது அரண்மனையைப் பார்ப்பதாலும் மட்டும் அவரை மகிழ்விக்க முடியாது; அதுபோலவே, உணவைப் பற்றிய அறிவாலும் அதைக் காண்பதாலும் மட்டும் பசியைத் தணித்துக்கொள்ள முடியாது; அதுபோலவே, அன்பு வரும் வரை இறைவனைப் பற்றிய அறிவாலோ அல்லது உணர்வாலோ ஒருவன் திருப்தியடைய முடியாது-அரச மாளிகை, உணவு போன்ற உதாரணங்கள் இதை விளக்குகின்றன. ஓர் ஆட்சியாளர் ஒரு மாளிகையைப் பார்ப்பதால் மட்டும் முழுமையாகத் திருப்தி அடைவதில்லை, அதுபோலவே ஒருவர் உணவைப் பார்ப்பதால் மட்டும் தன் பசியைத் தணித்துக்கொள்ள முடியாது.-ஏனெனில், இடங்கள், இரவு உணவு போன்ற உதாரணங்களில் அது அவ்வாறே நிரூபிக்கப்பட்டுக் காணப்படுகிறது. அதன் காரணமாக (வெறும் அறிவால் மட்டுமே), ஆட்சியாளரின் தயவோ, பசி தணிவதோ ஒருபோதும் நிகழாது.-

    அரச மாளிகை, உணவு போன்ற உதாரணங்கள் மூலம் இது விளக்கப்பட்டுள்ளது. ஒரு அரசன் ஒரு மாளிகையைப் பார்ப்பதால் மட்டும் முழுமையாகத் திருப்தி அடைவதில்லை, அதுபோலவே ஒருவரால் உணவைப் பார்ப்பதால் மட்டும் தன் பசியைத் தணித்துக்கொள்ளவும் முடியாது.

    தஸ்மாத்ஸைவ গ்ராஹ்ய முமுக்ஷுபிஹி–33-எனவே, (பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, இவ்வுலகில் உள்ள அனைத்து எதிர்நிலை ஜோடிகள் போன்ற) எல்லா வரம்புகளையும் பந்தங்களையும் கடக்க விரும்புவோர், பரம அன்பை மிக உயர்ந்த இலக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்.-எனவே, முக்தியை நாடுபவர்கள் பக்தித் தொண்டில் மட்டுமே ஈடுபட வேண்டும்.-எனவே, முழுமையான முக்தியை நாடுபவர்கள், கடவுள் மீதான அந்தப் பரம அன்பை மட்டுமே நாட வேண்டும்.-

    ஆகையால், முக்தியை நாடுபவர்கள் பக்தித் தொண்டில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

    அத்தியாயம் 3: சாதனையின் வழிமுறைகள்-

    தஸ்ய ஸধாநாநி গயந்தி ஆசார்யாஹா ॥–34-மாபெரும் ஆசிரியர்கள், உன்னதமான அன்பை அடைவதற்கான வழிமுறைகளாகப் பின்வருவனவற்றைத் துதிப்பாடல்களில் விவரிக்கிறார்கள்-பக்தித் தொண்டை அடைவதற்கான வழிமுறைகளைத் தரமான அறிஞர்கள் விவரித்துள்ளனர்.-உள்ளத்தில் இந்தப் பக்தியை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பண்டைய ஆசிரியர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுகிறார்கள்-

    பக்தி சேவையை அடைவதற்கான வழிமுறைகளைத் தரமான நூல்கள் விவரித்துள்ளன.

    தத்து விஷய த்யாகத் ஸங்கத்யகச்ச–35-உன்னதமான அன்பை அடைவதற்கு, ஒருவர் புலன் இன்பப் பொருட்களையும் அவற்றின் மீதான பற்றையும் துறக்க வேண்டும்.-புலனின்பங்களையும் உலகப் பற்றுகளையும் துறப்பதன் மூலம் ஒருவன் பக்தியை அடைகிறான்.-உண்மையில் பக்தியின் ஆதாரங்கள் (1) புலன்-பொருட்களைத் துறப்பதன் மூலமும், (2) சுற்றியுள்ள உயிரினங்கள் மீதான பற்றுகளைத் துறப்பதன் மூலமும் முழுமையாக ஆராயப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

    புலனின்பங்களையும் உலகப் பற்றுகளையும் துறப்பதன் மூலம் ஒருவன் பக்தியை அடைகிறான்.

    அவ்யவ்ரிதா பஜனத்–36-கடவுளைத் தடையின்றி, இடைவிடாமல் வழிபடுவதன் மூலம் (உன்னத அன்பு) அடையப்படுகிறது.–இறைவனை இடைவிடாமல் வழிபடுவதால் பக்தி அடைகிறார்.-கர்த்தருக்கு இடைவிடாத மேன்மையான மற்றும் அன்பான சேவையின் மூலம்.-

    இறைவனை இடைவிடாமல் வழிபடுவதன் மூலம் ஒருவன் பக்தியை அடைகிறான்.

    லோகேபி ভগவத் গுணா ஶ்ரவண கீர்தநாத் ॥–37-வாழ்க்கையின் சாதாரண செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே, கர்த்தரின் மகிமையைக் கேட்பதாலும் பாடுவதாலும்.-இவ்வுலகில் வாழ்க்கையின் சாதாரணச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே, பரம இறைவனின் சிறப்புக் குணங்களைக் கேட்பதாலும் உச்சரிப்பதாலும் ஒருவன் பக்தியை அடைகிறான்.-உலகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதும், கர்த்தருடைய மகிமைகளைக் கேட்பதாலும் பாடுவதாலும்.-

    இவ்வுலகில் வாழ்க்கையின் சாதாரணச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே, பரம இறைவனின் சிறப்புக் குணங்களைக் கேட்பதாலும் உச்சரிப்பதாலும் ஒருவன் பக்தியை அடைகிறான்.

    முখ்யாதஸ்து மஹாகৃபாயைவ ভগவத்கৃபாலேஶத்வா–38-பக்தியை அடைவதற்கான பிரதான வழி, ஒரு மகாத்மாவின் அருளே ஆகும்.-ஆயினும், முதன்மையாக, மகான்களின் கருணையாலோ அல்லது பகவானின் கருணையின் ஒரு சிறு துளியாலோ ஒருவர் பக்தியை வளர்த்துக் கொள்கிறார்.
    -முதன்மையாக அது (தூய பக்தி) (மகான்களின் அருளால், அல்லது சிறிதளவு தெய்வீக அருளால் பெறப்படுகிறது.

    ஆயினும், முதன்மையாக, மகான்களின் கருணையாலோ அல்லது பகவானின் கருணையின் ஒரு சிறு துளியாலோ ஒருவர் பக்தியை வளர்த்துக் கொள்கிறார்.

    மஹத்ஸங்গஸ்து দுர்லபோ அகம்யாமோঘஶ்ச–39-ஒரு மகான் அருளைப் பெறுவது கடினம், ஏனெனில் அத்தகையவரை அடையாளம் காண்பது கடினம்; ஆனால் ஒருவர் அருளைப் பெற்றால், அதன் விளைவு பிழையற்றது-மகான்களின் சங்கமம் என்பது அரிதாகக் கிடைக்கக்கூடியது, புரிந்துகொள்வதற்குக் கடினமானது, மற்றும் தவறற்றது.-ஒரு மகான் உடன் தொடர்பு கொள்வது உண்மையிலேயே மிகவும் கடினமானது. அவர்களை முழுமையாக அறிந்துகொள்வது இயலாத காரியம். ஆயினும், அதன் தாக்கம் பிழையற்றது.

    மகான்களின் சகவாசம் கிடைப்பது அரிது, புரிந்துகொள்வது கடினம், மற்றும் அது தவறாதது.

    லப்யதேபி தத் கிருபை யேவ–40-இறைவனின் அருளால் மட்டுமே ஒரு சாதகர் ஒரு மகான் மகாத்மாவின் அருளைப் பெறுகிறார்.-மகான்களின் சங்கமத்தை அடைய முடியும் — ஆனால் அது இறைவனின் கருணையால் மட்டுமே.-ஆயினும், இறைவனின் அருளால் மட்டுமே மகத்தான ஆன்மாக்கள் அடையப்படுகின்றன.-

    மகான்களின் சகவாசத்தை அடைய முடியும் — ஆனால் அது இறைவனின் கருணையால் மட்டுமே.

    தஸ்மிந் தஜ் ஜனே பேத அபவாத்–41-கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.-(பகவானின் தூய பக்தர்களின் சங்கத்தாலோ அல்லது நேரடியாக பகவானின் கருணையாலோ ஒருவர் பக்தியை அடையலாம், ஏனெனில்) பகவானும் தூய பக்தர்களும் வெவ்வேறானவர்கள் அல்ல.-ஏனெனில் கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் வேறுபாடு என்ற உணர்வே இல்லை.-

    [பகவானின் தூய பக்தர்களின் சகவாசத்தாலோ அல்லது நேரடியாக பகவானின் கருணையாலோ ஒருவர் பக்தியை அடையலாம், ஏனெனில்] பகவானும் அவருடைய தூய பக்தர்களும் பிரிக்கப்பட்டவர்கள் அல்ல-

    ததேவ ஸாத்யதம் ததேவ ஸாத்யதாம்--42-எனவே, ஒரு மகான் அருளை நாடுங்கள்.-தூய பக்தர்களின் சங்கத்திற்காக மட்டுமே பாடுபடுங்கள்.-அது ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்; அது ஒன்று மட்டுமே நிறைவேற்றப்படட்டும்.-

    தூய பக்தர்களின் சகவாசத்திற்காக மட்டுமே பாடுபடுங்கள்.-

    துஸ் சங்கா சர்வதைவே த்யாஜ–43-தீய [அறியாமை] சகவாசத்தை எந்த வகையிலும் தவிர்க்கவும்.-ஒருவர் எல்லா விதமான இழிவான தொடர்புகளையும் துறக்க வேண்டும்.-தீய [அறியாமை] சகவாசத்தை எல்லா வகையிலும் துறப்பதே உகந்தது.-

    ஒருவர் எல்லா விதமான இழிவான சகவாசத்தையும் துறக்க வேண்டும்.

    காமக்ரோধமோஹ ஸ்மৃதிভ்ராம்ஶ்ச বுদ்ধிநாஸா ஸர்வநாசகாரணத்வாத் ॥–44-தீய [அறியாமை] சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது காமம், கோபம், மயக்கம், இலக்கை மறத்தல் மற்றும் இறுதி அழிவுக்கு வழிவகுக்கிறது.-பௌதிகப் பற்றுதல் காமம், கோபம், குழப்பம், மறதி, அறிவுக் குறைவு மற்றும் முழுமையான பேரழிவு ஆகியவற்றிற்குக் காரணமாக அமைகிறது.-ஏனெனில் அதுவே காமம், கோபம், மயக்கம், ஞாபக மறதி, பகுத்தறியும் திறன் இழப்பு ஆகியவற்றை உண்டாக்கி, இறுதியில் நமது முழு அழிவுக்கும் காரணமாக அமைகிறது.

    பௌதிகப் பற்றுதல் காமம், கோபம், குழப்பம், மறதி, அறிவுக் குறைவு மற்றும் முழுமையான பேரழிவு ஆகியவற்றிற்குக் காரணமாகும்.

    தரங்গயிதா அபிமே ஸங்கத்ஸமுদ்ரயந்தி ॥–45-இந்த உணர்ச்சிகள் ஆரம்பத்தில் சிற்றலைகளாக இருக்கலாம், ஆனால் தீய [அறியாமை] சகவாசம் அவற்றை மாபெரும் கடல் அலைகளாக எழச் செய்கிறது.-பொருள்சார் தொடர்புகளிலிருந்து அலைகளைப் போல எழும் இந்தத் தீய விளைவுகள், துயரம் எனும் ஒரு மாபெரும் சமுத்திரமாகத் திரண்டு வருகின்றன.-ஆரம்பத்தில் சிற்றலையாகத் தோன்றினாலும், (கோபம், காமம் போன்றவை) தீய (அறியாமை) சகவாசத்தால் பெருங்கடலாக மாறிவிடும்.-

    பொருள்சார் தொடர்புகளிலிருந்து அலைகளைப் போல எழும் இந்தத் தீய விளைவுகள், துயரம் எனும் ஒரு மாபெரும் சமுத்திரமாகத் திரண்டு வருகின்றன.

    கஸ்தராதி கஸ்தராதி மாயம் ? யா சங்கம்த்யஜதி யோ மஹானுபவம் ஸேவதே , நிர்மமோ பவதி-46-மாயையை வெல்பவர் யார்? யார் எல்லாப் பற்றுகளையும் துறந்து, பெரியோர்களுக்குச் சேவை செய்து, ‘நான், என்னுடையது’ என்ற உணர்விலிருந்து விடுபட்டவரோ அவரே.-மாயையைக் கடந்து செல்பவர் யார்? உலகப் பற்றுகளைத் துறந்து, முனிவர்களுக்குச் சேவை செய்து, தன்னலமற்றவராக மாறுபவரே-மாயையை (பிரமை) கடப்பவர் யார்? உண்மையில் மாயையை கடப்பவர் யார்? (1) புலன் பொருட்களின் மீதான எல்லா பற்றுகளையும் துறப்பவர்; (2) சிறந்த பக்தர்களுக்கு சேவை செய்பவர் மற்றும் (3) உடைமை உணர்வை துறப்பவர் —-

    மாயையைக் கடந்து செல்லக்கூடியவர் யார்? உலகப் பற்றுகளைத் துறந்து, ஞானிகளுக்குச் சேவை செய்து, தன்னலமற்றவராக மாறுபவரே.

    யோ விவிக்தஸ்தானம் , ஸேவதே , யோலோகபந்தமுன்மூலயாதி நிஸ்த்ரகுண்யோ பவதி , யோகக்ஷேமம் த்யஜதி–47-தனிமையில் வாழ்பவர், இவ்வுலகப் பந்தங்களைக் களைந்து, முக்குணங்களையும் கடந்து, தன் வாழ்வாதாரத்திற்கும் இறைவனையே சார்ந்திருப்பவர்.–மாயையைக் கடந்து செல்பவர் யார்?) யார் ஒரு தனிமையான இடத்தில் தங்கி, உலகியல் சமூகப் பற்றை வேரோடு துண்டித்து, இயற்கையின் மும்மடங்கு குணங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, பொருள் ஆதாயம் மற்றும் பாதுகாப்பு மீதான ஆசையைத் துறக்கிறாரோ அவரே.-அமைதியான தனிமையான இடத்தில் தன்னை வைத்துக் கொள்பவர், (5) உலகப் பற்றை வேரோடு பிடுங்குபவர், (6) குணங்களின் தாக்கங்களைக் கடந்து செல்பவர், (7) பொருட்களைப் பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் உள்ள எல்லாக் கவலைகளையும் துறப்பவர்;-

    [மாயையைக் கடந்து செல்பவர் யார்?] யார் ஒரு தனிமையான இடத்தில் தங்கி, உலகியல் சமூகத்தின் மீதான தனது பற்றை வேரோடு துண்டித்து, இயற்கையின் மூன்று குணங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, பொருள் ஆதாயம் மற்றும் பாதுகாப்பு மீதான ஆசையைத் துறக்கிறாரோ அவரே.

    யঃ கர்மফலம் த்யஜபி , கர்மணிஸந்நியாஸ்யதி ததோ மৃদ்வந்த்வோ ভவதி–48-செயல்களின் பலன்களைத் துறந்து, எல்லா சுயநலச் செயல்களையும் துறந்து, முரண்பாடுகளின் ஜோடிகளைக் கடந்து செல்பவர்.-(மாயையைக் கடந்து செல்பவர் யார்?) பௌதிகக் கடமைகளையும் அவற்றின் இலாபங்களையும் துறந்து, அதன் மூலம் இருமையைக் கடந்து செல்பவர்.-செயல்களின் பலன்களைத் துறப்பவன், (9) எல்லா அகங்காரச் செயல்களையும் துறப்பவன், அதன் மூலம் (10) முரண்பாடுகளின் ஜோடிகளின் விளையாட்டிலிருந்து விடுபடுபவன் .-

    [மாயையைக் கடந்து செல்பவர் யார்?] உலகப்பிரகாரமான கடமைகளையும் அவற்றின் இலாபங்களையும் துறந்து, அதன்மூலம் இருமையைக் கடந்து செல்பவரே.-

    யோ வேதாநாபி ஸந்நியாஸ்யதி , கேவலமவிச்ছிந்நாநுராகம் லভதே–49-சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கூடத் துறந்து, கடவுள் மீது அசைக்க முடியாத அன்பை அடைபவர்.-வேதங்களையும் துறக்கும் நபர், கடவுள் மீது பிரத்தியேகமான மற்றும் தடையற்ற ஈர்ப்பைப் பெறுகிறார்.-வேதங்களையும் துறப்பவன்; மற்றும் (12) தூய்மையான, தடையற்ற பக்தி ஓட்டத்தைப் பெறுபவன் .-

    வேதங்களையும் துறக்கும் நபர், கடவுள் மீது பிரத்தியேகமான மற்றும் தடையற்ற ஈர்ப்பைப் பெறுகிறார்-

    ச தாராதி , ச தாராதி ச லோகமாஸ்தராயதி .–50-அத்தகைய நபர், உண்மையில், இந்த மாயையைக் கடப்பதுடன், மற்றவர்கள் அதைக் கடக்கவும் உதவுகிறார்.-அப்படிப்பட்ட ஒருவர் மெய்யாகவே விடுவிக்கப்படுகிறார், மேலும் அவர் உலகின் மற்றவர்களையும் விடுவிக்கிறார்.-ஒருவர் கடக்கிறார், ஆம், ஒருவர் கடக்கிறார். மற்றவர்களும் கடந்து செல்ல ஒருவர் உதவுகிறார்.-

    அப்படிப்பட்ட ஒருவர் மெய்யாகவே விடுவிக்கப்படுகிறார், மேலும் அவர் உலகின் மற்றவர்களையும் விடுவிக்கிறார்.-

    அத்தியாயம் 4: தூய மற்றும் கலப்பு பக்தி-

    அநிர்வச்சனியம் பிரேமஸ்வரூபம் .–51-இந்த உன்னதமான அன்பின் உண்மையான இயல்பை விவரிக்க இயலாது-கடவுள் மீதான தூய அன்பின் உண்மையான இயல்பு வர்ணிக்க முடியாதது.-பக்தியின் இயல்பு விவரிக்க முடியாதது, வரையறுக்க முடியாதது.

    கடவுள் மீதான தூய அன்பின் உண்மையான இயல்பு வர்ணிக்க முடியாதது.

    முகாஸ்வதானவத்.–52-அது, ஒரு ஊமையன் தனக்கு ஏற்பட்ட இன்பமான சுவையை அனுபவிக்க முயற்சிப்பதைப் போன்றது.-(இறைவனின் தூய அன்பு எனும் அனுபவத்தை விவரிக்க முயல்வது) என்பது, ஒரு ஊமை தான் சுவைப்பதை விவரிக்க முயற்சிப்பதைப் போன்றது.-ஊமைகள் அனுபவிக்கும் சுவையைப் போல.-

     [இறைவனின் தூய அன்பின் அனுபவத்தை விவரிக்க முயற்சிப்பது] ஒரு ஊமை தான் சுவைப்பதை விவரிக்க முயற்சிப்பதைப் போன்றது.

    ப்ரகாஸதே க்வாபி பத்ரே –53-(அது விவரிக்க முடியாததாக இருந்தாலும்), அதை அடைந்த மகான்களிடம் அது வெளிப்படுகிறது.-ஆயினும், தகுதியுள்ளவர்களுக்கு அவ்வப்போது இறைபக்தியின் தூய அன்பு வெளிப்படுகிறது.-இதற்குத் தகுதியானவர்களாக இருக்கும் சில அரிதான நபர்களிடம், இந்த (அத்தகைய தூய அன்பு) வெளிப்படுவதாகக் காணப்படுகிறது.-

    ஆயினும், தகுதியுள்ளவர்களுக்கு அவ்வப்போது தேவனுடைய பரிபூரண அன்பு வெளிப்படுத்தப்படுகிறது.

    গுணராஹிதம் கமநாரஹிதம் ப்ரதிக்ஷணவர்ধமாநமவிச்சிந்நம்ஸுக்ஷ்மாதரமநுভவரூபம் ॥–54-இந்த உன்னதமான அன்பு பண்புகளற்றது; அது எல்லா சுயநல ஆசைகளிலிருந்தும் விடுபட்டது; அது ஒவ்வொரு கணமும் தீவிரத்தில் வளர்கிறது; அது ஒரு தடையற்ற அக அனுபவமாகும், நுட்பமானவற்றிலும் நுட்பமானது.-கடவுள் மீதான தூய அன்பு என்பது, பௌதிக குணங்கள் மற்றும் பௌதிக ஆசைகள் அற்ற, ஒவ்வொரு கணமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும், ஒருபோதும் தடைபடாத மிகவும் நுட்பமான உணர்வாக வெளிப்படுகிறது-(இந்தத் தூய அன்பு) பண்புகளற்றது, ஆசைகள் எனும் நஞ்சற்றது, ஒவ்வொரு கணமும் பெருகிக்கொண்டே இருப்பது, தடையற்றது, மிகவும் நுட்பமானது, முற்றிலும் உடனடியான அனுபவத்தின் தன்மையுடையது…

    கடவுள் மீதான தூய அன்பு என்பது, பௌதிக குணங்கள் மற்றும் பௌதிக ஆசைகள் அற்ற, மிகவும் நுட்பமான உணர்வாக வெளிப்படுகிறது; அது ஒவ்வொரு கணமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும், ஒருபோதும் தடைபடாது.

    தத்ப்ராப்ய ததேவாவலோகயதி ததேவ ஶ்ரீணோதிததேவ பஷ்ட்யதி ததேவ சிந்தயதி ॥–55-ஒருவன் இந்த உன்னதமான அன்பை அடையும்போது, ​​அவன் பிரியமானவரை எங்கும் காண்கிறான், பிரியமானவரை எங்கும் கேட்கிறான், பிரியமானவரைப் பற்றி மட்டுமே பேசுகிறான், பிரியமானவரைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான்.-இறைவனின் மீது தூய அன்பைப் பெற்ற ஒருவர், இறைவனை மட்டுமே நோக்குகிறார், இறைவனைப் பற்றி மட்டுமே கேட்கிறார், இறைவனைப் பற்றி மட்டுமே பேசுகிறார், இறைவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.-பரம அன்பை அடைந்த பின்பு, பக்தன் அதையே காண்கிறான் (உணர்கிறான், புரிந்துகொள்கிறான்), அதையே கேட்கிறான், அதையே பேசுகிறான், அதையே சிந்திக்கிறான் (தியானிப்பான்).-

    கடவுள் மீது தூய அன்பைப் பெற்ற ஒருவர், ஆண்டவரை மட்டுமே நோக்குகிறார், அவரைப் பற்றி மட்டுமே கேட்கிறார், அவரைப் பற்றி மட்டுமே பேசுகிறார், அவரைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.

    கௌநீ த்ரிதா গுணভேদதார்தாদிভேদদ்வா–56–சாதகர்களுடைய மனதில் சத்துவம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஏதேனும் ஒன்று மேலோங்கி இருப்பதன் அடிப்படையிலும், அவர்கள் தங்களை இறைவனிடம் அர்ப்பணிப்பதற்கான காரணங்களின் அடிப்படையிலும் — அதாவது, உலகியல் சோர்வு, ஞானத் தேடல், அல்லது சில பௌதிக ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலும் — ஆயத்த பக்தி மூன்று வகைப்படும்-இரண்டாம் நிலை பக்தித் தொண்டானதென்பது, அந்த மூன்று பௌதிக குணங்களில் எது மேலோங்கி இருக்கிறதோ அதைப் பொறுத்தோ, அல்லது துன்பம் முதலிய பௌதிக உந்துதல்களில் எது ஒருவரை பக்திக்கு இட்டுச் செல்கிறதோ அதைப் பொறுத்தோ அமைகிறது.-இரண்டாம் நிலை பக்தி மூன்று வகைப்படும் — அது (பக்தரின்) மனநிலையின் வேறுபாட்டைப் பொறுத்தோ அல்லது (பக்தர்களிடம் உள்ள) மனக்குறையின் வகையைப் பொறுத்தோ அமையும்.-

    இரண்டாம் நிலை பக்தித் தொண்டானதென்பது, அந்த மூன்று பௌதிக குணங்களில் எது மேலோங்கி இருக்கிறதோ அதைப் பொறுத்தோ, அல்லது துன்பம் முதலிய பௌதிக உந்துதல்களில் எது ஒருவரை பக்திக்கு இட்டுச் செல்கிறதோ அதைப் பொறுத்தோ அமைகிறது.

    உத்தரஸ்மாদுத்தரஸ்மாத் பூர்வபூர்வஶ்ரேயாய ভவதி–57-இந்த பக்தப் பிரிவுகளில், முதலாவது பிரிவினர் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்; இவர்களுக்குப் பிறகு, குறைந்த உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள் மற்றும் கீழ்மட்டத்தினர் வருகிறார்கள்.-ஒவ்வொரு முந்தைய கட்டமும், அதனைத் தொடரும் கட்டத்தை விடச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும்.-பின்வருபவை ஒவ்வொன்றையும் விட, அதற்கு முந்தையவை மேன்மையானவையாக (பெரியவையாக) ஆகின்றன.-

    ஒவ்வொரு முந்தைய கட்டமும், அதனைத் தொடரும் கட்டத்தை விடச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும்.

    அந்யஸ்மாத் ஸுலப்யம் பக்தவ்–58-பக்தி மார்க்கமே இறைவனை அடைவதற்கான மிக எளிய வழியாகும்.-மற்ற எந்த முறையைக் காட்டிலும் பக்தித் தொண்டின் மூலம் வெற்றியை எளிதாக அடையலாம்.-மற்ற எல்லா யோகங்களையும் விட பக்தி எளிதில் கிடைக்கக்கூடியது — சுலபமாக அடையக்கூடியது…

    மற்ற எந்த வழிமுறையைக் காட்டிலும் பக்தித் தொண்டின் மூலம் வெற்றியை எளிதாக அடையலாம்.

    ப்ரமாணாந்தரஸ்யாநபேக்ஷத்வாத் ஸ்வயம் ப்ரமாணத்வாத்–59-அன்பே தனக்குத் தானே சான்று, அதற்கு வேறு எதுவும் தேவையில்லை.-எல்லா ஆன்மீகச் செயல்முறைகளிலும் பக்தித் தொண்டாலானது மிகவும் எளிமையானதாக இருப்பதற்குக் காரணம், அதன் செல்லுபடித்தன்மைக்காக அது வேறு எந்த அதிகாரத்தையும் சார்ந்திருக்காமல், அதுவே அதிகாரத்தின் அளவுகோலாக விளங்குவதே ஆகும்.-ஏனெனில் அன்பு வேறு எந்த ஆதாரத்தையும் சார்ந்திருக்கவில்லை, அதுவே ஒரு ஆதாரத்தின் தன்மையைக் கொண்டிருப்பதால், அன்பு சுய-தெளிவானது.-

    எல்லா ஆன்மீகச் செயல்முறைகளிலும் பக்தி ஆராதனை மிகவும் எளிதானதாக இருப்பதற்குக் காரணம், அதன் செல்லுபடித்தன்மைக்கு அது வேறு எந்த அதிகாரத்தையும் சார்ந்திருக்கவில்லை, அதுவே அதிகாரத்தின் தரமாக விளங்குகிறது.

    ஸந்திரூபத் பரமானந்தரூபச்ச–60-அதன் இயல்பு சாந்தியும் பரம ஆனந்தமும் ஆகும்.மேலும், பக்தி என்பது சாந்தி மற்றும் பரம ஆனந்தத்தின் வடிவமாகும்.-மேலும், அன்பு என்பது அமைதியின் இயல்புடையது மற்றும் அது பரம ஆனந்தத்தின் இயல்புடையது என்பதாலும் ஆகும்.

    மேலும், பக்தி என்பது அமைதி மற்றும் பரம ஆனந்தத்தின் வடிவமாகும்-

    லோகஹநௌ சிந்தா ந கார்யநிவேদிதாத்மாலோகவேদத்வாத்–61-பக்தன் எந்தவொரு தனிப்பட்ட இழப்பிற்காகவும் வருந்துவதில்லை, ஏனெனில் ஒருவன் தன்னையும், தன்னிடம் உள்ள அனைத்தையும், சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களையும் கூட சரணடைந்திருக்கிறான்.-ஒருவருடைய உலகியல் மற்றும் வேதக் கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்த பிறகு, உலக இழப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.-உலகியல் இழப்புகளைக் குறித்து எந்தக் கவலையோ கலக்கமோ கொள்ளக்கூடாது. ஏனெனில், தனது எல்லையற்ற ஆன்மாவையும், அதன் உலகியல் மற்றும் புனிதமான செயல்கள் அனைத்தையும் தன் இதயத்து இறைவனிடம் தொடர்ந்து ஒப்படைப்பதே ஒரு உண்மையான பக்தனின் இயல்பாகும்.

    ஒருவன் தனது உலகியல் மற்றும் வேதக் கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்த பிறகு, உலக இழப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

    ந தத் ஸிদ்ধௌ லோகவ்யவஹாரோ ஹேயஹ்கிந்து ফலத்யগஸ்தத் ஸாதநாஞ்ச கார்யமேவ ॥–62-ஒரு பக்தன் தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்திருந்தாலும், அவன் இவ்வுலகக் செயல்களைத் துறக்காமல், அச்செயல்களின் பலன்களை இறைவனுக்குச் சமர்ப்பித்து, அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.-ஒருவர் பக்தித் தொண்டில் நிலைபெற்ற பிறகும், இவ்வுலகில் உள்ள தனது பொறுப்புகளைக் கைவிடாமல், மாறாகத் தனது செயல்களின் பலன்களை இறைவனிடம் தொடர்ந்து ஒப்படைக்க வேண்டும். மேலும், தூய பக்தி நிலையை அடைய முயற்சிக்கும் அதே வேளையில், விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவர் நிச்சயமாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.-அத்தகைய பரிபூரண அன்பு கிடைக்கும் வரை அல்லது, அந்தப் பரிபூரண அன்பை அடைந்த பிறகும், உலகச் செயல்களைக் கைவிடக் கூடாது. ஆனால், நமது செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக, நாம் நிச்சயமாக அன்பை விடாமுயற்சியுடன் தேடி, நமது கவலையைத் துறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.-

    ஒருவர் பக்தித் தொண்டில் நிலைபெற்ற பிறகும், இவ்வுலகில் உள்ள தனது பொறுப்புகளைக் கைவிடக்கூடாது; மாறாக, தனது செயல்களின் பலன்களை இறைவனிடம் தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டும். மேலும், தூய பக்தி நிலையை அடைய முயற்சிக்கும் அதே வேளையில், விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவர் நிச்சயமாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

    ஸ்த்ரீ தான நாஸ்திக வைரி சரித்திரம் நாஸ்ரவணியம்–63-காமம், பேராசை மற்றும் நாத்திகம் பற்றிய உரையாடல்களைக் கேட்கக் கூடாது.-பாலியல், பணம் மற்றும் நாத்திகர்கள் பற்றிய செய்திகளில் பொழுதுபோக்கைக் காணக்கூடாது.-தேடுபவர், பாலியல், செல்வம், நாத்திகர்கள் மற்றும் எதிரிகள் பற்றிய வர்ணனைகளைக் கேட்கக் கூடாது.-

    பெண்கள், பணம், நாத்திகர்கள் பற்றிய செய்திகளில் பொழுதுபோக்கைக் காணக்கூடாது.

    அபிமானதம்படிகம் த்யஜ்யம்–64-கர்வம், தற்பெருமை மற்றும் அது போன்ற பிற தீய குணங்கள் களையப்பட வேண்டும்.-ஒருவர் பொய் கர்வம், பாசாங்குத்தனம் மற்றும் பிற தீய குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.-கர்வம், தற்பெருமை மற்றும் மனதின் இதுபோன்ற மற்ற எதிர்மறை உந்துதல்களைக் கைவிட வேண்டும்.-

    ஒருவர் பொய்யான பெருமை, பாசாங்குத்தனம் மற்றும் பிற தீய குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

    தদர்பிடখிலாச்சரঃ ஸங்கமக்ரோধভிமாநாদி தஸ்மிந்நேவ கரணீயம் ॥–65-உங்கள் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்; காமம், கோபம், கர்வம் போன்ற உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் இறைவனை நோக்கிச் செலுத்துங்கள்.-ஒருவன் தன் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து, ஆசை, கோபம், கர்வம் ஆகியவற்றை இறைவனிடம் மட்டுமே கொள்ள வேண்டும்.-தனது செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்த பின்பு, ஆசை, கோபம், கர்வம் முதலிய அனைத்தையும் இறைவனை நோக்கியே திருப்ப வேண்டும்.

    ஒருவன் தன் செயல்கள் அனைத்தையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, ஆசை, கோபம், பெருமை ஆகியவற்றை அவரிடத்தில் மட்டுமே உணர வேண்டும்.

    த்ரிரூபபங்கபூர்வகம்நித்யதஸ்யாநித்யகாந்தபாஜநாத்மகம் ப்ரேமகார்யம் ப்ரேமைவ கார்யம் ॥–66-அன்பின் மூன்று வடிவங்களையும் கடந்து, கர்த்தரை நேசியுங்கள்; அவரை ஒரு நித்திய ஊழியராகவும், கர்த்தரின் நித்திய மணவாட்டியாகவும் நேசியுங்கள்.-இயற்கையின் முக்கூட்டு குணங்கள் எனும் மேற்கூறிய திரைகளைக் கடந்து சென்ற பிறகு, எஜமானனுக்குச் சேவை செய்யும் சேவகனின் மனநிலையிலோ அல்லது காதலிக்குச் சேவை செய்யும் காதலனின் மனநிலையிலோ நிரந்தரமாக நிலைத்திருந்து, கடவுள் மீதான தூய அன்பில் மட்டுமே செயல்பட வேண்டும்.-அனுபவங்கள் எனும் மூன்று காரணிகளையும் கடந்து, ஒரு அர்ப்பணிப்புள்ள பணியாளர் அல்லது வாழ்க்கைத் துணையைப் போன்று, நிலையான சேவையைக் கொண்ட அன்பு மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.-

    இயற்கையின் முக்கூட்டு குணங்கள் எனும் மேற்கூறிய திரைகளைக் கடந்து சென்ற பிறகு, ஒருவன் தன் எஜமானனுக்குச் சேவை செய்யும் பணியாள் அல்லது தன் காதலனுக்குச் சேவை செய்யும் காதலியின் மனநிலையில் நிரந்தரமாக நிலைத்திருந்து, கடவுள் மீதான தூய அன்பில் மட்டுமே செயல்பட வேண்டும்

    பக்த ஏகந்தினோ முக்யஹ்–67-கடவுள் மீது ஒருமுகப்பட்ட அன்பையும், அந்த அன்பின் பொருட்டே அன்பையும் கொண்டிருப்பவர்களே மிக உயர்ந்த வகுப்பினரான பக்தர்கள்.-பகவானின் பக்தர்களில், பகவானுக்கு மட்டுமே தங்களை நெருங்கிய சேவகர்களாக அர்ப்பணிப்பவர்களே மிகச் சிறந்தவர்கள்.-எவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனாக இருப்பதோடு, இறைவனின் பொருட்டே அவனிடம் ஒருமுகப்பட்ட பக்தியைக் கொண்டிருப்பவர்களோ, அவர்களே முதன்மையானவர்கள் (சிறந்தவர்கள்).-

    பகவானின் பக்தர்களில், அவருக்கு முற்றிலும் நெருங்கிய சேவகர்களாகத் தங்களை அர்ப்பணிப்பவர்களே மிகச் சிறந்தவர்கள்.

    காந்தவரோধரோமஞ்சஸ்ருபிঃ பரஸ்பரம் லபமாநঃ பவயந்தி குலாநி ப்ரீதிவிம்ச ॥-68-பக்தர்கள் இறைவனைப் பற்றிப் பேசும்போது, ​​அவர்களின் குரல் தழுதழுக்கிறது, கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிறது, பரவசத்தில் அவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றன. இத்தகையோர் தங்கள் குடும்பங்களை மட்டுமல்ல, தாங்கள் பிறந்த இந்த முழுப் பூமியையும் தூய்மைப்படுத்துகிறார்கள்.-தொண்டை அடைத்தவாறும், மயிர் சிலிர்த்தவாறும், கண்ணீர் மல்கவும் ஒருவரோடொருவர் உரையாடுகையில், ஆண்டவரின் நெருங்கிய ஊழியர்கள் தங்களைப் பின்பற்றுவோரையும் முழு உலகத்தையும் தூய்மைப்படுத்துகிறார்கள்.-உணர்ச்சியால் தொண்டை அடைத்து, உடல் திகிலால் மூடப்பட்டு, கண்ணீர் வழிந்தோட, அவர்கள் தழுதழுத்த வார்த்தைகளில் ஒருவருக்கொருவர் உரையாடும்போது, ​​அவர்கள் தங்கள் குடும்பத்தையும் குலத்தையும் புனிதப்படுத்துகிறார்கள்; ஏன், அவர்கள் மகிமைப்படுத்த வரும் அந்த பூமியையே புனிதப்படுத்துகிறார்கள்.-

    தொண்டை அடைத்தபடியும், மயிர் சிலிர்த்தபடியும், கண்ணீர் பெருகும்படியும் ஒருவரோடொருவர் உரையாடுகையில், ஆண்டவரின் நெருங்கிய ஊழியர்கள் தங்களைப் பின்பற்றுவோரையும் முழு உலகத்தையும் தூய்மைப்படுத்துகிறார்கள்

    தீர்থிகுர்வந்தி தீர்থாநி ஸுகர்மி-குர்வந்திகர்மாணி ஸச்சஸ்த்ரிகுர்வந்தி சாஸ்த்ராணி ॥–69-இறைப் பிரியர்களான இந்த மகத்தான ஞானிகள், புனித யாத்திரைத் தலங்களைப் புனிதப்படுத்துகின்றனர். அவர்கள் செய்யும் செயல்கள் நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகின்றன. அவர்கள் சமய நூல்களுக்கு ஆன்மீக அதிகாரத்தை அளிக்கின்றனர்.-அவர்களுடைய சங்கம் புனித இடங்களைப் புனிதமாக்குகிறது, செயல்களை மங்களகரமானதாக்குகிறது, மேலும் வேதங்களை அதிகாரப்பூர்வமானதாக ஆக்குகிறது.-அவைகள் புனித யாத்திரைத் தலங்களைப் புனிதப்படுத்துகின்றன, செயல்களுக்கு மகிமையைச் சேர்க்கின்றன, மற்றும் வேதங்களுக்கு அதிகாரத்தை அளிக்கின்றன.-

    அவர்களுடைய சங்கம் புனித இடங்களைப் புனிதமாக்குகிறது, செயல்களை மங்களகரமானதாக்குகிறது, மற்றும் வேதங்களை அதிகாரப்பூர்வமானதாக ஆக்குகிறது.

    தன்மயா–70-அந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.-பரம இறைவனின் நெருங்கிய அடியார்களெல்லாம் அன்பில் முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள்.-ஏனெனில், அவர்கள் கர்த்தருக்குள் மூழ்கி வாழ்கிறார்கள்.

    பரம இறைவனின் நெருங்கிய அடியார்களெல்லாம் அவரை நேசிப்பதில் முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள்.

    மோদந்தே பிதரோ நৃத்யந்தி தேவதாঃஸநாதঃ சேயம் ভூர்ভவாத் ॥–71-அத்தகைய இறைப் பிரியர்கள் பூமியில் குடிகொள்ளும்போது, ​​அவர்களின் முன்னோர்கள் மகிழ்கிறார்கள், தேவர்கள் ஆனந்த நடனம் ஆடுகிறார்கள், இந்தப் பூமி புனிதமடைகிறது.-இவ்வாறு தூய பக்தர்களின் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், தேவர்கள் நடனமாடுகிறார்கள், மேலும் உலகம் நல்ல தலைவர்களால் பாதுகாக்கப்படுவதாக உணர்கிறது-கடந்த தலைமுறையினர் தங்கள் நிறைவில் மகிழ்கின்றனர், விண்ணுலகில் உள்ள தெய்வங்கள் ஆனந்த நடனம் ஆடுகின்றன, மேலும் இந்தப் பூமியே ஒரு ஆன்மீக மீட்பரால் ஆசீர்வதிக்கப்படுகிறது.-

    இவ்வாறு தூய பக்தர்களின் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், தேவர்கள் நடனமாடுகிறார்கள், மேலும் உலகம் நல்ல குருக்களால் பாதுகாக்கப்படுவதாக உணர்கிறது.

    நாஸ்தி தேஷு ஜாதிவிদ்யாரூபகுலধநக்ரியாদி বேদঃ–72-அவர்களிடையே சாதி, கல்வி, உருவ அழகு, உயர் அல்லது தாழ்ந்த குடும்பத்தில் பிறப்பு, செல்வம், உடைமைகள் மற்றும் அது போன்றவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.–அத்தகைய தூய பக்தர்களிடையே சமூக அந்தஸ்து, கல்வி, உடல் அழகு, குடும்ப அந்தஸ்து, செல்வம், தொழில் போன்றவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.-அவர்களிடையே (பரிபூரணமான மகான்களிடையே) சாதி, கலாச்சாரம், அழகு, குடும்பம், செல்வம் அல்லது தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

    அத்தகைய தூய பக்தர்களிடையே சமூக அந்தஸ்து, கல்வி, உடல் அழகு, குடும்ப அந்தஸ்து, செல்வம், தொழில் போன்றவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

    யடாஸ்டாடியா–73-ஏனெனில் அவர்கள் கர்த்தருக்கு உரியவர்கள்.-தூய பக்தர்கள் சமூக அந்தஸ்து போன்ற புறத்தோற்றங்களால் வேறுபடுத்தப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் இறைவனுக்கு உரியவர்கள்.ஏனெனில், அவை கர்த்தருடைய தெய்வீக இயல்பைச் சார்ந்தவை.-

    தூய பக்தர்கள் சமூக அந்தஸ்து போன்ற புறத்தோற்றங்களால் வேறுபடுத்தப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் இறைவனுக்கு உரியவர்கள்.

    அத்தியாயம் 5: பரிபூரணத்தை அடைதல்

    வாடோ நவையாம்ப்யா–74-வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.-வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.-பயனற்ற வாக்குவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபடக் கூடாது=

    வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

    বஹுல்யவகஸத்வদநீயதத்வச்ச–75-ஏனெனில் அவற்றுக்கு முடிவே இல்லை, மேலும் அவை திருப்திகரமான பலனையும் அளிப்பதில்லை.-இத்தகைய விவாதங்கள் அதீத சிக்கல்களுக்கு வழிவகுப்பதுடன், ஒருபோதும் தீர்க்கமானதாகவும் அமைவதில்லை.-(வீணான விவாதங்கள் கைவிடப்பட வேண்டும்) ஏனெனில் முடிவற்ற, பலதரப்பட்ட கருத்துக்கள் உருவாகக்கூடும், மேலும் அனைத்து வெறும் வாதங்களும் இறுதியில் முடிவற்றவையாகவே முடிந்துவிடும்.-

    இத்தகைய வாதம் அதீத சிக்கல்களுக்கு வழிவகுப்பதுடன், ஒருபோதும் தீர்க்கமானதாக அமைவதில்லை.

    ভக்திஶாஸ்த்ராணி மநநநியாநிதாদ்போধககர்மாணி கரணியாணி–76-நீங்கள் பக்தி நூல்களைப் படிக்கும்போது, ​​அவற்றின் போதனைகளைத் தியானித்து, அவற்றைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் இதயத்தில் இறை பக்தி தீவிரமடையும்.-பக்தித் தொண்டின் அருளப்பட்ட சாஸ்திரங்களை மதித்து, அவை விதிக்கும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.-பக்தி குறித்த நூல்களைச் ஆழ்ந்து சிந்தித்து, அவற்றின் போதனைகளைக் விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டும்.-

    பக்தித் தொண்டின் அருளப்பட்ட சாஸ்திரங்களை ஒருவர் மதித்து, அவை விதிக்கும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

    ஸுখদிঃখேச்சலভாদித்யக்தே காலே ப்ரதிக்ஷாமாணே க்ஷணார்ধமபி வ்யர்থம் நாநேயம் ॥–77-ஒரு பக்தன், ஒரு கணத்தையும் வீணாக்காமலும், இன்ப துன்பங்களிலிருந்தும், பற்றுகள் மற்றும் பேராசையிலிருந்தும் விடுபடும் வரை இறைவனை வழிபடுவதைத் தாமதிக்காமலும் இருப்பது அவனது கடமையாகும்.-பொருள் இன்பம், துன்பம், ஆசை, பொய் ஆதாயம் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் காலம் வரும் வரை பொறுமையுடன் சகித்துக்கொள்ளும்போது, ​​ஒரு நொடியின் சிறு பகுதியைக் கூட வீணாக்கக் கூடாது.-இன்பம், துன்பம், ஆசை, லாபம் போன்றவை உங்களைத் தொந்தரவு செய்யாத ஒரு உகந்த நேரத்திற்காகக் காத்திருக்கும்போது, ​​அரை நொடியைக் கூட வீணாக்கக் கூடாது.-

    ஒருவன் பொருள் இன்பம், துன்பம், ஆசை, பொய் ஆதாயம் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் காலம் வரை பொறுமையுடன் சகித்துக்கொள்ளும்போது, ​​ஒரு நொடியின் ஒரு சிறு பகுதியைக் கூட வீணாக்கக் கூடாது.

    அஹிம்ஸாஸத்யஸௌச்ছদயாஸ்திக்யாদிசரித்ரியாணி பரிபாலநீயாநி–78-பக்தன் அகிம்சை, வாய்மை, தூய்மை, கருணை, நம்பிக்கை மற்றும் அது போன்ற பிற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.-அகிம்சை, வாய்மை, தூய்மை, கருணை, நம்பிக்கை போன்ற நற்குணங்களை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.-பிறருக்குத் தீங்கு செய்யாமை, வாய்மை, தூய்மை, கருணை, இறை நம்பிக்கை முதலிய நற்பண்புகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.-

    அகிம்சை, வாய்மை, தூய்மை, இரக்கம், நம்பிக்கை போன்ற நற்குணங்களை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஸர்வদா ஸர்வভாவேந நிஶ்சிந்தைঃ ভগவாநேந ভஜநியாঃ–79-வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், இரவும் பகலும், வேறு எந்தச் சிந்தனையும் இன்றி, ஆசீர்வதிக்கப்பட்ட இறைவனை மட்டுமே வழிபட வேண்டும்.-சந்தேகங்கள் இல்லாதவர்கள் முழு மனதுடன் பரம இறைவனை இடைவிடாமல் வழிபட வேண்டும்.-எப்போதும், எல்லா மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டு, நமது ஆளுமையின் அனைத்து அம்சங்களுடனும் இறைவன் ஒருவனையே மன்றாடித் தேட வேண்டும்.-

    சந்தேகங்களற்றவர்கள் பரம இறைவனை முழு மனதுடன் இடைவிடாமல் வழிபட வேண்டும்.

    ஸ கீர்த்யமாநঃஸிঘ்ரமேவாভிர்ভவத்யாநுভவயதி ভக்தாந்–80-இவ்வாறு இறைவன் வழிபடப்படும் இடத்தில், இறைவன் விரைவில் பக்தர்களின் அகக்கண்ணுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.-இறைவன் மகிமைப்படுத்தப்படும்போது, ​​அவர் தன்னை பக்தர்களுக்கு விரைவாக வெளிப்படுத்தி, உள்ளபடியே தன்னை அறியச் செய்கிறார்.-வேண்டப்படும்போது, ​​இறைவன் தன்னை வெளிப்படுத்தி, பக்தனுக்குத் தனது முழுமையான தெய்வீக இயல்பை உணரச் செய்கிறார்.-

    அவர் மகிமைப்படுத்தப்படும்போது, ​​பகவான் தம் பக்தர்களுக்குத் தம்மை விரைவாக வெளிப்படுத்தி, அவர் உள்ளபடியே அவரை அறிந்துகொள்ள அனுமதிக்கிறார்.

    த்ரிஸத்யஸ்ய ভগிரேவ গரீயஸி ভக்திரேভগரீயஸி–81-நித்திய சத்தியத்தை நேசிப்பதே மெய்யாகவே மிகப்பெரிய அன்பு.–மனம், உடல் மற்றும் வார்த்தைகளை நேர்மையாகப் பயன்படுத்தும் ஒருவருக்கு, பக்தித் தொண்டே மிகவும் விலைமதிப்பற்ற உடைமையாகும்.-மூன்று ‘உண்மைகளில்’ (காலம் அல்லது பாதைகள்) பக்தி மட்டுமே மிகச் சிறந்தது; உண்மையில், பக்தி மட்டுமே மிகச் சிறந்தது.-

    தன் மனம், உடல் மற்றும் வார்த்தைகளை நேர்மையாகப் பயன்படுத்தும் ஒருவருக்கு, பக்தி சேவையே மிகவும் விலைமதிப்பற்ற உடைமையாகும்.

    গுணமாஹாத்ம்யஶக்திரூபஶக்தி பூஜாஶக்திஸ்மரணஶக்தி দஸ்யாஶக்தி ஸாখ்யஶக்தி வாத்சல்யஶக்திகாந்தாஶக்தி ஆத்மநிவேদநஶக்தி தந்மயாஶக்தி பரமவிரஹாஶக்தி ரூபாগধப்யேகாদஶதா ভவதி ॥–82-இந்த தெய்வீக அன்பு 11 விதமான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது :1-ஒரு பக்தர் கடவுளின் புகழையும் மகிமையையும் பாடுவதை விரும்புகிறார்.-2-கடவுளின் மயக்கும் அழகை நேசிக்கிறார்-3-இதயத்தின் வழிபாட்டை இறைவனுக்குச் செலுத்த விரும்புகிறார்.-4-இறைவனின் பிரசன்னத்தை இடைவிடாமல் தியானிக்க விரும்புகிறார்.-5-தன்னை இறைவனின் ஊழியராக நினைத்துக் கொள்ள விரும்புகிறார்-6-கடவுளை நண்பராக நேசிக்கிறார்-7-கடவுளைத் தன் பிள்ளையாக நேசிக்கிறார்-8-கடவுளைப் பிரியமானவராக நேசிக்கிறார்-9-தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.-10-கடவுளில் முழுமையாக மூழ்கி இருக்க விரும்புகிறார்.-11-கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் வேதனையை உணர்வதை விரும்புகிறார்.

    பக்தி சேவை என்பது ஒன்றாக இருந்தாலும், அது 11 வகையான பற்றுதல்களில் வெளிப்படுகிறது:-1-கடவுளின் மகிமையான குணங்களின் மீதான பற்று-2-கடவுளின் அழகின் மீதான பற்று-3-கடவுளை வழிபடுவதில் பற்று-4-கடவுளை நினைப்பதில் உள்ள பற்று-5-கடவுளுக்கு சேவை செய்வதில் பற்று-6-கடவுளை ஒரு நண்பராகக் கருதி, பதிலுக்குச் செய்வதில் உள்ள பற்று-7-ஒரு பெற்றோராகக் கடவுளைப் பராமரிப்பதில் உள்ள பற்று-8-கடவுளை ஒரு காதலராகக் கருதி அவருடன் பழகுவதில் உள்ள பற்று-9-தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதில் உள்ள பற்று-10-கடவுளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருப்பதில் பற்று-11-கடவுளிடமிருந்து பிரிந்திருப்பதை உணர்வதில் உள்ள பற்று.
    இதுவே உன்னதமான பற்று ஆகும்.-

    இவ்வாறு, அன்பு ஒன்றே என்றாலும், அது 11 விதமான முறைகளில் வெளிப்படுகிறது:1-கடவுளின் குணங்களை மகிமைப்படுத்துவதில் உள்ள அன்பு-2-கடவுளின் தெய்வீக வடிவத்தின் மீதான அன்பு-3-கடவுளை வழிபடுவதில் உள்ள அன்பு-4-கடவுளை நினைப்பதில் உள்ள அன்பு-5-கடவுளுக்கு சேவை செய்வதில் அன்பு செலுத்துங்கள்-6-கடவுளிடம் நட்பின் மீதான அன்பு-7-கடவுளைத் தன் சொந்தக் குழந்தையாக நேசிப்பது-8-கடவுள் மீதான அன்பு என்பது அன்புக்குரியவர் மீதான அன்பைப் போன்றது.-9-இறைவனின் பாதங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதற்கான அன்பு-10-கடவுளிடம் முழுமையாக மூழ்கும் அன்பு-11-இறைவனிடமிருந்து பிரிந்த வேதனையில் வெளிப்படும் அன்பு.-

    பக்தி சேவை என்பது ஒன்றாக இருந்தாலும், அது பதினோரு விதமான பற்றுதல்களில் வெளிப்படுகிறது: ஆண்டவரின் மகிமையான குணங்கள் மீதான பற்றுதல், அவருடைய அழகு மீதான பற்றுதல், அவரை வழிபடுதல், அவரை நினைவுகூருதல், அவருக்குச் சேவை செய்தல், ஒரு நண்பரைப் போல அவருடன் உறவாடுதல், ஒரு பெற்றோரைப் போல அவரைப் பராமரித்தல், ஒரு காதலரைப் போல அவருடன் உறவாடுதல், தன்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தல், அவரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருத்தல், மற்றும் அவரிடமிருந்து பிரிவை அனுபவித்தல். இந்தக் கடைசிப் பற்றே மிக உயர்ந்த பற்றுதலாகும்.

    இத்யேவம் வদந்தி ஜநஜல்பநிர்ভா ஏகமாதঃகுமாரவ்யாஸஸுகஸண்டில்யগர்গவிஷ்ணுகௌண்டில்யஶேஷோদ்ধா வருணிবலிஹநுமদ்விভீஷணদயோ ভக்தாசார்யாঃ ॥–83-பக்தி நெறியாளர்கள் இந்த உண்மைகளை, பொது விமர்சனத்திற்குச் சிறிதும் அஞ்சாமல், ஒருமனதாகப் பிரகடனம் செய்கிறார்கள்-பின்வருபவர்கள் பக்தியின் சிறந்த ஆசிரியர்களாக அறியப்படுகிறார்கள்:-குமார , வியாசர் , சுகா , சாண்டில்யா , கர்கா , விஷ்ணு , கவுண்டினியா , சேஷா , உத்தவர் , அருணி , பலி , அனுமன் , விபீஷணன் மற்றும் பலர் .-

    பக்தி சேவையின் ஸ்தாபகர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:-குமாரர்கள், வியாசர், சுகன், சாண்டில்யர், கர்கா, விஷ்ணு, கவுண்டில்யர், சேஷ, உத்தவர், அருணி, பலி, அனுமன், விபீஷணன் மற்றும் பிறர் – உலகப் பேச்சுக்களுக்கு அஞ்சாமல் பேசி, தங்களுக்குள் ஒரே கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு, பிறரையும் அவர்களின் வீண் பேச்சுகளையும் கண்டு அஞ்சாதவர்களும், சனத்குமாரர், வியாசர், சுகர், சாண்டில்யர், கர்கர், விஷ்ணு, கௌண்டின்யர், சேஷன், உத்தவர், அருணி, பலி, அனுமன், விபீஷணன் போன்ற பக்தி மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களும், தங்கள் ஒருமித்த கருத்தை அறிவிக்கிறார்கள்

    பக்தித் தொண்டின் ஸ்தாபக அதிகாரிகளான குமாரர்கள், வியாசர், சுகர், சாண்டில்யர், கர்கர், விஷ்ணு, கௌண்டில்யர், சேஷன், உத்தவர், அருணி, பலி, அனுமன், விபீஷணர் மற்றும் பிறர் — உலகப் புறங்கூறுதலுக்கு அஞ்சாமல் பேசி, தங்களுக்குள் ஒரே கருத்தைப் பகிர்ந்துகொண்டு இவ்வாறு கூறுகின்றனர்.

    ய இடம் நாரதப்ரோக்தம் ஶிவாநுசாஸநம்விஸ்வஸதி ஸ்ரத்ததே ச பக்திமாந் பவதி ச ப்ரேஷ்டம் லபத ச ப்ரேஷ்டம் லபதே இதி.-84-நாரதரின் தெய்வீக அன்பைப் பற்றிய இந்த மங்களகரமான வர்ணனையை நம்பி, இந்தப் போதனைகளில் நம்பிக்கை கொள்பவர் எவரோ, அவர் இறை அன்பு கொண்டவராக ஆகிறார், மிக உயர்ந்த பேரின்பத்தை அடைகிறார், மேலும் வாழ்வின் உன்னத இலக்கை எட்டுகிறார்.-நாரதர் கூறிய இந்த அறிவுரைகளை நம்பி, அவற்றால் உறுதியடைபவர் எவரும் பக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டு, மிகவும் பிரியமான இறைவனை அடைவார். ஆம், ஒருவர் மிகவும் பிரியமான இறைவனை அடைவார்.-சிவபெருமானால் போதிக்கப்பட்டதாக (கட்டளையிடப்பட்டதாக) நாரதரால் அருளப்பட்ட இந்த விளக்கத்தை நம்பி, அதில் நம்பிக்கை கொள்பவர், இறைவனின் அன்பைப் பெற்று, தனது நோக்கத்தை, ஆம், தான் விரும்பும் குறிக்கோளை அடைகிறார்

    நாரதர் கூறிய இந்த அறிவுரைகளை நம்பி, அவற்றால் உறுதியடைபவர், பக்தி என்னும் ஆசீர்வாதத்தைப் பெற்று, மிகவும் பிரியமான இறைவனை அடைவார். ஆம், அவர் பிரியமான இறைவனை அடைவார்


    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ மணவாள மா முனிகள்‌ விஷயமான ஸ்தோத்ரங்கள்‌–

    May 22, 2026

    ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-

    ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
    ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –

    ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –

    ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரணம் புஜ ஷட் பதம்
    தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்

    சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
    போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
    பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
    ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-

    போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
    பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
    பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
    பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்

    ———–

    ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
    உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
    ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
    ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-

    முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
    யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –

    ————

    ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
    சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
    காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
    பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-

    ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
    ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –

    ————

    கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
    லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-

    மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
    லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –

    ————–

    ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
    பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
    ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
    ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-

    ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
    சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்

    ——————–

    ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
    ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
    ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
    உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-

    ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
    உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
    நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

    ————–

    வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
    வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
    ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
    லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-

    ஆதி ஸத்-ஆஜ்ஜை-

    ——————

    யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
    கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
    தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
    வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-

    ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
    ஸ்ரீ சைல பாத்யம் லஷ்மி நாத பாத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
    என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை

    —————-

    பல ஸ்ருதி –

    ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
    மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
    யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
    வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா

    —————–

    வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
    ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா

    ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்

    ——————————————–

    ஸ்ரீ பரவாதிகேசரியார்‌ அருளிய ஸ்ரீ சைல வைபவம்‌

    கூறுகேன்‌ உலகீரே கும்குமத் தோளரங்கேசர்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ கேட்க மணவாள மாமுனியை
    ஏறுமணை தனிலிருத்தி இருநிலத்தில்‌ தாமிருந்து வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி, –1-

    ஏறுமணை–உயர்ந்த ஆஸனம்‌
    இருநிலத்தில்‌ -பூமியில்‌
    விரையடி-திருவடிகளை
    பூசனை யாற்றி-தொழுது

    ஆறு இரண்டு புறஞ்சூழ அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌
    கூறியசீர்‌ சயிலத்தைக்‌ கொண்டாடி உரைக்க வெனா
    ஊறிய தேன்‌ பெருக்கெள்ன உன்னிஅதை உகந்துரைத்தான்‌
    சேறுவளர்‌ கமலை மைந்தன்‌ சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே.—2–

    ஆறு இரண்டு–இரண்டு காவேரிகள்‌
    அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌ -திருவரங்கம்‌ முதலான 108 திருப்பதிகள்‌
    சயிலத்தைக்‌ கொண்டாடி-ஸ்ரீ சைலேச …என்னும்‌ தனியன்‌
    உன்னி-எண்ணி
    மைந்தன்‌ -அன்பன்‌ (கமலை மைந்தன்‌ -லஷ்மீ காத்நன்‌; சரிய:பதி!
    ஒருப்பட்டே–ஒப்புக்‌ கொண்டு,

    பட்டர் பிரான்‌ முதலாய பதின்மர் கலை பழிச்சலிலும்‌
    சிட்டார்களாய்த்‌ தினந் தோறும்‌ திருமணிடு வேளையிலும்‌
    இட்டமுற உணும் பொழுதத்து ஓண்கரநீர்‌ ஏற்கையினும்‌
    அட்டதிக்கும்‌ விளங்குரைத்தார்‌ ஆரியர்கள் அனைவருமே–3

    பதின்மர்கலை -ஆழ்வார்கள்‌ பதின்மரும்‌ பாடியுள்ள புகழ் மாலைகள்‌
    ஓண் கர நீர்‌ –பரிசேஷணத்தில் ஆசமநம்‌
    ஆரியர்கள்னைவருமே, -ஆசாரியர்கள்‌

    ஆரியர்கள்‌ கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்‌
    பேரியலும்‌ தொண்டர் குழாம்‌ பெரும் பேறாக்‌ கொண்டனரால்‌
    சீரியராய்‌ வாழ வெண்ணில்‌ செக தலத்தீர்‌ கற்றுணர்மின்‌
    தாரியலும்‌ அரங்கருக்கும்‌ தமிழ் மறைக்கும்‌ மணமாமே
    –4–தார்‌-பூமாலை

    மணவாளமாமுனியை வழுத்துறவோர்‌ பயன்‌ பெறுவர்‌
    குணமாகக்‌ கொண்மின்‌ இதைக்‌ கொடும் பிறவிப்‌ பிணி அகல்வீர்‌
    பணவாளராவிவராம்‌ பகைத்தாரே யுய்தலிலர்‌
    மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர்‌ தனியனையே–5
    -(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்_
    வழுத்துறவோர்‌ -துதிப்பவர்கள்‌
    பணவாள்‌ அரா–(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்)-பணா மணிகளுடைய ஆதி சேஷன்‌;

    தனியனென்று பேர்‌ சாற்றித்‌ தண்ணரங்கர்‌ முன்னர்‌
    இனிய திருப் பவளத்தாலே –முனிவரானார்‌
    மாறன்மறை முப்பத்தாறாயிரத்தின்‌ மாண் பொருளைக்‌
    கூற உபதேசித்தார்‌ கொண்டு–6-

    மா முனிவர்‌–சடகோப மா முனிகள்‌
    ஈடுமுப்பத்தாறாயிரம்‌
    மாண் பொருளை-உயர்ந்த அர்த்தங்களை

    தேசமெங்கும்‌ இது திருப்பதிகள்‌ தோறுரைக்க
    நேசமுற அரங்கர்‌ நேமித்தார்‌–ஏசுமவர்‌
    பாதகராய்‌ எரிவாய்‌ பாழ் நகரில்‌ துய்ப்பர்‌ இன்னல்‌
    வேதனார்‌ உள்ள மட்டும்‌ எய்த்து –7-

    துய்ப்பர்‌ இன்னல்‌–இன்னல்‌ படுவர்‌
    வேதனார்‌-பிரம்மா
    எய்த்து-வருந்தி

    எய்யத்‌ துணிய இராவணியைக்‌ கொன்றவன்‌ காண்‌
    செய்ய நெறி விளங்கும்‌ சேஷனவன்‌–வையக்‌
    தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்‌
    வினையறுத்து வீடருளும்‌ வேந்து–8-

    இராவணியைக்‌ கொன்றவன்‌–ராவணன்‌ பிள்ளையான இந்த்தரஜித்தைக்‌ கொன்ற லக்ஷ்மணன்‌
    வினையறுத்து–பாபங்களைப் போக்கி
    வீடருளும்‌–மோக்ஷம்‌ தரும்‌
    வேந்து–முனிவர்‌ பெருமான்‌

    வேந்தராய்‌ மண்ணாண்டு விண்ணேறலாம்‌ எளிதாய்‌
    தோய்ந்த உறவாயிருக்கில்‌ தொல்லுலகீர்‌–ஒர்ந்துய்ய
    ஏதிகொடு காலனிழந்து அமர்மேவான்‌ விண்ணோர்‌
    நாதனும்‌ வந்தே வணங்கு நன்‌கு — 9–

    விண்‌-பரமபதம்‌
    ஏதிகொடு–ஆயுதம்‌
    நாதன்‌-பரமபத நாதன்‌

    வணங்கினர்‌ சீர் பெற்றார்‌ வரன்‌ முறையால்‌ வீடணர் போல்‌
    இணங்கினார்‌ ஒரொருவர்‌ இரு நிலத்தில்‌ சிறப்புற்றார்‌
    பிணங்கினார்‌ பேய்ப் பிறவிப்‌ பேதையர்‌ கடமைக் கண்டே
    உணங்கினார்‌ தாமதராய்‌ உட்சனந்தார்‌ தென்றவரே–10-

    வீடணர்–விபிஷணன்‌
    பிணங்கினார்‌ –மாறுபடுபவர்‌
    பேதையர்‌ -அறிவிலிகள்‌
    உணங்கினார்‌ -காய்கின்றவன்‌
    தாமதராய்‌–மந்தர்‌

    தென் கலையாம்‌ தமிழ் வேதச்‌ சீர்சைலத்‌ தனியனெனும்‌
    நன்கலையும்‌ உள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்‌
    மின் கலையும்‌ புரி நூலும்‌ மேனோக்கு புண்டரமும்‌
    தென் கலையும்‌ வட கலையும்‌ திகழ் நாவர்‌ ஆகுவரே–11-

    தென் கலை–அழகிய கலை
    மின்‌-ப்ரகாசம்‌
    மேனோக்கு புண்டரமும்‌ –ஊர்த்வ புண்ட்ரம்‌-திருமண்‌ காப்பு

    ஆகுகலென்‌ இனி எனக்கோர்‌ ஆராவமுதாய்‌ என்‌
    சோகமற உளத்தடத்து துலங்கு வர வர யோகி
    சேகறு செம்மலர்த் தாளும்‌ சீர்‌ சைலத் தனியனும் இன்று
    ஓகையுறப்‌ பெற்றனெனால்‌ ஒலி கடல்‌ தாரணியீரே. –12-

    சேகறு-துயாறு
    ஓகை–மகழ்ச்சி

    தாரணியோர்‌ வாழ வெண்ணித்‌ தானே திரு வநந்தன்‌
    பேரணியும்‌ குருகை நகர்‌ பிறங்க நனிப்‌ பேரருளால்‌
    சீரணியும்‌ மணவாள மா முனியாய்ச்‌ செனித்தனால்‌
    தாரணியும்‌ அரங்கருக்குத்‌ தமிழ் மறைத்‌ தேசிகனெனவே–13–

    பிறங்க–விளங்க
    செனித்தனன் -அவதரித்தனன்‌

    தமிழ் மறை ஓதுவரேல்‌ தனியனது மற்றில்லை
    திமிரமற மெய்ஞ் ஞானச்‌ செழுஞ்சுடர் சேர்‌ மனமுடையீர்‌
    அமிழாமல்‌ சமுசாரத்து ஆழ் கடலைக்‌ கடத்தி ஒரு
    நிமிடத்தில்‌ நித்தியராய்‌ நிறுத்தும்‌ பேரின்பத்தே
    –14-திமிரமற-மயர்வற-இருள் போக

    பத்துத் திசைகளினும்‌ பண மணிகள்‌ சுடரெறிப்ப
    முத்தி தரும்‌ அரங்கருக்கு மூவணையாய்‌ சூழ்ந்திலங்கும்‌
    எத் திசையும்‌ பணிந்தேத்தும்‌ எம்‌ பெரிய முனியாகும்‌
    அத்தனெழில்‌ வர யோகி ஆயிர வாய்‌ அரவரசே-
    -15-அத்தனெழில்‌ வர யோகி–ஆசார்யனான அழகிய மணவாள மா முனிகள்‌

    அரவேறு மேவி யறி துயில்‌ கொள்ளும்‌ அரங்க நகருரை
    வர யோகி சீர்சைலத்தின்‌ பெருமாப் புகழ்‌ வைபவத்தை
    விரகால்‌ இசை மறையோர்‌ திலகன்‌ தமிழ் வீறுடைய
    பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே
    –15-யோக நித்‌திரையில்‌ ஆழ்ந்த திருவரங்கன்‌ அருளிச் செய்த,

    ஸ்ரீ மணவாள முனிகள் வைபவம் —ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா அருளிச் செய்த பாதாதி கேச மாலை -ஸ்ரீ மா முனிகள் விஷய ஸ்ரீ அமலனாதி பிரான் —

    ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
    அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
    அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
    எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

    எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
    கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
    பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
    உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
    அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
    அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
    பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

    ———————————————————————

    போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
    சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
    ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
    பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-

    புதுக்கணித்த -அலங்கரித்த
    செய்ய தாமரைத் தாளிணை வாழியே போல்

    —-

    வேழக் குருத்தின் அழகைப் பழித்து விரை மருவும்
    வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
    ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
    கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-

    குறங்கு -தொடை
    கேழற்ற-ஒப்பில்லாத

    ———–

    தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
    வீனமிலாத இளமையின் எழில் சகனம்
    வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
    தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–

    மருங்கு -இடை
    சகனம்-தொடையின் உள் பாகம்
    வான் -பெருமை
    துவராடை -காவி யூட்டிய ஆடை

    ————

    வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
    சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
    உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
    சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–

    சூறை- கொள்ளை

    வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு நீர் கங்கையின்
    பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
    நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
    இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டாரோ -கம்பர் —சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் -45-

    ———–

    ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
    காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
    சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
    ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-

    அம்புயம் -திருத்தோள்
    கார் -மேகம்
    சுரபி -காம தேனு
    திருத்தண்டு -திருக்கையில் ஏந்தும் முக்கோல்
    ஈரும் படி -அறும் படி

    கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

    ————

    தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைத் தார்
    வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
    இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
    திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–

    தார் –கிண்கிணி மாலை
    வடம் -மணி வடம்
    வண் புரி நூல் -முப்புரி நூல்
    எழுதி வைத்தேன் -சுவர் வழி எழுதிக் கொண்டேன் -பெரியாழ்வார்

    துய்ய மார்பும் புரி நூலும் வாழியே

    ————

    மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
    சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
    சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
    பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-

    மங்காது -குறையாது
    மருவார் -வாசனை நிரம்பிய
    தமியேன் -கதி அற்றவன்

    சுந்தரத் திருத் தோளிணை வாழியே

    ———–

    பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
    பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
    செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
    வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–

    வழுத்தினேன் -தொழுதேன்

    மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
    தேறும் படி உரைக்கும் சீர்

    கருணை பொங்கிய கண்ணினை வாழியே

    ————

    பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
    அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
    திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
    வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-

    புங்கவர் கோன் –ஆச்சார்ய சிகா மணி
    நாலும் திருச்சிகை -தாழ் முடி
    வருணம் -நிறம்

    ————

    வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
    வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
    வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
    வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-

    செய்ய தாமரை தாளிணை வாழியே
    சேலை வாழி திரு நாபி வாழியே
    துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
    சுந்தரத் திருத் தோளிணை வாழியே
    கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
    கருணை பொங்கிய கண்ணினை வாழியே
    பொய்யிலாத மணவாள மா முனி
    புந்தி வாழி புகழ் வாழி வாழியே –

    ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த சாத்து முறைப் பாசுரத்துடன் ஒப்பு நோக்குக

    ————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

    ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
    அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
    அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
    எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

    —————

    எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
    அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
    காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
    பேராளனை அடைந்த பேர் -தனியன் –

    ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
    சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
    ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
    ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

    ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
    அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
    ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
    ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
    ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

    தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை
    க்ரூர நிஷித்தம் -ஸ்ரீ வசன பூஷண ஸூர்ணிகை –308-
    சிஷ்யனாக நினைக்காமல் ச ப்ரஹ்ம சாரியாக-தன்னுடனே கற்பவனாகவே – –
    தனது ஆச்சார்யருக்கு சிஷ்யராக நினைத்து உபதேசிக்க வேண்டும்

    பரமனைப் பயிலும் திருவுடையார் யாவராலும் அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர்
    ஆழிப்பிரான் தன்னைப் பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடை நாதர்
    கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே
    கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம்
    மத்யம பர்வம் ப்ரக்ருஷ்டம் அன்றோ
    இந்தத் தனியன் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது
    மா முனிகள் அருளிச் செய்த தனியன்

    ———-

    சதாச்சார்ய சம்பந்தம் பெற்ற மா முனிகளைத் தாம்
    அகதிகராய் ஆஸ்ரயித்த விஷயத்தை அருளிச் செய்கிறார்

    சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
    தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
    பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
    பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

    சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
    அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
    குரு பரம்பரையும் அனுசந்தேயம்
    சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
    இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
    சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
    திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –

    மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
    செம் முகமும் –
    தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
    தளிரேய் பதங்களும்
    தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா தியானத்துக்கு —
    சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
    தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்

    பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் –
    மா முனிகள் திருவடித்தாமரைகள் -பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
    திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
    பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-
    ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

    ————-

    ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே முதல் ஸ்லோகத்திலே எம்பெருமானாரை சரண் புகுந்து
    அவர் உகப்புக்காக நம்மாழ்வாரை அடுத்த ஸ்லோகத்திலே சரண் புகுந்தால் போலவே இவரும்
    அவர் உகப்புக்காக திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகளில் சரணம் புகுகிறார்

    பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
    உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
    கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
    பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

    பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
    சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்

    உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
    ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
    கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
    காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ

    இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

    பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
    பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் தானே

    ———————-

    மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் கிடைத்த எம்பெருமானார்
    திருவடிகளிலே ப்ராவண்யத்தைப் பேசி
    யதீந்த்ர ப்ரவணரான மா முனிகளை வாழ்த்த வேண்டி இருக்க –
    அப்படிச் செய்யாதவர்களை நிந்திக்கிறார் –

    பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
    துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
    மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
    பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

    பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
    விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
    ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
    ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
    வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –

    பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
    பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே

    துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
    மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்

    பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
    யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

    —————-

    அனுகூலர் அல்லாதவர்களை நிந்தித்து
    அனுகூலர்களுக்கு அவரே மோக்ஷ உபாயமாகும் தன்மையைப் பேசி மகிழ்கிறார் –

    பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
    சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
    மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
    பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

    திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
    சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே

    தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
    மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
    ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –

    பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் தீண்டில்
    அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

    —————–

    கீழே பாவநவத்தைப் பேசி இதில் போக்யத்வத்தைப் பேசுகிறார்
    அல்லது
    மோக்ஷம் அளிக்காமல் படுகொலை செய்தாலும் விட ஒண்ணாத
    கண்ணுக்கும் நெஞ்சுக்கும் போக்யமான
    திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகைப் பேசுகிறார்

    நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
    பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
    முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
    எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

    நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
    பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
    திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே

    கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
    நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
    ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
    இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே —

    கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
    பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
    திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
    பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –

    முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
    எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
    கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

    கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-என்று
    ஆச்சார்ய அபிமானத்தை தவம் என்றது போல் இங்கு புண்ணியம் என்கிறார்

    ஞாலம் உண்ட ஞான மூர்த்தி நாராயணன் கோல மேனி
    மா முனிகளுடையதோ பொற் கோல மேனி

    தேசிகர் -த்ரிஜகத் புண்ய பலம் த்ரி தண்ட ஹஸ்தம் -என்றார் யதிராஜ சப்ததியில்
    அதே போல் இங்கு பூதலத்தோர் செய்த புண்ணியமாம் முக்கோல் தரித்த மா முனி என்கிறார்

    கோடி மூலை சிறு பகுதி -க்ஷணப் பொழுதாவது மா முனிகளின் திவ்ய மங்கள விக்ரஹ
    சிந்தை செய்வோருக்கு யாரும் ஈடில்லை என்றவாறு

    ———————

    இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
    நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
    தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
    வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

    இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
    அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
    அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே

    நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து

    நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விளைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
    பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
    அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
    இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்

    ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
    அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ

    கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி

    எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
    தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –

    த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
    உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

    —————-

    ஐந்தாம் பாட்டில் மானஸீக தியானத்தையும்
    அடுத்து வாசக ஸ்தோத்ரம்
    இதில் காயிக பிராணாமம்
    நினைப்பதும் பேசுவதும் வணங்குவதும் ஒரே வியக்தியான மா முனிகளே என்கிறார்

    வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
    தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
    காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
    பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

    வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
    ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
    ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
    அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
    சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி

    இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
    தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
    நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-

    அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
    அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
    ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

    ————————-

    வாழ்த்துவன் என்றாரே -நமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
    நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
    சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –
    சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் என்கிறார்

    பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
    கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
    தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
    தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

    பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
    பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –

    பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்

    குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்

    கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –

    தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –

    அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –

    அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
    கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

    ——————-

    பெருமையை நினைந்து சிந்திப்பவர்களையே அன்றி
    பொறாமை கொண்டு நிந்தித்தாலும் கூட விடாமல் உஜ்ஜீவிக்கப் பண்ணி அருள்வார் என்கிறார் –

    சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
    வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
    புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
    சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

    சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
    கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
    அங்கு சென்று நித்ய கைங்கர்யம் பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே

    சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்

    நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்

    மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
    ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
    மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –

    புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்

    தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்

    விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்

    மித்ர பாவேந -வேண்டாவே -நிந்திப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –

    நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
    நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

    ——————–

    பெரும் பாலோர் சிந்தித்து வந்தித்து வாழ்த்தி
    ஸ்வாமியின் பெருமையை உள்ளபடி உணர்ந்து
    இந்த சேவையே பரம பாவனம் போக்யம் என்று புகழ்ந்து நேசிக்கிறார்கள்

    நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
    மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
    நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
    தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

    நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
    மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்

    வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச் செயல்களே இருந்தாலும் – –
    மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற

    நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
    இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை

    இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
    இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

    ———————–

    இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
    சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
    துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
    எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

    இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
    இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
    எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே

    இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ

    நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே

    செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
    துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
    திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
    நடையாடும் மதிள் போல் –
    நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
    ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளையே வாய் வெருவிக் கொண்டு இருப்பாரே

    மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
    அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
    ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
    எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

    —————-

    பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
    இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்

    யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
    பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
    தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
    வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

    யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
    மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு

    பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
    சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
    சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
    ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –

    இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
    திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்

    சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
    இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –

    சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்

    நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்

    திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-

    கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-

    ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
    பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
    மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

    ————

    வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
    தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
    சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
    தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

    வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
    தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

    திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
    பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

    தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
    இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
    இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
    முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
    இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
    இவர் பெருமை அறிந்த நாரணார் —

    மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
    சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
    சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
    தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

    இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
    இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
    தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
    நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

    வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
    வகையாக நாரணனை அடிவணங்கிக்
    கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
    கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
    சதிராகச் சீசைல மந்திரத்தின்
    சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
    பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
    பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

    சென்றவர்கள் இருவருமே சேர வந்து
    திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
    சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
    தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
    பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
    புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
    சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
    தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

    ————–

    சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
    தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
    பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்-1-
    என்று த்யான முகத்தால்
    ஸ்ரீ சைல தயா பாத்ரத்வம் கூறப்பட்டது -காருணிகரே த்யானிக்கப் பட வேண்டியவர்கள்

    தொல்லருள் ஞானம் விளைத்து-6-என்றும்
    இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு வாய் மொழியோடு
    கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-என்றும்
    தத்வ ஹித புருஷார்த்த ஞானத்தையும்
    பகவத் விஷயார்த்த ஞானத்தையும் பிறருக்கு உண்டாகும் படி செய்வதைக் கூறும் முகத்தால்
    மா முனிகளுக்கு உள்ள ஞானத்தையும்

    சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால் வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து
    மெய்ம்மா மறையோர் புந்திக்குள் மேவும் வர யோகி–12-
    என்று மா முனிகள் ஸ்ரீ ரெங்கநாத பக்தர்களால் த்யானம் செய்யப்படுகின்றமை கூறும் வாயிலாக
    மா முனிகளுடைய ஸ்ரீ ரெங்கநாத பக்தியும் பேசப்பட்டன

    முக் கோல் தரித்த மணவாள மா முனி -5-என்று வைராக்கியமும்
    மணவாள மா முனிக் கார் முகிலை-2-என்று ஒவ் கார்யமும்
    கருணை மணவாள யோகி-8- தயை என்று
    தீ பக்த்யாதி -ஆதி யால் ஸங்க்ரஹிக்கிக்கப் பட்ட -தீ பக்த்யாதி குண ஆர்ணத்வம் கூறப்பட்டது

    எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
    மறவாத சீலன் மணவாள மா முனி-3-யதீந்த்ர ப்ரணத்வம் கூறப்பட்டது

    மணவாள மா முனி -வரயோகி -மணவாள யோகி-பல இடங்களிலும் வருவதால்
    ரம்ய ஜா மாத்ரு முனித்வம் கூறப்பட்டது

    மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–என்றும்
    வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
    தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம்-7- என்பதால்
    வந்தே பதார்த்தம் சொல்லப் பட்டது

    ஆக இப்பிரபந்தம் ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் விவரணம் என்பதும் தேறும்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி அஷ்டகம்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

    ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
    ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

    பர்யங்கேபி பரம் தத்வம் ரங்க ஷாயிந மேவய
    உத்திஷ்டத் யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் –1-

    உஷஸ் யுக்தாய லோகார்ய ப்ரமுக ஆச்சார்ய ஸூக்திபி
    உச்சைஸ் ஸ்துத்வாத கோவிந்தம் தத் திவ்ய ஸ்தல காஞ்சிதம் –2-

    காவேர்யா கமல உத்பாஸி ஸம்ஸ்ப்ருஷ்ய ஸலீலம் ஷுபம்
    கோவிந்த குண ஷிலாதி த்யாத்வா அஷ்ரு கலிலாநந –3-

    ரோமாஞ்சித சலத் காத்ர பக்த்யா பரமயைவ ய
    புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

    பகவத் ஸாஸ்த்ர நிர்த்திஷ்ட விதி நைவ நிமஜ்ஜ்ய
    திவ்ய காஷாய ஸூத்த ஊர்த்வ புண்ட்ர மாலாதி பூஷித –5–

    மஹா மந்த்ராதி ஸம் ஜப்ய விஷிஷ்டைஸ் பரி வாரித
    ஸ்ரீ ரெங்க தாம ஸம் ஸேவ்ய தத் தத்வாந் யுப ப்ரும்ஹ்ய ச –6–

    ஆராத்ய ரங்க ராஜாதீந் அநு யோகம் விதாய ச
    அபு நாத் அம்ருதைர் ஆர்யாந் தம் வந்தே வர யோகிநம் –7-

    வந்தே ஸுவ்ம்ய வராக்ரிய யோகிநம் அஹம் த்யான அம்ருதா ஸ்வாதிநம்
    ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரி சார்யா குணை காந்திநம்
    ஆஜ்ஜா ஸாஸ்த்ர விதேர விஸ்யதமலம் ஸம்ஸாரி கந்தாஸஹம்
    காலே ஷு த்ரி ஷு சைவ காமித பல ப்ராப்த் யை குரூணாம் குரும் — 8-

    இது ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ பூர்வ தினசரி சுருக்கம் –
    த்யான ஸ்லோகம் -போல் அமைந்துள்ளது

    ———–

    ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

    ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
    அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
    அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
    எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

    எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
    கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
    பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
    உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
    அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
    அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
    பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

    ———————————————————————

    ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
    அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
    பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
    பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
    நீதியாய் முன் போலே நிற்க நாடி
    நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
    சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
    தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-

    நற்குரோதன வருட மகரமாத
    நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
    விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
    வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
    புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
    புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
    துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
    துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-

    செய நாமமான திருவாண்டு தன்னில்
    ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
    செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
    தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
    தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
    தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
    சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
    சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

    வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
    வகையாக நாரணனை அடி வணங்கிக்
    கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
    கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
    சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
    சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
    பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
    பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-

    சென்றவர்கள் இருவருமே சேர வந்து
    திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
    சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
    தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
    பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
    புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
    சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
    தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

    நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
    நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
    தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
    தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
    செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
    செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
    வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
    மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

    ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
    அழகான ஆனி தனில் மூல நாளில்
    பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
    பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
    ஆனந்த மயமான மண்டபத்தில்
    அழகாக மணவாளர் ஈடு சாற்ற
    வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
    மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

    தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
    திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
    தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
    தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
    ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
    அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
    தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
    தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

    அருளினதே முதலாக அரங்கருக்கும்
    அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
    தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
    திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
    பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
    புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
    அருளுடைய சடகோபர் உரைத்த வேத
    மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

    நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
    தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
    செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
    வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

    சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
    போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
    மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
    ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

    ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம்‌ அண்ணா அருளிச் செய்த்‌ ஸ்ரீ வரவர முநி ஸுப்ரபாதம்‌
    வேதாத்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போகம்‌
    காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்‌ |
    வத்ஸாந்வவாய மநவத்ய குணைருபேதம்‌
    பக்த்யா பஜாமி ப்ரவாதி பயங்கரார்யம்‌ ॥

    ரவிருதிகஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
    விகஸத பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ ந மே |
    வரவர யோகி வர்ய! வரணீய.! தயைகநிதே!
    ஐயஜய தேவ ஜாக்ருஹி ஜநேஷு நிதேஹி தியம்‌ ॥–1-
    ஸ்வப்‌நமிதம்‌ தவ ஸ்வ மஹிமா நுபவைக ரஸம்‌ ததாபி
    ததாவிகம்‌ ததிதி ஜாது ந வேத்தி ஐந | வரவர யோகி வர்ய! ததிதப விஜஹாது பவாந்‌
    அபரிமிதம்‌ ஹிதம்‌ த்ரிஜகதா மநு சிந்தயிதும்‌ ॥–2-
    அவதரணம்‌ ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்‌
    விவித ஹிதா வபோதந க்ருதே ஹி க்ருதம்‌ பவதா |
    தத இஹ ஏஹி யோக ஸயநாத்‌ மம நாத
    ஜநாந்‌ அம்ருத மயைர பாங்க வலயைரபி ஷேச யிதும்‌ –3-

    ஸரதர வித்த ப்ருந்த ஸூஷமா பரிபோஷ ஜுஷா
    தவ நயநேந கேசந பரே சரணே நிததா |
    மது கபீர தீர சதுரை ருகிள நரி தரே வரத
    துரம்‌ தரந்தி பவஸிந்துமமும்‌ தரிதும்‌ ॥–4–
    பரம நபோ நிவாஸ! பணி புங்கவ! ரங்க பதே:
    பவந மிதம்‌ ஹிதாய ஜூகோ பவதா ததிகதம்‌ |
    ததபிஸ வை தேவ ந்ருகநிம் ப்ரசுபீகுருஷே
    ததிஹ மஹத்‌ தவைவ குரு வைபவ யத் பிதுரம்‌ ॥–5-
    த்வதபிமத ப்ரியஸ்த்வ தநு வர்‌த்தந தந்யதமாத்‌
    அலமதிரிக்த இதயகில லோக ஸுபோ தமிதம்‌ |
    அவநி தலம்‌ த்வதீப்ஸித மிதம்‌ ச ஹி தத்ர வஸந்
    அயமகிலஸ்‌ததைவ நிருபாயமுபைதி பதம்‌ –6-

    ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம் புஜேந
    ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந |
    ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸிதெளா தே
    ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே
    ஸ்ரீ மத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே |
    ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥
    –்ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேங்கடச ஸ்தோத்ரத்திலுள்ளவை)

    ஸ்ரீ வரவர முநி விஷய முக்தகம்‌
    ப்ரபத்யே பத பத்மாநி பரம ப்ரேம ஸம்பதாம்‌
    ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணைக ஜுஷாம்‌ ஸதாம்‌
    ஸம்பத் ஸ்வருபா நுகுணைக யஸ்மிந்‌ ஸர்வோத்தரோ யத்ர மந : ப்ரஸாத: |
    ஸ்த்பிஸ் ஸமம் தேவ தமேவ தேஸம்‌ ப்ராப்யம்‌ ப்ரபத்யே பவதங்க்ரி மூலம்‌ ॥

    யந் மூலாஸ் வயுஜமாஸ் யவதார மூலம்‌
    காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக ஸிந்தோ: |
    ஆஸீதஸத் ஸூகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌
    ததேவ ஐகதப் யுதயைக மூலம்‌ ॥

    ஸ்ரீ மத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாம்‌
    பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோ அபி பூமா ஸஹாய: |
    திவ்யம்‌ தஸ்மை தாது விபவம்‌ தேஸிகோ தேஸிகோநாம்‌
    காலே காலே வரவர முநி கல்பயந் மங்களாநி

    அபகத மதமாதைரந்தி மோபாய நிஷ்டை:
    அதிகத பரமார்த்தை ரர்த்த காமா நபேஷை : |
    நிகல ஜந ஸுஹ்‌ருத்பிர் நிர் ஜிதக்‌ரோத லோபை:
    வரவர முநி ப்ருக்யைரஸ்து மே நித்ய யோக ॥

    ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
    ஸ்ரீரங்கவாஸிநே பூயாத்‌ நித்ய ஸ்ரீர்‌ நித்ய மங்களம்‌ ॥

    —————-————————————————————————————————————–————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பரவாதி கேசரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீசைலேச மந்த்ர ப்ரபாவம் —

    May 22, 2026

    மணவாள மாமுனிகள்‌ வைபவ பரமான யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்‌ எனும்‌ இந்த திவ்ய க்ரநததத்தை அருளிச் செய்த பிள்ளை லோகார்ய (பிள்ளைலோகம்‌) ஜீயர்‌ மணவாளமாமுனிகள்‌ திருவடிகளில்‌ மதுரகவி நிஷ்டராய்‌ அந்தரங்கரான கோவிந்தப்ப தாதர்‌(தாஸர்‌) என்பவரின்‌ திரு வம்சத்தில்‌ உதித்தவர்‌. இந்த கோவிந்‌தப்பர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ பண்ணி பட்டர் பிரான்‌ ஜியர்‌ என்று திருநாமம் பெற்று மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்களில்‌ ஒருவராய்‌ விளங்கினார்‌. கோவிந்தப்பருடைய குமாரர்‌ அழகிய மணவாளர்‌-அழகிய மணவாளருடைய பெளத்ரரான வரதாசாரியர்‌ என்பவர்‌
    உததமாஸ்ரமம்‌ ஸ்வீகரிதது பிள்ளை லோகம் ஜீயர்‌ என்று ப்ரஸித்தி பெற்ரார்
    . இவர்‌ மணவாள மாமுனிகள்‌ அருளிச் செய்த யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம்‌ இவைகளுக்கு மணி ப்ரவான வ்யாக்யானங்கள்‌ அருளிச் செய்துள்ளார்‌. ராமாநுஜார்ய திவ்ய சரிதம்‌ என்னும்‌ வைபவ க்ரந்தம்‌, இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம்‌, நாலாயிர தனியன்கள்‌ வ்யாக்யானம்‌ இவைகளையும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. இவருடைய திருநஷத்ரம்‌ சித்திரையில்‌ திருவோணம்‌,-திருக் கடல்‌ மல்லையில்‌ கடல்‌ கொண்டு விட்ட தல சயனத்‌ துறைவார்‌ ஸந்திதியை இப்போதுள்ள விடத்தில்‌ கட்டி, அதில்‌ பெருமாளையும்‌ பூதத் தாழ்வாரையும்‌ திருப்ரதிஷ்டை கண்டருளப் பண்ணி அந்த ஸந்நிதியில்‌ தீர்த்தம்‌ முதலிய சிறப்புகளைப்‌ பெற்று வாழ்ந்திருந்தார்‌ இன்றும்‌ இவருடைய பூர்வாச்ரம ஸந்ததியினர்‌ இச் சிறப்புகளை அநுபவித்து வருகின்றனர்‌.

    —–

    ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌’ |
    யதீந்த்ர ப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்‌

    மணவாள மா முனிகள்‌ லிஷயமாக இந்தத்‌ தனியனை , ஸ்ரீரங்க நாதன்‌ தான்‌ மாமுனிகளுக்குச்‌ சிஷ்யனாயிருத்து அருளிச் செய்தது ப்ரஸித்தம்‌. இது நமக்கு மந்த்ர ரத்னததுக்‌ கொப்பான மஹா
    மந்த்ரமாகும்‌.

    வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌ வாழும்‌ மணவாள மாமுனிவன்‌” என்று பேசும்படி பெரிய ஜீயர்‌ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்யித்துத்‌ திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவரடி பணிந்து பெற்று, தாம் பெற்ற அர்த்தங்களை எல்லாரும்‌ கேட்டு உஜ்ஜீவிக்கும் படியாக நடத்த வேணும்‌ என்று அதற்கநுகுணமாக ஈடுபட்டிருக்க, இவரை நம்பெருமாள்‌ அர்ச்சகர்‌ மூலம்‌ அழைத்‌தருளி, “திருவாய்மொழியின்‌ அர்த்தத்தை நாமும்‌ நம்‌ மடியார்களும் கேட்டு வாழும்படி பெரிய திரு மண்டபத்திலே நடத்தும்‌ என்று தம்‌ திருவடிகளை ஊன்றுவிதது அருள்பாடிட்டு. நியமித்‌த௫ள, இவரும்‌ அப்படியே நடத்த, உயர்வற வுயர் நலம்‌-தொடங்கி அவாவறச் சூழ்‌” என்கிற சாற்றுப் பாட்டான வாறே
    இவர்‌ உபன்யாஸம்‌ நடத்துவதைக்‌ கேட்டருளி, மிகவும்‌ உகந்து முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்று இவருக்குத்‌ திரு நாமம்‌ சாத்தியருளி ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌’–என்கிற தனியனும்‌ அனு ஸந்தித்‌தருளினார்‌.
    இப்படிப்‌ பெரிய பெருமாள்‌ நிர்ஹேதுகமாகத்‌ தம்மை விஷயீ கரித்து நியமித்தருளியதற்கு ஜீயர்‌ அருளிச்‌ செய்த திருநாமம்‌ (பாசுரம்‌):
    நாமார்‌ ? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌ ,
    தாமாக நம்மைத் தனித்தழைத்து– நீ மாறன்‌
    செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளு மிங்கே
    வந்துரை யென்றேவுவதே வாய்ந்து.

    இப்படி நம் பெருமாள்‌ அருளிச் செய்த பெரிய ஜீயரது தனியனுக்கு அர்த்தம்‌–திருவாய் மொழிப் பிள்ளை யினுடைய க்ருபைக்கு விஷய பூதராய்‌, ஞான பக்‌தி வைராக்ய மஹோ ததியாய்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ விஷயத்திலே ப்ராவண்யத்தை யுடையராய்க்‌ கொண்டிருக்கிற கோயில்‌ அழகிய மணவாளச்‌ சியரை ளேலிக்கறேன்‌”-என்றபடி.

    ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌ : நம்மாழ்வாருளாலே அவர்‌ திருவடிகளான எதிராசர்‌ திருவடிகளை எப்போதும்‌ மறவாமல்‌ இறைஞ்சி ஏத்தும்‌ திருவாய் மொழிப் பிள்ளை சீரருளுக்கு ஏற்ற கலமாயிருப்‌பவர்‌ மணவாளமாமுனிகள்‌–ஸ்ரீசைல பூர்ணர்‌-(பெரிய திருமலை நம்பி) கிருபையால் பக்தி வெள்ளத்தைப்‌
    பெற்றது -முன்பு ராமாநுசனாக ; தீர்த்தங்களாயிரத்தை ஸ்ரீ சைலேசர்‌ தயையால்‌ பெற்றது பின்பு மா முனிகளாக )
    ஸ்ரீ சைலேசரான பெரிய திருமலை நம்பி க்ருபையாலும்‌ ஸ்ரீசைல தேசிகர்‌ ( திருவாய் மொழிப் பிள்ளை) தயையாலும்‌ இராமாயணமென்னும்‌ பக்தி வெள்ளமும்‌. தீர்த்தங்‌கள் ஆயிரமான திருவாய் மொழியும்‌ யதீந்த்ர ப்ரவணரான இவரிடம்‌ குடி கொண்டுள்ளன

    தீ பக்த்யாதி குணார்ணவம்‌-
    ஞானம்‌, பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்குக்‌ கடலாயிருப்பவர்‌ மணவாள முனிகள்‌. முன்‌ நிலைகளான இளைய பெருமாள்‌ (லஷ்மணர்‌) இளையாழ்வார்‌ (உடையவர்‌) இரண்டிலும் ஞான பக்த்யாதிகள்‌ பூர்ணமாய்‌ உண்டு-பெரிய ஜீயருடைய அந்தப்ரேமாதிகள் பெரிய பெருமாள விஷயத்துச்குச்‌ சேர இரட்டித் திருக்கும் -.

    யதீந்த்ர பிரவணம்‌ -இனி நம் பெருமாளிடத்தில் ப்ராவண்யம் அதன்‌. எல்லை நிலமான எம்பெருமானார் அளவும்‌ செல்லதைச்‌சொல்வது -யதீந்த்ர ப்ரவணம்‌’-அவர்‌ (எம்பெருமானார்‌) பராங்குச பக்தர்‌. இவர்‌ (மா முனிகள்‌) யதீந்த்ர ப்ரவணர்‌ இவரை அனைவரும் கால்‌ கட்டுகிறது இவர்‌ யதீந்தர ப்ரவணராகையாலே

    வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌-அழகிய மணவாள மா முநி-என்று திருநாமத்தை யநுஸந்தித்து அவர்‌ கால்களில்‌ விழுகிறார்‌.

    இப்படிகளால்‌ ஏற்றங்களை யுடைய இவர்‌ ஸ்துதி ரூபாமான இத் தனியன் -யத் வேதா தெளஸ்வர : ப்ரோக்தா வேதாத்தேச ப்ரதிஷ்டித;'” என்று வேதத்துக்கு ஓம்‌ என்னுமா போலே, ஸகல
    திவ்ய ப்ரபந்தங்கள்‌, அவைகளின்‌ வ்யாக்யான விசேஷங்கள்‌,இவைகளில்‌ ஸாரமான ரஹஸ்யங்கள்‌, இவை. எல்லாவற்றினுடைய முதலிலும்‌ முடிவிலும்‌ அகில திவ்ய தேச விலக்ஷண அதிகாரிகளாலும்‌ அநுஸத்திக்கப் படுமthaaய்‌ இருக்கும்‌.

    ப்ரணவத்‌தில் அகாரம்‌ பகவத் வாசகமாயும்‌ மகாரம் ஜீவ வாசகமாயும்‌ உகாரம்‌ இருவருடைய உறவை ப்ரகாஸிப்பதாகவும்‌ இருக்கும்‌.-
    அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
    உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு
    கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
    நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் -ப்ரமேய ஸாரம் – 1
    இந்த ஸ்லோகத்‌திலே பதங்கள்‌ தோறும்‌ இவ் வர்த்தம்‌ காணலாம்‌.

    ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌ : ஸ்ரீஸைலேச என்று அகார வாச்‌யனான ஸர்வேஸ்வரனைச்‌ சொல்லி, தயா பாத்ரம்‌ என்று வேறு யாவர்க்கு மில்லாமல்‌ அவனுக்கே உள்ளவனான சேதனன்‌ அவன்‌
    க்ரூபைக்கு பாத்ரம்‌ என்பதைச்‌ சொல்கிறது, மேலும்‌, ஆசார்‌யனை அவன்‌. தானாகவே சொல்லுவது விசேஷாதிஷ்டானத்தாலே.-“ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத்‌” என்று ப்ரமாணம்‌.

    தீ பக்த்யாதி குணார்ணவம்‌: என்கிற இப் பதத்தாலும்‌ (தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்குமுணர்வு”‘ என்றும்‌, ஆதியம் சோதிக்கே ஆராத காதல்‌’‘ என்றும்‌ உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ என்றும்‌ சொல்லுகிறபடியே ஞான பக்தி வைராக்கியங்களைச்‌ சொல்லுகையாலே, அகாரத்தில்‌ சொன்ன பகவத் சேஷத்வத்தை பக்தியால்‌ சொல்லுகிறது. ஸ்வருபமும்‌-உன்னிணைத்‌ தாமரைகட்கு அன்புறுகி நிற்குமதே. எம்பெருமானைப் பற்றியே ஜ்ஞானமாதலால்‌, சேஷத்வம்‌ பற்றிய ஞானமே ஞானம்‌. தேவதாந்தர த்யாக ப்ரதானமா யிருப்பது வைராக்யம்‌.

    யதீந்த்ர ப்ரவணம்‌ –-யதீந்த்ரராகை யாவது–பகவத்‌ பரதந்த்ரரான தம்‌ நிலையை நினைத்து துரும்பும்‌ நறுக்காமல்‌ வெறுமனே இருப்பவர்களைத்‌ திருத்தித்‌ திருமகள்‌ கேள்வனுக்காக்கி அடிமை செய்விக்கை. இது பற்றி எம்பெருமானாரிடம்‌ ப்ரவணராகிறார்‌ . பகவதநத்யார்‌ஹ சேஷத்வம்‌ அவனடியார்‌ வரையிலும்‌ செல்ல வேணும்‌. மேலுர்‌, யதிந்தர சப்தம்‌ அஸாதாரணமாக ராமானுஜனைச்‌ சொல்லுவது, ராம சப்தத்தாலே அகாரார்‌தமும், அநுஜ சப்தத்தாலே கைங்கர்ய பரனான ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ சொல்லிற்று. ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்தா’ என்றபடி ப்ராவண்ய நிலை

    வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்‌: இத்தாலும்‌ உக்தார்த்தமே- சொல்லுகிறது. ரம்ய ஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனான பகவானைச் சொல்லி முநி சப்தத்தாலே பகவத் தநந்யார்‌ஹ சேஷத்வ ஜ்ஞானருடைய பரம சேதனனைச்‌ சொல்லுகிறது – ரம்ய ஜாமாத்ரு மநநம்‌ கரோ தீதி ரம்ய ஜாமாத்ரு முநி;-ஆக இவை எல்லா வற்றாலும் ப்ரணவார்த்தமாக யோஜிக்கத் தட்டில்லை.

    பெருமாளுடைய கார்யத்தை கவனியாமலிருக்க, பெருமாள்‌ இளையோனை நோக்கி, லஷ்மணா! நீ ஸுக்ரீவனிடம்‌ சென்று நான்‌ சொன்னதாகச் சொல்லு. செய் நன்றி மறந்த பாபிஷ்டன்‌ புருஷர்களிற் கடையானவன்‌- வாலி சென்ற வழி ஸூக்ரீவனுக்கும்‌ திறந்திருக்கிறது அவனை உற்றார் உறவினரோடும்‌ யம புர மனுப்பச்‌ சித்தமாயிருக்கிறேன்‌.” இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்து விட்டதனால்‌ முன்பு சைலேச தயா பாத்ர பூதனான வொருவனை வணங்கின குறை தீர இப்போது ஸ்ரீசைலேச தயா பாத்ர பூதரை வணங்கி வாழ்‌கிறேன் என்றதாயிற்று,-திருமலை யாழ்வாரென்கிற திருவாய்‌ மொழிப் பிள்ளையின்‌ இன்னருளுக்கு இலக்கான மா முனிகளை வணங்குகிறேன்‌ என்கை.

    தீ பக்த்வாதி குணார்ணவம்‌ : ராமாவதார காலத்தில்‌ லவணார்ணவமான ஸமுத்ரத்தின்‌ காலிலும்‌ குனிந்தமை ப்ரஸித்தம்‌ –ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம்‌ கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின் படி லவணார்‌ணவத்தை நோக்கிச்‌ சரணாகதி பண்ணி யிருந்து அங்கும்‌ மந ஸ்தாபமே மிகுந்தது. ௮க்‌ கடலரசன்‌ முகங்காட்டிற்றிலனாக, மிகவும்‌ சீறிச் சிவந்து, சாபமாதய ஸ சவ் மித்ரே! சாராம்ச்ச ஆசீ விஷோபமாந் ஸாகர மாயோசயிஷ்யாமி”-லஷ்மணா! வில்லையும்‌ கொடிய அம்புகளையும்‌ கொண்டு வா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன்‌! ‘ என்று கூறி சரணாகதி பண்‌னின விடத்தில்‌ நிக்ரஹத்திலே யன்றோ நின்றது. அப்படியான குறை தீர அந்த லவணார்ணவத்தை விட்டு தீ பக்க்யாதி குணார்ணவத்தை அடி பணிந்து வாழப் பார்க்கிறபடி,
    ஞானபக்தி வைராக்யங்களுக்குக்‌ கடலான மாமுனிகளை வணங்குகி்றேனென்‌றபடி

    யதீந்த்ர ப்ரவணம்‌! ‘மந்திபாய்‌ வடவேங்கடமாமலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத் தரவினணையான்‌’! ஸ்ரீரங்க நாத பெருமாள திருவேங்கடமுடையானாகவும்‌ நிற்கிற நிலையிலே ”அப்பனுக்குச்‌ சங்காழி அளித்தருளும்‌ பெருமாள்‌! என்று போற்றப் படும்‌ ஸ்ரீராமாநுஜரிடம்‌ திருவாழி திருச்சங்கு பெற்றதனால்‌ அத்த யதீந்ரரிடத்தில்‌ சிஷ்ய வ்ருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம்‌, அங்கு மநஸ்தாபம்‌ ஒன்று நேரவில்லை யாயினும்‌ தன்னை யுற்றாட் செய்யும்‌ தன்மையினார்‌” (ராமாதுச.தூற்‌-97) என்கிற பாட்டைத்‌ திருச் செவி சாத்தின பின்பு “யதீந்த்ரரிடத்‌தில்‌ சிஷ்ய வ்‌ருத்தி செய்வதிற்‌ காட்டிலும்‌ யதீந்த்ர ப்ரவணனார்‌ திறத்திலே சிஷ்‌ய வ்‌ருத்தி செய்வது தான்‌ சிறந்தது என்று தோன்‌றி விட்டது. ராமானுசன்‌ தன்னை யுற்று ஆட் செய்வதிற் காட்டிலும்‌ தன்னை யுற்று ஆட்‌ செய்யும்‌ தன்மையினேரை யுற்று ஆட் செய்வாரே சிறந்தவர்‌ என்பது இந்தப் பாட்டில்‌ காட்டப்பட்ட தன்றோ? அதனால்‌ யதீந்த்த்ர ப்ரவணரை யிறைஞ்சுகிறேன் என்றதாயிற்று, மா முனிவனுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திரு நாமம்‌ சிறப்பாகக் கிடைத்தது ஓன்று –

    வந்தே ராம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ : இராமனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ அவதரித்த ஸமயங்களில்‌ இரண்டு முனிவர்களிடத்திலே சிஷ்ய விருத்தி செய்திருந்தானெம்பெருமான்‌ -அதாவது விச்வாமித்ர முனிவரிடத்திலும் சந்திபினி முனிவரிட ததிலும்‌. அவ் லிருவரிடத்திலும்‌ வெறுப்பே யாயிற்று. மிதிலையில்‌ ஜனகருடைய யாகசாலையில்‌ கெளதம புத்ரரான சதாநந்தர்‌ (பாலகாண்டம்‌ 51-ம்‌ சர்க்கம் முதலாக] விச்வாமித்ரருடைய பழைய வரலாற்றை எல்லாம்‌ சொல்ல, மேனகையுடன்‌ கூடியது, சண்டை யிட்டது முதலான ரஜோ குண தமோ குண கார்யங்களைக்‌ கேட்ட போது “இப்படிப்பட்ட ஒருவரையா ஆசார்யனாகக் கொண்டோம்‌” என்று வெறுத்திருக்க நேர்ந்தது. க்ருஷ்ணாவதாரத்திஸ்‌ ஸாந்தீபினி முனிவரிட த்தில்‌ ஸகல ௧லைகளையும்‌ பயின்று முடிவில்‌, குரு தஷிணை ஸமர்ப்பிக்க நின்ற வளவிலே -மாதவத்‌தோன்‌ புத்திரன் போய்‌ மறி கடல் வாய்‌ மாண்டாளை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்‌! என்கிறபடியே என்றோ ப்ரபாஸ தீர்த்தத்தில மாண்டு போன மகனை மீட்டுத் தர வேண்டும்‌ என்று வேண்டி அப்படியே பெற்றான்‌ -கண்ண பிரான்‌ ஸாக்ஷாத்‌ ஸ்ரீமன் நாராயணன்‌ என்று அறிந்து வைத்தும்‌ அவனிடம்‌ மோக்ஷத்தை வேண்டாமல்‌ ஷுத்ர புருஷார்‌தத்தையே வேண்‌டினமையால்‌ அvaன்‌ பக்கலிலும்‌ வெறுப்பாவயிருந்தது, இப்படி வெறுப்புக்கு இலக்கான இரண்டு முனிகளையும்‌ விட்டு ஸமஸ்த கல்யாண குணக் கடலாய்‌ வைராக்ய நிதியான ரம்ய ஜாமாத்ரு முனியை வணங்கி வாழ்கின்றேனென்கிற தாயிற்று

    இவ்வளவு அர்த்த விசேஷங்களைக் கொண்ட இந்த ஸ்லோகம்‌ எம்பெருமான் தானே சொல்லி யிருக்கவேண்டும்‌. இவையெல்லாம்‌ அவன்‌ நெஞ்சு தன்னில்‌ உறையும்‌ விஷயங்களாகையால்‌ பிறரொருவர்க்கு. ஏறிட்டுக் கொள்ளவும்‌ முடியாது. ஆகவே இந்தத் தனியன்‌ தெய்வ வாக்கே என்பது திண்ணமாயிற்று

    ஸ்ரீ மத் உபயவே. காரப்பங்காடு வேங்கடாசாசியர்‌ ஸ்வாமிகள் வழங்கும்‌ செம் பொருள்‌ :
    ஸாஷாத்‌ ஸர்வேஸ்வரனான ஸ்ரீரங்க நாதனாலேயே அருளிச்‌ செய்யப்பட்ட இந்த மந்த்ரத்தை விட உத்க்ருஷ்டமான மந்த்ரமே இல்லை என்றால்‌ மிகையாகாது,ஸ்ரீசைலேச தயா பாத்ரம்‌ என்று “ஸ்வாசார்யரான திருவாய்மொழிப்‌ ‘ பிள்ளையினுடைய பூர்ண கிருபைக்கு பாத்ரமாயிருந்தவர்‌ ஸ்வாமி மணவாளமாமுனிகள்‌, இப்படி சொல்லப்பட்ட ஆசார்யாபிமானத்தின்‌ பலனை பகவத்‌ ப்ராப்தியாகச்‌ சொல்லாமல்‌ யதீந்த்ர ப்ராவண்யமும்‌ தீ பக்த்யாதி குணார்ணவத்வமுமாகக் காட்டப் படுகின்றன -இங்கு ஸ்வாமி எம்பெருமானாரிடம்‌ அதிகமான ப்ரேமை யுடையவராய்‌ யதீந்த்ர ப்ரவணராய்த்‌ திகழ்ந்ததும்‌, ஞான பக்தி வைராக்யங்களாகிற குணங்களுக்குக்‌ கடலாக விளங்கியதும்‌ எந்தை திருவாய்மொழிப்‌ பிள்ளை இன்னருளால்‌ வந்த-என்று ஸ்வாமியே உணர்த்தும்‌
    ‘ஸ்வாசார்ய (ஸ்ரீசைலேசரின்‌) க்ருபை.
    தனமுள்ளவன்‌ ஸுக அநுபவம்‌ பண்ணுகிறான்‌. அவனுக்கு ஸுகாநுபவம்‌ கேவலம்‌ தனமுள்ளமையால்‌ ஏற்படுமாப் போலே; ஸ்வாமிக்கு யதீந்த்ர ப்ராவண்யம்‌, ஆத்ம குண பூர்த்தி ஆகிய பெருமைகள்‌, ஸ்வாசார்ய கிருபையால்‌–இவர்‌ ஸ்ரீசைலேச தயா பாத்ரராகையாலே –ஏற்பட்டவை, ௨பகாரகரான ஸ்வாசார்யருடைய க்ருபையால்‌
    உத்தாரகரான யதிராஜ ஸம்பந்தமும்‌ அபிமானமும்‌, ஏற்படுகின்றன –ராமாநுஜார்ய கருணைவது மத்கதிஸ்தே” என்று யதிராஜ விம்சதியிலும்‌, :மாசில்‌ திருமலையாழ்வார்‌ என்னை
    நேசத்தால்‌ நின்பால் சேர்த்தார்‌ ‘; உந்தனபிமானமே உத்தாரகமென்று சிந்தை செய்திருக்கச்‌ செய்த நீ அந்தோ! எதிராசா! சதிராக நின்‌ திருத்தாள்‌ தா;” அவர்க்காய்‌ (ஸ்வாசாரியருக்காக)
    எதிராசர்‌ எம்மைக்‌ கடுகப்‌ பரமபதம்‌ தன்னில்‌ ஏற்றுவர்‌, என்ன பயம்‌ நமக்கே?; எதிராசர் தம் அபிமான மென்னும்‌ போதத்தை ஏறிப்‌ பவமாம்‌ புணரிதனைக்‌ கடந்து பாதக் கரையைக்‌ குறுகுவனே !-
    என்றெல்லாம்‌ ஆர்த்தி ப்ரபந்தத்திலும்‌ எம்பெருமானாரிடத்‌தல்‌ தம்து மதுரகவி நிஷ்டையையும்‌ ப்ராவண்யத்தைபும வெளியிட்‌டுள்ளார் –ஸ்ரீ ஸ்வாமி உபதேச ரத்தின மாலையிலும்‌ நூற் பயனாக -எந்தை எதிராசரின் னருளுக் கிலக்காகி சதிராக வாழ்ந்திடுவர்‌” என்றுரைத்தார்‌. ஆக நாராயண சதுரஷரியினும்‌ எதிராஜ, ராமாநுஜ சதுரக்ஷரிகள்‌ மிகச்‌ சீரியவை என்பது மாமுனிகள்‌ காட்டும்‌ பரமார்த்சம்‌ இதுவே ஸார தமமான செம் பொருள்‌. இந்தத்‌ தனியனில்‌ நம்பெருமாள்‌ அருளும்‌ பரமார்த்தம்‌. எம்பெருமான்‌ திருநாமத்தையும்‌ உள்ளடக்கியுள்ள ரம்ய ஜாமாத்ரு முநி என்ற திரு நாமத்தை அநுஸந்தித்து வந்தே ரம்ய ஜாமாதாம்‌ முநிம்‌ என்று ஸ்வாமியை சரணம்‌ பற்றுவோம்‌,

    ஸ்ரீமத் உபயவே நல்லான்‌ சக்ரவர்த்தி ஸ்ரீ ராம க்ருஷ்ணய்யங்கார்‌ ஸ்வாமிகள்
    திருமகள்‌ கேள்வனே முழு முதற்‌ கடவுள்‌. உலகனைத்தையும்‌ ஈன்றெடுத் தளிப்பவன்‌ அவனே, அத் தகையோன்‌ தன்னை ஈன்றெடுத் தளிக்கு மொருவனைப்‌ பெற நெடு நாட்களாக அவாவி வந்தனன்‌. அவ்வவா தயரதனைத்‌ தந்தையாகப்‌ பெறும்‌ வாய்ப்‌பினால்‌ நிறைவேறியது உலகிற்கோர்‌ ‘முந்தைத் தந்தை சக்ரவர்த்தித்‌ திருமகனானான்‌.
    உடல்‌ கொடுப்பவன்‌ தந்‌தை ; மெய்யுணர்வை அளிப்பவன்‌ ஆசார்யன்‌; தந்தையினும்‌ ஆசார்யன்‌ சிறந்தவன்‌. தந்தை தருமூடல்‌ அழியும்‌; ஆசார்யன்‌ அளிக்கும்‌ மெய்யுணர்வு அழியாது.
    அத்தகைய ஆசாரியனாயிருப்பவனும்‌ திரு மகள்‌ கேள்வனே; நமது குரு பரம்பரையில்‌ அவனே முதலாசாரியனாய்‌ விளங்குகிறான்‌.-அவனுக்கு வேறொரு குரு இல்லை. அத்தகையான்‌ தனக்கு
    அறிவுரை கூறும்‌ குரு ஒருவனைப்‌ பெற நெடுங்காலமாக அவாவி வந்தனன்‌, அவ்வவா மணவாளமாமுனிகளைக்‌ குருவாகப்‌ பெறும்‌ வாய்ப்‌பினால்‌ நிறைவேறியது. ஆதி குரு மணவாளமாமுனிகளுடைய சீடனானான்‌. எல்லாம்‌ இயல்பாக அறிபவன்‌ ஆதி குரு ,
    அவனே மா முனிகளைக்‌ குருவாய்ப்‌ பெற விரும்பினால்‌ மாமுனிகளின்‌ மதி நுட்பத்தை நாம்‌ என்னென்பது!

    மணவாளமா முனிகளிடமே அஸாரமானவைகளை நீக்கி ஸார தம மந்த்ர ரத்நார்த்தமான திருவாய்மொழியின்‌ வியாக்யான மான ஈடு என்னும்‌ திவ்ய சாஸ்திரத்தை ஒராண்டு முழுதும்‌ விழுமிய வேட்கையுடன்‌ அரங்கள்‌ கோட்டான்‌. ‘*தத்தேரங்‌கீ நிஜமபிபதம்‌ தேசிகா தேச காங்க்ஷ” என்கிறபடி அரங்கன்‌ குரு வாக்கை மறுக்க கிலாதவன்‌, கண்ணனைப்‌ போல்‌ படித்ததாகப்‌ பேராக்கிக்‌ கொள்‌ளாமல்‌ கேட்டறிந்து ரஸிக்கும்‌ சிஷ்யனாய்ப்‌ பேரின்பம்‌ கண்டனன்‌ அரங்கன்‌. அர்ச்சை வடிவினனாய்க்‌ கேட்கும் அரங்கன்‌ தன்‌ ஈஸ்வரத்‌ தன்மையை மறைத்து வடிகட்டின சீடத் தன்மை வாய்ந்தனனாய்‌ ஈடு கேட்பதில் மிக்க ஈடுபாடு கொண்டான்‌-

    ஈஸ்வரத்தன்மை விஞ்சிநின்ற ஸாந்‌தீபநீ சிஷ்யன்‌ கண்ணன்‌ பண்டே இறந்து போன குருவின் மகனை உயிர்ப்பித்து குரு தக்ஷிணை வழங்கினான்‌. ஈஸ்வரத் தன்மை மறைந்த சிஷ்யத் தன்மை விஞ்சி நின்ற மா முனிவரின்‌ சிஷ்யனாக அரங்கனோ ‘ஸ்ரீசைலேச தயா பாத்ரம்‌’ என்று தொடங்கும்‌ தனியனை ஸமர்ப்பிப்பதன்றி வேறு குரு தக்ஷிணை தர வழியின்றி நிற்கின்றான்‌. எம்பெருமானார்‌ தனியனான யோ நித்யமச்புத’ என்று தொடங்கும்‌ ஸ்லோகம்‌ போல்‌ பெரிதாக அமைத்திலது மாமுனிகள்‌ தனியன்‌. உவகையால்‌ உள்ளம்‌ உடை குலைப் பட்டிருக்கிற அரங்கனுக்கு ஸ்லோகம்‌ சிறிதாகவே அமைந்தது.

    வஸிஷ்ட்டரும்‌ ஸாந்தீபிநீ யும்‌ அவதார நிலையில்‌ ராமனுக்கும்‌ கண்ணனுக்கும்‌ ஆசார்யராயிருந்தனர்‌. மாமுனிகளோ அர்ச்சை நிலையில்‌ ஆசார்யராய்‌ வீறு பெற்று இருக்கிறார் -. ஆழ்வார்‌ ஆசார்யர்கள்‌ அர்ச்சை நிலையில்‌ ஆசார்யராய்‌ விளங்கினாலும்‌ மாமுனிகளுக்கு உள்ள ஏற்றமவர்களுக்கும்‌ இல்லை, நம்‌மாழ்வார்‌ பல காலும்‌ அர்ச்‌சாவதார பரமான திருவாய்மொழியில்‌ உபதேசிப்பதும்‌ ஈச்வரனிடத்தில்‌ சிஷ்ய லக்ஷணம்‌ அமைந்திருப்பதும்‌ ஆசார்ய ஹ்ருதயத்‌தில் நன்கு காட்டப்பட்டுள்ளன. ஆண்டாள்‌ கண்ணனை எழுப்பி“உனக்கே நாமாட்செய்வோம்‌” என்று கற்பித்‌திருக்கிறாள் – ஆயினும்‌ மாமுனிகள்‌ போலத்‌ தொடர்ந்து ஒரு நூலை விரித்துரைத்து அவர்கள்‌ கற்பித்திலர்‌ என்பது கருத்தக்கது, திருமங்கை மன்னன்‌ ஒலிமிக்க பாடலை அவரிடமே கற்க விரும்பினான்‌ எம்பெருமான்‌.
    நின்‌ தனக்கும்‌ குறிப்பாகில்‌ கற்கலாம் கவியின்‌ பொருள் தானே ”’ என்று கற்பிக்கத்‌ திருமங்கை மன்னனும் முற்படுகிறார்‌,

    ஆழ்வார்களோடு ஒரே கோவையாகக்‌, கருதப்படுகிறவர் எம்பெருமானார்‌. அவரிடம்‌ பலகால்‌ சிஷ்யனாகி யிருக்கிறான்‌-எம்பெருமான்‌, வட வேங்கடவன்‌ வடமொழி வேதாந்தத்தைச்‌
    சுருக்கமாக ஸ்ரீபாஷ்யகாரரிடம்‌ கேட்டான்‌. அவ்வுபதேசமே -“வேதார்த்த ஹங்க்ரஹம்‌’? என்னும்‌ நூலாய்‌ விளங்குகிறது.-உபதேசித்த ஸ்ரீபாஷ்யகாரர்‌ இன்னும்‌ ஞாந முத்ரைக்‌ கையுடன்‌ விளங்குவதை நாம்‌ திருமலையிலே ஸேவிக்கலாம்‌. சங்காழி அளிக்கப் பெற்று அப்பன்‌ ஸ்ரீபாஷ்யகாரருக்குச்‌ சிஷ்யனாய்‌. உய்வு பெற்றதும்‌ உலகறிந்ததே. திருக்குறுங்குடி நம்‌பி ரஹஸ்ய உபதேசம்‌ பெற்று ஸ்ரீராமாநுஜ சிஷ்யராகி “ஸ்ரீவைஷ்ணவ நம்பி’*என்று பேர்‌ பெற்றதும்‌ ப்ரஸித்தம்

    வட வேங்கடவன்‌ வடமொழி மறைப் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரிடம்‌ ஸங்க்ரஹமாகத் தான்‌ கேட்டான்‌. தென்னரங்கனோ தென் மொழி மறை முழுதும்‌ விரித்துரைக்கத்‌ தினவு தீரும்படி. ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரிடம்‌ கேட்டான்‌. ஸ்ரீரங்கநாதன்‌ யதி நாதனோடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தது ஐதிஹ்யத்‌தாலும்‌ கத்யத்தாலும்‌ தெரிகிறது. திருவாய்மொழியின்‌ வளர்ப்புத்‌ தாயான அந்த யதி நாதனிடம்‌ ஸ்ரீரங்கநாதன்‌ தென்மொழி மறைப்‌ பொருளைக்‌ கேட்டிருக்கலாம்‌. கேட்டிலன்‌, ஏன்‌? த்ரமிடோபநிஷத் பாஷ்யம்‌ எனப்படும்‌ ஈடு அக் காலத்‌தில்‌ இல்லையே! நம்பிள்ளையிடம்‌ ஈடு கேட்டிருக்கலாம்‌, கேட்டிலன்‌: காரணம்‌, பெருக்கிச்‌ சொல்லி விளக்கும்‌ வாக்குப் படைத்த மணவாளமாமுனிகள்‌ திருவாயாலே விளக்கமுறக்‌ கேட்டு மகிழ வேண்டும்‌ என்கிற பேரவா தான்‌. மணவாளமாமுனிகளால் தான்‌ அரங்கனது நெடுநாளைய ஆசை நிறைவேறியது,வடக்கே ஸ்ரீபெரும்பூதாரில்‌ வடமொழி வேதாந்தத்தை வளர்க்க அவதரித்த ஸ்ரீபாஷ்யகாரர்‌ தெற்கே தென் மொழி மறை தோன்றிய ஆழ்வார்‌ திருநகரியிலேயே அதனைப்‌ பரப்ப மீண்டும் மாமுனிகளாய்‌ அவதரித்ததும்‌, மாமுனிகளுக்குத்‌ தென் மொழி மறையிலேயே கண்‌ செலுத்துமாறு ஆசார்ய நியமநம்‌ ஆனதும்‌, ஸர்‌வஜ்ஞனும்‌ ஸத்ய ஸங்கற்பனுமான அரங்கனது ஆசை நிறை வேறுவதற்காகவே அமைந்தன என்பதுணரத்தக்கது. ஆக அரங்கன்‌ ஈடு கேட்டதால்‌ வந்த பெருமை வேறெந்த ஆசாரியருக்கும்‌ இல்லாத தனிப் பெருமையாக மாமுனிகளுக்கு அமைந்தது என்பதல்‌ ஐயமில்லை.

    திருவாய்மொழி மதிளரங்கரையே ஓதுவதாக தாம்‌ கருதுகிறோம்‌.-மதுரகலியாழ்வார் நேரே நம்மாழ்வாரிடமே திருவாய்மொழி கேட்டார்‌- அவருடைய நுண்ணறிவுக்கு அதன்‌ உட்பொருள்‌ புலனாயிற்று. தம்‌ நெஞ்சில்‌ உட்பொருள்‌ நிற்கும்படி நம்மாழ்வார்‌ தமக்கு அருளிச் செய்ததாக அவர்‌ கூறிக் கொள்கிறார்‌. “வேதத்தின்‌ உட் பொருள்‌ நிற்கப் பாடி என்னெஞ்சுள்‌ நிறுத்தினன்‌’* என்பது
    அவர்‌ திருவாக்கு. வேதத்தின்‌ ‘ பொருள்‌ எம்பெருமான்‌; “வேதப்‌ பொருளே என்‌ வேங்கடவா’! என்று காண்க. உட்பொருள்‌. பாகவதர்‌. பாகவதருக்கு ஆட்படும்‌ மனப் பான்மையை நம்மாழ்‌வார்‌ அ௫ளினார்‌ என்றபடி, அவர்‌ ஆட்பட்ட பாகவதர்‌ நம்மாழ்‌வரே. திருவாய்‌ மொழியின்‌ உட்பொருள்‌ மதுரகவியாருக்கு நம்‌மாழ்வாராயினர்‌. ‘தேவுமற்றறியேன்‌” என்று நம்மாழ்வாரைத்‌ தவிர வேறு தெய்வமில்லை என்று அவர்‌ முடிவு கட்டினார்‌. திருவாய்‌ மொழியை ஓதி முடிக்கும் போதெல்லாம்‌ -ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌” என்று தான்‌ முடிவு கட்டினதைச்‌ சொல்லி முடிப்பது வாடிக்கை யாயிற்று, பின்னர்‌ நாதமுனிகள்‌ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து த்ரமிடோபநிஷத்தைப்‌ பெற்று அதனைத்‌ தன்‌ ஸந்தானத்துக்கும்‌ உபகரித்து மதுரசவிகளைப்‌ போலவே “ஆழ்வார்‌. திருவடிகளே சரணம்‌” என்று சொல்லி முடிப்பதை வாடிக்கை யாக்கினார்‌,

    உரை நூல்‌ இடுவித்தும்‌ காலஷேப கோஷ்ட்டிகளை நடத்தியும்‌ நடப்பித்தும்‌ திருவாய் மொழியை வளர்த்த எம்பெருமானார்‌ காலத்திலே ‘ பெரியோர்‌ அவரை நம்மாழ்வார்‌ திருவடியாகக்‌
    கொண்டு நம்மாழ்வார்‌ திருவடி உத்தேச்ய மன்றோ என்னும்‌ கருத்துடன்‌ ஸ்ரீராமாநுஜனையும்‌ வேதத்தின்‌ உட்பொருளாக ஏற்றனர்‌. ஏற்கவே முன்னவர்‌ கட்டின முடிவுடன்‌ தங்கள்‌
    முடிவையும்‌ சேர்த்து “ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌-“எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌,” எனறு அதன் மொழி மறையை ஒது முடிக்கும்போதெல்லாம்‌ அவர்கள்‌ அநுஸந்திப்பாராயினர்‌, தற் காலத்தில்‌ “ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌” என்பதையும்‌ சேர்த்து அநுஸந்தித்து முடிப்பது ஸம்ரதாயமா யிருக்கிறது-
    இந்த ஸம்ப்ரதாயம்‌ அரங்கன்‌ திருவுள்ளத்துக்கு மிகவும்‌ ஒத்தது என்பது அவன்‌ தனியன்‌ ஸமர்ப்பித்துத்‌ தென் மொழி மறை ஓதும்‌ போதல்லாம்‌ முன்னும்‌ பின்னும்‌ அதனை அநுஸந்திக்க வேண்டு மென்று திவ்யாஜ்ஜை பிறப்பிப்த்ததனால்‌ நன்கு விளங்குகிறது. ஜீயர்‌ என்பது இங்கே மணவாள மாமுனிகளை, -பெரியஜீயர்‌” என்று வழங்குவது முண்டு.
    ஆழ்வார்‌, எம்பெருமாளனார்‌, ஜீயர்‌, என்று மூன்று திருநாமங்‌களைச்‌ குறிப்பிட்டாலும்‌ மூவரிலும்‌ வேறுபாடின்மையின்‌ உட்‌பொருள்‌ மாறுபடவில்லை . திருவடியாதலின்‌ நம்மாழ்வாரினும்‌ எம்‌பெருமானார்‌ வேறுபடாமலிருப்பதும்‌, எம்பெருமானார்‌ எடுத்த புநரவதாரமே ஜீயராதலின்‌ அவரும்‌ வேறுபடாம லிருப்பதும்‌ காண்க. ஆக இம் மூவரையும்‌ மாமுனிகள்‌ காலத்திலுள்ள பெரியோர்‌ உட்பொருளாகக்‌ கருதி “ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌,எம்பெருமானார்‌ திருவடிகேளே சரணம்‌, ஜீயர்‌ திருவடிகனே சரணம்‌” என்று ஒதி முடிப்பது ஏற்புடையதே என்க,-இம் மூவரை மட்டும்‌ உட்பொருளான பாகவதர்‌ என்று பெரியோர்‌ விசேடித்துக்‌ கொண்டதற்குக்‌ காரணம்‌ இவர்கள்‌ மூவரும்‌ முறையே தமிழ்மறைக்கு ஈன்ற தாயாகவும்‌, வளர்ப்புத்‌ தாயாகவும்‌ பெருக்கி வாழ்வளிக்கும்‌ வள்ளாலகவும்‌ விளங்கியதே என்க,மேலும்‌ பகவத்‌, பாகவத, ஆசார்யர்கள்‌ மூவரும வேதப்‌ பொருளாவர்‌. பகவான்‌ புறப் பொருள்‌. ஏனையோர்‌ உட் பொருள்கள்‌,அவர்களுள்‌ ஆசார்யனை உட் பொருளாகக்‌ கொண்டால்‌ ‘*குருரேவ பரம் ப்ரஹ்ம:” என்றபடி அவர்‌ பகவானாகவும்‌, அவர்‌ இயல்பினில்‌ பாகவதராகவும்‌ இருத்தலின்‌; முப் பொருளாகவும்‌ இருத்தல்‌ ஆசார்‌யனுக்கே அமைகிறது. ஏனைய ஆசார்யர்கள்‌ இம் மூவருமே யாதலின்‌ ரஸிகப்‌ பெருமக்கள்‌ இம் மூவரையும்‌ வேதத்தின்‌ உட்பொருளாகக்‌ கொண்டது மிகவு மேற்புடையா தயிற்று.-திருவாய்மொழியில்‌ முதலில்‌ தோன்றும்‌ புறப்பொருள்‌ மதிளரங்க மணவாளன்‌, முடிவெல்லையாய்த்‌ தோன்றும்‌ உட்‌ பொருள்‌ கோயில்‌ மணவாள மாமுனிகள்‌, அரங்கனுடைய உலகமளந்த பொன்னடி புறப் பொருளின்‌ ஸாரம்‌. மாமுனிகளின்‌
    **பொன்னடியாம்‌ செங்கமலம்‌” உட் பொருளின்‌ ஸாரம்‌ –ஸாரமான இவ்விரு பொருள்களும்‌ நெஞ்சில் இருக்கும்படி ஈடு முப்பத்தாறாயிரத்தைப்‌ பெருக்கி மா முனிகள்‌ உரைப்‌ பதைச்‌ செவிமடுத்த அரங்கன்‌ அரும் பொருளை இங்ஙன்‌ எளிமைப்படுத்துவதே! என்று நாவன்மையை வியந்து, தக்க கைம்மாறு காணகிலாது சாத்து முறையின் போது நன்றி யறிவுடன்‌ *ஸ்ரீசைலேச”த்‌ தனியனாம்‌ மந்த்ர ரத்நத்தை ஸமர்ப்பித்ததாக மாமுனிகள்‌ காலத்தவரான எறும்பி யப்பாவே ௮ருளிச் செய்கிறார்‌

    ஆத்மாநாத்ம ப்ரமிதி விரஹாத்‌ பத் யுரத் யந்த தூர:
    கோரே தாபத்ரிதயகுஹரே கூர்ணமாநோ ஜநோயம்‌,
    பாதச் சாயாம்‌ வரவர முநே! ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்‌
    தஸ்மை தேயம்‌ ததிஹ கிமிவ ஸ்ரீநிதேர்வர்த்ததே தே.(வரவரமுநி சதகம்‌-63)

    (தேஹாத்ம விவேகம்‌ கூட இல்லாமையால்‌ எம்பெருமானுக்கு நெடுந் தூரத்திலுள்ளவரும்‌, கோரமான தாப த்ரயப்‌ படுகுழியிற்‌ சுழலுகின்றவருமான என்னைப் போன்ற மக்கள்‌ எவருடைய அனுக்‌ரஹத்தால்‌ திருவடி நிழலிற்‌ சேர்க்கப்பட்டனரோ, அத்தகைய தேவரீருக்குத்‌ திருமகள்‌ கேள்வனும்‌ இவ் விஷயத்தில்‌ வழங்கலாம்‌படியான வேறு கைம்மாறு யாது உள்ளது? என்னைப்‌ போன்றவரையும்‌ திருவடி நிழலிற்‌ சேர்த்து வைத்த பேருதவிக்குத்‌ தனியன்‌ ஸமர்ப்பித்தது தவிரத்‌ திருமாலுக்கும்‌ வேறு கைம்மாறு செய்ய இயலாதென்பது கருத்து.)
    இந்த ஸ்லோகத்தில்‌ “பாதச்‌ சாயா” என்னுமிடத்தில்‌ பற்றப்‌படும்‌ திருவடி என்னும்‌ உபாயமும்‌, நிழல்‌ என்று ஒதுங்கும்‌ இடமாகிய ௨பேயமும்‌ தோன்றுகின்றன. அரங்கன்‌ திருவடியே உபாயம்‌; நிழல்‌ தந்து தாபந் தவிர்க்கும்‌ அவ்வடியே உபேயம்‌ என்‌ றதாயிற்று, இது திருவாய்மொழியின்‌ புறப்பொருளாக முதலிற்‌ புகட்டப் படுவதாகும்‌. இதே பாதச்‌ சாயா’ என்பது பின்னர்ப்‌ புகட்டப்படும்‌ உட்பொருளின்‌ முடிவு நிலத்தையும்‌ காட்ட வற்றாயுள்ளது. திருவாய்‌ மொழியின்‌ உட்பொருளின்‌ முடிவு நிலமான மணவாள மாழனிகளையே குறிப்பதாகவும்‌ நுண்ணறிவுடையோர்‌ கொள்ளும்படி இது அமைந்துள்ளது. “*விஷ்ணு: சேஷீ ததீய। சுப குண நிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி;; ஸ்ரீமாந்‌ ராமாநுஜார்ய:
    பத கமல யுகம்பாதி ரம்யம்‌ ததீயம்‌?”’ என்றபடி எம்பெருமானது நற் குணம்‌ நிரம்பிய திருமேனியாக நம்மாழ்வாரையும்‌, அவருடைய இணைத் தாமரையடியாக ராமாநுஜனையும்‌ கொள்ளும்
    மரபிலே அரங்கன்‌ திருவடியாகிறார்‌ ராமாநுஜன்‌, அவர்‌ திறத்து அத்யந்த பாரதந்த்ரியத்தை அநுஸந்திப்பதனால்‌ நிழல்‌ போன்றவரான யதீந்த்ர ப்ரவணர்‌ திருவடி. நிழலாகிறார்‌
    ஆகலே, அடிப்‌படையான தேஹாத்ம விவேகமே யில்லாத பாமரரையும்‌ பேற்றின்‌ எல்லை நிலமான தன்னையே [மணவாள மாமுனிகளையே) சேர்ப்‌பிக்கும்‌ வித்தகத்தைக்‌ கண்டு இவ்வரிய பொருளை ௨லகம்‌ மறவாது என்றும்‌ நெஞ்சில்‌ நிலை நிறுத்தற்கும்‌, தன்‌ நன்றியை வெளிப்படுத்‌தற்கும்‌ ஸ்ரீசைலேசத்‌ தனியன் வெளியிட்டுத்‌ தமிழ்‌ மறைத்‌ தொடக்கத்திலும்‌ முடிவிலும்‌ அதனை யாவரும்‌ எங்கும்‌ அநுஸந்திக்க வேண்டுமெனறு ஸ்ரீரங்கநாதன்‌ கட்டளை யிட்டருளினான்‌.
    வேதப்‌ பொருள்‌ ஹரியே என்பது தோன்ற முதலிலு மிறுதியிலும்‌ ஹரி: என்று வேதமோதும்‌ போது சொல்வது போலத்‌ தமிழ்‌ மறை ஓதும்‌ போது அதன்‌ உட்பொருளின்‌ மூடிவு நிலமான
    ரம்ய ஜாமாத்ரு முனிவரை முதலிலும்‌ இறுதியிலும்‌ தான்‌ ஸமர்ப்‌பித்த தனியனால்‌ அநுஸந்திக்கு வேண்டும்‌ என்பது ரங்கநாதன்‌ திருவாணை. வடமொழி மறை எல்லாருக்கும்‌ பொதுவானது.ஆதலின்‌ உட்பொருளைக்‌ கூறாது புறப்பொருளாகிய ஹரியையே முதலிலும்‌ இறுதியிலும்‌ கூறுகிறோம்‌. உட்பொருளை . ஹரி ‘சப்தத்‌திலும்‌ ப்ரணவத்திலும்‌ பரம ஸாத்விகர்கள்‌ அநுஸந்திப்பர்‌, தென்‌ மொழி மறையோ பரம ஸாத்விகர்க்கே ஏற்பட்டதாதலின்‌ ரம்யஜா மாத்ரு முனியாகிய உட்பொருளையே அநுஸந்திக்க வேண்டு மென்பது ஸ்ரீரங்கராஜ திவ்யாஜ்ஞை. ஸம்ஸார மோக்ஷ ஹேதுவான ஹரியை அநுஸந்திப்பது இம்மை மறுமை வீடுகளைப்‌ பற்றிக்‌ கலந்து பேசும்‌ வடமொழி மறைக்கு ஏற்கும்‌. வடி கட்டின வீட்டின்பம்‌ பேசும்‌ தென்மொழி மறைக்கு மோக்ஷ ஹேதுவான ரம்ய ஜாமாத்ரு முனிவரை வந்திப்பதே பொருந்தும்‌.

    மணவாள மாமுனிகளே உட்பொருள்‌ என்பதைத்‌ தாமே அவர்‌ வெளிப்படையாகக்‌ கூறா விடினும்‌ அவரிடம்‌ காலக்ஷேபம்‌ கேட்ட பெரியோர்‌ இந்நுண்‌ பொருளை உணர்த்திருந்தனர்‌,தமக்குள்‌ அந்த ரஹஸ்யத்தை அவர்கள்‌ பேணிப்‌ பாதுகாத்தனர்‌,கருணை வாய்ந்த திருவரங்கன்‌ ஓராண்டு கேட்டு வந்து இந்த உண்மையான ஒண்‌ பொருளைக்‌ கோஷ்ட்டியில்‌ அந்வயிக்காதவர்‌களும்‌ பிற்பட்டவர்‌களும்‌ இழக்க வொண்ணாதென்று தான்‌ அருளிச்‌ செய்த தனியனை முதலிலும்‌ முடிவிலும்‌ சொல்லுமாறு தென்‌ மொழி மறையை அநுஸந்திப்பவர்களுக்குக்‌ கட்டளை யிட்டு இவ் வொண் பொருளை நாமும்‌ ௨ய்த்துணருமாறு செய்திருக்‌கிறான்‌. அந்தக்‌ கட்டளையின்‌ பலனே நாம்‌ இன்று முடிவுப்‌ பொருளாய்‌ அநுஸந்திக்கும்‌ “ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌” என்பது,


    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-4–

    May 21, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

    மற்றுமொரு நாள்‌ கந்தாடை யணணனை அழைத்தருளி, பெரிய கந்தாடை யப்பன்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டர்‌, சுத்த ஸத்வமண்ணன்‌, ஆண்ட பெருமாள்‌ நாயனார்‌, அய்யனப்பா இவர்களுக்கு
    பகவத் விஷயம்‌ ப்ரஸாதிக்கும்படிக்கு நியமித்தருளி ”பகவத்ஸம்‌பத்தாசாரியர்‌” என்று திருநாமம்‌ ஸாதித்தருளி ஆசார்ய ஸிம்‌ஹாஸநத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌.
    சுத்த ஸத்வமண்ணனுடைய வ்யாக்யாந சாதுர்யத்தைக் கண்டு போரவுகந்தருளி அவருக்குத்‌ ‘திருவாய்மொழியாசாரியர்‌” என்று திருநாமஞ் சாத்தி பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே அபிஷேகஞ் செய்தருளினார்‌.

    ஒரு நாள்‌ ராத்திரி கந்தாடை நாயனும்‌ ஜீயர் நாயனாரும்‌ பகவத் விஷயத்திலே கூடமான வாக்யங்களுக்கு அர்த்த விசாரம்‌ செய்ய,நாயன்‌ ஸம்ஸ்க்ருதமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்யக் கண்டு
    பகவத் விஷயத்திற்கு ஸம்ஸ்க்ருதத்தில்‌ அரும் பத விளக்கம்‌ பண்ண நியமித்தளி உபலாளித்தருளினார்‌.

    முதலிகளை ஆசார்ய ஸிம்ஹாஸனங்களில்‌ அபிஷேகம்‌ செய்தல்‌
    ஒருநாள்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை அழைத்தருளி, கந்தாடை யண்ணன்‌, போரேற்று நாயனார்‌, அநந்தய்யனப்பை. எம்‌பெருமானார்‌ ஜீயர்‌ நாயனார்‌, கந்தாடை நாயன்‌ இவர்களெல்லாருக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளும்படிக்கு நியமித்து அவருக்கு ஸ்ரீபாஷ்யாசாரியர்‌” என்று திருநாமம்‌ ப்ரஸாதித்தருளிஸ்ரீபாஷ்ய ஜிம்ஹாஸனத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌,

    எறும்பி அப்பாவை கோயிலுக்கு அழைத்தல்‌
    முன்பு ஜீயர்‌ ஸந்நிதியினின்று அனுப்புவித்துக் கொண்டு எழுந்தருளின எறும்பி அப்பா தத் விஸ்லேஷம்‌ ஸஹிக்க மாட்டாமல்‌ ஜீயருடைய தினசர்யா ப்ரகாரங்களை அநுஸந்தித்துக் கொண்டு ௮நுபவ பரீவாஹ ரூபமாக திநசர்யை” என்கிற ப்ரபந்தத்தைச்‌ செய்‌தருளி, ஜீயர்‌ ஸந்நிதிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கையிலே கொடுத்து வரக் காட்ட, அத்தைக் கண்டு ஜீயர்‌ மிகவும்‌ உகந்தருளி, ”அபிமத
    நிஷ்டராகில்‌ இப்படி யிருக்க வேண்டாவோ?” என்று மிகவும்‌ க்ருபை பண்ணி, அவரிடத்திலே திருவுள்ளம் சென்று, அப்போதே அப்பா எழுந்தருளும் படிக்கு ‘ப்ரீத: ப்ரேஷிதவாந்‌ முநிர் வர வரோ
    யஸ்மை முஹுஸ்ரீமுகம்‌!* என்கிறபடியே எறும்பி யேறத் திருமுகம்‌ போக விட்டருள. அப்பாவும்‌ ஜீயரை அப்போதே காண வேணும்‌ என்று பேராசையோடிருக்க,
    பாராவாரப் லவந சதுர: குஞ்ஜரோ வாநராணாம்‌ பத்மாபர்த்து: ப்ரிய ஸஹ சர : பத்ரிணாமீஸ்வரோ வா
    வாயுர்பூத்வாஸ பதியதிவா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்‌ காலே காலே வரவரமுநே காமயே வீக்ஷிதும்‌ த்வாம்‌ ॥

    [மணவாளமாமுனியே ! பெருங் கடலைத்‌ தாண்டுவதில்‌ சமர்த்தரான வானரங்களுள்‌ ஸ்ரேஷ்டரான சிறிய திருவடியாகவாவது பூமகள்‌ கேள்வனான எம்பெருமானுக்கு ப்ரியனாய்‌ ஸதா அருகே நித்ய கைங்கர்யம்‌ செய்து கொண்டிருக்கும்‌ பக்ஷி ராஜனான பெரிய திருவடியாகவாவது அடியேன்‌ ஆகி இப்பொழுதே கடக்த முடியாத வழியையும்‌ கடந்து தேவரீரைக்‌ காலந் தோறும்‌ கண்‌ணாரக் கண்டு களிக்க ஆசைப்படுகிறேன் ] என்றும்‌ மநோ ரதித்துக்‌ கொண்டிருக்கிற தசையிலே திருமுகம்‌ வரக் கண்டு அத்யாதரத்‌துடனே ப்ரத் யுக்தராய்ச்‌ சென்று ஸேவித்து திருமுகத்தை சிரஸா வஹித்து.

    தேவ:ஸ்வாம்‌ ஸ்வயமிஹ பவந்‌ வெளம்ய ஜாமாத்ரு யோகீ |
    போகீஸ த்வத் விமுக மபிமாம்‌ பூய ஸாபஸ்ய ஸித்வம்‌’?
    அர்த்தெள தார்யாதசே வசஸா மஞ்ஜாஸா ஸந்நிவே ஸாதா
    விர் பாஷ் பைர மலமபிதிர்‌ நித்ய மாராதநீயம்‌
    ஆஸா ஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம்‌ மர்த்யோ லப்தும்‌
    ப்ரபவதிகதம்‌ மத்வித: ஸ்ரீமுகம்தே
    ஸாரா ஸார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸ நம்தே ஸத்ய ஸ்ரீ மாந்‌
    கபிகர க்ருதர மாலிகா மேவ குர்யாம்‌’

    [திரு வநந்தாழ்வானே! தேவரீர் தாமாக இவ் வுலகில்‌ அஸ்மதாதிகளுக்கு ஸ்வாமியான மணவாளமாமுனிகளாகத்‌ திருவவதரித்து,தேவரீரிடத்தில்‌ விமுகனாயிருப்பினும்‌ அடியேனை விசேஷமாக கடாஷித்தருளிற்று. மணவாளமாமூனியே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளின்‌ அமைப்பினாலும்‌ அர்த்த கெளரவத்தாலும்‌ தூய மதியுடையவரால்‌ ஆநந்தக் கண்ணீருடன்‌ எப்போதும்‌
    ஆராதிக்கத் தக்கனவாய்‌, எப்‌போதும்‌ பல்லாண்டு பாடிக் கொண்டுள்ள நித்ய முக்தர்களாலும்‌ அடைய வரிதான தேவரீருடைய ஸ்ரீ முகத்தை அடியேன்‌ போல்வார்‌ அடைய எப்படித் தக்கவராவர்‌.’
    நன்மை தீமைகளைப்‌ பகுத்தறியும்‌ அறிவற்ற அடியேன்‌ எல்லா விதத்திலும்‌ தேவரீருடைய ஸ்ரீமுகத்தை குரங்கின்‌ கைப் பூ மாலை யாகவே ஆக்குவேன்‌] என்று அதிலே ஈடுபட்டு, அப்போதே கோயிலைக் குறித்து அத்யபி நிவேசத்துடேன எழுந்தருளி மடத்திலே புகுந்து வழியிலுண்டான விடாயும்‌ நெடு நாளாக ஸேவியாத விடாயும்‌ தீர “ஸுதா நிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தகர விக்ரஹம்‌”? [அமுதக் கடல் போல தமதிச்சையாலே ஸ்வீகரிக்கப்‌ பட்ட உயர்ந்த திருமேனி] என்னும்படியான விக்ரஹத்தைக் கண்டு
    களித்து, வரவர முநி யோகி வர்யருடைய ஸ்ரீபாதபத்மங்களைத் தம்‌ நெஞ்சிலும்‌ கண்ணிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸேவித்து,
    பொன்னிதனிற்‌ குளித்தாங்கந்‌ தனிற் புகுதப்‌ பெற்றோம்‌
    பொருவருஞ் சீர்‌ நம்பெருமாள் பதம்‌ புகழப் பெற்றோம்‌
    மன்‌னிய சீர்‌ மணவாள மாமுநி வனென்னையன்‌ வாழ்ந்திருக்கும்‌ மடம் தனில்‌ வந்திருக்கப் பெற்றோம்‌
    சென்னி தனிலவனடியார்‌ பதஞ்சூடப்‌ பெற்றோம்‌
    திருமலையாழ்வாரிலென்றும்‌ சிறந்திருக்கப் பெற்றோம்‌
    பின்னை யவர்க்கந்தரங்கப்‌ பொருளும்‌ பெற்றோம்‌
    பெருந் திவத்தி லின்‌பமிங்கே பெருகவும்‌ பெற்றோமே
    –என்றும்‌
    மண்ணாடு வாழ வந்தோன்‌ மணவாளமா முனிவன்‌ வண்மை
    கண்ணாருளுக் கிலக்காக நல் வாழ்வுங் கண்டவன் தன்‌
    திண்ணாரடிகளில்‌ குற்றேவல்‌ செய்து திரியவும்‌ நான்‌
    எண்ணாதிருக்க நடுவே நமக்கு வந்‌தெய்தியதே
    –என்றுஞ்‌ சொல்லுறபடியே தாம் பெற்ற பேற்றினுடைய கெளரவத்தை நாடோறும்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு,

    அந்த: ஸ்வாந்தம்‌ கமபி மதுரம்‌ மந்த்ர மாவர்த்த யந்தீம்‌ உத்யத் பாஷ்ப ஸ்திமித நயநா ழுஜ்ஜிதா ஸேஷ வ்ருத்திம்‌ | வ்யாக்யா கர்ப்பம்‌ வரவர முநே த்‌வந் முகம்‌ யீக்ஷமாணாம்‌ கோணேலீந : க்வசித ணுரசவ் ஸம் ஸதம் தாமுபாஸ்தாம்‌
    (மணவாள மாமுனிகளே, மனத்தினுள்ளே மதுரமான தோர் மந்த்ரத்தை அடிக்கடி உச்சரிப்பதும்‌, உண்டான ஆனத்தக்‌ கண்ணீரினால்‌ அசையாத திருக் கண்களை யுடையதும்‌, வேறு காரியங்‌களை விட்டிருப்பதும்‌, உபய வேதாந்த ரஹஸ்யார்‌த்த விவரணத்தை உள்ளடக்கிக்‌ கொண்டிருக்கிற தேவரீர்‌ திருமுக மண்டலத்தை ஸேவித்துக்‌ கொண்டிருப்பதுமான(பெரியோர்களுடைய) அந்த கோஷ்டியை, அற்பனான அடியேன்‌ ஒரு மூலையில்‌ மறைந்திருத்து அருகிலேயே ஸேவித்திருக்கக் கடவேன்‌.] என்னும்படியான திவ்ய கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு வரவர முநி ப்ருத்யர்‌ களுடனே வாழ்ந்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. அவர்களிலே வரந் தரும்‌ பெருமாள்‌ பிள்ளை ஜீயருடைய திருக் கைச்‌ செம்பும்‌ திரு வொற்று வாடையுங் கொண்டு ஸேவிப்பாரா யிருக்கிற நாளிலே அவர்க்குத்‌ திருக் குழற் கற்றை வளர்ந்திருக்க, இதேதென்று ஜீயர்‌ கேட்டருள தத் தேதுவை அவர்‌ விண்ணப்பஞ் செய்ய, ‘இன்று திரு முடி விளக்கும்‌” என்று நியமித்தருள, அவரும்‌ அப்படியே திருமுடி விளக்குவித்துக்‌ கொண்டு எழுந்தருள, அவர்க்கு குமாரர்‌ திருவவதரித்தா ரென்றும்‌ பத்து நாளாயிற் றென்றும்‌ அன்று ஆள் வர?இத்தைக் கேட்டு இதென்ன ஸர்வஜ்ஞதை! என்று எல்லோரும்‌ விஸ்மயப் பட்டார்கள்‌ அவரும்‌ பின்பு தம்முடைய குமாரருக்கு நாயனாரென்று ஜீயர்‌ திரு நாமஞ் சாத்‌தி யருளினார்‌; இப்படி பலரும்‌ திரு நாமஞ் சாத்தினார்கள்‌; ஆகையாலே வந்து பரந்த தெங்கு மித்‌ திருநாமமிங்கு என்கிறபடியே இதுவும்‌ அழகிய மணவாளன்‌ கோத்ர மென்னும்படி எங்கும்‌ விஸ்த்ருதமாயிற்று,

    அக் காலத்திலே கந்தாடை யண்ணன்‌ ஜீயர்‌ விரும்பி யமுது செய்தருளும்‌ கீரைக் கறியமுது நடத்திக் கொண்டு போந்து ஸர்வ காலத்திலும்‌ தத்பதாஸ்ரயராய்‌ ஸேவித்துக் கொண்டு போருகிறவர்‌ ,
    தம்முடைய எம்பெருமான்‌ தளிகைக்கு உபாதான த்ரவ்யத்தாலே நடத்திக் கொண்டு செல்ல, அவருக்குண்டான த்ருஷ்ட ஸங்‌கோசதைத்‌ திருவுள்ளம் பற்றி, தமக்குவந்த திரு முன் காணிக்கைகளையும்‌ அவர்க்கு ப்ரஸாதித்தருளி, இப்படி.த்ருஷ்டாத்ருஷ்டங்‌
    களிரண்டும்‌ ஸ்வாதீனமாக நடத்திக் கொண்டு போருகற நல்லடிக் காலத்திலே,
    அப்பிள்ளை கந்தாடையண்ணன்‌ முதலானோர்‌
    செப்பமுடன்‌ சேர்ந்த திரள் தன்னை-யெப்பொழுதும்‌
    பார்த்தாலும்‌ எமக்கிழவாம்‌ பட்டர் பிரான்‌ தாதர் தனைச்‌
    சூர் தீரக் காணாமையால்‌

    என்று! அவர்‌ விச்லேஷம்‌ ஸஹியாமலருளிச்‌ செய்துவிட,
    அப்பிள்ளானுங் கந்தாடை யண்ணனு மருள் புரிந்த சடகோபதாதரும்‌
    ஒப்பிலாத சிற்றானுங் கூடியே யோங்கு வண்மை மணவாள யோகி தாள்‌
    செப்பி வாழ்ந்து களித்துத்‌ தென் கோயிலிற்‌ சிறந்த வண்மையைச்‌ சேவித்திராமலே
    தப்பி யோடித்‌ தவித்துத் திரிவது தலை மெழுத்துத்‌ தப்பாது காணுமே

    என்று தம்முடைய இழவை அநுஸந்தித்து அப்போதே புறப்பட்டு வந்து திருவடிகளிலே ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌. பின்பு.

    வாது செயவென்று சில வாதினர்கள்‌ வந்து மனமுறிய நிற்பராருமால்‌
    வாழி யெனவே பெரிய சாப மறவென்று சிலர் வந்தனைகள்‌ செய்வ ரொருபால்‌
    போதுமினி வாதமுன பாதம்ருளென்று புகழ்ந்து சிலர்‌ நிற்ப ரொருபால்‌
    பொங்கி வருமெங்கள் வினை மங்க வருளென்‌று சிலர்‌ போற்றி செய்து நிற்ப ரொருபால்‌
    ஈதிவைகிடக்க மறை நூற் றமிழ்‌ தெரிந்து சிலரேதமற வாழ்வரொரு பால்‌
    ஏதமற வாதுலர்கள்‌ பேதையர்கள்‌ தாமயங்கி நிறை திறைஞ்சி நிற்பரொருபால்‌
    மா தகவினாலுலக மேழையு மளிக்க வென வந்த வெதிராசனடி சேர்‌
    மாமுனிவர் தீபமருளாளர்‌ மணவாள முனி மன்னு மடம்‌ வாழும்‌ வளமே

    என்று இப்படி பாகவத ஸம்‌ருத்தி யுடனே வாழுகிற நாளிலே

    நம்பெருமாள்‌ ஜீயரை பகவத் விஷய கால க்ஷேபம் ஸாதிக்க நியமித்தது
    தத : கதாசிதா ஹூ௰ தமேகம்‌ முநி புங்கவம்‌!
    ஸத் க்ருதம்‌ ஸாது ஸத் க்ருத்ய சரணாப்‌ஐ ஸமர்ப்பணாத்‌’ ॥
    ஸந்நிதெள மேநிஷீதேதி ॥ஸஸாஸ முரஸாஸந : |
    மஹாந் ப்ரஸாத இத் யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
    ததைவ தத்ர வ்யாக்பாதும் தத் ஷணாதுப சக்ரமே |
    ஸ்ரீமதி ஸ்ரீ பதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம்‌ |
    தத் வந்தஸ்ய ப்ரபந்தஸ்ய வயக்தந் தேநைவ தர்ஸிதம்‌
    ஸடவைரிமுகை: ஸ்ருண்வந்‌ தேஸிகைர் திவ்ய தர்ஸநை: |
    அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌ ॥
    அநுபூயே மமாபால கோபால மகிலோ ஜந: |
    அமந்யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

    [பின்பொரு கால்‌ நித்ய ஸூரி நிர்வாஹகரான பெருமாள்‌ முனிவர்‌ பெருமானாகிய இம் மணவாள மா முநிகளை வரவழைத்து கிருபையினால்‌ தமது ஸ்ரீசடகோபனை ஸாதிப்பதன்‌ மூலமாக மிகவும்‌ கெளரவித்து, “தேவரீர்‌ நமது ஸந்நிதியல்‌ திருவாய்‌ மொழி ஸ்ரீஸக்திகளின்‌ அறிவரிய விசேஷார்த்தங்களை ௨பந்யஸித்து கொண்டு வாரீர்‌” என்று நியமித்தருளினார்‌. மாமுனிகள்‌
    அவருடைய உத்தரவை, பெரிய அநுக்ரஹ மென்று சிரஸாவஹித்து அப்படியே அங்கு அந்த ஷணத்திலேயே உபந்யஸிக்கத்‌ தொடங்கினார்‌. ஸ்ரீய பதியான ஸ்ரீ ரங்க நாதர்‌ பெரிதாய்‌ அழகிய பெரிய திருமண்டபத்தில்‌ தாம்‌ நம்மாழ்வார் முதலான திவ்ய ஞாநம் படைத்த ஆசார்யர்களுடன்‌ எழுந்தருளி யிருந்து அந்தத்‌ திருவாய்மொழிக்கு அம் மணவாள மா முனிகளாலேயே தெளிவாக அருளிச்‌ செய்‌யப்பட்ட உண்மைப்‌ பொருள்களைக்‌ கேட்டருளி மகிழ்ந்தார்‌. பின்பு குழந்தைகள்‌ இடையர்‌ தொடக்கமான சாதாரண ஜனங்கள்‌ முதலாக எல்லோரும்‌ அந்த உயர்ந்த முனிவரான மணவாள மா முனிகளின்‌ அமானுஷமான வைபவத்தை அனுபவித்துத்‌ தம்மை அவரிடத்திலேயே ஸமர்ப்‌பித்துத்‌ தம்மை மிகவும்‌ பாக்ய சாலிகளாக நினைத்தார்கள்‌, என்கிறபடியே பரீதாபி வருஷத்தில்‌ திருப் பவித்ரத் திருநாளிலே

    க்ருபயா பர யா ஸ ரங்கராட்‌ மஹிமாநம்‌ மஹதாம்‌ ப்ரகாஸயந்‌
    குரு’சேஸ்வய மேவசேதஸா வர யோகி ப்ரவரஸஸ்ய ஸிஞ்யதாம்‌

    [அந்த ஸ்ரீரங்கராஜர்‌ தமது உயர்ந்த தயையினாலே முநிஸ்ரேஷ்டரான மணவாள மாமுனிகளின்‌ பெருமையைப்‌ பெரியோர்‌களுக்கு வெளிப்படுத்துவதற்காக, அம் முனிவர்க்குத்‌ தாம் சிஷ்யராக வேணுமென்று தாமே தமது மனத்தினால்‌ விருமபினார்‌ ] என்று ஸ்ரீரங்கநாயகரான பெருமாள்‌ தம்முடைய ப்ரம க்ருபை யாலே ஜீயருடைய மஹிமையை பெரியோர்களுக்கெல்லாம்‌ ப்ரகாசிப்பிப்பதாக ஸ்ரேஷ்டரான ஜீயருக்கு சிஷ்யராகுகையை -பிதரம்‌ ரோசயாமாஸ ததா தஸரதம்‌ ந்ருபம்‌- என்று பெருமாள்‌ சக்ரவர்த்தியை பிதாவாக ருசித்தாப்போலே இங்கும்‌ தாமே திருவுள்ளத்திலே ருசித்தருளினார்‌, அநந்தரம்‌,
    ஸ்ரோதும்‌ த்ராவிட வேதபூரி விவ்ருதிம்‌ ளெளம்யோம் யந்துர் முநே ருத்கடண்டாஸ்தி மமைந மாந்ய ததஸ் தார்க்ஷ்யாஸ்ரயம்‌ மண்டபம்‌ ஆவிஸ் யார்ச்சக மூரிவாநிதிமுதா, நிஸ்போஷ லோகாந்விதோ
    ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌ ॥

    [ஸ்ரீ ரங்கநாதன்‌ திராவிட வேதமான திருவாய்மொழியின்‌ உரையாகிய ஈட்டை மணவாளமா முனிவரிடமிருந்து கேட்க வேணுமென்ற ஆசை எனக்குள்ளது ஆகையால்‌ அவரை கருட மண்டபத்துக்கு அழைத்து வாரும்‌” என்று அர்ச்சகரை ஆவேசித்து அருளிச் செய்தான்‌, பின்பு அப்பெருமான்‌ எல்லாரோடும்‌ கூடி யிருந்து ஸந்தோஷமாக முறையே ஒரு வருஷ காலம்‌ அம் முனிவர்‌ ஸ்பஷ்டமாக ஸாதிக்கக்‌ கேட்டருளினான்‌] என்று ஸ்ரீராங்கநாதர்‌ நமக்கு அழகிய மணவாளமாமுனி யி டத்திலே திராவிட வேதமான நாலாயிரம்‌ திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்‌களைக் கேட்டருள அபிநிவேசமா யிருக்கிறது; ஆகையாலே இந்த மணவாளமாமுனியை கருட மண்‌டபத்திலே அழைப்பியும்‌!’ என்று அர்சசகரிடத்திலே ஆவிஷ்டராய்‌ ஸந்தோஷத்துடனே அருளிச்‌ செய்து, தாமுமங்கே யெழுந்தருளி, ஸமஸ்த ஜனங்களோடுங்‌ கூடி யிருந்து ஒரு ஸம்வத்ஸரம்‌ இப்படியே வ்யக்தமாக ஜீயரருளிச்‌ செய்த கிர்மத்திலே கேட்டருளினார்‌, அதெங்ஙனே எனில்‌;

    மங்களா யதநே ரங்கே ரம்ய ஜாமாத்ரு யோகிராட்‌ |
    யுகபத த்ராவிடாம்நாய ஸர்வ வ்யாக்யாந கெளதுகீ
    ॥-என்கிறபடியே மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌
    தேஸ்ந்தர கதோ வாபி த்வீபாந்தர கதோபிவா |
    ஸ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணி பத்ப நஸீததி ॥

    [மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கத்தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஒரே சமயத்தில்‌ திருவாய்மொழியின்‌ எல்லா வ்யாக்‌யானத்தையும்‌ உபந்யஸிப்பதில்‌ ஆசை யுடையரா யிருந்தார்‌ ]
    [தேசாந்தரத்திலிருந்தாலும்‌ த்வீபாந்தரத்திலே யிருந்தாலும்‌ ஸ்ரீரங்கத்திற் கெதிர்முகமாக நின்று ஒருவன்‌ தண்டம்‌ ஸமர்ப்‌பித்தானாகில்‌ அவன்‌ எவ்வித வருத்தமும்‌ அடைய மாட்டான்‌] என்றும்‌ தேசாந்தரங்களி$ல இருந்தானே யாகிலும்‌ திருவரங்கன்‌ திருப்பதியை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்பித்த மாத்ரத்திலே ஸகல துரித நிவர்த்தகமாய்‌ ஸகல மங்கள ப்ரதமான கோயிலிலே எழுந்தருளியிருந்து -ஸ்ரீரங்கமங்கள மணியான பெருமாள்‌ ஸந்‌நிதியிலே ஸ்வாமி அழகிய மணவாளமாமுனி, த்ராவிட வேதமான திருவாய்‌ மொழிக்கு ஆறாயிரப்படி , ஒன்பதினாயிரப்படி,
    பன்னீராயிரப்படி, இருபத்நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்‌ படிகளையும்‌, திருவாய்மொழிக்கு அங்கோபாங்கங்களான அருளிச்‌ செயல்‌ வ்யாக்னங்களையும்‌ ஒருக்கால்‌ காலக்ஷேபம்‌ நடத்தத் திருவுள்ளமாயெழுந்தருளி யிருந்தார்‌. பெருமாளும்‌ திருப் பவித்ரோத்‌ஸவ வ்யாஜமாகப்‌ புறப்பட்டருளி யிருந்தார்‌, பெருமாளும்‌ திருப் பவித்ர மண்டபத்திலே யேறியருளி பேரோலக்கமா யெழுந்‌ தருளி “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌, ஆசார்ய புருஷர்கள்‌, ஜீயர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைத்துக் கொத்துக்கும்‌ அருள்ப் பாடு ஸாதித்தருளி, ஜீயரும்‌ முதலிகளுடனே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டெழுந்தருளி யிருக்க, பலரடியார்‌ முன்பருளிய என்ற படியே ஜீயரைத்‌ தனித்து அருள்பாடிட்டருளி, ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி, ‘* நாளை முதலாக தம்முடைய
    பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்குருகூர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்‌’” என்ன
    ; “இப்படி அருளுவதே!” என்று மிகவும்‌ ஹ்ருஷ்டராய்
    நாமார்‌? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌
    தாமாக நம்மைத் தனித்தழைத்து–நீ மாறன்‌
    செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளுமிங்கே
    வந்துரை யென் றேவுவதே வாய்ந்து.
    -என்று அருளிச் செய்தார் –

    பிற்றை நாள்‌ தொடங்குவதாக எழுத்தருஸி இன்பம்‌ பயக்க விருக்க நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்டியைப்‌ பாரித்தாப் போலவும்‌ இராமாயணத்தைக்‌ கேட்‌பதாக பார்‌த்‌தி வாம்ஸ் ச நர வ்யாக்ர: பண்டிதாத்‌ நைகமாம்ஸ்த தா”! [(புருஷஸ்ரேஷ்டனான) இராமபிரான்‌ அரசர்களையும்‌ புலவர்‌ களையும்‌ வேதம் வல்லவர் களையும்‌ வரவழைத்தான்‌] என்று தொடங்கி பரிகணிதரான அனைவரையும்‌ திரட்டினாப்‌ போலவும்‌ பெருமாள்‌ நாய்ச்சிமாருடனே கூட திவ்ய ஸிம்ஹாஸநத்திலே யேறி யருனி திவ்ய கோஷ்டியைப்‌ பாரித்து அந்த கோஷ்ட் யந்தர் பூதராய்‌ சேர்த்தியை அநுபவிக்க -அயர்வறுமமர்களான திருவநந்தாழ்‌ வான்‌, பெரிய திருவடி, ஸேநாபதியாழ்வான்‌ என்கிற ஸுரிமார்‌ களோடும்‌, -வைகுத்தத்து முனிவராயிருந்துள்ள தம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌, நாதமுநி யதிவர ப்ரப்ருதிகளான ஆசார்யர்களனைவரோடும்‌, ஸ்ரீரங்கநாராயண ஜீயர்‌, திருமாலை தந்த பட்டர்‌ தொடக்கமானாரோடும்‌, அணிய ரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்கள் இன்பமிகு பெருங் குழுவோடுங்கூட பேரோலக்கமாக வெழுந்தருளி யிருத்து ஈடு தொடக்கமான ஐத்து வ்யாக்யானத்துடனே திருவாய்மொழி தொடங்க, அவ் வவ்விடங்‌ களிலே இது ஸ்ருதி ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை, இது கீதாபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஞ்சராத்ர ப்ரகீரியை, இது ஸ்ரீராமாயண ப்ரக்ரியை, இத மஹாபாரத ப்ரக்ரியை, இது ஸ்ரீவிஷ்ணுபுராண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை, இது பதார்த்தம்‌, இது வாக்யார்த்தம்‌, இது மஹாவாக்யார்த்தம்‌, இது ஸமபிவ்யாஹாரார்த்தம்‌, இது ஸ்வத்யர்த்தம்‌, இது அர்த்தரஸம்‌, இது பாவரஸம்‌, இது ஒண்‌ பொருள் , இது உட்பொருள்‌ என்று இவர்‌ இப்படி அருளிச்‌ செய்யும்படியையும்‌, கீ ரங்க வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌” [ஸ்ரீரங்கநாதன்‌ மாமுனிகளால்‌ முறையே ஸ்பஷ்டமாக சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருஷ காலம்‌ கேட்டருளினான்‌] என்றபடியே இவர்‌ தொடங்கி நடத்தி யரளும் படியையும்‌ திருச்செவி சாத்தி யருளி அங்கே இப்படியே ஒரு ஸம்வத்ஸரம்‌ நடந்து பின்பு சாத்தி யருளும் போது।

    பகவத்‌ விஷய சாத்துமறை
    முன்பு போலே, பராங்குஸ பரகால பட்டநாத யதிவராதிகளுடனே கூட ஏறி யருளித்‌ திருச்செவிசாத்தி யருளி ஜீயரை மிகவும்‌ உபலாளித்தருளி திவ்ய ப்ரபந்த தத்வ வ்யாக்யாந வைபவங்களையும்‌, ஜீயருடைய வைபவங்களையும்‌ ப்ரகாசஞ்‌ செய்தருள வேணுமென்றும்‌, தாம்‌ அநுஷ்டித்துக்‌ காட்ட வேணுமென்றும்‌ திரு வுள்ளமாய்‌

    ஸமாப்தெள க்ரந்தஸ்ய ப்ரதிதஸீ விநிதோ பர்யாயசசயே பரம்‌
    ஸஜ்ஜீபூதே வரவர முநேரங்க்ரி ஸவிதே |
    ஹடாத்பால: கஸ்சீத்குத இதி நிரஸ்தோப் படிபகத: ஐகெள
    ரங்கே ஸாக்ய: பரிணத் சதுர்ஹாயாந இதம் ॥

    [பகவத்விஷய க்ரந்தத்தின்‌ சாத்துமுறை ஸமயத்தில்‌, வெற்றிலை பாக்கு பழம்‌ என்றிங்ஙனே ப்ரஸித்தமான பலவகைப்பட்ட உபஹாரங்கள்‌ ஸித்தப்படுத்தப் பட்டவளவில்‌, நான்கு பிராயம்‌ நிறைந்து ‘ரங்கநாயகன்‌ என்னும்‌ பெயர் பூண்ட சிறுவனொருவன்‌ திடீரென்று அங்கு வரப் புக, “நீ எதற்கு வருகிறாய்‌ அப்பால்‌ செல்‌’ என்று |தடுக்கப்பட்ட போதிலும்‌ அருகே வந்து நின்று இத் தனியனைச்‌ சொன்னான்‌ ) என்கிறபடியே ஜீயருக்கு ஆசார்ய ஸம்‌பாவனையாக சில த்ரவ்யங்களும்‌ ஏலா லவங்க கர்ப்பூராதிகளும்‌ திருப்பரிவட்டங்களும்‌, அடைக்காயும்‌, பலங்களும்‌, அமர்த்தி நிற்க

    ஸ்ரீ சைலேச தயா பாத்ர தனியனவதாரம்‌
    அழகிய மணவாள பட்டரான அர்ச்சக குமாரராய்‌ ஐந்தாம்‌ வயதாய்‌ ரங்கநாயக மென்கிற திருநாமத்தை யுடையரான ஒருபிள்ளை, ஸம்பாவனைத்‌ தட்டுக்களுக்கும்‌ பெருமாளுக்கும்‌ நடுவே வத்து நிற்க, அப்பாலே விடவிடத் திரும்பி வந்து நிற்கும் , இது வெறுமனன்று, ஒரு ஆஸ்சர்ய முண்டாக வேணும்‌” என்று எல்லாரும்‌ பார்த்திருந்து சிறு பிள்ளையை நீர்‌ நிற்கிற காரியமேதென்ன, அவர்‌ கையைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல்‌ ஸ்ரீ ஸைலேஸ தயா பாத்ரம்‌ என்ன, பின்னுமேதென்ன, தீ பக்தயாதி குணார்ணவம்‌ என்ன, இன்னஞ் சொல்லுமென்ன, யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம்‌ முநிம்‌ என்று சொல்லி ஓடிப் போக, பெரியோர்களெல்லாம்‌ ஆஸ்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத்தைப்‌ பட்டோலை கொண்டு மஞ்சட்காப்புச்‌ சாத்தித்‌ திருவடிகளிலே ஸமர்ப்பித்து, பின்பு அத்தைத்‌ தட்டிலே வைத்து ரங்கநாயகத்தை உபலாளித்‌ தழைத்து இன்ன மேதென்ன, நானொன்றுமறியேன் என்ன முன்பு சொன்‌னத்தை இன்னமொறு முறை சொல்லுமென்ன, நானொன்றுமறியேனென்று ஓடி விட;

    வாழி திரு நாமத்துக்கு நியமனம்‌
    பின்பு அந்தப் பிள்ளைக்கு அருள்பாடு ஸாதித்து,நீர்‌ வாழித் திரு நாமமோதுமென்ன, அவர்‌ தமிழிலே அதி சதுரராகையாலே,

    வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌
    வாழும்‌ மணவாள மா முனிவன்‌–வாழியவன்‌
    மாறன்‌ திருவாய்மொழிப் பொருளை மா நிலத்தோர்‌
    தேறும்படி யுரைக்கும்‌ சீர்‌-
    – என்றும்‌(இப் பாசுரம்‌ மடத்துப்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது என்பர்-அப்பிள்ளை அருளிச் செய்தார் என்பாரும் உண்டு )
    செய்ய தாமரைத்‌ தாளிணை வாழியே
    சேலை வாழி திரு நாபி வாழியே
    துய்ய மார்பும்‌ புரி நூலும்‌ வாழியே
    சுந்தரத் திருத் தோளிணை வாழியே
    கையுமேக்திய முக்கோலும்‌ வாழியே
    சுருணைபொங்கிய கண்ணிணை வாழியே
    பொய்யிலாத மணவாளமாமுனி புந்திவாழி புகழ்வாழி வாழியே
    என்றும்‌–(ப்ரதிவாதி
    பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
    அடியார்கள்‌ வாழ அரங்க நகர்‌ வாழ
    சடகோபன்‌ தண்டமிழ் நூல்‌ வாழ–கடல்‌ சூழ்ந்த
    மன்னுலகம்‌ வாழ மணவாள மா முனியே!
    இன்னுமொரு நூற்றுண்டிரும்‌
    -என்றும்‌ -(ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
    ஒத, பெருமாளுகந்தருளி அவரை க்ருபை பண்ணி யருளி வரிசைகளும்‌ ப்ரஸாதித்து:

    திவ்ய தேசங்களுக்கு நம்பெருமாள்‌ நியமனம்‌-
    உடனே திருமலை, பெருமாள் கோயில்‌ தொடக்கமான திருப்‌பதிகளுக்கெல்லாம்‌ ஸ்ரீசேனை முதலியாருடைய ஸ்ரீமுகமாக அநுஸந்தான காலங்கள்‌ தோறும்‌ ஜீயர்‌ விஷயமாக நம்பெருமாளருளிச்‌ செய்த தனியன்‌ ,
    ஸ்ரீ ஸைலேஸ தயா யாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌ |
    யதீந்த்ர ப்ரவ்ணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ॥
    -என்‌றநுஸந்திந்துத்‌ தொடங்கவும்‌, ப்ரபந்தம்‌ சாத்தி -வாழி திருவாய்மொழிப் பிளளை என்று தொடங்கி , மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்‌ என்று அநுஸநத்தித்துத்‌ தலைக் கட்டவும்‌ என்று அனுப்பி விட்டருளி ஜீயருக்கு ஸம்பாவனையும்‌ செய்‌தருளி வரிசையுடன்‌ மடத்திற்கு அனுப்பியருளி நிற்க, பின்னும்‌ ஒரு
    அதிசயம்‌ ப்ரவர்த்தமாயிற்று,

    ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌: என்பது ப்ரணவார்த்தம்‌. ஸ்ரீசைலேச-(திருமலையப்பன்‌) ௮காரார்த்தம்‌. தயா-பாத்ரம்‌-௮வன்‌ க்ருபைக்கு பாத்ரமான ஜீவாத்மா மகார வாச்யன்‌.-எம்பெருமானுகக்குரியன்‌ என்ற ஸம்பந்தார்த்தமும்‌ தயா பாத்ரம்‌ என்பதனால்‌ காட்டப்பட்டது,

    அண்ணன்‌ திருமாளிகையில்‌ அதிசய நிகழ்ச்சி
    ஈடு சாத்து முறை யுத்ஸவம்‌ ஸேவிக்க அனைவரும்‌ கோயிலிலே சேர்ந்த வளவிலே அண்ணன்‌ திருமாளிகையிலே ஜ்ஞாநாதிகைகளான அம்மைமார்களும்‌ அண்ணன் தேவிகளும்‌ சேர விருந்து
    கொண்டு ஜீயருடைய வைபவத்தை அநுஸந்தித்திருக்கிற வளவிலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து ஒரு சீட்டை அண்ணன்தேவிகள்‌ கையிலே கொடுத்து, இத்தை அண்ணன்‌ திருக் கையிலே ஸமர்ப்பியும்‌-என்ன; அவர்‌ அத்தை வாங்கி வாஸிப்பித்து “இது ஒரு ஸ்லோகமிருத்தபடியே!*? என்று உகந்து ப்ரஹ்மசாரியைக்‌ கேட்டு ஆதரிக்‌ கப்பார்க்க, அங்கே அவரைக்‌ காணா தொழிய பின்பு எல்லாரும்‌
    எழுந்திருந்து எங்குந் தேடியுங்‌ காணப் பெறாமையாலை அங்குள்ளவர்கள்‌ பகவல் லீலை யென்று அறுதியிட , அவர்களிலே சிலர்‌ பெரிய திருமண்டபத்திலே சென்று முறியை ஸமர்ப்பித்துச்‌ செய்தியை
    விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டு
    ஹடாத் தஸ்மிந்‌ ஷணே கஸ்சித் வர்ணீ ஸம் ப்ராப்ய பத்ரிகாம்‌ |
    வாதூல வரதாசார்ய தர்ம பத்ந்யா: கரே ததெள ॥

    திடீரென்று அக் கணத்திலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து கோயிற் கந்‌தாடை யண்ணனுடைய தேவிகளின்‌ கையில்‌ ஒரு ஓலையைக்‌ கொடுத்‌தான்‌] என்று அநுஸந்தித்து அனைவரும்‌ ஆச்சர்யப்பட்டு முறியில்‌ திருவெழுத்துப்பட்ட ஸ்ரீஸைலேஸ தயாபாத்ர ஸ்லோகத்தைக் கண்டு வித்தராய்‌, தனியனின்‌ அர்த்தத்தை திருமந்த்ரமாக யோஜித்து -அநுஸந்தித்து, வானமா மலை ராமாநுஜ ஜீயர்‌; கந்தாடை
    அண்ணன்‌, அப்பா, அண்ணா முதலான பெரியோர்கள்‌ தாங்கள்‌ தங்களுடைய பக்த் யதிசயத்தாலே தனியனாக வேணுமென்று அருளிச் செய்த ஸ்லோகங்களையும்‌ இதிலே அந்தர் பவிப்பித் தருளி -இது எல்லார்க்கும்‌ உத்தாரகம்‌’- என்று உகந்திருக்க, பெருமாள்‌ ஆழ்வார்களுக்கு அருள்பாடிட்டு அனுப்பியருளி, -உள்ளே பெரிய பெருமாள்‌ சேர்த்தியிலே எழுந்தருளினவாறே கோயில்‌ பரிகர
    மனைத்துக் கொத்தும்‌ ஸகல வரிசைகளுடனே ஜீயரை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திருவீதி ப்ரதக்ஷிணமாக மடத்திலே யெழுந்தருளப்‌ பண்ணி வைத்தார்கள்‌. பின்பு கோயில்‌ பரிகரமனைத்‌துக் கொத்தும்‌ ஸந்நிதியிலே சென்றவாறே அவர்களைப்‌ பெருமாள்‌ உகந்தருளி, ஜீயர்‌ முப்பத்தாறாமிரப்‌ பெருக்கர்‌ என்னுமது கண்‌டோம்‌ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இதற்கு முதலிகளும்‌-வாழி திருவாய்மொழிப் பிள்ளை என்று தொடங்கி மங்களா சாஸநம்‌ பண்ணியும்‌
    அடிசூடி யென்‌ தலைமேலரு மறை யாய்ந்து தொண்டர்‌
    முடி சூடிய பெருமான்‌ வரயோகி முனங்குரவோர்‌
    படி சூடு முப்பத்தாறாயிரமும்‌ பணித் தரங்க
    ரடி சூடி விட்டதற்கோ எந்தாயென்ப துன்னையுமே
    –என்று ஆபால கோபாலரெல்லாரும்‌ தத் வைபவத்துலே யீடு பட்டு ததேக பரராய்‌ தந் நாம குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டுஹ்ருஷ்டரா யிருந்தார்கள்‌.

    திருவேங்கடமுடையான்‌ இத் தனியனை ப்ரவர்த்திப்பித்தது
    இத் தனியனுக்கு இன்னம்‌ அதிசயமுண்டு. அதெங்ஙகனே யென்னில்‌; –தென்னனுயர்‌ பொருப்பிலழகரும்‌ தெய்வ வடமலையப்‌பனும்‌ இதற்கு ப்ரவர்த்தகரா யிருப்பர்கள்‌. முன்பு முமுஷு வாய்‌
    தேசாந்தரங்களிலே திரிவாரொருவருடைய உஜ்ஜீவதார்த்தமாக ஸர்வேஸ்வரன்‌ ஸ்வப்நத்திலே இந்த ஸ்லோகத்தை யவருக்கு உபதேசிக்க, அவரும்‌ அத்தைத்‌ தஞ்சமாக நினைத்திருந்து பின்‌பொருக்‌கால்‌ இந்த ஸ்லோகம்‌ நடையாடுகிற தேசமான திருமலையிலே திருப் புரட்டாசாதி திருநாள்‌ ஸேவிக்கும் போது திருவேங்கடமுடையான்‌ அவரை க்ருபை பண்ணி அர்ச்சசக முகேந கையைப்‌
    பிடித்திட்டு வந்து திருவோலக்கத்திலே வைஷ்ணவர்கள்‌ நடுவேயிட்டு, -அவர்கள்‌ அருளிச் செய்வதைக்‌ கேள்‌” என்றும்‌ அவர்களை“இவன்‌ பணிப்பதைக்‌ கேளுங்கோள்‌” என்றும்‌ நியமிக்க, சேனை
    முதலியார்‌ திருமுகப்படியே நடத்துகிற தனியனை பெரிய கேள்வி ஜீயர்‌ தொடங்க, அத்தைக் கேட்டு விலஷணராகையாலே தெண்‌டனிட்டு,! “ஒரு விண்ணப்பம்‌; கேட்டருளவேணும்‌” என்றது விண்ணபஞ்‌ செய்து “அடியேனுக்கு ஸ்வப்ந லப்தமாய்‌ அது.தன்னை அடியேன் தஞ்சமாக நினைத்திருக்க ஸ்லோகத்தையே தேவரிர்‌களும்‌ அநுஸந்தித்தது இதென்ன ஆஸ்சர்யம்‌- என்ன, ஆகில்‌ நீர்‌ அந்த ஸ்லோகத்தைச்‌ சொல்லிக் காணீர்‌” என்ன, அவர்‌
    ஸ்ரீசைலேச தயாபாத்ரத்தைச்‌ சொல்ல அத்தைக் கேட்டு எல்லாரும்‌
    மிகவுமுகந்தருளித்‌ தங்களுக்கு வந்தவற்றை யெல்லாம்‌ ஸ ப்ரகாரமாக அருளிச் செய்யக்‌ கேட்டு அதி ப்ரவணராய்ப்‌ புறப்பட்டுக்‌ கோயிலிலே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே வேரற்ற மரம்‌ போலே விழுந்து கிடக்க; பரம தயாளுவான ஜீயரும்‌ அவரைத்‌ திருக்கையாலே ஸப்ர்சித்து ”நீயார்‌? வந்த காரியமேது?” என்று கேட்டருள“அடியேன்‌ முமுக்ஷுவாய்‌ தீர்த்த யாத்ராப்ரனாய் திரிவானொருத்‌தன்‌”என்று தொடங்கிச்‌ சிலவற்றையும்‌, ஸ்வப்ந வ்ருத்தாத்தத்தையும்‌ தனியனையும்‌ விண்ணப்பஞ் செய்து ஜீயர்‌ திருவடிகளைத்‌ தன் தலையிலே நற்றரிக்க வைத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான்‌ அடியேனை விசேஷ கடாஷம் செய்தருளி, இத்‌ தனியனைத்‌ திருவோலக்கத்திலே ஸாதித்து தேவரீர்‌ திருவடிகளை
    ஸேவிக்க விட்டார்‌” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க; ,
    இப்படி, பகவத்‌ கடாஷ பாத்ர பூதனோ நீ!” என்று மிகவும்‌ உகந்தருளி-இனி உனக்கு வேண்டுவதென்‌?” என்ன.-மோஷ உபாயமான மந்த்ர ரூபமான தனியனையும்‌ மந்த்ரதாசார்ய ரூபியான அப்பனையும்‌, மந்த்ர ப்ரப்‌திபாத்ய தேவதையான தேவரீர்‌ திருவடிகளையும்‌ த்ருடமாகப்‌ பற்றி முத்தனானேன்‌; இனி வேண்டுவதுண்டோ?’-என்று கையைத் தட்டிச்‌ சிரித்துக்‌ கூத்தாடி நிற்க, ஜீயரும்‌,
    மந்த்ரே தந் தேவதாயாஞ்ச। ததா மந்த்ர ப்ரேத குரெள |
    த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம்‌ ॥

    [மந்த்ரத்தினிடத்தும்‌, அதன்‌ உள்ளீடான தேவதை யிடமும்‌ அப்படியே அம் மந்த்ரத்தை யுபதேசித்த ஆசாரியனிடமுமாக இம்‌ மூன்று விஷயங்களிலும்‌ எப்போதும்‌ பக்தி செய்யப்படவேண்டும்‌;இந்தபக்தியே பகவத் ப்ராப்திக்கு முக்ய ஸாதநம்‌] என்னுமது
    இவருக்குண்டாயிருக்கிறதே! அதிகார பூர்த்திக்கு வேண்டுவதும்‌ இதுவே யன்றோ?’? என்று உகந்தருளி, அவருக்கு தாபாதி பஞ்‌ச ஸம்ங்காரங்களையும்‌ ஸாதித்து ‘*திருவேங்கடராமாநுஜ தாஸர்‌”
    என்று தாஸ்ய நாமத்தையும்‌ ஸாதித்து க்ருபை பண்ணி யருளினார்‌.
    பெருமாளும்‌, * வாரீர்‌ திருவேங்கட ராமாநுஜ தாஸரே! உமக்கு மேல்‌ வீடு தந்தோம்‌”? என்று ஸ்ரீ சடகோபனை ஸாதிக்க உடனே அவர்‌ திரு நாட்டுக் கெழுந்தருளினார்‌- எல்லாரும்‌ அவருக்குப்‌
    பெரியோர்களுக்குச்‌ செய்யும்‌ க்ரியைகளெல்லாஞ்‌ செய்து நிறை வேற்றி ஜீயருடைய வைபவத்தை எல்லாருமாகக்‌ கொண்டாடிக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌ ‘

    திருமாலிருஞ்சோலை அழகர்‌ இத் தனியளை ப்ரவர்த்திப்பித்தது
    அழகர்‌ திருமலையிலே ஸமஸ்த கைங்கர்ய நிரதராய்‌ ஜீயர் திருவடி ஸம்பந்த முடையாரயிருக்கிற ஜீயர்‌ தம்முடைய ஆசார்யருடைய ஆத்ம குணங்களையும்‌ விக்ரஹ குணங்களையும்‌ சிந்தித்து
    அனுஸந்தித்துக்‌ கொண்டு ப்ரதஷிணமாக வெழுந்தருளி, தமக்கு நித்யா நுஸந்தேயமாக ஜீயர்‌ விஷயமான தனியன்‌ பெரியோர்களிடத்தினின்று உண்டாக வேணுமென்று எண்ணிக் கெண்டு சேனை முதலியார்‌ ஸந்நிதியிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க: அந்த அவ ஸரத்திலே அர்ச்சகரும்‌ ஸேனை முதலியாருக்குத்‌ திருவாராதநங்‌ கண்டருளப் பண்ணி திருவந்திக்‌ காப்புங் கண்டருளப்‌ பண்ணி திருமுக மண்டலத்தை ஸேவித்து
    ஸ்ரீசைல ஸூந்தரே ஸஸ்ய கைங்கர்ய நிரதோயதி: |
    அமந்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய ஸம்பவ மார்யத; ॥

    [தெற்குத்‌ திருமலை யழகருடைய கைங்கர்யத்திலே ஊற்றமுடைய ஒரு ஜீயர்‌ தமது ஆசார்யராகிய மணவாளமாமுனிகளுக்கு ஒரு தனியன்‌ பெரியோர்‌ திருவாக்கிலிருந்து அவதரிக்க
    வேணுமென்று எண்ணினார் என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு பெருமாள்‌ ஸன்னிதியிலே அமுது செய்தருளப்‌ பண்ணச்‌ செல்ல, அவ் வளலிலே அழகிய மணவாளமாமுனியினுடைய
    திருவடி ஸம்பந்தமுடைய சேனை முதலியார்‌ என்பவர்‌ தெற்குத்‌ திருப்பதிகளெல்லாம்‌ மங்களாசாஸனம் பண்ணி அழகரைத்‌ திருவடி தொழ வெழுந்தருள, ஸ்ரீகார்யம் பார்க்கிற ஜீயரும்‌. அவரைக்‌ கண்டு மிகவும்‌ ஆதரித்துப்‌ பெருமாளை மங்களாசாசனம்‌ பண்ண வெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திருமுன்பே செல்ல, அழகரும்‌ அவரை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி தீர்த்தம்‌ முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து ஸ்ரீ சடகோபனையும்‌ அவர்‌ திரு முடியிலே நற்றரிக்க வைத்தருனி உமது நாவின்‌ நுனியில்‌ நான்‌ இருந்து
    ஜிஹ்வாக்ரே தவ வக்ஷ்யாமி ஸ்த்தித்வாவதஸூ பாவநம்‌ |
    பத்மம்‌ த்வதார்ய விஷயம்‌ முநீகரஸ்ய மமாஜ்ஞாயா: ॥

    கொண்டு சொல்லப்‌ போகிறேன்‌, என்னுடைய நியமனமாக ௨ம்‌முடைய ஆசார்யரான மணவாள மா முனிகளுடையதாய்ப்‌ பரம பவித்ரமான (இந்த) ஸ்லோகத்தை இந்த ஜீயருக்குச்‌ சொல்லும்‌,என்று அர்ச்சக முகேந நியமிக்க சேனை முதலியாரும்‌,
    தந்யோஸ் மீதிஸ் ஸேகேஸ தேஸி கோ வதந ஸ்லயம்‌’]
    வஹக் ஸிரஸி தேவஸ்ய பாதெள பரம பாவநவ் ॥

    (சேனை முதலியாரென்பவர்‌ அழகருடைய பரம பாவநமன திருவடி நிலைகளை ‘தமது திருமுடியில்‌ வைத்துக் கொண்டு அடியேன்‌ தந்யனானேன்‌ என்று கூறி, தாமே அத் தனியனைச்‌ சொன்னார்‌] என்கிறபடியே ஸ்ரீசடகோபனையும்‌ முடியில்‌ தரித்துக்‌ கொண்டு ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌”” என்னுமித் தனியனை யருளிச்‌’ செய்‌த உடனே அர்ச்சகரும்‌ தெரியப்பட்டு ஜீயருக்கு ஸாதித்தருளின்ர்‌-பின்பு சேனை முதலியாருக்கும்‌ அர்ச்சகருக்கும்‌ இந்த ஸ்லோகம்‌ தெரியாதொழிய, ஜீயர் மடமே சென்று ஸ்லோகம்ருளிச்‌ செய்ய வேணு மென்று கேட்க, அருளிச் செய்த தேவரீரே கேட்க வேணுோமோ “என்ன, ”எனக்கொன்றுமே தெரிய லில்லை, இது ஸுந்தர ராஜர்‌’ தானே ஸூந்தர ஜாமாத்ரு முநி விஷயமாக அருளிச்‌: செய்த என்று மூன்று திருநாமமும் கூடி தெரிவிப்பை கடாஷித்துத்‌ கொண்டு வித்தராய்த்‌ தங்களுக்குத் தஜ்சமாகக்‌ கொண்டருள்‌,சேனை முதலியாரும்‌ அதி ப்ரீதியடனே இச் செய்தியைக்‌ கோயிலிலே பெரியோர்களுக்செல்லாம்‌ தெரிவிக்க வேணுமென்று அதி த்வரையாக எமுந்தருளி கோஷ்டியிலே ஜீயரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து இவ் வைபவங்களை யெல்லாம்‌ “விண்ணப்பஞ் செய்ய, எல்லாரு மிகவும் உகந்தருளி இப்படி திருவேங்கடமுடையானும்‌ அழகரும்‌ உகந்தருளின இத் தனியனை ப்ரகாசப்‌பித் தருளுகிறதே ! இதென்ன வைபவம் தான்‌!” என்று போர வித்தரா யருளினார்கள்‌. –

    வானமாமலை ஜீயர்‌ முதலானார்‌ ஜீயரைப்‌ புகழ்தல்‌
    வான மாமலை ராமாநுஜ ஜீயர்‌ மிகவும்‌: ஹர்ஷ பரவசராய்‌”’ ஸ்தப்தராயிருக்க, ஜீயரும்‌ திருக் கைகளாலே அவரைத்‌ தட்டி உம்முடைய ஹர்ஷத்துக்குப்‌ போக்குவீடாக வார்த்தை யருளிச் செய்யலாகாதோ?” என்ன, அவரும்‌ “இரண்டு முலைக் காம்பினும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகப் பருகுவார்‌ தாமே யன்றோ?’” என்று கத்தாடை யண்ணனைப்‌ பார்த்தருளிச்‌ செய்ய -அண்ணணும்‌ -அந்தப் பாலிலும்‌ இந்த உக்தி ரஸம்‌ அதிசயமாயிருக்கிறதே!” என்ன, ப்ரதிவாதி பயங்கரரும்‌ உத்தரோத்தரம் அதிசயமாயிருக்கிற தென்று அண்ணனைக் கொண்டாட, அப்பிள்ளை இருத்து, மந்த்ரோத்தரமான பூர்வ வாக்கியத்திலும்‌ உத்தர வாக்கியம் அதிசயித்து இருக்குமென்ன, பட்டர்‌ பிரான் ஜீயர் த்வயத்திலும்‌ சட கோப த்வயம்‌ அதிசயிதமாய்‌, அது தன்னிலும்‌ ராமாநுஜ த்வயம் உத்‌தரம்‌ அதிசயமாய்‌, (அதுதன்னிலும்‌) தந் நிஷ்ட ரான நம்‌ ஜீயரைத்‌ தொழுவதாயிருக்கிற இந்தத் தனியனே ஸ்ரேஷ்ட்டமென்று ஒருவருக்கொருவர்‌ இட்டீடுகொண்டு சாடுரஸோக்திகள்‌ அருளிச்‌
    செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌-

    ஜீயர்‌ வடதேசத்தெம்பெருமான்களை த்யாநித்தது
    அநந்தரம்‌ ஒருநாள் ஜீயர் ப்ராத: காலத்திலே திருமலை யாழ்வாரிலே எழுந்தருளி யிருந்து திவ்ய தேசங்களை த்யாநித்து அங்கே ஆஸக்தமான திருவுள்ளத்தை உடையராய்‌ பாரவஸ்யத்தை யுமடைந்து அந்த திவ்யதேசங்களையே வாய் புலத்தித்‌ கொண்டு இரண்டு யாம பர்யந்த மெழுந்தருளி யிருத்து “காலம்‌ போகிறதே” என்று, சிந்திக்கும்‌ திசைக்கும் தேறும்‌ கை கூப்பும்‌; -வெருவாதாள்‌ வாய் வெருவி,
    அருவி சோர் வேங்கடம நீர்மலையென்று-வாய் வெருவி; இவறிராப்‌ பகல்‌ வாய்வெரீஇ என்கிறபடியே வாய் புலத்திக்‌ கொண்டு தளர்ந்து சாய்ந்தருள, காலஷேபத்திற்கு சில ஆசார்யர்களெழுந்‌ தருளி பின்னுஞ் சில ஆசார்யர்கள்‌ எழுந்தருள வேண்டியிருக்‌கிற அவஸரத்திலே.
    அவ்யாஜ பந்தோர்‌ கருட த்வஜஸ்ய திவ்யாஞ்சிதாந்யாய தநா நிபூய: |
    த்யாயம் ஸ்தமோ நாஸகராணி மோஹவஸாத்த தேவ ப்ரஹரத் வயம்ல:
    த்யாத்வாதி வ்யாஞ்சிதார்ச்ந விலஸித நிலயாந் யெளத்தராண்யாஸூ
    விஷ்ணேஸ் தத் ஸேவாயத்த சித்தே ப்ரணிகததி முஹுர்நாமதஸ்‌ தாநிதாநி |
    தூஷ்ணீம்‌ பூதேஸ பாஷ்பம்‌ ஸபுளகநிசயம்‌ ரம்ய ஜாமாத்ரு யோகி ந்யப்‌
    யேத்யா நம்ய ஸர்வே கிமிதமிதி பராமார்தி மார்திமாபூர்ம ஹாந்த: |

    [இயல்பாகவே உறவினனாய்‌ கருட த்வஜனான எம்பெருமானுடைய அஜ்ஞான நாசகங்களான திவ்யங்களென்று கௌரவித்துச்‌ சொல்‌லப்படுகிற திருப்பதிகளை (திவ்யதேசங்களை! தியானித்துக்‌
    கொண்டே மோஹித்து இரண்டு நாழிகைக் காலம்‌ அப்படியே மாமுனிகள்‌ இருந்தார்‌. பின்பு எம்பெருமான்‌ அர்ச்சாவதாரமாக ஸேவை ஸாதிக்கிற-வடதேசத்திலுள்ள திவ்ய தேசங்களை த்யானித்து . அவற்றை ஸேவிக்க வேணுமென்ற ஆசை யுடையவராய்‌ அத் திருப்‌பதிகளின் திருநாமங்களையே அடிக்கடி உச்சரிப்பவராய்‌ மயிர்க்‌கூச்செறியக்‌ கண்ணீர்‌ மல்‌கி வெறுமனே அவர்‌ இருந்தவ ளலிலே சிஷ்யர்களான பெரியோர்கள்‌ அருகில்‌ வந்து வணங்கி இது என்‌?என்று மிசுவும்‌ வருத்த மடைந்தார்கள்‌ ] என்கிறபடியே ஜீயர்‌ கிளர் ஒளி 2-10-1) என்றநு ஸந்தித்திருந்து, வட தேசத்திலே திருவயோத்யை
    முதலான திவ்யதேசங்களை ‘[த்யானித்து ‘ஸேவிக்கப்‌ பெற்றிலேமே!! என்று நிருபாதிக பந்துவாய்‌ ஆஸ்ரித ரஷணத்திற்குக்‌கொடி கட்டி யிருக்கிற திவ்ய தேசங்களை த்யாநித்து மோஹித்திருக்க
    அஷ்டதிக்கஜங்கள்‌ முதலான ஆசாரியர்கள்‌ இதென்னென்பதென்று கலங்கி அநேக விதமாக ஸமாதானம்‌ விண்ணப்‌பஞ் செய்யச்‌ செய்தேயும்‌ திருக் கண்களைத்‌ திறவாமல் அஸ்ருக்களோடே புளகிதகாத்ரராய்‌ ஜீயரெழுந்தருளி யிருக்கக்‌ கண்டு கிட்டவந்து, உற்று ஸேவித்து இதென்னவென்று பெரியவர்களெல்லாம்‌ பரவஸராய்‌ ஆர்த்தியை யடைந்து விட்டார்கள்‌;அவ் வளவிலே சரம பர்வநிஷ்டராய்‌ திருவடிகளுக்கந்தரங்கராய்‌-கண்‌டியூரரங்கம்‌ மெய்யம்‌ கச்சி பேர்‌ மல்லை என்கிறபடியே திவ்ய தேசங்களில்‌ மிகுந்த கைங்கர்யத்தைப்‌ பண்ணுகிற ராமாதுஜ தாஸர்‌,
    ஸூமத்யே ராமாநுஜ தாஸ நாமாவ்ய ஜிஜ்ஞ பத்தம்‌ வரயோகிவர்யம்‌–
    நிஷேவ்ய ஸர்வாணி பதாநி விஷ்ணோ: ஸமர்ப்ப யிஷ்யாமித தைவதத்வ:

    [ராமாநுஜ தாஸரென்னும்‌ பெயர்‌ பெற்ற ஒருவர்‌ வந்து, “விஷ்‌ணுவின்‌ ஸ்தலங்களனைத்தையும்‌ சென்று ஸேவித்துத்‌ திரும்பி வந்து அந்த ஸேவையை அப்படியே தேவரீருககுக்‌ காணிக்கையாகச்‌ செலுத்துகிறேன்‌” என்று அம்மா முனிகளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌] என்கிறபடியே அவர்‌ ஜீயர்‌ ஸந்நிதியிலே சென்று”அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌ தேவரீர்‌ திருவடிகளை முன்னிட்டு வட தேச திருப்பதிகளெல்லாம்‌ தேவரீர்‌ மங்களாசாஸநமாகத்‌ தொழுது வந்து அந்தப் படியே ஸமர்ப்பிக்கிறேன்‌’* என்றும்‌
    ஆஸேதோராப தர்யாஸ் ரமவர நிலயா தாச பூர்வா பராப்தே
    க்ஷேத்ராணி ஸ்ரீதரஸ்ய த்ருஹிண ஸடஜி தாத்யஞ்சிதாநி ப்ரணம்ய |
    ப்ராப்ஸ்யே ராமாநுஜோலம்‌ பவ தய தநுசதஸ் சிந்த யம்ஸ்த்வத்‌
    பதா வித்யஸ்மிந்‌ விஜ்ஞாபயித்வா ப்ரணமதி புபுதே ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ ॥

    “தென் திசையில்‌ உள்ள ஸேது முதலாக வடதிசையிலுள்ள பத்ரிகாஸ்ரமென்னும்‌ உயர்ந்த ஸ்தானம்‌ வரையில்‌ கிழக்குக்‌ கடல்‌ தொடநக்கி மேற்குக் கடலீறான இடங்களிலு முள்ளவையாய்‌, பிரமன்‌ முதலிய தேவர்களாலும்‌ நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்களாலும் பூஜிக்கப் பட்ட விஷ்ணுவின்‌ ,திவ்ய தேசங்களை எல்லாம் சேவியாததனால்‌ . தேவரீர்க்குள்ள மன வருத்தம்‌ காரணமாக
    சென்று தேவரீர்‌ திருவடிகளைத் தியானித்துக்‌ கொண்டு ராமானு தாஸனாகிய அடியேன்‌ ஸமர்த்தனாய்‌ ஸேவித்து வருகிறேன்‌! என்று விண்ணப்பித்து அவர்‌ வணங்க, மாமுனிகள்‌ மோஹம் தெளியப்‌ பெற்றார்‌] என்று ராமாநுஜ தாஸர்‌ விண்ணப்பஞ்‌ செய்து தண்‌டன் ஸமர்ப்பித்த வுடனே ஜீயர்‌ தெளிந்து திருக் கண்களை மலரத்‌ திறந்து “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே!” என்றருளிச்‌ செய்ய திக் கஜங்‌கள்‌ , முதலானா ரெல்லாரும்‌ தேறி அவரை மிகவும்‌ கொண்டாடி இருக்க, ஜீயரும்‌ எழுந்திருந்து நெடும்‌ போதாயிற்றே காலஷேப மின்றிக்கே யொழிந்ததே!’” என்று அருளிச்செய்ய, தேவரீர்‌ திவ்ய தேசங்சளில்‌ அநுபவ பரவசரா யெழுந்தருளி யிருக்க ஸேவித்து அநுபவித்துக்‌ கொண்டிருக்க மாட்டாமல்‌ சுலங்கி பயப்பட்டு விட்‌டோம்‌” என்று விண்ணப்பஞ்செய்து நிற்க, “ராமாநுஜ தாஸரே!”நீர்‌ சொன்னது கூடவற்றோ?’” என்றருளிச் செய்ய, அவரும்‌, அப்‌பொழுதே பயணமாகப் புறப்பட்டு நிற்க, திருவடி நிலைகளில்‌ ஸம்‌பந்த முடையாரயிருக்கிற, குமாண்‌டூர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையை
    யழைத்தருளி, “ரஈமாநுஜ தாஸரைக்‌ கூட்டிக் கொண்டு திருப்பதிகளை ஸேவித்து வருகிறீரோ?”” என்று கேட்டருள அவரும்‌ பாக்யமாயிற் றென்று விண்ணப்பஞ் செய்து நிற்க
    ததோஸ் ப்வுங்க்த ஸ்வக முத்தரீயம்‌ விதீர்ய ராமாநுஜ தாஸ மாஸூ |
    ஸஹஸ்வ பாதாவநி நித்ய யோக மஹோ ஜுஷாசாசுக லக்ஷ்மணேந ॥

    பின்பு ஜீயர்‌ உடினே ராமாநுஜ தாஸருக்குத் தமது உத்தரீயத்தைத்‌ ப்ரஸாதித்தருளி அவரை–தம்‌ திருவடி நிலைகளோடு நித்ய ஸம்பந்தமாகிற தேஜஸ்ஸைப்‌ பெற்றவராய்‌ வேகமாகச்‌ செல்லும்‌ இளையாழ்வார்‌
    பிள்ளையோடு செல்லுமாறு நியமித்தார்‌.] என்கிறபடி ஜீயர்‌ திருவடிக்குத்‌ திருவடி நிலைகள்‌ கொண்டு ஸதா ஸேவிக்கிற மஹாதிசயத்தை யுடைய இளையாழ்வார்‌ பிள்ளையோடே ராமாநுஜ தாஸரைத் தம்முடைய திருவடி நிலைகளை ஸூக்தமாக ப்ரசாதித்துப்‌ பயணமாக நியமித்தருளினர்‌-

    இளையாழ்வார் பிள்ளையும்‌ ராமாநுஜ தாஸரும்‌ யாத்திரை செய்தல்‌,
    சக்ரவர்த்தி திருமகனார்‌ ஸ்ரீபரதாழ்வானுக்குத்‌ திருவடி சாதிக்க அப்போது இளைய பெருமாளுக் கல்லாது ஒழிந்ததே– பரதாழ்வானைப் போலே. இளைய பெருமாள் திரு நாமத்தை யுடைய இவரும் ஜீயருடைய திருவடி நிலைகளை லபித்து, வோசத்‌தில் ஜனங்களுக்கு ஸந்தோஷ உத்ஸவத்தைச்‌ செய்தருளினார்‌-இப்படி அவருக்குத்‌ திரு உத்தீரீயம்‌ ஸாதித்தருளினாப் போலே இவருக்குத் திருவடி நிலைகள்‌- இப்படி தமக்கு ப்ரதி நிதியாக திருவடி நிலைகளை ஸாதித்தருளி யிருக்க, இளையாழ்வாரும்‌, -தநம்‌ மதீயம்‌ தவ பாத பங்கஜம்‌” என்கிறபடியே மஹா தநத்தை லபித்‌தருளி
    -மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி” என்று திருமுடி மேலே நற்றரிக்க வைத்துக் கொண்டு நிர்‌ மர்யாத ஹர்ஷ யுக்தரா யருளினார்‌-ராமாநுஜ தாஸரும்‌ பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை
    கொண்டு என்னை வாட்டம் தணிய வீசினீர்‌-என்று மிகவுமுகந்தார்‌-இப்படி அவரும்‌ ஜீயர்‌ திருவடி நிலைகளையே திருவாராதனமாக வெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு “அதி த்வரையாக கங்கா தீரத்திலே எழுந்தருளி திருவடி நிலைகளுக்கு நன்றாக சாஸ்த்ர ப்ரகாரம்‌ நெடும் போது கங்கையில்‌ திருமஞசனம்‌ ‘பண்ணி ஜீயர்‌ நீராடுவதாக அத்யவஸித்து அத் தீர்த்தத்திலே தாங்களும்‌ நீராடி பின்பு அங்குண்டான இடங்களெல்லாம்‌ ஸேவித்து
    க்ரமேண தீர்த்தாநி ஸரீர பாஜாம்‌ பாபா பஹாந் யூர்ஜித ஸெயக்யதாநி ]
    பரிக்ர மந்தாவதிதிம்‌ த்ருஸேர்ஸ்தெள விநிந்யது: ஸ்ரீ பதரீ நிவாஸம்‌ ॥
    விசித்ரர் தேஹ ஸம்பத்திரீரஸ்வராய நிவேதிதும்‌

    அவ்விருவரும்‌-மனிதர்களின்‌ பாபங்களைப்‌ போக்க வல்வையாய்‌ உயர்ந்த ஸெளக்யத்தை யளிக்க வல்ல தீர்‌த்தங்களை யெல்லாம்‌ முறையே நீராடிச் சென்று பின்பு தம்‌ கண்களுக்கு ஸ்ரீபதரிகாஸ்ரமப்‌ பெருமாளை அதிதியாக (விருந்தாக) ஆக்கினர்‌ ] [பல வகையான சத்திகளைப் பெற்ற சரீராவயவய ஸம்ருத்தியானது பசவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது ] என்கிறபடியே பகவதாத்தமாக தேஹ பரிக்‌ரஹம்‌ பணணினவர்‌ களுக்கு ஸ்வ ஸம்பந் தத்தாலே ஸமஸ்த ப்ரதிபந்தகங்களையம்‌ போக்கி ஊர்ஜிதமான மஹா புருஷார்த்தத்தை ஸாதிக்கற திவ்யதேசங்களை
    -இரண்டு திருநாமங்களும்‌ க்ரமேண ஸஞ்சரித்து ஸேவித்து பத்ரிகாஸ்ரம நாராயணனைத்‌ தங்களுடைய திருக்கண்‌ மலர்களுக்கு ஸர்வ ப்ரிய தர்ஸந மாக அடைவித்தார்கள்‌. இப்படி நர நாராயணப்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிப் புக்க வளவிலே
    அயோத்ய ராமாநுஜ தாஸ நாமக ஸதா முதா பூஜயதி ப்ரஸந்ந |
    வஸீ நிஜ ஸ்ரீ குல சேகரஸ் ஸந் ஹரிம்‌ பதர்யாஸ்ரம வாஸிநம்தம்‌ ॥

    (அயோத்யா ராமானுஜ தாஸரென்‌பவர்‌, அனைவரையும் தாமிட்ட வழக்காக்கியவராய்த் தமது ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்குச் சிரோ பூஷணமானவராய்‌, மிகத் தெளிந்த மனமுள்ளவராய்க்‌ கொண்டு
    மகிழ்ச்சியுடன்‌ எப்போதும்‌ ப்ரஸித்தரான பதரிகாச்ரமப்‌ பெருமானை ஆராதித்து வருகிறார்‌] என்று அயோத்யை ராமாநுஜ தாஸ ரென்கிற திருநாமத்தை யுடையவர்‌, குலசேகரராய்க்‌ கொண்டு ஸமஸ்த துரிதஸ்ஹரான வயதாஸ்ரிமப்‌ பெருமாளை எக் காலத்‌திலும்‌ ஸந்தோஷத்துடனே ஆராதித்துக் கொண்டிருந்தார்‌,

    ஸயிஷ்மணம்‌ வீஷ்ய பவித்ர ரூபம்‌ ஸமேத்ய ராமநுஜ தாஸ மேநம்‌ |
    ஸமர்ச்ச யித்வா விவிதோபசாரைஸ் ஸ தர்ஸ யாமாஸ ரமாஸஹாயம்‌ ॥

    [அந்த அயோத்யா ராமானுஜ தாஸர்‌-இளையாழ்வார்‌ பிள்ளையோடு வந்த இந்த சுத்த ஸ்வரூப ரான ராமாநுஜ தாஸரை கிட்டி வந்து பல வகைப்பட்ட உபசாரங்களைச்‌ செய்து ஆராதித்துப்‌ பின்பு பதரிசாச்ரம பெருமாளான ஸ்ரீயபதியை இவர்களுக்கு ஸேவை ஸாதிக்கப்‌ பண்ணினார்‌] என்று ராமாநுஜய்யங்கார்‌ பரம பாவநரா யிருக்கிற இவரைக்‌ கண்டு ஸேவித்து நர நாராயணப்‌ பெருமாளுக்கு விசேஷித்து தளிகைக்கு வரிசையாக ஸமர்ப்பித்துத்‌ தளிகை அமுது செய்தருளப்‌ பண்ணுவித்து உடனே அநுஸந்தாநம்‌ நடக்க வேணு மென்ன;
    வரயோகி வராகதெள ஸகைதெள நர நாராயண ஸந்நிதெள புரஸ்தாத்‌ |
    த்ரமிடோப நிஷந் மஹா பிரபந்த பிரதமோ உதாஹரணே ந்ய யுங்த வித்வாந் ॥

    [வித்வானாகிற அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார்‌- மணவாள மா முனிகள்‌ ஸந்நிதி யிலிருந்து வந்த இவ் விருவரையும்‌-நர நாராயணப்‌ பெருமாள்‌ ஸந்நிதியில்‌ பெருமாளுக்கு முன்னிலையில்‌ திவ்ய ப்ரந்தம்‌ தொடங்கும்படி நியமித்தார்‌-. என்கிறபடியே அழகிய மணவாளமாமுனினுடைய ஸந்நிதி யினின்றும்‌ அவருடைய மரியாதையாக எழுந்தருளின இவர்களை நர நாராயணப்‌ பெருமாள்‌ திரு வோலக்கத்தலே அருளிச் செயலாகிய மஹா ப்ரபந்தாநுஸந்தானத்‌ தொடக்கத்திலே நியமிக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
    ததா விதிஜ்ஜோ வித்‌ ப்ரஸாதாத்வ ரோப்யந்துர் துரி ரங்க தாம்நா |
    நிவேநிதம்‌ பத்ய வரம்‌ த்வி கண்டம் படந்ஜகெள த்ராவிட வேதமேஷ। ॥

    [முறை யறித்த இவ்விளையாழ்வார்‌ பின்ளை அவர்‌ நியமனத்‌தின் படியே, மணவாள மாமுனிகள்‌ முன்பே ஸ்ரீரங்க நாதரால்‌ மனத் தெளிவோடு அருளிச் செய்யப்பட்டதாய்‌ இரண்டு பாகங்கள்‌ கொண்ட (ஸ்ரீசைலேச’ என்ற ஸ்லோக ரத்நத்தை முதலில் சொல்லிப்‌ பின்பு திவ்ய ப்ரபந்தத்தை ஓதினார்‌.] என்‌கிறபடியே ராமாநுஜருடைய நியமனத்தின் படியே தொடங்குகிறவராய்க்‌ கொண்டு “ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌” என்னும் தனியனை முந்துற அனுஸந்தித்து மற்றத்‌ தனியன்களையும்‌ க்ரம ப்ரகாரம்‌ அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தாநஞ்‌ செய்தருளினார்‌.

    அது கண்டு ராமாநுஜய்யங்கார்‌ முதலானவர்கள்‌ விஸ்மிதராயிருக்க,
    ஜஜ்ஜே அமுநா ஸ்வப்ந நிவேதிதம் ஹியத்‌ கதம்‌ பதர்யாஸ்ரம நித்ய வாஸிநா |
    ப்ராகாஸி மந்த்ரர்ர்த்தமிதம்‌ முரத் விஷேத் யாயோத்ய ராமாநுஜ ஆவிஸிஷ்மயே 1

    [பத்ரிகாச்ரமற்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யும்‌ இந்த முராரியான பகவானாலே தம் ஸ்வப்நததில்‌ அருளிச்‌ செய்யப்பட்டு எந்தத்‌ தனியன்‌ உண்டாயிற்றோ-மந்த்ரார்த்தங்களைத்‌ தன்னகத்தே
    கொண்ட இந்தத்தனியன்‌ இவர்களால்‌ எப்படி வெளிப்படுத்தப்‌ பட்டது” என்று அயோத்யா ராமானுஜய்யங்கார்‌ மிக்க ஆச்சரிய மடைந்தார்‌]. என்று ‘ஸ்ரீபதரிகாச்ரமப்‌ பெருமாளாலே தமக்கு
    ஸ்வப்நத்திலே அருளிச்‌ செய்யப்‌ பட்டதன்றோ இது ‘” என்று இவர்களாலே ப்ரகாசமாய்‌ மந்த்ரார்த்த மானத்தை யறிந்து இது க்ருஷ்ண லீலை யென்று ராமாநுஜய்யங்கார்‌ மிகவும்‌ ஆஸ்சர்யப்‌ பட்டு, பின்பு இந்த ஸ்லோகம்‌ தேவரீருக்கு வந்தபடி யென்னென்ன)-கோயிலிலும்‌ பெருமாள்‌-ஆசிநோதிஹி ஸாஸ்த்ரார்த்தாத்‌[சாஸ்த்ரப்‌ பொருள்களை வெளியிடுமவன்‌ ஆசாரியன்‌] என்கிற படியே இந்த ஸ்தலததிலே நர நாராயண ரூபேண பெரிய திருமந்தரத்யை வெளியிட்டருளினாப்‌ பாலே அந்த மந்த்ரார்த்தமான திவ்ய ப்ரபந்த தத் வ்யாக்யாநங்களை லோகோபகாரமாக ப்ரவர்த்‌திப்‌ பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ ”யதோசிதம்‌ சேஷ இதீரிதே”* [ஸமயத்‌துக்குத்‌ தக்கபடி அடிமைக்கு உறுப்பான பல சரீரங்களைக்‌ கொள்ளுகையால்‌ சேஷன்‌ என்று சொல்லப்பட்டவன்‌] என்கிறபடியே அசேஷ சேஷ வருத்தியிலும்‌ அந்வயித்திருக்கிற திருவநந்‌ தாழ்வானை ஜீயராக வவதரிக்கச்‌ சொல்லி நியோகிக்க, அவரும்‌ தத் கைங்கர்யமாய்‌ அவதரித்து திவ்ய ப்ரபந்ததத்‌ வ்யாக்‌யாதங்களை அதி சதுரராய்‌ நடத்திக் கொண்டு போர, அவருடைய வைபவங்களை ப்ரகாசஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ ஜீயரிடத்‌திலே தாம்‌ ஈடு கேட்டருள நியமிக்க, ஜீயரும்‌: இதுவுமொரு கைங்கர்யமென்று தொடங்கி. நடத்திச்‌ சாத்துகிற ஸமயத்திலே

    ஆசார்ய சம்பாவனை காலத்திலே, அர்ச்சக புத்ரராம்‌ ரங்கநாயகன்‌ என்கிற பெயருடையரான அஞ்சு வயஸ்ஸூ உள்ளவர் மேலே பெருமாள் ஆவேஸித்து அருளிச்செய்த படியையும்‌, ‘ அந்தப்‌.
    பிள்ளையைக்‌ கொண்டு வாழி திரு நாம மவதரிப்பித்தபடியையும்‌ ப்ரபந்தாநுஸத்தான காலத்திலே ஆதியிலே இந்தத் தனியனையும்‌ ப்ரபந்தம்‌ சாத்தினால்‌ இந்த வாழித் திருநாமத்தையும்‌ அநுஷத்‌திக்கும்படி திருமலை பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களிலும்‌ மற்றெங்கும்‌ நடக்கும்‌ படிக்கு
    ஸ்ரீபந்நகாதீஸ முநே பத்யம்‌ ரங்கேஸ பாஷிதம்‌ | அஷ்டோத்தர தசஸ் தாலேஷ் வநுஸந்தாநமாசரேத்‌ ॥
    இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநேந ப்ரதி பாதிதா | ததாரப்ய மஹத் பிஸ்ச பட்யதே ஸந்நிதே:புரா ॥

    [ஸ்ரீரங்க நாதனால்‌ மணவாள மாமுனிகள்‌ விஷயமாக அருளிச்‌ செய்யப் பட்டது இந்த ஸ்லோகம்‌. இது தன்னை நூற்றெட்டுத்‌ திருப்பதி களிலும்‌ எல்லோரும்‌ அனுஸந்தானம் செய்யக் கடவர்கள்‌ -என்று நியமன பத்ரிகை ஸ்ரீஸேனை முதலியாரால்‌ அனுப்பப்பட்டது. அது முதலாகப்‌ பெரியோர்களாலும்‌ இஸ் ஸ்லோகம்‌ பெருமாள்‌ ஸந்நிதானத்தில்‌ முதலில்‌ அநுஸந்திக்கப்‌ பட்டு வருகிறது. என்கிறபடியே ஸ்ரீசேனை முதலியார்‌ திருமுகம்‌ வரவிட நடக்கிற படியையும்‌, திருவேங்கடமுடையான்‌ தீர்த்த
    யாத்ரா ப்ராஹ்மணனுக்கு
    உபதிஷ்டம்‌ மயாஸ்வப்நே திவ்யம்‌ பத்யமிதம்‌ ஸூபம்‌ |
    வரயோகி ஸமாஸ் ரித்ய பவத:ஸ்யாத்‌ பரம்‌ பதம்‌ ॥

    மிக வுயர்ந்ததும்‌ மங்களகரமுமான இந்த ஸ்லோகம்‌ கனவில்‌ உனக்கு உபதேசிக்கப்பட்டது. மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்தால்‌ உனக்குப்‌ பரமபத ப்ராப்தி உண்டாகும்‌.] என்று.. ஸ்வப்நத்திலே இந்தத் தனியனையும்‌ ப்ரஸாதித்து சில நாட்களுக்குப்‌ பின்‌ அந்த ப்ராஹ்மணனை ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸரயிக்கும்‌ படிக்கு
    இத் யுக்த்வாதம்‌ வ்ருஷாத்ரீஸோ ஸ்ரீபதாத ரேணு மேவச | தத்‌வா ஸூப்ரேஷ யாமாஸ கச்ச யோகி வரம்‌ ஸூசிம்‌.॥-[திருவேங்கடமுடையான்‌’ இங்ஙனம்‌ கூறிவிட்டு, ஸ்ரீ பாத ரேணுவையும்‌ அவனுக்குக்‌ கொடுத்து, பரிசுத்தரான ‘ மாமுனிகளிடம்‌ செல்வாயாக என்று சொல்லி விரைவாக அனுப்பினார்‌.] என்கிறபடியே அவருக்கு ஸ்ரீசடகோபனையும்‌ ஸ்ரீபாத ரேணுவையம ப்ரஸாதித்தருளின படியையும்‌, அவரும்‌ ஆஸ்ரயித்துத்‌ திருவடிகளைச்‌ சார்ந்த படியையும்‌, திருமாலிருஞ்சோலையழகர்‌ ஜீயர்‌ திருவடிகள்‌ ஸம்பந்த முடைய ஸேனை முதலியார்‌ முகமாக இந்தத் தனியனை அருளிச்‌ செய்தபடியையும்‌, பகவதுக்ததி யாயிருக்க ஈஷத் பேத முண்டாயிருந்ததே யானாலும்‌ அர்த்தைக்ய ப்ராதாந்யேந ஸேனை முதலியார்‌ ஆசார்ய கோடி ப்ரவிஷ்டராகையாலே “அவர்‌ திரு முகத்தின்படியே எங்கும்‌ அநுஸந்தித்துப்‌ போருகிறபடியையும்‌ ப்ரஹ்‌மசாரி சிறுமுறி கொடுத்ததையும்‌ ஸர்வ வ்ருத்தாந்தாந்தங்‌ களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு வித்தராய்‌ தமக்கு இந்தத்‌ தனியன்‌ வந்தபடியை அருளிச்‌ செய்யத்‌ தொடங்கினார்‌-

    தனியனவதரித்த வருஷம்‌ மாதம்‌ முதலியன கூறல்‌
    அதில்‌ முந்துற இத் தனியனும்‌ வாழித் திருதாமமும்‌ அவதரித்த வருஷம்‌ மாஸம்‌ தேதிகளைக்‌ கேட்டருள, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
    நல்லதோர்‌ பரீதாபி வருடந் தன்னில்‌ நலமான வவ் ஆவணியின்‌ முப்பத்‌ தொன்றில்‌
    சொல்லரிய சோதியுடன்‌ விளங்கு வெள்ளித்‌ தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்‌
    செல்வ மிகு பெரிய திருமண்டபத்தில்‌ செழுந் திருவாய்மொழிப்‌ பொருளைச்‌ செப்புமென்று
    வல்லி யுறை மணவாளரரங்கர்‌ நங்கண்‌ மணவாள மாமுனி வழங்கினாரே
    —என்றும்‌,
    ஆனந்த வருடத்தில்‌ கீழ்மை யாண்டில்‌ அழகான ஆனி தனின்‌ மூல நாளில்‌
    பாநுவாரங் கொண்ட பகலில்‌ செய்ய ‘பெளரணையினாளி யிட்டுப்‌ பொருந்தி வைத்தே
    ஆனந்த மயமான மண்டபத்தில்‌ அழகாக மணவாளரீடு சாத்த
    வானவரும்‌ நீரிட்டவழக்கே என்ன மணவாள மாமுனிகள்‌ களித்திட்டாரே
    –என்றும்‌

    தத: கதாசிதாஹூய தமேநம்‌ முநி புங்கவம்‌ |
    கிருபயா ஸாது ஸக்ருத்ய சரணாம் புஜ ஸமர்ப்பணாத்‌ ॥
    தர்ஸயந்‌ துர்க்ரஹாரர்த்தாந் த்ரமிடோபநிஷத் கிராம்‌ |
    ஸந்நிதெள வ்யாகுருஷ்வேதி ஸஸாஸ அமர ஸாஸந : ॥

    என்கிறபடியே பெருமாளும்‌ ஒரு திருப் பவித்ரோத்ஸவத்‌ திரு நாளிலே அங்குண்டான அனைவரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச் செய்தே, ஜீயரும்‌ முதலிகளும்‌ பெருமாளை
    மங்சகளாசானைம்‌ பண்ண எழுந்தருளின வளவிலே, பலரடியார்‌ முன்பருளிய பாம்பணை யப்பன்‌ என்கிறபடியே, தம்முடைய பரம கிருபையாலே உடையவருடைய வைபவத்தை நம்பி தாமே வெளியிட்டாப் போலே ஜீயருடைய மஹிமையை ப்ரகாசிப்பித் தருளுவதாகத்‌ திருவுள்ளம் புற்றி தாமும்‌ ஜீயருக்கு சிஷ்யராகுகையைக்‌ குறித்து ஜீயரைத்‌ தனித்தருளப் பாடிட்டருளி, “நாளை முதல்‌
    நம்முடைய பெரிய திருமண்டப.த்திலே பெரிய வண்‌ குருகூர் நகர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழியை ஈடு முப்பத்தாறாயிரம்‌ தொடக்கமான ஐந்து வ்யாக்யானங்களுடனே நடத்தும்‌”:
    என்று நியமித்தருள,
    மங்கள ஆயதநே ரங்கே. ரம்ய ஜாமத்ரு யோ விராட்‌ |
    யுகபத்‌ த்ராவிடாம்நாய வ்யாக்யநத்யாந கெளதுகி–
    –என்‌கிறபடியே, ‘“இப்படி ஏவி யருளுகிறதே!” என்று ஹ்ருஷடராய்‌

    மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
    ததைவ தத்ர வ்யாக்யாதும்‌ தத் க்ஷணாதுபசக்ரமே ॥
    ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்‌வயம்‌ |
    தத்‌வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம்‌ தேநைவ தந் ஸிதும்‌ ॥
    ஸடவைரி முகைஸ் ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்‌ஸநை |.
    அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌
    அநு பூயே மஹா பூகணே கோபால மகிலோ ஜநா |
    அமந் யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

    என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன்‌ மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு அர்த்தம்‌ நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம்‌ பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்‌பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும்‌ நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்‌தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான்‌ பெரிய திருவடியாழ்வான்‌, ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும்‌, வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌ ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப்‌ பரிகரத்தோடும்‌ அணி யரங்கத் திருமுற்‌றத்தடியார்‌களோடுங் கூடப்‌ பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம்‌ ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம்‌ க்ரமாத்‌- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன்‌ தமக்குப்‌ பாடமாமளவும்‌ ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ்‌ செய்யென்று நியமித்த படியைச்‌ சொல்லிக் கொண்டு விஸ்மிதராய்‌ ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார்‌ பிள்ளை முதலானாரும்‌
    பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்‌?’‘ என்று பரஸ்பரம்‌ கொண்டாடிக்‌ கொண்டு மிகவும்‌ ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார்‌ க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப்‌ பிடித்து ப்ரார்‌த்‌திக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
    அநுஸந்தாநத்தையும்‌ நிறைவேற்றிச்‌ சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம்‌ விநியோகமாய்‌ இளையாழ்வார்‌ பிள்ளைக்கு வரிசைகளும்‌ ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும்‌ ராமாநுஜய்யங்கார்‌ மடத்திலே
    யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ ஸாதித்து உகப்பித்தருளினார்‌, ராமாநுஜய்‌யங்காரும்‌ லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய்‌ ஜீயரைக்‌
    கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜதாஸர்‌ -பத்ரிகாச்ரமம்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ கைங்கர்யங்களுக்கு தேவரீர்‌ நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌” என்று சொல்லி,தேவரீர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையுடன்‌ கோயிலுக்கு எழுந்தருள
    வென்று அருளிச்‌ செய்ய, ராமாநுஜய்யங்காரும்‌ மிகவும்‌ ப்ரியப்‌பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர்‌ திருவடி நிலைகளை வரிசையுடன்‌ எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டுஇளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ராமா னுஜய்யங்காரும்‌ திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும்‌ இவர்களை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச்‌ சில கைங்கர்‌யங்களை நியமிக்க, அவரும்‌ அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும்‌ ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப்‌ பெறாமையாலும்‌ ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார்‌ ;மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
    ததைவ தத்ர வ்யாக்யாதும்‌ தத் க்ஷணாதுபசக்ரமே ॥
    ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்‌வயம்‌ |
    தத்‌வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம்‌ தேநைவ தந் ஸிதும்‌ ॥
    ஸடவைரி முகைஸ் ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்‌ஸநை |.
    அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌
    அநு பூயே மஹா பூகணே கோபால மகிலோ ஜநா |
    அமந் யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

    என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன்‌ மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு அர்த்தம்‌ நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம்‌ பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்‌பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும்‌ நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்‌தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான்‌ பெரிய திருவடியாழ்வான்‌, ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும்‌, வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌ ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப்‌ பரிகரத்தோடும்‌ அணி யரங்கத் திருமுற்‌றத்தடியார்‌களோடுங் கூடப்‌ பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம்‌ ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம்‌ க்ரமாத்‌- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன்‌ தமக்குப்‌ பாடமாமளவும்‌ ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ்‌ செய்யென்று நியமித்த படியைச்‌ சொல்லிக் கொண்டு விஸ்மிதராய்‌ ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார்‌ பிள்ளை முதலானாரும்‌
    பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்‌?’‘ என்று பரஸ்பரம்‌ கொண்டாடிக்‌ கொண்டு மிகவும்‌ ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார்‌ க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப்‌ பிடித்து ப்ரார்‌த்‌திக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
    அநுஸந்தாநத்தையும்‌ நிறைவேற்றிச்‌ சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம்‌ விநியோகமாய்‌ இளையாழ்வார்‌ பிள்ளைக்கு வரிசைகளும்‌ ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும்‌ ராமாநுஜய்யங்கார்‌ மடத்திலே
    யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ ஸாதித்து உகப்பித்தருளினார்‌, ராமாநுஜய்‌யங்காரும்‌ லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய்‌ ஜீயரைக்‌
    கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜதாஸர்‌ -பத்ரிகாச்ரமம்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ கைங்கர்யங்களுக்கு தேவரீர்‌ நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌” என்று சொல்லி,தேவரீர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையுடன்‌ கோயிலுக்கு எழுந்தருள
    வென்று அருளிச்‌ செய்ய, ராமாநுஜய்யங்காரும்‌ மிகவும்‌ ப்ரியப்‌பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர்‌ திருவடி நிலைகளை வரிசையுடன்‌ எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டுஇளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ராமா னுஜய்யங்காரும்‌ திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும்‌ இவர்களை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச்‌ சில கைங்கர்‌யங்களை நியமிக்க, அவரும்‌ அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும்‌ ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப்‌ பெறாமையாலும்‌ ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார்‌ ;

    மேலும்‌ கோயிலில்‌ நடந்தவை ‘
    இனிக் கோயில்‌ வ்ருத்தாந்தம்‌-
    திருவேங்கடமுடையான்‌ ராமாநுஜ அய்யங்காருக்கு கைங்கர்யம்‌ நியமித்தருளின தினத்‌திலே திருமலை யாழ்வாரிலே பகவத்‌ விஷய காலஷேபம்‌ நடத்தி யருள, அற்றைக்கு ஒழிவில்‌ காலத்தறுவாய்‌ நடந்து செல்ல,-ஒழிவில்காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌-என்று ௨க்தி மாத்ரமாயொழிவதே! என்று மிகவுத்‌ தளர்ந்து பரவசராய்ப்படுப்பதும்‌ இருப்‌பதும்‌ நிற்பதும்‌ புலம்புவதுமாயிருக்க, அற்றைக்கு முதல் நாள் ராத்ரி ப்ரதிவாதிபயங்கரமண்ணா ஸ்வப்நத்திலே திருவேங்கடஜீயர்‌ என்னும்‌ திரு நாமத்தை யுடை த்தாயிருக்கிற ஒரு ஏகாங்கி சென்று, “வாரீர்‌! ஸ்ரீவைஷ்ணவ தாஸரே நாளை ஒழிவில் கால வ்யாக்யாநாவஸரத்‌திலே ஜீயர் கைங்கர்ய ருசி விவசராயிருப்பர்‌, அவருக்கு சேஷசைலத்‌திலே சேஷாவதராமான ஜீயர்‌ மனோரதப்படியே கைங்கர்யம்‌ கொண்டருளுகிறோம்‌ என்று நீர்‌ விண்ணப்ஞ் செய்யும்‌’; என்று இப்படிக்‌ கண்டு எழுந்திருந்து வித்தராய்‌ ‘ ஈதொரு ஸ்வப்ந வைபவமிருந்தபடியே!” என்று எண்ணிக் கொண்டு நித்ய கர்மாநுஷ்‌டானங்களை நிறைவேற்றி மடத்திலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்வாரிலே ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து, எழுந்தாருளியிருக்‌கிற ப்ரகாரத்தைக் கண்டு தம்முடைய ஸ்வப்ந மிருந்த ஸ்த்திதியும்‌ சேர்ந்திருக்கிற படியையுங்கண்டு, ஹ்ருஷ்டராய்‌ இந்த ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை ஜீயர்‌ திருவுள்ளத்தில் படுத்த, ஜீயரும்‌ -இதுவுமொரு க்ருபையே!’” என்று ஹருஷ்டராய்‌ அண்ணாவை உபலாளித்தருளி, புநடபுந: கேட்டருளி, திக் கஜங்களை ‘இது எப்படி இருக்கிறது?? என்று கேட்டருள, அவர்களும்‌ “இந்த வேளை திருமலையிலே ஒரு அத்புத முண்டாயிருக்க வேணும்‌; அத்தை யறியும்‌ படிக்கு ஒருவரை நியமித்தருள வேணும்‌” என்று விண்ணப்பம் செய்ய; அவ்வளவிலே ௮ழகரண்ணன்‌ -எழுத்திந்து தண்டன்‌ ஸமர்ப்பித்து, “அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளை – முன்னிட்டுக்‌ கொண்டு திருமலைக்கு விடை கொண்டு அப்பனையும்‌ – ஸேலித்து செய்தியையும்‌ அறித்து கொண்டு விடை கொள்ளுகிறேன்‌’ என்று விண்ணப்பஞ் செய்ய, ஜீயரும்‌ போர உகந்தருளி அனுப்பி யருள,அவரும்‌ அதி த்வரையாகக்‌ திருமலையிலே சென்று பெருமாளை ஸேவிக்க, உடனே இளையாழ்வார்‌ பிள்ளையைக் கண்டு அந்யோந்ப
    வந்தந பரராய்க் கொண்டு குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு அயோத்யை ராமாதுஜய்யங்கார் பாடே செல்ல, அழகரண்ணனுக்கு பஹுமாநம் பண்ணி ப்ரதிபத்தி பண்ண, ஜீயருடைய
    வைபவங்களை புந:புந: கேட்டுத்‌ திருவேங்கடமுடையான்‌ தமக்குக்‌
    கைங்கர்யங்கள்‌ நியமித்தருளின படியையும்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணுமென்கிற த்வரையையும்‌ அருளிச்‌ செய்ய அழகரண்ணனும்‌, ஜீயருக்கு உகப்பு கைங்கர்யம்‌ செய்து போருகையாய்‌ இருக்குமென்று, ப்ரதிவாதி பயங்கரருடைய ஸ்வப்ந வ்ருத்தாந்‌தத்தையு மருளிச்செய்ய; ராமாநுஜ அய்யங்காரும்‌, “ஆனால்‌ தன்‌யனானேன்‌, ஜீயர்‌ நியமனப் படிக்கு அவருடைய திருக்கைகளாலே யதா-சக்தி செய்து போருகிறேன்‌” என்று சொல்லி இளையாழ்வார பிள்ளையையும்‌ அழகரண்ணனையும்‌ கோயிலுக்கு அனுப்பிவிட அவர்களும்‌ உடனே புறப்பட்டெழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து வடக்கில்‌ எம்பெருமான்களுடைய அபய ஹஸ்த ப்ரஸாதங்களையும்‌ ஸமர்ப்பித்துத்‌ திருவடி நிலைகளையும்‌ திருவடிகளிலே சேர்க்க, ஜீயரும்‌ இளையாழ்வார் பிள்ளையை பஹு நாளைக்‌காகக்‌ கண்டோமே! என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி, அழகரண்ணனையும்‌ போர க்ருபை செய்தருளி, ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை -உம்முடைய ஸ்வப்நம்‌ பல வ்யாப்தமாயிற்று; உமக்‌காக வன்றோ திருவேங்கட முடையான்‌ க்ருபை பண்ணி யாருளினார்‌!-என்று உகப்பு தோன்ற அடிக்கடி அருளிச் செய்து கொண்டு இளையாழ்வார் பிள்ளையை அடிக்கடி திருக்கையாலே தழுலி
    உபலாளித்து, ”நெடுந் தூரம்‌ சென்று வந்தீரே!” என்று அருளிச்‌ செய்து கொண்டு ராமாநுஜ அய்யங்கார்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை உகந்தருளிக்‌ கேட்டுக் கொண்டு, நம்பெருமாள்‌, ஸ்ரீபதிகாச்ரமப்‌
    பெருமாள்‌, திருநாராயணப்‌ பெருமாள்‌, திருவேங்கடமுடையான்‌,அழகர்‌, இவர்களுடைய ஐக கண்ட்யத்தையும்‌ அருளிச் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. இந்த அர்த்தங்களை யெல்லாம்‌
    வரவரமுநி வைபவ விஜயம்‌ என்கிற ப்ரபந்தத்திலே கந்தாடை யப்பன்‌ விஸ்த்ருதமாக அருளிச்‌ செய்ய ஜீயர்‌ திருச்செவி சாத்தி யருளினார்‌.

    பின்பொருநாள்‌ திருக் காவேரியினின்றும்‌ எழுந்தருளச்‌ செய்தே ஜீயருக்கு இளையாழ்வார்‌ பிள்ளை திருக்கை ஸர்ப்பித்துக்‌ கொண்டு வரும் போது ப்ரஸங்காத்‌ அயோத்யை ராமாநுஜ
    அய்யங்காருடைய மநோ ரதத்தை விண்ணப்பஞ் செய்யக்கேட்‌டருளி, ‘திருவேங்கடமுடையானை இன்னுமொருக் கால்‌ ஸேவிக்‌கையுமுண்டாம்‌, அப்போது அவர்‌ மநோரதப் படியே ஆகிறது;
    இப்போது அவர்‌ கைங்கர்யஸ்ரீ யுடனே யிருக்கக் கடவர்‌ ‘ என்றருளிச்செய்ய, பின்னும்‌ ராமாநுஜ அய்யங்கார்‌ இந்‌தத் திருவடி நிலைகளைத்‌ தமக்குத்‌ திருவாராதனமாசு ப்ரார்த்தித்துக்‌ கொண்‌
    டிருக்கிறாரென்று விண்ணப்பஞ்செய்ய , அப்படியே ஆகிறதென்று மடத்திலே யெழுந்தருளி னவுடனே தைவாதீனமாகத்‌ திருவடி ஸம்பந்தமுடையரான சில வைஷ்ணவர்கள்‌ திருமலைக்கு விடை
    கொண்டு திருப் புரட்டாசித்‌ திருநாள்‌ ஸேவித்து விடை கொள்ளுகிறோம் என்று தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, போர உகந்தருளி,புணர்‌த்த கையினராயடியேனுக்கும்‌ போற்றுமினே என்று திருமலையை நோக்கித் தொழுது ராமாநுஜ அய்யங்காருக்குத்‌ திருவடி நிலைகளை ஸாதித்து விடை கொடுத்தருள; அவர்களும்‌ புறப்பட்டுத்‌ திருமலைக்கு எழுந்தருளினார்கள்‌.

    கந்தாடை அண்ணன்‌ திருமலைக்கு எழுந்தருளல்‌
    பின்பொரு நாள்‌ கந்தாடையண்ணனை கடாஷித்தருளி திரு வேங்கட முடையானை மங்களாசாஸநம்‌ பண்ண வேண்டாவோ?என்ன, அப்பிள்ளை, “காவேரி கடவாத கந்தாடையண்ணரன்றோ?” என்ன, அரங்கத்தரவினணையான்‌ வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றது அங்கேயே யன்றோ? என்று ஜீயரருளிச்‌ செய்ய,அண்ணனும்‌ அப்படியே நியமித்தருள வேணும்‌” என்ன, அவரையுங் கூட்டிக்‌ கொண்டு பெருமாள்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி விடை கொடுப்பித்தருளி உத்தம நம்பியையும்‌ கூடவே ஸேவித்துக்‌ கொணடு போரும்படி நியமித்தருளி, அனேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ ஜீயர்களையும்‌ ஏகாங்கிகளையும்‌ சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ கூடப் பயணஞ்‌ செய்தருளி யிருக்கிற வவஸரத்திலே; உத்தம நம்பியும்‌ (அண்ணனுக்குத்‌ திருப்பல்லக்கு முதலான வரிசைகளைச்‌
    சேர்த்துப்‌ புறப்பட்டிருக்கும்படிக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டு நிற்க, அண்ணனும்‌ அவைகளை யெல்லாம்‌ நிரோதித்து ஸ்ரீ வைஷ்‌ணவ கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்குப்‌ பெருகம் கூட்டத்துடனே செல்லுகிற நமக்கு உசிதமன்றென்று மறு விண்ணப்பஞ் செய்ய வொண்ணாதபடிக்கு நிஷேஷித்துவிட்டு ” திரு நாளிலே இரண்டு மூன்று நாளாகிலும்‌ மங்களாசாளனமாக
    வேண்டும்‌” என்று அதி த்வரையாகப்‌ பயண கதிகளிலே யெழுந்தருளி திருமலை யடிவாரத்திலே அடிப்புளி யழகிய சிங்கரைத்‌ தொழுது திருமலை யேறி யருள; அச்செய்தியைத்‌ திருமலை யநந்தாழ்வான் கேட்டருளி,(இவர்‌ ஒன்றான திருமலை யநத்தாழ்வான்‌ திருவம்ச்யராய்‌ அவர்‌ ஸ்தாநத்தில்‌ கைங்கர்யம்‌ பண்ணி யிருந்தவர் ) பெரிய கேள்வி ஜீயர்‌ முதலானார்‌, மற்ற ஆசார்ய புருஷர்கள்‌, ஸ்தலத்தார்‌ எல்லாருக்குமறிவிக்க, அவர்களெல்லாரும்‌ போர உகந்தருளி வெள்ளிக்கிழமை புழுகுக் காப்பு. உத்ஸவத்தை அண்ணன்‌ மங்களாசாஸனம்‌ செய்தருள வேணுமென்று ப்ராத; கால வேளைக்கு நிறுத்தி, பெருமாள்‌ திருத்தேரிலே ஏறி யருளினவுடனே அனைவரும்‌ வரிசையுடனே ௮ண்ணனை எதிர்‌ கொண்டு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வந்து திருத்‌தேரிலே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவித்து, பின்பு திருத்தேர்‌ திருவீதி யெழுந்தருள இயல்‌ தொடங்குகிற விடத்திலே அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ கண்டு பக்தி பரவசராய்‌ ஸேவித்து நிற்க, அவரையும்‌ க்ருபை பண்ணி யருளி எழுந்தருளா நிற்கிற வளவிலே:
    ஸ்ரீபத்ரிகாச்ரமத்தினின்றும்‌ ராமாநுஜ தாஸர்‌ வந்து அசிந்தமாக அண்ணன் எழுந்தருளி யிருக்கக்‌ கண்டு மிகவும்‌ வித்தராய்‌ உகந்து திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க,, அண்ணனும்‌ போர வுகந்தருளி எடுத்தணைத்தக்‌ கொண்டு அத்யந்தம்‌ ஹர்ஷ பரவசராய்‌ “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே! உம்மைக்‌ காணப் பேருமே பெற்றோமே! தேசாந்தர கதனான புத்ரனிட த்தில்‌ பித்ரு ஹ்ருகயம் போலே
    ஜீயர்‌ திருவுள்ளம்‌ உம்மிடத்தலே ஒருமைப் பட்டிருக்கிறது’என்று அங்குள்ள பெரியோர்களுக்கெல்லாம் இவருடைய ஆசார்ய நிஷ்டையை யருளிச்செய்து, திருத்தேர்‌ நிலையில்‌ எழுந்தருள, பெருமாளும்‌ உள்ளே எழுந்தருளின வுடனே ஸேவாக்ரமத்திலேஅப்பனை பாதாதி கேசாந்தமாகவும்‌ கேசாதி பாதாந்தமாசுவும்‌ ஸேவித்து பூர்ண மநோரதராய்‌, புழுகுக் காப்பு ஸேவையுமாய்‌,தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, ஸ்ரீபாத ரேணு ப்ரஸாதித்தருள ஸ்லீகரித்தருளி, பின்பு அநந்தாழ்வான்‌ திருமாளிசைக்கு எழுந்தருளப்‌ பண்ணுவித்துக் கொண்டு எழுந்தருள, ‘அங்கே யெழுந்தருளின வுடனே அநந்தாழ்வானும்‌ ஸர்வோபசாரங்களையுஞ்‌ செய்தருள அங்கே எமுந்தருளி இருந்தார்‌.

    அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ அண்ணனை ஆச்ரயித்தது.
    ராமர்நுஜ தாஸரும்‌ ராமாநுஜ அய்யங்காரைக்‌ கண்டு,“தேவரீர்‌ திருமுக ப்ரசாரம்‌ அவ் விடத்தில்‌ கைங்கர்யங்களெல்லாம்‌ அமர்த்தி, சிறிய ராமானுஜ அய்யங்காரைக்‌ கற்பித்து அவரைக்‌ கொண்டு ஸகல வித கைங்கர்யங்களும்‌ நடக்கும்படி பண்ணி வந்தேன்‌; தேவரைக்‌ காணப் பெற்றேன்‌; அண்ணன்‌ திருவடி நிலையும்‌ ஸேவிக்கப் பெற்றேன்‌? என்று விண்ணப்பஞ்செய்ய;
    ராமாநுஜ அய்யங்காரும்‌ போர உகந்தருளித்‌ தமக்கு ஹிதங்‌ கேட்கத்‌ தொடங்கி அப்பன் திருவடி தொழுதவன்று தொடங்கி இற்றை வரைக்கும்‌ தம்முடைய வ்ருத்தாந்தங்களை யெல்லாம்‌
    விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டு அவருக்கு ஹிதமருளிச்‌ செய்தபடி,-“ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வில்லை யென்கிற குறையை விடும்‌;அதிலும்‌ அதிசயமாய்‌ ஜீயருக்கு இரட்டிப்பு உகப்பாயிருக்கும்‌:நாளை தீர்த்தம்‌ திருவோணத்தில்‌ அண்ணன்‌ திருவடிகளிலே ஆஸ்ரயணமாக:’ என்று நியமிக்க: ராமாநுஜ அய்யங்காரும்‌ அதிஸந்தோஷத்துடனே அவரையுங் கூட்டிக் கொண்டு அண்ணனைத்‌ தெண்டன்‌ மைர்ப்பித்து நின்று இச் செய்தியை விண்ணப்பம் செய்ய, அண்ணனும்‌ ”ஜீயருடைய நியமனமும்‌ அப்படியே இருக்கும்‌’* என்றருளிச்‌ செய்து, -ராமாநுஜ தாஸர்‌ ஹ்ருதமமும்‌
    ஜீயர்‌ திருவுள்ளமும்‌ ஏகமாய் இருந்தபடியென்‌!” என்று போர வித்தராயிருக்க, அண்ணனும்‌ “ஜீயர்‌, தமக்கு ப்ரதி பிம்பமாக அபிமானித்தருளி திவ்ய தேச மங்களாசாஸநம்‌ செய்தபடி அறிவீரே’” என்று அருளிச்‌ செய்து வைஷ்ண கோஷ்டி புரஸ்ஸரமாக ராமாநுஜ அய்யங்காருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தருளனார்‌. ராமாநுஜ தாஸரும்‌ பண்டைக்‌ குலத்தைத்‌ தவிர்த்து தாமும்‌ வேதகப்‌ பொன்னானார்‌ பின்பு அண்ணன்‌ இருவரையும்‌ கூட்டிக் கொண்டு கோவிலிலே எழுந்தருளி அப்பனை மங்களாசாஸதம்‌ செய்தருளா நிற்க , பெருமாளும்‌ அண்ணனை மிகவும்‌ க்ருபை. பண்ணி யருளி ராமாநுஜ அய்யங்காருக்கு அண்ணன்‌ திருவடி ஸம்பந்தம்‌ தோற்ற
    “கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌” என்று அருள்‌ பாட்டுடன் பட்டு வஸ்த்ரம்‌ ப்ரஸாதித்து இதுவே இவருக்குத்‌ திருநாமமென்று விதித்தருளிச் செய்து உபலாளித்தருளினார்‌ பின்பு பெரிய கேள்வி சிறிய கேள்வி ஜீயர்கள, ஏகாங்கிகள், ஆசார்ய புகுஷர்கள்‌ முதலான ஸ்தலஸ்தாரனைவரும்‌ அண்ணன்‌ சந்நிதிக்கெழுந்‌தருளி, சிறப்பு வரிசைகளும்‌ ஸமர்ப்பித்து, ஆஸ்ரயிக்க வேண்டியவர்கள்‌ ஆஸ்ரயித்து ஸ்ரீபாத தீர்ததம்‌ ஸ்வீகரித்து, அமுது செய்யத் தக்கவர்கள்‌ அமுது செய்தருளி, தளிகை ப்ரஸாத ப்ராப்‌தாக்கள்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரித்து ௨பலாளித்து க்ருதார்த்த ரானார்கள்‌-

    அண்ணன்‌ திருமலையினின்‌ றும்‌-கோயிலுக்கெழுந்தருளல்‌
    மற்றை நாள்‌ அண்ணனை அனைவரும்‌ கோவிலுக்கு வரிசையுடனே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வந்து மங்களாசாஸநம்‌ பண்ணின வுடனே பெருமாளரையில் பீதக வண்ண வாடையான பெரிய பீதாம்பரம்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ஸாதித்தருளி கந்தாடை ராமாநுஜ ௮ய்யங்காருடைய திருப் பல்லக்கு, சத்ர சாமராதிகள்‌, மற்றை ஸமர்ப்பணைகளை யெல்லாம்‌ பரிக்ரஹிக்கும்‌ படிக்கு அர்ச்சக முகேந நியமித்தருளி விடைகொடுத்தருள உடனே புறப்பட்டருளிக்‌ கீழ்த் திருப்பதியிலே யெழுந்தருளி ஸ்ரீகோவித்த ராஜப்‌ பெருமாளையும்‌ மற்றவர்களையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி வரிசை பெற்றுப்‌ புறப்பட்டு எறும்பியிலே எழுந்தருள, அப்பா திருத் தகப்பனார்‌ ஐயைகளும்‌ அழகிய மணவாள
    தாஸராகிய ஸ்ரீவைஷ்ணவர்களுடனே எதிர் கொண்டு ஸேவித்துத்‌ தம்முடைய திருமாளிகையிலே எருந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு சென்று உபசரித்தருளின வளவிலே; அண்ணன்‌,
    இளையாழ்வார்‌ பிள்ளை, திருவாய்மொழியாழ்வார்‌ பிள்ளை முதலான ஆசார்யர்களும்‌, எம்பெருமானார்‌ ஜீயர்‌, திருவேங்கடஜீயர்‌ முதலான ஜீயர்களும்‌, முந்தி எழுந்தருளுகிறார்கள்‌’- என்‌கை -“அடியேன்‌ சேரிக்கு எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்‌ அப்படிச்‌ செய்தருளலாமோ?” என்று ஐயைகள்‌ வெறுத்துக்‌ கொண்டு சுத்த ஸத்வமண்ணனைக்‌ கேட்டருள, அண்ணனும்‌,“ஸ்வாமி ஆசார்யரண்ணன்‌, தாம்‌ திருப் பல்லிக்கலே யெழுந்தருளச்‌ செய்தே அவர்களும்‌ கூட எழுந்தருளப் போகாதென்று முன்னே அனுப்பி யருளினார்‌. அவர்களும்‌, பத்மபுரமென்சிற திருமலையடி வாரத்திற் கெழுந்தருளுகிறார்கள்‌’” என்ன, ஆகில்‌ தாம்‌ எழுதந்தருளி அவர்களை யெல்லாரையும்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வர வேணுமென்று சுத்த ஸத்வ மண்ணன்‌ திருக் கைகளைப் பிடித்துக்‌
    கொண்டு பத்ம புரம் யெழுந்தருள, அவர்களுங் கண்டு அந் யோந்யலம் வந்தந பராய்‌ குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு எல்லாரும்‌ எறும்பியிலே ஐயைகள்‌ திருமாளிகையிலே எழுந்தருளி சக்ரவர்‌த்தி திருமகன்‌ அதி விஜ்ரும்‌பணமாக பூர்ணமாக அமுது செய்தருளி ததீயாராதநமும்‌ நடக்க, மற்றை நாள்‌ திருக்‌ கடிகையில்‌ ௮க்‌காரக் கனியை யடைந்து மங்களாசாஸநஞ் செய்தருளிப்‌ புறப்‌பட்டுப்‌ புட்குழி யம் போரேற்றைத் தொழுது பெருமாள்‌ கோயிலுக் கெழுந்தருள, அங்குள்ள ஆசார்யர்களும்‌ கோவிலனைத்துக் கொத்தும்‌ எதிர் கொண்டு எழுந்தருளிவித்துக்‌ கொண்டு போய்‌ பேரருளாளர்‌ பெருந்தேவியாரை ஸேவா க்ரமத்‌திலே மங்களாசாஸதம்‌ பணணுவித்துத்‌ திருமாளிகையிலே எழுந்தருளப்‌ பண்ணிச்‌ சிறப்பும்‌ நிரவதிகமாக ஸமர்ப்பித்து உபசரித்‌தருளினார்கள்‌-அப்பாச்சியாரண்ணாவும்‌ முதலியாண்டான்‌ தொடங்கி யுண்டான தம்முடைய பெரியோர்களை யெல்லாம்‌ ஸேவித்தாற்‌ போலிருக்கிறதென்று மிகவும்‌ உகந்தருளி ப்ரதிபத்தியுடனே ஸ்வாமி யண்ணனையும்‌, கூட எழுந்தருளின ஸ்வாமிகளையும்‌ மற்றுமுண்டான பரிஜனங்களையும்‌ தம் திருமாளிகையிலே தானே எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு பஹுவாக உபசரித்து உபலாளித்துக்‌ கொண்டெழுந்தருருளி யிருந்தார்‌. பேரருளாளரும்‌ உகந்தருளி அண்ணனுக்குத்‌ திருநாமம்‌ :ஸ்வாமி’” என்று அனைவரும்‌ அநுஸந்திக்கும் படிக்கு ஆஜ்ஞாபித்தருளி அருள் பாடும்‌ ப்‌ரஸாதித்தருளினார்‌.

    ஸ்வாமி யண்ணன்‌ பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தல்‌-
    ஸ்வாமி யண்ணனும்‌ பேரருளாளனுக்கு மிகவும்‌ ௨கப்பாக எம்‌பெருமானார்‌ உகந்து செய்தருளின கைங்கர்யமாய்‌, பின்பு முதலியாண்டானும்‌ அப்படியே செய்தருளி, துன்னு புகழ்க்‌ கந்தாடைத்‌ தோழப்பரும்‌ விரும்பிச்‌ செய்தருளின சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்ய மின்றிக்கே யொழிய வொண்ணா தென்று அப்பாச்சியாரண்ணா வுக்கருளிச்‌ செய்து, தாமும்‌ புறப்பட்டருளி அருணோதய காலத்திலே அநுஷ்டாந குளத்திலே நீராடி நித்ய கர்‌மாநுஷ்டாநங்களையும்‌ நிறை வேற்றி, கைங்கர்ய ருசியை யுடையருமாய்‌ சக்தருமா யெழுந்தருள ஸ்ரீவைஷ்ணவர்களுடனே சாலைக்‌ கிணற்றருகே எழுந்தருளி குடங்களை சோதித்துத்‌ திருமஞ்சநம்‌ பூரித்துத்‌ திரு முடியிலே வைத்துக் கொண்டு ஆளவந்தார்‌ ஸ்தோத்ர அநுஸந்தாநத்துடனே தண்ணீரமுது வழி திருத்துகிற உத்ஸவம்‌ (எம்பெருமானார் திரு மலையிலே நியமித்து ஏற்படுத்தி யருளிய ஒரு உத்ஸவம்‌, திரு மலையப்பன்‌ ஒரு வேடனுருலில்‌ பெரிய திருமலை நம்பி நித்யமாக ஆகாச கங்கை யினின்றும்‌ கோயிலுக்கு எழுந்தருளப்‌ பண்ணும்‌ திருமஞ்நத்தை ஒருநாள்‌ குடத்தை அம்பெய்து ஒட்டை பண்ணி பெருகிய தீர்க்தத்தைப்‌ பருகி யருளியதை அனைவரும்‌ அறியும்படி, பல ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ குழாமாக ஆகாச கங்கையிலிருந்து அத்‌யயந உத்ஸவம்‌ முடிந்த மறு தினம்‌ திருமஞ்சனம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு திருவீதி வலம்‌ வந்து கோயிலில்‌ ஸமர்ப்பித்தல்‌ )போலே தாம்‌ எழுந்தருளி யிருக்கிற நாளெல்லாம்‌பேரருளாளருக்குத்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தருளி, பின்பு அப்பாச்சியர் அண்ணாவை -இந்த கைங்கர்யம்‌ தப்பாமல்‌ நடத்தி வாரும்‌’” என்று நியமித் தருளினார்‌.

    கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌ செய்த கைங்கர்பங்கள்‌
    ஒரு நாள்‌ கந்தாடை ராமாநுஜ அய்யங்காரைத்‌ திருமவை திருப்பதியில்‌ கைங்கர்யங்களை நிறைவேற்றி மீண்டு வந்து, திருவநந்த ஸரஸ்ஸுக்கு நீராழி மண்டபமும்‌, சுற்றிவர ஸோபாதங்களும்‌ தென் கரையில்‌ உந்நதமான குளக் குறடும்‌, ஸிம்ஹாஸநமும்‌,மண்டபமும்‌, திருமழிசைப் பிரான்‌ கோயில்‌ கைங்கர்யமும்‌, திரு வபிஷேக மணடபத்திற்கு முன்னே பெரிய மண்டபமும்‌ திருமலைக்கு ஒலிமுக மண்டபம்‌ முதலான இன்னும் சில மண்டபங்களும்‌, திருமடைப் பள்ளி, வடக்குத்‌ திருக்குளப் படிக்கட்டும்‌, யதா ஸம்பவம்‌ திருவாபரணங்களும்‌, திருமஞ்சந காலத்திற்கு மஞ்சள் காப்பு கைங்கர்யம்‌ முதலான அநேக கைங்கர்யங்களும்‌,திருப் பவளத்திற்கு உகப்பாக அமுது செய்தருளும் படிக்கு சில
    கட்டளைகளும் நியமித்து,-இவைகளெல்லாம்‌ அழகிய மணவாள மாமுனிகள்‌ கைங்கர்யம்‌, அவச்யம்‌ நடத்‌தி வாரும்‌” என்றும்‌-அப்பாச்சியாரண்ணாவை நாமாகலே ப்ரதிபத்தி பண்ணி வாரும்‌’
    * என்றும்‌ புத்திகளை ஸாதித்து திருமலைக்கு அனுப்பி யருளினார்‌.

    “அண்ணன்‌ ஜீயர்‌- ஜீயரண்ணன்‌”
    பின்பு தாமும்‌ ஸ்ரீபெரும்பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை மங்களாசாஸநம்‌ பண்ணத் திருவுள்ளமாய்‌, பேரருளாளர்‌ ஸந்நிதியிலே அனுப்புவித்துக் கொள்ள எழுந்தருள, திருவாராதநம் கண்டருளி தத் யோதந அவஸரம்‌ அமுது செய்தருளின வுடனே அண்ணனை அருள்பாடிட்டழைத்து உடுத்துக் களைந்த பீதக வாடை, அபய ஹஸ்தங்கள்‌, திருவடிசோடு, களபம்‌, சூடிக் களைத்த தொடுத்த துழாய் மலர்‌, ப்ரஸாதங்தள்‌ இவையெல்லாங் கட்டி “இவை ஜீயருக்கு’” என்று அண்ணன்‌ திருக்கைகளிலே ஸாதித்தருளி அண்ணனுக்கு உகப்புடனே வரிசைகளும்‌ ஸாதித்தருளி விடை கொடுத்தருள, ஸ்வாமி யண்ணனும்‌ திருவைய மாளிகையிலே திரு மண்டபத்திற்கு எதிராக எழுந்தருளி இருந்து ஜீயருடைய வைபவங்களை அநுஸந்திக்க அதற்கு அநு குணமாக பேரருளாளர்‌ உபலாளித்தருளி உகந்து கொண்டிருக்க , அவ்வளவிலே சில பெரியோர்கள்‌ “தம்முடைய ஸ்வாமி ஜீயருக்கு”: “அண்ணன்‌ ஜீயர்‌” என்று பேரருளாளர்‌ திருநாமம்‌ சாத்துவது!” என்று உகந்தருள! வேறு சில பெரியோர்கள்‌, அண்ணனுக்கு பெரிய பெருமாள்!”ஜீயரண்ணன்‌’ என்று திருநாமம்‌ சாத்தினதுண்டே!யென்று, “ராமாநுஜம்‌ லக்ஷ்மண பூர்வஜம்‌ ச ‘- என்கிறபடியே ஜீயருக்கும்‌ அண்ணனுக்கு முண்டான அந்யோந்ய ப்ரீத்யதிசயத்‌தையும்‌ அப்ரதிம னவபவங்களையு மிட்டுப்‌ பேரருளாளரும்‌ பெரியோர்களும்‌ உகந்தருளி இப்படித் திருநாமங்கள்‌ சாத்தினார்‌களென்று எல்லாருங்‌ கொண்டாடிக் கொண்டு திரு மாளிகை யிலே எழுந்தருள; ‘பஹுநாளாயிற்று அதி சீக்ரமாக வரவும்‌” என்று அண்ணனுக்கு ஜீயருடைய திருமுகம்‌ வர, அண்ணனும்‌ அந்தத்‌ திரு முகத்தை சிரஸா வஹித்தருளி உட்பட்டுக்‌ கொண்டு ஸ்ரீ பெரும்‌பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்‌பித்துக்‌ கோயிலுக்குப்‌ புறப்பட்டு -பொன்னடி காண்பதோராசையினால்‌ அதி த்வரையாக பயண கதியிலைழுந்தருளித்‌ திருக் காவேரிக்‌ கரையிலே யெழுந்தருள, கோயிலுள்ள பெரியோர்களெல்லாருங்‌ கேட்டருளி மிகவுமுகந்திருக்க, பட்டர்‌ கோயில் பரிகரமனைத்‌துடனே எதிர் கொண்டு திருமாளிகையிலே எழுந்தருளிப்‌ பண்ணி வைத்தார்‌. ஜீயரும்‌ அண்ணன்‌ திரு மாளிகையிலே எழுந்தருளி யிருந்து அண்ணனை க்ருபை பண்ணி யருளி, திரு வேங்கடமுடையான்‌, பேரருளாளர்‌ ப்ரஸாதங்களையும்‌ அங்கீ கரித்தருளி அவ்வவ்‌விடங்களிலுள்ள வைபவங்களைக் கேட்டருளி உகப்புடனே எழுந்‌தருளி யிருக்கிற வளவிலே, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, பேரருளாளர்‌ ஜீயருக்கு அண்ணன்‌ ஜீயர்‌” என்று திரு நாமம்‌ ஸாதித்தபடியை விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டருளி மிகவுமுகந்து, -நம்முடைய மனஸ்ஸூக்குத் தக்கபடி பேரருளாளரும்‌ தேவரீர் ஸம்பந்தத்ம் தோற்ற அருளிச் செய்வதே!” என்று அண்ணனைப்‌ பார்‌த்தருளிச் செய்ய, ஸ்வதந்த்ரனுடைய அதி க்ரமணத்துக்குத்‌ தடை யுண்டோ? என்று சிலர் அருளிச்‌ செய்யப் புக ப்ரதிவாதி பயங்கர மண்ணாவும்‌ “ஸ்ரீ யபதி’* என்னுமா போலே ஜீயருக்கு இதுவுமொரு திருநாமமென்ன , அவரை எல்லாரும்‌ கொண்டாடினார்கள்‌,
    பின்பு ராமாநுஜதாஸர்‌ திருவடி களிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவர்‌ திருமுடியில் திருவடிகளை நற்றரிக்க வைத்தருளி மிகவும்‌ விஸேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினர்‌. அவரும்‌ வட தேசத்‌
    தெம்பெருமான் களுடைய ப்ரஸாதங்களை நாலு ஸ்ரீவைஷ்ணவர்‌களைக் கொண்டு எழுந்தருளப் பண்ணி அவற்றை யெல்லாம்‌ ஸமர்ப்‌பிக்சக , அங்கீ கரித்தருளி விநியோகம்‌ செய்தருளி தாமும்‌ ஸ்வீகரித்‌தருளி பூர்ண மநோ ரதராய்‌, வடக்கில்‌ திருப்பதிகளெல்லாம்‌ ஸேவித்தாராயிற் றென்று ராமனுஜ தாஸரை நெருங்கத் தழுவி யருளினார்‌,

    அநந்தரம்‌ அப்பாவை ஊரேற வரும்படிக்கு அவர்‌ திருத் தமப்‌பனார்‌ ராமாநுஜ தாஸர்‌ திருக்கையிலே திருமுகம்‌ வரக் காட்ட அவரும்‌ ஸேவா விஸ்லேஷ பீருவாயிருக்க, அவருக்குத் தஞ்சமாகத் தம்‌முடைய விக்ரஹமாக ஒரு விக்ரஹத்தையும்‌ திருவடி நிலைகளையும்‌ திரு உத்தரீயத்தையும ப்ரஸாதித்தருளினார்‌
    ப்ரீத। ப்ரேஷி தவாந் முநிர் வர வரோ யஸ்மை முஹு: ஸ்ரீமுகம்‌
    ப்ராதாத்‌ ஸ்வாங்க்ரி ஸரோஜ ஸங்க ஸுபகம்‌ ஸ்வீயா முபாநத்யுகீம்‌ |
    ஸ்வீயம்‌ ஸுந்தர முத்தரீயமமலம்‌ ஸ்வாம் மூர்த்தி மர்ச்சா மயீம்‌
    தம்‌ தேவேஸ குரும்‌ பஜேம ஸரணம்‌ ஸம்ஸார ஸந்தாரகம்‌ ॥

    [மணவாளமாமுனிகள்‌ யாருக்கு அடிக்கடி உகந்து நீ முகம் ஸாதித்‌தாரோ, யாருக்கு தம் திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்தத்தினால்‌ பாக்யம்‌ பெற்ற தமது பாதுகைகளிரண்டையும்‌, தமது அழகியதாய்த்‌ தூயதான உத்‌தரீயத்தையும்‌ தமது அர்ச்சா விக்ரஹத்தையும்‌ தந்தருளினாரோ, ஸம்ஸார தாரகரான அந்த தேவராஜ குரு வென்னும்‌ எறும்பி யப்பாவைச்‌ சரணமாகப்‌ பற்றக் கடவோம்‌]
    என்று பின்புள்ளாரும்‌ இவ் வ்ருத்தாந்தத்தை யநுஸந்திக்கும்படி அபிமானித்தருள, பின்பு எறும்‌பியப்பாவின்‌ திருப் பேரனாரான பிள்ளை யப்பாவும்‌ இந்த வ்ருத் தாந்தத்தை அநுஸந்‌தித் தருளினாரிறே. அப்பாவும்‌ ஜீயரநுமதி கொண்டு கோயிலினின்றும்‌ புறப்பட்டு
    எறும்பி யேற எழுந்தருளி தம் திருத் தமப்பனாரைத்‌ திருவடி தொழுது அவருக்கு சுஷ்ரூஷித்திக்‌ கொண்டிருந்து, –எண்டிசையுமறிய இயம்‌புகேன்‌ ஒண்டமிழ்ச்‌ சடகோப னருளையே-என்கிறபடியே, ஜீயருடைய சேஷா க்ருதித்வ லஷ்மணா க்ருதித்வ ப்ரப்ருதிகமான அப்ரதிம ப்ரபாவத்தை வரவர முநி ஸதகம்‌, வரவர முநி ப்ரபந்தம்‌,வர வரமுநி பஞ்சாஸத்‌, வரவர முநி ஸ்தவம்‌, வரவர முநி மங்களாசாஸநம்‌ வரவர முநி கத்யம்‌ முதலான ஹ்ருதயமான அநேக ப்ரபந்தந்களாலே வெளியிட்டு உபகரித்தருளினார்‌

    ஸ்ரீ வான மாமலை ஜீயர்‌ அரங்க நகரப்பனை திருவாரதனமாகப் பெறுதல்‌
    அவ்வளவிலே வானமாமலை ஜீயரை வானமாமலை ஸ்ரீகார்‌யார்த்தமாக அனுப்பி யருளவேணுமென்று ஸேனை முதலியார்‌ ஸ்ரீமூகம்வர, எதிர்கொண்டு சிரஸா வஹித்து உட்பட்டுக் கொண்டு அப்படியே ஸம்மதியாம் படி ஜீயர்‌ நியமித்தருளி, அவரையும்‌ கூட்‌டிக் கொண்டு பெருமாள்‌ திருமுன்பே சென்று இச் செய்தியை விண்ணப்பஞ் செய்து தாமும்‌ திவ்யப் ப்ரபந்தம்‌ நாலாயிரத்திலும் நூறு பாட்டு க்ரமத்திலே நித்யாநுஸந்தானமாக அநுஸந்‌திக்‌கி றது அவற்றைக்குத்‌ திருமொழி சாற்றுமுறையாய்‌, அணியர்ர்‌ பொழில் சூழ்‌ அரங்கநகரப்பா என்று -அநுஸந்திக்கிற வேளையில பெருமாளும்‌ அப்படியே ஸம்மதித்து, தம்முடைய ஸந்நிதியிலே பூபால ராயனில்‌ தட்டிலே யெழுந்தருளி யிருக்கிற அரங்க நகரப்பனாகிய லஷ்மீ நாராயணனான நாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உமக்குமாக வருகிறோமென்று வானமாமலை ஜீயர்‌ இருக்கையிலே எழுந்‌தருளப் பண்ணிக்‌ கொடுக்க, அவரும்‌ ஜீயர்‌ திரு முக மண்டலத்தைப்‌ பார்த்து பெரியார்க் காட்பட்டக்கால்‌ பெறாத பயன்‌ பெறுமாறு என்று விண்ணப்பஞ்செய்ய., பெருமாளும்‌ தீர்த்தம்‌ திருப்பரியட்‌டம்‌, திருமாலை அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகளும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதமும்‌ ஸாதித்து விடை கொடுத்தருள, ஜீயரும்‌ மங்கள வாத்யங்களுடளே அரங்க நகரப்பனை எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு மடத்திலே யெழுந்தருளி அமுது செய்தருளினவுடனே ஜீயரை வாழ்த்தி அரங்கநகரப்பனை ப்ரஸாதித்து வானமா மலைக்கு அனுப்‌பி யருளினார்‌.

    ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனின்‌ மதுரகவி நிஷ்டை
    அநந்தரம்‌ ஜீயரும்‌ ஒரு நாள்‌ எல்லாரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச்‌ செய்தே முதலிகளைக் குறித்து, எல்லாரு மறிந்தார்களே யாகினும்‌ தேவு மற்று அறியேன் என்றிருக்கிற
    இருப்பு ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனுக்கே யுள்ளதொன்றிறே
    என்று விசேஷாபிமாநம்‌ செய்தருளி,
    சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம்‌ தநும்‌ |
    மக்நாநுத்தரதே லோதாந்‌ காருண்யாச் சாஸ்த்ர பாணிநா |
    என்றும்‌
    ஐகதோ ஹித சிந்தாயை ஜாக்ரத பணி ஸாயிந : |
    அவதாரேஷ் யந்ய தமம்‌ வித்தி ஸெளம்யவரம்‌ முநிம்‌ ॥

    [ஸர்வேஸ்வரனான நாராயணன் தானே இவ்வுலகில்‌ மனிதவுருவில்‌ (ஆசார்யனாய்‌) வந்தவதரித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ முழுகிக்‌கிடக்குபம் ஜனங்களைத்‌ தமது கருணையினால்‌ சாஸ்த்ரங்களைக்‌ கைக் கொண்டு மேலெழச் செய்கிறான்‌-என்றும்‌, உலகங்களுக்கு நன்மை செய்யும்‌ எண்ணத்தினால்‌ அதன் பொருட்டு விழிப்புடனுள்ள சேஷசாயியான எம்பெருமான்‌ பண்ணி யருளும்‌ அவதாரங்களில்‌ மணவாளமாமுனிகளையும்‌ ஒரு அவதாரமாக அறிவீர்‌] என்றும்‌ சொல்‌லுகிறபடியே தாம்‌ பகவதவதாரமென்னுமிடம்‌ தோன்ற நாமே கிடீர்‌’ என்றருளிச் செய்து தம் மழகிய மணவாளப்‌ பெருமாளையும்‌ அவருக்குத்‌ திருவாராதனமாக ப்ரஸாதித்து பப்ராப்யைக நிஷ்டராக்கி யருளினார்‌. அவரும்‌, மோர் முன்ளாக முப்பது ஸம்வத்ஸரம்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரிக்கப் பெற்று (ஆசார்யன்‌ அமுதுசெய்த பாத்ரத்தில்‌ (இலையில்‌) அவர்‌ கடைசியாக அமுது செய்த மோர் ப்ரஸாதம்‌ ரஸம்‌ மாறாமல்‌
    அதையே சிஷ்யனான தாம்‌ முதலில்‌ உணடு பிறகு மற்ற வ்யஞ்சளங்‌களுடன்‌ அதே இலையில்‌ உண்பது. ஆசாரியன்‌ போனகம்‌ செய்த சேடம்‌ உண்கை சிஷ்யனுக்கு ப்ராப்யம்‌. இப்படி மோர் முன்னாரையன்‌ என்னும்படி 30 ஆண்டுகள்‌ தினமும்‌ ஆசாரியனின்‌ உச்சிஷ்ட
    முண்டு சிரோபாஸித ஸத் வ்ருத்தர்‌ என்று கொண்டாடப்‌ பெற்றவர்‌ பின்புள்ளாரிலு முண்டு
    )க்ருதார்த்தராய்‌ ஸகல ரஹாஸ்யார்த்தங்களையுங்‌ கேட்டு ஜீயர் திருவடிகளை ஒருக் காலும்‌
    பிரியாதே, பிரிந்தாலும்‌ இராத் தங்குமூருக்கும்‌ போகாதே, நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்பொரு திருவாடிப்‌ பூரத்திலே சூடிக் கொடுத்த நாச்சியார்‌ தீர்த்த ப்ரஸாதங்களை போர ஆதரித்துக்‌ கொண்டு வந்து ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அங்கீகரித்‌தருளி பெரிய ப்ரீதியோடே ஆண்டாளுக்குகப்பாக பட்டர்‌ பிரான்‌ தாஸர்‌” என்று திருநாமம்‌ ஸாதித்தருளினார்‌. பின்பு கோவிந்த தாஸரப்பன்‌ மஹா விரக்தராய்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்ய,பட்டர் பிரான்‌ ஜீயர்‌!’ என்று, திருநாமமாயிற்று. எம்பெருமானார்‌ திருவடிகளுக்கு வடுக நம்பியைப் போல யாய்த்து இவரும்‌ ஆசார்ய நிஷ்ட அக்‌ரேஸரரா யிருக்கும்படி-இப்படி யான விவர்‌ சரம பர்வ நிஷ்டை மணவாள யோகி வாழ்ந்தருளிகிற காலத்திலே தணவாத வடிமை ஸகல காலத்திலும்‌ செய்தருள, ‘பட்டர் பிரான்‌ ஜீயர்‌’” என்றும்‌, தேவு மற்றறியேன்‌ என்றும்‌, ‘பட்டநாத முநி வரா பீஷ்ட தைவதம்‌” [மணவாளமாமுனிகள்‌ பட்டர்பிரான்‌ ஜீயருக்கு இஷ்ட தேவதை] எனறும்‌ “ஸ்ரீமதுரகவி சரிதகாரி மஹித சாரித்ர ஸ்ரீமாந்‌ பட்டநாத யதீஸ்வர – [ஸ்ரீமதுரகவி நிஷ்டையை மணவாள மாமுனிகளிடம்‌ உடையவர்‌ நன்னடத்தை யுள்ள ஸ்ரீபட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌] என்றும்‌ அங்குத்தைக்கு அந்தரங்கரானவர்கள்‌ அருளிச்‌ செய்தார்கள்‌-இப்படி அந்திமோபாய நிஷ்ட்ட அக்ரேஸராகவே ஸேவ்யமாநராய் எழுந்தருளி யிருக்கிற ஸெளம்ய ஜாமாத்ரு முநிவர்யரான ஜீயரும்‌ அன்னையாய்‌ அத்தனாய்‌ என்கிறபடியே தமக்கு ஸர்வ விதோத்தாரக பந்து பூதரான நம்மாழ்வாரை ஸேவித்து நெடுநாளாயிற்று ஆகையால்‌ தத் விஷய ப்ரேமம் அதிசயித்து தாய்‌ நாடு கன்றே போல த்வரித்துக்‌ கொண்டு பெருமாளுக்கு விண்ன்ணப்பஞ் செய்து அப்போதே திருதகரியேற வெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டு, ““கூடல்‌” என்றது மதுரையிலே சென்று திருப் பல்லாண்டு அவதரித்த ஸ்தலமென்று உகந்தருளி மல்லாண்ட திண்டோனள்‌ மணி வண்ணரையும்‌ திருவடி தொழுது,
    பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாஸநம்‌ செய்தருளி அங்கே யெழுந்தருளி யிருக்குமளவிலே।

    மஹாபலி வாண நாத ராயன்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    அத் தேசத்துக்கு அதிபதியான மஹாபலி வாண நாத ராயன்‌ வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்க, அவனையும்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி ஜாய புண்ட்ராதி பஞ்ச ஸம்ஸ்கார யுக்தனாக்கித்‌ திருவடிகளுக்‌ காட்படுத்திக் கொண்டு அற்றைக்கு அங்‌கே யெழுந்தருளி யிருந்து பிற்றை நாள்‌ அர்த்த ராத்ரியிலே
    மணி காஞ்சந லஞ்சந்நாம்‌ சிபிகாம்‌ தததிஷ்ட்டிதாம்‌ |
    ஸபந் நயந்த ஸ்வஸ்கந்தே க்ருத்வா கேகித்‌ ப்ர தஸ்த்திரே ॥

    (சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ பொன்னாலும்‌ ரத்னங்களாலும்‌ ஆனதும்‌, நன்கலங்கரிக்கப் பட்டதும்‌, மாமுனிகள்‌ எழுந்தருளி யுள்ளதுமான அத் திருப் பல்லக்கை சலிப்பில்லாமல்‌ தமது
    தோள்களிலே தாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்‌ ] என்கிறபடியே அந்த ராஜா ஸமர்ப்பித்த அநர்க்கமான நவ ரத்நக சிதரமணீயாந்‌ தோளிகையிலே ஏறி யருளிப்‌ புறப்பட்டு மூடு பனி யாகையாலே
    திருப் பல்லக்கை குக்கூடலிட்டு ஸ்ரீவைஷ்ணனர்கள்‌ ஸ்ரீபாதந்‌ தாங்கிக்‌ கொண்டு எழுந்தருளா நிற்க,
    சத்ரம்சித்ரம்‌ தது : கேசித்‌ சாமரே ததிரேபரே |
    ப்ருங்காரமவரே அபிப்ரந் களாசீமமி கேசந ॥
    தத்பதாப்ஜா ஜஸ்பர்‌ஸ பாவநீ மாத்ம பாவிநீம்‌ |
    ஸந்த்ஸ் ஸந்தாரயந்திஸ்ம மெளளி நாமணி பாதுகாம்‌ |
    அகாயந் நக்ரத;கேசிதத ந்ருத்யந்தி கேசக ॥

    [சிலர்‌ திரு வெண்‌ கொற்றக் குடையைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ ;சிலர்‌ திரு வெண் சாமங்களை வீசினர்‌; சிலர்‌ படிக்கும்‌ காளஞ்சிகளைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ சில பாகவதர்கள்‌ ஜீயருடைய ஸ்ரீபாத ரேணு
    படுதலால்‌ பரிசுத்தராய்‌ ஸ்வரூபாநுகுணமாக ஸ்வாமியினுடைய மணி பாதுகங்களைத் திருமுடிமேல்‌ தாங்கிச் சென்றனா பிலர்‌ முன்னே பாடிச்‌ சென்றனர்‌; சிலர்‌ ஆடிச் சென்றனர்‌] என்கிறபடியே-சத்ர சாமராதிகள்‌ தொடக்கமான கைங்கர்யோப கரணங்களைத் தரித்துக் கொண்டு பாடுவாராடுவார்‌ உகந்தாலித்துக்‌ கேட்பாராய்‌ ஸஸம்ப்ரம ந்ருத்த கீதத்தடனே அனைவரும்‌ ஸேவித்துக் கொண்டு
    போருகிற படியைக் கண்டு இரவெல்லாம்‌ அவஸர ப்ரதீஷராய்‌ ஜீயரறியாதபடி ஸ்ரீ பாதம்‌ தாங்கிக் கொண்டு இருகாத வழி ஸேவித்து வர, விடிந்த பின்பு வைகை யாற்றின்‌ கரையிலே அநுஷ்ட்டா நார்த்தமாக இறங்கி யருளின வளவிலே ராஜாவும்‌ கச்சை கட்டி யுடுத்து ஸந்நத்தனாப்‌ ஸ்ரீபாதம்‌ தாங்கின வேஷத்தோடே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, ஜீயரும்‌ அது கண்டு இப்படி செய்வதே என்று ஆச்சர்யப் பட்டருள அப்போது அநுஷ்ட்டானம்‌ பண்ணுவதாக வெழுந்தருளி யிருந்த “முத்தரசன்‌” என்கிற கிராமத்தை அங்கீ கரித்தருள வேணு மென்று அபேக்ஷிக்க, ஜீயருமவனுடைய நிர்ப்‌பந்தத்துக்காக அந்த க்ராமத்தை அங்கீகரித்தருளி அன்று தொடங்கி அந்த க்ராமத்திற்கு ”அழகிய மணவாள நல்லூர்‌”என்று திருநாமம்‌ ப்ரஸாதித்து மஹாபலி வாண நாத ராஜாவையும்‌ மிகவு முகப்போடே அனுப்பி யருளி, திருப்புல்லாணி வழியாக எழுந்தருளு மளவிலே முதலிகளும்‌ தாமாக அத்வஸ்ர மாந்தராய்‌ நிழல் தேடி வாரா நிற்க, அங்கே ஸ்த்தாவர விசேஷமா யிருப்பதொரு
    இந்த்ரிணீ வ்ருஷம்‌ நீரந்தீரச் சாயா யுக்தமாய்‌ நிற்கக் கண்டு அங்கே வெழுந் தருளி அப் புளிய மர நிழலிலே விஸ்ரமித்து அத்வ ஸ்ரமம்‌ தீர்த்துக் கொண்டு எழுந்தருளி யிருக்க

    ஜீயர்‌ புளிய மரத்துக்கு மோக்ஷமருளுதல்‌
    முதலிகளெல்லாரும்‌ இப்படி மஹோபகாரம்‌ பண்ணின விதற்கு ஒரு கிருபை பண்ணி யருள வேணு மன்று ஜீயரைப் ப்ரார்த்திக்க, அவரும்‌ ஸ்வ க்ருபாதிசயத்தாலே அந்தப்‌ புளிய மரத்தைத்‌ திருக்கையாலே ஸ்பர்‌சித்து, தாம்‌ பெற்ற பேற்றை நீயும்‌ பெறக் கடவாய்‌’-என்று அநுக்ரஹித்து எழுந்தருளினார்‌. பின்பு அசிரேண அம் மரம்‌ உலர்ந்திருக்கக்‌ கண்டு முதலிகள்‌
    யம்யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌ யம்யம்‌ பஸ்யதி சஷுஷா |
    ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்த வாஜநா ; ॥

    [ஸத்துக்கள்‌ யார் யாரைத்‌ திருக் கைகளால்‌ ஸ்பர்சிப்பார்களோ ,யார் யாரைத்‌ திருக் கண்களால் கடாக்ஷிப்பர்களோ அவரில்‌ தாவரங்‌களும்‌ மோஷமடைகின்றன; பந்து ஜனங்களை ப்பற்றிச்‌ சொல்லவும்‌ வேணுமோ? என்கிற அர்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமிறே ! என்று உகந்தருளினார்கள்‌-

    அநந்தரம்‌ ஜீயரும்‌ திருப்புல்லாணி யேற எழுந்தருளி புல்லாணி யெம் பெருமானைத்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டுப்‌ பயண கதியிலே திருநகரி யேற வெழுந்தருளி ஸேவா கிரமம்
    தப்பாமல்‌ அடைவே ஆழ்வாரையும்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌ ஸேவித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு அங்கே அங்கே ஆத்மாக்களை திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கி , திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களையும்‌ ப்ரஸாதித்து நின்று, ப்ரதி தினம்‌ ஆழ்வார்‌ திரு மஞ்சன காலத்தையும்‌ மற்ற திவ்யோத்‌ ஸவங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளி யிருக்க।

    கோயிலில்‌ அநுபவங்களில்லாமைக்கு வருந்துதல்‌
    இப்படிக்‌ காலங் கழித்து செல்லா நிற்கச்‌ செய்தே மார்கழி மாஸம்‌ வர,
    எந்தை யெதிராசர் சிறப்பை யெழிலரங்கர்‌
    சிந்தை மகிழ்ந்தமுது செய்ய–அந்த நிலம்‌
    சென்று நின்று சேவிக்கும்‌ செல்வமின்று பெற்றிலமே

    என்று சேவிக்குமினியாம்‌?
    என்று எம்பெருமானார்‌ திருப்பாவைச்‌ சிறப்பை ஸேவிக்கப்‌ பெற்றிலோமில்லையீ என்று வெறுத்தருளியும்‌, பின்பு ஸங்க்ரமணம்‌ வர
    சீராரங்கர் தந் தேவியரோடு சிறப்புடனே
    யேராரு மாறன்‌ கலியனெதிராசனோடமரப்‌
    பாரோர்‌ மகிழ்ந்தேத்தும்‌ தட்டுக்கள் தன்னுடன்‌ போற்று மந்தப்‌
    பேரார வாரத்தை யின்று கண்டின்‌ புறப்‌ பெற்றிலமே

    என்று அதற்கும்‌ நொந்தருளி, பின்பு தைத் திருநாளை நினைத்தருளி
    தேவியருந் தாமும்‌ திருத்தேரின்‌ மேலரங்கர்‌
    மேவி விக்கிரமன்‌ வீதி தனிற்‌–சேவைசெயு
    மந்தச் சுவர்க்கத்தை யநுபவிக்கப்‌ பெற்றிலமே
    யிந்தத் திருநாளிலே யாம்‌

    என்றநுஸந்தித்துப்‌ பேரிழவோடே யெழுந்தருளி யிருந்து தொந்து
    அணி யரங்க மாடுதுமோ என்றும்‌, திரு வரங்கப் பெரு நகருள்‌ தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக் கையாலடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணியைக்‌ கோமளத்தைக்‌ கண்டு கொண்டென்‌ கண்ணினைகள்‌ . என்று கொலோ களிக்கும்‌ நாள்‌ (பெருமாள்‌ திரு.1-1) என்றும்‌.
    “ஊரரங்கமே யென்பதிவன்‌ தனக்காசை” என்றுஞ்‌ (
    காரிளம்‌ புரைமேனி நம்கதிர்‌ முத்தவெண்ணகைச்‌ செய்யவாய்‌ ஆரமர்வ னரங்கமென்னும்‌ அரும்பெருஞ்சுடரொன் றிை , (பெரு திரு. 2-7) சேரும்‌ நெஞ்சுடையராய்‌ அப்போதே ஆத்வார்‌ திருமுன்பே சென்று-)சொல்லுகிற படியே அபிநிவேசத்தைப்‌ பண்ணிக் கொண்டு அதி த்வரையுடனே ஆழ்வார்‌ திரு முன்பே சென்று

    திருக்குருகைப்பெருமாள்‌ தன்‌ திருத்தாள்கள்‌ வாழியே
    திருவாளதிருமுகத்துச்‌ செவியென்‌ றும்‌ வாழியே
    இருக்கு மொழி யென்னெஞ்சில்‌ தேக்கினான்‌ வாழியே
    யெந்தை யெதிராசர்க்கிறைவனார்‌ வாழியே
    கருக் குழியில்‌ புகா வண்ணம்‌ காத்தருள்வோன்‌ வாழியே
    காசினியிலாரியனாய்க்‌ காட்டினான்‌ வாழியே
    வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான்‌ வாழியே
    மதுரகவி தம்பிரான்‌ வாழி வாழி வாழியே

    என்று மங்களாசாஸனம்‌ பண்ணி ஸேவித்து, ஆழ்வாரனுமதி கொண்டு அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி அதி த்வரையுடனே ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ சென்று ப்ரவசித்து பொங்கும்‌ பரிவுடைய பட்டர்‌ பிரானையும்‌ வடபெருங்கோயிலுடையானையும்‌ ஸேவித்து, நாச்சியார்‌ திருமாளிகையிலே சென்று புகுந்து ஆழ்வார்‌ திருமகளாராண்டாளையும்‌ அன்புடனே அடி பணித்து நிற்க, கோதையும்‌ கோயிலண்ணருடைய திருவவதாரமன்றோ நீர்‌!” என்று மிகவும்‌ க்ருபை செய்தருள, ஆண்டாளருள்‌ கொண்டு புறப்பட்டு அழகனலங்காரன்‌ மலையான திருமாலிருஞ்‌சோலை மலை நின்ற சுந்தரத் தோளுடையானான பரம ஸ்வாமி யையும்‌ ஸேவித்து, அழகர்‌ திருக்குறுங்குடிக்குக்‌ குடி வாங்கிப்‌ புறப்‌ டெழுந்தருளி யிருக்கையாலே அவ்விடம்‌ “நல்லதோர்‌ தாமரைப்‌ பொய்கை நாண் மலர் மேல்‌ பனிசோர அல்லியுந் தாதுமுதிர்‌ந்திட்‌ டழகழிந்தாவொத்ததாலோ, இல்லம்‌ வெறியோடிற்றுலோ என்‌ மகளை யெங்குங்காணேன்‌ (பெரியாழ்வார்‌ திரு. 3-8-1) என்று-அழகழிந்திருக்கிற கோயிலைக் கண்டு ‘புத்ர த்வய விஹீநம்‌ தத்‌:(ராம லஷ்மணர்களாகிற புத்திரரிருவரும்‌ இல்லாத அந்த வீடு-இத்யாதிப் படியே மிகவும்‌ அவஸந்நராய்‌ க்லேசித்தருளி இவரும்‌ உடையவரைப் போல்‌ வேண்டும்‌ பொருள்களை யெல்லாம்‌ அழைப்‌பித்தருளி அங்கே பாங்காக தளிகை பண்ணி நாறு நறும்‌ பொழில்‌
    மாலிருஞ் சோலை நம்பிக்கு (நாச்‌ திரு. 9 6) என்கிறபடியே அமுது செய்தருளப் பண்ணி, அத்தைக் கண்டருளினதற்குக்‌ கைக் கூலியாக-பின்னுமாளுஞ்செய்வன்‌-உன் பொன்னடி வாழ்க (பெரியா திரு,
    5.3.3) என்று மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி பரம ஸ்வாமியின்‌ திரு முக மண்டலத்தை ஸேவித்து -நங்கள் குன்றம்‌ கை விடான்‌(திருவாய்‌ 10-8-4) என்று ஆழ்வாரருளிச்‌ செய்த பொய்யில் பாடலை
    அந்வர்த்த ஸித்தமாக்கி யருள வேணுமென்று ப்ரார்த்தித் தருளி;

    ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலுக் கெழுந்தருளியது
    அங்கு நின்றும்‌ புறப்பட்டு மாலிருஞ் சோலை மணாளனார்‌ பள்ளி கொள்ளுமிடமான திருவரங்கன் திருப்பதியைக்‌ குறித்து எழுந்‌ தருளி -கொடி யணி நெடு மதிள்‌ கோபுரம்‌ குறுகினர்‌ (திருவாய்‌-10-9-8)என்னும்படி கிட்டியவாறே அங்குண்டான வர்களெல்லாம்‌ எதிர் கொண்டு வந்து திருவடி களிலே ஸேவித்து
    வகுள தர ஸவித்ரீம்‌ யாதி யஸ்மிந் தரித்ரீம்‌ மது மதந நிவாஸோ ரங்க மாஸீ தஸாரம்‌ |
    புநரிபி ஸூஸம்ருதம்‌ பூயஸா ஸம் ப்ரவிஷ்டே’ வர வர முநிவர்யோ மாநுஷ:ஸ்யாத் கிமேஷ ॥

    எந்த மணவாள மா முனிகள்‌ மகிழ் மாலை மார்பரான நம்மாழ்‌வாருடைய பிறப்பிடமான திரு நகரியை அடைந்திருந்த போது மதுமதநனான பெருமாளுக்கு வாஸஸ்தானமான திருவரங்கமானது பொலிவற்றதாய்ப்‌ போயிற்றோ அவர்‌ அங்கு மீண்டும்‌ எழுந்தருளின வளவில்‌ அந்த ஸ்ரீரங்கம்‌ மிகவும்‌ நன்றாக பொலி வுற்றது; இந்த மணவாளமாமுனிகள்‌ மனிதராக எண்ணத் தக்கவராவாரோ?] என்றநுஸந்தித்து ப்ரீதராய்‌ ப்ரதிபத்தி பண்ண,அவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி அவர்களுடனே கூட-ப்ரதமம்‌ எம்பெருமானாரைத்‌ திருவடி தொழுது அவர்‌ புருஷகாரமாக ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌ பெரிய பெருமாளையும்‌ திருவடி தொழுது அவர்கள்‌ ப்ரஸாத விசேஷங்களையும்‌ பெற்று மடம் யெழுந் தருளி -ரங்கே தாம்நி ஸுகாஸீதம்‌” என்‌கிறபடியே திருமலை யாழ்வாரிலே இனிதாக வீற்றிருத்து வ்யாக்யாநித்து அகிலரையும்‌ ஆநந்திப்‌ பித்துக் கொண்டு வாழ்த்தருளா நிற்க, முதலிகளும்‌ அவ் விருப்புக்கு
    ஜய துயஸ ஸாதுங்கம் ரங்கம்‌ ஜகத் த்ரய மங்களம்‌
    ஜயதுஸுசிரம்‌ தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்‌
    வரத குருணா ஸார்த்தம்‌ தஸ்மை ஸுபாந்ய பிவர்த்தயந்‌
    வரவரமுநி:ஸ்ரீமாந் ராமாநுஜோ ஐயது க்ஷிதெள ॥

    [பெருமையினால்‌ உயர்ந்து முவ் வுலகுக்கும்‌ மங்களாவஹமான திரு வரங்கமானது பெருமை யுற்று விளங்க வேணும்‌; அத்‌ திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திவ்ய ஆபரணமாக வுடையனான எம்பெருமான்‌ பல்லாண்டாக விளங்க வேணும்‌; அவ் வெம் பெருமானின்‌ பொருட்டு வரத குருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குபவரான
    ராமாநுஜாபரா வதாரரான மணவாள மா முனிகள்‌ இப் புவியில்‌ விளங்க வேணும்‌-என்று மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு வாழ்ந்தருளுகிற காலத்திலே

    அழகர்‌ கோவிலுக்கு நிர்வாஹகராக ஒரு ஜீயரை அனுப்பியது -இவர்‌ அழகருக்குப்‌ பண்ணிய மங்களாசாஸனம்‌ பலித்து அழகர்‌ மீண்டும்‌ தம் கோயிலிலே குடி புகுந்தருளி ஜீயருக்குத் தம்‌
    திருமுகமெழுதி,நாம்‌ உம்முடைய நினைவின்படியே வந்து-“நங்கள்‌ குன்றங்கைக் கொண்டு குடிபுகுந்‌தோம்‌; நம்‌ வீட்டில்‌ கார்யமாராய்ந்து நன்றாக நடத்தி யருளும்‌ ஒருவரை வரவிட
    வேணும்‌’ என்று வரக் காட்டி யருள, ஜீயரும்‌ போர உகந்தருளி எதிராஜ ஜீயர்‌ என்னு திருநாம முடையராய்‌ மஹா விரக்தராய்‌ மங்களாசாஸன பரராயிருக்குமரை அழகர்‌ ஸ்ரீ கார்யார்த்தமாக அனுப்பி யருள, அவரும்‌ அங்கே சென்று அழகரை ஸேவிதது ஆசார்ய ப்ரீத் யர்த்தமாக அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினாரிறே
    .

    முதலிகளைக்‌ கொண்டு திவ்ய தேச கைங்கர்யங்கள்‌ செய்வித்தல்‌
    அநந்தரம்‌, ஜீயரை யாஸ்ரயித்த மஹாபலி வாண நாதரும்‌ திருமாலை தந்தான்‌ தோழப்பரை (திருமலை தோழப்பரை) முன்னிட்டுக்‌ கொண்டு மாலிருஞ் சோலை மாலுக்கு ஸர்வ வித கைங்கர்யங்களும்‌
    செய்து போந்தார்‌. இவர்களாலே அழகர் கைங்கர்யம்‌ ஸம்ருத்த மாயிற்று. இப்படி கோயில்‌ திருமலை முதலான திருப்பதிகளின்‌ கைங்கர்ய மெல்லாம்‌ குறைவறக்‌ கொண்டருளு கையாலே மிகவு முகப்புடனே எழுந்‌தருளிருக்கும்‌ காலத்திலே துளவருடைய வம்சத்திலே பிறந்து தேசாந்தரத்திலே திரிந்து போருவானொரு பிள்ளை திருவடிகளிலே வந்து ஆஸ்ரயிக்க, அவரை விசேஷித்து க்ருபை பண்ணி யருளி,-ஸ்ரீராமானுஜ தாஸர்‌’-என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்து அவரைக்‌ கொண்டு அநேகம் திருப் பதிகளில்‌ கைங்கர்யமெல்லாங்‌ கொண்டருளப் பண்ணும்படிக்கு விசேஷாபிமானஞ்‌ செய்தருள, அவ்விசேஷ கடாக்ஷ மடியாக பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திருப்பதிகளில்‌ அவரைக் கொண்டு கைங்‌கர்யங்களெல்லாம்‌ கொண்டருளப்‌ பெற்றது. அநந்தரம்‌ ஜீயரும்‌.
    திவ்யோத்‌வ ப்ரஸங்கேஷு தேவ தேவ மதந்த்ரித: |
    ஆஸாஸாநஸ் ஸமா ஸீதந் நத்ராக்ஷீத்‌ ரங்க பூஷணம்‌ ॥

    [விசேஷமான உத்ஸவ காலங்களில்‌ சோர்வில்லாமல்‌ ஸர்வேசஸ்வரனான ஸ்ரீரங்கநாதனை அணுக்கராய்‌ ஸேவித்து மங்களாசாஸனம்‌ பண்ணினார்‌ ] என்கிறபடியே திவ்யோத்ஸவங்களிலும்‌ நம்பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு
    கஸ்தூரி ஹிம கற்பூர ஸ்ரக்‌ தாம்பூலா அநுலேபரை: |
    திவ்யைரப்ய பஜத்‌ போஜ்யை: ரங்கநாத திநே திநே –

    அநுதினமும்‌ ஸ்ரீரங்கநாதனை கஸதூரி, பச்சை கற்பூரம்‌,பூமாலை, அடைக் காயமுது, பரமள த்ரவ்பங்கள்‌. இவற்றினால்‌ உபசரித்தராதித்தார்‌. என்கிறபடியே ப்ரதி தினமும்‌ பாங்காக கிஞ்சித்கார பூர்வகமாக கைங்கர்யங்களையும்‌ நடத்திக் கொண்டு, மார்கழி மாஸத்திலு மப்‌படியே
    காலே கோதண்ட மார்த்தாண்டே காங்ஷந்நே வாருணோதயம்‌ |
    ந்யஷேவத விஸேஷேண ஸேஷிணம்‌ ஸேஷ ஸாயிநம்‌ ॥ –
    மங்களாநி ப்ரயுஞ்ஜாநோ மாதம்‌ ப்ரத்ய போதயத்‌
    ஸம்யகேநம்‌ ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை : க்ரமை: ॥
    ஸ்வ ஸ்வ காலோசிதைர் திந்யை : ஸ்வாங்கல்போப லம்பிதை: |
    அபோஜயதயம்‌ போஜ்யை ஸாக மூல பலாதிபி; ॥
    ஸுூபா அபூப க்ருதக்ஷீர சர்க்கரா ஸஹிதம்‌ ஹவி: |

    தநுர் மாதத்தில்‌ அருணோயத்திற்கு முன்னே அரவணை மேல்‌ பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்‌தார்‌. மங்களமான பாசுரங்களை அநுஸந்தித்து திருமகள்‌ மணாளனை திருப் பள்ளி யுணர்த்தினார் – எல்லாப் படியாலும்‌ சாஸ்த்ர முறையான திருவாராதன க்ரமங்களால்‌ எம்பெருமாளை நன்றாக ஆராதித்து, பின்னர்‌ மணவாள மாமுனிகள்‌ தமது நியமனப்படி வரவழைக்கப்பட்ட தத்தத் காலோசிதங்களாய்‌ உயர்ந்தவையான காய்‌, கிழங்கு, பழம்‌, முதலான இனிய பதார்‌ த்தங்களுடன்‌ வடை,பருப்பு, நெய்‌, பால்‌ சர்க்கரை இவைகளுடன்‌ கூட ப்ரஸாதத்தை
    அமுது செய்தருளப்‌ பண்ணினார்‌ ]
    செந்நெலரிசி பருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய்‌ பாலால்‌ என்று சொல்லப்‌ படுகிற அக்கார வடிசில்‌ தொடக்கமான அனேக வகைத்‌ தளிகைகளும்‌ அமுது செய்தருளப் பண்ணிப் போருகிறதுக்கு மேலே ஒன்றும்‌ தேவும்‌ சிறப்பும்‌, கண்ணி நுண்‌ சிறுத்தாம்புச்‌ சிறப்பும்‌, நூற்றந்‌ தாதிச்‌ சிறப்பும் ப்‌ரதி ஸம்வத்ஸரம்‌ பெருமாளும்‌ நாச்சியாரும்‌ உகந்து அமுது செய்தருளும்படி நன்றாக நடத்திக் கொண்டு ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ல்யாக்யாளங்களுடன்‌ அநுதினம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ நாளிலே

    பெரியாழ்வார்‌ திருமொழிக்கு வ்யாக்யானம்‌ அருளிச் செய்தல்‌
    பெரியாழ்வார்‌ திருமொழிக்குப்‌ பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த வ்யாக்யானம்‌ காணாமையாலே அதற்கு வ்யாக்‌யானம்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ (திருபபாணாழ்வார் தாதர்‌ நாயனாருக்கு)
    செந் தமிழிலாழ்வார்கள்‌ செய்த வருளிச்‌ செயலை
    சிந்தை செயல்‌ தன்னுடனே செப்பலுமாம்‌-அந்தோ
    திருப்பாணாழ்வார் தாதர்‌ நாயனார்‌ சேர
    விருப்பாராகில்‌ நமக்கீடாவர்‌ யார்‌

    சிந்தையினால்‌ தேறலுமாம்‌ வாய் கொண்டு செப்பலுமாம்‌’என்று திருமுகம்‌ போக விட்டருள, அவரும்‌ திருநகரியிலே தம் திருநந்தவனத் திலிருக்கிறவர்‌ அந்த ஸ்ரீஸக்தியைக்‌ கண்டு உகந்து சிரஸா வஹித்து, திருநந்த வனத்தினின்றும்‌ அப்போதே புறப்பட்டு அதி சிக்ரமாக வெழுந்தருளி வந்து ஸேவித்து நிற்க, அவருடைய அத்வ ஸ்ரமத்தையும்‌ ஸ்வ விஸ்‌லேஷத்தா லுண்டான பெரு விடாயையும்‌ தத் விக்ரஹத்திலே கண்டு “மிகவு மிளைத்தீரே”’ என்று குசல ப்ரஸ்நம்‌ பண்ணிக்‌ குளிர கடாஷித்தருளி, பிற்றை நாள்‌ அவரையுங் கூட்டிக் கொண்டு திருமொழி நாலு பத்தளவாக நன்றாக வ்யாக்யாநஞ்‌ செய்தருளி மற்றை நாற்பது பாட்டுக்களுக்கு சேஷித்திருந்த பூர்வர்கள்‌ வ்யாக்‌யானத்தை அழைப்பித்து அத்தோடு சேர்ப்பதாக வைத்திருக்க,
    கந்தாடை நாயன்‌ ஜீயரருளிய வ்யாக்யானத்தை ஸேவித்தது
    அப்போது அதி பாலரா யிருக்கிற கந்தாடை நாயன்‌ அங்கே எழுந்தருளி ஜீயருடைய ஸ்ரீ ஸூக்திகளையும்‌ அபயப்ரதராஜ ஸூரி ஸ்ரீஸூக்திகளையும்‌ ஆலேகித்து அவற்றில்‌ அபய ப்ரதராஜ ஸுரி திவ்ய ஸூக்தியைக்‌ கீழே ஒரு பீடத்திலிட்டு வைத்து அபிராமவர யோகி திவ்ய ஸுூக்தியை ஆதரேண ஆலோகியா நிற்கிறவர்‌ “இந்த நாற்பது பாட்டுக்கும்‌ சேஷிடாதே முற்றப் போகா தொழிவதே!’என்ன; இத்தை மணவாளமாமுனிகள கேட்டருளி, ‘அதிபால்யத்‌திலே இவருக்கு இத்தனை ஞான பூர்த்தி யுண்டாவதே!’” என்று உகந்து, நாயனைக்‌ “கருணை பொங்கிய கண்ணிணைகளாலே கடாக்ஷித்து அழைத்தருளி “ஒன்றைப்‌ பொகட்டு ஒன்றைஆதரிப்பானென்‌); இங்ஙன மிருப்ப தொன்றுண்டோ?”?. என்று கேட்டருள, நாயனும்‌, மாம்பொழிற்றளிர் கோதிய மடக்குயில்‌ வாயது துவர்ப்பெய்த தீம்பலங் கனித்தேனது நிகர்‌”என்று சொல்லுகிறபடியே அஸாரத்தை விட்டு ஸாரத்தைப் பற்றுகை யன்றோ ஸாரஜ்ஞ க்ருத்யம்‌; ஆகையாலே அதிலுமிது மஹா ரஸ வாக்ய ஜாலவத்தா யிருக்கிறதென்று ஆதரித்தது என்ன, ஜீயரும்‌ அது கேட்டாநந்தித்து இவரும்‌ ஒரு அவதார விசேஷமென்று ஆலிங்கித்‌துக் கொண்டருளினார்‌. *இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நாலூர்‌ பிள்ளை (திருவாய் மொழிப் பிள்ளை )யிட்டருளின வ்யாக்யானங்களெல்லாவற்றிலும்‌ அதிசயித்திறே இவருடைய ஸூக்தி வைபவமிருப்பது-இப்படிப்‌ பெரியாழ்வார்‌ திருமொழிக்கு ஸாவஜந ஹ்ருதய மாம்படி வ்யாக்யானஞ் செயதருளி, திருப் பாணாழ்வார்‌ தாதர் நாயனார்க்கு
    பிள்ளை லோகாசாரியர்‌ திருக்கை ஸ்பர்சமுடையராய்‌ ஸ்ரீரங்க ராஜ: பதிமே ஸஹாய:’ என்கிறபடியே தமக்குத் துணையாய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீ ரங்கராஜரையும்‌ திருவாராதனமாக ப்ரஸாததித்து விடை கொடுத்தருளினார்‌.

    ஜீயர்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யான மருளியது
    அநந்தரம்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யாநஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்த்‌ திரு மேனியில்‌ தெளர்ப்பல்யத்தையும்‌ பாராமல்‌ திருவணையிலே சாய்ந்தருளினபடியே திருக்கழுத்து நோவத் திரு வெழுத்துச் சாத்தி யருளும்படியைக்‌ கந்தாடை யண்ணன்‌ கண்டு தேவரீர்‌ இப்படி எதுக்காக ப்ரயாஸப்படுவது?’” என்ன, ஜீயரும்‌“உம்முடைய புத்ர பெளத்ராதிகளுக்காகப்‌ படுகிறேன்‌” என்றருளிச்‌ செய்து வ்யாக்யானத்தை யருளிச்‌ செய்து தலைக் கட்டினார்‌.

    ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌ -அஷ்ட கோத்ர நிபந்தனை–
    அக் காலத்தில்‌ பெரிய திருமலை நம்பி திருவம்சஸ்தரான ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயருடைய அப்ரதிம ப்ரபாவத்தைக் கேட்டு-பெருமையும்‌ நாணும்‌ தவிர்ந்து ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களை
    முன்னிட்டு அநந்ய சரணராய்‌ ஜீயர்‌ திருவடிகளை ஆஸ்ரயிக்க, அவரை க்ருபை செய்தருளி, தன் மூலமாக வந்த திரவியத்தை ஆழ்வார்‌ திருக் கோபுர கைங்கர்யத்துக்கு திரு நகரிக்குப்‌ போக
    விட்டருளினார்‌. அக் கைங்கர்யம்‌ சிறிது குறையாக விருக்க பின்பு ஜீயர்‌ நாயனார்‌ அக் குறையைத்‌ தீர்த்தருளி சிகர பர் யந்தமாக நிறைவேற்றி யருளினார்‌- பின்பு போளிப் பாக்கம்‌ நாயனாரை
    அழைப்பித்தருளி அவர்‌ முகமாக ஸப்த கோத்ர நிபந்தனை செய்‌தருளி அதில்‌ இந்த ஏட்டூர்‌ சிங்கராசாரியரையுங் கூட்டிக் கொண்டு அஷ்டகோத்ர ஸங்கயை யாயிரும்‌ என்று நியமித்தருளினார்‌.

    இப்படி வாசா மசோசரமான வைபவத்தை யுடைய ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து
    ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜநிஷ் யத்ய பரோ முநி |
    ததாஸ்ரயாஸ் ஸதாசாராஸ்‌ ஸாத்விகாஸ் தத்வ தர்‌ஸிந : ॥

    [ஐகத் ரக்ஷணத்தில்‌ ஊன்றி யுள்ள திருவநந்தாழ்வான்‌’ வேறு முனிவராக-மணவாளமாமுனியாக- அவதரிக்கப்‌ போகிறார்‌. அவரை ஆஸ்ரயிப்போர்‌ நல்ல ஆசார சீலர்களாகவும்‌, ஸாத்விகர்களாகவும்‌ தத்வார்த்தங்களை உணர்ந்தவர்களாகவும்‌ ஆவார்கள்‌ என்கிறபடியே ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அநவரதம்‌ ஜீயரை ஸேவித்துக்‌ கொண்‌டிருக்கும்‌ முதலிகள்‌; (இந்த ஸ்லோகம்‌ துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பருக்கு ஸ்வப்‌நத்தில்‌ கச்சிப்‌ பேரருளாளன்‌ அருளியதாக இந்த நூலின்‌ தொடக்கத்தில்‌ வந்துள்ளது காண்க, )

    அஷ்டதிக்கஜங்கள்‌
    பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர் பிரான்‌
    ஆராமம்‌ சூழ் கோயில்‌ கந்தாடை யண்ணன்‌ எறும்பி யப்பா
    ஏராரு மப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதி பயங்கரரென்‌
    பேரார்ந்த திக் கயஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே

    என்று சொல்லப்பட்ட வானமாமலை ஜீயர்‌, திருவேங்கடஜீயர்‌-பட்டர் பிரான்‌ ஜியர்‌, கந்தாடை யண்ணன்‌, எறும்பி யப்பா, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கர மண்ணா என்கிற அஷ்ட திக்கஜங்களுக்கும்‌, திருப்பாணாழ்வார்‌ தாஸர்‌, ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌, வரந் தரும்‌ பெருமான்‌ பிள்ளை, மேனாட்டுத்‌ தோழப்பர்‌,அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌, ஜீயர்‌ நாயனார்‌, அண்‌ணராய சக்ரவர்த்திகள்‌ தொடக்கமானாரும்‌ ஜகத் ரஷா பரோ அநந்தோ…தத்வ தர்ஸிந:” என்கிறபடியே இவர்களெல்லாரும்‌ ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ ஜகதுஜ்‌ஜீவநைக பரராய்‌ இருப்பார்கள்‌.

    முதலிகளுக்கு வகுத்த கைங்கர்யங்கள்‌
    இப்படிப்பட்ட திக்கஜங்களாலும்‌ மற்றுமுள்ள முதலிகளாலும்‌ ஸேவ்யமாநரா யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே நித்யகைங்கர்யம்‌ செய்யும்‌ முதலிகளாரென்னில்‌:
    1-வானமாமலை ஜீயர்‌-பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ ஆஸ்ரயித்தவன்‌று தொடங்கி பிரியாதாட்‌ செய்‌திருப்பர்‌,
    2-கந்தாடை அண்ணன்‌ ‘“ராமாநுஜ முநீந்த்ரஸ்ய ஸ்ரீமாந் தாஸரதிர் யதா” என்று உடையவருக்கு முதலி யாண்டானைப் போலே அத்யந்தம்‌ பீரீதி விஷய பூதராய்‌ பாதுகா ஸ்தாநீய் இருப்பர்‌
    3-எறும்பி யப்பா வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே ஜீயருக்கு அத்யந்த மபிமதராயிருப்பர்‌.
    4- ப்ரதிவாத பயங்கர மண்ணா உடையவர்‌ திருவடிகளுக்குக்‌ கூரத் தாழ்வான்‌ போலே ப்ரதி பக்ஷ நிரஸந பூர்‌ வகமாக ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத் துணையா யிருப்பர்‌.
    5-ஸேனை முதலியாரண்ணன்‌, சடகோப தாஸர்‌, அப்பிள்ளை, திருப்பாணாழ்வார்‌
    தாஸர் இவர்கள்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயல்களுக்கு உசாத்துணையாய் இருப்பர்கள் -விசேஷித்து அப்பிள்ளை ஜீயர் நியமனத்தாலே ஐந்து திருவந்தாதிகளுக்கும் உரை யருளிச்‌ செய்து யதிராஜ விம்ஸதிக்கும்‌ வ்யாக்யாத்ம்‌ செய்தருளினார்‌.
    6-அப்பிள்‌ளார்‌ மட த்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ பரித்துக் கொண்டு தளிகைக்குப்‌ பாங்காக அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பாலமுது, நெய்‌யமுது,தயிரமுது தொடக்கமானவை நடத்திக் கொண்டு போருவர்‌
    7-பட்டர் பிரான்‌ ஜீயர்‌ எம்பாரைப்போலே ஸ்ரீபாதச்சாயா பந்தராய்‌ பிரியில்‌ தரியாமையை முன்னிட்டு அடிமை செய்து ததேக நிஷ்டராய்‌ ஸர்வவித கைங்கர்யங்களிலும்‌ அந்வயிததுத்‌ திருவடிகளை யல்லது ஒரு தெய்வ மறியா திருப்பர்‌,
    8-ஜீயர்‌ நாயனார்‌ இளவரசராய்‌ எல்லார்க்கும்‌ உத்தேச்யராய்‌ திருக் குருகைப் பிரான்‌ பிள்ளாளைப்போலே அத்யாதரணீயராயிருப்பர்‌

    இப்படி இவர்களாலே ஸேவ்யமானரா யிருக்கிற வரவரமுநிவர்யரான பெரிய ஜீயர்‌, திருமகள்‌ தன்‌ கொழுநன் திருக்ழல்‌ சேர்‌ மா்றனடி பரவும் எதிராசர்‌ செம் பொற் பாத மிரவு பகல்‌ மறவாமலிறைஞ்சி யேத்து மெழில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை யிணைத்தான்‌ பேணுமவரான மணவாள மா முனிவனெந்தை மண்ணுலகலவதரித்து வாழ்ந்த பின்‌ முன்னறிவெனவு மறியாத மானிடவரெல்லாமுதிதான வர்த்த பஞ்சக நிஷ்டரார்‌ என்றும்‌,
    இத்தம்‌ ப்ருத்யா நர்த்திரஸ் தோஷ யித்வா தேஸே தஸ்மிந் தர்ஸயந் வைபவம்‌ ஸ்வம்‌
    ப்ரத்யா வ்ருத்தஸ் த்வந்திமோபாய தத்வம்‌ தத்ரத்யேஷு ஸ்தாபயித்வா ஜநேஷு ॥
    -இப்படி விஷயங்களை யறிய வேணுமென்று வந்த சிஷ்யர்‌களை மகிழ்‌வித்துக்‌ கொண்டு அந்த திவ்ய தேசத்தில்‌ தமது வைபவங்களை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு அங்குள்ள வைஷ்ணவரிடையே அந்திமோபாய நிஷ்டையில்‌ உண்‌மையை நிலை நிறுத்தித்‌ திரும்‌பி யெழுந்‌தருளினார்‌ என்றுசொல்லுகிறபடியே-)ஜகத்திதுண்டான சேதனரெல்லாரையும்‌ அர்‌த்த பஞ்சக நிஷ்டராயும்‌ அந்திமோபாய நிஷ்டராயும்‌ உஜ்ஜீவிக்கும்படிக்குத் திருத்தி வாழ்வித்ருளி நாயனாருக்குத்‌ திரு வாய் மொழி ஈடும்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ விசதமாக ப்ரஸாதிக்கும்படி,அண்ணனையும்‌ அண்ணாவையும்‌ நியமித்தருளி க்ருதார்த்த்ராய்‌,
    தென்னரங்கா்‌ சீரருஞக்கிலக்காகப்‌ பெற்றோம்‌
    திருவரங்கந் திருப்பதியே இருப்பாகப்‌ பெற்றோம்‌
    மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்‌
    மதுரகவி சொற் படியே நிலையாகப்‌ பெற்றோம்‌
    முன்னவராநங் குரவர்‌ மொழிகளுள்ளப்‌ பெற்றோம்‌
    முழுது நமக்கிவை பொழுது போக்காகப்‌ பெற்றோம்‌
    பின்னை யொன்று தனில் நெஞ்சம்‌ போராமற் பெற்றோம்‌
    பிறர் மினுக்கம்‌ பொறாமை யில்லாப்‌ பெருமையும்‌ பெற்றோமே

    என்று இப்படி ஸ்வ நிஷ்டா விசேஷத்தை மதித்துக் கொண்டு அகாரண க்ருபா பரிதஸ்வ விஸேஷ கடாஷ பாதேந புளி முதலான வ்ருஷாதிகளையும்‌ உஜ்ஜீவிப்பித்துக்‌ கொண்டெழுந் தருளியிருந்‌தார்‌. யம் யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌” என்கற ஸ்லோகார்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமாய்‌ பலித்தபடி கண்ட பின்பு மனுஷ்யரான ஜ்ஞாநிகளுக்குஜ்ஜீவநம்‌ கிம் புநர்‌ ந்யாய ஸித்தமிறே-

    தத்‌ பாத பத்ம ஸம் ஸ்பர்ஸ பாவநம்‌ ஸலிலம்‌ ஐநா |
    ஸ்வீகுர் வந்தஸ் ஸூகேநைவ ஸ்வரூபம்‌ ப்ரதி பேதிரே ॥
    ஆலோகைர நுகம்பாத்யை ராலாபைரம்ரு தச்யுதை: !
    அந்வஹம்‌ பாணி சாதன்‌ய ஸ்பர்ஸந் யாஸைஸ் சபாவநை : ॥
    மந்த்ர ரத்ந ப்ரதாநேந ததர்த்த ப்ரதி பாதநாத்‌ |
    ஆத்மார்ப்பணேந கதிசிதஜ் ஞாதஜ் ஞாபநே ந௪ ॥
    கேசித் ஷேமம் யயுஸ்‌ தஸ்ய பாதபத்மஸ்ய ஸம்ஸ்ரயாத்‌ |
    அந்யே தத் ரூப நித்யா நாதந்யே தந் நாம கீர்தீதநாத்‌ ॥
    ஸம்ருத்வா தஸ்ய குணான் திவ்யாந்‌ ஸ்துத்வாதாநேவ கேசந |
    நத்வாதாம்‌ திஸ முத்திஸ்ய ஸ்ம்ருத்வா தத் வைபவம்‌ பரே ॥
    அபதிஸ்ய கமப்பயே நமந்யே ப்ரதித வைபவம்‌ |
    அந்யேதத்‌ பருத்ம ப்ருத்யா நாம லோக ஸ்பர்ஸ நாதபி:॥
    அந்யே தத்பாத ஸம்‌ ஸ்பர்ஸ தந்யே ஸம்பூய பூதலே |
    அபவந்‌ பூயஸா தஸ்ய முநே : பாத்ரம்‌ க்ருபாத்ருஸநம்‌ ॥
    ஏவம்‌ ஸர்வே முநீந்தரேண பபூவுஸ் ஸ்ரஸ்த பந்தநா;
    |
    [அம் மணவாள மாமுனிவருடைய திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்‌தத்‌தினால்‌ பரிசுத்தமான ஸ்ரீபாத தீர்‌த்தத்தைப்‌ பருக அடியார்கள்‌ எளிதில்‌ தமது ஸ்வரூபத்தை (சேஷத்வத்தை)உணர்ந்தனர்‌. அவருடைய திவ்ய கடாக்ஷத்தாலும்‌ அம்ருதம் போல்‌ பாயா நின்ற க்ருபாதிசயத்தாலும்‌, திருவடிகளின்‌ ஸ்பர்சத்தாலும்‌ அவற்றில்‌ பர ஸமர்ப்பணத்தினாலும்‌, மந்த்ர ரத்நமான த்வயத்தை ௨பதேசமாகப்‌ பெற்றும்‌ அதன்‌ பொருளை அருளிச்‌ செய்யக்‌ கேட்டும்‌ சிலர்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தினாலும்‌ (ப்ரபத்தியாலும்‌)), தமது அறியாமையை விண்ணப்பம்‌ செய்வதாலும்‌, (சிலர்‌) அம்மா முனிவருடைய திருவடித் தாமரைகளில்‌ ஆஸ்ரயிப்பதாலும்‌, ஆத்மோஜ்‌ ஜீவனத்தை (க்ஷேமத்தை) அடைந்தார்கள்‌. சிலர்‌ அம்மாமுனிவருடைய திருமேனியை எப் போதுமாக தியாந விஷயமாக்குதலாலும்‌, அவர்‌ திரு நாமங்களைப்‌ பாடுதலாலும்‌,சிலர்‌ அவருடைய கல்யாண குணங்களைக் கேட்டு அவற்றைக் கொண்டு அவரைத்‌ துதித்தும்‌, அவர்‌ எழுந்தருளி யுள்ள திக்கு நோக்கித்‌ தண்டனிட்டும்‌,அவருடைய பெருமைகளைச்‌ சிந்தித்து மூழ்ந்தும்‌, இப்படிப்பட்ட வைபவமுடைய ‘ஸ்வாமியை ஈடற்றவராக நிச்சயித்தும்‌, சிலர்‌ அவருடைய தாஸ தாஸர்களின்‌ கடாக்ஷித்தினாலும்‌ ஸ்பர்ஸத்தினாலும்‌, அவர்களின்‌ பாத ஸ்பர்ஸத்தினாலும்‌ தன்யமான இப்‌பூவுலகில்‌ (பாக்ய சாலிகளாக) பிறந்து, அம் முனிவருடைய க்ருபா கடாஷத்திற்கு மேலான பாத்ர பூதர்களாக ஆனார்கள்‌. இப்படி
    யாவரும்‌ முநீந்தரரான மணவாள மாமுனிகளருளாலே பந்தங்‌கள்‌ நீங்கியவர்களாக ஆனார்கள்‌] என்கிற படியே தம்முடைய ஸ்ரீபாத தீர்‌த்த ஸ்வீகாராதிகள்‌ தொடக்கமாக ஈஷண த்யாந ஸம்ஸ்பர்ஸாபிமாநாதி விசேஷங்களாலே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு பவிஷ்யோத்தர முண்டாமவர்களோடு வாசியற ஸர்வரையும்‌ ஸம்ஸாராதுத் தீர்ணராம்படி பண்ணி ஸம்ஸார பரமபத விபாகமற பூதலமெங்கும்‌ பொன்னுலகமாக்கி, இனி தேடித்‌ திருந்தும் படியாக வொழிந்த தசையாய்‌

    ஸர்வாவஸ்தா ஸத்ருஸ விபவா ஸேஷக்ருத்த்வம்‌ ரமயா பர்த்து;
    த்யக்வா ததபி பரமம்‌ தாம தத் ப்ரீதி ஹேதோ: |
    மக்நா நக்நெள வரவரமுநே மாத்ரு ஸாநுக்கி நீஷந்‌
    மர்த்யா வாஸே பவஸி பகவந்‌ மங்களம்‌ ரங்க தாம்‌ந : ॥

    (கல்யாண குண பூர்ணரான மணவாள மா முனிவரே! ஸ்ரீய:பதியான எம்பெருமானுக்கு எல்லா நிலைகளிலும்‌ தகுந்தபடி வைபவம்‌ மிக்க குற்றேவல்கள் அனைத்தும்‌ செய்து கொண்டுள்ள தேவரீர்‌ அந்தப்‌ பரம பதத்தையும்‌ விட்டு அவ் வெம்பெருமானுடைய பிரீதியின்‌ பொருட்டு ஸம்ஸாராக்நியில்‌ அழுந்திக் கிடக்கிற அடியேன்‌ போல்‌வாரை உத்தரிப்பிக்கத்‌ திருவள்ளமாய்‌ இம் மாநிட வுலகில்‌ திருவரங்கமான திருப்பதிக்கு அணி விளக்‌ஈய்‌ உள்ளீர்‌] என்றபடியே தம்முடைய அவதார காரியம்‌ தலைக் கட்டி யருளி:

    இராமானுசன் திருவடிகளே சரணம்‌,-இராமானுசாய நம : என்றது நடுவாக இந்த வரங்கர்‌ என்று தலைக் கட்டி அருளிச் செய்ய- அதுவே-ஆர்த்தி என்று அறுபது பாட்டாய்‌ ஒரு ப்ரபந்தமாய்த்‌ தலைக்‌
    கட்டிற்று
    , அந்த அபிநிவேசம்‌ அவ்வளவிலே நில்லாதே பரவி
    எம்பெருமானார்‌ தம்பிரானென்னுமவரை
    நம்பெருமாள்‌ தாமுகந்து நாள் தோறும்‌–தம் பரமா
    ஏறிட்டுக் கொண்டளிப்ப ரென்றுமவர்‌ தம்மை
    வேறிட்டுத்‌ தாங் கைவிடார்‌ —
    என்று தேறுவதென்றும்‌,
    பொல்லானிவனென்று போதிடென்று நங்குரவ
    ரெல்லாரு மென்னை யிகழ்ந்தாரோ-நல்லார்கள்‌
    வாழ்வான வைகுந்த வான்‌ சபையில்‌ வண் கூரத்‌
    தாழ்வானி ருந்திலனோ வங்கு?
    என்று கலங்குவதுமாய்‌ அநுகம்பாஞ்சலி யானவர்களை ஆராய்‌வதும்‌,
    ஆரியர்காள்‌! ஆழ்வீர்காள்‌! அங்குள்ள முக்தர்காள்‌ !
    சூரியர்காள்‌! தேவியர்காள்‌! சொல்லீரோ–நாரணற்கு
    எங்களடியானிவன்‌ மீடேற வேணுமென்‌
    நுங்களடியரருமுள
    என்று கடகர்‌ பலரையும்‌ பல கால்‌ கால் கட்டி அர்த்திப்பதும்‌,
    தென்னரங்கர்‌ தேவியே! சீரங்க நாயகியே!
    மன்னுயிர்கட்கெல்லாம்‌ மாதாவே!–என்னை யினி
    இவ் வுலகந் தன்னிலிருந்து நலங்காமல்‌
    அவ் வுலகில்‌ வாங்கி யருள்‌
    என்றும்‌
    சீ ரங்க நாயகியே! தென்னரங்கள்‌ தேவியே! ்‌
    நாரங்கட்கெல்லாம்‌ நற்றாயே ! — மாருதிக்கு
    வந்த விடாய்‌ தன்னை யொரு வாசகத்தால்‌ போக்கின நீ
    எந்தனிடர்‌ தீராத தென்‌
    ? என்றும்‌ மறுக்க வொண்ணாத மாத்ருத்வ ஸம்பந்தத்தைச்‌ சொல்லி மடி பிடிப்பதும்‌
    இந்த வுடம்‌ போடினி யிருக்கப்‌ போகாதுன்‌
    செங்கமலத் தாள் தன்னைத்‌ தந்தருள்நீ–அந்தோ
    மையார் கருங் கண்‌ணி மணவாளா! தென்னரங்கா!
    வையாம லிருப்பாயே யிங்கு
    -என்று ஆர்த்ர ஹருதயத்வ விஸிஷ்டராய்–ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டரான – அவர் முன்பே தம்‌முடைய ஆர்த்தியைச்‌ சொல்லுவதும்‌,

    சென்று திருமாலடியார்‌ தெய்வக் குழாங்கூடு
    மென்று மொரு நாளாமோ? ஆழ்வாரே!-துன்னு புகழக்‌
    கமலம்பாடினீரையோ அடியேனுமிக்‌
    கமலஞ் சேர் காயம்‌ விட்டு
    (கமலம்பாடி நிறையா அடியேனுமிக்‌–பாட பேதம்)என்று “அடியார்கள்‌ குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ? என்று அர்த்தித்த ஆழ்வாரிடத்தில்‌ ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யத்தை அபேக்ஷிப்பதும்‌
    இந்த வுடம்போ டிருவினையாலிவ்வளவும்
    உந்தனடி சேராதுழன்றேனே–அந்தோ
    அரங்கா! இரங்கா யெதிராசர்க்காக
    இரங்காய்‌ பிரானே இனி–
    என்றும்‌ திருவாங்கா! அருளாய்‌ இனி யுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” என்கிறபடியே மீளவும்‌ மரங்களுமிரங்கும்படி அவர்க்கந்தரங்கரை முன்னிட்டுக் கொண்டு அவரிரக்கத்தை இரப்‌பதுமாய்‌, இப்படி ஒரு தேச விஸேஷத்திலே சென்றாலொழிய தரியாத தசையை யடைந்து எழுந்தருளி யிருக்க;

    அந்த தசையிலே தேசாந்தரஸ்தரான மேல்நா ட்டுத்‌ தோழப்‌பரும்‌ அவர்‌ திருத்தமயனாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரும்‌ பெருமாளை ஸேவிப்‌பதாகக்‌ கோயிலுக்கெழுந்தருள।
    அவர்களைத்‌ தென் மாடத்திருவீதியிலே பட்டர்பிரான்‌ ஜீயர்‌ கண்டருளி, “நீங்கள்‌ எங்கு நின்றும்‌ எழுந்தருளினீர்கள்‌? எங்கேறப்‌ போகிறீர்கள்‌?” என்று கேட்க, அவர்களும்‌ ஸ ஸாத்வ ஸ விநயராய்‌ ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி உகப்போடே யதா மநோ ரதம்‌ வ்ருத்தாந்தத்தை விண்ணப்பஞ் செய்ய, ‘ இப்படி ஜ்ஞாநாக்த்யாதிகள்‌ வடிவிலே தொடை கொள்ளலாம்படி அநுகூலராயிருக்கிற நீங்கள்‌ யதிபுநரவதாரமான நம்முடைய பெரிய ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?” , என்றருளிச்செய்ய-
    அவர்களும்

    அதற்கு இசைந்து மடமேற கூடவெழுந்தருள, மணவாள யோகி தஞ்சமாம்‌ மலர்த் தாளிணைகாட்டி-என்கிறபடியே-ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்கப் பண்ண, அவ்வளவிலே நாயனாரும்-புரை கொண்ட கோயில்‌ மணவாளமாமுனிக்கண்ணருளே” என்றும்‌ போதச்‌ சிவந்து பரிமளம்‌ விஞ்சும்‌ புதுக் கணித்த
    சீதக் கமலத்தை நீரேற வோட்டிச்‌ சிறந்தடியேன்‌ ஏதத்தை மாற்றும்‌ மணவாள யோகி யினிமைதரும்‌
    பாதக் கமலங்கள்‌ கண்டேனெனக்குப்‌ பயமில்லையே என்றும்‌ வாசிக கைங்கர்யமாக இந்தத்‌ திருநாமத்தை விண்‌ணப்பஞ் செய்து கொண்டு
    திருவடிகளிலே ஸாஷ்டாங்கமாக
    தெண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, ஜீயரும்‌ அவர்‌ அபேஷித்தபடியே அமலங்களாகக்‌ கடாக்ஷித்தருளி அப்போது எம்பெருமானார்‌ திறத்திற் சென்ற சிந்தையரான தாம்‌ இவர்கள்‌’ என்றவாறே
    எம்பெருமானாருடைய விசேஷாபிமானமுள்ள திருநாராயண புரத்தை நினைத்து, அவர்‌ அந்திம தசையிலருளிச்‌ செய்தருளின
    கச்சந் பதம் பரமுவாச வசாம்ஸி யாரி
    ராமநுஜார்ய இஹதேஷு சதுர்த்த ஸித்தாம்‌ |
    ஸ்ரீ யாதவாத்ரி வஸதிம்‌ ஸததம் பஜந்தஸ்‌
    ஸக்தோ பவந்தி மம ஸந்ததி மூலநாத: 1

    [எமது குலகூடஸ்தரான எம்பெருமானாருக்‌கு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுமளவில்‌ அருளிச் செய்த (ஆறு) வார்த்தைகளில்‌ நாலாவதான (வார்த்தைப்படி) திருநாராயணபுரத்தில்‌ இடை விடாமல்‌
    வாஸம்‌ செய்பவர்கள் மஹான்களாவர்‌] என்கிறபடியே திரு நாராயண புரத்திலே நித்ய வாஸம்‌ பண்ணுவார்‌ நம்முடைய முதலிகளிலே ஒருவருமில்லையோ?” என்று ஜீயரரருளிச்‌ செய்ய,
    அட்போது தோழப்பர்‌ திருப் பரியட்டத்தைத்‌ தலையிலே முடிந்து கொண்டு -‘இந்தக் கைங்கர்யம்‌ அடியேனுக்காக வேணும்‌”’ என்று ப்ரார்த்திக்க, ஜீயரும்‌ மிகவுமுகந்தருளி, “எம்பெருமானாருக்கும்‌
    நமக்கும்‌ ப்ரியமாம்படி கிஞ்சித்கார பூர்வமாக எதிராஜ குமாரரை ஸேவித்து மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணியிரும்‌” என்று நியமித் தருளினார்‌-

    அண்ண ராயரை பட்டர்பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளுக்கு ஆளாக்கினது
    அந்த சமயத்திலே ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌ திருமலை நல்லான்‌ திருவம்சஸ்தராய்‌ .”இடங்கொள் சமயத்தை யெல்லாம்‌ எடுத்துக்‌ களைந்து ஸ்வமத ஸ்தாபகராயிருக்கிற அண்ணராய சக்ரவர்த்திகள்‌ ஸ குடும்பராக பெருமாளை ளேவிக்க எழுந்தருளிக்‌ கோயிலிலே பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளியிருக்க, அப்போது ஜீயருடைய சரம தசையை தேசாந்தரஸ்த்தரோடும்‌ தத் தேஸிரீயரோடும்‌ வாசியற ஸர்வரும்‌ குழாங் குழாமாகச்‌ சென்று ஸேவித்து மீளுகிறபடியை அண்ணராய சக்ரவர்த்தி திருத்தாயார்‌ ஆச்சி கண்டு, அவ் விசேஷங்சேட்டு, ”அண்ணராயனே! நமக்கு ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?! என்ன, சக்ரவர்த்தியும்‌ இசைந்து எல்லாரையுங் கூட்டிக் கொண்டு ஜீயர்‌ மடத்திலே சென்று பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌ புருஷகாரமாக வந்து ஸேவித்து திருவடிகளிலே வேரற்ற மரம் போலே விழுந்து கிடக்க, ஜீயர்‌ நெடுநாளாக அங்‌கீ கரிக்கைச்கு விஷயங் காணாமையாலே முடங்கிக் கிடந்த திருவடிகள்‌ இப்போது இவரைக் கண்டு (தத ஸ்திமித முத்க்ஷிப்ப சரணம்‌ சக்ரலாஞ்சிதம்‌ |
    க்ருபயாமூர்த்கி விந்யஸ்ப ஸநிநாய குருஸ்ரமம்‌
    ॥ [பிறகு அம் மணவாளமாமுனிகள்‌ சக்கர அடையாளம்‌ பெற்ற நிச்சலமான தம்‌ திருவடிகளை உயர வெடுத்து க்ருபையுடன்‌ அவர்‌ திருமுடியில்‌ வைத்தருளி அவரது பெரு விடாயைப்‌ போக்கினார்‌ -என்கிறபடியே; )நிமிரப் பெற்றுத் தந் திருவடித் தாமரைகளை இவர்‌ திரு முடியிலே வைத்தருள, இத்தைக் கண்டு முதலிகளெல்லாரும்‌ இவருடைய பேறிருந்தபடியென்‌! என்று உகந்தருளினார்கள்‌. ஜீயரும்‌ சக்ரவர்‌த்‌திகளைக் குறித்து எம்பெருமானார்‌ ஜீயரை திருவேங்கட த்ரோஹிகள்‌ நலியா வண்ணம்‌ காத்து ரக்ஷித்து நம்‌ தர்சந விஷயமாக அநேக கார்யங்கள்‌ பண்ணிப் போந்தவரன்றோ நீர்‌!” என்று மிகவுமுகந்தருளி, உமக்குத் தகுதியான பேறில்லையே, சற்று முந்துறச் சேரப் பெற்றீரில்லையே!’ என்று அருளிச் செய்து, பட்டர்பிரான்‌ ஜீயரைப் பார்த்து, வாரீர்‌ கோவிந்தப்ப தாஸரே! என்றழைத்தருளி, :ராமஸ்ய தஷிணோ பாஹு:”‘ [ராமபிரானுக்கு வலது கை லக்ஷ்மணன்‌ ] என்று நமக்கு தஷிண பாஹாு ஸ்த்தாநீயரன்றோ நீர்‌? ஆகையாலே நாம்‌ செய்கிறதாக நினைத்து நம்‌ ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கிற இவர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ செய்யுமென்று அண்ணராய சக்ரவர்த்திகளையும்‌ தோழப்பரையும்‌ நாயனாரையும்‌ அவர்‌ கையில காட்டிக்‌ கொடுத்து “தர்‌சந ப்ரவர்த்தகராம்படி திருத்தம்‌’” என்று
    நியமித்தருள, அவரும்‌ அப்படியே அவர்களை விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. பின்பு அப்பிள்ளானும்‌ ஜீயர்‌ நாயனாரும்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஸேவித்து, ‘அடியோங்களுக்குத்‌ தஞ்சமாசு தேவரீருடைய அர்ச்சா ரூபமான விக்ரஹம்‌ வேணும்‌” என்றபேஷிக்க,அப்படியே அநுமதி பண்ணித்‌’ தம்முடைய திருக்கைச் செம்பை உபாதாநமாக்கி யருள, அப்படியே அவர்களும்‌ இரண்டு விக்ரஹம்‌ ஏறி யருளப் பண்ணிக் கொண்டு உகந்தருளினார்‌கள்‌.

    பெரிய ஜீயர்‌ சரம தசையில்‌ நாலாயிரமும்‌ கேட்டருளியது
    பின்பு தனித் தனியே முதலிகளெல்லாருக்கும்‌ வேண்டிய ஹிதங்‌களை யெல்லாம்‌ ப்ரஸாதித்தருளி மேலிலங்குவானான கலங்காப்‌ பெரு நகரில்‌ சென்று இமையாத கண்ணீனராய்‌ வழுவிலா வடிமை
    செய்யப்‌ புறப்பட்டெழுந்தருள நாலு நாள் என்னவே, :’“நாலாயிரமும்‌ தொடங்கி நடத்துங்கோள்‌” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகளுக்கு நியமித்தருள, அவர்களுமப்படியே தொடங்கி அநுஸந்திக்க, இவைகளை யெல்லாம்‌ திருச் செவி சாத்தி யருளி
    -ஜீயரும்‌ உகப்புடனே -வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ என்‌றருளிச்‌ செய்து, மஸ்தகாஞ்சலியாய்‌ ததர்த்தாநுபவ பாரவஸ்யததாலே நிமீலிதாக்ஷ யுகளராயிருக்க, “இப்போது திருவுள்ளத்திலோடுகிறதென்‌?” என்று கந்தாடை யண்ணன்‌ கேட்டருள, “ஈட்டில்‌ அர்த்த ரஸம்‌ தலை மண்டி யிட்டுச்‌ செல்கிறது” என்று அருளிச் செய்து, அப்படியே நடக்கும் போது *மருளொழி நீ மட நெஞ்சே என்னும்‌ தசையை ப்ராப்தராய்‌ இங்ஙன்‌ ஏகாதசி சென்று மற்ற நாள்‌ திருத்‌ த்வாதசியிலே உத்தம நம்‌பி தொடக்கமான அனைத்துப் பரிகரத்தையும்‌ அழைப்பித்து ‘ஸர்வாபராதங்களையும்‌ பொறுத்தருள வேணும்‌”’ என்று ஷாமணம் பண்ணிக் கொள்ள, அவர்களும்‌ தேவரீருக்குமோரபசாரமுண்டோ?’? என்று அருளிச் செய்ய, மீளவும்‌ அவர்களைக்‌ குறித்து ‘பெரிய பெருமாளுடைய ஸ்ரீகார்யத்‌தைக்‌ குறைவற நடத்திக் கொண்டும்‌, ஸ்ரீவைஷ்ணவர்களை
    வரவளைத்துக் கொண்டும்‌ போருங்கோள்‌”” என்‌றருளிச் செய்துப்‌ போக விட்டு, திருவாராதநம்‌ [திருவாராதந எம்பெருமான்‌ ஆசாரியர்‌ திருமேனிகள்‌], ஸ்ரீகோசங்கள்‌, மற்றுமுண்டான உபகரணங்கள்‌, மடம்‌ முதலான எல்லாவற்றையும்‌ :யஸ்யை தே தஸ்ய தத் தநம்‌’‘என்னும்படி நம் பெருமாளுக்கு சேஷமாக்கி ஸமர்ப்‌பித்து, ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்கள்‌ தீர்த்‌தமும்‌ ஸ்வீகரித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டு எழுந்‌தருளி யிருக்க, முதலிகளும்‌ பலிதமான வ்ருக்ஷத்தை பக்ஷி ஜாதங்கள்‌ காத்துக்‌ கொண்டிருக்குமா போலே பரிந்து ஸேவித்துக் கொண்டு அஞ்ஜலி பத்மதங்களை யுடையராய்‌ அநுபவித்துக் கொண்டிருக்க, ஆதித்ய அஸ்தமான வாறே தத் காலீந கர்மத்தையுஞ்‌ செய்தருளி பிள்ளை திருவடிகளே சரணம்‌-வாழி உலகாசிரியன்‌” என்றநுஸந்தித்துப்‌ பிள்ளையை த்யாநித்துக்‌ கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ கை கூப்பிக்‌கொண்டு ப்ரஹ்‌ம வம்லி ப்ருகு வல்லி, சூழ்விசும்பணிமுகில்‌, அர்ச்‌சிராதி, நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய்‌ பெரிய ஆரவாரத்துடளே செல்லுகிறவளவி3ல அங்கயல் பாய் வயல் தென்‌னரங்கன்‌ [இரா. நற்‌. 108] என்ற பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அநுஸந்திக்கக் கேட்டு தாமும்‌ க்ருதாஞ்ஜலிபுடராய்‌ ”எம்‌பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌”’ என்றநுஸந்தித்து தத் கத சித்தராய்த்‌ திருக் கண்களைச்‌ செம்பளித்துக்‌ கொண்டிருக்க:

    ஜீயர்‌ திருநாட்டுக்கெழுந்தருளியது
    *கநசகிரி மேலே கரிய முகல்போல விநதை சிறுவன்‌ மேற்‌ கொண்டு என்றும்‌, எந்தை திருவரங்கரேரார்‌ கருடன்‌ மேல்‌ வந்து முகங் காட்டி வழி நடத்த
    என்றும்‌ இவர்‌ அபேக்ஷித்தபடியே பெரிய
    பெருமாளும்‌ -செழும்பறவை தானேறித் திரிவாராய்த்‌ தம்‌ தாளிணையை இவர்‌ திருமுடி மேலே வைத்து –மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மாமுகில் போன்ற தன்‌ வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து
    அநுபவிப்பிக்க அநுபவித்து – உன் சரணந் தந்தென்‌ சன்மங் களையாயே என்றும்‌ ”ஸுகேநேமாம்‌ ப்ரக்ருதிம்‌ ஸ்தூல ஸூஷ்ம ரூபாம்‌ விஸ்ருஜ்ய’ ‘ என்றும்‌,-நோய்களாலென்னை நலங்காமல்‌ சதிராக
    உன்‌ திருத்தாள்‌ தா என்றும்‌ -நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்‌கீ கரிக்கப்பெற்று, மாதவன்‌ தன்‌ துணையா நடந்‌தாள்‌ என்றும்‌ அரங்கத்துறையுமின்‌ துணைவனொடும்‌ போய்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே
    ஸ்ரீயபதியான பெரிய பெருமாள்‌ பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன்‌ வழி நடத்த, ஸுஷும்‌நை யாகிற வாசலிலே புறப்பட்டு சிர:கபாலத்தை பேதித்து ப்ரஹ்மரந்த்ரத்தாலே ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌

    அநந்தரம்‌ பெரிய பெருமாளும்‌ ‘விஸ்ருஜ்ய லஷ்மணம்‌ ராமோ துக்க ஸோக ஸமந்வித :- [இளையபெருமாளைப்‌ பிரிந்த ராம பிரான்‌ சோக துக்கங்களின்‌ வசமானான்‌] என்கிறபடியே ‘ஸெளமித்ரிர்மே ஸகலு பகவாந்‌ ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ – (ஸெளம்ய ஜாமாத்ரு யோகி-மணவளவாளமாமுனிகள்‌ இளைய பெருமாளே] என்கிற இளைய பெருமாளவதாரமான ஜீயரையும்‌ வழி விட்டு வந்து, இளைய பெருமாளைப்‌ பிரிந்து ஒரு பசலாயிரமூழியாய்‌ அமுது செய்யாதே முசித்துக்‌ கொண்டு பெருமாளிருந்தாப்போலே இவரும்‌ அமுது செய்யாதே முசித்து மூடிக்கிடந்தார்‌. ஸ்ரீ பாதத்து முதலிகளெல்‌லாரும்‌ –ஐயோ கண்ணபிரான்‌! அறையோ! முறையோ? அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்‌ வணணனே| என்று பெரு மிடறு செய்து கையெடுத்துக்‌ கூப்பிட்டுக்கொண்டு துடிக்க,அருகிலிருந்த முதலிகள்‌ தேற்றத் தேறி தின்று இப்படி யெழுந் தருளின அவருடைய அந்திம தசையை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்‌கும்படி
    கும்பம்பாஸ்வதி யாதி தத் ஸுததிநே பஷே வள க்ஷேதரே
    தவாதஸ்யாம்‌ ஸ்ரவணர் க்ஷ்பாஜி ருதிரோத் கார்யாக்ய ஸம்வத்ஸரே |
    தீ பக்த்யாதி குணார்ணவோ யதி வராதீநாகிலாத்ம ஸ்த்திதி:
    ஸ்ரீ வைகுண்டமகுண்ட வைபவமகாத்‌ காந்தோ பயந்தா முநி : ॥

    ஜ்ஞாந பக்தி வைராக்யம்‌ முதலான குணங்களுக்கு மஹா ஸமுத்ரம்‌ போன்றவரும்‌, எம்பெருமானாருக்கு ஸ்வாதீநமான தமது ஸமஸ்தமான நிலைகளையு முடையவருமான மணவாளமாமுனிகள்‌ ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில்‌ சூரியன்‌ கும்ப ராசியை யடைந்த அளவில்‌ (மாசி மாதத்தில்‌) சனிக் கிழமையில்‌ க்ருஷ்ண பக்ஷத்த்தில்‌ திருவோண நக்ஷத்ரம்‌ கூடிய த்வாதசி தினத்தன்று எல்லை யற்ற பெருமை யுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்‌-
    என்று அங்குத்தைக்கு அந்தரங்கர்கள்‌ அருளிச் செய்தார்கள்‌-
    அவ்வளவு மன்றிக்கே,
    ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறுவைப்‌ பசியிற் றிருமூலம்‌
    தேச நாளது வந்தருள் செய்த நந் திருவாய் மொழிப்பிள்ளை தா
    ளீசனாகி யெழுபத்து மூவாண்‌ டெவ் வுமிர்களையு முய்வித்து வாழ்ந்தனன்‌
    மாசி மால்‌ பக்கத் துவாதசி மா மணிமண்டபத் தெய்தினன்‌ வாழியே

    என்று இப்படி அவர்‌ தோன்றியது முதலாகத்‌ தன்னுலகம்‌ புக்கதீறாகப்‌ பேசித்‌ தலைக் கட்டினார்களிறே-

    ஜீயருக்கு சரம கைங்கர்யங்கள்‌
    அநந்தரம்‌ ஜீயருக்கு சரம கைங்கர்‌யங்களைச்‌ செய்வதாக முதலிகளெல்லாரையுங் கூட்டிக்கொண்டு ஜீயர்‌ நாயனார்‌ திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி அலங்காரத் திருமஞ்சனங் கொண்டு வந்தருளி
    ஜீயரைத்‌ திருமஞ்சநம்‌ கொண்டருளப் பண்ணுவதாக ஒரு திருமஞ்‌சந வேதிகையிலே விமல சரம விக்ரஹத்தை யேறி யருளப் பண்ணி புருஷ ஸுக்தா நுஸத்தத்தாலும்‌ த்வயாநுஸந்தாத்தாலும்‌ மற்று முண்டான அநு ஸந்தாநத்தாலும்‌ திருமஞ்சநங்‌ கொண்டருளப்‌ பண்ணி திருவொற்று வாடை சாத்தி, திருப் பரியட்டஞ் சாத்தி அலங்கரித்து, ‘விஸ்தீர்ண பால தல விஸ்புர தூர்த்வ புண்ட்ரம்‌”[விசாலமான திரு நெற்றியில்‌ மிக விளங்கும்‌ திருமண் காப்புடையவர்‌ ] என்றபடி த்வாதசோர்ந்த்வபுண்ட்ரங்களையும்‌ தரிப்பித்து தச் சேஷிமான திருமண்‌ ஸ்ரீசூர்ணங்களை யெல்லாம்‌ தங்களுக்கு ஆபத் தநமாகச்‌ சேர்த்து வைத்துக்‌ கொண்டு, ஜீயரை திவ்ய ஸிம்‌ஹாஸநத்திலே ஏறி யருளப் பண்ணி அவர்‌ திருவடிகளைக்‌ கண்ணிலும்‌ நெஞ்சிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்வ சிரோ பூஷணமாக தரித்துக்‌ கொண்டு, அத்தன்‌ மணவாளயோகி அடியிணையைச்‌ சித்தப்‌
    பெருங்கோயில்‌ கொண்டருளி என்று ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தம் தாம்‌ திருவுள்ளங்களில தேக்கிக் கொண்டு வைத்த கண் வாங்காதே விமல சரம விக்ரஹாநுபவம்‌ பண்ணிக்‌
    கொண்டிருக்க :
    அவ்வளவிலே-௮ரங்கத் தம்மானரைச் சிவந்த வாடையையும்‌,-அவன் மார்வணிந்த வன மாலையையும்‌ பொற்றட்டிலே வைத்துக்‌ கொண்டு ஸகல வாத்ய கோஷங்களுடனே உத்தம நம்பி ஸிரஸா வஹித்துக்‌ கொண்டு அனைத்துக் கொத்துப் பரிகரத்துடனே மடத்து வாசலிலே செல்ல, முதலிகளும்‌ அவற்றை எதிர் கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அங்கீரித்து, உடுத்துக் களைந்த பீதக
    வாடை யுடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக் களைந்தன சூடுமித் தொண்டரான ஜீயருக்கு அவற்றைச்‌ சூட்டி அலங்கரித்து, கோயில் அனைத்துப் பரிகரம்‌, ஆசார்ய புருஷர்கள்‌ ஜீயர்கள்‌, ஏகாங்கிகள்‌, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, சாத்தாத முதலிகள்‌ மற்று முண்டானவர்க ளெல்லாருங் கூடி ஜீயரை ஸேவித்து, -செய்‌ய தாமரைத் தாளிணை வாழியே என்று தொடங்கி அநுஸந்தித்து மங்களா சாஸநம்‌ பண்ணி ”எம்பெருமானாரை ஸேவியாத இழவெல்லாம்‌ தீர்ந்தோம்‌ இவரை ஸேவித்து; இப்போது இவ் வவதாரமும்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதித்துப்‌ போவதே! என்று மிகவும்‌ துக்காபிதப்தராய்‌
    (சோகித்து, பின்பு அங்கிருந்த முதலிகள்‌ தேற்‌றத் தேறி நின்று ஸந்நிதியில்‌ முதலிகளெல்லாரையுங்‌ கூட்டிக்‌
    கொண்டு யதா க்ரமத்திலே ஸ்ரீசூர்ண பரிபாலநத்தையும்‌ நடத்தி தச் சேஷமான ஸ்ரீசூர்ண ப்ரஸாதங்களைத்‌ தாங்களும்‌ தரித்துக்‌ கொண்டு, பின்பு எண்ணெய்‌ சுண்ணங் கொண்டாடி திவ்யா
    லங்க்ருதமான புஷ்பக விமாநத்திலே ஜீயரை ஏறி யருளப் பண்ணி வைத்து எல்லோரும்‌ ஸ்ரீபாதந் தாங்கிக்‌ கொண்டு சத்ர சாமர தால வ்ருத்தாதகள்‌ பணிமாற, மஹாஸம்ப்ரமத்துடனே மத்தளங்‌கள்‌ சங்க காஹள பேரிகள்‌ தொடக்கமான ஸகல வாத்யங்கள்‌ கடல்‌ போலே முழங்க,
    பதாகாத் விஜிநீம் ரம்யாம்‌ தூர்யோ த்ருஷ்ட நிகாதநீம்‌ |
    ஸிக்தராஜ பதாம் ராம்யாம்‌ க்ருத்ஸ்நம்‌ ப்ரகீர்ணகுஸு மோத்கராம்‌ ॥

    [நகரத்தையும்‌ மார்க்கத்தையும்‌ அலங்கரித்தக்‌ க்ரமம்‌-அங்கங்கே நாட்டிய கொடிகளால்‌ அழகியதாய்‌, ஸகல வாத்ய கோஷங்களால்‌ சப்த மயமானதாய்‌, நீர் தெளித்து அலங்கரிக்கப் பட்டதாய்‌, புஷ்பங்‌களை ராஜ மார்க்க மெங்கும்‌ தெளித்து வைத்ததாய்‌ ஆக்கினார்கள்‌] என்கிறபடியே காவொத்த கமுகு, பல, கதாலிச் சோலைகளாய்‌ அரங்‌கன்‌ திருவீதி யெட்டிலும்‌ நாட்டி -மகர தோரணம்‌ மேற்கொடிகளாட -என்று சொல்லுகிறபடியே ஸர்வாலங்கார ஸம்ப்ருதையான எட்டுத் திரு வீதிகளிலும்‌ கரும்பேந்தி நூற்றந்தாதி முதலாக அநுஸந்திக்க, திரு நீர்‌ பரிமாற பொரியும்‌ புஷ்பமும்‌ சிதற “தர்‌சநத்திலே மணவாளமாமுனிகள்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌’-என்று ஒற்றைத் திருச்சின்னம்‌ பணிமாற ஸூமங்கலிகள்‌ தீப மெடுக்க, திருவீதிகளிலே அங்குண்டானவர்களெல்லாம்‌ ஸேவிக்க எழுந்தருளப்‌ பண்ணு வைத்துக்‌ கொண்டு போய்‌;

    திருப் பள்ளிப் படுத்தல்‌
    மகிழாதி கேசவன்‌ தன்னடிக்கீழாக”? என்கிறபடியே ஆதிகேசவப் பெருமாள்‌ திருவடிக்கீழாக ௮வர்‌ திருவடி பிரியா வண்‌ணம்‌ தவராசன்‌ படுகையிலே பொன்னித் தென் பாலிலே (இங்கு சொல்லப்படும்‌ ஆதி கேசவப்‌ மெருமாள்‌ ஸந்நிதியையும்‌ மணவாளமாமுனிகள்‌ திருவரசையும்‌ தென் திருக் காவேரிப்‌
    படுகையில்‌ இன்றும்‌ ஸேவிக்கலாம்‌; )எழுந்தருளப் பண்ண ஒருப்பட அவ் வளவிலே பூதேவி யானவள்‌ முன்பு ஜனக ராஜன்‌ திரு மகளை மடியில வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற் போலே அந்த மண்மகளான பிராட்டியும்‌ மணவாளமாமுனியான இவரையும்‌ மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்‌துக் கொண்டு மகிழ, ஆளவந்தார்‌ எம்பெருமானாரைப்போலே யதி ஸம்ஸ்கார விதி யடங்கச்‌ செய்து கனித்து வாழும்படி திருப் பள்‌ளிப் படுத்தினார்கள்‌.

    முதலிகள்‌ ஜீயர்‌ பிரிவாற்றாமல்‌ சோகித்தல்‌
    அநந்தரம்‌ ”கதிரவன் போய்‌ குணபால் சேர்ந்த மகிமை போல்‌”-என்கிறபடியே கீழ்திக்கில்‌ ஒரூ ஆதித்யன்‌ அஸ்தமித்தாற் போல இருக்கையாய்‌ தத் ப்ரபாவஜ்ஞரான ஜீயர் நாயனார்‌ கந்தாடை யண்ணனுள்ளிட்ட முதலிகளெல்லாரும்‌
    ஜீயரெழுந்தருளி விட்டார்‌ செக ழுழுதும்‌
    போயிருள்‌ மீளப் புகுந்ததே தீய
    வினை நைய வெம் புலனா லீடழிந்து மாய்வோ
    ரனை வார்க்குமேதோ வரண்‌?

    என்று மிகவும்‌ சிந்தாக்ராந்தராய்‌ துக்கித்து பின்பு சிஷ்யர்களான தாங்கள்‌ தங்களுடைய சேஷத்வாநுகுணமாக திருமுடி விளக்குவித்துக் கொண்டு பெருமாள் அவப்ருதம்‌ கொண்டாடுமா போலே அவப்ருதம்‌ கொண்டாடி மீண்டும்‌ மடத்திலே எழுந்‌தருளி வெறித்தான மடத்தைக் கண்டு –இல்லம்‌ வெறி யோடிற்‌றாலோ என்று ஆசார்ய விஸ்லேஷாஸஹிஷ்ணுக்களாய்‌ மிகவும்‌
    க்லேசித்து தங்களிலே தேறி நின்று
    சீயர் திருத்தம பிரானாரே தென்னரங்க
    மேய பெருமானே விண்ணப்பம்‌-காய விலங்‌
    கெந்நாள்‌ விடுவீரெடுத்த பணி யுமக்குப்‌.
    பன்னாளும்‌ செய்யும்படி –
    -என்றும்‌
    சீயரபிமானமே தேர்ந்தருளித்‌ தீ வினையோம்‌
    காய விலங்கைக் கழித்தருளீர்‌–தூய புகழ்‌
    நம்பெருமாளே! இமையோர்‌ நாயகரே!- நான்மறை தேர்‌
    எம்பெருமானார்‌ பெருமாளே!
    –என்றும்
    தாயகலக்‌ கண்டு சிலுகிட்டடியேனை
    மாயையிலே மூட்டி மருட்டாதே-சீயரே
    காய விலங்கைக் கடுகெனவே தீர்த்தருளீர்
    தூய திருத் தாளே தொழ-
    -என்றும்
    எழும் பாவி யைம் புலன்கள்‌ சொன்ன வண்ணம்‌ செய்து
    தழும்பேறி வாழுந் தமியேன்‌-செழும் பொன்‌
    மணவாளமாமுனியே மா சுடலைத் தீர்க்குமின
    முணவாக வாழ்ந்திடுகையோர்‌
    –என்றும்
    நானெனதென்னும்‌ நரகத்திடை யழுந்திப்‌
    போன விந்தக் காலமெல்லாம்‌ போதாதோ?-கான மலர்‌
    மாலை யணி திண்டோண்‌ மணவாள மாமுனியே
    சால நைந்தேனுன்‌ பாதம்‌ தா-
    -என்றும்
    புண்ணாராக்கை தன்னுள்‌ புக்குழலும்‌ தீ வினையேன்‌
    தண்ணாருமென் கமலத் தாளணைவ தென்று கொலோ
    பண்ணாரு நால் வேதம்‌ பயின்றுய்யும்‌ பண்டிதனே
    மண்ணாள வந்த மணவாளமாமுனியே

    என்று இத்யாதியான ஆர்த்தியை அவர் விஷயத்தில்‌ விண்ணப்‌பஞ்செய்து திருமிடறு தழுதழுப்பத்‌ திரு முத்துதிர்த்துத்‌ தங்களிலே தேறி நின்று வித்த்யுக்த ப்ரகாரேண செய்ய வேண்டுங்‌ க்ருத்யங்‌களை யெல்லாஞ் செய்து ஜீயர்‌ வைபவத்திற்கு அநுகுணமாகப்‌ பெருக்கத் திருவத்யயநம் நடத்தி யருளி தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்வீகரித்து, பின்பு தந்தாமுக்கு நியமித் தருளின கைங்சர்யங்களைச்‌ செய்து கொண்டு போந்தார்கள்‌

    அநந்தரம்‌ –இஷ்வாஹூணாம்‌ குலதநம்‌’”’ என்னும்படியான-பெரிய பெருமாளும்‌ ஜீயர்‌ நாயனாருக்குக்‌ குலதநமான ஸ்ரீரங்கராஜரையும்‌ மடத்தையும்‌ நேக்கிக்‌ கொண்டு போருமென்று திரு வுள்‌ளமாய்‌, தீர்த்தம்‌, திருமாலை, திருப்பரியட்டம்‌, ஸ்ரீசடகோபன்‌ எல்லாம்‌ ஸாதித்து வாழ்வித்தருளினார்‌. இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாநாந்தர்ப் பூதரெல்லாரும்‌ ஹர்‌ஷ ப்ரகர்ஷ யுக்தராய்‌ ஜீயர்‌ நாயனாரை பெரிய ஜீயரைக்‌ கண்டாப்‌ போலே கண்டு அநுவர்‌த்தித்து ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌.

    ஜீயர்‌ நாயனார்‌ ஸ்ரீபாஷ்யம்‌,திருவாய்மொழி ஈடு பெறுதல்‌.
    கந்தாடை யண்ணனும்‌ ஆசார்ய நியமனத்தின் படியே ஆசார்ய பெளந்ரரான ஜீயர்‌ நாயனாருக்குத் திருவாய்‌ மொழியினீட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அநந்தரம்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவும்‌ ஸ்வாசார்ய நியமனததின் படியே நாயனாருக்கும்‌ கத்தாடை நாயனுக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளி,
    ஸ்ரீமாந்‌ ஸுந்தர ஜாமாத்ரு முநி: பர்யாய பாஷ்ய க்ருத்‌ |
    பாஷ்யம்‌ வ்யாகுருதே தஸ்ய ஸ்ரோத்ரு கோடெள மமாந்வய; ॥

    [பாஷ்யகாரருடைய புநவரவதாரமான, கைங்கர்ய ஸ்ரீமானான மணவாள மாமுனிகளே ஸ்ரீபாஷ்யத்தை விளக்கிக்‌ கொண்‌டிருக்கிறார்‌. அந்த ஸ்ரீபாஷ்யத்தை அதிகரிப்பாருடைய கோஷ்‌டியிலே அடியேனுக்கு ஸம்பந்தமுள்ளது] என்று அதில்‌ தமக்குண்டான கர்த்ருத்வத்தையும்‌ கழித்துக்‌ கொண்டருளினார்‌,-பின்பு திருப்பதியே யிருப்பாக எழுந்தருளியிருந்த போளிப்‌பாக்கம்‌ போரேற்று நாயனார்‌ தொடக்கமானவர்களுக்கும்‌ ஸ்ரீபாஷ்யத்தை ப்ரஸாதித்தருளியும்‌, பட்டர் பிரான்‌ முனி பாதசேகரஈய்‌ தத்‌ வம்ஸ்யரான பர வஸ்து ஸ்ரீநிவாஸாசாரியருக்கும்‌ அவருக்கு ஸ ப்ரஹ்மசாரிகளான பரவஸ்து அழகிய மணவாள ஜீயருக்கும்‌, திருவாய்மொழி நாயனார்‌ என்று நிரூபகமாம்படி திருவாய் மொழியினீட்டை ப்ரஸாதித்தருளியும் , ப்ரதிவாதி பயங்‌ கர ரென்னும்‌ ப்ரஸித்தி தோற்ற ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தை
    ரக்ஷித்துப் போந்தார்‌,

    வானமாமலை ஜீயர்‌ எழுந்தருளல்‌
    அநந்தரம்‌ அழகிய வரதரான வானமாமலை ஜீயர்‌ வடதேசத்தினின்‌றும் எழுந்தருளி ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளின வருத்தாந்‌தத்தை பெரிய திருமலை யருகே கேட்டு மிகவும்‌ ப்ரலாபித்தருளி
    திருமலை யேற வெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ பாடாற்றிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து கைங்கர்யார்த்தமாகக்‌ கூட்டின த்ரவ்யங்களை யெல்லாம்‌ கொண்டு கோயிலேற வெழுந்தருளி மடத்‌திலே சென்று போர க்லேசித்து ஜீயர்‌ நாயனாரையும்‌ ஸேவித்து-உடனே வானமாமலை யேற வெழுந்தருளி, கைங்கர்யங்களை எல்‌லாம்‌ தலைக்கட்டி யருளி மீண்டு திருமலை யேற வெழுந்தருளி நடுவே எறும்பியிலே சிலநாளெழுந்தருளி யிருந்து சுத்த ஸத்வ மணணாவுக்கும்‌ போளிப்பாக்கம்‌ நாயனாருக்கும்‌ திருவாய்மொழயின்‌ ஈடு முதலாக பகவத் விஷயத்தை ப்ரஸாதிந்தருளி மீண்டு வான
    மாமலை யேற வெழுந்தருளி தெய்வ நாயகன்‌ கைங்கர்ய ஸாம்ராஜ்‌யத்துடன்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌.

    பட்டர்பிரான்‌ ஜீயர்‌ அந்திமோபாய நிஷ்டை அருளியது
    பட்டர்பிரான்‌ ஜீயரும்‌ ‘வடமாமலைக்கதிபர்‌ பட்ட நாதமுனி’ என்கிறபடியே திருமலையிலே எழுந்தருளி யிருந்து அண்ணராய சக்ரவர்த்தி, நாயனார்‌, தோழப்பர்‌ தொடக்கமான அனேகாத்‌ மாக்களைத்‌ திருத்தி இந்தத் தரிசன ப்ரவர்த்கர்களாக்கி யருளி பர வஸ்து அண்ணரையும, பரவஸ்து அழகிய மணவாள ஜீயரையும்‌ ஸத் புத்ர ஸச் சிஷ்யர்களாச அபிமானித்து ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்‌தகராம்படி திருத்தி யருளி அகிலாத்மாக்களும்‌ உஜ்ஜீவிக்கும்படி அந்திமோபாய நிஷ்டா க்ரேஸரர்‌ என்னுமது தோற்ற “அந்தி மோபாய நிஷ்டை” என்கிற சரம ரஹஸ்‌ப ப்ரபந்தத்தை யருளிச்‌ செய்து வாழ்வித்தருளியும்‌.

    அந்திமோபாயநிஷ்டாயா வக்தா ஸெளம்ய வரோமுநி; ॥
    லேககஸ்யாந்வயோ மேஅத்ர லேகநீ தாள பத்ரவத்‌ ॥

    [அந்திமோபாய நிஷ்டா எனுமிந்த க்ரந்தத்தை அருளிச்‌ செய்‌தவர்‌ மணவாளமாமுனிகள்‌ ஒலை போலவும்‌ எழுத்தாணி போலவும்‌ பட்டோலையில் இதை எழுதுப்‌ தொடர்பே அடியேனுக்‌ குள்ளது] என்றும்‌
    எந்தை மணவாள யோகி யெனக்களித்த
    அந்திமோபாய நிட்டையாமிதனைச்‌-சிந்தை செய்திங்‌
    கெல்லாரும்‌ வாழ வெழுதி வைத்தேனிப் புவியில்‌
    நல்லறி வொன்‌ றில்லாத நான்‌

    என்று அதில்‌ தமக்கு கர்த்ருத்வ ராஹித்யத்தையும்‌ அருளிச் செய்து உபகரித் தருளினார்‌.

    திருநாராயண புரத்தில்‌ திரு நந்தவன கைங்கர்யம்‌
    ஆசார்ய பரதந்த்ரரான பட்டர் பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்த தோழப்பரும்‌ அவர்‌ திருத் தமையனாரான அழகிய மணவாள தாஸ நானாரும்‌ ஜீயர்‌ நியமனத்தின் படியே அரங்கத்‌துறைவா ரநுமதியடனே திரு நாராயண புரத்திலெழுந்தருளி, எம்பெருமானாருக்கும்‌ செல்வப் பின்ளைக்கும்‌ திரு நாராயணப்‌ பெருமாளுக்கும்‌ திரு நந்தவனம்‌ தொடக்‌கமான எல்லா வடிமைகளும்‌ செய்து கொண்டு அங்கே அனேகரையும்‌ ஜீயரபிமானாந்தர்‌ பூதராம்படி திருத்தி ஸ்ரீசைலத்துற்கு மேற்கும்‌ ஸ்ரீசைலே தயா பாத்ரரின்‌ வைபவத்தை வர்த்திப்பித்துக்‌ கொண்டு எதிராஜர்‌ மடத்துக்குப்‌ பின்னடியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌. பின்பு அவர்கள்‌ ஸந்தான பரம்பரையிலுணடான ஐயன்‌ முதலானாரும்‌ அந்தக் கைங்கர்யங்களை அபிவ்ர்த்தமாக நடத்திக் கொண்டு போந்‌தார்களிறே.

    எறும்பி யப்பாவின்‌ ஆர்த்தி
    பின்பு அழகிய மணவாள தாஸரான எறும்பி யப்பாவும்‌ ஜீயர்‌ திருநாட்டுக்‌கெழுந்தருளிள செய்தியைக் கேட்டு
    வரவர முநி பதிர் மே தத் பதயுகமேவ ஸரண மநுரூபம்‌ |
    தஸ்யைவ சரண யுகளே பரி சரணம்‌ ப்ராப்யமிதி நநு ப்ராப்தம்‌ |

    [மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி; அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக் கநுரூபாமன உபாயம்‌; அவருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமே உபேயம்‌ என்றே அடியேனால்‌ அடையப்பட்டது; இதுவே எனது அத்யவஸாயம்‌ என்கிற நிஷ்டை யுடையவராகையாலே ஆசார்ய விச்லேஷாஹிஷ்‌ணுவாய்‌ அவர்‌ விஷயத்திலே ஆர்த்தி மிகுந்து
    வபுரபி, ஸபதிமதீயம்‌ வரவர முநிவர்ய; மோசநீயமிதம்‌ |
    பரிசரதி நஹி பவந்தம்‌ பகவநிநஹி பகவதபிமதா நபிவா ॥
    –கல்யாண குண பூர்ணரான மணவாள மாமுநிவரே’ அடியேனுடைய இவ்வுடலும தேவரீரால்‌ இப்போதே விடுவிக்கத் தக்கது -இதனால் தேவரீருககு கைங்கர்யம்‌ செய்யப்‌ பெற்றதில்லை-எம் பெருமானடியார்களான பாகவதர்கள்‌ விஷயததிலுமில்லை. –என்றும்‌
    இதி புநரேஷு விதந்ந பிதுரி தரதிர்தூர நிம்ந பதரூட: |
    வரவர முநி வர கருணாம்‌ நிக்நந்‌ பதந்ரு பசுரஸ்நுதே நியமாந்‌ ॥
    -இவன்‌ மனிதவுடல் படைத்த விலங்கினம்‌!” என்னுமபடி, அறிவிருந்தும்‌ பாப கார்யங்களில்‌ ஆசை யுடையவனாய்‌ மிகத்‌ தாழ்ந்ததான நிலையிலிழிந்து மணவாளமாமுனிகளுடைய க்ருபையை யழித்துக்‌ கெண்டு கர்ம பலன்களை அநுபவிக்கிறான்‌–என்றும்‌
    ஆயுரபஹரதி ஜகதாமய முதயம்‌ விலயமபி பஜந்‌ பாநு. |
    மயி புநரி தம ந்ரு ஸம்ஸோ வரவர முநிவர்ய வர்த்தயத்யேவ ॥
    -மணவாள மாமுனிகளே! இந்த ஸூரியன்‌ உதயத்தையும்‌ அஸ்தமனத்தையும்‌ செய்து உலகங்களின்‌ ஆயுளை அபகரிக்கிறான்‌.-அடியேன்‌ விஷயததில்‌ மட்டும்‌ கொடியவனாய்‌ இந்த ஆயுளை வளரச் செய்கிறான்‌–என்றும்‌
    ததித பரமநுரூபம்‌ ந விளம்பிதுமிதி சிந்தயந்தயயா |
    மலபாஜநாதி தோமாம்‌ வரவரமுநி வர்ய மோசயத்வரிதம்‌
    –ஆதலால்‌, மணவாள மாமுனிவரே-அடியேன்‌ விஷயத்தில்‌ இனி கால விளம்பம்‌ செய்யத் தக்கதன்று.-தயை யுடைய மனத்தினராய்‌ இவ்வழுக்குட ம்பினின்றும்‌ அடியேனை விடுவித் தருள வேணும்‌- என்கிறபடியே தம்முடைய ஆர்த்தியை ஆவிஷ்கரித்து குணாநுபவைக தத் பரராய்‌ தத் ஸேவாபிநிவே சத்தை யுடையராய்‌ ஜீயரைப்‌ பிரிந்து ஸம்ஸாரத்திலிருக்கு மிருப்பு பிராட்டி பெருமாளைப் பிரிந்து ராவண பவநத்திலே தனிச் சிறை யிருந்தாப் போலே அதிதுஸ்ஸஹமாய்‌ பொய்ந்நின்‌ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கு மழுக்குடம்பும்‌ இந் நின்ற நீர்மை யினியா முறாமை என்றும்‌, கூவிக் கொள்ளுங்கால மின்னங்‌ குறுகாதோ?-என்றும்‌, ஆவிக்கோர்‌ பற்றுக் கொம்பு நின்னலா லறிகின்‌றிலேன்‌ யான்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே பெற்றல்லது தரிக்க கில்லாத பேரார்த்தியை யுடையராய்‌ ஒருபகலாயிர மூழியாய்‌ அவர்‌ திரு
    நாமந் தன்னையே பலகாலும்‌ வாய் வெருவிக் கொண்டு முன்னடி தோற்றாதே திகைத்து மதி மயங்கி உன்மத்தர் போல்‌ பித்தேறி என்னும்படி எழுந்தருளி யிருந்தார்‌,

    ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ தந் நிஷ்டராய்‌ வாழ்ந்தது
    இப்படி ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயித்த முதலிகளெல்லாரும்‌ஆசார்யாபிமான நிஷ்டராய்‌ -யதீந்த்ர ப்ரவணரான ஜீயர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள்‌”’ என்று தந் தாம்‌ சிஷ்யர்களுக்கு
    அருளிச் செய்து எல்லாரையும்‌ வரவரமுநி ப்ருத்யராக்க அவர்களும்‌
    அபகதமத மாநை: அந்திமோபாயநிஷ்டைஃ
    அதிகத பரமார்த்தை ரர்த்த காமாநபேக்ஷை: |
    நிகில ஜுஸுஹ்ருத்பிர்‌ நிர் ஜிதக்ரோத லோபை :
    வர வர முநி ப்ருத்யைரஸ்துமே நித்ய யோக: ॥

    [செருக்கும்‌ நான்‌ சுதந்திரனென்னும்‌ அபிமான முமில்லாதவர்களும்‌, கருமம்‌ ஞானம்‌ பக்தி ப்ரபத்தி ஆசார்யாபிமானம்‌ என்பவற்றில்‌ ஐந்தாமுபாயமான ஆசார்யாபிமானத்தில்‌ ஊன்‌றியவர்களும்‌, புருஷார்த்தத்தின்‌ எல்லையான ஆசார்ய கைங்‌கர்யத்தை யடைந்தவர்களும்‌, செல்வத்திலும்‌ அதைக்‌ கொண்டு அனுபவிக்கும்‌ சிற்றின்பத்திலும்‌ ஆசை யற்றவர்களும்‌ பகைவரிடமும்‌ நல்ல மனமுடையவர்களும்‌ கோபத்தையும்‌ உலோபித் தனத்தையும்‌ வென்றவர்களுமாகிய மணவாளமா முனி சிஷ்யர்‌களுடன்‌ சேர்க்கை அடியேனுக்கு உண்டாக வேணும்‌] என்கிற படியே ஜீதாரிஷட் வர்க்கமாய்‌ த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளை யடையராய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அந்திமோபாய நிஷ்டராய்‌ ஆஸ்திகாக்‌ரேஸரராய்‌, இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியையு மொன்றாக்கிக்‌ கொண்டு எல்லாரும்‌ தத் நிஷஷ்டராய்‌ தத் ஸேவோத் ஸுகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌.
    ஸ்ரீ ஸடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்‌ஜ மதுவ்ரதம்‌ |
    ஸ்ரீமத்‌ யதீந்த்ர ப்ரவணம்‌ ஸ்ரீலோகார்ய முநிம்‌ பஜே ॥

    இப்புவியில ரங்கேசர்க்‌ கீடளித்தான்‌ வாழியே
    எழில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை இணை யடியோன்‌ வாழியே
    ஐப்பசியில்‌ திருமூலத் தவதரித்தான்‌ வாழியே
    அரவரசப்‌ பெருஞ்சோதி அநந்தனென்றும்‌ வாழியே
    எப்புவியும்‌ ஸ்ரீ சைலமேத்த வந்தோன்‌ வாழியே
    ஏராருமெதிராசரென வுதித்தான்‌ வாழியே
    முப்புரிநூல்‌ மணி வடமும்‌ முக்கோல் தரித்தான்‌ வாழியே
    மூதரிய மணவாளமாமுனிவன்‌ வாழியே

    செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்‌
    சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுகாள்‌
    மந்த மதிப்புவி மானிடர்‌ தங்களை வானிலுயர்த்திடு நாள்‌
    மாசறு ஞானியர்சேரெதிராசர் தம்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
    கந்தமலர் பொழில் சூழ்‌ குருகாதிபன் கலைகள் விஎங்கிடு நாள்‌
    காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள்‌ களித்திடு நாள்‌
    அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன்‌ அவதாரம்‌ செய்திடு நாள்‌
    அழகு திகழ்ந்திடும்‌ ஐப்பசியில்‌ திரு மூலமதெனும்‌ நாளே.

    ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
    ஸ்ரீரங்க வாஸிநே பூயாத்‌ நித்யஸ்ரீர் நித்ய மங்களம்‌ ॥

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-3–

    May 17, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    (மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

    ஜீயர்‌ நாயனார்‌ திரு வவதாரம்‌.
    இப்படி ஸம்பந்த ஸம்பந்திகளும்‌ உத்தாரகராம்படி வைபவமுடைய ஜீயர்‌ தர்சநம்‌ நிர்வஹிக்கிற காலத்திலே ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில்‌ குமாரரான நம்மையனிராமானுசன்‌ திருநகரியிலே வளர்ந்தருளி அங்கே திருக்கல்யாணஞ்‌ செய்தருளி சில காலத்‌துக்கு மேல்‌ அவருக்குக்‌ குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்கு – அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌?’ என்று ஜீயர்‌ திருநாமம்‌ சாத்தி
    யருளினார்‌.
    பின்பு அவர்‌ ஸ்ரீவில்லிபுத்தூரிலே யெழுந்தருளியிருக்க பின்னுமொரு குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்குத்‌ திருநாமமேதென்று ஜீயர்‌ ஸந்நிதியிலே கேட்டு வரக் காட்ட, ஸ்ரீவில்லிபுத்‌தூரிலே பிறந்த பிள்ளைக்கு பெயரேதென்று கேட்டு வர விடுவதென்‌! பெரியாழ்வார்‌ திருநாமம்‌ சாத்துங்கோள்‌” என்று அருளிச்‌செய்து போகவிட, அப்படியே ‘பெரியாழ்வாரையன்‌”” என்று திருதாமஞ்‌ சாத்தி யருளினார்‌. அவர்களும்‌ வளர்ந்து உபநீதநான பின்பு ஜீயர்‌ திருவடிகளிலே வந்தாஸ்ரயித்தார்கள்‌. அவ்விருவரும் அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ ஜீயர்‌ திருவடிகளைப் பிரியாது ஆட்செய்து ஸேவித்திருந்தார்‌. ஸ்ரீபாதத்து முதலிகளெல்‌லாரும்‌ ஸ்வ புத்ரர்களுக்கு நாயனார்‌ என்று திரு நாமம்‌ சாத்துகையாலே இவருக்கும்‌ *’ஜீயர்‌ நாயனார்‌” என்றே நிரூபகமாயிருக்கும்‌. இவரும்‌ ‘ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஆளவந்தாரைப்‌ போலே தமக்குப்‌ பெளத்ரரான இவரை தர்சந ப்ரவர்த்தகாரம்படி விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. ஆசார்ய பெளத்ரரான அவரும்‌ தீபாதுத்பந்ந ப்ரதீபம்‌ போலே மிகவும்‌ ப்ரகாச மாநராயிருத்தார்‌.-இத்தைக்‌ கொண்டு ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயாச பூய:
    ஸ்வச்சாவதீர்ணமிவ ஸெளம்ய வரம்‌ மூநீந்த்ரம்‌
    ஆசார்ய பெளத்ர மபிராமவராபிதாநம்‌
    அஸ்மத் குரும்‌ குணநிதிம்‌ ஸததம்‌ ஸ்ரயாம: ॥

    நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌ பரம க்ருபையாலும்‌ தமதிச்சையாலே மணவாளமாமுனிகள்‌ மீண்டுமவதரித்தாரோ என்னலாம்‌படி யுள்ளவரும்‌ நற் குணங்களுக்கு நிதி போல விருப்பிடமும்‌,
    ஆசாரியர்‌ திருப் பேரனாரும்‌, அபிராமவரர்‌ (அழகிய மணவாளர்‌) என்ற திருநாம முடையவருமான ஜீயர்‌ நாயனாரான அஸ்மதசார்‌யரை எப்போதும்‌ அடி பணிகிறேன்- என்று அநுஸந்தித்துப்‌
    போந்தார்கள்‌.

    ஜீயர்‌ ஆழ்வார்‌ திருநகரி யேற எழுந்தருளுதல்‌
    அநந்தரம்‌ -எமரேழெழு பிறப்பும்‌ கேசவன்‌ தமரானார்கள்‌ என்‌னும்படி ஆழ்வாரபிமாநாந்தர்ப் பூதரில்‌ அக்ர கண்யரான ஜீயரும்‌-பகவந்‌ பவதுத்பவஸ்தலீ பவது ஸ்ரீநகரீகரீயஸீ” –கல்யாண குண பரி பூர்ணரே! தேவரீருடைய அவதார ஸ்தலமான திருகரியானது எல்லா விடங்களிலும்‌ உயர்ந்து விளங்கட்டும்‌–என்று சொல்லுகிற படியே, ஜீயர்‌ தமக்குப்‌ பிறந்தகமான ஆழ்வார்‌ திருநகரியிலே சென்று ஆழ்வாரைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, குருகூர்நம்பி! முயல்கின்றேனுன் தன்‌ மொய் கழற்கன்‌பயே -என்றபடியே உத்ஸாஹத்தை யுடையராய்‌, நம்பெருமாளை ஸேவித்து அநுமதி கொண்டு நம்மாழ்வாரை ஸேவிக்கப்‌ புறப் பட்டருளி அரங்கத்‌ துறையுமின் துணைவனே வழித் துணையாக எழுந்தருளி, திருவாய்மொழிப் பிள்ளை திருவவதார ஸ்தலமான குந்தீ நகரத்திலே த்ரிராத்ர மெழுந்தருளி யிருந்து,

    சித்தந் திருமால் மேல்‌ வைத்தருளும்‌ சீர் மன்னர்‌
    நத்தமிது காணு நாந் தொழில்‌–முத்தராய்ப்‌
    போனாரே யாகிலும்‌ பூங் கமலத்தாள்‌ கடனைத்‌
    தாமார வைத்தார்‌ தலம்‌-
    என்றநுஸந்தித்து, ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,
    யாநி யாநிச திவ்யாநி தேஸே தேஸே ஜகந்திதே: |
    தாநிதாநி ஸமஸ்தாநி ஸ்த்தாநாநி ஸமஸேவத ॥

    அவ்வோ இடங்களில்‌ எம்பெருமானுக்கு எந்தெந்த உகந் தருளின திவ்ய தேசங்கள்‌ உண்டோ அந்தந்த ஸ்தலங்கள்‌ எல்லாவற்‌றையும்‌ திருவடி தொழுதார்‌–என்றும்‌ தானுகந்த வூரெல்லாம்‌ தன் தாள் பாடி -என்றுஞ் சொல்லுகிறபடியே வழியிலுண்டான திருப்‌பதிகளை யெல்லாம்‌ திருவடி தொழுது அவ்வவ் விடங்களிலே தத் ஸ்தலோசிதமான மங்களசாஸநங்களைப்‌ பண்ணி ஸேலித்தருளி,
    வைகுண்டநாத விஜாயஸந பூமி பாலாந்‌ தேவேஸ பங்கஜ விலோசந சோர நாட்யாந் |
    நிக்ஷிப்த வித்த மகராலய கர்ண பாஸாந் நாதம்‌ நமாமி வகுளாபரணேந ஸார்த்தம்‌ ॥

    ஸ்ரீவைகுண்டநாதன்‌, விஜயாஸநர்‌, பூமிபாலர்‌ தேவபிரான்‌,(புளிங்குடி ) ‘ அரவிந்த லோசநர்‌ (துலை வில்லி மங்கலம்‌), சோரநாட்‌யர்‌ (மாயக் கூத்தர்‌), வைத்த மா நிதி, மகர நெடுங் குழைக் காதர்‌, வகுளாபரணரான ஆழ்வாருடன்‌ ஆதி நாதரையும்‌ திருவடி தொழுகிறேன்‌- என்கிறபடியே அஷ்ட தளம்‌ போலவே யிருக்கிற ஸ்ரீவைகுண்டம் முதலான திருப்பதிகளை ஸேவித்து, தத் கர்ணிகை போலிருந்துள்ள திருநகரியை திருக் குருகூரதனைப் பாடி யாடிப்‌ பரவிச்‌ சென்மின்கள்‌ என்று அத்யந்தம்‌ ஹர்ஷ ப்ரஹர்ஷத்துடன்‌ சென்று கிட்டி திருத் தாமிரபரணிச்‌ சங்கணித்‌ துறையிலே நீராடி–கேசவன்‌ தமரில்படியே திரு த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளித் தாமும்‌ முதலிகளுமாக குயில் நின்றார்‌ பொழில்களையும்‌, செந்தாமரைத்‌ தடங்களையும்‌, அதிலே அறு கால வரி வண்டிசை பாட-அன்னமென்‌ கமலத் தணி மலர்ப் பீடத்து அலை புனலிலைக் குடை நீழல்‌ செந் நெல் ஓண்‌ கவரி யசைய வீற்றிருக்கும்‌ (திருமொழி 9-1-5) படியையும்‌ செம் பொன்‌ மாடங்களையும்‌, உயர்ந்த திருமாளிகைகளையும்‌ சிரங்களாலமரர்‌ வணங்கும்‌ திருக்குருகூர்‌ என்ற ஊரையும்‌ அனுபவித்து

    புக்ககத்தினின்‌றும்‌ பிறந்தகத்தில்‌ போந்தது போல்‌
    தக்க புகழ்த் தென்னரங்கந் தன்னினின்றும்‌–மிக்க புகழ்‌
    மாறன்‌ திருநகரி வந்தோம்‌ அரங்கன்‌ தன்‌
    பேறன்றோ? நெஞ்சே! இப்போது–

    என்றநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கிற வளவிலே-நல்லார்‌ பலர் வாழ்‌ திருக்குருகூரிலுண்டான ஸத்துக்களெல்‌லாரும்‌ குழாங்‌ குழாமாக வந்து திருவடிகளிலே ஸேலிக்க, அவர்‌களையும்‌ கிருபை பண்‌ணி யருளி, அவர்களுடனே கூட வெழுந்தருளி,
    பிரதமம்‌ எம்பெருமானாரை ஸ்ரீமாதவாங்கரி என்று தொடங்கி,
    ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்நா*(யதிராஜ விம்சதி-1) என்று ஸேவித்தருளி,
    அதி ப்ரீதியடனே தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, அங்கு நின்றும்‌ புறப்பட்டு, பிள்ளை (திருவாய்மொழிப்‌பிள்ளை ) திருமாளிகை யேற வெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து இன வாயர்‌ தலைவனையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி,-நம: ஸ்ரீஸைல நாதாய என்றநுஸந்தித்து, பிள்ளை எழுந்தருளி யிருந்து வ்யாக்யானஞ்‌ செய்தருளின ஸ்தலத்தையும்‌ ”தம்மை விஷயீகரித்த இடமன்றோ!” என்று ஸேவித்து, அங்கு நின்றும்‌ புறப்பட்டு,குன்‌றம் போல்‌ மணி மாடங்களையும்‌ “செம் பொன்‌ மாடங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலிலே புக்கு, ‘வகுளாபரணம்‌ தேவம்‌ ஸ்வ குலாபரணம்‌ யயெள” -தமது குலத்துக்கு பூஷணமான பூஜ்யரான நம்மாழ்‌வாரைக்‌ கிட்டினார்‌-ஆஸ்ரயித்தார் – என்கிறபடியே முந்துற நாட் கமழ்‌ மகிழ் மாலை மார்பனான ஆழ்வார்‌ திருவடிகளைச்‌ சென்று கிட்டி, மாதா பிதா என்று தொடங்கி -வகுளாபிராமம்‌ ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா என்றநுஸந்தித்து ஸேவித்தருளி, கண்ணி நுண் சிறுத் தாம்பை யநுஸந்தித்து, அன்னையாய் யத்தனாய்‌ என்கிற பாட்டின் படியே ஸர்‌வ வித பந்து விசேஷங்களெல்லாம்‌ தமக்கு ஆழ்வாரே யென்று தோற்றும்படி அதி ப்ரேமத்துடனே அநுபலித்துக்‌ கொண்டு அஞ்ஜலித்து நிற்க, ஆழ்வாரும்‌ தேசாந்தர கதனான புத்ரனைக் கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே காரி மாறப் பிரானார்‌ தாம்‌. இவரைக்‌ கண்டு கொண்டிருந்து , பின்பு தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து ஸ்ரீராமாநுஜனையும்‌ ப்ரஸாதித்தருள. *செல்வச் சடகோபர்‌ தே மலர்த் தாட்‌ தேய்த்தினிய –பாதுகமா மெந்தை யிராமானுசனை வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்‌” என்றும்‌, “வகுளாலங்க்ருதம்‌ ஸ்ரீமச் சடகோபத் த்வயம்‌. அஸ்மத் குல தநம்‌ போக்யமஸ்துமே மூர்த்நி பூஷணம் ‘-மகிழ மலர்‌ மாலையால லங்கரிக்கப்பட்ட செல்வச்‌ சடகோபரின்‌ (ஆழ்வாரின்‌) இனிய திருவடியிணை அடியேனுக்கு சிரோ பூஷணமாய்‌ அமையட்டும்‌ என்று மநுஸந்தித்து ஹ்ருஷ்டராய்‌, அநந்‌தரம்‌ திரி தந்தாகிலும்‌ தேவ பிரானுடைக்‌ கரிய கோலத் திரு வுருக்‌ காண்பன்‌ நான்‌ என்கிறபடியே அவருகந்த விஷயமான பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிப்‌ புறப்பட்டருளி மடமே யெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்தார்‌

    அங்குண்டானவர்களெல்லாம்‌ இவரை அவதார விசேஷ மென்றறிந்து இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌. அவர்களை க்ருபை பணணி யருளி மாஹப்ரபாவரா யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே
    சுருதித் தமிழ் மொழியுஞ்‌ சடகோபர் தம்‌ பாதத்தைக்‌
    கருதிப்‌ பரவு மெதிராசராசன்‌ கவியமுதம்‌
    வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன்‌ புகழ் போய்ப்‌
    பருதிக் கதிர்‌ செல்லு மண்டலமேறப்‌ பரந்ததுவே

    என்னும்‌ படியான இவர்‌ வைபவங்களெல்லா வற்றையும்‌ அறிந்து இருக்கிறவர்களுக்கு ஆழ்வார்களின்‌ திவ்ய ப்ரபந்தங்களின்‌ அர்த்த மருளிச்‌ செய்து கொண்டிருக்குங் காலத்திலே;

    திருநாராயணாபுரத் தாயி யுடன்‌ ஸமாகமம்‌
    ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச்‌ செய்யும் போது ‘ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிக் குதயம்‌।” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக வாகாமையாலே இதற்கு அர்த்த மருளிச்‌ செய்வாராரென்று விசாரமுண்டால்‌ திரு நாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணும்‌ என்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பஞ்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப்‌ போவோ மென்று புறப்பட்டெழுந் தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவங்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்தமாக, மார்க்க மத்யே வந்து ஸங்கதராக, அவரைக்‌ கண்டு எண்‌ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே” என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும்‌ தாளுந் தடக் கையுங்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸநம்‌ பண்ணி நிற்க, இத்தைக்‌ கண்டு ஜீயர்‌ ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாப்‌ போலே யாயிற்று” என்று மிகவும்‌ உகந்தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்‌ற மாட திருக் குருகூரேற வெழுந்தருளி ஆயி பக்கலிலே ஆசார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ கேட்டருளி,
    ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: |
    ஸ்ரீஸாநுதாஸ மமலம்‌ , தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

    [எவரால்‌ ஆசார்ய ஹிருதயத்தின்‌ எல்லா வர்த்தங்களும்‌ விளக்கமாகக்‌ காட்டப்பட்டதோ, தோஷமற்ற திருத் தாழ்வரை தாஸர்‌ என்ற அந்த தேவ ராஜரை (ஆயியை) அடி பணிகிறேன்‌ -என்று (ஸ்ரீ ஸாநு தாஸம்‌ என்று தெலுங்குப்‌ பதிப்பில்‌ பாடம்‌-ஆயிஸ்வாமிக்கு திருத்தாழ்வரை, தாஸர்‌ என்று திருநாமமுள்ளபடியால்‌ [௨. ர. மாலை 58ம்‌ பாசுர வ்யாக்யாநம்‌ காண்க ] ஸ்ரீஸாநு தாஸர்‌ என்ற பாடமே ஆதரணீயம்‌, ஸாநு-தாழ்வரை. –கிரிஸாது ஷுரம்ஸ்யஸே-அஹாம்‌ ஸர்வம் கரிஷ்யாமி*‘ எ்ன்‌று இளைய பெருமாள்‌ திருத் தாழ்வரை தாஸரானார்‌. )அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச்‌ செய்தருள; ஆயி அதில்‌ தமக்கந்வய மற்றபடி தோற்ற,
    பூதூரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங் கமழும்‌
    தாதரு மகிழ் மார்பள்‌ தானிவனோ–தூதூர
    வந்த நெடுமாலோ? மணவாள மா முனிவன்‌
    எந்தை யிவர்‌ மூவரிலும்‌ யார்‌?

    என்றருளிச்‌ செய்து ‘ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக்‌ கொண்டு அங்கே சில கால மெழுந்தருளி இருக்க; அதுவே ஹேதுவாக, ‘ஆயி திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌’ என்று திரு நாராயண புரத்திலுளள அஸுயாளுக்கள்‌ அவர்‌ திருமாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கீ கரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்க்க அக் காலத்திலே ஆயிவும்‌ மீண்டும்‌ திருநாராயண புரத்தேற எழுந்தருளி இச் செய்‌தியைக்‌ கேட்டு ஹ்ருஷ்டராய்‌ “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம்யஹம்‌’” -நான்‌ எவன்‌ விஷயத்தில்‌ அநுக்ரஹம்‌ பண்ண விரும்புகிறேனோ அவன்‌ தனத்தை அபஹரிக்கிறேன்‌-என்னுந்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப் பிள்ளை இத்‌தைக் கொண்டருளிய பின்பு நாம்‌ இரக்கத்துக்கு விஷயமென்பது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே, ”யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌-. உடையவன்‌ உடைமையை ஸ்வீகரிக்கை ப்ராப்தமிறே” என்று ஈடுபட்டு
    ஆநந்தாஸ்ருக்கள்‌ பனிப்ப எழுந்தருளி ஆசார்ய க்ருபா லப்தரான ஞானப் பிரான்‌ ஒருவரையுமே அர்த்தித்துப்‌ பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து யாதவ கிரி நிலயனுக்கு மால்ய சமர்ப்பணைக நிஷ்டராய்‌ அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.

    அநந்தரம்‌ திருநகரியிலே பெரிய ஜீயரும்‌,
    மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
    தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌–தீதற்ற
    ஆசாரிய விதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
    தேசாரத்தன் கண்‌ நெஞ்சே காண்‌
    -என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாமநுஸந்தித்தருள-அப்படியே முதலிகளும்‌
    மாதவத்‌ தோன்‌ மாறன் மனம்‌ கூறும் மணவாளன்‌
    தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌- நீதியினால்‌
    ஆங்கவர் தாள்‌ சேரப் பெற்றாராயி மணவாள முநி
    பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று.
    என்றநுஸந்தித்தார்கள்‌.

    திருநகரியில்‌ ஜீயர் மடம்‌ தீக்கிறையாதல்‌.
    இப்படி பெரிய ஜீயர்‌ ஜ்ஞாந ஸம்ருத்தியுடனே திருநகரியிலே வாழ்ந்தருளுங் காலத்திலே, இத்தைக் கண்டு ஸஹிக்க மாட்டாதசில அஸுயாளுக்கள்‌ ஆஸூர ப்ரக்ருதிகளாய்‌ மஹா பாபிகளாய்க்‌ கொண்டு கூரை மேய்ச்சலா யிருக்கிற மடத்திலே ஜீயர்‌ எழுந்தருளி யிருக்க,அர்த்தராத்ரியிலே அக்நி ப்ரஷேபணம்‌ பண்ண, அத் தசையிலே ஜீயர்‌ தம்முடைய ப்ரபாவத்தாலே அவ் வழல் தட்டாதபடி சேஷாக்ருதியாய்க்‌ கொண்டு அனைவருங் காணப் புறப்பட்டு; மடம்‌ வேகிறபடியைக் கண்டு விஷண்ணராய்‌ சோகார்த்தரா யிருக்கிற முதலிகள் திரளிலே வந்து புகுந்து நிற்க, இந்த அத்புதத்தைக்‌ கண்ட முதலிகளெல்லாருங் கண்டு மிகவும்‌ ஸந்துஷ்டராயிருத்‌தார்கள்‌,இந்தச்‌ செய்தியை அந்த தேசாதிபதியான ராஜா கேட்டு ப்ரச்சந்ந சாரிகளான அவர்களைக்‌ கண்டு பிடித்து தண்டிக்கத் தேட ஸாபராதைகளான ஏகாக்ஷி ஏககரணி தொடக்கமானவர்களையுமுட்பட திருவடியோடே மறுதலித்து, :’பாபாநாம்‌ வா சுபாதாம்‌ வா ”, ‘*த்ராஹி த்ராஹி’‘ இத்யாதிப்படி ரக்ஷித்த ஜநக குல ஸூந்தரியைப் போலே ஸுந்தர வர முநியான இவரும்‌, தேவீ லஷ்மீர்ப்‌ பவஸி தயயா வத்ஸலத்வேந சத்வம்‌” [தயையாலும்‌ வத்ஸல்யத்‌தாலும் தேவரீர்‌ லக்ஷ்மீ தேவியாகிறீர்‌– வர. சத்கம்‌-14], என்னும்‌படியான தம்முடைய பரம க்ருபையாலும்‌ வாத்ஸல்யத்தாலும்‌ அவர்களையும்‌ அப்படியே ரக்ஷித்தருளினார்‌. பின்பு அநேக காலத்‌திற்கு மேல்‌ அவர்கள்‌ ஸாந்தா நிகரா யுள்ளவர்கள்‌ கருணாம்ருத ஸிந்துவான காந்தோ பயந்த்ரு முநிவர்ய கமநீய சரண கமலங்களை வந்தாஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டார்கள்‌.

    திருக் குருகூரிலும்‌ திருக் குறுங்குடியிலும்‌ கைங்கர்யங்கள்‌
    அநந்தரம்‌ அத் தேசத்துக்கு அதிபதியா யிருப்பானொருவன்‌ ஜீயருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியையும்‌ ஸர்வஜ்ஞத்வாதி களையுங் கண்டு அத்யந்தம்‌ ப்ரவணனாய்த்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அவனுக்கு சடகோப தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்‌தருளி, அவனைக் குறித்து அத்ருஷ்டத்திலே முக்காற் கூறு ருசியும்‌ – அத்ருஷ்டாநுகுணமான த்ருஷ்டத்திலே காற் கூறு ருசியும பண்ணிக் கொண்டு போரும்‌” என்று நியமித்தருள அவனும்‌ அபப்டியே செய்து கொண்டு வர்த்தித்து, காளமேகன்‌ திரு மண்டபம்‌ தொடங்கித்‌ திரு வீதிகள்‌, திரு மதிள்கள்‌, திரு வெல்லைகள்‌ முதலான அனேக கைங்கர்யங்களை ஆழ்வாருகந்தருளும்படி பண்ணி அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ உண்டாக்கினான்‌.

    அநந்தரம்‌ ஜீயர்‌ திருக் குறுங்குடியிலே சென்று அங்கே திரு வேங்கடமுடையான்‌ என்றொரு ப்ராஹ்மணனை க்ருபை பண்ணி யருளி அவருக்குத்‌ திருவேங்கட தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்தருளி அவருக்குத்‌ திருக் குறுங்குடியில்‌ கைங்கர்யத்தை என்று நியமித்தருள–ஸ்ரீ வாரஹ புராண ப்ரஸித்தமான -அவர்‌ நின்ற நம்பி இருந்த நம்‌பி, கிடந்த நம்பி ப்ரஸித்தமான நம்பிகள் மூவருக்கும்‌ (திருப்பாற்கடல்‌ நம்பி, மலை மேல்‌ நம்பி என்று நம்பிகள் ஐவர்க்கும்‌ ) தனித் தனியே திரு விருப்புகளையும்‌ திரு மண்டங்களையு முண்டாக்கி ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌ இப்படி திருக் குருகூர்‌ நம்பிக்கும்‌ திருக் குறுங்குடி நம்பிக்கும்‌ அனைத்தழகும்‌ கண்டருளப்‌ பண்ணி, மற்றும்‌ அத் தேசத்திலுண்டான திருப்பதிகளுக்கெல்லாம்‌ அதிசயத்தை யுண்டு பண்ணத் தக்க ஆஸ்ரிதரையும்‌ கற்பித்தருளி, பின்பு,

    ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலே எழுத்தருளல்‌
    பிறந்தகத்திற்‌ சீராட்டுப்‌ பெற்றாலும்‌ தன்னைச்‌ –
    சிறந்துகக்கும்‌ சீர் கணவன்‌ தன்னை-மறந்திருக்கப்‌
    போமோ மணவாளர்‌ பொன்னடியை விட்டிருக்க
    லாமோ கல்வி யறிந்தால்‌,

    என்றநுஸந்தித்து அப்போதே ஆழ்வாரநுமதி கொண்டு கோயிலேறப்‌ புறப்படெழுந்தருளி பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு இதர மத நிரஸந பூர்வகமாக ஸ்வமத ஸ்த்தாபநம்‌ பண்ணிக்‌ கொண்டு சேஷாவதார மென்னுமது தோற்ற பெரிய பெருமாள்‌ பரிஸரத்திலே ஸுகமே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலே அப்பிள்ளா ரென்றொரு வித்வான்‌ வாதிகளை ஜயிக்கப் போய்‌ வடதேசத்தி லுள்ளாரை ஜயித்து எறும்பியில்‌ அப்பாவுடனே தர்க்‌கிக்க வேணுமென்று புக, அப்பாவுடைய ப்ரபாவத்தைக்‌ கண்டு வித்தராய்‌ அவரை யநுவர்த்தித்துக்‌ கொண்டு மூன்று நாளிருந்து ஜ்ஜாதவ்யாம்சங்களைக்‌ கேட்டறிந்து, அனுப்புவித்துக்‌ கொண்டு புறப்பட, வழிவிட வெழுந்தருளின அப்பாவும்‌ இப்பால்‌ நீர்‌ இனி எங்குப்‌ போக வேண்டுவது?” என்று கேட்க, ஸ்ரீரங்க ஸ்தலத்திலே ஜீயரென்றொருவர்‌ ப்ரஸித்தரா யிருக்கிறார்‌; அவரைக் கண்டு வாதிக்க வேணும்‌.’” என்ன, அப்பாவும்‌ அத்தைக் கேட்டு இவருக்கு ஹிதமாய்‌ ”நீரிப்படி செய்ய வொண்ணாது; ஜீயருடைய ப்ரபாவம்‌ நானறிவேன்‌; பெருமாள்‌ கோயிலிலே கிடாம்பி நாயனார்‌ பாடே ஸ்ரீபாஷ்யம்‌ ஸ்ரவித்தார்‌; நாயனாரும்‌ (கிடாம்பி நாயனார்‌ பாடே பாஷ்யம்‌ கேட்ட போது சிந்தனை பண்ணுவித்தவர்‌ திருநாமம்‌ ஐயைகளப்பா (பக்‌. 81) என்றுள்ளது. இங்குள்ளது மேல்‌ வரும்‌ விருத்தாந்தத்‌துடன்‌ சேரவில்லை: )நம்மை அவருடனே சிந்தனைக் கிருக்கச்‌ சொல்ல இருந்தேன்‌; அவர்‌ ஸகலார்த்தங்களையும்‌ யுகபத்‌ ஸாக்ஷாத்கரித்து உபந்யஸிப்பர்‌; அவருடனே வாதிக்க ஒருவர்க்கும்‌ க்ஷமமன்று; அதுக்கு மேலே அவர்‌ யதீஸ்வரர்‌, ஸ்ரீவைஷ்ணவ தர்சநத்திற்கு அபி வ்ருத்திரர்‌, அவரிடத்திலே நமக்கெல்லாம்‌ ப்ரதி பத்தி க்ரமம்‌ வேறே இருக்கிறது, ஸமய ப்ராப்தே சொல்‌லுகிறேன்‌”என்றருளிச்‌ செய்து அனுப்பி யருளி மீண்டும்‌ எறும்பியிலே எழுந்தருளினார்‌.

    எறும்பியப்பா ஜீயரிடம்‌ ஆஸ்ரயித்தல்‌
    அநந்தரம்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கோயிலினின்றும்‌ திருமலைக்கு எழுந்தருளுவதாக எறும்‌பியிலே வர, அப்பா கண்டு அவரை யழைத்‌தருளி ஆதரித்து, கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ ஜீயருடைய விருத்‌தாத்தங்களையுங்‌ கேட்டருள, அவர்‌, ‘கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடை யய்யங்கார்களும்‌ மற்றும்‌ திருவாழியாழ்வார்‌ பிள்ளை முதலான பெரியோர்களும்‌ ஸ குடும்பமாகவும்‌ மற்றும்‌ அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்‌தார்கள்‌;-ஜீயருடைய வைபவம்‌ உத்தரோத்தர்ம்‌ அதிசயமாக நடக்கிறது” என்று விண்ணப்பஞ் செய்ய, திருவுள்ளமுகந்தருளி,அவருக்கு பஹுமாநஞ்‌ செய்தருளி அற்றைக்கு அவரை நிறுத்திக்‌ கொண்டு, நீர்‌ சொன்னதெல்லாம்‌ ஸாமாந்யமாகக்‌ கேட்டிருந்‌தோம்‌; அந்த வ்ருத்தாந்தங்களையும்‌, ஜீயர்‌ திருநகரிக் கெழுந்தளி திரும்பி யெழுந்தருளின: செய்தியையும்‌ விஸ்தாரமாக வருளிச் செய்யும்‌” என்று கேட்டருளி. அவரை, பிற்றை நாள்‌ திருவேங்கடமுடையானை ஸேவித்து சீக்கிரமாக வரச்‌ சொல்லி நியமித்து நாமும்‌ பயணமாயிருக்கிறோம்‌, கூடப் போவோம்‌” என்றருளிச்‌ செய்து விட. பின்பு தமது திருத் தமப்பனாருக்கு இச் செய்தியை யறிவிக்க’ அவரும்‌, ”ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வேணுமென்று ருசி யுண்டு போலே யிருக்கிறது; இனி மேல்‌ அது நன்றன்று போலே தோற்றுகிறது; வேணுமாகில்‌ அவரிடத்தில்‌ ப்ரதிபத்தி பண்ணி ஜ்ஞாதவ்யாம்ச முண்டானால்‌ அநுவர்த்தித்துக் கேட்டு, ஸ்ரீபாத தீர்த்த தளிகை ப்ரஸாத ஸ்லீகாராதிகளைப்‌ பண்ணி வாரும்‌’” என்ன, அந்த ஸ்ரீவைஷ்ணவரும்‌ திருமலையில்‌ நின்றும்‌ வர,

    அவரைக்‌ கூட்டிக்‌ கொண்டு எறும்பியப்பா கோயிலேற வெழுந்‌தருளி நம்பெருமாளைத்‌ திருவடி தொழுது, பெரிய கந்தாடை அண்ணன்‌ ஆப்த பந்துவாகையாலே அவர்‌ திருமாளிகையிலே அமுது செய்தருளி அவருடனே ஜீயர்‌ ஸந்நிதிக் கெழுந்தருள, ஜீயரும்‌ இவரைப்‌ பெரிய வித்வான்‌ என்றறிந்து, பரத்வ ப்ரதிபாதகமான உயர்வற வுயர் நல ப்ரவேசத்தை ௨பந்யஸித்துக்‌ காட்டி யருள. அப்பா அது கேட்டு ஆஸ்சர்யப்பட்டு ‘ஜீயருக்குத்‌ தமிழொழிய ஸம்ஸ்க்ருதத்தில்‌ மிகவும்‌ பரிசயமில்லை யென்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிக நிபுணரயிருக்‌ கிறார்‌?” என்று போர ப்ரீதராயிருக்க ஜீயர்‌ இவரை மடத்தில்‌ அமுது செய்ய ப்ரார்‌த்திக்க, அவரும்‌,
    யத் யந்நம்‌ பதிபாத்ரஸ்தம்‌ யதிநா ப்ரேஷிதம்ச யத்‌ |
    அந்ந த்ரயம்‌ ந போக்தவ்யம்‌ புக்த்வா சாந்த்ரயணம்‌ சரேத்‌ ॥

    ஸந்யாஸி களுடைய அந்நமும்‌, ஸந்யாஸிகளுடைய பாத்ரத்‌திலுள்ள அந்நமும்‌, ஸந்யாஸிகளால்‌ அனுப்பப்பட்ட அந்நமும்‌-இப்படி மூன்றும்‌ புசிக்கத் தக்கவை யன்று , அப்படி புசித்தானாகில்‌ சாந்த்ராயண வ்ரதத்தை யநுஷ்டிக்கக் கடவன்‌ -என்கிற ஸாமாந்ய சாஸ்த்ரைக நிரதராய்‌, ‘தருவரேல்‌ (திருமாலை-41),“ப்ரார்த்தயேத்‌’ என்கிற விசேஷ சாஸ்த்ர ஜ்ஞாத ரஹிதராய்‌ ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயியாமல்‌ மறுத்தெழுந்தருளி அண்ணனைப்‌ போர வெறுத்து அவர்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளாமல்‌ அப்போதே கோயிலிலிருந்து புறப்பட்டுத்‌ தம் மூரேற வெழுந்‌தருளி

    தமது திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகனாரைத்‌ திருவடி விளக்குவதாகக்‌ கோயிலாழ்வாரைத் திருக் காப்பு நீக்கப் புக; அது அவிசால்யமாய்‌, ஸக்லோபாயங்களாலும்‌ நீக்கப்‌ போகாமையாலே மிகவும்‌ து:கிதராய்‌ அமுது செய்யாமலே கண் வளர்த்தருள அவ்வளவில்‌ அப்பாவின்‌ ஸ்வப்நத்திலே
    ஸேஷ: ஸ்ரீமாநஜநிஹி புரா ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ
    போகீ பூதஸ்‌ ததநு பகவாந்‌ ராகவஸ் யாநு ஜந்மா |
    பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ பூபஸாபா ஸமாந:
    ரக்ஷத் யஸ்மாந்‌ ரகுகுல பதே ராஸ்திதோ பத்ர பீடம்‌ ॥
    பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வ பெளம:
    ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம் ரக்ஷணார்த்தம்‌ |
    தத்வம்‌ கந்தும்‌ வ்ரஜ ஸரண மித்யாதி ஸத்‌ ராகவோயம்‌
    ஸ்வப்நே ஸோயம்‌ வரவர குருஸ்‌ ஸம்ஸ்ரயோ மாத்ரு ஸாநாம்‌ –

    இந்த மணவாள மாமுனிகள்‌ முதன் முதலில்‌ கைங்கர்ய ஸ்ரீயை யுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார்‌. அவ் வரவரசனே பின்பு இராம பிரானுடைய தம்பியான லஷ்மண பகவானாகப் பிறந்தான் -பின்பு ஆஸ்ரித ஸுலபரான மணவாள மா முனிகளாக அவரே அவதாரம்‌ செய்து சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான ஸிம்ஹாஸனத்தில்‌ வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்‌-

    திருவனத்தாழ்வான்‌ ஆஸ்ரித ஸூலபரான மணவாள மா முனிகளாக அவதரித்து லோகத்தை ரஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்‌தில்‌ எல்லோரினும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌. தத்வ ஜ்ஞானம்‌ பெறுவதற்காக அவரை நீர்‌ தஞ்சமாகப்‌ பற்றுவீராக” என்று இந்த சக்ரவர்த்தி திருமகன்‌ அப்பாவுக்கு ஸ்வப்நத்திலே உத்தரவிட்டருளினார்‌. அப்படிப்பட்ட. மணவாள மாமுனிகள்‌ நம்மைப்‌ போன்றவர்களுக்கு சரணமடையத் தக்கவராகிறார்‌ -என்கிறபடியே, அவர்‌ திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகன்‌,நீர்‌ சேஷாவதாரமான ஜீயர்‌ திருவடிகளிலே அபசாரப்பட்டு. வந்தீர்‌; பகவத்‌ பக்த ஸம்புக்த பாத்ர சிஷ்டோதநாதராத்‌–கோபி தாஸீ ஸுதோப்யாஸீ தம்ருதோ வை நாரதோ அபவத்‌–பகவத் பக்தரொருவர்‌ அமுது செய்த பாத்திரத்தில்‌ மிச்சமான ப்ரஸாதத்தை அன்போடு உண்டதனால்‌,, வேசியின்‌ மகனொருவன்‌ கூட தான்‌ இறந்த பின்பு மறு பிறவியில்‌ நாரதராகப்‌ பிறந்தான்‌-என்று ஸ்ரீநாரத பகவான்‌ உத்பத்தி கேட்டறியீரோ? ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு வந்தாலொழிய உம்முடைய கையினாலே நாம்‌ திருவராதநம் கொள்ளக்‌ கடவோமல்லோம்‌; சடக்கெனப்‌ போகீர்‌” என்று நியமித்தருள; அப்பாவும்‌ திருக் கண்களை விழித்து விஸ்மிதராய்‌ ஸ்வப்நத்தை விச்வஸித்து -அப்போதே புறப்பட்டுக்‌ கோயிலேறச்‌ சென்று புக்கு, ”அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே ..ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌ வந்தே வரவரம் முதிம்‌”– திருக்‌ காவேரி மத்யத்தலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய்‌ விளங்கும்‌ திருவரங்கத்‌ திருப்பதியில்‌ இனிதாக வெழுந்தருளியுள்ள மணவாள மா முனிகளை அடி பணிகிறேன்‌-என்றநுஸந்திக் கொண்டு செல்ல; அவ்வளவிலே ஜீயரும்‌ பெருமாளை ஸேவிப்பதாகப்‌ புறப்பட்டு எதிரே எழுந்தருளக் கண்டு அத்யாதரத்துடனே ‘தண்டவத் ப்ரணமேத் பூமாவு பேத்ய குருமந்வஹம்‌”-நாடோறும்‌ ஆசாரியனைக்‌ கிட்டி தரையில்‌ தடி போல்‌ விழுந்து ஸேவிக்கக் கடவன்‌-என்கிறபடியே திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அவரை “லோசநாப்யாம்‌ பிபந்நிய’ என்கிறபடியே நிரீஷண ஸுதாஸந்து ஷிதாரம்படி குளிர நோக்கிக்‌ கொண்டு நிற்க, அப்பாவும்‌ அப்போது தம்மை விஷயீகரிக்கப்‌ புறப்பட்டருளின ஜீயரின்‌ திவ்ய மங்கள விக்ரஹம ஸெளந்தர்யத்திலே யீடுபட்டு, ”மயி ப்ரவிதி ஸ்ரீமந் ‘ என்று தொடங்கி மயி ப்ரஸாத ப்ரவணம்‌” (பூர்வ தின சர்யை -என்னுமளவாக அநுஸந்தித்துக்‌ கொண்டு நிற்க

    ஜீயரும்‌ இவருடைய உஜ்ஜீவநத்திலே யூன்‌றிப்‌ போமவராகையாலே மீண்டும்‌ உள்ளே புக்கு, ஆத்ம லாபத்தைப் பார்க்கிலும்‌ வேறொரு உயர்ந்த லாபமில்லை யென்றறுதியிட்டு, இவரை யங்கீ கரிக்கையிலுள்ள நசையாலே மதுரோதார பாஷணம்‌ பண்ணி யிருந்து, ஸ்ரீபாதத்து முதலிகளை ‘-பெருமாளை ஸேலித்து வாருங்கோள்‌’என்றனுப்பியருள, அவர்களும்‌ பெருமாளை ஸேவித்து மீண்டு வர ஜீயரும்‌; அவர்களுடனே ‘பெருமாள்‌ இன்னவொப்‌பனையோடே யெழுந்தருளியிருக்கிறார்‌; இன்னபடி, அமுதுசெய்ததருளினார்‌” என்றருளிச்‌ செய்ய, அவை ஒத்திருக்கையாலே, எல்‌லாரும்‌ ஜீயருடைய ஸர்வஜ்ஞதையைக் கண்டு விஸ்மயப்பட்‌டார்கள்‌. அப்பா,நெடுந்தூரத்திலிருந்து வந்தவராகையாலே வழியிலுண்டான விடாயெல்லாந்தீர பசியன்‌ சோற்றைக்‌ கண்டாப்‌போலே பவந்தமேவ நீரந்த்ரம்‌ பச்யந்வச்யேந சேதஸா” -தேவரீரையே, அடியேன்‌ வசப்பட்ட மனத்தோடு, இடை விடாமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு- என்றபடியே வைத்த கண்‌ வாங்க மாட்‌டாதே தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ ஜீயருடைய திவ்ய மங்கள விக்ரஹாநுபவமேயாக அநுபவித்துக்‌ கொண்டு போந்தார்‌ .

    மற்றை நாள்‌ அபர ராத்திரியிலே அண்ணன்‌ முதலாவனார்கள்‌ ஜீயர்‌ திருப்பள்னியறை வாசலிலே எழுந்தருளி
    ரவிருத யத்யதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
    விகஸதி பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ நமே |
    வரவர யோகி வர்ய! வரணீய குணைக நிதே
    ஐயஜய தேவ! ஜாக்ரஹி ஜநேஷு நிதேஹி த்ருஸம்‌ ॥

    சூரியன்‌ உதித்த போதிலும்‌ அடியேனுடைய அக விருள்‌ நீங்க வில்லை;-குளங்களில்‌* தாமரை மலர்கள்‌ மலரா நின்றன;-அடியேனுடைய மனமான தாமரை மலரவில்லை; விரும்பத் தக்க கல்யாண குண நிதியே! ஸ்வாமிந்‌! மணவாள மமுனியே ! விஜயியா யெழுந்தருளி யிருக்க வேணும்‌; திருப்பள்ளி உணர்ந்தருள வேணும்‌; ஆஸ்ரித ஜனங்‌களைக்‌ கடாக்ஷித்தருள வேணும்‌- என்று திருப்பள்ளி யுணர்த்த, திருப்பள்ளி யுணர்ந்து, குருபரம்பரா பூர்வகமாக ரஹஸ்ய த்ரயத்‌தையும்‌ அநுஸந்தித்தருளி அதில்‌ பர வ்யூஹாந்தர்யாமி குணங்‌களைத் திருமந்த்ரத்தாலும்‌, விபவ லெளலப்யாதி குணங்களை சரம ஸ்லோகத்தாலும்‌, அர்ச்சாவதார குண பூர்த்தியை த்வயத்தாலும்‌ அநுஸந்தித் தருளி பின்பு,

    அயபம் புநஸ் ஸ்வயம் வ்யக்தாந வதாரா கநுத்தமாலந் |
    நிதாய ‘ஹ்ருதிநீ ரந்தரம்‌ நித்யாயந்‌ ப்ரத்யபுத்யத ॥
    விஸேஷேண விஷேவேச ஸேஷ போக விபூஷணம்‌ |
    அமேயமாதிமம்‌ தாம ரமேஸம்‌ ரங்கஸாயிநம்‌ ॥
    த்யாயம்‌ த்யாயம்‌ வபுஸ் தஸ்ய பாயம்‌ பாயம்‌ தயோததிம்‌ |
    காயம்‌ காயம்‌ குணுநுச்சைஸ்‌ ஸோயம்‌ தத்பூய ஸாந்வயூத்‌

    இம் மணவாள மாமுனிகளோ வென்னில்‌ ஸ்வயம் வ்யக்தங்‌களான அர்ச்சாவதாரங்களை முறையே சிந்தையில்‌ வைத்து இடைவிடாமல்‌ த்யானித்துக்‌ கொண்டே திருக்கண் விழுத்தருளினார்‌.சிறப்பாக, திருவனந்தாழ்வானுடைய திருமேனிக்கு ஆபரணமும்‌ அளவிடற்கரியதும்‌ ஸ்ரீரங்கத்தில்‌ துயில் கொண்டிருப்பதுமான ஸ்ரீய:பதியென்னும்‌ உயர்ந்த தேஜஸ்ஸை த்யானம்‌ செய்தருளினார்‌,-அத் திருவரங்க நாகனுடைய திரு மேனியை த்யானித்துக் கொண்டும்‌ அவனுடைய கருணையாகிய கடலைப்‌ பருகிக்‌ கொண்டும்‌ அவன்‌ குணங்களைப்‌ புகழ்ந்து பாடிக்‌ கொண்டும்‌ இம் மாமுனிகள்‌ முற்‌கூறிய தேஜஸ்ஸாகிய ஸ்ரீரங்கநாதனை மறுபடியும்‌ மறுபடியும்‌ அனுபவித்தார்‌-என்கிறபடியே, அர்ச்சாவதாரத்துக்கு வேர்ப் பற்றான பெரிய பெருமாளுடைய விக்ரஹ குணங்களை விசேஷித் தநுஸந்தித்தருளி அதினுடைய பராகாஷ்டையான யதீந்த்ர சரணத்வvத்வ ப்ராவண்யத்‌தோடே நீராடி நித்யா நுஷ்டானங்களையுஞ்‌ செய்தருளித்‌- திருமண்‌ காப்புச்‌ சாத்தி யருளி; தம்முடைய திருவாராதனமான ஸ்ரீரங்கராஜர்‌ திருமுன்பே எழுந்தருளி, தண்டன் ஸமர்ப்பித்து

    ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யம்‌ ஆசார்யாதீந தைவயத்‌ |
    ஆம்நாயாராம்‌ ரஹஸ்யந்த தகிலேப்ய: ப்ரகாஸயந்‌ ॥
    ஸர்வம் யதிபதேரேவ குர்வந் நாதேஸ பூர்வகம்‌ |
    க்ருத்யாக்ருத்யேஷு கர்த்ருத்வம்‌ க்ருதீகிமபி நஸ்ப்ருபுஸக்‌ ॥
    ததஸ் தஸ்ய முகோல்லாஸம்‌ சிகீர்ஷந் நேவ கேவலம்‌

    யாதொரு ஆத்ம ஸ்வரூபத்தின்‌ உண்மையாண தன்மையானது ஆசார்யனுக்கே பரதந்த்ரமா யிருப்பதோ, ஸ்ருதிகளில்‌ ரஹஸ்ய மாயுள்ள அந்த ஆசார்ய பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிப்பவராய்‌,கேவலம்‌ அவ்வாசார்யருடைய(எம்பெருமானாருடைய) முக மலர்த்தியையே விரும்பிச்‌ செயல்படுபவரரய்‌ அவ் யதீந்த்ரரின்‌ நியமனப்படியே எல்லா விதமான கைங்கர்யங்களையுஞ்‌ செய்து கொண்டு ‘கார்யாகார்யங்களில்‌ நாம் செய்தோம்‌” என்ற எண்‌ணம்‌ சிறிதுமில்லாதவராய்‌ தந்யராய்‌ எழுந்தருளியிருந்தார்‌ -என்கிறபடி தம்முடைய பாரதந்தர்யத்துக்குச்‌ சேர்ந்த ப்ரதிபத்தியுடனே திருவாராதநத்தையும்‌ செய்தருளி;

    (ஐயைகள் அப்பா -எறும்பி அப்பாவின் திருத்தகப்பனார் -கிடாம்பி நாயனார் இடமும் ஸ்ரீ பாஷ்யம் காலஷேபம் பண்ணும் பொழுது கூட இருந்து மா முனிகளின் வைபவம் அறிந்தவர்-74 லில் ஒருவராக இருந்தும் அண்ணன் போல்வார் மீண்டும் இவரிடம் ஸமாஸ்ரயணம் செய்து கொண்டதும் இவர் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பதால் பெறும் ஸ்ரேஷ்டத்துக்காகவே -)

    அநந்தரம்‌ -ஸந்நிதிஸ்‌ நம்பமூல பூதல பூஷணமாய்‌ எழுந்‌தருளி யிருக்க, அவ் வளவிலே அப்பாவும்‌ அண்ணனைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு” அடியேனை அங்கீகரித்தருள வேண்டும்‌” என்றபேக்ஷிக்க அப்படியே அங்கீ கரித்தருளி, திருவிலச்சினை முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து விசேஷ கடாக்ஷம்‌ ‘செய்‌தருளி, திருவடிகளாலே அவருடைய திருமுடியை யலங்கரித்தருளி,பின்பு அத்தலைக்கு மங்களாசாஸன பரராக வேணுமென்னும்‌ திருவுள்ளக் கருத்தோடே மந்த்ர த்ரயத்தையும்‌ ப்ரஸாதித்தருளி; அவரையும்‌ அந்தரங்கராக்கிக்‌ கொண்டு அவருடன்‌ கூட பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவதாகப்‌ புறப்பட்டருளி நான்‌முகன்‌(கோட்டை வாசல் வழியாக -ரெங்க ரெங்கா கோபுரம் ) தண்டன்‌ ஸமர்ப்பித்து மெள்ள வெழுந்‌தருளி உள்ளே புக்கு
    தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணெள ரங்க ஸ்ருங்கம்‌
    ஸேநா நாதோ விஹக வ்ருஷபஸ்‌ ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
    பூமா நீளா குருஜந வ்ருத: பூரூஷஸ் சேத்யமீஷாம்‌
    அக்ரே நித்யம்‌ வரவர முநே ரங்க்ரி யுக்மம்‌ ப்ரபத்யே(பூர்வ தினசரி -24 )

    ஆண்டாள்‌, எம்பெருமானார்‌, நம்மாழ்வார்‌, ஸ்ரீரங்கவிமானம்‌, சேனை முதலியார்‌, பக்ஷி ராஜனாம்‌ பெரிய திருவடி ஸ்ரீரங்கநாதீன்‌, ஸ்ரீரங்கநாச்சியார்‌. பூமிதேவி, ஸ்ரீதேவி நீளாதேவி ஆழ்வார்கள்‌ ஆகியவர்களால்‌, சூழப்பட்ட பரமதநாதன்‌. என்‌னும்‌ க்ரமத்திலே மங்களாசாஸனார்த்தமாசு எழுந்தருளி ஸேவை ஸாதித்தருளும்‌ மணவாள மா முனிகளின்‌ இணை யடிகளை தினமும்‌. தொழுகின்றேன்‌-என்கிற அடைவிலே ஸேவித்து – தத்தத் ஸ்தலோசித மங்களாசாஸனங்களைப்‌ பண்ணி, பெரிய பெருமாளையும்‌ நம்பெருமாளையும்‌ திருவடி தொழுது அநந்தரம்‌
    உபேத்ய புநரப்யேஷி நிஜமேவ நிவேஸநம்‌ |
    நிவேத்ய நிகிலம்‌ தத்ர யதீந்த்ராய நமஸ்யயா ॥

    இந்த மணவாளமாமுனிகள்‌ மீண்டும்‌ தமது மடத்துக்‌கெழுந்தருளி அங்கு கோயில்‌ கொண்டெழுந்தருளியுள்ள யதிராஜரிடம்‌ நடந்ததை யெல்லாவற்றையும்‌ தெண்டனிட்டு விஜ்ஞாபித்து-என்கிறபடியே மீண்டும்‌ மடமே யெழுந்தருளி அங்கு எழுத்தருளி யிருக்கும்‌ உடையவர்‌ ஸந்நிதியிலே ஸர்வமும்‌ விஜ்ஜாபித்து, திருமலை யாழ்வாரிலே தத் பாதச் சாயையாக ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து, இவர்க்கு [எறும்பியப்‌பாவுக்கு]

    ஸம்சார நிவர்‌த்நகமாயிருக்கிற ஸ்வ திவ்ய சரணாம் போஐ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸெளரபமான ஸ்ரீபாத தீர்த்தத்தையும்‌ ப்ரஸாதித்தருளி
    அத மாத்யாஹ்நிகம்‌ க்ருத்யம்‌ க்ருத்வா ஸத்வோத்தரம்‌ முநி . |
    ஆராத்ய விதிவத் தேவ மந்வபூத்‌ ரங்க பூஷணம்‌ ॥
    ததஸ்தந்‌ முக ஸம்ஸ்பர்ஸரஸேந ஸுகந்திநா |
    ஸூசிநா ஸுகுமாரேண ஸத்வஸம்‌ ஸூத்தி ஹேதுநா ॥
    பக்தி பூர்வம்‌ ப்ரபூதேந போஜ்யேந பகவத் ப்ரியாந்‌ |
    தத் பரஸ் தர்ப்ப யாமாஸ ததீய ப்ரேம வ்ருத்தயே
    ஆத்மாந மாத்மநா பஸ்‌யந்‌ போக்தாரம்‌ புருஷம்பரம்‌ ॥
    அநு யாகம்‌ யதா யோகம்‌ நிஸ்ஸங்கோ நிரவர்த்தயத்‌ |

    பிறகு பரம ஸாத்விகரான மணவாளமாமுனிகள்‌, மத்யாஹ்ந அநுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ அரங்கநகரப்பனுக்கு முறைப்படி திருவாராதனம்‌ கண்டருளப் பண்ணி, குணாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்னர்‌ அவ்வெம்பெருமானுடைய திருப்பவள ஸம்பத்தத்தினால்‌ அமுதமாய்‌, பரிமளிதமாய் ,தூயதாய்‌, மென்மை யுடைத்தாய்‌, ஸத்வ ஸ்வபாவத்துக்கும்‌ மனத் தூய்மைக்கும்‌ முக்‌கிய காரணமாயிருப்பதான, ஸம்ருத்தமான பகவத்‌ ப்ரஸாதத்தால்‌ எம்பெருமானடியார்களை ததீய பக்தி பூர்வமாக , தத் கைங்கர்ய பரராக அவர்களிடம்‌ ப்ரேமம்‌ வளர்வதற் குறுப்பாக ஆராதித்தார்‌; தாம்‌ (ப்ரஸாதத்தை) அமுது செய்தருளுவதனால்‌ தம் மூலமாத அந்தர்யாமியான பரம புருஷனையே போக்தாவாக அத்யவஸித்து அமுது செய்வதில்‌ நேரே தொடர்பில்லாத மனதுடன்‌ பிஷை யேற்றருளினார்‌ -என்கிறபடியே பெருமாளமுது செய்தருளின அநந்தரம்‌ தாமும்‌ அமுது செய்தருளி, போனகஞ் செய்த சேடந் தருவரேல்‌ புனிதமன்றே” என்னும்படி ஸுபாவனமான திருத் தளிகை ப்ரஸ்தம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று இவர்‌ (அப்பா) க்ருதார்த்தரா யெழுந்தருளி யிருக்க; பின்பு,

    ததஸ் ஸ ஜீமூல ஜீதஸ்யாம கோமள விக்ரஹே |
    பீத கெளஸேய ஸம்வீதே பீந வ்ருத்த சதுர் புஜே ॥
    ஸங்க சக்ர கதா தாரே துங்க ரத்ந விபூஷணே |
    கமலா கெளஸ்து போரஸ்கே விமலாயத லோசநே ॥
    அபராத ஸஹே நித்யம்‌ தஹ ராகாஸ கோசரே |
    ரேமே தாம்நி யதாகாஸம்‌ யுஞ்ஜாநோத்யாந ஸம்பதா ॥
    ஸதத்ர நிஸா சலம்‌ சே த, சிரேண விநிவர்த்தயஙந் |

    பிறகு நீர்‌ கொண்ட மேகம் போல கருமையா யழகான திருமேனியில்‌ பீதாம்பர மணிந்தவனாய, பருத்து திரண்ட நான்கு திருத் தோள்களை யுடையனாய்‌, திருவாழி திருச்சங்கு கதைகளுக்கு இருப்பிடமாய்‌, சிறந்த ரத்ந மயமான திருவாபரணங்களால லங்கரிக்கப் பட்டவனாய்‌, பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திரு மார்பில்‌ தரித்தவனாய்‌ நிர்மலமான நீண்ட பெரியவாய கண்களை யுடையனாய்‌, ஆஸ்ரிதாபரதங்களைப்‌ பொறுப்பவனாய்‌ எப்போதும்‌ சேதந ஹ்ருதய மத்யத்தில்‌ வாஸம் செய்பவனாய்‌ பரம ப்ராப்யனான பரம புருஷனிடம்‌, தமது த்யான ஸம்ருத்தியினால்‌ ஒன்று பட்டு லயித்து யதாவகாசம்‌ தமது மடத்தில்‌ மகிழ்ந்திருந்தார்‌. அப் பெருமானிடத்தில்‌ ஸ்திரமாயிருந்த தமது மனஸ்ஸை வெகு காலம்‌ கழித்து மீட்டு–என்கிறபடியே
    ஸூபாஸ்ரயமான அந்தர்யாமி விஷயத்திலே நிமக்ந ஹ்ருதயத்தை யுடையராய்‌ அத்தை ஒரு படி மீட்டு, யதீந்த்ர ப்ரவணமாக்கி, யதிராஜ விம்சதியை யநுஸந்தித் தருளி, பின்பு ஸ்ரீவசநபூஷண வாக்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ ப்ரஸாதித்தருளி, ஸாயங்காலமானவாறே ஸர்வாநுஷ்டானங்களையும்‌ முன்பு போலவே செய்தருளி, மீளவும்‌ ஸந்நிதயிலே யெழுந்தருளி எல்லா வுபசாரங்களையும்‌ கண்டருளப் பண்ணி, திருப்‌ பல்லாண்டை யநுஸந்தித்து மங்களாஸசாநம்‌ பண்ணி, பின்‌ கண்‌ வளர்ந்தருளுவதற்காக ்‌
    தத:.கநக பர்யங்கே தருணத் த்யுமணி த்யுதெள |
    ரத்ந தீபத்வ யோதஸ்த மஹதஸ்‌ ஸ்தோமஸ மேதிதே ॥,
    ஸோபதாநே ஸுகாஸீநம்‌ ஸுகுமாரே வாரஸநே |:
    அநந்ய ஹ்ருதயைர்த் தந்யை ரந்தரங்கைர்‌ நிரந்தரம்‌ ॥,
    ஸூஸ்ரூஷமாணை; ஸூசிபி; த்வித்ரைர் ப்ருத்யை ருபாஸிதம்‌ |
    ப்ராசாமாசார்ய வர்யாணாம்‌ ஸூக்தி வ்ருத்‌ த்யநு வர்ணநை : ॥
    வ்யாச ஷாணம்‌ பரம் தத்வம்‌ வ்யக்தம்‌ மந்ததியாமபி |

    பிறகு உச்சிப்பட்ட சூரியன் போல ப்ரகாசமுடைத்தாய்‌, ரத்ந மயமான இரு தீபங்களினின்றும்‌ உண்டான ஒளியினால்‌ மிக விளங்கா நின்ற பொன்னாலான கட்டிலில்‌ தவையணையுடன்‌ கூடிய மென்மையான அழகிய ஆஸனத்தில்‌ இனிதே யெழுந்தருளி யிருப்பவரும்‌. அந்த மாமுனிகளள்லது வேறிடத்தில்‌ செல்லாத மனதை யுடையராய்‌ பாக்யமுடையரான அந்தரங்கராய்‌ கைங்கர்ய பரரான இரண்டு மூன்று சிஷ்யர்களால்‌ இடைவிடாமல்‌ ஆட் செய்யப்படுமவராய்‌, பூர்வாசாரியர்கஞ்டைய ஸ்ரீஸூக்திகளையும்‌ அநுஷ்‌டான க்ரமங்களையும்‌ அருளிச் செய்வதால்‌ மந்த மதிகளுக்கும்‌ பர தத்‌வத்தை தெளிவா யருளிச்‌ செய்து கொண்டிருக்கும்‌ மாமுனிகளை–என்றபடியே திருப்பள்ளி யறையிலே புக்கு ‘திருப்‌ படுக்கையிலே சாய்ந்தருளி எல்லார்க்கும்‌ தெரியும்படி பூர்வாசாரியர்கள்‌ போதமனுட்டானங்கள்‌ கூறுவாராக வெழுந்தருளி யிருக்கற, போக்‌யதையை அநுபலித்து அவ் வனுபவத்துக்குத்‌ தேசிகரானவர்களோடே கூட அஸ்தாநே பய சங்கிகளாய்‌
    மங்களம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி வர்யாய மங்களம்‌ |
    மங்களம்‌ பந்ந கேந்த்ராய மர்த்ய ரூபாய மங்களம்‌ ॥
    ஏவம் மங்கள வாணீபி ரேநம்‌ ஸாஞ்ஜலி பந்தநா; |
    ஸத் க்ருத்ய ஸம் ப்ரஸீ தந்தம்‌ ப்ரணேமு; ப்ரேம நிர்ப்பரா; ॥

    ஆசார்ய ஸ்ரேஷ்டரான மணவாள மா முனிகளுக்கு மங்களம்‌ மங்களம்‌, மனித வுருவில்‌ அவதரித்துள்ள திருவனந் தாழ்வானான மா முனிகளுக்கு மங்களம்‌, மங்களம்‌; இப்படி மங்கள வார்த்தைக்ளால்‌ ப்ரஸந்நரான இந்த மணவாள மா முனிகளை பக்தி நிறைந்த சிஷ்யர்கள்‌ கை கூப்பிக்‌ கொண்டு ஸேவித்தார்கள்‌-என்கிறபடியே மங்களாஸாசனம்‌ பண்ணி ஸாஞ்ஜலி ஹஸ்தராய்‌ ஸாஷ்டாங்க தீர்க்க ப்ரணாமாதிகளைப்‌ பண்ணிப் ப்ரேம நிர்ப்பரராய்‌ ஸேவித்துக்‌ கொண்டிருக்க, அதப்ருத்யாநநுஜ்ஞாப்ய’” என்கிறபடியே அவர்ளை விடை கொடுத்தனுப்பி யருளி
    ததஸ் ஸஜ்ஜீக்குருதம்‌ ப்ருத்யை; ஸூயநீ யம்‌ விபூஷயந்‌ |
    யுயோஜ ஹ்ருதயம் தாம்நி யோகித்யேய பதத்வயே ॥

    பிறகு சிஷ்யர்களால்‌ ஸித்தப்படுத்தப்பட்ட படுக்கையில்‌ சயனித்து, யோகிகளால்‌ த்யானிக்கத் தக்க திருவடிகளை யுடைய பரம புருஷனிடத்தில்‌ மனதை சேர்ப்பித்தார்‌- என்கிறபடியே
    படுத்த பைந் நாகணையாயிருக்கிற தாமும்‌ ஒரு படுக்கையைப் பற்றிக் கண் வளர்‌ந்தருளுவதற்காக யோகீ த்யேயமுமாய்‌ -ரங்காஸ்ரயம்‌ மம ஸூபாஸ்ரய மாஸாயாணி” என்னும்படி ஸூபாஸ்ரயமுகமாய் –அணைப்பார்‌ கருத்தனுவானான வெள்ளத் தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை மணவாள யோகியான தாம்‌ மனத்திற்‌ கொண்டு நெஞ்சத்துப்‌ பேராது நிற்கும்‌ பெருமானாய்‌ ஸூ ப்ரதிஷ்டிதஞ்‌ யெழுந்தருளி யிருக்கிற சேஷசாயியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே வைத்த இத் தயை யுடையராய்‌ நிர்ப் பரராய்‌ கண் வளர்ந்தருளப் புக்கார்‌.

    இத்தம்‌ திநே திநே குர்வந் வ்ருத்திம்‌ பத்யு, ப்ரஸாதிநீம்‌ |
    க்ருதீர்‌ கடாபதம்‌ சக்ரே ப்ராக்தநீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1
    இத்தம்‌ திநே திநே குர்வந்‌ வ்ருத்தம்‌ பர்த்து; ப்ரஸாதிகீம்‌ |
    க்ருதி கண்டா பதஞ்சக்ரே ப்ராக்த்நீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1

    இப்படி ஸ்வாமியான மணவாள மா முனிக்கு திரு வுள்ளத்துக்கு உகப்பான கைங்கர்யத்தை நாடோறும்‌ செய்து கொண்டு அவ்விடத்தில்‌ திநசர்யையை (45-ஸ்லோகங்களுடன் ) க்ரந்தமாகச்‌ செய்தருளி அதன்‌ மூலமாம்‌ அந்த கிரந்தத்தை எல்லோரும்‌ அனுஸந்திக்கும்படி ராஜ மார்க்கம் போலே ப்ரஸித்தமாக்கினார்‌- என்கிறபடியே எழுந்தருளி யிருக்கற நாளிலே நாடோறும்‌ ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக்‌
    கொண்டு செய்து கொண்டு அப்பா எழுந்தருளி யிருக்க; பின்பு
    வரவர முநி வர்ய பாத யுக்மம்‌ வரத குரரோ; கர பல்லவ த்வயேந |
    ரஹஸி ஸீரஸிமே நிதீயமாநம்‌ மநஸி நிதம்ய நிதாநவாந் பவாமி ॥

    கந்தாடை யண்ணனுடைய இருதளிரன்ன கைகளாலும்‌ ஏகாந்தத்தில்‌ அடியேனுடைய சிரஸில்‌ வைக்கப்பட்ட மணவாள மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளை மனதில்‌ கொண்டு ஸத்தை
    பெற்றவனாகிறேன்‌- என்று இவர்‌ ஹ்ருஷ்டராம்படி தம்‌ திருவடிகளைப் ப்ரஸாதித்து , ”ஊரேறப் போம்‌” என்று விடை கொடுத்தருள அப்பாவும்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற வெழுந்தருளினார்‌

    நாயனார்‌ ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளியது
    இவர்க்கு அநுபந்திகளுமாய் கந்தாடை யண்ணனுக்கு ஸம்பந்திகளுமாயிருப்பார்‌, கந்தாடை நாயன்‌ தேவிகளைப்‌ பிறந்தகத்தினின்‌றும்‌ புக்ககத்திற்கு அழைத்துக்‌ கொணடு வருமளவில்‌ அப்ராப்த வாஹநத்திலே ஏற்றிக்‌ கொண்டு வர, அப்பா அத்தைக் கண்டு ஜீயர்‌ ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளங் கலங்கி உடனே ௮ண்ணனை அழைத்தருளி இப்படியாகாது, அவர்களையும் பெண்ணையும்‌ த்யஜிக்கிறது தகுதி ” என்ன -அவர்களுக்கு ஸ்வரூபசிஷா பூர்வகமாக ஹிதோபதேசம்‌ செய்யலாகாதோ? என்ன,-அப்படியாகாது, எம்பாவுக்கு ஆப்த ஸம்பந்திகளான துர்மாதிகள்‌!” என்ன, ஆகில்விடும்‌:’ என்ன, பின்பு முதலியாண்டான்‌ திரு வம்ஸ்யரான கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடைஅய்யங்கார்களையும்‌ அவர்களுடைய ஸம்பந்திகளையும்‌ கூட்டி விசாரித்து அவர்களை க்ருபை பண்ணி யருளி ஹிதோபதேசஞ்‌ செய்தருளி, ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளி-இந்த ஸப்த பர்வஸ்த்ருக்கும்‌ பரஸ்பர ஸம்பந்தங்களும்‌ அப்யவஹாராதிகளுமாம்படி மர்யாதை கட்டி இன்ன கோத்ரத்தாரின்னரென்று பட்டோலை கொண்டு திருமங்கைமன்னன்‌ திருமாளிகையில்‌ சிலா சாஸனமுமிடுவித்து விசேஷித்து கந்தாடையய்யங்கார்களுக்கு விலஷண ப்ரவரமும்‌ ஸாதித்து அப்பா திருவுள்ளம்‌ மிகவும்‌ ப்ரஸந்நமாம்படி, செய்தருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திவே ஜீயர்‌ திருவடிகளிலே ஆநுகூல்யமில்லாமை மாத்ரமன்றிக்கே ப்ரதிகூலித்து வாக் துருக்திகளும்‌ பண்ணினவாகள்‌ , தரித்ரராய்‌ அபக்‌யாதி பாரீத்ர பூதரர்ய்‌ அநர்‌த்தப்பட்டுப்‌ போனார்கள்‌ –

    (ஸப்த கோத்ர வ்யவஸ்தை
    பிற்காலத்தில், ஏட்டூர் சிங்கராசார்யர் அவர்களின் வைபவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வரிசை அஷ்ட கோத்ர வ்யவஸ்தை (எட்டு கோத்திரங்கள்) என மாற்றப்பட்டது
    ஸ்ரீ வாஸ்த்ரேய கௌடின்யம் பாரத்வாஜஸ் ச கௌசிக
    சடமர்ஷணஸ் ச வாதூல காஸ்யபஸ் ச அஷ்டகோத்ர ஜா
    ஸ்ரீ வத்ஸம் –வாதூல்யம் -கௌடின்யம் பாரத்வாஜம் -கௌசிகம்- ஆத்ரேயம்
    ஷடமர்ஷணம் -நைத்ருவ காஸ்யபம்
    -)

    பின்பு ஜீயரும்‌ முதலிகளும்‌ ஒரு நாள்‌ ஆலின் மேலமர்ந்தான் என்கிற பாட்டுக்கு அர்‌த்த சிந்தநம்‌ பண்ணிக்‌கொண்டிருக்கிற வளவிலே, ஒன்று ஆல வ்ருக்ஷமாய்‌, மற்றதற்கு பத்ர பரமாய்‌ அர்த்தம்‌
    சொல்ல, !’ஆல்‌ என்று இலையைச்‌ சொல்லாது” ‘ என்று ஜீயரரருளிச்‌ செய்ய; பாலராய்‌ ஒத்த பருவத்தாரோடே க்ரீடா ஸக்தராயிருக்‌கிற கத்தாடை நாயன்‌ ”ஜீயா! ஆலாங்கட்டி யென்‌றன்றோ வ்யவஹாரம் ‘” என்ன, அவரை யழைத்து மடி மேலே வைத்துக்‌ கொண்டு நீர்‌ தொழு குலமன்றோ?” என்று உகந்தருளி தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாக வாழ்த்தி யருளினார்‌

    அப்பிள்ளை, ‘அப்பிள்ளார்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்தல்‌
    அநந்தரம்‌ அப்பா சகுந விருத்தமென்று மீண்டு தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ இவ் விடத்திலே ஒரு அதிசயமுண்டாக வேணும்‌, ஒரு நல்ல நாளிலே பயணப் படுத்துவோம்‌” என்று உகப்‌புடனே அருளிச்‌ செய்ய, இது கேட்டுப்‌ பெரியோர்கள்‌ ‘“ஸ்ரீஸூக்தி யில்‌ மோகமாவது ஒன்றுமில்லையே: ஏதோ அதிசயமுண்டாம்‌’ என்று ஒருவருக் கொருவர்‌ அருளிச் செய்து கொண்டிருக்க, அவிளம்பேந அக்காலத்தே அப்பிள்ளை அப்பிள்ளார்‌ இருவரும்‌ ஜீயர்‌ திருவடிகளீலே ப்ராவண்யமின்றிக்கே பெருமாளை ஸேலிக்க வேணு மென்று திருக் காவேரிக் கரையிலே வந்திறங்கி இரண்டு நாளிருந்து ஜீயருடைய ஸ்த்திதிகதிகளையும் அவருடைய வாக்‌ சாதுர்யத்தையும்‌,ஆராய்ந்து கந்தாடை யண்ணன்‌ முதலானோர்‌ ஆஸ்ரயித்த படிகளையும்‌ ஸ ப்ரகாரமாகக் கேட்டு ‘இதுவென்‌”என்று விஸ்மிதராயிருந்து, அப்பிள்ளை அப்பிள்ளாரை யழைத்து -இது ஸம்பவிக்குமோ” என்று கேட்க , இவர்‌: ‘“எறும்பி யப்பா ஸகல ஸாஸ்த்ர வல்லபர்‌, அதிக்ருத பரமார்த்தர்‌; அவரிப்படிச்‌ செய்யார்‌; நாம் விசாரித்து வருகிறோம்‌” என்று போய்‌ மடத்துக்கு ஸமீபத்திலே யிருந்து, தமக்கு அந்தரங்கராய்‌ ஸமர்த்தரா யிருப்பாரொவரை யமைத்து ”நீர் போய்‌ அப்பிள்ளான்‌ வந்திருக்கிறான்‌ ” என்றறிவியும்‌ -அந்த எறும்பியப்பாவே யாமாகில்‌ உடனே எழுந்தருளுகிருர்‌; அன்றிக்கே மற்றொருவராகில்‌ அப் பிள்ளானை யாரறிவார்‌? என்கிறார் என்று விட, அவர்‌ சென்று எறும்பியப்பாவைக்‌ கேட்டறிந்து கொண்டு தண்டனிட்டு – அப்பிள்ளார்‌ வத்து தெருவிலேயிருக்கிறார்‌, தேவரீருக்குத்‌ தெரிவிக்கச்‌ சொன்னார்‌” என்ன. அப்பா, ௨கந்‌தருளி “அவருக்கு நல்விடிவு” என்‌றருளிச்‌ செய்து கொண்டு தாம்‌ புறப்பட்டெழுந்தருள, அப்பிள்ளார்‌ அவருடை புஜ மூலங்களிலே யிருக்கிற சிஹ்நங்களைக்‌ கண்டு ஒரு தெளிவு பிறந்து அவர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, அப்பா குசல ப்ரச்நங்களுடன் ஆதரித்து இருவரும் கூடி ஒரு திண்ணையிலே இருந்து பெருமாள் தம்மை உஜ்ஜீவிப்பிக்க ஜீயர்‌ திருவடிகளிலே சேர்த்த ப்ரகாரத்தை முந்துற அப்பா அருளிச் செய்யக்‌ கேட்டுத்‌ தெளிந்து ஸ்வாத்மோஜ்ஜீவநபரராய்‌ , அப்பாவை அநுவர்த்தித்து, அப்பிள்ளை முதலானார்‌ திருக்காவேரிக் கரையிலிருக்கிற செய்தியையும் அவ்விடத்தே அப்பா எழுந்தருள வேணும் என்னும் காரியத்தையும் அறிவிக்கக் கேட்டருளி திரும்பி மடத்துக்கு எழுந்தருளி இச்செய்தியை வான மாமலை ஜீயருக்கு அறிவித்து நாம் அவர்களைத் திருத்திக் கொண்டு வரலாம் படி கடாஷித்து அருள வேண்டும் என்று புறப்பட்டு அப்பிள்ளாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு அப்பிள்ளை பாடே எழுந்தருளி அவருக்கு ஹிதமருளிச்‌ செய்து ஆஸ்திக்யாதரங்கள்‌ விஞ்சி வரப்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க, வானமாமலை ஜீயர்‌, ஜீயர்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி, ”அப்பிள்ளை அப்பிள்ளார்‌ என்பவர்கள்‌ ப்ரஸித்தர்‌ அவர்கள்‌ திருக்காவேரிக்கரையிலே இரண்டு நாளாக விருக்கிறார்‌கள்‌; அவர்களுக்கு

    ஈஸ்வரஸ்யஸ்ய ஸெளஹார்தம்‌ யத்ருச்சா ஸுக்ருதம்‌ ததா விஷ்ணோ. கடாக்ஷமத்வேஷமாபிமுக்யம்ச ஸாத்விகை: ஸம்பாஷணம்‌ ஷடேதாநி.-யன்றோ? ஸாத்விக ஸம்பாஷணம்‌ ப்ராப்தமாயிற்று- எறும்பியப்பா அங்கே எழுந்தருளியிருக்கிறார்‌; இப்படி ஆசார்ய ப்ராப்தி ஹேதுக்களெல்லாமுண்‌ டானபடியினாலே தேவரீர்‌ திருவடிகளிலே ஸம் பந்தம்‌ லபிக்கிறது; ஆத்மலாபாத்பரம்‌ கிஞ்சிதத்யத்‌ நாஸ்தி” என்‌றன்றோ தேவரீர்‌ திருவுள்ளமிருக்கும்‌; ஆசார்யன்‌ இருவருக்கும்‌ உபகாரகன்‌ என்றன்றோ இருக்கிறது; அவர்கள்‌ விஷயத்தில்‌ இரங்கி யருள வேணும்‌; அப்பாவுடையவும்‌ அடியேனுடையவும்‌ மநோ ரதம்‌ நிறைவேறும்படி ‘ஸூபேந மநஸாத்யாதம்‌” என்கிறபடிய திருவுள்ளம் பற்ற வேணும்‌’ ‘ என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஜீயரும்‌ “எம்பெருமானார்‌ அப்படியே திருவுள்ளமாயருளினாய் , ஒருவருக்கு
    எம்பெருமனார்‌ திருநாமம்‌’* என்று அருளிச்‌ செய்தருள, வானமாமலை ஜீயர்‌ ௨கந்தருளி *அவர்களை எதிர்‌ கொண்டு ஆதிரிப்பதற்காக அடியேனுக்கு விடை ஸாதிக்க வேணும்‌”என்ன அப்படியே
    அனேகம்‌ ஸ்ரீவைஷணவர்களைக்‌ கூட்டி அனுப்பி யருளப்‌ புறப்பட்டு எழுந்தருளா நிற்க, இவர்கள்‌ வருகிற செய்தியை அப்பிள்ளாருக்‌கறிவிக்க , அவரெழுந்திருந்து அந்த கோஷ்டியைக்‌ கண்டு ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணி அஞ்சலி ஹஸ்தராய் வைத்த கண்‌ வாங்காதே ஸேவித்துக் கொண்டு -தமக்கத்யந்த மபிமதமாயிருக்கிற பட்டுப் பச்சை வடத்தை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கையிலே கொடுத்து நீங்கள்‌ அதி த்வரையாகச் சென்று அவர்களெழுந்தருளுகிற வழியிலே அகலமெல்லாம்‌ படுத்து அத்தை நாலண்டையும்‌ எல்லாரு மெழுந்தருளும்படி பண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதரேணுவை ஸாவதாநமாகக்‌ கொண்டு
    வரச்‌ சொல்லி விட்டு, அடைக்காய்த் தட்டும்‌ பழத் தட்டும்‌ மத்யையில்‌ வைத்து எறும்பியப்பாவை முன்னிட்டுக்‌ கொண்டு எதிரே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி ஸ்வ ஜதங்களை யெல்லாம் காட்டி, அடியோங்களெல்லாரையும்‌ கற்றுவிப்பித்தருள வேணுமென்று ஸ்ரீபாத ரேளியை எல்‌லோரும்‌ சிரஸா வஹித்து நிற்க, ஜீயர்‌ குசல ப்ரச்நம்‌ செய்தருளி உபலாளித்‌தருளி பெருங்கூட்டமாக அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருள, அண்ணன்‌ எதிர் கொண்டு ஆதரித்தருளி உள்ளே அழைத்துக்‌ கொண்டு சென்று திருவோலக்கமாயிருந்து, தாம்‌ முன்னிருந்த இருப்பையும்‌, நிர்ஹேதுகமாக எம்பெருமானார்‌ க்ருபையால்‌ வந்த மஹா லாபத்தையும்‌, ஜீயர்‌ யதிபுநரவதாரமென்பதையும்‌ பஹு முகமாக அருளிச் செய்யக் கேட்டுத்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிளை ஸேவிக்க த்வரிக்க, அப்படியே திருமுன் காணிக்கையையும்‌ பட்டுப்‌படாவளிகளையும்‌ பச்சையையும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்‌திலே சென்று திருமலை யாழ்வாரிலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்த ருளியிருக்கக்‌ கண்டு மிகவும்‌ ஈடுபட்டு,
    அபூர்வ ருப ஸம்ஸ்தாதம்‌ தேஜஸாம்‌ ராஸ்மி மூர்ஜிதம்‌‘-எங்கும்‌ கண்டறியாத நிறத்தோடு கூடிய அவயவ ஸந்நிவேசமுடையவரும்‌ த்ருடமான தேஜோ ராசி போலிருப்பவருமான வரை என்று
    கொண்டு திருவடிகளிலை தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி உபஹாரங்‌களையும்‌ ஸமர்ப்பிக்கத் தக்க மரியாதையுடனே ஸமர்ப்பித்து நிற்க, ஜீயர்‌ அவர்களுடைய வைதுஷ்யங்களுக் கநுரூபமாகச்‌
    சிறிது ஸ்ரீஸூக்கிகளை யருளிச்‌ செய்ய, அவர்களும்‌ வித்தராய்‌ ஸமாஸ்ரயணத்துக்கு ப்ரார்த்தித்து த்வரைப்பட, தாப புண்ட்ர:’ இத்யாதிப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையுஞ்‌ செய்தருளி
    கோயிலுக்குப்‌ புறப்பட்டு ‘தேவீகோதா’ இத்யாதிப்படியே அவர்களோடே மங்களாசாஸனஞ்‌ செய்தருளி மீண்டு மடத்திலே யெழுந்தருளி ததீயாராதநமும்‌ நடந்து, ‘குரோருச்சிஷ்டம்‌ புஞ்ஜீத, போனகஞ் செய்த சேடந்‌ தருவரேல்‌ புனிதமன்றே-என்கிறபடியே ஸுபாவநமான தளிகை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதித்தருளி திருவடிகளுக்கு அந்தரங்கராக்கி உஜ்ஜீப்பித்‌ தருளினார்‌. அப்பா திருத் தமப்பனா எறும்யியிலே அப்பாவைக்‌ காண வேணுமென்று ஜீயருக்குக் குறித்து வரக் காட்ட, பின்பு ஜீயர் தாமே அப்பாவை ஊருக்குப்‌ போம்‌” என்று விடை கொடுக்கப்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற எழுந்தருளினார்‌.

    பெரிய பெருமான்‌ உத்தம நம்பியைத்‌ திருத்துதல்‌
    பின்பொரு நாள்‌ ஜீயர்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ண எழுந்தருளினவளவிலே ஏகாந்த ஸேயையாய்‌ திருத்திரை பரிமாறித்‌ திருவாராதநங்‌ கொண்டருளா நிற்க, இவரும்‌ உள்ளே சென்று திருவடி தொழுது நிற்க, அவ்வளவிலே திருவாலவட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தமநம்பியும்‌,-வெள்ளிப் பெருமலைக் குட்டரான ஜீயரூடைய “க்ஷீர ஸங்காத கெளரம்‌‘ என்றபடியே -பாலின்‌
    நீர்மை போலிருக்கிற விக்ரஹ வைலஷண்யத்தைக்‌ கண்டு பாப வாஸனையாலே அந்யதா சங்கை பண்ணி ஜீயரை -நெடும்போதிருக்க வேண்டா”’ என்ன, இவரும்‌ அபிப்ராயமறிந்து ‘மஹாப்ர
    ஸாதம்‌”” என்று புறப்பட்டு மடமே யெழுந்தருளினார்‌. அவ்வளவிலே திருவால வட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தம நம்பியும்‌ தரங்கிப்‌ பலகணிக் கதவிலே சாய்ந்திருக்க, –அரவினணை மிசை மேய
    மாயனாரான பெரிய பெருமாளும்‌ இவர்‌ கனாவில் வந்து,’திருப்பவளச்‌ செவ்வாய்‌ முறுவல்‌ தோன்ற,-௮ணி விளங்குமுயர் வெள்ளை யணையான திருவநந்தாழ்வானைத்‌ தொட்டுக்காட்டி, ‘ இவர் கிடீர்‌ ஜீயராக வந்து, அவதரித்தருளினார்‌; அவருடைய நிறம்‌ வெளுப்பு:விஸ்வஸித்திரும்‌”
    எனறருளிச்செய்ய, அவரும்‌ அத்யந்தம்‌ பீதராய்‌,அப்போதே மடமேற வந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவித்து இச்‌ செய்தியை விண்ணப்பஞ்செய்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு திருவடிகளுக் கந்தரங்கராய்ப்‌ போந்தார்‌, அது பற்றி-அனந்தாவதாரர்‌ வரயோகி யென்பது தென்னரங்கள்‌, மனந்தானறியும்‌ மற்றாரறிவார்‌ “என்று பின்புள்ளாரும்‌ சொல்லும்‌ படி யாயிற்று,

    ஒரு ஸாத்விகைக்கு ஜீயர்தமது நிஜாகாரத்தைக்‌ காட்டியருளல்‌
    அநந்தரம்‌ ஸாத்விகைகளில்‌ சடகோபக் கொற்றி யென்னும்‌திருநாமத்தை யுடையளாயும்‌ ஆச்சியார் பாடே திவ்ய ப்ரபந்தம்‌ நாலாயிரத்வையும்‌ ரஹஸ்யங்களையும்‌ அதிகரித்தவளாயும்‌ திருவடிகளுக்கு மிகவும்‌ அந்தரங்கையாயு மிருப்பாளொரு அம்மையார்‌ ஒரு நாள்‌ திருவோலக் கங்குலைந்த வநந்தரம்‌ மத்யாஹ்நத்திலே திருமலை யாழ்வாராகிற வ்யாக்யாந மண்டபத்திவ ஏகாந்தமாகத்‌ திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு தக்க மா மணி வண்ணனடியிலே வைத்த சிந்தையராய்‌ எழுந்தருளி யிருக்க, அப்போது கதவுப்‌ புரையிலே ஸேவிக்குமளவில்‌ ஆயிரம்‌ பைந் தலையனான திருவநந்தாழ்வானாக ஸேவை ஸாதிக்கக்‌ கண்டு திடுக் குற்றிருக்க,ஜீயர்‌ அத்தைக் கண்டு திருக்காப்பு நீக்கிக்‌ கொண்டு, புறப்பட்டு வந்து சிரித்தரூளி அம்மையாரை நடந்தபடி யென்னென்று கேட்டருள, அவள்‌ அப்போது ஸேவித்தபடியை விண்ணப்பஞ்‌ செய்ய, ‘ஆகில்‌ ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌” என்று நியமித்தருளினார்‌. இப்படி ஜீயர்‌ அவதார விசேஷமென்பது எல்லார்க்கும்‌ ப்ரத்யஷமிறே –

    ஜீயர்‌ வ்யாக்யானங்கள்‌ அருளிச்‌ செய்தது.
    பூத்வா பூயோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வபெளம
    ஸ்ரீமத் ரெங்கேவஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்‌த்தம்‌”
    [ஆதி சேஷன்‌ உலகைக்‌ காப்பதற்காக மறுபடியும்‌ மணவாளமாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில்‌ மிகவும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌] என்கிறபடி ஜகத் ரஷணார்த்தமாக அவதரித்தவராகையாலே ஜகத்தை யெல்லாம்‌ உஜ்ஜீவிப்பிக்கும்படி ஸகல ஜீவாதுவாகப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச் செய்த ரஹஸ்யங்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌
    “செய்தருள்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி
    ரஹஸ்ய க்ரந்த தத்வேஷு ரமயாமாஸ தத் ப்ரியம்‌ |
    வாக்ய ஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ச்ருதம்‌ ॥
    வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே |
    ஸ்வமநீஷாகதாம்‌ நைவ கல்பயந்‌ கிஞ்சிதப்யயம்‌ ॥
    குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாந தீதிஸத்‌ |
    தேஸிகாநாம்‌ நிடந்த்ரூணாம்‌ தர்‌ | ஸ்யங்நேக கண்டதாம்‌. ॥
    வாக்யாலங்கார வாக்யாநி வ்யாசக்ஷாணோ விசஷண: |
    ஸுதீய:ஸ்வாதயாமாஸ;ஸ்வ ஸ்வ ரூபம்‌ ஸுதுர்க்ருஹம்‌ ॥

    இந்த மணவாள மாமுனிகள்‌ முன்னோர்‌ மொழிந்த முறைகளில்‌ நிலை நின்றவராய்‌ ஒவ் வொரு சொல்லுக்கும்‌ தந் தெஞ்சில்‌ தோற்றினதே சொல்வதைச்‌ சிறிதும்‌ பண்ணாமல்‌ ஆசார்ய முகமாய்க் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள்‌, ஸங்கதிகள்‌ வாக்யார்த்தங்கள்‌ பாவார்த்தங்கள்‌ இவற்றை விசேஷமாக அருளிச் செய்து கொண்டு, ஸகல பூர்வாசாரியர்களாலும்‌ அர்த்த கெளரவம்‌ பற்றி மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்கலையும்‌ தமது க்ருபையால்‌ வெளியிட்டார்‌. இப்படி. ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ ஈடுபட்டவர்களை அவற்றின்‌ தத்வார்த்தங்‌களில்‌ மகிழச் செய்தார்‌. மேலும்‌ வேதங்களென்ன வேதாந்தங்‌களான உபநிடதங்களென்ன, இவற்றை யுட் கொண்டு பேசப்‌ பட்ட ஸ்ம்ருதிகளென்ன, ஸ்ரீராமாயணாதி இதிஹாஸங்கள் என்ன , ஸ்ரீபாஞ்சராத்ரமென்ன, இந்த ப்ரமாணங்களால்‌-பல க்ரந்தங்களை: யருளிச்‌ செய்துள்ள ஆசாரியர்களின் ஒருபடிப்பாட்டைக்‌ காட்டியருளி, நிபுணராய்‌ ஸ்ரீவசன பூஷண சூர்ணிகை வாக்யங்களை வியாக்யானம்‌ செய்தருளுமவராய்‌ அறிய வரிதான ஆத்ம ஸ்‌வருப யாதாத்ம்யத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்‌தார் ] என்றிப்படி ப்ரதமம்‌ தத்வ ரஹஸ்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ செய்தருளி அநந்தரம்‌ அசேஷார்த்த ப்ரதிபாதகமுமாய்‌ ஆழ்‌ பொருள்களை யுமுடைத்தான ஸ்ரீவசனபூஷணத்திற்கு மெச்சும்‌
    வியாக்கியை யென்று விலக்ஷண பரிக்ரஹமாம்படி வயாக்யாநஞ்‌செய்தருளி, தாமும்‌
    ஸ்ரீ வசன பூஷணமாந் தெய்வக் குளிகை பெற்றோம்‌
    பார் தன்ளைப்‌ பொன்னுலகாப்பார்க்க வல்லோம்‌-தேரில் தமக்‌
    கொப்பாரினியா ருலகாசிரியனருள்‌
    தப்பாம லோதிய பின்‌ தான்‌

    என்று இதினுடைய வைபவத்தை அநுஸந்தித்துப்‌ ப்ரீதராயருளினார்‌.-முதலிகளு மப்படியே
    வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌
    யோ மாத்ருஸாஞ்ச ஸுகமம்‌ வ்யவ்ருணோத்தயாளூ |
    ரம்யோ பயந்த்ரு முநயே யமிநாம்‌ வராய
    தஸ்மை நமஸ் ஸமதமாதி குணார்ணவாய

    (வகுளாபரணரான நம்மாழ்வாரின்‌ அருளிச் செயலான திருவாய்மொழி எனும்‌ சாஸ்தரத்தின்‌ ஸாரமான ஸ்ரீவசனபூஷணத்தை மந்தர்களான நம் போல்வாருக்கும்‌ எளிதில்‌ அறியும்படி எந்த மணவாளமாமுனிகள்‌ விவரித் தருளினாரோ, சமம்‌, தமம்‌ முதலான கல்யாண குணக் கடலாய்‌ யதி ஸ்ரேஷ்டரான அம் மணவாள மா முனிவருக்‌கு வணக்கம்‌) என்றும்‌,
    மேஷந்த வத்து வரயோகி யிட்ட வியாக்கியையால்‌
    தேவுந் திகைக்கும்‌, நற்றீந்தத்துவ ரகஸ்யத்துடனே
    தாவும் பெரும்‌ புகழாசாரிய விதயத்திற்குமா .
    தாவும்‌ பொருள் செறி சொல்லாபரணச்‌ சுருதிக்குமே
    -என்றும்‌ இப்படி உபகரித்தமையை அநுஸந்தித்தார்கள்‌.

    அநந்தரம்‌ ஸ்ரீவசனபூஷணத்திற்கு அடியாய்‌ சரம பர்வ நிஷ்‌டா கிரமங்ளை ப்ரதிபாதிக்கிற இராமானுச நூற்றந்தாதிக்கும்‌ ஞான ஸார ப்ரமேய ஸாரங்களுக்கும்‌ வியாக்யாளஞ்செய்தருளி (மற்றை ரஷஸ்யங்களுக்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்து அருளியும்‌ கீதைக்கு தாத்பர்ய தீபமென்றொரு வ்யாக்யானமும் இட்டருளி உடையவரருளிய நித்ய திருவாராதன க்ரமத்‌தையும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸுவ்யக்தமாகவும் ஸர்‌வவாத்மோஜ்‌ஜீவந தனமாகச்‌ செய்தருனாரிறே )திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்களை யெல்லாவற்றையும்‌ ப்ரவர்த்திப்பித்து, தர்‌சநத்துக்குப் பண்டில்லாத அதிசயங்களையும்‌ உண்டாக்கிக்‌ கொண்டு எழுத்தருளி யிருக்கிற காலத்திலே, திருவாய்மொழி விஷயமாக திருப் பவளத்தாலே ஏதேனுமொரு ப்ரபந்தம்‌ அருளிச் செய்ய வேணும்‌’ என்று முதலிகளெல்லாரும்‌ அபேஷிக்க, திருவாய்மொழி நூற்றந்தாதியை யருளிச்‌ செய்து தத்வ த்ரயத்திற்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்‌தருளி ஆசாரியர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமாய்‌ வந்த தர்சந தாத்பர்யங்களை யெல்லாம்‌ உபதேச ரத்தின மாலை என்கிற
    ப்ரபந்த முகேந ப்ரதிபாதித்து, உடையவர்‌ நித்யத்தை ஸுக்ரஹமாகவும்‌ பண்ணி யருளி இப்படி ஞான வர்த்தகராய்‌ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே

    தம்முள்‌ விரோதப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைத்‌ திருத்தியது.
    இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அஹங்காரத்தாலே அந்யோந்யம்‌ விவாதம்‌ பண்ணிக் கொண்டு போர, அப்போது நிஹீத ஜந்துக்‌களுக்கு விவாதமுண்டாக (நாய்களுக்குள்‌ சண்டை மூள), ஜீயர்‌
    அத்தைக்‌ கண்டு ‘ நீங்களும்‌ இவர்களைப் போல ஸ்ரீவசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம்‌ நடையாடி விவாதம்‌ பண்ணுகைக்கு–என்ன, அவர்கள்‌ இத்தைக்‌ கேட்டு லஜ்ஜா புரஸ்ரமாக அதில்‌
    நின்றும்‌ நிவ்ருத்தரானார்கள்‌.

    பொருளில்‌ பற்றின்மை
    பின்பு வட தேசத்தினின்றும்‌ சில திரு நாமதாரிகள்‌ சில த்ரவ்வம்‌ மடத்திற்கு வரக்காட்ட, அத்தை நிரூபித்துப்‌ பார்த்த வளவில்‌ அநுகூலமன்‌றியிலே யிருக்க, அது த்யாஜ்யமென்று கழிக்க, அநந்தரம்‌ மடத்துக்கு ஷேத்ரமுண்டாய்‌ (விளை நிலம்‌ சேர்ந்ததால்‌) தத்‌த்வாரா வந்த குடிகள்‌ மடத்தில்‌ புஜித்துப் போக அவ்விடம்‌ கோ மயத்தாலே சுத்‌தி பண்ணி ஈரமாயிருக்க, யாத்ருச்சிகமாகப்‌ புறப்பட்டருளினவர்‌ அத்தைக் கண்டு ஈரமேதென்று கேட்டருள,அங்கிருந்தவர்கள்‌ அக் காரணத்தை விண்ணப்பஞ்‌ செய்ய அப்போதே அந்தப்‌ பங்கை பெருமாளுக்கு சமர்ப்பித்து அந்தக்‌ கை யோலையையும்‌ ஸ்ரீபண்டாரத்திலே அர்த்த ராத்திரியி?லே போகவிட்டருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே,

    கிழட்டணிலாகிலும்‌ மரமேற வல்லதன்றோ?
    அதி வ்ருத்தையாயிருப்பாள்‌ ஒரம்மையார்‌ ஒரு நாள்‌, ராத்திரி மடத்தை விட்டுப்‌ போக மாட்டாமையாலே சயநிக்க அவளைக்‌ கண்டு அர்த்த ராத்திரியில மடத்தினின்று புறப்பட விட்டு(கேட்டவர்களுக்கு) “கிழட்டாணிலாகிலும்‌ மரமேற வல்ல தொன்றன்றோ? உகவாதார் அபவாதம்‌ சொல்ல இது போறுமே’-என்‌றருளிச்‌ செய்து இப்படி யோக்யதை யில்லாத விடத்திலும்‌-பிணமெழுந்து கடிக்கிறதோ!’ வென்று அதி சங்‌கையும்‌ போரா நிற்க –

    சிலருக்கு ஸ்வரூப சிக்ஷை
    ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ தூதுளங் கீரை கொண்டு வந்து தளிகைக்குச்‌ செய்கிற (தளிகைக்குச்‌ செய்தலாவது-தளிகை கு உபயோகமாகக்‌ கறியமுது திருத்துதல்‌ முதலியன செய்தல்‌ )அம்மையார்‌ கையிலே ‘இத்தைப் பாங்காச்‌ செய்து ஸமர்ப்பியும்‌” என்று கொடுக்க, அவர்‌ அத்தை உதாசித்துச்‌ செய்யாமலிருக்க, பின்பு அமுது செய்தருளும் போதுஅந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அம்மையார்‌ முகத்தைப் பார்க்க, ஜீயரும்‌ அத்தைக்‌ கண்ட ருளி இதென்னென்று கேட்டருள அவர்‌ உண்மையை விண்ணப்பஞ்செய்ய அத்தைக் கேட்டருளி அம்மையாரை ‘“ஆறுமாஸம்‌ தளிகைக்குப் பண்ண வேண்டாம்‌” என்று வெறுத்‌தருளிப்‌ பின்பு பாகவதாவமானம்‌ பண்ணினதற்கு ஷாமணம்‌ பண்ணுவித்து பின்பு பூர்வம் போலே நியமித்தருளி நடந்து செல்லுகிற நாளிலே!

    ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தனி வழி வரக்‌ கூடாது :
    வரந் தரும்‌ பெருமாள் பிள்ளை ”ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க வேணும்‌” என்ற ஆதாரதிசயத்தாலே தனித்துப் புறப்பட்டு அதி த்‌வரையுடனே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாஸ மின்றிக்கே தனியே ஸாஹஸித்து வருவதே,!”என்று வெறுத்து அவரை ஆறு மாஸம்‌ புறத்திண்ணையிலே யிருக்கும்படி உபேஷித்து பின்பு அங்கீ கரித்தருளி ஏதத்‌விஷயமாக
    1-பஷிதம்‌ ஹி, விஷம்‌ ஹந்தி ப்ராக்ருதம்‌ கேவலம்‌ வபு: |
    மந்த்ரெளஷத மயீ தத்ர பவத்யேவ ப்ரதிக்ரியா,
    தர்‌ஸந ஸ்பர்ஸ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ ஸ்ரவணாதபி |
    அப்ரதிக்ரிய மாத்மைவ ஹந்யதே விஷயைர்‌ த்ருடம்‌ ॥
    இத்த முத்கோஷயந்‌ தோஷாந் விஸ்தரேண ஸாுதுஸ்தராந் |
    தூரம்‌ நிர்வாஸ யாமாஸ வாஸநா விஷயேஷ் வஸெள ॥
    என்றும்‌-
    உட் கொள்ளப் பட்ட விஷம்‌ ப்ரக்ருதமான உடலை மட்டும்‌ அழியச் செய்கிறது; அவ் விஷயத்தில்‌ ‘மந்த்ர ரூபமாயும்‌ ஒளஷத ரூபமாயும்‌ பரிஹாரம்‌ இருக்கிறது ஸித்தம்‌, -ஜீவாத்மாவோ(அவற்றை) காண்பதாலும்‌, தொடுவதாலும்‌ அவற்றுடன்‌ கூடுவதாலும்‌ அவற்றைப்‌ பிரிவதாலும்‌, கேட்பதாலும்‌-பரிஹாரம்‌ பண்ண வொண்ணாதபடி விஷயங்களால்‌ நன்றாக அழிக்கப் படுகிறது- இந்த மணவாளமாமுனிகள்‌ எவ் விதத்திலும்‌ நிவர்‌த்திக்க முடியாத விஷய தோஷங்களை விரிவாக நன்றாக வெளிக் காட்டி ,அவற்றில்‌ வாஸனையை மீண்டும்‌ அணுக வெண்ணாபடி, ஸ மூலமாக
    போக்கினர்‌)
    2, நிதாநம்‌ ஸர்வ தோஷாணாம்‌ நிதாநம்‌ க்ரோத மோஹயோ; |
    மாந எவ,மநாம் ஸ்யேஷாம்‌ நித்ய முந்மூல யத்யஸெள
    ॥ என்றும்‌
    (ஸ்வாபிமாநமே (அஹங்காரமே) எல்லா தோஷங்களுக்கும்‌ காரணம்‌-கோப மோஹங்களுக்கும்‌ காரணம்‌,இவ் வபிமானமானது சேதநருடைய மதத்தை எப்போதுமாக அடியோடு அழித்து விடுகிறது. )

    3-அர்த்த ஸம்பத்‌ விமோஹாய விமோஹோ நரகாயச |
    தஸ்மா தர்த்த மார்த்தாக்யம்‌ ஸ்ரேயோர்த்தீ தூரதஸ் த்யஜேத்‌ ॥
    யஸ்ய தர்மார்த்த மர்த்தேஹா தஸ்ய நீஹைவ ஸோபநா |
    ப்ரஷாள நாத்தி பங்கஸ்ய தூராத ஸ்பர்ஸநம்‌ வரம்‌
    ॥ என்றும்‌
    (பொருட்‌ செல்வமானது மோஹத்‌துக்குக்‌ காரணமாகிறது. மோஹம்‌ நரக ஹேதுவாகறது. ஆசையால்‌ நன்மையைக் கோருபவன்‌ அநர்த்தம்‌ என்ற பெயருடைய செல்வத்தைக் கிட்ட வொண்ணாமல்‌ விலக்கக் கடவன்‌’ எவனுக்குத்‌ தருமஞ் செய்வற்காகப்‌ பொருளில்‌ ஆசை யுண்டாகிற்தோ அவனுக்குப்‌ பொருளில்‌ ஆசை யில்லாமையே நல்லது. சேற்றைக்‌ காலிலிருந்து அலம்புவதை விட, தூர நின்று அதைக் காலில் பட விடாதிருப்பது நலம்‌.)

    4–ப்ருத்யோஹம்‌ விஷ்ணு பக்தாநாம்‌ ஸாஸிதாரஸ்த ஏவமே |
    க்ரேதும்‌ விக்ரேதுமபிமாமீ ஸதேதே யதேப்ஸிதம்‌ ॥
    இதி யஸ்ய மதம்‌ நித்ய மயமேவாத்ம வித்தம: ॥
    ஸ்வரூப ஸித்திஸ் ஸர்வேஷாம்‌ ஸ்வோஜ்ஜீவந மபி த்ருவம்‌ |
    ஸ்ரேயஸீ தேஸிகாநாஞ்ச ஸித்யதி ப்ரத்யுபக்ரியா ॥
    என்றும்‌
    அடியேன்‌ ஸ்ரீவைஷணவர்களுக்கு தாஸ பூதன்‌. அவர்களே அடியேனுக்கு நியந்தாக்கள்‌-அவர்கள்‌ அடியேனை தங்களிஷ்டப்‌படி விற்கவும்‌ வாங்கவும்‌ உரியவர்கள்‌. இப்படி எத்த சேதனனுக்கு
    அத்யவஸாயம்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமோ அவனே ஆத்ம ஸ்வரூப முணர்ந்தவரில்‌ முதல்வன்‌. இதனால்‌ எல்லாருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ நிலை பெறுகிறது.-தமதுஜ்தீவநமும்‌ ஸித்திக்கிறது, ஆசாரியர்‌களுக்கும்‌ மேலான ப்ரத்யுபகாரமானது ஸித்திக்கிறது.

    5-ஆசார்யவத்‌ தேவதாவத்‌ மாத்ருவத்‌ பித்ரு வத்ததா
    த்ரஷ்ட வ்யாஸ் ஸந்த இத்யா திர்த்ருஷ்ட: ஸாஸ்த்ரேஷுவிஸ்ராத்‌ ॥
    என்றும்‌
    ஆசார்யனைப் போலவும்‌ தேவதையைப்‌ போலவும்‌,தாயைப்‌ போலவும்‌. தந்தையைப்‌ போலவும்‌ ஸத் புருஷர்கள்‌ அபி மானிக்கத் தக்கவர்கள்‌ என்று இது போன்ற நல் வழிகள்‌ சாஸ்தரங்‌களில் விரிவாகக்‌ காட்டப்பட்டுள்ளன.,

    6-ஸுஸீலஸ் ஸுலபஸ் ஸ்வாமீ ஸ்ரீமாந பிக்குபாநிதி:
    அணோரபி மஹத்த்வேஷா தத்த்யந்தாம்‌ யாதி விக்ரயாம்
    பாவநீ மஹதாம்‌ த்ருஷ்டி: ப்ரச்யுதா நபி மோசயேத்‌ |
    அமர்ஷ; புநரல் போபி நித்யாநபி நிபாதயேத்‌ ॥ ._
    ப்ரியாத்‌ ப்ரிய தரம்‌ சவ்ரேஸ் ஸஜ்‌ ஜநாநாம்‌ ஸபாஜநம்‌ |
    அப்ரியாத ப்ரியஸ் தேஷா மவ மாநோ மநாகபி ॥
    என்றும்‌
    ஸர்வ ஸ்வாமியான எம்பெருமான்‌ ஸ்ரீமானாயினும்‌, யாவருடனும்‌ கலப்பவனாயினும்‌, எளியனாயினும்‌, பரமகாருணீகனாயினும்‌, மஹான்களிடம்‌ பண்ணப்பட்ட சிறிது அபசாரத்தாலும்‌ மிகவும்‌ மனக் கலக்கம்‌ (சீற்றம்‌) அடைகிறான்‌, யாவரையும்‌ பரிசுத்தராக்க வல்ல மஹான்௧ளுடைய கடாஷமானது எம்பெருமானிடமிருந்து நழுவியவரையும்‌ உயர்‌த்த வல்வது, அவர்களின்‌ மனக் கலக்‌கம்‌ சிறிதாயினும்‌ நித்யர்களையுங் கூட நழுவப் பண்ண வல்லது, அந்த மஹான்களுக்கு நேரிட்ட அவமானமானது சிறிதாயினும்‌,எம்பெருமானுக்கு-தனக்கு நேரிடும்‌ அநிஷ்டத்தைக் காட்டிலும்‌ மிகவும்‌ அநிஷ்டமா யிருக்கும்‌.

    7-ஸஜ்‌ஜநாதிக்ரம க்ரெளர்யம்‌ ஸாஸ்த்ரைரர்த்தம்‌ ப்ரதர்‌ஸயகந் |
    ஸூக்தி பிர்யுக்தி யுக்தாபிஸ் ஸர்வாந் ஸமுத ஜீவயத்‌
    -என்றும்
    ஸத் புருஷர்கள்‌ விஷயத்தில்‌ பண்ணுமபசாரத்தின்‌ (பாகவதபாசாரத்தின்‌) கொடுமையை இப்படி சாஸ்த்ர முகத்தாலும்‌ யுக்திகளுடன்‌ கூடிய திரு வாக்குக்களாலும்‌ எடுத்துக் காட்டி யாவரையும்‌ உய்வித்துப் பேந்தார்‌]-என்றும்‌ இத்யாதிகளாலே
    இவற்றினுடைய ஸாஹித்ய ராஹித்யங்களா லுண்டான குண தோஷங்களைத்‌ தம்முடைய தீர்க்க தர்ஸித்வத்தாலே தர்‌ஸிப்பித்‌தருளி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற காலத்திலே

    ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்‌ காட்டித் தருதல்‌,
    இவருடைய உக்த யநுஷ்டானங்களை யெல்லாம்‌ உத்தர தேசத்‌திலே வைஷ்ணவ ப்ரபுவாயிருப்பா ரொருவர்‌ கேட்டு, தம்முடைய உஜ்ஜீவநத்திற் குடலாக ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும்‌
    ஸங்க்ரஹ ரூபேண அநுஷ்டேயமா யிருப்பதொரு படி அடியேனுக்கு அருளிச் செய்து வரக் காட்டி யருள வேண்டும்‌” என்று குறித்து வரக் காட்ட, ஜீயரும்‌ அப்படியே ‘ பகவத் தாஸ்ய ரஸம்‌ புருஷார்த்‌தமென்று தெளிந்த அதிகாரிக்கு கேவலம்‌ பகவத் தாஸ்யரணம்‌ புருஷார்‌த்தமன்று; கேவலம்‌ பகவல் லாஞ்சந தாரண மாத்ரமும்‌ போராது; கேவலம்‌ பகவத் ஸமாராதந நிஷ்ட்டா மாத்ரமும் போராது; கேவலம்‌ ஆசார்ய பர தந்த்ர யதிகார மாத்ரமும்‌ போராது; கேவல பாகவதாநுவர்‌த்தந மாத்ரமும் போராது; பின்னை எங்ஙனே யென்னில்‌; யதோசித கைங்கர்யைக நிரதகனாய் ஸ்வ கீயமான க்ருஹத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ நிஸ் ஸங்கமாக ப்ரவேஸித்திப்‌ பாங்காக வர்த்திக்கத்‌ தன்னை அத் தலைக்காகவே வைத்துத்‌ தலைக்கட்டும்‌-அடியார்க் கென்னை ஆட் படுத்த, *எம் தம்மை விற்கவும்‌ பெறுவார்களே என்‌னும்‌ நிலை யுண்டாக வேணுமிறே,-இப்படி இவ்வர்த்தம்‌ அநுஸத்தித்து அநுஷ்டியானாகில்‌ தனக்கு ப்ரதிபத்தி ஸெளபாக்யைஸ்வர்யங்கள்‌’ கை கூடாது.
    “ந்ய க்ரோத பீ்ஜ வடவத்‌ ப்ரணவே ஸப்த ஜாலவத்‌;
    ஸித்தே ததீய ரோஷத்வே ஸர்வார்த்தாஸ் ஸம்பவந்தி ஹி”-

    ஆலம்‌ விதையில்‌ பல கிளைகளை யுடைய ஆல மரம்‌ போலவும்‌, ப்ரணவத்தில்‌ பல சப்த ராசிகள்‌(அஷரங்கள்‌, பதங்கள்‌) போலவும்‌ பாகவத ஸேஷத்வம்‌ அநுஷ்டாந ஸித்தமானால்‌ எல்லா ஸத் ஸம்ப்ரதாய அர்‌த்தங்களும்‌ தன்னடையே கை புகும்‌] என்கிறபடியே சரமார்த்த விசேஷம்‌ கை புகுத்ததாகில்‌ விவிதங்களாய்‌ விசித்ரங்களாய்‌ அநந்தங்களா யிருந்துள்ள பகவத்‌ ரஹஸ்ய விசேஷங்களெல்லாம்‌ அறிய வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, இவ் விசேஷா நுஷ்டாந மின்றிக்கே செல்லுகிற ஜ்ஞாந அநுஷ்டாந ப்ரதி பாதநமும்‌ பகவத் ரஹஸ்ய விசேஷங்களும்‌ வேஸ்யை சொல்லுற பதி வ்ரதா தர்மம்‌ போலே வ்யர்த்தமாகி விடும்‌-
    பூஜநாத்‌ விஷ்ணு பக்தாநாம்‌ புருஷார்த்தோஸ்தி நேதர:; தேஷு
    வித்வேஷத: கிஞ்சித் நாஸ்தி,நாஸக மாத்மநாம்‌”’

    எம்பெருமானிடம்‌ பக்தி யுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதிற் காட்டில்‌ வேறு உயர்ந்த புருஷார்‌த்தமில்லை, அவர்களிடம்‌ த்வேஷம்‌ பண்ணுவதைக் காட்டில்‌ ஆத்ம நாசம்‌ பண்ணுவது வேறொன்‌றில்லை-என்கிறபடியே திருமந்த்ரார்த்தமான சரமார்த தந் நிஷ்டையை ஸ்வ திவ்‌ய ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பித்து எழுதிப் பேச விட்டருள,அவரும்‌ அப்படியே ததீயாராதநத்திலே நிஷ்ட்டராய்‌ :
    தஸ்யை நித்யம்‌ ப்ரதி ஸததிஸே தஷிணஸ்யை நமஸ்யாம்‌”
    [அந்த தெற்குத்‌ திசைக்கு எப்போதும்‌ நமஸ்காரம்‌ செய்யுங்கள்‌ ] என்றும்‌,
    திஸே வாபி நமஸ் குர்யாத்‌ யத்ராஸெள வஸதி ஸ்வயம்‌”
    [இவ் வாசாரியர்‌ தாம்‌ எத் திசையில்‌ வசிக்கிராரோ அத் திசைக்காவது நமஸ்கரிக்கக்‌ கடவன்‌] என்றுஞ்‌ சொல்லுகிறபடியே ஜீயரெழுந்தருளி யிருக்கிற திக்கை நோக்கி , –தொழுமத் திசை யுற்று நோக்கியே (திருவாய்‌ 6-5 5) என்கிறபடியே நாடோறும்‌ ஸேவித்துச்‌ கொண்டு தம்முடைய வர்ணாநு குணமான கைங்கர்யத்தையும்‌ மடத்திற்கு நடத்திக் கொண்டு போந்தார்‌.

    அக் காலத்திலே கோயிலிலே யிருக்கிற பட்டர்‌ பெருமாள்‌ திருவோலக்கத்திலே ஜீயரை ஸேவித்து உம்முடைய சிஷ்யர்கள்‌ நம்மை தண்டனிடாமல்‌ அவமதி பண்ணிப்‌ போரா நிற்பர்கள்‌-என்று அறிவிக்க, ஜீயரும்‌ மடத்திற்கெழுந்தருளி அவர்களை யழைத்து நீங்கள்‌ இப்படி செய்வானென்‌?”‘ என்று கேட்டருள, அவர்‌கள்‌, அவரிருக்கற இருப்பை விண்ணப்பஞ் செய்து, அவரை யநுவர்த்திக்க எங்களுக்கு மனமில்லை’* என்ன, ‘ஆகில்‌, பெருமாளும்‌, பிராட்டியும்‌ திவ்ய ஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளி யிருக்கிறதாக ப்ரதி பத்தி பண்ணி ஸேவித்துக் கொண்டு போருங்கோள்‌” என்று அருளிச் செய்து, இப்படி தோஷமுள்ள விடத்திலும்‌ குண ப்ரதிபத்தி நடக்கும்படியான பகவத் ப்ராவண்யத்தை யுடையவராய்‌, பின்பு வ்ருத்தாசாரங்களை அறிந்தருளு மவராகையாலே வேதகப்‌ பொன்னான விலக்ஷண விஷயங்களையும்‌ ஆதரித்துக் கொண்டு,அவர்கள்‌ விஷயத்திலே பூர்வர்கள்‌ அநுஷ்டித்துப் போரும்‌ சேஷ வ்ருத்திகளெல்லாம்‌ அநுஷ்டாந பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்‌தருளி;
    எக் குணத்தோ ரெக்குல்த்தோ ரெவ் வியல்‌ வோராயிடினும்‌
    அக் கணத்தே நம்மிறைவராவரே-மிக்க புகழ்க்‌
    காரார் பொழிற்‌ கோயிற் கந்தாடை யண்ணனெனும்‌
    பேராளனை யடைந்த பேர்‌

    என்று அநுஸூந்திந்தருளி, இப்படி விலஷணமான ஜ்ஞாந அனுஷ்‌டாநங்களோடே கூடி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ யுடனே எழுந்தருளி யிருக்கிற காலத்திலே –

    வேடலப்பையைக்கொண்டு குத்ருஷ்டியை நிரஸித்தல்‌
    குத்ருஷ்டி மதாவலம்‌பியா யிருப்பானொருவன்‌ கோயிலிலே வந்து ஸ்வமதாபந்யாஸம்‌ பண்ணிக் கொண்டு இறுமாந்திருக்க-ஸர்‌வஜ்ஞரான ஜீயரும்‌ அவனுடனே தர்க்கிக்கைக்கும்‌ ப்ரஸங்‌கத்தாலே அவனை வாய்‌ மூடப் பண்ணுகைக்கும்‌ ஸாமர்த்யமுண்டா யிருக்கச்‌ செய்தேயும்‌ -கலையறக் கற்ற மாந்தர்‌ காண்பரோ கேட்பரோ தாம்‌ -என்கிறபடியே அவனை த்ருண வத்கரித்து அநாதரித்துக்‌ கொண்டு ”பகவதநுபவ விரோதியான இவனை ஊரோடு ஒட்டக்‌ கடவோம்‌” என்று ஸங்கல்‌பித்து, முன்னே அவன்‌, வாதூல வம்ஸ்‌யரான வேடலப்பையை ஆஸ்ரயித்திருந்தவன்‌, ஸஹவாஸ தோஷத்‌தாலே கலங்கி ப்ரசந்ந பெளத்தரான விரோதிகளோடே கூடிக்‌ கொண்டு மதாந்தர ப்ரவிஷ்டனானாகையாலே, திரிசங்குவைப்‌ போலே கர்ம சண்டாளனான அவனை ஆலோசித்து வார்த்தை யருளிச்‌ செய்யக்‌ கூசி வேடலப்பையைக்‌ கொண்டு நிரஸிக்க வேணுமென்று திருவுள்ளம்‌ பற்றி அவரை அழைப்பித்தருள; அவரும்‌ லந்து ஜீயரை ஸேவித்து கோயிலிலே அவனைக் கண்டு ‘“மாணீ! இவ்‌ விடம்‌ கொண்டயோ?” என்ன, அவனும்‌ அவரைக் கண்டு கருடனைத கண்ட ஸர்ப்பம்‌ போல மிகவும்‌ பீதனாய்‌ ஸேவித்து அங்கு நின்றும்‌ புறப்பட்டு ஒடிப் போனான்‌. அப்பை யுடைய வித்வத ப்ரதிம ப்ரபாவத்தை ஜீயர்‌ கண்டருளி விஸ்மயப் பட்டு அப்பையை, “தேவரீர்‌ இங்கே யெழுந்தருளியிருக்க வேணும்‌ என்று மிகவும்‌ ஆதரிக்க,அவரும்‌ ஜீயர்‌ நியமித்தபடி செய்யாமல்‌ தம்‌ தேஹ யாத்ராசேஷமான லெவ்கிக கார்யங்களையும்‌ அபிஜந வித்யாவ் வருத்தங்களையும்‌ நினைத்து ப்ரக்ருதி பரவசராய்‌ பர்யுஷிதாந்நத்தையும மாஹிஷ ததியையும்‌ நினைத்து அங்கு நிற்க மாட்டாதே ஸ்வ க்ராமத்தை
    நோக்கி எழுந்தருளினார்‌.

    மணவாள மாமுனிகளால்‌ வித்யா பூர்த்தியை யிட்டு மதிக்கப் பட்டவரும்‌, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யருமான வித்வானைக்‌ குறித்து இந்த பரிஹாஸோக்திகள்‌ பொருந்தவில்லை.
    தமது வயது முதிர்ந்த பருவத்தை யுத்தேசித்து தம்மை யொத்த ஒரு வித்வானான தமது சிஷ்யரான தாசரதி ஆச்சானை ஜீயர் ஸந்‌நிதியிலிருக்கும்படி நியமித்து ஸ்வ க்ராமம்‌ எழுந்தருளியதாகப்‌ பழ நடை விளக்கம்‌ ‘ என்னும்‌ நூல்‌ கூறுகிறது. அதிலுள்ள விவரங்கள்‌ வருமாறு –
    ஸ்ரீமான்‌ திருமழிசை கோயில்‌ கந்தாடை அண்ணா வப்பங்கார்‌ ஸ்வாமி அருளிச் செய்த பழநடைவிளக்கம்‌
    பின்பு க்ருஷ்ணாநந்தி யென்‌கிற ஏக தண்டி ஸந்யாஸி கோயிலிலே வந்து தன்னோடே சாஸ்த்ர வாதம்‌ பண்ணச் சொல்ல, பெரிய ஜீயரும்‌, ‘இவனோடே வாதம்‌ பண்ணும் போது மங்களாசாஸந விரோாதமாமே! வாதம்‌ பண்ணாவிட்டால்‌ விரோதி நிரஸனம்‌ ஸித்தியாதே! என்ன செய்வோம்‌?என்று சிந்தித்துக் கொண்டிருக்கச்‌ செய்தே, பெரிய பெருமாள்‌ நியமனத்தாலே வேடலப்பைக்குப்‌ பெரிய பெருமாள்‌ ஸ்ரீமுகத்தை வனுப்ப, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யராய்‌, மஹா வைபவ முடையரான வேடலப்பையும்‌ ஸ்ரீமுகத்தை சிரஸா வஹித்து, தம்முடைய ஸந்நிதியிலே சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிதது மஹா வித்வானாகிய தாசரதி யாச்சானையும்‌ கூட்டிக்கொண்டு கோயிலுக் கெழுந்‌தருளி நம் பெருமாளை மங்களாசாஸனம்‌ செய்தருளி ஸகல வரிசைகளையும்‌ விசேஷ கடாக்ஷங்களையும்‌ பெற்று, ஸ்ரீரங்க நாயகியாரை மங்களாசாஸநம்‌ செய்தருளி அவருடைய ப்ரிபூர்ண கடாக்ஷம்‌ பெற்று, ஸம்மானமும்‌ பெற்று, வில்வ வ்ருக்ஷத்திற்கு ஸமீபமாக வெழுந் தருளச்‌ செய்தே அப்போது அவ் விடத்தில்‌ ஜபம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கிற ஏக தண்டியானவன்‌ இவர்களைக் கண்டெழுந்திருந்து, தனக்கு ஸகல சாஸ்த்ரங்களும்‌ படிப்பித்த வேடலப்பையை தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அவனைப் பார்த்து குசல ப்ரச்நம்‌ பண்ணினார்‌. அவனும்‌ தான்‌ வந்த காரியத்தை வேடலப்பைக்குச்‌ சொன்னான்‌ வேடலப்பையும்‌ -அதற்கள்றோ நாமிங்கே வந்தது’-என்‌றருளிச்‌ செய்தார்‌.-ஆனால்‌ அபசாரப்பட்‌டேன்‌” என்று பயப்பட்டு தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அண்ணன்‌ திருமாளிகைக்கெழுந்தருளி, அண்ணனும்‌ வேடலப்‌பையும்‌ தாசரதி யாச்சானும்‌ அமுது செய்தருளி, க்ருஷ்ணாநந்தி இவர்களுடைய ப்ரஸாதத்தை அர்த்தித்தானாகையால்‌ ஒரு பரிசு ப்ரஸாதத்தை அவனுக்கு ப்ரஸாதித்தார்கள்‌. அவனுமிவர்கள்‌ அநுமதி கொண்டு புறப்பட்டுப்‌ போய் விட்டான்‌-பின்பு வேடலப்டையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கூடசக்‌ கூட்டிக்‌ கொண்டு அண்ணனும்‌, பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே யெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து க்ருஷ்ணாநந்தி போய்‌ விட்ட செய்தியை விண்ணப்பஞ் செய்ய, பெரிய ஜீயரும்‌ அண்ணனையும்‌ வேடலப்‌யையையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கடாக்ஷித்து மிகவுமுகந்து”உகப்பினுடைய வதிசயத்தால்‌ முதலியாண்டான்‌ திருவம்ச விஷயமாக இரண்டு ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்து பரிபூர்ணாநுக்ரஹம்‌ செய்தருளி வேடலப்பையையும்‌ தாசரதி யாச்சானையும் ஸந்நிதியிலே நித்யவாஸம்‌ பண்ணும்படி நியமித்தருள- வேடலப்பையும்‌ வார்த்தகமான படியினாலே தாசரதி யாச்சானை யங்கே யிருக்கும்படி நியமித்து தாம்‌ பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே அநுமதி பெற்று மிகவும்‌ உபலாளனம்‌ பெற்று வேடலுக்கு எழுந்தருளினார்

    ப்ரதிவாதி பயங்கர மண்ணா வருத்தாந்தம்‌ (இந்த வ்ருத்தாந்தம்‌ தெலுங்குப் பதிப்பில்‌ வேறு விதமாக உள்ளது. அதுவும்‌ பின்னர்‌ இப் பதிப்பில்‌ வெளியிடப்படுகிறது, )
    இனி இதற்காவாராரென்று சிந்‌தித்திருக்க, அவ் வளவிலே -ஹஸ்திகிரிநாதரண்ணா வென்னும்‌ திருதாமத்தை யுடையராய்‌ தர்சந விரோதிகளான வாதிகளை ஜெயித்து ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று
    விருதிடும்படியான ப்ரபாவத்தை யுடையராய்‌ ‘ லோகே வேதேச பண்டித; லெளகிகே ஸமயாசாரே க்ருத கல்போ விஸாரத;” இத்‌யாதிப்படியே லௌகிக வைதிகங்களிவே அத்விதீயராய்‌ பெருமாள் கோயிலிலே சில நாள்‌ வஸித்து திருப் பதியிலே நித்ய வாஸமாக எழுத்தருளி யிருக்கிற காலத்திலே அவருக்கு மூன்று குமாரர்கள்‌ திருவவதரித்திருந்து அவர்கள்‌ அதி மேதாவிகளாகவும்‌. தேவிகள்‌ கூரத்தாண்‌டளோ டொத்திருப்பவள் ஓருத்தியும்‌ இப்படி யிருக்கிற ப்ரதிவாதிபயங்கரமண்ணா கூரத்‌தாழ்வானைப்‌ போலே ப்ராப்ய விரோதி யென்று ஐச்வர்யத்தில்‌ ஜிஹாஸை பிறந்து கேவலம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ ”அர்த்த ஸம்பத் விமோஹாய”” இத்யாதிகளை யநுஸத்தித்து -முற்றவும்‌ வீடு செய்து எல்லாவற்றையும்‌ பகவத் பாகவத ஸ்வம் க்கி, தமக்கு: பரம ஸேஷி விஷயத்தில்‌ கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்றறுதியடடு திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேணும்‌ என்றுநிற்க, திருமலை தோழப்பர்‌
    உகந்தருளி –அந்யத் பூர்ணாத பாம்கும் பாதந்ய த் பதாவநே ஜநாத் அந்யத் குஸல ஸம் ப்ரஸ்நாந்ந சேச்சதி ஜநார்த்தந:’‘-ஐநார்த்தனனாகிய கண்ண பிரான்‌ பூர்ண கும்பமோ -திருவடி விளக்குதலோ குசலப்‌ரஸ்னமோ இவற்றில்‌-ஒன்றைத் தவிர வேறொன்றையும்‌ ஆசைப் படமாட்டான்‌ என்று வெள்ளிக் குடத்தை ஸாதித்து ”ஆகாச கங்கையினின்றும்‌ திருமஞ்சநம்‌ கொண்டு வந்து பூர்ணமாக ஏலாதி ஸம்ஸ்‌க்ருத மாக்கி நீரே ஸமர்ப்பித்து வாரும்‌!’ என்று நியமிக்க, அண்ணா-நாயன்தே, நாயன்தே” என்று குடத்தை வாங்கிக் கொண்டு அதி ஸந்துஷ்டராய்‌ :“இவ்வளவாகிலும்‌ சேஷத்வ ஸித்தி யுண்டாயிற்றே’” என்று நித்யமாக நடத்திக் கொண்டு போர, ஒரு ஸ்ரீவைஷ்‌வணர்‌ கோயிலினின்றும்‌ அப்பனை ஸேவிக்க வந்து நிற்க , அவரை ஸேவிக்கப்‌ பண்ணி வைத்து, வரிசை பெறுவித்துத்‌ தாமும்‌
    ஸத்கரித்து அற்றைக்கு தம்முடைய அண்டையிலே வைத்துக்‌ கொண்டு கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ பெருமாளமுது, செய்கிற வரிசைகளையும்‌ உத்ஸவங்களையும்‌ அழகிய மணவாள மா முனி யுடைய அப்ததிம வைபவத்தையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து பிற்றை நாள்‌ தாம்‌ திருமஞ்சனத்திற் கெழுந்தருளுகிற போது அவரரையுங்‌ கூட்டிக் கொண்டு ”ஸ்ருணோம் யஹம்‌ ப்ரீதி கரம்‌ மமதா தஸ்ய கீர்த்தநம்‌’* [எனக்கு ப்ரீதியை யுண்டு பண்ணும்‌ என்‌ நாதனுடைய கதையைக்‌ கேட்கிறேன்‌] என்றபடியே அழகிய மணவாள மா முனியினுடைய திநசர்யையையும்‌ அத்புத வைபவங்‌களையும் சொல்லுமென்று ததேக சித்தராய்‌ திருமஞ்சநங் கொண்டு வந்து, ஏலாலவங்க கர்ப்பூராதிகளைப்‌ பரிமாறுவதற்காகத்‌ திருத்த, அப்போது ஒரு ஏகாங்கி ஓடி வந்து குடத்தை யெடுத்தக்‌ கொண்டு திருவாராதந ஸமயத்திற்கு உதவ வேணுமென்று கொண்டு போகா நிற்க , ‘-திருமஞ்சந த்ரவ்யங்கள்‌ இன்னும்‌ பரிமாற வில்லையே” -என்ன அதை அவர்‌ கேளாமல்‌ கொண்டு போய்‌ சமர்ப்பிக்க எப்போதும் போல்‌ திருவாராதநம்‌ கொண்டருளா நிற்க அண்ணா, “அபசாரம்‌ வந்ததே” எனறு ஏலாதிகளை வட்டிலிலே கொண்டு நிற்க அர்ச்சகர்‌, அவசராய்‌ ‘இத்தனை நாளைக் காட்டிலும்‌ பரிமள த்ரவ்யங்கள்‌ விஞ்சி, திருமஞ்சன வாஸனை அதிகமாயிருக்கிறதே’! என்ன அண்ணா பாவஜ்ஞராகையாலே ‘இது வெறுமன்று; ௨கப்பு விஞ்சி யிருக்கிறது; இதற்கு ஹேது ஜீயருடைய வைபவ ஸ்ரவணமாக வேணும்‌”’ என்று எண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “நீர்‌ அழகிய மணவாளமாமுனி , வைபவமான ஐதிஹ்யங்களை அருளிச் செய்ய அடியேன்‌ கேட்டபடியினாலே க்ருதார்‌த்தனானேன்‌; அப்பன்‌ திருவுள்ளம்‌ ப்ரஸன்னமாயிற்று;, அழகிய மணவாளமா முனியை ஸேவிக்கப்‌ பெறுதேனாகவேணும்‌‘ என்ன; அப்பனும்‌ உகந்து அவரை ஸத்கரித்து அனுப்பி யருளினார்‌.
    பின்பு தாம்‌ எப்போதும் போலே சில நாள்‌ திருமஞ்சந கைங்கர்‌யஞ்‌ செய்தருளி, அப்பனுடைய நியமனத்தினாலே ஸ குடும்பமாகக்‌ கோயிலுக்கும்‌ புறப்பட்டருளி, பயண கதியிலே திவ்ய நகரத்தைத்‌
    தண்டன்‌ ஸமர்பித்து வைத்த கண் வாங்காமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு நீராடி திருமண் காப்புச்‌ சாத்தி யருளி ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ மடத்திலே எழுந்தருளி பின்பு பெரிய பெருமாளை மங்களா சாஸநம்‌ பண்ணுவதாக ஸேவா க்ரமத்திலே யெழுந்தருள சித்ர மண்டபத்திலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்தருளியிருந்து -ஒன்றுந்‌ தேவு ப்ரவேசம்‌ நடத்த அந்த கோஷ்டியைக் கண்டு ஹர்ஷ பர வசராய்‌ தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, ப்ரதிவாதி பயங்கரர்‌ அண்ணா’” என்று ஜீயர்‌ கேட்டருளி குசல ப்ரச்நம்‌ செய்தருளி-இத்தனை நாளைக்காக இன்று ஸேவிக்கப்‌ பெற்றேன்‌” என்று தழுவிக்‌ கொண்டு பின்பு அவரையும்‌ கூட வைத்துக் கொண்டு கால ஷேபம்‌ நடத்த மூன்று பாட்டாய்‌ நாலாம்‌ பாட்டுத்தருவாய்‌ நிறுத்தின வளவிலே ப்ரதிவாதி பயங்கர அண்ணா ‘ இப்படி ஆழ்வார்‌ பர தத்வ நிர்ணயஞ்‌:செய்தருளி வைத்த படியை தேவரீர்‌ திருவடிகளிலே ஸம்பந்த முண்‌ டானாலல்லது ஆர்க்குமறியப்‌ போகாது””என்று வித்தராயிருக்க அவர்‌ திருக்கைகளைப்‌ பிடித்துக்‌ கொண்டு பெருமாளைத்‌ திருவடி தொழப் புக, தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ப்ரஸாதித்து, பெருமாள்‌ அர்ச்சக முகேந-வாரீர்‌ ப்ரதிவாதி பயங்கராசார்யரே! என்று அவர்‌ கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு ‘ திருமலை யிலே போரத் திரு மஞ்சந கைங்‌கர்யம்‌ பண்ணினீரே: ஒரு நாள்‌ திருமஞ்சநங் கொண்டு வரும்‌போது அழகிய மணவாளமாமுனி வைபவங்‌ கேட்டுக்‌ கொண்டு வர அதினாலே தீர்த்த ருச்யாதிக்யமும்‌ பரிமளாதிக்யமுமுண்டாய்‌
    தாம்‌ உகந்த படியை நினைத்து வந்தீர்‌; உமக்கு விலக்ஷண ஸம்பந்தம்‌ தந்தோம்‌” என்று ஜீயர்‌ திருக்கையிலே இவரைக்‌ காட்டிக்‌ கொடுக்கப்‌ புறப்பட்டு மடமே யெழுந்தருள;

    அநந்தரம்‌ அண்ணா கந்தாடை யண்ணன்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டருள, அண்ணன்‌ எதிர் கொண்டு, “வைஷ்ணவோ லைஷ்ணவம்‌ த்ருஷ்ட்வா தாண்டவத்‌ ப்ரணமேத்‌ புவி” என்கிற படியே அந்யோத்ய வந்தந பரராய்‌ சேஷத்வ புரஸ்‌ ஸரமாக குசல ப்ரச்நங்களுடனே திருமாளிகையிலே எழுந்தருள, அங்கே யாத்ருச்சிகமாய்‌ வானமாமலை ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு, “அருள்கொண்டாடுமடியவரன்றோ தேவரீர்‌!’* என்று திருவடிகளிலே தீர்க்கப் ப்ரணாமம்‌ பண்ண ஜீயர்‌, ப்ரணாம பூர்வமாகத்‌ தழுவிக் கொண்டு மூவருங் கூடி யிருந்து ஜீயருடைய யதி புநரவதாராது வைபவங்களை யெல்லாம்‌ அந்யோந்யம் அநுஸந்ததித்துக்‌ கொண்டு, மடத்திலே எழுந்தருளி; சிறட்பும்‌ திருமுன்‌ காணிக்கையும்‌, ஸமர்ப்பித்தருளி தேவிகள்‌ குமாரர்‌ எம்பெருமானாரப்பன்‌, அநந்தய்யன் அப்பை, திருவாய்மொழிப்‌ பெருமாள்‌ நாயனார்‌ முதலானாரெல்லாரைங்‌ கூட்டிக் கொண்டு திருவடிகளிலே ஆஸ்ரயித்தருளி க்ருதார்த்தராய்‌ ஸ்ரீபாத தீர்த்தமும்‌ தளிகை ப்ரஸாதமும்‌ ஸ்வீகரித்துத்‌ திருவடிகளுக்கு அந்ததரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌, ஜீயருடைய ஸம்பந்த முடையராய்‌ -அடங்கெழில்‌ சம்பத்து என்கிறபடியே கட்டடங்க விலஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை அடங்‌கக்கண்டு என்கிறபடியே கார்த்ஸ்ந்யேத கண்டு –அடங்கெழில்‌ என்றபடியே பந்நகாதீஸரான அழகிய மணவாளமாமுனிகளுடைய நிரவதிக விலக்ஷண ஸ்ரீயிலே அஃதென்‌ நடங்குக வுள்ளே-என்கிறபடியே தாமுமொன்றென்று அந்தர்பவித்து, ‘‘ப்ரஸித்த:பரகோஷ்டீஷு ப்ரவாதி பயங்கர:; ஸ்ரீவைஷ்ணவா நாம்‌
    கோஷ்டீஷு தத்தாஸ இதி விஸ்ருத:
    [ஸ்ரீவைஷ்ணவரல்லாத புறம்‌பான கோஷ்டிகளில்‌ பிரதி வாதிபயங்கரரென்று பிரஸித்தரானாலும்‌ ஸ்ரீ வைஷ்ண கோஷ்டிகளில்‌ அவர்களுக் கடியவர்‌ என்‌று நன்கறியப்‌ப்ட்டவர்‌] என்று ஸ்வ சேஷத்வாநுஸந்தாநத்துடனே ஜீயர்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌.

    தெலுங்குப்‌ பதிப்பிலுள்ளபடி. ப்ரதிவாத பயங்கர மண்ணா வ்ருத்தாந்தம்‌-(வேடலப்பை ஸ்ரீரங்கத்தில்‌ நித்ய வாஸத்‌துக்கு இசையாமல்‌ அகன்று போக ‘இனி இதற்கு ஆவாரர்‌?” என்று சிந்தித்துப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று திருநாம முடையராய்‌ விதேசேஷ்வபி விக்யாதராய்ப்‌ போருகிற ஹஸ்‌தி கிரிதாதரண்ணாவின்‌ பக்கல்‌ திருவுள்ளம்‌ குடி போய்‌ –ஆம்‌ முதல்வனிவன்‌ என்று அபிமானித்தருளி அவரை ஸ்ரீவைஷ்ணவ தாஸராக்க வேணும்‌” என்று ௧ருதித்‌ தன்‌ திருவடிகளுக் கந்தரங்கர்‌களான ஸ்ரீவைஷ்ணவரிருவர்‌ கையிலே தம்முடைய திருமுகமெழுதிக்‌ கொடுத்து அவர்பக்கல்‌ போக விட்டருள, அவர்களும்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவைக்‌ கிடடித்‌ திருமுகத்தையும்‌ கொடுத்து ஜீயர்‌ அனுப்பின விருத்தாந்த்தையும்‌ அறிவிக்க, அண்ணாவுங்‌ கேட்டு அதி ப்ரீதராய்த்‌ திருமுகத்தை சிரஸா வஹித்துக்‌ கொண்டு; முன்பே திராவிட வேதாந்தார்த்த ஸ்ரவண ஸ்ரத்தா யுக்தரானவர்‌ இதுவே இடமாமென்று கருதி தத் ஷணமே புறப்பட்டு –தாய் நாடு கன்றே போல்‌ என்றும்‌ * வத்‌ஸோவா மாதரம்‌”’ என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீவத்ஸ குல திலகராய்‌ ஸ்ரீவத் ஸிஹ்ந மிச்ர துல்‌யரான இவரும்‌ ஸ்ரீரங்காபிமுகராய்‌ -ஆஜகாம முஹூர்த்தேநல்‌-என்கிறபடியே பயண கதிகளை அர்ச்சிராதி கதியாக மநோ ரதித்துக்‌ கொண்டு ::மணவாளமாமுனிவன்‌ பாத கமலங்கள்‌ காண வேணும்‌” என்ற பேராசையுடனே திருவரங்கப்‌ பெரு நகரிலே சென்று-காவேரீ விரஜா ஸேயம்‌’‘ என்கையாலே அந்த வைகுந்த நாட்டிலே விரஜை தானான தன்மை யுடைய திருக் காவேரியிலே நீராடி நதீ நிஸ்தரணாநந்தரம்‌ ப்லவ பரித்யாகம்‌ போலே, சேதனன்‌ வாஸநா ரேணுவைக்‌ கழிக்குமா போலே அநுவாதரீதியாகிற வாஸநா ரேணுவைக்‌ கழித்து கேசவாதி த்வாதசோர்த்வ புண்‌டரங்களையும்‌ தரித்துக் கொண்டுஸ்ரீவைஷ்ணவாலங்கார முடையராய்‌ திவ்ய நகர ப்ரவேச யுக்தராயிருக்க;

    அவ்வளவிலே அவரண்டைக்குப்‌ போக விட்ட வைஷ்ணவர்‌களும்‌ ஜீயருக்கு இவர்‌ எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை விண்ணப்‌பம்‌ செய்ய, ஜீயருங் கேட்டு -பக்வமாய்ப்‌ பலிக்குமோ?”’ என்‌
    அவர்களை வினவி யருள அவர்களுலம் தேவரீருடைய அமோக ஸங்கல்பம்‌ பழுது போமோ? அங்கோல தைலம்‌ போலேஅப்போதே பல பர்யந்தமாய்‌ பலித்தது” என்ன, போர வுகந்தருளி,
    இவர்க்கு அபிமுகமாக கோயிலனைத்துப் பரிகரத்துடனே தம் ஸந்நிதி ஸ்ரீவைஷணவர்களைப்‌ போக விட்டருள, இவரும்‌ அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்குழுவு கண்டு கொண்டு ஸேவித்து ஹ்‌ருஷ்டராய்‌ நிகில ஜந ஸுஹருத்துக்களானவர்‌களுடனே கூட திருவரங்கத்‌ திருப்பதியிலே ப்ரவேசித்து, “அவர்கள்‌ முன்னிலையாகப்‌ பெருமாள்‌ ஸேவாகிரமந்தப்பாமல்‌ ஸேவித்துமீண்டு வரயோகி மடத்திலே சென்று ‘‘ரங்கேதாம்நி ஸுகாஸீநம்‌- வந்தே வர வர முநிம்‌!’ என்‌கிறபடியே விசேஷாதிஷ்டாதமாக ஸ்வாங்கீகாரோந் முகராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே ‘*அகிஞ்சநோ அநந்யகதி ஸயரண்ய த்வத்பாத மூலம்‌ சரணம்‌ ப்ரபத்யே” என்கிறபடியே ஆகிஞ்சந்ய அநந்யகதித்வ பூர்வமாகத்‌,தாளுந் தடக்கையுங்‌ கூப்‌பி ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணா நிற்க; ஜீயரும்‌ க்ருபை செய்து, “லோசநாப்யாம்‌ பிபநத்திவ – என்னும்படியே குளிர நோக்க, –வசஸா ஸாந்தவயித்வைநம்‌”என்னும்படி குசலப்ரஸநம்பண்ணி இருத்திக் கொண்டு அப்போது நடக்கிற *ஒன்றுந்தேவின்‌ ப்ரவேசத்தை உபந்யஸித்துக் காட்ட இவருங்கேட்டுப்‌ போர வாச்சர்யப்பட்டு, திருவாய்‌ மொழியிலு மருளிச்செயலிலு மொழிய ஸம்ஸ்‌க்ருத்தில்‌ பரிசயமில்லை” என்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்துலும்‌ மிகவும்‌ நிபுணரா யிருந்தார்‌’” என்று ஜீயரிடத்தில்‌ அத்யாதரம்‌ பண்ணி, இனி,-அடியேனை யாட் கொண்டருள வேணும்‌” என்ன, ஜீயரும்‌, “நீர்‌ ப்ரதிவாதி பயங்‌கரர்‌; நாம்‌ ஸா து; எங்ஙனே கூடுகிறது? என்ன, அண்ணுவும்‌ ஜீயரைக் குறித்து ”ப்ரஸித்த. பர கோஷ்டீஷு பரவாதி பயங்கர:, ஸ்ரீவைஷ்ணவாநாம்‌ கோஷ்டீஷு தத் தாஸ இதி விஸ்ருத:” என்று அடியேனுக்கு இங்ஙனே இரண்டு ப்ரஸித்தி யுமுண்டு”’ என்ன அத்தைக் கேட்டு ஜீயரும்‌ உகந்த திருவுள்ளத்தை யுடையராய்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து, –பலரடியார்‌ முன்பருளிய என்றும்‌ ‘பஹுமாநேந மஹதா?’ என்றுஞ்‌
    சொல்லுகிறபடியே விசேஷாபிமானம்‌ செய்தருளி, ஐந்மாத்‌ யுத்க்ருஷ்ட தாதிகளால்‌ “உண்டான அபிமானம்‌ போம்படி-“அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்‌ என்கிறபடியே ஆத்ம தாஸ்யமாக ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌” என்று ஆர்க்கும்‌ ஸித்தியாத தாஸ்ய நாமத்தையும்‌ ததீய சேஷத்வமே நிலை நின்ற நிரூபகமாம்‌ படி ப்ரஸாதித்தருளி, “காந்தோ பயந்த்ருயமிந: கருணைக பாத்‌ரம்‌” என்னும்படியான அண்ணாவைக்‌ குறித்து
    ”இதர மத நிராகரண பூர்வமாக ஸ்வ மதமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்யே
    ரக்ஷித்துக் கொண்டு விசிஷ்ட பஷத்திலேயே நிஷ்டராய்ப்‌ போரும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ ஒரு பிறவியிலே இரு பிறவியாய்‌ ஸத்தா மூலமான மூல ஸ்பர்‌ஸமுள்ள தொன்றைப்‌ பற்றி ”ஸந்தமேநம்‌ -என்னும்படி ஸத்தையும்‌ பெற்று க்ருதார்த்தராய்‌, உடையவர்‌ திருவடிகளுக்கு ஆழ்வானைப் போலே அந்தரங்கராய்‌, ஸகல வ்யாக்யான நிர்மாண ஸஹ காரியாய்‌ தத் பாதாப்த ஸேவைக தாரகராய்‌ வாழ்ந்து கொண்டு ஜீயருக்கு உகப்பாகப்‌ பெருமாளையும்‌ ஸேலித்து அரிய அருளிச்‌ செயற்‌பொருளை யெல்லாங்‌ கேட்டு ஆதரித்துக் கொண்டு எழுந்தருளி யிருத்தார்‌. பின்பு ”தஸ்மாத் பார்‌யாதய: புத்ராஸ்தமேகம்‌ குருமாப்நுயு: [அண்ணா ஆசரயித்‌த படியால்‌ அவருடைய புத்ரர்களும்‌ பத்நீ முதலானவர்களும்‌ அம்‌ மா முனிகளொருவரையே ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்கள்‌] என்‌னும் படி தத் ஸம்பத்திளான அப்பா முதலானவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தார்கள்‌. அந்த அப்பாவிறே அஸ்மத் தேசிகராயிருக்கிற சடகோப தேசிகரை ப்ரதமம்‌ கடாக்ஷித்‌தருளினார்‌.

    ஜீயர்‌ மீளவும்‌ திருமலை யாத்ரை செய்தருளல்‌.
    அநந்தரம்‌ ஜீயர்‌ மீளவும்‌ திருமலை முதலான திவ்ய தேசங்களைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, “ப்ரதீதைரபி தத் ப்ருத்யை ப்ரதிவாதி பயங்கரை: (ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவுடனும்‌ பிரசித்தர்களான அவருடைய அடியார்களுடன்‌ )என்கிறபடியே ப்ரதிவாதி பயங்கர அண்ணா முதலான அனேக ஸ்ரீவைஷ்ணவர்களுடனே திருக்காவேரி வடக்கு நோக்கினாப்‌போல புறப்பட்டருளி-அதவிலோகந லோகதமேநுதம்‌ த்வதவலோகந துங்க குதூஹலம்‌ | த்விரத ஸைல ஸிரோக்ரஹ மேதிநம்‌ வரத முத்தர வேதி பூஷணம்‌ (பின்னர்‌ தமது கடாக்ஷத்தாலே ஐநங்களு டைய அஜ்ஞான இருளைஅடியோடு போக்குமவராய்‌ தேவரீரை கடாக்ஷிப்பதில்‌ மிகவும்‌ குதூஹல முடையவராய்‌ திருவத்தி மலை யுச்சியில்‌ நித்யா வாஸம்‌ செய்தருள்பவராய்‌ உத்தர வேதியான யாக சாலைக்கு அலங்காரபூதரான பேரருளாளனை) என்கிறபடியே அர்த்திதார்த்த பரிதானத்‌தில்‌ அவஸர ப்ரதீஷாரயெழுந்தருளி யிருக்கும்‌ பேரருளாளரைத்‌ திருவடி தொழுவாராக ப்ரதமம்‌ பெருமாள்‌ கோயிலேற எழுதந்தருள, அங்குண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களெல்லாரும்‌ எதிர்‌ கெண்டு வந்து ஸேவிக்க அவர்களை க்ருபை பண்ணி அவர்கஞடனே எழுந்தருளி கோயிலுக்குள்ளே புக்கு.
    1-ஸ்ரீ மந் த்வாரவரம்‌ மஹத்தி பலிபீடாக்ர்யம்‌ பணீந்த்ரஹ்ரதம்‌கோபீநாம் ரமணம்‌ வராஹ வபுஷம்‌ ஸ்ரீபட்டநாதம்‌ ததா |
    ஸ்ரீமந்தம்‌ சட வைரிணம்‌ கலிரிபும்‌ ஸ்ரீபக்தி ஸாரம்‌ முநிம்‌ பூர்ணம்‌ லக்ஷமண யோகிநம்‌ முநிவரிராநாத்யா த்வாரபவ்
    ஸ்ரீமந் மஞ்ஜந மண்டபம்‌ ஸரஸிஜாம்‌ ஹேதீஸ போகீஸ்வரெள ராமம்‌ நீல மணிம்‌ மஹாந ஸவரம்‌ தார்க்ஷ்யம்‌ ந்ரு ஸிம்ஹம் ப்ரபும்‌
    ஸே நாந்யம்‌ கரிபூதரம்‌ ததுபரி ஸ்ரீ புண்யகோடிம்‌ ததா தந் மத்பே வரதம்‌ ரமாஸஹசரம்‌ வந்தே ததீயைர் வ்ருதம்‌ ॥

    நித்யஸ்ரீயுடன்‌ விளங்கா நின்ற பெரிய திருக் கோபுர வாயிலையும் பலி பீடத்துக்கு முன்புள்ள திருவநத்த ஸரஸ்ஸையும்‌, கோபீ ரமணனான ஸ்ரீவேணு கோபாலனையும, ஞானப் பிரானையும்‌, அப்‌படியே பட்டர்பிரானையும்‌, ஸ்ரீமானான சடகோபனையும்‌, திருக்கலிகன்‌றியான திருமங்கையாழ்வாரையும்‌, திருமழிசைப்‌ பிரானையும்‌ பெரியநம்பியாரையும்‌, எம்பெருமானாரையும்‌, முதலாழ்வார்களையும்‌, பிறகு திருவாசல் காக்கும்‌ முதலிகளையும்‌, திருவபிஷேக மண்டபத்தையும்‌, தாமரையாளான ‘பெரும் தேவித் தாயரையும்‌, திருவாழி யாழ்வானையும்‌, திருவநந்தாழ்வானையும்‌ சக்கரவர்த்தி திருமகனையும்‌, கரிய மாணிக்க வரதரையும்‌. திருமடைப் பள்ளியையும்‌, பெரிய திருவடி நாயனாரையும்‌, ஸ்வாமியான அழகிய சிங்கரையும்‌, சேனை முதல்வரையும்‌, திருயத்திமாமலையையும்‌ அதன்மேல்‌ ஸ்ரீபுண்ய கோடி விமானத்தையும்‌ அதன்‌ மத்தியில்‌ ஸ்ரீதேவி பூதேவி முதலானாரால்‌ சூழப்பட்ட திருமகள் கேள்வனான தேவப் பெருமானையும்‌: அடிபணிகிறேன்‌..


    2-கமல நிவேஸி தாங்க்ரி கமலம்‌ கமலாபரணம்‌ கந மணி பூஷணத்யுதி கடாரித காத்தருசிம்‌ |
    அபயகதா ஸூதர்ந ஸரோருஹ சாருகரம்‌ கரிகிரி ஸேகரம்‌ கிமபி சேதஸி மேநிததே ।

    ஆஸந பத்மத்தில்‌ அழுதியிட்ட திருவடித் தாமரைகளை யுடையனாய்‌ லஷ்‌மீ வல்லபனாய்‌ உயர்ந்த மணிமயமான திருவாபரணரங்களின்‌ ஒளியினால்‌ பொன் வண்ண மாக்கப்பட்ட திருமேனி
    சோபை யுடையனாய்‌ அஞ்சேலென்று காட்டும்‌ முத்திரை யென்ன கதை சங்கம்‌ சக்ரம்‌ இவ்வாழ்வார்களென்ன இவற்றை தரிக்கும்‌ திருக்கைகளாலே அழகாக விளங்கா நின்‌ற அத்திகிரிக்கு சிரோ பூஷணமான அநிர்வசநீயனான பேரருளாளனான எம் பெருமானை எனது மனதில்‌ த்யாநிக்கிறேன்‌) என்கிற படியே அடைவே ஸேவித்தருளி வைய மாளிகையிலே ஏறி யருளி பேரருளாளரைத்‌ திருவடி தொழுது
    மங்களம்‌ வேதஸோ வேதி மேதிநீ க்ருஹமேதிநே வரதாயதயா தாம்நே தீர்ரேதாராய மங்களம்‌ ”--பிரமனுடைய யாக பூமியில்‌ எழுந்தருளி யிருப்பவராய்‌, க்ருபா நிதியாய்‌, ஆஸ்ரிதாபேக்ஷிதங்‌களைத் தருவதில்‌ நிலை நின்றவரான பேரருளாளருக்கு மங்களம்‌,
    மங்களம்‌-என்று தொடங்கி மங்களாசாஸனம் பணணி எழுந்தருளி நிற்க திருவடிக்‌கீழவர்கள்‌ தீர்‌த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்ரீ சடகோபனும்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி தண்டன் ஸமர்ப்பித்துப்‌ புறப்‌பட்டருள, அங்குண்டானவர்கள்‌எழுந்தருளியிருக்கும்படி அங்கே ஒரு மடத்தைக தற்பிக்க.
    கதி ஸித்திநாநி கரிஸைல வாஸிந கமலா ஸகஸ்ய நயநாதுதா பவந |
    நிஜ பாத பங்கஜ ரஜோபி ஷேச நைரகிலாஸ்ரிதாந்‌ விமலாயக்நு வாஸை : ॥

    (அம் மணவாளமா முனிகள்‌: சில நாட்கள்‌ ஹஸ்தி கிரியில்‌ தித்யவாஸியாய்‌ ஸ்ரீ யபூதியான பேரருளாளனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி, அங்கு எல்லா ஆஸ்ரிவதகளையும்‌ தமது திருவடித்‌
    தாமரைகளின்‌ ஸ்பர்சத்தால்‌ சுத்த ஸ்வபராகச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌) என்கிறபடியே அங்கேயே அவர்களுக்கு உகப்பாக நாலாறு நாள்‌ எழுந்தருளி யிருக்க, அநந்தரம்‌ திரு வைசாகத்‌ திருநாள்‌ தொடங்கி நடக்க, முன்றாந் திருநாளன்று பெருமாள ஒப்பித்துக் கொண்டு
    ஆரூட : பதகேந்த்ர மஸ்ய கரயோரங்க்ரி த்வயீ மர்ப்பயந்‌
    திவ்யை ரம்பர பூஷணைர் திந க்ருதோ தீப்திம்‌ திவா தீபயத்‌ |
    முக்தேந்து ஸ்மிதீரோ சிஷா மதுரயந் முக்தாத பத்ர ச்ரியம்‌
    விஸ்வம்‌ பஸ்யதி சக்ஷுஷா விகஸதா வீதீ விஹாரீ ஹரி!

    (தேவப் பெருமாள்‌ பெரிய திருவடியின்‌ மேலே எழுந் தருளி அவருடைய கைகளிலே இரு திருவடிகளையும்‌ வைத்துக்‌ கொண்டு, திவ்யமான திருப் பரியட்டங்களாலும்‌ திருவாபரணங்களாலும்‌சூரியனுடைய ஒளியைப்‌ பகல்‌ விளக்காக்குமவராய்‌, அழகிய வெண் மதி போன்ற புன்முறுவலுடைய காந்தியான திரு முத்துக்‌ குடைகளின்‌ சோபையை விளங்கச்‌ செய்பவராய்‌, திருவீதிகள்‌ தோறும்‌ பவநி எழுந்தருளி, திருக் கண்ணோக்கினால்‌ யாவரையும்‌குளிரக் கடாக்ஷித்‌ தருளுகிறார்‌) என்கிறபடியே பெரிய திருவடி மேற்‌கொண்டு திரு வீதியிலே புறப்பட்டருள ஜீயரும்‌ பெருமாளை ஸேவித்‌துக்‌ கொண்டு கங்கை கொண்டான்‌ மண்டபத்தேற வெழுந்தருள);

    எறும்பியப்பா ஜீயரை ஸேவித்தல்‌
    எறும்பியப்‌பாவும்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ திருநாள்‌ ஸேவிக்க எழுந்தருளி னவர்கள்‌ அங்கே அசித்திதமாக ஜீயரை ஸேவித்து
    ஆருஹ்ய பதக வ்ருஷபமா யாந்தம்‌ வரத மாதராத் த்ரஷ்டும்‌. |
    கத்வாத தக்ர பூமிம்‌ நாத்ர நஷம்‌ தத்ர தேசிகம்‌ த்ருஷ்ட்வா

    (பெரிய திருவடியின்‌ மேல்‌ ஏறி யருளி எழுந்தருஞம்‌ தேவப் பெருமாளை ஸேவிக்க ஆதரத்துடன்‌ சென்று அவ் விடத்தில்‌ ஆசார்‌யரை-மணவாளமாமுனிகளை-ஸேவித்து அங்கு ஈடுபாட்டினால்‌-அதற்கு மேலே எதையும்‌ பார்க்க வில்லை) என்னும்படி அப்பா விஸ்‌மித ஹ்ருதயராய்‌ மோஹித்து ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆதராதிசயத்‌தாலே விழுந்து தத் விக்ரஹாநுபவம்‌ பண்ணிக் கொண்டு ”சிரேண ஸம்ஜ்ஞநம்‌ ப்ரதி லப்ய சைவ விசிந்தயா மாஸ விஸால நேத்ரா””. வெகு காலம்‌ கழித்துத்‌ (சீதை] தன்னினைவடைந்து மேலும்‌ மலர்ந்த திருக் கண்களை யுடையளாய்‌ சிந்திக்கலானாள்‌-என்கிறபடியே மூன்று நான்கு நாழிகைக்கு மேலே தெளிந்து-பின்பு திரு நாளென்றறிந்து ஜீயரை ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ –குமிறு மோசை விழவொலி தொலை வில்லி மங்கலம்‌ கொண்டுபுக்கு(திருவாய்‌ 2-4-2] என்றும்‌ (இழைகொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌ [திருவாய்‌ 5-5] என்றுஞ்‌
    சொல்லுகிறபடியே ஸேவித்தருளி
    (என்கிறபடியே ஜீயர்‌ புருஷகாரமாக ‘ஸெளம்யோ பயந்த்ரு முநிசா மம தர்ஸிதெள தெள ஸ்ரீ தேவராஜ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ” என்கிற படியே ஸேவித்தருளி)பின்பு ஜீயரும்‌ பெரிய திருவடியோட்டைச்‌ சேர்த்தியை

    ஸேவித்தருளி
    ஸூபர்ண ப்ருஷ்ட ரமாரூடஸ்ஸ யாம: பிதாம் புரோ ஹரி: |
    காஞ்சநஸ்ய கிரேஸ் ஸருங்கே ஸ தடித்தோ யதோ யதா ॥

    (பெரிய திருவடி நாயனாரின்‌ முதுகிலே எழுந்தருளி யிருக்கும்‌ நீல மேக ஸ்யாமளனும்‌ பீதக வாடைப் பிரானுமான தேவப் பெருமாள்‌ திரு பொன்மலையின்‌ மேலே மின்னலுடன் கூடிய மேகம்‌ போலே
    விளங்கினார்‌.) என்கிறபடியே மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மா முகில்‌ போன்ற வடிவை அநுபவித்தருளி –

    தரசழுந்து மணி தவள நற் பவள மருண ரத்ந வகை சாத்தியயே
    சங்கு சக்ராமுமங்கையில்‌ திகழ மங்ஸக பாகனரனேத்தவே
    நரகு மொத்தமரர்‌ திரளு மேத்தும்‌ நரவாகவனன்‌ வருணனிந்திரன்‌
    நடுவு நான்‌மறை கொள்‌ முனிவர்‌ வானவர்‌ குணாலமிட்டு நடமாடவே
    வரைகளிற்‌ பெரிய வட கிரிக்குமிசை மரதகக் குவடு போலவே
    வரதர்‌ கச்சிநகர்‌ வரு தனித் தெருவில்‌ வடகலைக்கழகு பொழியவே
    அரவுதித்த மணி மகுட முற்றவொரு வணி பிணக்குடன்‌ மிழற்றவே
    கநகமொத்த தொரு வடிவமொத்தி வரு கருடனிற் பவனி வருவரே

    என்றநுபவித்து அதற்குப்‌ பாசுரமிட்டருளி ஹ்ருஷ்டரா யெழுந்‌தருளியிருந்து மற்றைத்‌ திருநாள்களையும்‌ ஸேவித்தருளி எழுந்தருளி யிருக்க.

    அப்பாச்சியாண்ணாவைக்‌ கச்சியில்‌ நித்ய வாசம் பண்ண நியமித்தல்‌
    ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் கூடி யெழுந் தருளி-ஜீயர்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளுகையாலே இந்த விசை திரு வைசாக மஹோத்ஸவம்‌ அதி விலஷணமாகக்‌ கண்டருளினார்‌” என்று உகந்தருளக்‌ கேட்டருளி, ஜீயர்‌ அவர்களை ஆதரித்தருளி- கர்த்தவ்யாசாரபாகங்களையும்‌ பரஸ்பர சேஷத்வ ஸெளஹார்தாவஸ் யாகத்வத்தையும்‌ திவ்ய ப்ரபந்த வாஸநாத்யாவஸ் யகத்தையும்‌
    அவர்களுக்கு உத்தரோத்தரம்‌ அதிசயமாக வேணுமென்று அருளிச்‌ செய்ய, எல்லோரும்‌ அப்படியே யாக வேணும்‌; இவற்றிற்க் கெல்‌லாம்‌ ஒருவரைக் கற்பித்தருளி’ அடியோங்களைத்‌ திருத்திப் பணி கொள்ளும்படி அந்த ஸ்தலத்திலே நித்ய வாஸமாக நியமித்தருள வேண்டும்‌” என்ன ஜீயரும்‌ போர வுகந்தருளி வானமாமலை ஜீயரை இட்டு நம்முடைய அப்பாச்சியாரண்ணாவை அழைத்து
    வாரும்‌” என்று நியமிக்க அவருமப்படியே செய்தருள, அப்பாச்யாரண்ணாவை எல்‌லார்க்குங் காட்டி யருளி, இவரை தம்முடைய மர்யாதையாக வெண்ணி க்ருபை பண்ண வாருங்கோள்‌” என்றருளிச் செய்து அவரையும்‌ நீர் முதலியாண்டான்‌ திரு வம்சத்திலேஅவதீர்ணரா யிருக்கையாலே ஆண்டான்‌, தோழப்பர்‌, முதலானார்க்கு உகப்பாக நம்முடைய வாக்யாநுவிதாயியாய்‌ இவர்‌களுக் கெல்லாம்‌-ஹித ப்ரவர்‌த்தகராய்ப்‌ பேரருளாளருக்கு மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌
    ஸ்ரே யாம்ஸி கரி ஸைலேந்த்ர। கருணா வருணால்ய: |
    தோதுஹ்யாத் வரதஸ் ஸ் ரீமா நர்த்திநாம்‌ நிதிரவ்யய: ॥

    யாசிப்பவர் களுக்குக்‌ குறையாத நிதியாய்க் கருணைக்‌ கடலாய்‌ ஹஸ்திகிரி நாதனாய்‌ ‘ஸ்ரீமானான வரந் தரும்‌ பெருமாள்‌ நன்மைகளை(உமக்குச்‌) சுரந்தருளுவாராக] என்று ஆஸீர்‌வதித்தருளினார்‌-

    ஜீயர்‌ திருக்கடிகை, எறும்பி வழியாகத்‌ திருமலை எழுந்தருளல்‌.
    அநந்தரம்‌ அப்பாவையுங்‌ கூட்டிக்‌ கொண்டு திருப்புட்குழி வழியாக எழுந்தருளி அங்கே புட்குழி அம் போர் ஏற்றையும்‌ ஸேவித்‌துப்‌ புறப்பட்டு,
    கடிகாசல ஸேகரம் ததோ நரஸிம்ஹம்‌ நயநேந நிர்விஸந் |
    உதஜீவய தர்ஸ்ரிதைர ஜநைரவநீம்‌ தாம பநீத பந்தநை: ॥

    (பிறகு கடிகைத் தடங் குன்‌றுக்கு சிரோ பூஷணமா யெழுந்தருளியுள்ள நரசிங்கப்‌பிரானைத்‌ திருக் கண்களாலே பூர்ணமாயநுபவித்து, தம்மை யாஸ்ரயித்தவர்களாய்‌ அறுக்கப்பட்ட ஸம்ஸார பந்தத்தையுடைய சில மனிதர்களுடன்‌ அந்த நாட்டை அநுக்ரஹித்தருளினார்‌) என்கிறபடியே வண்டு வளங் கிளரும்‌ நீள் சோலை வண் பூங் கடிகைத் தடங் குன்றேற வெழுந்தருளித்‌ தக்கானையும்‌ திருவடி தொழுது க்ராமாந்தரங்களினின்றும்‌ அநுகூலராய்‌ வந்து ஆஸ்ரயித்தவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, அநந்தரம்‌ கடிகைத்‌ தடங் குன்றின்‌ மேல்‌ ஏறி யருளி -மிக்கார் வேத விமலர்‌ விழுங்கும்‌ அக்காரக் கனியை யநுபவித் தருளி, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப்‌ பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்‌டென்று பாடுதும்‌ -என்கிறபடியே மங்களாசாஸனம்‌ பண்ணி-அங்கே யெழுந்தருளி நின்று எறும்பியைக்‌ கடாஷித்தருளி ‘வட திருவரங்கம்‌” என்று ஊருக்குத்‌ திருநாமஞ் சாத்‌தி யருளி-அங்குண்டானவர்களெல்லாரையும்‌ அழகிய மணவாள தாஸரென்று அபிமானித்தருளி அண்ணல் மலை யருகே அரங்க மா நகராக்கி அநந்தரம்‌ -வண் பூங் கடிகைக்கு பண்டெல்லாம்‌ வேங்‌கடம்‌ என்று திருமலையோடே சேர்த்தி யுண்டாகையாலே பொன்‌மணியை அணி யார்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்துச்சியில்‌ கண்டு இப்படி ஸ்ரீதிதி யாகிற பொருள் படைப்பாரரக ஒண்ணுதல்‌ மாமை
    யின்படியே மநோ ரதத்தை யுடையராய்‌ தேவம்‌ திவ்யம்‌ ஸேஷஸைலே வஸந்தம்‌ தத்பாதாப்ஜம்‌ வீக்ஷிதும்‌’-என்று வேங்கடத்து உச்சியில்‌ கோயில்‌ கொண்டுள்ள தேவனின்‌ திருவடி தொழுவாராக திருவடிவாரமான திருப்பதியிலே முந்துற வெழுந்தருள அங்குள்ள்‌ ஆசார்‌ய புருஷர்கள்‌ முதலானாரனைவரும்‌ எதிர் கொண்டு சேவிக்க-

    அவர்களுடன்‌ கூட கோவிந்த ராஜப்‌ பெருமாளைத்‌ திருவடி தொழுவதாக எழுந்தருளி ப்ரதமம்‌ எம்‌ பெருமானாரைத்‌ திருவடித் தொழுது, அவருகந்து எழுந்தருளப் பண்ணினவரென்று அத்‌
    யாதரத்துடனே ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளையும்‌ –கையினார்‌ சுரி சங்கனலாழியர்‌ என்கிற படியே அத்யா தரத்துடன்‌ ஸேவித்‌தருளி கோவிந்தன்‌ குணம் பாடி மங்களசாளனம்‌ பண்ணி யருளி கோவிந்தன்‌ தன்னடியாரா யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடனே புறப்பட்டருளி திருமலையடிவாரத்‌திலே எழுந்தருளி யிருக்கிற : நம் மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களையும் *உலகுய்ய மால்‌ நின்ற என்று தொடங்கி மகிழ் மாறன்‌ தாளிணையே ௨ன்‌ சரணாய்‌ நெஞ்சமே யுள்‌ (திருவாய் நூற்‌-60) என்றும்‌ ஓழிவில் காலம்‌ என்று தொடங்கி -மிக்க நலஞ்சேர் மாறன் பூங் கழலை நெஞ்சே புகழ்‌
    (திருவாய்‌ நூற்‌-23) என்றும்‌ அநுஸந்தித்து ஸேவித்தருளி அ
    ன்றைக்கு அங்கே எழுந்தருளி யிருந்து அங்குண்டான வர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, பிற்றை நாள்‌ திலத முலகுக்காய்‌ நின்ற
    திருவேங்கடத்தைச்‌ சென்று வணங்கி, அநந்தரம்‌ மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (திருவாய்‌ 3-3-10) என்றும்‌ -தேனேய்‌ பொழில் சூழ்‌) திருவேங்கடமாமலை (திருமொழி 11-9-2) என்றும்‌-அப்ராக்ருதமமே யஞ்ச ஸர்வ ரத்ந மயம் கிரிம்‌, ஹிரண்மய மஹா ஸ்‌ருங்கம்‌ பஞ்ச உபநிஷதாத் மகம்‌:” (பஞ்சோபநிஷ மயமாய்‌ அப்ராக்ருதமாமய் அளவிடற்கு அரியதாய் ஸகல மணி மயமாய்‌ பொன்‌
    மயமான பெரிய சிகரத்தை யுடைத்தான திருமலையை என்கிறபடியே அப்ராக்ருத திவ்ய வபுஸ்ஸையுடைய திருமலை யாழ்‌வாரை யடைந்து வணங்கி, அப்பால்‌ பரம பதத்துக்குப்‌ படியொழுங்கு போலே யிருக்கிற திருமலையிலே *தம்பாதே நாத்யாரோ ஹதி (கெளஷீடக்‌ 1-5) என்னும்‌ ப்ரதிபத்தியுடன்‌ ஏறி எழுந்தருளி காட்டு அழகிய சிங்கரையும் திருவடி தொழுது -தேனாறு பாயுத்‌ திரு வேங்கடத்தி லுண்டான கானாறுகளையும்‌ -கண்டு களித்து கொண்டு அவ் வருகே எழுந்தருளு கிறவர்‌ விண்ணின்‌ மீதி யன்றே வேங்கடத்திலுண்டான விலங்கல்‌ குடுமிகளையும்‌ மின்‌ திகழ்‌ குடுமிகளையும்‌ கோல் தேன் பாய்ந்தொழுகும்‌ குளிர் சோலை சூழ்ந்த வழகையும்‌ கல் தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச் சுளைகளையும்‌ செப்பார்‌ திண் வரையையும்‌ ஸேவித்துக் கொண்டு அப்பாலே எழுந்தருளி
    காட்டில்‌ வேங்கடத்திலுண்டான காட்டையும்‌ வைகுந்த நாட்டுக்‌ கொப்பான வட வேங்கட நாட்டையுமநுபவித்து –மாலுகந்தவூரான ஊரருகே யெழுந்தருளி -நன் மணி வண்ணன்‌ (நான்‌திரு, 47)
    என்ற பாட்டின் படியே அங்குண்டான ‘ அபூர்வங்களை யெல்லாம்‌ ஆஸ்சர்யத்துடனனே அநுபவித்து,-கண்ணன்‌ விண்ணூரைத்‌ தொழுது ஊரருகே, ஸேவித்துக் கொண்டு நிற்க அவ்வள வில்‌ -வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழுகிற கோயில் கேள்‌வி ஜீயர்களும்‌ ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களும்‌ மற்றெல்லாரும்‌ வந்தெதிர்‌ கொண்டு ஸேவிக்க, அவர்களை –நிகரிலமரர்‌ முனிக் கணங்கள்‌ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளி அவர்களுடனே கூடத்‌ திருவேங்கட நகரை ப்ரவேசித்து அவ் வருகே வைகுந்தன்‌ திருவாசல்‌, அவாவறச் சூழ்ந்‌தான்‌ திருவாசல்‌, என்கிற திரு வாசல்களையும்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து ப்ரதஷிணமாக வெழுந்தருளி அங்கே அநந்தாழ்வான்‌ கைங்‌கர்யமான ‘இராமானுசன்‌”’ என்கிற திரு நந்தவனத்தையும்‌ மற்றுமுண்டான திருநந்தவனங்களையும்‌ திருப் பூ மண்டபங்களையும்‌ ஸேவித்து திருவுள்ளமுகந்தருளி, பின்பு திருக் கோனேரியிலே நீராடி-த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களையும்‌ தரித்தருளி-மேலொரு நாள்‌ மண் கோட்டுக் கொண்டான்‌ மலை (மூன்றாம் -திரு-45) என்கிறபடியே-எறிதர வையம்‌ முற்றும்‌ ஏனத்துருவா யிடந்த ஷேத்ராதிபயான ஞானப் பிரானையும்‌ ஸேவித்து ஊனேறு!செல்வத்தை (பெரு. திரு .4) அநுஸந்தித்து அங்குண்டான திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்‌தியா நின்று கொண்டு கோனேரி வாழுங் கிருகு தொடக்கமான பஷி ஸங்கங்களையும்‌ தம்பகலாய்‌ நிற்கும்‌ தவமுடையாரையும்‌ அநுபவித்துக் கொண்டு, பெரிய திருக்கோபுரத்துக் கருகே தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புகுந்து, நம்‌ பெருமாள்‌ எழுந்தருளி யிருந்த அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ ஸேவித்தருளி

    1-ஸ்ரீமதி மஹிதித்வரார சிஞ்சாம்‌ காஞ்சந மயஞ்ச பலிபீடம்‌ |
    ஸ்தாந மதயாமுநேயம்‌ சம்பக தரு ஸம்பதம்‌ ப்ரதீ ஹாரம்‌ ॥
    விநதா தநய மஹாநஸ மணி மண்டபம்‌ கநக மய விமாநவரம்‌ |
    ப்ருதநாபதி யதி துர்யெள நரஹரி மதந மத ஜாநகீ ஜாநிம்‌ ॥

    பெரிய திரு வாயிலிலே அந்தாணிப் புளிபையும்‌ பொன் மபமான பலி பீடத்தையும்‌ அதன் பின்னர்‌ யமுனைத் துறைவர்‌’ என்கிற புஷ்ப மண்டபத்தையும்‌ செண்பக வ்ருக்ஷ ஸம்பத்தை யுடைய செண்பகத்‌ திரு வாசலையும்‌ பெரிய திருவடி நாயனாரையும்‌ திருமடைப்‌ பள்ளி யையும்‌ திருமாமணி மண்டபத்தையும்‌, தங்கத்தால்‌ சமைந்த ஆநந்த நிலய விமானத்தையும்‌, சேனை முதல்வரையும்‌, யதிராசனாரை யும்‌, நரசிங்கப் பிரானையும்‌ பின்னர்‌ இராம பிரானையும்‌ வணங்கக்‌ கடவீராக.

    2-அதபுநர நக மணி த்யுதி கவசித கமலா நிவாஸ புஜ மத்யம்‌ |
    கலயத கமல விலோசந மஞ்ஜந கிரிநிதி மநஞ்ஜநம்‌ புருஷம்‌ ॥

    பின்னர்‌ தோஷமற்ற மணிகளின்‌ காந்தியால்‌ வியாபிக்கப் பெற்றதாய்ப்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமான திருமார்பை யுடையனாய்‌ செந்தாமரையை யொத்த திருக் கண்களை யுடையனாய்‌ அஞ்சன கிரி நிதியாய் ஹேய ப்ரதிபடனாய்‌ பரம புருஷனான திருவேங்கடமுடையானை கண்ணாரக் கண்டு களிக்கக் கடவீர்‌கள்‌

    3-ஸரணமய மித்யங்க்ரிம்‌ நிர்திஸ்ய தக்ஷிண பாணிநா
    கரகிஸலயம்‌ ஸவ்யம்‌ ஸவ்யோரு ஸீம்நி ஸமர்ப்பயந் |
    மணி கண மஹோ மக்நே வக்ஷஸ் ஸ்தலெ தததிந்திராம்‌
    பவதபிமத ஸ்ரீமாநஸ் மாகமஸ்து பரம்பதம்॥

    இந்தத் திருவடிகளே உங்களுக்கு மோக்ஷோபாயம்‌ என்று வலது திருக் கையால்‌ காட்டிக்கொண்டு, தளிர் போன்ற இடது திருக் கையை இடது திருத் தொடை ப்ரதேசத்தில்‌ வைத்திருப்பவராய்‌, ரத்நங்களின்‌ ஒளியில்‌ மூழ்கின திரு மார்‌பில்‌ பெரிய பிராட்டியாரைத்‌ தரிக்குமவனாய்‌ உங்களுக்கு ப்ரிய தமனுமான திருவேங்கடமுடையான்‌ ஸ்ரீநிவாஸன்‌ நமக்கு மேலான ப்ராப்ய ஸ்தானமாக ஆகக்‌ கடவன்‌]

    என்கிறபடியே திருவேங்கடமுடையானைத் திருவடி தொழுவதாக ஸேவா க்ரமத்தில்‌ அடைவே அத்தாணிப் புளி, ஸ்ரீபலி பீடம்‌, யமுனைத் துறைவனென்கிற திருப் பூ மண்டபம்‌, செண்‌பகத் திருவாசல்‌, பெரிய திருவடி, திருமடைப் பள்ளி, திருமாமணிமண்டபம்‌, திவ்ய விமானம்‌, முதலானவற்றையும்‌ ஸேவித்தருளி, அநத்தரம்‌ சேனை முதலியாரையும்‌ திருவடி தொழுது -நின்ற வண்‌ கீர்த்தியும்‌ நீள் புனலும்‌ நிறை வேங்கடப்‌ பொற் குன்‌றமும்‌ என்றும்‌-இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌ என்றும்‌ இத்யாதிகளை அநு ஸந்தித்து எம்பெருமானாரையும்‌ ஸேவித்து அவருடைய அநுமதியோடே புறப்பட்டருளி தூணாயதனூடரியாய்‌ என்றநுஸந்தித் தருளி -திருவேங்கடத் தரியையும்‌ ஸேவித்து, வென்று மாலை யிட்‌டான்‌ திருமண்டபத்தே யெழுந்தருளி தாயே தந்தை என்று தொடங்கி -நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி யாளென்னைக்‌ கொண்‌டருளே என்று தண்டன்‌ சமர்ப்பித்து உள்ளே புக்கு, பின்பு-மிடைந்த ஏழ் மரங்களுமடங்க வெய்து வேங்கட மடைந்த மாலான சக்ரவர்த்தி திருமகன்‌ திருவடிகளை யடைந்து, அப்பால்‌ அவன்‌ தாளிணைக் கீழ்ப் புகுங்‌ காதலை யுடையராய்க் குலசேகரன் படி
    யருகே சென்று -அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே-அடிக்கீழமர்ந்து புகுந்து நின்று ஸேவித்தருளி, அநத்தரம்‌ -செங்கமலக்‌ கழலில் படியே,

    திருமகள்‌ மருவு மிருபதமலரு முழந்தாள்களுங் குறங்கும் தாங்கு
    செக்கரம் மா முகில் போலத்‌ திருவரைச்‌ செம்பொனம்பரமும்‌
    அருமை சேர்‌ சீராவு மயனைத் தந்த தோருந்தியு மமுதமாருதர பந்தமும்‌
    அலர் மேல் மங்கை யுறை திருமார்வமு மாரமும்‌ பதக்க கன்னிரையும்‌
    பெருவரை யனைய புய மொரு நான்கும்‌ பிறங்கடலாழியுஞ் சங்கும்‌
    பெறு திவமென்று காட்டிய கரமும்‌ பிடித்ததோர்‌ மருங்கினிற்கறமும்‌
    ஒருமதி யெனவே சோதி சேர் முகமு முயர் திருவேங்கடத் துறையு
    மொப்பிலா வப்பன் கருணை சேர் விழியு மென்னுளெலாம்‌ நிறைந்து நின்றனவே

    என்று பாதாதி கேசமாக அநுபவித்தருளி அலங்கல்‌ துளப முடியையும்‌ திருத்தியகோறம்பையும்‌ சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து சோதி பரந்த கோளிழைவாள்‌ முகத்தையும்‌ அதில்‌ தன் முகத்‌துச் சுட்டியையும்‌, திரு நெற்றியில்‌ சாத்தின முத்தின்‌ திருநாமத்தையும்‌ “வெண்ணெ யுண்டான்‌ திருமூக்கு” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணலாம்படி புழுகிலே முழுகி யிருக்கிற கோல நீள் கொடி மூக்கையும்‌ தாமரை கட் கனி வாயையும்‌, வார் காதிலே சாத்தின இலகு மகர குண்டலங்களையும்‌ உலகமுண்ட பெரு வாயாலே அண்டமுநாடுமடங்க விழுங்கிய கண்டத்தையும்‌ அத் திருக் கழுத்தினில்‌ காறையையும்‌ -அலர் மேல்‌ மங்கை யுறை மார்வையும்‌, அதில்‌ பவள வாய்ப் பூமகளும்‌ பன் மணிப் பூணாரமுமான சேர்த்தியையும்‌,அத்தோடு சேர்த்த வெண் புரி நூலையும்‌ வட வேங்கட வனுடைய மல்லார் தோள்களையும்‌ அதிலே சாத்தின தண்டுமாய்‌ விரை நாறு கண்ணியையும்‌ திருக் கைகளிலே தரித்த வலம்புரி ஆழியையும்‌ அவற்றிற்குப்‌ பரபாகாவஹமான வண்ணமருள்‌ கொளணி மேக வண்ணத்தையும்‌, உய்ய வுலகு படைத்துண்ட மணிவயிற்றையும்‌ அதில்‌ திரு வுதர பந்தநத்தையும்‌, அதுக்கநந்தரபாவியாய்‌ உடையார்‌ கனமணி யோடொண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த வெழில்‌ தெழ்கனோடும்‌ பொன்ரை நாணொடு மாணிக்கக்‌ கிண்‌ கிணியையும்‌ -பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை என்று ப்ரணயினிகள்‌ வாய்‌ புலற்றும் படியான அந்தி போல்‌ நிறத்தாடையையும்‌ -பல்லி நுண் பற்றாகச் சாத்தின உடை வாளையும்‌, புரிந்து மலரிடுறை புண்டரீகப்பாதமான பூவார் கழல்களையும்‌ அதில்‌ அதிர் கழல் சதங்கைகளையுமுடைய திருவேங்கடமுடையானை எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ‘ என்கிறபடியே கேசாதிபாதாந்தமாக அநுபவித்தருளி ப்ரீதராய்த்‌ திருப் பல்லாண்டு தொடங்கி அநுசந்தித்து, மங்களாசாஸனம் பண்ணி, பர்யாப்தி பிறவாமையாலே.

    மங்களம்‌ மாநுஷே லோகே வைகுண்டமதி திஷ்டதே | ஸேஷஸைல நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥-மானிட வுலகில்‌ ஸ்ரீவைகுண்டமான திருமலையில்‌ எழுந்தருளி யிருக்கிற திருவேங்கடவனுக்கு மங்களமுண்டாக வேணும்‌; என்று மங்களாசாஸநம் பண்ணியருளி.
    ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸி தெளதே |
    ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ॥

    ஆசார்யரான ஸ்ரீ மணவாள மா முனிகளாலே அடியேனுக்‌குப் புகலாகக்‌ காட்டி யருளப்பட்ட ஸ்ரீவேங்கடேச பாத கமலங்‌களைப் புகலாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறபடியே எல்லார்க்கும்‌புகலாக அடிக்கீழம்ர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மின்‌ என்று திருவடியைக் காட்டி யருள அவனும்‌ மலை மேல் தான்‌’நின்று என்‌ மனத்‌துளிருந்தான்‌ என்கிறபடியே இவர்‌ திருவுள்ளத்தைக்‌ கணிஸித்துக்‌
    கொண்டிருந்து இப்போது இவரைப்‌ பெற்றவாறே ‘ஸ்ரீமத் ஸூந்‌தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிதே’ என்னும்படி. இவர்‌ திருவுள்‌ளத்தைத்‌ தனக்கு ஆவாஸ ஸ்தாநமாக விரும்ப, –எந்தாய்‌-வந்தாய்‌
    (திருவாய்‌ 2-6-9, திருமொழி 1-10-9) என்கிற பாட்டுக்களின்‌ படியே இனி யெங்குப் போகின்றதே , நிகரில் புகழான வாத்ஸல்‌யாதி குணங்களுக்குத் தோற்று அதிலே ஈடுபட்டு, ஒழிவில்காலம்‌-என்கிறபடியே உத்தர-வாக்யத்தில்‌ கைங்கர்ய ப்ரார்‌த்தனையையும்‌
    பண்ணி யருளா நிற்கிற வளவிலே, தீர்த்தம்‌, ப்ரஸாதம்‌, ஸ்ரீசடகோபன்‌, பூவார்‌ கழல்கள்‌ முதலான வரிசை களெல்லாம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று க்ருதார்த்தராய்‌ புறப்பட்டருளி :கதி சந திவஸாநி தாம்நி தஸ்மிந்‌ சுமல விலோசந மேந மீஷமாண;,’- இல
    நாட்கள்‌ செந்தாமரைக்‌ கண்ணனான இவ் வெம்பெருமானை ஸேவித்துக் கொண்டு அவ் விடத்தில்‌ எழுந்தருளி யிருத்தார்‌ என்‌ கிறபடியே அங்கே சிறிது நாளெழுத்தருளி யிருந்து அங்குண்டான
    வர்களையும்‌ அபிமானித்தருளி இது விண்ணோர்‌ வெற்பாயிருக்‌கிறது என்றருளிச்‌ செய்து அங்குள்ள வைபவங்கனை வைபவங்களை எல்லாம் ஸேவித்தருளிப்‌ புறப்பட்ட வளவிலே அங்தள்ளார்‌ ‘“இங்குத்தைக்‌குப் பரிவரா யிருப்பாரொருவரைக்‌ கற்பித்தருள வேணும்‌” என்ன,எம்பெருமானார்‌ ஜீயரைக்‌ கற்பித்தருளினார்‌.
    திருவேங்கடவனுடைய ஐஸ்வர்யங்களை ரஷித்து நிர்வஹிக்க பகவத் ராமாநுஜர் ஸ்ரீ ஸேநாபதி ஜீயர்‌- என்‌ற பட்டப்‌ பெயருள்ள ஏகாங்கியை நியமித்ததாக கி அநந்தார்யர்‌ அருளிச்‌ செய்த வேங்கடாசல இதுஹாஸ மாலை கூறுகிறது. பின்னர்‌அவ் விராமாதுஜரே அந்த ஏகாங்கித்கு ஸந்யாஸாஸ்ரமம்‌ தந்து “அப்பன்‌ திருவேங்கட சடகோபஜீயர்‌” என்ற திரு நாமத்துடன்‌ கோயில்‌ கார்ய நிர்வாஹகராக நியமித்து அவருக்குத்‌ துணையாக நாலு ஏகாங்கிகளை ஏற்படுத்தியாக இதிஹாஸ மாலை கூறுகிறது. இவருக்குக்‌ ”கோயில்‌ கேள்வி ஜீயர் என்ற பிருதும்‌ உண்டு. பின்னர்‌ பெரிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ சிறிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ இரண்டு ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ பெரியவருக்கு சிறியவர்‌ இளவரசாக நியமனம்‌ பெற்றதாகத்‌ தெரிகிறது. மணவாளமா முனிகள்‌ ”சிறிது காலம்‌” திருமலை-திருப்பதியில்‌ தங்கி யிருந்ததாக யதீந்த்ர ப்ரவண ப்ரபாவமாகிற இந்நூலில்‌ சொல்லப்பட்டுள்ளது.-இந்த சிறிது காலம்‌ ஒன்றிரண்டு ஆண்டுகள்‌ இருக்கலாம்‌ பிள்ளைலோகாசாரியர்‌ காலத்துக்குப்‌ பின்னர்‌ ராமாநுஜார்ய திவ்‌யாஜ்ஞஜை என்று திருவரங்கம்‌ திருவேங்கடம்‌ முதலான இடங்‌களில்‌ நடந்து வந்த கட்டுக்கோப்பு கலக கலாபாங்கள்‌ காரணமாகக்‌ குலைந்து, பின்னர்‌ மா மாமுனிகள்‌ காலத்தில்‌ ராமாநுஜார்ய திவ்யாஜ்ஜஞை வரவர முநி திவ்யாஜ்ஞையாக நிலை நாட்டப்பட்டது. “கோயில்‌ கேட்கும்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்‌பவர்‌ [கி பி] 1445ம்‌ ஆண்டு திருப்பதி திருமலை கல்வெட்டில்‌ பேசப்படுகிறார்‌, 1370-1443-என்ற காலத்தில்‌ வாழ்ந்திருந்த மணவாள மாமுனிகள்‌ நியமித்த ஜீயர்‌ இவரே என்பது தெளிவாகிறது. இவர்‌ திருமங்கையாழ்‌வார்‌ கோயிலுக்கு தரும கர்த்தரான படியால்‌ இவர்‌ சின்ன ஜீயரே
    யாவர்‌ என்று கல்வெட்டுச்‌ சான்றுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது திருமலை திருப்‌பதி தேவஸ்தான வெளியீடான திருப்பதி, 1953] திருமலை யொழுகு”‘ என்ற திருமலை திருப்பதி ஐதிஹ்ய மாலையில்‌
    -சகாப்தம்‌ 379 விகாரி வருஷம்‌ தை மாசம் அப்பன்‌ சடகோப ஜீயரை பகவத் ராமாநுஜர்‌ கோயில்‌ கேள்வி ஜீயராகப் பட்டாபிஷேகம்‌ செய்வித்ததாகவும்‌ அவரும்‌ 45 ஆண்டுகள்‌ கைங்கர்யத்துக்குப் பின்‌ ஐய வருஷத்தில்‌ தமக்கு இளவரசாக அழகிய மணவாள ஜீயர்‌ என்‌பவரை தியமித்ததாகவும் காணப் படுகிறது [பக்‌.123], இதே நூலில்‌ (பக்‌ 104) காண்பது: “முன்னாளில்‌ ஸ்ரீராமா நுஜ தரிசந ப்ரவர்‌த்தகரான மணவாள மாமுனியானவர்‌ திருப்பதிக் கெழுந்தருளித்‌ தேசாதிபதியை ஆஸீர்வதித்து ஸ்தலத்திலே மதாந்தரஸ்தராலே உபத்ரவம்‌ வராதபடிக்கு ஒரு உத்தமாஸ்ரமியை ஸ்தலாதிபதியாக்க வேணுமென்று சிந்தித்து, தம்முடைய சிஷ்டராய்‌,கோயிலில்‌ ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ ஸ்ரீபண்டாரத்துக்கு நிர்வாஹகராய்‌ இருக்கிறாப்‌ போலே திருமலைக்கு உத்தாரகராய்‌ நிக்ரஹ அனுக்ரஹ ஸமர்த்தரான ஒரு ஜீயரைக்‌ ”கோயில்‌ கேள்வித் திருவேங்‌கட ஜீயர்‌” என்று திருநாமம்‌ சாத்தி தேசாதிபதி அனுமதி கொண்டு அர்ச்சகர்‌ முதலான ஸமஸ்த பரிகரங்களையும்‌ ஸ்தல நிர்வாஹகரான ஆழ்வார்‌ கோவிந்த ஜீயர்‌ என்ற ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவரையும்‌ திருவேங்கட ஜீயர்‌ அதீனமாக்கி இவர்‌களெல்லாருக்கும்‌ இவர்‌ சிஷகராயும்‌ ரஷகராயும்‌, திருவேங்சடச்‌ செல்வத்துக்கு வர்த்தகராயும்‌ தேசாதிபதிக்கு பகவத் தர்மோபதேஷ்டாவாயும்‌ கல்பித்து, எம்பெருமானார்‌ திருமேனி முத்ரையாக ஓரு முத்ரை மோதிரத்தைப்‌ பண்ணி ஜீயரைத்‌ தரிக்கச்‌ சொல்லிக்‌ கொடுத்து விஷ்வக்ஸேந முத்ரா ஸுசிதமாக எம்பெருமானார்‌ நியமன ஸித்தமாய்‌ ஏகாங்கி பரம்பரா ப்ராப்தமான கண்டா, கடாரி, ஹநுமத் த்வஜங்களையும்‌ அவர்‌ ‘வசம் பண்ணி, கைங்கர்ய யாத்ரா காலங்களிலே கண்டா நாத ஹநுமத் த்வஜ புரஸ் ஸராமாக ஸஞ்சாரம்‌ பண்ணுமென்று நியமித்து: ஸ்ரீராமாநுஜபுரத்திலே ஜீயருக்கு ஒரு மடமும்‌ ஸங்கல்‌பித்துக்‌ கொடுத்து திருவேங்கட ஜீயர்‌ ஜ்ஞாந ஸந்தான பரம்பராந்தர்பூதரான ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களில் தானே திருமலை ஸ்தானத்‌துக்கு தத் தத் காலங்களிலே உத்தமாஸ்ரமியாய்‌ மடாதிபதியாய்த்‌
    திருவேங்கட நாட்டுக்கும்‌ திருவேங்கடச்‌ செல்வத்துக்கும் கர்த்தாவாகவும்‌ நியமித்துக் கோயிலுக்கு எழுந்தருளினார்‌.’ இதுவரை திருமலை யொழுகு நூலில்‌ காண்பவை.

    எம்பெருமானார்‌ நியமித்த ஸ்தலாதிகாரி ஜீயருக்கு திருவடி [அனுமான்‌ ] முத்ரையாக ஒரு முத்ராங்குளீயகத்தை தரிக்‌திருக்கும்படி எம்பெருமானார்‌ நியமநம்‌ [திருமலையொழுகு, பக்‌,
    42] மணவாளமாமுனிகள்‌ நியமித்த ஜீயருக்கு எம் பெருமனார்‌ முத்ரையுள்ள அங்குளீயகம்‌ என்று சொல்லி யுள்ளபடியால்‌ இவர்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்று அழைக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.

    இவரே சின்ன ஜீயர்‌ என்றும்‌ தெரிய வருகிறது.

    –==-

    ஜீயர்‌ திருவாலி திருநகரியில்‌ திருமங்கை யாழ்வரை லேவித்தது:-அநந்தரம்‌ :
    அஹி ராஜ ஸைலமபிதோ நிரந்தரம்‌ ப்ருதநாஸதே நஸ விலோகயந் தத; |
    அவருஹ்ய திவ்யநகரம்‌ ரமாஸ்பதம்‌ புஜகேஸயம்‌ புநருபேத்யபூருஷம்‌ ॥

    அந்த மணவாளமா முனிகள்‌ தாம்‌ சிஷ்ய ஜந பரிவாரத்துடன்‌ திருமலைக்கு நான்கு புறத்திலும்‌ இமை கொட்டாமல்‌ பார்த்துக்‌ கொண்டே அம் மலையினின்‌றும்‌ இறங்கி திவ்ய நகரமான கீழத் திருப்‌பதியை அடைந்து மறுபடியும்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய்த் திருவநந்தாழ்வான்‌ மேல்‌ பள்ளி கொண்டிருக்கிற பரம புருஷனான கோவிந்த ராஜனை ஸேவித்தார்‌.-என்கிறபடியே அங்கு
    நின்றுமிறங்கி யெழுந்தருளி-ஸ்ரீகோவிந்தராஜப்‌ பெருமாளையும்‌
    குளிரருவி வேங்கடத் தென்‌ கோவிந்தன்‌ குணம் பாடுவாராய்‌ அநுபவித்துப்‌ புறப்பட்டருளி, திருவெவ்வளூர்‌, திருவல்லிக்கேணி முதலான திருப்பதிகளெங்கும்‌ திருவடி தொழுது பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி பேரருளாளரையும்‌ திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ அவரநுமதியுடனே புறப்பட்டருளி மண்ணில்‌ பெரிய மதுராந்தகத்தேற எழுந்தருளி
    மருமலர்‌ கமழ் சோலை மதுரை மாநகர்‌ வந்தெய்தி
    அருள் பொழி பெரியநம்பி யன்றெதிராசராசற்கு
    அரும் பொருள்‌ வழங்கு மெங்களேரி காத்தருள்வார்‌ கோயில்‌
    திருமகிழடியிற் செல்வீர்‌ தீ வினை தீருமாறே
    -என்று அங்கேற வெழுந்தருளி,-
    இதுவோ கிளியாறிவ்வூரோ திரு மதுரை
    இதுவோ திருமகிழுங் கோபுரமு- மிதுவோ
    பெரியநம்பி தாமுகந்து பின்னு மெதிராசர்ச்குத்‌
    துயமளித்த தூயப் பதி-
    என்று அங்கே தண்டன்‌ ஸமர்ப்பித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ அற்றைக்கங்கே எழுந்தருளி யிருந்து

    பிற்றை நாள்‌ புறப்பட்டு திருச்சித்திர கூடத்தேற வெழுந்தருளி கோவிந்த ராஜரையும்‌ திருவடிதொழுது- அநந்தரம்‌ சோழ மண்டலத்திலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுவாராக மநோ ரதித்துக்‌ கொண்டு புறப்பட்டருளி அப்படியே வழியிலுள்ள திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாஸநம்‌ செய்தருளி, பின்பு திருவாலி திருதகரி யேற வெழுந்தருளித்‌ திருமங்கை யாழ்வாரைத் திருவடி தொழுது

    உறைகழித்த வேலை (வாளை )யொத்த விழி மடந்தை மாதர் மேல்‌
    உறைய (உருக )வைத்த மனமொழித்தவ்‌ வுலகளந்த நம்பிமேல்‌
    குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்‌
    கொல்லை தன்னில்‌ வழி பறித்த குற்றமற்ற-.செங்கையான்‌
    மறையன் வைத்த (மறை யுரைத்த )மந்திரத்தை மாலுரைக்க வவன் முன்னே
    மடி யொதுக்கி மன மொடுக்கி வாய் புதைத்தல்‌ வொன்‌னலார்‌
    கறை குளித்த வேலணைத்து நின்‌ற விந்த நிலைமை யென்‌
    கண்ணை விட்டகன்றிடாது கலியம் ஆணையாணையே– என்றும்‌
    அணைத்த வேலும்‌! தொழு கையும்‌, அழுந்திய திரு நாமமும்‌
    ஓமென்ற வாயும்‌, உயர்ந்த மூக்கும்‌, குளிர்ந்த முகமும்‌,
    பரந்த விழியும்‌, இருண்ட குழலும்‌, சுருண்ட வளையமும்‌,
    வடித்த காதும்‌, மலர்ந்த காதுகாப்பும்‌, தாழ்ந்த செவியும்‌
    செறிந்த கழுத்தும்‌, அகன்‌ற மார்பும்‌, திரண்ட தோளும்‌
    நெளித்த முதுகும்‌ குவிந்த இடையும்‌, அல்லிக் கயிறும்‌
    அழுந்திய சீராவும்‌, தூக்கிய கருங்கோவையும்‌’
    தெங்கலுந் தனி மாலையும்‌,சாத்திய திருத் தண்டையும்‌,
    சதிரான வீரக் கழலும்‌ குந்தியிட்ட கணைக் காலும்‌.
    குளிர வைத்த திருவடி மலரும்‌, மருவலர் தமுடல்‌ துணிய
    வாள் வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னரான வடிவே
    –என்றும்‌

    ஐயனருள் வாழி செய்ய வடிவிணைகள்‌ வாழியே
    அந் துகிலும்‌ சீராவுமணையுமரை வாழியே
    மையிலகு வேலணைத்த வண்மை மிக வாழியே
    மாறாமல்‌ அஞ்சலி செய்‌ மலர்க் கரங்கள்‌ வாழியே
    செங்யகலனுட னலங்கல்‌ சேர் மார்பும்‌ வாழியே
    திண் புயமும்‌ பணிர்ந்த திருக் கழுத்தும்‌ வாழியே
    மையல்‌ செய்யு முக முறுவல்‌ மலர்க் கண்கள்‌ வாழியே
    மன்னு முடித் தொப்பாரம்‌ வலயமுடன்‌ வாழியே–
    என்றும்‌ ஈடுபட்டு,

    வேலணைத்த மார்வும்‌ விளங்கு திரு வெட்டெழுத்தை மாலுரைக்கத்‌ தாழ்த்த வலச்‌ செவியும்‌–காலணைத்த தண்டையும்‌ வீரக் கழலும் தார்க் கலியன்‌ வாண் முகமும்‌ கண்டு களிக்கு மென்‌ கண்‌.–என்று அவர்‌ மந்த்ர லாபத்துக்கு நின்ற நிலையிலே மக்ந மநாவாய்‌ அநுபவித்து மங்களாசாஸனஞ் செய்தருளி பரகாலர்க்கு பரம ப்ரீதி கரரான வயலாவி மணவாளரையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டுத்‌ திருமணங் கொல்லை யேற வெழுந் தருளி

    ஈதோ திருவரசு? ஈதோ!மணங்கொல்லை
    ஈதோ எழிலாலி என்னுமூர்‌–ஈதோ தான்‌
    வெட்டுங்கலியன்‌ வேலை வெட்டி நெடுமால்‌
    ஈட்டெழுத்தும்‌ பறித்த விடம்‌!
    -என்று அவ்விடத்தையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,

    நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌,
    காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்‌-
    என்கிறபடியே திருக் கண்ண புரத்திலே திருவுள்ளஞ்‌ சென்று –இன்றே சென்று திருக்கண்ணபுரம்‌ புக்கு- என்கிறபடியே அதி த்வரையுடனே அங்கேற வெழுந்‌தருளி கருவரை போல்‌ நின்றானையும்‌ ஸர்வாங்க ஸுந்தரரான செளரி ராஜனையும்‌ ஸேவித்தருளி கண்ணபுரத் தடியன்‌ என்றதுவே நிரூபகமான திருமங்கை யாழ்வாரையும்‌ அங்கே யேறி யருளப்‌ பண்ணி, காலின்‌ மணி கரை யலைக்கும்‌ கணபுரத்தினின்றும்‌ போந்து வாவித் தடஞ்சூழ் மணி முத்தாற்றின்‌ நறையூர்‌ நெடு மாலான நம்பியையும்‌ நாய்ச்சியாரையும்‌ ஸேவித்துப் புறப்பட்டு
    செழு மா மணிகள்‌ சேரும்‌ திருக் குடந்தையிலே சேர்ந்து ஆராவமுதாழ்வாருடைய ஏரார்‌ கோலத் திரு வுருவையும் திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி, திருமால்‌ சென்று சேர்‌விடமான தென்திருப்பேரையில்‌ சென்று திருப்பேர் நகரானையும்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி மாமலராள்‌ புணர்ந்த பொன் மார்வன்‌ பொருந்தும் பதிதொறும்‌ புக்கு நிற்கும்‌
    -என்றும்‌,

    திவ்யாநி தத்ர நகராணி திகந்தராளேர் தேவே நயாநி ஹரிணு விஷயீ க்ருதாநி
    ஸத்யம்‌ த்வ தீஷண ஸம்ர்த்த மஹோத்ஸ வாநி தங்யாநி தாநி ஜகதஸ்‌ ஸமயம் த்வகாநி

    அவ்விடத்தில்‌ திங் மத்யத்தில்‌ எந்த திவ்ய தேசங்கள்‌ எம்பெருமானாலே ஆஸ்ரயிக்கப்பட்டனவோ, தேவரீருடைய கடாக்ஷத்தால்‌ ஸம்பூர்ணமான விஷோத்ஸவங்களை யுடையனவாய்‌. தந்யங்களான அந்த திவ்ய தேசங்கள்‌ லோகங்களுடைய ஸகல பாபங்களையும்‌ போக்கக் கடவன]என்றுஞ் சொல்லுகிறபடியே மற்றுமுண்டான திருப்பதிகளையும்‌ மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி, தையல் நல்லார் குழல் மாலையும்‌ மற்றவர்‌ தட முலைச்‌ செய்ய சாந்தும்‌ கலந்திழி புனல் சூழ்‌ தென்னரங்‌கத்தே சென்று பெரிய பெருமாளையும்‌ ”ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்‌டோஸ்தி கரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்‌” [இந்த நான்‌ க்ரீஷ்ம காலத்‌தில்‌ குளிர்ந்திருக்கிற மடுவில் போல்‌ பர ப்ரஹ்மத்தில்‌ மூழ்கினவனாகிறேன்‌ ] என்றும்‌,பொற்றாமரைக் கயம்‌ நீராடப் போனாள்‌-என்றும் சொல்லுகிறபடியே விடாய் கெட படிந்து குடைந்தாடி யநுபவிந்து தீர்த்த ப்ரஸாதம்‌ பெற்று ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு।

    அப்பாச்சியா ரண்ணாவை பெருமாள்‌ கோயிலுக்கு நியமித்தது
    தமக் கிருப்பான திருவரங்கன்‌ திருப்பதியிலே யெழுந்தருளி பெருமாளை ஸேவித்து,
    சித்ராணி தீப்ததர ரத்ந விபூஷணாநி சத்ராணி சாமர யுகம்‌ வ்யஜ நாஸநாநி |
    தக்நா மலாஞ்சக யுதாநி ததெள ததைவ ரங்காதிபாய தயிதா ஸஹிதாய தஸ்மை ॥

    [அந்த அழகிய மணவாளனுடைய திரு நாமத்துடனும்‌ சங்கு சக்கரம்‌ முதலிய அடையாளங்களுடனும்‌ கூடி யிருக்கிற-ஆச்சர்யகரமாய்‌ மிகவும்‌ ப்ரகாசியா நின்ற ரத்ந மயமான திருவாபரணங்‌களையும்‌ திரு வெண் கொற்றக் குடைகளையும்‌ திரு வெண் சாமரங்களையும்‌ திருவாலவட்டங்களையும்‌ சித்ராஸநங்களையும்‌, பெரிய பிராட்டியாருடன்‌ கூடி யிருக்கிற அந்த அழகிய மணவாளன்‌பொருட்டு அப்போதே ஸமர்ப்பித்தார்‌.]’ என்னும்படி தாம்‌ கொண்டெழுந்தருளின திருவாபரணங்கள்‌, திரு வெண் கொற்றக்குடை. திரு வெண் சாமரம்‌,- திருவாலவட்டம்‌, ரத்ந கம்பளம்‌, திருமெத்தை முதலான வஸ்துக்களெல்லா வற்றையும்‌ ஸமர்ப்‌பித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க-
    பெருமாளும்‌ மிகவுமுகந்தருளி, தீர்த்தம்‌, ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளையும்‌ ப்ரஸாதித் தருளி உத்தம நம்பி பிள்ளையை கோயில்‌ பரிகர மனைத்துக் கொத்துடான் வரிசையாக ஜீயரை மடத்‌திலே விட்டுவரவென்று அருள் பாடிட்டருள, அவரும்‌ அப்படியே அஷ்டாதச வாத்யங்களுடனே மஹோத்ஸவமாக மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்‌. நம்‌ பெரிய ஜீயரும்‌, மடத்திலே யெழுந்தருளி
    யிருக்கிற அப்பிள்ளை, திருவாழி யாழ்வார்‌ பிள்ள தொடக்கமான பெரியோர்களையும்‌ மற்றும்‌ கைங்கர்ய பரராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களையுபம் க்ருபை பண்ணி யருளி திருமலை பெருமாள் கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களினின்றும்‌
    கொண்டெழுந்தருளின தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ விநியோகம்‌செய்தருளி;

    அப்பாச்சியாரண்ணாவை அழைத்தருளி முன் நியமனப் படிக்கு பெருமாள் கோயிலுக்கு நியமித்தருள, அவரும்‌ ‘இந்த ஸேவையையும்‌ கோஷ்டியையும்‌ விட்டு விடை கொள்ள வல்லேனோ?’” என்று
    வ்யாகுலப்பட, ஜீயர்‌ அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஸந்நிதியிலே யெழுந்தருளி தாம்‌ அடி தொடங்கி ‘இராமானுசன்‌’* என்று திருநாமம் சாத்தி பஹுநாளாண்டதாய்‌ ஜீர்ணமாயிருக்கிற தீர்த்‌தச் செம்பு ஸ்வாமி யுடைய ப்ரஸாதமென்று வானமாமலை ஜீயர்‌ அணை கையவனாள்‌ தமது திருமண் கூடையிலே வைத்து ஸேவித்துக் கொண்டிருச்‌ கிறதைக்‌ கொண்டு வரச் சொல்லி திருக்கையிலே வாங்கிக்‌ கொண்டு: முன்னிருந்த இராமானுசன்‌ என்கிற விலாஸமும்‌, திருவாழி
    திருச்சங்கு, திருமண் ஸ்ரீசூர்ணம்‌ எல்லாம்‌ பரிமுஷிதமாயும்‌ ஜீர்ணமுமாயு மிருப்பதனாலே, தம்மைப் போலிருக்கிற இரண்டு விக்ரஹங்கள்‌ இத்தை யிட்டு உண்டாக்‌க ‘உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்ரஹமும்‌ உமக்கு ஒரு விக்ரஹமுமாகக்‌ கொள்ளும்‌” என்று ஸாதித்‌தருளி
    , கோயிலாழ்வாரிலே எழுந்தருளி யிருக்கிற “என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தார்‌” ஆட்கொண்டவில்லி ஜீயர்‌ திருவாராதனமாய்‌ எழுந்‌தருளி யிருந்தவராகையாலே, அவர்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கந்தாடை யாண்டான்‌ திருவம்சமாக அவருடைய கைங்கர்யம்‌ போலே நீரும்‌ கைங்கர்யம் பண்ணத் தக்கவராகையாலே உமக்கு இவர்‌ திருவாரதனம்‌ என்று உகந்து ஸாதித்தருளி கோஷ்டியிலே எழுந்தருளி
    ஸ்ரீ தீர்த்த தேவ ராஜார்ய தநயாம்பேதி விஸ்ருதா |
    தஸ்யாஸ் தநூஜோ வரத: காஞ்சீ நகர பூஷண: ॥

    [திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவ ராஜார்யரின்‌ குமராத்‌தியாய்‌ ஆய்ச்சி–அம்பா என்று அறியப்பட்டவரின்‌ குமாரரான வரதாசாரியர்‌ (அப்பாச்சியாரண்ணா) காஞ்சீ நகரத்துக்கு ஆபரணமானவர்‌] என்று பேரருளாளரே ஆச்சியாருக்கக்‌ குமாரராக அவதரித்தருளினார்‌?” என்று ப்ரீத் யதிசயத்தாலே அருளிச் செய்து பெருமாள்‌ கோயிலிலே நித்ய வாஸம்‌ பண்ணிக் கொண்டு ஸுகோத்‌தரராயிரும்‌’” என்று விடை ஸாதித்தருளினார்‌.


    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –நான்காம் பாதம் – பிராண பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

    May 16, 2026

    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

    பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
    ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
    பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
    ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
     ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
    வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

    ————————-

    நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

    2-4-1-ப்ராண உத்பத்த்யதி₄கரணம் –புலன்களும் படைக்கப்படுபடுபவையே

    பூர்வ பக்ஷிகளின் வாதம்- 2ஆவது அத்யாயத்தின்-3ஆவது பாதத்தில் ஐம்பூதங்களும் ஆத்மாக்களும் கூட ப்ர்ஹமத்தின் கார்யங்கள் தான், அதாவது படைக்கப் பட்டவை தான் என்று நிரூபித்தார் வ்யாஸர். அதைத் தொடர்ந்து –4ஆம் பாதத்தில் ஜீவாத்மாவுக்கு உதவும் கருவிகளான இந்திரியங்களும் ப்ராண வாயுவையும் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது -அவற்றுக்கு ஆகாஸம் முதலான அசேதனப் பொருள்களைப் போல் உருவ மாறுபாடு ஏற்படுகிறதா? அல்லது ஜீவாத்மாவைப் போல் நித்யமான படியால் பண்புகளில் மட்டும் மாறுபாடு ஏற்படுகிறதா? என்று.
    இந்தப் பாதத்தில் மொத்தம் 8 அதிகரணங்கள்உள்ளன. அதில் முதல் மற்றும் கடைசி அதிகரணங்களில் தான் நேரடியாக புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் உண்டாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. நடுவில் உள்ள 6 அதிகரணங்கள் ப்ரஸங்காத்(நினைவு வந்தபடியால்) புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் தன்மைகளைச் சொல்பவையாக உள்ளன

    (பிராணாதிகரணம் -முதல் அத்யாயம் முதல் பாதத்தில் பார்த்தோம் -இங்கு பிராண உத்பத்தி அதிகரணம் -இதில் மூன்று ஸூத்ரங்கள் உள்ளன -முதல் ஸூத்ரம் பூர்வபக்ஷம் ஸ்பஷ்டமாக சொல்லி ஸித்தாந்தம் மறைந்த உள்ளுரைப்பொருளாக -உத் ஸூத்ரமாக உள்ளது –இறுதியான எட்டாவது அதிகரணத்தில் புலன்கள் நேரடியாக ஸ்ருஷ்டிக்கப் படுவதை காட்டி அருளுகிறார்)

    2-4-1-ப்ராண உத்பத்த்தி₄கரணம்–இந்த அதிகரணத்தில் ப்ராணன் என்று அழைக்கப் படும் புலன்கள்(இந்த்ரியங்கள்) உண்டாகின்றனவா இல்லையா என்று ஆராயப்படுகிறது. இதில் மொத்தம் 3 ஸூத்ரங்கள் உள்ளன. முதல் ஸூத்ரம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது. அதிலேயே உத் ஸூத்ரமாக(ஸூத்ரத்திலியே நேரடியாக சொல்லப்படாமல் மறை முகமாக)ஸித்தாந்தமும் சொல்லப்படுகிறது. அதற்குப் பின்-2 ஸூத்ரங்கள் ஸித்தாந்தி கூறும் வேறு சில யுக்திகளைச் சொல்கின்றன

    பூர்வ பக்ஷம்–1-ததா ₂ ப்ராணா :-“அவ்வாறே ப்ராணங்கள்”
    அவ்வாறு-2-3-3-ஆத்மாதிகரணத்தில் ஆத்மா எப்படிப் பட்டவராகச் சொல்லப்பட்டாவரோ அப்படிப் பட்டவை தான் ப்ராணங்களும் என்று பொருள். அதாவது, 2.3.3 ஆத்மாதிகரணத்தின் முதல் ஸூத்ரம் “ந ஆத்மா ச்ருதே .” என்பது. அதன் பொருள் – “ஆத்மா உண்டாவதில்லை ; வேதம் சொல்கிற படியால்” என்பதாகும். “ப்ராணங்கள் அவ்வாறே ” என்றால் “ப்ராணங்கள் உண்டா வதில்லை ; வேதம் சொல்கிற படியால்”என்று பொருள். எனவே ப்ராணங்கள் எனப்படும் புலன்கள் நித்யமானவை என்பதே இவர்கள் வாதம்

    அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத் … ரிஷயோ வாவ தே அக்₃ரே ஸதா₃ஸீத் । ததா₃ஹு: கே தே ரிஷய இதி । ப்ராணா வாவ ரிஷய: ஸ்ருஷ்டிக்கு முன்னால் இவ் வுலகம் அனைத்தும் அஸத்தாக(இல்லாததாக) இருந்தது. அப்போது ரிஷிகள் மட்டும் தான் இருந்தன. ரிஷிகள் எனப்படுபவை ப்ராணங்கள்(புலன்கள்-இந்த்ரியங்கள்) தான்–ப்ரளயத்தின் போதும் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்கிறபடியால் அவற்றுக்கு உண்டாக்கமில்லை என்று அவர்கள் வாதம்.

    வேத வ்யாஸரின் மறுப்பு– ஸித்தாந்தம் –ஸூத்ரத்தில் வெளிப்படையாகச் சொற்களால் சொல்லப் படாமல், உள்ளுரைப் பொருளாக ஸித்தாந்தம் கூறப்படுகிறது.-ஆகமம் முதலானவை எப்படி உண்டாக்கப் படுகின்றனவோ அது போல் புலன்களும் உண்டாக்கப் படுகின்றன,ஏனெனில்
    1–“ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அதி₃விதீயம்”,
    “ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்₃ர ஆஸீத்
    ” முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளய காலத்தில், ஒரே ஒரு பொருள் தான் இருந்தது எனப்படுகிறது. எனவே புலன்கள் அப்போது இல்லை
    2- ஏதஸ்மாத் ஜாயதே ப்ராணா : மந: ஸர்வேந்த்₃ரியாணி ச -அதாவது “இந்த ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயுவும் மனதும் எல்லாப் புலன்களும் உண்டாகின்றன-என்று ஸ்பஷ்டமாக உள்ளது. ஆக, ப்ரளயத்தில் அவை இல்லை

    கேள்வி –ஆத்மவுக்குச் சில வாக்கியங்களில் பிறப்புண்டு என்று சொல்லப்பட்டிருந்தாலும் அது உண்டாக்கமல்ல, நித்யமான ஆத்மா ஓர் உடலை எடுத்துக் கொள்வது தான் சொல்லப் படுகிறது என்று கூறினீர்கள். அது போல் இங்கும் புலன்கள் உண்டாகின்றன என்று கொள்ளாமல். நித்யமான புலன்கள் வெளிப்படுகின்றன என்று கொள்ளலாமே ?
    பதில்–
    (ந ஜாயதே ம்ரியதே இத்யாதி )ஆத்மாக்கள் உண்டாகுவதில்லை என்றும், ஆத்மாக்கள் நித்யமானவை என்றும் கூறும் வேத வாக்கியங்கள் பல உள்ள படியால், “ஆத்மா பிறக்கிறார்” என்று கூறும் ஒரு வாக்கியத்துக்கு வேறு மாதிரி பொருள் கொண்டோம். ஆனால் புலன்கள் நித்யமானவை என்று கூறும் எந்த வேத வாக்கியமும் இல்லை – எனவே இந்த வாக்கியத்துக்கு நேரடியான பொருளைத் தான் ஏற்க வேண்டும்.

    அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்” என்று முன்னால் காட்டப்பட்ட வாக்கியத்திலும்,ப்ரளய காலத்தில் புலன்கள் இருந்தன என்று கூறப்பட வில்லை –அந்த வாக்கியத்தில் ரிஷி என்றும் ப்ராணன் என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மா தான். ஏனெனில்
    1-ப்ராணன் என்கிற சொல் வேதத்தில் பல இடங்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பரமாத்மா நம்மை வாழ வைப்பதால், அவரைப் ப்ராணன் என்று கூறுவது பொருத்தமானதே —
    2- ரிஷி என்ற சொல்லுக்கு“சிறந்த ஜ்ஞாந முடையவர்” என்று பொருள். அறிவற்ற புலன்களை ரிஷிகள் என்று அழைப்பது பொருந்தாது. ஸர்வஜ்ஞனான பரமாத்மாவையே ரிஷி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

    ஆக,புலன்களும் கூட ப்ரஹ்மத்தால் படைக்கத் தான் படுகின்றன என்று வேத வ்யாஸர் தன் ஸித்தாந்தத்தைக் கூறுகிறார்.

    ஸித்தாந்தியின் வாதங்கள் -கேள்வி–ரிஷி ப்ராணன் என்ற சொற்கள் ஒருமையில் பயன் படுத்தப் பட்டிருந்தால் பரமாத்மா என்று பொருள் கூறலாம். ஆனால் வேதத்தில்“ரிஷிகள்”, “ப்ராணங்கள்” என்று ப₃ஹு வசனம்(பன்மை விகுதி) உள்ள படியால் பரமாத்மாவாக இருக்க முடியாதே ?
    பதில்-2-கௌ₃ணீ அஸம்ப₄வாத் தத் ப்ராக் ச்ருதே : ச

    கௌ₃ணீ–இவ் விடத்தில் உள்ள பன்மை விகுதி கௌ₃ணமானது– அதாவது பன்மை என்ற பொருள் இல்லாமல் வேறொரு இரண்டாம் பக்ஷமான பொருளை உடையது
    அஸம்ப₄வத்–இயலாதபடியால்-ஸ்ருஷ்டிக்கு முன் பல பொருள்கள் இருக்க முடியாத படியால்”. இதற்குக் காரணம்
    தத் ப்ராக் ச்ருதே : ச – பரமாத்மா மட்டுமே ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தார் என்று வேதம் சொல்கிறபடியால்.

    (நாங்கள் போய் வருகிறோம் கௌசல்யை இடம் பெருமாள் சொன்னதை காட்டி லஷ்மணன் பன்மை பிரயோகத்தால் -ஒருமை இருமை பிரயோகம் இல்லாமல் -பன்மையாகவே அருளிச் செய்ததால் -தன்னையும் பிராட்டியாரையும் சேர்த்தே சொன்னதாக காட்டி கூடச் சென்றானே)

    கேள்வி–ஸ்ருஷ்டிக்கு முன் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்லா விட்டாலும் நாமே யுக்திகளைக் கொண்டு அவ்வாறு கல்பிக்கலாமே ? ப்ரளயத்தில் ஜீவாத்மா இருந்தார் என்று ஏற்பது போல் புலன்களும் இருந்தன என்றால் என்ன தவறு?

    பதில்-3–தத் பூர்வ கத்வாத் வாச :– சொற்கள் பொருள்களை முன்னிட்டுக் கொண்டவை யான படியால்”
    ப்ரளயத்திலும் ஆத்மாக்கள் இருந்தார்கள் என்று ஏற்பதற்குக் காரணம் உள்ளது -ப்ரளயத்துக்குப் பின் அந்தந்த ஜீவாத்மா அடையும் பிறவியானது, ப்ரளயத்துக்கு முன் அந்தந்த ஜீவாத்மா செய்த பாப புண்யங்களின் விளைவாகத் தான் இருக்க வேண்டும். எனவே இடைப்பட்ட ப்ரளய காலத்திலும் ஜீவாத்மாவும் அவரிடம் பாப புண்யங்களும் தொடர்ந்து இருந்தன என்று ஏற்க வேண்டும்.–அது போல் புலன்களும் ப்ரளயத்தின் போது இருந்தன என்று ஏற்க வேண்டுமென்றால், ப்ரளயத்திலும் புலன்களுக்குச் செயல்பாடு இருந்தது என்று காட்ட வேண்டும். ஆனால் அது பொருந்தாது. எடுத்துக் காட்டுக்கு–பேச்சுக்கான இந்த்ரியம் -சொற்களைப் பேச வேண்டும் என்றால் அதற்குச் சொற்கள் இருக்க வேண்டும். ஆனால், உலகச் சொற்கள் அனைத்துமே உலகம் படைக்கப் பட்ட பிறகு தான் உண்டாயின என்று வேதம் கூறுகிறது
    தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் । தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே என்று. ஆகையால், ப்ரளய காலத்தில் பொருள்கள் இல்லாத போது சொற்களும் இருந்திருக்க முடியாது. எனவே பேச்சுக்கான இந்த்ரியம் செயல் பட்டிருக்க முடியாது. எனவே அப் புலன் ப்ரளத்தின் போது இருந்தது என்று கல்பிப்பதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை

    ஆகவே ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுபவை தான் என்று நிரூபிக்கப்பட்டது.

    2-4-2-ஸப்த க₃த்யதி₄கரணம்-புலன்கள் பதினொன்று -பூர்வ பக்ஷியின் வாதம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் உண்டாக்கப்படுபவையே என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பற்றின பேச்சு எழுந்தமையால் ப்ரஸங்காத் (நினைவுக்கு வந்தபடியால்) புலன்களின் எண்ணிக்கை , அளவு, தன்மைகள் முதலானவற்றை அடுத்த சில
    அதிகரணங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார். அதில் இவ் வதிகரணத்தில் புலன்களின் எண்ணிக்கை ஆராயப் படுகிறது.

    ஸம்சயம் – வேதத்தில் முரண் பட்டவை போல் தோன்றும் சில வாக்கியங்கள் உள்ள படியால் புலன்கள் ஏழு உள்ளனவா? அல்லது பதினொன்றா ? என்று ஸந்தேஹம் எழுகிறது.
    பூர்வ பக்ஷம் – ஏழு புலன்கள் தான் என்ற பூர்வ பக்ஷம் இவ் வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் சொல்லப்படுகிறது.
    1-ஸப்த க₃தே : விசேஷி தத்வாச்ச – “(புலன்கள்) ஏழு, சொல்வதாலும் சிறப்பிக்கப்பட்ட தாலும்”
    க₃தி (செல்வது) – ஜீவாத்மா ஓருடலை விட்டு மற்றோர் உடலுக்குச் செல்லும் போது அவரோடு கூடச் செல்வது தான்
    இங்கு க₃தி’ (செல்வது) என்று குறிப்பிடப் படுகிறது. அந்த க₃தி ஏழு புலன்களுக்கு தான் உண்டு என்கிறது வேதம் –
    (ஸப்த இமே லோகா : யேஷு சரந்தி ப்ரணா : கு₃ஹா ஶயா : நிஹிதா 🙂
    லோகங்கள் எனப்படும் புலன்கள் ஏழு உள்ளன -அவை உறக்கத்தின் போது இதயத்தில் சுற்றி வருகின்றன.
    விசேஷிதத்வம் (சிறப்பிக்கப்படுதல்) – ப்ராணங்களை சிறப்பித்துச் சொல்லும் போது ஏழு தான் சொல்லப்படுகின்றன –
    யதா ₃ பஞ்சா வதிஷ்ட₂ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ । பு₃த்₃தி₄ஶ்ச ந விசேஷ்டேத தாமாஹு꞉ பரமாம் க₃திம் ॥
    “கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து ஜ்ஞாந இந்த்ரியங்களும் மனதும் புத்தியும் எப்போது செயல்படாமல் அடங்கி இருக்கின்றனவோ , அப்போது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும் யோகம் கை கூடுகிறது”
    ஆகவே , ஜ்ஞாந இந்த்ரியங்கள் 5, மனது, புத்தி – இந்த ஏழும் தான் இந்த்ரியங்கள் என்கிறார்கள் பூர்வ பக்ஷிகள்.
    சில இடங்களில் பேச்சுப்புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் கழிக்கும் புலன்கள், அஹங்காரம், சித்தம் என்று மேலும் 7 சொல்லப் பட்டிருந்தாலும், அவை ப்ராணன் என்று அழைக்கப்படும் புலன்கள் அல்ல , ஆத்மாவுக்கு உதவாத படியால்.

    ஸித்தாந்தியின் வாதம்-ஸித்தாந்தம் –2-ஹஸ்தாத₃ய: து ஸ்தி₂தே அத: ந ஏவம்
    ஹஸ்தாத₃ய: து
    – கை முதலானவையும் (இந்த்ரியங்கள் தான்) அன்றோ
    ஸ்தி₂தே அத: – (உடலில் ஜீவாத்மா ) இருக்கும் பொழுது (இன்ப துன்பங்களை அநுபவிக்கக்) கருவிகளான படியால்
    (அத:) ந ஏவம்– ஆகையால் அவ்வாறு (கை கால்கள் முதலானவை புலன்கள் அல்ல என்பது அல்ல

    கண் மூக்கு காது முதலானவை உடலிலிருக்கும் ஜீவாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கருவிகளாக இருப்பதால் தான் அவற்றைப் புலன்கள் என்கிறோம். அதே போல் பேச்சுப் புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்று இந்த ஐந்து கர்ம -இந்த்ரியங்களும் கூட ஜீவாத்மாவுக்குக் கருவிகளான படியால் அவையும் புலன்கள் (இந்த்ரியங்கள்) தான். ஆகவே 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 5 கர்ம இந்த்ரியங்கள், 1 மனது – ஆக மொத்தம் 11 இந்த்ரியங்கள் (ப்ராணங்கள் -புலன்கள்) உள்ளன என்று தெளிவாகிறது.

    சில இடங்களில் இந்த 11 இந்த்ரியங்களோடு கூட புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற மூன்றையும் சேர்த்து,மொத்தம் 14 இந்த்ரியங்கள் என்கிறார்கள். ஆனால் உண்மையில் புத்தி, அஹங்காரம், சித்தம் என்பவை யெல்லாம் மனதினுணடய வெவ்வேறு பெயர்கள் தான். ஒரே மனது மனனம் (ஆராய்ச்சி) செய்யும் போது மனது என்றும் , கர்வம் கொள்ளும் போது அஹங்காரம் என்றும், உறுதியோடு இருக்கும் பொழுது புத்தி என்றும்,கவலை கொண்ட போது சித்தம் என்றும் கூறப்படுகிறது. எனவே அம் மூன்றும் தனித்தனி புலன்கள் அல்ல. -மொத்தம் 11 புலன்கள் தான் உள்ளன.
    வேதம் முதலானவற்றிலும் (த₃ ச இமே புருஷே பரணா : ஆத்மா ஏகாதா₃ ஸ )
    அதாவது இந்த ஆத்மாவுக்குப் பத்து ப்ராணங்கள் (வெளிப் புலன்களும்) ஒரு மனதும் உள்ளன” என்று கூறப் பட்டுள்ளது.
    ஆக இவ்வாறு புலன்கள் மொத்தம் 11 தான் என்று வ்யாஸர் நிரூபித்தார்.

    (அந்தகரணம் -மனஸ்ஸூ –சித்தம் -சிந்தனை பண்ண -புத்தி -உறுதி கொள்ள -அபிமானம் -அஹங்காரம் கர்வம் -ஒன்றுக்கே பல நிலைகள்-வைகாரிக -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து பிறந்த இந்த்ரியங்கள் 11- ‘)

    2-4-3- ப்ராணாணுத்வாதி₄கரணம்-புலன்கள் அணுவானவை -புலன்களின் அளவு – ஸங்கதி –
    புலன்களின் எண்ணிக்கையை முடிவு செய்த பின்பு புலன்களின் அளவு என்ன என்று இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்.
    பூர்வ பக்ஷம் – புலன்கள் எல்லாம் விபு₄வானவை , அதாவது உலகெங்கம் நீக்கமற நிறைந்திருப்பவை என்பது பூர்வ பக்ஷம்

    வேதத்தில் -(தே ஏதே ஸர்வே ஏவ ஸமா: ஸர்வே அநந்தா🙂 அதாவது-அந்த ப்ராணங்கள் (புலன்கள்)
    அனைத்துமே ஸமமானவை , அனைத்துமே அநந்தமானவை ” என்று கூறப் படுகிறது. அந்தம் என்றால் முடிவு. அநந்தம் என்றால் முடிவற்றது, எல்லை யற்றது என்று பொருள். ஆக, புலன்கள் எல்லை யற்றவை என்று சொல்லப் படுவதால் அவை ஆகாசம் போல் விபு₄க்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

    (மூல ப்ரக்ருதி லீலா விபூதியில் தான் உள்ளது -அதில் இருந்து உண்டான ஆகாயம் நித்ய விபூதியில் இருக்காதே –நம் ஸித்தாந்தத்தில் ஆகாசம் விபு இல்லை -இங்கும் -அதைச் சுத்தி அஹங்காரம் மஹான் மூல பிரகிருதி உண்டே -)

    (இதில் இரண்டு ஸூத்ரங்கள் உள்ளன –முதல் ஸூத்ரம் இதை விவரித்து அடுத்த ஸூத்ரம் மூச்சிக்காற்றின் அறிமுகம் -மேல் அதைப் பற்றி ஆராய்ச்சி உள்ளதால்)

    ஸித்தாந்தம் – 1- அணவ: ச – “(ப்ராணங்கள் எனப்படும் புலன்கள்) அணுவானவையும் கூட
    வேதத்தில் –(ப்ராணம் அநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா : அநூத்க்ராமந்தி) அதாவது–ஓர் உடலிலிருந்து ஜீவாத்மா புறப்படும் பொழுது அவரைத் தொடர்ந்து ப்ராண வாயு (மூச்சுக் காற்று) புறப்படுகிறது, மூச்சுக் காற்று புறப்படும் பொழுது எல்லாப் புலன்களும் பின் தொடர்ந்து புறப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. புலன்கள் ஓரிடத்திலிருந்து புறப்பட வேண்டும் அவை விபு₄வாக (எங்கும் நீக்க மற நிறைந்து) இருக்க முடியாது.அளவு பட்டவையாகத் தான் இருக்க வேண்டும்.

    (இதே போல் உத் க்ராந்தி என்பதால் ஆத்மாவும் அணுவே என்று முன்னமே பார்த்தோம்)

    புலன்கள் உடலிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது யார் கண்ணுக்கும் தெரியாதபடியால், அவை அணுக்களாக (மிக நுண்ணியவையாக) தான் இருக்க வேண்டும், குடம் கட்டை போல் நடுத்தர அளவோடு இருக்க முடியாது.-“புலன்கள் அநந்தங்கள் (அளவற்றவை )” என்று வேதம் சொன்னது அளவின் அடிப்படையில் அல்ல. எண்ணிறந்த செயல்களை இந்தப் புலன்கள் செய்கிற படியால், செயலின் அடிப்படையில் எல்லை யற்றவை என்று தான் பொருள்.
    ஆகவே , ப்ராணங்கள் (புலன்கள்) எல்லாம் அணுவானவை தான் என்று நாம் முடிவு செய்யலாம்.

    இந்த அதிகரணத்தில் புலன்களைப் பற்றிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை முதல் ஸூத்ரத்திலேயே வ்யாஸர் முடித்து விட்டார். இரண்டாவது ஸூத்ரத்தால் ப்ராண வாயு எனப்படும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார்.

    ப்ராண வாயுவும் உண்டாக்கப் படுவதே
    இதற்கு எந்த புதிய யுக்திகளையும் அவர் காட்ட வில்லை , முன்னால் புலன்கள் உண்டாக்கப் படுபவை என்று நிரூபிக்க என்ன வாதங்களை முன் வைத்தாரோ , அதே வாதங்களால் தான் மூச்சுக் காற்று உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார். அதனால் தான் இதை ஒரு தனி அதிகரணமாக ஆக்காமல் இவ் வதிகரணத்திலேயே சேர்த்துள்ளார்.
    இதை ஏன் இப்போது கூறுகிறார்?அடுத்த அதிகரணத்திலிருந்து மூச்சுக் காற்றைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய இருப்பதால், அதற்கு அறிமுகமாக மூச்சுக் காற்றும் உண்டாக்கப்படுவதே என்று இவ் வதிகரணத்தில் கூறுகிறார்.
    2-:ஸ்ரேஷ்ட ச – “
    ஸ்ரேஷ்டமானதும் – சிறந்ததும் (உண்டாக்கப் படுவதே )”
    உபநிஷத்தில் ப்ராண ஸம்வாதம் (ப்ராணங்களின் உரை யாடல்) என்றொரு கதை . ஒரு முறை புலன்களும் மூச்சுக் காற்றும் தங்களுக்குள் யார் சிறந்தவர் (ஸ்ரேஷ்டமானவர்) என்ற விவாதத்தில் ஈடுபட்டன. ப்ரஹ்மா கூறினார் – “
    எது உடலை விட்டுப் புறப்படும் பொழுது மற்றவர்கள் எல்லாம் செயலிழந்து போகிறார்களோ அதுவே சிறந்தது” என்று. கண், காது,மூக்கு முதலானவை புறப்பட்ட போதும் மற்ற புலன்களுக்கோ உடலுக்கோ பாதிப்பு இருக்க வில்லை . ஆனால் மூச்சுக் காற்று புறப்படத் தொடங்கும் பொழுதே புலன்களனைத்தும் வலுவிழந்து போயின. அதனால் ப்ராண வாயு தான் தங்களுக்குள் சிறந்தது (ஸ்ரேஷ்டமானது) என்று முடிவு செய்தார்கள். அதனால் ’ஸ்ரேஷ்டம்’ (சிறந்தது) என்று வ்யாஸர் இங்கு குறிப்பிடுவது ப்ராண வாயுவைத் தான். ப்ராணன் என்ற சொல் புலன்களையும் மூச்சுக் காற்றையும் குறிக்கும் பொதுவான சொல். ஸ்ரேஷ்ட ப்ராணன் (சிறந்த ப்ராணன்) என்ற சொல் மூச்சுக் காற்றுக்கு மட்டும் தனிப்பட்ட பெயர்.

    (கீழ் பிராண -புலன்களை சொல்லி இங்கு மூச்சுக்காற்று -என்பதே பொருள் -ஆத்மா -உள்ளே புகுந்து இயக்கம் ஒன்றைக்குறிக்கும் –பரமாத்மா -மிகவும் உயர்ந்த ஸ்ரேஷ்டரான ஆத்மா –
    அதே போல் ஸ்ரேஷ்ட பிராணன் என்று மூச்சுக் காற்றைக் காட்டும் -முக்கிய பிராணன்
    -பிராண ஸம்வாதம் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் பிருகதாரண்யக உபநிடதம் ஆகிய நூல்களில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆற்றல்களுக்கும் (இந்திரியங்கள்) மேலானது உயிர் சக்தி (பிராணன்) என்பதை இது உணர்த்துகிறது.-)

    பூர்வபக்ஷம் – வேதத்தில் (ஆநீத் அவாதம் ஸ்வத₄யா ததே₃கம்) என்று ப்ரளயத்திலும்
    மூச்சுக் காற்று ஜீவ ராசிகளை ரக்ஷிப்பது சொல்லப் படுவதால் மூச்சுக் காற்று நித்யமானது, உண்டாக்கப்படுவதல்ல.
    ஸித்தாந்தம் – ஸ்ருஷ்டிக்கு முன் ஒரே பொருள் (பரமாத்மா) தான் இருந்தது என்று வேதம் சொல்வதாலும்,-(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது” என்று தெளிவாகச் சொல்கிற படியாலும் ப்ராண வாயு உண்டாக்கப் படுவது தான். “ஆநீத் அவாதம்” என்ற வாக்கியம் ’ஸ்வதா₄-என்றழைக்கப் படும் மஹா லக்ஷ்மி யோடு கூட பரமாத்மா உலகை ரக்ஷிக்கிறார் என்று தான் கூறுகிறது.

    (ஸ்வதயா லோக பாலிநீ -ஸ்ருதி -ஸ்ரீ யபதியையே குறிக்கும்)

    2-4-4-வாயுக்ரியாதி₄கரணம்-ப்ராண வாயு என்பது யாது? ப்ராணன் என்றால் என்ன? – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வாயுவும் உண்டாக்கத் தான் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. ப்ராண வாயு என்றால் என்ன என்று இவ் வதிகரணத்தில் ஆராய்கிறார்.
    பூர்வ பக்ஷம் -1- – ப்ராண வாயு என்பது வாயு அதாவது காற்று மட்டுமே , வேறொன்றும் இல்லை –

    வேதத்திலேயே (ய: ப்ராண: ஸ: வாயு:)-அதாவது-“ப்ராணன் என்பது வாயுவே தான்” என்று கூறப்பட்டு்ள்ளது.
    பூர்வ பக்ஷம் -2- – வெறும் வாயுவே தான் ப்ராணன் என்றால், உலகத்தில் எங்கு காற்றைப் பற்றிச் சொல்வதற்கும் ப்ராணன் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படிக் காணப்பட வில்லை . எனவே ப்ராணன் என்பது வெறும் காற்று அல்ல -காற்றினுடைய ஒரு செயல் (க்ரியை ) தான் ப்ராணன் எனப்படுகிறது. உலகத்தில் உச்வாஸம் (மூச்சை இழுப்பது) மற்றும் நிச்வாஸம் (மூச்சை வெளியே விடுவது) என்ற செயல்கள் இருக்கும் போது தான் ப்ராணன் உ்ள்ளது என்று சொல்லப் படுகிறது. எனவே ப்ராண வாயு என்பது காற்றினுடைய ஒரு செயல் தான்.

    ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களால் இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் நிரஸித்து தன் பக்ஷத்தைக் காட்டுகிறார் வ்யாஸர்.
    1– ந् வாயு க்ரியே ப்ருத₂க் உபதே ₃ஸாத் –
    “வாயுவும் செயலும் அல்ல, தனித்த உபதேஸத்தால்”
    வாயு மட்டுமே ப்ராணன் என்று சொல்வது பொருந்தாது, ஏனெனில் -(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண : மந: ஸர்வேந்த்ரியாணி ச கம் வாயு –தேஜோ அதிகரணத்திலேயே பார்த்தோம்-த்ரவ்யங்களைப் பற்றியே சொல்லும் சுருதி -கிரியை செயல்பாடு சொல்லவே இல்லையே- ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள் ,ஆகாசம், வாயு முதலானவை உண்டாகின்றன” என்று வேதம் சொல்கிறது. இதில், வாயு என்று சொல்வதைத் தவிற ப்ராணன் என்று தனித்து ஒரு முறை கூறப் பட்டு்ள்ளது. வாயுவே தான் ப்ராணன் என்றால் இது தேவை யில்லை –

    வாயுவின் செயல் (க்ரியை ) தான் ப்ராணன் என்பதும் பொருந்தாது, ஏனெனில் இந்த வாக்கியத்தில் நிலம் நீர் தீ ஆகாயம் என்ற த்ரவ்யங்கள் (பொருள்கள் ) தான் பட்டியலிடப் பட்டு்ள்ளனவே தவிற, அப்பொருள்களின் செயல்கள் எதுவும் சொல்லப் படவில்லை எனவே , தனித்து சொல்லப் பட்ட ப்ராணனும் ஒரு த்ரவ்யமாகத் தான் இருக்க வேண்டுமே தவிற செயலாக இருக்க முடியாது.
    ஆகவே , ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு.

    (பஞ்ச பிராணன் –அவஸ்தா விசேஷமே பிராணன் -ஹ்ருதி பிராணன் -புதி அபான– சபான- நாபி உதாந – கழுத்து -விதாந – உடல் முழுவதும்)

    ப்ராணன் என்பது ஆறாவது பூதமா?
    கேள்வி
    – ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து ஜலம் என்று அடுத்தடுத்த பூதங்கள் உண்டாகின்றன. அதுபோல் ப்ராணன் என்பதும் வாயுவிலிருந்து பிறந்த ஒரு
    மாறுபாடு என்றால் அது வேறு பூதமா?

    பதில் – 2- ச க்ஷுராதி₃வத் து தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய:
    சக்ஷு ராதி₃வத் து –
    சக்ஷுஸ் முதலான புலன்களைப் போல் (ஆத்மாவுக்கு ஒரு கருவி) தான், (வேறு
    பூதம் அல்ல )
    தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய: – அவற்றோடு கூட உபதேசிக்கப் படுதல் -முதலான வற்றால்
    ப்ராண வாயு என்பது ஒரு தனி ஆறாவது பூதம் அல்ல – கண் காது மூக்கு முதலான புலன்கள் எல்லாம் எப்படி ஜீவாத்மாவுக்குக் கருவிகளாக இருக்கின்றனவோ , அதுபோல் ப்ராண வாயுவும் ஒரு கருவி
    மட்டுமே –

    (ஆதி –முதலானவற்றால் -புலன்களுக்கும் மூச்சுக் காற்றுக்கும் ஒரே சொல் -பிராணன் -புலன்களைப் போலவே மூச்சுக் காற்று என்றவாறு)

    ஏனெனில் –
    1–ப்ராண வாயுவைப் பற்றின உபதேசங்களில் அது புலன்களோடு கூடத் தான் பேசப் படுகிறது-உதாஹரணத்துக்கு ப்ராண ஸம்வாதம் என்று புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்குமான உரையாடலைக் கடந்த அதிகரணத்தில் பார்த்தோம். அவற்றோடு கூட ஒற்றுமை இருப்பதால் தானே அவற்றோடு சேர்ந்து பேசப் பட்டிருக்க வேண்டும்.

    2-ப்ராணங்கள் என்ற சொல் புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்கும் பொதுவாக உள்ளது.
    ப்ராண வாயுவை ’ஸ்ரேஷ்ட ப்ராணன்’-அதாவது-’சிறந்த ப்ராணன்’ என்று வேதம் கூறுகிறது.-எனவே , அவற்றோடு ஒற்றுமை இருக்க வேண்டும்.

    ப்ராணன் ஒன்றா? ஐந்தா?
    கேள்வி
    – கண் காது முதலானவை தங்கள் செயல்களின் மூலம் ஜீவாத்மாவுக்கு உதவுகிறபடியால் கருவிகள் ஆகின்றன.-அப்படி எந்த ஒரு உதவியும் ப்ராண வாயுவால் செய்யப் படாத போது அது எப்படி கருவியாக இருக்க முடியும்?

    3-அகரணத்வாத் ச ந தோ₃ஷ: ததா₂ ஹி த₃ர்சயதி
    அகரணத்வாத் –
    “ஆத்மாவுக்கு உதவக் கூடிய செயல் இல்லாத படியால் [கரணம் என்றால் க்ரியை (செயல்)]
    தோ₃ஷ: ந ச – கருவியாக இருக்க முடியாது” என்ற தோஷம் இல்லை .
    ததா₂ ஹி த₃ர்சயதி – ப்ராணன் ஜீவாத்மாவுக்குச் செய்யக் கூடிய உதவிச் செயலை வேதமே காட்டுகிற படியால்.
    (யஸ்மிந் உத்க்ராந்தே இத₃ம் சரீரம் பாபிஷ்ட தரம் இவ த்₃ருச்யதே ஸ: வ: ச்ரேஷ்ட₂:) அதாவது-“எந்த ஒரு ப்ராண வாயு புறப்படும் பொழுது உடலை மிகத் தாழ்ந்ததாக ஆகிறதோ , அது தான் நமக்குள் சிறந்தவன்” என்று புலன்கள் கூறுவதாக வேதம் காட்டுகிறது. எனவே , சரீரம் மற்றும் புலன்களைத் தாங்குதல் என்கிற முக்கியமான உதவியை ஜீவாத்மாவுக்கு ப்ராண வாயு தான் செய்கிறது. எனவே அது கருவியாகத் தட்டில்லை

    கேள்வி – ப்ராணம் அபானன் வ்யானன் உதா₃னன் ஸமானன் என்று தனித் தனி பெயர்கள் இருப்பதாலும், அவற்றுக்குத் உடலில் தனித் தனி இடங்களும் செயல்களும் இருக்கிற படியாலும் 5 ப்ராண வாயுக்களும் வெவ்வேறானவையா?

    பதில் – 4-பஞ்ச வ்ருத்தி: மநோ வத் வ்யபதி₃ச்யதே
    பஞ்ச வ்ருத்தி:
    – ஒரே ப்ராண வாயு தான் ஐந்து விதமான செயல்பாடுகளை உடைய படியால்
    வ்யபதி₃ச்யதே – ஐந்தாகக் கூறப்படுகிறது
    மநோவத் – (காம: ஸங்கல்போ விசிகித்ஸா
    ஶ்ரத்₃தா₄ அஶ்ரத்₃தா₄ த்₄ருதி: அத்₄ருதி: ஹ்ரீ: தீ₄: பீ₄: இத்யே தத் ஸர்வம் மந ஏவ- என்கிற வேத வாக்கியத்தின் படி மனதுக்கு ஆசை , எண்ணம், ஆராய்ச்சி, ஈடுபாடு, ஈடுபாடின்மை , தைர்யம், தைர்யமின்மை, வெட்கம், பயம் என்று பல செயல்பாடுகள் இருந்தாலும் மனது ஒன்று தானே . அதே போல் ப்ராண வாயுவும் ஒன்று தான்.

    (பிராணன் – மார்புப் பகுதியில் செயல்படும் இது, சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் ஒட்டு மொத்த உயிர் ஆற்றலையும் நிர்வகிக்கிறது.
    அபானன் -தொப்புளுக்குக் கீழே அடி வயிற்றில் இயங்கும் இது, கழிவு நீக்கம் மற்றும் இனப் பெருக்க மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது.
    வியானன் – உடல் முழுவதும் பரவி யிருந்து, ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது.
    உதானன் – தொண்டை மற்றும் தலைப் பகுதியில் இயங்குகிறது. பேச்சு, சிந்தனை, மற்றும் நரம்பு மண்டலத்தின் மேல் நோக்கிய இயக்கங்களைச் செயல் படுத்துகிறது.
    சமானன் – தொப்புள் மற்றும் வயிற்றுப் பகுதியில் இயங்கும் இது, உணவு செரிமானம் மற்றும் சத்துக்களைப் பிரித்தளிக்கும் பணியைச் செய்கிறது.)

    (பஞ்ச பிராண வாயு அல்லது ஐந்து சக்தி ஓட்டங்கள், உடலையும் அதன் உறுப்புகளையும் செயல்பட வைக்கின்றன. அடிப்படையில்,  மனித உடலின் ஒட்டுமொத்த உடலியலுக்கும்  பஞ்ச பிராண வாயுக்களே பொறுப்பாகும்.-நாம் நமது உடல் ஆற்றலை உணவிலிருந்து உருவாக்குகிறோம். அந்த உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு, அது செல்களில் சிதைக்கப்பட்டு ஆற்றலை உற்பத்தி செய்கிறது.  இந்த ஆற்றலை உள்வாங்குவதிலும், விநியோகிப்பதிலும், மற்றும் உடல் இயங்குவதற்குத் தேவையானவற்றை நிர்வகிப்பதிலும் ஐந்து  பிராண வாயுக்கள் ஈடுபட்டுள்ளன. )

    ஆக ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு –

    2-4-5-ஸ்ரேஷ்டாணுத்வாதி₄கரணம்-ப்ராண வாயு அணுவானது -ப்ராண வாயுவின் அளவு-ஸங்கதி – ப்ராண வாயு என்றால் என்ன என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து இவ் வதிகரணத்தில் ப்ராண வாயுவின் அளவு ஆராயப்படுகிறது.
    ஸித்தாந்தம் – 1-:அணு ச –“
    அணுவானதும் கூட”
    புலன்கள் அணுவானவை என்று சொல்வதற்கு எந்த எந்த யுக்திகள் சொல்லப்பட்டனவோ , அதே யுக்திகளால் ப்ராண வாயுவும் அணுவானது என்று நிரூபிக்கலாம். அதாவது – “ஜீவாத்மா உடலிலிருந்து புறப்படும் பொழுது ப்ராண வாயு கூடப் புறப்படுகிறது” என்று வேதம் சொல்கிற படியால், ப்ராண வாயு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்கிறது என்று தெரிகிறது. எனவே கண்டிப்பாக ப்ராண வாயு விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்த்தாக) இருக்க முடியாது, அளவுபட்டதாகத்தான் இருக்க வேண்டும். அது புறப்படும் பொழுது கண்ணுக்கும் தெரிவதில்லை ,-எனவே அணுவாகத் தான் இருக்க வேண்டும்.

    கேள்வி – புது யுக்திகள் இல்லாத போது ஏன் இதற்குத் தனி அதிகரணம்? ப்ராணணுத்வ-அதிகரணத்திலேயே இதையும் சேர்த்துச் சொல்லி யிருக்கலாமே ?
    பதில் – இங்கு அதிகப்படியான ஒரு கேள்வி உள்ளது. வேதத்தில் (ஸம: ஏபி₄: த்ரிபி₄:
    லோகை : ஸம: அநேந ஸர்வேண )
    -அதாவது-“ப்ராண வாயு மூன்று உலகங்களுக்கும் ஸமமானது, அனைத்துப் பொருள்களுக்கும் ஸமமானது” என்றும்,
    (ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டி₂தம்) அதாவது “ப்ராண வாயுவில் அனைத்தும் நிலை பெற்றுள்ளது” என்றும்,
    (ஸர்வம் ஹி இத₃ம் ப்ராணேண ஆவ்ருதம்) அதாவது-“இந்த உலகனைத்தும் ப்ராண வாயுவால் சூழப் பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால், ப்ராண வாயு விபுவானதாக இருக்குமோ ? என்கிற ஸந்தேஹம் ஏற்படுகிறது. அதைத் தீர்ப்பதற்காகத் தான் இவ்வதிகரணம் தனியாக ஊள்ளது.
    ஸமாதானம் ப்ராண வாயு புறப்படுவது சொல்லப் படுவதால், அது அணுவானது தான். அனைத்துப் பொருள்களும் தங்கள் தங்கள் ப்ராண வாயுவை அண்டியே வாழ்கிறபடியால் ப்ராண வாயுவில் நிலை பெற்றுள்ளன என்றும் ப்ராணன் அனைத்தையும் சூழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைக் கொண்டு ப்ராண வாயு விபு என்று கூற முடியாது

    2-4-6-ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நாதி₄கரணம்-ஜீவாத்மா புலன்களை இயக்குவது
    பரமாத்மாவின் ஆணையாலேயே –
    புலன்களின் அதிஷ்டாநம் -ஸங்கதி
    – கண் காது முதலான 11 புலன்களும் ப்ராண வாயு என்னும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பயன்படுத்துவதற்காக ஜீவாத்மா அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார் (தன் ஜ்ஞாநத்தால் ஏற்று இயக்குகிறார்) என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அதே போல், அந்தப் புலன்களுக்கு சக்தி யளிப்பதற்காக அக்நி ஸூர்யன் முதலான தேவர்களும் அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது. (2-1-3-2-கீழ் விலக்ஷண அதிகரணத்தில் இந்திரியங்களை தேவர்கள் அதிஷ்டானம் -இயக்குவது -தேவதைகள் என்று பார்த்தோம் )இப்போது, ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்வது தாங்களாகவா? அல்லது பரமாத்மாவின் இயக்கத்தாலா? என்று ஆராய்கிறார்.

    பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்யும் போது யாரையும் எதிர்பார்க்கத் தேவை யில்லை , அவர்கள் தாங்களாகவே இயங்கும் வல்லமை படைத்தவர்கள் என்பது பூர்வ பக்ஷம்

    ஸித்தாந்தம் – இவ் வதிகரணத்தில் இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் தன் பக்ஷத்தைக் கூறுகிறார்.
    1–ஜ்யோதிராத் ₃யதி₄ஷ்டா₂நம் து தத் ஆ₃மநநாத் ப்ராண வதா சப்₃தா₃த்
    ப்ராண வதா
    – ப்ராணன் எனும் மூச்சுக் காற்றை உடையவரான ஜீவாத்மாவோடு கூட(சஹ யோகி த்ரியதாய் -மூன்றாம் வேற்றுமை உருபுடன் கூடி)
    ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நம் து – ஜ்யோதிஸ் (அக்நி) முதலான தேவர்கள் புலன்களை அதிஷ்டாநம் செய்வது
    ததா₃மநநாத் தத் ஆ₃மநநாத்– அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் (ஆமநநம் – -ஆபி முக்யேனான மனனம்–ஒன்றை நோக்கி சிந்தித்தல் – ஸங்கல்பம்)
    சப்₃தா₃த் – அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்கள் என்று வேதம் கூறுகிறபடியால்

    அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் கண் காது முதலான புலன்களுக்கும், ஜீவாத்மாக்களுக்கும், அக்நி வாயு ஸூர்யன் முதலான தேவர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்து இயக்குபவர் பரமாத்மா தான் என்று கூறப்பட்டுள்ளது.
    தைத்திரீய உபநிஷத்தில் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே பீ₄ஷா உதே₃தி ஸூர்ய:…)
    அதாவது-“அந்த பரமாத்மாவுக்கு பயந்து தான் காற்று வீசுகிறது, ஸூர்யன் உதிக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.
    ஆகவே , ஜீவாத்மாக்களும் தேவர்களும் புலன்களை அதிஷ்டாநம் செய்வதும் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்.

    இருப்பே பரமாத்மாவால் தான்-கேள்வி – தேவர்களும், நம்மைப் போன்ற ஸாதாரண ஜீவாத்மாக்களும் செய்யும் செயல்பாடுகள் எல்லாம் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் இருக்கட்டும், ஆனால் அந்த தேவர்களும் ஜீவாத்மாக்களும் இருப்பது (அவர்களின் ஸத்தை – இருப்பு) பரமாத்மாவால் அல்ல, சுயமானதே .
    பதில் – (2- தஸ்ய ச நித்யத்வாத் –
    “அந்த அதி₄ஷ்டா₂நம் நித்யமானதால்”
    பரமாத்மா தேவர்களையும் ஜீவாத்மாக்களையும் செய்யும் அதிஷ்டாநம் (உள்ளே புகுந்து இயக்குதல்)
    அவர்களுடைய செயல்பாட்டுக்காக மட்டுமல்ல, செயல்படும் காலத்தில் மட்டும் அல்ல. என்றுமே இயற்கையாகவே அதிஷ்டானம் செய்து தான் இருக்கிறார். எனவே அந்த தேவர்கள் மற்றும்
    ஜீவாத்மாக்களின் ஸத்தை அதாவது இருப்பு (existence) கூட, பரமாத்மாவால் தான்.
    பொருள்களின் இருப்பே அவரால் என்றால், செயல்பாடுகளும் அவரால் தான் என்று சொல்லத் தேவையே இல்லை . தானாகவே தேறுகிறது.

    நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
    தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
    வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
    ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

    தைத்திரீய உபநிஷத்தில் -(ததே₃வாநுப்ராவிசத் தத₃நுப்ரவிச்ய ஸத் ச த்யத் ச அப₄வத்) அதாவது-“அந்த பரமாத்மா உலகப் பொருள்களைப் படைத்துவிட்டு, அவற்றுக்குள் புகுந்தார், அவர் புகுந்ததால் தான் சேதனர்களான ஜீவாத்மாக்களும் அசேதனப் பொருள்களும் உள்ளவை ஆயின” என்று தெளிவாக கூறப்படுகிறது.
    ஆக, அனைத்துப் பொருள்களின் இருப்பும் செயல் பாடுகளும் பரமாத்மாவால் தான் என்று நிரூபிக்கப் பட்ட படியால், தேவர்களும் ஜீவாத்மாக்களும் புலன்களை அதிஷ்டானம் செய்வதும்
    பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்று தெளிவாகிறது.

    திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
    படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
    உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

    2-4-7-இந்த்₃ரியாதி₄கரணம்-இந்திரியங்கள் எவை?–புலன்கள் 11 மட்டுமே –ஸங்கதி – இது வரை இந்தப் பாதத்தில் ப்ராணன்கள் எனப்படும் 12 தத்துவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பட்டது. அவையாவன – சக்ஷுஸ் (கண்ணிலிருப்பது), ஸ்ரோ த்ரம் (காதிலிருப்பது), க்₄ராண ம் (மூக்கில்), ரஸநம் (நாக்கில்), த்வக் (தோல்), வாக் (நாக்கில்), பாணி (கைகள்), பாதம் (கால்கள்), பாயு (மலம் கழிக்க), உபஸ்தம் (ஜலம் கழிக்க), மநஸ் (மனது), ஸ்ரேஷ்டப்ராணன் -ப்ராண வாயு (மூச்சுக் காற்று). இப்போது, இந்த 12 தத்துவங்களில் எவை இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று இந்த அதிகரணத்தில் ஆராயப்படுகிறது.

    பூர்வ பக்ஷம் – இவை பன்னிரண்டுமே இந்த்ரியங்கள் தான். ப்ராணன்கள் என்கிற பெயர் இவை அனைத்துக்கும் பொதுவாக இருக்கிறது, அவற்றில் வேறுபாடுகளும் ஒன்றும் தெரியவில்லை . எனவே அனைத்துமே புலன்கள் தான். மேலும், இவை அனைத்துமே ஜீவாத்மாவுக்கு ஏதோ ஒரு விதத்தில் கருவிகளாகத் தான் இயங்குகின்றன. எனவே அனைத்துமே இந்த்ரியங்கள் தான்.

    ஸித்தாந்தம் – 1–தே இந்த்₃ரியாணி தத்₃வ்யபதே ₃சாத் அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த்
    தே இந்த்₃ரியாணி
    – அவை – 11 தான் இந்த்ரியங்கள்
    அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த் – ஸ்ரேஷ்ட₂ ப்ராணன் என்றழைக்கப்படும் மூச்சுக் காற்றைத் தவிற மற்றவற்றில்
    தத்₃வ்யபதே ₃சாத் – இந்த்ரியம் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதால்
    இந்த ஸூத்ரத்தில் ’-அவை ’ என்று பொதுவாகச் சொல்லப் பட்டிருந்தாலும், அச் சொல் முன் பேசப்பட்ட 12 தத்துவங்களையும் குறிக்க வில்லை . ’-அவை ’ என்று பன்மை ப்ரயோகம் உள்ள படியால், இதற்கு முன் பன்மையில் பேசப்பட்டதைத் தான் நினைவு கூற வேண்டும். இதற்கு முன் ப்ராணணுத்வாதிகரணத்தில் ’ அணவ: ச ’ என்ற-ஸூத்ரத்தில் தான் கண் முதலான 11 தத்துவங்களும் அணுவானவை என்று சொல்லும் போது பன்மை ப்ரயோகம் உள்ளது. மூச்சுக் காற்றை ஒருமை யில் தான் அழைத்துள்ளார். எனவே இங்கு ’ அவை ’ என்ற சொல் மூச்சுக் காற்றைத் தவிர்ந்த மற்ற ப்ராணன்களைத் தான் குறிக்கிறது.

    (இந்த்₃ரியாணி த₃ச ஏகம் ச ) அதாவது “இந்த்ரியங்கள் பத்தும் ஒன்றும்” என்று தெளிவாக உபநிஷத்துக்களில் கூறப்படுகிறது. எனவே , ப்ராண வாயுவைத் தவிர்ந்த மற்ற 11 ப்ராணன்களும் தான் இந்த்ரியங்கள்

    புலன்களை ஏன் ப்ராணன் என்றழைக்கிறோம்?
    பூர்வபக்ஷி 12 ப்ராணன்களுக்கும் எதுவும் வேறுபாடுகளே இல்லை என்று கூறியிருந்தார். அதை அடுத்த ஸூத்ரத்தால் தகர்க்கிறர் –
    2–பே₄த₃ஸ்ருதே : வைலக்ஷண்யாத் ச –
    “தனித்துக் கூறும் வேதத்தாலும் வேறுபாட்டாலும்”

    பே₄த₃ஸ்ருதி: (தனித்துக் கூறும் வேத வாக்கியம்) –
    (ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :, மந:, ஸர்வேந்த்ரியாணி ச )
    அதாவது
    “ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது, மனது உண்டாகிறது, எல்லாப் புலன்களும் உண்டாகின்றன” என்று வேதம் கூறுகிறது. இங்கு இந்த்ரியங்களைக் காட்டிலும் ப்ராண வாயு தனித்துச் சொல்லப் பட்டுள்ளதால், அது இந்த்ரியங்களுக்குள் ஒன்று அல்ல என்று தெரிகிறது. மனதும் இவ்விடத்தில் தனித்துச் சொல்லப் பட்டிருந்தாலும், மற்ற பல ப்ரமாணங்களில் மனதும் புலன் தான் என்று கூறப்பட்டுள்ளது.
    எடுத்துக் காட்டுக்கு பகவத்கீதையில் கண்ணன் (மந:ஷ்ஷ்டாநி இந்த்₃ரியாணி) அதாவது (மனது உள்பட ஆறு இந்த்ரியங்களையும்) என்று ஓரிடத்தில் கூறுகிறார். எனவே மனது ஓர் இந்த்ரியம் தான் என்று ஏற்கப் படுகிறது.-ஆனால் ப்ராண வாயு புலன் அல்ல

    வைலக்ஷண்யம் (வேறுபாடு) – ப்ராண வாயுவுக்கும் கண் முதலானவற்றுக்கும் பல விதமான வேறுபாடுகள் உள்ளன –
    1-நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது நம் புலன்கள் இயங்குவதில்லை . ஆனால் ப்ராண வாயு இயங்குகிறது
    2-கண் முதலானவை ஜீவாத்மாவுக்குச் செய்யும் உதவி – மற்ற பொருள்களையும் அறியவும் பயன்படுத்தவும் உதவுதல்.
    ப்ராண வாயு செய்யும் உதவி – சரீரம் புலன்கள் முதலானவற்றைத் தாங்குதல்.
    (தே ஏதஸ்யைவ ஸர்வே ரூபம் அப₄வன், தஸ்மாத் ஏதே ஏதேந ஆக்₂யாயதே )
    அதாவது–பிராண அதீன தாரணத்வாத்--“புலன்கள் ப்ராண வாயுவை நம்பியே இயங்குவதால் ப்ராணன் என்றே அழைக்கப் படுகின்றன” என்று வேதம் கூறுகிறது. ஆகவே , இந்த 12 தத்துவங்களுமே ப்ராணன் என்று அழைக்கப் பட்டாலும் அவற்றில் ப்ராண வாயுவைத் தவிற மற்ற 11 மட்டும் தான் இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று நிரூபிக்கப் படுகிறது.

    2-4-8-ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லிப்த் யதி₄கரணம் –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது யார்?–ஸங்கதி– இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலிருந்து இது வரை ஸமஷ்டி ஸ்ருஷ்டி ப்ரஹ்மத்தால் தான் செய்யப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் கடைசி அதிகரணத்தில் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் ப்ரஹ்மத்தால் தான் செய்யப் பட்டுகிறது என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
    ப்ரஹ்மம் உலகை ஸ்ருஷ்டிப்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன –
    1-ஸமஷ்டி ஸ்ருஷ்டி
    2-வ்யஷ்டி ஸ்ருஷ்டி

    (ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லாஅன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே”– பஹுஸ்யாம் ப்ரஜாயேய–ஊழி முதல்வன்-ஸமஷ்டி ஸ்ருஷ்டி-
    தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவனே –நாராயணன் நான்முகனைப் படைத்தான் –வ்யஷ்டி ஸ்ருஷ்டி
    )

    (ஸமஷ்டி ஜீவன் ஹிரண்ய கர்ப்பன் -நான்முகனுக்கு பெயர்கள்)

    ஸமஷ்டி ஸ்ருஷ்டி
    பிரளயத்தில் உலகங்களனைத்தும் அழிந்து, மூலப் பொருளான ப்ரதானம் என்பதோடு ஒன்றாகிறது.– இப் பூதங்களோ , அவற்றிலிருந்து உண்டான பொருள்களோ எதுவும் கிடையாது. ஜீவாத்மாக்கள் அனைவரும் உடலில்லாமல் ப்ரக்ருதியோடு சேர்ந்து இருப்பார்கள். இவை அனைத்துக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, ஸ்ருஷ்டிக்கான காலம் வந்தவுடன்,தனக்கு உடலான மூல ப்ரக்ருதி என்கிற அசேதனப் பொருளிலிருந்து வரிசையாக மஹாந், அஹம்காரம், 11 புலன்கள், 5 தன் மாத்ரங்கள், 5 பூதங்கள்(நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) ஆகியவற்றை உண்டாக்கி, அதற்குப் பின் ஐம் பூதங்களைக் கொண்டு14 உலகங்களைக் கொண்ட எண்ணிலடங்காத அண்டங்களைப் படைக்கிறார். அதற்குப் பின், அந்த அண்டத்துக்குள் அடியிலிருக்கும் தண்ணீரில் ஆதிசேஷன் படுக்கையில் சயனித்து, தன் உந்தித் தாமரை யிலிருந்து ப்ரஹ்மா என்னும் நான்முகனைப் படைக்கிறார். இதுவரை நடக்கும் ஸ்ருஷ்டிக்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி (பொதுவான ஸ்ருஷ்டி) என்று பெயர், ஏனென்றால் இதுவரை நடப்பது ஜீவாத்மாக்களின் தனிப்பட்ட புண்ய-பாபங்களுக்குப் பொருத்து அல்ல. இதை ப்ரஹ்மமே நேரடியாகச் தெய்கிறார்

    வ்யஷ்டி ஸ்ருஷ்டி–
    வ்யஷ்டி என்றால் தனித் தனியான என்று பொருள். நான்முகன்உண்டாக்கப் பட்ட பிறகு நடக்கும் ஸ்ருஷ்டிக்கு வ்யஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர், ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் பாப-புண்யங்களின் கணக்கைப் பார்த்து அதற்குத் தகுந்த படி ஓர் உடலை ஸ்ருஷ்டித்து, அதற்குள் அந்த ஜீவாத்மாவைப் புகுத்தி பிறப்பை ஏற்படுத்துவது தான் இந்த ஸ்ருஷ்டி. இதைத் தான் நான்முகன் செய்கிறார்–

    கேள்வி –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது நான்முகனேவா? அல்லது அவருக்கு அந்தர்யாமியான பரமாத்மாவா? –

    பூர்வ பக்ஷமும் ஸித்தாந்தமும்–
    பூர்வ பக்ஷம்
    –நான்முகன் தானாகவே தான் செய்கிறார். வேதத்தில் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது, பரமாத்மா ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்யும் முறையைக் கூறி விட்டு, அதற்குப் பின் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொலும் போது
    (அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி)-அதாவது “நான் இந்த ஜீவன் மூலமாக உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களின் பெயர்களையும் உருவங்களையும் பிரிக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் நாம-ரூப வ்யாகரணம்–அதாவது–பெயர் மற்றும் உருவங்களைப் பிரிப்பது என்பது தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டி ஆகும். அதைப் பரமாத்மா தானாகச் செய்யாமல், ஜீவாத்மா மூலம் தான் செய்கிறார் என்று இந்த வாக்கியம் கூறுகிறபடியால், வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது ஒரு ஜீவாத்மாவான நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்.
    மேலும், ஸ்ம்ருதிகளிலும் நான்முகன் செய்யும் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது தான் நாம-ரூப-வ்யாகரணம்–அதாவது பெயர்-உருவ பிரிவினை என்பது சொல்லப்படுகிறது. அதனால் அவரே செய்கிறார்.(நாம ரூப பூதானாம் க்ருத்யானாம் பிரபஞ்சனம்)

    ஸித்தாந்தம்-1– ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து த்ரிவித் குர்வத: உபதே ₃சாத் ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து–பெயர்-உருவ-ஸ்ருஷ்டி(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
    த்ரிவித் குர்வத: -த்ரிவித் கரணம் என்ற செயலைச் செய்பவரான பரமாத்மாவினுடையதே
    உபதே ₃சாத்–த்ரிவித்கரணம் செய்பவர் தான் பெயர்-உருவ-பிரிவினையைச் செய்கிறார் என்கிற உபதேசத்தால்

    பூர்வபக்ஷி காட்டின வாக்கியத்தில் பிற்பகுதி உள்ளது–(அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகர வாணி,தாஸாம் த்ரிவ்ரிதம் த்ரிவ்ரிதம் ஏகைகாம் கரவாணி)-அதாவது“இந்த ஜீவனாகிற நான் உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களுக்குப் பெயர்-உருவ-பிரிவைச் செய்யப் போகிறேன், அதற்காக அவை ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுத்துக் கொள்கிறார். முற் பாதியில் சொல்லப்பட்ட வ்யஷ்டி ஸ்ருஷ்டி யையும் பிற் பாதியில் சொல்லப்பட்ட த்ரிவித் கரணம்(ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்குதல்) என்னும் செயலையும் ஒருவரே செய்கிறார் என்று இதிலிருந்து தெரிகிற படியால் அதைச் செய்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    த்ரிவித்கரணம் அல்லது பஞ்சீகரணம் –உபநிஷத்தில் த்ரிவித் கரணம் என்று ஒரு செயல் குறிப்பிடப் பட்டுள்ளது. அக்நி, ஜலம், நிலம் என்ற மூன்று பூதங்களைப் படைத்த பிறகு த்ரிவித் கரணம் அதாவது -ஒவ்வொன்றையும் மூன்றாக ஆக்கும் செயல் நடக்கிறது. உண்மையில் ஐந்து பூதங்களைப் படைத்து, பஞ்சீகரணம் அதாவது ஒவ்வொன்றையும் ஐந்தாக ஆக்கும் செயல் செய்யப் படுகிறது என்று புராணங்களிலிருந்து நாம் அறியலாம். சாந்தோக்ய உபநிஷத்தில் அதன் ஒரு பகுதியாக த்ரிவித் கரணம் கூறப்பட்டுள்ளது — முதலில் பூதங்கள் படைக்கப்படும் பொழுது, தூய்மையான ஆகாசம், காற்று,நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் என்று இருக்கும். ஆனால் இப்படித் தனித் தனியான பூதங்களைக் கொண்டு அண்டங்களை ஸ்ருஷ்டி செய்ய இயலாது என்பதால் இவற்றை ஒன்றோடு ஒன்றாகக் கலக்க வேண்டும். ஒவ்வொரு பூதத்தின்12.5% எடுத்து மற்ற நான்கு பூதங்களோடு கலக்குவது தான் பஞ்சீகரணம். இதன் இறுதியில் ஆகாசம் என்ற பூதத்தில் 50% ஆகாசமும், தலா 12.5% காற்று, நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் இருக்கும். இதே போல் மற்ற பூதங்களிலும். இவற்றைக் கொண்டு தான் அண்டங்கள் படைக்கப் படுகின்றன

    நான்முகன் படைக்கப் படுவது அண்டம் உண்டான பிறகு அதற்குள் சயனித்திருக்கும் நாராயணனின் உந்தித் தாமரையில் தான். எனவே அண்டம் உண்டாவதற்கு முன் நடக்க வேண்டிய பஞ்சீகரணத்தை அவர் செய்திருக்க முடியாது, அவரே அப்போது உண்டாகாதபடியால். அதனால் பரமாத்மா தான் பஞ்சீகரணத்தைச் செய்திருக்க வேண்டும். பஞ்சீகரணம் செய்பவர் தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்கிறார் என்கிறது உபநிஷத். எனவே பரமாத்மா தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியையும் செய்பவராக இருக்க வேண்டும்.

    அநேந ஜீவேந ஆத்மநா’ என்ற இடத்தில் ஜீவன் மூலமாக என்று பொருள் அல்ல, ஜீவனை உடலாகக் கொண்ட நானாகிய பரமாத்மா உள்ளே புகுந்து பெயர்-உருவ-பாகுபாட்டைச் செய்யப் போகிறேன் என்று தான் பொருள்.

    (தத் தேஜஸ் ஐஷத–தேஜஸ்ஸை உடலாகக்கொண்ட ப்ரஹ்மமே ஸங்கல்பித்தது போல் இங்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட– —சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8–)

    வேறொரு த்ரிவித்கரணம் உள்ளதா? கேள்வி-இங்கு த்ரிவித்கரணம் என்பது நீங்கள் சொல்லும்படி அண்டம் உண்டாவதற்கு முன் நடக்கும் செயல் அல்ல. சாந்தோக்ய உபநிஷத்தில் இதே ப்ரகரணத்தில் வேறொரு த்ரிவித்கரணம் (ஒவ்வொன்றும் மும்மூன்றாக ஆவது) சொல்லப்பட்டுள்ளது. அதாவது

    இமா: திஸ்ரோ தே ₃வதா: புருஷம் ப்ராப்ய த்ரிவ்ரித் த்ரிவ்ரித் ஏகைகா ப₄வந்தி —
    அக்நி, ஜலம், நிலம் ஆகிய மூன்றும் மனிதனால் உண்ணப் பட்டதும் மும் மூன்றாகஆகின்றன
    பூதம் –நிலம் நீர் தீ
    கெட்டிப் பகுதி –மலம் மூத்திரம் அஸ்தி-எலும்பு
    நடுத்தரப் பகுதி –மாம்சம் ரத்தம் மஜ்ஜை
    நுண்ணிய பகுதி –மனது -பிராணன் -வாக்

    (நிலம் -மலம் -மாம்சம் -மனது
    நீர் -மூத்திரம் -ரத்தம் -பிராணன்
    தீ-அஸ்தி-எலும்பு-மஜ்ஜை-வாக்)

    இவ்வாறு ஒவ்வொரு பூதமும் மும்மூன்று பூதங்களாக மாறுவது தான் த்ரிவ்ரித்கரணம் எனப்படுகிறது. இதெல்லாம் நான்முகனால் தான் நம் உடலில் நடப்படுகிறது. எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் அவர் தான்.

    ஸித்தாந்தியின் பதில்
    2–மாம்ஸாதி பௌமம் யதா சப்தம் இதரயோ ச
    மாம்ஸாதி₃
    ப்ருதி₂வியிலிருந்து உண்டாகும் மாம்ஸம், மனது ஆகியவையும்
    ச பௌ₄மம்–ப்ருதி₂வி தான், மற்ற பூதங்கள் அல்ல.
    இதரயோ : ச – நீர் -நெருப்பிலிருந்தும் உண்டாகும் மூத்ரம் ப்ராணன் எலும்பு மஜ்ஜை ஆகியவையும்
    யதா₂சப்₃த₃ம்– அந்தந்த தொற்களின் படி நீரும் நெருப்பும் தான், மற்ற பூதங்கள் அல்ல.

    அது த்ரிவ்ரித் கரணமே அல்ல
    ஒரு பூதம் மூன்றாக ஆகும் த்ரிவ்ரித் கரணம் இது தான் என்றால், உண்ணப் பட்ட நிலம்,மலம், மாம்ஸம், மனது என்று மூன்றாக மாறும் பொழுது, அதில் ஒன்று நிலம், ஒன்று நீர், ஒன்று நெருப்பு என்று கூற வேண்டும். பொதுவாக கெட்டியாக இருப்பது நிலம், நடுத் தரமானது நீர், மிக நுண்ணியது நெருப்பு. எனவே , கீழுள்ள அட்டவணையின்படி தான் ஒவ்வொரு பூதமும் மும் மூன்றாக ஆகிறது, இது தான் த்ரிவ்ரித்கரணம் என்கிறார் பூர்வபக்ஷீ. ஆனால், இப்படிக் கூறுவது தவறானது–நிலத்திலிருந்து வரும் மலம், மாம்ஸம், மனது என்ற மூன்றுமே நிலம் தான். அதே போல், நீரிலிருந்து வரும் மூத்ரம், ரத்தம், ப்ராணன் மூன்றுமே நீர் தான். அதே போல் எலும்பு, மஜ்ணஜ, வாக் மூன்றுமே நெருப்பு தான் என்கிறார் வேத வ்யாஸர்

    பூதம் –நிலம் நீர் தீ
    கெட்டிப் பகுதி –மலம் -நிலம் –மூத்திரம் -நிலம் -எலும்பு -நிலம்
    நடுத்தரப் பகுதி –மாம்சம் -நீர் –ரத்தம் -நீர் -மஜ்ஜை -நீர்
    நுண்ணிய பகுதி –மனது -நெருப்பு –பிராணன் -நெருப்பு –வாக் -நெருப்பு –

    இதற்குக் காரணம்–இதே பகுதியில்(அந்ந மயம் ஹி ஸோம்ய மந:, ஆபோ மய: ப்ராண தேஜோ மயீ வாக்) அதாவது மனது நிலத்தாலானது, ப்ராணன் நீராலானது, வாக் நெருப்பாலானது –என்று வேதம் கூறுகிறது. இது பூர்வ பக்ஷியின் வாதத்தோடு முரண்படுகிறது, ஏனென்றால் அவர் கூறிய படி மனது நெருப்பாலானது, நிலமல்ல;ப்ராணன் நெருப்பாலானது, நீரல்ல; ஆகவே பூர்வ பக்ஷீ கூறியது தவறானது.
    ஆக, இங்கு ஒவ்வொரு பூதமும் மூன்று மூன்று பூதங்களாக மாறுவது சொல்லப்பட வில்லை , அதே விதமான மூன்று பொருள்களாக மாறுவது தான் சொல்லப் படுகிறது. எனவே இது த்ரிவ்ரித்கரணமே அல்ல. அண்டம் உண்டவதற்கு முன் நடப்பது தான் த்ரிவ்ரித்கரணம்; அதைச் செய்பவர் பரமாத்மா; எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் பரமாத்மாவே

    கேள்வி– நிலம் நீர் தீ ஆகியவை யெல்லாம் ஒவ்வொன்றும் மும் மூன்று பூதங்களாகக் கலந்து தான் உள்ளன என்றால், அவற்றை ஏன் நிலம் நீர் தீ என்றும்குறிக்கிறோம்? மாற்றி, எந்தச் சொல்லைக் கொண்டும் குறிக்கலாமே
    பதில்– 3-வைசேஷ்யாத் து தத்₃வாத₃: தத்₃வாத₃: – “சிறப்பாக (அதிகமாக) இருப்பதால் –அப்படிக் குறிக்கப் படுகிறது”. எந்த பூதத்தின் பகுதி எதில்அதிகமாக(50%) உள்ளதோ ,அச் சொல்லால் அதைக் குறிப்பிடுகிறோம்
    ஸூத்ரத்தில்’தத்₃வாத₃:’ என்ற சொல்லின் இரட்டிப்பு, இதோடு இந்த அத்யாயம் முடிகிறது என்பதைக் காட்டவே —

    (இங்கு ஸ்வாமி தேசிகன்
    அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
    அந்தராத்மா வேறு என்றும்
    மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை-ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்-அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
    ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும் மற்றவன் வியாகரணம் செய்வதாயும் கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும்
    –)

    இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

    1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
    2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
    3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
    4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
    5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
    6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
    7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
    8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
    பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
    என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

    ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

    May 15, 2026

    ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
    யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

    துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

    ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
    ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

    (ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

    குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
    பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
    உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
    நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

    (மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


    இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
    பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

    சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
    அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
    ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
    ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
    103 —

    தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

    (தன்வந்திரி சந்நிதி சேதம் -தங்க கொடிக் கம்பம் சேதம் -முதலாம் சடையவர்மன் சீர் படுத்தி –
    விஜய ஸ்தம்பம் -திருப்பாண் ஆழ்வார் சந்நிதிக்கு எதிராக உள்ளது -ராமானுஜர் விஜயத்துக்காக வைத்த ஸ்தம்பம்-கூர நாராயண ஜீயர் ரஷித்த விருத்தாந்தம் -தகடுகளில் மந்த்ரம் பதித்து வைத்தார் –விருப்பண்ண உடையார் சக்கரத்தாழ்வார் சேதத்தில் இருந்து ரக்ஷித்தார் -இவற்றை கோயில் ஒழுகு விவரிக்கும்)

    சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
    ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
    மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
    ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு (திருக்கணாம்பி -தமிழ் மாடு கர்நாடகம் கேரளா -மூன்றுக்கும் எல்லை )எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூட வருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சில நாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

    ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புர விப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீ ராம பிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியை யுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கட மாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

    (லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
    ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
    பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
    நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
    அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
    திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –)

    இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
    கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு (முத்தரப்பு மலை -இன்றும் உள்ளது -)ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப் பொஷகத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

    அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங் கேட்டு அபிமானித்து (திருவிதாங்கூர் )மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீ முகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ கண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமுகத்தை ஸிரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கிலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப் பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப் பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருப் பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

    அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று சொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

    கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராய் அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார் எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப் பணியார வகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக் காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, நாலு நாழிகைக்குத்‌ திருக்‌ காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமன ஸமயத்திலே உப்புச் சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப் படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌ அமுது செய்த்ருளி, இராக் காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ திட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌ அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளி யிருந்தார்க்கள்‌.

    இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
    பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக் கொண்டு போந்தார்‌. அது கண்டு அங்குண்டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல் வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

    திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
    பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில் ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே திரு விருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌ ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப் பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வ படரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந் முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமா யிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலை யாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலை யாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப் பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகை யாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

    கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தி யுடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜ காரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக் கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாத படியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமய மாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பல காலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜ கார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினா ராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக் கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ பாலர்களா யிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகும்‌ தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌ விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப் புல்லாணிக்கு ஸமீபத்திலே நாயனெழுந்தருளி யிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித் தருளினராகையாலே கூர குலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

    அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
    கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
    லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
    ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
    ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவே அர்த் ப்ரதாநத: |
    லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

    பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
    தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

    அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
    அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
    அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
    -தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
    நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” (கோல வராஹரான நாலூர் பிள்ளைக்கு இந்தத் திருநாமம் )என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; (பிள்ளை லோகாச்சார்யார் பேர் அருளாளன் தானே )இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள–நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி -வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரித்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

    (ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
    தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
    நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
    மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-)

    திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

    ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
    ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
    ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
    பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

    தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திரு நாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப் பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திரு நாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திரு நாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இன வாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

    தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

    உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

    ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேஸிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌ |
    வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
    என்றும்‌

    கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
    த்‌ரேதா ப்ரவர்த்ய புவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே –
    என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
    யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருவாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌ (இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்து வைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்த வுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலை யாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானத் தேற எழுந்தருளினார்‌.-

    யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்டருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌ தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

    (சடகோபர் தாசர் திருவாய்மொழிப்பிள்ளை இவை பட்டப்பெயர் -திருமலை ஆழ்வார் இயல் பெயர் –
    1371-பரிதாபி ஸம்வத்சரம் வைகாஸி 17 நம்பெருமாள் மீண்டு அருளினார்
    கோட்டூரில் அண்ணர்-திருகுமாரத்தியை ஸ்ரீ ரெங்கநாச்ச்யார் மணந்தவர் திகழக் கிடந்தான் பாடிய திரு நா வீறுடைய பிராணன் தாதர் அண்ணர் வீப்ர ஸயான குரு கோமடத்தாழ்வான் திருவம்சம் -இவர் திருக் குமாரர் நம் பெரிய ஜீயர் -சாதாரண வருஷத்தில் திருவவதாரம் -)

    அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
    ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
    அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

    வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
    கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
    பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

    (இன்றும் இனவாயர் தலைவன் திவ்ய விக்ரஹம் திருவாய் மொழிப்பிள்ளை திருமாளிகையில் சேவிக்கலாம் -விளாஞ்சோலைப் பிள்ளை யுடைய திருவாராதன திவ்ய மங்கள விக்ரஹம்)

    திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
    விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
    நாம ஸதா ஜபேத்‌”
    -ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
    ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம்‌ ஸதாம்‌ |
    தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

    ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌ ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை ஏழு -ஸப்த-காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை-ஸப்த-ஏழு காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார் )

    அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌ ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே, இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
    கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநே ரதம்‌ குத்ர சித்‌தம்‌
    நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
    தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
    ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

    அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

    இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
    நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
    )இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
    பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
    நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
    கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணிவோன்‌
    மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
    என்று அநுஸந்தித்தார்கள்‌.
    வாழி நலந் திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
    வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
    ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
    தேறு திருவுடையான்‌ சீர்‌
    — என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

    இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
    பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
    பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
    வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
    வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
    உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
    பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

    என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

    அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
    இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷண சிந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

    1–ததஸ் ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
    2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
    மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
    3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைக ஸிந்தோ:
    நஸீத் அஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

    1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
    2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
    3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
    (தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

    செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
    சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
    மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
    மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
    கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
    காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
    அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
    அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

    பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
    வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
    வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
    ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

    கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

    யஸ்மிந் ஸ்வ பாத பத்மேந பஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
    கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

    எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலி புருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

    இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
    அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
    அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

    ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
    என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடாரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
    பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரம பக்திரித்பபி |
    வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

    அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பர பக்தி பர ஜ்ஞானம்‌ பரம பக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
    உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதா லுன் தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
    பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
    ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
    காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

    கல்பத் ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத் தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
    ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
    ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
    – என்றும்‌
    ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
    ரஞ்ஜநேந ப்ரஜாநாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

    அறிவில்லாத ஐநங்களும்‌ செந் தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
    தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
    காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
    ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

    பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸ வார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

    (1286-1406 திருவாய் மொழிப்பிள்ளை
    1323-1371-நம்பெருமாள் விஜயம் -15 ஆண்டுகள் திருநாராயண புரம் -23 ஆண்டுகள் திருமலையில் –
    வீரபாண்டியன் கலியுக ராமன் -சித்திரை வீதிக்கு முன் பெயர் –
    இவன் தம்பி -சுந்தர பாண்டியன் -கைங்கர்யம் நிறைய பண்ணி யுள்ளான் -பராக்கிரம பாண்டியன் இவன் பிள்ளை -இவர் மந்திரி திருவாய் மொழிப் பிள்ளை –
    1371-சாதாரண வர்ஷம் ஐப்பசி மூலம் மா முனிகள் திருவவதாரம்)

    இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
    அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
    திருப்பல்லாண்டும்‌,
    ஏழை யேதலனும்‌,
    ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
    , அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

    ஆநீயா நீல ச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜநா தஞ்ஜநாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
    யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத் தநுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
    லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
    ஸம்யக் சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

    தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக் கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌ ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

    கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
    ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

    (முதலான சடைய வர்மன் -பாண்டியன் கொண்டை சமர்ப்பித்தவன் ஸ்ரீ ரெங்கவிமானத்துக்கு பொன் வேய்ந்தவன்-பூ பல ராயன் சிங்காசனனம் பெயர் கர்ப்பக்ருஹ -உள்ளே இருக்கும் -சேர பாண்டியன் சிங்காசனனம் -மூன்றாம் குலோத்துங்கன் -வெளியில் திருமஞ்சனம் இதில் தான் செய்து அருளுவார் -)

    அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
    பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
    ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

    பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

    அழகிய மணாவாளப் பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயித்தல்‌
    அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக் கீடுபட்டு
    ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸ மமல மஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
    ஸுந்தர வர குரு கருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம் ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

    கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ விருத்தி யடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறை யறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
    வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
    வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
    வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
    பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
    ‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

    பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி திருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
    அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளி யிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந் தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரி யேற வெழுந்தருளி பொருநற் சங்கணித்‌ துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பி யுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌ துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரிய தயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே தேசந் திகழுந்‌ திருவாய்மொழிப் பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
    ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத் தஸ்ய ப்ரஸாதத: |
    அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தநச்சித: ॥

    பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச் செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்கிறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவருபதேச முகத்தாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப் பொருளான சரம பர்‌வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னி யிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரை புடை சூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

    நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
    பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
    அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
    நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
    அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
    வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
    சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
    எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
    புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
    -என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

    இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
    மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
    சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
    இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

    பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் கறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்கி பங்க்தி பாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதி வேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாட ப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக் குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற் போலே தூற்றெட்டு தரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திரு நாமம்‌ சாத்‌தி யருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,

    இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
    இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
    -என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
    இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
    வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
    என்று நாயனார்‌ தலைக்கட்டி யருள, இதைக் கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளிகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற் போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

    இப்படி அவதார விசேஷமான இவர்‌
    வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
    திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
    திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
    சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
    -என்றும்‌
    நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
    ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
    என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
    செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
    குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
    வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
    தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
    -என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
    அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
    ப்ரவணார்த்ரசேதா: |
    கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
    த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

    செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
    மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

    அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
    தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
    அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
    இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
    -என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

    அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
    இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
    நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
    உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
    வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
    சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
    எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
    -என்று
    அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முசித்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமா யிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
    நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌ திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

    திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
    அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
    பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
    தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
    இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
    நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜந்மநே |
    ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

    அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
    ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
    வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
    ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
    அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

    பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தால்‌ ப்ரவர்த்தியா நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

    அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
    ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
    அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தாரராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

    நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
    இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
    ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
    ” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

    அநந்தரம்‌,
    தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
    ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

    பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

    தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
    யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

    எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
    சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
    விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
    ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

    கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாமும்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

    அநந்தரம்‌
    எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
    கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

    மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
    ஆடல்மாறனகளங்கன் வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
    கூடல்‌ வாழ் குலசேகரன் வீதியும்‌ குலவுந் ராச மகேந்திரன்‌ வீதியும்‌
    தேடு தன்‌வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

    என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ -அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமாளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள –அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
    கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌ பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மா மணி மாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌களையும் கூட்டி யனுப்பி யருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொன்னரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த் தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

    இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
    எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
    எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
    நில்லாதென்னெஞ்சு நிறைந்து

    என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
    முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

    அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
    கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
    சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
    ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

    ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
    தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
    கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
    என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

    பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாலையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
    அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந் தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
    எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
    வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
    வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
    மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
    இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
    –என்றும்‌,
    மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
    மணவாளன் மன்னு குலம் வாழி–மணவாளன்‌
    வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
    வாழியவன்‌ உரை செய்த நூல்‌
    –என்றும்‌
    அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

    ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
    ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
    யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
    தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

    இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

    ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
    பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
    க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விபஸ் சித்ரியம்‌
    லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

    பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

    யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
    காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
    க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
    ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

    யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

    தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
    ஸத்க்ருத: க்ருதவாந் வாஸம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

    மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
    திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக் காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளி யிருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
    என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச் செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக் குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக் கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

    நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
    அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
    சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

    திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
    அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
    உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
    அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

    இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
    திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

    ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
    ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
    ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
    ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

    பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
    அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
    மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
    திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
    ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
    அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
    கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
    பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

    (அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
    ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்-
    -ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.
    ஸ்ரீமத்ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்|
    ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யமஹம் பஜே||
    -ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித்தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.)

    மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
    கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
    யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
    திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
    செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
    வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

    நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
    அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
    தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
    மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

    நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
    அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
    ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
    ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
    அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

    அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
    புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
    ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
    ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
    வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

    திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
    ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
    த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
    வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
    தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

    பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
    தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
    ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
    பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
    யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

    நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
    யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
    அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

    ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
    இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
    எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
    தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
    ஓங்கு புகழுடைய வூர்‌
    -என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
    எந்தை எதிராச ரெம்மை யெடுத்தளிக்க
    வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
    மருளோ? தெருளோ? மகிழ் மாலை மார்பன்‌
    அருளோ விப் பேற்றுக் கடி-
    -என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

    என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
    நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
    பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
    பெரும் போகமெல்லாம்‌ பெற
    — என்று
    ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
    எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
    ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

    நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
    அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ (கிடாம்பி )நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தை யருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ர முகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும் போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச் செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரிய பெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தி யுடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளின படியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக் கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாள மா முனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சில நாளெழுந் தருளி யிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெடுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

    தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
    பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
    நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
    பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

    இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
    ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
    பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
    திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
    காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

    பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

    நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
    அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌ ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
    சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
    ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

    இவ் வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌ ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌, அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
    மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
    மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

    ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று;

    திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
    பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுல ஸமமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள துர்யாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

    ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
    ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

    ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
    மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
    வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
    மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
    அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
    (பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

    திருமஞ்சந அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    இப்படி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக் காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
    உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
    தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

    உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளி யிருத்தார்‌
    (தீர்த்த தாதஸ் –திருமஞ்சனம் அப்பா)

    அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

    அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகிற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசந பூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதா ஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை ‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுள பூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டும்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடி நிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாள மா முனியை இனி ஒப்பார்களில்லை உலகேழிலும் உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளை லோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திரு ப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக் கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திரு நக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.(விசத வாக் ஸிரோமணி –பிரமாணத் திரட்டு அருளிச் செய்து -)

    இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
    சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
    யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
    என்றும்‌,
    வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
    அதுக்கும்‌ மேலே
    (2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
    ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

    அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
    (3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
    ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

    பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
    -வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
    கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

    அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்த க்‌ருஹ யஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்று வாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திரு முன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

    ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
    அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
    ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
    த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

    என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவ ராஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

    சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
    ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
    -அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
    கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
    அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
    மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
    நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
    அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
    ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
    செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
    தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
    ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

    (ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
    விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
    ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
    வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே
    -தேவராஜ தோழப்பர் திருக் குமாரர் –வரதநாராயண குருவான அண்ணன்=திருமஞ்சனம் அப்பாவுக்கும் தேவராஜர் திருநாமம் உண்டு -திருவரங்கத்தில் இருந்து கொண்டே பேர் அருளாளன் திருநாமம் கொண்டவர்கள்)

    கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
    ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌ கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தொங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறு பிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்கள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங் காட்டி,
    த்வதீயாந்‌ அபராதாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
    க்ஷமாம் யஹம்‌ தாஸரீதஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

    நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
    அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

    இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
    வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
    ஸேஷோப் யஹம்‌ வர வரோ முநிரப் யஹம்‌ த்வம்‌ |மாம் ஆஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
    அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாம் ஆஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
    த்ருஷ்ட்வா க்ஷமாமி நநு தாஸரதேஸ் த்வதீய ஸர்வ அ பராதமிதி தம்‌ ப்ரவதந்த மீடே ॥

    யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌ நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌ பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

    அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க ஒருப்பட்டது
    சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
    ததா கதாம் தாம்‌ வ்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீந மாநஸாம்‌ |
    ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோப ஜீவிந:

    சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமா போலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
    ரங்கேஸ கைங்கர் ஸு தீர்த்த தேவ ராஜார்ய ஜ அம்பாகலு பாக்ய ஸீலா |
    ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

    யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

    குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌தித்தருளி “உம்முடைய திருக் கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச் செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ -தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பா வண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாகச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படி யானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலு மெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அநபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

    தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத் தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்த ஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே ஸ்வத ஏவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திநசர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹஸி போதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹித பராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநு ஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமில்லை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடாஷித்துக்‌ கொண்டிருக்க-

    அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
    அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமலை யாழ்வாரில்‌ ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாக திருச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங் கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

    அசட்டாச்சான்‌-
    அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்கிரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌ துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்க–அண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதி விநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக் கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயரு மெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூல பூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலை யாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகக் கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

    அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
    வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
    ஸ்ரீ லஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ ந தாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

    மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத் தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து (இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
    ஸ்ரேயஸீம் அநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

    ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியா தநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
    பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப் பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளி யிருக்க;
    அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலே ரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹா குல ப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
    அப்படி யொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம் தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

    மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
    புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
    அயமர்ச்சா வதாரத்வ ஸமாதி மவதீரயத்‌
    அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
    அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

    அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரம புருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறித் தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

    அநந்தரம்‌:
    அண்ணன் ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
    ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நித யோபியே |
    அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
    உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
    ஸ்வேஷா மதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

    எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறு மணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸம்ருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி –தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ் செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அதற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி -திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர் களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்தருளி நெடும் போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

    அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
    வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித் தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருள, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்ன வென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக் கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத் தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விட வேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமும் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ர கோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபா பாத்ர பூதரான அநேகம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌ அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளித் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
    ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்த படி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

    இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
    சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந ஜர்‌ஜ ஜர சேதஸம்‌
    புஜக சயநம்‌ தேவம் பூய: ப்ரஸாத யிதும்‌ த்ருவம்‌ |
    யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வய மித்யபூ
    திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

    யதி குல நாதரான ஸ்ரீமத் ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங் கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌ பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுகிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீ கோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப் போது சோதித்து ஸம் ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீ கோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

    ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
    ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீ மதுர கவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந் நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகல சுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

    (வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயணோந் முகராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்க ஸயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
    அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
    இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதி புநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

    —==-

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

    May 14, 2026

    ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

    அவினயமபனய விஷ்ணோ தமய மன ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம் |
    பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: || (1)

    ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

    திவ்யதுனீ  மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே  |
    ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய கேதச்சிதே வந்தே  || (2)

    கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.

    ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம் |
    ஸாமுத்ரோ ஹி தரங்க:  க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:  || (3)

    ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

    உத்ருதநக நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே  |
    த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: || (4)–(அந்தாதி வரிக்குள்ளே)

    கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

    மத்ஸ்யாதிபி  ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
    பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

    மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! ஹே பெருமாளே

    தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
    பவ ஜலதி மதனமந்தர பரமம் தரமபனயத்வம் மே (6)

    தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

    நாராயண கருணாய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
    இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

    ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

    மனத் தூய்மை அடைந்து திருவடி தொழுது -ஸ்வாமி சொத்து உணர்ந்து -கடாக்ஷம் பிரார்த்தித்து அவன் செய்யும் உபகார பரம்பரைகளை உணர்ந்து -மோக்ஷத்துக்கு சரணம் அடைந்து -ஷட் பதம் -வண்டு வாயாகிய-தாமரை -ஆறு வார்த்தைகளை எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் திருவடித் தாமரையையே பேசிக் கொண்டே இருக்க அது போல் ஆவோம் அன்றோ –

    இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.

    பகவத் அனுபவமாகிய தேனையே பெருகிக் கொண்டே இருப்போம் -வாயைத் தாமரை யாக்கி பேச்சையே வண்டாக்கி வாழ்ந்தே போவோம்

    ————————————————————————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-