ஸ்ரீ அநந்தாழ்வான் மஹாத்ம்யம்—ஸ்ரீ மா முனிகள் மஹாத்ம்யம்–

May 4, 2026

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

https://acharya.org/mag/g/g0505.pdf–கீதாசார்யன் -505-ஐப்பசி 2020–மா முநிகழ் 650-திரு நஷத்ர மலர்

இயற்பெயர் அழகிய மணவாளன் -ஸந்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த திருநாமம் தொடரும் -பால்யாத் -ஸஹஜ -மஹாத்ம்யம் -அழகிய மணவாள மா முனிகள் -கொண்டாடுகிறோம்-கீதா உபதேசம் -62 திருநக்ஷத்ரம் -ஈடு ஸாதித்த மா முநி களுக்கும் 62 திருநக்ஷத்ரம்-எம் ஐயன் ராமானுஜன் -திருக்குமாரருக்கு திருநாமம் ஸாதித்து அருளினார்-

ராமாநுஜ ரஹச்யத்ரயம் மூலம் – நித்தியம்  -அனுசந்திக்க வேண்டியவை :1-திருமந்த்ரம் – திருவஷ்டாக்ஷரம்–ஓம் நமோ ராமாநுஜாய-2. த்வய மந்த்ரம்–ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே : /ஸ்ரீமதே  ராமாநுஜாய நம :  //3. சரமச்லோகம்–ஸர்வகர்மாணி  ஸந்த்யஜ்ய ராமாநுஜ இதி ஸ்மர /விபூதிம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம //

ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!

திருவானந்தாழ்வானுக்கு திருவேங்கடமுடையான் ஸாதித்த தனியனும் உண்டே-தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
–அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ஈட்டுப் பெருக்கர் கோயில் செல்வ அழகிய மணவாள மா முனிகள் -கோயில் செல்வமான பெரிய பெருமாளைக் கொண்டவரே -கோயிலுக்கு செல்வமான -ஸ்ரீ ரெங்க தனம் மா முனிகள் –

அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*

ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார்.

இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.-தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.-பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்

ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.

செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,-எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது-எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.-ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது-பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது-இந்த குணங்களோடு-சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.-ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை-தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

ஸ்ரீ மா முனிகள் திருவரங்கத்தில் தமது திருமடத்தில் எழுந்தருளி இருப்பதை -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் –ததஸ் தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் ப்ராங்முகம் ஸூக மாஸீநம் ப்ரஸாத மதுர ஸ்மிதம் -பூர்வ திநசர்யை – 18-கம்பத்தின் அடிக்கு அலங்காரமாக கிழக்கு நோக்கி இனிய புன்முறுவலுடன் வீற்று இருந்தார் -என்று அருளிச் செய்துள்ளார் -இன்றும் நாம் ஆதி சேஷனுடன் இருக்கும் இருப்பை உத்தம நம்பிக்கு சேவை ஸாதித்த விருத்தாந்தம்-சித்ர வடிவில் நாம் சேவித்துக் கொள்கிறோம் அன்றோ இந்த திருவுருவத்தை –

தம்முடைய திருக்கை சொம்பை உபாதானமாக்கி இரண்டு சிறிய திரு விக்ரஹங்கள் -ஓன்று ஆழ்வார் திரு நகரியில் மூன்று அங்குல உயர நின்ற திருக்கோலம் அஞ்சலித்த திருக்கையுடன் சேவை -மற்ற ஓன்று திருவரங்கத்தில் ஞான முத்திரையுடன் வீற்று இருந்த திருக்கோலம்-ஐப்பசி திரு மூலம் சாற்றுமுறை என்று மா முனிகள் நம்மாழ்வார் திருவடிகளில் எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் கண்டருளப்பண்ணி நம்மாழ்வாருக்குச் சாத்தியருளிய திருமண் காப்பை மா முனிகளுக்கு சாத்தி அருளும் அழகை இன்றும் சேவிக்கலாம் -திருவரங்கத்தில் பெரிய பெருமாளே கஜ துரக சித்ரா சாமர வாத்ய விசேஷங்களுடன் பெரிய கோயில் அர்ச்சகர்கள் கைங்கர்ய பரர்கள் வந்து அமுது செய்யப்பண்ணி நடத்துவது அசாதாரண சிறப்பாகும்-காஞ்சி புரத்திலும் மா முனிகள் பரமபதித்த 50 வருடத்துக்குள் சந்நிதியும் உருவாகி -தேவப்பெருமாள் சாற்றுமுறை அன்று இங்கு எழுந்தருளி நடை பெறும் வைபவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்-ஸ்ரீ பெரும்பூதூரில் எம்பெருமானார் பெரிய சேஷ வாகனத்திலும் மா முனிகள் சிறிய சேஷ வாகனத்திலும் எழுந்தருளி புறப்பாடு கண்டருளுகிறார்கள்-

பூர்வாச்சார்கள் என்னும் வ்யாபதேசம் மா முனிகள் அளவில் –மதுரேண ஸமாபயேத் -என்னும்படி விஸ்ராந்தமாயிருக்கும் அன்றோ-ஆழ்வார் ஆச்சார்ய பரம்பரை பொய்கையாழ்வார் தொடக்கி பொய்யில்லாத மா முனிகளுடன் தலைக் கட்டுகின்றது -இவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் பல பல ஸ்தோத்ர பிரபந்தகளை அருளிச் செய்துள்ளமையும் இவருக்கே அசாதாரணம்-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைகதாமநி -ஆதிசேஷன் இவர் அவதாரம்–இவை இவரது பரம விலக்ஷண திரு நாறு வீறு பற்றி அருளிச் செய்துள்ளார்கள் –விசதவாக் சிகாமணிகள் -என்று கொண்டாடுகிறோம்

நாந் ருக்வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண நா சாமவேத விதூஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம்
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்கடலுமீ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொலிச்
சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-

சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
மாறிச் சொல்லும் இடமும் உண்டு –

மாறிச் சொல்லுவதும் உண்டு என்னாமல் மாறிச் சொல்லும் இடமும் உண்டு –என்று அருளிச் செய்து-பாஷ்யக்காரரே -16-1 கீதா பாஷ்யத்தில் அந்தக்கரண நியமனத்தை தமமாகவும் பாஹ்ய கரண நியமனத்தை சமமாகவும் அருளிச் செய்துள்ளார்-தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )-இரண்டு படியும் ஹ்ருத் கதமாயிருக்கையாலே இவ்வாறு அருளிச் செய்துள்ளார்

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –சூர்ணிகை -162—அதாவது இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –இதுக்கு பிரயோஜனம் -என்று சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே-தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும் தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இறே இவனுக்கு –இத்தால் –லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று–ஜகத் சர்கே லீல ஏவ கேவலா பிரயோஜனம் -என்றும் பரஸ்ய ப்ரஹ்மணோ லீல ஏவ பிரயோஜனம் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி–கிரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய –என்று ஸ்ரீ பராசர பகவானும் அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ–மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும் நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும் அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இறே-

ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் |
|-திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிக வைபவம்—ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாமாவளி–

May 4, 2026

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம் | ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேஸாஹ்வயம் மஹ: ||

தேஸிக ஸப்தத்தில் தே என்ற அக்ஷரம் தேவ: என்பதையும் ஸி என்ற அக்ஷரம் ஸிஷ்ய: என்பதையும் க என்பது கருணையையும் குறிக்கும்.தேவாநுக்ரஹ தாரித்வாத் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் கருணா மய ரூபத்வாத் உச்யதே தேஸிகோ புதை:தேஸிக பதத்தின் முதல் எழுத்து தே, தேவ: என்பதைக் குறிக்கும். தேவ:என்ற ஸப்தத்தை ஸாஸ்த்ரம் தீவ்ய தீதி தேவ: என்றும் ஸ்ரத்தயா தேவ: தேவத்வம் அஸ்நுதே என்றும் பல விதமாக விளக்குகிறது. ஆசார்யர்கள் நமக்கு அநுக்ரஹம் செய்வதற்காகவே தோன்றியதால் தேஸிக ஸப்தத்தின் முதல் எழுத்து தே என்பதை தேவ: என்று சொல்வதுண்டு. ஸிஷ்யர்களுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி ஆகியவை பற்றிய ஞானத்தை வழங்கி அநுக்ரஹம் செய்கிறார் ஆசார்யன்.ஆசார்யர்கள் ஸிஷ்யர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடத்திலே ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தான் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் என்பதன் பொருள். கார்ய நியத பூர்வ வ்ருத்தி காரணம் என்றபடி ஸிஷ்யனுக்கு அருளுவதற்கு முன்னரே எம்பெருமானிடத்திலே ஆசார்யன் அநுக்ரஹம் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காரணம் எப்படிப்பட்ட தென்றால் கருணா மய ரூபத்வாத்-பர துக்க துக்கித்வம் தயை என்று சொல்வார்கள்.அது போல் ஸிஷ்யர்களிடத்திலே தயையுடன் இருக்கக் கூடியவர்கள் ஆசார்யர்கள்.ப்ராதர்த் யூத ப்ரஸங்கேந மத்யாஹ்நே ஸ்த்ரீ ப்ரஸங்கத: ராத்ரௌ சௌர்ய ப்ரஸங்கேந காலோ கச்சத்ய தீ மதாம்||அதாவது,காலையில் சூதாட்டத்திலும், மதியம் பெண்கள் விஷயத்திலும், இரவில் திருட்டுத் தொழிலிலும் காலத்தை வீணடிப்பார்கள் அறிவிலிகள். அறிஞர்கள் அறிவுடையவர்கள் காலையில் மஹா பாரதக் கதை கேட்பதிலும், மதியம் ஸீதா தேவியின் சரிதமான இராமாயணக் கதை கேட்பதிலும், இரவில் நவநீத சோரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கதையைக் கேட்டும். காலத்தைக் கழிப்பார்கள்.

குரும் ப்ரகாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகா -ப்ரகாஸாப்யாம் யேதே ஸம்பதாயுஷ்||
என்று நூற்றெட்டு ஸம்ஹிதைகளில் ஒன்றான தேவ ஸம்ஹிதை சொல்கிறது. இந்த லோகத்தை
ஸ்வாமி தேஸிகன் குருபரம்பரா ப்ரபாவத்திலே மேற்கோள் காட்டுகிறார். ஆசார்ய அநுஸந்தானம்
முக்கியமானது. தேஸிகன் என்ற ப்தத்திற்கே ஆசார்யன் என்று அர்த்தம்.

ஆசரதீதி ஆசார்ய: ஆஸமந்தாத் சரதீதி ஆசார்ய: – ஆசார்ய லக்ஷணம்
ஸத் புத்தி: ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வ போதாபிலாஷீ
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந:ப்ரணி பதந பர: ப்ரஸ்ந கால ப்ரதீக்ஷ: 1
ஸாந்தோ தாந்தோ ந ஸூயு: ஸரணமுபகத: ஸாஸ்த்ர விஸ்வாஸ ஸாலீ
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாம் கருதவிதபிமதம் தத்வத: ஸிக்ஷணீய: –ஸிஷ்ய லக்ஷணம் பற்றி ஸ்வாமி தேஸிகன்

ஸூஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா!
ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்வ ஜ்ஞானம் ச தீகுணா:
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அநுப்ரவிஸ்ய குருதே யத் ஸமேஹிதம் அச்யுதா என்றபடி எம்பெருமானே ஸ்ரீ ஸடகோபராக, ஸ்ரீ ஆளவந்தாராக, பகவத் ராமானுஜராக, ஸ்வாமி தேஸிகனாக திருவவதாரம்-


ப்ரஸாதாத் தேஸிகேந்த்ராணாம் பராவர விபாகவித் |
ப்ரபந்ந: பரமாத்மாநம் ப்ராப்நோதி பரமம் பதம் II
இந்த ஒரு அனுஷ்டுப் ஸ்லோகத்திலேயே சித், அசித், ஈஸ்வர தத்வம் அனைத்தையும் அடக்கி விட்டார் ஸ்வாமி.-வ்யாகரணத்திலே சொல்வதுண்டு.
அல்பாக்ஷரம ஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோ முகம் |
அஸ்தோபமந வத்யஞ்ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது: 1
-என்பது ஸூத்ர லக்ஷணம்.
இப்படி சுருங்கச் சொல்வது ஸூத்ரமாகவும், விரித்துச் சொல்வது பாஷ்யமாகவும் இருக்க வேண்டும்.
பதச்சேத: பதார்த்தோக்தி: – விக்ரஹோ வாக்ய யோஜநா |
ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம் வ்யாக்யாநம் பஞ்ச லக்ஷணம்II

ஸ்ரீராமாயணத்திற்கு ஸமானம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஸமானம் யாதவாப்யுதயம். ஸ்வாமியினுடைய யாதவாப்யுதய க்ரந்த மானது மோக்ஷம் கொடுக்கக் கூடிய ஸர்வேஸ்வரனுடைய கிருஷ்ணாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது.-அதனால் இது பரம புருஷார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய க்ரந்தம். இவ் விஷயத்தை ஸ்வாமி முதல் ஸர்கத்தில் எட்டாவது ஸ்லோகத்தில் –விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸ வேதார்ணவாம்ருதம் |
வக்ஷ்யே விபுத ஜீவாதும் வ தேவஸுதோதயம்|–

வ்யாஸர் இயற்றிய வேதமான மஹா பாரதம் என்ற கடலிலிருந்து எடுக்கப்படும் ஸாரமான அமுதம் அதாவது தேவர்களுக்கும், வித்வான்களுக்கும் அன்னமுமான வஸுதேவருடைய குமாரரான கிருஷ்ணருடைய சரித்திரத்தைச் சொல்லுவேனாக என்று ஸாதிக்கிறார். இப்படி கிருஷ்ணனுடைய பெருமையைச் சொல்வதால் இந்த கரந்தத்தை மஹா பாரதம் என்றும் பாகவதத்தின் தஸம ஸ்கந்தத்தின் சுருக்கம் என்றும் கூறலாம்.-வந்தே ப்ருந்தாவந சரம் வல்லவீ ஜந வல்லபம் |
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்|||

க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபா ரூஷி தயா ஸ்வயம் |1
ஏகோ விஸ்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமாந ஜீஜனத்
|-பகவாந் க்ருபை என்கிற வர்ணத்தில் லீலை என்கிற குச்சியைத் தோய்த்து மூவுலகம் என்ற சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதிக் கொண்டான்-

கேவலம் பகவதநுபவத்தையே கொண்டுள்ள பகவதநுபவ ஜனிதமான இது போன்ற காவ்யங்கள் மஹா ஸ்ரேஷ்டமானவை.
விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம் |
தயா நிதிம் தேஹ ப்ருதாம் ஸரண்யம் தேவம் ஹயக்ரீவ மஹம் ப்ரபத்யே —
என்று ஞான வடிவமானவனும், விஸேஷ ஞானத்தை அருளுவதற்காகவே விரதம் பூண்டவனும், கருணைக்கு இருப்பிடமானவனுமான அந்த ஸ்ரீஹயக்ரீவனுடைய அநுக்ரஹமும், ஆசார்ய அநுக்ரஹமும், ராமாநுஜ
தயா பாத்ர பூதரான ஸ்வாமிக்கு ஒருங்கே இருந்ததால் கல்வியானது இவருக்கு வலைப்பட்டிருந்தது-

ஸ்தந்யேந க்ருஷ்ண ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா: 1
யதத்புதம் பாவயதாம் ஜநாநாம்
ஸ்தநந்தயத்வம் ந புநர்பபூவ II
–நான்காவது ஸர்கத்தில் பூதனா வதத்தை ஒரே ஸ்லோகத்தில் முடித்தார்.
தத்வ டீகா என்று ஒரு க்ரந்தம். அந்த க்ரந்தத்தில் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – “அத பல பதத்திற்கான விளக்கம் மட்டும் 350 பக்கம் எழுதி யிருக்கிறார் ஸ்வாமி.
விஸேஷேண ராகம் வைராக்யம், விகத ராகம் வைராக்யம் என்று இரண்டு விதமான வைராக்யங்கள்-
மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் |
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்
||என்றபடி நாம் மஹாத்மாக்களை நினைவிற் கொண்டு நாமும் அவர்கள் வழி நடக்க வேண்டும்.
ஆஹார ஸூத்தி ஆத்ம ஸூத்தி, ஸத்வ ஸூத்தி, தருவா ஸூத்தி, திரவ்யா ஸூத்தி, க்ரியா ஸூத்தி, மந்த்ர் ஸூத்தி அனைத்தும் நிறைந்தவர்..

முக்தி தரும் நகர் ஏழில் முக்கியமானது காஞ்சி மாநகர். அக்காஞ்சி மாநகரில் திருத் தண்கா என்னும் திவ்யதேசம் உள்ளது. அங்கு தீபப் பிரகாசன் என்னும்
திருமாலின் சந்நிதிக்கு வெகு அருகில் தூப்புல் என்னும் ஒர் அந்தணர் வாழ்விடம் (அக்ரஹாரம்) இருக்கிறது.(தூப்புல்- தூய்மை தரும் புல்-விஸ்வாமித்திரம் என்னும் தர்ப்பை நிறைந்த இடம்,அல்லது விஸ்வாமித்திர கோத்திரத்தில் தோன்றிய பெரியோர்கள் அங்கு வாழ்ந்து வந்ததால்,
இவ்விடத்திற்குத் தூப்புள் என்ற பெயர் நிலைத்து விட்டிருக்கலாம்.)

இத் தூப்புல் சேஷத்திரத்தில் அனந்த ஸூரி-தோதாரம்பா என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், குழந்தைப்
பேறு கிடைக்கப் பெறாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.-ிருமலைக்கு இருவரும் யாத்திரையாக சென்று, திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டி குழந்தைப் பேற்றினுக்கு அவனருளை எதிர் நோக்கி அங்கேயே தங்கி இருந்தனர்.ஒரு நள்ளிரவு தோதாரம்பா ஒரு கனவு கண்டார்
எழிலொழுகும் ஓர் இளஞ்சிறுவனாக திருவேங்கடமுடையான் கனவில் தோன்றி, ” ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்கு அதி மேதாவியான புத்திர ரத்தினத்தை
அளித்தோம்; பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி திருமலைக் கோயிலில் உள்ள திருமணியைப் போன்ற திருமணியைத் தன் கணவரிடம் கொடுக்க, அந்தத் திருமணியைத் தான் வாங்கிப் பெற்றுக் கொண்டு விழுங்குவது போல் அக் கனவில் கண்டார். இதே கனவை அனந்த ஸூரியும் கண்டதாக மறுநாள் காலையில் கண் விழித்ததும் சொல்லி, தோதாரம்பாவை வியப்பில் ஆழ்த்தினார்.இது இப்படி யிருக்க, மறுநாள் கோயிலில் பரிசாரகர் பூஜைக்குரிய மணியை வழக்கம் போல் எடுத்து வைக்கச் சென்றார். ஆனால் அது காண வில்லை. கைம்மணி யின்றி எப்படி பகவானுக்கு நிவேதனம் செய்வதென்று எல்லோரும் வருத்த முற்றிருந்தனர்.அப்பொழுது பகவான் கோயில் ஜீயர் பால் ஆவேசித்து. “ஸ்ரீராமாநுஜ் ஸம்ப்ரதாய ரஷணத்திற்காக ஒரு மஹானைத் தோற்றுவிப்பதற்குத் திருமணி யாழ்வாரை நாமே அநந்த ஸூரிக்கு அளித்து விட்டோம். ஆகவே இனி என் திருவாராதன காலத்தில் கைம் மணியை ஸேவிக்க வேண்டாம். நிலை மணி (பெரிய மணி)யொன்றை மட்டும் ஸேவித்தால் போதும்” என்று கூறினார்.

சில நாட்களுக்கெல்லாம் தோதாரம்மாள் கர்ப்பவதியானாள். தம்பதிகள் வேங்கடவனிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர் சேர்ந்தனர். காஞ்சியில் இவர்கள் வசித்து வந்த பகுதி தூப்புல் என்பதாகும். இது தீப ப்ரசாசர்’ என்னும் விளக்கொளி எம்பெருமான் விளங்கும் திவ்ய ஸ்தலம்.இந்த ஸ்தலத்தில் தம்பதிகள் இனிது வாழ்ந்து வந்தனர். வேங்கடேச விமல கண்டாவதாரமாய் அவதரிக்கப் போகும் மஹானாதல் பற்றி மற்ற மானவர்களைப் போலன்றி, பன்னிரண்டு ஆண்டுகள் தமது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்தார்.பிறகு, கலி 4370-வது வருஷத்திற்குக் சரியான (கி.பி. 1268)
சுக்ல புரட்டாசி மாதம் சுக்ல பஷ தசமி திருவோண நக்ஷத்திரம் கூடிய புதவாரத்தில்
தோதாரம்மையின் கர்ப்பமாகிய பாற்கடலினின்று பகலவன் போல் ஒரு ஆண் குழந்தையாக உதித்தார். அப்புள்ளாரும் தமது சகோதரிக்கு வெகுகாலம் கழித்து உதித்த இக் குழந்தையின் தெய்விக ஒளியை மகிழ்ச்சியுடன் நோக்கி வேங்கடவனின் அருளால் தோன்றிய படியால் வேங்கடநாதன் என்றே நாம கரணம் செய்வித்தார்.

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஜாதகம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல வர்ஷம் கதகலி 4370 க்குச் சரியான (கச்சி நகர்)
அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி- கைரவிணீ தீர்த்த ஸ்நானமும் ஆன பிறகும் புரட்டாசி மாதம் 11ந்தேதி ஞாயிற்றுக் கிழமை11 -28க்கு சுக்ல ஏகாதசி 6 நாழி-19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதி மானுஷ புருஷம் ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஐனனம் – துப்புல் புண்ய பூமி கச்சிநகர். 11 கடிகைகளும் 28 விகடிகையில் ஜனனம்.கர்ப்பச் செல்லு போக சந்திர மஹா தசையில் பாக்கி செல்ல வேண்டியது 0 வர்ஷம் –மீ 9-நா-13

முறைப்படி செளளம், உபநயனம் முதலியவைகளைச் செய்யப் பெற்ற பின் “வேங்கடநாதன் தமது அம்மானான அப்புள்ளாரிடமே காவியம் .நாடகம், சாஸ்திரங்கள் முதலியவைகளை அப்யஸித்து வந்தார். அக் காலத்தில், நடாதூர் அம்மாள் என்னும் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி காஞ்சி ஸ்ரீதேவராஜன் ஸந்நிதியில் சீடர்களுக்குக் கால க்ஷேபம் சொல்லி வந்தார். அப்புள்ளாரும் அம்மாளிடம் காலக்ஷேபம் செய்பவர். ஒரு சமயம் ஐந்து வயது நிரம்பிய மருமகன் வேங்கடநாதனை நடாதூர் அம்மாளுடைய கால ஷேப கோஷ்டிக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார் . மஹா தேஜஸ்வியான இச் சிறுவனைக் கண்டவுடன் அம்மாள் கால ஷேபத்தைச் சற்று நிறுத்தி விட்டு, இச் சிறுவனைப் பற்றி விசாரித்த பிறகு மறுபடியும் கால ஷேபத்தைத் தொடங்குகையில்,முன்பு எங்கே சொல்லி நிறுத்தினேன்?’ என்று சீடர்களை வினவினார்.கால க்ஷேபத்தில் விட்ட இடம் தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் சிறுவன் வேங்கட நாதனோ, ‘ இந்த இடத்தில் இந்த வாக்கியத்தைச் சொல்லி ஸ்வாமி நிறுத்தியது, என்று சட்டென எடுத்துக் கூறினார். வேங்கடநாதனின் ஜ்ஞாபக சக்தியை மிகவும் புகழ்ந்த நடாதூரம்மாள் கீழ் கண்ட ஸ்லோகத்தினால் இவரை வாழ்த்தினார் .
“ப்ரதிஷ்டாபித வேதாந்த ; ப்ரதிக்ஷிப்த பஹிர்மத
பூயாஸ் த்ரைலோக்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் |

(நீ பிற மதங்களைக் கண்டித்து, விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி, மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல க்ஷேமங்களையும் அடைவாயாக மற்றும், “இவனே ஸ்ரீ பகவத் ராமாநுஜ தர்சநத்தைப் ப்ரவர்த்திக்க வல்லவன்’ என்றும் ஆசிர்வதித்தார்.
இவ்வாறு,தமது ப்ராசார்யரான நடாதூரம்மாளிடம் ஆசி பெற்று,தமது 20 வயதுக்குள்ளாகவே வேத வேதாங்க தர்க்க மீமாம்ஸாதி ஸகல சாஸ்திரங்களையும் மாதுலரான அப்புள்ளாரிடமே கற்றுத் தேர்ச்சி யடைந்தார்.

இப்படி இருபது ஆண்டுகளுக்குள் ஷட் தரிசனங்களிலும் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான ஸகல வேதாந்த கிரந்தங்களிலும் தேர்ச்சி யடைந்த தமது மருகமனுக்கு ஸகல லக்ஷணங்களோடு கூடிய திருமங்கையார் என்னும் கன்னிகையுடன் விவாஹம் செய்வித்து கருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்தார்.
இப்படி ஸகல சாஸ்திர ஸம்பந்நராய் விளங்கும் வேங்கடநாதன் விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்வதற்கு ரக்ஷையாக அப்புள்ளார் வைநதேய (கருட) மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். இப்படி உபதேசிக்கப்பட்ட மந்த்ரத்தை ஸித்தி செய்துக் கொள்வதற்காக ஏகாந்த ப்ரதேசத்தைத் தேடிச் சென்று. திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகன் ஸந்நிதிக் கெதிரேயுள்ள ஒளஷத கிரியில் ஒரு அரசமரத் தடியில் அமர்ந்து வைநதேய மந்த்ரத்தை ஜபித்து வந்தார். பிறகு, கருத்மான் மனம் மகிழ்ந்து ப்ரத்யக்ஷமாகி, இவருக்கு ஸகல வித்யாதி நாதனான ஸ்ரீஹயக்ரீவனின் மந்தரத்தை உபதேசம் செய்தார். ஸ்ரீ தேசிகனும் நியமங்களுடன் ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஆவ்ருத்தி செய்ய ஸ்ரீ ஹயக்ரீவன் பிரதியஷமாகி, நினைத்த போதெல்லாம் உமது நாவிலமர்ந்து நால் வேதப் பொருளை யெல்லாம் நவில்வேன்’ என அருள் புரிந்தார்.
உடனே தேசிகள் முதன்முதலாக ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாஸத், அச்யுத சதகம், தேவ நாயக பஞ்சாஸத் என்னும் ஸ்தோத்ரங்களையும் மும் மணிக் கோவை, பத்துப் பா, கழற் பா, அம்மானைப் பா, ஊசல் பா, ஏசல் பா முதலிய தமிழ்ப் பாக்களையும் இயற்றினார்.-ஸம்ஸ்கிருதம். பிராகருதம்,தமிழ் என்னும் மும் மொழிகளிலும் கவிதைகள் புனைவதிலும், தர்க்க வாதங்களால் பிற சித்தாந்திலும் இவருக்குள்ள திறமையை நோக்கி, அக் காலத்திய பெரியோர்கள் ஸ்வாமிக்குக் கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிப் போற்றி வந்தனர்.

இப்படி ஞான நிதியாய் விளங்கிய ஸ்வாமி, தமது கிருஹஸ்த ஜீவனார்த்தமாக யாரிடமும் சேவகம் புரியவில்லை; யாரையும் அண்டவுமில்லை. தினந்தோறும் காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்ட பின், பகவந் நாம ஸ்மரணத்துடன் வெளியில் சென்று உஞ்ச வ்ருத்தியாகக் கொண்டு வரும் அமுத படியைச் சமைப்பித்து பகவானுக்கு நிவேதனம் செய்த பின் தாம் புசித்துக் குடும்ப நிர்வாஹம் செய்து வந்தார். பாக்ய வசமாக அமைந்த இவரது தர்ம பத்தினியும் இவர் மேற் கொண்ட வ்ருத்தியைப் புனிதமாகக் கருதி அன்புடன் ஸேவை புரிந்து வந்தார்.
ஒரு நாள்,ஸ்வாமி உஞ்ச விருத்திக்குச் செல்லும் போது,ஒரு தனிகரின் பத்தினி, இவர் வறுமை நீங்கி சில நாட்களாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி உஞ்ச விருத்தி பாத்திரத்தில் அரிசியுடன் பொன் நாணய மொன்றையும் கலந்து சேர்த்து விட்டாள். ஸ்வாமி கிருஹத்திற்குச் சேர்ந்ததும், பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துச் சுத்தம் செய்யும் போது இவரது தேவி அரிசியுடனிருந்த பொன் காசைக் காட்டி இது என்ன?’ என்று கேட்க, ஸ்வாமியும் இது ஒரு விஷப் புழு. இதை வீசி எறிந்து விடு’ என்று கூற, அவ் வம்மையார் அப்படியே அதை வீசி எறிந்து விட்டாராம். இவரல்லவோ வைராக்ய சீலர்! இவ் வம்மை யல்லவோ உத்தம தர்ம பத்தினி! என்று எல்லோரும் போற்றினர்.

தேசிகன் இவ்வாறு வைராக்ய நிதியாய் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது தேசமெங்கும் பரவியது. இவரது சக மாணவராக இருந்த வித்யாரண்யருக்கும் இவ் விஷயம் தெரிந்தது-அவர் அப்பொழுது விஜயநகர ஸாம்ராஜ்யத்து ஆஸ்தான வித்வானாக இருந்தார். அரசனிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. எனவே, எவ்விதமாக வாவது இந்த ஞான நிதியை வர வழைத்து தம்முடன் அரச சபையில் ஆஸ்தான வித்வானாக்கி, இவரது வறுமையை அகற்றி விட வேண்டு மென்று எண்ணினார். அதற்கேற்ப ஒரு தூதுவனை இவரிடம் அனுப்ப, ஸ்வாமியும் தமக்குள்ள வைராக்யத்தைக் கூறாமற் கூறி, வைராக்ய பஞ்சகம்’ என்னும் ஒரு ஸ்தோத்ரத்தை எழுதி வித்யாரண்யருக்கு அனுப்பி வைத்தார். உல்கெலாம் ஆளும் ஆண்டவனுக்கு அடிமை யாகிய நான், இந் நிலவுலகின் ஒரு சிறு பகுதிக்கு அரசனெனக் கூறிக்கொள்பவனுக்கு அடிமையாக மாட்டேன். அன்று குசேலனைக் குபேரனாக்கிய இறைவனை யன்றி மற்றோரிடம் நான் அடிமை செய்யேன்” என்பன போன்ற வைராக்யக் கருத்துக்களைக் கொண்ட இவரது வைராக்ய பஞ்சகத்தைப் படித்த வித்யாரண்யர் இவரல்லவோ மகான் ! என மனத்தால் போற்றி மகிழ்ந்தார்.

இப்படி ஏழ்மையையே உண்மைச் செல்வமாக ஏற்றிருக்கும் இந்த ஸ்வாமியின் ஞானத்தையும் வைராக்யத்தையும் கண்டு பொறாமை கொண்ட சில அந்தணர்கள் இவரை அவமானம் செய்ய வேண்டு மென்று முடிவு செய்து, ஒரு பிரம்மசாரியை அழைத்து, விவாஹம் செய்து கொள்வதற்காகப் பண உதவி செய்ய வேண்டு மென்று நீ ஸ்ரீதேசிகனிடம் கேள் ‘ என்று சொல்லி யனுப்பினார்கள்.-அவன் தேசிகனைத் தெண்டனிட்டு,தனது வறுமையையும் விவாஹம் செய்து கொள்வதற்கான பணத்தின் தேவையையும் கூறி, தனக்கு உதவி புரிந்தருள வேண்டுமென்று கெஞ்சினான்.-ஸ்வாமி தேசிகன், இது சிலரின் சூழ்ச்சி என்பதை நன்கு புரிந்து கொண்டார். ஆயினும் ஆண்டவனிடமுள்ள அசஞ்சலமான நம்பிக்கையால், ஜகன் மாதாவான ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதிக்குச் சென்று, ஸ்ரீஸ்துதி’ என்னும் தமது ஸ்தோத்ரத்தால் உருக்கமாகத் தாயாரைப் பிரார்த்தித்து நின்றார். தன்னலம் கருதாது பிறர் நலனுக்காகவே இந்த வைராக்ய மூர்த்தி செய்த பிரார்த்தனைக் கிரங்கி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியும் பொன் மழை பொழிந்தாள். பிரம்மசாரியும் யதேஷ்டமாகப் பொன்களைத் திரட்டிச் சென்று திருமணம் புரிந்து கொண்டான். பொறாமைக்காரர்கள் தேசிகனின் திருவடி பணிந்து மன்னிக்க வேண்டினர் .
பிறருடைய பொறாமைக் குணம் ஸ்வாமியின் பொறுமையை விளக்கிக் காட்டும் உரைக் கல்லாக அமைந்த நிகழ்ச்சிகள் பல. ஒரு சமயம் சில அற்பர்கள் ஸ்வாமி பிஷைக்கு எழுந்தருளும் தெருவழியில். சில செருப்புக்களைத் தோரணமாகத் தொடுத்துத் தொங்க விட்டிருந்தனர். ஸ்வாமி எவ்வித மனக் கசப்போ, முகச் சுளிப்போ இல்லாமல் அந்தத் தோரணத்தைத் தாண்டி,புன் முறுவல் பூத்த திருமுகத்துடன் இவ்வாறு கூறினாராம்:
கர்மாவலம்பகா கேசித் கேசித் ஜ்ஞாநாவலம் பகா :
வயம் து ஹரிதாஸாநாம் பாத ரக்ஷா வலம்பகா ! |

“சிலர் ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, கடைத் தேறுவதற்காகக் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். நான் ஹரி தாஸர்களின் பாத ரக்ஷைகளைப்
பற்றுக் கோடாகக் கொண்டு கடைத் தேறுபவன்” என்று கூறித் தமது பொறுமையின் சிறப்பையும் பாகவத காஷ்ட்டையையும் உலகுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு சமயம் கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சில நாள் தங்கியிருந்தார். அச் சமயம் பிற மதப் பண்டிதர்கள் சிலர் இவரை வாதுக்கழைத்தனர். அவர்களுடன் பல நாட்கள் வாதப் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டார்.-அவர்களுடன் நடந்த வாதப் பிரதிவாதங்களின் தொகுப்பை தூஷணி’ என்னும் நூலாக உருவாக்கினார் தேசிகன். அதற்கு அரங்கநாதன் மனமுவந்து, வேதாந்த தேசிகன் என்னும் சிறப்பான விருதை இவருக்கு சூட்டினார் –

இதை நோக்கிய அரங்க நாச்சியார் தாமும் இவருக்கொரு விருதமளிக்க விரும்பி, தம் மதத்திலும் பிற மதங்களிலும் தங்கு தடையின்றி புகுந்து ஆராய்ந்து உண்மையை ஒளிவு மறைவின்றி
எடுத்துக் கூறும் இவரது திறமையை மெச்சி,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்னும் விருதமளித்து வாழ்த்தினார்.-இவ்வாறு அரங்க நகர திவ்ய தம்பதிகளால் வாழ்த்தப் பெரும் பெருமை பெற்ற வேதாந்த தேசிகனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்று-ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரா’ என்று தெய்வ தம்பதிகள் அளித்த விருதைப் பொருளுள்ளதாகச் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் இவரது வாழ் நாட்களில் பல நேர்ந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

சிலருடைய துர்போதனைக் கிணங்கி ஒரு பாம்பாட்டி இவரிடம் வந்து இவர் மீது சில பாம்புகளை ஏவினான் தேசிகன் தம் முன்னே ஏழு கோடுகளைத் தரையில் கீறினார். அவைகளைத் தாண்ட
முடியாமல் பாம்புகள் பின்னடைந்தன. பிறகு அப் பிடாரன் சங்க பாலன்’ என்ற மஹா சர்ப்பத்தை ஏவினான்.அது அந்தக் கீற்றுக்களைத் தாண்டி ஸ்வாமியை நெருங்க, கருட தண்டகத்தால் பெரிய திருவடியைத் துதித்தார். அந்த க்ஷணமே கருட பகவான் சரேலென அப் பாம்பை எடுத்துச் சென்று மறைந்தார். கிடைத்தற்கரிய ஒரு மஹா ஸர்ப்பத்தை இழந்த அப் பிடாரன் தேசிகனின் திருவடி வணங்கி பிரார்த்திக்க, ஸ்வாமியும் கருட பஞ்சாஸத்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கருத்மானை ஸ்தோத்ரம் செய்து சங்க பாலனை மீட்டுக் கொடுத்தார்

திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் தங்கி யிருக்கும் காலையில் சில பொறாமைக் காரர்களால் ஏவப்பட்டு. ஒரு கொற்றன் தேசிகனிடம் வந்து, ‘ உங்களுக்குக் கிணறு கட்டத் தெரியுமா? இது தெரியாமல் எப்படி ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரரானீர்கள்?’ என்று கேட்டான்.இதைச் செவியுற்ற தேசிகன் தலைப் பாகைக் கட்டி, கையில் கட்டடச் சாதனங்களுடன் கிணற்றில் இரங்கி, சற்றும் ஏறுமாறில்லாமல் அழகாகக் கற்களை அடுக்கி, கிணற்றைக் கட்டி, கொற்றனைத் திகைக்க வைத்து விட்டார். அந்தக் கிணறு இன்றும் திருவயிந்தையில் தேசிகனது திரு மாளிகையில் இருப்பதைக் காணலாம்

ஸகல கலா நிதியாய் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென எல்லோரும் போற்றும் நிலையிலுள்ள ஸ்வாமி தேசிகனைக் கண்டு பொறாமை கொண்ட ஒரு சந்நியாசி ஷுத்ர மந்த்ர பிரயோகம் செய்து
தேசிகனின் வயிற்றில் ஜலோதரம் என்னும் வியாதி யுண்டாகும்படி செய்தான். ஸவாமி அதற்குச் சளைக்காமல் தம் எதிரே நிற்கும் கம்பத்தைக் கீறி அதன் வழியே தமது உதரத்திலேற்றிய நீரெல்லாம் வழிந்தோடும்படி செய்தார். அவனும் அவரை வணங்கி மன்னிக்க வேண்டினான்.

ஸ்ரீ தேசிகனுக்கு அளிக்கப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹம். என்னும் விருதைப் பார்த்து பொறாமை கொண்ட ஒரு வித்வான்”ஒரு ராத்திரியில் ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடியை வருணிக்கும் ஆயிரம் ஸ்லோகங்களை நம் இருவரில் யார் இயற்றுகிறோமோ அவருக்குத் தான் கவி தார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருது பொருந்தும்” என்று கூறி, தாம் ‘பத கமல ஸஹஸ்ரம்’ இயற்றுகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், அவர் அந்த இரவு முழுவதும் முயற்சி செய்தும் முந்நூறு ஸ்லோகங்களுக்கு மேல் செய்ய முடியாமல் காலையில் ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியில் வந்து நின்றார். ஸ்ரீ தேசிகனோ ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் சிறப்பைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்ற பெயருடன் பற்பல விருத்தங்கள், சித்திர பந்தங்கள், பத்ததிகள் முதலியவைகளைக் கொண்ட ஆயிரம் ஸ்லோகங்களை அழகாகச் செய்து வந்து எம்பெருமான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். இந்த ரஸமான-ஸ்தோத்ர ரூபமான காவியத்தைச் செவி யுற்ற அந்த அந்தணர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு தேவரீரே கவி தார்க்கிக ஸிம்ஹம் என்று போற்றிச் சென்றார் –

ஸ்ரீ தேசிகனின் திருத் தகப்பனாரின் திருவத்யயன நாள். அதில் நிமந்த்ரணம் செய்யத் தகுதியுள்ள இருவரை ஸ்வாமி முன்னாகவே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சில பொறாமைக்காரர்கள் நிமந்திரணத்தன்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஸ்வாமி நித்ய கர்மா நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அபராஹ்ணத்தில் நிமந்த்ரிதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர்பார்த்து அவர்கள் வராமையால் பகவானுக்கு நிவேதனம் செய்த பின், மூன்று இலைகளைச் சேர்த்து, பதார்த்தங்களைப் பரிமாறி ப்ரோண பரிஷேசனாதிகளைச் செய்த பின் திரைக்கு வெளியில் வந்து அபிச்ரவண மந்திரங்களை ஸேவித்து வந்தார். என்னே ஆச்சரியம் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று இலைகளில் இருந்த பதார்த்தங்கள் செவ்வனே புசிக்கப்பட்டு, வெளியில் வேடிக்கை பார்க்கும் துஷ்டர்கள் கண்களுக்கு மூன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் வெளிக் கிளம்பிச் செல்வது போல் காணப்பட்டது. அந்த துஷ்டர்களும் தமது கர்வமழிந்து நின்றனர். அங்னம் நிமந்தரணம் அமுது செய்தது ஸாக்ஷாத் ஹயக்ரீவனும், பேரருளாளனுமே என்பதை ஸ்வாமி அறிந்து பரமானந்தமடைந்தார்

ஸ்ரீ பாஷ்யத்தின் வியாகேயானம் ஸ்ருத ப்ரகாசிகை. இதை இயற்றியவர் சுதர்சன பட்டர் என்பவர். அவர் ஸ்ரீ ரங்கத்தி லிருந்த போது, முகம்மதியர்களால் ஸ்ரீ ரங்கம் ஆக்ரமிக்கப்பட்டது. அப்பொழுது சுதர்சன பட்டர் முதலான பல பெரியோர்கள் துருஷ்கர்களால் கொல்லப்பட்டனர். அந் நிலையில் அங்கிருந்த ஸ்ரீ தேசிகன் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களுடன், ஸ்ருத ப்ரகாசிகையையும் கர்நாடக தேசத்திலுள்ள ஸத்யாகாலத்திற்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார். ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த வியாக்யானமான ஸ்ருத பிரகாசிகையை ரக்ஷித்த பெருமை ஸ்ரீ தேசிகனையே சாரும்.
இப்படி எத்தனையோ ஸத் கரந்தங்களை இயற்றியும், ஸத் காரியங்களைச் செய்தும், தமது ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரத் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய பெருமையை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் வருணிக்க இயலாதெனில் மிகையாகாது.ஸ்ரீ தேசிகன் 102 ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து ஒரு செளமிய கார்த்திகை மாதத்தில் தமது அவதார ஸமாப்தியைச் செய்தார். ஆனால், இவ்வுலகமுள்ளளவும், இவர் அருளிய கிரந்தங்களாலும் இவர் காட்டிய நன்னெறியாலும் இவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து வருவதரகவே நாம் கருதி, இவரடியைப் பின்பற்றுவோமாக,

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின் வருமாறு
(1) ஸ்தோத்ரங்கள் 28
(2) வேதாந்த கிரந்தங்கள் 14
(3) வ்யாக்யாந் கிரந்தங்கள் 8
(4) ரஹஸ்ய கிரந்தங்கள் 31
(5) தமிழ்ப்ரபந்தங்கள் 24
(6) காவியங்கள் 4
(7) நாடகம் 1
(8) அநுஷ்டானக் கிரந்தங்கள் 2–ஆக 112 கிரந்தங்கள்

ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும் நாடகத்தில் காணும் பின் வரும்
ஸ்லோகத்திலிருந்து ஸ்வாமியின் திரு வாக்கினாலேயே இவர் வேங்கடேச கண்டாவதாரம் என்னும் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது –
வித்ராஸிநீ விபுத வைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதெள ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜநை: உபபத்தி பூம் நா கண்டா ஹரே: ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி

(அதாவது. ப்ரஹ்ம தேவன் பெருமாளை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானிகளான பெரியோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்)


கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம்:.


ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;
மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |
வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;
லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ – ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||–[இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திருமேனிக்கும் , அங்கு உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது)

விளக்கொளி எம்பெருமானே கம்பீரமானதும்(ஆழமானதும்) அழகியதும் மனிதர்களின் தாபத்தைப் போக்குவதும் இனிமையாய் விளங்குவதும் குற்றம் , அற்றதும் இந்த்ர நீலத் துண்டம் போல காணப் படுவதும் தாமரை (பிராட்டி)க்கு , உறைவிடமாகவும் உள்ள உன் திருமேனியும் லக்ஷ்மீ ஸரஸ் என்ற பொய்கையும் வேகவதி நதியின் நடுவில் சாயலின் அழகை செய்கின்றன !
விளக்கொளி எம்பெருமானே !வேகவதி நதிக்கு , அருகில் உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் நீரில் தெரிகின்றன .உன் திருமேனி கம்பீரமான தோற்றம் உடையது -மிக அழகியது -ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது அனுபவிக்க மிக இனியது இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது -இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது -பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது -இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .
இவ்வாறே , ‘லட்சுமி ஸரஸ்’ என்னும் பொய்கை ஆழமானது மிக அழகியது வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது இனிய நீர் நிறைந்து அழுக்கு , அற்றது இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .
இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !


ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

த்யாநம்
அகிலபுவந ரஷா ஸாதநா யாவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக்மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தெள வேத சூடா குரெள மே
பவது பரம பக்தி: ஸ்ரீநிதெள வேங்கடேஸே
-1

அஸ்மத் தேஸிக தத் குரூந் ஸ்ருதி ஸூரஸ் சூடார்ய ராமாநுஜெள
ரங்கேஸம் ரகு புங்கவாஜ குரும் ஸ்ரீமந் நதார்த்திச்சிதம்
ஸ்ரீ ராமாநுஜ பூர்ண யாமுந முநீந் ராமார விந்தேக்ஷணெள
நாத ஸ்ரீ ஸடகோப ஸைந்ய ரமண ஸ்ரீ ஸ்ரீபதிந் பாவயே–
2

ஸ்ரீமத் த்ரயீ ஸேகர தேஸிகஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரம் குணது: க்ரியாத: ப்ரக்யாது மக்யாதி நிராளி ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸா துமுதே தநோமி! 3

ஸ்தோத்ராரம்ப:
வேங்கடேஸ க்ருபா லப்த அநந்தார்ய ஸ்வப்ந சிந்தித:
தோதாரம்பா கர்ப்ப ஸுர்ய ஸங்க்யாப்தாவாஸ் பாஸுர –1-

மது ஸூதந ரங்கேஸ ஸாகூதேஷித ஐந்மக?
நபஸ்ய ஸ்ரவண ஸ்ரீஸ தீர்த்த வாஸர ஐந்மவாந்–2-

தீப ப்ரகாஸ நிகட ஸத்மாவிர்பாவ பாஸுர : ஸ்ரீ கண்டாவதாரத்வ ஜ்ஞாபகாநேக யுக்திமாந்-3-

புண்டரீ காஷாக்ய யஜ்வ பெளத்ரோ நந்தார்ய புத்ரக !
ஆத்ரேய வாதி ஹம்ஸாம்பு வாஹார்ய பகிநீ ஸுத 4

ஸ்வ ஸ்வ காலாநந்த குரு க்ருத ஜாத க்ரியாதி !!
அநந்தார்ய க்ருத ஸ்ரீமத் வேங்கடே ஸாபி தாநக–5-

வரதாசார்ய ராமாநுஜார்யோபய க்ருபேக்ஷித
விஸ்வாமித்ராந் வயாப் தீந்துர் ஜகத் புணய மஹா பலம்–6-

அநந்தார்யாசார்ய ரத்ந க்ருதோப நய ஸம்ஸ்க்ருதி
வாதி ஹம்ஸாம் புவாஹர்ய க்ருததாபாதி ஸம்ஸ்க்ருதி :–7


அதீத ஸாங்க ஸஸி ரஸ்கா கருத்ரிம ஸரஸ்வதி :
வாதி ஹம்ஸாம் புவாஹார்ய ஸம்ப்ராதாகில ஸாஸ்த்ரதீ : |
–8-

கணாத தந்த்ர பாரீண ஆஷபாதீய கௌதம
மீமாம்ஸா மாம்ஸலோ வ்யாகரண தந்த்ர பதஞ்ஜலி: | 9

காவ் யாலங்கார தத்வஜ் கவிதார்க்கிக கேஸரீ |
யதிராஜ பதாம்போஜ த்வந்துவ மாத்வீ மது விரத 10

யாமுநார்ய ப்ரேம மூர்த்தி: நாத யோகிஸ நாதவாந்
பராங்குஸ பதா ஸக்த : பரகாலாங்க்ரி பக்திமாந்! 11

ஸ்ரீபராஸர பட்டார்ய மேக ஸூக்த்யம்பு சாதக :
ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிஸ்ரேந்து ஸூக்தி ஜ்யோத்ஸ்நா ச கோரக! ||| 12

ஏகாந்தவாஸ ரஸிகோ த்வயசிந்தா பராயண :
தரிரா கக்நஸ் சதுஷ் பாண்டித்ய நிர் விண்ணைக மாநஸ–13-

பஞ்ச ப்ரகார ஸந்துஷ்டி ஷடூர்மி த்வம்ஸ கோவித!
ஸப்த வ்யஸந தத் த்யாக தத் ஸ்வீகார விஸாரத–14-

அஷ்டாங்க பக்திதீ ரஷ்ட புஷ்பீஷ்டாஷ்டாங்க யோகக
நவ வ்யாக்ருதி வித் ஸ்ரீபாஷ்யாத்ய பத்ய தஸார்த்த வித் –15-

ஸதாப்யதிக ஷட் பஞ்சாஸத் தரயீ மௌளி நீதிவித்
ஸஹஸ்ராதி க்ருதி ந்யாய விவேசந துரந்தர | 16

லஷகோடி ஸ்வ ப்ரபாவாம் ஸாநர்ஹ பஜந ஸத்திதி! !
காம க்ரோதாதி நிகில துராத்ம குண வர்ஜித : 17-

பாரதாத் யுக்த ஸகல ஸதாத்ம குண பூஷித
ஸாஸ்த்ரோக்த ஸகலாசார்ய லஷ்மாவாஸ வரஸ்த்தலீ –18-

ஸ்ரீ வைஷ்ணவாநேக லஷ்ம ஸோபித ஸ்வர்ண விக்ரஹ :
அகஸ்த்ய ஸாக ப்ரமுக ஸாத்விகாஹார பாஸூர –19–

ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸ்தாபநாசார்ய தல்லஜ
தேவ நாயக பத்ரா ஸீரர்த்தா ஹீந்த்ர புர ஸ்திதி: 20-

தார்ஷ்ய மந்தர ஜப ப்ரீத தார்ஷ்ய தத்த வர ப்ரியா
தார்ஷ்ய தத்த ஹயக்ரீவ மநு ப்ரீத ஹயாநந –21-

வாகர்த்த ஸித்தித ஹயக்ரீவ ஸ்தோத்ர விதாயக:
ஹயாஸ்யத்த லாலாம்ருதா ஸ்வாதந ஸு போஷித: -22-

தார்ஷ் யாஜ்ஞா க்ருத தார்ஷ்யைக பஞ்சாஸத் பிரீத தார்ஷ்யக:
தேவ நாயக பஞ்சாஸத் ஸ்துதி ஸம்பந்ந ஸத்ய வாக் –23-

ப்ராக்ருதோக் யச்யுத ஸதா ப்ராக்ருதாநந்த ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் த்ரிமணி ஸம் ப்ரோத காதாஸர விதாயக: -24-

க்ருத கந்துக காத: குபேராஷீ கீதிகாரக
குடிகா கீதி க்ருட் டோலா காதா க்ருதி விஸாரத |-25-

உபாலம்பாஸ்வய ஸ்ரீமத் காதாக்ருதி விசக்ஷண: ||
நவ ரத்ந ஸ்ரக் விதாதா பரதர்ஸந பங்கக் கருத்–26-

புராணோக்தாநேக தத்வ ஸ்ருஷ்டி க்ரம் நிரூபக
பரகால க்ருத ஸ்வர்ண பிம்ப ஸ்தேயா விரோத த்ருக்–27-

ஸ்வதந்த்ராஷ்டோத் தரஸத விரோத பரிஹாரவித்
ரகுபுங்கவ கத்ய ஸ்ரக் க்ருத கோபால விம்ஸதி:–28-

கோபபூர் கதி பத்ராஸாஸந துஷ்ட த்ரி விக்ரம:
தேஹளீஸ ஸ்துதி ப்ரீதாதி பக்த ஸ்துத மாதவ!–29-

ஹஸ்தி ஸைலேஸ பஞ்சாஸத் ஸ்துத நாகாசலேஸ்வர! !
ஸ்ரீசிந்ஹமாலாஹ்வ க்ருதி ப்ரீத ஸஜ்ஜந மாநஸ–30-

த்வாத ஸாக்யாந காதா க்ருந் நியாஸகாதா விதாயக:
அர்த்த பஞ்சக ஸங்கராஹி காதா க்ருதி விசக்ஷண–31-

வைஷ்ண வாவஸ்யக திந சர்யா க்ரம விதாயக
ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்ய க்ருத் க்ருதாஷ்ட புஜாஷ்டக!–32-

யாதோக்தகாரி ஸ்துதி க்ருத் க்ருத காமாஸிகாஷ்டக
ப்ரபத்தி தீபிகா ப்ரீத ஸ்ரீமத் தீப பிரகாஸக:–33-

ப்ரபந்நாந்வஹ ஸம்பாவ்ய பரமார்த்த ஸ்துதி ப்ரிய :
ஸூதர்ஸ நாஷ்டகோத்தூத ஸ்ரேயோ பாதக ஸஞ்சயா -34-

ஸஜ்ஜநார்த் யாஸாஸ நார்த்த ஷோடஸாயுத ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் வேங்கட நாதீய மங்களா ஸாஸந ப்ரியா –35-

தயாஸதக வீணாகீதி ப்ரீத ஸ்ரீநிவாஸக:
அயோத்யாத் யுத்தர திஸா திவ்யதேஸ கதி ப்ரிய–3
6-

காஞ்சீமாயி யாதி ஷுத்ர நிராஸி ஸ்தம்ப லேகந:
வித்யாரண்ய சமத்கார தாயி வைராக்ய பஞ்சக: !–3
7-

க்ருத ஸேஸ்வவர மீமாம்ஸோ மீமாம்ஸா பாதுகா க்ருதி:
பட்டாதி ஸூத்ர துர்வ்யாக்யா நிராகரண தக்ஷிண!–38-

பரிஸங்யாக்ய வித்யர்த்த நிரூபண துரந்தர!!
ஸ்ரீரங்கநாத ஸேநேஸ ஸாஸநோத்தம் ந ப்ரிய:–39-

பட்டாரகா த்யுக்தரீதி ரங்கி ஸேவாக்ர மோத் ஸுகா
பகவத் த்யாந ஸோபாந வர்த்தித ஸ்ரீஸ பக்திக!||–40-

ஸததூஷண் யபக்ராந்த மாயி துர்வாதி கர்வக
நிர்விஸேஷ ப்ரஹ்ம ஸப்த முக்யா முக்யார்த்த பங்க க்ருத் –41-

நிர்வி ஸேஷ ப்ரஹ்ம் ஜிஜ்ஞாஸ் யத்வ பஞ்ஜந் தக்ஷிண:
கர்ம ப்ரஸ்ம விசாராத்ம மீமாம்ஸைக்ய விதாயக : ! –42-

விதாநாநர்ஹ வாக்யார்த்த ஜ்ஞாந ஹேதுத்வ பஞ்ஜக!
உபாஸநா ஹேது வேத்தா பாதாநு ஸ்ருதி பாதக–43-

யஜ்ஞாதி ப்ரஹ்ம விவிதிஷா ஹேதுத்வ நிரோதக!
ஸாப்தா பரோஷஹா தூத பூர்வ வ்ருத்த சதுஷ்டய–44-

மாயி வாதாதி காரக்நோ நிர்விஸேஷாத்ம பாவஹா
நிர்விஸேஷ பராலம்பி நிர்விகல்பக பஞ்ஜந!–45-

ஸந் மாத்ராத் யஷரோத்தா பேத தோஷோத்தார கோவித!
பரவேதா ப்ரமாணத்வ திருக் த்ருஸ்யத்வா நுமாநஹா–46-

வயாவர்த்தமாந பாவாநு மாந ரோதந தத்பர :
மாயித்ருக் திருஸ்ய ஸம்பந்த நிராஸைக விசக்ஷண:–47-

மாயி பாஹ்ய பிரகாஸாநுப பத்தி ஸ்தாபந க்ஷம.
ப்ரஹ்மாஸ்ர யாஜ்ஞா ந ஹந்தா ப்ரஹ்மா வேத்யத்வ பஞ்ஜக!–48-

ஜ்ஞநா ஜந்ம நிராக்ருத் தீ நிர்விகாரத்வ மாநஹா
தீ நாநாத்வ விரோதிக்நோ நிர்விஸேஷா னுமாநஹா !!–49-

ஸம்விதாத்மத்வ ஹந்தா ஹமர்த்தாத்மத்வா நிரூபக:
ஜ்ஞாத்ருத்வாத்யாஸ ஹந்தா ச ஸாக்ஷி பஞ்ஜந் தத்பர!–50-

சாஸ்த்ராத்யஷ விரோதஜ்ஜோ அந்ருதா ஸாத்ரு தார்த்தவித்
ஜீவன் முக்தத்வஹா பாத ஸாமாநாதி கரண்யஹா –51-

ஸம்வி தத்வைதஹா மாய்யுபாதேஸா நுபபத்தி வித்
நிர்விஸேஷ திரோதாந ஹந்தாத் மாத்வைத பஞ்ஜக: ! 52

ஜீவேஸ் வரைக்ய வாதக்நோ அகண்ட வாக்யார்த்த பாதக 1
பாவ ரூபா ஜ்ஞாந ரோத்தா ஜீவா ஜ்ஞாந விநாஸக! || 53

அவித்யா நுபபத்திஜ்ஜோ மாயா வித்யா விபாகஹா !
குத்ரு குந்நீத ஸம்ஸார நிவர்த்தக நிவர்த்தக! 54

நிவ்ருத் யநுபபத்திஜ்ஞ : ஸப்தா வேத்யத்வ பஞ்ஜக !
நிஷ் ப்ரபஞ்ச நியோகநோ விகல்பாமாநதா ப்ரிய–55-

உப ப்ரும்ஹண வைகட்ய யுக்த துர்மத வேதிதா!
ஐக்யோபதே ஸாந்ய தோபபத்ய ஸம்பவ பாதக:–56-

குத்ருக் ஸாஸ்த்ராதி காரக்நோ முக்த தத்வேத்ய தத்வ வித்
ஸ குணாகுண வேதாந்த வ்யவஸ்தா கரண க்ஷம:–57-

ப்ரஹ்மோ பாதாநவிந் மாயோ பாதாநத்வ நிராஸக !
கார்யா த்யநுபபந்த்வ பரிஹார விசக்ஷண :-58-

ப்ரஹ்மா நந்தத்வ மதிநிர் விஸேஷாநந்த பஞ்ஜக
நிர்விஸேஷ ப்ரஸ்ம நித்ய பாவ பஞ்ஜந தக்ஷிண:–59-

அத்விதீய ஸ்ருதி வ்ராத விஸம்வாத விசாரக :
ஸத்வாஸத்வ விவேக்தா ஜீவைக்ய பங்க விசக்ஷண:-60-

குத்ருக்பக்ஷாப ஸூத்ராதி கரண வ்யாஹதி ப்ரிய:
அதிகாரி விவேகஜ்ஞோ யதி லக்ஷ்ம விவேசக:–61-

அலேபக மதச்சேத்தா மாயி ஸூத்ரார்த்த பாதக:
தஸாவதார ஸ்தோத்ராக்ய ஜகந் மங்கள காரக:–62-

ஸ்வப்ந பாஷ்ய கருதாஜ்ஞப்த வேத சூடா பிரவர்த்தந
யதீந்த்ர ஸப்தத்யாக்யோபசார ஸ்ருத்யந்த தீபக்ருத்–63-

பக்தி ப்ரகர்ஷ விஹித ஸ்ரீ பூ கோதா ஸ்துதி பரிய:
ரங்கேஸாஜ்ஞா க்ருத நியாஸ திலக ஸ்தோத்ர ரத்நக:–64-

ஸ்ரீரங்கநாத தத்த ஸ்ரீ வேதாந்தாசார்ய நாமக :
ரங்கேஸ்வரீ தத்த ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ர்ய பூஷித:–65-

அயத்நக்ருத வாதித்ரய கண்டந நிபந்தந !
தத்வ டீகா வ்யாக்ருத ஸ்ரீமத் பாஷ்யாம்ருத ஸாகர–66-

வாஜிஸாகா ஸிகா வ்யாக்யா க்ருதி ஸம் ப்ரீத மாநஸ
தாத்பர்ய சந்த்ரிகா ஸூஸ்த்த கீதா பாஷ்ய மஹாபத–67-

யாமுநார்யோக்த கீதார்த்த ஸங்கரஹ த்ராண காரக:
பிஷ்ட பஸ்வாதி காதோக்தி வ்யவஸ்தர கரண ஷம–68-

பரத்வம்ஸ ப்ராக பாவதி வ்யவஸ்தா கரண ஷம:
வைத ஹிம்ஸா அஹிம்ஸதா ஸ்தாபந நீதி ஸூநீதிக –69-

முமுஷு ஸூக்த வாகாதி பலோக்தி ததி நீதிவித்
அவாப்த ஸர்வ காமத்வ குண நிர்ணய கோவித: 70-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வ ரூபாநித்யத்வ ஸாதக!!
ஸாங்க கர்ம ஜ்ஞாந பக்தி யோகாவத்ருதி கோவித!! 71-

விபூதி விஸ்வரூபாதி விரோத ஸமநக்ஷம ஆத்மாநாத்ம குண ஷேத்ர தஜ்ஜ்ஞ ஸோதந தக்ஷிண:–72-

புருஷோத்தம தேவாஸூர விபாக நிருக்தி வித்
கர்த்ரு கர்மாதி ஸத்வாதி குணாதீந விபாகவித்–73-

ஏகாயநோக்தா ஸூயாவிர் பாவ வ்யாக்ருதி தக்ஷிண!
உச்சிஷ்டாதந ஹேத்வார்ய பேத நிர்ணய கோவித:–74-

ஸ்த்ரீ ஸூத்ர பகவத் பூஜா தாந்த்ரி கத்வாபி தாயக:
ஸ்வ பராதீநதா யத்த ஸாஸ்த்ர வைய்யர்த்ய பாதக:–75-

தத்வ முக்தா கலாப ஸ்ரக் க்ருத ஸர்வார்த்த ஸித்திக
க்ருதாதி கரண ஸாராவள்யாக்ய க்ரந்த ஸிகாமணி !-76-

ஸாராவளி வ்யாக்ரியாதி கரணாதர்ஸ காரக !
ஸ்ரீமந் ந்யாய பரீ ஸூத்தி விஸூத்தீக்ருத மாநஸ :–77-

ந்யாய ஸித்தாஞ்ஜநோ தஞ்சந் மேய யாதாத்ம்ய போதந:
ஆஷ பாதீய ஸூத்ரார்த்த ஸிஷா கரண தீக்ஷித–78-

அஷ பாத சமத்கார தாயி ஸூத்ர ஸமூஹக்ருத்
வ்யாஸாஷ பாத ஸூத்ரார்த்த விரோத பரிஹாரவித்—79-

த்ரவ்யாத்ரவ்ய பிதா தத்தல் லக்ஷணோக்தி விசக்ஷண
த்ரைகால்யா நேக ஸித்தாந்த நிராஸா ஸம்பவாந்தக:–80-

ரூபாதி பஞ்சகா தாரா பாவ வாத நிராஸக ! தர்ம தர்மித்தவா பலாப வாதத்வாந்த திவாகர!–81-

ப்ருதிவ்யாதி சதுர் த்ரவ்ய மாத்ர பக்ஷ விபேதிதா!
த்ரி குணேந்த்ரிய வர்கா நத்யக்ஷ பாவ விதாயக:–82-

பிரக்ருத்யாகம கம்யத்வ ஜகந் மூலத்வ போதக
சதுர்விம்ஸதி ஸங்க்யாக தத்வ ஸ்ருஷ்டி ப்ரகாரவித்–83-

ஸாங்க்யாதி ஹைதுகோந்நீத ஸ்ருஷ்டி தத் தேது பாதக !
அஷ்டீகரண பஞ்சீக்ருதி த்ரி வ்ருத் க்ருதி விபேதவித்–84-

அந்தயாவயவிஹா அந்யூநா நுத்க்ருஷ்ட பரிமாண வித்
ஸரீரோத்பத் யுபாதநைக பூதோக்தி நிராஸக–85-

ஸாங்க்ய ஸத் கார்ய வாதக்ந க்ஷணிகத்வ மதாந்தக
ஷணோபாதி விஸேஷஜ்ஞோ ஹேது ஸாத்யா பலாபஹா–86-

ப்ரதிஸங்க்யா ப்ரதீ ஸங்க்யா நிரோத மத பஞ்ஜக
அஷ பூத விகாரத்வ ஸாதக ப்ராண நாஸநii 87

பூதேந்த்ரியா ப்யாயகத்வ நிர்த்தாரண விசக்ஷண:
அந்த கரண நாநாத்வ பாஹ்யா ஷைக்ய நிராஸக: 88-

மநோ வ்யாபித்வ நித்யத்வ ஹேந்த்ரிய அணுத்வ வேதிதா
சக்ஷராதி ப்ராப்யகாரி பாவஸாதந தக்ஷிண–89-

ஸப்ததேஸ கத ஸ்ரோத்ர கார்ய க்ருத்வாபி தாயக|
ஸ்வதேஸாகத வ்ருத்தித்வ நிக்ராஹி ஸ்ரோத்ர பாதக:–90-

வ்யோமாத் யக்ஷத்வ நிர்ணேதா காவகா ஹோபகார வித்
ஆகாஸா வரணா பாவ மாத்ரபாவ விபஞ்ஜக–91-

ஆகாஸ நித்யத்வ விபு பாவ வாத விநாஸக
திக் வஸ்து ஸாதகச்சேதீ திக் வ்யோமாபேத ஸாதக! ||-92-

ராஜ ஸாக்ய மஹத் தத்வா பிந்ந ப்ராண விபஞ்ஜந :
ப்ராணாக்ஷத்வா வாயுபாவ வாத நிஹ்நவ தக்ஷிண |–93-

வைஸ்வாநர ஸ்வரூபாதி நிரூபண விசக்ஷண
தேஜோ தர்ம ப்ரபாதேஜோ பாவ ஸாதந தத் பர– 94-

ப்ரபா தீபாத் யவயவ பாவாபாவ விதாயக:!ப்ரபாவிஷய பாஷ்யோக்தி விரோதி ஸமநக்ஷம: 95-

ஸ்திராஸ்திராக்ய தேஜோ விபாக ஜ்ஞாந விசக்ஷண!
தம ஆலோக விரஹத்வாபாவ பருதிவீத்வ வித்11 96-

ப்ருத்வீ பதந பருத்வீ ப்ராமண வாத விநாஸக:
கால ஸ்வரூப கேஸாந்ய பாவஜ்ஞாந துரந்தர:–97-

காலானுத்பத் யஷகம்ய பாவஸ் ஸ்த்தாபந தத் பர
கால ஸர்வ வ்யாபகத்வ ஸர்வ ஸாதகதா ப்ரிய |–98-

ஆத்மாங்க மாநஸாக்ஷஜ்ஞாநாதி பேத ப்ரஸாதக:
ஆத்ம ப்ரத்யகத்வ கர்த்ருத்வ ஸ்வ ப்ரகாஸத்வ ஸாதக:–99-

யத்ந வைபல்ய ஹர்தோபாதிக ஜீவேஸ பேதஹா!
ஸ்வாபாவிகேஸ ஜீவாத்ம பேதாபேத மதாந்த க்ருத்!!–100-

ஏக தந்வேக ஜீவாத்ம மாத்ரபஷ விதாரண : ப்ரஹ்ம ப்ரதிச்சந்த ஜீவ வாத பஞ்ஜந தக்ஷிண–101-

சதுர் விதாத்மா நித்யத்வ வாத ப்ராண விநாஸந!
ஜீவாத்மா நித்யத்வ விபு வாத பஞ்ஜந தத் பர!-102-

ஜீவைககால நைகாங்கா திஷ்டா த்ருத்வா பிதாயக:
ஜீவ வ்யாபித்வோ பபத்திஹா ஜீவாணுத்வ ஸாதக: — 103-

தேஹதுல்ய பரீமாண ஜீவ வாத விநாஸக.
நித்ய ஸம்ஸாரி ஸதஸத் பாவ ஸ்த்தாபந தத் பர |-104

மோஷோபாய ஸு துர்ஜ்ஞாந பாவவாத விபஞ்ஜந
அபவர்கார்த்தி ஸத்தேது வித்யாநாநா விபாக வித் –105-

க்ரியா வித்யோபகாரித்வ ப்ரகார ஜ்ஞாந கோவித:
க்ரியாவித்யா கர்த்ரு ஸம்ஸ்காரத்வ வாத விநாஸக: |||-106-

ஸர்வாஸ்ரமி ப்ரஹ்ம வித்யாதி க்ரியா ஸ்தாபந க்ஷம:
கர்ம வித்யாஸ்ர மாங்கத்வ நித்யத்வாதி விபாகவித்!! | 107

ப்ரவ்ருத்யாக்ய நிவ்ருத்யாக்ய கர்மபேத ஸ்வரூபவித்
த்ரைவர்ணிகாதிகரண ஸர்வாதீகார பேத த்ருக் –108-

தத்வமஸ்யாதி புவந்பாதகத்வ விநாஸக : ஜகந் நிவர்த்தக ஜ்ஞாந நிவர்தக நிவாரக: !-109-

ஜகந் நிவர்த்தக ஞாந வேத்யாபாவ விதாயக
ஜகந் நிவர்த்தக ஞாநாதாராபாவ விதாயக:-110-

ப்ரஹ்ம வித்யா பாப நாஸ காரண த்வோப பத்தி வித்I
வித்யாநாஸ்ய த்ரி வர்காதி ஸூக்ருதோக்தி விசாரக: || 111–

அஸ்லே ஷோத்தர காம்யார்த்த புண்ய ஸம்பவ வேதிதா
விரஜோத்தர தீராந்த த்யக்த துர்வாஸ நோக்திமாந் –112–

முக்த புத்தி விகாஸோத்தர ஸீமா பாவ ஸாதக |
முக்தாத்யைச்சிக தேஹாதி யோக வர்ணந தத் பர: 113-

முக்தாதீச்சா விகாதாபாவ ஸ்தாபந விசஷண!
நிர்துக்க முக்தா நுபவ வேதீ நித்யாக்ய ஸுரிவித்-114-

தேவதாந்தர தாதாத்ம்ய முக்தி வாத தமோநுத
மதாந்தரஸ்த்த ஸாயுஜ்ய ஸ்ப்தார்த்தானுப பத்தி வித்– 115-

முக்தாத்ம புநரா வ்ருத்தி ப்ரஸங்க பரிஹாரக
வைஸேஷிகாதி பாஷாண துல்ய மோஷோக்தி வாரக! 116-

ஸாங்க்யாபிமத ஸம்ஸார மோஷ பக்ஷ நிவாரக
மதாந்தரஸ்த்தாபிமத மோஷ வைவித்ய வாரக!–117-

ஈஸ வேதைக கம்யத்வ வேதாபாத்யத்வ ஸாதக:
உபதேஸாநு மாநே ஸாநுமாந தமந க்ஷம: –118-

ஸாஸ்த்ர யோநித்வ ஸாங்க்யாதி க்ருதி த்வய விரோதஹா
நிமித்ததோ பாதாநத்வ த்வயைகாதார வேதிதா–119–

ஸூக்ஷ்ம ஜீவாசித் விஸிஷ்டே ஸோபாதாநத்வ ஸாதக
மதாந்தரஸ்த்த ப்ரஹமோபாதா நத்வோக்தி நிவாரக!! -120-

ஜீவாசிதீஸ விக்ருதிமத் ப்ரஹ்மோக் த்யபநோத 1
ஸர்வாநு வ்ருத்த ஸந் மாத்ர ப்ரஹ்மத் வோக்தி விபஞ்ஜக: –121-

ஜீவாதி பரிணாமீஸ ஜைநகந்தி மதாந்த க்ருத்
ப்ரஹ்மோபாதிக ஜீவத்வ பாஸ்கரோக்த்யபஹாஸக: || 122-

அவித்யா ஸஹித ப்ரஹ்ம விவர்தோக்த் யுபரோதக |
மதாந்தஸ்தாவித்யாவ லோகநாநுப்பத்தி த்ருக்–123-

ப்ரஹ்ம ஜ்ஞாநாநுமா ஸ்ரெளத பாதோதா ஹரண க்ஷம :
மாயாதிபத ஸத் ப்ரஹ்ம தோஷ ஜ்ஞாபக தாபஹ : || 124-

அவித்யா ஸாதகாஜ்ஞாந கார்யமித்யாத்வ ஸாதக!
கார்யோபாதாந ஸாத்ருஸ்ய நியமோக்தி விபஞ்ஜகா -125-

ஐகந் மித்யாத்வாதுமாந பஹு வ்யாஹதி போதக:”
அநித்ய மித்யா பாவ ப்ரக்லுப்தி பங்க விதாயக -126-

பேதா த்யக்ஷ விருத்தார்த்த நிஷேத ஸ்ருதி போதக:
அபரோஷாபாத்யதா யோக்யா யோக்ய ப்ரத்யஷ வேதிதா| 127-

மாயி ஸாஸ்த்ராத் யஷ மூல தோஷ ஸாம்யோப பாதக
துல்ய தோஷ ப்ரமாணந் யோந்ய ஸம்பாத கதாபஹ! 128-

ஸாஸ்த்ரைக வேத்யாநத்யஷ நாநாபேதோ பாதக
மாயி பெளத்தாதி ஸாம்யாபாதந நிர்வஹண க்ஷம : 129-

மாயி பக்ஷாநேக பாதக விகல்பாபிதாயக:
பர ஸாஸ்த்ரா நூபபத்தி பரிஹாரா விசக்ஷண! -130-

ஈஸ தேஹாதி பஞ்சாபா க்ருதிவாத நிராஸக!
தேவாதி விக்ரஹாபாவ வாத வ்ராத நிராஸக: || 131-

வ்யூஹாதி பஞ்சரூபேஸ பூர்ணஷாட் குண்ய வேதிதா
ஈஸ வ்யூஹ விஸேஷாபி மாநித்வ பரிஹாரக -132-

ஈஸாத்மாசார்ய ஸிஷ்யத்வாபி நீதி பல ஸாரவித் |
ஈஸ சித்ராநேக வ்ருத்தாந்த விஸேஷாதி தத்வ வித்–133-

ஈஸ ஸர்வஜ்ஞ பாவாநுபபத்தி விநிவாரக!
ஸர்வேஸ ஸர்வ ஸக்தித்வ ஸ்வேச்சாவத்வா பிதாயக:–134-

தீஸ்வ பாஸ்யத்வ நித்யத்வ திரவ்யத்வ ஸ்த்தாபந க்ஷம :
புத்யவேத்யத்வ நித்யாநுமேயத்வ மதபஞ்ஜக.–135-

ப்ரமா விபர்ய யத்வாபர தர்கோஹ ஸ்வரூப வித்
ப்ரமாண லக்ஷணஜ்ஞஸ் ஸத் க்யாத்யர்த்த க்யாதி பாதக–136-

அந்யதாக்யாதி ஸந்த்யாக ஸ்வீகார த்வய ஸாதக
ஸந்தேஹ யாதார்த்ய வேத்தா அநிர்வாச் யக்யாதி பங்க க்ருத்–137-

அநிர்வச ஸ்வரூபாதி ரஜதோத்பத்தி பஞ்ஜக :
புத்தோக்த நிரதிஷ்டாந் க்யாதிவாத நிராஸக !–138-

அநெளபாதிக துச்சக்யாதிவாத ப்ராண நாஸக
யோகாசார பரஹர்த்தா ச ஹ்யக்யா த்யநுபபத்திஹா–139

ஆத்மாகார ஜ்ஞாந ஹர்த்தா ஹ்யாத்மக்யா த்யப ஹாரக
நிராலம்பந விஜ்ஞாநா நுமாபஞ்ஜந தக்ஷிண: 140-

பாஹ்யா நெளபாதிகா ஸத்க்யாதி ஸாதந விபஞ்ஜந
தீகதார்த்தோத் பவார்த்தாகார வாத பரிஹாரக! -141-

ஹரித்ரா சூர்ண நீத்யர்த்த தீ யோகோத்தா க்ருதி த்விஷத்|
ஸெளகதோர்தா நதிஷட்டாந க்யாதிவாத நிரோதக: 142-

அநாலம்ப க்யாதி ஹந்தா ஸ்ம்ருதி ஜ்ஞாந ஸ்வரூப வித்
ப்ரத்யக்ஷ லக்ஷண ஜ்ஞாதா திவ்யார்ஷாத்யஷ ஸாதக –143–

வைஸிஷ்டயா கோசர ஜ்ஞாந மதச்சேதந தீக்ஷித:
ஸம்ஜ்ஞாநுவித்த ஸர்வார்த்த புத்தி ஸப்தாத்ய பாதஹா 144-

யோகி ப்ரத்யஷாநுமாந் தூஷணோத்பாவந ஷம 1
மாநஸாத்யஷ பங்கஜ்ஞஸ் ஸந்நிகர்ஷ ஸ்வரூபவித் | 145–

அலௌகிகாக்ய ஸம்பந்த ப்ரத்யஷ மத பாதக
அநுமாநாத் யக்ஷமாந பஹிர் பாவ விதாயக: 146-

அநுமா மாநதா லஷ்மஜ்ஞோ அநுமாபாதி தர்கஹா
அநுமாந்வா பரோத்தார ப்ரகார விதகரணீ: |–147–

உபாதி லக்ஷணோபாதி விதூநந விஸேஷவித் !
வ்யாப்தி ஸ்வரூப வயாப்தி க்ராஹக மாந விசாரக 148-

வ்யாப்தி க்ரஹ ப்ரகார ஜ்ஞாதா வயாப்த்யாதி விபாகவித்1
கேவலாந்வய யநூமாந விஸேஷஜ்ஞாந ஸாதக : – 149-

மஹா வித்யா நிராஸோத்த விரோத பரிஹாரக
கேவல வ்யதிரேக்யா க்யாநுமா பஞ்ஜந தக்ஷிண–150

லக்ஷண ஜ்ஞோந்யவாத் யுக்த லஷணார்த்த த்வயாபஹா I
ஸ்வ பரார்த்தா நுமா ப்ராஜ்ஞோ நியாயாயவ வேதிதா 151

நிக்ரஹஸ்தாந ஹேத்வாபாஸ ஜாதிச்சல வேதிதா
வாத ஜல்ப விதண்டாஜ்ஞோ மாநாபாஸ விவேஸக: 152-

அநுமாநாத்யஷ பாஹ்ய ஸப்தமாந ப்ரஸாதக:
ஆகாங்க்ஷ யோக்யதா ஸக்தி வாக்யார்த்த ஸஹகாரி வித் 153-

பத வாக்ய ஸ்வரூபஜ்ஞோ அந்வி தாபிவதநோத் ஸுக.
அபீஹிதாந்வய ஜ்ஞாதா விஸிஷ்ட பத ஸக்திவித் 154-

விபக்த்யாக்யாத தாதூப ஸர்க தத்தித வேத்யவித்
ஸமாஸாந்வய கருந் முக்ய ப்ரத்யயார்த்த விஸேஷவித்–155-

ஸாப்த போதாகார வேத்தா லக்ஷண பத வ்ருத்திவித்
விஸேஷ்ய முக்ய வ்ருத்தா ப்ருதக் ஸித்த பத ஸக்திவித்–156-

பகவத் ஸர்வ ஸப்தாபி தேயத்வ ஸ்தாபந க்ஷம:
தத்வமஸ்யாதி வாக்யார்த்த நிரூபண விசக்ஷண:–157-

ஸப்தோக்த ஸப்த ஸாமாநாதி கரண்யார்த்த வேதிதா !
ப்ரமோத்பத்தி ப்ரமா ஜ்ஞப்தி ஸ்வதஸ்த்தோத் பாவந க்ஷம:–158-

வேத ப்ரவாஹ நித்யத்வ வேதே ஸாஜநி தத்வவித்
வித்யர்த்த வாத மந்த்ராதி ததர்த்தாவ த்ருதி க்ஷமா–159-

பாஷா மந்த்ர வ்யவஸ்தாவிந் மந்த்ரா வாந்தர பேத வித் !
அத்ர வ்யமாநவித் ஸத்வா ஸத்வ ஸப்தோக்தி பாதக:–160-

ஜநநாதி ம்ருஷாத்வோக்தி மதச்சேதந தத்பர:
த்ரவ்யாத்ர வ்யாநு மேயாத் யஷ பேதாபேத வாரக–161-

பேத பாதக நிஸ்தாரா த்ரயேயத்தா வதாரக
ரஜஸ் தமஸ் ஸத்வ குணோபயோகா தரவ்ய தோக்தி மாந் ;–162-

ஸத்வாத் யவஸ்த்தா வைசித்ர்யாநந்த்ய நிர்ணய கோவித:
ஸப்தாதி க்ராஹகாதார நியமோக்தி விசஷண:–163-

ஸப்தாதி குணயுங்நித்ய விபூதி வ்யாக்ருதி க்ரம
ஸர்வ பூதாஸ்ரிதத்வாநா த்ரவ்யத்வ ஸ்தாபந க்ஷம–164-

ஸெளகதோக்த தீவாநஜைந ஸப்த புத்கல வாதஹா
வர்ண வேதாநித்ய நித்யத்வ ப்ரகாராவதாரக | 165-

அநுஷ்ணாஸீத ஸீதோஷ்ண ஸ்பர்ஸாதார விஸேஷவித்
பூத பஞ்சக வர்ணோக்தி நிர் வோடா ரூபபேதவித் 166-

சித்ரரூபமதச்சித் ஸ்நேஹ குணாந்தர பாதக: நிராக்ருத குருத்வ த்ரவத் வாக்யாந்ய குணத்வய ! 167

குருத்வாகம நிர்வோடா குருத்வாத்யக்ஷ லிங்க நுத்
ஏகத்வ த்வித்வ ஸங்க்யாதி குணாந்தர நிராஸக : |||168

பரிமாண ப்ருதக் த்வாக்ய குணாந்தர நிராஸக
நித்யாநித்யாக்ய ஸம்யோக ஸ்தாபநைக விசக்ஷண -169

பராபர விபக்தத்வ குணத்ரய நிராஸக
விஷயாலம்பிதாபேத தீவைஷம்யாவதாரக: 170-

முக்த புத்தி ஜகத் வ்யாப்தோபபத்தி நிரூபக :
யோகி புத்தி விநஷ்டைஷ்யத் கோசரத்வோபபாதக–171-

அத்ரவ்ய நித்யதீ பக்ஷ விஷயித்வாதி பாதக 11
தீவிகார த்வேஷ்ராக ஸுக துக்க ப்ரயத்நத்ருக்–172–

த்யக்த ஜீவந யோந் யாக்ய யத்ந ப்ராகட்ய தர்ஸந :1
பகவத் ப்ரீதி கோபாந்ய தர்மாதர்ம மதாந்தக–173–

ஸ்யேநாக் நீஷோம வைஷம்ய ஸாதநைக விசஷண:
மந்த்ர ஸ்வார்த்த பரத்வோக்தி விரோத பரிஹாரவித் –174–

தேவதாமுக ஸம்ஸித்த பகவத் ப்ரீதி ஸாதக :
ஸம்ஸ்கார கர்ம பகவத் பரீத் யர்த்தத்வ ப்ரஸாதக– 175–

அபூர்வ விதி வாஸ்யத்வ ப்ராதாந்ய பஹு தோஷவித் 1
வக்த்ர பிப்ராய தேவ ப்ரஸாத லிங்வாச்யதா ஸூதீ; 176-

ஸம்ஸ்காராக்ய குணச் சேத்தா கர்மாக் யார்த்த ஸ்வரூபவித்
ஸம்ஸ்த்தா நோத்தீர்ண கோத்வாதி ஸாமாந் யமத பஞ்ஜக ! !! 177-

ஜாதிவாத நேகவாதி ஸமீரித நிராஸக : 1
ஸாத்ருஸ்யாதி பதார்த்தாந்தர க்லுப்தி ப்ராண நாஸந– 178–

அநேக ஸூந்யா வயவாநுவ்ருத்தி வ்யவஹாரவித்!
விஸேஷ ஸமவாயாக்ய பதார்த்தாந்தர பாதக : –179–

அபா பாவ ரூபத்வ ஸ்வபாவேயத்வ போதக 1
ராமாநுஜீய ஸித்தாந்த ஸர்வோத்க்ருஷ்டத்வ ஸாதக!–180-

ஸச்சரித்ர த்ராண ஸம்யக் த்ராத ஸந்மார்க ஸந்ததி :
கிலாத்யஷ ஸ்ருதி ஸ்தாபித் சக்ராங்கந ஸம்ஸ்க்ருதி:–181-

ஸ்ம்ருதீதிஹாஸ நிர்ணீத தப்தசக்ராதி தாரண :
தப்த முத்ரா நிஷேதாதி வசோ நிர்வாஹ கோவித–182-

ப்ரத்யக்ஷ ஸ்ருதி ரூப ப்ரமாண போத்யோர்த்வ புண்ட்ரக !
ஊர்த்வ புண்டர ப்ரமாண ஸ்ம்ருதீதிஹாஸ புராணவித் 183

ஊர்த்வ புண்டராநநுஷ்டாந நிமித்தா நர்த்த ஸாதக :
ஸர்வ வைதிக கர்மாங்கோர்த்வ புண்டர த்ருதி கோவித : 184

பஸ்ம ஸ்ரீவைஷ்ணவாஸ் ப்ருஸ்ய பாவ ஸாதந தக்ஷிண
ஊர்த்வ புண்டர த்ருதி த்ரவ்ய விஸேஷாவ த்ருதிக்ஷம–185-

அச்சித்ர புண்ட்ரதமநஸ் திர்யக் புண்ட்ர நிஷேதக 1!
பகவத் பாத ஸத்ருஸோர்த்வ புண்ட்ரா க்ருதி வேதிதா –186-

புண்ட்ர ஸச்சித்ரதா வேத்தா புண்ட்ர ஸங்க்யா விசாரக :!
ஊர்த்வ புண்ட்ர த்ருதி ப்ரோக்த பிரகார விவ்ருதிஷம –187–

ஊர்த்வ புண்ட்ராநேக மந்திர வ்யவஸ்தா கரண ப்ரிய :
வர்ணாஸ்ரமாதி நியதோர்த்வ புண்ட்ராங்குளி வேதிதா -188–

ஊர்த்வ புண்ட்ர ஸ்தாந வேத்தோர்த்வ புண்ட்ர த்யேய தேவவித்
ஸ்ருதி ஸ்மருத்யாதி நிர்ணீத விஷ்ணு நைவேத்ய போஜந –189-

விஷ்ண்வர்த்தாந்நா பக்த சக்ஷர் தர்ஸநோத்ஸாரண ப்ரிய
பகவத் புக்த ஸேஷாந்நா பக்த் தாந நிஷேதக–190-

அந்யதேவ நிவேத்யாதி போஜ்யத்வாபாவ ஸாதக : 1
அநந்தாயுத பஷீஸ நைவேத்யாத் யத்வ ஸாதக : –191-

ஸேநேஸ த்வாரபாலாதி நைவேத்யத் யத்வா பாதக !!
ஸேநேஸ ஹவிராலம்பி பக்ஷபேத நிரூபக–192-

விபக்த விஷ்ணு நைவேத்ய சாதுர் வித்யோ பயோகவித்
ஹரி பூஜோ பயுக்தஸ்த்தாயி பூஜாந்தர யோகவித்!!–193-

விஷ்ணு நைவேத்யைகஸாத்ய வைஸ்வதேவ விதி ப்ரிய : விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய பித்ரு ஸ்ராத்த க்ரியாதிக I!–194-

விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய ப்ராாணாக்நி ஹவநக்ரிய 11
வைஸ்வதேவே ஜ்யோபயுக்த போஜ்யதா வாக்ய ஸோதக !!!–195-

விஷ்ணு நைவேத்ய ஹார்தா நிவேத்யாஸந நிஷேதக
அர்ச்சா ஹார்தாதி ரூபாஸ்ய ஹவிரம்ஸ விஸேஷவித்||–196-

அந்ய ப்ரயுக்தோபஜீவி ப்ராணாநி ஹவநகரிய :
ஸடகோபாதி நைவேத்ய ஸார்த்த ப்ராணாக்நி ஹோத்ரக–197-

ந்யாஸவிம்ஸதி ஸங்க்ஷிப்த நிஷேபா பேக்ஷிதாகில :
ஸங்க்ஷிப்த ந்யாஸ வித்யாங்க ஸ்ரீ ந்யாஸ தஸகப்ரத !–198-

நிஷேப ரக்ஷாக்ருந் ந்யாஸ நிஷேத நவகாந்தக
ஆநுகூல்யா த்யங்க பேத ப்ரபத்யத்யாய பேத த்ருக் || 199-

அந்யதேவ பராசார்ய த்யாக பர்யந்த போத க்ருத்
ஸம்ஹிதாபேத கம்ய ந்யாஸ வித்யா மநு பேதவித் –200–

ந்யாஸ பக்தாபசாராதி நாஸ்யத்வ வயாக்ருதி ஷம :
ந்யாஸ மந்த்ர த்வயந்யாஸ ஸர்வாதி க்ருதி ஸோதக: –201–

பும்ஸு வித்யா நியாஸ வித்யா ஸேஷபாவ பிரகார வித்
ஸங்கல்பித குருபாயா ஸங்க்ராஹ்ய லகு வேதிதா–202–

ஸ்ரீராம சரம ஸ்லோக வ்யாக்யாந கரண க்ஷம
ஸ்ருத்யந்த வேதந க்ராஹ்ய பக்தி ந்யாஸோப பாதக : 203–

ப்ரஹ்ம ஸூக்தாத் யுக்த பக்தி ந்யாஸ வித்யா த்வயோத்ஸு-க 11
மோஷார்த் தாராத நாத் யர்த்த ந்யாஸா வாந்தர பேதவித் –204-

பாஷ்யகாரோக்த கத்ய த்ரய வ்யாக்யாந விசக்ஷண :
கத்ய த்வய வ்யாக்ருதித்வ நிரூபண விசஷண : 205–

கத்ய ப்ரபத்தி ப்ராதாந்ய பரத்வ ப்ரதிபாதக : 1
ப்ரபித்ஸு பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய போதக : 206–

ஸரண்ய பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய வேதிதா
லஷ்மீ ப்ரபத்தி மோஷார்த்த ப்ரபத்யர்த்தத்வ ஸாதக: 207–

கமலாநுக்ரஹை காந்த்ய பாரம்ய த்ராண தீக்ஷித 1
ஸ்ரீந்யாஸ பாரமைகாந்த்ய பஞ்ஜகத்வ நிவாரக 1 ||| –208–

பரபக்தி பரஞாந பரம ப்ரேம ஸோதக:
ந்யாஸ ஸ்வரூப விஷயாயத்த வைஷம்ய ஸாதக : –209–

பஞ்சாயுதா வாந்தரீய ப்ரயோஜந விசாரக 🙂 பஞ்சாயுத ப்ரமாணீய விரோ தோத்தார கோவித :– 210–

கத்யோக்த பித்ரு மாத்ராதி த்யாக நிர்வாஹ கோவித!!
அக்ருத்ய கருத்யாகரணாபசாராதி விஸேவித் –211–

பக்தாபசார வித் பாப ஸக்திபேத நிரூபக ரஹஸ்ய ஸ்பஷ்ட பச்தாபசாராதி பரிஹாரவித் ! –212–

வர்த்தமாத பவிஷ்யத் காம்ய மார்த்தந யுக்திவித்
ப்ரபந்நாபுத்தி பூர்வைநோ நிஷ் க்ருத் யுக்த்ய விரோதவித் –213–

சதுஸ் லோகீ பாஷ்ய ஸூக்த லஷ்மீ ஸத்வோப பத்திக !
லஷ்மீ விஷய துர்வாதி விருத்தோக்கி நிவாரக : –214–

ஸ்தோத்ரபாஷ்ய க்ருதி வ்யக்த யாமுநாசார்ய மாநஸ
ஸ்வார்த்தாந் யோக்த ஸ்தோத்ர ஸர்வ புருஷார்த் தத்வ ஸாதக–215–

குரு தத்குரு ஸம்பாத கால ப்ராசார்ய தாஸ்ய க்ருத் !
வைகாநஸாகமாத் யுக்த நதிபேத விசாரக: -216–

வகுளாபரணாசார்ய பாவாநேக விரோதஹா !
அத்யஷாகம ஸத் ஸூக்தி நிர்ணீத ஜகதீஸ்வர: 217–

நாராயணாத் யநந்யார்த்த ஸம்ஜ்ஞாஸ் தேதர தைவத :
பாரம்ய ஸூசகாநேகா நந்யதா ஸித்த லிங்க த்ருக்! 218–

வக்த்ரு ஸத்வாத்யநுகுண ஸாத்விகாதி புராண வித்
ஸாத்விகாதி ப்ரவசந ஸாத்விகத்வ ப்ரஸாதக 1 ||| 219–

ஸ்ரீபாஞ்சராத்ரா ரஷாக்ருத் பஞ்சராத்ர ப்ரமாண வித் 1
அஸ்மார்த்த ஸம்ஸ்க்ரியாதீநா ப்ராஹ்மண்யா பத்தி வாரக : 220–

த்ரய்யாக மோக்த கர்மாதிகாரி வைஷம்ய ஸாதக
ஏகாயநா பௌருஷேய பாவ ஸாதந வேதிதா ! 221–

ஸ்ரீபாஞ்சராத்ர ஸித்தாந்த பேத லக்ஷண வேதிதா
சதுர்விதாகம ப்ரஹ்ம ப்ராப்தி ஹேதுத்வ ஸாதக :–222-

ஸித்தாந்த ஸம்ஹிதா தத் தத் ஸாங்கர்ய பரிஹாரவித்
ஸ்வாந்ய ஸித்தாந்த கர்மாதிகாரா பாவ ப்ரஸாதக –223–

ஆகமா வாந்தரோத்கர்ஷா பகர்ஷாதி விதாயக ! |
உத்ருஷ்டஸ்த்த நிக்ருஷ்டோக்த க்ரியாதி க்ருதி போதக?- 224–

வைகாநஸாக்ய தந்த்ர ப்ரமாணத்வ விவ்ருதி ஷம !
வைகாநஸாக மாந்யோந்ய ஸாங்கர்யாஸக்தி பஞ்ஜக : –225-

ஸ்ரீபாஞ்சராத்ர ஸர்வோப ஜீவ்யத் வோக்தி விசஷண:1
ஸூத்ராந்தரஸ்த்தாபி தார்ச்சா தந்த்ர பூஜா விதாயக :–226-

ஸைவாக மாத்ய மாந்யத்வ ஸம்ஸத்தாபந விசக்ஷண1
ப்ராக ப்ரவ்ருத்த பரித்யாகோத் க்ருஷ்டாகம நிரோதவித்–227-

ஸாத்விகாதி விபாகாதீ நாகமாமாந தாபஹ:
பூர்வாகமோத்ருஷ்ட மார்க விதாந ஸூகதி ப்ரத : |–228-

ஸ்வயம் வ்யக்தாதி. பவந தாரதம்ய விதாயக!
தேவ பூஜா முக்ய கெளணாதிகாரி வ்யாக்ருதி க்ஷம–229-

தேவேஜ் யாஷ்டாங்க தோத்கர்ஷ வர்ண நைக விசக்ஷண :
ப்ரயத்நா த்யநபேக்ஷ ஸ்வதஸ் ஸித்தோத்கர்ஷ வஸ்து த்ருக் |–230-

பரமைகாந்தி கர்த்தவ்ய பஞ்சகால க்ரியா ஸூதீ!
பாஷ்யகாராஸ்ரயி பூத பஞ்சகால பிரகாஸக :–231-

வைஸேஷிக த்ரிகாலார்ச்சா பிதாநாத்ய விரோத திருக்!
ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ம்ருத்யைக கண்ட்ய ஸ்தாபந தக்ஷிண :–232-

வ்யாஸ தஷாத் யுக்த தர்ம ஸாஸ்த்ரார்த்த விவ்ருதி க்ஷம 1
ஸர்வ க்ரியா த்யாங்க பூத ஹரி ஸ்மரண போதக !–233-

பஞ்சராத்ரோக்த பகவத் ஜ்ஞாந நித்யத்வ ஸாதக:
அர்ச்சாவதார ரஹித க்ருஹ போஜந தோஷவித்–234-

பகவத் த்யாந ரஹித கால வைய்யர்த்ய ஸாதக!
ப்ராப்த காமார்த்த லிப்ஸா பாரமைகாந்த் யாநுகூல்ய திருக் –235–

கைங்கர்ய காலாவஸ்யாநு ஸந்தேயார்த்த விஸேஷவித் 1
ஸமயாசார நியமா த்யாயோக்தா வஸ்யகத்வ வித்–236-

வைஷ்ணவ ஸ்ரீ தர்மா ஸாஸ்த்ரோ தீரிதா வஸ்யகத்வ வித்
ஆரம்ப மந்த்ர நிர்ணேதா ஸாத்விக த்யாக ஸாதக:–237-

ராத்ர்யந்தோத்தாந ஸமய ஹரி கீர்த்தந ஸாதக 1
நித்ரா நிமித்தா சமநாநுகல்பா வஸ்யகத்வ வித்–238-

பூர்வஷபா விரமித யோக கார்யத்வ வேதிதா
அபியாநாரம்பகால வேத்தா நிர்வேத காலவித் –239–

நிர்வேத பலவித் கார்ய கர ஸாத்விக தைர்ய வித்
மந்த்ராதிகம குர்வந்யோபாய தூஷண வேதிதா–240–

குருத்யா நாநு கர்த்தவ்ய ஹரி த்யாந ஸ்வரூபவித்
கைங்கர்யார்த்தாசார்ய விஷ்ணு த்யாநா நுத்யாந போதக –241–

நித்ய ப்ரயோஜ்ய கைங்கர்ய பூரணார்த்தந மந்த்ர வித் :
ஸ்தோத்ராதி ஸத்தாவஸ்ய கீர்த்ய தேவ தேவ்யாதி நாமவித் –242–

பகவந் மந்த்ர தத் கால சோதிதோசித ஜப்ய வித்
பத ந்யாஸ் மநுஜ்ஞாதா பதக்ரம மநூக்திமா –243–

கதிகாலா வஸ்ய கார்ய கேஸவாஹ்வாந கீர்த்தந :
ஸந்த்யா ஸ்தநோபகரண க்ரஹணைக விசக்ஷண –244–

மலமூத்ர விஸர்கார்த்த தேஸாதி ஸகலார்த்த வித்
சவ்ச ஸங்க்யா க்ரம த்ரவ்ய கால வைஷம்ய ஸாதக : || 245-

தந்ததாவந் காஷ்டாதி வ்யவஸ்த்தா ந்யாய தத்பர :
ஸ்நாந தீர்த்த விஸேஷஜ்ஞ! ஸ்நாந பேத விதாயக! 246–

உஷ்ணோதக ஸ்நாந கால வ்யவஸ்த்தா கரண ஷம
வாஸோ தரண புண்டராங்க தர்ப்பண க்ரம ஸாதக:–247-

ஸந்த்யோபாஸ்தி விஸேஷஜ்ஞோ காயத்ரீ ஸ்தாந ஸாரவித்
காயத்ரீ ஜப ஸங்க்யாந ஸாதநோத்கர்ஷ ஸாரவித்–248–

ஸந்த்யா கலீந நியம வேத்தோபஸ்த்தாந கால வித்
திகாதி நமநாஸக்த ஸாரமைகாந்த்ய பங்கஹா–249-

ஸந்த்யாகாலா வஸ்யகார்ய மூலமந்த்ர ஜபோக்திமாந்
வ்யாக்ருதாதார சக்த்யாதிதேவரிஷி பித்ரு தர்ப்பண:–250-

நித்ய தர்ப்பண கர்மாந்த வாஸ பீடந ஸாதக:
பரமேஜ்யாகாலவித் க்யாத தீர்த்த மந்த்ரோப ஸம்ஹ்ருதி: ||| 251-

தீர்த்தா ஸந்நா நந்த ஸத்ம ப்ரவேஸா ,வஸ்யகத்வ வித்
பகவத் ஸத்ம ஸந்த்யாஜ்ய த்வாத்ரிம்ஸ , தபசாரக : –252–

அப்யுஷாணோஷித க்ருஹோ ஹோம கால விஸேஷவித்
பரகோக்ராஸ தாநர்த்தி ரபியாந ஸ்வரூபவித் –253–

உபாதாநாக்ய ஸமய வேத்தோபாதாந மந்த்ரவித்!
ஹேயோபாதேய தேவார்த்த ஸூமாதி த்ரவ்ய வேதிதா –254–

ஸ்வார்ஜி தாரண்ய மூல்ய க்ரீத யாசித குணாதிவித்
ஸுமநோகத ஸத்வாதி க்ருதோபாதாந ஹாநக ! ! -255–

திதிபேதாதி நியத புஷ்பபேதாதி ஸாதக !திவாநிஸா தேவ யாக வ்யாப்த ஸூந விஸேஷவித் — 256–

ஸாஸ்த்ராநுமத ஸிஷ்டாக்ராஹ்ய புஷ்பாதி நிவாரக:
கருஹால யார்ச்சா நியத வாஸ புஷ்பாதி பேத வித் ல்–257–

ஸ்ரங்மாலா பேத த்ருக் ஸூத்ர க்ரதிதாதி நிஷேதக :
பகவத்யாக வர்ஜ்யோபாதேயாபரண ஸோதக –258–

ப்ராண்யங்க ஸூரபித்ர வ்யோபயோக வ்யாக்ருதி க்ஷம:
ஹேயோபாதேய முகுள பத்ராங்குர விசாரக–259-

திநக்வயாபா ர்யுஷித குஸு மோக்தி விசக்ஷண :
போஜ ராஜா த்யுக்தகால புஷ்ப பேத விசாரக:–260-

க்ராஹ்ய மூல க்ரஹீதா தூப தீப த்ரவ்ய வேதிதா
தஸா விஸேஷாநுமதார் ஜநோபாய விஸேஷவித்–261-

ஸர்வ ப்ரதி க்ரஹ வ்யாப்த மநு நிர்ணய கோவித: 1
யதி புஷ்பக்ர ஹோபாய விஸதீகரண க்ஷம–262-

பூஜாத் யர்ஹாந்த ராத்மீய குணோபாதாந ஸாதக
பாஷ்யகாரோக்த நித்யாக்ய க்ரந்த வ்யாகரண க்ஷம–263-

இஜ்யாகால விஸேஷஜ்ஞ இஜ்யா ப்ராதாந்ய ஸாதக
பரமைகாந்தி ஸப்தார்த்த தந் நிபந்தந வேதிதா –264–

யத்யந்ந தேவ பூஜாதி மஹா தோஷ ப்ரஸாதக !
பரமைகாந்தி ஸந்திருஷ்டாந் யதேவ நாதிபாதக! |– 265–

கர்மண்யதா பாவ ஹேது பாப தச்சாந்தி ஹேது த்ருக்
இஜ்யாதிகார பேதஜ்ஞ இஜ்யா ஸாரார்த்த வேதிதா –266–

ஸ்வாத்யாயகால ஸ்வாத்யாய பேதாதி க்ருதி பேத திருக்
ஸ்வாத்யாய ஸார ஸந்த்ரஷ்டா ஸ்வாத்யாயாங்க விஸேஷவித்| –267–

ஸாயம் ஸந்த்யாஹோம தேவ பூஜா போஜந காலவித்
புஜிலோப நிமித்த ப்ராணாக்நி ஹோத்ர மநூஜப –268–

ப்ரதோஷ வர்ஜித நிஸா யோக்யாதீதி விஸேஷவித்
த்ரயோ தஸீ , பூர்வராத்ரி கார்யமெளந விஸேஷவித் — 269–

ப்ரதோஷகால கர்த்தவ்ய ஸந்த்யா ஸங்கோச வேதிதா!
ப்ரதோஷா வஸ்ய வர்ஜ்யாஷ்டாக்ஷர மந்த்ர ஜபோக்திமாந் — 270–

ஸந்த்யா த்யாஜ்யா ஷ்டாக்ஷராந்ய காயத்ர்யந்ய ஜப க்ரிய
ஆசவ்சகால ஸந்த்யாஜ்ய காயத்ர் யந்ய ஜப க்ரிய–271-

அத்யாயா நர்ஹ விஷு வாத்யநுஜ்ஞாத ஜபாந்தர!!
மெளநக்ரியா ஸமாயாத ஸச்சித்ரத்வ நிராஸக!–272-

ப்ரதோஷ நரஸிம்ஹாந்ய ஹரி தர்ஸந பாதக: I
ப்ரதோஷ காலாநுஜ்ஞாத ஸ்வ க்ருஹார்ச்சா வலோகந !–273–

மத்ய ராத்ர நிஷித்தஸ்வ க்ருஹார்ச்சா பூஜநாதிக:
மத்ய ராத்ரோபராகாதி கால வர்ஜ்யார்ச்ச நாதிக! –274–

ஸர்வகாலாப் யநுஜ்ஞாதா ஸ்தாநஸ்த்த ஹரி தர்ஸந :
அஷ்டாங்க யாக மத்யா நுஜ்ஞாத ஸ்வாத்யாய யோக வித் — 275–

ஸ்ரீபராஸர ஸாண்டில்யா த்யுக்த யோக ஸ்வரூபவித்!
ஸ்ரீபாஷ்ய க்ருத் ஸம்ப்ரதாய ப்ரபந்ந ஜந யோகதிருக் !!–276-

ந்யாஸ கத்யாத்யநுகுண விநியோக விதாயாக!
அர்ச்சாவதார விஷய யோகெளசித்யாபி தாயக !–277–

யோகாங்க ஸம்ஹ்ருதி ந்யாஸ ஸ்தாநா சமந ஸாதக:1
யோகோபகாரி கரண ஸ்ராந்தி ஹேது ஸுஷப்திமாந் –278-

கட்வாதிருப ப்ரஹ்மாதி ஸம்பரிஷ்வங்க பாவந i
ஸாஸ்த்ரீய ஸயநீயாதி நியமாதி விதாயக –279–

ஸ்வாராத்ய பகவத் பாத ஸரோ ஜந்யஸ்த ஸீர்ஷக :
நித்ராரம்பச் சேதகார்ய மாதவத்யாந கீர்த்தந! –280–

ஏகாதஸ்யாதி லுப்தாநு யாக ஸப்தாங்க யாகத்ருக்
த்வாதஸ்யாதி ப்ரபாதாத : பாரணாஸ்தாபந க்ஷம– 281–

பாரணாதித மத்யாஹ்ந ஸப்தாங்கேஜ்யா விசாரக
அநேகேஜ்யா ஸந்நிபாத லுப்தோபாதாந லேஸக!–282-

அஸக்யவஸ்த்தா ஸ்வ ஸமாநர்த்விகாதி க்ருதேஜ்யக
விதுர வரதி ஸந்யாஸி வநஸ்த்தர்த்விங் நிஷேதக:–283-

ஸூதகாதி தஸாத்யாஜ்ய ஸூசிகர்த்தவ்ய கர்மக!
மௌந ஸூந்யா சவ்ச கால கீர்த்ய த்யேய ஹரி ப்ரிய–284-

ஆ சவ்சகால கர்த்தவ்யாபி யாநாக்ய க்ரியாபர1!
ஸர்வக்ரியா ப்ரதிநிதி பகவந்நாம கீர்த்தந:–285-

ரஹஸ்யாம்நாய நிஷ்டா சவ்ச நிஷேத விதாயக:
ப்ரஹ்ம வித்வ நிமித்தாக ஸங்கோச வ்யாஹதி க்ஷமா–286-

ப்ரக்ராந்தோத்ஸவ கார்யாதி ஸூதகாதி நிஷேதக
ஆசவ்ச கால கர்த்தவ்ய மாநஸேஜ்யா விசாரக–287–

ஆசவ்சகால கர்த்தவ்ய ஸந்த்யோபாஸ்தி ப்காரவித்
துஷ்கரத்வ பரிஜ்ஞாந ஷுப்த பும்ஹர்ஷ வர்த்தக: — 288–

பகவத் தர்ம சவ்கர்ய விஸேஷ வ்யாக்ருதி ஷம
இஜ்யோபசார வைகல்ய தோஷாதோஷ விசாரக! 289–

ஸங்கல்ப ஸூர்யோதயாத: க்ருத பாரக்ய நாடக
ஸங்கல்ப ஸர்யோ தயாத்ய பத்ய வ்யக்த ஸ்வவைபவ: — 290–

ச்சாத்ரபத்த த்வஜோத்பாஸி தாஸா ஸாஸௌத மண்டல
ஸ்ரீவைகுண்ட விநோதீ ஸத் கவி நாடக லக்ஷம த்ருக் ||–291-

ஸாந்தியைக ரஸ பாவஜ்ஞ ! ஸ்ருங்காராதி ரஸத்வஹா
கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகார வசோதர:– 292–

பாத்ரீக்ருத விவேகாதி குணாதிஷ்டாத்ரு தைவத !
ஸந்திபஞ்சக ஸம்வேஸ நாடக ஸ்தாந கோவித–293-

ஸர்வஸங்கட வித்வம்ஸி விஸங்கட மநீஷித:
விம்ஸத் வர்ஷாதீத ஸர்வ வித்யாஸந்த்தி பாஸூர–294-

த்ரிம் ஸத்வார ஸ்ராவித ஸ்ரீமச் சாரீரக பாஷ்யக
யதீந்த்ரார்ப்பித துர்வாதி விஜ்யார்த்த பவித்ரக–295-

வாதநாமா வாததோஷ வ்யவஸ்த்தா கரண க்ஷம:
ஸூக்ஷ்ம ஸூஷ்ம தராத்யந்த ஸூஷ்ம ப்ரஸ் நோத்தர க்ஷம–296-

யதீந்த்ர க்ரந்த ஸூரபி மநஸ்க பத ஸேகர !
ஸங்கராதி குத்ருங்மூர்த்த ந்யஸ்த வாம பதோஜ்வல! -297-

குத்ருங் மூர்த்த நீயஸ்தபாத ஸுவர்ண கடகோஜ்வல:
வைகுண்ட லோக ஸ்த்ரீ பும்ஸ மிதுநார்த்தோப பத்தி வித் — 298–

ஸ்வஸில்பஜித கீர்வாண தைத்ய ஸில்ப சமத் க்ருதி:!
ஸமாதி ஸாதகஸ்தாந ஸூபாஸ்ரய நிரூபக: — 299–

அநாத்ம குணகாமாதி நிராஸாதி ப்காரவித்
மஹாத்மாத்மாநாத்ம குண சேஷ்டித ஜ்ஞாபந ஷம: — 300–

ராகவாப்யுதயோத்க்ருஷ்ட யாதவாப்புதய ப்ரத:
ஸ்ரீஸேது ஸடகோபாதி ஸேவா ஸந்துஷ்ட மாநஸ !–301-

சோளதேஸீய பகவத் க்ஷேத்ர ஸேவா ரஸாகுல ;
ஹஸ்தீஸ ஸேவா குலாத்மா நரேந்த்ர மத ஸர்ப்பஹா–302-

நரேந்தர வந்திதஸ் தார்ஷ்ய தண்ட கோத்தம தாத்ருதீ !
புநர் வ்ருஷாத்ரி ரங்கேஸ ஸேவார்த்த கமநோத் ஸூக :–303-

ஆஸ்சர்யாவஹ சாரித்ர வாஜி வக்த்ராதி தைவத!
வரதாசார்ய ஜநகோ ஜீவிதாகில விஷ்டப:–304-

ஹயாஸ்ய பூர்த்த தீர்த்தாஹர் த்ருஷ்ட லஜ்ஜித விக்ந க்ருத்
ராத்ரி நிர்வ்யூட ரங்கேஸ பாதரக்ஷா ஸஹஸ்ரக:–305-

பாதரஷா ஸஹஸ்ரோக்த பாதுகா ஸேவகாபித:
ரங்கேஸ தத்த கவிதார்க்கிக ஸிம்ஹாபி தாநக–306-

ஸம்ப்ரதாய பரீஸூத்தி ஸ்தாபிதாசார்ய ஸத் பத!!
ஸத் ஸம்ப்ரதாய ரஹித ஸாஸ்த்ரா நாதர போதக:–307-

ஸச்சாஸ்த்ர மூலாந்ய ஸம்ப்ரதாயா நாதர போதக!!
கல்யாதி நிகமாந்த ப்ரவர்த்த காவத்ருதி க்ஷம!–308-

ஸட கோபாசார்ய பாவ ஸ்தாபநைக விசக்ஷண
அநு கூலாசார்ய வம்ஸ்ய வித்யாதாந ஸூபாத்ர வித்!!–309-

முக்ய ப்ரதாநாசார்யத்வ ஸ்தாபநைக விசக்ஷண:
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸம் ப்ரதாய விரோதஹா — 310–

ரஹஸ்ய தத்வ த்ரிதய பதவீ க்ருதி பாஸுர!! ரஹஸ்ய தத்வ ரத்நாவல்யலங்க்ருத ஸூஹ்ருந் மநா : ||| –311–

தத் வரத்நாவளீ ப்ரதிபாத்ய ஸங்க்ரஹ காரக :
தத்வரத்நாவளீ கம்ய ஜ்ஞாந பர்யாப்தி போதக! — 312–

ரஹஸ்ய ரத்னாவள்யாக்ய ரஹஸ்ய வ்யாக்ருதி ப்ரிய:
ந்யாஸ் யுத்தரைந : ப்ரதி பதோக்தா நிஷ்க்ருதி ஸாதக; — 313-

ஸ்ரீதத்வ நவநீத ப்ரீத ஹஸ்தி கிரி நாயக:
ரஹஸ்ய நவநீதோக்தி ஹருஷ்ட வேங்கட நாயக! ||– 314–

காலதாமஸ பாவாதி நிபந்தந விசாரக:
பகவத் த்ரிஸ்த்தலாவாஸ க்ரியா வ்யாக்ருதி தக்ஷிண: — 315–

யுக பேதாதீந வர்ண பகவத்தேஹ தர்ஸந! ஸ்ரீதத்வமாத்ருகா ஹருஷ்ட பகவத் பக்த மாநஸ: | — 316–

ரஹஸ்ய மாத்ருகா தத்த ப்ரபந்நாந்வஹ தோஷக! |
ஸாரஸங்கரஹ க்ருந் ந்யாஸ க்ராஹ்யாக்ராஹ்ய விபாகவித் — 317–

ப்ரபந்த ஸ்வீக்ருதிக்ருத பூர்த்ய பூரீத்தி விசாரக 1
மாநாதி தஸ காலம்பி விவேகி பல போதக! –318–

மாநப்ரமேய விச்சிஷ்யாசார்ய க்ருத்யாதி ஸாரவித் !
வ்யக்தீ க்ருதாகிலோத்கர்ஷ ஸ்ரீரஹஸ்ய ஸிகாமணி — 319–

ஸ்ரீமத்வராஹாவதார ஸர்வாதிக்யா பிதாயாக
வராஹாக்ய புராணாதிஸய வர்ணந தக்ஷிண:–320–

ப்ரபத்திபர வாராஹ சரம லோக போதக : 1
யாமுநோக்தி பரிஷ்கார்யஞ்ஜலி வைபவ காரக! –321-

ப்ரபந்த விஷய ஸ்ரீமததிகப்ரீதி ஸாதக: ! ஸ்ரீமத் தாஸ்யாநந்ய தைவத்வா தந்யார்த் தத்வ சிஹ்ந திருக்-322–

ப்ரதாந ஸதக வ்யக்தீ க்ருத முக்யார்த்த ஸஞ்சயா
ஸதாநு ஸந்தேயார்த்தோபகார ஸங்க்ரஹ காரக!!!–323-

மஹோபகார வித்ஸார ஸாராக்யாந க்ருதி ப்ரிய
பரங்குஸாதி நிர்வ்யாஜ ரக்ஷணோக்தி விரோதஹா !–324-

ரஹஸ்ய தத்வ த்ரிதய சுளகா ஸ்வாதி தாஸ்ரித :
அபய ப்ரதாந ஸார ஸ்பஷ்ட ராமாயணாந்தர :–325-

ஸ்ரீஸாபசார ரஸிக வைஷ்ணவா நாதரோத்திமாந்
ஸ்ரீஸாபசார பக்தாநாதர ஷாபண காலவித்–326-

நியாஸாபேக்ஷித ஸர்வார்த்த வ்யஞ்ஜகாதிம காவ்யவித்
ஸ்ரீமத் க்ருபா பரிணத ஸோபாந பதவீ ப்ரிய –327-

அர்ச்சிராதி மஹாமார்க விரோத ஸமந ப்ரிய
மாதவாத்மஜ பூபார்த்த தத்வ ஸந்தேஸ காரக:–328-

ரஹஸ்ய ஸந்தேஸ க்ருதி ப்ரீத மாதவ புத்ரக :
ரஹஸ்ய ஸந்தேஸ விவரணாக்ய க்ருதி தோஷக.–329-

மாதவாத்மஜ பூபார்த்த ஸுபாஷித விதாநவித்
ஹம்ஸ ஸந்தேஸ விவ்ருத பகவத் ப்ரேம தல்லஜ :–330-

ஸ்ரீமந் மெளளி க்ரமாபிக்ய க்ரந்த நிர்மாண கோவித :!
லோகாசார்யாதி ஸச்சிஷ் யார்ப்பித ஸாரீர பாஷ்யக:–331-

ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ராதி ஸிஷ்யார்ப்பித ரஹஸ்யக
க்ருதாஸீதி ஸஹஸ்ர த்ரமிடாகம பரீமள:–332-

முநிவாஹந போகாக்ய க்ரந்த ஸம்ப்ரீத ஸஜ்ஜந : 1
ஸ்ரீமந்மதுரகவ் யுக்தி காதா வ்யாக்யாந தஷிண ! !!–333–

த்ரமிடாம்நாய தாத்பர்ய ரத்நாவளி விதாயக:
த்ரமிடோபநிஷத் ஸார ப்ரபந்தோஜ்வல மாநஸ–334-

ஸ்லோக த்ரயோக்த பகவதாராதந விதி க்ரம:
நவஸ் லோகீ ஸங்க்ருஹீத ப்ரஹ்ம ஸத்ர விதாநக :–335-

ப்ரபந்த ஸார நிர்மாதா ஆஹார நைய்யத்ய கீதி க்ருத
மூல மந்த்ரார்த்த ஸங்கராஹி காதாக்ருதி விஸாரத:–336-

த்வய மந்த்ரார்த்த ஸங்க்ராஹி காதாகரண தக்ஷிண:
சரம ஸ்லோக ஸங்கராஹி காதா ஸங்க்ரஹ கோவித–337–

ப்ரபத்தி கர்ப்ப கீதார்த்த காதாக்ருதி விசக்ஷண:1
லக்ஷ்மணாசார்ய ரோகக்ந பாத தீர்த்த ப்ரபாவக: |||–338-

ஸ்ருத ப்ரகாஸிகா ரக்ஷா ரக்ஷிதாத்யாத்ம பாஷ்யக:
யாதவாசல பத்ரா ஸாஸநார்த்த கதிபாஸூர :–339-

அபீதி ஸ்தவ ஸஞ்ஜாதாபீதி ரங்கபுரீ கதி:1 ரங்க ப்ராபித ரங்கேஸ கோபணார்ய ஸ்துதிப்ரிய :–340-

ரஹஸ்யத்ரய ஸாரோஜ்ஜீவித சேதந ஸஞ்சய
த்ரமிடோபநிஷத் த்ரஷ்ட்ரு ஸூரி ப்ருந்தோபகாரவித்–341-

மோக்ஷைக ஸாதநாசார்ய வத்தா ஸாதந தத் பர:
ஸ்வாசார்யாதி ஸரண்யாந்த பக்தி க்ரம விஸேஷவித்–342-

ஸ்ரீமத் பகவதாசார்ய பாவபாதக பாதக!
ஸடாரிநாத யோகீந்த்ர குரு ஸிஷ்யத்வ ஸாதக — 343–

அபரீஷய ரஹஸ்யாதி ப்ரதாந பஹு தோஷவித்
பக்தி ப்ரகாஸித குரு வம்ஸ ஸிஷ்ய நிபந்த ! –344–

அஸம்பாஷ்யாதி ஸம்பாஷண நிஷ்க்ருதி குருஸ்ம்ருதி!!
மோக்ஷார்த்த ஸாஸ்த்ராநாரம்ப ஹேது திக்க்ருதி தக்ஷிண!!|| 345-

ஆசார்ய நிகடப்ராப்தி ஹேது ஷட்க நிரூபக!
ஸார நிஷ்கர்ஷ குஸல! ப்ரதாந ப்ரதிதந்த்ர வித் !! –346–

ஈஸா தாரகதா ஸேஷித்வ நியந்த்ருத்வ போதக : I
ஜீவாதேயத்வ ஸேஷத்வ நியாம்யத்வ நிரூபக: –347–

ஸங்கல்பாதீந நித்யாக்ய வஸ்து ஸ்திதி விஸேஷவித்
ஸேஷஸேஷ்யாதி ஸம்பந்த பலிதார்த்த விஸேஷவித் –348–

அர்த்த பஞ்சக தத்வஜ்ஞஸ் தத்வ த்ரய விஸேஷவித்
ஸ்வாதீந திரிவிதாசித் சித் ஸ்வரூப ஸ்திதி வ்ருத்தி த்ருக் — 349–

ப்ரமாண கம்ய தர்மி ஸ்வரூப ரூபக தர்மவித் !
ஜீவ லக்ஷண தத்வஜ்ஜோ பத்த லக்ஷண லக்ஷிதா — 350–

பத்த ஸ்திதி ப்ரவருத்திஜ்ஞோ முக்த லக்ஷண லக்ஷிதா நித்யஸ்திதி பரவருத்திஜ்ஞோ நித்யாத் யந் யோந்ய பேத த்ருக்– 351–

நித்ய முக்தாத்ம கைங்கர்ய ஸார்வ வித்ய நிரூபக
த்ரிகுணஸ்திதி வ்ருத்தி ஜ்ஞ : ஈஸ லக்ஷண லக்ஷிதா –352–

அவதார ரஹஸ்யஜ்ஞ! பர வ்யூஹாதி பேத த்ருக்!
ஸ்ரீ ஜகத் காரணத்வாதி ஸாதகாநேக யுக்தி மாந் — 353–

ஸ்ரீமந் நாராயண பர தேவதா நிர்ணயக்ஷம : 1
ஸர்வ தேவ பரப்ரஹமா பேது கண்டந தக்ஷிண : — 354–

த்ரிமூர்த்தி ஸாம்ய தமநஸ் த்ரிமூர்த்யைக்ய விநாஸக !
த்ரிமூர்த் யுத்தீர்ண பரம் தேவதா கண்டந க்ஷம– 355–

த்ரிமூர்த் யந்தர்கத ப்ரஹம ருத்ர பாரம்ய கண்டந 1
ப்ரஹ்ம ருத்ராதி கார்யத்வ கர்ம வஸ்யத்வ ஸாதக !–356–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பாரதந்த்ர்ய விசாரக
ப்ரஹ்மாதி பகவந் மாயா யத்ததீ ஹ்ராஸ வ்ருத்தி த்ருக் – 357–

விஷ்ணு தர்ஸித ஸர்கோப ஸர்காதி விதி ஸம்பு த்ருக்
ஸூபாஸ்ரயத்வ ரஹித ப்ரஹ்ம ருத்ராதி ஸாதக! — 358–

ப்ரஹ்ம ருத்ராதி திரிகுண பாரவஸ்ய நிரூபக
ப்ரஹ்ம ருத்ராதி பகவதாஸ்ரி தத்வ விதாயக: — 359–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் விபூதித்வ நிரூபக: ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பரகாரத்வா பிதாயக– 360–

ப்ரஹ்ம ருத்ராதி பகவச் சரீரத்வ பிரகாஸக ப்ரஹ்ம ருத்ராதி பகவத் தாஸத்வ ஸ்தாபந ஷம —361-

ஸாத்விகத் வோத்பத்தி ஹேது மது ஸூதந த்ருஷ்டி த்ருக்
ரஜஸ் தமோ குணா ஸக்தி ஹேது ப்ரஹ்மாதி திருஷ்டி த்ருக் –362-

ப்ரஹ்ம ருத்ராதி மோஷார்த்தி ஜநோபாஸ்யத் பாதக:1 ப்ரஹ்ம ருத்ராத்யுபாஸ் யத்வ வசோ நிர்வாஹ காரக : — 363–

ப்ரஹ்ம ருத்ராதி பாரம்ய த்ருக் கர்மா நர்ஹதாதி த்ருக் 1
ப்ரஹமாதி பகவத் ஸாம்ய த்ருக் பாஷண்டித்வ ஸாதக!! — 364 —

விஷ்ணு நிக்ராஹ்ய பாத்ரத்வ ரஹிதேதர தைவ த்ருக்
க்ஷிப்ரேதர பல ப்ராப்தி ஸாதநேதர தேவ த்ருக்-365–

காம்யாத் யர்த்தாஸ்ரிதாநந்த புருஷார்த்த விஷ்ணுதீ
அஜ்ஞாந்ய தேவ யஜந ப்ரீத விஷ்ணு ப்ரகாஸக : — 366–

அஜ்ஞாந்ய தேவ யஜந பல வைகல்ய ஸாதக:
விஷண் வாத்மகாந்ய தேவஜ்ஞ கர்ம பௌஷ்கல்ய ஸாதக — 367–

நிஷ்காம விஷ்ணு ஸேவா நுஷங்காந்ய பல ஸித்தி த்ருக்
பராங்குஸாதி ஸ்ரீஸுக்தி ஸாதிதோத்ருஷ்ட மாதவ –368–

முமுக்ஷாஹேது ஸாரஜ்ஞஸ் சாதிகாரி விபாகவித்
ப்ரபத்ய வாந்தரபிதா வேத்தோபாய விபாகவித் — 369-

ப்ரபத்யதி க்ரியா பஞ்சதஸ நிர்ணய தூர்வஹ!
ந்யாஸ வித்யாங்க பஞ்சத்வோபகார வ்யாக்ருதி க்ஷம –370-

விஸ்வாஸோத்கர்ஷ விஹதி காரண வ்யாஹதி க்ஷம
விஸ்வாஸ கோபத்ரு வரண ஸப்தார்த் தத்வ ப்ரகாரவித்–371-

ப்ரபத்தி லக்ஷணாபிஜ்ஞோ ந்யாஸ வித்யாங்கி வேதிதா
திரிவர்க மோஷ ஜநக ந்யாஸ வித்யா விஸேஷவித்–372-

ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ப்ரயோக விதி ஸாதக
ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ஸக்ருத்வ ஸ்தாபந ஷம –373-

ஸஹேதுக்ருத க்ருத்யத்வாநுஸந்தாந விஸாரத
ஸ்வ ஸ்வரூபோபாய பல நிஷ்டா த்ரய விவேகவாந்–374–

பிரபத் யுத்தர கர்த்தவ்ய க்ருத்ய நிர்ணய தக்ஷிண!
பகவத் தாஸ கைங்கர்ய தாஸ்ய த்வைவித்ய வேதிதா — 375 —

பகவத் தாஸ தாஸ்ய ப்ராப்தா நந்யத்வ விரோதஹா
ஸ்ரீமத் பாகவதாந்யோந்ய தாஸ்ய ஸாதந தத் பர–376-

ப்ரபந்நாந்வஹ ஸங்க்ராஹ்ய ஸாஸ்த்ரீய நியம ப்ரிய:
பாஷ்யகாரோக்த ஸாஸ்த்ராநு மத கைங்கர்ய ஸாரவித் –377–

உல்லங்கி தாஜ்ஞாகரணா வைஷ்ணவத்வ ப்ரஸாதக:
ப்ரபந்நாஜ்ஞாதி க்ரமாதி ப்ராயஸ் சித்த விஸேஷவித் !–378 —

ஏநோநிஷ்க்ரு த்யுதாஸீந ப்ரபந்த லகு தண்ட த்ருக்
ஆஜ்ஞாதி லங்கி கடிந ப்ரபந்ந நரகாப்ரிய: | –379–

ப்ரபந்த புத்தி பூர்வைந ப்ராயஸ் சித்த விஸேஷவித்
மஹா பாத ப்ரபந்ந ப்ரஸித்த நிஷ்க்ருதி வேதிதா — 380–

கடிநாநியதாயு : ப்ரபந்நாயுர் வ்ருத்தி ஸாதக
மோக்ஷார்த்த ந்யாஸ ஸம்ஹார்ய தீ பூர்வோத்தர பாபஹா — 381–

க்ருதபாதக நாஸார்த்த ஸரணாகதி வேதிதா
ப்ரபந்நாந்வஹ வாஸார்ஹ ஸ்தாந வ்யாக்யாந கோவித — 382–

விகலாங்க ந்யாஸ வித்யா பூர்ண ஹேதுத்வ ஸாதக:
தேவாந்தர த்ருடாஸக்த ப்ரபந்த நரகோக்திமாந் — 383–

வித்வதேகாந் தோத்க்ரமண க்ரம தர்ஸந தோஷித:
உபாயாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர பாப த்ருக் — 384–

இஷ்டாவ தூதாந்ய பல தீ வைமுக்ய ப்ரபந்ந வித்
விநஷ்டாஸ் லிஷ்ட புண்யாக விதூநந பதார்த்தவித் — 385–

புதபுண்யாக மித்ராரி ஸங்க்ராந்தி வ்யாஜ போதக
அர்ச்சிராதி கதிஜ்ஞாதா ஸுஷ்மதேஹ விஸர்கவித் — 386–

திவ்ய தேஸ ப்ராப்தி பூர்வ க்ரம தர்ஸந தக்ஷிண:
முக்த ப்ரபந்ந ஸாநந்த விபுஜ்ஞாந துரந்தர–387–

மதுவித்யாத்யதீகாரி கத்யந்தர வி ஸேஷவித் !
முக்த்யவஸ்தாநந்த தாரதம்ய வரத விநாஸக! –388–

ஜகத் ஸ்ரஷ்ட்ரு பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
பரிபூர்ண பர பரஹ்மாநுபவ ஸ்ருதி வேதிதா : — 389–

ஸுநிஸ் சித்தார்த்த பரம பிரஹ்மாநுபவ ரீதிக;
ஸம்ஸார ப்ரதி கூலார்த்த முக்த்ய வஸ்த்தாநுகூல்ய திருக்–390-

ஸ்ரீபதித்வ பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
ஸதாசார் யோபதேஸை காதிகாரி ஜ்ஞாபந க்ஷம–391-

ஸஸத் தர்கோபதே ஸாதிகாரி வ்யாக்ருதி கோவித!
வ்யாஜாந பேக்ஷ பகவத் ரக்ஷகத்வோக்தி வாரக–392-

ஸ்ரீமத் ஸ்வாதந்த்ர்ய காருண்யோபயோக வ்யாக்ருதி க்ஷம;
ப்ரபத்யதி க்ரியாவத் விஸேஷணத்வ நிரோதக–393-

மோக்ஷ நுபாய ஸரண வரஜ்யாவாத விநாஸக;
ப்ரதிபந்து நிராஸை கோபயுக்து வ்யாஜ வேதிதா–394-

தேவ ஸ்வாதந்த்ர்ய கருணா மூல வ்யாஜ நிராஸஹா
ஸ்ரீமத் ஸம்பந்த மூல வ்யாஜ நிராஸ மதாந்தக: — 393–

அவ்யாஜ பகவத் பாத்ர பாவ மாநோபபத்திஹா
த்வய பூர்வ ஸ்ரீபதோப லஷகத்வ விநாஸக–396–

ஸ்ரீவிஸேஷண பாவார்த்தோபாய த்வித்வ விபஞ்ஜக: |
நிர்வ்யூட ஸரண வ்ரஜ்யா விஸ்வாஸா பேத பூர்வ வாக் — 397–

ப்ரபத்தி ப்ரார்த்தநா பேத வாங் நிர்வாஹ விசக்ஷண
வாக்ய ஜந்ய ஜ்ஞாந மோஷோபாயத்வ மதபஞ்ஜக — 398–

ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபார நிவ்ருத் யுத்திதி தூர்வஹ!
ப்ரபத்தி மோஷோபாயத்வ பாதக வ்ராத நாஸக –399–

சரம ஸ்லோக நிகில தர்ம த்யாக பரத்வஹா
நிஷித்த வர்ஜநா தர்ம பாவத்வோக்த்ய பநோதந :–400–

உபாஸந ஸ்வரூபோபாய ஸ்வரூப விரோதஹா !
வர்ணாஸ்ரமாதி தர்ம ஸ்வரூபரோத விநாஸக — 401–

ஐகாந்த்யச் சேத் யந்யதேவ பர வர்ணாதி தர்மஹா
பக்தி வித்யா ஸித்த ஹேது ப்ரரோசந கரத்வஹா –402–

பக்தி வித்யா ஸிஷ்டலோகா பரிக்ரஹ நிவாரக
பர ந்யாஸாதி ஸகல கரல தர்மத்வ பஞ்ஜந–403–

ந்யாஸ ப்ரஸம்ஸகோ ந்யாஸ பக்த் யாதிக்ய ப்ரதர்ஸக
அநுகூலத்வ ஸங்கல்பாத்ய வஸ்யம்பாவ வேதிதா — 404–

விஸ்வாஸாங்க மஹத்வாந்தராய பங்க விசக்ஷண:!
ப்ரபந்ந பகவத் ப்ரேம தாரதம்ய விதாயக–405–

குரு பக்தி லகு ந்யாஸ பலைக்யோக்தி விசக்ஷண:
பூர்வ பூர்வாக்ருதாம் ஸார்த்த புந! ப்ரபதநோக்திமாந் –406–

ஐஹிகார்த்த நியாஸ கர்த்ரு ஹேது வைகல்ய ஸாதக 1
அபியாநாதி பஞ்சாவஸர க்ருத்ய பலோக்திமாந்–407-

விஷ்ணு பக்த சதுர்த்தாதி ப்ராஹ்மண்ய விநிவாரக!
விதுராதி ஸ்வ ஜாத்யுக்த தர்ந மாலங்க த்ருஷ்டிமாந்–408-

நிர்வ்யூட விதுர ப்ரஹ்மமேத ஸம்ஸ்க்ருதி ஸூக்திகா
யஜ்ஞே விதுராந்நாதநோக்தி நிர்வாஹ தக்ஷிண; –409–

அதிதேஸா நர்ஹகாரி ஸூநுவிருத்த பிரகாஸக:
பகவத் பக்த ஸூத்ராதி தீதானாதி க்ருதி ப்ரிய – 410–

சைத்தகாயிக ஸூத்ரத்வ பேத வ்யாக்யாந தஷிண
நாராயனைக நிஷ்டேதி வசநார்த்த பிரதர்ஸக! –411-

நிஷித்த த்யாக தர்மாக்யா முக்யார்த் தத்வ விபஞ்ஜக:
ஸ்ரீமத் ப்ரபாவ ஸந்த்ராதோபாய மாஹாத்ம்ய ரஷக: | — 412–

பகவத் ஷேத்ர மாஹாத்ம்ய த்ருக் வைஷ்ணவ மஹத்வவித்
ஸெளம்காரமூல மந்த்ராஷ்டாக்ஷரத்வ த்ராண தீக்ஷித!! — 413–

த்வய மூல மநு வ்யாக்யா ரூபத்வ பரிஸோதிக !
மூல மந்த்ர அஷ்டாக்ஷர பத் தத்வார்த்த விஸேஷவித் — 414–

மூல மந்த்ர மஹா வாக்ய யோஜநா ஸத காரக:
த்வய ப்ரபாவ விஜ்ஞாதா த்வய ஸப்த நிருக்தி வித் – 415–

த்வய த்ரயீ மூல தாந்த்ர மந்திரத்வ ஸ்த்தாபந க்ஷம :
லஷ்மீ புருஷகாரத்வ மாநஜ்ஞ : ஸ்ரீபதார்த்த வித் — 416–

த்வய மந்த்ர பத ப்ராத ப்ரத்யேக வ்யாக்ருதி ப்ரிய 1
ஸ்ரீ ஸோபா யாந்தர ஸ்தாநாபத்தி ஸாரார்த்த போதக!!-417–

கார்பண்ய கோப்த்ரு வரண ஸார்த்தோபாயத்வ யாசந:1
உபாய வரணாத்யாத்ம நிஷேபாங்கித்வ ஸாதக: |–418-

த்வயோத்தரார்த்த கம்யார்த்த புருஷார்த்த நிரூபக
த்வய மந்த்ர மஹா வாக்ய யோஜநா த்ரய ஸாதக:–419-

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகாவதார வ்யாக்ருதி ஷம
சரம ஸ்லோக தர்மோக்தி வேத்ய நிர்ணய கோவித: — 420–

புருஷோத்தம தீமோஷ ஹேதுத்வ மதபஞ்ஜக
அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி மோஷ கரத்வஹா! — 421–

சரம ஸ்லோக தர்ம த்யாகாநுவாத மத ப்ரிய:
ப்ரபத்தி ஸர்வ தர்ம த்யாகங்கோக்தி விதி பஞ்ஜக: –422–

க்ஷேத்ரஜ்ஞோபாஸநோபாய நித்யா ஸக்தத்வ பஞ்ஜக !
ஏக வாக்ய விதித்வாநு வாதத் வாநுப பத்தி வித் — 423–

குரூபாய லகூபாயகீ ! ப்ரரோசகதா ப்ரிய:1
பக்தி வித்யா மந்ததீகாதி காரித்வ மதாந்தக — 424–

உபாஸநா மந்த விஸ்வாஸாதி காரித்வ நாஸக : I
உபாஸநா லோக ஸங்கரஹார்த்தித்வ மதமாரக: — 425–

ப்ரபத்தி ரூப ஸகல தர்மத்யாக மதாந்தக ! ப்ரபத் யநுஷ்டாந கால ஸர்வ தர்ம விமுக்திஹா–426-

ப்ரதக்ஷிண ப்ரணாமாத்யநுஜ்ஞா கைங்கர்ய ஹேது த்ருக்
அவஜ்ஞாக்ருத பக்தாதி ஜந்ம சிந்தாதி தோஷ த்ருக்–427–

ஸாஸ்த்ர வ்யவஸ்த்தா ஸித்யர்த்த பக்த ஜந்மாதி சிந்தக:
ஸாரகல்க ஸ்வரூப ஸ்ரீமத் கைங்கர்ய விபாக த்ருக்||–428-

ஸம்பந்ததீ முகாநேக மோக்ஷஹேது மதாந்தக
சரம ஸ்லோக நிகில தர்ம த்யாகி ஷடர்த்தவித்–429-

சரம ஸ்லோகைக ஸப்த ஷடர்த்தோக்தி விசக்ஷண:
பரதந்த்ர ஸ்வபாவாத்ம வித்ய நர்ஹத்வ பஞ்ஜக!!–430-

பரதந்த்ராத்ம கர்த்ருத்வ ஸ்வரூப விஸதோக்திமாந்
ஸ்ரீமத் கர்த்ரு ப்ரேராகாநு மந்த்ரு காரயித்ருத்வ வித் ||–431-

க்ரியமாணாக வித்வம்ஸி ப்ரபத்தி ப்ரதிபாதக
ப்ரஹ்ம வித்யாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட கர்ம ஸ்வரூபவித்–432-

ப்ரியா ப்ரியோப ஸங்க்ராந்த வித்வத் புண்யாக வேதிதா
ப்ராப்த் யந்தராய வித் ஸாத்யோபாய ரோதி விஸேஷவித் |–433-

ப்ரதிகூலாநு பூத்யாதி ஹேது பாப ஸ்வரூப வித்
குணாஷ்ட காவிர்ப்பா வோக்தி வேத்யார்த்த பரிஸோதக:–434-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வரூப நித்யத்வ பாதக
மா ஸூச ஸப்த நிரணுந்த ஸோகாநேக விதத்வவித் — 435–

ஆசார்ய க்ருத்யவிச் சிஷ்ய க்ருத்ய வேதந தீக்ஷித!!
யதீந்த்ரமாஹாநஸிக ஸம்ப்ரதாய ஸூதாப்ரத: || -436–

விரோத பரிஹார ஸ்ரீஸார ஸாராக்ஷி யுக்மத !
ஸெளம்ய கார்த்திக ராகாஸ்ரீ பர்யங்காரோஹண ப்ரிய –437–

அத்ரார்ச்யா ஜகத் ஸர்வம் பாலயந் ஜயதி ஹ்யஸெள–438-

இதம் குரோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் மஹார்த்தம் ஸர ஸார்த்த போதம்!
படந்தி யே ஸர்வ ஸமீஹிதார்த்த ஸித்திம் லபந்தே அத்ர பரத்ர சாபி –439–

பலாநபேஷோபி குரோ ப்ரஸாதாத் ஸித்திம் ஸமாப்நோ த்யநுஷங்க ஸித்தாம் ஸ்ரமாபநோதாய க்ருதாவகாஹம் கங்கா பவித்ரீ குருதே ஹி ஐந்தும் — 440–

கோபால தாஸஸ்ய குருத்த மாங்க்ரி பக்தி ஸ்ரவந்தீ ஹ்ருதயாப்ஜ கோஸாத்
நிர்கத்ய தந்நாம ஸஹஸ்ர ரூபா தத் த்யாயிந! ஸர்வ ஜநாந்புநாதி–441–

இத்யாத்ரேய க்ருஷ்ணார்ய தநூஜஸ்ய ஸ்ரீமத் வேதாந்த ராமாநுஜ மஹா தேஸிக கடாஷ லப்த ஸார்வஜ்ஸ்ய கோபாலார்ய மஹாதேஸிகஸ்ய க்ருதிஷு தேஸிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீமதே கோபாலார்ய மஹா தேஸிகாய நம
ஸ்ரீமதே நிகமாந்த தேஸிகாய நம

ஸ்ரீ தேசிக அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–

ஸாங்க்ய ஸெளகத சார்வாக ஸாங்கராதி தமோநுதம்!
த்ரய்யந்த தேஸிகம் வந்தே வேங்கடேஸாஹ்வயம் மஹ:–

ஸ்ரீமத் வேங்கட நாதஸ்ய நாம்நாம் அஷ்டோத்தரம் ஸதம்
ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வஹ்யே ஸர்வார்த்த ஸித்திதம்–1-
கண்டாவதாரோ அநந்தார்ய தநயோ வேங்கடாதிப :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்ஸோ வரதாசார்ய வீக்ஷித: –2-
ராமாநுஜாரர்ய ஸந்த்ருஷ்ட: ஸெளபர்ண மனுசிந்தக
தார்ஷ்ய தத்த வர ஸூத்த! ப்ரஸாதித ஹயாதந –3-
அதீத ஸாங்கஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ;
இதிஹாஸ புராணஜ்ஞ ! ஸூகவிஸ் தர்க்க தத்வ வித்–4-
பாஷ்யகாரோ பயஹர ஸுதாஸீ துக்க ராசி க்ருத்
ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ தேவதா பாரமார்த்யவித் ||–5-
ஸ்ருத வித்யா ஸ்ராவயிதா ஸ்ருத பால ஸ்ருத ப்ரத:
ஸ்ரித: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருதிய : க்ருதீ ஸூதீ–6-
நிரஸ்த ஸாங்கய ப்ரத்யுக்த யோக காணாத பஞ்ஜந
அசிச்சை தந்ய வாதக்ந க்ஷணி காணுமதார்தந–7-
ஸாகாராதீ நிராகர்த்தா ஸூந்யவாத தமோநுத
குத்ருஷ்ட்யுரக பஷீஸ ஸப்த பங்கீ விலோபந–8-
பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந
அநீஸவாதி தம்போளி : பாஷண்ட மத கண்டந–9-
ஸம்ரக்ஷிதாகம! ஸங்க சக்ர தாரண ரக்ஷிதா
ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா ஸூத்த ஸத்வ மயா க்ருதி–10-
யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதீ :
அவதார ரஹஸ்யஜ்ஞா அர்ச்சா சவ்ந்தர்ய ஸக்ததீ? ||–11-
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ ! தத்வ த்ரய விஸேஷவித் | பக்தி யோக விரோதிக்ந ! பக்திமாந் பகவத் ப்ரிய–12-
ஞாநைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய:
சதுஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞ! ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக –13-

ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்த தந்து க்ருதுத்தம:
அஷ்டாக்ஷரைக நிரத நவமைகரஸாஸ்ரய–14-
தஸ தாத்பர்ய விஜ்ஞாதா ஸத க்ருச்ச ஸஹஸ்ரவித்
ஸ்தூல லஷோ அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக–15-
தர்ம ஸங்குஸ் ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸரோருஹ:
பத்மாக்ஷாநந்த ஜநக ததாநந்த குணாகர!–16-
த்யாக ஸப்தார்த்தவித் தர்மவேதீ விதி விஸேஷவித் !
உத்தம ஸ்லோக பாவஜ : பஞ்ச கால பராயண:–17-
ஸு ரஸேவ்ய பூர்ண மநா : ஸூரீந்த்ர ப்ரதி ரூபக!
கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேஸிக!–18-
வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குரூத்தம !
ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதீ: அநகஸ் ஸத்ய வாகபி –19-
ஸாது வ்ருத்திர் முக்தடம்ப !: ஜிதாஷோ தீர்க்க பந்துமாந்!
தயாளு: ஸாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர:–20-
மஹா குரு’: ஸ்வர்ண வர்ண: ஸூபாஹு ! புண்டரீக த்ருத்
பவித்ர பாணிர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ–21-
ஸவ்யபாணி தலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்ஜவல –22-
பல ஸ்ருதி :
இதீதம் தேஸி கேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வ பாபாபனுத்தயே–23-
படந் நாம ஸதம் பக்த்யா ஸ்ருத்வா குரு முகாம்புஜாத்
ப்ரஸாதாத் தேஸிகேந்த்ரஸ்ய புக்தி முக்தீ ஸமஸ்நுதே–24-
ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம்
ஸர்வாந் காமான வாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் ஸதம் –25-
இதி ஸ்ரீ நிக மாந்த மஹாதேஸிகாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி:
ஓம் கண்டாவதாராய நம:
“அநந்தார்ய தநயாய நம :
வேங்கடாதிபாய நம:
ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யம்ஸாய நம
வரதாசார்ய வீக்ஷிதாய நம
ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஸௌபர்ணமநு சிந்தகாய நம

தார்ஷ்ய தத்த வராய நம :
ஸூத்தாய நம ,י
ப்ரஸாதித ஹயாநநாய நம

அதீத ஸாங்க ஸகல ஸ்ருதயே நம
ஸ்ம்ருதி விதே நம
அக்ரணயே நம:
இதிஹாஸ புராணஜ்ஞாய நம
ஸு கவயே நம:
தர்க்க தத்வ விதே நம
பாஷ்யகாராய நம
பய ஹராய நம:
ஸூதா ஸிநே நம
துக்த ராஸி க்ருதே நம

பிரதான ப்ரதி தந்த்ரஞ்ஞாய நம
தேவதா பாரமார்த்ய விதே நம:
ஸ்ருத வித்யாய நம
ஸ்ராவயித்ரே நம
ஸ்ருத பாலாய நம:
ஸ்ருத ப்ரதாய நம
ஸ்ரிதாய நம
பாண்டித்ய தாத்ரே நம

க்ருத க்ருத்யாய நம
க்ருதிநே நம
ஸூதியே நம:
நிரஸ்த ஸாங்க்யாய நம:
ப்ரத்யுக்த யோகாய நம.
காணாத பஞ்ஜநாய நம
அசிச்சைதந்ய வாதக்நாய நம
க்ஷணிகாணு மதார்தநாய நம

ஸாகாரதீ நிராகர்த்ரே நம:
ஸூந்யவாத தமோ நுதாய நம
குத்ருஷ்ட்ரக பஷீஸாய நம
ஸப்த பங்கீ விலோபாநாய நம

பேதாபேத மதச் சேத்ரே நம
தூதயாதவ கல்பநாய நம
அநீஸவாதி தம்போளயே
பாஷண்ட மத கண்ட்டநாய நம:
ஸம் ரக்ஷிதாகமாய நம
சங்க சக்ர தாரண ரஷித்ரே நம:
ஊர்த்வ புண்ட்ராங்க த்ராத்ரே நம
ஸூத்த ஸத்வ மயா க்ருதயே நம
யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரதியே நம– 50

அவதார ரஹஸ்யஜ்ஞாய நம
அர்ச்சா ஸெளந்தர்ய ஸக்ததியே நம:
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம
தத்வ த்ரய விஸேஷவிதே நம
பக்தியோக விரோதிக்நாய நம:
பக்திமதே நம!
பகவத் பிரியாய நம:
ஜ்ஞாநைக ஸாராய நம
த்வய விதே நம
விபக்தாதி க்ருதி த்ரயாய நம :—60

சதுஸ் ஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம:
ஸம்யக் ஞாதாங்க பஞ்சகாய நம
ஷடங்க யோக நிர்ணேத்ரே நம:
ஸப்த தந்து க்ருதுத்தமாய நம
அஷ்டாக்ஷரைக நிரதாய நம.
நவமைக ரஸாஸ்ரயாய நம.
தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஸதக்ருதே நம
ஸஹஸ்ர விதே நம
ஸ்தூல் லக்ஷாய நம –70

அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம
தர்ம ஸங்கவே நம
ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸ்ரோருஹாய நம:
பத்மாக்ஷாநந்த ஜநகாய நம
அநந்த குணாகராய நம:
த்யாக ஸப்தார்த்த விதே நம
தர்ம வேதிநே நம
விதி விஸேஷ விதே நம
உத்தம ஸ்லோக பாவஜ்ஞாய நம!
பஞ்ச கால பராயணாய நம–80–

ஸூர ஸேவ்யாய நம:
பூர்ண மநஸே நம :
ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம:
நிகமாஞ்சல தேஸிகாய நம
வைத்யாய நம:
முநீந்த்ராய நம!
ஸர்வஜ்ஞாய நம:
உபகர்த்ரே நம :
குரூத்தமாய நம –90-

ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதியே நம
அநகாய் நம:
ஸத்ய வாசே நம.
ஸாது வ்ருத்தயே நம:
முக்த டம்பாய நம
ஜிதாஷாய நம:
தீர்க்க பந்துமதே நம:
தயாளவே நம :
ஸாஸித்ரே நம:
ஸர்வ ஹிதா சரண தத் பராய நம: 100-

மஹா குரவே நம
ஸ்வர்ண வர்ணாய நம.
ஸூபாஹவே நம
புண்டரீக த்ருஸே ந :
பவித்ர பாணயே நம:
வ்யாக்யாந முத்ராங்கித் கராம்புஜாய நம:
ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்லவாய நம –108–

ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜய த்வஜம்!
விஸ்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே

வித்வந் மதங்கஜ ஸிகாபரணாய மாநௌ விஸ்வாதிஸாயி மஹிமாம்பு நிதாந பூதெள
வித்வேஷி வாத மகுடீ க்ருத குட்டநௌதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–1-

விஸ்வம்பரா மதிதராமபி பாஸயந்தெள விந்யாஸதோ விவித ஸஜ்ஐந தாநுபாயெள
விஸ்தீர்ண ஸம்ஸ்ருதி மஹார்ணவ் கர்ண தாரெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–2-

விஸ்வாந் தராந்த தமஸ க்ஷபண ப்ர வீணவ் வித்யோதமாந நகரேந்து மயூக ஜாலை!
விக்யாத தாமரஸ ஸங்க ரதாங்க சிஹ்நெள
வேதாந்த ஸூரி சரணெவ் ஸரணம் ப்ரபத்யே-3-

வித்வேஷமாந மதமத்ஸர வித்விஷெளயௌ விஷ்ண் வாலாயாநுகம நோத்தம நித்ய க்ருத்யெள
வேதாந்த வ்ருத்த விஹிதாஞ்ஜலி கோசரெள தெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–4–

விஷ்ண் வர்ப்பிதாத்மஜந பாக்ய விபாக பூதெள விப்ராஜமாந் நவகோக நதாநுகல்பெவ்
வேஷாந்தரோபகத பல்லவ தல்லஜெளதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் பிரபத்யே–5–

வேதோ முகைரபி ஸூரைர் விஹித ப்ரணாமௌ வேலாதிலங்கி ஸுஷமா குமரபாவெள
விஸ்மேர கேஸரலஸந் ம்ருது வாங்குலீகௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–6-

வித்ரா விதோத்பட விகார ரஜோ குணெள தெள விக்யாத பூரி விபவேந் ரஜ கணேந
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பரபத்யே–7-

விஷ்ண்வங்கரி நிர்கத ஸரித் ப்ரவராநு பாவ்யெள
வித்யா விநீத ஜநிதைர் விமலை ஸ்வ தீர்த்தை!!
வ்யாநம்ர ஸிஷ்ய ஜந ரக்ஷண ஜாகரூகெள வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பிரபத்யே–8–

வீதீஷு ரங்க நகரே க்ருத சங்கரமௌதெள விஷ்ணூத்ஸவேஷு விதி வாஸவ ஸேவிதேஷு
வித்யா விநீத ஐநதா விஹிதா நுஸாரெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–9-

விஸ்வாஸ விஷ்ணு பத பக்தி விரக்தி ஸூந்யம் |
விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம்
வித்வத்ஸபாநு கதி யோக்ய மிஹாததாநெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–10-

ஸ்ரீமதே வேதாந்த தேஸிகாய நம:

ஸ்ரீ தேசிக மங்களாசாஸநம்-

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி |

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே

ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம்!
வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேஸாய மங்களம் !–1-

நபஸ்யமாஸி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே
விஸ்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்|| 2||

பிதா யஸ்யாநந்த ஸுரி! புண்டரீகாஷ யஜ்வந:)
பெளத்ரோ யஸ் தநயஸ் தோதாரம்பாயாஸ் தஸ்ய மங்களம்–3-

வேங்கடேஸாவதாரோயம் ததி கண்டாம் ஸோ அதவா பவேத்
யதீந்த்ராம்ஸோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் –4-

ஸ்ரீ பாஷ்யகார பந்தாந மாத்மநா தர்ஸீதம் புந!!
உத்தரத்து மாகதோ நூந மித்யுக்தா யாஸ்து மங்களம் | -5-

யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம்
அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் 6|||

ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸ்கலா கலா!
அவாப விம்ஸத் யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் –7-

ஸ்ருத ப்ரகாஸிகா பூமெள யேநாதெள பரி ரஷிதா
ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ தஸ்மை ஸ்ரேஷ்டாய மங்களம் –8-

ஸாம்ஸ்க்ருதீபிர் த்ராமிடீபிர் பஹ்வீபி க்ருதிபிர் ஜநாந்
யஸ் ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் –9-

ய : க்யாதி லாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே!
க்ரயணீய தஸாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் –10-

யஸ்மா தேவ மயா ஸர்வம் ஸாஸ்த்ர மக்ராஹி நாந்யத :
தஸ்மை வேங்கட நதாய மம நாதாய மங்களம் –11-

பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச
ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்–12-

ய கருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம்
ஆஸாஸ்தே அநு திநம் ஸோ அபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

ஸ்ரீ தேசிக ஸ்துதி: –
ஸ்ரீ தொட்டையாசார்யர் (வைபவ ப்ரகாசிகை)
ஜயது நிகம சூடா தேஸிகேந்த்ரோ தயாளு
ஜயதி ஸுமதி ஸேவ்யா ஸோபநா தஸ்ய ஸூக்தி:
ஐயதி ஸூப தம் ஸீலயந் ஸூரி ஸங்க:
ஜயதி வஸூ மதீயம் தஸ்ய ஸஞ்சார தந்யா-

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபஹத ஸ்ப்ருஹம் !
ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷ வேங்கடேஸாஹ்வயம் மஹ :

ஸ்ரீ அண்ணயார்ய மஹா தேசிகன்
கவிதார்க்கிக கண்டீரவ சரணாப்ஜம்
பிப்ருத மெளலி பாகேஷு
விலஸதி வ ஸார்வஜ்ஞம் விபுத ஐநா : ஸர்வ மங்களோல்லலிதம் |

ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர பரகால யதீந்த்ரர்
வாதி த்விய ஸிரோ பங்க பஞ்சாநந பராக்ரம:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கிரம் விஐயதாம் புவி|

ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்

ஸ்மயமாநாநநாம் போஜம் தயமாந த்ருஸம் குணாந் !
அயமாநம் குரும் ஸ்ம்ருத்வா வயமாநந்த பூரிதா | :

பரிமித மதி துஷ் பரவேஸா கிலாம்நாய கோடீ குஹாந்தர் நிராபாத ஸஞ்சார தீவ்யத் பர ப்ரஹ்ம பஞ்சாஸ்ய நிஸ் ஸங்க ஹஸ்த க்ரஹா பூர்வ திவ்யெளஷ தீபூத ஸூக்தி ச்சலோதீத திவ்யாபகா பூர நிர்த்தூத விஸ்வம்பரா பாப பாளீக நாளீக ஜந்மா த்யமேய ப்ரபாவ ப்ரதிஷட்டாபிதா ஸேஷ ராமாநுஜாசார்ய ஸித்தாந்த ஸேதோ ! பஜத் பவ்ய ஹேதோ ! சிராவ்ருத்த ஸம்ஸார பாதோதி நிர்மக்ந லோகாவநோத்யத் தயாஸார ஸேஷாசலாதீஸ ஸங்கல்ப ஸம்பூத கண்டாவதாரா கமாந் தார்ய நிஸ் ஸீம நிர் ஹேது காருண்ய ஸிந்தோ! ப்ரபந்கைக பந்தோ! தியாந்தம் மதாந்தம் பவாப்தெள நிமக்நம் கதாசார
கந்தம் பவத்பாத பங்கேருஹ ப்ரேம பந்தம் குருஷ்வ ப்ராபோமாம் க்ருதாஜ்ஞாந பங்கை: பயோஜாந்தரங்கை ரபாங்கை ருதீக்ஷஸ்வ ரக்ஷ ஸ்வயம் — 1–

ஐயது நிகம சூளிகா தேஸிகோ நிர்மம ஸ்தோம துஸ்ஸாத நித்யாந மந்தாந நிர்மத்ய மாநாத்ம சேத: பயோராஸி நிர்யத் ஸுதாபாநு ரேகாயிதாமந்த விஜ்ஞாந ஸந் மல்லிகா மஞ்ஜரீ வாஸிதாபஷ திங்மண்டலோ வித்விஷந் மண்டலி பூமி ப்ருத் கண்டநா கண்டல: குண்டலீஸ ப்ரதா ஹாரி பாண்டித்ய
பாக் சண்டபாது ப்ரபா ஸ்பர்த்தி காய த்யுதிர் நிஸ்துல க்ரந்த நிர்மாண வைசித்ர்ய கண்டாபதீ பூத
துஷ்ப்ராப நிஸ்ரேயஸாஸ்த்தா நிஷித்தாகமாளி விருத்த ப்ரசார; ப்ரபந்ந ப்ரஸித்தாபதாந ப்ரணாடீ விநிஸ்சேய ஸஞ்சாரி லக்ஷ்மீ ஸஹாயாவதாரோ மஹாந் — 2-

ப்ரபதந ஸரணி ஸ்வரூப ப்ரமாண ப்ரசாரேஷு புங்காநு புங்காயிதாநேக துர்வார ஸந்தேஹ ஸந்தோஹ காடாந்தகார ப்ரதாந ப்ரதிக்ஷேப பாலாருணாகார நிக்ஷே பரக்ஷாதி ஸங்க்ஷிப்த யுக்த்யா விபக்ஷோக்தி ஸிக்ஷாதி தக்ஷம் ஜகத் பங்க பங்கா ப்ரகங்கா ஸமுத்பாதி துங்காநு பாவாந்த ரங்கேஸ பூவாத
ஸங்கோதயத் பாஷ்ய வாதாவளீ யுக்ம ஸம்பந்ந மாநந்த வாசா ஸுதாபூர தோராஹவோத்யுக்த ஸராதிக ஸ்தோத்ர விஸ்மாபிதாஸேஷ வித்வஜ்ஜந ஸ்தோம ஸம்பாவ்யமாநம் பவாநீ தவாம்போஜ ஸம்பூத ஜம்பாரி முக்யாமர வ்ராத நிஸ் ஸங்க ஜ்ரும்பத் ஸ்வ வீராயீ தாநங்க தாஸீ க்ருதி ப்ரௌட கம்பீர சித்த ப்ரவ்ருத்தம் பதாம்போஜ ஸக்தாப தம்போநிதி க்ராஸ கும்பீ குமாரம் பஜேஹம் துராசார துர்போத தூர்வாத ஸந்தேஸ வைதேஸிகம் தேஸீகம் || 3 ||

பவ ஹ்ருதய சிரத்நகீ ரஞ்சலாசார்ய வர்யேத்புதா நந்தசர்யே விசார்யேஹ கத்யந்தாரபாவ முத்புல்ல பத்ம ப்ரவாள ப்ரதி ஸ்பர்த்தி பாதே, கதா யோதநோத்யுக்த ஸச்சாத்ர ஜைத்ரோதயத் காஹளீ ஸோபி ஜங்கா யுகீபாஜி, ரம்பா வநஸ் தம்ப கும்பீந்த்ர ஸூண்டோபமாநோரு காண்டே, வளக்ஷாம் ஸூக த்வந்த்வ ராஜத்கடீகே, ஸமுத்யத் விவஸ்வத் ப்ரபா புஞ்ஜதிக்காரி தேஜ:ப்ரவாஹாந்த விப்ராம்யதாவர்த்த ஸங்காஸ்பதி பூத கம்பீர நாபௌ, கவாடப்ரமாதாயி வஷோ விலோலத்
துலஸ்யப்ஜ பிஜாக்ஷமாலே, கராம்போஜ நாளாயிதாஜாநு ஸம்லம்பி பாஹௌ, களஜ் ஜ்யோதிஷாதோ பவத் கம்புகாந் தெள, ஸரத்பர்வ ஸோமாபி ராமாந நாம்போ ருஹாந்தர் ப்ரமத் ப்ருங்க யுக்மீ பவல் லோசநே,மோசநே துஷ்க்ருதாளேர் பஹிர்நிர்ய தந்தஸ்த்த ஸத்வாம்ஸ ஸந்தேஹ பாத்ரீபவத்
காத்ர ஸக்தோர்த்வ புண்ட்ர ஸ்ரியாலங்க்ருதே, வேங்கடேஸே குரௌ| | 4

ஷட் ஸப்ததி கணோபேத சரணோ ம்ருது பந்தந !!
படதாம ஸூபச்சேதீ த்ரய்யந்தாசார்ய தண்டக–

ஸ்ரீதேசிகன் வாழித் திருநாமம்-நேரிசை வெண்பா
வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்த குரு – வாழியவன்
மாறன் மறையுமிராமானுசன் பாடியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.

எண்சீராசிரிய விருத்தம்
வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே
கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
தண்டமிழ்த் தூப்புல் திருவேங் கடவன தாள் வாழியே!

நேரிசை வெண்பா
நானிலமுந்தா வாழ நான் மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ- ஞானியர்கள்
சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றணடிரும்

திருவோலக்கப் பாட்டு
வாழி யணி தூப்புல் வரு நிகமாந் தாசிரியன்,
வாழி யவன் பாதார விந்த மலர் – வாழியவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்

திருநாள் பாட்டு
வாதா சனவர ரிவரென வருமா பாடியம் வகை பெறு நாள்
வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாசி யறிந்திடு நாள்
பேதா பேதம் பிரம மெனாவகை பிரமந் தெளிவுறு நாள்
பேச்சொன் றுக்குச் சததூடணியைப் பேசிய தேசிக நாள்
தீதா கியபல மாயக் கலியைச் சிக்கென வென்றிடு நாள்
திக்கெட்டும் புகழ் சீபா டியத்தைத் தெளிய வுரைத்திடு நாள்,
ஓதா தோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடு நாள்
உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே–

செங்கமலத்தய னனனவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்
சீர் கொளிராமா நுசவெனுமந்திரம் பதிகளில் வாழ் திரு நாள்
செங்கல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு
சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடுநாள்,
தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடுநாள்,
சீர்மதி யாகம மெளலி தந் தேசிகர் பிறந்து வளர்ந்திடுநாள்,
பங்கய மா மலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்,
பார் திகழ் பாத்திர பதத் திருவோணமெனு திரு நன்னாளே

ஸ்ரீ தேசிகனின் திருநக்ஷத்ரம்

கந்யா ஸ்ரவண ஸம்பூதம் கண்டாம்ஸம் வேங்கடேஸிது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்!

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெருமாள் தூதரும்- ஸ்ரீ பாண்டவ தூதனும்–

May 1, 2026

இன்னார் தூதன் என நின்றான் -தரித்து நின்றான்

சொல்லின் செல்வன் -ராமன் சங்கல்பத்தாலேயே சுக்ரீவன் திருவடியையே தூதுவனாக அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி அனுப்பினான் -வாய் போல் எங்கும் செல்லும் திறமை யுடையவன்

உத்யோக பர்வம் -70- கிருஷ்ணனே தன்னைத் தூதுவனாக –

இருவருக்கும் செய்தி சொல்லி அனுப்ப -பெருமாள் -சுக்ரீவனின் மந்திரி -அவன் சொல்லியே செல்ல வேண்டும் -அங்குளி கொடுத்து -அடையாளங்களும் -ரஹஸ்யங்கள் -இதுவா காடு -கோட்டைக்கு வெளியில் வந்ததும் -கங்கை தாண்டி சுமந்தனுக்கு செய்து சொல்லும் -கிளி அரண்மனையில் விட்டு வந்தேன் ஊர்மிளையை பார்த்துக்கக் சொல்லி
பாண்டவர்-ஐந்து ஊராவது இது உண்மைக் கார்யம் அல்ல -பாஞ்சாலி கூந்தல் முடிக்க -நறையூர் நம்பி பாசுரம் -உத்யோக பர்வம் -81-துச்சாதனன் கர்ணன் அவமானம் -சர்வாத்மா அந்தகன் வெள்ளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவன் -சண்டைக்கு பேசிய வர சொல்லி அனுப்பினாள்

தேர்வு – செய்தி -பயணம்
கார்த்திகை மாதம் ஆரம்பம்

சம்பாதி சொல்ல -கடலைத்தாண்ட -பங்குனி மாதம் மஹேந்திர கிரியில் இருந்து புறப்படுகிறார் -காலினால் அளந்தான் -வாலினால் அளந்தான் -ஆகவே திருவடி திருநாம பெற்றார்
மூன்று தடைகள் -மைநாகம் – ஆதர சப்தமோ தசை-ஆறு சுவைக்கு மேல் -சுரசா நாகமாதா -வாயுக்குள் சென்று -ஸிம்ஹிதா நிழல் -வயிற்றுக்குள் -குடலை கிழித்து
அன்பால் வென்று -அறிவால் வென்று ஆற்றலால் வென்று -ராமநாமம் சொல்லி தடை நீக்கி-பங்குனி பவ்ர்ணமி அடைந்தார்

உத்யோக -82 பர்வம் -காலை புறப்பட்டு -அதே கார்த்திகை மாதம் கிளம்பி ரேவதி நக்ஷத்ரம் -பனி வர ஆரம்பிக்க – தாரகன் தேரோட்டி -நான்கு குதிரைகள் பூட்டி -சுக்ரீவனின் பெயரும் ஒரு குதிரை -சாத்விகி உடன் கூடி -காலால் குதிரைப்படை 1000 பின் தொடர-வேத விற்பன்னர் உபசரிக்க ஒரு நாள் தங்கி-ஹஸ்தினாபுரம் அடுத்த நாள்

சந்திப்பு -திருவடி சீதா பிராட்டி -இவனோ விதுர பக்தன் -நான் தேடி கிடைக்க வில்லன் -நான் விட்டு அடியேன் -நினைக்க அசோகவனத்தில் கண்டார் -ஞான முத்திரை -கட்டைவிரல் –
நமோஸ்து ராமாய-ருத்ரன் இத்யாதி ராமகைங்கர்ய துடிப்பால் -சம்சரே மதுரம் வாக்கியம் -31 -1-சர்க்கம் -தமிழ் இராமாயணம் -பாசுரப்படி இராமாயணம்- -அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி-இராமாயண உபன்யாசத்தில் தூங்கினால் அரக்கர்கள் ஆவோம்-

பீஷ்ம த்ரோண -விட்டு விதுரர்-துரியோதனன் சம்பந்தி -சாம்பன் இவன் மகளை திருமணம் -மம பிராண பாண்டவ-பஞ்ச பிராணனும் பஞ்ச பாண்டவர்கள்-விதுரன் வாழ் வள மனை புகுந்தான் உன் குடிசைக்கு வா -வில்லிபாதரம்-கணை யாழி கொடுத்து சீதையை உளனாக்கி -இங்கு கைங்கர்யம் ஏற்றுக்கொண்டு விதுரனை உளனாக்கி

பேச்சு -ராவணன் இடம் -அசோகவனம் துவம்சம் இங்கு அடிக்க அங்கு வலிக்கும் -கதை உபயோகிக்க வில்லை -மரங்களே ஆயுதம் -எதிராளி ஆயுதம் உபயோகிப்பர் -80000 கிங்கர்களை அழித்து –ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப்பட்டது போல் -நடித்து -ராம தூதன் -ராம தாஸ்ன் -சீதா அருளாலே-வாலையை ஆஸனம் நேரடிக் குறிப்பு இல்லை -அண்ணாந்து பார்த்து உத் வீஷய வால்மீகி இராமாயணம்-வரம் பொய்க்கும் ராமசரம் பொய்க்காது -தேவி ஒப்படைக்காவிடில் ஆவியை விடவேண்டி வரும்

பொய்யாசனம் -பாண்டவ தூதன்-அப்பூச்சி காட்டுகிறான் ஊர் ஓன்று வேண்டி-துஷ்டர்கள் எவ்வளவு பேசினாலும் கேட்க மாட்டார்கள்

இருவரையும் தூதன் என்றும் பார்க்காமல் அழிக்க பார்த்தால்-நரத்துக்கு வால் வாநரம் -சீதை சோக அக்னியை வைத்தே எரித்தார்-

இருவரும் விஸ்வரூபம் -திவ்யம் ததாமி அர்ஜுனனுக்கு-த்ருதராஷ்டரனுக்கும் காட்டி -இத்தைப்பார்த்த கண்ணாலே வேறே ஒன்றையும் பார்க்க மாட்டான் கண்ணை வாங்கிக்கோ பிரார்த்தனை -தூது பேரில் -இலங்கை முழுவதும் கண்டு -விபீஷணன் பற்றி நன்றாக அறிந்து -தோளில் அமர்ந்து கொண்டு போவேன் -இவர் அறிவார் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் தெரிந்தும் -ராமன் காக்கும் வரை உயிர் காத்து இருப்பவள் -ஒரு மாதம் கெடு வாங்குவதற்காகவே இந்த வார்த்தை –

சூடாமணி -காகாசுரன் -மனசிலா -செங்கல்பொடிக்கதை -திலகம் கோணலாக -கன்னத்தையே கண்ணாடி -இத்தையும் சொல் அடையாளம் -ஒரு கல்லில் பல மாங்காய் இருவரும் -விதுரன் உணவு -கோபத்தில் துரியோதனன் -வில் முறித்து உனக்காக போராட மாட்டான் -அரசியல் -குந்தி கர்ணன் இடம் அர்ஜுனனைத்தவிர மற்ற பாண்டவர்களை கொல்ல மாட்டான் -அஸ்வத்தாமா தளபதியாமல் பண்ணி -மோதிரம் போட-சண்டையில் உதவுவான் சகுனி தப்பாக புரிந்து -லீலைகள் பல செய்து

இருவரும் செய்தியுடன் வந்தார்கள் தஸ்ய சத்ருசம் பவத்-தென் திசை நோக்கி நமஸ்காரம் தொழத்தக்க நிலையில் இருப்பதைக் குறிப்பால் கண்டேன் சீதையை-கற்பினுக்கு அணியை-பரிஷ்வங்கம் -தன்னையே கொடுத்து பெருமாள் திருவடியையே விட ஸ்ரேஷ்டரானார் அங்கு தர்மபுத்ரன் நன்றி கூட சொல்லாமல் சங்கல்பித்தது -பின் வந்த தூதனை கொண்டாடட்டும் என்று செய்த செயல்-தூதரே முக்கிய போர் புரிந்தனர்

ஆச்சார்ய பிரபாவம் சொல்லும் தூது -பிறவிப்பெரும்கடல் -அசோகவனம் உடம்புடன் -இத்யாதி-தூது போனவன் ஏற்றம் உபாய வைபவம் சொல்லிற்று-ஆஸ்ரித பாரதந்தர்யம் -கண்ணன் அல்லால் கண்ணில்லை-பொருப்பு துறப்பு-

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம். திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார். இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும்.கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.-பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.

மன்னா போற்றி! மணாளா போற்றி!
அஞ்சன வண்ணத் தரியே போற்றி!
கஞ்சனை அடர்ந்த கண்ணா போற்றி!
கருங்கடற் றுயின்ற காரே போற்றி!
ஆயிரந் தோளுடை அடுபோர் வாணனை
நேமியற் றுணித்த நெடியாய் போற்றி!
பேய்முலை யுண்ட பிரானே போற்றி!
பேருல களந்த மாலே போற்றி!
மருதிடைத் தவழ்ந்த மாயா போற்றி!
மாக்கடல் கடைந்த மகேசா போற்றி!
பெருவரை எடுத்த பிரானே போற்றி!
சங்கொடு சக்கரந் தரித்தாய் போற்றி!
தண்டொடு சார்ங்கமும் தனிநாந் தகமும்
பிண்டி பாலமும் பெருவச் சிரமும்
எண்டிசை நிறைந்த எம்மான் போற்றி!
அண்டமும் விசும்பும் அகலிடம் எல்லாம்
உண்டுமிழ்ந் தவனே ஒருவா போற்றி!
திருமறு மார்பத் திருமால் போற்றி!
தீவினை கெடுக்கும் செல்வா போற்றி!
அருமறை தேடும் அடியாய் போற்றி!
அடியவர் வினைகெட அருள்வாய் போற்றி!
சென்றொரு தூணிடை நின்றாய் போற்றி!
சிறுவனை உகந்த செல்வா போற்றி!
அயனொடு தேவர்க் கரியாய் போற்றி!
மலர்மகள் புணர்ந்த மணாளா போற்றி
நிலமகள் இடந்த நெடியாய் போற்றி!
திருவருள் தருவாய் திருவடி போற்றி!>

இரத்தினச்‌ சுருக்கம்‌ என்னும்‌ நூல்‌ தூது விடுவதற்குரிய பொருள்களாகப்‌ பத்தினைக்‌ குறிப்பிடுகின்றது. அன்னம்‌, மயில்‌, இளி, மேகம்‌, நாகணவாய்ப்‌புள்‌, தோழி, குயில்‌, நெஞ்சு, தென்றல்‌, வண்டு
என்னும்‌ இவற்றள்‌ ஒன்றைப்‌ பொருளாகக்‌ கொண்டு, புலவர்கள்‌ தம்‌ புலமை நலம் தோன்றுமாறும்‌ இலக்கிய நயம்‌ பொருந்துமாறும்‌ தூதிலக்கியத்தை ஓதுகின்‌றனர்‌. |
*இயம்புகன்ற காலத்‌தெகின மயில்‌ கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி--நயந்த குயில்‌
பேதை நெஞ்சம்‌ தென்றல்‌ பிரமரம்‌ ஈரைந்துமே
தூதுரைத்து வாங்கும்‌ தொடை”
என்னும்‌ பழம் பாட்டால்‌ ௮வ் வுண்மை புலனாம்‌.

தான்‌ வகுத்துக்‌ கூறுவான்‌ தலையாய தூதன்‌ ; கூறியது கூறுவான்‌ இடையாய தூதன்‌; ஓலை கொடுத்து நிற்பான்‌ கடையாய தூதன்‌ என்பர்‌.
தானறிந்து கூறும்‌ தலைமற்‌றிடையது .
கோனறைந்த தீதென்று கூறுமால்‌--தான றியா
தோலையே காட்டும்‌ கடையென்‌(.று) ஒரு மூன்று
மேலையோர்‌ தூதுரைத்த வாறு”
என்னும்‌ பெருந் தேவனாரின்‌ பழந் தமிழ்ப்‌ பாரத
வெண்பாப்‌ பாடல்‌

கடனறிந்து காலம்‌ கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான்‌ தலை”
அறிவுரு ஆராய்ந்த கல்வி யிம்‌ மூன்றன்‌
செறிவுடையான்‌ செல்க வினைக்கு”'
இறுதி பயப்பினும்‌ எஞ்சா திறைவற்‌
குறுதி பயப்பதாம்‌ தூது”
----திரு வள்ளுவர்


அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை--நன்கமைந்த
சுற்‌றமுடைமை வடிவுடைமை சொல் வன்மை
கற்றடங்கல்‌ தூதின்‌ கடன்‌.”-பெரும் தேவனார்

வில்லின்‌ செல்வனாகிய: இராமன்‌ சொல்லின்‌ செல்வனாகிய அனுமனைத்‌ தன்‌ தேவியாகிய ஸீதையைக்‌ கண்டு வரும்‌ பொருட்டுத்‌ தென்றிசை நோக்கித்‌ தூது போக்கினான்‌-ஐயமகற்றும்‌ அடையாளங்கள்‌ பலவற்றை அறிவுறுத்தினான்‌. இறுதியில்‌ ஓளி பொருந்திய கணை யாழி யொன்றையும்‌ அளித்து வாழ்த்தி வழியனுப்பினான்‌.
அனுமன்‌ இராமனை வணங்கி விடை. பெற்றுத்‌ தென்‌றிசை நோக்கிச்‌ சென்றான்‌-இராமபிரானை மனத்துள்‌ நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர்‌ வீதிகளில்‌ ஓரமாக நடந்து சென்றான்‌. மலர்களில்‌ தேனை நாடிச்‌ செல்லும்‌ வண்டைப் போல்‌ கண்ட இட மெல்லாம்‌ சீதையைத்‌ தேடிக் கொண்டே சென்றான்‌–பிராட்டியைக்‌ காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன்‌ தனது மந்திர வன்மையால்‌ அரக்கியர்‌ உறக்கம்‌ கொள்ளுமாறு செய்தான்‌. உற்ற தோழியாய்‌ அமைந்த திரிசடையும்‌ துயில்‌ கொள்ளலானாள்‌-இராமபிரானால்‌ அனுப்பப்‌ பெற்ற தூதன்‌
நான்‌” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான்‌-
அரக்கனே யாக, வேறோர்‌ அமரனே யாக, அன்றிக்‌
குரக்கனத்‌ தலைவனே தான்‌ ஆகுக, கொடுமையாக :
இரக்கமேயாக வந்து இங்‌கு எம்பிரான்‌ நாமம்‌ சொல்லி
உருக்கினன்‌ உணர்வைத்‌ தந்தான்‌ உயிரிதின்‌ உதவி யுண்டோ

இராமபிரான்‌ கூறியனவாக அனுமன்‌ கூறிய அடையாள மொழிகளையும்‌ கேட்டு உள்ளம்‌ உருகினாள்‌. பின்னர்‌, இராமபிரான்‌ அளித்த கணையாழி யொன்றை எடுத்துப்‌ பிராட்டிக்குக்‌ காட்டினான்‌.அதனைக்‌ கண்ட சீதை பெரு மகிழ்ச்சி கொண்டாள்‌.அதனை அன்புடன்‌ வாங்கித்‌ தன்‌ மார்பில்‌ வைத்துத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌ ; தலைமேல்‌ தாங்கினாள்‌ ; கண்களில்‌ ஓத்திக்‌ கொண்டாள்‌; அதனைக்‌ கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள்‌-
பின்னர்ச்‌ சீதை, அனுமன்‌ தன்னைக்‌ கண்டு பேசியதற்கு அடையாளமாகத்‌ தன்பால்‌ இருந்த சூடாமணி யென்னும்‌ அணிகலத்தை அவனிடம்‌ நல்கினாள்‌.
அதனைத்‌ தொழுது வாங்கிய அனுமன்‌ தன்‌ ஆடையிலே முடிந்து பாதுகாப்புச்‌ செய்து கொண்டான்‌.
பிறகு, பிராட்டியிடம்‌ விடைபெற்று அவ்விடம்‌ விட்டுப்‌ பெயர்ந்தான்‌.
அனுமன்‌ இராமபிரான்‌ இருக்கும்‌ இடத்தை யடைந்தான்‌. அவன்‌ அங்கு இராமபிரானை வணங்கவில்லை. ஸீதை இருக்கும்‌ திக்கை நோக்கி வணங்கி வாழ்த்தினான்‌. குறிப்பறிவதில்‌ வல்ல இராமபிரான்‌ ௮னுமனது செயலை உற்று நோக்கினன்‌.ஸீதை நலமாக உள்ளாள்‌ ; இவ்வனுமன்‌ அவளைப்‌ பார்த்து விட்டு வந்துள்ளான்‌; அவளுடைய கற்பும்‌ கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான்‌. அவனுக்கு உற்ற துயர்‌ நீங்கியது? உவகையால்‌ தோள்கள்‌ பூரித்தன.
இங்ஙனம்‌ இராமன்‌ விடுத்த தூதனாய அனுமன்‌ அவ் விராமனைப்‌ பிரிந்த சீதைக்குக்‌ கணவன்‌ விடுத்த காதல்‌ தூதனாக மட்டும்‌ தொண்டாற்ற வில்லை. தன்‌ பெருந்தலைவனாகிய இராமன்‌ விடுத்த போர்த் தூதனாகவும்‌ இலங்கை வேந்தனைக்‌ கண்டு, அவனது உள்ளமும்‌ துளங்குமாறு செய்து மீண்டான்‌. அதனாலேயே கவியரசராகிய. கம்பர்‌, அவ்வனுமனைச்‌ சொல்லின்‌ செல்வன்‌” என்று தம்‌ காவியத்தில்‌ போற்றிப்‌ புகழ்‌கின்றார்‌.

முன்னமே துயின்‌ றருளிய முது பயோ ததியோ
பன்னகாதி பப்‌ பாயலோ ? பச்சை ஆல்‌ இலையோ
சொன்ன நால் வகைச்‌ சுருதியோ ₹ கருதி நீ எய்தற்
கென்ன மாதவம்‌ செய்தது இச்‌ சிறுகுடில்‌ என்றான்‌.”
–விதுரர் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமானுசனர் அமைத்த ஸ்ரீ சோழங்கநல்லூர் கிருஷ்ணர் கோயில்–

May 1, 2026

சோழங்கநல்லூர் – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமம். ஶ்ரீரங்கத்த்திற்கு வடக்கே கொள்ளிடத்திற்கு எதிர் கரையில் ( திருச்சி – நாமக்கல் ரோட்டில்) சிறுகாம்பூர் என்னும் இடம் உள்ளது. அங்கிருந்து 5 km தொலைவில் இந்த கோவில் உள்ளது. இந்த கிராமத்திற்கும் ஸ்ரீராமானுஜருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.-இந்த கிராமத்தில் வயற்காட்டில் நடுவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கிருஷ்ணர் தனது ஆஸ்தானத்திலிருந்து இருந்து வெளியே ஒரு அறையில் பாலாலயமாகி 50 ஆண்டுகாலமாக கோவில் திருப்பணி நடக்க காத்துக்கொண்டிருக்கிறார்.சேவிக்க யாரும் வராமல் தினமும் வரும் அர்ச்சகரை மட்டும் கடாக்க்ஷித்து நிற்கிறார். 85 வயது முதியவர் எந்த சம்பளமும் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர்.

ஶ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு கோசாலையை #சோழங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்த்து பிருந்தாவனம் காடுபோல் இராமானுசர் அமைத்தார் என்பது ஶ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் செய்தி. இந்த இடத்தில் ஆநிரைகாத்த பெருமாள் – கண்ணன் பிரதிஷ்டை செய்தார் என்பதும் கோயிலொழுகில் கூறப்பட்டுள்ளது.இப்போதும் அந்த கிருஷ்ணர் சோழிங்கநல்லூரில் ஒரு அறையில் இந்து சமய அறநிலை துறை திருப்பணி அனுமதி உத்தரவை எதிர்பார்த்து 50 ஆண்டுக்கு மேல் சிதிலமடைந்த கோவிலுக்கு வெளியே உள்ளார்.அந்த பசுக்களை கடாக்க்ஷிக்க இராமானுசர் தானே வந்து சில நாட்கள் இங்கே தங்குவார். திருவரங்கன் விக்ரஹத்தை பிரதிக்ஷ்டை செய்து அதற்கு வைகானச நம்பிமாரையும் திருவாராதனம் செய்ய பணித்தார் என்பதும் கோவிலொழுகில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலை:
1. புன்சிரிப்புடன் கிருஷ்ணர் (ஆநிரைகாத்த்த பெருமாள்) கையில் வெண்ணெய்யுடன் சேவை சாதிக்கிறார்.
2. அருகே நம்மாழ்வார், இராமானுசர் மற்றும் சேனைமுதல்வன் விக்ரஹங்கள் உள்ளன.
3. த்வஜஸ்தம்பம் முன்பும் பலிபீடம் பின்பும் உள்ளதால் தற்போது பாஞ்சராத்ர ஆகம முறையில் கோவில் உள்ளது
4. கோவிலொழுகில் குறிப்பிட்ட அரங்கன் இங்கே இல்லை. கோவிலைத் தெரிந்த எவருக்கும் இங்கு இருந்த அரங்கன் பற்றிய தகவல்கள் இல்லை.
5. கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் எந்த வருமானமும் இல்லை.
6. கோவிலுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. கிணறு தண்ணீர் இல்லாமல் பாழ்பட்டு உள்ளது

கோவில் தொடர்பிற்கு: ஆறுமுகம் Ph: +91 93455193555

தொடருபுக்கு: வெங்கடேசன் Ph: +91 9841348374

கோவில் அர்ச்சகர்: சேதுராமன் Ph: ‭+91 97875 72556‬

கோவிலுக்கு செல்லும் வழி:
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.

சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது.

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –ஸ்ரீ திவ்ய தேச ஸ்ரீ கருட சேவைகள்-

May 1, 2026

தை மாதம் – திருநாங்கூர் 11 கருட சேவை: தை அமாவாசைக்கு மறுநாள் (ஜனவரி/பிப்ரவரி) திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசப் பெருமாள்களும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கின்றனர்.திருநாங்கூர் 11 கருட சேவை: இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் மிக முக்கியமான விழா. தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்குக் காட்சி அளிப்பார்கள்.-இடம்: மணிமாடக் கோயில் (திருமணிமாடம்), திருநாங்கூர்.

கும்பகோணம் 12 கருட சேவை: சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவக் கோயில்களின் பெருமாள்களும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளுவார்கள்.-இடம்: பெரிய தெரு, கும்பகோணம்.

திருவல்லிக்கேணி (சென்னை): சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார்.

வைகாசி – காஞ்சிபுரம் கருட சேவை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.-பெரியாழ்வார் திருநக்ஷத்ர ஆனி ஸ்வாதிக்கும் ஆடி கஜேந்திர மோக்ஷத்துக்கும் கருட சேவை இங்கு உண்டு

ஆழ்வார்திருநகரி 9 கருட சேவை: வைகாசி விசாகத் திருவிழாவின் போது, நவதிருப்பதி எனப்படும் 9 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்குக் காட்சி கொடுப்பார்கள்.

ஆடி– ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் அவதரித்த இடத்தில், திரு ஆடிப் பூரத்தை முன்னிட்டு கருட சேவை நடைபெறும்.-திரு ஆடிப் பூரம் திருவிழாவின் போது பெரியாழ்வாருடன் ஐந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நடைபெறும்.

பெரும்பாலான திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவத்தின் 3வது அல்லது 5வது நாளில் கருட சேவை நடத்தப்படுகிறது.

ப்ரஹ்மோத்ஸவம்
கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.
அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.
த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.
கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.
ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்
வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.
கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான் கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ. எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில் கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால் நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.
தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.
துவஜ அவரோஹணம் – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.
த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.
சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.
விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.
பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.
வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.
கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.
ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது
பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.
ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.
ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.
ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.
.நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.
விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது
தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்
கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.
அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம்

 

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –

ஸ்ரீ கருடன் மேல் ஸ்ரீ சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன ஸ்ரீ கருட தாண்டகம், ஸ்ரீ கருட பஞசாசத்

———

வைநதேயன் – விந்தையின் குமாரன்.
பக்ஷிராஜன் – வேத ஸ்வரூபன்.
கருத்மான் – அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி – நாகப்பகையோன்
பத்ரிநாடா – பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி – நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் – பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் – பறவைகளின் அரசன்.
தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மை யுடையவர்.
மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.
மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு
ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.
இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.
ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர்.
அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.
 
கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள்.
இவரது நட்சத்திரம் சுவாதி.
சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு
திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள்.
இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு
அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.
எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்(
நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான்.
இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது
சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான்.
இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும்
எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.
 
————-
கருடன் வேதமயமானவன், அதாவது “வேத சொரூபன்”.
 
ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் – என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
 
விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி.
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
 
பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே
கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும்
அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம்.
அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது.
கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும்
தாயார் செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.
 
அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
 

ஆடி கருடன் – கஜேந்திர மோக்ஷம்

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி யன்று கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

———-

திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் – சேஷாசலம்.
வேதங்களால் நிறைந்திருப்பதால் – வேதாசலம்.
கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் – கருடாசலம்.
விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் – விருஷபாத்ரி.
திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.
துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் – அனந்தாத்ரி.
சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் – வேங்கடாத்ரி
 
இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு.
கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .
 
திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள்
1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது,
2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை,
3) தங்கத்தேர்.
4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.
 
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் . கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.
 
தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.
இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.  இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.
 
பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
————-

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

———-

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம்

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

——–

புராணங்களில் மேல் கோட்டை
1. பத்மகூடா,
2. புஷ்கரா,
3. புத்மசேகரா ,
4.அனந்தமாயா ,
5. யாதவகிரி,
6. நாராயணாத்ரி,
7. வேதாத்ரி ,
8. வித்யா (ஞான) மண்டல்,
9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம் :- ஆனந்தமய விமானம்

ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.

வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.

———

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

————–

மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்
 

ஒரே மாலையில் 18 ஸ்ரீ கருட சேவைகளின் அரிய காட்சி

சமத கும்பம் 2025 என்று அழைக்கப்படும் 3வது வருடாந்திர பிரம்மோத்சவம், 
108 திவ்ய தேசங்களால் சூழப்பட்ட பிரமாண்டமான சமத்துவ சிலையில் ( 
சுவாமி ராமானுஜாச்சாரியாரின் 216 அடி உயர சிலை )  நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வு பக்தர்களுக்கு  ஒரே மாலையில் 18 கருட சேவைகளைக் காணும் அரிய வாய்ப்பை வழங்குகிறது -இது ஆன்மீக மற்றும் மன எழுச்சியின் சூழலை உருவாக்குகிறது.காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்-18 பெருமாள்களுடன் திவ்ய சாகேதம் ராமச்சந்திர பகவானும் திருமஞ்சனம் பெற்றார்.இந்த சடங்கில் மூலிகை கலந்த நீர், பால், தயிர், தேன் மற்றும் பழச்சாறுகள் பயன்படுத்தப்பட்டன.தொடர்ந்து சஹஸ்ரதாரா அபிஷேகம் , ஷங்கதாரா, சக்ரதார ஸ்நானம் உள்ளிட்டவை நடந்தன. பகவத் ராமானுஜரும் புனித சேவையைப் பெற்றார்.அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றது.
கருடன் தான் விஷ்ணுவின் வாகனன் என்று எல்லோர்க்கும் தெரியும்-விஷ்ணு கோவில்களில் துவஜஸ்தம்பம் உண்டு. அதில் கருடனின் கொடியே கட்டி இருக்கும்.-10 நாள் உற்சவத்தின் போது கொடியை ஏற்றுவது துவஜாரோஹணம்-என்பர்.-கடைசி நாள் துவஜாஅவரோகணம் நடக்கும். 3 ஆம் நாள்கருடோத்சவம் நடக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொது-

-கருடனை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல சாலச்சிறந்தது.

-குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து&நஃபிஸ்தவளாய ச!விஷ்ணு வாஹந ! நமஸ்துப்யம் பஷிராஜாய தேநம:!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அரிய 100 தகவல்கள்–

1-ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3-‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4-கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

7-ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.

12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

14-வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.-இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

17. குப்தர் காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

18-சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

19-உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.-இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.

25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் –

26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள்.இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி

31-கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

33-ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

34-கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

35-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

37-கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

38-எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

39-கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

40-நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

41-எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.

42-நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.-கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.

50-சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

51-ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

52-வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச் சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

55-கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

56-திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

57-கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
 –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
–1-6-11-

58-கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

59=ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

60-பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

61-கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

62-கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.

65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட ‘ தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

70-ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

71-கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

72-வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

74-கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

76-தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

77-ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்ய ஸூரிகள் எனப்படுவர்.-அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

80-கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

82-பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

85-அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்

93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.

94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.-குங்குமோங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹன நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நமஹ)

96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம்,-காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.

99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

100-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

பக்ஷி ராஜாயதே நமஹ-

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களை ஒற்றியே ஸ்ரீ நாச்சியார் அருளிச் செயல்கள்–

May 1, 2026

1-ஸ்ரீ புத்தூர்‌ – திவ்ய தேசமாகுகை
ஸ்ரீ கோதை நாச்சியாரும்‌, அவரது தகப்பனாரும்‌, பிறந்து வளர்ந்த பெருமையினாலேயே திருவில்லிபுத்தூர்‌ தெய்விகத் தன்மை பெற்று விளங்குகின்றது எனலாம்‌.
மென்னடை யன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர் உறைவான் தன் -நாச்சியார்‌ திரு-5-5-என்றும்‌
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் —பெரியாழ்வார்‌ திருமொழி-2-2-6–என்றும்‌ அருளிச் செய்து திவ்யதேசமாக ஆக்கி அருளினார்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே
-2 2-6 –மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்- மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே – ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே -திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே- பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே – (ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் – நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே – லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் – இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை – எனக்கு உண்டாக்கித் தந்த–கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –-யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )-முலை உணாயே-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து – பரம பதத்திலே நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது – இப்போது காணப் பெறாத வருத்தம் வெறுப்பு தோன்ற வந்து நிற்கிறது –என்கிறாள் –வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்கை பிராப்தம்-அது தூரஸ்தம் ஆகையாலே – தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள் என்றால் இது சேரும்படி எங்கனே என்று -நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன் –உள்ளுக்குப் புக்கால் குறி யாழியாமே நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து – உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தைக் கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும் –பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும் என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் –திருவாய் மொழி -6-5-5-என்று பரிஹாரம் சொல்லுகிறவர்கள் தாங்களே படுகுலை யடுத்தி கோள் -என்னும் படி இறே இருப்பது-பொன் -அழகு – பிறருக்கு காட்டுகைக்காக வந்து நிற்கிறவன் திருவடிகள் காண வேணும் என்னும் ஆசையினாலே-என் பொரு கயல் கண் இணை துஞ்சா –இக் கண்ணுக்கு   இலக்கானவன் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து – பொரா நின்றுள்ள கயல் போலேயே ஒன்றுக்கு ஓன்று ஒப்பான கண்களானவை உறங்கா –இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை-உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே – பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –-அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் –-தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம்-கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –உலகளந்தான் வரக் கூவாய்-இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு – பேறு எனக்குக் கைப்படும் – எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் — குணாகுணம் நிரூபணம் பண்ணாதே – வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

2-பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌, . உண்ணாத போது ஒரு வார்த்தையும்‌ பேசுபவர்கள்‌,
காற்றினைப்‌ புனலைச்‌ சென்று நாடிக்‌ கண்ணமங்கையுள்‌ கண்டு கொண்டேனே” -7-10-5- என்று பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌,
‘ கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகம்‌ கொண்ட அடியன்‌” -5-3-5-என்றும்‌,
ஆசை வழுவாதேத்தும்‌ எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்‌ தேசமறிய உமக்கே யாளாய்த்‌ திரிகின்றோமுக்கு *. காசினொளியில்‌ திகழும்‌ வண்ணம்‌, காட்டீர்‌ எம்பெருமான்‌ ! * வாசிவல்லீர்‌! இந்தளூரீர்‌! வாழ்ந்தே போம்‌ நீரே! -4-9-4-என்று உண்ணாத போது ஒருவார்த்தையும்‌ பேசுவதைக்‌ காணலாம்

பகவதநுபவத்தை ஆசைப்பட்ட ஆழ்வார்களுக்கும்‌, பகவத்‌ ஸம்ருத்தியை (நிறைவில்‌ ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ நெடுவாசியுண்டு. பகவத்‌ ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்ட ஆண்டாளுக்கும்‌ அம்மாதிரியே நெடுவாசி யுண்டு. ஆழ்வார்கள்‌ இளைய பெருமாளைப்‌ போன்றவர்கள்‌. “ பெரியாழ்வார்‌ பரதாழ்வானுக்கு ஒப்பானவர்‌. ஆண்டாளும்‌ மதுரகவிகளும்‌ ஸ்ரீசத்ருக்கனாழ்வானைப் போன்றவர்கள்

கலியுகம் -97-நள வருஷம் திருவாடிப்பூரம் சுக்ல பக்ஷம் -செவ்வாய் கிளம்பி -சதுர்த்தி -அயோநிஜையாய் திருவவதரித்தார்
மிக்க இறைநிலை விளக்கம் -திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்கள்
மெய்யாம் உயிர் நிலை -6-15 பாசுரங்கள்
தக்க நெறி -16-22-
வாழ்வினை பகவத் கைங்கர்யம் -23-27
ஊழ்வினை-ப்ரக்ருதி சம்பந்தம் -28-30-
பகவத் ஸம்ஸ்லேஷமே நீராட்டம்
பகவத் கைங்கர்யமே பறை

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் |
ஸமூடமஸ்ய பாகும்ஸுரே |
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதா” ப்ய: |
தததோ தர்மாணி தாரயந் |-விஷ்ணு ஸூக்தம்

இதம் விஷ்ணுர் வி சக்ரமே த்ரேதா நிததே பதம் -ருக்வேதம் -ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
த்ரீணீ பதா வி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -ருக்வேதம் -யாராலும் வெல்ல முடியாத ஸர்வ ரக்ஷகனான ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
ஓங்கி உலகளந்த உத்தமன்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
அன்றிவ்வுலகம் அளந்தான் அடி போற்றி

ஸ காரணம் கரணாதிபாதிப ந சாஸ்ய கச்சித் ஜநிதா ந சாதிப -ஸ்வேதா -இவ்வாத்மாவுக்கு அதிபதியான ஈஸ்வரனே எல்லாவற்றுக்கும் காரணமாய் நின்று படைக்கும் முதல்வன் -அவனை உண்டாக்கியவனும் அவனுக்கு அதிபதியாகவும் யாரும் இல்லை
ஊழி முதல்வன் –பாழி யம் தோளுடை பற்ம நாபன்

அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் -ஸ்வேதா -மாயனான பரமபுருஷன் பிரபஞ்சம் அனைத்தையுமே படைத்தருளுகிறான்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-
மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
மாயன் மணிவண்ணன் -16-

ஸமுத்ரே அந்தம் விஸ்வ சம்பவம் அந்த ஸமுத்ரே கவயோ வயந்தி -தைத்ரியம் -பாற் கடலின் நடுவே பள்ளி கொண்டவன் அகிலப் பிரபஞ்சத்துக்கும் மங்கள கரன் -அவன் திருப்பாற் கடலுள் இடமுடையான் என்றும் கவிகள் அறிகிறார்கள்
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து–6-

தத்யதா இஷீ காதூலம் அஃனவ் ப்ரோதம் ப்ரதூ யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -நெருப்பிலிட்டு பஞ்ச போலே ஸஞ்சித பாபங்கள் அடியோடு அற்றுப் போகின்றன –
தத்யதா புஷ்கர பலாஸ ஆபோந ஸ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே —சாந்தோக்யம் -ஸ்வரூப ஞானம் பிறந்த பிறகு தாமரை இலையில் நீர் ஒட்டாதது போல் பாப கர்மங்கள் இவன் கண் ஒட்டுவதில்லை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

அத யததஸ் பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -சாந்தோக்யம் -பரதத்வத்தின் தோற்றமாய் நின்ற ஒண் சுடர்
தோற்றமாய் நின்ற சுடரே –21-

ஞானம் ஆத்மனி மஹதி நியச்சேத் தத் யச்சேத் சாந்தா ஆத்மனி-கட உபநிஷத் –சேஷமான இவ்வாத்மாவை சேஷியான பரமாத்மாவுக்கே தக்கவனாய் சேர்க்க வேண்டியது –
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீலே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்த்தோம் –22-

அந்தப்பிரதிஷ்ட ஸாஸ்தா ஜனனாம் ஸர்வாத்மா -ஸ்வேதாஸ் –எல்லாப் பொருள்களிலும் உள் நிறைந்து உயிர் அனைத்தையுமே நியமிப்பவன்-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி -24- இந்திரனுக்கு ஸர்வாத்ம பாவமும் நியமிப்பவனாயும் இருப்பதைக் உணர்த்தி அருளினவன்

ஸனோ புத்யா சுபயா ஸம்யுநக்து -ஸ்வேதா அவ்வெம்பெருமான் நன்மை நல்லறிவுடன் கூட்டுக -கைங்கர்யம் யவாதாத்மபாவி அருள வேண்டும் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்-29-

தேவஸ்யைஷ ஸ்வ பாவோயம் ஆத்ம காமஸ்ய காஸ் ப்ரூ –மாண்டூக்யம் -அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனுக்கு அடையப்படாததாயும் அடையப்பட வேண்டியது ஒன்றுமே இல்லை
குறை ஒன்றுமே இல்லாத கோவிந்தா -29-

அறம் செய்ய விரும்பு -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஆறுவது சினம் -சில்லென்று அழையேன்மின்
ஓதுவது ஒழியேல் -முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்
ஓங்கி உலகளந்த –நீங்காத செல்வம் –
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வசனம் வழங்காது எனின் –
அம்பரமே தண்ணீரே
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

30-3+0=3-ஆச்சார்ய பரம் -மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ –
ஐ ஐந்தும் ஐ ஐந்தும் –பஞ்சபூதங்கள் சம்பந்தமுள்ள இந்த உடம்பில் ஐம் புலன்களையும் ஐம் பொருள்களையும் அடக்கி யாண்டால் அர்த்த பஞ்சகம் ஞானம் ஸித்தித்து ஆழ் பொருளை உணரலாம்
நாச்சியார் திருமொழி –143-1+4+3=8-–பிரணவத்தின்-1- விவாரமான – நான்கு வேத சாரத்தை -3 ஆச்சார்யர் அனுக்ரஹத்தின் மூலமும் அறிந்தால் ப்ரணவாகார விமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும் திரு அஷ்டாக்ஷர பொருளாக நாராயணனை அடையலாம்
எல்லே இளங்கிளியே -15-பாகவத நிஷ்டை சொல்லும் இது திருப்பாவை யாகிறது -1+5=6-உய்யும் ஆறு படி நடந்தால் அறிந்து அடையலாம்

பதின்மருடைய ஞானமும் ஸ்திரீ தனமாக இவள்‌ பக்கலிறே குடி கொண்டது. பத்துப்‌ பேர்க்கு ஒரு பெண்‌ பிள்ளை இறே – பெண்‌ ஆணைக்‌ கண்டு காதல் கொள்வது பள்ளமடை ஆகும்‌. எனவே ஆழ்வார்‌ களுடைய பக்தியைக்‌ காட்டிலும்‌ பதின் மடங்கு அதிகமான அன்பை யுடையவர்‌ கோதை நாச்சியார்‌-உபயவிபூதிக்கும்‌ நாயகன்‌ இடைக் குலத்தில்‌. பிறந்து எளிமைக்‌ குணமே நிரம்பப்‌ பெற்று இச்சை யுடையோர்க்கு வீட்டின்பத்தை அளித்தான்‌. அதே போன்று கோதை நாச்சியாரும்‌, . தாம்‌ அந்தண குலத்தில்‌ வளர்ந்தாலும்‌, இறைவனை அடைவதற்கு உபாயமாக, துவாபர யுகத்தில்‌ கோபியர்கள்‌ மேற் கொண்ட நோன்பினை வழியாகப்‌ பின் பற்றுகிறார்

இடை நடையும்‌ இடை முடியும்‌, இடையர் பேச்சும்‌ கொண்ட ‘இடைப் பெண்ணாக பாவநா ப்ரகர்ஷத்தாலே (நினைவின்‌ முதிர்ச்சியாலே) வடிவெடுத்து இடைக்குலச்‌ சிறுமியரோடு இணைந்து, ஸ்ரீவில்லி புத்தூரே . திருவாய்ப்பாடியாகவும்‌, வடபெருங்கோயிலுடையான்‌ திருக்கோயிலே நந்தகோபர்‌ திருமாளிகையாகவும்‌, வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாகவும்‌ பாவித்து, நோன்பினைக்‌ கைக்கொள்கிறார் –
கண்ணனும்‌, கோதை, நாச்சியாரும்‌, இழிந்த குலமென்ற தாழ்ச்சி எதுவும்‌ இன்றி இச்சை யொன்றே தாம்‌ உகந்தருளும்‌ இடம்‌ என்று காட்டியதை அடி யொற்றி இராமாநுசர்‌ பிட்டிதேவன்‌ என்ற அரசனை விஷ்ணு வர்த்தனன்‌ என்ற பெயரில்‌ திருத்திப்‌ பணி கொண்டார்‌. வில்லி என்ற: வேட்டுவனை அரங்கனின்‌ கண்ணழகைக் காட்டி, உய்வித்தார்‌, ஊனமுற்ற ஊமைக்கும்‌ உய்யும்‌ வழி அருளிச்‌ செய்தார் –-முத்தியோ சிலரது சொத்தென் றிருக்கையில்‌ தமிழ்நாடு தம்‌ இருந் தவப்‌ பயனாய்‌ நம்‌ இராமாநுசனைத்‌ தந்தது அன்றோ-

3-இளமைப்‌ பருவத்தில்‌ கோதையார்‌ ஆடிய விளையாடல்‌களிலும்‌ எம்பெருமானும்‌ எம்பெருமான்‌ தொடர்பு பெற்ற பொருட்‌ களுமே இடம்‌ பெருகின்றன.
பொங்கு வெண்‌ மணல் கொண்டு சிற்றிலும்‌ முற்றத்‌ திழைக்கலுறில்‌ சங்கு சக்கம்‌ தண்டு வாள்‌ வில்லுமல்லது இழைக்கலுறாள்‌”-பெரியாழ்வார் -3-7-3-என்பதனால்‌ இதனை அறியலாம்

பொங்கு -இத்யாதி-புறம்பே போய் -தீ இணக்கி  இணங்கி ஆடாதே முற்றத்திலே இருந்து விளையாடு -என்று நான் நியமித்து வைத்தால் வண்டலிட்டதாகையலே நுண்ணியதாய் -வெளுத்து இருக்கிற மணலைக் கொண்டு முற்றத்திலே கொட்டகமிட ஒருப் பட்டாளாகில்–உறில்-என்கையாலே-இவளுக்கு மனசு இல்லாமையும் – தன்னுடைய நிர்பந்தத்துக்காக செய்கிற இத்தனை என்னுமதும் தோற்ற சொல்லுகிறாள்-சங்கு -இத்யாதி-அவனுக்கு அசாதாராண சிஹ்னமாய் – அழகுக்கும் விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருக்கும் ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆயுதம் ஒழிய   வேறு ஒன்றும் இட நினையாள்

4-அண்ணலார்‌ தாளிணை மேல்‌ அணி தண்ணந்துழாயென்றே மாலுமால்‌ வல்வினையேன்‌ மடவல்லியே -திருவாய் -4-2-1-என்கிறார்‌. பெரியாழ்‌வார் தன் பெண்‌ கொடியாகிய கோதை நாச்சியாருக்கு ஏற்ற கொழு கொம்பு எம்பெருமானே என்பதை அறிகிறார் -கோதை கோதை நாச்சியாரும் எந்நேரமும்‌ எம்பெருமானின்‌ வரவை எதிர் நோக்கிக்‌ காத்திருப்பவர்‌. அதனால்‌ எப்போதும்‌ அணி கலன்‌ பூண்டு ஆடைகளைச்‌ செவ்வனே உடுத்தி அழகு பார்த்திருப்‌பவர்‌. இதனை-காறை பூணும்‌ கண்ணாடி காணும்‌ தன்‌ கையில்‌ வளை குலுக்கும்‌ கூறை யுடுக்கும்‌ அயர்க்கும்‌ தன்‌ கொவ்வைச்‌ செவ்வாய்‌ திருத்தும்‌”பெரியாழ்வார் -3-7-8-என்பதால்‌ உணர இயலும்‌.
பரபக்தி நிலையில்‌ அருளிச் செய்தது திருப்பாவை. பரபக்தி, பரஜ்ஞானமாக வளர்ந்த நிலையில்‌ உருவானதே நாச்சியார்‌ திருமொழி. பரம பக்தி பிறந்த நிலையில்‌ சீவான்மாவின்‌ துடிப்பை உணர்ந்த எம்பெருமான்‌ தான்‌ தன்‌ உருக் காட்டலானான் –சேதன அசேதனம்‌ இரண்டையும்‌ எம்பெருமான்‌ உடலாகக்‌ கொண்டிருக்கிறான்‌. இவற்றுள்‌ உயிராக நின்று இயக்குபவன்‌ எம்பெருமான்‌.-இதையே திருவில்லிபுத்தூர்‌ கோயிலிலே ஆண்டாள் நாச்சியாரும்‌, ரங்கமன்னாரும்‌, பெரிய திருவடியும் ஏக ஆசனத்தில்‌ அமைந்திருப்பதைக்‌ காணும் போது எளிதில் உணர முடிகின்றது –

காறை பூணும் –தன் ஆற்றாமையாலே – ஏதேனும் ஒன்றைச் செய்து நாம் அவனை பெற வேணும் -என்று நினைத்து – அவனுக்கு ஆகர்ஷமாம் படி நம்மை அலங்கரிக்கவே அவன் தானே வந்து மேலே விழும் -என்று தன்னை அலங்கரிக்கையிலே -ப்ரவர்த்தையாய் –ப்ரதமம் –அவனைக் கண்டு பிரியப்பட்டு கட்டிக் கொள்ளும் கழுத்துக்கு அலங்காரமாக காறையைப் பூணும்-இது தான் உத்தம  அங்கத்துக்கும் உடம்புக்கும் நடுவாய் நின்று – ஒளி விடுவதோர் ஆபரணம் இறேகண்ணாடி காணும்-காறை பூண்ட திருத்தம் தன் கண்ணுக்கு விஷயம் அல்லாமையாலே அவனுக்கு உகக்கும்படி வாய்த்ததோ இல்லையோ என்னும் இடம் அறிகைக்காக-காறையும் கழுத்துமான சேர்த்தி அழகை கண்ணாடி புறத்திலே பாரா நிற்கும்–இது தான் அவயாந்தரங்களில் ஆபரணங்களும் இவள் பூணும் அதுக்கு உப லஷணம்–தன் கையில் வளை குலுக்கும்-இம் மநோ ரதம் அடியாக உடம்பிலே ஒரு பூரிப்பு தோற்றுகையாலே அது அறிகைக்காக கையிலே வளையை அசைத்து பாரா நிற்கும் –விரஹ கார்ச்யத்தாலே (பிரிவால் இளைப்பாலே )கையிலே வளைகள் கழன்றாலும் பின்னையும் எடுப்பது இடுவதாய் இறே இவள் தான் இருப்பது-இவள் எடுத்து இட்டாலும் அவை கையில் தொங்காதே
இப்போது உடம்பில் தோன்றுகிற பூரிப்பாலே -அவை கையிலே தொங்கினமை அறிகைக்காக
அசைத்து பாரா நிற்கும் -என்கை–கூறை உடுக்கும் – பரியட்டமும் அறையில் தொங்கும்படி ஆய்த்து -இம் மநோரத நிபந்தனமான தேக பௌஷ்கல்யத்தாலே இறே – அல்லாத போது – கையிலே ஒரு தலைப்பும் —காலிலும் தரையிலும் ஒரு தலைப்பு மாம் இறே–வளையும் கலையும் க்ரத சந்கேதரைப் போலே  –
கழலும் போது ஒக்க கழன்று தொங்கும் போதும் ஒக்க தொங்கா நிற்கும் ஆய்த்து —காறை பூண்டதுக்கு  மேலே ஓர் அதிசயம் தேடுகைக்காக இறே கூறை உடுக்கப் புகுந்தது–அதாவது அவனுக்கு ஆகர்ஷமாம்படி பரியட்டத்தை நன்றாக உடா நிற்கும் -என்கை-இவளுடைய அழகிலே ஆய்த்து அவன் ஈடுபடுவது-ஆதலால் அவன் உகக்க தக்க உடை வாய்ப்பு வரும் அளவும் குலைப்பது உடுப்பதுமாய் செல்லா நிற்கும் ஆய்த்து-அயர்க்கும்-இப்படி அவன் வரவுக்கு உடலாக -தன்னை அலங்கரித்த அளவிலும் வரக் காணாமையாலே அறிவு அழியா நிற்கும்–தன் கோவைச் செவ்வாய் திருத்தும் –
மீளவும் அறிவு குடி புகுந்து – இன்னமும் அவனுக்கு ஆகர்ஷமாம் படி இருப்பதோர் அதிசயம் நம் பக்கல் உண்டாக்க கடவோம் என்று – ஸ்வபாவமே கோவைப் பழம் போலே சிவந்து இருக்கிற தன்னுடைய அதரத்தை ராக ஜனகமான பதார்த்த சேவைகளாலும் மிகவும் சிவக்கும் படி பண்ணா நிற்கும்
அல்லாதவை போலே அன்றிக்கே –இது அவனுக்கு வாய் புகு சோறாய் இருப்பது ஓன்று இறே
தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்கிறபடியே–தேறித் தேறி நின்று – தன்னுடைய அவயவ அலங்காரத்தின் வாய்ப்பாலும் – தச்மிம்ச் ச பகவோ குண-(ஸூந்தர )-என்கிறபடியே இத் தசையில் வந்து உதவுகைக்கு ஈடான அவன் குணங்களிலே விச்வாசத்தாலும்-அயர்க்கை தவிர்ந்து
மென் மேலும் தெளிவை உடையவளாய் -அத் தெளிவு கை கொடுக்க தரித்து நின்று –ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் –தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே (தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )-தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் – அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் – அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்–மாறில் -இத்யாதி-ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-

5-மாணிக்கக்‌ கிண்கிணி யாரவாரிப்ப மருங்கின்‌. மேல்‌” பெரியாழ்வார்‌-1-6-1- கிங்கிணி வாய்ச்‌ செய்த தாமரைப்‌ பூப்போலே-25-

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி
–1 6-1 –பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள – அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் – மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் – ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல் நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் – கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –(ஆணிப்பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி-மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமேநாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே – ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்றுஇழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படிகாலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் – சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )


6-வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற” _-1-4-3-
வித்தகன்‌ வேங்கடவாணன்‌ என்னும்‌*-விளக்கினில்‌ புக என்னை விதிக்கிற்றியே-1-3-

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் – துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து- கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ) உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக அம்புலீ -விரைந்து ஓடி வா –வாணன்– வாழ் நன்

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே– பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து – குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே –வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

மைத்தடங்கண்ணி யசோதை தன்‌ மகனுக்கு? மைத்தடங்கண்ணி –1-4-10- யசோதைக்கு அடைமொழி
மைத்தடங்கண்ணினாய்‌ நீ உன்‌ மணாளனை” –19-மைத்தடங்கண்ணி – நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அடைமொழி-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை – அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –இவன் பக்கல் ஸ்நேகத்தாலே விகசிதமான கண்ணை உடையவள்
என்னுதல் –(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-19-மைத் தடங்கண்ணினாய் –சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே-விஸ்ருங்கலமான ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –இவன் மறுமாற்றம் சொல்லப் புக –நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான் ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் – நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் – இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ – அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன் அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது – உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் – அது இழவுக்கு உடலாவதே –நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்- உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது இழவுக்கு உடலாவதேஇக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பதுஅல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8) மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10) ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறேமையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

கஞ்சன்‌ புணர்பினில்‌ வந்த கடிய சகடம்‌ உதைத்து -2-4-4-
கள்ளச்‌ சகடம்‌ கலக்கழியக் காலோச்சி”்‌–6-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை –முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து–

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி – பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்- தாயே ரஷையாக வைத்த சகடம் – அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று- மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது- பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனதுகலக்கழிய காலோச்சிகட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான்-ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் – திருக் காலாண்ட பெருமான் (6-9-) ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போலகள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

பேயின்‌ முலையுண்ட பிள்ளை இவன்‌ முன்னம்‌?-2-5-2-
பேய்முலை நஞ்சுண்டு -6-

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த பூதனை உடைய முலையை – தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் – இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை( குறை ) இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் – பிரதி கூலித்து கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –

பேய் முலை நஞ்சுண்டு – பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காகபுகுந்த அபாயம் கேட்டிலையோபெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை – உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறேஅவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்பேய் உண்டு -பிரகிருதிமுலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –அதாவதுபிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்‌ வாய் கீண்டான்‌’ -2-6-3-
புள்ளின்‌ வாய்‌ கீண்டானை’ -13-

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )- கள்ளச் சகடம் -என்னுமா போலே – மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் – பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் ) கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் – தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்- அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

புண்ணில்‌ புளிப்பெய்தாலொக்கும்‌ தீமை” -2-9-1-
புண்ணில்‌ புளிப்பெய்தால் போலப்‌ புறம்‌ நின்று அழகு பேசாதே” –13-1-

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 –புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது -நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்-உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –-எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்–வீப்சையால் அகம் தோறும் என்றபடி –-ஆல்-அசைஅண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
-அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ ஸூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –-இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது –-க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்-இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –அன்றிக்கே –-அண்ணற்கு என்றது  அண்ணனுக்கு என்றபடியாய்-அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்-இப்படி தீம்புகளை செய்கையாலே-தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் (10-7)-என்கிறபடியே-சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே-புறம் நின்று – வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்-என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –-இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய- மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே-என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே-எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே-அழகு சொல்லாதே –இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே–அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி–இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் –-மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மைபேசாதே-இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று –காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி – நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே-சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே-பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

வங்கம்‌ விட்டுலவும்‌ கடற்பள்ளி மாயனை”?-4-5-6-
வங்கக்‌ கடல்கடைந்த மாதவனை-30-

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை 
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன் 
வங்கம் விட்டு வுலவும்  கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து 
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –அன்றிக்கே –மாயனை -என்றது -ஞானமாய் –தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி –குரை கடல் மேல் அரவணை மேல் குல வரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே –மது சூதனை- மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே  வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்  துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே  வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் ( 8-10 )-என்னக் கடவது இறே 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-கடல் கடையா நிற்க மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –கடைந்த போது சுழன்று வருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் – பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்றுஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்றுதேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டுபெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் –தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதைப் பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறேஅன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலேஇங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்கன்னிகைகளைப் பெறக் கடவனாய் இறே இருப்பதுபாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கைஅவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை-அறுப்புண்டான்

மானிட சாதியில்‌ தோன்றிற்று ஒர்‌ மானிட சாதியை.”–மானிட சாதியின்‌ பேரிட்டால்‌ மறுமைக்கில்லை?! -4-6-4-
மானிடவர்க்கென்று பேச்சுப்‌ படில்‌ வாழகில்லேன் -1-5-

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை 
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
 
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் 
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-மனுஷ்ய ஜாதியில் உத்பன்னமான தொரு மனுஷ்ய ஜந்துவை  -ஆத்மா கர்ம அனுகுணமாக தேவாதி யோனிகள் தோறும் பிறக்கக் கடவன் ஆகையாலே -புண்ய பாபங்கள் இரண்டையும் அனுபவிக்கைக்கும்  ஆர்ஜிக்கைக்கும் -உறுப்பாக ஆய்த்து -மனுஷ்ய யோனியில் பிறந்தது – ஆகையால் இப்படி இருக்கிற மனுஷ்ய ஜாதியிலே உத்பன்னமானதொரு ஜந்துவை  -த்ருஷ்ட பிரயோஜனத்தை நச்சி -கர்ம வச்யமான மனுஷ்ய ஜாதியில் ஒன்றின்  பேர் இட்டால் ஐஹிகத்தில் சில பிரயோஜனம் சித்திக்கிலும் மறுமைக்கு  ஒரு பிரயோஜனம் இல்லை -மறுமை யாவது அத்ருஷ்டம் 

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க –மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க – இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து – அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

செப்போது மென்முலையார்கள்‌ சிறுசோறும்‌ இல்லும்‌ சிதைத்திட்டு -2-8-3-
நாமமாயிரமேத்த நின்ற நாராயணா! நரனே?“ 2-1-என்று கண்ணனைத்‌ தாங்கள்‌ இழைத்த சிற்றிலைச்‌ சிதைக்க வேண்டாம்‌ என்று ஒரு பதிகத்தையே(2பதிகம் )அமைத்துள்ளார்

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 -3-செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய் இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும்
கொட்டகத்தையும் அழித்திட்டு பெண்களோடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே- நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன் என்று
என் முன் நிற்க அஞ்சி போய் உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை–

நமக்கு அசாதாரணைகளாய் இருக்கும் இவர்கள் தேவதாந்த்ரங்களின் காலில் விழப் பார்த்து இருக்கை நமக்கு மிகவும் பொல்லாங்கு என்று திரு உள்ளம் நொந்து தளும்பி முன் மடுவின் கரையிலே யானைக்கு உதவினால் போலே கடுக வந்து ஆய்ச்சிகட்கு முகம் காட்ட-அவர்களும் இவனை காணாதவர்கள் போலே அந்ய பரரையாய் இருக்கையைக் காட்டி சிற்றில் இழைக்க அந்த செயலும் காமாஸ்ரயணம் போலே இவனுக்கு அநிஷ்டம் ஆதலால் அவர்கள் இழைக்கும் சிற்றிலை இவன் அழிப்பதாக முயற்சி செய்ய-அவர்கள் அதுவும் வேண்டா என்ன இவன் வேணும் என்ன இப்படி நடுவே ஒரு மகா பாரதம் நடந்தது–பிறகு புணர்ச்சி நேர்ந்து அது தானும் பிரிவிலே தலைக் கட்டி நின்ற வாற்றை
ஆண்டாள் அனுகரித்து அருளிச் செய்யும் திரு மொழி இது–ஒன்பதாம் பாட்டில் -எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -என்பதால் புணர்ச்சி நேர்ந்த படி தோற்றும்-கோழி அழைப்பதன் முன்னம் -அடுத்த திருமொழியில் அமைக்கு நோக்கும் இடத்து பிரிவில் தலைக் கட்டினபடி தோற்றும்-

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-நான் உங்களை நெஞ்சாலும் நினைக்காமல் இருக்க என்னை எதிர் பார்த்து நீங்கள் சிற்றில் இழைக்க – உனக்காக சிற்றில் இழைக்க வில்லை- காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-காம தேவன் வீதி வலம் வரக் கூடும் என்று சொல்ல-நீங்கள் சிற்றில் இளைப்பது அந்ய அர்த்தமாகில் அதனை நான் அழிப்பதும் அந்ய அர்த்தம் தான் என்று அளிக்கப் புக ஆய்சிகள் அழிக்க வேண்டா என்று விலக்குகிறார்கள்

“இன்றுமுற்று முதுகு நோவ –2-2-என்பதற்குக் கருத்து எங்கள் முதுகை நோவு தீரச்சற்றுப் பிடிக்கலாகாதோ? என்பதாம்.-இச் சிற்றிலை இழைக்கப் பட்ட பாடு பன்னி உரைக்கும் கால் பாரதமாம் –
முதுகு நோவ தீர சற்று பிடிக்கல் ஆகாதோ-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
—2-3-

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-பேச்சும் செய்கையும்
தாழ்ந்த வார்த்தைகளும் தாழ்ந்த வியாபாரங்களும் பிரானே எங்கள் திறத்திலே அடியேன் குடியேன் என்றால் போலே சொல்லும் அதி விநய வார்த்தைகளும் கள்ளக் குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே இதற்கு எல்லாம் அடி உன் திருமுக மண்டலம் இறே-இப்படிப் பட்ட மயக்கத்தை உண்டு பண்ணுகைக்கு உன் திருமுகம் அம்மான் பொடியோ-

நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்-
-2-5-நாங்கள் இளைத்த இக் கோலத்தை அழித்தாயேஆகிலும் சர்வ ஸ்மாத் பரனானவன் இப்படி எல்லாம் செய்யப் பெறுவதே
ஈது என்ன சௌசீல்யம் என்று நெஞ்சு உருகிப் போம் இத்தனை ஒழிய ரோஷம் என்று பேர் இடும்படி ஒரு விகாரம் பெற்றோம் ஆகோம்-
ஆகிலும் உன் முகத்தில் உள்ளவை மெய்யே கண்கள் ஆகில்
நீ இந்த சிற்றிலை அழிக்க ஒருப்பட மாட்டாய்-இச் சிற்றிலை அன்புடன் நோக்குகை அன்றோ
கண் படைத்ததற்குபிரயோஜனம் என்கிறார்கள்-உரோடம் -ரோஷம்-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம்-
-2-6-சிற்றில் விஷயமாக ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு நீ சிறிதுண்டு –
நீ செய்யும் செய்திகள் சில உள-திண்ணென நாமது கற்றிலோம்-அவற்றை நாங்கள் அழகியதாக அப்யசித்தோம் அல்லோம்-கண்ண பிரான் இன்னது செய்தான் என்று பிறருக்கு சொல்ல முடியாத படி சில குறும்புகளைச் செய்ய அது கண்ட ஆய்ச்சிகள் அப்பா நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அளவேயோ வேண்டுவது-எங்கள் பருவத்தை சிறிது ஆராய வேண்டாவோ-கொங்கை இன்னும் குவிந்து எழுந்து இலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் அறியும்படி குருகுல வாசம் பண்ணி ஒன்றும் கற்றிலோம்

ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
——2-7-கண்ண பிரான் ஆய்ச்சிமார்களை நோக்கி சில குறும்பு வார்த்தைகளைச் சொல்லி சிற்றில் அழித்து நலிய அதுகண்ட அவர்கள் -அப்பனே
வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்கள் இடத்தில் நீ இந்த குறும்பு வார்த்தைகளைச் சொல்ல
அவர்கள் ஒன்பது சொல்ல மேன் மேலே வார்த்தைகள் பெருகி பரம ரசமாகச் செல்லும் கபடம் அற்ற
வார்த்தைகளின் கருத்தையும் அறிய மாட்டாத எங்கள் திறத்திலே அந்த பேச்சுகளைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயன் உண்டு என்று சொல்லச் செய்தேயும் அவன் மேன் மேலும் சிற்றிலை சிதைக்கப் புக நின் திருமேல் ஆணை -என்று பிராட்டி மேல் ஆணை இட்டு விலக்கப் பார்க்கிறார்கள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய்
–2-8-கண்ணபிரான், ‘ஆய்ச்சிகாள்! இச்சிற்றிலை நான் காலாலும் கையாலும் உதைத்துச் சிதைப்பதினால் எனக்கு ஒரு பயனுமில்லை யென்பது மெய்யே உங்களைத் தீண்டுவதன்றோ எனக்குப் பிரயோஜனம்’ என்று அவர்களைத் தீண்ட-அது கண்டு ஆய்ச்சிகள், ‘ஹரி, ஹரி! நீ எத்தனை தூரிரஸ்த்ரிகளோடு கலந்துவந்தாயோ தெரியாது, எங்கள் மேல் தீண்டாதே கடக்க நில்’ என்ன’-அதுகேட்ட கண்ணன் ‘நான் ஸர்வேச்வரனல்லேனோ? என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ? நான் ஈச்வரனென்பதில் உங்களுக்கு ஸம்வயமுண்டாகில் என் திவ்யாயுதத்தைப் பாருங்கள்” என்று திருக்கையிற் சக்கரந் தோற்ற நின்றான்-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
–2-9-இவன் தனித்தனியே ஒவ்வொரு ஆய்ச்சியிடத்துஞ் சென்று,-நங்காய்! எங்ஙனே இங்கு வந்தாய்? கால்கள் நோகின்றனவோ? நானும் நீயுங் கலந்துவரப் பெற்றிலோமே!’-என்றாற்போலே சிலவற்றைச் சொல்லி முகத்தை விளங்கக்காட்டினனென்க.-அங்ஙனஞ் சொல்லக்கேட்ட ஆய்ச்சிகள் ‘நமது எண்ணம் வீணாயொழிந்ததே!’ என்று தங்கள் தோல்வியை நினைத்து லஜ்ஜிக்க, இவன் புன்முறுவல் செய்தான்.-நாம் இவனுக்குத் தோற்று வெட்கமடைகின்றமையை இவன் அறியலாகாது’ அந்யபரதையைக் காட்டுவோம்’ என்று அங்கேயிருந்து சிற்றிலிழைக்கப் புக்கார்கள்.-அதுகண்ட கண்ணபிரான் ‘இங்கே நம் கண்வட்டத்திலே இவர்கள் அந்யபரராவதென்!’ என்று சிவிட்கென்று, நினைக்கைக்கு நெஞ்சுங் கூடாதே வியாபாரிக்கைக்குக் கையுங்கூடாதபடியாகச் சிலவற்றைச் செய்தான்; (சிற்றிலோடு இத்யாதி.) உனக்குப் பசுமேய்க்கையன்றோ தொழில்; பெண்களை நலிகையும் பணியோ? என்கிறார்கள். ‘கோவிந்தா!’ என்ற விளியில் நோக்கு.–ஆவது ஆயிடுக -என்று பெண்களின் பரியட்டங்களைக் கிழித்து அவர்கள் உடம்பு கொண்டு தாய்மார் முன் நிற்க ஒண்ணாதபடி பண்ணினான் – எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என்
சொல்லார் -என்கிறார்கள்-என்னோடு அணைகை உங்களுக்கு அசஹ்யமாய் இருந்ததோ
யோகிகளும் என் உடம்போடு அணைக்க ஆசைப்பட -என்ன உன்னோடு சம்ச்லேஷிக்கை எங்களுக்கு மிகவும் அழகிதே-ஆனாலும் அருகில் உள்ளார்க்கு அஞ்ச வேண்டுமே -என்றார்கள்-இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்லுகிறதுஆழ்வார்கள் ஆண்களாய் இருந்துவைத்து
பெண்ணுடை உடுத்து மின்னிடை மடவார் முதலிய திருவாய் மொழிகளிலே என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி-ஒரு நான்று தடி பிணக்கே -என்றால் போல் சொல்லும் பாசுரங்கள் போல் அன்றிக்கே பெண் பிள்ளை தனக்கே அதுக்கு மேலே ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லும் வேறுபாடு என்னே -என்று ஈடுபட்டு உருகுவாராம் நம்பிள்ளை-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
–2-10-நிகமத்தில்
இப்பதிகம் ஓத வல்லார் பெரும் பேற்றை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-சீதை வாய் அமுதம் உண்டாய் -என்ற விளிச் சொல்லும்-ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை -என்பதையும் நோக்குக
பருவம் நிரம்பினவள் உடன் ரசானுபவம் பண்ணுபவன் எல்லாரும் திரளும் இடத்திலே மறைக்க வேண்டியவற்றை மறைக்கக்கூட தெரியாத தோற்றினபடி விளையாடுகிற பருவம் நிரம்பாத பெண்களுடன் போராடுகை விரூபம் என்று உணர்த்தியவாறு-

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளை துகில்‌ கைக் கொண்டு”–2-10-1-என்று பெரியாழ்வார்‌ உரைத்தவற்றிலிருந்து கோதை நாச்சியார்‌,
கோழியழைப்பதன்‌ முன்னம்‌ குடைந்து நீராடுவான்‌ போந்தோம்‌
ஆழியஞ்செல்வன்‌ எழுந்தான்‌ அரவணை மேல்‌ பள்ளி கொண்டாய்‌ !
ஏழையமை யாற்றவும்‌ பட்டோம்‌ இனி யென்றும்‌ பொய்கைக்கு வாரோம்‌
தோழியும்‌ நானும்‌ தொழுதோம்‌ துகிலைப்‌
பணித்தருளாயே -3-1-என்று கண்ணன்‌ கவர்ந்து கொண்ட கூறைகளைக்‌ கன்னியர்‌ கேட்பதாக ஒரு பதிகம்‌(3) பாடியுள்ளார்

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்  
-2 -10-1 –சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான ஸ்தலத்திலே அன்றோ-நாங்கள் அந்ய பரைகள் அன்றோ – தன் இடையாட்டம் பட்டமோ – நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ – தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –சேற்றை இட்டு எறிந்து – பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது-துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி – தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் – எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் – அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )-பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது-நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ (உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை –வார்த்தையும் தர வில்லை-மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ – இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் – ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
-தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்

வடிவார்சோதி வலத்துறையுஞ்‌ சுடராழியும்‌ பல்லாண்டு படைபோர்‌ புக்கு முழங்கும்‌ அப்பாஞ்ச சன்னியமும்‌ பல்லாண்டே-1-
பூங்கொள்‌ திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்‌ ‘ சார்ங்கவில்‌ நாணொலியும்‌ தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-9-9-

வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –-வடிவார் சோதி – காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இறே இருப்பது-தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்-வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –-வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –
படை போர் இத்யாதி – நம் கையை விடாதே த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை போர் முழங்கும் –சேனையை உடையயுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்-முழங்கும் சகோஷொ  தார்த்தராஷ்டாராணாம்  ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் – யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும் அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி-என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்-அப் பாஞ்ச சன்னியமும் –-முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் – புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
–9-9-இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை-சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை-ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு –இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்- அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை

நல்ல என்‌ தோழி! நாகணையிசை நம்பரர்‌ * செல்வர்‌ பெரியர்‌ சிறுமானிடவர்‌ நாம்‌ செய்வதென்‌? வில்லிபுதுவை விட்டுசித்தர்‌ தங்கள்‌ தேவரை வல்லபரிசு வருவிப்பரேல்‌ அது காண்டுமே -10-10-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-நல்ல வென் தோழீ – என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே-நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்-அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை -அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர் அதுக்கு உறுப்பாக –-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்-தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –நாகணை மிசை--அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இறே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு–நம் பரர் –அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்-நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர —இத்யாதிகளில் -படியே-செல்வர் –ஸ்ரீ யபதிகள்-அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1- ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே–பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்-சிறு மானிடவர் – தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே-ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே அதி ஷூத்ரரான மனுஷ்யர் நாம் செய்வது என் முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண் த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்-நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே– சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று-ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து – விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8– அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்–சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது -சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது-தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து-பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்–பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –-வல்ல பரிசு வருவிப்பரேல் ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்-ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-
வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம் திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே-அன்றிக்கே நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்–வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி-அது காண்டுமே -அவ் வழியாலே பெறக் கடவோம்–பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர -நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்பல்லாண்டு இசைப்பாரே ––திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்--19-போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –போற்றி –புகழ்ந்து –வந்தோம்பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –புகழ்ந்துசத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்-இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது-

பிரானடிக் கீழ் பிரியாது -14-10
சாயை போலே அணுக்கர்களே -பெரியாழ்வார் திருமொழி -5-4-11-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் – ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது –-இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு – இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )தாமும் -என்கைக்கு அடி –
அவர்கள் ஏற்றதை நினைத்து-அதாவது – பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து – மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – கழிந்த காலத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
(அன்று உலகு அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் ஆண்டாள் போல் )
இப்படிக்கொத்த தம்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை ஏழாட்  காலம் பழிப்பிலோம்  -என்று அருளிச் செய்தார் இறே –பாடுகை யாவது – உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை-சாயை போலே என்றது – புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு – புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார் நிழலும் அடி தாறுமாகப் பெறுவார்கள்
–அடி தாறு -திருவடிகளில் ரேகைகள்-சாயை போலே பாட வல்லார் – நிழல் உண்டாக பாட வல்லார்-நிழல் ஆவது -குளிர்த்தி-குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன –தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்-பரம பிராப்யமாய் – நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை – உடையவன் திருவடிகளிலே உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று-பிரியாது என்றும் இருப்பரே— சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்-தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————————————————————————————–

ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வைஷ்ணவ திருவாராதனம் –ஸ்ரீ ப்ரமாணத் திரட்டு-

April 30, 2026

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் ப்ரமாணத் திரட்டு என்பது திருவாராதனத்தின் போது ஓதப்படும் முக்கியமான ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களின் தொகுப்பாகும். இது ஆறு நிலைகளாகப் (ஆஸனங்கள்) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலைக்கும் உரிய வேத மந்திரங்கள் மற்றும் திவ்யப்

திருவாராதனத்தின் முக்கியப் பகுதிகள்:

  • மந்த்ராஸநம்: முந்தைய நாள் சாற்றப்பட்ட மலர்களைக் களைந்துவிட்டு (நிர்மால்யம்), பகவானை எழுந்தருளப் பண்ணுதல். இதற்கு “உடுத்துக் களைந்த நின் பீதக வாடை” போன்ற பாசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஸ்நாநாஸநம்: பகவானுக்குத் திருமஞ்சனம் (நீராடல்) செய்வித்தல். இதன்போது புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம் போன்ற வேத மந்திரங்களும், பெரியாழ்வார் திருமொழியின் வெண்ணெயளைந்த குணுங்கு பதிகமும் அநுஸந்திக்கப்படுகின்றன.
  • அலங்காராஸநம்: பகவானுக்கு ஆடை, ஆபரணங்கள் மற்றும் சந்தனம், மலர்களைச் சமர்ப்பித்தல். “கந்தத்வாராம் துராதர்ஷாம்” போன்ற ஸ்ரீ ஸூக்த ச்லோகங்கள் இங்கு ஓதப்படும்.
  • போஜ்யாஸநம் (தளிகை): எம்பெருமானுக்கு அமுது (உணவு) சமர்ப்பித்தல். “கூடாரை வெல்லும் சீர்”, “நாறு நறும்பொழில்” போன்ற பாசுரங்களுடன் உணவு நிவேதனம் செய்யப்படுகிறது.
  • புனர்-மந்த்ராஸநம்: தளிகைக்குப் பின் தீர்த்தம், தாம்பூலம் சமர்ப்பித்து மீண்டும் மந்த்ராஸனம் செய்தல்.
  • பர்யங்காஸநம்: பகவானை ஓய்வெடுக்கச் செய்யும் முறை

எண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)

  1. நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
  2. வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
  3. நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
  4. கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
  5. வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
  6. தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
  7. கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
  8. வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
  9. தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
  10. கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
  11. கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  12. கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந
:–பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||
-பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||
-ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
-நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||
-ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||
-உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||
-மணக்கால்நம்பி (மாசி – மகம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||
-ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||
-பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||
-எம்பார் (தை – புனர்பூசம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே |
|-பட்டர் (வைகாசி – அனுஷம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||
-நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||
நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||
-வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||
-பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே
||-திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் |
|-மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே
-பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) 

தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ஸ்லோகமும்

புவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |
ஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே |
|திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்

நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.-திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய–த்வயம்-ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே | ஸ்ரீமதே நாராயணாய நம: ||-ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் |

யோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ஸ்லோகங்கள்அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு
|| (ஸ்தோத்ர ரத்நம் 48)ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே |
| (ஸ்தோத்ர ரத்நம் 22) ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ ||
(ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் | ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் |உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜஉத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் ||

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே ||
 (புராண ஸ்லோகம்)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: ||
(புராண ஸ்லோகம்)

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ||
(ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே
(திருவாய்மொழி 4.3.2)

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி
(ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே
(திருவாய்மொழி 1.6.1)

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச ||
(மஹா நாராயண உபநிஷத்)தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ஸ்லோகம்

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம்.
(ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம்
. (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.
  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (
உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி|
யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் ||
(ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே ||
(ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: |
| (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் ||
(ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ ||
(லிங்க புராணம்)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி |
| (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா ||
(யதிராஜ விம்சதி 1)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு
(க்ருஷ்ண கர்ணாம்ருதம்)போஜ்யாஸனம்

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம்
(ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

ஓம் கேசவாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் வாமநாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் தாமோதராய நம:

ஓம் ச்ரியை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் சந்த்ரஸோதர்யை நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் ஹரி வல்லபாயை நம:
ஓம் ஸார்ங்கிண்யை நம:
ஓம் தேவ தேவ்யை நம:
ஓம் லோகஸுந்தர்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

பர்யங்காஸனம் ச்லோகங்கள்

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: ||
(முகுந்த மாலா)

உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம |
|-ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:

——————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்ய நூற்றந்தாதி-

April 25, 2026

Click to access 2015.295141.Alarmeil-Mang-kaiyan-thaatiyum.pdf

யாதும்‌ அறியேன்‌ அதையே அறிந்தன்று
போதரா யென்றே பொருளாக்கும்‌ – நீதியான்‌
ஆசையால்‌ தாளினையே காப்பா அறிந்தின்று
பேசுகின்றேன்‌ வாஞ்சை வரப்‌ பெற்று –காப்புச் செய்யுள்

உய்வு பேற்றுக்குரிய யாதொன்றும்‌ அறியாத அறிவிலி” என்று என்னையறிந்து, அதுவே காரணமாக அடியேனைத்‌ தன்பாலழைத்து மெய்யுணர்வு இன்மையால்‌ அசித்தைப்போல (அறிவற்ற ஜடப்பொருளைப்‌ போல) கிடந்தவனை, மெய்யுணர்வை முற்றும்‌ போதித்து பொருளல்லாத . என்னைப்‌ பொருளாக்கி, சத்தை-யுண்டாம்படி செய்த ஆசாரியன்‌ செயலை இன்றாக அறிந்து மிக்க பிரேமையுற்ற அடியேன்‌, ஆசாரிய நூற்றந்தாதி என்ற வெண்பா யாப்பினால்‌ வாஞ்சையே வடிவாக ஆசாரியன்‌ திருவடிகளை முன்னிட்டுக்‌ கொண்டு இந்நூலை இயற்றுகின்றேன் –

சீரார்‌ வநசச்‌ செழுங்கடல்‌ வந்தமுதின்‌
ஏரார்‌ நிறைபொருள்மார்‌ பேய்ந்துறையும்‌ – ஆரா
வமுத்‌ யமுதமே வேறன்‌ றயிந்தை
எமையாளும்‌ பாடியன்தாள்‌ இங்கு–1-

எம்பெருமான்‌ திருக்கண்‌ வளர்தலால்‌ செழுமையுற்ற பாற்‌ கடலில்‌, (மஹாலக்ஷ்மி) தான்‌ தோன்றுவதற்கேற்ற சிறப்புற்றத்‌ தாமரை மலரில்‌ அமுதத்தோடு வந்தவதரித்து, எல்லாவற்றாலும்‌ அழகுமிக்க ஒத்தார்‌ மிக்காரையில்லாத பரம்பொருளான திருமாலின்‌ திருமார்பில்‌ இறையும்‌ அகலாது. பொருந்தியுள்ள ரூபத்தாலும்‌ குணத்தாலும்‌ பேரழகு வாய்ந்த பெரியபிராட்டியார்‌, அழுதந்தவிர்த்தப்‌ பேறு என்னலாம் படி எம்மையாளும்‌ திருவயீந்திரபுரம்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றி உய்யும்படி அடியேனுக்குப் பேர் அருள் செய்தான் –

இங்கே திரிந்தே எழு பிறப்பும்‌ தீர்ந்தொழிந்தேன்‌
சிங்கப்‌ பிரான் சீர்மை ஆய்ந்தறிந்தேன்‌ – பொங்கும்‌
கருணைக்‌ கடலமு துண்பேன்‌ அமிந்தைத்‌
திருவன்‌ திருவடி சேர்ந்‌ தின்று –2-

இருள்தரு மாஞாலமாகிய இவ்வுலகத்தில்‌ மனம்போனபடி திரிந்த அடியேன்‌ திருவயீந்திரபுரத்தில்‌ வாசஞ்செய்யும்‌ ஸ்ரீமத்‌ பகவத்‌ கைங்கர்யமாகிய செல்வம்‌ நிரம்பப்பெற்ற ஸ்ரீமத்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடிகளை, அவரருளால்‌ இன்று சேர்ந்து தேவ, மனித, விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்‌ ஆகிய ஏழுவகைத்‌ தோற்றங்களாகப்‌ பிறக்கும்‌ பிறவியொழிந்து, சிங்கப்பிரான்‌ புகழை ஆராய்ந்தறிந்து ஸ்ரீவைகுண்டமாகிய திருநாட்டிற்‌ சேர்ந்து அளவில்லாமல்‌ பொங்கி வழியக்கூடிய பநப்தநாதனின்‌ கருணையை அநுபவிப்பேன் –

இன்றுநாளை யென்றறியேன்‌ கங்குல்
பொன்றுமுட லென்றுநா னென்றறியேன்‌ – பொன்றுவிக்கும்‌
தீதறியேன்‌ யாதறியேன்‌ தேரத்‌ தெரிந்தென்னை
ஒதுவித்த தொண்பொருள்‌ ஒன்று-3-

இன்றென்றும்‌ நாளையென்றும்‌ உலகத்தவம்‌ சொல்லும்‌ கால வேறுபாட்டையும்‌ இவற்றைச்‌ சார்ந்து நிகழும்‌ நிகழ்ச்சிகளின்‌ வேறுபாட்டையும்‌ இவ்வாறே இரவு பகலின்‌ வேறுபாட்டையும்‌ அறியேன்‌. எடுக்கும்‌ பிறவிகள்‌ தோறும்‌ அழிந்து படும்‌ உடல்கள்‌ அவ்வாறு அழியாத நிலை பெற்ற உயிர்களின்‌ நிலைகளையும்‌ அறியேன்‌. அழிவுக்குக் காரணமான அடியேனை நன்கறிந்து இந் நிலை போய்‌ எல்லாவற்றையும்‌ தெளிய அறியும்படி ஒப்பற்ற பொருள்‌ ஒன்று ஒதுவித்தது –

ஒன்றுதான்‌ போதமுநி வேதமுநி நாதமுநி நன்று நலந்தீதுங்‌ காட்டுமுநி – நன்றும்‌ சிவந்த வாய் செம்பவளம் கண் கமலம் ஒன்மை உவந்துளத்துப்‌ பாடியனென்‌ றோர் -4-

ஒதுவித்த அழகிய பொருள்‌ யாதெனின்‌? மனனஞ்‌ செய்து மெய்யுணர்வை நிரம்பப்‌ பெற்றதும்‌, இதைப் பிறருக்கு அறிவிப்பதையே தொழிலாக வுடையதும்‌, நல்லொழுக்கத்தில்‌ ஏவுவதும்‌ மற்றுள்ள நல்லதும்‌ தீயதும்‌ காட்டக்கூடிய நன்கு சிவந்த தாமரைப் போன்ற வாயையும்‌ தாமரைப்‌ போன்ற இதழ்களை யுடையதும்‌ அழகிய கைகளை யுடையதும்‌ எல்லார்‌ திறத்தும்‌ நன்மையே வேண்டுவதுமான பாஷ்யமா சாரியரே யாகுமாம் –

ஓரடி முந்தமற்‌ றோரடி முந்தவதின்‌
ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்பதே? – ஈரடியக்‌
சேர்ந்திணைந்‌ தன்றன்றே சேமமாம் ஆறுபயன்‌
ஒர்ந்திணைந்‌ துள்ளதெம்‌ பால்‌–5–

அடியேனை ஏற்பதற்காக ஓரடிமுற்பட்டு வர, அதைக்காட்டிலும்‌ இன்னொரு திருவடி முற்பட, இப்படி ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்றது வியப்பன்றோ? இதன்றி இந்த இரண்டு திருவடிகளும்‌ சேர்ந்தே சாதனமும்‌ பயனுமாகும்‌ என்பதை யானறியேன் –

எம்பெரு மானார்‌ இசைத்ததாக்‌ கேட்டதுண்டு
நம்பும்‌ படி யொன்றும்‌ நானறியேன்‌ – வம்பெதற்கு?
வீடில்நாள்‌ மூன்றில்‌ முமுச்சுபடி மெய்ப்பித்த
பாடியனே பெற்றேன்‌ பயன்‌–6-

உஜ்ஜீவனத்துக்‌ கேதுவாக எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷயம்‌ அருளிச்‌ செய்துள்ளதாகக்‌ கேளவிப்படுகிறோம்‌, அதை நேர் கண்டறிந்ததில்லை. ஸ்ரீபாஷ்யத்தில்‌ சீக்கிரமாகப்‌ பல ப்ராப்தி உண்டு, இல்லை யென்‌கிற வம்பெதற்கு? நிரந்தரமாக மூன்று நாட்களில்‌ முமுக்ஷுப்படி என்கிற திருமந்திரார்த்தத்தை உள்ளவாறு கேட்பித்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளையே அடியேற்குப்‌ பயனாகப்‌ பெற்றேன்‌-

பயனுற்ற தொன்றன்றே பாவிரித்தான்‌ மாறன்‌ உயர்வசந பூடணம்‌ ஓதி – நயந்துரைத்தான்‌ தத்துவ மூன்றின்‌ தகவனைத்தும்‌ தானோக்கி வித்தகன்நீ! யென்றான்‌ வியந்து–7-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைப்‌ பயனாக மட்டுமோ பெற்றோம்‌? இவரால்‌ மாறன் கலையாகிற பகவத்‌ விஷயத்தை உரைக்கப் பெற்றேன்‌;ஸ்ரீவசன பூஷணம்‌ உரைக்கப்‌ பெற்றேன்‌; இங்ஙனே தத்வ த்ரயமும்‌ அருளப்‌ பெற்றேன்‌; இவற்றைக்‌ கேட்ட தன்மையைக்‌ கண்டு வியந்து ‘நீ வித்தகன்‌” என்று அவரால்‌ அருளப் பெற்றேன் –

வியந்தான்‌ உகந்தான்‌ விரிகமலம்‌ நோக்கி
பயந்தான்‌ பரன் தான்‌ பணியை – உயர்ந்தோர்‌
இணைந்தா மரைத்தாள்‌ இசைத்தான்தன்‌ பொன்தான்‌
பிணைத்தான்‌ பீழை தகர்த்து–8-

ஸ்ரீ பாஷ்யமாசாரியன்‌, அடியேனை வியந்தான்‌, உகந்தான்‌, தாமரைக் கண்களால்‌ விரியக்‌ கடாக்ஷித்தான்‌. அடியேன்‌ பாலுள்ள குறைகளைப் போக்கி உயர்ந்தவர்களான மெய்யடியார்‌ திருவடி யிணை யடியை வணங்கும்படி இசைவித்து, தன்‌ அழகிய திருவடிகளில்‌ இருத்திக்‌ கொண்டான்‌.

தகர்த்தேன்‌ மடமை வினைப்படலம்‌ தாக்கி
உகக்கடிந்தேன் ஊணைக் கமலம் புகுந்தேன்‌
நனியாக் கலவி இன்பம் நாளும் நுகர்வேன்
இனியனெனும் பாடியன் தாள் ஏய்ந்து –9

இனியவரான ஸ்ரீ பாஷ்யமாசரியன்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதால்‌ அறிவின்‌மையை அறத்தொலைத்து, அதன்‌ காரியமான பாப சமூகத்தையொழித்து, அதின்‌ கார்யமான உடல்‌ தொடர்பை யொழித்து, இறைவன்‌ திருவடிகளைப் பிரியா மெய்யடியார்‌ கூட்டத்து புகுந்து அளவிலா இன்பம்‌ நாளும்‌ நுகர்பவனாயினேன் —

ஏய்ந்த குருகூரன்‌ தன்தான்‌ இணையடியே வாய்ந்த சரணா வரித்தன்றே – நீந்திப்‌
பிறவிக்‌ கடல் கடந்தீர்‌ பேதை எனையும்‌ உறவைப்பீர்‌ உந்திருத்தாள்‌ உய்த்து–10–

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! திருக் குருகூரில்‌ அவதரித்து பிறந்த பொழுதே துறவியான நம்மாழ்வாரின்‌ திருவடிகளிணையே தஞ்சமாகக்‌ கொண்டு, அவரருளால்‌ பிறவிக் கடல்‌ கடந்தீர்‌. அறிவிலியான அடியேனையும்‌ தேவரீர்‌ திருவடிகளில்‌ பொருந்தச் செய்து, அவ்வாறே பிறவி தொலைத்து பேரின்பமுற்று வாழும்படி செய்வீராக –

உய்த்தும்‌ கடைக் கணித்தும்‌ ஒப்ப நினைந்திட்டும்
எய்த்த இது தன்னைப் பற்றாச-மெய்த்த வுரை
எட்டு எழுத்தும் முப்பத்திரண்டு எழுத்தும் ஐயைந்தும்
தொட்டுரைத்த ஒன்றே துணை –11-

அடியேன்‌ அறிவிலியாய்‌ உய்யும் வழி யறியாமல்‌ பிறவிக் கடலில்‌ ஆழ, அதையே காரணமாகக் கொண்டு பாஷ்யமாசாரியர்‌ என்னை நினைத்து தன் முன்‌ நிறுத்தி, கருணைப் பூத்தக்‌ கண்களால்‌ நோக்கி, மெய்யடியார்‌ திரளில்‌ சேரும்படி செய்து, மெய்ப் பொருளான எட்டெழுத்துள்ள திருமந்திரம்‌, இருபத்தைந்து எழுத்தான த்வய மந்திரம்‌, முப்பத்திரண்‌ டெழுத்தான சரம ச்லோகம்‌ இவைகளின்‌ அர்த்தங்களைச்‌ சுட்டிக் காட்டி நெஞ்சில்‌ பதிய வைத்த அவரருளே அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்குத்‌ துணை யாகும் —

துணைவனே துன்பப்‌ பிறவிக்‌ கடல்நீர்‌
புணைவனே பொய்ம்மை இருள்தீர்‌ – இணையில்‌
கதிரவனே பூரியர்‌ சுற்றங்‌ கழற்றும்‌
சதிரனே தந்தருள்வாய மறறு–12-

துணைவராயும்‌, துன்பமேயான பிறவிக் கடலைக்‌ கடத்தும்‌ நாவாய்‌ போன்றவராயும்‌, பொய்யறிவாகிய இருளை நீக்கும்‌ ஸூரியனாயும்‌, தகவு இல்லாதவர்களின்‌ உறவை நீக்கும்‌ சதுரராயும்‌ உள்ள தேவரீர்‌, உய்வு பேற்றுக்குத்‌ தக்கதை அடியேனுக்கு உகந்து அருள்‌ செய்வீராக –

மற்றோர்‌ பொருளுளதே? மாயை அறத் தொலைத்து
தெற்றத்‌ தெளிவித்துச்‌ சேம நல்கி – பிற்றைப்‌
பிறப்பொழித்துப்‌ பெம்மான்‌ கழலிணைத்து நாளும்‌
உறுமின்பம் உண்பிக்கவே–13-

ஆசாரியன்‌ அருளைக் காட்டிலும்‌ பிறிதொரு சிறந்த பொருள்‌ அடியேற்குளதோ? பிறவிக்‌ கேதுவான பிரகிருதி தொடர்பை நீக்கி,அறிவின்‌ மையாகிற மயக்கத்தைப் போக்கித் தெளிவைத்‌ தந்து,இவ்வளவிலேயே ஆனந்தமுறச்‌ செய்து முகுந்தனான இறைவன்‌ திருவடிகளில்‌ சேர்த்து மேலுள்ள காலமெல்லாம்‌ பேரின்பம்‌ நுகரும்‌ வாய்ப்பினை அடையும்படி செய்தார் –

உண்பித்தான்‌ ஒண்மை உலகார்யன்‌ ஓர்ந்தருள்செய்‌
விண்புகு விஞ்சுசுவை முத்தர்தம்‌ – பண்பிதனை
தக்கவாறுண்டு தரமுயர்ந்து நிற்கின்றேன்‌
மிக்கவா நான் எவ்வெவர்க்கும் மேல் –14-

உலகோர்க்கு உய்யும்‌ வழியைத்‌ தந்தவரான வள்ளல்‌ பிள்ளை லோகசாரியர்‌, தாம் மிக வுணர்ந்து அருளிச்‌ செய்த ஆகாசத்தைப்‌ போன்று உயர்ந்த சுவை யுடைய முத்தர்க்கு இன்பத்தை வழங்கக்‌ கூடியதான ஸ்ரீவசநபூஷணம்‌ என்ற நூலை அமுதாகக் தேர்ந்து அநுபவிக்கும்படி செய்தார்‌. பாஷியமாசாரியரும்‌ அதை அடியேனுக்கு உபகரித்தார்‌. அடியேனும்‌ அதன்‌ தரமறிந்து உள்ளத்திருத்தினேன்‌. இதனால்‌, நான்‌ உலகில்‌ எவருக்கும்‌ மேன்மையனாவேன் –

மேலா மிகு புகழ்ப் பாடியன் தன் மெய் வழி சால்
தோலா அருள்தந்த தொல்வழியில்‌ – நாலாம்‌
வழியே எளிய உரிய வழியா
அழிவிலா ஈரியல்புக்காம் –15-

மேலானார்‌ புகழும்‌ புகழ்களுக்கெல்லாம்‌ மேம்பட்ட புகழாலரான பாஷ்யமாசாரியர்‌, தம்‌ மெய்யுணர்வால்‌ ஆய்ந்து, முக்தி நெறியான நான்கில்‌ எல்லா நெறிகளைக் காட்டிலும்‌ மிக எளியதும்‌ அழிவற்ற ஆத்ம பரமாத்மாக்களுடைய உண்மை நிலைமைகளுக்குப்‌ பொருந்தியதும்‌ எவரும் மேற் கொண்டொழுகுவதற்கு உரியதாகிய மிகச்‌ சிறந்தது சரணாகதி உபாயமே யாகும்‌ என்றார் –

ஆமா றறிவுடைய ராவ தரிதன்றே
தேமா மலர்மா திருவருள்சார்‌ – நாமடந்தை
நாவன்‌ திருவயிந்தைப்‌ பாடியன்‌ நல்குதல் போல்‌
யாவனே ஆரியர்சார்‌ பின்று–16-

தன்னை யடைந்தாரை உய்விக்கத்தக்க அறிவுடையராக்குவது அரிதே யன்றோ இவ் வுலகின்‌ நிலை? இப்படி யிருக்க, தேனொழுகும்‌ தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய திருமகளின்‌ அருளைப் பெற்ற கலைமகள்‌ வாழும்‌ திருநாவை வுடையவரான திருவயீந்திரபுரம்‌ பாஷ்யமாசாரியரைப்‌ போல்‌ அடைந்தாரைக் காக்கும்‌ இயல்புடையவர்‌ எவரே உளர் –

இன்றே பிறந்தேன்‌ பழுதே யிழந்த நாள்‌
குன்றோ? மலையோ? கொழுங்கடலோ? – ஒன்றறியேன்‌
பாடியன்‌ வந்திலனேல்‌ பாழன்றே?
மேல் நாளும்‌ தேடிவந்தான்‌ ஏதிலருள்‌ செய்து–17-

மாறி மாறிப் பலப்‌ பிறவிகளை யடைந்து நின்ற கீழ்‌ நாள்களெல்லாம்‌ பல கல்பங்களாக கழிந்தது மட்டுமின்றி ஒரு குன்றினளவு, பெரியமலையளவு பெருங்கடலினளவு என்றளவிட முடியாதக்‌ காலமெல்லாம்‌ எனக்குப்‌ பழுதேயாயின. பாஷிய மாசாரியர்‌ காரணமற்ற கருணையால்‌ அடியேனைத்‌ தேடி வந்து, எனக்கருள்‌ செய்த இந்நாளே பயனுள்ள பிறவி யடைந்தேன்‌ என்றவாறு-

செய்த நலன்‌ ஈதென்று சிந்திக்க ஒல்லுமே?
மெய்யுணர்வின் மேம் பொருளைச் சேர் நெறியும் பொய்மையைப்
போக்குதலும் மெய்ம்மை மிக வுணர்த்தி பொன் கழலில்
வீக்கு மெய்ம்மைப்‌ பாடியன் மெய்‌ யின்று–18-

பாஷ்யமாசாரியர்‌ செய்த ஆனந்தத்துக்‌ கேதுவான நன்மைகளை மனத்தால்‌ நினைக்கவும்‌ முடியுமா? மெய்யுணர்வின்‌ தொடர்பால்‌ அடைதலுக்குரிய பரம் பொருளை அடையும்‌ வழியையும்‌, அதற்குத்‌ தடையானப்‌ பொய்யுணர்வைப்‌ போக்குதலும்‌, தன்னுடைய அழகிய திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொண்டு மெய்யறிவை நன்கு உணர்த்தி அருள்‌ செய்த இவை யனைத்தும்‌ மெய்யேயாகும் –

இன்றன்றே யானும்‌ இலன் போய்‌ உளனானேன்‌
என்றடி யேனை இருந்துகேள்நீ – என்றதுமே
எண்பெருக்‌ கந்நலத்‌ தொண்பொரு ளாயினன்‌
திண்கழற்‌ பாடியற்‌ சேர்ந்து–19-

அடைந்தாரைக்‌ கைவிடாது எம்பெருமானிடத்தில்‌ சேர்க்கும்‌ திருவடி களையுடைய பாஷ்யபாசாரியர்‌, அடியேனை அழைத்து ௭திரிலிருத்தி முமுஷுப்படியைப்‌ போதித்தலுமே, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அளவிடமுடியாத ஆனந்தத்தை யுடைய இறைவனோடு சம தர்மத்தை அடையத் தக்க இன்றே, அசத்தாயிருந்த அடியேன்‌ சத்தானப்‌ பொருளானேன்‌ என்றவாறு –

சேர்ந்தேதி லின்னருளே பொய்ம்மையைத்‌ தீர்த்தருள
ஆர்ந்த மதிநலம்‌ அன்றடைந்து – ஓர்ந்தீங்‌
குபய விபூதி ஒழிவி லுடையான்‌
அபயமிங்‌ குற்றே னது–20-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ வேறு காரணமற்ற இன்னருளால்‌ அடியேனைத்‌ தன் பால்‌ சேர்த்து நிறைந்த பக்தியும்‌ அறிவும்‌ உண்டாகும்படி பண்ணி, ஒரு சிறு துணுக்கும்‌ தன்னை விட்டு நீங்காது இரண்டு விதமான உலகத்திலிருக்கும்‌ அனைத்தையும்‌ தனக்குடமைப்‌ பொருளாகக்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமனால்‌ அஞ்சேல்‌ என்றருளப்‌ பெற்றேன்‌. ஈதன்றே அடியேனுடைய பாக்கியம் –

அதன்றே ஒழுக்கம் இலது உண்டறிதல்
அதன்றி மெய்ஞ்ஞானம் அறிதல் இதன்றே?
முழுமையன் பாடியன் முந்துற்ற என் போல்
விழுமயரின் மிக்கார் எவர் ? –21-

அறிவொழுக்கங்களால்‌ நிறைவுபெற்ற குருவை அடைவதே உய்வு பேற்றிற்குரியதாகும்‌. இதனை நாம்‌ அறிவது இயலாதே. இது உலகின்‌ நிலை. அப்படியிருக்க அறிவற்றவனான அடியேன்‌ இவற்றை எப்படி அறிவேன்‌? அறிவொழுக்கங்களால்‌ நிறைந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே அடியேன்‌
இருக்குமிடம்‌ தேடிவந்து இன்னருளைச்‌ செய்தார்‌. இதனால்‌ அடியேனைப்போல்‌ சிறப்புடையாரின்‌ மிக்கவர்‌ எவர்-

எவரே? விடம்போல்‌ இருந்துடன்‌ நாளும்‌ பவரேகைப்‌ பண்ணும்‌ பரிசும்‌ – அவரே கழற்றுந்‌ திறனறிவார்‌ பாடியன்‌ தானே கழற்றுங்‌ கருணை மிகக்‌ கொண்டு –22-

தீய செயலைப்புரிவதற்குக்‌ காரணமான நம்முடைய உடலானது விஷம்போல்‌ நாள்‌ தோறுமிருந்து நம்மை நலிகின்றது. இப்படிப்பட்ட உடற்பிறவியை நீக்க வேண்டுமானால்‌ விரோதி ஸ்வரூபத்தை நன்றாசு அறியவேண்டும்‌. அவ்வாறு அறிந்து, அவ்விரோதியை பொக்குவதில்‌ வல்லவரான பாஷ்யமாசாரியர்‌, தன்‌ கருணையாலே அடியேனுடைய விரோதியை போக்கி என்னை ஆட்கொண்டர்‌-

கொண்டான்‌ நிரம்புங்‌ குறைக்கொள்ளி நானாவேன்‌
மண்டிய தீவினையேன்‌ மாலுடையேன்‌ – கொண்டான்‌
உலகில்‌ நிகரில்லாப்‌ பாடியன்‌ ஒன்றோ
அலகில்‌ அருளால்‌ அணைத்து–23

இவ்வுலகில் எல்லாவாற்றாலும்‌ நீசைதை நிரம்பிய குறைக்‌ கொள்ளியானக்‌ காரணத்தினால்‌ மொய்த்த தீவினையுடைய வனானேன்‌-இத்தகு தீவினையேனையும்‌ கைக்‌ கொண்டு ஒப்பற்றக்‌ கருணை யுடையவராக ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அளவற்ற அருளால்‌ அடியேனை அணைத்துக் கொண்டார் –

அணைவான்‌ அணைத்தார்‌ பெரிய உடையார்‌
இணையில்லாச்‌ சீரார்‌ இறையை – அணைத்தான்‌
கருணைக்‌ கடல்போலுங்‌ கண்ணென்னுந்‌ தோளால்‌
பரிவுமிகும்‌ பாடியன்வந்‌ தின்று–24-

முத்தனாய்‌ வருமவனை அணைத்துக் கொள்ளும்‌ அளவற்ற கல்யாண குணங்கள்‌ நிரம்பிய ஒப்பற்றவனான சக்ரவர்த்தித்‌ திருமகனை (இராமனை) பெரியஉடையார்‌ என்ற ஜடாயு அளவற்ற ஆர்வத்தால்‌ அணைத்தார்‌. அது போல்‌, பெருங் கருணைக் கடலான பாஷ்யமாசாரியர்‌, பவித்திரத்தை உண்டாக்கும்‌ கண்ணென்னும்‌ தோளால்‌ அடியேனை அணைத்துக்‌ கொண்டார்‌.

இன்றன்‌ றிறைவன்பா லுள்ளவுற வொன்பதும்‌
ஒன்றும்‌ உணரோம்யாம்‌ தானறிவான்‌ – இன்றயிந்தை
பாடியன்பால்‌ சேர்த்தும்‌ பரிவின்‌ முழுக்களித்தான்‌
ஈடிலம்யாம்‌ என்றுலகின்‌ தேர்வு–25-

அநாதிகாலமாக எம்பெருமானுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவு ஒன்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. முற்றுணர்வினாகிய எம்பெருமான்‌ தானறிவான்‌. இத்தகு உறவின்‌ காரணமாக அடியேனை உய்வு பெற நினைத்து தகுந்தவரான பாஷ்யமாசாரியரிடம்‌ பரிவோடு சேர்த்து, மெய்யுணர்வை முழுக்க உண்டாக்கினான்‌. இதனால்‌, இன்று உலகவர்‌ இவன்‌ ஒப்பற்றவன்‌ என்று நிர்ணயிப்பதற்கு ஏதுவானேன்‌ – என்றவாறு –

தேர்வ லிதமென்னாச்‌ சிந்தியேன்‌ பாவியேன்‌
ஊரோ டுழல்வேனைப்‌ பாடியனாம்‌ – நாரணன்‌
மந்திரத்தின்‌ நுண்பொருளை மாட்டிச்‌ செவிவழியே
தந்தருள்‌ செய்தான்‌ நேர்ந்து–26-

ஆத்மாவாகிற நமக்கு நன்மையைச்‌ சிந்திக்காமல்‌ உண்டியே உடையே என்று உகந்தோடும்‌ ஊரவரோடு உழல்கின்ற பாவியான என்னை, பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அடியேனுக்கு இதம்‌ செய்வதற்காக, என்னை வளைத்துப்பிடித்து நாரணன்‌ மந்திரமாம்‌ எட்டெழுத்தின்‌ உட்பொருளை செவியின்‌ மூலம்‌ உபதேசித்தருள்‌ செய்

நேர்ந்து நினைந்தும்‌ வணங்கி வழிபட்டும்‌
கூர்ந்துமிகும்‌ அன்பின்‌ குறிக்கொண்டும்‌ – தீர்ந்துநின்பால்‌
தஞ்சம்‌ அடைந்தனன்‌ பாடிய நின்‌ தாளிணையே
எஞ்சுத லில்லா அரன்‌–27-

பெருமான்‌ அருள்தமக்கு வேண்டுமென்று ஈடுபட்டு, வணங்கி வழிபாடுகளைச்‌ செய்யும்‌ மிகமிக அன்புடையவரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! தேவரீரையே தஞ்சமென்றடைந்தேன்‌. ஆதலின்‌, தேவரீர்‌ அடியேனுடைய உய்வு பேற்றிற்குக்‌ குறைவற்றக்‌ காப்பாளாராக ஆகக் கடவீர் –

அரணென்‌ றடைந்தனன்‌ ஆரியநின்‌ தாள்கள்‌
முரணும்‌ அழுக்குடம்பும்‌ ஞானம்‌ – முரணும்‌
ஒழுக்கமும் தெற்றென அற்றன தேர்ந்தேன்
விழுப்பொருள்‌ நீயா விழைந்–28-

ஆசாரிய ஸ்வாமிகளே! தேவரீர்‌ திருவடிகளே காப்பாகுமென்று தஞ்மென்று அடைந்தேன்‌. அடைந்த இம்மாத்திரத்‌ தாலேயே, தீயவிஷயத்தில்‌ ஈடுபாட்டை விளைவிக்கும்‌ அழுக்குடம்பு, அதன்காரணமான தீயவொழுக்கம்‌, அதன்காரணமான பொய்யறிவு இவையனைத்தும்‌ பறந்தோடின. இதனால்‌, தேவரீரே விழுமிய பொருளென்று உணர்ந்தேன் –

விழைந்தேன்‌ இனியதா வேகடஞ்செய்‌ நின்னை
விழைந்திலன்முன்‌ மாயவன்சேற்‌ றள்ளல்‌ – அழுந்தி
பல் பகல் பாழ் பட்ட மீட்பதினி யுண்டாயின்
நல் வகையில் நீ இனி நல்கு –29-

முன்காலமெல்லாம்‌ வலிய சேறாகிய இந் நிலவுலகில்‌ அழுந்தி உருப்படி யில்லாமல்‌ கிடந்தமையால்‌ இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போல் இருக்கிற தேவரீருடைய ஸ்வபாவத்தை அறியாமல்‌ நீண்டகாலம்‌ பாழே போனேன்‌. இன்றாகத்‌ தேவரீரை அறிந்து அன்பு பூண்டேன்‌. ஆனால்‌, பாழே கழிந்த காலத்தை இனி மீட்பதொன்று உண்டே? தேவரீரே இதை யருளிச்‌ செய்ய வேணும்‌-

நல்கும்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ வேட்பன
அல்லனே தான் பொதுவன்‌ நீர்சிறப்பின்‌ – அல்லரே
ஏந்தூர்‌ சடகோபன்‌ வேட்பன ஈவதே
உந்தம்‌ சிறப்பினுக்‌ கொப்பு–30-

குருகூருக்குத்‌ தலைவரான நம்மாழ்வார்‌ எவ் வண்ணம்‌ எம்பெருமானை ஆசைப்படுவாரோ உபய விபூதிக்கும்‌ பொது நின்ற எம்பெருமான்‌ அவ் வண்ணமே நல்குவான்‌. எமக்கு ஆசாரியரான தேவரீரோ, உம்மைத் தஞ்சமென்று அடைந்தாரை அவர்கள்‌ விரும்பியது தரும்‌ சிறப்புடைய நியதி யுடையீர்‌. இத்தகைய நீர்‌, உம்மையே தஞ்சமாக அடைந்த ஏந்தூர்‌ சடகோபனாகிய அடியேன்‌ விரும்பியதைக்‌ கொடுப்பதே சிறப்பாகக்‌ காப்பவரான உமக்குத்‌ தகும்‌ என்று அடியேன்‌ விண்ணப்பம் –

ஒக்கும்‌ அடியேனைக்‌ கைக்கொளல்‌ உந்தமக்கே
ஒக்கும்‌ அடியேனும்‌ தாள்சாரல்‌ – தக்கதே
ஈடினை யில்லாப்‌ பெருமையீர்‌ நீரன்றே
ஈடினை யில்சின்ன வனான்‌–31-

சிறப்புடைய ஆசாரியரான உமக்கே அடியேனைக்‌ கைக்கொளல் தகும்‌. தேவரீரோ ஈடியிணையில்லாப்‌ பெருமை-யுடையவரெனத்‌ தக்கவராகையாலே, அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளைக்‌ சார்வதே ஒக்கும்‌. அடியேனோ சிறியவர்களில்‌ ஈடிணையில்லவன்‌ என்பதே உண்மையாகும்‌

நானென்‌ றெனதென்றும்‌ நான்பெரிய கோனென்றும்‌
வானொன்‌ றகங்காரத்‌ தியான்வளர்ந்தேன்‌ – தேனென்‌
றமுதென்றும்‌ மும்மநுப்பால்‌ ஆழ்ந்ததின்‌ ஆசான்‌
நமவென்‌ நலங்கொடுத்தனன்‌–3
2–

அடியேன்‌ கீழ்க்கழிந்த நாள்களிலெல்லாம்‌ நானென்றும்‌,எனதென்றும்‌, நானே பெரியவன்‌ என்றும்‌ இப்படி வானைவிட உயர்ந்தஅகங்காரத்தில்‌ முதிர்ந்தவனாய்‌ இருந்தேன்‌. இந்நிலையில்‌ ஆசார்ய சுவாமிகள்‌ அடியேனுக்கு மூன்று மந்திரங்களில்‌ முதல்‌ மந்திரமான திருமந்திரத்தில்‌ நடுவில்‌ பதமான நம: என்ற சொல்லை விவரித்து, தேனில்‌ இனியதும்‌ அமுதம்‌ போன்றதும்‌ மரண மற்றதுமான இந்த விஷேச அர்த்தங்களை உபதேசித்து அடியேனை உய்வித்தார் –

கொடுத்தான்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஈந்த
கொடுத்தான்‌ பதின்மர்‌ குறிக்கும்‌ மொழிகள்‌
கொடுத்தான்‌ கலம்பகம்‌ மற்றும்‌ அனந்தம்‌
மடுத்தேன்‌ மதுவெனப்‌ பெற்று–33-

உலகோர்‌ துன்பத்தைப்‌ போக்க திருநகரியில்‌ அவதரித்தவர்‌ நம்மாழ்வார்‌, அவர்‌ அருளிய பிரபந்தங்கள்‌, மற்றுள்ள ஆழ்வார்கள்‌ பிரபந்தங்களையும்‌ கொடுத்தார்‌. அடியேன்‌ பாஷ்யமாசாரியரை அடைந்ததே காரணமாக, அடியேனைக் கொண்டு திருவாய்மொழிக்‌ கலம்பகத்தையும்‌ இயற்றும்படி செய்து, மதுரமிக்க ஸம்பிரதாய அர்த்தங்களையும்‌ அடியேனை அநுபவிக்கச்‌ செய்தார் –

பெற்றேனின்‌ தாளிணையில்‌ பாமாலை பெய்கலையைக்‌
கற்றேன்‌ கடும்பிறவி காய்ந்தொழித்தேன்‌ – நற்றேன்‌
ஒழுகுநின்‌ கீர்த்தி நயந்துரைத்தேன்‌ ஓர்கால்‌
பழகு பரிந்துரைப்பால்‌ பட்டு–34-

ஆசாரியரே! மறு பிறப்பறுக்கும்‌ உமது தாளிணையே தஞ்சமாகப்‌ பெற்றேன்‌. நின்‌ திருவடி விஷயமான பாமாலையாகிற கலையைக்‌ கற்றேன்‌-இதனால்‌, துன்பத்துக்குக்‌ காரணமான பிறவி மீண்டும்‌ வாரா வண்ணம்‌ தேவரீர்‌ கீர்த்திகளை உலகறியச்‌ செய்தேன்‌.சில சமயம்‌ உலகோர்க்கு தேவரீர்‌ திருவடியை அடைய புருஷகாரமாகவும்‌ வாய்ப்பேன்‌ – என்றவாறு-

பட்டேன்‌ பருவரல்‌ பல்லூழிக்‌ காலமெல்லாம்‌
தொட்டேன்‌ பாடியன் தன்‌ தூமலர்த்தான்‌ – தொட்டதுமே
முன்ன வினை பின்ன வினை ஆரத்த மூன்று ஒழிந்த
என்னை நிகர் யாரே யினி –35-

கீழ்க் கழிந்த நாட்களிலெல்லாம்‌ பிறப்பிறப்புப்‌ பிணியால்‌ படாத பாடுபட்டேன்‌. காதாகித்கமாக பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடியைத்‌ தொட்டேன்‌-தொட்டதும் இப் பிறப்புக்கு முற்பட்ட பிறவிகளில்‌ செய்த வினைகள்‌, பிற்பட்ட வினைகள்‌ இவை யனைத்தும்‌ தீயினில்‌ தூசாகி கழிந்தொழிந்தன. இனி, வினை யற்றவர்களில்‌ எனக்கு நிகராக யவருமில்லை என்றவாறு–

இனியோர் குறை யுண்டோ பூதூரில் வள்ளல்
பனி மலர்த் தாளிணையே பற்றா -நனி விழையும்
சிங்களில் பாடியன் தன் செங்கமலத் தாளிணையே
துங்கமா தூய் மௌளிக் கொண்டு –36–

ஸ்ரீபெரும்புதூர்‌ யதிராசருடைய குளிர்ந்த தாமரை மலர்‌ போன்ற திருவடியினையே பற்றாக மிக விரும்பி, ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றிய பாஷ்யமாசாரியருடைய திருவடித்‌ தாமரையையே அடியேன்‌ உத்துங்கமான முடியாகக்‌ கொண்ட பிறகு, இனியும்‌ ஒரு குறையுள்ளதோ? எனக்கு –

கொண்டான்‌ வரமுநி கோயில்‌ உகந் தயிந்தை
கொண்டான் நல மந்தம் இல்லத–கொண்டோம்
உலகளந்தான்‌ பொன்னடியோம்‌ பாடியன் போல் யமும் ன்பம்‌
நிலமளந்தான்‌ சொம்மாயினோம் –37–

மணவாளமாமுநிகள்‌ திருவமீந்திர புரத்தையே தமக்குகந்த கோயிலாகக்‌ கொண்டார்‌. அதை யறிந்த பாஷ்யமாசாரியரும்‌ நலமந்தமில்லாததான அந்தக்‌ கோயிலையே தமக்கேற்ற வாச ஸ்தலமாகக்‌ கொண்டார்‌. இவர்‌ அபிமாநித்த சிஷ்யர்களாகிய யாமும்‌ உலகளந்தான்‌ பொன்னடியார்‌ ஆதலால்‌ நிலமளந்தவனுடைய சொத்தாக ஆயினோம் —

நேமிசங்கம்‌ கண்கைகால்‌ வாய்முகம்‌ நாபியணி
தாமரைகள்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டம்‌
அயிந்தையில்‌ ஈருருவும்‌ ஆறு பயன்‌ ஆவதே!
நயந்தெரிந்து நானடைந்தேன்‌ நன்கு–38-

அடைந்தாரைக்‌ காப்பாற்ற வேண்டி பஞ்ச ஸம்ஸ்காரார்த்தமாகத் தரித்த திருவாழித்‌ திருச் சங்கமும்‌, தன்னை அடைந்தாரை நோக்கும்‌ மலர்ந்த திருக் கண்களும்‌, பிறவி போக்கும்‌ திருவடிகளும்‌, அஞ்சலென்ற திருக் கைகளும்‌, உபதேசம்‌ செய்யும்‌ திரு முகமும்‌, எம்பெருமான்‌ திருமேனிக்குப்‌ போலி யுருவான திரு நாபிக்‌ கமலமும்‌ ஆகிய இவைகளைத்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டங்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீமந்‌ மணவாள மாமுனிகளும்‌ அவரின்‌ நிழல்‌ என்னலாம்படியான பாஷ்யமாசாரியரும்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஈருருவோ? என்று நினைக்கலாம் படி யிருக்கும்‌ இருப்பை நினைத்து அவர்களையே தஞ்சமடைந்தேன்‌.

நன்றென்‌ றுளதேயோ? பொய்யறியா நானறிந்த
என்றென்றும்‌ யாண்டும்‌ இலதன்றே – குன்றாக்‌
கருணைக்‌ கடலே தான்‌ பாடியன்‌ வேறன்‌
றிருனிலத்தில்‌ பேரொளியே யின்று–39-

பொய்யென்ப தறியாத அடியேன்‌ அறிந்த தொன்றைச்‌ சொல்லுகின்றேன்‌. இருள் தரு மா ஞாலத்தில்‌ பேரொளிப்‌ பிழம்பாகத்‌ திகழும்‌ திருவயீந்திர புரம்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே ஆவர்‌. கருணைக் கடலான அவரைப்‌ போல்‌ நன்றான ஒரு பொருள்‌ இன்று எவ்விடத்திலாகிலும்‌ உளதோ? இல்லை யென்றபடி –

இன்றன்றே? என்றென்றும்‌ ஈடிணை யென்பதில்லை
பொன்றாப்‌ புகழோன்‌ சடகோபன்‌ – பொன்றாத
பேரறிஞன்‌ நாதமுநி யாமுநன்‌ பேராளன்‌
நேராவ ரென்பதிலை நேர்‌–40-

இன்றும்‌ முற் காலத்திலும்‌ மேல் வரும்‌ காலத்திலும்‌ என்றும்‌ அழியாத புகழை யுடைய நம்மாழ்வாருக்கு ஒப்பானவர்‌ எவருமில்லை எனலாம்‌. அவரை அடி பணிந்த குறை வற்ற போறிஞரான ஸ்ரீமந்‌ நாத முநிகள்‌, அங்ஙனமே யாமுந முளிகள்‌, திக்கெட்டும்‌ புகழ் பரவும்‌ பேராளரான ராமாநுஜர்‌ முதலான இவர்களுக்கும்‌ ஒப்பாகக்‌ கூடியவர்‌ ஒருவரும்‌ இலர்‌ எனலாம்‌. நன்மை யொன்று மில்லாத அடியேனை அங்கீகரித்தமையால்‌ பாஷ்யமாசாரியரை வேண்டுமானால்‌ அந்த பூர்வாசாரியர்களுக்கும்‌ ஒப்புச்‌ சொல்லலாம்‌ – என்றவாறு –

நேராவார்‌ யாரே? கருணை நிரம்பியதில்‌
நேரார்‌ நிகரில்‌ புகழொன்றில்‌ – நேராவார்‌
உண்டேயோ? பாடியற்குப்‌ பெம்மானும்‌ உள்ளதேல்‌?
புண்டரீகம்‌ வான்பூத்த போல்‌–41-

கருணை நிரப்பத்திலும்‌ வாத்சல்யாதி குணங்களிலும்‌ பாஷ்யகாரருக்கு நிகர்‌ ஒருவருண்டோ? எல்லா நற் பண்புகளால்‌ நிறைந்தவனான எம்பெருமானும்‌ அவருக்கு நிகராக மாட்டான்‌. உளர்‌ என்பீரேல்‌! ஆகாயத்தில்‌ பூத்தத்‌ தாமரைப்‌ போலாகும்‌ என்பேன் –

போலா மதுரகவி மாறன் தன்‌ பொன்னருளே
ஏலாரே? சான்றோ ரெனக் கொண்டு – மேலாத்‌
தகவுடைய தாய் தந்தை என்று நின்ற அஃதே
மிக விரும்பும்‌ பாடியனே மெய்‌–42-

மதுரகவியார்‌, தன்புன்மையைக்‌ கண்டால்‌ சான்றோர்‌ தன்னை ஏற்க மாட்டார்‌ என்று கருதியே அழகிய அருளை யுடைய ஸ்வாமி நம்மாழ்வாரையே தகவுடையதாய்‌, தந்தையான எல்லா வுறவுமாய்க்‌ கொண்டு தஞ்சமடைந்தார்‌. ஆழ்வாரும்‌ அவரை ஏற்றார்‌. அதைப் போலவே புன்மை யுடைய அடியேனை பாஷ்யமா-சாரியர்‌ ஏற்றுக்‌ கடைக் கணித்ததும்‌ மெய்யே யாகும்‌-

மெய்ம்மைத் திருவயிந்தை பாடியன் மேல் நாளில்
செம்மை யுறச் செய்யா திருப்பேனேல் -அம்மே
நலன் துறந்து நாண் துறந்து பாழ் படுவன் அன்றே
இலனாகி எய்த்து இருப்பன் இன்று –43-

பொய்யில்லா மணவாள மா முநிகள்‌ திருவயீந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டதனால்‌ அத் தலம்‌ இன்று மெய்த்தல மாயிற்று. அத் தலத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியர்‌ முன் காலத்தில்‌ அடியேனை செம்மைப் படுத்தா திருப்பாரானால்‌, அம்மம்மே ! அடியேன்‌ எல்லா நலன்களையும்‌ துறந்து லஜ்ஜையும்‌ துறந்து அசத்தாகிப்‌ பாழ்பட்டிருப்பேன்‌ இன்று – என்றவாறு –

இன்றன்றே மாறன்‌ சடகோபன்‌ என்றென்று
நன்றானேன்‌ உண்ணாட்டுத்‌ தேசிதனை – நன்றா
குடிகஷணைன்‌ கோவிந்தன்‌ மாதவன்‌ அன்பர்‌
மடிவைத்து கந்தருள்வான்‌ மால்‌–44-

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளால்‌ அடியேன்‌ செம்மைப்‌ பெற்றமையால்‌, இன்று மாறன்‌ என்றும்‌, சடகோபனென்றும்‌ உலகவர்‌ இயம்புகின்றதால்‌, அடியான்‌ தொண்டன்‌ என்ற உள் நாட்டுத்‌ தேஜஸ்ஸைத்‌ தரும்‌ பேர் பெற்றவனானேன்‌; கோவிந்தன்‌ குடியடியானென்றும்‌, மாதவன்‌ தமரென்றும்‌ சொல்லத்‌ தரமுடையவனானேன் . இதனால்‌ ஸ்ரீவைகுண்டத்தில் தேவிமாரோடு எழுந்தருளி யிருக்கும்‌ பர வாசுதேவன் இவனால்‌ அலம்பி லாபம்‌ பெற்றோம்‌ என்று உச்சி முகந்தருள்‌ செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌ – என்றவாறு –

மாலே படைத்துக்‌ கடைக் கணித்தான்‌ மற்றுள்ள
ஏலா திருத்தான்‌ அன்றோ! – தோலாப்‌
புகழா இத்தைப் பாடியன் பூதூர்‌ முனிபோல்‌
மிகப் பரிந்தாட்‌ கொண்டான்‌ விழைந்து –45-

எம்பெருமான்‌ பிரளய காலத்தில்‌ இறகொடிந்த பக்ஷிகளைப்‌ போலான ஜீவாத்மாக்களைக்‌ கடைக் கணித்து, கை கால்‌ உறுப்புக்களோடுக்‌ கூடிய சரீரத்தைக்‌ கொடுத்து, அறிவைக்‌ கொடுத்து விட்டு விட்டான்‌. அயிந்தைப்‌ பாடியனோ ஸ்ரீபெரும்புதூர்‌ இராமாநுஜரைப்‌ போல்‌ ஜீவர்கள்‌ விஷயத்தில்‌ ஐயோ! ஐயோ! என்று மிகப்‌ பரிந்து அவர்களை விரும்பி அடிமை கொண்டான் –

விழையொழி யாதாயின்‌ வெந்துயரே வீவில்‌
விழைவுளதேல்‌ பாடியன் பால்‌ இன்பம்‌ – கழியும்‌?
விதிசூழ்ந்‌ திலனென்று வீறுசால்‌ தானே
பதிந்தான் தன்‌ பாலாம்பேரன்பு–46-

உலகியலில்‌ இருக்கும்‌ ஆசையை ஒருவன்‌ விடவில் யென்றால்‌, அவன்‌ பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்ந்து கிடக்க வேண்டியதே. ஆனால்‌, உத்தாரக ஆசாரியரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ திறத்து பேரன்பு உளதேல்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ நீங்குமா? நீங்காது. எம்பெருமான்‌ கருனை ஜிவர்களிடம்‌ ஏறிப்‌ பாயவில்லை என்று நினைத்து பாஷ்யமாசாரியர்‌ ஜீவர்கள்‌ தன் பால்‌ கொள்ள வேண்டிய பேரன்‌பை தாமே பதியும்படி செய்தார் –

அன்பின்‌ நிகரில்லா னாங்கே கருணையின்‌
இன்பி னிணையில்லான்‌ தோற்றத்தால்‌ – பொன் பிறங்கும்‌
மேரு மிசைப்‌ பூத்த செந்‌ தாமரையே ஒருருத்தாள்‌
கண் கை முகம் வாய்‌ மதி –47.

ஸ்ரீ பாஷ்யமாசாரியர்‌, எம்பெருமான்‌ திறத்தும்‌, தன்னை தஞ்சமென்றடைந்த சீடர்‌ திறத்தும்‌ அளவிலா அன்புடைமையின்‌ இன்புறுவதிலும்‌ இணையில்லாதவரே. இவர்‌ தோற்றத்தில்‌ பொன்னிறத்தால்‌ அழகிய திருமேனி, திருவடிகள்‌, திருக்கண்கள்‌, திருக்கைகள்‌, திருப்பவளம்‌, திருமுகம்‌ இவையனைத்தும்‌ அப்போதலர்ந்த செந்தாமரையொத்து பொன்மலையான மேருமலை௰ல்‌ பூத்தபல செந்தாமரைப் போல்‌ காட்சி யளிக்குமென்பதாம் –

மதியொன்றில்‌ மான்குறள்நேர்‌ மாயை கடிவில்‌
எதி சட கோப னிவனே – கதியில்லான்‌
என்போலும்‌ ஏழையைக்‌ கண்போலும்‌ காப்பவன்‌
விண்போகும்‌ சீர்பாடி யன்‌–48–

செயல்‌ செய்யச்‌ சிந்திப்பதில்‌ வாமந மூர்த்தி போலும்‌, மாயயைக்‌ கோபித்துப்‌ போக்குவதில்‌ முற்றுந் துறந்த சடகோபனே யாவான்‌. தன்‌ பாலீடுபாடு இல்லாத என்னைப்‌ போல்‌ அறிவிலியைக்‌ கண்‌ போலும்‌ சிறப்புறச்‌ செய்து காத்தருள்வார்‌ வானளாவிய கீர்த்தி வாய்ந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌- என்பதாம்

பாடியனோ சானகியோ போல்வீர்நன்‌ குத்தமரில்‌
வீடில்சீர்‌ ஆழ்வான்‌ தனையடைந்தார்‌ – கோடல்‌
பதி பரவும்‌ பாங்கில்‌ கலியனோ டொப்பீர்‌ மதி நலத்தால்‌ மாறனே நீர்‌–49-

தான்‌ நரகமடைந்தாலும்‌ பரவாயில்லை. ஆனால்‌, ஆசை யுடையோர்‌ இழக்கலாகாது என்று எண்ணி ஆசாரியன்‌ ஆணையை மீறி திருமந்திரத்தை ஆசையுள்ள எல்லோருக்கும்‌ தூளி தானம்‌ செய்த எம்பெருமானாரைப்‌ போலவும்‌, தேவ மாதரை மீட்கத்‌ தான்‌ சிறையிருந்த சீதாப் பிராட்டியைப்‌ போலவும்‌, தரிசனத்தைக்‌ காக்க தன்‌ கண்ணை யிழந்த கூரத்தாழ்வானைப்‌ போலவும்‌, தன்னை அடைந்தாரைக்‌ கைக் கொண்டு திவ்விய தேசங்களை வாழ்த்திய திருமங்கை யாழ்வாரைப்‌ போலவும்‌, மயர்வற மதிலம்‌ அருளப்‌ பெற்றவர்களில்‌ தலைவரான நம்மாழ்வாரைப்‌ போலத்‌ திகழும்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! இவர்களில்‌ நீவீர்‌ எவரோடு ஒப்பாவீர்‌-

நீரே சயமே யடிமைத்‌ தலை நின்றீர்‌ நீரே அடிமையில்‌ நீக்கமிலீர்‌ – நீர்தாமே கோதிலடி யாருங்‌ குணந்திகழ்‌ கொண்டலும்‌ நீதி நெறி வித்தகரும்‌ நீர்‌–50-

பாஷ்யமாசாரியரே! பயனாகிற அடிமையில்‌ தலை நின்றவர்‌ நீரே; எம்பெருமானுக்‌ காற்றும்‌ தொண்டில்‌ பிரிவதில்லாதவரும்‌ நீரே; குற்றம்‌ யாதுமில்லாது அடிமையில்‌ தலை நின்ற தோடல்லாமல்‌ அடைந்தாரைக்‌ கைக் கொண்டு குணந் திகழ்‌ மேகத்தோடு ஒத்தவரும்‌ ஆவீர்‌. ஆத்ம பரமாத்மாக்களின்‌ நீதியை முற்றும்‌ அறிந்தவரும்‌ நீரே யாவீர் –

நீரே நிகரற்ற நீசனெனை கைக்கொண்டீர்‌
பாருடன்‌ நீரும்‌ பரிவுமிகு – ஊரவரும்‌
எக்காலத்‌ தெவ்வெவரும்‌ ஏற்பதொண்‌ றுண்டேயோ?
மிக்க புகழ் தத்துவமே –51–

நிகரற்ற நீசனான என்னை நீரே உகந்துக்‌ கைக் கொண்டீர்‌. நிலத் தேவரும்‌ ஸ்வேதத்‌ தீப வாசிகளும்‌, மங்களாசாஸனமே யாத்திரை யாயுள்ள நித்திய விபூதியிலுள்ளாரும்‌ முதலாக எக்காலத்திலும்‌ எவ்வுலகிலுள்ளாரும்‌ ஏற்பது என்பது இல்லை யேயாம்‌. மேலாம்‌ புகழே வடிவான தத்துவமே இதுவாகும்‌. தேவரீருடைய வாத்சல்ய குணம் –

மேதினியில்‌ ஐம்புல வாஞ்சை மிகவுடையன்‌
காதுங்‌ கடுநெஞ்சன்‌ தீச்செயல்கள்‌ – யாதும்‌
எனையன்றே அண்டி நிலை பெறுவ யாண்டும்‌
வினையமென்ப தொன்றும்‌ மிகை–52-

பாருலகில்‌ ஐம்புலன்‌ நுகரும்‌ விஷய விருப்பம்‌ மிக உடையவன்‌; கொலை செய்ததற்குரிய கடுமை மிக்க நெஞ்சினை யுடையவன்‌; கொடிய செய்கைகளை யுடைய இப்படிப்பட்ட யாவும்‌ என்னைச்‌ சேர்ந்தே நிலை பெறுவனவாம்‌. எம்பெருமான்‌ விஷயமாக அன்பின்‌ பட்டும்‌ அடக்கமென்பதே யில்லாதவனடியேன் –

மிகையனே மெய்யடியாா கூட்டத்து யானோ
தகையிலன்‌ சாது கோட்டி தம்மில்‌ – நகையிலன்‌
நள்ளருட்கண்‌ இங்கலம்போல்‌ நானொருவன்‌ உள்ளேன்பால்‌
உள்ளதெல்லாம்‌ தீய துள–53-

மெய்யடியார்‌ கூட்டத்து அதிகப்‌ படுவேன்‌ யானொருவன்‌ என்பதாகும்‌. சாது கோட்டிக்குரிய பண்பற்றவன்‌; பகவதநுபவ மில்லாதவன்‌; குதூகலமில்லாதவன்‌; நடுநிசியில்‌ அடுப்புக்கரிபோல்‌ ஒளியற்றவன்‌; இலனென்பாரில்‌ நானொருவன்‌ உளன்‌; என்னிடம்‌ உள்ளதெல்லாம்‌ தீயதே உள்ளதாம் –

உளதேயோ? நீர்செய்‌ செயலின்‌ தரந்தான்‌
உளதேயோ? எம்பெருமான்‌ செய்த – உளதே?
இருவீரும்‌ செய்தசெயற்‌ கொப்பறிவணர்‌ உண்டோ?
பெருமைமிகு பாடியனே! பேசு–54-

தேவரீர்‌ அடியேன்‌ திறத்துச்‌ செய்த செயலின்‌ தரமறிதலுண்டோ? தேவரீரை அடியேற்குத்‌ தந்த எம்பெருமான்‌ செய்த செயலுக்கு ஈடுண்டோ? தேவரீர்களிருவரும்‌ செய்த நல்லுதவிக்‌ கொப்புண்டோ? ஒப்பறிவாரிங்குளரோ? இவற்றை பெருமை மிகு பாஷ்யமாசாரியரே! நீரே அருளிச்‌ செய்ய வேணும் –

பேசுதல்‌ வல்லீரே? நீர்செய்த பேருதவி
பேசுந்‌ தரமுடைத்‌ தல்லவே – நீசனேனைக்‌
கைக்கொண்ட காரியமே எற்கறி வித்ததால்‌
இக் குறிப்பே கொண்டுரைத்தேன்‌ இங்கு–55-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ திறத்து தேவரிர்‌ செய்த பேருதவியானது, தேவரீரே அருளிச்‌ செய்யும்‌ தரமற்றது. ஆதலினால்‌ பேசுதல்‌ வல்லீராக மாட்டீர்‌. உனக்கெப்படித்‌ தெரியும்‌ என்று கேட்பீரானால்‌, அடியேனோ நிகரற்ற நீசனானவனெனக்‌ கொண்டு செம்மை படுத்திய செயலே, அடியேற்கறிவித்தாகுமிதைக்‌ கொண்டே நிகரற்ற செயலென்கிறேனாகும் –

இங்கறிந்தேன்‌ இன்றாக எம்பெருமான்‌ செய்தநன்றி
துங்கமிகு பாடியனைத்‌ தோற்றுவித்தல்‌ – இங்கிலதேல்‌
தொல்லூழிக்‌ காலந்‌ தொலைந்தகீழ்‌ மேல்நாளும்‌
பல்லூழிக்‌ காலம்‌ பழுது –56-

எம்பெருமான்‌ அடியேனை உய்விக்க வேண்டியே பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைத்‌ தோற்றுவித்தான்‌ என்பதனை இன்றாக அறிந்தேன்‌. அப்படி அவரைத்‌ தோற்றுவிக்க வில்லையானால்‌, அடியேற்கு கீழ் கழிந்த காலமும்‌ இனி மேல்‌ வருங்காலமும்‌ பழுதாய்‌ முடிந்திருக்கு மன்றோ –

பழுதாகா வண்ணம்‌ பாடியன்தன்‌ சீலம்‌
விழுமிதென்‌ றுள்ளில்‌ விரித்தான்‌ – கழிபேர்‌
கருணையான்‌ அவ்வளவே வேறன்று கொண்டு
சரணடைந்தேன்‌ பாடியன்தா ளின்று–57-

ஆசாரிய ஸ்வாமிகள்‌, பிறர்‌ நலமே பேணும்‌ மிக்கப்‌ பெருங் கருணையால்‌ தன்னைச்‌ சார்ந்தாரை உய்வு பெறுத்தலில்‌ மிகவும்‌ ஊற்றமுடையவர்‌ ஆவார்‌ என்பதனை அடியேன்‌ உள்ளத்தில்‌ மிக விரியக்‌ காட்டி யருளினார்‌. இவ்வளவிலேயே அடியேன்‌ நிர்ணயித்து, இவர்‌ திருவடிகளில்‌ தஞ்சமென்றடைந்தேன்‌. இதனால்‌, அடியேன்‌ வாழ் நாளைப்‌ பழுதாகா வண்ணம்‌ மேற் கொண்டேன்‌ இன்றெ என்பதாம் –

இன்றயிதை மாமுநிதன்‌ தாளில்‌ இருந்து தொண்டு
நன்றியற்றும்‌ பாடியன் தன்‌ நாண்மலர்த்தாள்‌ – குன்றாத
ஆறுடன்‌ பேறாக வானில்‌ அரியயயன்‌
வீறுடன்‌ பெற்றேன்‌ விரைந்து–.58-

இன்றாக திருவயிந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டுள்ள மணவாளமாமுநிகள்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு நிலை நின்ற பேறென்றறிந்து தொண்டு செய்யும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய அன்று பூத்த தாமரை போன்ற அழகிய திருவடிகளையே அழிவற்ற ஆறுடன்‌ பேறாக வானில்‌ பெறும்‌ பயனின்‌ பெறுதற்கரிய பயனாக சிறப்புற்ற வகையில்‌ விரைந்து பெற்றேன்‌ என்பதாம் –

விரைந்து திருமலை யாழ்வார்‌ விரும்பி
வரமுநியை சீடராகக்‌ கொண்டார்‌ – வரமுநியும்‌
கோயில் அயிந்தை கொடு பாடியற் கொண்டார்
ஆய்விலடி யேற்கொண்டான்‌ ஆர்ந்து –59-

திருமலையாழ்வார்‌, தீவிரமாக மிக விரும்பி மணவாள மாமுனிகளை உபயாத்திரையும்‌ தமதாகக்‌ கொண்டு சிறப்பித்தார்‌. மணவாள மாமுனிகள்‌
திருவயிந்திபுரம்‌ விரும்பி கோயில்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உய்யும்படியே பெற்றார்‌. பாஷ்யமாசார்ய சுவாமிகளடியேனை அளவிடற்கரிய பேரன்பினில்‌ கைக் கொண்டார் —

ஆர்ந்தபுகழ்‌ அச்சுதனே வந்தான்‌ உலகார்யன்‌
தேர்ந்தறிய வல்லமே? தன்பெருமை – தேர்ந்தறிவ
தென்ப தொருபொருள்‌ நாடுறைவர்‌ யாரறிவார்‌?
பண்பனே பாடியற்குக் காப்பு –60-

நிரம்பிய புகழுடைய அடைந்தாரைக்‌ கைவிடாத எம்பெருமான்‌ பிள்ளை யுலகாசார்யராய்‌ வந்துதித் தருளுகையால்‌ இவர்‌ பெருமை நாமறியோ மென்பதொரு பொருளல்ல, உலகிலுள்ளார்‌ எவருமே அறிய முடியாத பெருமையாகக்‌ கருதக் கூடிய பண்புடையரான உலகா சாரியரே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்குக்‌ காப்பாவார் –

காப்பு வடக்குதிரு வீதிப் பிள்ளை காத்திலரேல்‌
காப்பெவர்‌ வாய் மொழி ஈட்டுரைக்கு – காப்பன்றி
நுண் பொருள்‌ முற்றவும்‌ நோக்குவித்தான்‌ பாடியற்கு
பண்பினெற்‌ கீந்தான்‌ பயன்‌–61-

வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்ளை சொன்னை திருவாய்மொழி ஈட்டின்‌ உரையைக்‌ காத்து எழுதவில்லையானால்‌, காப்பாவார்‌ யார்‌? இந்த வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை ஸ்ரீவைஷ்ணவத்தை காப்பது மட்டுமல்லாமல்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியருக்கு ஈட்டுரையை தன்னருளால்‌ இவரிடம்‌ வந்து சேரும்படி நோக்குவித்தார்‌. இந் நோக்கை பாஷியமாசாரியர்‌ தம் பரம கருணையாலே அடியேன்‌ திறத்தில்‌ பயனுறும்படி செய்தார் –

பயனாநம்‌ பிள்ளையின்றேல்‌ ஆழ்வார்கள்‌ பாக்கள்‌
பயனோயோ? உம்பர்‌ திவத்தொப்பாம்‌ – பயனுடைத்தே
ஈடின மில்லார் இறையின்பம் மில்லாதோர்
பாடியனே பெற்றான் தன்‌ சீர்‌–62-

உலகுக்குப்‌ பெரும்‌ பயனாக உயர்வற உயர்நலமுடையவனால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றவர்களாழ்வார்கள்‌ பதின்மரும்‌, இப்படி இவர்களால்‌ இறை யனுபவம்‌ கரைந்து வழிந்தவாறே அருளிச்‌ செயல்கள்‌ தொண்டர்க்கமுத மாயமைந்தன அருளிச்செயல்கள்‌. நம்பிள்ளை என்ற ஸ்வாமிகள்‌ அவதரிக்கவில்லையானால்‌ இந்த அருளிச்செயல்‌ பயனுடையதாகாது. இதன்றி தாழ்த்திக்கு முடிந்த நிலமான இருள்தருமா ஞாலம்‌ உம்பர்‌ திவத்தொப்பாம்‌ பயனுடைத்‌ தாயிற்று. இத்தகு அனுபவம்‌ நம்பிள்ளைகளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்‌ சார்ய சுவாமிகளுக்கு அருளப் பெற்ற அவ் வனுபவம்‌ தம் பரம கருணையால்‌ எமக்குக்‌ கொடுத்தார் –

தஞ்சீரை ஞானியர்கள்‌ தாம்புகழும்‌ வேதாந்தி
நஞ்சீயர்‌ தாம்பட்டர்‌ நல்லருளால்‌ – எஞ்சாத
ஆர்வமுடன்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ நூறுரு
ஆர்ந்தெற்கீந்‌ தான்பா டியன்‌–63-

தம்‌ கீர்த்தியை மெய் ஞானியர்கள்‌ கொண்டாடும்‌ தரமுடைய நஞ்சீயர்‌ என்றும்‌ வேதாந்தி என்றும்‌ பெயருடையார்‌, பட்டர்‌ திருவருளால்‌ மாறன்‌ மறையாகிய திருவாய்மொழியின்‌ நுண்‌ பொருள்கள்‌ முற்றும்‌ தம்மைச்‌ சார்ந்தார்‌ தமக்கு நூறுருவமையைக்‌ கொடுத்ததை, ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகள்‌ மேற்படியார்‌ அருள்களால்‌ தாம்‌ பெற்று தன் பேரருளால்‌ அடியார்க்கருளினார் –

அன்பின்‌ அலைகடல்‌ ஆயிரம்போக்‌ காழ்பொருள்‌
இன்பின்‌ இளங்குமரன்‌ எம்பிராற்‌ – கின்புருவன்‌
எட்டெழுத்‌ தெட்டுகாதை பண்ணின்‌ தனிச் சுவையன்‌
பட்டர்திருத்‌ தாள்பா டியன்‌–64-

எம்பெருமானார் திறத்தும்‌ மெய்யடியார் திறத்தும்‌ அலைகடலை யொத்த அன்புடையாரும்‌, இன்பம ளிக்கும்‌ இளங்குமரனும்‌, பிறவித்‌ துயரொழிய வேண்டுவார்க்கு துன்பமொழித்து எம்பிரான் பால்‌ சேர்த்து இன்பமளிக்கும்‌ எட்டெழுத்துக்கு அஷ்டச்லோகி என்ற நூலருளியவரும்‌ பண்ணின்‌ தனிக் கலைஞரும்‌ ஆயிர நாமத்துக்கு ஆழ் பொருளெல்லாம்‌ அருளிச்‌ செய்தவருமாகிய ஸ்ரீமத்‌ பட்டருடைய திருத் தாளை தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகளின்‌ திருவடிகளே அடியேற்குத்‌ தஞ்சமாகும் –

பாடியன்‌ எம்பார்‌ பதற்சேர்ந்‌ திதந் தெரிவான்‌
ஈடில்‌ சுவையன்‌ தமிழ் மறையின்‌ – நாடு புகழ்‌
நாலாயிரம் பாவில்‌ எம்பெருமானார் தாள் சேர்த்‌
தோலாத்‌ துணைச் சீட னாம்‌–65-

ஸ்ரீபாஷ்யமருளிச்‌ செய்த எம்ருமானார்‌ திருத்தாளினைச்‌ சேர்ந்து உய்யும்‌ இதந்தெரிந்தவரும்‌, தமிழ்‌ வேதமாகிய நாலாயிரம்‌ பாசுரங்களில்‌ ஈடிணை யில்லாச் சுவையுடைய பண்ணின்‌ தணிக் கலைஞருமாகியவரும்‌ உலகெல்லாம்‌ புகழும்படியான எம்பார்‌, சிஷ்யாச்சார்ய முறையில்‌ சிறிதும்‌ மாறுபடாதவராய்‌ எம்பெருமானாருக்கு துணைமிக்க சீடனுமாவார்‌. இவர்‌ திருவடிகளைப்‌ பற்றின ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ அடியேனை ஏற்ற குருவாகும் –

சீடன்‌ பெரியநம்பி சேர்ந்தசீடர்‌ ஐவர்‌
சேடனிரா மானுசனா சீர் தரும் -பாடியற்கும்
எம்பெருமான் உட்பட இந் நிலத் தேவர்க்கும்
இம்பர் நலமந்தமில் –66-

அர்ச்சாவதார மூர்த்திகளாய்‌ கோயில்‌ கொண்டுள்ள எம்பெருமான்களுட்பட ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளோடு நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி யற அனைவர்க்கும்‌ இவ் வுலகிலுள்ளவர்‌ கட்கும்‌ இங்குண்டான ஆநந்தம்‌ நிலைத்திருப்பதற்குக்‌ காரணம்‌, ஐவர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி பெரிய திருமலை நம்பி, திருமலை யாண்டான்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ இவர்களுக்கு சிஷ்யராய்‌ திருவனந்தாழ்வான்‌ அம்சமாய்‌ இராமாநுசராய்‌ வந்தவதரித் ததாலாகும் –

இலரேல்‌ இருநூ றகவைகளும்‌ ஈங்கே
நலமொன்‌ றுளதேயோ? நாட்டில்‌ – பலவென்‌?
பரமன் படைப்போடு பாடியன் எற்கோடல்‌
தரமன்று சத்திய மீது–67-

எம்பெருமானாரும்‌ அவருடைய மறு அவதாரமான மணவாள மாமுனிகளும்‌ இருநூறு ஆண்டுகள்‌ இந்த நிலத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்க வில்லையே யானால்‌ இந்த நானிலத்தில்‌ ஆனந்த மென்பதொன்றும்‌ உண்டோ? இல்லையேயாம்‌. நிற்க. பல பேசி என்‌? பரமன் படைத்த படைப்பும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனைக்‌ கைக் கோடலும்‌ முதலானவை பயனற்றுப்‌ போயிருக்கும்‌ இது சத்தியம்‌.

இதுவொப்ப தின்பமில்லை யாமுநர்த்‌ தாள்கள்‌
கதி பெற்றூர்‌ யாமுநர்த்‌ தாதை – கதி பெற்றேன்‌
இவ் விருவர்‌ தாங்களே ஆறுடன்பே றென்றபடியேன்‌
செவ்வி யுறச்‌ சேர்ந்தூய்ந்த னன்‌-68

ஸ்ரீமத்‌ ஆளவந்தார்‌ திருவடிகளையே ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளும்‌, இவர்‌ திருக் குமாரரான யாமுநாசார்ய ஸ்வாமிகளும்‌ தமக்குக்‌ கதி என்று பெற்றிருந்த இந்த இரண்டு ஸ்வாமிகளுடைய திருவடிகளையே கதி யென்றும்‌ ஆறும்‌ பேறுமா செவ்வி யுறச்‌ சேர்ந்துய்ந்தே னென்பதில்‌ இது ஓப்பதின் இல்லையாம் –

சேர்ந்தூய்ந்தோன்‌ சீராமன்‌ பங்கயக்கண்‌ ணன்தாள்கள்‌
ஆர்ந்த புகழ்ப்‌ பாடிய னம்பொனடிச்‌ – சேர்ந்துய்ந்தேன்‌
இவ்வளவே பேற்றினுக்கு ஏய்ந்த யானும் பெற்றனன்
கவ்வை யென்பால்‌ காட்டா தலை–69-

அடியேன்‌ நிரம்பிய புகழாளரான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌, மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌ இவ் விருவருடைய திருவடிகள்‌ அடைந்து உய்ந்தவர்‌. இந்த ஸ்வாமிகளின்‌ திருவடிகளே கதி யென்று சேர்ந்த இவ்வளவே பேறு பெறுதற்குரிய யாவும்‌ பொருந்தி விட்டன. ஆதலால்‌ துர் விஷயங்கள்‌ என்பால்‌ தலை காட்டாது –

தலைகாட்டாத்‌ தண்ணென்ற ஞானவவொழுக்‌ கங்கள்‌
தலைக்காட்டாத்‌ தண்ணென்ற முக்கும்‌ – நிலைநாட்டும்‌
வாள்நேர்‌ உயர்கதியும்‌ வள்ளலெனும்‌ பாடியன்தன்‌
தான்தர முந்தும்‌ தகவு–70-

மிகத்‌ தாழ்ந்தான பொய்யறியும்‌ தீயொழுக்கம்‌ அழுக்குடம்பும்‌ என்பாலும்‌ தலைக் காட்டாதவைகள்‌. ஒளி பொருந்திய நித்திய விபூதியாம்‌ உயர் கதி வள்ளலெனும்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தயையால்‌ தானே முந்தும்‌.

தகவில்‌ உலகின்‌ தகவுடையீர்‌ நீரேதகவென்னும்‌ தத்துவம்‌ வேட்கும்‌ – தகையீர்‌
தகுதியில்‌ தத்துவம்‌ நாயேனைக்‌ கொண்டு தகும் கூட்டம்‌ தந்தளித்தீர்‌ நீர்‌–71-

பெருமை யென்பதறியாத உலகில்‌ பெருமை மிக உடையீர்‌ நீர்‌. தயை யென்ற தத்துவம் தானே விரும்பும்‌ தயை யுடையீர்‌ நீர்‌. தகுதி என்பது இல்லாத அடியேனான கீழோனைக்‌ கைக் கொண்டு நிலத்தேவர்‌ கூடத்திலடியேனை இருத்தினீர்‌. இவற்றை யெல்லாம்‌ அடியேனைக்‌ கைக் கொண்டவாற்றானே அறிந்தேன் –

நீர்தந்த சேமம்‌ நிமலனாம்‌ நாதமுநி
பார் நிரம்பும்‌ பல் புகழ்ப்‌ பாவினத்தை – சீருநவே .
மீள்வித்த விஞ்சுசுவைப்‌ பண்ணமர்நா லாலிரத்தால்‌
ஆள்வித்த பாடியனன்றோ–72-

மிக்க சுவை யுடையதும்‌ பண்ணமைந்ததும்‌ உலகம்‌ நிறைந்த புகழுடையதுமான நாலாயிரத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரங்களைக்‌ ‘குற்றமன்றிக் குணம்‌ மிக்கவரான ஸ்ரீமந் நாதமுநிகள்‌, மறைந்து போனதை மீள்வித்ததைக்‌ கொண்டு அடியேனை ஆள்வித்தீர்‌. ஆதலால்‌, இத்தகைய பாஷ்யமாசார்யரான நீர்‌, அடியேற்கு எல்லாச்‌ சேமமும்‌ நீரன்றோ –

அன்றே குருகூர்ச்‌ சடகோபன்‌ தாளிணையும்‌ பொன்றாப்‌ புகழ்நிரம்பும் வாய் மொழியும்‌ –
நன்றுதவி பொந்நிலத்தில்‌ பொன்னிலத்தில்‌ மன்னு புகழ்ப் பாடியன்
என்னை நிகர்‌ யானென்றனன்‌–73-

திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வருடைய இரண்டு திருவடிகளையும்‌, அழிவற்ற இவரருளிச்‌ செயலாம்‌ திருவாய்மொழியும்‌ அடியேற்குய்யும்‌ வண்ணம்‌ உதவி, இருள்தருமாஞாலமாகிய இவ்வுலகிலும்‌ தெளிவிசும்பு திருநாடான பரமபதத்திலும்‌ நிரம்பப்‌ பொருந்தியுள்ள புகழாளரான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ ‘உனக்கு நிகர்‌ நீதா னென்றார் –

என்றறிவேன்‌ என்னாயன்‌ செய்தநன்றி முற்றவும்‌
இன்றறிந்தேன்‌ ஓரளவே சேனையர் கோன்‌ – தன் திறத்தில்‌
அன்பின்‌ அளவில்யான்‌ அங்ஙனமே என்பாலும்‌
அன்பின்‌ அளவில்லான்‌ என்று–74-

அடியேற்கு வகுத்த ஸ்வாமியான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு, அடியேன் திறத்தில்‌ செய்த நலம்‌ முற்றவும்‌ என்றும்‌ அறியப் போகாது. ஆயினும்‌ இன்றாக ஓரளவே அறிந்து கொண்டேன்‌. ஸ்ரீவைஷ்ணவ சமயாசார்யர்களில்‌ முதல்வரான ஸ்ரீமத் விஷ்வக்சேனரிடத்தில்‌ தாழுய்யும்‌ பொருட்டும்‌ பிறரை உய்வித்தல்‌ பொருட்டும்‌ அளவிறந்த அன்புடையாரானார்‌. அதே நிலையில்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு அளவு கடந்த அன்புடையரானார் –

என்றும்‌ மறவேன்‌ மறந்தேன்‌ இனியுணர்ந்தேன்‌
குன்றேய் குணக் கொண்டல்‌ பாடி – நின்ற புகழ்‌
கேள்வன் பொன்‌னாகத்து நீங்காத்தாய்‌ தாள்கட்கு
ஆளென்று புக்கான்‌ தனை–75-

குன்று போல்‌ மிக்க குணங்களால்‌ நிறைவாளனும்‌, கொண்டல் மேகம்‌ போல்வானும்‌ குறையேது மின்றி நற்குணக் கடலாக நின்ற புகழாளனான இறைவன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவான திருமகள்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உணராமையால்‌ மறந்தேன்‌; அடியேன்‌ உணர்ந்தேன்‌; இனி மறவேன் –

கேள்வனாகம்‌ நீங்காத்தாய்‌ தாள்கள்‌ சிரங்கொண்டு
கேள்வனையே தஞ்சமென்று கொள்ளும்‌ – மீள்வில்சீர்‌
பாடியன் தன் ஆர்ந்த புகழ் எக்காலும் பண் தொடுத்து
பாடுதற்‌ குற்றதொரு பற்று–76-

உலக நாயகன் தன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவின்‌ திருவடிகளைச்‌ சிரத்திற்‌ கணியாகக்‌ கொண்டு இவளைப்‌ புருஷகாரமாக, எம்பிரான்‌ தன்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமென்று கொள்ளும்‌, பழுதின்றி குணங்களால்‌ நிறைந்த புகழாளரான ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய கெளரவம்‌ மிக்க புகழை எக்காலத்தும்‌ பண்ணின்‌ இசையோட தொடுத்துப்‌ பாடுதற்குரிய தொரு உபாதானமாகும் –

பற்றோ சிறிதில்‌ பரன்சீர்க்‌ கடல்மூழ்கி
நற்றமிழ்நூல்‌ நான்களித்த இன்பமாரிப்‌- பெற்றியன்‌
வண்குருகை வந்தருளும்‌ மாறன்‌ மலரடியே
பண்புமிகும்‌ பாடியருக்‌ கின்பு –77

உலகியலில்‌ பற்று சிறிதுமின்றி பரனாம்‌ பெருமானுடைய குணக்கடலில்‌ மூழ்கி அந்த குணங்களையே உபாதாநமாகக்‌ கொண்டு, திருவாய்மொழி திருவிருத்தம்‌, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம்‌ என்கிற நான்குப்‌ பிரபந்தங்களளித்த வளமிக்க குருகூரில்‌ வந்தவதரித்த நற்குணக்கடலாகிய சடகோபருடைய திருவடிகளே ஸ்ரீமத்பாஷ்யமா சார்ய ஸ்வாமிகளுக்கு என்‌றும்‌ இன்பமேயாம் –

இன்புருவன்‌ பொய்கை எழிலியகல்‌ வார்கடல்நெய்‌
மின்சுடரா வேங்கடவற்‌ காட்டுமவன்‌ – பொன்னடிகள்‌
வன்சரணா வாழும்‌ அயிந்தைவரும்‌ பாடியன்தூள்‌
உன்சரணா நெஞ்சமே யுள்‌–78-

பகவதநுபவ இன்பமே வடிவான பொய்கையாழ்வார்‌, ஸ்ரீபூமியையே அகலாக, நிறைகடலை நெய்யாக விளக்கேற்றி இந்த ஒளிமிக்க விளக்கால்‌ திருவேங்கடத்தெம்பெருமானை உலகங்காணக்‌ காட்டும்‌ அவர்‌ திருவடிகளையே தமக்கு வாழ்வாக அவதரித்த, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ திருவடிகளையே நெஞ்சமே! உனக்குத்‌ தஞ்சமாக நினைவில்‌ கொள்ளுவாயாக –

உள்ளிருள்‌ நீக்கும்‌ ஒளிவிளக்‌ கேற்றுதற்கு
தெள்ளுதமிழ்‌ தேர்ந்து துணைக்கோடும்‌ – விள்ளரிய
கீர்த்தியார்‌ பூதத்தார்‌ தாளினையே பாடியற்கு
சீர்த்த பயன்‌ எற்கிவனே வாழ்வு–79-

உலகவருடைய அகவிருளைப்‌ போக்குதற்கு உள்ளத்திலுண்டான கோணலைப்‌ போக்கும்‌ தெளிந்த தமிழ் பாசுரமே நம்‌ செயலுக்கேற்ற துணை என்று தேர்ந்து துணையாகக்‌ கொண்ட, எவராலும்‌ புகழ்ந்து சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த பூதத்தாழ்வார்‌ திருவடிகளையே, தமக்குற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே, அடியேற்கேற்ற பேரின்ப வாழ்வாகும்‌ என்பதாம் —

வாழ்வான்‌ வலிய வழி கண்டேம்‌ நன்மைமிக்காள்‌
கேழில் திருக்‌ கண்ட பொன்‌ னாழி கண்ட – கீழ்வில்‌
தமிழ்த் தலைவன்‌ பொன்னடியே தன் சரண்‌ கொண்டான்‌
எமைக்காக்கும்‌ ஏற்ற வழி–80-

நலமந்தமில்லதொரு நாட்டில்‌ போய்‌ வாழ்ச்சி பெற, சிறப்புற்ற மார்க்கமொன்று நாம்‌ கண்டு கொண்டோம்‌. எல்லா நலன்களாலும்‌ மிக்காளரான திருக்கண்டதோடு பொன்னாழி கண்டேன்‌ என்று பாடிய எக்குறையுமற்ற பேயாழ்வாராகிய தமிழ்த்‌ தலைவன்‌ அழகிய திருவடிகளே தன்‌ சரண் என்று கொள்ளும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ எம்மைக்‌ காப்பதற்கு ஏற்ற வழியாகுமென்பதாம் –

வழியல்‌ வழி யனைத்தும்‌ வாள் கொண்டு வெட்டி
கழிய மிகு நல்வழியே காட்டும்‌ – பழுதில் புகழ்‌
பத்திசாரன்‌ தாளிணையே பாடியற்காம்‌ பரிசு
இத்தகையோன்‌ ஏற்ற பரிசு–81-

தேவதாந்தர சாதனாந்தர ப்ரயோஜநாந்தர முதலான வழியில்லா அல் வழிகள்‌ பலவும்‌, தம்‌ நாவென்னும்‌ வாளால்‌ அறத் தொலைத்து எம்பெருமான்‌ நாரணனே ஆறும்‌ பேறும்‌ என்பது முதலா மிக மிக நல்ல வழிகளனைத்தும்‌ தெளியக் காட்டி உலகவரை உய்வித்த திருமழிசைப்‌ பிரான் திருடியிணைகளே, ஏற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே எமக்குரிய எல்லாப்‌ பயனுமாவாரென்பதாம் –

பரிசறிவார்‌ பல்லோர்‌ பரிசறிவார்‌ ஈடே?
குருகை வரு வண்சட கோபன்‌ – திருவடியே
பாடியற்‌ கேற்ற நிதி பாடியன் சேர்ப்‌ பாடியனே
ஈடிணையில்‌ எந்தம்‌ நிதி–82-

உலகில்‌ உற்ற பயனறிவார்‌ தாம்‌ கண்டதுவே பயனென்பார்‌ பல்லோர்‌, ஆனால்‌ பாஷியமாசாரியர்‌ கண்ட பரிசே அனைவர்க்கும்‌ ஏற்ற பயனாகையால்‌ பயனறிவார்‌ இவர்க்கீடில்லை. திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபன்‌ திருவடிகளே நிதி போன்ற கதியாகும்‌ என்றருளியவர் ஸ்வாமி ராமாநுஜர்‌. இந்த ராமாநுஜர்‌ திருவடியைச்‌ சாரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமி ஈடும்‌ எடுப்புமில்லா நிதியாகும்‌ எம் தமக்கு –

நிதிகண்‌ டுரைசெய்தோன்‌ நீள்குன்றத்‌ தியாவும்‌
நிதியா அடியா ரடித்தூள்‌ – நிதியாக இன்பப்‌
பெருங்குழுசேர்‌ சேரலர்‌ கோனின்பம்‌
பாடியற்‌ கின்பமெற்‌ கு-83

திருவேங்கட மலையின்‌ தொடர்பே நிதி என்றும்‌, மெய்யடியார்‌ திருவடித் துகளே நிதியாகவும்‌, எம்பெருமானை நினைந் தின்‌புறும்‌ பெருங் குழுவே பேரின்பமாகச்‌ சேரும்‌ குலசேகரப்‌ பெருமானே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு இன்பம்‌. இந்த ஸ்வாமிகளே அடியேனுக்கு ஏற்ற ‘இன்பமென்பது –

எமக்குக்‌ கதியாவார்‌ பாடியரென்‌ போல்வார்‌
தமக்குங்‌ கதியாவர்‌ தாமே – குமைக்கும்‌ .
உலகென்று பல்லாண்‌டு ஓதும் விட்ணு சித்தர்‌
உலகிய லென்று பல்லாண்‌ டோதிய பட்டர் பிரான்‌– 84

இவ்வுலகின்‌ தன்மையால்‌ எம்பெருமான்‌ திருமேனிக்குக்‌ கண்ணேறு வரும்‌ என்று பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கும்‌ உற்ற காப்பாவார்‌. இத்தகு ஸ்வாமி எமக்குக்‌ கதியாவதன்றி, என் போல்வார்‌ கீழோர்‌ பலருக்குங்கதி தாமே யாவாரென்பதாம் –

உற்று நோக்கில் தேவியர் மூவர் உயர்ந்தோர் யார்
பற்றிப்‌ பரன் தாள்‌ உலகுய்ய – முற்றுணர்வை
ஒதியருள்‌ கோதை உயர் கதி கொள்‌ பாடியன் தாள்‌
மா துயர் மாய்க்கும் மருந்து–85-

எம்பெருமானுடைய தேவியார்‌ மூவராகும்‌. இவர்களில்‌ உலகவர்களுக்கு உபசரிப்பதில்‌ உயர்ந்தோர்‌ யாவரென உற்று நோக்கில்‌ உலகோர்‌ பரன் தாள்‌ பற்றி உய்வடைய இன்றியமையாச்‌ சாதனமான மெய் யுணர்வை இரண்டு ப்ரபந்தங்களில்‌ தெள்ளத்‌ தெளிய ஒதி யருளிய கோதை நாச்சியரே என்பது தேறும்‌. இத்தகு நாச்சியார்‌ திருவடிகளையே உயர்ந்த கதியாகப்‌ பற்றிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே பிறவித் துயர்‌ ஒழிக்கும்‌ மருந்தாகுமென்பதாம் –

மருந்தாய தொண்டர் தாள்‌ தொண்டர் தாள்‌ தூளே
பெருவடிவாப்‌ பேணிக் கொள்‌ பெம்மான்‌ திருவடி சேர்‌
பாடியன் தன் தாளிணையே ஒப்பில் பரகதிக்கு
ஈடில்லா நம்நல்‌ தவம்‌–86-

பிறவி நோய மாத்திரமன்று, அனைத்து நோய்க்கும்‌ மருந்தாவது தொண்டரடித் தூளே யாகும்‌. இத் தகுத்‌ தொண்டரடிப்‌ பொடியே தமக்கு மேம்பட்ட திருமேனியாக விரும்பிக்‌ கொண்டதையே நிரூபகமாக உடையவர்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வாராகும்‌. இந்தப்‌ பெருமை யுடைய இவ் வாழ்வார்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமாகச்‌ சேர்ந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய திருவடி-யிணையே ஒப்பற்ற நலமந்தமில்லதோர்‌ நாட்டிற்குப்‌ போவான்‌ ஈடிணை யில்லா நம்முடைய நல்ல தவமாகும்‌ என்பதாம் –

நற்றவம்‌ மொன்றுமிலேன்‌ நாரணன்‌ தாள் பணியேன்‌
உற்ற உறவறியேன்‌ ஊழ்வினையேன்‌ — பற்றி நின்‌
தாள்பணியேன்‌ தண் கழலே பொய்யன்‌ புறந் திரிவேன்‌
ஆள் கொண்டாய்‌ கொண்டதுவே மெய்‌–87-

நலமந்தமில்லாதோர்‌ நாடுபுகுவான்‌ பொருட்டு உலகவர்‌ செய்வதாகிய நல்ல தவங்களொன்றும்‌ செய்திலேன்‌. இதைத்‌ தருவானான நாராயணன்‌ திருவடிகளைப்‌ பணிவதும்‌ செய்திலேன்‌. இவைகளின்‌ காரணமாக ஊழ்வினை வயத்தவனாய்‌, மெய்யுணர்வு மறைக்கப்‌ பெற்றவனாய்‌ பரனுக்கும்‌ எனக்கும்‌ உள்ள உறவுகளை ஒன்றும்‌ அறியேன்‌. இந்தக்‌ குறைகளெல்லாம்‌ தீர்த்து தெளிய பரம காருணிகரான தேவரீர்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றி பணியேன்‌. இன்னும்‌ பொய்யனாய்‌ தேவரீரையும்‌, எம்பெருமானையும்‌ விட்டுப்‌ புறந் திரியுமவனான அடியேனை மேல்‌ விழுந்து அடிமை கொண்டதுமன்றி, மெய்யாம்‌ வகையில்‌ மேல்‌ செய்வனவற்றைச்‌ செய்து அருளினீர் –

மெய்யார்‌ திகிரியையும்‌ மேவார்‌ செருக்களத்தில்‌
உய்யா வகை முழங்கும்‌ ஒண்ணந்தும்‌ – மெய்யாரும்‌
எட்டெழுத்தும்‌ புண்டரமும்‌ இன்னருளே நாமமும் நின்‌
பட்டழுந்தும்‌ பங்கயமீந்‌ தாய்‌–88-

ஒளிப் பிழம்பாகத்‌ திகழும்‌ திருமேனியை யுடைய சுதரிசனாழ்வானையும்‌, விரோதிகள்‌ நிறைந்துள்ள யுத்தக் களத்தில்‌ புகுந்து, விரோதிகள்‌ குடல்‌ குழம்பும்படி முழுங்கும்‌ பாஞ்ச சந்நியாழ்வானையும்‌ முறையே வலது தோளிலும்‌ இடது தோளிலும்‌ பொறித்து உண்மை யறிவினை விளைப்பதற்கு இன்றியமையாத திருவஷ்டாக்ஷர மந்திர முதலான வற்றையும்‌ திருமண்‌ காப்பையும்‌ திருவாராதன தெய்வமான தேவரீருடைய திருவடி நிலையும்‌ ஈந்தருளினீர் –

(ஈந்த) அருளே அருள் தந்த அன்னே சுரக்கும்‌
பொருளே இணையடிகள்‌ பொன்னே – மருவார்கள்‌
அங்கம் அடரும் அயிந்தை வாழ் அண்ணலே
இங்கு இறைவர் ஆள்கவத்‌ தா–89-

இவையெல்லாம்‌ தந்த, அருளே ஒருவடி வென்னலாம்படியான ஸ்வாமிகளே! அடியேன்‌ கடைத்தேற அருளைத் தந்த இறைவன்‌ போன்றவரே! மிகவும்‌ சுரந்து மிக உண்டான செல்வமே! பொன் போலுமழகிய இணைந்த திருவடிகளை யுடையீரே! விரோதிகளைப்‌ பறிப்பது போல்‌ ஒழிக்கும்‌ திருவயிந்தையில்‌ கோயில்‌ கொண்டுள்ள உற்ற ஸ்வாமியே! மேன்மேலும்‌ இங்ஙனமே ஆள்வீராக!

நல்குங்‌ கமலநேர்‌ நாண்மலர்த்‌ தாள்தொடங்கி
பல்சுவைய மேனி பரியந்தம்‌ – பல்சுவையில்‌
பாடிப்‌ பரவிய பாணன்சேர்‌ பாடியனே
ஈடில்‌ கதியாம்‌ எமக்கு–91-

நலமனைத்தும்‌ நல்குந் திருமகள்‌ தோற்றத்துக் கேதுவாகிய அன்று பூத்த தாமரைப்‌ போன்ற திருவடி மலர்‌ தொடங்கி, மிக்க பேரழகுக்குக்‌ கொள்கலமாகிய திருமேனி பரியந்தமாக பல விதமான பாட்டுச்‌ சுவையுண்டாம்படி பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரைத்‌ தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே! நீரே எந்தமக்கு ஒப்பற்ற கதியாகுமென்பதாம் –

எமக்குங்‌ கதியுண்டே எண் பதினாறு தலம்
தமை வாழ்த்தியதே தகும்பே றமைக்கும்
பரகாலன் தாளிணையே தஞ்சம் கொள் பண்பன்
அரவிந்த மன்ன திருத்தாள் –92-

திருமங்கையாழ்வார்‌ எண்பத்தியாறு திவ்விய தேசங்களை வாழ்த்தி, அதுவே பெறும்‌ பயனான நலமந்த மில்லாதொரு நாடென்றமைக்கும்‌ இவர் திருவடிகளே தஞ்சமென்று கொள்ளும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தாமரை போன்ற திருவடிகளே ஏதிலனான அடியேற்கு கதியாகு மென்பதாம் –

தாளிணைகள்‌ தானவர்‌ தேவர்‌ தொழுதிறைஞ்ச
நாள்தொறும்‌ மாமுனி வாழ்த்துரைக்க – நாள்தொறும்‌
பாவியேனைக்‌ கைக்கொண்ட பாடியன்‌ நாவழுத்த
தேவனாதன்‌ சேரயிந்‌ தை–93-

திருவயீந்த்ர புரமானது தினந்தோறும்‌ தானவர்களும்‌ தேவர்களும்‌ வந்து வந்து தொழுதிறைஞ்சவும்‌, ஸ்ரீமன்‌ மணவாளமாமுனிகள்‌ நாள்தொறும்‌ வாழ்த்துரைக்கவும்‌, பாவியேனான அடியேனையும்‌ கைக்கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ நாவினால்‌ நாள் தொறும்‌ நவின்று வழுத்தவும்‌ தேவனாதன்‌ கோயில்‌ கொண்ட தலமாகும் –

அயிந்தையில்‌ பாடிய யாதறியா நாயேன்‌
கயவனெனைக்‌ கண்டுகந்‌ தன்பின்‌ – நயந்தழைத்த
நன்மைமுற்றும்‌ ஊட்டினையே! நாண் மூன்றில்‌ அன்றின்‌றும்‌
நன்மைமிகும்‌ பேறனைத்தும்‌ நல்கு–94-

திருவயீந்திரபுரத்தில்‌ நித்திய வாசம்‌ செய்யும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யாசார்ய ஸ்வாமிகள்‌, உண்மை உணர்வில்‌ ஒன்றும்‌ அறியாத கீழோனானக்‌ கயவனாகிற என்னைக்‌ கண்டு செளசீல்யத்தால்‌ உகந்தருகில்‌ அழைத்து நன்மை யென்பதனைத்திலும்‌ மேம்பட்ட நன்மையை முற்றூட்டாக மூன்று நாளில்‌ அக் காலத்து ஊட்டி யருளினீர்கள்‌. அது போல்‌ நன்மை மிகும்‌ பேறனைத்தும்‌ இன்று நல்குவீராக –

நல்கும்‌ நலமிக்க ஆசார்யர்க்‌ கெல்லைநீர்‌!
பல் புகழில்‌ மிக்‌க புகழ்ப் பாடியர் நீர் -அல்வழியில்‌
செல்வேன்‌ சிரத்தில்‌ அடி சூட்டிச் சீடர்களில்‌
எல்லையிவ லென்னும்‌ பேர் –95-

பல புகழில்‌ மிக்க புகழாளராம்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ நீராகும்‌. அதே நிலையில்‌ ஆசார்யரென்பவரில்‌ முடிவில்‌ உயர்ந்தவரெனத்‌ தக்கவர்‌ நீரே. அடியேனோ நன்மைக்கு மாறான அல் வழியிலேயே செல்பவன்‌. இத் தகு அடியேனுக்கு சிரோ பூஷணமாக தேவரீர்‌ திருவடித் தாமரைகளைச்‌ சூட்டி அலங்கரித்தருளி சிஷ்ய வர்க்கத்தில்‌ இவன்‌ முடிவானவனென்னும்‌ பேர்‌ நல்குவீராக –

போ் பிதற்றிப்‌ பெற்றேன்‌ பெறும் பரி சங்ஙனமே
சீர்ப் பாடிப்‌ பெற்றேன்‌ சிறப்பெல்லாம்‌ – காரேய்‌
கருணை தனைக்‌ கண்டு கலக்கங்கள்‌ தீர்ந்தேன்‌
இருணிலத்தில்‌ பாடியன்தாள்‌ ஏய்ந்து–96-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ திருநாமத்தைக்‌ கண்டவாறு பிதற்றியும்‌ மெய்யடியார்‌ கூட்டத்துப்‌ பெற வேண்டிய பகவதனுபவ பயனைப்‌ பெற்றேன்‌. அவ்வாறே அவர்‌ சீர்களைப்‌ பாடி உய்வு பேற்றுக்குரிய சிறப்பெல்லாம்‌ பெற்றேன்‌. கைம்மாறு கருதாத கொண்டல்‌ முகில்‌ போல்‌ இந்த இருள் தரு மா ஞாலத்தில்‌ அவர் தம்‌ கருணைப்‌ பெருக்கத்தைக்‌ கண்டு உய்வகையில்‌ குறை யுண்டாக்கும்‌ கலக்கங்கள்‌ தீரப் பெற்றேன்‌. இவ்வளவும்‌ இவர்‌ தம்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதலாகும் –

ஏய்ந்த கருணைவடி வானோன்‌ இவனன்றே
வாய்ந்த ஒழுக்கநிலை நின்றோனே – மாய்ந்து
அறிவின்மை முற்றறிவின்‌ பாடியன்‌ மிக்கோன்‌
பிறிது பெறுவ தெவன்‌?–97-

ஒழுக்கத்திற்‌ காணுமிடத்து மிகப் பொருந்திய கருணையே வடிவானவர்களாகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே யாவர்‌. இந்த கருணைக்கேற்ற ஒழுக்க மிக்காரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யரே தான்‌. அறிவின்மை தொலைந்து முழு மெய்யுணர்வின்‌ மிக்கவரென்பதில்‌ குறை யேதுமில்லாதவர்‌. இத்தகு பண்புகளிருக்க இதில்‌ மிக்க பிரிதொரு பண்பு பெறுவதெது –

எவன்தான்‌? அயிந்தையில்‌ ஈடிணை யில்லான்‌
எவன்தான்‌? மதுரகவி நிட்டை – எவன்தான்‌?
வரயோகித்‌ தாள்சேர்ந்த தேவநாதன்‌ சேயாம்‌
பரனாம்‌ இவனெங்‌ கதி–98-

திருவயிந்திரபுரத்தில்‌ ஈடிணையில்லா ஆசார்யர்யவரே? மதுரகவி நிட்டையை மேற்கொண்டிருந்தவர்‌ யாவரே? ஸ்ரீமன்‌ மணவாள மாமுனிகளையே கதியென்று பற்றிய தேவனாதாசார்யர்‌ திருக்குமாரரென்ற சிறப்புற்றவர் யாவரே? இத்‌ தன்மைகளால்‌ மேன்மை யுள்ளவராகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ ஆகிய நீரே எங்களுக்குக்‌ கதி யாவீர் –

கதியொன்‌ நிலதென்போல்‌ காசினியில்‌ யாது?
மதிதான்‌ இலதில்‌ உலகில்‌ – எதுவொன்‌
றிதுவேயோ? பாடியற்குப்‌ பற்றுதற்‌கேது
இதுபோல்வார்‌ யாரே? இனி–99-

யாரும்‌ பற்றத் தகாத கதியற்றவன்‌ என்போல்வாருலகில்‌ யாவர்‌? அறிவின்மையில்‌ இந்நில உலகில்‌ என் போல்வார் யாரே? இனி இத்தகு நிராதீன நிலைகளே ஸ்ரீமத்பாஷ்யமாசார்யர்‌ தனக்குத்‌ தஞ்சமெனக்‌ கருதி கைக் கொள்வதற்குங்‌ காரணமாயினவாம்‌. இதனால்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு உலகில்‌ நிகரில்லை யென்பதாம் –

இனிமறவேன்‌ செம்‌ ப்க்கொண்‌ டிசைத்து
வினவி முறுவல்‌ மிகப்பூத்து – நனிமகிழ்ந்து
செந்தா மரைக்கண்‌ கடைக்கணித்த சீர்மைதனை
அந்தோ யான்‌ உய்வழியீ தென்று–100-

அடியேனை ஒரு பொருளாக மதித்து எதிரிலமரச்‌ செய்து சிவந்த பவளம்‌ போன்ற செவ்வாய்க்‌ கொண்டு மந்திரார்த்தங்களைச்‌ சொல்லி வினாவுதல்‌ செய்து, தக்க விடையளிக்க வெண்முறுவல்‌ மலரச்‌ சிறு நகைபுரிந்து மிக்கபேருவகை கொண்டு செந்தாமரை யொத்த திருக்கண்கள்‌ கொண்டு கடைக்கணித்து உகந்த, இந்த கெளரவச்‌ செயலை அந்தோ! அந்தோ! இவைகளே அடியேற்கு உய்யும்‌ மாழ்க்கமென்று எக்காலும்‌ நினைவிற்கொண்டு இனி எக்காலும்‌ மறவேன்‌ என்பதாம் –

என்றும்நின்‌ தாளிணைக்கண்‌ சென்னி யிலக்காகும்‌
என்றும்‌ அருண்மொழியுள்‌ ளெஞ்சாது – நின்றருளும்‌
சேமத்‌ திருமேனி செவ்விக்கள்‌ ஈன்றிலகும்‌
யாமிழைத்த தென்ன தவம்‌? –101-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளே! தேவரீருடைய திருவடித்‌ தாமரைகளே அடியேன்‌ சென்னிக்கு இலக்காக அமைந்துள்ளன. தேவரீர்‌ கருணை கொண்டு அருளிச்‌ செய்த அருள் மொழிகளே உள்ளத்தில்‌ குறைவற்று என்றும்‌ நின்‌று பிரகாசிக்கும்‌. தேவரீர்‌ திவ்ய மங்கள விக்ரஹமே அழகிய கண்களில்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இத்தகு, சீரிய பயன்களைக்‌ கொண்டிருக்க யாம்‌ எத்தகைய தவமியற்றினேனோ? தெரியாது.

தவமிழைத்தோர்‌ யாரே? தமியன்போல்‌ கல்லா
தெவையெனைத்தும்‌ கேட்டுத்‌ தெளிந்தார்‌? – யவரேயோ?
பாடியன்தன்‌ னின்னருளே யிங்கன்‌ பகர்வித்த
ஈடில்லா நீசனெனை ஏற்று–102–

தனித்து கதியற்று நிற்பவன்‌ யான்‌. இத்தகையன்‌ பெருந்தவம்‌ செய்த அடியனைப்‌ போல்‌ யாரே? இனி முறையாகக்‌ கல்லாமலே சீரிய நூல்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்தோர்‌ யார்‌? ஐயந் திரிபுகளாகிற குற்றங்களைந்து தெரியக் கற்பிக்கும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளருள்‌ ஈடில்லா நீசெனனை ஏற்று இவ் வண்ணம்‌ சொல்லும்படி செய்தது –

ஏற்றேன்‌ பிராட்டி திருவருளால்‌ எம்பிரானை
ஏற்ற னிவனருளால்‌ பாடியனை – ஏற்பதும்‌
ஏலாத தென்பதிலை பாடியன்தன்‌ இன்னருளால்‌
ஏலாவை குந்தமுத லேற்பு–103-

கருணை வடிவாயமைந்த பிராட்டி கடாக்ஷத்தால்‌ எம்பிரானை கதியாக ஏற்றேன்‌. இவன்‌ தன்னின்னருளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியனை கதியாக ஏற்கப்‌ பெற்றேன்‌. இவனருளால்‌ பேறு பெருவதெவையுளதோ அவைகளில்‌ இன்னது ஏற்க முடியும்‌ இன்னது ஏலாதது என்பதில்லை. ஏற்றரும்‌ வைகுந்த முதலாக வுள்ளதனைத்தும்‌ ஏற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றோம்‌ என்பதாம்‌-

ஏற்பதே நின்‌ தாளின்றி என் சிரத்தால்‌ வேறொன்றை
ஏற்றறேல் நின்‌ சார்பன்‌ றயலொன்றை – ஏற்பதே?
தாளருமை கண்டேன்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌
ஆளுடையான்‌ கண்ட வாறு–104-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளின்‌ அருமைப் பாட்டை அறிந்தவன்‌. எவ்வாறறிந்தேனென்னில்‌? திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபனாம்‌ நம்மாழ்வாரை எம்பெருமான்‌ நோக்கி, நீர்‌ விலக்ஷணமான மோக்ஷமென்று அடிக்கடி சொல்வீரே அந்த மோக்ஷம்‌ தந்தோமென’ ‘அந்த மோக்ஷம்‌ வேண்டா, தேவரீர்‌ திருவடிகளை சிரசிலணிவித்தருள வேண்டு மென்றார்‌. அதைப் போல்‌ தேவரீர்‌ திருவடிகள்‌ சார்பன்றி வேறொள்றை ஏற்க மாட்டேன்‌ என்பதாம் –

ஆறும்பே றென்றறியார்‌ ஆசிரியா்‌ இந்நிலையில்‌
மாறில்‌ மறைமுற்றும்‌ ஐயபின்றித்‌ – தேறியநீர்‌
ஏதிலன்‌ என்னை இருயென்று முற்றுணாத்தும்‌
கோதிலருள்‌ உந்தங்‌ குணம்‌.–105-

உலகில்‌ ஆசாரியனென்று தம்மைச்‌ சொல்லிக்‌ கொள்ளுமவர்கள்‌ இன்னது சாதனம்‌, பயன்‌ இன்னது என்று வேறுபடுத்தி அறிய மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ தேவரீர்‌ வேதங்களும்‌ இவைகளின்‌ சாரமான மந்திரங்கள்‌. இவைகளில்‌ பொருள்களை ஐயந் திரிபற நன்குணர்ந்தவர்‌ நீரே. இத்‌ தகுதி யுடைய நீர்‌ அடியேனோ மூடர்களில்‌ முதல்வன்‌. இத்தகைய அடியேனை எதிரிலிரு என்று இருத்தி அனைத்தும்‌ ஐயம்‌ திரிபற உணர்த்தினீர்‌. இதனால்‌ உந்தம்‌ குணம்‌ யாதுங்‌ குறைவில்லா அருளொன்றேயாக அறிகிறேன்‌.

குணந்திகழ் சீர்க்‌ கொண்டலே பாடியனே தூயோய்‌
மணமலிந்த தாமரைத்‌ தாளோய்‌! – குணமலிந்த
சீநிவாசன்‌ தாளிணையோய்‌! தேவநாதன்‌ கதனேயோ!
கோபாலன் சொல்லமுதக் கூட்டு -105-

குணங்களால்‌ கைம்மாறு கருதாது பெய்யும்‌ கொண்டல்‌ மேகம்‌ போன்ற ஸ்வாமிகளே! ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ என்ற திருநாமமுடையவரே! மணமே உபாதாநமான தாமரையே போலுந்‌ திருவடிகளை யுடையீரே! அடைந்தாரை உய்விக்கும்‌ நற்பண்புகளே திருமேனியான ஸ்ரீநிவாச ஆசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடிகளாகவே இருப்பவரே! ஸ்ரீமத்‌ தேவநாதசார்ய ஸ்வாமிகளின்‌ திருக்குமாரரே! ஸ்ரீமத்‌ கோபாலாசார்ய ஸ்வாமிகளின்‌ சொல்லமுதமே திருமேனியாக வுடைய ஸ்வாமிகளே என்றவாறு.

கூட்டமு துள்ள தினிமையொருங்‌ கேக்கூட்டி
நாட்டும் தெளி யுணர்வை ஐயமின்றி – நாட்டிச்
சிரத்தில்‌ பரன் தாளும்‌ பாடியன் தாள்‌ சேர்க்கும்‌
வரமிக்க வைகுந்த வான்‌–107–

முன் தோன்றல்களான ஆழ்வாராசார்யர்களாகிய சான்றோர்களுடைய கூட்டமுதின்‌ இனிமையை அடியேனுள்ளத்‌ தொருங்கே கூட்டி இதன்‌ பயனான மெய்யுணர்வை ஐவந்திரிபின்றி நிலை நிறுத்தியும் இதன்‌ பயனாக திருமகள்‌ கேள்வன்‌ திருவடித் தாமரைகளையும்‌, ஸ்ரீமத் பாஷ்ய மாசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடித் தாமரைகளையும்‌ அடியேன்‌ சிரோ பூஷணமாக சேர்த்தது யாதோ எனின்‌? ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ அபிமானம்‌ பெற்ற, இவனுக்கு நாம்‌ முற்பட்டோமாக வேண்டுமென்று சிறப்புக்களனைத்தும்‌ ஒருங்கே யுடைய வைகுந்தமென்கிற பரமபதமானது, ‘சிரோபூஷணத்‌ தோடு கூடிய இவனை நம்மிடத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டு” மென்ற அவாவோடு இருத்திக்‌ கொண்டது என்பதாம் –

வானாளும்‌ சீர்சீநி வாசன்‌ மலரடியைத்‌
தான்சேர்‌ தகவுடைய பாடியன்தன்‌ – தேன்பெருகு
செந்தா மரையிணையே சிந்திப்ப தென்பேறா
அந்தோ! அவனருளும்‌ சீர்‌–108-

வைகுந்த வானாட்டில்‌ ஆட்சி செலுத்தும்‌ சிறப்புகளனைத்தும்‌ ஒருங்கே பொருந்திய ஸ்ரீமத்‌ ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமிகள்‌ தாமரை போன்ற திருவடிகளைச்‌ சேர்ந்த கருணையே வடிவான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய செந்தாமரை யொத்த திருவடி யிணையையே சிந்திப்பதையே அடியேனுடைய பரம பிரயோஜனமாக உடைய அடியேனை, ஆசார்ய ஸ்வாமிகள்‌ தம்‌ கருணையால்‌ ஐயோ!” என்றிரங்கி யருளும்‌ அருளையே அடியேன்‌ சிறப்பாக உடையவனாவேன்‌ – என்பதாம் –

இருள் தரு மா ஞாலத்து இயங்கும் உயிர்கள்
அருந்துயரில்‌ ஆழ்ந்தழுந்தல்‌ உண்மை -அருந்துயர்தீர்ந(து)
அந்தமில்பே ரின்பமுற ஆசார்ய னைத்துதி நூற்‌
றந்தாதி யன்றோ கதி.–நூற்‌ பயன்‌

இருள்தருமாஞாலமாகிய லீலா விபூதியில்‌ நிரந்தரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஆத்மாவானது, எய்தற்கரிய நிரம்பிய துன்பத்தில்‌ அழுந்துதலென்பது உண்மை விஷயமாகும்‌. இந்த துன்பத்தில்‌ மீண்டு எல்லையில்லா இன்பமேயான பேரின்பமெய்த ஆசார்யனிடத்து தான்‌ பெற்றபேற்றினைஎண்ணித்‌ துதிப்பதேயாகும்‌–அதற்கு வழி ஆசார்ய நூற்றந்தாதியை இடைவிடாமல்‌ அநுசந்திப்பதே ஏற்ற கதியாகும்

சுபமஸ்து

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி சின்ன ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ –ஸ்ரீ க.கி. யாமுநாசார்ய ஸ்வாமிகள் –

ஆத்ரேய ராமாவரஜ குரோர்‌ புத்ரம்‌ ததாஸ்ரயம்‌
வேதாந்த த்வய ஸம்பந்தம் யாமுனம் ப்ரணமாம்யகம் –

மடஞ்சால்‌ மநனே வல் வினைகள்‌ சிந்தும்‌
உடைந்தோடும்‌ ஊழ் வினைசால்‌ சென்மம்‌-தடஞ் சூழ்ந்த
பூதூர் மன்‌ தன்னருளும்‌ பொன்னருளும்‌ நின்வயமாம்‌
யாதானும்‌ யாமுநனென்‌ றேத்து

சீராரும்‌ திருவயிந்தை திகழவந்தோன்‌ வாழியே
சேயாய்பா டியர்க்கவன்தன்‌ தாளடைந்தோன்‌ வாழியே
நீராரைப்‌ பசி உத்தி ராடத்தோன்‌ வாழியே
நீள்சரணா எதிபதிதன்‌ னிணையடியோன்‌ வாழியே.
பார் புகழும்‌ பூருவர் தாள்‌ பற்றுமவன்‌ வாழியே
பதின்மர் அருள் மொழி கோதை பரவுமவன் வாழியே
ஏரார்‌ உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
எஞ்ஞான்றும்‌ யாமுனன் தாள்‌ எம் கதியா வாழியே

வாழி திருப்பாடி யன்தன்சீர்‌ மல்கிய மாதகவால்‌
வாழும்‌ சிரீயா முநனென்‌ நிறைகுரவன்‌ – வாழியவன்‌
மாறன்‌ பிறைப்‌ பொருளும் ஆகமத்தின்‌ மான்‌ பொருளும்
தேறும்‌ படி யுரைக்கும்‌ சீர் –

சேவிப்போர்‌ பிறப்பறுக்கும்‌ திருவடிகள்‌ வாழியே
செம்பொன் செய்மலை வெயிலேய் செம்பட்டும் வாழியே
பூவியலும்‌ நாபியொடு புரிநூலும்‌ வாழியே
பொருவரிய தோளிணையும்‌ புரிகண்டம்‌ வாழியே
பாவியரும்‌ உய்யப் பணிக்கும்‌ பவள வாய்‌ வாழியே
பாண் மதிஏய்‌ திரு முகமும்‌ கருணை விழி வாழியே
நீவியெனும்‌ குரவரருண்‌ மொழி உளத்தோன்‌ வாழியே
நீள் புகழ் யாமுநன் தாள்‌ நினைப்போரும்‌ வாழியே

அடியார்கள் வாழ அரங்கம் முதல் வாழ சடகோபன்‌ தண்டமிழ்நூல்‌ வாழ-படியிலிரு
மன்னும்‌ மறைப் பயிற்றும்‌ யாமுனனென்‌ தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்‌ டிரும்‌.

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி யாமுநாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம்

ஸ்ரீ கச்சிக் கிடாம்பி பெரிய ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ -ஸ்ரீ க.கி. பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகள்‌

ஆத்ரேய ஸ்ரீநிவாசார்ய பதபங்கே ரூஹாஸ்ரயம்‌
தேவநாத குரோர்‌ ஸூனும்‌ ராமாநுஜ குரும் பஜே.

ஏங்கும்‌ மடநெஞ்சே! எம்பெருமான்‌ ஈந்தநிதி ஒங்கு புகழ்‌ பாடியன்தன்‌ ஒண்மலர்த்தாள்‌-தேங்கிய நீர்க்‌
கண்டா மரையிணைகள்‌ கைத்தாமரை யிணைகள்‌ உண்டாய் காலமெல்லாம் உள் –

அநவரதம்‌ தெளி சிங்கர்‌ அடிதொழுவோன்‌ வாழியே
அருள்ஸ்ரீ னிவாசார்யன்‌ அடைந்துயந்தோன்‌ வாழியே
அநகன் தேவ நாதாரயன்‌ அருஞ்சேயோன்‌ வாழியே
ஆதிரைநாள்‌ புரட்டாசி அவதரித்தோன்‌ வாழியே
அனைத்தறிந்த கோபாலர்‌ அடைந்தறிந்தோன்‌ வாழியே
அரங்கம் முதல் உகந்தருள்‌ மாநிலத் தன்பன்‌ வாழியே.
அநர்த்தமிலா(து) உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
அமிந்தைவர முனி தாள்சேர்‌ பாடியன் தாள்‌ வாழியே-

எதிபதிதன்‌ இணையடியே கதியுடையோன்‌ வாழியே
ஈடில்லா ஈடுதனை எடுத்துரைப்போன்‌ வாழியே
பதின்மருடன்‌ கோதைமொழி பரிந்து கற்றோன்‌ வாழியே
பார்புகழும்‌ பூருவர்தாள்‌ பற்றுமவன்‌ வாழி
மதுரகவி நிட்டையையே நிட்டை கொள்வோன்‌ வாழியே
வன்முடும்மை இருகுரவர்‌ மலரடியோன்‌ வாழியே
மதிமிகுந்த வரமுனிதாள்‌ வாழ்த்துமவன்‌ வாழியே
பாடிய ராமாநு சாரியன் தாள்‌ வாழியே

வாழிசிரீ நிவாசார்யன்‌ கோபாலன்‌ மாதகவால்‌
வாழும்சீ பாடிய மாசார்யன்‌ – வாழியவன்‌.
மாறன் மறைப்பொருளும் பாடியத்தின் மான் பொருளும்
தேறும்‌ படியுரைக்கும்‌ சீர்‌.

சென்மம்‌ தவிர்த்தருளும்‌ சேஷிகள்‌ வாழியே
சேமஞ்செய்‌ பொன்னாடைத்‌ திருநாபி வாழியே
தன்மம்‌ விரிந்தணைய திருமார்பும்‌ வாழியே
தரணிதனில்‌ அஞ்சலெனும்‌ கரதலமும்‌ வாழியே
நன்மருந்து பொழிமதிபோல்‌ திருமுகமும்‌ வாழியே
நளினஞ்செய்‌ கருணை மொழி கண்ணினையும்‌ வாழியே
மென்மை குவிந்தனைய திருமேனி வாழியே
மெய்மைஇரா மாநுசன்தாள்‌ மேன்மேலும்‌ வாழியே.

ததியர்கள்‌ வாழ தலநூற்‌(று) எண்வாழ
மதிநலஞ்சால்‌ மாறன்‌ மறை வாழ – பதியார்ந்த
மண்ணுலகும்‌ வாழ சிரீ பாடியமா தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டி டிரும்

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம் –

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சடகோப நான்மணிமாலை-

April 24, 2026

ஸ்ரீ சடகோப நான்மணிமாலை

நானிலத்‌ தேவரும்‌ மாமுடி கோளுறு நாறுமகிழ்‌
தேனலந்‌ தாரிதை மாமுடி கோளுறுந்‌ தேசிகன்தன்‌
நான்மணி மாலை உலகவ ருய்ய நவில்வதற்கு
மான்மறைச்‌ சீடன்‌ குருவவன்‌ காப்பாகு மாமுனியே –காப்புச்‌ செய்யுள்‌-

நால்வகைப்பட்ட நிலங்களிலுள்ள யாவருமே சடகோபன்‌” என்ற சொல்‌ கேட்டதும்‌ தங்கள்‌ திருக் கரங்களை சிறந்த முடி மேல்‌ கொள்ளுதற்கு உரியவரும்‌, பரிமளம்‌ மிகுத்து தேன்‌ வெள்ளமிடும்‌ மகிழ மலர்‌ மாலையை முடிமேல்‌ கொண்டுள்ளவருமான ஆதி குருவாம்‌ மாறன்‌ (நம்மாழ்வார்‌) விஷயமான நான்மணிமாலை என்ற நூலை உலகை உய்வித்தல்‌ பொருட்டு, திராவிடவேதத்தின்‌ பொருளை காலட்ஷேப ரீதியில்‌ நம்பெருமாளுக்குணர்த்தி அவனைச்‌ சீடனாக்கிக்‌ கொண்ட மணவாள மாமுனிகளே இதற்குக்‌ காப்பாகும்

வீறுசால்‌ தெய்வ வெறிகொள்‌ துழாய்கமழும்‌
நாறுநவ நீத முடைநாற்றம்‌ – நாறுமால்‌
மச்சகந்தம்‌ மாறன்கண்‌ ணன்வியாசன்‌ வந்தவிடம்‌
நச்சுவது யாரைநெஞ்சே நாம்‌?–1-

உலகிலுள்ள மற்ற மணங்கள்‌ தனக்கு ஒவ்வாத தெய்வத் தன்மை வாய்ந்த துழாய்‌ மணம்‌ கமழும்‌ குருகூர்‌ நம்பி அவதரித்த இடமும்‌, கண்ணன்‌ வந்தவதரித்த வெண்ணெய்‌ முடநாற்றம்‌ கமழும்‌ ஆயர்சேரியும்‌, வியாசன்‌ வந்தவதரித்த மச்சகந்தம்‌ நாறும்‌ புலைச்சேரியும்‌ இத்தகையவர்கள்‌ அவதரித்த இடம்‌ இத்தன்மையாதனால்‌ நெஞ்சே! இவர்களில்‌ நாம்‌ விரும்பித்‌ தொழுதற்குரியவர்‌ யார்‌? என்று சொல்வாயாக –

நாமே? யியம்புவ நானிலந்‌ தாழ்ந்த வருணமிதை
தாமேந்‌ துதற்கு வராககோ பாலராம்‌ தண்ணியராய்‌
ஆமா றுலகோர்‌ பிறவிக்‌ கடலாழ்ந்‌ தனத்தமுற
பூமா தவர்ச்செய மாறன்‌ புகுந்த வருணநான்கே–2-

ஒரு காலத்தில்‌ பிரளய வெள்ளத்தில்‌ அழுந்தித்‌ தாழ்ந்த உலகையும்‌, யயாதி சாபத்தால்‌ தாழ்ந்துபோன யது குலத்தையும்‌ மேல்‌ நோக்கி உயர்த்துவதற்கு வராக மூர்த்தியாகவும்‌, கோபால கிருஷ்ணனாகவும்‌, தாழ்ந்து வந்தவதரித்தாற்‌ போன்று, உலகத்தவர்கள்‌ பிறவிக் கடலில்‌ அழுந்திக்‌ கிடக்கின்றவர்களை மெய்யுணர்வைக்‌ கொடுத்து நிலத்தேவராக்குவதற்கு உயர்ந்த மாஞானியாகிய குருகூர்ச்‌ சடகோபன்‌, தாழ்ந்ததென்று உலகம்‌ நினைக்கும்‌ நான்காம்‌ வருணத்தில்‌ வந்தவதரித்த வியப்பை, நாம்‌ சொல்லும்‌ தரமுடையதன்றே? (நெஞ்சே நீ சொல்வாயாக )-

நான்முகன்‌ நான்மறை நாபியா றங்கம்‌ ஒருமுடி யிருகண்மூன்‌ றந்தாதி
நோன்புளம்‌ திருமொழிப்‌ பல்லாண்டு திருமொழி முகங்கழுத்‌ திருபது நூறோடும்‌
நான்கிரு பதினான்‌ கேழ்பதி னைந்துதோள்‌ நாற்பதைந்‌ தடித்தூள்‌ பத்தாகம்‌
வானிடந்‌ தோள்பத்‌ தடிஎதி மதுர கவியுடல்‌ உறுப்புபாங்‌ கந்தாமே–3–

நான்கு முகங்களாலே வேதங்களின்‌ கருத்தாக தமிழில்‌ திருவாய்மொழி பாடினவர்‌ நம்மாழ்வார்‌. இவருக்கு நாபியாக வந்தவதரித்தவர்‌ கலியன்‌. இவர்‌ வடமொழியிலுள்ள ஆறுஅங்கங்களையும்‌ தமிழில்‌ பாடிய பிரபந்தங்கள்‌. அதைப் போலவே வடமொழி வேதத்தை தமிழில் பாடியவர்களான பொய்கையாழ்வார்‌ நம்மாழ்வாருக்கு முடி– பூதத்தாழ்வாரும்‌ பேயாழ்வாரும்‌ இரண்டு திருக்கண்கள்‌– இவர்கள்‌ மூவரும்‌ பாடிய மூன்றந்தாதிகள்‌– நோன்பென்று நோற்ற திருப்பாவையும்‌ நாச்சியார்‌ திருமொழியும்‌ நம்மாழ்வாரின்‌ திருவுள்ளம்‌ ஆண்டாள்‌ பாடிய பிரபந்தம்‌. நம்மாழ்வாருக்கு திருமுகமாகிய பெரியாழ்வார்‌ பாடிய திருப்பல்லாண்டும் பெரியாழ்வார்‌ திருமொழி. இந்த நம்மாழ்வாருக்கு திருக் கழுத்தாக அவதரித்த திருமழிசை பிரான்‌ இவர்‌ பாடி யருளிய நூற்றிருபது திருச்சந்தவிருத்தம்‌ நான்முகந்திருவந்தாதி தொண்ணூத்தாறும்‌– நம்மாழ்வாரின்‌. திருத் தோளான குலசேகரப்‌ ‘பெருமாள்‌ பாடிய பெருமாள்‌ திருமொழி நூற்றைந்து. இவர்‌ திரு மார்பான தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ திருமாலை நாற்பத்தைந்து திருப்பள்ளியெழுச்சி பத்து. இவர்‌ இடது தோளான திருப்பாணாழ்வார்‌ பாடிய அமலனாதிபிரான்‌ பத்து-எம்பெருமானார்‌ இவர்‌ திருவடிகள்‌. இவர்‌ விஷயமாக பதினொரு பாசுரங்கள்‌ பாடியவர்‌ மதுரகவியாழ்வார்‌ இவர்‌ திருமேனி, நம்மாழ்வார்‌ தவிர்த்த மற்ற ஆழ்வார்கள்‌ பாடின பிரபந்தங்கள்‌ உபஅங்கங்களாகும்

தாயேத்‌ திரந்திடற்‌ குற்றவர்‌ தங்குரு ஆமா றறிந்துடன்‌ பயில்பவர்‌ சோத்தரி தங்கிளை மாணவர்‌ தாமிவர்‌ சேர்ப்பார்‌ பரிந்துரைத்‌ திரக்கும்‌ பராங்குச நாயகி பறவையாய்‌ பாவணை சிறையறி வொழுக்கும்‌ வீசுஞ்‌ சிறகீர்‌ விண்ணுமக்‌ கெளிதே அஞ்சிறை சேவலோ டாடுவென்‌ றருளீர்‌ கூட்பிகைச்‌ சொல்லீர்‌ குருகினத்‌ தவரே உணர்த்தல்‌ ஊடல்‌ உணர்ந்துறை அன்னம்‌ புணர்த்த பூந்‌ துழாய்முடி பெருமாற்‌ கண்டு புணர்த்தகை யடியேற்‌ பொருட்டுப்‌ போற்றுமின்‌ நன்னலப்‌ புள்ளினம்‌ நான்வினை யாட்டியேன்‌ இரந்தேன்‌ என்முல்லை மேல்சேர்‌ தும்பிகாள்‌ இதுவோ தக்கவா றென்னவே வேண்டும்‌ செங்கால நாராய்‌ குடக்கூத்‌ தென்துதாய்‌ நுங்கால்‌ நுமரோடென்‌ தலைமேல்‌ செழுமிரே கொக்கினங்‌ குருகினந்‌ தக்கிலங்‌ கேளிரே உடன்‌ மாணாக்கர்‌ கேண்மி ஸுயர்குரு இளங்கிளி சிறுபுவாய்‌ யான்வளர்‌ நீரலீர்‌ வினையேன்‌ வளர்சிறு பூவை மீர்காள்‌ இன்னமா ஸணாக்கர்‌ மக்கள்பா லிரந்து பிரிவின்‌ வேட்கை மிகுந்திடப்‌ பெருமான்‌ பால் அணைந்திடுமாப்‌ பரிந்‌துரை செய்மின்னென்‌(று) இரந்திடும்‌ பறவை தாள்‌ வீழ்த்து பரிந்தே–4–

பறவைகளைத்‌ தூதுவிடுவதற்கு உள்ளூறைப்பொருள்‌:-

குருகூர்‌ மாறன்‌ தான்‌ நாயகி பாவத்திலே களவில்‌ கூடி பழிக்கஞ்சி நாணத்தால்‌ பிரிந்து, பிரிவுத்துயர்‌ தாங்காது எம்பெருமான்‌ பக்கல்‌ தூதுவிடுகின்ற பராங்குசநாயகியுடைய சொற்கள்‌ இவைகள்‌. பராங்குச நாயகி நெய்தல்‌ நிறத்து மங்கையாய்‌ அங்குள்ள பறவைகளைக்‌ கண்டு பெருமானைப்‌ பிரிந்த பிரிவாற்றாமையால்‌ பறவைகளைத்‌ தூதுவிடுகின்ற பராங்குச நாயகி, தூது விடுதற்குற்றவர்‌ தனக்கு குருவாகவும்‌ தான்‌ பயிலும்‌ போது உடன்‌ மாணாக்காராகவும்‌ நினைத்து பெருமான் பால்‌ தூது விடுகிறார்‌. பெருமானிடத்தில்‌ செல்வதற்குப்‌ பறவைகளுக்கு இரண்டு இறகுண்டு என்று நினைத்து அவைகளைத்‌ தூது விட, தான்‌ தூது விடுபவர்களுக்கு ஞான ஒழுக்கங்கள்‌ உண்டு. அவை இறைவனை அடைதற்குச்‌ சாதனம்‌ எனக்‌ கருதி, ‘சிறகுகளலே ஆகாயத்தில்‌ பறந்து செல்கின்‌றவர்களே! பறவைகளாகிய நீங்கள்‌ எம்பெருமானிடத்தில்‌ செல்வது சுலபம்‌. சேவலோடு என்‌ துயரத்தைக்‌ கண்டு ஐயோ! என்று அருள வேண்டும்‌. ‘நீங்கள்‌ பெருமானிடத்தில்‌ சென்று கை கூப்பிச்‌ சொல்லுங்கள்‌ குருகினத்தாவர்களே! உணர்த்தல்‌ உடையவர்களாயும்‌ ஊடல்‌ செய்கின்றவராயும்‌ உணர்ந்து உறையும்‌ அன்னங்களே! தொடுக்கப்பட்ட திருத் துழாய்‌ மாலைகளை முடி மேல்‌ தரித்துக்‌ கொண்டிருக்கும்‌ பெருமானுக்கு அடியேன்‌ பொருட்டு புணர்த்த கையராய்‌ போற்றிச்‌ சொல்லுங்கள்‌. கூடியிருத்தலாலே மிக்க இன்பத்தை அடைந்திருக்கிற புள்ளினங்களே! நான்‌ வினை வயத்தால்‌ பிரிந்து வருந்துகிறேன்‌. ஆதலால்‌ உம்மை இரந்து கேட்கிறேன்‌, முல்லைகளின்‌ மீது சேர்ந்திருக்கும்‌ தும்பிகளே! என்னைப்‌ பெருமானைக்‌ கண்டு பிரிந்து வருந்தும்படி விட்டிருப்பது தக்கதோ? என்று பெருமானைக்‌ கேளுங்கள்‌, சிவந்த கால்களுடைய நாரைகளே! குடக்கூத்தாடிய பெருமானுக்கு காதலன்‌ காதலியின்‌ திறத்தில்‌ வேட்கை மிகுதியால்‌ அவள்‌ தன்‌ எச்சிலை ஆதராம்ருதம்‌ என்று விரும்புவது போல, இவ்வாழ்வார்‌ திறத்துண்டான ஞான பக்தி வைராக்கியங்களின்‌ மிகுதியால்‌ எம்பெருமான்‌ மிக விருப்பமுற்று இந்த ஞான பக்தி வைராக்கியங்கள்‌ வளர்வதற்குக்‌ காரணம்‌ திருமேனி சத்துவ குணத்தாலாயது என்று திருவுள்ளம்‌ பற்றி இவரை திருமேனியோடே திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ண வேணும்‌ என்ற திரு உள்ளம்‌ உடையனாய்‌ எம்பெருமான்‌ இவருடைய திருமேனியிலே ஐம்பெரும்‌ பூதம்‌ சேர்க்கை என்ற நினைவில்லாதவனாய்‌, இவர்‌ திறத்துண்டான ப்ரேமையின்‌ மிகுதியால்‌ இவர்‌ திருமேனியில்‌ குரவை துவரைகளில்‌ பற்பல உருவம்‌ கொண்டு பரிமாறியது போலே இவ்வாழ்வார்‌ திருமேனியில்‌ உகந்தருளின நிலங்கள்‌ எல்லாவற்றிலும்‌ பண்ணும்‌ ஆதரத்தோடு வைகுந்த வள நாட்டில்‌ பண்ணும்‌ ஆதரத்தையும்‌ உடையவனாய்‌ இவர்‌ திருமேனியில்‌ புகுந்து, இவர்‌ திருமேனியோடே கொண்டு போக விரைவானாக திருக் கையைப்‌ பற்றி வாரும்‌ என்றழைக்க, ‘இங்குத்தான்‌ விலங்கென்றால்‌ அங்கும்‌ எனக்கு விலங்கா” என்று இவ்வாழ்வார்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்றிக்‌ கொண்டு தன்‌ திருமேனியில்‌ அவன்‌ பண்ணும்‌ ஆதரத்தை கைவிடும்படி விடுவித்துக்‌ கொண்டார்‌. இதனால்‌ பரமார்த்தனுடைய சரீரத்திலே எம்பெருமான்‌ பண்ணும்‌ வியாமோகம்‌ திருமாலிருஞ்சோலை மலையிலே தழைக்கும்‌. “தூது செல்லும்‌ பொருட்டு உமது திருவடிகளை நும்‌ இனத்தவரோ டென்‌ தலை மீதாக்குங்கள்‌. கொக்கினங்களே! குருகினங்களே! பெருமானைக்‌ கண்டு, ‘நான்‌ தகுதியற்றவளா’ என்று கேளுங்கள்‌. உயர்ந்த குருகுகளே நீங்களும்‌ (சப்ரம்மசாரிகளே) கேளுங்கள்‌ இளங்கிளிகளே! சின்னஞ்சிறு நாகனவாய்‌ பறவைகளே! என்னால்‌ வளர்க்கப்பட்ட நீங்களல்லையோ? வினையேன்‌ வளர்த்த சிறு பூவைகாள்‌! கேண்மின்‌” என்று இவ்வாறு மாணாக்கர் பாலும்‌ மக்கள்‌ பாலும்‌ பிரிவின்‌ வேட்கையால்‌ துயரமிகந்து ‘பெருமான்‌ என்பால்‌ அணைந்திடுமாறு பரிந்துறை செய்மின்‌” என்று பறவைகள்‌ தாள்களில்‌ வீழ்ந்து யாசிக்கிறாள் –

பரிந்திங்‌ கிருள்தரும்‌ பாருல குய்யப்‌
பொருந்துமா மேகம்‌ புகன்றான்‌ – பெருந்தவங்கள்‌
நீத்துக்‌ கலைதெளியக்‌ கண்டுரை ணவ
வாய்த்தகுரு கூர்வந்தவன்‌-5-

லீலா விபூதியான இருள்தருமா ஞாலத்தில்‌ உள்ள சேதநர்களை உய்விப்பதின்‌ பொருட்டு இரக்கங்கொண்டு உய்விப்பதற்குப்‌ பொருந்தியதான “மாமேகம்‌ சரணம்‌ வரஜ” என்றெம்‌ பெருமான்‌ சொன்ன வார்த்தைக்குப்‌ பொருந்த தாம்‌ முயன்று செய்யும்‌ (உபாயாந்தரங்களை அறக் கைவிட்டு ஆத்ம பரமாத்ம சொரூபங்களுக்கு) பொருந்தியதான சரணாகதி நிலையைக்‌ கண்டு சொன்ன நியதியை உடையவனானவன்‌ இதற்கு வாய்த்த குருகூர்‌ வந்த பராங்குசனாகும் –

வந்தவன்‌ வேதம்‌ மயக்கும்‌ பொருளைத்‌ தெளிவுறுத்த
அந்தமில்‌ சீரன்பர்‌ கூட்டுணும்‌ ஆயிரம்‌ பா வமுதைத்
தந்தவன்‌ மாலன்பர்‌ தம்படிச்‌ சாயைசார்‌ ஏழ்‌ கீழ்‌
சந்ததம்‌ நின்றவன்‌ தாளெம்மை என்றும்‌ விளைக்குமாலே–6-

வேதமானது சரீராத்ம சம்பந்த முதலிய காரணங்களால்‌ முரண்படுவது போல்‌ சொல்லும்‌. அர்த்தங்களைத்‌ தெள்ளத்‌ தெளிய சொல்ல வந்த எல்லை காண்பரிய நலமிக்க அன்பர்கள்‌ கூட்டம்‌ கூட்டமாகக்‌ கூடி அனுபவிக்கும்படியாக அமுதமயமான ஆயிரம்‌ பாக்களைத்‌ தந்தவன்‌ சடகோபனாவார்‌. அவர்‌, எம்பெருமானுடைய அடியார்களுக்கு அடியார்‌ என்ற முறையிலே ஏழு தலைமுறைக்கு கீழே போய்‌ நின்றவர் அவருடைய திருவடிகள்‌ என்றும்‌ எமக்கு வியாமோகத்தை உண்டாக்கும் –

மாலேழ்‌ கடலேழ்‌ மலையேழ்‌ உலகேழ்‌ நும்படைப்பு மற்றுளவும்‌
மாலே எவர்க்கும்‌ அழியக்‌ கடிவான்‌ தனக்குமொரு மால்விளைக்கும்‌
மாலே!நும்சீர்‌ பரவும்‌ கவியால்‌ நுமக்குமொரு
மால்விளைக்கும்‌ பாலேய் தமிழர் இசையர் பரவும் தமிழ் மறைப்‌ பூட்டினனே–7-

திருமகள்‌ கேள்வனே! தேவரீர்‌ உலகவர்‌ திறத்துண்டான கழிவிரக்கத்தால்‌ ஏழுகடல்களோடும்‌ ஏழுமலைகளோடும்‌ கூடிய ஏழ்‌ உலகங்களும்‌ மற்றும்‌ உண்டானவையும்‌, உங்களுடைய படைப்பு படைத்த உலகத்தில்‌ உண்டான உண்டியே உடையே என உகந்து ஒடும்படியான நீர்‌ விளைத்த மயக்கத்தை அழியும்படி போக்கும்‌ தன்மையுடையவன்‌ குரு கூர்ச்‌ கோபன்‌. இத்தகைய குருகூர்‌ சடகோபனுக்கும்‌ உம்முடைய சொருபம்‌, குணங்கள்‌, திருமேனி முதலாகிய செளந்தர் யத்தைக்‌ காட்டி வியாமோகத்தை விளைத்தீர்‌. இந்த குருகூர்ச்‌ சடகோபன்‌ பாலே போல்‌ இனிக்கும்‌ உன்‌ கீர்த்திகளைப்‌ பாடும்‌ கவிகளால்‌ இனிய இசையில்‌ வல்லவர்களுக்கும்‌ நுமக்கும்‌ இன்ப மயக்கத்தை விளைக்கும்‌ தமிழ்மொழியாம்‌ திருவாய்மொழியை புணைந்து கொடுத்தான் –

பூண்டநாள்‌ பொருவரு சீர்க்கடல்‌ உட்கொளும்‌
நீண்டதோள்‌ மால்துயில்‌ நீள்கடல்‌ தன்னின்‌
பூண்டநா ளெல்லாம்‌ நீராடப்‌ புகுமே
திருமால்‌ சீர்க்கடல்‌ உட்பொதி சிந்தையர்‌
நீலநன்‌ மேனி நின்றநன்‌ நிறமொத்து
திருமால்‌ திருமேனி யோகம்‌ ஒத்து
நினைஅடை முகில்வணன்‌ நிழலீட்‌ டாலே
தீர்த்த கரராய்த்‌ திரிந்துயி ரளிப்பான்‌
தீதில்‌ நன்னெறி காட்டித்‌ திரிந்து
ஞானமா மடுவை யுடையதும்‌ அன்றி
நீள நினைவுறு நீரை யுடையதும்‌
ஆசை வெறுப்பாம்‌ அழுக்ககற்‌ றுவ்தும்‌
ஆன மனத்தில்‌ உளவாம்‌ தீர்த்தத்து
ஆடுவான்‌ எவனவன்‌ மேற்கதி அடைவதும்‌
எம்பிரான்‌ இலங்கு குணநீர்‌ நிறைந்து
தீங்கின்றி வாழ உலகில்‌ பெய்து
கொடுத்த நினைந்திடா வள்ளல்‌ தன்மையுள்‌
வெட்கி வெறுத்து கொடுக்கப்‌ பெற்றிலம்‌
பிறர்தம்‌ நலமே தம்பேறாக
அன்பின்‌ நிறைந்த அன்பன்‌ பாலன்பு
கூறும்‌ அடியவர்‌ உறையில்‌ இடாதவர்‌புயல்கை மாரி குணந்திகழ்‌ கொண்டல்‌
போல்வார்‌ மேகம்‌ போல்‌ தந்திடுமே.
–8-(அகவற்பா)

பூண்ட நாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு மழை பெய்ய வேண்டிய காலங்களில்‌, கடலிலே புகுந்து அதில்‌ நீரைப்‌ பருகிப்‌ பொழியும்‌ மேகம்‌ போலே, பூண்ட நாளெல்லாம்‌ புகும்‌ என்றும்‌ திருமால்‌ சீர்க்கடலை உட்பொதிந்த சிந்தனையேன்‌’ என்றும்‌ சொல்லுகிறபடியே விடிந்த நாளெல்லாம்‌ அவன்‌ கண்வளர்ந்தருள்கிற கடலிலே புகுந்து திருமகள்‌ கேள்வனான அவனுடைய கல்யாண குணக்கடலை உள்ளே அடக்கிக்கொண்டு மேகமானது அவன்‌ திருமேனியோடு ஒத்த நிறத்தை யுடைதாயிருக்குமாப் போலே உள்ளே தியானிக்கப்படுகிற முகில்‌ வண்ணனுடைய நிழலிட்டாலே அவனோடு ஒத்த நிறத்தையுடையதாய்‌, மேகமானது மழை மூலமாக உயிர்களைப்‌ பாதுகாப்பதற்காக விரிந்திருக்கிற ஆகாசப்‌ பரப்பெங்கும்‌ சஞ்சரிக்குமா போலே, பிறப்பு இறப்புகளிலே உழலுகிற ஆன்மாக்களைப்‌ பாதுகாப்பதற்காக உலகத்தை தூய்மை செய்பவர்களாய்‌ உய்யும்‌ வழியைச்‌ காட்டுமவர்களாய்‌, எவ்விடத்தும்‌ திரிந்து கொண்டு ஞானமாசின்ற அறிவினையுடையதும்‌ தியானமாகிற நீரையுடையதும்‌ ஆசை துவேஷம் ஆகிற அழுக்கை யகற்றுவதும்‌ ஆன மனத்தில்‌ உறவாகிய தீர்த்தத்தில்‌ எவன்‌ ஆடுகிறானோ அவன்‌ உயர்ந்த கதியை அடைகிற நான்‌ என்று: மனத்திலுள்ள தீர்த்தத்தைச்‌ சிறப்பித்துச்‌ சொன்ன ஞானமாகிற மடுவைத் தாங்கள்‌ பெய்கிற பகவானுடைய குணங்களாகிற தண்ணீரால்‌ நிறைத்த தீங்கின்றி வாழ நிதி சொரிந்து “தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” என்றும்‌, “வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” என்றும்‌, மத்த நிதி சொரிந்து” என்கிறபடியே கேடு சிறிதும்‌ இன்றியே வரும்படி பகவானுடைட குணங்களாகிற நீரைப்பொழிந்து பொழிந்து, கொடுத்தது நினையாதே வெட்கி வள்ளல் தன்மை மிகுதிபினாலே இன்னமும்‌ கொடுக்கப்‌ பெற்றிலோம் செய்தது போருமோ என்று வெட்கி வெளுத்துப்போய்‌ ஒளித்து மேகமானது :மழை பெய்யாத போது வெளுத்துப்‌ போய்க்‌ கண்களுக்கு புலப்படாமல் இருப்பது போலே ஆர்த்தவிசேடங்களை உபதேஸிக்கப் பெறாதே பேறாக போது உடம்‌பு மறைத்து வெளியே முகம்‌ காட்டாதவர்களாய்‌ கண்டு உவந்து பிறந்த பேறான, மேகமானது தனக்கு என்று காரியம்‌ செய்யாது பிறர்நலத்துக்‌காகவே கொடுப்பது போன்று, கொடுக்குமிடத்து சிஷ்யர்களின்‌ நிறைவினைக் கண்டு மகிழ்ந்து அந் நிறைவினையே தங்களுக்கு பயனாகக் கொண்டிருக்கும்படியான ஆங்கரும்பிச்‌ கண்ணீ சோர்ந்தன்பு கூ.றும்‌ அடியவர்களான முதலாழ்வார்கள்‌, உருவினா வாள்‌ உறையில் இடாதே முதல்‌ நடு இறுதிகளிலே மாறுபட்டவர்கள்‌ குறையினை கூறுதல்‌ முன்னாக எம்பெருமானுடைய முதன்மையை எடுத்துக்‌ கூறிய திருமழிசைப்பிரான்‌, வள்ளற்றன்‌மையினையுடைய மேகத்தைப்‌ போன்றவராய்‌ அருளைப்‌ பெய்யும்‌ திருமங்கையாழ்வார்‌, “குணம்‌ திகழ்‌ கொண்டல்‌ இராமானுசன்‌” என்று குணங்கள்‌ ஒளிவீசும்‌ மேகமாகச்‌ சொல்லும்‌ எம்பெருமானார்‌ போன்றவர்களை குணங்களின்‌ ஒப்புமைக்‌ கொண்டு மேகம்‌ என்று சொல்லும்‌ என்கை, பயனுக்குக்‌ காரணம்‌ இவர்களாகையாலே பயனில்‌ விரைவுத்‌ தோன்றப்‌ பலகாலும்‌ தூதுவிடுவர்‌ என்கை –

தந்திடும்‌ அற்ற களைகணார்‌ தங்கட்கு
அந்தமில்‌ ஆர்வம்‌ அடைந்திடத்‌ – தந்த
உடலம்‌ உருக பெருகும்‌ மதுரம்‌
குடமுக்கில்‌ வெள்ளங்‌ கொடு –9-

எம்பெருமானையன்றி வேறு கதியற்றவர்க்கு எல்லையில்லா ஆர்வம்‌ பெருகும்‌ வகையில்‌ தந்த உடலம்‌ உருகும்படியாக இனிமை பெருகும்‌ வண்ணம்‌ பேரார்வத்தை திருக்குடந்தையில்‌ பெருவெள்ளம்‌ பெருக தந்திடும்‌.

கொடுமை யுடைய விருத்தம்‌ இலதாக்கும்‌ எம்‌பெருமான்
கடுமை யுடன்‌ கழகம்‌ புகவேண்டா போகுநம்பி
திடமா யெதிர்த்திடு நாயகி ஊடல்‌ திருவடியால்‌
விடச் செய்து விண்ணகர்‌ கோயில் கொள்‌ அப்பனாம்‌ ஒப்பிலானே.
–10-கட்டளைக்‌ கலித்துறை

திருவிண்ணகர்‌ கோயில்‌ கொண்ட விருத்த விபூதியனான ஒப்பிலியப்பன்‌ வராமைக்‌ கண்டு, மின்னிடைமடவார்‌ என்ற திருவாய்‌ , மொழியில்‌ பராங்குசனாயகி வைகல்பூங்கழிவாய்‌ என்ற திருவாய்மொழியில்‌ நாயகனாம்‌ எம்பெருமானை குறித்து பிறிவாற்றாமை மீதுற பறவைகளைத்‌ தூதுவிட்டாள்‌. தூதுபோன பறவைகள்‌ போய்‌ சொல்லி அவன்‌ புறப்பட்டு வருவதற்குள்‌ வேட்கையின்‌ மிகுதியாலே பராங்குச நாயகி அவன்‌ திறத்து ஊடல்‌ கொண்டு, அவன்‌ இனி வந்தாலும்‌ அவன்‌ முகத்தில்‌ விழிப்பதில்லை என்று தன்‌ ஆற்றாமையை போக்குவதற்காக சிற்றிலமைத்து பராக்காக பொழுது போக்கும்‌ காலத்தில்‌ எம்பெருமான்‌ வந்தான்‌. வந்தவிடத்தில்‌ பராங்குசநாயகி முகம்‌ கொடாமலிருக்கக்‌ கண்டு, தன்பால்‌ சேர்த்துக்‌ கொள்ள பலவித உபாயங்களைச்‌ செய்தான்‌. அதில்‌ ஒன்று கூட்டமாகக்‌ கூடியிருந்த கழகத்தில்‌ உள்ளே நுழைந்தான்‌. அப்போது பராங்குச நாயகி ‘எங்கள்‌ கூட்டத்தில்‌ புகாதே வெளியேறு’ என்று கடிந்து சொல்ல, இவர்கள்‌ இழைத்து நின்ற கடுந்தன்மை நீங்கி அவனிடம்‌ கலந்துக்‌ கொண்டார்கள்‌. அனைவர்க்கும்‌ உபாயமான திருவடியே அவர்களோடு கூடுவதற்குத்‌ தனக்கும்‌ உபாயமாயிற்று. அஃதன்றி பராங்குசநாயகி ஊடே நின்றிருந்த கடுந்தன்மை நீங்கி இணைந்ததை வியப்பாகக்‌ கொண்டு விருத்த விபூதியனான எம்பெருமானை அடுத்த திருவாய்‌ மொழியில்‌ ஒப்பிலா அப்பனான அவனை மங்களாசாசனம்‌ பண்ணினார் –

ஒப்பில்பே ரன்புடையாள்‌ உடன்கூடி உலகிரைக்கும்‌ பழிக்கஞ்சி நாணமுற்றுப்‌ பிரிந்தாள் அந்தோ
இப்பரிசால்‌ ஆற்றாளாய்‌ இழிபுடைய மடப்பத்தால்‌ பறவைகளைத்‌ தூதுவிடற்‌ கிணக்க முற்றாள் செப்பரிய தம் பிழையும் சிறந்த செல்வம் படைப்பலுவல் தமர்கூட்டம்‌ மறப்பிக்க மறந்தா னன்றே
துப்புடைய பொறை விரதம்‌ சுவையமகு இருபரங்கள்‌ வியூகவிப வர்ச்செய்‌ இவை விடைய மன்றே–11-
-(எண் சீர் கழி நெடிலாசிரிய விருத்தம் )

ஒப்பற்றவளான பராங்குசநாயகி எம்பெருமான்‌ பக்கல்‌ பேரன்புடையவளாய்‌ காதாசித்கமாக அவனைக்‌ கிட்டி நின்றநுபவிக்க உலகவர்‌ பழித்துச் சொல்லும்‌ பழிக்கஞ்சி வெட்கமுற்றுப்‌ பிரிந்தான்‌. அந்தோ பாவம்‌! பிரிந்த இந்தக்‌ காரண த்தால்‌ ஆற்றாமை மீதூர்ந்து பெண்மையால்‌ இழிவுடைய மடப்பத்தால்‌ பறவைகள்‌ தூது செல்வதற்கு தகுமா? தகாதா? என்ற விவேகமின்றி ஆற்றாமை கை கொடுக்க பறவைகளை தூது விட்டாள்‌ இப்படி இவள்‌ தூது விட அந்தப் பெருமான்‌ இவளை மறந்திருந்தான்‌. அதற்குக் காரணம்‌ குறையுடைய நாயகி செய்யும்‌ பிழையை பொறுத்துக் கொள்ளும்‌ அபராத ஸஹத்வம்‌ என்ற குணம்‌ தனக்கிருப்பதை மறக்கையாலே நாயகியை மறந்தாள்‌. இது, வியூக மூர்த்தியின் பால்‌ அஞ்சிறையமட நாரையில்‌ தூதுக்கு விஷயம்‌. அடியார்களைக்‌ காக்கும்‌ விரதமுடையவனாகையாலே நாயகியை மறந்தான்‌. இது, “வைகல்பூங்கழிவாய்‌” என்ற பதிகம்‌ இரண்டாம்‌ தூதுக்கு விபவத்துக்கு விஷயம்‌ – “பொன்னுலகாளீரோ” என்ற திருவாய்மொழியில்‌ அந்தர் யாமித்வம்‌ பரத்வம்‌ நிலைகளுக்கு தூதுவிடும்படியாய்‌ அவன்‌ தன்‌ படைப்பின்‌ மீதாகிய ஈடுபாட்டில்‌ நாயகியை மறந்தான்‌. “எங்கானலங்கழிவாய்‌”” எனத் தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ “திருவல்லவாழ்கோயில்‌ கொண்ட” என்ற அர்ச்சாவதார மூர்த்தி அடியார்கள்‌ கூட்டத்தின்‌ இனிமையாலே பாரங்குசநாயகியாகிற தலைவியை மறந்தான்‌. அந்தர்யாமித்வம்‌ பரத்வாமாகிற இவைகள்‌ மூன்று நான்கு தூதுக்கு விஷயம்‌ என்றவாறு –

விடுதற்‌ கரிய பேரழகின்‌ மிக்கவள்‌ புனிதாப்‌ பிரிந்து பொறுக்‌ கிலளாகி நினைவற்‌ றுணங்கினள்‌ தாயர்‌ நுணங்கினர்‌ கட்டுவிச்‌ சியரைக்‌ கதியெனக்‌ கொண்டு இனதென நோயும்‌ மருந்தும்‌ இனதெனீர்‌ முனநாள்‌ முருகற்‌ பற்றினில்‌ முடிக்கிலீர்‌ நீர்மறந்‌ திட்டால்‌ தான்மறந்‌ திடுமே வேலனைக்‌ குறித்து வெறியாடத்‌ தீர்மென மறந்தும்‌ புறந்தொழில்‌ மாய்வளே அந்தோ !
இழப்பர்‌ இதனை முந்துற விடுமின்‌
துலைவிலி மங்கலம்‌ துணைகொடு காட்டினீர்‌
வகுத்தவன்‌ வடிவில்‌ மயங்கினள்‌ மீள்வளோ?
இவள்விடாள்‌ தாயீர்‌ நீர்விடும்‌ ஆசை
மணமுரசு அறையீர்‌ செவிப்படின்‌ மாய்வள்‌
திருப்புலி யூரில்‌ நாயனார்‌ திறத்துக்‌
கலவி இவட்குள போலும்‌ காண்மின்‌
அந்தண்‌ துழாய்‌இவள்‌ கமழ்தலில்‌ அறிந்தனன்‌
,புனையிழை அணிவும்‌ புதுக்கணிப்‌ பறிமின்‌
அவைகளால்‌ பிறர்க்கும்‌ தனக்கும்‌ அல்லள்‌
வகுத்தவன்‌ திறத்துத்‌ தகுந்ததென்‌ றமைமின்‌
தோழிக்கூற்‌ நிஃதேல்‌ தாய்நிலை சொல்வதென்‌?
வாடி மெலிந்துபித்‌ தேறியும்‌ மற்றும்‌
ஏறப்‌ பேசி கட்டிழந்‌ தகன்றும்‌
சார்வதே வலித்தமை சாதன மென்று
அஞ்சி ஏழில்‌ அவனருள்‌ அல்லதோர்‌
நெறிபிற தில்லெனல்‌ நிச்சய மாமே?
மகள்பல்கால்‌ ஆள்விட்டு ஆற்றாமை சொல்லி

கண்புதையப்‌ போக்கற்‌ றுறுநெஞ்‌ சுள்ளெழ
கூடுநாள்‌ கூடித்‌ தாழ்த்ததுக்‌ கூடி
உசாத்துணை அற்று சூழவும்‌ பகைமுகம்‌
செயத்தடை நிலாது புயக்கற்‌ றதனொடும்‌
மாலையும்‌ காலையும்‌ பூசல்‌ பதினேழ்‌
விரைதலின்‌ விரைவு தெரிந்த தெளிவே–12( அகவற்பா)

விட்டுப்பிரிய முடியாத அப்பேர்பட்ட அழகின்மிக்கவனாய்‌, தூயவற்றுக்கெல்லாம்‌ தூயனாய்‌ மிக்க பேரழகனாய்‌, கல்வி செல்வம்‌ இவற்றால்‌ பூர்ணனாய்‌ திருமகள்‌ கேள்வனான எம்பெருமான்‌ ஒருக்கால்‌ தோழரோடு வேட்டையாடித்‌ தோழர்களைப்‌ பிரிந்து வந்தானாக. எல்லாவற்றிலும்‌ சிறந்தவளான பராங்குச நாயகி தோழியரோடு பறித்துக்‌ கொண்டிருந்தவள்‌ தெய்வகதியால்‌ தோழியரைப்‌ பிரிந்து தனித்த வந்தாளாக, இப்படித்‌ தனித்து வந்த இருவரும்‌ தெய்வயோகத்தால்‌ ஒருவரை ஒருவர்‌ கண்டு காதலுற்று கூடீன ர்கள்‌. இப்படிக்‌ கூடினவர்கள்‌ உலகவர்கள்‌ நகைப்பார்களே என்று அஞ்சி பிரிந்தார்கள்‌. பிரிந்தவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ மறந்ததில்லை. பெரிய பேதமைச்‌ சின்மதிப்‌ பெண்பையாச்‌ பராங்குசநாயகி நினைவு முதிர்ந்து தந்நிலை இழந்து உணர்ச்சியந்றுச்‌ கிடக்கிறாள்‌.இப்படிக்‌ கிடந்த பராங்குச நாயகியை தோழியரும்‌ தாய்மார்களுப்‌ கண்டு ஒரு மகள்‌ தன்னையுடையவர்களாகையாலே திருமகள்‌ போ6 வளர்த்தவர்கள்‌ ஆற்றாமையால்‌ ஒன்றும்‌ தோன்றாமல்‌ கவலையுற்ற:£ கலங்கினார்கள்‌. அந்தத்‌ தாய்மார்களில்‌ ஒருத்தி குறி சொல்லுகிள்‌ கட்டுவிச்சியைக்‌ கண்டு இந்த நோயின்‌ தன்மை என்ன? இதற்குப்‌ பரிகார: என்ன?” என்று வினவியபோது அவள்‌ “நீங்கள்‌ முன்னொரு காலத்தி வேலனுக்கு ஏதேதோ செய்வதாக பிரார்த்தித்தீர்கள்‌. ஆனால்‌ அந்‌: பிரார்த்தனை செலுத்தவில்லை. கால நீட்டிப்பால்‌ மறந்து விட்டீர்கள்‌ அதனால்‌ கோபமுற்றவனாய்‌ இந்தப்‌ பெண்ணின்‌ பீதாவேசித்து இந்நின௦ யெய்தும்படி நேர்ந்தது. வேலனைக்‌ குறித்து பூஜை செய்கின்‌! வெறியாட்டக்காரை அரைத்து வெளியாட வேண்டும்‌; அர்‌: ர ர… ட்டம்‌ மதுவாராதனை பஸண்‌ஈ “வண்டு. இல ச்ச்‌ ளைக்‌ 0 ப்பு ண்ண மேளம்‌; அதல. ஐன்‌ மடம்‌ ஜ்‌ த. ந்நோயுக்கிடமில்வாதபடி செய்து னிதுகான்‌” என்ட்‌ கட்டுவிச்சிச்‌ ௦ சொன்னாள்‌. மகள்‌ நிமித்தமாக நீள உருகும்‌ சாய்மார்கு6 தங்கள்‌ குடிமரபின்‌ ஒழுக்கத்துக்கு மாறாக மறந்தும்‌ பறந்தெ:ழாத்தன்‌ ௮ விட்டு, மகளின்‌ நிமித்தமாக கட்டுவிச்சி சொன்ன துக்கிணங்க இசை நட்‌ வெறியாட இறைச்சி, கள்‌, மீன போன்றவற்றை வைத்து வெறியாட்ட।! நடத்தினார்கள்‌. இதை அந்தரங்கத்‌ தோழி கண்டாள்‌. “பெருந்தேவனா எ பெருமான்‌ திறத்தில்‌ ஈடுபட்ட இவளை, இவள்‌ நிலை இன்னதென்றறியா£ வைணவக்‌ குடும்பத்தைத்‌ தூஷிக்க வேண்டும்‌ என்று கட்டுவிச்‌ஈ சொன்னதை மெய்க்‌ கொண்டு நீங்கள்‌ ஆராயாமல்‌ செய்த இந்த செயலா? பராங்குச நாயகியை இழந்துவிடுவீர்‌” என்று தோழியானவள்‌ ஆராய்ந்‌ சொல்வது போலச்‌ சொன்னாள்‌. உலகொருங்காக உண்ட பெருந்தேவஃ திறத்தீடுபட்டு சித்தியாமையாலே உணர்ச்சியற்றுக்‌ கிடக்கின்ற பராங்கு, நாயகி உண்மை நிலைமை யுணர்ந்து வெறியாட்டம்‌, களியாட்டம்‌ நம்‌ மரபுக்‌ ஒவ்வாதென விளக்கிவிட்டாள இது, தீர்ப்பாரை என்று தொடங்கு: திருவாய்மொழியின்‌ சாரம்‌. அடுகதபடியாக “‘துவளில்‌ மணிமாடமோங்கும்‌ என்று தொடங்கும்‌ உரையிலே தோழியரும்‌ தாய்மாரும்‌ திருத்தொலைவில்‌ஈ மங்கலத்தை சேளித்தார்கள்‌. அரவிந்த லோசனஎனக்‌ கண்டபோச நெடுங்கண்‌ இளமானான பராங்குச நாயகி அவன்‌ அழகிலே ஈடுபட்டு அவனை விட்டுப்‌ பிரியமுடியாமல்‌ பேராசையுற்று அங்ஙனே நிற்கின்றாள்‌. தாய்மார்‌ அவளை மீட்கப்‌ பலகால்‌ முயன்றும்‌ முடியவில்லை. இதைக்கண்ட அந்தரங்கத்தோழி (“நலியக்கூடிய பொருள்கள்‌ நலியா நின்றன என்று கூப்பிட்டும்‌ போருகிற பதினேழில்‌ த்‌ வரையும்‌ தெரியும்‌”. மேற்கூறிய பதினேழு திருவாய்‌ மொழிகளிலே பேற்றிலே பதற்றம்‌. தோன்றும்‌ என்கை.) “சிறப்புடைய பேரழகனைக்‌ கண்டால்‌ இவள்‌ மீளமாட்டாள்‌ என்று நீங்கள்‌ குறிக்கொள்ளாது வலிய அழைத்து வந்து சேவிக்க வைத்துவிட்டீர்கள்‌. அவன்‌ அழகில்‌ ஈடுபட்டு அவனைவிட முடியாதபடி நிற்கிறாள்‌, நீங்கள்‌ இவள்‌ திறத்து ஆசையை துறக்க வேண்டுமே தவிர அவன்‌ திறத்து ஆசையை அவள்‌ துறக்கமாட்டாள்‌ என்றாள்‌. மற்றோர்‌ நிலையில்‌ குட்ட நாட்டுத்‌ திருப்புலியூர்‌ ஆயன்‌ விஷயத்தில்‌ மிக்க பேரழகுக்‌ கண்டு பேரன்புடையவளாகி ஈடுபாடு கொண்ட பருவம்‌ நிரம்பிய இவளை யாருக்கேனும்‌ மணமுடிக்க வேண்டும்‌ என்று சுயம்வரம்‌ கூட்ட மணமுற சறைவிக்க ஆரம்பித்தார்கள்‌. அந்தரங்கத்‌ தோழி, “இவள்‌ ஏற்கனவே குட்டநாட்டுத்‌ திருப்புலியூர்‌ ஆயன்‌ விஷயத்தில்‌ ஈடுபட்டவள்‌; அவனோடு கலவியுள்ளவன்‌; அதனால்‌ அவள்மேல்‌ திருத்துமாய்‌ மணம்‌ கவிழ்கின்றது; இவன்‌ பேசுகின்ற பேச்செல்லாம்‌ அவன்‌ திறத்ததுவே; அவனுக்கு நேராக வேண்டும்‌ என்று நினைத்து சிறந்த ஆடை அணிகலன்கள்‌ எல்லாம்‌ அணிந்து கொண்டு புதுக்களிப்புற்றிருக்கிறாள்‌; ஆதலால்‌ இவளை திருப்புலியூர்‌ ஆயன்‌ திறத்தில்‌ சேர்ப்பிப்பதுதான்‌ தர்மம்‌, அங்ஙனம்‌ இன்றி நீங்கள்‌ நினைப்பது செய்தால்‌ அது அதர்மம்‌” என்றாள்‌. கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடத்தாமரை என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ அனுபவம்‌. இது தோழி அறத்தொடு நிற்றல்‌ என்ற பிரணவத்தில்‌ ஜீவபரர்கள்‌ சம்பந்தம்‌ சொல்லும்‌ தோழி உரையைச்‌ சேர்ந்த கூற்று.

தாய கூற்று–தலைமகளின்‌ பதற்ற நிலை கண்டு இது சாதநத்தில்‌ மூளுமோ என்றஞ்சும்‌ நிலைதாய பேச்சாகும்‌. ஆடி ஆடி என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌, வாடிவாடும்‌ என்கிறபடி அடியார்கள்‌ குழாங்களை உடன்கூட பையால்‌ வந்த துன்பத்தாலே கொம்பை இழந்த தளிர்போலே வாடி மெலிந்து என்றும்‌, “பாலனாய்‌ ஏழுலகு” என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌, “கண்ணன்‌ கழல்‌ துழாய்‌ பொன்‌ செய்‌ பூண்மென்முலைக்கு ” என்கிறபடியே, கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து பித்தேரி என்றும்‌. “மண்ணை இருந்து துழாவி என்ற திருவாய்‌ மொழியில்‌, என்‌ பெண்கொடி ஏறிய பித்தே” என்கிறபடியே, ஒப்புமையுள்ள பொருள்களையும்‌ அவனாக நினைத்துக்‌ கிட்டும்படி, பித்தேறி ஏறப்பேசி என்றும்‌, “கடல்ஞானம்‌” என்ற திருவாய்மொழியில்‌, ஈசன்‌ வந்தேறக்‌ கொலோ என்கிறபடியே ஆற்றாமையாலே இறைவன்‌ ஆவேசித்தானோ-என்னும்படியும்‌ கட்டிழந்த மாலுக்குஎன்ற திருவாய்மொழியில்‌, கற்புடையாட்டி இழந்தது கட்டே என்று பகவானைப்‌ பிரிந்த க்லேசத்தாலே கட்டடங்க இழந்து அகன்று என்றும்‌, உண்ணுஞ்சோறு என்ற திருவாய்மொழியிலே, இன்றெனக்குதவாதகன்ற என்கிறபடி, தன்னைப்‌ பிரிந்து துன்பப்படுகின்ற இன்னிலையிலே எனக்கு உதவாதே போன என்‌ பெண்பிள்ளை என்னும்படியாகவும்‌, “கங்குலும்‌ பகலும்‌” என்ற திருவாய்மொழியிலே, “சந்தித்து உன்‌ சரணம்‌ சார்வதே வலித்த தையலை என்கிறபடி அவனைக்‌ கிட்டி அவன்‌ திருமுன்னரே முடிய வேண்டும்‌ என்று உறுதி பூண்டமை சாதனம்‌ ஆமோ? என்று உபாஸக பரபக்தி தசையில்‌ உண்டாம்‌ வாட்டம்‌ மெலிதல்‌ முதலிய போலே சாதனத்திலே முதலிடுமோ ? என்று மாதா அஞ்சி, அவனையும்‌ வினவ வந்தவர்களையும்‌ மயங்கா நின்றாள்‌. மெலியா நின்றாள்‌, “எந்தன்‌ கோவே” என்று முறையிடுகிற ஏழில்‌, “முறையோ அரவணை மேல்‌ பள்ளிகொண்ட முகில்‌ வண்ணனே ” என்கிறபடி “இவள்‌ பக்கல்‌ உள்ளவை ஒன்றும்‌ உபாயம்‌ அன்று ஆனபின்பு இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை உம்முடைய கருணைக்கும்‌ பாதுகாக்கும்‌ தன்மைக்கும்‌ தகுமோ?” என்று கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உபாயத்திலே உறுதி தோன்ற பேசும்‌ இது தாய்க்‌ கூற்று-

தெளிவுறுத்தி நான்முகற்கு தென்மறைமால்‌ சொன்னான்‌
தெளிவின்‌ றிருக்கவே சொன்னான்‌ – தெளிவின்றித்‌
தேக்கு வடவேதம்‌ தெளிவிக்கும்‌? தேர்த்தெளிவால்‌
காக்குமத்‌ தென்மறையே காண்‌–13-(வெண்பா)

எம்‌ பெருமானானவன்‌ ஒரு நான்முகற்கு (நம்மாழ்வாருக்கு) மயர்வற மதி நலமருளி தென்மொழியாகிற திருவாய்மொழி என்ற திராவிட வேதத்தை தான்‌ சொன்னான்‌. மற்றுமோர்‌ நான்முகனுக்கு மயர்வறமதி நலமருளி கீர்வாணவேதத்தை உபதேசித்தான்‌. இந்நிலையில்‌ பிரம்மாவுக்கு உபதேசித்த வடமொழி மறை உலகவரை தெளிவிக்குமா? என்பது ஐயம்‌. மயர்வற மதிநல மருளிச்‌ சென்ற திராவிட வேதமே உலகவருடைய அறிவின்மையைப்‌ போக்கி மெய்புணர்வை உண்டாக்கி இறைவனடியிலே சேர்த்துக்‌ காக்கும்‌ தன்மையுடையதாகும் –

காணத்‌ தடைசெய்‌ மயர்வைக்‌ கழித்து மதிநலமாப்‌
பூணும்‌ பொலன்முகம்‌ தன்முகம்‌ ஏழ்பத்து முப்பதிகம்‌
நாணும்‌ நலங்கொள்‌ மகள்முகம்‌ பத்துடன்‌ ஏழ்பதிகம்‌
தோணற்றாய்‌ தோழி இருமுகம்‌ வாய்மொழி ஏழுமூன்றே–14-
-(கட்டளைக்‌ கலித்துறை)

ஐம்பொருளையும்‌ காணவொட்டாமல்‌ தடை செய்கின்ற வினைவழி வந்த உடல்வயத்தால்‌ வந்த அறிவின்மையை எம்பெருமான்‌ கழித்து முழுமெய்ஞானமும்‌ முழுமையான பக்தியும்‌, விட்டு நீங்காதபடி 73 திருவாய்மொழிகள்‌ தோன்றின. நாணத்தை மிகவுடைய தலைமகள்‌ கூற்றாக 27-திருவாய்மொழிகள்‌ தோன்றின. தலைமகளை வலது தோளாக உடைய தாய்முகமாக ஏழுதிருவாய்மொழிகள்‌ தோன்றின. அந்தரங்கத்‌ தோழி முகமாக மூன்று திருவாய்‌ மொழிகள்‌ தோன்றின. ஆக, தன்‌ முகம்‌, தாய்‌ முகம்‌, தலைமகள்‌ முகம்‌, தோழி முகம்‌ ஆக நான்கு முகங்களாக நூறுதிருவாய்‌ மொழிகள்‌ தோன்றின-

மூன்றும்‌ ஐந்தும்‌ அறியா தவர்க்கு உய்யும்‌ வகையை முதலு ரைப்பர்‌
ஏன்ற குருவின்‌ இன்ன ருளால்‌ இக்கரை சார்ந்தார்க்‌ கின்ப வெள்ளம்‌
தோன்றா மடுவும்‌ மேடு காணும்‌ துவளறு சீல மாழங்‌ காணா
தான்றன்‌ னருளால்‌ கரை சேர்ப்பார்க்‌கு உடற்கு றைகாண்‌ சடகோபன்‌ னுண்டே–15-
(ஆசிரிய விருத்தம்‌)

தத்துவங்கள்‌ மூன்றென்றும்‌, முதல்‌ தத்துவம்‌ எம்பெருமான்‌ என்றும்‌, அர்த்த பஞ்சகத்தை அறியாதவர்கட்கு அவற்றை அறிவித்தும்‌, துன்பக்‌ கடலை நீந்தி இக்கரை ஏறி இளைத்திருப்பாருக்கு என்கிறபடியே, பிரபன்னனுக்கு உபாயம்‌ அவனே என்று துணிந்திருப்பார்க்கு க்ருதக்ருத்யனாகையாலே முகில்வண்ண வானத்தவர்‌ சூழ பேரின்ப வெள்ளத்தை முத்தர்க்கு அறிவித்தும்‌, பரமார்த்தனுடைய திருமேனியைவிட இசையாமல்‌ வியாமோகத்தாலே அங்கு கொண்ட போக நினைக்கும்‌ உபய விபூதி நாயகனுக்கு “‘மங்கவொட்டு உன்‌ மாமாயையை” என்ற பாசுரப்படியே விகாரமான தேகதோஷத்தை எம்பெருமானுக்கறிவித்தும்‌, நித்திய தொண்டாற்றும்‌ சுவை மிகுதியாலே எம்பொருமானுடைய ஆச்ரிய பாரதந்தரியத்தால்‌ சீலகுணத்தாலே பரிமாறும்‌ பரிமாற்றத்தாலே சீலகுணம்‌ ஆழங்கால்படுத்தும்‌ என்று நித்தியர்கட்கு அறிவித்தும்‌ போருவர்‌. முழுக்ஷுக்களுக்கு நிச்சயமாக எய்வது பேரின்ப வெள்ளம்‌ என்று உபதேசித்தும்‌, இப்படி நான்கு வித அதிகாரிகளுக்கும்‌ ஆழ்வார்‌ உபதேசம்‌ செய்வர்‌ என்றபடி –

உண்டே? ஆயிரம்‌ கவிகொள்‌ கீதையும்‌ ஆதித்தியன்‌ ஆயிரங்‌ கதிர்‌ பரப்பியும்‌ இராம திவாகரன்‌ இலங்கை யெரித்தும்‌ உள்ளிருள்‌ நீங்கிய தென்பதுளதே? ஊற்றாறா பிறவிக்‌ கடலும்‌ ஒய்ந்ததே? ‘குருகையில்‌ வருமோர்‌ கோதில்‌ வகுள பூடணபாற்‌ கரன்‌ உதிக்க அப்பொழுதே பிறவியாம்‌ பெருங்கடல்‌ இறையும்‌ இலதே போதிற்‌ கமலம்‌ புரையற மலர்ந்தே உள்ளிருள்‌ எனும்‌ அறிவின்மை உலர்ந்ததே இவ்வெலாம்‌ நேர்ந்த இல்‌ வுலகின்‌ புறவே-16-( ஆசிரியப்பா )

திருத்தேர்த்‌ தட்டில்‌ கண்ணன்‌ எம்பெருமான்‌ அருளிய கீதையெனும்‌ ஆயிரம்‌ கவி உதித்தும்‌, ஆதித்தியன்‌ ஆயிரம்‌ கிரணம்‌ பரப்பியும்‌. சக்கரவர்த்தி திருமகன்‌ என்னும்‌ திவாகரன்‌ இலங்கை தகிக்க ஆயிரம்‌ அம்பு எய்வித்தும்‌ உள்ளிருள்‌ என்னும்‌ அஞ்ஞானம்‌ நீங்கியதில்லை. மேன்மேலிருளைச்‌ சுரக்கும்‌ பிறவிப்‌ பெருங்கடல்‌ வற்றவில்லை. திருக்குரு கூரில்‌ வந்துதித்த குறை யாதும்‌ இலாது வகுள பூஷண பாஸ்கரன்‌ உதித்த அந்தக் கணமே பிறவியாம்‌ பெருங்கடல்‌ அல்பம்‌ இன்றி வற்றி இதய கமலம்‌ நன்கு மலர்ந்தது; உள்ளிருள்‌ என்பதான அறிவின்மை உலர்ந்து போயிற்று. இவை யெலாம்‌ நேர்ந்ததால்‌ இவ் வுலகம்‌ இன்புற்றது.

இன்பமாரி இன்பப்பா வீட்டின்பம்‌ இம்மூன்றுள்‌
பண்பறிவார்‌ யாரே! பயனறிவார்‌ – உண்மை
தரமுயர்‌ மாறன்‌ இசைவேதம்‌ அர்ச்சை
திரிபறிவார்‌ சேர்வர்‌ நரகு–17-
(வெண்பா)

இன்பமாரியாம்‌ குருகூர்ச்சட்கோபனையும்‌, இவர்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய திருவாய்‌ மொழியையும்‌, அர்ச்சாமூர்த்தியை உலோகங்களால்‌ புனையப்‌ பெற்றது என்றும்‌, நான்காம்‌ வர்ணத்தார்‌ என்றும்‌, தமிழ்பாக்கள்‌ என்றும்‌ பண்பறியார்‌ கூறுவர்‌. பண்பறிவார்‌, தொழுகுலத்தோன்‌ என்றும்‌,உயர்வேதமென்றும்‌, சுத்த ஸத்வ திருமேனி என்றும்‌ காண்பர்‌. இதற்கு மாறுபட அறிவர்‌ நரகம்‌ சேர்வர்‌ என்பதே-

நரகை யொழித்து நன்கழல்‌ சேர்க்கும்‌ அனந்தபுரம்‌
அருச்சித்‌ தமரர்‌ தலைவன்‌ அயனும்‌ நிலத்தேவர்‌
ஒருத்தர்‌ தவறா(து) ஒருங்குமூ வாசல்‌ கடைப்பிடித்து
திருத்தம்‌ உறவே சமமாகச்‌ சேவிக்கச்‌ சீர் கொளுமே-
-18-(கட்டளைக்‌ கலித்துறை)

மலைநாட்டு திருப்பதிகளில்‌ ஒன்றானது திருவனந்தபுரம்‌. அதில்‌ அமரர் கோனாகிய விஷ்வக்சேனர்‌, முதல் வாசல்‌ கடைபிடித்து திருமுடிபக்கம்‌ நின்று சேவித்தும்‌, எம்பெருமான் நாபியில்‌ தோன்றிய பிரமன்‌ இரண்டாம்‌ வாசல்‌ கடைபிடித்து திரு உந்திக் கமலம்‌ சேவித்தும்‌, நிலத் தேவர்கள்‌: மூன்றாம்‌ வாசல்‌ கடைபிடித்து திருவடிகளைச்‌ சேவித்தும்‌, இப்படிச்‌ சேவித்தாலும்‌ தன் பால்‌ வேற்றுமை இன்றி சமமாக சேவிக்கும்‌ வாய்ப்பினை உடையதாம் –

கொள்ளும்‌ எழுத்தொன்‌(று) இகுளைஎன உறவில்‌ உணர்த்திகுறை வில் பொருள்
விள்ளும்‌ நமம செவிலியென அருளே நெறிகொள்‌ மிக்கதிடம்‌
துள்ளும்‌ பதற்றம்‌ மகன்நான்கில்‌ துவளில்‌ போகத்‌ துறுவேட்கை
தெள்ளென்‌ ஞானச் சட கோபன்‌ தெறிக்கும்‌ நால்வர்‌ நான்முகத்தே–19-
(அறுசீர்க்‌ கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்‌)

பிரணவத்தின்‌ அர்த்தமான ஜீவபரர்கள்‌ சம்மந்தத்தைத்‌ தோழிக்‌ கூற்றாகச்‌ சொல்லும்‌. குறைவிலா நிறைபொருள்‌ தரும்படியான நமப்பதம்‌, எம்பெருமான்‌ அருளல்லது வேறு உபாயம்‌ இல்லை என்னுபடியான திட நம்பிக்கையை வலியுறுத்தும்‌ தாய்க்கூற்று. தலைமகனை சேர்ந்தல்லது தரிக்க முடியாத பதற்றமுடைய நாராயணாய என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளைத்‌ தலைமகள்‌ கூற்றாகச்‌ சொல்லும்‌. இப்படித்‌ தோழி, தாயார்‌, தலைமகள்‌ மூன்றோடு பெண்‌ பேச்சாகவும்‌ பேசும்‌ ஆழ்வார்‌ தம்‌ பேச்சாக நான்கு அதிகாரிகளைப்‌ பார்த்து நான்கு முகமாக உபதேசிப்பர் –

என்பெறு தென்ன மலைக்கா துள்ளத்து ஊறிய மதுவிர தமாய்‌ தூமது வாய்கொள்‌ கொண்டு குழல்வாய்‌ வகுளத்தின்‌ சாரமுட்‌ கொண்டு தேனென என்று ஆளம்‌ வைத்துச்‌ சிறுகாலில்‌ லியம்போது குறிஞ்சி மருளறும்‌ காமரம்‌ கந்தாரம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்‌ திருண்ட குழலில்‌ சங்கையற மருவி யருளாத யாமென்‌ றோடிவந்து வாசமே ஊதி வண்டே கரியாய தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமம்‌ உடைய நாரதன்‌ முனிவா கனர்தம்‌ பிரான்மார்‌ போல்வார்‌ இவர்களை வண்டு தும்பியாம்‌ பொருளே--20-( அகவற்பா)

அழகிய மலரெலாம்‌ ஊதி நீ என்பெறுதி என்று மீட்க வேண்டும்படி தகாத பொருள்களை இனிய பொருள்களென்று மயங்காதே, இறைவனாகிய தன்னுடைய அழகு சீலம்‌ முதலியவைகளை நினைத்து உள்ளம்‌ கனிந்திருக்கும்‌ அடியார்களுடைய மனத்திலே பகவனாகியத்‌ தேனை விரும்பி அவனையே உணவாக உடைய வண்டு, தாமரை மலரில்‌ இருந்து கொண்டு அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய்‌ அடைந்தாலும்‌ நாவினை நனைப்பதற்கும்‌ போராதே, தேனை உடைய முள்ளிற்‌ பூவை கண்ணாலும்‌ பாராததைப்‌ போன்று, “தேவரீருடைய தேனே மலரும்‌ திருவடித் தாமரைகளுடைய இனிமையில்‌ மனம்‌ அழுந்திய ஒருவன்‌ மற்றொரு அற்ப இன்பத்தை விரும்ப மாட்டான்‌” என்கிறபடியே, மற்றொன்றினைப்‌ பிரித்து பாராதே இந்தத்‌ தேனை உண்ணுதலையே விரதமாக உடையராய்‌ பகவானாகிய இனிய பொருளை அனுபவிக்கும்‌ அனுபவத்தாலே பரிசுத்தமாய்‌ வகுள மாலையைத்‌ தரித்த ஆழ்வாருடைய இனிமை பரத்துவம்‌ முதலான வற்றின்‌ இனிமையும்‌ அளவிற்குட்பட்டது என்னும்படியான திருக்குழலில்‌ வைத்த ஒளிமா மலரான வகுளத்தின்‌ தரத்தை எடுத்து அவ்வழியாலே இத்தலையில்‌ இனிமையை அனுபவித்து, இப்படி பகவானுடையவும்‌ பாகவதருடையவும்‌ இனிமைகளை அனுபவித்த செருக்குக்குப்‌ போக்கு வீடாக ஆலத்தி வைத்து, காலங்கட்கு தகுதியான பண்களைப்‌ பாடி, திருவாசல்களிலே சேவிக்க வந்தவர்கள்‌ நிறைந்து தலைப்புகவொண்ணாதபடி நெருக்க தெருவாசல்‌ காப்பர்‌ திருக்கதவு திறக்க வேண்டும்‌ என்று விரும்பிக்‌ கேட்டு, கண்ணையும்‌ மனத்தையும்‌ கவருகின்ற திருவாசலில்‌ அழகில்‌ துவக்குண்ணாதே அதனைக்‌ கடந்து புகவேண்டுகையால்‌ தடையற பாடுவாராக இருக்கின்ற அந்தரங்கத்‌ தன்மையாலும்‌, ஒன்றிலேயே நோக்குடைய மனத்தினை உடைமையாலும்‌, தனக்கு ஒத்த விஷபமுள்ள இடத்திலே சேர்ந்து அச்சமில்லாமல்‌ அவனுடைய அண்மையில்‌ இருப்பவர்களாய்‌, இத்தலையில்‌ துன்பத்தை அவனுக்கு அறிவித்து அவனோடே கூடிவர இராதே முந்துறவே தேடிவர வேண்டும்‌ என்று விரும்பி விட்டபடியே இத்தலையில்‌ துன்பத்துக்குத்‌ தகுதியாக அவன்வரவினை அறிவிக்க, விரைந்து வந்து தங்கள்‌ வரவாலே இத்‌ தலையில்‌ பிறந்த செவ்வியை அனுபவித்து அத்தலையில்‌ தாங்கள்‌ அனுபவித்த இனிமையை தங்கள்‌ வரவாலே இத்தலைக்கு விளக்கிக்‌ கொண்டு தரிக்கச்‌ செய்து, வேத சாகைகளின்‌ மேலேயுள்ள சாரத்தை உட்கொள்ளும்‌ ஆறுபத நிஷ்டர்களாய்‌ இரண்டு சிறகுகளோடு கூடியிருப்பதாலே தடையின்றி எங்கும்‌ செல்லக்‌ கூடியவர்களை முன்னிட்டு அங்கீகரிக்கும்‌ அவனாய்‌, வேதாந்தங்களாலே அறியப்படுமவன்‌ என்று தோன்றும்படி கெருடவாகனனாய்‌ சாரத்தையே எடுக்கின்ற சர்வேச்வரனோடே சேர்விக்கும்‌ பிரம்மமாவனையாகிற சேமத்தையுடைய நாரதன்‌, பகவானுடைய குணங்களை அனுபவித்து போரானந்தமுடையவனாய்‌ அந்த ஆனந்தத்தில்‌ பாடிக்கொண்டும்‌, நடனம்‌ ஆடிக்கொண்டிருக்கும்‌ ஸ்ரீநாரதமாமுனி, லோக சாரங்கமாமுனிகளாலே தாங்கப்படுகையாலே முனிவரென்று கூறப்படுகின்ற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி இசையினையே தங்களுக்கு இனிய பொருளாகக்‌ கொடுக்கின்ற தம்பிரான்மார்‌ போன்றவர்களை வண்டு தும்பி என்னும்‌ என்கிறபடி.

பொருளில்‌ அடிமையிற் புக்கிலர் ஞாநம்
இருந்தும்‌ இசையார்‌ அழுக்கை – விரும்பியும்‌
ஏற்பரோ? மாறன் பா மெய்யுணர்ந்தார் ஏலாரே
காற்கடை கொள்ளுவர் காண்
–21-(வெண்பா )

தடையற்ற சுவாதீனான பரம்‌ பொருளுக்கு ஆன்மா அடிமை என்பதையும்‌, அந்த அடிமைகளோட தொண்டாற்றுதலையும்‌ அறியாதவனானவனுடைய ஆன்மா அறிவு மயம்‌ ஆனந்த மயனானாலும் மாறன் பாவாகிய திருவாய்மொழி உணர்ந்தோர்‌ இவ் வாத்மாவை வேண்டுமென்றிசைய மாட்டார்கள்‌. இவ் வான்மாவால்‌ தரிக்கப்‌ பெறா அறிவில்லாப்‌ பொருளாம்‌ அழுக்குடம்பை ஏற்க மாட்டார்கள்‌ என்பதை சொல்ல வேண்டிடுமா? அவற்றைக்‌ காற்கடை கொள்வர் –

காண்மின்‌ உலகீர்‌ சனக தசரதர்‌ காசினியில்‌
பேணும்‌ பிறங்கொளி இலதாம்‌ நந்தன்‌ இவர்கள்குலம்‌
தோணும்‌ முதலும்‌ இடையும்‌ கடையும்‌ துலங்குவபோல்‌
நாணுறு நான்கினில்‌ மாறன்‌ எனவரு பாற்கரனே
–22-(கட்டளைக்‌ கலித்துறை)

உலகவர்களே! இந்த வியப்பைக்‌ காணுங்கள்‌. ஜனகர்‌ மூத்த மகளான சீதா பிராட்டியும்‌, தசரத சக்கரவர்த்தியுடைய நடுப்‌ பிள்ளையான பரதாழ்வானும்‌, உலகவர்‌ விருப்பத்துக்‌ குரித்தல்லாத குலத்தில் தோன்றிய நந்த கோபனுடைய கடைக்‌ கூற்றுப்‌ பிள்ளையான கண்ணனும்‌ தோன்றி,குலத்தை சார்ந்த குறைகளைப்‌ போக்கி புகழுண்டாக்கினது போல்‌ மாறன்‌ நான்காம்‌ வர்ணத்துத்‌ தோன்றி குலத்துக்குப்‌ புகழும்‌ உலகவருடைய பிறவிச் சிறையும்‌ அறுத்தார் –

பாற்கரன்‌ கதிரின்‌ ஞானமா ந்தம்‌ அடியவன்‌ பாலதோர்‌ நூல்களின்‌ நுகர்பவன் பகர்வே
நூற்களின்‌ சாரமாம்‌ நுவலரு மறையின்‌ உயிர்களாம்‌ நுவல்பர தந்திரன்‌ நுகர்பவன்‌ பரனே
பாற்படா பரன்தன்‌ தன்வழி நுவல்பவை முதற்கடை பகையிவை நான்கும்‌ நமவும்‌ பின்னவே
ஏற்ப திவ்வாறாம்‌ குறை யறக் காண்‌பார் பரனுயிர் இயல்பை அறிவெனும் கடலெனப் பெறுவரே -23-
(ஒன்பதின்‌ சீர்க்கழி நெடில்‌ ஆசிரிய விருத்தம் )

பகலவனுடைய பேரொளியைப்‌ போன்ற ஞான ஒளியும்‌, அவற்றின்‌ காரியமான ஆனந்தமும்‌ உடையவனான இந்த ஜீவன்‌, தான்‌ பரனுக்கு அடியவனாய்த்‌ தொண்டு செயது தொண்டினால்‌ வரும்‌ இன்பம்‌ தனதாகக்‌ கருதுபவன்‌ என்பது சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டதாகும்‌. சாஸ்திரங்களின்‌ ஸாரமாய்‌ சொல்வதற்கரிய பெருமைகளைபுடையதான திருமந்திரத்தில்‌, சேதனனை பரதந்திரன்‌ என்றும்‌, இந்தப்‌ பரதந்திர இயல்புக்கு ஏற்ப ஜீவன்‌ செய்கின்ற தொண்டினால்‌ விளையும்‌ இன்பத்தை நுகர்பவன்‌ இறைவனென்றும்‌ சொல்வதாகும் –
நூல்களில்‌ சொன்ன ரீதியில்‌ பரனுக்கு ஜீவனானவன்‌ பரதந்திரன்‌ என்றும்‌ போக்யம்‌ என்றும்‌ கொள்ளாது, சேஷத்துவ போக்த்ருவத்தோடு கூடிய இவ்‌- விரண்டும்‌ அகங்காரத்தை ஏற்றிருப்பதால்‌ பரன்‌ திருவுளத்திற்கு மாறுபட்டவை. (அவன்‌ உகப்புக்கு மாறுபட்டவை) இவற்றைத்‌ திருமந்திரத்தில்‌ ப்ரணவத்தில்‌ முதல்‌ எழுத்தாகிய அகாரமும்‌ ஈற்றெழுத்தாகிய மகாரமும்‌ சொல்லியிருக்க, பின்வரும்‌ நாராயணாய என்று வரும்‌ நான்காம்‌ வேற்றுமையும்‌ இரண்டாம்‌ பதமான நமசும்‌ சேஷத்வ போக்த்ருத்வத்தை அறத்தள்ளி முதற்சொன்ன அகார மகாரங்களை விட்டு, பின்‌ சொன்ன நமபத ஆய பதங்கள்‌ பின்‌ வந்து பாரதந்த்ரிய போக்யதையை. சொல்லிற்று. இதில்‌ அகங்காரத்திற்கு யோக்யதை இல்லையாயிற்று. இவ்வாறாக பரமாத்மாவின்‌ இயல்பையும்‌ ஜீவாத்மாவின்‌ இயல்பையும்‌ மாறுபடக்‌ காணாது. மேற்சொன்ன ரீதியில்‌ யதார்த்தமாக காண்பவர்களை கண்ணனெம்‌ பெருமான்‌ “ஸமஹாத்மா” என்று சொன்னதாலே, மகாமதியுடைய வன்‌ என்பதால்‌ இவன்‌ கடல்‌ போன்ற பேரறிஞன்‌ எனப்படுவான்‌-இதை நம்மாழ்வாரும்‌ “தனைக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே” என்ற ருளியிருக்கின்றார் -“சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ போலன்றே பாரதந்தர்ய போக்யதைகள்‌” என்று தொடங்கும்‌ ஆசார்ய ஹ்ருதய ஸூத்திரத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்தவை இவை-

கடல்நீர்‌ உப்புநீர்‌ நித்தம்‌ காணலாம்‌ உவாவில்‌ அன்றித்‌ தொடற்‌ குதவாத போல்‌ நூற்கடல்‌ ஆங்கே கலங்குநீர்‌ நொய்யவாம்‌ தெளிவிலாக்‌ கலங்கல்‌ பருகத்‌ தெளிவிலாது ஐயத்‌ திரியறி வின்மையின்‌ ஆழ்ந்து வேண்டா நாற்ற மிகுமுடல்‌ முகந்து நானென தென்னும்‌ நலமி லுழல்வான்‌ இறையருள்‌ கடைக்கண்‌ இயங்கக்‌ குருகை நேர் வகுள பூஷணன்‌ பாற்கரன்‌ வந்து இன்ப மாரி இயந்ததோர்‌ ஞானத்து வீட்டின்ப வாரி தன்‌ குணநீர்‌ மிசைந் ஆயிரங்‌ கதிரா யிரங்‌ வியமுதின்‌ நிலத்தே யிவரால்‌ நிறைஞா னம்பெரும்‌ புகல்வதோர் புகழே மாறன் தன் வேதமே –-24-(ஆசிரியப்பா)

உப்புத்‌ தன்மை வாய்த்தாய்‌ அந்தக்‌ கடலுக்குள்‌ வசிக்கின்ற மீன்‌ முதலான பொருட்களுக்கொழிய, புறம்புள்ளார்க்கு உள்ளே புகுவதற்கும்‌ அரிதான பவுர்ணமி முதலிய பருவ காலங்களில்‌ ஒழிய ஏனைய காலங்களில்‌ தீண்டத்தகாது என்கையாலே முழுகுதற்குக்‌ கால நியதியை உடைத்தாய்‌ இருக்கிற கடல்‌ நீரானது, மேகம்‌ பருகி மழையாகப்‌ பெய்ய அம்மேகத்தின்‌ சம்பந்தத்தில்‌ கடல்நீரினது உப்புத்தன்மை நீங்கி எப்பொழுதும்‌ எல்லார்க்கும்‌ பயன்படுவத போன்று, வடமொழி மறையானது, பிராமணன்‌ ஆவணிமாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில்‌ சொல்லியபடி உபாகர்மங்களைச்‌ செய்யும்‌ நியமத்துடன்‌ கூடியவனாய்‌ நாலரை மாதங்களில்‌ வேதங்களை அத்யயனம்‌ செய்யக்கடவன்‌. இதற்குப்‌ பிறகு நியமத்துடன்‌ கூடியவனாய்‌ சுக்கில பட்சத்தில்‌ வேதங்களை ஒதக்கடவன்‌. 4 வேதம்‌ 6 அங்கங்கள்‌ உபநிடதங்களையும்‌ கிருஷ்ணபட்சத்தில்‌ நன்றாக அத்தியயனம்‌ செய்யக்கடவன்‌ என்கிறபடியே அத்தியயனம்‌ செய்வதற்கு கால நியதியும்‌, மேல்‌ மூன்று வர்ணத்தாரும்‌ ஒதற்கு அதிகாரிகள்‌ ஆகையாலே, அதிகாரி நியதியையும்‌ உடைத்தாயிருக்கிற நூற்கடல்‌ என்ற வேதம்‌, இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நம்மாழ்வார்‌ திருவாக்காலே வெளிவந்து கால நியதி அதிகாரி நியதியை வேண்டாத பண்பை அடைந்து கட்டளைப்பட்டவாறே, பெண்களாலும்‌ நான்காம்‌ வர்ணத்தவர்களாலும்‌ அத்யயனம்‌ செய்யத்தக்கது. இதனை அத்தியயனம்‌ செய்யும்வாகட்கு மோக்ஷம்‌ கையில்‌ இருக்கும்படியே. ஒரு காலவரையின்றியே எல்லார்க்கும்‌ எல்லாக்‌ காலமும்‌ கற்பதற்குரியதாம்‌ இந்தத்‌ திருவாய்மொழி. இந்த மறையும்‌ இதன்‌ பயனும்‌ சிறப்புடைவனவாகும்‌. வடமொழி மறை முக்குணமான தோஷத்தைக்‌ குறிக்கொண்டதால்‌ அம்மறை பயின்றவர்கட்கு யதார்த்த ஞானம்‌ வருவது அருமை. ஐய உணர்வு, திரிபுணர்வு, அறிவின்மை இவைகளில்‌ ஆழ்ந்து இதனால்‌ பொல்லா ஒழுக்கு ஒழுகி துர்நாற்றமுடைய உடலெடுத்து, நான்‌ எனதென்னும்‌ அகங்காரமமகாரங்களால்‌ ஆனந்தம்‌ இல்லாத காட்டில்‌ உழல்வாருக்கு வேதம்‌ பிரமாணம்‌, இதைக்கண்ட இறைவன்‌ மனம்‌ வருந்தினவனாய்‌, சேதனர்பால்‌ அருள்‌ பெருகி உண்மை உணர்ந்த நல்லாள்‌ ஒருவனைத்‌ தோற்றி வைக்க வேண்டும்‌ என நினைத்து, அமலங்களால்‌ விழிக்கும்‌ தம்கடைக்‌ கண்களால்‌ நோக்க, அந்நோக்கம்‌ ஜாயமான காலத்தில்‌ அவதரிக்கப்பட்ட இனபமாரியாம்‌ ஆழ்வார்‌ என்ற முகிலானது அர்ச்சாவதாரத்தின்‌ குண நீரைப்பருகி, ஆயிரம்‌ கவியமுதமாக்கி, இதையுண்டவர்‌ நிலத்தேவராய்‌ நிறைஞானம்‌ பெற்று தாங்கள்‌ உய்ந்தார்கள்‌; உலகை உய்வித்தார்கள்‌. இதனால்‌ மாறன்‌ வேதம்‌ புகழ்வதற்கரியதோர்‌ புகழுடையது.

வேதங்கள் கற்றல் ஒழுகலில் விப்ரராய்
சாதியால் தாழ்த்தி உயர்த்திகள் -ஓதுவர் சந்தங்கள்‌ ஆயிரவர்‌ சாதி பிரித்தறியார்‌
வந்தனைக்காம்‌ வைணவன்‌ தான்‌
–25-(வெண்பா )

மறைகளை குருமுகமாகக்‌ கற்றறிந்து அறிந்ததின்‌ ஒழுக்கத்தை மேற்கொண்டொழுகலால்‌ பிராமணன்‌ என்ற தகுதியை பெறுவர்‌. இவர்‌, தன்‌ குலத்தை மேலாக மற்றது தாழ்வாகக்‌ கொள்வர்‌. குருகூர்‌ சடகோபன்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய சந்தங்கள்‌ ஆயிரத்தைக்‌ கற்று வல்லவரானால்‌ வைணவன்‌ என்ற தகுதி பெறுவான்‌. இவன்‌ ஆன்மாவின்‌ உண்மை அறிந்து அனைத்தும்‌ சமமே என்றொழுகுவான்‌-

தானே உயர் தின்னணை ஒன்று சாற்றினான்‌ நோற்ற நான்கில்‌
கானேய்‌ பயிலேறு கண்கரு வீடொருக்‌ கொண்ட சொன்னால்‌
தேனே எம்மா ஒழி வேய்‌ நெடு நான்கில்‌ தெரிபயனும்‌
ஊனேய்‌ தடைஉயிர்‌ ஆறெம்மான்‌ ஐம் பொருள்‌ ஓர்ந்துரைத்தே –26
–(கட்டளைக்‌ கலித்துறை)

மிக்க இறை நிலையும்‌ என்ற தனியனின்படி திருவாய்மொழியில்‌ அர்த்த பஞ்சகம்‌ உள்ளதென்பதை உயர்வற என்றும்‌, திண்ணன்‌ வீடு, அணைவதரவணை, ஒன்றும்‌ தேவு என்றும்‌ தொடங்கும்‌ நான்கு திருவாய்மொழிகளில்‌ பரத்வ தன்மை சொல்லியதாம்‌. பயிலும்‌ சுடரொளி, ஏறாளும்‌ இறையோனும்‌, கண்கள்‌ சிவந்து, கருமாணிக்கம்‌,என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழிகளில்‌ ஆன்மாவின்‌ தன்மையும்‌, வீடுமின்‌, ஒரு நாயகம்‌, கொண்ட பெண்டீர்‌, சொன்னால்‌ விரோதம்‌ என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ இறைவனை அடையத்‌ தடை பண்ணும்‌ விரோதியின்‌ தன்மையும்‌ சொல்லிற்று. நோற்ற நோன்பு, ஆராவமுதே, மானேய்‌ நோக்கு நல்லீர்‌, பிறந்தவாறு என்று தொடங்கும்‌ நான்கு திருவாய்மொழியில்‌ பகவானை அடைவதற்கு சாதனத்‌ தன்மையும்‌ சொல்லிற்று. எம்மா வீடு, ஒழிவில்காலம்‌, நெடுமாற்கடிமை, வேய்மரு தோளினை என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழிகளில்‌ பரன்‌ திறத்து அடைந்து பெரும்பயனைச்‌ சொல்லிற்று —

ஈதே முடிவில்‌ விடுமுடம்பில்‌ எச்சில்‌ உகக்கும்‌ காதலன்போல்‌
ஏதும்‌ உடம்பின்‌ குறைகாணான்‌ மாயஆக்கை இதில்‌ புகுந்து
யாதும்‌ உகந்த நிலமாக இவன்திரு மேனிவா னாட்டிருப்பா
பாதம்‌ பற்றி மங்கவொட்டுன்‌ மாயை எனவே விடுவிக்கும் –27-(
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்‌)

மாலையாக பிறக்கும்‌ பிறவிகளின்‌ உடம்பில்‌ இறைவனருளால்‌ வினைத்‌ தொடர்பு இல்லாததாக இதுதான்‌ கடைசி உடம்பு என்றும்‌, இணி, உடம்பின்‌ தொடர்பு இந்த ஆத்மாவிற்கு கிடையாது என்றும்‌, இந்த நிலையில்‌ இருக்கும்‌ ஆழ்வார்‌, இறைவன்‌ இடத்திலும்‌ அடியார்களின்‌ திறத்திலும்‌ மற்றும்‌ இறைவன்‌ சம்பந்தப்பட்ட எல்லைக்‌ காண்பரீய பிரேமையும்‌ மதிப்பும்‌ உடையவராக ஆகவும்‌, இதைக்கண்ட எம்பெருமான்‌ பல கல்பங்களாக படைத்துக்‌ கொண்டு வருகிற நிலைபில்‌ இந்த ஆழ்வாருடைய பண்புகளைக்‌ கொண்டு, இதுவரைக்கும்‌ படைத்த படைப்பில்‌ இப்படி ஒருவர்‌ இல்லை மேலும்‌ இருக்க முடியாது என்ற திருவுள்ளமுடையவனாய. இவர்‌ திருமேளியில்‌ வாஞ்சையறு, காதலியின்‌ அழுக்கை விரும்பும்‌ காதலன்‌ போல்‌ இவர்‌ திருமேனியில்‌ புகுந்திருந்து, இ வரை இந்தத்‌ திருமேனியோடு பரமபதத்திற்குக்‌ கொண்டு செல்ல வேண்டும்‌ என்று நினைத்து, “இந்த ஸ்தூல உடம்போடு கையைப்‌ பிடித்து அழைக்கின்றானே என்று இங்கு தான்‌ அருவருக்கத்தக்கப்‌ பிறவி என்ற சிறை என்றால்‌ அங்குமா?” என்று கலங்கி எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றிக்கொண்டு முக்குணத்தோடு கூடிய மாயையின்‌ பரிணாமமாகையாலே இதை விடுவிக்க வேண்டுமென்று ஆழ்வார்‌ பிரார்த்திக்க, திவ்யசூரிகளான இவர்களால்‌ வாழ்த்தப்‌ பெற்ற திவ்ய தேசங்கள்‌ தோறும்‌ செய்யும்‌ பிரேமையை இவருடம்பில்‌ செய்வானாக. இவர்‌ இசையாமல்‌ இறைவனைப்‌ பார்த்து, அருவருக்கத்தக்க மாயை காண்‌ இந்த அழுக்குடம்பு ஆதலால்‌ இதை விடுக்க வேண்டுமென்று திருவடிகளிலே மன்றாட எம்பெருமான்‌ ஆச்ரித பரதந்தரனாய்‌ இசைந்து விடுவித்தான்‌ என்பதாம்‌. இந்த குணம்‌ “மருள்கள்‌ கடியும்‌ மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே” என்ற பதிகத்தில்‌ காணலாம்‌.

என்றனை நீஇன்று ஒருபொரு ளாக்கி என்னுள்ளே நின்றனை வைத்தாய் அன்றெனை புறம் போகப்‌ புணர்த்த தென்செய்க? குன்றென திகழ் மாடங்கள் சூழ்ந்த திருப்பேரா ஒன்றெனக்‌ கருள்செய்‌ யுணர்த்த லுற்றேன்‌ என்றே மாறன்‌ நின்றே இயம்ப தலைநிலம்‌ கவிழ்ந்து தரையைக்‌ கீறி இறைவன்‌ இதற்கொரு மாற்றங்‌ காணா கடிமணக்‌ காட்சியில்‌ மந்திரம்‌ மறந்த மறையவன்‌ வாத்திய ஒலியை முழக்கி செய்யச்‌ செய்யும்‌ செய்கை போலே சூழ் விசும்‌ பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கம் முரசங்கள்‌ வலம்புரி முழக்கம்‌ செய்து அர்ச்சி ராதி கதியைக்‌ காட்ட அமானவர்‌ அடையும்‌ நிலையுங்‌. காட்டி அந்தமில்‌ பேரின்பத்‌ தடியரோ டிருந்தமை இவ்வெலாங்‌ காட்டி இறைவன் ஆழ்வாரை திசைதிருப்பிக்‌ கேட்ட கேள்வியை ‘ மறக்கச்‌ செய்வதில்‌ மாயன்‌ சதுரன்‌ மாறனே! வாரீர்‌ ஓங்காரத்‌ தேரில்‌ ர்‌ ஏறுமென இறைவன்‌ இதமொ ழிந்தானே--28-(ஆசிரியப்பா )

வைராக்கியங்களைக்‌ கண்டு எம்பெருமான்‌, ர அல்‌ கப்பன்‌ திருப்பாற்கடல்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ பண்ணும்‌ ஆதரத்தையும்‌, அன்பையும்‌ ஆழ்வார்‌ திருமேனி முதலான அவயங்கள்‌. – உறுப்புகள்‌ எல்லாவற்றிலும்‌ செய்து பஞ்ச பூதங்களினுடைய சேர்த்தியாலான ஆழ்வாருடைய திருமேனியை பரமபதத்திற்கு எடுத்துச்‌ செல்ல விரும்பி அவசரப்படுத்துவதைக்‌ கண்ட ஸ்வாமி நம்மாழ்வார்‌, எம்பெருமானைப்‌ பார்த்து ஒரு கேள்வி கேட்டார்‌. எம்பெருமானே! அடியேனை இன்று ஒப்பற்ற வஸ்துவாக்கி-பொருளாக்கி உபயவிபூதிக்கும்‌ நாயகனான உம்மை என்னிடத்தில்‌ இருத்தி, என்‌ இருதய கமலத்தில்‌ வீற்றிருந்து, இவ்வளவு பாரிப்புகளைச்‌ செய்து என்னைச்‌ சூழ்ந்து கொண்டு ஒரு நொடிப் போதும் என்னை விட்டகலாமல்‌ பேரருள்‌ செய்கிறீர்‌. அடியேனைக் கடந்த காலங்களில்‌ மாறிப்‌ மாறி பல பிறப்புகளை எடுத்து அனர்த்தப்படும்படி விட்டு வைத்தது எதுக்காக? இதை யருளிச்‌ செய்ய வேணும்‌’ என்றார்‌. அதற்கு எம்பெருமான்‌, இவர்‌ கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்ல ஆரம்பித்தால்‌, பிறகு வேறு ஒரு கேள்வியைக்‌ கேட்பார்‌. இதனால்‌ இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என அறிந்து, தலை கவிழ்ந்து பூமியை தனது பெரு விரலால்‌ கீற,கல்யாணத்தில்‌ மாங்கல்ய தாரணம்‌ செய்யும் போது சொல்லக் கூடிய மந்திரத்தை மறந்த புரோகிதனைப்‌ போல, திசைத்‌ திருப்புவதில சாதுரியமுடைய எம் பெருமான்‌. “சூழ்விசும்‌ பணிமுகில்‌” என்ற திருவாய்மொழியில் சொல்லப்பட்ட அரச்சிராதி கதியைக்‌ காட்டி ஆழ்வாருடைய கேள்வியை மறக்கச்‌ செய்தான் –

மொழிபல செப்பம்‌ பிறந்தது முத்தி
வழிபல வாயவிட்‌ டொன்றாம்‌ – சுழிபல
தாழ்த்தும்‌ பொருநைக்‌ குருகைச்‌ சடகோபன்‌ :
வாழ்த்துரைத்த வாய்மொழித்‌ தேன்‌–29-(வெண்பா )

உலகின்‌ பல மொழிகளும்‌ இயங்குவதால்‌ இறைவன்‌ தொடர்பின்‌ மையால்‌ செப்பமற்றன. திருவாய்‌ மொழி இறையனுபவத்தையே கொண்டிருத்ததலால்‌ மற்ற மொழிகளும்‌ இதைக்‌ கண்டே செப்பமுற்றன. முக்தி மார்க்கங்கள்‌ பலவாக நுல்கள்‌ கூறியதை, பரன் பால்‌ தஞ்சம்‌ அடைவதொன்றே முக்தி மார்க்கமென்று திருவாய்மொழி கூறும்‌. வெள்ளப் பெருக்கால்‌ சுழித்தோடும்‌ பொருனைத்‌ தென்கரையிலுள்ள திருக்குருகூரிலவதரித்த மாறனருளிய திருவாய்‌ மொழியின்‌ செப்பங்களிதுவாம்‌ –

தேனென்றி னிக்கும்‌ சொலக்கேட்க சென்மங்கள்‌ கைத்தழலும்
தானொன்றி தந்தான்‌ கவியா னமையின்‌ புளிகவாது
கானொன்று செவ்வாய்‌ துவர்ப்பாம்‌ கூடிக்‌ களிப்புறு மால்
வானொன்று சீர்த்திரு வாய்பொழித்‌ தேன்கொள்‌ கடலிதுவே-
-30-(கட்டளைக்‌ கலித்துறை)

சுவை மிக்கதும்‌ சிறப்பு மிக்கதுமான திருவாய்மொழி ஆறுசுவைகளைக்‌ கொண்டதொரு தேன் கடல்‌. “எங்ஙனே சொல்லினும்‌ இன்பம்‌ பயக்கும்‌” என்று சடகோபன்‌ வாய்மொழி பண்புரை சாமத்தின்‌ சதோக்யமாகையாலே சொன்ன மாத்திரத்திலேயே தேனுறலின்‌ இனிக்கும்‌. குருமுகமாகக்‌ கேட்கப்‌ பிறவிகளில்‌ விரத்தி யுண்டாக்கிப்‌ பிறவியைக் கடிந்து போக்கும்‌, எம்பெருமான்‌ “ஒன்றி ஒன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேன்‌ “என்பதனால்‌ உளதாய இன்பம்‌ உள்ளே நிரந்தரமாக நிரம்பி மிடைந்த சொல் தொடையா யிரமாக வழிந்து வந்ததாகையாலே, உள்ளே என்றும்‌ நிற்கும்‌ பராங்குச நாயகி எம்பெருமானைக்‌ கூடிக்களிப்புற்றதால்‌ எம்பெருமான்‌ திருவதரம்‌ துவர்த்துப்பாம்‌. இதில்‌ அறுசுவையும்‌ சொல்லப்பட்டது.-

கடலகடு வகிர்பொருநை காவிரியின்‌ கரையிகந்து கிளை கொண்டோடும்‌
உடனிகுளை கூறு பல உற்றதாய் பல் கூறுதலை மகள் பல் கூறா
படர் வேட்க்கை தன் கூறோ பல பல கால் விரித்து திருமகள் கேள்வாரி
குடைந்து புகும் குருகூரர் வாய் மொழியாம் குடைந்து பிறகுடைதல் தீர்ந்ததுவே –31–
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் )

கடலின்‌ வயிறு கிழியும்படியாக வேகமாகச்‌ சென்று சங்கமமாகம்‌ தாமிரபரணி, காவேரி என்ற நதிகள்‌ போலே திருவாய்மொழியாம்‌ பெரியதோர்‌ ஆறு கரை கடந்து தோழிக்கூற்று, தாய்க்கூற்று, தலைமகள்‌ கூற்று என்ற பல கிளைகளாலும்‌ பெருகியும்‌ தன்‌ கூற்றோடு சிதிதும்‌ குறையாது கம்பீரமான கடலைக்‌ கிழித்துக்‌ கொண்டு திருவாய்மொழி என்ற ஆறு திருமகள்‌ கேள்வன்‌ என்ற பெருங்கடலிலே சங்கமிக்கும்‌. இத்தகைய குணக்கடலாகிய திருவாய்மொழி என்றதோர்‌ பெரிய தோராற்றில்‌ படிந்து குடைந்து பெருமுத்தாபமும்‌ பிறவிக்கேதமும்‌ தணிந்து சந்ததம்‌ சுகித்துக்‌ கொண்டிருக்கிற யாம்‌, பிரிதொன்றில்‌ தொடர்புக்‌ கொள்ள மாட்டோம் –

வித்தைநல்‌ தாயெனக்‌ கொடுபெறு வித்து பாலும்‌ அமுதுமாம்‌ பரம்பரன்‌ பேர்கொடு வளர்த்தது திருமகள்‌ போன்றென வளர்த்த தஞ்சமாத்‌ தந்‌தை மற்றைப்‌ பேச்சன்றி
உபய விபூதி நாயகன்‌ நன்கொடு
நாலிரண்‌ டிழைசேர்‌ முப்புரி நாண்கொடு
பிரம சூத்திர பந்தம்‌ பிணைக்க
பரம்புரு டன்தான்‌ பாங்குடன்‌ கைக்கொள
நான்கினில்‌ புக்கு நடுக்கிடக்‌ கும்நாள்‌
நான்கினைக்‌ கழித்து சூழ்விசம்‌ பின்படி
உடன்வழி சென்று குடைந்துநீ ராடி
வியன்துழாய்‌ அஞ்சனம்‌ நீறுநா னப்பொடி
பீதக வாடை பல்கலன்‌ கொண்டு
நோக்‌கியர் அலங்கரித்துப் பல் லாண்டு
கவரிசெய்‌ நிறைகுட விளக்கம்‌ ஏந்தி
இளமங்‌ கையர்தாம்‌ வந்தெதிர்‌ கொள்ள
வைகுந்தம்‌ புக்‌கு வாய் மடுத்‌ துப்பெரும்‌
களிச்சியா வானவர்‌ போகம்‌ உண்டு
கோப்புடைக் கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து
ஆரோ கித்துப்‌ பரதன்‌ அக்ரூரன்‌
மாருதி இவர்களை அணைதிரு மார்பில்‌
குருமா மணியா அணையும்‌ பொருளிவள்
மணிவல்லிப்பேச்சி இவள் தன் பரமே –32
-(அகவற்பா)

பிரம்ம வித்தையாம்‌ திருமந்திரத்தை இலனென்பது போய்‌ உளனாம்‌ ஞாநப்பிறவியாகப்‌ பெற்று, பாலும்‌ அமுதுமான திருமால்‌ திருநாமங்‌ கொண்டு திருமகள்‌ போலவளர்த்தேன்‌ என்கிறபடியே திருமகளுக்கு ஒப்பாக வளர்த்த ஆசாரியனாகிய தஞ்சமாகிய தந்தையானவன்‌, வினைவழி வந்த பிறவி ஆகிய ஊணஜென்மத்துக்‌ காரணமாகிய தந்‌ைத போலன்றியே, உபய விபூதிக்கும்‌ தந்தையாயிருந்தும்‌ பந்த மோஷங்களின்ரண்டுக்கும்‌ காரணமான தந்தையைப்‌ போலுமன்றிக்கே ஞானசென்மத்தைக்‌ கொடுத்து மோஷத்துக்கே காரணனாகிய தந்தையாய்‌, எந்த நிலையிலும்‌ கைவிடாதவனாய்‌ உய்விப்பதையே நோக்குகிறவனாய்க்‌ கொண்டு ஆபத்துக்களில்‌ காப்பாற்றுபவனாம்‌ ஆசாரியனாகிய தந்தை. எம்பெருமான்‌ தவிர மற்றவர்க்குப பேச்சுப்படாமல்‌ பரம்புருடன்‌ உகந்து, கைக்கொண்டு போக, அகாரத்தில்‌ நான்காம்‌ வேற்றுமை வழியேயணைந்து இதற்கிடையூறாக ஆத்ம பரமாக்களுக்கு “நண்ணியும்‌ நண்ண கில்லேன்‌ “என்கிறபடியே நடுவே யோருடம்பிற்கிடக்கும்‌ நான்கு நாள்‌ கழித்து, சூழ்விசும்பிற்படியே உடன்வழி சென்று விரஜையில்‌ சென்று குடைந்தாடி என்கிறபடியே, “தெய்வத்தன்மை வாய்ந்த நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரத்தைக்‌ கையில்‌ ஏந்தியவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணத்தை கையில்‌ ஏந்தின வரகளாய்‌, நூறு பெண்கள்‌ திருவாபரணத்தைக்‌ கையிலேந்தியவர்களாய்‌ மானேய்‌ நோக்கியா ஆன தெய்வப்‌ பெண்கள்‌ எதிரே வந்து முத்தனைய பிரம்ம அலங்காரத்தாலே அலங்கரிக்கின்றார்கள்‌” என்கிறபடியே, சர்வேச்வரனுக்கு இனிதாம்படி அலங்கரித்து இவர்களிடத்தில்‌ அவர்களுக்குண்டான தொண்டு செய்வதில்‌ உண்டான இச்சைக்கேற்ப திரள நின்று போற்றி பணிமாற அங்குள்ள பெண்கள்‌ மங்கள தீபம்‌ முதலியவற்றை ஏந்திக்‌ கொண்டு எதிரே வந்து உபசரிக்குமாறு போலே புதிய இளமையினை எப்பொழுதுமே இயல்பாக உடையவர்களான வேறு தெய்வம்‌ பெண்கள்‌ சிலர்‌ எதிர்‌ கொள்ள, திருமகள்‌ கேள்வனுடைய பேரின்பத்திற்கு நிலைக்களமான வைகுந்தம்‌ அடைந்து அவனோடே கூடியிருந்து வாய்மடுத்துப்பெருங்களிச்சியாக அடைந்து அடியார்‌ குழாங்களும்‌ அவனுமாக இருக்கிற சேர்த்தியாக முழுமிடறு செய்து நித்திய சூரிகள்‌ அனுபவிக்கிற போகத்தை, ‘ முக்தன்‌ எல்லாக்‌ குணங்களையும்‌ பரமாத்மாவோடு அனுபவிக்கிறான்‌” என்கிறபடியே எல்லாப்‌ பொருள்கட்கும்‌ புகலிடமான தொன்மை பொருந்திய கட்டிலிலே பாத பிடத்திலே அடியிட்டேறி, பரத அக்ரூர மாருதிகளைத்தழுவிய மணிமிகு மார்பிலே ஸ்ரீபரதாழ்வானையும்‌ அக்ரூரனையும்‌ திருவடியையும்‌ ஆதரித்து அணைத்துக்கொண்ட கெளஸ்துபம்‌ நிறம்‌ பெறும்படியான அழகியதான திருமார்பிலே இறைமைத்‌ தன்மைக்கு அடையாளமாக ஸ்ரீகெளத்துபமணியைப்போன்று இனிய ஒளியுடையதாய்க்‌ கொண்டு அணைகிற ஆன்மாவிற்கு இனியதாய்‌ தனக்குத்தானே அழகியதாய்‌ கொள்‌ கொம்பு பிரியில்‌ தரைப்பட்டுக்கிடக்கும்‌ ‘கொடி போன்றவள்‌” என்கிற தன்‌ தன்மையோடு கூடியதாய்‌ வரும்‌ பேச்சு வந்தேறியன்‌ று இயல்பாகவே
அமைந்தது-

பரனும்‌ பிறனும்‌ உறைகோயில்‌ ஓங்காரம்‌
பிறனாக்‌ குருகூர்ப்‌ பிறந்தோன்‌ – பரனிவனில்‌
வேறிலன்‌ மெய்ம்மைப்‌ பொலிந்து நின்றாசனா
தேறுமெனத்‌ தக்கா னிவன்
–33-(வெண்பா )

பரன்‌ என்பது எம்பெருமான்‌, எம்பெருமானுக்கு பிரதியாய்‌ இருப்பவன்‌ ஜீவன்‌ (ஆன்மா). இந்த இருவருடைய பெயரான அகாரமும்‌ மகாரமும்‌ உகாரமும் அகாரத்தாலும்‌, உகாரத்தாலும்‌, சொல்லப்பட்ட பரனுக்கும்‌ பிராட்டிக்கு! மகாரத்தை பெயராக உடைய ஜீவன்‌ இருவருக்கும்‌ அடிமை என்‌ பொருளைத்‌ தருவதாய்‌, இந்த மூன்று எழுத்துக்களும்‌ சேர்ந்தே ப்ரணவம் ஆகையால்‌, திருக்குருகூரில்‌ ஆதிநாதப்‌ பெருமானும்‌ ஆதிநாத வல்லியும் ஆழ்வாரும்‌ ஆகிய மூவரும்‌ உறை கோயில்‌ திருக்குருகூர்‌. இதனால் திருக்குருகூரும்‌ ப்ரணவத்திற்கு நிகரானது. குருகூரில்‌ அவதரித்‌த நம்மாழ்வார்‌, பரனோடு சொத்தாக ஒத்திருப்பதால்‌ பொலிந்து நின்ற பிரானே ஈசன்‌ என்று ஆழ்வார்‌ அருளியுள்ளதால்‌ “ஈ சேசி தவ்ய” என்கிறபடி உடையவன்‌ உடமை என்று சம்பந்தத்தால்‌ வேறிலர்‌ என தேறுதல் தக்கதாம் –

வன்பெரு வான்முதல்‌ உய்ய உலகம்‌ இனிமையுற என்றும்‌ இவற்றில்‌ இவள்திறத்‌ தென்கோலோ நேர்வதென என்பிக்‌ கின்ற வியூகநட்‌ புண்மை முதன்மையிதே –34-(கட்டளைக்‌ கலித்துறை)

திருவரங்கத்‌ எம்பெருமானுடைய ஐவகை நிலைகளையும்‌ கண்‌ இந்த ஆழ்வார்‌, வடியுடை வானோர்‌ தலைவனே என்றும்‌, கடலிடங்கொண் கடல்வண்ணா என்றும்‌, கட்கிலி என்றும்‌, காகுத்தா கண்ணா என்று! திருவரங்கத்தானே என்றும்‌ ஐந்து நிலைகளை பேசியதி6 அர்ச்சாவதாரத்தில்‌ எல்லா குணங்களும்‌ பூர்ணமாக ஒளிவிடும்‌ என்‌! இருந்தாலும்‌ இவ்வாழ்வார்‌ இந்த மூர்த்தியிடத்தில்‌ வியூக செளகார்த்த0 (உலகை காத்தல்‌ பொருட்டு சிந்தனை செய்வது) பிரகாசிப்பதாக அருளி செய்கின்றார்‌. திரு வுள்ளம்‌ உகந்து, திருக்கண்‌ வளர்ந்து அருளுகி திருவாளனுடைய திருப்பதியான திருவரங்கம்‌ ஐவகை நிலைகளை வைத்துக்கொண்டு இவள்‌ திறத்து என்‌ சிந்தித்தாய்‌ என்று சொல்லும்ப உலகை காப்பதைப்‌ பற்றி சிந்தனை பண்ணும்‌ குணம்‌ முதன்மையுடையத என்கோலோ இவள்‌ திரத்து முடிகின்றது என்று பாற்கடலில்‌ யோக நித்திள செய்யும்‌ வியூகத்தின்‌ குணமான செளகார்த்தத்தை முதன்மையா உடைத்தாய்‌ இருக்கும்‌ (உடையதாய்‌ இருக்கும்‌) –

வாமணன்‌ வந்து கோயில்‌ கொண்ட குறியவன்தான்‌ குறுங்குடிக்கண்‌ நாமம்‌ வைணவ நம்பி என்று எதிவரனார்‌ இடப்பெற்று பூமி மூவடி வேண்டி நின்ற பேரழகின் பொலங்கழளால்
ஏமம் மிகுத்து நின்று இரந்த விபவம் இங்கு பூர்ணமே –
35-(அறுசீர்‌ ஆசிரியர்‌ விருத்தம் )

விபவ மூர்த்தியான வாமணன்‌ திருக்குறுங்குடியில்‌ அர்ச்சாவதாரமாகக்‌ கோயில்‌ கொண்டிருந்தான்‌. ஒருநாள்‌ உடையவர்‌ என்ற திருநாமம்‌ உடைய இராமாநுஜரைக்‌ கண்டு, “மண்மிசை பிறந்த நாம்‌ பெருக்க முயன்று திருத்த முடியாத இத்நிலவுலகத்தவர்களை எப்படி திருத்தினீர்‌?” என்று கேட்க, “கேட்கும்‌ கிரமத்தோடு கேட்டால்‌ நான்‌ சொல்லும்‌ கிரமத்தோடு சொல்கிறேன்‌ ” என்று இராமானுஜர்‌ சொல்ல, எம்பெருமான்‌ அவருக்கு ஒரு பீடம்‌ கொடுக்க, இராமாநுஜர்‌ அந்த பீடத்தின்‌ அருகில்‌ கீழ்நின்று தன்‌ வலக்கையை அதன்‌ மீது வைத்துக்கொண்டு பெரிய நம்பிகள்‌ உபதேசிப்பதாக பாவனை செய்து கொண்டு துயத்தை உபதேசஞ்செய்து வைஷ்ணவ நம்பி’ என்று தாஸ்யநாமம்‌ இட்டார்‌. அன்று முதல்‌ வைஷ்ணவ நம்பி என்று பெயர்பெற்றான்‌. அவனேவிபவ அவதாரத்தில்‌ மாபலி இடத்தில்‌ சென்று “என்‌ காலால்‌ மூவடி மண் தா”‘ என்று யாசித்து நின்ற பேரழைக்கண்டு அப்படியே தந்தேனென்று உதக பூர்வமாகக்‌ கொடுத்தான்‌ மாபலி என்பர்‌. இதனால்‌ இந்த விபவ அவதாரத்தில்‌ லாவண்யம்‌ பூர்ணம் –

பூரணம்‌ கண்வலைப்‌ பொருந்தாப்‌ போலிகள்‌ வளர்த்‌ தெடுப்பார்தம்‌ கையில்‌ இருந்து தயிர்நெய்‌ யமாபால்‌ அமுதமுண்‌ டேநீமீர்‌ போற்றி ஓர்வண்ணம்‌ திருந்த நுவலாது என்பிழைக்‌ கும்நீ யலையே நல்வளம்‌ துரப்பன்‌ என்னும்‌ அவற்றுக்கு முகந்து சொல்லை எடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றங்கள்‌ கூப்பி வணங்கப்‌ பாடி ஆலியா அழையா பராபி மானத்து ஒதுங்கின அன்றே நம்பிக்‌ கன்பர்‌ தலைமீ தடிப்பொடி உடையவர்‌ உடையார்‌ போல்வார்‌ தன்மை கிளியும்பூவை குயிலும்‌ மயில்‌ எனுமே –36-(அகவற்பா)

“மாதரார்‌ கயற்கண்‌ என்னும்‌ வலையில்‌ பட்டு” என்கிறபடியே பெண்களின்‌ கண்ணாகிற வலையில்‌ அகப்பட்டு அழிந்து போகாமல்‌; “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” என்று பூரணனான ஸர்வேச்வரனுடைய தாமரைப்‌ போன்ற திருக்கண்களின்‌ நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு, இதற்குப்‌ பொருந்தாத மற்றவற்றைப்‌ பொருந்தாப்‌ போலிகளென விட்டு, “வளர்த்தனால்‌ பயன்‌ பெற்றேன்‌ மடக்கிளியை” என்று எடுத்து வளர்த்தவர்‌ கைகளிலிருந்து, “தயிர்ப்‌ பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” என்றும்‌, ‘நெய்யமரின்‌ னடிசில்‌” என்கிறபடி-உபதேக்ஷயந்திதே ஜ்ஞானம்‌” அவர்கள்‌ உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்‌ என்கிறபடியே காலத்துக்‌ கேற்றவாரும்‌, நிலைமைக்‌ கேற்றவாரும்‌ தாராளமாய்‌ அவர்களுக்கு பகவத்‌ குணங்களாகிற உணவை அநுபவிக்கும்படி செய்து, “போற்றி யானிரந்தேன்‌ புன்னை மேலுறை பூங்குயில்காள்‌” என்று அவர்களைப்‌ பல்லாண்டு பாடி அவர்களை ஆசாரியனாக பாவித்து, ஆதரித்தாலும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கெனச்‌ கொன்றுரை யொண்கிளியே” என்று எனக்காக இறைவனிடம்‌ சென்று ஒருவழியாக என்‌ நிலைமையை அறிவி என்றால்‌ அறிவிக்காமல்‌, “என்பிழைக்கும்‌ நீயலையே-நுவலென்ன? நுவலாதே யிருந்தொழிந்தாய்‌” என்று ‘என்னுடைய ஆற்றாமையைப்‌ பெருமானிடம்‌ சீக்கிரமாய்‌ அறிவியென்றால்‌’ “சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீரே” ‘எனக்குதவன்‌ பெயரைச்‌ சொல்லாதே என்றால்‌ “கண்ணன்‌ நாமமே குழறிக்‌ கொன்றீர்‌” என்கிறபடி எனக்கு உதவாத எம்பெருமானை எனக்கு ஞாபகமூட்டி துன்புறுத்துகிறீர்‌ உம்மை நான்‌ வளர்த்து நல்‌ விஷயத்தில்‌ ஈடுபடும்படி செய்த எனக்கு நல்ல உதவி செய்கிறீர்கள்‌, நல்ல பண்புதான்‌! என்று அவற்றைக்‌ கடிந்தும்‌,
“இன்று நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குத்து நின்றும்‌ துரப்பன்‌ ” என்று தன்னை ஆதரித்த சமயத்திலும்‌ அநாதரித்த சமயத்திலும்‌ இன்சொற்களும்‌ வன்சொற்களும்‌ வகுத்த விஷயத்தில்‌ கோபமும்‌ அருளும்‌ பகவத்‌ விஷயத்தில்‌ விநியோகப்படுத்தலாம்‌ என்னும்‌ நினைவாலே உகந்து; சொல்லை எடுத்துத்தொடுப்பதற்கு இயலாமல்‌ சோர்ந்தவாறே- அதாவது, அவன்‌ திருநாமத்தை சொல்‌ என்றால்‌ நெஞ்சாழும்‌ கண்சுழலும்‌ என்றபடி சொல்ல பலமில்லாமையாலே துவள, ஏற்கனவே உமக்கு கற்பித்துள்ளேன்‌ அவற்றைச்‌ சொல்ல என்ன, அந்த கிளிகள்‌ இறைவன்‌ திருநாமத்தைச்‌ சொல்ல “மடக்‌ கிளியை கைகூப்பி வணங்கினாளே “‘ என்று அவற்றைப்‌ பராங்குச நாயகியான தான்‌ கை கூப்பி வணங்கி சந்தோஷ மிகுதியாலே பாடியும்‌ “ஆலியா அழையா” என்கிறபடி ஆனந்தத்தோடே போது போக்குபவர்களாய பராபிமானத்திலே ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி “தென்குருகூர்‌ நம்பிக்‌ கன்பன்‌ ” என்‌ கிறபடி, ஸ்ரீமதுர கவிகள்‌ ஆசாரியரான நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ அன்பே வடிவாக இருப்பர்‌ “நாவலிட்டுழி தருகின்றோம் நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று யமன்‌ போன்றோர்‌ தலைகள்‌ மீது காலடியிடும்படி செருக்கை யுடையராய்‌ பாகவதவர்களுக்குப்‌ பாத தூளி போலே நிரூபித்த தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌, ஆழ்வான்‌ ஆண்டான்‌, எம்பார்‌, அருளாளப்‌ பெருமாளெம்‌பெருமனார்‌ முதலானவர்களை குணத்தை யிட்டு, கிளி, பூவை, மயில்‌, குயில்‌ என்று சொல்லும்‌ என்றுபடி –

குயிலும்‌ மயிலையும்‌ தூதென்‌ றனுப்பி
அயர்வின்‌ விரோதம்‌ அழிக்கும்‌ – பயிற்சி
விருத்தம் ஒழிக்கும் கடனா சாமர்த்யம்
நன்னகரில்‌ வித்தீர்‌ ணம்‌–37–(வெண்பா)

பாரங்குச நாயகி குயில்‌ முதலான பறவைகளை தூதுவிட, அவைகள்‌ சென்று சொல்லி அவன்‌ வருமளவுக்கும்‌ பொறுக்காத ஆற்றாமை மிகுதியால்‌ பிரணய ரோஷம்‌ உண்டாகி, அவன்‌ வந்தாலும்‌ இனி வேண்டாம்‌ என்று ஊடல்‌ பண்ணி சிற்றிலிழைக்க, அவன்‌ வந்து இவர்களோடு கலப்பதற்குப்‌ பல உபாயம்‌ பண்ணியும்‌ முகம்‌ கொடாதிக்க, இவர்கள்‌ இழைத்த சிற்றிலை தன்‌ திருவடியால்‌ கலைத்தான்‌. அனைவர்க்கும்‌ உபாயமாயிருக்கும்‌ திருவடிகள்‌ தனக்கும்‌ உபாயமாய்‌ பாரங்குச நாயகி “எங்கள்‌ சிற்றிலும்‌ யாமடும்‌ சிறு சோறும்‌ கண்டு முறுவல்‌ செய்து நின்று அழித்தாயே”‘ என்று சொல்லி கூடுவாளாகி, நாம்‌ ஊடிய ஊடலைத்‌ தீர்த்த இவன்‌ முரண்பட்டவை எல்லாம்‌ பொருந்த விடுவான்‌ என்று நினைத்து, திருவிண்ணகர்‌ பெருமானை நல்குரவும்‌ செல்வம்‌ என்று தொடங்கும்‌ திருவாய் மொழியால் விரிவுற வாழ்த்தினார்-

கைய கழிந்தார்க்கு உணவுடன்‌ நீருக்குறு நிதியா
வெய்ய தோராபத்‌ துடன்‌ தோழனுமா விழையுமிவ
னொய்ய உறவினன்‌ தூய்மை நிகரில்‌ புகழுடையோன்‌
செய்ய நற் பண்புகள் திண்ணம்‌ புகுமூர்‌ பெருமையிதே ? –38-(கட்டளைக்‌ கலித்துறை)

பராங்குச நாயகி இறைவன்‌ திறத்தான விருப்ப மிகுதியால்‌ தன்கையகத்தி ருந்த மற்றைப்‌ பொருட்களெல்லாம்‌ கைகழிய, திருக்கோளூர்‌ வைத்தமாநிதி பெருமானே உண்ணுர் சோறும்‌ பருகும்‌ நீரும் தின்னும் வெற்றிலை எல்லாம்‌ கண்ணன்‌ என்று நிஷ்டை யுடையவளாக பராங்குச நாயகி, ஆபத்துக்குதவும்‌ உடன்‌ தோழனுமாய்‌ எல்லா உறவுகளை! முடையவனாய்‌ விருப்புற்று நிகரில புகழான வாத்சல்ய குணத்தை உடையவனுமாய்‌ உள்ள பெருமானைச்‌ சென்றடைவது என்று, தான்‌ தன் வழியே திருக்கோளூருக்குப்‌ போய்விட, தாயானவள்‌ இன்று எனக்குதவாதகன்றவள்‌ தின்ன மென்னிளமான்‌ புகுமூர்‌ திருக்கோளூரே என்று உலகவற்கு உரைக்கும்படியான பெருமை யுடையவள் –

பெரும்புறக்‌ கடலிது அலைத்தும்‌ ஆழ்ந்தும்‌ ஒடுமிவ்‌ விடங்களில்‌ பெறுவதற்‌ கியல்வில பேதுறுவார்‌
விருப்புறு விசும்பும்‌ பாற்கடல்‌ கரந்தசில்‌ லிடங்களோ டயோத்தியும்‌ காலமும்‌ தேசமும்‌ சேய்மைத்தே
பருகுபே ராவல்க ளுடையவர்க்‌ கவையிவை இயல்வில பயனில சாககண்‌ டத்துறு முலையேதான்‌
திருவுடைக்‌ குணங்களால்‌ நிரம்பிய மடுவொடு திருவுடை நிறை நூல்‌ இன்ப மாரி மான மேயம்‌ உயர்ந்ததே–39-(ஒன்பதின்‌ சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் )

எம்பெருமான்‌ பர வாசு தேவனாக பரமபதத்தில்‌ இருக்கும்‌ நிலையை பெரும்புறக்‌ கடலென்பார்கள்‌. அந்த மூர்த்தியும்‌ பாற்கடலுள்‌ பள்ளி கொண்டுள்ள வியூக மூர்த்தியும்‌, சேதந அசேதநங்களனைத்திலுட்‌ அந்தர் யாமியாக உறைபவனும்‌, காகுத்தன்‌ கண்ணனாக வரும்‌ அவதார நிலையுமாகிய நான்கு நிலைகளிலும்‌ பகலோலக்‌ கமிருந்து காரியம் மந்திரிந்து கருப்புடுத்தி நகர சோதனை செய்து வேட்டையாடி (ஆராமங்களில் விளையாடும்‌ ராஜநீதி). இவற்றில்‌ பர வாசு தேவ மூர்த்தியும்‌ பாற் கடல்‌ மூர்த்தியும்‌ தூர தேசத்திலிருப்பவர்கள்‌. விபவ அவதார மூர்த்தியுடம் காலங்கடந்தது. அந்தர்யாமித்துவமோ எவராலும்‌ காண முடியாதநிலை. ஆக இந்த நான்கு மூர்த்தி இருந்தும்‌ உலகவர்க்கு காண இயலாது பயனற்றன முதுவேனில்‌ காலத்தில்‌ குளிர்ந்த மடுவில்‌ சம்சார தாபத்தால்‌ தவிக்கப் பெற்றவன்‌, நீர் நசை மிகுந்து பருகுவதற்கு நீரைக்‌ காணாது தவிக்கப்படுவது போன்றும்‌, ஆட்டின்‌ கழுத்தில்‌ உள்ள மூலைக்காம்புகள்‌ போல பயனற்றவை இந்‌ நிலையில்‌ கல்யாண குணங்களால்‌ நிரம்பிய பெருக்காற்று வெள்ளத்தில்‌ தேங்கிய மடுவோடு ஒத்தது அர்ச்சாவதாரம்‌. மேற்சொல்லப்பட்ட நான்கு மூர்த்திகளையும்‌ அறிவதற்குப்‌ பிரமாணமாயிருப்பது, பரவாசுதேவனைச்‌ சொல்லப்பட்டது வேதம்‌, வியூக மூர்த்தியைப்‌ பற்றி பேசுவத பாஞ்சராந்திரம்‌, விபவ அவதாரங்களைப்‌ பேசுவது இதிகாச புராணங்கள் -அந்தர்யாமியைப்‌ பற்றி பேசுவது மனுநீதி என்னும்‌ நூல்கள்‌. காணமுடியாததைப்‌ பற்றி பேசுவதால்‌ மேற்சொன்ன பிரமாணங்கள்‌ நான்கும்‌ குறைவுடையதே. தேங்கிய மடுக்களுக்கு ஈடாக சொல்லப்பட்ட குணங்களால்‌ பூர்ணமான அர்ச்சாவதாரத்தைப்‌ பற்றிப் பேசுவது திருவாய்‌ மொழியாம்‌. பிராமணம்‌ என்பது ஒரு விஷயத்தைச்‌ சான்று காட்டிப்‌ பேசும்‌ நூல்‌. பிரமேயம்‌ அந்த நூலால்‌ சொல்லப்பட்ட விஷயங்களாகும்‌. மேற்சொல்லப்பட்ட நான்கு பிரமாணங்களாலும்‌ பேசிய விஷயங்களை நான்கு மூர்த்திகளும்‌ குறைவுடையனவே. அஞ்சாம்‌ பிரமாணத்தால்‌ பேசப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியே உயர்ந்தது. அதே போன்று அந்த மூர்த்தியைப்‌ பற்றி வாழ்த்தி பேசும்படியான திருவாய்மொழியும்‌ உயர்ந்தததேயாம்‌.

உயர்வற உயர்நலத்‌ தொண்பொருள்‌ பகலிடை அயர்வறும்‌ அமரர்கோன்‌ மூதுவர்‌ தியாகிகள்‌ கணாதிபர்‌ துவார பாலனர்‌ கணத்துடன்‌ சோர்வர செங்கோல்‌ செலுத்திரா சநீதி சனக சநாதி சீரியர்‌ கூட்டத்து காப்புடை காரியம்‌ மந்திரித்‌ தொழுங்குற ஓல்வன அல்லன காணுமி ராசநீதி சீரிய உபய விபூதியில்‌ செய்தியை கருப்புடை உடுத்தி ஒருவரும்‌ காணாது. , உழற்றுஉழன்று காணுமி ராசநீதி மீனம்‌ கூர்மம்‌ வராகம்‌ வீறுசால்‌ நார சிங்கம்‌ நன்மதி வாமனன்‌ மூவுரு வினிரா மன்கண்‌ ணன்கற்கி அரக்க ரசுரர்‌ நாத்திகர்‌ புறத்தோர்‌ வெறுப்பொடு வேட்டையா டுமிரா சந்தி பெருந்தே வுடையமூ வுலகில்‌ பெய்த காவெனும்‌ அரங்க முதலா ராமங்கள்‌ ஒண்டோடி யாளெனும்‌ திரும ளோடு விளையாடு வீவிலி ராச நீதிகள்‌ மனக்கண் கண்டு களிக்கும்‌ வாய்ப்புடை உம்பர் தம்‌ உலகு நமக்‌ கொப்புண்டே? வீவிலம்‌ மிராச நீதிவீ றுடையதே -40-( அகவற்பா)

கதிரவன்‌ ஒளிக்கு முன்‌ மற்றை ஒளிகள்‌ இருந்தும்‌ இல்லையாவது போல, உலகில்‌ மற்றுமுண்டான ஆனந்தமிருக்க இறைவனுடைய ஆனந்தத்திற்கு முன்‌ இல்லையாவது போல்‌ உயர்வற உயர்ந்த ஆனந்தமுடைய பரம்பொருளான பரவாசு தேவனுடைய பேரொளிப்பிழம்பான பரமபதத்தில்‌, அறிவின்மையின்‌ வாசனை கூட இல்லாது நிரந்தரமான பேரறிஞர்களான விஷ்வசேனர்‌ முதலிய நித்யசூரிகள்‌, சம்சாரத்தை அறத்துறந்து விட்டு வானோர்க்குலம்‌ புகுந்த முக்தர்கள்‌, கணாதிபர்‌, துவாரபாலகர்‌, கணம்‌ கணமாக வாழ்த்தி ஸேவிக்கும்படியாக செங்கோல்‌ செலுத்தும்படியான ராஜ நீதி ஒன்று. சனகாதிகள்‌ முதல்‌ ஸ்வேதத்தீப வாசிகள்‌ கூடியிருந்து வாழ்த்தும்படியான பாற்கடலில்‌ மந்திராலோசனை அதாவது ஜகத்‌ ரட்சனை சிந்தனை பண்ணுகின்ற வியூக மூர்த்தி ஒரு ராஜநீதி–கருப்புடை தரித்து நகரசோதனைச்‌ செய்யும்‌ அரசர்கள்‌ போல்‌, தன்னால்‌ வியாபிக்கப்பட்ட பொருளை மறைந்திருந்து நகர சோதனை பண்ணுகிற ஒரு ராஜ நீதி.-மச்சம்‌, கூர்மம்‌, வராகம்‌, நரசிங்கம்‌, வாமனம்‌, மூவுருவின்‌ ராமன்‌, கண்ணன்‌, கல்கி என அவதரித்து அரக்கர்‌, அசுரர்‌, நாத்திகர்‌ மற்றும்‌ புறத்தோர்‌ உலக நலத்தை பாழ்படுத்துவார்‌. இவர்களைச்‌ சினத்தோடு வேட்டையாடும்‌ ஒரு ராஜநீதி -“செய்த திண்மதில்‌ சூழ்‌ திருவிண்ணகர்‌ சேர்ந்தபிரான்‌ பெய்த காவு கண்டீர்‌ பெருந்தேவுடை மூவ்வுலகு” என்கிறபடி திருவரங்கம்‌ முதலான ஆராமங்களான பூஞ்சோலைகளில்‌ ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ தானுமாக விளையாடுவது ஒரு ராஜ நீதி. இந்த ராஜ நீதிகளை எல்லாம்‌ சான்றோர்கள்‌ அருளிய நுல்களைக்‌ கொண்டும்‌ ஆசாரியர்கள்‌ உபதேசங்களைக்‌ கொண்டும்‌ மளக்கண்ணால்‌ கண்டு களிக்கும்‌ முழுக்ஷுக்களாகிய எம்போல்வார்கள வாய்க்கப்‌ பெற்றவாகள்‌. இத்தகைய நாம்‌ இருக்கும்‌ இருள்தருமாஞாலத்திற்குத்‌ தெளிவிசும்பு திருநாடு ஈடாகாது என்னும்படியான வீறுடைய ராஜ நீதி ஒன்று –

திருமகள்‌ கேள்வன்‌ திருவருள்‌ நலத்தால்‌ மயர்வற மதிநல மருள
அரும்பொரு எனைத்தும்‌ ஒருங்குடன்‌ அமுத கடமென ஆயிரம்‌ விரித்தான்‌
குருகையில்‌ வருநல்‌ பிறவியில்‌ துறவிதன்‌ நான்மணி மாலையாம்‌ குளிகை
இருள்தரு ஞாலம்‌ தெருள்தரு விசும்பா வேகடம்‌ செய்வதொன்‌ றன்றே

திருமகள்‌ கேள்வனாகிய ஸ்ரீமந்‌ நாராயணன்‌ தன்‌ திருவருள்‌ வயப்பட்டு தென்‌ திசையில்‌ தன்‌ திருக்கண்‌ பார்வை செலுத்த, ஜாயமான காலத்தில்‌ குருகூர்‌ சடகோபன்‌ மேல்‌ வீழ்ந்து, அதனால்‌ அறிவின்மை அறத்தொலைந்து ப்ரீதி ரூபமான ஞானம்‌ உண்டாகப்‌ பெற்று, திருக்குரு கூரில்‌ வந்தவதரித்த பிறந்த போதே துறந்த சடகோபன்‌ விஷயமாக “நான்மணிமாலை” என்று சொல்லப்பட்ட, ரசகுளிகை இயல்பில்‌ இருந்து இருள்தருமாஞாலமான இந்த லீலாவிபூதியை தெளிவிசும்பாம்‌ நித்திய விபூதியாக மாற்றும்‌ தகுதியுடையதொன்றாதாகும் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அலர்மேல் மங்கை யந்தாதி-

April 23, 2026

ஸ்ரீ அலர்மேல்மங்கையந்தாதி
முதல் நூலான இந்நூல் கட்டளைக் கலித்துறையிலான பாயினத்தாலாயது.இஃது, நான்கு அடிகளையுடையதாய் அடிதோறும் ஐந்து சீர்களோடு கூடி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் இறுதிச்சீர் கூவிளங்காயும் கருவிளங்காயுமாக ஏதேனும் ஒன்றைப் பெற்று ஒவ்வொரடியும் முதற்சீர் நேரசையாயிருந்தால் ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்தும், நிரையசையாயிருந்தால் பதினேழ் எழுத்துக் கணக்கோடு ஈற்றடியின் இறுதிச்சீரின் ஈற்றசை ஏகாரம் பெற்று முடிதல் வேண்டும். உதாரணம்,
அடியடி தோறும் ஐஞ்சீ ராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.”என்பது இலக்கண விதியாகும்.

இங்ஙன்‌ கட்டளைக்‌ கலித்துறை என்ற நூறு பாக்களான்‌ அமைந்த அலர்மேல்மங்கை அந்தாதியின்‌ முதற்பா காப்புச்‌ செய்யுள்‌, நூல்‌ தடையின்றி இனிது நிறைவேறும்‌ பொருட்டு சுவாமி நம்மாழ்வாராகிற ஆசாரிய வணக்கமும்‌ செயப்படுபொருளும்‌ எய்த உரைக்கும்‌ தற்சிறப்புப்‌ பாசிரமாக அமைந்துள்ளது

இழைத்தா ரிலதா மறையின்‌ பொருள் சீர்த்த இன்தமிழால்‌
இழைத்தான்‌ இவனே சராசரம் முற்றும் நினைவகத்தே
இழைத்தான்‌ சிரம் தான்‌ குலுங்க ஓர்‌ ஆயிரம்‌ பாவிழைத்தான்‌
இழைத்தான்‌ அலர் மேல் மங்கை யந்தாதி க்கருள்‌ முற்றுறவே-
காப்புச் செய்யுள்

எவராலும்‌ செய்யாமல்‌ இயல்பாக தோன்றிய வேதங்களின்‌ பொருளை இனிய தமிழில்‌ ஆயிரம்‌ பாசுரங்களாகச்‌ சொன்ன குருகூர்‌ நம்பியே, அறிவுடை பொருள்கள்‌ அறிவில்‌ பொருள்கள்‌ இவைகளை நினைவாற்றலாலேயே தோற்றுவித்த இறைவன்‌, தன்‌ சிரத்தை குலுக்கி கேட்கும்படியாகத்‌ திருவாய்மொழி என்ற ஆயிரம்‌ சொன்னவனே-இந்த அலர்மேல்மங்கை அந்தாதிக்கு இடையூறின்றி நிறைவு பெரும்படி காப்பாக இருந்து தானே அடியேனுக்கு அருள்‌ செய்தான்-

உலகொருங்‌காக வணங்குதற்‌ காக உடையவன்தான்‌
உலகொருங்‌ காக உளப்படுத்‌தாகத்‌ தகலகில்லாள்‌
உலகொருங்‌காக உடையவளாகக்‌ கலைக்கு நில்லா
உலகொருங்‌காக உதவுவாளாகத்‌ தெழில் வணங்கே.

நெஞ்சே! எல்லா உலகும்‌ தன்னை வந்து வணங்குவதற்காக அவர்களுக்கு இறைவனிடத்தில்‌ பரிந்துரை கூறுவதற்காக அனைத்து சராசரங்களையம்‌ ஊழிக்‌ காலத்தில்‌ தன்‌ வயிற்றில்‌ கொள்ளும்‌ இறைவனுடைய திருமார்பை விட்டு அகலாதவளான திருமகள்‌, இறைவனையும்‌ அவன்‌ உடைமைகள்‌ ஆன உபய விபூதிகளும்‌ ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்‌. பிராட்டியின்‌ பேர்‌ அழகு பதினாறு கலைகளில்‌ ஒரு கலைக்கும்‌ போதாத பேரழகு உடைய பிராட்டியை வணங்குவாயாக —

வணங்குக நெஞ்சே! மதிமுகம்‌ தீஞ்சொல்‌ அமுதனையவ்‌ i
வணங்குக ளுத்தமை பங்கயத் தாள் தாள் பராபரர் நீர்
வணங்குக சென்னி மகரம்‌ அகரம்‌ சுதந்திரத்தை
வணங்குக நுஞ்சீர்ப்‌ பெறஇரு வீர்க்கொரு வாய்ப்பெனுமே–2-

நெஞ்சே! முழு மதி போன்ற முகமும்‌, இனிய சொற்களும்‌, அமுதம்‌ ஒத்த இனிமையும்‌ உடைய தெய்வ பெண்களுள்‌ மிக மேம்பட்ட பிராட்டியின்‌ திருவடி தாமரைகளை வணங்குக! பிராட்டியின்‌ தொடர்பால்‌ அகாரத்தை பேராக உடைய மேலார்க்கும்‌ மேலாலனாகிய எம்பெருமான்‌ தன்‌ சுதந்திரத்தை தளர்த்தி கொடுப்பானாக- மகாரத்தை பேராக உடைய ஆன்மாக்கள்‌ தங்கள்‌ சென்னிகளை வணங்குவாராக.- இவ்வாறு பிராட்டியின்‌ இருப்பு பெருமானுக்கும்‌, ஆன்மாக்களுக்கும்‌ சிறப்புப்‌ பெற உதவுவதாகும்-

வாய்த்தவத்‌ தாயவள்‌ சேர்த்தியின்‌றேல் வேத வேத்தியன் தான்‌
வாய்த்தவத்‌ தாவனே? காட்டியும்‌ ஊட்டி மறைத்திடுமவ்‌
வாய்த்தவத்‌ தாயவக்‌ காரியம்‌ சீரிய வாமதுவே
வாய்த்தவத்‌ தாயவச்‌ சேதநன்‌ சேர்ந்து நல்‌ வாழ்வுறுமே–3–

உலகங்களுக்குத்‌ தாயாக வாய்ந்த பிராட்டியின்‌ சேர்த்தி இல்லை யென்றால்‌, வேதங்களால்‌ பரம்‌ பொருளென்று போற்றப்‌ பெறும்‌ திருமாலும்‌, மெய்ப் பொருள்‌ ஆக முடியுமா? அவனால்‌ செய்யப்படும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற செயல்களும்‌ சிறப்புற நிகழுமா? அநாதியான சீவான்‌ மாக்கள்‌ எம்பெருமானைச்‌ சேர்ந்து உய்வு பெறுமா-

வாழ்வது மாகம னுந்திரி யம்பகனும்‌ ககரன்‌
வாழ்வது மாகலை யாதிய மோன முனிக் கணமும்‌
வாழ்வது மாகமும்‌ தாரணி பூவிவ ரத்துயிர்கள்‌
வாழ்வது மாக முதல்தனி வாய்த்த கருணையினே–4-

எல்லா பொருள்களுக்கும்‌, தாயாய்‌ கருணையே வடிவெடுத்த பிராட்டி எம்பெருமான்‌ திருமார்பில்‌ வீற்றிருப்பதினாலேயே வானவர்‌ மன்னனாகிய இந்திரனும்‌, ககாரம்‌ என்ற பெயருடைய பிரமனும்‌, முக்கண்ணனாகிய உருத்திரனும்‌, மேம்பட்ட கலைகள்‌ முதலியனவும்‌ இடையறாத தவத்திலேயே ஈடுபட்டு இருக்கும்‌ முனிவர்‌ குழுவும்‌, பூமியும்‌, வானுலகும்‌, அவ்வுலகுகளில்‌ உள்ள ஜீவன்மாக்களும்‌ நல் வாழ்வு வாழ்கின்றன-

கருணைத்‌ திருவுரு காரணத்‌ தோருரு காவலன்தன்‌
கருணைத்‌ திருவுரு உள்ளங்‌ கசிவரக்‌ காகமொடு
கருணைத்‌ திருவுரு தானே யரக்கியீர்‌ காப்பெனென்ற
கருணைத்‌ திருவுரு உள்ளமன்‌றோ நமைக்‌ காப்பதுவே–5–

கருணையே வடிவு எடுத்தவனும்‌, உலக காரணனும்‌ பேரழகிய உருவினனும்‌, உலகைக்‌ காப்பவனும்‌ அழகிய பெருமானுடைய திருவுள்ளம்‌ பெருந் தவறு செய்த காக்கையின்‌ திறத்துக்‌ கருணையால்‌ உருகி அதனை கொல்லாது விடுத்தற்கும்‌, கருணையே வடிவெடுத்தவளாய்‌, தன்னை ஓயாது நலிவுறுத்திய அரக்கியரையும்‌, அனுமனால்‌ ஏதம்‌ வராது காப்பேன்‌’ என்ற பிராட்டியின்‌ கருணை வடிவான உள்ளம்‌ அன்றோ? காரணமாகும்‌. அந்தத்‌ திருவுள்ளமே வாழ்க்கையில்‌ பல தவறுகளையும்‌ செய்யும்‌ நம்மையும்‌ பாதுகாப்பதாகும் –

காப்பது நாம்தாங்‌ கருமமே முன்னா எவருமென்னின்‌
காப்பது நாம்தாமென் காப்பதா வைதிகச் சொல்வ தெவன்
காப்பது நாந்தாங்‌ கருமமே முன்னா அடைந்திவரை
காப்பதுங்‌ காசில்‌ குணத்தா லருள் வடைந்தவர்க்கே–6-

அவரவர்‌ செய்த நல் வினை தீ வினைகளுக்கு எற்‌ப நாம்‌ அவர்களைக்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று எம்பெருமான் திருவுள்ளம்‌ பற்றினால்‌ நீர்‌ பெருமானை நோக்கி உலகை காப்பதாக வேதம்‌ வல்லார்‌ கூறுவது பொருந்துமா? உங்களைச்‌ சரணாக அடையாதாரை அவர்கள்‌ வினைகளுக்கு ஏற்ப பயனளிப்பீர்‌; தன்னைச்‌ சாணாக அடைந்தவர்‌ திறத்து உம்முடைய வாத்சல்யாதி குணங்களால்‌ அவர்களை வினைகளை நோக்காது அருள் செய்யக்‌ கடவீர்‌”‘ என்பாள் –

அடைந்திடும்‌ ஏதெதோ நுந்தான்‌ அடையாத கல்வதுவே
அடைந்தில தாகா தெவரெவை தீவினை மாய்வதுவே
அடைந்தவை எவ்வெப்‌ பயனும்‌ அடையா திழக்குமதோ?
அடைந்திடு வாரும்‌ அடைகிலா தாரும்‌ உமது சேயே–7–

பிராட்டியே! உன் திருவடிகளை சரணாகப்‌ பற்றுபவரும்‌ பற்றாதவரும்‌ உன்‌ மக்களே. உன்‌ திருவடிகளைச்‌ சரணாகப்‌ பற்றாததனால்‌ பலவகை துன்பங்களும்‌ வந்து சேரும்‌; திருவடிகளைச்‌ சரணாக பற்றாமையால்‌ எந்த தீவினையும்‌ அழிய மாட்டா; திருவடிகளைப்‌ பற்றினவர்கள்‌ தாம்‌ கருதிய எவ்வெப்‌ பயன்களையும்‌ அடையாமல்‌ இழப்பதில்லை. இவ்வாறாக தாயாகிய உன்னைச்‌ சரணடையாமல்‌ பலர்‌ துன்பப்படுகிறார்கள்‌ என்பது குறிப்பாகும் –

உமது சேயாவா ரலாதார்‌ உளரே? கணிப்பதற்கும்‌
உமது சேயாவ சராசரம்‌ உள்ள அனைத்துமன்றோ!
உமது சேயாவ னலாதவன்‌ ஓர் பொருள்‌ நாரணனே
உமது சேய்க்கூட்டத்து அடியவன் ஓர் பொருள் கைவிடவே –8–

உம் மக்களல்லாதார்‌ என்று குறித்தறிவதற்கும்‌ சிலர்‌ உளரோ?-எல்லா இங்கியற்‌ பொருள்களும்‌ உமது குழந்தைகளே- உனக்கு வசப்படாத ஸ்வதந்திரப்‌ பொருள்‌ எம்பெருமான்‌ ஒருவனே- உம்முடைய மக்கள்‌ குழாத்தில்‌ அடியேனும்‌ ஒருவன்‌ ஆகலில்‌ அடியேனைக்‌ கைவிட்டு விடாதீர் –

கைவிடாக்‌ காப்ப தவனெனச்‌ சான்றோர்‌ பறையறைவர்‌
கைவிடாக்‌ காப்பவர்‌ நீரா அவனா எவரறிவார்‌?
கைவிடாக்‌ கொள்கை யனுமனைக்‌ கை விடச்‌ செய்தவர் யார்‌?
கைவிடாக்‌ காவல்‌ எழுநூ றரக்கியர்‌ கண்டதன்றே?–9-

எல்லா உயிர்களையும்‌ கைவிடாமல்‌ காப்பவன்‌ என்று சான்றோர்‌ பரக்கக்‌ கூறுவர்‌. அப்படிக்‌ கைவிடாமல்‌ காப்பவர்‌ நீரா? நும்‌ கணவராகிய எம்பெருமானா? என்பதனை உண்மையாகவா அறிகிறார்கள்‌? அரக்கியரை அழிக்க வேண்டும்‌ என்ற உறுதியான எண்ணத்தோடு வந்த அனுமனை, உம்மை விடாமல்‌ துன்புறுத்தி வந்த அரக்கியர்‌ எழுநூற்றுவரைப்‌ பாதுகாத்து, அனுமன்‌ எண்ணத்தைக்‌ கை விடச்‌ செய்த நும்‌ செயலை நோக்க, எல்லா உயிர்களையும்‌, கை விடாது காக்கும்‌ செயல்‌ உம்முடையதே என்று புலப்படுகின்றதன்றோ-

கண்ட அமுதம்‌ திசை திருப்பும் செயல் காப்பதற்கோ
கண்ட அமுதம் உமைக் குறிக்‌ கொண்டே கடல் கடைந்தான்‌
கண்ட அமுதச்‌ செயலில்‌ களவிதைக்‌ கண்டறிந்தீர்‌
கண்ட அமுதென வையகம்‌ காப்பதார் ? எய்துவதே–10-

தேவர்கள்‌ உள்ளத்தைத்‌ திசை திருப்பி அவர்கள்‌ நலன்‌ பெறுவதற்காகப்‌ பாற் கடல்‌ கடைந்து அமுதினைக்‌ கொண்ட எம்பெருமானுடைய செயல்‌ அவர்களை அமுதத்தால்‌ காப்பதற்காகவோ நிகழ்ந்தது? ஆய்ந்து கண்டால்‌ உண்மையான அமுதமாகிய உம்மைப்‌ பெற்ற பின்னரே எம்பெருமானுடைய உலகங்காத்தல்‌ தொழில்‌ சிறப்புற நிகழ்ந்து வருகிறது எனலாம்‌. ஆதலின்‌ உலகினை உண்மையாகக்‌ காப்பவர்‌ நீரே என்பது தேற்றம்‌–

எய்துவ துண்டே? அருளின்றி எம்மோய்‌ எனைத்தையுமே
எய்துவ துண்டே? சிவனயன்‌ இந்திரன்‌ தம் பதங்கள்‌
எய்துவ துண்டே?
அடியவன்‌ என்றென்‌ றிறைவனுமே
எய்துவ துண்டே? நுமநோக்‌ கிலதெனின்‌ முத்தியுமே–11-

அலர்மேல்‌ மங்கையீரே! தேவரீர்‌ அருளின்றி எந்தப்‌ பயன்களையும்‌ உலகவர்‌ எய்த இயலுமா? எம்பெருமானும்‌ தனக்கு அடியவன்‌ என்று எவனையும்‌ எய்துதல்‌ இயலுமா? பிரம்மன்‌, சிவன்‌, இந்திரன்‌ முதலியோரும்‌ தத்தம்‌ பதவிகளை அடைதல்‌ இயலுமோ? நும்‌ அருள்‌ நோக்கிலதெனின்‌ வீடு பேற்றினையும்‌ எய்த இயலுமா? என்றவாறு –

முத்தி யுளதென்‌ றளிப்பான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவைக்‌ கீடில்லை என்பதே முற்றுமுண்மை
முத்தி யுளசுவைக்‌ குற்றான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவை நீரின்றேல்‌ முற்றும்‌ பயனிலதே–12-

முத்தியை ஆன்மாக்களுக்கு வழங்குபவன்‌ முகுந்தனாகிய திருமாலே.-முத்திப் பேரின்பத்துக்கு இணையான இன்பம்‌ இல்லை என்பதே முழுமையான உண்மையாகும்‌. அம் முத்திச்சுவையை ஆன்மா பெறத்‌ திருமாலே காரணம்‌ ஆவான்‌ என்பதும்‌, அம் முத்திப்‌ பேரின்பம்‌ நல்கும்‌ என்பதும்‌, தாயாகிய நீர்‌ இல்லை யென்றால்‌ பயனிலவாகும் –

பயனற்‌ றிருப்பன உபய வி பூதிமான் பண்ணவனேல்‌
பயனற்‌ றிருப்பன்‌ நிகரில்‌ புகழ்சால்‌ பரமனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ தனிமாப்‌ புகழின்‌ படைப்பனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ அலர் மேல மங்கை தன்‌ பாலிலதே–13–

அலர்மேல்‌ மங்கை தன் பக்கம்‌ இல்லையாயின்‌, மண்‌ விண்‌ என்ற ஈருலகங்களுக்கும்‌ தலைவனாகத்‌ தான்‌ இருந்தாலும்‌, ஒப்பற்ற புகழை யுடைய பரம் பொருள்‌ என்ற நிலை இருந்தாலும்‌, ஒப்பற்ற மேம்பட்ட புகழுக்குரிய படைப்புச்‌ செயல்களைச்‌ செய்தாலும்‌ எம்பெருமான்‌ அவற்றால்‌ பயனற்றவனாகவே இருப்பான் –

பால தடைந்தனன்‌ பாதகத்‌ தாபமாழ்‌ தூறதனின்‌
பால தடைந்தனன்‌ பொய்ம் மதிப்‌ பற்றும்‌ ஒழுக்கமதின்
பால தடைந்தனன்‌ தீவினைப்‌ பாவிய காடதனின்‌
பால தடைதல்‌ கழிய நின்‌ பங்கயத்‌ தாளருளே–14-

அடியேன்‌ தீவினையாகிய வெப்பம்‌ சூழ்ந்துள்ள புதர்களில்‌ அகப்பட்டு அடைந்துள்ளேன்‌. அதனால்‌ பொய்யான அறிவைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ ஒழுக்கத்தை மேற் கொண்டேன்‌. இதனால்‌ தீவினை பரவிய காடாகிய உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்டேன்‌. அவ் வாழ்க்கையில்‌ ஈடுபடும்‌ அடியேனை மீட்டு பிறவித்‌ துயர்‌ சேர்வதில்‌ நின்றும்‌ நீங்குமாறு உன்‌ தாமரைப்‌ போன்ற திருவடிகளைச்‌ சேர்ப்பாயாக –

அருளால்‌ நிறைந்தொளிர்‌ கண்ணுடை அன்னைநீ, ஆதுவர்பால்‌
அருளால்‌ நிறைந்த அழகின்‌ இனியைநீ எம்பிரான்பால்‌
அருளால்‌ நிறைந்த அளியை நீ தேவர் தம்‌ மாததம்பால்‌
அருளால்‌ நிறைந்த அலர்மேல் மங்கை நீ ஆளெமையே–1
5-

அருளால்‌ நிறைந்த அலர்மேல்‌ மங்கையீர்‌ ! நீர்‌ பிறவிப்‌ பிணியால்‌ வருந்துவோர்பிணி தீர்க்க அருளால்‌ நிறைந்து விளங்கும்‌ அன்னையாய்‌ உள்ளீர்‌; அருளால்‌ நிறைந்த நீர்‌ எம்பெருமான்பால்‌ இனிய அழகிய உருவெடுத்து அமைந்துள்ளீர்‌, தேவ மாதர்‌ திறத்தில்‌ அருளால்‌ நிறைந்த இரக்கமே வடிவாக உள்ளீர்‌; அத்தகைய அருள்‌ வடிவாகிய நீர்‌ அடியேனையும்‌ ஆட்கொண்டு அருள்வீராக –

எமையாள வந்தே புணரி எழுந்தீர்‌ அமுதுடனே
எமையாள வந்தே துழாய் கமழ்‌ மார்பத்‌ ‘ தினிதிருப்பீர்‌
எமையாள வந்தநீர்‌ மங்கா புரத்தில்‌ இருந்தருள்வீர்‌
எமையாள வந்தெம்‌ மனத்தில்‌ இருப்பதும்‌ மாலுடனே–16–

எம்மை ஆட்கொள்வதற்காகவே திருமகளாகிய நீர்‌ அமுதத்தோடு அவதரித்தீர்‌; திருத்துழாய்‌ மணம்‌ கமழும்‌ திருமாலின்‌ திருமார்பில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறீர்‌; அலர்மேல்‌ மங்கா புரத்தை உகந்து அருளி வீற்றிருக்கின்றீர்‌; எம்மை ஆட்கொள்வதற்காக எம்பெருமானுடன்‌ சேர்ந்து எங்கள்‌ உள்ளத்தில்‌ அமர்ந்துள்ளீர் –

மாலுநும்‌ கூட்டும்‌ மலமற்‌(று) அமானவன்‌ பால்தருமே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபத்துட் புகுந்திடவே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபமேவி கேள்விகொள
மாலுநும்‌ கூட்டும்‌ மகிழ்ந்‌து அணைந்து உச்சி முகப்பதுவே ! –17–

எம்பெருமானுடன்‌ கூடிய தாங்கள்‌ சேர்ந்திருப்பது உலகம்‌ மாசற்று வீட்டுலகிற்கு அழைத்துச்‌ செல்லும்‌ அமானவன்‌ தொடர்பை உண்டாக்கும்‌; வைகுந்‌தத்திலிருக்கும்‌ திருமாமணி மண்டபத்தில்‌ புகும்‌ வாய்ப்பினை ஆன்மாக்களுக்கு நல்கும்‌; எம்பெருமான்‌ ‘நீ யார்‌ என்ன? நான்‌ ப்ரஹ்மம் ஆகிறேன்‌’ என்‌று ஜீவான்மா விடை கூறவும்‌, அவ்வான்மாவை மகிழ்வோடு தழுவி தாயன்பால்‌ உச்சி மோக்கும்‌ உயர்நிலையும் தரும் –

முகந்தருள்‌ நுந்தம்‌ கருணையின்‌ முன்னர்‌ இணையெதுவே?
முகந்தருள்‌ அண்ணல்‌ கருணை பிறிதின்‌ முனைந்ததுவே?
முகந்தருள்‌ மாறன்‌ அருள்நு மதருளின்‌ முன்வருமே?
முகந்தருள்‌ பூதார்‌ முனைவன்‌ அருளும்‌ இணையிலதே–18-

ஆன்மாக்களை விரும்பித் தழுவும்‌ எம்பெருமானுடைய கருணை இணையற்றதே? அத் தகைய செயலைச்‌ செய்யும்‌ மாறனுடைய கருணையும்‌ இணை யற்றதே? அதனை ஒத்த இராமாநுசர்‌ கருணையும்‌ ஈடு அற்றதே? என்பர்‌. இவற்றுக்கு எல்லாம்‌ காரணமாக அமையும்‌ தாயாராக அன்பு காட்டும்‌ உம்‌ அருளுக்கு முன்னர்‌ ஒப்பாகாது இவைகள்‌ குறைவடையும் –

இணையிலை என்பது நித்ய விபூதியி லெய்துமின்பம்‌
இணையிலை என்ப பிறவிக் கண்‌ ஆழ்வதில்‌ எய்துதுன்பம்‌
இணையிலை யென்ப திறைவன்‌ உயிர்கள்பால்‌ செய்யுமருள்‌
இணையிலை நும்மருட்‌(கு) இத்தனை சேரிலும்‌ ஒன்றினக்கே?-19-

நித்திய விபூதி என்னும்‌ பரமபதத்தில்‌ எய்தும்‌ இன்பம்‌ இணையற்றது; பிறவித் துயரில்‌ ஆழும்‌ துன்பமும்‌ இணையற்றது; இறைவன்‌ ஆன்மாக்கள்‌ பக்கம்‌ செலுத்தும்‌ அன்பும்‌ இணையற்றது; இவ்வளவும்‌ ஒன்று சேரினும்‌ தாயாராகிய நுமது அருளுக்கு நிகராக மட்டா –

ஒன்றினும்‌ ஒன்றா உலகியல்‌ பற்றைக்‌ களைவதற்கே
ஒன்றினும்‌ ஒன்றா உயர்பரன்‌ பால் நின்‌றகலகிலீர்‌
ஒன்றிலும்‌ ஒன்றாக்‌ கயவன்‌ சிறைநின்‌று பகரித்தீர்‌!
ஒன்றினும்‌ ஒன்றா உலைப்பும்‌ அரக்கியர்‌ நற்றமிதே–20-

தாழ்வில்லாத தனக்கு பிரிதொன்று இணையாகாத இவ் வுலக பற்றினை எம்மிடத்தில்‌ இருந்து போக்குவதற்காகவே, தன்னை ஓக்கும்‌ பொருள்‌ பிரிதொன்று இல்லாத மேம்பட்ட எம்பெருமான்‌ மார்பினில்‌ அகலாது தங்கி இருக்கின்றீர்‌. இழிவில்‌ தனக்கு ஒப்பவர்‌ இல்லாத இராவணனுடைய சிறையில்‌ இருந்து, அவனுக்கு உபதேசித்த நிலையிலும்‌ அரக்கியர்‌ ஈடு இணையில்லா தாழ்ந்த மொழிகளால்‌ அலைத்த நிலையிலும்‌ உம்‌ ஈடில்லா உபதேசத்தால்‌ அவர்களுக்கு நன்மையே புரிந்தீர் –

நற்றமாம்‌ நுந்தாள்‌ சரணா நணுகுவ தோர் செயலே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகி இறை தாள்‌ நணுகுவதே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகப்‌ பிறர் தாள்‌ நணுகுவதோ?
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகா திறைதாள்‌ நணுகுவதோ?–21-

நன்மையே தரும்‌ நும்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றுவதே மேம்பட்ட செயலாகும்‌. உம்‌ திருவடிகளை முதற்கண்‌ பற்றிட்ட பின்‌ எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவதற்குப்‌ பிறருடைய பரிந்துரைக்கு முயல்வது தேவையற்ற செயலாகும்‌. உம்‌ திருவடிகளைப்‌ பற்றாது எடுத்த எடுப்பிலேயே எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவது முறையல்லவே –

நணுகுவ துண்டே? அகப்புறப்‌ பற்றுசால்‌ நாகரீகம்‌
நணுகுவ துண்டே? பிறவித்‌ தொழுவினில்‌ நாலுசெயல்‌
நணுகுவ துண்டே? நமன்தமர்‌ சித்திர குத்தனாதி
நணுகுவ துண்டே? பரத்துவம்‌ நக்கனைப்‌ போல்பவர்க்கே–22-

உம்மைச்‌ சரணமடைந்தவர்களை யான்‌ எனது என்ற அகப்புறப்‌ பற்றுக்கள்‌ கொண்ட பண்பாடு அடையுமோ? பிறவியாகிய தொழுக்கட்டையில்‌ இயங்கும்‌ செயல்‌ அடையுமோ? இயமனுடைய ஏவலன்‌ சித்திரகுப்தனும்‌ நமனும்‌ நலிவதற்கு அணுகுவார்களா? உம்மைச்‌ சரணமடைவோருக்குச்‌ சிவன்‌ முதலான தேவர்களைப்‌ பரம்‌ பொருளாம் தன்மை உண்டென்ற நினைவு ஏற்படுமா-

கேதங்கள்‌ வாரா நமன்தமர்‌ கேள்விகொள்‌ தீயசொற்கள்‌
கேதங்கள்‌ வாரா பராசத்தி போல்பவர் கீழ் படிதல்‌
கேதங்கள்‌ வாரா புறசமயத்துறு கேடுசெயல்‌
கேதங்கள்‌ வாரா நும திருதாள் மலர் கிட்டுவார்க்கே –23-

உம்முடைய திருவடிகளிரண்டினையும்‌ சரணாகப்‌ பற்றுபவர்களுக்கு, யமனுடைய ஏவலர்‌ பழித்துக்‌ கூறும்‌ தீயசெயல்களைக்‌ கேட்கும்‌ தீவினையாகிய துயரங்கள்‌ வாரா. உமாதேவி முதலிய சிறுதெய்வங்களை வழிபாடு நிகழ்த்தும்‌ குறைபாடுவாரா. வேற்றுச்‌ சமயங்களைப்‌ பின்பற்றுவதாகிய தீயசெயல்களும்‌ ஏற்பட மாட்டாதென்பதாம் –

கிட்டுவ துண்டே? நுமதடி யாரெனும்‌ கேழில்பதம்‌
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கீழிருந்‌ தாற்றுதொண்டு
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கேழில புன்முறுவல்‌
கிட்டுவ துண்டே? மிதுநறும்‌ தாண்மலர்க்‌ கீழிருப்பே–24-

நும்முடைய அடியவரெனும்‌ ஒப்பிலாப்‌ பதவி எல்லோருக்கும்‌ கிட்டுமோ? பெருமானும்‌ நீருமாக இருக்கும்‌ இருவர்‌ திருவடிகளின்‌ கீழிருந்தாற்றும்‌ தொண்டு எல்லோருக்கும்‌ கிட்டுமோ? நும்மிருவருடைய ஒப்பற்ற புன்முறுவலைக்‌ காணும்‌ வாய்ப்புகள்‌ எல்லோருக்கும்‌ கிட்டுமோ? இருவருடைய திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ என்றும்‌ இருக்கும்‌ இருப்பு எல்லோருக்கும்‌ கிட்டுமோ-

தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பா தரணி புரப்பவரும்‌
தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பார்‌ தமதியல்‌ பெய்துவாரும்‌
தாள்மலாக்‌ கீழ்நின்‌ றெனைவரும்‌ தாங்குவார்‌ மெய்யுணர்வே
தாள்மலாக்‌ கீழ்த் தொண்‌ டலர் மேல் மங்கை! தனமெமதே–25-

அலர்மேல்‌ மங்கையாகிய அன்னையே! இவ் வுலகைக்‌ காக்கும்‌ அரசர்களும்‌ உன்‌ திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ நின்று வேண்டிய செல்வத்தை இரப்பர்‌. கைவல்ய இன்பம்‌ வேண்டுவாரும்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ வேண்டுவாரும்‌ இவற்றின்‌ காரணமாகிய மெய் யுணர்வு பெற விரும்புவாரும்‌ உன்‌ திருவடித் தாமரைகளைப்‌ பற்றியே இருப்பர்‌. உம்‌ திருவடிக் கீழ்‌ தொண்டே அடியேன்‌ வேண்டும்‌ செல்வமாகும்-

தனத்தவர்‌ தாய் நின கோட்டி தனி முதல் கோட்டியையும்
தனத்தவர்‌ நேர்மைத்‌ தனிமனந்‌ தன்னில்‌ நிறுத்தெடுத்து
தனத்தவர்‌ கெளரவத்‌ தாய்நின கோட்டி லகுமிகுத்த
தனத்தவர்‌ சாமிதன்‌ கோட்டி எனுநிலை தந்தனரே–26-

தாயே! ஸ்ரீயபதி. திருவடிகளில்‌ தொண்டு செய்தலையே தமக்குச்‌ செல்வம்‌ என்று கருதும்‌ அடியவர்‌, உமது குழாத்தின்‌ பெருமையையும்‌, ஒப்பற்ற முதற் பொருளாகிய எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமையையும்‌, தங்கள்‌ மனமாகிய தராசின்‌ இரு தட்டுகளிலும்‌ நிறுத்துப் பார்த்து தாயாகிய உங்கள்‌ குழாத்தின்‌ பெருமையே மதிப்புடையது எனவும்‌, எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமை சற்று மதிப்பு குறைந்ததுவே எனவும்‌ நிலைநாட்டி யுள்ளனர் –

தந்த மலைக்கும்‌ வினையர்‌ தகவிலர்‌ என்னநிரை
தந்த மலைக்குடை யான்தள்ளு மென்றும்‌ தருக்கியிகல்‌
தந்த மலைக்குமைத்‌ தான்திருத்‌ தாளிணைத்‌ தஞ்சமென்று
தந்த மலையவர்‌ மேல்மங்கை சற்றே தரிப்பதுண்டே–27-

பசுக்களையும்‌ ஆயர்களையும்‌ காப்பதற்காக கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனும்‌, தன் மேல்‌ செருக்குற்று போர்‌ செய்யவந்த சாணுரன்‌, முஷ்டிகன்‌ என்ற மல்லர்களை அழித்தவனான எம்பெருமான்‌, வினைகளால்‌ துன்பத்தை யடைந்த அடியார்க்‌ தன்னை நேராக தஞ்சமடைந்தால்‌, இவர்கள்‌ நெடுநாள்‌ செய்த அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சீறுவான்‌ என்று நினைத்து, தேவரீர்‌ புருஷகாரமாகிய சிபாரிசு பண்ணி அடியார்களை எம்பெருமான்‌ திருவடிகளை அடையத்‌ தந்து, பெருமான்‌ அவர்களை ஏற்கும் வரையில்‌ ஆறியிராமல்‌ அடியார்களுக்காகப்‌ பதறுபவள்‌ அன்றோ நீர்‌-

உண்டே? திரிபோ டுனர்வின்மை ஐயம்‌ முதலதீர்தல்‌
உண்டே? இவற்றின்‌ ஒழிந்துப் பெறப்பெறு மெய்யுணர்வும்
உண்டே? பரனெனுந்‌ தாரக மாதியாம்‌ உச்சநிலை
உண்டே? உடையான்‌ குறைதீர்‌ வதின்றேல்‌ உமது நோக்கே.
–28-

அன்னையீர்‌! நுமது கடைக்கண்பார்வை எங்கள்‌ மேல்‌ பொருந்தாவிடில்‌ அறிவின்மை திரிபுணர்ச்சி, ஐயம்‌ என்ற குறைபாடுகள்‌ ஆன்மாக்களை விட்டு நீங்குமா? இவற்றின்‌ நீங்கிப்‌ பெறக்கூடிய மெய்யுணர்வு ஏற்படுமா? எம்பெருமானே தாரகம்‌, போஷகம்‌, போக்கியம்‌ என்ற மனநிலை ஏற்படுமா? ஆன்மாக்கள்‌ தன்னை கிட்டவில்லையே என்ற எம்பெருமானுடைய குறையும்‌ தீருமா?

உமதுநோக்‌ கன்றே? பலபல அண்டங்கள்‌ உள்ளவாதல்‌
உமதுநோக்‌ கிவ்வெலாம்‌ பாலநம்‌ செய்பொருள்‌ உள்ளதுவும்‌
உமதுநோக்‌ கின்றே? இவை தாம்‌ நிரல்பட ஊர்வதுவே?
உமது நோக்‌கா மாதின் ஒப்பின்ற அருளும் இவ்வின்பமிதே -29-

அம்மையீர்‌! உம்‌ கடைக்கண்‌ பார்வை செலுத்தப்படாவிடின்‌ எம்பெருமான்‌ பல அண்டங்களைப்‌ படைப்பதுவும்‌, அவனால்‌ காக்கப்பட்ட இவ் வண்டங்கள்‌ உளவாதலும்‌, இவற்றின்‌ செயல்கள்‌ நிரல்பட நிகழ்வதுவும்‌ ஒப்பற்ற வீட்டின்பத்தை இவ்வான்மாக்கள்‌ எய்தி வாழ்வதுவும்‌ நிகழற்பாலதா–

இன்பம்‌ உளதா எவரும்‌ மயங்கி விடமரத்தில்‌
இன்பம்‌ உளதா எவரும்‌ பறிப்பர்‌ விடக்கனிகள்‌
இன்பக்‌ கனிதான்‌ மிதுநநும்‌ பாலன்‌ பியைவதின்றி
இன்பக்‌ கனியாம்‌ நுமதடி யாரோ டிணங்குமிதே–30-

இன்பம்‌ உளதாகக்‌ கருதி மன மயக்கங்கொண்டு சிலர்‌, உலகியலாகிய விஷமேறிய மரத்தில்‌ தோன்றும்‌ விஷக் கனிகளைப்‌ பறிப்பர்‌. பிராட்டியும்‌ பெருமானும்‌ ஆகிய நும்‌ இருவரிடம்‌ அன்பு செய்வதன்றி இன்பமாகிய கனிதான்‌ வேறுளதோ? உங்கள்‌ அடியவரோடு இணங்கி வாழும்‌ வாழ்வே உண்மையான இன்பச்சுவை தரும்‌ பழமாகும் –

இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்‌ திருந்திட லென்பதென்ன
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்து இரானொரு தொண்டனாமே?
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டமே வானுலக இன்பமாமே
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத் திருந்திடச் செய்‌கெனையே — 31-

நும்மடியார்தம்‌ கூட்டத்தோடும்‌ கலந்து வாழ்தலென்பது ஒரு சாதாரணச்‌ செயலாகுமா? உங்கள்‌ அடியார்‌ கூட்டத்தின்‌ இணக்கம்‌ இல்லாதவனும்‌ தொண்டருள்‌ ஒருவனாவானா? நும்‌ தொண்டரோடு இயைந்து வாழும்‌ வாழ்வே வானுல கின்பமாகும்‌. ஆதலின்‌ அடியேனை நும்‌ அடியார்‌ நடுவின்‌ இருந்திடச்‌ செய்யும்‌ அருளினைச்‌ செய்வீராக –

எனைப்போல்‌ பிழைசெய்வார்‌ யாரே? உலகினில்‌ இல்லையென்றும்‌
எனைப்போல்‌ பிழை செய்யார்‌ யாரே? உலகினில்‌ இல்லையின்றும்‌ ்‌
எனைப்போல்‌ பிழையாமை செய்தொறும்‌ யானென தின்மையுண்டேல்‌
எனைப்போல்‌ பிழையாமை உம்மரு ளாலல்ல தில்லையன்றே–32-

என்னைப்போல்‌ தவறான செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ உலகில்‌ என்றுமில்லை, என்னைப்போல்‌ மனமொத்து பிழை செய்யாதவர்‌ உலகில்‌ யாருமில்லை. யானென்று அகப்பற்றும்‌ புறப்பற்றும்‌ கழிந்ததென்றால்‌ செயலில்‌ பிழையில்லையாம்‌. அத்தகைய அகப்புறப்‌ பற்றும்‌ நீக்கிச்‌ செயல்களைப்‌ பிழையறச்‌ செய்தல்‌ உம்மருளாலல்லது ஏற்படாது –

அன்றே மகரமும்‌ ஆமையுங்‌ கேழலுந்‌ சிங்கமாவான்‌
அன்றே சறையினான்‌ ஆன்மேய்க்‌ கரைசால்‌ துவருடையான்‌
அன்றே இரணியன்‌ ஊனுண்‌ டவனென அறிந்திலிரே?
அன்றே வனசத்‌ தமுதின்‌ அமுதுடன்‌ தோன்றினீரே–33-

ஒவ்வொரு காலத்தில்‌ மீனாகவும்‌, ஆமையாகவும்‌, பன்றியாகவும்‌, நரசிங்கமாகவும்‌ அவதரித்த எம்பெருமானே மாட்டாரங்கழியில்‌ தோல்பை தொங்க அழுக்குப்படிந்த செந்நிற ஆடையை அணிந்த ஆயனாகிய கண்ணனாவான்‌. அடியவனுக்கு தீங்கு செய்த இரணியனுடைய மார்பைப்‌ பிளந்த அவன்‌ உடலை உண்டவனும்‌ அப்பெருமானே யன்றோ? அன்று பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றியபொழுது தாமரை மலரில்‌ தோன்றிய தாங்கள்‌ அவன்‌ மார்பில்‌ இணைந்திருக்கின்றீர்‌. அவனைத்‌ தாங்கள்‌ அறியவில்லையா

மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? உலகினில்‌ மானிடர்க்கும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ வாச வனாதியா தேவர்களும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? மலரயன்‌ சூலியொடும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ மங்கைநும்‌ ஆட்சிக்‌ கிலைகறங்கே–34-

அலர்மேல்‌ மங்கையீர்‌! உம்முடைய ஆளுகை நன்றன்றே! மறைதலும்‌ தோன்றலுமாகிய சுழற்சி இல்லை. ஆனால்‌ உலகில்‌ உள்ளமானிடர்‌ முதலியோருக்கும்‌ இந்திரன்‌ முதலிய தேவர்களுக்கும்‌ தாமரை மலரில்‌ தோன்றிய பிரமனுக்கும்‌ அவன்‌ தனயனாகிய சிவனுக்கும்‌ பிறப்பிறப்பாகிய தோன்றலும்‌ மறைதலும்‌ உண்டன்றோ-

கறங்குபு சக்கர கையன லதிலேன்‌ காசினியில்‌
கறங்குபு செல்வக்‌ றந்திலேன்‌ கல்விதனில்‌
கறங்குபு நெஞ்சின்‌ இளந்துணுக்‌ குற்றனென்‌ காத்திலையே
கறங்குங்‌ கரிசறத்‌ தேற்றந்‌ தருவித்தை நீயலையே? –35-

சுழலும்‌ சக்கரத்தை என்றும்‌ கையிலேந்திய திருமாலைப்‌ பற்றிய அடியேன்‌ வேறு தெய்வங்களை அறியேன்‌. மாறி, மாறி வரும்‌ செல்வமாகிய மாசு என்பக்கல்‌ வராதபடியானேன்‌. கல்வியைப்‌ பெற அற்பத்துணிவுடையேனாய்‌ முற்றப்பெறாத வனானேன்‌. நின்றவாநில்லா நெஞ்சின்‌ கரிசைப்‌ போக்கித்தெளிவைத்தரு வித்தை நீயாயிருந்தும்‌ கல்வியை முற்றநீர்‌ தந்திடவில்லையே –

நீயலை யேயணு வாயே விபுவின்‌ நிமிர்ந்துறைவாய்‌
நீயலை யேநிதி யாளி பெறுவதும்‌ நின்னிடமே
நீயலை யேயவன்‌ பாலநம்‌ நேருறச்‌ செய்வதுவே?

நீயலை யேழுத்தி இன்பம்‌ இணைந்திருந்‌ தாக்குவிப்பே–36-

அணுவளவாக இருந்தும்‌ நீர்‌, எங்கும்‌ வியாபித்துள்ள விபுவான பெருமானைப் போல்‌ சக்தி விசேஷத்தாலே கரந்தெங்கும்‌ பரந்தெங்கும்‌ உள்ளாய்‌ நீரன்றோ? செல்வத்துக்கு உரிய தெய்வம்‌ நீரல்லையோ? அனைவரும்‌ எல்லாச்‌ செல்வமும்‌ பெறுதல்‌ உமமிட மிருந்தன்றோ? எம்பெருமானுடைய காத்தல்‌ தொழிலை முறையாகச்‌ செய்பவரும்‌ நீயல்லையே? எம்பெருமானோட கூடியிருந்து புருஷகாரம்‌ செய்து அடியார்கள்‌ வீடு பேற்றின்பம்‌ அடைவதற்காக முயற்சி செய்பவள்‌ நீரன்றோ –

ஆக்கலுங்‌ காத்தல்‌ உமதுளத்து கப்பினுக்‌ கெம்பெருமான்‌
ஆக்கலுங்‌ காத்தலும்‌ ஆவவே? உந்தங்கண்‌ ணோக்கிலதேன்‌
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழிப்பதொன்‌ றன்றி நுமக்காக
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழித்தல்‌ ஆம்பயன்‌ சேதநனே–37-

எம்பெருமான்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌ தொழில்களைச்‌ செய்வது உமக்கு இன்பத்தை அளிப்பதற்கே. உம்‌ பார்வையின்றேல்‌ பெருமானுடைய ஆக்கலுங்காத்தலு முறையாக நிகழா. எம்பெருமான்‌ முத்தொழிலும் செய்வது உமக்காக. இம் முத்‌ தொழில்களால்‌ ஆகும்‌ பயன்‌ சேதனனைத் தம்போடிணைத்துக்‌ கொள்வதற்காகவே-

உடனிருந்‌ தன்பர்போல்‌ ஊறுபல்‌ லாற்றற்‌ களவுமுண்டே?
உடனிருந்‌ தாக்கம் அறிவொடு வீக்கும் உணக்குவமே
உடனிருந்‌ தைம்பொறி ஊட்டும்‌ புலநலத்‌ தொன்றுவமே
உடனிருந்‌ துந்தம்‌ கடைக்கணின்‌ நோக்குவீர்‌ தீர்ந்திடவே–38-

ஐம்பொறிகள்‌ இவ்வுடம்பில்‌ ஆன்மாக்களோடு கூடியிருந்து ஆற்றும்‌ பலவகை இடையூறுகளுக்கு எல்லை யுண்டோ? அவை ஆன்மாவோடு தொடர்ந்திருந்தே பக்தி செல்வத்தையும்‌ ஞானத்தையும்‌ கெடுக்கிறது, அவை: போக்கும்‌ திறத்தை நாங்கள்‌ அறிவோமா? அவ்வாறு அறியாமல்‌ ஐம்பொறிகள்‌ உண்பிக்கும்‌ புலனின்பத்தில்‌ ஈடுபட்டுக்‌ காலங்கழிக்கின்றோம்‌. இத்தகைய அறியாமை எம்மை விட்டு நீங்குமாறு தாயாகிய நீர்‌ எம்‌ பக்கம்‌ இருந்து உமது கடைக் கண்ணால்‌ நோக்கி எமக்கு அருள்‌ செய்வீராக –

தீர்ந்திடச்‌ செய்தீர்‌ துருவனைச்‌ சிற்றனைச்‌ செய்கொடுமை
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ இரணியற்‌ கொன்றவன்‌ சேய்‌ கொலையைத்
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ சிறைப்படு மாதர்‌ பிறர்துயரும்‌
தீர்ந்திடச்‌ செய்வீர்‌ அடியேன்‌ படுங்கடுந்‌ தீமைகளே–39-

துருவன்‌ என்ற அரசிளங்குமரனுக்கு அவன்‌ சிற்றன்னையால்‌ ஏற்பட்ட துயரங்கள்‌ எம்பெருமானைக்‌ கொண்டு நீங்குமாறு செய்தீர்‌. இரணியனைக்‌ கொன்று அவன்‌ மகன்‌ பிரகலாதன்‌ கொலை செய்யப் படுதலை நீங்குமாறு செய்தீர்‌, இத்தகைய தாங்கள்‌ அடியவனாகிற நான்‌ படும்‌ கடுந்தீவினைகளும்‌ நீங்குமாறு செய்வீராக –

தீமைகள்‌ செய்வன ஐம்பொறி சேர்க்கும்‌ புலனலங்கள்‌
தீமைகள்‌ செய்வன பெண்ணெனும்‌ ஆணெனும்‌ ஈருடல்கள்‌
தீமைகள்‌ செய்வன ஒன்றினோடு ஓன்றுடன் சேர் பிணக்காம்
தீமைகள்‌ செய்வனடொன்‌ மேல்நலம்‌ சேரத்‌ தடைமிழைத்தே–40-

ஐம்பொறிகளால்‌ நுகரப்பெறும்‌ புலனின்பங்கள்‌ சேதநன்‌ எம்பெருமானை அடையாதபடி தீமைகள்‌ செய்கின்றன. பெண்ணுடல்‌ எனவும்‌, ஆணுடல்‌ எனவும்‌ பருத்து உலாவப்படும்‌ இருவகை உடல்களும்‌ தீமைகள்‌ தருவனவேயாம்‌. மேம்பட்ட வீட்டின்பம்‌ அடைய முடியாதபடி தீமை செய்யும்‌ இவற்றை அகற்றுவீராக –

இழைப்ப துலகென காப்ப தழிப்ப திவைசெயல்கள்‌
இழைப்பதற்‌ கோர்துணை இன்றித்‌ தனதிடத்‌ தாக்குமவன்‌
இழைப்பவன்‌ மார்வத்‌ திருந்துநீ ரீதின்‌ இகந்தெவையும்‌
இழைப் பவற் கொண்டே இணை இல் பேரின்பத்‌ திருத்துவீரே–41-

உலகங்களைப்‌ படைத்தலும்‌, காத்தலும்‌, அழித்தலும்‌ என்ற முத்தொழில்களையும்‌ பிறருதவியின்றி எம்பெருமான்‌ தானே தனதிடத்தே நிகழ்த்தும்‌ போது, தேவரீர்‌ திருமார்பில்‌ பிரியாமல்‌ உறைந்து கொண்டு முத்தொழில்களிலும்‌ தொடர்பின்றி, எல்லா உயிர்களும்‌ எம்பெருமானைக்‌ கொண்டே, இணையில்லாப்‌ பேரின்ப உலகமாகிய பரம பதத்தில்‌ சேர்வதற்கு ஆவன செய்கின்றீர் –

இருத்துவீர்‌ நான்முக னாதி எவரையும்‌ தம்பதத்தே
இருத்துவீர்‌; தாளடையாரை அவர்தம்‌ இருவினையில்‌
இருத்துவீர்‌; தத்தம்‌ வரம்புடை யார்தம்‌ இயல்பறிந்து
இருத்துவீர்‌; தஞ்சமா ஈரிணைத்‌ தாள்களில்‌ தொண்டுடனே–42-

நான்முகன்‌ முதலிய தேவர்களை அவரவர்‌ பதவிகளில்‌ நிலையாகப்‌ பலகாலம்‌ வரை இருக்கச்‌ செய்கின்றீர்‌. உம்மை வணங்காதவர்களை அவரவர்‌ நல்வினை தீவினைகளுக்கேற்பப்‌ பயன்‌ தந்து நுகரும்‌ வண்ணம்‌ வாழ்க்கையிலிருக்கும்படி காலம்‌ கழிக்க வைக்கின்றீர்‌. ஆன்மாநந்தமே போதும்‌ என்ற வரம்புடையவர்களை கைவல்யத்திருக்கச்‌ செய்கின்‌றீர்‌. உம்மையே தஞ்சமாக துடைந்த அடியார்களை நும்மிருவருடைய இணைந்துள்ள திருவடிகளில்‌ செய்யும்‌ திருத்தொண்டை நிலையாக ஈடுபடுத்துகின்றீர் –

தொண்டினை யன்றிச்‌ சுகமே? உலகொரு நாயகமே
தொண்டினை யன்றிச்‌ சுவர்க மெனுமோர்‌ தனிச்சுகமே?
தொண்டினை யன்றி உயிர்சுகத்‌ தாழ்தல்‌ ஒருசுகமே?
தொண்டினை யன்றிக்‌ குழாத்தொடும்‌ உந்தம்‌ தொண்டுமொன்நே? –43-

உமது திருவடிகளில்‌ தொண்டு செய்வதால்‌ ஏற்படும்‌ இன்பம்‌ உலகொரு நாயகமாக ஆளும்‌ தலைமையாலும்‌ கிட்டாது. இதனை ஒத்த இன்பம்‌ சுவர்கம்‌ முதலான எவ்வுலகத்திலும்‌ இல்லை. இதனை ஒத்த இன்பம்‌ ஆன்மா தன்னைத்‌ தானே அநுபவிக்கிற கைவல்யீத்திலும்‌ இல்லை. தங்கள்‌ திருவடிகளில்‌ அடியார்‌ குழாத்தொடும்‌ ஒன்றிச்‌ செய்யும்‌ தொண்டே பேரின்பம்‌ பயப்பது. தனித்துச்‌ செய்யும்‌ தொண்டு பேரின்பம்‌ பயவாது –

ஒன்றும்‌ அறிந்திலன்‌ ஒள்ளிய உம் தம் அருள் பெருக்கை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ எம்மான்‌ பரத்துவத்‌ துண்மைதனை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ அணுவில் விபூவினை உட்படுத்தல்
ஒன்றும றிந்திலன்யான்‌ எங்கும்‌ அணுநீர்‌ எனவொத்தே–44

மேம்பட்ட தாயாகிய உம்முடைய அருள் வெள்ளம்‌ பற்றி ஒன்றும்‌ அறியேன்‌ அடியேன்‌. அது போலவே எம்பெருமானுடைய மேலார்க்கும்‌ மேலானாகிய, உண்மையும்‌ அறியேன்‌. எங்கும்‌ பரந்திருக்கும்‌ தனித் தன்மையை உடைய எம்பெருமான்‌ அணுவளவினதாகிய ஆன்மாவுக்குள்‌ மறைந்திருப்பதையும்‌ அணு அளவு நுண்ணிய தாங்கள்‌ எங்கும்‌ பரவியிருக்கும்‌ விபுவாகிய எம்பெருமான்‌ அளவினை ஒத்திருப்பதனையும்‌ அறியேன்-

ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபேய நிலைதனக்கு எவ்வுயிர்க்கும்‌
ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபாய நிலையில்‌ புருடகாரம்‌
ஒத்திருந்‌ தேயுநீர்‌ காக்கும்‌ நிலையில்‌ உடனருள்வீர்‌
ஓந்திருந்‌து அண்மையில் நீக்கும்‌ தொழிலில்‌ உடன் இருப்பே-45-

எம்பெருமான்‌ எல்லா உயிர்களுக்கும்‌ சென்று சேரத்தக்க பயனாகிய நிலையில்‌ இருக்கும்போது உயிர்களுக்கு இன்பம்‌ அருளும்‌ நிலையில்‌ தாயாகிய நீங்கள்‌ எம்பெருமானை ஒத்திருப்பீர்‌. உயிர்‌ எம்பெருமானை அடையும்‌ உபாய நிலையில்‌ பரிந்துரைக்‌ கூறி, உயிர்களைப்‌ பாதுகாக்கும்‌ தொழிலில்‌ எம்பெருமானோடு உடனிருந்து செயல்படுகின்றீர்‌. அவன்‌ பக்கலில்‌ உடனிருந்தும்‌ அவன்‌ செய்யும்‌ அழித்தல்‌ தொழிலையும்‌ ஆமோதிக்கிறீர்-

ஒட்டிலிர்‌ எம்பிராற்‌ சேடம்‌ உளதன்றிப்‌ புன்னிமயொன்றும்‌
ஒட்டிலீர்‌ ஒன்றும்‌ சுதந்திரம்‌ இன்றன்றிப்‌ பண்பிலதில்‌
ஒட்டிலீர்‌ இவ்விரு தன்மையும்‌ இன்றி ஒருகுறையும்‌
ஒட்டிலீர்‌ உம்பர்கோன்‌ சேதநர்‌ பற்றருள்‌ மற்றவையே –46-

தாயாராகிய தாங்கள்‌ எம்பெருமானுக்கே யடிமையாயுள்ளீர்‌. மற்றவர்‌ திறத்து அடிமையாம்‌ கீழ்மை யன்றித்‌ தலைவியாக உள்ளீர்‌. தங்களுக்கு எம்பெருமானை விடுத்துச்‌ சுதந்திரம்‌ இல்லை.-எம்பெருமானுக்கு அடிமை-மற்றவருக்குத்‌ தலைமை. ஏனைய உயிர்‌ பண்புகள்‌ யாவுக்‌கும் நிபந்தனம்‌ என்ற இரு தன்மை அன்றி நுமக்கு குறை தரும்‌ பண்புகள்‌ எதன்‌ கண்ணும்‌ தொடர்பில்லை. எம்பெருமான்‌ திறத்துப்‌ பற்றும்‌ உயிரினங்கள்‌ திறத்தருளுவதன்‌றி மற்றைய கீழான பண்புகளோடு தொடர்புடையீ ரல்லீர் –

மற்றவை தாம்சுவை, யற்றவை மாயையை யாரறிவார்‌?
மற்றவை தாம்சுவை யுற்றவை யாமென மாலுமிதே
மற்றவை தாமற்ப சாரம்‌ உயிர்ச்சுவை மாரணமே
மற்றவை தீர்ந்தும்‌ தொண்டர்‌ குழுவுடன்‌ வாழ்சுவையே –47-

உம்‌ திருத்தொண்டு தவிர ஏனையவை சுவையற்றவையாகவும்‌,சேதனன்‌ அவற்றை சுவையுடையனவாகக்‌ கருதச்‌ செய்யும்‌ உமது மாயையின்‌ ஆற்றலை அறியவல்லவர்‌ யார்‌? மற்ற பொருள்கள்‌ சுவையுள்ளன என்று சேதனன்‌ கருதுதல்‌ மாயையின்‌ மயக்கமே. ஏனைய புலனின்பங்கள்‌ மிகக் குறைவான சுவை புடையனவே. மரணமாகிய கைவல்யம் முதலான இவற்றை விடுத்து நும்‌ தொண்டர்‌ குழாத்தொடும்‌ வாழும்‌ சுவையே மேம்பட்ட சுவையாகும் –

வாழ்சுவை மிக்கசீர்த்‌ தொண்டர்க்‌ கமுதெனும்‌ வாய்மொழியும்‌
வாழ்சுவைப்‌ பேருரை ஐவர்‌ வழங்கிய கோலமுடன்‌
வாழ்சுவை மிக்க கலியன் சொல்‌ மாலையா றங்கமுடன்‌
வாழ்சுவை வேரிமா மாறாத பூமேல்‌ இருப்பருளே–48-

மேம்பட்ட நறுமணம்‌ மாறாத தாமரை மேல்‌ இருக்கும்‌ பெருமாட்டியே! நல் வாழ்வுக்கு உரிய சுவை மிக்க சிறப்பினையுடைய தொண்டருக்கு அமுதம்‌ எனப்படும்‌ திருவாய்மொழியும்‌, இந்நூலுக்குத்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌, நஞ்சீயர்‌, வாதிகேசரி, பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை சொன்னதை ஏடுபடுத்திய வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை இவர்கள்‌ வழங்கிய ஐந்து உரைகளும்‌ ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்‌ னீராயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று போற்றப்படும்‌ அழகிய ஐந்து உரைகளும்‌, மேம்பட்ட திருமங்கை மன்னன்‌ அருளிய பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌, சிறிய திருமடல்‌, பெரிய திருமடல்‌, திவெழுகூற்றிருக்கை என்ற பெயர்களையுடையதாய்‌ அருளிய சொல்‌ மாலைகளும்‌ உன்‌ அருளால்‌ ஏற்பட்டனவாகும் –

இருப்பதும்‌ வந்தும்‌ உறைவதும்‌ ஏற்றசீர்த்‌ தாமரையே
இருப்பதும்‌ நாச்சியார்‌ கோயிலும்‌ வெள்ளறை ஏருறையூர்‌
இருப்பதும்‌ எல்லா இதய கமலத்‌(து) இறைவனுடன்‌
இருப்பதும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்த இறையுடனே–49-

உனக்குப்‌ பொருத்தமான சிறப்பை யுடைய தாமரையே நீ காட்சி வழங்குமிடமும்‌ தோன்றுமிடமும்‌, நிலையாத்‌ தங்கி இருக்குமிடமும்‌, நீ கோயில்‌ கொண்டிருக்கும்‌ திருப்பதிகள்‌ திருநறையூர்‌, திருவெள்ளறை, திருஉறையூர்‌, முதலியனவும்‌. ஆன்மாக்களின்‌ இதய தாமரைகளும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்தும்படி இறைவனுடன்‌ வீற்றிருக்கும்‌ பரமபதமும்‌ உனக்கு நிலையான இருப்பிடங்களாகும் –

இறையுடன்‌ எவ்வெப்‌ பிறப்பினும்‌ தோன்றல்‌ இணக்கமுடன்‌
இறையுடன்‌ சேர்ந்திருந்‌ தெவ்வெவ்‌ வளத்தினு முந்துகிறீர்‌
இறையுடன்‌ சேர்ந்தே பரனெனும்‌ ஏற்றம்‌ விளைப்பதுவே
இறையுடன்‌ சேர்க்கவும்‌ இன்பநீர்‌ சேதனர்‌ ஏற்பதுவே –50-

எம்பெருமான்‌ எடுக்கும்‌ எவ்வெவ்வதாரத்திலும்‌ அவன்‌ திருவுள்ளத்துக்கு ஏற்பவே தோன்றுதலும்‌, எம்பெருமானுடன்‌ சேர்ந்திருந்தே எல்லா அறங்களிலும்‌ முற்பட்டு செயற்படுதலும்‌, எம்பெருமானை நீர்‌ சேர்ந்திருந்திருப்பதாலேயே அவனுக்கு எல்லாரிலும்‌ மேம்பட்டவன்‌’ என்று ஏற்றம்‌ விளைவிப்பதும்‌, எம்பெருமானுடன்‌ ஆன்மாக்களைச்‌ சேர்ப்பதும்‌, அவற்றை அவன்‌ ஏற்றுக்‌ கோடலும்‌ ஆகியவை அனைத்தும்‌ தாயாராகிய உங்களுக்கு மதிப்புடைய செயல்களாகும் –

ஏற்பதும்‌ எல்லா உலகும்‌ இணையில்‌ தனம்விரும்பி
ஏற்பதும்‌ ஞாநிகள்‌ எல்லாம்‌ பரனிடம்‌ சேர்ந்திடவே
ஏற்பதும்‌ நித்தரும்‌ முத்தரும்‌ தந்தொண்‌ டெழிலுறவே
ஏற்பதும்‌ எம்மான்‌ அகத்தெழில்‌ நீர்தாம்‌ முகத்தெளிவே–51-

எல்லா உலகத்திலுள்ளவர்களும்‌, ஒப்பற்ற செல்வத்தை விடும்‌ ஞாநிகள்‌ எல்லோரும்‌ தம்மை எம்பெருமானிடம்‌ சேர்ப்பிப்பதை விரும்பியும்‌, நித்தியசூரிகளும்‌, முத்தி பெற்றுப்‌ பரமபதத்திலுள்ளவர்களும்‌, தங்கள்‌ தொண்டுசிறக்க அவர்களால்‌ வழிபடப்படுகின்ற தாங்கள்‌ எம்பெருமான்‌ உள்ளத்தெய்தும்‌ உகப்பைக்‌ சுண்டு, அதனால்‌ ஏற்படும்‌ மகிழ்வால்‌ முகத்தின்‌ தெளிவான அழகைப்‌ பெற்றுள்ளீர்கள் –

முகத்தெளி வுள்ள தறிவிலார்க்‌ குத்தனம்‌ முந்துதலால்‌
முகத்தெளி வுள்ளதாம்‌ மூதறி ஞர்தமது மெய்யுணர்வால்‌
முகத்தெளி யுண்டாம்‌ பரனுக்குத்‌ தம்மை முகந்தளிப்பால்‌
முகத்தெளி வுண்டாம்‌ முகம்பரன்‌ சீர்தனைக்‌ கண்டுமக்கே–52-

அறிவில்லாதார்க்கு செல்வம்‌ மிகுதலினாலே முகத்தெளி வேற்படுகிறது. உண்மை யறிவுடையவர்களுக்குத்‌ தத்துவ ஞானத்தால்‌ முகத்தெளிவுண்டாகிறது. மெய்யடியார்கள்‌ தம்மை முற்றவும்‌ வழங்குதலால்‌ அப்பரனுக்கு உள்ளத்துகப்பால்‌ முகத்‌ தெளிவுண்டாகிறது. எம்பெருமான்‌ உகப்பைக்‌ கண்டு உகத்தலால்‌ தாயாராகிய உமக்கு முகத்தெளிவும்‌ மகிழ்ச்சியுமேற்படுகிறது –

உமக்கொரு பாதப்‌ பயனாம்‌ உலகோர்‌ செழிப்புறவே
உமக்கொரு பாதிப்‌ பயனாம்‌ சுவர்க துற்றிடுதல்‌
உமக்கொரு முக்கால்‌ பயனாம் தமதியல்பு ஊர் புகுதல்‌
உமக்கொரு முற்றாம் அடியார் குழுவில்‌ உடனிருப்‌பே –53-

உலகவர்‌ செழிப்புறும்‌ செயல்‌ எம்பெருமானுக்கும்‌, தாயாராகிய உமக்கும்‌ காற்பங்கு மகிழ்ச்சியாகிய பயனைத்‌ தருகிறது; ஆன்மாக்கள்‌ சுவர்க்க இன்பம்‌ அடைதலால்‌ உமக்கு அரைப்பங்கு மகிழ்ச்சியாகிய பயன்‌ கிட்டுகிறது; ஆன்மாக்கள்‌ வீட்டுலகம்‌ அடைந்து கைவல்லிய இன்பம்‌ நுகர்தலைக்‌ கண்டு உங்களுக்கு முக்காற்‌ பங்கு மகிழ்ச்சிப்‌ பயன்‌ ஏற்படுகிறது; அடியார்‌ குழாத்தில்‌ நடுவில்‌ நீவிர்‌ இருவரும்‌ இருப்பது உமக்கு நிறை மகிழ்ச்சியாகிய பயனை உண்டாக்குகிறது –

அடியார்‌ குழாங்களைக் காணுதல் வாய்ப்பென்‌ றறிவளித்திர்‌
அடியார்‌ குழாங்களைக் காணும்‌ பெரும்பயன்‌ ஆய்ந்தளித்தீர்
அடியார்‌ குழாத்தின்‌ அகத்துறை பேரின்பம்‌ ஈந்தநீரே
அடியார்‌ அடிசூடும்‌ பேரரசாள நினைப்பிரன்றே–54-

அடியார்‌ குழாங்களைக்‌ காணுதலே உண்மையான செயல்‌ என்ற அறிவைத்‌ தந்துள்ளீர்‌. அதனால்‌ ஏற்படும்‌ பெரும்‌ பயனை அடியேன்‌ பெறுமாறு என்‌ நிலையை ஆராய்ந்தருள்‌ செய்தீர்‌. அடியார்‌ குழாத்துள்‌ அடியேனும்‌ ஒருவனாக அவருடனே இணைந்து தங்கும்‌ வாய்ப்பினை நல்கிய தாங்களே, அடியேன்‌ அடியார்களுடைய திருவடிகளைத்‌ தலையில்‌ சூடி மகிழ்தலாகிய பெரிய அரசாட்சியை அருளுமாறு திருவுள்ளம்‌ பற்ற வேண்டும்‌-

நினைப்பதும்‌ எல்லா உயிர்களும்‌ உய்யுமா நீக்கமின்றி
நினைப்பதும்‌ எம்பிரான்‌ காப்பும்‌ நிகில செயல்நலங்கள்‌
நினைப்பதும்‌ தேவிகள்‌ மற்றவர்‌ நும்போல்‌ நினைவுகொள்ள
நினைப்பதும்‌ செவ்விதான்‌ நீள உபய விபூதியுமே –55-

எல்லா உயிர்களும்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமாகிய நும்மை நீங்காமல்‌ பற்றிப்‌ பிறவித்‌ துயரிலிருந்து பிழைத்து வீடு பேறுஅடையுமாறும்‌, எம்பெருமானுடைய காத்தல்‌ செயலோடு ஏனைய செயல்களும்‌ முறையாக நிசுழுமாறும்‌, எம்பெருமானுடைய தேவியருள்‌ ஏனையராகிய மண்மகளும்‌, ஆயர்‌ மடமகளும்‌, நும்மைப்‌ போன்ற நினைவினையே கொள்ளுமாறும்‌, லீலா விபூதியும்‌ நித்திய விபூதியையும்‌ தொடர்ந்து எல்லா நலன்களும்‌ பெறுமாறும்‌ தாயாகிய நீங்களே திருவுள்ளம்‌ பற்றியுள்ளீர்கள் –

விபூதி விபூதிமான்‌ நும்நோக்கில்‌ உள்ளதும்‌ ஓர்பொருளே!
விபூதி விபூதிமான்‌ உந்தம்சீர்‌ சார்பன்றி உள்ளதாமே?
விபூதி விபூதிமான்‌ சீரலர்‌ மேல்மங்கை உம்மதாட்சி
விபூதி விபூதிமான்‌ உந்தம தேர்கடைக்‌ கண்ணதன்றே–56-

அலர்மேல்‌ மங்கையீரே! ஈருலகமும்‌ அவற்றையுடையானும்‌ நும்பார்வை தம்மேல்‌ பதிவதாலேயே ஒப்பற்ற பொருள்களாகின்றன. உம்‌ தொடர்பின்றேல்‌ உலகுகளுக்கும்‌ அவற்றை உடையானுக்கும்‌ நிறை நலம்‌ ஏற்படுமா? உலகுகளும்‌ உம்‌ அன்பிற்கு வசப்பட்ட உடையானும்‌ உம்‌ செல்வங்களாம்‌. எல்லா உலகுகளும்‌ உம்‌ கடைக்கண்‌ நோக்கினை எதிர்நோக்கி உள்ள பொருள்களே –

உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றயி ராணிதன்கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே மலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே கலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றதே தாமரையே –57-

உம்‌ கடைக்கண்ணின்‌ அருள்‌ நோக்கத்தின்‌ பல கூறுகளில்‌ ஒரு கூறு தம்மீது பொருந்தியதனால்‌ இந்திராணியும்‌, பார்வதியும்‌, நாமகளும்‌ சிறப்புறுகின்றனர்‌. அங்ஙனமே பெருமானுடைய தாமரைக்‌ கண்களும்‌ வீறுபெற்று விளங்குகின்றன-

தாமரைக்‌ கண்ணன்‌ தகவிலை அன்றே கதிர் முழக்கே
தாமரைக்‌ கையய யம்மேலும்‌ வீடணர்த்‌ தாழ்ததியதே
தாமரைத்‌ தாள்பிறப்‌ பீர்பதாச்‌ சொல்லுதல்‌ சொல்லளவே
தாமரைத்‌ தந்தநும்‌ மொக்கும்‌ உபய விபூதிவேந்தே–58-

எம்பெருமான்‌ தாமரைக்‌ கண்ணனாய்‌ இருக்கும்‌ செயல்‌ உன்னீடில்லாக்‌ கதிர்‌ முழக்குப்‌ போன்ற வெளி அழகு மாத்திரமே. எம்பெருமானுடைய தாமரைக்கை அபய முத்திரை உடையதேனும்‌ அவனைத்‌ தஞ்சமென்றடைந்த விபீஷணாழ்வானை ஐயுறச்‌ செய்தது. எம்பெருமானுடைய தாமரைத்‌ திருவடிகள்‌ அடியாருடைய பிறவிப் பிணியைப்‌ போக்குவன என்ற செய்தி அடியேங்கள்‌ பக்கல்‌ செயற்படுவதாகத்‌ தெரியவில்லை. தாமரையில்‌ தோன்றிய தாயாராகிய தங்களை ஈருலக வேந்தனாகிய எம்பெருமானும்‌ ஒப்பானோ-

வேந்தர்‌ தலைவன்‌ தயரதன்‌ மேலாம்‌ மருகிமானீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ சனகன்‌ விரும்பும்‌ திருமகள் நீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ இராமன்‌ வியத்தகு தேவியானீர்‌
வேந்தர்‌ தலைக்கடை வேசரி நாசமாக்‌ கண்டீர்‌ நீரே–59-

அரசர்‌ தலைவர்களாகிய தயரதற்கும்‌ சனகர்க்கும்‌, இராமபிரானுக்கும்‌ முறையே மருமகளும்‌, விரும்பி வளர்த்த செல்வமகளும்‌, வியத்தகு தேவியுமாகிய தாங்கள்‌, அரசருள்‌ கடைப்பட்ட கோவேறு கழுதை போன்ற இராவணனைப்‌ பூண்டோடு அழியுமாறு செய்தீர் –

நீரே பரம புருடன்‌ புருடனா நிரணமிப்பீர்‌
நீரே உயிர்கள்‌ உடையான்‌ அணையுமா நேர்ந்திடுவீர்‌
நீரே அடியான்‌ பணியவன்‌ உள்ளம்‌ நிலைக்கவைப்பீர்‌
நீரே இவன் செயும்‌ தொண்டை நினைத்து மகிழவைப்பீர்‌–60-

நீரே எம்பெருமானைக்‌ கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தீர்‌. நீரே ஆன்மாக்களை எம்பெருமான்‌ தன்னோடு பொருந்துமாறு ஏற்றுக்‌ கொள்ளுதற்குரிய பரிவுரை கூறிச்‌ சேர்த்து வைப்பீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ திருத்‌ தொண்டினை எம்பெருமான்‌ உகந்தருளுமாறு அவன்‌ உள்ளத்தில்‌ நிலைபெறச்‌ செய்வீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ தொண்டுகளை நினைத்து எம்பெருமான்‌ மகிழுமாறு செய்வீர் –

மகிழ்வீர்‌ மணாளன்‌ படைத்ததைக்‌ காத்திவை யீர்ப்பிதனை
மகிழ்வீர்‌ மணாளன்‌ சராசரம்‌ பந்தென ஆடுசெயல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ உலகம்‌ முறையுடன்‌ பாலடைதல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ வனமாலை சேர்திரு மார்பினையே–61-

நீரே உங்கள்‌ மணாளனாகிய எம்பெருமான்‌ உலகைப்‌ படைத்துக்‌ காத்து ஊழிக் காலத்தில்‌ அவற்றை வயிற்றினிட்டு மறைப்பதனையும்‌, இவ்வுலகத்து உயிர்களை அவன்‌ பந்து போல ஆட்டுவித்தலையும்‌, உலகத்துயிர்கள்‌ தத்தம்‌ பக்குவத்திற்கு ஏற்ப முன்னோ பின்னோ அவன்பால்‌ அடைதலையும்‌ கண்டு, மகிழ்தலோடு எம்பெருமானுடைய வனமாலை அணிந்துள்ள மார்பினை உங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு மகிழ்வீர் —

மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய வெண்மை முதலுகத்தும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ நீர்கொளும்‌ செம்மை மறுயுகத்தும்
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய சாமளம்‌ மூன்றினிலும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ கொள்‌ளுவான்‌ மாநிறம்‌ நான்கினி்‌லே -62-

அலர்மேல்‌ மங்கையீர்‌! நீர்‌ எம்பெருமான்‌ திருமார்பினை விடுத்துத்‌ தனியே ஊஞ்சலில்‌ ஆடும்‌ போது கொள்ளும்‌ வெண்ணிறத்தைக்‌ கிருத யுகத்தும்‌, பின்‌ ஒருகால்‌ செம்மை நிறத்தைத்‌ திரேதா யுகத்தும்‌, மீண்டும்‌ ஒருகால்‌ கொள்ளும்‌ நீல நிறத்தைத்‌ துவாபர யுகத்தும்‌, மறுபடியும்‌ ஊழியாகிய கலியுகத்தும்‌ எம்பெருமான்‌ கரு நிறமும் முறையே தனக்குரிய நிறங்களாக்‌ கொண்டுள்ளான்-

நான்கெனும்‌ வேதம்‌ நவில்வநுங்‌ கீர்த்தியே நானிலத்தே
நான்கெனுந்‌ தோளால்‌ நலனுற சார்வதே நாரணனாம்‌
நான்கெனுந்‌ தாளால்‌ நடையறம்‌ பெற்ற நுமதுநோக்கின்‌
நான்கெனும்‌ மார்க்கம் நலமிகு மார்க்கம் செலுத்துவீரே –63-

தாயீர்‌! நான்கு வேதங்களும்‌ கூறுவன இறைவன்‌ புகழே-நாரணனாகிய எம்பெருமான்‌ தன்‌ நான்கு தோள்களாலும்‌ மகிழ்வுறத்‌ தழுவவது உம்மையே- உம் பார்வையாலேயே அறம்‌ என்னும்‌ பசு நான்கு கால்களால்‌ நடக்கிறது-கர்ப்பம்‌, யாம்யம்‌, தூமம்‌, அர்ச்சிராதிகதி என்ற நான்கு கதிகளுள்‌ நன்மை மிக்க அர்ச்சிராதிகதி மார்க்கத்தில்‌ உம்‌ அடியார்களை எம்பெருமானைக் கொண்டு செலுத்துவீராக —

செலுத்தும்‌ வினைகளைத்‌ தீய்ந்திடச்‌ செய்யும்‌ உமதருளை
செலுத்தும்‌ படைப்புப்‌ பதம்பெறு வானுறும்‌ சீரருளே
செலுத்தும்‌ சதமகன்‌ மூவுல காட்சி நும்சீரருளே
செலுத்துநும்‌ நேர்மைசால்‌ சீர்மை உபய விபூதிமனே –64-

துயரத்தில்‌ செலுத்தும்‌ கரும பயன்களை உமது அருள்‌ அழித்து ஒழிக்கும்‌. பிரமன்‌ படைப்புத் தொழில்‌ செய்வதும்‌, இந்திரன்‌ மூவுலகம்‌ ஆளுவதும்‌, எம்பெருமான்‌ தன்‌ இரு செல்வங்களாகிய உலகங்களை ஆட்சி செய்வதும்‌ நும்‌ இச்சையின்‌ பொருட்டே –

விபூதி பெறுமே விலகி நும்‌ பார்வை தனதனேலும்
விபூதி நும் கூட்டின்றி வில்வமே யாயின்‌ விளைவதுண்டே?
விபூதிசால்‌ இந்திர போகம்‌ விளையுமே? வாசவற்கும்‌
விபூதி விளைக்கும்‌ அருளன்றி உண்டே? எவர் தமக்கே–65-

நும்‌ அருட்பார்வை விலகின்‌ செல்வத்துக்கு உரிய குபேரனும்‌ செல்வத்தைப்பெறுதல்‌ இயலுமா? வில்வத்தினால்‌ கூட உம்‌ தொடர்பில்லையேல்‌ செல்வம்‌ விளைத்தல்‌ இயலுமா? உம்‌ அருளினாலேயே இந்திரனுக்கும்‌ செல்வம்‌ மிக்க தேவ இன்பம்‌ விளைகிறது. செல்வத்தை நல்கும்‌ உம்‌ அருளன்றி ஒருவருக்கும்‌ எவ்வகைச்‌ செல்வமும்‌ கிட்டாது —

தன்னலம்‌ நீத்துப்‌ பிறர் நலம்‌ பேணுமித்‌ தாயினம்யார் ?
தன்னலத்‌ தாழ்வில்‌ தரிக்கிலர்‌ மூவராந்‌ தேவதேவர்‌
தன்னலத்‌ தாழ்விலர்‌ முப்பத்து முக்கோடி தேவர்தாமும்‌
தன்னலம்‌ நீத்தல்‌ உபய விபூதிக்கும்‌ தாயதாலே–66-

மூம் மூர்த்திகளும்‌ தன்னலம்‌ குறைந்தால்‌ அமைதி யுற மாட்டார்கள்‌-முப்பத்து மூவருடைய வரிசையில்‌ சேர்ந்த தேவர்களும்‌, தன்னலம்‌ தாழ்வதைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. தன்னலத்தை விடுத்துப் பிறர்‌ நலத்துக்காகவே வாழும்‌ தாய்க் குலம்‌ உம்‌ அம்சமே. நீர்‌ ஈருலகங்களுக்கும்‌ தாயராக இருப்பதால்‌ தன்னலம்‌ நீத்துச்‌ செயல்‌ புரிகிறீர் —

தாயெனக்‌ கோடல்‌ சசியும்‌ உமையும்‌ கலைமகளும்‌
தாயெனச்‌ சித்திதே வானை பிடாரி குறமகளும்‌
தாயெனப்‌ பத்தினித்‌ தெய்வ மாச்சாற்றும்‌ மகளிரெல்லாம்‌
தாயெனும்‌ நீயெனும்‌ பொருளன்றி மற்றைத்‌ தகவுளதே–67-

உலகவர்‌ தாய்மார்‌ என்று போற்றும்‌ இந்திராணியும்‌, உமா தேவியும்‌, கலை மகளும்‌, சித்தி தேவியும்‌, தெய்வானை அம்மையாரும்‌. பிடாரியும்‌, வள்ளியும்‌, தாயார் என்று போற்றப்படும்‌ பத்தினிப்‌ பெண்டிரும்‌ உம்மைப்‌ போன்ற தாயாவார்களா? ஈருலகிற்கும்‌ தாயெனப்படும்‌ உன்னுடைய அம்சமே என்று கூறுவதைத்‌ தவிர வேறு பொருளுடைய சொற்றொடர்‌ உள்ளதோ?-

உளதே? கருணை சால்‌ சீலம்‌ உமதிரு பாலதன்றி
உளதே? உலகவர்‌ தாய்தந்தை மற்றுள உற்ற சுற்றம்‌
உளதே? அணுவும்‌ விபுவுமாய ஒன்றிலும்‌ நீக்கமின்மை
உளதே? உபாயமும்‌ பேறாம்‌ உயர்வுறு மிக்க பண்பே –68-

பெருமானும்‌ நீருமாகிய இருவர்‌ பக்கத்தலன்‌றி வேற்றுத்‌ தெய்வங்கள்‌ பால்‌ கருணையும்‌ அதற்கேற்ற செயலும்‌ உளவோ? மற்ற தெய்வங்கள்‌ உங்கள்‌ இருவரைப்‌ போல்‌ உலக மக்களுக்குப்‌ பெற்றோரும்‌ சுற்றமும்‌ ஆவாரோ? நீரும்‌ எம்பெருமானும்‌ அணுவும்‌ விபவுமாய்‌ இருந்து உடல் மிசை உயிர்‌ எனக் கலந்து பரந்திருக்கும்‌ செயல்‌, மற்ற தெய்வங்கள்‌ பால்‌ உண்டோ? வீட்டிற்கு நிமித்தப்‌ பொருளான உபாயமும்‌ உபயே யமுமாக இருக்கும்‌ உயர் தன்மை உங்கள்‌ இருவர் பால்‌ அன்றி மற்ற தெய்வங்கள்‌ பக்கம்‌ உள்ளதோ?

பண்பிவை நுந்தம்‌ பரனுக்‌ கடிமை பிறிதிலின்மை
பண்பிவை நுந்தம்‌ பரனருட்‌ சார்பன்றி சார்பிலதாம்‌
பண்பிவை நுந்தம்‌ பரனுகப்‌ பின்முகம்‌ பூப்பதுவே
பண்பிவை நீழல்‌ பரன்சார்‌ புளதில தோர் வழக்கே–69-

எம்பெருமானுக்கே அடிமையா யிருத்தலன்‌றிப் பிற தெய்வங்களுக்கு அடிமையா யிருக்கும்‌ பண்பு நும்மிடம்‌ இல்லை. எம்பெருமான்‌ அருளைச்‌ சார்தலன்றிப்‌ பிற சாதனங்களைப்‌ பின்பற்றாமை நும்‌ பண்பாகும்‌. எம்பெருமான்‌ உகப்பிணைக்கண்டு உகத்தலே நும்‌ பண்பு-எம்பெருமானுடைய நிழலாக அவனைப்‌ பிரியாது இருப்பதும்‌ நும்‌ பண்பு. இப் பண்புகள்‌ எம்பெருமான்‌ சார்பு உளதேல்‌ நும் பால்‌ உண்டு. இலதேல்‌ நம்பால்‌ இல்லை- எனவே, நீர்‌ என்றும்‌ எம்பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் –

வழக்கோ நன்‌ மக்கள் பால்‌ தீர்ந்து புன்‌ மக்கள்பால்‌ சார்வதுவே
வழக்கோ? சிறைக்கண்யம் தேவ மகளிர் சிறை கழிப்பீர்
வழக்கோ? மண் மாதர்‌ சிறை எமைத் தீர்ப்பதை பார்த்திருப்பீர்‌
வழக்கோ? படு துயர் யாம் கண்டு கத்தல் மணாளனோடே –70-

தாயாராகிய தாங்கள்‌ நன் மக்கள்‌ பக்கலினின்று நீங்கிப்‌ புன் மக்கள் பக்கல்‌ சேர்வது முறையோ? அடியவராகிய நாங்கள்‌ பிறவிச்‌ சிறையில்‌ கிடக்கவும் சிறைப்பட்டுத் தேவ மகளிரைத் தாங்கள் சிறைவீடு செய்தமை முறையோ – பூ மடந்தை கோதை நாச்சியராக அவதரித்து எமக்கு மெய்யுணர்வு அளித்து எம்மைப்‌ பிறவிச் சிறையிலிருந்து விடு விப்பதனை நீங்கள்‌ பார்த்துள்ளீர்கள்‌. நாங்கள்‌ படுந்துயரைக் கண்டும்‌ அதனைப்‌ போக்க முயலாது தங்கள்‌ மணாளனாகிய எம்பெருமானுடன்‌ தாங்கள்‌ உகந்திருப்பது முறையோ

ஓடுங்‌ கறங்கன்ன ஊழ்வினைச்‌ சூழலில்‌ ஒத்திருப்போம்‌
ஓடுங்‌ கறங்கின்‌ உலகியல்‌ ஒன்றின்பின்‌ ஒன்றுறுவ
ஒடுங்‌ கறங்கின்‌ இறை நெறி ஆம்பரிசு ஊர்ந்தலைப்ப
ஓடுங்‌ கறங்கிவை வீடுசெய்‌ யுந்தங்கண்‌ நோக்கிலதே–71-

உம்முடைய கடைக்கண்‌ நோக்கம்‌ எம்மேல்‌ பதியாததால்‌ முன்செய்த வினைகளால்‌ காற்றாடிபோலச்‌ சுழற்றப்படுகிறோம்‌. உலகியல்‌ வாழ்வும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக எங்களைச்‌ சுழலச்‌ செய்கின்றன, பல தெய்வங்களையும்‌ வழிபடும்‌ ஆராதனைகள்‌, நெறிமுறைகள்‌ போல்வன எம்மை அணுகி சுழல்விக்கின்றன. இச் சுழற்சி களிலிருந்து எங்களை விடுவிக்கத்‌ தங்களாலேயே இயலும் –

நோக்கில தாயிடின்‌ உள்ளதோர்‌ நுண்ணறிவு யார்க்குளதாம்‌?
நோக்கில தாயின்‌ நுவலுமி யாவும்‌ நிலை பெறுமே?
நோக்கில தாயின்‌ நுவல்படைப்‌ பீர்ப்பதும்‌ ஆமதுவே?
நோக்கில தாயின்‌ உகந்தருள்‌ நோன்தலம்‌ புல்லெழுமே–72-

உங்களுடைய அருள் நோக்கு இல்லையேல்‌ ஒருவருக்கும்‌ மெய் உணர்வு ஏற்படாது. எம்பெருமானுடைய உடைமைகளாகிய இயங்கியற் பொருள்ளும்‌ நிலையியற்‌ பொருளும்‌ நிலையாக இருக்கமாட்டா. எம்பெருமானுடைய படைத்தல்‌, காத்தல்‌, முதலிய செயல்களும்‌ முறையாக நிகழா? எம்பெருமாள்‌ உகந்தருகின்ற திருப்பதிகள்‌ யாவும்‌ தரிசிப்பார் இன்மையால்‌ புல்‌ தோன்றி வளரும்‌ பாழிடங்கள்‌ ஆகும் –

புல்லெழும்‌ நும்சார்‌ பிலதென்ன புண்ணிய நோன்பிடங்கள்‌
புல்லெழும்‌ புண்ணிய கேத்திரம்‌ புண்ணிய தீர்த்தங்களும்‌
புல்லெழும்‌ முத்தி தருமென போற்று நும்‌ ஏழ்தலமும்‌
புல்லெழும்‌ வேங்கடம்‌ சோலை நல்‌ வான மலையதுவே–73–

நும்‌ தொடர்பு இல்லை யெனின்‌ அறச் செயல்கள்‌ செய்வதற்கு ஏற்றன என்று போற்றப்படும்‌ புண்ணிய பூமிகளும்‌, புண்ணிய திருத் தலங்களும்‌,புண்ணிய தீர்த்தங்களும்‌, முத்தி தரும்‌ திருப்பதிகளாகிய அவந்தி அத்தினாபுரி, துவாரகை முதலியனவும்‌, எம்பெருமான்‌ உகந்தருளி யிருக்கும் வேங்கடமலை, வானமாமலை முதலியனவும்‌, பயன்‌ கொள்ளும்‌ அடியவருடைய வருகை இன்மையால்‌ பாழ் பட்டுவிடும்

மலையுமால்‌ நெஞ்சும்‌ பொறியும்‌ புலனொடு மாறி மாறி
மலையுமால்‌ முன்முன்‌ வினையும்‌ சுவையொடு வாசனையும்‌
மலையுமால்‌ தாபக்‌ கனலும்‌ மறித்து வரு பிறப்பும்‌
மலையுமால்‌ ஈங்கிதின்‌ வைத்திருப்‌ பான்றனைக்‌ கேட்கிலீரே–74–

இவ் வுலக வாழ்க்கையில்‌, நும்‌ அடியார்களை நெஞ்சமும்‌ அறிவும்‌ பொறியும்‌ புலன்‌ நுகர்ச்சியும்‌ செயற்‌ பொறிகளும்‌ தனித்தும்‌ கிளர்ந்தும்‌ நலியும்‌. பண்டைய வினைகளும்‌ அவற்றின்‌ வழிவரும்‌ சுவைகளும்‌ அவற்றின்‌ சுவடுகளும்‌ நலிகின்றன. ஆதியாத்மிகம்‌, ஆதிதைவிகம்‌, ஆதிபெளதிகம்‌ என்று கூறப்படும்‌ இடுக்கண் தரும்‌ மூவகைத்‌ தீக்களும்‌, மாறிமாறித்‌ தோன்றும்‌ பிறவிப்‌ பிணியும்‌ நலிவுறுத்துகின்றன. அடியார்கள்‌ படும்‌ இத் துயர்களை இம் மண்ணுலகில்‌ அவர்களை வைத்து வருந்தச்‌ செய்யும்‌ செயல்‌ பற்றித்‌ தாங்கள்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ வினவ மாட்டீர்களா –

கேட்கிலீர்‌ ஆய்பாடி வெண்ணை கவர்ந்துண்ணும்‌ கேவலத்தை
கேட்கிலிர்‌ முன்பகை வாய் வந்த கேட்டவன்‌ மேனிகொண்டான்‌
கேட்கிலீர்‌ பாஞ்சாலி மூர்க்கர்‌ கிளரவைக்‌ கூக்குரலைக்‌
கேட்கிலீர்‌ நீருமே பல்லூழி யான்படுங்‌ கேடிதையே–75-

எம்பெருமான்‌ ஆயர்பாடியில்‌ வெண்ணையைக்‌ களவினால்‌ உண்ணலாகிய இழி செயல்‌ செய்தான்‌. தன்‌ கண் முன்‌ பகைவனாய்‌ வந்து தன்னோடு பொருது உயிர் நீத்த சிசுபாலனுக்குத்‌ தன்‌ திருவடிமில்‌ இடம்‌ அளித்தான்‌. அரசவையில்‌ பாஞ்சாலியைக்‌ கெளரவரும்‌ அவரைச்‌ சேர்ந்தவர்களும்‌ பழித்துப்‌ பேசினர்‌. இவற்றைக்‌ குறித்து எந்த வினாவும்‌ எழுப்பாத தாங்கள்‌, பல ஊழிக் காலமாக அடியேன்‌ அனுபவிக்கும்‌ கேடுகளையும்‌ பற்றி வினவாதிருப்பதில்‌ வியப்பு ஒன்றும் இல்லை –

கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ பிணைதலும்‌ கேழிலதே
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உளத்துக்‌ கிளருமருள்‌
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ வடமறை நேருமொழி
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உபதேசக்‌ கேள்வியதே–76-

எம்பெருமானும்‌ நீங்களும்‌ சேர்ந்திருக்கும்‌ சேர்த்தியும்‌ உங்கள்‌ உள்ளத்தில்‌ மேன்‌ மேலும்‌ பெருகும்‌ அருளும்‌, வேதத்தை ஒத்து இனிய நும்‌ மொழிகளும்‌, இரக்கத்தால்‌ நீங்கள்‌ பிறருக்கு வழங்கும்‌ நல்லுரைகளும்‌ என்றும்‌ அழிவில்லாத பெரும்‌ புகழுக்கு உரியனவாம் –

கேள்விகொள்‌ வீர்நும கேள்வி யவன்கொள வையமுய்யும்‌
கேள்விகொண்‌ டானலன்‌ கேடுவுந்‌ துற்றதால்‌ கெட்டொழிந்தான்‌
கேள்விகொள்‌ வீரே சிறைப்பட்ட ரக்கியர்கே ழில்நிந்தை
கேள்விகொள்‌ வீர்பிற மாதர்தம்‌ கேடு தவிர்ப்பதற்கே–77-

அடியார்களுடைய குறைகளைச்‌ செவி மடுக்கும்‌ தாங்கள்‌ எம்பெருமானுக்கு அவற்றைத்‌ தெரிவிப்பதனால்‌ உலகவராம்‌ அவர்கள்‌ ‘நன்மை அடைகிறார்கள்‌. தங்கள்‌ சொற்களைக்‌ கேளாததனால்‌ கேடுகளை அடைந்து இராவணன்‌ அடியோடு அழிந்தான்‌. சிறையிலிருந்து அரக்கியர்‌ கூறிய கடஞ்சொற்களைத்‌ தாங்கள்‌ செவி மடுத்தீர்கள்‌. ஏனைய தேவ மாதர் தம்‌ சிறையைத்‌ தவிர்ப்பதற்கே தாங்கள்‌ அவ் வரக்கியர்‌ கூற்றைப்‌ பொறுமையோடு செவி மடுத்தீர் —

தவிர்ப்பதும்‌ எம்பிரான்‌ சேதநர்த்‌ தள்ளும்‌ சுதந்திரத்தைத்‌
தவிர்ப்பதும்‌ சேதனர்‌ தம்பிழைக்‌ கண்டு நடுங்குமதைத்‌
தவிர்ப்பதும்‌ தம்ம தியல்பின்‌ முரண்பிறர்‌ சொல்லுமதைத்‌
தவிர்ப்பதும்‌ சார்வார்‌ மிதுநத்‌ திருப்பின்‌ தமபிறப்பே–78

பிராட்டியாரே! ஆன்மாக்களைப்‌ புறக்கணிக்கும்‌ எம்பெருமானுடைய சுதந்திரத்தைத்‌ தாங்களே பரிந்துரை கூறி நீக்குகிறீர்‌. ஆன்மாக்கள்‌ தம்‌ பிழைகளை நினைத்து நடுங்குவதைத்‌ தாங்கள்‌ கருணையால்‌ போக்குகிறீர்‌. ஆன்மாவின்‌ இயல்புக்கு மாறாகப்‌ பிறர்‌ பேசுவதைப்‌ போக்குவீரும்‌ நீர்‌. எம்பெருமானும்‌ நீரும்‌ இருக்கும்‌ இருப்பினைச்‌ சரணாகச்‌ சார்பவர்‌ தம்‌ பிறவியைப்‌ போக்குபவரும்‌ நீரே-

பிறப்பதற்‌ கோர்வினைக்‌ கட்டில்லை என்றும்‌ பிறந்தருள்வீர்‌
பிறப்பதற்‌ கும்மொரு தாய்தந்தை யில்லை பிறந்தருள்வீர்‌
பிறப்பது தாமரையாம்‌ பெற்றிக்கோ ருறுப்புமில்லை
பிறப்புத்‌ தவிரா(து) அவன்பிறப்‌ பொக்கப்‌ பிறக்குமதே–79-

உலகில்‌ பிறப்பதற்குரியதொரு வினையின்‌ தொடர்பு இல்லாமலேயே நீங்கள்‌ உலகில்‌ பிறப்பெடுக்கிறீர்கள்‌. தாய்‌ தந்தையர்‌ இல்லாமலே இயல்பாலேயே நீங்கள்‌ பிறவி எடுக்கிறீர்‌. தாங்கள்‌ பிறப்பிடமாகிய தாமரைக்குத்‌ தங்களைப்‌ பிறக்கச்‌ செய்யும்‌ உறுப்பு எதுவும்‌ இல்லை.
எம்பெருமான்‌ உலகில்‌ பிறவி எடுக்குந்‌ தோறும்‌ அவனுக்கு ஏற்க நீங்களும்‌ பிறவி எடுக்கின்றீர்‌-

பிறப்பதோ பெம்மான்‌ சுரர்குலம்‌ தாமும்‌ சுரர்குலமே
பிறப்பதோ பெம்மான்‌ மனிதனே தாழும்‌ மனிதகுலம்‌
பிறப்பதோ பெம்மான்‌ விலங்கது தாமும்‌ விலங்கினமே
பிறப்பதோ பெம்மான் தான்‌ தாவரம்‌ தாமுமோர்‌ தாவரமே ! –80–

பெருமான்‌ தேவனாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ தேவியாகவும்‌,மனிதனாகப்‌ பிறப்பின்‌ பெண்மகளாகவும்‌, விலங்காகப்‌ பிறப்பின்‌ மறைந்து நின்‌று பெண்‌ விலங்காகவும்‌, தாவரமாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ மறைந்து நின்று தாவரமாகவும்‌ பிறப்பெடுக்கின்றீர்‌. நும்‌ இணை பிரியாமை இருக்குமாறு என்னே? என்பது குறிப்பெச்சம் –

தாவி லருங்கலை நும்மருள்‌ கூட்டின்‌ தகவுடைத்தாம்‌
தாவி லருங்கலைக்‌ கற்றோன்‌ கதிரோன்முன்‌ சாயிழந்தான்‌
தாவி லருங்கலைக்‌ சாற்றற்‌(கு) அரியவன்‌ நும் வயமே
தாவி லருங்கலைக்‌ முற்றும்‌ இயல்பி னறி வரிதே? –81-

வருத்தமில்லாத அரிய கலைகள்‌ நும்‌ அருளொடு கூடியே பெருமை பெறுகின்றன. நீங்குதலில்லாத அரிய கலைகளைச்‌ ஸூரியனை அடுத்துச்‌ கற்ற அனுமனும்‌ நும்‌ சொற்களால்‌ தன்‌ எண்ணத்தைக்‌ கை விட்டு நும்மைச்‌ சூழ்ந்த அரக்கியரை நலியாது விடுத்தான்‌. நீங்குதலில்லாத பல கலைகளாலும்‌ உள்ளவாறு அறிய முடியாத எம்பெருமானும்‌ நுமக்கு வசப்பட்டவனே. நீங்குதலில்லாத அரிய கலைகளும்‌ உம்மை உள்ளவாறு அறிதல்‌ இயலாது–

அறிவி தேயலர்‌ மேல்மங்கை நுந்தரத்‌ தாயிரத்தொன்‌(று)
அறிவரி தேயயன்‌ நெற்றியில்‌ அங்கணன்‌ இந்திரனும்‌
அறிவரி தேஅயன்‌ தேவி அயிராணி பார்வதியும்‌
அரிவரி தேயுடன்‌ தேவியர்‌ நீரும்‌ அமலனுமே–82-

அன்னையார்‌! நும்‌ தகுதியின்‌ ஆயிரத்திலொரு கூறு கூட மற்றவர்‌ அறிதல்‌ இயலாது. பிரமன்‌, சிவன்‌, இந்திரன்‌ என்ற பெருந்தேவரும்‌ அவர் தேவியராகிய நா மகள்‌, பார்வதி, இந்திராணி என்பவரும்‌ கூட நும்‌ தகுதியை உள்ளவாறு அறிதல்‌ இயலாது. மற்றவரைக்‌ கூறுதல்‌ ஏன்‌? உம்முடன்‌ இருக்கும்‌ நில மடந்தையும்‌, ஆயர் குல மடந்தையும்‌ நீரும்‌ எம்பெருமானும் கூட நும்‌ பெருமையை அறிதல்‌ அருமையாகும் –

அமலன்‌ அமுதங்‌ கடைந்தான்‌ பிறர்க்கென்‌ றுமை யடைந்தான்‌
அமலன்‌ அனைத்தும்‌ இயக்கற்‌ குரியன்‌ நினைவினாலே
அமலன்‌ அனைத்தும்‌ தனதா உடையான்‌ இயல்புறவே
அமலன்‌ உடையன்‌ செயலன்‌ உமதவன்‌ மார்பி௫ப்பே –83-

களங்கமற்ற எம்பெருமான்‌ பிறருக்கு அமுதம்‌ கடைந்து கொடுப்பதான பொய்க் காரணம்‌ காட்டிக் கடல்‌ கடைந்த செய்கை உலகத்துக்‌ தாயாராகிய உம்மைப்‌ பெறவே, எல்லா உலகப்‌ பொருள்களையும்‌ ஆட்டுவிக்கும்‌ செயலையும்‌ யாவற்றையும்‌ தன்னை உடைமையாகப்‌ பெற்றிருக்கும்‌ சிறப்பினையும்‌ உடையவனாய்‌, அனனத்தையும்‌ உடையவனாகவும்‌ ஆள்பவனாகவும்‌ சிறந்து விளங்குகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌, நீர்‌ அவன்‌ மார்பிலிருந்து உற்சாகப் படுத்து வதலாலேயே –

இருப்ப திறையும்‌ பிரிவிலை மேன்மை பிரிவிலையே
இருப்பதும்‌ வில்வத்‌ திரிணியக்‌ கூட்டினும்‌ சேமமுற
இருப்பதும்‌ ஐயந்‌ திரிபறத்‌ தேர்ந்த தெளிவுணர்வின்‌
இருப்பதும்‌ மெய்யடி யார் தம்‌ குழுவில்‌ இறையுடனே–84-

ஒரு கண நேரமும்‌ பிரிவினை மேற் கொள்ளாது எம்பெருமான்‌ திரு மார்பில்‌ இருக்கும்‌ மேம்பட்ட நிலையை உடைய நீர்‌ பொற் குவியலிலும்‌ வில்வத்திலும்‌, ஐய உணர்வும்‌ திரிபுணர்வும்‌ நீங்குதலால்‌ தெளிவுடைய அடியாருடைய மெய்யுணர்வில்‌ வீற்றிருப்பதும்‌, மெய்யடியார்‌ குழுவில்‌ எம்பெருமானோடு தங்கியிருப்பதும்‌ ஆகிய உயரிய செயல்களைச்‌ செய்கின்றீர் —

உடனுறை யானென தென்பதின்‌ உற்ற கொடியதெது?
உடனுறை ஐம்பொறி கோட்புலன்‌ சார்தலின்‌ ஊனமுன்டே?
உடனுறை ஊழ்வினைக்‌ கட்டில்‌ வலிய பிரிப்புமுண்டே?
உடனுறைந்‌ தெம்மான்‌ உறுவன தீர்ப்புறும்‌ வேண்டுகோளே –85-

ஆன்மாக்கள்‌. உடலில்‌ தங்கியிருந்து ‘யான்‌’ என்று அகங்கரிக்கும் அகங்காரத்தை விடக்‌ கொடியது யாது உள்ளது? ஐம்பொறி புலன்களைச்‌ சார்ந்த சிற்றின்ப நுகர்ச்சியின்‌ குறைபாடுகளுடன்‌ கூடியது வேறு உண்டே? முன்‌ செய்த வினைகள்‌ இப் பிறப்பில்‌ நம்மைப்‌ பிணித்து இன்ப துன்பங்களை நுகர்விக்கும்‌ பிணைப்பை விட வலிய பிணைப்பு உளதோ? பெருமானுடன்‌ இருந்து ஆன்மாக்களின்‌ இத் தீமைகளைத்‌ தீர்க்குமாறு வேண்டுவதனையே நும்‌ பண்பாகக்‌ கொண்டுள்ளீர்‌–

வேண்டியார்‌ பாலும்‌ அரக்கியர்‌ தீமையை விள்ளகிலீர்‌
வேண்டிப்‌ பிறந்தகம்‌ புக்ககம்‌ விட்டோர்‌ கணம் விரும்பீர்
வேண்டி முயலீர்‌ சிறையிருள்‌ தீயின்‌ விடுதலையை
வேண்டிடில் எம்மான் அடைந்தவர் ஏற்குமா வேட்கையிதே –86-

அசோக வனத்தில்‌ அரக்கியர்‌ நுமக்கு இழைத்த கொடுமைகளை நும்‌ நெருங்கிய உறவினரிடத்தும்‌ நீர்‌ தெரிவிக்க வில்லை. புக்ககத்தை விடுத்துப்‌ பிறந்தகம்‌ சென்று வர ஒரு கணமும்‌ நீர்‌ விரும்பினீர்‌ அல்லீர்‌. தீயினும்‌ கொடிய சிறையினின்றும்‌ நும்‌ முயற்சியால்‌ விடுதலை பெற நீர்‌ முயன்றீர்‌ அல்லீர்‌. எம்பெருமானைச்‌ சரணம்‌ அடைந்த அடியவர்களை ஏற்குமாறு கொள்ளும்‌ விருப்பத்தையே நீர்‌ வேண்டி நிற்கிறீர் —

வேட்கை பரன்பால்‌ அடியான்‌ விரும்பி அடைந்திடவே
வேட்கை பிரியில்‌ அடியார்க்‌(கு) அனர்த்தம்‌ விளையுமென்றே
வேட்கை யிருளுமிஞ்‌ ஞாலம்‌ தெருளும்‌ விசும்புறவே
வேட்கை திரு மா மணி மண்டபம் என்னும் வேங்கடமே –87–

அடியவன்‌ எம்பெருமானை விரும்பிச்‌ சரண்புகும்‌ செயலொன்றே நும்‌ வேட்கையாகும்‌. அத்தகைய வேட்கையை நீர்‌ நீத்துவிட்டால்‌ அடியவருக்குத்‌ தீங்கே விளையும்‌. இவ்விருள்‌ தருமாஞாலமாகிய நிலவுலகைப்‌ பரமபதமொத்த துன்பக்‌ கலப்பில்லா இன்ப மயமாக்குவதே உம்முடைய ஆசை. நீர்‌ உகந்தருளி யிருக்க விரும்புமிடம்‌ நில வுலக வைகுந்தத்‌ திரு மா மணி மண்டபமாகிய திருவேங்கட மலையே —

வேங்கடம்‌ வேங்கட மேவாய்‌ வெருவி இருந்திடுவீர்‌
வேங்கடம்‌ கீழிருந்‌ தன்புப தேசம்‌ விரித்துரைப்பீர்‌
வேங்கட மார்பகம்‌ நீங்கா விழைந்தே அபயமீவீர்‌
வேங்கடற்‌ குற்றதோர்‌ தொண்டொன்று பத்தா விரிப்பது–88-

நீர்‌ பரகால நாயகியை ஆவேசித்து! வேங்கடமே! வேங்கடமே! என்று விருப்பத்தோடு பல நாளும்‌ தன்னை மறந்து கூப்பிடச்‌ செய்தீர்‌. வேங்கட மலையின்‌ கீழிருந்தவாறே எம்பெருமானுக்குச்‌ சேதனர்‌ பக்கல்‌ அன்பு காட்டுமாறு உபதேசிக்கின்றீர்‌. வேங்கடத்தான்‌ மார்பினைப்‌ பிரியாமலிருந்தே அடியார்க்கு அஞ்சற்க! என்ற அருளுரை வழங்குகின்றீர்‌. குறை காணாது அடியாரை ஏற்றுக்‌ கொள்ளுமாறு எம்பெருமானிடம்‌ பரிந்துரை கூறும்‌ திருப் பணியை அடியவர்‌ உய்வதற்கே விரிவாகச்‌ செய்கின்றீர் –

விரியத்‌ தமர்செய்‌ வினைதான்‌ கழிவ தவனருளால்‌
விரியு மியல்பாழ்‌ வினைநீங்க ஒங்க நிகரில்சீர்‌
விரியத்‌ தமா்பால்‌ குறைகாணான்‌ மேன்மேல்‌ அருளுமவன்‌
விரியுஞ்‌ செயலுகப்‌ பீரலர்‌ மேல்மங்கை உம் மியல்பே–89-

அலர்மேல்‌ மங்கையீர்‌! அடியார்கள்‌ மிகுதியாகச்‌ செய்யும்‌ வினைகள்‌ யாவும்‌ எம்பெருமான்‌ அருளால்‌ நீங்கற்பாலன. அப் பெருமானிடத்தில்‌ தவறு கண்டு புறக் கணிக்கும்‌ சுதந்திர உணர்வு நீங்கவும்‌, தவறுகளையும்‌ உகக்கும்‌ ஒப்பற்ற புகழுடைய தூயன்பு அவன் பால்‌ தழைக்கவும்‌, அவன்‌ அடியார்களிடத்துக்‌ குறை காணாது அவர்களுக்கு விரிவாக அருள் புரியும்‌ மேம்பட்ட செயலுக்காக அடியவர்‌ திறத்தப்‌ பரிந்துரை கூறுவது உம்‌ பணபாகும் –

இயல்பீ திருவரைக்‌ காணும்‌ மறைப்பது மெய்யுணர்வை
இயல்பிது முக் குணத் தேய்ந்து மயக்கம் விளைக்குமதாம்‌
இயல்பீ திருவினை பாசப்‌ பிணக்கின்‌ இயக்குமிதே
இயல்பீ திறையுடன்‌ சார்ந்திவை முற்று மகற்றுவீரே–90-

எம்பெருமானும்‌ நீருமாகிய இருவரையும்‌ மனத்தால்‌ காணும்‌ உண்மை யறிவை மறைப்பது இவ் வுடம்பின்‌ இயல்பாகும்‌. காமம்‌, வெகுளி, மயக்கம்‌ என்ற முப் பண்புகளுடன்‌ பொருந்தி மெய்ப் பொருளை உள்ளவாறு அறிய முடியாதபடி மறைத்து மயங்கச்‌ செய்வதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. நல் வினை தீ வினைகளாகிய பற்றுக்களால்‌ ஆன்மாவை ஆட்டுவிப்பதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. எம்பெருமானைச்‌ சார்ந்து நீங்கள்‌ உடல்‌ குற்றங்கள்‌ அனைத்தையும்‌ நீக்குகின்‌றீர்‌. இது உமக்கு இயல்பாக அமைந்த பண்பாகும்‌-

வீராங்‌ கனைநீர்‌ விமலன்‌ திறத்தாறு பண்புடையீர்‌
வீராங்‌ கனைகள்‌ உமைப்போல்‌ விரதியர்‌ யாவரேனும்‌
வீராங்‌ கனைகள்‌ விழுமத்‌ தொழுதெழு மூவியலார்‌
வீராங்‌ கனைகளை நீர்‌ தத்த மியலால்‌ விளைப்பீரே-91-

வீரம்‌ சான்ற பெண்மகளாராகிய தாங்கள்‌ எம்பெருமான்‌ ஞானம்‌, சக்தி பலம்‌, ஐஸ்வரியம்‌, வீரியம்‌, தேஜஸ் என்ற ஆறு பண்புடையனாதல்‌ போல அவன்‌ திறத்தில்‌ உசுப்பில்‌ உகத்தல்‌, நோவின்‌ நோதல்‌, ஒண்பொருள்‌ கொடுத்தல்‌, நன்கு இனிது மொழிதல்‌, புணர்வு நனிவேட்டல்‌, பிரிவு நனி இரங்கல்‌ என்ற ஆறு பண்புகளை உடையீர்‌. உம்மைப்போல்‌ விரதமுடையார்‌ யாவரும்‌ வீரப் பெண்களே. எம்பெருமானைத்‌ தொழுது எழும்‌ வீரப் பெண்கள்‌ எம்பெருமானே ஆண்டான்‌, அவனே ஆறு, அவனே பேறு என்ற மூன்று இயல்பு உடையவர்கள்‌ தம்‌ பண்புகளில்‌ நெகிழ்வில்லாதபடி வீராங்கனைகளைத்‌ தயாரிப்பவரும்‌ தாங்களே —

விப்பிர நாரா யணனொடும்‌ விஞ்சு சீர்‌ மாறனொடும்‌
விப்பிரத்‌ தோன்றலாம்‌ விட்டுசித்‌ தன்னொடு வீசு புகழ்‌
விப்பிர ஊர்தி வியன் தமிழ்ப்‌ பாணன்‌ பிறவி வெரு
விப்பிர புத்தி செய்‌ வேந்தன்‌ குலசே கரனொடுமே–92-

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ ஆகிய விப்பிரநாராயணர்‌, மேம்பட்ட சிறப்பினை உடைய சடகோபர்‌, அந்தணருள்‌ மேம்பட்ட விட்டு சித்தர்‌, யோக சாரங்க முனிவர்‌ தோளில்‌ சுமக்கப்பட்டு எம்பெருமானைத்‌ தரிசிக்க வந்த திருப்பாணாழ்வார்‌, பிறவிப்‌ பிணிக்கு அஞ்சி விற்றுவக்‌ கோட்டம்மானைச்‌ சரண்‌ புகுந்த குலசேகரப்‌ பெருமான்‌ ஆகியவரும் –

ஒடுங்கலில்‌ சீரார்‌ முதல்வர்கள்‌ மூவராம்‌ ஒன்தமிழர்‌
ஒடுங்கலில்‌ ஞானமும்‌ பத்தி விரத்தியும்‌ ஒங்கு கோதை
ஒடுங்கலில்‌ யோகி மழிசை மன்‌ உற்ற மதுரகவி
ஓடுங்குலில்‌ வாழ்த்துக்‌ கலியன்‌ உதிப்பித்‌தும் மருளே –93-

மற்றும்‌ குறைவற்ற சிறப்புடைய முதலாழ்வார்கள்‌, மூவர்‌ ஞான பக்தி வைராக்கியத்தால்‌ மேம்பட்ட கோதையராகிய ஸ்ரீஆண்டாள்‌, யோகியாய்‌ வாழ்ந்த திருமழிசைப்‌ பிரான்‌ மதுரகவியார்‌, 86 திவ்விய தேசங்களைப்‌ ்‌ பாடியருளிய திருமங்கையாழ்வார்‌ முதலானாருடைய திருஅவதாரங்கள்‌ தாயாராகிய உமது முனைப்பினாலும்‌ எம்பெருமான்‌ அருளாலும்‌ இந்த பூலோகத்தில்‌ உண்டாயின–

உமதரு ளொன்றே உதவு மெய்‌ ஞானநீர்‌ வித்தையதால்‌
உமதருள்‌ சேதனர்‌ பாலதாம்‌ உற்ற நல்‌ தாயதனால்‌
உமதருள்‌ ஏற்பன் உலகுண் பரனின் இனியையதால்
உமதருள்‌ முற்றவும்‌ உற்றதே யாக்கும்‌ நெகிழ்தலிலே–94-

அன்னையாராகிய நீர்‌, வித்தையே வடிவினராய்‌ இருப்பதால்‌ உம்‌ அருளே மெய்யுணாவை உண்டாக்குவதாகும்‌. தாங்கள்‌ உலகின்‌ தாயாக இருப்பதனால்‌ தங்கள்‌ அருள்‌ இவ்வுலகினுள்ள உயிர்களின்‌ பக்கல்‌ பரவியுள்ளது. எம்பெருமான்‌ உகப்பிற்குரிய தேவியராக நீர்‌ இருப்பதால்‌ ஊழியில்‌ உலகை வயிற்றில்‌ வைத்துப்‌ பாதுகாக்கும்‌ எம்பெருமான்‌ உம்‌ அருள்செயல்களைத்‌ தானும்‌ இசைகிறான்‌. உம்‌ அருள்‌ செயல்களைக் குறைவுறாமல்‌ உயிர்களுக்கு ஏற்புடைய நன்மைகளையே உண்டாக்கும் —

நெகிழ்வதே உந்தம்‌ அருளிலர்‌ நேர்வது முற்றவுமே
நெகிழ்வதே இந்திரன்‌ நீடு சிவனயன்‌ நேர் பதங்கள்‌
நெகிழ்வதே ஓரிரு கோள்கதி யைம்பூத நேர்மையதும்‌
நெகிழ்வதில்‌ நித்த விபூதி நும்‌ சார்பில்‌ நிலைத்திடுமே-95-

உம்‌ அருள்‌ பெறாதார்‌ செய்யும்‌ செயல்கள்‌ முழுமையாக நிறைவேறாமல்‌ இடையிலேயே தடைபட்டு அழியும்‌. உம்‌ அருளின்‌றேல்‌ இந்திரன்‌, சிவன்‌, அயன்‌ என்பார்‌ பதவிகள்‌ நிலை பேறு அடைய மாட்டா, மேலும்‌, ஞாயிறு, திங்கள்‌ இயக்கமும்‌ ஐம் பூதப்‌ பண்புகளும்‌ நெகிழ்ந்து விடும்‌. அழிவில்லாத பரம பதமும்‌ உம்‌ தொடர்பினாலேயே நிலை பெற்றிருக்கும் —

நிலை நிற்கு மன்றோ கயவன்‌ சிறைவைத்த பாதகத்தை
நிலை நிற்கு மன்றோ நெருப்பிடை மூழ்க நீர்‌ நேர்ந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிமலன் தன்‌ பள்ளி இருந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிலத்தின்‌ புகு செயல்‌ மாதருக்கே–96-

இராவணன்‌ உங்களைச்‌ சிறை வைத்த நீசச்‌ செயல்‌ உலக மக்கள்‌ உள்ளத்தில்‌ துன்பத்தை உண்டு பண்ணும்‌. தாங்கள்‌ நெருப்பில்‌ மூழ்குவதற்கு ஈடுபட்ட செயலும்‌, வான்மீகியின்‌ ஆசிரமத்தில்‌ நீங்கள்‌ பல காலம்‌ இருந்த செய்தியும்‌, இறுதியில்‌ பூமிக்குள்‌ புகுந்து மறைந்த செயலும்‌ உலகவர்‌ உள்ளத்தில்‌ என்றும்‌ நிலை நிற்பனவாம் —

மாதா நுமதே அழகின்‌ சிகரமே மற்றுமுண்டே
மாதா நுமதே அருளின்‌ வடிவம்‌ பிறிதிலதே
மாதா நுமதே பிறர் நலம்‌ பேணும்‌ சிறப்புடைமை
மாதா நுமதே நிலை பிரி தொண்டர்‌ அடிப்படுத்தே–97-

அன்னையீர்‌! அழகின்‌ உயர்ந்த நிலையும்‌ அருளின்‌ வடிவமும்‌, பிறர்‌ நன்மையே வேண்டிச்‌ செயற்படும்‌ மாட்சிமையும்‌ உடைய நீங்கள்‌ அடியார்‌ தொண்டினை மிகைப்படுத்தி எம்பெருமானுக்குப்‌ பரிந்துரை கூறி, அவர்களை ஆட்கொள்வதற்காகப்‌ பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் —

அடியனைக்‌ கொண்டதே யாவும்‌ அடைந்தது போலுமானீர்‌
அடியனில்‌ கீழ்மையோன்‌ முன்பின்‌ படைப்பிலும் யாருமுண்டே
அடியர்பால்‌ காணீர்‌ குறையடி யேன்கேட்‌ டறிந்ததுண்டு
அடியனின் தாழ்வையும் கொண்ட நீர் ஆய்ந்திடின் உண்மை யன்றே –98-

மிகக் கீழனோகிய அடியேனை ஆட் கொண்ட திறத்தால்‌ தங்கள்‌ விருப்பமெல்லாம்‌ நிறைவேறியது போன்ற நிறை மகிழ்வைப்‌ பெற்றுள்ளீர்‌. முன்‌ ஊழிகளிலும்‌ இனி வரும்‌ ஊழிகளிலும்‌ நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற படைப்புகளில்‌ அடியேனிலும்‌ கீழானோர்‌ இருக்க மாட்டார்கள்‌. தாங்கள்‌ அடியார்களுடைய குறைகளைப்‌ பொருட்படுத்த மாட்டீர்‌ என்று கேட்டறிந்ததுண்டு. தங்கள்‌ உயர்வையும்‌ அடியேன்‌ தாழ்வையும்‌ ஆராய்ந்தால்‌ தாங்கள்‌ அடியேனை ஆட் கொண்டது மெய்யான செயலேயாகும் –

உண்மைப் பொருள் அலர்மேல் மங்கை சேர்ந்து இங்கு உளன் ஒருவன்
உண்மைப் பொருள் பொறைத் தாயினை ஒக்கலை யேந்து கேழல்
உண்மைப்‌ பொருள்ளேழ்‌ விடை செற்று வந்து கொள்‌ பின்னை கேள்வர்
உண்மைப் பொருள் மூன்றே ஓர்த்துப் பொதுவுறக் காண்ப தென்றே –99-

மெய்ப்பொருளாம்‌ பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுடன்‌ சேர்ந்து வேங்கட மலையில்‌ உள்ளான்‌. பொறுமைக்கு இருப்பிடமாகிய பூமித் தாயை தன்‌ இடையில்‌ வைத்துக்‌ கொணர்ந்த மகா வராக மூர்த்தியும்‌, அசுரா உட்புகுந்த ஏழு காளைகளை அழித்துப்‌ பின்னையை மணந்த கண்ணனும்‌, வேங்கடவனும்‌ ஒரே உண்மைப்‌ பொருளின்‌ அவதாரங்களே என்பதனைக்‌ காணலாம்‌

என்றலர்‌ மேல்மங்கை நின் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை மன் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை தொண்டர் சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்யங்கை போற்றும்‌ அருளென்கண்‌ பார்த்துலகே –100-

அலர்மேல்‌ மங்கைத்தாயே! என்னிடம்‌ உன்திருவுளச்‌ சார்பினை அருளுவது என்றோ? நீர்‌ எம்பெருமான்‌ திருவடிகளை அடியேன்‌ சாரும்‌ வாய்ப்பினை அருளுவது என்றோ? பிராட்டி பெருமாள்‌ என்ற இருவரையும்‌ சரணாகப்‌ பற்றிய தொண்டர்கள்‌ சார்பினை அடியேனுக்கு அருளுவது என்றோ? அடியேன்‌ மாட்டு அலர்மேல்‌ மங்கை பாலிக்கும்‌ அருளும்‌ எம்பெருமாள்‌ அடியேன் திறத்தில்‌ செய்யும்‌ அருளையும்‌ உலகவர் போற்று நாள்‌ என்று வருமோ?

அலர்மேல மங்கை நல்‌ தாய்திருத்‌ தாளன்ப ரும்பயனை
அலர் மேல மங்கையந்‌ தாதி தனையோதி ஆர்வமும
அலர்மேல மங்கை இணையடித்‌ தாமரை தம்மினெஞ்சம்‌
அலர்மே லமர்ந்துறை யன்னமாய்‌ நின்றன்பு பெற்றிடுமே –நூற்பயன்

நற்றாயாகிய அலர்மேல்‌ மங்கை திருவடிகளில்‌ அன்பு பெருகுதலாகிய அரிய பயனாய்‌, இந்த அலர்மேல்‌ மங்கையந்தாதியை ஆர்வத்தோடு ஒதுவதால்‌ நம்‌ நெஞ்சமானது, அப்பெருமாட்டியின்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ அன்னம்போல்‌ நீங்காதிருந்து தூய அன்பினைப்‌ பெற்றுச்‌ சிறந்து விளங்கும்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-